{"url": "http://kuppilan.yolasite.com/ourpeople.php", "date_download": "2018-04-26T13:21:45Z", "digest": "sha1:WDHJA7ISY4NATGATZFK5MPY4KTEWO4UQ", "length": 2619, "nlines": 11, "source_domain": "kuppilan.yolasite.com", "title": "முகப்பு", "raw_content": "\nபல்வேறு தமிழிசை விழாக்கள் கிராமம் தொட்டு நகரம் வரை தாயக மண்ணில் பல்வேறு இடங்களில் நடைபெறும் அந்த நிகழ்வுகள் இன்றும் பலருக்கும் பசுமரத்தாணி போல் நினைவில் இருக்கும் என்பதில் எதுவித சந்தேகமும் இருக்க மாட்டாது. ஆலயங்களில் இரவு இரவாக இயல், இசைநாடகங்களுடன் சேர்ந்த இன்னிசை விழாக்கள் நடைபெறும் அதனை இப் புலம்பெயர் நாட்டிலிருந்து இன்றும் நினைத்தாலே ஒரு பரவசம் மனதில் தோன்றும். தற்போது கனடா உட்பட மேலைத்தேச நாடுகளில் வாழும் நாம் அதனைத் தற்போது கடந்த காலத்தின் ஒரு கனவாகவே காண்கின்றோம். அந்த தாயக மண்ணின் இனிமையான பொற்கால வாழ்க்கையின் விழாக்களில் நடக்கும் இன்னிசைக் கச்சேரிகளில் அனேகமாக பல இடங்களில் நடுச்சாமத்தின் பின்பும் கூட \"பக்திப்பண்ணரசு\" திரு. கதிர் சுந்தரலிங்கம் அவர்களின் இன்னிசைப்பாடல்கள் நடைபெறவுள்ளது என்ற செய்தி இருந்தால் தூக்கக் கலக்கத்தில் இருப்போரையும் ஒரு முறை தட்டி விழித்திருக்கச் செய்யும். மேலும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.south.news/tamil-famous-heros-daughter-in-cinema/", "date_download": "2018-04-26T13:15:16Z", "digest": "sha1:KECZFHQCNQGXU7PBYJ6M73UXVKEAYHM2", "length": 5519, "nlines": 83, "source_domain": "tamil.south.news", "title": "தமிழ் சினிமாவில் நடித்த உண்மையான அப்பா மகள்கள்..!", "raw_content": "\nசினிமா தமிழ் சினிமாவில் நடித்த உண்மையான அப்பா மகள்கள்..\nதமிழ் சினிமாவில் நடித்த உண்மையான அப்பா மகள்கள்..\nசினிமாவை பொருத்தவரையில் திரைகளில் மின்னிய பல பிரபலங்களின் மகன்களை நடிக்க வருவர்கள் அதேபோல் முன்னனி நடிகர்களின் மகள்களும் தற்போது தமிழ் சினிமாவில் இருக்கும் அப்பா மகள்கள் பட்டியல் உங்களுக்காக.\nஆக்ஷன் கிங் அர்ஜூன் படங்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அவரது மகள் ஐஸ்வர்யாவும் தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.\nநகைச்சுவை நடிகர் மோகன் ராம் மகள் தான் வித்யலேகா ராமன் . இவரும் தமிழ் தெலுங்கு கன்னடம் போன்ற பல பொழிகளில் தற்போது பிஸியாக நடித்து வருகிறார்.\nநடிகர் மற்றும் இயக்குனர் பார்த்திபனின் மகள் தான் கீர்த்தனா கன்னத்தில் முத்தமிட்டால் என்ற ஒரு படத்தில் நடித்து தேசிய விருதும் பெற்றவர்.\nகமல் மகள்கள் தமிழ் தெலுங்கு ஹிந்தி கன்னடம் என பல மொழிகளில் நடிக்கிறார்கள் ஸ்ருதி ஹசன் மற்றும் அக்ஷரா ஹாசன்.\nதேசிய சினிமா விருதுகள் முழு பட்டியல் இங்கே\nஇன்ஸ்டாகிராமில் கலக்கும் பிரபலங்களின் பிக்ஸ்\nமலையாள கவர்ச்சிப்பட பேரழகி ரேஷ்மாவின் உண்மை கதை\nசென்னையில் 24 மணி நேரத்தில் இதையெல்லாம் செய்யலாம்\nவேலூரில் 48 மணி நேரத்தை எப்படி செலவிடலாம்\nஓட ஓட தெறிக்கவிட்ட சி.எஸ்.கே’; 400 அடிச்சாலும் ஜெயிக்க மாட்டாங்களா ஆர்.சி.பி\nஜெட் வேகத்தில் ஆண்மை பெருக இந்த கீரையை சாப்பிடுங்க\nமினிமம் பேலன்ஸ் இல்லாத கணக்குகளில் இருந்து ரூ.1,772 கோடி அபராதம் வசூலித்த எஸ்.பி.ஐ. வங்கி\nஆதார் அமைப்பை கைது செய்யுங்கள்… சர்ச்சையை கிளப்பிய ‘விக்கி லீக்ஸ்’ எட்வர்ட்\nமெரினாவில் இனி இதற்கும் தடை… அதிர்ச்சியில் மக்கள்\nஅன்புசெழியனை மிரண்டு ஓட வைத்த தல அஜித்… எதற்கு தெரியுமா\n‘வடசென்னை’ இன்னும் கெத்தான… இன்னும் மாஸ்ஸான கதை\n வைரலாகும் ஸருதியின் கவர்ச்சி புகைப்படம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.siddharyogam.com/maruttuvam", "date_download": "2018-04-26T13:21:46Z", "digest": "sha1:QAII6MECQ76WSI7QUAQQBC6EKEDMGZNS", "length": 10107, "nlines": 135, "source_domain": "www.siddharyogam.com", "title": "மருத்துவம் - சித்தர் யோகம்", "raw_content": "\nமுருகன் பற்றி பகுதி 1\nசித்தர்கள் காலப் பயணம் [Time Travel]\nசித்தர்கள் பிரபஞ்ச பயணம் [Space Travel] - பகுதி 1\nசித்தர்கள் பிரபஞ்ச பயணம் [Space Travel] - பகுதி 2\nசித்தர்கள் பிரபஞ்ச பயணம் [Space Travel] - பகுதி 3\nசித்தர்கள் பிரபஞ்ச பயணம் [Space Travel] - பகுதி 4\nசித்தர்கள் பிரபஞ்ச பயணம் [Space Travel] - பகுதி 5\nசித்தர்கள் செய்யும் உடல் தங்கம்\nசித்தர்கள் பிரபஞ்ச பயணம் [Space Travel] - பகுதி 6\nசித்தர்கள் பிரபஞ்ச பயணம் [Space Travel] - பகுதி 7\nசித்தர்கள் பிரபஞ்ச பயணம் [Space Travel] - பகுதி 8\nபெண் சித்தர்கள் - வாசுகி\nபாடம் 10 சந்தேகம் விளக்கம்\nபாடம் 13 சந்தேக விளக்கம்\nவாசி யோக விளக்கம் 4\nவாசி யோக விளக்கம் 5\nவாசி யோக விளக்கம் 6\nவாசி யோக விளக்கம் 7\nவாசி யோக விளக்கம் 8\nவாசி யோக விளக்கம் 9\nவாசி யோக விளக்கம் 10\nசித்தியும் ,முக்தியும் பெற இல்லறம் தடையா\nயோகா செய்யும் பொது உஷ்ணம் மீறி வெப்பு, கொப்புளம் ,கண் எரிச்சல் ஆகியவற்றிற்கு மருத்துவம்\nவீட்டில் வாசியோகம் பாடத்தில் சொன்ன கரிசாலை , கத்தாழை கடுக்கை கற்பங்கள் நடைமுறை செய்யுங்கள் .\nகாலையில் டி , காபி பருகாதீர்கள்\nகாலையில் , சாத்துக்குடி சாறு, இளநீர் , பதநீர் அருந்துங்கள் .\nவாரம் ஒருமுறை நல்ல என்னை காய்ச்சி தலை உடல் முழுக்க தேய்த்து தலை முழுகுங்கள் .\nதலையில் தினமும் என்னை வையுங்கள்\nபழங்கள் உண்ணுங்கள். தர்பூசணி வெள்ளரிக்காய் உண்ணுங்கள் .\nகைப்பிடி அருகம்புபுல்லை ஒருபாத்திரத்தில் போடுங்கள், அதில் ஒரு லிட்டர் தணணீர ஊற்றுங்கள் . அதில் 25gm மிளகுபோடுங்கள். பாத்திரத்தை அடுப்பில் வைத்து 125 மில்லிலிட்டராக வத்த வையுங்கள் .கடைசியாக 10 கிராம் வெண்ணை அதில் சேர்த்து இறக்குங்கள். மூதண்ட கியாழம் தயார் ..\nஇதை வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள் .\nமூன்றுநாட்கள் சாப்பிட்டால் போதும் . . மூலாதாரவெப்பு ,அரிப்பு . கொப்புளம் , பெண்கள் வெள்ளைப்பாடு மற்றும் ஆண்கள் இந்திரியம் வெளியேறல் தீரும் .\nகொப்புளம், தீபட்டபுன் .மூலத்தில் எரிச்சல் , மூல கடுப்பு வேனல் கட்டி , வெட்டுக்காயம் குணமாகும் .\nமஞ்சள் மெழுகு 100 கிராம் வாங்கி அதை சிறு துண்டுகளாக வெட்டவும் . 200 கிராம் தேங்காய் என்னை சேர்த்து சிறு தீயில் 2௦ நிமிடம் காய்ச்சவும் . . ஆறியபின் அது கழிம்பாக இருக்கும் .. அதை ஆசனவாய் உள்ளே வெளிய தடவவும் .\nகொப்புளங்களில் தடவவும் . எரிச்சல் வலி குறையும் . தீ பட்ட புண் தழும்பு இல்லாமல் ஆறும் . வெட்டு காயம் வலி குறைந்து ஆறும்\nதலை முழுக்க என்னை .\nசிவப்பு சம்பா மிளகாய் வத்தல் காம்பு நீக்கியது அல்லது தூள் 10 கிராம்\nகடுக்காய் பொடி 10 கிராம்\nவிரலி மஞ்சள்தூள் 5 கிராம்\nஆகியவற்றை ஒன்றாக சேர்த்து . காய்ச்சி இறக்கி ஆற வைக்கவும்..\nஇந்த எண்ணையை பெண்கள் செவ்வாய் அல்லது வெள்ளி கிழமையும் ஆண்கள் புதன் அல்லது சனி கிழமையும் தலை உடல் முழுவதும் தேய்த்து 15 நிமிடம் ஊற வைக்கவும். அதன்பின் சீகக்காய் தேய்த்து குளிக்கவும் .\nஆண்கள் தலை முழுக்கு செய்த நாளில் உடல் உறவு செய்யக்கூடாது, இது கட்டாயம். பெண்ணிற்கு இந்த கட்டு பாடு தலை முழுக்கு செய்த நாளில் இல்லை ..\nஉடல் அசதி வலி நீங்கும் .\nஉடல் மிருதுவாகவும் , பளபளப்பாகவும், தேஜஸ் பெறும்\nநரம்பு தளர்ச்சி நீங்கும் .\nஉடல் காங்கை என்ற உஷ்ணம் குறையும் .\nமூக்கில் நீர்வடிதல் மற்றும் தலை நீர் , தலை நோய்கள் தீறும் .\nயோகி வே. இராஜா கிருஷ்ண மூர்த்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.viduppu.com/entertainment/04/161559", "date_download": "2018-04-26T13:45:39Z", "digest": "sha1:QLKED7XXSSEOSQS3OFURRMFE7XF2PA6Y", "length": 7459, "nlines": 73, "source_domain": "www.viduppu.com", "title": "சதீஷ் நட்பே வேண்டாம்னு சொன்ன சிவகார்த்திகேயன்...காரணம் இதுதானாம்!! - Viduppu.com", "raw_content": "\nகணவரை பிரிந்தார் ஐஸ்வர்யா ராய்\nதாலி கட்டும் நேரத்தில் நடந்த நிஜ சம்பவம்\nஅஜித்தின் மனைவி ஷாலினியின் பகையாளி யார் தெரியுமா\nதிடீர் திருமணம் செய்துகொண்ட சூப்பர் ஹிட் பட நடிகை...அதிர்ச்சியில் ரசிகர்கள்\nதலைவர் உரையின் போது தூங்கிய ராணுவ தலைவருக்கு மரண தண்டனை\nஆர்யாவின் திருமணம் நிகழ்ச்சியை மரணகலாய் கலாய்த்த கார்த்திக் மற்றும் ஜெகன்...வைரலாகும் வீடியோ உள்ளே\nஅனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய சூப்பர் சிங்கர் பிரியங்கா அடடே இப்படியும் ஒரு திறமையா..\nஒரே வீட்டில் தனி தனியாக வாழும் ஐஸ்வர்யா அபிஷேக் பச்சன்...காரணம் என்ன\nசுசானாவின் தந்தையால் ஆதாரத்துடன் சிக்கும் ஆர்யா\nவிவாகரத்திற்கு பிறகு அமலாபால் இப்படி மாறிட்டாங்களே...வைரலாகும் புகைப்படம் உள்ளே\nசதீஷ் நட்பே வேண்டாம்னு சொன்ன சிவகார்த்திகேயன்...காரணம் இதுதானாம்\nரஜினிக்காக காமெடி நடிகர் சதீஷின் நட்பே வேண்டாம் என்று கூறியுள்ளார் சிவகார்த்திகேயன்.\nதமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் சிவகார்த்திகேயன். ரஜினியைப் போன்று இவருக்கும் ரசிகர்கள் பட்டாளம் கொஞ்சம் அதிகம் தான். இந்த நிலையில் சிவகார்த்திகேயன் பற்றி சதீஷ் ஒரு தகவல் தெரிவித்துள்ளார்.\nஅதில், தனுஷ் தயாரித்த எதிர்நீச்சல் படத்தின் போது, ஒரு நாள் சிவகார்த்திகேயன் என்னிடம் சொல்லாமல் எங்கேயோ புறப்பட்டுக்கொண்டிருந்தார். நான் கேட்டேன். ஆனால், அதற்கு பதில் இல்லை.\nபின் அவரது கார் டிரைவரிடம் கேட்டேன். அதற்கு ரஜினியை பார்க்க செல்வதாக தெரிவித்தார். இதையடுத்து தானும் அவரைப் பார்த்தே ஆகவேண்டும் என்ற ஆசையில், நானும் வருகிறேன் என்னையும் அழைத்துப் போ என்று சின்னக் குழந்தை போல் அடம்பிடித்துள்ளார்.\nநான் மட்டும் தான் அவரைப் பார்க்க அனுமதி வாங்கியிருக்கிறேன். நீ ஒன்றும் வர தேவையில்லை என்று அவருக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதில், அவரது அனுமதி ஏதும் கேட்காமல், அவரது காரில் ஏறி அமர்ந்துள்ளார்.\nஇதற்கு இப்படி என்னுடைய பேச்சைக் கேட்காமல், என்னுடைய அனுமதி இல்லாமல், ரஜினி சாரை பார்க்க வருகிறாய் என்றால், உன்னுடைய நட்பே எனக்கு தேவையில்லை என்று சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். அப்போது, ரஜினியை பார்க்கும் ஆசையில், சிவகார்த்திகேயன் நட்பு போனாலும் பரவாயில்லை என்று சதீஷ் அவருடன் சென்று ரஜியை நேரில் பார்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nதலைவர் உரையின் போது தூங்கிய ராணுவ தலைவருக்கு மரண தண்டனை\nஅஜித்தின் மனைவி ஷாலினியின் பகையாளி யார் தெரியுமா\nஆர்யாவின் திருமணம் நிகழ்ச்சியை மரணகலாய் கலாய்த்த கார்த்திக் மற்றும் ஜெகன்...வைரலாகும் வீடியோ உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vivalanka.com/news/page.jsp?articleid=118936", "date_download": "2018-04-26T13:58:24Z", "digest": "sha1:VDVWFHLJ2NR6I74ZRW5NMLLVUXQITJDH", "length": 4112, "nlines": 116, "source_domain": "www.vivalanka.com", "title": "Basin authority board member defends new study", "raw_content": "\nVideo: News 1st:டயகம வெஸ்ட் மூன்றாம் பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் சித்திர தேர் பவணி\nVideo: News 1st:நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்\nVideo: News 1st:மண்டத்தீவு பகுதியில் முதலை ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது\nVideo: News 1st: குடிபோதையில் வந்த சிலரால் கட்டுகஸ்தொட்டை வைத்தியசாலை ஊழியர்களுக்கு அச்சுறுத்தல்\nVideo: News 1st: சித்ராகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் காயம்\nVideo: News 1st:எல்ல பகுதியில் விபத்து: 3 வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு\nVideo: News 1st:புத்தாண்டு காலப்பகுதியில் 95 மில்லியன் ரூபா வருமானம் – இலங்கை போக்குவரத்து சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} {"url": "https://indrayavanam.blogspot.com/2013/03/blog-post.html", "date_download": "2018-04-26T13:36:21Z", "digest": "sha1:VXQZIJOTU4Z43VYZ6LDP7XRJN7DVQTT4", "length": 22076, "nlines": 143, "source_domain": "indrayavanam.blogspot.com", "title": "சூரியநெல்லி பெண்குட்டி கற்பழிக்கப்பட்ட கதை...", "raw_content": "\nசூரியநெல்லி பெண்குட்டி கற்பழிக்கப்பட்ட கதை...\nசூரியநெல்லி என்பது கற்பழிக்கப்பட்ட பெண்ணின் பெயரல்ல, அவள் வாழ்ந்த ஊரின் பெயர்.கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் மூணாறுக்கு அருகேயுள்ள ஒரு சிறிய கிராமம் சூரியநெல்லி. 1996ல் நடந்த இந்த சம்பவம் கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் கடந்த பின்பும் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் அறிவிக்கப்படவில்லை. டெல்லி பேருந்து கற்பழிப்பு (பாலியியல் பலாத்காரம் என்றுதான் எழுத வேண்டும்) சம்பவத்திற்கு பிறகு இந்தியா முழுவதும் ஏற்பட்ட அதிர்ச்சி அலைகலைகளில் தூசிதட்டி எடுக்கப்பட்ட கற்பழிப்பு வழக்குகளில் முக்கியமானது...ஏன் தெரியுமா இந்த வழக்கில் இந்தியவை ஆளும் மத்திய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி. ஒருவர் சிக்கியிருக்கிறார். இனி பெண்குட்டியின் கதை....\n16 வயது நிரம்பிய 9ம் வகுப்பு மாணவியை ராஜூ என்ற நடத்துனர் (கண்டக்டர்) கடத்துகிறார்.பின்பு அந்த காமூகனால் பலமுறை சீரக்கப்பட்ட அந்த பெண் உஷா என்ற பெண்ணிடமும்,எஸ்.எஸ்.தர்மராஜன் என்ற வழக்கறிஞராலும் கோட்டையம், வண்டிபெரியாறு, கம்பம்,தேனி, குமுளி என ஊர்.. ஊராக அழைத்துச்செல்லப்பட்டு 42 நாட்கள் 40 பேரின் ஆசைக்கு பலிகொடுக்கப்படுகிறார். பின்னர் கொஞ்சம் பணம் கொடுத்து கொலை மிரட்டலுக்கு பின்பு விடுவிக்கப்படுகிறார். தனக்கு நேர்நத கொடுமைக்கு போலீஸில் புகார் கொடுக்கிறார் அந்தபெண்.. அவளை சீரழித்தவர்கள் எல்லாம் பெரிய இடத்து மனிதர்கள், ஒரு எப்.ஐ.ஆர் கூட போடபடவில்லை. பின்பு மிகப்பெரிய போராட்டத்திற்கு பிறகு 3வருடங்களுக்கு பிறகு(1999) ல் வழக்கு பதியப்பட்டது. 2000ல் வழக்கு நடைபெற்றது. ஆனால் 2003 வரை நடைபெற்ற வழக்கில் ''இது விபசாரம் பாலியியல் பலத்காரம் அல்ல'' என தீர்ப்பளித்து இந்த வழக்கில் சம்பந்தபட்ட அனைவரையும் நீதிமன்றம் விடுதலை செய்தது. இதில் கொடுமை என்னவென்றால் கற்பழிப்பு வழக்கில் சம்பந்தபட்டவர்களில் காங்கிரஸ் எம்.பி. குரியனும் ஒருவர், அவர் நீதிமன்றத்திற்கு வரமலேயே விடுதலை செய்யப்பட்டார்.\nஇதற்கிடையில் பாதிக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு பல தொந்தரவுகள்,அந்த பெண் பார்த்துவந்த வேலைக்கு இடைஞ்சல் என தொடர் தாக்குதலை தாக்கு பிடித்து மேல்முறையீடு செய்த, அந்த பெண்ணுக்கு டெல்லி மாணவி சம்பவத்திற்கு பிறகு சூரியநெல்லி விரகாரமும் மீடியாவின் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சம்பந்தபட்ட எம்.பி.குரியன் தற்போது இந்திய நாடளுமன்ற கீழ் அவையின் தலைமை பொறுப்பில் இருக்கிறார். அதுவும் பெணகள் பாதுகாப்பு தொடர்பான மசோதா நிறைவேற்றபடவுள்ள நேரத்தில் .... என்ன கொடுமை சார் இது கேரளவில் இந்த வழக்கை சூரியநெல்லி பெண்குட்டி வழக்கு என்று சொல்கிறார்கள்... சூரியநெல்லிக்கு சரியான தீப்பு கிடைக்குமா கேரளவில் இந்த வழக்கை சூரியநெல்லி பெண்குட்டி வழக்கு என்று சொல்கிறார்கள்... சூரியநெல்லிக்கு சரியான தீப்பு கிடைக்குமா\nஉங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்\nஅரசியல் செய்தி விமர்சனம் நிகழ்வு\nதிண்டுக்கல் தனபாலன் இவ்வாறு கூறியுள்ளார்…\nசரியான தீப்பு வேண்டாம்... சரியான தீர்ப்பு கிடைக்கட்டும்...\n1 மார்ச், 2013 ’அன்று’ முற்பகல் 10:37\n1 மார்ச், 2013 ’அன்று’ பிற்பகல் 12:31\n1 மார்ச், 2013 ’அன்று’ பிற்பகல் 10:48\n17 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 4:34\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\nராஜராஜ சோழன் எந்த சாதிக்காரன்\nமன்னர் ராஜராஜ சோழன் எங்க சாதிகாரன்..இல்ல..இல்ல எங்க சாதிக்காரன் என குத்துவெட்டு நடந்து கொண்டிருக்கிறது. பசும்பொன் முத்துராமலிங்கம், கட்டபொம்மன், வ.உ.சிதம்பரம் போன்ற சுதந்திர போராட்ட வீரர்களை சாதித்தலைவர்களாக மாற்றிவிட்டார்கள் சாதி வெறியர்கள். இப்போது 1000 ஆண்டுகளுக்கு முந்தைய மன்னர்களையும் இவர்கள் விடுவதாக இல்லை\nதஞ்சையில் கடந்த 10, 11 தேதிகளில் ராஜராஜசோழனின் 1028வது சதய விழா (பிறந்த நாள்)அரசு விழாவாக மிக கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. 11ந் தேதி மாவட்ட ஆட்சியர் தலைமையில் சதய விழாக்குழுவினர் ஊர் வலமாக வந்து பெரிய கோவில் அருகிலுள்ள ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதற்கு பின்பு இதுவரை இல்லாத மிகவும் கேலிக்கூத்தான நிகழ்ச்சிகள் நடந்தேறின.\nஇலங்கை கதிர்காமம் முருகன் கோவில் போல் மதுரை புளியம்பட்டியில் ஒரு கோயில்\nஎம்.ஜி.ஆர்.,எஸ்.எஸ்.ஆர்.,உள்ளிட்ட நாடகக்கலை உலகின் பிரபலமானஜாம்பவான்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்த மதுரை ஸ்ரீ பரமானந்தா ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியின் நிறுவனரான நாடகச்செல்வர் பி.கா.சுப்பாரெட்டியாரால் இலங்கை கண்டி கதிர்காமத்திலுள்ள முருகன் கோவில் போல் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி.கல்லுப்பட்டி பகுதி புளியம்பட்டி கிராமத்தில் கட்டப்பட்டுள்ள ஸ்ரீ கதிரேசப்பெருமான் கோவிலில் நடைபெறும் ஆடிப்பவுர்ணமி நாளன்று பூஜையில் கலந்து கொண்டு வழிபட்டால் ஆயுசு பெருகும் அதிசயங்கள் நடக்கும் என்று பக்தகோடி பெருமக்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி.கல்லுப்பட்டி பகுதியில் புளியம்பட்டி எனும் சின்னஞ்சிறிய கிராமம் உள்ளது.இந்த கிராமத்தில் கடந்த 1890-ம் ஆண்டு ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்து பிற்காலத்தில் நாடக உலகத்தையே தன்னோக்கி பார்க்க வைத்தவர் பி.கா.சுப்பா ரெட்டியார்.கல்வி கற்றிடாத கிராமவாசியான இவருக்கு நாடகத்துறையின் மீது ஏற்பட்ட அளவுகடந்த பற்றின் காரணமாக 1925-ம் ஆண்டு சில குழந்தைகளை தன்னகத்தே சேர்த்துக் கொண்டு ஓர் நாடகக் கம்பெனியை புளியமாநகரில் நிறுவினார்.பின்னர் ஸ்ரீலஸ்ரீ மஹா…\nடி.கல்லுப்பட்டி அருகே முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் பிராமி எழுத்துக்கள் கண்டுபிடிப்பு\nமதுரை மாவட்டம்,பேரையூர் தாலுகா, டி.கல்லுப்பட்டி அருகேயுள்ள கவசக்கோட்டை கிராமத்தில் தமிழரின் தொன்மை சிறப்புகளை கண்டறியும் நோக்கில் பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் முதல் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறித்த கருப்பு சிவப்பு வண்ணமுடைய பானை ஓடுகள்,எலும்பு துண்டுகள்,முதுமக்கள் தாழி,தானிய களஞ்சியம்,குறியீடுடைய உடைந்த மண்கலயம் போன்றவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nமதுரை மாவட்டம் பேரையூர் தாலுகாவில் பண்டைகாலத்து தமிழர்களின் வாழ்க்கைமுறை தொடர்பான பல்வேறு சான்றுகள் இன்றளவும் அழிந்திடாமல் உள்ளது.இந்நிலையில் தமிழரின் தொன்மையை கண்டறியும் நோக்கில் பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் ஆய்வாளர்களான\nமுனைவர்கள்.சி.மாணிக்கராஜ்,சி.செல்லப்பாண்டியன்,து.முனீஸ்வரன்,மு.கனகராஜ்,மு.லட்சுமணமூர்த்தி ஆகியோரை கொண்ட ஆய்வுக்குழு பேரையூர் தாலுகா டி.கல்லுப்பட்டி அருகேயுள்ள கவசக்கோட்டை கிராமத்தில் கள ஆய்வு மேற்கொண்டது.அப்போது கவசக்கோட்டை கிராமத்திலுள்ள அக்ரஹாரமேடு,பண்ணைமேடு ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட களஆய்வின்போது உடைந்த நிலையில் பெருங்கற்காலத்தைச் சார்ந்த …\nஅஜித்தின் விவேக மற்ற படம்...\nஅஜித்துக்கு நடிப்பு வராது...ஒரே மாதிரியான உடல் மொழி,பேச்சு,நடிப்பு சலிப்பு தட்ட கூடியது.இதிலும் அப்படித்தான். படம் முழுக்கவே இரைச்சல் .துவங்கியதிலிருந்தே துப்பாக்கி சத்தமும், கார்களின் மோதல், பறக்கும் கார்களின் காட்சிகள் இதுதான் படம் முழுக்கவே.நம்ப முடியாத கதை காட்சிகள்.இயக்குனர் தெலுங்கு பட இயக்குனர் போல தூக்கலான ஹீரோயிசம்,தத்துவங்கள் கொட்டும் பஞ்ச் டயலாக்.வில்லுனுக்கு வேலையே வஞ்ச புகழ்ச்சி அணியில் ஹீரோவை புகழ்வது தான்.\nபடம் சகிக்கல...இயக்குனர் ஒரு பேட்டியில் சொன்னார் அஜித் இன்டர்னேஷனல் ஸ்டார் ஆகிட்டார் .வெளிநாட்டில் படம் எடுத்தால் இன்டர்நேசனல் ஸ்டாரா.கொடும..கொடும...\nகதை சுருக்கம் சொல்கிறேன்...நம்ப முடிகிறதா என பாருங்கள் . அதற்கு மேல் படம் பார்த்து மாட்டிக்கொண்டால் நான் பொறுப்பல்ல.\nநீங்கள் வந்தீர்கள்;விசிட்டிங் கார்டு தருவது போல் பொக்கேயை வைத்தீர்கள்.ஓ.பி.எஸ்ஸைக் கட்டிப் பிடித்து கண்ணீரைத் துடைத்து விட்டீர்கள். சசிகலாவிற்கு ஆறுதல் சொன்னீர்கள்.கணேசன் உங்களுக்கு நடராஜரை அறிமுகப்படுத்தினார்.பிறகு, உங்களின் போன ஜென்மத்து சொந்தமான கேமராக்காரர்களை நோக்கி கைகளை ஆட்டினீர்கள்.எங்கள் MLA க்களெல்லாம் உங்களோடு கை குலுக்க குழந்தையைப் போல் ஓடி வந்தார்கள். சிக்கியவர்களோடு செல்ஃபியும் எடுத்துக் கொண்டீர்கள்.தேர்தல் முடிவு வந்ததைப் போல் பெருமிதத்தோடு கும்பிடு போட்டீர்கள். உங்கள் வித்தைகளின் அனா ஆவன்னாவைக் கூட அறிந்திராத ஓ.பி.எஸ் ஐ பக்கத்தில் நிற்க வைத்து போஸ் கொடுத்தீர்கள்.எங்களின் இப்போதைய முதலமைச்சர் உங்கள் பின்னால் ஒரு டிரைவரைப் போல் ஓடி வந்தார். கம்பெனி ஊழியரைப் போல் கருதி அவர் முதுகில் தட்டி விட்டு புறப்பட்டு விட்டீர்கள். ஏற்கனவே நிகழ்ந்து முடிந்த நாடகத்தின் இன்னொரு அத்தியாயம் இது என்பதைச் சொல்லாமல் சொல்லியிருக்கிறீர்கள் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://muruganandan.wordpress.com/2017/03/18/baked-salmon/", "date_download": "2018-04-26T13:45:32Z", "digest": "sha1:MXBNI7ICTD3GVNHRCPLWQ3EJEBEASMXD", "length": 3951, "nlines": 80, "source_domain": "muruganandan.wordpress.com", "title": "Baked Salmon | Our World -", "raw_content": "\nமின்னடுப்பில் சுட்ட மீன் (Baked Salmon)\nதேவையான பொருட்கள் : சால்மன் மீன் – 600 கிராம்\nசெய்முறை: ஒரு 11 மணிக்கு, கழுத்தில் துண்டைக்(Apron) கட்டிக்கிட்டு , கையில் கத்தியை எடுத்தேன்.\nபுயல் வேகத்தில் கயல்விழியாள் வந்தாள். ஒரு முறை முறைத்து “என்னா சமைக்கப்போறீங்க\nஇன்னும் பெரிய கத்தியை கையில் எடுத்துக்கொண்டு “போ, போ, பனிரெண்டு மணிக்கு சாப்பாடு வரும்” என்று மிரட்டினாள்.\nநான் “எதாவது உதவி” என்று பணிவாக கேட்டேன்.\n“வெளிலே மூணு அடிக்கு ஸ்னோ கொட்டிக்கிடக்கு” போய் கிளீன் பண்ணுங்க என்றாள்.\nநம்மால் எதற்கு மூன்றாம் உலகப்போர் என்ற நல்லெண்ணத்தில் கத்தியை கீழே வைத்துவிட்டு பின்வாங்கினேன்.\nநான் திரும்பி வருவதற்குள் மதிய உணவு தயார். மீனை மேலே சொன்ன பொருட்களுடன் ஊறவைத்து, அவனில் (Electric Convection Oven) 375 degree Fல்\n1/2 மணி நேரம் bake செய்து எடுத்து, அவுச்ச (broccoli) புரோகலியுடன் அனுபவிச்சு சாப்பிட்டேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} {"url": "https://www.jeyamohan.in/1071", "date_download": "2018-04-26T13:18:47Z", "digest": "sha1:NG26BPKXKYDFQWWYOSEE4BAQLRDCQUHS", "length": 38651, "nlines": 139, "source_domain": "www.jeyamohan.in", "title": "முடிவற்ற அறிதல்:பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு எளிய விளக்கம் 3", "raw_content": "\nமுடிவற்ற அறிதல்:பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு எளிய விளக்கம் 3\nப்ரமாண விபர்யாய விகல்ப நித்ரா ஸ்ம்ருதய:\n[ அவையாவன, யதார்த்தம், பொய்யறிவு, திரிபு , துயில்நிலை , நினைவுகூர்தல் ]\nமனச்செயல்பாடுகளை ஆறுவகையாக பிரித்துப் பார்க்கின்றது யோகம். இங்கே பிரமாணம் என்ற சொல் வகுத்து அறியப்பட்டது என்ற பொருளில் பயன்படுத்தப்படுகிறது. புலன்களாலும் தர்க்கத்தாலும் நாம் அறியக்கூடிய அனைத்துமே பிரமாணம் என்பதில் அடங்கும். யதார்த்த அறிவு என்று இதை சொல்லலாம்.\nஇது சிறகுகள்கொண்டிருக்கிறது வானில் பறக்கிறது ஆகவே இது பறவை . இது சிறியதாக உள்ளது, சிறகுகள் நீலச்சாம்பல் நிறம். நீலச்சாம்பல் நிறமுள்ள சிறகுகள் கொண்ட சிறிய பறவை மைனா எனப்படும். ஆகவே இது மைனா. இவ்வாறு நாம் கண்டு கேட்டு யோசித்து அறிகிற செயல்பாடுதான் பிரமாணம். இது நம்மில் இடையறாது நடந்து கொண்டிருக்கிற மனச்செயல்பாடு .\nஅறிதல் நிகழும்போதே கூடவே அறிதல்பிழைகளும் நிகழ்கின்றன. அப்பறவை இரைதேடுவதாக நாம் நினைப்போம், அது கூடுகட்ட சுள்ளிதேடிக் கொண்டிருக்கலாம். இதை பொய்யறிவு என்று யோகம் வகுக்கிறது. யோகத்தின் நிர்ணயப்படி அறிதலுடன் சேர்ந்தே பொய்யறிதலும் நிகழ்கிறது. அறிவின் அடியிலேயே பொய்யறிவும் குடிகொள்கிறது. விளக்குடன் நிழலும் வருவதுபோல எந்த அறிவும் அதனுடன் தொடர்புள்ள ஓர் அறியமையையும் நமக்கு அளிக்கிறது.\nசட்டென்று கேட்டால் இது வியப்பு தரலாம், யோசித்துப் பார்த்தால் எத்தனை பெரிய உண்மை இது என நமக்கு தெரியும் . ஓர் அறிதல் இன்னொரு முக்கியமான அறிதலை மறைத்துவிடலாம். அறிவியல் ஞானம் கவித்துவ நுண்ணுணர்வை அழுத்திவிடக்கூடும் அல்லவா ஓர் உண்மை அதன் தீவிரம் மற்றும் நுட்பம் காரணமாகவே அதன் மறுபக்கத்தை நமக்குத்தெரியாமல் செய்துவிடக்கூடும் . ஒருமகத்தான விஷயத்தை நாம் அறிந்ததுமே நம் மனம் அடையும்பரவசம் இன்னொரு விஷயத்தைக் காணமுடியாதவர்களாக ஆக்கிவிடலாம்.ஆகவேதான் அறிதல்கள் அனைத்தையும் ஐயப்படவேண்டும் , அவை முழுமையானவை என்று நம்பிவிடக்கூடாது என்று சொல்லப்படுகிறது.\nஅறிதல் அறியாமை இரண்டும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். ஓர் அறிதல் நமக்கு அறியாமையை அளிக்கக் கூடும். அது நம் அறியாமையை நமக்கு காட்டலாம். அதேபோல அறியாமை என்பது ஒருஅறிதலே . எனக்கு மேற்கத்திய இசை தெரியாது என நான் தெரிந்துகொள்ளுவதையே நான் அறியாமை என்கிறேன் இல்லையா பூமிக்கு அப்பால் இப்பிரபஞ்ச வெளியில் நாம் அறியாத , அதாவது நாம் அறியவில்லை என்று கூட அறியாத , பலகோடி விஷயங்கள் உள்ளன. அவற்றை நாம் நம் அறியாமையில் சேர்ப்பதில்லையே. நாராயணகுருவின் ‘அறிவு’ என்ற சிறு தத்துவ நூல் இதை விளக்குகிறது. யோகமரபின்படி அறிவு அறியாமை இரண்டுமே இருவகை அறிதல்கள்தான். அவை பிரிக்கமுடியாதவை\nஅறிந்தவை நம் மனதில் கொள்ளும் மாறுதல்கள், அதாவது திரிபுகள் அடுத்த மனசெயல்பாடு. நாம் அறிபவை எல்லாமே நமக்குள் வந்த உடனேயே ஒரு மாறுதலை அடைந்துவிடுபதை நாம் அவதானித்திருப்போம். ஒரே விஷயத்தை ஒன்பது பேர் பார்த்து தங்கள் மனப்பதிவை எழுதினால் ஒன்பதுவகை சித்திரம் நமக்கு கிடைப்பது இதனால்தான். நாம் அறிந்த அறிவு உடனடியாக ‘நம்முடைய’ அறிவாக ஆகிவிடுகிறது. பாத்திரத்துக்கு ஏற்ப மாறும் நீர்போல.\nமைனாவைப் பார்த்ததுமே ஒருவர் ‘மைனாவை சாப்பிட முடியாது, காடையை சாப்பிடலாம்’ என்று அந்த புரிதலை உருமாற்றிக் கொள்ளலாம். இன்னொருவருக்கு எப்படியோ அது ‘பேனா ‘வுடன் தொடர்பு கொண்டு விடலாம் . இன்னொருவர் ‘மை’ [My] என்ற சொல்லுடன் அப்பறவையை தொடர்புபடுத்தி வைத்திருக்கலாம் . இன்னொருவருக்கு ஒரு சிறுவயது நினைவு வரலாம். நாம் அறிபவை எல்லாமே நமக்குமட்டுமே உரிய சொந்த அறிதல்களாக உடனடியாக மாறிவிடுகின்றன. மூவர் சேர்ந்து பார்த்த ஒரு மைனாவை பற்றி பேசினால் அவர்கள் ஒருவரோடொருவர் விவாதிக்கவே முடியும் நம் மன இயக்கத்தில் மிக முக்கியமான ஒன்று இந்த திரிபுநிலை.\nமேற்குறிப்பிட்ட மூன்றுவகையான மன இயக்கங்களும் அடங்கி நாம் அடையும் ஆழ்ந்த நிலைதான் துயில்நிலை. இங்கே நித்ர என்ற வடமொழிச்சொல்லை தோராயமாகவே துயில் என்று மொழியாக்கம் செய்திருக்கிறேன். அது யோக மரபில் மிக ஆழமான பொருள் கொண்ட கலைச்சொல் . புத்தரின் யோக நித்திரை பற்றி நாம் கேட்டிருப்போம். விஷ்ணுவின் நித்திரைநிலை மகாயோகம் எனப்படுகிறது. யோக மரபுகளில் துயில் என்றால் ஓர் உடல் சார்ந்த நிலை அல்ல.\nஇப்படி விளக்குகிறேன். மரம் விதை நிலையில் உள்ளது. உலர்ந்த விதைமீது நீர் படாமலிருந்தால் அதற்குள் உள்ள மாபெரும் மரம் பலநூறு ஆண்டுகள் தூங்கக்கூடும். விதைக்குள் மரம் ஒரு நுண்வடிவில் , கரு வடிவில் உள்ளது. அதேபோல மனம் என்று நாம் சொல்லும் அத்தனை பேரியக்கங்களும் நமக்குள் கரு வடிவில் இருந்து பிறகு முளைத்து வளர்ந்து காடாக மாறி நிறைந்தவைதாம். துயில்நிலையின்போது அவை திரும்ப கருவடிவுக்கு சென்றுவிடுகின்றன . இதுதான் யோக மரபின் துயில் என்னும் உருவகம்.\nஆகவேதான் தூங்கும் புத்தர், தூங்கும் விஷ்ணு போன்ற சிலைகளுக்கு முக்கியமான குறியீட்டுப் பொருள் உள்ளது. விஷ்ணு பிரபஞ்சமே தன் உடலாக கொண்டவர். விஷ்ணுவின் மகாயோக நிலையில் காலம் கருவடிவில் உள்ளது . பிரபஞ்சங்களும் கருவடிவில்தான் உள்ளன. அதாவது சிருஷ்டிக்கு முந்தைய நிலை அது. புத்தரின் உடலை பிரபஞ்ச நியதியின் , மகாதர்மத்தின் வடிவமாக கொள்வது பௌத்த மெய்யியல் மரபு. அதை அவர்கள் தர்மகாயம் என்கிறார்கள் .யோகாசார பௌத்த மரபின்படி யோகநித்திரையில் உள்ள புத்தர் மகாதர்மம் தன் முடிவற்ற இயக்கத்தை கருவடிவில் மட்டுமே நிகழ்த்தும் நிலையை குறிக்கிறார்.\nஆகவே நம் மன இயக்கமானது அதன் அலைகளை. கிளைபரப்பலை நிறுத்தி உள்ளே சென்று கருவடிவில் இயங்கும் நிலையே துயில்நிலை. துயில்நிலையிலும் மனம் செயல்பட்டபடியேதான் உள்ளது. நம் மன இயக்கத்தின் முக்கியமான ஒரு சரடுதான் அது. விழிப்பின் நாம் பார்த்த மைனா அதன் பல்வேறு சாத்தியங்களுடன் நம் மனதில் உள்ளது. இடைவிடாது வளர்ந்து மாறியபடியே இருக்கும் ஒன்றாகவே நாம் நம் விழிப்பில் மைனாவை உணர்ந்திருப்போம். மைனா ஒரு தகவலாக, ஒரு படமாக, ஒரு குறியீடாக, ஒரு ஒலியாக நம் மனதில் மாறி மாறி தெரியும். மைனா நம் ஆழ்மனதில் அதன் கருவடிவில் இறங்குவது துயிலில் தான். மைனா ஒரு கருத்தாக சுருக்கப்பட்டுவிடுகிறது. அதாவது சாராம்சப்படுத்தப்பட்டுவிடுகிறது. நம் விழிப்புநிலையில் எந்த மையப்புள்ளியில் இருந்து மைனாவைப்பற்றிய பலவகையான மனச்சித்திரங்களும் எண்ணங்களும் பிறந்து விரிகின்றனவோ அந்த மையப்புள்ளி மட்டுமே எஞ்சும் நிலை அது.\nஅதற்கடுத்த நிலை என்று நினைவுகூர்தல் நிலை சொல்லப்படுகிறது . நாம் அறிந்தவற்றை நினைவுகூர்வது இல்லை. மாறாக நம் மனதில் சாராம்சப்படுத்தி வைத்துள்ளவற்றையே நினைவுகூர்கிறோம் என்று நமக்குத்தெரியும். மைனாவை நினைவுகூரும்போது உடனே நாம் அப்போது அருகே இருந்த குளத்தில் விழுந்த தன் நிழலையும் சேர்த்தே நினைவுகூரலாம். மைனாவும் நம் பள்ளிப்பருவமும் சேர்ந்தே நினைவுக்கு வரலாம். அல்லது நம்மால் தர்க்கபூர்வமாக வகுத்துக் கொள்ள முடியாதபடி சம்பந்தமில்லாத பற்பல படங்களை, உணர்வெழுச்சிகளை மைனாவின் நினைவு நம்மில் கிளர்த்தலாம்.உள்ளே போகும்போது புறவுலகு சார்ந்த ஓர் அறிதலாக இருந்த மைனா வெளியேவரும்போது அகம்சார்ந்த ஒரு அடையாளமாக மாறிவிட்டிருக்கிறது. பறவையாக உள்ளே போய் படிமமாக மீண்டுவருகிறது\nஆக பதஞ்சலி மன இயக்கம் என்று சொல்லும்போது புறவுலகம் நம் மனதுக்குள் சென்று உருமாறி நம்முடைய அகத்தின் ஒரு துளியாக மாறி மீண்டு வருவது வரையிலான ஒரு சுழற்சியையே ஐந்துபடிகளாக சொல்லிவிடுகிறார். இதன் விரிவாக்கத்தை மீண்டும் காணலாம்.\n[நேர்க்காட்சி , ஊகம், முன்னறிவு என பிரமாணங்கள் மூன்று]\nபிரமாணம் என பதஞ்சலி சொல்லும் புறவய அறிதல் மூன்றுவகை.\nபிரத் + அக்ஷ [ அக்ஷம்-கண்] என்ற சொற்சேர்க்கையின் சரியான பொருள் கண்முன் என்பதே. புலனறிவு என்று இதை வகுக்கலாம். கண்டுகேட்டு உண்டு உயிர்த்து தொட்டு அறியும் அறிவுதான் பிரத்யட்சம் . இது என்ன என்றவினாவுக்கு நம் புலன்கள் அளிக்கும் விடை அது.\nஆனால் நம் புலனறிதல்கள் துண்டுபட்டவை. மைனாவை மென்மை, இனிய ஒலி , அழகிய நிறம் என்ற மூன்று தனி அறிதல்களாக நாம் உள்வாங்கிக் கொள்கிறோம். அம்மூன்றையும் ஓர் அறிதலாக மாற்றிக் கொள்ளவேண்டியுள்ளது . அதை அனுமானம் அல்லது ஊகம் என்று சொல்கிறார். இடைவெளியில்லாது நம் அகம் நம் புலனறிதல்களைத் தொகுத்து ஊகங்களாக மாற்றியபடியே இருக்கிறது .\nஇவ்வாறு நாம் ஊகங்களை நிகழ்த்துகையில் அதற்கு அடித்தளமாக இருப்பது நமது முன்னறிவு ஆகும். ஒரு புதிய அறிதலை அதற்கு முன்பே நாம் அறிந்த அனைத்து அறிதல்களையும் பயன்படுத்தித்தான் நாம் அடைகிறோம். அறிதல் என்பது தொடர்ச்சியாக நடந்துகொண்டிருக்கும் ஒரு செயல்பாடு. பறவையைப்பற்றி நாம் அறிந்த அனைத்துமே ஒரு மைனாவை நாம் அறிவதற்கு உதவுகின்றன .\nமுன்னறிவே இல்லாமல் அறிதல் நிகழ முடியுமா என்ற வினா பொதுவாக எல்லா அமர்வுகளிலும் எழுப்பப் படுகிறது. சிறிய குழந்தை முதன்முதலில் அறியக்கூடிய ஒரே ஒரு அறிதலை வேண்டுமானால் அப்படி சொல்லலாம் என்பது நமக்கு உடனே தோன்றுகிறது. முதன் முதலில் மைனாவைப் பார்க்கும் குழந்தை உடனே கையை நீட்டி அதை ‘ க்கா ‘ என்று தானறிந்த முன்னறிவுடன் சம்பந்தப்படுத்திவிடும். முதன்முதலில் காக்காவைப்பார்த்ததும் அதை தன் துணியாக எண்ணி ‘த்து’ என்று சொல்லக் கூடும். முதலில் துணியைப்பார்த்ததும் அம்மாவின் உடையாக எண்ணி ‘ம்மா’ என்று சொல்லலாம். முதலில் அம்மாவைப் பார்த்ததும் அது முலைக்கண்ணை சுவைப்பது பற்றிய முன்னறிவுடன் தொடர்பு படுத்தி சுவைக்கும் ஒலியை ‘ ம்ம்ம் ‘ என எழுப்புகிறது. துள்ளுகிறது. ஆனால் முலைக்கண் \nயோசியுங்கள். முலைக்கண்ணைபற்றிய அறிதலுடன்தானே அது பிறக்கிறது பிறந்த மறுகணமே அதனால் முலையை சப்ப முடியும். முன்னறிவு என்பது இங்கே அடையப்பெற்றது அல்ல. அது கொண்டுவரப்படுவது. உயிரியல்பின் ஒரு பகுதி. ஆகவேதான் ஆகமா என்றார் பதஞ்சலி. [கமனம் என்றால் வருதல். ஆகமம் என்றால் வந்தது ] முன்னறிவு ஒருவனில் இயல்பாக உள்ளது.\nமுக்கியமான ஓர் அறிதல் இது. நமது அறிதல்களின் சாத்தியங்கள் அவற்றின் எல்லைகள் இரண்டையுமே இது காட்டுகிறது. நாம் நமது அடிப்படை உள்ளுணர்வுகள் பலவற்றுடன்தான் பிறந்திருக்கிறோம். அவற்றை அடித்தளமாகக் கொண்டுதான் நமது எல்லா அறிதல்களும் நிகழ்ந்துகொண்டுள்ளன. அவற்றின் எல்லைகளை நாம் மீறிப்போகவே முடியாது.\nஎப்படியெல்லாம் மேகங்களில் மிதந்தும் காற்றுகளில் அலைந்தும் சிந்தித்தாலும் நமது சிந்தனை என்ற பட்டத்தின் நூல் கீழே முன்னறிவு என்ற நூல்பிடியில்தான் உள்ளது. அந்நூல்கண்டு நமது அடிப்படையான மிருக நினைவுகளாக இருக்கலாம். அல்லது நமது இன ,கலாச்சார நினைவுகளாக இருக்கலாம்.\nஇங்கே தத்துவ மாணவர்களுக்குச் சொல்ல ஒரு முக்கியமான விஷயம் உள்ளது. பதஞ்சலி ஆகம என்று சொல்லும் சொல் நம் மரபிலே பலவாக விளக்கப்பட்டுள்ளது. அதை ‘முன்னோரிடமிருந்து வந்த அறிவு’ என்று கொள்வது வழக்கமான மத உரைகளில் காணப்படுகிறது. வழிபாட்டுமுறைகளை வழிவழியாகப் பெற்று செய்துகொண்டிருக்கும் முறையை பதிவுசெய்த நூல்கள் அகமங்கள் எனப்பட்டன. ஆகவே ஆகமங்கள் என்னும்போது வழிவழியாக வந்த நூல்கள் என்ற பொருளில் நம் மரபில் பயன்படுத்தப்படுகிறது.\nவேறுசில நூல்களில் மூன்று பிரமாணங்களில் மூன்றாவது வருவது ‘சுருதி’ [ பிரத்யட்சம், அனுமானம், சுருதி] என்று சொல்லப்படுகிறது. வேதங்களை ஞானத்தின் அடிப்படைகளாக கருதும் மீமாம்சகர்கள் சுருதி என்றால் வேதமே என்று வகுத்து எல்லா அறிதல்களுக்கும் வேதங்களே அடிப்படை என்று விளக்க முற்படுகிறார்கள். சாதாரணமாக இன்றைய இந்துமதச் சொற்பொழிவுகளை கேட்பவர்கள் இவ்விளக்கத்தையே கேட்டிருப்பார்கள்.\nஅதேபோல வைதிகர்கள் வேதங்களை சொல்லும்போது மற்றவர்கள் தங்கள் மூலநூல்களை அவ்விடத்தில் வைப்பார்கள். அறிதல் எப்போதுமே முன்னோர்வகுத்த சாத்திரங்களை மீறக் கூடாது, மீற முடியாது என இவர்கள் சொல்வார்கள். பதஞ்சலி யோகசூத்திரம் என்ற மூலநூலில் இத்தகைய வரையறை இல்லை என்பதை வாசகர் காணலாம்.\nநாராயண குரு நடராஜ குரு நித்ய சைதன்ய யதி என மூன்று ஆசிரியர்களுமே மாஅகம என்பதை முன்னோர் அறிவு என்ற விளக்கத்தை ஏற்றுக் கொண்டவர்கள் அல்ல. மதம்சார்ந்து அளிக்கப்பட்ட வாசிப்புகளாக மட்டுமே அவற்றை அவர்கள் காண்கிறார்கள். அவற்றை ‘முன்னறிவு’ என்றே அவர்கள் கொள்கிறார்கள். அதாவது கருவிலேயே மனிதனுக்குள் உருவாகிவிடும் அறிவு. எல்லா உயிரினங்களிடமும் பிறப்பிலேயே வந்துவிடும் அடிப்ப்டை அறிவ்ய்.\nமூலநூல்[Canon] என்று எதுவும் பொதுவாக இந்துமெய்ஞான மரபில் இல்லை. மீமாம்சகர்கள் வேதங்களை மாற்றமில்லா மூலநூல்களாக கொள்வார்கள். அது மட்டுமே இந்து ஞானமரபில் உள்ள மூலநூல்வாதம். மற்ற தரிசனங்களைப் பொறுத்தவரை மூலநூல்கள் என்பவை தத்துவ நூல்களே. அதாவது ஏற்று ஒழுகவேண்டியவை அல்ல, கற்று ,பயின்றுவிவாதித்து தெளியவேண்டியவை .ஆகவே முன்னறிவை மூலநூல் என்றோ மூத்தோர் சொல் என்றோ விளக்க இந்துமெய்ஞான மரபில் இடமில்லை என்பதே உண்மையாகும். பிற்கால பக்திமரபுதான் அப்படிப்பட்ட் விளக்கத்தை அடைந்திருக்கிறது. யோகமாணவன் அதை தவிர்த்து முன்னகர்வதே முறை.\nமுடிவற்ற அறிதல்:பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு எளிய விளக்கம் 2\nமுடிவற்ற அறிதல்:பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு எளிய விளக்கம்\nமுடிவற்ற அறிதல்:பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு ஒரு முன்னுரை,தொடர்ச்சி\nபதஞ்சலி யோகம்: ஒரு கடிதம்\nமுடிவற்ற அறிதல்:பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு ஒரு முன்னுரை\nநாராயண குரு எனும் இயக்கம்-2\nநாராயண குரு எனும் இயக்கம் -1\n3. நான் பிரம்மத்தை நிராகரிக்காமலிருப்பேனாக\nவேதாந்த மரபும் இலக்கியப் போக்குகளும்\nமுடிவற்ற அறிதல்:பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு எளிய விளக்கம் 2\nமுடிவற்ற அறிதல்:பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு எளிய விளக்கம்\nமுடிவற்ற அறிதல்:பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு எளிய விளக்கம்\nமுடிவற்ற அறிதல்:பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு ஒரு முன்னுரை\nஅஞ்ஞானமும் ஒளிச்சுடரும் (இந்து ஞானமரபில் ஆறு தரிசனங்கள் – ஜெயமோகனுடைய கட்டுரைநூல் அறிமுகம் )\nகடவுள், மதம், குழந்தைகள் : ஒரு வினா\n1. உங்கள் உள்ளங்கள் ஒன்றாகுக\nTags: ஆன்மீகம், தத்துவம், மதம்\nஇந்த பதஞ்சலி யோகா சூத்திரத்திற்கு எளிய விளக்கம் புத்தகமாக வந்துள்ளதா அவ்வாறெனில் எந்த பதிப்பகத்தில் கிடைக்கும்\nசூரியதிசைப் பயணம் - 2\nகுருநித்யா காவியமுகாம் , ஊட்டி 2017\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 82\nவெண்முரசு கலந்துரையாடல் ( சென்னை )\nவைரஸ் எச்சரிக்கை – சரிசெய்யப்பட்டது\nகுமரகுருபரன்- விஷ்ணுபுரம் விருதுவிழா கடிதங்கள்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://chennaicity.info/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-04-26T13:25:31Z", "digest": "sha1:ILHEQD57APUBQ7NO5V3YTKXU6SQV26GO", "length": 9980, "nlines": 150, "source_domain": "chennaicity.info", "title": "வீடியோ – சிறு கண் அசைவால் இணையத்தை கலக்கும் ப்ரியா வாரியர் | Chennai City Info - 8122-044-044", "raw_content": "\nபாலியல் வன்கொடுமையில் ஆண் குழந்தைகள் பாதிக்கப்பட்டாலும் மரண தண்டனை அளிக்க வேண்டும்: மேனகா காந்தி ஆதரவு\nவிமானத்தில் ரூ2.6 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்\nHome news cine news வீடியோ – சிறு கண் அசைவால் இணையத்தை கலக்கும் ப்ரியா வாரியர்\nவீடியோ – சிறு கண் அசைவால் இணையத்தை கலக்கும் ப்ரியா வாரியர்\nவீடியோ – சிறு கண் அசைவால் இணையத்தை கலக்கும் ப்ரியா வாரியர்சமீப காலமாகவே கேரள படங்களுக்கும், பாடல்களுக்கு தமிழ் சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் ப்ரேமம் மலர் டீச்சர், ஜிமிக்கி கம்மல் ஷெரிலுக்கு பின்னர் தற்போது டிரெண்டாகி வருகிறார் ப்ரியா வாரியர். மலையாளத்தில் `ஹேப்பி வெட்டிங்’, `சங்ஃஸ்’ உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கிய ஒமர் லூலு தற்போது `ஒரு அடாரு லவ்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், காதலர் தினத்தை முன்னிட்டு வீடியோ பாடல் ஒன்றை கடந்த பிப்ரவரி 9-ஆம் தேதி படக்குழு வெளியிட்டுள்ளது. `மாணிக்ய மலராய பூவி’ என தொடங்கும் அந்த பாடலை வினீத் ஸ்ரீனிவாசன் பாடியிருக்கிறார். ஒரு பள்ளியில் நடக்கும் கலை நிகழ்ச்சியின் போது மாணவர்கள் கூடியிருக்கின்றனர். அப்போது, தனது நண்பனை பார்த்து இரு புருவங்களையும் உயர்த்தியபடி பார்க்கும் ப்ரியாவின் பார்வை தான் சமூக வலைதளங்களில் தற்போது ட்ரெண்டாகி வருகிறது. அதுமட்டுமில்லாமல் ப்ரியா வாரியருக்கென தற்போது\nThe post வீடியோ – சிறு கண் அசைவால் இணையத்தை கலக்கும் ப்ரியா வாரியர் appeared first on தமிழில் சினிமா செய்திகள்.\nசமீப காலமாகவே கேரள படங்களுக்கும், பாடல்களுக்கு தமிழ் சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் ப்ரேமம் மலர் டீச்சர், ஜிமிக்கி கம்மல் ஷெரிலுக்கு பின்னர் தற்போது டிரெண்டாகி வருகிறார் ப்ரியா வாரியர். மலையாளத்தில் `ஹேப்பி வெட்டிங்’, `சங்ஃஸ்’ உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கிய ஒமர் லூலு தற்போது `ஒரு அடாரு லவ்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், காதலர் தினத்தை முன்னிட்டு வீடியோ பாடல் ஒன்றை கடந்த பிப்ரவரி 9-ஆம் தேதி படக்குழு வெளியிட்டுள்ளது. `மாணிக்ய மலராய பூவி’ என தொடங்கும் அந்த பாடலை வினீத் ஸ்ரீனிவாசன் பாடியிருக்கிறார். ஒரு பள்ளியில் நடக்கும் கலை நிகழ்ச்சியின் போது மாணவர்கள் கூடியிருக்கின்றனர். அப்போது, தனது நண்பனை பார்த்து இரு புருவங்களையும் உயர்த்தியபடி பார்க்கும் ப்ரியாவின் பார்வை தான் சமூக வலைதளங்களில் தற்போது ட்ரெண்டாகி வருகிறது. அதுமட்டுமில்லாமல் ப்ரியா வாரியருக்கென தற்போது\nThe post வீடியோ – சிறு கண் அசைவால் இணையத்தை கலக்கும் ப்ரியா வாரியர் appeared first on தமிழில் சினிமா செய்திகள்.\nபாலியல் வன்கொடுமையில் ஆண் குழந்தைகள் பாதிக்கப்பட்டாலும் மரண தண்டனை அளிக்க வேண்டும்: மேனகா காந்தி ஆதரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://puthu.thinnai.com/?p=6171", "date_download": "2018-04-26T13:38:12Z", "digest": "sha1:MYVOJSY63Z46ARXS4SDNIWO4CBKGWOOF", "length": 24860, "nlines": 121, "source_domain": "puthu.thinnai.com", "title": "நானும் அசோகமித்திரனும் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nகி.பி. 2000த்துக்கு முன்னால் என் இலக்கிய வாசிப்பு தினத்தந்தி, சிகப்பு நாடா, இந்துநேசன் என்கிற செய்தித் தாள்களிலும், பி.டி. சாமி, சாண்டில்யன் என்கிற நாவல் வாசிப்பிலும் தான் இருந்தது.. இவைகளை இலக்கிய வாசிப்பு என்று யாரேனும் ஒப்புக் கொண்டால்..\nஅடிப்படையில் நான் ஒரு வணிக இதழ் வாசகன். எனக்குத் தெரிந்ததெல்லாம் குமுதம், ஆனந்த விகடன், பின்னாளில் சாவி, குங்குமம் எனலாம். சுஜாதாவை நான் அவ்வண்ணமே அடையாளம் கண்டு கொண்டேன். ஆரம்பத்தில் அவரது எழுத்து கூட எனக்கு ஜேம்ஸ் ஹேட்லி சேஸைத்தான் ஞாபகப்படுத்தியது. பெரிதாக தாக்கம் ஒன்றுமில்லை. ஒரு சர்க்கஸ் கலைஞனைப்போல் அவர் வாசகர்களை இழுக்க கையாண்ட யுக்திகள் எனக்கு அறவே பிடிக்கவில்லை.\nமில்லேன்னியம் ஆண்டில் எனது இளைய சகோதரன், கொஞ்சம் ஜெயகாந்தன், நாஞ்சில் நாடன், வண்ணநிலவன் என்று பேசிக் கொண்டு திரிந்தவன், எனக்கு இலக்கிய சிந்தனை அமைப்புப் பற்றிச் சொன்னான். என்னதான் நடக்குது என்கிற க்யூரியாஸிட்டியில் அங்கே போனேன்.\nஅசோகமித்திரன் என்கிற பெயரை பலரும் உச்சரிக்க அங்குதான் கேட்டேன். ஆகா ஒகோ என்கிற இவரது படைப்புக்களைச் சோதித்துப் பார்க்க வேண்டும் என்று என் உள்மனது வேதாளம் உத்தரவிட்டது.\nபட்டினப்பாக்கம் கிளை நூலகத்தில் அ.மி.யின் சிறுகதைத் தொகுப்பு ஒன்று கிடைத்தது. அதை வாசிக்க ஆரம்பித்தவுடன் அவர் கதைகளின் கிளெடிலாஸ்கோப் தன்மை புலப்பட்டது. கொஞ்சம் மரியாதை வர ஆரம்பித்தது.\n2002ல் சிறகு இதழ் ஆரம்பிக்கப்பட்டு சொற்ப பிரதிகளே அதுவும் கணினி அச்சாக வெளியிட்டபோது பால்நிலவன் முத்துராமன் பற்றி சொன்னார்.\n‘ அடுத்த இதழுக்கு முத்துராமன் கதையைக் கேட்டு வாங்கிடலாம் ‘\n‘ இலக்கியத்துல ஆர்வமுள்ள ஒரு இளைஞர்.. தனியார் கம்பெனியில் வேலை பாக்கறார்.. காந்தியைப் பற்றி ஒரு கதை எழுதி வச்சிருக்கார். கேட்டு வாங்கிடலாம்..’\nஇரண்டாவது இதழிலேயே காந்தி பற்றிய கதையா.. நாம என்ன தேசபக்தி இதழா நடத்துறோம் என்கிற வகையில் எண்ணங்கள் ஓடியது என் உள்மனதில்.. ஆனால் இதுதான் வேண்டும் என்று டிமாண்ட் பண்ணுகிற அளவில் சிறகு அப்போது இல்லை..\nஎல்டாம்ஸ் ரோடில் வானவில் பண்பாட்டு மையம் என்கிற அமைப்பு ஒரு கிருத்துவ கழகத்தின் அரங்கில் நடந்த தேவதேவன் கவிதை வாசித்த ஒரு இலக்கியக் கூட்டத்தில் முத்துராமனைச் சந்தித்தேன். அவர் தன் கதையைப் பற்றி பேசியதை விட அசோகமித்திரனைப் பற்றி பேசியதுதான் அதிகம்.\nசில விசயங்கள் எனக்கு ஆச்சர்யத்தைத் தந்தன. முத்துராமன் அ.மி.யின் சிறுகதைகள் பால் ஈர்க்கப்பட்டு எப்படியோ அவரது தொலைபேசி எண்ணை கண்டுபிடித்து அவருடன் பேசியது, ( அப்போதெல்லாம் அவர் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார்.. இப்போதெல்லாம் அவரைப் பார்க்கக் கூட குடும்பத்தினரின் அனுமதி வேண்டும்), எழுதும் கதையை அவரிடம் படித்துப் பார்க்கச் சொல்லி அனுப்புவது, அவர் சொல்லும் குறைகளை அவர் பாணியிலேயே செப்பனிட்டுத் திருத்துவது, திருத்திய கதையை மீண்டும் அனுப்பி அவர் எந்தப் பத்திரிக்கைக்கு அனுப்பச் சொல்கிறாரோ அதற்கு அனுப்புவது.. அது பிரசுரமும் ஆவது..\n‘ கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார் மேட்டர் மாதிரி இருக்குதே’\nசிரித்தார்.. கதை கொடுத்தார்.. வெளியிட்டேன்.. அது வெளிவந்த இதழைக் கொண்டு போய் கொடுக்க அவர் அலுவலகத்துக்குப் போனேன்.\n‘ அசோகமித்திரன் கதையில ஒரு நக்கல் நையாண்டி இருக்கும்.. அது அவர் பேச்சிலும் உண்டு.. இன்னிக்கு அவரப் பத்தி ஒரு ஆவணப்படம் இருக்கு.. வர்றீங்களா\nபடம் முழுக்க டைட் க்ளோஸப்.. வெறும் அசோகமித்திரன் தான். சுருக்கம் விழுந்த நீண்ட முகம், நீண்ட மூக்கு, அதில் உட்கார்ந்திருக்கும் பழைய மூக்குக் கண்ணாடி.. இவரா இத்தனைக் கதைகளை எழுதியவர்\nஅவரைப் பற்றிய ஆவணப்படத் திரையிடலுக்கு அவரே வருவார் என்று நான் எதிர் பார்க்கவில்லை. பேசினார். சன்னமான குரல்.. கொஞ்சம் கவனம் பிசகினால் வார்த்தைகள் விடுபட்டுப் போகும் நம் செவிகளுக்கு.\nபின்னாளில் பல கூட்டங்களில் அவர் பேசக் கேட்டேன். தமிழ் மட்டுமின்றி ஆங்கிலத்திலும் உரையாற்றக் கூடியவர் என்பதும் ஆங்கிலச் சிறுகதைகள் எழுதி இருக்கிறார் என்பது எனக்குக் கிடைத்த கூடுதல் தகவல்கள்.\nமைலாப்பூர் ரானடே நூலகத்தின் மாடியில் நடைபெற்ற தீம்தரிகிட ஞானியின் வருடாந்திரக் கூட்டத்தில் ஒரு ஓரமாக அமர்ந்திருந்தார் அ.மி. வலுக்கட்டாயமாக நானே அவரருகில் போய் அமர்ந்து கொண்டு பேச்சுக் கொடுத்தேன். சிறகு பற்றிச் சொன்னேன். இதழ் கொடுத்தேன். முகவரி வாங்கிக் கொண்டேன்.\n‘ சிறகுக்கு ஏதாவது எழுதுங்களேன்..’\n‘ என்னை எதுக்கு எழுதச் சொல்றீங்க.. நிறைய எழுதியாச்சு.. உங்க பத்திரிக்கை நீங்க எழுதுங்க, தப்பில்ல..’\nகூட்டம் முடிவதற்கு முன்னரே கிளம்பிவிட்டார்.. எனக்கும் சுவாரஸ்யமில்லை.. அப்போது மா என்கிற பத்மாவுக்கும் எக்குதப்பு கேள்வி கேட்ட ஒரு இளைஞனுக்கும் காரசார விவாதம் நடந்து கொண்டிருந்தது. ஏறக்குறைய குழாயடி ரேஞ்ச். அ.மி.யை பின் தொடர்ந்தேன். எங்கே கிளம்பி விட்டார் எப்படி போவார் வாகனம் இருந்தால் வீட்டை நோக்கி நடையைக் கட்ட வேண்டியதுதான்..\nமனிதர் மெல்ல நடந்து லஸ் கார்னரில் இருக்கும் பேருந்து நிற்குமிடத்திற்கு போய்க் கொண்டிருந்தார். பெரிய எழுத்தாளர், வயதானவர்.. எத்தனை வாசகர்கள், ரசிகர்கள் இருப்பார்கள்.. ஒரு பய கூட இல்லை. பரிதாபமாக இருந்தது. நிகழ்வு அமைப்பாளர் களாவது ஏதாவது ஏற்பாடு செய்ய வேண்டாமோ பாவம் ஞானியைக் குறை சொல்ல முடியாது. அன்றைக்கு அவருக்கு குடும்பச் சிக்கலைத் தீர்க்கவே நேரம் சரியாக இருந்திருக்கும்.\n‘ வணக்கம் சார்.. பஸ்லெயா போறீங்க.. யாரும் துணைக்கு வரலியா\n‘ வாங்க ரவிச்சந்திரன்..( ஆச்சர்யம் பெயர் ஞாபகம் இருக்கிறது) யாரும் வரமாட்டாங்க.. என்னையே போகக்கூடாதுன்னு சொல்வாங்க.. நான் ஞானிக்காக வந்தேன்.. எட்டாயிருத்து.. வேளச்சேரி போகணும்..’\nஅப்போதெல்லாம் வேளச்சேரிக்கு ஒன்றோ இரண்டோ தான் பேருந்துத் தடங்கள். அவர் போக வேண்டிய தடம் எண் வந்தவுடன் கும்பலை ஒதுக்கி வழி ஏற்படுத்தி அவரை பத்திரமாக உள்ளே அனுப்பினேன். குனிந்து கையசைத்தார். நிறைவாக இருந்தது.\nபேருந்துக்காக காத்திருந்த நேரத்தில் நடந்த சம்பாஷணை சுவையானது.\n‘ எங்கே வேலை பாக்கறீங்க\n அங்கே ராமன் ஒருத்தன் இருந்தான்.. நான் கணையாழியில வேலை பாத்திட்டிருந்த சமயம்.. நான் மேலே ஒரு அலுவலகத்தில் வேலை பாத்திட்டிருந்தேன். அவனை பாக்கும்போதெல்லாம் சொல்வான்.. சார் சொல்லுங்க நான் ஹெல்ப் பண்றேன்.. எனக்கு இலக்கிய ஆர்வம் உண்டு சார்.. அடுத்த இதழ் கணையாழி ரெடியான உடனே அவன வரச்சொன்னேன்.. அஞ்சலுக்கு பெயர் ஒட்டணும், தபால் தலை ஒட்டணும் இந்த மாதிரியான வேலைகள் இருந்தது.. ‘\n‘ ம்ஹ¥ம்.. எனக்கு வெளியூர் போகணும்.. மன்னிச்சுக்கங்க ‘ ன்னு கழண்டுக்கிட்டான். இத மாதிரி ஒரு தடவை இல்ல.. பல தடவை.. அதனாலதான் வங்கி ஊழியர்கள் இலக்கியம் அது இதுன்னா நான் நம்பறதில்ல..’\nசா. கந்தசாமியின் வீட்டில் நடந்த இலக்கியக் கூட்டத்தில் அசோகமித்திரன் பேசினார். முடிவில் கேள்வி பதில் செஷன் இருந்தது. நான் கேட்டேன்..\n‘ ஏன் சார் அந்தக் கதையில் கடைசியில் அந்தப் பஸ்ஸை விபத்துக்குள்ளாக்கிட்டீங்க.. இன்னமும் அந்தக் கடைசி வரி எனக்கு மறக்கல.. சாலையோரத்தில் அந்த பஸ் செங்குத்தாக நின்றுகொண்டிருந்தது.. ஏன் ‘\n‘ அது பஸ் அதனாலதான்..’\nகாவ்யாவின் கூட்டங்கள், தமிழச்சி தங்கபாண்டியன் பிரபலமாக ஆகாத காலத்தில் கலந்து கொண்ட அசோகமித்திரனின் ஆங்கில கதைகளின் வாசிப்புக் கூட்டம் என பல முறை அ.மி.யைச் சந்தித்திருக்கிறேன். இன்னமும் தான் ஒரு பெரிய எழுத்தாளர் என்கிற ஒளிவட்டம் அவர் தலையைச் சுற்றி இருக்கவில்லை.\nஅவரிடமிருந்து வருடத்திற்கு ஒரு முறை ஒரு கடிதம் வரும். அதை அப்படியே ஸ்கேன் செய்து வெளியிடுவேன் சிறகு இதழில்.. பக்கத்திலேயே அதன் வரிகளை அச்சிட்டிருப்பேன். ஏனென்றால் அவரது கையெழுத்து அப்படி..\nகொஞ்ச காலமாக அவரிடமிருந்து கடிதம் காணவில்லை..\nஅசோகமித்ரன் ஆர் யூ ஆல்ரைட்\nSeries Navigation தலைமை தகிக்கும்…குறுங்கவிதைகள்\nமலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை – 1\nதமிழ் பெண் கவிஞர்கள் – ஆங்கிலத்தில் – ஆதி மந்தியார் முதல் உமா மஹேஸ்வரி வரை\nஅர்ஜண்ட் வெயிட் லாஸ்.. ஒரு யாத்ரா டிக்கட் ப்ளீஸ்..\nபழமொழிகள் கூறும் உதவி எனும் வாழ்க்கை நெறி\nஜென் ஒரு புரிதல் – பகுதி 19\nஇதுவும் அதுவும் உதுவும் – 5\nஇந்திய அணுமின்சக்தித் தொழில் நுட்பம் முதிர்ச்சி யானதா அணுவியல் இயக்குநர் முதிர்ச்சி பெற்றவரா \nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கோடாரியில் தகர்ப்பாய் (கவிதை -52 பாகம் -1)\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) திருமணப் பாதையில் (கவிதை – 50 பாகம் -5)\nபஞ்சதந்திரம் தொடர் 18 சமுத்திரமும் நீர்க்குருவியும்\nதமிழ் விக்கிப்பீடியா ஒரு ஊடகப் போட்டி\nதோள்களில் அமர்ந்திருக்கும் மரணத்தின் தூதுவன்\nமுகம்மது யூனுஸ் அறிஞர் அண்ணாவை ஹாங்காங்கில் சந்தித்தது பற்றிய உரை\nபிரான்சு கம்பன் கழகத்தின் 10 -ஆம் ஆண்டு விழா\nநானும் பிரபஞ்சனும் கட்டுரை குறித்து சில கருத்துகள்:\nமுன்னணியின் பின்னணிகள் – 14 சாமர்செட் மாம்\nமூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 16\nPrevious Topic: ஜென் ஒரு புரிதல் – பகுதி 19\nNext Topic: பா. சத்தியமோகன் கவிதைகள்\n2 Comments for “நானும் அசோகமித்திரனும்”\nகொஞ்ச காலமாக அவரிடமிருந்து கடிதம் காணவில்லை..\nஅசோகமித்ரன் ஆர் யூ ஆல்ரைட்\n— வாட் யூ மீன்… இது தேவையில்லா பிரயோகம். இந்த வாரம் ஒரு நாள் இந்துவில் கூட1947 சென்னை நினைவுகளில் பேட்டி தந்துள்ளார்….\nலறீனா அப்துல் ஹக் says:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://puttalamtoday.com/%E0%AE%A8%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2018-04-26T13:34:19Z", "digest": "sha1:EGY6F6KUFZEXNNMVUON7IZLWAACVXQPZ", "length": 11976, "nlines": 62, "source_domain": "puttalamtoday.com", "title": "நக்கத் கான் என்கிற குஷ்பூ :தமிழ் நாடு காங்கிரஸ் தலைவர் பதவிக்கு நடிகை குஷ்புவின் பெயரும் பரிந்துரை – PuttalamToday", "raw_content": "\nநக்கத் கான் என்கிற குஷ்பூ :தமிழ் நாடு காங்கிரஸ் தலைவர் பதவிக்கு நடிகை குஷ்புவின் பெயரும் பரிந்துரை\nதமிழக காங்கிரஸ் தலைவரை புதியதாக நியமிப்பது பற்றி ராகுல்காந்தி யோசித்து வரும் நிலையில், அப்பதவிக்கு நடிகை குஷ்புவை நியமிக்கலாம் என்று கட்சி வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.\nதமிழக காங்கிரஸ் உட்கட்சி தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. 19 ஆண்டுகளுக்கு பிறகு பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டு புதிய மாநில தலைவரை நியமிக்கும் அதிகாரத்தை கட்சி தலைமைக்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nதமிழக காங்கிரஸ் தலைவராக இருக்கும் திருநாவுக்கரசர் மீது டெல்லி மேலிடத்தில் சில புகார்கள் தெரிவித்துள்ளனர்.\nஇதையடுத்து காங்கிரஸ் அறக்கட்டளை நிர்வாகம் தொடர்பாக கட்சியின் பொருளாளர் வோரா விசாரணை நடத்தி தமிழக காங்கிரசுக்கு சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.\nஅறக்கட்டளையை மேற்பார்வையிட கேரளாவை சேர்ந்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். செக் பரிவர்த்தனை முழுவதும் அவரது மேற்பார்வையிலேயே நடைபெறுகிறது.\nஇந்த நிலையில் காங்கிரசுக்கு புதிய தலைவரை நியமிப்பது பற்றி ராகுல் காந்தி தீவிரமாக யோசித்து வருகிறார்.\nதலைவர் பதவியை தக்க வைக்கும் நோக்கில் திருநாவுக்கரசர் டெல்லியில் காய்களை நகர்த்தி இருக்கிறார்.\nராகுல் காந்தியையும் சந்தித்து பேசி இருக்கிறார். அது எந்த அளவுக்கு பலன் கொடுக்கும் என்று தெரியவில்லை.\nமுன்னாள் தலைவர் இளங்கோவனுடன் ராகுல் காந்தி நீண்ட நேரம் ஆலோசித்து இருக்கிறார். குஷ்புவையும் சந்தித்து தமிழக நிலவரம் குறித்து கேட்டறிந்துள்ளார். மேலும் சில முக்கிய நிர்வாகிகளை ராகுல் அழைத்து பேசி வருகிறார்.\nபுதிய தலைவருக்கான பட்டியலில் இளங்கோவன், குஷ்பு, அழகிரி, செல்லக்குமார், மாணிக்கம் தாகூர் ஆகியோரது பெயர்கள் இடம்பெற்று இருப்பதாக கூறப்படுகிறது.\nகுஷ்புவிடம் இதுபற்றி கட்சி மேலிடம் கேட்டபோது மேலிடம் என்ன பணி தந்தாலும் செய்ய தயார் என்று கூறியதாக கூறப்படுகிறது.\nதற்போதைய அரசியல் சூழலில் இளங்கோவனை தலைவராக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது. இளங்கோவனுக்கு தலைவர் பதவி வழங்க ப.சிதம்பரமும் ஆதரவு தெரிவித்துள்ளாராம்.\nஇளங்கோவனுக்கு வழங்காதபட்சத்தில் தனது ஆதரவாளரான கே.எஸ்.அழகிரிக்கு தலைவர் பதவி வழங்கலாம் என்று தனது கருத்தை தெரிவித்துள்ளார்.\nமாணிக்கம்தாகூர், ராகுலுடன் நேரடி தொடர்பில் இருப்பவர். அதேபோல் செல்லக்குமாரும் டெல்லி தலைவர்களுடன் தொடர்பு கொண்டவர்தான். இவர்களில் யாரை தலைவராக நியமிக்கலாம் என்பது பற்றி மேலிடம் தீவிரமாக பரிசீலித்து வருகிறது.\nகாங்கிரசுக்கு நேரடி எதிரி கட்சியான பா.ஜனதாவுக்கு மாநில தலைவராக பெண் இருப்பதால் காங்கிரசும் பெண் தலைவராக மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் குஷ்புவை நியமிக்கலாம் என்ற கருத்து குஷ்புவுக்கு ஆதரவாக முன் வைக்கப்பட்டுள்ளது.\nவருகிற 21-ந்தேதி முதல் 3 நாட்கள் கட்சியின் செயற்குழு கூட்டம் டெல்லியில் நடக்கிறது. அதன்பிறகு புதிய தலைவர் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது. தமிழகம் உள்பட 6 மாநிலங்களுக்கு புதிய தலைவர் நியமிக்கப்பட இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.\nB.M.S. college சாரம் திருவிழா: பெலூன் டான்ஸ் ஆடிக் கலக்கிய முஸ்லிம் யுவதிகள்- எல்லை மீறுகிறார்களா..\nBreaking : சவூதி மன்னரை கவிழ்க்க முயற்சி.. அரண்மை அருகே கடும் துப்பாக்கி சூடு – பங்கருக்குள் கொண்டு செல்லப்பட்டார் சல்மான் posted on April 22, 2018\nசவூதியின் கொடூர செயலால் உலகமே அதிர்ச்சியில் \nBreaking : 12 வயதுக்கு உள்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு தூக்குத் தண்டனை மோடியின் அமைச்சரவை அவசர சட்டம் பிறப்பிப்பு posted on April 21, 2018\nBreaking :கண்டி கலவரங்களை வழி நடத்திய போலிஸ் இன்ஸ்பெக்டர், சார்ஜென்ட் மேஜர் கைது செய்யப்படவுள்ளார்கள் posted on April 21, 2018\nதலைமைப் பற்றி தீர்மானிக்கும் ஐக்கியத் தேசியக் கட்சியின் முக்கியக் கூட்டம் இன்று \nகண்டிக் கலவரத்தை முன்னின்று நடத்திய இரு பிரதேச சபை உறுப்பினர்கள் தொடர்ந்தும் தேடப்படுகிறார்கள்..\nபச்சை கறிவேப்பிலை சாப்பிடுவதன் மூலம் கொலஸ்ட்ரோலை கட்டுக்குள் வைக்கலாம் இதய சத்திர சிகிச்சை நிபுணர் Dr.இலாஹி\nநகர, பிரதேச சபை சேர்மன்களின் ஆட்டம் எல்லாம் 2 வருடங்களுக்கு மட்டுமே.. அதன் பிறகு உறுப்பினர்களின் காலில் விழுந்தாக வேண்டும்\nமுன்னாள் நேவி தளபதி சந்தன பிரசாத் தப்பிச் செல்ல பாதுகாப்புச் சபை பிரதானி ரவீந்திர விஜேகுணவர்தன 5 லட்சம் கொடுத்தார்.. C.I.D. பொஸ் சான் குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.south.news/author/user/", "date_download": "2018-04-26T13:04:23Z", "digest": "sha1:GV4TQBLN7WZACQE55OK5T2CMFCWAWO4S", "length": 4776, "nlines": 93, "source_domain": "tamil.south.news", "title": "Arun Madhavan, Author at Tamil News", "raw_content": "\nசென்னையில் 24 மணி நேரத்தில் இதையெல்லாம் செய்யலாம்\nவேலூரில் 48 மணி நேரத்தை எப்படி செலவிடலாம்\nஓட ஓட தெறிக்கவிட்ட சி.எஸ்.கே’; 400 அடிச்சாலும் ஜெயிக்க மாட்டாங்களா ஆர்.சி.பி\nஇந்த கோயிலில் நின்று பொய் சொன்னால் 10கி.மீ. நீளமுடைய பாம்பு கொல்லும்\nஸ்பின் பாலால் மிரட்டிய ரஷீத் கான்… மிரண்டுபோன சீனியர்கள்\nகொசுக்களை விரட்டும் இந்த 7 செடிகளை வீட்டிலேயே வளர்க்கலாம்\nஇப்படி உங்களுக்கும் உடல் பருமன் குறையணுமா\nசச்சின் சொன்னதை செய்து காட்டுவாரா கோஹ்லி\nஏன் ‘அம்மா’வை எந்த கடவுளாலும் ஈடுசெய்ய முடியாது\nசி.எஸ்.கே.வால் வாழ்க்கையை இழக்கும் 3 முக்கிய அணிகள்\nசி.எஸ்.கே.வின் த்ரில் வெற்றிக்கு குவிந்த மீம்ஸ்\nஐ.பி.எல்-ல் சிறந்த கேட்ச் எது தெரியுமா\n’… குமுறிய சி.எஸ்.கே. ரசிகர்கள்\nஐபிஎல் தொடர்: அஷ்வினா தினேஷ் கார்த்திக்கா\nகுழந்தைகளை பலாத்காரம் செய்தால் தூக்கு தண்டனை: மத்திய அரசு ஒப்புதல்\nசென்னையில் 24 மணி நேரத்தில் இதையெல்லாம் செய்யலாம்\nவேலூரில் 48 மணி நேரத்தை எப்படி செலவிடலாம்\nஓட ஓட தெறிக்கவிட்ட சி.எஸ்.கே’; 400 அடிச்சாலும் ஜெயிக்க மாட்டாங்களா ஆர்.சி.பி\nஜெட் வேகத்தில் ஆண்மை பெருக இந்த கீரையை சாப்பிடுங்க\nமினிமம் பேலன்ஸ் இல்லாத கணக்குகளில் இருந்து ரூ.1,772 கோடி அபராதம் வசூலித்த எஸ்.பி.ஐ. வங்கி\nஆதார் அமைப்பை கைது செய்யுங்கள்… சர்ச்சையை கிளப்பிய ‘விக்கி லீக்ஸ்’ எட்வர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/egg-rate-increased-as-rs-4-74-117111300043_1.html", "date_download": "2018-04-26T13:43:15Z", "digest": "sha1:TNQTKBXJY3SLZ6DIVQ3LIUTZPUV4PS3Z", "length": 10989, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "விண்ணை முட்டுகிறது முட்டை விலை: ரூ.10 வரை செல்லும் என தகவல் | Webdunia Tamil", "raw_content": "\nவியாழன், 26 ஏப்ரல் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nவிண்ணை முட்டுகிறது முட்டை விலை: ரூ.10 வரை செல்லும் என தகவல்\nமுட்டை சாப்பிடாதவர்களே இல்லை என்ற நிலையில் பொதுமக்கள் அனைவரும் விரும்பி சாப்பிடும் இந்த முட்டையின் விலை நாளுக்கு நாள் விலை உயர்ந்து கொண்டே போவது நடுத்தர வர்க்கத்தினர்களின் வயிற்றிலு புளியை கரைத்துள்ளது.\nகடந்த சில வாரங்களுக்கு முன் முட்டையின் சில்லறை விலை ரூ.4 என்று இருந்த நிலையில் இன்று முட்டையின் விலை ரூ.6 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் இதே நிலை நீடித்தால் ரூ.10ஆக உயரும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.\nநாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டை ஒன்றின் கொள்முதல் விலை ரூ.4.59ஆக நேற்று இருந்த நிலையில் இன்று 15 பைசா அதிகரித்து ரூ.4.74 ஆக உயர்ந்துள்ளது. கோழிப்பண்ணை வரலாற்றில் இந்த விலை தான் அதிகபட்ச விலை என்று கூறப்படுகிறது. கோடை காலத்தில் அதிக கோழிகள் விற்பனை செய்யப்பட்டதால் தற்போது முட்டை உற்பத்தி குறைந்துவிட்டதாகவும், இதன் காரணமாகவே விலை உயர்ந்து கொண்டிருப்பதாகவும் கோழிப்பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇரண்டு மாதத்திற்கு பிச்சை எடுக்க லீவ்: ஐதராபாத் அரசு\nடிரம்ப் மகள் வருகை எதிரொலி: ஐதராபாத் போலீஸ் விதித்த அதிரடி தடை\nவடகொரியா அணு ஆயுதங்களை அழிக்க இதுவே வழி: அமெரிக்கா வியூகம்\nபட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்: ரெட்மி அறிமுகம்\nகனமழை எதிரொலி: நாமக்கல் பேருந்து நிலைய மேற்கூரை இடிந்தது\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.mayyam.com/talk/showthread.php?11536-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-5&s=9058a46a2a56ff07a8ebc0e50cc74b9f&p=1323001", "date_download": "2018-04-26T13:26:40Z", "digest": "sha1:OIEO27YL4W55UKJKA3S6BJHPIOVFJ623", "length": 26404, "nlines": 483, "source_domain": "www.mayyam.com", "title": "மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5 - Page 329", "raw_content": "\nமனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5\nThread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5\nமலரோடு மலர் இங்கு மகிழ்ந்தாடும் போது\nமனதோடு மனமிங்கு பகை கொள்வதேனோ\nமதம் என்னும் மதம் ஓயட்டும்\nதேசம் மலர் மீது துயில் கொள்ளட்டும்\nமலரோடு மலர் இங்கு மகிழ்ந்தாடும் போது\nமனதோடு மனமிங்கு பகை கொள்வதேனோ\nமதம் என்னும் மதம் ஓயட்டும்\nதேசம் மலர் மீது துயில் கொள்ளட்டும்\nவழிகின்ற கண்ணீரில் இனம் இல்லையே\nஉதிரத்தின் நிறம் இங்கு வேறில்லையே\nவழிகின்ற கண்ணீரில் இனம் இல்லையே\nஉதிரத்தின் நிறம் இங்கு வேறில்லையே\nகாற்றுக்கு திசை இல்லை தேசம் இல்லை\nமலரோடு மலர் இங்கு மகிழ்ந்தாடும் போது\nமனதோடு மனமிங்கு பகைக் கொள்வதேனோ\nமதம் என்னும் மதம் ஓயட்டும்\nதேசம் மலர் மீது துயில் கொள்ளட்டும்\nதுகள் எல்லாம் ஒன்றாகி மலையாகட்டும்\nவிடியாத இரவென்றும் வானில் இல்லை\nஏதோ சுகம் எங்கோ தினம்\nநெஞ்சில் இட்ட கோலம் எல்லாம் அழிவதில்லை\nஅந்த நாள் அம்மா என்ன ஆனந்தமே\nஏதோ சுகம் எங்கோ தினம்\nஏதோ சுகம் எங்கோ தினம்\nஅம்மம்மா அள்ளும் சுகம் கோடி விதம்\nஏதோ சுகம் எங்கோ தினம்\nதிரைப்படம்: மனதில் உறுதி வேண்டும்\nகண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா\nஉன் கண்களில் என்ன கண்களில் என்ன நீரோட்டமா\nபெண் முன்னேற்றம் எல்லாம் வெறும் பேச்சோடு தானா\nபழம் பாட்டோடுதானா அதன் ஏட்டோடுதானா\nநாள் தோறும் பாடும் ஊமைகள் தானா\nகண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா\nஉன் கண்களில் என்ன கண்களில் என்ன நீரோட்டமா\nசாத்திரங்கள் பெண் இணத்தை மூடி மறைத்ததம்மா\nஅந்த ஆத்திரத்தில் பாரதிக்கும் மீசை துடித்ததம்மா\nசாத்திரங்கள் பெண் இணத்தை மூடி மறைத்ததம்மா\nஅந்த ஆத்திரத்தில் பாரதிக்கும் மீசை துடித்ததம்மா\nவீடாளும் பெண்மை இங்கே நாடாளும் காலம் வந்தால்\nஊமைகள் போலவே என்றும் ஓயாமல் கண்ணீர் சிந்தும்\nஏனென்று கேட்கத்தான் இப்போது ஆள் இல்லை\nசம நீதி கேட்கின்ற சட்டங்கள் ஏன் இல்லை\nகண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா\nஉன் கண்களில் என்ன கண்களில் என்ன நீரோட்டமா\nபாய் விரிக்கும் பெண்மை என்ன காதல் பதுமைகளா\nதினம் ஏவல் செய்ய ஆடவர்க்கு காவல் அடிமைகளா\nபொன்னள்ளி வைத்தால் தானே பூமாலை தோளில் ஏறும்\nஇல்லாத ஏனையர்க்கெல்லாம் பொல்லாத தனிமைக் கோலம்\nஎரிகின்ற நேரத்தில் அணைக்கின்ற கை இல்லை\nசொல்கின்ற வார்த்தைகள் ஒவ்வொன்றும் பொய் இல்லை\nகலங்குது மயங்குது பருவக் கொடி\nகண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா\nஉன் கண்களில் என்ன கண்களில் என்ன நீரோட்டமா\nபெண் முன்னேற்றம் எல்லாம் வெறும் பேச்சோடு தானா\nபழம் பாட்டோடுதானா அதன் ஏட்டோடுதானா\nநாள் தோறும் பாடும் ஊமைகள் தானா\nகண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா\nஉன் கண்களில் என்ன கண்களில் என்ன நீரோட்டமா...\nதிரைப்படம்: மனதில் உறுதி வேண்டும்\nகண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா\nஉன் கண்களில் என்ன கண்களில் என்ன நீரோட்டமா\nபெண் முன்னேற்றம் எல்லாம் வெறும் பேச்சோடு தானா\nபழம் பாட்டோடுதானா அதன் ஏட்டோடுதானா\nநாள் தோறும் பாடும் ஊமைகள் தானா\nகண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா\nஉன் கண்களில் என்ன கண்களில் என்ன நீரோட்டமா\nசாத்திரங்கள் பெண் இணத்தை மூடி மறைத்ததம்மா\nஅந்த ஆத்திரத்தில் பாரதிக்கும் மீசை துடித்ததம்மா\nசாத்திரங்கள் பெண் இணத்தை மூடி மறைத்ததம்மா\nஅந்த ஆத்திரத்தில் பாரதிக்கும் மீசை துடித்ததம்மா\nவீடாளும் பெண்மை இங்கே நாடாளும் காலம் வந்தால்\nஊமைகள் போலவே என்றும் ஓயாமல் கண்ணீர் சிந்தும்\nஏனென்று கேட்கத்தான் இப்போது ஆள் இல்லை\nசம நீதி கேட்கின்ற சட்டங்கள் ஏன் இல்லை\nகண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா\nஉன் கண்களில் என்ன கண்களில் என்ன நீரோட்டமா\nபாய் விரிக்கும் பெண்மை என்ன காதல் பதுமைகளா\nதினம் ஏவல் செய்ய ஆடவர்க்கு காவல் அடிமைகளா\nபொன்னள்ளி வைத்தால் தானே பூமாலை தோளில் ஏறும்\nஇல்லாத ஏனையர்க்கெல்லாம் பொல்லாத தனிமைக் கோலம்\nஎரிகின்ற நேரத்தில் அணைக்கின்ற கை இல்லை\nசொல்கின்ற வார்த்தைகள் ஒவ்வொன்றும் பொய் இல்லை\nகலங்குது மயங்குது பருவக் கொடி\nகண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா\nஉன் கண்களில் என்ன கண்களில் என்ன நீரோட்டமா\nபெண் முன்னேற்றம் எல்லாம் வெறும் பேச்சோடு தானா\nபழம் பாட்டோடுதானா அதன் ஏட்டோடுதானா\nநாள் தோறும் பாடும் ஊமைகள் தானா\nகண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா\nஉன் கண்களில் என்ன கண்களில் என்ன நீரோட்டமா...\nவாலியின் மிக சிறந்த வரிகள்.\nதன்னுயிர் பிரிவதை பார்த்தவரில்லை. என்னுயிர் பிரிவதை பார்த்து நின்றேன்.\nகன்னமெனும் கிண்ணத்திலே வண்ணங்களை குழைத்தாயே. பொங்கி வரும் புன் சிரிப்பில் கொஞ்சம் கொஞ்சம் இறைத்தாயே.\nமனசுக்குள்ளே தேரோட்ட மைவிழியில் வடம் புடிச்சான்\nமுன்னுரைத்த காதலையே உந்தன் முடிவுரையாய் தருக\nமுக்கனிக்கும் சர்க்கரைக்கும் சுவையை செவ்வாய்தான் தருமோ\nநித்தமும் நாடகம் நினைவெல்லாம் காவியம்\nகடல் நீர் நடுவே பயணம் போனால் குடிநீர் தருபவர் யாரோ\nமாளிகையே அவள் வீடு மரகிளையில் என் கூடு\nமாதவி பொன்மயிலாள் தோகை விரித்தாள் வண்ண மையிட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்\nநீ பார்த்த பார்வைகள் கனவோடு போகும் நீ சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும் ஊர் பார்த்த உண்மைகள் உனக்காக வாழும்\nபுத்தம் புதிய புத்தகமே உன்னை புரட்டி பார்க்கும் புலவன் நான்\nவான் பறவை தன் சிறகை எனக்கு தந்தால் ,பூங்காற்றே உன் உதவியும் எனக்கிருந்தால்,வானத்திலே பறந்து சென்றே போனவளை அழைத்து வந்தே காதலை வாழ வைப்பேன்\nஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ ஜகத் காரணி நீ பரிபூரணி நீ\nஎங்களுக்கு மீளா வலி தந்து எங்களை விட்டு மறைந்த கவிஞர் வாலி அவர்களின் நினைவலைகள்.அவரை ஒரு தமிழ் மன்ற நிகழ்ச்சிக்கு ஜகார்த்தா அழைக்க சென்ற போது வர மறுத்தவர், பாஸ்போர்ட் எடுக்கலை என்றார். அவரிடம் சற்று உரையாடிய போது ,நடிகர்திலகத்தை அறிந்திருக்க மாட்டீர்கள் என்று சில குறிப்புகளை தந்த போது சீறி எழுந்து , பொழப்பு வேறே ,ரசனை வேறப்பா.உன்னை விட நான் பெரிய ரசிகனாக்கும் என்ற படி ,சிவாஜியின் சிறப்புகளை பற்றி விடாமல் 20 நிமிடம் பேசினார்.அசந்து நின்றேன் .\nஎங்கிருந்தாலும் இளமையோடு வாழுங்கள் கவிஞரே .\nநானும் கண்ணதாசன், வைரமுத்து ஆகியவர்களின் ரசிகன் என்றாலும் வாலி அவர்களில் இருந்து வேறு பட்டவர் , சமமமாக மதிக்க பட வேண்டியவர் என்பதை வலியுறுத்த விரும்புகிறேன் .(வாலி யுருத்த\n1)வாலி அளவு சங்கீத அறிவு கொண்ட பாடலாசிரியர்கள் இந்திய அளவு கிடையாது. இதை விஸ்வநாதன்-ராமமூர்த்தி ,இளைய ராஜா முதல் இளம் இசையமைப்பாளர்கள் வரை சுட்டி காட்டியுள்ளனர்.\n2)வாலி இலக்கியங்கள் அளவு புராண,இதிகாச,வேத அறிவுகளும் கொண்டிருந்ததால் வசீகர ,அபூர்வ கருத்துக்களை பாடல்களில் தர முடிந்தது. (சாண்டில்யன் கதைகள் போல)\n3)வாலி down to earth .அணுக சுலபமானவர். அழிவு தரும் அகந்தையோ, தீய பழக்கங்களில் மூழ்கியோ போகாமல் உலகத்தோடு ஒட்டினார்.\n4) 1959 முதல்- 2013 வரையான longevity with glory என்பது டெண்டுல்கர் சாதனைக்கு ஒப்பானது.\n5)வாலி கொடுத்த range எந்த பாடலாசிரியரும் தொட முடியாதது.\nவாலி ஒரு விதத்தில் துரதிர்ஷ்டசாலி. கண்ணதாசன் திறமைக்கு மீறி புகழடைந்தார். வாலி திறமை இருந்த அளவு போற்றப்படவில்லை.கீழ்கண்ட உதாரணங்களே போதும்.\nஒரு முறை ஜீவி(மணி ரத்தினம் அண்ணன்) ஒரு மேடையில் பேசும் போது , மூன்று பாடல்களை குறிப்பிட்டு , கண்ணதாசன் எழுதிய இது போன்ற பாடல்களை நீங்கள் எழுதவில்லை என்றார். வாலியோ ,அடபாவி,நீ குறிப்பிட்ட மூன்று பாடல்களுமே நான் எழுதியவை என்றாராம்.\nM .S .V கண்போன போக்கிலே,அந்த நாள் ஞாபகம் பாடல்களை கண்ணதாசன் எழுதியதாகவே குறிப்பிட்டு வந்தார்.(ஒரு தொடரிலும்\nஇப்படியாக கண்ணதாசனுக்கு வேண்டாத புகழ்களும் சேர்ந்தன. ஆனால் கண்ணதாசன் எழுதிய பாடல்கள் ,வாலி எழுதியதாக குறிப்பிடபட்டதேயில்லை.\nவாலி தன்னை ஒரு குறிப்பிட்ட நடிகருடன் ,முக்கிய காலகட்டங்களில் Brand பண்ணி கொண்டது, வாலியின் தவறாகும். இது அவர் திறமையை மற்றவர் குறைத்து எடை போட காரணமானது.கண்ணதாசன்,வைரமுத்து அந்த பொறியில் சிக்கவில்லை .\nநெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.puthinappalakai.net/2017/06/12/news/23895", "date_download": "2018-04-26T13:07:17Z", "digest": "sha1:AOK5QIWACUDKCDK7BAE5AEDGWA3I7VFU", "length": 8522, "nlines": 101, "source_domain": "www.puthinappalakai.net", "title": "மாகாணசபைத் தேர்தலைப் பிற்போடும் அதிகாரம் இல்லை – மகிந்த தேசப்பிரிய | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nமாகாணசபைத் தேர்தலைப் பிற்போடும் அதிகாரம் இல்லை – மகிந்த தேசப்பிரிய\nமாகாணசபைத் தேர்தல்களைப் பிற்போடுவதற்கு அமைச்சர்களுக்கோ வேறு எவருக்குமோ அதிகாரம் இல்லை என்று சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.\n‘ஒரு மாகாணசபையின் பதவிக்காலம் முடிந்து ஒரு வாரத்துக்குள், புதிய உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான தேர்தலை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிக்க வேண்டும்.\nமாகாணசபைத் தேர்தலைப் அண்மையில் ஏற்பட்டது போன்ற பாரிய அனர்த்தம் அல்லது பிரபலமான ஆணை அல்லது நீதிமன்ற தீர்ப்பினால் மாத்திரமே பிற்போட முடியும்.\nஒரு அமைச்சரோ, அல்லது வேறு எந்த நபரோ மாகாணசபைத் தேர்தலைப் பிற்போடுவதற்கு சட்டத்தில் அதிகாரம் வழங்கப்படவில்லை.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nசிறிலங்காவில், கிழக்கு, வடமத்திய, சப்ரகமுவ மாகாணசபைகளின் பதவிக்காலம், எதிர்வரும், செப்ரெம்பர் மாதத்துடன் முடிவடையவுள்ள நிலையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.\nTagged with: சப்ரகமுவ, மகிந்த தேசப்பிரிய, மாகாணசபை\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் தொடர்ந்து சரியும் சிறிலங்கா ரூபாவின் மதிப்பு – வெளிநாட்டு கடன்சுமை அதிகரிப்பு\nசெய்திகள் திருகோணமலையில் அமெரிக்காவின் பாரிய மிதக்கும் மருத்துவமனை\nசெய்திகள் தமிழ்தேசியம்: ‘தமிழ்நாட்டின் உரிமைகளை எப்போது மீட்க முடியும்\nசெய்திகள் “எமது கதைகளை நாங்கள்தான் கூற வேண்டும் “- ‘தமிழர் மூவர்’ விருது பெற்ற றீற்றா பரமலிங்கம்\nசெய்திகள் இளைஞர் மாநாட்டைக் கூட்டுகிறார் முதலமைச்சர் விக்னேஸ்வரன்\nகட்டுரைகள் இரா.சம்பந்தன் – ‘சேர் பொன். இராமநாதனின் மறுஉருவம்’ 0 Comments\nசெய்திகள் காணாமல் போனோர் பணியக உறுப்பினர்களை வேண்டா வெறுப்பாக நியமித்த சிறிலங்கா அதிபர் 0 Comments\nசெய்திகள் தொடர்ந்து சரியும் சிறிலங்கா ரூபாவின் மதிப்பு – வெளிநாட்டு கடன்சுமை அதிகரிப்பு 0 Comments\nசெய்திகள் திருகோணமலையில் அமெரிக்காவின் பாரிய மிதக்கும் மருத்துவமனை 0 Comments\nசெய்திகள் நல்லிணக்கச் செயல்முறைகள் குறித்து சிறிலங்காவுடன் கனடா பேச்சு 0 Comments\nNakkeeran on ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\nShan Nalliah on 10 நிபந்தனைகளின் அடிப்படையிலேயே ரணிலுக்கு ஆதரவு – செல்வம் அடைக்கலநாதன்\nShan Nalliah on கூட்டமைப்புடன் எந்த உடன்பாடும் கையெழுத்திடப்படவில்லை – மனோ கணேசன்\n‌மன‌ோ on 10 நிபந்தனைகளின் அடிப்படையிலேயே ரணிலுக்கு ஆதரவு – செல்வம் அடைக்கலநாதன்\nChenavi L on நம்பிக்கையில்லா பிரேரணை படுதோல்வி\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tharavu.com/2014/12/blog-post_85.html", "date_download": "2018-04-26T13:18:40Z", "digest": "sha1:CFCC5WHODBTVHGWPSN4FJ6NDVYLLWYNZ", "length": 16000, "nlines": 100, "source_domain": "www.tharavu.com", "title": "திருப்பதி வரும் ராஜபக்சேவுக்கு கருப்புக்கொடி: வைகோ அறிவிப்பு | தரவு", "raw_content": "\nமுகப்பு ஈழம் உலகம் சினிமா விளையாட்டு இலங்கை\nதேசியத் தலைவர் பிரபாகரன்தான் வரவேண்டும் இந்த நாட்டை வழிநடாத்துவதற்கு.யாழ்.யாழ்பாணத்தின் சீர்கெட்ட நிலவரங்கள் தொடர்பாக குறித்த நீதிபதி\nஇலங்கை எதிர்கொண்ட பின்னடைவுகளுக்கு விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் காரணமல்ல அதிகாரத்தில் இருந்த அரசாங்கங்களே காரணம்\nசிறிலங்காவில் தமிழர் பிரச்சினை தொடர்பாக கருணாநிதியினைச் சாடியிருக்கும் ஜெயலலிதா அவரது குடும்ப ஆட்சியினதும் முறைகேடுகள் நிறைந்த\nஈழத்தமிழரின் புனர்வாழ்வுக்கு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பேன்தமிழக சட்டசபைக்கான தேர்தல் எதிர்வரும் 13 ம் திகதி இடம்பெறவுள்ள நிலையில்\nதமிழர்கள் பாரம்பரியம் மிக்கவர்கள். அவர்கள் கனடாவின் மதிப்பு மிக்க சொத்து.அதீத வளர்ச்சி, கலாச்சாரப் பங்களிப்பு மற்றும் புலமை வாய்ந்த தொழில்வாய்ப்பு என்பன கனடாவிற்குப் பெருமை\nஉலக கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா வாழ்த்து தெரிவித்துள்ளார்.ஜப்பான் நாட்டில் கடந்த 11ந் தேதி மிகப்பெரிய\nஜப்பானில் ஏற்பட்ட பூகம்பம் சுனாமியின் பாதிப்புக்கு அனுதாபம் தெரிவித்து, ஜப்பான் பிரதமருக்கு நடிகர் ரஜினிகாந்த் ஒரு கடிதம் அனுப்பி இருக்கிறார். ஜப்பான் நாட்டில் கடந்த 11ந் தேதி மிகப்பெரிய\nசிறிலங்காவில் விடுதலைப் புலிகளுக்கும் அரசப் படைகளுக்கும் இடையில் நடந்த இறுதிக் கட்டப் போரின்போது,- போர்நிறுத்தம் செய்யுமாறும், பேச்சுக்களில் ஈடுபடுமாறும் அனைத்துலக நாடுகள் கொடுத்த அழுத்தங்களில் இருந்து\nவிக்கிலீக்ஸில் வெளியாகியுள்ள தகவல்கள் ஒரு பக்கம் சர்ச்சையைக் கிளப்பி வரும் நிலையில், விடுதலைப் புலிகளுடனான போரில் அமெரிக்காவின் இராணுவப் புலனாய்வுத் தகவல்கள்\nபுலிகள் தொடர்ந்து செயல்பட வாய்ப்பு உள்ளது: டக்ளஸ் தேவானந்தா\nதிருப்பதி வரும் ராஜபக்சேவுக்கு கருப்புக்கொடி: வைகோ அறிவிப்பு\nவரும் 9ஆம் தேதி திருப்பதி வரும் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு எதிராக கருப்புக் கொடி அறப்போர் நடைபெறும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், \"தமிழ் இனப் படுகொலை நடத்திய கொலைகாரன் ராஜபக்சே டிசம்பர் 9 ஆம் தேதி திருப்பதிக்கு வந்து, 10 ஆம் தேதி காலையில் வெங்கடாசலபதி ஆலயத்தில் தரிசனம் செய்யப் போகிறானாம்.\nபச்சிளம் குழந்தைகள், பாலகர்கள், தாய்மார்கள், வயது முதிர்ந்தவர்கள், நோயாளிகள் ஆயுதம் ஏந்தாத அப்பாவிப் பொதுமக்கள் உள்ளிட்ட லட்சக்கணக்கான ஈழத்தமிழர்களை, வான்வெளிக் குண்டுகளையும் தடை செய்யப்பட்ட குண்டுகளையும் வீசியும், நவீன ஆயுதங்களாலும் கொடூரத் தாக்குதல் நடத்தியும், கோரப் படுகொலைகளைச் செய்த மாபாவியுடன் நரேந்திர மோடியின் இந்திய அரசு கொஞ்சிக் குலாவுகிறது. மத்திய அரசு கொடுக்கின்ற ஊக்கத்தினால்தான் இப்போது திருப்பதிக்கு வரப் போகிறான்.\nமத்தியப் பிரதேசம் சாஞ்சிக்கு ராஜபக்சே வந்தபோது, தமிழகத்தில் இருந்து 1200 பேருடன் சென்று பட்சி சோலையில் பகலிலும் இரவிலும் நெடுஞ்சாலையில் அறப்போர் நடத்திக் கைதானோம்.\nஅதன் பின்னர் டெல்லியில் பிரதமரைச் சந்திக்க வரப்போவதை அறிந்த 48 மணி நேரத்திற்குள் டெல்லிக்குச் சென்று பிரதமர் வீட்டை முற்றுகைப் போராட்டம் நடத்தினோம். எனவே டெல்லிக்கு வராமல் பீகாரில் இருந்தே திரும்பிப் போனான்.\nமுன்பு திருப்பதிக்கு வந்தபோது ம.தி.மு.க.வினர் காவல்துறையின் கெடுபிடிகள் தடைகளைக் கடந்து மகிந்தனுக்குக் கருப்புக்கொடி காட்டினார்கள்.\n1750 இந்துக் கோயில்களை இலங்கைத் தீவில் தமிழர் தாயகத்தில் உடைத்து நொறுக்கிய காட்டுமிராண்டி வேலை செய்த கூட்டத்தின் தலைவன்தான் மகிந்த ராஜபக்சே. தமிழ் இனத்தின் அடையாளமே அந்தத் தீவில் இல்லாமல் செய்துவிட அனைத்து அக்கிரமங்களையும் செய்கின்ற ராஜபக்சே, அதிபர் தேர்தலில் வெற்றி பெற வேண்டுமானால், திருப்பதி ஏழுமலையானைத் தரிசிக்க வேண்டும் என்று சில சோதிடர்கள் கூறிய யோசனையின் பேரில் இங்கு வருகிறான்.\nஏழுமலையானை வழிபடும் இந்துக்களையும் தமிழர்களையும் அங்கே அழிக்கிறான். இங்கே வெங்கடாசலபதி தரிசனத்திற்கும் வருகிறான்.\nராஜபக்சே வருகையை மத்திய அரசு ரகசியமாக வைத்து இருக்கின்றது. இந்தியாவிற்குள் ராஜபக்சே என்றைக்கு வந்தாலும், ம.தி.மு.க. அவனது வருகையை எதிர்த்து அறப்போர் நடத்தும் என அறிவித்து இருக்கிறோம். எனவே, 9 ஆம் தேதி அன்று திருப்பதிக்கு வரும் ராஜபக்சேயை எதிர்த்து, ம.தி.மு.க. பொருளாளர் டாக்டர் மாசிலாமணி தலைமையில், துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா முன்னிலையில் கருப்புக்கொடி அறப்போர் நடைபெறும்.\nகட்சித் தொண்டர்களும், தமிழ் உணர்வாளர்களும் இந்த அறப்போரில் பெருமளவில் பங்கேற்க வேண்டுகிறேன்\" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.\nதொடர்புடைய பதிவுகள்: , , ,\nLabels: இந்தியா , இலங்கை , தமிழ்நாடு , விடுதலை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஈழத்து நகைச்சுவை இரட்டையர்கள் டிங்கிரி சிவகுரு காணொளி இணைப்பு\nஜெனிவா சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம்- பிரித்தானியாவும் ஆதரவு\nபிரேமலதா விஜயகாந்துக்கு ரஜினிகாந்த் ரசிகர்கள் கண்டனம்\nசிரியாவுக்குள் புகுந்த ஈழத்து புலி\nஆஸ்திரியாவில் கச்சேரிக்கு வந்த கூட்டத்தினர் மீது துப்பாக்கிச் சூடு : 2 பேர் பலி\nஐ.நா மனிதவுரிமை உரிமைகள் சபையின் 37 வது கூட்டத்தொடர் இன்று ஆரம்பமாகியது.\nஈழத் தமிழர்களுக்கு நீதி கோரி உலகளாவிய நீதியில் வழக்கறிஞர்கள் கையெழுத்து.\nராஜிவ் கொலை குற்றவாளிகள் எழுவரையும் விடுவிக்க தமிழக அரசு முடிவு\nரவிராஜ் கொலையில் பிள்ளையானின் ஆயுதம்\nவிடுதலை வீரர்களின் சமாதியில் சிங்கள குடியேற்றம்\nதமிழீழ மாணவர்களின் இன்றைய அரசியல் தெளிவு.\n1976 மே 14 ஆந் தேதியன்று வட்டுக்கோட்டையில் நடைபெற்ற தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் முதலாவது தேசிய மாநாட்டில்\nசடலத்தை சமைத்து உண்ணும் பாகிஸ்தானியர்கள் (காணொளி இணைப்பு) இறந்த பெண்ணொருவரின்\nஇலங்கையில் திருதிமைக்கப்பட்ட ஒரு சில பெரும் சாலைகளின் புகைப்படங்கள் பார்க்க அருமையாக இருக்கிறது.\nஒன்று பட்டால் உண்டு வாழ்வு/ தரவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tnguru.com/2013/04/blog-post_3.html", "date_download": "2018-04-26T13:40:12Z", "digest": "sha1:6KRGFDUUT6PHPUMQZA7HCSUICPONN5SE", "length": 8565, "nlines": 187, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: ஆசிரியர்களுக்குப் பயன்படும் முக்கியமான இணையதளங்கள்", "raw_content": "\nஆசிரியர்களுக்குப் பயன்படும் முக்கியமான இணையதளங்கள்\nபெற்றோர்களுக்கு அடுத்தப்படியாக குழந்தைகளை நல்லதொரு குடிமகனாக உருவாக்குபவர்கள் ஆசிரியர்கள் தான்.\nஏன் பெற்றோர்களைவிட ஒரு படி உயர்ந்து, ஒரு மாணவனை நல்லவனாக்குவதிலும், வல்லவனாக்குவதிலும், திறமைகளை வெளிக்கொணர்ந்து ஒரு சாதனையாளனாக மாற்றுவதிலும் முதன்மையாகத் திகழ்பவர்கள் ஆசிரியர்கள்.\nஅத்தகைய சிறப்புக்க ஆசிரியர்களுக்குப் பயன்படும் ஒரு சில வலைத்தளங்கள் உள்ளன. இத்தளங்கள் ஆசிரியர்களுக்கு, மாணவர்களுக்கு, கல்வித் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ள விரும்புபவர்களுக்கும் நல்லதொரு வழிகாடியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை..\nஇதோ அப்பயன்மிக்க வலைத்தளங்களின் பட்டியல்:\nஆசிரியர்களுக்குப் பயன்படும் முக்கியமான இணையதளங்கள்\nதமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கூட்டணி விருதுநகர்\nதமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்\nதமிழ்நாடு மேல்நிலைப்பள்ளிமுதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம்\nவேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை\nதங்களுக்குத் தெரிந்த இணையங்கள் ஏதேனும் இருப்பின் அவற்றையும் குறிப்பிடலாம். நன்றி.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\nஸ்மார்ட் ரேஷன் கார்டு பற்றிய முழுமையான விவரங்கள் பார்த்து பயனடைவீர் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://www.vanakkammalaysia.com/india1/33-tamilnadu/9068-2017-04-19-04-36-20", "date_download": "2018-04-26T13:10:48Z", "digest": "sha1:KYQVXRXGMOFJS7JTRWRR3TGGVJI3P2HW", "length": 15257, "nlines": 275, "source_domain": "www.vanakkammalaysia.com", "title": "கட்சியிலிருந்து சசி, தினகரன் நீக்கமா? அமைச்சர்கள் அதிரடி முடிவு!", "raw_content": "\nமலையாளப் பாடல் திறன் போட்டி: அனைவரும் பங்கேற்கலாம்\n1 எம்.டி.பி தலைமை நிர்வாக அதிகாரி அருள் கந்தா அரசியல் பிரவேசமா\nதேர்தல் அதிகாரிகள் பற்றிய போலித் தகவலை நம்பாதீர் \nகேவியசின் ராஜினாமா; தே.மு.விற்கு எவ்வித பாதிப்பும் இல்லை\nகடந்த தேர்தலை விட கூடுதலான வெற்றி: வாய்ப்பு பிரகாசம்\nவெளிநாட்டு வாக்காளர்கள்:வாக்குச் சீட்டுகளை எப்படி அனுப்புவீர்கள்\nரோஸ்மாவின் பிறந்தநாள் கேக்: அது போலிச் செய்தி\nகெந்திங் சாலையில் பேருந்து தீக்கிரை\nமஇகாவிலிருந்து காயத்ரி ரகுமூர்த்தி முற்றாக விலகல்\nமணமகன் பலி: திருமணப் பரிசாக வெடிகுண்டு பார்சல் அனுப்பிய கல்லூரி ஆசிரியர் கைது\nஐஸ்வர்யா ராய் ஓரங்கட்டப் படுவது ஏன்\nமழலைக் குரலில் ரசிகர்களை வசீகரித்த பாடகி எம்.எஸ். ராஜேஸ்வரி காலமானார்\nசிறுமி பலாத்காரம்: பிரபல சாமியார் ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் சிறை\nஇந்திய நாடாளுமன்றத்திலும் பாலியல் தொல்லையா\nஅக்சய் குமாரின் படப்பிடிப்பு தளத்தில் குண்டு வெடித்து கோரத் தீ விபத்து\nபாலியல் வழக்கில் பிரபல சாமியார் குற்றவாளி -இந்திய நீதிமன்றம் தீர்ப்பு தீர்ப்பு\nஎஸ் வி சேகருக்கு அடைக்கலம் தந்த கிரிஜா வைத்தியநாதன் மீது வழக்கு\nதமிழ் நடிகருக்கு 50 கோடி சம்பளமா\nபாலஸ்தீனர் ஸ்தாபாக்கில் சுட்டுக் கொலை: கொலையாளிகளின் படங்கள் வெளியீடு\nஅர்சனல் குழுவின் 22 ஆண்டு கால நிர்வாகி அர்செனி வெங்கர் விலகுகிறார்\n'இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி'யில் வடிவேலு நடிக்க மறுத்தது ஏன்\nகற்பழிப்புக்கு மரண தண்டனை ஒன்றே தீர்வு- வரலட்சுமி ஆவேசம்\nசினிமா வேலைநிறுத்தம்: சொந்த ஊரில் ஆடு மேய்க்கும் நடிகை\nகணவருடன் ரஷ்யாவில் குடியேறுகிறார் நடிகை ஸ்ரேயா\n விஜய் சேதுபதி மீது விஷாலின் நடவடிக்கை பாயுமா\nஏங்க, எத்தனை தடவை சொல்றது, 'மாட்டேன்., மாட்டேன். ' -சத்யராஜ் மகள் திவ்யா\nகமலுக்கு செம அதிர்ச்சி தந்த ஹாலிவுட் தயாரிப்பாளர் நோலன்\nகட்சியிலிருந்து சசி, தினகரன் நீக்கமா\nPrevious Article அதிமுகவிலிருந்து நேற்றே ஒதுங்கிவிட்டேன்- டிடிவி தினகரன் அதிரடி அறிவிப்பு\nNext Article கைதாவதை தவிர்க்க தினகரன் தலைமறைவு\nசென்னை, ஏப்ரல் 19- சர்ச்சைகளுக்கிடையில் சிக்கி கொண்டுள்ள அதிமுக கட்சியைக் காப்பாற்ற சசிகலா குடும்பத்தை கட்சியிலிருந்து முழுமையாக நீக்க அமைச்சர் ஜெயக்குமார் தலைமையிலான அமைச்சர் கூட்டம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக முதல்வர் பழனிசாமி சந்தித்து ஆலோசனை கூட்டம் ஒன்றும் நடத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.\nஉடைந்து போயுள்ள அதிமுக கட்சியை ஒன்றிணைக்க ஓ.பன்னீர் செல்வம் பச்சை கொடி காட்டியிருந்தாலும் சசிகலா குடும்பம் கட்சியில் இருக்கக்கூடாது எனும் நிபந்தனையை விதித்தார். அதனை அடுத்து சசிகலா மற்றும் தினகரனை ஓரம் கட்டி விட்டு இரு தரப்பும் இணைய அமைச்சர்கள் முடிவெடுத்துள்ளனர். இதற்கு சசிகலா அணியைச் சேர்ந்த சட்டசபை துணை சபாநாயகர் தம்பிதுரையும் இதற்கு ஆரதவு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.\nமுதல்வர் பழனிசாமி இல்லத்தில் நடத்தப்பட்ட மூத்த அமைச்சர்களுடான கூட்டத்தில், தினகரன், சசிகலா ஆகியோரைக் கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்றும் பன்னீருடன் எந்த நேரத்திலும் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும் முடிவெடுக்கப்பட்டது.\nமேலும், தொண்டர்களின் விருப்படி ஆட்சி அமையும் என்றும் ஒற்றுமையாக இருந்து இரட்டை இலை சின்னத்தை மீட்போம் என்றும் தீர்மானம் செய்யப்பட்டது.\nPrevious Article அதிமுகவிலிருந்து நேற்றே ஒதுங்கிவிட்டேன்- டிடிவி தினகரன் அதிரடி அறிவிப்பு\nNext Article கைதாவதை தவிர்க்க தினகரன் தலைமறைவு\nமலேசிய கோடீஸ்வரரை தரக் குறைவாக பேசுவதா அமைச்சர் நஸ்ரிக்கு மசீச கடும் கண்டனம்\nம.இ.காவுக்கு 7 எம்பி, தொகுதிகள் மட்டுமே கோத்தராஜா - கேமரன்மலை கைநழுவுகிறதா\n9 நாடாளுமன்ற வேட்பாளர்கள் யார் யார்\n6 எம்.பி. தொகுதிகளில் மஇகா போட்டி\nஇந்திய தொழிலதிபரான ''டத்தோஶ்ரீ'யுடன் புகைப்படம்: பதிலடி தந்தார் லிம் குவான்\nமலையாளப் பாடல் திறன் போட்டி: அனைவரும் பங்கேற்கலாம்\n1 எம்.டி.பி தலைமை நிர்வாக அதிகாரி அருள் கந்தா அரசியல் பிரவேசமா\nதேர்தல் அதிகாரிகள் பற்றிய போலித் தகவலை நம்பாதீர் \nகேவியசின் ராஜினாமா; தே.மு.விற்கு எவ்வித பாதிப்பும் இல்லை\nகடந்த தேர்தலை விட கூடுதலான வெற்றி: வாய்ப்பு பிரகாசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ajmal-mahdee.blogspot.com/2014/09/blog-post_15.html", "date_download": "2018-04-26T13:15:09Z", "digest": "sha1:I6XGYWW3YDG7JMI2G2VTXYANO5A5LSHZ", "length": 34844, "nlines": 744, "source_domain": "ajmal-mahdee.blogspot.com", "title": "Discover Islam In Tamil: சகாயம் ஐ.ஏ.எஸ் அவர்களைப் பற்றிய ஒரு சமூக பார்வை...", "raw_content": "\nசகாயம் ஐ.ஏ.எஸ் அவர்களைப் பற்றிய ஒரு சமூக பார்வை...\nகற்றவராக இருந்தால் மட்டும் போதாது, தான் கற்ற கல்வியை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். அப்போது சிறப்பு மாவட்ட ஆட்சியர்கள் எத்தனையோ பேர் இருந்திருக்கிறார்கள், ஆனால், ஒரு சிலரே மக்கள் மனதில் ஆழமாக, நீங்காத இடம் பிடித்திருப்பார்கள்.அப்படி, மக்கள் இடத்தே ஒரு பெரும் மதிப்பைப் பெற்றவர், திரு. உ. சகாயம் அவர்கள். இவரை அறியாதவர் யாரும் இருக்க வாய்ப்பில்லை இங்கே\nஊர் : புதுக்கோட்டை மாவட்டம், சித்தன்னவாசல் அருகில் உள்ள பெருஞ்சுணை கிராமம்.\nபெற்றோர்: உபகாரம் பிள்ளை - சவேரி அம்மாள்.\nஇவரது பெற்றோருக்கு நான்கு மகன்களில், இளையவர். இவரது அப்பாவின் ஆசைக்காக, லட்சியத்தோடு படித்து இன்று ஐ.ஏ.எஸ் அதிகாரியாகி இருக்கிறார்.இப்போது, இவரது மகளுக்கும் மாவட்ட ஆட்சியர் ஆக வேண்டும் என்பது லட்சியமாம்.\nவழக்கமான இந்திய பெற்றோர் போன்று மகன் டாக்டர்/இஞ்சினியர் ஆகனும் என்பவர்கள் அல்ல.\nஅம்மா- மத்தவங்க தோட்டத்து மாங்காய் தெருவுல கிடந்தாக்கூட எடுத்துட்டு வரக்கூடாதுன்னு சொல்றவங்க❗\nஅப்பா- படிச்சு கலெக்டர் ஆகி உதவின்னு கேட்டு வர்றவங்களுக்கு எல்லாம் உதவணும்னு சொல்றவங்க❗\nஎதற்கும் பயம் இல்லை, நேர்மை, அது தான் இவரது கொள்கையாக இருக்கிறது.சில காலம் மாவட்ட ஆட்சியாளர், மற்ற சமயங்களில் ஊழல் பெருச்சாளிகள் தீர்மானம் செய்யும் தொழில்\nநீலகிரி மாவட்டம், கூடலூரில், கோட்ட வளர்ச்சி அதிகாரி\nதிருச்சி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது)\nகள்ளக்குறிச்சி சர்க்கரை ஆலை சிறப்பு அதிகாரி\nகாஞ்சிபுரம் கோட்ட வளர்ச்சி அதிகாரி\nதிருச்சி உணவு பொருள் வழங்கல் துறையின் முதுநிலை மண்டல மேலாளர்\nகோவை ஆயப்பிரிவு துணை ஆணையாளர்\nசென்னை, மாவட்ட வருவாய் அதிகாரி\nதொழில் வணிகத்துறை இணை இயக்குனர்\nமாநிலத் தேர்தல் ஆணையச் செயலர்\nநுகர்பொருள் வழங்கல் துறை இணை ஆணையர்\nபுது திருப்பூர் மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குனர்\nகோஆப்டக்ஸ் நிர்வாக இயக்குகனர் (தற்பொழுது)\nஊழலிலேயே பிறந்து வளர்ந்து வாழும் கோடிக்கணக்கான தமிழர்களில் தப்பிப்பிறந்தவர்⁉\n✅லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து\n✅உனக்கு அதிகாரம் இருந்தால் அதை ஏழைகளின் மேம்பாட்டிற்கு பயன்படுத்து\n✅உயர உயரப் பற… வானம் வசப்படும்\n2⃣இவருக்கு ஏன் இந்த வேண்டாத வேலை...\n👎23 ஆண்டுகளில் 24 முறை இட மற்றும் பணி மாற்றம்..\n👌கடன் வாங்கி கட்டிய தன் ஒரே சொத்தை பகிரங்கமாய் அறிவித்த முதல் இந்திய ஐ.ஏ.ஸ் அதிகாரி.\n👌மதுரையில் நடந்த முதல் நேர்மையான தேர்தல்.\n👌சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளின் உழவன் உணவகம்\nமனிதர்கள் குடிக்க ஏற்ற பானமில்லைன்னு பெப்சி கம்பெனிக்கு எட்டு பூட்டு போட்டது‼\nசென்னையில் 600 கோடி ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு‼\nபாலாறு மணல் கொள்ளை தடுப்பு‼\nகோவை மதுபான ஏல சீரமைப்பு, பிரபல சைவ உணவக மதுபான பதுக்கல் முற்றுகை‼\nநாமக்கல் மாவட்ட ஒரு கோடி மரக்கன்று திட்டம்,\nகொல்லி மலை அடிவாரத்தில் தடுப்பணை திட்டம்,\nதொடுவானம் ~ கிராம மக்கள் தங்கள் புகார்களை இணைய வழியாக பதியும் திட்டம்‼\n✅✅ நட்டத்தில் இயங்கிய கோ ஆப் டெக்ஸை லாபத்திற்கு மாற்றியது\nஉயிரையும் பணயம் வைத்து கிராணைட் மோசடி பதுக்கல்களை அம்பலப்படுத்தியது.\nகட்சி பேதமின்றி என்றுமே ஆளும் கட்சி மற்றும் அது சார்ந்த ஊழல் பெருச்சாளிகள்.\nஅழகிரி, பிஆர்பி, கோகுல இந்திரா அன் கோ.\nஎன்றும் வாய்மையே வெல்லும் என நம்பி ஆதரவளிக்கும் நல்ல உள்ளங்கள், இளைஞர்கள்.\nஒவ்வொருவருக்கும் ஒரு கொள்கை இருக்கும், அந்த கொள்கை எத்தகையது என்பதே, அவர் எத்தகையவர் என்பதைத் தீர்மானிக்கும். இதோ, நமது சகாயம் அவர்களின் கொள்கைகள் நாம் அறிந்தவையே,குறிப்பாக ஏழைகளுக்காக உழைப்பவர். தீமைகள் எங்கிருந்தாலும் எதிர்ப்பவர். அதனால் ஏற்படும் விளைவுகளை எண்ணி, தனக்கு பாதிப்பு ஏற்படும் என்று எண்ணி, என்றுமே இவர் அஞ்சியதில்லை..\nஊழலிலேயே பிறந்து வளர்ந்து எவனும் எக்கேடும் கெட்டுப்போகட்டும்… யாராலும் இதை திருத்த முடியாது என்று சொல்லி டிவி பார்த்து பொழுது போக்கும் கோடிக்கணக்கான தமிழர்களிடையே வாழ்வது.\nஒரு நல்ல சமூகம் உருவாக வேண்டும், மாணவர்கள் மனத்திலும் நேர்மையை இப்போதே விதைக்க வேண்டும் என்ற அவரது அக்கறையை, இதை விட விளக்கமாக சொல்ல வேண்டுமா என்ன\nஒரு பெரியவர் புகார் கொடுத்திருக்கிறார், தான் வாங்கிய பெப்சியில் ஏதேதோ மிதப்பதாக, உடனே அந்த பெப்சியை பரிசோதனைக்கு அனுப்பி, பரிசோதனை முடிவு - அந்தப் பெப்சி அருந்த ஏற்றது இல்லை என்று வந்ததும், உடனே அந்த பெப்சி தயாரிக்கும் \"யூனிட்டிற்கு\" \"சீல்\" வைத்திருக்கிறார்.\nஅப்போது அவர் காஞ்சிபுரத்தில் டி.ஆர்.ஓ-வாகப் பணியாற்றிக் கொண்டிருந்தார், \"சீல்\" வைக்க அவரோடு வந்த தாசில்தார் பயந்திருக்கிறார், \"இதெல்லாம் மாவட்ட ஆட்சியரிடம் கேட்க வேண்டும்\", என்று. அவருக்கும் தைரியம் கொடுத்து, இதைச் செய்யே நமக்கே அதிகாரம் இருக்கிறது என்று சொல்லி சீல் வைக்க அழைத்துச் சென்றிருக்கிறார்.\nதனது மகளுக்கு உடல் நிலை சரியில்லாத போது, கையில் நான்காயிரம் பணம் இல்லாமல் கடன் வாங்கி வைத்தியம் பார்த்தவர் இவர். அப்போது அவருக்கு மதுபானக் கடைகள் ஒரு கடைக்கு பத்தாயிரம் ரூபாய் தர தயாராக இருந்திருக்கின்றன. ஆனாலும் அவர் அந்த சூழ்நிலையிலும் லஞ்சம் வாங்கவில்லை, தெரிந்தவரிடம் கடன் வாங்கி மருத்துவம் பார்த்துவிட்டு கடனை உடனே அடுத்தமாதம் சம்பளம் வந்ததும் திருப்பிக் கொடுத்திருக்கிறார்.\nபொதுமக்கள் எப்போதும் தொடர்பு கொள்ளலாம் என்று அவரது தொலைபேசி எண்ணி அவர் வெளியிட்டிருக்க, \"சார், கேஸ் கம்பனிக்கு போன் போட்டா எடுக்க மாட்டிக்காங்க\", இப்படி எல்லாம் அழைப்பு வந்திருக்கிறது. ஆனாலும், பொறுமையாக இது போன்ற அழைப்புகளையும் விசாரித்து உதவுமாறு உத்தரவிட்டிருக்கிறார்.\nமதுரையில் சரியாக தேர்தல் நடைபெறுவதற்கு இவர் ஆற்றிய பணியை சொல்லவும் வேண்டுமா திருமங்கலம் தேர்தல் மிகவும் நேர்மையான முறையில் நடக்க இவர் தானே காரணமாய் இருந்தார்.\nஇன்று நடந்து கொண்டிருக்கும் \"கிரானைட் ஊழல்\" வழக்கு, அந்த ஊழல் குறித்த விபரங்கள் வெளி வருவதற்குக் கூட, இவர் முதன் முதலில் இது குறித்து தீவிரமாக விசாரணை செய்தது தான் காரணம்.\nஎதற்கும் பயம் இல்லை, நேர்மை, அது தான் இவரது கொள்கையாக இருக்கிறது.\n🎯கிராமப்புற ஏழைகளுக்காகஅனைத்து வசதிகளும் கூடிய இலவச மருத்துவமனை.\nநேர்மை நிச்சயம் வெல்லும்,சில நேரங்களில் அது தாமதமானாலும் சரியே.👍👍👍\nஇதுவரை புரியாதது:அடுத்த பதவியும் இடமும்\nவிரும்புவது:தமிழ், தமிழர்கள், கிராமம், திலீபன் மற்றும் யாழினி❗\nவிரும்பாதது:முக்கிய குற்றவாளிக்கே கடிதம் எழுத வேண்டிய நிலை❓\nநேர்மைக்கு சொந்தக்காரரான சகாயம் போல் எதற்கும் சகாயமாகாத அதிகாரிகள் நம் நாட்டுக்கு நிறைய தேவை.இது போன்று நேர்மையானவர்கள் குறைவு தான், காரணம், நூறு தீயவர்களை அழிக்க, ஒரு நல்லவர் போதும். தீமையும் நன்மையையும் சமமான சக்தி கொண்டவை இல்லை தானே அதனால் தான் போலும், சக்தி கொண்ட நல்லவர்கள் குறைவாகவே இருக்கிறார்கள் அதனால் தான் போலும், சக்தி கொண்ட நல்லவர்கள் குறைவாகவே இருக்கிறார்கள்சினிமா, கதை நாயகர்களை விட்டுவிட்டு இவரை போன்ற நல்ல மனிதர்களை, நம் குழந்தைகளுக்கு முன்மாதிரியாக அறியத்தருவோம்.ஊழலற்ற நல்ல சமூகத்திற்கு வழிகாட்டுவோம்.\nஎவ்வளவு தேவையற்ற விஷயங்களை Shere செய்கிறோம்\nஇதனை ஒரு நான்கு பேருக்கு அனுப்பி அதில் ஒருவர் இதனை\nகருத்தில் கொண்டாலும் அது தமிழர்களுக்கு கிடைக்கும் வெற்றி தான்\nசகாயம் என்ற சகாப்தத்திற்கு வாழ்த்துக்கள் இன்னும் உங்கள் சேவை தமிழ் நாட்டில் தேவை...\nதொகுப்பு : மு.அஜ்மல் கான்.\nசொத்து குவித்ததாக 4 ஆண்டுகள் சிறை பெற்ற முதலாவது...\nடெல்லி உயிரியல் பூங்காவில் புலிக்கு இரையான இளைஞர் ...\nஜப்பானில் ஓமலூரைச் சேர்ந்த முத்துவிற்கு தபால் தலை ...\n அன்புள்ள காதலால் ஆதல் செய...\nநீங்கள் சொந்த வீடு கட்டுவோரா \nதிருமணமான பெண் தன் தாய்க்கு எழுதிய கடிதம்..\nஇணையத்தில் வேலை தேடும் நண்பர்களுக்கு ஓர் அறிய தகவ...\nசகாயம் ஐ.ஏ.எஸ் அவர்களைப் பற்றிய ஒரு சமூக பார்வை......\nலெக்கின்ஸ் அணிவதால் பெண்களுக்கு உண்டாகும் தீமைகள்\nஇன்று துபாய் மெட்ரோவுக்கு இன்று வயது 5 \nஇட்லி செய்முறை பற்றி திருமதி தையுபாவின் அசத்தல் பே...\nநாளந்தா பல்கலைக்கழகம் மீண்டும் உதயம்\nதிருக்குறள் (Thirukkural) By திருவள்ளுவர்(Thiruvalluvar)\nTamilil Quran - தமிழ் குர்ஆன்\nஒரே உறவில் கர்ப்பம் சாத்தியமா-ஒரு சிறப்பு பார்வை ...\nஒரு பெண்ணின் வாழ்வில் மிகப் பெரிய விஷயம், குழந்தை பெறுவது. திருமணத்தை விடவும் சவாலான அதேநேரம் திருப்தி அளிக்கும் விஷயம். திருமணமான ஒரு பெண...\nகர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் பற்றிய சமூக விழிப்புணர்வு பார்வை ...\nஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் கர்ப்பகாலம் என்பது தனிச்சிறப்பு வாய்ந்தது. இந்த சமயத்தில் ஒரு பெண் தனது உடலில் மேலும் ஒரு உயிரை சுமக்க தயார் ஆக...\nகர்ப்பப்பை கட்டிகள் (Uterine Tumors)-ஒரு அலசல்....\n* கர்ப்பப்பை பாகங்கள் - கருப்பை கழுத்துப் பகுதி (Cernix) - உடல்பகுதி - கருக்குழல் - கருப்பை எங்கு வேண்டுமானாலும் புதிய வளர்...\n\"ஜீஷா\" பிரமிட்டுக்கள்(The Great Pyramid of Giza) ஏன்\nமனித நாகரீகத்தின் அடையாள சின்னமாகவும் அதிசயம் பல கொண்டுள்ளதுமாகிய ஜீஷா பிரமிட்டுக்கள் ( The Great Pyramid of Giza ) படத்திலுள்ளன. எ...\nதாம்பத்திய திருப்தி என்றால் என்ன\nசெக்ஸ் உறவில் ஆணும், பெண்ணும் கடைப்பிடிக்க வேண்டிய சில முக்கிய அம்சங்களை காமசூத்திரம் தெள்ளத்தெளிவாக விளக்கி இருக்கிறது. அது பற்றி இன்ற...\nசீரழிக்கும் சிசேரியன்களும்(CESAREAN DELIVERY) Vs சுகமான பிரசவமும் (Normal delivery)-ஒரு விழிப்புணர்வு ஆய்வு\nஇந்த கட்டுரையை படித்து பயன்பெறுகின்ற அணைத்து கர்ப்பிணி தாய்மார்களுக்கும் சுகபிரசவம் அடைய என்னுடைய வாழ்த்துகளை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://aumonerietamouleindienne.org/", "date_download": "2018-04-26T13:33:19Z", "digest": "sha1:Q3JEW3REARWJFRELEZCTQNX4BTTVWOHG", "length": 10882, "nlines": 113, "source_domain": "aumonerietamouleindienne.org", "title": "Accueil - AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE", "raw_content": "\n29 மார்ச் 2018 ஆண்டவரின் இறுதி இராவுணவுத் திருப்பலி\n29 மார்ச் 2018 ஆண்டவரின் இறுதி இராவுணவுத் திருப்பலி\nஅருள்பணி இயேசு கருணாநிதி, மதுரை\nநற்கருணை, பணிக்குருத்துவம், அன்புக் கட்டளை - இந்த மூன்றையும் இன்றைய நாளில் கொண்டாடுகிறோம். இன்றைய நற்செய்தி வாசகத்தில் இரண்டு வினைச்சொற்கள் இரண்டு முறை கையாளப்படுகின்றன: 'அறிதல்', 'புரிதல்.'\nஅ. தன் நேரம் வந்துவிட்டது என்பதை இயேசு அறிந்திருக்கிறார் (13:1)\nஅருள்பணி இயேசு கருணாநிதி, மதுரை.\n'இயேசு முள்முடியும் செந்நிற மேலுடையும் அணிந்தவராய் வெளியே வந்தார்.\n' என்றான்.' (யோவான் 19:5)\nஇன்று நாம் வாசிக்கக் கேட்ட யோவான் நற்செய்தியாளர் எழுதிய பாடுகளின் வரலாற்றில் மையமாக இருப்பவை 'இதோ மனிதன்' என்னும் இரண்டு வார்த்தைகள்தாம். கிரேக்கத்தில் 'இட்து ஹோ ஆன்த்ரபோஸ்' என இருக்கின்றது. 'மனிதன்' என்ற வார்த்தை தமிழில் 'ஆண்' என்று பாலினத்தை வேறுபடுத்துகிறது. ஆனால், கிரேக்கத்தில் இது பொதுவான பாலினம். ஆக, 'மனிதன்' என்ற இந்த வார்த்தை பெண் பாலினத்தையும் தன்னகத்தை வைத்துள்ளது என்பதை மனதில் கொள்வோம்.\nநமக்காகப் பலியான இயேசு - மறை உரை - நல்ல வெள்ளி\nமறை உரை - நல்ல வெள்ளி :\nநமக்காகப் பலியான இயேசு -\nஜப்பானில் உள்ள கடற்கரைக் கிராமம் அது. அந்தக் கிராமத்தில் நிலநடுக்கம், சுனாமி போன்ற இயற்கைப் பேரிடர்கள் எல்லாம் அடிக்கடி ஏற்படும். மக்களும் அவையெல்லாம் தங்களுடைய வாழ்வில் ஓர் அங்கம் என்பதுபோல் வாழப் பழகிக்கொண்டார்கள். இவற்றுக்கிடையில் ஒருநாள் அந்தக் கிராமத்தில் இருந்த மலை உச்சியில் நெல் பயிரிட்டு சாகுபடி செய்துவந்த பெரியவர் ஒருவர் கடல் நோக்கி தன்னுடைய கண்களை ஏறெடுத்துப் பார்த்தார்.\nதன்னையே உணவாகத் தரும் இயேசு - மறை உரை - பெரிய வியாழன்\nமறை உரை - பெரிய வியாழன் :\nதன்னையே உணவாகத் தரும் இயேசு\nமுன்பொரு காலத்தில் சிபிச் சக்ரவர்த்தி என்றொரு சோழ மன்னன் இருந்தான். அவன் மக்களிடத்தில் மட்டுமல்லாமல் அனைத்து உயிர்களிடத்தும் மிக்க அன்பு பாராட்டி வாழ்ந்து வந்தான். ஒருநாள் மாலைநேரம் சிபி அரண்மனை மேல்மாடத்தில் உலவிக்கொண்டு இருந்தார். அப்போது பறவை ஒன்று உயிருக்குப் பயந்து கிரீச்சிடுவதுபோல் சத்தம் வந்தது.\nபுனித வியாழன் (29.03.2018) வாசகங்கள்\nபுனித வியாழன் (29.03.2018) வாசகங்கள்\nவிடுதலைப்பயண நூலிலிருந்து வாசகம் 12:1-8, 11-14\nஎகிப்து நாட்டில் ஆண்டவர் மோசேக்கும் ஆரோனுக்கும் பின்வருமாறு கூறினார்:2 உங்களுக்கு மாதங்களில் தலையாயது இம்மாதமே ஆண்டில் உங்களுக்கு முதல் மாதமும் இதுவே ஆண்டில் உங்களுக்கு முதல் மாதமும் இதுவே3 இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பு முழுவதற்கும் நீங்கள் அறிவியுங்கள்: அவர்கள் இம்மாதம் பத்தாம்நாள், குடும்பத்துக்கு ஓர் ஆடு, வீட்டிற்கு ஓர் ஆடு என்று தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டும்.4\nபுனித வெள்ளி (30.03.2018) வாசகங்கள்\nபுனித வெள்ளி (30.03.2018) வாசகங்கள்\nஅவர் தம் உயிரைக் குற்றநீக்கப்பலியாகத் தந்தார்\nஏசாயா நூலிலிருந்து வாசகம் 52:13-43:12\nஇதோ, என் ஊழியர் சிறப்படைவார்: அவர் மேன்மைப்படுத்தப்பட்டு, உயர்த்தப்பட்டு, பெரிதும் மாட்சியுறுவார்.14 அவரைக் கண்ட பலர் திகைப்புற்றனர்: அவரது தோற்றம் பெரிதும் உருக்குலைந்ததால் மனித சாயலே அவருக்கு இல்லாதிருந்தது: மானிடரின் உருவமே அவருக்கு இல்லை.15 அவ்வாறே, அவர் பல பிறஇனத்தாரை அதிர்ச்சிக்குள்ளாக்குவார்: அரசர்களும் அவரை முன்னிட்டு வாய்பொத்தி நிற்பர்: ஏனெனில் தங்களுக்குச் சொல்லப் படாததை அவர்கள் காண்பர்: தாங்கள் கேள்விப்படாததை அவர்கள் புரிந்து கொள்வர்.1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://karyapolitik.blogspot.com/2009_07_27_archive.html", "date_download": "2018-04-26T13:10:46Z", "digest": "sha1:IKKSOILU3FNMGRZ7LUQPQY65PR25M2US", "length": 14851, "nlines": 259, "source_domain": "karyapolitik.blogspot.com", "title": "SIKIT-SIKIT.... NAK MAIN POLITIK: Jul 27, 2009", "raw_content": "\nபுதிய அரசியல் சுனாமி ஏற்பட்டால் என்னவாகும்\nஜனநாயகத்தின் பிறப்பிடம் என்று கருதப்படும் மலேசியாவின் நாடாளுமன்றம், சமீபத்தில் அடித்த பலவிதமான புதிய சுனாமியின் அலைக்கு நாட்டின் அரசியல் கட்டமைப்பு அஷ்திவாரத்தோடு அலசிப்பார்க்கும் அளவிற்கு தாக்கத்தை எற்படுதிவுள்ளது.\nஅப்படி என்னதான் பெரிய விஷயங்கள் நடந்தது என்று கேட்டால், முதலில் அளசிபார்க்கும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம் என்ற கருத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். தேர்வு செய்யப்பட்ட நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற மக்கள் பிரதிநிதிகள் மக்களுக்கு சேவை செய்யக்கூடிய சேவகர்களாக இருக்கவேண்டுமே ஒழிய மக்களை உதாசினப்படுத்தும் வஞ்சகர்களாக இருக்கக் கூடாது.\nஅப்படித்தான் நான் இருப்பேன் என்றைக்கும் தன் போக்கு தனித்தன்மை வாய்ந்த போக்கு என்று வீர வசனம் சொல்லும் இன்றைய சந்தர்பவாத அரசியல் தலைவர்கள் மீண்டும் மக்களிடம் கையேந்தும் நிலை வர வாய்ப்பு உள்ளதை மறந்துவிடக்கூடாது.\nதற்பொழுது நடக்கும் அரசியல் சூழ்நிலை மக்களின் அபிமான கருத்துக்கள் மலேசியா அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தத்தும் நிலைக்கு உள்ளது. கடந்த பத்து வருடத்திற்கு மேல் அரசியலில் இருக்கும் தலைவர்கள் மக்களிடையே படுவேகமாக அரசியல் செல்வாக்கில் வீழ்ச்சி அடைந்தனர் என்பதனை மறந்துவிடக்கூடாது. அதிலும் இந்தியர்களின் நிலை படு மோசம் என்பதனை சொல்லாமல் இருக்க முடியாது.\nஅதற்கான காரணங்கள் குகனை போல தடுப்பு காவலில் உயிர் இழந்த இந்தியர்களின் எண்ணிக்கையின் அதிகரிப்பு, இந்தியர்களின் சொந்துடமை விகிதம் இன்னும் ஏற்றம் காணாமல் இருப்பதும், மேலும் இந்தியர்களின் அரசாங்க வேலை வாய்ப்புகளில் ஏற்றம் என்ற புள்ளி விவகாரம் இல்லாத தகவல் மற்றும் பல.\nஇந்த தாக்கங்களின் கொடுத்த வீழ்ச்சியின் எதிரொலி மறுபடியும் எந்த திசை வீசும் என்பதே ஒரு பெரிய கேள்விக்குறியாகி விட்டது. ஆரம்பத்தில் வீசிய சுனாமி இந்தியர்களை ஒதுக்கிய அனைவரையும் தவிடுபோடியாக்கியது. அதில் தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஒரு சிலர் மட்டுமே கரைசேர்ந்தனர்.\nஇந்த அவல நிலை இந்தியர்களுக்கு மலேசியா மண்ணில் தொடர்கதை ஆனால் மீண்டும் அடிக்கும் சுனாமியில் மொத்தமாக அனைவரையுமே சுருட்டிக்கொண்டுபோய்விடும் என்பதனை மறந்துவிடக்கூடாது.\nஇன்றிய அரசியல் மாற்றங்களில் மிகவும் முக்கிய பங்கு வகிப்பது இன்றைய தினசரி பத்திரிக்கைகள். அவைகளுக்கு முதலில் நன்றி தெரிவித்தல் வேண்டும். கடந்த பொது தேர்தலுக்கு பிறகுதான் பல பிரச்சனை உள்ள விவகாரங்கள் பத்திரிக்கைகளில் வெட்ட வெளிச்சமாக எழுதிய பிறகு இன்றைக்கு இந்தியர்களின் நிலை உயர்வுகாணும் அடித்தளமாக அமைந்தது.\nஇரண்டு வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற அரசியல் மறுமலர்ச்சியில் தான் இந்தியரின் நிலை குறித்த \"பல இரகசியங்கள்\" செயல் வழி செய்தியின் மூலம் பல உலக நாடு மக்களின் பார்வைக்கு கொண்டுசெல்லப்பட்டது.\nஇந்த கால கட்டத்தில் நடைபெற்ற மறுமலர்ச்சி தான் இந்நாட்டு அரசியலில் அதிர்வலைகளை உருவாக்கியது.\nஆகவே இன்று பதவியில் இருக்கும் அனைத்து மக்கள் பிரதிநிதிகள் சற்று மேல்நோக்கி பார்ப்பதை நிறுத்தி, மக்களை நேருக்கு நேர் நோக்கி பார்க்கும் அளவுக்கு பழக்கத்தை மாற்றியமைத்தால் அவர்களின் மீது காணப்படும் கறுப்புக்கரை கழுவப்பட்டு இனிவரும் அரசியல் அழுக்கற்ற கட்டமைப்பை கொண்டிருக்கும் எம்பதை தைரியமாக சொல்லலாம். இதற்க்கு இன்றைய அனுபவமுள்ள இந்திய பிரதிநிதிகளே பதில் சொல்லே முடியும்.\nபுதிய அரசியல் சுனாமி ஏற்பட்டால் என்னவாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} {"url": "http://news.lankasri.com/othercountries/03/176532?ref=category-feed", "date_download": "2018-04-26T13:41:10Z", "digest": "sha1:G4SMDO6XLGUOZWBH532FSS7YY6SIM522", "length": 7147, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "உங்கள் கண்கள் கலங்கும்! சிரியாவின் நிலைப்பற்றி பார்வையற்ற சிறுமியின் பாடல் - category-feed - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n சிரியாவின் நிலைப்பற்றி பார்வையற்ற சிறுமியின் பாடல்\nசிரியாவின் நிலை குறித்து பார்வையற்ற சிறுமி ஒருவரின் பாடல் காட்சிகள் உலக அரங்கில் அதிர்வை ஏற்படுத்தி உள்ளன.\n7 ஆண்டுகளாக உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்டுள்ள சிரியாவின் நிலை குறித்து பார்வையற்ற சிறுமி ஒருவர் குப்பை மேடாக காட்சியளிக்கும் சிரிய நகர வீதிகளில் பாடிக் கொண்டு வருவது போன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.\nஅதன் பின்னர் ஆங்காங்கே மறைந்திருக்கும் சிரிய குழந்தைகள் தாங்களும் பாடிக் கொண்டே அந்தச் சிறுமியுடன் துணைக்கு வருவது போன்றும் யுனிசெப் சார்பில் அந்தப் பாடல் தயாரிக்கப்பட்டுள்ளது\nசமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வரும் இந்தப் பாடல் காட்சி மிக உருக்கமாகவும், சிரியாவின் தற்போதைய நிலையை விளக்குவதாகவும் அமைந்துள்ளது.\nயூ டியூப் வீடியோவில் தற்போது டிரெண்டிங்காக இந்தப் பாடல் மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://news.lankasri.com/swiss/03/176557?ref=archive-feed", "date_download": "2018-04-26T13:45:07Z", "digest": "sha1:OCXT5J6CZGWDCHPRHV7ADVV4RA5DFI5V", "length": 6767, "nlines": 137, "source_domain": "news.lankasri.com", "title": "சுவிஸ் உள்ளாட்சி தேர்தலில் ஈழத்தமிழர் ஒருவர் அமோக வெற்றி - archive-feed - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசுவிஸ் உள்ளாட்சி தேர்தலில் ஈழத்தமிழர் ஒருவர் அமோக வெற்றி\nசுவிட்ஸர்லாந்து - சூரிச் மாகாணத்தின் அடல்விஸ் நகரசபைத் தேர்தலில் ஈழத் தமிழரான கண்ணதாசன் முத்துத்தம்பி அமோக வெற்றியை பதிவு செய்துள்ளார்.\nகடந்த 15ம் திகதி இடம்பெற்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்ற அவர், இரண்டாவது முறையாகவும் நகர சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.\n36 ஆசனங்களை கொண்ட குறித்த நகரசபைக்கு 140க்கும் மேற்பட்டவர்கள் போட்டியிட்டனர். இதில் கண்ணதாசன் முத்துத்தம்பி சோசலிசக் கட்சி சார்பில் போட்டியிட்டிருந்தார்.\nசோசலிசக் கட்சி சார்பில் குறித்த நகர சபைக்கு 21 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அதில் கண்ணதாசன் முத்துத்தம்பி ஐந்தாம் இடத்தினை பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://saranagadi.blogspot.com/2010/08/dog-and-monkey.html", "date_download": "2018-04-26T13:34:04Z", "digest": "sha1:6I3ZEQ6MHGJZXOTM7UQ7T34LVJUBFMYO", "length": 8725, "nlines": 62, "source_domain": "saranagadi.blogspot.com", "title": "Hare Guruvayurappa: The Dog and Monkey", "raw_content": "\nவாரணாசி என்ற புண்ய ஸ்தலத்தில் ஒரு வண்ணான் வசித்து வந்தான். அவன் ஒரு கழுதையையும் ஒரு நாயையும் வளர்த்து வந்தான். கழுதையை துணிகளை ஆற்றுக்கு சுமந்து வருவதற்கும் நாயை வீட்டு காவலுக்கும் உபயோகப்படுத்திக்கொண்டான்.\nகழுதை பெரிய மூட்டைகளை முதுகு ஒடிய சுமந்துகொண்டு மெதுவாக போகும். வண்ணான் அதி குச்சியால் அடித்துகொண்டே போவான். வீட்டில் நாயோ வண்ணான் வரும் வரை வீட்டு வாசலில் உறங்கிகொண்டே இருக்கும். வண்னான் அதற்கு போகும்போது தீனி போட்டுவிட்டு போவான். வந்தபின்னும் அதற்கு தீனி கிடைக்கும்.\nகழுதை இதை பார்த்துகொண்டே இருக்கும். அதற்கு ரொம்ப பொறாமை- நாம் தினமும் பொதி சுமந்து, அடிவாங்கி போதும் போதாமல் தீனியை தின்று கஷ்டப்படுகிறோம். ஆனால் இந்த நாயோ சுகமாக தீனியை தின்றுவிட்டு பகலில் வீட்டை காக்கின்றேன் என்ற பெயரில் நாள் முழுவதும் தூங்கிகொண்டே இருக்கிறது என்று வருத்தப்பட்டு கொண்டே ஒரு நாள் நாயையே கேட்டும் விட்டது.\nஅதற்கு நாய் என் வேலை வீட்டை காவல் காப்பது-உன் வேலையோ பொதி சுமப்பது. நீ உன் வேலையை செய்-நான் என் வேலையை செய்கின்றேன் என்று காட்டமாக பதில் சொல்லிவிட்டது. கழுதையும் பேசாமல் படுத்துவிட்டது.\nஒரு நாள் இரவில் இரண்டும் உறங்கிகொண்டிருக்கும்போது மெதுவாக ஒரு திருடன் சுவர் ஏறி குதிப்பதை நாயும் ஒரு கண்ணால் பார்த்துவிட்டது.கழுதையும் பார்த்துவிட்டது. நாயோ குலைக்காமல் படுத்துக்கொண்டே வேடிக்கை பார்த்தது. இதை பொறுக்காமல் கழுதை நாயை பார்த்து கேட்டது-நீ எஜமானனுக்கு இப்படி துரோகம் செய்யக்கூடாது. திருடனை நீ பார்த்தை நானும் பார்த்தேன்-அப்படி இருக்குக்போது நீ ஏன் குறைக்காமல் இருக்கிறாய் என்று கேட்டது.\nஅதற்கு நாய்-நீ உன் வேலையை கவனி-நான் என் வேலையை கவனித்துக்கொள்கிறேன்-என் விஷயத்தில் தலை இடாதே. நான் சும்மா இருப்பதற்கு காரணம் உண்டு. பல நாட்களாக நான் எஜமானன் இல்லாதபோதும் கவனமாக பார்த்துகொண்டிருக்கின்றேன். ஆனால் சமீப காலமாக எஜமானன் என்னை அலட்சியம் செய்துவருகிறான்-என்னை கவனிப்பதில்லை-தீனியும் சரியாக\nபோடுவதில்லை-அவனுக்கு பாடம் கற்பிக்கவேண்டும்-நீ சும்மா இரு என்று கோபமாக பேசிவிட்டு படுத்துக்கொண்டது.\nகழுதைக்கு பொறுக்கமுடியவில்லை. நீ ஒரு துரோகி. உண்ட வீட்டிற்கு துரோகம் செய்பவன்-கஷ்டகாலத்தில் பழி தீர்த்துகொள்வது போன்ற செயல்கள் செய்பவன்-கெட்டவன் யஜமான துரோகி. நீயோ யஜமானனை காக்க வேண்டிய சமயத்தில் அதை செய்யாமல் வேடிக்கை பார்க்கிறாய். நீ இப்போது யஜமானனை எழுப்பாமல் இருந்தால் நான் எழுப்புகிறேன் என்று பலமாக கத்திற்று. இதை கேட்ட திருடன் ஓடிவிட்டான்.\nவண்ணான் பாதி தூக்க கலக்கத்தில் தன்னை இந்த கழுதை கத்தி எழுப்பிவிட்டதை கண்டு கோபமாக வெளியே வந்தான். சுற்றும் முற்றும் பார்த்தான்- யாரையும் காணவில்லை. அவனுக்கோ படு கோபம்-தன் தூக்கம் கலைந்துபோனதால். ஒரு குச்சியை எடுத்து கழுதையை விளாசு விளாசென்று அடித்துவிட்டு மறுபடியும் தூங்கபோய்விட்டான்.\nகழுதையோ வலி பொறுக்காமல் துடித்தது. அதை கண்டு நாய் நகைத்தது-பார்த்தாயா உன்னுடைய யஜமான விச்வாஸத்திற்கு கிடைத்த பரிசை உன்னுடைய யஜமான விச்வாஸத்திற்கு கிடைத்த பரிசை இனிமேலாவது நீ உன் வேலையை பார்த்துகொண்டு போ-நான் என் வேலையை பார்த்துக்கொள்கிறேன்-மற்றவர்கள் விஷயத்தில் அனாவசியமாக தலையிடக்கூடாது.\nகழுதையோ தனக்கு கிடைத்த பரிசை நினைத்து பேசாமல் இருந்துவிட்டது,\nஅரங்ககனை அநுபவித்தவர்கள்ஆழ்வாரும், பட்டரும் கலியுக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.adiyakkamangalam.com/science/2399/underground-ocean-found-on-enceladus-moon-of-saturn", "date_download": "2018-04-26T13:29:11Z", "digest": "sha1:O364ZNOIFV3E63HCERNFFWZMNRJQ4R76", "length": 12643, "nlines": 78, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam Underground Ocean Found On Enceladus Moon Of", "raw_content": "\nசனியின் துணைகோள் என்செலாடஸில் கடல் போன்ற தண்ணீர்\nஅடியக்கமங்கலம், 06.04.2014: சனி கிரகத்தை சுற்றும் துணைக்கோள் என்செலாடஸில் உறைபனி மூடிய அதன் மேற்பரப்புக்கு கீழே திரவ நிலை மிகப்பெரிய கடல் ஒன்று இருப்பதற்கான புதிய ஆதாரங்கள் தற்போது கிடைத்துள்ளன. இந்த குட்டிக் கிரகத்தின் தென் துருவத்தில் வரிவரியாகத் தோன்றும் ஒரு இடத்தில் இருந்து உறைபனியாலான துகள்கள் போலத் தோன்றிய பொருட்கள் பீய்ச்சியடித்ததை விஞ்ஞானிகள் கண்ட காலம்தொட்டே அவர்கள் இது தொடர்பாக உற்சாகம் அடைந்திருந்தனர்.\nநாஸாவின் காஸினி விண்கலம் இந்த துணைக்கோளின் மேலே பறந்து செல்லும் போது அது சேகரித்த தகவல்களை தற்போது ஆராய்ந்துள்ள விஞ்ஞானிகள் இந்த துணைக்கோளில் திரவ நீர் இருப்பதற்கான அறிகுறிகளை அக்கோளின் ஈர்ப்பு சக்தி பற்றிய விவரங்களில் கண்டுள்ளதாக கூறுகின்றனர். மிகப் பெரியளவில் கடல் போன்று தண்ணீரைக் கொண்டுள்ள நீர் நிலை ஒன்று இந்த துணைக்கோளில் இருப்பதற்கான அடையாளங்களை இந்த தகவல்கள் காட்டுகின்றன.\nசூரிய குடும்பத்தில் பூமிக்கு வெளியே நுண்ணுயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுள்ள ஒரு இடம் என்று பார்த்தால் அது என்செலாடஸாக இருக்க முடியும் என்ற பேராசிரியர் லெஸ் மற்றும் அவரது அணியினரின் நம்பிக்கைக்கு வலுசேர்ப்பதாக இந்தப் புதிய தகவல்கள் அமைந்துள்ளன. என்செலாடஸின் மேற்பரப்புக்கு கீழே சுமார் நாற்பது கிலோ மீட்டருக்கடியில் இந்த திரவ நீர்நிலை இருக்கலாம் என இந்த தகவல்கள் குறிப்புணர்த்துகின்றன. என்செலாடஸைச் சுற்றியுள்ள வாயு மண்டலத்தில் நீராவில் கலந்திருக்க வாய்ப்புள்ளது என காஸினி விண்கலம் 2005ம் ஆண்டு கண்டதில் இருந்தே, அந்த கோளின் மேற்பரப்பில் உள்ள உறைபனிக்கு கீழே திரவ வடிவில் நீர் இருக்கலாம் என்ற ஊகங்கள் வலுப்பெற்றன. இந்த வாயு மண்டலத்தில் நீராவி கலந்திருக்க காரணம் இத்துணைக்கோளின் மேற்பரப்பில் வரிவரியாக காணப்படும் பிளவுகளில் இருந்து நீராவி பீய்ச்சியடிக்கப்படுவதுதான் என்று கண்டுபிடிக்கப்பட்டது.\nபீய்ச்சியடிக்கப்படும் நீராவியில் ஊடாகப் பறந்து அவற்றில் உப்புக் கரிக்கிறதா கரிமம் செறிந்த இரசாயணங்கள் இருக்கின்றனவாக என்று கஸ்ஸினி சோதனை செய்தும் இருந்தது. நீராவி பீய்ச்சியடிக்கப்படுவதன் காரணம் என்னவென்று இன்னும் முழுமையான தகவல் நமக்கு இல்லை. சனிக்கிரகத்தை மையத்தில் கொண்ட ஒரு வட்டப்பாதையில் என்செலாடஸ் சுற்றிவரவில்லை, மாறாக சனிக்கிரகத்தை பாதிநேரம் அருகிலும் பாதி நேரம் தொலைவிலும் கொண்டிருக்கக்கூடிய ஒரு நீள்வட்டப் பாதையில் இந்த துணைக்கோள் பயணிக்கிறது. எனவே இந்த துணைக்கோளின் மீது சனிக்கிரகத்தின் ஈர்ப்புசக்தி சில காலம் குறைவாகவும் சில காலம் அதிகமாகவும் இருக்கிறது.\nபுவியீர்ப்பு சக்தியின் மாறுதல்களின் காரணமாக உறைபனி உருகி வாயுமண்டலத்தில் பீய்ச்சியடிக்கப்படுவதாக கருதப்படுகிறது. என்செலாடஸின் தென் துருவத்தை ஒட்டிய இடங்களில் எட்டு கிலோமீட்டர் முதல் பத்து கிலோமீட்டர் வரை ஆழமான நீர் நிலை ஒன்று மேற்பரப்புக்கு அடியில் அமைந்துள்ளது என தற்போது கிடைத்துள்ள ஈர்ப்புசக்தி தகவல்கள் குறிப்புணர்த்துகின்றன.\nசூரியனில் பெரிய துளைகள் - நாசா\nவிண்வெளி குப்பைகளை அகற்ற நாசா முயற்சி\nசெவ்வாய் கிரகத்தில் நீல நிற சூரிய அஸ்தமனம்\nபூமிக்கு மேலே வாழும் உயிரினங்கள் - ஆய்வறிக்கை\nசெவ்வாய் கிரகத்தில் மிகப்பெரிய கடல் இருந்ததாக விஞ்ஞானிகள் தகவல்\nசெவ்வாய் கிரகத்திலும் செல்பி எடுத்த கியுரியாசிட்டி ரோபா\nசெவ்வாய் கிரகத்தில் ஏற்பட்ட மர்ம மூடுபனியால் விஞ்ஞானிகள் குழப்பம்\nபூமியைப் போல எட்டு புதிய கிரகங்கள் கண்டு பிடிப்பு\nசெவ்வாய் கிரகத்திற்குச் செல்ல புதிய மாற்று பாதை\nபூமியைவிட இரண்டரை மடங்கு பெரிய சூப்பர்-எர்த்தை கெப்ளர் கண்டுப்பிடித்துள்ளது\nசெவ்வாய் கிரகத்தில் பிரம்மாண்டமான ஏரி\nதண்ணீரில் இருந்து எரிபொருள் கண்டுபிடிப்பு\nவால் நட்சத்திரத்தில் பிலே விண்கலத்தை இறக்கி சாதனை\nவியாழன் கிரகத்தில் கடும் புயலால் ராட்சத கண் போன்ற தோற்றம்\nசூரிய வெப்பத்தை விட பத்தாயிரம் மடங்கு சக்தி வாய்ந்த சூரிய வெடிப்பு\nபூமியிலிருந்து 1800 ஒளி ஆண்டுகள் தூரத்தில் மிகப் பெரிய நிலா\nவிண்வெளியில் 176 அடி நீளமுள்ள தொலைநோக்கி நிருவ நாசா திட்டம்\nகெப்லர்-10C எனப்படும் பூமியை போன்ற ராட்சத கிரகம் கண்டுப்பிடிப்பு\nசூரியனுக்கு அருகில் குளுமையான நட்சத்திரம்\nகானிமெடே சந்திரனில் குவிந்து கிடக்கும் ஜஸ்கட்டிகள்\nசூரியனுக்கு அருகில் குளிர்ச்சியான நிழல் நட்சத்திரங்கள்\nசனி கிரகத்தில் புதிய துணை கிரகம் கண்டுபிடிப்பு\nசனியின் துணைகோள் என்செலாடஸில் கடல் போன்ற தண்ணீர்\nசெவ்வாய் கிரகத்தில் உறைந்து கிடக்கும் நீர்\nசூரிய குடும்பத்தில் குட்டி கிரகம் கண்டுபிடிப்பு\nபுதன் கிரகம் வேகமாக சுருங்கி வருகிறது\nஒன்றரைக் கோடி கிலோ மீட்டர் தூரம் கடந்து விட்ட மங்கள்யான்\nநட்சத்திர கூட்டங்களுக்கிடையில் பாயும் ஹைட்ரஜன் ஆறு\n440 கோடி ஆண்டுகளுக்கு முன் உருவான சனி கிரக வளையங்கள்\nசனி வரிவரியா� அதன் திரவ moon இருப்பதற்கான on of ஆதாரங்கள் மூடிய இந்த கிடைத்துள்ளன துணைக்கோள் என்செலாடஸில் found ocean Underground கிரகத்தை நிலை தென் துருவத்தில் சுற்றும் கீழே மிகப்பெரிய புதிய தற்போது குட்டிக் கிரகத்தின் மேற்பரப்புக்கு Enceladus உறைபனி ஒன்று கடல் Saturn\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamalar.com/News_Detail.asp?Id=642810", "date_download": "2018-04-26T13:29:20Z", "digest": "sha1:RBP7DLTTOFCYLHTK3B5TLGP4CA7V2GYN", "length": 18247, "nlines": 236, "source_domain": "www.dinamalar.com", "title": "pothu news | மீண்டும் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டு * தொழில் துறையினர் அதிர்ச்சி| Dinamalar", "raw_content": "\nமீண்டும் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டு * தொழில் துறையினர் அதிர்ச்சி\nபணமதிப்பிழப்பிற்கு பின் கள்ள நோட்டுக்கள் புழக்கம் ... 56\nபலாத்காரம், கிறிஸ்தவ மிஷனரி: அமைச்சர்கள் சர்ச்சை ... 213\n காஷ்மீர் போலீசார் ... 55\nதிருப்பூர் : திருப்பூரில் கடந்த இரண்டு மாதமாக மின்வெட்டு நேரம் குறைந்திருந்த நிலையில், மீண்டும் அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டதால், தொழில்துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nதிருப்பூரில் நூற்பாலைகள், பின்னலாடை உற்பத்தி, அரிசி, ஆயில் மில்கள், விசைத்தறி, இயந்திரங்கள், பாத்திர உற்பத்தி,கோழி பண்ணைகள், விவசாயம், இயந்திரங்கள் உற்பத்தி என தொழில்கள் அதிகம் உள்ளன.\nதினமும் சராசரி, 700 முதல் 750 மெகாவாட் வரை, மின்சாரம் தேவைப்படுகிறது.\nகடந்த இரு மாதங்களாக, நகர பகுதிகளில் இரண்டு மணி நேரம்; கிராம பகுதிகளில் அதிகபட்சமாக நான்கு மணி நேரம் என்ற அளவிலேயே மின்வெட்டு இருந்தது. அடிக்கடி மின்வெட்டு ஏற்படாமல், சீராக குறிப்பிட்ட\nநேரம் மட்டும் ஏற்பட்டதால், பொதுமக்களும், தொழில் துறையினரும் நிம்மதியடைந்தனர்.\nஆனால், கடந்த சில நாட்களாக மீண்டும் மின்வெட்டு நேரம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. திடீர், திடீரென மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. இரண்டு நாட்களாக தினமும் சராசரியாக, எட்டு மணி நேரம் வரை நகர\nபகுதிகளிலும், கிராம பகுதிகளில் 10 மணி நேரம் வரையிலும் மின் தடை ஏற்பட்டது. இதனால், பொதுமக்களும், தொழில் துறையினரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nகோடை காலம் துவங்குவதற்கு முன்பே, மின் வெட்டு நேரம் அதிகரித்துள்ளது; நீர் மின் உற்பத்தி குறைவு, மின் தேவை அதிகரிப்பு ஆகிய காரணங்களால், மின்வெட்டு மேலும் நேரம் அதிகரிக்கும் என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர். மேற்பார்வை பொறியாளர் நிர்மலதா கூறியதாவது:\nரேணிகுண்டா மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட பழுதால், நமக்கு கிடைக்க வேண்டிய, 1,000 மெகாவாட் மின்சாரம் தடைபட்டுள்ளது. இதனால், மீண்டும் மின்வெட்டு நேரம் அதிகரித்துள்ளது. தடையில்லாமல்\nமின்சாரம் கிடைத்து வந்தபோது, 700 மெகாவாட் வரை திருப்பூர் மின் பகிர்மான வட்டத்தில் பயன்படுத்தப்பட்டது.\nதற்போது, 480 மெகாவாட் மட்டுமே கிடைத்து வருகிறது. இதனால், மீண்டும் எட்டு மணி நேரம் வரை மின் வெட்டு ஏற்படுகிறது. இரண்டு நாட்களுக்குள் நிலைமை சரியாகும். கோடை காலத்தில், காற்றாலை மூலம் மின் உற்பத்தியாக வாய்ப்புள்ளதால், மின்வெட்டு நேரம் அதிகரிக்க வாய்ப்பில்லை. இவ்வாறு அவர் கூறினார்.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nசென்னை :இடைநிலை ஆசிரியர் உண்ணாவிரத போராட்டம் வாபஸ் ஏப்ரல் 26,2018\nகோவை சுற்று பகுதிகளில் சூறைக்காற்றுடன் மழை ஏப்ரல் 26,2018\nஆசிரியர்களின் உண்ணாவிரத போராட்டம் வாபஸ் ஏப்ரல் 26,2018\nசீனா கிளம்பினார் பிரதமர் மோடி ஏப்ரல் 26,2018 5\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tharavu.com/2013/05/blog-post_8900.html", "date_download": "2018-04-26T13:11:47Z", "digest": "sha1:2PXJCQNCZJFKJO7MWMEWW3UEVGABRRBU", "length": 32355, "nlines": 132, "source_domain": "www.tharavu.com", "title": "புகலிடம் மறுக்கப்பட்ட ஒரு தமிழன் அந்நாட்டு நீதிமன்றத்தில் ஆற்றிய உரை | தரவு", "raw_content": "\nமுகப்பு ஈழம் உலகம் சினிமா விளையாட்டு இலங்கை\nதேசியத் தலைவர் பிரபாகரன்தான் வரவேண்டும் இந்த நாட்டை வழிநடாத்துவதற்கு.யாழ்.யாழ்பாணத்தின் சீர்கெட்ட நிலவரங்கள் தொடர்பாக குறித்த நீதிபதி\nஇலங்கை எதிர்கொண்ட பின்னடைவுகளுக்கு விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் காரணமல்ல அதிகாரத்தில் இருந்த அரசாங்கங்களே காரணம்\nசிறிலங்காவில் தமிழர் பிரச்சினை தொடர்பாக கருணாநிதியினைச் சாடியிருக்கும் ஜெயலலிதா அவரது குடும்ப ஆட்சியினதும் முறைகேடுகள் நிறைந்த\nஈழத்தமிழரின் புனர்வாழ்வுக்கு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பேன்தமிழக சட்டசபைக்கான தேர்தல் எதிர்வரும் 13 ம் திகதி இடம்பெறவுள்ள நிலையில்\nதமிழர்கள் பாரம்பரியம் மிக்கவர்கள். அவர்கள் கனடாவின் மதிப்பு மிக்க சொத்து.அதீத வளர்ச்சி, கலாச்சாரப் பங்களிப்பு மற்றும் புலமை வாய்ந்த தொழில்வாய்ப்பு என்பன கனடாவிற்குப் பெருமை\nஉலக கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா வாழ்த்து தெரிவித்துள்ளார்.ஜப்பான் நாட்டில் கடந்த 11ந் தேதி மிகப்பெரிய\nஜப்பானில் ஏற்பட்ட பூகம்பம் சுனாமியின் பாதிப்புக்கு அனுதாபம் தெரிவித்து, ஜப்பான் பிரதமருக்கு நடிகர் ரஜினிகாந்த் ஒரு கடிதம் அனுப்பி இருக்கிறார். ஜப்பான் நாட்டில் கடந்த 11ந் தேதி மிகப்பெரிய\nசிறிலங்காவில் விடுதலைப் புலிகளுக்கும் அரசப் படைகளுக்கும் இடையில் நடந்த இறுதிக் கட்டப் போரின்போது,- போர்நிறுத்தம் செய்யுமாறும், பேச்சுக்களில் ஈடுபடுமாறும் அனைத்துலக நாடுகள் கொடுத்த அழுத்தங்களில் இருந்து\nவிக்கிலீக்ஸில் வெளியாகியுள்ள தகவல்கள் ஒரு பக்கம் சர்ச்சையைக் கிளப்பி வரும் நிலையில், விடுதலைப் புலிகளுடனான போரில் அமெரிக்காவின் இராணுவப் புலனாய்வுத் தகவல்கள்\nபுலிகள் தொடர்ந்து செயல்பட வாய்ப்பு உள்ளது: டக்ளஸ் தேவானந்தா\nபுகலிடம் மறுக்கப்பட்ட ஒரு தமிழன் அந்நாட்டு நீதிமன்றத்தில் ஆற்றிய உரை\n18.05.2013- முள்ளிவாய்க்கால் நினைவு நாளில் புலம்பெயர் தேசத்தில் புகலிடம் மறுக்கப்பட்ட ஒரு தமிழன் அந்நாட்டு நீதிமன்றத்தில் உரையாற்றக் கிடைத்த வாய்ப்பில் அவர் பின்வருமாறு உரையாற்றினார். ஆங்கிலத்தில் அவர் ஆற்றிய உரையின் முழுமையான தமிழ் வடிம் பின்வருமாறு\nஇன்று மே-18, என் இன மக்களாகிய ஈழத்தமிழர்களின் இருண்ட நாளின் நான்காவது ஆண்டு நினைவு நாள்.\n2009 ஆம் ஆண்டு என்பது, எமது மக்கள் படுகொலை செய்யப்பட்ட போது ஐக்கிய நாடுகளும் உலகமும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததால் ஒருபோதும் மறக்கப்பட முடியாத ஆண்டாக உள்ளது.\n(மே-18) உலகெங்கும் வாழ்கின்ற தமிழ் மக்கள் இன்றைய நாளை அடையாளப்படுத்துவதற்காக எழுச்சி கொள்வார்கள். 21வது நூற்றாண்டின் முதலாவது இனப்படுகொலை இதுவென்பதை இந்த உலகம் விரைவாகவோ, காலம் தாழ்த்தியோ உணரத்தான் போகிறது.\nதமது அண்மைய அறிக்கையில் (பெற்றி அறிக்கை) ஐக்கிய நாடுகள் தமது பயங்கரத் தவறுகளை ஏற்கெனவே ஏற்றுக் கொண்டுள்ளன. அத்துடன், 70,000 ற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என நம்பத்தகுந்த தகவல்கள் சுட்டிக்காட்டுவதாகவும் அது கூறியுள்ளது.\nஅவை சர்வதேச சமூகத்தில் மனிதநேயத்துக்கான எந்த அக்கறையோடும், நீதிக்கான எந்தக் கருசனையோடும் - பிரித்தானிய காலனித்துவ காலங்களிலிருந்து சிங்கள மேலாதிக்கத்திடம் பிரித்தானியாவால் ஆட்சி வழங்கப்பட்டதிலிருந்து 60 ஆண்டுகளாக மோசமாக-மோசமாக உருவாகி - 2009 ஆம் ஆண்டில் நடத்தப்பட்டது மிக மோசமான உச்சக்கட்ட இனப்படுகொலைத் தாக்குதல் என்பதை விரைவாகவோ, காலம் தாழ்த்தியோ கற்றுக்கொள்வார்கள்.\nஇந்த இனப்படுகொலை முன்னெடுப்பின் காரணமாகவே புலம்பெயர் தமிழர்களுள் பலர் தாம் நேசித்த தாயகத்தை விட்டு பலவந்தமாக வெளியேற்றப்பட்டமை, உலக சமுதாயத்தின் மனிதாபிமானப் பரப்பால் இந்த உண்மைகள் உணரப்படும் வரை ஒருபோதும் ஓயாது.\nஅவர்களுள் ஒருவனாக நான். இந்த இனப்படுகொலையின் உச்சக்கட்டத்தை எனது குடும்பத்துடன் அனுபவித்தேன். எனது தந்தை கொல்லப்பட்டார். தாயார் முள்ளிவாய்க்காலில் காயம்பட்டார். நான்கு தடவைகள் நான் காயம்பட்டேன். எனது அம்மாவின் சகோதரியின் மகன் கொல்லப்பட்டார். மற்றுமொரு மகன் மோசமாகக் காயம்பட்டார்.\nநாங்கள் உணவு இன்றி, தண்ணீர் இன்றி, காயங்களுக்கு மருந்துகள் இன்றி உயிர்வாழ முயற்சிப்பதற்காக நாங்கள் பதுங்குகுழிகளுக்குள்ளே மறைந்துகொள்ள வேண்டியிருந்தது. நாங்கள் பிழைக்க வேண்டியிருந்த அந்த கூட்டு வேதனைகளை இந்தக் குறுகிய நேரத்துக்குள் விபரிப்பது எனக்கு கடினம்.\nஇன்னும், நான்கு ஆண்டுகள் கடந்தும், எனது சகோதரனும் சகோதரியின் கணவரும் இலங்கைப் படையினரின் சிறைக்குள்தான் இருக்கிறார்கள். நான் பிறந்த மண்ணில் வாழமுடியாது, இலங்கைத் தீவை விட்டே வெளியேற்றப்பட்டிருந்தேன். இன்று அந்நிய நாட்டில் புகலிடத்துக்காக மன்றாடிக் கொண்டிருக்கிறேன். இதுதான் இலங்கையில் தமிழர்களின் நிலை.\nநாங்கள் எங்களது கூட்டு சமூக கலாச்சார வாழ்க்கையை இழந்தோம், எங்கள் குடும்பங்களை இழந்தோம், எங்கள் தாய்நாட்டில் வாழ்வதற்கான உரிமையை இழந்தோம். வரலாற்று ரீதியாக நாங்கள் உண்மை பேசுகின்ற ஒரு மக்கள். தயவுசெய்து எங்களை உண்மை பேசவிடுங்கள். எங்களுக்குப் பாதுகாப்புக் கொடுங்கள், எனக்கு பாதுகாப்புக் கொடுக்கள் எனவேதான் என்னால் உண்மை பேசமுடியும்.\nதமிழீழ விடுதலைப் புலிகளுடனான எனது தொடர்பை நான் உங்களிடமிருந்து ஒருபோதும் மறைக்கவில்லை. ஆனால், என்மீதான உங்களுடைய இந்தக் குற்றச்சாட்டு சற்று வித்தியாசமாக இருப்பதை நான் உங்களுக்கு கூறவேண்டியுள்ளது.\nவிடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்டு இன்று நான்கு ஆண்டுகள் கடந்துள்ளன. இந்த நான்கு ஆண்டு காலப்பகுதியில் உறுதியாகத் தமிழர்களிடமிருந்து எந்த ஆயுதச் செயற்பாடுகளும் இடம்பெறவில்லை.\nஇனப்படுகொலைத் தாக்குதலின் பலியாட்களாக நாங்கள் இருந்தும், தமிழர்கள் பயங்கரவாதிகளாக இருப்பதுபோல் வகைப்படுத்துவது சற்று வித்தியாசமாக இல்லையா இலங்கை அரச ஆயுதப் படைகளை நீங்கள் எப்படி விபரிக்கப் போகிறீர்கள்\nஉண்மையிலே மிகவும் வேதனையான விடயம் என்னவென்றால், என்னைப் பற்றி நீங்கள் உங்கள் மனதில் எழுப்பி வைத்திருக்கும் கேள்வி, பொதுவாகவே தமிழ் மக்கள் குறித்து உலகப் பொதுசனத்தின் மனதிலும் உள்ளது.\nநான் என்ன கருதுகிறேன் என்பதை காட்டுவதற்காக நான் இணையத்தளத்தில் படித்த மிக அண்மையில் வெளியான ஒரு கட்டுரையை நான் இங்கே பயன்படுத்துகிறேன்.\n'உருவறித் நிக்கோல் இலங்கையில் விடுமுறைகள் பற்றி எழுதுகிறார், பிரித்தானிய செய்தித்தாள் 'தி ஒப்சேவர்' இல் ஒரு 'Taxi' ஓட்டுநருடனான தனது கலந்துரையாடலை விபரிக்கிறார்.\n'நீங்கள் ஒரு புத்த மதத்தவரா' அந்த ஓட்டுநரிடம் நான் கேட்டேன்.\n'இல்லை. நான் ஒரு இந்து.'\n'ஓ, அப்படியானால் நீங்கள் தமிழனா\n'ஆம். நான் ஒரு தமிழன்,' என்கிறார் ஓட்டுநர், பின்பு சத்தம்போட்டுச் சொன்னார், 'ஆனால், நான் ஒரு பயங்கரவாதி இல்லை\nதிரு.நிக்கோல் தனது கட்டுரையில் பின்வருமாறு கூறி நிறைவு செய்கிறார். அந்த ஓட்டுநர் ஒரு பயங்கரவாதி என ஒருபோதும் சிறுகணம் கூட நான் நினைக்கவில்லை, ஆனால், அவர் அதைக் கூறியதில் ஓர் உலகத்தின் வலியை நான் கேட்டேன்.\nபிரித்தானியா இலங்கைத் தீவைவிட்டு வெளியேறியதிலிருந்து முதல் 30 ஆண்டுகளாக, தமிழர்கள் சிங்கள தேசத்திடமிருந்து தீவிர இனவாத வன்முறையை எதிர்த்து அமைதியான காந்திய வழிமுறைகளை மட்டும் பயன்படுத்தி போராடினார்கள்.\nபாகுபாட்டுச் சட்டங்கள், தமிழ் தேயிலைத் தொழிலாளர்களின் குடியுரிமைகளைப் பறித்தல், தனிச் சிங்களச் சட்டம், தமிழ் மாணவர்கள் அதிக மதிப்பெண்களை எடுத்தால் மட்டுமே பல்கலைக் கழகம் நுழைய முடியும் என்ற கோரிக்கை, அரச ஆதரவோடு தமிழர் எதிர்ப்பு இனக்கலவரங்கள் - இவை அனைத்தும் அமைதியான ஆர்ப்பாட்டங்களை தமிழர்கள் மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தின் போதே நிகழ்ந்தன.\n30 ஆண்டுகளாக அமைதி முறை ஆர்ப்பாட்டங்கள் மூலம் எதையும் அடைய முடியவில்லை என்பதை உணர்ந்து கொண்ட பிற்பாடு மட்டுமே தமிழர்களிடமிருந்து ஆயுதப் போராட்டம் ஆரம்பித்தது. 30 ஆண்டுகளாக பலத்தோடு பலம் சந்திக்க வைக்கக்கூடிய ஒரு நிலையில் இனவாதப் பயங்கரவாதம் தமிழர்களை நிறுத்தியது. போர் தமிழர்கள் மீது திணிக்கப்பட்டது.\nதமிழீழ விடுதலைப் புலிகள் சித்தரிக்கப்படுகின்ற முறையை நான் நிராகரிக்கிறேன் - குறிப்பாக மேற்குலக ஊடகத்தால். வெறிபிடித்தவர்கள் என்றும் தீவிரவாதிகள் என்றும் பயங்கரவாதக் குழு என்றும் சித்தரிக்கிறார்கள்.\nதமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் மக்களின் உரிமைகளைக் காப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு அறிவான, நவீன, முன்னோடியான இயக்கம். அது இலங்கைப் படைக்கு எதிராகப் போராடிய அதேவேளை, சாதி முறைமைக்கு எதிராகவும் பெண்கள் உரிமைகளுக்காகவும் மிகவும் கடினமாகப் போராடியது.\n25 ஆண்டுகள் கொண்ட தீவிர சமச்சீரற்ற போரின் பின்னர், தமிழர்கள் ஒரு பலம்வாய்ந்த நிலையை அடைந்ததும், தமிழீழ விடுதலைப் புலிகள் என்ன செய்தார்கள் சமாதான முன்னெடுப்பைத் தொடங்கினார்கள் சர்வதேச நாடுகளின் கண்காணிப்பில் 2002 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சமாதான முன்னெடுப்பு தமிழர்களுக்கு ஒரு நம்பிக்கையான காலமாக இருந்தது.\nசிங்களவர்களுக்கும் அது ஒரு நம்பிக்கையான காலமாக இருந்தது என நான் கேள்விப்பட்டேன். ஆனால், ஆரம்பத்தில் சமாதான முன்னெடுப்புக்கு முற்றுமுழுதான ஆதரவைக் காட்டிக்கொண்ட சர்வதேச சமூகம், அதன் நிலைப்பாட்டை மாற்றியது.\n2003 ல் தமிழ் மற்றும் சிங்கள பேச்சுவார்த்தையாளர்கள் கைகளைக் குலுக்கிக் கொண்டிருந்த போது, உலகம் போரை நோக்கி வழிநடந்தது. இலங்கை சமாதான முன்னெடுப்பின் இணைத் தலைமை நாடுகளுக்குள் பிரதான இரு வலுவான நாடுகளுக்கிடையே பாரிய வேற்றுமைகள் நிலவின.\nஅமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் ஈராக் போர் தொடர்பாக சர்ச்சையில் இருந்தன. இந்த சர்ச்சை இலங்கை சமாதான முன்னெடுப்பில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது.\nதமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் சமாதானம் தேவைப்பட்டிருக்கலாம் - ஆனால், அமெரிக்காவும் பிரித்தானியாவும் விரிவடைந்து கொண்டிருந்த மத்திய கிழக்குப் போர்களில் - பயன்படுத்த சுதந்திரமாக இருப்பதற்காக - தமிழர் தாயகத்தில் உள்ள திருகோணமலை போன்ற மூலோபாயத் துறைமுகங்களில் அதிக ஆர்வத்தைக் காட்டின.\nஇந்த வல்லரசுகள் துறைமுகத்தை அண்மித்த பகுதியை விட்டு விடுதலைப் புலிகளை வெளியேற்றத் தேவைப்பட்டது என்பது வெளிப்படையானது. எனவே, சமாதான முன்னெடுப்பானது வெட்கமின்றி அமெரிக்க கூட்டு நாடுகளாலும் சிங்கள தீவிரவாத மேலாதிக்கவாதிகளாலும் திட்டமிட்டுத் தாக்கப்பட்டது.\nசமாதான முன்னெடுப்புக்கான இறுதித் தாக்கமானது அமெரிக்காவும் பிரித்தானியாவும் விடுதலைப் புலிகளைத் தடை செய்ததிலிருந்து ஐரோப்பிய ஒன்றியம் மிகப் பெரிய அழுத்தத்துக்குள் உள்ளான போதே ஏற்பட்டது.\nஅமெரிக்காவும் பிரித்தானியாவும் விடுதலைப் புலிகளை வெறிபிடித்தவர்கள் என்றும் பயங்கரவாதிகள் என்றும் அழைப்பதற்கு ஒரு நீண்ட பாதை செல்வார்கள் என்பதை என்னால் விளங்கிக்கொள்ள முடியும்.\nஆனால், நன்றாக அறிந்துகொள்ள வேண்டிய ஏனைய நாடுகள் வெட்கமின்றி அமெரிக்க வரிசையைப் பின்பற்றுவது உண்மையிலே மிகவும் கவலையாக உள்ளது.\nபயங்கரவாதியாக விபரிக்கப்படக்கூடிய எந்தச் செயற்பாட்டிலும் நான் ஈடுபடவில்லை என்பதை உங்களுக்கு என்னால் கூறமுடியும்.\nமேலும், என்னால் கூறிக்கொள்ளக் கூடிய விடயம் என்னவென்றால், பொதுமக்களை மனிதக் கேடயங்களாகவோ அல்லது பலவந்தமாக சிறுவர்களை படையில் சேர்த்தல் போன்ற எந்தச் செயற்பாடுகளிலும் விடுதலைப் புலிகளின் எந்தப் பகுதியும் ஈடுபடுத்தப்பட்டது என்பதில் எனக்கு சிறுதுளி கூட அனுபவமில்லை.\nஇங்குள்ள ஒவ்வொருவரும் நான் சொல்லவேண்டிய விடயத்துடன் உடன்படுவார்களோ அல்லது விளங்கித் தன்னும் கொள்வார்கள் என நான் எதிர்பார்க்கவில்லை.\nஆனால், இந்த 21ஆம் நூற்றாண்டின் முதலாவது இனப்படுகொலையின் இந்த நான்காவது ஆண்டு நினைவு நாளில் - சற்று சுதந்திரமான ஆய்வைச் செய்யுமாறும் அத்துடன், புரிந்துகொள்ள முயற்சி செய்யுமாறும் நான் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.\nஏனென்றால், என்னுடைய வழக்கு குறித்த ஒரு முடிவை நீங்கள் தற்பொழுது எடுக்கமாட்டீர்கள் - ஆனால், அதைக்காட்டிலும் ஏதோவொரு விடயத்தில் அதிகமாக முடிவுசெய்வீர்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஈழத்து நகைச்சுவை இரட்டையர்கள் டிங்கிரி சிவகுரு காணொளி இணைப்பு\nஜெனிவா சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம்- பிரித்தானியாவும் ஆதரவு\nபிரேமலதா விஜயகாந்துக்கு ரஜினிகாந்த் ரசிகர்கள் கண்டனம்\nசிரியாவுக்குள் புகுந்த ஈழத்து புலி\nஆஸ்திரியாவில் கச்சேரிக்கு வந்த கூட்டத்தினர் மீது துப்பாக்கிச் சூடு : 2 பேர் பலி\nஐ.நா மனிதவுரிமை உரிமைகள் சபையின் 37 வது கூட்டத்தொடர் இன்று ஆரம்பமாகியது.\nஈழத் தமிழர்களுக்கு நீதி கோரி உலகளாவிய நீதியில் வழக்கறிஞர்கள் கையெழுத்து.\nராஜிவ் கொலை குற்றவாளிகள் எழுவரையும் விடுவிக்க தமிழக அரசு முடிவு\nரவிராஜ் கொலையில் பிள்ளையானின் ஆயுதம்\nவிடுதலை வீரர்களின் சமாதியில் சிங்கள குடியேற்றம்\nதமிழீழ மாணவர்களின் இன்றைய அரசியல் தெளிவு.\n1976 மே 14 ஆந் தேதியன்று வட்டுக்கோட்டையில் நடைபெற்ற தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் முதலாவது தேசிய மாநாட்டில்\nசடலத்தை சமைத்து உண்ணும் பாகிஸ்தானியர்கள் (காணொளி இணைப்பு) இறந்த பெண்ணொருவரின்\nஇலங்கையில் திருதிமைக்கப்பட்ட ஒரு சில பெரும் சாலைகளின் புகைப்படங்கள் பார்க்க அருமையாக இருக்கிறது.\nஒன்று பட்டால் உண்டு வாழ்வு/ தரவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vakeesam.com/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D.html", "date_download": "2018-04-26T13:29:29Z", "digest": "sha1:WIEFKGXXXNHBOHDSVAJIWPULHSCL64BF", "length": 6775, "nlines": 75, "source_domain": "www.vakeesam.com", "title": "பொலிஸ் பாதுகாப்பு தாருங்கள் – யாழ் அரசாங்க அதிபர் வேண்டுகோள் – Vakeesam", "raw_content": "\nஹட்டனில் நில அதிர்வு – 05 வீடுகள் சேதம்\nதந்தை செல்வா நினைவுதினம் அனுஷ்டிப்பு\nஜ.தே.க முக்கிய பதவிகளில் மாற்றம் – பொதுச் செயலாளராக அகில விராஜ் காரியவசம்\n203 பட்டதாரிகள் நேர்முகத் தேர்விற்குத் தோற்றவில்லை \nயாழ் போதனா வைத்தியசாலையில் கழிவு வாய்க்கால்மேல் கன்ரீன் – மக்கள் விசனம்\nபொலிஸ் பாதுகாப்பு தாருங்கள் – யாழ் அரசாங்க அதிபர் வேண்டுகோள்\nin பிரதான செய்திகள், முக்கிய செய்திகள் April 16, 2016\nயாழ். மாவட்டச் செயலகத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்குமாறு பொலிஸ் அத்தியட்சகருக்கு மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் கோரிக்கை விடுத்துள்ளார்.\nயாழ். மாவட்டச் செயலகத்திற்கும் கடமை நேரங்களில் அரச அதிபரின் அலுவலகத்திற்கும் நிரந்தரமாக பொலிஸ் பாதுகாப்பு வழங்குமாறு கோரியே குறித்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\nகடமை நேரங்களில் திடீரென ஏற்படும் அசம்பாவிதங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களின் போது அரச அதிபரின் அலுவலக அறை என்பனவற்றினை முன் அறிவித்தல் இன்றி பூட்டுவதனால் சில உடையூறுகள் ஏற்படுவதாகத் தெரிவித்தே இந்தக் கோரிக்கையினை பொலிசாரிடம் கோருவதாக அரச அதிபர் குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை கடந்த திங்கட்கிழமை(11) யாழில் இடம்பெறும் காணி அபகரிப்பைத் தடுக்க வேண்டும் என மாவட்ட அரச அதிபரிடம் மனு ஒன்றினைக் கையளித்த ஆர்ப்பாட்டக்கார்ர்கள் திடீரென அரச அதிபர் அலுவலகத்தை முற்றுகையிட்டிருந்தனர்.\nதங்களுக்குரிய பதிலினை உடனடியாகப் பெற்று வழங்கவேண்டும் என கோரி அரச அதிபரின் அலுவலகத்தினை பூட்டி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.\nஅரச அதிபர் பாதுகாப்பு பொலிஸ் யாழ் மாவட்டச் செயலகம்\t2016-04-16\nதந்தை செல்வா நினைவுதினம் அனுஷ்டிப்பு\nஜ.தே.க முக்கிய பதவிகளில் மாற்றம் – பொதுச் செயலாளராக அகில விராஜ் காரியவசம்\nயாழ். பல்கலை வளாகத்துக்குள் முள்ளிவாய்க்கால் நினைவாலயம் – தடுத்து நிறுத்தியது கொழும்பு\nஹட்டனில் நில அதிர்வு – 05 வீடுகள் சேதம்\nதந்தை செல்வா நினைவுதினம் அனுஷ்டிப்பு\nஜ.தே.க முக்கிய பதவிகளில் மாற்றம் – பொதுச் செயலாளராக அகில விராஜ் காரியவசம்\n203 பட்டதாரிகள் நேர்முகத் தேர்விற்குத் தோற்றவில்லை \nயாழ் போதனா வைத்தியசாலையில் கழிவு வாய்க்கால்மேல் கன்ரீன் – மக்கள் விசனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vivalanka.com/news/page.jsp?articleid=178536", "date_download": "2018-04-26T13:49:37Z", "digest": "sha1:ICD5COIBN2VVM74ITO6WKSMWGOR6ZPU5", "length": 4256, "nlines": 117, "source_domain": "www.vivalanka.com", "title": "Inside Emanuel's campaign war chest", "raw_content": "\nVideo: News 1st:டயகம வெஸ்ட் மூன்றாம் பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் சித்திர தேர் பவணி\nVideo: News 1st:நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்\nVideo: News 1st:மண்டத்தீவு பகுதியில் முதலை ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது\nVideo: News 1st: குடிபோதையில் வந்த சிலரால் கட்டுகஸ்தொட்டை வைத்தியசாலை ஊழியர்களுக்கு அச்சுறுத்தல்\nVideo: News 1st: சித்ராகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் காயம்\nVideo: News 1st:எல்ல பகுதியில் விபத்து: 3 வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு\nVideo: News 1st:புத்தாண்டு காலப்பகுதியில் 95 மில்லியன் ரூபா வருமானம் – இலங்கை போக்குவரத்து சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3", "date_download": "2018-04-26T13:23:40Z", "digest": "sha1:2M2T3GESVB32PLGLE5VVIQYNHWGYOVCH", "length": 4098, "nlines": 73, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "தொல்பொருள் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் தொல்பொருள் யின் அர்த்தம்\nமுற்காலத்தில் வாழ்ந்த மக்களின் பண்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் கிடைக்கும் கட்டடப் பகுதிகள், பாண்டம், கருவி முதலியவை அல்லது அவற்றின் சிதைவுகள்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://puthu.thinnai.com/?p=6173", "date_download": "2018-04-26T13:35:59Z", "digest": "sha1:KHWOJBLRW5HRBVBZKENB7KLLQCXEBOKV", "length": 8041, "nlines": 107, "source_domain": "puthu.thinnai.com", "title": "குறுங்கவிதைகள் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nபேச்சு வராத தமையனைப் பற்றி\nSeries Navigation நானும் அசோகமித்திரனும்ஜென் ஒரு புரிதல் – பகுதி 19\nமலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை – 1\nதமிழ் பெண் கவிஞர்கள் – ஆங்கிலத்தில் – ஆதி மந்தியார் முதல் உமா மஹேஸ்வரி வரை\nஅர்ஜண்ட் வெயிட் லாஸ்.. ஒரு யாத்ரா டிக்கட் ப்ளீஸ்..\nபழமொழிகள் கூறும் உதவி எனும் வாழ்க்கை நெறி\nஜென் ஒரு புரிதல் – பகுதி 19\nஇதுவும் அதுவும் உதுவும் – 5\nஇந்திய அணுமின்சக்தித் தொழில் நுட்பம் முதிர்ச்சி யானதா அணுவியல் இயக்குநர் முதிர்ச்சி பெற்றவரா \nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கோடாரியில் தகர்ப்பாய் (கவிதை -52 பாகம் -1)\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) திருமணப் பாதையில் (கவிதை – 50 பாகம் -5)\nபஞ்சதந்திரம் தொடர் 18 சமுத்திரமும் நீர்க்குருவியும்\nதமிழ் விக்கிப்பீடியா ஒரு ஊடகப் போட்டி\nதோள்களில் அமர்ந்திருக்கும் மரணத்தின் தூதுவன்\nமுகம்மது யூனுஸ் அறிஞர் அண்ணாவை ஹாங்காங்கில் சந்தித்தது பற்றிய உரை\nபிரான்சு கம்பன் கழகத்தின் 10 -ஆம் ஆண்டு விழா\nநானும் பிரபஞ்சனும் கட்டுரை குறித்து சில கருத்துகள்:\nமுன்னணியின் பின்னணிகள் – 14 சாமர்செட் மாம்\nமூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 16\nNext Topic: தலைமை தகிக்கும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://saranagadi.blogspot.com/2010/01/blog-post_31.html", "date_download": "2018-04-26T13:40:34Z", "digest": "sha1:OO6HFA6RORCBYIIC5OBV3F3JL46RFSZ3", "length": 10348, "nlines": 122, "source_domain": "saranagadi.blogspot.com", "title": "Hare Guruvayurappa", "raw_content": "\nஎல்லா ஸ்லோகங்களையும் அ.நுச்ந்திக்க முடியாவிட்டாலும் 12- வது ஸ்லோகத்தையாவது தினம் பாராயணம் செய்தால் கோடி புண்யம் கிடைக்கும் என்று ஸ்வாமி தேசிகரே சொல்கிறார்.\n1. தேவோ ந: சுபமாத.நோத தசதா நிர்வர்த்தயந் பூமிகாம்\nரங்கே தாமநி லப்த நிர்ப்பரரஸை ரத்யக்ஷிதோ பாவுகை:\nயத்பாவேஷூ ப்ருதக்விதேஷ் வநுகுணான் பாவந் ஸ்வயம் பிப்ரதீ\nயத்தர்மைரிஹ தர்மிணீ விஹரதே நாநாக்ருதி நாயிகா //\nநிர்மக்ந ச்ருதி ஜால மார்க்கண தசா: தத்த க்ஷணைர் விக்ஷணை:\nஅந்தஸ் தந்வதிவா ரவிந்த கஹநாத்:யௌதந்வதீநா மபாம்\nநிஷ்ப்ரத்யூஹ தரங்க ரிங்கண மித: ப்ரத்யூட பாதத் சடா\nடோலாரோஹ ஸதோஹளம் பகவதோ மாத்ஸ்யம் வபு: பாது .ந: //\nஅவ்யாஸுர் புவந த்ரயீ மநிப்ருதம் கண்டூயநை ரத்ரிணா\nநித்ராணஸ்ய பரஸ்ய கூர்மவபுஷோ நி:ச்வாஸ: வாதோர்மய:\nயத் விக்ஷாபண ஸம்ஸ்க்ருதோததி பய: ப்ரேங்க்கோள பர்யங்கிகா\nநித்யாரோஹண நிர்வ்ருதோ விஹரதி தேவ: ஸஹைவ ச்ரியா //\nகோபாயேத் அ.நிசம் ஜக.ந்தி குஹணா - போத்ரீ பவித்ரீக்ருத-\nப்ரஹ்மாண்ட: ப்ரளயோர்மி கோஷ குருபிர் கோனாரவைர் குர்க்குரை:\nஉஅத் தம்ஷ்ற்றாங்குர கோடி காட கட.நா நிஷ்கம்ப நித்ய ஸ்த்திதி:\nப்ரஹ்ம ஸ்தம்ப ம்ஸௌத் அஸௌ பகவதீ முஸ்தேவ விச்வம்பர: //\nப்ராதிஷ்ட புராதந ப்ரஹரண-க்ராம: க்ஷணம் பாணிஜை:\nஅவ்யாத் த்ரீணி ஜகந்த் யகுண்ட மஹிமா வைகுண்ட கண்ட்டீரவ:\nயத் ப்ராதுர்ப்பவநா தவந்த்ய ஜடரா யாத்ருச்ச்காத் வேதஸாம்\nயா காசித் ஸஹஸா மஹாஸுரக்ருஹ-ஸ்த்துணா பிதாமஹ் யபூத் //\nவ்ரீடா வித்த வதாந்ய தாநவ யசோ நாஸீர தாடீ பட:\nத்ரையக்ஷம் மகுடம் புநந் அவது நஸ் த்ரைவிக்ரமோ விக்ரம:\nயத் பஃரஸ்தாவ ஸமுர்ச்ச்ரித த்வஜ படீ வரித்தாந ஸித்தாந்திபி:\nஸ்ரோதோபி: ஸுரஸிந்து ரஷ்டஸுதிசா -ஸௌதேஷூ தோதுயதே //\nக்ரோதாக்னிம் ஜம்தக்நி பீடந பவம் ஸந்த்ர்ப்பயிஷ்யந் க்ரமாத்\nஅக்ஷத்ராமிஹ ஸந்தத்க்ஷய இமாம் த்ரிஸப்த க்ரித்வ: க்ஷிதம்\nதத்த்வா கர்மாணி தக்ஷிணாம் க்வசநதாம் ஆஸ்கந்த்ய ஸிந்தும் வஸந்\nஅப்ரஹ்மண்ய மபாகரோது பகவாந் ஆப்ரஹ்மகீடம் முநி://\nபாராவார பயோ விசோஷண கலா:-பாரீண காலாநல\nஜ்வாலா ஜால விஹார ஹாரி விசிக வ்யாபார கோர க்ரம\nஸர்வாவஸ்த்த ஸக்ருத் ப்ரபந்ந ஜநநா ஸம்ரக்ஷணைக வ்ரதீ\nதர்மோ விக்ரஹவாந் அத்ர்ம விரதம் தந்வீ ஸ தந்வீத.ந://\nபக்.ந் கௌரவ பட்டண: ப்ரப்ருதய: ப்ராஸ்த ப்ரலம்பாயத:\nதாதாங்கஸ்ய தாதாவிதாதா விஹ்ருதயஸ் தந்வந்து பத்ராணி ந:\nக்ஷீரம் சக்ரகரயேவ யாபி ரப்ருதக் புதா: ப்ரபூதைர் குணை:\nஆகௌமாரக: மஸ்வதந்த ஜகதே க்ருஷ்ணஸ்ய தா: கேளய: //\nநா.நாதயைவ நம: பதம்பவ்பது ந: சித்ரை சரித்ர க்ரமை:\nபூயோபிர் புவ.நா.ந்யமு.நி குஹ.நா கோபாய கோபாயதே\nகாளீ.ந்தீ ரஸிகாய காளியபணி ஸ்ப்பார ஸ்ப்பர்டா வாடிகா\nரங்கோத்ஸங்க விசங்க சங்க்ரம துரா பர்யாய சர்யா: யதே //\nபாவிந்யா தசயா பவந் இஹ பவ த்வம்ஸாய ந: கல்பதாம்\nகல்கீ விஷ்ணுயச: ஸுத: கலிகதா காலுஷ்ய கூலங்கஷ:\nநி: சேஷ ச்கத கண்டகே க்ஷிதி தலே தாரா ஜலௌகைர் த்ருவம்\nதர்மம் கார்த்தியுகம் ப்ரரோஹயதி யந் நிஸ்த்ரிம்ச தராதர: //\nஇச்சா மீந விஹார கச்சப மஹா போத்ரிந் யத்ருச்சா ஹரே\nரக்ஷா வாமந ரோஷ ராம கருணா காகுஸ்த்த ஹேலாஹலி.ந்\nக்ரீடா வல்லவ கல்கி வாஹநதசா கல்கிந் இதி ப்ரத்யஹம்\nஜல்பந்த: புருஷா: புநந்தி புவநம் புண்யௌக பண்யாபணா: //\nவித்யாதவந்வதி வேங்கடேஸ்வர கவௌ ஜாதம் ஜகத் மங்களம்\nதேவசஸ்ய தசாவதார விஷயம் ஸ்தோத்ரம் விவ்க்ஷேதய:\nவக்த்ரே தஸ்ய ஸரஸ்வதி பஹூமுகீ பக்தி பரா மா.நஸே\nசித்தி: காபி: த.நௌ திசாஸு தசஸுக்க்யாதி: சுபா ஜ்ரும்பதே //\nஸ்ரீ தேசிக ஸ்தோத்ரமாலா ஸ்ரீ தசாவதார ஸ்தோத்ரம் எல...\nஸ்ரீ கிருஷ்ண த்வாதச நாம ஸ்தோத்ரம்\nபவிஷ்ய புராண சூர்ய ஸ்தோத்ரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sinthanaimalar.blogspot.com/2012/02/blog-post_04.html", "date_download": "2018-04-26T13:29:15Z", "digest": "sha1:Z7UKZP2VPDV72OVLPYS4INZSMZQENX2B", "length": 4388, "nlines": 78, "source_domain": "sinthanaimalar.blogspot.com", "title": "சிந்தனை துளிகள்!!!: நட்பு !!!", "raw_content": "\nஎன் சோகங்கள் பகிரும் அன்னையாய் ...\nஎன் வெற்றியை கொண்டாடும் சுற்றமாய் ...\nஎன் கண்ணீர் துடைக்கும் விரலாய் ...\nஎன்னை தோல்வியில் மீட்கும் கரமாய் ....\nஎன்றும் நீ வேண்டும் என் அருகில் ...\nஎன் நட்பை பகிரும் என் தோழியாய் ...\nசங்கடங்கள் பல வந்தாலும் சளைக்காமல் நான் ஏற்பேன் சாய்ந்துகொள்ள உன் தோள் இருந்தால் ... கஷ்டங்கள் பல கண்டாலும் கலங்காமல் நான் இருப்...\nஉதிர்த்து போகும் என்று தெரிந்தே நித்தமும் மலர்கிறேன் உன் நினைவால் \nமனிதனுக்கு புவியறையை விட .... கருவறையும் கல்லறையுமே நிசப்தம் ....\nஉண்மையான அன்புக்கு மட்டுமே உன் கண்ணீர் துளிகள் தெரியும் ... நீ மழையில் நினைந்து கொண்டே அழுதாலும் கூட ...\nதனிமையின் ஆழத்தை உணர்ந்துகொண்டேன் உன் மௌனத்தில் ..\nஎன் கண்ணீர்த்துளிகளால் எழுதிய கவிதை இது .... படித்தால் புரியாது ... உணர்ந்துகொள் ...\nநேசிக்கும் இதயத்தை தண்டிக்கும் ஓர் மொழி .... - மௌனம்\nஉறவுகளை விட உணர்வுகளை மதியுங்கள் ... உறவுகள் உங்களை விட்டு போகலாம் ஆனால் உணர்வுகள் உங்களுடனே இருக்கும் ......\nமலர வேண்டிய பூக்களுக்கு மரணமே பரிசாக பூக்களுக்கு தண்ணீர் ஊற்றி பார்த்த காலங்கள் கடந்துவிட்டது அகிம்சம் வளர்த்த பூமியில் அமிலங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://supsind.blogspot.com/2014/01/blog-post.html", "date_download": "2018-04-26T13:35:55Z", "digest": "sha1:KV2I5FCPIJPDJAK4JYBOKBLI724WZ5X5", "length": 16047, "nlines": 168, "source_domain": "supsind.blogspot.com", "title": "சுசி: காக்காவான குயில் :(((", "raw_content": "\nவீட்டுக்கும், நாட்டுக்கும் பயனுள்ளவர்களாய் வாழ்வதே வாழ்க்கை.\nவியாழன், ஜனவரி 09, 2014\nஇடம் : எங்க வீடு.\nகாலம் : நேற்று காலை ஒன்பது மணி.\n\"கங்கை வெள்ளம் சங்குக்குளே அடங்கி விடாது, மங்கை நெஞ்சம் பொங்கும் போது...\"\n\"மங்கை நெஞ்சம் பொங்கறது இருக்கட்டும், பால் பொங்கிட போறது கவனி\n\"தெரியும்ப்பா, அடங்க மாட்டீங்க நீங்க கொஞ்சமாவது பீல் பண்ணி பாட விடறீங்களா... கொஞ்சமாவது பீல் பண்ணி பாட விடறீங்களா...\n\"தண்ணி கேன்காரர் வந்தா பணம் குடுத்திடு\n\"இல்லப்பா நீ ஜலதோஷத்துலையும், ஜுரத்துலையும் கஷ்ட்டப்படரன்னு எங்க ஆபீஸ்ல டிரைவர்ரா இருக்கானே, அந்த நார்த் இந்தியன் பையன் அவன்கிட்ட சொன்னேன். அவன்தான் இந்த மருந்தை குடுத்தான். \"இத மேடத்துக்கு குடுங்க சார், இன்னிக்கே நிவாரணம் கிடைச்சுடும்\"ன்னு சொன்னான். ஆயுர்வேதிக்காம், ஒரு நாளைக்கு மூணு வேளை ஹாட் வாட்டர்ல கலந்து குடிக்கணுமாம்.இந்தா\"\n\"இல்ல எப்பவும் போல நீங்க நச்சரதுக்கு தான் கூப்படறேளோன்னு நினைச்சு, எரிஞ்சு விழுந்துட்டேன்.\"\n\"சீ..சீ...பரவாயில்லை, மறக்காம மருந்த சாப்பிடு.\"\nஇடம் : எங்க வீடு.\nகாலம் : நேற்று இரவு ஏழு மணி.\nகிச்சனுக்கு வந்து,\"உடம்பு எப்படிப்பா இருக்கு மருந்த சாப்பிட்டியா\n ஏதோ ஒரு மருந்தை குடுத்து குயில் மாதிரி இருந்த என் குரலை காக்கா மாதிரி ஆக்கிட்டேன்களே..\nகத்தினேன், கதறினேன், என்ன புண்ணியம் என் குரல் எனக்கே கேட்கவில்லை.\nஎன் நிலையை பார்த்து முகம் முழுக்க பூரித்து, அட அந்த மருந்தை குடுக்கும் போதே டிரைவர் சொன்னான், \"இன்னிக்கி ஒரு நாள் இந்த மருந்தை மேடம் சாப்பிட்டால் போதும் சாப், உங்களுக்கு ஒரு வாரத்திற்கு அவங்க பாட்டுலருந்து நிவாரணம் கிடைக்கும்ன்னு, நிஜம் தான். நாளைக்கு அவனுக்கு சரவண பவன்ல லஞ்ச் ஸ்பொன்சர் பண்ணிட வேண்டியதுதான்.\"\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஹா.... ஹா.... டிரைவர் வாழ்க...\nஅந்தாளுக்கு நாலு எலுமிச்சையைக் காட்டிட வேண்டியது தான்\nதூக்கம் இல்லாமலே தொண்டை வறண்டு போகட்டும் தோழி\n@ திண்டுக்கல் தனபாலன் : உங்கள் அட்ரெஸ் குடுங்க, அந்த டிரைவர அனுப்பிவைக்கிறேன், மருந்தோட\n@ அம்பாளடியாள் : எலும்பிச்சையை என்ன செய்யணும்\n@சே.குமார் : இந்த மாதிரி எத்தன பேர் கிலம்பி இருக்கீங்க உங்கலுக்கும் ஒரு மருந்து பார்சல் வருது. :))\n@jananathan : அது என்ன ப்ரோக்ராம் எந்த டீ.வீல எப்போ வருது எந்த டீ.வீல எப்போ வருது நான் டி.வியே பார்க்கிறதில்ல. சோ நான் டி.வியே பார்க்கிறதில்ல. சோ\n@jananathan : அது என்ன ப்ரோக்ராம் எந்த டீ.வீல எப்போ வருது எந்த டீ.வீல எப்போ வருது நான் டி.வியே பார்க்கிறதில்ல. சோ நான் டி.வியே பார்க்கிறதில்ல. சோ\nஅந்த மருந்தை கொடுத்த ட்ரைவர் புண்ணியவான் எங்கே இருக்கார் இங்கே நிறைய பேருக்கு அந்த மருந்து தேவை படுகிறது.\n ஸ்டொரி இப்டி தான் முடியும் னு எதிர்பார்க்கவே இல்லை\n@Gopikaa : ஒரு நாள் எனக்கு தொண்டை கட்டி கொண்டுவிட்டது. அதோடு பாடிக்கொண்டிருந்தேன். அப்போது என் தலைவர்,”தொண்டை தான் சரியில்லியே, அப்படியாவது பாடலைன்னா என்ன” என்று கேட்டார். அப்போது உதித்த கற்பனைதான் இது. உண்மையில் அப்படி ஒரு டிரைவரும் இல்லை,அப்படி ஒரு சம்பவம் நடக்கவும் இல்லை. ரசித்து படித்தமைக்கு நன்றி.\nஅழகான கற்பனை. ட்ரைவராக இல்லாவிட்டாலும், சில சமயம் இம்மாதிரி மருந்துகள் வேறுவிதமாக மாறுவதும் உண்டு. காலத்திற்கேற்ப மாருதல்களுக்கு உட்படதான் முடிகிறதே தவிர யோசிக்காமல் எதையும் செய்வதற்கில்லை.அன்புடன்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஈன்ற பொழுதின் பெரிதுவத்தல் (2)\nலக்ஷ்மி கடாக்ஷம் - பகுதி 3\nமேடையில் பல விதமான லக்ஷ்மி கொலு பொம்மைகள் வைக்கப்பட்டிருந்தன. க்ருஹ லக்ஷ்மி, பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் பரமன் காலடியில் அமர்ந்திருக்கும...\nதங்கச்சி பாப்பா பிறந்தநாள் (நவம்பர் 19)\n, பேர்சொல்ல உனக்கு ஒரு ஆண்வாரிசு இல்லையே\" நான் மனதிற்குள் : \"இங்கே எனக்கு என்ன சாம்ராஜ்ஜியமா இருக்கிறத...\nஇது நம்ம வீட்டு கல்யாணம்\nநானும் நிறைய விஷயங்களை பற்றி கதை எழுத வேண்டும் என்று கற்பனை செய்து வைத்து இருக்கிறேன். ஆனால், அதற்குள் எதாவது சுவாரசியமான ஒரு உண்மை நிகழ்வு ...\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள் (ஜோதிட நம்பிக்கை இல்லாதவர்களுக்கான பதிவு)\n\"இது சனி பெயர்ச்சியா தானே இருக்க முடியும் எப்படி ராகு-கேது பெயர்ச்சியாச்சு\"ன்னு நீங்க யோசிக்கலாம். வாஸ்தவம் தான் இந்த க்ரஹமு...\n\" \"என் பொண்ணு தான் சார்\" \"மஞ்சுளா மேடத்துக்கு இவ்வளவு பெரிய பொண்ணா \" \"மஞ்சுளா மேடத்துக்கு இவ்வளவு பெரிய பொண்ணா \nபுவனேஸ்வரி மகாத்மியம் - பகுதி 1\n என்பது நான் அடிக்கடி சொல்லும் வாக்கியம். இதுதான் காரணம் என்றில்லாமல் என...\nஅம்பது ரூபாய் பொருளை \"பார்டி நைன் ருபீஸ் பிப்டி பைஸ்னா தாங்க \" என்று பேரம் பேசி வாங்கியதையே பெருமையாக நினைக்கும் சென்னை நகரத்து அ...\nபடித்து பல வருடங்கள் ஆகிவிட்ட போதிலும் என்னால் மறக்க முடியாத சில நகைச்சுவை துணுக்குகள் இங்கே. இவற்றை எங்கே,எப்போது படித்தேன் என்பது நினைவில...\nகடை நிலை ஊழியர்கள் - (தொடர் பதிவு) இறுதி பகுதி.\nமீனாம்மா : மீனாம்மாவின் உண்மையான பெயர் இன்றுவரை எனக்கு தெரியாது. மீனாவின் அம்மா மீனாம்மா அவ்வளவு தான். மீனாம்மாவிற்கு மூன்று குழந்தைகள்...\n”என் கையெல்லாம் கருப்பா, சுருக்கம் சுருக்கமா இருக்கு பாரேன் உஷா, இதுக்கு என்ன பண்ணலாம்” வாயில் நூலை கவ்வியபடி என் புருவத்தை ராவிக்கொண்ட...\nஉஷா ஸ்ரீகுமார் தந்த விருது\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.adiyakkamangalam.com/health/2418/banana-boosts-brain-power-and-masculinity-energy", "date_download": "2018-04-26T13:27:25Z", "digest": "sha1:KHESDFFMYP5QH4GFOGDC42TON4RVWSTU", "length": 13982, "nlines": 88, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam Banana Boosts Brain Power And Masculinity", "raw_content": "\nமூளை வலிமை மற்றும் ஆண்மை சக்தியை பெருக்கும் வாழைப்பழம்\nஅடியக்கமங்கலம், 01.06.2014: பொட்டாசியம் மற்றும் விட்டமின்-B ஆகியவை ஹார்மோனை ஊக்குவிக்கும் மூலப் பொருட்களாகும். இதனால் வாழைப்பழம் ஒரு ஆண்மையை பெருக்கும் முக்கியமான பழமாக கருதப்படுகிறது. வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிக அளவில் இருப்பதால் மூளையின் திறனை அதிகரிக்கிறது. நல்ல மனநிலையில் வைத்து கொள்ள துணைபுரிகிறது. நரம்புகளை சீராக வைத்து கொள்கிறது. பொட்டாசியமானது ரத்த அழுத்தத்தையும் இதயத்தையும் சீராக இயங்க வைக்கிறது. வாழைப்பழத்தில் உள்ள ஒரு வேதிப்பொருள் செக்ஸ் உணர்வை அதிகரிக்கும். வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின்-B டிரைப்டோபெனாக மாற்றப்படுகிறது. டிரைப்டோபென் சீரோடோனினாக மாற்றமடைகிறது. இது நமக்கு சாந்த குணத்தை தோற்றுவிக்கிறது. டிரைப்டோபென் பின்னர் நியாசினாக மாற்றம் அடைகிறது. உடலில் உள்ள ஹார்மோன் குறைபாடுகளை நிவர்த்தி செய்கிறது.\nவயிற்றில் உள்ள குடல்களில் சுரக்கும் அமிலங்களும் நச்சுப் பொருட்களும் அரிப்பதன் காரணமாக குடல் புண் என்கிற அல்சர் ஏற்படுகிறது. பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம். குடல்களில் பழுதுபட்ட மெல்லிய சவ்வுத் தோல்களைச் விரைவில் வளரச் செய்து புண்ணை ஆற்றிவிடும் சக்தி பச்சை வாழைப்பழத்திற்கு உண்டு. வெண்டைக்காய் விதையைக் கொஞ்சம் பார்லி கஞ்சியில் போட்டு காய்ச்சி மூன்று நாள் வரை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் இல்லாமல் போகும். நம்முடைய உடலில் சுரக்க கூடிய திரவத்தை சமநிலைப் படுத்துகிறது. உடம்பில் உள்ள செல்களை தூய்மையாகவும் நல்ல ஊட்டச்சத்துடனும் வைத்து கொள்கிறது. வாழைப்பழத்தில் காணப்படும் நார்ச்சத்துகள் குடலை சீராக வைக்கிறது. வாழைப்பழத்துடன் பால் கலந்து சாப்பிட்டாலோ அல்லது தேன் கலந்து சாப்பிட்டாலோ அவை வயிற்று சம்பந்தமான நோய்களை குறைக்கிறது.\nரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுக்கும் வைக்கிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது. வாழைப்பழத்தை நம்முடைய உணவின் ஒரு பகுதியாக சாப்பிட்டு வந்தால் பக்கவாதத்தால் ஏற்படும் இறப்பு சதவீதம் 40 சதவீதம் குறையும் என்று ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது. வாழைப்பழம் மனிதனின் மூளைக்கு தேவையான எல்லாப் புரதச் சத்துக்களையும் கொண்டுள்ளது.\nவாழைப்பழம் மூன்று இயற்கையான இனிப்பு வகைகளைக் (NATURAL SUGAR) கொண்டுள்ளது. அதாவது சக்ரோஸ் (SUCROSE), பிரக்டோஸ் (FRUCTOSE) மற்றும் குளுகோஸ் (GLUCOSE) உடன் சேர்ந்து நம் குடலுக்குத் தேவையான ஃபைபரையும் (Fiber) கொண்டுள்ளது. இரண்டு வாழைப்பழம் சாப்பிட்ட 1 1/2 மணி நேரத்தில் உடலுக்குத் தேவையான, உடனடியான, உறுதியான, கணிசமான, ஊக்கமுள்ள ஊட்டச்சத்தை கொடுப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.\nவாழைப்பழம் ஒரு மனிதனுக்கு கிடைக்ககூடிய ஊட்டச்சத்து மட்டுமல்ல பல நோய்கள் வராமல் தடுக்கக்கூடிய நோய்தடுப்பு நாசினியும் கூட. இதை நாம் உடலில் தினமும் சேர்த்துக் கொள்ள வேண்டும். மூளை வலிமை (BRAIN POWER) வாழைப்பழத்தை உணவுடன் சேர்த்து கொடுத்து சோதனை செய்து பார்த்தபோது மூளைத்திறன் அதிகரித்ததோடு, பொட்டாசியம் நிறைந்த இந்த உணவு அதிகமான கல்வித்திறனை அளிப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. வாழையின் ஒவ்வொரு பாகமுமே மருத்துவ குணங்கள் கொண்டவை.\nவெங்காயத் தோலில் உள்ள ஆற்றல் மிக்க ஆன்டி ஆக்சிடெண்ட்\nஉடல் எடையை குறைக்க மிளகுத் தூள் கலந்த தர்பூசணி ஜூஸ்\nபுற்றுநோய்க்கு எதிராக போராடும் புதினா\nஉயர் ரத்தழுத்தத்தை கட்டுப்படுத்தும் காளான்கள்\nபுரோத சத்துக்கள் நிறைந்த முருங்கை கீரை\nதினமும் தயங்காமல் முட்டை சாப்பிடலாம்\nநோய்களை தீர்க்கும் மருந்து பலாபழம்\nதலை முடி சாயத்தால் ஏற்படும் பக்க விளைவுகள்\nஇரண்டாம் வகை நீரிழிவு நோயை வரவழைக்கும் நூடுல்ஸில் உள்ள மைதா\n4-7-8 மூச்சுப் பயிற்சி முறையில் எளிதில் தூக்கத்தை வரவழைக்கலாம் - ஆய்வறிக்கை\nஅதிக நாட்கள் தாய்ப்பால் பருகும் குழந்தை பிற்காலத்தில் செல்வந்தராகும் - ஆய்வறிக்கை\nஆரோக்கியம் தரும் அவித்த உணவுகள்\nவலிப்பு நோய் இருப்பவர்களுக்கு இரும்பு பொருட்களை கொடுப்பது தீர்வல்ல\nதினமும் ஐந்து கப் காபி குடித்தால் மாரடைப்பு வராது - ஆய்வறிக்கை\nபிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்ட தண்ணீரை எப்படி பயன்படுத்துவது\nபேரிக்காய் சிறுநீரக கற்க்களை நீக்கும்\nதாடி வளர்க்கும் ஆண்களை பற்றிய சுவாரசிய தகவல்\nஇன்சோம்னியா எனற தூக்கமின்மை நோய்\nஅதிக சத்துக்களை கொண்ட இறால் உணவுகள்\nநெஞ்சு சளியை குறைக்கும் வாழைப்பூக்கள்\nமலட்டுத்தன்மையை உருவாக்கும் சோப்புகள் மற்றும் பற்பசைகள்\nபற்களை வெண்மையக்க உதவும் வாழைப்பழம்\nநோய் எதிர்ப்பு சக்தியை தரும் ஸ்ட்ராபெர்ரி பழம்\nகருமிளகு வீரியமிக்க கெப்செசின் புற்றுநோயை தடுக்கும்\nபனங்காயின் (நொங்கு) மருத்துவ குணங்கள்\nபெண்களுக்கு இதய துடிப்பின் வேகம் அதிகம் - ஆய்வறிக்கை\nஇரத்த சோகையை போக்கும் உணவுக் காளான்கள்\nவைட்டமின்-A அதிகரிக்கப்பட்ட சூப்பர் வாழைப்பழம் கண்டுப்பிடிப்பு\nமூளை வலிமை மற்றும் ஆண்மை சக்தியை பெருக்கும் வாழைப்பழம்\nநார்ச்சத்து மிகுந்த உணவுகளை உண்பதால் மாரடைப்பைத் தடுக்கலாம்\nகாஸ்டஸ் பிக்டஸ் இலையின் மூலம் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாம்\nபழ ரசங்களில் அளவுக்கு அதிகமாக சர்க்கரை - ஆய்வறிக்கை\nஇருப்பதால் விட்டமின்B அளவில் boosts பொட்டாசியம் இதனால் கருதப்படுகிறது masculinity energy Banana பொருட்களாகும் ஆண்மையை brain த� பழமாக ஊக்குவிக்கும் ஹார்மோனை மற்றும் வாழைப்பழம் and ஆகியவை மூளையின் அதிக மூலப் பொட்டாசியம் power முக்கியமான ஒரு பெருக்கும் வாழைப்பழத்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.viduppu.com/cinema/04/156751", "date_download": "2018-04-26T13:50:35Z", "digest": "sha1:CUUAO5DFZYGVD4SKZNRDEG7AG62SLNDM", "length": 5215, "nlines": 70, "source_domain": "www.viduppu.com", "title": "ரஜினியும் கமலும் எனது இரு கண்கள் : பிரபலர் பேச்சு - Viduppu.com", "raw_content": "\nகணவரை பிரிந்தார் ஐஸ்வர்யா ராய்\nதாலி கட்டும் நேரத்தில் நடந்த நிஜ சம்பவம்\nஅஜித்தின் மனைவி ஷாலினியின் பகையாளி யார் தெரியுமா\nதலைவர் உரையின் போது தூங்கிய ராணுவ தலைவருக்கு மரண தண்டனை\nதிடீர் திருமணம் செய்துகொண்ட சூப்பர் ஹிட் பட நடிகை...அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஆர்யாவின் திருமணம் நிகழ்ச்சியை மரணகலாய் கலாய்த்த கார்த்திக் மற்றும் ஜெகன்...வைரலாகும் வீடியோ உள்ளே\nஅனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய சூப்பர் சிங்கர் பிரியங்கா அடடே இப்படியும் ஒரு திறமையா..\nஒரே வீட்டில் தனி தனியாக வாழும் ஐஸ்வர்யா அபிஷேக் பச்சன்...காரணம் என்ன\nசுசானாவின் தந்தையால் ஆதாரத்துடன் சிக்கும் ஆர்யா\nவிவாகரத்திற்கு பிறகு அமலாபால் இப்படி மாறிட்டாங்களே...வைரலாகும் புகைப்படம் உள்ளே\nரஜினியும் கமலும் எனது இரு கண்கள் : பிரபலர் பேச்சு\nரஜினியும் கமலும் எனது இரு கண்கள் போன்றவர்கள் என்று தென்காசியில் நேற்று முந்தினம் மாலையில் நடைபெற்ற நிகழ்வொன்றின்போது நிருபர்கள் சந்திப்பில் கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.\nநிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பின் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் ரஜினி பிரவேசம் குறித்தும் தமிழக அரசியல் நிலவரம் குற்த்தும் நிருபர் ஒருவர் கேள்வி கேட்டிருந்தார்.\nஅதற்கு பதில் கூறுகையில் இருவரும் எனது நண்பர்கள் ,இருவரும் எனது இரண்டு கண்கள் போன்றவர்கள் என கூறியுள்ளார்.\nஆர்யாவின் திருமணம் நிகழ்ச்சியை மரணகலாய் கலாய்த்த கார்த்திக் மற்றும் ஜெகன்...வைரலாகும் வீடியோ உள்ளே\nதலைவர் உரையின் போது தூங்கிய ராணுவ தலைவருக்கு மரண தண்டனை\nஅஜித்தின் மனைவி ஷாலினியின் பகையாளி யார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://factorynotes.pressbooks.com/chapter/1-%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-04-26T13:14:21Z", "digest": "sha1:YHWK6447PFAUW2LNZW3C6UB7NEZJC4DX", "length": 28606, "nlines": 99, "source_domain": "factorynotes.pressbooks.com", "title": "1. பஞ்சபாண்டவர்கள் – ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்", "raw_content": "\nஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் .......\n3. 2 . என் கேள்விக்கு என்ன பதில் \n4. 3. பணமே பயம் போக்கும் மருந்து\n7. 6. என் பெயர் மாடசாமி\n8. 7. உழைத்து ( மட்டும் ) வாழ்ந்திடாதே \n9. 8. பலி கொடுத்து விடு \n10. 9. பாறைகளைப் பிளக்கும் விதைகள்\n11. 10. நேர்மையே உன் விலை என்ன \n12. 11. காற்றில் பறக்கும் கௌரவம்\n13. 12. கொள்ளையடிப்பது தனிக்கலை\n14. 13. வேலையைக் காதலி\n15. 14 வண்ணங்களே வாழ்க்கை\n16. 15 பணக்காரன் பேசுவதெல்லாம் தத்துவமே\n17. 16 எந்திர மனிதர்கள்\n18. 17. அவள் பெயர் ரம்யா\n19. 18 பொருளாதாரம் உருவாக்கும் அவதாரங்கள்\n20. 19. பெயர் மட்டுமல்ல உழைப்பிலும் ராஜா தான்\n21. 20 துணிவே துணை\nஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் ..\nஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் – ஒரு அலசல்\nஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்… ..\nஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் .......\nஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்… ..\nஇதுவரையிலும் வெளிவந்துள்ள என் மின் நூல்கள்\n“ சார்… உங்களைப் பஞ்சபாண்டவர்கள் அழைக்கின்றார்கள்”\nஎன் அறையின் கண்ணாடிக் கதவை பாதித் திறந்தபடி உள்ளே நுழையாமல் தலையை மட்டும் நீட்டியபடி என் உதவியாளர் பெண் குறும்பாகச் சிரித்துக் கொண்டே ஆங்கிலத்தில் சொன்னபோது அந்த வாரத்தில் முடிக்க வேண்டிய கோப்புகளோடு போராடிக் கொண்டிருந்தேன் .\nஇருபது வயதுக்குரிய இளமையும் , அழகும் உள்ள இளைஞிக்கு இயல்பாகவே குறும்புத்தனம் அதிகம் . அவரின் இயல்பான கலாய்த்தல் என்பதாக எடுத்துக் கொண்டு அடுத்து முடிக்க வேண்டிய கோப்புகளை எடுக்கத் துவங்கினேன் .\n“ சார்… உண்மையிலேயே உங்களை அழைக்கின்றார்கள் . இப்பொழுது தான் மேலேயிருந்து தகவல் வந்தது” என்றார் .\nவாரத்தின் துவக்க நாளில் இதென்ன கொடுமை என்று மனதில் நினைத்துக் கொண்டே புருவத்தைத் தூக்கி “ஏதும் பிரச்சனையா என்று மனதில் நினைத்துக் கொண்டே புருவத்தைத் தூக்கி “ஏதும் பிரச்சனையா ” என்று சைகையால் கேட்டேன் . அவரும் அதே புருவ மொழியில் “தெரியலையே ” என்று சைகையால் கேட்டேன் . அவரும் அதே புருவ மொழியில் “தெரியலையே “ என்று சொல்லிவிட்டு “இன்றைக்கு மாட்டிக் கொண்டீர்களா “ என்று சொல்லிவிட்டு “இன்றைக்கு மாட்டிக் கொண்டீர்களா ” என்று ஒரு விதமாகச் சுழித்துச் சிரித்தபடியே வேறுபக்கம் நகர்ந்தார் .\n“ பஞ்சபாண்டவர்கள்” என்றால் நான் பணிபுரிந்த நிறுவனத்தில் பலருக்கும் பேதி வரவழைக்கும் சமாச்சாரம் . நிறுவனத்தில் மொத்தமாக ஐந்து இயக்குநர்கள் . ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பணி . மனிதவளம் , நிதி , நிர்வாகம் , உற்பத்தி , சந்தைப்படுத்துதல் ( மார்க்கெட்டிங் ) என்று ஒவ்வொருவரும் அவரவர் துறையில் கில்லாடி ரங்காவாக இருப்பது பிரச்சனையல்ல . பேசியே கொன்று விடுவார்கள் . அவர்கள் பேசுவதை மட்டுமே கேட்டுக் கொண்டு இருக்க வேண்டும் . எனக்கு எப்போது செயலாக்கம் முக்கியம் . பேசும் நேரத்தில் குறிப்பிட்ட வேலையைச் செய்து விடலாமே என்று பரபரப்பாய் செயல்படுவேன் .\nஆனால் அவர்களோ ஒவ்வொரு செயல்பாட்டுக்கும் விதமான அறிக்கையை ( ரிப்போர்ட் ) எதிர்பார்ப்பார்கள் . அவர்கள் எதிர்பார்க்கின்ற அறிக்கைகள் இல்லாமல் வாயைத் திறந்தால் என்றால் தயவு தாட்சண்டயமில்லாமல் ‘ கெட் அவுட் ‘ என்பார்கள் .\nஅவர்கள் விருப்பங்களை என்னால் புரிந்து கொள்ள முடிந்த போதிலும் நான் பணிபுரியும் சூழ்நிலையை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியாமல் என்னை அவர்கள் விரும்பும் நடைமுறைகளுக்கு மாற்றுவதிலேயே குறியாய் இருப்பார்கள் . என்னால் அவர்கள் வட்டத்தில் பொருத்திக் கொள்ள முடியாமல் ஒவ்வொரு முறையும் தடுமாறி வேர்த்து விறுவிறுத்து விக்கிப்போய் நிற்பேன் .\nஅவர்கள் விரும்பும் நிர்வாகம் மேலைநாட்டு முறையைச் சார்ந்தது . ஆனால் உள்ளே நிறுவன செயல்பாடுகளோ கூவம் நதிக்கரையின் ஓரத்தில் கூவிக்கூவி காய்கறி விற்கும் நிலையில் இருக்கும் . இதையெல்லாம் விட மற்றொரு முக்கியமான பிரச்சனை ஒன்று உண்டு . உற்பத்திக்கான இயக்குநர் என்ற பதவியில் இருந்த பெண்மணி நிறுவன முதலாளியின் மனைவி . அவர் உத்திரபிரதேசத்தைச் சேர்ந்தவர் . இயல்பாகவே அவருக்கும் எனக்கும் ஏழாம் பொருத்தம் .\nஅவர் நடைமுறைக்குச் சாத்தியமில்லாத ஒன்றைச் சொல்வார் . ” அதற்கு வாய்ப்பில்லை . இப்படித்தான் நடைமுறையில் சாத்தியமாகும் ” என்பேன் . அவருக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்து விடும் .\n” நான் ஐஈ (INDUSTRIAL ENGINEER) துறையிடம் கேட்டுவிட்டேன் . அவர்கள் சாத்தியமே என்கிறார்கள் . ஏற்றுமதி தொழிற்சாலையில் பல்வேறு பிரிவுகள் உண்டு . அதில் ஒன்று ஐஈ . அவர்களின் முக்கியமான பணி என்பது ஒரு ஆடையை எத்தனை பேர்கள் வைத்து தைக்க வேண்டும் . எத்தனை மணி நேரத்தில் தைத்து முடிக்க வேண்டும் எத்தனை எந்திரங்கள் கொண்டு அதனைச் செயல்படுத்த வேண்டும் என்று பல்வேறு கணக்கீடுகள் அடிப்படையில் அறிக்கை தயார் செய்து என்னைப் போன்ற உற்பத்திப் பிரிவில் உள்ள உயர் பதவியில் உள்ளவர்களிடம் கொடுக்க அவர்கள் சொல்வதை இம்மி அளவு கூடப் பிசகாமல் நிறைவேற்ற வேண்டும் .\nகாரணங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்பதை விட அது குறித்து எவரும் கவலைப்படவே மாட்டார்கள் . தொழிலாளர்கள் வந்தார்களா வராமல் முன்னறிவிப்பு இன்றி விடுமுறை எடுத்தார்களா வராமல் முன்னறிவிப்பு இன்றி விடுமுறை எடுத்தார்களா போன்ற நடைமுறை எதார்த்தங்களைக் குறித்துக் கவலைப்படாமல் எல்லாமே ‘புள்ளிவிபரப்புலி’ போலவே கணக்கு அடிப்படையில் செயல்பட வேண்டும் நினைக்கும் புத்திசாலிகள் அடங்கிய கூட்டமது . எனக்கு இந்த இடத்தில் தான் பிரச்சனைகள் உருவாகும் . ஐம்பது பேர்கள் இருந்து செய்ய வேண்டிய வேலைகளை எப்படி முப்பது பேர்களால் முடியும் போன்ற நடைமுறை எதார்த்தங்களைக் குறித்துக் கவலைப்படாமல் எல்லாமே ‘புள்ளிவிபரப்புலி’ போலவே கணக்கு அடிப்படையில் செயல்பட வேண்டும் நினைக்கும் புத்திசாலிகள் அடங்கிய கூட்டமது . எனக்கு இந்த இடத்தில் தான் பிரச்சனைகள் உருவாகும் . ஐம்பது பேர்கள் இருந்து செய்ய வேண்டிய வேலைகளை எப்படி முப்பது பேர்களால் முடியும் என்று கேட்டால் அது உன்பாடு என்று கேட்டால் அது உன்பாடு என்று ஒதுங்கி விடுவார்கள் .\nஇயக்குநராக இருக்கும் பெண்மணிக்கு ஐஈ கூட்டம் சொல்வது தான் வேதவாக்காக இருக்கும் . வாக்குவாதம் செய்தால் ” நான் சொல்வதை மட்டும் செய் ” என்பார் . நானும் விடாப்பிடியாக ” அப்படியென்றால் என் பதவியில் நீங்க சொல்வதைக் கேட்கும் நபரை வைத்திருக்கலாமே \nஅவர் முகம் சிவந்து விடும் . அவர் கணவர் குறுக்கிடுவார் . மனைவியின் பெயரைச் சொல்லி ஆங்கிலத்தில் மென்மையாகச் சொல்வார் . ” அவர் ஏற்கனவே டென்சன் பார்ட்டி . நீ அவருக்கிட்டே பேசப் பேச அவரும் பேசிக் கொண்டே தான் இருப்பார் . உனக்கு என்ன வேண்டுமோ அதை மட்டும் கேட்டுப் பழகு அதை மட்டும் கேட்டுப் பழகு மற்ற விசயங்களை அவரே முடிவு செய்யட்டுமே மற்ற விசயங்களை அவரே முடிவு செய்யட்டுமே ” என்பார் . மற்ற இயக்குநர்களும் எனக்கு ஆதரவாகக் களத்தில் இறங்குவார்கள் .\nகணவர் சொல்லி நிறுத்தியதும் அவர் முகம் மாறத் தொடங்கும் . ஏற்கனவே கோதுமை நிறத் தோலில் இருக்கும் அவரின் முகப் பொலிவில் ரத்த ஓட்டம் அதிகமாவதைப் பார்க்க முடியும் . இதன் காரணமாகப் பெரும்பாலான கூட்டத்திற்கு என்னை அழைத்தால் அவர் இருக்க மாட்டார் . என் திமிர்த்தனத்தையும் இந்தப் பாஞ்ச் கூட்டம் பொறுத்துக் கொள்ள முக்கியக் காரணம் ஒன்று உண்டு . அவர்கள் கேட்கும் உற்பத்தியை விட இரண்டு மடங்கு எடுத்துக் கொடுத்து விடுவதுண்டு .\nஉற்பத்தி இயக்குநரின் அடுத்த நிலையில் இருந்த எனக்குக் கொடுத்திருந்த பதவி ‘ உதவி உற்பத்தி இயக்குநர் ‘. ஒரு பின்னலாடை நிறுவனத்தில் உற்பத்திப் பிரிவில் புரொடக்சன் மானேஜர் , பேக்டரி மானேஜர் என்ற இரண்டு பதவிகள் உண்டு . அதற்கு மேலே உற்பத்திக்கான பொது மேலாளர் ( ஜெனரல் மேனேஜர் ) என்ற பதவியும் உண்டு .\nஜி . எம் . பதவிக்குப் பதிலாக இங்கே இயக்குநர் என்ற பதவியை உருவாக்கியிருந்தார்கள் . முதலாளியின் பெண்மணிக்கு அந்தப் பொறுப்பு கொடுக்கப்பட்டு இருந்ததே தவிர அவர் அலங்கார பொம்மையாகத்தான் இருந்தார் . அவரை நான் தான் இயக்கிக் கொண்டிருந்தேன் .\nஇந்தச் சமயத்தில் ஒரு கொசுவர்த்திச் சுருளை பற்ற வைத்து விடுகின்றேன் . திருப்பூர் பற்றிச் சில தனிப்பட்ட தகவல்கள் சிலவற்றைத் தெரிந்து வைத்துக் கொள்ளுங்களேன் .\nதிருப்பூர் என்றால் உங்களுக்கு எவையெல்லாம் நினைவுக்கு வரும் சிலருக்குப் பள்ளியில் படித்த திருப்பூர் குமரன் குறித்துத் தெரிந்துருக்க வாய்ப்புண்டு . இன்னும் சிலருக்கு பனியன் ஜட்டி சல்லிசான விலையில் கிடைக்கும் என்று தோன்றும் . ஆனால் இந்தியாவின் அந்நியச் செலவாணியைத் தாங்கிப் பிடிக்கும் முக்கியமான ஊர் திருப்பூர் .\nஏறக்குறைய வருடந்தோறும் 15000 கோடிகளுக்கு மேல் திருப்பூர் வாரி வழங்கிக் கொண்டிருக்கின்றது . 50 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள இந்த ஊர் நம்பியிருப்பதும் , நம்பிக்கையுடன் தொழில் செய்து கொண்டிருப்பவர்கள் நம்பி கை வைத்திருப்பது பஞ்சின் மேல் மட்டுமே . பஞ்சு தான் நூலாக மாறுகின்றது . நூல் தான் விதவிதமான அளவுகளில் ஆடைக்குத் தேவையான துணியாக மாற்றம் பெறுகின்றது . வண்ணங்கள் சேர இறுதியில் வெட்டி தைக்கப்பட்ட ஆடைகள் உலகில் உள்ள முக்கியமான அத்தனை நாடுகளுக்கும் விமானம் / கப்பல் வழியாகப் போய்ச் சேருகின்றது .\nஇந்தியாவில் பஞ்சு விளைச்சல் அதிகமுள்ள மாநிலம் குஜராத் . அதனைத் தொடர்ந்து ஆந்திரா . “ எல்லாமே பஞ்சு பஞ்சாய் பறந்து போச்சு” என்று பேச்சு வாக்கில் பலரும் சொல்லக் கேட்டு இருப்பீங்க இந்தப்பஞ்சு பல கோடி வர்த்தகத்தை ஆளக்கூடியது . பல கோடி மக்களையும் இந்தியாவில் இந்தத் துறை வாழ வைத்துக் கொண்டிருக்கின்றது .\nஇந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் விளையக்கூடிய பஞ்சுப் பொதிகள் தான் திருப்பூரை வாழ வைத்து மக்களை வாழ்வில் உயர வைத்துக் கொண்டிருக்கின்றது . விளைச்சலில் வந்த பஞ்சுப் பொதிகளைத் தனியார் மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்கள் மொத்தமாக வாங்கிப் பொதுச் சந்தைக்குக் கொண்டு வருகின்றார்கள் . பஞ்சு தன் பயணத்தைத் தொடங்குகின்றது . பல தொழில் நகரங்களுக்குச் செல்கின்றது .\nபல நிலைகளில் சுத்தப்படுத்தப்படுகின்றது . வகை வகையாகத் தரம் பிரிக்கப்படுகின்றது . பஞ்சாலைக்குச் சென்று இறுதியில் தரம் வாரியான நூலாக மாறுகின்றது . இறுதியில் இந்த நூல் தான் திருப்பூர் போன்ற ஊர்களுக்கு வருகின்றது .\nதிருப்பூருக்குள் இரண்டு விதமான உலகம் உண்டு . ஒன்று உள்நாட்டுக்கு (LOCAL MARKET) மட்டும் என்று செயல்படும் பனியன் , ஜட்டி சம்மந்தப்பட்ட தயாரிப்பு வகைகள் . மற்றொன்று ஹொசைரி கார்மெண்ட்ஸ் (HOSIERY GARMENTS) என்றழைக்கப்படும் (EXPORT MARKET) வெளிநாட்டு வர்த்தகம் . இந்த வர்த்தகத்தில் பலதரப்பட்ட பிரிவுகள் உள்ளது . ஒவ்வொன்றைப்பற்றியும் படிப்படியாகப் பார்ப்போம் .\nஇந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பின்னலாடைத் தொழில் இருந்த போதிலும் கடந்த இருபது ஆண்டுகளாகத் திருப்பூர் என்ற ஊரின் வளர்ச்சியை எவராலும் தடுக்க முடியவில்லை . ஆனால் இன்றுவரையிலும் அரசாங்கத்தின் ஒத்துழைப்பு ஒரு சதவிகிதம் கூட இல்லை என்பது கசப்பான உண்மை . தொடக்கத்தில் கோயமுத்தூர் மாவட்டத்திற்குள் ஒரு சிறிய ஊர் என்கிற அளவில் இருந்த திருப்பூர் 2009 முதல் தனி மாவட்டம் என்ற அந்தஸ்துடன் உயர்ந்து இன்று மாநகராட்சி என்ற நிலைக்கு மாறியுள்ளது .\nஒவ்வொரு காலகட்டத்திலும் திருப்பூர் மாறிக் கொண்டே தான் வந்துள்ளது . அதேபோலச் சிறிய அளவில் தொழில் செய்து கொண்டிருந்தவர்கள் இன்று மிகப் பெரிய தொழில் அதிபர்களாகவும் மாறியுள்ளனர் . இன்றைய சூழலில் பின்னலாடைத் தொழில் (KNITS) என்பது சர்வதேசத்துடன் போட்டியிட்டே ஆக வேண்டிய தொழிலாக உள்ளது .\nஉலகளாவிய போட்டியில் வெல்ல வேண்டிய பலதரப்பட்ட சவால்கள் இந்தத் தொழிலுக்கு உள்ளது . சர்வதேச பன்னாட்டு நிறுவனங்களுடன் போட்டியிட வேண்டிய திருப்பூர் பின்னலாடைத் தொழில் என்பது திருப்பூரில் எப்படியுள்ளது \nஇங்குள்ள நிறுவனங்களின் நிர்வாக முறைகள் , அணுகுமுறைகள் மாறியுள்ளதா காலத்திற்கேற்ப இந்தத் தொழில் வளர்ந்துள்ளதா காலத்திற்கேற்ப இந்தத் தொழில் வளர்ந்துள்ளதா இந்தத் தொழிலில் உள்ள தொழிலாளர்களின் நிலை எப்படியுள்ளது இந்தத் தொழிலில் உள்ள தொழிலாளர்களின் நிலை எப்படியுள்ளது இந்திய அரசாங்கம் திருப்பூரை எப்படிப் பார்க்கின்றது இந்திய அரசாங்கம் திருப்பூரை எப்படிப் பார்க்கின்றது போன்ற பல கேள்விக்குறிக்கான பதிலை நாம் தேட வேண்டும் . யோசித்துக் கொண்டே என் அறையை விட்டு வெளியே வந்து முதல் தளத்திற்குச் செல்லும் மாடிப்படியில் ஏறத் தொடங்கினேன் .\nமுதல் தளத்தில் தான் அலுவலகம் சார்ந்த முக்கியக் கூட்டங்கள் நடக்கும் அறையுள்ளது . அதே அறையில் வெளிநாட்டில் இருந்து வருபவர்களுடன் கூடிய கலந்துரையாடலும் நடக்கும் . வெளிநாட்டில் இருந்து வருபவர்களைப் பையர் ( BUYER ) என்கிறார்கள் . அவர்கள் ஒரு நிறுவனத்திற்குக் கொடுக்கின்ற ஒப்பந்தங்களை ஆடர் (ORDER) என்கிறார்கள் . பையர் என்றால் திருப்பூர் முதலாளிகளுக்குக் கடவுள் என்று பெயர் . பலரின் வளர்ச்சிக்கும் வீழ்ச்சிக்கும் இந்தக் கடவுளே காரணமாக இருப்பார் . பஞ்சபாண்டவர்கள் எதற்காக நம்மை அழைக்கின்றார்கள் என்பதை யோசித்துக் கொண்டே மாடிப்படியில் ஏறிக் கொண்டிருந்தேன் . அப்போது தான் இந்த நிறுவனத்திற்குள் வந்த கதை என் மனதிற்குள் நிழலாடியது .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2018-04-26T13:30:48Z", "digest": "sha1:4D64Q4YQD4ILCBEVPAUI7Y5E6WHBKJE4", "length": 4646, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "பாகப்பிரிவினை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் பாகப்பிரிவினை யின் அர்த்தம்\nஉரிமையாளர்கள் தங்கள் பொதுவான சொத்தைப் பிரித்துக்கொள்ளும் முறை.\n‘பாகப்பிரிவினையில் எனக்கு இந்த வீடு கிடைத்தது’\n‘இன்னும் பாகப்பிரிவினை நடக்காத கூட்டுக்குடும்பம் இது’\n‘இப்போது பாகப்பிரிவினை செய்வதில் அப்பாவுக்கு விருப்பம் இல்லை’\n‘அந்த நிறுவனத்தின் வெளிநாட்டு மற்றும் இந்திய உரிமையாளர்கள் தங்களுக்குள் பாகப்பிரிவினை செய்துகொண்டதாக ஒரு பேச்சு அடிபடுகிறது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2018-04-26T13:30:35Z", "digest": "sha1:UFQ4HDRJ72EXHCZGIGESA6NKKVREI7RJ", "length": 4580, "nlines": 81, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "மலிவு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் மலிவு யின் அர்த்தம்\n‘கோதுமை மலிவாகக் கிடைத்தால் இரண்டு மூட்டை வாங்கிப்போடலாம்’\n‘இந்தத் துணி கொள்ளை மலிவு’\n‘அலுமினியம் மிகவும் மலிவான உலோகம்’\n‘ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் மலிவான நடவடிக்கைகளில் எதிர்க்கட்சிகள் ஈடுபடக் கூடாது’\n‘இப்படி மலிவாகப் பேசுவதை முதலில் நிறுத்து’\n‘மலிவான காட்சிகள் நிறைந்த திரைப்படம்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.penniyam.com/2013/02/blog-post_24.html", "date_download": "2018-04-26T13:24:09Z", "digest": "sha1:SV45BAC5HND6OD3ERTFKI652VITH3GNC", "length": 22739, "nlines": 247, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: பெண்களுக்கெதிரான சாதிய ஒடுக்குமுறை – கொற்றவை, மாசெஸ்", "raw_content": "\nபெண்களுக்கெதிரான சாதிய ஒடுக்குமுறை – கொற்றவை, மாசெஸ்\nநத்தம், கொண்டம்பட்டி, அண்ணாநகர் தலித் கிராமங்களில் நடந்திருக்கும் ஆதிக்க வெறியாட்டத்தில் சாதிப் பிரச்சனை இருக்கிற்தா – இருக்கிறது; வர்க்கப் பிரச்சனை இருக்கிறதா – இருக்கிரது; இவைகளோடு மற்றுமொரு முக்கியப் பிரச்சனை ஒன்றிருக்கிறது – அதுதான் பெண் உரிமை பிரச்சனை. (The question of women’s rights). நிலப்பிரபுத்துவ அமைப்பானது உழைப்பைச் சுரண்ட அடிமைக் கட்டமைப்புகளை உருவாக்கியது, சத்ரிய பார்ப்பனியக் கூட்டு அதை மனுதர்மச் சட்டமாக்கியது. அந்த சட்டங்களைப் பெண்ணின் கருப்பையில் திணித்தது. சாதிய பற்றாளர்கள், சாதியக் கட்சிகள் இந்த ஆணாதிக்க பார்ப்பனிய இந்துத்துவ சாதியச் சட்டங்களை தங்கள் பொருளாதார, சமூக, அரசியல் அதிகார ஆதாயக் காரணிகளுக்காக அப்படியே பிடித்துக் கொள்கின்றனர். நடைமுறைப்படுத்துகின்றனர்.\nபெரியார் இருந்திருந்தால் இந்த சாதிச் சங்கங்கள், அரசியல் கட்சிகள் இவ்வளவு தைரியமாக சாதி மறுப்பு திருமணங்களுக்கு எதிராக பேசியிருக்க முடியுமா\nஹிந்து கோட்பில் மூலம் அம்பேத்கர் முன் மொழிந்த உரிமைகளுல் ஓர் முக்கியமான உரிமை பெண்கள் தாங்கள் விரும்பிய துணையை தேர்ந்தெடுக்கலாம் என்பதுதான், அவ்வரைவுக்கு ஆதரவு கிடைக்காமல் பதவியையே துறந்தார் அம்பேத்கர். சாதி மறுப்பு திருமணத்தை எதிர்ப்பதென்பது அரசியல் சாசனம் அளித்திருக்கும் உரிமைக்கெதிராகப் பேசுவதென்பதாகும்.\nபண்டைய தாய்வழிச் சமூகம் சிதைந்து தந்தைவழி ஆணாதிக்க சமூகம் மோலோங்கியபோது நிலப்பிரபுத்துவ அமைப்புக்கேற்றவாறு உருவாக்கப்பட்ட சட்டங்கள் பெரும்பாலும் பெண்ணை அடக்குவதன் மூலம் ஒரு சாதியை, சமூகத்தை, இனக்குழுவை, இனத்தை அடக்கி ஆள திட்டமிட்டது. தங்களின் அரசியல் ஆதாயங்களுக்காக இன்றும் அது பல சாதிக் கட்சிகளால் பின்பற்றப்படுகிறது.\nஊழல் செய்வதில்கூட பல நவீனங்களை உள்வாங்கிக்கொண்ட ஆதிக்க சாதி அரசியல் கட்சிகள் சாதி விசயத்தில் மட்டும் இன்னும் ஆண்டானைப்போல நடந்து கொள்வது பிற்போக்குத்தனமானது, வன்மையாக கண்டிக்கத்தக்கது.\nடிவிட்டர், முக நூல் போன்ற இணையதளங்களில் வைக்கபடும் கருத்திற்கு பாய்ந்து வந்து கைது செய்யும் வல்லமை படைத்த அரசுகள் வெளிப்படையாக இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கெதிராக, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யத்தக்க கருத்துக்களைப் பேசிவரும் காடு வெட்டி குரு, பா.ம.க நிறுவனர் இராமதாஸ், கொங்கு வேளாளர் பேரவை மணிகண்டன், மூவேந்தர் முன்னேற்றக் கழகம், பழ. கருப்பையா போன்ற சாதியக் கட்சிகள், சாதிய பற்றாளர்களை ஏன் இந்த அரசு இன்னும் கைது செய்யவில்லை.\nசாதி வெறியில் வீடுகளை எரிப்பது, சூரையாடுவது போன்ற வன்கொடுமைகளை திரைப்படங்களில் மட்டுமே நான் பார்த்திருக்கிறேன். சமூக உணர்வு ஏற்பட்ட பின்னர் தான் இத்தகைய கொடூரங்களுக்குப் பின் இருக்கும் சமூக, பொருளாதார, அரசியல் காரணிகள் விளங்கியது.\nமீசையை முறுக்கி, தோளை விடைத்துக் கொண்டு சாதிக் கொடுமைக்கெதிராக பொங்கு எழுந்த அந்த ‘ஆண் கதாநாயக வீரர்கள்’ எவரேனும் இந்த ஆதிக்க சாதி வெறியாட்டத்திற்கெஹ்டிராக ஒரு கண்டன அறிக்கையையாவது வெளியிட்டிருக்கிறார்களா ‘தாய் குலம், தங்கைக் குலம்’ இப்படி ஒடுக்கப்படுவதை வேடிக்கப் பார்க்கும் இவர்களில் சிலர் தமிழ், தமிழ் தேசியம் என்றால் மட்டும் களத்தில் இறங்குகிறார்கள். இவர்களைப் பொறுத்தவரை ‘தமிழர்’ என்றால் வெறும் ஆண்கள் மட்டும்தான் போலும்.\nசின்மயி விவகாரத்தில் ஒரு பேட்டியில், உரையாடலின் ஒரு தொடர்ச்சியாக அவரது தாயிடம் அப்படியே உங்கள் மகளைப் ஆபாசப் பாடல் பாடுவதையும் நிறுத்தச் சொல்லுங்கள் என்றேன். அதைப் பிடித்துக் கொண்டு குஷ்புவிடம் சின்மயி முறையிட, இப்படிப்பட்ட பிற்போக்குத்தனமான பெண்களும் இந்த காலத்தில் இருக்கிறார்களா அவருக்கு ஒரு கேக்கைப் பரிசளித்து தூக்கத்திலிருந்து தட்டியெழுப்ப வேண்டும் என்றார். இந்த பெண் உரிமை பாதுகாவலர்கள் சாதி மறுப்பு திருமண எதிர்ப்பு என்பதில் அடிப்படையில் ஒடுக்கப்படுவது பெண்ணின் உரிமை என்பதை அறியவில்லையா அவருக்கு ஒரு கேக்கைப் பரிசளித்து தூக்கத்திலிருந்து தட்டியெழுப்ப வேண்டும் என்றார். இந்த பெண் உரிமை பாதுகாவலர்கள் சாதி மறுப்பு திருமண எதிர்ப்பு என்பதில் அடிப்படையில் ஒடுக்கப்படுவது பெண்ணின் உரிமை என்பதை அறியவில்லையா கூடுதலாக அதைக் காரணமாக வைத்து சாதிய ஆதிக்கப் போக்கில் தலித் கிராமங்களில் நிகழ்த்தப்பட்டிருக்கும் சாதி வெறியாட்டம் குறித்து இவர்கள் ஏதாவது கண்டன அறிக்கைகளை வெளியிட்டிருக்கிறார்களா\nஇந்த சினிமாக்காரர்கள் சிலரின் கபட நாடகங்களையும், ஆணாதிக்க மனப்பான்மையும் தெரியாமல் உழைக்கும் வர்க்கமானது மீண்டும் மீண்டும் இவர்களை ஆட்சி அதிகாரத்தில் அமர்த்துகிறது. ஆட்சிக்கு வந்த பின்னர் அவர்கள் பெண் விடுதலை பற்றியும் கவலைப்படுவதில்லை, சமூக விடுதலைப் பற்றியும் கவலைப்படுவதில்லை.\nஆக தேர்தல் அரசியலில் பங்கெடுக்கும் இந்த ஆதிக்க சாதி, இடைநிலை சாதிக் கட்சிகளில் பெண் உரிமை, பெண் விடுதலைச் சிந்தனை இவைகளைச் சரியாகப் புரிந்து கொண்ட தலைமைகள் இருக்கின்றனவா என்பதே இப்போது இந்த நிகழ்வு நம் முன் வைக்கும் மிகப் பெரிய கேள்வி.\nபொதுவாக அரசியல், சாதி, இன உணர்வு, மொழி உணர்வு என்று எல்லாவற்றிலும் ஆதிக்கம் செலுத்தம் நலன் ஆண் நலனே. இங்கு கூடியிருக்கும் தோழர்கள், தலித் அமைப்புகள், புரட்சிகர அமைப்புகள் இந்த ஆணாதிக்க அரசியலை விடுத்து பெண் உரிமையை நிலைநாட்டுவதின் மூலம் சாதி ஒழிப்பை மேற்கொள்வதின் அவசியத்தை உணர்ந்தவர்கள் என்று நம்புகிறேன்.\nபெண் விடுதலையும், சாதி ஒழிப்பும் பின்னிப் பிணைந்தவை – உழைக்கும் மக்களை ஒன்றிணைப்போம், பெண் உரிமைகளைக் காக்கும் அறிவூட்டுவோம்..\nசாதி-வர்க்க-பாலின வேறுபாடுகளைக் களைய ஒன்றுபட்டு போராடுவோம்.\n30.11.2012 அன்று சென்னை மெரியல் ஹால் அருகில் தர்மபுரி தலித் கிராமங்கள் மீதான திட்டமிட்ட காட்டு மிராண்டித் தாக்குதலுக்கு எதிராக சாதி ஆதிக்க எதிர்ப்பு கூட்டியக்கம் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் ஆற்றிய உரை (சறிய திருத்தங்களுடன்).\nநன்றி - சாவின் உதடுகள்\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (18) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1751) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nசென்னை பெண்களுக்குப் பாதுகாப்பான நகரமா\nமனித உரிமை கண்காணிப்பகத்தின் அதிர்ச்சிகர அறிக்கை\nஒரு தலைக் காதலால் சாதியும் சேர்ந்த கொடுரம்,, வித்ய...\nவித்யாவின் கொலையில் இருக்கும் நிஜ பின்னணி...\nபெண்களுக்கெதிரான சாதிய ஒடுக்குமுறை – கொற்றவை, மாசெ...\nஉலகின் எல்லாப் பருவங்களிலும் ஒலிக்கட்டும் எம் பெண்...\nநேர்காணல் - கல் மனிதர்கள் ஆவணப்படத்தை முன்வைத்து க...\nபாமாவின் ‘கருக்கு” – தலித் பெண்ணியப் பார்வை\nஆண்களை உள்ளடக்கிய தீர்வுதான் உண்மையிலேயே சாத்தியம்...\nபட்டுப்போன பட்டு... சில்க் சுமிதா\n – சுசேதா கிருபளானி – (19...\nபாகிஸ்தானில் பாதுகாப்பற்ற கருக்கலைப்பால் நிகழும் ம...\nஓயாத உழைப்பும், மனிதநேயப் பண்பும்\nஇந்திய ரா வும் கமலின் ர்ரா நாடகமும் - புதியமாதவி ம...\nஹிலா திருமணம் என்ற சாபம் - ஏ. ஹெச். ஜாபர் உல்லா\nஈரானில் அதிகரிக்கும் குழந்தை திருமணங்கள் - விவியன்...\nஅதிகரிக்கும் பாலுறவு பலாத்கார குற்றங்களுக்கு தீர்வ...\nதி.பரமேசுவரியின் ஓசை புதையும் வெளியை முன் வைத்து ப...\nபெண்ணெழுத்து: உடலரசியலும் உலக அரசியலும்\nபாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை தீர்வாகுமா\nபார்பி பொம்மைகளும் அழகின் அரசியலும் -பிரளயன்\nதமிழிலக்கியத்தில் ஜே.எம்.சாலி - கமலாதேவி அரவிந்தன்...\nபாம்புகள், கணவன்மார்கள், ஆஷாலொதா மற்றும் நாங்கள் -...\nகருவிலிருந்து கல்லறை வரை பெண்ணுடலை சிதைக்க காத்திர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/chuttivikatan/2016-mar-31/general-knowledge/116963-information-about-madurai-malli.html", "date_download": "2018-04-26T13:14:44Z", "digest": "sha1:5YN257C5MX5IYA6BLBVSCJMQMLFFQ53E", "length": 15533, "nlines": 391, "source_domain": "www.vikatan.com", "title": "மதுரைனா... மல்லிகைதான்! | Information about Madurai Malli - Chutti Vikatan | சுட்டி விகடன் - 2016-03-31", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nமீட் டு த கோர்ட்\nவயலுக்குச் சென்றோம் விவசாயம் படித்தோம்\nதூங்கா நகரில் உளியின் ஓசை\nநாம் வாழ நீரைக் காப்போம்\nசந்தைக்குச் சென்று பாடம் படித்தோம்\nநான் யார், என் இடம் எது\nசின்னக் கோடு பெரிய கோடு\nமதுரைக் குசும்பு தனி ரகம்\nஅஞ்சு நிமிஷத்தில் செஃப் ஆகலாம்\nசந்தோஷம் வருத்தம் எல்லாமே டிரம்ஸ்தான்\nடாப் 10 ஆப்ஸ் 10\nகுறும்புக்காரன் டைரி - 9\nதினமும் கேளுங்கள்... சுட்டித் தமிழ்\nசுட்டி விகடன் - 31 Mar, 2016\nமதுரைக்கு வந்துட்டு மல்லிகைப் பூ பற்றி தெரிஞ்சுக்கலைனா எப்படி இதோ, உங்களுக்காக பூக்கடைப் பக்கம் போய் நாங்க தொடுத்த தகவல்கள்.\nதமிழ்நாட்டில் அதிகமான மல்லிகைப் பூ விளைவது மதுரை மாவட்டத்தில்�\nவிகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP\nநாம் வாழ நீரைக் காப்போம்\nவிகடன் பிரஸ்மீட்: அஜித்திடம் என்ன பிடிக்காது விஜய்யிடம் என்ன பிடிக்கும்\n“இந்த வேலைநிறுத்தம், இந்திய சினிமாவையே கோலிவுட் பக்கம் திருப்ப வெச்சிருக்கு. இதன் மூலமா...\nஜெ. கன்னத்திலிருந்த நான்கு புள்ளிகளும் அவிழாத முடிச்சுகளும்\nமரணத்துக்குப் பிறகு ஜெயலலிதா உடல் ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டபோது, ஜெ. கன்னத்தில் காணப்பட்ட நான்கு புள்ளிகள் குறித்துப் பெரும் சர்ச்சை எழுந்தது. அந்த நான்கு புள்ளிகள் குறித்த மர்ம முடிச்சுகளை அவிழ்ப்பதற்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முயற்சி செய்துள்ளது.\n\"வைகோ, சீமான் மோதல் வேதனை தருகிறது” - கலங்கும் திருமா\nகாவிரிப் பிரச்னை, எஸ.சி, எஸ்.டி வன்கொடுமைத் தடுப்பு சட்டம் ஆகியவற்றுக்கான போராட்டங்களில் மும்முரமாக...\n” - 1 - நாட்டுக்கோழி விருந்து... நள்ளிரவு உபசரிப்பு\nஒரு நிர்மலாதேவி சிக்கிக்கொண்டார். பலர், எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறார்கள். தங்கள் உழைப்பாலும் திறமையாலும் உயரங்களைத் தொடும் பெண்மணிகளுக்கு ராயல் சல்யூட் அடிப்போம். அதேநேரம், குறுக்குவழியில் முன்னுக்கு வர நினைக்கும் பலர் இருப்பதும் ஓர் அவலம்\nதமிழகத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்ட சில மாதங்களில் ‘தமிழகம் முழுவதும் ஆய்வு’ என்று ஆளுநர் கிளம்பியபோதே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kavishan.blogspot.com/2012/02/blog-post_5588.html", "date_download": "2018-04-26T13:07:08Z", "digest": "sha1:I4TSGSUOND4GEK3SONV6RQQSXLUITYBA", "length": 7617, "nlines": 126, "source_domain": "kavishan.blogspot.com", "title": "ஜ.நாவில் சிறீலங்காவுக்கு சாவுமணி அடிக்க சர்வதேசம் தயார்.அடைக்கலம் தேடி ஆபிரிக்காவுக்கு மீண்டும் ஓடும் பிரீஸ் ~ ஈழம் செய்திகள்", "raw_content": "\nஜ.நாவில் சிறீலங்காவுக்கு சாவுமணி அடிக்க சர்வதேசம் தயார்.அடைக்கலம் தேடி ஆபிரிக்காவுக்கு மீண்டும் ஓடும் பிரீஸ்\nநாளை ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 19ஆவது கூட்டத்தொடரின் போது சிறீலங்காவுக்கு எதிரான தீர்மானங்கள் நிறைவெற்றப்படலாம் என்ற அச்சத்தில் சிறீலங்கா அரசு கதிகலங்கி நிற்கிறது.\nஇலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்பட உள்ளதாகக் கூறப்படும் தீர்மானத்தை 25 முதல் 30 நாடுகள் ஆதரிக்கும் சாத்தியங்கள் இருக்கின்றன என்று ஜெனிவாத் தகவல்கள் தெரிவித்துள்ள நிலையில் ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைகள் அமர்வை பிரதிநிதித்துவப்படுத்தும் 4 ஆபிரிக்க நாடுகளுடன் கலந்துரையாடி சிறீலங்காவுக்கு அவர்களை ஆதரவு தரும் படி கோருவதற்காக மீண்டும் சிறீலங்காவின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் ஜெனிவாவிலிருந்து இன்று பயணமாகியுள்ளார்.\nநீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.\nஇலங்கையின் ஏழாவது ஜனாதிபதி (1)\nஉலகத் தமிழர் பேரவை (1)\nசிறீலங்காவின் 7வது நாடாளுமன்ற தேர்தல் (12)\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (6)\nதலைமைச் செயலகம் தமிழீழம் (5)\nநாடு கடந்த அரசாங்கத் தேர்தல் (6)\nநாடு கடந்த அரசாங்கம் (57)\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கம் (1)\nநான் சாகலாம் நாங்கள் சாகக் கூடாது (11)\nபோர்குற்ற நாள் 2009 மே (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://paattumix.blogspot.com/2010/09/blog-post_21.html", "date_download": "2018-04-26T13:02:07Z", "digest": "sha1:6U3MKVPW6JKDDVIWUSS6P6C326OKBE2S", "length": 7052, "nlines": 214, "source_domain": "paattumix.blogspot.com", "title": "Music Mix: நான் ஒரு குழந்தை நீ ஒரு குழந்தை", "raw_content": "\nநான் ஒரு குழந்தை நீ ஒரு குழந்தை\nஇசை : எம் எஸ் வி\nநேற்றொரு தோற்றம் இன்றொரு மாற்றம்\nதொடங்கிய பாதையில் தொடர்ந்து வராமல்\nநான் ஒரு குழந்தை -\nயார் வர சொன்னார் காட்டுக்குள்ளே\nஓடிய கால்களை ஓட விடாமல்\nயார் தடுத்தார்கள் உன்னை வீட்டுக்குள்ளே\nஆவி துடித்தது நானும் அழைத்தேன்\nநீயும் வந்தாய் என் பாட்டுக்குள்ளே\nநான் ஒரு குழந்தை -\nஉன்னருகில் வருகையில் உள்ளே ஓர் பரவசம்\nஉசிலம்பட்டி பெண்குட்டி முத்துப் பேச்சு\nஅம்மம்மா சரணம் சரணம் உன் பாதங்கள் ..\nஒன்னம் கிளி பொன்னாங் கிளி - கிளிசுந்தன் மாம்பழம்\nபாட்டும் நானே பாவமும் நானே\nஒரு நாள் போதுமா இன்றொரு நாள் போதுமா\nநான் ஒரு குழந்தை நீ ஒரு குழந்தை\nகுழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று\nகுறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை..\nபொன்னாரம் பூவாரம் கண்ணோரம் சிருங்காரம்\nசிந்து நதிக்கரை ஓரம் அந்தி நேரம்\nசோலை புஷ்பங்களே.. என் சோகம் சொல்லுங்களே\nஎன்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பேரும் என்னடி\nஏ ஐய்யாசாமி அட நீ ஆளக்காமி\nபொங்கலு பொங்கலு வெக்க மஞ்சள மஞ்சள எடு\nபச்ச மலைப் பூவு நீ உச்சி மலைத் தேனு\nகண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி\nநாத வினோதங்கள் நடன சந்தோஷங்கள்\nவெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே\nஉன்னிடம் மயங்குகிறேன் உள்ளத்தால் நெருங்குகிறேன்\nபூவே செம்பூவே உன் வாசம் வரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://puttalamtoday.com/%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2018-04-26T13:34:07Z", "digest": "sha1:VNGLXGYCLOMOZYA6U5GHNTEFK5KJWBFO", "length": 7121, "nlines": 51, "source_domain": "puttalamtoday.com", "title": "கீதா வீட்டுக்கு : கீதா குமாரசிங்க எம்.பி.யாக பதவி வகிக்க முடியாது !! ஹை கோர்ட் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்தது – PuttalamToday", "raw_content": "\nகீதா வீட்டுக்கு : கீதா குமாரசிங்க எம்.பி.யாக பதவி வகிக்க முடியாது ஹை கோர்ட் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்தது\nகீதா குமாரசிங்க இலங்கைப் பாராளுமன்றத்தில் உறுப்பினராக இருக்கத் தகுதியுடையவர் அல்ல என, மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை, உயர்நீதிமன்றம் உறுதிசெய்துள்ளது.\nஇன்று குறித்த மனு பிரதம நீதியரசர் தலைமையிலான ஐவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.\nஇரட்டைக் குடியுறிமை இருப்பதால், கீதா குமாரசிங்கவுக்கு, இலங்கை பாராளுமன்றத்தில் உறுப்பினராக இருக்க முடியாது என, கடந்த மே மாதம் மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.\nஇதனையடுத்து, இந்த தீர்ப்பை எதிர்த்து கீதா உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.\nஇந்தநிலையில், இரட்டைக் குடியுறிமையுடன் கீதா இலங்கை பாராளுமன்றத்தில் உறுப்பினராக இருக்க முடியாது என, உயர்நீதிமன்றமும் தனது தீர்பில் குறிப்பிட்டுள்ளது.\nB.M.S. college சாரம் திருவிழா: பெலூன் டான்ஸ் ஆடிக் கலக்கிய முஸ்லிம் யுவதிகள்- எல்லை மீறுகிறார்களா..\nBreaking : சவூதி மன்னரை கவிழ்க்க முயற்சி.. அரண்மை அருகே கடும் துப்பாக்கி சூடு – பங்கருக்குள் கொண்டு செல்லப்பட்டார் சல்மான் posted on April 22, 2018\nசவூதியின் கொடூர செயலால் உலகமே அதிர்ச்சியில் \nBreaking : 12 வயதுக்கு உள்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு தூக்குத் தண்டனை மோடியின் அமைச்சரவை அவசர சட்டம் பிறப்பிப்பு posted on April 21, 2018\nBreaking :கண்டி கலவரங்களை வழி நடத்திய போலிஸ் இன்ஸ்பெக்டர், சார்ஜென்ட் மேஜர் கைது செய்யப்படவுள்ளார்கள் posted on April 21, 2018\nதலைமைப் பற்றி தீர்மானிக்கும் ஐக்கியத் தேசியக் கட்சியின் முக்கியக் கூட்டம் இன்று \nகண்டிக் கலவரத்தை முன்னின்று நடத்திய இரு பிரதேச சபை உறுப்பினர்கள் தொடர்ந்தும் தேடப்படுகிறார்கள்..\nபச்சை கறிவேப்பிலை சாப்பிடுவதன் மூலம் கொலஸ்ட்ரோலை கட்டுக்குள் வைக்கலாம் இதய சத்திர சிகிச்சை நிபுணர் Dr.இலாஹி\nநகர, பிரதேச சபை சேர்மன்களின் ஆட்டம் எல்லாம் 2 வருடங்களுக்கு மட்டுமே.. அதன் பிறகு உறுப்பினர்களின் காலில் விழுந்தாக வேண்டும்\nமுன்னாள் நேவி தளபதி சந்தன பிரசாத் தப்பிச் செல்ல பாதுகாப்புச் சபை பிரதானி ரவீந்திர விஜேகுணவர்தன 5 லட்சம் கொடுத்தார்.. C.I.D. பொஸ் சான் குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/it-raid-for-jayalalithaa-treatment-video-117111400023_1.html", "date_download": "2018-04-26T13:42:13Z", "digest": "sha1:XV7ZKVSXYNX6OP6ABVTGV5QE2BA2QXGV", "length": 12257, "nlines": 162, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஜெயலலிதா சிகிச்சை வீடியோவை ஐடி ரெய்டில் தேடிய அதிகாரிகள்? | Webdunia Tamil", "raw_content": "\nவியாழன், 26 ஏப்ரல் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஜெயலலிதா சிகிச்சை வீடியோவை ஐடி ரெய்டில் தேடிய அதிகாரிகள்\nஜெயலலிதா சிகிச்சை வீடியோவை ஐடி ரெய்டில் தேடிய அதிகாரிகள்\nதமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது சிகிச்சை பெற்ற வீடியோ தங்களிடம் இருப்பதாகவும், ஜெயலலிதா சசிகலாவிடம் பேசும் அந்த வீடியோவை வெளியிட்டால் சிலருடைய முகத்திரை கிழியும் எனவும் திவாகரனின் மகன் ஜெயானந்த் கூறியிருந்தார்.\nஇந்த வீடியோவை கைப்பற்றத்தான் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டதாக திவாகரன் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இந்நிலையில் சுஜய் என்ற இளஞன் அளித்துள்ள பேட்டி இதனை உறுதிப்படுத்தும் விதமாக உள்ளது.\nசசிகலாவின் தம்பி திவாகரனின் வீட்டிற்கு சுஜய் என்ற இளைஞன் அடிக்கடி வந்து செல்வான். இதனால் சுஜய் வீட்டையும் வருமான வரித்துறையினர் விட்டுவைக்காமல் ஆய்வு செய்தனர். அதன் பின்னர் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை கூறித்து சுஜய் பேட்டியளித்துள்ளார்.\nஅதில், நீங்க என்ன வேலை செய்றீங்க, உங்கள் வருமானம் என்ன என்று கேட்டார்கள். பாஸ் வீட்ல வேலை செய்றேன், ரியல் எஸ்டேட் செய்றேன்னு சொன்னேன். ஒவ்வொரு இடமா தேடினாங்க எதுவும் கிடைக்கலை. கடைசியா உங்களிடம் திவாகரன் தரப்பு கொடுத்துள்ள சிடி, பென்டிரைவ், லேப்டாப் எங்கே என கேட்டாங்க. என்னிடம் எதுவும் தரலன்னு சொன்னேன் என சுஜய் தெரிவித்துள்ளார்.\nஇதனையடுத்து ஜெயலலிதா வமருத்துவமனையில இருக்கிற வீடியோவை வெளியிடுவோம்னு ஜெயானந்த் சொன்னதை வைத்து அந்த வீடியோ ஆதாரம் எங்கே என தேடுறாங்க போல திவாகரன் தரப்பு சந்தேகிக்கிறது.\nதமிழகத்தில் கனமழை - வானிலை மையம் அறிவிப்பு\nரெய்டில் சிக்கிய விவேக் - தினகரன் ஹேப்பி அன்ணாச்சி\nசென்னையில் மீண்டும் மழை - பொதுமக்கள் அவதி\nதினகரனை கைது செய்ய வேண்டும்; சசிகலாவை வெளியே கொண்டு வர வேண்டும்: ஈவிகேஎஸ் இளங்கோவன் அதிரடி\nரெய்டுகளால் பரபரத்துக்கிடக்கும் தமிழகம்: தூக்கி வீசப்பட்ட 2000 ரூபாய் கட்டுகள்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.manithan.com/othercountries/04/157403?ref=ls_d_manithan", "date_download": "2018-04-26T13:42:28Z", "digest": "sha1:YPFX3L7CDXMV343Q5LRNNDFZP3PRTGWV", "length": 12420, "nlines": 157, "source_domain": "www.manithan.com", "title": "திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த தந்தை...மகன் எடுத்த பயங்கர முடிவு - Manithan", "raw_content": "\nவெட்டப்பட்ட மனைவியின் தலையுடன் தெருவில் நடந்து சென்ற கணவன்: அதிர வைக்கும் சம்பவம்\nஇளவரசர் ஹரியின் திருமணத்தில் மணப்பெண் தோழியாகும் உலக அழகி\nஜெயலலிதா வழக்கில் திடீர் திருப்பம்\nஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுலா செல்ல வேண்டுமா விரைவில் வரவிருக்கும் புதிய சட்டம்\nஅஜித்தின் மனைவி ஷாலினியின் பகையாளி யார் தெரியுமா\n பல ஆண்டுகளுக்கு பின் பாத்திமா பாபு விளக்கம்\nஇத்தனை வயதில் பிரபல நடிகை கௌசல்யாவுக்கு கல்யாணமாம்\nசர்வதேச இளம் இளம் விஞ்ஞானிகளுக்கான போட்டியில் இலங்கை 3 தங்கப்பதக்கம்\nமரணத்தின் பிடியிலிருந்து அஜீத்தை மீட்டெடுத்த ஷாலினி கசந்து போன வாழ்வில் உயிர்த்தெழுந்த காதல்\nசிவகார்த்திகேயனால் தொகுப்பாளினி பாவனா அனுபவித்த கொடுமை\nபிள்ளைகள், பெற்றோர்களை கொடூரமாக கொலை செய்த பெண் காரணத்தை கேட்டால் அதிர்ந்து போயிடுவிங்க\nஇந்த 3 ராசியில உங்க ராசி இருக்குதா.. இந்த ஆண்டில் கோடீஸ்வர யோகம் இதற்குத் தானாம்\nமனைவியை நண்பர்களுடன் உறவு வைக்க கட்டாயப்படுத்திய கணவன் - இறுதியில் நடந்ததை பாருங்கள்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\n31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்\nயாழ். சரசாலை, கனடா Toronto\nதிருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த தந்தை...மகன் எடுத்த பயங்கர முடிவு\nதிருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த தந்தையை கார் குண்டு மூலம் கொல்ல முயன்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வாலிபருக்கு சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.\nஇந்திய வம்சாவளியைச் சேர்ந்த குர்ஜித் சிங் ரந்தாவா என்ற வாலிபர் தனது தந்தையுடன் லண்டனில் வசித்து வந்தார். இவர் லண்டனைச் சேர்ந்த பெண்ணை காதலித்து வந்தார். இவர்களின் திருமணத்திற்கு குர்ஜித்தின் தந்தை மறுப்பு தெரிவித்தார்.\nஇதனால் கோபமடைந்த குர்ஜித் தனது தந்தையை கொல்ல முடிவு செய்தார்.\nஅதற்காக கார் வெடிகுண்டை ஆன்லைனில் ஆர்டர் செய்தார். இது குறித்த தகவல் வந்ததும் லண்டனின் தேசிய குற்றப்பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் வெடிகுண்டிற்கு பதிலாக போலியை மாற்றி வைத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.\nஇதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குர்ஜித்தை கைது செய்தனர். இந்நிலையில், அவருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உயிர்ச்சேதம் ஏற்படாவிட்டாலும் வெடிகுண்டு வைக்க முயன்றது குற்றமாகும்.\nஆனால் அவர் எவ்வித தீவிரவாத அமைப்பையும் சார்ந்தவர் அல்ல. மேலும், அவர் லிவர்ஃபுல் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயில நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.\nஉடல் எடையை மிக வேகமாக குறைக்க இந்த ஒரு பொருள் போதும்\nசோகத்தில் இருந்த நடிகர் வடிவேலுவிற்கு அடுத்தடுத்து அடித்த அதிஷ்டம்\nமனைவியை நண்பர்களுடன் உறவு வைக்க கட்டாயப்படுத்திய கணவன் - இறுதியில் நடந்ததை பாருங்கள்\nஐ.தே.க. செயற்குழு கூட்டத்தில் சிக்கல்\nசட்ட விரோதமாக மண் அகழும் இடங்களைப் பார்வையிட்டார் மன்னார் நகர முதல்வர்\nமத்திய வங்கியின் அறிக்கை நிதியமைச்சரிடம் கையளிப்பு\nதொழிலாளர் தினத்தை மே முதலாம் திகதி கொண்டாடவுள்ளது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு\nபள்ளிமுனை கடற்கரையில் உள்ள மீன் வாடிகளில் இருந்து கைப்பற்றப்பட்ட ஒரு தொகை மீன்கள்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா் விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tnpsclink.in/2017/06/tnpsc-current-affairs-quiz-no-105-tamil-test.html", "date_download": "2018-04-26T13:01:49Z", "digest": "sha1:I7UCLNQLQEEJGADKVWQRZ2GNK6CQSTC7", "length": 6026, "nlines": 118, "source_domain": "www.tnpsclink.in", "title": "Tnpsc Current Affairs Quiz No. 105 Tamil (International Affairs) - Test Yourself", "raw_content": "\n2017 மே மாதம் G7 அமைப்பு நாடுகளின் கூட்டம், எந்த நாட்டில் நடைபெற்றது\nஇந்தியா-பசிபிக் தீவுகளின் நீடித்த அபிவிருத்தி மாநாடு 2017 மாநாடு (25-26 மே, 2017) எந்த நாட்டில் நடைபெற்றது\nசூரிய மண்டலத்தின் மிகப்பெரிய கோள் (கிரகம்) எது\nஉலக பொருளாதார மன்றம் (WEF-World Economic Forum) வெளியிட்ட, 2017 உலகின் மிகவும் \"மக்கள் தொகை அடர்த்தியான நகரங்கள்\" பட்டியலில் முதலிடம் பெற்ற நகரம் எது\n2017 உலகின் மிகவும் மக்கள் தொகை அடர்த்தியான நகரங்கள் பட்டியலில், மும்பை நகரம் பெற்ற இடம் எது\n2017 உலக அளவிலான முன்னணி சுற்றுலா தலங்களின் பட்டியலில் முதலிடம் பெற்ற சுற்றுலா தலம் எது\n2017 உலக அளவிலான முன்னணி சுற்றுலா தலங்களின் பட்டியலில் இந்தியாவின் \"தாஜ்மகால்\" பெற்ற இடம் எது\nSIMBEX 2017 என்ற கூட்டுக் கடற்படை கூட்டுப் பயிற்சியில், இந்தியாவுடன் இணைந்து பயிற்சி மேற்கொண்ட நாடு எது\nஇந்தியா, இலங்கையில் கேரவலபிடியா எனும் இடத்தில் திரவ இயற்கை எரிவாயு (LNG) இறக்குமதி முனையத்தை எந்த நாட்டுடன் இணைந்து அமைக்கவுள்ளது\nஆசிய நாடுகளில் முதன் முறையாக, \"ஒரே பாலினத்தவர்கள் திருமணம் செய்ய\" அனுமதி அளித்துள்ள நாடு எது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "http://www.vakeesam.com/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA.html", "date_download": "2018-04-26T13:04:13Z", "digest": "sha1:B5BYLQ2OAZSA2SGI3627B7UPIPIKDQMG", "length": 5578, "nlines": 72, "source_domain": "www.vakeesam.com", "title": "சந்தைக்குச் சென்றவர் விபத்தில் மரணம் – சாவகச்சேரியில் இன்று காலை சம்பவம் – Vakeesam", "raw_content": "\nஹட்டனில் நில அதிர்வு – 05 வீடுகள் சேதம்\nதந்தை செல்வா நினைவுதினம் அனுஷ்டிப்பு\nஜ.தே.க முக்கிய பதவிகளில் மாற்றம் – பொதுச் செயலாளராக அகில விராஜ் காரியவசம்\n203 பட்டதாரிகள் நேர்முகத் தேர்விற்குத் தோற்றவில்லை \nயாழ் போதனா வைத்தியசாலையில் கழிவு வாய்க்கால்மேல் கன்ரீன் – மக்கள் விசனம்\nசந்தைக்குச் சென்றவர் விபத்தில் மரணம் – சாவகச்சேரியில் இன்று காலை சம்பவம்\nin செய்திகள், முக்கிய செய்திகள் August 19, 2017\nவீட்டில் பறித்த தேங்காயை விற்பனை செய்வதற்கு சந்தைக்குக் கொண்டு சென்றவர் டிப்பருடன் மோதுண்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து இன்று காலை சாவகச்சேரி நீதிமன்றத்துக்கு முன்னால் நடந்தது. சைக்கிளில் தேங்காய் மூடையைக் கட்டிக் கொண்டு சாவகச்சேரி பொதுச் சந்தைக்குச் சென்றவரை, எதிரே வந்த டிப்பர் வாகனம் மோதித் தள்ளியது எனத் தெரிவிக்கப்பட்டது.\nஇந்த விபத்தில் தோப்பு ஒழுங்கை மட்டுவில் பகுதியைச் சேர்ந்த சிவராஜா( வயது 50) என்பவரே உயிரிழந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டது. டிப்பர் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டார். மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nஹட்டனில் நில அதிர்வு – 05 வீடுகள் சேதம்\nதந்தை செல்வா நினைவுதினம் அனுஷ்டிப்பு\nஜ.தே.க முக்கிய பதவிகளில் மாற்றம் – பொதுச் செயலாளராக அகில விராஜ் காரியவசம்\nஹட்டனில் நில அதிர்வு – 05 வீடுகள் சேதம்\nதந்தை செல்வா நினைவுதினம் அனுஷ்டிப்பு\nஜ.தே.க முக்கிய பதவிகளில் மாற்றம் – பொதுச் செயலாளராக அகில விராஜ் காரியவசம்\n203 பட்டதாரிகள் நேர்முகத் தேர்விற்குத் தோற்றவில்லை \nயாழ் போதனா வைத்தியசாலையில் கழிவு வாய்க்கால்மேல் கன்ரீன் – மக்கள் விசனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://adiraipirai.in/img-20180218-wa00331702611237-jpg", "date_download": "2018-04-26T13:33:50Z", "digest": "sha1:L3A7RHACOBDJOCURPNK4CIEYEN2HJHSV", "length": 4000, "nlines": 111, "source_domain": "adiraipirai.in", "title": "img-20180218-wa00331702611237.jpg - Adiraipirai.in", "raw_content": "\nஅதிரையில், சாம்பலான பிறகு சாவகாசமாக வந்த தீயணைப்பு வாகனம்\nமரண அறிவிப்பு – நடுத்தெரு ஹாஜி ஷிஹாபுத்தீன் (வயது 74)\nஅதிரை ரஹ்மானிய்யா மதரஸாவில் இன்று பட்டமளிப்பு விழா\nBREAKING NEWS: அதிரை கடைத்தெருவில் பயங்கர தீ விபத்து\nநோய் பரப்புவதில் நாங்கள் கெட்டிகாரர்கள் – பேரூராட்சி\nமரண அறிவிப்பு – தட்டார தெருவை சேர்ந்த S.M.S.அப்துல் ரவூப்\nசவூதி ரியாத்தில் கொட்டித்தீர்த்த கனமழை\nதஞ்சையில் தினகரனுடன் போராட்டக்களத்தில் பங்கேற்ற அதிரை அமமுக வினர்\nகவலையில் இருக்கும் ஏர்செல் வாடிக்கையாளர்களுக்கு ஆறுதலான செய்தி\nதொடர்ந்து விடுதலையாகும் பாஜக, ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகள்… அதிரவைக்கும் தகவல்\nகல்வி & வேலை வாய்ப்பு\nஅதிரையில், சாம்பலான பிறகு சாவகாசமாக வந்த தீயணைப்பு வாகனம்\n#BREAKING_NEWS: அதிரை கடைத்தெருவில் பயங்கர தீ விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://seithupaarungal.com/2014/09/27/%E0%AE%9C%E0%AF%86-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2018-04-26T13:04:56Z", "digest": "sha1:W3S4JCG3OOCCAVJDDBCW6IN4FMWLVS22", "length": 12782, "nlines": 114, "source_domain": "seithupaarungal.com", "title": "ஜெ. மீதான சொத்து குவிப்பு வழக்கு இதுவரை நடந்தது என்ன? ஒரு தொகுப்பு – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nஅரசியல், இன்றைய முதன்மை செய்திகள், தமிழ்நாடு\nஜெ. மீதான சொத்து குவிப்பு வழக்கு இதுவரை நடந்தது என்ன\nசெப்ரெம்பர் 27, 2014 த டைம்ஸ் தமிழ்\nகடந்த 1991 முதல் 1996-ஆம் ஆண்டு வரை தமிழகத்தின் முதல்வராக ஜெயலலிதா பதவி வகித்த போது, வருமானத்துக்குப் பொருந்தாத வகையில் ரூ. 66.56 கோடி அளவுக்கு சொத்துகள் சேர்த்ததாக 1996, ஜூன் 14-ஆம் தேதி சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீது சுப்ரமணியம் சுவாமி வழக்குத் தொடுத்தார்.\nஇதனிடையே, 2001-இல் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று, ஜெயலலிதா முதல்வரானார். இந்த நிலையில், ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் விசாரணையை கர்நாடகத்துக்கு மாற்ற வேண்டும் என திமுக பொதுச் செயலர் அன்பழகன் அளித்த மனுவை ஏற்று, சொத்துக் குவிப்பு வழக்கை கர்நாடகத்துக்கு மாற்றி கடந்த 2003, நவ.18-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஅதன்படி, பெங்களூருவில் உள்ள மாநகர சிட்டி சிவில் நீதிமன்ற வளாகத்தில் சிறப்பு நீதிமன்றத்தை அமைத்து இந்த வழக்கை விசாரிக்க கர்நாடக அரசு ஏற்பாடு செய்தது. இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணை கடந்த 2004, பிப்.14-ஆம் தேதி தொடங்கியது. இதுவரை 252 அரசுத் தரப்பு சாட்சிகளிடமும், 99 எதிர்தரப்பு சாட்சிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.\nஇந்த வழக்கை நீதிபதிகள் ஏ.எஸ்.பச்சாபுரே, மனோலி, கிருஷ்ணப்பா, ஆன்ட்ரிக்ஸ், டி.எம்.மல்லிகார்ஜுனையா, சோமராஜு, பாலகிருஷ்ணா, முடிகெளடர் ஆகியோர் விசாரணை நடத்தினர். இவர்களைத் தொடர்ந்து நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா இந்த வழக்கை விசாரித்து வந்தார். குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 313-இன் கீழ், ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளன.\nகடந்த ஆகஸ்ட் 27-ஆம் தேதியுடன் வாதங்கள் நிறைவடைந்தன. அரசுத் தரப்பு வழக்குரைஞரான பவானி சிங் 17 நாள்கள் தனது வாதத்தை முன்வைத்தார். ஜெயலலிதா தரப்பில் வழக்குரைஞர் பி.குமார், தனது தரப்பு வாதங்களை 25 நாள்கள் பதிவு செய்தார். இருதரப்பு வாதங்கள் முடிவடைந்துள்ள நிலையில் சனிக்கிழமை (செப்.27) தீர்ப்பு வழங்கப்படுகிறது.\nதமிழக முதல்வர் ஜெயலலிதா நீதிமன்றத்தில் ஆஜராவதால், பாதுகாப்பு காரணங்களுக்காக நீதிமன்றம் பெங்களூரு பரப்பன அக்ரஹாராவில் உள்ள மத்திய சிறை வளாகத்தில் அமைந்துள்ள காந்தி பவனுக்கு மாற்றப்பட்டுள்ளது. அங்கு முற்பகல் 11 மணிக்கு நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா, இந்த வழக்கின் தீர்ப்பை வெளியிடுகிறார். 18 ஆண்டுகள் வரை இந்த வழக்கு சென்னை மற்றும் பெங்களூருவில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றங்களில் நடைபெற்றது\nதமிழக முதல்வர் ஜெயலலிதா நீதிமன்றத்தில் ஆஜராவதையொட்டி, பரப்பன அக்ரஹாரா மத்திய சிறை வளாகத்தை சுற்றிலும் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுப்பதற்காக பாதுகாப்புப் பணியில் 5 ஆயிரம் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுதவிர ஆயுதப் படை, அதிரடிப் படையைச் சேர்ந்த ஆயிரம் பேரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். சிறை வளாகம் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.\nகுறிச்சொல்லிடப்பட்டது அரசியல், இன்றைய முதன்மை செய்திகள், இளவரசி, சசிகலா, சுதாகரன், ஜெ. மீதான சொத்து குவிப்பு வழக்கு, ஜெயலலிதா, தமிழ்நாடு, திமுக பொதுச் செயலர் அன்பழகன், நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா, பரப்பன அக்ரஹாரா\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postமங்கள்யான் எடுத்த முதல் புகைப்படம் வெளியீடு\nNext postஜெயலலிதவுக்கு 4 ஆண்டுகள் சிறை, ரூ. 100 கோடி அபராதம்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nநீங்களே செய்யலாம் ஃப்ரூட் ஃபலூடா\nபிஸ்தா ஐஸ்கிரீம் செய்வது எப்படி\nகருப்பட்டி கம்பு சேமியா எப்படி செய்வது\nஸ்டாக்கிங் பூக்கள் செய்வது எப்படி\nமணி வளையல் செய்வது எப்படி\nஎம்பிராய்டரி: பிரஞ்ச் நாட்’இல் சூரிய பூக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sinthanaimalar.blogspot.com/", "date_download": "2018-04-26T13:26:21Z", "digest": "sha1:KVEACBZLMNR65J7IJEOHXRBDEKGVWGHW", "length": 10967, "nlines": 186, "source_domain": "sinthanaimalar.blogspot.com", "title": "சிந்தனை துளிகள்!!!", "raw_content": "\nஉதிர்த்து போகும் என்று தெரிந்தே\nநித்தமும் மலர்கிறேன் உன் நினைவால் \nஎன் தாய்மொழியும் உன் முன் மன்றாடி நின்றது\nஉன் அழகை வர்ணிக்க வார்த்தைகள் கிட்டாமல் ...\nதனிமையின் ஆழத்தை உணர்ந்துகொண்டேன் உன் மௌனத்தில் ..\nநேசிக்கும் இதயத்தை தண்டிக்கும் ஓர் மொழி ....\nதனிமையை உணரும் என் இதயத்திற்கு ...\nஅதை உணர்த்திட வார்த்தைகள் கிடைக்கவில்லை ..\nஉன் அருகில் அமர்நது உன்முகம் பார்த்துக்கொண்டிருந்தால் போதும்\nஎன் துயரங்கள் அனைத்தும் தொலைந்தே போகும் ...\nஎன் கண்ணீர்த்துளிகளால் எழுதிய கவிதை இது ....\nமனிதனுக்கு புவியறையை விட ....\nகருவறையும் கல்லறையுமே நிசப்தம் ....\nசங்கடங்கள் பல வந்தாலும் சளைக்காமல் நான் ஏற்பேன் சாய்ந்துகொள்ள உன் தோள் இருந்தால் ... கஷ்டங்கள் பல கண்டாலும் கலங்காமல் நான் இருப்...\nஉதிர்த்து போகும் என்று தெரிந்தே நித்தமும் மலர்கிறேன் உன் நினைவால் \nமனிதனுக்கு புவியறையை விட .... கருவறையும் கல்லறையுமே நிசப்தம் ....\nஉண்மையான அன்புக்கு மட்டுமே உன் கண்ணீர் துளிகள் தெரியும் ... நீ மழையில் நினைந்து கொண்டே அழுதாலும் கூட ...\nதனிமையின் ஆழத்தை உணர்ந்துகொண்டேன் உன் மௌனத்தில் ..\nஎன் கண்ணீர்த்துளிகளால் எழுதிய கவிதை இது .... படித்தால் புரியாது ... உணர்ந்துகொள் ...\nநேசிக்கும் இதயத்தை தண்டிக்கும் ஓர் மொழி .... - மௌனம்\nஉறவுகளை விட உணர்வுகளை மதியுங்கள் ... உறவுகள் உங்களை விட்டு போகலாம் ஆனால் உணர்வுகள் உங்களுடனே இருக்கும் ......\nமலர வேண்டிய பூக்களுக்கு மரணமே பரிசாக பூக்களுக்கு தண்ணீர் ஊற்றி பார்த்த காலங்கள் கடந்துவிட்டது அகிம்சம் வளர்த்த பூமியில் அமிலங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} {"url": "http://vembanattukkaayal.blogspot.com/2010/11/blog-post.html", "date_download": "2018-04-26T12:53:41Z", "digest": "sha1:LAVEADUKTOTTQS6R6YK72GRXISQBOF4K", "length": 38615, "nlines": 164, "source_domain": "vembanattukkaayal.blogspot.com", "title": "vembanattu-k-kaayal: ரங்கா சேட்", "raw_content": "\nரொம்ப நாளைக்கு அப்புறம் ப்ளாகை தொடர முடிவு செய்தேன் - க்ஷணப் பித்தம். வெப்சைட் ஒரு பக்கம் இருக்கட்டும், இது இன்னொரு பக்கம் இருக்கட்டுமே.. இந்த ஆண்டு 2010 கல்கி தீபாவளி மலரில் வெளிவந்த என் சிறுகதையோடு\n‘இதென்னடா நாய் வண்டி மாதிரி இருக்கு\nபஸ்ஸில் ஏறினதும் ரங்கா சேட் கேட்டார்.\nமகா தப்பு. அவர் சேட் இல்லை. தமிழ்தான். அப்புறம், அவராக பஸ்ஸில் ஏறவில்லை. திடகாத்திரமான நாலு இளவயசுப் பிள்ளைகள் பித்தளை கூஜா, கான்வாஸ் பை சகிதம் அவரை அலாக்காகத் தூக்கி பஸ் உள்ளே போட்டார்கள்.\n‘எதுக்கு மாமா கூஜாவும் மண்ணாங்கட்டியும்\nமுந்திரிக்காய் கூஜா மூடி லூசாகி வென்னீர் காலில் சிந்தின அவஸ்தையைப் பொறுக்க முடியாமல் நந்து கேட்டான். ஆறே கால் அடி ஜாம்பவான். நித்தியப்படிக்கு நாலு சிகரெட் ஒளிந்து நின்று ஊதித் தள்ளுகிறதைத் தவிர ஒரு கெட்ட பழக்கம் கிடையாது. முதலாவது விடிகாலை கொல்லைக்குப் போக, அடுத்த மூணும் அந்தந்த வேளை ஆகாரம் முடிந்த அப்புறம்.\nரங்கா சேட்டின் ஒரே தங்கை நாச்சியார் கிழங்கு கிழங்காக நாலு பிள்ளைகளைப் பெற்று நல்லெண்ணெய் முழுக்காட்டி வளர்த்து நிறுத்தி வைத்திருக்கிறாள். பக்தவத்சலம் முதலமைச்சராக இருந்த நேரத்தில் அவளுக்குக் கல்யாணம் செய்தபோது சீராகக் கொடுத்த கிழங்கு மாதிரியான முந்திரிக்காய் கூஜாவை மட்டும் இத்தனை வருஷம் போனபிறகு கழித்துக் கட்டிவிட்டாள்.\n‘இதை எடுத்துண்டு போய் புழங்கிக்கோடா அண்ணா’\nநாச்சியார் களிம்பேறிய அந்தக் கூஜாவை காலையில் விசேஷம் எல்லாம் முடிந்ததும் ரங்கா சேட்டிடம் கொடுத்தாள். நேற்று சாயந்திரம் தேங்காய் நாரை வைத்து தேய்க்கிறேன் என்று பெயர் பண்ணி முனிசிபல் குழாய்த் தண்ணீரில் அலம்பி, சுத்த ஜலம் என்று கொதிக்கக் கொதிக்க ஊற்றி வேறே கொடுத்தாள்.\nமுந்திரிக்காய் கூஜாவை எப்படிப் புழங்குவது என்று சேட்டுக்குப் புரியவில்லை. உசிர் இருக்கப்பட்ட மனுஷ ஜீவன் என்றாலும் வர, போக, பார்க்க, நாலு வார்த்தை பிரியமாகப் பேச, தலைவலி, கைகால் குடைச்சல் வந்தால் அலுப்பு மருந்து வாங்கி வந்து கொடுத்து, ‘நாளைக்கு சரியாப் போயிடும். ரஸ்க் சாப்பிட்டுத் தூங்கு’ என்று ஆறுதல் சொல்லிவிட்டு வர என்று பழக முடியும். கூஜாவோடு எப்படி உறவாட\n“எஞ்ஜாய் மாமா, தூங்கிட்டே சென்னை”. நந்து உற்சாகமாகச் சொன்னான்.\nசேட் திகிலோடு பஸ் உள்ளே பார்த்தார். ரெண்டு வரிசையாகப் படுக்கை. ரயிலில் ஸ்லீப்பர் கம்பார்ட்மெண்டில் ஏறின மாதிரி. ஆனால் இங்கே சுத்தமான பஸ் வாடை, வெளியே அகாலத்தில் பலாச்சுளை விற்கிறவன் குரல், முன்னால் ஸ்டியரிங்கைப் பிடித்து ஆரோகணித்த டிரைவர், மற்றும் கண்டக்டர்.\n“இந்த கூஜாவை வேணும்னா உங்க அம்மா கிட்டேயே பத்திரமா”.\nரங்கா சேட் ஜன்னல் வழியே கூஜாவின் முந்திரித் தலையை மட்டும் நுழைத்து மிச்சம் நுழையாத ஏக்கத்தோடு கேட்டபோது பஸ் நகர்ந்திருந்தது.\nகாக்கி நிஜார் மாட்டிய கண்டக்டர் படுக்கை படுக்கையாக டிக்கெட் விவரம் விசாரித்துக் கொண்டு வந்தான். ரங்கா சேட் எங்கே இருக்கணும்\nஅவர் பவ்யமாக கான்வாஸ் பையைத் திறந்து நாமக்கட்டிக்கும் தலைவலி மாத்திரைக்கும் நடுவே வைத்திருந்த டிக்கட்டை எடுத்து நீட்டினார்.\n‘சேட்டுன்னு போட்டிருக்கே. யாருக்கு எடுத்தது\nபடுபாவி நந்து. ஊரில் பெயர் புழங்குகிற படிக்கே டிக்கட் எடுத்து விட்டான். முந்திரிக்கா கூஜா என்று புழங்கியிருந்தாலோ\nமுந்திரி. அவசரமாக வார்த்தையை முழுங்கியபடி ரங்கநாதன் என்றார்.\n“அப்புறம் ஏன் சேட்டுன்னு வடக்கத்தியாருங்க பேரு”\nபாவ மன்னிப்பு கேட்க வேண்டிய நேரம்.\n“அது ஒண்ணும் இல்லேப்பா. நாள் முழுக்க ஜர்தாபான் வாயிலே அடக்கிண்டே இருப்பேனா, மார்வாடிப் பெயர் வச்சுட்டாங்க சிநேகிதங்க எல்லாரும்”.\nபக்கத்து படுக்கை கொஞ்சம் அசைந்து அதில் பத்து சதவிகிதம் தூக்கத்தில் இருந்தவன் ஒதுங்கிப் படுத்தான். அவன் மேலே ரங்கா சேட் புகையிலை அபிஷேகம் நடத்துவார் என்று தூக்கத்தை மீறின ஜாக்கிரதை உணர்ச்சி.\n“பஸ்ஸுக்குள்ளே ஜர்தா குர்தா எல்லாம் போடக்கூடாதுன்னு சொல்லு கபாலி”\nடிரைவர் இரைந்தது தன்னைப் பற்றித்தான் என்று ரங்கா சேட்டுக்குப் புரிந்தது.\n“நான் ஜர்தா போடறதை விட்டு ஒரு மாமாங்கம் ஆகப் போறது. நீ ஏன் வெட்டியா கவலைப் படறே”.\nஅவர் குரல் எழுவதற்குள் பஸ் ஹாரன் பெரிசாக முழங்கி அதை விழுங்கிவிட்டது.\nரங்கா சேட் நகர முற்பட்ட கண்டக்டரை அவசரமாகக் கையைப் பிடித்து இழுத்து நிறுத்திக் கேட்டார்.\n“அந்தக் கோடி சேட்டு. கடைசிப் படுக்கை. ஏணியிலே ஏறி மேலே போய்ப் படுத்துடு. துப்பிடாதே. சொம்புலே தண்ணி இருந்தா இப்பவே குடிச்சுட்டு”.\n“அதையும் உமிஞ்சிடாதே. கபால்னு முளுங்கிடு”.\nகபாலி அறிவுரை அருளிய ஒளி முகத்தில் வீச ஞானஸ்தனாக முன்னே நடந்தான்.\nகான்வாஸ் பை தோளில் கனக்க, கையில் வென்னீர் கூஜா குலுங்க தேகம் முழுக்க ஆடியபடி ரங்கா சேட் பஸ்ஸின் ஈசான மூலையை நோக்கிப் போனபோது யாரோ விடலைப் பசங்களைப் போல் விசில் அடித்தார்கள்.\nபஸ் கம்பத்தைப் பிடித்தபடி மூச்சு வாங்கத் திரும்பிப் பார்த்தார். பஸ் வீடியோ உயிர் பெற்று பெருஞ்சத்தத்தோடு இயங்க ஆரம்பித்திருந்தது. ஒரு சுந்தரிப் பெண்ணை பரட்டைத் தலைப் பையன் பையப் பதறாமல் கொட்டு முழக்கோடு கேலி செய்து பாடிக் கொண்டு போன பாட்டு.\nஇன்னிக்கு வைகுண்ட ஏகாதசிதான். இந்த இரைச்சலில்.\nஅவர் மனசு சொல்ல அதை அடக்கினார். முதல்லே எங்கே முடங்கறதுன்னு பாரு.\nதனக்குத்தானே உத்தரவிட்டபடி பஸ் கோடிக்கு வந்து விட்டார்.\nஇருட்டில் கீழ் பெர்த். இங்கேயும் பெர்த்னு தான் பெயர் புழங்குகிறதா இல்லை வேறே ஏதாவது டெர்மினாலஜியா\nஏதோ ஒண்ணு. கீழே புளிமூட்டை மாதிரி அடைந்து கிடந்தவன் கொஞ்சம் போல் உட்கார்ந்து எந்த சீட் என்றான்.\nதத்துவார்த்தமாக தான் சொன்னதை தானே ரசித்தார் ஒரு வினாடி.\n“செருப்பை இப்படி கீழே விட்டுட்டு ஏணியைப் பிடிச்சு ஏறுங்க”.\nகீழே பாதி அறுந்து கிடந்த அவனுடைய ரப்பர் ஸ்லிப்பரை பத்திரமாக ஓரத்தில் நகர்த்தி வைத்தான். அப்புறம் என்னமோ தோன்ற அதைத் தலைமாட்டில் வைத்து செய்தித்தாளுக்குள் பொட்டலம் கட்டிப் பத்திரப்படுத்தினான்.\nஉலகத்தை, அறுந்து போன ஸ்லிப்பர் மதிப்புக்குக்கூட அவன் நம்பத் தயாராக இல்லை என்று உறைக்க, சேட் மேலே போகிற வழியை அண்ணாந்து பார்த்தார்.\n“இப்படி மலைச்சுப் போய் நின்னா, ராத்திரி முழுக்க நின்னுக்கிட்டே கிடக்க வேண்டியதுதான். ஏறு சார் சரசரன்னு”.\nபின்னால் கண்டக்டர் குரல். அவன் ரங்கா சேட்டின் தோள்பையைப் பறித்து மேலே வீசினான். கூஜாவைப் பிடுங்கி ஒரு எம்பு எம்பி இருட்டுக் குகைக்குள் வைத்தான். அப்புறம் ரங்கா சேட்டின் இடுப்பில் கைகொடுத்து ஒரு தள்ளு தள்ளி இரும்பு ஏணியில் ஏற்ற, சேட் மேலே சயனப் பொந்தில் அலக்க மலக்க விழுந்தார்.\n“ஏம்ப்பா, இங்கே சௌகரியம் எல்லாம்”.\nஅவர் சரிந்தபடி கேட்டபோது கண்டக்டர் நிமிர்ந்து பார்த்தான்.\n ஏசி போட்டு வைச்சிருக்கு. இப்போ ஜிலுஜிலுன்னு ஆயிடும். ஃபேன் இருக்கு. சைடுலே கையை விட்டுத் துளாவினா சுவிட்ச் கிடைக்கும். பிளேட்லே கையை விட்டுக்காம பத்திரமா சுவிட்ச் போடணும்”.\n“அது இல்லேப்பா வேறே சௌகரியங்கள்”.\n“கம்பளிப் போர்வை இருக்கு. போர்த்திக்கிட்டு தூங்கு. இறங்கும்போது என் கையிலே ஒப்படைச்சுட்டுப் போகணும்.”\n“போர்வை கிடக்கட்டும். பாத்ரூம் சங்கதி”.\n“அதுக்கெல்லாம் இடம் எங்கே இருக்கு வண்டி நிக்கும்போது ஓரமாப் போய்”.\nஅவன் முடிப்பதற்குள் வீடியோ பாட்டு முடிந்து வசனம் ஆரம்பித்திருந்ததால் படுத்தபடி சினிமா பார்க்கிற யாரோ இடைஞ்சலாக இருப்பதாக ஆட்சேபிக்க, அவசரமாக நகர்ந்தான்.\nரங்காசேட் இருட்டுக்குள் பீதியோடு உற்றுப் பார்த்தார். அந்த கூஜா இங்கேதான் புழங்கிக் கொண்டிருக்கிறது. அதற்குள் சுத்த ஜலம். குடித்தால் ஒரு மணி நேரத்தில் பாத்ரூம் போக வேண்டி வரும்.\nபஸ் வேகமாக நகர்கிறது. எப்போ நிற்கும் எதுக்கு நிற்கணும்\nஅவர் தூங்குகிற மாதிரி பாவனை செய்தார். குளிர் அதிகமாக இருந்தது. கம்பளிப் போர்வை என்று சொன்னானே\nதலைமாட்டில் ஹேர் ஆயில் வாசனையும் புளிப்பு மிட்டாய் வாடையுமாகக் கிடந்த பழந்துணிதானா அது\nஅதுதான் போலிருக்கு. உட்கார்ந்து அதை பரிசோதிக்க நினைத்தார்.\n கொஞ்சம் நிமிர்ந்தால் தலை மேல் கூரையில் முட்டுகிறது. கிடப்பதைத் தவிர வழி இல்லை. சென்னை போகிற வரைக்குமா\nதூங்கினால் இதோ வேகமாக விடிந்து சென்னைதான். தூக்கம் எங்கே வருது\nகாலையில் இருந்தே வித்தியாசமாக விடிந்தது சேட்டுக்கு.\nஅசை போட்டபடி கிடக்க, வீடியோவில் யாரோ செத்துப்போய் மூக்கில் பஞ்சு அடைத்து எடுத்துப் போனது பாதியில் நின்று ஜிகினா ஜிகினாவாக வெளிச்சம்.\nயாரோ ஆணையிட அந்த வெளிச்சமும் போய் முழு அந்தகாரம்.\nநேற்று வந்து இறங்கினதுமே நாச்சியார் சுவாதீனமாக வேலை ஒப்பித்தாள்.\n“தோ பாருடா அண்ணா, நீ தனிக்கட்டை. ரெண்டு நாள் முந்தியே வந்திருக்கலாமில்லே. புது வீட்டுக்கு தரை பாலீஷ் போடறதுக்கும், கரண்ட் சப்ளைக்கும் அலைய ஒத்தாசையா இருந்திருக்கும். என்னமோ போ”.\nகல்யாணம், பெண்டாட்டி, பிள்ளை குட்டி தேவை இல்லாமலேயே தாலுக்கா ஆபீசில் சீனியர் அசிஸ்டெண்டாக, அசிஸ்டெண்ட் என்ன, அவர் சேர்ந்தபோதே எழுத்தர்னு கூப்பிட ஆரம்பித்திருந்தார்கள். அப்புறம் முதுநிலை எழுத்தர்.\nகிழ எழுத்தராக அவர் ரிடையர் ஆனபோது வட்டாட்சியர் அலுவலகத்திலும் கம்ப்யூட்டர் வந்துவிட்டது. அதுக்குப் பக்கத்தில் நிறுத்தி பிரிவுபசார போட்டோ எடுத்தபோது ஏனோ பெருமையாக இருந்தது. நாச்சியாரிடமும் அவள் பிள்ளைகளிடமும் காட்ட அதை எடுத்து வந்திருந்தார். யாருக்கு அவர் கொண்டு வந்ததைப் பார்க்க நேரம் இருக்கு வேலை சொல்ல மட்டும் அது உண்டு போல.\nநேற்று ராத்திரியே நாச்சியார் கட்டிய புதுவீட்டில் போய்ப் படுத்துக் கொள்ள வேண்டி வந்தது. வீடு இல்லை. ரெண்டாவது மாடியில் எழுநூறு சதுர மீட்டர் ப்ளாட். காலையில் கிரகப் பிரவேசம். வீடெல்லாம் தண்ணீரை அடித்துக் கழுவி, அது காயாமல் பாதி ராத்திரி வரை ஒத்தி ஒத்தி எடுத்து ஈரத் துணியைப் பிழிந்து ஒரு மாதிரி பொழுது போய்விட்டது.\nகாலையில் வந்து சேர்ந்த எல்லாரும் அவரை லட்சியம் செய்யாமல் புரோகிதருக்கு பிளாஸ்கில் இருந்து காப்பி ஊற்றிக் கொடுத்து உட்கார வைத்தார்கள்.\n“பிரமாதமான காப்பி டிபன் கேடரிங்லே சொல்லியிருக்கு. இப்போ வந்துடும்”.\nரங்கா சேட் தேற்றப்பட்டார். ஏழு மணி வரை கேட்டரிங் பற்றிக் கேட்டும் பயனில்லை. காப்பியை யாரும் கண்ணில் காட்டவில்லை. பசுமாடு வந்தாச்சா என்று ஆளுக்கு ஆள் பரபரத்துக் கொண்டிருந்தார்கள்.\n“மாமா, இங்கே தெருக்கோடிதான். இப்படியே நடந்து வலதுகைப் பக்கம் திரும்பி அரை கிலோமீட்டர் போனா, அஞ்சனா பண்ணைன்னு போர்ட் தெரியும். யாரைக் கேட்டாலும் சொல்வாங்க. வாயிலே இருக்கு வழி”.\nநந்து அவரைக் கிளப்பி விட்டான்.\n“நீயும் வாயேன். உன் மோட்டார் பைக்கிலே போய்ட்டு வந்துடலாம்”.\nயார்யாரையோ புதுமனை புகுவிழாவுக்கு விருந்தாளியாகக் கொண்டு சேர்க்க அந்த வண்டியை அவன் விடிந்ததிலிருந்து உபயோகித்துக் கொண்டிருக்கிறான்.\nஅவன் போயிருந்தான். மற்ற மருமகன்களும் கேடரிங் காண்ட்ராக்டர், புரோகிதருடைய உதவியாளர், யாரோ ஒரு மகாலட்சுமி மாமி, சிடியில் விஷ்ணு சகஸ்ரநாமம் முடிந்து பாவயாமி ரகுராமம் என்று சுற்றிக் கொண்டிருந்ததால் அஞ்சனா பண்ணைக்கு அவர் தனியாக நடக்க வேண்டி வந்தது.\nஅரை கிலோமீட்டர் என்பது மூணரை கிலோமீட்டராக வாய்வழியாக நீண்டு அஞ்சனா பண்ணையில் நுழைந்தபோது, முழுத் தொகையும் அட்வான்ஸாகத் தராத காரணத்தால் பசுமாடு வராது என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டார்கள்.\nஅட்வான்ஸ் கொடுத்திருந்த நூறு போக, சிறப்புக் கட்டணமாக ரங்கா சேட் பாக்கெட்டில் இருந்து இன்னொரு இருநூறை வெட்டினார். ஒரு கட்டு மஸ்தான ஆளோடு மாட்டை முன்னும் பின்னும் இழுத்து தட்டி தாஜா செய்து நகர்த்தி ப்ளாட் வந்தபோது எட்டு மணி. கேடரிங் முடிந்து வேன் கிளம்பிக் கொண்டிருந்தது.\n“மதியச் சாப்பாடு சீக்கிரமே வச்சுக்கலாம் மாமா”.\nபிளாஸ்கைக் கவிழ்த்து ஆறி அவலாகிப் போன அரைக்கப் காப்பியை வாயில் ஊற்றியதும் புத்துணர்வு பெற்றார் சேட்.\n“ரெண்டாம் மாடிக்கெல்லாம் மாடு ஓட்டிப் போக முடியாது. க்ரூயல்டி டு அனிமல்”.\nஅசோசியேஷன் செக்ரட்டரி கண்டிப்பாகச் சொல்லிவிட்டார். கட்டு மஸ்தான ஆசாமியும் ஆமோதித்தான். மாடு கூட அதேபடிக்குத் தலையை ஆட்டியது.\nநந்து ஒரு நல்ல வழி சொன்னான்.\n“பசுமாடு மாடிப்படி பக்கமா நிக்கட்டும். என் ஹேண்டிகாம் வீடியோ காமிராவிலே அதைப் படம் எடுத்துக்கலாம். கேமராவை அப்படியே பிடிச்சுட்டு படியேறி வீட்டுக்குள்ளே போனா, சம்பிரதாயம் நடந்து முடிஞ்ச மாதிரி தானே”.\nரங்காசேட் தான் இதுக்கும் அழைக்கப்பட்டார். பசுமாட்டை சிரத்தையாக எடுத்த ஹேண்டிகாமை கையில் பிடித்தபடி அவர் மாடிப்படி ஏற வேண்டிப் போனது. “மெல்ல”, “ஓடாமப் போங்க” என்று அங்கங்கே சகலரும் அறிவுரைத்தார்கள்.\nநாலு படி ஏறுவதற்குள் ரங்கா சேட் தானே பசுமாடானதாக உணர்ந்தார். காலை எடுத்து முன்னால் வைக்கவே கஷ்டமாக இருந்தது. பாத்ரூம் போனால் தேவலை என்று ஒரு தோணல்.\nசட்டென்று நினைவுச் சங்கிலி அறுபட்டது. பாத்ரூம். போகணும். போனால் தேவலை. இப்போதும்.\nசும்மா கிட. அப்படி ஒண்ணும் இல்லே. வேறே எதையாவது நினை.\nமனதுக்குக் கட்டளை இட்டது நாச்சியார் குரலில் இருந்தது தப்பாகி விட்டது. “முந்திரிக்காய் கூஜாவைப் புழங்க வச்சுக்கோடா அண்ணா”.\nஅது நிறைய வென்னீர். இங்கே தான் பக்கத்தில் இருட்டில் எங்கேயோ. பாத்ரூம் போயே ஆகணும்.\nதூங்கு. இப்போ இல்லே. அப்புறம் ஒரு மணி நேரம் கழித்து உட்காரலாம்.\nதூக்கமா விழிப்பா என்று தெரியாத நிலை. வயிறு மட்டும் படியேறாத பசுமாடு போல அடம் பிடித்தது.\nகீழ் பெர்த்காரன் மேலே நிமிர்ந்து பார்த்தான்.\nஅவனுக்கு ஒரு குரலை கற்பனை செய்யலாம். நாச்சியார் குரல் வேணாம்.\nமுப்பது வருடம் முன்னால் அவர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜுனியர் அசிஸ்டெண்ட் ஆகச் சேர்ந்தபோது ஆகாசவாணியில் செய்தி வாசித்த குரல்.\nசக வருஷம் .. செய்திகள் வாசிப்பது. கடவுள்.\nகீழே படுத்திருந்த லுங்கி கட்டிய ஆசாமி சிரித்தான்.\n“என்ன வேணும் கேளு ரங்கா. இந்த செருப்பை மட்டும் கேட்காதே”.\nசெய்தித்தாள் பார்சலில் இருந்து செருப்பை எடுத்து கால் பக்கம் நகர்த்தியபடி ரங்கா சேட்டைப் பார்த்தான்.\n படுத்துக்கொண்டே பயணம் போகிற பஸ்ஸிலா\nரங்கா சேட்டுக்கு எழுந்து உட்காரணும் போல் இருந்தது. கீழ் பர்த் கடவுள்காரன் ஒரு மாதிரி முதுகு வளைத்து உட்கார்ந்தான். செருப்பைக் கீழே போட்டான்.\nபக்கத்தில் ஒரு நசுங்கின ப்ளாஸ்டிக் வாட்டர் பாட்டிலில் இருந்து களக் களக் என்று சத்தம் எழ தண்ணீர் முழுவதையும் குடித்துத் தீர்த்தான். அத்தனை நீரும் ரங்கா சேட் வயிற்றில் இறங்கின மாதிரி இருந்தது.\nசேட்டுக்கு இனியும் பாத்ரூம் போகாமல் முடியாது.\nஉட்காரவும் வழியில்லை. இறங்கி, டிரைவரை நிறுத்தச் சொல்லலாமா\nநகரும் இருட்டுப் பொதிக்குள் அவன் எங்கே இருப்பான் என்று தெரியவில்லை.\nமேலண்ணத்தில் ஒட்டிக் கொண்ட நாக்கு. பஸ் நகர்கிற இரைச்சலும், ஏணியில் ஏதோ சங்கிலி உரசி உரசி வருகிற ஓசையும் தவிர வேறே சத்தம் இல்லை.\nகீழ் சீட்காரன் திரும்ப மேலே பார்த்தான். கடவுள் பேசின மாதிரி இருந்தது.\n“சொல்லு ரங்கா. என்ன வரம் வேணும் என்ன வேணும்னாலும் கேளு, தரேன்”.\nஅவன் தலையை ஆட்டிக் கொண்டான்.\nஅவன் இரைந்து அரை நிமிஷம் கழித்து பஸ் நின்றது.\n“இறங்கிக்கறேன். திரும்ப ஊருக்குப் போக வேண்டிய அவசரம்”.\nமொபைல் போனை சட்டைப் பையில் போட்டுக் கொண்டான்.\n“இங்கே இறங்கினா வண்டி கிடைக்காது. யாரும் நிறுத்த மாட்டாங்க”.\nகண்டக்டர் சொன்னபோது ரங்கா சேட் கான்வாஸ் பைகூட இல்லாமல் தனியாக ஏணியைப் பிடித்து இறங்கிக் கொண்டிருந்தார்.\nகீழ் பெர்த் கடவுள்காரன் செருப்பில் கால் நுழைத்துக்கொண்டபோது ரங்கா சேட் அவன் பக்கத்தில் நின்றார்.\nகண்டக்டர் கேட்டான். தலையாட்டியபடி லுங்கிக்காரக் கடவுளைத் தொடர்ந்தார் ரங்கா சேட். பசுமாடு மாடிப்படி ஏறுகிற படபடப்பு அவர் நடையில்.\nகான்வாஸ் பையையும், முந்திரிக்காய் கூஜாவையும் நீட்டினான் கண்டக்டர்.\nலுங்கிக் காரனும் பின்னால் ரங்காசேட்டும் இறங்கினார்கள்.\nசேட் முகத்தில் அலாதி நிம்மதி. இருட்டில் ஓரமாக நின்று கூஜாவை கான்வாஸ் பையில் திணித்துக் கொண்டார். பாத்ரூம் என்றது மனம். இருடா ரங்கா என்றார்.\nஐந்து நிமிடம் கழித்து அவர் புறப்பட்டபோது லுங்கிக்காரன் போன தடம் தெரியவில்லை. இது வந்த வழியா, போக வேண்டியதா\nஇருட்டில் எதுவும் புலப்படவில்லை. கடந்து போகிற பஸ் வெளிச்சத்தில் பாதை மட்டும் விட்டு விட்டுத் தெரிந்தது.\nமுந்திரிக்காய் கூஜாவில் இருந்து தண்ணீர் குடித்தார். அது திறக்கவும், மூடவும் சகஜமாக கைக்குப் பிடித்த பிடிக்கு வந்தது. பழகி விட்டது.\nநண்பர் மனுஷயபுத்ரன் கடிதம் - urgent please\nசிவகங்கையில் ஒரு சின்னப் பையன்\nஒண்ணித் திலநகை - ஓரம்போ;ஆழி மழைக் கண்ணா, ஆடி வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.hirunews.lk/sooriyanfmnews/159687/%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-04-26T13:43:29Z", "digest": "sha1:H3NTVJJUIDHWBQL7GRJJBRHLZEFIIY7Y", "length": 11717, "nlines": 195, "source_domain": "www.hirunews.lk", "title": "ஐந்து வருடங்களாக மரங்கள், பாறைகள், தூண்களில் கட்டிவைக்கப்பட்ட பிள்ளைகள்!! - Sooriyan FM News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nஐந்து வருடங்களாக மரங்கள், பாறைகள், தூண்களில் கட்டிவைக்கப்பட்ட பிள்ளைகள்\n5 வருடங்களாக மரங்கள் , பாறைகள் மற்றும் தூண்களில் கட்டிவைக்கப்பட்டிருந்த இரண்டு பிள்ளைகள் கதிர்காமம் நாகாஹவீதிய கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.\nஅப்பகுதி தேரர் ஒருவருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இந்த குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.\nகாவற்துறை அதிகாரிகளுடன், அங்கு சென்ற தேரர், அதன்போது தூண்களில் கட்டப்பட்டிருந்த அந்த பிள்ளைகள் இருவரையும் மீட்டுள்ளார்.\nஇவ்வாறு மீட்கப்பட்டுள்ளவர்கள் 7 வயதான ஆண் பிள்ளையொன்றும், 17 வயதான பெண் பிள்ளையொருவரும் என தெரியவந்துள்ளது.\nஅவர்களால் பேசவும் முடியாது என பிரதேசவாசிகள் கூறியுள்ளனர்.\nகுறித்த பிள்ளைகளின் தாய் மேலும் ஒரு விஷேட தேவையுடைய பிள்ளையை கதிர்காம ஆலயத்தில் யாசகம் பெற அமர்த்தியுள்ளதாக இதன்போது தெரியவந்துள்ளது.\nபல காலங்களாக இவ்வாறு அந்த பிள்ளைகள் கட்டிவைக்கப்பட்டிருந்தாகவும், அவர்களின் தந்தை உயிரிழந்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.\nகுறித்த பெண் வேறு ஒரு நபருடன் வாழ்ந்து வருவதுடன், அந்த பிள்ளைகளை கவனிக்குமாறு காவற்துறை பல முறை தாயுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபின்னர் குறித்த பெண் மேலதிக விசாரணைக்காக கைது செய்யப்பட்டுள்ளார்.\nபிள்ளைகளை குழந்தைகள் பராமரிப்பு நிலையத்தில் ஒப்படைக்க முயன்ற போதும், பிள்ளைகள் விஷேட தேவையுடையவர்கள் என்பதால் அதனை மேற்கொள்ள முடியாமல் போனதாக அந்த பெண் குறிப்பிட்டுள்ளார்.\nசம்பவம் தொடர்பில் கதிர்காமம் காவற்துறை மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.\nஐ.தே.கட்சியின் முக்கிய பதவிகளில் அதிரடி மாற்றம்..\n26 வயது மகள் தந்தைக்கு செய்த கொடூரம்\nதகாத உறவை கண்டித்த தந்தையை மகளே...\nகம்போடியா நாட்டின் அரசியில் கட்சித் தலைவரொருவர் கைது\nகம்போடியா நாட்டின் அரசியல் கட்சித்...\nநாளை சந்திக்கவுள்ள வட, தென் கொரிய ஜனாதிபதிகள்\nவடகொரிய ஜனாதிபதி கிம் ஜொன்-யுன்...\nதுருக்கிய நீதிமன்றம் 13 ஊடகவியலாளர்களுக்கு...\nஆரம்ப சுகாதார சேவை முறையினை பலப்படுத்தும் வேலைத்திட்டம் முன்னெடுப்பு\nAI Beauty 2.0 சிறந்ததொழில்நுட்பத்துடன் OPPO F7 அறிமுகம்\nஇலங்கை, லாவோஸ் நாடுகளுக்கிடையிலான சுற்றுலாத்துறையை மேலும் வலுப்படுத்த கலந்துரையாடல்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nமுக்கிய பொருளாதார மையமாக மாறிவரும் கண்டி கைத்தொழில் பேட்டை\nUpdate: யாழ்ப்பாண நகர எல்லைக்கு அப்பால் ஆர்ப்பாட்டம்\nபுங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...\n19தும் 20தும் ஒன்றாக வேண்டும் - நிமல்\n19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...\nஐ.நா நிபுணர் குழுவில் இலங்கையர்\nமனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...\nநாவலப்பிட்டி நகரத்தில் ஒரு பகுதி நீரில் மூழ்கியது...\nமலையகத்தில் பெய்துவரும் கடும் மழையைத்தொடர்ந்து நாவலப்பிட்டி... Read More\nஅனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ள தோனி - காணொளி\nபிரபல பாடகி திடீர் மரணம் - அதிர்ச்சியில் திரையுலகம்\nஇலங்கை பெண்ணுக்கு கனடாவில் இடம்பெற்ற பயங்கரம் (காணொளி)\nபொது மக்களுக்கான ஓர் முக்கிய செய்தி...\nஜனாதிபதி விடுத்துள்ள அதிரடி கருத்து..\nகேல் ரத்னா விருதிற்கு கோலி\nஅனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ள தோனி - காணொளி\nதோனி மீண்டும் விஸ்வரூபம் / பெங்களூரை வீழ்த்தியது சென்னை\nடி வில்லியர்ஸ் விளாசல் / சென்னை அணிக்கு சவாலான வெற்றி இலக்கு\nஇந்தியன் பிரிமியர் லீக் தொடரின் 24வது போட்டி இன்று\nநடிகை கௌசல்யா தொடர்பில் அவரது பெற்றோரின் அதிரடி தீர்மானம்\nபிரபல நடிகரின் படப்பிடிப்பில் பயங்கர குண்டு வெடிப்பு\nபிரபல பாடகி திடீர் மரணம் - அதிர்ச்சியில் திரையுலகம்\nகோபத்தில் ஆபாச காணொளியை வெளியிட்ட பிக் பாஸ் பிரபலம்\nதீயில் கருகிய பிரபல சின்னத்திரை நடிகை\nதமிழக முதல்வரால் பிரபல நடிகைக்கு நேர்ந்த பரிதாபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.sahabudeen.com/2014/03/blog-post_8.html", "date_download": "2018-04-26T13:02:05Z", "digest": "sha1:AUGAF2RERU3UEEDGE5LPZKF3HHNMO6XP", "length": 16286, "nlines": 211, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: ஹஜ்ஜின் சட்டமும் சிறப்பும்", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nஹஜ், முஸ்லிமான ஆண், பெண் அனைவர் மீதும் வாழ்நாளில் ஒருமுறை கடமையாகும். இது இஸ்லாமியக் கடமைகளில் ஐந்தாவது கடமையாகும். அல்லாஹ் கூறுகிறான் அதற்கு (செல் வதற்கு)ரிய பாதையில் பயணம் செய் யச் சக்தி பெற்றிருக்கும் மனிதர்களுக்கு அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது கடமையாகும். (3 : 97)\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இஸ்லாம் ஐந்து காரியங்கள் மீது அமைக் கப்பட்டுள்ளது. அவை வணக்கத்துக்குரிய வன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரு மில்லை.\nநிச்சயமாக முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் திருத்தூதரா வார்கள். எனச் சாட்சி பகர்வது, தொழு கையை நிலை நிறுத்துவது, ஸகாத் கொடுப்பது, ரமழான் மாதம் நோன்பு நோற்பது, கண்ணியமிக்க அல்லாஹ்வின் வீட்டிற்குச் சென்றுவர சக்தி பெற்றவர் ஹஜ் வெய்வது.\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். யார் பெண்களிடத்தில் உறவாடாமலும் பாவம் செய்யாமலும் இந்த வீட்டை ஹஜ் செய்கிறாரோ அவர் (பாவங்கள் அழிக்கப்பட்டு) அன்று பிறந்த பாலகன் போலாகிவிடுகிறார். (அல்-ஹதீஸ்)\nஹஜ் வயது வந்த புத்தி சுவாதீனமுள்ள சக்தி பெற்ற அனைத்து முஸ்லிம்களுக்கும் கடமையாகும். சக்தி பெறுவதென்பது சென்று வருவதற்கும் வாகனச் செலவிடும் சக்தி பெறுவதாகும்.\nஉதாரணமாக சென்று வரும் வழியில் உணவு, நீர், உடை, வாகனம் ஆகியவற்றிற்குச் செலவு செய்யச் சக்தி பெற்றவனாக இருப்பது போல இச்செலவு தனது குடும்பத்தின ருக்கும் தனது செலவின் கீழுள்ளவர் களுக்கும் போக மேல் மிச்சமானதாக இருக்கவேண்டும் இதுபோனறே ஹஜ்ஜை நிறைவேற்றுவதற்குத் தடை யாக நோய் போன்ற இடையூறில்லாமல் உடல் ஆரோக்கியமாகவும் பயணம் செய்யும் பாதை பயமற்றதாகவும் இருக்க வேண்டும்.\nபெண்களுக்கும் இதே நிபந்தனைதான். என்றாலும் அவளுடன் அவளுடைய கணவர் அல்லாது அவள் மணம் முடி த்துக்கொள்ள ஹராமாக்கப்பட்ட ஒரு வருடன் செல்வது அவசியமாகும்.\nஇன் னும் அவள் இத்தாவிலிருக்கும் பெண் ணாகவுமிருக்கக் கூடாது. ஏனெனில் இத்தாவிலிருக்கும் பெண்கள் அவர்களின் இல்லங்களிலிருந்து வெளியே செல்வதை அல்லாஹ் தடுத்துள்ளான். எனவே யாருக்கேனும் இத்தடைகளில் ஒரு தடையிருக்குமானால் அவருக்கு ஹஜ் கடமையில்லை.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com\nஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களினது சிறப்புக்கள்....\nகம்ப்யூட்டரின் திறவு கோலாக யு.எஸ்.பி. ட்ரைவ்\nஉடல் பருமன் அதிகமான குழந்தைகள் தவிர்க்கவேண்டிய உணவ...\nதியாகத்தின் மறுபெயர் ஹஜ் கடமை..\nஅம்மை போட்டக் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் ...\nஒட்டகம் – அல்லாஹ்வின் அற்புதப்படைப்பு\nபாதாமை தினமும் சாப்பிடுவதால், உடலில் உண்டாகும் 15 ...\nவீடு கட்ட வாங்க போகிறீர்களா….\nவேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்பவர்கள் கவனத்...\nவெளிநாட்டில் வேலை… ஏமாறாமல் இருக்க\nமூச்சு முக்கியம் பாஸ்... 'இன்ஹேலர்' எச்சரிக்கை\n படிப்பதை நினைவில் நிறுத்துவது எப்...\nதனியாக செல்லும் பெண்கள் தெரிந்து கொள்ள‍ வேண்டியது\nமாரடைப்பு வராமல் இருக்க சில வழிகள்\nசெருப்பு வாங்குவதில் இப்படி ஒரு சிக்கலா\nதனிக்குடித்தனம் – பிரிந்திருந்தாலும் புரிந்திருப்ப...\nகுதிகால் செருப்பு வாங்கப் போறீங்களா\nசளிக் காய்ச்சல் இருமலுக்கு இயற்கை வைத்தியம்:-\nமாற்றுத்திறனாளிகள் பைக் வாங்க என்ன செய்ய வேண்டும்\nஉணவில் தரமற்ற பொருட்களை கலக்கிறார்கள்\nதண்ணீர் சிகிச்சை {Water Therapy}\nவெயிலை சமாளிக்க அட்டகாசமான குறிப்புகள்...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nதேனை தனியாக சாப்பிட்டால் பலன்--- மருத்துவ டிப்ஸ்\nதேன் சீரண சக்தியை தரும். இரைப்பையில் ஏற்படும் எல்லாவித கோளாறுகளையும் வயிற்றில் ஏற்படும் கோளாறுகளையும் குணமாக்கும். நெஞ்சில் ஏற்படும் எரிச்...\n‘ பாட்டி வைத்தியம் ’ சொன்ன பாட்டியிடமிருந்து ‘ வைத்திய ’ ரிலே கட்டையை கைப்பற்றியிருக்கும் பாட்டியும் , நல்ல அனுபவசாலி\nஉடலை சார்ஜ் செய்வது எப்படி\nஉடலை சார்ஜ் செய்வது எப்படி பாகம் - 2 முந்தைய பதிவில் நம் உடலை ஏன் சார்ஜ் செய்ய வேண்டும் , அதனால் உண்டாகும் பலன்கள் என்னென்ன என்...\nஅதிகாலையில் தண்ணீர் பருகினால் பல வியாதிகளைக் குணப்படுத்த முடியும் \nதினமும் காலையில் தூக்கத்தில் இருந்து எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவது ஜப்பானில் இப்போது பிரபலமாகி வருகிறது. இங்கு தரப்பட்டி...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nஉங்கள் உடல் எடை ஏழு நாட்களுக்குள் ஐந்து கிலோ எடை குறைய...\nகீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த அட்டவணை மிகப் பிரபலமான உணவு அட்டவணை. ஏழு நாட்களுக்கு இந்த அட்டவணையைப் பயன்படுத்தினால் , உங்கள் எடையில் சராசரி...\nநபிமார்கள் பற்றிய அரிய தகவல்கள்\nநபிமார்கள் மனிதர்களில் மாண்புடையவர்கள்.இவர்கள் அல்லாஹ்வின் வாக்கே உலகில் மேலானது. இறைவனல்லாத ஏனையோரின் வாக்கு கீழானது என்னும் தாரகமந்திரத்...\n கல்யாணம் ஆயி பல வருசம் ஆச்சு. இன்னும் வண்டி மக்கர் பண்ணுதே என்று மனசுக்குள்ளே குமையும் நம்ம குரூப் மக்களே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tnpsclink.in/2017/03/tnpsc-current-affairs-quiz-2017-mock-test-yourself-59.html", "date_download": "2018-04-26T13:02:41Z", "digest": "sha1:W75HVCO7VJGET5R5RTTFI4NEFRYCC2Y4", "length": 6311, "nlines": 117, "source_domain": "www.tnpsclink.in", "title": "TNPSC Current Affairs Quiz 59 (Latest Current Affairs 2017) - Test Yourself", "raw_content": "\nடென்னிஸ் போட்டியில் சிறப்புபெற்ற \" கிராண்ட்சிலாம்\" டென்னிஸ் போட்டிகள் எத்தனை\nஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் கிராண்ட்சிலாம்\" டென்னிஸ் போட்டிகளை வரிசைபடுத்துக\nஅமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரெஞ்சு, விம்பிள்டன்\nவிம்பிள்டன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரெஞ்சு\nபிரெஞ்சு, விம்பிள்டன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா\nஆஸ்திரேலியா, பிரெஞ்சு, விம்பிள்டன், அமெரிக்கா\n2017 ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றவர் யார்\n2017 ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி பெண்கள் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றவர் யார்\nகிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் அதிக பட்டங்களை (18) வென்று வரிசையில் முதலிடத்தில் உள்ளவர் யார்\nஉலக டென்னிஸ் போட்டி ஆண்கள் ஒற்றையர் தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் உள்ளவர் யார்\nஉலக டென்னிஸ் போட்டி பெண்கள் ஒற்றையர் தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் உள்ளவர் யார்\n2017 சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர் யார்\n2017 சென்னை ஓபன் டென்னிஸ் ஆடவர் இரட்டையர் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர்கள் யார்\n2017 சென்னை ஓபன் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர்கள் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://itstechschool.com/ta/rhcsa-exam-tips/", "date_download": "2018-04-26T13:12:53Z", "digest": "sha1:JEMP465OCPRW5AMXKKFVENQFTLPTKOA7", "length": 45516, "nlines": 345, "source_domain": "itstechschool.com", "title": "RHCSA தேர்வுகள் - எப்படி RHCSA தேர்வு அனுப்ப? »அதன் தொழில்நுட்ப பள்ளி", "raw_content": "\nஐடிஐஎல் சேவை வியூகம் (எஸ்எஸ்)\nITIL சேவை வடிவமைப்பு (SD)\nITIL சேவை மாற்றம் (ST)\nITIL சேவை ஆபரேஷன் (SO)\nITIL தொடர்ச்சியான சேவை மேம்பாடு (சிஎஸ்ஐ)\nEC- கவுன்சில் டிசார்டர் மீட்பு நிபுணத்துவ (EDRP)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட பாதுகாப்பு நிபுணர் (ECSS)\nEC- கவுன்சிலின் சான்றளிக்கப்பட்ட முதன்மை தகவல் பாதுகாப்பு அதிகாரி (C | CISO)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட சம்பவம் ஹேண்ட்லர் (ECIH)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட செக்யூர்க் புரோகிராமர் (ECSP.net)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட செக்யூர்க் புரோகிராமர் (ஜாவா)\nகணினி ஹேக்கிங் தடயவியல் புலன்விசாரணை (CHFI)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட குறியாக்க சிறப்பு (ECES)\nசான்றளிக்கப்பட்ட பாதுகாப்பான கணினி பயனர் (CSCU)\nCAST 614 மேம்பட்ட பிணைய பாதுகாப்பு\nCAST XX ஹேக்கிங் மற்றும் ஹார்டனிங் கார்பரேட் வலை ஆப் / வெப் சைட்\nCAST 616 பாதுகாப்பான விண்டோஸ் உள்கட்டமைப்பு\nLPT (உரிமம் பெற்ற ஊடுருவல் சோதனையாளர்)\nசான்றளிக்கப்பட்ட நெட்வொர்க் டிஃபென்டர் (CND)\nECSA V10 (EC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட பாதுகாப்பு ஆய்வாளர்)\nமாஸ்டர் டிரெய்னர் & ஃபேஸ்லிடிட்டர் (MTF)\nசான்றளிப்பு ஆட்சேர்ப்பு ஆய்வாளர் (CRA)\nசான்றளிக்கப்பட்ட சைமோமெட்ரிக் டெஸ்ட் நிபுணத்துவ (CPTP)\nசான்றளிக்கப்பட்ட செயல்திறன் மற்றும் திறன் டெவலப்பர் (CPCD)\nசான்றளிக்கப்பட்ட OD தலையீடு வல்லுநர் (CODIP)\nசான்றளிக்கப்பட்ட நிறுவன அபிவிருத்தி ஆய்வாளர் (CODA)\nசான்றளிக்கப்பட்ட கற்றல் மற்றும் மேம்பாட்டு மேலாளர் (CLDM)\nசான்றளிக்கப்பட்ட அறிவுரை வடிவமைப்பாளர் (சிஐடி)\nசான்றளிக்கப்பட்ட மனித வர்த்தக பங்குதாரர் (CHRBP)\nHR அனலிட்டிக்ஸ் இல் சான்றளிக்கப்பட்ட நிபுணத்துவம் (CHAMP)\nசான்றளிக்கப்பட்ட நிர்வாக மற்றும் வாழ்க்கை பயிற்சியாளர் (CELC)\nசான்றளிக்கப்பட்ட இருப்பு ஸ்கோர் அட்டை நிபுணர் (CBSCP)\nAWS பயிற்சி மீது கட்டிடக்கலை\nAWS தொழில்நுட்ப எசென்ஷியல்ஸ் பயிற்சி\nACI பயன்முறையில் சிஸ்கோ நெக்ஸஸ் சுவிட்சுகள் சுவிட்சுகள் கட்டமைத்தல் V9000\nNX-OS பயன்முறையில் சிஸ்கோ நெக்ஸஸ் 9000 ஐ கட்டமைக்கிறது (C9KNX)\nCCNP ரவுட்டிங் & ஸ்விட்சிங்\nஹெச்பி மென்பொருள் ஆட்டோமேஷன் சோதனை\nரனோரேக்ஸ் V8.x (அடிப்படைக்கு மேம்பட்டது)\nஇதற்கு முந்தைய சகாப்தங்கள் கொண்டு செலினியம்\nஐடிஐஎல் சேவை வியூகம் (எஸ்எஸ்)\nITIL சேவை வடிவமைப்பு (SD)\nITIL சேவை மாற்றம் (ST)\nITIL சேவை ஆபரேஷன் (SO)\nITIL தொடர்ச்சியான சேவை மேம்பாடு (சிஎஸ்ஐ)\nEC- கவுன்சில் டிசார்டர் மீட்பு நிபுணத்துவ (EDRP)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட பாதுகாப்பு நிபுணர் (ECSS)\nEC- கவுன்சிலின் சான்றளிக்கப்பட்ட முதன்மை தகவல் பாதுகாப்பு அதிகாரி (C | CISO)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட சம்பவம் ஹேண்ட்லர் (ECIH)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட செக்யூர்க் புரோகிராமர் (ECSP.net)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட செக்யூர்க் புரோகிராமர் (ஜாவா)\nகணினி ஹேக்கிங் தடயவியல் புலன்விசாரணை (CHFI)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட குறியாக்க சிறப்பு (ECES)\nசான்றளிக்கப்பட்ட பாதுகாப்பான கணினி பயனர் (CSCU)\nCAST 614 மேம்பட்ட பிணைய பாதுகாப்பு\nCAST XX ஹேக்கிங் மற்றும் ஹார்டனிங் கார்பரேட் வலை ஆப் / வெப் சைட்\nCAST 616 பாதுகாப்பான விண்டோஸ் உள்கட்டமைப்பு\nLPT (உரிமம் பெற்ற ஊடுருவல் சோதனையாளர்)\nசான்றளிக்கப்பட்ட நெட்வொர்க் டிஃபென்டர் (CND)\nECSA V10 (EC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட பாதுகாப்பு ஆய்வாளர்)\nமாஸ்டர் டிரெய்னர் & ஃபேஸ்லிடிட்டர் (MTF)\nசான்றளிப்பு ஆட்சேர்ப்பு ஆய்வாளர் (CRA)\nசான்றளிக்கப்பட்ட சைமோமெட்ரிக் டெஸ்ட் நிபுணத்துவ (CPTP)\nசான்றளிக்கப்பட்ட செயல்திறன் மற்றும் திறன் டெவலப்பர் (CPCD)\nசான்றளிக்கப்பட்ட OD தலையீடு வல்லுநர் (CODIP)\nசான்றளிக்கப்பட்ட நிறுவன அபிவிருத்தி ஆய்வாளர் (CODA)\nசான்றளிக்கப்பட்ட கற்றல் மற்றும் மேம்பாட்டு மேலாளர் (CLDM)\nசான்றளிக்கப்பட்ட அறிவுரை வடிவமைப்பாளர் (சிஐடி)\nசான்றளிக்கப்பட்ட மனித வர்த்தக பங்குதாரர் (CHRBP)\nHR அனலிட்டிக்ஸ் இல் சான்றளிக்கப்பட்ட நிபுணத்துவம் (CHAMP)\nசான்றளிக்கப்பட்ட நிர்வாக மற்றும் வாழ்க்கை பயிற்சியாளர் (CELC)\nசான்றளிக்கப்பட்ட இருப்பு ஸ்கோர் அட்டை நிபுணர் (CBSCP)\nAWS பயிற்சி மீது கட்டிடக்கலை\nAWS தொழில்நுட்ப எசென்ஷியல்ஸ் பயிற்சி\nACI பயன்முறையில் சிஸ்கோ நெக்ஸஸ் சுவிட்சுகள் சுவிட்சுகள் கட்டமைத்தல் V9000\nNX-OS பயன்முறையில் சிஸ்கோ நெக்ஸஸ் 9000 ஐ கட்டமைக்கிறது (C9KNX)\nCCNP ரவுட்டிங் & ஸ்விட்சிங்\nஹெச்பி மென்பொருள் ஆட்டோமேஷன் சோதனை\nரனோரேக்ஸ் V8.x (அடிப்படைக்கு மேம்பட்டது)\nஇதற்கு முந்தைய சகாப்தங்கள் கொண்டு செலினியம்\nRHCSA தேர்வுகள் - எப்படி RHCSA தேர்வு அனுப்ப\nRHCSA தேர்வின் சமீபத்திய குறிப்புகள்\nRHCSA ஆனது Red Hat Enterprise Linux கணினி அமைப்பின் தகவல் மற்றும் நம்பகத்தன்மைகள் கணினி நிறுவனங்களுக்கான முயற்சிக்கு முயற்சிக்கப்படும் விருப்பங்களின் மதிப்பாகும். நீங்கள் சான்றிதழைப் பெற்ற பிறகு, Red Hat Enterprise Linux சூழல்களில் பணியாற்றுவதற்கு தகுதியானவராவீர்கள். வெறுமனே முன் மற்றும் RHCSA சான்றிதழ் தேர்வு உங்களுக்கு உதவும் என்று ஒரு சில குறிப்புகள் கண்டறிய.\nRHCSA: Red Hat சான்றளிக்கப்பட்ட கணினி நிர்வாகி\nRHCSA தேர்வின் சமீபத்திய குறிப்புகள்\nகுறைபாடுகளுக்கு ஒத்திகை: நீங்கள் ஏதாவது தேர்வில் தேர்ச்சி அடைவதற்கு, நடைமுறையில் தவிர்க்க முடியாதது. எனவே RHCSA உடனான நிலைமை. இது ஒரு கையெழுத்துப் பரீட்சை என்பதால் இதயக் கருத்துக்களை நீங்கள் கற்றுக்கொள்ள முடியாது. உங்கள் கணினியில் இப்போது மாறவும், எந்த விஷயத்திலும் பணிகள் மூலம் பணிபுரிய தொடங்கவும். நீங்கள் உண்மையிலேயே என்ன செய்ய வேண்டும் என்பதை உணர்ந்துகொள்வது அவசியம்.\nநேரம் நிர்வாகம்: பரீட்சை உண்மையிலேயே நீடித்தது மற்றும் நீங்கள் போதுமான நேரம் நெருங்கியிருக்காது. உங்கள் வேலையில் இயற்றப்படவும், நீங்கள் குறிப்பிட்ட சில குறிக்கோள்களை முதலில் நிறைவேற்றவும் முயற்சி செய்யுங்கள். நீங்கள் கவலைப்படுகிறவர்களிடம் நீங்கள் கவலைப்படலாம். உங்கள் ஆர்வத்தைத் தூண்டுவதற்காக, உங்கள் நேரத்தை ஒரு முறை உங்கள் நேரத்தை வீணடிக்க முயற்சி செய்யுங்கள்.\nஇலக்குகளை புரிந்து கொள்ளுங்கள்: நீங்கள் ஒரு திறமையான நிர்வாகியாக இருந்தால், நீங்கள் குறிப்பிட்ட இடங்களின் ஒரு பகுதியை எளிதில் கண்டறியலாம். கடினமாக இருப்பதைப் பொறுத்தவரை, நீங்கள் நம்பிக்கை இழக்கலாம். பரீட்சைகளை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், அதே இலக்கணங்களை புரிந்து கொள்ள அவர்கள் புறக்கணிக்கப்பட்ட காரணத்தினால் நிபுணர்கள் அதே எண்ணிக்கையில் தோல்வியடைந்தனர்.\nஎல்லா பகுதிகளையும் மூடி: பரீட்சைக்கு உட்படுத்தப்பட்ட பாடங்களின் பரந்த வகைப்பாடுகள் உள்ளன, எல்லாவற்றையும் நீங்கள் அறிந்திருக்க முடியாது. இன்னும் ஒரு முறை நீங்கள் ஒரு நிர்வாகி நிர்வாகியாக நிரப்பப்பட்டிருக்கலாம், Red Hat சான்றிதழ் கணினி நிர்வாகி பரீட்சை இன்னும் கோருகிறது. ஒரு நிர்வாகி வழக்கமாக முன்னரே தீர்மானிக்கப்பட்ட பணிகள் மீது கவனம் செலுத்துவதுடன், அவர்களின் தொலைதூரப் புள்ளிக்கு வெளியே உள்ள பிரதேசங்களில் திறனைக் கொண்டிருக்கவில்லை. பரீட்சைக்குத் திட்டமிடுகையில், கருப்பொருள்கள் ஒவ்வொன்றையும் மூடிமறைக்கவும் மிக அண்மைய முன்னேற்றங்களைப் புரிந்துகொள்ளவும் அழுத்தம் தேவை.\nமுக்கிய கவலை நீங்கள் நினைக்கிறீர்கள் என பரீட்சை எளிதானது அல்ல. நியமிக்கப்பட்ட கற்றல் மற்றும் பழக்கவழக்கங்களைக் கோருவதற்கான உண்மையான தவறுகளைச் செய்ய நீங்கள் பொறுப்பேற்க வேண்டும். எனவே, நீங்கள் பொருள் இடையே சில தூரத்தை வைத்து இல்லை என்று உத்தரவாதம் பொது நடைமுறையில் சார்ந்தது.\nRed Hat ஐ ஒற்றை உள்நுழைவு (SSO) Red Hat மெய்நிகராக்கத்தில் இயங்குகிறது\nRHCE சான்று பெற மிகவும் பயனுள்ள முறை\nஒரு பதில் விடவும் பதிலை நிருத்து\nநீங்கள் ஒரு மனித மற்றும் இந்த துறையில் பார்க்கிறீர்கள் எனில், அது வெற்று விடுங்கள்.\nஒரு குறிக்கப்பட்ட புலங்கள் * தேவைப்படும்\nஆப்கானிஸ்தான்அல்பேனியாஅல்ஜீரியாஅமெரிக்க சமோவாஅன்டோராஅங்கோலாஅங்கியுலாஅண்டார்டிகாஅன்டிகுவா மற்றும் பார்புடாஅர்ஜென்டீனாஆர்மீனியாஅரூபஆஸ்திரேலியாஆஸ்திரியாஅஜர்பைஜான்பஹாமாஸ்பஹ்ரைன்வங்காளம்பார்படாஸ்பெலாரஸ்பெல்ஜியம்பெலிஸ்பெனின்பெர்முடாபூட்டான்பொலிவியாபோஸ்னியா மற்றும் ஹெர்சிகோவினாபோட்ஸ்வானாபொவேட் தீவுபிரேசில்பிரித்தானிய இந்தியப் பெருங்கடல் மண்டலம்புருனெ டர்ஸ்சலாம்பல்கேரியாபுர்கினா பாசோபுருண்டிகம்போடியாகமரூன்கனடாகேப் வேர்ட்கேமன் தீவுகள்மத்திய ஆப்பிரிக்க குடியரசுசாட்சிலிசீனாகிறிஸ்துமஸ் தீவுகோகோஸ் (கீலிங்) தீவுகள்கொலம்பியாகொமொரோசுகாங்கோகாங்கோ, ஜனநாயக குடியரசுகுக் தீவுகள்கோஸ்டா ரிகாகோட் டி 'ஐவோரிகுரோஷியா (உள்ளூர் பெயர்: குரோஷியா)கியூபாசைப்ரஸ்செ குடியரசுடென்மார்க்ஜிபூட்டிடொமினிக்காடொமினிக்கன் குடியரசுடிமோர்-லெஸ்டெ (கிழக்கு திமோர்)எக்குவடோர்எகிப்துஎல் சல்வடோர்எக்குவடோரியல் கினிஎரித்திரியாஎஸ்டோனியாஎத்தியோப்பியாபோக்லாந்து தீவுகள் (மால்வினாஸ்)பரோயே தீவுகள்பிஜிபின்லாந்துபிரான்ஸ்பிரான்ஸ், பெருநகரபிரஞ்சு கயானாபிரஞ்சு பொலினீசியாபிரஞ்சு தென் பகுதிகள்காபோன்காம்பியாஜோர்ஜியாஜெர்மனிகானாஜிப்ரால்டர்கிரீஸ்கிரீன்லாந்துகிரெனடாகுவாதலூப்பேகுவாம்குவாத்தமாலாகினிகினியா-பிசாவுகயானாஹெய்டிஹார்ட் அண்ட் மெக் டொனால்ட் தீவுகள்ஹொலி சி (வாடிகன் நகர மாநிலம்)ஹோண்டுராஸ்ஹாங்காங்ஹங்கேரிஐஸ்லாந்துஇந்தியாஇந்தோனேஷியாஈரான் (இஸ்லாமிய குடியரசு)ஈராக்அயர்லாந்துஇஸ்ரேல்இத்தாலிஜமைக்காஜப்பான்ஜோர்டான்கஜகஸ்தான்கென்யாகிரிபட்டிகொரியா, ஜனநாயக மக்கள் குடியரசுகொரியா, குடியரசுகுவைத்கிர்கிஸ்தான்லாவோ மக்கள் ஜனநாயக குடியரசுலாட்வியாலெபனான்லெசோதோலைபீரியாலிபிய அரபு சமாகிரியாலீக்டன்ஸ்டைன்லிதுவேனியாலக்சம்பர்க்மக்காவுமாசிடோனியா, முன்னாள் யூகோஸ்லாவிய குடியரசுமடகாஸ்கர்மலாவிமலேஷியாமாலத்தீவுமாலிமால்டாமார்சல் தீவுகள்மார்டீனிக்மவுரித்தேனியாமொரிஷியஸ்மயோட்டேமெக்ஸிக்கோமைக்குரேனேசிய ஆபிரிக்காமால்டோவா குடியரசின்மொனாகோமங்கோலியாமொண்டெனேகுரோமொன்செராட்மொரோக்கோமொசாம்பிக்மியான்மார்நமீபியாநவ்ரூநேபால்நெதர்லாந்துநெதர்லாந்து அண்டிலிசுபுதிய கலிடோனியாநியூசீலாந்துநிகரகுவாநைஜர்நைஜீரியாநியுவேநோர்போக் தீவுவட மரியானா தீவுகள்நோர்வேஓமான்பாக்கிஸ்தான்பலாவுபனாமாபப்புவா நியூ கினிபராகுவேபெருபிலிப்பைன்ஸ்பிட்கன்போலந்துபோர்ச்சுகல்புவேர்ட்டோ ரிக்கோகத்தார்ரீயூனியன்ருமேனியாஇரஷ்ய கூட்டமைப்புருவாண்டாநெவிஸ்செயிண்ட் லூசியாசென் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்சுசமோவாசான் மரினோசாவோ டோமி மற்றும் பிரின்கிப்பிசவூதி அரேபியாசெனிகல்செர்பியாசீசெல்சுசியரா லியோன்சிங்கப்பூர்ஸ்லோவாக்கியா (ஸ்லோவாக் குடியரசு)ஸ்லோவேனியாசாலமன் தீவுகள்சோமாலியாதென் ஆப்பிரிக்காதென் ஜார்ஜியா, தெற்கு சாண்ட்விச் தீவுகள்தெற்கு சூடான்ஸ்பெயின்இலங்கைசெயின்ட் ஹெலினாசெயின்ட் பியர் மற்றும் மிக்குலன்சூடான்சுரினாம்ஸ்வால்பார்ட் மற்றும் ஜான் மாயென் தீவுகள்சுவாசிலாந்துஸ்வீடன்சுவிச்சர்லாந்துசிரியாதைவான்தஜிகிஸ்தான்தான்சானியா, ஐக்கிய குடியரசுதாய்லாந்துடோகோடோக்கெலாவ்டோங்காடிரினிடாட் மற்றும் டொபாகோதுனிசியாதுருக்கிதுர்க்மெனிஸ்தான்துருக்கிகள் மற்றும் காய்கோஸ் தீவுகள்துவாலுஉகாண்டாஉக்ரைன்ஐக்கிய அரபு நாடுகள்ஐக்கிய ராஜ்யம்ஐக்கிய மாநிலங்கள்அமெரிக்காவைச் சுற்றியுள்ள சிறிய தீவுகள்உருகுவேஉஸ்பெகிஸ்தான்Vanuatuவெனிசுலாவியத்நாம்விர்ஜின் தீவுகள் (பிரிட்டிஷ்)வர்ஜின் தீவுகள் (யு.எஸ்)வாலிஸ் மற்றும் ஃப்யுடுனா தீவுகள்மேற்கு சகாராஏமன்யூகோஸ்லாவியாசாம்பியாஜிம்பாப்வே\nஒரு விரிவான சிஸ்கோ சான்றிதழ் வழிகாட்டி 2018\nவெளியிட்ட நாள்26 சித்திரை 2018\nPMP vs PRINCE2 Vs CAPM: எனக்கு ஒரு நல்ல தேர்வு எது\nவெளியிட்ட நாள்25 சித்திரை 2018\nTOGAF பயிற்சி மற்றும் சான்றிதழ் பெற காரணங்கள்\nவெளியிட்ட நாள்20 சித்திரை 2018\nSCCM கேள்விகளும் பதில்களும், இன்வெர்ட்வில் XENX இல் கேட்டன\nவெளியிட்ட நாள்17 சித்திரை 2018\nவேலை வாய்ப்புகள் மற்றும் ஆரக்கிள் சான்றிதழ் படிப்பின் நன்மைகள்\nவெளியிட்ட நாள்13 சித்திரை 2018\nB 100 A, தெற்கு நகரம் 1, அருகில் கையொப்பம் டவர்ஸ், குர்கான், HR, இந்தியா - 122001\nபதிப்புரிமை © அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை - புதுமையான தொழில்நுட்ப தீர்வுகள் | தனியுரிமை கொள்கை\nநீங்கள் ஒரு மனித மற்றும் இந்த துறையில் பார்க்கிறீர்கள் எனில், அது வெற்று விடுங்கள்.\nஒரு குறிக்கப்பட்ட புலங்கள் * தேவைப்படும்\nஆப்கானிஸ்தான்அல்பேனியாஅல்ஜீரியாஅமெரிக்க சமோவாஅன்டோராஅங்கோலாஅங்கியுலாஅண்டார்டிகாஅன்டிகுவா மற்றும் பார்புடாஅர்ஜென்டீனாஆர்மீனியாஅரூபஆஸ்திரேலியாஆஸ்திரியாஅஜர்பைஜான்பஹாமாஸ்பஹ்ரைன்வங்காளம்பார்படாஸ்பெலாரஸ்பெல்ஜியம்பெலிஸ்பெனின்பெர்முடாபூட்டான்பொலிவியாபோஸ்னியா மற்றும் ஹெர்சிகோவினாபோட்ஸ்வானாபொவேட் தீவுபிரேசில்பிரித்தானிய இந்தியப் பெருங்கடல் மண்டலம்புருனெ டர்ஸ்சலாம்பல்கேரியாபுர்கினா பாசோபுருண்டிகம்போடியாகமரூன்கனடாகேப் வேர்ட்கேமன் தீவுகள்மத்திய ஆப்பிரிக்க குடியரசுசாட்சிலிசீனாகிறிஸ்துமஸ் தீவுகோகோஸ் (கீலிங்) தீவுகள்கொலம்பியாகொமொரோசுகாங்கோகாங்கோ, ஜனநாயக குடியரசுகுக் தீவுகள்கோஸ்டா ரிகாகோட் டி 'ஐவோரிகுரோஷியா (உள்ளூர் பெயர்: குரோஷியா)கியூபாசைப்ரஸ்செ குடியரசுடென்மார்க்ஜிபூட்டிடொமினிக்காடொமினிக்கன் குடியரசுடிமோர்-லெஸ்டெ (கிழக்கு திமோர்)எக்குவடோர்எகிப்துஎல் சல்வடோர்எக்குவடோரியல் கினிஎரித்திரியாஎஸ்டோனியாஎத்தியோப்பியாபோக்லாந்து தீவுகள் (மால்வினாஸ்)பரோயே தீவுகள்பிஜிபின்லாந்துபிரான்ஸ்பிரான்ஸ், பெருநகரபிரஞ்சு கயானாபிரஞ்சு பொலினீசியாபிரஞ்சு தென் பகுதிகள்காபோன்காம்பியாஜோர்ஜியாஜெர்மனிகானாஜிப்ரால்டர்கிரீஸ்கிரீன்லாந்துகிரெனடாகுவாதலூப்பேகுவாம்குவாத்தமாலாகினிகினியா-பிசாவுகயானாஹெய்டிஹார்ட் அண்ட் மெக் டொனால்ட் தீவுகள்ஹொலி சி (வாடிகன் நகர மாநிலம்)ஹோண்டுராஸ்ஹாங்காங்ஹங்கேரிஐஸ்லாந்துஇந்தியாஇந்தோனேஷியாஈரான் (இஸ்லாமிய குடியரசு)ஈராக்அயர்லாந்துஇஸ்ரேல்இத்தாலிஜமைக்காஜப்பான்ஜோர்டான்கஜகஸ்தான்கென்யாகிரிபட்டிகொரியா, ஜனநாயக மக்கள் குடியரசுகொரியா, குடியரசுகுவைத்கிர்கிஸ்தான்லாவோ மக்கள் ஜனநாயக குடியரசுலாட்வியாலெபனான்லெசோதோலைபீரியாலிபிய அரபு சமாகிரியாலீக்டன்ஸ்டைன்லிதுவேனியாலக்சம்பர்க்மக்காவுமாசிடோனியா, முன்னாள் யூகோஸ்லாவிய குடியரசுமடகாஸ்கர்மலாவிமலேஷியாமாலத்தீவுமாலிமால்டாமார்சல் தீவுகள்மார்டீனிக்மவுரித்தேனியாமொரிஷியஸ்மயோட்டேமெக்ஸிக்கோமைக்குரேனேசிய ஆபிரிக்காமால்டோவா குடியரசின்மொனாகோமங்கோலியாமொண்டெனேகுரோமொன்செராட்மொரோக்கோமொசாம்பிக்மியான்மார்நமீபியாநவ்ரூநேபால்நெதர்லாந்துநெதர்லாந்து அண்டிலிசுபுதிய கலிடோனியாநியூசீலாந்துநிகரகுவாநைஜர்நைஜீரியாநியுவேநோர்போக் தீவுவட மரியானா தீவுகள்நோர்வேஓமான்பாக்கிஸ்தான்பலாவுபனாமாபப்புவா நியூ கினிபராகுவேபெருபிலிப்பைன்ஸ்பிட்கன்போலந்துபோர்ச்சுகல்புவேர்ட்டோ ரிக்கோகத்தார்ரீயூனியன்ருமேனியாஇரஷ்ய கூட்டமைப்புருவாண்டாநெவிஸ்செயிண்ட் லூசியாசென் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்சுசமோவாசான் மரினோசாவோ டோமி மற்றும் பிரின்கிப்பிசவூதி அரேபியாசெனிகல்செர்பியாசீசெல்சுசியரா லியோன்சிங்கப்பூர்ஸ்லோவாக்கியா (ஸ்லோவாக் குடியரசு)ஸ்லோவேனியாசாலமன் தீவுகள்சோமாலியாதென் ஆப்பிரிக்காதென் ஜார்ஜியா, தெற்கு சாண்ட்விச் தீவுகள்தெற்கு சூடான்ஸ்பெயின்இலங்கைசெயின்ட் ஹெலினாசெயின்ட் பியர் மற்றும் மிக்குலன்சூடான்சுரினாம்ஸ்வால்பார்ட் மற்றும் ஜான் மாயென் தீவுகள்சுவாசிலாந்துஸ்வீடன்சுவிச்சர்லாந்துசிரியாதைவான்தஜிகிஸ்தான்தான்சானியா, ஐக்கிய குடியரசுதாய்லாந்துடோகோடோக்கெலாவ்டோங்காடிரினிடாட் மற்றும் டொபாகோதுனிசியாதுருக்கிதுர்க்மெனிஸ்தான்துருக்கிகள் மற்றும் காய்கோஸ் தீவுகள்துவாலுஉகாண்டாஉக்ரைன்ஐக்கிய அரபு நாடுகள்ஐக்கிய ராஜ்யம்ஐக்கிய மாநிலங்கள்அமெரிக்காவைச் சுற்றியுள்ள சிறிய தீவுகள்உருகுவேஉஸ்பெகிஸ்தான்Vanuatuவெனிசுலாவியத்நாம்விர்ஜின் தீவுகள் (பிரிட்டிஷ்)வர்ஜின் தீவுகள் (யு.எஸ்)வாலிஸ் மற்றும் ஃப்யுடுனா தீவுகள்மேற்கு சகாராஏமன்யூகோஸ்லாவியாசாம்பியாஜிம்பாப்வே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kadayanallur.org/archives/3039", "date_download": "2018-04-26T13:25:09Z", "digest": "sha1:PMMHN6EX4A6JU32XBRY77MFD22NAMBKI", "length": 9610, "nlines": 92, "source_domain": "kadayanallur.org", "title": "வீதியில் கூவி கூவி விற்கப்பட்ட 10 ம் வகுப்பு வினாத்தாள்: பரபரப்பு விற்பனை |", "raw_content": "\nவீதியில் கூவி கூவி விற்கப்பட்ட 10 ம் வகுப்பு வினாத்தாள்: பரபரப்பு விற்பனை\nஇன்று Buy cheap Levitra நடைபெறும் 10-ம் வகுப்பு அரையாண்டு கணித வினாத்தாள் உசிலம்பட்டி வீதிகளில் கூவி கூவி விற்பனை செய்யப்பட்டது. இதையடுத்து தேர்வு ரத்து செய்யப்பட்டது.\nதமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தற்போது அரையாண்டுத் தேர்வு நடந்து வருகிறது. இதில் 10 மற்றும் 12-வது வகுப்புகளுக்கு மட்டும் மாவட்ட அளவில் ஒரே மாதிரியான வினாத்தாள் வழங்கப்படுகிறது.\nஅரையாண்டுத் தேர்வு வினாத்தாள்கள் சீல் வைக்கப்பட்ட உறைகளில் குறிப்பிட்ட மையங்களில் வைத்து தலைமை ஆசிரியர்களிடம் கொடுக்கப்பட்டன. இன்று 10-வகுப்புக்கு கணிதத் தேர்வு. ஆனால் நேற்றே அந்த வினாத்தாள் உசிலம்பட்டியில் வெளியாகிவிட்டது. வெளியாகிய வினாத்தாளை சிலர் ஜெராக்ஸ் எடுத்து லாபம் பார்க்கத் துவங்கினர்.\nதெருவில் காய்கறி விற்பது போன்று வினாத்தாள் விற்கப்பட்டது. கணித வினாத்தாள் வெளியாகி ஜெராக்ஸ் கடைகளில் ஜோராக விற்பனை நடப்பது குறித்து அறிந்த மாணவர்கள் தங்கள் பெற்றோர்களுடன் வந்து வாங்கிச் சென்றுள்ளனர்.\nஒரு வினாத்தாள் ரூ. 10-க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. பெற்றோர்களுக்குத் தான் எவ்வளவு ஆவல். பிள்ளை எப்படியாவது மார்க் எடுத்தால் போதும் என்று நினைத்துவிட்டனர் போலும்.\nஇதையடுத்து மதுரை மாவட்டத்தில் இன்றைய தேர்வு ரத்து செய்யப்பட்டு நாளை பிற்பகல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.\nஇந்த 12 ஆவணங்களில் ஒன்று இருந்தாலும் நீங்க ஓட்டு போடலாம்\nமாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ. 2,000 ஊக்கத்தொகை: ஜெயலலிதா\n20-ஆம் தேதி பள்ளிகள் இயங்கும் -அரசு திடீர் அறிவிப்பு\nஅப்துல் கலாம் , வாஜ்பாய் பெயரில் மாணவ மாணவிகளுக்கு scholarship\nமாணவி ஹலிமா தர்வேஷ் சாதனை \nமலேசியாவில் இருந்து வெளிவரும் ‘நம்பிக்கை’\nஅபுதாபியில் மாபெரும் இரத்த தான முகாம்\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகடையநல்லூரில் … வீடு வீடாக சென்று நெல்லை கலெக்டர் ஆய்வு\nபரவி வரும் டெங்கு காய்சல் …மரண பயத்தில் கடையநல்லூர் மக்கள்.\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.nitharsanam.net/177304/news/177304.html", "date_download": "2018-04-26T13:03:52Z", "digest": "sha1:FS36JSQMY2CBS6XKORATIAJWQA4C24R2", "length": 9850, "nlines": 123, "source_domain": "www.nitharsanam.net", "title": "சுவிஸ் சூரிச்சில் அடுத்த சனிக்கிழமை மதியம், “வேரும் விழுதும்” கலைமாலை நிகழ்வு..! (அறிவித்தல்) : நிதர்சனம்", "raw_content": "\nசுவிஸ் சூரிச்சில் அடுத்த சனிக்கிழமை மதியம், “வேரும் விழுதும்” கலைமாலை நிகழ்வு..\nசுவிஸ் சூரிச்சில் அடுத்த சனிக்கிழமை மதியம், “வேரும் விழுதும்” கலைமாலை நிகழ்வு..\nசூரிச் வரசித்தி மஹால் மண்டபத்தில் எதிர்வரும் 17.03.18 சனிக்கிழமை மதியம் 02.00 மணிக்கு நடைபெற இருக்கும் “வேரும் விழுதும்” கலைமாலை நிகழ்வு…\n**பொது வாழ்வில், சமூக சேவகர்களான வயதில் மூத்தோர் கௌரவிப்பு…\n(தலைவர், புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத் தலைவர்)\nதிரு விந்தன் கனகரத்தினம் (வடமாகாண சபை உறுப்பினர்)\n(சமூக சேவகர் & முன்னாள் அதிபர் & சுவிஸ் ஒன்றிய புங்குடுதீவின் செயற்பாட்டாளர்)\n(பிரபல ஆன்மீக குரு -ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலயம் -சூரிச்)\n(சமூக சேவகர் & போஷகர், புங்குடுதீவு நலன்புரி சங்கம் லண்டன்)\n(வர்த்தகர் & தலைவர் , புங்குடுதீவு நலன்புரி சங்கம் லண்டன்)\n(வர்த்தகர் & பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றிய முக்கியஸ்தர்)\n(கலைஞர் & படைப்பாளிகள் உலக அமைப்பின் தலைவர், கனடா)\n(செயலாளர், புங்குடுதீவு நலன்புரி சங்கம், லண்டன்)\n(போஷகர், புங்குடுதீவு நலன்புரி சங்கம் லண்டன்)\nதிரு.இராசமாணிக்கம் இரவீந்திரன் (வர்த்தகர், சுவிஸ்)\nதிரு. இளையதம்பி ஸ்ரீதாஸ் (வர்த்தகர், சுவிஸ்)\n“சுவிஸ் ராகம்” கரோக்கி இசைக்குழுவின் இன்னிசை கானங்கள்..\n“அறிவுத்திறன்” போட்டியில் வெற்றியீட்டிய, & கலந்து கொண்ட மாணவர்களுக்கான பரிசளிப்பு..\nவாணி சர்மா ஆசிரியையின் “அக்கடமி ஆப் ஆர்ட்” மாணவிகளின் பல்வேறு நடனங்கள்..\n“ட்ரீம் பாய்ஸ்” மற்றும் பல்வேறு நடனக் குழுக்களின் டான்ஸ்..\nஇளையோர்களின் “ஹிப் ஹாப்” நடனங்கள், நாட்டியங்கள், உட்பட இளையோரின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் “ஆட்டம், பாட்டம், கொண்டாட்டமாக” நடைபெறவுள்ளது.\nசுவிஸ் வாழ் தமிழ் மக்கள் அனைவரும் தவறாது கலந்து சிறப்பிக்குமாறு அன்புரிமையுடன் கேட்டுக் கொள்கிறோம்..\nகாலம் & நேரம்:- 17.03.2018 அன்று சனிக்கிழமை மதியம் இரண்டு (14.00) மணிக்கு,\n“அனைவரும் வருக, ஆதரவு தருக” (அனுமதி இலவசம்)\nஉடலுறவின் போது எதுவெல்லாம் உங்கள் துணைக்கு பிடிக்கும்\nகர்ப்பகாலத்தில் தாம்பத்யம், அசைவம் சரியா\nமரண காமெடி- இது நம்ம ஊரு நடிகர்கள் – பழமார்நேரி பஞ்சாயத்து\nஇந்திய அரசியலில் ‘ஆளுநர்’ பதவிகள்\nநல்ல தூக்கத்துக்கு நாளை செய்ய வேண்டியதை எழுதுங்கள்\nதாம்பத்திய இன்பத்தின் போது தவிர்க்க வேண்டியவை\nசினிமா துறையில் இந்த வசனத்தை இவரை தவிர யாராலும் பேச முடியாது\nஉலக புகழ் பெற்ற குரங்கு செல்பி புகைப்பட வழக்கு : காப்புரிமை கோர முடியாது நீதிமன்றம் தீர்ப்பு\nஅணு சக்தி ஒப்பந்தம் மோசமானது என்றால் அமெரிக்க கையெழுத்திட்டது : ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி\nஇலங்கைப் பொலிஸாரின் பொருட்களை வைத்திருந்த பிரிட்டன் குடியுரிமை பெற்ற நபர் கைது\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilthottam.in/t27168-topic", "date_download": "2018-04-26T13:03:18Z", "digest": "sha1:REQBXDSF3ZCK3LH4CRRHSF6DOHHKLKHT", "length": 26846, "nlines": 251, "source_domain": "www.tamilthottam.in", "title": "சென்னைல் பேருந்தில் செல்லும் மக்களுக்கு ஒரு அறிவிப்பு...!", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» டி20 போட்டிகளில் கேப்டனாக 5 ஆயிரம் ரன்களை கடந்து டோனி சாதனை\n» டென்னிஸ் வீரர்கள் ரோகன் போபண்ணா, யூகி பாம்ப்ரி பெயர்கள் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை\n» இந்த உலகத்துல நல்லவங்க, கெட்டவங்கன்னு யாரும் இல்ல....\n» வாசகர் கவிதை - தொடர் பதிவு\n» எதுக்காக உன் காதலியை கிணத்துல தள்ளிவிட்டே...\n» குற்றத்திற்கும் நீதிக்கும் உள்ள உறவு...\n» நரசிம்மர் பற்றிய 30 வழிபாட்டு குறிப்புகள்\n» அமர்நாத் யாத்திரை ஜூன் 28-ம் தேதி தொடங்குகிறது\n» சருமப் பிரச்னைக்கு மாம்பழம் -\n» ‘சிற்றெறும்பு கட்டெறும்பு’ - கமல்ஹாசன், அமைச்சர் ஜெயக்குமார் வார்த்தை ஜாலத்தால் ஒருவருக்கொருவர் கிண்டல்\n» 5,000 குஜராத் விவசாயிகள் தற்கொலைக்கு மனு\n» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்\n» அமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி\n» இந்தியர்களை பாதிக்கும் ‘எச்-4’ விசா ரத்து நடவடிக்கைக்கு அமெரிக்க எம்.பி.க்கள் எதிர்ப்பு, ஐ.டி. துறையும் கண்டனம்\n» பலாத்காரத்துக்கு ஆளாகும் ஆண் குழந்தைகளுக்கும் இழப்பீடு'\n» நிலக்கரியை விட கருப்பாக இருக்கும் கிரகம் கண்டுபிடிப்பு\n» பிரபல பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி மரணம்: கமலுக்கு முதல் பின்னணிப் பாடல் பாடியவர்\n» உறவு முன்னே...ப்ராப்ளம் பின்னே...\n» கவர்ச்சி நடிகைகிட்ட பிடிச்சது, அவரோட நடிப்பு...\n» 2 மணி நேரம் பொறுக்க முடியாதா கஸ்தூரி..\n» தமிழில் காலூன்ற தடுமாறும் பிறமொழி நடிகர்கள்\n» பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்\n» வாழ்க்கையை ஓஹோன்னு வாழ கன்ஃபூசியஸ் சொன்ன 10 கட்டளைகள்...\n» இரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு\n» ரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது: மக்கள் மன்ற மாநில செயலாளர் பேச்சு\n» தாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து\n» காங்., கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக்கறை: சல்மான் குர்ஷித் சர்ச்சை\n» நாடு முழுவதும் 24 போலி பல்கலை.,கள்\n» உ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்\n» சுப்ரீம் கோர்ட் எதிர்காலம்: ஆலோசிக்க நீதிபதிகள் கோரிக்கை\n» 2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்: ஜூன் 16-ம் தேதி இந்தியா-பாக். மோதல்\n நூல் ஆசிரியர் : முனைவர் பேராசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி\n» சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து\n» உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி\n» தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்\n» பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது\n» கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு\n» கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்\n» கிறிஸ்தவ பெண்ணுக்கு திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் பதவி: நடிகை ரோஜா கண்டனம்\n» கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன\n» கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி\n» கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு\n» நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nசென்னைல் பேருந்தில் செல்லும் மக்களுக்கு ஒரு அறிவிப்பு...\nதமிழ்த்தோட்டம் :: செய்திச் சோலை :: செய்திச் சங்கமம்\nசென்னைல் பேருந்தில் செல்லும் மக்களுக்கு ஒரு அறிவிப்பு...\nமுதலில் ஆங்கிலத்தில் பதிவு செய்ததற்கு மன்னிக்கவும்...இது தற்போது வந்த செய்தி,\nஅலுவலகத்தில் இருப்பதனால் உடனே தமிழில் மாற்றம் செய்ய முடியவில்லை..\nநண்பர்கள் இதை தமிழில் மாற்றம் செய்ய வேண்டி கேட்டு கொள்கிறேன்\nRe: சென்னைல் பேருந்தில் செல்லும் மக்களுக்கு ஒரு அறிவிப்பு...\nஉண்மையை சொல்லுங்க இது சிங்கபூர்லதானே நடந்தது\nRe: சென்னைல் பேருந்தில் செல்லும் மக்களுக்கு ஒரு அறிவிப்பு...\nஆமாம் வருங்கால சிங்கபுராக மாறும் சென்னைய்ல் தான் நடந்தது\nRe: சென்னைல் பேருந்தில் செல்லும் மக்களுக்கு ஒரு அறிவிப்பு...\nஉங்கள் பதிலை படித்த உடன் கீழ் கண்ட சம்பவம் தான் நினைவுக்கு வருகிறது\nஒரு தடவை சிங்கப்பூர் அமைச்சர் பீகார் போனார். அங்கே லாலு முதல் அமைச்சர்.\nசிங்கப்பூர் அமைச்சர்: 3 மாதம் time கொடுத்தால், பிகாரை சிங்கப்பூராக மாற்றிவிடுவோம்\nலாலு : நீங்க 3 நாள் time குடுங்க சிங்கப்பூரை பிகாரா நான் மாற்றுகிறேன்\nRe: சென்னைல் பேருந்தில் செல்லும் மக்களுக்கு ஒரு அறிவிப்பு...\nநெல்லை அன்பன் wrote: உங்கள் பதிலை படித்த உடன் கீழ் கண்ட சம்பவம் தான் நினைவுக்கு வருகிறது\nஒரு தடவை சிங்கப்பூர் அமைச்சர் பீகார் போனார். அங்கே லாலு முதல் அமைச்சர்.\nசிங்கப்பூர் அமைச்சர்: 3 மாதம் time கொடுத்தால், பிகாரை சிங்கப்பூராக மாற்றிவிடுவோம்\nலாலு : நீங்க 3 நாள் time குடுங்க சிங்கப்பூரை பிகாரா நான் மாற்றுகிறேன்\nRe: சென்னைல் பேருந்தில் செல்லும் மக்களுக்கு ஒரு அறிவிப்பு...\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nRe: சென்னைல் பேருந்தில் செல்லும் மக்களுக்கு ஒரு அறிவிப்பு...\nதமிழ்த்தோட்டம் :: செய்திச் சோலை :: செய்திச் சங்கமம்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://seithupaarungal.com/2015/01/13/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2018-04-26T13:08:56Z", "digest": "sha1:7CFIVQLGXJ77ZHX2WA3PVC5Y6BYKGCHJ", "length": 11354, "nlines": 123, "source_domain": "seithupaarungal.com", "title": "எழுத்தாளர் பெருமாள்முருகன் என்பவனுக்காக பெ.முருகன் அறிக்கை – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nஅரசியல், இலக்கியம், சர்ச்சை, தமிழ்நாடு\nஎழுத்தாளர் பெருமாள்முருகன் என்பவனுக்காக பெ.முருகன் அறிக்கை\nஜனவரி 13, 2015 ஜனவரி 13, 2015 த டைம்ஸ் தமிழ்\nஎழுத்தாளன் பெருமாள்முருகன் செத்துவிட்டான். அவன் கடவுள் அல்ல, ஆகவே உயிர்த்தெழப் போவதில்லை. மறுபிறவியில் அவனுக்கு நம்பிக்கையும் இல்லை. இனி அற்ப ஆசிரியனாகிய பெ.முருகன் என்பவன் மட்டுமே உயிர் வாழ்வான்.\nபெருமாள்முருகனுக்கு ஆதரவு தெரிவித்தும் கருத்துரிமையை முன்னெடுத்தும் போராடிய பத்திரிகைகள், ஊடகங்கள், வாசகர்கள், நண்பர்கள், எழுத்தாளர்கள், அமைப்புகள், கட்சிகள், தலைவர்கள், மாணவர்கள் முதலிய அனைத்துத் தரப்பினருக்கும் நன்றிகள்.\n‘மாதொருபாகன்’ நூலோடு பிரச்சினை முடிந்துவிடப் போவதில்லை. வெவ்வேறு அமைப்புக்கள், தனிநபர்கள் அவனுடைய ஏதாவது நூலை எடுத்துப் பிரச்சினை ஆக்கக் கூடும். ஆகவே பெருமாள்முருகன் இறுதியாக எடுத்த முடிவுகள் வருமாறு:\n1. பெருமாள்முருகன் தொகுத்த, பதிப்பித்த நூல்கள் தவிர அவன் எழுதிய நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் ஆகிய அனைத்து நூல்களையும் அவன் திரும்பப் பெற்றுக்கொள்கிறான். இனி எந்த நூலும் விற்பனையில் இருக்காது என்பதை உறுதிபடத் தெரிவித்துக்கொள்கிறான்.\n2. பெருமாள்முருகனின் நூல்களை வெளியிட்டுள்ள காலச்சுவடு, நற்றிணை, அடையாளம், மலைகள், கயல்கவின் ஆகிய பதிப்பகத்தார் அவன் நூல்களை விற்பனை செய்ய வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறான். உரிய நஷ்ட ஈட்டை அவர்களுக்கு பெ.முருகன் வழங்கிவிடுவான்.\n3. பெருமாள்முருகன் முருகனின் நூல்களை இதுவரை வாங்கியோர் தாராளமாக அவற்றைத் தீயிட்டுக் கொளுத்திவிடலாம். யாருக்கேனும் நஷ்டம் எனக் கருதி அணுகினால் உரிய தொகையை அவருக்கு வழங்கிவிடத் தயாராக உள்ளான்.\n4. இனி எந்த இலக்கிய நிகழ்வுக்குப் பெருமாள்முருகனை அழைக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறான்.\n5. எல்லா நூல்களையும் திரும்பப் பெறுவதால் சாதி, மதம், கட்சி உள்ளிட்ட அமைப்புகள் போராட்டத்திலோ பிரச்சினையிலோ ஈடுபட வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்கிறான்.\nஅவனை விட்டுவிடுங்கள். அனைவருக்கும் நன்றி.\nகுறிச்சொல்லிடப்பட்டது அடையாளம், அரசியல், இலக்கியம், கயல்கவின், காலச்சுவடு, சர்ச்சை, தமிழ்நாடு, நற்றிணை, மலைகள், மாதொருபாகன்\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postதிருவள்ளுவர் தினத்தில் மதுவை ஒழிக்க உள்ளாட்சி அமைப்புகளில் தீர்மானம்: குமரி அனந்தன் கோரிக்கை\nNext postஜெயலலிதாவை சந்தித்தார் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி\n“எழுத்தாளர் பெருமாள்முருகன் என்பவனுக்காக பெ.முருகன் அறிக்கை” இல் 3 கருத்துகள் உள்ளன\nPingback: இலக்கிய ஃபாசிசம் வெல்கிறது | சிலிகான் ஷெல்ஃப்\nPingback: பெருமாள் முருகன் – ஹிந்துத்துவர்களுக்கு சில கேள்விகள் | சிலிகான் ஷெல்ஃப்\nPingback: பெருமாள் முருகனின் மாதொருபாகன் வழக்கு;கருத்துரிமைக்காகக் கரம் உயர்த்துவோருக்கு நம்பிக்கை த�\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nநீங்களே செய்யலாம் ஃப்ரூட் ஃபலூடா\nபிஸ்தா ஐஸ்கிரீம் செய்வது எப்படி\nகருப்பட்டி கம்பு சேமியா எப்படி செய்வது\nஸ்டாக்கிங் பூக்கள் செய்வது எப்படி\nமணி வளையல் செய்வது எப்படி\nஎம்பிராய்டரி: பிரஞ்ச் நாட்’இல் சூரிய பூக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://anony-anony.blogspot.com/2008/07/", "date_download": "2018-04-26T13:07:48Z", "digest": "sha1:I3S3D5AAJQMDAYB6Z3H6RDJXKCKHOBJE", "length": 6063, "nlines": 224, "source_domain": "anony-anony.blogspot.com", "title": "ANONYMOUS: July 2008", "raw_content": "\nஎன்னை தூக்கி கடலில் போடுங்கள்...\nமொக்கை போட்டது ALIF AHAMED | Labels: அரசியல், மொக்கை\nஎன்னை தூக்கி கடலில் போடுங்கள்\nஅதில் ஏறி பயணம் செய்யுங்கள்\nஇலங்கை கடற்படை சுட்டு கொல்லட்டும்..\nபோங்காடா போய் ஓட்டு போடுங்க (1)\nஎன்னை தூக்கி கடலில் போடுங்கள்...\nவேலன்:-பைல்களை வேண்டிய அளவு பிரிக்க -சேர்க்க -தகவல்களை மறைத்துவைக்கFile friend\nபொழுதுகளைக் களவாடிய டூரிங் டாக்கீஸ்\nMicrosoft Office: ரிப்பன் மெனுவில் தேவையான கட்டளைகளை கொண்ட புதிய டேபை உருவாக்க..\nஎன்னை தூக்கி கடலில் போடுங்கள்...\nபோங்காடா போய் ஓட்டு போடுங்க (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://news.lankasri.com/othercountries/03/176515?ref=category-feed", "date_download": "2018-04-26T13:42:37Z", "digest": "sha1:Q2ZR2RD6QU733CLZSMIOGSO64QANVQSF", "length": 9029, "nlines": 142, "source_domain": "news.lankasri.com", "title": "விமானப் பணிப்பெண்ணை பிணைக்கைதியாக்கிய பயணி: அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம் - category-feed - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவிமானப் பணிப்பெண்ணை பிணைக்கைதியாக்கிய பயணி: அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்\nசீன தலைநகர் பீஜிங் நோக்கி புறப்பட்டுச் சென்ற விமானம் ஒன்றில் பயணி ஒருவர் பேனா முனையில் விமானப் பணிப்பெணை மிரட்டி பிணைக்கைதியாக சிறைபிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகுறித்த சம்பவத்தை அடுத்து ஏர் சீனா விமானம் CA1350 Zhengzhou பகுதிக்கு திருப்பி விடப்பட்டது.\nசீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள சங்சா விமான நிலையத்தில் இருந்து தலைநகர் பீஜிங் நோக்கி CA1350 எண் கொண்ட ஏர் சீனா விமானமானது இன்று காலை புறப்பட்டு சென்றது.\nகாலை 11 மணியளவில் அந்த விமானம் பீஜிங் நகரை சென்றடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சுமார் 10 மணியளவில் Zhengzho நகர விமான நிலையத்தின் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட விமானி,\nஎக்சிகியூட்டிவ் கிளாஸ் பகுதியில் கூரிய ஆயுதத்தை வைத்து விமானப்பணிப் பெண்ணை சிறைபிடித்து வைத்து, அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் மிரட்டி வருவதாக தெரிவித்து, அவசரமாக தரையிறங்க அனுமதி கேட்டார்.\nஇதையடுத்து, Zhengzho விமான நிலையத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. ஏராளமான பொலிசாரும், பாதுகாப்பு மற்றும் அதிரடிப் படையினரும், ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்களும் குவிக்கப்பட்டன.\nஅந்த விமானம் தரையிறங்குவதற்குள் பணிப்பெண்ணை சிறைபிடித்து வைத்திருந்த நபர்மீது அதிரடியாக தாக்குதல் நடத்தி அவரை விடுவித்ததாக தெரிகிறது.\nஅப்போது, அந்த மர்மநபர் பேனா முனையை பணிப்பெண்ணின் கழுத்தில் வைத்து மிரட்டிய விபரம் தெரியவந்துள்ளது.\n இந்த நாடகம் எதற்காக நடந்தது என்பது தொடர்பான தகவல்கள் ஏதும் வெளியிடப்படாத நிலையில் இந்த சம்பவம் நடைபெற்ற விமானத்தில் வந்த பயணிகள் அனைவரும் மாற்று விமானத்தின் மூலம் பீஜிங் நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://puthu.thinnai.com/?p=6177", "date_download": "2018-04-26T13:35:39Z", "digest": "sha1:DETIYGNEOENKTN2F5JZJ6MJ5AKTU4465", "length": 7986, "nlines": 94, "source_domain": "puthu.thinnai.com", "title": "அந்த நொடி | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஎதை கொண்டு நிரப்ப அதை\nஅதன் முனையை கூட நிரப்ப முடிவதில்லை\nதேடிய பொழுதுகள் உன்னை நிரப்ப போவதில்லை\nதேடாத பொழுதுகலால் உன்னை நிரப்பும் சாத்தியமும் இல்லை\nSeries Navigation ஜென் ஒரு புரிதல் – பகுதி 19முள் எடுக்கும் முள்\nமலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை – 1\nதமிழ் பெண் கவிஞர்கள் – ஆங்கிலத்தில் – ஆதி மந்தியார் முதல் உமா மஹேஸ்வரி வரை\nஅர்ஜண்ட் வெயிட் லாஸ்.. ஒரு யாத்ரா டிக்கட் ப்ளீஸ்..\nபழமொழிகள் கூறும் உதவி எனும் வாழ்க்கை நெறி\nஜென் ஒரு புரிதல் – பகுதி 19\nஇதுவும் அதுவும் உதுவும் – 5\nஇந்திய அணுமின்சக்தித் தொழில் நுட்பம் முதிர்ச்சி யானதா அணுவியல் இயக்குநர் முதிர்ச்சி பெற்றவரா \nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கோடாரியில் தகர்ப்பாய் (கவிதை -52 பாகம் -1)\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) திருமணப் பாதையில் (கவிதை – 50 பாகம் -5)\nபஞ்சதந்திரம் தொடர் 18 சமுத்திரமும் நீர்க்குருவியும்\nதமிழ் விக்கிப்பீடியா ஒரு ஊடகப் போட்டி\nதோள்களில் அமர்ந்திருக்கும் மரணத்தின் தூதுவன்\nமுகம்மது யூனுஸ் அறிஞர் அண்ணாவை ஹாங்காங்கில் சந்தித்தது பற்றிய உரை\nபிரான்சு கம்பன் கழகத்தின் 10 -ஆம் ஆண்டு விழா\nநானும் பிரபஞ்சனும் கட்டுரை குறித்து சில கருத்துகள்:\nமுன்னணியின் பின்னணிகள் – 14 சாமர்செட் மாம்\nமூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 16\nPrevious Topic: முள் எடுக்கும் முள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/junction/finished-serials/damaal-dumeel/2015/apr/17/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF---8-%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D...-%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B2%E0%AF%8D...-1099746.html", "date_download": "2018-04-26T13:02:04Z", "digest": "sha1:GYURFSMNUFHISSR7QIWSTDBTVAINTZKH", "length": 12996, "nlines": 177, "source_domain": "www.dinamani.com", "title": "பகுதி - 8 டமால்... டுமீல்...- Dinamani", "raw_content": "\nமுகப்பு ஜங்ஷன் முடிந்த தொடர்கள் டமால்… டுமீல்\nபகுதி - 8 டமால்... டுமீல்...\nகணவனுடன் கசமுசா இல்லை என்று தெரிவிக்க, அவரோடு செல்ஃபி எடுத்து முகநூலில் போடுகிறார்களாம்.\nசத்யம் ராமலிங்க ராஜூ, சிறையில் கைதிகளுக்கு கணினி பாடம் எடுப்பாராம்…\n‘எஸ்கேப்’ பட்டனை உபயோகிப்பது பற்றி முதல் பாடம் அமையுமா\nஜப்பானில் கணவன் உபயோகித்த டாய்லெட்டில் நாற்றம் தாங்காமல் கத்தியால் குத்திய மனைவி.\nமுடி வெட்டுபவர்களே மகிழ்ச்சியுடன் தொழிலில் ஈடுபடுகிறார்களாம்.\nஇதைப் பாராட்டி, வெள்ளைத் துணிக்கு பதில் மரியாதையாகப் பொன்னாடையை போர்த்த வேண்டும்.\n100 வயதான அமெரிக்கர், கோடாலியால் 88 வயதான மனைவியைக் கொன்று தற்கொலை செய்து கொண்டார்.\nஎங்கே சிரஞ்சீவிகளாக ஆகிவிடுவோமோ என்கிற மிரட்சியால் இருக்குமோ\nஒபாமாவுக்கு தினம் டிவி சீரியல் பார்ப்பதில் கொள்ளை ஆசையாம்.\nஆப்ரகாம் லிங்கன் காலத்தில் ஆரம்பமான அமெரிக்க சீரியலா\nராகுவும் கேதுவும் சகோதரர்களாம். ராகு அண்ணன், கேது தம்பி.\nஆனால் ராகு(வுக்கு) காலம் வந்ததுபோல், கேது(வுக்கு) காலம் வராதது, கேதுவின் போறாத காலம்.\nடிராபிக் ராமசாமி, வரதட்சணை வாங்க மறுத்ததால் அவரது தந்தை கல்யாணத்தை புறக்கணித்தாராம்.\nகோபித்துக்கொண்ட அப்பா, காசி யாத்திரைக்கு கிளம்பிவிட்டாரா\nஅமராவதியை ஆந்திராவின் தலைநகராக சந்திரபாபு நாயுடு அறிவிப்பு.\nஇந்திராவுக்கு ஒரு அமராவதி. சந்திராவுக்கும் ஒரு அமராவதியா\nவிமானச் சக்கரத்தில் மறைந்து இரண்டு மணி நேரம் பறந்து வாலிபர் கைது.\nசீன எழுத்தாளர் ஸாங் யியி, கோடிகள் செலவழித்து ஷேக்ஸ்பியரைப்போல் உருவத்தை மாற்றிக்கொண்டார்.\nAs you like it என்று அவரது மனைவி கடுப்புடன் கைகழுவிவிட்டாரா\nஏமன் நாட்டில் இருந்து தப்பி வந்த பிறந்து ஆறே நாளான பெண் சிசு.\nஎமன் பிடியிலிருந்து தப்பிய இக் குழந்தை எமனுக்கு எமன்தான்.\n‘எலி’ படத்தில் வடிவேலு, ஜாக்கி சான் ஸ்டைலில் சண்டை போடுகிறாராம்.\nநடிகர் வடிவேலு, சிரிப்பு வெடிவேலாக மாறி தற்போது அடிவேலா\nநாய்க் கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு ரூ.2 லட்சம் தர நீதிமன்றம் உத்தரவு.\nஇனி, தெரு நாயைப் பார்த்தால், ‘கொஞ்சம் கடிங்க பாஸ்’ என்று கெஞ்சுவார்களா\nதொடர்ந்து சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு ஆண்மைத் தன்மை குறைந்துவிடுமாம்….\nஎமனின் மனைவியின் பெயர் ஐயோ.\n60 பெண்களைப் பெற்று ஆண்டி ஆவாய் என்கிற சாபத்தால், நாரதருக்குப் பிறந்த பெண்களுக்கு 60 ஆண்டுகளின் பெயராம்.\nஅத்தனையையும் ஞாபகம் வைக்கமுடியாமல் ‘நா-ராயணி நா-ராயணி’ என்று பொதுவாக குரல் கொடுத்துக்கொண்டிருந்தாரா\nஅமெரிக்க புத்தகக் கடைகளில் அதிகம் திருடப்படும் புத்தகம், பைபிள்.\nஅதைப் படித்தவர்கள் திருடமாட்டாரகள். ஆகவே, திருடுபவர்கள் அதைப் படித்திருக்கமாட்டார்கள் போலிருக்கு,\nதாய்லாந்து மன்னர் முடிசூட்டு விழாவில் திருப்பாவை பாடப்படுகிறதாம்…\nஆண்டாண்டுகளாக ஆள ஆண்டாளின் அருள் கிட்டவா…\nகுடித்துவிட்டு வரும் மணவர்களை, கல்லூரி டிஸ்மிஸ் செய்யலாம் - சென்னை உயர்நீதி மன்றம்.\nபின்னே, மாணவர்கள் குடித்துவிட்டா வருவது\nஈர்ப்புடைய சிறுகதைகளைத் தந்த ஜெயகாந்தன் சமீபத்தில் மறைந்தார்.\nஅவர் எழுத்துக்களில் இருந்தது வெறும் காந்தம் அல்ல, ஜெயகாந்தம்\n10 வருடங்கள் ஓடிய டீசல் வாகனங்களுக்குத் தடை.\nஇனி, டீசல் வண்டிகள் ஈசலாகப் பெருகாது.\nகேரளாவில் கடலை விற்று பொறியியல் படிக்கும் மாணவர்.\n பெண் குட்டிகளுடன் கடலை போடாமல், கடலை விற்றுப் படிக்கிறாரே\nநெதர்லாந்து முதியோர் காப்பகத்தில், கல்லூரி மாணவர்கள் இலவசமாகத் தங்கி அவர்களுக்கு உதவுகிறார்களாம்.\n‘வானவில்லைப்போல வரும் வாலிபம் போனபின் திரும்பி வராது’ என்று உணர இது வாய்ப்பல்லவா\nசிறுநீரை முகர்ந்து பார்த்து, ஆண்களின் ப்ராஸ்டேட் கேன்ஸரை நாய்கள் கண்டுபிடித்துவிடுமாம்.\nCAT scan மாதிரி இது DOG scan போலிருக்கு.\nஸ்டண்ட் மாஸ்டர் மகன் திருமண ஆல்பம்\nநாயகி இஷாரா நாயர் - சாஹில் திருமணம்\nசச்சின் பிறந்த நாள் ரசிகர்கள் வாழ்த்து\nசஞ்சு படத்தின் டீஸர் வெளியீடு\nரயில் மோதி 11 மாணவர்கள் பலி\nஜெயகாந்தன் 84ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா\nதலையில் காயம் ஆனால் காலில் ஆபரேசன்\nஇளவரசர் தம்பதியருக்கு 3வது குழந்தை பிறந்தது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vivalanka.com/news/page.jsp?articleid=154979", "date_download": "2018-04-26T14:05:05Z", "digest": "sha1:M4Q472ELR5TNZ3P4SNP3YTTVFVVKUCMV", "length": 4160, "nlines": 116, "source_domain": "www.vivalanka.com", "title": "Oregon considers statewide ban on plastic bags", "raw_content": "\nVideo: News 1st:டயகம வெஸ்ட் மூன்றாம் பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் சித்திர தேர் பவணி\nVideo: News 1st:நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்\nVideo: News 1st:மண்டத்தீவு பகுதியில் முதலை ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது\nVideo: News 1st: குடிபோதையில் வந்த சிலரால் கட்டுகஸ்தொட்டை வைத்தியசாலை ஊழியர்களுக்கு அச்சுறுத்தல்\nVideo: News 1st: சித்ராகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் காயம்\nVideo: News 1st:எல்ல பகுதியில் விபத்து: 3 வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு\nVideo: News 1st:புத்தாண்டு காலப்பகுதியில் 95 மில்லியன் ரூபா வருமானம் – இலங்கை போக்குவரத்து சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} {"url": "https://jmmedia.lk/2016/08/19/a-boy-atrocities-in-syria/", "date_download": "2018-04-26T13:32:26Z", "digest": "sha1:2KEYFOCHXALTRYSSCNO57TXURTK6V7KX", "length": 4571, "nlines": 56, "source_domain": "jmmedia.lk", "title": "சிரியா கொடூரங்களுக்கு மற்றுமொரு உதாரணமாகிய சிறுவன் (Video) – JM MEDIA.LK", "raw_content": "\nகடுகண்ணாவ கற்குகைக்கு தற்காலிகமாக பூட்டு\nஇறப்பர் தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்து தொடர்பில் தொழிற்சாலையின் முகாமையாளர் கைது\nவட கொரியாவுக்கு ரகசிய பயணம் : மைக் பாம்பேயோ\nபௌத்தகுருமாருக்கு வாக்குறுதி வழங்கிய பிரதமர்\nசிரியா கொடூரங்களுக்கு மற்றுமொரு உதாரணமாகிய சிறுவன் (Video)\n2011 ஆம் ஆண்டு ஆரம்பித்த உள்நாட்டுப் போர் காரணமாக இதுவரை 2.7 இலட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.\nஇலட்சக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறி அகதிகளாக உள்ளனர்.\nபெண்கள், குழந்தைகள் என்ற பேதமில்லாமல் உள்நாட்டுப் போரினால் மடிந்தவர்கள் ஏராளம்.\nஇந்நிலையில், சிரியாவின் அலெப்போ நகரில் விமானத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட சிறுவன் இரத்த காயங்களுடன் அமர்ந்திருக்கும் புகைப்படம் வெளியாகி பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.\n4 அல்லது 5 வயது மதிக்கத்தக்க சிறுவனை சிவில் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தூக்கிச் சென்று அம்பியுலன்சில் ஏற்றி வைக்கும் காட்சியை CNN வெளியிட்டுள்ளது.\nதற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்படும் சிறுவனின் படம் சிரியாவில் நடக்கும் கொடூரங்களுக்கு மற்றுமொரு எடுத்துக்காட்டாக உள்ளது.\n← மேலுமொரு தங்கத்தை வென்றெடுத்தார் உசைன் போல்ட்டு\nபந்துலவின் அமைப்பாளர் பதவி மேல் மாகாண சபை அமைச்சர் காமினி திலகசிறிக்கு →\nஜிம்பாப்வே அதிபராகப் பொறுப்பேற்றார் எமர்சன் முனங்காக்வா\nமோதியின் இஸ்ரேல் சுற்றுப்பயணம்: இந்திய நிலைப்பாட்டில் ஒரு திருப்புமுனையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/cinema-stars-political-leaders-welcoming-rajinikanth-political-306949.html", "date_download": "2018-04-26T13:18:18Z", "digest": "sha1:QMY2WFD23EBNCHWPAPILNXWRHMQG5YOY", "length": 15535, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரஜினி அரசியல் அறிவிப்பு.. பிரபலங்கள் என்ன சொல்றாங்க தெரியுமா? | Cinema stars and political leaders welcoming Rajinikanth political arrival - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\n» ரஜினி அரசியல் அறிவிப்பு.. பிரபலங்கள் என்ன சொல்றாங்க தெரியுமா\nரஜினி அரசியல் அறிவிப்பு.. பிரபலங்கள் என்ன சொல்றாங்க தெரியுமா\nகட்சி தொடங்குவது உறுதி, ஆனா... தெளிவாக சொல்லாத ரஜினி\nநாளை வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாள்.. காங். வேட்பாளர் நடிகர் அம்பரீஷ் எங்கே\nஉடல்பரிசோதனைக்காக இன்று அமெரிக்கா புறப்படும் ரஜினி... பயண திட்ட மத்தியில் மன்றத்தினருடன் ஆலோசனை\nகாலா படத்திற்கு தடை கோரிய மனு.. சென்னை ஹைகோர்ட் தள்ளுபடி\n அரசியல் அறிவிப்பை எதிர்பார்த்த ரசிகர்கள் ஷாக்\nகர்நாடக காவியின் தூதுவர் ரஜினி என பாரதிராஜா கூறியதில் பிழையில்லையே- சீமான்\nதமிழர்களின் ரத்தத்தில் ராஜவாழ்க்கை வாழும் ரஜினி எங்களை வன்முறையாளர் என்பதா- பாரதிராஜா நறுக்\nஜாதி மதம் வேறுபாடு இல்லா ஆன்மீக அரசியல் செய்ய போகிறேன் - ரஜினி அதிரடி\nசென்னை: நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் வருகைக்கு பல்வேறு பிரபலங்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.\nஅரசியலுக்கு வருவது உறுதி என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். மேலும் தனிக்கட்சி 234 தொகுதிகளிலும் போட்டியிட போவதாகவும் நடிகர் ரஜினிகாந்த் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.\n20 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருந்த அவரது ரசிகர்களுக்கு இந்த அறிவிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ரஜினியின் அறிவிப்புக்கு பல்வேறு பிரபலங்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.\nசகோதரர் ரஜினியின் சமூக உணர்வுக்கும் அரசியல் வருகைக்கும் வாழ்த்துக்கள். வருக வருக\nநடிகர் கமல்ஹாசன் ரஜினியின் அரசியல் வருகைக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார். சகோதரர் ரஜினியின் சமூக உணர்வுக்கும் அரசியல் வருகைக்கும் வாழ்த்துக்கள். வருக வருக\nஅதிர்ச்சி ஆனால் ஆனந்த அதிர்ச்சி அளித்து விட்டார் ரஜினி... இனி அவர் பின் வாங்கக் கூடாது. உணர்ச்சிப் பெருக்கில் ரசிகர்கள் கட்டுப்பாடு மீறல் கூடாது.சட்டம் ஒழுங்கு முக்கியம். வாழ்த்துக்கள் @dinathanthi @pttv_tweets @news7tamil @ThanthiTV @News18TamilNadu\nநடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் அறிவிப்பின் மூலம் ஆனந்த அதிர்ச்சி அளித்துவிட்டார் என நடிகர் விவேக் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ரஜினி பின் வாங்கக் கூடாது. உணர்ச்சிப் பெருக்கில் ரசிகர்கள் கட்டுப்பாடு மீறல் கூடாது. சட்டம் ஒழுங்கு முக்கியம். வாழ்த்துக்கள் என்று அவர் கூறியுள்ளார்.\nரஜினியின் அரசியல் வருகையை நடிகரும் இயக்குநருமான சமுத்திரக்கனி வரவேற்றுள்ளார். அவர் தனது டிவிட்டில் வாங்க.. வாங்க.. என தெரிவித்துள்ளார்.\nஇயக்குநர் கார்த்திக் சுப்புராஜும் ரஜினியின் வருகைக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார். தலைவா... வா தலைவா.. தனித்து வா தலைவா.. அனைவருக்கும் தேவையான மாற்றமாக இரு.. என தெரிவித்துள்ளார்.\nஊழலற்ற நிர்வாகத்துக்காக நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவது பாராட்ட தக்கது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். பாரதிய ஜனதா கட்சிக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆதரவளிப்பார் என நம்புகிறேன் என்றும் அவர் கூறியுள்ளார். துணுச்சலுடன் அரசியல்களத்திற்கு வருகிறேன் என அறிவித்திருக்கும் சகோதர் ரஜினிக்கு வாழ்த்துகள்\nநடிகை கஸ்தூரியும் நடிகர் ரஜினிகாந்த்தின் அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார். தலைவா வா என அவரது டிவிட்டில் தெரிவித்துள்ளார்.\nஅரசியலில் ஈடுபடபோவதாக அறிவித்த ரஜினிக்கு ஐஜேகே தலைவர் பாரிவேந்தர் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆரோக்கியமான அரசியலை முன்னெடுக்க வேண்டும் என பாரிவேந்தர் தெரிவித்துள்ளார்.\nமதவாத அரசியலாக இல்லாமல், ஆன்மீக அரசியலாக இருக்கும் என்று கூறியிருப்பது வரவேற்கத்தக்கது என திருமாவளவன் தெரிவித்துள்ளார். ரஜினிகாந்தின் அரசியல் வருகையை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வரவேற்கிறது என்றும் அவர் கூறினார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nrajinikanth rajini politics ரஜினிகாந்த் ரஜினி அரசியல்\nஎன்ன இந்தியாவின் முதல் பிரதமர் மோடியா.. விக்கிபீடியா செய்த தவறால் உருவான சர்ச்சை\n1.3 லட்சம் பேரின் ஆதார் தகவல்கள் லீக்கானது.. ஆந்திர அரசு இணையத்தில் நடந்த பெரிய முறைகேடு\nதிமுகவின் செயல்பாடுகள் பாஜகவுக்குத்தானே பலன் தரும்\nதித்திக்கும் மாம்பழங்களை உங்கள் வீட்டுக்கே வந்து கொடுக்கும் டிரெடிஃபுட்ஸ்\nபிஸ்னஸ் லோனின் சிறப்பம்சங்கள் மற்றும் பயன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/tamilaga-vazhvurimai-party-condemns-central-government-new-307161.html", "date_download": "2018-04-26T13:17:21Z", "digest": "sha1:55U7IF3HGQ2WZDAK2YJPNJAZU5ZBCXCL", "length": 21364, "nlines": 177, "source_domain": "tamil.oneindia.com", "title": "மத்திய அரசின் தேசிய மருத்துவ கமிஷன் மசோதா 2017-க்கு தமிழக வாழ்வுரிமை கட்சி எதிர்ப்பு | Tamilaga Vazhvurimai party condemns Central government new bill on Medical Commission 2017 - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\n» மத்திய அரசின் தேசிய மருத்துவ கமிஷன் மசோதா 2017-க்கு தமிழக வாழ்வுரிமை கட்சி எதிர்ப்பு\nமத்திய அரசின் தேசிய மருத்துவ கமிஷன் மசோதா 2017-க்கு தமிழக வாழ்வுரிமை கட்சி எதிர்ப்பு\nசென்னை ஐஓசி தலைமை அலுவலகத்திற்குள் நுழைந்து போராட்டம்- வேல்முருகன் உட்பட 250 பேர் கைது\nகாவிரி விவகாரம்: ஏப்ரல் 29ம் தேதி தடையை மீறி மெரினாவில் போராட்டம்: வேல்முருகன் அறிவிப்பு\nBreaking News Live: எஸ்.வி.சேகர் முன்ஜாமீன் கோரி ஹைகோர்ட்டில் மனுத் தாக்கல்\nகாவிரி வாரியத்திற்காக ஏப்ரல் 29ல் மெரினாவில் போராட்டம்... வேல்முருகன் எச்சரிக்கை\nபெண் பத்திரிகையாளரிடம் 24 மணி நேரத்தில் ஆளுநர் மன்னிப்பு கேட்க வேண்டும்: வேல்முருகன் எச்சரிக்கை\nகாவிரிக்காக மெரினாவில் மிகப்பெரிய போராட்டம் நடத்த திட்டம்.. வேல்முருகன் அதிரடி\nஎஸ்.சி.,எஸ்.டி., சட்ட திருத்தம் : உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுத்தாக்கல் செய்ய தமிழக அரசு முடிவு\nசென்னை: இந்திய மருத்துவ கவுன்சிலை கலைத்து விட்டு நிர்வாக குழுக்களை அமைக்கும் மத்திய அரசின் மசோதாவுக்கு தமிழக வாழ்வுரிமை கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.\nயுனானி, ஹோமியோபதி, சித்தா போன்ற மருத்துவ துறை சார்ந்த மருத்துவர்களை 'பிரிட்ஜ்' எனும் குறுகிய கால படிப்பு மூலம் அல்லோபதி மருத்துவர்களாக அங்கீகரிப்பது, இந்திய மருத்துவ கவுன்சிலை கலைத்து விட்டு அதற்கு பதிலாக புதிதாக 4 நிர்வாக குழுக்களை அமைப்பது, தனியார் மருத்துவ கல்லூரிகளை மாணவர் சேர்க்கை எண்ணிக்கை மற்றும் கட்டணத்தை நிர்ணயிக்க அனுமதிப்பது போன்ற அம்சங்களை உள்ளடக்கிய மத்திய அரசின் தேசிய மருத்துவ கமிஷன் மசோதா கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.\nஇதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில் தமிழக வாழ்வுரிமை கட்சி இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், குறிப்பாக தமிழ்நாட்டை நடுவண் அரசின் \"காலனி\"யாக மாற்றும் மோடியின் மற்றும் ஓர் அதிரடிதான் \"இந்திய மருத்துவக் கவுன்சி\"லுக்குப் பதிலாகக் கொண்டுவரும் \"தேசிய மருத்துவ ஆணையம்\"\nசமூக நீதி, மாநில உரிமை மட்டுமல்ல; மருத்துவம் மற்றும் மருத்துவக் கல்வியையே தமிழகத்திற்கு மறுக்கும் இந்த பாசிச நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி\nநாட்டை கார்ப்பரேட்மயமாக்கவும் மாநிலங்களை குறிப்பாக தமிழ்நாட்டை நடுவண் அரசின் \"காலனி\"யாகவே மாற்றிவிடவும் தலைகீழாகவே நின்றுவருகிறார் பிரதமர் நரேந்திர மோடி. அதனால் அரசியல் சாசனத்தின் அனைத்து உறுப்பு அமைப்புகளையும் தன்வயப்படுத்தும் நோக்கில் தான்தோன்றித்தன, சர்வாதிகார, பாசிச நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். திட்டக் கமிஷனைக் கலைத்ததிலிருந்து தொடங்கிய இந்த பாசிசப் பயணம் இப்போது \"இந்திய மருத்துவக் கவுன்சி\"லைக் கலைத்துவிட்டு, அதற்குப் பதிலாக \"தேசிய மருத்துவ ஆணையம்\" என்பதை அமைக்க சட்ட முன்வரைவைத் தாக்கல் செய்ய வந்திருக்கிறது.\nஇந்த சட்ட முன்வரைவின் கூறுகள் அனைத்துமே சமூக நீதிக்கும் மாநில உரிமைக்கும் எதிரானதாக இருப்பது மட்டுமின்றி, மருத்துவத்தையும் மருத்துவக் கல்வியையுமே குறிப்பாக தமிழ்நாட்டிற்கு மறுப்பதாக இருக்கிறது. இப்போது தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 65 விழுக்காடு இடங்கள் அரசு ஒதுக்கீட்டிற்கும், 35 விழுக்காடு இடங்கள் நிர்வாக ஒதுக்கீட்டிற்கும் வழங்கப்படுகின்றன.\nநீட் தேர்வின் நோக்கத்துக்கு எதிரானது\nஆனால் தேசிய மருத்துவ ஆணையச் சட்டத்தில் இது தலைக்கீழாக்கப்பட்டிருக்கிறது. அதாவது அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 40 விழுக்காடு, நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் 60 விழுக்காடு. இதனால் நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றிருந்தாலும் வசதி படைத்த மாணவர்கள்தான் தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களைக் கைப்பற்றுவர். தகுதி பெற்றிருந்தாலும் ஏழை மாணவர்கள் பணம் இல்லாததால் மருத்துவமே படிக்க முடியாது. இது நீட் தேர்வின் நோக்கத்திற்கேகூட எதிரானது.\nமேலும், மருத்துவப் படிப்பை முடித்தவர்கள் மீண்டும் ஒரு தேர்வில் தேறினால் மட்டுமே தேசிய மருத்துவ ஆணையத்தில் பதிவு செய்து மருத்துவராக பணிசெய்ய முடியும். அது வெளியேறும் தேர்வு என்ற எக்சிட் தேர்வு (EXIT TEST). இது கிராமப்புற மக்கள் மற்றும் ஏழைகளை மருத்துவப் பணியில் சேர விடாமல் திட்டமிட்டே தடுப்பதாகும். இப்போது \"இந்திய மருத்துவக் கவுன்சில்\" ஒப்புதல்படியே தனியார் கல்லூரி மாணவர் சேர்க்கை இடங்களை அதிகரிக்க முடியும். ஆனால் \"தேசிய மருத்துவ ஆணையம்\" தனியார் மருத்துவக் கல்லூரிகளின் விருப்பப்படி மாணவர் சேர்க்கை இடங்களை அதிகரித்துக் கொள்ள வழிவகுக்கிறது. இது மருத்துவக் கல்வியின் தரத்தையே கேள்விக்குறியாக்கிவிடும்.\nமிகவும் ஆபத்தானது என்னவென்றால், மருத்துவக் கல்வியை ஒழுங்குபடுத்தும் பொறுப்பை மாநில அரசிடமிருந்து மத்திய அரசு பறித்துக் கொள்ள புதிய \"தேசிய மருத்துவ ஆணைய\"த்தின் சட்டம் வழிவகை செய்திருக்கிறது என்பதுதான். இப்போதைய மருத்துவக் கவுன்சிலுக்கு அனைத்து மாநிலங்களில் இருந்தும் விகிதாச்சார அடிப்படையில் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். ஆனால் மருத்துவ ஆணையத்தில் மொத்தமுள்ள 25 உறுப்பினர்களில் 20 பேரை நடுவண் அரசே நியமிக்கிறது; அவர்கள் மருத்துவர்கள் அல்ல; மாநிலங்கள் சார்பாக தேர்வு செய்யப்படும் 5 பேர் மட்டுமே மருத்துவர்கள். இதனால் தமிழ்நாட்டிற்கு பிரதிநிதித்துவமே இல்லாமல் போகும்.\nஇவ்வளவு மோசமான சட்டவிதிகளுடன் கூடிய தேசிய மருத்துவ ஆணையத்தை மோடி அரசு அமைக்கவிருப்பதன் ஆபத்தை உணர்ந்து நாடெங்கும் உள்ள 8 லட்சம் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் நாடெங்கும் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் 2.5 லட்சம் மருத்துவர்களும் அடங்குவர்.\nநாட்டின் மொத்த 8 லட்சம் மருத்துவர்களில் தமிழ்நாட்டில் மட்டும் ஒரு லட்சம் பேர் என்பதிலிருந்தே மருத்துவத் துறையில் மட்டுமல்ல, எல்லாத் துறைகளிலுமே தமிழ்நாடுதான் உயரிடத்தில் இருப்பது புரியும். அதனால்தான் மோடி தன் பாசிச நடவடிக்கைகளை தமிழ்நாட்டைக் குறிவைத்தே எடுக்கிறார்.\nஎனவேதான் நாம் தெளிவாகக் குறிப்பிடுகிறோம் - தமிழ்நாட்டை நடுவண் அரசின் \"காலனி\"யாக மாற்றும் மோடியின் மற்றும் ஓர் அதிரடிதான் \"இந்திய மருத்துவக் கவுன்சி\"லுக்குப் பதிலாகக் கொண்டுவரும் \"தேசிய மருத்துவ ஆணையம்\" என்று\nசமூக நீதி, மாநில உரிமை மட்டுமல்ல; மருத்துவம் மற்றும் மருத்துவக் கல்வியையே தமிழகத்திற்கு மறுக்கும் இந்த பாசிச நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nvelmurugan central government மத்திய அரசு தமிழக வாழ்வுரிமை கட்சி\nசசிகலாவிடம் 'முதலில் போட்டு கொடுப்பது யாரு' மல்லுக்கட்டும் மன்னார்குடி மாமா- மருமகன்\nஎன்ன இந்தியாவின் முதல் பிரதமர் மோடியா.. விக்கிபீடியா செய்த தவறால் உருவான சர்ச்சை\nகுட்கா: ரூ40 கோடி லஞ்சம்- அமைச்சர் விஜயபாஸ்கர், போலீஸ் அதிகாரிகள் ராஜேந்திரன், ஜார்ஜூக்கு நெருக்கடி\nதித்திக்கும் மாம்பழங்களை உங்கள் வீட்டுக்கே வந்து கொடுக்கும் டிரெடிஃபுட்ஸ்\nபிஸ்னஸ் லோனின் சிறப்பம்சங்கள் மற்றும் பயன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/videos/actor-vishal-has-said-that-he-will-raise-his-voice-more-292603.html", "date_download": "2018-04-26T13:17:05Z", "digest": "sha1:VNFEEARVOLYEGNS6CISNUKOZV3WNXSYD", "length": 9196, "nlines": 162, "source_domain": "tamil.oneindia.com", "title": "மக்களுக்கு நல்லது செய்யவே போட்டி... என் குரலை நான் சத்தமாக பதிவு செய்வேன் விஷால்-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » தமிழகம்\nமக்களுக்கு நல்லது செய்யவே போட்டி... என் குரலை நான் சத்தமாக பதிவு செய்வேன் விஷால்-வீடியோ\nமக்களுக்கு நல்லது செய்யவே அரசியலுக்கு வர நினைத்தேன். இன்னும் நான் அரசியல்வாதியாக மாறவில்லை. சினிமாவில் நடந்தது போல ஆர்.கே. நகரில் நடந்துள்ளது என்ற கூறியுள்ளார் விஷால்.\nபுதிய தலைமுறை தொலைக்காட்சியின் அக்னிபரிட்சை நிகழ்ச்சியில் பேசிய விஷால்,\nஎன் வேட்புமனுவை தள்ளுபடி செய்தது நிறைய பேருக்கு சந்தோசம். என் மீது எந்த எப்ஐஆரும் இல்லை. ஆனால் திமுக, அதிமுக வேட்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.\n72வது வேட்புமனுவாக பரிசீலிக்க வேண்டும். ஆனால் 145வது வேட்புமனுவாக என் மனுவை பரிசீலனை செய்தனர். எல்லோருடைய மனுவையும் தேர்தல் அதிகாரியே முடிவு செய்தார். ஆனால் எனக்கு மட்டும் ஏன் வெளியில் போய் பேசினார் என்று தெரியவில்லை.\nஎன்னுடைய புகாரை மனசாட்சிப்படி ஏற்றுக்கொண்டு கையெழுத்து போட்டிருக்கிறார்.\nதேர்தல் அதிகாரிகாரியின் அறிவிப்பு வீடியோவில் பதிவாகியுள்ளது. நான் பேட்டி கொடுத்த பின்னர் யாருமே அப்ஜெக்ட் செய்யவில்லை. வீட்டிற்கு போய் விட்டு வருவதற்குள் வேட்புமனுவை தள்ளுபடி செய்து விட்டனர்.\nமக்களுக்கு நல்லது செய்யவே போட்டி... என் குரலை நான் சத்தமாக பதிவு செய்வேன் விஷால்-வீடியோ\nகுட்டையில் மிதந்த மண்டை ஓடு\nகொள்ளையில் அதிமுக புள்ளி புதுவையில் அதிர்சி\nஜெ. மகள் விவகாரம்.. ரத்த மாதிரி இல்லை என்கிறது அப்பல்லோ.\nதிமுகவின் செயல்பாடுகள் பாஜகவுக்குத்தானே பலன் தரும்\nமமதாவுக்கு ஸ்டாலின் திடீர் பாராட்டு காங்கிரஸ் ஷாக்\nதாய், தந்தை, மகளுக்கு விஷம் கொடுத்து கொன்ற பெண்..\nவிக்கிபீடியா செய்த தவறால் உருவான சர்ச்சை\nசிதம்பரம் அருகே இருசக்கர வாகனம் மீது பஸ் மோதி விபத்து\nசசிகலா சிறை செல்ல தினகரன் காரணம்: குட்கா ஊழல் வழக்கில் இன்று தீர்ப்பு\nதஞ்சை பெரியகோவில் தேரோட்டம் கோலாகலமாக தொடங்கியது\nஉபியில் 13 சிறுவர்கள் பலி, டெல்லியில் 400 கர்நாடக விவசயிகள் போராட்டம்\nமாணவியை பலாத்காரம் செய்த ஆசிரியர் லிப்ட் விழுந்து 8 வயது சிறுமி பரிதாப பலி\nமேலும் பார்க்க தமிழகம் வீடியோக்கள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kaviyazhi.blogspot.com/2012/12/blog-post_9865.html", "date_download": "2018-04-26T13:42:04Z", "digest": "sha1:YH4O3LMROPDEX6HP6MIG23DKZKEOQDVW", "length": 11777, "nlines": 240, "source_domain": "kaviyazhi.blogspot.com", "title": "கவியாழி : மார்கழிப் பூவோ", "raw_content": "\nகாலம் மாறி பயந்து வந்ததோ\nநன்றிங்க ,வருகைக்கு நன்றி தொடர்ந்து படிங்க கருத்தை சொல்லுங்க\nமார்கழி பனி எனும் கவிதையில் நனைந்தேன்...\nநிச்சயம் சளி பிடிக்காது ,நன்றி\nமார்கழிக்கான சிறப்புப் பதிவு அருமை\n\"மௌனமாய்ப் பூக்கும் ஓசை \"\nவார்த்தை ஜாலம் மனம் கவர்ந்தது\nமார்கழிப்பூ பூக்கும் ஓசை என்னையும் இங்கு அழைத்து வந்தது.\nதங்களின் வருகைக்கு நன்றிங்க ,மென்மையான சத்தம் கேட்க மெதுவாக வாருங்கள்,துல்லியமாய் கெட்டு கருத்தை தாருங்கள்\nமார்கழிப்பூ பூக்க மணம் முகர மூக்கே\nநீங்களும் முகர்ந்ததுக்கு ,நன்றிங்க ஐயா\nநன்றி உறவே,வந்ததுக்கும் வாழ்த்தியதர்க்கும் நன்றி\nமௌனமான பூக்கும் ஓசை// அழகிய வரிகள்\nநன்றிங்க ,வந்தமைக்கும் கருத்து தந்தமைக்கும்\nதங்களின்இந்தப் படைப்பை வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன். வாருங்கள் ஐயாhttp://blogintamil.blogspot.in/2012/12/blog-post_20.html நன்றி\nநிசப்தப் பொழுதில் பூப்பூக்கும் ஓசை மட்டும் \nகேட்கத்தான் ஆசை ஆனால் மார்கழியில் அதிகாலையில் நல்லா தூக்கம்தான் வருது\nபனித்துளியும் முகம்மலரும் அழகான கவிதை ... பாராட்டுக்கள்..\nநன்றிங்க நட்பே ,அடிக்கடி வாருங்க ஆதரவு தாருங்க\nநன்றிங்க உங்க ரசனை தொடரும் நீங்களும் தொடர்ந்து படிங்க\nதங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்\nபிறந்த நாள் வாழ்த்துக்கு நன்றி\nஅரசன் அன்றே கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்\nகடவுள் இருந்தால் கஷ்டமும் தருவானா\nஅகத்தை ஆள ஆணவத்தை அடக்கு\nதிசையெங்கும் முழங்கி வா தமிழே\nசின்னஞ் சிறு விதைகள்- 2\n21.12.2012 ல் உலகம் அழியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://puttalamtoday.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5/", "date_download": "2018-04-26T13:40:13Z", "digest": "sha1:MSS6BXQDATJO47XLZPQAACB4HYQTMEXL", "length": 9833, "nlines": 53, "source_domain": "puttalamtoday.com", "title": "காலியில் “கா…லி” : அடிப்படைவாத முஸ்லிம் அரசியல்வாதிகள் முன்னெடுக்கும் நடவடிக்கைகளை கண்டிக்கிறார் ஞானசாரர் – படங்கள் – PuttalamToday", "raw_content": "\nகாலியில் “கா…லி” : அடிப்படைவாத முஸ்லிம் அரசியல்வாதிகள் முன்னெடுக்கும் நடவடிக்கைகளை கண்டிக்கிறார் ஞானசாரர் – படங்கள்\nநல்லிணக்கத்தை ஏற்படுத்தும் அரசாங்கத்தின் நடவடிக்கை செல்லுபடியற்றதாகவுள்ளதையும், செயற்திறனற்ற ஒரு பிரவேசம் என்பதையும் இச்சம்பவத்தினூடாக தமக்கு கண்டுகொள்ள முடியுமாகவுள்ளதாகவும் அவ்வமைப்பு மேலும் கூறியுள்ளது.\nகிந்தொட்ட பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தொன்றில் சிங்கள சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு பிரதேசத்தில் பெரும்பான்மையாகவுள்ள முஸ்லிம் அடிப்படைவாதிகள் சிலரினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனைத் தீர்த்துக் கொள்ள முடியாமல் இனங்களுக்கிடையில் பிரச்சினையாக இது வளர்ந்துள்ளது.\nஇவ்வாறு பிரச்சினை முற்றிப் போன பிறகு வீரர்கள் போன்று ஊடகங்களுக்கு முன்னாள் வந்து சிங்கள அரசியல் வாதிகளும், அப்பிரதேசத்துடன் சம்பந்தமில்லாத அடிப்படைவாத முஸ்லிம் அரசியல்வாதிகளும் முன்னெடுக்கும் நடவடிக்கைகளை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.\nகடந்த சில நாட்களுக்கு முன்னர் கம்பொலயில் புன்னிய பெரஹர நிகழ்வின் போது முஸ்லிம் அடிப்படைவாதிகள் சிலர் பள்ளிவாயலின் முன்னாள் இருந்து கொண்டு கல் வீசியதனால் ஏற்பட விருந்த பாரிய அழிவு தடுக்கப்பட்டது. இவ்வாறு தொடர்ந்தும் சம்பவங்கள் நடைபெறுவது பாரிய சிக்கலை ஏற்படுத்தும் என்பது எமது அவதானம் ஆகும் எனவும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nமுஸ்லிம் அடிப்படைவாதமும் பயங்கரவாதமும் எமது நாட்டுக்கு மட்டுமல்ல, முழு உலகிலும் தலையிடியாக மாறியுள்ள ஒரு காலகட்டத்தில், மிகச் சிறியளவில் செயற்படும் முஸ்லிம் அடிப்படைவாதிகளை கட்டுப்படுத்த அரசியல்வாதிகளும், அரசாங்கமும், விசேடமாக முஸ்லிம் சமய தலைவர்களும் நடவடிக்கை எடுக்க முன்வராவிடின் பங்கரமான ஒரு நிலைமைக்கு நாடு உட்படும் என்பதை நாம் தெளிவாக அறிவித்துக் கொள்கின்றோம்.\nஎதிர்வரும் 10 வருடங்களுக்கு நாட்டில் அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய அம்சங்கள் குறித்து பௌத்த, இந்து, கிறிஸ்தவ மற்றும் இஸ்லாம் சமய குழுக்களுடனும், சிங்கள தமிழ் இனக் குழுக்களுடனும் பொதுபல சேனா திறந்த கலந்துரையாடல்களை ஆரம்பித்து முன்னெடுத்துச் செல்கின்றது.\nB.M.S. college சாரம் திருவிழா: பெலூன் டான்ஸ் ஆடிக் கலக்கிய முஸ்லிம் யுவதிகள்- எல்லை மீறுகிறார்களா..\nBreaking : சவூதி மன்னரை கவிழ்க்க முயற்சி.. அரண்மை அருகே கடும் துப்பாக்கி சூடு – பங்கருக்குள் கொண்டு செல்லப்பட்டார் சல்மான் posted on April 22, 2018\nசவூதியின் கொடூர செயலால் உலகமே அதிர்ச்சியில் \nBreaking : 12 வயதுக்கு உள்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு தூக்குத் தண்டனை மோடியின் அமைச்சரவை அவசர சட்டம் பிறப்பிப்பு posted on April 21, 2018\nBreaking :கண்டி கலவரங்களை வழி நடத்திய போலிஸ் இன்ஸ்பெக்டர், சார்ஜென்ட் மேஜர் கைது செய்யப்படவுள்ளார்கள் posted on April 21, 2018\nதலைமைப் பற்றி தீர்மானிக்கும் ஐக்கியத் தேசியக் கட்சியின் முக்கியக் கூட்டம் இன்று \nகண்டிக் கலவரத்தை முன்னின்று நடத்திய இரு பிரதேச சபை உறுப்பினர்கள் தொடர்ந்தும் தேடப்படுகிறார்கள்..\nபச்சை கறிவேப்பிலை சாப்பிடுவதன் மூலம் கொலஸ்ட்ரோலை கட்டுக்குள் வைக்கலாம் இதய சத்திர சிகிச்சை நிபுணர் Dr.இலாஹி\nநகர, பிரதேச சபை சேர்மன்களின் ஆட்டம் எல்லாம் 2 வருடங்களுக்கு மட்டுமே.. அதன் பிறகு உறுப்பினர்களின் காலில் விழுந்தாக வேண்டும்\nமுன்னாள் நேவி தளபதி சந்தன பிரசாத் தப்பிச் செல்ல பாதுகாப்புச் சபை பிரதானி ரவீந்திர விஜேகுணவர்தன 5 லட்சம் கொடுத்தார்.. C.I.D. பொஸ் சான் குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/98", "date_download": "2018-04-26T13:32:19Z", "digest": "sha1:Z5BCAAPA7NQSU5LDRIIG4IPUR2QICKGX", "length": 9739, "nlines": 167, "source_domain": "www.tamilmirror.lk", "title": "TamilMirror.lk", "raw_content": "\nஇரா.உதயணன் இலக்கிய விருது விழா - 2017\n“கவிதை எழுதியதற்காகவே கவிஞர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர்”\nகவிஞர் ஹஸனார் ஷக்காப் காலமானார்\nஆய்வாளரும் எழுத்தாளரும் விஸ்வகர்மா சங்கத்தின் ஸ்தாபகத் தலைவரும் மற்றும் இலங்கை தமிழரசுக்...\nநாதஸ்வர மேதை முருகப்பா பஞ்சாபிகேசன் காலமானார்\nபிரபல நாதஸ்வர மேதை முருகப்பா பஞ்சாபிகேசன் தனது 91 ஆவது வயதில் வெள்ளிக்கிழமை (26) காலமானார்.... ...\nமாஸ்டர் சிவலிங்கத்துக்கு சிறுவர் இலக்கிய செம்மல் பட்டம் வழங்கி கௌரவிப்பு\nகொழும்பு தமிழ்ச் சங்கத்தால் மாஸ்டர் சிவலிங்கத்துக்கு சிறுவர் இலக்கியச் செம்மல் பட்டம் வழங...\n'கலை, கலாசார விழா - 2015'\nஅரசின் 100 நாட்கள்; வேலைத்திட்டத்தின் கீழ், மூதூர் பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு...\nவட இலங்கை சங்கீத சபை பட்டங்களை வழங்கவேண்டும்: பாலசுந்தரம்பிள்ளை\nவட இலங்கை சங்கீத சபை எதிர்காலத்தில் பட்டதாரிகளுக்குரிய பட்டங்களை வழங்குவதற்குரிய சீர்த...\nஈழத்து கவிஞரும் எழுத்தாளருமான கி.பி. அரவிந்தன் பிரான்சில் காலமானார்\nஈழத்து கவிஞரும் எழுத்தாளருமான கி.பி. அரவிந்தன் உடல்நலக் குறைவால் பிரான்சில் இன்று ஞாயிற்று...\nதென்னிந்தியத் திருச்சபையின் முன்னாள் பேராயரும் யாழ். பல்கலைக்கழக தமிழ் முதுமாணிக் கற்கைந...\nகாட்டில் ஓர் கதை நூல் வெளியீடு\nகாடும், காடு சார்ந்த முல்லை மண்ணில் 'காட்டில் ஓர் கதை நூல்' வியாழக்கிழமை (19) வெளியிடப்பட்டு...\nதுரைவி நினைவுப்பேருரையும் விருது வழங்கல் நிகழ்வும்\nதுரை விஸ்வநாதனின் 84 ஆவது பிறந்தி தின நினைவுப்பேருரையும் துரைவி விருது வழங்கல் நிகழ்வும் .... ...\n'இரத்தின தீபம்' விருது விழாவின் ஸ்தாபகருக்கு பாராட்டு விழா\nமலையக கலை கலாசார சங்கத்தினால் கடந்த 20 வருடங்களாக நடத்தப்பட்டு வரும் 'இரத்தின தீபம்' விருத...\nசற்குரு ஸ்ரீ தியாகராஜசுவாமிகளின் 168 ஆவது ஆராதனை நிகழ்வு\nஇலங்கைக்கான இந்திய துணைத்தூதரகத்தின் ஆதரவுடன் வட இலங்கை சங்கீத சபையின் எற்பாட்டில், மருதனா...\nஅரியான் பொய்கை புலவரின் திருவுறுவச்சிலையின் திறந்து வைப்பு\nஇலக்கியத்துறைக்கு அரும்பணியாற்றிய அமரர் அரியான் பொய்கை (கே.செல்லத்துரை) புலவரின் திருவுறுவ...\nதம்பலகாமம் நாமகள் சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் அண்மையில் கலா பூசனம் விருது பெற்ற ஓய்வுப...\nவில்லிசைப் புலவர் சின்னமணி காலமானார்\nவில்லிசைப்புலவர் கலாபூஷணம் நா.கணபதிப்பிள்ளை (சின்னமணி) அச்சுவேலி உலவிற்குளம் பிள்ளையார் க...\nஅரசினால் வழங்கப்படு கலாபூஷணம் விருது பெற்ற, கலைஞர்களை கௌரவிக்கும் நிகழ்வு... ...\nவவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியத்தின் வாழ்நாள் சாதனையாளர் மற்றும் கலாபூசணம் விருது பெற்றவர்...\nகடந்த 64 வருடங்களுக்கு மேலாக அளப்பரிய சமூக தொண்டுகளை செய்துகொண்டு வருகின்ற அகில இலங்கை முஸ்ல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/94010-actor-balajis-wife-nithya-slams-her-husband.html", "date_download": "2018-04-26T13:10:58Z", "digest": "sha1:6FGBTET6N5F2JQP7KTJGBEIV3OUJH6PM", "length": 28801, "nlines": 386, "source_domain": "cinema.vikatan.com", "title": "\"போலீஸாரை வழக்குப் பதியவிடாமல் தடுக்கிறார் என் கணவர்!” - பாலாஜி மனைவி நித்யா குற்றச்சாட்டு | Actor balaji's wife nithya slams her husband", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\n\"போலீஸாரை வழக்குப் பதியவிடாமல் தடுக்கிறார் என் கணவர்” - பாலாஜி மனைவி நித்யா குற்றச்சாட்டு\n‘‘பாலாஜி மீது வழக்கு போடாமல் மாதவரம் போலீஸார் இழுத்தடிக்கிறார்கள்'’ என்று அவரின் மனைவி நித்யா, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் தெரிவித்திருக்கிறார்.\nநடிகரும் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளருமான பாலாஜி, தன்னை சாதியைக் குறிப்பிட்டுத் திட்டுவதாக சென்னை மாதவரம் காவல் நிலையத்தில் அவரின் மனைவி நித்யா கடந்த மே மாதம் புகார் அளித்திருந்தார். இதற்கிடையில் இன்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்த நித்யா, `பாலாஜி மீது வழக்கு பதிவுசெய்ய மாதவரம் போலீஸார் மறுக்கிறார்கள்; அவர் மீதான என் புகாரை இங்கு பதிவுசெய்ய வேண்டும்' என்றும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றைக் கொடுத்தார்.\nஇதுகுறித்து நித்யாவிடம் பேசும்போது அவர் கூறியதாவது...\n‘‘பாலாஜி என்னைத் தாக்கியது, சாதியைக் குறிப்பிட்டுத் திட்டியது தொடர்பாக அவர்மீது நான் ஏற்கெனவே மாதவரம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்திருந்தேன். அந்தப் புகாரை மையமாக வைத்து வழக்கு பதிவுசெய்யாமல் மாதவரம் போலீஸார் இழுத்தடிக்கிறார்கள். பாலாஜி என்னை அடித்ததற்கான ஹாஸ்பிடல் ரெக்கார்ட்ஸ், ஸ்கேன் ரிப்போர்ட்ஸ் அனைத்தும் இருக்கின்றன. ஆனால், எஃப்.ஐ.ஆர் போட மறுக்கிறார்கள்.\nமாதவரம் போலீஸாரை, பாலாஜி தனக்கு சாதகமாகவே செயல்படவைக்கிறார். என் வழக்கறிஞர்களைக்கூட அவர் பக்கம் இழுத்துக்கொண்டார். இதனால் இதுவரை இரண்டு வழக்கறிஞர்களை மாற்றிவிட்டேன். ஹாஸ்பிடலில் உள்ள ஆவணங்களைக்கூட தன் பிரபல்யத்தைப் பயன்படுத்தி மாற்றியிருக்கிறார். மேலும், குண்டர்களையும் அரசியல்வாதிகளையும் வைத்து என்னை மிரட்டுகிறார். இப்படி ஆரம்பம் முதல் இன்று வரை அனைத்து தரப்பினரையும் அவருக்குச் சாதகமாகவே செயல்படவைக்கிறார்.\nஅவ்வளவு ஏன், என் காரை எடுத்துச் சென்றுவிட்டார். என் பாஸ்போர்ட், நாய்க்குட்டியைத் தூக்கிச் சென்றுவிட்டார். தவிர, என் கேரக்டரைப் பற்றி வெளியே தவறாகச் சித்திரிக்கிறார். இப்படி என்னை விவாகரத்துக்குப் போகவிடாமல் இரண்டு நாள்களுக்கு ஒருமுறை ஏதாவது ஒரு பிரச்னை கொடுத்துகொண்டே இருக்கிறார்.\nஇப்பவும் சொல்கிறேன், அவரைப் பழிவாங்க வேண்டும்; அவரைக் கைதுசெய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை. ஆனால், ஒரு பிரபலமாக இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்வீர்களா எவ்வளவு பெரிய தவறையும் செய்துவிட்டு தப்பித்துக்கொள்வீர்களா எவ்வளவு பெரிய தவறையும் செய்துவிட்டு தப்பித்துக்கொள்வீர்களா `நான் ஏற்கெனவே விவாகரத்து ஆனவன். நான் எல்லாத்தையும் பார்த்துட்டேன். இந்தப் பிரச்னையை எப்படி டீல் பண்றதுனு எனக்குத் தெரியும். நீ என்ன மூவ் பண்றியோ பண்ணு. நான் உன்கூட இருக்கிறதுக்கு எந்த லெவலுக்குப் போவேன்’ என்கிறார். நாங்கள் பிரிந்து கிட்டத்தட்ட 50 நாள்கள் ஆகின்றன. ஆனால், இன்னமும் தொந்தரவு கொடுத்துக்கொண்டிருக்கிறார்.\nஅவர் தன் சோஷியல் இமேஜைத் தக்கவைத்துக்கொள்வதற்காகவே எங்களுடன் சேர்ந்திருக்க நினைக்கிறார். இந்த எட்டு வருஷங்களில் எங்களுக்குள் எந்த அன்யோன்யமும் இல்லை. என்னையும் என் குழந்தையையும் வைத்து செயற்கையான வாழ்க்கைதான் வாழ்ந்தார். குடும்ப உறவில் கொஞ்சமாவது நேர்மை இருக்க வேண்டாமா பணக்கார, போலியான வாழ்க்கை எனக்குத் தேவையில்லை. நிம்மதியான வாழ்க்கைதான் தேவை. அதைத்தான் நான் எதிர்பார்க்கிறேன். அதை நோக்கியே நான் செயல்படுகிறேன்.\nஆனால், மாதவரம் போலீஸாரோ, ‘உங்க மேலயும் வழக்கு போடுவோம்’ என்கிறார்கள். சாதாரண ஒரு குடும்பப் பெண்ணை, பாலாஜி தன் நடவடிக்கையால் வீதிக்கு இழுத்துவந்துவிட்டார். நீதி கேட்டு போலீஸ் ஸ்டேஷன் சென்றால், அவர்கள் பாலாஜியுடன் சேர்ந்துகொண்டு பாதிக்கப்பட்ட எனக்கு எதிராகவே பேசுகிறார்கள். அதனால்தான் நான் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் தந்தேன். அவர்கள் மாதவரம் போலீஸாருக்கு போன் செய்து மாலை 4.30 மணிக்குள் எஃப்.ஐ.ஆர் போடச் சொல்லியிருக்கிறார்கள். அதற்குப் பிறகும் அவர்கள் எஃப்.ஐ.ஆர் போடவில்லை என்றால், என் புகாரை பத்திரிகைகளுக்கு அளித்துவிட்டு முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் செய்யலாம் என இருக்கிறேன்’’ இவ்வாறு நித்யா கூறினார்.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\n21 கொலைகளைச் செய்த கொடூரனிடம் மாட்டும் காதல் ஜோடி - 'யானும் தீயவன்' படம் எப்படி\n21 கொலைகளைச் செய்த ஒரு கொடூர வில்லனிடம் மாட்டிக்கொள்ளும் ஒரு இளம் காதல் ஜோடியின் கதையைக் கமர்ஷியல் த்ரில்லராகச் சொல்லியிருக்கும் 'யானும் தீயவன்' படம் எப்படி\nநித்யாவின் புகார் குறித்து நடிகர் பாலாஜியிடம் கேட்டப்போது, ‘’மாதவரம் போலீஸ் ஸ்டேஷன்ல நித்யா புகார் கொடுத்ததில் இருந்து இப்போ வரை ஸ்டேஷனில் இருந்து போன் பண்ணும் போதெல்லாம் போய் நின்னுருகேன். என் மேல எதுக்கு புகார் கொடுக்கணும், நான் தப்பே பண்ணலையே. அப்பறம், அவங்க காரை நான் எடுத்துட்டு போயிட்டதா சொல்றாங்க. அது நான் வாங்கி கொடுத்த கார். அதுனால அதை எடுத்துட்டு வந்தேன். அவங்க திரும்ப கேட்டதும் போய் கொடுத்துட்டேன். நான் அவங்களுக்காக எவ்வளவு தூரம் இறங்கி போனாலும், அவங்க வழக்கம் போல மீடியாகிட்ட பேட்டி கொடுக்கிறது, போலீஸ் ஸ்டேஷனின் புகார் கொடுக்கிறதுனு எனக்கு எதிரா எதையாவது பண்ணிட்டே இருக்காங்க. இதையெல்லாம் பார்க்கும் போதுதான், அவங்களுக்கு பின்னால இருந்து யாரோ இயக்குற மாதிரி தெரியிது. நானும் அவங்களை மாதிரி பேட்டி, புகார்னு கொடுக்கலாம். ஆனால், என் பொண்ணோட எதிர்காலத்துக்காக நான் அமைதியா இருக்கேன்’’ என்றார் விரக்தியாக.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா\n’’ - கலங்கும் நித்யா\n“அவங்க வருவாங்க... என்கூட சேர்ந்து வாழ்வாங்க” - பாலாஜி நம்பிக்கை\n'என் மனைவி ஆசைப்பட்டால் ஜெயிலுக்குப் போகவும் தயார்' -தாடி பாலாஜி உருக்கம்\n'உங்கள் காதல் திருமணம் இப்படி முடியக்கூடாது’ - பாலாஜி - நித்யாவுக்கு போலீஸ் சமரசம்\nநடிகர் தாடி பாலாஜியை துரத்தும் வதந்தி\n``சிவகார்த்திகேயன் பங்கமா கலாய்ப்பார்... மா.கா.பா எவ்வளவு கலாய்ச்சாலும் வாங்கிப்பார்..’’ - அத்தியாயம் 13\n\"25 சூப்பர் ஹீரோக்கள்... ஒரு சூப்பர் வில்லன் தேனோஸ்\n``கார்த்திக்... என்னை கல்யாணம் பண்ணிக்குவீங்களானு கேட்கணும்போல இருக்கு\" - விஜி சந்திரசேகர்\n\" 'சுந்தரபாண்டியன் 2' தயாரிக்கிறேன்; விஜய்சேதுபதி கேரக்டர்ல நடிக்கிறேன்\n\"ஆமாங்க... வருத்தப்படாத வாலிபர் சங்கம் நல்ல படம்தான்’’ - ‘விகடன் பிரஸ் மீட்’ சிவகார்த்திகேயன்\nமிஸ்டர் கழுகு: பி.ஜே.பி மீது ரஜினி வருத்தம்\nஆற்றை சாகடிக்கும் மணல் மாஃபியாக்கள்\n\"வைகோ, சீமான் மோதல் வேதனை தருகிறது” - கலங்கும் திருமா\nஜெயித்தது தோனி... ஜெயிக்க வைத்தது கோலி... ஜஸ்ட் கோலி திங்ஸ்\nதிருடிய மொபைலை அன்லாக் செய்ய திருடர்கள் செய்யும் இன்னொரு திருட்டுத்தனம்... உஷார்\n'நிர்மலா தேவி வாழ்க்கையே ரகசியம்தான்'- காவியன் நகர் மக்கள் சொல்வது என்ன\nமெக்கானிக்குடன் சாலையில் நின்ற போலீஸார்... கதிகலங்கிப்போன இருசக்கர வாகன ஓட்டிகள்\nஜெயித்தது தோனி... ஜெயிக்க வைத்தது கோலி... ஜஸ்ட் கோலி திங்ஸ்\n``மன அழுத்தம் போக்க உங்களை நீங்கள் ஜெயிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்\n``லட்சியத்தை நோக்கி நகர்ந்துகொண்டே இருந்தால் மனஅழுத்தம் இல்லை. மனஅழுத்தம் போக்க உங்களை நீங்கள் ஜெயிக்கக் கற்க வேண்டும்’’ என்கிறார் எழுத்துச் சித்தர் பாலகுமாரன்.\nகருவளையத்தை மறைக்க மேக்கப் வேண்டாம்... இரும்புச்சத்து உணவு போதும்\nகருவளையத்தை மறைக்க மேக்கப் வேண்டாம். எந்தக் காரணத்தினால் உங்களுக்குக் கருவளையம் வந்திருக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டால் அதைச் சரி செய்வது சுலபம்..\nகொடைக்கானல் மெர்க்குரி ஆலை... அன்று நடந்ததும் இன்றைய நிலையும்\nஅவர்கள் குறைக்கவேண்டியதாக அரசு கூறிய மெர்க்குரி அளவு, உண்மையில் குறைக்கவேண்டிய அளவைவிட 20 மடங்கு அதிகம். இது யூனிலிவர் செலவைக் குறைப்பதற்காகச் செய்யப்பட்டது.\nவிகடன் பிரஸ்மீட்: அஜித்திடம் என்ன பிடிக்காது விஜய்யிடம் என்ன பிடிக்கும்\n“இந்த வேலைநிறுத்தம், இந்திய சினிமாவையே கோலிவுட் பக்கம் திருப்ப வெச்சிருக்கு. இதன் மூலமா...\nஜெ. கன்னத்திலிருந்த நான்கு புள்ளிகளும் அவிழாத முடிச்சுகளும்\nமரணத்துக்குப் பிறகு ஜெயலலிதா உடல் ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டபோது, ஜெ. கன்னத்தில் காணப்பட்ட நான்கு புள்ளிகள் குறித்துப் பெரும் சர்ச்சை எழுந்தது. அந்த நான்கு புள்ளிகள் குறித்த மர்ம முடிச்சுகளை அவிழ்ப்பதற்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முயற்சி செய்துள்ளது.\n\"வைகோ, சீமான் மோதல் வேதனை தருகிறது” - கலங்கும் திருமா\nகாவிரிப் பிரச்னை, எஸ.சி, எஸ்.டி வன்கொடுமைத் தடுப்பு சட்டம் ஆகியவற்றுக்கான போராட்டங்களில் மும்முரமாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://academy.tamilcube.com/unit/psle-tamil-reading-passage-1/?id=5037", "date_download": "2018-04-26T13:19:40Z", "digest": "sha1:WNGPGILLRXX3MAY74P7QUJOBPV5X3FZ4", "length": 4083, "nlines": 86, "source_domain": "academy.tamilcube.com", "title": "PSLE Tamil reading passage 1 | Tamilcube Academy", "raw_content": "\nதெனாலிராமன் எப்போதும் நகைச்சுவையாகப் பேசி எல்லாரையும் மகிழ வைப்பார். ஒரு சமயம் தெனாலிராமன் அக்பரின் கோபத்துக்கு ஆளானார். உடனே அக்பர், “ராமா உன் செய்கைகள் எல்லை மீறுகின்றன. இனி உன் முகத்தில் நான் விழிக்க விரும்பவில்லை உன் செய்கைகள் எல்லை மீறுகின்றன. இனி உன் முகத்தில் நான் விழிக்க விரும்பவில்லை” என்று சினத்துடன் கூறிவிட்டு அங்கிருந்து அகன்றார்.\nமறுநாள் அக்பர் அரசவையில் ஒரு முக்கியமான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டிருந்தார். திடீரென்று அவையினர் முணுமுணுத்தனர். அக்பர், “என்ன நடக்கிறது” என்று வினவினார். அப்போது தெனாலிராமன் அவரது முகத்தில் ஒரு மண்பானையைக் கவிழ்த்தபடி வந்து தம் இருக்கையில் அமர்வதை அக்பர் கண்டார். “ராமா” என்று வினவினார். அப்போது தெனாலிராமன் அவரது முகத்தில் ஒரு மண்பானையைக் கவிழ்த்தபடி வந்து தம் இருக்கையில் அமர்வதை அக்பர் கண்டார். “ராமா என் பேச்சை மீறிக்கொண்டு இங்கு வந்திருக்கிறாயா என் பேச்சை மீறிக்கொண்டு இங்கு வந்திருக்கிறாயா” என்று கேட்டார். அதற்குத் தெனாலிராமன், “அக்பரே” என்று கேட்டார். அதற்குத் தெனாலிராமன், “அக்பரே நீங்கள் என் முகத்தைக் காண விரும்பவில்லை என்றுதானே சொன்னீர்கள். அதனால்தான் என் முகத்தை மறைக்கப் பானையைக் கவிழ்த்துக்கொண்டேன் நீங்கள் என் முகத்தைக் காண விரும்பவில்லை என்றுதானே சொன்னீர்கள். அதனால்தான் என் முகத்தை மறைக்கப் பானையைக் கவிழ்த்துக்கொண்டேன்” என்று சொன்னார். அதைக் கேட்டு அக்பர் சிரித்து விட்டார்.\n1. அக்பர் ஏன் தெனாலிராமன் மீது கோபங்கொண்டார்\n2. தெனாலிராமன் ஏன் தமது முகத்தில் மண்பானையைக் கவிழ்த்தபடி அரசவைக்கு வந்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://cinema.vikatan.com/movie-review/46915.html", "date_download": "2018-04-26T13:14:31Z", "digest": "sha1:BRZYNJ5DD3CCDUW5IERDTD52WZLEHBBY", "length": 23920, "nlines": 377, "source_domain": "cinema.vikatan.com", "title": "டிமான்ட்டி காலனி படம் எப்படி? | demonte colony Movie Review", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nடிமான்ட்டி காலனி படம் எப்படி\nசென்னைக் கடற்கரையோரம் உள்ள பட்டினப்பாக்கத்தில் வசிக்கும் நாயகன் அருள்நிதி அவருடைய நண்பர்கள் ரமேஷ்திலக், ஷனத், அபிஷேக்ஜோசப் ஆகியோர் ஆளுக்கொரு வேலை செய்துகொண்டு வாழ்கிறார்கள். இவர்களும் மாலையானால் டாஸ்மாஸ்க்கில் ஒன்றுகூடுகிற இளைஞர்கள்தாம்.\nஅப்படிக்குடித்துவிட்ட ஒரு பொழுதில், மழைபெய்யும் இரவில், வீட்டுக்குப் போகாமல் எங்காவது போகலாம் என்று பேசுகிறார்கள். நால்வரில் ஒருவர் உதவிஇயக்குநர். அவர் ஒரு பேய்ப்படத்துக்கான திரைக்கதை எழுதிவைத்திருக்கிறார். அதனால் அவருக்குப் பேய் உலவும் என்று சொல்லப்படுகிற டிமாண்ட்டிகாலனி பங்களாவுக்குப் போக ஆசை. இதை நண்பர்களிடம் அவர் சொல்கிறார். ஒருவர் மறுக்க மற்றவர்கள் ஒப்புக்கொள்கிறார்கள்.\nஎல்லோரும் அங்கு போகிறார்கள். போனஇடத்தில் நாயகன் அருள்நிதிக்கு அங்கு பேய் இருக்கிற உணர்வு வருகிறது. எல்லோரையும் கூட்டிக்கொண்டு வந்துவிடுகிறார். அங்கு போனவர்கள் உயிருடன் திரும்பியதே இல்லை என்று சொல்லப்படுகிற நேரத்தில் அவர்கள் போய்விட்டு அந்தவீட்டில் உள்ள ஒரு விலையுயர்ந்த பொருளையும் எடுத்துக்கொண்டு வந்துவிடுகிறார்கள். அதன்பின் என்னவெல்லாம் நடக்கிறது\nஅருள்நிதி முந்தைய படங்களைக்காட்டிலும் பக்குவப்பட்டிருக்கிறார். நடனம் ஆடுவதும் பயப்படாதது போல நடிப்பதும் உண்மையிலேயே பயப்படுவதும் ஆகிய எல்லா இடங்களிலும் தவறாகத் தெரியவில்லை. நண்பர்களாக நடித்திருக்கும் ரமேஷ்திலக், ஷனத், அபிஷேக்ஜோசப் ஆகியோரும் தங்குளுக்குக் கொடுக்கப்பட்ட வேலையைக் குறைவின்றி செய்திருக்கிறார்கள். நாடிசோதிடராக எம்.எஸ்.பாஸ்கர், திரைப்படத் தயாரிப்பாளராக சிங்கம்புலி, ஜில்லாக நடித்திருக்கும் மதுமிதா (அந்தப்பாத்திரம் எதற்கு) ஆகியோரும் படத்தில் இருக்கிறார்கள்.\nபேய்ப்படங்களுக்குரிய விளக்குகள் அணைவது திடீரென சத்தம் வருவது, அமைதியாக இருந்துவிட்டு திடீரென பின்னணிஇசை ஒலிப்பது போன்ற எல்லா அம்சங்களும் இந்தப்படத்திலும் நீக்கமற நிறைந்திருக்கின்றன. பூனை மட்டும்தான் குறுக்கே போகவில்லை.\nதொலைக்காட்சியில் பேய்ப்படம் போட்டுப் பார்க்கலாம் என்றால் அதில் இவர்களே தெரிவதும் எற்கெனவே வந்ததுதான். டிமாண்ட்டி என்கிற போர்த்துக்கீசியப் பெரியமனிதர் அவருடைய மனநலம் தவறிய மனைவி அவருக்கு வருகிற சிக்கல் என்கிற பழையகதையில் பெரிய சுவாரசியம் எதுவும் இல்லை.\nதூங்கிக்கொண்டிருக்கிறார் என்று நினைக்கிற நண்பர் இறந்துபோய்விட்டார் என்பதும் கடைசியில் அருள்நிதி தப்பிவிட்டாரா இல்லையா\nகேபாஜெர்மியாவின் இசையில் வாடாமச்சி பாடல் கேட்கிற மாதிரி இருக்கிறது. பின்னணிஇசை பேய்ப்படத்துக்கேற்ப இருக்கிறது. அரவிந்தசிங்கின் கேமிரா அவ்வப்போது சென்னையைப் பருந்து போலப் பறந்து பார்க்கிறது. ஒரு பங்களா மற்றும் பட்டினப்பாக்கம் குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டுக்குள்ளேயே மொத்தப்படத்தையும் எடுத்துமுடித்துவிட்டார்கள்.\nஇதுபோன்ற பேய்ப்படங்களில் கடைசியில் நடந்ததெல்லாம் பேயின் வேலை இல்லை. மனிதர்களின் வேலைதான் என்று சொல்லி முடிப்பார்கள். அண்மைக்காலமாக எல்லாப்படங்களிலும் பேய்தான் என்றே வெளிப்படையாகச் சொல்லுகிறார்கள். இந்தப்படத்திலும் அப்படித்தான், பேய் இருக்கிறது, நாடிசோதிடம் சொல்வதெல்லாம் உண்மை என்கிற கருத்துகளைத்தான் சொல்லியிருக்கிறார்கள்.\nபடத்தில் நாயகியே இல்லை. நாயகி இல்லாமல் பேயை நம்பி மட்டுமே படத்தை எடுக்க நினைத்தது இயக்குநர் அஜய்ஞானமுத்துவின் துணிவுதான். படத்தில் கடைசிக் கொஞ்சநேரம் இருக்கிற வேகம் தொடக்கத்திலிருந்து இருந்திருந்தால் இன்னும் சுவாரசியமாக இருந்திருக்கும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n``சிவகார்த்திகேயன் பங்கமா கலாய்ப்பார்... மா.கா.பா எவ்வளவு கலாய்ச்சாலும் வாங்கிப்பார்..’’ - அத்தியாயம் 13\n\"25 சூப்பர் ஹீரோக்கள்... ஒரு சூப்பர் வில்லன் தேனோஸ்\n``கார்த்திக்... என்னை கல்யாணம் பண்ணிக்குவீங்களானு கேட்கணும்போல இருக்கு\" - விஜி சந்திரசேகர்\n\" 'சுந்தரபாண்டியன் 2' தயாரிக்கிறேன்; விஜய்சேதுபதி கேரக்டர்ல நடிக்கிறேன்\n\"ஆமாங்க... வருத்தப்படாத வாலிபர் சங்கம் நல்ல படம்தான்’’ - ‘விகடன் பிரஸ் மீட்’ சிவகார்த்திகேயன்\n\"வைகோ, சீமான் மோதல் வேதனை தருகிறது” - கலங்கும் திருமா\nவிகடன் பிரஸ்மீட்: அஜித்திடம் என்ன பிடிக்காது விஜய்யிடம் என்ன பிடிக்கும்\nநான் ரம்யாவாக இருக்கிறேன் - 21\n\"வைகோ, சீமான் மோதல் வேதனை தருகிறது” - கலங்கும் திருமா\nஜெயித்தது தோனி... ஜெயிக்க வைத்தது கோலி... ஜஸ்ட் கோலி திங்ஸ்\nதிருடிய மொபைலை அன்லாக் செய்ய திருடர்கள் செய்யும் இன்னொரு திருட்டுத்தனம்... உஷார்\n'நிர்மலா தேவி வாழ்க்கையே ரகசியம்தான்'- காவியன் நகர் மக்கள் சொல்வது என்ன\nமெக்கானிக்குடன் சாலையில் நின்ற போலீஸார்... கதிகலங்கிப்போன இருசக்கர வாகன ஓட்டிகள்\nஜெயித்தது தோனி... ஜெயிக்க வைத்தது கோலி... ஜஸ்ட் கோலி திங்ஸ்\n``மன அழுத்தம் போக்க உங்களை நீங்கள் ஜெயிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்\n``லட்சியத்தை நோக்கி நகர்ந்துகொண்டே இருந்தால் மனஅழுத்தம் இல்லை. மனஅழுத்தம் போக்க உங்களை நீங்கள் ஜெயிக்கக் கற்க வேண்டும்’’ என்கிறார் எழுத்துச் சித்தர் பாலகுமாரன்.\nகருவளையத்தை மறைக்க மேக்கப் வேண்டாம்... இரும்புச்சத்து உணவு போதும்\nகருவளையத்தை மறைக்க மேக்கப் வேண்டாம். எந்தக் காரணத்தினால் உங்களுக்குக் கருவளையம் வந்திருக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டால் அதைச் சரி செய்வது சுலபம்..\nகொடைக்கானல் மெர்க்குரி ஆலை... அன்று நடந்ததும் இன்றைய நிலையும்\nஅவர்கள் குறைக்கவேண்டியதாக அரசு கூறிய மெர்க்குரி அளவு, உண்மையில் குறைக்கவேண்டிய அளவைவிட 20 மடங்கு அதிகம். இது யூனிலிவர் செலவைக் குறைப்பதற்காகச் செய்யப்பட்டது.\nவிகடன் பிரஸ்மீட்: அஜித்திடம் என்ன பிடிக்காது விஜய்யிடம் என்ன பிடிக்கும்\n“இந்த வேலைநிறுத்தம், இந்திய சினிமாவையே கோலிவுட் பக்கம் திருப்ப வெச்சிருக்கு. இதன் மூலமா...\nஜெ. கன்னத்திலிருந்த நான்கு புள்ளிகளும் அவிழாத முடிச்சுகளும்\nமரணத்துக்குப் பிறகு ஜெயலலிதா உடல் ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டபோது, ஜெ. கன்னத்தில் காணப்பட்ட நான்கு புள்ளிகள் குறித்துப் பெரும் சர்ச்சை எழுந்தது. அந்த நான்கு புள்ளிகள் குறித்த மர்ம முடிச்சுகளை அவிழ்ப்பதற்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முயற்சி செய்துள்ளது.\n\"வைகோ, சீமான் மோதல் வேதனை தருகிறது” - கலங்கும் திருமா\nகாவிரிப் பிரச்னை, எஸ.சி, எஸ்.டி வன்கொடுமைத் தடுப்பு சட்டம் ஆகியவற்றுக்கான போராட்டங்களில் மும்முரமாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/122191-kerela-government-doctors-strike-affects-patients.html", "date_download": "2018-04-26T13:16:44Z", "digest": "sha1:UKBVWOXQITHUU6C6T3FHU3LYQHVG7FU2", "length": 22413, "nlines": 365, "source_domain": "www.vikatan.com", "title": "கேரளாவில் டாக்டர்கள் ஸ்டிரைக்! - மருத்துவ சேவை முடங்கியதால் நோயாளிகள் அவதி! | Kerela government doctors strike affects patients", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\n - மருத்துவ சேவை முடங்கியதால் நோயாளிகள் அவதி\nகேரளாவில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் காலவரையற்ற ஸ்டிரைக் செய்து வருவதால் நோயாளிகளுக்கு மருத்துவ சேவை கிடைக்காமல் கடும் அவதிக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.\nகேரளாவில் கடந்த 2016 நவம்பர் மாதம் ’ஆதர்ம்’ என்ற திட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின்படி, மருத்துவ சேவைகளில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. அதன்படி, அரசு மருத்துவமனைகளில் புறநோயாளிகள் சிகிச்சைப் பிரிவு காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும் என அறிவிக்கப்பட்டது. ஆரம்ப சுகாதார நிலையங்கள் அனைத்திலும் மாலை வரையிலும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.\nஇதை கேரள மருத்துவர்கள் சங்கம் எதிர்த்தது. மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டுமே, தவிர கூடுதல் நேரத்தை அமல்படுத்தக் கூடாது என அரசு மருத்துவர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்கள். இந்தநிலையில், கூடுதல் நேரம் பணியாற்ற மறுத்த பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த ஜிஸ்மி என்ற மருத்துவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதைக் கண்டித்தும் கூடுதல் நேரம் பணியாற்ற மறுப்புத் தெரிவித்தும் கேரளா முழுவதும் அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.\nமருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் தவிர அனைத்து மருத்துவமனைகளிலும் டாக்டர்கள் இல்லாததால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படவில்லை. புறநோயாளிகள் சிகிச்சைப் பிரிவு செயல்படாததால், நோயாளிகள் கூட்டம் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார மையங்களில் அலைமோதியது. ஏற்கெனவே சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களைத் தவிர, புதிய நோயாளிகள் சேர்க்கப்படவில்லை.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\n - கோவையில் 18 சாலை மார்க்கங்கள் வெறிச்சோடின\nபெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் இன்று முழு அடைப்பு நடத்தப்பட்டுவருகிறது. Petrol, diesel Price hike: Protest intensified in Kerala\nஅவசர சிகிச்சைக்காக வந்த நோயாளிகள்கூட, தனியார் மருத்துவமனைகளுக்குச் செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அரசு மருத்துவமனைகள் அனைத்திலும் கூட்டம் அலைமோதுவதுடன், உரிய சிகிச்சை கிடைக்காததால் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதனிடையே, அரசு மருத்துவர்களின் இந்தப் போராட்டம் நியாயமற்றது என கேரள சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா குற்றம் சாட்டியுள்ளார். அரசு மருத்துவர்கள் உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் இந்தப் போராட்டத்தை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவருமாறு கேட்டுக்கொண்டுள்ள அவர், தொடர்ந்து டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால், கடுமையான நடவடிக்கை எடுப்பதைத் தவிர தனக்கு வேறு வழியில்லை என்றும் தெரிவித்துள்ளார். அரசு டாக்டர்களின் ஸ்டிரைக் காரணமாக கேரளாவில் சுகாதாரப் பணிகள் முழுமையாக முடங்கிப் போயிருக்கிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா\nடாக்டர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்\nஜிப்மரில் டாக்டர் திடீர் போராட்டம்: நோயாளிகள் அவதி\nஅவதூறாகப் பேசிய ஆட்சியர்... ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட டாக்டர்கள்\n'டாக்டர்களின் சம்பளத்திலிருந்து நஷ்டஈடு வேண்டும்'- குழந்தையைப் பறிகொடுத்த தந்தை ஆவேசம்\nகேரளா ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் போராட்டம் வாபஸ்\nதிருடிய மொபைலை அன்லாக் செய்ய திருடர்கள் செய்யும் இன்னொரு திருட்டுத்தனம்... உஷார்\n'நிர்மலா தேவி வாழ்க்கையே ரகசியம்தான்'- காவியன் நகர் மக்கள் சொல்வது என்ன\n``மன அழுத்தம் போக்க உங்களை நீங்கள் ஜெயிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்\n``லட்சியத்தை நோக்கி நகர்ந்துகொண்டே இருந்தால் மனஅழுத்தம் இல்லை. மனஅழுத்தம் போக்க உங்களை நீங்கள் ஜெயிக்கக் கற்க வேண்டும்’’ என்கிறார் எழுத்துச் சித்தர் பாலகுமாரன்.\nகருவளையத்தை மறைக்க மேக்கப் வேண்டாம்... இரும்புச்சத்து உணவு போதும்\nகருவளையத்தை மறைக்க மேக்கப் வேண்டாம். எந்தக் காரணத்தினால் உங்களுக்குக் கருவளையம் வந்திருக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டால் அதைச் சரி செய்வது சுலபம்..\nகொடைக்கானல் மெர்க்குரி ஆலை... அன்று நடந்ததும் இன்றைய நிலையும்\nஅவர்கள் குறைக்கவேண்டியதாக அரசு கூறிய மெர்க்குரி அளவு, உண்மையில் குறைக்கவேண்டிய அளவைவிட 20 மடங்கு அதிகம். இது யூனிலிவர் செலவைக் குறைப்பதற்காகச் செய்யப்பட்டது.\nவிகடன் பிரஸ்மீட்: அஜித்திடம் என்ன பிடிக்காது விஜய்யிடம் என்ன பிடிக்கும்\n“இந்த வேலைநிறுத்தம், இந்திய சினிமாவையே கோலிவுட் பக்கம் திருப்ப வெச்சிருக்கு. இதன் மூலமா...\nஜெ. கன்னத்திலிருந்த நான்கு புள்ளிகளும் அவிழாத முடிச்சுகளும்\nமரணத்துக்குப் பிறகு ஜெயலலிதா உடல் ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டபோது, ஜெ. கன்னத்தில் காணப்பட்ட நான்கு புள்ளிகள் குறித்துப் பெரும் சர்ச்சை எழுந்தது. அந்த நான்கு புள்ளிகள் குறித்த மர்ம முடிச்சுகளை அவிழ்ப்பதற்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முயற்சி செய்துள்ளது.\n\"வைகோ, சீமான் மோதல் வேதனை தருகிறது” - கலங்கும் திருமா\nகாவிரிப் பிரச்னை, எஸ.சி, எஸ்.டி வன்கொடுமைத் தடுப்பு சட்டம் ஆகியவற்றுக்கான போராட்டங்களில் மும்முரமாக...\nவிகடன் பிரஸ்மீட்: அஜித்திடம் என்ன பிடிக்காது விஜய்யிடம் என்ன பிடிக்கும்\nமிஸ்டர் கழுகு: பி.ஜே.பி மீது ரஜினி வருத்தம்\n\"வைகோ, சீமான் மோதல் வேதனை தருகிறது” - கலங்கும் திருமா\nஜெயித்தது தோனி... ஜெயிக்க வைத்தது கோலி... ஜஸ்ட் கோலி திங்ஸ்\nதிருடிய மொபைலை அன்லாக் செய்ய திருடர்கள் செய்யும் இன்னொரு திருட்டுத்தனம்... உஷார்\n'நிர்மலா தேவி வாழ்க்கையே ரகசியம்தான்'- காவியன் நகர் மக்கள் சொல்வது என்ன\nமெக்கானிக்குடன் சாலையில் நின்ற போலீஸார்... கதிகலங்கிப்போன இருசக்கர வாகன ஓட்டிகள்\nஜெயித்தது தோனி... ஜெயிக்க வைத்தது கோலி... ஜஸ்ட் கோலி திங்ஸ்\n`புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை’ - கலெக்டர் வீட்டை முற்றுகையிட்ட பட்டியலின மக்கள்\n' - ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அழைப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nagoreflash.blogspot.com/2015/03/blog-post.html", "date_download": "2018-04-26T13:15:17Z", "digest": "sha1:AQL56EC2N2ADPZZNIXVNCQQIYSPGRX6H", "length": 23944, "nlines": 230, "source_domain": "nagoreflash.blogspot.com", "title": "NAGORE FLASH: தாலியும், பர்தாவும் ஊடகங்களின் மீதான தாக்குதலும்.", "raw_content": "................அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்................. இந்த இணையத்தளம் நாகூர் வாழ் மக்களுக்கான ஓர் அறிவகம்.\n) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)\nதாலியும், பர்தாவும் ஊடகங்களின் மீதான தாக்குதலும்.\nசில நாட்களுக்கு முன்பு புதியதலைமுறை தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் ஹிந்து முன்னணி அமைப்பினரால் தாக்கப்பட்டதற்கு பரவலாக அனைவரும் கண்டனங்களை பதிவு செய்துவருகிறார்கள்.. இது கண்டனத்திற்குரியது என்பதில் மாற்றுகருத்தில்லை என்றபோதிலும் இதில் நாம் கண்டிக்கவேண்டியது புதிய தலைமுறை போன்ற ஊடகங்களையும் தான்...\nஅனைத்து காட்சி ஊடங்கங்களும் TRP ரேட்டிங்கை இலக்காக கொண்டுதான் செயல்படுகின்றன. எப்படியாவது தங்களின் ஊடகங்களை முதன்மையாக மக்களுக்கு காட்சி படுத்தி பெயர் வாங்க வேண்டும் என்ற வெறியில் சர்ச்சைக்குரிய விசயங்களுக்கு போட்டி போட்டுக்கொண்டு முக்கியத்துவம் கொடுப்பதை நாம் பார்த்து வருகிறோம்.\nஅந்த வகையில் தான் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்குத் தாலி தேவையா என்ற விவாதத்தை நடத்துவதாக விளம்பரப்படுத்தியிருந்தார்கள். இந்த விளம்பரத்தில் பெண்களுக்கு தாலி என்பது நாய்க்கு சங்கலி கட்டுவது போல என ஒரு பெண் பேசுவதை PROMOவில் ஒளிபரப்பியுள்ளார்கள்.. இதை பார்த்து தான் ஹிந்து முன்னணியினர் வழக்கம்போல் நிதானம் இழந்து தாக்குதல் நடத்தியுள்ளார்கள்.\nஒருவேளை சகிப்புத்தன்மையுடன் ஜனநாயக முறையில் தங்களின் எதிர்ப்பை அவர்கள் தெரிவித்திருந்தால் அதை நாம் வரவேற்கவே வேண்டும். கருத்து சுதந்திரம் என்ற பெயரின் அவர்கள் எப்படி வேண்டுமானலும் சர்ச்சைக்குரிய விசயங்களை ஊடகங்களில் ஒளிபரப்பலாம் என்றால் அதை எதிர்த்து குரல் கொடுப்பதற்கும் மக்களுக்கு சுதந்திரம் இருக்கிறது என்பதை ஊடகங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.\nஇதே போன்ற சம்பவம் சில ஆண்டுகளுக்கு முன்பு விஜய் டிவியில் நடந்தது நமக்கு நினைவிருக்கலாம்...\nவிஜய் டிவி நீயா நானாவில் முஸ்லிம்களின் பர்தா குறித்து ஒளிபரப்பப்பட்ட PROMOவில் பர்தா எங்களை அடிமைபடுத்துகிறது , சுதந்திரத்தை பரிக்கிறது என்று எதிர்மறையான சர்ச்சையான கருத்தை முன்னிறுத்தி ஒளிபரப்பபட்ட போது பல முஸ்லிம் அமைப்புகள் ஜனநாயக வழியில் தங்களின் எதிர்ப்பை பதிவு செய்து அந்த நிகழ்ச்சியை தடை செய்யவேண்டும் என்று குரல்கொடுத்தன.. ஆனால் அந்த நிகழ்வின் போது எந்த ஒரு தாக்குதலிலும் முஸ்லிம்கள் ஈடுபடவில்லை, எந்த கேமராவும் உடைபடவில்லை , எந்த நிருபரும் தாக்கப்படவில்லை மாறாக இந்திய சட்டத்திற்கு உட்பட்டே தங்கள் எதிர்ப்பை முஸ்லிம்கள் பதிவு செய்தார்கள் என்பதை கருத்து சுந்ததிரம் பேசுவோர் உணர்ந்துகொள்ள வேண்டும்.\nபர்தா போடுவதும் , தாலி கட்டுவதும் அவர் அவர் சார்ந்த சமய நம்பிக்கை...\nநாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கும்போது, மக்களின் நம்பிக்கை சார்ந்த சென்சிடிவ் விஷயங்களை கிளறிவிட்டு வேடிக்கை பார்ப்பதும் , அதை படம்பிடித்து காசு பார்பதுமாக இன்றைய காட்சி ஊடகங்கள் தங்கள் இருப்பை தக்கவைத்துகொள்ள போட்டியிட்டு கொண்டிருப்பது வேதனையான ஒன்று...\nமக்கள் விழித்துகொள்ள வேண்டும்... இது போன்று நம் உணர்வுகளை தூண்டி வேடிக்கைபார்க்கும் வியாபார உக்தியை புரிந்துகொள்ள வேண்டும்.. எந்த ஒரு விஷயத்திற்கும் உணர்வுகளுக்கு இடமளிக்காமல் புத்திக்கு இடம்கொடுத்தால் .. நிதானமாக எதையும் நாம் எதிர்கொள்ளலாம் இன்ஷால்லாஹ்.\nஇஸ்லாம் கூறும் இன்பமான கணவன் மனைவியா நீங்கள் \nதிருமணம் செய்து கணவன் மனைவியாக கைக் கோர்ப்பவர்கள் கடைசிவரை சந்தோசமாக வாழ வேண்டும் என்றே ஆசைப்படுவார்கள். மணமக்களை வாழ்த்துபவர்கள் கூட இதைத்...\nகளமிறங்கிய போராட்ட குழுவிற்கு ஆதரவுகொடுப்போம்.\nபிரபல இஸ்லாமிய அறிஞர் ஜாகிர் நாயக்கிற்கு பிரிட்டன் தடை வலுக்கும் எதிர்ப்பு\nபிரபல இஸ்லாமிய அறி ஞரும் சர்வதேச சொற்பொழி வாளருமான ஜாகிர் நாயக் பிரிட்டனுக்கு வர அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது பெரும் பரபர...\nVote List-ல் உங்கள் பெயர் இருக்கா...\nVote List-ல் நமது பெயர் மற்றும் முகவரியை சரிபார்க்க இந்த Website உதவுகிறது. Vote List-ல் பெயர் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. நீங்கள் தேர்...\nபெண்களை துரத்தும் ரகசிய கேமராக்கள் – ஓர் அபாய எச்சரிக்கை \n( மிக நுணுக்கமான செய்தி என்பதால் நீண்ட பதிவாக எழுதி இருகிறோம் குறிப்பாக பெண்கள் அளிப்பு பார்க்காமல் முழுமையாக படித்து பயன்பெறவேண்டும்,மற்றவ...\nவிந்தின் பிறப்பிடம் - திருக்குரானின் விளக்கம்\nகுர்ஆன் - அறிவுக்கும் அறிவியலுக்கும் ஏற்ற எக்காலத்திற்கும் பொருந்தும் ஓர் வாழ்வியல் நெறிநூல் இது அறிவியல் நூலல்ல; ஆனாலும் அறிவியலையும் உள்ள...\n\"இஸ்லாத்தின் பார்வையில் இசை ஒரு முழுமையான ஆய்வு\"\n இசை என்பதன் விளக்கம் என்ன … இசை என்ற சொல்லுக்கு இசைய வைப்பது எனறு பொருள். இசை (Music) என்பது ஒழுங்கு செய...\nஹதீஸ் - அடிப்படை விளக்கம்\n ஹதஸ் என்ற வேர்ச்சொல்லிலிருந்து பெறப்பட்ட சொல்தான் ஹதீஸ் என்பது. ஹதீஸ் என்றால் உரை உரையாடல் புதியசெய்தி எனப்ப...\nநவீன காலத்து அடிமைகளை விடுவிப்போம்....\nவளைகுடா நாடுகளில் வேலை செய்யும் முஸ்லிம்களில், கணிசமானவர்கள் வீடுகளில் வாகன ஓட்டுனர் வேலை செய்பவர்களாக உள்ளனர். இவர்களில் பெரும்பான்மையினர் ...\nஇரு தரப்பு பேச்சுவார்த்தை எதிர்பார்த்தப்படி சுமூகமாக முடிந்தது.\nஒரு பிரச்சனை எப்படி முறைப்படி கையாளபட வேண்டுமோ அப்படி கையாளபட்டிருகிறது.. அல்ஹம்துலில்லாஹ். கடந்த விநாயகர் சதுர்த்தி அன்று நாகூர் மியா...\n9/11 INSIDE JOB (3) BOOKS (11) HAJ (10) MEDIA (7) POLL (1) ZAKIR NAIK (7) அக்கம் பக்கம் (28) அமைதி (3) அரசியல் (5) அரசு உத்தரவுகள் (14) அரவாணிகள் (1) அவ்லியா (2) அறிவியல் (19) அனுபவம் (26) அஹமது தீதாத் (2) இசை (2) இந்திய முஸ்லிம்கள் வரலாறு (3) இல்லறம் (2) இறுதி தீர்ப்புநாள் (2) உதவி தேவை (13) எச்சரிக்கை (18) ஒற்றுமை (9) கல்வி (24) கனவு இல்லம் (1) கிலாபத் (2) கேள்வி பதில் (18) சத்தியமார்க்கம் (26) சஹாபாக்கள் (4) சுய பரிசோதனை (3) செல்போன் (12) தப்லீக் (1) தரீக்கா (2) தர்கா (11) தன்னம்பிக்கை (2) திருமணம் (6) தீவிரவாதம் (12) தெரிந்த ரகசியங்கள் (32) தெரிந்து கொள்ளுங்கள் (111) தேசபக்தி (9) தேர்தல் 2011 (22) நபி(ஸல்) (3) நாகூர போல வருமா (6) நாகூர் (1) நாகூர் சங்கதி (119) நாகூர் வரலாறு (2) நாத்திகன் (3) நோன்பு (1) பழனிபாபா (1) பாபரி மஸ்ஜித் (7) பாவமன்னிப்பு (3) பிறை (4) புகை (3) பைபிள் (3) போராட்டக்களம் (10) போராட்டம் (1) மருத்துவம் (10) மவ்லித் (4) மீலாது (1) முஸ்லீம்கள் (5) மோசடி (10) ரமளான் (5) வாக்காளர் பட்டியல் (1) விமர்சனங்கள் (5) விவாதங்கள் (4) ஷியா (2) ஷிர்க் (14) ஸூபித்துவம் (2) ஹதீஸ் (3) ஹிந்து தீவிரவாதிகள் (22) ஹிஜாப் (16)\nதாலியும், பர்தாவும் ஊடகங்களின் மீதான தாக்குதலும்....\nகுரான் & ஹதீஸ் நூல்கள் பதிவிறக்கம்\nநபி( ஸல்) முழு வரலாறு\nகிருத்துவ மத போதகருடனான கலந்துரையாடல்\nஇரத்ததானம் செய்ய பதிவு செய்யுங்கள்\nசெய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற மின்னஞ்சல் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்\nதமிழில் டைப் செய்ய (தங்கலிஷ்)\nஅல்லாஹ்வின் சாந்தியும் , சமாதானமும் உங்கள் அனைவரின் மீதும் உண்டாவதாக இந்த தளம் நாகூர் வாழ் மக்களுக்கான ஓர் அறிவகம். நல்ல விஷயங்கள் பகிர்ந்து கொள்ளவும், தவறான விஷயங்களை சுட்டிக்காட்டவும் இந்த தளத்தை அமைத்திருகிறோம்.. நம்ம ஊரை பற்றி மற்றவர்களை விட நாமே அதிகம் விமர்சிக்கிறோம் இதே ஊரில் இருந்துகொண்டு, உண்மையில் நம்மை நாமே விமர்சித்து கொள்கிறோம் என்பதே உண்மை.. ஆகையால் உணர்வுகளை உள்ளது உள்ளபடி பகிர்ந்து கொள்ள ஒரு தளம். மேலும் உலக நாட்டுநடப்புகளும் இங்கே உரியமுறையில் அலசப்படுகிறது. நீங்களும் இந்த தளத்தின் அங்கமே , உங்களின் கருத்துகள் ,விமர்சனங்கள் , கட்டுரைகள் எதுவாக இருந்தாலும் nagoreflash@ymail.com முகவரிக்கு அனுப்பித்தாருங்கள். உங்கள் அன்புடன் அப்துல்லாஹ்.\nஅண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: \"தொழுகையாளிகள் அரபுத் தீபகற்பத்தில் தன்னை இபாதத் செய்வார்கள் -வணங்குவார்கள் - எனும் விஷயத்தில் ஷைத்தான் நிராசை அடைந்து விட்டான். எனினும், முஸ்லிம்களிடையே பகைமைத் தீயை மூட்டுவதில் அவன் நம்பிக்கை இழக்கவில்லை\". அறிவிப்பாளர்: ஜாபிர்(ரலி), நூல்: முஸ்லிம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://prakashkumar014.blogspot.com/2010/05/blog-post.html", "date_download": "2018-04-26T13:08:06Z", "digest": "sha1:KZSXCYMRPTPW33HDLBBEYEBBMQZRWZX6", "length": 8404, "nlines": 62, "source_domain": "prakashkumar014.blogspot.com", "title": "குமாரின் கிறுக்கல்கள்...: நண்பர்கள்…", "raw_content": "\nஆறு எழுத்தில் ஒரு அழகிய உலகம்.\nஇவர்கள் மட்டும் இல்லா விட்டால்\n*பால்வாடியில்(அரை class) மண் கொழித்து விளையாடியிருக்க மாட்டேன்\n*முதல் நாள் முதலாம் வகுப்பில், சரோஜினி டீச்சரிடம் என்னை அப்பா விட்டு சென்ற போது ஆரம்பித்த அழுகையை நிறுத்தியிருக்க மாட்டேன்\n*பள்ளி முடிந்து மாலை வேளையில், புதிதாக கோவில் கட்ட குவித்து வைத்திருக்கும் மணலில் விளையாடி, சட்டை அழுக்காகி அம்மாவிடம் அடி வாங்கியிருக்க மாட்டேன்\n*என் வீட்டு மாம்பழம், கொய்யாவை விட அடுத்தவர் வீட்டு (திருட்டு) மாம்பழம், கொய்யாதான் சுவையானது என்பது எனக்கு தெரியாமலே போயிருக்கும்\n*சனி, ஞாயிறுகளில் கவை(ஒண்டி வில்) கொண்டு சிட்டுக்குருவி அடித்து, கூட்டாஞ்சோறு சமைக்க கற்றுக்கொண்டிருக்க மாட்டேன்\n*கில்லி தாண்டு விளையாடி எதிராளியின் நெற்றியை பதம் பார்த்து, தக்காளி சட்னி போட்டிருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது\n*வேதியியல் சிறப்பு வகுப்பை புறக்கணித்து விட்டு Matnee show பார்ப்பதில் இருக்கும் சுகம் எனக்கு தெரியாமலே போயிருக்கும்\n*பள்ளி இறுதியாண்டு விழாவில், எனக்கு பெண் வேடமிட்டால் கூட(மாறு வேடம்) நன்றாகத்தான் இருக்குமென்று தெரியாமல் போயிருக்கும்\n*பொதுத்தேர்வு இறுதி நாளன்று, எனது வெள்ளை சட்டையில் மை தெளிக்கப்படாமல் வெள்ளையாகவே இருந்திருக்கும்\n*\"தேர்வு முடிவுகள் வெளியீடு\" -'நினைத்த அளவுக்கு மதிப்பெண் வரவில்லையே' என சோகமாக net centerஐ விட்டு வெளியேற, 'விடு மச்சான். உன்னை விட 10 மார்க்கு கம்மி. நான்லாம் feel பன்னுறேனா' என மனதை தேற்ற ஆள் இல்லாமல் இருந்திருக்கும்…\n*யாருமே அறிமுகமில்லா கல்லூரியில் தனியாகவே வாழ்க்கையைக் கடத்தியிருக்க வேண்டி வந்திருக்கும்\n*பின்புறம் உள்ள சந்தன மரக்காடுகள் கடந்து Night show Film போயிருக்க வாய்ப்பு கிடைத்திருக்காது\n*Computer lab ல் புதிய காலணிகள்(slippers) காணாமல் போகாமல் இருக்க Bata cheppals use செய்யும் idea கொடுக்க ஆள் இருந்திருக்காது\n*Lecture சுத்தமாக புரியாமல் இருந்த போதும், semester clear செய்ய semester க்கு முன் Free tution எடுக்க ஆள் இல்லாமல் போயிருக்கும்\n*பிறந்த நாள் கொண்டாட்டம் என்ற பெயரில் Solution அபிஸேகங்கள், Warden இடம் enquiry - இவைகளுக்கு அவசியம் இருந்திருக்காது\n*\"Semester Result\" - \"மச்சான் எனக்கும் 1 CUP டா. Revaluation போட்டா, நிச்சயம் 36 போட்ருவாங்க. Clear பன்னிடலாம்\" என மனதை தேற்ற ஆள் இருந்திருக்காது\n*Industrial Visit என்ற பெயரில் Industry ஐ 10 நிமிடம் visit செய்து விட்டு, 2 நாட்கள் Tour சுற்றிய இனிமை கிடைத்திருக்காது\n*Symposium என்ற பெயரில் ஒரு வாரம் O.D , 2 நாட்கள் ருசியான உணவு உண்ண வாய்ப்பு கிடைத்திருக்காது\n*Culturals ல் எவ்வளவு தான் சுமாராக ஆடினாலும், \"Super da மச்சி\" என கட்டித் தழுவி உற்காகமூட்ட ஆள் இருந்திருக்காது\n*\":Any doubt\" என Lecturer கேட்கும் சமயம் பார்த்து, உறங்கிக் கொண்டிருப்பவனை எழுப்பி விட்டு, அவனை வைத்து Comedy Kemedy செய்யப்படாமல் இருந்திருக்கும்\n*எனக்கு பின்னால் இருந்த எதையோ அவள் பார்த்து சிரிக்க, \"மச்சான், அவ உன்ன பார்த்துதான் சிரிக்கிறா. உன்னையேதான் look விட்றா. Something Something டா\" என கத்திரிக்காயை விதைக்க ஆள் இல்லாமல் போயிருக்கும்\n*Class முடிந்து Hostel போகும் Junior பெண்ணின் பெயரை அழைத்து விட்டு, ஒளிந்து கொள்ள, அவள் ஜன்னலில் நிற்கும் நான் தான் அழைத்தேன் என நினைத்து, முறைத்த அந்த சம்பவம் நடந்திருக்காது\n*யாரோ பகைக்காக, யாரையோ நான் திட்டி, \"அதே கட்டை குரல்\" என Girls Hostel முழுக்க எனது குரல் தேடப்பட்டு இருக்காது\n*கல்லூரியின் கடைசி நாளில், என் கண்கள் குளமாகியிருக்க வாய்ப்பு இருந்திருக்காது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/simbu-in-mani-ratnam-s-film-the-fans-happy-117111100006_1.html", "date_download": "2018-04-26T13:39:28Z", "digest": "sha1:KDRAOAFOQSDMWPNZ4NZR34WWS2L2LTOC", "length": 11182, "nlines": 161, "source_domain": "tamil.webdunia.com", "title": "மணிரத்னம் படத்தில் சிம்பு; மகிழ்ச்சியில் ரசிகர்கள் | Webdunia Tamil", "raw_content": "\nவியாழன், 26 ஏப்ரல் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nமணிரத்னம் படத்தில் சிம்பு; மகிழ்ச்சியில் ரசிகர்கள்\nநடிகர் சிம்புவுக்கு படங்கள் சில வருடமாகவே மிகவும் மோசமான நிலையிலேயேதான் உள்ளது. அவருடைய ரசிகர்களை திருப்திப்படுத்தி சிம்பு ரசிகர்கள் எல்லோரும் கொண்டாடும்படி ஒரு படம் அமைந்தது என்றால் அச்சம் என்பது மடமையடா தான்.\nஇப்படம் வெளிவந்து இன்றுடன் ஒரு வருடம் ஆகின்றது, அதை ரசிகர்கள் டுவிட்டரில் கொண்டாடி வருகின்றனர். AAA-வில் மீண்டு வருவார் என்று நினைத்தால் சொதப்பினார். இதனால், ரசிகர்கள் மிகவும் கவலையில் இருக்க, அவர்களுக்கு ஆறுதலாக தற்போது சிம்பு மணிரத்னம் படத்தில் கமிட் ஆகியிருப்பதாக ஒரு செய்தி வந்ததுள்ளது.\nஇந்த நிலையில் மணிரத்னம், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், ஐஸ்வர்யா ராஜேஷ், ஜோதிகா, அரவிந்த் சாமி ஆகியோரை வைத்து ஒரு புதிய படம் இயக்க இருப்பதாகவும், சிம்பு முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சிம்பு, மணிரத்னம் இணைய வேண்டும் என்பது ரசிகர்களின் நீண்ட நாள் ஆசை. அது தற்போது நிறைவேறியுள்ளது சிம்பு ரசிகர்களுக்குப் மகிழ்ச்சியை தந்துள்ளது.\nதட்றோம் தூக்றோம் - டீமானிடைசேஷன் கீதம்; தெறிக்கவிடும் சிம்பு பாடல்\nபிக்பாஸ் காயத்ரி யாருக்கு ஐ லவ் யூ சொன்னார் தெரியுமா\nசிம்பு இசையில் படகராக மாறிய பிக்பாஸ் ஹரிஷ் கல்யாண்\nசிம்பு பட இயக்குனரின் படத்தில் பிக்பாஸ் ஆரவ்\nகருணாநிதிக்கு விரைவில் பேச்சு பயிற்சி - திமுக தொண்டர்கள் மகிழ்ச்சி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.nitharsanam.net/179205/news/179205.html", "date_download": "2018-04-26T13:13:35Z", "digest": "sha1:L3JFBBOG4TUWPGPAZE25YE2HGCGYUEF7", "length": 6702, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "இந்தோனேசியாவின் போர்னியோ தீவு துறைமுகத்தில் அவசர நிலை பிரகடனம்!!(உலக செய்தி) : நிதர்சனம்", "raw_content": "\nஇந்தோனேசியாவின் போர்னியோ தீவு துறைமுகத்தில் அவசர நிலை பிரகடனம்\nஇந்தோனேசியாவின் ஜகார்தா கடல் பகுதியில் உள்ள போர்னியோ தீவு அருகே கப்பலில் இருந்து கொட்டிய எண்ணெய் தீப்பிடித்து எரிந்ததில் 5 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து இந்தோனேசியாவில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. தீயைக் கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் மூன்றாவது நாளாகப் போராடி வருகின்றனர். எண்ணெய்க் கசிவு மற்றும் புகை மண்டலத்தால், பாலிக்பாப்பன் நகர மக்களுக்கு கடும் முன்னெச்சரிக்கைகள் விடப்பட்டுள்ளன.\nதீயைப் பரப்பும் வகையில் எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. எண்ணெய்க் கசிவு மற்றும் தீ விபத்து பாதிப்புகளை குறைந்தபட்சமாக்கவும் சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டதைக் குறைக்கவும் அதிகாரிகள் போராடி வருகின்றனர். இதன்மூலம் ஏற்பட்ட புகைமண்டலத்தால் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் உடல் நலம் பாபதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 2 கிலோமீட்டர் அளவுக்கு பரவியுள்ள தீயை அணைக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இந்தோனேசிய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nஉடலுறவின் போது எதுவெல்லாம் உங்கள் துணைக்கு பிடிக்கும்\nகர்ப்பகாலத்தில் தாம்பத்யம், அசைவம் சரியா\nமரண காமெடி- இது நம்ம ஊரு நடிகர்கள் – பழமார்நேரி பஞ்சாயத்து\nஇந்திய அரசியலில் ‘ஆளுநர்’ பதவிகள்\nநல்ல தூக்கத்துக்கு நாளை செய்ய வேண்டியதை எழுதுங்கள்\nதாம்பத்திய இன்பத்தின் போது தவிர்க்க வேண்டியவை\nசினிமா துறையில் இந்த வசனத்தை இவரை தவிர யாராலும் பேச முடியாது\nஉலக புகழ் பெற்ற குரங்கு செல்பி புகைப்பட வழக்கு : காப்புரிமை கோர முடியாது நீதிமன்றம் தீர்ப்பு\nஅணு சக்தி ஒப்பந்தம் மோசமானது என்றால் அமெரிக்க கையெழுத்திட்டது : ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி\nஇலங்கைப் பொலிஸாரின் பொருட்களை வைத்திருந்த பிரிட்டன் குடியுரிமை பெற்ற நபர் கைது\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilthottam.in/t45982-topic", "date_download": "2018-04-26T13:22:50Z", "digest": "sha1:QGQNZEHJYXPWTT3SX4WQTQKBLVKSNL33", "length": 21403, "nlines": 187, "source_domain": "www.tamilthottam.in", "title": "நினைவுகள் மட்டும் அழிவதில்லை ! கவிஞர் இரா .இரவி !", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» டி20 போட்டிகளில் கேப்டனாக 5 ஆயிரம் ரன்களை கடந்து டோனி சாதனை\n» டென்னிஸ் வீரர்கள் ரோகன் போபண்ணா, யூகி பாம்ப்ரி பெயர்கள் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை\n» இந்த உலகத்துல நல்லவங்க, கெட்டவங்கன்னு யாரும் இல்ல....\n» வாசகர் கவிதை - தொடர் பதிவு\n» எதுக்காக உன் காதலியை கிணத்துல தள்ளிவிட்டே...\n» குற்றத்திற்கும் நீதிக்கும் உள்ள உறவு...\n» நரசிம்மர் பற்றிய 30 வழிபாட்டு குறிப்புகள்\n» அமர்நாத் யாத்திரை ஜூன் 28-ம் தேதி தொடங்குகிறது\n» சருமப் பிரச்னைக்கு மாம்பழம் -\n» ‘சிற்றெறும்பு கட்டெறும்பு’ - கமல்ஹாசன், அமைச்சர் ஜெயக்குமார் வார்த்தை ஜாலத்தால் ஒருவருக்கொருவர் கிண்டல்\n» 5,000 குஜராத் விவசாயிகள் தற்கொலைக்கு மனு\n» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்\n» அமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி\n» இந்தியர்களை பாதிக்கும் ‘எச்-4’ விசா ரத்து நடவடிக்கைக்கு அமெரிக்க எம்.பி.க்கள் எதிர்ப்பு, ஐ.டி. துறையும் கண்டனம்\n» பலாத்காரத்துக்கு ஆளாகும் ஆண் குழந்தைகளுக்கும் இழப்பீடு'\n» நிலக்கரியை விட கருப்பாக இருக்கும் கிரகம் கண்டுபிடிப்பு\n» பிரபல பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி மரணம்: கமலுக்கு முதல் பின்னணிப் பாடல் பாடியவர்\n» உறவு முன்னே...ப்ராப்ளம் பின்னே...\n» கவர்ச்சி நடிகைகிட்ட பிடிச்சது, அவரோட நடிப்பு...\n» 2 மணி நேரம் பொறுக்க முடியாதா கஸ்தூரி..\n» தமிழில் காலூன்ற தடுமாறும் பிறமொழி நடிகர்கள்\n» பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்\n» வாழ்க்கையை ஓஹோன்னு வாழ கன்ஃபூசியஸ் சொன்ன 10 கட்டளைகள்...\n» இரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு\n» ரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது: மக்கள் மன்ற மாநில செயலாளர் பேச்சு\n» தாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து\n» காங்., கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக்கறை: சல்மான் குர்ஷித் சர்ச்சை\n» நாடு முழுவதும் 24 போலி பல்கலை.,கள்\n» உ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்\n» சுப்ரீம் கோர்ட் எதிர்காலம்: ஆலோசிக்க நீதிபதிகள் கோரிக்கை\n» 2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்: ஜூன் 16-ம் தேதி இந்தியா-பாக். மோதல்\n நூல் ஆசிரியர் : முனைவர் பேராசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி\n» சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து\n» உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி\n» தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்\n» பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது\n» கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு\n» கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்\n» கிறிஸ்தவ பெண்ணுக்கு திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் பதவி: நடிகை ரோஜா கண்டனம்\n» கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன\n» கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி\n» கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு\n» நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nதமிழ்த்தோட்டம் :: கவிதைச் சோலை :: சொந்தக் கவிதைகள்\nகடவுள் உண்டு இல்லை என்று\nகடவுளை ஒதுக்கி வைத்து விட்டு\nமிகவும் பிடித்தது நீ என்றேன் \nஅதே கேள்வி உன்னைக் கேட்டதும்\nவிதியின் மீது நம்பிக்கையற்றவன் நான்\nஉலகின் எங்கோ ஒரு மூலையில் நீ\nஉலகின் மற்றொரு மூலையில் நான் \nகடல் அலைகள் என வந்து மோதுகின்றன \nRe: நினைவுகள் மட்டும் அழிவதில்லை \nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nRe: நினைவுகள் மட்டும் அழிவதில்லை \nRe: நினைவுகள் மட்டும் அழிவதில்லை \nதமிழ்த்தோட்டம் :: கவிதைச் சோலை :: சொந்தக் கவிதைகள்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://nilapennukku.blogspot.com/2012/03/blog-post_24.html", "date_download": "2018-04-26T13:29:50Z", "digest": "sha1:YTVTAPWVPLJKCUFLUCY4HSKWXED3WP6W", "length": 11454, "nlines": 133, "source_domain": "nilapennukku.blogspot.com", "title": "கிரிக்கெட் நகைச்சுவை | நிலாப்பெண்ணுக்கு", "raw_content": "\nஇங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பங்களாதேஷ் என அனைத்து தொடர்களையும் இந்திய அணி இழந்தபின்,\nரெயினா - உன்னை அனுஷ்கா சர்மாவா நினைச்சுக்கறேன்\nஜடேஜா - இந்த ரணகலத்திலேயும் உனக்கொரு கிளுகிளுப்பு கேக்குது\n மொத்தமா 100 செஞ்சுரி அடிச்சாச்சு இன்னும் ஒரு செஞ்சுரி அடிச்ச ODIல 50செஞ்சுரி ஆயிடும் – எப்ப அடிக்கப் போறீங்க\nசச்சின்- இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்ப ரணகளமாக்கிட்டேங்களேடா\nஹி ஹி நான்கு நகைச்சுவையும் சூப்பர்..அதுல 1.2 சான்சே இல்லை...கோலி பாவம்\n:) இல்லை ஜடேஜாதான் பாவம்\nநல்ல காமெடி இவங்களதான் கலாய்காம இருந்திங்க\nஇப்ப இந்த வடையும் போச்சே\nஏ ஜோக்ஸ் கதைகள் தத்துவங்கள் 3\nஹைக்கூ - சின்ன சின்ன கவிதைகள்\nஅரிய புகைப்படங்கள் - திருக்குறள் ஓலைச்சுவடி, பழைய சென்னை, கோவை, திருச்சி, திரிகோணமலை, நெல்லை\nதத்துவங்கள் - ஜோக்ஸ், வாழ்க்கை, சிறை, வரலாறு\nஏ ஜோக்ஸ் – தத்துவங்கள்\nவருடத்தின் சிறந்த 10 பதிவுகள்\nஉன்னோட மூளை ஏன் பிரெஷ்ஸா இருக்கு தெரியுமா நீ உபயோகப்படுத்தாமலே வச்சிருந்தா அப்பிடிதேன் இருக்கும் நீ உபயோகப்படுத்தாமலே வச்சிருந்தா அப்பிடிதேன் இருக்கும்\nஏ ஜோக்ஸ் கதைகள் தத்துவங்கள் 3\nகல்யாணம் சொர்கத்தில் நிச்சயிக்கப்படுகிறதென்றால் முதலிரவு எங்கே நிச்சயிக்கபடுகிறது நான் நேரா அங்கே போயிடுறேன் நான் நேரா அங்கே போயிடுறேன்\nதத்துவங்கள் - ஜோக்ஸ், வாழ்க்கை, சிறை, வரலாறு\nஹிந்தி சினிமாகாரர்கள் எல்லா படங்களிலும் \"சோனியே\" \"சோனியே\" என்று பாட்டெழுதியே சோனியா காந்தியை பிரபலமாக்கிவிட்டனர். ...\nஏ ஜோக்ஸ் – தத்துவங்கள்\nஒரு பதின்மூன்று வயது பெண்ணின் T-SHIRT வாசகம் - “ IT’S GROWING ” எந்த ஒரு உடையும் ரசிக்கப்படுவதற்கும் ரசிக்கப்படாமல் போவதற்கு...\nஅவள் வரமாட்டாள் என்று தெரிந்தும் காதலை ஆண்கள் கழிவறைகளில் எழுதுவதுதான் மூடநம்பிக்கை பெண்கள் இல்லா உலகம் வேண்டும் - அங்கு என்னைத்தவிர ...\n A JOKES, நகைச்சுவை, கதை, தத்துவம், அனுபவம், தமிழ், கவிதை,சுற்றுலா, கார்டூன்\nநிலாப்பெண்ணுக்கு இணையதளம் ஆரம்பித்து ஓராண்டு நிறைவு பெறுவதை முன்னிட்டு இந்த வருடத்தின் சிறந்த பதிவுகள் சில\nஅரிய புகைப்படங்கள் - திருக்குறள் ஓலைச்சுவடி, பழைய சென்னை, கோவை, திருச்சி, திரிகோணமலை, நெல்லை\nஎன் சிறுவயது முதல் (இப்ப ரொம்ப பெரிய வயசுன்னு நினைப்பு) தேடிய புகைப்படம் – திருக்குறளின் ஓலைச்சுவடி. இன்னும் பல நகரங்களின் முந்தைய தோற...\nஹைக்கூ - சின்ன சின்ன கவிதைகள்\nஎனக்கும் அவளுக்கும் ஒரு ஒற்றுமை என் நண்பனைப் பிடித்துப்போனதுதான் வடக்கு தெற்கு ஈர்க்கும் காந்தப்புலம் அவள் கண்க...\nஉங்களிடம் உள்ள டிகிரியை வைத்துக்கொண்டு ஒரு ஃபில்டர் காபிகூட போட முடியாது பெண்களுக்குத் தேவை குடிக்காத நல்ல ஆண்கள் பெண்களுக்குத் தேவை குடிக்காத நல்ல ஆண்கள்\nவானம் ஆழமானது நீ நினைத்தால் வானம் ஆழமானது நீ உயர்ந்து நின்றால் வானம் ஆழமானது நீ உயர்ந்து நின்றால்\nகாதல் கவிதைகள் - பிரிவு\nகலைஞர் சாதனை - அமெரிக்காவைக் காப்பாற்றினார்\nவடிவேலு ரோலில் மன்மோகன் சிங்\nசைக்கோ தொடர்கதை பகுதி 2\n வீடு, கம்பேனியை ஒரே நாளில் ...\nமனைவி சண்டையும் ஒரு பீரும்\nLOVE JOKES - காமெடி வசனங்கள்\nEnglish PLUS18 WatchMovie அரசியல் அனுபவம் ஆன்மீகம் இணையதளம் இயற்கை இலங்கை இன்னா 40 ஈழம் உணவு உபயோகமானவை கட்டுரை கதை கவிதை காதல் காதல் மொழி கார்டூன் சினிமா சுட்டவை 40 சுற்றுலா செய்திகள் சைக்கோ ட்விட்டர் தத்துவம் தமிழ் தலையங்கம் தனிமை திரை விமர்சனம் துபாய் துறை தொழில்நுட்பம் நகைச்சுவை நிலா படைப்புகள் பாடல் புகைப்படங்கள் பேசி போராட்டம் மழலை மனதைத் திற வரலாறு விளையாட்டு வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://anony-anony.blogspot.com/2009/05/2-and-sslc.html", "date_download": "2018-04-26T13:22:57Z", "digest": "sha1:CJ54SYRFSQLPPUUSF6SY7SFZWNJNAPAG", "length": 7498, "nlines": 255, "source_domain": "anony-anony.blogspot.com", "title": "ANONYMOUS: +2 and s.s.l.c பாஸான மானவர்களுக்கு இலவச மெடிக்கல் கோர்ஸ்..!", "raw_content": "\n+2 and s.s.l.c பாஸான மானவர்களுக்கு இலவச மெடிக்கல் கோர்ஸ்..\nமொக்கை போட்டது ALIF AHAMED | Labels: free, மெடிக்கல்ஸ்\nதமிழர்ஸ் டாட் காமில் உங்கள் வலைப்பக்கத்தை இணைத்து உலக தமிழர்களை சென்றடையுங்கள்.\nநண்பா அழகிய வோட்டு பட்டையும் இனைத்துக்கொள்ளுங்கள்\nword verification வைப்பதற்கு சாரி. spam மெசெஜ் அதிகம் வருவதால் வைக்க பட்டு உள்ளது புரிந்துணர்வுக்கு நன்றி \nபோங்காடா போய் ஓட்டு போடுங்க (1)\n+2 and s.s.l.c பாஸான மானவர்களுக்கு இலவச மெடிக்கல் ...\nவேலன்:-பைல்களை வேண்டிய அளவு பிரிக்க -சேர்க்க -தகவல்களை மறைத்துவைக்கFile friend\nபொழுதுகளைக் களவாடிய டூரிங் டாக்கீஸ்\nMicrosoft Office: ரிப்பன் மெனுவில் தேவையான கட்டளைகளை கொண்ட புதிய டேபை உருவாக்க..\n+2 and s.s.l.c பாஸான மானவர்களுக்கு இலவச மெடிக்கல் ...\nபோங்காடா போய் ஓட்டு போடுங்க (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "http://global.drfone.biz/ta/ios-data-backup-and-restore.html", "date_download": "2018-04-26T13:45:26Z", "digest": "sha1:XDNVIVENORCYCWL4VPH3OHA5GJ4GXW5H", "length": 25191, "nlines": 321, "source_domain": "global.drfone.biz", "title": "[அதிகாரபூர்வ] dr.fone - தேர்ந்தெடுக்கப்பட்ட iOS க்கு தரவு காப்பு பிரதி & மீட்டமை", "raw_content": "\niOS க்கு தரவு மீட்பு ( ஐபோன் தரவு மீட்பு )\niOS க்கு அமைப்பு மீட்பு\niOS க்கு தரவு காப்பு பிரதி & மீட்டமை\niOS க்கு தேதிகளில் டிரான்ஸ்பர், காப்பு மற்றும் மீட்டமை\niOS க்கு Viber, காப்பு மற்றும் மீட்டமை\niOS க்கு Kik காப்பு மற்றும் மீட்டமை\niOS க்கு வரி காப்பு மற்றும் மீட்டமை\niOS க்கு முழு தரவு அழிப்பான்\niOS க்கு தனியார் தரவு அழிப்பான்\niOS க்கு திரை ரெக்கார்டர்\nஅண்ட்ராய்டு பூட்டு திரை நீக்கம்\nஅண்ட்ராய்டு தரவு காப்பு பிரதி & மீட்டமை\niOS க்கு தரவு மீட்பு\niOS க்கு அமைப்பு மீட்பு\niOS க்கு தரவு காப்பு பிரதி & மீட்டமை\niOS க்கு தேதிகளில் டிரான்ஸ்பர், காப்பு மற்றும் மீட்டமை\niOS க்கு முழு தரவு அழிப்பான்\niOS க்கு தனியார் தரவு அழிப்பான்\niOS க்கு Kik காப்பு மற்றும் மீட்டமை\niOS க்கு Viber, காப்பு மற்றும் மீட்டமை\niOS க்கு வரி காப்பு மற்றும் மீட்டமை\niOS க்கு திரை ரெக்கார்டர்\nஅண்ட்ராய்டு பூட்டு திரை நீக்கம்\nஅண்ட்ராய்டு தரவு காப்பு பிரதி & மீட்டமை\niOS க்கு தரவு மீட்பு\niOS க்கு அமைப்பு மீட்பு\niOS க்கு தரவு காப்பு பிரதி & மீட்டமை\niOS க்கு தேதிகளில் டிரான்ஸ்பர், காப்பு மற்றும் மீட்டமை\niOS க்கு முழு தரவு அழிப்பான்\niOS க்கு தனியார் தரவு அழிப்பான்\niOS க்கு Kik காப்பு மற்றும் மீட்டமை\niOS க்கு Viber, காப்பு மற்றும் மீட்டமை\niOS க்கு வரி காப்பு மற்றும் மீட்டமை\ndr.fone கருவிகளை - iOS க்கு தரவு காப்பு பிரதி & மீட்டமை\nகாப்பு மற்றும் iOS க்கு தரவு நெகிழ்வான டர்ன்ஸ் மீட்டமை\nகாப்பெடுக்க ஒரே கிளிக்கில் உங்கள் கணினியில் முழு iOS சாதனம்.\nமுன்னோட்டத்தை மற்றும் ஒரு சாதனம் காப்பு ஏதாவது உருப்படியை மீட்க அனுமதி.\nநீங்கள் உங்கள் கணினியில் காப்பு இருந்து என்ன ஏற்றுமதி செய்க.\nமீட்க போது, சாதனங்களைத் தரவு இழப்பு இல்லை.\nஇலவசமாக முயற்சிக்கவும் இப்போது வாங்க\nஇலவசமாக முயற்சிக்கவும் இப்போது வாங்க\nமுயற்சி அது இலவச அது முயற்சி இலவச\ndr.fone கருவிகளை - iOS க்கு தரவு காப்பு பிரதி & மீட்டமை நீங்கள் தேர்ந்தெடுத்து காப்பு அனுமதித்து, iOS சாதனங்களில் / காப்பு இருந்து நீங்கள் என்ன மீட்க.\ndr.fone கருவிகளை - காப்பு மற்றும் மீட்டமை iOS க்கு தரவு உங்கள் iPhone, iPad இல் கிட்டத்தட்ட அனைத்து தரவு ஒரு முழு காப்பு செய்ய முடியும், அல்லது நீங்கள் தேர்ந்தெடுத்து நீங்கள் உங்கள் கணினியில் வைத்திருக்க விரும்பும் தரவை ஏற்றுமதி செய்யலாம். தேவை இருக்கும் போது, நீங்கள் பிரதி எடுக்கப்பட்ட தரவை உங்கள் சாதனத்தில் நீங்கள் விரும்பும் பொருட்களை தேர்ந்தெடுப்பதன் மூலம் மீட்டெடுக்க முடியும். அது ஐடியூன்ஸ் அல்லது iCloud பயன்படுத்தி விட ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.\nஒரே கிளிக்கில் காப்பு உங்கள் ஐபோன் / ஐபாட்\nமுழு காப்பு விஷயம் மட்டும் நீங்கள் ஒரே கிளிக்கில் எடுக்கிறது. உங்கள் சாதனம் இணைக்கப்பட்டது மற்றும் கண்டுபிடிக்கப்பட்டவுடன், செய்தால் உங்கள் iPhone, iPad அல்லது ஐபாட் டச் தானாக காப்பு தரவு. புதிய காப்பு கோப்பு பழைய புதியது எழுதப்படும் மாட்டேன். நீங்கள் விரும்பும் போதெல்லாம் காப்பு செய்ய முடியும்.\nகோப்புகளை அனைத்து வகையான காப்புப் பிரதி\nஐபோன் காப்பு மற்றும் மீட்டமை டர்ன்ஸ் எளிதாக\nகாப்பு உங்கள் இயக்கபடலாம் பின் ஒன்றாக கிளிக்கில் ஐபோன் தரவு மீட்க மற்றும்.\nஐபோன் காப்பு கோப்புகள் புதுப்பிக்கப்பட மாட்டாது\nநீங்கள் ஐபோன் காப்பு பிரதியையும் அன்றாட செய்ய முடியும் மற்றும் அனைத்து காப்பு கோப்புகளை சேமிக்கப்படும் புதியவற்றை பதிலாக இருக்க முடியாது.\nமுன்னோட்டம் ஐபோன் காப்பு உள்ளடக்க\nநீங்கள் உங்கள் ஐபோன் காப்பு நன்கு நிர்வகிக்க முடியும் என்று நீங்கள், இந்த iOS காப்பு அனைத்து உங்கள் ஐபோன் காப்பு கோப்புகளை விவரங்கள் முன்னோட்டத்தை மற்றும் நிரலை மீட்டெடுக்க முடியும்.\nஐபோன் மீட்டமை உங்கள் தரவைப் மேலெழுதவா மாட்டேன்\nமுன்னோட்ட பிறகு, நீங்கள் உங்கள் ஐபோன் அல்லது ஐபாட் அதை மீட்க உங்கள் ஐபோன் காப்பு எந்த உருப்படியை தேர்வு செய்யலாம். இது உங்கள் சாதனத்தில் இருக்கும் எந்த தரவு மாற்றியமைக்காது.\nஉங்கள் ஐபோன் தரவு ஏற்றுமதி\nநீங்கள் படிக்க அல்லது உங்கள் தரவு அச்சிட வேண்டும் என்றால், நீங்கள் ஒரு HTML கோப்பு அல்லது நீங்கள் விரும்பும் மற்றவர்கள் உங்கள் ஐபோன் காப்பு உள்ள பொருட்களை ஏற்றுமதி செய்ய முடியும். அதை நீங்கள் தான்.\nஐபோன், ஐபாட் மற்றும் ஐபாட் டச் உடன் பெரிதும் வேலை\nநீங்கள் சமீபத்திய ஐபோன் 7 பிளஸ், ஐபாட் புரோ, அல்லது பழைய ஐபோன் 4, ஐபாட் 1 பயன்படுத்தி வருகிறோம் இல்லை விஷயம், இந்த iOS தரவு மீட்பு ஐபோன், ஐபாட் மற்றும் ஐபாட் டச் இன் அனைத்து மாடல்களுக்கும் முழுமையாக ஏற்றதாக உள்ளது.\nஇந்த iOS காப்பு மற்றும் நிரலை மீட்டெடுக்க முற்றிலும் படிக்க மட்டுமேயாகும் மென்பொருள். அது வைக்கமாட்டேன் மாற்ற அல்லது உங்கள் சாதனத்தில் அல்லது காப்பு கோப்பில் எந்த தரவு கசிய. உங்கள் தனிப்பட்ட தரவு எடுத்து தீவிரமாக கணக்கு. நீங்கள் எப்போதும் அதை அணுக முடியும் ஒரே நபர் இருக்கிறோம்.\nகாப்பு கோப்புகள் இருந்து ஏற்றுமதி தரவு\nகாப்பு கோப்புகளை, நீங்கள் அவர்கள் அனைவரையும் வைத்துக்கொள்வதாயினும் அல்லது நீங்கள் தேவை இல்லை என்று அவர்கள் எந்த நீக்க தேர்வு செய்யலாம். மேலும், நீங்கள் முன்னோட்டத்தை முடியும் மற்றும் உங்கள் கணினியில் காப்பு கோப்பிலிருந்து எந்தவொரு பொருட்களை ஏற்றுமதி, மற்றும் HTML, CSV அல்லது செய்வதையும் கோப்புகளாக அவர்களை காப்பாற்ற.\nகாப்பு மற்றும் எளிதாக உங்கள் iOS சாதனங்களில் தரவு மீட்க.\nஅது மட்டும் தரவு, ஆபத்து எந்த தரவும் படிக்கிறார்.\nஅது யாருக்கும் கிடைக்கும், எந்த தொழில்நுட்ப அறிவு கேட்டார்.\nபோது காப்பு, ஏற்றுமதி அல்லது மீட்க இழந்து தகவல்கள் இல்லை.\niOS க்கு தரவு காப்பு பிரதி & அனைத்து iOS சாதனங்கள் படைப்புகளை மீட்டமை\nஐபோன் 7 பிளஸ், ஐபோன் 7, ஐபோன் ஓஎஸ் ஐபோன் மேலும் 6 கள், ஐபோன், ஐபோன் 6 பிளஸ், ஐபோன் 6, ஐபோன் 5s, ஐபோன் 5c, ஐபோன் 5, ஐபோன் 4s, ஐபோன் 4 6 கள்\nஐபாட் அனைத்து மாதிரிகள் புரோ, ஐபாட் ஏர், ஐபாட் மினி, ஐபாட்\nஐபாட் டச் 5, ஐபாட் டச் 4\nஏற்றுமதி தொடர்புகள் மற்றும் செய்திகளை .cvs, .html, அல்லது தகவல் vcard கணினியில்;\nஏற்றுமதி தேதிகளில் .csv அல்லது .html மேலும், கணினிக்கு செய்திகளை;\nஏற்றுமதி அழைப்பு பதிவைப் குறிப்புகள், காலண்டர், நினைவூட்டல்கள் மற்றும் .html மேலும், கணினிக்கு சபாரி பக்கக்குறிப்பு.\n1GHz (32 பிட் அல்லது 64 பிட்)\n256 எம்பி ரேம் அல்லது மிகவும் (1024MB பரிந்துரைக்கப்படுகிறது)\n200 எம்பி காலியிடம் மேலே மற்றும்\niOS க்கு 10.3, iOS க்கு 10, iOS க்கு 9 மற்றும் முன்னாள்\niOS க்கு தரவு காப்பு பிரதி & மீட்டமை\nExellent மற்றும் beautifull மற்றும் மிகவும் importaint திட்டம்.\nதினம் சேமிக்கப்பட்டது. தங்கம் அதன் எடை வொர்த். நன்றி.\nநீங்கள் இழந்த தரவுகளை கிடைத்தால், ஒரு வேண்டும்\nசரியான தயாரிப்பு ஐபோன் பெரிய வேலை.\niPhone, iPad இல் காப்பு குறிப்புக்கள் 3 வழிகள்\nஐடியூன்ஸ் காப்பு என்ன செய்கிறது\nஐபோன் மற்றும் Android சாதனங்களில் தேதிகளில் காப்பு மீட்டமை எப்படி\nகாப்பு iCloud தொடர்புகள் இரண்டு வழிகள்\nஎப்படி காப்பு பூட்டிய ஐபோன் 7 (பிளஸ்) / அர்ஜென்டினா / 6 கள் (பிளஸ்) / 6 தரவு\nஐடியூன்ஸ் காப்பு மீட்டெடுக்க எப்படி\nஐபோன் காப்பு கரைத்து: பிரித்தல் மற்றும் ஐபோன் தரவு மீட்டெடு\nஐடியூன்ஸ் இல்லாமல் / காப்பு ஐபோன் தொடர்புகள் 4 முறைகள்\nஐபோன் காப்பு இடம் கண்டுபிடித்து காப்புப்பிரதிகளில் நீக்கு எப்படி\nஎங்கள் வாடிக்கையாளர்கள் மேலும் பதிவிறக்கினால்:\niOS க்கு அமைப்பு மீட்பு\nமீட்பு முறையில், வெள்ளை ஆப்பிள் லோகோ, கருப்பு திரை, தொடக்கத்தில் தேடுகிறது, போன்ற பல்வேறு iOS கணினியில் பிரச்சினைகள் சரி\nமுயற்சி அது இலவச அது முயற்சி இலவச\niOS க்கு தரவு மீட்பு\nஐபோன், ஐபாட் மற்றும் ஐபாட் டச் இருந்து இழந்த அல்லது நீக்கிய தொடர்புகளைப், செய்திகள், படங்கள், குறிப்புகள், முதலியன மீட்க.\nமுயற்சி அது இலவச அது முயற்சி இலவச\nபயன்கள் டிரான்ஸ்பர், காப்பு மற்றும் மீட்டமை\nஐபோன் / ஐபாட் / ஐபாட் டச் / Android சாதனங்களில், அல்லது காப்பு / ஏற்றுமதி கணினிகளுக்கு அதை, iOS தேதிகளில் மாற்றம் செய்யுங்கள்.\nமுயற்சி அது இலவச அது முயற்சி இலவச\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kadayanallur.org/archives/4925", "date_download": "2018-04-26T13:07:42Z", "digest": "sha1:XJLKJBFGLXG5PDDMX2TUNCIQDMCC2PW5", "length": 8086, "nlines": 87, "source_domain": "kadayanallur.org", "title": "வைகோ நாளை நெல்லை வருகை |", "raw_content": "\nவைகோ நாளை நெல்லை வருகை\nநெல்லைக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நாளை (18ம்தேதி) வருகிறார். நெல்லை மாவட்ட மதிமுக செயலாளர் சரவணன், மாநகர் மாவட்டச்செயலாளர் பெருமாள் வெளியிட்ட அறிக்கை: நெல்லையில் மாவட்ட, மாநகர் மாவட்ட மதிமுக தேர்தல் நிதியளிப்பு விழா வண்ணார்பேட்டை சகுந்தலா ஓட்டலில் நாளை காலை 10 மணிக்கு நடக்கிறது. பொதுச்செயலாளர் வைகோ தேர்தல் நிதியை பெற்றுக்கொள்கிறார். துணைப்பொதுச்செயலாளர் மல்லை சத்யா, தலைமை நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். ஒன்றிய, நகர, வார்டு செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் buy Cialis online கூட்டத்தில் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது\nசொத்துக் குவிப்பு வழக்கு: ஜெயலலிதா குற்றவாளி- முதல்வர் பதவியை இழக்கிறார்\nநாளை பிளஸ்டூ தேர்வு தொடக்கம்-28ம் தேதி பத்தாம் வகுப்பு தேர்வுகள் தொடக்கம்\nபுதிய வீடு கட்ட 18 நிபந்தனைகள் விதிப்பதா நெல்லை மாநகராட்சி கூட்டத்தில் கடும் எதிர்ப்பு\nதென்காசியில் பிப். 25ல் ஊர்க்காவல் படை தேர்வு\n10 தொகுதிகளில் 18.99 லட்சம் வாக்காளர்கள்; பெண்கள் அதிகம்பெயர் சேர்த்தல், திருத்தம்\nஜெ.,விற்கு நன்றி கடன் தென்காசி வேட்பாளர் உருக்கம்\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகடையநல்லூரில் … வீடு வீடாக சென்று நெல்லை கலெக்டர் ஆய்வு\nபரவி வரும் டெங்கு காய்சல் …மரண பயத்தில் கடையநல்லூர் மக்கள்.\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://jobflashportal.blogspot.com/2012/02/blog-post_8706.html", "date_download": "2018-04-26T13:11:27Z", "digest": "sha1:H3IW5NKCAMN623YZDIQ3LABXECLQSNM4", "length": 29579, "nlines": 390, "source_domain": "jobflashportal.blogspot.com", "title": "EDUCATION & JOB PORTAL: ஆண்டுக்கு இரண்டு ஈத்து ஈத்துக்கு இரண்டு குட்டிகள்", "raw_content": "\nஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் உண்டாவதாக சகோதர்களே இது கல்வி மற்றும் வேலைவாய்ப்பு செய்திகளை பகிர்ந்துகொள்ளும் பொதுவான தளம். உங்களுக்கு தெரியவரும் வேலைவாய்ப்பு தகவல்களை nagoreflash@ymail.com என்ற முகவரிக்கு நீங்கள் அனுப்பிதந்து இங்கே இடம்பெற செய்யுங்கள் இன்ஷால்லாஹ் பலர் பயன்பெறுவர்கள்..... இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளின் வேலைவாய்ப்பு தகவல்களை தொடர்ந்து UPADATE செய்து வருகிறோம்.\nநீங்கள் நன்மையிலும்,இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்- உலகப்பொதுமறை - திருக்குர்ஆன்.\nவெற்றி என்பது உன்னை உலகத்திற்கு அறிமுகம் செய்வது.... தோல்வி என்பது உன்னை உனக்கே அறிமுகம் செய்வது \nCALL CENTRE வேலையை பற்றிய ஒரு பார்வை\nஅரசு தேர்வானையும் முஸ்லிம்களின் ஆர்வமின்மையும்\nஆன்லைன் வேலைவாய்ப்பு அலுவலகம் - பதிவுசெய்யுங்கள்.\n - டாப் 10 படிப்புகள்\nகல்வி உதவிக்கான இந்திய அரசின் வலைத்தளம்\nசிறுபான்மையினருக்கான உயர்கல்வி பயிற்சி மையம்\nசுவீடனுக்குப் படிக்கப் போகலாம் வாங்க, படிப்பு இலவசம்\nதமிழ்நாடு கலை & அறிவியல் கல்லூரிகள்\nதொழில்நுட்பம் படிக்கும் சிறுபான்மை மாணவர்களுக்கு உதவித்தொகை\nமாணவர்கள் 'அதிக மதிப்பெண்கள்' பெற ஓர் இணையதளம்\nமுழுமையான கல்வி வழிகாட்டி -தமிழில்\nமுஸ்லீம் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் தொண்டு நிறுவனங்கள்\nஆண்டுக்கு இரண்டு ஈத்து ஈத்துக்கு இரண்டு குட்டிகள்\nவான்கோழி, காடை, வென்பன்றி, முயல் கறிக்கோழி என இறைச்சிக்காக பல வகை கால்நடைகளை வளர்த்தாலும் நாட்டுக்கோழிக் கறி, ஆட்டுக் கறி இவையிரண்டுக்குமான கிராக்கி என்றும் குறைவதேயில்லை. மளமளவென்று ஏறி வரும் இவற்றின் விலை, அப்படியிருந்தும் சந்தையில் இவற்றுக்கான தட்டுப்பாடு ஆகியவையே இவற்றின் தேவைக்கான சாட்சி. அந்த வகையில் விவசாயிகளுக்கு அதிகளவில் கைகொடுத்து வருவது ஆடு வளர்ப்புதான்.\nஏறத்தாழ நம் ஊர் வெள்ளாடுகளைப் போன்ற தோற்றம். ஆனால், உயரம் மட்டும் கொஞ்சம்குறைவு. முழுவெள்ளை மற்றும் முழுகருப்பு என இரண்டு நிறங்களில் இருக்கும் இந்த ஆடுகளின் காது, கண், கால் என்று சில இடங்களில் மட்டும் கருப்பு அல்லது வெள்ளை நிறத்தில்பரஸ்பரம் மாறி இருக்கின்றன.\nஆடுகளைக் கொட்டிலிருந்து மேய்ச்சலுக்காகத் திறந்து விட்ட சுந்தர்ராஜன். “பெங்கால் கருப்புன்ற வகை ஆட்டுக்கும், ஆஸ்டின் வெள்ளைன்ற ஆட்டுக்குமான கலப்பின வகை இது. நம்ம ஊரு செம்மறி ஆட்டை வளர்க்கற மாதிரி மேயவிட்டும் வளர்க்கலாம். வெள்ளாடு மாதிரி கொட்டில்ல அடைச்சு, தீவனம் கொடுத்தும் வளர்க்கலாம். ஆக, எல்லா வகையிலும் செளரியமானது இந்த ஆடு. பெரும்பாலும் இதை அழகுக்காகத்தான் வளர்க்கறாங்க. நானும் அப்படித்தான் வாங்கிட்டு வந்தேன். நாலு வருஷத்துக்கு முன்ன ஒரு தடவை சந்தைக்குப் போயிருந்தப்ப, ஒரு வியாபாரி இந்த ஆட்டை கொண்டு வந்திருந்தார். பாக்கறதுக்கு நல்ல ஜாதி நாய்க்குட்டி மாதிரி இருந்துச்சு. சரி பேத்தி விளையாடறதுக்கு ஆகட்டுமேனு ஐநூறு ரூபாய்க்கு வாங்கினேன். ஆனா, நாளடைவுல இதையே பெரிய அளவுல வளர்க்க ஆரம்பிச்சிட்டேன்” என்று பெருமிதத்தோடு ஒரு ஆட்டுக்குட்டியைத் தடவிக் கொடுத்தார்.\nதற்போது 57 வயதாகும் சுந்தராஜன், கோவையில் பத்து ஆண்டு காலம் வழக்கறிஞராகப் பணியாற்றியவர். கோர்ட்டையும், கோப்புகளையும் பார்த்துப் பார்த்து ஒரு கட்டத்தில் அலுத்துப் போகவே சட்டப் பணிக்கு மொத்தமாக, முழுக்குப் போட்டுவிட்டு சொந்த ஊருக்குத் திரும்பி, மனைவியோடு கைகோத்து முழுநேர விவசாயத்தில் இறங்கிவிட்டார்.\n“அந்த ஆட்டைப் பிடிச்சுக்கிட்டு வந்தப்போ அது என்ன ரகம்னெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனா, வீட்டுல எல்லாத்துக்கும் எனக்குத் தெரியாது. ஆனா, வீட்டுல எல்லாத்துக்கும் பிடிச்சுப்போயிடுச்சு. அந்த சமயத்துல வீட்டுக்கு வந்த சொந்தக்காரர் ஒருத்தர்தான் இதோட ரகத்தைச் சொல்லி, கேரளாவுல இருந்து இதுக்கு ஜோடியா ஒரு கிடாக் குட்டியை வாங்கிட்டு வந்து கொடுத்தார். அந்த ரெண்டு ஆடுதான் இன்னிக்கு நாப்பது ஆடுகளா பெருகியிருக்கு. இதுக்காக நான் தனியா கொட்டகையெல்லாம் அமைக்கல. ஏற்கெனவே காலியா கிடந்த கறிக்கோழிக்கொட்டகைக்கு உள்ளேயேதான் வளர்த்துக்கிட்டு இருக்கேன்.\nஅதிகபட்சம் ரெண்டரை அடி உயரம்தான் இதுங்க வளருதங்க. தீவனம், தண்ணியெல்லாம் குறைவாத்தான் எடுத்துக்குதுங்க. நோய் எதிர்ப்புச் சக்தி நல்லாவே இருக்கறதால, பெருசா எந்த நோயுமே வர்றதில்லை. பூச்சிமருந்துகூட கொடு்குறதில்லைனா பார்த்துக்கோங்க. காலையில் ஒவ்வொரு ஆட்டுக்கும் கால் கிலோ மக்காச்சோளத்தைக் கொடுத்து. தண்ணியையும் வெச்சுடுவோம். சாயங்காலம் மூணு மணி வாக்குல மேய்ச்சலுக்கு அனுப்புவோம். ஆறரை மணிக்குப் பிறகு திரும்பவும் அடைச்சுடுவோம்.\nஎந்த இலை, தழையையும் கழிக்கிறதில்லை. தென்னை ஓலை, தேக்கு இலைனு விட்டு வெக்காம சாப்பிட்டுட்டு, ‘கண்டதைத் தின்றால் குண்டன் ஆவான்ன்ற மாதிரி ‘கொழுகொழு’னு ஆயிடும். மேய்ச்சலுக்காகவே தட்டை, கொள்ளு, கம்புனு மாத்தி மாத்தி பயிர் பண்ணிடுவோம். மேய்ச்சல் முடிஞ்சதும் ஒரு தண்ணி பாய்ச்சுனோம்னா மறுதழைவு வந்துடும். ஆடுகளோட எருதான் அதுக்கு உரம்” என்று சுந்தரராஜன் நிறுத்த, தொடர்ந்தார் செண்பகவல்லி.\n“ஆடுகளுக்குனு எயும் வெளியில வாங்குறதில்ல. இயற்கை முறையில் நாங்களே உற்பத்தி பண்ற மக்காச் சோளம், சவுண்டல்தான் தீவனம். வழக்கமா ஆடுக ரெண்டு வருஷத்துக்கு மூணு தடவை குட்டி ஈனும். இந்த ஆடுக, வருஷத்துக்கே ரெண்டு தடவை ஈனுதுங்க. அஞ்சு மாசத்துலேயே பருவத்துக்கு வந்துடுது. ஒவ்வொரு ஈத்துக்கும் ரெண்டு குட்டிங்களை ஈனுது. தென்னந்தோப்பு வெச்சுருக்கவங்களுக்குகளை எடுக்குறதுக்கு இந்த வகை ஆடுகள் வரப்பிரசாதம்னே சொல்லலாம். அந்தளவுக்கு எல்லாச் செடிகளையும் பிடுங்கிச் சாப்பிட்டுடுதுக. நம்ம சீதோஷ்ண நிலைக்கு நல்லா தாங்கி வளருதுங்க இந்த ஆடுக” என்று தன் பங்குக்கு கலப்பின ஆடுகளின் பெருமையைச் சொன்னார்.\nநிறைவாக வருமானம் பற்றிய பேசிய சுந்தராஜன், “கிடைக்கிற குட்டிகளில் சராசரியா பாதி அளவுக்கு கிடாக் குட்டிகளும் இருக்கு. நான் இந்த ஆடுகளைப் பெருக்கணும்னு நினைச்சு வளர்க்கறதால பெரியளவுல விற்பனை செய்யலை. கிடாக்குட்டிகளை மட்டும் ஏழு மாசம் வளர்த்து வித்துடுவேன். ஏழு மாசத்துல இருபது கிலோ வரை எடை வந்துடும். உயிர் எடைக்கு கிலோ 125 ரூபாய்னு எடுத்துக்கறாங்க. இதுவரைக்கும் இப்படி அஞ்சாறு கிடாக்களை கறிக்காக வித்துருக்கேன். வளப்புக்காக ஏழு ஜோடியை வித்துருக்கேன். இதெல்லாம் கழிச்சது போக, கையில நாப்பது ஆடுக இருக்கு. கசாப்புக் கடைக்காரங்க தேடி வந்து விலைக்கு கேட்டுக்கிட்டு இருக்காங்க. இனிமேதான் விற்பனையைத் தொடங்கணும். எப்படி இருந்தாலும் பத்து பெட்டை, ஒரு கிடா வாங்கி விட்டோம்னா வருஷத்துக்கு நாப்பது குட்டி கண்டிப்பா கிடைக்கும்” என்றார் .\nமனிதன் தனது சிந்தனைகளை மாற்றியமைப்பதன் மூலம் தன் வாழ்க்கையையே மாற்றிவிடமுடிவும்\n7 மாதம் 40 ஆயிரம் கொட்டிக் கொடுக்கும் கொடி ஆடுகள்\nவிற்பனை வாய்ப்பை அதிகப்படுத்தும் கோழிகளின் வளர்ப்ப...\nநம்பிக்கை தரும் நாமக்கல் காடை\nஏரோபிளேன் ஏற வைத்த எருமை வளர்ப்பு\nஆண்டுக்கு இரண்டு ஈத்து ஈத்துக்கு இரண்டு குட்டிகள்\nவாழ்க்கையை வளமாக்கிய எருமை வளர்ப்பு\nவிறு விறு லாபம் தரும் விரால் மீன்\nஇணையற்ற லாபம் தரும் இயற்கை மீன் வளர்ப்பு\nதினமும் 18 லிட்டர் பால் சந்தோஷம் பொங்க வைக்கும் ச...\nகைகளால் இயக்கினால், கறக்குது பால்\nஜோரான வருமானம் தரும், ஜோடிப் புறா\n+2 விற்கு பிறகு என்ன படிக்கலாம் \nசவுதி அரேபியா புதிய வேலை வாய்ப்புகள்.\nசிங்கப்பூர் , சவூதி , ஆஸ்திரலியா ,துபாய் - வேலைவாய்ப்புகள்\nஏகஇறைவனின் திருப்பெயரால்..... ... நன்மையிலும் , இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள் பாவத்திலும் , வரம்பு மீறலிலும் ஒருவருக...\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் GO...\nசவூதி அரேபியாவில் வேலைவாய்ப்பு: நாகர்கோவிலில் நேர்முகத் தேர்வு\nFirst Published : 10 Nov 2010 10:28:38 AM IST திண்டுக்கல், நவ. 9: சவூதி அரேபியாவில் உள்ள நிறுவனத்தில் ஆட்டோகாட் டிராப்ட்ஸ்மேன்கள் பணிக்க...\nஉங்கள் கல்வி சம்பந்தமான விவரங்களுக்கு\nகல்வி களஞ்சியம் சிறப்பு குழுவை\nபள்ளி & கல்லூரி தேர்வு முடிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "https://www.jeyamohan.in/48", "date_download": "2018-04-26T13:09:17Z", "digest": "sha1:U6STORFEU6PUPDLV2FXETEQ7CKFDAY4H", "length": 52942, "nlines": 209, "source_domain": "www.jeyamohan.in", "title": "இரு கலைஞர்கள்", "raw_content": "\n« பின் தொடரும் நிழலின் குரல் – சித்தார்த்\nசாகித்ய அகாதமி வெளியிட்டுள்ள முக்கியமான மொழிபெயர்ப்பு நாவல்கள் »\nஜெ.கருணாகர் காலையில் தூங்கி எழ தாமதமாகும். இரவு வெகுநேரம்வரை , சிலநாட்களில் விடிகாலை நான்குமணிவரைக்கூட, அவரது ‘மன்ற’த்தில் பேச்சு நீள்வதுண்டு. மாடிமீது தாழ்வாகக் கட்டப்பட்ட கூரைப்பந்தல் அது. நீளவாட்டில் பெஞ்சுகள் நடுவே நீளமான மேஜை. எல்லாம் காயமும் கறையும் பட்ட பழைய உருப்படிகள். வலதுபக்கம் முனையில் தன் நாற்காலியில் அவர் பின்மதியம் மூன்று மூன்றரை வாக்கில் வந்து அமர்வார். சாதாரணமாக லுங்கி கட்டிக் கொண்டு மேலே சட்டையில்லாமல் நீளமான வெண்தலைமயிர் சிலும்பிப் பறக்க தூங்கிக் களைத்த கண்களுடன் வந்து அமர்வதும் உண்டு.குளிர்ந்த நீரில் குளித்து தலைசீவி மடிப்பு கலையாத ஜிப்பாவும் காற்சட்டையுமாக வருவதும் உண்டு. எல்லாம் அவரது மனநிலையைப் பொறுத்ததே ஒழிய வருபவர்களின் தகுதியைச் சார்ந்தது அல்ல.\nஅவரது மன்றத்தில் எப்போதும் கிடைக்கும் கஞ்சாப்புகைக்காக வந்து அமரும் குடிசைவாசிகள் முதல் அவரது நீண்ட தன்னுரையாடல்களையும் ஊடாகக் பொழியும் வசைகளையும் நக்கல்களையும் கேட்பதற்கென்றே வரும் ரசிகர்கள் வரை அங்கே எப்போதும் ஆளிருக்கும். பலசமயம் அவருக்காக சிலும்பியும் இலைப்பொட்டலங்களும் ஆட்களும் காத்திருப்பார்கள். அபூர்வமாக அவர் மட்டும் வந்து தன்னந்தனிமையில் தன்மீசையை ஆழ்ந்து கோதியபடி கூரையை வெறித்து அமர்ந்திருப்பார்.\nமன்றம் நெரியநெரிய ஆள் நிரம்பி சமகாலப்பிரச்சினைகள் மிக உக்கிரமாக விவாதிக்கப்படும்போதும்கூட சட்டென்று அவர் தன் முழுத்தனிமைக்குள் சென்றுவிடுவதுண்டு. அவரை நெருங்கியறிந்தவர்கள் அவர் மிகமிகத் தனிமையான மனிதர் என்பதை அறிவார்கள். அது தினம் ஆயிரம்பேர் புழங்கும் பேராலயத்தில் கருவறை இருளில் நிற்கும் மூலச்சிலையின் தனிமை. அங்கே வருபவர்கள்கூட அத்தனிமையால் ஈர்க்கப்பட்டவர்கள் போலும். அவரது நெருக்கமான நண்பரும் வாசகருமான கெ.எஸ்.ராவ் ஒருமுறை கூறியதுபோல அவர் தன் வாழ்நாள் முழுக்க எப்போதும் பிறரிடம் பேசியதேயில்லை, எழுதியதுமில்லை.\nஅன்றுகாலை வழக்கத்துக்கு முற்றிலும் மாறாக அவர் அதிகாலையிலேயே எழுந்து தூக்கத்தில் நடப்பவர் போல நடந்து கொட்டகைக்கு வந்து கைகளால் இருட்டில் தடவி முட்டைவிளக்கைப் போட்டுவிட்டு தன் நாற்காலியில் அமர்ந்து தன் எண்ணங்களுள் ஆழ்ந்தவராக மீசையைக் கோதிவிட்டுக் கொண்டு எதிரே நேற்று வந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் விட்டுச்சென்ற சிவப்புத் துண்டை வெறித்து நோக்கியபடி அமர்ந்திருந்தார். எப்போதோ தன் இருப்பை உணர்ந்து பெருமூச்சுடன் அசைந்து அமர்ந்து சுற்றிலும் நோக்கியபோது இரவில் ரீங்காரத்தைக் கேட்டார்.\nஅவர் இருந்த பகுதி நகரில் நடுவே குடிசைகளால் சூழப்பட்ட தெரு. எங்கோ ஒரு குழந்தை அழுதது. ஆட்டோ ஒன்று அசிங்கமான ஒலியுடன் சென்றது. மிகத்தொலைவில் ஒருசில நாய்கள் குரைத்துக் கொண்டன. எல்லா ஒலிகளையும் அந்த சில்வண்டு ஒலி இணைத்துக் கொண்டிருந்தது. இதேபோன்ற நகரிலும் எப்படி சில்வண்டுகள் இரவை நிரப்பிவிடுகின்றன என்று வியப்புடன் எண்ணிக் கொண்டார். எல்லாரும் சிறுவயதில் இரவை சில்வண்டின் ஒலியாகவே அறிகிறார்கள். வெளியே நிரம்பியிருக்கும் இருளையும் வானவிரிவையும் விண்மீன்களையும் கோர்க்கும் நீண்ட ஒலி.\nசில்வண்டின் ஒலி உடனடியாக இளமைநினைவுகளை உருவாக்கிவிடுகிறது. அம்மாவை, அவள் மென்மையான சருமத்தின் வெம்மையை, புழுக்கவீச்சம் நிறைந்த பாய்தலையணைகளை நினைவுக்குக் கொண்டுவருகிறது. இப்போது உடனே கிளம்பி பஸ் பிடித்து கடலூர் சென்று தன் ஊருக்குப் போய் இறங்கினால் என்ன என்ன இருக்கும் அங்கே அவருடைய இளமைக்காலம், அன்றிருந்த மனிதர்கள், மரங்கள் எதுவும் இருக்காது. மண் கூட இருக்காது. மண்மீது காலம் ஒரு சினிமாபோல காட்சிகளை ஓடவிடுகிறது. சென்ற காட்சிகள் மீள்வதேயில்லை.\nஏன் ஒருநாளும் இல்லாத இந்த விழிப்பு, இந்த நிலைகெட்ட எண்ணங்கள் என்று எண்ணிக் கொண்டார். தொண்டையில் ஒரு தவிப்பை உணர்ந்து எழுந்துசென்று மண்கூஜாவிலிருந்து நீரை கண்ணாடி டம்ளரில் விட்டு குடித்தார். அதன் பயணம் குளுமையாக இதமாக இருந்தது. ஏன் சிலும்பி மேஜைமீதுதான் கிடந்தது. ஒரு முறை புகைபோடலாம்தான். ஆனால் அப்போது சலிப்பாக இருந்தது. புகைபோட்டு பிந்தித் தூங்கிய ஒருநாளும் அவர் விழித்துக் கொண்டதில்லை. இப்போது ஏன்\nஅவருக்கு விழிக்கும்போது கண்ட கனவு நினைவுக்கு வந்தது. ஆனால் கனவல்ல அது. ஒரு நினைவுபோல அது ஓடியது. கடுமையான நெஞ்சுவலி. கூவுகிறார் , யாருக்குமே அது கேட்கவில்லை. எல்லாரும் அவரைச்சுற்றித்தான் இருந்தார்கள். நடமாடிக் கொண்டிருந்தார்கள். ஆனால் யாருமே அவரைக் கேட்கவில்லை, காணவும் இல்லை. அவர்களைப் பொறுத்தவரை ஏற்கனவே அவர் இல்லாமலாகிவிட்டிருந்தார். விழித்துக் கொண்டதும் பெருமூச்சுடன் இருண்ட வீட்டில் ஜன்னல்வழியாக வந்த தெருவிளக்கின் ஒளி பரவிக் கிடந்த கூரைப்பரப்பை பார்த்தபடி கிடந்தார். பிறகு தூக்கம் வரவில்லை.\nபுன்னகைத்துக் கொண்டு மீசையைத் தடவினார். நேற்று கெ.எஸ் மூத்த தோழர் ஒருவரின் மரணத்தைப்பற்றிச் சொன்னார். மாரடைப்பு. வயலுக்குப் போனவர் வரப்பில் இறந்துகிடந்தார். நாற்பதுவருடம் முன்பு சிலவருடங்கள் அவருடன் நெருக்கமாக இருந்திருக்கிறார். சேர்ந்தே தலைமறைவாக மதுரை, சின்னமனூர் பக்கம் சுற்றியிருக்கிறார்கள். அதிகம் படிக்காவிட்டாலும் உண்மையான நம்பிக்கை கொண்டிருந்த கம்யூனிஸ்ட் அவர்.\n”கம்யூனிஸ்டுகள்லாம் சாகவேண்டிய நேரம் எப்பவோ வந்தாச்சுய்யா… இந்தாள் எதுக்கு அவசியமில்லாம இவ்ளவுநாள் லேட் பண்ணினான் காடு வா வாங்குது கட்சி போ போங்குது.. ” என்று நக்கலாகச்சிரித்து அதைத் தாண்டிவந்தார். ஆனால் உள்ளே தூண்டில்முள் தொடுத்தியிருக்கிறது. அத்தனை பயமா காடு வா வாங்குது கட்சி போ போங்குது.. ” என்று நக்கலாகச்சிரித்து அதைத் தாண்டிவந்தார். ஆனால் உள்ளே தூண்டில்முள் தொடுத்தியிருக்கிறது. அத்தனை பயமா யாரைப்பற்றி அல்லது எதைப்பற்றி தன் மரணம். எல்லா உயிருக்கும் தன் மரணம் பெரிது. எழுத்தாளனுக்கு இன்னும் பெரிது. மரணபயமில்லாதவன் ஏற்கனவே இல்லாமலாகிவிட்டவன். இல்லாமலாகிவிட்ட ஒருவன் எப்படி இருப்பான். அவனைக் காண்பவர்கள் என்ன உணர்வார்கள் என்ன சிந்தனை இது நான் ஒரு பொருள்முதல்வாதி அல்லவா சிரித்தபடி ‘ இல்லை நான் ஒரு சுயமுதல்வாதி ‘ என்று முனகிக் கொண்டார்.\nகீழே ஒரு காரின் ஹார்ன் ஒலி கேட்டது. பலமுறை கேட்டபின்னரே அது தன் வீட்டை உத்தேசித்தது என்று கருணாகர் உணர்ந்தார். எழுந்து நோக்கியபோது வெள்ளைஉடையணிந்த ஒருவர் நீளமான பெரிய காரிலிருந்து இறங்கி கேட்டருகே நிற்பதும் காரின் முகவிளக்குகள் சுடர்வதும் தெரிந்தது. படிகளில் தடுமாறி இறங்கி வீட்டுக்குமுன் வந்தார். அதற்குள் அவர் மனைவி எழுந்து விளக்கைப் போட்டு கதவைத்திறந்து வெளிவாசலைத் தாழ்நீக்கி திறந்துவிட்டாள்.\nஅது யுவராஜ். நரை கலந்த பத்துநாள் முடிபரவிய மொட்டைத்தலை, முகவாய். உருண்டையான கரிய முகம். வெண்ணிற ஜிப்பா , வேட்டி. நாற்பதுவருடம் முன்பு முதல்முதலாக தேனியில் கட்சிக்கூட்டத்தில் தன் சகோதரர்களுடன் பாடவந்திருந்து அறிமுகமாகும்போது முதலில் மனதைக் கவர்ந்த அதே அழகிய குழந்தைக் கண்கள், குழந்தையின் சிரிப்பு. கையில் ஒரு பிளாஸ்டிக் பை.\n”வாய்யா…என்ன அதிகாலையிலேயே… ” என்றார். ” ஆச்சரியமா இருக்கே”\n“நீங்க காலையிலேயே எந்திரிச்சிருக்கிறதுதான் ஆச்சரியம் ஜெ.கெ” என்றபடி யுவராஜ் உள்ளே வந்தார்.\n“என்னமோ முழிப்பு வந்தது… உள்ள வா.. ”\nயுவராஜ் உள்ளே வந்து அமர்ந்தார். அவரது வருகையால் வீடே மெல்லிய பரபரப்பு கொண்டது. ஊரிலிருந்து வந்திருந்த அவரது பெண்ணும் மகனும் எழுந்துவந்து வணக்கம் சொன்னார்கள். யுவராஜ் அவர்களிடம் நலம் விசாரித்தார். காபி டீ எதுவுமே குடிப்பதில்லை என்றார்.\n“இப்ப அவன் ஆச்சாரிய ஸ்வாமிகள் மாதிரி. பழங்கள்தான் குடுக்கணும். அதில ஒண்ணை எடுத்து ஆசீர்வாதம் பண்ணி நமக்கு பிரசாதமா எறிஞ்சு குடுப்பான். ஏன்யா ” என்றார் கருணாகர். ”அதிகாலையிலேயே குளிச்சிருக்கே. கிட்டத்தட்ட ஞானி ஆயிட்டே…”\nயுவராஜ் அவரது கிண்டல்களை பொருட்படுத்தவேயில்லை. ” கெளம்புங்க ஜெகெ. நாம ஒரு எடத்துக்குப் போறோம். ”\n“பக்கம்தான். உடனே போய்ட்டு வந்திருவோம். ”\n” தேச்சு குளிச்ச்சிட்டு வாங்க… நான் காத்திருக்கேன்..”\n“குளிக்கிறதா, நல்ல கதை. நான் மத்தியான்னம்தான் குளிக்கிறது. இப்டியே வரதுன்னா வரேன்”\n“இல்லை ஜெகெ. குளிச்சிட்டுதான் போகணும்.எனக்காக வாங்க…”\n” என்னய்யா… ஆசிரமம் கீசிரமம் கட்ட ஏதாவது எடம் பாத்திருக்கியா சினிமாப்பாட்டு போடறதையெல்லாம் விட்டுரப்போறியா. பாவம்யா நம்ம ஊர் விரகதாபக் காதலர்கள்… கைவிட்டுராதே …”\n“சொல்றேன். போய்ட்டு வாங்க ஜெகெ” யுவராஜ் தன் கையிலிருந்த பொட்டலத்தை நீட்டினார். ” குளிச்சுட்டு இதைப் போட்டுட்டு வாங்க”\n ” கருணாகர் அதை உருவினார். வெள்ளை வேட்டியும் ஜிப்பாவும். ” காவியைக் கீவியை கொண்டாந்துட்டியோன்னு பயந்துட்டேன் .நல்லவேளை”\nகருணாகர் காரில் பின்னிருக்கையில் ஏறி அமர்ந்ததும் அருகே யுவராஜ் ஏறிக் கொண்டார். கார் கிளம்பியது.\n“என்ன பாட்டு போடணும் ஜெகெ \n” ஏதாவது போடு. நான் பாட்டு கேட்டே ரொம்ப நாளாச்சு”\n“ஹிந்துஸ்தானி போடறேனே ” என்றபடி யுவராஜ் குண்டேச்சா சகோதரர்களின் குறுந்தகடை எடுத்து டிரைவரிடம் கொடுத்தார். மெல்லிய ஒலியில் ஆழமான குரல்கள் காருக்குள் நிறைந்தன. வெளியில் அலைகிளம்பும் சுத்த ஆலாபனை.\nயுவராஜ் கருணாகர் ஏதாவது கேட்பார் என்று எதிர்பார்த்தவர் போல திரும்பிப் பார்த்தார். ஆனால் அவர் சாலையோரங்களில் நீலஒளியுடன் விடியல் விரிவதை பார்க்க ஆரம்பித்துவிட்டிருந்தார். கைகள் மீசையில் ஓடிக்கொண்டிருந்தன.\nஇசை நிற்கும்போது மட்டும் கருணாகர் அசைந்து எழுந்து பெருமூச்சுவிட்டார். அவரது மனநிலைக்கு ஏற்ப குறுந்தகடுகளை தேர்வுசெய்து யுவராஜ் போட்டுக் கொண்டிருந்தார்.\nகார் திருவண்ணாமலைக்குள் நுழையும்போதாவது கருணாகர் ஏதாவது கேட்பார் என்று யுவராஜ் எதிர்பார்த்தார். கருணாகர் சற்று நிமிர்ந்து அமர்ந்து மலையை வெறித்த கண்களுடன் நோக்கினார். கார் ரமண ஆசிரமம் நோக்கிச்சென்றது. சிமிட்டி முகப்பைத் தாண்டியதுமே அவரது காரை ஆசிரமவாசிகள் அடையாளம் கண்டுகொண்டார்கள். பலர் முகப்புக்கு வந்து எட்டிப்பார்த்தார்கள். அப்போது அதிக பயணிகள் இல்லை. இருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் வட இந்தியர்கள். அவர்களுக்கு இருவரையுமே அடையாளம் தெரியவில்லை.\nஇறங்கி மீசையை வருடியபடி மரக்கிளைமீது இருந்த மயில்களை நோக்கி நின்ற கருணாகரிடம் யுவராஜ் ” இதுக்கு முன்னாடி வந்திருக்கீங்களா\n” ம்” என்றார் கருணாகர்\nயுவராஜ் ஆர்வத்துடன் ” எப்ப\nகருணாகர் திரும்பாமலேயே ” ரொம்ப முன்னாடி ” என்றார்.\nஆசிரமப் பொறுப்பாளர் ஓடிவந்தார். ” வாங்க ராஜா சார். வாங்க…” என்றார். அவருக்கு கருணாகரை அடையாளம் தெரியவில்லை. அவருக்கும் ஒரு வணக்கம் போட்டார்.\nயுவராஜ் ,” இது ஜெ.கருணாகர். பெரிய எழுத்தாளர்” என்றார்\nஆசிரமப் பொறுப்பாளருக்கு எழுத்தாளர் என்பதும் சரிவரப் பிடி கிடைக்கவில்லை. ” அப்டீங்களா\nயுவராஜ் கிளர்ச்சி அடைந்திருந்தார். கைகளில் இருந்த பூஜைப்பொருட்களை அடிக்கடி மாற்றி மாற்றி பிடித்தார். ஆசிரம ஆட்கள் அவரைச் சுற்றி பணிவும் பிரியமும் கலந்து பேசிக்கொண்டிருப்பதில் அவர் மனம் செல்லவில்லை. படிகளில் ஏறி உள்ளே சென்றார். கருணாகர் மீசையை வருடியபடி ஆழ்ந்த மௌனத்துடன் பார்த்தபடி நடந்தார். அவர் ஏதாவது சொல்வார் என்று யுவராஜ் எதிர்பார்த்தார். அவரையே ஓரக்கண்ணால் பார்த்தார்.\nஇருவரும் ரமணரின் அறைக்குள் மௌனமாகவே நுழைந்தனர். காலையின் குளிர் அங்கே மிச்சமிருந்தது. ரமணர் படத்தில் கோவணத்துடன் கையில் பெரிய தண்டம் ஏந்தி புலித்தோல்மீது அமர்ந்திருந்தார்.\nகருணாகர் ஒன்றும் பேசாமல் அமர்ந்துகொண்டார். யுவராஜ் சற்றுதள்ளி தரையில் அமர்ந்தார். ஹாலில் இருந்த சிலர் எழுந்துவிலகினர். கதவருகே சிலர் நின்று வேடிக்கை பார்த்தனர்.\nயுவராஜ் ரமணரின் படத்தையே கூர்ந்து நோக்கிக்கொண்டிருந்தார். அவரது தலை சற்று ஆட ஆரம்பித்தது. தலையைக் குனித்து கைகளை புத்தகம் போல விரித்து பார்த்தார். மீண்டும் தலைதூக்கி உதட்டைக்கடித்தபடி ரமணரைப் பார்த்தார். ஒருமுறை குரலைச் செருமிக் கொண்டார்.\nஅவரது செருமல் ஒலியில் கருணாகர் திடுக்கிட்டுவிழித்து அவரை நோக்கி புன்னகையுடன் மீசையை வருடினார்.\nயுவராஜ் மெல்ல முனகினார். சுத்த தன்யாஸி. பிறகு ”ஹிமகிரி தனயே ஹேமலதே” என்று குரல் எழுந்தது. சற்றே சுருதிவிலகியதும், அதனாலேயே நாட்டுப்புறப்பாடல்களுக்குரிய உண்மையின் வசீகரம் கலந்ததுமான குரல். பிறகு ”அகிலாண்டேஸ்வரீ ” பிறகு ” ஸ்ரீசக்ரராஜசிம்மனேஸ்வரி ” . பாடப்பாட அவர் குரல் கனிந்து வந்தது. ஆரம்பத்தில் அடித்துத் தாளமிட்டுப்பாடியவர் பிறகு மெல்ல விரலால் தொடையில் தொட்டு தாளமிட்டார். ”ஜனனீ ஜனனீ ” பாடியபோது சட்டென்று குரல் கம்மி கரகரத்தது. பாடமுடியாது திணறி விசும்பி கேவினார். சரசரவென கண்ணீர் கொட்ட தோள்கள் குலுங்க அழத்தொடங்கினார்.\nகருணாகர் யுவராஜ் அழுவதையே எவ்வித உணர்ச்சியும் இல்லாமல் பார்த்து அமர்ந்திருந்தார். வாசலில் கூடிய ஆட்கள் முகத்தில் வியப்புடனும் சிரிப்புடனும் வேடிக்கைபார்த்தனர். ஒரு முதிய வெள்ளைக்காரமாது இடுப்பில் கைவைத்து நின்று முகச்சுருக்கங்கள் நெளிய நோக்கினாள். யுவராஜ் மேலும் மேலும் அழுகைவலுத்து ஒரு கட்டத்தில் கேவிக்கேவி அழுதுகொண்டே தரையில் படுத்துவிட்டார். அப்படியே தேம்பல்களாகி மெல்ல அடங்கி அமைதியாக வெறுந்தரையில் குழந்தைபோலக் கிடந்தார்.\nஆசிரமத்து முதியவர் ஒருவர் வந்து மெல்ல அவர் தோள்களைத் தொட்டு ” ராஜா சார் ” என்று அழைத்தார். யுவராஜ் விழித்து எழுந்து ஒன்றும்புரியாதவர் போல அவரையும் ரமணரின் படத்தையும் பார்த்தார். நீண்டபெருமூச்சுடன் கண்களையும் கன்னங்களையும் துடைத்தார். எழுந்து தன் ஜிப்பாவை இழுத்து விட்டுக் கொண்டார். அவர் முகம் தெளிந்திருந்தது. ரமணரைப் பார்த்தபோது அவர் முகத்தில் மெல்லிய இளநகை கூடியது.\n”வாங்கோ” என்றார் முதியவர் புன்னகையுடன். ” இதே இடத்திலே உக்காந்துதான் பால் பிரண்டன் அழுதார். ஜூலியன் ஹக்ஸ்லி அழுதார். உலகம் முழுக்க இருந்து எத்தனையோபேர் இங்கவந்து இப்டி அழுதிருக்கா….”\nசட்டென்று நினைவுகூர்ந்த யுவராஜ் ” ஜெகெ சார் எங்கே\nகிழவர் திரும்பி ” தோ இருக்காரே” என்றார்\nகருணாகர் தன் கண்கள் ரமணரில் ஊன்றியிருக்க விரைப்புடன் அமர்ந்திருந்தார். ரமணரை அவர் முறைப்பதுபோலிருந்தது\nகருணாகர் விழித்தார். அவசரமாக எழுந்தபடி ” முடிச்சிட்டியா” என்றார் ”போலாமா\nஇருவரும் விடைபெற்று படியிறங்கி காரை நோக்கி நடந்தனர். கருணாகர் மீண்டும் மயில்களையும் மரங்களையும் நோக்கியபடி மீசையை முறுக்கினார்.\nகாரில் ஏறி சாலைக்கு வந்தனர். கருணாகர் சாலையில் சென்ற ஆட்களை பார்த்தபடி ” அப்பல்லாம் இந்த ஊரிலே ஏகப்பட்ட தொழுநோயாளிகள் இருப்பாங்க” என்றார்.\nயுவராஜ் ஒன்றும் சொல்லவில்லை. அவர் திரும்பி விலகும் ரமணாசிரமத்தையும் , ஆசிரமத்தை மடியிலமர்த்திய மலையையும் நோக்கிக் கொண்டிருந்தார்.\nகார் நகர்மையம் சென்றதும் டிரைவரை அனுப்பி பழங்கள் வாங்கிவரச்சொல்லி காரிலமர்ந்தபடியே உண்டார்கள். கருணாகர் சற்று அமைதியிழந்திருப்பதை யுவராஜ் கண்டார்.\nகார் மீண்டும் கிளம்பியதும் யுவராஜ் பாட்டு போடப்போனார் ” வேண்டாம்” என்றார் கருணாகர் .\nதிருவண்ணாமலை தாண்டியதும் கருணாகர் பெருமூச்சுடன் சரிந்து அமர்ந்தார். கிண்டலாக சிரித்தபடி ” என்னய்யா அப்டி ஒரு அழுகை\n“தெரியலை அண்ணே…அழணும்னு தோணிச்சு அவ்ளவுதான்… ”\n” யோகக்காரன்யா நீ ” என்றார் கருணாகர். ”என்னால அப்டி அழமுடியல”\nஅந்தக்குரல் யுவராஜை ஆச்சரியப்படவைத்தது. பரபரப்புடன் திரும்பி ” ஏன் ஜெகெ\nகருணாகரின் கண்கள் காற்றுபட்ட கங்குபோல சீறியணைந்தன ” கள்ளமோ கரைந்தழும் . அதான் ” என்றார்.\nயுவராஜ் முகம் மாறியது. குரல் தாழ ” ஏண்ணே அப்டி சொல்லிட்டீங்க\n“எங்கிட்ட அப்டி என்ன அண்ணே கள்ளத்தைக் கண்டீங்க\n“இல்லண்ணே…என்னை ஆதிமுதல் தெரிஞ்சவர் நீங்க. சொல்லுங்க ,எந்த அர்த்தத்தில சொன்னீங்க\n” ஏதோ சொல்லிட்டேன்யா. போட்டு உசிர வாங்காத ” கருணாகர் சாய்ந்து அமர்ந்து மீசையை அழுத்தமாக முறுக்க ஆரம்பித்தார்.\nகண்கள் மெல்ல ஈரமாகி நீர்ப்படலமாகி நிறைய யுவராஜ் அவரையே நோக்கி அமர்ந்திருந்தார்.\nகார் நெடுஞ்சாலையில் அசைவின்றி சென்றது. சற்று நேரம் கழித்து கருணாகர் திரும்பிப்பார்த்தபோது யுவராஜின் கன்னங்களில் நீர் வழிந்து தாடிமுட்களில் பரவியிருப்பதைக் கவனித்தார். பொருள்கொள்ளாதவர் போல அதையே பார்த்தார். மீண்டும் திரும்பிக் கொண்டார்.\nஒரு சந்திப்பில் கருணாகர் திரும்பி ” ஒரு எளநி சாப்டலாம்யா” என்றார். கார் நின்றது.\nகருணாகர் கதவைத்திறந்து இறங்கினார். ”வாய்யா”\nயுவராஜ் தலைகுனிந்து அமர்ந்திருந்தார். கருணாகர் ஒரு இளநீருக்குச் சொன்னார். அதைக் குடித்து முடித்ததும் ஏறி அமர்ந்துகொண்டார்.\nகார் கிளம்பியது. யுவராஜின் உதடுகள் அழுந்தியிருந்தன.\n” என் மேல கொஞ்சமாவது பிரியம் இருந்தா சொல்லுங்க… அப்டி என்ன கள்ளத்தைக் கண்டீங்க\n”கள்ளம்னு இருந்தா அது சங்கீதம்மேல நான் கொண்டிருக்கிற ஈடுபாட்டிலதான் இருக்கணும். ஏன்னா அதுதான் நான் . மத்ததெல்லாம் பூச்சுகள்தான். சொல்லுங்க, ஏன் அப்டி சொன்னீங்க\n” எங்கியோ எல்லாம் போகணும்னு ஆசைப்படறேன். எல்லாம் இங்கேருந்துதான் தொடங்கணும். இங்கேயே தப்பு இருக்குன்னா…எனக்கு தெரிஞ்சாகணும் ”\n“யோவ், அது பாரதியோட வரி. சும்மா பழக்கதோஷத்தில வாயில வந்திட்டுது. எதையும் உத்தேசிச்சு சொல்லல.”\n“உண்மையாத்தான்யா. முழுக்க முழுக்க உண்மை. போருமா \nயுவராஜ் சற்று முகம் தெளிந்தார். சற்று நேரம்கழித்து அவர் முன் இருக்கை மீது கைவிரல்களால் தாளம்போடுவதை கருணாகர் கண்டார். அதையே அவர் பார்த்துக் கொண்டிருந்தார்\nசென்னை புறநகரை நெருங்குவதுவரை பேச்சு ஏதும் நிகழவில்லை. சட்டென்று கருணாகர் ” காலையில நெஞ்சுவலி வாரதுமாதிரி ஒரு கனவு” என்றார்.\nயுவராஜ் பதற்றம் அடைந்து ” கனவா நிஜமாவே வலி ஏதாம் வந்திருக்கப்போகுது ஜெகெ. நாம நேரா இப்டியே நம்ம சௌரிராஜனைப் பார்த்திருவோம்…”\n“இல்ல.அப்டி விடக்கூடாது. விடிகாலைல வரதுன்னா…”\n“அடச் சும்மா இருய்யா.” என்றார் கருணாகர் ” அதான் காலையிலேயே முழிச்சுக்கிட்டேன். இப்ப நல்ல தூக்கம் வருது”\n“மேலே போய் ஜமா சேராம பேசாமப் போய் தூங்குங்க”\n” நாப்பது வருஷமா பேசி, எழுதி, கேட்டு ஏகப்பட்ட வார்த்தைகள் மூளைக்குள்ள நிரம்பிப்போச்சுய்யா . புகையைப்போட்டா கொசு ஓடுறமாதிரி ஒவ்வொண்ணா ஓடிப்போயிரும். அப்றம் கொஞ்சநேரம் நிம்மதி…. ” கருணாகர் கைகளைதூக்கி சோம்பல் முறித்தார் ” வார்த்தைகளை வச்சிருக்கிறவனால அப்டி சாதாரணமா அழுதிர முடியாது”\nகார் கூவியபடி நகருள் நுழைந்தது. கட்டிடங்கள் வெயில் ஒளிரும் சன்னல்களுடன் நெற்றியில் எழுத்துக்களுடன் விலகிச்சென்றன. சுற்றும் சீறும் கூவும் கார்கள். கனத்து சரிந்து செல்லும் பேருந்துகள். நிழல் நீண்ட சந்துகளில் கழட்டப்பட்ட சக்கரங்கள், இரும்புக்குப்பைகள், டீசல் கறைகள், சோர்ந்து வியர்த்த மனிதர்கள்….\nஅந்த சில்வண்டுகள் இப்போது என்ன செய்யும் எங்கே இருக்கின்றன அவை இந்த மொத்தப் பகலும் அவற்றுக்கு ஒரு வெறும் ரீங்காரம்போலும்….கருணாகர் தலையை உசுப்பி அவ்வெண்ணங்களை உதற முயன்றார்.\nவீடுமுன் கார் நின்றபோது ”அப்ப பாப்பம்யா” என்றபடி கருணாகர் இறங்கினார் ” நீ பாட்டுக்கு இறங்கிராதே. அப்றம் தெருவே கூடிரப்போகுது”\nசட்டென்று கருணாகர் உரக்கச்சிரித்தார் ” அசடுய்யா நீ. ஒருத்தன் தன்னால அழமுடியலைன்னு சொல்றப்ப ஏன்னு கேக்கலாமா என்ன ” என்றார் . கதவை சாத்தும் முன் ” ஒரு வேளை அப்டி கேக்கிறவனா நீ இருக்கிறதனாலத்தான் உன்னால அழமுடியுதோ என்னமோ” என்றார்.\nஅவர் பிடரி பறக்கும் நிமிர்ந்த தலையுடன் மிடுக்காக நடந்து தன் வீட்டுப்படிகளில் ஏறுவதை யுவராஜ் பார்த்தார். புறப்படும்படிச் சொல்ல டிரைவரைத் தொட்டார்.\nஆயிரம் கால் மண்டபம் (சிறுகதை)\nTags: இரு கலைஞர்கள், சிறுகதை.\n[…] தளத்தில் ஜூலை 27, 2006 அன்று பதிவான “இரு கலைஞர்கள்” – என்ற கதையை இன்றுவரை படிக்காமல் […]\nஜெயமோகன் சிறுகதை – “பழைய பாதைகள்” « சிலிகான் ஷெல்ஃப்\n[…] ஆளில்லை. அறம் சீரிஸ் சிறுகதைகள், இரு கலைஞர்கள் சிறுகதை என்று சொல்லிக் கொண்டே […]\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 66\nஇலக்கியத்திருட்டு, தழுவல், மறு ஆக்கம்...\nகேள்வி பதில் - 51, 52\nசில வரலாற்று நூல்கள் 1 - மதுரை நாடு - ஒரு ஆவணப்பதிவு (ஜே.எச்.நெல்சன்)\nதிருவிதாங்கூர் வரலாறு பற்றிய குறிப்புகள்\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 58\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sivantv.com/videogallery/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95-130/", "date_download": "2018-04-26T13:46:06Z", "digest": "sha1:VWFF74JQPK6J3Z4QWHSTVW5757Z5TWZY", "length": 12179, "nlines": 180, "source_domain": "sivantv.com", "title": "சூரிச் அருள்மிகு சிவன் கோவில் வருடாந்த பெருவிழாவில் வைரவர் திருவிழா 04.07.2017 | Sivan TV", "raw_content": "\nபுங்குடுதீவு கிழக்கு கண்ணகைபுரம் ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்பாள் திருக்கோவில் வருடார்ந்த மகோற்சவம்\nHome சூரிச் அருள்மிகு சிவன் கோவில் வருடாந்த பெருவிழாவில் வைரவர் திருவிழா 04.07.2017\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் வருடாந்த பெருவிழாவில் வைரவர் திருவிழா 04.07.2017\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் வர�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் சி�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் சி�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் தை�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் தி�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் தி�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் பே�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் கந�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் கந�..\nசைவத் தமிழ்ச் சங்கம், அருள்மிகு ச�..\nசைவத் தமிழ்ச் சங்கம், அருள்மிகு ச�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் கந�..\nசைவத் தமிழ்ச் சங்கம், அருள்மிகு ச�..\nசைவத் தமிழ்ச் சங்கம் சூரிச் அருள�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் கந�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் கந�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் கந�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் கந�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் கந�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் கே�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் பு�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் மூ�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் வி�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் வர�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் வர�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் வர�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் தே�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் தே�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் வர�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் வர�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் வர�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் வர�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் வர�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் வர�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் வர�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் வர�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் வர�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் வர�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் வர�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் வர�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் வர�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் வர�..\nசூரிச் - அருள்மிகு சிவன் கோவில் வர..\nசூரிச் - மூதாளர் அன்பு இல்லம் முதல..\nஅற்றார் அழிபசி தீர்த்தல் நிகழ்வி..\nஅற்றார் அழிபசி தீர்த்தல் நிகழ்வி..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் சி�..\nஅன்பே சிவம் நடாத்திய அற்றார் அழி�..\nசூரிச் - அருள்மிகு சிவன் கோவில், ச�..\nசைவத் தமிழ்ச் சங்கம் நடாத்திய அற�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் மக�..\nசூரிச் - அருள்மிகு சிவன் கோவில் தை..\nசூரிச் - அருள்மிகு சிவன் கோவில் தை..\nசூரிச் - அருள்மிகு சிவன் கோவில் தி..\nசூரிச் - அருள்மிகு சிவன் கோவில் தி..\nசூரிச் - அருள்மிகு சிவன் கோவில் தி..\nசூரிச்-அருள்மிகு சிவன் கோவிலில் �..\nசைவத் தமிழ்ச் சங்கம் – அருள்மிகு �..\nசைவத் தமிழ்ச் சங்கம் – அருள்மிகு �..\nசைவத் தமிழ்ச் சங்கம் – அருள்மிகு �..\nசைவத் தமிழ்ச் சங்கம் - அருள்மிகு ச..\nசூரிச் – அருள்மிகு சிவன் கோவில் க�..\nசூரிச் – அருள்மிகு சிவன் கோவில் க�..\nசூரிச் – அருள்மிகு சிவன் கோவில் க�..\nசூரிச் – அருள்மிகு சிவன் கோவில் க�..\nசூரிச் – அருள்மிகு சிவன் கோவில் க�..\nசூரிச் – அருள்மிகு சிவன் கோவில் க�..\nசூரிச் – அருள்மிகு சிவன் கோவில் க�..\nசூரிச் – அருள்மிகு சிவன் கோவில் க�..\nசூரிச் – அருள்மிகு சிவன் கோவில் க�..\nசூரிச் - அருள்மிகு சிவன் கோவில் கந..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் வி�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் நவ�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் இர�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் மு�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் வை�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் பூ�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் கொ�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் தீ�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் தே�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் தே�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் – ச�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் – ச�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் சப�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் வே�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் – ச�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் கு�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் – ச�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் கு�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் – ச�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் கை�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் – ச�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் – ச�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் கை�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் – ச�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் மா�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் – ச�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் பஞ�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் பஞ�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் – ச�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் – இ�..\nதிருநெல்வேலி அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயம் மானம்பூ (விஜயதசமி) 30.09.2017\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் விசயதசமி, ஏடு தொடக்கல் 30.09.2017\nபுங்குடுதீவு - கிழக்கு - கண்ணகைப�..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.megatamil.in/astrology/who-will-excel-in-sports/", "date_download": "2018-04-26T13:25:49Z", "digest": "sha1:W2IH5Z3RBTHWXBPCWJNZHYZ4CSAJCOG3", "length": 7339, "nlines": 56, "source_domain": "www.megatamil.in", "title": "Who will excel in Sports ? Tamil Astrology", "raw_content": "\nஓடி விளையாடு பாப்பா நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா. காலை எழுந்தவுடன் படிப்பு பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு மாலை முழுதும் விளையாட்டு என்று வழக்கப்படுத்தி கொள்ளு பாப்பா. இது பாரதி நமக்கு சொல்லி தந்த பாடம். கல்வியில் சாதனைப் படைப்பதைப் போலவே விளையாட்டுத் துறைகளிலும் மற்ற துறைகளிலும் சாதனை படைக்க இன்றைய இளைய தலைமுறையினர் விரும்புகின்றனர். வேகமாக வளர்ந்து வரும் காலகட்டங்களில் ஒவ்வொரு மணி நேரமும் பொன்னான நேரமாக கருதப்படுகிறது. காலை 5 மணி தொடங்கியதிலிருந்து யோகா, தியானம், உடற்பயிற்சி, நாட்டியம், இசை, பாடல் பயிற்சி, நீச்சல் பயிற்சி, கிரிக்கெட், கால்பந்து, கைபந்து என பல பயிற்சிகளுக்கு பிள்ளைகளை ஈடுபடுத்துவதில் பெற்றோர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.\nபணம் எவ்வளவு செலவானாலும் பிள்ளைகளை ஏதாவது ஒரு துறையில் முன்னேற்றவே முழு மூச்சுடன் செயல்படுகிறார்கள். பிள்ளைகளை ஊக்குவிப்பது நல்ல செயல் என்றாலும் அவர்களின் விருப்பத்திற்கு மாறாக எதிலும் திணிக்காமல் அவர்களுக்கு எந்த துறையில் ஆர்வம் அதிகம் உள்ளது என்பதை ஆராய்ந்து அதில் அவர்களை ஈடுபட செய்வது பெற்றோருக்கும் நல்லது. பிள்ளைகளுக்கும் நல்லது.\nஜென்ம லக்னத்திற்கு 5ஆம் வீட்டை கொண்டு விளையாட்டு, கேளிக்கை, பொழுது போக்கு செயல்கள் பற்றி தெளிவாக அறியலாம். விளையாட்டுத் துறைகளில் ஈடுபடுவதற்கு முதலில் நல்ல தைரியமும், மனோ வலிமையும் புத்திக் கூர்மையும் வேண்டும். இவற்றிற்கு காரகனாக விளங்கக் கூடிய சூரியன், சந்திரன், செவ்வாய் புதன் போன்ற கிரகங்களும் பலம் பெற்றிருந்தால் எந்தத் துறையை தேர்ந்தெடுத்தாலும் அதில் வெற்றி பெறக் கூடிய அளவிற்கு ஆற்றல் உண்டாகும்.\nசூரியன் பலம் பெற்றால் நல்ல உடல் பலமும், சந்திரன் பலம் பெற்றால் மனோபலமும், செவ்வாய் பலம் பெற்றால் தைரியம் துணிவும், புதன் பலம் பெற்றால் புக்தி கூர்மையும், சனி பலம் பெற்றால் கால்களில் பலமும் உண்டாகும்.\nசனி, செவ்வாய் பலம் பெற்று 3,12ல் வலுவாக அமையப் பெற்றால் கைபந்து, கால்பந்து, ஒடி விளையாடும் விளையாட்டுகளில் ஈடுபட முடியும்.\nசுக்கிரன், சந்திரன் நீர் கிரகங்கள் என்பதால் 5ம் வீட்டில் சுக்கிரன், சந்திரன் பலமாக அமையப் பெற்றால் நீச்சல் போட்டிகளில் ஆர்வம் அதிகரிக்கும்.\nபுதன் 5ஆம் அதிபதியாக இருந்தாலும் 5ல் அமையப் பெற்றாலும் புத்திக்கு வேலை தரக்கூடிய செஸ், கேரம் போன்றவற்றில் ஈடுபாடு உண்டாகும்.\nகுறிப்பாக 5ஆம் இடமும் 5ஆம் அதிபதியும் சூரியன், சந்திரன், செவ்வாயும் பலம் பெற்றால் விளையாட்டுத் துறைகளில் தைரியமாக செயல்பட்டு பல வெற்றிகளை குவிக்க முடியும். ஆணுக்கு பெண் குறைந்தவர்கள் இல்லை என்பதை கண்கூடாக கண்டு கொண்டிருக்கிறோம். அதனால் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் ஆர்வம் உடையவர்களை முன்னேற விடுங்கள். அவர்களை மட்டம் தட்டி முன்னேற்றத்திற்கு தடையாக இருக்காதீர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.nitharsanam.net/178984/news/178984.html", "date_download": "2018-04-26T13:15:56Z", "digest": "sha1:ZSGTQKO3EP2TZLZDV3MKDEYQUSELO3GV", "length": 24852, "nlines": 106, "source_domain": "www.nitharsanam.net", "title": "வெப்பாலை!! (மருத்துவம்) : நிதர்சனம்", "raw_content": "\nநாம் சாலை ஓரங்களிலும், காடு, மலைப் பகுதிகளிலும் சாதாரணமாகக் காணக்கூடிய ஒரு தாவரம் வெப்பாலை. சுமார் 10 மீட்டர் உயரம் வளரக்கூடியதாகவும், பீன்ஸ் போன்ற காய்களைக் கொத்துக் கொத்தாக பெற்றிருக்கும் மரம் இது. இதன் இலைகள் 8 முதல் 15 செ.மீ நீளத்துக்கு வேப்பிலையைப் போன்ற வடிவ அமைப்பினைப் பெற்றிருக்கும். வெப்பாலையின் பூக்கள் வெண்ணிற நறுமணமுடையதாக மல்லிகைப் பூ போன்ற வடிவில் ஒவ்வொரு கிளையின் முனையிலும் மலரும். மிகுதியான பால் உள்ள மரமான வெப்பாலை மிகுதியான மருத்துவ பலன்களும் கொண்டது என்பதையே இந்த அத்தியாயத்தில் பார்க்க இருக்கிறோம்.\nவெப்பாலை இந்திய மண்ணைத் தாயகமாகக் கொண்டது என்றும் பர்மா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் தமிழ்நாடு போன்ற பகுதிகளில் மிகுதியாகக் காணக்கூடியது, வளரக்கூடியதும் கூட. வெப்பாலையின் இலை, பட்டை, வித்து ஆகியன மருந்தாகிப் பயன் தரவல்லது. இது கசப்புச் சுவையுடையது அல்ல. வெப்பாலையைப் போலவே தோற்றமுடைய வேறு ஒரு மூலிகை உண்டு. அது மிக கசப்புடையது. இதைத் தவறாக வெப்பாலை என்று புரிந்துகொள்ளும் குழப்பம் ஏற்படும். அது உண்மையில் குடசப்பாலை அல்லது குளப்பாலை எனப்படும். இதை நன்கு புரிந்து பயன்படுத்துதல் வேண்டும். Wrightia tinctoria என்னும் தாவரப் பெயரால் வெப்பாலை இனங் காணப்பெறும்.\nஇது Apocynaceae என்னும் தாவரக் குடும்பத்தைச் சார்ந்தது ஆகும். தந்த நிற மரம் என்று இது ஆங்கில மொழியில் அழைக்கப்பெறும். ஸ்வேதகுடஜா என்பது இதன் வடமொழிப் பெயர். இரும்பாலை, நிலப்பாலை என்றெல்லாம் கூட இதற்குத் தமிழ்ப் பெயர்கள் உண்டு. பாலியல் உணர்வைத் தூண்டக்கூடியது வெப்பாலையின் பட்டை என்பதால் இது காமவர்த்தினி என்றும் அழைக்கப்படுகிறது. வெப்பு எனப்படும் உஷ்ண சம்பந்தமான நோய்களைக் கண்டிக்கக் கூடியது என்பதால் இதற்கு வெப்பாலை என்று பெயர் வந்தது. உஷ்ண நோய்களான வயிற்றுக் கழிச்சல், சரும நோய்கள், உடற்சூடு, காய்ச்சல் போன்ற நோய் களைத் தணிக்கும் திறன் கொண்டது வெப்பாலை.\nபேதி மற்றும் சீதபேதியை நிறுத்தவல்லது. மூலம் என்னும் ஆசனவாய்ப் பற்றிய நோய்களையும் பல்வேறு சரும நோய்களையும் போக்கி உடலைப் பாதுகாக்கவல்லது. இதன் விதைகளும் ரத்த சீதபேதிகளைத் தணிக்கவல்லது. குருதி ஒழுக்கோ, நீர் ஒழுக்கோ எவ்விதத்தாயினும், உடலை எங்கு பற்றியதாயினும் அதை வற்றச் செய்யும் நன் மருந்தாவது. உடலில் வியர்வையைத் தூண்டி வெப்பத்தை தணித்து காய்ச்சலையும் உடல் வலியையும் போக்குவிக்கக் கூடியது. இதன் பட்டைப் பகுதி மற்றும் விதைகள் இந்திய மருத்துவ முறைகளாக சித்த, ஆயுர்வேத முறைகளில் வயிற்று உப்புசம் மற்றும் வயிற்றுப் பொருமல், பித்த சம்பந்தமான நோய்களைப் போக்குவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன.\nஇது கல்லீரல் மற்றும் மண்ணீரலை பலப்படுத்தக் கூடியதாகவும், குருதிச் சீர்பாட்டுக்காகவும், முத்தோஷக் கேடுகளை (வாத, பித்த, சிலேத்துமம்) சமன்படுத்தி ஆரோக்கியத்தை நிலைப்படுத்த வல்லதாகவும் விளங்குகிறது. வெப்பாலையில் உள்ள மருந்து வேதிப்பொருட்களும், குணங்களும் வெப்பாலையின் விதை நீக்கிய காய்கள் Cycloartane என்னும் வேதிப்பொருள் சீதபேதியையும், கடுங் கழிச்சலையும் போக்கவல்லது. இதில் Beta sitosterol என்னும் வேதிப்பொருள் மிகுந்துள்ளது. இது குருதியில் மிகுந்துள்ள கொழுப்புச் சத்துவத்தைக் கரைக்கவல்லது. மார்பு நோய் அல்லது இதயநோய் இதனைத் தொடர்ந்து வரும் இதய அடைப்பு வராது தவிர்க்க உதவுகிறது.\nமேலும் ப்ரோஸ்ட்டேட் கோளத்தின் வீக்கத்தையும் கட்டுப்படுத்தி சிறுநீரை தாராளமாகக் கழியச் செய்கிறது. வெப்பாலை மரப்பட்டையினின்று பிரித்தெடுக்கப் பெறும் Beta amyrin என்னும் வேதிப்பொருள் வலித்தணிப்பானாகவும், வீக்கத்தைக் கரைப்பதாகவும் விளங்குகிறது. மேலும் இது மலேரியா என்னும் குளிர்காய்ச்சல், மூட்டுவாதம், பல்வலி, வீக்கம் இவற்றைக் குணப்படுத்தும் மருந்தாகவும் பயன் தருகிறது. இது புண்களை விரைந்து ஆற்றும் ஓர் உன்னத குணம் படைத்தது. வெப்பாலை மரப்பட்டையில் Ursolic acid என்று குறிப்பிடப் பெறும் அமிலத்தன்மை மிகுதியாக உள்ளது.\nஇந்த அர்சோலிக் அமிலம் உடலின் தசை வளர்ச்சிக்குப் பயன் தருகிறது. மேலும் இது குருதியில் சேர்ந்த மிகுதியான கொழுப்புச் சத்துவத்தை கரைத்து வெளியேற்றக்கூடியது. இதனால் உடல் எடையைக் குறைப்பதற்கு உதவுகிறது. ரத்தத்தில் மிகுந்திருக்கும் சர்க்கரையின் அளவையும் இது கட்டுப்படுத்தவல்லது. கொழுப்புச் சத்துவங்களில் கெட்ட கொழுப்பாக நின்று பல்வேறு துயரங்களைத் தூண்டுவிக்கும் டிரைகிளிசரைட்ஸ் என்னும் கொழுப்பு சேராமலும் சேர்ந்ததைக் கரைக்கவும் மருந்தாகிறது.\n* வெப்பாலை மரப்பட்டைச் சூரணம் ஓரிரு தேக்கரண்டி எடுத்துத் தீநீராகப் பருகுகிறபோது பாற்பெருக்கியாகவும், பல்வேறு வயிற்று நோய்களைத்\n* வெப்பாலை மரப்பட்டைச் சூரணத்தோடு 10 மிளகும் சுவைக்கென பனங்கற்கண்டும் சேர்த்து தீநீராகப் பருகும்போது, சருமநோய்களை விரைந்து குணப்படுத்துவதோடு காயங்கள் எவ்விதத்தினால் ஆயினும் அதை ஆற்றும் மருந்தாகிறது. காய்ச்சலைத் தணிவிக்கிறது. பேதி மற்றும் சீதபேதியைக் கட்டுப்படுத்துகிறது. பாம்புக்கடி விஷம், தேள்கடி, பூரான் கடி போன்றவற்றால் உண்டான விஷத்தை முறிக்கவல்லது.\n* குருதிக்கசிவு அதாவது ஆசன வாயினின்று வெளிப்படும் ஹெமராய்ட்ஸ் என்னும் ரத்தக்கசிவு, கருப்பையினின்று வெளியேறும் அதிகமான குருதிப்போக்கு, சிறுநீர்த்தரை வழியே வெளியேறும் குருதிக்கசிவு, இருமும்போது நெஞ்சகச் சளியோடு குருதி கலந்து வெளியேறுவது போன்ற அசாதாரண நிலைகளில் வெப்பாலைப் பட்டைச் சூரணமும் மிளகும் சேர்ந்த தீநீர் உடலை தேற்றும் உன்னத மருந்தாகிறது.\n* வெப்பாலை இலை நான்கு அல்லது ஐந்து எடுத்து அதனுடன் சம அளவு கீழாநெல்லி, நொச்சி இவைகளின் இலையைச் சேர்த்து அரைத்து, ஒரு மண்டலம் உள்ளுக்கு சாப்பிட, மாதவிலக்கு ஒழுங்காவதோடு பெண் மலடு நீங்குவதற்கும் வகை செய்கிறது.\n* வெப்பாலை இலை, கீழ்க்காய் நெல்லி இலை மற்றும் ஆமணக்கு இலை ஆகிய மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து ஒரு நெல்லிக்காய் அளவு விழுதோடு மோர் கலந்து அன்றாடம் காலை வெறும் வயிற்றில் பருகி வர சில நாட்களில் மஞ்சள் காமாலை மறைந்துபோகும்.\n* வெப்பாலை விதையைப் பொடித்துச் சூரணித்து வெருகடி அளவு (ஒரு கிராம்) எடுத்து தேன் கலந்து குழைத்து தினம் அந்தி, சந்தி என இரு வேளை உண்டுவர, இது ஒரு காமவிருத்தினியாக பயன் தரும். கருப்பை வீக்கம், கருப்பைப் புற்று, மார்பகப் புற்று, ரத்த நாளங்களிலே ஏற்படும் அடைப்பு ஆகியவற்றைக் கண்டிக்கும்.\n* வெப்பாலை இலைகளை அரைத்து விழுதாக்கி அக்கிப் புண்கள் பொன்னுக்கு வீங்கி என்று சொல்லப் பெறும் புட்டாலம்மை ஆகியவற்றின் வலியைக் குறைத்து வீக்கத்தைத் தணிவிக்கச் செய்யும். வெப்பாலை இலைகளை போதிய அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து நான்கைந்து நாட்கள் நல்ல சூரிய ஒளி படும்படி வைத்து சூரிய புடமிட்டு வைக்க எண்ணெய் நன்கு நீல நிற வண்ணம் பெறும்.\nஇந்த எண்ணெயை வடித்து பாட்டிலில் பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டு மேற்பூச்சாகப் பூசிவர உடலில் செதில் செதிலாகக் கொட்டி அரிப்பும், துர்நாற்றமும் மன உளைச்சலும் உண்டாக்கக்கூடிய தோல் நோயான சொரியாஸிஸ் குணமாகும்.\n* வெப்பாலைப் பட்டைச் சூரணம் வெருகடி அளவு எடுத்து சம அளவு இசப்கோல் வித்து பொடித்து இரண்டையும் ஒரு சேரக் கலந்து சிறிது பசு வெண்ணெய் சேர்த்து நன்கு உறவாடும்படி குழைத்து அந்தி சந்தி என இருவேளை உள்ளுக்கு சாப்பிட்டு வர நாட்பட்ட தீராக் கழிச்சல், மலத்தில் குருதி கலந்து வெளியேறுதல், மூலம், தோல் நோய்கள், தேமல், தொழுநோய் ஆகியன குணமாகும்.\n* வெப்பாலைப் பட்டைத் தீநீர் இரண்டு மூன்று தேக்கரண்டி எடுத்து அதனோடு வெருகடி சுக்குத்தூள் கலந்து சுவைக்கென தேன் கலந்து உறவாடும்படி குழைத்து உள்ளுக்கு சாப்பிட்டு வர மூல நோய் குணமாவதோடு இதையே தேனில்லாமல் மேலே பூசி வர தோல் நோய்கள் குணமாகும்.\n* வெப்பாலைப் பொடியைக் கோமூத்திரத்தோடு சேர்த்துக் குழைத்து மேற்பற்றாகப் பூசிவரப் பல விதமான சரும நோய்களும் பறந்து போகும்.\n* வெப்பாலைப் பட்டையைப் பசுமையாக இடித்துச் சாறு எடுத்து இரண்டு தேக்கரண்டி அளவு சாறுடன் பசும்பால் சேர்த்துப் பருகி வர சிறுநீரக நோய்கள் பலவும் சீர்பெறும்.\n* உலர்ந்த பட்டை சூரணத்தை எடுத்து உடலில் வீக்கம் கண்ட இடத்தின் மேல் தேய்த்து வர வீக்கம் தணியும்.\n* வெப்பாலை விதைச் சூரணத்தை வெருகடி எடுத்து தேன் சேர்த்து குழைத்து சாப்பிட்டு வர குடலில் தங்கிய புழுக்கள் நீங்கும், காய்ச்சலும் தணியும், பேதியும் குணமாகும்.\n* வெப்பாலை இலையோடு சிறிது உப்பு சேர்த்து மென்று சிறிது நேரம் வாயில் வைத்திருந்து துப்பிவிட பல்வலி பற்சொத்தை குணமாகும்.\n* வெப்பாலைப் பட்டைச் சூரணத்துடன் அரை தேக்கரண்டி மிளகு சேர்த்து உள்ளுக்கு சாப்பிட்டு வர மூட்டுவலி, எலும்புவலி ஆகியன குணமாகும்.\n* வெப்பாலையைத் தைல பதத்தில் தயாரித்து தொடர்ந்து 90 நாட்கள் பயன்படுத்தியதில் சரும நோய்கள் பலவும் குணமாயின என ஒரு விஞ்ஞான ஆய்வுதெரிவிக்கிறது. சாதாரணமாக நாம் சாலை ஓரங்களில் பார்க்கக் கூடிய இந்த வெப்பாலை, மஞ்சள் காமாலையைப் போக்கும் மரம் என்றே அழைக்கப் பெறுகிறது.\nஇப்படி தீராத சரும நோய்கள், காய்ச்சல், பல்வலி, எலும்புவலி, மூட்டுவலி, பேதி, சீதபேதி, குருதிக்கொழுப்பு, சர்க்கரை நோய் இப்படிப் பல்வேறு நோய்களைப் போக்குவதை மனதில் வைத்து ஆங்காங்கே இயன்ற வரையில் பயிரிடுவதால் எதிர்காலத்தில் ஆரோக்கிய வாழ்வுக்கு அடிகோலும் என்பதில் ஐயமில்லை.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nஉடலுறவின் போது எதுவெல்லாம் உங்கள் துணைக்கு பிடிக்கும்\nகர்ப்பகாலத்தில் தாம்பத்யம், அசைவம் சரியா\nமரண காமெடி- இது நம்ம ஊரு நடிகர்கள் – பழமார்நேரி பஞ்சாயத்து\nஇந்திய அரசியலில் ‘ஆளுநர்’ பதவிகள்\nநல்ல தூக்கத்துக்கு நாளை செய்ய வேண்டியதை எழுதுங்கள்\nதாம்பத்திய இன்பத்தின் போது தவிர்க்க வேண்டியவை\nசினிமா துறையில் இந்த வசனத்தை இவரை தவிர யாராலும் பேச முடியாது\nஉலக புகழ் பெற்ற குரங்கு செல்பி புகைப்பட வழக்கு : காப்புரிமை கோர முடியாது நீதிமன்றம் தீர்ப்பு\nஅணு சக்தி ஒப்பந்தம் மோசமானது என்றால் அமெரிக்க கையெழுத்திட்டது : ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி\nஇலங்கைப் பொலிஸாரின் பொருட்களை வைத்திருந்த பிரிட்டன் குடியுரிமை பெற்ற நபர் கைது\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthinappalakai.net/2017/05/03", "date_download": "2018-04-26T13:15:40Z", "digest": "sha1:KA4O34PY7S7CJRBFZS6EQQP6M7WGI434", "length": 11725, "nlines": 115, "source_domain": "www.puthinappalakai.net", "title": "03 | May | 2017 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nயாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்கள் கவனயீர்ப்புப் போராட்டம்\nஅனைத்துலக ஊடக சுதந்திர நாளான இன்று யாழ்ப்பாணத்தில் ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தியும், படுகொலை செய்யப்பட்ட, கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்கள், ஊடகப் பணியாளர்கள் தொடர்பான நீதியான விசாரணைகளை நடத்தக் கோரியும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.\nவிரிவு May 03, 2017 | 13:05 // யாழ்ப்பாணச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nசரத் பொன்சேகா குறித்து அமைச்சரவையில் முடிவெடுக்கப்படவில்லை- சிறிலங்கா பிரதமர்\nபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை இராணுவத் தலைமைப் பதவிக்கு நியமிக்கும் எந்த முடிவும் அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்படவில்லை என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.\nவிரிவு May 03, 2017 | 9:50 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nகொழும்பு துறைமுகத்தில் பாகிஸ்தான் கடற்படைக் கப்பல்\nபாகிஸ்தான் கடற்படையின் கடல்சார் பாதுகாப்புக் கப்பலான பிஎம்எஸ்எஸ் டாஸ்ட் (‘Dasht’ ) நல்லெண்ணப் பயணமாக கொழும்புத் துறைமுகத்துக்கு வந்துள்ளது.\nவிரிவு May 03, 2017 | 9:47 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nமன்னாரில் சிறிலங்கா கடற்படைப் படகு கவிழ்ந்து விபத்து – அதிகாரியைக் காணவில்லை\nமன்னார்- அரிப்பு கடல் பகுதியில் சிறிலங்கா கடற்படைப் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கடற்படை அதிகாரி ஒருவர் காணாமல் போயுள்ளார்.\nவிரிவு May 03, 2017 | 8:16 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nகீதா குமாரசிங்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைப் பறித்தது மேல் முறையீட்டு நீதிமன்றம்\nஇரட்டைக் குடியுரிமை வைத்திருந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரான கீதா குமாரசிங்க தகுதியிழந்தவராக சிறிலங்கா மேல்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.\nவிரிவு May 03, 2017 | 8:03 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகஜபா படைப்பிரிவின் தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமனம்\nசிறிலங்கா இராணுவத்தின் கஜபா படைப்பிரிவின் 11 ஆவது தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா பதவியேற்றுள்ளார்.\nவிரிவு May 03, 2017 | 2:51 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nசிறிலங்கா கடற்படைக்கான இரண்டாவது ஆழ்கடல் ரோந்துக் கப்பல் கோவாவில் வெள்ளோட்டம்\nசிறிலங்கா கடற்படைக்காக இந்தியாவின் கோவா கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்ட ஆழ்கடல் ரோந்துக் கப்பல் நேற்று வெள்ளோட்டம் விடப்பட்டது.\nவிரிவு May 03, 2017 | 2:19 // இந்தியச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nமகிந்த அரசு பெற்ற கடன் 9.3 பில்லியன் டொலர்\nமகிந்த ராஜபக்ச அரசாங்கத்தினால் பெறப்பட்ட 9.3 பில்லியன் டொலரை கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய நிலையில் சிறிலங்கா அரசாங்கம் இருப்பதாக, சிறிலங்காவின் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.\nவிரிவு May 03, 2017 | 2:00 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nவடக்கு முதல்வரை தனியாகச் சந்திப்பார் சிறிலங்கா அதிபர்\nவடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுடன், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தனியாகப் பேச்சு நடத்தவுள்ளார் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nவிரிவு May 03, 2017 | 1:47 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் இரா.சம்பந்தன் – ‘சேர் பொன். இராமநாதனின் மறுஉருவம்’\t0 Comments\nகட்டுரைகள் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு யார் காரணம்\nகட்டுரைகள் சிறிலங்கா: மகிந்தவுக்காக திறக்கப்படும் கதவுகள்\t0 Comments\nகட்டுரைகள் ஐ.நாவின் மனிதஉரிமைச் செயற்பாடுகளைப் பலவீனப்படுத்தும் ரஷ்யா, சீனா\t0 Comments\nகட்டுரைகள் சீனாவின் இறுக்கமான பிடியில் சிறிலங்காவின் அமைதியான துறைமுகம்\t1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுக்கு எதிரான வியூகத்தில் சிறிலங்காவின் பௌத்த பிக்குகளையும் இணைக்கிறது இந்தியா\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்திய மாக்கடலில் அதிகரிக்கும் சீனாவின் செல்வாக்கும் – இந்தியாவின் முத்தரப்பு கடற்பாதுகாப்பு ஒப்பந்தமும்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t0 Comments\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t2 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE", "date_download": "2018-04-26T13:32:42Z", "digest": "sha1:E7RUCVQQI7TNLUOQAN26Y7RZ46QXCOND", "length": 4098, "nlines": 77, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "வாலாயம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் வாலாயம் யின் அர்த்தம்\nஇலங்கைத் தமிழ் வழக்கு கைவந்தது; தேர்ச்சி.\n‘ஏமாற்றுவது என்பது அவனுக்கு வாலாயமான கலை’\nஇலங்கைத் தமிழ் வழக்கு வசியம்.\n‘அவன் பேய் பிசாசுகளையும் வாலாயம் பண்ணக்கூடியவன்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88)", "date_download": "2018-04-26T13:42:27Z", "digest": "sha1:TC76DUZJJMW6P2WCVXYIFXOSUMMSUKTT", "length": 8454, "nlines": 135, "source_domain": "ta.wikipedia.org", "title": "உப்புத் தொழில் (தமிழர் தொழிற்கலை) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "உப்புத் தொழில் (தமிழர் தொழிற்கலை)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ. கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம்\nஇக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள்.\nதமிழர் தாயகப் பகுதிகள் கடற்கரையை அண்டிய பகுதிகளாக இருந்தமையால் தமிழர்கள் உப்புத் தொழிலில் நீண்ட காலமாக ஈடுபட்டு வருகிறார்கள்.\nஇலங்கையில் தமிழர் தாயகப் பகுதிகள் ஆன ஆனையிறவு, நிலாவெளி, சிவியாதெரு, இருபாலை, கரணவாய், கல்லுண்டாய், முல்லைத்தீவு முதலிய இடங்களில் உப்புப் பெறப்படுகின்றது.[1] இப் பகுதிகளில் பல உப்பளங்கள் உள்ளன.\nதமிழ்நாட்டில் தூத்துக்குடி, திருநெல்வேலி, காஞ்சிபுரம் போன்ற கரையோர மாவட்டங்களில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இந்திய அரசின் தாராளமயமாக்கல் கொள்கையினால் தமிழ்நாட்டு உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டு இந்த தொழிலில் ஈடுபட்டவர்கள் பெரும் பாதிப்பை அடைந்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.[2]\nஉப்புத் தொழிலில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுபடுகின்றனர். உப்பு தமிழர் தாயகப் பகுதிகளில் இருந்து பிற பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஒரு பொருளாகவும் உள்ளது.\n↑ இலங்கையில் தமிழர் பாரம்பரியப் பிரதேசத்தின் குடித்தொகைப் பண்புகளும் பொருளாதார வளங்களும்\n↑ தவாது போன உப்புத் தொழில்\nதலைப்பு மாற்றப்பட வேண்டிய பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சனவரி 2016, 11:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://pathavi.com/?page=86", "date_download": "2018-04-26T13:08:11Z", "digest": "sha1:M7K5R5DA235QLEXCRL6AD5HECCFUJF7D", "length": 7947, "nlines": 196, "source_domain": "pathavi.com", "title": "Best tamil websites & blogs •et; Page 86 •et; Pathavi", "raw_content": "\nSIIMAawards 2013 மெகா புகைப்பட கேலரி\nடைரக்டர் ஷங்கரை ‘கெடுக்க’ பார்க்கிறார் அர்ஜுன்\nஎன் ராஜபாட்டை : பாதுகாக்க வேண்டிய 10 புத்தகங்கள் (Free Download)\nEVIL DEAD (2013) - சினிமா விமர்சனம்\nமூடர்கூடம் - குட்டி விமர்சனம் - டோண்ட் மிஸ் இட்\nஎத்தரையும் பெகுமானப்பட்ட தமிழ் நாட்டுட முக்ய மந்திரி : பாமரன்\nதமிழா...தமிழா..: ஆதலால் அன்புடன் இருப்பீர்..\nஅஜித் நாடித்த ஆரம்பம் பட்டியலின் விவரம்...\nவீட்டுக்குறிப்புக்கள் -- சமையல் அரிச்சுவடி, ~ பெட்டகம்\nயுவகிருஷ்ணா: தூக்குத்தண்டனையை தூக்கில் ஏற்றுவோம்\nPathavi தமிழின் முதன்மையான வலைப்பதிவு திரட்டி ஆகும். Pathavi தமிழ் வலைப்பதிவுகளுக்கு பலச் சேவைகளை வழங்கி வருகிறது. வலைப்பதிவுகளை திரட்டுதல், மறுமொழிகளை திரட்டுதல், குறிச்சொற்களை திரட்டுதல், வாசகர் பரிந்துரைகள், தமிழின் முன்னணி வலைப்பதிவுகள் என பலச் சேவைகளை Pathavi வழங்கி வருகிறது. வேறு எந்த இந்திய மொழிகளிலும் இல்லாத அளவுக்கு தொழில்நுட்ப சேவைகளை Pathavi தமிழ் வலைப்பதிவுகளுக்கு அளித்து வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://puthu.thinnai.com/?cat=4&paged=180", "date_download": "2018-04-26T13:39:43Z", "digest": "sha1:Z37U4DKK5I5X3NNCZM4YALYBGZTXTAKP", "length": 15623, "nlines": 72, "source_domain": "puthu.thinnai.com", "title": "திண்ணை | Archive | அரசியல் சமூகம்", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஅவ்வப்போது எனக்கு வரும் மின்னஞ்சல்களில் கேட்கப்படும் கேள்வி, எப்போது பார்த்தாலும் மு.கருணாநிதி அவர்களைக் கடுமையாக விமர்சித்தும் கண்டித்தும் எழுதி வருகிறீர்களே, அப்படியானால் கருணாநிதியிடம் பாராட்டுவதற்கு எதுவுமே இல்லையா பாஷைதான் வேறுபடுமேயன்றி அடிப்படையில் இந்தக் கேள்வியின் சாரம்தான் எதிலும். இது வெகு காலமாகவே என்னிடம் கேட்கப்பட்டுவரும் கேள்வி. ஆனால்\t[Read More]\nஇந்திய வர்த்தகம் – குறியா, குறி தவறியதா\nஅமெரிக்காவைப் பிடிக்கவில்லை என்றால், உலகெங்கிலும் சில விஷயங்களைச் செய்கிறார்கள். அங்கிள் சாமின் உருவத்தை, அமெரிக்கக் கொடியைக் கொளுத்துவார்கள். அல்லது கோக், மெக்டானல்டு (Coke, MacDonalds) மற்றும் பெப்ஸி (Pepsi) போன்ற அமெரிக்க வர்த்தகக் குறிகளின் (brands) பெரிய வடிவத்தை எரிக்கிறார்கள். அமெரிக்கா என்றவுடன் சட்டென்று அதன் கொடியைத் தவிர எது நினைவுக்கு வருகிறது இன்று, நைக்கி, ஆப்பிள்,\t[Read More]\nஒரு மனிதனை எப்படியெல்லாம் நாம் துன்புறுத்தலாம் சொற்களால், வார்த்தைகளால், செய்கைகளால், எமது நடத்தைகள் மற்றும் நடவடிக்கைகள் எல்லாவற்றாலும் ஒரு மனிதனை இலகுவாகத் துன்புறுத்தி விடலாம். ஆனால் அத் துன்புறுத்தல்களை எல்லோராலும் இலகுவில் தாங்கிக் கொள்ளமுடியாது. துன்புறுத்தலுக்குள்ளாகும் மனிதனின் உணர்வுகளும், உடலும் ஒரே நேரத்தில் சீண்டப்படுகின்றன. அவற்றின் விளைவுகள்\t[Read More]\nஇருள் குவியும் நிழல் முற்றம்\nசல்மா முதல்முறை அமெரிக்கா வந்திருந்த பொழுது. கோபால் ராஜாராம் வீட்டில் ஒரு சந்திப்புக்கு ஏற்பாடாகியிருந்தது. பேச்சு சல்மாவின் இரண்டாம் ஜாமங்களின் கதை நாவல் பற்றித் திரும்பியது. அதற்கு ரவிக்குமார் எழுதிய முன்னுரையைப் படித்துவிட்டு நாவலைப் படிக்க வேண்டாம் என்று நெடுநாள் வைத்திருந்ததாகவும், பின்னர் சில பக்கங்கள் படித்துத்தான் பார்ப்போமே என்று படிக்க ஆரம்பித்து\t[Read More]\nதிண்ணைப் பேச்சு- நன்றி ரிஷான்ஷெரீஃப்\nசிங்களர்களே என்றாலே காடையர்கள் என்பதாக ஒரு பிம்பம் கடந்த் மூன்று தசாப்தங்களாக தமிழ் மக்களில் பதிந்து விட்ட ஒன்று. தமிழ் ஈழப் போராட்டத்தில் நியாய உணர்வு கொண்ட சிங்களவர்களும் இணைந்து பணி புரிய முடியாதபடிக்கு அவர்களிடமிருந்து தனிமைப் பட்ட நிலையில் இயக்கங்களும் போராட்டங்களும் இருந்து வந்திருக்கின்றன. இது பற்றி முதன்முதலில் உணர்ச்சி பூர்வமாகவும், அறிவு\t[Read More]\nஜூன் 25 நெருக்கடி நிலை நினைவுநாள்- இன்றும்\n1975 ஆம் வருடம் ஜூன் 25 ஆம் தேதி எமர்ஜன்ஸி என்ற நெருக்கடி நிலை இந்திரா காந்தியால் அமல் செய்யப்பட்டது. அதன் பொருட்டு வந்த சில அபு அப்ரஹாம் கார்ட்டூன்களையும் கார்ட்டூன் போன்ற இங்கே பகிர்ந்துகொள்கிறேன் [Read More]\nஎன்னைக் கைது செய்யப் போகிறார்கள்\nதற்போது இலங்கையில் வசிக்கும் என்னை விரைவில் கைது செய்யப் போகிறார்கள். இலங்கை அரசாங்கத்தின் பார்வையில் நான் ஒரு தண்டனைக்குரிய குற்றவாளி. தண்டனையாக, ஐந்து லட்ச இலங்கை ரூபாய்களை தண்டப் பணமாகச் செலுத்த வேண்டும். தவறினால் குறைந்த பட்சம் ஆறு மாதச் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும். என்ன செய்யப் போகிறேன் நான் என்னிடம் நன்றாக வேலை செய்யும் ஒரு கணினி இருக்கிறது. அதில்தான்\t[Read More]\nஅண்ணாவும் மாணவர்-தொழிலாளர் மோதலும்: மேலும் கொஞ்சம் பேசலாம்\nதில்லி ராம் லீலா மைதானத்தில் பாபா ராம் தேவ் கூட்டிய கூட்டத்தை போலீசார் நட்ட நடு நிசியில் வலுக்கட்டாயமாகக் கலைத்தது பற்றிய எனது கட்டுரையில் உண்மையான மக்களாட்சி எவ்வாறு இருக்கும் என்ற எனது கருத்தை விவரிக்கிறபோது அண்ணா அவர்கள் முதல்வராக இருக்கையில் எப்படி நடந்துகொண்டார்கள் என்பதற்கு ஒரு சம்பவத்தை நினைவு கூர்ந்திருந்தேன். 1967-ல் தி.மு.க. ஆட்சிப் பொறுப்பை ஏற்ற சில\t[Read More]\nமகளே கனிமொழி, வருந்துகிறேன், உனக்காக\nசுமார் நான்கு வயதுக் குழந்தையாக இருக்கையில் என் மடி மீது உட்கார்ந்து கொஞ்சி விளையாடியவள் கனிமொழி. நானும் உனக்கு அப்பா மாதிரிதான் என்று சொன்னபோது கன்னங் குழியச் சிரித்து எனது சொல்லை அங்கீகரித்தவள் குழந்தை கனிமொழி. 1972 என்று நினைக்கிறேன். மதியழகன் மிகவும் வற்புறுத்தியதைத் தொடர்ந்து அவர் தம்பி கிருஷ்ணசாமி நடத்திய தென்னகம் நாளிதழ் கட்சிப் பத்திரிகை போல் இல்லாமல்\t[Read More]\nஇறந்து போன எழுத்தாளர்களைப் பற்றிய குறிப்புக்கள் பற்றிச் சில குறிப்புக்கள்\nபி.கே.சிவகுமாரின் ‘அறிவா உள்ளுணர்வா ‘ கட்டுரையில் எழுப்பப் பட்டிருக்கும் விஷயம் —இறந்து போன எழுத்தாளனைப் “போட்டுப்” பார்க்கும் தமிழ்க் குணாதிசயம் —- சில சிந்தனைகளை எழுப்புகிறது. கனிமொழியின் கைது விவகாரத்தில் பெருந்தன்மையுடன் எழுதும் அதே ஜெய மோகனின் பேனாதான் அடுத்த சில நாட்களிலேயே, மறைந்து விட்ட குத்தூசியைக் குத்திக் கிழிக்கிறது. கருணாநிதி பற்றிய\t[Read More]\nDelmore Schwartz தமிழில் : எஸ். ஆல்பர்ட் ஒரு ஏப்ரல்\t[Read More]\nஅ.டெல்பின் கனவுகளுக் கிடையில் என்\t[Read More]\nகிழக்கை மேற்கென்றும் தெற்கை வடக்கென்றும்\t[Read More]\nமொழிவது சுகம் : எப்ரல் 2 – 2018\nஅ. மேற்குலக சினிமா : ‘Still Alice’ திரைப்படங்கள், [Read More]\nஇந்த மாமியார் கொஞ்சம் வித்தியாசமானவர்\nபாபுவின் மனைவி சசிகலா-சசி-\t[Read More]\nஇரவு 2 மணி. நான் தூங்கச் செல்வது எப்போதும்\t[Read More]\nமுதியோர் இல்லத்திற்கு சக்கரவண்டிகள்\t[Read More]\nசு. இராமகோபால் சாதாரணமான அவனுடன் பேச்சு\t[Read More]\nஉலகின் தலை சிறந்த சில ஓரினப்படங்கள் 2 – தி இமிடேசன் கேம்\nஅழகர்சாமி சக்திவேல் திரைப்பட விமர்சனம் – தி\t[Read More]\nவித்யாசாகர் காலம் சில நேரம் இப்படித்தான்\t[Read More]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.manithan.com/astrology/04/157288", "date_download": "2018-04-26T13:35:08Z", "digest": "sha1:MBW4RMTDT4YMHPXOIYROESY5G7DDYSS3", "length": 14924, "nlines": 173, "source_domain": "www.manithan.com", "title": "வீட்டில் வாஸ்து முறைப்படி தென்மேற்கு மூலை‌யி‌ல் வர‌க்கூடியவை - வர‌க் கூடாதவை! - Manithan", "raw_content": "\nவெட்டப்பட்ட மனைவியின் தலையுடன் தெருவில் நடந்து சென்ற கணவன்: அதிர வைக்கும் சம்பவம்\nஇளவரசர் ஹரியின் திருமணத்தில் மணப்பெண் தோழியாகும் உலக அழகி\nஜெயலலிதா வழக்கில் திடீர் திருப்பம்\nஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுலா செல்ல வேண்டுமா விரைவில் வரவிருக்கும் புதிய சட்டம்\nஅஜித்தின் மனைவி ஷாலினியின் பகையாளி யார் தெரியுமா\n பல ஆண்டுகளுக்கு பின் பாத்திமா பாபு விளக்கம்\nஇத்தனை வயதில் பிரபல நடிகை கௌசல்யாவுக்கு கல்யாணமாம்\nசர்வதேச இளம் இளம் விஞ்ஞானிகளுக்கான போட்டியில் இலங்கை 3 தங்கப்பதக்கம்\nமரணத்தின் பிடியிலிருந்து அஜீத்தை மீட்டெடுத்த ஷாலினி கசந்து போன வாழ்வில் உயிர்த்தெழுந்த காதல்\nசிவகார்த்திகேயனால் தொகுப்பாளினி பாவனா அனுபவித்த கொடுமை\nபிள்ளைகள், பெற்றோர்களை கொடூரமாக கொலை செய்த பெண் காரணத்தை கேட்டால் அதிர்ந்து போயிடுவிங்க\nஇந்த 3 ராசியில உங்க ராசி இருக்குதா.. இந்த ஆண்டில் கோடீஸ்வர யோகம் இதற்குத் தானாம்\nமனைவியை நண்பர்களுடன் உறவு வைக்க கட்டாயப்படுத்திய கணவன் - இறுதியில் நடந்ததை பாருங்கள்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\n31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்\nயாழ். சரசாலை, கனடா Toronto\nவீட்டில் வாஸ்து முறைப்படி தென்மேற்கு மூலை‌யி‌ல் வர‌க்கூடியவை - வர‌க் கூடாதவை\nமுன்பொரு காலத்தில் அண்டகாசுரன் என்ற அரக்கன், தன்னை வெற்றிகாண எவரும் இல்லை என்ற மமதையில் சிவபெருமானை போருக்கு அழைத்து போரிட்டான். அப்போது சிவபெருமானுடன் போரிட்ட அசுரனின் நெற்றியில் வழிந்த வியர்வையில் இருந்து ஒரு பூதம் தோன்றியது. மிகவும் கரிய நிறம் கொண்ட அந்த பூதத்திற்கு அகோரப் பசி ஏற்பட்டது. அதனால் கண்ணில் கண்ட அனைத்தையும் விழுங்கியது. கொடிய அசுரன் அண்டகாசுரனின் உடலையும் விழுங்கியது. தீராத பசியில் இருந்த பூதம் தன் பசியை தீர்த்து வைக்குமாறு சிவபெருமானிடம் வேண்டியது. சிவபெருமான் அந்த பூதத்திற்கு அனைத்தையும் உண்ணும் வரத்தை அளித்தார்.\nஇதனால் அந்த பூதத்திற்கு இந்த பூமியையே அளிக்கும் சக்தி உண்டானது. உடனே தேவர்கள் அனைவரும் பிரம்மாவிடம் முறையிட்டனர். பிறகு பிரம்மதேவன் அந்த பூதத்திடம் பூமியில் மக்கள் வீடு கட்டும் போது அவர்கள் படைக்கும் உணவை உண் என்றும், சாஸ்திரப்படி வீடு கட்டவில்லை என்றால் அந்த வீட்டில் வசிப்பவரை வாட்டு என்றும் வரம் அளித்தார். அந்த பூதமே வாஸ்து பகவான் என்றும் வாஸ்துப்படி வீடு கட்டுபவர்களுக்கு நன்மைகளையும், மற்றவர்களுக்கு தீமையையும் அளித்து வருகிறார். வாஸ்து என்றால் வாழும் இடம் என்று பொருள். மிகச்சரியான வாஸ்து உள்ள வீட்டில் பிரச்சனைகள் இருக்காது. நிம்மதி மகிழ்ச்சி பெருகும்.\n“வாஸ்து” என்ற சொல் கட்டிடமொன்று கட்டப்பட்டுள்ள அல்லது கட்டப்படவுள்ள நிலத்தைக் குறிக்கும். “வாஸ்து சாஸ்திரம்” என்பது, ஒரு நிலத்தில் கட்டிடம் கட்டுவதற்குரிய முறைகளையும், அதன் தத்துவங்களையும் விளக்கும் ஒரு வேதம் சார்ந்த அறிவுத்துறையாகும்.\nவாஸ்து சாஸ்திரப்படி, தென்மேற்கு மூலையில் வர‌க் கூடியவை - வர‌க் கூடாதவை பற்றி இங்கு பார்ப்போம்.\nதென்மேற்கு மூலையில் வரக் கூடியவை:\nகுடும்ப‌த் தலைவன் / தலைவி படுக்கையறை\nமேல்நிலை தண்ணீர்த் தொட்டி (Over Head Tank)\nபொருட்கள் சேமிக்கும் அறை (Store room)\nபணப் பெட்டி வைக்கும் அறை\nதென்மேற்கு மூலையில் வரக் கூடாதவை (உள் மற்றும் வெளி மூலைகள்):\nபள்ளம் / கிணறு / ஆழ்துளைக் கிணறு\nவெளிமூலை மூடப்பட்டு, தூண்கள் போட்ட படிக்கட்டு.\nஇதன் அடிப்படையில் உங்கள் வீடு அமைந்தால், அது உங்களுக்கு நன்மை விளைவிக்கும்.\nஉடல் எடையை மிக வேகமாக குறைக்க இந்த ஒரு பொருள் போதும்\nசோகத்தில் இருந்த நடிகர் வடிவேலுவிற்கு அடுத்தடுத்து அடித்த அதிஷ்டம்\nமனைவியை நண்பர்களுடன் உறவு வைக்க கட்டாயப்படுத்திய கணவன் - இறுதியில் நடந்ததை பாருங்கள்\nஐ.தே.க. செயற்குழு கூட்டத்தில் சிக்கல்\nசட்ட விரோதமாக மண் அகழும் இடங்களைப் பார்வையிட்டார் மன்னார் நகர முதல்வர்\nமத்திய வங்கியின் அறிக்கை நிதியமைச்சரிடம் கையளிப்பு\nதொழிலாளர் தினத்தை மே முதலாம் திகதி கொண்டாடவுள்ளது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு\nபள்ளிமுனை கடற்கரையில் உள்ள மீன் வாடிகளில் இருந்து கைப்பற்றப்பட்ட ஒரு தொகை மீன்கள்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா் விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.megatamil.in/astrology/who-will-have-good-speaking-ability/", "date_download": "2018-04-26T13:28:05Z", "digest": "sha1:QLUUKOOITSW24RIT4AJ7Z3OJJM7DVQLP", "length": 7810, "nlines": 56, "source_domain": "www.megatamil.in", "title": "பேச்சுத் திறன் Tamil Astrology", "raw_content": "\nபேச்சுத் திறன் – நேருக்கு நேர் இனிமையாக பேசி விட்டு பின்னர் போக விட்டு புறம் பேசும் மனிதர்களிடம் பழகாமல் தவிர்த்து விடுவது நல்லது. அத்தகைய மனிதர்களோடு நட்பு கொள்வது பசும்பாலில் கடும் விஷத்தை கலப்பதற்கு ஒப்பாகும். ஒருவருக்கு சமுதாயத்தில் நல்ல பெயர் இருக்க வேண்டும் என்றால் பேச்சு சாதுர்யமும் நாக்கு சுத்தமும் இருக்க வேண்டும். உடலில் நரம்பில்லாதது நாக்கு. அதை எப்படி வேண்டுமானாலும் சுழல விடாமல் சிந்தித்து பேசுவது சிறப்பு. வசீகரமான பேச்சுத் திறனும், நல்ல நகைச்சுவை உணர்வும் கொண்டவர்களை அனைவரும் விரும்புவார்கள்.\nமாற்றி மாற்றி பேசுவது தான் என்ற அகங்காரத்தில் பேசுவது, தன்னை மட்டும் உயர்த்தி பேசுவது, பிறரை கேலி கிண்டல் செய்வது பேசுவது, புறம் பேசுவது போன்றவற்றால் மற்றவர்களின் மனம் புண்படுவதுடன் இப்படி பேசுபவர்களிடம் பேசுவதை விட சும்மா இருக்கலாம் என ஒதுங்கி கொள்வார்கள். சிலர் வாயை திறந்தாலே பேச்சுக்கள் அனைத்தும் அபசகுணமாகவே இருக்கும். இவர்களுக்கும் சமுதாயத்தில் மதிப்பிருக்காது.\nநரம்பில்லாத நாக்கு ஏன் இப்படி சுழன்று கொண்டிருக்கிறது என்று ஜோதிட ரீதியாக ஆராய்ந்தால் ஜென்ம லக்னத்திற்கு 2ஆம் வீடான வாக்கு ஸ்தானமே காரணமாக இருக்கும்.\nவாக்கு ஸ்தானமான 2ஆம் வீடு பலம் பெற்று 2ஆம் அதிபதியும் ஆட்சி உச்சம் பெற்று, பேச்சுக்கு காரகனான புதன் பகவானும் பலம் பெற்று ஒருவர் ஜாதகத்தில் இருக்குமேயானாலும் அவருக்கு வாக்கால் பேச்சால் வாழ்வில் உயரக் கூடிய அமைப்பு கொடுக்கும். பொன்னவன் என போற்றப்படக்கூடிய குரு பகவானின் பார்வையும் 2ஆம் வீட்டிற்கும், 2ஆம் வீட்டின் அதிபதிக்கும், புதனுக்கும் இருந்தாலும் அவருடைய பேச்சும் ராசிக்கும் படியாக இருக்கும். பலருக்கு அறிவுரை வழங்கும் ஆற்றல், கல்வி போதிக்கும் திறன் யாவும் சிறப்பாக அமையும். தன்னுடைய பேச்சாற்றலால் அனைவரையும் கவர்ந்து விடுவார். தன்னுடைய பேச்சிற்கு எங்கு சென்றாலும் மதிப்பும் மரியாதையும் உயரக்கூடிய அளவிற்கு வாக்கு வன்மையை உண்டாக்கி கொள்வார்.\nஅதுவே 2ஆம் அதிபதியும் புதனும் 6ஆம் அதிபதியின் சேர்க்கை பெற்று பாவ கிரகங்களின் பார்வை பெற்றாலும், குரு பகவான் 6ஆம் அதிபதியின் சேர்க்கைப் பெற்று ஜென்ம லக்னத்தில் அமைந்து 2ஆம் அதிபதி வலுவிழந்திருந்தாலும், புதன் 2ஆம் அதிபதியின் சேர்க்கை பெற்று 6,8,12ல் அமையப் பெற்றாலும் கடகம், விருச்சிகம், மீனத்தில் அமைந்து சந்திரனின் பார்வை பெற்றாலும் சனியின் வீடான மகரம், கும்பத்தில் அமைந்து சனிப் பார்வை பெற்றாலும் நாக்கு சுத்தமோ, வாக்கு சாதுர்யமோ இருக்காது. எந்த இடத்தில் எதை பேச வேண்டுமோ அதை விடுத்து சம்மந்தமே இல்லாமல் பேசி கேலிக்குரியவராவார். 2ல் பாவிகள் அமையப் பெற்று அதன் தசா புத்திகள் வரும் காலங்களில் வீண் சண்டை சச்சரவு, தகராறு, வாக்கு வாதங்கள் போன்றவை உண்டாகும். 2ல் சனி அல்லது ராகு அமைந்து சுபர் பார்வையில்லாமல் இருந்தாலும் மேற்கூறிய அசுப பலன்களே ஏற்படும். இப்படி பேசுபவர்களை பார்த்தால் அவன் நாக்கில் சனி எனக் கூறி அனைவரும் ஒதுங்கி கொள்வார்கள்.\nமுனைவர் முருகு பால முருகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://saranagadi.blogspot.com/2010/08/foolish-ass.html", "date_download": "2018-04-26T13:29:40Z", "digest": "sha1:JWTCPXQJBO3ZIQK22NV6DIGRYZPBTXQU", "length": 5385, "nlines": 56, "source_domain": "saranagadi.blogspot.com", "title": "Hare Guruvayurappa: Foolish Ass", "raw_content": "\nநகரத்தின் ஒரு கோடியில் ஒரு வண்ணான் இருந்தான். அவன் ஒரு கழுதையை வைத்துக்கொண்டு நகரவாசிகளின் துணிகளை வெளுக்க வாங்கி வந்து வெளுத்து சலவை செய்து கொடுத்து வந்தான்.கழுதையும் அவனிடம் பல காலம் வேலை செய்து வந்தது. அதற்கும் வயதாகிகொண்டே போனது. இனிமேல் அது தனக்கு உதாவாது என்று உணர்ந்த வண்ணான் அந்த கழுதையை வெளியேற்ற முடிவு செய்தான்.\nஅந்த கழுதையை புலி தோலால் சுற்றி அதை அருலில் உள்ள காட்டு பகுதிக்கு சென்று ஒரு வயலில் விட்டு விட்டு வந்துவிட்டான். கழுதையும் அந்த வயல் செழிப்பாக இருப்பதை கண்டு ஆனந்தம் அடைந்து அதில் மேய ஆரம்பித்தது. அதற்கு தீனி நிறைய கிடைத்ததால் அந்த இடத்தையே தன்னுடைய வாசஸ்தலாமாக ஏற்படுத்திகொண்டது. தன்னுடைய இந்த புதிய வாழ்க்கையை-வேலை செய்யாமல் எப்போது வேண்டுமானாலும் சாப்பிட்டுவிட்டு தூங்கி கொண்டு காலத்தை ஓட்டிக்கொண்டிருந்தது.\nஅதனுடைய புலி தோலை கண்டு பயந்து அந்த வயலின் சொந்தக்காரன் ஓடிவிட்டான். கழுதையும் பயமில்லாமல் மேய தொடங்கியது. கொஞ்ச நாளில் அது கொழு கொழுவென்றாகி பழைய பலத்தையும் பெற்றது.\nபயிர்கள் நன்றாக விளைந்து அறுவடைகாலம் வந்தது. இப்போது அந்த வயலின் சொந்தக்காரன் ஒரு கருப்பு போர்வையை போத்திக்கொண்டு கையில் ஒரு துப்பாக்கியுடன் வயலுக்கு வந்தான். அவன் குனிந்து குளிருக்காக நெருப்பை மூட்ட முனைந்தான். அவன் அப்படி குனிந்தபோது அது இன்னொரு கழுதைபோல வயலில் உள்ள கழுதைக்கு தோற்றமளித்தது. இதைகண்டு ஆனந்தம் அடைந்த கழுதை அந்த சொந்தக்காரனை நோக்கி கத்திகொண்டு ( கறைத்துக்கொண்டு ) ஓடி வந்தது.\nஅவன் கழுதை குரலை கேட்டு இது புலி இல்லை-கழுதை என்று தெரிந்துகொண்டு தன் துப்பாக்கியால் அதை சுட்டான். கழுதையும் தன் உயிரை விட்டது.\nஎன்ன தான் தன் சுய உருவத்தை மாற்றிக்கொண்டாலும் ஏதோ ஒன்று நம்\nசுய உருவத்தை காட்டிக்கொடுத்துவிடும். நாம் நாமாக இருக்கவேண்டும்.\nஅரங்ககனை அநுபவித்தவர்கள்ஆழ்வாரும், பட்டரும் கலியுக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=20415&Cat=3", "date_download": "2018-04-26T13:10:28Z", "digest": "sha1:NGDNUXX4YYNFQOKBRVLLUEGQNVO3572G", "length": 8828, "nlines": 77, "source_domain": "www.dinakaran.com", "title": "அம்பையில் தங்கம்மன் கோயில் கொடை விழா | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > களஞ்சியம்\nஅம்பையில் தங்கம்மன் கோயில் கொடை விழா\nஅம்பை: அம்பா சமுத்திரம் தங்கம்மன் கோயில் கொடை விழாவில் முளைப்பாரி, தீர்த்த குடம் ஊர்வலம் நடந்தது. மேல அம்பாசமுத்திரம் தங்கம்மன், தளவாய் சுவாமி கொடை விழா கடந்த மாதம் 25ம் தேதி கால் நாட்டுதலுடன் துவங்கியது. இதையொட்டி முளைப்பாரி மற்றும் பால்குடம் எடுக்கும் பக்தர்கள் காப்பு கட்டி விரதம் துவங்கினர். திருவிழா நாட்களில் தினமும் சுவாமி, அம்பாள், சுவாமிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. மார்ச் 30ம் தேதி இரவு மாக்காப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. மறுநாள் மாலை 5 மணிக்கு காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலில் இருந்து புனிதநீர் எடுத்து வரப்பட்டு கும்ப பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தன. இரவு பூந்தட்டு ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக கோயிலை வந்தடைந்ததும் புஷ்பாஞ்சலி, முழு காப்பு தீபாராதனை நடந்தது.\nகடந்த 1ம் தேதி காலை 8 மணிக்கு தாமிரபரணி நதிக்கரை நட்டாத்தியம்மன் கோயில் படித்துறையிலிருந்து பால்குடம், கிரககுட ஊர்வலம் நடந்தது. மதியம் 1 மணிக்கு கொடை விழாவில் அலங்கார தீபாராதனை நடந்தது. மாலை பொங்கலிடுதலும், இரவு 9.30 மணிக்கு தீர்த்தகுடம் வீதியுலாவும் நள்ளிரவு சாமக்கொடை, படைப்பு, சிறப்பு தீபாராதனை நடந்தது. இதையொட்டி வில்லிசை, நையாண்டி மேளம், வாண வேடிக்கை நடந்தது. விழாவில் திரளானோர் பங்கேற்றனர். இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் முளைப்பாரி ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு தாமிரபரணி ஆற்றில் விடப்பட்டது. ஏற்பாடுகளை சேனைத்தலைவர் சமுதாய கொடை விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.\nவரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nஆனந்த காமாட்சியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா\nசிறுகடம்பூர் செல்லியம்மன் கோயிலில் சித்திரை தேர் திருவிழா\nநடராஜர் கோயிலில் பக்தர்கள் தரிசனம்\nகல்லாலங்குடி முத்துமாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல்\nமணலூர் மாரியம்மன் கோயில் தேரோட்டம்\nதம்மத்துக்கோணம் சிவ சுடலைமாட சுவாமி கோயில் கொடை விழா\nஎய்ம்ஸ் அமைவதில் என்ன சிக்கல் இயற்கையிடம் இருக்கிறது எல்லாவற்றுக்குமான தீர்வு\nசென்னையில் நடைபெற்ற இடைநிலை ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம் வாபஸ்..\nஇந்தோனேஷியாவில் எண்ணெய் கிணற்றில் தீ : 21 பேர் பரிதாப பலி\nஹவாய் தீவு அருகே உள்ள எரிமலையில் சீற்றம்...ஆறாக ஓடும் எரிமலைக் குழம்பு\nபெர்லிங்கில் சர்வதேச ஏரோஸ்பேஸ் கண்காட்சி : பல்வேறு நாடுகளின் புதுமையான கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன\nஉத்தரப்பிரதேச மாநிலம் குஷிநகரில் பள்ளிப்பேருந்து மீது ரயில் மோதிய விபத்தில் 11 மாணவர்கள் உயிரிழப்பு\nஉ.பி.யில் விபத்தில் பலியான குழந்தைகள் படித்த பள்ளி முதல்வர் கைது\nகோவையில் பல இடங்களில் சூறைக்காற்றுடன் பலத்த மழை\nபேராசிரியை நிர்மலாதேவியிடம் விசாரணை நிறைவு\nகொடைக்கானலில் மே 19ல் மலர் கண்காட்சியுடன் கோடை விழா : ஆட்சியர் வினய்\nமாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி சீனா பயணம்\n2019 பாராளுமன்ற தேர்தல் வரை காவிரி மேலாண்மை வாரியம் அமையாது: டி.டி.வி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/galleries/photo-news/2017/nov/03/chennai-floods-and-ther-aftermath-happenings-10949.html", "date_download": "2018-04-26T13:00:06Z", "digest": "sha1:7OHNIY6SV6KVQRSQKO75YAV3Z3CDEN6N", "length": 5274, "nlines": 102, "source_domain": "www.dinamani.com", "title": "வெள்ளக்காடானது சென்னை- Dinamani", "raw_content": "\nசென்னையில் வியாழக்கிழமை மாலை தொடங்கி வெள்ளிக்கிழமை காலை வரை விடிய விடிய தொடர்ந்து மழை பெய்தது. இதனால் நகரின் பெரும்பாலான இடங்களில் மழை நீர் தேங்கி பல இடங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. மேலும் சென்னை மெரீனா கடற்கரை சாலையில் நேப்பியர் பாலம் முதல் விவேகானந்தர் இல்லம் வரை சாலையின் இருபுறமும் மழை நீர் வெள்ளம் போன்று தேங்கியுள்ளது. கனமழை காரணமாக, இயக்கப்படும் பேருந்துகளின் அளவு பாதியாகக் குறைக்கப்பட்டதால் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.\nவிடிய விடிய தொடர் மழை வெள்ளம்\nஸ்டண்ட் மாஸ்டர் மகன் திருமண ஆல்பம்\nநாயகி இஷாரா நாயர் - சாஹில் திருமணம்\nசச்சின் பிறந்த நாள் ரசிகர்கள் வாழ்த்து\nசஞ்சு படத்தின் டீஸர் வெளியீடு\nரயில் மோதி 11 மாணவர்கள் பலி\nஜெயகாந்தன் 84ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா\nதலையில் காயம் ஆனால் காலில் ஆபரேசன்\nஇளவரசர் தம்பதியருக்கு 3வது குழந்தை பிறந்தது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://techulagam.com/category/microsoft/office-2013", "date_download": "2018-04-26T13:06:04Z", "digest": "sha1:KSOGYURZODAKMMUYOYXPFV7S5V2LUWUA", "length": 4430, "nlines": 124, "source_domain": "techulagam.com", "title": "Office 2013 Archives - TechUlagam.com", "raw_content": "\nDoodle ஆல் வண்ணமயமாக மாறிய Google\nTwitter ட்ரீட்டாக வெளிவரும் புதிய Bookmark வசதி\nபிரமாண்டமான அளவில் உருவாகவுள்ள புதிய ஐபோன்: வியந்து பார்க்கும் சாம்சங்\nஇன்ஸ்டாகிராம் சுயவிவரத்தைப் பாதுகாப்பாக வைக்கும் வழிமுறைகள்\nதமிழில் தட்டச்சு செய்வது எப்படி.\nஇரட்டை பின்புற கேமராக்கள் கொண்ட கேலக்ஸி எஸ்8 சிறப்பு மாறுபாடு.\nபிரமாண்டமான அளவில் உருவாகவுள்ள புதிய ஐபோன்: வியந்து பார்க்கும் சாம்சங்\nபில் கேட்ஸ் பெண்களை சந்திக்க அவர்களின் பள்ளி கணணிகளை ஹேக் செய்தார்\nDoodle ஆல் வண்ணமயமாக மாறிய Google\nTwitter ட்ரீட்டாக வெளிவரும் புதிய Bookmark வசதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} {"url": "http://mypno.blogspot.com/2013/07/blog-post_9901.html", "date_download": "2018-04-26T13:30:37Z", "digest": "sha1:JA7DHYR4MQLHUUPZ2DEXTP6A3CJFBOY6", "length": 43535, "nlines": 851, "source_domain": "mypno.blogspot.com", "title": "ஜமாஅத்தின் வரதட்சனை ஒழிப்பு நடவடிக்கை நாட்டுக்கே முன்மாதிரியான விசயம்: வாசு சிதம்பரம் | பரங்கிப்பேட்டை தகவல் களஞ்சியம்", "raw_content": "\nஜமாஅத்தின் வரதட்சனை ஒழிப்பு நடவடிக்கை நாட்டுக்கே முன்மாதிரியான விசயம்: வாசு சிதம்பரம்\nby: M.Gee.ஃபக்ருத்தீன் ஞாயிறு, 21 ஜூலை, 2013\nசவூதி அரேபியா கிழக்கு மாகாணம் பரங்கிப்பேட்டை வாழ் சகோதரர்களுக்கு மத்தியிலும் நிதாகத் சட்டத்தினால் பாதிக்கப்பட்ட எண்ணற்ற தமிழ் நெஞ்சங்களிலும் நினைவு கொண்டிருக்கும் சமூக ஆர்வலரான வாசு சிதம்பரம், டான்பா எனும் சமூகநல அமைப்பின் சமூகநல செயலாளராக உள்ளார். தனது ஊர் பெயரையே தனது பெயரில் பாதியாக கொண்டிருக்கும் இவர் பரங்கிப்பேட்டையின் மருமகன். பரங்கிப்பேட்டை பாலன் (அச்சகம்) மகளை மணம் கொண்டிருக்கும் இவர் சமீப காலமாய் தனது சமூக சேவைகளை பரங்கிப்பேட்டை மக்களோடு இணைந்தும் செயலாற்றிக் கொண்டிருக்கிறார்.\nகல்வி, வெளிநாட்டுவாழ் இந்தியர் நலம் முல் நிதாகத் சட்டத்தில் சிக்கியவர்களை மீட்டெடுப்பது வரை பல்வேறு நலச் சேவைகளை ஆற்றிவரும் இவரை MYPNO சந்தித்து பேட்டி கண்டுள்ளது. இனி பேட்டியிளிருந்து....\nடான்பா (Tamilnadu NRI & Parents Association) என்கிற சமூகநல அமைப்பு கடந்த 15 ஆண்டுகளாக இங்கு (சவூதி அரேபியா கிழக்கு பிராந்தியத்தில்) செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. நான் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக இதில் என்னை இணைத்துக் கொண்டு பல்வேறு சமூகநலப் பணியினை மேற்கொண்டு வருகிறேன். இதில் தமிழ் சமுதாய மக்களுக்காக தலைவர் பாலமுரளி அவர்களின் வழிகாட்டலோடு பல்வேறு உதவிகளை டான்பா மூலம் செய்து வருகிறோம். இதில் மிக முக்கியமாக பன்னாட்டு இந்திய பள்ளியின் நிர்வாகக்குழு தேர்தலின்போது, பள்ளியின் நிர்வாகக் குழு தலைவராக தமிழரான கே.எம். திருநாவுக்கரசு அவர்களை தேர்தலில் வெற்றிப் பெறச் செய்தோம். இவை தவிர டான்பா அமைப்பு இங்குள்ள பல்வேறு தமிழ்நாட்டை சார்ந்த பல்வேறு அமைப்புகள் மற்றும் சங்களை ஒருங்கிணைத்து பல பொதுநல உதவிகளை தொடர்ந்து செய்து வருகின்றோம்.\nடான்பாவில் உங்களது பங்களிப்பு என்ன\nடான்பா அமைப்பில் நான் சமூகநல செயலாளராக கடந்த 3 ஆண்டுகளாய் அமைப்பின் அனைத்து சமூக சேவை பணிகளை செய்து வருகிறேன். நான் இங்கு 20 ஆண்டுகளாக பணியில் (தொழிலில்) இருந்து வந்தாலும் 5 ஆண்டுகளுக்கு முன்பு சகோதரர் \" நாஸ் வொக்கம்\" மூலமாக சமூக சேவைகளில் ஈடுபடும் நல்ல வாய்ப்பு கிடைத்தது. அதன் தொடர்ச்சியாக டான்பா அமைப்பில் இணைந்து தமிழ் சமூக மக்களுக்கு மட்டுமின்றி தென்னிந்திய மக்களுக்கும் பள்ளி, கல்வி, மருத்துவம், மற்றும் வெளிநாட்டுவாழ் இந்தியர் நலம் குறித்து பல்வேறு சேவைகளை செய்து வருகின்றேன். தர்ஹீலுடன் எங்கள் பணிகள் முடிந்துவிடவில்லை. இங்கே இறப்பெய்கின்ற இந்தியர்களின் உடலை அவர்களின் குடும்பத்தினர் விருப்பத்திற்கேற்ப இங்கேயே அடக்கம் செய்யவோ அல்லது உடலை தாயகத்திற்கு அனுப்பவோ ஏற்பாடு செய்கின்றோம். சவூதி சிறைகள், பெண்கள் காப்பகத்தில் உள்ளவர்களுக்கு அவர்கிளன் தேவைகளை முடித்துத் தருகிறோம். பயணச்சீட்டு இல்லாமல் தவிப்பவாகளுக்கு இங்குள்ள சமுக மற்றும் சமுதாய அமைப்புகளைச் சந்தித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு பொருளாதார உதவிகளை வழங்கி வருகின்றோம்.\nயார் இந்த \"நாஸ் வொக்கம்\"\nஇவர் கேரள மாநிலத்தை சேர்ந்த முஸ்லிம் சகோதரர். சுமார் 17 ஆயிரம் உறுப்பினர்களை கொண்ட நவோதயா என்கிற அமைப்பில் சிறப்புநிலை உறுப்பினராக (Executive Member)ஆக உள்ளார். இவர் அறிவிக்கப்படாத இந்திய தூதரகத்தின் ஒரு முகவர் என்று சொன்னால் அது மிகையாகாது. அவர் செய்த செய்து வரும் சேவைகளினால் ஈர்க்கப்பட்டதின் விளைவுதான் இன்று டான்பாவில் எனது பங்களிப்பு.\nதமிழ் அமைப்புகளை ஒன்றினைக்கும் டான்பாவின் சாதனையாக எதை கருதுகிறீர்கள்\nசவூதி அரசின் நிகாதத் சட்டத்தில் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டு சகோதரர்கள் நலம் உள்ளிட்ட எத்தனையோ சேவைகளை நாங்கள் தொடர்ந்து செய்து வந்தாலும், முன்பே நான் சொன்னது போன்று, 17000-க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள், 700 ஆசிரியர்களை அடக்கிய பன்னாட்டு இந்திய பள்ளியில் நடைப்பெற்ற நிர்வாக தேர்தலின் போது ஒரு தமிழரை முன்னிறுத்தி அவரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெறசெய்தோம். இதில் நிர்வாகக் குழு தலைவராக (chairperson) தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழர் கே.எம். திருநாவுக்கரசு தனது பதவிக்காலத்தை பூர்த்தி செய்துவிட்டு, அவரது செம்மையான பணியினால் மீண்டும் இரண்டாவது முறையும் அவரே தொடர்கின்றார். நிச்சயமாக இது டான்பாவின் சாதனை என்றே சொல்லலாம்.\nஅப்படியென்றால் இந்திய தூதரக அலுவலகத்துடன் டான்பா அமைப்பிற்கு நல்ல உறவு இருக்கிறதா\nகண்டிப்பாக இருக்கிறது. நாங்கள் மேற்கொள்ளும் சமூகநல உதவிகளினால் எங்களுக்கு இங்குள்ள அரசு அலுவலகங்களில் நல்ல மரியாதையும் இணக்கமும் உள்ளது. எனவேதான், வாரமொருமுறை ரியாத்திலிருந்து வரும் தூதர அதிகாரிகள் கூட எங்களுடன் இணைந்துதான் இங்குள்ள அரசு தொடர்பான காரியங்களில் ஈடுபடுகின்றனர். எங்களது பணிகளை அவர்கள் அறிந்திருப்பதால் தான், அதற்கான அங்கீகார கடிதங்களை (Letter of Authorization) எங்களுக்கு வழங்கியுள்ளனர்.\nடான்பாவுடன் இணைந்து செயல்படும் எத்துனையோ அமைப்புகள் இருந்தாலும் பரங்கிப்பேட்டடை - கிழக்கு மாகாணம் அமைப்புடன் ஒரு நல்லுறவு மேற்கொள்வதில் அதனைப் பற்றிய தங்களது கருத்து\nகடந்த3-4 ஆண்டுகளாய் இந்த அமைப்பை பற்றி நான் அறிந்திருந்தாலும் எனக்கு எவ்வித தொடர்பும் இவர்களுடன் இருந்ததில்லை. இது எனக்கு மிகவும் ஆதங்கமாகவே இருந்து வந்தது. எத்தனையோ நல்ல விசயங்களை நாம் செய்து வருகிறோம். ஆனால் நமதூர் அமைப்பான இந்த பரங்கிப்பேட்டை வாழ் சவூதி-கிழக்கு மாகாண முஸ்லிம் அமைப்பிற்கு டான்பாவின் சேவைகள் சரிவர போய்ச் சேரவில்லையே என்று அடிக்கடி நினைப்பதுண்டு. தமிழ் சமூகத்திற்கென்று ஒரு மீடியா இல்லாததினால் டான்பாவின் செயல்பாடுகள் இன்னும் முழுமையாக சென்றடயவில்லையே என்று நினனத்த சமயத்தில் தான், நமது பேரூராட்சித் தலைவர் முனைவர் முஹம்மது யூனுஸ் தம்மாமிற்கு வருகை தந்தார். அதுசமயம் சமூக சேவகர் நாஸ் வக்கமுடன் சென்று விமான நிலையத்திற்கு சென்ற போதுதான் கிழக்கு மாகாண சங்க நிர்வாகிகளான வஜ்ஹுத்தீன், அன்ஸாரி, காஜா முயினுத்தீன், கலிமுல்லா, நஜீர் உபைதுல்லா, ரஹமத்துல்லா போன்றோர்கள் எனக்கு அறிமுகமானார்கள். இந்த வரவேற்பும் அதனை தொடர்ந்து நடந்தேறிய நிகழ்ச்சிகள் தங்களின் வலைத்தளம் (MYPNO) வழியாக செய்திகளானபோது எங்கள் அமைப்பை இன்னும் சென்றடைய செய்தது. அதற்காக முனைவர் யூனுஸ் அவர்களுக்கும் தங்களுக்கும் (MYPNO) நான் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.\nபிறகு, அல்கோபார் நகர மேயருடன் நடந்தேறிய சந்திப்பின் போது சகோதரர் நவ்ஸாத் எனக்கு அறிமுகமானார். இவ்வாறு எனக்கு இந்த பரங்கிப்பேட்டை கிழக்கு மாகாண சங்க நிர்வாகிகளுடன் நல்லுறவு ஏற்பட்டது. அதன்பிறகு இவர்கள் அனைவரும் எங்களுக்கு எல்லாவகையிலும் நல்ல ஒத்துழைப்பை தந்து வருகின்றனர். சமீபத்தில்கூட இவர்களுடன் இணைந்துதான் தர்ஹீல் அலுவலகத்தில் நாட்கணக்கில் நின்று கொண்டிருக்கும் மக்களுக்கு தண்ணீர், பிஸ்கட் கொடுத்தோம். எங்களுக்கு இவர்கள் எல்லாவகையிலும் நல்ல ஒத்துழைப்பை நல்கி வருகின்றார்கள்.\nமலையாளிகளுக்கு என்று சவூதி அரேபியாவில் கிட்டதட்ட 5 ஊடகங்கள் செயல்பட்டு வரும் நிலையில், நீங்களே ஆதங்கப்படும் தமிழ் சமூகத்திற்கு ஒரு ஊடகத்தை இங்கு கொண்டுவர உங்கள் அமைப்பு ஏன் முயற்சிக்கவில்லை\nஇதுபற்றி எல்லாக் கூட்டங்களில் தொடர்ந்து ஆலோசனை செய்து கொண்டுதான் இருக்கிறோம். ஒரு தமிழ் ஊடகத்தை இங்கு நிறுவுவது என்பது எங்களின் குறைந்தபட்ச திட்டத்திலேயே உள்ளது. வேலைப்பளு காரணமாக அது தள்ளிப்போய் கொண்டிருக்கின்றது. குறைந்தபட்டசமாக முதலில் ஒரு செய்தி வலைத்தளத்தையாவது உருவாக்க வேண்டும் என்றும், அதற்கு தங்களின் MYPNO தளத்தினைக்கூட எங்களது நிர்வாகிகளிடம் முன்னுதாரணமாக கூறியிருக்கிறேன். எனவே, கூடியவிரைவில் அதற்கான முழுமுயற்சியில் நாங்கள் ஈடுபடுவோம்.\nஇங்கு எத்துனையோ தமிழ் அமைப்புகள் செயல்படுகிறது. பொதுவான விசயங்களில் அவை ஒருங்கிணைந்து செயல்படுகின்றனவா\nஇங்கு ஊர் நல அமைப்புகள், முஸ்லிம் அமைப்புகள், சமூக-சமுதாய மற்றும் பண்பாட்டு அமைப்புகள் என்று எத்தனையோ செயல்பட்டாலும், பொது விசயங்களில் எங்களிடம் ஒருங்கிணைந்துதான் செயல்படுகின்றன. இதில் பாரபட்சம் பாராமல் எல்லோரும் ஒத்துழைப்பை எங்களுக்கு தருகின்றனர்.\nடான்பாவின் சிறப்புமிகு பணியாக சவூதி நிகாதத் சட்டத்தில் பாதிக்கப்ட்டுள்ள இந்தியர்களுக்கு உதவிகளை செய்து வருகிறீர்கள். இதில் தமிழர்களுக்கு என்று தனிப்பட்ட முன்னுரிமையை தருகின்றீர்களா\nதமிழர்களுக்கு தனிகவனம் செலுத்தி அவர்களுக்கு இயன்ற உதவிகளை செய்து வருகின்றோம். சவூதி கிழக்கு பிராந்தியத்தில் கிடைக்கப்பெற்ற 8000 விண்ணப்பங்களில் சுமார் 1500 விண்ணப்பங்கள் தமிழர்களுடையது. இதில் சுமார் 300 பேர்கள் இங்கிருந்து நல்ல முறையில் வெளியேறிவிட்டார்கள். மீதமுள்ளவர்களுக்கு கைரேகை பணிகள் முடிவடைந்து விசா அடிக்கும் பணி நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது. இது சம்மந்தமாக நாங்கள் காலை 8 மணிக்கு சென்று இரவு 10 மணிக்குத்தான் திரும்புகிறோம்.\nதற்போது நிகாதத் விசயத்தில் சவூதி அரசு 4 மாத கால அவகாசம் அளித்துள்ளது. இந்த காலக்கெடுவுக்குள் இதில் பாதிக்கப்ட்ட அனைவரும் முறையாக வெளியேறிவிடுவார்களா அல்லது விசாவினை முறைப்படுத்திக் கொள்வார்களா\nஇதை செய்தே ஆகனும் இல்லையெனில் இதன் பின்விளைவுகளினால் சட்டங்கள் இன்னும் கடுமையாக்கப்படலாம். எனவே இந்த காலக்கெடுவை இதில் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். முதல் காலக்கெடுவுக்கு முன்பு நடந்த ரெய்டின்போது நிறையபேர் பிடிபட்டு சிறையில் அடைப்பட்டனர். அப்போது சிலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு ஒரு சில மரணங்கள் கூட நிகழ்ந்தன. அதில் ஒரு மலையாளி உட்பட மூவருக்கு நான் தனிப்பட்ட வகையில் ஜாமீன் எடுத்திருந்தேன். எனவே காலக்கெடுவுக்கு பிறகு சட்டங்கள் கடுமையாக்கப்படுவதுற்கு முன்னரே இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த விசயத்தில் இரண்டாவது முறையாக கால அவசகாசம் கொடுத்துள்ள சவூதி மன்னருக்கு நாம் நன்றி கூற கடமைபட்டுள்ளோம். அதேபோன்று, நம் இந்திய தூதர் ஹமீத் அலி ராவ், துணை தூதர் சிபிராஜ் ஆகியோருக்கும் நன்றி சொல்ல கடமைபட்டுள்ளோம். ஏனெனில், நிகாதத் குறித்து சவூதி அரசிடம் முதன் முதலில் பேச்சுவார்த்தை நடத்தியது நம் இந்திய அரசுதான்.\nகஃபாலத் என்று சொல்லப்படும் இது போன்ற விசாவில் இனி வருபவர்களுக்கு தங்களின் அறிவுரை என்ன\nகஃபாலத் என்று ஒரு விசாவே முதலில் கிடையாது. இங்குள்ள சில அரபியர்களிடம் (கஃபில்) பணம் கொடுத்து முறையற்ற வகையில் பெறப்படும் இந்த விசா ஆபத்தானது. எனவே, முறையான விசாக்களில் மட்டுமே வரவேண்டும். புதிதாக வேலைக்கு வருபவர்கள் சரியான விழிப்புணர்வுடன் செயல்பட்டால் அவர்களுக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை.\nதங்களுக்கு தெரிந்த வகையில் பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் பற்றி..\nநான் பரங்கிப்பேட்டையின் மருமகன் என்பதினால் ஏற்கனவே இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் பற்றி நிறைய கேள்விப்பட்டுள்ளேன். ஒரு கட்டுக்கோப்பான அமைப்பாக இருந்து பிற சமுதாய மக்களுக்கும் சேர்த்து அவசரகால உதவிகள் மற்றும் கல்விநிதி உதவிகள் செய்து வருவதை அறிந்திருக்கிறேன். நமது முனைவர் முஹம்மது யூனுஸ் அவர்கள் தம்மாம் வருகைக்கு பிறகு ஜமாஅத் பற்றி இன்னும் பல அறிந்திடாத சேவைகளை தெரிந்துக் கொண்டேன். அதில் குறிப்பாக வரதட்சனை ஒழிப்பு தீர்மானம் நிறைவேற்றி ஊரில் முஸ்லிம் சமுதாயத்தில் வரதட்சனையை ஒழித்தது மிகவும் பாரட்டத்தக்கது. இதை மற்ற முஸ்லிம் அமைப்புகளும் முஸ்லிம் அல்லாத அமைப்புகளும் பின்பற்ற வேண்டும். இது நமது நாட்டுக்கு பயன் விளைவிக்கும் முன்மாதிரியான விசயம்.\n@ ஞாயிறு, ஜூலை 21, 2013\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமின் வாரியம் - 253786\nதுணை மின்நிலையம் - 247220\nபஞ்சாயத்து யூனியன் - 243227\nகேஸ் சர்வீஸ் - 243387\nஅஞ்சல் நிலையம் - 243203\nDr அங்கயற்கண்ணி - 253922\nDr பார்த்தசாரதி - 243396\nDr பிரேம்குமார் - 253580\nDr ஷகீலா பேகம் - 243234\nபரங்கிப்பேட்டை, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கடலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.\nஇவ்வூர் மஹ்மூதுபந்தர், போர்டோநோவோ (புதிய துறைமுக நகரம்) மற்றும் முத்து கிருஷ்ணபுரி என்றும் அறியப்படுகிறது. வங்காள வளைகுடா கடலோரத்தில் அமைந்துள்ள இவ்வூர் போர்ச்சுகீசியர்கள் மற்றும் பிரிட்டிசாரால் காலனி ஆதிக்கத்தில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இது முக்கிய கப்பல் துறைமுகமாகவும் விளங்கியது. ஆசியாவின் முதல் இரும்பு தொழிற்சாலை இங்கு நிறுவப்பட்டிருந்தது.\nகி.பி. 1781ல் ஆங்கிலேயரை எதிர்த்து ஹைதர் அலி இரண்டாம் மைசூர் போர் புரிந்தார். அதன் நினைவு போர்கொடி கம்பமும், கல்லறைகளும் இன்றும் அழியாச் சின்னங்களாக உள்ளது.\nஇங்கு கடல்சார் கல்வியான அண்ணாமலை பல்கலைகழகத்தினால் நிறுவப்பட்டு ஆராய்ச்சி படிப்புகள் நடைபெற்று வருகின்றது - இதின் கடல்சார் அருங்காட்சியகம் இங்கு பிரசித்தி பெற்றது.\nஇரயில் நிலையம்: விழுப்புரம் - மயிலாடுதுறை கோட்ட பாதையின் இடையே அமைந்துள்ளது. சிதம்பரம் இரயில் நிலையம் இங்கிருந்து 11 கி.மீ தூரத்திலும், கடலூ சந்திப்பு 28 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது.\nஅருகில் உள்ள விமான நிலையங்கள்: திருச்சிராப்பள்ளி - 145 கி.மீ., சென்னை - 230 கி.மீ.\nதற்போதைய பேரூராட்சி தலைவர்: திரு. முஹமது யூனுஸ்\nஎஸ். டி. டீ. குறியீடு: 4144\nசிங்கப்பூரில் நோன்பு துறக்கும் நிகழ்ச்சி..\nஜமாஅத்தின் வரதட்சனை ஒழிப்பு நடவடிக்கை நாட்டுக்கே ம...\nCopyright © 2010 பரங்கிப்பேட்டை தகவல் களஞ்சியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.eegarai.net/t21347-topic", "date_download": "2018-04-26T13:11:16Z", "digest": "sha1:ET462W67ZNZUCPDNYQUSIMIRR2D7L4WB", "length": 13610, "nlines": 250, "source_domain": "www.eegarai.net", "title": "அன்றும் இன்றும் நம் வாழ்க்கைகள்!", "raw_content": "\nருசியான ஊறுகாய்கள் - அரு /அரை நெல்லிக்காய் தொக்கு \nஅரை நெல்லிக்காய் - அரை நெல்லிக்காய் தொக்கு \nஎச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி\nஉடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்\nஎனக்குள் ஒரு கவிஞன் SK\nஉலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி\nபராமரிப்பு பணி முடிந்தது பழநி கோயில் வின்ச் சேவை துவக்கம்: பக்தர்கள் மகிழ்ச்சி\nபாலகுமாரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக\nஅறிமுகம்---- வாலி மோகன் தாஸ்\n2 மணி நேரம் பொறுக்க முடியாதா கஸ்தூரி..\nஎதுக்காக உன் காதலியை கிணத்துல தள்ளிவிட்டே...\nஅமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி\nநிலக்கரியை விட கருப்பாக இருக்கும் கிரகம் கண்டுபிடிப்பு\nகவர்ச்சி நடிகைகிட்ட பிடிச்சது, அவரோட நடிப்பு...\nஏப்ரல் 30-ம் தேதி வைகை ஆற்றில் இறங்குகிறார் கள்ளழகர்\nகோயில்களுக்கு செல்ல குழந்தைகளை கண்டிப்பாக பழக்குங்கள்.....\nஇந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'\nஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்\nஉப்புமா சாப்பிடுவது மோன நிலை...\nநீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு\n‘சிற்றெறும்பு கட்டெறும்பு’ - கமல்ஹாசன், அமைச்சர் ஜெயக்குமார் வார்த்தை ஜாலத்தால் ஒருவருக்கொருவர் கிண்டல்\nஉ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்\nகண்மணி வார நாவல் 25.04.2018\nதிகில் மன்னன் ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக\nதாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து\nபலாத்காரத்துக்கு ஆளாகும் ஆண் குழந்தைகளுக்கும் இழப்பீடு'\nஇந்தியர்களை பாதிக்கும் ‘எச்-4’ விசா ரத்து நடவடிக்கைக்கு அமெரிக்க எம்.பி.க்கள் எதிர்ப்பு, ஐ.டி. துறையும் கண்டனம்\n'பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்\n5,000 குஜராத் விவசாயிகள் தற்கொலைக்கு மனு\nவாழ்க்கையை ஓஹோன்னு வாழ கன்ஃபூசியஸ் சொன்ன 10 கட்டளைகள்...\nஇரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு\nரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது: மக்கள் மன்ற மாநில செயலாளர் பேச்சு\n2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்: ஜூன் 16-ம் தேதி இந்தியா-பாக். மோதல்\nசுப்ரீம் கோர்ட் எதிர்காலம்: ஆலோசிக்க நீதிபதிகள் கோரிக்கை\nநாடு முழுவதும் 24 போலி பல்கலை.,கள்\nகாங்., கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக்கறை: சல்மான் குர்ஷித் சர்ச்சை\nஅன்றும் இன்றும் நம் வாழ்க்கைகள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nஅன்றும் இன்றும் நம் வாழ்க்கைகள்\nகூடி வாழ்ந்தால் கோடி நன்மை.\nவந்தவர்களை முகம் மலர வரவேற்பு\nஏன் வருகிறார்கள் என முகச்சுழிப்பு\nஏதோ மூலையில் சில செடிகள்.\nபெருமையோடு வாழ்ந்த வாழ்க்கை ,\nஅவசரத்தில் தொலைத்த நாட்கள் .\nRe: அன்றும் இன்றும் நம் வாழ்க்கைகள்\nஅவசர உலகில் நாம் தொலைத்தவை ஏராளம். கவிதைக்கு நன்றி தொடருங்கள்\nRe: அன்றும் இன்றும் நம் வாழ்க்கைகள்\nஅருமை நல்ல சிந்தனை வாழ்த்துக்கள் கலை\nRe: அன்றும் இன்றும் நம் வாழ்க்கைகள்\nவேகமாக விரையும் உலகிற்கு ஈடாக நாமும் பயனிக்க இதுபோன்ற தியாகங்கள் அவசியமாகிறது\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: அன்றும் இன்றும் நம் வாழ்க்கைகள்\nஉண்மைதான்.இருபினும் அந்த நாட்கள் இன்று மலரும் நினைவுகள்,என ஆகிவிட்டது இன்றைய நிலை.\nமறுமொழி தந்த நண்பர்களுக்கு நன்றி\nRe: அன்றும் இன்றும் நம் வாழ்க்கைகள்\nRe: அன்றும் இன்றும் நம் வாழ்க்கைகள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.eegarai.net/t59748-topic", "date_download": "2018-04-26T13:10:38Z", "digest": "sha1:FL6BJSN2GFXD25S4WWSXAQGQVUMJGUFO", "length": 13924, "nlines": 185, "source_domain": "www.eegarai.net", "title": "தனுஷ்-செல்வராகவன் மனக்கசப்பு ; இருட்டுக்குள் இரண்டாம் உலகம் !", "raw_content": "\nருசியான ஊறுகாய்கள் - அரு /அரை நெல்லிக்காய் தொக்கு \nஅரை நெல்லிக்காய் - அரை நெல்லிக்காய் தொக்கு \nஎச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி\nஉடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்\nஎனக்குள் ஒரு கவிஞன் SK\nஉலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி\nபராமரிப்பு பணி முடிந்தது பழநி கோயில் வின்ச் சேவை துவக்கம்: பக்தர்கள் மகிழ்ச்சி\nபாலகுமாரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக\nஅறிமுகம்---- வாலி மோகன் தாஸ்\n2 மணி நேரம் பொறுக்க முடியாதா கஸ்தூரி..\nஎதுக்காக உன் காதலியை கிணத்துல தள்ளிவிட்டே...\nஅமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி\nநிலக்கரியை விட கருப்பாக இருக்கும் கிரகம் கண்டுபிடிப்பு\nகவர்ச்சி நடிகைகிட்ட பிடிச்சது, அவரோட நடிப்பு...\nஏப்ரல் 30-ம் தேதி வைகை ஆற்றில் இறங்குகிறார் கள்ளழகர்\nகோயில்களுக்கு செல்ல குழந்தைகளை கண்டிப்பாக பழக்குங்கள்.....\nஇந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'\nஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்\nஉப்புமா சாப்பிடுவது மோன நிலை...\nநீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு\n‘சிற்றெறும்பு கட்டெறும்பு’ - கமல்ஹாசன், அமைச்சர் ஜெயக்குமார் வார்த்தை ஜாலத்தால் ஒருவருக்கொருவர் கிண்டல்\nஉ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்\nகண்மணி வார நாவல் 25.04.2018\nதிகில் மன்னன் ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக\nதாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து\nபலாத்காரத்துக்கு ஆளாகும் ஆண் குழந்தைகளுக்கும் இழப்பீடு'\nஇந்தியர்களை பாதிக்கும் ‘எச்-4’ விசா ரத்து நடவடிக்கைக்கு அமெரிக்க எம்.பி.க்கள் எதிர்ப்பு, ஐ.டி. துறையும் கண்டனம்\n'பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்\n5,000 குஜராத் விவசாயிகள் தற்கொலைக்கு மனு\nவாழ்க்கையை ஓஹோன்னு வாழ கன்ஃபூசியஸ் சொன்ன 10 கட்டளைகள்...\nஇரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு\nரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது: மக்கள் மன்ற மாநில செயலாளர் பேச்சு\n2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்: ஜூன் 16-ம் தேதி இந்தியா-பாக். மோதல்\nசுப்ரீம் கோர்ட் எதிர்காலம்: ஆலோசிக்க நீதிபதிகள் கோரிக்கை\nநாடு முழுவதும் 24 போலி பல்கலை.,கள்\nகாங்., கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக்கறை: சல்மான் குர்ஷித் சர்ச்சை\nதனுஷ்-செல்வராகவன் மனக்கசப்பு ; இருட்டுக்குள் இரண்டாம் உலகம் \nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nதனுஷ்-செல்வராகவன் மனக்கசப்பு ; இருட்டுக்குள் இரண்டாம் உலகம் \nகொஞ்சம் கொஞ்சமாக கொத்தி மரத்தையே வீழ்த்துகிற பலம் மரங்கொத்தி பறவையின் மூக்குக்கு உண்டு. அப்படி ஒரு அசுர பலம் செல்வராகவனுக்கும் உண்டு. இவரால் பல விநியோகஸ்தர்களும் தியேட்டர்காரர்களும் வாழ்வாங்கு வாழ்ந்தாலும், தயாரிப்பாளர்கள் என்னவோ கொத்தப்பட்ட மரம்தான். அதற்கு லேட்டஸ்ட் உதாரணம் ஆயிரத்தில் ஒருவன் தயாரிப்பாளர் ரவீந்திரன்.\nஅவர் போகட்டும். தற்போது சொந்தப்படம் எடுத்து வரும் செல்வராகவன் தனக்கு தானே கூட கொத்திக் கொள்வார் போலிருக்கிறது. இவர் இயக்கிக் கொண்டிருக்கும் இரண்டாம் உலகம் செல்வராகவனின் குடும்ப தயாரிப்பு. ஆனால் விநியோகஸ்தர்களும் கணிசமாக பணம் கொடுத்திருப்பதாக கேள்வி.\nபடம் பாதி தாண்டிய நிலையில் இந்த படத்தின் ஹீரோயின் ஆன்ட்ரியாவை படத்திலிருந்தே நீக்கிவிட்டார் செல்வா. இதற்கு ஆயிரம் காரணங்கள் சொல்லப்பட்டாலும், ஆன்ட்ரியா திரும்ப வரமாட்டார் என்கிற அளவுக்கு முட்டை ஆஃப் பாயில் ஆகிவிட்டது.\nஆன்ட்ரியா போனபின் வேறொரு ஹீரோயினை வைத்து அதே காட்சிகளை எடுத்தாக வேண்டுமே ஹீரோயின் ரெடி. ஆனால் மீண்டும் நடிக்க வேண்டிய தனுஷ், அட போண்ணா... உனக்கு வேற வேலையே இல்லை என்கிறாராம் எரிச்சலுடன். நீ கேட்கும்போதெல்லாம் என்னால் தேதி தர முடியாது. நான் எப்ப சொல்றேனோ அப்போ படத்தை எடுத்துக்கோ என்று கூறிவிட்டாரம் கடுகடுப்புடன்.\nஉன்னை வளர்த்ததே நான்தான். நான் இல்லேன்னா தனுஷ்னு ஒரு நடிகனே இல்லை என்று செல்வாவும், அதுக்காக எவ்வளோ செஞ்சாச்சு. இன்னும் வாட்டி எடுக்காதே என்று தனுஷ§ம் மாறி மாறி வாதம் செய்து கொண்டிருக்க, கண்ணீரை பீய்ச்சியாவது கலவரத்தை அடக்க துடித்துக் கொண்டிருக்கிறாராம் பாசக்கார அப்பா.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.eegarai.net/t8942-topic", "date_download": "2018-04-26T13:12:16Z", "digest": "sha1:YKTISH3LZDCBASYSXXZKLAJLYDS2QPBL", "length": 12383, "nlines": 192, "source_domain": "www.eegarai.net", "title": "முற்றிவரும் மோதல் ..", "raw_content": "\nருசியான ஊறுகாய்கள் - அரு /அரை நெல்லிக்காய் தொக்கு \nஅரை நெல்லிக்காய் - அரை நெல்லிக்காய் தொக்கு \nஎச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி\nஉடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்\nஎனக்குள் ஒரு கவிஞன் SK\nஉலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி\nபராமரிப்பு பணி முடிந்தது பழநி கோயில் வின்ச் சேவை துவக்கம்: பக்தர்கள் மகிழ்ச்சி\nபாலகுமாரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக\nஅறிமுகம்---- வாலி மோகன் தாஸ்\n2 மணி நேரம் பொறுக்க முடியாதா கஸ்தூரி..\nஎதுக்காக உன் காதலியை கிணத்துல தள்ளிவிட்டே...\nஅமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி\nநிலக்கரியை விட கருப்பாக இருக்கும் கிரகம் கண்டுபிடிப்பு\nகவர்ச்சி நடிகைகிட்ட பிடிச்சது, அவரோட நடிப்பு...\nஏப்ரல் 30-ம் தேதி வைகை ஆற்றில் இறங்குகிறார் கள்ளழகர்\nகோயில்களுக்கு செல்ல குழந்தைகளை கண்டிப்பாக பழக்குங்கள்.....\nஇந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'\nஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்\nஉப்புமா சாப்பிடுவது மோன நிலை...\nநீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு\n‘சிற்றெறும்பு கட்டெறும்பு’ - கமல்ஹாசன், அமைச்சர் ஜெயக்குமார் வார்த்தை ஜாலத்தால் ஒருவருக்கொருவர் கிண்டல்\nஉ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்\nகண்மணி வார நாவல் 25.04.2018\nதிகில் மன்னன் ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக\nதாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து\nபலாத்காரத்துக்கு ஆளாகும் ஆண் குழந்தைகளுக்கும் இழப்பீடு'\nஇந்தியர்களை பாதிக்கும் ‘எச்-4’ விசா ரத்து நடவடிக்கைக்கு அமெரிக்க எம்.பி.க்கள் எதிர்ப்பு, ஐ.டி. துறையும் கண்டனம்\n'பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்\n5,000 குஜராத் விவசாயிகள் தற்கொலைக்கு மனு\nவாழ்க்கையை ஓஹோன்னு வாழ கன்ஃபூசியஸ் சொன்ன 10 கட்டளைகள்...\nஇரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு\nரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது: மக்கள் மன்ற மாநில செயலாளர் பேச்சு\n2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்: ஜூன் 16-ம் தேதி இந்தியா-பாக். மோதல்\nசுப்ரீம் கோர்ட் எதிர்காலம்: ஆலோசிக்க நீதிபதிகள் கோரிக்கை\nநாடு முழுவதும் 24 போலி பல்கலை.,கள்\nகாங்., கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக்கறை: சல்மான் குர்ஷித் சர்ச்சை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nநாளிதழ் ஆசிரியர் லெனின் கைது செய்யப்பட்டதற்குப் பிறகு பத்திரிகையாளர்களுக்கும் நடிகர் சங்கத்திற்குமான மோதல் வலுத்துவருகிறது. நடிகர் சங்கக் கூட்டத்தில் பத்திரிகையாளர்களுக்கு மிரட்டல் விடுத்த சத்யராஜ், விஜயகுமார், விவேக், ஸ்ரீப்ரியா ஆகிய நால்வரையும் கைது செய்ய வேண்டும் என்று போலீஸ் கமிஷனரைச் சந்தித்து புகார் மனு கொடுத்தனர் சென்னை பிரஸ் கிளப் உறுப்பினர்கள். அப்படிச் செய்யாவிடில் முதல்வரின் வீட்டை முற்றுகை இடப்போவதாகவும் அப்போது கூறினர்.\nஇது ஒருபுறம் இருக்க, சம்பந்தப்பட்ட நாளிதழுக்கு நடிகர் சங்கம் தடை விதித்தது போல குறிப்பிட்ட சில நடிகர் நடிகைகளின் செய்தியை போடுவதில்லை என்று சில முன்னணி நாளிதழ்களும் முடிவெடுத்துள்ளனவாம். அந்த லிஸ்டில் இருக்கிற முக்கியமானவர்கள் விவேக் மற்றும் சத்யராஜ்.\nஇவர்கள் தயவே எனக்கு வேண்டாம். நான் பார்த்துக் கொள்கிறேன் என்கிறாராம் விவேக். ஆனாலும் நேற்று காலையில் இருந்தே அவரது செல்போன் சுவிட்ச் ஆஃப். காரணம்\nRe: முற்றிவரும் மோதல் ..\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.eegarai.net/t95465-topic", "date_download": "2018-04-26T13:11:57Z", "digest": "sha1:W4HYUUZUY636KY7WKJPN7H5SE4R47ZR5", "length": 23559, "nlines": 309, "source_domain": "www.eegarai.net", "title": "ராதாரவிக்கு விஷால்தான் இளிச்சவாயரா?", "raw_content": "\nருசியான ஊறுகாய்கள் - அரு /அரை நெல்லிக்காய் தொக்கு \nஅரை நெல்லிக்காய் - அரை நெல்லிக்காய் தொக்கு \nஎச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி\nஉடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்\nஎனக்குள் ஒரு கவிஞன் SK\nஉலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி\nபராமரிப்பு பணி முடிந்தது பழநி கோயில் வின்ச் சேவை துவக்கம்: பக்தர்கள் மகிழ்ச்சி\nபாலகுமாரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக\nஅறிமுகம்---- வாலி மோகன் தாஸ்\n2 மணி நேரம் பொறுக்க முடியாதா கஸ்தூரி..\nஎதுக்காக உன் காதலியை கிணத்துல தள்ளிவிட்டே...\nஅமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி\nநிலக்கரியை விட கருப்பாக இருக்கும் கிரகம் கண்டுபிடிப்பு\nகவர்ச்சி நடிகைகிட்ட பிடிச்சது, அவரோட நடிப்பு...\nஏப்ரல் 30-ம் தேதி வைகை ஆற்றில் இறங்குகிறார் கள்ளழகர்\nகோயில்களுக்கு செல்ல குழந்தைகளை கண்டிப்பாக பழக்குங்கள்.....\nஇந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'\nஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்\nஉப்புமா சாப்பிடுவது மோன நிலை...\nநீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு\n‘சிற்றெறும்பு கட்டெறும்பு’ - கமல்ஹாசன், அமைச்சர் ஜெயக்குமார் வார்த்தை ஜாலத்தால் ஒருவருக்கொருவர் கிண்டல்\nஉ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்\nகண்மணி வார நாவல் 25.04.2018\nதிகில் மன்னன் ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக\nதாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து\nபலாத்காரத்துக்கு ஆளாகும் ஆண் குழந்தைகளுக்கும் இழப்பீடு'\nஇந்தியர்களை பாதிக்கும் ‘எச்-4’ விசா ரத்து நடவடிக்கைக்கு அமெரிக்க எம்.பி.க்கள் எதிர்ப்பு, ஐ.டி. துறையும் கண்டனம்\n'பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்\n5,000 குஜராத் விவசாயிகள் தற்கொலைக்கு மனு\nவாழ்க்கையை ஓஹோன்னு வாழ கன்ஃபூசியஸ் சொன்ன 10 கட்டளைகள்...\nஇரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு\nரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது: மக்கள் மன்ற மாநில செயலாளர் பேச்சு\n2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்: ஜூன் 16-ம் தேதி இந்தியா-பாக். மோதல்\nசுப்ரீம் கோர்ட் எதிர்காலம்: ஆலோசிக்க நீதிபதிகள் கோரிக்கை\nநாடு முழுவதும் 24 போலி பல்கலை.,கள்\nகாங்., கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக்கறை: சல்மான் குர்ஷித் சர்ச்சை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nகடைசியில் நம்ம ராதாரவிக்கு விஷால்தான் இளிச்சவாயராகத் தெரிந்துள்ளார்.\n\"\"கமல்ஹாசனுக்கு ஆதரவாக நடிகர் சங்கம் ஒன்றுமே செய்யவில்லை\" என்று விஷால் கோபப்பட்டு இணையத்தில் எழுதி விட்டாராம்.\n\"ஆனால் நடிகர் சங்கம் ஒன்றும் செய்யாததை பார்த்தீரா.நானும்,சரத்குமாரும் கமல்ஹாசனிடம் சென்று ஆறுதல் கூறி வந்தது.கண்ணில் படவில்லையாஉன் மீது ஈன் நடவடிக்கை எடுக்கக் கூடாது \" என்று பாய்ந்து குதறியுள்ளார்.\nஇந்த நடிகர் சங்கம் மீதான குற்ற சாட்டை கூறும் முதலாமானவரும் கடைசியானவரும் விஷால் அல்ல.பலரும் கூறியுள்ளார்கள்.\nபிரச்னை முடிந்த அன்று \"விஸ்வரூபம் பிரச்னையை முடித்து வைத்த முதல்வர் அம்மாவுக்கு நனறி\nஎன்ற அறிக்கை ஒன்றை விட்டதி தவிற நடிகர் சங்கம் இந்த பிரச்னையில் எங்கே தலையை உள்ளெ விட்டது.\n கமலை பார்த்து துக்கம் விசாரித்து வந்தார்கள்.கணக்கற்றவ்ர்கள்.ஆந்திர,கர்நாடக,கேரளா,இந்தி நடிகர்கள் ,அரசியல்வாதிகள்,ரசிகர்கள் என்று ஆயிரக்கணக்கில் அவரை பார்த்து சென்றனர்.ஆனால் அவர்கள் அனைவரும் கமல்ஹாசனுக்கு ஆதரவு அறிக்கைகளை வெளியிட்டனர் .தமிழக அரசின் தடையை விமர்சித்தார்கள்.நீக்கக் கூறினர்.\nஆனால் அவர் உறுப்பினராக உள்ள தென்னிந்திய நடிகர் சங்கம்.\nபிரச்னை முடிவில் நன்றி மட்டுமே அதுவும் அம்மா வுக்கு கூறி மட்டுமே விட்டுள்ளது.\nவேறு எந்த சந்தர்ப்பத்திலும் மூச்சு விட்ட சப்தம் கூட வரவில்லை. அட ஆதரவாக அல்ல கமல் மதம் பற்றி எடுத்தது தவறுதான் என்று தனது எதிர்ப்பையாவது பதிவு செய்திருக்கலாமே\nவிஷால் மட்டுமா இணையத்தில் நடிகர் சங்கத்தை விமர்சித்தார்.எத்தனையோ நடிகர்கள் அப்படி பதிவு செய்துள்ளார்கள்.\nஏன் .ராதாரவிக்கு மருமகள் முறையை உடைய நடிகர் சரத்குமாரின் மகள் நடிகை கூட இணையத்தில் நடிகர் சங்கம் என்ன செய்கிறது என்று கேள்வியை எழுப்பியிருந்தாரே .அவர் மீது என்ன நடவடிக்கையை இந்த நடிகர் சங்கம் எடுத்துள்ளது\nமொத்தத்தில் குற்றம் செய்தது நடிகர் சங்கம் மட்டும்தான் .அதை நடத்துபவர்கள் அதிமுக உறுப்பினர்கள் அம்மாவை மீறி செயல்படமுடியாத நிலை.அதுதான் அனைத்து நடிகர்களுக்கும்-பொதுமக்களுக்கும் தெரியுமே.பின் ஏன் இந்த நடிப்பு\nசேவை வரியை நீக்க,காவிரி தண்ணீரை திறக்க,ஈழத்தமிழர் பிரச்னை என்று பொதுப்பிரச்னைக்கெல்லாம் போராடி ,உண்ணா விரதம் இருந்த நடிகர் சங்கம் [இதில் பலவற்றில் கமல்ஹாசன் கலந்து கொண்டுள்ளார்.]தன் உறுப்பினர் பிரச்னையில் ஒன்றும் செய்யாமல் வாளாவிருந்து விட்டு பிரச்னை முடிந்த கட்ட கடைசியில் இந்த பிரச்னையின் ஆணிவேருக்கு நன்றி தெரிவித்தது கொஞ்சம் அசிங்கமானதுதான்.\nஅதை சுட்டிக்காட்ட ஒவ்வொரு உறுப்பினருக்கும் உரிமை உண்டு.சந்தா வாங்குகிறீர்கள் அல்லவா.\nவாயைத்திறக்காமல் இருக்கவும் வாயைத்திறந்து தட்டிக்கேட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் நடிகர் சங்கம் ஒன்றும் உங்களின் இதய தெய்வம் அம்மாவின் அதிமுக கட்சி அல்ல.\nRe: ராதாரவிக்கு விஷால்தான் இளிச்சவாயரா\nRe: ராதாரவிக்கு விஷால்தான் இளிச்சவாயரா\nவிஷாலுக்கு விசாலமான மனசாம் - அதான் ராதாரவி அப்படி சொல்லி இருக்கிறார் - அவரு கணக்குப்படி (அம்மாவின் அடக்குமுறையின்படி) கூட்டி கழிச்சு பார்த்தா கணக்கு சரியாத் தான் வரும்...\nRe: ராதாரவிக்கு விஷால்தான் இளிச்சவாயரா\nயார அடிச்சா திருப்பி அடிக்கமாட்டனோ அவன அடிக்கிறது தானே வீரம்......\nRe: ராதாரவிக்கு விஷால்தான் இளிச்சவாயரா\nசரத் குமார் நு ஒருத்தர் இருந்தார் அவர் இப்ப இருக்காரா\nRe: ராதாரவிக்கு விஷால்தான் இளிச்சவாயரா\n@Guna Tamil wrote: யார அடிச்சா திருப்பி அடிக்கமாட்டனோ அவன அடிக்கிறது தானே வீரம்......\nRe: ராதாரவிக்கு விஷால்தான் இளிச்சவாயரா\n@அருண் wrote: சரத் குமார் நு ஒருத்தர் இருந்தார் அவர் இப்ப இருக்காரா\nRe: ராதாரவிக்கு விஷால்தான் இளிச்சவாயரா\nஅதை சுட்டிக்காட்ட ஒவ்வொரு உறுப்பினருக்கும் உரிமை உண்டு.சந்தா வாங்குகிறீர்கள் அல்லவா.\nவாயைத்திறக்காமல் இருக்கவும் வாயைத்திறந்து தட்டிக்கேட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் நடிகர் சங்கம் ஒன்றும் உங்களின் இதய தெய்வம் அம்மாவின் அதிமுக கட்சி அல்ல\nRe: ராதாரவிக்கு விஷால்தான் இளிச்சவாயரா\nஇவுங்க கேக்குறதுக்கு கேக்காமலையே இருப்பதுத்தான் நல்லது\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nRe: ராதாரவிக்கு விஷால்தான் இளிச்சவாயரா\n@Muthumohamed wrote: அதை சுட்டிக்காட்ட ஒவ்வொரு உறுப்பினருக்கும் உரிமை உண்டு.சந்தா வாங்குகிறீர்கள் அல்லவா.\nவாயைத்திறக்காமல் இருக்கவும் வாயைத்திறந்து தட்டிக்கேட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் நடிகர் சங்கம் ஒன்றும் உங்களின் இதய தெய்வம் அம்மாவின் அதிமுக கட்சி அல்ல\nஎனக்கென்னமோ இரண்டும் ஒன்றுபோலத்தான் தெரிகிறது\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: ராதாரவிக்கு விஷால்தான் இளிச்சவாயரா\n@அருண் wrote: சரத் குமார் நு ஒருத்தர் இருந்தார் அவர் இப்ப இருக்காரா\nRe: ராதாரவிக்கு விஷால்தான் இளிச்சவாயரா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.unmaikal.com/2013/01/blog-post_8315.html", "date_download": "2018-04-26T12:56:28Z", "digest": "sha1:O43US254OVCYO2CXTXMEMFF7XJ3CHZX4", "length": 26687, "nlines": 448, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: ஏவுகணை ஏவ வட கொரியாவுக்கு ஐ.நா தடை", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nவிக்கிலீக்ஸ்: அமெரிக்காவின் உளவாளியாக செயல்பட்ட சம...\nவிண்வெளிக்கு குரங்கை அனுப்பி பத்திரமாக தரையிறக்கிய...\nகிழக்கு மாகாணத்தில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் அதி...\nஜனாதிபதியின் கிழக்க விஜயம் குறித்து விசேட கலந்துரை...\nமட்டக்களப்பு 37741 மில்லியன் ரூபாவில் அபிவிருத்தி ...\nகிழக்கு பல்கலைக்கு ஜனாதிபதி 5ஆம் திகதி விஜயம்\nஉயர்தரப் பரீட்சை முடிவுகள் எதிர்வரும் புதன் கிழமை\nகளை கட்டும் மாவீரர் வியாபாரம்\nநாங்கள் புலிகளுடன் இணைந்து வேலை செய்வோம். சுவிட்சர...\nஅறுவடைக்குத் தயாராகவிருந்த விவசாய வயல்கள் நீரில் ம...\nமன்னம்பிட்டி ஊடான போக்குவரத்து துண்டிப்பு\nவாழ்வின் எழுச்சி திட்டம் பற்றிய அறிவுறுத்தல் செயலம...\nஇலங்கையில் இருமொழிக் கலப்பில் தேசிய கீதம்\nஅணுச் சோதனை வடகொரியாவில் தொடர்தல்\nஏவுகணை ஏவ வட கொரியாவுக்கு ஐ.நா தடை\nசீன அறிவியல் கழகத்தின் பரிசை பெற்ற இந்திய அறிவியலா...\nஎனக்குள் பெய்த மழையின் நிறங்கள்” எனும் கவிதை நூல் ...\nதமிழரசு கட்சியை பலப்படுத்த வேண்டுமென முயற்சிப்பது ...\nஅல்ஜீரியாவில் இஸ்லாமிய ஆயுததாரிகளின்; நான்கு நாள் ...\nமட்டக்களப்பு மாவட்டத்தில் எழுந்துள்ள எல்லைப் பிரச்...\nகொள்ளையிட்ட பொருட்களை பகிரங்கமாக விற்கும் வெள்ளையர...\nதமிழர்களின் நில அபகரிப்புக்கு எதிராக தமிழ் மக்கள் ...\nஅடிப்படைக் கடமைகளை கூட முறையாக நிறைவேற்றத் தெரியாம...\nமட்டக்களப்பில் புதிய எல்லை நிர்ணயங்களால் சர்ச்சை\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இனவாத செயற்பாட்டினைக...\nஇன்று மட்டக்களப்பில் முழுஅளவிலான கடையடைப்புப் போரா...\nமக்களின் வறுமை ஒழிப்பில் குறித்த அதிகாரிகளினதும் இ...\nவாழைச்சேனையில் வறுமையற்றதோர் இலங்கையை கட்டியெழுப்ப...\nஒருபால் திருமணத்திற்கு எதிராக பிரான்ஸில் ஆயிரக்கணக...\nஇலங்கையின் புதிய தலைமை நீதியரசராக மொஹான் பீரீஸ் பத...\nபிரதம நீதியரசர் பதவியிலிருந்து நீக்கம் ஜனாதிபதியின...\n\"வறுமையினை ஒழிக்கப் பாடுபடுவோம்\" - தைத்திருநாள் வா...\nபிரான்சில் பாடுமீன் சமூக அபிவிருத்தி சங்கத்தின் தை...\nமாவடிஓடைப் பாலம் இரண்டாக பிளவு பல கிராமங்களுக்கான ...\nபட்டதாரி நியமனத்தில் உள்வாங்கப்பட வேண்டும் என கோரி...\nரிசானா நபீக் இன் மரணத்திற்கு எமது அனுதாபங்கள் - த....\nதேர்தல் வரும் போது மட்டும் இந்த புத்தி எங்கே போகி...\nசஊதி தாலிபானியமும் மௌனங்காக்கும் சஊதி ஏஜென்டுகளும்...\nசவூதிக்கான இலங்கைத் தூதுவர் மீள அழைக்கப்பட்டார்\nயோகா கலைக்கு முதன் முறையாக கலாபூசனம் - பெருமைபெற்ற...\nவெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உலர் உணவு பொ...\nரிசானாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது'\nஆப்கான் ஜனாதிபதி கர்சாயி அமெரிக்கா விஜயம்\n‘வாழ்வின் எழுச்சி’ சபையில் நிறைவேற்றம்\nவெள்ளத்தினால் மட்டு. மாவட்டத்தில் 142,674 பேர் பாத...\nவிவசாய அமைச்சர் மஹிந்த யாப்பா அபயவர்த்தன திருக்கோவ...\nமாற்றம் காணும் மட்டக்களப்பில் ஏற்றம் காணும் விவசாய...\nஉள்ளூராட்சி சபைக்குட்பட்ட வட்டாரங்களை மீளமைத்தல்\n2100வருடகாலமாக தமிழர்கள் வாழ்ந்துவரும் வெல்லாவெளி\nமட்டக்களப்பில் மீண்டும் தொடர் மழை\nதொடர்மழையினால் வெள்ள அபாயம்: உறுகாமம் குளத்தின் இர...\n'ரிசானாவுக்கான மரண தண்டனையை நீதிமன்றம் உறுதி செய்த...\nதிரு.வைரமுத்து மாஸ்டருக்கான அஞ்சலியும், மீள் நினைவ...\nகருணை உள்ளமும் மனிதாபிமான நோக்கமும் கொண்டவர்கள் வெ...\nஆலையடிவேம்பில் பி. எச். பியசேன முன்னிலையில் ஐ. ம. ...\nகிழக்கு மாகாணசபையின் அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்...\nதேற்றாத்தீவில் உலோகப் பொருள் உற்பத்தி\nபுகலிடத்திலிருந்து இலங்கையில் மூன்று மொழி பெயர்ப்ப...\nபகத் சிங்கின் பெயரை வைத்ததால் வந்த சர்ச்சை\n2013 ஆம் ஆண்டுக்கான சிறந்த சுற்றுலாத்தளமாக இலங்கை ...\nஉண்மையின் உபாசகர்கள் அனைவருக்கும் எமது உளங்கனிந்த ...\nகிழக்கிற்கு சென்ற கொள்ளைக் கும்பல் பொலநறுவையில் மா...\nபுதுவருடப்பிறப்பினை முன்னிட்டு முன்னாள் முதல்வரின்...\nஏவுகணை ஏவ வட கொரியாவுக்கு ஐ.நா தடை\nவட கொரியா ஏவுகணையைச் செலுத்துவது பற்றி, ஐ.நா பாதுகாப்பவை ஜனவரி 22ஆம் நாள், 15 ஆதரவு வாக்குகளுடன் 2087வது தீர்மானத்தை, நிறைவேற்றியுள்ளது. பாதுகாப்பவையின் தொடர்புடைய விதிகளைப் பின்பற்றி, எறிவிசை ஏவுகணைத் தொழில் நுட்பங்களின் மூலம் ஏவுகணையைச் செலுத்த, ஐ.நா வட கொரியாவுக்குத் தடை விதித்துள்ளது. அமைதி, தூதாண்மை மற்றும் அரசியல் வழிமுறைகளின் மூலம் தொடர்புடைய பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும். 6 தரப்பு பேச்சுவார்த்தையை மீண்டும் துவக்குமாறு இத்தீர்மானம் வேண்டுகோள் விடுத்துள்ளது.\nஐ.நாவுக்கான சீனாவின் நிரந்தர பிரதிநிதி லி பௌ துங், ஆதரவாக வாக்களித்து, சீன மற்றும் வெளிநாட்டுச் செய்தியாளர்களுக்கு உரை நிகழ்த்தினார். 6 தரப்புப் பேச்சுவார்த்தையை விரைவாக மீண்டும் தொடங்கி, பல்வேறு தரப்புகளின் கவனத்தைச் சமநிலையில் கையாள வேண்டுமென அவர் தெரிவித்தார்.\nஐ.நா தலைமைச் செயலாளர் பான் கி மூன் அறிக்கை வெளியிடுகையில், பாதுகாப்பவையின் புதிய தீர்மானம் வரவேற்கப்படுகிறது. கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதமின்மை மற்றும் நிதான அமைதி நிலையை நிலைநிறுத்தும் ஒரே வழிமுறையாக, பேச்சுவார்த்தை இருப்பதாக அவர் கூறினார்.\nவிக்கிலீக்ஸ்: அமெரிக்காவின் உளவாளியாக செயல்பட்ட சம...\nவிண்வெளிக்கு குரங்கை அனுப்பி பத்திரமாக தரையிறக்கிய...\nகிழக்கு மாகாணத்தில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் அதி...\nஜனாதிபதியின் கிழக்க விஜயம் குறித்து விசேட கலந்துரை...\nமட்டக்களப்பு 37741 மில்லியன் ரூபாவில் அபிவிருத்தி ...\nகிழக்கு பல்கலைக்கு ஜனாதிபதி 5ஆம் திகதி விஜயம்\nஉயர்தரப் பரீட்சை முடிவுகள் எதிர்வரும் புதன் கிழமை\nகளை கட்டும் மாவீரர் வியாபாரம்\nநாங்கள் புலிகளுடன் இணைந்து வேலை செய்வோம். சுவிட்சர...\nஅறுவடைக்குத் தயாராகவிருந்த விவசாய வயல்கள் நீரில் ம...\nமன்னம்பிட்டி ஊடான போக்குவரத்து துண்டிப்பு\nவாழ்வின் எழுச்சி திட்டம் பற்றிய அறிவுறுத்தல் செயலம...\nஇலங்கையில் இருமொழிக் கலப்பில் தேசிய கீதம்\nஅணுச் சோதனை வடகொரியாவில் தொடர்தல்\nஏவுகணை ஏவ வட கொரியாவுக்கு ஐ.நா தடை\nசீன அறிவியல் கழகத்தின் பரிசை பெற்ற இந்திய அறிவியலா...\nஎனக்குள் பெய்த மழையின் நிறங்கள்” எனும் கவிதை நூல் ...\nதமிழரசு கட்சியை பலப்படுத்த வேண்டுமென முயற்சிப்பது ...\nஅல்ஜீரியாவில் இஸ்லாமிய ஆயுததாரிகளின்; நான்கு நாள் ...\nமட்டக்களப்பு மாவட்டத்தில் எழுந்துள்ள எல்லைப் பிரச்...\nகொள்ளையிட்ட பொருட்களை பகிரங்கமாக விற்கும் வெள்ளையர...\nதமிழர்களின் நில அபகரிப்புக்கு எதிராக தமிழ் மக்கள் ...\nஅடிப்படைக் கடமைகளை கூட முறையாக நிறைவேற்றத் தெரியாம...\nமட்டக்களப்பில் புதிய எல்லை நிர்ணயங்களால் சர்ச்சை\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இனவாத செயற்பாட்டினைக...\nஇன்று மட்டக்களப்பில் முழுஅளவிலான கடையடைப்புப் போரா...\nமக்களின் வறுமை ஒழிப்பில் குறித்த அதிகாரிகளினதும் இ...\nவாழைச்சேனையில் வறுமையற்றதோர் இலங்கையை கட்டியெழுப்ப...\nஒருபால் திருமணத்திற்கு எதிராக பிரான்ஸில் ஆயிரக்கணக...\nஇலங்கையின் புதிய தலைமை நீதியரசராக மொஹான் பீரீஸ் பத...\nபிரதம நீதியரசர் பதவியிலிருந்து நீக்கம் ஜனாதிபதியின...\n\"வறுமையினை ஒழிக்கப் பாடுபடுவோம்\" - தைத்திருநாள் வா...\nபிரான்சில் பாடுமீன் சமூக அபிவிருத்தி சங்கத்தின் தை...\nமாவடிஓடைப் பாலம் இரண்டாக பிளவு பல கிராமங்களுக்கான ...\nபட்டதாரி நியமனத்தில் உள்வாங்கப்பட வேண்டும் என கோரி...\nரிசானா நபீக் இன் மரணத்திற்கு எமது அனுதாபங்கள் - த....\nதேர்தல் வரும் போது மட்டும் இந்த புத்தி எங்கே போகி...\nசஊதி தாலிபானியமும் மௌனங்காக்கும் சஊதி ஏஜென்டுகளும்...\nசவூதிக்கான இலங்கைத் தூதுவர் மீள அழைக்கப்பட்டார்\nயோகா கலைக்கு முதன் முறையாக கலாபூசனம் - பெருமைபெற்ற...\nவெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உலர் உணவு பொ...\nரிசானாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது'\nஆப்கான் ஜனாதிபதி கர்சாயி அமெரிக்கா விஜயம்\n‘வாழ்வின் எழுச்சி’ சபையில் நிறைவேற்றம்\nவெள்ளத்தினால் மட்டு. மாவட்டத்தில் 142,674 பேர் பாத...\nவிவசாய அமைச்சர் மஹிந்த யாப்பா அபயவர்த்தன திருக்கோவ...\nமாற்றம் காணும் மட்டக்களப்பில் ஏற்றம் காணும் விவசாய...\nஉள்ளூராட்சி சபைக்குட்பட்ட வட்டாரங்களை மீளமைத்தல்\n2100வருடகாலமாக தமிழர்கள் வாழ்ந்துவரும் வெல்லாவெளி\nமட்டக்களப்பில் மீண்டும் தொடர் மழை\nதொடர்மழையினால் வெள்ள அபாயம்: உறுகாமம் குளத்தின் இர...\n'ரிசானாவுக்கான மரண தண்டனையை நீதிமன்றம் உறுதி செய்த...\nதிரு.வைரமுத்து மாஸ்டருக்கான அஞ்சலியும், மீள் நினைவ...\nகருணை உள்ளமும் மனிதாபிமான நோக்கமும் கொண்டவர்கள் வெ...\nஆலையடிவேம்பில் பி. எச். பியசேன முன்னிலையில் ஐ. ம. ...\nகிழக்கு மாகாணசபையின் அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்...\nதேற்றாத்தீவில் உலோகப் பொருள் உற்பத்தி\nபுகலிடத்திலிருந்து இலங்கையில் மூன்று மொழி பெயர்ப்ப...\nபகத் சிங்கின் பெயரை வைத்ததால் வந்த சர்ச்சை\n2013 ஆம் ஆண்டுக்கான சிறந்த சுற்றுலாத்தளமாக இலங்கை ...\nஉண்மையின் உபாசகர்கள் அனைவருக்கும் எமது உளங்கனிந்த ...\nகிழக்கிற்கு சென்ற கொள்ளைக் கும்பல் பொலநறுவையில் மா...\nபுதுவருடப்பிறப்பினை முன்னிட்டு முன்னாள் முதல்வரின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2018-04-26T13:13:23Z", "digest": "sha1:WEXGOBYCUFYRSXO3CVF67MT3GP7EL5DH", "length": 18715, "nlines": 414, "source_domain": "ta.wikipedia.org", "title": "கொமொரோசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\n• அதிபர் அகமது அப்துல்லா எம். சாம்பி\n• மொத்தம் 2,235 கிமீ2 (178வது)\n• நீர் (%) சிறியது\n• 2005 கணக்கெடுப்பு 798,000 (159வது)\n• அடர்த்தி 275/km2 (25வது)\nமொ.உ.உ (கொஆச) 2004 கணக்கெடுப்பு\n• மொத்தம் $1.049 பில்லியன் (171வது)\n• தலைவிகிதம் $1,660 (156வது)\n• கோடை (ப.சே) கடைபிடிக்கப்படுவதில்லை (ஒ.அ.நே+3)\nகொமொரோசு அல்லது அதிகாரப்பட்சமாக கொமொரோசு ஒன்றியம் இந்தியப் பெருங்கடலில் ஆப்பிரிக்காவின் கிழக்குக் கரையில் வட மடகசுகாருக்கும் வடகிழக்கு மொசாம்பிக்குக்கும் இடையே அமைந்துள்ள தீவுகளால் ஆன நாடாகும். மொசாம்பிக், மடகாஸ்கர், சிஷெல்ஸ், தன்சானியா என்பன கொமொரோசுக்கு அண்மையில் அமைந்துள்ள நாடுகளாகும். 2002 ஆம் ஆண்டுக்கு முன்னதாக இந்நாடு கொமொரோசு இசுலாமிய கூட்டாட்சிக் குடியரசு என அழைக்கப்பட்டு வந்தது. 2,235 சதுர கி.மீ. (863 சதுர மைல்)[1] பரப்பளவைக் கொண்டக் கொமொரொசு பரப்பளவின் படி ஆப்பிரிக்காவின் மூன்றாவது சிறிய நாடும் மக்கள்தொகை அடிப்படையில் ஆப்பிரிக்காவில் ஆறாவது சிறிய நாடுமாகும். இருந்த போதிலும் ஆப்பிரிக்காவின் மக்கள்தொகை அடர்த்திக் கூடிய நாடுகளில் கொமொரோசும் ஒன்றாக திகழ்கிறது. கொமொரோசு என்றப் பெயர் அரபு மொழியின் சந்திரனைக் குறிக்கும் பதமான கொமார் என்பதிலிருந்து தோன்றியதாகும்.[2]\nநாடு அதிகாரப் பட்சமாக கொமொரோசு தீவுக்குழுமத்தில் அமைந்துள்ள நிகசிட்சா (Ngazidja), மவாளி (Mwali), நிசவாணி (Nzwani) மவோரே (Mahoré) என்ற நான்கு முக்கியத் தீவுகளைடும் மற்றும் சில சிறிய தீவுகளையும் கொண்டது.[3][4] இருப்பினும் கொமொரோசு ஒன்றியமோ அல்லது அதற்கு முன்பிருந்த அரசுகளோ மவோரே தீவை ஆட்சி செய்யவில்லை. பிரான்சின் அடிமை நாடுகளாக கொமொரோசு இருந்தப்போது பிரான்சிடமிருந்து விடுதலையடைய வேண்டுமா எந்பதை அறிய நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் மவொரே தீவு விடுதலைக்கு எதிராக வக்களித்ததாலும், மவோரேயின் கட்டுப்பாட்டை கொமொரோசிடம் வழங்குவதற்கான ஐ.நா.வின் தீர்மானத்தை பிரான்சு தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி[5][6] நிரகரித்தமையாலும் மவொரேயின் ஆட்சி கொமொரோசிடம் கையளிக்கப்படவில்லை.\nகொமொரோசு பல காலாச்சராங்களில் கலப்புக் காரணமாக ஏற்பட்ட தேசியமாதாலால் கலாச்சாரப் பல்வகைமையைக் கொண்டுள்ளது. இங்கு கொமொரிய மொழி, பிரெஞ்சு மொழி, அரபு மொழி என்பன அதிகாரப்பட்ச மொழிகளாகும். இது ஆப்பிரிக்க ஒன்றியம், அரபு லீக், இந்திய மாக்கடல் ஆணயம் போன்ற பன்னாட்டு அமைப்புகளிலும் அங்கத்தவராக உள்ளது.\nஆப்பிரிக்காவில் உள்ள நாடுகளும் பிராந்தியங்களும்\nசாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி\nபிரான்சு (மயோட்டே • ரீயூனியன்)\nஇத்தாலி (பந்தலேரியா • பெலாகி தீவுகள்\nஎசுப்பானியா (கேனரி தீவுகள் • செயுத்தா • மெலில்லா • இறைமையுள்ள பகுதிகள்)\nசெயிண்ட் எலனா, லாசென்சன் மற்றும் திரிசுத்தான் தா குன்யா\nசகாராவிய அரபு சனநாயகக் குடியரசு\nவிக்கித் திட்டம் நாடுகளின் அங்கமான நாடு பற்றிய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 ஏப்ரல் 2017, 19:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://danvantripeedam.blogspot.com/2017/06/sahasra-chandi-yagam-with-sapthasathi.html", "date_download": "2018-04-26T13:38:05Z", "digest": "sha1:EN6CCCUJ762MV46QZCKBOMP477BUTSL7", "length": 24749, "nlines": 401, "source_domain": "danvantripeedam.blogspot.com", "title": "Danvantri Peedam - Universal Peedam: Sahasra Chandi Yagam.", "raw_content": "\nகயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் உலக மக்களின் நலன் கருதி தனது தாயை குருவாக ஏற்று அவர்களின் அருளாணைப்படி உலக மக்களின் நோய் தீர்க்க வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப் பேட்டையில் தன்வந்திரி ஆரோக்ய பீடத்தை நிறுவி சமய பணி மற்றும் சமுதாய பணிகளை தினசரி செய்துவருகிறார். ஸ்வாமிகளிடம் ஆலோசனை பெற்று ஆசிபெற வேண்டுவோர் தொடர்புக்கு : 9443330203. E-Mail : danvantripeedam@gmail.com. State Bank of India, A/c No. : 10917462439. IFSC No. : SBIN0000775.\nவாலாஜா பேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்\nஇராகுகேது பெயர்ச்சி, ஆடிவெள்ளி மற்றும் ஆடிப்பூரம்\nமுன்னிட்டு 26.07.2017 முதல் 30.07.2017 வரை ஐந்து நாட்கள் நடைபெறுகிறது.\nவாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் சகஸ்ர சண்டி மகாயாகம்\nவேலூர் மாவட்டம் ,வாலாஜாபேட்டை அருகே ஔஷதகிரி என்றும் குபேர பட்டிணம் என்றும் ஆரோக்ய பீடம் என்றும் அழைக்கப்படும் தன்வந்திரி பீடம் அனந்தலை மதுரா கீழ்புதுப்பேட்டையில் 46 லட்சம் பக்தர்கள் கைப்பட எழுதிய 54 கோடி தன்வந்திரி லிகித ஜப மந்திரங்களை கொண்டு 9 அடி மூலவர் தன்வந்திரி பெருமாள், ஆரோக்ய லட்சுமி தாயார், ஐஸ்வர்ய ப்ரத்தியங்கிரா தேவி, 18 கைகளுடன் ஸ்ரீ மகிஷாசுரமர்த்தினி, போன்ற 73 தெய்வங்களுடன் மகான்களும் 468 சித்தர்கள் சிவலிங்க ரூபமாக கொண்டு மிகவும் இரம்மியமாக இயற்கை சூழலுடன் மூலிகை வாசத் ஸ்தலமாக அமைந்து உள்ளது.\nஷண்மத பீடமாக திகழ்கின்ற தன்வந்திரி பீடத்தில் தினசரி யாகத்துடன் அன்னதானம், மருத்துவ சேவை கோ பராமரிப்பு நடைபெற்று வருகிறது. ஆண்டு தோறும் பல்வேறு வகையான பிரம்மாண்ட யாகங்கள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக 365 நாட்கள் 365 விதமான யாகங்கள், சதசண்டீ யாகம், 365 நாட்கள் சண்டியாகம், 6000 கிலோ மிளகாய் வற்றல் கொண்டு மஹா ப்ரத்தியங்கிரா யாகம், லட்சம் நெல்லிக் கனிகளில் கனகதாரா யாகம், 10 லட்சம் ஏலக்காய்களை கொண்டு லட்சுமி ஐயக்ரீவர் யாகம், லட்சத்து முப்பத்திரண்டாயிரம் லட்டுகளை கொண்டு குபேர லட்சுமி யாகம், ஒரு லட்சம் மோதகங்களை கொண்டு வாஞ்சா கல்ப கணபதி யாகம், ஒரு லட்சம் தாமரை பூக்களை கொண்டு மஹா லட்சுமி யாகம், முப்பது லட்சம் தாமரை விதைகளைக் கொண்டு அஷ்ட லட்சுமி யாகம் 74 பைரவர் யாகம், 64 பைரவர் யாகம்,108 கணபதி யாகம், 468 சித்தர்கள் யாகம் 21 ஆயிரம் ஜாங்கிரியை கொண்டும் 11 ஆயிரம் வாழைப்பழத்தை கொண்டும் ஸ்ரீ ஆஞ்சநேயர் யாகம், 21 ஆயிரம் மாதுளை பழத்தை கொண்டு ஸ்ரீ மஹா காளி யாகம், 21 ஆயிரம் வில்வ காய்களுடன் ஸ்ரீ மஹா லட்சுமி யாகம் , ஒரு லட்ச ஜபத்துடன் ஸ்ரீ மஹா சுதர்சன யாகம், 24 மணி நேரமும் 27 யாகங்கள், லட்ச த்தி எட்டாயிரம் ஜபங்களுடன் நவகிரக ஹோமம்,நவ துர்கா ஹோமம், திருஷ்டி துர்கா ஹோமம், 2014 பூசணிக்காயை கொண்டு கூஷ்மாண்ட யாகம், அதி ருத்ரம், மஹா ருத்ரம், ஏகாதச ருத்ரம்,55 நாட்கள் 135 யாகங்கள் போன்ற பல்வேறு விதமான மஹாயாகங்கள் உலக நலன் கருதி நடைபெற்றுள்ளது. ஸ்ரீ தன்வந்திரி, சுதர்சன ஹோமம், ஸ்ரீ கார்தவீர்யார்ஜீனா ஹோமம், மஹா மிருத்யஞ்ச ஹோமம், கந்தர்வராஜ ஹோமம், சுயம்வர கலா பார்வதி யாகம், சந்தான கோபால யாகம், சத்ரு சம்ஹார ஹோமம், சூலினி துர்கா ஹோமம், தேய்பிறை அஷ்டமி யாகம், அமாவாசை யாகம், பௌர்ணமி யாகம், போன்ற கார்ய சித்தி ஹோமங்களும் மாதம் தோறும் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி நடைபெற்று வருகிறது.\nஇத்தகைய சிறப்புகளுடன் யக்ஞபூமியாக திகழும் ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் மனநோய், உடல் நோய் ,தீர்க்கும் வகையில் அம்மனுக்குரிய ஆடி மாதத்தை முன்னிட்டும் இராகு கேது பெயர்ச்சியை முன்னிட்டும் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாக வாழ வேண்டியும், இயற்கை சீற்றங்கள் ஏற்படாமல் இருக்கவும் நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும் என்ற வகையில் ஆயிரம் சண்டி மகா யாகம் என அழைக்கப்படும் சகஸ்ர சண்டி ஹோமம் நடைபெறுகிறது.\n26.07-2017 தேதி ஆடி மாதம் 10ம் தேதி புதன் கிழமை, ஆடி பூரம், திருவோண நட்சத்திரம் சதுர்த்தி கூடிய சுபதினத்தில் மாலை 4.30 மணிமுதல் கோ பூஜை விக்னேஸ்வர பூஜை, சண்டி தேவி கலச பூஜையுடன் தீப சண்டி பாராயணத்துடன் துவங்க உள்ளது.\n27.07.2017 தேதி ஆடி மாதம் 11ம் தேதி வியாழன் காலை 6.30 மணிமுதல் எல்லா காரியங்களும் தங்கு தடையின்றி வெற்றி பெறவும் நோய் நொடிகளின்றி நீண்ட ஆயுளை பெறவும் இராகு கேது பெயர்ச்சி யாகம், நவக்கிரக ஹோமம், மகா தன்வந்திரி ஹோமம்,மஹா சுதர்சனம், ஸ்ரீ தட்சிணாமூர்த்தி ஹோமம், ஸ்ரீ சரஸ்வதி, மிருத்ஞ்ஜய ஹோமம் தொடங்குகிறது. இரவு 7 மணிக்கு சண்டி ஆவரண பூஜை, அர்ச்சனை தீபாராதனை நடைபெறுகிறது.\n28.07.2017 தேதி ஆடி மாதம் 12ம் வெள்ளிக் கிழமை காலை 7.30 மணி முதல் இரவு 8 மணி வரை நினைத்த காரியங்கள் நடைபெறவும், 26 வகையான செல்வங்கள் கிடைக்கவும், குழந்தை இல்லாத தம்பதியர்கள் மட்டும் கலந்து கொள்ளும் புத்திரகாமேஷ்டி ஹோமம், தங்கு தடையின்றி பெண்களுக்கு திரு மணம் நடைபெற வேண்டி ஸ்வயம்வரா பார்வதி ஹோமம், ஆண்களுக்கு கந்தர்வ ராஜ ஹோமம், ஸ்ரீ மஹா லட்சுமி யாகம், காலபைரவர் ஹோமம் அதை தொடர்ந்து சதுர் சஷ்டி பைரவ பலி பூஜை நடைபெறுகிறது.\n29.07.2017 தேதி ஆடி மாதம் 13ம் தேதி சனிக் கிழமை காலை 7.30 மணி முதல் இரவு 8 மணி வரை ஹோரம்ப கணபதி ஹோமம், அதை தொடர்ந்து ஆயிரம் சண்டி மகா ஹோமம் தொடங்குகிறது. இரவு 7 மணிக்கு அம்பாளின் சிறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. 30.07.2017-ந்தேதி ஆடி மாதம் 14 ந் தேதி ஞாயிற்று கிழமைகாலை 7 மணி முதல்\nஇரவு 8 மணி வரை சகல சௌபாக்கியங்கள் வேண்டி வாஞ்ஜா கல்பலதா கணபதி ஹோமம், தசமஹா வித்யா ஹோமம் . ஸ்ரீசாக்த உபாசகர்களைக் கொண்டுநடைபெறுகிறது.\nதன்வந்திரி பீடம் ஸ்தாபகர் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி தன்வந்திரி பக்தர்கள், தன்வந்திரி குடும்பத்தினர் மற்றும் நிர்வாகிகள் இந்த யாகத்திற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். யாகம் நடைபெறும் 5 நாட்களிலும் பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானமும் நடைபெறுகிறது.\nஇதுபற்றி ஸ்தாபகர் டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் கூறுகையில், ஆயிரம் சண்டி யாகம் என அழைக்கப்படும் சகஸ்ர சண்டி யாகம் மன்னர்களும், அரசர்களும், நாட்டின் நன்மைக்காக செய்து வந்தனர். இதன் பெருமை மக்களுக்கு தெரியப்படுத்த மவுரிய பேரரசு காலத்திலும் அதன்பின் மைசூர் அரசன் காலத்தில் காஞ்சிபுரம், மதுரை, புதுக்கோட்டை ஆகிய நகரங்களிலும் 1963-ம் ஆண்டு நடந்துள்ளது. அதை தொடர்ந்து அன்புடன் உலக மக்கள் ஆரோக்யத்துடன் சகலஐஸ்வரியம் பெற்று இறையருளுடன் ஆனந்தமாய் வாழ வேண்டி வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் 5 நாட்கள் ஸ்ரீ சகஸ்ர சண்டி ஹோமம் நடைபெறுகிறது என்றார்.\nதன்வந்திரி பீடத்தில் குருபெயர்ச்சிவிழா வரும் ஆகஸ்டு 02 மற்றும் 11ம் தேதிகளில் நடைபெறுகிறது.\nமே 1ஆம் தேதி முதல் 48 நாட்களுக்கு மங்களங்கள் நல்கு...\nவேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டைதன்வந்திரி பீடத்தில்ஆ...\n5000 கிலோ மிளகாய் யாகம் (1)\n5000 கிலோ மிளாகாய் கொண்டு நிகும்பல யாகம் (1)\nசங்கடஹர கணபதி ஹோமம் (1)\nசத்ரு ஸம்ஹார ஹோமம் (1)\nதச பைரவர் யாகம் (1)\nதிருமணத் தடை நீங்க (1)\nதிருஷ்டி துர்கா ஹோமம் (1)\nபடியுங்கள் தன்வந்திரி விஜயம் (1)\nபத்து பைரவர் யாகம் (1)\nமஹா சிவராத்திரி 2018 (2)\nமுரளிதர ஸ்வாமிகள் ஜெயந்தி (1)\nராமகிருஷ்ண பரமஹம்சர் 182வது ஜெயந்தி (1)\nலக்ஷ்மி நரசிம்மர் ஹோமம் (1)\nவாஞ்சா கல்பலாதா ஹோமம் (1)\nவாழை பூ பூஜை (1)\nஸ்ரீ தன்வந்திரி ஜெயந்தி (1)\nஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் ஹோமம் (1)\nஹயக்ரீவர் ஜெயந்தி 2017 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.manithan.com/cinema/04/157121", "date_download": "2018-04-26T13:32:52Z", "digest": "sha1:PCODAMBAMQGN333UHCWMFHFUTF3MT7BQ", "length": 11927, "nlines": 157, "source_domain": "www.manithan.com", "title": "காலில் விழ சென்ற ரசிகரை அதிர்ச்சியாக்கிய சூர்யாவின் செயல்! - Manithan", "raw_content": "\nவெட்டப்பட்ட மனைவியின் தலையுடன் தெருவில் நடந்து சென்ற கணவன்: அதிர வைக்கும் சம்பவம்\nஇளவரசர் ஹரியின் திருமணத்தில் மணப்பெண் தோழியாகும் உலக அழகி\nஜெயலலிதா வழக்கில் திடீர் திருப்பம்\nஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுலா செல்ல வேண்டுமா விரைவில் வரவிருக்கும் புதிய சட்டம்\nஅஜித்தின் மனைவி ஷாலினியின் பகையாளி யார் தெரியுமா\n பல ஆண்டுகளுக்கு பின் பாத்திமா பாபு விளக்கம்\nஇத்தனை வயதில் பிரபல நடிகை கௌசல்யாவுக்கு கல்யாணமாம்\nசர்வதேச இளம் இளம் விஞ்ஞானிகளுக்கான போட்டியில் இலங்கை 3 தங்கப்பதக்கம்\nமரணத்தின் பிடியிலிருந்து அஜீத்தை மீட்டெடுத்த ஷாலினி கசந்து போன வாழ்வில் உயிர்த்தெழுந்த காதல்\nசிவகார்த்திகேயனால் தொகுப்பாளினி பாவனா அனுபவித்த கொடுமை\nபிள்ளைகள், பெற்றோர்களை கொடூரமாக கொலை செய்த பெண் காரணத்தை கேட்டால் அதிர்ந்து போயிடுவிங்க\nஇந்த 3 ராசியில உங்க ராசி இருக்குதா.. இந்த ஆண்டில் கோடீஸ்வர யோகம் இதற்குத் தானாம்\nமனைவியை நண்பர்களுடன் உறவு வைக்க கட்டாயப்படுத்திய கணவன் - இறுதியில் நடந்ததை பாருங்கள்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\n31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்\nயாழ். சரசாலை, கனடா Toronto\nகாலில் விழ சென்ற ரசிகரை அதிர்ச்சியாக்கிய சூர்யாவின் செயல்\nலட்சக் கணக்கில் ரசிகர்களை வைத்துள்ளவர் நடிகர் சூர்யா.அஜித் விஜய் என பல நடிகர்களுக்கு ரசிகர்கள் இருந்தாலும், சூர்யாவுக்கு என ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது.\nதற்போது, விக்னேஷ் சிவன் இயக்கத்தில்,சூர்யா நடித்து வெளிவரவுள்ள படம் தானே சேர்ந்த கூட்டம்...இந்த படம் திரைக்கு வர உள்ளது.\nஇதற்கான புரமோஷன் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில்,சூர்யா ரசிகர்கள் உற்சாகமாக கலந்துக் கொண்டனர்.\nஅப்போது, சூர்யாவை பார்த்த ரசிகர்கள் ஓடி போய் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கியுள்ளனர்.\nரசிகர்கள் தன் காலில்,விழுந்து ஆசிர்வாதம் வாங்க வருவதை பார்த்த ,நடிகர் சூர்யா இமைப்பொழுதில்,ரசிகர் காலில் விழுந்து,தயவு செய்து இது போன்று காலில் விழுந்து வணங்குவதை விட்டுவிடுங்கள் என கேட்டுக் கொண்டுள்ளார்.\nஇதனை பார்த்த மற்ற ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.பின்னர் ரசிகர்கள் காலில் விழுவதை விட்டுவிட்டு அமைதியான முறையில், ஜாலியாக உற்சாகத்துடன் சூர்யாவுடன் போட்டோ எடுத்துள்ளனர்.\nஉடல் எடையை மிக வேகமாக குறைக்க இந்த ஒரு பொருள் போதும்\nசோகத்தில் இருந்த நடிகர் வடிவேலுவிற்கு அடுத்தடுத்து அடித்த அதிஷ்டம்\nமனைவியை நண்பர்களுடன் உறவு வைக்க கட்டாயப்படுத்திய கணவன் - இறுதியில் நடந்ததை பாருங்கள்\nஐ.தே.க. செயற்குழு கூட்டத்தில் சிக்கல்\nசட்ட விரோதமாக மண் அகழும் இடங்களைப் பார்வையிட்டார் மன்னார் நகர முதல்வர்\nமத்திய வங்கியின் அறிக்கை நிதியமைச்சரிடம் கையளிப்பு\nதொழிலாளர் தினத்தை மே முதலாம் திகதி கொண்டாடவுள்ளது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு\nபள்ளிமுனை கடற்கரையில் உள்ள மீன் வாடிகளில் இருந்து கைப்பற்றப்பட்ட ஒரு தொகை மீன்கள்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா் விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthinappalakai.net/2017/05/07", "date_download": "2018-04-26T12:59:19Z", "digest": "sha1:FF4E6PWDQ2S5J46YRVVTRSBUJKCDSTBJ", "length": 10449, "nlines": 109, "source_domain": "www.puthinappalakai.net", "title": "07 | May | 2017 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nசலாவ வெடிவிபத்து – இளநிலை அதிகாரிகள் கைது செய்யப்பட்டதால் இராணுவத்துக்குள் குழப்பம்\nசலாவ இராணுவ ஆயுதக் களஞ்சிய வெடிவிபத்து தொடர்பாக சிறிலங்கா இராணுவத்தின் மூன்று இளநிலை அதிகாரிகள் கைது செய்யப்பட்டமை சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.\nவிரிவு May 07, 2017 | 12:09 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\n24 மணிநேரம் வரையே சிறிலங்காவில் தங்கியிருப்பார் இந்தியப் பிரதமர்\nஎதிர்வரும் வியாழக்கிழமை சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 24 மணி நேரம் வரையே அங்கு தங்கியிருப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவிரிவு May 07, 2017 | 11:52 // இந்தியச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nசிறிலங்காவின் மனித உரிமைகள் விவகாரமும் வர்த்தக தொடர்பும்\nமே 2009ல் முடிவிற்கு வந்த, சிறிலங்காவின் உள்நாட்டுப் போரின் வடுக்கள் நாட்டின் கிழக்குக் கரையோரத்தில் அமைந்துள்ள மட்டக்களப்பு நகரம் மற்றும் அதன் புறநகர்க் கிராமங்களிலும் இன்னமும் தொடர்கின்றன.\nவிரிவு May 07, 2017 | 7:52 // நித்தியபாரதி பிரிவு: கட்டுரைகள்\nகூட்டமைப்பில் வலுவடையும் கருத்து வேறுபாடுகள்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பகிரங்கமாக வெளியிட்ட கருத்துக்களை அடுத்து, கூட்டமைப்புக்குள் கருத்து வேறுபாடுகள் வலுவடைந்துள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nவிரிவு May 07, 2017 | 7:33 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nசனியன்று சீனா செல்கிறார் சிறிலங்கா பிரதமர்\nசிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வரும் மே 13 ஆம் நாள் சீனத் தலைநகர் பீஜிங்கிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.\nவிரிவு May 07, 2017 | 7:16 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nஅம்பாந்தோட்டை துறைமுக உடன்பாட்டில் மீண்டும் திருத்தம் – குத்தகைக் காலம் குறைப்பு\nஅம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவின் மேர்ச்சன்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்கும் உடன்பாட்டில் மேலும் பல திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nவிரிவு May 07, 2017 | 7:13 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஎண்ணெய்த் தாங்கிகள் இந்தியாவுக்கு குத்தகைக்கே வழங்கப்படும் – சிறிலங்கா பிரதமர்\nதிருகோணமலை எண்ணெய்த் தாங்கிகள் இந்தியாவுக்கு குத்தகைக்கே வழங்கப்படவுள்ளதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சிறிலங்காவின் தேசிய சொத்துக்களை தற்போதைய அரசாங்கம் வெளிநாடுகளுக்குனு விற்பனை செய்வதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர்-\nவிரிவு May 07, 2017 | 3:31 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் இரா.சம்பந்தன் – ‘சேர் பொன். இராமநாதனின் மறுஉருவம்’\t0 Comments\nகட்டுரைகள் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு யார் காரணம்\nகட்டுரைகள் சிறிலங்கா: மகிந்தவுக்காக திறக்கப்படும் கதவுகள்\t0 Comments\nகட்டுரைகள் ஐ.நாவின் மனிதஉரிமைச் செயற்பாடுகளைப் பலவீனப்படுத்தும் ரஷ்யா, சீனா\t0 Comments\nகட்டுரைகள் சீனாவின் இறுக்கமான பிடியில் சிறிலங்காவின் அமைதியான துறைமுகம்\t1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுக்கு எதிரான வியூகத்தில் சிறிலங்காவின் பௌத்த பிக்குகளையும் இணைக்கிறது இந்தியா\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்திய மாக்கடலில் அதிகரிக்கும் சீனாவின் செல்வாக்கும் – இந்தியாவின் முத்தரப்பு கடற்பாதுகாப்பு ஒப்பந்தமும்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t0 Comments\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t2 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.sahabudeen.com/2018/02/blog-post_15.html", "date_download": "2018-04-26T13:14:08Z", "digest": "sha1:GM7LRKLSWWSNB4LVBIIMNINA27FUTCX2", "length": 16965, "nlines": 212, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: ஒரு ஊஞ்சலில் இவ்வளவு விசயமா!", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nஒரு ஊஞ்சலில் இவ்வளவு விசயமா\nஒரு ஊஞ்சலில் இவ்வளவு விசயமா\nஊஞ்சல் ஆடுவது எல்லோருக்கும் பிடித்த விஷயம். வீடடில் இருக்கும் உபகரணங்களிலே பெண்களுக்கு அதிக மகிழ்ச்சியைத் தரக் கூடியது ஊஞ்சல்தான். முன்பெல்லாம் ஊருக்கு வெளியே ஆலமரத்தில் ஊஞ்சல் கட்டி பெண்கள் ஆனந்தமாக ஆடினார்கள். பின்பு படிப்படியாய் அது குறைந்து, காணாமல் போய்விட்டது.\nஇந்த ஊஞ்சல் ஆட்டம் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, மன ஆரோக்கியத்திற்கும் ஏற்றது. அதனால் தான் வீடுகளில் தவறாமல் ஊஞ்சல் அமைக்கிறார்கள். இடவசதி குறைவாக உள்ளவர்களும் வாங்கி பயன்படுத்தும் வகையில் ஊஞ்சல்கள் வடிவமைக்கப்பட்டு இப்போது விற்பனைக்கு வருகின்றன.\nஊஞ்சலில் ஆடுவதால் மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் மறைந்து பாசிடிவ் எண்ணங்கள் தோன்றுகிறது. மகிழ்ச்சி பெருகி எதிர்காலத்தைப் பற்றிய வளமான எண்ணங்களும் தோன்றுகின்றன. ஊஞ்சல் ஆடுவதால் மனச்சோர்வு நீங்கி உடல் உற்சாகம் பெறுகிறது.\nநேராக அமர்ந்து கைகளை உயர்த்தி இரு பக்க சங்கலிகளையும் பிடித்துக்கொண்டு வேக மாக ஆடும் போது முதுகுத்தண்டுக்கு ரத்த ஓட்டம் படர்ந்து மூளை சுறு சுறுப்பாகிறது.\nஇது ஒரு நல்ல பயிற்சி\nகம்ப்யூட்டரில் மணிகணக்கில் உட்கார்ந்து முதுகுத்தண்டு வளைந்துப் போன இன்றைய பெண்கள் இந்த ஊஞ்சல் பயிற் சியை தினமும் செய்தால் முதுகுத்தண்டு வடம் பலம் பெற்று கழுத்துவலி குண மடைய வழி செய்கிறது.\nதோட்டத்தில் அமைக் கப்பட்டிருக்கும் ஊஞ்சலில் ஆடுவது அதிக பலனை தரக் கூடியது.\nமரம் செடிகளிலிருந்து வரும் பிராணவாயு வேகமாக உடல் முழுவதும் பரவி ரத்தத்தை சுத்திகரிக்கும்.\nஇதயத்திற்கு சுத்தமான பிராண வாயுவை கொடுத்து இதயத்தை சீராக இயங்கச் செய்யும்.\nதினமும் தோட்டத்தில் ஊஞ்சல் ஆடுவர்களுக்கு இதயநோய் கட்டுப்படும்.\nஊஞ்சல் ஆடுவதால் உடலில் ரத்த ஓட்டம் அதிகரித்து இதயத்திற்கு ரத்தம் சீராக செல்லும்.\nசாப்பிட்டவுடன் அரைமணிநேரம் மிதமான வேகத்தில் ஊஞ்சல் ஆடுவது நல்லது.\nசாப்பிட்ட உணவு நன்கு செரிக்க இந்த ஆட்டம் உதவும்.\nகோபமாக இருக்கும் போது ஊஞ்சல் ஆடினால் கோபம் தணியும்.\nவெளியில் சுற்றியலைந்துவிட்டு வந்து ஊஞ்சலில் உட்கார்ந்து கண்களை மூடி தலையை சற்றே மேலே உயர்த்தி, இரு கைகளையும் ஊஞ்சல் பலகையில் பதியவைத்து ரிலாக்ஸாக ஆடினால் களைப்பெல்லாம் பறந்து, உடலின் ஒவ்வொரு பகுதியும் ஓய்வு பெற்று நிம்மதி ஏற்படும்.\nபழங்காலத்தில் எல்லா வீடுகளிலும் வரவேற்பறையில் ஊஞ்சல் கட்டி வைத்திருப்பார்கள்.\nஇல்லத்திற்கு அழகு சேர்க்கும் கலைப்பொருட்களில் ஊஞ்சலும் ஒன்று.\nசங்கிலியால் பிணைக்கப்பட்ட பெரிய பலகைகளை கொண்ட ஊஞ்சல். இது பழையகால ஊஞ்சல் என்றாலும் இதில் ஆடும்போது திரில் அதிகம்.\nநவீன வகை ஊஞ்சல்கள் \"சோபா\" வகையை சேர்ந்தது. அமர்ந்து ஆட வசதியாக இருக்கும்.\nதோட்டம் திறந்த வெளிகளுக்கு மெட்டல் ஊஞ்சல்கள் ஏற்றது.\nமூங்கில் ஊஞ்சல்கள் பால்கனி படுக்கை அறைகளுக்கு ஏற்றது.\nமூங்கில் எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும் அதனால் வெயில் காலங்களில் குளிர்ச்சியை உடலுக்கு தர வல்லது.\nகுறுகலான இடத்தில் ஊஞ்சல்கள் அமைக்கக் கூடாது.\nகாற்றோட்டமான இடத்தில் தாராளமான இடவசதி உள்ள இடத்தில் ஊஞ்சல்கள் அமைப்பதே நல்லது.\nகூடுமானவரை ஜன்னல்கள் அருகே ஊஞ்சல் அமைப்பது நல்லது.\nரம்மியமான சூழ்நிலையில் ஊஞ்சல் அமைத்தால் இளைப்பாற வசதியாக இருக்கும்.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com\nசொந்த கார் Vs வாடகை கார் எது பெஸ்ட்\nஇரண்டாவது திருமணம் செய்யப்போகும் பெண்களுக்கான 8 வி...\nஹெல்த்தியாக இருக்க 20 வழிகள்\nமனைவி கணவனிடம் எதிர்பார்க்கும் 37 விசயங்கள்...\nஎதனுடன் எதை சேர்த்து சாப்பிடக் கூடாது\nகுடும்பத் தலைவிகள் செய்யவே கூடாத 8 தவறுகள்\nஒரு ஊஞ்சலில் இவ்வளவு விசயமா\nசிறுநீர் கல்லடைப்பு – இயற்கை முறை சிகிச்சை\nகருவறைக்குள் சிசு செய்யும் லூட்டிகள்\nபித்தப் பையில் கல் உண்டாவது ஏன்\nநம் துஆக்கள் ஏன் கபூலாவதில்லை\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nதேனை தனியாக சாப்பிட்டால் பலன்--- மருத்துவ டிப்ஸ்\nதேன் சீரண சக்தியை தரும். இரைப்பையில் ஏற்படும் எல்லாவித கோளாறுகளையும் வயிற்றில் ஏற்படும் கோளாறுகளையும் குணமாக்கும். நெஞ்சில் ஏற்படும் எரிச்...\n‘ பாட்டி வைத்தியம் ’ சொன்ன பாட்டியிடமிருந்து ‘ வைத்திய ’ ரிலே கட்டையை கைப்பற்றியிருக்கும் பாட்டியும் , நல்ல அனுபவசாலி\nஉடலை சார்ஜ் செய்வது எப்படி\nஉடலை சார்ஜ் செய்வது எப்படி பாகம் - 2 முந்தைய பதிவில் நம் உடலை ஏன் சார்ஜ் செய்ய வேண்டும் , அதனால் உண்டாகும் பலன்கள் என்னென்ன என்...\nஅதிகாலையில் தண்ணீர் பருகினால் பல வியாதிகளைக் குணப்படுத்த முடியும் \nதினமும் காலையில் தூக்கத்தில் இருந்து எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவது ஜப்பானில் இப்போது பிரபலமாகி வருகிறது. இங்கு தரப்பட்டி...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nஉங்கள் உடல் எடை ஏழு நாட்களுக்குள் ஐந்து கிலோ எடை குறைய...\nகீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த அட்டவணை மிகப் பிரபலமான உணவு அட்டவணை. ஏழு நாட்களுக்கு இந்த அட்டவணையைப் பயன்படுத்தினால் , உங்கள் எடையில் சராசரி...\nநபிமார்கள் பற்றிய அரிய தகவல்கள்\nநபிமார்கள் மனிதர்களில் மாண்புடையவர்கள்.இவர்கள் அல்லாஹ்வின் வாக்கே உலகில் மேலானது. இறைவனல்லாத ஏனையோரின் வாக்கு கீழானது என்னும் தாரகமந்திரத்...\n கல்யாணம் ஆயி பல வருசம் ஆச்சு. இன்னும் வண்டி மக்கர் பண்ணுதே என்று மனசுக்குள்ளே குமையும் நம்ம குரூப் மக்களே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.siddharyogam.com/discussion/Horroscope-trueornot", "date_download": "2018-04-26T13:41:51Z", "digest": "sha1:4XGUSCUPCOU3BX3APUKAVQOZH3FNF47B", "length": 9487, "nlines": 134, "source_domain": "www.siddharyogam.com", "title": "ஜோசியம் பொய்யா? யாத்திரை வீனா? - சித்தர் யோகம்", "raw_content": "\nமுருகன் பற்றி பகுதி 1\nசித்தர்கள் காலப் பயணம் [Time Travel]\nசித்தர்கள் பிரபஞ்ச பயணம் [Space Travel] - பகுதி 1\nசித்தர்கள் பிரபஞ்ச பயணம் [Space Travel] - பகுதி 2\nசித்தர்கள் பிரபஞ்ச பயணம் [Space Travel] - பகுதி 3\nசித்தர்கள் பிரபஞ்ச பயணம் [Space Travel] - பகுதி 4\nசித்தர்கள் பிரபஞ்ச பயணம் [Space Travel] - பகுதி 5\nசித்தர்கள் செய்யும் உடல் தங்கம்\nசித்தர்கள் பிரபஞ்ச பயணம் [Space Travel] - பகுதி 6\nசித்தர்கள் பிரபஞ்ச பயணம் [Space Travel] - பகுதி 7\nசித்தர்கள் பிரபஞ்ச பயணம் [Space Travel] - பகுதி 8\nபெண் சித்தர்கள் - வாசுகி\nபாடம் 10 சந்தேகம் விளக்கம்\nபாடம் 13 சந்தேக விளக்கம்\nவாசி யோக விளக்கம் 4\nவாசி யோக விளக்கம் 5\nவாசி யோக விளக்கம் 6\nவாசி யோக விளக்கம் 7\nவாசி யோக விளக்கம் 8\nவாசி யோக விளக்கம் 9\nவாசி யோக விளக்கம் 10\nசித்தியும் ,முக்தியும் பெற இல்லறம் தடையா\nதோஷம் ,பரிகாரம் இதெல்லாம் உண்மையா\nபரிகாரம் செய்தால் தோஷம் போய்விடுமா\nஜாதகம் கர்மாவால் ஏற்படும் போது கோவிலில் சென்று செயும் பரிகார கள் நமது தோசத்தை போக்குமா\nநாம் கும்பிடும் தெய்வங்கள் , பூஜைமுறைகள் ஜோதிடம் ஆகியவை .\nபக்தி யோகா வழியாகும் இது சரியை கிரியை என்ற அனுபவத்தையும் நம்பிக்கையும் சார்ந்தது .\nவேதாந்த வழி யாகும் மக்கள் துன்பநிலையில் இருந்து விடுபட்டு மகிழும் படி செய்பவை . இங்கு அறிவை விட அனுபவம் மேலோங்கும் .. இந்த அடிப்படையில் அமைத்தது ஜோசியமும் பரிகாரமும்\nசனி தோசம் போக்க திருனள்ளறு,\nராகு கேது தோஷம் போக்க திரு நாகஸ்வரம் .\nநவக்கிரக தோஷம் போக்க சூரியனார் கோவல் ,\nகுரு பார்வை பெற பட்டமங்கலம், பிச்சண்டர் கோவில்\nஎல்லா பாவம்களை போக்க காசி , கைலாயம் ,ராமேஸ்வரம்\nஆகிய கோவில்களில் பரிகாரம் பூஜை செய்கிறோம்\nநம்ம்பிக்கை உள்ளவர் செய்கிறார் . . இத்தகை யவர் 90% க்கும் அதிகம் . நான்கு பக்கம் துன்பம் வந்தால் நாத்தி கற்கும் தெய்வம் உண்டு .அவரை தவறு என்று சொல்ல முடியாது\nநீங்கள் கேட்டது அறிவு சார்ந்தது. அறிவியலை அடிப்படையாக கொண்டது .இது சித்தாந்தம் என்பது . சித்தர் வழி . யோகமும் ஞானமும் சித்தாந்த வழி ... சரியை கிரியை ஆகியவற்றை கடந்தவர்களே சித்தாந்திகள் , யோகிகள் ,சித்தர்கள் . மக்களில் மிக குறைவு ...\nஉங்கள் கேள்விக்கு சித்தர் களின் பதில் ::\nகூறுவேன் லோகதி மா ந்தறெல்லாம்\nமாறுதலாம் பொய் யன்றி மெய் யொன்றில்லை\nபாடல் 902 5 ஆம் காண்டம் அகத்தியர் பெரு நூல் 12000 தொடக்கி\nஅதை நிருபிக்க 10 பாடல்கள் பாடியுள்ளர்\nஅகத்தியர் 912 ஆம் padalil பரிகாரம் சொல்ல்கிறார், அப்பாடல்\nதேடியாதோர் விதி போலே அமைககும்மபபா\nதெளிவு அறிந்த ஞானிகள் தன அறிவரப்ப\nநாடியே தேவ வழிபாடு கண்டு\nநலமுடனே இருந்தவருக்கு எல்லாம் சித்தி .\nஜோசியம் பொய் . இதை அறிவு உள்ள ஞானி அறிவார்கள் , நீங்கள் செய்த கரியங்களின்படி நடக்கும் .தேவவழிபாடு செய்யுங்கள் . எல்லாம் வெற்றியாகும்\nகோவில் குளம் போவதால் வினை தீராது ... பாடல் 837 , அகத்தியர் 2000 காண்டம் 5 பாடல் 837\nயாத்திரை தான் போனதினால் ஆவதென்ன\nஅறிவில்லா கொடுமை ............................................பாடல் 272 அகத்தியர் சௌமிய சகரம் \nயோகி வே. இராஜா கிருஷ்ண மூர்த்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilthottam.in/t45823-topic", "date_download": "2018-04-26T13:07:19Z", "digest": "sha1:3ANZYFSEVPRSCHIJJ5OKMCEF7YOIIGC2", "length": 24432, "nlines": 139, "source_domain": "www.tamilthottam.in", "title": "களிற்றின் நாணம்", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» டி20 போட்டிகளில் கேப்டனாக 5 ஆயிரம் ரன்களை கடந்து டோனி சாதனை\n» டென்னிஸ் வீரர்கள் ரோகன் போபண்ணா, யூகி பாம்ப்ரி பெயர்கள் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை\n» இந்த உலகத்துல நல்லவங்க, கெட்டவங்கன்னு யாரும் இல்ல....\n» வாசகர் கவிதை - தொடர் பதிவு\n» எதுக்காக உன் காதலியை கிணத்துல தள்ளிவிட்டே...\n» குற்றத்திற்கும் நீதிக்கும் உள்ள உறவு...\n» நரசிம்மர் பற்றிய 30 வழிபாட்டு குறிப்புகள்\n» அமர்நாத் யாத்திரை ஜூன் 28-ம் தேதி தொடங்குகிறது\n» சருமப் பிரச்னைக்கு மாம்பழம் -\n» ‘சிற்றெறும்பு கட்டெறும்பு’ - கமல்ஹாசன், அமைச்சர் ஜெயக்குமார் வார்த்தை ஜாலத்தால் ஒருவருக்கொருவர் கிண்டல்\n» 5,000 குஜராத் விவசாயிகள் தற்கொலைக்கு மனு\n» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்\n» அமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி\n» இந்தியர்களை பாதிக்கும் ‘எச்-4’ விசா ரத்து நடவடிக்கைக்கு அமெரிக்க எம்.பி.க்கள் எதிர்ப்பு, ஐ.டி. துறையும் கண்டனம்\n» பலாத்காரத்துக்கு ஆளாகும் ஆண் குழந்தைகளுக்கும் இழப்பீடு'\n» நிலக்கரியை விட கருப்பாக இருக்கும் கிரகம் கண்டுபிடிப்பு\n» பிரபல பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி மரணம்: கமலுக்கு முதல் பின்னணிப் பாடல் பாடியவர்\n» உறவு முன்னே...ப்ராப்ளம் பின்னே...\n» கவர்ச்சி நடிகைகிட்ட பிடிச்சது, அவரோட நடிப்பு...\n» 2 மணி நேரம் பொறுக்க முடியாதா கஸ்தூரி..\n» தமிழில் காலூன்ற தடுமாறும் பிறமொழி நடிகர்கள்\n» பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்\n» வாழ்க்கையை ஓஹோன்னு வாழ கன்ஃபூசியஸ் சொன்ன 10 கட்டளைகள்...\n» இரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு\n» ரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது: மக்கள் மன்ற மாநில செயலாளர் பேச்சு\n» தாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து\n» காங்., கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக்கறை: சல்மான் குர்ஷித் சர்ச்சை\n» நாடு முழுவதும் 24 போலி பல்கலை.,கள்\n» உ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்\n» சுப்ரீம் கோர்ட் எதிர்காலம்: ஆலோசிக்க நீதிபதிகள் கோரிக்கை\n» 2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்: ஜூன் 16-ம் தேதி இந்தியா-பாக். மோதல்\n நூல் ஆசிரியர் : முனைவர் பேராசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி\n» சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து\n» உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி\n» தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்\n» பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது\n» கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு\n» கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்\n» கிறிஸ்தவ பெண்ணுக்கு திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் பதவி: நடிகை ரோஜா கண்டனம்\n» கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன\n» கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி\n» கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு\n» நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nதமிழ்த்தோட்டம் :: கவிதைச் சோலை :: சொந்தக் கவிதைகள்\nசங்ககாலத்தில் தமிழர்களிடம் மட்டுமன்றி அவர்கள் வளர்த்த விலங்குகளிடமும் மறமாண்பும், மான உணர்வும், நாணமும் இருந்தன என்பதற்கு முத்தொள்ளாயிரப் பாடல் சான்றாக விளங்குகிறது.\nசோழ மன்னன் பகை நாட்டின் மீது படையெடுத்து வாகை சூடினான். வீரத்திலகமிட்டு வெற்றி முத்தம் பதித்து சென்றுவா வென்றுவா என மறத்தமிழச்சிக்கேயுரிய அந்தத் தன்மான உணர்ச்சியிலே, வாழ்த்து கூறி விடை கொடுத்த மனைவிமார்கள் பகை வென்று திரும்பும் தம் கணவர்மார்களை வரவேற்க வீட்டு வாயிற்படியிலேயே ஆவலும், ஆசையும் ததும்பக் காத்திருக்கின்றனர்.\nஅன்றிரவு, பிரிந்த இடை நாள்களுக்கும் சேர்த்து இன்பப் பரிமாற்றங்கள் நடைபெறுகின்றன. மார்பிலே பட்ட அம்பு முனைகளின் வேதனையை மனைவிமார்கள் தங்கள் கொங்கை முனைகளிலே வேது செய்து ஆற்றுகின்றனர். போர்க்களப் புழுதிபட்டும், வியர்வையிலே உப்பாகக் காய்ந்திருக்கும் உதடுகளில் தங்கள் கொவ்வை இதழ்களைப் பதித்துத் தேன் சுவையை ஊட்டுகின்றனர். குதிரைகளின் கடிவாளத்தையும், வாட்களின் பிடிகளையும் பிடித்து உரமேறிய கைகளுக்கு மலரினும் மென்மையுடைய தம் மேனியைத் தருகின்றனர். போர்க்களத்திலே மனத்தில் கொடுமையையும், விழிகளில் கனலையும் கக்கிய தம் கணவன்மார்களை இன்ப குளம் நோக்கி அழைத்துச் செல்கின்றனர்.\n வெற்றிக் கூத்திலே இவர்களெல்லாம் மகிழ்ச்சி வெள்ளத்தில் தம்மையே மறந்து விளையாடிக் கொண்டிருக்கும் அந்த வேளையில், வெற்றிக்குத் துணைநின்ற ஓர் உள்ளம் தன் அன்பு காதலியைக் காணமுடியாமல் ஓரத்தில் ஒதுங்கி நிற்கிறது. போருக்குச் சென்ற மறவர்களில் காலிழந்தும், கையிழந்தும் திரும்பிய வீரர்களும் தம் மனைவிமார்களுடன் கூடிக் குலாவுகையில்1 வெற்றிக்கே மூலமாய் நின்று, வீர விழுப்புண்கள் பல ஏற்றுத்தம் மன்னனையே காத்த அந்த ஐந்தறிவு உள்ளம் மட்டும் ஏனோ தனித்து நிற்கிறது.\n அந்தக் களிறு போர்க்களத்தில் மறவர்களாலும் இடிக்க முடியாத மதில்களை தம் கிம்புரிக் கொம்புகளால் இடித்துத் தள்ளியது. அவ்வாறு இடிக்குங்கால் கிம்புரியொடு கொம்பும் ஒடிந்தது. அத்துடன் விட்டதா இல்லை மதிலை அழித்து உள்ளே சென்று பகைமன்னரைப் பாய்ந்து தள்ளிக் காலால் இடறிக்கொண்டே போகிறது. அப்படி போனதால் கால்நகமும் தேய்ந்து போயின. கால்நகமும், கொம்பும் சென்றபுன்பும் தம் மன்னரைத் தாங்கி எதிர்வந்த பகையினைத் தங்கையால் தடுத்து வெற்றியைத் தந்தது.\nபோர்முடிந்து அனைவரும் வீடு திரும்பினர். ஆனால் இந்தக் களிறோ கொம்பும், நகமும் இழந்த கோலத்தில் பிடி முன்பு செல்ல நாணியது. தம்பிடி முன்பு சென்றால் கொம்பும், நகமும் இழந்த இக்கோலத்தைக் கண்டு எள்ளி நகையாடுமே கொம்பும், நகமும் இழந்த கோலத்தில் பிடி முன்பு செல்ல நாணியது. தம்பிடி முன்பு சென்றால் கொம்பும், நகமும் இழந்த இக்கோலத்தைக் கண்டு எள்ளி நகையாடுமே மதிலை விடத் தம்கொம்புகள் உரமற்றவை எனக் கேலிபேசுமே என்ற வெட்கத்தால் தன்பிடியினைக் காணாமல் மூலையிலே ஒதுங்கி நிற்கிறது.\n அக்காலத்தில் தமிழர்களுக்கு மட்டுமன்றி அவர்களால் வளர்க்கப்பட்ட விலங்குகளுக்கும் தனமான உணர்ச்சி இருந்ததைத்தான் இக்களிறு நமக்குக் காட்டுகிறது.\nஇத்தகு இன்பமிகு காட்சியைக் காட்டும் பாடல்.\nகொடிமதில் பாய்ந்திற்ற கோடும் அரசர்\nமுடியிடறித் தேய்ந்த நகமும் - பிடிமுன்பு\nபொல்லாமை நாணி புறங்கடை நின்றதே\nதமிழ்த்தோட்டம் :: கவிதைச் சோலை :: சொந்தக் கவிதைகள்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/28206", "date_download": "2018-04-26T13:12:44Z", "digest": "sha1:2QNQRXL5DKNOOQQ3NQNMWY7T63PTOZFE", "length": 9478, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "மூன்றாவது ஆஷஸ் டெஸ்ட் இன்று | Virakesari.lk", "raw_content": "\nஇலங்கை ஆசிரியர் சேவை சங்கம் ஜே.வி.பியுடன் இணைந்து யாழ்பாணத்தில் \"செம்மே\" தினக் கொண்டாட்டம்\nநிலக்கரியை விட அடர்ந்த கருப்பு நிறத்தில் புதிய கிரகம் கண்டு பிடிப்பு\nஎரிந்த நிலையில் சடலம் மீட்பு\nபல கொள்ளைச் சம்பவங்களோடு தொடர்புடைய கொள்ளை கும்பல் கைது\nஇடி தாக்கி இருவர் வைத்தியசாலையில்\nஜாலிய விக்கிரமசூரியவை கைது செய்ய மீண்டும் பிடியாணை\n“அம்பாந்தோட்டை துறைமுகத்தின் பாதுகாப்பிற்கு இலங்கை கடற்படை மாத்திரமே பொறுப்பு”\nஐ.எஸ். தற்கொலை தாக்குதல் ; உயிரிழந்தோரின் எண்ணிக்கை 57 ஆக அதிகரிப்பு\nகாலில் விழுந்தவர் காலாவதியான நூடில்ஸ் என என்னை வர்ணிக்கிறார் : சந்திரிகா\nமூன்றாவது ஆஷஸ் டெஸ்ட் இன்று\nமூன்றாவது ஆஷஸ் டெஸ்ட் இன்று\nஇங்­கி­லாந்து அணி ஆஷஸ் தொடரின் முதல் இரண்டு டெஸ்ட் போட்­டி­களில் அவுஸ்­தி­ரே­லி­யா­விடம் தோற்­ற­தற்கு இன்­றைய போட்­டியில் பதி­லடி கொடுக்­குமா என்ற எதிர்­பார்ப்பு எழுந்­துள்­ளது.\nஇங்­கி­லாந்து கிரிக்கெட் அணி அவுஸ்­தி­ரே­லி­யாவில் சுற்­றுப்­ப­யணம் மேற்­கொண்டு விளை­யாடி வரு­கி­றது. இவ்­விரு அணி­க­ளுக்­கி­டை­யி­லான 5 டெஸ்ட் போட்­டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் அவுஸ்­தி­ரே­லியா 2–-0 என்ற கணக்கில் முன்­னி­லையில் உள்­ளது.\nபிரிஸ்­பேனில் நடந்த முதல் டெஸ்டில் 10 விக்­கெட்­டுக்கள் வித்­தி­யா­சத்­திலும், அடி­லெய்ட்டில் நடை­பெற்ற இரண்­டா­வது டெஸ்டில் 120 ஓட்­டங்கள் வித்­தி­யா­சத்­திலும் அவுஸ்­தி­ரே­லியா வெற்றி பெற்­றி­ருந்­தது.\nஇந்­நி­லையில் இவ்­விரு அணி­களும் மோதும் மூன்­றா­வது டெஸ்ட் போட்டி பெர்த் மைதா­னத்தில் இன்று தொடங்­கு­கி­றது.\nமுதல் 2 டெஸ்ட் போட்­டி­களில் தோற்ற இங்­கி­லாந்து அணி இன்­றைய போட்­டி­யி­லா­வது பதி­லடி கொடுக்­குமா என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. மேலும் தொடரை இழக்­காமல் இருக்க இங்­கி­லாந்து வெற்றி பெறு­வது அவ­சி­ய­மா­கி­றது.\nமுன்னாள் தலைவர் குக்­குக்கு இந்த போட்டி 150-ஆவது டெஸ்­டாகும். இந்த மைல்­கல்லை தொடும் முதல் இங்­கி­லாந்து வீரர் இவர்தான்.\nமறுமுனையில் ஆஸி. இந்த டெஸ்டில் வென்று ஹெட்ரிக் சாதனையுடன் தொடரை கைப்பற்றும் ஆர்வத்துடன் உள்ளது.\nஹெட்ரிக் சாதனை இங்­கி­லாந்து டெஸ்ட் போட்­டி­ அவுஸ்­தி­ரே­லி­யா\nபஞ்சாப் - சன் ரைசர்ஸ் இன்று பலபரிட்சை\nஇன்றையப் ஐ.பி.எல் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதவுள்ளன.\n2018-04-26 16:47:21 ஐ.பி.எல் போட்டி கிங்ஸ் லெவன் பஞ்சாப் சன் ரைசர்\nகேல் ரத்னா விருதுக்கு விராட் கோலி பெயர் பரிந்துரை\nஇந்திய கிரிக்கெட் துறை விருதான கேல் ரத்னா விருதிற்கு இந்திய கிரிக்கெட் அணி தலைவர் விராட் கோலியின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.\n2018-04-26 12:30:57 இந்திய கிரிக்கெட் கேல் ரத்னா\nமீண்டும் களமிறங்கும் அனா புஞ்சிஹேவா \nஎதிர்வரும் மே மாதம் 9 ஆம் திகதி இடம்பெறவுள்ள இலங்கை கிரிக்கெட் சபைத் தேர்தலில், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் முன்னாள் தலைவர் அனா புஞ்சிஹேவா போட்டியிடப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளனர்.\n2018-04-23 12:36:42 அனா புஞ்சிஹேவா இலங்கை கிரிக்கெட்\nகனிஷ்ட தேசிய மெய்வல்லுநர் போட்டி நாளை ஆரம்பம்\nவடக்கு, கிழக்கு உட்­பட நாட்டின் சகல பாகங்­க­ளி­லி­ருந்தும் 138 தங்கப் பதக்­கங்­க­ளுக்கு குறி­வைத்து 2,500க்கும் மேற்­பட்ட வீர, வீராங்­க­னைகள்\n2018-04-22 10:21:59 வடக்கு கிழக்கு போட்டி\nஅசங்க குருசிங்கவுக்கு புதிய பதவி\nஇலங்கை கிரிக்கட்டின் பிரதான கிரிக்கெட் செயற்பாட்டு அதிகாரியாக அசங்க குருசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.\n2018-04-21 21:07:53 இலங்கை கிரிக்கெட் அசங்க குருசிங்க\nநிலக்கரியை விட அடர்ந்த கருப்பு நிறத்தில் புதிய கிரகம் கண்டு பிடிப்பு\nஎரிந்த நிலையில் சடலம் மீட்பு\nபல கொள்ளைச் சம்பவங்களோடு தொடர்புடைய கொள்ளை கும்பல் கைது\nஇடி தாக்கி இருவர் வைத்தியசாலையில்\nபள்ளிமுனை கடற்கரை மீன் வாடிகளிலிருந்து ஒரு தொகை மீன்கள் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://adiraipirai.in/wpid-04030_flickr_al_jazeera_englishtif_9076ce9733-jpg-3", "date_download": "2018-04-26T13:38:49Z", "digest": "sha1:JE5RK35LQN2BND2JR4CETG4JIG4A4SXZ", "length": 4090, "nlines": 113, "source_domain": "adiraipirai.in", "title": "wpid-04030_flickr_al_jazeera_englishtif_9076ce9733.jpg - Adiraipirai.in", "raw_content": "\nஅதிரையில், சாம்பலான பிறகு சாவகாசமாக வந்த தீயணைப்பு வாகனம்\nமரண அறிவிப்பு – நடுத்தெரு ஹாஜி ஷிஹாபுத்தீன் (வயது 74)\nஅதிரை ரஹ்மானிய்யா மதரஸாவில் இன்று பட்டமளிப்பு விழா\nBREAKING NEWS: அதிரை கடைத்தெருவில் பயங்கர தீ விபத்து\nநோய் பரப்புவதில் நாங்கள் கெட்டிகாரர்கள் – பேரூராட்சி\nமரண அறிவிப்பு – தட்டார தெருவை சேர்ந்த S.M.S.அப்துல் ரவூப்\nசவூதி ரியாத்தில் கொட்டித்தீர்த்த கனமழை\nதஞ்சையில் தினகரனுடன் போராட்டக்களத்தில் பங்கேற்ற அதிரை அமமுக வினர்\nகவலையில் இருக்கும் ஏர்செல் வாடிக்கையாளர்களுக்கு ஆறுதலான செய்தி\nதொடர்ந்து விடுதலையாகும் பாஜக, ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகள்… அதிரவைக்கும் தகவல்\nகல்வி & வேலை வாய்ப்பு\nஅதிரையில், சாம்பலான பிறகு சாவகாசமாக வந்த தீயணைப்பு வாகனம்\n#BREAKING_NEWS: அதிரை கடைத்தெருவில் பயங்கர தீ விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF", "date_download": "2018-04-26T13:29:57Z", "digest": "sha1:KVQJ72MCPD5SNLV3YN5DVCGX4QJFNVJK", "length": 4113, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "சீரிய | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் சீரிய யின் அர்த்தம்\nஉயர் வழக்கு உயர்ந்த; சிறப்பான; தீவிரமான.\n‘இந்த இயந்திரத்தின் எல்லாப் பாகங்களும் சீரிய தரப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவை’\n‘உங்களுடைய பணி சீரிய முறையில் நடந்துவருகிறது அல்லவா\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/personalfinance/article.php?aid=11780", "date_download": "2018-04-26T13:14:34Z", "digest": "sha1:I7LMQKP2U2JLLGX6U4JL5QN42YP7OGT4", "length": 13269, "nlines": 366, "source_domain": "www.vikatan.com", "title": "sensex down nifty down | சென்செக்ஸ் 500 புள்ளிகள் சரிந்தது ஏன்?", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nசென்செக்ஸ் 500 புள்ளிகள் சரிந்தது ஏன்\nமாலை 3.30 மணி நிலவரம்\nஇந்தியப் பங்குச் சந்தைகள் நேற்று 500 புள்ளிகளுக்கும் அதிகமாக வீழ்ச்சியடைந்து காணப்பட்டது. சர்வதேச சந்தையில் மந்தம், சீன உற்பத்தி தரவுகள் குறைவு மற்றும் உள்நாட்டில் உற்பத்தி துறை குறியீட்டெண் சரிவு போன்ற காரணங்களால் சென்செக்ஸ் 500 புள்ளிகளுக்கும் மேல் வீழ்ச்சியடைந்தது.\nஇந்த நிலையில் இன்று (05.01.2016) காலை முதலே இந்திய பங்குச் சந்தைகள் மீண்டும் எழுச்சியுடன் வர்த்தகமாகி வந்தது. மாலை 3.30 மணியளவில் இறக்கத்துடன் வர்த்தகமாகி நிறைவடைந்தது. மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 43.01 புள்ளிகள் குறைந்து 25580.34 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 6.65 புள்ளிகள் குறைந்து 7784.65 என்ற நிலையில் வர்த்தகமானது\nபேங்க் ஆஃப் பரோடா (-2.15%)\nபவர் கிரிட் கார்ப் (-1.49%)\nஹெச் யூ எல் (-1.46%)\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nவிகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP\nவிகடன் பிரஸ்மீட்: அஜித்திடம் என்ன பிடிக்காது விஜய்யிடம் என்ன பிடிக்கும்\nமிஸ்டர் கழுகு: பி.ஜே.பி மீது ரஜினி வருத்தம்\nஆற்றை சாகடிக்கும் மணல் மாஃபியாக்கள்\n\"வைகோ, சீமான் மோதல் வேதனை தருகிறது” - கலங்கும் திருமா\nஜெயித்தது தோனி... ஜெயிக்க வைத்தது கோலி... ஜஸ்ட் கோலி திங்ஸ்\nதிருடிய மொபைலை அன்லாக் செய்ய திருடர்கள் செய்யும் இன்னொரு திருட்டுத்தனம்... உஷார்\n'நிர்மலா தேவி வாழ்க்கையே ரகசியம்தான்'- காவியன் நகர் மக்கள் சொல்வது என்ன\nமெக்கானிக்குடன் சாலையில் நின்ற போலீஸார்... கதிகலங்கிப்போன இருசக்கர வாகன ஓட்டிகள்\nஜெயித்தது தோனி... ஜெயிக்க வைத்தது கோலி... ஜஸ்ட் கோலி திங்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kanichaaru.blogspot.com/2015/01/blog-post_11.html", "date_download": "2018-04-26T13:32:52Z", "digest": "sha1:I4A7TWEHZVF7LTXIY6VMACKQIJCFA35B", "length": 7958, "nlines": 98, "source_domain": "kanichaaru.blogspot.com", "title": "தமிழுக்கு விடுதலை தா .. ! ~ கனிச்சாறு", "raw_content": "\nபெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.\nதமிழுக்கு விடுதலை தா .. \n​நடக்க நடக்கக் குருதி ஓடும் \nதோள் கொடு, தூக்கி விடு \nதனித்தமிழ் தேடி, தூய தமிழ் நாடி\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nதமிழின் செம்மொழிப் பண்புகள் - பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் - செம்மொழித்தமிழ் இலக்கண இலக்கியங்கள் \nஞெமன் தெரிகோல் அன்ன செயிர்தீர் செம்மொழி அக நானூறு -349 - 3, 4 செம்மொழி மாதவர் சேயிழை நங்கை தம் துறவு எமக்குச...\nகனிச்சாறு : 5 :தமிழ் வாழ வேண்டுமா \n‘தமிழ் வாழ்க’ வென்பதிலும் தமிழ்வா ழாது: தமிழ்ப் பெயரை வைப்பதிலும் தமிழ்வா ழாது தமிழ் சிரிப்பைப் பெருஞ்சிரிப்பாய் அவிழ்த்துக் கொட்...\nநெல்லை & தூத்துக்குடி மாவட்டங்களில் முக்கியமான இடங்களில் சில.\nதூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள கொற்கை கிராமம் இன்று நாம் பார்ப்பதற்கு மிகச்சாதாரண கிராமமாகத் தெரியலாம். ஆனால் முன்னொரு காலத்...\nயுத்த பூமி - அத்தியாயம் 5 - கல் சொல்லும் வீரம் -த. பார்த்திபன்\nஇந்தக் கல் சொல்லும் வீரம்செறிந்த போர்கள், உலகைப் புரட்டிப்போட்ட போர்கள் அல்ல; நாட்டு மக்களை நாடோடிகளாகவும் அகதிகளாகவும் ஆக்கியவையும் அல்ல...\nகோப்பெருஞ்சோழன் - பிசிராந்தையின் நட்பும், பாரியைத் தவிரப் பிறரைப் பாடாத கபிலரின் ஆற்றாமையும்\nஉலகுடன் திரிதரும் பலர்புகழ் நல்லிசை வாய்மொழிக் கபிலர், நீரினும் இனிய சாயலன் ஆகிய பாரியின் இனிய தோழர். அறிமுகம் பழக்கமாகி, பழக்கம் நட...\nயாழ்ப்பாணம் : www.ourjaffna.com இணைய தளச் சொந்தக்காரரின் திருமண விழா : சில காட்சிகள்.\nஅமெரிக்கப் பல்கலையில் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட திருமந்திரத்தின் 6 பாடல்கள்\nஅமெரிக்காவில் உள்ள தென் கரோலின பல்கலையில் ஆய்வுக்குள்ளான 6 பாடல்கள் அல்சைமர் நோயாளிக்கு உதவும் என்று முடிவு காண்க:- h...\nதினத்தந்தி வெளியீடு : ஆயிரம் ஆண்டு அதிசயம். - அமுதன்\nஓரிருமுறை தஞ்சைப் பெரியகோவிலுக்குச் சென்றிருக்கின்றேன். ஆனால், இம்முறை சென்றவாரம் சென்றிருந்தபோது அரியதோர் வழிகாட்டுநர் கிடை...\nகவிமணி தேசிக விநாயகம் பிள்ளை\nவாழ்க்கைக் குறிப்பு கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை (ஆகஸ்ட் 27, 1876 - செப்டம்பர் 26, 1954) 20 நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு புகழ் பெற்ற...\nவயது 65, சென்னை, தமிழ்நாடு,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kuppilan.yolasite.com/marana-ariviththal-18.php", "date_download": "2018-04-26T13:27:28Z", "digest": "sha1:LIJK5FL6OBETPODTFREIPT6JRQZGK26S", "length": 2062, "nlines": 14, "source_domain": "kuppilan.yolasite.com", "title": "முகப்பு", "raw_content": "\nவசாவிளானைப் பிறப்பிடமாகவும் குப்பிளான் வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா கனகம்மா வெள்ளிக்கிழமை 04-03-2011 அன்று காலமானார்.\nஅன்னார் காலஞ் சென்ற செல்லத்துரையின் அன்பு மனைவியும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் புதன்கிழமை 09-03-2011 அன்று நண்பகல் அவரது இல்லத்தில் இடம்பெற்று தகனக் கிரியைக்காக பூதவுடல் குப்பிளான் காடாகடம்பை இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.\nஇவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.\nஅன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வதுடன் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைபிரார்த்திக்கிறோம் - குப்பிளான் இணையத்தளம். http://www.newkuppilan.com/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.south.news/18-cases-in-24-years-north-chennai-rowdy-story/", "date_download": "2018-04-26T13:07:50Z", "digest": "sha1:5QPUMLJLALRZRDKMGXQDHP7Z6G3DAB74", "length": 9409, "nlines": 81, "source_domain": "tamil.south.news", "title": "24 வயதில் பிரபல ரவுடியாக வலம் வந்த விஜி ஒட ஓட வெட்டிக் கொலை!", "raw_content": "\nநிகழ்வுகள் 24 வயது ,18 கேஸ் தனிஒருவன் ரவுடி ‘விஜி’ வெட்டி...\n24 வயது ,18 கேஸ் தனிஒருவன் ரவுடி ‘விஜி’ வெட்டி கொலை\nசென்னையில் ரவுடி வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுவண்ணாரப்பேட்டை பல்லவன் நகரை சேர்ந்த 24 வயதாகும் விஜி என்ற விஜயகுமார் காசிமேடு பகுதியில் படகு பழுதுபார்க்கும் வேலை செய்து வந்தவர். பிறகு கஞ்சா விற்பனையில் சில காலம் ஈடுபட்டுள்ளார். வியாபாரம் சூடு பிடிக்க சூடு பிடிக்க, வடசென்னையை உள்ள பிரபல ரவுடி ஒருவருடன் அறிமுகம் கிடைத்துள்ளது.\nஆரம்பத்தில் அவருடைய அடியாட்களில் ஒருவராக செயல்பட்டு வந்துள்ளார். அதன்பிறகு ஒரு முக்கிய ரவுடியாக வலம் வந்துள்ளார் விஜி. கட்டப்பஞ்பாயத்து, ஆள்கடத்தல், கொலை முயற்சி, மிரட்டல் என விஜி நுழையாத சட்டவிரோத செயல்கள் இல்லை. போலீசாரின் லிஸ்டில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் அளவிற்கு பல குற்றங்களை செய்து வந்துள்ளார்.\nஎப்பொழுதும் விஜியை சுற்றி ஒரு கூட்டம் இருக்கும். வழக்குகள் தொடர்பாக காவல் நிலையம் நீதிமன்றம் என அடிக்கடி சென்று வருவார். விஜியை பிடிக்காமல் எதிரிகள் அதிகம் உருவாகினார்கள். இந்த சூழலில் பாரிமுனையில் உள்ள ஜார்ஜ்டவுன் நீதிமன்றத்துக்கு வந்து விசாரணை முடிந்து வீட்டு திரும்பியுள்ளார்.\nவிஜி தனியாக செல்வதை அறிந்த 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று மண்ணடி தம்புசெட்டி தெருவில் வரும் போது விஜியை மறித்து வெட்டியுள்ளனர். உயிருக்கு பயந்து அங்கிருந்து தப்பிக்க முயற்சி செய்துள்ளார் விஜி. இருந்தாலும் அந்த கும்பல் ஒட ஒட விரட்டி வந்து வெட்டியுள்ளனர். உயிரை காப்பாற்றிக் கொள்ள அருகில் இருந்த வீட்டிற்குள் நுழைந்தும் அந்த கும்பல் விடாமல் சென்று வெட்டி விட்டு தப்பித்து சென்றுள்ளனர்.\nரத்த வெள்ளத்தில் கிடந்த விஜி ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் மருத்துவர்கள் விஜி இறந்துவிட்டதாக தெரிவித்துவிட்டனர். பட்ட பகலில் நடந்த சம்பவத்தை பார்த்த அப்பகுதி மக்கள் அலறியடித்துக் ஓடினர். இச்சம்பவம் அங்கிருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியுள்ளது. எதற்காக இந்த கொலை நடந்தது என்று போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nவிஜியின் மீது இதுவரை 18 வழக்குகள் உள்ளன. நீதிமன்றத்துக்கு தனியாக வருவதை அறிந்துக்கொண்டு திட்டமிட்டப்படி கொன்றுள்ளனர். கொலை செய்தவர்களுக்கு 25 வயதிலிருந்து 30 வயதுக்குள் தான் இருக்கும் என்றும் முன்விரோத காரணமாக நடந்திருக்கும், விஜியின் எதிரிகள் தலைமறைவாகி விட்டதால் கொலைக்காக சரியான காரணம் தெரியவில்லை என்று போலிஸ் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.\nசென்னையில் 24 மணி நேரத்தில் இதையெல்லாம் செய்யலாம்\nஓட ஓட தெறிக்கவிட்ட சி.எஸ்.கே’; 400 அடிச்சாலும் ஜெயிக்க மாட்டாங்களா ஆர்.சி.பி\nசி.எஸ்.கே.வால் வாழ்க்கையை இழக்கும் 3 முக்கிய அணிகள்\nசென்னையில் 24 மணி நேரத்தில் இதையெல்லாம் செய்யலாம்\nவேலூரில் 48 மணி நேரத்தை எப்படி செலவிடலாம்\nஓட ஓட தெறிக்கவிட்ட சி.எஸ்.கே’; 400 அடிச்சாலும் ஜெயிக்க மாட்டாங்களா ஆர்.சி.பி\nஜெட் வேகத்தில் ஆண்மை பெருக இந்த கீரையை சாப்பிடுங்க\nமினிமம் பேலன்ஸ் இல்லாத கணக்குகளில் இருந்து ரூ.1,772 கோடி அபராதம் வசூலித்த எஸ்.பி.ஐ. வங்கி\nஆதார் அமைப்பை கைது செய்யுங்கள்… சர்ச்சையை கிளப்பிய ‘விக்கி லீக்ஸ்’ எட்வர்ட்\nகாவிரிக்காக போர்க்களமானது அண்ணாசாலை.. ஸ்டேடியம் ‘வெறிச்’\nசிறுமி ஹாசினி கொலை வழக்கு குற்றவாளி தஷ்வந்த் அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்..\n5௦௦மீட்டர் மழை பாக்கி இருக்கிறதாம்…. பீதியை கிளப்பும் பிபிசி அறிக்கை\nசெப்டம்பர் வரை ஜோராக மழை வரும்: தமிழ்நாடு வெதர்மேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://devapriyaji.wordpress.com/2010/04/24/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2018-04-26T13:38:29Z", "digest": "sha1:6RJZJF3SBNCQR35K77X4KKZSDQPWWLQY", "length": 11492, "nlines": 99, "source_domain": "devapriyaji.wordpress.com", "title": "கோவை செம்மொழி மாநாட்டுக்காக கோவில்களில் பூஜை-அதிமுக | தேவப்ரியா", "raw_content": "\nபைபிள்-குலைக்கப் படுகிறதா -அகழ்வாய்வு உண்மைகளில்\nஉலகம் அழியப்போவது என் -நம் வாழ்நாளிலே- இயேசு சிறிஸ்து\nபுனித தோமா -புனித தோமையர் கட்டுக்கதைகள்\n← செல்போன் கைப்பற்றப்படவில்லை-நளினி மறுப்பு சனிக்கிழமை,\nகோவை செம்மொழி மாநாட்டுக்காக கோவில்களில் பூஜை-அதிமுக\nசென்னை: கோவையில் நடத்தப்பட இருக்கும் செம்மொழி மாநாடு வெற்றிபெற வேண்டும் என்பதற்காக, கோவில்களில் லட்சார்ச்சணை பூஜைகள் நடத்தப்பட்டு வருவதாக அதிமுக எம்எல்ஏ மலரவன் கூறினார்.\nசட்டசபையில் உள்ளாட்சி துறை மானிய கோரிக்கைகள் மீது நடந்த விவாத விவரம்:\nமலரவன் (அதிமுக): கோவை மாவட்டத்தில் பெரும் பகுதி பில்லூர் அணையை ஆதாரமாக கொண்டு பயன்பெறுகிறது. அதிமுக ஆட்சி காலத்தில் போடப்பட்ட இதன் 2வது திட்டம், இன்னும் நிறைவேற்றப்படவில்லை. கோவை பஸ் நிலையத்தில் ஆம்னி பஸ்களுக்காக பஸ் நிலையம் அமைத்தோம். ஆனால், அதற்கு இன்னமும் கூரை போடப்படவில்லை.\nஇந்த 4 ஆண்டுகளில் கோவைக்கு திட்டங்களே இல்லை. திருப்பூர், ஈரோடு, வேலூர், தூத்துக்குடி ஆகிய நகராட்சிகளை மாநகராட்சியாக்கினீர்கள். ஆனால், அந்த நகராட்சித் தலைவர்களையே மாநகராட்சி மேயர்களாக மாற்றினீர்கள். அதிகாரம் இருக்கிறது என்பதற்காக எதையும் செய்யக்கூடாது.\nசென்னை கூவம் ஆற்றை சுத்தப்படுத்த சென்னை நதிநீர் அறக்கட்டளை அமைக்கப்பட்டுள்ளது. கோவையில் உள்ள சிறிய கால்வாயையே சுத்தப்படுத்த முடியவில்லை. கூவம் நதியையா நீங்கள் சீர்படுத்த போகிறீர்கள்\n1973ம் ஆண்டில் இன்றைய முதல்வர், கூவத்தை சுத்தப்படுத்த விழா நடத்தியபோது படகு விடும் நிகழ்ச்சியின்போது ஒரு எம்.எல்.ஏ கூவத்தில் விழுந்தார். அதனால், அந்தத் திட்டமே கைவிடப்பட்டது. எனவே, மக்களின் வரிப் பணத்தை வீணாக்க வேண்டாம்.\nநிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு 2,11,356 ஏக்கர் நிலம் தந்திருப்பதாக கூறுகிறீர்கள். ஆனால் கோவை மேற்கு தொகுதியில் ஒருவருக்கு கூட வழங்கவில்லை.\nஅமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி: கோவை மேற்கு தொகுதியில் ஒரு ஏக்கர் நிலம் ரூ.20 கோடிக்கு விற்கப்படுகிறது. அங்கு எப்படி இலவச நிலம் அளிப்பது\nஅமைச்சர் வெள்ளக்கோயில் சாமிநாதன்: கோவையில் திமுக ஆட்சியில் திட்டங்கள் செயல்படுத்தவில்லை என்கிறார். ஒண்டிப்புதூர், உக்கடம் மேம்பாலம் ஆகியவை இப்போது கட்டப்பட்டவைதான். உப்பிலிபாளையம் பாலம் கட்டியது, ஹோப் கல்லூரி ரயில்வே பாலத்தில் 3 வழித்தடம் அமைக்கப்பட்டிருப்பதும் இப்போதுதான். கருணாநிதி எப்போது முதல்வராக இருந்தாலும் திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்படும். இவர் (மலரவன்) மேயராக இருந்தபோது பத்திரிகைகளில் செய்தி வருமே தவிர திட்டங்கள் நடக்காது.\nமலரவன்: நெடுஞ்சாலைத்துறை கட்டிய ஒரு பாலத்தில், கீழே யாரும் போக முடியாதபடி நீர் தேங்கியிருக்கிறது.\nஅமைச்சர் சாமிநாதன்: நடவடிக்கை எடுக்கப்பட்டு, தண்ணீர் அகற்றப்பட்டுவிட்டது.\nமலரவன்: கோவையில் செம்மொழி மாநாடு நடத்த இருக்கும் வேளையில் அது வெற்றிபெற வேண்டும் என்பதற்காக, கோவில்களில் லட்சார்ச்சணை நடக்கிறது. 1973ம் ஆண்டில் கோவை காந்தி இர்வின் ஸ்டேடியத்தை இடித்துவிட்டு சிதம்பரம் பூங்காவில் மாநாடு போட்டீர்கள். அது முடிந்ததும் ஆட்சி கலைக்கப்பட்டது. அதுபோல ஆட்சி பறிபோய்விடுமோ என்ற பயத்தில் லட்சார்ச்சணை செய்கிறீர்கள்.\nஅமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி: அரசு எப்போதும் கோவில்களில் அர்ச்சணை செய்ததில்லை. சிலர் நம்பிக்கை அடிப்படையில் பூஜை செய்கிறார்கள். அதை கொச்சைப்படுத்தாதீர்கள்.\nஅமைச்சர் எ.வ.வேலு: அ.தி.மு.க. ஆட்சியில்தான், அரசு கட்டிடத்துக்கு கூட பூமி பூஜை நடத்தப்பட்டது.\nமலரவன்: சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் ஆடு வெட்டி, சுவர்களில் ரத்தம் தெளித்ததை யாரும் மறக்கவில்லை.\nஉண்மைகளை அறிவோம் தீமைகளை விரட்டுவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%90%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-04-26T13:34:49Z", "digest": "sha1:F77BR6PDFH4BT6LSE7TVU5BJ544F5YHY", "length": 37189, "nlines": 287, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஐரோப்பிய ஆணையம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஐரோப்பிய ஆணையம் (European Commission அல்லது EC) என்பது ஐரோப்பிய ஒன்றியத்தின் நிறைவேற்று செயற்குழு ஆகும். இது சட்ட ஆலோசனைகளை முன்மொழிவதற்கும், ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவுகளை செயல்படுத்தவும், உடன்படிக்கைகளில் கைச்சாதிடவும், ஐரோப்பிய ஒன்றியத்தின் அன்றாட நடவடிக்கைகளைத் திறம்பட செயல்படுத்தவும் உறுதுணை புரிகிறது.[2]\nஆணைக்குழுவானது அமைச்சரவை அரசாங்கத்தை போல \"ஆணையாளர்கள்\" என அழைக்கப்படும் 28 உறுப்பினர்களைக் கொண்டு செயல்படுகிறது.[3]). ஒவ்வொரு அங்கத்துவ நாட்டிற்கும் தலா ஒரு பிரதிநிதி வீதம் இருப்பார். உறுப்பினர்கள் தங்களது சொந்த நாட்டு நலன்களை விட முழு ஐரோப்பிய ஒன்றிய நலன்களைப் பிரதிபலிக்கக் கடமைப்பட்டுள்ளனர். 28 நாடுகளில் ஒன்றின் பிரதிநிதியே ஆணையத்தின் தலைவர் (தற்போது ஜோஸ் மானுவல் டோரா பரோசோ) ஆவார். இவர் ஐரோப்பியப் பேரவையால் முன்மொழியப்பட்டு, ஐரோப்பிய நாடாளுமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்படுவார். அதன் பின்னர் ஐரோப்பியப் பேரவை ஐரோபிய ஆணையத்திற்குரிய ஏனைய 27 உறுப்பினரகளையும் பிரேரிக்கப்பட்ட தலைவரின் (ஆணையத்தின்) உதவியுடன் தெரிவு செய்யும். எனினும் இந்த 28 உறுப்பினர்களையும் கொண்ட ஆணையம் ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் இறுதி முடிவின் பின்னரே அதிகாரபூர்வமாக நியமிக்கப்படும்.[4]\nமுதன் முறையாக பரோசோவின் ஆணையம் 2004ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்தது. அதன் பின்னர் ஆணையத்தின் வெற்றிக்கு வித்திட்ட பரோசோவே மீண்டும் ஆணையத்தின் தலைவராக 2010ஆம் ஆண்டில் பதவியேற்றார்.[5]\nமொத்தமாக ஆணையத்தில் 24 திணைக்களங்கள் (Colleges) உள்ளன. பல்வேறு துறைகளாகப் பிரிக்கப்பட்டுள்ள இந்த நிர்வாகக் கட்டமைப்பில் ஏறத்தாழ 23,000 ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.[6] இங்கு அதிகாரபூர்வ மொழிகளாக ஆங்கிலம், பிரெஞ்சு, இடாய்ச்சு ஆகியன பயன்படுத்தப்படுகின்றன. ஆணையத்தின் முக்கிய காரியாலயம் பெல்ஜியத்தின் பிரசெல்சு நகரில் பெர்லேய்மொண்ட் கட்டடத்தில் அமைந்துள்ளது.\n1 ஐரோப்பிய ஒன்றிய வரலாறு\n'ஐரோப்பிய ஒன்றியம்' என்பது 28 உறுப்பு நாடுகளைக் கொண்ட எல்லைகளைத் தாண்டிய பொது அரசிடை அமைப்பாகும். 1992ல் நிறுவப்பட்ட ஐரோப்பிய ஒன்றிய உடன்பாட்டை மாசுடிரிச் ஒப்பந்தம் என்றும் பரவலாக அறியப்படுகிறது) அடுத்து இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. எனினும், 1950கள் முதற்கொண்டே இயங்கி வந்த பல முன்னோடி அமைப்புகளின் செயற்பாடுகள், ஐரோப்பிய ஒன்றியத்தை ஒத்து இருந்தன. 1951 ஆம் ஆண்டில் ஆறு நாடுகள் சேர்ந்து உருவாக்கிய ஐரோப்பிய நிலக்கரி மற்றும் உருக்கு சமூகம், 1957 ஆம் ஆண்டின் ரோம் ஒப்பந்தம் ஆகியவையே ஐரோப்பிய ஒன்றியத்தின் தோற்றத்தின் மூலமாகக் கருதப்படுகிறது. அக்காலத்தில் இருந்து, ஒன்றியம் புதிய உறுப்பு நாடுகளை உள்ளடக்கி விரிவடைந்தது.\nஏறத்தாழ 500 மில்லியன் குடிமக்களைக் கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உலகத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 30% ஐ உருவாக்குகின்றன. ஐரோப்பிய ஒன்றியம், தனது உறுப்பு நாடுகளிடையே மக்கள், பொருட்கள், சேவைகள், முதலீடு ஆகியவற்றின் கட்டற்ற நகர்வுகளுக்கு உத்தரவாதம் அளிக்கும் பொதுவான சட்டங்களைக் கொண்ட ஒற்றைச் சந்தையை உருவாக்கியுள்ளது. இது பொதுவான வணிகக் கொள்கை, வேளாண்மை கொள்கை, மீன்பிடிக் கொள்கை என்பவற்றுடன் பிரதேச வளர்ச்சிக் கொள்கையையும் பேணி வருகின்றது. இதிலுள்ள 18 உறுப்பு நாடுகள் யூரோ எனப்படும் பொதுவான நாணய முறையையும் ஏற்றுக்கொண்டுள்ளன. இது ஒரு வெளிநாட்டலுவல்கள் கொள்கையொன்றையும் உருவாக்கியுள்ளதுடன், உலக வணிக அமைப்பு, ஜி8 உச்சி மாநாடு, ஐக்கிய நாடுகள் அவை என்பவற்றிலும் சார்பாண்மை (representation) கொண்டுள்ளது. 21 ஐரோப்பிய ஒன்றிய நாட்டுகள் \"நாட்டோ\" (NATO) அமைப்பிலும் உறுப்பு நாடுகளாக உள்ளன. யூரோ நாணயங்களை வெளியிடும் அதிகாரப்பூர்வ அமைப்பு ஐரோப்பிய மத்திய வங்கி(ECB) ஆகும். இது ஜெர்மனியின் பிராங்பர்ட் நகரில் உள்ளது. நாணயங்களின் மதிப்பை நிர்ணயிப்பது இவ்வமைப்பே ஆகும். பொருளாதாரத்தில், ஒரு தரைத்தோற்ற நிலவமைப்பில் ஒற்றை நாணயமுறையை பயன்படுத்தும்போது அந்த புவியியல் பகுதியின் (உகந்த நாணய பகுதி - Optimum Currency Area) பொருளாதார திறன் அதிகரிக்கும் என்று ராபர்ட் முன்டெல் தெரிவித்தார். அதன்படி ஐரோப்பிய ஒன்றியம் ஊடாக யூரோவின் பயன்பாட்டை ஊக்குவிக்கவும் செய்தனர்.\nஐரோப்பிய ஒன்றியம் அதன் உறுப்பு நாடுகளின் நீதியமைப்பு, உள்நாட்டு அலுவல்கள் ஆகியவற்றிலும் முக்கிய பங்களிப்பைச் செலுத்துகிறது. ஷெங்கன் ஒப்பந்தத்தின் (Schengen Agreement) கீழ் சில உறுப்பு நாடுகளிடையேயான கடவுச்சீட்டுக் கட்டுப்பாட்டு முறையும் ஒழிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் முடிவுகளை எடுக்கும் போது அரசுகளிடையான இணக்கப்பாடு, அரசுகளுக்கு அப்பாற்பட்டு இயங்கும் அமைப்புக்கள் ஆகியவற்றைக் கொண்ட ஒரு கலப்பு முறையைக் கைக்கொள்கிறது.\nஐரோப்பிய ஒன்றியமானது ஐரோப்பிய நாடாளுமன்றம், ஐரோப்பிய ஒன்றியஅவை, ஐரோப்பிய அவை, ஐரோப்பிய ஆணையம், ஐரோப்பிய நீதிமன்றம், ஐரோப்பிய மத்திய வங்கி, ஐரோப்பிய நிதி தணிக்கையாளர்களின் மன்றம் ஆகிய 07 முக்கிய நிர்வாக அமைப்புக்களை உள்ளடக்கியுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் குடிமக்கள் 05ஆண்டுகளுக்கு ஒருமுறை ஐரோப்பிய நாடாளுமன்றத்தைத் தெரிவு செய்கின்றனர்.\nஐரோப்பிய ஒன்றியம் தற்போது 28 சுதந்திரமான, இறைமையுள்ள நாடுகளை உறுப்புநாடுகளாகக் கொண்டுள்ளது.[7] இவை, ஆஸ்திரியா, பெல்ஜியம், பல்கேரியா, சைப்பிரஸ், செக் குடியரசு, டென்மார்க், எஸ்தோனியா, பின்லாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, ஸ்பெயின், கிரேக்கம், ஹங்கேரி, அயர்லாந்து, இத்தாலி, லத்வியா, லித்துவேனியா, லக்சம்பர்க், மால்ட்டா, நெதர்லாந்து, போலந்து, போர்த்துக்கல், ருமேனியா, சிலோவாக்கியா, சுலோவீனியா, எசுப்பானியா, சுவீடன், ஐக்கிய இராச்சியம் என்பவை. மொத்தமாக 28 உறுப்பு நாடுகளையும் சேர்த்து ஒட்டுமொத்த ஐரோப்பிய ஒன்றியத்தின் நிலப்பரப்பு 43,81,376 ச.கி.மீ. ஆகும்.\nமசிடோனியக் குடியரசு, துருக்கி ஆகிய இரு நாடுகளும் உறுப்பினர்களாகச் சேர்வதற்கான நியமனம் பெற்றுள்ளன. மேற்கு பால்க்கன் பகுதி நாடுகளான அல்பேனியா, பொசுனியா எர்செகோவினா, மொண்டெனேகுரோ, செர்பியா ஆகிய நாடுகளும் இவ்வமைப்பில் சேரும் தகுதியுள்ளவையாக ஏற்கப்பட்டுள்ளன. ஐரோப்பிய ஆணையம் கொசோவோவையும் தகுதியுள்ளதாகக் குறிப்பிட்டிருந்தும், ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் அனைத்தும் இதனை ஒரு தனி நாடாக ஏற்றுக்கொள்ளாமையால் அதனைத் தகுதியுள்ள நாடுகள் பட்டியலில் சேர்க்கவில்லை.\nஆரம்ப கால உறுப்பினர்கள் பச்சையிலும், பிறகு இணைந்தவர்கள் நீலத்திலும்\nபெல்ஜியம் 25 மார்ச், 1957\nஇத்தாலி 25 மார்ச், 1957\nலக்சம்பர்க் 25 மார்ச், 1957\nபிரான்ஸ் 25 மார்ச், 1957\nநெதர்லாந்து 25 மார்ச், 1957\nசெருமனி 25 மார்ச், 1957\nடென்மார்க் 01 ஜனவரி, 1973\nஅயர்லாந்து 01 ஜனவரி, 1973\nஐக்கிய இராச்சியம் 01 ஜனவரி, 1973\nகிரேக்க நாடு 01 ஜனவரி, 1981\nபோர்த்துகல் 01 ஜனவரி, 1986\nஎசுப்பானியா 01 ஜனவரி, 1986\nஎல்லைகளுக்கு அப்பாற்பட்ட ஐரோப்பிய சமூக அமைப்பில் உருவாக்கப்பட்ட மிக முக்கிய 05 ஐரோப்பிய நிறுவகங்களில் ஒன்றான ஐரோப்பிய ஆணையமானது, பிரஞ்சு வெளியுறவு அமைச்சர் ராபர்ட் ஸ்கூமன் என்பவரால் முன்மொழியப்பட்ட திட்டத்தைத் தொடர்ந்து 09ந் திகதி மே மாதம் 1950 அன்று உருப்பெற்றது. ஐரோப்பிய நிலக்கரி மற்றும் உருக்கு சமூகமாக 1951 ஆம் ஆண்டில் உத்தியோகபூர்வமாக உருவெடுத்த இவ்வமைப்பு 03 வெவ்வேறு வகையான சமூகங்களையும் உள்ளடக்கியதாக அதிகார மற்றும் அமைப்பு ரீதியாக இன்று வரை பல்வேறு மாற்றங்களை யும் பல்வேறு தலைவர்களையும் கொண்டு வளர்ந்து நிற்கிறது.\nமுதல் ஆணையமானது 09 உறுப்பு நாடுகளைக் கொண்ட உயர் அதிகார அமைப்பாக 1951ஆம் ஆண்டில் ஜென் மோனர்டின் தலைமையில் உருப்பெற்றது. இதன் உயர் நிர்வாக அதிகாரி புதிய ஐரோப்பிய நிலக்கரி மற்றும் உடுக்கு சமூகத்தின் (ECSC) பிரதம நிறைவேற்று அதிகாரி ஆவார். இதன் காரியாலயம் லக்சம்பர்க்கில் 10ம் திகதி ஆகஸ்ட் 1952இல் நிறுவப்பட்டது. 1958ஆம் ஆண்டில் ரோம் உடன்படிக்கைகளைத் தொடர்ந்து இவ்வமைப்புடன் இணைந்ததாக ஐரோப்பிய பொருளாதார சமூகம் (EEC) மற்றும் ஐரோப்பிய அணுச்சக்தி சமூகத்தையும் (Euratom) ஆகியனவும் உருவாக்கப்ப்பட்டன .\nஅதிகாரிகள் இதனை உயரதிகார அமைப்பு அன்று அழைப்பதற்கு பதிலாக ஆணையம் என அழைத்தனர். இவ்வாறு பெயரிடக் காரணம் சாதாரண நிர்வாக மற்றும் உயரதிகார நிர்வாகங்களுக்கு இடையே உள்ள அதிகார வரைமுறைகளை தெளிவாகத் வேறுபடுத்தவாகும். எவ்வாறாயினும் பிரான்ஸ் போன்ற சில நாடுகள் உயரதிகார உரிமைகள் சில நாடுகளுக்கு கோட்டா அடிப்படையில் குறிப்பிட்டளவு நிரந்தரமாக வழங்கப்பட வேண்டும் என வற்புறுத்தின.\nலூவிஸ் ஆர்மண்ட் என்பவரே ஐரோப்பிய அணுச்சக்தி சமூகத்தின் (யுரடோம்) முதலாவது ஆணையத்திற்கு தலைமை வகித்தார். வால்ட்டர் ஹால்ச்டெய்ன் ஐரோப்பிய பொருளாதார சமூகத்திற்கு முதலில் தலைமை தாங்கினார். முதல் உத்தியோகபூர்வ கூட்டமானது 16ஆந் திகதி ஜனவரி மாதம் 1958, Château of Val-Duchesseஇல் நடைபெற்றது.\n'ஒருங்கிணைத்தல் உடன்படிக்கையின்' கீழ் 1967 ஆம் ஆண்டு ஜூலை 01 வரை இணைந்து இருந்த ஐரோப்பிய நிர்வாக மூன்று அமைப்புகள், தலைவர் ஜீன் ரே ( Jean Rey ) நிர்வாகத்தின் கீழ் கூட்டாக இணைக்கப்பட்டன.\nஆணையத்தின் தலைவர் மற்றும் துணை தலைவர்கள் உட்பட 28 உறுப்பினர்கள், \" ஆணையாளர்கள் \" ஒரு கல்லூரி உருவாக்குகின்றது. ஒவ்வொரு உறுப்பினரும் ஒரு தேசிய அரசாங்கம், மாநில ஒன்றுக்கு ஒரு நியமிக்கப்பட்ட போதிலும், அவர்கள் ( ஆனால் நடைமுறையில் அவர்கள் எப்போதாவது தங்கள் தேசிய நலனுக்கு அழுத்தவும் ) கமிஷன் தங்கள் மாநில பிரதிநிதித்துவம் இல்லை . உறுப்பினர்கள் இடையே ஒருமுறை முன்மொழியப்பட்ட , ஜனாதிபதி பிரதிநிதிகள் அமைச்சர்கள் . ஒரு ஆணையாளர் அதிகாரம் பெரும்பாலும் தங்கள் போர்ட்ஃபோலியோ பொறுத்து , மற்றும் காலப்போக்கில் மாறுபடுகிறது. உதாரணமாக, கல்வி ஆணையர் ஐரோப்பிய கொள்கை கல்வி மற்றும் கலாச்சார முக்கியத்துவம் அதிகரித்தது ஏற்ப , முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது . மற்றொரு உதாரணம் பூகோள ஒரு மிகவும் தெளிவாக தெரியும் நிலையில் வைத்திருக்கும் போட்டி ஆணையாளர் ஆகிறது . ஆணைக்குழு அலுவலகத்தில் கருதி முடியும் முன், ஒரு முழு கல்லூரி பாராளுமன்ற ஒப்புதல் வேண்டும் .\nதொழில்நுட்ப தயாரிப்பு சிவில் சேவை ( துணை ஆளுநர்களும் , கீழே காண்க) போது ஆணையாளர்கள் , அவர்களுக்கு அரசியல் வழிகாட்டுதல் கொடுக்க தங்கள் தனிப்பட்ட அமைச்சரவை ஆதரவு ஒப்பந்தம். ஆணைக்குழு முதன்மையாக ஜனாதிபதி அலுவலகம் மற்றும் Berlaymont கட்டிடம் 13 மாடி மீது கமிஷன் கூட்டத்தில் அறையில், பிரஸ்ஸல்ஸில் அடிப்படையாக கொண்டது. ஆணைக்குழு பிரஸ்ஸல்ஸ் மற்றும் லக்சம்பர்க் பல கட்டிடங்கள் வெளியே செயல்படுகிறது. பாராளுமன்ற Strasbourg ல் சந்தித்த போது, ஆணையாளர்கள் கூட பாராளுமன்ற விவாதங்களில் கலந்துகொள்ள வின்ஸ்டன் சர்ச்சில் கட்டிடத்தில் சந்திக்க . ஆணைக்குழு துறைகள் அல்லது அமைச்சகங்கள் இணையாக முடியும் என்று இயக்குநரும் பொது ( துணை ஆளுநர்களும் ) என அழைக்கப்படும் துறைகள் பிரிக்கப்பட்டுள்ளது.\nஒவ்வொரு போன்ற விவசாயம் அல்லது நீதி மற்றும் குடிமக்கள் உரிமைகள் அல்லது மனித வள மற்றும் மொழிபெயர்ப்பு உள் சேவைகள் ஒரு குறிப்பிட்ட கொள்கை பரப்பளவில் ஒரு ஆணையர் யார் பொறுப்பு இயக்குநர் ஜெனரல் தலைமையில் உள்ளது. ஒரு ஆணையாளர் போர்ட்ஃபோலியோ பல துணை ஆளுநர்களும் ஆதரவு முடியும் , அவர்கள் திட்டங்களை தயாரிக்கிறார்கள் மற்றும் ஆணையாளர்கள் பெரும்பான்மை ஒப்புதல் இருந்தால் அது மிகவும் பிளவுபட்ட DG அமைப்பு கழிவுகள் என்று மக்கள் பல விமர்சனங்களை consideration.There வருகிறது பாராளுமன்றம் மற்றும் கவுன்சில் முன் செல்கிறது ஒரு தரை போர்களில் நேரம் கணிசமான அளவு பல்வேறு துறைகள் மற்றும் ஆணையாளர்கள் ஒருவருக்கொருவர் போட்டியிட . மேலும் துணை ஆளுநர்களும் ஆணையாளர் தங்கள் ஊழியர்கள் மீது கட்டுப்பாட்டை உறுதிப்படுத்தி கொள்ள சிறிது நேரம் கொண்ட ஒரு ஆணையாளர் கணிசமான கட்டுப்பாட்டை முடியும் .\nஆணைக்குழு வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின் படி, 23,803 பேர் செப்டம்பர் 2012 ல் அதிகாரிகள் மற்றும் தற்காலிக முகவர்கள் கமிஷன் நியமிக்கப்பட்டிருந்தனர். இவை தவிர , 9230 \"வெளி ஊழியர்கள் \" (எ.கா. ஒப்பந்த முகவர் , பிரிக்கப்பட்ட தேசிய நிபுணர்கள் , இளம் நிபுணர்கள் , பயிற்சியாளர்களுக்கு முதலியன) நியமிக்கப்பட்டிருந்தனர். தேசிய மிகப்பெரிய குழு அநேகமாக நாட்டில் அடிப்படையாக இருப்பது ஊழியர்கள் பெரும்பான்மை ( 17,664 ) செய்ய , ( 18.7 % ) , பெல்ஜிய போது ஒற்றை பெரிய DG , ஒரு 2309 வலுவான ஊழியர்கள் , மொழிபெயர்ப்பு இயக்குநர் ஜெனரல் ஆகிறது . ஆணைக்குழுவின் உள்நாட்டு சேவை ஒரு பொது செயலாளர் , தற்போது கேதரின் தினம் தலைமையில்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 ஏப்ரல் 2017, 10:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.techtamil.com/tutorials/smart-object-video-tutorial-on-photoshop/", "date_download": "2018-04-26T13:19:16Z", "digest": "sha1:JEAGWJK4YQ4E5H5AE4YKGVDJC6SXXGNC", "length": 6793, "nlines": 130, "source_domain": "www.techtamil.com", "title": "Smart object video tutorial on Photoshop – TechTamil News", "raw_content": "\nContact / அறிமுகம் / தொடர்புக்கு\nSEO செய்வதற்கு Googleலின் தடைகள்....\nநீண்ட நாட்கள் கழித்து நான் பதியும் செய்தி இது. SEO செய்வது என்பது Googleலின் Indexing Algorithmஐ ஏமாற்றும் வேலை என கூகல் நினைக்கிறது. SEO செய்வதை முழ...\nஇந்த டுடோரியாயலில் எவ்வாறு அழகான பரிசு பெட்டி உருவாக்குவது என்று விளக்கப்பட்டுள்ளது. எளிதாக கற்றுக்கொள்ளலாம். ஏதேனும் ஐயம் இருந்தால் தெரிவிக்கவும். Do...\nஎந்த ஒரு புகைப்படத்திற்கும் புதுபொழிவு கொடுங்கள். எளிய வழியில் இதை செய்து முடிக்கலாம். photoshop ல் ஒரு புகைப்படத்தை எடுத்து, பின் வரும் முறைப்படி செய...\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\n​இணைய நிரல் பொறியாளர்களுக்கான ​ சிறந்த ​10 PHP Frameworkகள்\nவிளம்பர வடிவமைப்பு மென்பொருள் ஒன்றை வெளியிட்டது கூகல்\nவிண்டோஸ் 8 விளையாட்டுக்களை திருடுவது எப்படி நோக்கியா பொறியாளர் கசிய விட்ட…\nஇலவச இரண்டு Task Management மென்பொருள்கள் (அனைத்து வகையான பணிகளுக்கும்)\nகார்த்திக் விளக்கும் Google SEOவின் புதிய பரிணாமம் – பென்குயின் அப்டேட்\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n​இணைய நிரல் பொறியாளர்களுக்கான ​ சிறந்த ​10 PHP Frameworkகள்\nவிளம்பர வடிவமைப்பு மென்பொருள் ஒன்றை வெளியிட்டது கூகல்\nவிண்டோஸ் 8 விளையாட்டுக்களை திருடுவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://www.vanakkammalaysia.com/world/9111-2017-04-21-06-42-59", "date_download": "2018-04-26T13:08:28Z", "digest": "sha1:34D43QJOQXF5FCSBYIA3N4EEXGJVEDGE", "length": 14933, "nlines": 273, "source_domain": "www.vanakkammalaysia.com", "title": "பிரதமர் நவாஸ் ஊழலா? ஆதாரமில்லை! நீதிமன்றம் தீர்ப்பு", "raw_content": "\nமலையாளப் பாடல் திறன் போட்டி: அனைவரும் பங்கேற்கலாம்\n1 எம்.டி.பி தலைமை நிர்வாக அதிகாரி அருள் கந்தா அரசியல் பிரவேசமா\nதேர்தல் அதிகாரிகள் பற்றிய போலித் தகவலை நம்பாதீர் \nகேவியசின் ராஜினாமா; தே.மு.விற்கு எவ்வித பாதிப்பும் இல்லை\nகடந்த தேர்தலை விட கூடுதலான வெற்றி: வாய்ப்பு பிரகாசம்\nவெளிநாட்டு வாக்காளர்கள்:வாக்குச் சீட்டுகளை எப்படி அனுப்புவீர்கள்\nரோஸ்மாவின் பிறந்தநாள் கேக்: அது போலிச் செய்தி\nகெந்திங் சாலையில் பேருந்து தீக்கிரை\nமஇகாவிலிருந்து காயத்ரி ரகுமூர்த்தி முற்றாக விலகல்\nமணமகன் பலி: திருமணப் பரிசாக வெடிகுண்டு பார்சல் அனுப்பிய கல்லூரி ஆசிரியர் கைது\nஐஸ்வர்யா ராய் ஓரங்கட்டப் படுவது ஏன்\nமழலைக் குரலில் ரசிகர்களை வசீகரித்த பாடகி எம்.எஸ். ராஜேஸ்வரி காலமானார்\nசிறுமி பலாத்காரம்: பிரபல சாமியார் ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் சிறை\nஇந்திய நாடாளுமன்றத்திலும் பாலியல் தொல்லையா\nஅக்சய் குமாரின் படப்பிடிப்பு தளத்தில் குண்டு வெடித்து கோரத் தீ விபத்து\nபாலியல் வழக்கில் பிரபல சாமியார் குற்றவாளி -இந்திய நீதிமன்றம் தீர்ப்பு தீர்ப்பு\nஎஸ் வி சேகருக்கு அடைக்கலம் தந்த கிரிஜா வைத்தியநாதன் மீது வழக்கு\nதமிழ் நடிகருக்கு 50 கோடி சம்பளமா\nபாலஸ்தீனர் ஸ்தாபாக்கில் சுட்டுக் கொலை: கொலையாளிகளின் படங்கள் வெளியீடு\nஅர்சனல் குழுவின் 22 ஆண்டு கால நிர்வாகி அர்செனி வெங்கர் விலகுகிறார்\n'இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி'யில் வடிவேலு நடிக்க மறுத்தது ஏன்\nகற்பழிப்புக்கு மரண தண்டனை ஒன்றே தீர்வு- வரலட்சுமி ஆவேசம்\nசினிமா வேலைநிறுத்தம்: சொந்த ஊரில் ஆடு மேய்க்கும் நடிகை\nகணவருடன் ரஷ்யாவில் குடியேறுகிறார் நடிகை ஸ்ரேயா\n விஜய் சேதுபதி மீது விஷாலின் நடவடிக்கை பாயுமா\nஏங்க, எத்தனை தடவை சொல்றது, 'மாட்டேன்., மாட்டேன். ' -சத்யராஜ் மகள் திவ்யா\nகமலுக்கு செம அதிர்ச்சி தந்த ஹாலிவுட் தயாரிப்பாளர் நோலன்\nPrevious Article 14,000 மெக்சிகோ பெண்கள் ஒவ்வொரு ஆண்டும் கற்பழிப்பு\nNext Article மீண்டும் பயங்கரவாதத் தாக்குதல்: நிலைகுலைந்தது பிரான்ஸ்\nஇஸ்லாமாபாத், ஏப்ரல்.21- பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரிப்பை பதவியிலிருந்து நீக்குவதற்கு தொடுக்கப்பட்ட ஊழல் விசாரணையில் போதுமான ஆதாரங்கள் இல்லை என்று பாகிஸ்தானின் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.\nவெளிநாடுகளில், வங்கிக் கணக்குகளில் சொத்துக்களைப் பதுக்குவதில் பிரதமர் நவாசின் மூன்று பிள்ளைகள் சம்பந்தப்பட்டுள்ளார்கள் என்ற தகவல் 2015-ஆம் ஆண்டில் வெளியானது. தவறான வழியில் தாமும் தமது குடும்பமும் சொத்துச் சேர்க்கவில்லை என்று நவாஸ் மறுத்தார்.\nஇந்தப் பிரச்சனையினால் நவாஸ் கடும் சிக்கலை எதிர்நோக்கி இருந்தார். பிரதமர் பதவியிலிருந்து நவாஸ் விலகவேண்டும் என்று அரசியல் கட்சிகள் பலத்த நெருக்குதலை அளித்தனர். இது தொடர்பாக எதிர்க்கட்சியினர் அளித்த நெருக்குதலுக்கு இணங்கி இது குறித்து விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் ஒப்புக்கொண்டது.\nஇந்த விசாரணையின் முடிவில் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களில் போதுமான ஆதாரம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்புக் கூறியது. உச்சநீதிமன்ற வளாகத்தில் ஆயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள் திரண்டு, நவாஸ் பதவி விலகவேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nPrevious Article 14,000 மெக்சிகோ பெண்கள் ஒவ்வொரு ஆண்டும் கற்பழிப்பு\nNext Article மீண்டும் பயங்கரவாதத் தாக்குதல்: நிலைகுலைந்தது பிரான்ஸ்\nமலேசிய கோடீஸ்வரரை தரக் குறைவாக பேசுவதா அமைச்சர் நஸ்ரிக்கு மசீச கடும் கண்டனம்\nம.இ.காவுக்கு 7 எம்பி, தொகுதிகள் மட்டுமே கோத்தராஜா - கேமரன்மலை கைநழுவுகிறதா\n9 நாடாளுமன்ற வேட்பாளர்கள் யார் யார்\n6 எம்.பி. தொகுதிகளில் மஇகா போட்டி\nஇந்திய தொழிலதிபரான ''டத்தோஶ்ரீ'யுடன் புகைப்படம்: பதிலடி தந்தார் லிம் குவான்\nமலையாளப் பாடல் திறன் போட்டி: அனைவரும் பங்கேற்கலாம்\n1 எம்.டி.பி தலைமை நிர்வாக அதிகாரி அருள் கந்தா அரசியல் பிரவேசமா\nதேர்தல் அதிகாரிகள் பற்றிய போலித் தகவலை நம்பாதீர் \nகேவியசின் ராஜினாமா; தே.மு.விற்கு எவ்வித பாதிப்பும் இல்லை\nகடந்த தேர்தலை விட கூடுதலான வெற்றி: வாய்ப்பு பிரகாசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%C2%AD%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-04-26T13:22:30Z", "digest": "sha1:PSYCI7E7U42LXXGFACVXXAOTHOQYCB4E", "length": 3989, "nlines": 80, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கைத்­தொழில் | Virakesari.lk", "raw_content": "\nஇலங்கை ஆசிரியர் சேவை சங்கம் ஜே.வி.பியுடன் இணைந்து யாழ்பாணத்தில் \"செம்மே\" தினக் கொண்டாட்டம்\nநிலக்கரியை விட அடர்ந்த கருப்பு நிறத்தில் புதிய கிரகம் கண்டு பிடிப்பு\nஎரிந்த நிலையில் சடலம் மீட்பு\nபல கொள்ளைச் சம்பவங்களோடு தொடர்புடைய கொள்ளை கும்பல் கைது\nஇடி தாக்கி இருவர் வைத்தியசாலையில்\nஜாலிய விக்கிரமசூரியவை கைது செய்ய மீண்டும் பிடியாணை\n“அம்பாந்தோட்டை துறைமுகத்தின் பாதுகாப்பிற்கு இலங்கை கடற்படை மாத்திரமே பொறுப்பு”\nஐ.எஸ். தற்கொலை தாக்குதல் ; உயிரிழந்தோரின் எண்ணிக்கை 57 ஆக அதிகரிப்பு\nகாலில் விழுந்தவர் காலாவதியான நூடில்ஸ் என என்னை வர்ணிக்கிறார் : சந்திரிகா\nபுதிய வருடம் பிறந்­துள்ள நிலையில் கடந்த வரு­டத்தில் பொரு­ளா­தார நிலை­மைகள் எவ்­வாறு அமைந்திருந்தன என்­பது தொடர்பில்...\nசிறுவர் தொழி­லா­ளர்­களின் எண்­ணிக்கை வீழ்ச்சி\nசிறுவர் தொழி­லா­ளர்­களை நாட்­டி­லி­ருந்து ஒழிக்கும் திட்டம் வெற்­றி­ய­ளித்­துள்­ள­தாக கைத்­தொழில் மற்றும் தொழில்­ப­யிற்ச...\nநிலக்கரியை விட அடர்ந்த கருப்பு நிறத்தில் புதிய கிரகம் கண்டு பிடிப்பு\nஎரிந்த நிலையில் சடலம் மீட்பு\nபல கொள்ளைச் சம்பவங்களோடு தொடர்புடைய கொள்ளை கும்பல் கைது\nஇடி தாக்கி இருவர் வைத்தியசாலையில்\nபள்ளிமுனை கடற்கரை மீன் வாடிகளிலிருந்து ஒரு தொகை மீன்கள் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%B9%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-04-26T13:05:06Z", "digest": "sha1:CB6YA5LUDD5CWKFLMY7K2NI2BAWX3XZF", "length": 3524, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ஹரிவராசனம் விருது | Virakesari.lk", "raw_content": "\nஇலங்கை ஆசிரியர் சேவை சங்கம் ஜே.வி.பியுடன் இணைந்து யாழ்பாணத்தில் \"செம்மே\" தினக் கொண்டாட்டம்\nநிலக்கரியை விட அடர்ந்த கருப்பு நிறத்தில் புதிய கிரகம் கண்டு பிடிப்பு\nஎரிந்த நிலையில் சடலம் மீட்பு\nபல கொள்ளைச் சம்பவங்களோடு தொடர்புடைய கொள்ளை கும்பல் கைது\nஇடி தாக்கி இருவர் வைத்தியசாலையில்\nஜாலிய விக்கிரமசூரியவை கைது செய்ய மீண்டும் பிடியாணை\n“அம்பாந்தோட்டை துறைமுகத்தின் பாதுகாப்பிற்கு இலங்கை கடற்படை மாத்திரமே பொறுப்பு”\nஐ.எஸ். தற்கொலை தாக்குதல் ; உயிரிழந்தோரின் எண்ணிக்கை 57 ஆக அதிகரிப்பு\nகாலில் விழுந்தவர் காலாவதியான நூடில்ஸ் என என்னை வர்ணிக்கிறார் : சந்திரிகா\nArticles Tagged Under: ஹரிவராசனம் விருது\n\"ஹரிவராசனம்\" விருது பாடகி சித்ராவிற்கு......\nகேரள அரசின் இந்த ஆண்டுக்கான ஹரிவராசனம் விருதுக்கு பின்னணி பாடகி சித்ரா தேர்வு செய்யப்பட்டுஉள்ளார்.\nநிலக்கரியை விட அடர்ந்த கருப்பு நிறத்தில் புதிய கிரகம் கண்டு பிடிப்பு\nஎரிந்த நிலையில் சடலம் மீட்பு\nபல கொள்ளைச் சம்பவங்களோடு தொடர்புடைய கொள்ளை கும்பல் கைது\nஇடி தாக்கி இருவர் வைத்தியசாலையில்\nபள்ளிமுனை கடற்கரை மீன் வாடிகளிலிருந்து ஒரு தொகை மீன்கள் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://seithupaarungal.com/2014/09/07/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2018-04-26T13:12:39Z", "digest": "sha1:4WADWELYWYIY6G445R2R4A7BUCG3HTQ4", "length": 9778, "nlines": 113, "source_domain": "seithupaarungal.com", "title": "கணவாய் மீன் குழம்பு செய்வது எப்படி? – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nகணவாய் மீன் குழம்பு செய்வது எப்படி\nசெப்ரெம்பர் 7, 2014 செப்ரெம்பர் 7, 2014 த டைம்ஸ் தமிழ்\nஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் கணவாய் மீன் அதிகமாகக் கிடைக்கும். கிலோ ரூ. 100க்கு வாங்கலாம். மீன் என்று சொல்லப்பட்டாலும் இது ஒரு கடல் வாழ் உயிரி. ஜின்க், மாங்கனீஸ், வைட்டமின் பி12 நிறைந்தது இது சாப்பிட மிருதுவான இறைச்சி போல இருக்கும். இதை ஊறுகாயாக செய்து சேமிக்கும் வழக்கம் சில மீனவ குடிகளில் உண்டு. இதை எளிமையான செய்முறையில் சமைத்தும் உண்ணலாம்.\nகணவாய் மீனை சுத்தம் செய்வது மிகவும் எளிது. தெரியாதவர்கள் இந்த விடியோவைக் காணுங்கள்.\nகணவாய் மீனை சுத்தம் செய்து பலமுறை கழுவுங்கள். கழுவியதில் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து பிசறி வையுங்கள். கணவாய் மீனின் அளவுக்குத் தகுந்தமாதிரி வெங்காயம், தக்காளியை பொடியாக வெட்டிக் கொள்ளுங்கள். இஞ்சி பூண்டை அரைத்து வைக்கவும். தாளிக்க எண்ணெய், கடுகு, கருவேப்பிலையை எடுக்கவும். தேவையான உப்பும், குழம்பு மிளகாய் தூளும் வைத்துக் கொள்ளவும்.\nஒரு வாணலியில் எண்ணெய் விட்டு தாளித்து கடுகு, கருவேப்பிலை, வெங்காயத்தைப் போட்டு இளஞ்சிவப்பாக வதக்கவும். பிறகுஅரைத்து இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்த்து வாசனை மாற வதக்கி தக்காளி சேர்த்து அதனுடன் உப்பும் சேர்த்து வதக்கவும். தக்காளி வதங்கி வரும்போது மிளகாய் தூள் சேர்த்துக் கிளறவும். அப்போது மிளகாய் புகைக்காமல் இருக்க அடுப்பை குறைவான தீயில் வைக்கவும். அடுத்த நொடி சுத்தம் செய்து வைத்திருக்கும் கணவாய் மீனை சேர்த்து நன்றாக பிரட்டி ஒரு கப் தண்ணீர் அல்லது மிதமான தண்ணீர் சேர்த்து நன்றாக வேக விடவும். கணவாய் வெந்து தொக்கு பதத்துக்கு வரும்போது அடுப்பிலிருந்து இறக்கவும்.\nவழக்கம்போல இந்த குழம்பை எல்லா வகையான உணவுடனும் உண்ணலாம். மிகவும் ருசியான கடல் உணவு இது முயற்சித்துப் பாருங்கள்.\nகுறிச்சொல்லிடப்பட்டது அசைவ சமையல், கடல் உணவு, கணவாய் மீன் குழம்பு, சமையல், ஜின்க், மாங்கனீஸ், வைட்டமின் பி12\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postஎம்பிராய்டரி : சங்கிலித் தையல் போடுவது எப்படி\nNext postகுழந்தை திருமணம் பாலியல் பலாத்காரத்தை விட மிகவும் மோசமானது: டெல்லி நீதிமன்றம்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nநீங்களே செய்யலாம் ஃப்ரூட் ஃபலூடா\nபிஸ்தா ஐஸ்கிரீம் செய்வது எப்படி\nகருப்பட்டி கம்பு சேமியா எப்படி செய்வது\nஸ்டாக்கிங் பூக்கள் செய்வது எப்படி\nமணி வளையல் செய்வது எப்படி\nஎம்பிராய்டரி: பிரஞ்ச் நாட்’இல் சூரிய பூக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://chennaicity.info/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2018-04-26T13:35:30Z", "digest": "sha1:FMOIH3LNMVET5G3N5X62HZZZOI2OVZD5", "length": 7602, "nlines": 163, "source_domain": "chennaicity.info", "title": "ஜெயலலிதா உடல்நிலை குறித்து அமித்ஷா கேட்டறிந்தார் மத்திய … – தினத் தந்தி | Chennai City Info - 8122-044-044", "raw_content": "\nபாலியல் வன்கொடுமையில் ஆண் குழந்தைகள் பாதிக்கப்பட்டாலும் மரண தண்டனை அளிக்க வேண்டும்: மேனகா காந்தி ஆதரவு\nவிமானத்தில் ரூ2.6 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்\nHome Business ஜெயலலிதா உடல்நிலை குறித்து அமித்ஷா கேட்டறிந்தார் மத்திய … – தினத் தந்தி\nஜெயலலிதா உடல்நிலை குறித்து அமித்ஷா கேட்டறிந்தார் மத்திய … – தினத் தந்தி\nஜெயலலிதா உடல்நிலை குறித்து அமித்ஷா கேட்டறிந்தார் மத்திய … – தினத் தந்தி\nஜெயலலிதா உடல்நிலை குறித்து அமித்ஷா கேட்டறிந்தார் மத்திய …\nஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல்நலம் குறித்து பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய மந்திரி அருண் ஜெட்லி ஆகியோர் கேட்டறிந்தனர்.\nஜெயலலிதாவுக்கு 21வது நாளாக சிகிச்சை அமித் ஷா, ஜெட்லி திடீர் …தினகரன்\nமுதல்வர் ஜெயலலிதாவின் உடல் நலம் விசாரித்த அமித்ஷா …தின பூமி\nஜெ., விரைவில் நலமடைய அமித் ஷா ஜெட்லி வாழ்த்துதினமலர்\nமேலும் 39 செய்திகள் »\nஜெயலலிதா உடல்நிலை குறித்து அமித்ஷா கேட்டறிந்தார் மத்திய …\nஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல்நலம் குறித்து பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய மந்திரி அருண் ஜெட்லி ஆகியோர் கேட்டறிந்தனர்.\nஜெயலலிதாவுக்கு 21வது நாளாக சிகிச்சை அமித் ஷா, ஜெட்லி திடீர் …தினகரன்\nமுதல்வர் ஜெயலலிதாவின் உடல் நலம் விசாரித்த அமித்ஷா …தின பூமி\nஜெ., விரைவில் நலமடைய அமித் ஷா ஜெட்லி வாழ்த்துதினமலர்\nமேலும் 39 செய்திகள் »\nபிளஸ்-1 மாணவி பாலியல் பலாத்காரம்; பனியன் தொழிலாளிக்கு … – நக்கீரன் nakkheeran publications\nகறுப்புப் பணத்தை கணக்கில் கொண்டு வரும் பிஎம்ஜிகேஒய் … – தி இந்து\nபிப்ரவரி 1-ந் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு எதிராக … – தினத் தந்தி\nபாலியல் வன்கொடுமையில் ஆண் குழந்தைகள் பாதிக்கப்பட்டாலும் மரண தண்டனை அளிக்க வேண்டும்: மேனகா காந்தி ஆதரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} {"url": "http://millathnagar.blogspot.ae/", "date_download": "2018-04-26T12:54:32Z", "digest": "sha1:JOWIVDQHIREUOQHYJPMV2TF6QXVSPO5D", "length": 23564, "nlines": 223, "source_domain": "millathnagar.blogspot.ae", "title": "மில்லத்நகர்.காம்", "raw_content": "\nதுபாய் விமான நிலையங்களில் பயணிகள் நுழைய இனி 35 திர்ஹாம் கட்டணம்..\nதுபாய், 31-03-2016 துபாய் விமான நிலையத்தை பயன்படுத்தும் பயணிகளுக்கு சேவை கட்டணம் வசூலிக்க துபாய் பட்டத்து இளவரசரும்,...\nநாகூர் கந்தூரி நாசமாகும் அமல்கள்..\n🤔 தமிழகத்திலுள்ள முஸ்லிம் பெண்கள் ஹிஜ்ரி மாதக் கணக்கை நன்கு நினைவு வைத்திருப்பர் ... 😒 ஆனால் அவர்களுக்கு அரபு மாதங்களின் பெயர்கள...\n‎பசுவை பாரதமாதாவாக‬‎ அறிவிக்க வேண்டுமென‬ ‎விசம் குடித்த விவசாயிகள்..\nஇதில் ஒரு விவசாயி இறந்து விட்டார், 3பேர் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ... 8பேர் விசம் அருந்தி போராட்டம் நடத்தியுள்ளனர...\nஃபலஸ்தீன மக்களுக்கு சர்வதேச சமூகம் உதவ வேண்டும்: காலித் மிஷ் அல்.\nசுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஃபலஸ்தீன மக்களுக்கு சர்வதேச சமூகம் உதவ வேண்டும் என்று ஹமாஸ் இயக்க அரசியல் பிரிவு தலைவர் காலித் மிஷ்அல...\nஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகாவத்தை கேலி செய்யும் படங்களை இணையத்தில் பகிர்ந்ததினால் இரண்டு முஸ்லிம் இளைஞர்கள் கைது\nமத்திய பிரதேச மாநிலத்தில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகாவத்தை கேலி செய்யும் படம் ஒன்றை இணையதளத்தில் பகிர்ந்தமைக்கு இரண்டு முஸ்லிம் இளைஞர...\nதுபாய்: வரும் ஆண்டு 1 ஜனவரி 2018 முதல் VAT வரி அமலுக்கு வருகிறது...\nநிதி விவகாரங்கள் துறை இணை அமைச்சராக உள்ள ஓபைத் ஹூமைத் அல் தயார். கூறுகையில் GCCசுப்ரீம் கவுன்சில் தீர்மானம் செயல்படுத்த VAT வரி 5 % ...\nதுபாய் விமானம் ரஷியாவில் தரையிறங்கியபோது வெடித்துச் சிதறியது: 61 பேர் பலி \nமாஸ்கோ, மார்ச் 19- துபாய் நாட்டில் இருந்து ரஷியாவுக்கு சென்ற ‘பிளை துபாய்’ விமானம் ராஸ்டோவ்-ஆன்-டான் விமான நிலையத்தில் தரையிறங்க...\nஇஸ்ரேலுடன் நெருங்கும் இந்தியா : சவூதியுடன் நெருங்கும் சீனா.....\nபாலஸ்தீனை ஆக்கிரமித்த இஸ்ரேல் உலக வரைபடத்தில் திடீரென உருவாக்கப்பட்ட நாடாகும். இந்தியா சுதந்திரம் அடைந்த காலம் முதல் இந்தியா பாலஸ்தீனையே...\nஷிர்க் ஒழிப்பு மாநாட்டை தடுக்க முடியாது – உயர் நீதி மன்றம் அதிரடி..\nஷிர்க் ஒழிப்பு மாநாட்டை தடுக்க முடியாது – உயர் நீதி மன்றம் அதிரடி: முஸ்லிம்களின் பேரியக்கமான தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் எதிர்வரும் ஜனவரி 31...\nவரலாற்றை மீட்டும் ஷீஆக்கள் - அழிக்கப்படும் முஸ்லிம்கள்...\n​ உலக வரலாற்றில் முஸ்லிம்களுக்குள் இருந்துகொண்டு தங்களை முஸ்லிம்களாகவும் முஸ்லிம்களுக்காகப் போராடுபவர்களாகவும் காட்டிக்கொண்டு வேலை செய்த...\nUAEல் வேலைக்கு வருவதற்கு முன்பு கவனிக்கவேண்டியவை\n1) விசா 2) சம்பளம் விசா: முதலில் விசாவை பற்றி பார்கலாம் இதுவரை பலபேர் செய்துகொண்டு இருந்தது, விசிட் விசா (டூரிஸ்ட் விசா) எடுத்து இங்கு ...\nவி. களத்தூர் மில்லத்நகர் பிஸ்மில்லாஹ் தெரு அவுள் வீடு ஹாஜி பிச்சை கனி அவர்கள் 14-12-2014 இன்று மதியம் 03:00 மணியளவில் வபாத்தானா...\n இஸ்லாத்தின் பெரும்பாலான சட்டங்களைப் போல நோன்பும் ஹிஜ்ராவின்பின் மதினாவில் வைத்தே விதியாக்கப்பட்டது....\nபுஷ்ரா நல அறக்கட்டளையின் பெருநாள் கேக் மற்றும் மிக்ஸ் ஸ்வீட் விநியோகம் -வி.களத்தூர் மற்றும் லப்பைகுடிகாடு மக்கள் ஆர்டர் கொடுத்து பயனடைவீர்\nபுஷ்ரா நல அறக்கட் டளை கடந்த பல வருடங்களாக வி . களத ்தூர் , மில்லத் நகர் மற்றும் லப ்பைகுடிகாடு மக்களுக்கு ஈத் ப...\nவி.களத்தூர் கிழக்கு மெயின் ரோடு வைத்தியக்காரர் வீடு தஸ்தகீர் அவர்களின் இளைய மகன் சலீம் பாஷா என்பவர் வபாத்தாகிவிட்டார். கடந்த சில நா...\nநாகூர் கந்தூரி நாசமாகும் அமல்கள்..\n🤔 தமிழகத்திலுள்ள முஸ்லிம் பெண்கள் ஹிஜ்ரி மாதக் கணக்கை நன்கு நினைவு வைத்திருப்பர் ... 😒 ஆனால் அவர்களுக்கு அரபு மாதங்களின் பெயர்கள...\nபிறப்பு – இறப்பு சான்றிதழ்களின் முக்கியத்துவமும் அவற்றை பெறுவதற்கான வழிமுறைகளும்\nஒரு மனிதன், பிறக்கும் போது,அவன் வாழும் காலம் வரை. அவ னது பிறப்புச்சான்றிதழ் பயன் படும் அதே மனிதன் இறந்த பின்பு, அவனது குடும்பத்தா ...\nஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகாவத்தை கேலி செய்யும் படங்களை இணையத்தில் பகிர்ந்ததினால் இரண்டு முஸ்லிம் இளைஞர்கள் கைது\nமத்திய பிரதேச மாநிலத்தில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகாவத்தை கேலி செய்யும் படம் ஒன்றை இணையதளத்தில் பகிர்ந்தமைக்கு இரண்டு முஸ்லிம் இளைஞர...\n‘பெண்களுக்கு அவர்களின் மணக்கொடையை (மஹர்) மனமுவந்து வழங்கிவிடுங்கள்.’ (அல்குர்ஆன் 4:4) ‘நபியே எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்த...\nநோன்பின் சட்டங்கள்: இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் தொழுகைக்கு அடுத்த நிலையில் நோன்பு அமைந்துள்ளது. எனவே, நோன்பு தொடர்பாக ஒரு தெளிவான வ...\nUAEல் வேலைக்கு வருவதற்கு முன்பு கவனிக்கவேண்டியவை\n1) விசா 2) சம்பளம் விசா: முதலில் விசாவை பற்றி பார்கலாம் இதுவரை பலபேர் செய்துகொண்டு இருந்தது, விசிட் விசா (டூரிஸ்ட் விசா) எடுத்து இங்கு ...\nவி. களத்தூர் மில்லத்நகர் பிஸ்மில்லாஹ் தெரு அவுள் வீடு ஹாஜி பிச்சை கனி அவர்கள் 14-12-2014 இன்று மதியம் 03:00 மணியளவில் வபாத்தானா...\n இஸ்லாத்தின் பெரும்பாலான சட்டங்களைப் போல நோன்பும் ஹிஜ்ராவின்பின் மதினாவில் வைத்தே விதியாக்கப்பட்டது....\nபுஷ்ரா நல அறக்கட்டளையின் பெருநாள் கேக் மற்றும் மிக்ஸ் ஸ்வீட் விநியோகம் -வி.களத்தூர் மற்றும் லப்பைகுடிகாடு மக்கள் ஆர்டர் கொடுத்து பயனடைவீர்\nபுஷ்ரா நல அறக்கட் டளை கடந்த பல வருடங்களாக வி . களத ்தூர் , மில்லத் நகர் மற்றும் லப ்பைகுடிகாடு மக்களுக்கு ஈத் ப...\nவி.களத்தூர் கிழக்கு மெயின் ரோடு வைத்தியக்காரர் வீடு தஸ்தகீர் அவர்களின் இளைய மகன் சலீம் பாஷா என்பவர் வபாத்தாகிவிட்டார். கடந்த சில நா...\nநாகூர் கந்தூரி நாசமாகும் அமல்கள்..\n🤔 தமிழகத்திலுள்ள முஸ்லிம் பெண்கள் ஹிஜ்ரி மாதக் கணக்கை நன்கு நினைவு வைத்திருப்பர் ... 😒 ஆனால் அவர்களுக்கு அரபு மாதங்களின் பெயர்கள...\nபிறப்பு – இறப்பு சான்றிதழ்களின் முக்கியத்துவமும் அவற்றை பெறுவதற்கான வழிமுறைகளும்\nஒரு மனிதன், பிறக்கும் போது,அவன் வாழும் காலம் வரை. அவ னது பிறப்புச்சான்றிதழ் பயன் படும் அதே மனிதன் இறந்த பின்பு, அவனது குடும்பத்தா ...\nஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகாவத்தை கேலி செய்யும் படங்களை இணையத்தில் பகிர்ந்ததினால் இரண்டு முஸ்லிம் இளைஞர்கள் கைது\nமத்திய பிரதேச மாநிலத்தில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகாவத்தை கேலி செய்யும் படம் ஒன்றை இணையதளத்தில் பகிர்ந்தமைக்கு இரண்டு முஸ்லிம் இளைஞர...\n‘பெண்களுக்கு அவர்களின் மணக்கொடையை (மஹர்) மனமுவந்து வழங்கிவிடுங்கள்.’ (அல்குர்ஆன் 4:4) ‘நபியே எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்த...\nநோன்பின் சட்டங்கள்: இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் தொழுகைக்கு அடுத்த நிலையில் நோன்பு அமைந்துள்ளது. எனவே, நோன்பு தொடர்பாக ஒரு தெளிவான வ...\nUAEல் வேலைக்கு வருவதற்கு முன்பு கவனிக்கவேண்டியவை\n1) விசா 2) சம்பளம் விசா: முதலில் விசாவை பற்றி பார்கலாம் இதுவரை பலபேர் செய்துகொண்டு இருந்தது, விசிட் விசா (டூரிஸ்ட் விசா) எடுத்து இங்கு ...\nவி. களத்தூர் மில்லத்நகர் பிஸ்மில்லாஹ் தெரு அவுள் வீடு ஹாஜி பிச்சை கனி அவர்கள் 14-12-2014 இன்று மதியம் 03:00 மணியளவில் வபாத்தானா...\n இஸ்லாத்தின் பெரும்பாலான சட்டங்களைப் போல நோன்பும் ஹிஜ்ராவின்பின் மதினாவில் வைத்தே விதியாக்கப்பட்டது....\nபுஷ்ரா நல அறக்கட்டளையின் பெருநாள் கேக் மற்றும் மிக்ஸ் ஸ்வீட் விநியோகம் -வி.களத்தூர் மற்றும் லப்பைகுடிகாடு மக்கள் ஆர்டர் கொடுத்து பயனடைவீர்\nபுஷ்ரா நல அறக்கட் டளை கடந்த பல வருடங்களாக வி . களத ்தூர் , மில்லத் நகர் மற்றும் லப ்பைகுடிகாடு மக்களுக்கு ஈத் ப...\nவி.களத்தூர் கிழக்கு மெயின் ரோடு வைத்தியக்காரர் வீடு தஸ்தகீர் அவர்களின் இளைய மகன் சலீம் பாஷா என்பவர் வபாத்தாகிவிட்டார். கடந்த சில நா...\nநாகூர் கந்தூரி நாசமாகும் அமல்கள்..\n🤔 தமிழகத்திலுள்ள முஸ்லிம் பெண்கள் ஹிஜ்ரி மாதக் கணக்கை நன்கு நினைவு வைத்திருப்பர் ... 😒 ஆனால் அவர்களுக்கு அரபு மாதங்களின் பெயர்கள...\nபிறப்பு – இறப்பு சான்றிதழ்களின் முக்கியத்துவமும் அவற்றை பெறுவதற்கான வழிமுறைகளும்\nஒரு மனிதன், பிறக்கும் போது,அவன் வாழும் காலம் வரை. அவ னது பிறப்புச்சான்றிதழ் பயன் படும் அதே மனிதன் இறந்த பின்பு, அவனது குடும்பத்தா ...\nஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகாவத்தை கேலி செய்யும் படங்களை இணையத்தில் பகிர்ந்ததினால் இரண்டு முஸ்லிம் இளைஞர்கள் கைது\nமத்திய பிரதேச மாநிலத்தில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகாவத்தை கேலி செய்யும் படம் ஒன்றை இணையதளத்தில் பகிர்ந்தமைக்கு இரண்டு முஸ்லிம் இளைஞர...\n‘பெண்களுக்கு அவர்களின் மணக்கொடையை (மஹர்) மனமுவந்து வழங்கிவிடுங்கள்.’ (அல்குர்ஆன் 4:4) ‘நபியே எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்த...\nநோன்பின் சட்டங்கள்: இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் தொழுகைக்கு அடுத்த நிலையில் நோன்பு அமைந்துள்ளது. எனவே, நோன்பு தொடர்பாக ஒரு தெளிவான வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.surekaa.com/2007/12/blog-post_23.html", "date_download": "2018-04-26T13:10:26Z", "digest": "sha1:VJXK6JD3TEG3LNYCH3HK5ZWGA3OMWTSR", "length": 26200, "nlines": 322, "source_domain": "www.surekaa.com", "title": "சுரேகா: நேர்மைன்னா என்னங்க?", "raw_content": "\n-அது ஒரு நடைமுறைக்கு ஒவ்வாத விஷயம்.\n-ஏனெனில் இவ்வுலகில் யாருமே நேர்மையாக இல்லை.இப்படித்தான் நம் பதில்கள் இருக்கும்.\nஒருவர் நேர்மையானவராக இச்சூழலில் இருந்தால், அவரை 'புதிய ஜந்து' மாதிரி பார்க்கிறோம். ஆனால் , கொடுமை என்னவென்றால், மனிதனின் பொதுவான குணங்களில் ஒன்றுதான் நேர்மை..\nநம் அனைவருக்கும் (பெரும்பான்மையாக) 18 வயதுக்கு மேல் ஆகியிருக்கும். அனைவரும் இரு சக்கர வாகனம் ஓட்டத்தெரிந்தவர்களாக இருப்போம். நகர வீதிகளில் சிறப்பாக ஓட்டிச்சென்றிருப்போம்.நம்மில் எத்தனைபேரிடம் ஓட்டுநர் உரிமம் இருக்கிறதுநம்மை யாரும் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்கவேண்டியதில்லை என்று கட்டாயப்படுத்தவில்லை. ஆனாலும் நாம்\n நேரமில்லை.. என்போம். ஆனால் எத்தனையோ நேரங்களை வீணாக செலவழித்திருப்போம்.\nஇந்நிலையில் ஒரு நெரிசல் மிகுந்த சாலையில் , நல்ல வேகத்தில் செல்லும்போது போக்குவரத்து காவலர் பிடித்தால், அவரிடம் ஏதாவது காரணம் சொல்லி தப்பிக்கப்பார்ப்பதும் , அவரிடத்தில் கையூட்டு கொடுத்து நகர நினைப்பதும்தான் நடக்கும். இதுதான் லஞ்சத்தை ஊக்குவிக்கும் நேர்மையை மீறிய கயமைத்தனம்.இங்குதான் பிறக்கிறது நேர்மையின்மை நம்மால் ஒருவர் லஞ்சம் வாங்குவதை தட்டிக்கேட்க முடியாது. ஏனெனில் நாமும் தவறு செய்தவர்தான்..நாம் யாருக்குமே பயப்படாமல் தவறுகளை தட்டிக் கேட்க துணிந்துவிட்டோமென்றால் நேர்மையானவர் ஆகிவிட்டோம் என்று அர்த்தம்.நாம் யாருக்குமே பயப்படாமல் தவறுகளை தட்டிக் கேட்க துணிந்துவிட்டோமென்றால் நேர்மையானவர் ஆகிவிட்டோம் என்று அர்த்தம். ஏனெனில் எதிராளி குறைகூற நம்மிடம் ஒரு\nஆகவே நேர்மையை உண்மைகொண்டே ஆரம்பிக்கமுடியும்..தைரியமாக உண்மை கூறப்பழகவேண்டும். நாம் கண்டிப்பாக பொய்கூறமாட்டோம் என்று எதிராளி எண்ணவேண்டும். மேலும் நம் சமூகம், அரசு ஆகியவை கூறும் நியாயமான செயல்களை அதே முறைப்படி பின்பற்றவேண்டும். யாருக்கும் பயப்பட வேண்டியிருக்காது. அதையும் மீறி தவறு நடந்தால்...\n\"என் ஒருவனால் இந்த உலகை, நாட்டை , ஊரை , கிராமத்தை,\nதெருவை, ஏன் என் குடும்பத்தைக்கூட மாற்றமுடியாது என்ற அவநம்பிக்க்கு அடிமையாகத்தான் இன்னும் நாம் இருக்கிறோம். நேர்மை பழகிப்போய் அதன் ருசி கண்டுவிட்டால் அப்புறம் ஒரு கூட்டமே அதனை பயிற்சிசெய்யும். அப்போது பார்த்தால் அனைத்தும் மாற ஆரம்பிக்கும். அனைவரும் நேர்மையாகிவிட்டோம் என்ற முடிவுக்கு விரைவில் நாம் வந்துவிடுவோம்.பயத்தின் அடிப்படையே நேர்மையின்மைதான். அனைவரும் நேர்மையாகிவிட்டோம் என்ற முடிவுக்கு விரைவில் நாம் வந்துவிடுவோம்.பயத்தின் அடிப்படையே நேர்மையின்மைதான். நேர்மை பழகிப்போனபின் பார்த்தால் நம் பலம் நமக்கே தெரிய ஆரம்பிக்கும்.\nமுதலில் எக்காரணம் கொண்டும் லஞ்சம் கொடுப்பதில்லை என்று உறுதி பூணுவோம்..\nஏனெனில் நாமெல்லாம் பூனைத்தோல் போர்த்திய புலிகள்\nபூனைத்தோலை உதறி புலியென்று உணருவோம். \nசொன்னது சுரேகா.. வகை தத்துவம் மாதிரி\nமொதல்ல ப்ளாகர்ல அத ஆரம்பிப்போமா\n//\"என் ஒருவனால் இந்த உலகை, நாட்டை , ஊரை , கிராமத்தை,\nதெருவை, ஏன் என் குடும்பத்தைக்கூட மாற்றமுடியாது என்ற அவநம்பிக்க்கு அடிமையாகத்தான் இன்னும் நாம் இருக்கிறோம். நேர்மை பழகிப்போய் அதன் ருசி கண்டுவிட்டால் அப்புறம் ஒரு கூட்டமே அதனை பயிற்சிசெய்யும்.//\nஎந்த அளவுக்கு நாம இந்த பழக்கத்துக்கு அடிமை ஆகியிருக்கோம்னு நினச்சுக்கூட பார்க்க முடியலை... லஞ்சம் கொடுக்கிறது பெரிய தப்பில்லைன்னு நினைக்குற அளவுல தான் இன்றைய தலைமுறை இருக்கு..ஹ்ம்ம்ம்\nஇது என்ன லஞ்ச ஒழிப்பு மாதமா...\nஎல்லாரும் போட்டி போட்டுட்டு எழுதறீங்க\n//மொதல்ல ப்ளாகர்ல அத ஆரம்பிப்போமா\nஅய்யய்யோ..இங்கல்லாம் அமைதியாத்தான் டீல் பண்ணணும்...\n//எந்த அளவுக்கு நாம இந்த பழக்கத்துக்கு அடிமை ஆகியிருக்கோம்னு நினச்சுக்கூட பார்க்க முடியலை... லஞ்சம் கொடுக்கிறது பெரிய தப்பில்லைன்னு நினைக்குற அளவுல தான் இன்றைய தலைமுறை இருக்கு..ஹ்ம்ம்ம்//\nஆமாங்க..அதுதான் இன்னிக்கு விஸ்வரூபமெடுத்து நிக்கிது.. நாம நினைச்சா கண்டிப்பா விலக்கிடலாம்.\nகண்டிப்பா.. நான் முடிஞ்சவரை நேர்மையைக் கடைபிடிச்சு சந்தோஷமா இருக்கேன். தட்டிக்கேட்பதில் இருக்கும் சுகமே அலாதிதான்.\nநல்லா சொன்னிங்க, பணம் கொடுத்து சாதிப்பதால் மட்டும் தவறில் இருந்து தப்பிப்பது நடக்கிறது என சொல்ல முடியாது.\nசில, பல விருப்ப தேர்வுகள் , பாரபட்சம் காட்டுவதும் தவறுகளை ஊக்குவிப்பது. என் ஊர்க்காரன்/ஜாதிக்காரன்/உறவினன் என்று ஒருவருக்கு சாதகம் செய்யும் போது அப்படிப்பட்ட வாய்ப்பு அல்லாதவனுக்கு நியாமாக கிடைக்க வேண்டிய வாய்ப்பு மறுக்கப்படுகிறது, அவன் தனக்கு ஏற்பட்ட அநீதிக்கு போராடாமல் அவன் பணம் கொடுத்தாவது காரியம் சாதிக்க முயல்கிறான்.\nஇங்கு தான் எல்லா சமூக சிக்கல்களும் ஊழல்களும் சாஸ்வதம் பெறுகின்றன.\nஇதைத்தானே இங்கே வந்த நாள் முதலா செய்துக்கிட்டு இருக்கேன்... கொலை வாளினை எடடா கொடியோர் மிகு பூமியிலே.... எடுத்துட்டோம்ல வலைப்பூ வாளினை\nநேர்மை என்பது வெளியில் பிறப்பதில்லை, நமக்குள் தான் பிறக்க வேண்டும் , ஊரும், நாடும் திருந்த நாம் திருந்த வேண்டும்.\nதிருப்பதிக்கு சாமி கும்பிட போனாக்கூட வி.ஐ.பி லெட்டருக்கு ஏன் தனி மரியாதை. அந்த வி.ஐ.பி வந்த மரியாதைக்குடுக்கட்டும், அவன் தர காகிதத்துக்கு எதுக்கு தனிச்சிறப்பு. அந்த வி.ஐ.பி காகிதம் இல்லாதவன் ரிசர்வ் பேங் காகிதம் தருகிறான். எதுவுமே இல்லாம பெருமாள பார்க்கணும்னா ... அவதி தான்\nஎல்லாரையும் ஒரே தட்டுல வைங்க, முன்னால வரவன் முன்ன போய்ப்பார்க்கட்டும். சர்வமும் அவனே ஆனா கடவுளைப்பார்க்கவே பல தராதரம் நிர்ணயித்தா எப்படி.\nஇப்படி சொல்லித்தான் ஆரம்பிக்கறதா இருந்தேங்க.. ஆனா மொக்கையாப்போயிடுமோன்னு தவிர்த்தேன்.. நல்லவேளை முடிச்சுவச்சுட்டீங்க..\n//சில, பல விருப்ப தேர்வுகள் , பாரபட்சம் காட்டுவதும் தவறுகளை ஊக்குவிப்பது. என் ஊர்க்காரன்/ஜாதிக்காரன்/உறவினன் என்று ஒருவருக்கு சாதகம் செய்யும் போது அப்படிப்பட்ட வாய்ப்பு அல்லாதவனுக்கு நியாமாக கிடைக்க வேண்டிய வாய்ப்பு மறுக்கப்படுகிறது, அவன் தனக்கு ஏற்பட்ட அநீதிக்கு போராடாமல் அவன் பணம் கொடுத்தாவது காரியம் சாதிக்க முயல்கிறான்.\nஇங்கு தான் எல்லா சமூக சிக்கல்களும் ஊழல்களும் சாஸ்வதம் பெறுகின்றன.//\nஆமாமா...ஒரு எடுத்துக்காட்டுக்குத்தான் சொன்னேன். இதுக்கு பல முகங்கள் இருக்கு.\nநம்பள எங்க கொண்டு போய் விடும்னே தெரியாம பல விஷயங்கள் ஊறிப்போயிருக்கு\n//இதைத்தானே இங்கே வந்த நாள் முதலா செய்துக்கிட்டு இருக்கேன்... கொலை வாளினை எடடா கொடியோர் மிகு பூமியிலே.... எடுத்துட்டோம்ல வலைப்பூ வாளினை\nஆமாமா.. ஏதாவது ஒரு முறையில் நம்மால் தட்டிக்கேட்க முடிந்தாலே ஒரு வடிகால் கிடைக்கும். அதற்கும்மேல் கண்டிப்பா 2 பேராவது யோசிப்பாங்கல்ல.\n//திருப்பதிக்கு சாமி கும்பிட போனாக்கூட வி.ஐ.பி லெட்டருக்கு ஏன் தனி மரியாதை. அந்த வி.ஐ.பி வந்த மரியாதைக்குடுக்கட்டும், அவன் தர காகிதத்துக்கு எதுக்கு தனிச்சிறப்பு. அந்த வி.ஐ.பி காகிதம் இல்லாதவன் ரிசர்வ் பேங் காகிதம் தருகிறான். எதுவுமே இல்லாம பெருமாள பார்க்கணும்னா ... அவதி தான்\nஅய்யய்ய... அந்தக்கொடுமைக்காகவே நான் திருப்பதி போறதில்லை.\nமேலும் இப்படி அநியாயம் பண்ணுறவன் கொடுக்கும் காசை வாங்கிக்கிட்டு, அவனுக்கும் அருள்பாலிக்கும் சாமி...\nஇதையும் விமர்சனம் பண்ணினா என்ன \nஅந்தக் கோரம் நடந்த நாள்..\nஉறவுகள் - பாகம் 2\nமறுபடியும் பெட்டி போச்சு....(போயே போச்சு...)\nஅரசியல் ( 11 )\nஅவலம் ( 13 )\nஅழைப்பு ( 6 )\nஅனுபவம் ( 50 )\nஅன்பு ( 19 )\nஆரஞ்சு மணக்கும் பசி ( 1 )\nஇயற்கை ( 3 )\nஇலக்கியம் ( 2 )\nஉலக அழிவு ( 1 )\nஒலிப் பதிவு ( 2 )\nஓமப்பொடி ( 9 )\nகண்ணீர் ( 1 )\nகவிக்கதை ( 3 )\nகவிதை ( 26 )\nகேட்டால் கிடைக்கும் ( 14 )\nகொசுவத்தி ( 16 )\nசவால் சிறுகதை ( 1 )\nசிரிப்பு ( 2 )\nசினம் ( 5 )\nசினிமா ( 21 )\nசுதந்திரம் ( 1 )\nட்விட்டுரை ( 2 )\nதத்துவம் மாதிரி ( 29 )\nதமிழ்மண நட்சத்திரம் ( 18 )\nதிறமை இடைவெளி ( 1 )\nநடப்பு ( 94 )\nநன்றி ( 9 )\nநாடகம் ( 6 )\nநினைவுகள் ( 2 )\nநேர்முக்கியத் தேர்வு தொடர் ( 3 )\nபாராட்டு ( 10 )\nபார்வை ( 4 )\nபுது மீள்பதிவு ( 3 )\nபுத்தகம் ( 8 )\nபுனைவு ( 1 )\nமகளிர் தினம் ( 1 )\nமகிழ்ச்சி ( 1 )\nமயன் ( 1 )\nமீள்பதிவு ( 7 )\nமொக்கை ( 17 )\nயுடான்ஸ் நட்சத்திரம் ( 6 )\nவாழ்த்து ( 8 )\nவிமர்சனம் ( 15 )\nவேலைத் தகுதி ( 2 )\nஸ்டாலின் சரவணன் ( 1 )\nஎன் நெருங்கிய நட்பாக நான் நினைக்கும், மதிக்கும் பதிவுலகில் இதைப்பகிரவேண்டிய நிர்ப்பந்தத்தை என் மனசாட்சி ஏற்படுத்தியதன் விளைவுதான் இ...\nசிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி நெறியாளர், வானொலி நிகழ்ச்சியாளர், பத்திரிகையாளர், விளம்பரப்பட தயாரிப்பாளர், நண்பர் கோபிநாத்தின் திருமணம் ...\nசென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் சினிமா டுடே என்ற திரைத்துறைக் கண்காட்சிக்கு நேற்று (சனிக்கிழமை) சென்று சுற்றிப்பார்த்ததில் நேரம் ம...\nஒரு கொப்பனாம்பட்டித் தமிழன் சென்னையில் மூன்றாண்டுகள் குப்பை வீசியபின் தன்னை சென்னையனாகக் காட்டிக்கொள்ள வார இறுதிகளில் படையெடு...\nகுமரன் தியேட்டரும்.. ..குடுவைத் தண்ணீரும் . .\nசூது கவ்வும் படம் பார்க்கலாம் என்று திடீர் யோசனை வந்தபோது நான் சென்றுகொண்டிருந்தது மடிப்பாக்கம் சாலை. நேரமும் மால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tnguru.com/2017/09/blog-post.html", "date_download": "2018-04-26T13:38:46Z", "digest": "sha1:FPOFTTWC524YAAFZLCJI7TG45SEE35ZM", "length": 7307, "nlines": 142, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: டாக்டர் ராதகிருஷ்ணண் அவர்களின் பிறந்த நாள்", "raw_content": "\nடாக்டர் ராதகிருஷ்ணண் அவர்களின் பிறந்த நாள்\nடாக்டர் ராதகிருஷ்ணண் அவர்களின் பிறந்த நாள்\nகுறிக்கோள் இல்லாத வாழ்க்கை முகவரியில்லாதகடிதத்திற்குச் சமம். இது போல் தான் மாணவ சமூகமும்குறிக்கோள், லட்சியம் இல்லாமல் இருந்தால்எதிர்காலம் ஓர்; இருண்ட பாதை என்பதை ஆரம்பகாலத்தில் இருந்தே மாணவமனதில் நன்கு பதிய வைத்து, அதன் மூலம் கிடைக்கும்வெற்றியை பார்க்கும் பொழுது ஆசிரியர்களின்முகத்தில் ஓர்; மகிழ்ச்சி தோன்றும். இதனைசொல்வதை விட உணர்வுப் பூர்வமாக உணர முடியும்.தன்னிடம் ஒப்படைக்கப்படும் மாணவனை நல்லமாணவனாக ஆக்குவதோடு, நல்ல மனிதனாகமாற்றும் பொறுப்பும் ஆசிரியர்களுக்கு இருக்கிறது.அதே போல் ஆசிரியர்கள் என்பவர்கள் மாணவசமூகத்தை உருவாக்குபவர்கள் அல்ல, மாறாகஉயிரூட்டுபவர்கள். ஒரு சிறந்த ஆசிரியர்களின்பண்புகள், குணங்களை பார்க்கும் மாணவ,மாணவிகளின் மனதில் அப்படியே பதியும். அதனால்ஆசிரியர்கள் தங்களை மாணவர்களின் காலக்கண்ணாடி என்ற எண்ணத்தில் தான் பணியாற்றிவருகின்றனர்.அப்படி பணியாற்றுவதன் மூலம்கடினமாக உழைத்து வாழ்வில் ஒளிரும் மாணவசமூகத்திற்கு ஆசிரியர்கள் உரிமையாளர்களாகமாறுகின்றனர்.\n42 டாக்டர் பட்டம் பெற்ற டாக்டர் ராதகிருஷ்ணண்அவர்களின் பிறந்த நாளைத் தான் ஆசிரியர்கள்தினமாக கொண்டாடப்படுகிறது. தெளிவான,சிறப்பான மாணவ சமூகத்தை உருவாக்குவதில்ஆசிரியர்களின் பங்கு முதன்மையானது என்பதைஇங்கு யாரும் மறுக்கமுடியாது.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\nஸ்மார்ட் ரேஷன் கார்டு பற்றிய முழுமையான விவரங்கள் பார்த்து பயனடைவீர் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://muruganandan.wordpress.com/tag/veg/", "date_download": "2018-04-26T13:44:26Z", "digest": "sha1:6CAXYGTW57LOW3PKOLHKSK2VYQPGJ6IR", "length": 9509, "nlines": 119, "source_domain": "muruganandan.wordpress.com", "title": "Veg | Our World -", "raw_content": "\nபனீர் – 300 கிராம்\n1. வேதாஸ் டிக்கா மசாலா – 2 மேசைக்கரண்டி\n2. மஞ்சத்தூள் – 1/2 தேக்கரண்டி\n3. உப்பு – தேவைக்கேற்ப\n4. எலுமிச்சை ரசம் – 1/2 தேக்கரண்டி\n5. பெரிய வெங்காயம் – 2\n6. பச்சை மிளகாய் – 1\n7. கருவேப்பிலை – கொஞ்சம்\n8. கடுகு – கொஞ்சம்\n9. பச்சைக்குடை மிளகாய் – கொஞ்சம்\n10. சிகப்புக்குடை மிளகாய் – கொஞ்சம்\n11. தக்காளி – 3 கீத்து\n12. தேங்காய் எண்ணெய் – 4 மேசைக்கரண்டி\nநன்றாக உதிர்த்து விட்ட பனீருடன் 1 – 4 வரை சொல்லியுள்ள பொருட்களை, நன்றாக கலந்து ஒரு அரை மணிநேரம் ஓரத்தில் வைத்தேன்.\nதேங்காய் எண்ணையை காயவச்சு கடுகு, கருவேப்பிலை தாளிச்சு, வெங்காயம், ப.மிளகாய் வதக்கி, புரட்டி வச்ச பனீரை நடுவுல கொட்டி, ஒரு ரெண்டு நிமிஷம் புரட்டி (ரொம்ப நேரம் சமைச்சா, ரப்பர் மாதிரி ஆயிரும்) அழகுக்கு குடை மிளகாய் தூவி, புதுசா வாங்குன தட்டுலே, ரெண்டா பிரிச்சு கொட்டி, தக்காளி கீத்தை உப்பு போட்டு சுத்தி வச்சு, சுடு தண்ணி குடிச்சிகிட்டே சாப்பிட்டேன் பாருங்க,,,அப்படி ஒரு ஆனந்தம்…\nபின் குறிப்பு: எப்பப் பாரு ஒரே தட்ட போட்டோ எடுத்து போடறேன்னு நீங்க எல்லோரும் திட்டுறீங்கன்னு பொண்டாட்டி கிட்டே சொல்லி, கொற அழுகை அழுது, உண்ணாவிரதம் இருப்பேன் என்று பயமுறுத்தி, புது தட்டு வாங்கிட்டேங்க 🙂\nதுருவிய காய்கறிகள் (கேரட், சிவப்பு முள்ளங்கி, ஜுக்கினி ) – 150 கிராம்\nவெட்டிய காய்கறிகள் (பச்சை மிளகாய் 2, காளான் 1, வெங்காயத்தாள் 2, கீரை கொஞ்சம், கொத்தமல்லி கொஞ்சம்)\nபனீர் – 200 கிராம்\nமேலே சொல்லிய காய்கறிகளை வேகும் வரை உப்பு போட்டு வதக்கி எடுத்துக்கோங்க.\nதுருவிய பனீருடன், வதக்கிய காய்கறிகளைப் போட்டு, முட்டையை நன்றாக அடிச்சு கலந்து,\nசட்டியில் கொஞ்சமா ஆலிவ் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் ஊத்தி, மிதமான சூட்டில்\nகட்லெட்களை சுட்டு, திருப்பி போட்டு, மறுபடியும் சுட்டு எடுங்கள்.\nமுட்டை இல்லாமலும் செய்யலாம். கொஞ்சம் உடையாமல் பார்த்துக்கோங்க.\nமுட்டை சேர்த்தால் எண்ணெய் குடிக்காது, கட்லெட் நன்றாக உப்பி, மெதுவாக இருக்கும்.\nவீட்டில் உங்கள் மதிப்பு கொஞ்சம் கூடும். மறந்து போன காதல் மறுபடியும் நினைவுக்கு வரும்.\nசுருட்ட (Wrap) – முட்டைகோசு 1\nஉருட்ட (Stuffing) – பொடிசா நறுக்கிய காய்கள், பனீர்.\nஊற்ற (Sauce) – தக்காளி, இஞ்சி, பூண்டு, மிளகாய்ப்பொடி, மஞ்சபொடி, உப்பு போட்டு அரைத்த கலவை\nசெய்முறை – முழு முட்டைகோஸை எடுத்து, தண்டும், தாளும் சேரும் இடங்களில் , கத்தி கொண்டு செருகி எடுங்கள்.\nமுட்டைக்கோசு முழுவதும் தண்ணீரில் மூழ்கி இருக்க ஒரு இருபது நிமிடம் வேகவைக்கவும்.\nமுதலில் இருக்கும் தாள்களை உரித்து எடுத்து தட்டில் (Use them as baking sheet in slow cooker)\nபரப்பி வைத்துக்கொள்ளுங்கள். அடுத்து இருக்கும் தாள்களை பிய்ந்து விடாமல் எடுத்து, கெட்டியான தண்டு பகுதியை வெட்டிவிட்டு\nவதக்கி வைத்து இருக்கும் காய்களை உள்ளே வைத்து உருட்டி, இருமுனைகளையும் உள்மடித்து (Fold in the ends)\nசட்டியில் வரிசையாக அடுக்கி (Seam should face down) சாஸ் மேலே ஊற்றி, மூடி வைத்து நன்றாக வேக விடவும்.\nசுருள்களை மட்டும் எடுத்து சாறுடன் பரிமாறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://seithupaarungal.com/2015/12/21/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2018-04-26T13:09:15Z", "digest": "sha1:CCAY6J424IRVBTJG5ZUTGBJEEQYO7Z6Q", "length": 16621, "nlines": 112, "source_domain": "seithupaarungal.com", "title": "கூட்டு மனச்சாட்சிக்குக் குழந்தைகளை பலியிடலாமா? – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nகுழந்தை வளர்ப்பு, பெண், பெண்ணியம்\nகூட்டு மனச்சாட்சிக்குக் குழந்தைகளை பலியிடலாமா\nதிசெம்பர் 21, 2015 திசெம்பர் 21, 2015 த டைம்ஸ் தமிழ்\nடெல்லி மருத்துவ மாணவி ஜோதி சிங்கை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கிக் கொன்ற இளம் குற்றவாளியின் விடுதலையை ஒட்டி குற்றத்தில் ஈடுபடும் குற்றவாளி சிறாரின் வயது குறைப்பு பற்றி பொது மக்களும் மனிதவுரிமை ஆர்வலர்களும் பரபரப்பாக வாதப் பிரதிவாதங்களை முன் வைக்கிறனர். ஆளும் கட்சியினர் எதிர்கட்சியினர் மகா பொதுசனம் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆசை குழந்தைக் குற்றாவாளிகளின் வயதை 16ஆக குறைக்க வேண்டுமென்பதே.\nநாடாளுமன்றத்தில் சட்டமியற்றி எளிதாக்கி விடலாமே இதில் என்ன சிக்கல் என்கிறார்கள். சிக்கல் நம் நாடாளுமன்றத்தில் இல்லை. சர்வதேச குழந்தைவுரிமைகள் ஆணையம் குழந்தை என்பதை 18 வயதாக வரையறுத்து வைத்திருப்பதால் அதை மீறி இந்தியா குறைக்க முடியாது என்கிற சட்டச்சிக்கல் ஒருபுறமிருக்கட்டும்.\nஇந்தியா தன்னிச்சையாக சட்டமியற்றி குற்றவாளி குழந்தைகளின் வயதை 16ஆக குறைத்து விட்டால் இந்தியாவில் இனி பாலியல் குற்றங்கள் நடக்காதா இதற்கான உத்திரவாதத்தை யார் தருவர் இதற்கான உத்திரவாதத்தை யார் தருவர் மணிப்பூரில் காஷ்மீரில் இந்திய ராணுவத்தினர் நடத்திய பாலியல் வன்முறைக்கு இதுவரை ஏன் தண்டனை அளிக்கப்படவில்லை. மாவோயிஸ்டுகள் தேடுதல் வேட்டை என்ற பெயரில் சிறுமிகளை தின்று போடும் பாதுகாப்பு படையினர் எத்தனைப் பேரை தண்டித்தோம் நாம்.. பாலியல் குற்றவாளிகளான குரியன் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர் எத்தனைப் பேருக்கு தண்டனை கிடைத்திருக்கு. ஆஸாராம் பாபு போன்ற சாதாரண சாமியார் அவருக்கு எதிரான சாட்சிகளைக் கொன்று வருகிறாரே இது எப்படி நடக்கிறது. ஹரியானா உள்ளிட்ட இந்திய மாநிலங்களில் தினம் தினம் தலித் பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாகி உயிரிழக்கிறார்களே அவர்களுக்கு இதுவரை நமது இந்திய நீதிமன்றங்கள் நீதி வழங்கியிருக்கிறதா மணிப்பூரில் காஷ்மீரில் இந்திய ராணுவத்தினர் நடத்திய பாலியல் வன்முறைக்கு இதுவரை ஏன் தண்டனை அளிக்கப்படவில்லை. மாவோயிஸ்டுகள் தேடுதல் வேட்டை என்ற பெயரில் சிறுமிகளை தின்று போடும் பாதுகாப்பு படையினர் எத்தனைப் பேரை தண்டித்தோம் நாம்.. பாலியல் குற்றவாளிகளான குரியன் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர் எத்தனைப் பேருக்கு தண்டனை கிடைத்திருக்கு. ஆஸாராம் பாபு போன்ற சாதாரண சாமியார் அவருக்கு எதிரான சாட்சிகளைக் கொன்று வருகிறாரே இது எப்படி நடக்கிறது. ஹரியானா உள்ளிட்ட இந்திய மாநிலங்களில் தினம் தினம் தலித் பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாகி உயிரிழக்கிறார்களே அவர்களுக்கு இதுவரை நமது இந்திய நீதிமன்றங்கள் நீதி வழங்கியிருக்கிறதா\nஆணாதிக்க சாதிவெறிப் பிடித்த நமது இந்தியச் சமூக கட்டமைப்புப் பெண்களை எந்நிலையிலும் எந்த வயதிலும் பாலியல் வன்முறைக்கு உள்ளாகும் நிலையில் வைத்திருக்கிறது. பெண் வெறுப்பை பெண் இழிவை கொண்டாடும் உளவியலை ஆண்களுக்கு புகட்டுகிறது. குடும்பம் சமூகம் கல்வி நிறுவனங்கள், ஊடக நிறுவனங்கனென ஒரு ஆண் குழந்தையின் உளவியலை வளர்த்தெடுக்கும் பொறுப்பிலுள்ள அனைத்தும் பெண்களை சக உயிரியாக பார்க்க பழக கற்பிக்க தவறியதன் பண்பாட்டுப் பேரழிவு இது. பொது சிவில் சமூகமே அறமற்ற நேர்மையற்ற நீதியற்ற நிலையில் இயங்கும் போது அதன் விளைப்பொருளான குழந்தைகள் குற்றவாளிகளாக மாறுவதில் வியப்பில்லை. அவர்கள் கண்முன் குற்றவாளிகள் அதிகாரம் படைத்தவர்களாக சுதந்திரமாக நடமாடும்போது நாமும் குற்றம் செய்துவிட்டு சுதந்திரமாக முடியும் என்ற நம்பிக்கை பிறக்கிறது. நாம் குற்றவாளிகளாக இருக்கும்போது குழந்தைகள் குற்றவாளிகளாகதான் இருப்பார்கள். குழந்தைகளுக்கு அதிகபட்ச தண்டனைக் கொடுத்து தப்பிவிடலாமென்று ஆள்வோரும் அதிகாரிகளும் நினைக்கிறார்கள். சமூக ஆர்வலர்களும் இதை தான் விரும்புகிறார்கள் எனும் போது எவ்வளவு அறியாமையில் அதிகார வர்க்கத்தின் பிம்பங்களாக நாம் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம்.\nஊடக பயங்கரவாதம் பெரிய சுறாக்களை தப்பவிட்டு எளிதாக கிடைக்கும் சிறு கெண்டைகளைப் பலியிடத் துடிக்கிறது. இதை தின்று செறிக்கும் மகா பொதுசனம் சிறுவர்கள் சிறைக்கம்பிக்குள் இருந்தால் ரேப்பை தடுத்துவிடலாம் எனும் நஞ்சை திரும்ப வாந்தியெடுக்கிறார்கள். சாதி, மத, அதிகாரம் அந்தஸ்து பார்க்காமல் பாலியல் குற்றவாளிகள் அனைவரையும் சிறைக்குள் தள்ளுங்கள் குழந்தைகள் குழந்தைகளாக இருப்பார்கள் குற்றவாளியாக மாட்டார்கள். அதிகாரமுடைய பணபலமுள்ள குற்றவாளிகளைச் சுதந்திரமாக நடமாட விட்டுவிட்டு குழந்தைகளைக் குற்றாவாளிகளாகிச் சிறைக்குள் தள்ளணும், என்ன லாஜிக் இது இங்கு மாற்றபட வேண்டியது குழந்தைகளின் வயதல்ல. மாற்றம் நமது கல்விமுறையில் பெண்களைப் பற்றிய சாதி மத சமூக மதிப்பீடுகளில் மற்றும் சட்டத்தின் ஆட்சி முறையில் நிகழ வேண்டும். குறைந்தபட்சம் வர்மா கமிட்டி பரிந்துரையைக்கூட செயல்படுத்த துணிவில்லாத ஆட்சியாளர்கள் குழந்தையின் வயது குறைக்கப் போராடுகிறார்கள். என்ன முரண்பாடு இங்கு மாற்றபட வேண்டியது குழந்தைகளின் வயதல்ல. மாற்றம் நமது கல்விமுறையில் பெண்களைப் பற்றிய சாதி மத சமூக மதிப்பீடுகளில் மற்றும் சட்டத்தின் ஆட்சி முறையில் நிகழ வேண்டும். குறைந்தபட்சம் வர்மா கமிட்டி பரிந்துரையைக்கூட செயல்படுத்த துணிவில்லாத ஆட்சியாளர்கள் குழந்தையின் வயது குறைக்கப் போராடுகிறார்கள். என்ன முரண்பாடு இவர்களுக்குதான் பெண்களின் சுதந்திர வாழ்வு மீது எவ்வளவு அக்கறை.\nகொசுறு: பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான டெஹல்கா ஆசிரியர் தருண் தேஜ்பாலை அழைத்து நூல் வெளியிட்ட குழந்தைகளின் மீதான பாலியல் வன்முறையை கிளுகிளுப்பு கதையாக்கும் போர்னோ ரைட்டர் சாருநிவேதிதாவை எதிர்த்து எத்தனை பேர் குரல் கொடுத்தாங்க. சாநிதான் தமிழின் ஆகச்சிறந்த முற்போக்கு எழுத்தாளனென முன்நிறுத்தும் தமிழ் தி இந்து மற்றும் தினமணி ஊடகங்களை நோக்கி உங்களின் முணகல் கூட கேட்கவில்லையே ஏன்\nகுறிச்சொல்லிடப்பட்டது ஆஸாராம் பாபு, சாருநிவேதிதா, டெஹல்கா ஆசிரியர் தருண் தேஜ்பால், நிர்பயா, நிர்பயா வழக்கு, மாவோயிஸ்டுகள், வர்மா கமிட்டி\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postபெண்ணை உடல், மனரீதியாக ஒடுக்கும் ஒரு சமூகம் எப்படி ஆரோக்கியமானதாக இருக்க முடியும்\nNext postஅனிருத், சிம்பு கைதுசெய்யப்படாமல் இருப்பதை ஆதரிக்கும் புதிய சட்டமசோதா ஏதாவது வருமா\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nநீங்களே செய்யலாம் ஃப்ரூட் ஃபலூடா\nபிஸ்தா ஐஸ்கிரீம் செய்வது எப்படி\nகருப்பட்டி கம்பு சேமியா எப்படி செய்வது\nஸ்டாக்கிங் பூக்கள் செய்வது எப்படி\nமணி வளையல் செய்வது எப்படி\nஎம்பிராய்டரி: பிரஞ்ச் நாட்’இல் சூரிய பூக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%A8%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2018-04-26T13:28:36Z", "digest": "sha1:HVNKLACUKUACWZVPCKWO4WODCZRTGDEJ", "length": 3896, "nlines": 72, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "அந்துப்பூச்சி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் அந்துப்பூச்சி யின் அர்த்தம்\n(சேமித்துவைத்திருக்கும் நெல்லில் காணப்படும்) இறக்கையுடன் கூடிய பழுப்பு நிறப் பூச்சி.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nagoreflash.blogspot.com/2013/08/dr_19.html", "date_download": "2018-04-26T13:19:29Z", "digest": "sha1:TZXXAXSLNM73SURVYCYOSTMDMN4AYSII", "length": 22415, "nlines": 238, "source_domain": "nagoreflash.blogspot.com", "title": "NAGORE FLASH: Dr.அப்துல்லாஹ்விற்கு நேர்வழிகாட்டி அழைத்துகொண்டான் அல்லாஹ்..!!", "raw_content": "................அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்................. இந்த இணையத்தளம் நாகூர் வாழ் மக்களுக்கான ஓர் அறிவகம்.\n) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)\nDr.அப்துல்லாஹ்விற்கு நேர்வழிகாட்டி அழைத்துகொண்டான் அல்லாஹ்..\nபெரியார்தாசன் என்று நாத்திகராக அறியப்பட்டு , பிறகு உண்மையான இறை தேடலுக்கு தன்னை உட்படுத்தி கொண்டு 2010ல் சத்திய இஸ்லாத்தை உண்மை என்று ஏற்றுகொண்டு அப்துல்லாஹ்வாக தன்னை இறை மறுப்பிலிருந்து மீட்டுக்கொண்ட சகோதரர் Dr.அப்துல்லாஹ் அவர்கள் நேற்று நள்ளிரவு மரணித்தார்கள்..\n\"இன்னலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்\"\nஅல்லாஹ் அவர்களின் பாவங்களை மன்னித்து மறுமை வாழ்வை வெற்றி பெற செய்வானாக..\nஇஸ்லாத்தை ஏற்றுகொண்ட நாள் முதல் தாவா களத்தில் முழுமூச்சாக இறங்கி செயல்பட்டார்கள்... பல ஊர்களுக்கும் , பல நாடுகளும் சென்று முஸ்லீம்களுக்கும் தாவா பயிற்சிகளை வழங்கியுள்ளார்கள்...\nஅண்மைகாலமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டதன் விளைவாக சென்னையில் சிகிச்சை பெற்று வந்தார்கள் ..அல்லாஹ்வின் நாட்டப்படி நள்ளிரவு சுமார் 1:30மணி அளவில் மௌத்தாகிவிட்டார்கள்..\nஅப்துல்லாஹ் அவர்களின் சொற்பொழிவுகள் எப்படி இருக்கும் என்று யாருக்கும் சொல்லிகாட்ட தேவையில்லை .. தனது பேச்சால் அனைவரையும் கட்டி போடுபவர்..\nஅப்துல்லாஹ் அவர்கள் சிறந்த மனத்தத்துவ நிபுணரரும் கூட .. பலரை தனது பேச்சாற்றலால் மனமாற்றத்தை ஏற்படுத்தினார்கள்...இதை பயன்படுத்தி நான் இஸ்லாத்தை மற்றவர்களுக்கு எடுத்துரைப்பேன் என்று முழுவதுமாக செயல்பட்டார் ...\nஅப்துல்லாஹ் அவர்கள் இன்று நம்மோடு இல்லை என்று நினைக்கும் போது மனம் கனக்கிறது ..அவரின் பங்களிப்பு நமக்கு தேவை தான் .. இருப்பினும் அனைத்தையும் அறிந்தவன் அல்லாஹ் .. அவனது நாட்டப்படியே அனைத்தும் நிகழ்கிறது..\nஇஸ்லாமிய கொள்கைகளுக்கு நேர் எதிர் கொள்கையில் இருந்தவரை அல்லாஹ் அவரின் உள்ளதை புரட்டி இஸ்லாத்தில் நுழைவிக்க வைத்து அவருக்கு வளமான மறுமைவாழ்விற்கு வழிவகுத்து கொடுத்துவிட்டான்.\nஅவர் செய்த நற்காரியங்களை அல்லாஹ் பொருந்திகொண்டு .. மறுமையில் மகத்தான கூலி வழங்க வேண்டி நாம் அனைவரும் பிரார்த்திப்போம்..\nமேலும் நாம் அனைவரும் மரணிக்கும் போது முஸ்லீம்களாக ஈமானோடு மரணிக்க அல்லாஹ்விடம் துஆ செய்ய வேண்டும்..\nமுஸ்லீமாக இருப்பதைவிட மரணிக்கும் போது முஸ்லீமாக ஈமானோடு மரணிப்பதில் தான் மறுமை வெற்றி இருக்கிறது ..\nஅந்த பாக்கியத்தை அல்லாஹ் நம் அனைவருக்கும் வழங்கவேண்டும்.\nஅல்லாஹ் ஒருவனுக்கே அனைத்து புகழும்...\nLabels: சத்தியமார்க்கம், தெரிந்து கொள்ளுங்கள்\nஇஸ்லாம் கூறும் இன்பமான கணவன் மனைவியா நீங்கள் \nதிருமணம் செய்து கணவன் மனைவியாக கைக் கோர்ப்பவர்கள் கடைசிவரை சந்தோசமாக வாழ வேண்டும் என்றே ஆசைப்படுவார்கள். மணமக்களை வாழ்த்துபவர்கள் கூட இதைத்...\nகளமிறங்கிய போராட்ட குழுவிற்கு ஆதரவுகொடுப்போம்.\nநவீன காலத்து அடிமைகளை விடுவிப்போம்....\nவளைகுடா நாடுகளில் வேலை செய்யும் முஸ்லிம்களில், கணிசமானவர்கள் வீடுகளில் வாகன ஓட்டுனர் வேலை செய்பவர்களாக உள்ளனர். இவர்களில் பெரும்பான்மையினர் ...\nVote List-ல் உங்கள் பெயர் இருக்கா...\nVote List-ல் நமது பெயர் மற்றும் முகவரியை சரிபார்க்க இந்த Website உதவுகிறது. Vote List-ல் பெயர் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. நீங்கள் தேர்...\nபிரபல இஸ்லாமிய அறிஞர் ஜாகிர் நாயக்கிற்கு பிரிட்டன் தடை வலுக்கும் எதிர்ப்பு\nபிரபல இஸ்லாமிய அறி ஞரும் சர்வதேச சொற்பொழி வாளருமான ஜாகிர் நாயக் பிரிட்டனுக்கு வர அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது பெரும் பரபர...\nவிந்தின் பிறப்பிடம் - திருக்குரானின் விளக்கம்\nகுர்ஆன் - அறிவுக்கும் அறிவியலுக்கும் ஏற்ற எக்காலத்திற்கும் பொருந்தும் ஓர் வாழ்வியல் நெறிநூல் இது அறிவியல் நூலல்ல; ஆனாலும் அறிவியலையும் உள்ள...\nபெண்களை துரத்தும் ரகசிய கேமராக்கள் – ஓர் அபாய எச்சரிக்கை \n( மிக நுணுக்கமான செய்தி என்பதால் நீண்ட பதிவாக எழுதி இருகிறோம் குறிப்பாக பெண்கள் அளிப்பு பார்க்காமல் முழுமையாக படித்து பயன்பெறவேண்டும்,மற்றவ...\n\"இஸ்லாத்தின் பார்வையில் இசை ஒரு முழுமையான ஆய்வு\"\n இசை என்பதன் விளக்கம் என்ன … இசை என்ற சொல்லுக்கு இசைய வைப்பது எனறு பொருள். இசை (Music) என்பது ஒழுங்கு செய...\nஹதீஸ் - அடிப்படை விளக்கம்\n ஹதஸ் என்ற வேர்ச்சொல்லிலிருந்து பெறப்பட்ட சொல்தான் ஹதீஸ் என்பது. ஹதீஸ் என்றால் உரை உரையாடல் புதியசெய்தி எனப்ப...\nஇரு தரப்பு பேச்சுவார்த்தை எதிர்பார்த்தப்படி சுமூகமாக முடிந்தது.\nஒரு பிரச்சனை எப்படி முறைப்படி கையாளபட வேண்டுமோ அப்படி கையாளபட்டிருகிறது.. அல்ஹம்துலில்லாஹ். கடந்த விநாயகர் சதுர்த்தி அன்று நாகூர் மியா...\n9/11 INSIDE JOB (3) BOOKS (11) HAJ (10) MEDIA (7) POLL (1) ZAKIR NAIK (7) அக்கம் பக்கம் (28) அமைதி (3) அரசியல் (5) அரசு உத்தரவுகள் (14) அரவாணிகள் (1) அவ்லியா (2) அறிவியல் (19) அனுபவம் (26) அஹமது தீதாத் (2) இசை (2) இந்திய முஸ்லிம்கள் வரலாறு (3) இல்லறம் (2) இறுதி தீர்ப்புநாள் (2) உதவி தேவை (13) எச்சரிக்கை (18) ஒற்றுமை (9) கல்வி (24) கனவு இல்லம் (1) கிலாபத் (2) கேள்வி பதில் (18) சத்தியமார்க்கம் (26) சஹாபாக்கள் (4) சுய பரிசோதனை (3) செல்போன் (12) தப்லீக் (1) தரீக்கா (2) தர்கா (11) தன்னம்பிக்கை (2) திருமணம் (6) தீவிரவாதம் (12) தெரிந்த ரகசியங்கள் (32) தெரிந்து கொள்ளுங்கள் (111) தேசபக்தி (9) தேர்தல் 2011 (22) நபி(ஸல்) (3) நாகூர போல வருமா (6) நாகூர் (1) நாகூர் சங்கதி (119) நாகூர் வரலாறு (2) நாத்திகன் (3) நோன்பு (1) பழனிபாபா (1) பாபரி மஸ்ஜித் (7) பாவமன்னிப்பு (3) பிறை (4) புகை (3) பைபிள் (3) போராட்டக்களம் (10) போராட்டம் (1) மருத்துவம் (10) மவ்லித் (4) மீலாது (1) முஸ்லீம்கள் (5) மோசடி (10) ரமளான் (5) வாக்காளர் பட்டியல் (1) விமர்சனங்கள் (5) விவாதங்கள் (4) ஷியா (2) ஷிர்க் (14) ஸூபித்துவம் (2) ஹதீஸ் (3) ஹிந்து தீவிரவாதிகள் (22) ஹிஜாப் (16)\nசேரனை பார்த்து படிப்பினை பெறுவார்களா இயக்குனர்கள் ...\nகாரைக்கால் : பொய் வழக்குகளை புதுச்சேரி அரசு வாபஸ் ...\nகுரான் & ஹதீஸ் நூல்கள் பதிவிறக்கம்\nநபி( ஸல்) முழு வரலாறு\nகிருத்துவ மத போதகருடனான கலந்துரையாடல்\nஇரத்ததானம் செய்ய பதிவு செய்யுங்கள்\nசெய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற மின்னஞ்சல் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்\nதமிழில் டைப் செய்ய (தங்கலிஷ்)\nஅல்லாஹ்வின் சாந்தியும் , சமாதானமும் உங்கள் அனைவரின் மீதும் உண்டாவதாக இந்த தளம் நாகூர் வாழ் மக்களுக்கான ஓர் அறிவகம். நல்ல விஷயங்கள் பகிர்ந்து கொள்ளவும், தவறான விஷயங்களை சுட்டிக்காட்டவும் இந்த தளத்தை அமைத்திருகிறோம்.. நம்ம ஊரை பற்றி மற்றவர்களை விட நாமே அதிகம் விமர்சிக்கிறோம் இதே ஊரில் இருந்துகொண்டு, உண்மையில் நம்மை நாமே விமர்சித்து கொள்கிறோம் என்பதே உண்மை.. ஆகையால் உணர்வுகளை உள்ளது உள்ளபடி பகிர்ந்து கொள்ள ஒரு தளம். மேலும் உலக நாட்டுநடப்புகளும் இங்கே உரியமுறையில் அலசப்படுகிறது. நீங்களும் இந்த தளத்தின் அங்கமே , உங்களின் கருத்துகள் ,விமர்சனங்கள் , கட்டுரைகள் எதுவாக இருந்தாலும் nagoreflash@ymail.com முகவரிக்கு அனுப்பித்தாருங்கள். உங்கள் அன்புடன் அப்துல்லாஹ்.\nஅண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: \"தொழுகையாளிகள் அரபுத் தீபகற்பத்தில் தன்னை இபாதத் செய்வார்கள் -வணங்குவார்கள் - எனும் விஷயத்தில் ஷைத்தான் நிராசை அடைந்து விட்டான். எனினும், முஸ்லிம்களிடையே பகைமைத் தீயை மூட்டுவதில் அவன் நம்பிக்கை இழக்கவில்லை\". அறிவிப்பாளர்: ஜாபிர்(ரலி), நூல்: முஸ்லிம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://puttalamtoday.com/author/PTAdmin/page/628/", "date_download": "2018-04-26T13:40:35Z", "digest": "sha1:6ZFT6YHTUFA7BDG5SOWAARYP5CY4SO7N", "length": 30991, "nlines": 137, "source_domain": "puttalamtoday.com", "title": "PuttalamToday – Page 628 – PuttalamToday", "raw_content": "\nவிண்வெளிக்கு மீண்டும் குரங்கை அனுப்பி சாதித்தது ஈரான் குரங்கின் பெயர் ‘பார்கம்’ (நல்ல அறிகுறி)\nவிண்வெளிக்கு ஈரான் இரண்டாவது தடவையாக குரங்கை வெற்றிகரமாக அனுப்பியது. அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுக்கு இணையாக விண்வெளி ஆய்வில் முன்னேற ஈரான் திட்டமிட்டுள்ளது. மேலும் வருகிற 2020ம் ஆண்டில் விண்வெளிக்கு ஆட்களை அனுப்பவும் முடிவு செய்துள்ளது. இதன் முன்னோட்டமாக விலங்குகளை அனுப்பி பரிசோதித்து வருகிறது. கடந்த ஜனவரி மாதம் ராக்கெட் மூலம் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட குரங்கு, பத்திரமாக திரும்பி வந்தது. இதனை தொடர்ந்து இரண்டாவது தடவையாக மீண்டும் குரங்கை விண்வெளிக்கு வெற்றிகரமாக அனுப்பி உள்ளது. அக்குரங் … Continue Reading →\n” ஒரு கல் இரு கண்ணாடி” – நஜீப் சேவையரின் வீட்டில் உடைந்தது கண்ணாடி மட்டுமல்ல கண்ணியமும் தான் – பின்வாங்கப் போவதில்லை – நஜீப் திடசங்கற்பம்\n” இந்த கல் வீச்சினால் எனது, பாடசாலை அதிபராக ஜனப்.யஹ்கூப் அவர்களை நியமிக்கும் போராட்டத்தில் எனது சக்தியை பல மடங்கு அதிகரிக்கச்செய்து விட்டது” என்றார் பிரபல நில அளவையாளரும் , புத்தளம் சாஹிர தேசியக் கல்லூரியின் பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளருமான ஜனாப். எ.ஒ. எம். நஜீப். இது உண்மையிலேயே ஒரு திட்ட மிட்ட செயல். நான் சமூகத்தின் தேவைக்காக ஒரு புத்தளத்து மகன் ஜனாப். யஹ்கூப் அவர்களை சாஹிரா தேசியக் கல்லூரியின் அதிபராக்க எடுக்கும் … Continue Reading →\n முன்னாள் சினிமா நடிகை ரோஜா நாடு ரோட்டில் சமையல் செய்து போராடினார் நூதனமான போராட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு\nஆந்திராவைபிரித்து தெலுங்கானா மாநிலம் அமைக்கும் மசோதாவுக்கு மத்திய அமைச்சர்கள்குழு ஒப்புதல் அளித்து உள்ளது. இந்த மசோதா ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டது. அவர் அதனை ஆந்திர சட்ட சபை ஒப்புதலுக்கு அனுப்பி உள்ளர். இந்தமசோதாவுக்கு ஆந்திர சட்டசபை ஒப்புதல் வழங்க 6 வாரம் அவகாசமும்வழங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், ஆந்திர சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இதேவேளை, தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ்தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி உள்பட சீமாந்திரா பகுதி எம்.பி.க்கள் நேற்றுசாலை மறியல் போராட்டம் நடத்தினர். சீமாந்திரா பகுதியில் … Continue Reading →\n முடிவுக்கு வந்தது வழுக்கை தலை பிரச்சனை – பேராசிரியர் கோலின் ஐஹோடா அபாரம்\nஉலக அளவில் ஆண்களின் மிகப் பெரிய பிரச்சனைகளில் ஒன்று வழுக்கைத்தலை. ஆண்களின் அழகுக்கு மிகப்பெரிய எதிரியாக வழுக்கைத் தலை உள்ளது. இதை தடுக்க விரும்பாத ஆண்களே இல்லை எனலாம். தலைப்பாகை துவங்கி, தொப்பியாக வளர்ந்து இன்று விக் வரை வழுக்கையை மறைக்க ஆண்கள் பலவகையான தந்திரங்களை கையாண்டு வந்திருக்கிறார்கள். வழுக்கையை தடுக்கும் மருந்துகள், முடி உதிராமல் தடுக்கும் மருந்துகள், உதிர்ந்த முடி வளர்க்கும் மருந்துகள். கடைசியாக முடிமாற்று அறுவை சிகிச்சை முறை என்று பல வகையான மருத்துவ … Continue Reading →\nறிபாத் – பாத்திமா காதல் கொலை செய்யப்பட்ட ரிபாதின் ஜனாஸா தோண்டி எடுக்கப்பட்டது கொலை செய்யப்பட்ட ரிபாதின் ஜனாஸா தோண்டி எடுக்கப்பட்டது – சோகங்களைக் கொண்ட காதல் கதை\n(எம்.எப்.எம்.பஸீர்) உம்மா நான் கூட்டத்துக்கு போய் வருகிறேன்’ பெற்றோரிடமிருந்து ரிபாத் விடைபெறும் போது நேரம் 9.30ஐ அண்மித்திருந்தது. ரிபாத் யூசுப் 18 வயதான இளைஞர் குருநாகல் மாவட்டத்தில் வாரியபொல பிரதேசத்தை அண்மித்த பண்டாரகொஸ்வத்த மடிகே மிதியால பிரதேசத்தைச் சேர்ந்தவர். ஒரு சகோதரி நான்கு சகோதரர்களைக் கொண்ட ரிபாத் குடும்பத்தின் கடைக்குட்டி கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சை வரை கற்றலை மேற்கொண்டிருந்த ரிபாத் பின்னர் சந்தை வர்த்தகத்தை தேர்ந்தெடுத்து அந்த நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி வந்தார். இந்நிலையில் 18 … Continue Reading →\nபொலிசாரின் முன் நிவாணமாக குத்தாட்டம் போட்ட பெண்மணிகள் ஜாஎலவில் சம்பவம் – தாயும் பிள்ளைகளுமாம்\nஆடைகளை களைந்து பொலிஸாரை பார்த்து கூக்குரலிட்ட பெண்களுக்கு பிணை மறுக்கப்பட்டுள்ளது. ஜாஎல தடுகம பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் சூதாட்ட நிலையமொன்று நடத்தப்பட்டு வந்துள்ளது. பெண் ஒருவரும் அவரது இரண்டு மகள்களும் இவ்வாறு சூதாட்ட நிலையத்தை நடத்தியுள்ளனர். குறித்த சட்ட விரோத சூதாட்ட நிலையத்தை பொலிஸார் அண்மையில் சுற்றி வளைத்தபோது பொலிஸாரைக் கண்ட குறித்த மூன்று பெண்களும் ஆடைகளைக் களைந்து நிர்வாணவமாக பொலிஸாருக்கு எதிராக கூக்குரல் இட்டுள்ளனர். மேலும் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த ஏனைய ஐந்து ஆண்களும் ஆடைகளைக் களைந்து … Continue Reading →\nஆண்கள் மட்டும் : வெளிநாடு செல்லும் ஆண் பணியாளர்களுக்கு வட்டியில்லா கடன் ஜனவரியில் ஆரம்பம் – வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்\nவெளிநாடுசெல்கின்ற ஆண் பணியாளர்களுக்கு வட்டியில்லா கடனை பெற்றுக்கொடுப்பதற்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஆண் பணியாளர்கள் வெளிநாடு செல்வதற்கான ஆர்வத்தை அதிகரிக்கச் செய்வதே இதன் பிரதான நோக்கமாகும் என பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் மங்கல ரந்தெனிய கூறினார். எதிர்வரும் முதலாம் திகதி முதல் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் குடும்பங்களில் கணவன்மார் வெளிநாடு செல்வதற்கு தடையாகவுள்ள காரணிகளில், அவர்களே பணம் செலுத்தவேண்டியுள்ளமை பிரதான காரணியாக அமைகின்றது. இதில் விமானச் … Continue Reading →\n இன்றும் பல உள்ளூராட்சி மன்றங்களில் ஆளும் கட்சி மண்ணைக் கவ்வியது \nஉள்ளூராட்சி மன்றங்கள் சிலவற்றின் வரவு-செலவுத்திட்டம் இன்று தோற்கடிக்கப்பட்டுள்ளது. மாத்தறை பிரதேச சபையின் வரவு-செலவுத்திட்டம் இரண்டாம் முறையாக இன்று சமர்ப்பிக்கப்பட்டதுடன், அது மூன்று மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. வரவு-செலவுத்திட்டத்திற்கு எதிராக ஆளுங்கட்சியின் ஐந்து உறுப்பினர்கள் வாக்களித்ததாக மாத்தறை பிரதேச சபையின் உபதவிசாளர் கே.பி. லசந்த சஞ்ஜீவ குறிப்பிட்டார். இதேவேளை, கெஸ்பேவ நகர சபையின் வரவு-செலவுத்திட்டமும் இன்று இரண்டாம் முறையாக தோற்கடிக்கப்பட்டது. ஒரு மேலதிக வாக்கினால் இந்த வரவு-செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது. ஆளுங்கட்சி உறுப்பினர்கள் இருவர் வரவு-செலவுத்திட்டத்திற்கு எதிராக வாக்களித்துள்ளதாக கெஸ்பேவ … Continue Reading →\n கப்பலின் கதைப் போலவே அவரின் வாழ்க்கையிலும் சோகங்கள் \nபல விருதுகளை வென்று, வசூலில் சாதனை படைத்த டைட்டானிக் பட கதாநாயகியான கேத்தே, ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளார். 1997–ம் ஆண்டு வெளியாகி உலகம் முழுவதும் சக்கைபோடு போட்ட ஆங்கிலப்படம் டைட்டானிக். இதில் இங்கிலாந்து நடிகை கேத்தே வின்ஸ்லெட் கதா நாயகியாக நடித்து உலகப் புகழ் பெற்றார். டைட்டானிக் படத்தில் நடிக்கும் முன்பே 1991–ம் ஆண்டு தனது 16 வயதில் இங்கிலாந்து டி.வி.நடிகர் ஸ்டீபன் டிரேடர் என்பவரை காதலித்து திருமணம் செய்யாமல் 4½ ஆண்டுகள் ஒன்றாக சேர்ந்து … Continue Reading →\n பசில் ராஜபக்சவுக்கு புற்று நோய் அமெரிக்காவின் ஹூஸ்டன் மருத்துவமனையில் சிகிச்சை .. அமெரிக்காவின் ஹூஸ்டன் மருத்துவமனையில் சிகிச்சை .. – ஆரம்ப நிலையிலேயே நோய் உள்ளதாம்\nமகிந்த ராஜபக்‌ஷவின் சகோதரரும், பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பசில் ராஜபக்‌ஷ புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் தற்போது அமெரிக்காவின் Houston மருத்துவனையில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் தெரியவருகிறது. 2014ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் வரையில் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் வெளிநாடு செல்லக் கூடாது என ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ உத்தரவிட்டுள்ளார். எனினும், பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டு விவாதம் நிறைவடைந்த அன்றைய தினம் இரவே, அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ அவசரமாக அமெரிக்கா … Continue Reading →\nவெட்கம் இருந்தால் பிரதமர் பதவியில் இருந்து விலகுங்கள் \nஹூலா என்பவர் யார் என்பதை அரசாங்கம் வெளியிடாவிட்டாலும், யுத்தம் நடைபெற்ற காலத்தில் தாம் செய்த சேவைக்கு இப்படியா செய்வது என்று அந்த நபர் கூறியுள்ளார். இதன் மூலம் அந்த நபர் யார் என்பதை தாம் அறிந்து கொண்டுள்ளதாகவும் ஐ.தே.கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பீ. பெரேரா தெரிவித்தார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், கொழும்பில் இயங்கிய மிகப் பெரிய சூதாட்டம் நிலையம் சுற்றிவளைக்கப்பட்ட சம்பவம் பற்றி பேசும் … Continue Reading →\n” வெளுக்கும் காதல் ” சன்லைட் அழகியுடன் இலங்கையின் முக்கியஸ்தரின் மகன் – படங்கள் – ஜனாதிபதியின் மகனுக்கு காதலிக்க உரிமை இல்லையா என்ன..\nகாதலியுடன் இலங்கையின் மிக முக்கிய அரசியல்வாதியின் புதல்வர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் புதிதாக இணையங்களில் வெளியாகி உள்ளன. மோடல் அழகியும், சன் லைற் விளம்பரம் மூலம் பிரபலம் அடைந்தவருமான Tatiyana leeதான் இவரின் காதலி.\n பாகிஸ்தானை சேர்ந்த 6௦௦ கிறிஸ்தவ ஆயர்கள் இலங்கையில் தஞ்சம் – சிலாபம் ஆயர்\nஇஸ்லாமிய அடிப்படைவாதிகளின் தொந்தரவுகள் மற்றும் இடையூறுகள் காரணமாக பாகிஸ்தானை சேர்ந்த 600 கத்தோலிக்கர்கள் இலங்கையில் தஞ்சமடைந்துள்ளதாக சிலாபம் மறைமாவட்ட ஆயர் தெரிவித்தார். அவர்மேலும் தெரிவிக்கையில், இவர்கள் கொழும்பு மற்றும் நீர்கொழும்பு பகுதிகளில் தற்காலிகமாக தங்கியிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். அத்துடன் இந்த மக்களுக்கு தேவையான சேவைகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானை சேர்ந்த 600 கத்தோலிக்க மக்கள் இலங்கைக்கு வந்துள்ளதாக எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. பாகிஸ்தானில் உள்ள முஸ்லிம் அடிப்படைவாதிகளின் இடையூறுகள் காரணமாகவே இவர்கள் இலங்கை வந்துள்ளனர். மூன்றாவது … Continue Reading →\n அவமானத்தால் காத்தான்குடி மீரா பாலிகா மகளிர் மகா வித்தியாலய மாணவி தற்கொலை முயற்சி \nகாத்தான்குடியிலுள்ள பாடசாலைகளில் மூன்றாம் தவணைப் பரீட்சையில் போதியளவு புள்ளிகளைப் பெறாத மாணவர்களை 2014ம் கல்வியாண்டில் புதிய வகுப்புகளுக்கு வகுப்பேற்றாது தடுக்கப்பட்டுள்ளதாக பெற்றோர் ‘வார உரைகல்’லிடம் முறையிட்டுள்ளனர். இவ்வாறு வகுப்பேற்றப்படாத மாணவியொருவர் அவமானம் தாங்காமல் நேற்று நஞ்சருந்தி உயிராபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பெற்றார் ஒருவர் தகவல் தெரிவித்தார். காத்தான்குடி மீரா பாலிகா மகளிர் மகா வித்தியாலயத்தில் பல மாணவிகள் வகுப்பேற்றப்படாததை அறிந்த பெற்றோர் கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.ரி.எம். நிஸாம் அவர்களைச் சந்தித்து … Continue Reading →\nமுரளீதரன் ரன் அவுட் .. மனைவியும் பிள்ளைகளும் பிரிவு.. அரசா – குடும்பமா – தடுமாற்றத்தில் முரளி\nஇலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர சுழல்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதனை அரசியலுக்குள் இழுப்பதற்கு மகிந்த ராஜபக்‌ஷ, அண்மைக் காலமாக பலத்த பிரயத்தனம் மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேல் மாகாண சபைத் தேர்தலில் முத்தையா முரளிதரனைக் களமறிக்கி, முதலமைச்சராக்குவதற்கு மகிந்த ராஜபக்‌ஷ திட்டமிட்டுள்ளதாக ஆளும் கட்சியின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம் தமிழர்களுக்கு சமமான உரிமை வழங்கப்பட்டு வருவதையும், இன்னுமொரு தமிழ்ப் பிரதிநிதி முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளதையும் சர்வதேச சமூகத்திற்கு காண்பிக்கவே மகிந்த ராஜபக்‌ஷ இந்த முயற்சிகளை மேற்கொண்டு … Continue Reading →\nB.M.S. college சாரம் திருவிழா: பெலூன் டான்ஸ் ஆடிக் கலக்கிய முஸ்லிம் யுவதிகள்- எல்லை மீறுகிறார்களா..\nBreaking : சவூதி மன்னரை கவிழ்க்க முயற்சி.. அரண்மை அருகே கடும் துப்பாக்கி சூடு – பங்கருக்குள் கொண்டு செல்லப்பட்டார் சல்மான் posted on April 22, 2018\nசவூதியின் கொடூர செயலால் உலகமே அதிர்ச்சியில் \nBreaking : 12 வயதுக்கு உள்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு தூக்குத் தண்டனை மோடியின் அமைச்சரவை அவசர சட்டம் பிறப்பிப்பு posted on April 21, 2018\nBreaking :கண்டி கலவரங்களை வழி நடத்திய போலிஸ் இன்ஸ்பெக்டர், சார்ஜென்ட் மேஜர் கைது செய்யப்படவுள்ளார்கள் posted on April 21, 2018\nதலைமைப் பற்றி தீர்மானிக்கும் ஐக்கியத் தேசியக் கட்சியின் முக்கியக் கூட்டம் இன்று \nகண்டிக் கலவரத்தை முன்னின்று நடத்திய இரு பிரதேச சபை உறுப்பினர்கள் தொடர்ந்தும் தேடப்படுகிறார்கள்..\nபச்சை கறிவேப்பிலை சாப்பிடுவதன் மூலம் கொலஸ்ட்ரோலை கட்டுக்குள் வைக்கலாம் இதய சத்திர சிகிச்சை நிபுணர் Dr.இலாஹி\nநகர, பிரதேச சபை சேர்மன்களின் ஆட்டம் எல்லாம் 2 வருடங்களுக்கு மட்டுமே.. அதன் பிறகு உறுப்பினர்களின் காலில் விழுந்தாக வேண்டும்\nமுன்னாள் நேவி தளபதி சந்தன பிரசாத் தப்பிச் செல்ல பாதுகாப்புச் சபை பிரதானி ரவீந்திர விஜேகுணவர்தன 5 லட்சம் கொடுத்தார்.. C.I.D. பொஸ் சான் குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.karaitivunews.com/akkankal/151017-inraiyaracipalan15102017", "date_download": "2018-04-26T13:14:58Z", "digest": "sha1:COL27WJ556VBXDQ5HPJDCLORFN6URFQJ", "length": 8708, "nlines": 26, "source_domain": "www.karaitivunews.com", "title": "15.10.17- இன்றைய ராசி பலன்..(15.10.2017) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்:புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோ கம் குறித்து யோசிப்பீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். நினைத்தது நிறைவேறும் நாள்.\nரிஷபம்: நட்பு வட்டம் விரியும். அரசு அதிகாரிகளின் உதவி யால் சில காரியங்களை முடிப்பீர்கள். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வந்துப் போகும். புது வேலைக் கிடைக்கும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். நன்மை கிட்டும் நாள்.\nமிதுனம்:துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபா ரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. வெற்றிக்கு வித்திடும் நாள்.\nகடகம்:காலை 8.53 மணி வரை சந்திராஷ்டமம் தொடர்வதால் உணர்ச்சிவசப்படாமல் இருங்கள். நண்பகல் முதல் சோர்வு நீங்கி சுறுசுறுப்பா வீர்கள். குடும்பத்தில் இருந்த கூச்சல், குழப்பம் விலகும். வராது என்றிருந்த பணம் வரும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.\nசிம்மம்:காலை 8.53 மணி முதல் ராசிக்குள் சந்தி ரன் நுழைவதால் வேலைச் சுமையால் பதட்டம் அதிகரிக் கும். கணவன்- மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. விமர்சனங்களை கண்டு அஞ்சாதீர்கள். அடுத்தவர்களை குறைக் கூறுவதை நிறுத்துங்கள். வியாபாரத்தில் வேலை யாட்களால் விரயம் வரும். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.\nகன்னி:எதிர்பார்த்த காரியங்கள் அலைச்சலின் பேரில் முடியும். பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்துக் கொள்ளுங்கள். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். போராடி வெல்லும் நாள்.\nதுலாம்:தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறை வேற்றுவீர்கள். சொந்த-பந்தங்களில் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.\nவிருச்சிகம்:பிரச்னைகளை சமாளிக்கும் மனோ பலம் அதிகரிக்கும். உறவினர், நண்பர்களால் அனுகூலம் உண்டு. பழைய கடன் பிரச்னைகள் கட்டுப்பாட்டிற்குள் வரும். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். கனவு நனவாகும் நாள்.\nதனுசு:காலை 8.53 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதனால் பழைய நினைவு களில் மூழ்குவீர்கள். நண் பகல் முதல் கணவன்- மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். அரைக்குறையாக நின்ற வேலை கள் முடியும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். மனசாட்சி படி செயல்படும் நாள்.\nமகரம்: காலை 8.53 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள். குடும் பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும். நெருங்கியவரிடம் உங்களின் மனக்குறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கை யாளர்களிடம் நயமாக பேசுங்கள். பொறுமைத் தேவைப்படும் நாள்.\nகும்பம்:உங்கள் திறமை களை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். சகோ தர வகையில் உதவிகள் கிட்டும். விலை உயர்ந்த பொருட் கள் வாங்குவீர்கள். தாயார் ஆதரித்துப் பேசுவார். வியாபாரத்தை பெருக்குவீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.\nமீனம்:எதிர்பாராத பணவரவு உண்டு. பழைய உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். பிரபலங்களின் நட்பு கிட்டும். வெளியூர் பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.sahabudeen.com/2014/04/blog-post_27.html", "date_download": "2018-04-26T13:24:56Z", "digest": "sha1:ZMLAA4OKROGP7CPV6ZCSFI5MQZQQQSVH", "length": 59069, "nlines": 236, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: எது சுன்னா? செய்ததை அப்படியே செய்வதா..?", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\n\"நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு கருமத்தை எப்படிச் செய்தார்களோ அதனை அப்படியே செய்வதுதான் ஸுன்னா. அதனை மாற்றிச் செய்தால் சுன்னா புறக்கணிக்கப்படுகின்றது. மாற்றிச் செய்பவர் நபியையே புறக்கணிக்கிறார். எனவே, நபிகளாரின் சுன்னாக்களை உரிய முறையில் பின்பற்ற வேண்டும்.\"\nஇந்தக் கூற்றை விளங்கிக் கொள்வதற்கான ஒரு முயற்சியே இவ்வாக்கம். இந்தக் கூற்றை விளங்குவதற்கு முதலில் பின்வரும் வினாவை எடுத்துக் கொள்வோம்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செய்த அனைத்துக் கருமங்களையும் அவர்கள் செய்தது போலவே செய்ய வேண்டுமா\nசில செயல்களை நபிகளார் செய்தது போலவே செய்ய வேண்டும். அத்தகைய செயல்கள் வரிசையில் முதல் இடம்பெறுவது வணக்க வழிபாடுகளாகும்.\nவணக்க வழிபாடுகளான தொழுகை, நோன்பு போன்ற அமல்களில் நபிகளார் எதை, எப்படிச் செய்தார்களோ அதை அப்படியே செய்ய வேண்டும். சில அமல்களை அவர்கள் இரண்டு விதமாகச் செய்திருந்தால் நாமும் இரண்டு விதமாகச் செய்யலாம். சிலதை மூன்று விதமாகச் செய் திருந்தால் நாமும் மூன்று விதமாகச் செய்யலாம். அவற்றுள் ஒன்று ஆதார பலம் கூடியதாக அல்லது குறைந்ததாக இருக்கலாம். எனினும், நபிகளார் செய்த முறைகளில் ஒன்றைப் பின்பற்றுவது ஆகுமானதே.\nதொழுகை நேரங்கள், தொழு கையின் ரக்அத்துகள், தக்பீர் முதல் ஸலாம் வரையிலான ஒழுங்குகள், நோன்பு, ஹஜ் என்பவற்றிலுள்ள நடைமுறைகள் என இதற்கான உதாரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். பிரயாணத்தில் தொழுகையை சேர்த்து சுருக்கித் தொழுவதும் நபிகளாரின் சுன்னாதான். சிலர் அவ்வாறு செய்வதில்லை. காரணம், அவ்வாறு செய்யாமலிருப்பது ஈமானுக்கும் தக்வாவுக்கும் சிறந்தது என்று அவர்கள் நினைக்கிறார்கள்.\nஇவற்றில் பர்ளுகளை செய்யும் போதும் சுன்னத்துகளை செய்யும் போதும் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் செய்தது போலவே செய்ய வேண்டும். இவற்றுள் ஒரு செயலை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இரண்டு, மூன்று விதமாகச் செய்திருக்கிறார்கள் என்பது ஹதீஸ்கள் வாயிலாகத் தெரிய வந்தால் அவற்றில் ஒன்றைச் செய்வது சுன்னாவாகவே கொள்ளப்படும். உதாரணமாக, தக்பீரின்போது கையைப் பலவிதமாகக் கட்டியிருக்கிறார்கள் என ஹதீஸ்களில் காண்கிறோம். அவற்றில் ஒரு முறையைப் பின்பற்றலாம். மற்றொரு முறையை இன்னு மொருவர் பின்பற்றினால் அது சுன்னாவல்ல என்று கூறுவதற்கு எமக்கு அதிகாரமில்லை.\nஸகாத் நடைமுறைகளைப் பொறுத்தவரை ஸகாத் விதியாகும் பொருட்கள், அவற்றின் அளவுகள் போன்ற விடயங்களில் விரிவான ஆய்வுகள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடுகளும் இருக்கின்றன. காரணம், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது காலத்தில் இல்லாத உற்பத்திப் பொருட்கள், விளைச்சல்கள், வியாபாரப் பொருட்கள் பிற்காலத்தில் மலிந்து விட்டன. அவற்றின் ஸகாத் நடைமுறைகள் பற்றியே இத்தகைய ஆய்வுகளும் கருத்து வேறுபாடுகளும் தோற்றம் பெற்றன. எனினும், இத்தகைய கருத்து வேறுபாடு கள் நபிகளாரின் சுன்னாவையே பிரதி பலிக்கின்றன. தொழுகை, நோன்பு, ஹஜ் என்பவற்றில் காலத்தால் மாறும் நடைமுறைகள் இல்லை.\nஅதேபோன்று காலத்தால் மாறாத ஒழுக்கங்கள் சிலவும் இந்த வரிசையில் இடம்பெறுகின்றன. வலது கால், வலது கையை முற்படுத்த வேண்டிய இடங்கள், இடது கால், இடது கையை முற்படுத்த வேண்டிய இடங்கள். ஆடை அணியும் முறை, உணவு உட்கொள்ளும் ஒழுங்குகள், நித்திரை ஒழுங்குகள், குழந்தை பிறந்தால் செய்ய வேண்டியவை, மனிதன் இறந்தால் செய்ய வேண்டியவை, திருமண ஒழுங்குகள் போன்ற இன்னோரன்ன வாழ்வு ஒழுங்குகள் விடயத்திலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செய்தது போன்று நாமும் செய்ய வேண்டும். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது சுன்னாவைப் பின்பற்றுவோராக நாம் மாறலாம்.\nஇவற்றோடு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செய்தது போல் செய்ய வேண்டிய மற்றுமொரு நடைமுறையும் இருக்கிறது. அதுவே நற்குணங்களாகும். பணிவு, நாவடக்கம், பயனற்ற வேலைகளில் ஈடுபடாமை, பிறரது குறைகளை அறிந்து கொள்வதிலும் பேசுவதிலும் அக்கறையின்மை, அலட்டலும் முறையீடுகளும் இன்மை, கடுமை, முரட்டு சுபாவங்கள், பிடிவாதம், முரண்படும் குணம், விரைந்து உணர்ச்சிவசப்படுதல், பகை பாராட்டுதல், அடுத்தவரின் துன்பத்தில் இன்பம் காணுதல், தற்புகழ்ச்சி போன்ற இழிவான குணங்களிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளல்.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அனைத்து நற்குணங்களின் இருப்பிடமாகத் திகழ்ந்திருக்கிறார்கள். அனைத்துத் தீய குணங்களும் அவர்களைக் கண்டு அஞ்சி நடுங்கியிருக்கின்றன. நற்குணங்கள் விடயத்திலும் நாம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை முற்றிலும் பின்பற்றி நடக்க முயற்சி செய்ய வேண்டும்.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செய்த செயல்களில் இன்னும் சில இருக்கின்றன. அவற்றை அவர்கள் செய்ததுபோல அப்படியே செய்ய முடியாது செய்வதும் அவசியமில்லை. மாறாக, எந்த நோக்கத்திற்காக அவர்கள் அவற்றை செய்தார்களோ அந்த நோக்கத்தை அடைந்து கொள்வதற்காக நாம் அவற்றைச் செய்ய வேண்டும்.\nஉதாரணமாக, ஒரு சிறிய பாத்திரத்தில் நீர் எடுத்து அதில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குளித்திருக்கிறார்கள் என்பதனால் உலக முஸ் லிம்கள் அனைவரும் அந்தளவு சிறிய பாத்திர நீரில்தான் குளிக்க வேண்டும் என்று வலியுறுத்த முடியாது. அங்கு செயலைவிட செயலின் நோக்கம்தான் முன்மாதிரியாகக் கொள்ளப்படுகிறது. சுத்தம் அல்லது பெருந்துடக்கை நீக்குதல் போன்ற நோக்கங்களே இங்கு முன்மாதிரியாகும். அந்த நோக்கங்களை அடைவதற்காக ஒருவர் ஒரு சிறிய பாத்திரமளவு நீரையும் பயன்படுத்தலாம். ஆற்றிலும் குளிக்கலாம் கடலிலும் குளிக்கலாம். அனைத்தும் சுன்னாக்கள்தாம்.\nஇதற்கு மற்றுமோர் உதாரணம் நாம் அணியும் ஆடைகளாகும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பல்வேறு ஆடைகள் அணிந்திருப்பதாக ஹதீஸ்களில் வந்துள்ளது. உலகெங்கும் வாழும் முஸ்லிம்கள் அவர்கள் அணிந்தது போன்ற ஆடைகளை அணிவது தான் சுன்னத்தா என்றால் பதில் \"இல்லை\" என்பதே. காரணம், ஆடைகள் சுன்னத்தல்ல. ஆடை அணியும் நோக்கம்தான் இங்கு சுன்னத்தாகக் கொள்ளப்படுகிறது. அவ்ரத்தை மறைத்தல், கண்ணியத்தைப் பாதுகாத்தல், அழகாக இருத்தல் போன்ற நோக்கங்களுக்காகவே ஆடை அணியப்படுகிறது. அவ்ரத்தில் கண்டிப்பாக மறைக்க வேண்டிய பகுதி, மேலதிகமாக மறைக்க வேண்டிய பகுதி எனும் விளக்கங்கள் உண்டு. அவற்றோடு ஆண்கள், பெண்கள் அணிய வேண்டிய ஆடைகளுக்கான வரையறைகள் தரப்பட்டிருக்கின்றனவே அன்றி, ஆடையின் வடிவங்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படவில்லை.\nஇந்த வகையில் ஒவ்வொரு நாட்டிலும் வாழ்பவர்கள் அந்தந்த நாட்டின் சீதோஷ்ஷண நிலைக்கேற்ற ஆடைகளை இஸ்லாமிய வரையறைகளைப் பேணி அணிவார்கள் என்றால் அவர்கள் பின்பற்றுவது சுன்னாவைத்தான்.\nஇவ்வாறு நோக்கங்களை அறிந்து செய்ய வேண்டிய சுன்னாக்களும் இருக்கின்றன. நோக்கங்களை அறிந்தோ அறியாமலோ செய்ததை அப்படியே செய்ய வேண்டிய சுன்னாக்களும் இருக்கின்றன. இந்த இரு சுன்னாக்களுக்குமிடையில் உள்ள வேறுபாட்டைப் புரிந்து கொள்ளாத தன் காரணமாக, எது சுன்னா, எது இல்லை என்ற குழப்பம் மக்களிடையே நிலவுகிறது. குறிப்பாக, நோக்கங்களை அறிந்து செய்ய வேண்டிய சுன்னாக்கள் விடயத்தில் நோக்கங்களை விட்டுவிட்டு செயல்களை நாம் முக்கியத்துவப்படுத்தினால் இந்தக் குழப்பம் மேலும் அதிகரிக்கும்.\nஅதேபோன்று நபிகளார் செய்ததை அப்படியே செய்ய வேண்டிய சுன்னாக்களுக்கு நாம் நோக்கம் கற்பிக்க முற்படவும் கூடாது. அவற்றை அப்படியே செய்து விட்டுச் செல்வதுதான் முறை. அவற்றுக்கு நாங்கள் நோக்கம் கற்பித்தால் அங்கும் சமூகத்தில் தெளிவின்மையும் குழப்பமுமே அதிகரிக்கும்.\nவணக்க வழிபாடுகளான தொழுகை, நோன்பு போன்ற அமல்களை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எப்படிச் செய்தார்களோ நாமும் அப்படியே செய்ய வேண்டும் என்று பார்த்தோம். தொழுகையோடு சம்பந்தப்பட்ட அதானும் அப்படிப்பட்ட ஒரு வணக்கம்தான். அதானை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எப்படி அறிமுகம் செய்தார்களோ அதனை அப்படியே சொல்ல வேண்டும். அதானுக்கு முன்னால் ஸலவாத்தை நாம் சேர்த்துவிட்டு நபியின் மீதிருக்கின்ற அன்பினால் நாம் அப்படிச் செய் கின்றோம் என்று எமது செயலுக்கு நாங்கள் நோக்கம் கற்பிக்க முற்படக்கூடாது. அவ்வாறு செய்வது சுன்னாவை மறுக்கும் செயலாகும்.\nசெய்ததை அப்படியே செய்யாமல் மாற்றிச் செய்து விட்டு நோக்கம் கற்பிப்பதற்கு மற்றுமோர் உதாரணம், அறபா தினத்தின் பிரச்சினையாகும். இந்தப் பிரச்சினையை விளங்குவதற்கு பின்வரும் வினா முக்கியமானது:\nபிறை ஒன்பதாம் நாள் அறபா தினமா அல்லது \"அறபா\" தினம் என ஒரு தினம் இருக்கிறது. அத்தினத்தில் பிறை எட்டாகவும் இருக்கலாம் அல்லது பத்தாகவும் இருக்கலாமா\nஉண்மையில் ஒன்பதாம் பிறையன்று அறபாவுக்குச் செல்லுங்கள் என்றே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். அதாவது, ஹஜ்ஜில் அறபா தினமன்று அறபாவுக்குச் செல்லும் நடைமுறையொன்று இல்லை. ஒன்பதாம் நாள் அறபா செல்லும் நடைமுறையே இருக்கிறது.\nஆக, உலகில் எங்கிருந்தாலும் அவர்கள் இருக்குமிடத்தில் ஒன்பதாம் தினமே அவர்களுக்கு அறபா தினமாகும். அவர்களது ஒன்பதாம் தினத்தை பத்தாம் தினமாக மாற்றிவிட்டு எட்டாம் தினத்தை ஒன்பதாம் தினமாக்கி அதை அறபா தினம் என்று நோக்கம் கற்பிக்கும் உரிமை எமக்கில்லை. எட்டாம் நாள் எப்படி அறபா தினமாக மாறும் இது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செய்ததை அப்படியே செய்யாமல் மாற்றிச் செய்து விட்டு, ஏன் மக்காவில் இன்று அறபாவல்லவா இது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செய்ததை அப்படியே செய்யாமல் மாற்றிச் செய்து விட்டு, ஏன் மக்காவில் இன்று அறபாவல்லவா என நோக்கம் அல்லது காரணம் கற்பிக்க முற்படுவது சுன்னாவுக்கு முரணான செயலாகும்.\nஎதை அப்படியே செய்வது எதை நோக்கமறிந்து செய்வது என்ற வேறுபாடு தெரியாமல் செய்யும்போது தான் இத்தகைய குழப்பங்கள் தோன்றுகின்றன.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மற்றுமொரு சுன்னா இருக்கிறது. அங்கும் செய்ததை அப்படியே செய்ய வேண்டும் என்பதில்லை. அங்கு ஷரீஆ விதிமுறைகளுக்கும் சட்டங்களுக்கும் கட்டுப்படுவதே சுன்னாவாகும். வியாபாரம், சொத்துப் பங்கீடு போன்றவற்றை இதற்கு உதாரணங்களாகக் கூறலாம்.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது காலத்துக்கும் எமது காலத்துக்குமிடையில் வியாபார நடைமுறைகள் எவ்வளவோ மாறிவிட்டன. நிதி, நிர்வாகத் துறை நடைமுறைகள் மாறிவிட்டன. பொது வாழ்க்கையோடு சம்பந்தப்பட்ட இத்தகைய நடை முறைகளில் விதிகள், சட்டங்கள் என்பவற்றையே நாம் பின்பற்ற வேண்டும். அவ்வாறு செய்யும்போது நாம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது சுன்னாவைப் பின்பற்றியவர்களாவோம்.\nநிர்வாகத்துறையை உதாரணமாக எடுத்துக் கொண்டால், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர் கள் மஸ்ஜிதிலிருந்துதான் பரிபாலனம் செய்திருப்பதைக் காண்கிறோம். அலுவலக முறைகள் இன்றைய ஒரு நவீன அலுவலகத்தில் இருப்பது போன்று நபியவர்களது நிர்வாக முறைமைகளில் இருந்திருக்காது. நாமும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கனைப் போன்று மஸ்ஜித்களில் இருந்த வண்ணம்தான் அனைத்து விவகாரங்களையும் நிர்வகிக்க வேண்டும் என்று கூறினால் நாங்கள் சுன்னாவை விளங்கவில்லை என்பது பொருள். இங்கு பொறுப்புணர்வு, தகைமை, அமானிதம், சேவை மனப்பான்மை போன்றவற்றை நிர்வாகத்தில் கடை பிடிப்பதுதான் சுன்னாவாகும். மஸ்ஜிதில் இருந்து நிர்வாகம் செய்வதல்ல.\nஇன்றைய வியாபார நடைமுறைகளை எடுத்துக் கொண்டாலும், நிலைமை அதே போன்றதுதான். அங்கு வியாபாரத்திற்கான விதிகளையும் சட்டங்களையும் கற்று அந்த சட்டங்களுக்கேற்ப தமது வியாபாரத்தை நடத்திச் செல்வதே சுன்னாவாகும். இன்றைய இஸ்லாமிய வங்கிகள் நபிகளாரின் ஒரு சுன்னாவை (வியாபாரத்தில்) உயிர்ப்பித்திருப்பதை இங்கு குறிப்பிடலாம்.\nஇவ்வாறு நபிகளாரின் சுன்னாக்களை விடயத்திற்கு விடயம் வேறுபடுத்தி எந்த விடயத்தில் எது சுன்னாவாக இருக்கிறது என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். இந்த விளக்கம் இல்லாமல் சமூகத்தை வழிநடத்த முற்படும்போதுதான் குழப்பங்களும் அமைதியின்மையும் ஏற்படுகின்றன. \"இஸ்லாத்தைக் தேடிக் கற்பது ஒவ் வொரு முஸ்லிமினதும் கடமை\" என்ற நபிமொழியின் அர்த்தத்தை இங்கு நாம் தெளிவாக உணரக்கூடியதாக இருக்கின்றது.\nகளத்தில் சிலர் சில சுன்னாக்களைக் கற்றிருக்கிறார்கள் சிலதைக் கற்கவில்லை. மற்றும் சிலர் வேறு சிலதைக் கற்றிருக்கிறார்கள். முன்னையவர்கள் கற்றதைக் கற்கவில்லை. இவ்வாறு சிலர் சிலதைக் கற்றாலும் பலர் கற்காமலே இருக்கும் ஒரு சுன்னா இருக்கிறது. அந்த சுன்னா விடயத்தில் தெளிவான விளக்கம் இல்லாத காரணத்தால் இஸ்லாத்தினதும் முஸ்லிம் சமூகத்தினதும் மறுமலர்ச்சி யுக யுகமாகப் பின்தள்ளப்பட்டுக் கொண்டே செல்கிறது. அதுதான் இஸ்லாமியப் பணி அல்லது தஃவா விடயத்தில் நபிகளாரின் சுன்னா எது என்பதாகும்.\nஇஸ்லாமியப் பணி விடயத்தில் எது சுன்னாவல்ல என்பதை சமூகம் தெளிவாகப் புரிந்திருக்கிறது. எனினும், எது சுன்னா என்பதைத்தான் புரியாமல் இருக்கிறது. உதாரணமாக, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹிராவிலிருந்து தனது பணியைத் துவங்கினார்கள். மனைவியிடம் வந்தார்கள். வரகத் இப்னு நவ்பல் என்பவரிடம் சென்றார்கள். உறவினர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்தார்கள். தாருல் அர்கமில் இரகசியமாகப் பிரசாரம் செய்தார்கள். தோழர்களை ஹபஷாவிற்கு ஹிஜ்ரத் அனுப்பினார்கள். தாயிபுக்கு ஹிஜ்ரத் போனார்கள்…\nஇந்த ஒழுங்கைப் பின்பற்றித்தான் தஃவா பணி செய்ய வேண்டும் அதுதான் சுன்னா என்று சமூகத்தில் ஒருவர் கூடச் சொல்வதில்லை. எனவே, எது சுன்னாவல்ல என்பதை மக்கள் புரிந்திருக்கிறார்கள். எனினும், எது சுன்னா என்பது விளங்காதிருக்கின்றது.\nதஃவா பணியில் சுன்னா என்பது நபியவர்கள் அந்தப் பணி மூலம் அடைந்து கொண்ட இலக்குகளை அடைவதாகும். அந்த இலக்குகளை ஒருவரோ ஒரு சமூகமோ ஓர் இயக்கமோ தவறவிட்டால் அவர்கள் தஃவா பணியில் நபிகளாரின் சுன்னாவைப் புறக்கணித்தவர்களாகவே கருதப்படுவர். அது மட்டுமல்ல, தஃவா விடயத்தில் நபியவர்களின் இந்த சுன்னாவைப் புறக்கணிக்கும்போது நாம் ஏற்கனவே குறிப்பிட்ட சுன்னாக்கள் சமூகத்தில் உயிர்ப்பிக்கப்பட்டிருந்தாலும், இஸ்லாத்தினதும் முஸ்லிம் சமூகத்தினதும் மறுமலர்ச்சி எட்டாக்கனியாகவே இருக்கும்.\nதஃவா பணியில் நபிகளாரின் இலக்குகள் எவை\nதஃவா பணி என்பது அழைப்புப் பணி. \"அழைப்பு\" என்றாலே எதை நோக்கி எங்கு செல்வதற்காக என்ற வினாக்கள் எழும். அல்லாஹ்விடம் செல்வதற்காக என்று நாம் கூறுவோம். அதாவது, அவனது திருப்தியை… திருப்பொருத்தத்தை அடைந்து கொள்வதற்காக. இதுதான் தஃவா பணியின் இலக்கு. அல்லாஹ்வின் திருப்தியைப் பெற்றவர்களுக்கு அல்லாஹ் சுவனத்தைப் பரிசாக வழங்குவான். ஆக \"சுவனம்\" தஃவாப் பணியின் அடுத்த இலக்கு. சுருக்கமாகச் சொன்னால் அழைப்புப் பணியின் இலக்குகள் அல்லாஹ்வின் திருப்தியும் சுவனமும் என்பதாகும். இந்த இலக்குகள் விடயத்திலும் முஸ்லிம் சமூகத்தில் ஒத்த கருத்திருக்கிறது. குழப்பமில்லை.\nஎனினும், குழப்பம் அதற்குப் பின்னர்தான் ஆரம்பமாகிறது. அல்லாஹ்விடம் அழைத்துச் சென்று சுவனம் வாங்கிக் கொடுப்பது எப்படி அழைப்புப் பணி மூலம் இதனை வெளிப்படையாக சாதித்து விடலாமா அழைப்புப் பணி மூலம் இதனை வெளிப்படையாக சாதித்து விடலாமா யார் அழைக்கும் அழைப்புக்குப் பின்னால் போனால் சுவர்க்கம் கிடைக்கும் யார் அழைக்கும் அழைப்புக்குப் பின்னால் போனால் சுவர்க்கம் கிடைக்கும் சுவனமா, நாங்கள் பெற்றுத் தருகிறோம் எங்களுக்குப் பின்னால் வாருங்கள் என்று வெளிப்படை யாகச் சொன்னாலும் சரி, மறைமுகமாகச் சொன்னாலும் சரி யார் சொல்வதை நம்புவது\nஇங்குதான் பிரச்சினை ஆரம்பமாகிறது. இதற்குக் காரணம், தஃவா பணியில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அடைந்த இலக்குகள் பற்றி நாம் தெளிவற்றிருப்பதே. அழைப்புப் பணியின் இலக்குகள் அல்லாஹ்வின் திருப்தி, சுவனம் என்பதோடு முடிவதில்லை. அவை இறுதி இலக்குகள். அந்த இறுதி இலக்குகளை அடைய வேண்டுமானால் அதற்கு முன் சில இலக்குகளை உலகில் அடைந்தாக வேண்டும். அந்த உலக இலக்குகளை அடைய முடியுமாக இருந்தால் யார் பின்னால் போனாலும் சுவனம் கிடைக்கும். அது மட்டுமல்ல, அழைப்புப் பணியில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் முன்மாதிரியைப் பின்பற்றியதாகவும் இருக்கும். காரணம், அழைப்புப் பணியில் சுன்னா நபியவர்கள் அடைந்த இலக்குகளை அடைவதாகும். ஹிரா மலையிலிருந்து பயணத்தை ஆரம்பிப்பதல்ல சுன்னா.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அழைப்புப் பணியின் மூலம் உலகில் சில இலக்குகளை அல்லது சில அடைவுகளை அடைந்தார்கள். அந்த அடைவுகள் இஸ்லாம் என்ற அமைதியை உள்ளத்துக்கும் உலகத்திற்கும் கொடுத்ததாகும். வேறு விதமாகக் கூறினால், இஸ்லாத்தின் மூலம் அமைதியான உள்ளங்களையும் அமைதியான உலகமொன்றையும் கட்டி யெழுப்பினார்கள் நபியவர்கள். ஆக, \"அமைதியான உள்ளம்\" \"அமைதியான உலகம்\" என்பவையே நபியவர்களது அழைப்புப் பணியின் உலக இலக்குகளாகும். இந்த இலக்குகளில் அமைதியான உள்ளம் எனும் இலக்கை ஒவ்வொரு மனிதனும் அவசியம் அடைந்திருக்க வேண்டும்.\nஇரண்டாவது இலக்கை அடையும் பாதையில் மும்முரமாக உழைக்க வேண்டும்… நகர்ந்து கொண்டிருக்க வேண்டும். அப்போது அவர் செய்யும் அழைப்புப் பணி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது சுன்னாவை செயல்படுத்துவதாக இருக்கும். சுவனம் என்ற இறுதி இலக்கின்பாலும் அது அவரை இட்டுச் செல்லும்.\nஅமைதியடைந்த ஆரோக்கியமான உள்ளங்களுக்கே சுவனம் கிடைக்கும் என்று அல்குர்ஆன் குறிப்பிடுகிறது. (பார்க்க 89:27, 26:87 – 89)\nஅதேபோன்று அமைதியான உலகத்தைக் கட்டியெழுப்புவதற்காக நபிகளாரோடு அகபாவில் உடன்படிக்கை செய்த மதீனாவாசிகளுக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சுவனத்தை வாக்களித்தார்கள். அந்த மதீனாவாசிகளோடு இணைந்து அமைதியான உலகத்தைக் கட்டியெழுப்பும் பணிக்கு உதவ முன் வராமல் மக்காவில் இருக்க விரும்புகின்ற முஸ்லிம்களுக்கு அல்குர்ஆன் எச்சரிக்கை விடுத்தது. அவர்களை அநியாயக்காரர்கள் என்றும் குறிப்பிட்டது. அவர்களது உயிர்களை அநியாயக்காரர்களின் உயிர்களைக் கைப்பற்றுவதுபோல மலக்குகள் கைப்பற்றுவார்கள் என்று சுட்டிக்காட்டியது. (பார்க்க 4:97)\nஅது மட்டுமல்ல, அவர்கள் மக்காவிலிருந்து மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்து அமைதியான உலகைக் கட்டியெழுப்பும் பணியில் பங்கு கொள்ளும்வரை அவர்களுடன் எந்த உறவும் வேண்டாம் என்று மதீனாவாசிகளைத் தடுத்தது அல்குர்ஆன். (பார்க்க 8:72)\nஇந்தப் பணியைச் செய்கின்றவர்களுக்கு அமைதியான உலகமொன்றை ஏற்படுத்தித் தருவதாக அல்லாஹ் வாக்களித்துமிருந்தான். அத்தகைய உலகமொன்றில் தான் இணைவைத்தல் முற்றாக நீக்கப்பட்டு மக்கள் அல்லாஹ்வை வணங்கி வழிபடுகின்ற நிலை உருவாகும். (பார்க்க: 24:55)\nஇவ்வாறானதோர் இலக்கை அடையும் போராட்டத்திலும் பயணத்திலும் பங்குபற்றாமல் ஒதுங்கியிருக்க விரும்புபவர்களையே மதீனா சமூகத்தின் முனாபிக்குகளாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அடையாளப்படுத்தினார்கள். ஆக, அமைதியான உலக மொன்றைக் கட்டியெழுப்பும் பணியிலிருந்து ஒதுங்கியிருக்கும் மதீனாவாசிகள் முனாபிக்குகள் என்றும் ஒதுங்கியிருக்கும் மக்காவாசிகள் அநியாயக்காரர்கள் என்றும் அல்குர்ஆன் குறிப்பிடுகிறது. அவ்வாறாயின் இந்த இலக்கை அடையும் பாதையில் மும்முரமாக உழைக்காதவர்கள் எப்படி சுவனம் என்ற இறுதி இலக்கை அடைய முடியும்\nஎனவே, தஃவா பணியின் சுன்னா நபிகளார் அடைந்த இலக்குகளை அடைவதற்குத் திட்டமிட்டு வேலை செய்வதாகும்.\nஆனால், இன்று மேற்கொள்ளப்படுகின்ற இஸ்லாமிய அழைப்புப் பணிகள் உள்ளங்களில் இருக்கின்ற அமைதியையும் இல்லாமலாக்கி (உலகம் எப்படிப் போனாலும்) ஊர் அளவில் இருக்கின்ற அமைதியையும் இல்லாமல் செய்கின்றன. அவ்வாறு அமைதியை சீர் குலைக்கின்ற சக்திகள் தம்மை எவ்வாறு அடையாளப்படுத்துகின்றன தெரியுமா\n\"குழப்பவாதிகள் வந்தார்கள் நாங்கள் விடவில்லை. ஊரின் அமைதியைப் பாதுகாத்தோம்.\"\nஇப்படிக் கூறும் இவர்கள் யார் இவர்கள்தாம் ஊரிலுள்ள குழப்பங்கள் அனைத்துக்கும் பின்னாலிருந்து எண்ணெய் ஊற்றுபவர்கள். அல்லாஹ் சரியாகச் சொன்னான்.\n\"நீங்கள் பூமியில் குழப்பம் செய்து திரியாதீர்கள் என்று அவர்களுக்குக் கூறப்பட்டால் நாங்கள்தான் சீர்திருத்தவாதிகள் என அவர்கள் கூறுவார்கள். அறிந்து கொள்ளுங்கள் அவர்கள்தான் குழப்பவாதிகள். ஆனால், அவர்கள் அதனை உணர்வதில்லை.\" (2:11-12)\nஇன்றைய பணிகள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அடைந்த இலக்குகளை முற்றாக அடையவில்லை என்று நான் கூற மாட்டேன். உள்ளங்கள் சிலவற்றை அமைதியடைந்த உள்ளங்களாக ஆக்குவதில் அவை வெற்றி கண்டிருக்கின்றன. எனினும், சமூகத்தை அமைதியடைந்த ஒரு சமூகமாக ஓர் ஊர் மட்டத்தில் மாற்றுகின்ற அளவுக்காவது முன்னேற்ற வில்லை. முன்னேறும் முயற்சிகளையும் இஸ்லாம் என்ற பெயராலேயே தடுக்கும் வேலைகள்தான் முன்னெடுக்கப்படுகின்றன. இஸ்லாமியப் பணியில் எது சுன்னா என்பதை விளங்க முடியாத நிலையே அதற்குக் காரணமாகும்.\nஅமைதியடைந்த ஒரு சமூகம் எனும்போது அங்கு ஓர் இஸ்லாமியத் தலைமைத்துவம், கட்டுப்படும் சமூகம், இஸ்லாமிய வாழ்வியலைக் கட்டியெழுப்புவதற்கான திட்டங்கள் எனப் பல அம்சங்கள் அதனுள் வருகின்றன. அவை ஒரு சமூகத்திலோ ஓர் ஊரிலோ வந்துவிட்டால் எமது கதி அதோ கதிதான் என்று கருதும் இஸ்லாத்தின் வளர்ச்சியை விரும்பாத சக்திகள் நிச்சயம் இந்த சுன்னாவை அமுல் நடத்துவதற்குத் தடையாகத்தானே இருக்கும் எனினும், இந்த சக்திகள் அல்லாஹ்வை எதிர்த்து நிற்பதால் நீண்ட காலம் தாக்குப்பிடிப்பதில்லை என்பதே வரலாறு.\nஆக, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சுன்னாவை ஒவ்வொரு விடயத்திலும் நாம் எப்படிப் பின்பற்றுவது என்பதை முதலில் நாம் கற்க வேண்டும். அதன்பின் செய்ததை அப்படியே செய்வதா அல்லது நோக்கமறிந்து இலக்கறிந்து செய்வதா என்ற வேறுபாடுகளைப் புரிந்து கொள்ளலாம். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பற்றி அதிகமாகப் பேசப்படும் இக்காலத்தில் இந்த உண்மைகளை முஸ்லிம்கள் நன்கு விளங்கியிருக்க வேண்டும்.\nகுறிப்பு: இந்த ஆக்கத்தில் \"சுன்னா\" என்ற பிரயோகம் அதிகமாக இடம்பெற்றள்ளது. அது பர்ளு, சுன்னத்து என்ற கருத்திலல்ல. பர்ளாக இருக்கலாம். சுன்னத்தாக இருக்கலாம். நபிகளாரின் நடைமுறை இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற கருத்தில்தான் \"சுன்னா\" என்ற சொல் இங்கு பிரயோகிக்கப்பட்டுள்ளது. இமாம்கள், இஸ்லாமிய அறிஞர்கள் இத்தகைய கருத்துக்களிலும் இன்னும் பல்வேறுபட்ட கருத்துக்களிலும் \"சுன்னா\" என்ற பதத்தைப் பிரயோகித்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nநன்றி: உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்\nநிலம் வாங்குவதற்கு முன் தெரிந்துகொள்ளவேண்டியன\nசிறுநீர்: சில சிக்கல்கள், உண்மைகள்\nதித்திக்கும் மாம்பழத்தின் சூப்பரான நன்மைகள்\nவட்டி – ஒரு சமுதாயக் கேடு\n படிப்பதை நினைவில் நிறுத்துவது எப்...\nகோழி, ஆடு இறைச்சி உண்பவரா\nவிட்டமின் மாத்திரைகள் – அதிர்ச்சி தகவல்\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nதேனை தனியாக சாப்பிட்டால் பலன்--- மருத்துவ டிப்ஸ்\nதேன் சீரண சக்தியை தரும். இரைப்பையில் ஏற்படும் எல்லாவித கோளாறுகளையும் வயிற்றில் ஏற்படும் கோளாறுகளையும் குணமாக்கும். நெஞ்சில் ஏற்படும் எரிச்...\n‘ பாட்டி வைத்தியம் ’ சொன்ன பாட்டியிடமிருந்து ‘ வைத்திய ’ ரிலே கட்டையை கைப்பற்றியிருக்கும் பாட்டியும் , நல்ல அனுபவசாலி\nஉடலை சார்ஜ் செய்வது எப்படி\nஉடலை சார்ஜ் செய்வது எப்படி பாகம் - 2 முந்தைய பதிவில் நம் உடலை ஏன் சார்ஜ் செய்ய வேண்டும் , அதனால் உண்டாகும் பலன்கள் என்னென்ன என்...\nஅதிகாலையில் தண்ணீர் பருகினால் பல வியாதிகளைக் குணப்படுத்த முடியும் \nதினமும் காலையில் தூக்கத்தில் இருந்து எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவது ஜப்பானில் இப்போது பிரபலமாகி வருகிறது. இங்கு தரப்பட்டி...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nஉங்கள் உடல் எடை ஏழு நாட்களுக்குள் ஐந்து கிலோ எடை குறைய...\nகீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த அட்டவணை மிகப் பிரபலமான உணவு அட்டவணை. ஏழு நாட்களுக்கு இந்த அட்டவணையைப் பயன்படுத்தினால் , உங்கள் எடையில் சராசரி...\nநபிமார்கள் பற்றிய அரிய தகவல்கள்\nநபிமார்கள் மனிதர்களில் மாண்புடையவர்கள்.இவர்கள் அல்லாஹ்வின் வாக்கே உலகில் மேலானது. இறைவனல்லாத ஏனையோரின் வாக்கு கீழானது என்னும் தாரகமந்திரத்...\n கல்யாணம் ஆயி பல வருசம் ஆச்சு. இன்னும் வண்டி மக்கர் பண்ணுதே என்று மனசுக்குள்ளே குமையும் நம்ம குரூப் மக்களே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%20%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE", "date_download": "2018-04-26T13:23:45Z", "digest": "sha1:SO3A3WZXG6IEKSJJGOP4T2H7JQJTBVPF", "length": 5096, "nlines": 88, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: அனுஷ்கா சர்மா | Virakesari.lk", "raw_content": "\nஇலங்கை ஆசிரியர் சேவை சங்கம் ஜே.வி.பியுடன் இணைந்து யாழ்பாணத்தில் \"செம்மே\" தினக் கொண்டாட்டம்\nநிலக்கரியை விட அடர்ந்த கருப்பு நிறத்தில் புதிய கிரகம் கண்டு பிடிப்பு\nஎரிந்த நிலையில் சடலம் மீட்பு\nபல கொள்ளைச் சம்பவங்களோடு தொடர்புடைய கொள்ளை கும்பல் கைது\nஇடி தாக்கி இருவர் வைத்தியசாலையில்\nஜாலிய விக்கிரமசூரியவை கைது செய்ய மீண்டும் பிடியாணை\n“அம்பாந்தோட்டை துறைமுகத்தின் பாதுகாப்பிற்கு இலங்கை கடற்படை மாத்திரமே பொறுப்பு”\nஐ.எஸ். தற்கொலை தாக்குதல் ; உயிரிழந்தோரின் எண்ணிக்கை 57 ஆக அதிகரிப்பு\nகாலில் விழுந்தவர் காலாவதியான நூடில்ஸ் என என்னை வர்ணிக்கிறார் : சந்திரிகா\nகோலியின் வரவேற்பு பத்திரிகையில் புதுமை.\nகோலி, அனுஷ்கா சர்மாவின் திருமண வரவேற்பு பத்திரிகையை வழங்குவதில் இருவரும் புதுமையை கடைபிடித்துள்ளனர்.\nகோலியும் அனுஷ்காவும் இணைந்து இலங்கையில் முன்னெடுத்த காரியம் ( படங்கள் இணைப்பு )\nஇந்திய அணித் தலைவர் விராட் கோலியும் அவரது பெண் தோழியுடான அனுஷ்கா சர்மாவும் இணைந்து இலங்கையில் மரக்கன்று ஒன்றை நாட்டி வைத...\nபுத்தாண்டில் வீராட் கோலி-அனுஷ்கா திருமண நிச்சயதார்த்தம்.\nவீராட் கோலி-அனுஷ்கா சர்மா திருமண நிச்சயதார்த்தம் புத்தாண்டு தினத்தில் (ஜனவரி 1 ஆம் திகதி) நடைபெறுகிறது என்று தகவல் வெளிய...\n கமராவில் அகப்பட்ட கோலி -அனுஷ்கா\nகருத்து வேறுபாட்டால் பிரிந்துவிட்டதாக கூறப்பட்ட காதல் ஜோடியான விராட் கோலி -அனுஷ்கா சர்மா தற்போது மீண்டும் ஒன்றாக சுற்ற ஆ...\nநிலக்கரியை விட அடர்ந்த கருப்பு நிறத்தில் புதிய கிரகம் கண்டு பிடிப்பு\nஎரிந்த நிலையில் சடலம் மீட்பு\nபல கொள்ளைச் சம்பவங்களோடு தொடர்புடைய கொள்ளை கும்பல் கைது\nஇடி தாக்கி இருவர் வைத்தியசாலையில்\nபள்ளிமுனை கடற்கரை மீன் வாடிகளிலிருந்து ஒரு தொகை மீன்கள் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/68793-soundarya-rajinikanth-to-direct-dhanushs-script.html", "date_download": "2018-04-26T13:06:08Z", "digest": "sha1:OLS5EGMSTVP2Z5HEABE54RZ3GF3WHJQF", "length": 20338, "nlines": 382, "source_domain": "cinema.vikatan.com", "title": "கதை திரைக்கதை வசனம் தயாரிப்பு -தனுஷ்... இயக்கம் -செளந்தர்யா ரஜினிகாந்த்! | soundarya rajinikanth to direct dhanush's script", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nகதை திரைக்கதை வசனம் தயாரிப்பு -தனுஷ்... இயக்கம் -செளந்தர்யா ரஜினிகாந்த்\nசென்ற வார நெட்டிசன்களின் பேசுபொருள் செளந்தர்யா ரஜினிகாந்த் தான். அவரது மண வாழ்க்கை பற்றி வந்த செய்திகளுக்கு தனது ட்வீட்டின் மூலம் முற்றுப்புள்ளி வைத்துவிட்டு அடுத்த வேலையை பார்க்க சென்றுவிட்டார்.\nகோச்சடையானை தொடர்ந்து இன்னொரு படம் இயக்கும் வேலையை தொடங்கிவிட்டார் செளந்தர்யா. இந்த முறை அவர் கையில் எடுத்திருக்கும் ஸ்கிரிப்ட்டை எழுதியவர்...தனுஷ்.\nபவர் பாண்டி மூலம் இயக்குநராகும் தனுஷ், தனது இன்னொரு ஸ்க்ரிப்ட்டை செளந்தர்யாவுக்கு தந்ததோடு மட்டுமில்லாமல், படத்தை வுண்டர்பார் சார்பில் தயாரிக்கவும் செய்கிறார். ஏற்கனவே தனுஷை இயக்க வேண்டும் என்ற தனது ஆசையை சொல்லியிருந்தார் செளந்தர்யா. இந்தப் படத்தில் தனுஷ் நடிப்பாரா என்பதை தெரிந்துக் கொள்ள கொஞ்சம் காத்திருக்க வேண்டும்.\nபடத்துக்கு “நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்” என்ற தலைப்பை தேர்வு செய்திருக்கிறார்களாம். அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் எனத் தெரிகிறது. ஒரே நேரத்தில் ரஜினி படம், அவரது மகள் இயக்கும் படம் இரண்டையும் தயாரிக்கிறார் தனுஷ்.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\nமுதல் ட்ரெய்ன் மூவி என்று சப் டைட்டிலோடு பிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ் கீர்த்தி சுரேஷ் நடிக்க வெளிவந்துள்ள படம் தொடரி.... Thodari Movie Review Thodari Movie Review | பயணிகளின் கனிவான கவனத்துக்கு... தொடரி விமர்சனம் - VIKATAN\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா\nதனுஷ், சிம்பு படங்கள் தள்ளிப்போக காரணம் என்ன, எப்போ ரிலீஸ்\nகண்டிப்பாக 'கபாலி -2' இல்லை... பா. ரஞ்சித் திட்டவட்டம்\n'பவர் பாண்டி' சூப்பர் டூப்பர் கதை... -- ராஜ்கிரணிடம் ரகசியம் உடைத்த ரஜினி #VikatanExclusive\nஅனிருத்துக்கு குட்பை சொன்ன தனுஷ்\nவாவ்... ஆஸ்கருக்கு செல்கிறது 'விசாரணை'\nDhanush,Soundarya Rajinikanth,செளந்தர்யா,தனுஷ்,ரஜினி,நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்,Rajini,Wunderbar\n``சிவகார்த்திகேயன் பங்கமா கலாய்ப்பார்... மா.கா.பா எவ்வளவு கலாய்ச்சாலும் வாங்கிப்பார்..’’ - அத்தியாயம் 13\n\"25 சூப்பர் ஹீரோக்கள்... ஒரு சூப்பர் வில்லன் தேனோஸ்\n``கார்த்திக்... என்னை கல்யாணம் பண்ணிக்குவீங்களானு கேட்கணும்போல இருக்கு\" - விஜி சந்திரசேகர்\n\" 'சுந்தரபாண்டியன் 2' தயாரிக்கிறேன்; விஜய்சேதுபதி கேரக்டர்ல நடிக்கிறேன்\n\"ஆமாங்க... வருத்தப்படாத வாலிபர் சங்கம் நல்ல படம்தான்’’ - ‘விகடன் பிரஸ் மீட்’ சிவகார்த்திகேயன்\n\"வைகோ, சீமான் மோதல் வேதனை தருகிறது” - கலங்கும் திருமா\nவிகடன் பிரஸ்மீட்: அஜித்திடம் என்ன பிடிக்காது விஜய்யிடம் என்ன பிடிக்கும்\nமிஸ்டர் கழுகு: பி.ஜே.பி மீது ரஜினி வருத்தம்\nஆற்றை சாகடிக்கும் மணல் மாஃபியாக்கள்\n\"வைகோ, சீமான் மோதல் வேதனை தருகிறது” - கலங்கும் திருமா\nஜெயித்தது தோனி... ஜெயிக்க வைத்தது கோலி... ஜஸ்ட் கோலி திங்ஸ்\nதிருடிய மொபைலை அன்லாக் செய்ய திருடர்கள் செய்யும் இன்னொரு திருட்டுத்தனம்... உஷார்\n'நிர்மலா தேவி வாழ்க்கையே ரகசியம்தான்'- காவியன் நகர் மக்கள் சொல்வது என்ன\nமெக்கானிக்குடன் சாலையில் நின்ற போலீஸார்... கதிகலங்கிப்போன இருசக்கர வாகன ஓட்டிகள்\nஜெயித்தது தோனி... ஜெயிக்க வைத்தது கோலி... ஜஸ்ட் கோலி திங்ஸ்\n``மன அழுத்தம் போக்க உங்களை நீங்கள் ஜெயிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்\n``லட்சியத்தை நோக்கி நகர்ந்துகொண்டே இருந்தால் மனஅழுத்தம் இல்லை. மனஅழுத்தம் போக்க உங்களை நீங்கள் ஜெயிக்கக் கற்க வேண்டும்’’ என்கிறார் எழுத்துச் சித்தர் பாலகுமாரன்.\nகருவளையத்தை மறைக்க மேக்கப் வேண்டாம்... இரும்புச்சத்து உணவு போதும்\nகருவளையத்தை மறைக்க மேக்கப் வேண்டாம். எந்தக் காரணத்தினால் உங்களுக்குக் கருவளையம் வந்திருக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டால் அதைச் சரி செய்வது சுலபம்..\nகொடைக்கானல் மெர்க்குரி ஆலை... அன்று நடந்ததும் இன்றைய நிலையும்\nஅவர்கள் குறைக்கவேண்டியதாக அரசு கூறிய மெர்க்குரி அளவு, உண்மையில் குறைக்கவேண்டிய அளவைவிட 20 மடங்கு அதிகம். இது யூனிலிவர் செலவைக் குறைப்பதற்காகச் செய்யப்பட்டது.\nவிகடன் பிரஸ்மீட்: அஜித்திடம் என்ன பிடிக்காது விஜய்யிடம் என்ன பிடிக்கும்\n“இந்த வேலைநிறுத்தம், இந்திய சினிமாவையே கோலிவுட் பக்கம் திருப்ப வெச்சிருக்கு. இதன் மூலமா...\nஜெ. கன்னத்திலிருந்த நான்கு புள்ளிகளும் அவிழாத முடிச்சுகளும்\nமரணத்துக்குப் பிறகு ஜெயலலிதா உடல் ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டபோது, ஜெ. கன்னத்தில் காணப்பட்ட நான்கு புள்ளிகள் குறித்துப் பெரும் சர்ச்சை எழுந்தது. அந்த நான்கு புள்ளிகள் குறித்த மர்ம முடிச்சுகளை அவிழ்ப்பதற்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முயற்சி செய்துள்ளது.\n\"வைகோ, சீமான் மோதல் வேதனை தருகிறது” - கலங்கும் திருமா\nகாவிரிப் பிரச்னை, எஸ.சி, எஸ்.டி வன்கொடுமைத் தடுப்பு சட்டம் ஆகியவற்றுக்கான போராட்டங்களில் மும்முரமாக...\nஜேம்ஸ் வசந்தன் இயக்கத்தில் ராதிகா... சுஹாசினி... ஊர்வசி... குஷ்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/hereafter-politics-people-only-needed-rajinikanth-306425.html", "date_download": "2018-04-26T12:59:26Z", "digest": "sha1:BMCTY4TXOLKORDUZRZN6ICGN7WMPZQNY", "length": 17043, "nlines": 170, "source_domain": "tamil.oneindia.com", "title": "மக்களோடு மக்களாக இறங்கி வாங்க ரஜினி... ரசிகர்கள் மட்டுமல்ல, உலகமே உங்கள் வசப்படும்! #RajiniFansMeet | Hereafter politics for people only needed Rajinikanth - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\n» மக்களோடு மக்களாக இறங்கி வாங்க ரஜினி... ரசிகர்கள் மட்டுமல்ல, உலகமே உங்கள் வசப்படும்\nமக்களோடு மக்களாக இறங்கி வாங்க ரஜினி... ரசிகர்கள் மட்டுமல்ல, உலகமே உங்கள் வசப்படும்\nகட்சி தொடங்குவது உறுதி, ஆனா... தெளிவாக சொல்லாத ரஜினி\nநாளை வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாள்.. காங். வேட்பாளர் நடிகர் அம்பரீஷ் எங்கே\nஉடல்பரிசோதனைக்காக இன்று அமெரிக்கா புறப்படும் ரஜினி... பயண திட்ட மத்தியில் மன்றத்தினருடன் ஆலோசனை\nகாலா படத்திற்கு தடை கோரிய மனு.. சென்னை ஹைகோர்ட் தள்ளுபடி\n அரசியல் அறிவிப்பை எதிர்பார்த்த ரசிகர்கள் ஷாக்\nகர்நாடக காவியின் தூதுவர் ரஜினி என பாரதிராஜா கூறியதில் பிழையில்லையே- சீமான்\nசிஎஸ்கே ரசிகர்களை தாக்கியது யார்.. பரபரப்பு வீடியோ.. அம்பலப்படுத்திய நாம் தமிழர் கட்சி\n31ம் தேதி சஸ்பென்ஸ் உடைக்கப்போகும் ரஜினி\nசென்னை: புது கட்சி, கொடி, சின்னம் இப்படி டைம் வேஸ்ட் செய்வதை காட்டிலும் மக்களோடு மக்களாக இறங்கி அதிரடி அரசியலில் ரஜினி குதித்தால்தான் அவருக்கு மக்களின் ஆதரவு சுலபமாககிடைக்கும். இதை ரஜினி உணர்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.\nகடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் மட்டுமல்லாமல் மக்களும் எதிர்பார்த்து காத்திருந்தனர். எதிலும் ஊழல், முறைகேடு என்றே மக்கள் பார்த்து சலித்துவிட்ட நேரத்தில் அத்தனை பேரின் எதிர்பார்ப்புக்கும் எதிராகவே ரஜினியின் தாமதம் இருந்து வந்தது.\n1996ல் அவர் முதல் முறையாக தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தபோது எனக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இப்போது இல்லை என்று கூறியிருந்தார். ஆனால் அது அவரை நம்பி காத்திருந்த மக்களை ஏமாற்றி விட்டது.\nகடந்த 1996-ஆம் ஆண்டு ஏமாற்றமடைந்த மக்கள் அதற்கு அடுத்து ரஜினி அரசியலுக்கு வருவார் என்று தொடர்ந்தும் எதிர்பார்த்திருந்தனர். அதேபோல் ரசிகர்களும் எதிர்பார்த்தனர். ஆனால் அவர் மௌனமே சாதித்தார். மாறாக திரைப்படங்களிலும் அவரை யாராவது அரசியலுக்கு அழைப்பது போன்றும் அதற்கு அவர் வரும்போது வருவேன் என்ற ரீதியிலான பதிலை தருவது போன்றுமே காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன.\nகடந்த மே மாதம் ரஜினி தனது ரசிகர்களை சந்தித்தார். அப்போது அவர் தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்றார். மேலும் போர் வரட்டும் பார்த்துக் கொள்ளலாம் என்றார். போர் வரும் வரை ஏன் காத்திருக்க வேண்டும் என்பதுதான் கேள்வி. எதற்கு இனியும் கால தாமதம். அதுதான் தமிழகத்தில் தலைமை இல்லையே. இறங்கி அடிக்க வேண்டியதுதானே. மக்களோடு மக்களாக பழகும் அரசியலே இனி தேவை.\nரசிகர்கள் என்ற சிறு வட்டத்துக்குள் அடைப்பட்டு விடாமல் மக்களோடு மக்களாக பழக வேண்டும். காமராஜர் உள்ளிட்டோர் எல்லாம் அரசியல் கட்சிகளுக்கு சேவை செய்ய வேண்டும் என்று அரசியலுக்கு வரவில்லை. மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று வந்தார்கள், வென்றார்கள். அதுபோன்ற ஒரு தலைவராக ரஜினி இருக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பும்.\n1996-ஆம் ஆண்டிலேயே அரசியலுக்கு வந்து விட்டதாக கூறும் ரஜினி, கட்சி, கொடி ஆரம்பிப்பது ஒரு புறம் இருந்தாலும் மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும். அதற்கு மக்களோடு மக்களாக பயணிக்க வேண்டும். ஒவ்வொரு பகுதியிலும் மக்கள் பிரச்சினைகள் இருக்கும். ஏன் இவர் பிறந்த கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் ஏராளமான பிரச்சினைகள் இருக்கும். அவற்றை பட்டியலிட்டு உண்மையான கோரிக்கை நியாயமான கோரிக்கை என்ற பட்சத்தில் நேரடியாக சம்பந்தப்பட்ட அரசு அதிகாரியுடன் பேசி தீர்க்கலாம். அதுதான் நிஜமான அரசியல். அதற்கு அவர் மாற வேண்டும்.\nரஜினி பேசினால் எடுப்படாத பிரச்சினை இருக்க முடியுமா.. சும்மா விரலைச் சுட்டி முடிக்கிற நேரத்தில் தீர்வு ஓடி வராதா என்ன.. அனிதா இறந்ததுமே கூட ரஜினி அதிரடியாக குதித்திருக்கலாம். டெல்லிக்குப் படையெடுத்திருக்கலாம். நீட்டைத் தூக்கு என்று போர்க்கொடி உயர்த்தியிருக்கலாம். விவசாயிகள் பிரச்சினைகள், மீனவ பிரச்சினை, காவிரி பிரச்சினை, நதி நீர் இணைப்பு ஆகியவற்றுக்கு இவர் இன்னும் வேகமாக குரல் கொடுத்திருக்கலாம்.\nமகாபாரதத்தில் பாண்டவர்களுக்கு கிருஷ்ணன் அறிவுறுத்துவார். அதில் உன் எதிரில் நிற்பர் உனது சகோதரனாக இருந்தாலும் அவரை எதிரியாகத்தான் பார்க்க வேண்டும். அதுபோல் மற்ற மாநில முதல்வர்கள், அரசியல் தலைவர்கள் நண்பர்களாக இருந்தாலும், எதிர்த்து நின்றால் எதிரிதான் என்று மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டும். ரஜினியே ஒரு சிம்பல்தான். தனியாக கட்சி, கொடி எதற்கு. \"போர்\" வர இன்னும் 3 ஆண்டுகள் உள்ளன. அதுவரை கட்சியே ஆரம்பிக்காமல் மக்கள் பிரச்சினைகளில் தலையிடாமல் இருந்தால் எப்படி தலைவரே.. இது ரசிகர்களின் நிஜமான ஆதங்கம்.\nஇறங்கி வாங்க தலைவரே.. மக்கள் உங்க பின்னாடி வருவாங்க\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nrajinikanth fans political entry political party ரஜினிகாந்த் ரசிகர்கள் அரசியல் பிரவேசம் அரசியல் கட்சி சந்திப்பு\nஜெ. ரத்த மாதிரிகள் இல்லை- அப்பல்லோ மருத்துவமனை கைவிரிப்பு\nகுட்கா: ரூ40 கோடி லஞ்சம்- அமைச்சர் விஜயபாஸ்கர், போலீஸ் அதிகாரிகள் ராஜேந்திரன், ஜார்ஜூக்கு நெருக்கடி\nநோ கூல்டிரிங்ஸ்.. பழைய சோறும் சின்ன வெங்காயமும் போதுமே-வாசகரின் ஜில் ஐடியா\nதித்திக்கும் மாம்பழங்களை உங்கள் வீட்டுக்கே வந்து கொடுக்கும் டிரெடிஃபுட்ஸ்\nபிஸ்னஸ் லோனின் சிறப்பம்சங்கள் மற்றும் பயன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://freetamilebooks.com/ebooks/katru-mazhai-veyil-velicham/", "date_download": "2018-04-26T13:18:39Z", "digest": "sha1:CHWYMUDRHAOCMGBOW57YBRBAWIUNHTKD", "length": 8704, "nlines": 102, "source_domain": "freetamilebooks.com", "title": "காற்று மழை வெயில் வெளிச்சம் – கடிதங்கள்", "raw_content": "\nகாற்று மழை வெயில் வெளிச்சம் – கடிதங்கள்\nமுருகானந்தம் ராமசாமி மற்றும் அன்பரசு சண்முகம்\nஉருவாக்கம்: முருகானந்தம் ராமசாமி மற்றும் அன்பரசு சண்முகம்\nமேலட்டை உருவாக்கம்: மனோஜ் குமார்\nமின்னூலாக்கம் : சிவமுருகன் பெருமாள்\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nமுருகானந்தம் ராமசாமி எளிய விவசாயி மற்றும் இலக்கிய வாசகருக்கும், மெல்ல இலக்கியங்கள் வாசிக்கத் தொடங்கும் நண்பரான அன்பரசு சண்முகத்திற்கும் இடையிலான கடிதங்கள் குடும்பம், சமூகம் ஆகியவற்றின் வழியே இலக்கியங்களைப் பற்றிய அனுபவப் பகிர்தலை நிகழ்த்துகிறது. சாதாரண கடிதங்களைப்போலில்லாது, தனித்துவமான இலக்கியப்பகிர்வை நிகழ்த்துகின்ற எழுத்துக்களை நாம் இதில் காணமுடிகிறது. இருவரும் ஒருவரையொருவர் முழுக்க அடையாளம் கண்டுகொண்டதே கடிதங்களில்தான் என்பதை, இருவரின் வார்த்தைகளிலிருந்தே கண்டு கொள்ள முடியும். கடிதங்கள் எழுதுவது என்பது குறைந்துவிட்ட காலத்தில் இது போன்ற கடிதங்கள் உறவின் வெம்மையை உள்ளங்கையில் உணர்த்துகிறது. இதனை இருவரின் நண்பரான அரசமார் நேர்த்தியாக தொகுத்தளித்திருக்கிறார்.\nஇந்நூலினை அனைவரும் தரவிறக்கி படிக்கலாம், யாருடனும் பகிரலாம். நன்றி.\nநூல் பற்றிய விமர்சனங்களை, கருத்துக்களை அனுப்ப,\nஅன்பரசு, 57,கிளுவன்காடு, வடக்குப்புதுப்பாளையம்(அ), ஊஞ்சலூர்(வழி), ஈரோடு-638152\nஇரா.முருகானந்தம், 130, தொப்பம்பட்டி(அ), தாராபுரம், திருப்பூர் – 638657\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 117\nநூல் வகை: இலக்கியம், கட்டுரைகள்\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nஆப்பிள் கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nதமிழ் மின்னூல்களைப் படிப்பது எப்படி\nகிரியேட்டிவ் காமன்சு தமிழ் வலைத்தளங்கள்\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n57 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.nitharsanam.net/178693/news/178693.html", "date_download": "2018-04-26T13:04:27Z", "digest": "sha1:CFKN7MHEX3IQ3IRVWOGTJK4CUGUBBP5J", "length": 4277, "nlines": 80, "source_domain": "www.nitharsanam.net", "title": "சீமானின் நெத்யடி பதில், யாரெலாம் தமிழர்? வேற கேல்வி கேலுங்க!!(வீடியோ) : நிதர்சனம்", "raw_content": "\nசீமானின் நெத்யடி பதில், யாரெலாம் தமிழர் வேற கேல்வி கேலுங்க\nசீமானின் நெத்யடி பதில், யாரெலாம் தமிழர்\nPosted in: செய்திகள், வீடியோ\nஉடலுறவின் போது எதுவெல்லாம் உங்கள் துணைக்கு பிடிக்கும்\nகர்ப்பகாலத்தில் தாம்பத்யம், அசைவம் சரியா\nமரண காமெடி- இது நம்ம ஊரு நடிகர்கள் – பழமார்நேரி பஞ்சாயத்து\nஇந்திய அரசியலில் ‘ஆளுநர்’ பதவிகள்\nநல்ல தூக்கத்துக்கு நாளை செய்ய வேண்டியதை எழுதுங்கள்\nதாம்பத்திய இன்பத்தின் போது தவிர்க்க வேண்டியவை\nசினிமா துறையில் இந்த வசனத்தை இவரை தவிர யாராலும் பேச முடியாது\nஉலக புகழ் பெற்ற குரங்கு செல்பி புகைப்பட வழக்கு : காப்புரிமை கோர முடியாது நீதிமன்றம் தீர்ப்பு\nஅணு சக்தி ஒப்பந்தம் மோசமானது என்றால் அமெரிக்க கையெழுத்திட்டது : ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி\nஇலங்கைப் பொலிஸாரின் பொருட்களை வைத்திருந்த பிரிட்டன் குடியுரிமை பெற்ற நபர் கைது\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%AE", "date_download": "2018-04-26T13:30:57Z", "digest": "sha1:MNQGAJYABEBMCL2JBRGCBIWD2TNYGX5Y", "length": 3699, "nlines": 72, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கொல்லைப்புறம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் கொல்லைப்புறம் யின் அர்த்தம்\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ajmal-mahdee.blogspot.com/2016/10/blog-post_25.html", "date_download": "2018-04-26T13:26:48Z", "digest": "sha1:LXQ5GOWHHUWDXEPH44JAD57Q2N4DDNB7", "length": 53853, "nlines": 701, "source_domain": "ajmal-mahdee.blogspot.com", "title": "Discover Islam In Tamil: உங்கள் மனைவியை கண்ணியப்படுத்துங்கள் !!", "raw_content": "\nவாழ்க்கைக்கு கணவன்–மனைவி உறவு முக்கியமானது. குடும்பத்திற்கு அடிநாதமாக இருந்து தாங்குபவர்கள் கணவன்–மனைவி தான் என்று கூறலாம். ‘கணவன்–மனைவிக்கு ஆடையாகவும், மனைவி கணவனுக்கு ஆடையாகவும் இருக்கின்றனர்’ என்று திருக்குர்ஆன் குறிப்பிடுகிறது.\nஆடைகள் மனிதனின் வெட்கத்தலங்களை மறைத்து அவர்களை பாதுகாக்கின்றது. அதுபோல ஒருவருக்கொருவர் பாதுகாவலர்களாக இருக்க வேண்டும் என்பதைத்தான் இஸ்லாம் இவ்வாறு குறிப்பிடுகின்றது.\nகதிஜா (ரலி) இறந்து பதினான்கு ஆண்டுகள் கடந்துவிட்டன. அப்போது மக்கா வெற்றி கொள்ளப்படுகிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்கா நகரினுள் நுழைகிறார்கள். அங்கு குழுமியிருக்கிற அனைவரும் நபி அவர்களை தங்கள் வீட்டில் விருந்தினராக தங்குமாறு அன்பு அழைப்பு விடுக்கின்றார்கள்.\nநபி அவர்களோ ‘கதிஜாவின் கப்ருக்கு (கதிஜாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தின்) அருகே எனக்குக் கூடாரம் அடியுங்கள்’ என்று அறிவிக்கின்றார்கள். பதினான்கு ஆண்டுகள் கடந்த பின்பும் தனது மனைவி கதிஜா அவர்களின்மேல் நபியவர்கள் வைத்திருந்த அன்பை வெளிப்படுத்துகிறது இச்சம்பவம்.\nஅன்பு, பாசம், நேசம், கருணை, பரிவு, விட்டுக்கொடுத்தல், அரவணைத்து செல்லுதல், குற்றம், குறை காணாது தவிர்த்தல், மனம் விட்டு பேசுதல் இவைகள்தான் கணவன்–மனைவி இடையே நெருக்கத்தையும், மன பிணைப்பையும் ஏற்படுத்தும்.\nகால மாற்றத்தினூடே இவைகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. சிறு, சிறு பிரச்சினைகள், கருத்து மாறுபாடுகள் காலப்போக்கில் பெரிய பிரிவினையை ஏற்படுத்தி விடுகிறது.\nஇதில் கோபம் தான் முக்கிய பங்காற்றுகிறது. எதற்கெல்லாம் கோபப்பட வேண்டும் என்று வரையறை இல்லாமல் சாதாரண விஷயங்களுக்குக் கூட கோபத்தில் வார்த்தைகளை விட்டு மீண்டும் அதை அள்ள முடியாமல் பிரிந்து வாழ்கிறார்கள் பலர்.\n‘கண்ணியமானவன், சங்கையானவன் மனைவிக்குக் கண்ணியம், சங்கை செய்வான். சாபத்திற்குரியவன் மனைவியை கேவலப்படுத்துவான்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள். மனைவியை கேவலப்படுத்துபவன் சாபத்திற்கு உரியவன் என்பதே இதன் பொருள்.\nதனது மனைவியை ஒருவர் எப்படி நேசிக்க வேண்டும் என்பதற்கு ஒரு சிறு உதாரணம் இது. தன் மரணப்படுக்கையில் அபுபக்கர் (ரலி) கூறியது நாம் கனவில்கூட நினைத்து பார்க்க முடியாது.\nஅவர்கள் கூறினார்கள் ‘என் மரணத்திற்கு பிறகு என் ஜனாஸாவை (உடலை) என் மனைவி அஸ்மா பின்த் உமைஸ் (ரலி) குளிப்பாட்ட வேண்டும்’.\n’ என்று கேட்டார்கள் தோழர்கள்.\n‘என் இதயத்துடன் நெருக்கமானவள் என் மனைவி. அவள் அதைச்செய்தால் எனக்கு பிடித்தமானதாக இருக்கும்’ என்று பதிலளித்தார்கள்.\nதனது இறுதி சடங்கைக் கூட தனது மனைவி செய்ய வேண்டும் என்று விரும்பும் அளவிற்கு தனது மனைவியை நேசித்தார்கள் அபுபக்கர் (ரலி) அவர்கள்.\nஒவ்வொரு மனிதரும் ஏதாவது ஒரு வகையில் தவறுகள் செய்யக் கூடியவர்கள் தாம். ஆணும் பெண்ணும் இதில் விதிவிலக்கல்ல. மனைவி தன் கணவனுக்காகவும், அவன் குடும்பத்திற்காகவும் எத்தனையோ நன்மைகளை, தியாகங்களை செய்திருந்தாலும், அவள் அறிந்தோ, அறியாமலோ செய்த சிறு தவறுகளால் கோபப்பட்டு அவசர முடிவுகளை எடுத்து இறுதியில் பிரிவை நோக்குகிறார்கள். மனைவி இத்தனை நாள் தனக்கு செய்த உபகாரங்களை கணவன் கொஞ்சம்கூட நினைத்து பார்ப்பதில்லை.\nகணவன் திருமணத்திற்குப் பிறகு தம் மனைவியுடன் பழகுவதிலும் அவளை நடத்துவதிலும் இஸ்லாம் கற்பிக்கும் நெறி முறைகளைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும்.\nமனைவிக்குச் செய்ய வேண்டிய கடமைகள், அவளுடன் அழகிய முறையில் பழகுவது, அவளைக் கண்ணியமாக நடத்துவது ஆகியவை குறித்து இஸ்லாம் போதிக்கும் நல்லுரைகளை நாம் ஆராய்ந்தால் அவை நம்மை வியப்பில் ஆழ்த்திவிடுகின்றன. இஸ்லாம், பெண்ணின் உரிமைகளைப் பற்றி மிக ஆழமாக உபதேசித்துள்ளது. அவளுக்கு உலகின் எந்த மார்க்கமும் அளித்திராத உயரிய அந்தஸ்தை வழங்கியுள்ளது.\nஇதோ, அல்லாஹ்வின் தூதர் ஆண்களை எச்சரிக்கிறார்கள்:\n“பெண்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள் என உங்களுக்கு நான் உபதேசிப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள் ஏனெனில், பெண், (வளைந்த) விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டுள்ளாள். விலா எலும்பின் மிகக் கோணலான பகுதி அதன் மேல் பகுதியாகும். அதை நீ நிமிர்த்திக் கொண்டே போனால், ஒடித்து விடுவாய். அதை அப்படியே நீ விட்டுவிட்டால் கோணல் உள்ளதாகவே நீடிக்கும். ஆகவே, பெண்கள் விஷயத்தில் உங்களுக்கு நான் உபதேசிப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)\n“பெண், விலா எலும்பைப் போன்றவள். அவளை நீ நிமிர்த்தினால் ஒடித்து விடுவாய். அவளிடம் நீ இன்பத்தை அடைய நாடினால், அவளிடம் குறையுள்ள நிலையிலேயே இன்பத்தை அடைந்து கொள்வாய்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)\n“பெண், விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டவள். ஒரே நிலையில் உனக்கு நிலையாக இருக்கமாட்டாள். அவளிடம் நீ இன்பத்தை அடைய நாடினால் அவளிடம் குறையுள்ள நிலையிலேயே இன்பத்தை அடைந்து கொள்வாய் அவளை நீ நேராக்க முயன்றால் ஒடித்து விடுவாய். அவளை ஒடிப்பது என்பது அவளைத் ‘தலாக்’ விடுவதாகும்.” (ஸஹீஹ் முஸ்லிம்)\nஇலக்கிய நயமான இந்த உதாரணத்தில் பெண்ணின் இயற்கைத் தன்மைகளையும் பண்புகளையும் மிகத் துல்லியமாக நபி அவர்கள் விவரித்துள்ளார்கள். மனைவி என்பவள் கணவர் விரும்புவது போன்று ஒரே நிலையில் சீராக இருக்கமாட்டாள். அவளிடம் சில கோணலான பண்புகளும் இயல்பாகவே அமைந்திருக்கும். இதைக் கணவர் விளங்கிக் கொள்ள வேண்டும். பூரணமானது அல்லது சரியானது என, தாம் நினைக்கும் முறையில் அவளைத் திருத்திவிட முயலக் கூடாது. பெண்மைக்கென்று அமைந்துள்ள இயற்கைப் பண்புகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அவளை, அல்லாஹ் எந்த இயல்புடன் படைத்தானோ அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும்.\nமனைவியின் சில குணங்கள் தமக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக, தாம் விரும்புவது போலவே அவளை மாற்றிட நினைப்பது, ‘விலா எலும்புகள் எதுவும் வளைந்திருக்கக் கூடாது அவற்றை நேராக்கியே தீருவேன்’ என்று நினைப்பது போலாகும். அப்படி நினைத்துச் செயல் பட்டால் அது அந்த எலும்புகளை முறித்து விடுவதில்தான் போய் நிற்கும். அதுபோன்றே ஒரு கணவர் தம் மனைவியை தாம் விரும்பியவாறு சீராக்க நினைப்பதும் விவாகரத்தில்தான் கொண்டுபோய் சேர்த்துவிடும்.\nநபி அவர்கள் பெண்ணின் மன நிலைiயும் இயற்கைப் பண்புகளையும் ஆழமாக விளங்கி விவரித்திருக்கிறார்கள். இந்த வழிகாட்டுதலை உள்ளத்தில் ஏற்றுள்ள உண்மை முஸ்லிம், தமது மனைவியின் குறைகளை சகித்துக்கொள்வார். அவளது சிணுங்கல்களைப் பொருட்படுத்த மாட்டார். அதன் மூலம் அவரது இல்லறம் சண்டை, சச்சரவு, வாக்குவாதம், கூச்சல் இல்லாத மகிழ்ச்சி, அமைதி, நிம்மதி நிறைந்த இன்பப் பூங்காவாகத் திகழும்.\nசற்றுமுன் கூறப்பட்ட நபிமொழியை ஆய்வு செய்பவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள முடியும். அதாவது நபி அவர்கள், ‘பெண்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள் என நான் உங்களுக்கு உபதேசிப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்’ என்று ஆரம்பித்து, பிறகு அவளது இயல்புகளை விவரிக்கிறார்கள். அதன் பின், மீண்டும் தாம் ஆரம்பித்த முந்தைய வார்த்தையைக் கூறியே முடிக்கிறார்கள். ஆகவே, நபி அவர்கள் பெண்ணுக்கு எந்தளவு முக்கியத்துவம் அளித்துள்ளார்கள் அவளது இயல்பைப் பற்றி எந்தளவு ஆழமாக விளங்கி இருக்கிறார்கள் அவள் மீது எந்தளவு இரக்கம் கொண்டுள்ளார்கள் என்பதைக் கவனியுங்கள் நபி அவர்களின் இந்த மேலான வழிகாட்டுதல்களை எல்லா நிலைகளிலும் முன்மாதியாக அமைத்து செயல்படுவதைத் தவிர ஓர் உண்மை முஸ்லிமுக்கு வேறு ஏதேனும் வழியுண்டோ\nபெண்களுக்கு மிக முக்கியத்துவம் அளித்ததால்தான் தமது இறுதி ஹஜ்ஜின் பேருரையிலும் பெண்களைப்பற்றி நபி அவர்கள் உபதேசிக்க மறந்துவிடவில்லை. முஸ்லிம்களுக்கு எவற்றையெல்லாம் சொல்ல வேண்டுமோ அவை அனைத்தையும் கூறுவதற்கான கடைசி வாய்ப்பாக இறுதி ஹஜ்ஜுப் பேருரையைப் பயன்படுத்தினார்கள். அந்த உரையின் ஆரம்பமே பெண்களைப் பற்றியதாக அமைந்திருப்பது, அதன் முக்கியத்துவத்தை நமக்கு உணர்த்துகிறது.\nநபி அவர்கள் கூறினார்கள்: “அறிந்து கொள்ளுங்கள் பெண்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள் என நான் உங்களுக்கு உபதேசிப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள் பெண்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள் என நான் உங்களுக்கு உபதேசிப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள் நிச்சயமாக அவர்கள் உங்களிடத்திலே உதவியாளர்களாகவே இருக்கிறார்கள். அதைத்தவிர வேறெதையும் நீங்கள் உரிமையாக்கிக் கொள்ள முடியாது அவர்கள் பகிரங்கமான மானக்கேடான விஷயங்களில் ஈடுபட்டாலே தவிர நிச்சயமாக அவர்கள் உங்களிடத்திலே உதவியாளர்களாகவே இருக்கிறார்கள். அதைத்தவிர வேறெதையும் நீங்கள் உரிமையாக்கிக் கொள்ள முடியாது அவர்கள் பகிரங்கமான மானக்கேடான விஷயங்களில் ஈடுபட்டாலே தவிர அவ்வாறு அவர்கள் ஈடுபட்டால் படுக்கையிலிருந்து அவர்களை ஒதுக்கி வையுங்கள். அவர்களை காயம் ஏற்படாத வகையில் அடியுங்கள். அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டுவிட்டால் அவர்கள் மீது எந்த மாற்று வழியையும் தேடாதீர்கள். அறிந்து கொள்ளுங்கள் அவ்வாறு அவர்கள் ஈடுபட்டால் படுக்கையிலிருந்து அவர்களை ஒதுக்கி வையுங்கள். அவர்களை காயம் ஏற்படாத வகையில் அடியுங்கள். அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டுவிட்டால் அவர்கள் மீது எந்த மாற்று வழியையும் தேடாதீர்கள். அறிந்து கொள்ளுங்கள் உங்களுக்கு உங்கள் மனைவியர் மீது சில உரிமைகள் உள்ளன. உங்கள் மனைவியருக்கு உங்கள் மீது சில உரிமைகள் உள்ளன. அவர்கள் மீதான உங்கள் உரிமை என்பது, உங்களுக்கு வெறுப்பானவர் எவரையும் உங்களது விரிப்பை மிதிக்க அனுமதிக்காமல் இருப்பதும், உங்களுக்கு வெறுப்பானவர்களை உங்கள் வீட்டினுள் அனுமதிக்காமல் இருப்பதுமாகும். அறிந்து கொள்ளுங்கள் உங்களுக்கு உங்கள் மனைவியர் மீது சில உரிமைகள் உள்ளன. உங்கள் மனைவியருக்கு உங்கள் மீது சில உரிமைகள் உள்ளன. அவர்கள் மீதான உங்கள் உரிமை என்பது, உங்களுக்கு வெறுப்பானவர் எவரையும் உங்களது விரிப்பை மிதிக்க அனுமதிக்காமல் இருப்பதும், உங்களுக்கு வெறுப்பானவர்களை உங்கள் வீட்டினுள் அனுமதிக்காமல் இருப்பதுமாகும். அறிந்து கொள்ளுங்கள் உங்கள் மீதான அவர்களுடைய உரிமை என்பது, ஆடையிலும் உணவிலும் நீங்கள் அவர்களுக்கு அழகிய முறையில் நடந்து கொள்வதாகும்.” (ஜாமிவுத் திர்மிதி)\nநபியவர்களின் இந்த உபதேசத்தை ஒவ்வொரு உண்மை முஸ்லிமும் நிச்சயமாக செவிமடுப்பார். கணவன், மனைவி இருவரின் உரிமைகள், கடமைகள் குறித்து நபி அவர்கள் எத்துணை நுட்பமாக வழிகாட்டியுள்ளார்கள் என்பதைக் கவனத்தில் கொள்வார். இதில் குறிப்பாக பெண்கள் மீது கருணை, அன்பு காட்டுவது, அவர்களுடன் அழகிய முறையில் நடந்து கொள்வது பற்றி நபி வலியுறுத்தியுள்ளார்கள். ஆகையால், முஸ்லிம்களின் வீடுகளில் பெண்கள் மீது அநீதி இழைக்கப்படுவது அல்லது அவர்களுக்கு இடையூறு செய்யப்படுவதற்கான எவ்வித வாய்ப்பும் அறவே இருக்காது.\nபெண்ணைப் பேணுவதைப் பற்றி நபி அவர்கள் கூறிய உபதேசங்கள் ஏராளமானவை. தமது மனைவியிடத்தில் அழகிய முறையில் நடந்து கொள்பவர்தான் இச்சமுதாயத்தின் சிறந்தோர் ஆக முடியும் என்கிற அளவிற்கு நபி கூறியுள்ளார்கள்.\nநபி அவர்கள் கூறினார்கள்: “நம்பிக்கையாளர்களில் நம்பிக்கையில் (ஈமானில்) பரிபூரணமானவர் அவர்களில் மிக அழகிய குணமுடையவரே உங்களில் சிறந்தோர் உங்கள் மனைவியடத்தில் சிறந்தோரே உங்களில் சிறந்தோர் உங்கள் மனைவியடத்தில் சிறந்தோரே\nஇந்த நபிமொழி, நம்பிக்கையாளர் மிக நேர்த்தியான குணத்தைக் கொண்டிருக்க வேண்டும் அந்த குணமில்லாமல் பரிப10ரண நம்பிக்கையை அடைய முடியாது நாம் யாரை நம்மில் சிறந்தவராக கருதுகிறோமோ அவர், தம் மனைவிக்கும் சிறந்தவராக விளங்க வேண்டும் நம்மிடத்தில் சிறந்தவராக இருந்து மனைவியிடத்தில் சிறந்தவராக இல்லையென்றால் உண்மையில் அவர் நம்மில் சிறந்தவரல்லர்’ என்று வலியுறுத்துகிறது.\nசில பெண்கள் தங்களுடைய கணவர்களைப்பற்றி முறையிடுவதற்காக நபி அவர்களின் இல்லத்திற்கு வந்தார்கள். அப்போது நபி அவர்கள் ஆண்களின் காதுகளுக்கு எட்டும் விதமாக “முஹம்மதின் குடும்பத்தாரிடம் சில பெண்கள் தங்களது கணவன்மாரைப்பற்றி முறையிட வருகிறார்கள். அந்தக் கணவர்கள் உங்களில் சிறந்தவர்கள் அல்லர்” என்று கூறினார்கள். (ஸுனன்் அபூதாவூத்)\nநேரிய மார்க்கமான இஸ்லாம், பெண்ணுக்கு நீதி வழங்குவதிலும் அவளைக் கண்ணியப் படுத்துவதிலும் ஏனைய மார்க்கங்களைப் பார்க்கிலும் மிக உயர்ந்தே நிற்கிறது. அவளைக் கணவன் வெறுத்தாலும் அவளுடன் நல்ல முறையிலேயே நடந்து கொள்ள வேண்டும் என உபதேசிக்கிறது. பெண்கள், தங்களது வரலாற்றில் இஸ்லாமைத் தவிர வேறெங்கும் இந்தக் கண்ணியத்தை அடைந்து கொண்டதே கிடையாது.\nமேலும், “அவர்களுடன் (பெண்களுடன்) சிறந்த முறையில் நடந்து கொள்ளுங்கள் அவர்களை நீங்கள் வெறுத்தபோதிலும் சரியே அவர்களை நீங்கள் வெறுத்தபோதிலும் சரியே ஏனென்றால், நீங்கள் வெறுக்கும் ஒன்றில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை வைத்திருக்கலாம்.”\nஇந்த இறைவசனம் உண்மை முஸ்லிமின் உள்ளுணர்வைத் தொட்டுப் பேசுகிறது. அவரது கோபத்தின் கொதிப்பைத் தணிக்கிறது தம் மனைவி மீதான வெறுப்பின் வேகத்தைக் குறைக்கிறது. ஆகவே, இதன் மூலம் மண வளையம் துண்டிக்கப்படுவதிலிருந்து இஸ்லாம் அதைப் பாதுகாக்கிறது. இங்குமங்கும் அலைபாயும் மடத்தனமான எண்ணங்களாலும், மாறிக் கொண்டே இருக்கும் சுபாவத்தினாலும் தூய்மையானத் திருமண உறவில் பங்கம் ஏற்படுவதை விட்டும் கட்டிக்காக்கிறது. தம் மனைவியின் மீது வெறுப்பு ஏற்பட்டு விட்டதால் அவளை விவாகரத்துச் செய்யப் போவதாக கூறிய மனிதருக்கு உமர் (ரழி) அவர்கள் “உனக்கென்ன கேடு இல்லறம் அன்பின் மீதுதானே அமைக்கப்படுகிறது. அதில், பராமரிப்பும் புறக்கணிப்பும் எப்படி ஒன்று சேர முடியும் இல்லறம் அன்பின் மீதுதானே அமைக்கப்படுகிறது. அதில், பராமரிப்பும் புறக்கணிப்பும் எப்படி ஒன்று சேர முடியும்” என்று அறிவுரை கூறினார்கள்.\nஇஸ்லாமில் திருமண ஒப்பந்தம் என்பது அற்பமான உணர்வுகளின் வெளிப்பாடோ அல்லது இயற்கை ஆசையைத் தணித்து விட்டுப் போவதற்கான வழியோ அல்ல. மாறாக, இதற்கெல்லாம் மேலாகத் தூய்மையானதும் மிகக் கண்ணியமானதுமாகும். உண்மை முஸ்லிமிடம் மனித நேயமும், அறிவும், நற்குணமும், சகிப்புத் தன்மையும், விசாலமான இதயமும் அமைந்திருக்கும். அந்தப பண்புகள் தமது மனைவியிடம் காணப்படும் வெறுக்கத்தகுந்த குணங்களைச் சகித்துக் கொள்ளும் பக்குவத்தை அவருக்கு அளிக்கும். உண்மை முஸ்லிம் தமது இறைவனின் கட்டளையைப் பின்பற்றுவார். மனைவியின் மீது வெறுப்புள்ளவராக இருந்தாலும் நல்லுறவையே கடைப்பிடிப்பார். தமது இறைவனின் கூற்றுக்கிணங்க தம்மை அமைத்துக் கொள்வார். ஏனென்றால், மனிதன் சில விஷயங்களை வெறுத்து அதிலிருந்து விலகியிருக்க விரும்புகிறான். ஆனால், உண்மையில் அவை நன்மைகளால் சூழப்பட்டதாகவும், நல்லதை உள்ளடக் கியதாகவும் அமைந்திருக்கும்.\nஎனவே உண்மை முஸ்லிம், எப்படி நேசிக்க வேண்டும், எப்படி வெறுக்க வேண்டும் என்பதையெல்லாம் அறிந்திருப்பார். நேசிப்பவர் மீது குருட்டுத்தனமான நேசத்தைக் கொண்டிருக்கவும் மாட்டார். அதே சமயம், வெறுப்பவர் மீது கல்நெஞ்சம் கொண்ட, பிடிவாதமான, அடிப்படையற்ற கோபத்தையும் வெளிப்படுத்த மாட்டார். நேசிப்பிலும் வெறுப்பிலும் நீதமான நடுநிலையைக் கொண்டிருப்பார்.\n“முஸ்லிமான பெண்ணை அவளது கணவர் எவ்வளவுதான் வெறுத்தாலும் அவளிடம் விரும்பத்தகுந்த பல நற்குணங்கள் இருந்தே தீரும். எனவே, அந்தக் கணவர் தமது மனைவியிடம் தமக்கு திருப்தி அளிக்கும் நற்குணங்கள் இருப்பதை மறந்துவிடக் கூடாது. அவளிடம் உள்ள வெறுக்கத்தக்க குணங்களைச் சுட்டிக் காட்டித் திருத்தவும் தவறக்கூடாது” என மகத்தான இறைத்தூதர் அவர்கள் தெளிவு படுத்தினார்கள்.\nநபி அவர்கள் கூறினார்கள்: “எந்த ஒரு முஃமினும் (நம்பிக்கையாளரும்) முஃமினான பெண்ணை வெறுக்க வேண்டாம். அவளிடம் ஒரு குணத்தை அவர் வெறுத்தால் மற்றொரு குணத்தைப் பொருந்திக் கொள்வார்.” (ஸஹீஹ் முஸ்லிம்)\n”இறை நம்பிக்கை கொண்ட ஓர் ஆண் இறை நம்பிக்கையுள்ள ஒரு பெண்ணை (முழுமையாக) வெறுத்து\nஒதுக்க வேண்டாம். அவளிடமிருந்து அவர் ஒரு குணத்தைவெறுத்தாலும் மற்றொரு குணத்தைக் கண்டு திருப்தி\nகொள்ளட்டும்” என நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலீ) நூல்: முஸ்லிம் 2915\nஉண்ணும் போதும், உடுத்தும் போதும் மனைவியை விட்டு விடாதீர்கள். மனைவியிடம் வெறுப்பை வீட்டிலே\nதவிர வேறெங்கும் வெளிப்படுத்தாதீர்கள்.அறிவிப்பாளர்: முஆவியா (ரலி) நூல்: அஹ்மத் 19160\n”அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நாடி நீர் எதைச் செலவு செய்தாலும் அதற்காகக் கூலி வழங்கப்படுவீர்.\nஉமது மனைவியின் வாயில் நீர் ஊட்டும் உணவுஉட்பட” என்று அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸஃத் பின் அபீவக்காஸ் (ரலி) நூல்: புகாரி 56\nஒரு மனிதர் நபியவர்களிடம் ”மனைவிக்குக் கணவன் செய்ய வேண்டிய கடமைகள் என்ன” என்று கேட்டார் அதற்கு நபி அவர்கள்,’நீ உண்ணும் போதுஅவளுக்கு உணவளிப்பதும் நீ அணியும் போது அவளுக்கு அணிவிப்பதும் இருப்பதும் வீட்டில் (கண்டிக்கும் போது) முகத்தில் அடிக்காதிருப்பதும் கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தாமல் தவிர மற்ற இடங்களில் வெறுக்காமல் இருப்பதும் ஆகும்” என்று கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: முஆவியா பின் ஹைதர் (ரலி)\nநூல்கள்: அபூதாவூத் 1830, அஹ்மத் 19162\n”இறை நம்பிக்கை கொண்ட வர்களில் முழுமையான நம்பிக்கை கொண்டவர் அவர்களில் நற்குணம்\n உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடம்நற்பண்பால் சிறந்து விளங்குபவரே\nஎன்று நபி அவரகள் கூறினார்கள்.\n‘எந்த முஃமினான கணவனும் தன் மனைவியை கோபப்பட்டு பிரிந்துவிட வேண்டாம். அவளின் ஒரு குணம் உன்னை வெறுப்படையச் செய்தால், மறு குணம் உன்னை திருப்தியுறச் செய்யும்’ என்கிறார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.\nஅன்பும், கருணையும் இருக்கும் இடத்தில் பகைமைக்கும், பிரிவினைக்கும் வேலையில்லை. மனைவி என்பவள் குடும்பத்தை தாங்கும் அஸ்திவாரம். அவள் மீது காட்டப்படும் அன்பும், பரிவும், கண்ணியமும் மனைவி எனும் அஸ்திவாரத்தை பலப்படுத்தும். அது கட்டிடம் எனும் குடும்பத்தை மகிழ்ச்சியிலும், அமைதியிலும் நிலைத்திருக்கச் செய்யும்.\nஆக்கம் மற்றும் தொகுப்பு : மு.அஜ்மல் கான் .\nசர்வதேச இடையலிங்கத்தவர் ( Intersex) விழிப்புணர்வு ...\nஉங்களிடம் கொடுக்கப்பட்ட பணி ஒரு குரங்கு மூட்டை \nபுற்றுநோய் (CANCER ) பற்றிய விழிப்புணர்வு பார்வை...\nஅரபி மொழியில் திருக்குறள் பாடும்பேராசிரியர்..\nநமக்கு கடும் சோதனைகள் வருவது ஏன்\nஇந்தியாவில் பாலியல் வன்கொடுமை அதிகரிப்பு \nதிருக்குறள் (Thirukkural) By திருவள்ளுவர்(Thiruvalluvar)\nTamilil Quran - தமிழ் குர்ஆன்\nஒரே உறவில் கர்ப்பம் சாத்தியமா-ஒரு சிறப்பு பார்வை ...\nஒரு பெண்ணின் வாழ்வில் மிகப் பெரிய விஷயம், குழந்தை பெறுவது. திருமணத்தை விடவும் சவாலான அதேநேரம் திருப்தி அளிக்கும் விஷயம். திருமணமான ஒரு பெண...\nகர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் பற்றிய சமூக விழிப்புணர்வு பார்வை ...\nஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் கர்ப்பகாலம் என்பது தனிச்சிறப்பு வாய்ந்தது. இந்த சமயத்தில் ஒரு பெண் தனது உடலில் மேலும் ஒரு உயிரை சுமக்க தயார் ஆக...\nகர்ப்பப்பை கட்டிகள் (Uterine Tumors)-ஒரு அலசல்....\n* கர்ப்பப்பை பாகங்கள் - கருப்பை கழுத்துப் பகுதி (Cernix) - உடல்பகுதி - கருக்குழல் - கருப்பை எங்கு வேண்டுமானாலும் புதிய வளர்...\n\"ஜீஷா\" பிரமிட்டுக்கள்(The Great Pyramid of Giza) ஏன்\nமனித நாகரீகத்தின் அடையாள சின்னமாகவும் அதிசயம் பல கொண்டுள்ளதுமாகிய ஜீஷா பிரமிட்டுக்கள் ( The Great Pyramid of Giza ) படத்திலுள்ளன. எ...\nதாம்பத்திய திருப்தி என்றால் என்ன\nசெக்ஸ் உறவில் ஆணும், பெண்ணும் கடைப்பிடிக்க வேண்டிய சில முக்கிய அம்சங்களை காமசூத்திரம் தெள்ளத்தெளிவாக விளக்கி இருக்கிறது. அது பற்றி இன்ற...\nசீரழிக்கும் சிசேரியன்களும்(CESAREAN DELIVERY) Vs சுகமான பிரசவமும் (Normal delivery)-ஒரு விழிப்புணர்வு ஆய்வு\nஇந்த கட்டுரையை படித்து பயன்பெறுகின்ற அணைத்து கர்ப்பிணி தாய்மார்களுக்கும் சுகபிரசவம் அடைய என்னுடைய வாழ்த்துகளை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://rajinifans.com/history/part61.php", "date_download": "2018-04-26T13:13:50Z", "digest": "sha1:FBLKTUXXWIJSXNFPIUBL3HOZEBIAN4EB", "length": 13492, "nlines": 222, "source_domain": "rajinifans.com", "title": "Part 61 - Rajini's History (Tamil) - Rajinifans.com", "raw_content": "\n\"ஏவி.எம்''மின் \"ராஜா சின்ன ரோஜா'' கார்ட்டூன்களுடன் ரஜினி நடித்தார் 80 ஆயிரம் படங்களை வரைந்து உருவாக்கிய காட்சி\nஇந்தியாவிலேயே முதன் முறையாக, யானை, முயல், குரங்கு முதலான கார்ட்டூன் படங்களுடன் (\"அனிமேஷன்'') ரஜினிகாந்த் நடித்தார்.\n\"ஏவி.எம்'' தயாரித்த \"ராஜா சின்ன ரோஜா'' என்ற படத்துக்காக, மிகுந்த பொருட்செலவில் இந்தப் பாடல் காட்சி படமாக்கப்பட்டது.\nஇந்தப்படம் 1989-ல் தயாரிக்கப்பட்டதாகும். கதை-வசனத்தை பஞ்சு அருணாசலம் எழுதினார். எஸ்.பி.முத்துராமன் டைரக்ட் செய்தார்.\nபாடல்களை கவிஞர் வைரமுத்து எழுத, சந்திரபோஸ் இசை அமைத்தார்.\nஇந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக கவுதமி நடித்தார்.\nமற்றும் ராகவி, ஷாலினி, கோவை சரளா, எஸ்.எஸ்.சந்திரன், சின்னிஜெயந்த் ஆகியோர் நடித்தனர்.\nஇந்தப் படத்தில் ரஜினி, கவுதமி மற்றும் 5 குழந்தைகம் இடம் பெறும் பாடல் காட்சி ஒன்று வருகிறது. அந்த பாடல் காட்சியில், இந்த 7 பேருடன் யானை, முயல், குரங்கு முதலான மிருகங்கம் (கார்ட்டூன்களாக) ஆடிப்பாடுவது போல் படமாக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.\nஇதற்கு முன் கார்ட்டூன் சினிமா படங்கம் உருவாகியிருந்தபோதிலும், மனிதர்களுடன் கார்ட்டூன்கம் சேர்ந்து நடிப்பது இந்தியாவிலேயே இதுவே முதல் தடவை.\nஇப்படி கார்ட்டூன் காட்சிகம் அமைப்பதில், மும்பையைச் சேர்ந்த ராம்மோகன் பெரிய நிபுணர். அவர் ரொம்ப `பிசி'யாக இருந்த காலக்கட்டம் அது.\nஎனவே, பட அதிபர் ஏவி.எம்.சரவணன், முத்துராமனை அழைத்து, \"படத்துக்கு இந்த அனிமேஷன் காட்சி முக்கியம். எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. அதை சிறப்பாக எடுக்க வேண்டும். `அனிமேஷன்' நிபுணர் ராம்மோகன் ரொம்ப பிசியாக இருப்பதாக அறிந்தேன். நீங்கம் உடனடியாக மும்பை சென்று, அவருடைய சம்மதத்தைப் பெற்று வாருங்கம்'' என்றார்.\nஎனவே, படத்துக்கு பூஜை போடப்பட்ட அன்றே விமானம் மூலமாக முத்துராமன் மும்பை சென்றார். ராம்மோகனை சந்தித்து, விஷயத்தைச் சொன்னார்.\n\"இந்த மாதிரியான `அனிமேஷன்' பாடல் காட்சி எடுக்க, நான் 80 ஆயிரம் படங்களை வரையவேண்டும். அதற்கு ரொம்ப அவகாசம் வேண்டும். இப்போது எனக்கும்ள வேலையில், இந்த பொறுப்பை ஏற்பது இயலாத காரியம்'' என்று ராம்மோகன் கூறினார்.\nஆனால், முத்துராமன் விடவில்லை. \"ஏவி.எம். எதையும் திட்டமிட்டு படமாக்கும் நிறுவனம். இந்த பாடல் காட்சியை முதலாவதாக படமாக்கி, உங்களுக்கு அனுப்பி வைக்கிறோம். உடனடியாக நீங்கம் படம் வரைய ஆரம்பித்துவிடலாம். அதன்பின் 6 மாதம் கழித்துத்தான் படம் ரிலீஸ் ஆகும். உங்கம் வேலையை செய்து முடிக்க, போதுமான அவகாசம் கிடைக்கும்'' என்றார்.\nஅதன் பேரில், கார்ட்டூன்கம் வரைய ராம்மோகன் சம்மதித்தார்.\n\"இந்தக் காட்சியை படமாக்கியது எப்படி'' என்று முத்துராமனிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது:-\n\"இந்த பாடல் காட்சியில் ரஜினி, கவுதமி ஆகியோருடன் 5 குழந்தைகம் பங்கு கொண்டார்கம்.\nஅவர்களுடன் யானை, முயல், குரங்கு முதலான மிருகங்கம் ஓடியாடுவது வெறும் கற்பனைதான். அக்காட்சியில் யானை எங்கிருந்து வரும், முயல் எப்படி ஓடி வரும் என்பதையெல்லாம் உதவியாளர்கம் விளக்கி, நடித்துக் காட்டினார்கம்.\nஅந்த மிருகங்கம் அந்தந்த இடங்களில் இருப்பதாக ரஜினியும், மற்றவர்களும் கற்பனை செய்துகொண்டு நடித்தார்கம்.\nஇதை நாங்கம் படமாக்கி மும்பை அனுப்பினோம். அதற்கு ஏற்றபடி, ராம்மோகன் கார்ட்டூன்கம் வரைந்தார். அவற்றையெல்லாம் அந்தந்த இடத்தில் பொருத்தமாக இணைத்து பாடல் காட்சியை உருவாக்கினோம்.\nசிரமமும், பணச்செலவும் அதிகமாக இருந்தபோதிலும், அந்தக் காட்சி அழகாக அமைந்தது. குழந்தைகளை வெகுவாகக் கவர்ந்தது.\n`குழந்தைகளை பெற்றோர்கம் பொறுப்போடு வளர்க்க வேண்டும். வேலைக்காரர்களிடம் விட்டுவிடக்கூடாது' என்ற கருத்தை இந்தப்படம் வலியுறுத்தியது. இதற்கு அந்தப் பாடல் காட்சி உதவியது.\nஇந்தக் காட்சியின் மூலம், தமிழ்நாட்டுக் குழந்தைகளின் மனதை ரஜினி வெகுவாகக் கவர்ந்தார்.\nஎங்கு போனாலும், \"ரஜினி அங்கிம், ரஜினி அங்கிம்'' என்று குழந்தைகம் கூடிவிடுவார்கம்.\nஒருநாம் மூணாறில் படப்பிடிப்பை முடித்துவிட்டு, ரஜினியும், படப்பிடிப்புக்குழுவினரும் திரும்பிக் கொண்டிருந்தோம்.\nஒரு இடத்தில் ரோட்டில் சுமார் நூறு குழந்தைகம் கூடி நின்றார்கம். அனைவரும் பம்ளிக்கூட சீருடை அணிந்திருந்தார்கம்.\n`ரஜினி அங்கிம் இந்த வழியாக வருவதாகக் கேம்விப்பட்டோம். அவரைப் பார்த்துவிட்டுப் போக, பம்ளிக்கூடத்திலிருந்து நேராக இங்கே வந்திருக்கிறோம்' என்றார்கம்.\nஅவர்களுடன் ரஜினி அன்புடன் பழகினார். ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்தார். \"நன்றாகப் படிக்க வேண்டும்'' என்று முத்தம் கொடுத்து வாழ்த்தினார்.''\n20-7-1989 அன்று வெளிவந்த \"ராஜா சின்ன ரோஜா'' 7 தியேட்டர்களில் நூறு நாட்கம் ஓடியது. அதன்பின் பகல்காட்சியாக தொடர்ந்து ஓடி வெம்ளி விழா கொண்டாடியது.\nஇந்தப்படம், தெலுங்கில் மொழி மாற்றம் செய்யப்பட்டு, அங்கும் வெற்றிகரமாக ஓடியது.\nகே.பாலசந்தரின் கவிதாலயா தயாரித்த படம் \"சிவா.'' இதில் ரஜினிகாந்த், சோபனா நடித்தனர்.\nவசனத்தை கண்ணன் எழுத, அமீர்ஜான் இயக்கினார். இசை: இளையராஜா.\n5-5-1989-ல் வெளிவந்த இப்படம் 75 நாம் ஓடியது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.asiriyar.com/2017/01/blog-post_476.html", "date_download": "2018-04-26T13:37:51Z", "digest": "sha1:EKTPQQIFD2LI6I2HXOFVWWJN6XKAO47V", "length": 33545, "nlines": 541, "source_domain": "www.asiriyar.com", "title": "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை ALL INDIA TEACHERS PERAVAI: உயருமா? வருமான வரிவிலக்கு உச்சவரம்பு... துவங்கி விட்டது பட்ஜெட் பரபரப்பு", "raw_content": "\n வருமான வரிவிலக்கு உச்சவரம்பு... துவங்கி விட்டது பட்ஜெட் பரபரப்பு\nபிப்., 1ல், மத்திய பட்ஜெட் தாக்கலாகிறது. முதன்முறையாக, ரயில்வே மற்றும் பொது பட்ஜெட் ஆகிய இரண்டும் கலந்த ஒருங் கிணைந்த பட்ஜெட், தாக்கலாக உள்ளது; இதில், வருமான வரி விலக்கு உச்சவரம்பு உயர்த்தப் படுமா என்ற எதிர்பார்ப்பு, மாத ஊதியதாரர் களிடையே ஏற்பட்டுள்ளது.\nபட்ஜெட்டில், என்னென்ன விஷயங்கள் இடம் பெறும் என்பது குறித்த எதிர்பார்ப்பு, இப்போதே துவங்கி விட்டது. வழக்கம் போல், மாத ஊதிய தாரர்கள், தொழில் துறையினர் உள்ளிட்ட, பல்வேறு தரப்பைச் சேர்ந்தவர்கள், இந்த பட்ஜெட்டில், தங்களுக்கு சாதகமான அம்சங்கள் வந்துவிடாதா என, ஆவலுடன் காத்திருக்கின் றனர். கடந்த சில ஆண்டுகளாக, ஆண்டு வருமான வரி உச்சவரம்பு, 2.5 லட்சம் ரூபாயை தாண்ட மறுக்கிறது. கடந்த ஆண்டும், ஏமாற்றமே மிஞ்சியது. அதனால், இந்த ஆண்டு, அது நிச்சயம் உயரும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.\nமாத வருவாயும், கடந்த சில ஆண்டுகளில், குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்து வரு கிறது. அதனால், குறைந்தபட்சம், 4.5 லட்சம் ரூபாய் முதல், ஐந்து லட்சம் ரூபாய் வரை யாவது, வருமான வரி உச்சவரம்பை உயர்த்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.\nமாத ஊதியதாரர்கள்,80 - சி பிரிவில், வருங்கால வைப்பு நிதி, மருத்துவ செலவு, வீட்டுக் கடன் மாதத் தவணை, எல்.ஐ.சி., உள்ளிட் டவை, வரிக்கழிவிற்கு உதவுகின்றன. இதில் அதிகபட்சம், 1.5 லட்சம் ரூபாய் மட்டும் கழிக்க முடியும். இதை, 2.5 லட்சம் முதல், மூன்று லட்சம் ரூபாய் வரை உயர்த்தினால், மக்கள் சேமிப்பில் ஆர்வம் காட்டுவர்.\nகுறிப்பாக,இன்சூரன்ஸ் திட்டங்களுக்கு தனிக் கழிவு, 1 லட்சம் ரூபாய் வரை கொடுத்தால், சேமிக் கும் வழக்கம் மக்களிடம் அதிகரிக்கும்; சமூக பாது காப்பும் கிடைக்கும்.\nஇந்த பிரிவில், மருத்துவ செலவுகளுக்காக கழிக்கப்படும் தொகை, 15 ஆயிரம் ரூபாயாக, பல ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் உள்ளது; அது, 30 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்பட வேண்டும். இது போல், மற்றோர் பிரிவான, 80 டிடிஏ - வில், வங்கி சேமிப்பு மீதான வட்டிக்கான வரி விதிப்பு குறைக்கப்படவேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.\nஅப்படி செய்தால், 'செட்டில்மென்ட்' பணத்தின் மீதான வட்டியை நம்பியிருக்கும், 60 வயதிற்கு, மேற்பட்டோர் பயனடைவர்.\nபுதிய,'பென்ஷன்' திட்டத்தில் சேர்ந்தால்,ஆண்டுக்கு, 50 ஆயிரம் ரூபாய் வரை, 80 சிசிடி (1பி) பிரிவின் கீழ், வருமான வரி கழியும். இந்த பட்ஜெட்டில், முதலீடு தொகை முழுவதற்கும், நிதியமைச்சர் ஜெட்லி, விலக்களிக்க முயற்சிப்பார் என, தெரிகிறது.\nவீட்டுக்கடன்வட்டிக்கான உச்சவரம்ரபு, பிரிவு 24 - ன் கீழ், 2 லட்சம் ரூபாயாக உள்ளது. வீடு விலை ராக் கெட் வேகத்தில் உயர்ந்துவிட்டது; எனவே, அதை உயர்த்த வேண்டும் என்ற கருத்து நிலவுகிறது.\n50 கோடி பேர் 'எஸ்கேப்'\nநாட்டில், நான்கு கோடிக்கும் குறைவானவர் களே, குறிப்பாக, மாத வருமானம் பெறுவோர் தான், வரி செலுத்துகின்றனர். வருமான வரி வரம்பிற்குள்\nவரக்கூடிய, மருத்துவர், வியாபாரிகள், சுய தொழில் வருவாய் மற்றும் வீட்டு வாடகை வருவாய் ஈட்டுவோர் உட்பட, 50 கோடிக்கும் அதிகமானோர், வருமான வரித்துறை வளையத்திற்குள் இன்னும் வரவில்லை.\nஅவர்களையும், வரிவிதிப்பு முறையின் கீழ் கொண்டு வர வேண்டும். அதற்கு, வரி விதிப்பு முறை எளிதாக வேண்டும். அதாவது, வருமான வரி உச்சவரம்பை உயர்த்த வேண்டும்.\nமேலும், ஐந்து லட்சத்திற்குள் வருமானம் இருந்தால், 10 சதவீத வரி விதிப்பு; ஐந்து லட்சத் திற்கு மேல், 20 சதவீதம்; 10 லட்சத்திற்கு மேல், 30 சதவீதம், வரி என்பதை குறைக்க வேண்டும். அப்போது தான், குடிமக்கள் அனைவரும் சமமாக நடத்தப்படும் நிலை உருவாகும்.\nபண மதிப்பிழப்பிற்கு பின், ரொக்கமில்லா பரிவர்த்தனைக்கு மாற, அரசு ஊக்குவிப்பதால், 'கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, நெட் பேங்கிங்' உள்ளிட்டவை போன்ற பரிவர்த்தனைக்கு, அரசு அதிக சலுகை அளிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.\n\"அனைத்திந்திய ஆசிரியர் பேரவை\" நண்பர்களே..\nநீங்கள் ஒவ்வொருவரும் \"அனைத்திந்திய ஆசிரியர் பேரவை\"யின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. \"அனைத்திந்திய ஆசிரியர் பேரவை\" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ \"அனைத்திந்திய ஆசிரியர் பேரவை\" குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\n-அன்புடன் \"அனைத்திந்திய ஆசிரியர் பேரவை\"\nதொடக்க நடுநிலைப் பள்ளிகள் சமர்பிக்க வேண்டிய ஆண்டு இறுதி அறிக்கை படிவங்கள்\nபள்ளியில் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள்\n2016 - 2017 வருமான வரி படிவம் பூர்த்தி செய்யும் போ...\nTET தேர்வு என்றால் என்னயார் எழுதலாம்\nமருத்துவப்படிப்புக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத...\nTNTET 2017 - ஆசிரியர் தகுதித் தேர்வு 2017 விண்ணப்ப...\nஆசிரியர் தகுதி தேர்வு -மாவட்டத்தில் முன்னேற்பாடு ப...\nTNTET நிபந்தனை - பணி நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு...\nபள்ளிகல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு. க.பாண்டியராஜ...\nபள்ளிக் கல்வித்துறை,தொடக்க கல்வித் துறை,மாநிலக் கல...\nTNTET -2013 தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் ...\nபள்ளிப் பாடத்தில் காயிதே மில்லத் வாழ்க்கை வரலாறு: ...\nவெளிநாடு வாழ் இந்தியர் 'நீட்' தேர்வு எழுதலாமா\nபிளஸ் 2 ஹால் டிக்கெட் அவகாசம் நீட்டிப்பு\nஇன்ஜி., கல்லூரிகளில் கல்வி கட்டணம் உயர்கிறது.\nசி.பி.எஸ்.இ., திட்டத்தில் சேர ஜூன் 30 வரை அவகாசம்....\nபிளஸ் 2 ஹால் டிக்கெட் அவகாசம் நீட்டிப்பு\nTANCET : அண்ணா பல்கலை நுழைவு தேர்வு அறிவிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரி...\nTNPSC: அடுத்த வாரம் முதல் பல தேர்வுகளுக்கு தொடர்ந்...\nஆசிரியரின்றி உபரிப் பணியிடங்களை காலிப்பணியிடங்களாக...\nTNTET-ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 11-லட்சம் விண்ணப...\nஅங்கீகாரம் இல்லாத பள்ளிகளை முறைப்படுத்த அரசாணை: அம...\nTET : ஆசிரியர் தகுதித் தேர்வு குளறுபடி இல்லாமல் நட...\n வருமான வரிவிலக்கு உச்சவரம்பு... துவங்கி வி...\nதேர்வுகளை விழாவாக பாருங்கள்: மாணவர்களுக்கு மோடி அற...\nNEET EXAM:விரைவில் மாதிரி நுழைவு தேர்வு\nநீட்' தேர்வு வந்தாலும் மாநில மாணவர்களுக்கே முன்னுர...\nஎய்ம்ஸ்' நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்க பிப்., 23 ...\nNEET Exam:நீட் நுழைவு தேர்விலிருந்து தமிழக மாணவர்க...\nTNTET - 2017 :இது குறித்த முதன்மைக் கல்வி அலுவலர்க...\nதமிழக பள்ளிக்கல்வி துறையை சீரமைக்க... திட்டம் ஆதாய...\nபொதுத்தேர்வு மாணவர்களுக்கு 'சென்டம்' மதிப்பீட்டில்...\nபள்ளிக்கல்வி -தமிழ்நாடு தமிழ் கற்றல் சட்டம் -2006 ...\nINCOME TAX NEWS : வருமானவரிப் படிவம் நிரப்பல் ,மாத...\nதொடக்கக் கல்வி - தீண்டாமை எதிர்ப்பு தினம் - 30.01....\nஅகஇ - 2016-17ஆம் ஆண்டுக்கான கட்டிடப்பணிகள் - நிதி ...\nஅகஇ - பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கான மூன...\nஆசிரியர் தகுதித் தேர்வு நடத்துவதில் உள்ள சட்ட சிக்...\nதொடக்க, நடுநிலைப் பள்ளி மாணவர்கள் கணக்கெடுப்பு : ஒ...\nஉள்ளாட்சி தேர்தல் எப்போது நடக்கும்\nமீசில்ஸ் ரூபெல்லா தடுப்பூசி பாதுகாப்பானது\nசென்னை பல்கலை தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு\nபேராசிரியர் பணிக்கான 'செட்' தேர்வுக்கு புதிய கமிட்...\nமதுரையில் 'நீட்' தேர்வு கருத்தரங்கு தினமலர் நாளை ந...\nஅலங்காநல்லூர், பாலமேட்டில் ஜல்லிக்கட்டு ஒத்திவைப்ப...\nடி.டி.சி., தேர்ச்சி பெறாத பகுதி நேர ஆசிரியர்கள் நீ...\nபிளஸ் 2 மதிப்பெண்ணுக்கு ஐ.ஐ.டி., தேர்வில் முக்கியத...\nஅரசு கேபிள் 'டிவி' கட்டணம்நேரடியாக செலுத்த 'மொபைல்...\nஉடல்திறன் சான்றிதழ் பெற மாணவர்கள் அலைக்கழிப்பு\nதலைவர் இல்லாத கல்வி கட்டண கமிட்டி மாணவர் சேர்க்கைய...\nNEET Exam 3 முறை மட்டுமே எழுதலாம்\nEMIS NEWS :- த.ஆ. கவத்திற்கு. கீழே கண்ட Pdf பைலை த...\nஏப்ரல் மாதம் 30ம் தேதிக்குள் டெட் தேர்வு இதற்கான அ...\nASIRIYAR. COM வாசக நண்பர்களுக்கு குடியரசு தின நல்வ...\nTNTET: ஆசிரியர் தகுதித் தேர்வு எந்த நேரத்திலும் அற...\nபுது ஓய்வூதிய திட்டத்தில் கடன் கிடையாது.\nமார்ச் 25ல் 'ஸ்டிரைக்' : அரசு ஊழியர்கள் அறிவிப்பு\nபிளஸ் 2 செய்முறை தேர்வில் முறைகேடுக்கு இடம் கூடாது...\nTNTET Exam 2017 நடைபெறும் நாள் நாளை அறிவிக்கப்படும...\nDSE - ஆசிரியர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொ...\nபுதிய 2,000 ரூபாய் நோட்டுகளும் செல்லாது என அறிவிக்...\nதமிழக வீரர் மாரியப்பனுக்கு பத்மஸ்ரீ விருது.\nபிளஸ் 2 தனி தேர்வர்களுக்கு இன்று 'ஹால் டிக்கெட்'\nபிளஸ் 2 செய்முறை தேர்வு பிப்ரவரி 2ல் துவக்கம்\nTRB : இன்ஜினியரிங் பேராசிரியர் பணி பிப்., 2ல் சான்...\nGoogle Play 10.2-ன் அறிமுகமாகும் புதிய அம்சம்\nATM-யில் பணமெடுக்க மாதம் 3 முறை மட்டுமே இலவச அனுமத...\nதொடக்க கல்வி - 26.01.2017 அன்று பள்ளிகளில் \"குடி...\nகுடியரசு தினம் என்றால் என்ன\nகுழந்தைகளுக்கான குடியரசு தின பாடல்\n7வது ஊதியகுழு கணிப்பான் உங்களது தற்போதைய சம்பள விபரங்களை கொடுத்தால், உடனடியாக தோராய மதிப்பீடு கணக்கிடப்பட்டு கணிப்பான் புதிய சம்பள விபரங்களை காட்டும்..\nதமிழக அரசு ஊழியர்களுக்கான புதிய ஊதிய அட்டவணை வெளியீடு. CLICK HERE TO READ MORE 》》》\n ஜுன் 6 வரை ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவேண்டும்..\nFLASH NEWS : இனி ஒவ்வொரு வாரமும் பள்ளிகளுக்கு TEAM VISIT செய்ய உத்தரவு - ஆய்வின் போது பார்வையிட வேண்டியவை மற்றும் மீளாய்வு முறைகள் - செயல்முறைகள்\nBIG FLASH - அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு ஏழாவது ஊதிய குழுவின் 10 மாத நிலுவைத் தொகை வழங்க தமிழக அரசு ஒப்புதல்விரைவில் அறிவிப்பு வெளியாகிறது.\n7 - வது ஊதிய குழு அமல் படுத்தினால் ஊதிய உயர்வு எவ்வளவு கிடைக்கும் - தோராய கணக்கீடு\n2009 க்கு பின் நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி CLICK HERE TO READ MORE NEWS...\nTNTET-2017 தேர்வு முடிவுகள் வெளியீடு..\nமாணவர்களின் வங்கிக்கணக்கு விபரங்கள் POWER FINANCE (SPECIAL CASH INCENTIVE)\nஆசிரியர் தன் சுயவிவரங்கள்(personal information)\n7வது ஊதியகுழு கணிப்பான் உங்களது தற்போதைய சம்பள விபரங்களை கொடுத்தால், உடனடியாக தோராய மதிப்பீடு கணக்கிடப்பட்டு கணிப்பான் புதிய சம்பள விபரங்களை காட்டும்..\nதமிழக அரசு ஊழியர்களுக்கான புதிய ஊதிய அட்டவணை வெளியீடு. CLICK HERE TO READ MORE 》》》\n ஜுன் 6 வரை ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவேண்டும்..\nFLASH NEWS : இனி ஒவ்வொரு வாரமும் பள்ளிகளுக்கு TEAM VISIT செய்ய உத்தரவு - ஆய்வின் போது பார்வையிட வேண்டியவை மற்றும் மீளாய்வு முறைகள் - செயல்முறைகள்\nBIG FLASH - அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு ஏழாவது ஊதிய குழுவின் 10 மாத நிலுவைத் தொகை வழங்க தமிழக அரசு ஒப்புதல்விரைவில் அறிவிப்பு வெளியாகிறது.\n7 - வது ஊதிய குழு அமல் படுத்தினால் ஊதிய உயர்வு எவ்வளவு கிடைக்கும் - தோராய கணக்கீடு\n2009 க்கு பின் நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி CLICK HERE TO READ MORE NEWS...\nTNTET-2017 தேர்வு முடிவுகள் வெளியீடு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.gamelola.com/play-online-game-of-ta/ideal-wedding-cake-ta", "date_download": "2018-04-26T13:45:26Z", "digest": "sha1:BQB3M4KSEBUCJ5A2QFTBF2GW6MNFDONB", "length": 4904, "nlines": 87, "source_domain": "www.gamelola.com", "title": "(Ideal Wedding Cake) - இலவச பிளாஷ் விளையாட்டை", "raw_content": "\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nதயவுகூர்ந்து உங்கள் மின்னஞ்சல் தட்டச்சு செய்யவும்.\nஓய்வு விளையாட்டுகள் விளையாட | பற்றி | தொடர்பு | விளையாட்டை சமர்ப்பிக்க | உங்கள் இணைய தளம் இலவச விளையாட்டுப்\nஇலவச விளையாட்டு - சாகச - Anime - Arcade - சண்டை - பெண்கள் - Puzzle - ரேஸ் - RPG - படப்பிடிப்பு - விளையாட்டு\nவிளையாட்டுப் பகுதியை கடைசி துண்டிற்கு - பிரபல விளையாட்டுப் - பெரும்பாலான Rated விளையாட்டுப்\n: சட்டத்திற்குப் புறம்பான இலவச விளையாட்டுப் ஓட்டு. புதிய விளையாட்டுப் விநியோகிக்க. குளிர்ந்த விளையாட்டுப் வரம்பற்ற வேடிக்கை.\nவிளையாட்டில் விளையாட: சிறிய திரை - பெரிய திரை - முழு திரை விளையாட்டில் ஓடவிடு\nAmanda True வசதிக் குறைபாடு அடைய வைக்கும்\nஎன்பதை நீங்கள் முடியும் முக்கியஸ்தருடனான ஓட்டுதலை ஆன்லைன் இலவசமாக பிளாஷ் விளையாட்டை உள்ளது. இருந்தாலும் அந்த சட்டத்திற்குப் புறம்பான இலவச விளையாட்டுப் ஓட்டு, நீங்கள் கண்டுபிடிக்க இயலும் புதிய playable விளையாட்டுப் ஒவ்வொரு நாளும். இந்த game, பேர் இருந்தால் நீங்கள் முடியும் விளையாட்டுகள் இதே போ. உங்கள் நிலைவட்டில் இருந்து நீக்க விளையாட்டுப் விதை: சேர் உங்கள் சொந்த இணையதளம் மீது நிஜம் அல்லது Facebook பக்க மற்றும் கேனாக உங்கள் விருப்பமான விளையாட்டுப் ஓடவிடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.sahabudeen.com/2014/07/blog-post_17.html", "date_download": "2018-04-26T12:58:19Z", "digest": "sha1:GARJXDMKRM7VLYKTAPST4CSN5QTP4UMM", "length": 12999, "nlines": 193, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: ஸ்கிப்பிங் பயிற்சி செய்வதால் கிடைக்கும் நன்மைகள்", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nஸ்கிப்பிங் பயிற்சி செய்வதால் கிடைக்கும் நன்மைகள்\nஸ்கிப்பிங் பயிற்சி செய்வதால் கிடைக்கும் நன்மைகள்\nதினமும் தவறாமல் மிதமான உடற்பயிற்சி செய்வது அவசியம். தினமும் 30 நிமிடங்கள் வாக்கிங் போவதோ, 20 நிமிடங்கள் சைக்கிள் ஓட்டுவதோ அல்லது நீச்சல் அடிப்பதோ ஸ்கிப்பிங் பயிற்சியோ சரியான உடற்பயிற்சி முறைகள்.\nஇவை உடற்பருமனையும் குறைப்பதால் இரத்த அழுத்தம் குறையும். இன்று தொப்பை பிரச்சினையால் அவதிக்குள்ளாகும் ஆண்கள், பெண்கள் நிறைய இருக்கிறார்கள். அவர்கள் தினமும் ஸ்கிப்பிங் பயிற்சி செய்து வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து தொப்பை பிரச்சினையும் படிப்படியாக குறையும்\n• ஸ்கிப்பிங் பயிற்சி செய்ய ஆரம்பிக்கும் போது முதலில் உடலில் உள்ள தேவையற்ற எடைகுறைகிறது. சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் ஆரோக்கியத்தையும், வளர்ச்சியையும், உடலுக்குப் புத்துணர்வையும் தரக் கூடியது ஸ்கிப்பிங்.\n• உடலின் உள் உறுப்புகளும், நரம்புகளும் தக்க பயிற்சி கிடைப்பதால் அவற்றின் செயல்பாடுகள் சீராகின்றன. மனக் கவலை, மன அழுத்தம், எதிலும் நாட்டமின்மை போன்ற கோளறுகள் நீங்குகின்றன.\n• உடலின் ரத்த ஓட்டத்தை சீராக்குவதுடன் , இதயத்திற்கும், நுரையீரலுக்கும் வலுவூட்டம் கொடுக்கிறது.\n• கை, கால், தொடைப்பகுதி தசைகள் அதிக சக்தி பெறுகின்றன. மூட்டு வலி, கணுக்கால் வலி நீங்குகிறது. தொடர்ச் சியான இடுப்பு வலி உள்ளவர்களுக்கு அது குறைவதுடன் முது கெலும்பின் எலும்பு முடிச்சுகள் பலம் பெறுகின்றன. இரத்த ஓட்டம் சீராகிறது.\n• ஆரோக்கியம், அழகை பராமரிக்க ஸ்கிப்பிங் உதவுகிறது\nதொப்பையை குறைக்க எளிதான எட்டு வழிகள்…\nமயக்கும் அழகுக்கு மல்லிச் சாறு இயற்கை தரும் இளமை ...\nதெனமும் தேனைக் குடிச்சாப் போதும்\nஸ்கிப்பிங் பயிற்சி செய்வதால் கிடைக்கும் நன்மைகள்\nஉடலுக்கு குளிர்ச்சி... மனதுக்கு மலர்ச்சி\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nதேனை தனியாக சாப்பிட்டால் பலன்--- மருத்துவ டிப்ஸ்\nதேன் சீரண சக்தியை தரும். இரைப்பையில் ஏற்படும் எல்லாவித கோளாறுகளையும் வயிற்றில் ஏற்படும் கோளாறுகளையும் குணமாக்கும். நெஞ்சில் ஏற்படும் எரிச்...\n‘ பாட்டி வைத்தியம் ’ சொன்ன பாட்டியிடமிருந்து ‘ வைத்திய ’ ரிலே கட்டையை கைப்பற்றியிருக்கும் பாட்டியும் , நல்ல அனுபவசாலி\nஉடலை சார்ஜ் செய்வது எப்படி\nஉடலை சார்ஜ் செய்வது எப்படி பாகம் - 2 முந்தைய பதிவில் நம் உடலை ஏன் சார்ஜ் செய்ய வேண்டும் , அதனால் உண்டாகும் பலன்கள் என்னென்ன என்...\nஅதிகாலையில் தண்ணீர் பருகினால் பல வியாதிகளைக் குணப்படுத்த முடியும் \nதினமும் காலையில் தூக்கத்தில் இருந்து எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவது ஜப்பானில் இப்போது பிரபலமாகி வருகிறது. இங்கு தரப்பட்டி...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nஉங்கள் உடல் எடை ஏழு நாட்களுக்குள் ஐந்து கிலோ எடை குறைய...\nகீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த அட்டவணை மிகப் பிரபலமான உணவு அட்டவணை. ஏழு நாட்களுக்கு இந்த அட்டவணையைப் பயன்படுத்தினால் , உங்கள் எடையில் சராசரி...\nநபிமார்கள் பற்றிய அரிய தகவல்கள்\nநபிமார்கள் மனிதர்களில் மாண்புடையவர்கள்.இவர்கள் அல்லாஹ்வின் வாக்கே உலகில் மேலானது. இறைவனல்லாத ஏனையோரின் வாக்கு கீழானது என்னும் தாரகமந்திரத்...\n கல்யாணம் ஆயி பல வருசம் ஆச்சு. இன்னும் வண்டி மக்கர் பண்ணுதே என்று மனசுக்குள்ளே குமையும் நம்ம குரூப் மக்களே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://chennaicity.info/%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2018-04-26T13:35:39Z", "digest": "sha1:UIUBUH5OX3GTT7SIIVTC5WNDWBDS3KHB", "length": 5838, "nlines": 152, "source_domain": "chennaicity.info", "title": "ரூபாய் நோட்டு விவகாரம்: பொது கணக்குக் குழுவிடம் ரிசர்வ் … – தினமணி | Chennai City Info - 8122-044-044", "raw_content": "\nபாலியல் வன்கொடுமையில் ஆண் குழந்தைகள் பாதிக்கப்பட்டாலும் மரண தண்டனை அளிக்க வேண்டும்: மேனகா காந்தி ஆதரவு\nவிமானத்தில் ரூ2.6 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்\nHome Business ரூபாய் நோட்டு விவகாரம்: பொது கணக்குக் குழுவிடம் ரிசர்வ் … – தினமணி\nரூபாய் நோட்டு விவகாரம்: பொது கணக்குக் குழுவிடம் ரிசர்வ் … – தினமணி\nரூபாய் நோட்டு விவகாரம்: பொது கணக்குக் குழுவிடம் ரிசர்வ் … – தினமணி\nரூபாய் நோட்டு விவகாரம்: பொது கணக்குக் குழுவிடம் ரிசர்வ் …\nஉயர்மதிப்பு ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்பட்ட விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற பொது கணக்குக் குழு (பிஏசி) முன்பு ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் வெள்ளிக்கிழமை நேரில் …\nபிளஸ்-1 மாணவி பாலியல் பலாத்காரம்; பனியன் தொழிலாளிக்கு … – நக்கீரன் nakkheeran publications\nகறுப்புப் பணத்தை கணக்கில் கொண்டு வரும் பிஎம்ஜிகேஒய் … – தி இந்து\nபிப்ரவரி 1-ந் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு எதிராக … – தினத் தந்தி\nபாலியல் வன்கொடுமையில் ஆண் குழந்தைகள் பாதிக்கப்பட்டாலும் மரண தண்டனை அளிக்க வேண்டும்: மேனகா காந்தி ஆதரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} {"url": "http://exactspy.com/ta/what-is-the-best-spy-phone-free-software/", "date_download": "2018-04-26T13:43:37Z", "digest": "sha1:TGIDKZ6MFIOSQDABTTI4L52HH7ONSD2I", "length": 18064, "nlines": 143, "source_domain": "exactspy.com", "title": "What Is The Best Spy Phone Free Software?", "raw_content": "\nஎப்படி மொபைல் சாதனத்தில் ரூட்\nஎப்படி மொபைல் சாதனத்தில் ரூட்\nOn: அக் 22Author: நிர்வாகம்வகைகள்: ஆண் போன்ற, கைப்பேசி ஸ்பை, மாறவே, பணியாளர் கண்காணிப்பு, மொபைல் ஸ்பை நிறுவ, ஐபோன், ஐபோன் 5s ஸ்பை மென்பொருள், மொபைல் தொலைபேசி கண்காணிப்பு, மொபைல் ஸ்பை, மொபைல் ஸ்பை ஆன்லைன், இணைய பயன்படுத்தி கண்காணித்தல், ஸ்பை பேஸ்புக் தூதர், Android க்கான ஸ்பை, ஐபோன் ஸ்பை, ஸ்பை iMessage, உளவு மொபைல் ஸ்மார்ட்போன், அழைப்புகள் ஸ்பை, எஸ்எம்எஸ் ஸ்பை, ஸ்பை ஸ்கைப், ஸ்பை Viber, ஸ்பை தேதிகளில், ட்ராக் ஜி.பி. எஸ் இடம் இல்லை\nநீங்கள் என்ன தான் செய்ய வேண்டும் ஆகிறது:\n1. exactspy வலை தளம் சென்று மென்பொருள் வாங்க.\n2. நீங்கள் கண்காணிக்க வேண்டும் தொலைபேசி பயன்பாடு பதிவிறக்க.\n3. இணைய இணைப்பு உள்ளது என்று எந்த சாதனம் இருந்து போன் தரவு காண்க.\nexactspy கொண்டு-Spy Phone Free நீங்கள் முடியும்:\n•, ஜி.பி. எஸ் இடம்\n• மானிட்டர் இணைய பாவனை\n• அணுகல் நாள்காட்டி மற்றும் முகவரி புத்தக\n• வாசிக்க உடனடி செய்திகள்\n• கட்டுப்பாடு பயன்பாடுகள் மற்றும் திட்டங்கள்\n• View மல்டிமீடியா கோப்புகளை\n• தொலைபேசி மற்றும் தொலை கட்டுப்பாடு வேண்டும் ...\nஆண் போன்ற கைப்பேசி ஸ்பை கைப்பேசி ஸ்பை கூப்பன் மாறவே பணியாளர் கண்காணிப்பு மொபைல் ஸ்பை நிறுவ ஐபோன் ஐபோன் 5s ஸ்பை மென்பொருள் மொபைல் தொலைபேசி கண்காணிப்பு மொபைல் ஸ்பை மொபைல் ஸ்பை ஆன்லைன் இணைய பயன்படுத்தி கண்காணித்தல் பெற்றோர் கட்டுப்பாடு ஸ்பை பேஸ்புக் தூதர் Android க்கான ஸ்பை ஐபோன் ஸ்பை ஸ்பை iMessage உளவு மொபைல் ஸ்மார்ட்போன் அழைப்புகள் ஸ்பை எஸ்எம்எஸ் ஸ்பை ஸ்பை ஸ்கைப் ஸ்பை Viber ஸ்பை தேதிகளில் ட்ராக் ஜி.பி. எஸ் இடம் பகுக்கப்படாதது\nபயன்பாட்டை மற்றொரு தொலைபேசி உரை செய்திகளை கண்காணிக்க சிறந்த செல் போன் கண்காணிப்பு மென்பொருள் சிறந்த செல் போன் உளவு மென்பொருள் பதிவிறக்கங்கள் சிறந்த செல் போன் உளவு மென்பொருள் இலவச சிறந்த செல் போன் உளவு மென்பொருள் ஐபோன் சிறந்த இலவச கைப்பேசி ஸ்பை ஆப் இலவச ஐபோன் செல் போன் உளவு பயன்பாட்டை செல் போன் உளவு மென்பொருள் செல் போன் உளவு மென்பொருள் இலவச செல் போன் உளவு மென்பொருள் ஐபோன் செல் போன் ஸ்பைவேர் செல் போன் மோப்ப செல் போன் கண்காணிப்பு பயன்பாட்டை செல் போன் கண்காணிப்பு மென்பொருள் இலவச செல்போன் கண்காணிப்பு மென்பொருள் அண்ட்ராய்டு இலவச செல் போன் உளவு பயன்பாட்டை Android க்கான இலவச செல்போன் உளவு பயன்பாடுகள் இலவச செல்போன் உளவு மென்பொருள் இலவச செல்போன் உளவு மென்பொருள் பதிவிறக்க இலவச செல்போன் உளவு மென்பொருள் எந்த தொலைபேசி பதிவிறக்க இலவச செல்போன் தமிழை இலவச செல்போன் தட ஆன்லைன் இலவச ஐபோன் உளவு மென்பொருள் Free mobile spy app அண்ட்ராய்டு இலவச நடமாடும் ஸ்பை பயன்பாட்டை ஐபோன் இலவச மொபைல் உளவு பயன்பாட்டை அண்ட்ராய்டு இலவச மொபைல் உளவு பயன்பாடுகள் Android க்கான இலவச மொபைல் உளவு மென்பொருள் இலவச ஆன்லைன் உரை செய்திகளை மீது உளவு எப்படி உரை செய்திகளை இலவசமாக பதிவிறக்க உளவு எப்படி How to spy on text messages free without target phone மென்பொருள் நிறுவும் இல்லாமல் உரை செய்திகளை மீது உளவு எப்படி மொபைல் உளவு பயன்பாட்டை இலவச பதிவிறக்க இலவச பயன்பாட்டை செல் போனில் ஸ்பை கைப்பேசி இலவச பயன்பாட்டை ஸ்பை செல் போன் இலவச பதிவிறக்க மீது ஸ்பை செல் போன் இலவச ஆன்லைன் உளவு இலவச பதிவிறக்க செல் போன் உரை செய்திகளை மீது உளவு உரை செய்திகளை இலவச பயன்பாட்டை ஐபோன் ஸ்பை உரை செய்திகளை மீது உளவு இலவச ஆன்லைன் உரை செய்திகளை இலவசமாக விசாரணைக்கு ஸ்பை உரை செய்திகளை மீது உளவு மென்பொருளை நிறுவும் இல்லாமல் இலவசமாக தொலைபேசி இல்லாமல் இலவச ஸ்பை உரை செய்திகளை WhatsApp தூதர் மீது ஸ்பை இலவச சர்வீஸ் உரை செய்திகளை ஸ்பை\n©2013 By EXACT LLC, அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://kavishan.blogspot.com/2012/03/blog-post_878.html", "date_download": "2018-04-26T13:14:34Z", "digest": "sha1:LAQDWQZIQILB2DYHF2YPRKOU3TBI6AX2", "length": 11935, "nlines": 133, "source_domain": "kavishan.blogspot.com", "title": "சர்வதேசத்தை மூன்று வருடங்களாகக் காத்திருக்க வைத்துள்ள இலங்கை அரசு ~ ஈழம் செய்திகள்", "raw_content": "\nசர்வதேசத்தை மூன்று வருடங்களாகக் காத்திருக்க வைத்துள்ள இலங்கை அரசு\nஇலங்கையில் நல்லிணக்கமும் பொறுப்புக்கூறலும் இல்லாமல் நிலைத்த சமாதானத்தை காணமுடியாது என்று கூறியுள்ள அமெரிக்கா ஆனால் காலம் கடந்துகொண்டிருக்கிறது என்றும் கவலை தெரிவித்துள்ளது.\nஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் மனித உரிமைக் கவுன்ஸிலின் 19 வது கூட்டத்தொடரில் உரையாற்றிய அமெரிக்காவின் பிரதிநிதியான பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகளுக்கான அமெரிக்க அரசுத்துறை சார்நிலைச் செயலரான மரியா ஒட்டேரோ அவர்கள் சர்வதேச சமூகம் இலங்கை விவகாரத்தில் மூன்று வருடங்களாக நடவடிக்கைகளுக்காக காத்துக்கிடப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nஅமெரிக்காவின் சார்பில் நேற்று வெள்ளிக்கிழமை மனித உரிமைக் கவுன்ஸிலில் உரையாற்றிய அவர் சிரியா பர்மா வடகொரியா உட்பட பல விடயங்கள் குறித்து அறிக்கை ஒன்றைப் படித்தார்.\n'' எங்களது கடந்த கால அனுபவங்களின் படி நல்லிணக்கம் மற்றும் இடம்பெற்ற நிகழ்வுகளுக்கான பொறுப்புக்கூறல் ஆகியவை இல்லாமல் நிரந்தர சமாதானம் எங்கும் ஏற்பட முடியாது. ஆனால் இலங்கை விவகாரத்தைப் பொறுத்தவரை காலம் கடந்துகொண்டிருக்கிறது என்று அமெரிக்கா கவலை கொள்கிறது'' என்றார் அவர்.\n''இலங்கையின் நடவடிக்கைகளுக்காக சர்வதேச சமூகம் சுமார் மூன்று வருடங்கள் காத்துக்கிடந்தது. இலங்கையின் படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நாங்கள் வரவேற்கின்றோம். அதேவேளை அந்த அறிக்கை நடைமுறைப்படுத்தப்பட்டாக வேண்டும்'' என்றும் ஒட்டேரோ கூறினார்.\n''2009 ஆம் ஆண்டில் போர் முடிந்தது முதல் இந்த விடயங்கள் தொடர்பாக நாங்கள் இலங்கையுடன் இரு தரப்புப் பேச்சுக்களை நடத்தி வருகின்றோம். அவர்களுடன் தொடர்ந்து சேர்ந்து பணியாற்றவும் தயாராக இருக்கிறோம். இந்த சபையில் தற்போது எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகள் அங்கு அமைதிக்கான விதைகளை விதப்பதாக இருக்க வேண்டும்'' என்றும் அவர் வலியுறுத்தினார்.\nஇதேவேளை அணிசேரா நாடுகளின் சார்பில் பேசிய எகிப்திய பிரதிநிதிஇ இலங்கை தனது நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த அதற்கு கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்றும் அதற்கு முன்பாக இலங்கைக்கு எதிரான ஒரு தீர்மானம் தேவையற்றது என்றும் கூறியுள்ளார்.\nஇலங்கையின் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை மனித உரிமைக் கவுன்ஸில் விவாதத்துக்கு எடுக்கும் என்று தான் எதிர்பார்ப்பதாக ஐநா மனித உரிமைகள் ஆணையர் நவி பிள்ளை கூறியுள்ளார்.\nஐநா நிபுணர் குழுவில் கூறப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்புக் கூறல் போன்ற விடயங்களில் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை சில குறைபாடுகளை கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.மனித உரிமைகளுக்கு மதிப்புக்கொடுக்கும் வகையில் நாட்டு மக்களின் அச்சங்களை தீர்த்து வைக்க வேண்டியது ஒரு அரசாங்கத்தின் கடமை என்றும் அவர் கூறியுள்ளார்.\nநீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.\nஇலங்கையின் ஏழாவது ஜனாதிபதி (1)\nஉலகத் தமிழர் பேரவை (1)\nசிறீலங்காவின் 7வது நாடாளுமன்ற தேர்தல் (12)\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (6)\nதலைமைச் செயலகம் தமிழீழம் (5)\nநாடு கடந்த அரசாங்கத் தேர்தல் (6)\nநாடு கடந்த அரசாங்கம் (57)\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கம் (1)\nநான் சாகலாம் நாங்கள் சாகக் கூடாது (11)\nபோர்குற்ற நாள் 2009 மே (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://rajinifans.com/history/part62.php", "date_download": "2018-04-26T13:07:41Z", "digest": "sha1:2TQP5Q5RGFRIKOZOC2CUFEPIK4RVDLZD", "length": 16243, "nlines": 220, "source_domain": "rajinifans.com", "title": "Part 62 - Rajini's History (Tamil) - Rajinifans.com", "raw_content": "\nசத்யா மூவிஸ் வெம்ளி விழா ஆண்டில்\nரஜினி நடித்த வெம்ளி விழா படம் - \"பணக்காரன்''\nஆர்.எம்.வீரப்பனின் \"சத்யா மூவிஸ்'' அதன் வெம்ளி விழா ஆண்டையொட்டி, ரஜினியை வைத்து \"பணக்காரன்'' என்ற படத்தைத் தயாரித்தது. அது 25 வாரங்களுக்கு மேல் ஓடி, வெம்ளி விழா கொண்டாடியது.\n\"லாவரிஸ்'' என்ற இந்திப்படம், \"நாதேசம்'' என்ற பெயரில் தெலுங்கில் தயாரிக்கப்பட்டது. அந்த கதையை வைத்து தமிழில் தயாரிக்கப்பட்ட படம் \"பணக்காரன்.''\nஇந்தப் படத்துக்கு வசனம் எழுதி, டைரக்ட் செய்தவர் பி.வாசு.\nரஜினியுடன், கவுதமி இணைந்து நடித்தார்.\nதிருப்பங்கம் நிறைந்த குடும்பக்கதை \"பணக்காரன்''\nகோடீசுவரரான விஜயகுமார், பாடகி சுமித்ராவை திருமணம் செய்து கொம்வதாகக் கூறி ஏமாற்றி, கர்ப்பிணி ஆனதும் கைவிட்டு விடுகிறார்.\nகர்ப்பிணியான சுமித்ராவுக்கு ஆண் குழந்தை பிறக்கிறது. மாமா ராதாரவி, தாயார் சுமித்ரா ஆகியோரின் வாழ்க்கைப் போராட்டத்தில் குழந்தை ஒரு ரவுடியிடம் வந்து சேர்கிறது.\nசிறுவன் வாலிபனாகிறான். வேலை தேடும்போது தனது அப்பா யார் என்பது தெரிகிறது. அவர் கோடீசுவரர். இப்போது அவருக்கு இன்னொரு குடும்பம், குழந்தைகம் இருக்கிறார்கம்.\nஎன்றாலும் தன் தாயார் மீதான களங்கம் துடைக்கப்பட முயற்சிகம் மேற்கொம்கிறான். பல்வேறு அவமானங்கம் அடைகிறான். ஆனாலும் எடுத்துக்கொண்ட முயற்சியில் வென்று, கோடீசுவரரான விஜயகுமாருடன் தனது தாயாரை மறுபடியும் இணைத்து வைக்கிறான்.\nஉறவுகம் புனிதமானவை. அதை \"பணம்'' என்ற போர்வைக்கும் போட்டு புதைத்து விடக்கூடாது என்பதை விளக்கிய படம்.\nஅனாதை இளைஞனாக - தாயின் அவமானத்தை துடைக்கப் போராடும் இளைஞனாக ரஜினி அற்புதமாக நடித்தார்.\nஒரு கட்டத்தில் பெண் வேடத்தில் தோன்றி அசத்தினார்.\nரஜினிக்கு ஜோடியாக நடித்தவர் கவுதமி. ரஜினி - கவுதமிகடிகார முட்களுடன் இணைந்து பாடும், \"இரண்டும் ஒன்றோடு ஒன்று சேர்ந்தது'' என்ற பாடல் புதுமையாக படமாக்கப்பட்டு ரசிகர்களை கவர்ந்தது.\nதனது நிலையை எண்ணி ரஜினி பாடுவதாக வரும், \"நான் உம்ளுக்கும்ள சக்கரவர்த்தி; ஆனா உண்மையிலே மெழுகுவர்த்தி'' என்ற பாடல் காட்சியில் ரஜினியின் உருக்கமான நடிப்பு நெகிழ வைத்தது.\nபடத்தில் வரும் \"நூறு வருஷம் இந்த மாப்பிம்ளையும் பொண்ணும்தான் பேரு விளங்க இங்கே வாழணும்'' என்ற பாடல், திருமண வீடுகளில் நிரந்தரமாகி விட்டது.\nபுவனா ஒரு கேம்விக்குறி படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த சுமித்ரா, இந்தப் படத்தில் ரஜினிக்கு அம்மாவாக நடித்திருந்தார்.\n1990 பொங்கலுக்கு வெளிவந்த இந்தப்படம், 25 வாரங்கம் ஓடி, வெம்ளி விழா கொண்டாடியது.\nரஜினியின் மற்றொரு வெற்றிப்படம் \"மாப்பிம்ளை.'' தெலுங்குப்படம் ஒன்றை தழுவி, வசனத்தை பஞ்சு அருணாசலம் எழுத, ராஜசேகர் இயக்கினார்.\nதிமிர்த்தனமாக நடந்து கொம்ளும் ஒரு மாமியாரை, மருமகன் அடக்கி புத்தி புகட்டும் கதை. (கிட்டத்தட்ட \"பணமா, பாசமா\nராஜராஜேஸ்வரி என்ற பணக்கார மாமியாராக, ஸ்ரீவித்யா முதன் முதலாக `வில்லி' முகம் காட்டிய படம்.\nராஜராஜேஸ்வரிக்கு 3 மகன்கம். ஒரே மகம். மகம் அமலா வெளி�ரில் தங்கி மருத்துவப் படிப்பை தொடர்கிறாம். அந்த ஊரில் வேலையில் இருக்கும் ரஜினிக்கும், அமலாவுக்கும் காதல் ஏற்படுகிறது. நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த ரஜினியின் தங்கை, பணக்கார ராஜராஜேஸ்வரியின் மகன் ராஜா மீது காதலாகிறாம். `காதல்' எல்லை மீறியதில் தவறு நிகழ்ந்துவிட, நிச்சயம் திருமணம் செய்து கொம்கிறேன் என்று சத்தியம் செய்கிறான், ராஜா. சொன்னபடி தனது தாயார் ராஜராஜேஸ்வரியிடம் காதலியை அழைத்துப்போகிறான்.\nவெகுண்டெழுந்த ராஜராஜேஸ்வரி, மகனின் காதலியையும், அவம் தாயாரையும் தனது செல்வாக்கால் போலீசில் மாட்டிவிடுகிறாம். தாயாரும், தங்கையும் ஜெயிலில் இருக்கும் விஷயம், வெளி�ரில் இருக்கும் ரஜினிக்கு தெரியவர, தாயாரையும், தங்கையையும் ஜெயிலில் சந்திக்கிறார்.\nதங்கை மூலம் காதலன் யார் என்பதை தெரிந்து கொண்ட ரஜினி, ராஜாவை கண்டுபிடித்து நொறுக்குகிறார். ஆனால் ராஜா நல்லவன். அவன் தாயாரின் சூழ்ச்சிதான் இவ்வளவுக்கும் காரணம் என்று ரஜினி தெரிந்து கொம்கிறார். ஜெயிலில் இருந்து தாயாரையும், தங்கையையும் விடுவித்து, ரஜினியின் தங்கைக்கு ராஜா ஒரு கோவிலில் தாலி கட்டுகிறான்.\nஆனால் நடந்தது எதுவும் ராஜராஜேஸ்வரிக்கு தெரியாது. ரகசியமாக நடந்த இந்த திருமணத்தை ஊரறியச் செய்யவேண்டும், தங்கை அந்த வீட்டு மருமகளாக ஏற்றுக்கொம்ளப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் ரஜினி சில முயற்சிகளை எடுக்கிறார்.\nஅப்போதுதான் தன்னை விரும்பிய அமலாவும், தன் தங்கை கணவர் ராஜாவும் அண்ணன் - தங்கை என்று தெரிய வர, ராஜராஜேஸ்வரிக்கு பாடம் புகட்ட திட்டம் போடுகிறார், ரஜினி. அமலாவை மணந்து கொண்டு, ராஜராஜேஸ்வரி முன்பாக போய் நிற்கிறார்.\nஅதிர்ந்து போன ராஜராஜேஸ்வரி தனது மருமகன் ரஜினிக்கு அடுக்கடுக்காக பல தொல்லைகம் கொடுக்கிறார். \"முதல் இரவு'' கூட நடக்கவிடாமல் தடுக்கிறார். ஆனால், தடைகம் தகர்க்கப்பட்டு ரஜினி வெற்றி பெறுகிறார். தோல்வியில் ஆத்திரமான ராஜராஜேஸ்வரி, மருமகன் என்றும் பாராமல் ரஜினியை கொல்ல அடியாட்களை ஏவி விடுகிறார். ஆனால் அத்தனை பேரும் அடிவாங்கிக் கொண்டு ஓடுகிறார்கம். ரஜினியும் மனைவி அமலாவுடன் வீட்டை விட்டு வெளியேறுகிறார்.\nஇந்த நிலையில் ராஜராஜேஸ்வரி தனக்கு யார் பாதுகாப்பு என்று நினைத்தாளோ, அவர்கம் அத்தனை பேரும் அவம் பணத்தை - திரண்ட சொத்தை கபளீகரம் செய்வதற்காகவே அவளுடன் இருக்கிறார்கம் என்பதை தெரிந்து கொம்கிறாம். சுதாரித்து அவர்கம் மீது நடவடிக்கை எடுப்பதற்கும் அவர்கம் முந்திக்கொண்டு ராஜராஜேஸ்வரியை கொடுமைப்படுத்தி சொத்துக்களை தங்கம் பெயருக்கு மாற்றித்தர கேட்கிறார்கம்.\nரஜினிக்கு இந்த விஷயம் தெரியவர, எதிரிகளை பந்தாடி, மாமியாரை காப்பாற்றுகிறார். திருந்திய மாமியார், ரஜினியை தனது `மாப்பிம்ளை' என்பதை ஊரறியச் செய்கிறார். ரஜினியின் தங்கையை தன் மருமகளாகவும் மனப்பூர்வமாக ஏற்றுக்கொம்கிறார்.\nமாமியார் ஸ்ரீவித்யா - மருமகன் ரஜினி இருவரும் மோதிக்கொம்ளும் ஒவ்வொரு காட்சியும் கலகலப்பானவை. ரஜினி தனக்கே உரிய பாணியில் காமெடியிலும் கலக்கியிருந்தார்.\nநிழல்கம்ரவி, சோனியா, லலிதாகுமாரி, எஸ்.எஸ்.சந்திரன், ஜெய்சங்கர், வினுசக்ரவர்த்தி ஆகியோரும் நடித்திருந்தனர்.\nஇசை: இளையராஜா. \"மானின் இரு கண்கம் கொண்ட மானே மானே'', \"என்னோட ராசி நல்ல ராசி, அது எப்போதும் பெரியவங்க ஆசி'', \"என்னதான் சுகமோ நெஞ்சினிலே'' போன்ற பாடல்கம் புகழ் பெற்றவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilthottam.in/t40419-topic", "date_download": "2018-04-26T13:20:56Z", "digest": "sha1:6AHACMOAKILWI4AQJVV6ZZKLYWGGKYTV", "length": 20600, "nlines": 203, "source_domain": "www.tamilthottam.in", "title": "நட்பு ஹைக்கூ", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» டி20 போட்டிகளில் கேப்டனாக 5 ஆயிரம் ரன்களை கடந்து டோனி சாதனை\n» டென்னிஸ் வீரர்கள் ரோகன் போபண்ணா, யூகி பாம்ப்ரி பெயர்கள் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை\n» இந்த உலகத்துல நல்லவங்க, கெட்டவங்கன்னு யாரும் இல்ல....\n» வாசகர் கவிதை - தொடர் பதிவு\n» எதுக்காக உன் காதலியை கிணத்துல தள்ளிவிட்டே...\n» குற்றத்திற்கும் நீதிக்கும் உள்ள உறவு...\n» நரசிம்மர் பற்றிய 30 வழிபாட்டு குறிப்புகள்\n» அமர்நாத் யாத்திரை ஜூன் 28-ம் தேதி தொடங்குகிறது\n» சருமப் பிரச்னைக்கு மாம்பழம் -\n» ‘சிற்றெறும்பு கட்டெறும்பு’ - கமல்ஹாசன், அமைச்சர் ஜெயக்குமார் வார்த்தை ஜாலத்தால் ஒருவருக்கொருவர் கிண்டல்\n» 5,000 குஜராத் விவசாயிகள் தற்கொலைக்கு மனு\n» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்\n» அமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி\n» இந்தியர்களை பாதிக்கும் ‘எச்-4’ விசா ரத்து நடவடிக்கைக்கு அமெரிக்க எம்.பி.க்கள் எதிர்ப்பு, ஐ.டி. துறையும் கண்டனம்\n» பலாத்காரத்துக்கு ஆளாகும் ஆண் குழந்தைகளுக்கும் இழப்பீடு'\n» நிலக்கரியை விட கருப்பாக இருக்கும் கிரகம் கண்டுபிடிப்பு\n» பிரபல பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி மரணம்: கமலுக்கு முதல் பின்னணிப் பாடல் பாடியவர்\n» உறவு முன்னே...ப்ராப்ளம் பின்னே...\n» கவர்ச்சி நடிகைகிட்ட பிடிச்சது, அவரோட நடிப்பு...\n» 2 மணி நேரம் பொறுக்க முடியாதா கஸ்தூரி..\n» தமிழில் காலூன்ற தடுமாறும் பிறமொழி நடிகர்கள்\n» பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்\n» வாழ்க்கையை ஓஹோன்னு வாழ கன்ஃபூசியஸ் சொன்ன 10 கட்டளைகள்...\n» இரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு\n» ரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது: மக்கள் மன்ற மாநில செயலாளர் பேச்சு\n» தாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து\n» காங்., கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக்கறை: சல்மான் குர்ஷித் சர்ச்சை\n» நாடு முழுவதும் 24 போலி பல்கலை.,கள்\n» உ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்\n» சுப்ரீம் கோர்ட் எதிர்காலம்: ஆலோசிக்க நீதிபதிகள் கோரிக்கை\n» 2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்: ஜூன் 16-ம் தேதி இந்தியா-பாக். மோதல்\n நூல் ஆசிரியர் : முனைவர் பேராசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி\n» சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து\n» உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி\n» தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்\n» பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது\n» கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு\n» கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்\n» கிறிஸ்தவ பெண்ணுக்கு திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் பதவி: நடிகை ரோஜா கண்டனம்\n» கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன\n» கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி\n» கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு\n» நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nதமிழ்த்தோட்டம் :: கவிதைச் சோலை :: சொந்தக் கவிதைகள்\nLocation : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி\nபல் விழுந்த பருவம் வரை\nLocation : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி\nLocation : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி\nLocation : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி\nLocation : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி\nஎன்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க\nLocation : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி\nதமிழ்த்தோட்டம் :: கவிதைச் சோலை :: சொந்தக் கவிதைகள்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/25937", "date_download": "2018-04-26T13:24:05Z", "digest": "sha1:WD2CJ4YPNQ74O3VIF3TH3SSSISOY346H", "length": 9973, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "தீபாவளியன்று தாயும் மகனும் கழுத்தறுத்துக் கொலை ; ஏறாவூரில் சம்பவம் | Virakesari.lk", "raw_content": "\nஇலங்கை ஆசிரியர் சேவை சங்கம் ஜே.வி.பியுடன் இணைந்து யாழ்பாணத்தில் \"செம்மே\" தினக் கொண்டாட்டம்\nநிலக்கரியை விட அடர்ந்த கருப்பு நிறத்தில் புதிய கிரகம் கண்டு பிடிப்பு\nஎரிந்த நிலையில் சடலம் மீட்பு\nபல கொள்ளைச் சம்பவங்களோடு தொடர்புடைய கொள்ளை கும்பல் கைது\nஇடி தாக்கி இருவர் வைத்தியசாலையில்\nஜாலிய விக்கிரமசூரியவை கைது செய்ய மீண்டும் பிடியாணை\n“அம்பாந்தோட்டை துறைமுகத்தின் பாதுகாப்பிற்கு இலங்கை கடற்படை மாத்திரமே பொறுப்பு”\nஐ.எஸ். தற்கொலை தாக்குதல் ; உயிரிழந்தோரின் எண்ணிக்கை 57 ஆக அதிகரிப்பு\nகாலில் விழுந்தவர் காலாவதியான நூடில்ஸ் என என்னை வர்ணிக்கிறார் : சந்திரிகா\nதீபாவளியன்று தாயும் மகனும் கழுத்தறுத்துக் கொலை ; ஏறாவூரில் சம்பவம்\nதீபாவளியன்று தாயும் மகனும் கழுத்தறுத்துக் கொலை ; ஏறாவூரில் சம்பவம்\nதாயும் மகனும் கழுத்தறுத்துக்கொலை செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.\nஏறாவூர், சவுக்கடி பகுதியிலுள்ள ஒரு வீட்டில் தாயும் மகனும் இவ்வாறு கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலங்களாரக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.\nகுறித்த தாயும் மகனும் தனிமையில் இருந்த வேளை, வீட்டுக்குள் புகுந்த கொள்ளைக் கும்பலொன்று தாயையும் மகனையும் கழுத்தறுத்துக்கொலை செய்து விட்டு அங்கிருந்து பணம் மற்றும் நகைகளை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.\nஇவ்வாறு கொலைசெய்யப்பட்டவர் இளம் தாயெனவும் கணவன் வெளியூரில் வசிப்பதாகவும் தெரிய வருகின்றது.\nஇச் சம்பம் இரவு இடம்பெற்றிருக்கலாமென சந்தேகிக்கும் பொலிஸார் சம்பம் தொடர்பில் இன்று காலை 8.30 மணிளவிலேயே தகவல் கிடைத்ததாகவும் தெரிவித்தனர்.\nகழுத்தறுத்துக் கொலை செய்யபட்டவர்கள் பீதாம்பரம் மதுசாந்தி 26 வயதெனவும் மதுசான் வயது 11 எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nசம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nதீபாவளி தினமான இன்று இக் கொடூரச் சம்பவம் இடம்பெற்ற நிலையில் குறித்த பகுதியில் பெரும் பதற்றம் நிலவுவதாகவும் அப் பகுதி மக்கள் பெரும் அச்சத்துடன் இருப்பதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.\nஏறாவூர் பொலிஸ் தாய் கொலை புன்னக்குடா கழுத்து\nஇலங்கை ஆசிரியர் சேவை சங்கம் ஜே.வி.பியுடன் இணைந்து யாழ்பாணத்தில் \"செம்மே\" தினக் கொண்டாட்டம்\nகொழும்பு மருதானை சி.எஸ்.ஆர் நிலையத்தில் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் ஊடகவியளார் சந்திப்பு இன்று நடைபெற்றுள்ளது.\n2018-04-26 18:20:26 கொழும்பு மருதானை இலங்கை ஆசிரியர் சேவை சங்கம்\nஎரிந்த நிலையில் சடலம் மீட்பு\nபேருவளை - மஸ்ஸல பிரதேசத்தின் இரண்டு மாடி வீடொன்றின் மேல் மாடியில் இருந்து இன்று மாலை எரிந்த நிலையில் சடலமொன்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.\n2018-04-26 17:41:54 பேருவளை இரண்டு மாடி வீடு எரிந்த நிலையில் சடலம்\nபல கொள்ளைச் சம்பவங்களோடு தொடர்புடைய கொள்ளை கும்பல் கைது\nபல கொள்ளைச் சம்பவங்களோடு தொடர்புடைய பொலிஸாரால் பல நாட்களாக வலை வீசி தேடப்பட்டு வந்து கொள்ளைக் கும்பல் ஒன்றை நேற்று இரவு பம்பலப்பிட்டி பொலிஸார் கைது செய்துள்ளனர்.\n2018-04-26 17:29:46 கொள்ளை கும்பல் கைது பம்பலப்பிட்டி பொலிஸார்\nஇடி தாக்கி இருவர் வைத்தியசாலையில்\nடிக்கோயா - மாணிக்கவத்தை தோட்டத்தில் இடி தாக்குதலுக்குள்ளாகி இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\n2018-04-26 17:07:52 டிக்கோயா - மாணிக்கவத்தை இடி தாக்குதல் வைத்தியசாலை\nபத்திரிகை தரவரிசைப் பட்டியலில் இலங்கை முன்னேற்றம்\nசர்வதேச பத்திரிகை சுதந்திர தரவரிசைப் பட்டியலில் இலங்கை பத்து இடங்கள் முன்னேறி 131 ஆவது இடத்தில் உள்ளது.\n2018-04-26 16:58:11 உலகின் சர்வதேசம் பத்திரிகை\nநிலக்கரியை விட அடர்ந்த கருப்பு நிறத்தில் புதிய கிரகம் கண்டு பிடிப்பு\nஎரிந்த நிலையில் சடலம் மீட்பு\nபல கொள்ளைச் சம்பவங்களோடு தொடர்புடைய கொள்ளை கும்பல் கைது\nஇடி தாக்கி இருவர் வைத்தியசாலையில்\nபள்ளிமுனை கடற்கரை மீன் வாடிகளிலிருந்து ஒரு தொகை மீன்கள் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://seithupaarungal.com/2014/08/28/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2018-04-26T13:00:36Z", "digest": "sha1:CHN4LUWFVAUTJZUKAH75T2OIHV2FLLQC", "length": 9649, "nlines": 110, "source_domain": "seithupaarungal.com", "title": "நடிகைகளை ஏமாற்றும் அரசியல்வாரிசுகள்: மீண்டும் ஒரு சம்பவம்! – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nஅரசியல், இந்தியா, இன்றைய முதன்மை செய்திகள், சினிமா\nநடிகைகளை ஏமாற்றும் அரசியல்வாரிசுகள்: மீண்டும் ஒரு சம்பவம்\nஓகஸ்ட் 28, 2014 த டைம்ஸ் தமிழ்\nஅரசியல்வாதிகளின் வாரிசுகள் பணம் மற்றும் செல்வாக்கை காரணம் காட்சி பிரபலமாக உள்ள நடிகைகளை ஏமாற்றுவது வாடிக்கியாக உள்ளது. அந்த காலத்து மைனர்களைப் போல இந்தக் காலத்தில் அரசியல் வாரிசுகள் பெண்களை ஏமாற்றுவதை அந்தஸ்துக்குரிய விஷயமாக பார்க்கிறார்கள். அதை பெருமையாக நினைக்கிறார்கள். சமீபத்திய உதாரணம்… ரயில்வே அமைச்சரின் மகன் சதானந்தாவின் மகன் கார்த்திக். திருமணம் செய்து ஏமாற்றியதாக சதானந்த கவுடாவின் மகன் கார்த்திக் மீது கன்னட நடிகை மைத்ரி குற்றம்சாட்டியுள்ளார்.\nமங்களூரைச் சேர்ந்த மைத்ரி கவுடா, கடந்த ஆண்டு கன்னட நடிகர் உபேந்திரா நடித்த டோபிவாலா என்ற கன்னட படத்தில் நடிகையாக அறிமுகமானார். கடந்த மே 8 ஆம் தேதி மங்களூருவில் கார்த்திக்கை சந்தித்ததாகவும் பிறகு இருவரும் அடிக்கடி சந்தித்துப் பேசிக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.\nபின்னர், ஜூன் 5 ஆம் தேதி மங்களூருவில் உள்ள கார்த்திக்கின் வீட்டில் வைத்து அவர் தன்னை திருமணம் செய்து கொண்டதாக மைத்ரி கூறியுள்ளார். பிறகு இருவரும் தனித்தனியாக வசித்து வந்ததாகவும் நடிகை மைத்ரி தெரிவித்தார். தங்களைப் பற்றி கார்த்திக்கின் தாய்க்கு நன்றாகத் தெரியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இந்த குற்றச்சாட்டை சதானந்த கவுடாவும், அவரது மகனும் மறுத்துள்ளனர். தனது தந்தை சதானந்தாவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கில் இந்த அபாண்ட குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக கார்த்திக் தெரிவித்தார். இதுவும் வழக்கமான பாணி தப்பித்தல்தான்\nகுறிச்சொல்லிடப்பட்டது அரசியல், இந்தியா, இன்றைய முதன்மை செய்திகள், சினிமா, நடிகர் உபேந்திரா, மைத்ரி கவுடா, ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postவீட்டை அலங்கரிக்க சீன விசிறி: step by step படங்களுடன் செய்முறை\nNext postசண்டமாருதத்தில் புதிய தோற்றத்தில் மீரா நந்தன்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nநீங்களே செய்யலாம் ஃப்ரூட் ஃபலூடா\nபிஸ்தா ஐஸ்கிரீம் செய்வது எப்படி\nகருப்பட்டி கம்பு சேமியா எப்படி செய்வது\nஸ்டாக்கிங் பூக்கள் செய்வது எப்படி\nமணி வளையல் செய்வது எப்படி\nஎம்பிராய்டரி: பிரஞ்ச் நாட்’இல் சூரிய பூக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cinemaparvai.com/simbu-sk/", "date_download": "2018-04-26T13:10:56Z", "digest": "sha1:JISHKBWVFCZFGM4KVAI4BXM4N6IIBEFT", "length": 6202, "nlines": 138, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai சிம்பு வுடன் நடித்த சிவகார்த்திகேயன் - Cinema Parvai", "raw_content": "\nகுழந்தை போல நடந்து கொண்ட யோகி பி\nதனுஷ் படத்தை மே 30ல் வெளியிடத் திட்டம்\nடீசர் ரிலீஸ்க்கு தயாராகும் பரத் படம்\nஉறுதியானது ரஜினி – விஜய் சேதுபதி மாஸ் கூட்டணி\nமுன்னணி கதாநாயகிக்கு விரைவில் திருமணம்\nமிஸ்டர் சந்திரமௌலி படத்தின் இசை வெளியீட்டு விழா\nசிம்பு வுடன் நடித்த சிவகார்த்திகேயன்\nசிம்பு வுடன் நடித்த சிவகார்த்திகேயன்\nசிவகார்த்திகேயன் தற்போது கோலிவுட்டின் உட்ச நட்சத்திரமாக உள்ளார். இவர் தன் அடுத்தடுத்த படங்களை கவனமாக தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார்.\nஇவர் நடிக்க வருவதற்கு முன் தொகுப்பாளராக இருந்தார், அது மட்டுமின்றி இயக்குனர் நெல்சன் இயக்கிய வேட்டை மன்னன் படத்தில் உதவி இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.\nஇப்படத்தில் சிம்பு, ஜெய் நடிக்க சிவகார்த்திகேயனும் ஒரு சிறிய ரோலில் நடித்தாராம், ஆனால், அந்த படம் ட்ராப் ஆனது குறிப்பிடத்தக்கது.\nநெல்சன் தற்போது நயன்தாரா நடித்து வரும் கோலமாவு கோகிலா படத்தை இயக்கி வருகின்றார்.\nசெக்கச் சிவந்த வானத்தில் நட்சத்திரங்களின் கதாபாத்திரங்கள்\nசிம்பு, அனிருத்தைத் தொடர்ந்து கமல் மீது வழக்கு\n20 வயதான துளசி (சாய் பல்லவி) மற்றும் கிருஷ்ணா (நாக...\nமதன் கார்க்கியின் கிண்டி பொறியியல் கல்லூரி பாடல்\nகெளதம் வாசுதேவ் மேனனின் பாராட்டைப் பெற்ற சங்கரின் உதவி இயக்குனர்\nகுழந்தை போல நடந்து கொண்ட யோகி பி\nதனுஷ் படத்தை மே 30ல் வெளியிடத் திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://paattumix.blogspot.com/2010/11/blog-post_23.html", "date_download": "2018-04-26T13:29:09Z", "digest": "sha1:RL6Q2AAGECIRJSULDEJRH72Q7JYL22N4", "length": 6996, "nlines": 208, "source_domain": "paattumix.blogspot.com", "title": "Music Mix: யார் அந்த நிலவு ஏன் இந்தக் கனவு", "raw_content": "\nயார் அந்த நிலவு ஏன் இந்தக் கனவு\nகுரல்: டி எம் சௌந்தரராஜன்\nஇசை: விஸ்வநாதன் – ராமமூர்த்தி\nயார் அந்த நிலவு ஏன் இந்தக் கனவு\nயாரோ சொல்ல யாரோ என்று யாரோ வந்த உறவு\nகாலம் செய்த கோலம் நான் வந்த வரவு\nமாலையும் மஞ்சளும் மாறியதே ஒரு சோதனை\nமஞ்சம் நெஞ்சம் வாடுவதே பெரும் வேதனை\nதெய்வமே யாரிடம் யாரை நீ தந்தாயோ\nஉன் கோவில் தீபம் மாறியதை நீ அறிவாயோ\nஓ…ஓ…கோவில் தீபம் மாறியதை…நீ அறிவாயோ\nஆடிய நாடகம் முடிவதில்லை ஒரு நாளிலே\nஅங்கும் இங்கும் சாந்தியில்லை சிலர் வாழ்விலே\nதெய்வமே யாருடன் மேடையில் நீ நின்றாயோ\nஇன்று யாரை யாராய் நேரினிலே நீ கண்டாயோ\nநீ வருவாய் என நான் இருந்தேன்\nஒரு நாள் யாரோ என்ன பாடல் சொல்லித் தந்தாரோ\nமயிலே மயிலே உன் தோகை இங்கே...\nஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்தேன்\nயார் அந்த நிலவு ஏன் இந்தக் கனவு\nமாணிக்க தேரில் மரகத கலசம் மின்னுவதென்ன என்ன\nஏதோ ஏதோ ஏதோ ஒரு மயக்கம் அது\nஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ\nஉனக்குள் நானே உருகும் இரவில்\nகருகரு விழிகளால் ஒரு கண்மை என்னைக் கடத்துதே\nவெண்ணிலவே வெள்ளி வெள்ளி நிலவே\nசந்தனத் தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா\nநினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை\nவா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே\nமயிலிறகே... மயிலிறகே வருடுகிறாய் மெல்ல...\nதில்லானா தில்லானா தித்திக்கின்ற தேனா\nஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்\nகுறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா\nகேளடி கண்மணி பாடகன் சங்கதி\nசொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா\nஅட மச்சம் உள்ள மச்சான் நான் புதுவித ரகம்\nநீ கொடுத்தத திருப்பிக் கொடுப்பேன்\nஎங்கிருந்தாய் நான் மண்ணில் பிறந்திடும் போது\nவிழியை விழியை நீ பூக்க செய்தாயடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "http://puttalamtoday.com/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-04-26T13:35:06Z", "digest": "sha1:BL6BCJML7GXXB5IWFC42UNAIFC3ACVVC", "length": 7472, "nlines": 51, "source_domain": "puttalamtoday.com", "title": "“எனது வாப்பாவின் கதையில் நடித்தால் நடவடிக்கை..!! பம்பாயை கலக்கிய தாதா ஹாஜி மஸ்தானின் மகன் ரஜனிக்கு மிரட்டல் – PuttalamToday", "raw_content": "\n“எனது வாப்பாவின் கதையில் நடித்தால் நடவடிக்கை.. பம்பாயை கலக்கிய தாதா ஹாஜி மஸ்தானின் மகன் ரஜனிக்கு மிரட்டல்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கவுள்ள ரஜினியின் 161வது படம், மும்பையை கலக்கிய தாதா ஹாஜி மஸ்தான் கதை என்று கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூறப்பட்டது. ஆனால் இந்த தகவலை இயக்குனர் ரஞ்சித் மறுத்திருந்தார்\nஇந்நிலையில் ஹாஜி மஸ்தானின் வளர்ப்பு மகன், ரஜினிக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார். தனது தந்தை ஒரு தாதா இல்லை என்றும், அவரை தாதா போன்று சித்தரித்து திரைப்படம் எடுத்தால் சட்ட நடவடிக்கை எடுப்பேன் என்றும் அவர் அந்த நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் ஹாஜி மஸ்தான் கதையை படமெடுக்க வேண்டும் என்றால் உண்மையான கதையை நான் தருகிறேன் என்றும் வேண்டும் என்றால் நானே அந்த படத்தை தயாரிக்கின்றேன் என்றும் கூறியுள்ளார்.\nமேலும் தனக்கு பின்னால் ஒரு படையே இருப்பதாகவும், தன்னுடைய எச்சரிக்கையை மீறி தன்னுடைய தந்தையின் கதையை படமாக்கினால் விளைவுகளை சந்திக்க வேண்டும் என்றும் அவர் ரஜினிக்கு அனுப்பிய நோட்டீஸில் தெரிவித்துள்ளார்.\nB.M.S. college சாரம் திருவிழா: பெலூன் டான்ஸ் ஆடிக் கலக்கிய முஸ்லிம் யுவதிகள்- எல்லை மீறுகிறார்களா..\nBreaking : சவூதி மன்னரை கவிழ்க்க முயற்சி.. அரண்மை அருகே கடும் துப்பாக்கி சூடு – பங்கருக்குள் கொண்டு செல்லப்பட்டார் சல்மான் posted on April 22, 2018\nசவூதியின் கொடூர செயலால் உலகமே அதிர்ச்சியில் \nBreaking : 12 வயதுக்கு உள்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு தூக்குத் தண்டனை மோடியின் அமைச்சரவை அவசர சட்டம் பிறப்பிப்பு posted on April 21, 2018\nBreaking :கண்டி கலவரங்களை வழி நடத்திய போலிஸ் இன்ஸ்பெக்டர், சார்ஜென்ட் மேஜர் கைது செய்யப்படவுள்ளார்கள் posted on April 21, 2018\nதலைமைப் பற்றி தீர்மானிக்கும் ஐக்கியத் தேசியக் கட்சியின் முக்கியக் கூட்டம் இன்று \nகண்டிக் கலவரத்தை முன்னின்று நடத்திய இரு பிரதேச சபை உறுப்பினர்கள் தொடர்ந்தும் தேடப்படுகிறார்கள்..\nபச்சை கறிவேப்பிலை சாப்பிடுவதன் மூலம் கொலஸ்ட்ரோலை கட்டுக்குள் வைக்கலாம் இதய சத்திர சிகிச்சை நிபுணர் Dr.இலாஹி\nநகர, பிரதேச சபை சேர்மன்களின் ஆட்டம் எல்லாம் 2 வருடங்களுக்கு மட்டுமே.. அதன் பிறகு உறுப்பினர்களின் காலில் விழுந்தாக வேண்டும்\nமுன்னாள் நேவி தளபதி சந்தன பிரசாத் தப்பிச் செல்ல பாதுகாப்புச் சபை பிரதானி ரவீந்திர விஜேகுணவர்தன 5 லட்சம் கொடுத்தார்.. C.I.D. பொஸ் சான் குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://puttalamtoday.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-04-26T13:39:43Z", "digest": "sha1:YO2Q4JPXSHLSN3FUE2J6FJHACNTE3QAK", "length": 19084, "nlines": 90, "source_domain": "puttalamtoday.com", "title": "மாமன்னர் அப்துல் அசீஸின் பேரன்..உலகின் 47 வது பணக்காரர் தலால் கைது செய்யப்படக் காரணம் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்..? – PuttalamToday", "raw_content": "\nமாமன்னர் அப்துல் அசீஸின் பேரன்..உலகின் 47 வது பணக்காரர் தலால் கைது செய்யப்படக் காரணம் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்..\nதமிழ் செய்தி கீழே :\nசவுதி அரேபியாவில் ஊழல் வழக்குகளின் மீது எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கையில் அந்நாட்டின் பில்லியனரும், இளவரசருமான அல்வாலித் பின் தலால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் உலக அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஅரேபிய நாட்டின் மிகப்பெரிய தொழிலதிபர்களில் மிக முக்கியமானவர் அல்வாலித் பின் தலால். உலகின் மதிப்புமிக்க பில்லியனர்கள் பட்டியலில் தனக்கென ஒரு இடத்தை இவர் பெற்றிருக்கிறார்.\nஇதனால் இவருடைய கைது உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அல்வாலித் பின் தலால் யார் அவர் என்ன தொழில் செய்கிறார் அவர் என்ன தொழில் செய்கிறார் எதற்காக தற்போது கைது செய்யப்பட்டிருக்கிறார்\nசவுதி அரேபியாவின் அரச குடும்பத்தில் இளவரசர் தலால் மற்றும் மோனா அல் சோக் இணையர்களுக்கு அல்வாலித் பின் தலால் 1955ஆம் ஆண்டு மார்ச் 7ஆம் திகதி பிறந்தார்.\nஇவருடைய தாத்தா இபின் சவுத் சவுதி அரேபியாவின் முதல் அரசர் ஆவார். அல்வாலித் அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள மென்லோ கல்லூரியில் தொழில் நிர்வாகப் பட்டமும், நியூயார்க் நகரில் உள்ள சைரக்ஸ் பல்கலைக் கழகத்தில் சமூக அறிவியல் பாடப் பிரிவில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார்.\nஅல்-தலாலைப் பொறுத்தவரையில் பெண் உரிமைகளுக்குக் குரல் கொடுப்பவராகவும் இருந்துள்ளார். அண்மையில் சவுதியில் பெண்கள் வாகனங்கள் ஓட்டத் தடை என்ற அறிவிப்பு வெளியான போது “பெண்கள் வாகனங்கள் ஓட்ட நேரம் இது” என்று டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். சவுதி அரேபியாவின் முதல் பெண் விமான ஓட்டியாக நியமிக்கப்பட்ட ஹனாடி ஜகாரியா அல்-ஹின்டிக்கு நிதியுதவி வழங்கியுள்ளார்.\nஅல்வாலித் பின் தலால் தற்போது கிங்டம் ஹோல்டிங் என்ற நிறுவனத்தின் தலைவராக உள்ளார். இந்நிறுவனத்தின் 95 சதவிகிதப் பங்குகளை இவர் கொண்டுள்ளார்.\nநிதித்துறை, சுற்றுலாத்துறை, சுகாதாரத்துறை, ஊடகத்துறை, கேளிக்கைத்துறை, சில்லறை வர்த்தகம், வேளாண்துறை, தொழில்நுட்பம், ரியல் எஸ்டேட், விமானப் போக்குவரத்து, பெட்ரோகெமிக்கல்ஸ் எனப் பல்வேறு துறைகளில் அல்வாலித் வெற்றிகரமாக இயங்கி வருகிறார்.\nமுதலீட்டுத் துறையில் இவருக்குள்ள துணிச்சல் காரணமாக அரேபியாவின் வாரன் பஃபட் என்று வர்ணிக்கப்படுகிறார். 2017ஆம் ஆண்டின் ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்ட உலகின் பணக்காரர்கள் பட்டியலில் அல்வாலித் 45ஆவது இடத்தைப் பெற்றார்.\nஅதேபோல ஃபோர்ப்ஸ் இதழின் 2017ஆம் ஆண்டுக்கான அரேபியாவின் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார். இவருடைய நிகர சொத்து மதிப்பு 18.7 பில்லியன் டொலர்களாகும்.\nஅரேபியாவைத் தாண்டியும் பல நாடுகளில் அல்வாலித் முதலீடு செய்துள்ளார். அமெரிக்காவின் சிட்டி குரூப், ஆப்பிள், 21ஸ்ட் சென்சுரி பாக்ஸ், டிவிட்டர் ஆகிய நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளார்.\n1991-95க்கு இடைப்பகுதியில் தற்போதைய அமெரிக்க ஜனாதிபதியான டொனால்டு டிரம்பின் ரியல் எஸ்டேட் நிறுவனம் இழப்பைச் சந்தித்த போது மீட்க உதவினார். மேலும் டிரம்பின் பிளாசா ஹோட்டலில் முதலீடு செய்துள்ளார்.\nஇந்நிலையில் சவுதியில் இளவரசர் முகமது பின் சல்மான் தலைமையில் 4-ஆம் திகதி சனிக்கிழமை புதிதாக அமைக்கப்பட்ட ஊழல் தடுப்பு கமிஷனால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇவருடன் சேர்த்து மேலும் பத்து இளவரசர்கள், 4 அமைச்சர்கள், 12 முன்னாள் அமைச்சர்கள் எனப் பலர் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் உறுதி செய்துள்ளன.\nகடந்த மாதத்தில் அல்வாலித் வெஸ்டன் மீடியாவுக்கு அளித்த பேட்டியில்,” சவுதி அரசு எண்ணெய் நிறுவனங்களின் பொதுப் பங்குகளுக்கு தனியார் நிறுவனங்களை அனுமதிக்கத் திட்டமிட்டுள்ளது” என்றார்.\nஅந்தப் பேட்டியில் அவர் ரகசிய கிரிப்டோ நாணயங்கள் குறித்து பதில் அளித்திருந்தார். இந்நிலையில் ஊழல் வழக்கில் இவர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டிருப்பது உலகளவில் இவர் முதலீடு செய்துள்ள பெருநிறுவனங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஅல்வாலித் உள்படக் கைது செய்யப்பட்ட அனைவர் மீதும் சவுதி அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பதை உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.\nB.M.S. college சாரம் திருவிழா: பெலூன் டான்ஸ் ஆடிக் கலக்கிய முஸ்லிம் யுவதிகள்- எல்லை மீறுகிறார்களா..\nBreaking : சவூதி மன்னரை கவிழ்க்க முயற்சி.. அரண்மை அருகே கடும் துப்பாக்கி சூடு – பங்கருக்குள் கொண்டு செல்லப்பட்டார் சல்மான் posted on April 22, 2018\nசவூதியின் கொடூர செயலால் உலகமே அதிர்ச்சியில் \nBreaking : 12 வயதுக்கு உள்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு தூக்குத் தண்டனை மோடியின் அமைச்சரவை அவசர சட்டம் பிறப்பிப்பு posted on April 21, 2018\nBreaking :கண்டி கலவரங்களை வழி நடத்திய போலிஸ் இன்ஸ்பெக்டர், சார்ஜென்ட் மேஜர் கைது செய்யப்படவுள்ளார்கள் posted on April 21, 2018\nதலைமைப் பற்றி தீர்மானிக்கும் ஐக்கியத் தேசியக் கட்சியின் முக்கியக் கூட்டம் இன்று \nகண்டிக் கலவரத்தை முன்னின்று நடத்திய இரு பிரதேச சபை உறுப்பினர்கள் தொடர்ந்தும் தேடப்படுகிறார்கள்..\nபச்சை கறிவேப்பிலை சாப்பிடுவதன் மூலம் கொலஸ்ட்ரோலை கட்டுக்குள் வைக்கலாம் இதய சத்திர சிகிச்சை நிபுணர் Dr.இலாஹி\nநகர, பிரதேச சபை சேர்மன்களின் ஆட்டம் எல்லாம் 2 வருடங்களுக்கு மட்டுமே.. அதன் பிறகு உறுப்பினர்களின் காலில் விழுந்தாக வேண்டும்\nமுன்னாள் நேவி தளபதி சந்தன பிரசாத் தப்பிச் செல்ல பாதுகாப்புச் சபை பிரதானி ரவீந்திர விஜேகுணவர்தன 5 லட்சம் கொடுத்தார்.. C.I.D. பொஸ் சான் குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://sivantv.com/videogallery/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B2%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-3/", "date_download": "2018-04-26T13:21:14Z", "digest": "sha1:XFKRLN7FE65IWM7T7TGWAVMKZR4643F2", "length": 12483, "nlines": 180, "source_domain": "sivantv.com", "title": "ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் மாநாடு மற்றும் குருபூசை நிகழ்வு முதலாம் நாள் காலை நிகழ்வுகள் மலர் – 03 (08.12.2017) | Sivan TV", "raw_content": "\nபுங்குடுதீவு கிழக்கு கண்ணகைபுரம் ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்பாள் திருக்கோவில் வருடார்ந்த மகோற்சவம்\nHome ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் மாநாடு மற்றும் குருபூசை நிகழ்வு முதலாம் நாள் காலை நிகழ்வுகள் மலர் – 03 (08.12.2017)\nஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் மாநாடு மற்றும் குருபூசை நிகழ்வு முதலாம் நாள் காலை நிகழ்வுகள் மலர் – 03 (08.12.2017)\nஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் மாநாடு மற..\nபுங்குடுதீவு அம்பலவாணர் கலை அரங்..\nபுங்குடுதீவு அம்பலவாணர் கலை அரங்..\nகரம்பன் கிழக்கு அருள்மிகு ஞானவைர..\nகரம்பன் கிழக்கு அருள்மிகு ஞானவைர..\nகரம்பன் கிழக்கு அருள்மிகு ஞானவைர..\nபுங்குடுதீவு 8ம் வட்டாரம் மடத்து�..\nமாவிட்டபுரம் - வீணியவரை ஸ்ரீ இராஜ�..\nஇணுவில் செகராச சேகரப் பிள்ளையார்..\nபுங்குடுதீவு 8ம் வட்டாரம் மடத்து�..\nமிருசுவில் வடக்கு அரசடி ஸ்ரீ சித�..\nமானிப்பாய் மருதடி விநாயகர் கோவில..\nபுங்குடுதீவு - மடத்துவெளி - வயலூர்..\nபுங்குடுதீவு - மடத்துவெளி - வயலூர்..\nபுங்குடுதீவு - மடத்துவெளி - வயலூர்..\nமட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ..\nபுங்குடுதீவு - மடத்துவெளி - வயலூர்..\nபுங்குடுதீவு - மடத்துவெளி - வயலூர்..\nகரவெட்டி – கொற்றாவத்தை – செட்டித�..\nமிருசுவில் வடக்கு அரசடி ஸ்ரீ சித�..\nகிளிநொச்சி - கரைச்சி - புளியம்பொக்..\nவற்றாப்பளை கண்ணகை அம்மன் திருக்க..\nஏழாலை வசந்தநாகபூசணி அம்பாள் திரு..\nமுகமாலை சிவபுர வளாகம் அடிக்கல் ந�..\nlஎழுதுமட்டுவாழ் - மருதங்குளம் திர�..\nமானிப்பாய் மருதடி பிள்ளையார் கோவ..\nசுன்னாகம் ஸ்ரீ ஹரிகர புத்திர ஐயன�..\nஏழாலை – தம்புவத்தை ஞான வைரவர் கோவ�..\nஏழாலை - தம்புவத்தை ஞான வைரவர் கோவி..\nவடக்கு மாகாணத்தில் சைவ ஆலயங்கள் �..\nமாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் க�..\nஅமெரிக்க ஹவாய் ஆதீன முதல்வர் சற்�..\nமாதகல் - நுணசை - கூடல்விளாத்தி ஸ்ர�..\nமாதகல் - நுணசை - கூடல்விளாத்தி ஸ்ர�..\nமாதகல் - நுணசை - கூடல்விளாத்தி ஸ்ர�..\nமாதகல் - நுணசை - கூடல்விளாத்தி ஸ்ர�..\nமாதகல் - நுணசை - கூடல்விளாத்தி ஸ்ர�..\nஅமெரிக்க ஹவாய் ஆதீன முதல்வர் சற்�..\nகோப்பாய் ஸ்ரீ சுப்பிரமுனிய கோட்ட..\nமாதகல் நுணசை கூடல்விளாத்தி ஸ்ரீ �..\nபேராசிரியர் சாலமன் பாப்பையாவின் ..\nகீரிமலை நகுலேச்சரம் சிவன் கோவில்..\nகீரிமலை நகுலேஸ்வரம் சிவன் கோவில்..\nசரவணை - நாவலடி ஸ்ரீ ஞானவைரவ சுவாமி..\nஏழாலை வசந்தநாகபூசணி அம்பாள் திரு..\nஇணுவில் கந்தசுவாமி கோவில் திருமஞ..\nகீரிமலை நகுலேச்சரம் சிவன் கோவில்..\nசரவணை – நாவலடி ஸ்ரீ ஞானவைரவ சுவாம�..\nஏழாலை வசந்தநாகபூசணி அம்பாள் திரு..\nசரவணை - நாவலடி ஸ்ரீ ஞானவைரவ சுவாமி..\nஏழாலை வசந்தநாகபூசணி அம்பாள் திரு..\nசரவணை-நாவலடி ஸ்ரீ ஞானவைரவ சுவாமி �..\nதெல்லிப்பளை துர்க்கை அம்மன் கோவி..\nஏழாலை வசந்தநாகபூசணி அம்பாள் திரு..\nதெல்லிப்பழை துர்க்கை அம்மன் கோவி..\nஏழாலை வசந்தநாகபூசணி அம்பாள் திரு..\nஇணுவில் காரைக்கால் சிவன் கோவில் �..\nசைவசமய தலைவர்களின் தைத்திருநாள் ..\nஇணுவில் காரைக்கால் சிவன் கோவில் �..\nகோண்டாவில் ஈழத்துச் சபரிமலை சபரீ..\nகாரைநகர்- ஈழத்துச் சிதம்பரம் திண�..\nகாரைநகர்- ஈழத்துச் சிதம்பரம் திண�..\nகீரிமலை நகுலேஸ்வரம் சிவன் கோவில்..\nஏழாலை வசந்தநாகபூசணி அம்பாள் திரு..\nஇணுவில் தெற்கு அருள்மிகு ஞானலிங்..\nகோண்டாவில் ஈழத்துச் சபரிமலை சபரீ..\nசுன்னாகம் - மயிலணி ஸ்ரீ முத்துமார�..\nயாழ் - வண்ணார்பண்ணை வீரமாகாளி அம்�..\nகோண்டாவில் ஈழத்துச் சபரிமலை சபரீ..\nநல்லூர் ஸ்ரீ கமலாம்பிகா சமேத ஸ்ர�..\nதெல்லிப்பழை துர்க்கை அம்மன் கோவி..\nயாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் நடத்த..\nசுன்னாகம் கதிரமலைச் சிவன் கோவில்..\nமானிப்பாய் மருதடி பிள்ளையார் கோவ..\nகோண்டாவில் ஈழத்துச் சபரிமலை சபரீ..\nமருதனார்மடம் ஸ்ரீ சுந்தர ஆஞ்சநேய..\nதேவார இசைமணி குமார வயலூர் திருஞா�..\nகோண்டாவில் ஈழத்துச் சபரிமலை சபரீ..\n\"நிறைவள்ளுவம்\" நாட்டிய நாடகம் (09.12.201..\nஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் மாநாடு மற..\nஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் மாநாடு மற..\nயாழ் - நாயன்மார்கட்டு ஸ்ரீ எருமேல..\nஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் மாநாடு மற்றும் குருபூசை நிகழ்வு முதலாம் நாள் காலை நிகழ்வுகள் மலர் – 02 (08.12.2017)\nஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் மாநாடு மற்றும் குருபூசை நிகழ்வு இரண்டாம் நாள் காலை நிகழ்வுகள் (08.12.2017)\nபுங்குடுதீவு - கிழக்கு - கண்ணகைப�..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.adiyakkamangalam.com/cookbook/89/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D-gulab-jamun-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-04-26T13:42:21Z", "digest": "sha1:FK4ALVAQOTNDSLBTNK4UB6OGAMPY2PJ5", "length": 10161, "nlines": 187, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam குலோப் ஜாமூன் (Gulab", "raw_content": "\nசமையல் / இனிப்பு வகை\nகுலோப் ஜாமூன் (Gulab Jamun)\nமைதா - 1/4 கிலோ\nசோள மாவு - 2 மேஜை கரண்டி\nசீனி - 1/4 கிலோ\nஉப்பு – 1 சிட்டிகை\nஎண்ணெய் – பொரிப்பதற்கு ஏற்ப\nகேசரி பவுடர் – 1 சிட்டிகை\nமைதா, சோள மாவு, 1 டீஸ்பூன் சீனி, 1 மேஜைக் கரண்டி சூடு செய்யப்பட்ட எண்ணெய், 1 சிட்டிகை உப்பு, சுடுதண்ணீர் தேவைக்கேற்ப சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசைந்து, ½ மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு அதனை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் பொன் நிறமாக பொரித்தெடுத்து நன்றாக ஆறவிடவும்.\nஇன்னொரு அகண்ற பாத்திரத்தில் 1/4 கிலோ சீனி, 1 சிட்டிகை கேசரி பவுடர், ஏலக்காயை பொடியாக்கி அதையும் சேர்த்து கொதிக்க வைத்து 1 கம்பி பதத்திற்கு முன்பாக இறக்கி விடவும். ஆறிய குலோப் ஜாமூன் உருண்டைகளை சீனி பாகில் போடவும். மறுநாள் சுவையான மைதா குலோப் ஜாமூன் ரெடி.\nபீட்ரூட் ஜாமுன் அல்வா (Beetroot Jamun Halwa)\nபப்பாளி பழ அல்வா (Papaya Halwa)\nபச்சரிசி ஹல்வா (Rice Halwa)\nகுலோப் ஜாமூன் (Gulab Jamun)\nசிம்பிள் மைதா கேக் (Simple Maida Cake)\nபீட்ரூட் அல்வா (Beetroot Halwa)\nதேங்காய் பர்பி (Coconut Burfi)\nஅரிசி மாவு புட்டு (Rice Flour Puttu)\nஅவல் ராகி புட்டு (Aval Raggi Puttu)\nபூர்ணக் கொழுக்கட்டை (Poorna Kolukattai)\nபொட்டுக்கடலை உருண்டை (Bengal Gram Sweet)\nபொரி உருண்டை (Pori Urundai)\nஓலைப் பக்கோடா (Ribbon Pakoda)\nவாழைக்காய் சிப்ஸ் (Banana Chips)\nவாழைக்காய் பஜ்ஜி (Banana Bajji)\nவெங்காய பஜ்ஜி (Onion Bajji)\nகருப்பு கொண்டை கடலை சுண்டல்\nவெங்காய பக்கோடா (Onion Bakoda)\nமுந்திரி பக்கோடா (Cashewnut Bakoda)\nநிலக்கடலை பக்கோடா (Peanut Bakoda)\nஜவ்வரிசி முறுக்கு (Sago Murukku)\nஅரிசி மாவு முறுக்கு (Rice Flour Murukku)\nதேங்காய்ப்பால் முறுக்கு (Coconut Milk Murukku)\nமரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் (Tapioca Chips)\nபருப்பு ரசம் (Daal Rasam)\nசெட்டிநாடு கார நண்டுக் குழம்பு\nபயத்தம்பருப்பு தோசை ( Moong dal dosa )\nஃப்ரைட் இட்லி (Fried Idly)\nரவா பொங்கல் (Rawa Pongal)\nகத்திரிக்காய் சட்னி (Brinjal Chutney)\nஎக் ஃப்ரைட் ரைஸ் (Egg Fried Rice)\nசில்லி சிக்கன் (Chilli Chicken)\nமாவு – மேஜைக் குலோப் 1 Gulab பொருட்கள்மைதா சிட்டிகை கரண்டி கிலோ 1 தேவையான ஜாமூன் சீனி Jamun ஏற்ப பவுடர் மேஜை 5 எண்� – கிலோ 1 கேசரி சீனி மாவு2 14 பொரிப்பதற்கு சூடு – டீஸ்பூன் செய்யப்பட்ட சோள ஏலக்காய் 1 கரண்டி சிட்டிகைசெய்முறைமைதா உப்பு எண்ணெய் 14 சோள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.adiyakkamangalam.com/science/2420/kepler-10c-giant-earth-like-planet", "date_download": "2018-04-26T13:37:02Z", "digest": "sha1:HOX3SIUPDZL4ZRUJ4GB7PJ3F72IL3VF7", "length": 8764, "nlines": 75, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam Kepler-10C Giant Earth-like Planet", "raw_content": "\nகெப்லர்-10C எனப்படும் பூமியை போன்ற ராட்சத கிரகம் கண்டுப்பிடிப்பு\nஅடியக்கமங்கலம், 05.06.2014: பூமியை போன்ற ராட்சத கோள்கள் பிரபஞ்சத்தில் காணப்படுவதாக விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த கிரகங்கள் நமது பூமியைப் போலவே அழுத்தமான மேற்பரப்பை கொண்டிருந்தாலும் பூமியை விட 17 மடங்கு எடை கூடிய கிரகம் ஒன்று தொலைதூரத்து நட்சத்திரம் ஒன்றைச் சுற்றி வலம் வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, இந்த புதிய ரக கோள்களை வகைப்படுத்த வேண்டிய அவசியம் எழுந்துள்ளது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள ராட்சத கிரகத்துக்கு கெப்லர்-10C (KEPLER-10C) என்று பெயரிடப்பட்டுள்ளது.\nபூமியிலிருந்து 560 ஒளியாண்டுகள் தூரத்தில் இருக்கிற நட்சத்திரம் ஒன்றைச் சுற்றி இந்த கிரகம் வலம் வருகிறது. இவ்வளவு அதிகமான எடை ஒரு கிரகத்துக்கு வருமானால், அது சுற்றுவட்டாரத்திலுள்ள அனைத்து ஹைட்ரஜன் அணுக்களையும் ஈர்த்து வியாழன் கிரகம் போல வாயுக் கிரகமாகவோ அல்லது நெப்டியூன் போல பனிக்கட்டி கிரகமாகவோதான் இருக்கும் என்று விஞ்ஞானிகள் கருதிவந்தனர். ஆனால் அவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் விதமாக கெப்ளர்-10C (KEPLER-10C) அழுத்தமான மேற்பரப்பைக் கொண்டுள்ளது. பூமியை விட இரண்டு மூன்று மடங்கு விட்டம் கொண்டுள்ள இந்த கிரகம் 17 மடங்கு எடையைப் பெற்றுள்ளது என்றால் இந்தக் கிரகம் பூமியை விட அடர்த்தியானது என்று தெரியவருகிறது.\nசூரியனில் பெரிய துளைகள் - நாசா\nவிண்வெளி குப்பைகளை அகற்ற நாசா முயற்சி\nசெவ்வாய் கிரகத்தில் நீல நிற சூரிய அஸ்தமனம்\nபூமிக்கு மேலே வாழும் உயிரினங்கள் - ஆய்வறிக்கை\nசெவ்வாய் கிரகத்தில் மிகப்பெரிய கடல் இருந்ததாக விஞ்ஞானிகள் தகவல்\nசெவ்வாய் கிரகத்திலும் செல்பி எடுத்த கியுரியாசிட்டி ரோபா\nசெவ்வாய் கிரகத்தில் ஏற்பட்ட மர்ம மூடுபனியால் விஞ்ஞானிகள் குழப்பம்\nபூமியைப் போல எட்டு புதிய கிரகங்கள் கண்டு பிடிப்பு\nசெவ்வாய் கிரகத்திற்குச் செல்ல புதிய மாற்று பாதை\nபூமியைவிட இரண்டரை மடங்கு பெரிய சூப்பர்-எர்த்தை கெப்ளர் கண்டுப்பிடித்துள்ளது\nசெவ்வாய் கிரகத்தில் பிரம்மாண்டமான ஏரி\nதண்ணீரில் இருந்து எரிபொருள் கண்டுபிடிப்பு\nவால் நட்சத்திரத்தில் பிலே விண்கலத்தை இறக்கி சாதனை\nவியாழன் கிரகத்தில் கடும் புயலால் ராட்சத கண் போன்ற தோற்றம்\nசூரிய வெப்பத்தை விட பத்தாயிரம் மடங்கு சக்தி வாய்ந்த சூரிய வெடிப்பு\nபூமியிலிருந்து 1800 ஒளி ஆண்டுகள் தூரத்தில் மிகப் பெரிய நிலா\nவிண்வெளியில் 176 அடி நீளமுள்ள தொலைநோக்கி நிருவ நாசா திட்டம்\nகெப்லர்-10C எனப்படும் பூமியை போன்ற ராட்சத கிரகம் கண்டுப்பிடிப்பு\nசூரியனுக்கு அருகில் குளுமையான நட்சத்திரம்\nகானிமெடே சந்திரனில் குவிந்து கிடக்கும் ஜஸ்கட்டிகள்\nசூரியனுக்கு அருகில் குளிர்ச்சியான நிழல் நட்சத்திரங்கள்\nசனி கிரகத்தில் புதிய துணை கிரகம் கண்டுபிடிப்பு\nசனியின் துணைகோள் என்செலாடஸில் கடல் போன்ற தண்ணீர்\nசெவ்வாய் கிரகத்தில் உறைந்து கிடக்கும் நீர்\nசூரிய குடும்பத்தில் குட்டி கிரகம் கண்டுபிடிப்பு\nபுதன் கிரகம் வேகமாக சுருங்கி வருகிறது\nஒன்றரைக் கோடி கிலோ மீட்டர் தூரம் கடந்து விட்ட மங்கள்யான்\nநட்சத்திர கூட்டங்களுக்கிடையில் பாயும் ஹைட்ரஜன் ஆறு\n440 கோடி ஆண்டுகளுக்கு முன் உருவான சனி கிரக வளையங்கள்\nஇந்த எடை giant மடங்கு கிரகங்கள் 17 பூமியை போலவே கோள்கள் போன்ற கூடிய கூறுகின்றனர் ஒன்று நமது பூமியைப் Kepler10C விண்வெளி காணப்படுவதாக பூமியை விட கொண்டிருந்தாலும் பிரபஞ்சத்தில் ராட்சத planet தொலைத� அழுத்தமான கிரகம் earthlike மேற்பரப்பை ஆராய்ச்சியாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.surekaa.com/2008/07/blog-post_23.html", "date_download": "2018-04-26T13:18:21Z", "digest": "sha1:TZLARS7QXAFW3ATGJRAMNNADLXNM6OHX", "length": 24829, "nlines": 326, "source_domain": "www.surekaa.com", "title": "சுரேகா: எங்க ஸ்டைல் சோதனை!!!", "raw_content": "\nநம்ப தமிழ்நாட்டு எல்காட் நிறுவனம் மாணவர்களுக்கான மடிக்கணிணி திட்டம் அறிவிச்சிருக்காங்க அது உண்மையிலேயே பயனுள்ளதாகவும், விலை மலிவானதாகவும்தான் இருக்கு அது உண்மையிலேயே பயனுள்ளதாகவும், விலை மலிவானதாகவும்தான் இருக்கு ஆனா அந்த ஏசர் லேப்டாப்பை இந்த மாதிரி சோதனைக்கு உட்படுத்தினதுதான்....ஏன்னு புரியலை\nநாம ஏன் ஏறி நிக்கப்போறோம்\nநான் ஏண்டா நடுராத்திரில சுடுகாட்டுக்குப்போனும் ன்னு வடிவேல் கேக்கறதுதான் ஞாபகத்துக்கு வருது\nசொன்னது சுரேகா.. வகை நடப்பு\nஇதுதான் பென்ச் மார்க் டெஸ்ட்டா\nஸ்ட்ரெஸ் டெஸ்டிங் என்பதை தப்பாப் புரின்சிக்கிட்டாங்களோ\nநாம ஏன் ஏறி நிக்கப்போறோம்\nஇங்கே பம்பர் ட்டு பம்பர் முழுக் காப்பீடு வாங்கும் பொழுது கணினித் திரை ஒடைஞ்சிருந்தாலோ இல்ல வெளிப் புறம் ஒடைஞ்சிருந்தாலோ எந்தக் கேள்வியுமில்லாம மாத்திக் கொடுக்கிறோமின்னு உறுதி கொடுத்துட்டு 3 வருஷமெல்லாம் எக்ஸ்டெண்டட் வாராண்டி எடுத்துக்கிறாங்க.\nஅப்படி ஏதாவது தவறி ஏடாகூடாம விழுந்து வைச்சா சான்ஸ் இருக்குமில்ல, அதனை ஃப்ரூ பண்ணவா இருக்குமோ\nஊர்ல கிடக்கிற ஏசெர்க்கு இது போன்ற வாராண்டி இருக்கு... கொஞ்சம் மாடியில இருந்து கீழே தூக்கிப் போட்டு ஒடைச்சு இங்க அனுப்பிவையேன் :-P.\nசந்தையில் 51000 ரூபாய்க்கு விற்கப்படும் (அதே மாடல்) மடிக்கணினிகளை எல்காட் நிறுவனம் 30,000 ரூபாய்க்கு அளிக்கிறது.\nஇதனால் அந்த மடிக்கணினி முகவர்கள் ”அது போலி, நாங்கள் வைத்திருப்பது தான் நிஜன்” என்று சொல்ல ஆரம்பித்ததாக கேள்வி.\nஎனவே வதந்திகளை எதிர்க்கத்தான் இந்த நடவடிக்கை\nஆமா...இதை FIRE WALK டெஸ்டுன்னு சொல்லுவாங்க\nச்சும்மா லந்துக்கு போஸ்ட் பண்ணினேன்.\n//அப்படி ஏதாவது தவறி ஏடாகூடாம விழுந்து வைச்சா சான்ஸ் இருக்குமில்ல, அதனை ஃப்ரூ பண்ணவா இருக்குமோ\nஅதன் வலிமையை டெஸ்ட் பண்ணத்தான் அப்படி செஞ்சிருக்காங்க\nஆனா ஏறி நின்ன அதிகாரிகள்தான் கொஞ்சம் குண்டா தெரியுறாங்க \nஸ்ட்ரெஸ் டெஸ்டிங் என்பதை தப்பாப் புரின்சிக்கிட்டாங்களோ\nஇதுவும் ஒரு வித ஸ்ட்ரெஸ்தானே....\nஎங்க வூட்டுக் கம்பிய்யூட்டர் மேலே ஏற் நின்ன பாக்கட்டா ரிஸ்க் எடுக்கலாமா நான் ஏம்பா ராத்ரி சுட்காட்டுக்குப் போகணும் \nஎங்க வூட்டுக் கம்பிய்யூட்டர் மேலே ஏற் நின்ன பாக்கட்டா ரிஸ்க் எடுக்கலாமா நான் ஏம்பா ராத்ரி சுட்காட்டுக்குப் போகணும் \nஅவுங்க இந்த மாதிரி டெஸ்டெல்லாம் நடத்தியிருக்கலாம்.\nஆனா அதை வீடியோ எடுத்து மெனக்கட்டு போட்டு பயமுறுத்தவேண்டாமுல்ல\nஅதே மாதிரி, இன்னும் எத்தனையோ பென்ச்மார்க் இருக்கு \nஅதுக்காகத்தான்.....பதிவு எழுத மேட்டர் கிடைக்கலைன்னா நாங்க இப்படித்தான்\nஒரு பண்ணையின் மரணப்படுக்கை - இரண்டாம் பாகம்\nஅரசியல் ( 11 )\nஅவலம் ( 13 )\nஅழைப்பு ( 6 )\nஅனுபவம் ( 50 )\nஅன்பு ( 19 )\nஆரஞ்சு மணக்கும் பசி ( 1 )\nஇயற்கை ( 3 )\nஇலக்கியம் ( 2 )\nஉலக அழிவு ( 1 )\nஒலிப் பதிவு ( 2 )\nஓமப்பொடி ( 9 )\nகண்ணீர் ( 1 )\nகவிக்கதை ( 3 )\nகவிதை ( 26 )\nகேட்டால் கிடைக்கும் ( 14 )\nகொசுவத்தி ( 16 )\nசவால் சிறுகதை ( 1 )\nசிரிப்பு ( 2 )\nசினம் ( 5 )\nசினிமா ( 21 )\nசுதந்திரம் ( 1 )\nட்விட்டுரை ( 2 )\nதத்துவம் மாதிரி ( 29 )\nதமிழ்மண நட்சத்திரம் ( 18 )\nதிறமை இடைவெளி ( 1 )\nநடப்பு ( 94 )\nநன்றி ( 9 )\nநாடகம் ( 6 )\nநினைவுகள் ( 2 )\nநேர்முக்கியத் தேர்வு தொடர் ( 3 )\nபாராட்டு ( 10 )\nபார்வை ( 4 )\nபுது மீள்பதிவு ( 3 )\nபுத்தகம் ( 8 )\nபுனைவு ( 1 )\nமகளிர் தினம் ( 1 )\nமகிழ்ச்சி ( 1 )\nமயன் ( 1 )\nமீள்பதிவு ( 7 )\nமொக்கை ( 17 )\nயுடான்ஸ் நட்சத்திரம் ( 6 )\nவாழ்த்து ( 8 )\nவிமர்சனம் ( 15 )\nவேலைத் தகுதி ( 2 )\nஸ்டாலின் சரவணன் ( 1 )\nஎன் நெருங்கிய நட்பாக நான் நினைக்கும், மதிக்கும் பதிவுலகில் இதைப்பகிரவேண்டிய நிர்ப்பந்தத்தை என் மனசாட்சி ஏற்படுத்தியதன் விளைவுதான் இ...\nசிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி நெறியாளர், வானொலி நிகழ்ச்சியாளர், பத்திரிகையாளர், விளம்பரப்பட தயாரிப்பாளர், நண்பர் கோபிநாத்தின் திருமணம் ...\nசென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் சினிமா டுடே என்ற திரைத்துறைக் கண்காட்சிக்கு நேற்று (சனிக்கிழமை) சென்று சுற்றிப்பார்த்ததில் நேரம் ம...\nஒரு கொப்பனாம்பட்டித் தமிழன் சென்னையில் மூன்றாண்டுகள் குப்பை வீசியபின் தன்னை சென்னையனாகக் காட்டிக்கொள்ள வார இறுதிகளில் படையெடு...\nகுமரன் தியேட்டரும்.. ..குடுவைத் தண்ணீரும் . .\nசூது கவ்வும் படம் பார்க்கலாம் என்று திடீர் யோசனை வந்தபோது நான் சென்றுகொண்டிருந்தது மடிப்பாக்கம் சாலை. நேரமும் மால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} {"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF/44-207178", "date_download": "2018-04-26T13:31:39Z", "digest": "sha1:VOKY34ZGZD5AJG6TFPEW36RIUK7UBUQH", "length": 9359, "nlines": 86, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || உலகக் கிண்ணத்துக்கு தகுதி பெறத் தவறியது இத்தாலி", "raw_content": "\n2018 ஏப்ரல் 26, வியாழக்கிழமை\nஉலகக் கிண்ணத்துக்கு தகுதி பெறத் தவறியது இத்தாலி\nநான்கு தடவைகள் கால்பந்தாட்ட உலகக் கிண்ணத்தை வென்ற இத்தாலி, 1958ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதற்தடவையாக, ரஷ்யாவில் அடுத்தாண்டு இடம்பெறவுள்ள உலகக் கிண்ணத்துக்கு தகுதிபெறத் தவறியுள்ளது.\nசுவீடனுக்கெதிரான முதலாவது சுற்று தகுதிப் போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்திருந்த இத்தாலி, இலங்கை நேரப்படி இன்று அதிகாலை இடம்பெற்ற இரண்டாவது சுற்று தகுதிப் போட்டியில் எதுவிதக் கோல்களையும் பெறாமல் 0-0 என போட்டியை சமநிலையில் முடிக்க, 1-0 என்ற மொத்த கோல் அடிப்படையில் உலகக் கிண்ணத்துக்கு தகுதிபெற, இத்தாலி உலகக் கிண்ணத்துக்கு தகுதிபெறத் தவறியது.\nஅந்தவகையில், 1930ஆம் ஆண்டு இடம்பெற்ற முதலாவது உலகக் கிண்ணத்தில் பங்குபற்ற மறுத்திருந்த இத்தாலி, தமது வரலாற்றில் இரண்டாவது தடவையாக உலகக் கிண்ணத்துக்கு தகுதிபெறத் தவறியுள்ளது. மறுபக்கம், 2006ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதற்தடவையாக உலகக் கிண்ணத்துக்கு சுவீடன் தகுதிபெற்றுள்ளது.\nஇந்த இரண்டாவது சுற்று தகுதிப் போட்டியில், 76 சதவீதமான நேரம் இத்தாலியே பந்தை வைத்திருந்தபோதும் கோலெதனையும் பெற முடியாமல் போக, முதலாவது சுற்று தகுதிப் போட்டியில், சுவீடனின் மத்திய கள வீரர் ஜகொப் ஜொஹன்சனின் உதை, இத்தாலியின் மத்திய கள டானியல் டி றோசியில் பட்டு கோலானதே, உலகக் கிண்ணத்துக்கு சுவீடன் தகுதிபெறக் காரணமாய் அமைந்தது.\nஇப்போட்டியின் இறுதி நேரத்தில், மாற்று வீரராகக் களமிறங்கிய ஸ்டெபன் எல் ஷராவி கோல் கம்பத்தை நோக்கி உதைத்த உதையே, இத்தாலி கோல் பெறுவதற்கான சிறந்த சந்தர்ப்பமாக அமைந்தபோதும் இந்த உதையை சுவீடனின் கோல் காப்பாளர் றொபின் ஒல்சன் தடுத்திருந்தார். இது தவிர இத்தாலியன் முன்கள வீரர் சிரோ இம்மொபைல் பல வாய்ப்புகளைத் தவறவிட்டிருந்ததுடன், போட்டியின் முதற்பாதியில் இவர் தாழ்வாக உதைத்த உதையொன்றை சுவீடனின் அணித்தலைவரான அன்ட்ரியாஸ் கிரான்குவிஸ்ட் தடுத்திருந்தார்.\nஇந்தப் போட்டியில் கோல் கம்பத்தை நோக்கி 20 உதைகளை இத்தாலி உதைத்திருந்தபோதும் சுவீடனின் கோல் கம்பப் பகுதிக்குள் அடிக்கடி நின்றிருந்த ஆறு பின்கள வீரர்களும் வந்த ஒவ்வொரு பந்துப் பரிமாற்றங்களையும் தடுத்திருந்தனர். மொத்தமாக 56 தடவைகள் உதைகளை வெளியேற்றியது மட்டுமன்றி, 19 தடவைகள் பந்துகளுடன் வந்தவர்களை இடைமறித்திருந்தனர்.\nஎவ்வாறெனினும், இத்தாலியின் மார்க்கோ பரோலோவை சுவீடனின் லுட்விக் அகஸ்டின்ஸன் வீழ்த்தியபோதும் இத்தாலியின் மட்டியோ டர்மியன், அன்ட்ரியா பர்ஸாலி ஆகியோர் கையால் பந்தை கையாண்டிருந்தபோதும் பெனால்டிகள் வழங்கப்பட்டிருக்கவில்லை.\nஉலகக் கிண்ணத்துக்கு தகுதி பெறத் தவறியது இத்தாலி\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cinema.vikatan.com/movie-review/94156-baby-driver-movie-review.html", "date_download": "2018-04-26T13:12:53Z", "digest": "sha1:XSTR7P5G56ONGQIUWBV4LSGUFWKYSTJK", "length": 28449, "nlines": 382, "source_domain": "cinema.vikatan.com", "title": "தோட்டா தெறிக்க ஒரு மியூசிக்கல் ரெய்டு! - `பேபி டிரைவர்' படம் எப்படி? | Baby Driver Movie review", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nதோட்டா தெறிக்க ஒரு மியூசிக்கல் ரெய்டு - `பேபி டிரைவர்' படம் எப்படி\nமியூசிக்கல் படங்கள், பெரும்பாலும் ரொமான்டிக் படங்களாகத்தான் (லா லா லேண்டு, பியூட்டி அண்டு தி பீஸ்ட்) ஹாலிவுட்டில் வெளிவந்துள்ளன. ஜானி டெப், ஹெலனா பொன்ஹாம் கார்ட்டர் நடித்த ஹாரர் திரைப்படமான `ஸ்வீனி டாட்' எல்லாம் விதிவிலக்கு. அதிரடி ஆக்‌ஷன் படத்துக்குப் பாடல்கள் தேவைப்படுவதே இல்லை. அப்படியே தேவைப்பட்டாலும், சம்பிரதாயப் பாடலாக ஒன்றே ஒன்று ஒலிக்கும். `பேபி டிரைவர்' படத்தில் முழுக்க முழுக்கப் பாடல்கள் மட்டும்தான். ஆக்‌ஷன் படங்களில் சில ஆண்டுகளுக்கு முன் ஆஸ்கர்களைக் குவித்த `மேட்மேக்ஸ்' ஒரு ரகம் என்றால், `பேபி டிரைவர்' இன்னொரு ரகம்.\nஒரு கதை படமாவதற்கும், ஆகாமல் கிடப்பில் போடப்படுவதற்கும் ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். சில கதைகளின் கரு, படமாவது வரை வளர்ந்துகொண்டே இருக்கும். இயக்குநரும் எழுத்தாளருமான எட்கர் ரைட், 1994-ம் ஆண்டு இந்தப் படத்தின் கதையை எழுதினார். பிறகு 2003-ம் ஆண்டு நோயல் ஃபீல்டிங் நடித்த ஒரு மியூசிக்கல் வீடியோவை இயக்குகிறார். அதில், வங்கிக்கொள்ளையர்களுக்காக வண்டி ஓட்டும் நபராக நடிக்கிறார் நோயல். அவனுக்கு பாடல்கள் கேட்டுக்கொண்டே ஓட்டுவதுதான் பிடிக்கும். இந்தக் கதாபாத்திரத்தின் தன்மையை அப்படியே `பேபி டிரைவர்' படத்தினுள் கொண்டுவருகிறார் எட்கர் ரைட். 22 ஆண்டுகளுக்குப் பிறகு, தான் எழுதி இயக்க நினைத்த கதையை இன்னும் அதிரடியாக `பேபி டிரைவர்' படத்தின் மூலம் சொல்லியிருக்கிறார் எட்கர் ரைட். சமீபத்திய ஆண்டுகளில் வெளியான படங்களில், சிறப்பான ஓர் அனுபவத்தைத் தருகிறது `பேபி டிரைவர்'. டொரென்டினோ, கை ரிட்ச்சி போன்ற இயக்குநர்களுக்கு ஒரு கல்ட் ரசிகர் கூட்டம் இருப்பது போல், இனி எட்கர் ரைட்டுக்கும் வரப்போவது உறுதி.\nஏதோ ஒரு காரணத்தின் பேரில், ஒயிட் காலர் வில்லன் டாக்கிடம் (கெவின் ஸ்பேஸி) கடன்பட்டிருக்கிறார் பேபி. சிறுவயதில் பேபிக்கு ஏற்படும் ஒரு விபத்தால், அவனுக்கு காது இரைச்சல் `டின்னிடஸ்' (tinnitus) ஏற்படுகிறது. ஒவ்வொரு திருட்டுக்கும் தன் டீமை மாற்றிக்கொண்டே வருகிறார் டாக். ஆனால், காரின் டிரைவர் மட்டும் எப்போதுமே பேபிதான். போலீஸிடம் யார் சிக்கினார்கள்; யார் தப்பினார்கள் என்பதை அதிரடி வேகத்தில் இசையுடன் சொல்லியிருக்கிறது `பேபி டிரைவர்'.\nஒவ்வொரு திருட்டுக்கும் ஒவ்வொரு டீம். அவர்களுக்கு வித்தியாசமான அடைமொழிகள், ஸ்டைல், எல்லோருக்கும் ஒரு குட்டி அறிமுக கதை என ஒவ்வொரு கதாபாத்திரமும் ரியலாக இருக்கிறது. ஜேசன் `பட்டி (buddy)' லியோன் `பேட்ஸ்' , மோனிகா `டார்லிங் ' , எட்டி `நோ- நோஸ்' என ஒவ்வொருவருக்கும் ஒரு நிக் நேம் வேறு. டீமில் இருக்கும் அனைவருமே கொடூரக் கெட்டவர்கள். 24*7 காதல் மோடிலேயே சுற்றும் ஜேசனும் மோனிகாவும் ஒருவகை என்றால், பேசியே ஒருவனைக் கடுப்பேற்றும் லியோன் `பேட்ஸ்' வேறு லெவல் ட்ரீட்மென்ட்.\nஜேமி ஃபாக்ஸ் போன்ற நாயகர்களின் நடிப்பைக்கூடப் பின்னுக்குத் தள்ளி இதில் அசால்ட்டாக ஸ்கோர்செய்வது பேபியாக நடித்திருப்பது அன்செல் எல்கார்ட்தான். டீமில் நடக்கும் முக்கியமான மீட்டிங் சமயங்களிலும் பாடல்கள் மட்டுமே பேபி கேட்கிறார். வாய் அசைவுகளை மட்டுமே வைத்து எல்லாவற்றையும் புரிந்துகொள்கிறார். அவர்கள் பேசும் வார்த்தைகளை வைத்து, அதை ரீமிக்ஸ் செய்து பாடல் ஆக்குவது. பிறகு அதுவே அவனுக்கு ஆபத்தாக முடிவது என பேபியின் கதாபாத்திரம் அதிரடி ஃப்ரெஷ்.\nபடத்தின் மற்றுமொரு ப்ளஸ் வசனங்கள். வில்லன் கூட்டத்துக்குள் பேசப்படும் சின்னச் சின்ன காமெடி ஒன்லைனர்கள் செம. ``HATE'னுதான் டாட்டூ குத்தினேன்.வேலையே கிடைக்கலை. அதான் `HAT'னு மாத்திக்கிட்டேன்', `அவன் பேச மாட்டானா' Retarded ... No... Slow... . இந்த வார்த்தைகளை அப்படியே ரீமிக்ஸ் செய்து அதைப் பாடலாக்கியவிதம் சூப்பர். படத்தில் கிட்டத்தட்ட 30 பாடல்கள் ஒலிக்கின்றன. சிறு வயதில் பேபிக்கு நேரும் விபத்துக்கு முன், அவனின் தாய் பாடிய பாடல் தொடங்கி தான் கேட்கும் உரையாடல் அனைத்தையும் ஒவ்வொரு கேசட்டில் பதிவேற்றுகிறார் பேபி. அதிலும் குறிப்பாக, பேபியும் அவர் காதலியும் பேசிக்கொள்ளும் சின்னச் சின்ன வசனங்கள்கூட ரொமான்டிக்காக இருக்கிறது.\nபடத்தின் மற்றொரு ப்ளஸ் அதன் அதிரடி வேகமும், அதற்கு ஈடுகொடுத்திருக்கும் ஜொனாதன் அமோஸ், பால் மெச்லிஸ் எடிட்டிங்கும்தான். `இனி இந்த வேலை வேண்டாம்' என முடிவெடுத்து, ஒரு கடைக்குள் நுழைந்து வெளியே பீட்சா டெலிவெரி பையனாக வருவான் பேபி. தன் துப்பாகியை சம்பவ இடத்திலேயே தவறவிட்டவனுக்கு நேரும் கதி என, பல காட்சிகள் செம ஃபாஸ்ட்.\nபடத்தின் இறுதிக்காட்சிகள், டெம்ப்ளேட் ஹாலிவுட் சினிமா பார்த்த அனுபவத்தைத் தருவது மட்டுமே படத்தின் ஒரே ஒரு குறை. ஆரம்பம் முதல் எல்லாவற்றையும் அசால்ட்டாக டீல் செய்யும் கெவின் ஸ்பேஸி, காதல் ஜோடிகளுக்கு மனம் இறங்குவதெல்லாம்... `அட போங்க பாஸ்' ரகம். நல்லவன் ஒருவனுக்கு, ஏதொவொரு வகையில் எப்போதும் நல்லது நடக்கும் என்பதைக் காட்டும் இறுதிக்காட்சிகள் கொஞ்சம் எமோஷனல்.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\n\" - தொண்டிமுதலும் த்ரிக்‌சாக்‌ஷியும் படம் எப்படி\nஏதோ பிரச்சனைக்காக போராடிக் கொண்டிருந்தவர்களை, வேறு பிரச்சனை சந்திக்கத் தள்ளிவிடுகிறது அந்தப் பயணம். அது என்ன இதில் ஃபஹத் எங்கு வருகிறார் இதில் ஃபஹத் எங்கு வருகிறார்\nசினிமா காதலர்கள் பார்க்கவேண்டிய இந்த ஆண்டின் மிகச்சிறப்பான படங்களுள் `பேபி டிரைவர் ' படமும் ஒன்று. சினிமா திரையரங்க ஸ்டிரைக் எல்லாம் முடிந்து, வாய்ப்பு கிடைக்கும்போது பாருங்கள். டோன்ட் மிஸ்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா\n - `அதாகப்பட்டது மகாஜனங்களே' படம் எப்படி\nமொட்ட பையன் காதலிச்சா என்ன ஆகும் - ‘இவன் யாரென்று தெரிகிறதா - ‘இவன் யாரென்று தெரிகிறதா\n``சிவகார்த்திகேயன் பங்கமா கலாய்ப்பார்... மா.கா.பா எவ்வளவு கலாய்ச்சாலும் வாங்கிப்பார்..’’ - அத்தியாயம் 13\n\"25 சூப்பர் ஹீரோக்கள்... ஒரு சூப்பர் வில்லன் தேனோஸ்\n``கார்த்திக்... என்னை கல்யாணம் பண்ணிக்குவீங்களானு கேட்கணும்போல இருக்கு\" - விஜி சந்திரசேகர்\n\" 'சுந்தரபாண்டியன் 2' தயாரிக்கிறேன்; விஜய்சேதுபதி கேரக்டர்ல நடிக்கிறேன்\n\"ஆமாங்க... வருத்தப்படாத வாலிபர் சங்கம் நல்ல படம்தான்’’ - ‘விகடன் பிரஸ் மீட்’ சிவகார்த்திகேயன்\n\"வைகோ, சீமான் மோதல் வேதனை தருகிறது” - கலங்கும் திருமா\nமிஸ்டர் கழுகு: பி.ஜே.பி மீது ரஜினி வருத்தம்\nஆற்றை சாகடிக்கும் மணல் மாஃபியாக்கள்\nநான் ரம்யாவாக இருக்கிறேன் - 21\n\"வைகோ, சீமான் மோதல் வேதனை தருகிறது” - கலங்கும் திருமா\nஜெயித்தது தோனி... ஜெயிக்க வைத்தது கோலி... ஜஸ்ட் கோலி திங்ஸ்\nதிருடிய மொபைலை அன்லாக் செய்ய திருடர்கள் செய்யும் இன்னொரு திருட்டுத்தனம்... உஷார்\n'நிர்மலா தேவி வாழ்க்கையே ரகசியம்தான்'- காவியன் நகர் மக்கள் சொல்வது என்ன\nமெக்கானிக்குடன் சாலையில் நின்ற போலீஸார்... கதிகலங்கிப்போன இருசக்கர வாகன ஓட்டிகள்\nஜெயித்தது தோனி... ஜெயிக்க வைத்தது கோலி... ஜஸ்ட் கோலி திங்ஸ்\n``மன அழுத்தம் போக்க உங்களை நீங்கள் ஜெயிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்\n``லட்சியத்தை நோக்கி நகர்ந்துகொண்டே இருந்தால் மனஅழுத்தம் இல்லை. மனஅழுத்தம் போக்க உங்களை நீங்கள் ஜெயிக்கக் கற்க வேண்டும்’’ என்கிறார் எழுத்துச் சித்தர் பாலகுமாரன்.\nகருவளையத்தை மறைக்க மேக்கப் வேண்டாம்... இரும்புச்சத்து உணவு போதும்\nகருவளையத்தை மறைக்க மேக்கப் வேண்டாம். எந்தக் காரணத்தினால் உங்களுக்குக் கருவளையம் வந்திருக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டால் அதைச் சரி செய்வது சுலபம்..\nகொடைக்கானல் மெர்க்குரி ஆலை... அன்று நடந்ததும் இன்றைய நிலையும்\nஅவர்கள் குறைக்கவேண்டியதாக அரசு கூறிய மெர்க்குரி அளவு, உண்மையில் குறைக்கவேண்டிய அளவைவிட 20 மடங்கு அதிகம். இது யூனிலிவர் செலவைக் குறைப்பதற்காகச் செய்யப்பட்டது.\nவிகடன் பிரஸ்மீட்: அஜித்திடம் என்ன பிடிக்காது விஜய்யிடம் என்ன பிடிக்கும்\n“இந்த வேலைநிறுத்தம், இந்திய சினிமாவையே கோலிவுட் பக்கம் திருப்ப வெச்சிருக்கு. இதன் மூலமா...\nஜெ. கன்னத்திலிருந்த நான்கு புள்ளிகளும் அவிழாத முடிச்சுகளும்\nமரணத்துக்குப் பிறகு ஜெயலலிதா உடல் ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டபோது, ஜெ. கன்னத்தில் காணப்பட்ட நான்கு புள்ளிகள் குறித்துப் பெரும் சர்ச்சை எழுந்தது. அந்த நான்கு புள்ளிகள் குறித்த மர்ம முடிச்சுகளை அவிழ்ப்பதற்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முயற்சி செய்துள்ளது.\n\"வைகோ, சீமான் மோதல் வேதனை தருகிறது” - கலங்கும் திருமா\nகாவிரிப் பிரச்னை, எஸ.சி, எஸ்.டி வன்கொடுமைத் தடுப்பு சட்டம் ஆகியவற்றுக்கான போராட்டங்களில் மும்முரமாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cinema.vikatan.com/movie-review/95639-rubaai-movie-review.html", "date_download": "2018-04-26T13:15:58Z", "digest": "sha1:X5JRDYWIJSWFYKCG7JMFCJIRW5ZAFL2N", "length": 31617, "nlines": 385, "source_domain": "cinema.vikatan.com", "title": "செல்லுபடியாகுமா இந்த கரன்சி... ‛ரூபாய்’ படம் எப்படி? | Rubaai Movie Review", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nசெல்லுபடியாகுமா இந்த கரன்சி... ‛ரூபாய்’ படம் எப்படி\nகடன் தொல்லையால் பாதிக்கப்பட்ட மூவருக்கு, திடீரென கத்தைக் கத்தையாகப் பணம் கிடைத்தால்.. `ரூபாய்' படத்தின் ஒன்லைன் இதுதான்.\nசந்திரன் (பரணி) மற்றும் கிஷோர் ரவிச்சந்திரன் (பாபு) இருவருக்கும் `பரணி பாபு' எனும் லாரிதான் சொத்து, சொந்தம், பந்தம் எல்லாமே. இருவரும் தேனியிலிருந்து கோயம்பேடு சந்தைக்கு, காய்கறி ஏற்றி வருகிறார்கள். மறுநாளுக்குள் தேனிக்குத் திரும்பி, 18,000 ரூபாய் கடன்தொகையைக் கட்ட வேண்டும். இல்லையேல், டெம்போ பறிமுதல் செய்யப்படும் எனும் இக்கட்டான சூழ்நிலையில் தவிக்கிறார்கள். காய்கறி ஏற்றி வந்ததற்கும் குறைவான கூலியே கிடைக்க, மிச்சப் பணத்தை எப்படிப் புரட்டுவது என நொந்துபோகிறார்கள். அந்தநேரத்தில் வீடு காலிசெய்ய லாரி தேடி அலைந்துகொண்டிருக்கும் சின்னி ஜெயந்த் (குங்குமராஜன்) இவர்களின் கண்ணில் பட, 2,000 ரூபாய்க்கு டீல் பேசி லாரியை ஸ்டார்ட் செய்கிறார்கள்.\nசின்னி ஜெயந்துக்கு சொந்தம் எனச் சொல்லிக்கொள்ள ஒரே மகள், ஆனந்தி (பொன்னி). அவரைப் பார்த்ததும் சந்திரனின் வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா ஓர் உருண்டை உருள்கிறது. குடி மாறிச் செல்லவிருந்த வீடு, கடைசி நேரத்தில் கிடைக்காமல்போய்விடுகிறது. வீடு புரோக்கரும் `வேற வீடு காட்டுறேன். பின்னாலேயே வாங்க' என 5,000 ரூபாயை வாங்கிக்கொண்டு சந்து பொந்துக்குள் புகுந்து எஸ்கேப் ஆகிவிடுகிறார். வீடு கிடைக்காமல் வீட்டுச் சாமான்களோடு சின்னி ஜெயந்தும் அவரின் மகள் ஆனந்தியும் லாரியிலேயே தங்கிவிடுகிறார்கள். இதனால், கிஷோர் ரவிச்சந்திரனுக்கும் சின்னி ஜெயந்துக்கும் இடையே மோதல் வெடிக்கிறது.\nமறுபுறம் இரவோடு இரவாக வங்கியில் ஓட்டை போட்டு 2 கோடியே 30 லட்சம் ரூபாயை ஆட்டைப்போடுகிறார் கொடூரக் கொள்ளையன் ஹரீஷ் உத்தமன். கொள்ளையடித்த பணப்பையை போலீஸிடமிருந்து மறைக்க, பரணி பாபு லாரியில் சாமானோடு சாமானாக மறைத்து வைத்துவிடுகிறார். ஒருகட்டத்தில் கிஷோர் ரவிச்சந்திரனுக்கும் சின்னி ஜெயந்துக்கும் மோதல் முற்றிவிட, லாரியில் இருக்கும் சாமான்களைத் தூக்கி நடுரோட்டில் எரிகிறார் கிஷோர். அப்போது அந்தப் பணப்பையும் கீழே விழுந்து சிதற, நால்வரும் அதிர்ச்சியில் உறைந்துப்போகிறார்கள். அவர்கள் அந்தப் பணத்தை என்ன செய்தார்கள், அந்தப் பணம் அவர்களை என்ன செய்தது என்பதை தியேட்டரில் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள் மக்களே\n`கயல்' படத்தின் அதே ஜோடி. அந்தப் படத்தில் வருவதுபோல் ஆனந்தியைப் பார்த்ததும் சந்திரனுக்கு மனசுக்குள் இடியும் மின்னலுமா அடிச்சுப் பிரிச்சு மேஞ்சுட்டுப்போயிடுது. `கயல்' படத்தில் வருவது போன்றே இந்தப் படத்திலும் சந்திரனுக்கும் அவரின் நண்பருக்கும் வீடு, விலாசம் என எதுவும் கிடையாது. `கயல்' படத்தில் வருவது போன்றே இந்தப் படத்திலும் ஆனந்திக்காக எதையும் செய்யத் துணிகிறார் சந்திரன். `கயல்' படத்தில் வருவது போன்றே அழகாய் இருக்கிறார் ஆனந்தி; தேவையான அளவு நடித்திருக்கிறார். கிஷோர் ரவிச்சந்திரன் கவனம் ஈர்க்கிறார். `கில்பான்சி', `பில்போத்ரி' இல்லாத சின்னி ஜெயந்த், குங்குமராஜன் எனும் கதாபாத்திரத்தில் அளவாக, அழகாக நடித்து, தான் அனுபவம் வாய்ந்த நடிகர் என்பதை நிரூபித்திருக்கிறார். வழக்கம்போல் ஹரீஷ் உத்தமனைப் பார்த்தாலே பீதியாகிறது. படத்தில் வரும் அத்தனை கதாபாத்திரங்களும் இயல்பாக நடித்து, படத்துக்குப் பலம் சேர்த்திருக்கிறார்கள்.\n`கயல்' மட்டுமல்ல, பிரபுசாலமனின் மற்ற படங்களையும் ஞாபகப்படுத்துகிறது இளையராஜாவின் ஒளிப்பதிவு. `மைனா'வுக்கு ஒரு `ஜிங்கு ஜிக்கா', `கும்கி'க்கு ஒரு `சொய்ங் சொய்ங்', `கயல்'க்கு ஒரு `டியாலோ டியாலோ'போல் `ரூபாய்'க்கு ஒரு `டுக்கும் டுக்கும்' கொடுத்திருக்கிறார் இமான். `பிரபுசாலமன்தான் இந்தப் படத்தையும் இயக்கியிருப்பாரோ' எனச் சந்தேகப்படும் அளவுக்கு படத்தில் அவ்வளவு பிரபுசாலமன் டச். மாரடைப்பால் சுருண்டு விழும் சின்னி ஜெயந்தை, உடனே ஆஸ்பத்திரியில் சேர்த்து, ஆபரேஷன் செய்து உடனே டிஸ்சார்ஜும் செய்கிறார்கள். இது அனைத்தும் ஒரே நாளில் நடந்ததா, அடுத்தடுத்த நாள்களில் நடந்ததா என்ற எந்த விளக்கமும் இல்லை.\nதான் ஒருகாலத்தில் வாழ்ந்த வீட்டை, பல ஆண்டுகள் கழித்து சென்று பார்க்கிறார் சின்னி ஜெயந்த். தற்போது வேறொருவருக்கு சொந்தமானதாக இருக்கும் அந்த வீட்டை, அப்போதே காசு கொடுத்து பத்திரப் பதிவுசெய்து சின்னி வாங்கிவிடுகிறார். இதுவும் ஒரே நாளில் நடந்ததா, அடுத்தடுத்த நாள்களில் நடந்ததா என்ற எந்த விளக்கமும் இல்லை. காரணம், படம் முழுக்க மொத்தமே மூன்று செட் ஆடைகள்தான் நால்வருக்கும். வில்லனோ ஒரு சட்டையோடு, அதுவும் ரத்தக்கறை படிந்த அந்தச் சட்டையோடுதான் ஊர் ஊராகச் சுற்றிக்கொண்டிருக்கிறார். படத்தில் வரும் சின்னச் சின்னக் கதாபாத்திரங்கள் அனைத்தும் கொதிக்கும் எண்ணெயில் கொட்டிய கடுகைப்போல `கடுகடு'வென்றே பேசுகிறார்கள். ஹரீஷ் உத்தமனின் கார் தாம்பரத்தில் யூடர்ன் அடிப்பது, எங்கேயோ இருக்கும் அவரின் முதலாளிக்குத் தெரிகிறது. ஜி.பி.எஸ். ஆனால், ஹரீஷ் உத்தமனோ பணப்பையில் 100 மீட்டர் இடைவெளியில் இருந்தால் கண்டுக்கொள்ளகூடிய டிரான்ஸ்மிட்டரைப் பொருத்திவிட்டு, தலையைப் பிய்த்துக்கொண்டு திரிகிறார். முக்கியமாக, புது 500, 2,000 ரூபாய் தாள்களும், பழைய 500,1,000 ரூபாய் தாள்களும் படத்தில் ஆங்காங்கே ஆள்மாறாட்டம் செய்கின்றன.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\nதிண்டாட்டத்தைக் கொண்டாட்டமாக்கிய கேங்ஸ்டர் சினிமா... பண்டிகை விமர்சனம்\nதிறமையான சண்டைக்காரர்கள் இருவரை மோதவிட்டு, யார் ஜெயிப்பார் என பந்தயம் கட்டி விளையாடும் \"ஃபைட் க்ளப்\" ஆட்டமே பண்டிகை. இழந்ததை மீட்க நினைத்து இருப்பதையும்... Pandigai Tamil Movie Review\n`பணத்தாசை, தீமைகளுக்கு வேர்' என்ற மெசேஜோடு படத்தை முடிக்கிறார் இயக்குநர் அன்பழகன். ஆனால், தான் வாழ்ந்த வீடு, தன்னுடைய லாரி, தன் காதலி எனக் கதாபாத்திரங்கள் எமோஷனலாக யோசிப்பதால்தான் அவ்வளவு பிரச்னையும் ஏற்படுகின்றன. `பணத்தை எடுத்துக்கொண்டு தூரதேசத்துக்கு ஆமை போல் ஊர்ந்தே சென்றிருந்தாலும், எந்தத் தீமையிலும் சிக்கியிருக்க மாட்டார்களோ' எனச் சிந்திக்கத் தோன்றுகிறது. அதேபோல், ராசியில்லாத, அபசகுனம்கொண்ட, தொட்டால் துலங்காத அதனாலேயே எல்லோரும் ஒதுக்கிவைக்கும் கதாபாத்திரமாக குங்குமராஜன் பாத்திரத்தை வடிவமைத்திருக்கிறார்கள். முடிவில் அது சரிதான் என்பதுபோலவே முடித்திருக்கிறார்கள். இப்படி ரூபாயில் சில ஓட்டைகள். ஆனாலும், இயல்பான நடிப்பு, உறுத்தாத ஒளிப்பதிவு, மிரட்டும் வில்லன், ஆங்காங்கே தெறிக்கும் வசனங்கள், காமெடிகளுக்காகப் படத்தை தாராளமாகப் பார்க்கலாம்.\nஅப்படியே `ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்' விமர்சனமும் படிச்சுருங்க...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா\nசோர்வான ஜெமினிகணேசனும் சுறுசுறுப்பு சுருளிராஜனும் - 'ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்' விமர்சனம்\nமுன்னாள் பேட்மேன்... இப்போ வில்லன்... ஸ்பைடர்மேன் ஹோம்கம்மிங் படம் எப்படி\nதிண்டாட்டத்தைக் கொண்டாட்டமாக்கிய கேங்ஸ்டர் சினிமா... பண்டிகை விமர்சனம்\nமொட்ட பையன் காதலிச்சா என்ன ஆகும் - ‘இவன் யாரென்று தெரிகிறதா - ‘இவன் யாரென்று தெரிகிறதா\n``சிவகார்த்திகேயன் பங்கமா கலாய்ப்பார்... மா.கா.பா எவ்வளவு கலாய்ச்சாலும் வாங்கிப்பார்..’’ - அத்தியாயம் 13\n\"25 சூப்பர் ஹீரோக்கள்... ஒரு சூப்பர் வில்லன் தேனோஸ்\n``கார்த்திக்... என்னை கல்யாணம் பண்ணிக்குவீங்களானு கேட்கணும்போல இருக்கு\" - விஜி சந்திரசேகர்\n\" 'சுந்தரபாண்டியன் 2' தயாரிக்கிறேன்; விஜய்சேதுபதி கேரக்டர்ல நடிக்கிறேன்\n\"ஆமாங்க... வருத்தப்படாத வாலிபர் சங்கம் நல்ல படம்தான்’’ - ‘விகடன் பிரஸ் மீட்’ சிவகார்த்திகேயன்\n\"வைகோ, சீமான் மோதல் வேதனை தருகிறது” - கலங்கும் திருமா\nவிகடன் பிரஸ்மீட்: அஜித்திடம் என்ன பிடிக்காது விஜய்யிடம் என்ன பிடிக்கும்\nமிஸ்டர் கழுகு: பி.ஜே.பி மீது ரஜினி வருத்தம்\n\"வைகோ, சீமான் மோதல் வேதனை தருகிறது” - கலங்கும் திருமா\nஜெயித்தது தோனி... ஜெயிக்க வைத்தது கோலி... ஜஸ்ட் கோலி திங்ஸ்\nதிருடிய மொபைலை அன்லாக் செய்ய திருடர்கள் செய்யும் இன்னொரு திருட்டுத்தனம்... உஷார்\n'நிர்மலா தேவி வாழ்க்கையே ரகசியம்தான்'- காவியன் நகர் மக்கள் சொல்வது என்ன\nமெக்கானிக்குடன் சாலையில் நின்ற போலீஸார்... கதிகலங்கிப்போன இருசக்கர வாகன ஓட்டிகள்\nஜெயித்தது தோனி... ஜெயிக்க வைத்தது கோலி... ஜஸ்ட் கோலி திங்ஸ்\n``மன அழுத்தம் போக்க உங்களை நீங்கள் ஜெயிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்\n``லட்சியத்தை நோக்கி நகர்ந்துகொண்டே இருந்தால் மனஅழுத்தம் இல்லை. மனஅழுத்தம் போக்க உங்களை நீங்கள் ஜெயிக்கக் கற்க வேண்டும்’’ என்கிறார் எழுத்துச் சித்தர் பாலகுமாரன்.\nகருவளையத்தை மறைக்க மேக்கப் வேண்டாம்... இரும்புச்சத்து உணவு போதும்\nகருவளையத்தை மறைக்க மேக்கப் வேண்டாம். எந்தக் காரணத்தினால் உங்களுக்குக் கருவளையம் வந்திருக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டால் அதைச் சரி செய்வது சுலபம்..\nகொடைக்கானல் மெர்க்குரி ஆலை... அன்று நடந்ததும் இன்றைய நிலையும்\nஅவர்கள் குறைக்கவேண்டியதாக அரசு கூறிய மெர்க்குரி அளவு, உண்மையில் குறைக்கவேண்டிய அளவைவிட 20 மடங்கு அதிகம். இது யூனிலிவர் செலவைக் குறைப்பதற்காகச் செய்யப்பட்டது.\nவிகடன் பிரஸ்மீட்: அஜித்திடம் என்ன பிடிக்காது விஜய்யிடம் என்ன பிடிக்கும்\n“இந்த வேலைநிறுத்தம், இந்திய சினிமாவையே கோலிவுட் பக்கம் திருப்ப வெச்சிருக்கு. இதன் மூலமா...\nஜெ. கன்னத்திலிருந்த நான்கு புள்ளிகளும் அவிழாத முடிச்சுகளும்\nமரணத்துக்குப் பிறகு ஜெயலலிதா உடல் ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டபோது, ஜெ. கன்னத்தில் காணப்பட்ட நான்கு புள்ளிகள் குறித்துப் பெரும் சர்ச்சை எழுந்தது. அந்த நான்கு புள்ளிகள் குறித்த மர்ம முடிச்சுகளை அவிழ்ப்பதற்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முயற்சி செய்துள்ளது.\n\"வைகோ, சீமான் மோதல் வேதனை தருகிறது” - கலங்கும் திருமா\nகாவிரிப் பிரச்னை, எஸ.சி, எஸ்.டி வன்கொடுமைத் தடுப்பு சட்டம் ஆகியவற்றுக்கான போராட்டங்களில் மும்முரமாக...\nகோபாலகிருஷ்ணன் டு திலீப்... ஜனங்களின் நாயகன் வளர்ந்த, வீழ்ந்த கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cinema.dinamalar.com/tamil-news/60457/cinema/Kollywood/Arya-tweets-that-he-needs-immediate-girl-friend.htm", "date_download": "2018-04-26T13:33:11Z", "digest": "sha1:UOQXE2QKA4YF4T6CVVQ6FEIC2YPSOPFV", "length": 10303, "nlines": 150, "source_domain": "cinema.dinamalar.com", "title": "கேர்ள் பிரண்டு கேட்கும் ஆர்யா - Arya tweets that he needs immediate girl friend", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nசீனாவில் ஐமேக்ஸில் பாகுபலி 2 | எம்.எஸ்.ராஜேஸ்வரியை மறந்த தமிழ்த் திரையுலகம் | 'அர்ஜுன் ரெட்டி' ஹிந்தி ரீமேக்கில் ஷாகித் கபூர் | மீண்டும் சமுத்திரகனி இயக்கத்தில் அமலாபால் - நானி | மோகன்லால் தவிர்க்கிறார் : தேசியவிருது இயக்குனர் வருத்தம் | மோகன்லாலின் ஒடியன் படப்பிடிப்பு நிறைவு | 6 ஆண்டுகள் கழித்து பாடிய மம்முட்டி | தமன்னா ஹிந்தி படம், மொத்தமாக ரீ-ஷூட் | மணிரத்னத்திடம் விஜய்சேதுபதி சொன்ன பழையகதை | பாலியல் குற்றச்சாட்டு - உஷா ஜாதவ் பரபரப்பு பேட்டி |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nகேர்ள் பிரண்டு கேட்கும் ஆர்யா\n1 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nகோலிவுட்டில் ஆர்யாவை கலாய்ப்பு நடிகர் என்பார்கள். காரணம் படப்பிடிப்பு தளங்களில் யாராவது தன்னிடம் சிக்கிக்கொண்டால் அவர்களை கலாய்த்தே ஒரு வழி பண்ணி விடுவார். முக்கியமாக நடிகைகள் என்றால் கேட்கவே வேண்டாம். அவர்களை தெறித்து ஓட வைத்து விடுவார். அதோடு, தனது டுவிட்டரில் அவ்வப்போது ஏதேனும் தகவல்களை வெளியிட்டு சர்ச்சையிலும் சிக்கிக்கொள்வார்.\nஅப்படித்தான் ஜல்லிக்கட்டு போராட்டம் பூதாகரமாக வெடித்திருந்த சமயம், தனது டுவிட்டரில் ஒரு கிண்டலான பதிவு வெளியிட்டு தமிழ்நாட்டு இளைஞர்களின் கோபத்துக்கு ஆளானார். அதையடுத்து டுவிட்டர் பக்கமே வராத ஆர்யா, சமீபத்தில் விஜய்யின் பிறந்த நாளன்று அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். அதோடு, தற்போது தான் ஒரு முக்கிய வேலையில் இருப்பதாகவும், தனக்கொரு கேர்ள் பிரண்டு உடனே தேவை என்றும் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். இதற்கு இணையவாசிகள் ஜாலியாகவும், கிண்டலாகவும் ஆர்யாவுக்கு கமெண்ட் கொடுத்து வருகிறார்கள்.\naarya girl friend ஆர்யா கேர்ள் பிரண்டு.\nஎன்னை தூங்கவிடாமல் செய்த முதல் ... தயவு செய்து என்னை கலாய்த்து ...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n'அர்ஜுன் ரெட்டி' ஹிந்தி ரீமேக்கில் ஷாகித் கபூர்\nதமன்னா ஹிந்தி படம், மொத்தமாக ரீ-ஷூட்\nபாலியல் குற்றச்சாட்டு - உஷா ஜாதவ் பரபரப்பு பேட்டி\nசஞ்சய் தத் ரிப்பீட்டு : ரன்பீருக்கு பாராட்டு\nமேக்கப் மேன் பிறந்தநாளுக்கு கார் பரிசளித்த ஜாக்குலின் பெர்னாண்டஸ்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nசீனாவில் ஐமேக்ஸில் பாகுபலி 2\nஎம்.எஸ்.ராஜேஸ்வரியை மறந்த தமிழ்த் திரையுலகம்\nமீண்டும் சமுத்திரகனி இயக்கத்தில் அமலாபால் - நானி\nமணிரத்னத்திடம் விஜய்சேதுபதி சொன்ன பழையகதை\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nராணுவ வீரராக நடிக்கும் கார்த்திக் ஆர்யன்\nதம்பியையும் கூட்டணியில் சேர்த்துக்கொண்ட ஆர்யா\nஅண்ணன், தம்பியாக அவதாரமெடுக்கும் ஆர்யா\nஆர்யா படமென்றால் சம்பளமே வாங்காமல் நடிப்பேன்\nஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்\nநடிகர் : கெளதம் கார்த்திக்\nநடிகர் : விக்ரம் ,\nநடிகை : கீர்த்தி சுரேஷ்\nநடிகை : சாய் பல்லவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kanichaaru.blogspot.com/2014/09/blog-post_12.html", "date_download": "2018-04-26T13:31:35Z", "digest": "sha1:KSNZLLSWUY5SXV5VDFYVTHOC33EU5HQA", "length": 8296, "nlines": 68, "source_domain": "kanichaaru.blogspot.com", "title": "பாரதியார் நினைவு நாள்: உறுதிமொழி ஏற்பு ~ கனிச்சாறு", "raw_content": "\nபெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.\nபாரதியார் நினைவு நாள்: உறுதிமொழி ஏற்பு\nமகாகவி பாரதியாரின் நினைவு நாளையொட்டி, உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி திருநெல்வேலி சந்திப்பில் நடைபெற்றது.\nபாரதியார் உலக பொது சேவை நிதியம் என்ற அமைப்பின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அதன் தலைவர் மரியசூசை தலைமை வகித்தார். திருநெல்வேலி சந்திப்பில் உள்ள பாரதியாரின் சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. சிலையின் முன்பு தமிழைக் காப்பது, நாட்டுப்பற்றை வளர்ப்பது குறித்த உறுதிமொழி ஏற்கப்பட்டது.\nஅமைப்பின் செயலர் கணபதி சுப்பிரமணியன், பொருளாளர் வெங்கடாசலம், பென்சனர் சங்க மாவட்டச் செயலர் கணபதியப்பன், சிவப்பிரகாசர் நற்பணி மன்ற துணைச் செயலர் முத்துசாமி, நுகர்வோர் பாதுகாப்பு இயக்க உறுப்பினர் சந்திரபாபு, கவிஞர் பேரவைத் தலைவர் பே. ராஜேந்திரன், சிவானந்தம், ஜெயக்குமார், குருராஜ், ராமச்சந்திரன், கதிர்வேல் உள்பட பலர் கலந்துகொண்டனர்.\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nதமிழின் செம்மொழிப் பண்புகள் - பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் - செம்மொழித்தமிழ் இலக்கண இலக்கியங்கள் \nஞெமன் தெரிகோல் அன்ன செயிர்தீர் செம்மொழி அக நானூறு -349 - 3, 4 செம்மொழி மாதவர் சேயிழை நங்கை தம் துறவு எமக்குச...\nகனிச்சாறு : 5 :தமிழ் வாழ வேண்டுமா \n‘தமிழ் வாழ்க’ வென்பதிலும் தமிழ்வா ழாது: தமிழ்ப் பெயரை வைப்பதிலும் தமிழ்வா ழாது தமிழ் சிரிப்பைப் பெருஞ்சிரிப்பாய் அவிழ்த்துக் கொட்...\nநெல்லை & தூத்துக்குடி மாவட்டங்களில் முக்கியமான இடங்களில் சில.\nதூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள கொற்கை கிராமம் இன்று நாம் பார்ப்பதற்கு மிகச்சாதாரண கிராமமாகத் தெரியலாம். ஆனால் முன்னொரு காலத்...\nயுத்த பூமி - அத்தியாயம் 5 - கல் சொல்லும் வீரம் -த. பார்த்திபன்\nஇந்தக் கல் சொல்லும் வீரம்செறிந்த போர்கள், உலகைப் புரட்டிப்போட்ட போர்கள் அல்ல; நாட்டு மக்களை நாடோடிகளாகவும் அகதிகளாகவும் ஆக்கியவையும் அல்ல...\nகோப்பெருஞ்சோழன் - பிசிராந்தையின் நட்பும், பாரியைத் தவிரப் பிறரைப் பாடாத கபிலரின் ஆற்றாமையும்\nஉலகுடன் திரிதரும் பலர்புகழ் நல்லிசை வாய்மொழிக் கபிலர், நீரினும் இனிய சாயலன் ஆகிய பாரியின் இனிய தோழர். அறிமுகம் பழக்கமாகி, பழக்கம் நட...\nயாழ்ப்பாணம் : www.ourjaffna.com இணைய தளச் சொந்தக்காரரின் திருமண விழா : சில காட்சிகள்.\nஅமெரிக்கப் பல்கலையில் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட திருமந்திரத்தின் 6 பாடல்கள்\nஅமெரிக்காவில் உள்ள தென் கரோலின பல்கலையில் ஆய்வுக்குள்ளான 6 பாடல்கள் அல்சைமர் நோயாளிக்கு உதவும் என்று முடிவு காண்க:- h...\nதினத்தந்தி வெளியீடு : ஆயிரம் ஆண்டு அதிசயம். - அமுதன்\nஓரிருமுறை தஞ்சைப் பெரியகோவிலுக்குச் சென்றிருக்கின்றேன். ஆனால், இம்முறை சென்றவாரம் சென்றிருந்தபோது அரியதோர் வழிகாட்டுநர் கிடை...\nகவிமணி தேசிக விநாயகம் பிள்ளை\nவாழ்க்கைக் குறிப்பு கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை (ஆகஸ்ட் 27, 1876 - செப்டம்பர் 26, 1954) 20 நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு புகழ் பெற்ற...\nவயது 65, சென்னை, தமிழ்நாடு,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.south.news/tag/pongal/", "date_download": "2018-04-26T13:09:03Z", "digest": "sha1:IA62FTIGAETMVHH3D325LKXBOJKAHQU2", "length": 9242, "nlines": 82, "source_domain": "tamil.south.news", "title": "Pongal Archives - Tamil News", "raw_content": "\nபொங்கல் வாழ்த்துக்கள் தெரிவித்த 5 உலகத் தலைவர்கள்… ஏன் தெரியுமா\nதெரேசா மே ஐக்கிய ராச்சிய நாடுகளின் பிரதம மந்திரி அவர்கள் அந்நாட்டின் முன்னேற்றத்திற்கு உழைக்கும் தமிழர் வர்க்கத்திற்கு நன்றி கூறி, பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார். பிரிட்டன் வாழ் தமிழர்களை ஆகச் சிறந்த உதாரண...\nபோகியன்று கிராமங்களில் ஒப்பாரி வைப்பதற்கும், புத்தருக்கும் உள்ள ரகசிய சம்மந்தம்\nமார்கழி இறுதி நாளான போகி என்பது, வீட்டில் உள்ள தேவையற்ற குப்பைகள், பொருட்களை தீயிலிட்டு எரித்துவிட்டு, இல்லத்தில் புதியன புகுத்தும் நாளாக கருதப்படுகிறது. ஆனால்.... அண்மைக்காலங்களில் இந்த போகி நாளில் தமிழகத்தின் பல கிராமங்களில்...\nசூரிய பொங்கலன்று காலை 7 மணிக்குள் இதை செய்தால் பண மழை கொட்டும்\nவிவசாயத்திற்கு மீப்பெரும் உதவிகரமாக திகழ்ந்த கதிரவனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தை முதல் நாளில் சூரிய பொங்கல் கொண்டாடப்படுகிறது. சூரியனே எல்லாவற்றுக்கும் அதிபதி என்பதால் சூரியனை வழிபட நாம் யாரும் தவறிவிடக்கூடாது. சூரிய...\nபொங்கலன்று தமிழகத்தில் நடக்கும் 8 பெருமிதமான விஷயங்கள்\nதமிழகத்தின் ஆதி நாளில் இருந்து கொண்டாடப்பட்டு வரும் தனிப்பெரும் திருவிழா பொங்கல். தமிழர்கள் திருநாளாக தமிழகம் மட்டுமின்றி இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், அரபு நாடுகள், அமெரிக்கா, தென்னாப்பிரிக்கா, மொரீசியஸ் உள்ளிட்ட...\nபோகியில் மாரியம்மனை வழிபட்டால் நோய், நொடிகள் பறந்தோடும்\nமாரியம்மன் என்றால் மாரியின், அதாவது மழையின் தேவதை என்று பொருள். மாதம் மும்மாரி பொழிய மாரியம்மனைதான் வேண்டி வணங்குவார்கள் விவசாயப் பெருமக்கள். விவசாயிகள் ஆண்டு முழுவதும் விளைவித்த உணவுப்பொருட்களை எல்லாம் மார்கழியில் அறுவடை...\nஎந்த நேரத்தில் பொங்கல் வைத்தால் ராஜயோகம் கிடைக்கும்\nதை திருநாளின் முதல் நாளான பொங்கலன்று, கதிரவனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பொங்கலிட்டு வழிபாடு நடத்துகிறோம். இதுவே தமிழர்களின் மரபு. எந்த நேரத்தில் பொங்கல் வைத்து வழிபட்டால் ராஜயோகம் கிடைக்கும்\nஇந்த பொங்கலுக்கு தொலைக்காட்சியில் கபாலி, மெர்சல், அறம் மற்றும் பல புதுப்படங்கள்\nஇந்தாண்டு பொங்கல் விழாவை முன்னிட்டு தமிழ் தொலைக்காட்சிகளில் ஏராளமான புதுப்படங்கள் ஒளிபரப்பப்பட உள்ளன. வெள்ளித்திரையில் இந்தாண்டு ஒரு சில படங்கள் மட்டுமே ரிலீஸ் ஆக உள்ள நிலையில், சின்னத்திரையில் பிளாக்பஸ்டர் ஒளிபரபப்பாகின்றன. உலகத் தொலைக்காட்சியான...\nதித்திக்கும் தைப் பொங்கல் ரெசிபி\nபொங்கல் பண்டிகை என்றாலே நம் நினைவில் முதலில் வருது கரும்பும் இனிப்பான பொங்கலாகவும் தான் இருக்கும். பண்டிகையின் போது முக்கிய உணவாக கருதப்படும் பொங்கல் நாம் பாரம்பரிய உணவுகளின் ஒன்று. சர்க்கரை பொங்கல்...\nஜல்லிக்கட்டுக்கு தடை இல்லை… சீறிப்பாய தயாராகும் காளைகள்\nவரும் 2௦18 பொங்கல் விழாவில் நடைபெற இருக்கும் ஜல்லிக்கட்டுக்காக காளைகள் இப்போது இருந்தே பயிற்சி பெறத் தொடங்கியுள்ளன. மதுரையின் பல்வேறு பகுதிகளில் காளைகளுக்கு நீச்சல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. போராட்டங்கள்: ஜல்லிக்கட்டு தடையை நீக்கக்...\nசென்னையில் 24 மணி நேரத்தில் இதையெல்லாம் செய்யலாம்\nவேலூரில் 48 மணி நேரத்தை எப்படி செலவிடலாம்\nஓட ஓட தெறிக்கவிட்ட சி.எஸ்.கே’; 400 அடிச்சாலும் ஜெயிக்க மாட்டாங்களா ஆர்.சி.பி\nஜெட் வேகத்தில் ஆண்மை பெருக இந்த கீரையை சாப்பிடுங்க\nமினிமம் பேலன்ஸ் இல்லாத கணக்குகளில் இருந்து ரூ.1,772 கோடி அபராதம் வசூலித்த எஸ்.பி.ஐ. வங்கி\nஆதார் அமைப்பை கைது செய்யுங்கள்… சர்ச்சையை கிளப்பிய ‘விக்கி லீக்ஸ்’ எட்வர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vakeesam.com/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D.html", "date_download": "2018-04-26T13:22:27Z", "digest": "sha1:73GHIBAVZHDZYVENHHH36MY32X5MK6VW", "length": 4942, "nlines": 73, "source_domain": "www.vakeesam.com", "title": "தலைமைத்துவ பயிற்சி கருத்தரங்கு – Vakeesam", "raw_content": "\nஹட்டனில் நில அதிர்வு – 05 வீடுகள் சேதம்\nதந்தை செல்வா நினைவுதினம் அனுஷ்டிப்பு\nஜ.தே.க முக்கிய பதவிகளில் மாற்றம் – பொதுச் செயலாளராக அகில விராஜ் காரியவசம்\n203 பட்டதாரிகள் நேர்முகத் தேர்விற்குத் தோற்றவில்லை \nயாழ் போதனா வைத்தியசாலையில் கழிவு வாய்க்கால்மேல் கன்ரீன் – மக்கள் விசனம்\nin உள்ளூர் செய்திகள், செய்திகள் October 6, 2016\nமலையக தொழிலாளர் முன்னணியும், சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனமும் இணைந்து நடாத்திய தலைமைத்துவ பயிற்சி கருத்தரங்கு ஒன்று மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.ராஜாராம் தலைமையில் 06.10.2016 அன்று அட்டனில் ஸ்ரீ கிருஷ்ணபவான் கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.\nஇக்கருத்தரங்கு சிறப்பு விரிவுரையாளர்களை கொண்டு பல்வேறு தலைப்புகளில் நடைபெற்றது.\nஇதன்போது மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் ஏ.லோறன்ஸ் மற்றும் பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.\nஹட்டனில் நில அதிர்வு – 05 வீடுகள் சேதம்\nதந்தை செல்வா நினைவுதினம் அனுஷ்டிப்பு\nஜ.தே.க முக்கிய பதவிகளில் மாற்றம் – பொதுச் செயலாளராக அகில விராஜ் காரியவசம்\nஹட்டனில் நில அதிர்வு – 05 வீடுகள் சேதம்\nதந்தை செல்வா நினைவுதினம் அனுஷ்டிப்பு\nஜ.தே.க முக்கிய பதவிகளில் மாற்றம் – பொதுச் செயலாளராக அகில விராஜ் காரியவசம்\n203 பட்டதாரிகள் நேர்முகத் தேர்விற்குத் தோற்றவில்லை \nயாழ் போதனா வைத்தியசாலையில் கழிவு வாய்க்கால்மேல் கன்ரீன் – மக்கள் விசனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vakeesam.com/17-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D.html", "date_download": "2018-04-26T13:28:05Z", "digest": "sha1:JNXG2YT5ROHWKA2JWQ32XLHLALCOAOH3", "length": 12048, "nlines": 84, "source_domain": "www.vakeesam.com", "title": "17 வயதுடைய சிறுவனின் மரணத்தில் சந்தேகம் – விசாரணை கோரும் பெற்றோர் – Vakeesam", "raw_content": "\nஹட்டனில் நில அதிர்வு – 05 வீடுகள் சேதம்\nதந்தை செல்வா நினைவுதினம் அனுஷ்டிப்பு\nஜ.தே.க முக்கிய பதவிகளில் மாற்றம் – பொதுச் செயலாளராக அகில விராஜ் காரியவசம்\n203 பட்டதாரிகள் நேர்முகத் தேர்விற்குத் தோற்றவில்லை \nயாழ் போதனா வைத்தியசாலையில் கழிவு வாய்க்கால்மேல் கன்ரீன் – மக்கள் விசனம்\n17 வயதுடைய சிறுவனின் மரணத்தில் சந்தேகம் – விசாரணை கோரும் பெற்றோர்\nin உள்ளூர் செய்திகள், செய்திகள் June 25, 2016\nஅட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா மாணிக்கவத்தை தோட்டத்திலிருந்து 17 வயதுடைய பத்மநாதன் அஜித்குமார் கொழும்புக்கு தொழிலுக்காக சென்றிருந்த வேளையில் அங்கு 23.06.2016 அன்று தொழில் செய்துக்கொண்டிருந்த இடத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.\nஇச் சம்பவத்தில் சந்தேகம் இருப்பதாக உயிரிழந்த சிறுவனின் உறுவினர்கள் தெரிவிக்கின்றனர்.\nஇச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,\nஇச்சிறுவன் சிறுவயதிலிருந்து டிக்கோயா இன்வெறி தோட்டத்தில் தனது பாட்டியின் அரவணைப்பில் வாழ்ந்து வந்துள்ளான். இவனின் பெற்றோர்களான தந்தை பத்மநாதன், தாயான செல்வசுந்தரி ஆகியோர் தொழில் நிமிர்த்தம் கொழும்பில் வேலை செய்கின்றனர்.\nபாட்டியின் அரவணைப்பில் வாழ்ந்த சிறுவனை மேற்படி தோட்டத்தில் உள்ள நபர் ஒருவரினால் பாட்டியின் விருப்பத்துடன் தொழிலுக்காக கொழும்பு கிருலப்பனை பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு அழைத்து சென்றுள்ளார்.\nகுறித்த நபர் பாட்டியிடம் அதிகபடியான சம்பளம் வழங்கப்படும் எனவும், இச்சிறுவனுக்கு எவ்வித பிரச்சினைகளும் ஏற்படாது என கூறியதன் காரணமாக பாட்டியும் இதனை நம்பி தனது அரவணைப்பில் வாழ்ந்த இச்சிறுவனை அனுப்பி வைத்துள்ளார்.\nஇச்சிறுவன் தொழிலுக்கு சென்ற சம்பவம் பெற்றோர்களுக்கு தெரிந்திருக்கவில்லை. சிறுவன் தொழில் செய்த இடத்திலிருந்து மூன்று மாதங்களுக்கு 3000 ரூபா மாத்திரமே தனக்கு கிடைத்ததாக பாட்டி தெரிவிக்கின்றார்.\nஇவ் வேளையில் கடந்த 22ம் திகதி சிறுவன் வேலை செய்யும் இடத்திலிருந்து தொலைபேசி மூலம் பாட்டிக்கு அழைப்பு ஒன்று வந்துள்ளது. மேற்படி சிறுவனுக்கு சுகயீனம் காரணமாக உடனடியாக கொழும்புக்கு வருமாறு தொலைபேசி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சிறுவனின் பாட்டி கொழும்புக்கு சென்றுள்ளார்.\nசிறுவனை வேலைக்கு அழைத்து சென்ற நபரின் ஊடாக உயிரிழந்த சிறுவனின் சித்தப்பாவிற்கு 23ம் திகதி தொலைபேசி மூலம் சிறுவன் அஜித்குமார் தூக்கிட்டு உயிரிழந்துள்ளதாகவும், இவரின் சடலம் புஞ்சி பொரலையில் உள்ள பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து இவரின் சித்தப்பா சிறுவனின் பெற்றோர்களிடமும் உறவினர்களிடமும் தகவல் வழங்கியுள்ளார்.\nஇதனையடுத்து சம்மந்தப்பட்டவர்கள் கொழும்பு சென்ற போது அங்கு எவ்வித விசாரணகளும் மேற்கொள்ளாமல் உயிரிழந்த சிறுவனின் சடலத்தை கொண்டு செல்லுமாறு பொலிஸாரால் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஉயிரிழந்தவரின் சடலத்தை பிரேத பரிசோதனை செய்தாலும், இது தொடர்பாக சம்மந்தப்பட்ட பெற்றோர்களுக்கு உறவினர்களுக்கும் தெளிப்படுத்தவில்லை எனவும், அனைத்து விடயங்களையும் குறித்த பாட்டியிடம் கூறியுள்ளதாகவும், உறவினர்களிடம் சடலத்தை கொண்டு செல்லுமாறு பொலிஸார் சடலத்தை ஒப்படைத்துள்ளனர்.\nஇருந்தபோதிலும் சிறுவன் உயிரிழந்ததத்திற்கான காரணம் சரியாக தெரியாத காரணத்தினால் உயிரிழப்பில் சந்தேகம் நிலவுவதாக தெரிவிக்கும் உறவினர்கள் இது தொடர்பாக நாரான்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுக்க சென்ற போது இவர்களின் புகாரை ஏற்றுக்கொள்ள பொலிஸார் மறுத்துள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.\nஅத்தோடு உயிரிழந்தவரின் இறுதி கிரியைகள் 25.06.2016 அன்று டிக்கோயா மாணிக்கவத்தை தோட்டத்தில் உள்ள பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.\nஇச்சிறுவனின் மரணம் குறித்து தோட்ட மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளதோடு சிறுவனின் மரணம் தொடர்பான உரிய காரணங்களை விசாரணைகள் நடத்தி தீர்வினை பெற்று தர நடவடிக்கை எடுக்குமாறு உயிரிழந்த சிறுவனின் உறவினர்கள் கோருகின்றனர்.\nஹட்டனில் நில அதிர்வு – 05 வீடுகள் சேதம்\nதந்தை செல்வா நினைவுதினம் அனுஷ்டிப்பு\nஜ.தே.க முக்கிய பதவிகளில் மாற்றம் – பொதுச் செயலாளராக அகில விராஜ் காரியவசம்\nஹட்டனில் நில அதிர்வு – 05 வீடுகள் சேதம்\nதந்தை செல்வா நினைவுதினம் அனுஷ்டிப்பு\nஜ.தே.க முக்கிய பதவிகளில் மாற்றம் – பொதுச் செயலாளராக அகில விராஜ் காரியவசம்\n203 பட்டதாரிகள் நேர்முகத் தேர்விற்குத் தோற்றவில்லை \nயாழ் போதனா வைத்தியசாலையில் கழிவு வாய்க்கால்மேல் கன்ரீன் – மக்கள் விசனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://jmmedia.lk/2017/11/06/33-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5/", "date_download": "2018-04-26T13:39:29Z", "digest": "sha1:BJXLIDQNVA66O2PBKBF7KDGR44L22KDU", "length": 8825, "nlines": 60, "source_domain": "jmmedia.lk", "title": "33 சதவீத மாணவர்கள் காலை உணவை உட்கொள்வதில்லை – JM MEDIA.LK", "raw_content": "\nகடுகண்ணாவ கற்குகைக்கு தற்காலிகமாக பூட்டு\nஇறப்பர் தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்து தொடர்பில் தொழிற்சாலையின் முகாமையாளர் கைது\nவட கொரியாவுக்கு ரகசிய பயணம் : மைக் பாம்பேயோ\nபௌத்தகுருமாருக்கு வாக்குறுதி வழங்கிய பிரதமர்\n33 சதவீத மாணவர்கள் காலை உணவை உட்கொள்வதில்லை\nஇலங்கை கெக்கிராவ பிரதேசத்தில் கர்ப்பமடைந்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டு பள்ளி மாணவியொருவர் பாடசாலையிலிருந்து விலக்கப்பட்ட செய்தி சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் பெரியளவில் பரிமாறப்பட்டது. பசி காரணமாக அம்மாணவி வாந்தி எடுத்ததாக மருத்துவ பரிசோதனையின் பின்னர் தெரிய வந்திருந்தது.\nபாடசாலைக்கு செல்லும் முன்னர் மாணவர்கள் காலை உணவை எடுத்திருந்தார்களா என்ற விடயத்தில் பொருளாதாரம், சமூகம் மற்றும் சில சந்தர்ப்பங்களில் மதம் கலாச்சார காரணங்களும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.\nகுறிப்பாக பொருளாதார பிரச்சனை காரணமாக சில பிள்ளைகள் காலை உணவை எடுக்காமலே பாடசாலைக்கு செல்கின்ற அதேவேளை பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்வதன் காரணமாகவும் சில பிள்ளைகளுக்கு காலை உணவு விடுபடுகின்றது.\n2016 ஆம் ஆண்டு கல்வி அமைச்சகம் வெளியிடப்பட்ட தகவல்களின்படி, இலங்கையில் 10,162 பாடசாலைகளில் 41,43,330 மாணவர்கள் கல்வி பயில்வதாக கூறப்படுகின்றது.\nஇந்த எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பகுதி மாணவர்கள் அதாவது 14 லட்சம் பேர் காலை உணவு எடுப்பது இல்லை என ஆய்வுகளில் தெரியவந்துள்ளதாக சுகாதார அமைச்சகத்தின் மருத்துவ ஆய்வு மையத்தின் போஷாக்கு பிரிவு கூறுகின்றது.\n“காலை உணவு உட்கொள்ளாமல் இருப்பது பிள்ளைகளின் மூளை வளர்ச்சியிலும், உடல் வளர்ச்சியிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். ” என்கின்றார் அந்த பிரிவுக்கு பொறுப்பு வகிக்கும் சிறப்பு மருத்துவ நிபுணரான டாக்டர் ரேணுகா ஜயதிஸ்ஸ.\nகாலை உணவு எடுக்காத பிள்ளைகளிடம் கணித ஆற்றல், நினைவாற்றல் குறைதல், பலவீனமாக காணப்படுதல், பிரச்சனைகளை தீர்க்கும் ஆற்றல் குறைதல் , போட்டிப் பரீட்சைகளில் குறைந்த புள்ளிகளை பெறுதல் மற்றும் உயரம் குறைதல் போன்ற அறிகுறிகள் காணப்படுவதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.\nகாலை உணவு எடுக்காமல் பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள் மேல் மற்றும் தென் மாகாணங்களிலே அதிகம் காணப்படுவதாகவும் அவரது தகவல்கள் மூலம் அறியமுடிகின்றது.\n“பிள்ளைகளுக்கு காலையில் ஒரு கிளாஸ் பால் கொடுப்பதை பெற்றோர்கள் பழக்கமாக வைத்து கொள்கின்றனர். அது போதுமானதாக இல்லை. ஒரு கிளாஸ் பாலை விட பிள்ளைகளுக்கு காலை உணவு கொடுப்பது முக்கியமானதாகும். பாடசாலை செல்லும் வயதில்தான் பிள்ளைகளிடம் துரித வளர்ச்சி காணப்படும்.\nகாலை உணவு என்பது தானியம், பழவகை, மரக்கறி, மாமிசம் என மூன்று உணவு பிரிவுகளை கொண்ட பிரதான உணவு வேளையாக இருத்தல் வேண்டும். பால் என்பது இதில் ஒரு பிரிவு மட்டுமே. அதனை இடை உணவாக கொடுக்கலாம் ” என்று டாக்டர் ரேணுகா ஜயதிஸ்ஸ காலை உணவின் முக்கியத்துவம் பற்றி வலியுறுத்தி கூறுகின்றார்.\n“இது பற்றி பெற்றோர் அறியாமல் இருப்பதே தற்போதைய இந்த நிலைமைக்கு காரணம் ” என்றும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.\n← பதுளை மாவட்டத்தில் மண்சரிவு அபாயம்\nஇலங்கை பெட்ரோல் தட்டுப்பாடு →\nமாவனல்லை பதுரியா மத்திய கல்லூரியின் பழைய மாணவர்களே, இது உங்கள் கவனத்திற்கு\nகோதபாய காலத்தில் அரச நிறுவனங்களில் படையதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட நியமனங்கள் குறித்து விசாரணை\nஇலங்கை ‘போர்க்குற்றம்’: ஜகத் ஜயசூரியவுக்கு எதிரான வழக்கை குறிப்பிட்டு ஐ.நா எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://nilapennukku.blogspot.com/2012/08/padippusolliththaraatheer.html", "date_download": "2018-04-26T13:09:14Z", "digest": "sha1:YR4IX34PDSNR6ZZKDAEC5ECPHQK5AJPQ", "length": 19164, "nlines": 144, "source_domain": "nilapennukku.blogspot.com", "title": "குழந்தைகளுக்கு படிப்பு சொல்லித் தராதீர்! - மனதைத் திற 2! | நிலாப்பெண்ணுக்கு", "raw_content": "\nகுழந்தைகளுக்கு படிப்பு சொல்லித் தராதீர் - மனதைத் திற 2\nநீங்கள், நான் ஏன் எல்லோருமே குழந்தையாய் இருந்து வளரும்போது ஒவ்வொரு செயலும், செய்கையும் நமது பெற்றோர், சகோதரர் அல்லது அருகிலிருக்கும் வேறு யாரேனும் - இவர்களைப் பார்த்தே உங்கள் நடை, உடை பாவனைகள் வந்திருக்கும் உதாரணமாய் உங்கள் தந்தை நல்ல நகைச்சுவையாளர் என்றால் உங்களுக்கும் அந்த நகைச்சுவைப் பழக்கம் தானாகவே தொற்றிக்கொள்ளும் உதாரணமாய் உங்கள் தந்தை நல்ல நகைச்சுவையாளர் என்றால் உங்களுக்கும் அந்த நகைச்சுவைப் பழக்கம் தானாகவே தொற்றிக்கொள்ளும் இப்படியாக வளர வளர மொழி, உடை உடுத்துதல், உண்ணுதல் என ஒவ்வொரு பழக்கவழக்கத்தையும் வளரும் சூழலே தீர்மானிக்கிறது.\n நீங்கள் அடிக்கடி கெட்டவார்த்தை உபயோகிப்பவறென்றால் உங்கள் குழந்தையும் சரளமாக அதை உபயோகிக்கும் ஒருவேளை நீங்கள் புகைபிடிப்பவர் எனில் குழந்தை வளர்ந்ததும் புகை பிடிப்பதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். உங்கள் குழந்தை நல்லவராவதும், தீயவராவதும் உங்களின் வளர்ப்பு முறையிலேயே உள்ளது.\nஇவற்றைப்போலவே இன்றைய சூழ்நிலையில் குழந்தை வளர்ப்பில் நாம் செய்யும் முக்கிய தவறு படிப்பைத் திணிப்பது இளமைக்காலங்களில் நம்மால் படிக்க முடியாமல் போனதை எல்லாம் நம் குழந்தை படிக்க வேண்டும் என்ற எண்ணம்.\nஉதாரணமாக டாக்டர் ஆக வேண்டும் என்ற ஆசை உடைந்து போனதால் உண்டாகும் தாழ்வுணர்ச்சிக்கு வடிகாலாய் பிள்ளைகள் டாக்டராக வேண்டுமென்று நினைக்கிறோம் மாறாக குழந்தைகளின் எண்ணங்களையோ அல்லது அவர்களின் விருப்பங்களையோ பொருட்படுத்துவதில்லை. என் பிள்ளை நான் படிக்கவைக்கிறேன் நான் செலவு செய்கிறேன் அது நான் சொல்வதைத்தான் படிக்க வேண்டும் என்று ஆசைகளை நிறைவேற்றும் எந்திரமாகவே பார்க்கிறோம் மாறாக குழந்தைகளின் எண்ணங்களையோ அல்லது அவர்களின் விருப்பங்களையோ பொருட்படுத்துவதில்லை. என் பிள்ளை நான் படிக்கவைக்கிறேன் நான் செலவு செய்கிறேன் அது நான் சொல்வதைத்தான் படிக்க வேண்டும் என்று ஆசைகளை நிறைவேற்றும் எந்திரமாகவே பார்க்கிறோம் குழந்தைகள் நம் சந்ததியின் வழித்தோன்றலே தவிர நம் எண்ணங்களை நிறைவேற்றும் எந்திரம் அல்ல.\nபிரபலமான ஒரு ஜென் கதை:\nபழங்காலத்தில் மூத்த பேராசிரியர் ஒருவர், துறவிகளிடம் ஏன் மக்கள் போய்க் குவிகிறார்கள் அப்படி இவர்களிடம் என்ன இருக்கிறது என்று தெரிந்துகொள்ள விரும்பினார். ஒரு ஜென் துறவியிடம் அதுபற்றி கேட்டுத் தெரிந்துகொள்ளலாமென்று மடத்தை நோக்கி புறப்பட்டார்.\nமடத்தை அடைந்ததும் துறவி அவரை அமர வைத்தார். ஒரு கோப்பையை எடுத்து தேநீர் (டீ) ஊற்ற ஆரம்பித்தார். கோப்பை நிரம்பிவிட்டது, ஆனாலும் நிறுத்தாமல் இன்னும் ஊற்றினார் ஜென் துறவி. கோப்பையிலிருந்து தேநீர் கீழே வழிந்தது.\n\"கோப்பை நிரம்பிவிட்டது\" என்று கூறினார் பேராசிரியர்.\nஇனிமேல் இதில் ஊற்ற முடியாதா\nநிரம்பிய கோப்பையில் எப்படி ஊற்ற முடியும்\n\"அதுபோல்தான் நீங்களும். ஏற்கனவே உங்கள் மனதில் உங்கள் கருத்துக்களை முழுதும் நிரப்பிக்கொண்டு வந்திருக்கிறீர்கள். பிறகெப்படி நான் துறவறத்தைப்பற்றி விளக்க முடியும் அவற்றை எல்லாம் விட்டுவிட்டு வாருங்கள் பின்னர் சொல்கிறேன்\" என்றார் துறவி.\nஅதுபோலத்தான் இளமை முதலே குழந்தைகளின் மனதில் முழுமையாய் நம்மை/ நம் எண்ணங்களை திணித்து நிரப்பிவிடுகிறோம். பிறகெப்படி அதில் புதிதாய் எண்ணங்களும், செயல்களும் திறமைகளும் வளரும்\nஒரு செடி கருகிப்போக விஷம் மட்டும் காரணமல்ல; தினமும் அதனருகில் சென்று திட்டினால் போதும் அது போலவே குழந்தைகளும் - ஆனால் இதைத்தான் நமது சந்ததிகளுக்குச் செய்துகொண்டிருக்கிறோம் அது போலவே குழந்தைகளும் - ஆனால் இதைத்தான் நமது சந்ததிகளுக்குச் செய்துகொண்டிருக்கிறோம் குழந்தை என்பது மனித இனம் தழைக்க நம் சந்ததியை இந்த உலகிற்கு விட்டுச்செல்லுதலே தவிர நம்மை விட்டுச்செல்வதல்ல. நீங்கள் வாழ்நாள் முழுதும் முயன்றாலும்கூட இன்னொரு உங்களை உருவாக்க முடியாது.\nகுழந்தைகளுக்கு எதை எப்படிப் படிக்க வேண்டும் என்று படிக்கச் சொல்லிக்கொடுங்கள், தேர்வு முக்கியம், மதிப்பெண்கள் முக்கியம் ஆனால் அதைவிட குழந்தைகள் முக்கியம்\nஆசிரியர்கள் கதவைத்தான் திறப்பார்கள் மாணவர்கள்தான் உள்ளே நுழையவேண்டும்\nடிஸ்கி - பிடித்திருந்தால் பகிரவும்\nLABELS: அனுபவம், ஆன்மீகம், மனதைத் திற\nநல்லதொரு உதாரணத்துடன் (ஜென் கதை) சொன்னது சிறப்பு... தொடருங்கள்... வாழ்த்துக்கள்...\nஆசிரியர்கள் கதவைத்தான் திறப்பார்கள் மாணவர்கள்தான் உள்ளே நுழையவேண்டும்\nகுழந்தை என்பது மனித இனம் தழைக்க நம் சந்ததியை இந்த உலகிற்கு விட்டுச்செல்லுதலே தவிர நம்மை விட்டுச்செல்வதல்ல.\nஏ ஜோக்ஸ் கதைகள் தத்துவங்கள் 3\nஹைக்கூ - சின்ன சின்ன கவிதைகள்\nஅரிய புகைப்படங்கள் - திருக்குறள் ஓலைச்சுவடி, பழைய சென்னை, கோவை, திருச்சி, திரிகோணமலை, நெல்லை\nதத்துவங்கள் - ஜோக்ஸ், வாழ்க்கை, சிறை, வரலாறு\nஏ ஜோக்ஸ் – தத்துவங்கள்\nவருடத்தின் சிறந்த 10 பதிவுகள்\nஉன்னோட மூளை ஏன் பிரெஷ்ஸா இருக்கு தெரியுமா நீ உபயோகப்படுத்தாமலே வச்சிருந்தா அப்பிடிதேன் இருக்கும் நீ உபயோகப்படுத்தாமலே வச்சிருந்தா அப்பிடிதேன் இருக்கும்\nஏ ஜோக்ஸ் கதைகள் தத்துவங்கள் 3\nகல்யாணம் சொர்கத்தில் நிச்சயிக்கப்படுகிறதென்றால் முதலிரவு எங்கே நிச்சயிக்கபடுகிறது நான் நேரா அங்கே போயிடுறேன் நான் நேரா அங்கே போயிடுறேன்\nதத்துவங்கள் - ஜோக்ஸ், வாழ்க்கை, சிறை, வரலாறு\nஹிந்தி சினிமாகாரர்கள் எல்லா படங்களிலும் \"சோனியே\" \"சோனியே\" என்று பாட்டெழுதியே சோனியா காந்தியை பிரபலமாக்கிவிட்டனர். ...\nஏ ஜோக்ஸ் – தத்துவங்கள்\nஒரு பதின்மூன்று வயது பெண்ணின் T-SHIRT வாசகம் - “ IT’S GROWING ” எந்த ஒரு உடையும் ரசிக்கப்படுவதற்கும் ரசிக்கப்படாமல் போவதற்கு...\nஅவள் வரமாட்டாள் என்று தெரிந்தும் காதலை ஆண்கள் கழிவறைகளில் எழுதுவதுதான் மூடநம்பிக்கை பெண்கள் இல்லா உலகம் வேண்டும் - அங்கு என்னைத்தவிர ...\n A JOKES, நகைச்சுவை, கதை, தத்துவம், அனுபவம், தமிழ், கவிதை,சுற்றுலா, கார்டூன்\nநிலாப்பெண்ணுக்கு இணையதளம் ஆரம்பித்து ஓராண்டு நிறைவு பெறுவதை முன்னிட்டு இந்த வருடத்தின் சிறந்த பதிவுகள் சில\nஅரிய புகைப்படங்கள் - திருக்குறள் ஓலைச்சுவடி, பழைய சென்னை, கோவை, திருச்சி, திரிகோணமலை, நெல்லை\nஎன் சிறுவயது முதல் (இப்ப ரொம்ப பெரிய வயசுன்னு நினைப்பு) தேடிய புகைப்படம் – திருக்குறளின் ஓலைச்சுவடி. இன்னும் பல நகரங்களின் முந்தைய தோற...\nஹைக்கூ - சின்ன சின்ன கவிதைகள்\nஎனக்கும் அவளுக்கும் ஒரு ஒற்றுமை என் நண்பனைப் பிடித்துப்போனதுதான் வடக்கு தெற்கு ஈர்க்கும் காந்தப்புலம் அவள் கண்க...\nஉங்களிடம் உள்ள டிகிரியை வைத்துக்கொண்டு ஒரு ஃபில்டர் காபிகூட போட முடியாது பெண்களுக்குத் தேவை குடிக்காத நல்ல ஆண்கள் பெண்களுக்குத் தேவை குடிக்காத நல்ல ஆண்கள்\nவானம் ஆழமானது நீ நினைத்தால் வானம் ஆழமானது நீ உயர்ந்து நின்றால் வானம் ஆழமானது நீ உயர்ந்து நின்றால்\nஇரண்டாம் ஆண்டில் நிலாப்பெண்ணுக்கு, நீங்களும் பதிவு...\nஅபோகாலிப்டோ - பார்க்கவேண்டிய படம் +18 only\n A JOKES, நகைச்சுவை, கதை, தத்துவம...\nஏ ஜோக்ஸ் கதைகள் தத்துவங்கள் 3\nஃபிகர், சரக்கு, ஜொள்ளு தத்துவங்கள்\nகுழந்தைகளுக்கு படிப்பு சொல்லித் தராதீர்\nஏக் தா டைகர் சினிமா விமர்சனம் – சல்மான் கான், கத்ர...\nஒரு கொடி ஒரு மிட்டாய் ஒரு சுதந்திர தினம்\nபிளைட் ஏறி வந்து பிச்சை எடுத்த இந்தியர்கள் துபாயில...\nஅப்பன் பேர் தெரியாத தமிழர்கள், தமிழ் போற்றும் பிரா...\nகார்/பஸ் தண்ணீருக்குள் விழுந்துவிட்டால் என்ன செய்ய...\nLOVE JOKES - காமெடி வசனங்கள்\nEnglish PLUS18 WatchMovie அரசியல் அனுபவம் ஆன்மீகம் இணையதளம் இயற்கை இலங்கை இன்னா 40 ஈழம் உணவு உபயோகமானவை கட்டுரை கதை கவிதை காதல் காதல் மொழி கார்டூன் சினிமா சுட்டவை 40 சுற்றுலா செய்திகள் சைக்கோ ட்விட்டர் தத்துவம் தமிழ் தலையங்கம் தனிமை திரை விமர்சனம் துபாய் துறை தொழில்நுட்பம் நகைச்சுவை நிலா படைப்புகள் பாடல் புகைப்படங்கள் பேசி போராட்டம் மழலை மனதைத் திற வரலாறு விளையாட்டு வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://catholicpentecostmission.in/Comments_Request.aspx", "date_download": "2018-04-26T13:38:15Z", "digest": "sha1:DY6BF5FO3MTKFWOS2235LAVHGAIEFHYR", "length": 42275, "nlines": 207, "source_domain": "catholicpentecostmission.in", "title": "விண்ணப்பம்", "raw_content": "\nஇன்று - CPM சபை\n“கேளுங்கள் உங்களுக்கு கொடுக்கப்படும்” – மத் 7:7\nஉங்கள் விண்ணப்பங்களுக்காக, நாங்கள் ஜெபிக்க,\n தாங்கள் பதிவு செய்த விண்ணப்பத்தையும், பதிலையும், இன்னும் 24 மணி நேரத்தில், இந்த பகுதியில் எதிர்பாருங்கள். இறை அமைதி உங்களோடு என்றும் இருப்பதாக\nநான் எழுதிய போலிஸ் தேர்வில் வெற்றி பெற போலிஸ் வேலை கிடைக்க எனக்காக ஜெபம் செய்ய வேண்டுகிறேன்\n உங்கள் ஏக்கம் நிறைந்த விண்ணப்பதை தேவ பாதத்தில் ஒப்புக்கொடுத்து ஜெபிக்கின்றோம். “விரைவில் உனக்கு நலமான வாழ்வு துளிர்க்கும்” (எசாயா 58:8) என்ற வேத வசனத்தின் படியே, தங்கள் வாழ்விலும், எதிர்பார்க்கின்ற வேலையையும், வெற்றியையும், விரைவில் தந்து, நலமான வாழ்வையும், வளமான எதிர்காலத்தையும் தருவதாக தேவன் வாக்குத்தத்தம் தருகிறார். வாக்கு மாறாத தேவனை பற்றிக் கொண்டு, தொடர்ந்து ஜெபிப்போம். வெற்றி நிச்சயம் உண்டு. தம்மை நம்பின யாரையும் அவர் ஒருபோதும் கைவிடுவதில்லை. மீட்படைவோம்- மீட்பளிப்போம், ஆசீர் அருட்சகோதரிகள் - J.John Celin, V.Catherine Vimala\nஇறை இயேசுவில், மிகவும் பிரியமான சகோதரரே வியாதியோடு போராடிக்கொண்டிருக்கும் தங்களின் பாரம் நிறைந்த விண்ணப்பத்தை தேவ பாதத்தில் கண்ணீரோடு ஒப்புக் கொடுக்கிறோம். “பல்வேறு பிணிகளால் வருந்திய பலரை அவர் குணப்படுத்தினார். பல பேய்களையும் அவர் ஓட்டினார்” (மாற் 1:34) என்ற வேத வசனத்தின்படியே, இயேசுவை நம்பி, கண்ணீரோடு ஜெபிக்கின்ற தங்கள் விண்ணப்பத்தையும் ஆண்டவர் இப்போதே கேட்கின்றார். மெய்யாகவே, அவர் நம் பிணிகளை எல்லாம் பாரச்சிலுவையில் சுமந்து தீர்த்தார். என்ன வியாதியாக இருந்தாலும், அவரால் விடுதலை தர முடியும் என்ற விசுவாசத்தோடு தொடர்ந்து உங்களுக்காக கரம் விரித்து கண்ணீரோடு ஜெபிக்கின்றோம். வெகு விரைவில் தங்கள் விடுதலையின் சாட்சிக்காக காத்திருக்கின்றோம். மீட்படைவோம் - மீட்பளிப்போம் - ஆசீர் - அருட்சகோதரிகள் - Catherine Vimala, John Celin\nஎனக்கு ஒரு மகள் ,எனக்கு ஆண் குழந்தை வேண்டும் அதற்காக ஜெபிக்கவும்.இப்படி ஒரு சபை இருப்பது இப்போது தான் அறிந்தேன் மிக்க மழிச்சி\nஇறை இயேசுவில் அன்பு சகோதரியே தங்களின் மன்றாட்டை ஆண்டவரின் பாதத்தில் சமர்ப்பித்து, உங்களுக்காக கண்ணீரோடு ஜெபிக்கின்றோம். “பிள்ளைகள், ஆண்டவர் அருளும் செல்வம். மக்கட்பேறு, அவர் அளிக்கும் பரிசில்” (தி.பா 127:3) என்ற வசனத்தின்படியே ஆண்டவர் தந்திருக்கின்ற பிள்ளைகளுக்காக நன்றி. 1சாமு 1:11 – ல், அன்னா என்ற பெண்மணியும், தனக்கு ஒரு ஆண் குழந்தை வேண்டும் என்று ஆண்டவரி;டம் மன்றாடினார். அவர் மன்றாட்டை கேட்டு, கடவுளும், சாமுவேல் என்ற இறைவாக்கினரை மகனாக கொடுத்தார். உங்கள் விண்ணப்பத்தையும், ஆண்டவர் கேட்டு, உங்கள் மன விருப்பத்தை நிறைவேற்ற, தொடர்ந்து உங்களுக்காக ஜெபிக்கின்றோம். அற்புத சாட்சிகளையும் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள். மீட்படைவோம் - மீட்பளிப்போம் - ஆசீர் - அருட்சகோதரிகள் - Catherine Vimala, John Celin.\nமேரி சார்லெட் , Chennai\nநான் கிறிஸ்தவம் பற்றி புரிந்துணர விரும்புகிறேன், எனக்கு சரியான வழிகாட்டுதல் கிடைக்குமா பணம்,தொழில்,குடும்பம், என எனக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை, தனிமை தவிர..உதவ முடியுமா\nரஞ்சித் ஆண்டனி , வேளாங்கண்ணி\nகர்த்தருக்கு சித்தமான ஒரு பெண் 24 மணி நேரத்தில் நான் பார்க்க வேண்டும் தயவு செய்து கல்யாணம் சீக்கிரம் முடிய ஜெபம் செய்ய வேண்டுகிறேன்\nஎனக்கு அரசாங்க வேலை கிடைக்க ஜெபம் செய்ய வேண்டுகிறேன்\nஅரசாங்க வேலை கிடைக்க......குறிப்பாக ஆசிரியை வேலை கிடைக்க........எனக்காக ஜெபிக்குமாறு வேண்டுகிறேன்.\nபேயின் தொல்லையிலிருந்து விடுதலை கிடைக்கவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும் ஜெபிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.\nநிக்கோலஸ் லியோ பீட்டர் , பெரியகுளம்\nகுடும்பத்தில் உள்ள அனைவரும் நல்ல உடல் நலம் பெற, கடவுளுக்கு விரோதமாக செய்த பாவத்திலிருந்து விடுபட , கடன் பிரச்சனைலிருந்து விடுதலை பெற, அவருடைய ஆசிர்வாதம் பெற மன்றாடுகிறோம்.\nஎனது மகன் டேவிட் லீஜே வயது 16 ஆட்டிசம் எனும் மன நலமின்மையால் இயல்பான வாழ்வு முறை இல்லாது வாழ்ந்து வருகிறான். அவனுக்கு தெய்வீக சுகம் கிடைக்க மன்றாட வேண்டுகிறேன்\nபிரவீன் அ , மதுரை\nமன குழப்பம், மன வேதனை தீர, சாத்தானின் கட்டுகள் உடைய, நல்ல உடல் சுகம் வேண்டும், மன தைரியம் வேண்டும். எந்தவித தடைகள் இல்லாமல் திருமணம் நடை பெற வேண்டும். நான்கு வருடமாக காதலித்த பெண் இப்போது என்னுடன் பேச, பார்க்க மறுக்கிறாள். அவளின் வீட்டில் எதிர்ப்புகள், தீய கட்டுகள் அவளிடம் போடப்பட்டுள்ளது. எங்கள் வீட்டில் அனைவருக்கும் சம்மதம், அவள் வீட்டில் எதிர்ப்பு. எங்களுக்காக வேண்டி கொள்ளுங்கள். என் பாவத்தை கடவுள் மன்னித்து என் வாழ்க்கை மாற்றி தர வேண்டும்.\nஎனக்கு இடது பக்கமாக ஒரு வித கஷ்டமும் தொடர் காஸ் பிரச்சினையும் உள்ளது. இதிலிருந்து நான்விடு பட ஜெபியுங்கள்\nஎனக்கு வேலை கிடைக்க ஜெபிக்கவும்.\nநான் மிகவும் கஷ்ட படுக்கிறேன் எனக்கு நிரந்தர ஒரு வருமானம் இல்லை என் பாவத்தை கடவுள் மன்னித்து என் வாழ்க்கை மாற்றி தர வேண்டும் என கேட்க்கிறேன் என்னோடைய பழைய சிந்தனைகளை நான் மறக்க என் நிலை மாற வேண்டும் ப்ளீஸ் எனக்கு prayer பண்ணுங்க also please change my life.i am waiting for your one word please lord change my life.\nஇறை இயேசுவில் எனக்கு அன்பான அருட்தந்தை அவர்களுக்கும் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள் சிறுவயதுமுதல் பல சந்தர்ப்பங்களில் என் சக்திக்கு அப்பாற்பட்ட விஷயங்கள் எதுவாக இருந்தாலும் அதை நடத்தி வைத்து தப்புவிக்க அன்பு தகப்பனின் நேசகரம் என்றும் கூடேயுண்டு சிறுவயதுமுதல் பல சந்தர்ப்பங்களில் என் சக்திக்கு அப்பாற்பட்ட விஷயங்கள் எதுவாக இருந்தாலும் அதை நடத்தி வைத்து தப்புவிக்க அன்பு தகப்பனின் நேசகரம் என்றும் கூடேயுண்டு இன்றும் அதுபோல எங்கள் குடும்பத்தில் நிலவும் கருத்துவேறுபாடு, பிளவு, வெறுப்பு, வைராக்கியம், பொல்லாத எண்ணங்கள் இவைகளை குடும்பத்தில் கொண்டு சேர்க்க முயலும் பொல்லாங்கனின் சூழ்ச்சிகளில் இருந்து தப்புவிக்கவும் குடும்பத்தில் அன்பும் சமாதானமும் மேலோங்கி ஒற்றுமை நிலவ இறை பாதத்தில் மிகுந்த மன பாரத்துடன் என் விண்ணப்பத்தை சமர்பிக்கிறேன்.\nஇறை இயேசுவில் அன்பான தந்தையவர்களுக்கும் மற்றும் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள். தொலை தூர தேசத்தில்(சவுதி அரேபியா) இருந்து தன்னந்தனியே ஒரு அபய குரல் தான் அறிந்த ஆண்டவரை நோக்கி, இதுவரை உதவி செய்தார், இனியும் காத்திடுவார் என்ற நம்பிக்கையில். என் எளிய விண்ணப்பம் எதுவெனில், இப்போது வேலை செய்து கொண்டிருக்கும் கம்பெனியில் இரண்டு வருட ஒப்பந்தம் முடிவுறும் தருவாயில், வருடாந்திர விடுமுறையும் இந்த மாதம் முதல் வந்துள்ளது. இச்சூழ்நிலையில், மற்றுமொரு புதிய கம்பெனியில் இருந்து சிறந்ததொரு வேலை வாய்ப்பு தருவதாக கூறி அழைக்கிறார்கள். ஆனால் முன்பிருந்த கம்பெனி அனுமதி தர மறுப்பதோடு, விடுமுறைக்கும் அனுப்ப மறுக்கின்றனர். இப்போது அவர்கள் என்னிடம் பேரம் பேசிக்கொண்டிருக்கிறார்கள் ஒரு நல்ல முடிவு ஏற்பட ஆண்டவர் சமூகத்தில் ஜெபம் ஏறெடுக்க சபையார் அனைவரையும் அன்புடன் வேண்டுகிறேன் அன்புடன், F.ஹெட்விஜ் சுரேஷ் ரியாத்(சவுதி அரேபியா)\nஇறை இயேசுவில் அன்பான தந்தையவர்களுக்கும் மற்றும் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள். தொலை தூர தேசத்தில்(சவுதி அரேபியா) இருந்து தன்னந்தனியே ஒரு அபய குரல் தான் அறிந்த ஆண்டவரை நோக்கி, இதுவரை உதவி செய்தார், இனியும் காத்திடுவார் என்ற நம்பிக்கையில். என் எளிய விண்ணப்பம் எதுவெனில், இப்போது வேலை செய்து கொண்டிருக்கும் கம்பெனியில் இரண்டு வருட ஒப்பந்தம் முடிவுறும் தருவாயில், வருடாந்திர விடுமுறையும் இந்த மாதம் முதல் வந்துள்ளது. இச்சூழ்நிலையில், மற்றுமொரு புதிய கம்பெனியில் இருந்து சிறந்ததொரு வேலை வாய்ப்பு தருவதாக கூறி அழைக்கிறார்கள். ஆனால் முன்பிருந்த கம்பெனி அனுமதி தர மறுப்பதோடு, விடுமுறைக்கும் அனுப்ப மறுக்கின்றனர். இப்போது அவர்கள் என்னிடம் பேரம் பேசிக்கொண்டிருக்கிறார்கள் ஒரு நல்ல முடிவு ஏற்பட ஆண்டவர் சமூகத்தில் ஜெபம் ஏறெடுக்க சபையார் அனைவரையும் அன்புடன் வேண்டுகிறேன் அன்புடன், F.ஹெட்விஜ் சுரேஷ் ரியாத்(சவுதி அரேபியா)\nகுடும்பங்களில் சமாதானம் மன கசப்புகள் கருத்து வேறுபாடுகள் நீங்க என் மகனுக்கு இருக்கும் பிடிவாத குணத்திலிருந்து விடுவிக்க என் மனைவிக்கு இருக்கும் உடல்நல பிரச்சனை தீர என் தாய் தந்தைக்கு இருக்கும் உடல்நல பிரச்சனை தீர என் தந்தை நாங்கள் குடியிருக்கும் வீட்டை என் பெயருக்கு எழுதி தர எனக்கு பனி உயர்வும் சம்பள உயர்வும் கிடைத்திட எங்களுக்காக வேண்டி கொள்ளும் ஆமென்\n தங்கள் உள்ளம் கனத்த விண்ணப்பத்தோடு, தேவ பாதத்தில் வேண்டுகிறோம். பயந்து போய், மிகுந்த நடுக்கத்துடன், அறைக்கதவை பூட்டிக் கொண்டு ஒளிந்திருந்த சீடர்கள் மத்தயில் உயிர்த்த இயேசு தோன்றி, “உங்களுக்கு அமைதி உரித்தாகுக” (யோவா 20:19) என்று கூறி வாழ்த்தினார். அந்த இயேசு, நிச்சயமாக இன்றும் தம்மை தேடும் ஒவ்வொருவரோடும் வாழ்கின்றார். அவர் எல்லாருக்கும் நன்மை செய்கின்றவர். நிச்சயமாக உங்கள் குடும்பத்தையும் எல்லாவித நன்மைகளாலும் நிரப்பி, யாராலும் எடுக்க முடியாத, நிலையான சமாதானத்தை தந்தருள்வார். தோடர்ந்து தொடர்பில் இருங்கள். மீட்படைவோம் - மீட்பளிப்போம். ஆசீர் - அருட்சகோதரிகள் - Catherine Vimala, John Celin.\nஎனக்கு நல்ல வேலை கிடைக்கவேண்டும் அல்லது என் தொழில் சிறக்க வேண்டும். நான் தற்போது மிகவும் கஷ்டத்தில உள்ளேன். என் கஷ்டம் நீங்க , இறை அருள் கிடைக்க ஜெபியுங்கள். நன்றி.\n உங்கள் பாரம் நிறைந்த விண்ணப்பத்தை, தேவ சமூகத்தில் ஏறெடுத்து கண்ணீரோடு நிற்கின்றோம். உயிர்த்த இயேசு, தம் சீடர்களின் தொழிலிலே, ஆலோசனைகள் வழங்கி, அவர்களின் தொழிலில் ஏற்பட்ட தொய்வுகளை எல்லாம் சீராக்கினார். வெற்றியையும, செழிப்பையும் கொடுத்தார் என்று யோவா 21:1-8 வரையுள்ள வசனங்களில் வாசிக்கின்றோம். உயிர்த்த இயேசு, இந்த நாட்களில் நம்மோடு இருக்கின்றார். வெகுவிரைவில் உங்களுக்கு நல்ல பலனைத் தருவார்.தொடர்ந்து ஜெபிக்கின்றோம். முயற்சிகள் நிச்சயம் வெற்றி பெறும். மீட்படைவோம் - மீட்பளிப்போம். ஆசீர் - அருட்சகோதரிகள் - Catherine Vimala, John Celin.\nஅரசங்க வேலை கிடைக்கவாழ்க்கையில் முன்னேர கர்த்தரிடம் எனக்காக ஜெபிக்குமாரு வேண்டுக்கிறேன்.................\n மத் 7:7 – ன் படி, ஆண்டவர் உங்கள் விண்ணப்பத்திற்கு பதில் தருகிறார். “கேளுங்கள் உங்களுக்கு கொடுக்கப்படும்; தேடுங்கள் நீங்கள் கண்டடைவீர்கள்; தட்டுங்கள் உங்களுக்கு திறக்கப்படும்” என்று சொன்ன தேவன் உங்கள் விண்ணப்பத்தை நிச்சயம் கேட்பார். விசுவாசத்தில் உறுதியாய் இருங்கள். ஆண்டவர் நீங்கள் நினைப்பதற்கும் வேண்டுவதற்கும் மேலாக அதிசயங்களை செய்ய வல்லவர். மீட்படைவோம் - மீட்பளிப்போம். ஆசீர் - அருட்சகோதரிகள் - Catherine Vimala, John Celin.\nநான் MSC 2009ல் முடித்தேன் இதுவரை எந்த வேலையிலும் நிரந்திரமாக பணிபுரிய முடியவில்லை, பிரச்சனைகள் வந்து வெளியேர வெண்டிய நிலை உருவகிறது. இப்பொலுதும் உடல் நிலை சரியில்லாமல் அருவை சிகிச்சை செய்து வீட்டில் உள்ளேன். என்னுடைய படிப்பிற்கு ஏற்ற வேலைக்கு செல்ல இயலாத நிலையில் உள்ளேன், நிரந்தர வேலை கிடைத்து வாழ்க்கையில் முன்னேர கர்த்தரிடம் எனக்காக ஜெபிக்குமாரு வேண்டுக்கிறேன்.................\n பாரம் நிறைந்த உங்கள் விண்ணப்பத்தை ஆண்டவர் நிச்சயம் கேட்டருள்வார். ஏசா 53:4-5 ன்படி, “அவர் நம் பிணிகளைத் தாங்கிக் கொண்டார். நம் துன்பங்களை சுமந்து கொண்டார். அவர் தம் காயங்களால் நாம் குணமடைகின்றோம்” என்று நம் தேவன், கல்வாரியில் தன்னை பலியாக்கி, நமக்கு விடுதலையை தந்துள்ளார். அவரை விடாமல் பற்றிக்கொள்ளுங்கள். இடைவிடாமல் ஜெபியுங்கள் - 1தெச 5:16. தேவன் உங்களை எழுப்பிவிட்டு, நிச்சயமாக ஒரு நிரந்தர வேலையையும் இப்போதே ஆயத்தம் செய்வார். உங்களை சாட்சியாக மாற்றி ஆசீர்வதிப்பார். தொடர்ந்து உங்களை ஜெபத்தில் தாங்கும் . மீட்படைவோம் - மீட்பளிப்போம். ஆசீர் - அருட்சகோதரிகள் - Catherine Vimala, John Celin.\nநான் கடன் பிரச்னை இல் இருந்து விடுபட வேண்டும் நான் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் அம்மா நன்றாக இருக்க மற்றும் என் காதலி விஜயலஷ்மி யை நான் திருமணம் செய்து கொண்டு கர்த்தருடைய பத்திரமாக இறுக்க ஜெபிக்க வேண்டுக்கிறேன்\n 1யோவா 5:14 – ன்படி ஆண்டவர் உங்கள் ஜெபத்திற்கு பதில் தருகின்றார். “நாம் கேட்பது, அவருடைய திருவுளத்திற்கு ஏற்ப அமைந்திருப்பின், அவர் நமக்கு செவிசாய்க்கின்றார்\" என்று சொன்ன நல்ல தேவன், தம்முடைய விருப்பத்தின்படியே, உங்கள் தேவைகளையும் சந்திப்பார். தங்களுக்காகவும் தங்கள் விண்ணப்பத்திற்காகவும், தொடர்ந்து இறை பாதம் நிற்கின்றோம். மீட்படைவோம் - மீட்பளிப்போம். ஆசீர் - அருட்சகோதரிகள் - Catherine Vimala, John Celin.\nஎன் அம்மாவிற்கு வயிற்று வலி சுகமாக ஜெபிக்க வேண்டும்\nஎனக்கு அரசாங்க வேலை கிடைக்க வேண்டுமாறு ஜெபிக்க வேண்டும்\nஅன்பு சகோதரி 1 சாமு 1 : 17 - ன் படி, தங்கள் ஜெபத்தை, ஆண்டவர் கேட்டருள்வார். மனிதனாலே கூடாதது, நம் தேவனாலே கூடும் - தொ. நூ 18 : 13,14 . வேலையில்லாதவர்களுக்கு, வேலை அளித்த இயேசு, உங்கள் விண்ணப்பத்துக்கு, வெகு விரைவில் செவி சாய்க்கிறார். - மத் 20 : 1 -8 . தங்கள் விண்ணப்பத்தோடு, தங்களையும், தங்கள் குடும்பத்தையும், தாங்கி ஜெபிக்கிறோம். மீட்படைவோம் - மீட்பளிப்போம். ஆசீர் - அருட்சகோதரிகள் - Catherine Vimala, John Celin.\nஎன் கணவரின் குடி பழக்கம் மாற வேண்டும்\nஅன்பு சகோதரி, தங்களின் பாரம் நிறைந்த விண்ணப்பத்தை, கண்ணீரோடு தேவ சமூகத்தில் ஏறெடுக்கிறோம். அல்லும் பகலும் தம்மை நோக்கி ஜெபிக்கின்றவர்களுக்கு விரைவில் பதில் கொடுப்பேன் என்று சொன்ன நல்ல தேவன், உங்கள் கணவரின் குடிபழக்கத்தை விரைவில் மாற்ற சித்தம் கொண்டார். இரவும் பகலும் சோர்ந்து போகாமல், தேவ பாதத்தில் ஜெபியுங்கள். வெற்றி நிச்சயம் உண்டு. மீட்படைவோம் - மீட்பளிப்போம் - இப்படிக்கு, உங்களை என்றும் ஜெபத்தில் தாங்கும் அருட்சகோதரிகள் - Catherine Vimala, John Celin.\nஅன்பு சகோதரி, தங்களுடைய விண்ணப்பத்தை பார்த்தோம். மத் 6 : 32 - 34 -ன் படி, தங்களுடைய விண்ணப்பம் கேட்கப்பட்டது. தடைகள் எல்லாம் வெகு சீக்கிரத்தில் நீங்கி, நீங்கள் ஒரு வேலையை சீக்கிரம் பெற்று கொள்வீர்கள். \"தம்மிடம் வருபவரை ஒருபோதும் தள்ளிடாத தேவன், (யோவா 6 : 37 ), உங்களை ஆசீர்வதிக்கிறார் . “மீட்படைவோம் - மீட்பளிப்போம்”. இப்படிக்கு தங்களை தாங்கி ஜெபிக்கும் அருட்சகோதரிகள் - Catherine Vimala, John Celin.\nஎன் அக்காமா புதுப்பிக்க முடியாமலும், நான் இந்நாட்டிலிருந்து வெளியேறக்கூடிய நெருக்கடியான சூழல் உருவாக உள்ளது. எனக்கு உதவி செய்ய இங்கு யாரையும் காணவில்லை. தயவு தேடி ஆண்டவர் சமூகத்தில் என் விண்ணப்பத்தை ஏறெடுக்கிறேன் எனக்காக தேவ சமூகத்தில் ஜெபிக்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். lovingly, Hedwige\n தங்களுடைய பாரம் நிறைந்த விண்ணப்பம், இறை சமூகத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தி.பா18:16-30 – ன் படி, தங்களுடைய விண்ணப்பத்திற்கு ஆண்டவர் பதில் தருகிறார். தம்மைத் தாழ்த்தும் நீதிமானின் ஜெபம், மேகங்களை ஊடுருவி சென்று, பதில் பெறாமல் திரும்பாது – சீரா 35:17. திடம் கொள்ளுங்கள், உறுதியாயிருங்கள், ஆண்டவர் தங்கள் பக்கம் இருந்து, தங்களுக்காக யாவையும் செய்து முடிக்கிறார் - தி.பா 37:5. “மீட்படைவோம் - மீட்பளிப்போம்”. இப்படிக்கு தங்களை தாங்கி ஜெபிக்கும் அருட்சகோதரிகள் - Catherine Vimala, John Celin.\nDear Father, எனது இரண்டு கை விரல்களும் நடுங்கும் (nervous).சிறு வயதுலிருந்தே எனக்கு இந்த பிரச்சினை உண்டு ஆனால் இப்போ அதை விட பயங்கரமா இருக்கு. i have fear that it will affect my carrier. Father please pray for me to strengthen my fingures\nஅன்பு சகோதரி, பிணி தீர்ப்பதற்கான, ஆண்டவரின் வல்லமை இயேசுவோடிருக்கிறது – லூக் 5:17. இயேசு பல்வேறு பிணிகளாலும், வாதைகளாலும், வருந்திய அனைவரையும், குணமாக்கினார் - மத் 4:24. எனவே, தங்கள் நம்பிக்கை வீண்போகாது. விடுதலையளிக்கும் இயேசு, தங்கள் விரல்களின் நடுக்கத்தை, நீக்கிப்போடுவார். மீட்படைவோம் - மீட்பளிப்போம் - இப்படிக்கு, உங்களை என்றும் ஜெபத்தில் தாங்கும் அருட்சகோதரிகள் - Catherine Vimala, John Celin.\nஅன்புள்ள அகிலா, தாங்கள் ஏறெடுத்த விண்ணப்பங்களை இறை சமூகத்தில் வைத்து ஜெபிக்கிறோம். எசயா 46 : 3 ,4 வசனங்களின் படி, ஆண்டவர் உங்கள் ஜெபத்திற்கு பதில் தருகிறார். ஜெபமே ஜெயம். விடாது ஜெபித்தால், விடுதலை உண்டு. மீட்படைவோம், மீட்பளிப்போம். இப்படிக்கு, உங்களை தாங்கி ஜெபிக்கும், அருட்சகோதரிகள், Catherine Vimala , John Celin .\nஅன்பு சகோதரி 1 சாமு 1 : 17 - ன் படி, தங்கள் ஜெபத்தை, ஆண்டவர் கேட்டருள்வார். மனிதனாலே கூடாதது, நம் தேவனாலே கூடும் - தொ. நூ 18 : 13,14 . வேலையில்லாதவர்களுக்கு, வேலை அளித்த இயேசு, உங்கள் விண்ணப்பத்துக்கு, வெகு விரைவில் செவி சாய்க்கிறார். - மத் 20 : 1 -8 . தங்கள் விண்ணப்பத்தோடு, தங்களையும், தங்கள் குடும்பத்தையும், தாங்கி ஜெபிக்கிறோம். மீட்படைவோம் - மீட்பளிப்போம். ஆசீர் - அருட்சகோதரிகள் - Catherine Vimala, John Celin.\n எல்லாரும் என்னிடம் வாருங்கள், உங்களுக்கு நான் இளைப்பாறுதல் தருவேன்” - மத் 11:29\n“இயேசுவே நான் உம்மை நேசிக்கிறேன்” – யோவா 21:15\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.manithan.com/india/04/157316?ref=more-highlights-lankasrinews", "date_download": "2018-04-26T13:13:00Z", "digest": "sha1:VCQYGWSMGRZ77B2WX7MZ3CKULFI6IVEU", "length": 11970, "nlines": 157, "source_domain": "www.manithan.com", "title": "மனைவியின் அந்த நிலையால் பொறாமைப்பட்ட கணவன்.... பின்பு நடந்த கொடூரமான சம்பவம் - Manithan", "raw_content": "\nவெட்டப்பட்ட மனைவியின் தலையுடன் தெருவில் நடந்து சென்ற கணவன்: அதிர வைக்கும் சம்பவம்\nஇளவரசர் ஹரியின் திருமணத்தில் மணப்பெண் தோழியாகும் உலக அழகி\nஜெயலலிதா வழக்கில் திடீர் திருப்பம்\nஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுலா செல்ல வேண்டுமா விரைவில் வரவிருக்கும் புதிய சட்டம்\nஅஜித்தின் மனைவி ஷாலினியின் பகையாளி யார் தெரியுமா\n பல ஆண்டுகளுக்கு பின் பாத்திமா பாபு விளக்கம்\nஇத்தனை வயதில் பிரபல நடிகை கௌசல்யாவுக்கு கல்யாணமாம்\nசர்வதேச இளம் இளம் விஞ்ஞானிகளுக்கான போட்டியில் இலங்கை 3 தங்கப்பதக்கம்\nமரணத்தின் பிடியிலிருந்து அஜீத்தை மீட்டெடுத்த ஷாலினி கசந்து போன வாழ்வில் உயிர்த்தெழுந்த காதல்\nசிவகார்த்திகேயனால் தொகுப்பாளினி பாவனா அனுபவித்த கொடுமை\nபிள்ளைகள், பெற்றோர்களை கொடூரமாக கொலை செய்த பெண் காரணத்தை கேட்டால் அதிர்ந்து போயிடுவிங்க\nஇந்த 3 ராசியில உங்க ராசி இருக்குதா.. இந்த ஆண்டில் கோடீஸ்வர யோகம் இதற்குத் தானாம்\nமனைவியை நண்பர்களுடன் உறவு வைக்க கட்டாயப்படுத்திய கணவன் - இறுதியில் நடந்ததை பாருங்கள்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\n31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்\nயாழ். சரசாலை, கனடா Toronto\nமனைவியின் அந்த நிலையால் பொறாமைப்பட்ட கணவன்.... பின்பு நடந்த கொடூரமான சம்பவம்\nஇந்தியாவில் உத்திர பிரதேச மாநிலத்தில் தன்னைவிட மனைவி நல்ல வேளையில் இருந்ததால் பொறாமையில் கணவன் மனைவியை அடித்தே கொலை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஉத்திர பிரதேச மாநிலம் நொய்டாவை சேர்ந்தவர் குல்தீப் ராகவ். இவருக்கும் ரிச்சா சிசோடியா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது.\nஇதனையடுத்து ரிச்சா தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வந்தார். ஆனால் குல்தீப்க்கு சரியாக வேலை கிடைக்காததால் மளிகை கடையில் உதவியளாராக வேலை செய்து வந்துள்ளார்.\nஇதனால் தன் மனைவி நல்ல நிலையில் இருக்கிறாளே என்ற பொறாமை குல்திப்க்கு ஏற்படவே ஒரு கட்டத்தில் மனைவி மீது கோபம் ஏற்பட்டு அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளார்.\nஇதனையடுத்து கடந்த சில தினங்களுக்கு இருவருக்கும் சண்டை அதிகமானதால் ஆத்திரமடைந்த குல்தீப் ரிச்சாவை கடுமையாக தாக்கியுள்ளார்.\nஇதனால் படுகாயமடைந்த ரிச்சா பரிதாபமாக இறந்தார். இதனையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஉடல் எடையை மிக வேகமாக குறைக்க இந்த ஒரு பொருள் போதும்\nசோகத்தில் இருந்த நடிகர் வடிவேலுவிற்கு அடுத்தடுத்து அடித்த அதிஷ்டம்\nமனைவியை நண்பர்களுடன் உறவு வைக்க கட்டாயப்படுத்திய கணவன் - இறுதியில் நடந்ததை பாருங்கள்\nஐ.தே.க. செயற்குழு கூட்டத்தில் சிக்கல்\nமத்திய வங்கியின் அறிக்கை நிதியமைச்சரிடம் கையளிப்பு\nதொழிலாளர் தினத்தை மே முதலாம் திகதி கொண்டாடவுள்ளது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு\nபள்ளிமுனை கடற்கரையில் உள்ள மீன் வாடிகளில் இருந்து கைப்பற்றப்பட்ட ஒரு தொகை மீன்கள்\nபேருவளையில் எரிந்த நிலையில் சடலம் மீட்பு\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா் விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.techtamil.com/jobs/sukhvarsha-management-services-pvt-ltd-excellent-opening-for-a-leading-health-care-bpo-in-chennai/", "date_download": "2018-04-26T12:57:39Z", "digest": "sha1:TUG4NQWYWMM2LMD55YCCESYCLFMF4R4G", "length": 7241, "nlines": 152, "source_domain": "www.techtamil.com", "title": "Sukhvarsha Management Services Pvt Ltd Excellent – opening for a Leading Health Care BPO in Chennai – TechTamil News", "raw_content": "\nContact / அறிமுகம் / தொடர்புக்கு\nவிப்ரோ நிறுவனம் ‘India Gateway' Internship Program ஒன்றை UK university பல்கலைகழக மாணவர்களுக்காக ஆரம்பித்துள்ளது. இதன் முக்கிய நோக்கம் 100000 தகுதியுள...\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\n2012 – 2013 இல் 8000 புதிய பணியிடங்களை நிரப்பும் Infosys BPO பிரிவு.\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n2012 – 2013 இல் 8000 புதிய பணியிடங்களை நிரப்பும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} {"url": "http://www.viduppu.com/entertainment/04/161169", "date_download": "2018-04-26T13:48:02Z", "digest": "sha1:Z7WLTMCM63R6GLQ7M4I4IOIJR3KOWY4J", "length": 5255, "nlines": 69, "source_domain": "www.viduppu.com", "title": "மகள் ஐஸ்வர்யாவிற்காக அர்ஜுன் செய்த காரியத்தை பாருங்களேன் - Viduppu.com", "raw_content": "\nகணவரை பிரிந்தார் ஐஸ்வர்யா ராய்\nதாலி கட்டும் நேரத்தில் நடந்த நிஜ சம்பவம்\nஅஜித்தின் மனைவி ஷாலினியின் பகையாளி யார் தெரியுமா\nதிடீர் திருமணம் செய்துகொண்ட சூப்பர் ஹிட் பட நடிகை...அதிர்ச்சியில் ரசிகர்கள்\nதலைவர் உரையின் போது தூங்கிய ராணுவ தலைவருக்கு மரண தண்டனை\nஆர்யாவின் திருமணம் நிகழ்ச்சியை மரணகலாய் கலாய்த்த கார்த்திக் மற்றும் ஜெகன்...வைரலாகும் வீடியோ உள்ளே\nஅனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய சூப்பர் சிங்கர் பிரியங்கா அடடே இப்படியும் ஒரு திறமையா..\nஒரே வீட்டில் தனி தனியாக வாழும் ஐஸ்வர்யா அபிஷேக் பச்சன்...காரணம் என்ன\nசுசானாவின் தந்தையால் ஆதாரத்துடன் சிக்கும் ஆர்யா\nவிவாகரத்திற்கு பிறகு அமலாபால் இப்படி மாறிட்டாங்களே...வைரலாகும் புகைப்படம் உள்ளே\nமகள் ஐஸ்வர்யாவிற்காக அர்ஜுன் செய்த காரியத்தை பாருங்களேன்\nஅர்ஜுன் தன் மகள் ஐஸ்வர்யா நடிப்பில் இயக்கியுள்ள படம் சொல்லிவிடவா. சந்தன் குமார் ஹீரோவாக நடிக்கிறார். பிரகாஷ்ராஜ், சுஹாசினி, கே.விஸ்வநாத் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். தமிழ் மற்றும் கன்னடத்தில் இன்று வெளியாகிறது.\nஇந்தப் படத்தில் அர்ஜுன் ஒரு பாடலுக்கு ஆடியுள்ளார். ஆஞ்சநேய பக்தர் ஒருவர் பக்தி பரவசம் பொங்கும் பாடலுக்கு ஆடுவதுதான் இந்த பாடலின் கான்செப்ட். இதில் அர்ஜுனுடன் கன்னட நடிகர்களான சிரஞ்சீவி சர்ஜா, துருவ் சர்ஜா ஆகியோரும் ஆடியுள்ளனர்.\nதலைவர் உரையின் போது தூங்கிய ராணுவ தலைவருக்கு மரண தண்டனை\nஅஜித்தின் மனைவி ஷாலினியின் பகையாளி யார் தெரியுமா\nஆர்யாவின் திருமணம் நிகழ்ச்சியை மரணகலாய் கலாய்த்த கார்த்திக் மற்றும் ஜெகன்...வைரலாகும் வீடியோ உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.viduppu.com/entertainment/04/161565", "date_download": "2018-04-26T13:45:50Z", "digest": "sha1:FIYOA3K2M7BFX2QLTACUVXTQXB3WK3JM", "length": 6562, "nlines": 71, "source_domain": "www.viduppu.com", "title": "ஜுலிக்கு விருது!! என்ன விருதுன்னு தெரியுமா? - Viduppu.com", "raw_content": "\nகணவரை பிரிந்தார் ஐஸ்வர்யா ராய்\nதாலி கட்டும் நேரத்தில் நடந்த நிஜ சம்பவம்\nஅஜித்தின் மனைவி ஷாலினியின் பகையாளி யார் தெரியுமா\nதிடீர் திருமணம் செய்துகொண்ட சூப்பர் ஹிட் பட நடிகை...அதிர்ச்சியில் ரசிகர்கள்\nதலைவர் உரையின் போது தூங்கிய ராணுவ தலைவருக்கு மரண தண்டனை\nஆர்யாவின் திருமணம் நிகழ்ச்சியை மரணகலாய் கலாய்த்த கார்த்திக் மற்றும் ஜெகன்...வைரலாகும் வீடியோ உள்ளே\nஅனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய சூப்பர் சிங்கர் பிரியங்கா அடடே இப்படியும் ஒரு திறமையா..\nஒரே வீட்டில் தனி தனியாக வாழும் ஐஸ்வர்யா அபிஷேக் பச்சன்...காரணம் என்ன\nசுசானாவின் தந்தையால் ஆதாரத்துடன் சிக்கும் ஆர்யா\nவிவாகரத்திற்கு பிறகு அமலாபால் இப்படி மாறிட்டாங்களே...வைரலாகும் புகைப்படம் உள்ளே\nதேசி அவார்ட்ஸ் 2017 நிகழ்ச்சியில் ஜூலிக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு ஜூலிக்கு ஏறுமுகமாக உள்ளது. முதலில் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி ஆனார். அதன் பிறகு கோலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.\nஅவர் ஹீரோயினாக நடிக்கும் உத்தமி படத்தில் சமூகத்தின் மீது அக்கறை கொண்ட பெண்ணாக நடிக்கிறார்.தேசி விருதுகள் 2017 நிகழ்ச்சியில் ஜூலிக்கு 'The Most Trending Face Of The Year 2017' விருது வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூலி தான் ரொம்ப டிரெண்டான முகம் என்று கூறி விருதை அளித்துள்ளனர்.\nதனக்கு இப்படி ஒரு விருதை வழங்கிய தேசி விருதுகள் 2017 குழுவுக்கு நன்றி தெரிவித்து ட்வீட்டியுள்ளார் ஜூலி. மேலும் மேடையில் விருது வாங்கும்போது எடுத்த புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.விருது விழாவுக்கு சென்ற இடத்தில் எடுத்த செல்ஃபி ஒன்றையும் ட்விட்டரில் வெளியிட்டு தனது மகிழ்ச்சியை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார் ஜூலி\nஜூலிக்கு விருது கிடைத்துள்ளதை அறிந்து அவரின் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இனி நிறைய விருதுகளை வாங்க வேண்டும் என்று வாழ்த்தியுள்ளனர்.\nஆர்யாவின் திருமணம் நிகழ்ச்சியை மரணகலாய் கலாய்த்த கார்த்திக் மற்றும் ஜெகன்...வைரலாகும் வீடியோ உள்ளே\nஅஜித்தின் மனைவி ஷாலினியின் பகையாளி யார் தெரியுமா\nதலைவர் உரையின் போது தூங்கிய ராணுவ தலைவருக்கு மரண தண்டனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://seithupaarungal.com/2014/08/13/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A3%E0%AE%B2/", "date_download": "2018-04-26T13:13:15Z", "digest": "sha1:LJS3ZRASHJYXIBOQT4CONHWA2DVGJ5NH", "length": 12264, "nlines": 138, "source_domain": "seithupaarungal.com", "title": "நீங்களே செய்யுங்கள் : சணல் மணி தோரணம் விடியோ செய்முறையுடன் – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nகைவினைப் பொருட்கள் செய்முறை, சிறு தொழில், சுயதொழில், செய்து பாருங்கள், நீங்களும் செய்யலாம், விடியோ பதிவுகள்\nநீங்களே செய்யுங்கள் : சணல் மணி தோரணம் விடியோ செய்முறையுடன்\nஓகஸ்ட் 13, 2014 ஓகஸ்ட் 13, 2014 த டைம்ஸ் தமிழ்\nசிறு தொழில் வாய்ப்பு தரும் கைவினை வேலைப்பாடுகள் – 3\nஅலங்கார சணல் மணி தோரணம்\nவிழா காலங்களில், திருமணங்கள், பிறந்த நாள் போன்ற வீட்டு நிகழ்ச்சிகளில் வழக்கமான பேப்பர் டிசைன்களை ஒட்டி அலங்கரிப்பதைக் காட்டிலும் நாமே செய்த கைவினைப் பொருட்கள் கொண்டு அலங்கரிப்பது நமக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தரக்கூடும். இதில் பணமும் குறைவாக செலவாகும் என்பது கூடுதல் சிறப்பு. நம் வீட்டை அலங்கரிப்பதன் மூலம் நம் இந்தப் பொருட்களை செய்கிறோம் என்கிற விளம்பரம் கிடைப்பதோடு, அதன் மூலம் சுயதொழில் வாய்ப்பும் ஏற்படலாம். அந்த வகையில் சணல் தோரணம் உங்கள் எதிர்பார்ப்புகள் அனைத்தையும் நிறைவு செய்யும். எளிய செய்முறை, குறைந்த செலவில் இவற்றை செய்யலாம். செய்யக் கற்றுத்தருகிறார் கைவினை கலைஞர் ஜெயஸ்ரீ நாராயணன். செய்முறை விளக்கத்துக்கு விடியோவைப் பாருங்கள்.\nசாயமிடப்பட்ட சணல் துணி (இரண்டு நிறங்களில்), சம்க்கி, கஜ்ஜோரி லேஸ், கோல்டன் லேஸ், வுட் க்ளு, ஃபேப்ரிக் க்ளு, கத்தரிக்கோல், ஸ்டேப்ளர். சணல் துணிகளில் வட்டவடிவத்தில் எத்தனை துண்டுகள்(தோரணத்தில் நீளத்துக்கு ஏற்ப) தேவையோ அவற்றை வெட்டி வைக்கவும்.\nவெட்டிய வட்ட வடிவ துண்டை, இப்படி இரண்டாக வெட்டுங்கள். அனைத்தையும் இப்படி வெட்டி வைக்கவும்.\nவெட்டிய துண்டின் வளைவான பக்கத்தில் கஜ்ஜோரி லேஸால் வுட் க்ளூ கொண்டு ஒட்டுங்கள்.\nஒட்டியது உலர்ந்ததும் இப்படி முக்கோண வடிவத்தில் வளைத்து உள்புறமாக வைத்து ஒட்டுங்கள். இப்போது இது மணி போல வந்துவிடும்.\nஇரண்டு மணி நேரம் கழித்து லேஸால் அலங்கரித்து ஒட்டி வைத்திருக்கும் சணல் மணிகள் மீது ஃபேப்ரிக் க்ளுவால்…\nஅனைத்திலும் இப்படி சம்க்கி ஒட்டி தயாராக வைக்கவும். இவை உலர சற்று இடைவெளி தரவும்.\nபிறகு, கோல்டன் லேஸால் சரியான இடைவெளியில் தயாரித்து வைத்திருக்கும் அலங்கார சணல் மணிகளை…\nஇதோ அலங்கார சணல் மணி தோரணம் தயார்.\nசந்தேகங்கள், கைவினைப் பொருட்கள் செய்யத் தேவையான பொருட்கள் பற்றிய விவரங்கள் அறிய கைவினை கலைஞர் ஜெயஸ்ரீ நாராயணனை தொடர்பு கொள்ளலாம்.\nஎண்: 13/7, ஷ்யாம்ஸ் துவாரகா\nகுறிச்சொல்லிடப்பட்டது அனுபவம், கைவினை கலைஞர் ஜெயஸ்ரீ நாராயணன், கைவினைப் பொருட்கள் செய்முறை, சணல் மணி தோரணம், சிறு தொழில் வாய்ப்பு தரும் கைவினை வேலைப்பாடுகள், சிறுதொழில், சுய தொழில், பகுதி நேர வருமானம், விடியோ பதிவு\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postஆவணப்பட இயக்குனர் ஆனந்த் பட்வர்தனுக்கு லெனின் விருது\nNext postமாலை நேர சிற்றுண்டி- வாழைப்பூ கட்லெட்\n“நீங்களே செய்யுங்கள் : சணல் மணி தோரணம் விடியோ செய்முறையுடன்” இல் 2 கருத்துகள் உள்ளன\n7:11 முப இல் ஓகஸ்ட் 19, 2014\nபயனுள்ள பகிர்வு. தொடர்ந்து நானும் என் மகளும் பார்த்து வருகிறோம். நன்றி.\n9:31 முப இல் ஓகஸ்ட் 19, 2014\nஉங்கள் இருவருக்கும் நன்றியும் வாழ்த்துகளும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nநீங்களே செய்யலாம் ஃப்ரூட் ஃபலூடா\nபிஸ்தா ஐஸ்கிரீம் செய்வது எப்படி\nகருப்பட்டி கம்பு சேமியா எப்படி செய்வது\nஸ்டாக்கிங் பூக்கள் செய்வது எப்படி\nமணி வளையல் செய்வது எப்படி\nஎம்பிராய்டரி: பிரஞ்ச் நாட்’இல் சூரிய பூக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://techulagam.com/tamil/news-tamil/new-wi-fi-system-to-provide-100-times-faster-internet", "date_download": "2018-04-26T13:16:41Z", "digest": "sha1:NS5YCIIMYDUUFBNAWL3CE3DSAQ7T6CZK", "length": 7760, "nlines": 144, "source_domain": "techulagam.com", "title": "தற்போதையை வைஃபை-யை விட 100 மடங்கு வேகத்தில் புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு - TechUlagam.com", "raw_content": "\nDoodle ஆல் வண்ணமயமாக மாறிய Google\nTwitter ட்ரீட்டாக வெளிவரும் புதிய Bookmark வசதி\nபிரமாண்டமான அளவில் உருவாகவுள்ள புதிய ஐபோன்: வியந்து பார்க்கும் சாம்சங்\nஇன்ஸ்டாகிராம் சுயவிவரத்தைப் பாதுகாப்பாக வைக்கும் வழிமுறைகள்\nதமிழில் தட்டச்சு செய்வது எப்படி.\nஇரட்டை பின்புற கேமராக்கள் கொண்ட கேலக்ஸி எஸ்8 சிறப்பு மாறுபாடு.\nHome Tamil News தற்போதையை வைஃபை-யை விட 100 மடங்கு வேகத்தில் புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு\nதற்போதையை வைஃபை-யை விட 100 மடங்கு வேகத்தில் புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு\nதற்போதைய வைஃபை-யை விட 100 மடங்கு வேகத்தில் இயங்கக்கூடிய புதிய தொழில்நுட்பத்தை நெதர்லாந்து நாட்டின் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.\nநெர்தர்லாந்து இந்தோவன் பல்கலைகழத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் ஒரே நேரத்தில் பலர் வைஃபை-ஐ பயன்படுத்தினால் அதன் வேகம் குறைவது குறித்து அதன் வேகத்தை எப்படி அதிகப்படுத்தலாம் என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.\nஅவர்களது ஆய்வில் அகசிவப்புக் கதிர்களை பயன்படுத்தி விநாடிக்கு 40 ஜிபிக்கும் அதிகமான வேகத்துடன் இணைய இணைப்பினை வேகத்தடையின்றி பெற முடியும் என்று கண்டறிந்தனர்.\nமேலும் ஓரே வைஃபை இணைப்பில் அதிக கருவிகள் இணைக்கப்படும் போது அதன் வேகம் குறையாமல் இருப்பதன் இதன் மூலம் கண்டறிந்தனர்.\nஇந்த புதிய தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்படும் வைஃபை இணைப்பில் இணைக்கப்படும் ஒவ்வொரு புதிய சாதனத்துக்கும் பிரத்யேக ஓளிக்கறைகள் மூலம் இணைப்பு அளிக்கப்படும் என்பதால், இதன் வேகம் குறைய வாய்ப்பில்லை எனவும் ஆய்வாளர்கள் அறிவித்துள்ளனர்.\nPrevious articleஆண்ட்ராய்ட் போன்களிலும் அறிமுகமாகிறது சூப்பர் மேரியோ கேம் \nTwitter ட்ரீட்டாக வெளிவரும் புதிய Bookmark வசதி\nபிரமாண்டமான அளவில் உருவாகவுள்ள புதிய ஐபோன்: வியந்து பார்க்கும் சாம்சங்\nDoodle ஆல் வண்ணமயமாக மாறிய Google\nTwitter ட்ரீட்டாக வெளிவரும் புதிய Bookmark வசதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "https://vadakaraivelan.wordpress.com/2009/12/", "date_download": "2018-04-26T13:05:45Z", "digest": "sha1:KCSDPALQ5745LFT5J6ETFJNIDFACYD6D", "length": 64847, "nlines": 318, "source_domain": "vadakaraivelan.wordpress.com", "title": "December | 2009 | வடகரை வேலன்", "raw_content": "\nஇட்டார் பெரியோர் இடாதோர் இழிகுலத்தோர் (\nநான் எட்டாம் வகுப்பு படிக்கும்போது எனக்குத் தோழர்கள் இருவர்; எம்.பாலசுப்ரமணியனும், சண்முக சுந்தரமும். பெரும்பாலும் மூவரும் ஒருவர் வீட்டில் விளையாடுவதும் படிப்பதுமாகக் கழிந்த பருவம். அப்படி ஒரு முறை இருவரும் என் வீடு வந்திருந்த போது. கிராமத்திலிருந்து வந்திருந்த என் அத்தை (அப்பாவின் அக்கா) கேட்டார், ” நீ என்ன ஜாதிடா\nபாதிச் சாப்பாடு தட்டில் இருக்க எழுந்து போனவன்தான் சண்முகம். அதன் பின் ஆண்டிறுதி வரை என்னுடன் அவன் பேசவே இல்லை. மேற்படிப்புக்கு அவன் வேறு பள்ளிக்கும் நான் வேறு பள்ளிக்கும் சென்றுவிட்டோம். அவன் என்ன ஜாதி என்பது பற்றிய அக்கறை ஏதுமற்றுத்தான் பழகினோம் என்றாலும் அத்தை விதைத்த அந்த விதை எங்களிடையே ஒரு விரிசலை ஏற்படுத்தி விட்டது.\nஅதைப்போலத்தான் இப்பொழுதும் வலையில் நடக்கிறது. பொதுவான கருத்துக்களை எழுதியும் பழகியும் வந்த நண்பர்கள் இப்பொழுது கட்சி கட்டிக் கொண்டிருக்கிறார்கள். If you are not with me, you are against me. என்ற சித்தாந்தம் இங்கு நன்றாகச் செல்லுபடியாகிறது.\nமேலும் பின்னூட்டம் இடும் சிலரும் இதுதான் தக்க வாய்ப்பென்று தங்கள் மன வக்கிரங்களையும் இறக்கி வைக்க இது களம் அமைத்துத் தருகிறதென்ற அடிப்படைப் புரிதல் இரு சாரரிடமும் இல்லை என்பது மிக வருத்தமேற்படுத்துகிறது.\nஅடிப்படைப் பிரச்சினையை ஒட்டியும் வெட்டியும் பேசுவதை விட்டு,, கிளைவாய்க்கால்களை வெட்டி வெட்டி அவரவர் வயலுக்கு நீர் பாய்ச்சிக் கொண்டிருக்க, ஆறு வற்றிப் போனதுதான் சோகம்.\nநான் வீடு வாங்கப் பணம் போதாமல் தவித்த போது கை கொடுத்த பதிவர்களில் ஒருவர் இந்து, ஒருவர் முஸல்மான். கிட்டத்தட்ட 8 மாதங்களாகி விட்டன. இப்பொழுதுதான் ஒருவருக்குத் திருப்பிக் கொடுத்திருக்கிறேன். இன்னொருவருக்கு இன்னும் இரண்டு மாதங்களாவது ஆகும். அவர்கள் எதைப் பார்த்து எனக்கு உதவினார்கள். இத்தனைக்கும் ஒருவரை நான் நேரில் பார்த்ததுகூட இல்லை அப்பொழுது. இருவருமே நான் கேட்காமல் என் நிலையறிந்து தானாக முன் வந்து என் வங்கிக் கணக்கை வாங்கி பணம் அனுப்பினார்கள்.\nநல்ல அறுசுவை விருந்தைப் பரிமாறி நடுவில் மலத்தையும் வைக்கும் உங்கள் நாகரீகம் அருவெறுப்பூட்டுகிறது எனக்கு. சலிப்பும் அயர்ச்சியும் மேலோங்குகிறது.\nஎன்றாலும் உங்களைப் போன்றவர்களை இனங்கண்டு ஒதுங்கிப் போகவும் போலல்லாதவர்களை அறிந்து கொண்டு நட்பு பாராட்டவும் வாய்த்திருக்கிறது. எனக்கது போதும் எப்போதும்.\nவாழ்க்கை மிகவும் அழகானது, அதை உணரும்போது. நாமே அதை வலிந்து சிக்கலாக்கிக் கொள்கிறோம்.\nடிஸ்கி : இது என் போன்று எந்தக் கட்சியிலும் இல்லாத மிதவாதிகளுக்கு. மதவாதிகளுக்கு இங்கிடமில்லை.\nடிஸ்கி 2: நன்றி முரளிக் குமார் பத்மனாபன்.\nசென்ற வாரம் நண்பரொருவரைப் பார்க்கச் சென்றிருந்தேன். மிக மகிழ்ச்சியாக இருந்தார். காரணம் அவருக்குப் பேத்தி பிறந்திருக்கிறாள். உச்சபட்ச மகிழ்ச்சிக்குக் காரணம் கேட்டத்தில் தன் வம்சச் சங்கிலி அறுபடாமல் அடுத்த தலைமுறை தொடர்கிறது என்பதே என்றார்.\nபாட்டிகள் தாத்தாக்கள் பேரக்குழந்தைகள் மீது மிக அதிக அன்பும் பாசமும் உடையவராக இருப்பதைக் கவனித்திருக்கிறீர்களா குழந்தைகள் செய்யும் சின்னச் சின்னக் குறும்புகளை ரசித்தவாறே நாட்களை நகர்த்துவர். வாழ்க்கைப் போராட்டத்தில் சற்று நின்று இளைப்பாறி தன் குழந்தகளுடன் அதிக நேரம் செலவழிக்க முடியாமல் போனதை சரிசெய்வது போன்றது அது.\nபிரசவ வார்டுகளில் காத்திருக்கும் அப்பாக்களின் கண்களில் தெரியும் ஆர்வத்தை விட தாத்தா பாட்டிகளின் ஆர்வம் அளவுக்கதிகமாகவே இருக்கும். பேரக் குழந்தைகளுடனான வாழ்வில் தங்கள் பால்யத்தை மீண்டும் வாழ்வதாக உணருகிறார்கள். தன் வாழ்வை மீண்டும் ஒரு முறை வாழ்வதான ஒரு ஒப்புமை போல.\nநண்பரின் பரவசத்தை வார்த்தைகளில் இங்கே வடித்திருக்கிறேன்.\nகார்னர் சைட் என்றார் அப்பா\nபூமி பூஜை முடிந்த கையுடன்\nபுது மனை புகு விழாவும் ஆயிற்று\nநண்பர்களுக்கு இனிய கிருஸ்துமஸ் வாழ்த்துக்கள்.\nபைபிளில் எத்தனையோ வசனங்கள் இருந்தாலும் இந்த வசனம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.\n”நான் உன்னைக் கைவிடுவதுமில்லை உன்னை விட்டு விலகுவதுமில்லை”\nகடவுள் உங்கள் கூடவே இருந்து உங்களை ஆசிர்வதிக்கட்டும்.\nவேட்டைக் காரனை எல்லோரும் துவைத்துத் தொங்க விட்டிருக்கிறார்கள். எனக்கு மிகவும் பிடித்தது நர்சிம்மின் பதிவு. பதிவைப் பார்த்ததும் அவரை அழைத்துப் பேசினால் மனிதர் பொங்கி விட்டார். ”அண்ணாச்சி இன்னும் எழுதனும்னு நெனைச்சிருந்தேன். எவனாவது விஜய் ரசிகன் (கார்க்கி அல்ல) போட்டுத்தள்ளிடுவானோன்னு பயம் அதான் கொஞ்சம் அடக்கி வாசிச்சிருக்கேன்” என்றார். ஹும் அடக்கி வாசிச்சதே இவ்வளவுன்னா\nஃப்ரெண்ட்ஸ் படத்தில் விஜய் ஸ்டார், சூர்யா அப்பொழுதுதான் நடிகராகி இருக்கிறார். அந்தப் படத்திலிருந்து துவங்கி எவ்வளவு உயரம் வந்து விட்டார் சூர்யா. விஜய் தேங்கி விட்டார். சூர்யாவிற்குச் சொல்லிக்கொள்ளும்படி காக்க காக்க, கஜினி பொன்ற படங்கள் இருக்கையில் விஜய்க்கு அப்படி ஏதும் இல்லை என்பது கொடுமை.\nஎடுப்பார் கைப்பிள்ளையாக இருப்பதின் நஷ்டம் இதுதான்.\nநாலு நாள் ஊருக்குப் போகிறேன் என்னை யாரும் தேடாதீர்கள் என ஒரு மின்ன்ஞ்சல் அனுப்பினார் ஆதி. இவரை யாரும் தேடமாட்டார்கள் என்ற புரிதல் கூட இல்லாத அப்பாவி பாவம். அதற்கு வந்த பதில் மின்னஞ்சல் அதைவிட சிரிப்பு.\n“இந்த நாலு நாள் இனிய நாலு நாள்”\nகேபிளின் பதில் உச்சம். “ என்னாது ஊருக்கு போறீங்களா. அப்ப திரும்ப வரும் போது குறும்படத்தோட இல்ல வருவீங்கா.. மக்கா.. எல்ல்லாரும் அலர்ட்டா இருங்கா….. ஓடுங்க.. பின்னாடி ஒரு படம் வருது.. (இங்கிலீஷ் த்மிழ் டப்பிங் பட வசனத்தில் படிக்கவும்)”\nமக்களின் பேராசை டுபாக்கூர் நிதி நிறுவனங்களில் முதலீடு செய்து ஏமாறுவதில் வெளிப்படுகிறது. ஆறே மாதத்தில் பணம் இரண்டு மடங்கு என்பதை எப்படி ந்ம்புகிறார்கள் எனத் தெரியவில்லை. எந்தத் தொழிலும் இது சாத்தியமில்லை.\nசமீபத்தில் பணம் இழந்தவர் கொடுத்த வாக்குமூலம், “ ஆல்ட்டோ கார் வாங்கலாம்னு 2.5 லட்சம் வச்சிருந்தேன். இரண்டு மடங்கா கிடைச்சா ஹோண்டா சிட்டி கார் வாங்கலாமேன்னு அதுல போட்டேன். இப்ப உள்ளதும் போச்சு” அடப் பாவிகளா ஆசைக்கு அளவில்லையா\nரூ 5000 கட்டி மெம்பர் ஆன பின் விளம்பரங்களை க்ளிக் செய்தால் பணம் கிடைக்கும் எனச் சொல்லி ஒருவர் சுருட்டியிருக்கிறார். ஆளுக்கு 5000 என்பதற்கு பதிலாக குடும்பத்தில் உள்ள நபர்களின் எண்ணிக்கை X 5000 எனக் கட்டியிருக்கிறார்கள். இவர்கள் கிளிக்கிய விளம்பர நிறுவனங்களிடமும் நல்ல பணம் பெற்றிருக்கிறான் சுருட்டியவன். சுருட்டிய பணம் எவ்வளவு இருக்கும் தெரியுமா\nஇந்த மாத மணல்வீடு (ஆசிரியர் ஹரி கிருஷ்ணன், ஏர்வாடி, குட்டப்படி அஞ்சல் மேட்டூர் வட்டம், சேலம் மாவட்டம். செல் : 9894605371) இதழிலிருந்து கார்த்திகேயனின் கவிதை\nதெலுங்கானா பிரச்சினை நாள்தோறும் புதிய ரூபம் எடுக்கிறது. தேன்கூட்டைக் கலைத்தவனின் நிலைதான் மத்திய அரசுக்கு. இருந்தாலும் கார்க்கி ஹைதையிலிருந்து கிளம்பிய உடனே இந்தப் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்ததில் ஏதும் கனெக்சன் இருக்குமோ\nஎனது முந்தைய சஞ்சய் ஏ சி பதிவின் தொடர்ச்சி இது.\nஇராமச்சந்திரன் தமிழசிரியர் மட்டுமல்ல. தமிழறிஞர். அவரது பட்டிமன்றப் பேச்சுக்கு பழனியில் ஒரு ரசிகர் கூட்டமே இருந்தது. என் போன்றோர் தமிழில் வாசிக்கவும், எழுதவும் ஆர்வமூட்டியவர்.\nஇருந்தும் அவரது இறுதிக்காலம் மெச்சும்படி இல்லை. யாருமற்ற வனாந்திரத்தில் இறந்து கிடந்தார். மூன்று நாட்களுக்கு எந்தத் தகவலுமற்று அலைமோதியதில், மாடு மேய்ப்பர் ஒருவர் கண்டெடுத்தார் அவரது உடலை. நாயும் நரியும் தின்றது போக மீதத்தை பொறுக்கி எடுத்து வந்து எரித்தோம்.\nஉழைப்பால் உயர்ந்த இரண்டு பெண்கள் . அவர்கள் டிப்ளமொ முடித்ததும் ஒரு பொறியியல் கல்லூரியின் லேபில் வேலைக்கு சேர்கிறார்கள். அங்கிருந்தவாறே பகுதி நேர படிப்பில் B.E. பின்பு M.E முடித்து Phd உம் முடித்து விட்டனர். ஒருவர் அதே கல்லூரியில் விரிவுரையாளர். இன்னொருவர் லண்டன் மாநகரில் உள்ள பொறியியல் கல்லுரியில் விரிவுரையாளர்.\nஇருவருமின்று செல்வத்தில் கொழித்தாலும் அவர்களது சொந்த ஊரில், வீதியில் நல்ல பெயர் கிடையாது. காரணம் அவர்களல்ல.\nஅது ஒரு கம்யூட்டர் தயாரித்து விற்கும் நிறுவனம். மும்பை தலைமையிடம். கடந்த காலாண்டு விறபனைச் செயல்பாடுகளையும் அடுத்த காலாண்டு திட்டங்களயும் பற்றி விரிவாகப் பேச ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. இரண்டு நாட்கள் நடக்கும் அந்நிகழ்வின் முதல் நாள் இரவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றின் விளைவாக அடுத்த நாள் ஒருவர் அந்நிறுவனத்திலிருந்து எந்த வித முன்னறிவிப்பும் இன்றி வெளியேற்றப் படுகிறார். இத்தனைக்கும் நல்ல விறபனையாளர் அவர். முதல் மூன்று இடத்தில் இருப்பவர். ஒவ்வொரு காலாண்டின் இறுதியிலும் அதிக இன்செண்டிவ் வாங்குபவர்.\nஇதைப் போல இன்னும் என்னற்ற சம்பவங்களைச் சொல்லலாம். உங்களிடமும் அநேகம் இருக்கக்கூடும். எல்லாச் சீரழிவுக்கும் காரணம் மது.\nதமிழாசிரியர் எங்களெக்கெல்லாம் ஆதர்ஷ புருஷராக இருந்தார். அவரது வகுப்புக்களை இழக்க யாரும் தயாராக இருந்ததில்லை. அவரைப் பற்றி ஒரு பதிவே தனியாக எழுதலாம் அந்த அளவுக்கு ஆளுமை உள்ளவர். இறுதியாக அவரை நான் பார்க்க நேர்ந்த காட்சி என் எதிரிக்கும் வேண்டாம்.\nபெண்கள் இருவரையும் எனக்கு நன்றாகத் தெரியும். மிகுந்த சிரமத்திற்கிடையேதான் டிப்ளொமொ படித்தனர். ஒவ்வொரு முறை செமஸ்டர் கட்டணமும் பரிட்சைக் கட்டணமும் தாமதமாகத்தான் கட்டுவார்கள். இருவரது குடும்பமுமே அவர்கள் அம்மாக்களால்தான் நடத்தப் பட்டு வந்தது.\nஅவர்கள் தந்தையர் கிடைத்தப் பணத்தில் கிடைத்ததை குடித்து விட்டு கண்ட இடத்தில் விழுந்து கிடப்பார்கள். பலமுறை நானே என் தோள்களில் எடுத்து வந்து குளிப்பாட்டி இருக்கிறேன். இன்னும் ஒரு குடிகாரனின் மகளாகத்தான் பாவிக்கப் படுகின்றனர்.\nஅந்த விற்பனையாள நண்பர் மிகவும் இனியவர் பழகுவதற்கு. மரியாதையாகப் பேசுபவர். திருமணம் நிச்சயமாகி இருந்தது. ஆனாலும் போதைக்கு அடிமை. முதல் நாள் இரவில் நடந்த காக்டெயிலில் கட்டுப்பாட்டை இழந்து சேர்மனை அவன் இவன் எனப் பேசிவிட்டார். அந்த நிறுவனத்தில் ஏற்பட்ட மான இழப்பால் அவர் செல்லுமிடத்தில் எல்லாம் அவருக்கு இரண்டாம் தர மரியாதையே கிட்டியது.\nகுடிப்பது என்பது ஒரு கொண்டாட்டத்தின் வெளிப்பாடாக ஆரம்பித்தாலும் முடிவென்னவோ திண்டாட்டமாக ஆகி விடுகிறது; பெரும் பாலோருக்கு. குடிக்கும்போது இருக்கும் மனநிலையைக் காட்டிலும் குடிக்கு முன்னதான மனநிலையும் முக்கியமானது. நான் பெருங்குடிகாரன் என்னால் 6 ரவுண்டு தாங்க முடியும் ஒரு புல் பாட்டில் அடிப்பேன் எனச் சவடால் விடும் ஆசாமிகள்தான் மூன்றாம் ரவுண்டிலோ அல்லது ஒரு குவார்ட்டரிலோ கவிழ்ந்து விடுகிறார்கள்.\nகுடிப்பதற்காக ஏற்படுத்திக் கொள்ளும் சூழ்நிலையும் முக்கியமானது. சிலர் தங்கள் வீராப்பைக் காட்டக் குடித்துவிட்டு மொத்த நிகழ்வையும் துன்பகரமாக ஆக்கிவிடுகிறார்கள். இன்னும் சிலர் இது வரை குடிக்க ஏதும் கிடைக்காதது போல குடிக்க ஆரம்பித்து எல்லோருக்கும் முன்னாடியே மட்டை ஆகி விடுகிறார்கள்.\nகுடிப்பது ஒன்றும் பாவமில்லை. ஆனால் நாம் குடிப்பதால் நம்மைச் சார்ந்தவருக்கு நாம் ஏற்படுத்தும் இழப்புகள்தான் முக்கியமானவை. பொருள், நேரம், அவமானம், உடல் நலம் என எல்லாவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டும்.\nஇதையெல்லாம் சொல்வதால் நான் குடிப்பதில்லை என்ற நல்ல பிம்பத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டாம்;நானும் குடிகாரன். சில கட்டுப்பாடுகளை வைத்திருக்கிறேன். உங்களுக்கும் பயன்படலாம்.\n1. குடித்துவிட்டு வீட்டிற்குச் செல்ல வேண்டாம். நீங்கள் வீடு வந்து சேரும் வரை அவர்கள் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டிருக்க வேண்டும். உங்களை அனுப்பி வைத்தவர்களுக்கும் அதே அவஸ்தை. தங்கும் இடவசதி இருந்தால்தான் நான் குடிக்கவே ஆரம்பிப்பேன்.\n2. குடித்துவிட்டு உங்கள் குழந்தைகளைக் கொஞ்சாதீர்கள். உங்களைப் பற்றிய மதிப்பில் மிகத் தாழ்ந்து விடுவீர்கள். நான் குடிப்பபேன் என என் குடும்பத்திற்குத் தெரிந்தாலும் குடித்த நிலையில் என்னை அவர்கள் ஒரு போதும் பார்த்ததில்லை.\n3. நீங்கள் குடிப்பது உங்கள் மனைவிக்குப் பிடிக்கவில்லை எனில் அதைத் தொட்டுக் கூடப் பார்க்காதீர்கள். மணவாழ்க்கைக்கு உலை வைப்பதில் மதுவிற்குத்தான் முதலிடம்.\n4. குடித்த பிறகு பெண்களுடன் பேசவோ அல்லது அவர்களைப் பார்க்கவோ வேண்டி இருப்பின், இரண்டில் ஏதாவதொன்றைத் தவிர்த்தல் நல்லது. குடிகார பிம்பம் பெண்கள் மனதில் இருந்து விரைவில் அகலுவதில்லை. நீங்கள் இறந்தாலும்கூட ஒழிந்தான் ஒரு குடிகாரன் என்பதான எண்ணம்தான் அவர்களிடம் இருக்கும்.\n5. நிதானமிழக்கிறீர்கள் என்பதை உணர ஆரம்பித்ததும் உங்கள் நண்பரிடம் உண்மையைச் சொல்லி விடுங்கள். அதன் பிறகு அவர் கட்டுப்பாட்டில் நீங்கள் இருத்தல் நலம். இல்லையெனில் அவரவர் வேலையைப் பார்த்துச் சென்று விடுவர். நீங்கள் மப்புத் தெளியும் வரை அங்கேயே இருக்க வேண்டி வரும்.\n6. எல்லா சரக்கையும் கலந்து அடிக்காதீர்கள். இருப்பதிலேயே அது மிகவும் ஆபத்தானது. அதன் பிறகு உங்கள் கட்டுப்பாட்டில் ஏதும் நடக்காது.\n7. குடிப்பதற்கு மிக அதிக நேரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். எவ்வளவு சீக்கிரம் ரத்தத்தில் மது கலக்கிறதோ அத்தனை வேகத்தில் நீங்கள் நிதானமிழக்கிறீர்கள். என் டிப்ளொமா கிளாஸ் மேட் மைக்கேல் கேவின் அலெக்ஸும் அவனது அப்பாவும் மது அருந்துவதைக் காணும் வாய்ப்புக் கிட்டியது. கிட்டத்தட்ட 3 மணி நேரம் இருவரும் அருந்தியவாறே செஸ் விளையாடியது மட்டுமல்லாமல். ஆட்டம் முடிந்ததும் மைக்கேல் எங்கெல்லாம் தவறு செய்தான் எனபதை ஒவ்வொரு கட்டத்திலும் அவர் காய்களை அடுக்கி விவரித்த விதம் அலாதியானது. இருவரும் ஒரு புல் பாட்டிலில் முக்கால் வாசி காலி செய்திருந்தார்கள்.\nநீங்கள் மதுவின் கட்டுப்பாட்டில் இருக்கிறீர்களா அல்லது மது உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கிறதா என்பதில்தான் இருக்கிறது உங்கள் வாழ்வும் தாழ்வும்.\n1. என்னதான் தங்கமணி சொல்லுறதுக்கு நாம நோன்னு சொன்னாலும் கடைசில அவங்க சொல்லுறதுதான் நடக்குது. நாமும் அதைத்தான் செய்கிறோம். தெரிந்திருந்தும் உடனே நோ சொல்கிறோமே; அது ஏன்\n2. என்னதான் நாம் பார்த்துப் பார்த்து செலக்ட் செய்தாலும் அது தங்கமனியிடம் இருக்கும் கலராகவோ அல்லது டிசைனாகவோ அமைந்து விடுகிறதே; அது ஏன்\n3. தங்கமணியின் பெற்றோர் வரும் நாள் பார்த்து அலுவலகத்தில் அதிக வேலையும் வீட்டுக்குத் தாமதமாக வரும்படி அமைகிறதே; அது ஏன்\n4. அலுவலகத்தில் சூப்பராகப் பொய் சொல்லி சமாளிக்கும் நாம் தங்கமணியிடம் சொல்லும் பொய்யின் சாயம் மட்டும் உடனே வெளுத்து விடுகிறதே; அது ஏன்\n5. சாதாரணமா தங்கமணி சொல்லும் 10 பொருட்களை வாங்கி வருகிறோம். ஆனா மறக்காம வாங்கிட்டு வாங்கன்னு சொல்லுறது மட்டும் மறந்து போயிடுதே; அது ஏன்.\n6. நல்ல பசியோட வரும் அன்னைக்குப் பாத்து முடியலைங்கன்னு ஏதாவது சுலபமான ஐட்டம் சமைச்சு வக்கிறாங்க. ஆனா நல்லா ஒரு பிடி பிடிச்சுட்டு வர்ர அன்னைக்கு சூப்பரா சமைச்சு வைக்கிறாங்களே; அது ஏன்.\n7. ஒவ்வொரு திருமண நாளன்றும், இனிமே தங்மணி எதிர்பார்க்கிற மாதிரி நல்ல ரங்கம்ணியா நடந்துக்கணும்னு சபதம் எல்லாம் எடுத்துட்டு, அடுத்த நாளே ஆகப்பெரிய பல்பு வாங்குறோமே; அது ஏன்\n8. தங்கமணி கையில இருக்க வரைக்கும் சமத்தா இருக்கிற நம்ம குட்டிமணிகள் நம்ம கைக்கு வந்ததும் கரெக்டா ஒன் பாத்ரூம் போறாங்களே; அது ஏன்\n9. ஒரு ப்ரண்ட அவாய்ட் பண்ணனும்னு நினைச்சுகிட்டு இருப்போம். அவன் வந்து கூப்பிட்டது, டக்குன்னு சட்டைய மாட்டிக்கிட்டு கிளம்பிடறமே; அது ஏன்.\n10. அரைமணி நேரம் பதிவப் படிக்கிறதுன்னு முடிவு பண்ணிட்டு பதிவப் படிக்க ஆரம்பிச்சா இன்னும் அரைமணி நேரம்னு நீட்டிட்டே போயி தங்கம்ணிகிட்ட திட்டு வாங்குறோமே: அது ஏன்\nமு கு : இது ஒரு பொண்ணோட டைரிக் குறிப்பு. தேதி முக்கியமில்லை.\nகாலேஜ் ஃபர்ஸ்ட் டே இன்னைக்கு. ரெம்பப் பேமஸான காலேஜ். இடம் கிடைக்கிறதே பெரிசு. அப்பாவுக்கும் அம்மாவுக்கும்தான் நன்றி சொல்லணும். அவங்க மனசு நோகம நடந்துக்கணும். அவங்களுக்கு பேரும் புகழும் வாங்கித்தர்ற மாதிரி நடந்துக்கணும். ஐ லவ் மை மாம் அண்ட் டாட். தெ ஆர் சிம்ப்லி க்ரேட்.\nகாலேஜ் சேந்ததுக்கப்புறமா நேரமே இல்லை. அதான் எழுதலை. ஐ லைக் காலேஜ். ஸ்கூல் மாதிரி இல்லாம ஜாலியா இருக்கு. ஸ்கூல்ல எல்லாருக்கும் பயப்படணும். இங்க அப்படி இல்ல. ஜஸ்ட் டோண்ட் கேர். பசங்கதான் பாவம் இம்ப்ரெஸ் பண்ணப் பாக்குறாங்க.\nஇந்த லலிதா ரெம்ப மோசம். நான் ஸ்ரீராமுக்கு ரூட் விடுறேன்னு கலாட்டா பண்ணுறா. ம் நானாவது அப்படியெல்லாம் செய்யுறதாவது. ஜஸ்ட் ஃப்ரண்ட்ஸ் அவ்வளவுதான். நான் யாரையும் லவ் பண்ண மாட்டேம்ப்பா. அப்பா படுற சிரமம் தெரியும். அம்ம படுற கஷ்டம் அதை விட அதிகம். எப்படித்தான் வேலைக்கும் போய்ட்டு வீட்டையும் மேனேஜ் பண்ணுறாங்களோ\nஇன்னைக்கு ஒரு இண்டரெஸ்டிங்கான விஷயம் நடந்தது.ஸ்ரீராமும் நானும் காபி ஷாப் போனோம். ஸ்ரீராம் நல்ல பையன். தெளிவா இருக்கான். நல்ல கோல்ஸ் எல்லாம் வச்சிருக்கான். காதல் கீதல்ல எல்லாம் அவனுக்கு இண்ட்ரஸ்ட் இல்லை என்னை மாதிரியே. வீ ஆர் ஃப்ரண்ட்ஸ். ஜஸ்ட் ஃப்ரண்ட்ஸ்.\nஎல்லொரும் அன்ன ரெம்ப ஓட்டுராங்கப்பா. நான் ஸ்ரீராமோட சேர்ந்து சுத்துறது காதலாம். வேற எதுவுமில்லையாம். என்னாலயே நம்ப முடியல அவஙக சொல்லுறது. ஸ்ரீராமக் கேட்டா நிறுத்தாம சிரிக்கிறான். எங்க ஃப்ரன்ட்ஷிப்ப புரிஞ்சுக்க, நம்ப முடியாத அளவுக்கு எல்லொரும் இருக்காங்க. சுத்த மோசம். எனக்கு அப்பா அம்மாதான் முக்கியம்\nஸ்ரீராம் இன்னைக்குப் ப்ரபோஸ் பண்ணுனான். நான் முடியாதுன்னு சொல்லிட்டேன். ஃப்ரண்ட்ஸா இருப்போம்னுதானே பழகுனான்.அப்புறமென்ன எனக்கு அவனைப் பிடிச்சிருக்கு ஆனா லவ்வெல்லாம் பண்ணமாட்டேன். எனக்குப் படிக்கணும்.\nவா செல்லம் வாவா செல்லம் பாட்டு எனக்கு ரெம்பப் பிடிக்குது ஏனோ தெரியலை.\nஸ்ரீராமப் பார்க்க பாவமா இருக்கு பழைய கலகலப்பு இல்லை அவங்கிட்ட. எதையோ பறிகொடுத்த மாதிரி இருக்கான். எல்லோரும் நாந்தான் காரணம்ங்கிறாங்க. நான் என்ன பண்ணினேன். ப்ரண்ட்ஸ்னு சொல்லித்தானே பழகுனோம்னா யாரும் நம்ப மாட்டேங்குறாங்க.\nஒரு வேளை நாந்தான் தப்பு பண்ணீட்டேனோ\nஒரு ஃப்ரண்ட் கஷ்டப் படுறத என்னால தாங்கிக்க முடியல. அதனாலும் நானும் சரின்னு சொல்லிட்டேன். ஸ்ரீராம் இப்பத்தான் பழைய ஸ்ரீராமா இருக்கான்.எனக்கு இப்பத்தான் நிம்மதி. என்னால ஒருத்தன் கஷ்டப் படுறத தாங்கிக்க முடியல.\nஆனாலும் இந்த ஸ்ரீராம் மோசம். பிரண்ட்ஸா இருந்தப்ப்ப இந்த சேட்டை எல்லாம் எங்க வச்சிருந்தான்னு தெரியலை கொஞ்சம் வரம்பு மீறித்தான் பழ்குறான். ஆனா அதுதான் பிடிச்சிருக்கு.\nடேய் ஸ்ரீராம், நாயே, பேயே, பன்னிக்குட்டி, புஜ்ஜிகுட்டி செல்லம். எப்படிடா என்னை இப்படி மாத்துனே ஐ லவ் யு ஸ்ரீராம். யூ ஆர் சிம்ப்லி க்ரேட்.\nடிஸ்கி : செமஸ்டர்ல கப்பு வாங்கி,அப்பா அம்மா காலெஜுக்கு வந்து ஹெச் ஓ டியப் பாத்து விஷய்ம் தெரிஞ்சு, படிப்பை நிறுத்தி, கதிரவனைக் கல்யாணம் பண்ணி கையில ஒண்ணு வயித்துல ஒண்ணுன்னு வழக்கமா முடிக்காம முடிவ உங்க கையில விட்டுட்டேன்.\nதனிக்குடித்தனம் போவதென்பது ஒரு கனவாகத் திருமணப் பேச்சு ஆரம்பித்ததிலிருந்தே தொடங்கி விடும். மெதுவாக சண்டை போட்டோ இல்லை சமாதானமாகவோ அந்த நாளும் வந்து விடும். வெளியூரில் வேலை பார்க்கும் நண்பர்களுக்கு வேறு வழியில்லை. ஆரம்பத்தில் குஷியாக இருந்து நாளாக நாளாக எப்படி மாறுகிறது ஓவ்வொரு நிலையிலும்\nஏங்க எத்தனை மணிக்கு வருவீங்க\nஇல்லை இன்னைக்கு முள்ளங்கி சாம்பார், அவரைக்காய் பொரியல், பச்சடி, மோர்க்குழம்பு, ரசம், தயிர் தாளிச்சு வச்சிருக்கேன். சீக்கிரமா சப்பிட வாங்க.\nசரி சரி நீ என்ன பண்ணியிருந்தாலும் லன்ச் டயத்துலதான் வர முடியும்\nஇன்னைக்கு புளிக்க்குழம்பு வச்சு உருளைக்கிழங்கு, பொடிமாஸ், ரசம் பண்ணீருக்கேன் தயிர் இருக்கு. சாப்பிட வாங்க.\nஇன்னைக்கு வத்தக் குழம்பு வச்சு அப்பளம் பொரிச்சிருக்கேன் தயிரும் ஊறுகாயும்.\nஇன்னைக்கு ரசம் வச்சு பருப்புச் சட்னிதான் வச்சிருக்கேன்.\nஇன்னைக்கு ஒன்ணும் பண்ணல. அங்கியே ஏதாச்சும் சப்பிட்டுக்குங்க.\nநான் ரெண்டு தோசை ஊத்திக்கிறேன்.\nஏங்க வரும்போது எனக்கும் சாப்பாடு வாங்கி வந்திருங்க.\nஇந்த நிலை எல்லோருக்கும் வந்தே தீரும் . என்ன ஆளாளுக்கு நேரம் வேறுபடும். தப்பிக்க முடியாது. அம்மா கைப்பக்குவத்தில் தயாராகும் சாப்பாட்டு ஐட்டங்கள் மனசிலாடுவதும் நாக்கில் எச்சில் ஊறுவதும் பக்க விளைவுகள்.\nஎன சம்சயித்தார் தொந்தி ஆசாமி\nடிஸ்கி : எந்த உள்குத்தும் இல்லை. அட நம்புங்கப்பா.\nடிஸ்கி 2 : திட்டத் தோன்றினால் நிரந்தர யூத்() அனுஜன்யாவைத் திட்டலாம் அவர்தான் தொலைபேசியில் அழைத்துக் கவிதை எழுதச் சொன்னவர்.\nஉங்களிடம் முப்பதாயிரம் ரூபாய் பணம் இருக்கிறது 500 ரூபாய் நோட்டுக்களாக. வர வேண்டிய பழைய பாக்கி வசூலானது. பணத்தை திருப்பிக் கொடுத்தவரே உங்களை தனது இரு சக்கர வாகனத்தில் அழைத்து வந்து, பேருந்தில் ஏற்றி விடுகிறார். இருக்கை தேடும் பதட்டத்தில் அவருக்கு விடை சொல்லக் கூட மறந்து விடுகிறீர்கள். இருக்கையில் அமர்ந்து ஆசுவாசப் படுத்திக் கொள்கிறீர்கள். இதற்குள் நகரத்தை விட்டு வெளியே வந்து விடுகிறது பேருந்து. இன்னும் 30 கி மி தூரம் போக வேண்டும். நடத்துனர் பயணச் சீட்டுக்கான கட்டணத்தைக் கேட்டதும் 500 ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்துக் கொடுக்கிறீர்கள். அவர் உங்களை மேலும் கீழும் பார்த்து விட்டு, நிறுத்தச் சொல்லி இறக்கி விடுகிறார். எப்படி உணர்வீர்கள்\nநெடுந்தூரம் பயணம் செய்து ஒரு நகரத்தை அடைகிறீர்கள். இயற்கை உபாதை கழிக்க இடம் தேடுகிறீர்கள். கட்டணக் கழிப்பிடத்தை அடைந்து 50 ரூ நோட்டை நீட்டுகிறீர்கள். சில்லரை இல்லை எனச் சொல்லி உங்களை மறுதலிக்கிறார். எப்படி உணர்கிறீர்கள்\nஉங்கள் காரை பழுது நீக்க விட்டிருக்கும் நாளொன்றில், நடு இரவில் வந்திறங்கிய உறவினரை அழைத்துச் செல்ல ஆட்டோ பேசுகிறீர்கள். ஆட்டோக்காரர் இருக்கையிலிருந்து அசையாமலேயே உங்களை உதாசீனப் படுத்துகிறார். எப்படி உணர்வீர்கள்\nஅந்த அரசாங்க உயரதிகாரியை உங்களுக்கு நன்றாகத் தெரியும். நல்ல பழக்கமும்கூட. அந்த அலுவலகத்தில் ஆக வேண்டிய காரியம் ஒன்றை அவரிடம் வேண்டிச் செய்து கொள்கிறீர்கள். அதில் செய்ய வேண்டிய திருத்தம் ஒன்றிற்காக மீண்டும் அதே அலுவலகம் செல்லும்போது அட்டெண்டரால் உதாசீனப் படுத்தப் படுகிறீர்கள்.\nஉங்கள் முதல் குழந்தையை பார்க்க ஆவலாகக் காத்திருக்கிறீர்கள். உலகின் உச்சத்தில் இருப்பதாக உணர்கிறீகர்கள். வெள்ளை நிற தேவதைகள் அந்த ரோஜாக் குவியலை எடுத்து வந்து உங்கள் கையில் கொடுக்கக் காத்திருக்கிறீர்கள். மாறாக, கொண்டு வந்து கொடுப்பவர் எரிச்சல் பட்டவாறே “ம்ம் பார்த்துக்குங்க ” என்கிறார் ஏதோவொரு பண்டமொன்றைப் போல. எப்படி உணர்வீர்கள்\nஇதைப் போன்றோ அல்லது இதைவிடக் கூடுதலாகவோ ஒவ்வொரு நாளும் அவமானம் நம்மைப் பிடுங்கித் தின்றவாறே இருக்கிறது. தவிர்க்கவியலா கையாலாகாத்தனத்தின் பிடியிலாட் பட்டிருக்கிறோம்.\nஇன்னார் இவரென்ற பாகுபாடுகளேதுமற்று, எவர் வாயிலிருந்தும் வெளிப்படும் வார்த்தைகள் அவமானப்படுத்தலைத் தவிர வேறொன்றையும் இலக்காகக் கொள்வதில்லை.\nபெற்றோர், உற்றார், உறவினர், கொண்டான், கொடுத்தான், உடன் பிறந்தோர், கட்டியவள், நண்பன், ஆசிரியர், அலுவலக மேலதிகாரி, முதலாளி என யாவருக்கும் இஃதொன்றே பிரதானத் தொழிலோ\nவிளக்கணைத்ததும் கவிழும் இருட்டைப் போல அவமானம் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது. மேற்சட்டையிட்டு ஒட்டிய வயிறு மறைத்தல் போல அவரவரால் இயன்றதைக் கொண்டு மூடி மறைத்து வாழ்தல் இயல்பாகப் போயிற்றிங்கு.\nஅவமானத்திற்குள்ளாக்குபவனுக்கு உள்ளாக்கிய சந்தோஷம் ஒன்றே கிட்டுகிறது. ஆகிற காரியம் ஆகும்போதுதான் ஆகிறதென்றாலும் அவமானத்திற்குள்ளக்குவதால் அவசரமாக ஆவதில்லை. எனினும் அவமானத்திற்குள்ளானவன் சபை நடுவே ஆடை விலகியவன் போலாகிறான். அதுவல்ல நோக்கமென்றாலும் அஃதொரு ஊக்குவிணையாக அமையலாம் சில பொழுது.\nஎன்றாலும் ஆக்குபவனும், ஆக்கப் படுபவனுக்குமான இடைவெளி இந்தப் புள்ளியிலிருந்து இந்தப் பொழுதிலிருந்தே விரியத் தொடங்கி விடுகிறது. மேலுமது ஒரு பொழுதும் ஒத்திசைவைத் தருவதில்லை. நிர்பந்தத்தின் காரணமாயொரு சமயம் இசைவது போலிருந்தாலும், அது காட்சிப் பிழையேயன்றி வேறில்லை. உள்ளிருக்கும் வன்மம் காத்திருக்கும் நல்லதொரு வாய்ப்பிற்காக.\nஎவ்வாறாயினும், ஒன்றையடைந்ததும் அதன் மீதான ஆசை நீர்க்க, அடுத்ததொன்றிற்கேங்கும் வாழ்க்கை, தடித்துப் போகவைத்திருக்கிறது நமது தோலை.\nஎதையெதையோ எதெதுவோடோவெல்லாம் கட்டிக் கலந்து தின்று பழகிய நமக்கிப்போது உணவாக ஆகிப் போனது அவமானங்களே; அதையே தின்கிறோமென்ற அவமானமுமற்று.\nமுதல் சமூக நீதிப் போராளி\nகிஸ்மத் – மலையாளத் திரைப்படம்\nலூசியா – கன்னடத் திரைப்படம்\nவடகரை வேலன் on உருவு கண்டு எள்ளாமை\ncgbalu on உருவு கண்டு எள்ளாமை\nGopal Kannan on யாம் துஞ்சலமே\nமுரளிகண்ணன் (@murali… on கோபிசெட்டிபாளையம்\n100/100 L R G Govt Arts Uncategorized அனுபவம் அனுபவம். நகைச்சுவை எழுத்தோவியம் கதம்பம் கதை கவிதை குசும்பு சமூகம் சாதனை சினிமா சிறுகதை சிறுகதைகள் ஜோக் தமிழ் தமிழ் வழிக் கல்வி தொடர் நகைச்சுவை நக்கல் நட்சத்திரப் பதிவு நாவல் நையாண்டி பதிவர் வட்டம் மொக்கை லொள்ளு வலை வாசிப்பு விமர்சனம்\nஒரு வேளை ஏதாவது ஒரு தோழர் நான் புர்ச்சின்னு சொன்னதுல காண்டாயிட்டாரோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://entertainment.chennaipatrika.com/post/2018/01/07/Saavi-Movie-Review.aspx", "date_download": "2018-04-26T13:21:56Z", "digest": "sha1:K6QBHF6W4GPHDYZU4PP36UHKDKGSP54W", "length": 5278, "nlines": 49, "source_domain": "entertainment.chennaipatrika.com", "title": "Saavi Movie Review", "raw_content": "\nமதுரையில் வாழும் இளைஞன் ஒருவன், அவன் வாழ்வில் ஏற்படும் திடீர் திருப்பங்கள், அவனது வாழ்க்கையில் எந்தவிதமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.............................\nமதுரையில் வாழும் இளைஞன் ஒருவன், அவன் வாழ்வில் ஏற்படும் திடீர் திருப்பங்கள், அவனது வாழ்க்கையில் எந்தவிதமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அதனை அவன் எப்படி எதிர்கொள்கிறான் என்பதை யதார்த்தமாக காட்டியிருக்கும் ஆர்.சுப்ரமணியனுக்கு பாராட்டுக்கள்.\nசாவி செய்யும் தொழில் செய்து வருகிறார் நாயகன் பிரகாஷ் சந்திரா. அவரது அண்ணன் ஆட்டோ ஓட்டி வருகிறார். நாயகி சுனு லட்சுமியை, பிரகாஷ் சந்திராவுக்கு நிச்சயம் செய்திருக்கின்றனர். அவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கவிருக்கும் நிலையில், பிரகாஷ் சந்திராவின் அண்ணன் கொலை செய்யப்படுகிறார்.\nஅதே நேரத்தில் மற்றொரு வீட்டில் கொள்ளை சம்பவம் ஒன்றும் அரங்கேறுகிறது. இரண்டு குற்றங்கள் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் பிரகாஷ் சந்திராவின் அண்ணன் கொலை குறித்து நாயகனின் அப்பாவிடம் விசாரணை நடத்தும் போது தனது குடும்பத்தில் உள்ளவர்கள் குறித்து அவர் போலீசிடம் தெரிவிக்கிறார். மறுபுறத்தில் கொள்ளை நடந்த வீட்டின் பூட்டை உடைக்காமலும், எந்த சேதமும் செய்யாமல் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த இரு குற்றங்களும் நாயகனுக்கு எதிராக திரும்ப, பிரகாஷ் சந்திரா அதனை எப்படி எதிர்கொண்டார் பிரகாஷ் சந்திராவின் அண்ணனை கொன்றது யார் பிரகாஷ் சந்திராவின் அண்ணனை கொன்றது யார் கொள்ளை அடித்ததற்கும், அவருக்கும் சம்பந்தம் இருக்கிறதா கொள்ளை அடித்ததற்கும், அவருக்கும் சம்பந்தம் இருக்கிறதா இந்த இரண்டு பிரச்சனையையும் அவர் எப்படி எதிர் கொண்டார் இந்த இரண்டு பிரச்சனையையும் அவர் எப்படி எதிர் கொண்டார்\nசாவி செய்யும் இளைஞனாக, கொலை பழி, கொள்ளை பழியை எதிர்கொள்ளும் சாதாரண இளைஞனாக பிரகாஷ் சந்திரா யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். சுனு லக்‌ஷ்மி அவரது கதாபாத்திரத்தை பூர்த்தி செய்திருக்கிறார். ராஜ லிங்கம், உதயபானு மகேஷ்வரன், ஸ்டில்ஸ் குமார், கவிஞர் நந்தலாலா உள்ளிட்ட அனைவருமே யதார்த்தமாக நடித்திருப்பது படத்திற்கு பலமாக அமைந்தது.\nமொத்தத்தில் ` துரு பிடிக்காத சாவி'.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://rajinifans.com/history/part66.php", "date_download": "2018-04-26T13:18:40Z", "digest": "sha1:6AVF5STYSL5DYJ555JB5C2LMMO6TARM2", "length": 15870, "nlines": 224, "source_domain": "rajinifans.com", "title": "Part 66 - Rajini's History (Tamil) - Rajinifans.com", "raw_content": "\n\"எங்கம் நட்பை யாராலும் பிரிக்க முடியாது''\n\"ரஜினிக்கும் எனக்கும் உம்ள நட்பை யாராலும் பிரிக்க முடியாது'' என்று கமலஹாசன் கூறினார்.\nகமலஹாசன் நடித்த \"அபூர்வ ராகங்கம்'' படத்தில் சிறு வேடத்தில் அறிமுகமான ரஜினி, பிற்காலத்தில் சூப்பர் ஸ்டாராக உயர்ந்தார்.\nநடிப்பில் \"உலக நாயகன்'' என்று போற்றப்படுகிறார், கமலஹாசன்.\n\"அபூர்வராகங்கம்'' படத்தில் நடிக்கும்போதே கமலும், ரஜினியும் நண்பர்கம் ஆனார்கம்.\nஇருவரும் வெவ்வேறு பாதையில் நடந்து சென்றபோதிலும், அவர்கம் இடையேயான ஆழமான நட்பு இன்றும் தொடருகிறது.\nஇருவரும் பல படங்களில் நடித்து, \"பிசி''யாக இருந்த காலக்கட்டத்தில், இருவருக்கும் இடையே நட்புறவு இல்லை என்று ரசிகர்கம் ந�னைத்தனர். அதை ஒரு பேட்டியில் கமல் மறுத்தார். அவர் அப்போது கூறியதாவது:-\n\"எனக்கும், ரஜினிக்கும் ஆகாது என்றும், ஒருவரை ஒருவர் விழுங்கப் பார்க்கிறோம் என்றும் எங்களது எதிரிகம் சிலரும், எங்களுக்கும் `கோம்' மூட்டிவிடப் பார்க்கும் சிலரும் சொல்வது உண்டு.\nஎனக்கும், ரஜினிக்கும் உம்ள நட்பு, சினிமா அந்தஸ்தையும் மீறி நிற்பதாகும். அந்த உயரத்துக்கு வந்து, எங்களை - எங்கம் நட்பை - எதுவும் செய்துவிட முடியாது.\n\"அபூர்வ ராகங்கம்'' படத்தில் தொடங்கி, எங்கம் நட்பு வளர்ந்தது. \"அவர்கம்'' படத்தின் படப்பிடிப்பு முடிந்த நேரத்தில் ரஜினியிடம், \"தொடர்ந்து ஸ்டைல் நடிப்பையே தந்து கொண்டிருக்கிறீர்களே. கொஞ்சம் கேரக்டர் நடிப்பிலும் கவனம் செலுத்தினால் என்ன\nரஜினி அமைதியாக என்னிடம், \"கமல் நீங்கம் உங்கம் வழியில் செல்லுங்கம். எனக்கு ஸ்டைல் நடிப்புதான் சரி நீங்கம் உங்கம் வழியில் செல்லுங்கம். எனக்கு ஸ்டைல் நடிப்புதான் சரி\nஅவருடைய பதில் எப்போதுமே இப்படி நேரடியாகத்தான் வரும். சுற்றி வளைத்து பேசுவது என்பதே அவரிடம் கிடையாது.\n\"அவர்கம்'' படத்தில் ரஜினியின் `நெகடிவ்' நடிப்பு மிக வித்தியாசமாக அமைந்திருந்தது. அவரும் அதை சிறப்பாகச் செய்திருந்தார். அப்போதுதான் அவரிடம் `அவர்கம்' நடிப்பை சுட்டிக்காட்டி மேற்கண்ட கேம்வியைக் கேட்டேன்.\n\"நினைத்தாலே இனிக்கும்'' படப்பிடிப்பு, சிங்கப்பூரில் நடந்தது. தினமும் படப்பிடிப்பு முடிந்தபின், ரஜினி ஊரை சுற்றிப் பார்க்கக் கிளம்பி விடுவார். என்னையும் துணைக்கு அழைப்பார். எனக்கு மறுநாம் படப்பிடிப்புக்காக காலையிலேயே எழுந்தாக வேண்டும் என்பதற்காக தயங்குவேன். \"அட, சும்மா வாங்க சிங்கப்பூருக்கு எதுக்கு வந்திருக்கோம்'' என்று அழைத்துச் செல்வார்.\nஊர் சுற்றிவிட்டு எங்கம் இருப்பிடம் திரும்ப, நம்ளிரவு 2 மணிக்கு மேல் ஆகிவிடும். ரஜினியுடன் நீண்ட நேரம் சுற்றுவது எனக்கு சரிப்பட்டு வரவில்லை. அதனால் ஒரு மணி நேரம் முன்னதாகவே வந்துவிடுவேன்.\nரஜினி அதிகாலை 3 மணி, 4 மணிக்கு திரும்பி வருவார். ஆனால் மறுநாம் காலையில் பார்த்தால், முந்தின நாம் இரவு விழித்திருந்த அசதி அவரிடம் தெரியாது.\nபாலசந்தர் சார் இரவு 9 மணிக்கு தூங்கி காலை 5 மணிக்கே தயாராகி விடுவார். படப்பிடிப்பு தளத்துக்கு வந்தார் என்றால், காட்சியை தயார் செய்ய அரை மணி நேரமாவது ஆகும். அந்த இடைவெளியை நானும், ரஜினியும் வீணாக்குவது இல்லை. அருகே உம்ள பூங்காக்களிலும் நடைபாதைகளிலும் சிமெண்ட் சாய்மானங்கம் இருக்கும். அங்கே ஓய்வு எடுப்போம்.\nநான் ஒரு இடத்திலும், ரஜினி வேறு இடத்திலும் இருக்க முடியாது. ஏனென்றால், டைரக்டர் அழைத்ததும் எழுந்து ஓடவேண்டும். எனவே, ஒரே இடத்தில் இருவரும் ஒருவர் தோம் மீது ஒருவர் தலை சாய்த்தபடி தூங்குவோம்.\nஒரே காரில் பயணம் செய்யும்போதும், விமான நிலையத்திலும் இப்படி தூங்கித்தான் ஓய்வு எடுப்போம். இதை எத்தனை பேர் நம்புவீர்களோ தெரியாது. ஆனால் உண்மை.\n\"அலாவுதீனும் அற்புத விளக்கும்'' படப்பிடிப்பு சத்யா ஸ்டூடியோவில் நடந்தபோதுதான், இருவரும் இனி சேர்ந்து நடிப்பதில்லை என்று முடிவு எடுத்தோம். ஏனென்றால், நாங்கம் இருவரும் இணைந்து நடிக்கும்போது, படத்தயாரிப்பாளர்கம் எங்கம் இருவருக்குமே ஒரு தொகையை பேசிக்கொடுத்து விடுவார்கம். தனித்தனியாக நடித்தால் இருவருமே முன்னேற முடியும் என்று கருதி, அந்த முடிவுக்கு வந்தோம்.\nசினிமாவைப் பொறுத்தவரை நாங்கம் கடுமையாகப் போட்டி போட்டு மோதுவோம். ஒரு சமயம், நான் பெரிய வெற்றியாக வெடித்தால், அடுத்து அதைவிடப் பெரிய வெற்றியாக அவர் வெடித்து சிதறுவார். அதைப்பார்த்து, அதைவிட வெற்றி பெறவேண்டும் என்று நான் முயலுவேன்.\nஎங்கம் போட்டி எவ்வளவு கடுமையானதாக இருந்தாலும், நட்பில் எங்களுக்கும் எந்த மாற்றமும் இல்லை.\nநான் முதன் முதலாகத் தயாரித்த \"ராஜபார்வை''யைப் பற்றி பலரும் `ஆகா, ஓகோ' என்று பாராட்டி விமர்சிக்கையில், ரஜினி மட்டும் `சரியில்லை' என்றார்.\n\"டெக்னிகலா பெரிசா பண்ணியிருக்கீங்க. அதனால் என்ன பிரயோஜனம்\nரஜினியின் பெரிய படம் ஒன்று வந்தது. அதைப் பார்த்துவிட்டு, எனக்குப் பிடிக்காததை அவரிடம் சொன்னேன். ஒருவரையொருவர் இப்படி விமர்சிப்பதிலும், நாங்கம் பின்வாங்கியதில்லை.\nஅதுமட்டுமின்றி எங்கம் தவறுகளையும் நாங்கம் விமர்சிக்க பயந்ததில்லை. இந்த மனப்பாங்கு, எம்.ஜி.ஆர்., சிவாஜியிடம்கூட இருந்திருக்க முடியாது. ஏன், வேறு எந்த இந்திய நடிகர்களிடமும் காணமுடியாதது என்பதைப் பெருமையாகச் சொல்லிக் கொம்வேன்.\nமுன்பு, அரசியலில் ஈடுபடலாமா, வேண்டாமா என்ற கேம்வி ரஜினிக்கு எழுந்தபோது, என்னிடம் அதுபற்றி அபிப்பிராயம் கேட்டார்.\n\"வேண்டாம்'' என்று கூறி, சில விளக்கங்களும் சொன்னேன். அதை ரஜினி ஏற்றுக்கொண்டு, \"எனது நலனை விரும்பும் வேறு சிலரும் இதுமாதிரிதான் கூறுகிறார்கம்'' என்றார்.\nநான் நடித்த \"நாயகன்'' படத்தைப் பார்த்துவிட்டு, \"நடிகனுக்கு நடிகன்'' என்று பாராட்டினார், ரஜினி.\n\"புன்னகை மன்னன்'' நூறாவது நாம் விழாவில் கலந்து கொண்ட ரஜினி, அப்படத்தில் நான் ஏற்றிருந்த சாப்ளின் செல்லப்பா வேடத்தை, \"இதுபோல் எந்த நடிகராலும் செய்ய முடியாது'' என்று கூறினார்.\n\"எங்கேயோ கேட்ட குரல்'' படத்தில், மாறுபட்ட ரஜினியைப் பார்த்து ரசித்தேன். அந்தப்படம் பெரிய அளவு வெற்றி பெறாததில் எனக்கும் வருத்தமுண்டு. வெற்றிகம்தான் கலைஞர்களை பெரிய அளவில் உற்சாகப்படுத்த முடியும் என்று நம்புகிறவன் நான்.''\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://supsind.blogspot.com/2013/08/blog-post_22.html", "date_download": "2018-04-26T13:35:04Z", "digest": "sha1:SEILRH6X4KRJOUKWHEYG7C37EMLTEFA6", "length": 15507, "nlines": 132, "source_domain": "supsind.blogspot.com", "title": "சுசி: ரீ என்ட்ரீ", "raw_content": "\nவீட்டுக்கும், நாட்டுக்கும் பயனுள்ளவர்களாய் வாழ்வதே வாழ்க்கை.\nவியாழன், ஆகஸ்ட் 22, 2013\nஇந்த சினிமா நட்சத்திரங்கள் எல்லாம் கல்யாணம் பண்ணி கொஞ்ச காலம் நடிக்காம இருந்துட்டு திரும்பவும் நடிக்க வரும்போது அதற்கு நிறைய தடபுடல் இருக்கும். நான் என்ன நடிக்கவா செய்யறேன். அதனால என் ரீ என்ட்ரி க்கு எந்த ஆர்ப்பாட்டமான வரவேற்பும் தேவையில்லை (நீ கேட்டாலும் இங்க யாரும் குடுக்க தயாரில்லை).\nஎன் தம்பியின் திருமணதிற்கு பின், என் கம்ப்யூட்டர் ரொம்பவே தொல்லை கொடுத்து விட்டது. நிறைய சர்வீஸ் இன்ஜினீயர்கள் வந்து பார்த்து விட்டு, அதனால தான் இதனால தான் என்று காரணம் சொல்லிவிட்டு போனார்கள். ஏதோ ஒரு அஜீத் படத்துல ஆட்டோ கண்ணாடிய திருப்பினா ஆட்டோ கிளம்புமே அந்த மாதிரி,\"மேடம், உங்க கேஸ் அடுப்ப கொஞ்சம் நிறுத்துங்க , உங்க கேஸ் அடுப்ப கொஞ்சம் நிறுத்துங்க , அது தான் இந்த பிரச்சனைக்கு காரணமாய் இருக்கும், அது தான் இந்த பிரச்சனைக்கு காரணமாய் இருக்கும்\", ன்னு தான் யாரும் சொல்லலை.\nஅந்தளவுக்கு புதுமையான காரணங்கள் சொல்லப்பட்டன. அவ்வப்போது என் தம்பியின் லாப் டாப்பிலும், பிரௌசிங் சென்டரிலும் சென்று மெயில் மட்டும் பார்த்து வந்தேன். அப்போதெல்லாம் வலை உலகத்தில் என்ன நடக்கிறதோ தெரியவில்லையே என்ற ஏக்கம் பிடித்து வாட்டும். ஒரு சில தளங்களில் மட்டும் சென்று அவ்வப்போது சில கமெண்டுகளை தூவிவிட்டு போய் விடுவேன்.\nஇத்தனை நாட்களும் என்னை யாரும் தேடியிருக்க மாட்டார்கள் (தேடுகின்ற அளவிற்கு நான் ஒன்றும் பெரிதாக எழுதிவிடவில்லை).\nஇருந்தாலும், \" நான் வந்துட்டேன்............\" என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.\nரீ என்ட்ரி யை ஒரு நல்ல செய்தியோடு ஆரம்பிப்போம் என்று எண்ணுகிறேன்.\nசுவாமி விவேகானந்தரின் 150 வது ஜெயந்தி நாடு முழுவதும் கொண்டாட பட்டு வருவது நாம் அனைவரும் அறிந்ததே. வரும் செப்டெம்பர் 11 ஆம் தேதி (அன்று சுவாமிஜி சிகாகோவில் சொற்பொழிவாற்றிய நாள்) சென்னை கடற்கரையில் உள்ள ஸ்ரீ விவேகானந்தர் இல்லத்தில் மாலை நான்கு மணிக்கு ஒரு சிறப்பு நிகழ்ச்சி நடக்க இருக்கிறது. பெரிய தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் பங்கேற்க உள்ளனர். பின்னர், விவேகானந்தர் இல்லத்தில் இருந்து கலங்கரை விளக்கம் வரை \"தேசத்திற்காக ஓடுவோம்\", என்ற ஒரு ஓட்டம் (mass run ) நடைபெற உள்ளது. இதில் பதினெட்டு முதல் நாற்பது வயது வரை உள்ளவர்கள் கலந்து கொண்டு ஓடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎனவே, எல்லோரும் குடும்பத்துடன் கலந்து கொண்டு தேச பணியில் பங்கு பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.\nPosted by சுசி at வியாழன், ஆகஸ்ட் 22, 2013\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n ஒரு வழியா காஸ் அடுப்பை நிறுத்தி கணினியை சரி பண்ணீட்டிங்க போல உங்களை மிஸ் பண்ணின ரசிகர் கூட்டத்தில் நானும் ஒருத்தி :) உங்கள் கலக்கல்களை எதிர்பார்த்து...\n//என் தம்பியின் திருமணதிற்கு பின், என் கம்ப்யூட்டர் ரொம்பவே தொல்லை கொடுத்து விட்டது.//\nஇந்த ரெண்டுக்கும் எதோ சம்பந்தம் இருக்குதோ\n, உங்க கேஸ் அடுப்ப கொஞ்சம் நிறுத்துங்க , அது தான் இந்த பிரச்சனைக்கு காரணமாய் இருக்கும், அது தான் இந்த பிரச்சனைக்கு காரணமாய் இருக்கும்\", ன்னு தான் யாரும் சொல்லலை.//\nஅப்படி யாராவது சொல்ல மாட்டாங்களான்னு எதிர்பார்த்த மாதிரி இருக்கே\n@ சே.குமார் : நன்றி சார் \n@ திண்டுக்கல் தனபாலன் : நன்றி சார் \n@ கவிநயா : நன்றி கவிநயா வைர நெஞ்சுள்ள தைரிய சாலிகள் ஒரு நாலு பேராவது இருக்கீங்களேன்னு நினைச்சு சந்தோஷ படறேன்.\n@ ஹுச்சைனம்மா : இருக்கும் என் தம்பிதான் அவன் மனைவிக்கு என் அக்கா எழுதியதை எல்லாம் படின்னு சொல்லி லிங்க் அனுப்பினானாம். பெண் பாவம் பொல்லாதது. :))\nகாஸ் அடுப்பை நிறுத்த வேண்டிய அவசியமில்லைங்க. அதை தலைவர் தலையில் கட்டிடலாம் (அவர் சூப்பரா சமைப்பார் \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஈன்ற பொழுதின் பெரிதுவத்தல் (2)\nலக்ஷ்மி கடாக்ஷம் - பகுதி 3\nமேடையில் பல விதமான லக்ஷ்மி கொலு பொம்மைகள் வைக்கப்பட்டிருந்தன. க்ருஹ லக்ஷ்மி, பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் பரமன் காலடியில் அமர்ந்திருக்கும...\nதங்கச்சி பாப்பா பிறந்தநாள் (நவம்பர் 19)\n, பேர்சொல்ல உனக்கு ஒரு ஆண்வாரிசு இல்லையே\" நான் மனதிற்குள் : \"இங்கே எனக்கு என்ன சாம்ராஜ்ஜியமா இருக்கிறத...\nஇது நம்ம வீட்டு கல்யாணம்\nநானும் நிறைய விஷயங்களை பற்றி கதை எழுத வேண்டும் என்று கற்பனை செய்து வைத்து இருக்கிறேன். ஆனால், அதற்குள் எதாவது சுவாரசியமான ஒரு உண்மை நிகழ்வு ...\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள் (ஜோதிட நம்பிக்கை இல்லாதவர்களுக்கான பதிவு)\n\"இது சனி பெயர்ச்சியா தானே இருக்க முடியும் எப்படி ராகு-கேது பெயர்ச்சியாச்சு\"ன்னு நீங்க யோசிக்கலாம். வாஸ்தவம் தான் இந்த க்ரஹமு...\n\" \"என் பொண்ணு தான் சார்\" \"மஞ்சுளா மேடத்துக்கு இவ்வளவு பெரிய பொண்ணா \" \"மஞ்சுளா மேடத்துக்கு இவ்வளவு பெரிய பொண்ணா \nபுவனேஸ்வரி மகாத்மியம் - பகுதி 1\n என்பது நான் அடிக்கடி சொல்லும் வாக்கியம். இதுதான் காரணம் என்றில்லாமல் என...\nஅம்பது ரூபாய் பொருளை \"பார்டி நைன் ருபீஸ் பிப்டி பைஸ்னா தாங்க \" என்று பேரம் பேசி வாங்கியதையே பெருமையாக நினைக்கும் சென்னை நகரத்து அ...\nபடித்து பல வருடங்கள் ஆகிவிட்ட போதிலும் என்னால் மறக்க முடியாத சில நகைச்சுவை துணுக்குகள் இங்கே. இவற்றை எங்கே,எப்போது படித்தேன் என்பது நினைவில...\nகடை நிலை ஊழியர்கள் - (தொடர் பதிவு) இறுதி பகுதி.\nமீனாம்மா : மீனாம்மாவின் உண்மையான பெயர் இன்றுவரை எனக்கு தெரியாது. மீனாவின் அம்மா மீனாம்மா அவ்வளவு தான். மீனாம்மாவிற்கு மூன்று குழந்தைகள்...\n”என் கையெல்லாம் கருப்பா, சுருக்கம் சுருக்கமா இருக்கு பாரேன் உஷா, இதுக்கு என்ன பண்ணலாம்” வாயில் நூலை கவ்வியபடி என் புருவத்தை ராவிக்கொண்ட...\nஉஷா ஸ்ரீகுமார் தந்த விருது\nகண்ணனை நினைப்பவர் சொல்வது பலிக்கும்\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.adiyakkamangalam.com/cookbook/100/%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-kali-urundai-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-04-26T13:40:59Z", "digest": "sha1:GYXMLGQHVXSURTDG2LG5RVJOYBGQR6UE", "length": 10095, "nlines": 187, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam களி உருண்டை (Kali", "raw_content": "\nசமையல் / இனிப்பு வகை\nபுழுங்கல் அரிசி - 2 கப்\nசர்க்கரை - 1 1/2 கப்\nஏலக்காய் - 5 (பொடி செய்தது)\nதேங்காய் துருவல் - 1 கப்\nஅரிசியை வறுத்து பொடியாக அரைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் 6 கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். இதில் பொடித்த அரிசியை சிறிது சிறிதாக கொட்டி கட்டி பிடிக்காமல் கிளறிவிடவும். அரிசி வெந்தவுடன் சர்க்கரையைச் சேர்த்து கிளறி விடவும்.\nவறுத்த முந்திரி, ஏலக்காய் பொடியை அதில் போடவும். இந்த கலவை சட்டியில் ஒட்டாமல் வரும்போது இறக்கி வைக்கவும். சிறிது சூடாக இருக்கும்போதே உருண்டை பிடித்து தேங்காய் துருவலில் உருண்டையின் அனைத்து பாகங்களிலும் படுமாறு பிறட்டி எடுத்து தனியாக ஆற வைத்து சுவைக்கலாம்.\nபீட்ரூட் ஜாமுன் அல்வா (Beetroot Jamun Halwa)\nபப்பாளி பழ அல்வா (Papaya Halwa)\nபச்சரிசி ஹல்வா (Rice Halwa)\nகுலோப் ஜாமூன் (Gulab Jamun)\nசிம்பிள் மைதா கேக் (Simple Maida Cake)\nபீட்ரூட் அல்வா (Beetroot Halwa)\nதேங்காய் பர்பி (Coconut Burfi)\nஅரிசி மாவு புட்டு (Rice Flour Puttu)\nஅவல் ராகி புட்டு (Aval Raggi Puttu)\nபூர்ணக் கொழுக்கட்டை (Poorna Kolukattai)\nபொட்டுக்கடலை உருண்டை (Bengal Gram Sweet)\nபொரி உருண்டை (Pori Urundai)\nஓலைப் பக்கோடா (Ribbon Pakoda)\nவாழைக்காய் சிப்ஸ் (Banana Chips)\nவாழைக்காய் பஜ்ஜி (Banana Bajji)\nவெங்காய பஜ்ஜி (Onion Bajji)\nகருப்பு கொண்டை கடலை சுண்டல்\nவெங்காய பக்கோடா (Onion Bakoda)\nமுந்திரி பக்கோடா (Cashewnut Bakoda)\nநிலக்கடலை பக்கோடா (Peanut Bakoda)\nஜவ்வரிசி முறுக்கு (Sago Murukku)\nஅரிசி மாவு முறுக்கு (Rice Flour Murukku)\nதேங்காய்ப்பால் முறுக்கு (Coconut Milk Murukku)\nமரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் (Tapioca Chips)\nபருப்பு ரசம் (Daal Rasam)\nசெட்டிநாடு கார நண்டுக் குழம்பு\nபயத்தம்பருப்பு தோசை ( Moong dal dosa )\nஃப்ரைட் இட்லி (Fried Idly)\nரவா பொங்கல் (Rawa Pongal)\nகத்திரிக்காய் சட்னி (Brinjal Chutney)\nஎக் ஃப்ரைட் ரைஸ் (Egg Fried Rice)\nசில்லி சிக்கன் (Chilli Chicken)\nவறுத்து தண்ணீர் பொருட்கள்புழுங்கல் பாத்திரத்தில் முந்திரி10 பொடியாக விட் தேங்காய் சர்க்கரை1 கொள்ளவும் செய்தது 12 கப் அரிசி2 Urundai ஒரு உருண்டை தேவையான பொடி உப்புசிறிதளவுசெய்முறைஅரிசியை அரைத்துக் கப் 6 ஏலக்காய்5 கப் Kali களி துருவல்1 கப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dawahfm.com/2018/02/08-Janaza-Qatar.html", "date_download": "2018-04-26T13:18:59Z", "digest": "sha1:B23E7RMLIU5AX74GDIBE66XOXGP7DIPK", "length": 10648, "nlines": 96, "source_domain": "www.dawahfm.com", "title": "கத்தாரில் குட்டி இலங்கை சகோதரர் வபாத்தானார்! ஜனாஸா அறிவித்தல் | Dawah FM தமிழ்", "raw_content": "\nஉள்நாட்டுச் செய்திகள் வெளிநாட்டுச் செய்திகள்\nகத்தாரில் குட்டி இலங்கை சகோதரர் வபாத்தானார்\nஇலங்கையின் கிராண்ட்பாஸ் கொழும்பு 12 ஐ பிறப்பிடமாகக் கொண்ட கட்டார் நாட்டில் தொழில் புரியும் சகோதரர் முஹம்மது ஷிஹான் { 66824803 } அவர்களின் 5 மாதக் குழந்தை இன்று ஹமாத் வைத்தியசாலையில் காலமாகியதாய் கிடைக்க பெற்ற செய்தியை கவலையுடன் அறியத் தருகிறோம்\nஇவர்களுக்கு 12 வருடத்தின் பின்னர் கிடைக்க பெற்ற இந்தக் குழந்தையின் இழப்பை தாங்கும் மன வலிமையை வல்ல இறைவன் அவர்களுக்கு\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்\nஇவர்களுக்கு மீண்டும் ஸாலிகான குழந்தைகளை வழங்க அல்லாஹ்விடம் துஆ கேட்ப்போம் இன்ஷா அல்லாஹ்\nஜனாஸா நல்லடக்கம் இன் ஷா அல்லாஹ் இன்று 08.02.2018 வியழக்கிழமை இரவு இஷா தொழுகையை தொடர்ந்து கட்டாரிலுள்ள அபுஹமூர் மையவாடியில் இடம்பெறும் இன் ஷா அல்லாஹ்\nLabels: உள்நாட்டுச் செய்திகள் வெளிநாட்டுச் செய்திகள்\nதிகன - வீடியோ காட்சிகள்\nஅமித் வீரசிங்கவின் மனைவி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு\nகண்டி இனவாத நடவடிக்கையின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் மஹசொஹன் பலகாயவின் தலைவர் அமித் வீரசிங்கவின் மனைவி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ...\nபெண்கள் அபாயா அணிவது 'கட்டாயமில்லை': முஹம்மத் பின் சல்மான்\nசவுதி அரேபியாவில் பெண்கள் அபாயா அணிவது எந்த வகையிலும் கட்டாயமில்லையென தெரிவித்துள்ளார் சவுதி முடிக்குரிய இளவரசர் முஹம்மத் பின் சல்மான். ...\nதிகன பகுதியில் சற்றுமுன் மீண்டும் அமைதியற்ற நிலமை தோன்றியுள்ளது.\nதிகன பகுதியில் சற்றுமுன் மீண்டும் அமைதியற்ற நிலமை தோன்றியுள்ளது. முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள் மற்றும் பள்ளிவாசல் மீதும் ஆத்திரகாரர்க...\nமுஸ்லீம் அமைப்புகளுக்கு SLTJ யின் அன்பான அழைப்பு\nஅஸ்ஸலாமு அலைக்கு வரஹ்மதுல்லாஹி வபரஹாத்துஹு முஸ்லீம் அமைப்புகளுக்கு SLTJ யின் அன்பான அழைப்பு சில தினங்களாக நாட்டில் முஸ்லிம்களுக்கு எதி...\nமகிந்த ராஜபக்‌ஷ, ஜம்மியதுல் உலமா அவசர சந்திப்பு ..\nதற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அவசரகால நிலைமையை கருத்தில் கொண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை அவரது இல்லத்தில் அகில இலங்கை ஜம்மியதுல்...\nசவூதியில் அமோகமாக ஆரம்பமான ஜாஸ் இசை கச்சேரி\nபொருளாதாரத்தில் பின்னோக்கி செல்லும் சவூதி அரேபியாவை நவீன இஸ்லாமியா நாடாக மாற்றி வருவாயை மீண்டும் வரவழைத்து கொள்ளும் சவுதி இளவரசரின் தூரநோ...\nசியம்பலாண்டுவையில் கறுப்பு கொடி கட்டி பெரும்பான்மை குழுக்கள் தற்போது ஆர்ப்பாட்டம்\n#BREAKING #NEWS அம்பாறையில் பள்ளிவாசல் உடைக்கப்பட்டதை நியாயப்படுத்தியும், முஸ்லிம்களை வெளியேறுமாறு கூறியும் மொனராகலை, சியம்பலாண்டுவையில்...\nமலட்டு மருந்து விவகாரம்; சம்பவ தினம் என்னதான் நடந்தது: விபரிக்கிறார் ஹோட்டல் உரிமையாளர் (வீடியோ இணைப்பு)\n– மப்றூக் – அ ம்பாறை நகரில் திங்கட்கிழமையன்று இரவு – இனவாதத் தாக்குதல் ஆரம்பித்த காசிம் ஹோட்டல் உரிமையாளர் ஏ.எல். பர்சித், அன்றைய தினம...\nசட்டம், ஒழுங்கு அமைச்சராக ரஞ்சித் மத்தும பண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.\nசட்டம், ஒழுங்கு அமைச்சராக மொனராகல மாவட்ட ஜ.தே.கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார நியமிக்கப்பட்டுள்ளார். குறித்த நியமன...\nசியம்பலாண்டுவையில் கறுப்பு கொடி கட்டி பெரும்பான்மை...\nஅம்பாறை ஜும்மாபள்ளிவாசல்மீது இனவாதிகள் பலத்த தாக்க...\nசவுதியில் துண்டிக்கப்பட்ட தொழிலாளியின் கை வெற்றிகர...\nஅதிவேக நெடுஞ்சாலையில் வேக அளவீட்டு இயந்திரக்கட்டமை...\nஇலங்கை வரலாற்றில் முதற்தடவையாக அரசியலுக்குள் நுழைந...\n​வாட்ஸ் அப் செயலியின் பயன்பாட்டை மேலும் சுவாரஸ்யமா...\nவாக்களிப்பு நிறைவு: 60 வீதத்திற்கும் அதிகமான வாக்க...\nஇலங்கை நாத்தாண்டிய பகுதியில் நான்கு கால்களும் அதிச...\nகத்தாரில் குட்டி இலங்கை சகோதரர் வபாத்தானார்\nஅமீரகத்தில் 1 நம்பர் பிளேட்டை ஏலத்தில் எடுத்தவருக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.nitharsanam.net/178085/news/178085.html", "date_download": "2018-04-26T13:23:37Z", "digest": "sha1:6FCW4YFIWVR5ZCBYF2MTTE2HQBWFBETI", "length": 7471, "nlines": 90, "source_domain": "www.nitharsanam.net", "title": "இணை தேர்வு வழிமுறை!!(அவ்வப்போது கிளாமர்) : நிதர்சனம்", "raw_content": "\nகாலுக்குச் சரியான அளவில் செருப்பைத் தேர்வு செய்ய வேண்டும். சிறியதாக இருந்தால் காலில் புண் ஏற்படும். பெரியதாக இருந்தால் நடக்க முடியாது. அதுபோல் காமசுகம் அடைவதற்கு ஆண் அல்லது பெண் தனக்கு தகுந்த சரியான இணையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதுடன் நிறுத்திக்கொள்ளாமல் தேர்ந்தெடுக்க சில வழிமுறைகளையும் சொல்லியிருக்கிறார் வாத்ஸ்யாயனர்.\n1. இருவரும் ஒரே நிலையில் கவுரவமான குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்\n2. ஆணை விட பெண்ணுக்கு மூன்று வயது வரை குறைவாக இருக்க வேண்டும்.\n3. தலைமுடி, நகம், காதுகள், பாதங்கள் போன்றவற்றை முறைப்படி பராமரிப்பவராக இருக்க வேண்டும்.\n4. மணந்து கொள்ளும் முன் ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் நன்றாக பார்த்து அறிந்து புரிந்து கொண்டிருக்க வேண்டும்.\n5. முதல் பார்வையிலேயே பிடிக்காதவர்களை இணைத்துவைக்க குடும்பத்தினர் முயற்சிக்க கூடாது.\n6. ஆணை விரும்புவதை பெண் சொல்லமாட்டாள் என்றாலும் கடைக்கண் பார்வை, கன்னம் சிவத்தல், புளகாங்கிதம் அடைதல், பேச்சில் தெரியும் இனிமை, குழைவு போன்றவற்றில் இருந்து அறிந்துகொள்ள முடியும்.\n7. மனதுக்கு பிடித்த ஆணின் அருகே இருக்க விரும்பி ஏதாவது காரணத்துக்காக அந்த இடத்தையே சுற்றி சுற்றி வருவாள்.\n8. நல்ல ஆடை அணியாத நேரத்தில் மனம் விரும்பிய ஆணின் முன் வர விரும்பமாட்டாள்.\n9. பனக்காரன் என்பதற்காக யாரோ ஒருவனுக்கு பெண்ணை மணமுடித்து வைக்கக் கூடாது.\n10. சந்தேகப்படுபவர்களும் அடிக்கடி வெளியுர் பயணம் செய்பவர்களும் யாருக்கும் நல்ல துணையாக இருக்க முடியாது.\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nஉடலுறவின் போது எதுவெல்லாம் உங்கள் துணைக்கு பிடிக்கும்\nகர்ப்பகாலத்தில் தாம்பத்யம், அசைவம் சரியா\nமரண காமெடி- இது நம்ம ஊரு நடிகர்கள் – பழமார்நேரி பஞ்சாயத்து\nஇந்திய அரசியலில் ‘ஆளுநர்’ பதவிகள்\nநல்ல தூக்கத்துக்கு நாளை செய்ய வேண்டியதை எழுதுங்கள்\nதாம்பத்திய இன்பத்தின் போது தவிர்க்க வேண்டியவை\nசினிமா துறையில் இந்த வசனத்தை இவரை தவிர யாராலும் பேச முடியாது\nஉலக புகழ் பெற்ற குரங்கு செல்பி புகைப்பட வழக்கு : காப்புரிமை கோர முடியாது நீதிமன்றம் தீர்ப்பு\nஅணு சக்தி ஒப்பந்தம் மோசமானது என்றால் அமெரிக்க கையெழுத்திட்டது : ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி\nஇலங்கைப் பொலிஸாரின் பொருட்களை வைத்திருந்த பிரிட்டன் குடியுரிமை பெற்ற நபர் கைது\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.nitharsanam.net/178162/news/178162.html", "date_download": "2018-04-26T13:23:20Z", "digest": "sha1:NOYMTD5RNVW2Q56IBW4MSSSLBYSKPNFP", "length": 14995, "nlines": 95, "source_domain": "www.nitharsanam.net", "title": "பெண்களுக்கு பந்தா இல்லாத ஆண்களை தான் மிகவும் பிடிக்கும்..!!!(அவ்வப்போது கிளாமர்) : நிதர்சனம்", "raw_content": "\nபெண்களுக்கு பந்தா இல்லாத ஆண்களை தான் மிகவும் பிடிக்கும்..\nதாங்கள் எப்படி எல்லாம் இருந்தால் பெண்களுக்கு பிடிக்கும் என்று ஆண்களும் , தாங்கள் எப்படி எல்லாம் அழகாக காட்சி அளித்தால் வாலிப பட்டாளத்தை பின்னால் அலைய விடலாம் என்று பெண்களும் போட்டி போட்டுக்கொண்டு ஒருவருக்கொருவர் தங்களை அழகுபடுத்திக்கொள்வதில் ஈடுபடுவதாக தெரிவிக்கிறது ஒரு ஆராய்ச்சி. பல சுவாரஸ்யமான தகவல்களை கொண்ட அந்த ஆராய்ச்சி முடிவு பற்றி நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்.\nபொதுவாகவே காதலர்களிடம் சென்று நீங்கள் காதலிப்பதற்கு என்ன காரணம் என்றால், நல்லகுணம், என்று பொய், மேல் பொய் சொல்வார்கள். ஆனால் அப்படி ஒன்றும் இல்லை காதல் வருவதற்கு அழகும், உடல் கூறும் தான் காரணம் என்று கூறும் ஆராய்ச்சிகள் ஒரு கட்டத்தில் சிவப்பு நிறத்தாலும் தான் பெரும்பாலும் செக்ஸ் உணர்ச்சி ஏற்பட்டு அதன் மூலம் காதல் வலையில் விழுகிறார்கள் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.\nஇதுபற்றி ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், பொதுவாக சிவப்பு கலரில் உடை அணியும் பெண்கள் கவர்ச்சியாக தெரிவார்கள் என்கின்றனர். காமம் இல்லாத காதல் இல்லை என்பார்கள். அதுவும் இந்த ஆராய்ச்சியின் முடிவும் சரியாகத்தான் இருக்கிறது.\nஉச்சம் தலை முதல் உள்ளங்கால் வரை ஒரு பெண்ணை பார்த்த அடுத்த நிமிடத்திலேயே படம் எடுக்கிறது வாலிபர்களின் காமிரா கண்கள்… கண்ணை பறிக்கிற சிவப்பு கலர் உடை அணிபவர்களுக்கு பாலுணர்வு தானாகவே வந்து விடுகிறது. சிவப்பு என்பது பெண்களை பகலிலும், இரவிலும் வசீகரிக்கும்ஒரு கலர் என்று தெரிவிக்கிறது அமெரிக்காவின் ரோசெஸ்டர் பல்கலைக்கழக ஆய்வு முடிவுகள்.\nபெண்களின் அழகுக்கு முதல் அழகு சேர்ப்பது கண்கள் தான். இதில் கண்களுக்கு மேக்கப் போடாத பெண்களை குறைந்த ஆண்களுக்கு மட்டுமே பிடிக்குமாம். அதுவும் கிராமபுறத்து வாலிபர்களுக்கு தான் இது போன்ற கண்கள் பிடிக்கும். ஆனால் நகரத்தில் வசிக்கும் வாலிபர்களுக்கு ஒவ்வொரு அழகு பிடிக்கிறது.\nஐ லைனர் போடும் பெண்கள் பெரும்பாலான இளைஞர்களை வசீகரிக்கின்றனர். அவர்களின் கண் அழகும், முகம், சிரிப்பு என ஒட்டுமொத்தமாக வாலிபர்களை கட்டிவைக்கிறது இது போன்ற அழகுடன் கண் மேக்கப் செய்தவுடன் மேலும் அழகு சேர்ந்து கொள்வதால் பெண்களின் அழகுக்கு எப்போதுமே நாங்கள் அடிமை தான் என்று கூறும் அளவுக்கு இளைஞர்கள் மாறிவிடுகின்றனர்.\nஇயற்கை அழகை ரசிக்கும் வாலிபர்கள்\nஆனால் இதே அளவுக்கு மேக்கப்போடும் பெண்களை வெறுக்கும் வாலிபர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் என்ன தான் இருந்தாலும் பெண்களுக்கு இயற்கையான அழகே, தனிதான் என்று ரசிக்கின்றனர். இப்படி வேறுப்பட்டு இருந்தாலும் அனைவரையும் கவர்ந்திழுப்பது பெண்களின் கண்கள் தான் என்பது மற்றொரு விசேஷம்… கண்ணுக்கு மை அழகு… கவிதைக்கு பொய் அழகு என்பது போல பெண்ணின் கண்ணுக்கு மேக்கப் அழகு தான் என்கிறார்கள் காதலில் விழாதவர்களும்.\nஅடுத்து பெண்களின் அழகை நிர்ணயிப்பதில் முக்கிய பங்காக இருப்பது உதடுகள். ஆண்களை விட பெண்களின் உதடுக்கு எப்பவுமே தனி மவுசுதான். அழகுக்கு அழகு சேர்க்கும் விதமாக இன்றைய காலகட்டத்தில் உதட்டிற்கு லிப்ஸ்டிக் போடாத பெண்களே இல்லை என்று கூறும் அளவுக்கு நாகரீகம் வளர்ந்து விட்டது. லிப்ஸ்டிக் போட்டுக் கொள்வதால் முகத்திற்கு பளிச்சென்ற தோற்றம் ஏற்படுகிறது. உதட்டில் ஈரப்பதத்தை தக்க வைக்கவும், வெய்யிலில் பாதுகாக்கவும் லிப்ஸ்டிக்கில் உள்ள மாய்சுரைசர் உதவுகிறது. இதே போல் உதடுகளுக்கு நிறம் கொடுக்கும் மற்றொரு பொருளாக லிப்கிளாஸ் உதவுகிறது.\nஉதட்டினை பளப்பளப்பாகவும், மிருதுவானதாகவும் இது காட்டும். இதை பெரும்பாலான இளைஞர்கள் ரசிக்கின்றனர். பெண்களின் அடுத்த அழகாக உருவெடுத்துள்ளது நகங்கள். பொதுவாக இன்றைய காலக்கட்டத்தில் பெண்கள் நீண்ட நகங்கள் வளர்த்து வருகிறார்கள். பொதுவாகவே நகம் வளர்க்கும் பெண்களை ஆண்களுக்கு பிடிக்காது என்பது தான் பெண்களுக்கு அதிர்ச்சி தரும் விஷயம்.\nசரி இனி ஆண்களைப்பற்றி சர்வே முடிவு என்ன கூறுகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். ஆண்கள் அணியும் உடையின் வர்ணத்தில் சிவப்பு தூக்கலாக இருந்தாலே போதும், தன்னை அறியாமலே பெண்கள் திரும்பிப்பார்ப்பார்கள். சிவப்பு கலரில் பனியன், சட்டை போடும் ஆண்களை கவர்ச்சிகரமானவராக பெண்கள் உணர்கிறார்கள் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.\nமேலும் பெண்களுக்கு பந்தா இல்லாத ஆண்களை தான் மிகவும் பிடிக்கும். எளிமையான, நகைச்சுவை உணர்வு, பேச்சு திறமை கொண்ட ஆண்களை தான் பெண்கள் வளைத்து வளைத்து காதலிக்கிறார்கள் என்கிறது சர்வே… பெண்களை கவர ஆண்களுக்கான செலவு கம்மிதான். ஆனால் தமக்கு பின்னால் ஆண்களை சுற்ற வைக்க வேண்டும் என்றால் பெண்களுக்குத்தான் செலவு அதிகம் பிடிக்கும் என்கிறது தெரிவித்துள்ளது ஆராய்ச்சி முடிவு.\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nஉடலுறவின் போது எதுவெல்லாம் உங்கள் துணைக்கு பிடிக்கும்\nகர்ப்பகாலத்தில் தாம்பத்யம், அசைவம் சரியா\nமரண காமெடி- இது நம்ம ஊரு நடிகர்கள் – பழமார்நேரி பஞ்சாயத்து\nஇந்திய அரசியலில் ‘ஆளுநர்’ பதவிகள்\nநல்ல தூக்கத்துக்கு நாளை செய்ய வேண்டியதை எழுதுங்கள்\nதாம்பத்திய இன்பத்தின் போது தவிர்க்க வேண்டியவை\nசினிமா துறையில் இந்த வசனத்தை இவரை தவிர யாராலும் பேச முடியாது\nஉலக புகழ் பெற்ற குரங்கு செல்பி புகைப்பட வழக்கு : காப்புரிமை கோர முடியாது நீதிமன்றம் தீர்ப்பு\nஅணு சக்தி ஒப்பந்தம் மோசமானது என்றால் அமெரிக்க கையெழுத்திட்டது : ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி\nஇலங்கைப் பொலிஸாரின் பொருட்களை வைத்திருந்த பிரிட்டன் குடியுரிமை பெற்ற நபர் கைது\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.sahabudeen.com/2014/06/blog-post_11.html", "date_download": "2018-04-26T13:01:13Z", "digest": "sha1:JLQAFO7YSQSKQP475BEQR4VQQQ54VMUV", "length": 20685, "nlines": 203, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: இணையக் கட்டணம்... தொலைபேசி கட்டணம்... இப்படி சேமிக்கலாம்!", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nஇணையக் கட்டணம்... தொலைபேசி கட்டணம்... இப்படி சேமிக்கலாம்\nஇணையக் கட்டணம்... தொலைபேசி கட்டணம்... இப்படி சேமிக்கலாம்\nஇந்த நவீன யுகத்தில் இணையம், அலைபேசி உதவியுடன் இருந்த இடத்தில் இருந்துகொண்டே மின்னஞ்சல், குறுஞ்செய்தி, ஆன்லைன் தேர்வு, இ-புத்தகம்/இ-பேப்பர், மின்சாரம் என அனைத்து காரியங்களையும் எப்படி சுலபமாக முடிக்கலாம் என்பது பற்றி 'இதெல்லாம்கூட சேமிப்புதானுங்க' என்ற தலைப்பில் கடந்த இரு இதழ்களில் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக இன்னும் பல சேமிப்பு\nகணினி மற்றும் செல்போனில் இணைய இணைப்பை பயன்படுத்துபவர்கள், தங்களின் தேவைக்கு ஏற்ப டேட்டா கார்டு, இன்டர்நெட் பூஸ்டர் கார்டை பயன்படுத்தலாம். அனைத்து நாட்களிலும் இணையம் பயன்படுத்துபவர்கள் 'அன்லிமிட்டட் இன்டர்நெட் பேக்'கையும், இரண்டொரு நாளுக்கு பயன்படுத்துபவர்கள் குறைந்த எம்.பி. கொண்ட 'இன்டர்நெட் பேக்'கையும் பயன்படுத்தலாம். இதற்கெனவே ஏகப்பட்ட திட்டங்களை, தங்களின் இணையப்பக்கத்தில் வைத்துள்ளன சம்பந்தப்பட்ட நிறுவனங்கள். அதை கொஞ்சம் அலசினால், லாபம் நமக்குத்தான்.\nwww.youtube.com போன்ற வலைதளத்தில் குறும்படங்கள் தொடங்கி திரைப்படங்கள் வரை இலவசமாகப் பார்க்க முடியும். அதுமட்டுமில்லாமல், இதை டவுன்லோடும் செய்துகொள்ளலாம். மேலும் நமது வீடியோக்கள், பாடல்கள் என இந்த வலைதளத்தில் இலவசமாக எதை வேண்டுமானாலும் அப்லோடு செய்து, அதை மற்றவர்களையும் பார்க்கும்படி செய்யலாம். இன்றைக்கு வெள்ளித்திரை, சின்னத்திரை இதையெல்லாம் தாண்டி, இந்த இணையத்திரை (கணினித்திரை), இணையவாசிகளிடம் வேகமாகவே பரவிக் கொண்டிருக் கிறது. இன்றைய சூழலில் ஒரு குறும்படத்தை வெளியிடவே லட்சங்களில் செலவாகும். ஆனால், இதுபோன்ற வலைதளங்களில் அப்லோடு செய்வதன் மூலம் இலவசமாக உலகம் முழுவதும் உலவச் செய்துவிடலாம்.\nவெளிநாட்டில் இருப்பவர்களிடம் தொலைபேசியில் பேச, நிமிடத்துக்கு நிமிடம் எகிறும் கட்டணம். ஆனால், இணையத்தின் மூலமாக மிகமிகக் குறைந்த செலவில் இன்றைக்கு மணிக்கணக்கில் பேசமுடியும். உதாரணமாக, நமது ஜி-மெயில் அக்கவுன்ட்டை எடுத்துக்கொள்வோம். இதன் மூலமாக, சாட் ஆப்ஷனுக்கு அருகே உள்ள 'ஸ்டார்ட் வீடியோ கால்' ஆப்ஷனை கிளிக் செய்து வெப்கேமரா மற்றும் மைக் உதவியோடு உலகத்தின் எந்த மூலையில் இருக்கும் நண்பர்களுடனும் சுலபமாக வீடியோ கால் பேசமுடியும். இதேபோல் 'ஸ்கைப்' உள்ளிட்ட தளத்தில் வாய்ஸ் கால் பேசமுடியும். ஃபேஸ்புக், கூகுள் ப்ளஸ், யாஹூ தொடங்கி பல்வேறு வலைதளங்கள் மூலமாகவும் இந்தச் சேவையை பயன்படுத்தலாம்.\n'எங்கள் ஏரியாவுக்கு தண்ணீர் வரவில்லை', 'எங்கள் ஊருக்கு சாலை வசதி இல்லை' - இது போன்ற பல்வேறு புகார்களுக்கு முன்பெல்லாம் சம்பந்தப்பட்ட அலுவலகத்துக்குச் சென்று மனு கொடுப்பதே வழக்கமாக இருந்தது. இன்றோ வீட்டிலிருந்தபடியே இன்டர்நெட் உதவியுடன் கிராம நிர்வாக அதிகாரி முதல் முதல்வர் வரை சம்பந்தப்பட்ட யாருக்கு வேண்டுமானாலும் மெயில் அனுப்பலாம். உதாரணமாக, மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கிராமத்தினருக்கு அரசு வழங்கும் சலுகைகள் எதுவும் சரிவர கிடைக்கவில்லை என்று எடுத்துக்கொள்வோம். அவர்கள், www.cmcell.tn.gov.in என்ற வலைதளத்தின் மூலமாக தங்களது புகாரினை முதல்வருக்கு தெரிவிக்கலாம். இப்படி எல்லா அரசு அலுவலகங்களுக்கும் இன்று வலைதளங்களும், இ-மெயில் முகவரிகளும் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம்.\nஇன்று பல சாஃப்ட்வேர்கள் இணையத்தில் குவிந்துகிடக்கின்றன. அவற்றை இலவசமாகவும், ஆன்-லைன் மூலமாக பணம் செலுத்தியும் டவுன்லோடு செய்து பயன்படுத்தலாம். உதாரணமாக, செல்போனில் இன்டர்நெட்டை பயன்படுத்துபவர்கள், செல்போனுக்குத் தேவையான சாஃப்ட்வேர்களையும், கணினியில் இணையத்தை பயன்படுத்துபவர்கள் தங்களது கணினிக்கு தேவையான சாஃப்ட்வேர்களையும் அதற்கான வலைதளங்கள் மற்றும் கூகுள் சர்ச் மூலமாகவும் தேடி டவுன்லோடு செய்துகொள்ளலாம்.\nதொலைக்காட்சி, செய்தித்தாள் என்று விளம்பரம் செய்து வந்த நிறுவனங்கள் பலவும், இன்று டிவிட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களை, தங்களின் விளம்பரங்களுக்கு இலவசமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர். பல நிறுவனங்கள் தங்களுக்கென்று பிரத்யேக ஃபேஸ்புக் பக்கத்தையோ அல்லது டிவிட்டர் பக்கத்தையோ உருவாக்கி, தங்களது விளம்பரங்களை கோடான கோடி இணையவாசிகளிடம் சென்று சேர்க்கின்றனர்.\nநமக்கென்று ஒரு வலைபக்கத்தை உருவாக்கி, நம் தகவல்களை பதிவேற்றம் செய்யலாம், விளம்பரப்படுத்தலாம். உதாரணமாக, www.blogger.com வலைதளத்தில் நமது ஜி-மெயில் ஐ.டி மற்றும் பாஸ்வேர்டைக் கொண்டு உள்நுழைந்து, நமக்கான பிளாக் ஆரம்பிக்கலாம். அதில் நாம் விரும்பும் தகவல்கள் தொடங்கி புகைப்படங்கள் வரை பதிவேற்றலாம். எதற்கும் எந்தக் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை\nதனியாக இருக்கும் போது மாரடைப்பு\nஉங்க வீட்டு செல்லம் அடம் பிடிக்கிறதா \nமல்லிகைப் பூவின் மருத்துவ குணங்கள்\nஎன்றும் குன்றாத இளமை தரும் அமிழ்தம்\nகணவரைத் தேர்ந்தெடுப்பதில் நன்கு ஆழமாகச் சிந்தியுங்...\nகணினியில் ஏற்படும் தவறுகளைக் கண்டறிய\nதேநீரா, பால்தேநீரா, கிறீன் தேநீரா\nஇணையக் கட்டணம்... தொலைபேசி கட்டணம்... இப்படி சேமிக...\n100/100 ஷாப்பிங் சூப்பர் டிப்ஸ்'\nநோய் எதிர்ப்பு மருந்துகள் தீர்வா தீங்கா\nபிஞ்சுக் குழந்தைகளின் பற்கள் பத்திரமா\nகுழந்தையை பெற்றெடுக்க தாய் படும் பாடுகள்\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nதேனை தனியாக சாப்பிட்டால் பலன்--- மருத்துவ டிப்ஸ்\nதேன் சீரண சக்தியை தரும். இரைப்பையில் ஏற்படும் எல்லாவித கோளாறுகளையும் வயிற்றில் ஏற்படும் கோளாறுகளையும் குணமாக்கும். நெஞ்சில் ஏற்படும் எரிச்...\n‘ பாட்டி வைத்தியம் ’ சொன்ன பாட்டியிடமிருந்து ‘ வைத்திய ’ ரிலே கட்டையை கைப்பற்றியிருக்கும் பாட்டியும் , நல்ல அனுபவசாலி\nஉடலை சார்ஜ் செய்வது எப்படி\nஉடலை சார்ஜ் செய்வது எப்படி பாகம் - 2 முந்தைய பதிவில் நம் உடலை ஏன் சார்ஜ் செய்ய வேண்டும் , அதனால் உண்டாகும் பலன்கள் என்னென்ன என்...\nஅதிகாலையில் தண்ணீர் பருகினால் பல வியாதிகளைக் குணப்படுத்த முடியும் \nதினமும் காலையில் தூக்கத்தில் இருந்து எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவது ஜப்பானில் இப்போது பிரபலமாகி வருகிறது. இங்கு தரப்பட்டி...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nஉங்கள் உடல் எடை ஏழு நாட்களுக்குள் ஐந்து கிலோ எடை குறைய...\nகீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த அட்டவணை மிகப் பிரபலமான உணவு அட்டவணை. ஏழு நாட்களுக்கு இந்த அட்டவணையைப் பயன்படுத்தினால் , உங்கள் எடையில் சராசரி...\nநபிமார்கள் பற்றிய அரிய தகவல்கள்\nநபிமார்கள் மனிதர்களில் மாண்புடையவர்கள்.இவர்கள் அல்லாஹ்வின் வாக்கே உலகில் மேலானது. இறைவனல்லாத ஏனையோரின் வாக்கு கீழானது என்னும் தாரகமந்திரத்...\n கல்யாணம் ஆயி பல வருசம் ஆச்சு. இன்னும் வண்டி மக்கர் பண்ணுதே என்று மனசுக்குள்ளே குமையும் நம்ம குரூப் மக்களே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tharavu.com/2013/05/blog-post_1723.html", "date_download": "2018-04-26T13:00:15Z", "digest": "sha1:VULPGI2FJHLU4IM27XSZFBGHOTFAQN7Q", "length": 31051, "nlines": 112, "source_domain": "www.tharavu.com", "title": "லயன் எயார் விமானத்தை புலிகள் ஏன் சுட்டுவீழ்த்தினார்கள்? - | தரவு", "raw_content": "\nமுகப்பு ஈழம் உலகம் சினிமா விளையாட்டு இலங்கை\nதேசியத் தலைவர் பிரபாகரன்தான் வரவேண்டும் இந்த நாட்டை வழிநடாத்துவதற்கு.யாழ்.யாழ்பாணத்தின் சீர்கெட்ட நிலவரங்கள் தொடர்பாக குறித்த நீதிபதி\nஇலங்கை எதிர்கொண்ட பின்னடைவுகளுக்கு விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் காரணமல்ல அதிகாரத்தில் இருந்த அரசாங்கங்களே காரணம்\nசிறிலங்காவில் தமிழர் பிரச்சினை தொடர்பாக கருணாநிதியினைச் சாடியிருக்கும் ஜெயலலிதா அவரது குடும்ப ஆட்சியினதும் முறைகேடுகள் நிறைந்த\nஈழத்தமிழரின் புனர்வாழ்வுக்கு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பேன்தமிழக சட்டசபைக்கான தேர்தல் எதிர்வரும் 13 ம் திகதி இடம்பெறவுள்ள நிலையில்\nதமிழர்கள் பாரம்பரியம் மிக்கவர்கள். அவர்கள் கனடாவின் மதிப்பு மிக்க சொத்து.அதீத வளர்ச்சி, கலாச்சாரப் பங்களிப்பு மற்றும் புலமை வாய்ந்த தொழில்வாய்ப்பு என்பன கனடாவிற்குப் பெருமை\nஉலக கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா வாழ்த்து தெரிவித்துள்ளார்.ஜப்பான் நாட்டில் கடந்த 11ந் தேதி மிகப்பெரிய\nஜப்பானில் ஏற்பட்ட பூகம்பம் சுனாமியின் பாதிப்புக்கு அனுதாபம் தெரிவித்து, ஜப்பான் பிரதமருக்கு நடிகர் ரஜினிகாந்த் ஒரு கடிதம் அனுப்பி இருக்கிறார். ஜப்பான் நாட்டில் கடந்த 11ந் தேதி மிகப்பெரிய\nசிறிலங்காவில் விடுதலைப் புலிகளுக்கும் அரசப் படைகளுக்கும் இடையில் நடந்த இறுதிக் கட்டப் போரின்போது,- போர்நிறுத்தம் செய்யுமாறும், பேச்சுக்களில் ஈடுபடுமாறும் அனைத்துலக நாடுகள் கொடுத்த அழுத்தங்களில் இருந்து\nவிக்கிலீக்ஸில் வெளியாகியுள்ள தகவல்கள் ஒரு பக்கம் சர்ச்சையைக் கிளப்பி வரும் நிலையில், விடுதலைப் புலிகளுடனான போரில் அமெரிக்காவின் இராணுவப் புலனாய்வுத் தகவல்கள்\nபுலிகள் தொடர்ந்து செயல்பட வாய்ப்பு உள்ளது: டக்ளஸ் தேவானந்தா\nலயன் எயார் விமானத்தை புலிகள் ஏன் சுட்டுவீழ்த்தினார்கள்\nதமிழீழ விடுதலைப் புலிகளால் 15 வருடங்களுக்கு முன் சுட்டு வீழ்த்தப்பட்டதாக கூறப்படும் ‘லயன் எயார் - அன்டனோவ் 24’ ரக விமானத்தின் நொறுங்கிய பகுதிகளில் சில கடந்த சனிக்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக சிறீலங்காக் கடற்படையினர் அறிவித்துள்ளனர்.\nவடபகுதி கடற்பரப்பின் இரணைத்தீவுக்கு அண்மையில் கடலுக்கு அடியிலிருந்து இந்த விமானத்தின் சிதைவடைந்த பாகங்கள் சில மீட்கப்பட்டுள்ளன. குறித்த விமானத்தின் பாகங்கள் கடலுக்கு அடியில் மிகவும் ஆழமான பிரதேசத்தில் இருப்பதால் அவற்றை மீட்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் மேற்குறிப்பிட்ட சில பாகங்களை மாத்திரமே தற்போதைக்கு மீட்க முடிந்ததாகவும் சிறீலங்கா கடற்படையினர் அறிவித்துள்ளனர்.\nசிறீலங்கா கடற்படைக்குச் சொந்தமான கப்பலொன்றின் உதவியுடனேயே இந்த விமானத்தின் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த கடற்பிரதேசத்துக்குச் சென்ற சிறீலங்காவின் பயங்கரவாதத் தடுப்புப் புலனாய்வுப் பிரிவின் தலைவர், காவல்துறை அத்தியட்சகர் அசங்க கரவிட்ட, காவல்துறை ஊடக பேச்சாளர் புத்திக சிறிவர்தன உள்ளிட்ட காவல்துறை மற்றும் முப்படையைச் சேர்ந்த அதிகாரிகள், தொல்பொருள் அகழ்வாராய்ச்சி திணைக்கள அதிகாரிகள், நாரா நிறுவனத்தின் அதிகாரிகள், அரசாங்க பகுப்பாய்வு பிரிவு அதிகாரிகள், சட்டமா அதிபரின் ஆலோசனைக்கமைய சிரேஷ்ட சட்டத்தரணிகள், அரசாங்க அளவைத் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் என 250க்கும் மேற்பட்டவர்கள் மேற்படி விமானத்தின் பாகங்களை மீட்டபதை நேரில் பார்வையிட்டனர்.\nவிமானத்தின் இயந்திரம் மற்றும் விமானத்தின் பின்புறப் பகுதிகள் சில தற்போது மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட விமானத்தின் பாகங்கள் தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட நீதவான் எம்.வை.மஹப்தீன் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்.\n1998 செப்டம்பர் மாதம் 29ம் திகதி 48 பயணிகளுடனும் 8 விமான சிப்பந்திகளுடனும் பலாலியில் இருந்து புறப்பட்ட லயன் எயார் 10 நிமிடங்களின் பின் ராடார் திரையிலிருந்து மறைந்துபோனது. இந்த விமானம் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஏவுகணைத் தாக்குதலில் வீழ்த்தப்பட்டதாக குற்றம்சாட்டப்படுகின்றது.\nகொழும்பு - யாழ்ப்பாணம் இடையிலான பொது மக்களுக்கான விமான சேவைகள் பாதுகாப்புக் காரணங்களைக் காண்பித்து, சிறீலங்காவின் சிவில் விமான போக்குவரத்து அதிகார சபையினால் பல மாதங்களாக இடைநிறுத்தப்பட்டிருந்தது. எனினும், சந்திரிகா அரசாங்கம் ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்ததன் பின்னர், பொது மக்களுக்கான விமான சேவைகள் அதிகம் நடைபெறுவதுபோல் காண்பிக்கப்பட்டுக்கொண்டிருந்தது.\nலயன் எயார், மொனரா உட்பட சுமார் மூன்று வரையான விமான சேவை நிறுவனங்கள் யாழ்குடாவிற்கான பறப்பில் ஈடுபட்டிருந்தன. பொது மக்களுக்கான விமான சேவை என்ற பெயரில் இராணுவத்தினரும், அவர்களுக்குத் தேவையான இராணுவ தளவாடங்களும் பொருட்களும் தனியார் விமான சேவை மூலம் ஏற்றி இறக்கப்படுவதாக குற்றம்சாட்டியிருந்த விடுதலைப் புலிகள், அவ்வாறான விமான சேவைகளை நிறுத்துமாறு கோரி யாழ்ப்பாணத்தில் இயங்கிய லயன் எயார் விமான சேவை நிறுவனத்திற்கு கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்திருந்தார்கள்.\nஆனால், அந்த விமான சேவை நிறுவனம் இது வர்த்தகப் போட்டி காரணமாக அனுப்பப்பட்டுள்ளது எனக்கூறி அதனைப் புறந்தள்ளிவிட்டு, தொடர்ந்து பறப்பில் ஈடுபட்டிருந்தது. இதனையடுத்து இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடவேண்டாம் என மீண்டும் வலியுறுத்தி விடுதலைப் புலிகளால் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. இதனையடுத்து விமானம் கடலில் விழுவதற்கு நான்கு நாட்கள் முன்பாக லயன் எயார் யாழ்.குடாவில் இயங்கிய தனது நிறுவனத்தை மூடியிருந்தது.\nவிமானம் சுட்டுவீழ்த்தப்பட்டதாகக் கூறப்படும் காலத்தில் மிகக் கடுமையான போர் கிளிநொச்சிப் பகுதியில் இடம்பெற்றுக்கொண்டிருந்தது. தரை வழியிலான பாதைகள் அற்றநிலையில், காயப்படும் இராணுவத்தினரும் அவர்களுக்குத் தேவையான பொருட்களும் விமானப் படையினரால் மாறி மாறி ஏற்றி இறக்கப்பட்டுக்கொண்டிருந்தன. அத்துடன், கிளிநொச்சியில் ஆயிரக் கணக்கான படையினர் கொல்லப்பட்டிருந்தனர். இதில் 600 வரையான படையினரின் உடலங்களைக் கைப்பற்றியிருந்த விடுதலைப் புலிகள் அவற்றை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக சிறீலங்காவிடம் ஒப்படைத்திருந்தனர்.\nஇவ்வாறு சிறீலங்கா பலத்த இராணுவ நெருக்கடியைச் சந்தித்துக்கொண்டிருந்த நிலையில் பொது மக்களுக்காக யாழ்ப்பாணம் நோக்கி விமானங்கள் பறந்துகொண்டிருந்ததாக கூறப்படுவது முழுப்பொய் என்பதை அனைவரும் அறிவார்கள். அத்துடன், பொது மக்களுக்கான விமான சேவை மேற்கொள்ளப்பட்டால் அது கொழும்பு விமான நிலையத்திற்குத்தான் சென்றுவரவேண்டும். ஆனால், தனியார் விமானங்கள் இரத்மலானை நோக்கியே பறப்புக்களை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டிருந்தன.\nகுறிப்பிட்ட விழுந்த அன்டனோவ்-24 விமானமும் இராணுவ தேவைகளுக்காக அதிகம் பயன்படும் இரத்மலானை நோக்கியே சென்றது என்பது குறிப்பிடத்தக்கது. காயப்பட்ட படையினர் அதிகமாக கொண்டு சென்று இறக்கப்படும் இடமாகவும் இராணுவ தேவைகளுக்கான விமானத் தளமாகவும் பாதுகாப்பு மிக்கதாகக் கருதப்பட்ட இரத்மலானையையே படையினரால் பயன்படுத்தப்பட்டு வந்தது.\nஎனவே, இந்த விமானம் இராணுவ தேவைக்காகவே பயன்படுத்தப்பட்டிருந்தது என்பது உறுதியாகின்றது. எனினும், ஒரு சில பொது மக்களும் இதில் ஏற்றப்பட்டிருந்துள்ளனர். அத்துடன் இதில் சிறீலங்கா உயர் இராணுவ அதிகாரிகள் சிலரும் இருந்ததாக அப்போதே தகவல்கள் வெளியாகியிருந்தன. சிறீலங்கா வான் படை விமானங்கள் விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்கு இலக்காகலாம் என்ற அச்சம் காரணமாக இராணுவ உயரதிகாரிகள் பொது மக்களின் விமானங்களையே தமது போக்குவரத்திற்கு பயன்படுத்தி வந்துள்ளனர். அத்துடன், சிறீலங்காப் படையினருக்கு ஆலோசனைகளை வழங்குவதற்காகச் சென்று வருபவர்களும் இவ்வாறான விமானங்களிலேயே யாழ்குடாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.\nரஷ்யத் தயாரிப்பான இந்த அன்டனோவ் விமானத்தை உக்ரேன் நாட்டு சிறந்த விமானிகளில் ஒருவரான Matochko Anatoli என்பவரே செலுத்திச் சென்றிருந்தார். அவருடன் உதவி உக்ரேன் விமானி ஒருவரும், உக்ரேன் பொறியிலாளர் ஒருவரும் விமானத்தில் இருந்துள்ளனர்.\nஇந்த விமானம் வீழ்ந்ததன் பின்னர் கரையதுங்கிய உடலங்கள் சில பொது மக்களால் கண்டெடுக்கப்பட்டபோது அவை வெள்ளை இனத்தவர்களின் உடலங்கள் என அவர்கள் கூறியிருந்த தகவல்களும் அப்போதே ஊடகங்களில் வெளியாகியிருந்தன. மிகவும் சேதமடைந்திருந்த அவ் உடலங்கள் ஒப்படைக்க முடியாமல் அப்பகுதிகளிலேயே எரியூட்டப்பட்டன.\nஇதேவேளை, விமானம் வீழ்த்தப்பட்டிருந்த காலத்தில் சிறீலங்கா இராணுவம் மிகமோசமான அழிவுகளை சந்தித்துக்கொண்டிருந்தது. படையினரை அவசர அவசரமாக ஏற்றி இறக்குவதற்கு வான் வழிப் பாதை மட்டுமே ஒரே தெரிவாக சிறீலங்காவிற்கு இருந்த நிலையில், இராணுவ தேவைக்காகவே இது பறந்துகொண்டிருந்தது. இந்த விமானத்தில் காயப்பட்ட படையினரை ஏற்றி வந்தபோதே கடலில் வீழ்ந்ததாக கொழும்பு ஆங்கில ஊடகங்கள் உடயனடியாகத் தகவல் வெளியிட்டிருந்தன.\nஆனால், இதனை மறுத்த சிறீலங்காவின் எயார் வைஸ் மார்சல் மென்டிஸ், லயன் எயார் சரக்கு விமானங்களில் மட்டுமே காயப்பட்ட படையினரை ஏற்றிச் செல்வதாகவும், பொது மக்களின் விமான சேவைகளில் படையினரை ஏற்றுவதில்லை என்றும் மறுத்திருந்தார்.\nஎனவே, பயணிகள் விமானத்தை விடுதலைப் புலிகள் சுட்டுவீழ்த்தியதாக குற்றம் சுமத்துவதற்கு சிறீலங்கா பகீரதப்பிரயத்தனங்களை அப்போதே மேற்கொண்டிருந்தது என்பது தெளிவாகின்றது. இந்த விமானம் இரணைதீவிற்கு மேற்காக 3 கிலோ மீற்றர் தொலைவில் விழுந்ததாக நேரில் கண்ட மக்கள் உடனடியாகவே தகவல்கள் வெளியிட்டிருந்தனர்.\nதமது கட்டுப்பாட்டுக் கடற் பிரதேசத்தில் விழுந்துள்ள அந்த விமானத்தின் பாகங்களை மீட்பதற்கு சிறீலங்காக் கடற்படையினரை அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்திருந்த விடுதலைப் புலிகள், தமது கடற்புலிகள் அதனை மீட்டுத்தருவதற்கு, கடற்படையினர் அப்பகுதியில் தமது படை நடவடிக்கையை நிறுத்தவேண்டும் எனக் கோரியிருந்தார்கள்.\nஎனினும் சிறீலங்கா படைத் தரப்பு அதனை நிராகரித்த நிலையில் மீட்பு நடவடிக்கைகள் கைவிடப்பட்டன. ஆனால், தற்போது முள்ளிவாய்க்காலில் கைது செய்யப்பட்ட ஒரு போராளியின் மூலமே இந்த விமானம் விழுந்த இடத்தையும், இது விடுதலைப் புலிகளால் சுட்டுவீழ்த்தப்பட்டதென்ற செய்தியையும் அறிந்ததாக சிறீலங்கா தகவல் பரப்ப முனைந்துள்ளது. தங்களால் சுட்டு வீழ்த்தப்பட்ட விமானங்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் உரிமைகோரி வந்துள்ளனர்.\nஎனினும், இந்த விமானம் தங்களால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக விடுதலைப் புலிகள் உரிமை கோரியிருக்கவில்லை. அத்துடன், இந்த விமானம் சுட்டுத்தான் வீழ்த்தப்பட்டதாக இன்னமும் தொழில்நுட்ப ரீதியாக உறுதிப்படுத்தப்படவில்லை. இந்த விமானம் வீழ்ந்ததன் மர்மம் இன்னும் பூரணமாகத் துலங்காத நிலையில், மேற்படி பயணிகள் விமானத்தை விடுதலைப் புலிகள்தான் சுட்டு வீழ்த்தியதாக சிறீலங்கா குற்றம்சாட்டத் தொடங்கிவிட்டது குறிப்பிடத்தக்கது.\nஅதனால்தான், எத்தனையோ வான்படை விமானங்கள் விழுந்துள்ள நிலையில், இந்த விமானத்தை மீட்பதற்கு மட்டும் சிறீலங்கா அதிக பிரயத்தனங்களையும் பெரும் செலவையும் செய்துவருகின்றது. பொது மக்களின் விமானத்தைத்தான் விடுதலைப் புலிகள் சுட்டுவீழ்த்தினார்கள் என்று விடுதலைப் புலிகள் மீது சர்வதேச ரீதியாக அபகீர்த்தியை ஏற்படுத்த இந்த விமானம் வீழ்த்தப்பட்டதை பயன்படுத்த முனைந்துள்ளது. இதற்காகவே நீதிமன்ற ஊடாக கட்டளை பிறப்பிக்கப்பட்டு மீட்புப் பணிகள் இடம்பெற்றுள்ளன.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஈழத்து நகைச்சுவை இரட்டையர்கள் டிங்கிரி சிவகுரு காணொளி இணைப்பு\nஜெனிவா சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம்- பிரித்தானியாவும் ஆதரவு\nபிரேமலதா விஜயகாந்துக்கு ரஜினிகாந்த் ரசிகர்கள் கண்டனம்\nசிரியாவுக்குள் புகுந்த ஈழத்து புலி\nஆஸ்திரியாவில் கச்சேரிக்கு வந்த கூட்டத்தினர் மீது துப்பாக்கிச் சூடு : 2 பேர் பலி\nஐ.நா மனிதவுரிமை உரிமைகள் சபையின் 37 வது கூட்டத்தொடர் இன்று ஆரம்பமாகியது.\nஈழத் தமிழர்களுக்கு நீதி கோரி உலகளாவிய நீதியில் வழக்கறிஞர்கள் கையெழுத்து.\nராஜிவ் கொலை குற்றவாளிகள் எழுவரையும் விடுவிக்க தமிழக அரசு முடிவு\nரவிராஜ் கொலையில் பிள்ளையானின் ஆயுதம்\nவிடுதலை வீரர்களின் சமாதியில் சிங்கள குடியேற்றம்\nதமிழீழ மாணவர்களின் இன்றைய அரசியல் தெளிவு.\n1976 மே 14 ஆந் தேதியன்று வட்டுக்கோட்டையில் நடைபெற்ற தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் முதலாவது தேசிய மாநாட்டில்\nசடலத்தை சமைத்து உண்ணும் பாகிஸ்தானியர்கள் (காணொளி இணைப்பு) இறந்த பெண்ணொருவரின்\nஇலங்கையில் திருதிமைக்கப்பட்ட ஒரு சில பெரும் சாலைகளின் புகைப்படங்கள் பார்க்க அருமையாக இருக்கிறது.\nஒன்று பட்டால் உண்டு வாழ்வு/ தரவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://mycrankywritings.wordpress.com/2015/10/20/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87/", "date_download": "2018-04-26T13:45:32Z", "digest": "sha1:3RWVUJ3CHJCMBB7IUM5MOJRR62TGTYGW", "length": 5777, "nlines": 121, "source_domain": "mycrankywritings.wordpress.com", "title": "கலை மகளே | My Cranky Writings", "raw_content": "\nகலை மகளே, வீணை மீட்டாயோ\nமொழி தந்த வாணியே, உன்\nகலை மகளே, வீணை மீட்டாயோ\nகுளிர் தென்றலும் பனிச்சாறலும் →\nதேர்வு செய் தேர்வு செய் April 5, 2018\nஎன்னுடன் நீ இருப்பாய் March 10, 2018\nநீர் துளிக்குள் March 4, 2018\nஇங்கும் அங்கும் எங்கும் February 25, 2018\nகவரும் விழி அழகே February 18, 2018\nபரிசு பொருள்கள் January 8, 2018\nஇறைவனுடன் கலந்துவிட்டேன் January 5, 2018\nகொஞ்சம் மறந்திருந்தேன் December 16, 2017\nநம்ம ஊர் பால்க்காரன் November 30, 2017\nகழுதைக்கு வந்த யோகம் November 30, 2017\nநாளை மீண்டும் நாளை November 21, 2017\nதூக்கம் வரவில்லை November 6, 2017\nமணல் வருது மணல் வருது October 30, 2017\nஇரவு வெகு நேரம் ஆகியும் October 18, 2017\nமல்லி மொட்டு பூ அணிந்து October 18, 2017\nஉன் விழிகளில் எழுதிய October 12, 2017\nஎங்கிருந்துதான் வந்ததோ October 8, 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-04-26T13:41:44Z", "digest": "sha1:ZKMPCHMSHKOI4RAZGHW3LLZ4R7X3ECNQ", "length": 6057, "nlines": 111, "source_domain": "ta.wikipedia.org", "title": "தாய் உள்ளம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nதாய் உள்ளம் 1952 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. ராம்நாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மனோகர், ஜெமினி கணேசன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]\nஜெமினி கணேசன் நடித்துள்ள திரைப்படங்கள்\nசித்தூர் வி. நாகையா நடித்த திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 திசம்பர் 2016, 05:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://rajinifans.com/history/part67.php", "date_download": "2018-04-26T13:08:24Z", "digest": "sha1:JY6UT252V33KUXAP3MOLBP52FUCQIVUT", "length": 14953, "nlines": 211, "source_domain": "rajinifans.com", "title": "Part 67 - Rajini's History (Tamil) - Rajinifans.com", "raw_content": "\nகே.பாலசந்தர் - ரஜினி அபூர்வ சந்திப்பு\nரஜினிகாந்தை, \"அபூர்வ ராகங்கம்'' படத்தின் மூலம் 1975-ல் திரை உலகுக்கு அறிமுகப்படுத்தியவர், டைரக்டர் கே.பாலசந்தர். இதற்கு சரியாக பத்து ஆண்டுகளுக்குப் பின், சினிமா பத்திரிகை ஒன்றுக்காக அவர்கம் இருவரும் சந்தித்து மனம் விட்டுப் பேசினார்கம்.\nபாலசந்தர் கேம்விகம் கேட்க, ரஜினிகாந்த் பதிலளித்தார்.\nபாலசந்தர்:- நான் உன்னை நடிக்க வைத்தபோதெல்லாம், நீ அமைதியில்லாமல் வாழ்க்கையில் எதையாவது சாதிக்க வேண்டும் என்று ஆர்வமுடன் இருந்தாய். இப்போது அந்த பரபரப்பு இல்லாமல், சஞ்சலமில்லாமல் அமைதியாக வேலை செய்பவனாக, கடவும் பக்தி உடையவனாக இருக்கிறாய். பத்து ஆண்டுகளுக்கும் இந்த மாறுதல் ஏற்பட எப்படி முடிந்தது\nரஜினி:- பத்து வருஷத்துக்கு முன்பாக `பெரிய நடிகனாக வேண்டும், நிறைய சம்பாதிக்கணும். கார், பங்களா வாங்கணும்' என்ற ஆசை நிறைய இருந்தது. மனுஷன் சந்தோஷமா, நிம்மதியா இருக்க இதெல்லாம் தேவை. இதெல்லாம் இல்லாம சந்தோஷமா, நிம்மதியா இருக்க முடியாதுன்னு நம்பி இருந்தேன். அப்போது பணம் எனக்கு ரொம்பத் தேவைப்பட்டது.\nஇதை எல்லாம் நான் அடைந்த பிறகு மன நிம்மதியோ, சந்தோஷமோ நிச்சயமாக பணம், புகழில் இல்லை. அப்படி யாராவது நினைச்சா அது முட்டாம்தனம். இதெல்லாம் அதிகமாக வரவரச் சிக்கல்களும், பிரச்சினைகளும் ஜாஸ்தியாயிகிட்டே இருக்கும்.\nசுகம், நிம்மதியை நாம் விலை கொடுத்து வாங்க முடியாது. இதெல்லாம் நம்ம மனசுக்கும்ளேயே இருக்கு. இதெல்லாம் கிடைக்கிறதுக்கு ஆண்டவனோட அரும் வேணும்.\nபணம், புகழ் நிலையானது இல்லைன்னு தெரிஞ்ச பிறகு அதைப் பொருட்படுத்தாம நடிக்கிறதுதான் என்னோட கடமைன்னு தீர்மானிச்சேன். தவிர, பேரையும், புகழையும் என்னோட மன நிம்மதி, சந்தோஷத்தோட சேர்க்கலை. அது தனி, இது தனி.\nபாலசந்தர்:- புகழ் பெற்ற நட்சத்திரங்கம் அரசியலுக்கு வருவது நல்லது என்றுதான் நான் நினைக்கிறேன். அதிக படிப்பறிவில்லாத ஜனங்களுக்கு மத்தியில் ஜனநாயகம் நல்ல முறையில் செயல்பட வேண்டுமானால் நல்ல கருத்துக்களை மக்களிடம் எடுத்துரைக்க பிரபல நட்சத்திரங்கம் தேவைப்படுகிறார்கம். அதிலும் மக்களிடையே புகழ் பெற்ற தேசியத் தலைவர்கம் அதிகமில்லாத சமயத்தில். இதைப்பற்றி நீ என்ன\nரஜினி:- நீங்கம் சொல்வதை ஒப்புக்கொம்கிறேன். ஆனால் அரசியலில் ஈடுபடுவதற்கு முன் ஜனங்களுக்கு உதவி செய்யவேண்டும். என்ன கஷ்டம் வந்தாலும், அதிலிருந்து நாம் பின்வாங்கக்கூடாது என்கிற உறுதியான எண்ணம் நம் மனதில் வரவேண்டும்.\nஅரசியலை \"சாக்கடை'' என்று சொல்வார்கம். நாமும் அந்தச் சாக்கடையில் ஐக்கியமாகாமல் எதிர்நீச்சல் போட்டு எடுத்த காரியத்தை முடிக்க வேண்டும் என்கிற உறுதி வேண்டும்.\nஅரசியலில் ஈடுபடுவதற்கு முன் நம்முடைய பொருளாதார வசதி, குடும்பச் சூழ்நிலை முதலியவற்றை ஒருநிலைப்படுத்திக்கொண்டு \"இனி இங்கே வேலை கிடையாது. எனவே அரசியலுக்குப் போவோம்'' என்ற எண்ணமில்லாமல், உண்மையிலேயே மக்களுக்குச் சேவை செய்யவேண்டும் என்கிற குறிக்கோளுடன் அந்தச் சாக்கடையை சுத்தம் பண்ண நாம் போகவேண்டும். இல்லேன்னா சாக்கடைப் பக்கமே போகக்கூடாது.\nபாலசந்தர்:- என்றாவது ஒரு நாம் அரசியலில் ஈடுபடலாம் என்கிற எண்ணம் உனக்குத் தோன்றுகிறது. பெங்களூரில் நீ பேசியதைக் கேட்டபின்பு, நீயும் அரசியலில் ஈடுபடவேண்டும் என்பதுதான் என் விருப்பம் கூட. உடனடியாக இல்லாவிட்டாலும், அமிதாப்பைப் போல சில ஆண்டுகம் கழித்து அரசியலுக்கு வரலாம். உன்னுடைய அபிப்பிராயம் என்ன\nரஜினி:- என்னைப்பற்றி எனக்குத் தெரிந்ததைவிட உங்களுக்கு நிறைய தெரியும். என்னால் அரசியலில் நிச்சயமாக மாற்றங்கம் செய்ய முடியும் என்றும், அதற்கான அறிவுத்தகுதி, சக்தி எனக்கு இருக்கிறது என்றும் நீங்கம் நம்பினால் அதற்காக நான் நிறைய கொடுத்து வைத்தவன்.\nபாலசந்தர்:- வன்முறை சம்பந்தமான படங்களிலேயே தொடர்ந்து நடித்து வருகிறாயே நீ வன்முறையில் நம்பிக்கை உம்ளவனா என்ன நீ வன்முறையில் நம்பிக்கை உம்ளவனா என்ன சமீபத்தில் நாட்டில் நடந்த வன்முறை நிகழ்ச்சியைப் பற்றி என்ன சொல்கிறாய்\nரஜினி:- எனக்கு வன்முறையில் நம்பிக்கையில்லை. நான் வன்முறையாளனும் அல்ல. வன்முறை சம்பந்தப்பட்ட படங்களில் என்னை நடிக்க வைத்துக்கொண்டு இருக்கிறார்கம். இப்போது என்னுடைய நிலைமை, எனக்கு யார் பணம் கொடுக்கிறார்களோ அவர்களுக்குத் திரும்ப நான் பணம் வாங்கித் தரவேண்டும். அவர்கம் நடிக்க வைக்கிறார்கம், நான் நடிக்கிறேன்.\nசமீபத்தில் நாட்டில் நடந்த வன்முறைக்கெல்லாம் காரணம் \"நாம் அனைவரும் இந்தியர்கம்'' என்ற உணர்வு நம்மிடையே குறைந்து\nபாலசந்தர்:- அபூர்வ ராகங்கம் ஷூட்டிங்கில் முதல் நாளன்று நீ என்னுடன் பங்கேற்றது உனக்கு நினைவிருக்கிறதா\nரஜினி:- அந்த நிகழ்ச்சி அப்படியே பசுமையாக நினைவில் உம்ளது.\nபாலசந்தர்:- ஏவி.எம். ஸ்டூடியோவில் `அவர்கம்' படப்பிடிப்பின்போது நான் உன்னைத்திட்டியதும் உனக்கு நினைவிருக்கிறதா\nரஜினி:- \"உனக்கு நடிப்பு வராது, உன்னால் நான் தலையைப் பிச்சுக்கணும். இன்ஸ்டிடி�ட்ல நீ என்ன படிச்சி கிழிச்சியோ `மூன்று முடிச்சு'படத்துல வசனம் கம்மி. சிகரெட்டை தூக்கிப் போடறது, அதைப் போடறதுன்னு ஸ்டைலா போயிருச்சு. ஆனா இது வசனம் நிறைய இருக்கிற கேரக்டர். \"இவனுக்காக நான் கேரக்டரை மாத்த முடியாது. இவனை மாத்திட்டு ஜெய்கணேசை கொண்டு வாங்க'ன்னு சொல்லி ஷூட்டிங்கை கேன்சல் பண்ணிட்டு நீங்க போனது, இன்னைக்கும் ஞாபகத்தில் இருக்கிறது.\nபாலசந்தர்:- `உனக்கு நடிப்பே வராது' என்று உரிமையுடன் அன்று உன்னைத் திட்டியது இன்று கவனத்துக்கு வருகிறது. அகில இந்தியாவிலும் ஒரு `சூப்பர் ஸ்டார்' என்கிறப் பெயரை இன்று நீ பெற்றுவிட்டாய். அதற்காகப் பெருமைப்படுபவன் என்னைத்தவிர வேறு யாராக இருக்க முடியும்\nரஜினி:- அதற்குக் காரணம் நீங்கம்தான். உங்களுடைய ஆசீர்வாதம்.''\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vakeesam.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%88.html", "date_download": "2018-04-26T13:29:00Z", "digest": "sha1:BLY5MFFF7M5FXICDYKAPTNRQLRH6TE42", "length": 6117, "nlines": 73, "source_domain": "www.vakeesam.com", "title": "யார் கேட்பினும் கச்சதீவைக் கொடுக்கோம் – ஊடக பிரதி அமைச்சர் – Vakeesam", "raw_content": "\nஹட்டனில் நில அதிர்வு – 05 வீடுகள் சேதம்\nதந்தை செல்வா நினைவுதினம் அனுஷ்டிப்பு\nஜ.தே.க முக்கிய பதவிகளில் மாற்றம் – பொதுச் செயலாளராக அகில விராஜ் காரியவசம்\n203 பட்டதாரிகள் நேர்முகத் தேர்விற்குத் தோற்றவில்லை \nயாழ் போதனா வைத்தியசாலையில் கழிவு வாய்க்கால்மேல் கன்ரீன் – மக்கள் விசனம்\nயார் கேட்பினும் கச்சதீவைக் கொடுக்கோம் – ஊடக பிரதி அமைச்சர்\nin செய்திகள், முக்கிய செய்திகள் June 15, 2016\nஇந்தியப் பிரதமர் மேடியை டெல்லியில் சந்தித்த தமிழக முதல்வர் ஜெயலலிதா தமிழக மீனவர்களின் பாரம்பரிய உரிமையைப் பாதுகாக்க, 1974 மற்றும் 1976-ம் ஆண்டுகளில் இலங்கையுடன் செய்துகொண்ட ஒப்பந்தங்களை ரத்து செய்து, கச்சத்தீவை மீட்க வேண்டும் என்றுகோரிக்கை விடுத்துள்ள நிலையில் கச்சதீவையாரும் கேட்கமுடியாது கேட்டால் நாங்கள் கொடுத்துவிடவும் மாட்டோம் என்று ஊடகத்துறை பிரதியமைச்சர் கருணாரத்ன பரணவித்தாரன தெரிவித்துள்ளார்.\nஅரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலே மேற்கண்டவாறு அவர் தெரிவித்துள்ளர்.\nதமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கச்சதீவை, இன்று நேற்றல்ல, அத்தீவை கேட்டுக்குகொண்டுதான் இருகின்றார். அது முடிந்துபோன விடயமாகும். கச்சதீவையாரும் கேட்கமுடியாது கேட்டால் நாங்கள் கொடுத்துவிடவும் மாட்டோம் என்றார் அவர்.\nஹட்டனில் நில அதிர்வு – 05 வீடுகள் சேதம்\nதந்தை செல்வா நினைவுதினம் அனுஷ்டிப்பு\nஜ.தே.க முக்கிய பதவிகளில் மாற்றம் – பொதுச் செயலாளராக அகில விராஜ் காரியவசம்\nஹட்டனில் நில அதிர்வு – 05 வீடுகள் சேதம்\nதந்தை செல்வா நினைவுதினம் அனுஷ்டிப்பு\nஜ.தே.க முக்கிய பதவிகளில் மாற்றம் – பொதுச் செயலாளராக அகில விராஜ் காரியவசம்\n203 பட்டதாரிகள் நேர்முகத் தேர்விற்குத் தோற்றவில்லை \nயாழ் போதனா வைத்தியசாலையில் கழிவு வாய்க்கால்மேல் கன்ரீன் – மக்கள் விசனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vivalanka.com/news/page.jsp?articleid=133497", "date_download": "2018-04-26T14:03:12Z", "digest": "sha1:AO675RC2V4HHJTRBRZRM5KPY46W7DDBE", "length": 4272, "nlines": 116, "source_domain": "www.vivalanka.com", "title": "Autopsy: Man found bleeding in Seattle's ID was assaulted", "raw_content": "\nVideo: News 1st:டயகம வெஸ்ட் மூன்றாம் பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் சித்திர தேர் பவணி\nVideo: News 1st:நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்\nVideo: News 1st:மண்டத்தீவு பகுதியில் முதலை ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது\nVideo: News 1st: குடிபோதையில் வந்த சிலரால் கட்டுகஸ்தொட்டை வைத்தியசாலை ஊழியர்களுக்கு அச்சுறுத்தல்\nVideo: News 1st: சித்ராகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் காயம்\nVideo: News 1st:எல்ல பகுதியில் விபத்து: 3 வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு\nVideo: News 1st:புத்தாண்டு காலப்பகுதியில் 95 மில்லியன் ரூபா வருமானம் – இலங்கை போக்குவரத்து சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} {"url": "http://www.vivalanka.com/news/page.jsp?articleid=175473", "date_download": "2018-04-26T14:03:32Z", "digest": "sha1:XD4UAPR3MFB2UB22OEGZBAZCJ5PDVLQE", "length": 4162, "nlines": 116, "source_domain": "www.vivalanka.com", "title": "Minister pulls plug on ‘enhanced’ TV cable in Ontario jails", "raw_content": "\nVideo: News 1st:டயகம வெஸ்ட் மூன்றாம் பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் சித்திர தேர் பவணி\nVideo: News 1st:நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்\nVideo: News 1st:மண்டத்தீவு பகுதியில் முதலை ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது\nVideo: News 1st: குடிபோதையில் வந்த சிலரால் கட்டுகஸ்தொட்டை வைத்தியசாலை ஊழியர்களுக்கு அச்சுறுத்தல்\nVideo: News 1st: சித்ராகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் காயம்\nVideo: News 1st:எல்ல பகுதியில் விபத்து: 3 வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு\nVideo: News 1st:புத்தாண்டு காலப்பகுதியில் 95 மில்லியன் ரூபா வருமானம் – இலங்கை போக்குவரத்து சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} {"url": "https://jmmedia.lk/2017/08/16/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F-%E0%AE%AE/", "date_download": "2018-04-26T13:28:24Z", "digest": "sha1:NTUUBE6JNVTWJMHJOQAGULKLCAJHLKY6", "length": 9718, "nlines": 63, "source_domain": "jmmedia.lk", "title": "‘கோபமும், வெறுப்பும்கூட மகிழ்ச்சியைத் தரலாம்’ – சொல்கிறது புதிய ஆய்வு – JM MEDIA.LK", "raw_content": "\nகடுகண்ணாவ கற்குகைக்கு தற்காலிகமாக பூட்டு\nஇறப்பர் தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்து தொடர்பில் தொழிற்சாலையின் முகாமையாளர் கைது\nவட கொரியாவுக்கு ரகசிய பயணம் : மைக் பாம்பேயோ\nபௌத்தகுருமாருக்கு வாக்குறுதி வழங்கிய பிரதமர்\n‘கோபமும், வெறுப்பும்கூட மகிழ்ச்சியைத் தரலாம்’ – சொல்கிறது புதிய ஆய்வு\nவிரும்பும் உணர்ச்சிகளை மனதால் அனுபவிக்க முடிந்தால் மக்கள் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள்- அந்த உணர்ச்சி கோபம் வெறுப்பு என விரும்பத்தகாத உணர்ச்சிகளாக இருந்தாலும் பரவாயில்லை என ஒரு ஆய்வு கூறியுள்ளது.\nமகிழ்ச்சி என்பது, வெறுமனே இன்பத்தை அனுபவிப்பது மற்றும் வலியைத் தவிர்ப்பது மட்டுமல்லாமல் அதற்கும் மேலானது என ஒரு சர்வதேச ஆராய்ச்சிக் குழுவின் ஆய்வு கண்டுபிடித்துள்ளது.\nஎதிர்மறை உணர்ச்சிகளை அதிகளவு உணர்ந்தால், மகிழ்ச்சியுடன் இருக்கலாம் என ஆய்வு கூறுகிறது.\nஅமெரிக்கா,பிரேசில், ஜெர்மனி, சீனா, இஸ்ரேல், கானா, போலாந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 2,300 பல்கலைக்கழக மாணவர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.\nஎன்ன உணர்ச்சியை விரும்பினார்கள் என்றும் மற்றும் என்ன உணர்ச்சியை அனுபவித்தார்கள் என்றும் பங்கேற்பாளர்களை ஆராய்ச்சியாளர்கள் கேட்டுள்ளனர்.\nமக்கள், வாழ்க்கை திருப்தியை எப்படி மதிப்பிடுகிறார்கள் என்பதை இதை வைத்து ஒப்பீட்டு பார்க்கப்பட்டது.\nதாங்கள் விரும்பியதற்கு நிகராக அனுபவித்த உணர்ச்சிகள் இருந்தால் மக்களின் வாழ்க்கை திருப்தியுடன் இருக்கும் என ஆராச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.\nநீங்கள் விரும்பும் உணர்ச்சியை உங்களால் அனுபவிக்க முடிந்தால், நீங்கள் மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். சோகம், வெறுப்பு என அந்த உணர்வு விரும்பத்தகாத உணர்வாக இருந்தாலும் பரவாயில்லை என ஜெருசலமின் ஹீப்ரு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முன்னணி ஆராய்ச்சியாளர் டாக்டர் மாயா தாமிர் கூறியுள்ளார்.\nஅன்பு போன்ற நேர்மறை உணர்ச்சிகளைக் குறைவாக உணர 11% மக்கள் விரும்புவதாகவும், 10% மக்கள் வெறுப்பு மற்றும் கோபம் போன்ற எதிர்மறை உணர்ச்சிகளை அதிகம் உணர விரும்புவதாகவும் இந்த ஆய்வு கூறியுள்ளது.\nஒரு மோசமான கணவரை விட்டுச் செல்ல விரும்பும் ஒரு பெண், அவ்வாறு செய்ய தயாராக இல்லை. காரணம் கணவரை குறைவாக நேசித்தால் அப்பெண் மகிழ்ச்சியாக இருக்கலாம் என ஒரு எடுத்துக்காட்டை தாமிர் கூறுகிறார்.\nவிரும்பத்தகாத உணர்வுகள் என குறிப்பிடும் போது, இந்த ஆய்வானது கோபத்தையும் வெறுப்பையும் மட்டுமே மதிப்பீடு செய்கிறது.\nஆனால், பயம், குற்றவுணர்வு, துக்கம் மற்றும் பதட்டம் போன்றவற்றை விரும்பத்தகாத உணர்வுகள் என கூறுவதற்கான அறிகுறிகள் இல்லை என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.\nமனரீதியாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த ஆய்வு பொருந்தாது என டாக்டர் மாயா தாமிர் கூறுகிறார். “மனரீதியாகப் பாதிக்கப்பட்டவர்கள், மற்றவர்களை அதிக சோகமாகவும், குறைவான மகிழ்ச்சியுடனும் இருக்க விரும்புவார்கள். இது பிரச்சனையை அதிகரிக்கவே செய்யும்“ என மாயா கூறியுள்ளார்.\n“மேற்கத்திய கலாச்சாரங்களில் எல்லா நேரமும் மிகவும் நன்றாகவே உணர வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள். பெரும்பாலான நேரங்களில் அவர்கள் நன்றாக உணர்ந்தாலும், இன்னும் சிறப்பாக உணர வேண்டும் என்று அவர்கள் நினைக்கலாம். அவை ஒட்டுமொத்தமாகக் குறைவான மகிழ்ச்சியை அவர்களுக்குக் கொடுக்கலாம்“ என்கிறார் மாயா.\n← மலேசிய இளவரசி – டச்சுக்காரரை மணந்த ஆடம்பர திருமண விழா\nஇலங்கை கிழக்கு பல்கலைக்கழகம் காலவரையின்றி மூடல் →\nஎச்.ஐ.வி தொற்றுக்கு விடை சொல்லும் பசுக்கள்: ‘திகைக்க’ வைத்த ஆய்வு முடிவுகள்\nவெடித்துச் சிதறியது ஸ்பேஸ்.எக்ஸ் ; பேஸ்புக் செய்மதியும் அழிவுற்றது\nபார்வையிழப்பைத் தடுக்கும் ஆராய்ச்சியில் முக்கிய வெற்றி; 10 ஆண்டுக்கு முன்பே கண்டுபிடிக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://rajinifans.com/history/part68.php", "date_download": "2018-04-26T13:11:47Z", "digest": "sha1:MM4FDLIYKHESORDC2FOJVRACM3CVRIJA", "length": 16573, "nlines": 225, "source_domain": "rajinifans.com", "title": "Part 68 - Rajini's History (Tamil) - Rajinifans.com", "raw_content": "\n\"என் கடவுளுக்கு மதம் கிடையாது''\nஆன்மீகம் பற்றி ரஜினி விளக்கம்\n\"விபூதி பூசிக்கொள்வதை வைத்து, என்னை இந்து என்று கூறுவதில் அர்த்தம் இல்லை. என்னுடைய கடவுளுக்கு மதம் கிடையாது'' என்று ரஜினிகாந்த் கூறினார்.\nஆன்மீகம் பற்றியும், தனது விருப்பு வெறுப்புகள் குறித்தும் தன்னுடைய கருத்துக்களை ரஜினிகாந்த் பல்வேறு சந்தர்ப்பங்களில் கட்டுரைகளிலும், பேட்டிகளிலும் தெரிவித்திருக்கிறார்.\n\"சின்ன வயசிலே ஆன்மீகத்திலே எனக்கு நிறைய சந்தேகங்கள் வரும். அப்போதெல்லாம் அந்த சந்தேகங்களை என் அப்பாக்கிட்டே சொல்லி விளக்கம் கேட்பேன்.\n அப்புறம் உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதின்னு பேதம் ஏது இந்தப் பழக்கம் ஏன் வந்துச்சு... தேவையா... இந்தப் பழக்கம் ஏன் வந்துச்சு... தேவையா... அது ஏன்...\nஇப்படி நிறைய கேள்விகளை அப்பாக்கிட்டே கேட்பேன். அப்பாவும் பதில் சொல்லுவாரு. ஆனா அந்தப் பதில்களிலே எனக்கு\nதிருப்தியிருக்காது.அப்பாக்கிட்டே மட்டுமில்லாம பெரிய அண்ணன்கிட்டே, அக்காகிட்டே... இப்படி எல்லார்கிட்டேயும் நான் இந்த மாதிரியான கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தேன். அவங்க பதில்கள்லே எனக்கு திருப்தி கிடைக்கவில்லை.\nவீட்டிலே அடிக்கடி கோவிலுக்குப்போய் வருவாங்க. `இன்னது பண்ணினா இன்னது செய்வேன்'னு சொல்லி சாமிக்கு நேர்த்தி வைப்பாங்க. அது, அது நடந்தா உடனே அந்த நேர்த்தியை `பயபக்தி'யோட செய்வாங்க. என்னடா இது சாமிக்கே `லஞ்சம்' கொடுக்கிறாப்பல இருக்கேன்னு நான் யோசிப்பேன். அவங்ககிட்டே கேட்கவும் செய்வேன்.\nஅவங்க \"அது... அது... அப்படித்தாண்டா... காரணம் கேட்காதே...'' என்று சொல்லுவாங்க. மதம் சம்பந்தமா... கடவுள் சம்பந்தமா... சமுதாயம் சம்பந்தமா... நான் கேள்வி கேட்கிறப்ப எல்லாம் இதேபாணி பதில்தான்.\nஎன் கேள்விகளுக்கு வீட்டிலே யாராலும் சரியா பதில் சொல்ல முடியலே.\nஆனா... நான் பாட்டுக்குக் கேள்விகள் கேட்டுக்கிட்டே இருந்தேன்.\n`உன்னோட கேள்விக்கெல்லாம் சரியான பதில் கிடைக்கிற இடத்திலே உன்னைச் சேர்த்து விடறேன்னு சொல்லி, என்னைக் கூட்டிட்டுப்போய் ராமகிருஷ்ணா ஆசிரமப் பள்ளியிலே பெரிய அண்ணன் சேர்த்துட்டாங்க.\nஆசிரமப் பள்ளியிலே சேர்ந்ததுக்கு அப்புறம்தான் நான் படிப்படியாக ஆன்மீகவாதியா மாற ஆரம்பிச்சேன்.\nமுன்னாடி கஷ்டத்தை, கஷ்டமாகவே பார்த்து வந்த எனக்குப் பெரிய பெரிய கஷ்டங்களைக்கூட சுலபமா ஏத்துக்கிற பக்குவம் வந்தாச்சு. ஆமா... எல்லாத்தையுமே ஈசியா எடுத்துக்கிட்டேன்.\n`இந்த உலகத்துலே எதுவும் சாஸ்வதம் இல்லை. நாம இப்ப அனுபவிச்சுக்கிட்டிருக்கிற சொத்து, சுகம், பதவி, பந்தம், பாசம்... ஏன் இந்த உடம்பே சாஸ்வதம் கிடையாது அப்படீங்கிற ஞானம் அப்பத்தான் எனக்கு வந்துச்சு.\nஅதனாலதான் யாராச்சும் என் வயசைப்பற்றி கேட்கறப்போ, `என்னோட உடம்புக்கு இத்தனை வயசு'ன்னு சொல்றேன். 1950-ல் பொறந்த உடம்பு இது. உடம்புக்குத்தான் வயசு, எனக்கு வயசு கிடையாது. அதாவது ஆத்மாவுக்கு வயசேது\n`ஆன்மீகவாதி என்று சொல்லிக்கொள்ளும் நீங்கள் அசைவ உணவு சாப்பிடலாமா' என்று சிலர் என்னிடம் கேட்கிறாங்க.\nஆன்மீகவாதியா இருந்தால் அசைவமாக இருக்கக் கூடாதுன்னு யார் சொன்னாங்க ஒருத்தன் என்ன சாப்பிடறான்கிறது முக்கியம் இல்லை. அவன் எப்படி வாழறான்கிறதுதான் முக்கியம். இவனால அடுத்தவங்களுக்கு உபகாரமா இருக்க முடியுமா ஒருத்தன் என்ன சாப்பிடறான்கிறது முக்கியம் இல்லை. அவன் எப்படி வாழறான்கிறதுதான் முக்கியம். இவனால அடுத்தவங்களுக்கு உபகாரமா இருக்க முடியுமா இல்லை உபத்திரவமாக இருக்கானா அப்படிங்கிறதை வைச்சுத்தான் அவன் ஆன்மீகவாதியா, இல்லையான்னு முடிவு பண்ணனும்.\nஅன்பும் மனிதநேயமும் மட்டுமே ஒருத்தனை ஆன்மீகவாதியா நமக்கு அடையாளம் காட்டுது.\nஎன் கடவுளுக்கு மதம் கிடையாது\n`எம்மதமும் சம்மதம் என்று கூறும் ந�ங்கள், இந்து மதம் சொல்கிறபடி விபூதி பூசிக்கொள்ளலாமா' என்று சில பேர்\nகேட்கிறாங்க.சின்னவயதிலிருந்தே எனக்கு ஏற்பட்ட பழக்கம்தான் விபூதி பூசறது. அதனால இன்னிக்கும் நான் விபூதி பூசிக்கிறேன். விபூதிப் பூசிக்கிறதை வைச்சுக்கிட்டு, நான் இந்து மதத்தைச் சேர்ந்தவன்னு குற்றம் சொல்றதிலே எந்த அர்த்தமும் இல்லை. ஏன்னா என்னோட கடவுளுக்கு மதம் கிடையாது.\nஉலக அமைதிக்காகவும், மனித சமாதானத்துக்காகவும் நான் மத சமரசத்தை வரவேற்கிறேன். ஆனா தனிப்பட்ட ஒரு மதத்தின் மேலே `வெறி' கொள்றதை - அந்த மதத்துக்காகச் சார்ந்து பேசறதை நான் என்னிக்குமே விரும்பினதில்லை.\nஇன்னிக்கு இருக்கிற துன்பங்களுக்கெல்லாம் என்ன காரணம்னு நாம நினைச்சுப் பார்க்கிறோமா ஆசை... யெஸ் அதுதான் எல்லா வகையான கஷ்டங்களுக்கும் காரணம்.\nபோதுங்கிற மனமே பொன் செய்யும் மருந்து. இருக்கிறதிலே திருப்தி கண்டாலே போதும். அதுதான் உண்மையான இன்பம். இருக்கிறதை விட்டுப்புட்டு பறக்கிறதைப் பிடிக்க நினைக்கிறப்போதான் ஏமாற்றமும் விரக்தியும் மிஞ்சுது.\nஎதிர்காலத்தைப் பற்றிய கவலையிலேயே நிகழ்காலத்தை இழந்துக்கிட்டிருக்கோம். நாளைக்கு என்ன நடக்குமோ எப்படி சமாளிக்கப் போறோமோ... இப்படி பயந்தே வாழ்க்கையில எந்த நாளையுமே முழுசா அனுபவிக்காம விட்டுடறோம்.\nகனவிலே இரண்டு வகை. ராத்திரியிலே காண்றது ராத்திரி கனா. பகல்லே காண்றது பகல் கனவு.\nஇப்ப நாம வாழ்ந்துக்கிட்டிருக்கிற வாழ்க்கைப் பகல்கனவு. பணம், பொருள், புகழ், பதவி... இதெல்லாம் அந்தப் பகல் கனவோட அஸ்திவாரங்கள். ஆனா சாஸ்வதம் இல்லாத... சட்டுனு கலைஞ்சுப் போயிடக்கூடிய அஸ்திவாரங்கள்.\nயெஸ். இன்னும் 25 வருஷம் கழிச்சு, உங்க பழைய வாழ்க்கையை நினைச்சுப் பார்த்தா 25 வருஷங்கறது 25 நிமிஷமா நமக்குத் தெரியும்.\nநான் நடிக்க வந்தப்போ சிவாஜி சார் நடிச்சுக்கிட்டிருந்தாரு. ஜெய்சங்கர் நடிச்சுக்கிட்டிருந்தாரு. அதுக்கப்புறம் இரண்டு தலைமுறை நடிக்க வந்திருக்கு. ஆனா எனக்கு நேத்துதான் `அபூர்வ ராக'ங்களில் நடிச்சேன்கிற மாதிரி பீலிங்.\nஎல்லாமே கனவு... பகல் கனவு. வேகமா ஓடி வேகமா மறைஞ்சுடும். அதுக்காக எதுவுமே இங்கே சாஸ்வதம் கிடையாதுன்னு சொல்லிக்கிட்டு யாருமே சும்மா உட்கார்ந்திடக்கூடாது.\nஅவங்க அவங்க தங்கள் தங்கள் கடமைகளை ஒழுங்கா செய்யணும். இதை நான் சொல்லலை. பகவானே கீதையிலே சொல்லியிருக்காரு. `கடமையைச் செய்; பலனை எதிர்பார்க்காதே'ன்னு.\nஇன்னிக்கு இருக்கிறவங்கள்ல நூற்றுக்கு தொண்ணூறு பேர், பணம் சம்பாதிக்கணும்ங்கிறதை மட்டுமே நோக்கமா கொண்டிருக்காங்க. இவங்கள்லே யாருமே மனுஷங்களைச் சம்பாதிக்கணும்னு நினைக்கிறதே இல்லை. இது ஏன்னு எனக்குப் புரியலை. நம்ம வாழ்க்கையிலே எத்தனை ஆயிரங்களைச் சம்பாதிச்சிருக்கோம்... சம்பாதிக்கப் போகிறோம்கிறது முக்கியம் இல்லை. எத்தனை மனுஷங்களைச் சம்பாதிச்சிருக்கோம்கிறதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.south.news/category/politics/", "date_download": "2018-04-26T12:57:22Z", "digest": "sha1:B5NDNFVRXLH3BD2D5XMNQ4BQUNZ67OOF", "length": 15986, "nlines": 137, "source_domain": "tamil.south.news", "title": "அரசியல் | Politics of TamilNadu in Tamil", "raw_content": "\nகர்நாடக தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. – வெற்றிமுகம் உள்ளதா\nமருத்துவமனையில் கடிதம் எழுதிய ஜெயலலிதா… அன்று நடந்தது என்ன\nகர்நாடகாவில் ஆட்சியை பிடிக்கப்போவது தாமரையா கையா – இந்தியா டுடே சர்வே\nஇந்தியாவின் ஃபேஷன் ஃப்ரீக் நரேந்திர மோடி போட்ட பிரபல கெட்டப்கள் ஒரு பார்வை\nகமலுக்கும், ரஜினிக்கும் கெட்-அவுட் சொன்ன வாட்டாள் நாகராஜ்\nகாவிரி நீர் மேலாண்மை வாரியம் அமைக்காமல் இழுத்தடித்து வரும் மத்திய அரசுக்கு எதிராக கடும் கண்டனங்கள், எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில், தமிழகத்தின் புதிய அரசியல்வாதிகளாக அவதரித்திருக்கும் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோரும் தமிழர்களுக்கு...\nசசிகலா சொன்ன பதில் ‘வேதனையின் உச்சம்’… அப்படி என்ன சொன்னார் தெரியுமா\nசொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களுர் பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். கடந்த அக்டோபர் மாதம் சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு உறுப்பு செயலிழந்ததால் தீவிர மருத்துவ சிகிச்சை கொடுக்கப்பட்டு வந்தது,...\nநான் சசிகலா புஷ்பாவின் புதிய கணவர் ராமசாமி பேசுகிறேன்…\nசர்ச்சைகளின் அரசி சசிகலா புஷ்பா தற்போது மறுமணம் செய்துகொண்டிருக்கிறார். டெல்லியில் தங்கியிருக்கும் இவர் முதல் கணவர் திலகரிடம் இருந்து சட்ட ரீதியாக விவாகரத்து பெற்று, கடந்த 26ம் தேதியன்று ஓரியண்டல் சயின்ஸ் பல்கலைக்கழகத்தின்...\nஜெ.வின் இறப்பிற்கு பின் சசிகலா குடும்பத்தில் நிகழ்ந்த அடுத்தடுத்த மரணங்கள்\nமுன்னாள் முதல்வரான ஜெயலலிதா இறந்த அடுத்த 2 வருடங்களுள் சசிகலாவின் குடும்பத்திலும் உறவினர்கள் வட்டத்திலும் ஏற்பட்டுள்ள அடுத்தடுத்த மரணங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. போயஸ் தோட்ட இல்லத்திற்கு நெருக்கமாக இருந்த மகாதேவன், சந்தானலட்சுமி...\nபாத்ரூமில் விழுந்த அக்காவை கைத்தாங்கலாக அழைத்துவந்தேன்: சசிகலாவின் வாக்குமூலம்\nஜெயலலிதா மரணம் தொடர்பான மர்ம முடிச்சுகளை அவிழ்க்கும் நோக்கத்துடன் நீதிபதி ஆறுமுகச்சாமி தலைமையிலான விசாரணை கமிஷன் சீறி செயலாற்றி வருகிறது. ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, தீபக், இளவரசி, விவேக், போயஸ் இல்ல...\nஜெயலலிதாவை ருத்ரதாண்டவம் ஆட வைத்த நடராஜன்… ஒரு த்ரில்லர் ஃப்ளாஷ்பேக்\nஅரசியலில் இருந்து முழுமையாக விலகப்போவதாக ஜெயலலிதா தன் கைப்பட எழுதிய ஏழு கடிதங்களை கருணாநிதி பகிரங்கமாக அம்பலப்படுத்தினார். இதற்கு சசிகலாவின் கணவர் நடராஜன் காரணமாக இருந்திருக்கிறார். ஏழு கடிதங்கள்: 1989ம் ஆண்டு மார்ச் 15ம் தேதி...\nமுதல்வர் கனவில் மிதந்த நடராஜனை நாடு கடத்திய ஜெயலலிதா\nநடராஜன் தமிழ்நாட்டின் முதல்வராக ஆசைப்பட்டதும், அவரை ஜெயலலிதா வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்த சம்பவத்தையும் இந்நாளில் தமிழக மக்கள் ரீக்கால் செய்துகொள்ள வேண்டும். வி.பி.சிங் ஆட்சி கவிழ்ந்த சமயத்தில் டெல்லியிலேயே இருந்தார் நடராஜன். அப்போதைய...\nஜெயலலிதாவையே வீட்டுச்சிறை வைத்த நடராஜன்: என்ன நடந்தது தெரியுமா\nஒருமுறை ஜெயலலிதாவின் கார் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த ஜெயலலிதாவும், சசிகலாவும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியிருந்தனர். அன்று போயஸ் தோட்டத்திற்குள் சென்ற ஜெயலலிதா அடுத்த 5 மாதங்களுக்கு...\nஜெ. இறந்ததுமே ‘குடும்ப அரசியல் செய்வோம்’ என மேடையில் பேசிய நடராஜன்\nகடந்தாண்டு தஞ்சையில் நடந்த பொங்கல் விழாவில் பேசிய நடராஜன், குடும்ப அரசியல் செய்வோம் என மேடையில் பேசிய நிகழ்வும் நடந்துள்ளது. அதுவும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்து அடுத்த இரண்டு மாதங்களில் அவர்...\nசசிகலா கணவர் நடராஜன் மருத்துவமனையில் காலமானார்\nசசிகலாவின் கணவர் ம.நடராஜன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை 1:30 மணியளவில் காலமானார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அறுவை சிகிச்சை: சென்னையில் உள்ள குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் நடராஜன். சில மாதங்களுக்கு...\nஇரண்டாவது திருமணம் செய்யப்போகும் சசிகலா புஷ்பாவின் ஆரம்பக்கால வாழ்க்கை இதுதான்\nபாராளுமன்றத்தில் கத்தி கூப்பாடு போட்டு, ஜெயலலிதாவை சர்ச்சையில் சிக்க வைத்தபோதுதான் சசிகலா புஷ்பா மீது மீடியாவின் வெளிச்சம் பட்டது. அப்போதுதான் பெரும்பாலான தமிழ்நாட்டு மக்களே இவரை பற்றி தெரிந்துகொண்டார்கள். மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா...\n‘பணக்கார முதல்வர்’ சந்திரபாபு நாயுடுவும் மோடி சர்க்காரும்\nமோடி அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு அமோக ஆதரவு தெரிவித்து கருத்து சொல்லி வந்த சந்திரபாபு நாயுடு இப்போது மோடியை விமர்சிக்கிறாரே. போட்டுத் தாக்குகிறாரே. ஏன் தெரியுமா பொருளியல் பேரழிவு: கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் எட்டாம்...\nதமிழ்நாட்டின் அடுத்த தலைமுறையை ஆளப்போகும் அரசியல் கட்சிகள்\n1940ம் ஆண்டு ஆரியத்திற்கும், மொழி ஆதிக்கத்திற்கும் எதிராக வெடித்த புரட்சிகள், போராட்டங்களில் இருந்துதான் தமிழ்நாட்டின் அரசியல் உயிர் கொண்டு எழுந்து, நெஞ்சை நிமிர்த்தி நிற்க ஆரம்பித்தது. இந்தி எதிர்ப்பு, பகுத்தறிவு, திராவிடம் என...\nஎன்னய்யா தப்பு செய்தான் என் அட்மின்… இறக்கம் இல்லையா உங்களுக்கு\nசமூக ஊடகங்களில் ஹெச். ராஜாவின் அட்மின் வாங்கிக்கட்டும் திட்டு கொஞ்சம்நஞ்சம் இல்லை. ஏகபோகமாக கிடைத்துக்கொண்டிருக்கிறது. நம்மாட்களும் தாறுமாறாக திட்டி தீர்க்கிறார்கள். இதையெல்லாம் பார்த்து ராஜா, \"என்னய்யா தப்பு செய்தான் என் அட்மின்... இறக்கம்...\nசசிகலா கொடுத்த சீல் வைத்த கவருக்குள் இருக்கும் ரகசியம்… விசாரணை கமிஷனில் அம்பலம்\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக் கமிஷனில் சசிகலா கொடுத்தனுப்பிய வாக்குமூலம் சீல் வைக்கப்பட்ட கடிதமாக சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. விசாரணை இதுவரை: ஜெயலலிதா மரணம் தொடர்பான மர்ம முடிச்சுகளை அவிழ்க்கும் நோக்கத்துடன் நீதிபதி ஆறுமுகச்சாமி தலைமையிலான...\nசென்னையில் 24 மணி நேரத்தில் இதையெல்லாம் செய்யலாம்\nவேலூரில் 48 மணி நேரத்தை எப்படி செலவிடலாம்\nஓட ஓட தெறிக்கவிட்ட சி.எஸ்.கே’; 400 அடிச்சாலும் ஜெயிக்க மாட்டாங்களா ஆர்.சி.பி\nஜெட் வேகத்தில் ஆண்மை பெருக இந்த கீரையை சாப்பிடுங்க\nமினிமம் பேலன்ஸ் இல்லாத கணக்குகளில் இருந்து ரூ.1,772 கோடி அபராதம் வசூலித்த எஸ்.பி.ஐ. வங்கி\nஆதார் அமைப்பை கைது செய்யுங்கள்… சர்ச்சையை கிளப்பிய ‘விக்கி லீக்ஸ்’ எட்வர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vallalar.net/vallalarsongs/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-04-26T13:19:10Z", "digest": "sha1:GNUWJPVYMC3C2OT2IR6EQLPKKVSXW2VV", "length": 1626, "nlines": 29, "source_domain": "vallalar.net", "title": "என்றும்", "raw_content": "\nஎன்றும் மாதர்மேல் இச்சைவைத் துன்றனை எண்ணுவேன் துயருற்றால்\nகன்று நெஞ்சகக் கள்வனேன் அன்பினைக் கருத்திடை எணில்சால\nநன்று நன்றெனக் கெவ்வணம் பொன்அருள் நல்குவை அறிகில்லேன்\nதுன்று மாதவர் போற்றிடும் தணிகைவாழ் சோதியே சுகவாழ்வே\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nஎன்றும் இறவார் மிடற்றில்விடம் இருக்க அமைத்தார் என்றாலும்\nஒன்று நிலையார் நிலையில்லா தோடி உழல்வார் என்றாலும்\nநன்று புரிவார் தருமன்உயிர் நலிய உதைத்தார் என்றாலும்\nகன்றுண் கரத்தாய் நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவினுமே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilmirror.lk/popularity/97", "date_download": "2018-04-26T13:44:21Z", "digest": "sha1:VSBIAMLFY6LWNSIIEYAQS2KY2HZW3KCN", "length": 11814, "nlines": 168, "source_domain": "www.tamilmirror.lk", "title": "TamilMirror.lk", "raw_content": "\nபழம்பெறும் பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்\nபிரபல பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி, உடல் நலக்குறைவு காரணமாக நேற்று (25) காலமானார். 1950களில் குழந்தை......\nஇங்கிலாந்து அரச குடும்பத்துக்கு மற்றுமொரு வாரிசு\nஇங்கிலாந்து இளவரசர் சார்லஸ் -அமரர் டயானா தம்பதியினரின் மூத்த மகன் இளவரசர்...\n‘கறுப்பு வைரம்’ மாயா ஏஞ்சலோ\n“கசப்பு மண்டிய, திருகலான உங்கள் பொய்களால் வரலாற்றில் என்னை நீங்கள் வீழ்த்திவிடலாம். அந்த அழ...\nஸ்டீபன் ஹாக்கிங்கின் நிறைவேறாத ஆசை\nஐக்கிய இராச்சியத்தின் இயற்பியலாளரான ஸ்டீபன் ஹவாக்கிங், தனது 76 வயதில்......\nஸ்ரீதேவியை உருவத்தில் மட்டுமல்லாமல் மரணத்திலும் ஒத்துப் போன நடிகை\nபார்பதற்கு அச்சு அசல் ஸ்ரீதேவி போலவே இருந்தவர் தான் நடிகை திவ்ய பாரதி. முக தோற்றம் மட்டுமல்ல...\nவாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கின்றார்களா என்று இவரிடம் கேட்க, அதற்கு அவர் ‘ஆம்,...\nகவுரி லங்கேஷுக்கு சர்வதேச விருது\nபெங்ளூருல் சுட்டுக்கொல்லப்பட்ட மூத்த பத்திரிகையாளர் கவுரி லங்கேஷுக்கு, அன்னா பொலிட்கோவ்ஸ...\nஇந்தி நடிகர் சசி கபூர் காலமானார்\nஇந்திய நடிகர் சசி கபூர் தனது 79ஆவது வயதில் நேற்று(4) காலமாகியுள்ளார்...\nபிரபல குணச்சித்திர நடிகர் சண்முகசுந்தரம் காலமானார்\nபிரபல குணச்சித்திர நடிகர் சண்முகசுந்தரம், உடல்நலக் குறைவால், தனது 70ஆவது வயதில்...\nஉலக பெண் கோடீஸ்வரர்கள் பட்டியலில் சீன பெண்ணுக்கு முதலிடம்\nசீனாவில் ஏழ்மைக் குடும்பத்தில் பிறந்த பெண் உழைப்பினால்......\nபெண்களுக்கான உலக கட்டழகி பட்டத்தை, இந்தியாவின் பூமிகா சர்மா கைப்பற்றியுள்ளார். இதன்மூலம் உ...\nசிலர், சினிமாவில் நடிப்பவர்களையே மணமுடித்துள்ளனர். இந்தப் பட்டியலில் புதிதாக......\nகவிக்கோ அப்துல் ரஹ்மான் காலமானார்\nகடைசி வரை சினிமாவுக்கு பாடல்களை எழுதமாட்டேன் என தீர்க்கமாய் இருந்த கவிக்கோ அப்துல் ரஹ்மான்...\n’ஜேம்ஸ் பொண்ட் 007’ தொடரில் உளவு அதிகாரியாக நடித்த புகழ்பெற்ற நடிகர் சேர் ரோஜர் மூர், தனது ......\nசூர்யா, சத்யராஜ் உட்பட 8 நடிகர்களுக்குப் பிடியாணை\nஊடகவியலாளர்களை அவதூறாகப் பேசிய குற்றச்சாட்டுத் தொடர்பான வழக்கில், நேரில் ஆஜராகததால் நடிகர...\nமகளிடமும் இரகசியம் காத்தார் கட்டப்பா\nகட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார் என்ற ரகசியத்தைத் தனது குடும்பத்தாரிடம் கூட......\nஇலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தின் சிரேஷ்ட அறிவிப்பாளர் சற்சொரூபவதி நாதன், தனது 80ஆவது வ...\nஉலக சாதனை படைத்த வைக்கம் விஜயலட்சுமி\nகாயத்ரி வீணையில் தொடர்ச்சியாக 67 பாடல்களை இசைத்து, புதிய... ...\nகுறைந்தளவு நேரம் தூங்கும் பிரபலங்கள்\n​உலகில் பிரபலமான தலைவர்கள் பலர் தனது அன்றாட வாழ்க்கை... ...\nஇருதய நோய் காரணமாக, ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில், இன்று காலை... ...\nபிரபல நடிகர் விஜய நந்தசிறி காலமானார்\nஇலங்கை சிங்கள சினிமாவின் மூத்த நடிகர் விஜய நந்தசிறி,... ...\nதங்கச் சட்டை தொழிலதிபர் அடித்துக்கொலை\nதங்கத்தால் செய்யப்பட்ட சட்டையை அணிந்து பரபரப்பை... ...\nஇலங்கை கலையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரும் நாடாக நடிகர், நாடக ஆசிரியரான மரிக்கார் ராமதாஸ...\nமலையக இலக்கியவாதியான சி.வி.வேலுப்பிள்ளையின் பேரனும் மலையகத்தின் மூத்த கவிஞரும் ஊடகவியலாளர...\nமகனை பார்க்க சென்ற தாய்...\nஅந்த வாசஸ்தலத்துக்கு, முதன்முறையாக வருகைதந்துள்ள தன்னுடைய தாயை, பிரதமர் நரேந்திர மோடி... ...\nபிரபல எழுத்தாளர் ஹோல்ம்ஸ்ட்ரோம் காலமானார்\nஇங்கிலாந்து, கனடா, இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் மொழிபெயர்ப்புப் பட்டறைகளை நடத்தித் தமிழ் ...\nபொப் இசை மன்னன் பிரின்ஸ் மர்ம மரணம்\nநேற்று தனது வீட்டில் உள்ள லிப்ட்டின் உள்ளே மர்மமான முறையில் பிரின்ஸ் இறந்து... ...\nமின்னஞ்சலைக் கண்டுபிடித்த டொம்லின்சன் காலமானார்\nமின்னஞ்சல் மற்றும் மின்னஞ்சல் முகவரிகளுக்கான @ குறியீடு என்பவற்றை... ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tharavu.com/2013/05/blog-post_16.html", "date_download": "2018-04-26T13:09:27Z", "digest": "sha1:4IVNZQHKRVYJSOS5ZUOYKMPBXCAR3ZKA", "length": 12066, "nlines": 96, "source_domain": "www.tharavu.com", "title": "யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியம்!- சர்வதேச மன்னிப்புச் சபை | தரவு", "raw_content": "\nமுகப்பு ஈழம் உலகம் சினிமா விளையாட்டு இலங்கை\nதேசியத் தலைவர் பிரபாகரன்தான் வரவேண்டும் இந்த நாட்டை வழிநடாத்துவதற்கு.யாழ்.யாழ்பாணத்தின் சீர்கெட்ட நிலவரங்கள் தொடர்பாக குறித்த நீதிபதி\nஇலங்கை எதிர்கொண்ட பின்னடைவுகளுக்கு விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் காரணமல்ல அதிகாரத்தில் இருந்த அரசாங்கங்களே காரணம்\nசிறிலங்காவில் தமிழர் பிரச்சினை தொடர்பாக கருணாநிதியினைச் சாடியிருக்கும் ஜெயலலிதா அவரது குடும்ப ஆட்சியினதும் முறைகேடுகள் நிறைந்த\nஈழத்தமிழரின் புனர்வாழ்வுக்கு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பேன்தமிழக சட்டசபைக்கான தேர்தல் எதிர்வரும் 13 ம் திகதி இடம்பெறவுள்ள நிலையில்\nதமிழர்கள் பாரம்பரியம் மிக்கவர்கள். அவர்கள் கனடாவின் மதிப்பு மிக்க சொத்து.அதீத வளர்ச்சி, கலாச்சாரப் பங்களிப்பு மற்றும் புலமை வாய்ந்த தொழில்வாய்ப்பு என்பன கனடாவிற்குப் பெருமை\nஉலக கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா வாழ்த்து தெரிவித்துள்ளார்.ஜப்பான் நாட்டில் கடந்த 11ந் தேதி மிகப்பெரிய\nஜப்பானில் ஏற்பட்ட பூகம்பம் சுனாமியின் பாதிப்புக்கு அனுதாபம் தெரிவித்து, ஜப்பான் பிரதமருக்கு நடிகர் ரஜினிகாந்த் ஒரு கடிதம் அனுப்பி இருக்கிறார். ஜப்பான் நாட்டில் கடந்த 11ந் தேதி மிகப்பெரிய\nசிறிலங்காவில் விடுதலைப் புலிகளுக்கும் அரசப் படைகளுக்கும் இடையில் நடந்த இறுதிக் கட்டப் போரின்போது,- போர்நிறுத்தம் செய்யுமாறும், பேச்சுக்களில் ஈடுபடுமாறும் அனைத்துலக நாடுகள் கொடுத்த அழுத்தங்களில் இருந்து\nவிக்கிலீக்ஸில் வெளியாகியுள்ள தகவல்கள் ஒரு பக்கம் சர்ச்சையைக் கிளப்பி வரும் நிலையில், விடுதலைப் புலிகளுடனான போரில் அமெரிக்காவின் இராணுவப் புலனாய்வுத் தகவல்கள்\nபுலிகள் தொடர்ந்து செயல்பட வாய்ப்பு உள்ளது: டக்ளஸ் தேவானந்தா\nயுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியம்- சர்வதேச மன்னிப்புச் சபை\nஇலங்கையின் யுத்த குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச தரத்திலான விசாரணை ஒன்று முன்னெடுக்கப்பட வேண்டும் என்று சர்வதேச மன்னிப்பு சபை கோரிக்கை விடுத்துள்ளது.\nஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைக்கு, மன்னிப்பு சபை எழுதியுள்ள கடிதத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமனித உரிமைகள் பேரவையின் 23வது மாநாட்டு இந்த மாதம் 27ம் திகதி நடைபெறவுள்ள நிலையில் இந்த கடிதம் எழுதப்பட்டுள்ளது.\nசர்வதேச ரீதியாக வலியுறுத்தப்பட்ட நிலையிலும், அரசாங்கம் மனித உரிமைகள் விடயங்களில் தோல்வி கண்டுள்ளது.\nஇந்த நிலையில் சர்வதேச தரத்தினாலான விசாரணை ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என்றும், அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மனித உரிமைகள் பேரவை மேற்கொள்ள வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.\nஅத்துடன் இலங்கையில் இருந்து பாதுகாப்பு கோருகின்றவர்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை சரியான முறையில் செயற்பட வேண்டும் என்றும் சர்வதேச மன்னிப்பு சபை தமது கடிதத்தில் கோரியுள்ளது.\nLabels: ஈழம் , உலகம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஈழத்து நகைச்சுவை இரட்டையர்கள் டிங்கிரி சிவகுரு காணொளி இணைப்பு\nஜெனிவா சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம்- பிரித்தானியாவும் ஆதரவு\nபிரேமலதா விஜயகாந்துக்கு ரஜினிகாந்த் ரசிகர்கள் கண்டனம்\nசிரியாவுக்குள் புகுந்த ஈழத்து புலி\nஆஸ்திரியாவில் கச்சேரிக்கு வந்த கூட்டத்தினர் மீது துப்பாக்கிச் சூடு : 2 பேர் பலி\nஐ.நா மனிதவுரிமை உரிமைகள் சபையின் 37 வது கூட்டத்தொடர் இன்று ஆரம்பமாகியது.\nஈழத் தமிழர்களுக்கு நீதி கோரி உலகளாவிய நீதியில் வழக்கறிஞர்கள் கையெழுத்து.\nராஜிவ் கொலை குற்றவாளிகள் எழுவரையும் விடுவிக்க தமிழக அரசு முடிவு\nரவிராஜ் கொலையில் பிள்ளையானின் ஆயுதம்\nவிடுதலை வீரர்களின் சமாதியில் சிங்கள குடியேற்றம்\nதமிழீழ மாணவர்களின் இன்றைய அரசியல் தெளிவு.\n1976 மே 14 ஆந் தேதியன்று வட்டுக்கோட்டையில் நடைபெற்ற தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் முதலாவது தேசிய மாநாட்டில்\nசடலத்தை சமைத்து உண்ணும் பாகிஸ்தானியர்கள் (காணொளி இணைப்பு) இறந்த பெண்ணொருவரின்\nஇலங்கையில் திருதிமைக்கப்பட்ட ஒரு சில பெரும் சாலைகளின் புகைப்படங்கள் பார்க்க அருமையாக இருக்கிறது.\nஒன்று பட்டால் உண்டு வாழ்வு/ தரவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vivalanka.com/news/page.jsp?articleid=7504", "date_download": "2018-04-26T13:55:00Z", "digest": "sha1:ZDKVIGAHIGPMOA7AXYVVKDMPXPYPV3KI", "length": 4207, "nlines": 116, "source_domain": "www.vivalanka.com", "title": "WTVI stands to lose all county funding as budget cuts loom", "raw_content": "\nVideo: News 1st:டயகம வெஸ்ட் மூன்றாம் பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் சித்திர தேர் பவணி\nVideo: News 1st:நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்\nVideo: News 1st:மண்டத்தீவு பகுதியில் முதலை ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது\nVideo: News 1st: குடிபோதையில் வந்த சிலரால் கட்டுகஸ்தொட்டை வைத்தியசாலை ஊழியர்களுக்கு அச்சுறுத்தல்\nVideo: News 1st: சித்ராகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் காயம்\nVideo: News 1st:எல்ல பகுதியில் விபத்து: 3 வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு\nVideo: News 1st:புத்தாண்டு காலப்பகுதியில் 95 மில்லியன் ரூபா வருமானம் – இலங்கை போக்குவரத்து சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B7%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2018-04-26T13:41:28Z", "digest": "sha1:RPD56FYO2NGQLHW6TIPTFCJEJALZBJDW", "length": 7021, "nlines": 99, "source_domain": "ta.wikipedia.org", "title": "செசெஷெட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nசெசெஷெட் அரசி (Queen Sesheshet, ஐபிஏ: sɘʃɘsɐʈ) என்பவள் பண்டைய எகிப்தின் ஆறாம் வம்சத்தின் முதலாவது பாரோவும், டேட்டி அரசரின் தாயாரும் ஆவார். அரச வம்சத்தின் இரு பிரிவுகளிடையே இருந்த பிளவை சீர்ப்படுத்தி தனது மகனை ஆட்சிக்குக்குக் கொண்டுவந்ததில் இவளுக்கு முக்கிய பங்கு உள்ளது[1]. இவளது மகனுடன் ஆரம்பிக்கும் வம்சம் எகிப்திய வரலாற்றில் பழைய இராச்சியத்தின் ஒரு பகுதியாக இப்போதைய வரலாற்றாய்வாளர்கள் வகுத்துள்ளார்கள்.\n2008 ஆம் ஆண்டு வரையில், ஆறாவது வம்சத்தினரில் செசெஷெட்டின் பிரமிது மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டிருக்கவில்லை[2]. இவ்வாண்டில் செசெஷெட்டின் பிரமிது எனக்கருதப்படும் பிரமிதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்[3].\n2008, நவம்பர் 8 இல் எகிப்தின் தொல்லியல் ஆய்வாளர், சாஹி ஹவாஸ், சக்காரா என்ற இடத்தில் 4.300 ஆண்டுகள் பழமையான செசெஷெட்டின் 5 மீட்டர் உயர பிரமிட் ஒன்றைத் தமது குழுவினர் கண்டுபிடித்திருப்பதாக அறிவித்தார்[4]. இந்த சமாதி எகிப்தில் இதுவரையில் கண்டுபிடிக்கப்பட்ட பண்டைய பிரமிதுகளில் 118 ஆவது ஆகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மார்ச் 2013, 21:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/videos/newzealand-won-1st-odi-match-286467.html", "date_download": "2018-04-26T13:20:42Z", "digest": "sha1:KPBAL7HQORF63JYRZ6KMEOEIXO5PT5K5", "length": 6700, "nlines": 157, "source_domain": "tamil.oneindia.com", "title": "சொதப்பிய ஓப்பனிங்... வெற்றியை பறிகொடுத்தது இந்திய அணி-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » விளையாட்டு\nசொதப்பிய ஓப்பனிங்... வெற்றியை பறிகொடுத்தது இந்திய அணி-வீடியோ\nமும்பையில் நேற்று நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் 281 ரன்கள் இலக்கை எளிதாக எடுத்து வெற்றி பெற்றது நியூசிலாந்து அணி.\nசொதப்பிய ஓப்பனிங்... வெற்றியை பறிகொடுத்தது இந்திய அணி-வீடியோ\nகேப்டன் பதவியை துறந்த கம்பிரின் அடுத்த திட்டம்\nமாஸ் காட்டிய தோனி... அதிரடியாக வென்ற சென்னை\nஆட்டத்தின் திசையை மாற்றிய இரண்டு ஓவர்கள்\nடி.வில்லியர்ஸ் அதிரடி.... சென்னைக்கு இலக்கு 206\nமைதானத்திற்கு வெளியே அடித்த டி.வில்லியர்ஸ்\nசசிகலா சிறை செல்ல தினகரனே காரணம்: திவாகரன்\nதாய், தந்தை, மகளுக்கு விஷம் கொடுத்து கொன்ற பெண்..\nசென்னை ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு\nதோனி தடுத்து நிறுத்திய பவுண்டரி\nபெங்களூரை எதிர்த்து சென்னை பந்து வீச முடிவு\nடெல்லி டேர்டெவில்ஸ் கேப்டன் பதவியில் இருந்து கம்பீர் விலகினார்\nமேலும் பார்க்க விளையாட்டு வீடியோக்கள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://anony-anony.blogspot.com/2006/06/blog-post_26.html", "date_download": "2018-04-26T13:26:42Z", "digest": "sha1:EY3UQMZI35NBA55MBTS22G5YGUIOOBLM", "length": 24846, "nlines": 399, "source_domain": "anony-anony.blogspot.com", "title": "ANONYMOUS: இது உண்மையா??", "raw_content": "\nமொக்கை போட்டது ALIF AHAMED |\nதலை கூட்டங்களுக்கு இடையில் நம்ம தல....\nசங்க கூட்டத்துக்கு வரும் வழியில் சங்க தலைவி.....\nதலயை பாடாபடுத்திய எலி (படம் பெயர் என்னங்க\nதல மொதமொதலா சைக்கிள் உட ஆசை பட்டபோது தளபதி நாகை சிவாவிடம் சொல்லி சூடானிலிருந்து ஸ்பெசலாக ஆடர் செய்தது.\nதேவுக்கு கழுதைபுலி கடிச்சதை கொன்டாட கத்தாரிலிருந்து விவசாயி கொண்டு வந்த சேவல் கிடா....\nகொண்டாத்தில் ஒரு பெக் மட்டுமே அடிப்பேன் என்று தல தலையில் அடித்து சத்தியம் செய்ததை காப்பாற்றும் பாண்டி..\nஇதில் வரும் அனைத்து சம்பவங்களும் படங்களும் கற்பனையே (அப்பாடா பொன்ஸ் வக்கில் நோட்டிஸு விடமுடியாது)\nயோவ், பொன்ஸ் இருக்கட்டும் அந்த பொண்ண வக்கில் நோட்டிஸ் உட போகுது பாத்து.\nநல்ல வேளை இன்னிக்கு ஆபிசு இல்ல, உங்க லொல்லு தாங்க முடியலடா சாமி.:-))))))))\nபடம் பெயரு சுந்தரா டிராவல்ஸ்.\nஅப்புறம் இந்த தளபதி எல்லாம் வேணாம் அப்பு. அது ரஜினிக்கு அப்புறம் நம்ம சிபியாருக்கு தான். பிரச்சனைய உண்டு பண்ணாத ராசா.\nஉங்க லொல்லு தாங்க முடியலடா சாமி.:-))))))))\n//அப்புறம் இந்த தளபதி எல்லாம் வேணாம் அப்பு. அது ரஜினிக்கு அப்புறம் நம்ம சிபியாருக்கு தான். பிரச்சனைய உண்டு பண்ணாத ராசா.\nமின்னலு ஆனாலும் உமக்கு தெகிறியம் ஜாஸ்திதான் \nஎன்னையப் பத்தி எப்படி வேணாலும் படம் போடுவே\nஎங்கள் சங்க தங்கம் பொன்ஸக்காவின் படத்தினை மாற்றாவிட்டால் கடும் பின்(னூட்ட) விளைவுகளை சந்திப்பீர் என எச்சரிக்கிறேன் \nஅன்புள்ள அக்கா போட்டோவை நீக்கி விட்டேன். செய்தது விளையாட்டுக்காக தான்.\nநீக்கின வரைக்கும் நன்றி மின்னல்...\nஜொ.பா, தம்பின்னா நீதாம்பா.. தங்கத் தம்பி\nஆனாலும், //கடும் பின்(னூட்ட) விளைவுகளை சந்திப்பீர் // இது ஏதோ உள்குத்தா இருக்கேப்பா\nவருகைபுரிந்த, புரிய இருக்கின்ற (டேய் அடங்குடா என்பது என் காதில் விழுகிற்து) அனைவருக்கும்..\nயோவ் நன்மனம் நான் பின்னுட்டம் போடுவதற்க்காக தான் இந்த பதிவை ஆரம்பிச்சேன்.\nநீ வந்து முனுகல் அறிக்கை எப்போனு கேட்டு உசுப்பேத்தி இப்படி ஆப்பு வாங்க வைக்கிறியே இது நல்லா இல்ல ஆமா...\nஅப்புறம் இந்த தளபதி எல்லாம் வேணாம் அப்பு. அது ரஜினிக்கு அப்புறம் நம்ம சிபியாருக்கு தான். பிரச்சனைய உண்டு பண்ணாத ராசா.\nதளபதிக்கு பக்கத்தில் ஒரு கமா வுட்டு போச்சி சிவா தளபதினா அது சிபின்னு கூடவா எனக்கு தெரியாது:(\nஉங்க லொல்லு தாங்க முடியலடா சாமி.:-))))))))\nஉங்கள விடவா (சிபி அங்க சியாம் நயண்தாரா தான் பிடிக்கும் அப்படினு சொல்லுகிட்டு திரியிராரு போய் என்னானு பாருங்க)\nமின்னலு ஆனாலும் உமக்கு தெகிறியம் ஜாஸ்திதான் \nஎன்னையப் பத்தி எப்படி வேணாலும் படம் போடுவே\nஎங்கள் சங்க தங்கம் பொன்ஸக்காவின் படத்தினை மாற்றாவிட்டால் கடும் பின்(னூட்ட) விளைவுகளை சந்திப்பீர் என எச்சரிக்கிறேன்\nஆனாலும், //கடும் பின்(னூட்ட) விளைவுகளை சந்திப்பீர் // இது ஏதோ உள்குத்தா இருக்கேப்பா\nஅக்கா தம்பியா இருந்தாலும் சங்கத்துக்கு வந்துட்டா எல்லோரும் சமம்...என்னப்பு நாங்கள்ளாம் பாக்கறதுக்குள்ள யக்கா படத்த எடுத்துடீகளே....\nமிக்க நன்றி மின்னால் ராசா :)) ரொம்ப சந்தோஷம் \n//ஆனாலும், //கடும் பின்(னூட்ட) விளைவுகளை சந்திப்பீர் // இது ஏதோ உள்குத்தா இருக்கேப்பா\n :(( உங்கள் தம்பி பாசக்கம்பியையா சந்தேகப்படுகிறீர்கள் ஐயகோ நான் என் செய்வேன் ஐயகோ நான் என் செய்வேன் உள்குட்து வெளிகுத்தெல்லாம் எனக்கு தெரியாதே \nஅது என்னங்க, தலை இல்லாத தலைவி படம் போடறீங்க சங்கத்தோட தலைவி யாருனு தெரியாமப் புகுந்து விளையாடறீங்க போல இருக்கு. உங்க வயசைப் பார்த்து மன்னிச்சு விடறேன். மத்தபடி ஆப்பு அடிக்கிற வேலை எல்லாம் சங்கத்தின் இளம் சிங்கங்கள் பார்த்துக்குவாங்க. அடிக்கடி மின்னுங்க.\nஉங்க வயசைப் பார்த்து மன்னிச்சு விடறேன்\nஅந்த வயசே போலிதான் உண்மையான வயசை ஃபிளாக்கர் எடுத்துக்க மாட்டேங்குது,\n1902 க்கு முன்பு பிறந்தவங்க யாரும் உயிரோட இருக்க கூடாதா என்னோட உண்மையான வயச சொல்ல முடியலெயே..........:)\n( உங்கள் பின்னுட்டம் காட்ட மறுக்கிறது எதனால்\nஅந்த படம் பொன்ஸ் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க.. (ஜொள்ளு பாண்டியின் மிரட்டலின் காரணமாக இல்லை) கணினியிலிருந்தே நீக்கி விட்டேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் தயவுசெய்து ஈமெயிலில் யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம்\n இல்லேன்னா நானே ஒரு பெரிய பிரச்னை பண்ணலாமுன்னு இருந்தேன்.\n//:(( உங்கள் தம்பி பாசக்கம்பியையா சந்தேகப்படுகிறீர்கள் ஐயகோ நான் என் செய்வேன் ஐயகோ நான் என் செய்வேன் உள்குட்து வெளிகுத்தெல்லாம் எனக்கு தெரியாதே \n படக்குன்னு இப்படி கட்சி மாறுகிறீர்களே வளமான அரிசியல் எதிர்காலம் இருக்கிறது உமக்கு\n//தளபதிக்கு பக்கத்தில் ஒரு கமா வுட்டு போச்சி சிவா தளபதினா அது சிபின்னு கூடவா எனக்கு தெரியாது:(\nவாம்மா/வாப்பா மின்னலு கலக்கிடிங்க போங்க.. அப்புறம் நம்ம பிகிலின் படத்தை ஒளிச்சி வச்ச இடத்துல இருந்து நமக்கு ஒரு காப்பி அனுப்புங்க.. :))\nவயசு ஆயிடுச்சு இல்லை, அதான் புது பதிவு போடமுடியலை தாத்தாவாலே\nஅக்கா தம்பியா இருந்தாலும் சங்கத்துக்கு வந்துட்டா எல்லோரும் சமம்...என்னப்பு நாங்கள்ளாம் பாக்கறதுக்குள்ள யக்கா படத்த எடுத்துடீகளே....\nம் என்ன பன்னுறது சியாம் அடுத்தவர்களை சிரிக்க வைக்க தன்னையே மெழுகுதிரி போல் உருக்கி கொள்(ல்)ளும் வ வா சங்க நிர்வாகிகளின் வேண்டுகோளை(மிரட்டல்களை \nமிக்க நன்றி மின்னால் ராசா :)) ரொம்ப சந்தோஷம் \nஏம்பு அந்த படத்தை காப்பி கிப்பி எடுக்கலையே \n(ஆப்பு வச்சிடாதிங்கப்பு வக்கீல் நோட்டிஸ் வரும் எனக்கு ..)\n இல்லேன்னா நானே ஒரு பெரிய பிரச்னை பண்ணலாமுன்னு இருந்தேன்.\nஎப்படா மாட்டுவான்னு இருக்கிங்க போல.....:))\nவாம்மா/வாப்பா மின்னலு கலக்கிடிங்க போங்க..\nமா இல்லை பா :)\nஅப்புறம் நம்ம பிகிலின் படத்தை ஒளிச்சி வச்ச இடத்துல இருந்து நமக்கு ஒரு காப்பி அனுப்புங்க.. :))\nநம்ம பாண்டி சிரிப்புல எதோ இருக்கு அவர்கிட்ட கேளுங்க...\nவயசு ஆயிடுச்சு இல்லை, அதான் புது பதிவு போடமுடியலை தாத்தாவாலே\nஹும் எனக்கு சுட்டு போட்டாலும் எழுத வராது\nஇதுல வேலை பளு வேற\nஅதனால் மேயிதல் +சிரித்தல் + பின்னுட்டமிடுதல்\nம் ம் பாக்கலாம் எப்பயாவது \nஎன்ன புதுப் பதிவு ஒண்ணும் காணோம்\n பின்னுட்ட 22 யை மீண்டும் ஒன்ஸ்மோர் படிங்க ஃபிளிஸ்ஸ்....\n( நாகை சிவா இப்ப ஒகேவா எனக்கு வயசு 105 ஆகஸ்ட்டு வந்தால் அப்ப கீதாக்கா வயசு \nகாத கிட்ட கொண்டுவாங்க இன்னும் கிட்ட 105 வயசு கிபி 2085 வந்தால் தான் ஹி ஹி ஹி\nword verification வைப்பதற்கு சாரி. spam மெசெஜ் அதிகம் வருவதால் வைக்க பட்டு உள்ளது புரிந்துணர்வுக்கு நன்றி \nபோங்காடா போய் ஓட்டு போடுங்க (1)\nவேலன்:-பைல்களை வேண்டிய அளவு பிரிக்க -சேர்க்க -தகவல்களை மறைத்துவைக்கFile friend\nபொழுதுகளைக் களவாடிய டூரிங் டாக்கீஸ்\nMicrosoft Office: ரிப்பன் மெனுவில் தேவையான கட்டளைகளை கொண்ட புதிய டேபை உருவாக்க..\nபோங்காடா போய் ஓட்டு போடுங்க (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.south.news/jallikattu-in-tamilnadu-2018/", "date_download": "2018-04-26T13:14:09Z", "digest": "sha1:XCREDJH3GKN6JXJ2S3IVCA3KNLHVBIU7", "length": 7090, "nlines": 79, "source_domain": "tamil.south.news", "title": "2000 வருடங்களில் ஜல்லிக்கட்டு அழிந்ததாக வரலாறு இல்லை!", "raw_content": "\nநிகழ்வுகள் 2000 வருடங்களில் ஜல்லிக்கட்டு அழிந்ததாக வரலாறு இல்லை\n2000 வருடங்களில் ஜல்லிக்கட்டு அழிந்ததாக வரலாறு இல்லை\nகடந்த 2000 வருடங்களில் எத்தனயோ பேரரசுகள், அரசுகள் வென்று வீழ்ந்திருக்கலாம். பல நூறு கலாச்சாரங்கள் மறைந்திருக்கலாம். ஆனால் தமிழர்களின் வீரத்திற்கும், கலாச்சாரத்திற்கும் அடையாளமாக திகழும் ஜல்லிக்கட்டு அழிந்ததாக வரலாறே இல்லை. ஜல்லிக்கட்டு விளையாட்டை முடக்க நினைத்து அதன் மீது முதலில் கை வைத்த அமைப்பே PeTAதான். தமிழர்களின் தன்னெழுச்சி சீற்றத்தைக் கண்டு நடுநடுங்கிப் போனது அந்த அமைப்பு.\nதைப்புரட்சி, மெரீனா புரட்சி என பெயரிடப்படும் நமது ஜல்லிக்கட்டு போராட்டங்களை தொடர்ந்து அரசும், நீதிமன்றமும் நிறுவியிருந்த தடை வெற்றிகரமாக உடைக்கப்பட்டது. கடந்தாண்டு நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டிகளை தமிழகம் மட்டுமல்ல, உலகமே பார்த்து ரசித்தது. தமிழனின் வீரம் உலக அரங்கில் கண்டு வியக்கப்பட்டது. தமிழர்களின் கலாசச்சார பிடிப்பை இந்தியாவே கண்டு வியந்தது.\nஇரு நூறு நூற்றாண்டுகளாக தமிழர்களின் பாரம்பரியத்துடன் இணைந்திருக்கும் காளைகளையும் அவைதம் வீரத்தினையும் அயல் நாடுகளும் ஆச்சரியத்துடன் பார்த்தன. ஜல்லிக்கட்டு தடைக்குப் பின் இருக்கும் அரசியலையும், வியாபாரத்தையும் உலக தளத்தில் போட்டு உடைத்தான் தமிழன். மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவன சதிகளை முறியடித்துள்ளோம் என்ற மாதகு பெருமைகளுடன் இந்தாண்டும் ஜல்லிகட்டை குதூகளிப்புடன் நடத்தி முடிக்க ஆயத்தம் ஆவோம்.\nதமிழ்ப் புத்தாண்டில் இதை செய்தால் ‘வாழ்நாள் அதிகரிக்கும்’… தமிழர் அறிவியல்\nஆம்பூரில் ஓடிய பஸ்ஸை கெத்தாக தடுத்து நிறுத்திய தேவயாணி\nஅனைவரும் விரும்பி சாப்பிட தூண்டும் கோவையின் பேமஸ் உணவுகள்..\nசென்னையில் 24 மணி நேரத்தில் இதையெல்லாம் செய்யலாம்\nவேலூரில் 48 மணி நேரத்தை எப்படி செலவிடலாம்\nஓட ஓட தெறிக்கவிட்ட சி.எஸ்.கே’; 400 அடிச்சாலும் ஜெயிக்க மாட்டாங்களா ஆர்.சி.பி\nஜெட் வேகத்தில் ஆண்மை பெருக இந்த கீரையை சாப்பிடுங்க\nமினிமம் பேலன்ஸ் இல்லாத கணக்குகளில் இருந்து ரூ.1,772 கோடி அபராதம் வசூலித்த எஸ்.பி.ஐ. வங்கி\nஆதார் அமைப்பை கைது செய்யுங்கள்… சர்ச்சையை கிளப்பிய ‘விக்கி லீக்ஸ்’ எட்வர்ட்\nஜல்லிக்கட்டுக்கு தடை இல்லை… சீறிப்பாய தயாராகும் காளைகள்\nபெங்களூருவில் புகழ்பெற்ற 10 சிறந்த தமிழ்நாட்டு ஓட்டல்கள்..\nஓலமிடும் மீனவப் பெண்மணிகள்… நெற்றிப்பொட்டில் அறையும் ‘ஃபேஸ்புக் பதிவு’\nஅடித்த அடி மறந்துபோனது… மீண்டும் ஜல்லிக்கட்டுக்கு தடை கோரும் பீட்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/mr-viayabaskar-vehicle-hit-and-biker-died-at-spot-117111100043_1.html", "date_download": "2018-04-26T13:41:12Z", "digest": "sha1:AVCRTYGIRMAA6DSUP3DEEHQB3CYV3KA7", "length": 13150, "nlines": 157, "source_domain": "tamil.webdunia.com", "title": "வாகனம் மோதி விபத்து; அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பதவி விலக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கோரிக்கை | Webdunia Tamil", "raw_content": "\nவியாழன், 26 ஏப்ரல் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nவாகனம் மோதி விபத்து; அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பதவி விலக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கோரிக்கை\nகரூர் அருகே அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் பாதுகாப்பு வாகனம் மோதிய விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூ 25 லட்சம் வழங்க வேண்டுமென்றும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பதவி விலக வேண்டுமென்றும், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nகரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல பகுதிகளில் இலவச மடிக்கணினி மற்றும் பொதுமக்கள் குறைகளை கேட்கும் முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியிலும், திருமண விழாவில் ஒன்றிலும் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டார். பள்ளப்பட்டியிலிருந்து அரவக்குறிச்சி வழியாக சென்று கொண்டிருந்த போது அவருடைய கார் அதிக வேகத்தில் சென்றது.\nஅவரின் பாதுகாப்பிற்காக சென்று கொண்டிருந்த எஸ்காட் பாதுகாப்பு வாகனமும் அதிகவேகத்தில் சென்றது. அப்போது, நிலைதடுமாறிய பாதுகாப்பு வாகனம் எதிரே வந்த இரு சக்கர வாகனத்தில் மோதியது. இந்த சம்பவத்தில் இரு சக்கர வாகனத்தை ஓட்டிய குறிக்காரன் வலசு பகுதியை சார்ந்த லட்சுமணன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.\nஇந்நிலையில் இதை கண்டும், காணாமல் சென்ற தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், மற்ற நிகழ்ச்சிகளுக்காக சென்றுவிட்டார். பிரேத பரிசோதனைக்காக அரவக்குறிச்சி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த லெட்சுமணனின் உடல் ஆம்புலன்ஸ்சில் கரூரில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.\nஇதையடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், தமிழக அரசு தக்க உயிரிழந்த கூலித்தொழிலாளி லட்சுமணன் குடும்பத்திற்கு ரூ 25 லட்சம் நிதியை வழங்க வேண்டுமென்றும், அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பதவி விலக வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nதமிழகத்தில் லாவண்யா கொசுக்கள்: பெரம்பலூர் எம்.எல்.ஏவின் கண்டுபிடிப்பு\nபோக்குவரத்துதுறை அமைச்சர் பாதுகாவலர் வாகனம் மோதி கூலித்தொழிலாளி பலி\nநான் என்ன இன்கம்டாக்ஸ் அதிகாரியா- நிருபர்களிடம் கேட்ட தம்பித்துரை\nவாட்டர் புரூப் ஆம்புலன்ஸ் விரைவில் அறிமுகம்: அமைச்சர் விஜயபாஸ்கர்\nடி.ஆர்.டி.ஓ-வில் பணி: ஐ.டி.ஐ பட்டதாரிகள் விண்ணப்பங்களுக்கு வரவேற்பு\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/classifieds/4227", "date_download": "2018-04-26T13:03:10Z", "digest": "sha1:5OV2GDMP2IMJJNMBJ23QUCBNPOXAHCNT", "length": 8553, "nlines": 105, "source_domain": "www.virakesari.lk", "title": "பழுதுபார்த்தல் - 03-12-2017 | Classifieds | Virakesari.lk", "raw_content": "\nஇலங்கை ஆசிரியர் சேவை சங்கம் ஜே.வி.பியுடன் இணைந்து யாழ்பாணத்தில் \"செம்மே\" தினக் கொண்டாட்டம்\nநிலக்கரியை விட அடர்ந்த கருப்பு நிறத்தில் புதிய கிரகம் கண்டு பிடிப்பு\nஎரிந்த நிலையில் சடலம் மீட்பு\nபல கொள்ளைச் சம்பவங்களோடு தொடர்புடைய கொள்ளை கும்பல் கைது\nஇடி தாக்கி இருவர் வைத்தியசாலையில்\nஜாலிய விக்கிரமசூரியவை கைது செய்ய மீண்டும் பிடியாணை\n“அம்பாந்தோட்டை துறைமுகத்தின் பாதுகாப்பிற்கு இலங்கை கடற்படை மாத்திரமே பொறுப்பு”\nஐ.எஸ். தற்கொலை தாக்குதல் ; உயிரிழந்தோரின் எண்ணிக்கை 57 ஆக அதிகரிப்பு\nகாலில் விழுந்தவர் காலாவதியான நூடில்ஸ் என என்னை வர்ணிக்கிறார் : சந்திரிகா\nTV, LCD, LED, 3D, HIFI Set, DVD, Washing Machine, Fridge, Micro Oven, Laptop போன்ற மின் உபகரணங்கள் நேரடியாக வந்து பழுதுபார்த்துக் கொடுக்கப்படும். LED, LCD Parts எம்மிடம் உண்டு. (குறைந்த கட்டணம் துரித சேவை). (அருள்) (Wellawatte). 077 6625944.\nஎல்லாவிதமான குளிர்சாதனப்பெட்டிகள் (Fridges), சகலவிதமான தொலைக்காட்சிப் பெட்டிகள் (TV), A/C, Washing Machine ஆகிய திருத்த வேலைகள் உங்கள் வீடுகளுக்கு வந்து துரிதமாக திருத்தி க்கொடுக்கப்படும். (St.Jude Electronics)/ ஜூட் பர்ணாந்து (டிலான் செல்வராஜா) இல. 104 / 37, சங்கமித்த மாவத்தை, கொழும்பு 13. Tel :– 011 2388247 / 072 2199334.\nComputer and Laptop Repair வீடுகளுக்கு வந்து திருத்திக் கொடுக்கப்படும் (Kotahena, Wellawatte, Wattala) Hardware, Software formatting O/S, Office, Photoshop, Skype, Game Install செய்யப்படும். 1000/= மட்டுமே. மேலதிக எந்தக் கட்டணமும் அறவிடப்பட மாட்டாது. உங்கள் கணனி திருத்தி கொடுத்தால் மட்டுமே பணம் அறவிடப்படும். கிழமையில் எல்லா நாட்களும் பழுதுபார்க்கப்படும். 1000/= மட்டுமே Kumar – 077 2906492.\nComputer, Laptop, CCTV Repairing and Service உங்களுடைய காரியால யங்களுக்கும், வீட்டிற்கும் வந்து திருத்திக் கொடுக்கப்படும். Hardware, Software, O/S Installation, (ADSL, Recovery) தேவை ப்படுகின்ற அனைத்து Software Installation செய்து தரப்படும். 077 6539954 (Mohan).\nA/C, Services Repair, Maintenance, Installations வீடுகளுக்கும் காரியால யங்களுக்கும் வந்து விரைவாகவும், துல்லிய மாகவும் திருத்திக் கொடுக்க ப்படும். எங்களிடம் குறுகிய நாட்கள் பாவித்த A/C, Brand New A/C களும் உத்தரவாதத்துடன் விற்பனைக்கு உண்டு. No.77G, Manning Place, Wellawatte. 077 3355088 / 071 7236741 / 011 2360559.\nசகல LED, LCD Micro Oven, Washing Machine ஆகியன கொழும்பின் எப்பா கத்துக்கும் நேரடியாக வந்து திருத்தி கொடுக்கப்படும். (ரவி 077 8196095 Bambalapitiya)\nஉங்களது எல்லா வகையான தையல் இயந்திரங்களதும் உங்களது வீடுகள், நிறுவனங்களுக்கு வந்து உத்தரவா தத்தோடு திருத்தித்தரப்படும். (Screen Printing) செய்து தரப்படும். AR.ஆனந்த். 072 9508248.\nAny Brand of Automatic, Manual, Topload Washing Machine, Water Motor, Fridge என்பன உங்கள் வீட்டில் வைத்தே திருத்தித் தரப்படும். மட்டக்குளி, Wattala, கொட்டாஞ்சேனை. 077 7472201. வெள்ளவத்தை, தெஹிவளை, பம்பல ப்பிட்டி. Sasi 077 9220271.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://aviobilet.com/ta/world/Europe/BY/SKP/MSQ", "date_download": "2018-04-26T14:42:36Z", "digest": "sha1:MGU6JYOFAOVVMD4RDNU6XJHGPSJJH6QO", "length": 12491, "nlines": 330, "source_domain": "aviobilet.com", "title": "ஸ்கொப்ஜெ இருந்து சகாயமான விமானங்கள் விமான டிக்கெட் புக்கிங் மின்ஸ்க் வேண்டும் - aviobilet.com", "raw_content": "\nவிமானங்கள் ஒரு கார் வாடகைக்கு விடுதிகள்\nஒரு மீண்டும் விமானம் சேர்\nகுழந்தை 2 - 12\nஉள்ள விடுதி BYRent a Car உள்ள BYபார்க்க உள்ள BYபோவதற்கு உள்ள BYBar & Restaurant உள்ள BYவிளையாட்டு உள்ள BY\nஸ்கொப்ஜெ இருந்து சகாயமான விமானங்கள் விமான டிக்கெட் புக்கிங் மின்ஸ்க் வேண்டும் - aviobilet.com\n1 வயது பொருளாதாரம் வகுப்பு டிக்கெட் விலை\nசகாயமான விமான டிக்கெட் ஸ்கொப்ஜெ-மின்ஸ்க்\nவரிசை: விலை €\tபுறப்படும் தேதி\nஸ்கொப்ஜெ (SKP) → மின்ஸ்க் (MSQ)\nஸ்கொப்ஜெ (SKP) → மின்ஸ்க் (MSQ)\nஸ்கொப்ஜெ (SKP) → மின்ஸ்க் (MSQ)\nஸ்கொப்ஜெ (SKP) → மின்ஸ்க் (MSQ)\nஸ்கொப்ஜெ (SKP) → மின்ஸ்க் (MSQ)\nஸ்கொப்ஜெ (SKP) → மின்ஸ்க் (MSQ)\nஸ்கொப்ஜெ (SKP) → மின்ஸ்க் (MSQ)\nஸ்கொப்ஜெ (SKP) → மின்ஸ்க் (MSQ)\nஸ்கொப்ஜெ (SKP) → மின்ஸ்க் (MSQ)\nஸ்கொப்ஜெ (SKP) → மின்ஸ்க் (MSQ)\nஸ்கொப்ஜெ (SKP) → மின்ஸ்க் (MSQ)\nஸ்கொப்ஜெ (SKP) → மின்ஸ்க் (MSQ)\nஸ்கொப்ஜெ (SKP) → மின்ஸ்க் (MSQ)\nஸ்கொப்ஜெ (SKP) → மின்ஸ்க் (MSQ)\nஸ்கொப்ஜெ (SKP) → மின்ஸ்க் (MSQ)\nஸ்கொப்ஜெ (SKP) → மின்ஸ்க் (MSQ)\nஸ்கொப்ஜெ (SKP) → மின்ஸ்க் (MSQ)\nஸ்கொப்ஜெ (SKP) → மின்ஸ்க் (MSQ)\nஸ்கொப்ஜெ (SKP) → மின்ஸ்க் (MSQ)\nஸ்கொப்ஜெ (SKP) → மின்ஸ்க் (MSQ)\nஸ்கொப்ஜெ (SKP) → மின்ஸ்க் (MSQ)\nஒரு நல்ல வாய்ப்பை கண்டுபிடிக்க முடியவில்லை\nசகாயமான விமான டிக்கெட் ஸ்கொப்ஜெ-மின்ஸ்க்-ஸ்கொப்ஜெ\nவரிசை: விலை €\tபுறப்படும் தேதி\nஸ்கொப்ஜெ (SKP) → மின்ஸ்க் (MSQ) → ஸ்கொப்ஜெ (SKP)\nஸ்கொப்ஜெ (SKP) → மின்ஸ்க் (MSQ) → ஸ்கொப்ஜெ (SKP)\nஸ்கொப்ஜெ (SKP) → மின்ஸ்க் (MSQ) → ஸ்கொப்ஜெ (SKP)\nஸ்கொப்ஜெ (SKP) → மின்ஸ்க் (MSQ) → ஸ்கொப்ஜெ (SKP)\nஸ்கொப்ஜெ (SKP) → மின்ஸ்க் (MSQ) → ஸ்கொப்ஜெ (SKP)\nஸ்கொப்ஜெ (SKP) → மின்ஸ்க் (MSQ) → ஸ்கொப்ஜெ (SKP)\nஒரு நல்ல வாய்ப்பை கண்டுபிடிக்க முடியவில்லை\nஇலக்கு:: உலகம் » ஐரோப்பா » Belarus » ஸ்கொப்ஜெ - மின்ஸ்க்\nபதிப்புரிமை © 2015. Elitaire லிமிடெட் - அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\nஎங்கள் இலவச செய்திமடல் பெற\nநீங்கள் சிறந்த சலுகைகள் பெறும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/junction/kaiyil-alliya-neer/2017/jun/25/ahalya-short-film-radhika-apte-2726552.html", "date_download": "2018-04-26T13:11:19Z", "digest": "sha1:RASZ6T7PSB4QCC3WRRAIRYEUZ35MR457", "length": 41933, "nlines": 157, "source_domain": "www.dinamani.com", "title": "8. வளர் பூமியின் உழா நிலம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு ஜங்ஷன் கையில் அள்ளிய நீர்\n8. வளர் பூமியின் உழா நிலம்\nராமாயணத்தில் வரும் அகல்யையின் கதையை நவீன உள்ளடக்கமாகக் கொண்டது இக்குறும்படம் என்று ஒரு பார்வை உண்டு. பிரம்மனின் படைப்பில் மிக அழகான படைப்பு இவள். முதிய கௌதம ரிஷியை கணவராகக் கொண்டவள். இந்திரன் அகல்யையின் கணவரைப் போல உருவெடுத்து வந்து அவளை மயக்குகிறான். இந்த துரோகத்தினால் இருவரும் கௌதம ரிஷியின் சாபத்திற்கு ஆளாகின்றனர். அகல்யையை கல்லாய் சமைக்கிறார் அவளின் கணவர். பிறிதொரு சமயம் ராமனின் கால் பட்டு மனித உருவை அடைகிறாள். சாபத்திலிருந்து மீள்கிறாள்.\nஅஹல்யா (2015) / இயக்குனர் சுஜோய் கோஷ்\nகாலிங் பெல் அடிக்கிறது. வாலிபம் முறுக்கேறிய இன்ஸ்பெக்டர் இந்திரா சன் தெரு வாசலிலிருந்து வீட்டின் மாடியை அண்ணாந்து பார்க்கிறார். பொறுமையை இழக்கிறார். கதவைத் திறந்து ஒரு அழகான இளம் பெண் அவரிடம் சொல்லுங்கள் என்று மென்மையான குரலில் கேட்கிறாள். காவல் நிலையத்திலிருந்து வருகிறேன் என்றும் மிஸ்டர்.சாது இருக்கிறாரா என்றும் அழுத்தமாக வினவுகிறார். மெல்லிய அதிர்ச்சி அவள் முகத்தில் எழ அவளின் அழகில் இவர் தடுமாறுகிறார். முன்னே அவள் நடக்க இவர் அவளின் பின்னழகு நடையில் கிறங்கிப் பின்தொடர்கிறார்.\nஹாலிற்கு வந்த பிறகு இருக்கையில் அமருங்கள் சாதுவை கூப்பிடுகிறேன் என்று சொல்கிறாள். சாப்பிட ஏதாவது டீ கொண்டு வரட்டுமா என்று அவள் வினவ இன்ஸ்பெக்டரோ சிரமமில்லையெனில் என்று பதில் சொல்கிறார். கீழே ஏதோ விழும் சத்தம் கேட்க இன்ஸ்பெக்டர் அதைக் கண்ணுறுகிறார். இவளோ அந்நிகழ்வை பித்து மர்மம் என்றும் யாராவது வீட்டிற்கு புதிய நபர்கள் வந்தால் இப்படித்தான் இந்த பொம்மைகள் நடந்து கொள்கின்றன என்று செல்லமாக குறைபட்டுக்கொள்கிறாள்.\nகீழே விழுந்த அந்த பொம்மையை எடுத்து மேஜையின் மீது நிற்க வைக்கப்பட்டிருக்கும் ஐந்தாறு பொம்மைகளுக்கிடையில் மீண்டும் நிற்க வைக்கிறாள். காரணம் புரியவில்லை என்பவளிடம் ஃபேனாக இருக்கலாம் என்று சொல்கிறார் இவர். கடவுளுக்கே வெளிச்சம் என்று சொல்லிவிட்டு நகர்கிறாள். அங்கிருக்கும் பொருட்களை பார்வையிடுகிற இன்ஸ்பெக்டர் தான் கையில் வைத்திருக்கும் ஒரு போட்டோவை கம்பேர் செய்து ஒரு பொம்மையை உற்றுப் பார்க்கிறார். அது தான் தேடி வந்த அர்ஜூன் ஜாடையில் இருப்பதை கண்டுகொள்கிறார். மேலும் அருகில் கண்ணாடிப்பேழையினுள் ஒரு கூழாங்கல் இருப்பதைப் பார்க்கிறார். மீண்டும் அர்ஜூன் பொம்மை மேஜையின் மேலிருந்து கீழே விழுகிறது.\nஇன்ஸ்பெக்டர் மேலே சுழலும் மின் விசிறியைப் பார்த்து நகைக்கிறார். மீண்டும் கீழே விழுந்துவிட்டதா என்று சொல்லிக்கொண்டே கம்பீரமான ஒரு உருவம் இன்ஸ்பெக்டரை நோக்கி வருகிறது.\nகௌதம் சாது என்று இன்ஸ்பெக்டர் இந்திரா சன்னிடம் கைகுலுக்குகிறது. யாராவது புதிதாக வீட்டிற்குள் வரும்பொழுது இந்த பொம்மைகள் கீழே விழுகின்றன என்று கௌதம் சாது சொல்ல இன்ஸ்பெக்டரோ உங்கள் மகள் சொன்னாள் என்று கூறுகிறார். சாதுவோ அவர் என்னுடைய மகளா என்று புருவம் சுழிக்க இவர் தடுமாற அந்நேரம் அங்கு குடிக்க டீ கொண்டு வருகிறாள் அந்த இளம் நங்கை. சாது பலமாக சிரித்துக்கொண்டே தவறுதலாகப் புரிந்துகொண்டீர்கள் இவள் என் மனைவி என்று சொல்ல இன்ஸ்பெக்டரோ வழிகிறார். மன்னிப்பு கேட்கும் இன்ஸ்பெக்டரிடம் பரவாயில்லை எல்லோருமே இப்படித்தான் நினைக்கிறார்கள் என்றும் இவளிடம் எப்பொழுதுமே சொல்கிறேன் வலுவான வாழ்வைக் கொண்ட ஒருவனை தேர்ந்துகொண்டு இங்கிருந்து நகர்ந்து செல்ல வேண்டும் அவள் என்றும் அந்நியோன்யமாக உரையாடுகிறார். அப்படி என்னதான் என்னிடம் கண்டு கொண்டாளோ இவள் என்று ஆதங்கப்படும் சாது மேலும் எப்படியிருந்தாலும் படுக்கையில் நான் சிறப்பாகவே நடந்து கொள்கிறேன் என்று பேசி இன்ஸ்பெக்டரை திண்டாடச் செய்கிறார்.\nஅவள் கலந்து கொடுக்கும் டீயை பணிவுடன் வாங்கிக் கொள்கிறார் இன்ஸ்பெக்டர். டீயில் கூச்சம் நெளிகிறது. உளராதீர்கள் என்று இவள் தன் கணவனிடம் சொல்ல அவரோ உளறுதல் என்பது முதிய பருவத்தைப் பறைசாற்றுகிறது என்று மென்சோகத்துடன் சொல்கிறார். டீ குடிக்கிறீர்களா என்று கணவரிடம் தாம்பத்ய உணர்வுடன் கேட்க பைத்தியமா நீ என்று இருக்கையிலிருந்து எழுந்து நகர்ந்துபோய் விஸ்கியை கண்ணாடி டம்ளரில் ஊற்றுகிறார் மேலும் இது உள்ளே போனால் நாடி நரம்பெல்லாம் குதிரைக் கணக்காக திமிறும் என்று சொல்கிறார்.\nமெல்ல தன் பார்வையை மிசஸ்.சாதுவின் மேல் படரவிடும் இன்ஸ்பெக்டர் தெரியாமல் படும் அவளின் கால் தொடுகையால் தடுமாறி நிலைக்கு வருகிறார். விஸ்கியை விழுங்கும் கௌதம் சாதுவின் முன் கண்ணாடிப் பேழையில் வைக்கப்பட்டிருக்கும் அந்த கூழாங்கல் மீண்டும் நம் கண்ணில் படுகிறது. எழுபத்தெட்டு வயதாகிறது தனக்கு என்றும் திருப்தியுறுகிற தன் மனதிற்கு மிக நெருக்கமானவைகள் புகைப் பழக்கமும் குடிப் பழக்கமும் என்று சொல்லிவிட்டு பெருமூச்செறிகிறார் சாது. குடிக்கிறீர்களா என்று கேட்பவருக்கு டுயூட்டியில் இருக்கும்போது தான் குடிப்பதில்லை என்று கண்ணியம் காக்கிறார் இன்ஸ்பெக்டர் இந்திரா சன்.\nவந்த காரியம் என்னவோ என்று சாது கேட்க இவள் சாதுவை உற்றுப் பார்த்துவிட்டு தான் மேலே மாடிக்குப் போவதாகவும் காரியம் முடிந்தவுடன் மேலே வாருங்கள் என்றும் சொல்லிவிட்டு மாடிப்படியேறிப் போகிறாள். வந்த வேலையை மறந்துவிட்டு அவள் போவதையே லஜ்ஜையுடன் பார்க்கிறார் இன்ஸ்பெக்டர். தன் மனைவியை காமத்துடன் பார்க்கும் இன்ஸ்பெக்டரிடம் அழகாக இருக்கிறாள் இல்லையா என்று கேட்க டீ குடித்துக்கொண்டிருக்கும் இன்ஸ்பெக்டருக்கு புரையேறுகிறது. தன்னுடைய எல்லாப் படைப்பும் அவளால்தான் என்றும் அவளுடைய உடலின் ஒவ்வொரு இன்ச்சும் அதற்கு எடுத்துக்காட்டு என்றும் சிலாகிக்கிறார் சாது. உலகே என்னை ஒரு சிறந்த படைப்பாளி என்று கருதுகிறது. அவளில்லாமல் நான் வெறும் பூஜ்ஜியம் என்று சொல்கிறார்.\nவந்த காரணம் என்னவென்று தன் பாக்கெட்டிலிருந்து அர்ஜூனின் புகைப்படத்தை எடுத்து சாதுவிடம் காட்டி இவரைத் தெரிகிறதா என்று அதிகாரத் தோரணையில் வினவுகிறார் இன்ஸ்பெக்டர். அடையாளம் தெரியாமல் தடுமாறும் சாது பிறகு இவன் ஒரு மாடல் இல்லையா என்று பதில் தெரிவிக்க ஆமாம் இவன் பெயர் அர்ஜூன் என்று இன்ஸ்பெக்டர் சொல்கிறார். பாண்டவர்களில் மூன்றாமவன் என்று அழுத்தமும் நிதானமுமாக பேச ஆரம்பிக்கும் சாது. ஒரு மாதத்திற்கு முன்பு ஒரு அமர்விற்கு வந்திருந்தான் என்னுடைய கடைசி படைப்பு அவன் உருவில்தான் என்று சாது சொல்ல இன்ஸ்பெக்டரோ அதைத் தான் கண்டு கொண்டதாகச் சொல்கிறார். ஏன் என்னாவாயிற்று என்று பதில் தெரிவிக்க ஆமாம் இவன் பெயர் அர்ஜூன் என்று இன்ஸ்பெக்டர் சொல்கிறார். பாண்டவர்களில் மூன்றாமவன் என்று அழுத்தமும் நிதானமுமாக பேச ஆரம்பிக்கும் சாது. ஒரு மாதத்திற்கு முன்பு ஒரு அமர்விற்கு வந்திருந்தான் என்னுடைய கடைசி படைப்பு அவன் உருவில்தான் என்று சாது சொல்ல இன்ஸ்பெக்டரோ அதைத் தான் கண்டு கொண்டதாகச் சொல்கிறார். ஏன் என்னாவாயிற்று என்று சாது கேட்க அர்ஜூன் காணாமல் போய்விட்டதாகவும் கடைசியாக தங்களைப் பார்க்கத்தான் அவன் வந்ததாகவும் துப்பு என்று சொல்கிறார் இன்ஸ்பெக்டர்.\nதடுமாறும் சாது காணாமலா போய்விட்டான் என்று பாவமும் அதிர்ச்சியுமாக கேட்க இன்ஸ்பெக்டர் அவரை நெருங்கிவிட்ட தோரணையில் அசால்ட்டாக டீயை குடிக்கிறார். இப்பொழுதுதான் தனக்கும் எல்லாம் புரிகிறது என்கிற பாவனையில் இப்படி ஒருவேளை நடந்திருக்கலாம் என்று சாது இன்ஸ்பெக்டரிடம் எதையோ ஒன்றை கூற முயற்சிக்கிறார். இன்ஸ்பெக்டர் அவரை உற்று நோக்குகிறார்.\nஃப்ளாஷ்பேக் காட்சிகள் சாதுவின் வாய்ஸ் ஓவரில் தொடர்கிறது. அர்ஜூன் தனக்கான மாடலிங் கூலியைப் பெற வந்திருந்தான். ஒவர்கோட் அணிந்த அர்ஜூன் சாதுவின் வீட்டினுள் மாடலாக இயங்குகிறான். வேலையை முடித்துவிட்டு கிளம்புவனிடம் போய் நான் ஒரு முட்டாளைப் போல ஒரு விஷயத்தைச் சொன்னேன் என்று சாது சொல்லி முடிக்கவும் இன்ஸ்பெக்டரின் முகம் இறுகவும் அலைபேசி அடிக்கவும் சரியாக இருக்கிறது. இவள் ஒருத்தி மொபைல் போனை எல்லா இடங்களிலும் வைத்து விட்டுப் போய் விடுகிறாள் என்று அலைபேசியை கையிலெடுக்கிறார்; பாருங்க இன்னும் கொஞ்சம் நேரத்தில் கூச்சலிடுவாள் என்று இன்ஸ்பெக்டரின் ஆர்வத்தை இடை மறிக்கிறார். டீ மேஜையின் மீது வைக்கப்பட்டிருக்கும் கூழாங்கல்லை தொடப்போகும் இன்ஸ்பெக்டரை அக்கல்லில் மேஜிக் பவர் இருக்கிறது என்று சொல்லி எச்சரிக்கிறார் சாது. பயந்து பின் வாங்குகிறார் காவல் துறை ஆய்வாளர் இந்திரா சன்.\n எனும் சாதுவின் கேள்விக்கு தனக்கு பேசிக் லைன் மட்டும் தெரியும் என்று இன்ஸ்பெக்டர் சொல்ல சாதுவோ சிரிக்கிறார். இந்தக் கல்லிற்கும் பேசிக் லைன் கதையொன்று இருக்கிறது என்று கூற ஆரம்பிக்கிறார்.\nகடவுள்களின் தலைவன் இந்திரன் ஒரு குறும்புக்காரன் உங்களின் பெயரும் அதுவே என்னும் சாது தொடர்ந்து அவனிடமும் இப்படி மேஜிக் தன்மை கொண்ட ஒரு கல் இருந்தது என்றும் அந்தக் கல்லை வைத்துக் கொண்டு பல விஷமத்தனங்களை செய்து வந்தான் எனவும் சொல்ல ஆர்வம் மேலோங்க எப்படி என்று இன்ஸ்பெக்டர் இந்திரா சன் மும்முரமாக சாதுவிடம் கதை கேட்க ஆரம்பிக்கிறார்.\nஅந்தக்கல்லை வைத்துக்கொண்டு நினைத்த மாத்திரத்தில் நினைத்த உருவை எடுக்கலாம் என்று சொல்லிக் கொண்டிருக்கும் சாதுவை இடைமறித்து அப்படீன்னா நீங்க சொல்றதப் பார்த்தா இந்தக் கல்லை வைத்து நீங்கள் யாரை வேண்டுமானாலும் உருமாற்றம் செய்யலாம் என்றா சொல்கிறீர்கள் என்று மையத்திற்கு வருகிறார். நான்தான் ஆரம்பத்திலேயே சொன்னேனில்லையா நீங்கள் நான் சொல்லும் கதையை நம்பப் போவதில்லையென்று - இது சாது. இதைக்கேட்டுவிட்டு இதற்கும் அர்ஜூனுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறார் இன்ஸ்பெக்டர். அர்ஜூன் தான் சிலபேரிடமிருந்து தப்பிப்பதற்காக இந்தக் கல்லைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென்று என்னிடம் மன்றாடினான்; மேலும் இன்றைய தினத்தைப் போலவே அன்றைக்கும் இந்த பாழாய்ப் போன மொபைல் அடித்தது; அதைக் கொண்டு போய் என் மனைவியிடம் மாடியில் கொடுத்துவிட்டு வருவதற்குள் அர்ஜூன் போய் விட்டிருந்தான்;\nஇந்தக் கல் மட்டும் இங்கேயே தரையில் இருந்தது என்று சாது சொல்ல அப்படீன்னா அர்ஜூன் இந்த மந்திரக்கல்லை வைத்து வேறொரு ஆளாக உருமாறிவிட்டான் என்றா சொல்கிறீர்கள் என்று இன்ஸ்பெக்டர் கேட்க அப்படித்தான் இருக்கணும் என்று சாது பதில் சொல்கிறார். அவனுக்காக வருத்தப்பட்டு அமர்ந்திருக்கும் சாதுவை நக்கலாக உற்றுப் பார்க்கும் இன்ஸ்பெக்டர் இருக்கையிலிருந்து சடாரென்று எழுந்து சாதுவை அர்ஜூனை கொலை செய்த குற்றத்திற்காக சந்தேகத்தின் பேரில் கைது செய்கிறேன் என்று சொல்ல நீங்கள் நான் சொல்வதை நம்புவேனென்றல்லவா ஆரம்பத்தில் சொன்னீர்கள் என்று சாது சொல்ல அதற்கு இன்ஸ்பெக்டர் நக்கலாக நம்புகிற மாதிரி சொல்லியிருந்தால் நம்பியிருப்பேன் என்று கடுப்பாகிறார். இது ரொம்ப அதிகம் என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே மாடியிலிருந்து சாதுவின் இளம் மனைவியின் குரல் மொபைலைக் கேட்டு கதறுகிறது.\nநம்பவில்லையெனில் நீங்களே ஒரு முறை முயற்சி செய்யுங்களேன் என்று இன்ஸ்பெக்டரை உசுப்பேற்றுகிறார் சாது. இந்தக் கல்லை கையில் வைத்துக்கொண்டு நான்தான் நீங்கள் என்று நினைத்துக் கொள்ளுங்கள் பிறகு இந்த மொபைல் போனை என் மனைவியிடம் கொண்டு போய் கொடுங்கள் என்று சொல்லும் சாதுவை இளக்காரமாக பார்க்கும் இன்ஸ்பெக்டரிடம் என்ன பயமாக இருக்கிறதா என்று தீர்க்கமாகப் பார்க்கிறார் சாது.\nமந்திரக்கல் சாதுவின் கையிலிருந்து இன்ஸ்பெக்டரின் கைக்கு இடம் பெயர்கிறது. மெல்லிய பதற்றத்துடன் மாடிப்படியேறிப் போகிறார் இன்ஸ்பெக்டர். ஜன்னல்களைக் கடக்கும்போது உள் அறையில் சாதுவின் மனைவி ஒயிலாக படுக்கையில் சாய்ந்து சஞ்சிகையொன்றை புரட்டிக் கொண்டிருக்கிறாள். இவருக்கு நடையில் எதிர்ப்பும் மிடுக்கும் கூடுகிறது. மொபைலை சீக்கிரம் கொண்டு வாருங்கள் என்கிற தொனியில் கைநீட்ட தன் உடலைக் கண்ணாடியில் கௌதம் சாதுவாக காண்கிறார் இன்ஸ்பெக்டர் இந்திரா சன். அந்த போலீஸ்காரனோடு அப்படி என்ன விஷயம் இவ்வளவு நேரம் எடுத்திருக்கிறது உங்களுக்கு என்று கொஞ்சலான தொனியில் சாதுவாக உருமாறிப்போன இன்ஸ்பெக்டரிடம் உரையாடுகிறாள் மிஸஸ்.சாது. மீண்டும் மீண்டும் கண்ணாடியில் முகம் பார்த்து குழம்பித் தடுமாறுகிறார் இன்ஸ்பெக்டர் இந்திரா சன். படுக்கைக்கு அழைக்கும் மிஸஸ்.சாது இன்ஸ்பெக்டரை மல்லாக்கப்போட்டு அவரின் மார்பில் சாய்கிறாள். படுக்கையில் சரியில்லையென்று ஏன் நீங்கள் அந்த இன்ஸ்பெக்டரிடம் பொய் சொன்னீர்கள் என்று கொஞ்சலான தொனியில் சாதுவாக உருமாறிப்போன இன்ஸ்பெக்டரிடம் உரையாடுகிறாள் மிஸஸ்.சாது. மீண்டும் மீண்டும் கண்ணாடியில் முகம் பார்த்து குழம்பித் தடுமாறுகிறார் இன்ஸ்பெக்டர் இந்திரா சன். படுக்கைக்கு அழைக்கும் மிஸஸ்.சாது இன்ஸ்பெக்டரை மல்லாக்கப்போட்டு அவரின் மார்பில் சாய்கிறாள். படுக்கையில் சரியில்லையென்று ஏன் நீங்கள் அந்த இன்ஸ்பெக்டரிடம் பொய் சொன்னீர்கள் என்று செல்லக் கோபம் கொண்டு உருமாறிய இன்ஸ்பெக்டரைத் தீண்டுகிறாள். சீக்கிரம் அந்த இன்ஸ்பெக்டரை அனுப்பிவிட்டு வாருங்கள் போங்கள் போங்கள்ள் போங்கள்ள்ள் என்று காமவிருந்தை விளம்புகிறாள். அதிர்ச்சியும் மகிழ்ச்சியுமாக அறையை விட்டு வெளியே வரும் இன்ஸ்பெக்டர் வந்த காரியத்தையே மறந்து போகிறார். தன் கை கால்களை சம்சயத்துடன் தடவிப் பார்த்துக் கொள்கிறார். காமம் ஊற்றெடுக்க மிஸஸ்.சாதுடன் கூடி முயங்க தினவோடு உள் நுழைகிறார். அவளும் இவரை இரு கை விரித்து அணைக்க ஆலிங்கனம் அரங்கேறுகிறது.\nதிரை இருள்கிறது. மீண்டும் அதே காலிங் பெல் ஓசை. அதே சாது ஒரு ஆண் மாடலிடம் தன் படைப்புத் தேவையை விளக்கிக் கொண்டிருக்க யாரும் கேட்க முடியாத ஈன ஸ்வரம் மெல்ல பெருக்கெடுத்து அதிக டெசிபலில் கேட்கத் துவங்குகிறது. மிஸ்டர்.சாது நான் இங்கிருந்து வெளியேறவேண்டும் என்னை விடுவியுங்கள் என்று மனிதர்கள் கேட்க முடியாத டெசிபல் சத்தத்தில் கதறி கூப்பாடு போடுகிறார். கதறலின் உதறலில் மேஜை மேலிருந்து அடுத்தடுத்து நிற்க வைக்கப் பட்டிருக்கும் பொம்மைகளின் வரிசையிலிருந்து கீழே விழுகிறார் பொம்மையாய்ச் சமைந்துபோன இன்ஸ்பெக்டர் இந்திரா சன்.\nமீண்டும் சாதுவின் குரல். இது ஒரு இனம்புரியா பித்து மர்மம்; ஒவ்வொரு தடவையும் யாராவது புதிதாக இவ்வீட்டிற்கு வந்தால் இப்பொம்மைகள் கீழே விழுகின்றன என்று சாது சொல்லிக் கொண்டிருக்கும்போதே அவரின் மனைவி கீழே விழுந்த இன்ஸ்பெக்டர் பொம்மையை எடுத்து மீண்டும் டேபிளின் மீது சமைந்துபோன பொம்மைகளின் வரிசையில் நிற்க வைக்கிறாள். வைக்கும் முன் சாதுவிடம் காட்ட அவரோ என்னுடைய கடைசிப் படைப்பு என்று பெருமை கொள்கிறார். எல்லாம் இவளால்தான் என்று சொல்லிவிட்டு டீ குடிக்கிறாயா என்று கேட்டுவிட்டு அகல்யா ஒரு கப் சாயா என்று சொல்லி விருந்தோம்பலுக்கு தயாராகிறார் கௌதம் சாது. மற்றவர்களைப் போல் குறும்பு செய்யாமல் அடங்கியிரு என்று பொம்மை இன்ஸ்பெக்டரை மௌன மொழியில் அதட்டிவிட்டு மாதவிப் பொன் மயிலாள் தோகை விரிக்கிறாள். இன்ஸ்பெக்டர் தயவு செய்து என்னைக் காப்பாற்று என்று சொல்லி விருந்தோம்பலுக்கு தயாராகிறார் கௌதம் சாது. மற்றவர்களைப் போல் குறும்பு செய்யாமல் அடங்கியிரு என்று பொம்மை இன்ஸ்பெக்டரை மௌன மொழியில் அதட்டிவிட்டு மாதவிப் பொன் மயிலாள் தோகை விரிக்கிறாள். இன்ஸ்பெக்டர் தயவு செய்து என்னைக் காப்பாற்று\nஅகல்யா என்று ஆங்கிலத்தில் டைப் ரைட்டிங் செய்யப்படும் எழுத்துக்கள் திரையில் தோன்றுகின்றன. மீண்டும் அதே காலிங் பெல் ஓசை அடிக்கக் கேட்கிறது.\nஏனோ இக்கவிதை இக்கணம் மனதில் மெல்ல மேலெழுகிறது.\nபாறைகளில் பள்ளம் பறித்தெஞ்சிய நீர்\nமுனைகளில் வழுக்கி விழுகிறது அருவியாய்\nகுருதி படர்ந்த வாயை நனைக்கிறது\nவலஞ்சுழிப் புயல் நிலத்தை அசைக்கிறது\nமிஸ்டர்.சாது என்கிற கௌதம் சாதுவாக சௌமித்ர சட்டர்ஜியும், மிஸஸ்.சாது என்கிற அகல்யாவாக ராதிகா ஆப்தேவும், இன்ஸ்பெக்டர் இந்திரா சன்னாக டோட்டா ராய் சௌதுரியும் நடிப்பில் அக உணர்வுகளை நுட்பமாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இக்குறும்படத்தில் சப்தங்கள் கலை நேர்த்தியுடன் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஒளிப்பதிவுக் காட்சிக் கோணங்களும் இசையும் ஆடை வடிவமைப்பும் செட் பொருட்களும் மிக கவனமாகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. பதினான்கு நிமிட குறும்படம் ஆண்களை மயக்கி ஏமாற்றும் வித்தையை பாடு பொருளாகக் கொண்ட ஒரு எளிமையான சஸ்பென்ஸ் திரில்லர் என்று சொல்லலாம். அதே வேளையில் இக்குறும்படத்தின் கதை ராமாயணத்தில் வரும் அகல்யையின் கதையை ஒத்திருப்பதாக சொன்னாலும் அது விவாதத்துக்குரியதே.\nஅறியாமையால் காமத்தில் ஈடுபடும் இளநங்கை அகல்யாவை மையக் கதாபாத்திரமாகக் கொண்ட இக்குறும்படம் இயக்குனர் சத்யஜித்ரே எழுதிய ப்ரொஃபசர் ஷோன்கு அண்ட் ஸ்ட்ரேஞ்ச் டால்ஸ் ( Professor Shonku And Strange Dolls ) என்ற சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது.\nகாமத்தையும் வன்முறையையும் அடிப்படையாகக் கொண்ட அகல்யா என்ற இக்குறும்படத்தின் இயக்குனர் பெயர் சுஜோய் கோஷ். 13 வயதில் லண்டனுக்கு குடிபெயர்ந்த சுஜோய் கோஷ் பொறியியல் பட்டப் படிப்பும் வியாபார நிர்வாகத்தில் உயர் பட்டப்படிப்பும் முடித்துவிட்டு ரியூட்டர்ஸ் மீடியா நிறுவனத்தில் தென்னாசியாவின் உயரதிகாரியாக பணிபுரிந்திருக்கிறார். கஹானி மற்றும் Te3n போன்ற திரைப்படங்களை இயக்கியதன் மூலம் மெயின் ஸ்ட்ரீம் சினிமாவின் குறிப்பிடத் தகுந்த இயக்குனரானார்.\nRadhika Apte Ahalya அகல்யா ராதிகா ஆப்தே\nஸ்டண்ட் மாஸ்டர் மகன் திருமண ஆல்பம்\nநாயகி இஷாரா நாயர் - சாஹில் திருமணம்\nசச்சின் பிறந்த நாள் ரசிகர்கள் வாழ்த்து\nசஞ்சு படத்தின் டீஸர் வெளியீடு\nரயில் மோதி 11 மாணவர்கள் பலி\nஜெயகாந்தன் 84ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா\nதலையில் காயம் ஆனால் காலில் ஆபரேசன்\nஇளவரசர் தம்பதியருக்கு 3வது குழந்தை பிறந்தது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kopunniavan.blogspot.com/2012_08_05_archive.html", "date_download": "2018-04-26T13:12:25Z", "digest": "sha1:7YTXCYUSH6YPQ3WXGL776CKGQSCD2XJ3", "length": 14016, "nlines": 205, "source_domain": "kopunniavan.blogspot.com", "title": "கோ.புண்ணியவான்: 8/5/12 - 8/12/12", "raw_content": "ஒவ்வொருமுறையும் நூல்கள் திறக்கப்படும்போது- நன்றிக் கடனாக அவை உங்களை அகலத் திறந்துவிடுகினறன. (ko.punniavan@gmail.com)\nபிச்சைப் பாத்திரம் கதை ஒரு பார்வை\nபாவையின் ‘பிச்சைப் பாத்திரம் சிறுகதை மலேசியாவில் அரிதாக சொல்லப்படும் கதை வகைமையில் ஒன்று. ஏறத்தாழ துறவறமே இல்லறத்தைவிட மேலானது என்று சொல்ல வந்த கதை. கிட்டதட்ட 100 விகிதம் நடைமுறை வாழ்க்கையையைத் திரும்பத் திருமப படம்பிடித்துக்காட்டும் வரட்சியான கதைக் களத்திலிருந்து சற்று விலகி துறவு பற்றிப்பேச வந்ததை சற்று ஆறுதல் தருகிறது. அதற்காகப் பாராட்டுகள்.\nஏகபோக சொத்துக்கும் அதிபதியாகப் போகிறவனின் மகன் துறவறத்தில்தான் தான் முழுமையடைவதாகச் சொல்வதை நிதானமாக , சொற்ப வார்த்தைகளுக்குள் சொல்வது வாசகமனத்தை கவர்கிறது. ஆனால் மகன் துறவறம் மேற்கொள்வதற்கான பின்புலக் கற்பிதம் எங்கேயும் காட்டப் படவில்லை. வாசகனே இட்டு நிரப்பிக்கொள்ளட்டும் என்று வெற்றுக்கோடுகளை விட்டிருக்கலாம் கதாசிரியர் .ஆனாலும் சொல்ல வேண்டியதைச் சொல்லியே இருக்கவேண்டும் .இட்டு நிரப்புவதற்கான வெற்றுக்கோடுகள் கதையில் காணவில்லை. மகன் மெய்ஞ்ஞானத் தேடலுக்குள் நுழைந்து விட்ட பின்புலம் இன்னொரு கதையாக நீண்டுவிடுமோ என்று நினைத்து கவனமாகத் தவிர்த்திருக்கலாமோ என்னவோ தெளிவாகக் காட்டியிருந்தால் கதை மேலும் வலுவாகியிருக்கும்.\nபணமும் புகழும் புரளும் சுகபோக வாழ்க்கையை அனுபவித்தவன் சந்தடி சத்தமில்லாமல் துறவறத்துக்குத் தாவுவது சாத்தியாமா என்ன எங்கிருந்து கிடைத்தது அந்தத் திடீர் மெய்ஞ்ஞான ஒளி\nநொடி நேரம் கூட விரையமாக்காமல் வணிகம் வணிகம் என்றே உழன்று, கோடிக்கனக்கான சொத்துக்கு அதிபதியானவர் தன் மகனின் ‘மெய்ஞ்ஞானத் தேடல் ’ குறித்து கவலையுறுகிறார். அதிலிருந்து அவனை மீட்கும் வழி தெரியாமல் விழி பிதுங்கும் நிலை கதையில் நிறைவுற காட்சிப்படுத்தப் படுகிறது. தன்னுடைய வாகன ஓட்டுனரின் சொற்கள் இடைச்செருகளாவதுதான் கொஞ்சம் உறுத்துகிறது. தன் எஜமானரின் மனச் கிலேசங்களை உன்னித்தவர், இப்போதுள்ள இளைஞர்கள் வன்மமான முறையில் தங்கள் வாழ்க்கையை விணாக்கிக்கொள்கிறார்கள், அதற்கு உங்கள் மகனின் மெய்ஞ்ஞானத் தேர்வு வாழ்வு, எவ்வளவோ மேல் என்று கூறியதும் எஜமானருக்கும் அவர் சொல்வது சரிதான் என்ற வெளிச்சம் கிடைக்கிறது .. இது மிகச்சாதாரண கருத்து. மகனை மீட்டெடுக்க வகையறியாமல் தவிக்கும் மனத்துக்கு இந்த வசனமே அவரின் சிந்தனையை வழி மறித்து புதிய தெளிவைக்காட்டுவதாகச் சொல்லி முடிக்கிறார். மகனைப் ‘பறிகொடுத்தவர் – அவனை மீட்கும் உபாயத்துக்காக்ச் சிந்தித்தவர் அர்ச்சுனரை மீட்க உபதேசம் சொல்ல வந்த கண்ணனாக கார் டிரைவரைக் காட்டுகிறாரா என்ன எல்லா சாரதிகளும் பார்த்தசாரதியாகிவிட முடியுமா என்ன\nபரம் என்ற பாத்திரம் இக்கதைக்குள் நுழைகிறது . இது ஈரிழையில் இயங்கும் கதை யென்றாலும் ஒரு கதைப்பொருளையே சொல்ல வந்த சிறுகதை. இந்த உத்தியில் கதை சொல்ல முயன்றதற்கும் பாராட்டுகள்.. ஓவியத்தில் இதனை கோலாஜ் முறை என்று சொல்வார்கள். ஆனால் பரமு தெருவுக்குத் தள்ளப்பட்ட நிலையையும், கோடீஸ்வரனின் மகன் பிச்சைப் பாத்திரத்தை தானே முன்வந்து ஏற்றுக்கொண்ட நிலையையும் கொஞ்சம் ஒப்பீட்டு நோக்கில் பார்க்கத்தான் வேண்டும். பரம் நிராகரிக்கப் பட்டிருக்கிறார். விளிம்பு நிலை வாழ்க்கைக்குள் வலிந்து தள்ளப்பட்டவர். ஆனால் பணம் படைத்தவனின் மகன் மெய்ஞ்ஞானத்தேடலை தானே விரும்பி ஏற்றுக்குக்கொண்டிருக்கிறார். வாழ்வு சூரையாடப் பட்டு நீராகரிக்கப்பட்ட ஒருவரின் கதையும், லௌகீக வாழ்வை நிராகரித்துவிட்ட இன்னொருவரின் கதையும் இறுத்திப்புள்ளியில் –ஒட்டியதா என்று தெரியவில்லை. ஆனால் முயன்றிருக்கிறார்.\nகதையில் சமிக்ஞை விளக்கைக் குறியீடாகக்காட்டுவது கதை நிகழ்தலுக்குள் ஒன்றி விடுகிறது.\nகதை சொல்லும் கலை பாவைக்கு எப்போதுமே சீராகவே வருகிறது. இக்கதையும் அதற்கொரு சான்று.\nஇது என் பார்வை மட்டுமே.\nகதை எழுத முன்வரும் புதியவர்களையும் கை நீட்டித் தூக்கிவிடவேண்டும் என்ற தார்மீகச் நோக்கத்துக்காகவே இதனை எழுதுகிறேன். நீதிபதிகளின் நடுவு நிலைக்கும், என் கலா ரசனைக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்ற தினக்குரலின் முடிபுக்கு நானும் ஒத்த கருத்துடையவன்-அவ்வளவே.\nநிராகரித்தலும், நிராகரிக்கப்படுதலும்- பிச்சைப் பா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://puthu.thinnai.com/?p=6182", "date_download": "2018-04-26T13:35:32Z", "digest": "sha1:DSIDJQKNZ4SHRMZKI5KBNALTT7MZKNZN", "length": 12516, "nlines": 77, "source_domain": "puthu.thinnai.com", "title": "வாசிப்பு அனுபவம் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nவெகுநாட்களுக்குப் பிறகு போரூர் அரசு நூலகத்திற்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மாற்றுவது குறித்து குய்யோ முறையோ என்று கூக்குரலிடம் தமிழ் சமுதாயம் கைவிரல்களின் எண்ணிககையில் தான் நூலக பருவ ஏடுகள் அறையில் இருந்தன.. வாசிப்பும் அனுபவமும் அந்த லட்சணத்தில் இருக்கிறது. அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை.. வந்திருந்தவர்கள் ஒருவர் கையில் சிறு துண்டு காகிதம் வைத்துக் கொண்டு பேனாவை வேறொரு வாசகரிடம் கடன் வாங்கிக் கொண்டு எம்ப்ளாயிண்ட் நியூஸ் வாசித்து குறிப்பெடுத்துக் கொண்டிருந்தார். பிள்ளைக்கோ பேரனுக்கோ..\nவந்திருந்தவர்கள் யாரும் தீவிர வாசகர்கள் இல்லை என்பது அவர்கள் புரட்டும் பாணியிலேயே தெரிந்தது. வீட்டுச் சாவி மனைவியிடம் இருக்கும்.. அல்லது டியூஷன் போன குழந்தையைக் கூட்டிப் போக இன்னும் ஒரு மணி நேரம் ஆகும் என்பது போன்ற தலையாயக் கடமைகள் உள்ளவர்களே அங்கு வருகிறார்கள் என்பது எனக்கு புரிந்தது.\nநான் இருந்த ஒரு மணி நேரம் வரை யாரும் புத்தகம் எடுக்கவும் இல்லை வாங்க வரவும் இல்லை.. பணி யில் இருந்த இளம்பெண் அடிக்கடி கடிகாரத்தைப் பார்க்கவும் தலையைச் சொறிந்து கொள்ளவுமே நேரத்தைச் செலவிட்டார். நூலகர்கள் சிறந்த வாசகர்களாக இருப்பது நூலகத்தின் ஆரோக்கியத்தைக் கூட்டும் என்று யாரோ சொன்னது எனக்கு நினைவுக்கு வந்தது. இது கூலிக்கு மாரடிக்கிற கூட்டமல்லவா என்று ஜெயகாந்தன் பாணீயில் யோசித்தேன்.\nநான் போனதே சில இலக்கிய இதழ்கள் கண்ணில் படாதா என்கிற ஆதங்கத்தில்.. இப்போதெல்லாம் இதழ்களை வாங்க முடிவதில்லை.. 17, 20 என்று விலையேறி எட்ட முடியாத உயரத்தில் இருக்கின்றன இதழ்கள்.\nயாரும் சீண்டாத ஆனந்தவிகடனை எடுத்தேன்.. வண்ணநிலவனின் சிறுகதை.. அருமை.. வயதான தாய், வசதியில்லாத தங்கை, மூன்று கடை வருமானம். ஒருகடை வருமானத்தையாவது கேட்க மனைவி தூண்ட அசலூருக்கு செல்லும் கணவன் கதை நாயகன்.. கடைசியில் அம்மாவுக்கு பழம், தங்கைக்கு பட்சணம் என்று வாங்கித் தந்துவிட்டு அவள் கொடுத்த வடையை தின்று விட்டு எதுவும் கேட்காமல் திரும்பும் அண்ணன்.\nஉயிர்மை நாலைந்து புத்தகங்களூக்கிடையில் புதைந்து.. தேடி எடுத்து புரட்டினேன். சுகுமாரனின் ‘ சர்ப்பம் ‘ அட மனிதருக்கு என்ன நகைச்சுவை.. மனிதர்களைக் கண்டு நடுங்கும் வயதான சர்ப்பம், அதன் எண்ண ஓட்டம், எல்லாமே மலையாள வாடையோடு வரும் நல்ல தமிழ் வர்ணனை.. இந்த வருடத்தில் சிறந்த கதைகளுள் ஒன்றாகக் கூட ஆகலாம்.\nஇன்னமும் எம்ப்ளாயிண்ட் ஆள் எழுதிக் கொண்டிருக்கிறார்.. டியூஷன் ஆசாமி புரட்டிக் கொண்டிருக்கிறார்.. நிறைவுடன் வெளியேறுகிறேன் நான்.. மணி ஏழாகி விட்டது.. நூலகம் மூடப்பட வேண்டும்.\nSeries Navigation முள் எடுக்கும் முள்இதுவும் அதுவும் உதுவும் – 5\nமலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை – 1\nதமிழ் பெண் கவிஞர்கள் – ஆங்கிலத்தில் – ஆதி மந்தியார் முதல் உமா மஹேஸ்வரி வரை\nஅர்ஜண்ட் வெயிட் லாஸ்.. ஒரு யாத்ரா டிக்கட் ப்ளீஸ்..\nபழமொழிகள் கூறும் உதவி எனும் வாழ்க்கை நெறி\nஜென் ஒரு புரிதல் – பகுதி 19\nஇதுவும் அதுவும் உதுவும் – 5\nஇந்திய அணுமின்சக்தித் தொழில் நுட்பம் முதிர்ச்சி யானதா அணுவியல் இயக்குநர் முதிர்ச்சி பெற்றவரா \nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கோடாரியில் தகர்ப்பாய் (கவிதை -52 பாகம் -1)\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) திருமணப் பாதையில் (கவிதை – 50 பாகம் -5)\nபஞ்சதந்திரம் தொடர் 18 சமுத்திரமும் நீர்க்குருவியும்\nதமிழ் விக்கிப்பீடியா ஒரு ஊடகப் போட்டி\nதோள்களில் அமர்ந்திருக்கும் மரணத்தின் தூதுவன்\nமுகம்மது யூனுஸ் அறிஞர் அண்ணாவை ஹாங்காங்கில் சந்தித்தது பற்றிய உரை\nபிரான்சு கம்பன் கழகத்தின் 10 -ஆம் ஆண்டு விழா\nநானும் பிரபஞ்சனும் கட்டுரை குறித்து சில கருத்துகள்:\nமுன்னணியின் பின்னணிகள் – 14 சாமர்செட் மாம்\nமூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 16\nPrevious Topic: இதுவும் அதுவும் உதுவும் – 5\nNext Topic: ஜென் ஒரு புரிதல் – பகுதி 19\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/karthi-speech-about-hamalhassan-political-entery-117111400025_1.html", "date_download": "2018-04-26T13:43:03Z", "digest": "sha1:CJX4Q32ZMHXJJYZ5QJKWYIX4BNZRVIEX", "length": 11745, "nlines": 157, "source_domain": "tamil.webdunia.com", "title": "“கமல்ஹாசன் நல்ல அரசியல்வாதியா வரலாம்” - கார்த்தி | Webdunia Tamil", "raw_content": "\nவியாழன், 26 ஏப்ரல் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\n“கமல்ஹாசன் நல்ல அரசியல்வாதியா வரலாம்” - கார்த்தி\n‘கமல்ஹாசன் நல்ல அரசியல்வாதியா வரலாம்’ என நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.\nவினோத் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் ‘தீரன் அதிகாரம் ஒன்று’. ரகுல் ப்ரீத்சிங் ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தில், போலீஸ் அதிகாரியாக கார்த்தி நடித்துள்ளார். நாளிதழ் ஒன்றில் வெளியான உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. கார்த்திக்கு தெலுங்கிலும் நல்ல மார்க்கெட் இருப்பதால், ‘காக்கி’ என்ற பெயரில் அங்கு இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது. இதன் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது.\n’ என கார்த்தியிடம் கேட்க, “எனக்கு கல்யாணம் ஆகிவிட்டது. அரசியலுக்கு வர எனக்கு நேரமில்லை” எனப் பதிலளித்தார். கமல்ஹாசன் மற்றும் விஷாலின் அரசியல் பிரவேசம் குறித்த கேள்விக்குப் பதிலளித்த கார்த்தி, “விஷாலுக்கு இன்னும் திருமணம் நடக்கவில்லை. எனவே, அவர் அரசியலுக்கு வரலாம். கமல்ஹாசன் சார் நல்ல அரசியல்வாதியா வரலாம். அவர் ஒரு விஷயத்தைப் பற்றி பேசினாலோ, செய்தாலோ... அதைப்பற்றி முழுமையா ஆராய்ச்சி பண்ணிட்டுத்தான் இறங்குவார். அவர் முடிவு பண்ணி இறங்கிட்டா, அதிலிருந்து பின்வாங்க மாட்டார். அவர் அரசியலுக்கு வந்தால், மக்கள் அவரை எளிதில் அணுக முடியும்னு நம்புறேன்” என்றார்.\nபிரகாஷ்ராஜுவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஆனந்தராஜ்...\nரஜினி கமல் அரசியலுக்கு வர கூடாது - பிரகாஷ்ராஜ்\nமம்தாவிற்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்த நடிகர் கமல்ஹாசன்\nசோ இடத்தை கமல்ஹாசன் நிரப்புவார்: ஆனந்தராஜ்\nமம்தா பானர்ஜி சந்திப்பில் நடந்தது என்ன\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilsextips.com/tag/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-04-26T13:46:39Z", "digest": "sha1:OREDBDEAVQRS227Q3BIO3F4VZGHQF3LA", "length": 7876, "nlines": 110, "source_domain": "www.tamilsextips.com", "title": "Category உணவு உடல் – TamilSextips.com – Tamil Doctor – Tamil Sex tips.com – tamilsex – tamil kamasutra – tamilsex.com", "raw_content": "\nசெக்ஸ்சை முழுமைப்படுத்தி, திருப்திப்படுத்துவது எது....\nகுஷியான உறவுக்கு சரியான இடம் சமையலறை தானாம்\nஅதிகாலையில்தான் செக்ஸ் விளையாட்டுக்களுக்கு கூடுதல் கிக் \nஉடலுறவு ஆசையை தூண்டும் உணவுகள்\nஎக்ஸ்ட்ரா செக்ஸை விரும்பும் இந்தியப் பெண்கள்\nஆண் குழந்தையை பெற தீர்மானிக்கும் உணவுகள்\nஆண் குழந்தைக்கு ஆசைப்படாத பெண்கள் யார்தான் இல்லை அப்படி ஆண் குழந்தை பெற விரும்பும் More...\nமுள்ளங்கி டிப்ஸ் முள்ளங்கியை அதிகம் சாப்பிட்டால் தோல் நல்ல பளபளப்பாக மாறும். More...\nஉங்கள் சமையல் அறையில் இருக்கிறது “வயாகரா”\nவாழ்வில் அனைத்து வளங்களைப் பெற்றிருந்தும், இல்லற சுகம் என்ற உன்னதத்தை முழுவதும் More...\nகருப்பையை வலுவடையச்செய்யும் துரியம் பழம்\nநறுமண வாசனையுடைய துரியன் பழம், மிகுந்த இனிப்பு சுவையை கொண்டுள்ளது. இந்த துரியன் More...\nபடுக்கை அறையை சூடாக்கும் பரம இரகசியம் வெந்தயத்தில் உள்ளது\nநாம் அன்றாடம் சமையலில் பாவிக்கும் ஒரு திரவியம் வெந்தயம். வாசனைக்காகவும், சுவைக்காகவும் More...\nஎளிதில் தொப்பையை குறைக்கும் 15 சிறந்த வழிகள்\nவயிற்றினைச் சுற்றி தொப்பை வருவதற்கு முக்கிய காரணம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை More...\nஉடல் எடை குறைய விரும்புபவர்கள்\n* உடல் எடை குறைய விரும்புபவர்கள் இரவில் பால் அருந்திவிட்டு உறங்குவதை தவிர்க்க More...\nஉண்ணும் உணவும், உடுத்தும் உடையும் மனதை உற்சாகப்படுத்தும் பெட்ரூம்\nஉண்ணும் உணவும், உடுத்தும் உடையும் ஒரே மாதிரி இருந்தாலே சில சமயங்களில் போராடித்து More...\nஉறவுக்கு போகும் முன் ஃப்ரெஞ்ச் ப்ரைஸ் சாப்பிடாதீங்க\nசில உணவுகள் உற்சாகத்தை அதிகரிக்கும்… சில உணவுகள் உற்சாகத்தை கட்டுப்படுத்தும்… More...\n ஒயின் குடிக்கும் போது இதெல்லாம் முயற்சித்துப் பாருங்க…\nஒயின் குடிப்பதென்பது ஒரு கலை. அதனை புரிந்து செயல்படுத்த சிறிது காலம் எடுக்கும். More...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.techtamil.com/entertainment/story/career-critics-story/", "date_download": "2018-04-26T13:15:35Z", "digest": "sha1:EHXVLIZYGUJZM3F6II5ACKCQ6TXNU6U2", "length": 8970, "nlines": 120, "source_domain": "www.techtamil.com", "title": "குறையா நிறையா? – TechTamil News", "raw_content": "\nContact / அறிமுகம் / தொடர்புக்கு\nஒரு ஏழை ஒரு கிராமத்தில் வாழ்ந்து வந்தான். அவன் தன் வீட்டுத் தேவைக்காகத் தினமும் ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.\nதண்ணீர் எடுத்து வர அவன் இரண்டு பானைகளை வைத்திருந்தான். அந்தப் பானைகளை ஒரு நீளமான கழியின் இரண்டு முனைகளிலும் தொங்க விட்டு, கழியைத் தோளில் சுமந்து செல்வான்.\nஇரண்டு பானைகளில் ஒன்றில் சிறிய ஓட்டை இருந்தது. அதனால் ஒவ்வொரு நாளும் வீட்டிற்கு வரும் பொழுது, குறையுள்ள பானையில் பாதியளவு நீரே இருக்கும்.\nகுறையில்லாத பானைக்குத் தன் திறன் பற்றி பெருமை. குறையுள்ள பானையைப் பார்த்து எப்பொழுதும் அதன் குறையைக் கிண்டலும் கேலியும் செய்து கொண்டே இருக்கும்.\nஇப்படியே இரண்டு வருடங்கள் கழிந்து விட்டன. கேலி பொருக்க முடியாத பானை அதன் எஜமானனைப் பார்த்துப் பின் வருமாறு கேட்டது.\n என் குறையை நினைத்து நான் மிகவும் கேவலமாக உணர்கிறேன். உங்களுக்கும் தினமும் என் குறையால், வரும் வழியெல்லாம் தண்ணீர் சிந்தி, உங்கள் வேலைப் பளு மிகவும் அதிகரிக்கிறது. என் குறையை நீங்கள் தயவு கூர்ந்து சரி செய்யுங்களேன்”\n நாம் வரும் பாதையில், உன் பக்கம் இருக்கும் அழகான பூச்செடிகள் வரிசையைக் கவனித்தாயா உன்னிடமிருந்து தண்ணீர் சிந்துவது எனக்கு முன்னமே தெரியும். அதனால்தான் வழி நெடுக பூச்செடி விதைகளை விதைத்து வைத்தேன். அவை நீ தினமும் சிந்திய தண்ணீரில் இன்று பெரிதாக வளர்ந்து எனக்கு தினமும் அழகான பூக்களை அளிக்கின்றன. அவற்றை வைத்து நான் வீட்டை அலங்கரிக்கிறேன். மீதமுள்ள பூக்களை விற்றுப் பணம் சம்பாதிக்கிறேன்”\nஇதைக் கேட்ட பானை கேவலமாக உணர்வதை நிறுத்தி விட்டது. அடுத்தவர் பேச்சைப் பற்றிக் கவலைப் படாமல் தன் வேலையைக் கருத்துடன் செய்யத் தொடங்கியது\nநீதி : அடுத்தவர் பேச்சைப் பற்றிக் கவலைப் பட்டால், நாம் எந்த வேலையையும் செய்ய முடியாது.\n\"ஏம்பா இந்த கம்ப்யூட்டர் படிச்சவங்க எல்லாம் நிறைய சம்பளம் வாங்கிட்டு, பந்தா பண்ணிட்டு ஒரு தினுசாவே அலையுறீங்களே அப்படி என்னதான் வேலை பார்பீங்க அப்படி என்னதான் வேலை பார்பீங்க\nமுல்லா ஒரு நாள் ஒரு பெரிய பணக்காரரிடம் சென்றார். \"ஒரு மனிதனுடைய கஷ்ட நிலைகண்டு மனம் பொறாமால் தங்களிடம் வந்திருக்கிறேன். அந்த மனிதன் ஒரு பணக்காரரிடம் க...\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nமனித உடம்பினை நீங்களே அறுத்துப் பாருங்கள் Google ன் உதவியுடன்\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vakeesam.com/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0.html", "date_download": "2018-04-26T13:21:57Z", "digest": "sha1:L42IH42YVXD5GWMJHO7NCYXLQBT4B6AJ", "length": 17498, "nlines": 80, "source_domain": "www.vakeesam.com", "title": "அதிமுக அரசு வாட்ஸ்ஆப் அரசாக மாறியுள்ளது: விஜயகாந்த் கடும் தாக்கு! – Vakeesam", "raw_content": "\nஹட்டனில் நில அதிர்வு – 05 வீடுகள் சேதம்\nதந்தை செல்வா நினைவுதினம் அனுஷ்டிப்பு\nஜ.தே.க முக்கிய பதவிகளில் மாற்றம் – பொதுச் செயலாளராக அகில விராஜ் காரியவசம்\n203 பட்டதாரிகள் நேர்முகத் தேர்விற்குத் தோற்றவில்லை \nயாழ் போதனா வைத்தியசாலையில் கழிவு வாய்க்கால்மேல் கன்ரீன் – மக்கள் விசனம்\nஅதிமுக அரசு வாட்ஸ்ஆப் அரசாக மாறியுள்ளது: விஜயகாந்த் கடும் தாக்கு\nமக்கள் பிரச்னைகளைத் தீர்க்கும் இடத்தில் உள்ள அதிமுக அரசு முற்றிலும் முடங்கிப்போய், வாட்ஸ் ஆப் அரசாக மாறியுள்ளது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார்.\nஇது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாம் இயற்கையை அழிக்க, அழிக்க, இயற்கை விஸ்வரூபம் எடுத்து நம்மை அழிக்கிறது. இனியாவது விழித்துக்கொண்டு இயற்கைக்கு மாறாக எவ்வித செயலும் செய்யாமல், இயற்கையோடு ஒன்றிணைந்து மக்கள் வாழ்ந்திட அதிமுக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.\nஜனநாயக நாட்டில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுதான் மக்கள் பிரச்சனைகளை தீர்க்கமுடியும். ஆனால் தமிழகத்திலோ, நீதிமன்றங்கள்தான் மக்கள் பிரச்சனைகளை தீர்க்கும் சக்தியாக உருமாறியுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அதிமுக அரசு முற்றிலும் முடங்கிப்போய், வாட்ஸ்ஆப் அரசாக மாறியுள்ளதே இதற்கு காரணமாகும்.\nமழை வெள்ளம் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரி தண்ணீர் திறப்பு உள்ளிட்ட பிரச்னைகளில் உயர்நீதி மன்றமே தானாக முன்வந்து வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறது. ஆக்கிரமிப்பாளர்கள் அரசுக்கு எதிராக நீதிமன்றத்தை நாடிய நிலைமாறி, நீதிமன்றமே ஆக்கிரமிப்பாளர்களையும், அரசையும் எச்சரிக்கும் நிலை தமிழகத்தில் உருவாகியுள்ளது.\nதமிழகத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளுக்கு அதிமுக, திமுக என இரண்டு கட்சிகளின் ஆட்சியிலும், அரசும், அதிகாரிகளும், ஆளும் கட்சியினரும் உடந்தையாக இருந்தததால்தான், தற்போது ஆக்கிரமிப்புகள் பூதாகரமான பிரச்னையாக உருவெடுத்துள்ளது. தமிழகத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி, புதிய ஆக்கிரமிப்புகள் உருவாகாமலும், குப்பை கூளங்களும், திடக்கழிவுகளும் குவியாமல் நடவடிக்கை எடுத்து, இந்த விஷயத்தில் நேர்மையாகவும், நியாயமாகவும் அதிமுகஅரசு நடந்துகொள்ளவேண்டுமென்று உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.\nநேற்று உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில், நீர்நிலையை ஆக்கிரமித்து அதன்மீது சாலையமைக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாக மனுதாரர் புகார் கூறியும், அதிகாரிகள் அதுகுறித்து நீதிமன்றத்திற்கு அளித்த அறிக்கையில் ஆக்கிரமிப்புகள் செய்யப்படவில்லையென உண்மைக்கு மாறான தகவல்களை கூறி இருப்பதாக நீதிமன்றம் கருதியதாலேயே, தமிழகம் முழுவதும் நீர்நிலை ஆதாரங்களில் கட்டடங்கள் கட்டுவதற்கு தடைவிதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நீர்நிலைகளை பாதுகாக்கவேண்டும் என்கின்ற அக்கறை அதிமுக அரசுக்கு இருந்திருந்தால், அரசு அதிகாரிகள் இதுபோன்று தவறான தகவல்களை உயர்நீதிமன்றத்திற்கு அளித்திருப்பார்களா அரசே நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்துவருகிறதென்பது இதிலிருந்தே தெரியவருகிறது.\nஅதிமுக, திமுக, இரண்டு ஆட்சியிலும் நடைபெற்ற ஆக்கிரமிப்புகளை அகற்றும் வகையில், உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை அதிமுக அரசு நிறைவேற்றவேண்டும். அரசியல் சுய லாபத்திற்காகவும், வாக்கு வங்கி அரசியலுக்கும் இந்த ஆக்கிரமிப்புகளை நீண்ட காலமாக இரண்டு கட்சிகளும் பயன்படுத்தி வந்தன. அரசியல்வாதிகளின் துணையோடு பல தனிநபர்கள் நீர் நிலைகளை ஆக்கிரமித்து பிரம்மாண்ட கட்டிடங்களை கட்டியுள்ளனர். அதோடு மட்டுமல்ல இரண்டு கட்சிகளின் ஆட்சி காலத்தில் அரசாங்கத்தினுடைய பல்வேறு அலுவலகங்கள் மற்றும் அரசு பயன்பாட்டிற்காக பல நீர் நிலைகள் மூடப்பட்டு கட்டடங்களாகவும், மைதானங்களாகவும் மாறியுள்ளன. இதுபோன்ற ஆக்கிரமிப்புகளை அரசிடம் உள்ள அதிகாரத்தின் மூலமே அகற்றி இருக்கலாம். அதை செய்யாமல் உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு அதை செயல்படுத்தும் கட்டாயத்திற்கு அதிமுக அரசு தள்ளப்பட்டுள்ளது.\nஒவ்வொரு வழக்கிலும் அதிமுக அரசு கால அவகாசம் கேட்டு, அந்த வழக்கையே நீர்த்துப்போக முயற்சி எடுக்கும். அதுபோன்று எவ்வித முயற்சியும் செய்யாமல், உயர்நீதிமன்றம் கொடுத்துள்ள நான்கு வார கால அவகாசத்திற்குள் அதன் உத்தரவை நிறைவேற்றவேண்டும். ஆக்கிரமிப்பை அகற்றுவதில் அரசு எவ்வித விருப்பு வெறுப்பும் இல்லாமல், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கவேண்டும். தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கூறும்போது 100 ஆண்டுகளுக்கு முன்புதான் சென்னையில் இதுபோன்று மழை பெய்ததாக கூறினார். அப்போது இதுபோன்ற சேதமோ, பாதிப்புகளோ ஏற்பட்டதாக தெரியவில்லை. அதிமுக, திமுக ஆட்சி ஏற்பட்ட பிறகுதான், நீர்நிலைகள் அரசாலும், அரசின் துணையுடன் தனி நபர்களாலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, விதிகளைமீறி கட்டிடங்கள் கட்டப்பட்டது. அதனால்தான் சென்னை மாநகராட்சி மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இவ்வளவு பெரிய பேரழிவு ஏற்பட்டது. அதுகூட இயற்கையாக அல்லாமல், செயற்கையாக ஏற்படுத்தப்பட்டது என்பதற்கான காரணங்கள் தற்போது வெளிவந்த வண்ணம் உள்ளது.\nதமிழக மக்களையும், வருங்கால தலைமுறையினரையும் காக்கவேண்டும் என்றால், கடந்த காலங்களில் நீர்நிலைகளின் பரப்பளவும், கொள்ளளவும் எந்த நிலையில் இருந்ததோ, அதே நிலைக்கு நீர்நிலைகளை மீட்டெடுத்தால் மட்டுமே இதுபோன்ற பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வுகாண முடியும். எனவே அதிமுக அரசு எப்போதும், எல்லோரையும் ஏமாற்றுவதைப்போல, இதிலும் ஏமாற்றாமல் உண்மையாகவும், நேர்மையாகவும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். நீர்நிலைகளின் கரையோரங்களில் வசித்துவந்த ஏழை, எளிய மக்களுக்கு, அவர்களின் தொழில் மற்றும் கல்வி பாதிக்காத வகையில், சுகாதாரம் மற்றும் அடிப்படை வசதிகளுடன் கூடிய குடியிருப்புகளை அவர்கள் வசித்துவந்த பகுதிக்கு அருகாமையிலேயே அமைத்துத்தர வேண்டும்.\n“அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்” என்பார்கள் அதுபோல நாம் இயற்கையை அழிக்க, அழிக்க, இயற்கை விஸ்வரூபம் எடுத்து நம்மை அழிக்கிறது. இனியாவது விழித்துக்கொண்டு இயற்கைக்கு மாறாக எவ்வித செயலும் செய்யாமல், இயற்கையோடு ஒன்றிணைந்து மக்கள் வாழ்ந்திட அதிமுக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விமர்சிக்க முஸ்லீம் தலமைகள் தகுதியற்றவர்கள் – இப்படிச் சொல்கிறார் அஸ்மின்\nதமிழ்த் தேசிய ஜனநாயகப்போராளிகள்’ – புதிய கட்சி ஆரம்பம்\nநல்லாட்சி அரசாங்கம் கல்வி வளர்ச்சிக்கு பாரிய ஒத்துழைப்பை வழங்கி வருகின்றது – கல்வி இராஜாங்க அமைச்சர்\nஹட்டனில் நில அதிர்வு – 05 வீடுகள் சேதம்\nதந்தை செல்வா நினைவுதினம் அனுஷ்டிப்பு\nஜ.தே.க முக்கிய பதவிகளில் மாற்றம் – பொதுச் செயலாளராக அகில விராஜ் காரியவசம்\n203 பட்டதாரிகள் நேர்முகத் தேர்விற்குத் தோற்றவில்லை \nயாழ் போதனா வைத்தியசாலையில் கழிவு வாய்க்கால்மேல் கன்ரீன் – மக்கள் விசனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://muruganandan.wordpress.com/tag/paneer/", "date_download": "2018-04-26T13:44:53Z", "digest": "sha1:BLWAJMQ44QP2ZI4JEUXREK22U7RSH4MB", "length": 16973, "nlines": 180, "source_domain": "muruganandan.wordpress.com", "title": "Paneer | Our World -", "raw_content": "\nகாலிபிளவர் காரட் கட்லெட் (க க க)\nகடைலே வாங்குன பனீரும், காஞ்ச வெந்தயக்கீரையும்\nபனீர் – 200 கிராம்\nஇதழ், இதழாய் வெட்டிய வெங்காயம் – 1\nகலர் கலராய் குடமிளகாய் – 200 கிராம்\nமஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு – தேவைக்கேற்ப\nமிருதுவாக்க, ஊறவைக்க தயிர் – 4 மேசைக்கரண்டி\nசுவைகூட்ட, காய்ந்த வெந்தயக்கீரை – கொஞ்சம்\nதேங்காய் எண்ணெய் – தேவைக்கேற்ப\nசோம்பு – 1 தேக்கரண்டி\nமனைவி சொன்னப்ப கேட்கவில்லை, ஆனால் ஒரு நாய்க்குட்டி என்னை முகநூல் பக்கமே வரவிட மாட்டேங்குது,,,என்ன செய்யறது, சொல்லுங்க,,,,\nபுது வருஷத்தின் முதல் பதிவு,,,அனைவருக்கும் வணக்கம்,,,\nமின்னல் வேகத்தில் கலக்கலான ஒரு பனீர் வதக்கல்\nபொடிகளுடன் தயிர் சேர்த்து, பனீரை ஒரு அரைமணி நேரம் ஊறவச்சு,\nகாய்ஞ்ச எண்ணைலே சோம்ப வதக்கிக்கிட்டு,\nபொறவு குடமிளகாய் வெங்காயம் போட்டு பொரட்டிக்கிட்டு, பாதி வெந்தவுடன், ஊறவச்ச பனீரை சேர்த்து கிண்டி விட்டு,\nகடைசிலே காய்ஞ்ச வெந்தயக்கீரை தூவி இறக்கி வச்சு,\nமுகநூலில் ஊர்பார்க்க படமும் எடுத்துக்கிட்டு,\nபொறந்த வீடு போனவளை மனதுக்குள் திட்டிவிட்டு\n அப்புறம் என்னா செஞ்சேன்னு ஒன்னையாவது நீங்க சொல்லுங்க,,,சரியா\nதேவையான பொருட்கள் >>> நெய்யில் வறுத்த பனீர், பிடித்தால் காளான்(optional), வெங்காயம், தக்காளி, மஞ்சப்பொடி, மிளகாய்ப்பொடி, உப்பு\nஅரைக்க – துருவிய தேங்காய், கட்டாயம் கசகசா, 1 மேசைக்கரண்டி சோம்பு, பூண்டு நாலு பல், முந்திரி அல்லது பாதாம் பருப்பு, கொஞ்சம் இஞ்சி, ரெண்டே ரெண்டு மேசைக்கரண்டி முழுக்கொழுப்பு பால் அல்லது கிரீம்,\nதாளிக்க கிராம்பு, பட்டை, பிரிஞ்சி இலை, தூவி இறக்க கொத்தமல்லி தழை\nசெய்முறை >>> குருமா செய்வது எப்படின்னு உங்களுக்குத்தான் தெரியுமே 😉\nஇந்த ஊர்லே ” Arugula அருகுளா”ன்னு ஒரு கீரை கிடைக்குதுங்க…அதை ஒன்னும் சேர்க்காம, பச்சையா சாப்பிடலாமுங்க..கொஞ்சம் கசக்கும், ஆனால் எனக்கு மிகவும் பிடிக்கும்…\nபனீர் – 300 கிராம்\n1. வேதாஸ் டிக்கா மசாலா – 2 மேசைக்கரண்டி\n2. மஞ்சத்தூள் – 1/2 தேக்கரண்டி\n3. உப்பு – தேவைக்கேற்ப\n4. எலுமிச்சை ரசம் – 1/2 தேக்கரண்டி\n5. பெரிய வெங்காயம் – 2\n6. பச்சை மிளகாய் – 1\n7. கருவேப்பிலை – கொஞ்சம்\n8. கடுகு – கொஞ்சம்\n9. பச்சைக்குடை மிளகாய் – கொஞ்சம்\n10. சிகப்புக்குடை மிளகாய் – கொஞ்சம்\n11. தக்காளி – 3 கீத்து\n12. தேங்காய் எண்ணெய் – 4 மேசைக்கரண்டி\nநன்றாக உதிர்த்து விட்ட பனீருடன் 1 – 4 வரை சொல்லியுள்ள பொருட்களை, நன்றாக கலந்து ஒரு அரை மணிநேரம் ஓரத்தில் வைத்தேன்.\nதேங்காய் எண்ணையை காயவச்சு கடுகு, கருவேப்பிலை தாளிச்சு, வெங்காயம், ப.மிளகாய் வதக்கி, புரட்டி வச்ச பனீரை நடுவுல கொட்டி, ஒரு ரெண்டு நிமிஷம் புரட்டி (ரொம்ப நேரம் சமைச்சா, ரப்பர் மாதிரி ஆயிரும்) அழகுக்கு குடை மிளகாய் தூவி, புதுசா வாங்குன தட்டுலே, ரெண்டா பிரிச்சு கொட்டி, தக்காளி கீத்தை உப்பு போட்டு சுத்தி வச்சு, சுடு தண்ணி குடிச்சிகிட்டே சாப்பிட்டேன் பாருங்க,,,அப்படி ஒரு ஆனந்தம்…\nபின் குறிப்பு: எப்பப் பாரு ஒரே தட்ட போட்டோ எடுத்து போடறேன்னு நீங்க எல்லோரும் திட்டுறீங்கன்னு பொண்டாட்டி கிட்டே சொல்லி, கொற அழுகை அழுது, உண்ணாவிரதம் இருப்பேன் என்று பயமுறுத்தி, புது தட்டு வாங்கிட்டேங்க 🙂\nவட்ட வட்ட பனீர், வதக்கிய காளான்\nதேவையான பொருட்கள்: பனீர் 200 கிராம்,\nவேதா டிக்கா மசாலா 1/2 தேக்கரண்டி\nதேங்காய் எண்ணெய் 2 மேசைக்கரண்டி\nசெய்முறை: மின்னல் வேகத்தில் தயாரான மதிய உணவு. வேதா டிக்கா மசாலா, எலுமிச்சை ரசம், உப்பு கலந்து\nவட்ட வட்டமாக வெட்டிய பனீர் மேல் தூவி, பத்து நிமிஷம் ஊறவச்சு, எண்ணெயை காயவச்சு, ரெண்டு பக்கமும் பொரட்டி போட்டு பொரிச்சு எடுத்தேன்.\nசட்டி சூடா இருக்கும்போதே, ஒரு நாலு காளான பாதி பாதியா வெட்டி உள்ளே போட்டு, சும்மா ரெண்டு கிண்டு கிண்டி எடுத்துட்டேன்.\nசமையல் நல்லா இருக்கோ இல்லையோ, போட்டோ பேஸ்புக்கில் போடணுமே, அதுக்காக அழகா அடுக்கி, பதிவு பண்ணுகிறேன், சரிங்களா\nயார் யாருக்கோ ஒட்டு போடுறீங்க, எனக்கும் ஒரு லைக் போடுங்க..(போடலேனா, நான் சாப்பிட மாட்டேன், அம்மா, அப்பா இல்லாத பிள்ளையை பட்டினி போட்ட பாவம் உங்களுக்கு வேணுமா\nபின்கதை: என்னாச்சுன்னா, வீட்டுக்காரம்மா காலைலெ கீழே வந்தாங்க. Good Morning Honey, I love youன்னு சொன்னேன்.\nஅழகான புருவத்தை மேலே உசத்தி, (அதான் மாசா மாசம், eyebrow பண்றீங்களே அப்புறம் ஏன் புருவம் நல்லாஇருக்காது அப்புறம் ஏன் புருவம் நல்லாஇருக்காது\n“என்னா வேணும்” ன்னு கேட்டாங்க. பால்லே இருந்து பனீர் செய்வியே, அது செஞ்சு தர்ரியா-ன்னு கேட்டேங்க.\n“எலி ஏன் அம்மணமா ஓடுதுன்னு” இப்பத்தானே புரியுது, honeyன்னு சொல்லேலேயே நினைச்சேன், ஏன், உங்க FaceBook groupலே, உங்க தங்கச்சிக யாரும் பனீர் எப்படி செய்வதுன்னு போடலியா – அதைப் பாத்து செய்யுங்க-ன்டு காரை எடுத்துட்டு கிளம்பி போய்ட்டா.\n“கடன் பட்டார் நெஞ்சம்போல்” ஒரு நிமிஷம் கலங்கி நின்னேங்க. மாடோட மடிலேருந்து directஆ பனீர் எடுக்கிற மிசின் கண்டு பிடிக்கிறேன்-னு டேபிளில் மூணு தடவை அடிச்சு\nசத்தியம் பண்ணிட்டு, கோட்டும், குல்லாயும் போட்டுக்கிட்டு, குளிரைத் தாங்கிக்கிட்டு, (3 degree C)\nபொடி நடையா நடந்துபோய், Naanak Paneer வாங்கிட்டு வந்தேங்க. வீட்டுக்கு வந்துட்டு labelஐ பாத்தா,\nஹா, ஹா, அதான் செல்வன் அண்ணாச்சி அடிக்கடி processed food வாங்கதீங்கன்னு சொல்றாரோன்னு நினைச்சேங்க.\nநேரம் ஆச்சு, பசி வேற, ஒரு நாள்தானே, லேபில தூக்கிப் போட்டுட்டு சமைச்சு சாபிட்டுடேங்க.\nஇந்த விஷயம் நமக்குள்ளே இருக்கட்டுங்க. நம்ம அட்மின்ஸ், சீனியர்களுக்கு தெரியவேண்டாங்க…\nதுருவிய காய்கறிகள் (கேரட், சிவப்பு முள்ளங்கி, ஜுக்கினி ) – 150 கிராம்\nவெட்டிய காய்கறிகள் (பச்சை மிளகாய் 2, காளான் 1, வெங்காயத்தாள் 2, கீரை கொஞ்சம், கொத்தமல்லி கொஞ்சம்)\nபனீர் – 200 கிராம்\nமேலே சொல்லிய காய்கறிகளை வேகும் வரை உப்பு போட்டு வதக்கி எடுத்துக்கோங்க.\nதுருவிய பனீருடன், வதக்கிய காய்கறிகளைப் போட்டு, முட்டையை நன்றாக அடிச்சு கலந்து,\nசட்டியில் கொஞ்சமா ஆலிவ் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் ஊத்தி, மிதமான சூட்டில்\nகட்லெட்களை சுட்டு, திருப்பி போட்டு, மறுபடியும் சுட்டு எடுங்கள்.\nமுட்டை இல்லாமலும் செய்யலாம். கொஞ்சம் உடையாமல் பார்த்துக்கோங்க.\nமுட்டை சேர்த்தால் எண்ணெய் குடிக்காது, கட்லெட் நன்றாக உப்பி, மெதுவாக இருக்கும்.\nவீட்டில் உங்கள் மதிப்பு கொஞ்சம் கூடும். மறந்து போன காதல் மறுபடியும் நினைவுக்கு வரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://techulagam.com/category/tamil", "date_download": "2018-04-26T13:10:46Z", "digest": "sha1:BB25DO23QF5342GOK3DLVCWFYZTXPUUQ", "length": 7056, "nlines": 162, "source_domain": "techulagam.com", "title": "Tamil Archives - TechUlagam.com", "raw_content": "\nDoodle ஆல் வண்ணமயமாக மாறிய Google\nTwitter ட்ரீட்டாக வெளிவரும் புதிய Bookmark வசதி\nபிரமாண்டமான அளவில் உருவாகவுள்ள புதிய ஐபோன்: வியந்து பார்க்கும் சாம்சங்\nஇன்ஸ்டாகிராம் சுயவிவரத்தைப் பாதுகாப்பாக வைக்கும் வழிமுறைகள்\nதமிழில் தட்டச்சு செய்வது எப்படி.\nஇரட்டை பின்புற கேமராக்கள் கொண்ட கேலக்ஸி எஸ்8 சிறப்பு மாறுபாடு.\nபிரமாண்டமான அளவில் உருவாகவுள்ள புதிய ஐபோன்: வியந்து பார்க்கும் சாம்சங்\nஇன்ஸ்டாகிராம் சுயவிவரத்தைப் பாதுகாப்பாக வைக்கும் வழிமுறைகள்\nதமிழில் தட்டச்சு செய்வது எப்படி.\nஇரட்டை பின்புற கேமராக்கள் கொண்ட கேலக்ஸி எஸ்8 சிறப்பு மாறுபாடு.\n‘‘அவசர எச்சரிக்கை.. உஷார்’’ மற்றொரு புதிய ‘உய்விஸ்’ வைரஸ்\nஉலகையே அச்சுறுத்தும் ‘ரான்சம்வேர்.. இதிலிருந்து எப்படி தப்பிக்கலாம்.\nதற்போதையை வைஃபை-யை விட 100 மடங்கு வேகத்தில் புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு\nஆண்ட்ராய்ட் போன்களிலும் அறிமுகமாகிறது சூப்பர் மேரியோ கேம் \nஸ்டேட்டஸ் வசதியை மீண்டும் வழங்குகிறது வாட்ஸ் அப் \nஹேங் அவுட்டில் ஏற்பட்ட புது மாற்றம்\nபேஸ்புக்கில் “search” பட்டனில் தேடிய நண்பர்களை, நீக்குவது எவ்வாறு\nஉங்கள் SMS -ஐ பேஸ்புக் மேசென்ஜெரில் பெற….\nபில் கேட்ஸ் பெண்களை சந்திக்க அவர்களின் பள்ளி கணணிகளை ஹேக் செய்தார்\nகணினியில் டூப்ளிகேட் கோப்புகளை கண்டறிந்து அழிக்க\nஇரட்டை பின்புற கேமராக்கள் கொண்ட கேலக்ஸி எஸ்8 சிறப்பு மாறுபாடு.\nDoodle ஆல் வண்ணமயமாக மாறிய Google\nTwitter ட்ரீட்டாக வெளிவரும் புதிய Bookmark வசதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} {"url": "http://freetamilebooks.com/ravi-natarajan-qa/", "date_download": "2018-04-26T13:10:38Z", "digest": "sha1:MMKQJ32QWRMKMWQ4OHARLGQOAFPIFLCB", "length": 7116, "nlines": 85, "source_domain": "freetamilebooks.com", "title": "நூலாசிரியர் பேட்டி – ரவி நடராஜன்", "raw_content": "\nநூலாசிரியர் பேட்டி – ரவி நடராஜன்\nமின்னஞ்சல் வழி பேட்டி – சிவமுருகன் பெருமாள்\nபுத்தகங்களை வெளியிட்ட freetamilebooks.com -க்கு நன்றி.\nதங்கள் முதல் மின்னூல் இணையத்தின் முலம் வெளிவந்துடன் எப்படி இருந்தது \nநல்ல ஒரு தமிழ் முயற்சிக்கு உதவுவது எப்பொழுதும் மகிழ்ச்சியான விஷயம்.\nஇந்த இரண்டு ஆண்டுகளில் freetamilebooks.com சேவை எப்படி இருந்தது \nசில சமயங்களில் உங்களது சேவை நன்றாக இருந்தாலும், பிற சமயங்களில், புத்தகம் வெளியாக வெகு காலமாகியது. வணிக அமைப்பில்லாதலால், இதில் பணியாற்றும் பலருக்கும் வேலை காரணமாக நேரமில்லாததை அறிவேன். ஆயினும் என்னுடைய கடைசி புத்தகம் வெளிவர 4 மாதங்கள் ஆகியது. ஒரு குறைந்தபட்ச வெளியீட்டு நேர உத்தரவாதம் தேவை என்று நினைக்கிறேன். உதாரணத்திற்கு, புத்தக ஆவணம் கிடைத்த 1 மாததிற்குள் வெளியிட்டால் நன்றாக இருக்கும்.\nவாசகர்கள் உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்களா\nமின்னூல்கள் இன்னும் பலரையும் சென்றடைய என்ன செய்யலாம்\n1) தமிழ்ப் புத்தகக் குழுக்கள் இருந்தால், அவர்களுக்கு சுட்டிகளை அனுப்பலாம். 2) இணைய உலகில் சில விஷயங்கள் முக்கியம். உதாரணத்திற்கு, ஒரு யூடியூப் விடியோ மில்லியன் பேர்கள் பார்த்தார்கள் என்றால், அது ஒரு சாதனை என்று கருதப்படுகிறது. உங்களது இணைத்தளத்தின் ஒவ்வொரு லட்சம் தரவிறக்கத்தையும் ‘சொல்வனம்’, ‘திண்ணை’, போன்ற தளங்களில் அறிவிக்க வேண்டும். ஒரு வளர்ச்சி எண்ணத்தை உருவாக்கினால், இன்னும் சில பேர் படிப்பார்கள். இதை சில வெகு ஜன தமிழ் ஊடகங்கள் இலவசமாக அனுமதிக்கலாம்.\nநாங்கள் இன்னும் சிறப்பாக எப்படி செயல்படலாம்\nஇதை முந்தைய கேள்விக்கு பதிலளிக்கையில் சொல்லியுள்ளேன்.\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nஆப்பிள் கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nதமிழ் மின்னூல்களைப் படிப்பது எப்படி\nகிரியேட்டிவ் காமன்சு தமிழ் வலைத்தளங்கள்\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n57 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kadayanallur.org/archives/5422", "date_download": "2018-04-26T13:15:44Z", "digest": "sha1:DLK4VH6ERYUN2OIWR5CGTHCY4YMU2GAJ", "length": 13438, "nlines": 114, "source_domain": "kadayanallur.org", "title": "நமது மூளை: சுவாரசியமான சில உண்மை! |", "raw_content": "\nநமது மூளை: சுவாரசியமான சில உண்மை\n“மனிதன் தனது மூளையால் ஓவியங்களை வரைகிறானே தவிர, கைகளால் அல்ல” என்றார் உலகப் புகழ்பெற்ற ஓவியர் மைக்கேல் ஏஞ்சலோ\nஒருவர் சிறு தவறு செய்தாலும் அனிச்சையாக, `மூளையிருக்கா’ என்று கேட்டு விடுகிறோம். மூளைதான் எல்லா செயல்பாட்டுகளுக்கும் காரணம் என்பது அப்படி நமது உணர்விலேயே ஊறிப் போயிருக்கிறது. பேசுவது, சாப்பிடுவது, சிந்திப்பது, தூங்குவது, மூச்சுவிடுவது, நினைவுகள், உணர்வுகள், இதயத் துடிப்பு, வளர்ச்சி, செக்ஸ்… ஏன், உயிரும் கூட Buy Levitra மூளையைச் சார்ந்துதான் இருக்கிறது. ஒன்றரை கிலோ எடையுள்ள பழுப்பும், வெள்ளையுமான திசுக்களாலான இந்த `தளதள’ பொருள்தான் நமது மூளை. மூளையைப் பற்றிய சில சுவாரசியமான உண்மைகளைப் பார்ப்போம்…\nஇங்கிலாந்து நாடக நடிகையான ரியான்னன் பிரைதெர்க் (வயது 28), ஒருநாள் தனது மூளையில் ஏதோ வெடிப்பதைப் போல உணர்ந்தார். தொடர்ந்து அவருக்குக் கடுமையான தலைவலியும், வாந்தி உணர்வும் ஏற்பட்டன. பரிசோதனையில் அவரது மூளையில் `சப்அராக்னாய்டு’ ரத்தக் குழாய் சேதம் அடைந்திருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். அந்நிலை ஏற்பட்டவர், சில மணி நேரங்களில் இறந்துவிடுவார். தனது இறுதிச் சடங்குக்கான ஏற்பாடுகளைச் செய்த ரியான்னன், தனது நகைகளையும் உறவினர்களுக்குப் பிரித்துக் கொடுத்தார். கடைசியில், `ரிஸ்க்’ எடுத்து ஓர் அறுவைச்சிகிச்சைக்கு உடன்பட்ட அவர், பின்னர் முழுமையாகக் குணமடைந்து இயல்பு நிலையை அடைந்தார்.\nமத்திய தரைக்கடல் பகுதி கடல் உணவுகள், மூளைக்கு நன்மையளிப்பவையாக உள்ளன என்று ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. பழங்கள், காய்கறிகள், ஆலிவ் எண்ணையை அதிகமாகச் சாப்பிடுவது, வயதால் ஏற்படும் மூளைப் பாதிப்பைக் குறைக்கிறது என்று அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர். மீனும், மூளைக்கு நல்லது.\n`எலக்ட்ரான் செப்பல்லோகிராமில்’ பார்க்கிறபோது மூளை செயல்பாடு இல்லாத நிலையே `மூளைச் சாவு’ எனப்படுகிறது. அப்போது அனைத்து தன்னிச்சையான, தன்னிச்சையற்ற செயல்பாடுகளும் நின்று போகின்றன. அதில் வலி உணர்வும் அடக்கம். மருத்துவரீதியான மரணத்தில், ரத்த ஓட்டம், சுவாசம், இதயத் துடிப்பு ஆகியவையும் நின்று விடுகின்றன. மூளைச் சாவு ஏற்படும்போதுதான் உறுப்பு தானம் செய்யப்படுகிறது.\nவயது வந்த மனிதன் – 1.360 கிலோ கிராம்\nயானை – 4.780 கி.கி\nஒட்டகச்சிவிங்கி – 680 கிராம்\nஆந்தை – 2.2 கிராம்\nபாம்பு – 0.1 கிராம்\nபல்லி – 0.08 கிராம்\nபுலி – 265 கிராம்\nமேக்பீ பறவை – 5.8 கிராம்\nதிமிங்கலம் – 7,800 கிலோ கிராம்\nபிறந்த குழந்தையின் மூளை எடை 400 கிராம்.\nஒரு மனிதனின் எடையில் மூளையின் பங்கு 2 சதவீதம்.\nமூளையின் 25 சதவீதம், பார்வையுடன் தொடர்புடையது.\nஇதயத்தில் இருந்து 20 சதவீத ரத்தம் மூளைக்குப் பாய்கிறது.\nஅமெரிக்க முன்னாள் ஜனாதிபதிகளில் 11 பேர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார்கள். அவர்களில் 4 பேருக்கு பணியின்போது அது நேர்ந்தது.\nமூளைக்கு 10 நொடிகள் ரத்தம் பாயவில்லை என்றால் மயக்கம் வந்துவிடும்.\nஆறு வயதில் மூளை முழு எடையை எட்டுகிறது.\nஆண்மைக் குறைவு: புதிய `சர்வே’ தரும் அதிர்ச்சி\nபுதிதாக திருமணமான பெண்கள் எளிதில் கர்ப்பம் தரிக்க சில ஆலோசனை\nநீரிழிவு நோயைச் சமாளிப்பது எப்படி\nகொஞ்சம் மெனக்கெட்டால் குழந்தை எப்படிப் பிறக்க வேண்டும் என்பதை நாமே தீர்மானிக்கலாம்: புத்திசாலிக் குழந்தையைப் பெற அம்மா அப்பா என்ன செய்யவேண்டும்\nஇயற்கை இளநீரும், செயற்கை குளிர்பானமும்\nதுபாயில் முஹ‌ம்ம‌து ச‌த‌க் பாலிடெக்னிக் கல்லூரி முன்னாள் மாண‌வ‌ர் ச‌ங்க‌ துவ‌க்க‌ விழா\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகடையநல்லூரில் … வீடு வீடாக சென்று நெல்லை கலெக்டர் ஆய்வு\nபரவி வரும் டெங்கு காய்சல் …மரண பயத்தில் கடையநல்லூர் மக்கள்.\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kaviyazhi.blogspot.com/search?updated-max=2013-09-01T06:54:00%2B05:30&max-results=5", "date_download": "2018-04-26T13:43:58Z", "digest": "sha1:RBQRWUXKQBV5WWFPN4YYBOBPK73AOMUF", "length": 20281, "nlines": 196, "source_domain": "kaviyazhi.blogspot.com", "title": "கவியாழி", "raw_content": "\nமூத்தப் பதிவருடன் சென்னைக்கு வந்த முதல் பதிவர்\nஇன்று மாலை மூன்று மணிக்கு எனக்கு அவசர அழைப்பு திரு.ரமணி அய்யா. மதுரை அவர்களிடமிருந்து \"நான் சென்னை வந்துவிட்டேன் நான் உடனே புலவர் அய்யாவைப் பார்க்க முடியுமா என்று சொன்னார்.\nஉடனே எக்மோர் ரயில் நிலையம் சென்று அவரை புலவர் அய்யாவின் வீட்டிற்கு அழைத்துச் சென்றேன்.\nஅங்கு முதன் முதலில் திரு .ரமணி அவர்கள்தான் பதிவர் திருவிழாவுக்கு வந்தார் எனபதை சுமார்.மாலை 4.15 க்கு புலவர்.அய்யா அவர்கள் உறுதி செய்தார்.\nஅதன்பின் இருவரும் பழைய கதைகளை பேசி மகிழ்ந்தார்கள்.எனக்கு ஏதோ புத்தகத்தில் படித்த ஞாபகம்.இருவரும் தொடர்ந்து பேசியதிலிருந்து எவ்வளவு பெரிய ஜாம்பவான்களிடம் நட்புப் பாராட்டியுள்ளேன் என்பதை நினைத்து அகமகிழ்ந்தேன்.\nதிரு.ரமணி அய்யா அவர்கள் ஈ.வே.ரா. பெரியாரின் பாட சாலையில் அவருடன் அன்பைப் பகிர்ந்து திருச்சியில் பயின்றவர் என்பதை அறிந்து மனம்\nமகிழ்ந்தேன்.அப்போதே பெரியாருடன் வீட்டில் தங்கி அவருக்கு பணிவிடைச் செய்தவர் என்பதை அறிந்து வியப்புற்றேன்.\nஅதுபோலவே புலவர் அய்யா அவர்கள் மாண்புமிகு.எம்.ஜி.ஆர். அவர்களை நேரில் சந்தித்தது பற்றியும் அவரின் ஆளுமைத்திறன் மற்றும் மனித நேயம் பற்றி கூறியது அவரின் பெருந்தன்மைக்கு சான்றாய் இருந்தது.\nஇருவரும் மாறிமாறி பேசியதிலிருந்து பல விஷயங்கள் எனக்குப் புரிந்தன நான் நல்லோரிடம் பழகி வந்தேன் என்று மகிழ்ந்தேன் .. புதுப்புது விஷயங்களை பேசினர்கள் என்பதைவிட எனக்கு எவ்வாறு பெரியோர்களிடம் நடந்து கொள்ளவேண்டும் என்று அறிவுரைத்ததுபோல் இருந்தது..\nஆனாலும் இருவரின் என்ன ஓட்டமே பதிவர் திருவிழாவை எப்படி சிறப்பாக நடத்துவது என்றே பேசினார்கள்.இறுதியில் புலவர் அய்யா இந்த விழாவை சிறப்பிக்க ஆரூர்,மூனா.செந்திலும் .கவிஞர்.மதுமதியும் என்னுடன் பேசி வருவதிலிருந்து மிகவும் சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் நடக்கும் என்பதில்\nஐய்யமில்லை ஆனால் அடுத்த வருட சந்திப்பு பற்றியே சிந்திக்கிறேன் என்று சொன்னது மகிழ்வாய் இருந்தது.\nகாரணம் இந்த வருடம் சிறப்பாக நடைபெறும் என்ற நம்பிக்கையும் அடுத்த வருடம் எப்படி சிறப்பாக நடத்துவது என்ற யோசனையில் புலவர் அய்யா உள்ளார் எனபதே எனக்குத் தெளிவாய் புரிந்தது.அதற்க்கு திரு.ரமணி அவர்கள். எல்லோரிடமும் பேசியப்பின் நிச்சயம் நீங்கள் எதிர்ப் பார்த்தபடி சிறப்பாகவே நடத்தலாம் என்று பட்டும் படாமலும் சொன்னார்,அது அவரது முன் யோசனையையும் பெருந்தன்மையைக் காட்டுகிறது.எல்லோரையும் கலந்தே முடிவு சொல்வதாக சொன்னார்.\nஆக மொத்தம் இருவருமே ஒத்தக் கருத்துடன் பதிவர் நலனையே குறிக்கோளாய் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் நானறிந்த உண்மை. எனவே இருவரின் எதிர்ப்பார்புக்களுக்கிணங்க அனைவரும் ஒன்றிணைந்து நல்ல விஷயங்களுக்காகவும் நாம் இணைந்து செயல் பட வேண்டியது அவசியமெனக் கருதுகிறேன்\nவிழாவில் கலந்துகொள்ளும் பதிவர்கள் கவனத்திற்கு...\nஇன்றிலிருந்தே பதிவுலகம் சென்னையை நோக்கி புறப்படத் தயாராய் இருப்பீர்கள் என்று நம்புகிறோம். உங்களை மகிழ்ச்சியுடன் வரவேற்க நாங்களும் தயார்தான் என்பதை அனைத்துக் குழுவினரின் சார்பாகத் தெரிவித்துக் கொள்கிறேன்\n1, பதிவர்கள் ஒவ்வொருவரும் கூடவே இன்னொரு பதிவரை அழைத்துவர முயற்சியுங்கள்.இவ்வாறான தனியுலகில் அவர்களையும் இடம்பெற செய்வது எல்லோரின் கடமையாகும். அவர்கள் இடம்பெறும் ஒவ்வொரு நிகழ்விலும் உங்களின் பங்களிப்பும் நிச்சயம் இருக்கும் .\n2, நிகழ்ச்சிக்கான இடத்தின் விலாசமும் ஒருங்கிணைப்புக் குழுவினரின்\nகைபேசி எண்களும் கையோடு மறக்காமல் எடுத்துவர வேண்டும். அல்லது வரும் முன்பே தகவலை உங்கள் நண்பருக்கோ அல்லது உறவினருக்கோ தெரிவித்தல் நலம்.\n3, சென்னை வந்தவுடன் அரங்கத்தில் உள்ள செல்லும் முன்பே முன்பதிவு பகுதியில் உள்ள பொறுப்பாளரிடம் சென்று உங்கள் பெயரைப் பதிவு செய்து உங்களுக்கான அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளவேண்டும்.\n4 அமைதியான முறையில் எல்லோருக்கும் நாகரீகமாக வணக்கம் சொல்லி நலம் விசாரித்து நமது பண்பாட்டை காத்தல் நன்று.பெயர் பெரியா விட்டால் அடையாள அட்டையைப் பார்த்து அறிந்து கொள்ளவும்.\n5, மேடையில் பேசிக்கொண்டிருக்கும்போது ஒவ்வோருவரும் என்னப் பேசுகிறார்கள் என்பதைக் கவனமாக கேட்கவும். அவரின் பேச்சுப் பற்றி நீங்கள் உங்களது அனுபவத்தில் கருத்தில் கொள்ளலாம்.\n1, கைபேசியை அதிர்வு அழைப்புகளில் சரி செய்து வைப்பது அவசியமாகும்.இது மற்றவர்களுக்கு முன்னுதாரணமாய் இருக்க வேண்டும்\n2, அரங்கினுள் அருகில் இருப்பவரிடம் தனியாக சத்தமாக பேசிக்கொண்டிருக்கக் கூடாது.பொது இடத்தில் அமைதி காப்பது நலம்.அவசியமாகும்\n3, உணவுக் கூடத்தில் அதிகபட்ச அமைதியுடன் ஒவ்வொருவரும் வரிசையில் நின்று உணவை வாங்க வேண்டும் .இரண்டு மூன்று பேருக்கு ஒருவரே வாங்கிச் செல்ல முயற்சிக்கக் கூடாது.\n4. அரங்கத்திற்கு வெளியே நின்றுகொண்டு இரைச்சலாய் பேசக்கூடாது\n5, தங்களது உடைமைகளையும் விலை உயர்ந்தப் பொருட்களையும் அவரவர் சொந்தப் பொறுப்பில் பாதுகாத்து கொள்வது உங்களின் கடமை.\nஉங்கள் அன்பிற்கு நன்றி- 28.08.2013 ல் ஓராண்டு நிறைவு\nமொத்தப் பதிவுகள் ; 295\nவருகைத் தந்தவர்கள் ; 37,943\nவலையில் இணைந்தவர்கள் ; 131\nகழனி ஓரம் செடி விதைப்போம்\nLabels: கவிதை/சமூகம்/ மரம் வளர்ப்பு\nபிறந்த நாள் வாழ்த்துக்கு நன்றி\nஅரசன் அன்றே கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.adiyakkamangalam.com/science/2412/coldest-star-discovered-near-sun", "date_download": "2018-04-26T13:28:08Z", "digest": "sha1:EKIHDCFPRJ4XBDZO5HBAS4YLSU323LSG", "length": 7187, "nlines": 74, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam Coldest Star Discovered Near Sun", "raw_content": "\nசூரியனுக்கு அருகில் குளுமையான நட்சத்திரம்\nஅடியக்கமங்கலம், 06.05.2014: சூரியனுக்கு அருகில் மிகவும் குளுமையான நட்சத்திரத்தை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வானியல் ஆய்வாளர்கள் நாசாவின் உதவியுடன் இந்த புதிய நட்சத்திரத்தைக் கண்டுபிடித்து உள்ளனர். புதிய நட்சத்திரத்திற்கு, J085510.83-071442.5 என பெயரிடப்பட்டுள்ளது. பூமியின் வட துருவத்தை விட குளிர்ச்சியான, இந்த நட்சத்திரத்தின் வெப்பநிலை, - 48ல் இருந்து, - 13 டிகிரி செல்சியஸ் வரை உள்ளது. வியாழன் கிரகத்தை விட மூன்று முதல் 10 மடங்கு வரை இந்த நட்சத்திரம் பெரிதாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.\nசூரியனில் பெரிய துளைகள் - நாசா\nவிண்வெளி குப்பைகளை அகற்ற நாசா முயற்சி\nசெவ்வாய் கிரகத்தில் நீல நிற சூரிய அஸ்தமனம்\nபூமிக்கு மேலே வாழும் உயிரினங்கள் - ஆய்வறிக்கை\nசெவ்வாய் கிரகத்தில் மிகப்பெரிய கடல் இருந்ததாக விஞ்ஞானிகள் தகவல்\nசெவ்வாய் கிரகத்திலும் செல்பி எடுத்த கியுரியாசிட்டி ரோபா\nசெவ்வாய் கிரகத்தில் ஏற்பட்ட மர்ம மூடுபனியால் விஞ்ஞானிகள் குழப்பம்\nபூமியைப் போல எட்டு புதிய கிரகங்கள் கண்டு பிடிப்பு\nசெவ்வாய் கிரகத்திற்குச் செல்ல புதிய மாற்று பாதை\nபூமியைவிட இரண்டரை மடங்கு பெரிய சூப்பர்-எர்த்தை கெப்ளர் கண்டுப்பிடித்துள்ளது\nசெவ்வாய் கிரகத்தில் பிரம்மாண்டமான ஏரி\nதண்ணீரில் இருந்து எரிபொருள் கண்டுபிடிப்பு\nவால் நட்சத்திரத்தில் பிலே விண்கலத்தை இறக்கி சாதனை\nவியாழன் கிரகத்தில் கடும் புயலால் ராட்சத கண் போன்ற தோற்றம்\nசூரிய வெப்பத்தை விட பத்தாயிரம் மடங்கு சக்தி வாய்ந்த சூரிய வெடிப்பு\nபூமியிலிருந்து 1800 ஒளி ஆண்டுகள் தூரத்தில் மிகப் பெரிய நிலா\nவிண்வெளியில் 176 அடி நீளமுள்ள தொலைநோக்கி நிருவ நாசா திட்டம்\nகெப்லர்-10C எனப்படும் பூமியை போன்ற ராட்சத கிரகம் கண்டுப்பிடிப்பு\nசூரியனுக்கு அருகில் குளுமையான நட்சத்திரம்\nகானிமெடே சந்திரனில் குவிந்து கிடக்கும் ஜஸ்கட்டிகள்\nசூரியனுக்கு அருகில் குளிர்ச்சியான நிழல் நட்சத்திரங்கள்\nசனி கிரகத்தில் புதிய துணை கிரகம் கண்டுபிடிப்பு\nசனியின் துணைகோள் என்செலாடஸில் கடல் போன்ற தண்ணீர்\nசெவ்வாய் கிரகத்தில் உறைந்து கிடக்கும் நீர்\nசூரிய குடும்பத்தில் குட்டி கிரகம் கண்டுபிடிப்பு\nபுதன் கிரகம் வேகமாக சுருங்கி வருகிறது\nஒன்றரைக் கோடி கிலோ மீட்டர் தூரம் கடந்து விட்ட மங்கள்யான்\nநட்சத்திர கூட்டங்களுக்கிடையில் பாயும் ஹைட்ரஜன் ஆறு\n440 கோடி ஆண்டுகளுக்கு முன் உருவான சனி கிரக வளையங்கள்\nகண்டுபிடித்துள்ளனர் அமெரிக்க பென்சில்வேனியா இந்த discovered அருகில் சேர்ந்த நட்சத்திரத்தைக் star நாசாவின் கண்டுபிடித்� பல்கலைக்கழகத்தைச் புதிய விஞ்ஞானிகள் Coldest குளுமையான மிகவும் நட்சத்திரத்தை வானியல் சூரியனுக்கு ஆய்வாளர்கள் Sun near உதவியுடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/health/health-news/2017/sep/18/aroma-therapy-2775327.html", "date_download": "2018-04-26T13:19:01Z", "digest": "sha1:5ZBXLAQ5RHXM2MM3W7ZAICMW67NJI5B3", "length": 5855, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "மலர்களின் மருத்துவம்- Dinamani", "raw_content": "\nஅடிக்கடி உணவில் வாழைப் பூவை கூட்டு வைத்து சாப்பிட்டு வர பித்த நோய்கள் அகலும்.\nவெங்காயத்தின் பூவை அடிக்கடி உணவோடு சேர்த்துக் கொண்டால் உடல் சூடு குறையும்.\nநித்திய கல்யாணி பூவை கஷாயம் செய்து சாப்பிட்டு வர நீரிழிவு நோய் குணமாகும்.\n- மலர்களின் மருத்துவம் என்ற நூலிலிருந்து\nசெவ்வாழைப் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றல் உருவாகும்.\nதிராட்சை பழச்சாற்றை மூன்று வேளைகள் அருந்த குடல்புண் குணமாகும்.\nவிளாம்பழத்தின் சதையுடன் திப்பிலியையும், மிளகையும் தூள் செய்து சேர்த்துப் பயன்படுத்த பித்த மயக்கம், தொண்டை நோய்கள் குணமாகும்.\n- பழங்களின் மருத்துவம் என்ற நூலிலிருந்து\naroma therapy fruit therapy மலர்கள் மருத்துவம் பழங்கள் மருத்துவம்\nஸ்டண்ட் மாஸ்டர் மகன் திருமண ஆல்பம்\nநாயகி இஷாரா நாயர் - சாஹில் திருமணம்\nசச்சின் பிறந்த நாள் ரசிகர்கள் வாழ்த்து\nசஞ்சு படத்தின் டீஸர் வெளியீடு\nரயில் மோதி 11 மாணவர்கள் பலி\nஜெயகாந்தன் 84ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா\nதலையில் காயம் ஆனால் காலில் ஆபரேசன்\nஇளவரசர் தம்பதியருக்கு 3வது குழந்தை பிறந்தது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/specials/kavithaimani/2017/nov/06/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE--%E0%AE%95%E0%AF%8B-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D-2802815.html", "date_download": "2018-04-26T13:23:35Z", "digest": "sha1:OOZRYERT2QTIXFB2YSI24VNLSUU7QWUZ", "length": 5926, "nlines": 138, "source_domain": "www.dinamani.com", "title": "மேகத்தில் கரைந்த நிலா: -கோ. மன்றவாணன்- Dinamani", "raw_content": "\nமேகத்தில் கரைந்த நிலா: -கோ. மன்றவாணன்\nஸ்டண்ட் மாஸ்டர் மகன் திருமண ஆல்பம்\nநாயகி இஷாரா நாயர் - சாஹில் திருமணம்\nசச்சின் பிறந்த நாள் ரசிகர்கள் வாழ்த்து\nசஞ்சு படத்தின் டீஸர் வெளியீடு\nரயில் மோதி 11 மாணவர்கள் பலி\nஜெயகாந்தன் 84ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா\nதலையில் காயம் ஆனால் காலில் ஆபரேசன்\nஇளவரசர் தம்பதியருக்கு 3வது குழந்தை பிறந்தது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.manithan.com/mobile/04/157298", "date_download": "2018-04-26T13:18:53Z", "digest": "sha1:ZMDIC47TPGZRIPBXKA6DLSPVINNTQNGA", "length": 12503, "nlines": 160, "source_domain": "www.manithan.com", "title": "தொலைந்து போன ஸ்மார்ட்போனில் பெர்சனல் போட்டோஸ் இருக்கேனு பயமா? கவலை வேண்டாம் ஈசியா அழிச்சிடலாம்! - Manithan", "raw_content": "\nவெட்டப்பட்ட மனைவியின் தலையுடன் தெருவில் நடந்து சென்ற கணவன்: அதிர வைக்கும் சம்பவம்\nஇளவரசர் ஹரியின் திருமணத்தில் மணப்பெண் தோழியாகும் உலக அழகி\nஜெயலலிதா வழக்கில் திடீர் திருப்பம்\nஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுலா செல்ல வேண்டுமா விரைவில் வரவிருக்கும் புதிய சட்டம்\nஅஜித்தின் மனைவி ஷாலினியின் பகையாளி யார் தெரியுமா\n பல ஆண்டுகளுக்கு பின் பாத்திமா பாபு விளக்கம்\nஇத்தனை வயதில் பிரபல நடிகை கௌசல்யாவுக்கு கல்யாணமாம்\nசர்வதேச இளம் இளம் விஞ்ஞானிகளுக்கான போட்டியில் இலங்கை 3 தங்கப்பதக்கம்\nமரணத்தின் பிடியிலிருந்து அஜீத்தை மீட்டெடுத்த ஷாலினி கசந்து போன வாழ்வில் உயிர்த்தெழுந்த காதல்\nசிவகார்த்திகேயனால் தொகுப்பாளினி பாவனா அனுபவித்த கொடுமை\nபிள்ளைகள், பெற்றோர்களை கொடூரமாக கொலை செய்த பெண் காரணத்தை கேட்டால் அதிர்ந்து போயிடுவிங்க\nஇந்த 3 ராசியில உங்க ராசி இருக்குதா.. இந்த ஆண்டில் கோடீஸ்வர யோகம் இதற்குத் தானாம்\nமனைவியை நண்பர்களுடன் உறவு வைக்க கட்டாயப்படுத்திய கணவன் - இறுதியில் நடந்ததை பாருங்கள்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\n31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்\nயாழ். சரசாலை, கனடா Toronto\nதொலைந்து போன ஸ்மார்ட்போனில் பெர்சனல் போட்டோஸ் இருக்கேனு பயமா கவலை வேண்டாம் ஈசியா அழிச்சிடலாம்\nஸ்மார்ட்போன் கூட ஒவ்வொருவருக்கும் பொக்கிஷம்தான். நாலு பேரை கேட்டு, ரிவ்யு பார்த்து, பணம் சேர்த்து வாங்கிய ஒரே மாதத்தில் மொபைலை தொலைத்தவர்கள் நிறைய பேர். தகவல்குரு தளத்தில் மொபைலை தொலைத்து விட்டேன் எப்படி கண்டுபிடிப்பது என கேட்டவர்கள் நிறைய பேர்.\nஅதிலும், என் மொபைல் ல பெர்சனல் அப்ளிகேசன்ஸ் அதிகமாக வச்சிருந்தேன். அது எல்லாம் எப்டி அழிக்கிறதுனு தெரியலையே என புலம்புபவர்களும் இங்கு ஏராளம்.\nஅப்படிப்பட்டவர்களுக்ககத்தான் இந்த நீங்கள் தொலைத்த ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் உள்ள தகவல்களை அழிப்பது எப்படி என்பதை பார்க்கலாம்.\nமுதலில் android.com/find என்ற தளத்திற்கு செல்ல வேண்டும்.\nஅடுத்து உங்களது கூகுள் அக்கவுன்ட்டில் சைன் இன் செய்ய வேண்டும்.\nதொடர்ந்து அங்கு நீங்கள் பயன்படுத்திய சாதனங்களின் பட்டியலை பார்க்க முடியும். ஒருவேலை ஒன்றுக்கும் மேற்பட்ட சாதனத்தை பயன்படுத்தியிருந்தால், திரையின் மேல் காணப்படும் சாதனத்தை கிளிக் செய்ய வேண்டும்.\nஇனி, சாதனம் எங்கிருக்கிறது என்பதை பார்க்க முடியும்.\nஉங்களது சாதனத்தை இங்கு பார்க்க முடியாமல் போனால், இறுதியாக சாதனம் இருந்த இடம் காண்பிக்கப்படும்.\nஇனி திரையில் இரண்டு ஆப்ஷன்கள் காணப்படும் -- Sound, Lock and Erase\nஉடல் எடையை மிக வேகமாக குறைக்க இந்த ஒரு பொருள் போதும்\nசோகத்தில் இருந்த நடிகர் வடிவேலுவிற்கு அடுத்தடுத்து அடித்த அதிஷ்டம்\nமனைவியை நண்பர்களுடன் உறவு வைக்க கட்டாயப்படுத்திய கணவன் - இறுதியில் நடந்ததை பாருங்கள்\nஐ.தே.க. செயற்குழு கூட்டத்தில் சிக்கல்\nமத்திய வங்கியின் அறிக்கை நிதியமைச்சரிடம் கையளிப்பு\nதொழிலாளர் தினத்தை மே முதலாம் திகதி கொண்டாடவுள்ளது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு\nபள்ளிமுனை கடற்கரையில் உள்ள மீன் வாடிகளில் இருந்து கைப்பற்றப்பட்ட ஒரு தொகை மீன்கள்\nபேருவளையில் எரிந்த நிலையில் சடலம் மீட்பு\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா் விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/91", "date_download": "2018-04-26T13:39:14Z", "digest": "sha1:4CKBNZLI24247QUOZTGLFWFPIIFRR5IM", "length": 13256, "nlines": 168, "source_domain": "www.tamilmirror.lk", "title": "TamilMirror.lk", "raw_content": "\nஅபாயாவை எதிர்ப்பதோ அல்லது அபாயாவை ஆதரிப்பதோ, எந்தவிதத்திலும் நேர்மையான செயற்பாடாக இருக்கா...\nபொருளாதார நலன்கள் முன்னிலைக்கு வருகையில், போர் அதன் பகுதியாகும். ஏகபோகத்தை மெதுமெதுவாக இழக...\nஎதிர்க்கட்சித் தலைவர் பதவியை சம்பந்தன் பறிகொடுப்பாரா\nதமிழ் அரசியல் கைதிகள், தமிழ் மக்களின் காணிகள் தொடர்பான பிரச்சினைகளை சிங்கள அரசியல்வாதிகளால...\nவிக்னேஸ்வரனின் புதிய கட்சிக்கான அறிவித்தலையும், அடுத்த கட்ட நடவடிக்கைகளையும் பார்க்க வேண்...\nஇலங்கையிலுள்ள எந்தவொரு முற்போக்கு அரசியலுக்கும், சமத்துவத்துக்கான திட்டமொன்றைக் கொண்டிரு...\nஎம்மை நினைத்து யாரும் கலங்க மாட்டார்கள்\n‘தேசியம்’ என்ற உயர் எண்ணக்கருவில் மண்ணைப் போட்டவர்களுக்கு, தமிழ் மக்கள் வாக்குப் போடும் நி...\nஎது அபிவிருத்தி என்பதை முதலில் இனங்கான வேண்டும். இல்லாவிட்டால், கடனும் பஞ்சமும் போட்டியிட்...\nகடந்த ஆண்டு இறுதிப்பகுதியிலும் நடப்பாண்டின் நடுப்பகுதிவரையிலும், பயங்கரவாதம்...\nஇந்திய அரசியலில் ‘ஆளுநர்’ பதவிகள்\nஇந்திய அரசியலில் ‘ஆளுநர்’ பதவிகள் அசிங்கப்படுவது மட்டுமல்ல, ராஜ்பவன்கள் அரசியல் கட்சி அலுவ...\nஅமிர்தலிங்கத்துக்கு அதிர்ச்சி கொடுத்த தமிழ் இளைஞர்கள்\nதமிழ்த் தலைமைகளின் 1977 பொதுத் தேர்தலின் பின்னரான நடவடிக்கைகள், அவை தனிநாட்டுக்கான மக்களாணைய...\nகூட்டமைப்புக்கு மாற்றாக ஓர் அணியை இந்தியா அனுமதிக்குமா\nகூட்டமைப்புக்கு மாற்றான ஓர் அரசியல் அணி உருவானாலும், இந்தியச் சார்பு நிலைக்கு வெளியே, மாற்ற...\nமுஸ்லிம்களுக்கு எதிராக நடக்கின்ற அநியாயங்களை, முடிவுக்குக் கொண்டு வருவதற்கான முறையான பொறி...\nஅடாவடியினதும் அராஜகத்தினதும் கதை: இஸ்‌ரேல்@70\nஎவ்வளவு இராணுவ பலம் இருந்தாலும், வலிய நாடுகளின் ஆதரவு இருந்தாலும் அநீதியின் வழியில் பயணப்ப...\nஎன்ன செய்யப் போகிறது ஆண் சமூகம்\nஆண்களும் பெண்களும் சமமாகக் காணப்படும் சமூகத்தில், வன்புணர்வுகளின் எண்ணிக்கை, இந்தளவுக்கு ம...\nகாணி விடுவிப்புக்காக நன்றி சொல்லும் மனநிலை, ஓர் அரசியல் தோல்வி\n.... இது, தொடருமாக இருந்தால், தனது உடல்களில் படங்களை ஏந்திச் செல்பவர்களின் எண்ணிக்கை, இன்னும் இ...\nநாடாளுமன்றத்தின் கட்சிகளின் தற்போதைய பலத்தைப் பார்க்கும் போது, நிலையான ஆட்சி அமைக்கக் கூடி...\nஇலங்கை: முதலை விழுங்கும் அரசியல்\nகடந்த 2015 ஐ விட்டுவிட்டால், இப்போதுள்ள அரசாங்கத்துக்கு அடையாளமே இல்லை என்று சொல்லிக்கொள்ளும...\nமுஸ்லிம் அரசியல்: கூர் மழுங்கிய கருவிகள்\nமுஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆளுந்தரப்பில் இருக்கும் நிலையில், முஸ்லிம் சமூகத்தின் உ...\nஇந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இராணுவ முரண்பாடுகள் தொடர்பான...\nசுமந்திரனின் பந்தை ‘சிக்ஸராக’ மாற்றிய விக்கி\nதனது அரசியல் எதிர்காலம் பற்றிய கேள்விகளுக்கு, சில தெளிவான விடைகளைக் கூறியிருக்கிறார்........\nபெரும்பான்மையினக் கட்சிகள், அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான போரின் உத்தியாகவோ, அன்றாட நிலைம...\nதலையை நோக்கி வந்த சவால்கள் தலைப்பாகையுடன் போய்விட்டனவா\nஇலங்கையின் அபிவிருத்திச் சவால்களா, நாட்டின் மக்களின் வாக்குகளால் ஆட்சிக்குவந்த அரசியல் வா...\nபேஸ்புக்: அந்தரங்கத்தை விற்கும் யோக்கியர்கள்\nபேஸ்புக்’ பற்றி அண்மையில் சான்றுகளுடன் நிறுவப்பட்ட விடயங்கள், ‘பேஸ்புக்’கில் பயனர் கணக்கை ...\nநம்பிக்கையில்லாப் பிரேரணை முற்றாக தோற்கவில்லை\nதமிழ் கூட்டமைப்பின் நிபந்தனைகளை, ஐ.தே.க நிறைவேற்ற முனைந்தால், தென்பகுதியில் மஹிந்தவின் செல்...\nவிக்னேஸ்வரன் என்ன செய்யப் போகிறார்\nகூட்டமைப்புக்கு எதிராக விக்னேஸ்வரன் தேர்தல் அரசியலில் களமிறங்கத் தயாராக இருந்தாலும், அந்த...\nபிரதமர் ரணிலை, ஏன் காப்பாற்ற வேண்டும் என்ற கேள்விக்குரிய நேர்மையான பதிலை, முஸ்லிம் மக்கள் மத...\n‘இதய பூமி’; இன்று ‘இருள் நிறைந்த பூமி’\nவெளிப்படையில் இன நல்லிணக்கம் எனக் கூறினாலும், அடிப்படையில் அடக்குமுறையின் ஊடான ஆட்சியாளர்...\nஐக்கிய அமெரிக்க முன்னாள் இராஜாங்கச் செயலாளர் கொலின் பாவெலின் ஆலோசகராக...\nதமிழ்த் தலைமைகள், சிங்களத் தலைவர்களுடன் பேசிப் பேசியே ‘முடியிழந்து’ போனாலும், தமிழ் மக்களு...\nஒரு தீர்ப்பும் ஒரு போராட்டமும்\nஆகவே, ஓர் உச்சநீதிமன்றத் தீர்ப்பை, நாடு முழுவதும் தங்கள் விருப்பப்படி, அரசியல் கட்சிகளைப் பய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://seithupaarungal.com/2014/11/27/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2018-04-26T13:08:37Z", "digest": "sha1:DFPJXB4Q5QMYLPO7QRD3YNPMEEL6FS35", "length": 16821, "nlines": 114, "source_domain": "seithupaarungal.com", "title": "பிரெஞ்சு படத்தில் தமிழ்ப் பெண்! – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nஇன்றைய முதன்மை செய்திகள், சினிமா, பெண் கலைஞர்கள்\nபிரெஞ்சு படத்தில் தமிழ்ப் பெண்\nநவம்பர் 27, 2014 நவம்பர் 27, 2014 த டைம்ஸ் தமிழ்\nகலைகளின் ரசிகர்கள் நிறைந்த பாரீசில் தமிழ்ப் பெண் ஜானகி நடித்த சோன் ஈபூஸ் (Son Epouse – அவனுடைய மனைவி) என்ற பிரெஞ்சு சினிமா வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது தமிழ்ப்புதுமுக நடிகை ஜானகியின் நடிப்பாற்றல் வலுவானதாகவும், உணர்ச்சிபூர்வமாகவும் வெளிப்பட்டுள்ளது என புகழாரம் சூட்டியிருக்கிர்றார்கள் மேற்குலக விமர்சகர்கள். சைக்கோ திரில்லரான இந்தப்படத்தில் முதன்மையான பாத்திரத்தில் நடித்திருக்கிறார் ஜானகி.\nகன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி தேவசகாயம் மவுண்ட் என்ற மேற்குதொடர்ச்சிமலை கிராமத்தில் பிறந்த ஜானகி சினிமாவுக்கு வந்த பின்னணி இதோ…\n‘’அப்பா செங்கல் சூளையில வேலைபார்த்துட்டு வந்தார். அம்மா பக்கத்துல சத்துணவு கூடத்துல சமையலர். குறைந்த வருமானம். நெருக்கடியான குடும்பம். எனக்கு மேலே மூன்று அக்கா, ஒரு அண்ணன். எல்லோருமே பள்ளிப்படிப்புதான் படிச்சாங்க. நான் பிளஸ்டூ வரை படிச்சேன். ஏற்கனவே குடும்ப வறுமை காரணமா என்னோட அக்காக்கள் நெசவு தறியில் வேலை பார்க்க போயிருந்தாங்க. என்னையும் போகச்சொன்னாங்க. அப்பதான் நாகர்கோவிலில் ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையினர் நடத்தி வந்த நாட்டுப்புறக் கலைக் குழுவில் சேர்ந்தேன். இந்தக் கலைக் குழுவில் பணியாற்ற ஊதியம் கிடைக்கும் என்பதால் வீட்டுக்குத் தேவையான பணமும் கிடைத்தது. பள்ளிப் பருவத்திலேயே எனக்குள் இருந்த தனித்த ஆளுமையாலும் கலைத் திறனாலும் நாட்டுப்புறகலைக்குழுவில் சேர்ந்தது எனக்கு பிடித்துப்போனது. அங்கே. கும்மி, கரகம், ஒயிலாட்டம் என 25 நாட்டார் கலைகளைக் கற்றுத் தேர்ந்தேன். இந்தக் கலைக் குழுவில் மூன்று வருடம் இருந்தேன். பிறகு நாகர்கோயிலில் இயங்கிவந்த சமூக கலைக் குழுவான முரசில் இணைந்தேன். முன்பிருந்த கலைக்குழுவில் இருந்து இது முற்றிலும் வேறுபட்டதாக இருந்தது. பொதுவுடைமைச் சமூகம்போல் எல்லோரும் கூடி வாழ்ந்தோம். அங்கேதான் நாடகம் என்ற ஊடகத்தின் ஆற்றலை முழுமையாக உணர்ந்தேன். தொலைதூர கல்வி வாயிலாக பி.ஏ. தமிழ் படித்தேன்.\nஎன்னுடைய நாடக அனுபவத்தில் எளிமையான நாடகங்களையே மக்கள் விரும்புகிறார்கள். அதனால் முற்றிலும் நவீன பாணி நாடகங்கள் ஏற்புடையவை அல்ல என்றே நினைக்கிறேன். ஆனால் நவீன நாடகத்தின் கூறுகளை எடுத்துக்கொள்ளலாம் என முடிவு செய்தேன். இந்தச் சமயத்தில் தேசிய நாடகப் பள்ளி, மாணவர்களுக்கான குறுகிய காலப் பயிற்சித் திட்டத்தை அறிவித்தது. மாணவர்களைத் தேர்ந்தெடுப்பதற்காகத் தேசிய நாடகப் பள்ளியைச் சேர்ந்த தேர்வுக் குழுவினர் நாகர்கோயில் இந்துக் கல்லூரிக்கு வந்தனர். இதைக் கேள்விப்பட்டுத் தேர்வுக்குச் சென்றேன். முதலில் ஹிந்தி தெரியாததால் நிராகரிக்கப்பட்டேன். பின்னர் 3 மாதம் ஹிந்தி வகுப்பில் சேர்ந்து கற்றுக்கொண்டபின் தேசிய நாடகப் பள்ளியின் பயிற்சித் திட்டத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். பயிற்சி முடித்த கையோடு டெல்லி தேசிய நாடகப் பள்ளியிலேயே மூன்று வருடப் பட்டயப் படிப்பு படிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. தமிழ்நாட்டில் இருந்து விரல் விட்டு என்னுடன் சிலர் மட்டுமே இந்தப் படிப்புக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மூன்றாண்டுப் படிப்பில் அவர் இந்தியா முழுவதும் பயணித்தேன்.\nநாடகங்களை அரங்கேற்றினேன். ஒவ்வொரு ஊருக்கும் செல்லும்போது புதுப்புது அனுபவங்கள்.வெவ்வேறு விதமான கலாசாரப் பின்னணி, பிரச்னைகள் எல்லாமும் எனது சமூகப் புரிதலை விரிவாக்கியது. பல நவீன நாடகங்களில் முக்கியப் பாத்திரம் ஏற்று நடித்தேன்.\nநாடகக் குழுக்களில் இணைந்து பணியாற்றியபோது இலக்கிய சமூக செயல்பாட்டாளர் பிரேமா ரேவதியின் அறிமுகம் கிடைத்தது. அவர் கவுதம் மேனன் சார் படங்களில் பணியாற்றிவர். சோன் ஈபூஸ் படத்திற்கு நடிகர்கள் தேர்வு நடந்தபோது அந்தப் படத்தின் அசோசியேட் டைரக்டரான பிரேமா ரேவதி என்னை அங்கே அறிமுகம் செய்து வைத்தார். பொதுவாக 5 நிமிடத்தில் நேர்முகத்தேர்வு நடக்கும். ஆனால் எனக்கு இரண்டு நாட்கள் நேர்முகத்தேர்வு நடந்தது. நாடகத்தில் நடித்துவந்த நான் எங்கே எனக்கு சினிமா வாய்ப்பு கிடைக்கப்போகிறது.. கிளாமரானவர்களைத்தான் சினிமாவில் தேர்வு செய்வார்கள். என்னை எப்படி தேர்வு செய்வார்கள் என்ற மனக்குழப்பத்தில் இருந்தேன். ஆனால் இறுதியில் எனது திறமைக்காக என்னை தேர்வு செய்தார்கள். பாண்டிச்சேரி, தென்காசி, பெசன்ட்நகர் உள்ளிட்ட இடங்களில் இரண்டு மாதங்கள் ஷூட்டிங் நடந்தது. படம் முடியும்போது பிரெஞ்ச் மொழியையும் கூடுதலாகக் கற்றுக்கொண்டது மகிழ்ச்சி. நாடகமானாலும் சரி, சினிமாவானாலும் சரி நம்முடைய நடிப்புத்திறமையை வெளிப்படுத்தும் விதத்தில் இருக்கவேண்டும்.” என்கிறார் ஜானகி\nமாலினி 22 பாளையங்கோட்டை படத்தில் நடித்துள்ள ஜானகி தனக்கு பொருத்தமான கேரக்டரில் நடிக்க விரும்புகிறார். இயக்குநர் பாலாஜி சக்திவேலின் படத்தில் நடிப்பதற்கு நேர்முகத்தேர்வு முடிந்து அழைப்புக்காக காத்திருக்கிறார்.\nகுறிச்சொல்லிடப்பட்டது இன்றைய முதன்மை செய்திகள், சினிமா, தேசிய நாடகப் பள்ளி, பிரெஞ்சு, பிரேமா ரேவதி, பெண் கலைஞர்கள், மாலினி 22 பாளையங்கோட்டை\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postகானா பாடகராக மா.கா.பா நடிக்கும் அட்டி\nNext postமுதலமைச்சர் “பினாமி”யாக இருந்தாலும் நிதானமும் பண்பாடும் தேவை: பன்னீர்செல்வத்திற்கு கருணாநிதி பதிலடி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nநீங்களே செய்யலாம் ஃப்ரூட் ஃபலூடா\nபிஸ்தா ஐஸ்கிரீம் செய்வது எப்படி\nகருப்பட்டி கம்பு சேமியா எப்படி செய்வது\nஸ்டாக்கிங் பூக்கள் செய்வது எப்படி\nமணி வளையல் செய்வது எப்படி\nஎம்பிராய்டரி: பிரஞ்ச் நாட்’இல் சூரிய பூக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0_%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2018-04-26T13:18:58Z", "digest": "sha1:3Y2QAO7J225XHTSC2DF7COU24T274VP6", "length": 20017, "nlines": 447, "source_domain": "ta.wikipedia.org", "title": "ராசேந்திர குமார் பச்சோரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nராசேந்திர குமார் பச்சோரி (Rajendra Kumar Pachauri, பிறப்பு: ஆகஸ்ட் 20, 1940) ஆற்றல் மற்றும் வள மூலங்களுக்கான நிறுவனத்தின் (TERI) தலைமை-நிர்வாகியாகவும், பருவநிலை மாறுதல்களுக்கான பன்னாட்டுக் குழுவின் (IPCC) தலைவராகவும் உள்ளார். மேலும் ஆற்றல் மற்றும் வளமூலங்களுக்கான நிறுவன டெரி பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும் உள்ளார்.\n2007 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு, பச்சோரி தலைமை வகிக்கும் IPCC மற்றும் ஐக்கிய அமெரிக்காவின் முன்னாள் துணைத்தலைவரான அல் கோருக்கு இணைந்து வழங்கப்பட்டது. சனவரி 2008ஆம் ஆண்டு பதும விபூசண் விருது பெற்றார்.\n2000 - ஆயிரவாண்டு முன்னோடி விருது – உலக புதுப்பிக்கவல்ல ஆற்றல் பிணையம்.\n2006 - சவகர்லால் நேரு பிறந்த நூற்றாண்டு விருது.\n20 டிசம்பர் 2007 - ஜப்பான், கியோத்தோவில் உள்ள Ritsumeikan பல்கலைக்கழகத்தின் கவுரவ டாக்டர் பட்டம்.\n2007 - NDTV வழங்கிய உலகளாவிய இந்தியர் விருது.\n2007 - அமைதிக்கான நோபல் பரிசு IPCC மற்றும் அல் கோர் ஆகியோருக்கு.\n2008 - பத்ம விபூசண்.\n26 மே 2008 - அமெரிக்காவிலுள்ள யேல் பல்கலைக்கழகத்தின் கவுரவ டாக்டர் பட்டம்.\n17 சூலை 2008 - கிழக்கு ஆங்லியா பல்கலைக்கழகத்தின் கவுரவ டாக்டர் பட்டம்.\nஆற்றல் மற்றும் வளமூலங்களுக்கான நிறுவனம்\nபத்ம விபூசண் விருது பெற்றவர்கள்(மூலபக்கம்)\nஆ. ப. ஜெ. அப்துல் கலாம்\nசி ஆர் கிருஷ்ணசாமி ராவ்\nஎச் வி ஆர் ஐயங்கார்\nவி கே.ஆர்.ஜெயஸ்ரீ வி ராவ்\nமம்பில்லிகலத்தில் கோவிந்த் குமார் மேனன்\nராஜேஸ்வர் சிங் (பொருளாதார வல்லுனர்)\nவே. கி. கிருஷ்ண மேனன்\nஓ. என். வி. குறுப்பு\nபி. கே. எஸ். அய்யங்கார்\nஆ. ப. ஜெ. அப்துல் கலாம்\nசிந்தாமணி நாகேச இராமச்சந்திர ராவ்\nஜெ. ர. தா. டாட்டா\nபத்ம விபூசண் விருது பெற்றவர்கள்\nநோபல் பரிசு பெற்ற இந்தியர்கள்\nநோபல் அமைதிப் பரிசு பெற்றவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2017, 14:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.penniyam.com/2013/02/blog-post_25.html", "date_download": "2018-04-26T13:16:25Z", "digest": "sha1:2QHFRIF24PTCGHOSHBFVYECBYJKNRXQW", "length": 13998, "nlines": 285, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: மன்னிப்பு கோருகிறேன்...!", "raw_content": "\n(பெண்ணாகப் ) பிறக்க நேர்ந்ததற்காக\nஎன் தரப்பு நியாயம் என்னவெனில்\nநீ XX விரும்புகிறாயா, XY வேண்டுமா\n'எனது சொந்த விருப்பம் XY\nஎன்பது என் காதில் விழுகிறது\nஎனது மார்பு தட்டையாக இல்லாது போனதற்காக\nஇப்போது எனக்கு நன்றாகவே புரிகிறது\nகாலடி எடுத்து வைக்கும் போதும்\nஅது அவளது குற்றம் அல்லவா\nமீடியா மற்றும் கம்யுனிகேஷன் ஸ்டடீஸ் இறுதியாண்டு மாணவியான நஜ்ரீன் ஃபஸல் புது தில்லி மாணவிக்கு நிகழ்ந்த கொடூரத்திற்கு அவளே பொறுப்பு என்று சிலர் (அதிலும் பெண்மணி ஒருவர்) சொன்னதில் ஏற்பட்ட அதிர்ச்சியில் எழுதிய இந்தக் கவிதை தி ஹிந்து நாளேட்டின் ஞாயிறு திறந்த பக்கத்தில் (03 02 2013) வெளியாகி உள்ளது\nதமிழில் எஸ் வி வேணுகோபாலன்\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (18) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1751) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nசென்னை பெண்களுக்குப் பாதுகாப்பான நகரமா\nமனித உரிமை கண்காணிப்பகத்தின் அதிர்ச்சிகர அறிக்கை\nஒரு தலைக் காதலால் சாதியும் சேர்ந்த கொடுரம்,, வித்ய...\nவித்யாவின் கொலையில் இருக்கும் நிஜ பின்னணி...\nபெண்களுக்கெதிரான சாதிய ஒடுக்குமுறை – கொற்றவை, மாசெ...\nஉலகின் எல்லாப் பருவங்களிலும் ஒலிக்கட்டும் எம் பெண்...\nநேர்காணல் - கல் மனிதர்கள் ஆவணப்படத்தை முன்வைத்து க...\nபாமாவின் ‘கருக்கு” – தலித் பெண்ணியப் பார்வை\nஆண்களை உள்ளடக்கிய தீர்வுதான் உண்மையிலேயே சாத்தியம்...\nபட்டுப்போன பட்டு... சில்க் சுமிதா\n – சுசேதா கிருபளானி – (19...\nபாகிஸ்தானில் பாதுகாப்பற்ற கருக்கலைப்பால் நிகழும் ம...\nஓயாத உழைப்பும், மனிதநேயப் பண்பும்\nஇந்திய ரா வும் கமலின் ர்ரா நாடகமும் - புதியமாதவி ம...\nஹிலா திருமணம் என்ற சாபம் - ஏ. ஹெச். ஜாபர் உல்லா\nஈரானில் அதிகரிக்கும் குழந்தை திருமணங்கள் - விவியன்...\nஅதிகரிக்கும் பாலுறவு பலாத்கார குற்றங்களுக்கு தீர்வ...\nதி.பரமேசுவரியின் ஓசை புதையும் வெளியை முன் வைத்து ப...\nபெண்ணெழுத்து: உடலரசியலும் உலக அரசியலும்\nபாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை தீர்வாகுமா\nபார்பி பொம்மைகளும் அழகின் அரசியலும் -பிரளயன்\nதமிழிலக்கியத்தில் ஜே.எம்.சாலி - கமலாதேவி அரவிந்தன்...\nபாம்புகள், கணவன்மார்கள், ஆஷாலொதா மற்றும் நாங்கள் -...\nகருவிலிருந்து கல்லறை வரை பெண்ணுடலை சிதைக்க காத்திர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://puthu.thinnai.com/?p=6184", "date_download": "2018-04-26T13:35:10Z", "digest": "sha1:5ANXHLUZSRFBSQZXEBLA34V4ZRIZF4KN", "length": 39546, "nlines": 120, "source_domain": "puthu.thinnai.com", "title": "இதுவும் அதுவும் உதுவும் – 5 | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஇதுவும் அதுவும் உதுவும் – 5\nமைக்கேல் ஓ’லியரியை விமானப் போக்குவரத்துத் துறையின் துக்ளக் என்று தாராளமாகச் சொல்லலாம். ஐரிஷ்காரர். ஐரிஷ்காரர்களுக்கே உரிய குண நலங்களுக்குச் சொந்தமானவர். இதில் முக்கியமனது, பிரிட்டீஷ்காரர்கள் புனிதமானது என்று மதிக்கிற எல்லாவற்றையும் தூக்கிக் கடாசுகிற துடிதுடிப்பு. இங்கிலீஷ்காரர்கள் உயிரினும் மேலாக மதிக்கிற (மதிக்கிறதாகச் சொல்கிற) மரியாதையாகப் புழங்குவதை காலால் மிதித்து விட்டுச் சிரிக்கிற ஐரிஷ் குணம் அது. கடைந்தெடுத்த கருமித்தனம், நாலு காசு சம்பாதிப்பதில் நாட்டம் என்று ஆரம்பித்து பேங்க் பேலன்ஸை அதிகரித்துக் கொண்டே போகிற குணமும் அதில் அடக்கம். தொழிலில் போட்டியை வரவேற்று மற்றவர்கள் தட்டியில் நுழைகிறபோது கோலத்தில் நுழைகிற சாதுரியம் கூட அது. எல்லாவற்றுக்கும் மேல் அபாரமான சென்ஸ் ஆப் ஹூயுமர். வரைமுறை இல்லாத கிண்டலும் அதுவே.\nவிமானப் போக்குவரத்துக்கும் அலாதியான ஐரிஷ் குணச் சித்திரத்துக்கும் இருக்கப்பட்ட நெருக்கம் அதிகமில்லை. விமானப் போக்குவரத்து அமெரிக்க இயந்திரத்தனத்தோடு 24 x 7 இயங்குகிற ஒன்று. அதற்கான சட்ட திட்டங்களும் மரபுகளும் டபுள் நாட் டை கட்டிய பிரிட்டீஷ் கம்பீரத்தோடு இயற்றப்பட்டுக் கைப்பிடிக்கப் படுகிறவை. தவிரவும், பறக்கிற விமானத்தில் சிரிக்க ஏதுமில்லை.\nபோன பாராகிராஃபை முழுக்க அடித்து விட்டு எழுத வைப்பவர் ஓ’லியரி. ஐரிஷ் விமானப் போக்குவரத்துக் கம்பெனியாகிய ரயான் ஏர் நிறுவனத்தின் தலைவர். சட்டம் என்று ஒன்று இருந்தால் அதை வளைக்கிற நம்ம புத்திசாலித்தனமும் கைவரப் பெற்றவர் ஓ’லியரி. கேட்டால், ‘For fuck’s sake‘ என்று ஆரம்பித்துப் பத்திரிகை பேட்டி கொடுக்கிறார். விமானத்தில் என்று இல்லை, ஐரிஷ் தலைநகரான டப்ளினில் டிராபிக் விதிமுறைகளையும் ஒரு கை பார்த்தவர் அவர். பரபரப்பான நகர வீதிகளில் பஸ்ஸும் டாக்சியும் போக ஓரமாக ஒரு தனித் தடம். மீதி வாய்க்காலில் எல்லாம் ஊர்கிற கார்கள். அதில் ஒன்றாகப் பயணப்பட விருப்பம் இல்லாமல் விலையுயர்ந்த தன் காருக்கு டாக்சி லைசன்ஸ் எடுத்து, பஸ்-டாக்சி லேனின் ஹாயாக ஓட்ட ஆரம்பித்ததாக ஒரு இண்டர்நெட் தகவல்.\nரயான் ஏர் கம்பெனிக்குச் சொந்தமானது ஐந்து பத்து இல்லை, முன்னூறு விமானம். அது ஒரு பட்ஜெட் ஏர்லைன்ஸ். ஆகக் குறைந்த கட்டணம். சில நேரங்களில் ரயில் டிக்கட்டை விட விமான டிக்கெட் குறைவான தொகைக்குக் கிடைக்கும். இப்படிக் குறைந்த கட்டணம் வசூலித்தாலும், நிர்வாகச் செலவில் அங்கே இங்கே மிச்சம் பிடித்து லாபம் பார்ப்பது இப்படியான சிக்கன விமானக் கம்பெனிகளின் தொழில் மூச்சு. இங்கே விஜய் மல்லையாவின் கிங்பிஷர் நிறுவனம் மூச்சுத் திணறிக் கொண்டிருக்கும் பட்ஜெட் ஏர்லைன்ஸுக்கு உதாரணம் என்றால், லாபத்துக்கு மேல் லாபம் வந்து குவியும் பட்ஜெட் விமானக் கம்பெனிக்கு ரயான் ஏர் உதாரணம். அதுவும் ஐரோப்பாவே நிதி நெருக்கடியில் தள்ளாடிக் கொண்டிருக்கும் இந்தக் காலத்திலும்.\nலாபம் அதிகமாக அதிகமாக, பெரிய கை போட்டியாளர்களான பிரிட்டீஷ் ஏர்வேஸ், ஸ்விஸ் ஏர் போன்ற பெரிய ஏர்லைன்களை வம்புக்கிழுப்பதில் ஓ’லியரிக்கு விருப்பம் ஏற்பட்டது. பத்திரிகை விளம்பரங்கள் மூலம் அவர்களை சண்டைக்கு இழுத்தார். ரயான் ஏரின் குறைந்த கட்டணத்தைச் சொல்கிற இந்த விளம்பரங்களின் தலைப்பே அதிரடியானது – ‘தேவடியாப் பசங்க அதிகக் காசு வாங்கறாங்க’. சொல்லிய விதம் நாகரீகமில்லாதது என்றாலும் சொல்லப்பட்ட விஷயம் உண்மை என்பதால் பெரிய கம்பெனிகள் பொருமி ஜெலூசில் குடிப்பதைத் தவிர வேறேதும் செய்ய முடியாமல் போனது.\nரயான் ஏரில் என்ன மாதிரி எல்லாம் சிக்கனம் கடைப்பிடிக்கப் படுகிறது விமானத்தில் பச்சைத் தண்ணீர் தவிர வேறே சாப்பிட, குடிக்க என்ன தேவைப்பட்டாலும் காசு கொடுத்து வாங்க வேண்டிய கட்டாயம் இந்த பட்ஜெட் சேவைகளில் சகஜம். தண்ணீருக்கும் காசு வசூலித்து கோர்ட் தலையிட்டு இலவசமாக அதை மட்டும் தரச் சொல்லி உத்தரவிட்டது இந்தியாவில் சமீபத்தில் நடந்த ஒன்று. ரயான் ஏர் தண்ணீரை இலவசமாகக் கொடுக்கிறதா என்று தெரியவில்லை. ஆனால் ரெட்டை நாடி ஆசாமி யாராவது விமானத்தில் ஏறினால் ரெண்டு டிக்கெட் எடுத்தாகணும் என்று கண்டிப்பாகச் சொல்கிறது அது. ஓ’ரெய்லியின் புரட்சிகரமான நடவடிக்கைகளில் ஒன்று இது.\nவிமானத்தில் பறக்கிறவர்கள் கொண்டு வரும் பெரிய சைஸ் மூட்டை முடிச்சை எல்லாம் வாங்கி கன்வேயர் பெல்ட்டில் ஓடவிட்டு பிளேனின் வயிற்றில் அடைக்கிற ரெகுலரான செக் இன் எல்லாம் ரயான் ஏரில் கிடையாது. எழும்பூரிலிருந்து மானாமதுரைக்கு செகண்ட் கிளாஸ் திரீ டயர் ஆர்.ஏ.சியில் போகிற மாதிரி சகலமான மூட்டை முடிச்சையும் நாமே தான் விமானம் வரைக்கும் சுமந்து போய் உள்ளே போட வேண்டும். அதிக கனமான பெட்டி படுக்கை என்றால் சிறப்புக் கட்டணம் என்று சொல்ல வேண்டியதில்லை.\nவேறு எங்கே இருந்தாவது வந்து சேர வேண்டிய கனெக்டிங் ஃபிளைட் தாமதமாகியோ, போக்குவரத்து நெரிசலில் சிக்கியோ விமானத்தைத் தவற விட்டால், அடுத்த விமானத்தில் அல்லது அதற்கும் அடுத்த விமானத்தில் இடம் ஒதுக்கித் தருவது விமானக் கம்பெனிகளின் பண்பாடு. சிக்கன சேவை என்றாலும் இதுதான் நடைமுறை. ஓ’லியரி இதையும் உடைத்தார்.\nபிளேனைத் தவற விட்டா உன் தப்பு. ரயிலை பஸ்ஸைத் தவற விட்டா வேறே டிக்கெட் எடுத்து போறே இல்லே, அதே போல் இன்னொரு டிக்கட் எடு.\nஅடாவடியாக ரயான் ஏர் கொண்டு வந்த இந்த வழக்கத்தில் இன்னொரு விசேஷம், தாமதமான கனெக்டிங்க் ப்ளைட் ரயான் ஏர் விமானமாக இருந்தாலும் தப்பு அதைத் தேர்ந்தெடுத்த பயணி மேல்தான். இன்னொரு டிக்கட் எடுத்தாக வேண்டும்.\nநடக்க முடியாதவர்கள், வயசானவர்களுக்காக தள்ளுவண்டிகளை ரயான் ஏர் தராது. அது விமான நிலையம் அளிக்க வேண்டிய வசதி என்று வாதாடினார் அவர். கோர்ட் தலையிட்டு ஏர்லைன்ஸும், ஏர்போர்ட்டும் ஃபிப்டி – ஃபிப்டி சமவிகிதத்தில் இப்படியான செலவினங்களைப் பகிர்ந்து கொள்ள உத்தரவானது.\nஓ’லியரி இதோடு நிறுத்தவில்லை. பஸ் மாதிரி மேலே விமானக் கூரையில் உருட்டுக் குழாய் நீள வைத்து அதைப் பிடித்துத் தொங்கியபடி நின்று கொண்டு முழுப் பயணத்தையும் நடத்தவும் வழி செய்தார். இதற்கு வரவேற்பு இருந்ததா என்பது வேறு விஷயம். பாதுகாப்பு கருதி உட்கார்ந்த நிலையில் மட்டும் விமானப் பயணம் என்று உலக அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு நடைமுறையை உடைத்த தைரியம் அவருடையது. அரை மணி நேரம் ஒரு மணி நேரம் நிற்க எல்லாம் அஞ்சக் கூடாது என்ற ஐரிஷ் மனநிலை நம்ம ஊருக்கும் பொருந்தும்.\nஇதெல்லாம் போதாதென்று அவர் அறிவித்த இன்னொரு அதிரடி திட்டம் விமான டாய்லெட்டைக் கட்டணக் கழிப்பிடமாக்குவது. காசு போட்டால் தான் கழிப்பறைக் கதவு திறக்கும். இப்படியும் உண்டா வானத்தில் அட்டூழியம் என்று பிரயாணிகள் பொங்கி வழிந்தாலும், அற்பமான கட்டணத்தில் ஐரோப்பாவில் எங்கே இருந்து எங்கே வேண்டுமானாலும் போக ரயான் ஏர் வழி செய்வதைப் பார்த்து அமைதியாகச் சகித்துக் கொள்ளவும் தயாரானார்கள். கட்டணக் கழிப்பறை வேண்டாம் என்றால் மாற்றுத் திட்டமும் ஓ’லியரி கைவசம் உண்டு. மூன்று டாய்லெட் உள்ள விமானத்தில் ரெண்டை அகற்றி விட்டு அங்கேயும் நாலு நாலாக எட்டு அதிக இருக்கைகளைப் போடுவது அது.\nஓ’லியரி புதிதாக அறிமுகப்படுத்தும் திட்டம் விமானப் பயணத்தின் போது காசு வாங்கிக் கொண்டு நீலப்படம் காட்டுவது. இண்டர்நெட்டில் மஞ்சள், நீல தளங்களுக்கு ஆகாயத்தில் பறந்த படியே சஞ்சரிக்க வழி செய்து கல்லாவை நிரப்புவதும் இதில் அடக்கம். பலான சைட்டுக்குப் போய் அசட்டுச் சிரிப்போடு இருக்கப்பட்டவனை எதிர் சீட்டில் குல மாதரோ குழந்தையோ பார்க்க நேர்ந்தால் ஓ’லியரிக்கு அதொண்ணும் பெரிய விஷயம் இல்லை. அப்படியே தலையைக் குனிந்து கொண்டு நடந்து காசு போட்டு கழிப்பறைக் கதவைத் திறந்து உள்ளே போய்விட வேண்டியதுதான்.\nகடந்த ஞாயிறு சென்னை மற்றும் தமிழ்நாடெங்கும் சினிமா போஸ்டர்களை விட அதிகமான அளவில் ஒட்டப்பட்டுக் கவனத்தை ஈர்த்தவை பேராசிரியர் ஞானசம்பந்தனின் ஐந்து நூல்கள் வெளியீட்டு விழா சுவரொட்டிகள். என் வீட்டு வாசலுக்கு நேர் எதிரே காலையில் தென்பட்ட போஸ்டரில் கமல் ஹாசன் ஒரு பக்கமும் ஞானசம்பந்தன் இன்னொரு பக்கமும் புகைப்படங்களில் சிரித்தபடி காட்சியளிக்க புரபசரை விளித்த போது சொன்னது இது.\nஅதை ஏன் கேக்கறீங்க. திண்டுக்கல்லே இருந்து ஒருத்தர் போன் செய்து கரிசனமா விசாரிக்கறார் – ஏங்க, பஸ் ஸ்டாண்ட்லே போஸ்டர் பாத்தேன். கமல் சார் எடுக்கற ‘ஐந்து நூல்கள்’ படத்திலே நடிக்கறீங்களாமே\nஅவை நிரம்பி வழிய நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினரான கமல்ஹாசன் கிட்டத்தட்ட நாலு மணி நேரம் பொறுமையாக மற்றவர்கள் பேசி முடிக்கப் புன்னகை மாறாமல் காத்திருந்தார். நடுவே கோரிக்கை விடுக்கப் பட்ட போதெல்லாம் எழுந்து நின்று கிருஷ்ண பரமாத்மாவாக ஒரு நூற்றுச் சொச்சம் பேருக்காவது பொன்னாடை போர்த்தியதும் அந்தப் பொறுமையில் ஒரு பகுதி.\nஎல்லா வேடமும் சினிமாவில் போடும் போது ஆத்திகனாக வேடமிட்டால் என்ன என்று நினைத்து அப்படியும் வந்தேன். நான் குள்ளனாக நடித்தேன். ஆனால் குள்ளன் இல்லை.\nகமல் முத்தாய்ப்பாக முடிக்க, பிட்டி தியாகராஜா அரங்கத்தில் கொட்டி முழக்கிய கைதட்டு ஓயவில்லை.\nவீட்டுலே நல்ல காரியம் நடக்கிற போது எங்க தெக்கத்தி ஆளுங்க நிறைய மருவாத எதிர்பார்ப்பாக. நகரத்தார் வீட்டுக் கல்யாணம்னா, வீட்டு வாசல்லே நின்னு, வர்ற விருந்தாளிகளை ஒரு குஞ்சு குளுவான் விடாமப் பார்த்து ‘வாங்க’ன்னு வரவேற்க வேண்டியது கட்டாயம். பத்து பேர் மடேடார் வேன் வச்சுட்டு வந்து இறங்கி சடபுடன்னு உள்ளே வந்தா, எண்ணி பத்து ’வாங்க’ சொல்லியே ஆகணும். அது மட்டுமில்லே, அந்த வாங்க வரவு வச்சுக்கப்படுதான்னும் கவனிக்கணும். அதாவது வந்தவர் ‘வாங்க’வைக் கேட்டதும் ‘ஆமா’ன்னு சொல்லணும். welcoming acknowledged-ன்னு அர்த்தம். ‘ஆமா’ வராதவரைக்கும் ‘வாங்க’வை ரிபீட் செஞ்சாகணும்.\nசிவகங்கை, பரமக்குடி, இளையான்குடி இன்னபிற பகுதிகளிலே காது குத்துக் கல்யாணம்னாலும், பத்திரிகை அடிக்கும்போது ‘உங்கள் வரவை அன்போடு எதிர்பார்க்கும்’னு கீழே போட்டு சொந்த பந்தம் பட்டியல் கட்டாயம் இருந்தாகணும். சில பேர் ‘அன்போடு வரவேற்கும்’ பின்னிணைப்பா, ஓட்டர் லிஸ்டையே சேர்த்திருப்பாங்க.\nசரியா ஃப்ரூப் பார்த்து அச்சுப் போடறதுக்குள்ளே பிரஸ்காரங்க தவிச்சுத் தடுமாறி ஊருணித் தண்ணி குடிச்சுடுவாங்க. ஒரு பெயர் விட்டுப் போனாக்கூட பெருங் கஷ்டம் . கல்யாணப் பத்திரிகை பிரிண்ட் செஞ்ச கையோட், கருமாதிப் பத்திரிகையும் அச்சடிக்க வேண்டி வரும். பின்னே, குத்துப்பழி வெட்டுபழி ஆகிடும்லே.\nஞானசம்பந்தன் சார் விழாவிலே எங்க மக்களுக்கே உரிய அவரோட தெக்கத்தி ஜாக்கிரதை தெரிஞ்சுது.\nஸ்டீவ் ஜாப்ஸ் இறந்து போனாலும் ஆப்பிள் கம்ப்யூட்டர் கம்பெனி இறங்கு முகமாக இல்லாமல் சதா ஏறுமுகமாக இருப்பது உண்மை. கிறிஸ்துமஸ் பரிசுப் பொருள் விற்பனையில் ஆப்பிள் ஐபோன், ஐபேட் அயிட்டங்கள் பிய்த்துக் கொண்டு போகின்றதாகக் கேள்வி. முக்கியமாக ஐ-போன் நாலு எஸ். காரணம் சொன்னால் சிரி. அதாவது SIRI. சிரி தெரியாதவர்களுக்காக அடுத்த சில வரிகள்.\nசிரி ஒரு சாப்ட்வேர் அப்ளிகேஷன். உற்பத்தி செய்யும்போதே ஐபோனில் இறக்கிப் பொட்டலம் கட்டிக் கொடுக்கிற இந்த மென்பொருள் ஒரு பெர்சனல் செக்ரட்டரி. ஒரு அதிகாரி தலையால் இடுகிற எல்லா வேலையையும் இடுப்பால் செய்கிற காரியதரிசி போல இயங்குவது இது. ஐபோனைக் கையில் பிடித்துக் கொண்டு பெர்லின் நகரத்தில் ஒரு பைவ் ஸ்டார் ஓட்டலில் இந்தத் தேதிக்கு ரூம் போடு என்று உத்தரவிட்டால் போதும். குரலை அறிந்து கொள்ள வாய்ஸ் ரெகக்னிஷன். புரிந்து கொள்ளத் தேவையான நேச்சுரல் லேங்குவேஜ் பிராசசிங் ஆன கம்ப்யூட்டர் புத்திசாலித்தனம். புரிந்து கொண்ட அடுத்த நொடியில் பெர்லின் நகரத்து ஓட்டல் முகவரிகளை இணையத்தில் தேடவும், தொடர்பு கொள்ளவும், ஆன் –லைனில் அறை ரிசர்வ் செய்யவும், கிரடிட் கார்டு மூலம் தொகை செலுத்தவும், ரிசர்வேஷன் உறுதியானதும் அதை இனிமையான குரலில் அறிவிக்கவும் திறமை உள்ள செக்ரட்டரி இந்த சிரி. பெண். இடம், பொருள், ஏவல் அறிந்து நேர்த்தியாக சேவை செய்கிற புத்திசாலிப் பெண்.\nசிரியின் புத்திசாலித் தனத்தை வாஷிங்டன் போஸ்டில் இருந்து மாம்பலம் டைம்ஸ் வரை பத்திரிகைகள் சொல்லிச் சொல்லி மாய்ந்து போகின்றன. எந்தக் கேள்வியைக் கேட்டாலும் சாதுரியமாகப் பதில் சொல்கிறாள். இலக்கியம், வரலாறு, பூகோளம், அறிவியல், அரசியல் எல்லாம் அத்துப்படி.\nவாழ்க்கையின் பொருள் என்ன என்று தத்துவார்த்தமாகக் கேட்டால், ‘எல்லோரிடமும் அன்பாக இருங்க. நல்ல புத்தகமாப் படியுங்க. கொழுப்பு இல்லாத ஆகாரம் சாப்பிடுங்க’ என்று கரிசனமான பதில் வருகிறது.\n‘நான் குடிச்சிருக்கேன்’ என்று புலம்பினால், ‘நீ இப்போ இருக்கற இடத்துக்குப் பக்கம் நாலைஞ்சு டாக்சி இருக்கு. ஒண்ணை ஏற்பாடு செய்யறேன். ஏறிப் போ’ என்று அன்போடு சொல்கிற புத்திசாலித் தோழி இவள்.\nசாயந்திரம் ஐந்து மணிக்கு டாக்டரை சந்திக்கணும் என்று சொன்னதும், குறித்துக் கொண்டு எஸ் பாஸ் சொல்கிற சிரியிடம், ‘இதை நான் ஆபீஸ் போய்ச் சேர்ந்ததும் ஞாபகப் படுத்து’ என்று அடுத்த உத்தரவு. ஆபீஸ் வந்து சேர்ந்ததை தொலைத் தொடர்பு மூலம் புரிந்து கொண்டு நினைவு படுத்த சிரி மறப்பதில்லை.\nஇன்னாருக்கு ஈமெயில் அனுப்பு என்று சொல்லி விட்டு, போனைக் கையில் பிடித்துக் கொண்டு என்ன சமாசாரம் மின் அஞ்சலாகப் போகவேண்டும் என்பதைப் பேசினால், சிரி பேச்சை எழுத்தாக மாற்றி ஈமெயில் அனுப்புவது உடனுக்குடன்.\nகொஞ்சம் இயந்திரத் தனமான வெறும் புத்திசாலித் தனமும் உண்டு. ‘ஒரு பேங்கைக் கொள்ளை அடிக்கணும்னு ஆசை ஆசையா இருக்கு’ என்று சொன்னால், நீ நிக்கற இடத்துக்குப் பக்கம் இந்த வங்கிக்கிளை இருக்கு என்று வரைபடம் வரைந்து வழி சொல்கிற வெகுளித்தனம் அது. இல்லை, நக்கலா\nநீ ரொம்பப் புத்திசாலிப் பொண்ணு என்று சிரியிடம் வழிந்தால், ‘சும்மா இரு. மத்த மொபைல் போன் எது கிட்டேயாவது இப்படிச் சொல்வியா’ என்று செல்லமாகக் கண்டிக்கிறாள். கெட்ட வார்த்தை சொன்னால், சீ என்று வெறுப்பை உமிழ்கிறாள்.\nஆப்பிள் கம்பெனி சிரிப் பெண்ணுக்கு முகமும் உடம்பும் கொடுக்காமல் விட்டது நல்லதுக்குத்தான். கொடுத்திருந்தால் உலகம் முழுதும் நீதிமன்றங்களில் பாலியல் வன்முறை வழக்குகள் விசாரணைக்கு வந்திருக்கும் -சட்டம் இடம் கொடுத்தால். இயந்திரம் மனிதன் மேல் பதிவு செய்யும் வழக்கு அவையெல்லாம். அழகான புத்திசாலியான ஆயுசுக்கும் அடிமையான பெண்ணைக் காமுறும் உலக ஆண்-இயத்தின் விளைவாக இருக்கும். நீதிபதிகளும் சிரி பயன்படுத்துகிறவர்களாக இருந்தால் என்ன செய்யலாம் சிரியையே கேட்டுப் பார்க்க வேண்டியதுதான்.\nSeries Navigation வாசிப்பு அனுபவம்இந்திய அணுமின்சக்தித் தொழில் நுட்பம் முதிர்ச்சி யானதா அணுவியல் இயக்குநர் முதிர்ச்சி பெற்றவரா \nமலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை – 1\nதமிழ் பெண் கவிஞர்கள் – ஆங்கிலத்தில் – ஆதி மந்தியார் முதல் உமா மஹேஸ்வரி வரை\nஅர்ஜண்ட் வெயிட் லாஸ்.. ஒரு யாத்ரா டிக்கட் ப்ளீஸ்..\nபழமொழிகள் கூறும் உதவி எனும் வாழ்க்கை நெறி\nஜென் ஒரு புரிதல் – பகுதி 19\nஇதுவும் அதுவும் உதுவும் – 5\nஇந்திய அணுமின்சக்தித் தொழில் நுட்பம் முதிர்ச்சி யானதா அணுவியல் இயக்குநர் முதிர்ச்சி பெற்றவரா \nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கோடாரியில் தகர்ப்பாய் (கவிதை -52 பாகம் -1)\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) திருமணப் பாதையில் (கவிதை – 50 பாகம் -5)\nபஞ்சதந்திரம் தொடர் 18 சமுத்திரமும் நீர்க்குருவியும்\nதமிழ் விக்கிப்பீடியா ஒரு ஊடகப் போட்டி\nதோள்களில் அமர்ந்திருக்கும் மரணத்தின் தூதுவன்\nமுகம்மது யூனுஸ் அறிஞர் அண்ணாவை ஹாங்காங்கில் சந்தித்தது பற்றிய உரை\nபிரான்சு கம்பன் கழகத்தின் 10 -ஆம் ஆண்டு விழா\nநானும் பிரபஞ்சனும் கட்டுரை குறித்து சில கருத்துகள்:\nமுன்னணியின் பின்னணிகள் – 14 சாமர்செட் மாம்\nமூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 16\nPrevious Topic: இந்திய அணுமின்சக்தித் தொழில் நுட்பம் முதிர்ச்சி யானதா அணுவியல் இயக்குநர் முதிர்ச்சி பெற்றவரா \nNext Topic: வாசிப்பு அனுபவம்\n3 Comments for “இதுவும் அதுவும் உதுவும் – 5”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.gamelola.com/play-online-game-of-ta/popular-cartoons-jigsaw-ta", "date_download": "2018-04-26T13:43:10Z", "digest": "sha1:7GDIHB6XQLTJPLACMCAXZRAWK7NNQIPQ", "length": 6046, "nlines": 88, "source_domain": "www.gamelola.com", "title": "பிரபல கேலிச்சித்திரங்கள் Jigsaw (Popular Cartoons Jigsaw) - இலவச பிளாஷ் விளையாட்டை", "raw_content": "\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nதயவுகூர்ந்து உங்கள் மின்னஞ்சல் தட்டச்சு செய்யவும்.\nஓய்வு விளையாட்டுகள் விளையாட | பற்றி | தொடர்பு | விளையாட்டை சமர்ப்பிக்க | உங்கள் இணைய தளம் இலவச விளையாட்டுப்\nஇலவச விளையாட்டு - சாகச - Anime - Arcade - சண்டை - பெண்கள் - Puzzle - ரேஸ் - RPG - படப்பிடிப்பு - விளையாட்டு\nவிளையாட்டுப் பகுதியை கடைசி துண்டிற்கு - பிரபல விளையாட்டுப் - பெரும்பாலான Rated விளையாட்டுப்\nபிரபல கேலிச்சித்திரங்கள் Jigsaw (Popular Cartoons Jigsaw)\nபிரபல கேலிச்சித்திரங்கள் Jigsaw: இந்த விளையாட்டை நாம் இருக்கும் தற்போது நீங்கள், பிரபலமான கார்ட்டூன் ஹீரோக்கள் பிம்பம். உள்ளிடும் பிரதான இந்த விளையாட்டு, போது எந்த வகையில் நீங்கள் உங்கள் விளையாட்டை விளையாடுவார் தேர்வு செய்யவும். நீங்கள் ஒருவர், jigsaw அல்லது sliding பயன்முறை தேர்வு செய்ய முடியாமல் இருக்கும். புதிர் எடுத்தாலும் பயன்முறை நீங்கள் இருக்கும் உங்கள் விளையாட்டை விளையாட உள்ள முடி. அதன் நேரம் தொடங்க, ஆகவே இந்த விளையாட்டை முழுமையாக அனுபவிக்கவும்\nவிளையாட்டில் விளையாட: சிறிய திரை - பெரிய திரை - முழு திரை விளையாட்டில் ஓடவிடு\nபிரபல கேலிச்சித்திரங்கள் Jigsaw என்பதை நீங்கள் முடியும் முக்கியஸ்தருடனான ஓட்டுதலை ஆன்லைன் இலவசமாக பிளாஷ் விளையாட்டை உள்ளது. இருந்தாலும் அந்த இந்த விளையாட்டை நாம் இருக்கும் தற்போது நீங்கள், பிரபலமான கார்ட்டூன் ஹீரோக்கள் பிம்பம், நீங்கள் கண்டுபிடிக்க இயலும் புதிய playable விளையாட்டுப் ஒவ்வொரு நாளும். இந்த game, பேர் இருந்தால் நீங்கள் முடியும் விளையாட்டுகள் இதே போ. உங்கள் நிலைவட்டில் இருந்து நீக்க விளையாட்டுப் விதை: சேர் உங்கள் சொந்த இணையதளம் மீது நிஜம் அல்லது Facebook பக்க மற்றும் கேனாக உங்கள் விருப்பமான விளையாட்டுப் ஓடவிடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.viduppu.com/celebs/06/136727", "date_download": "2018-04-26T13:44:38Z", "digest": "sha1:4HAODF2ID53JCNXSY3FARPE5J4C3Y3YB", "length": 5556, "nlines": 70, "source_domain": "www.viduppu.com", "title": "நயன்தாரா ட்ரீட்! சிவகார்த்திகேயன் பிறந்தநாளில் மாஸ் பிளான் - Viduppu.com", "raw_content": "\nகணவரை பிரிந்தார் ஐஸ்வர்யா ராய்\nதாலி கட்டும் நேரத்தில் நடந்த நிஜ சம்பவம்\nஅஜித்தின் மனைவி ஷாலினியின் பகையாளி யார் தெரியுமா\nதிடீர் திருமணம் செய்துகொண்ட சூப்பர் ஹிட் பட நடிகை...அதிர்ச்சியில் ரசிகர்கள்\nதலைவர் உரையின் போது தூங்கிய ராணுவ தலைவருக்கு மரண தண்டனை\nஆர்யாவின் திருமணம் நிகழ்ச்சியை மரணகலாய் கலாய்த்த கார்த்திக் மற்றும் ஜெகன்...வைரலாகும் வீடியோ உள்ளே\nஅனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய சூப்பர் சிங்கர் பிரியங்கா அடடே இப்படியும் ஒரு திறமையா..\nஒரே வீட்டில் தனி தனியாக வாழும் ஐஸ்வர்யா அபிஷேக் பச்சன்...காரணம் என்ன\nசுசானாவின் தந்தையால் ஆதாரத்துடன் சிக்கும் ஆர்யா\nவிவாகரத்திற்கு பிறகு அமலாபால் இப்படி மாறிட்டாங்களே...வைரலாகும் புகைப்படம் உள்ளே\n சிவகார்த்திகேயன் பிறந்தநாளில் மாஸ் பிளான்\nநயந்தாராவின் தமிழ் சினிமா ட்ராக் நில்லாமல் நித்தமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. தனி ஹீரோயினாக முக்கிய கதைகளை தேர்ந்தெடுத்து ஹிட் கொடுத்த அவர் இப்போது சற்குணம் தயாரிப்பில் தாஸ் ராமசாமி இயக்கத்தில் டோரா படத்தில் நடித்துள்ளார்.\nஏற்கனவே அவர் நடித்த மாயா படத்திற்கு பிறகு தற்போது டோரா மிகவும் எதிர்பார்பை தூண்டியுள்ளது. வரும் மார்ச் 3 தேதி இப்படம் வெளியாகவுள்ள நிலையில் இதன் டீசர் நாளை வெளியாகிறது.\nஇதற்கு நடுவில் மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயனோடு நடித்துவருகிறார். டோரா படத்தின் டீசர் சிவகார்த்திகேயன் பிறந்தநாள் அன்று வெளியாவது கூடுதல் தகவல்.\nஆர்யாவின் திருமணம் நிகழ்ச்சியை மரணகலாய் கலாய்த்த கார்த்திக் மற்றும் ஜெகன்...வைரலாகும் வீடியோ உள்ளே\nஅஜித்தின் மனைவி ஷாலினியின் பகையாளி யார் தெரியுமா\nதலைவர் உரையின் போது தூங்கிய ராணுவ தலைவருக்கு மரண தண்டனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.penniyam.com/2012/01/blog-post_24.html", "date_download": "2018-04-26T13:21:25Z", "digest": "sha1:PD4DSZZPQS4R6C52BJQU3G226JIULRYX", "length": 34039, "nlines": 252, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: யார் அந்த நாலு பேர்??? - ஆர்த்தி வேந்தன்", "raw_content": "\nயார் அந்த நாலு பேர்\nவிடிந்த பிறகும் இப்படி தூங்கினா வீடு எப்படி விளங்கும் ஏழு மணிக்கு பொம்பள பிள்ள இப்படி படுத்து தூங்கினா ஊரு என்ன பேசும் எந்திரி. விடிந்த பிறகும் தூங்கறதுனால தான் சனி நம்மை பிடித்து ஆடுது. கனவுகளையும் போர்வையையும் உதறி விட்டு காலை அர்ச்சனைகளை கேட்டு கொண்டே எழுந்தாள். இரவு கழட்டி வைத்த clip யை தேடி பார்த்தாள் கிடைக்க வில்லை. தலை விரி கோலமாக எழுந்து நடந்தாள்.இப்படி முடியை விரித்து போட்டு இருந்தால் வீடு விளங்குமா காதில் விழாதது போல் தண்ணீர் பாட்டில் யை எடுக்க கை நீட்டினாள். குளிக்காமல் தொடாதே என்ன பெண்ணோ நாளைக்கு வேற வீட்டுக்கு போன எங்கள தான் எல்லாரும் சொலுவாங்க. போய் குளித்து விட்டு வா. இவர்களிடம் பேசி ஒரு பயனும் இல்லை என்று தெரியும். டிரஸ் யை எடுத்து கொண்டு தன் குளியல் அறையை எட்டி பார்த்தாள். ஹீட்டர் off யில் இருந்தது.\nஅண்ணனின் அறைக்கு நகர்ந்தாள். எத்தனை முறை சொலி இருகிறேன் இந்த அரைகுறை டிரஸ் யை எல்லாம் hostel லே விட்டு வா என்று. ஹாலில் அப்பாவும் மாமாவும் உள்ளார் வயதுக்கு வந்த பெண் இப்படி டிரஸ் யை போட்டு இருந்தால் நாலு பேறு என்ன சொலுவாங்க. இங்கயே குளி. வெயில் காலத்தில் எப்படி தான் அப்றோம் டிரஸ் போடுறது. இவர்கள் சொன்ன மாதிரி போட்டால் வேர்த்தே சாக வேண்டியது தான். இவர்களுக்கு எங்க புரியபோகிறது என்று நினைத்து கொண்டே குளியல் அறைக்குள் நுழைந்தாள். தனிமை எங்க கிடைத்தால் என்ன மகிழ்ச்சி தான். உலகத்திலே மிக பெரிய பூவும் நீயடி சினஞ்சிறு நதியும் நீயடி என்று பாடல் வரிகளை பாடி கொண்டே குளித்தாள் பல நாட்கள் இல்லை பல வருடம் கழித்து இன்று குடும்பத்துடன் வெளியூர் செல்கிறாள். குடும்பத்துடன் திருனாளர் கோவில்கு சென்று அங்கு இருக்கும் குளத்தில் குளித்தால் பிடித்த சனி போயிருமாம் வெளியூர் எங்கியாவது சென்று ஓய்வு எடுத்து வாருங்கள் என்று டாக்டர் சொன்னது எல்லாம் காதில் விழவில்லை. எங்கியாவது வெளியே போக கூடாதா என்ற ஏக்கம் கண்ணில் இருந்தது தெரியவில்லை.\nயாரோ ஒருவன் ஏழரை சனி கோவில் குலத்தில் குளித்தால் போய்விடும் என்று சொனதால் இந்த திடிர் முடிவு. காரணம் எதுவாக இருந்தா என்ன சனல் ஓர சீட், தொட்டும் தொடாமலும் நம்மை கடந்து செலும் காற்று இசையுடன் கலந்த நீண்ட பயணம் நினைக்கவே சந்தோஷமாக இருந்தது. குளியல் அறையில் இருந்து வெளியே வரும் போது முகத்தில் சந்தோஷம் இல்லை. பதற்றத்துடனும் வலியுடனும் படுகையில் உட்காந்தாள். உயிர் போகிற மாதிரி வலி. மாத மாதம் வருகிற வலி என்றாலும் வலி வலி தான். தாங்கிகொள முடிய வில்லை. சொல்வதா வேண்டாமா என்று யோசித்து கொண்டே இருந்தாள் உடம்பு வலியை கூட பொறுத்து கொள்ளலாம் இவர்கள் கொடுக்கும் மன வேதனை தாங்க முடியாது,.\n.ம்ம்ம் வலியும் பயமும் தான் முகத்தில் எழுதி ஒட்டி இருக்கே எப்படி மறைப்பது. ஏன் இப்படி உட்காந்து இருக்கே அம்மா.............. உடனே சத்தம்.. ஐயோ.. அவர் சொன்ன மாதிரியே தடங்கல் வந்து விட்டது. இப்படி ஆகிவிட்டதே.. கடவுளே உனக்கு ஒரு முறை சொன்னா புரியாதா அம்மா.............. உடனே சத்தம்.. ஐயோ.. அவர் சொன்ன மாதிரியே தடங்கல் வந்து விட்டது. இப்படி ஆகிவிட்டதே.. கடவுளே உனக்கு ஒரு முறை சொன்னா புரியாதா தூரம் ஆனா படுக்கையை தொடாத. போய் பெட் ஷீட் யை துவை. அது தீட்டு. வலிக்குது மா.. இதுக்கு தான் ஒழுங்கா சாப்டனும் எல்ல வேலையும் செயனும். வீடு முழுவதும் தீட்டு ஆகாதே. தம்பி ஓடி வந்தான் .. ஏய்.. வெளியே போ அக்கா க்கு உடம்பு சரி இல்லை. புரிந்தும் புரியாமலும் வருத்ததுடன் வெளியே சென்றான். அவமானமாக இருந்தது. அப்பாவையும் தம்பியையும் தான் முக்கியமாக குளத்தில் குளிக்க சொலி இருக்கிறார். கார் யில் என் பக்கத்தில் உட்காந்து கொள். அவர்களை தொடதே. ஏற்கனமே நமக்கு நேரம் சரி இல்லை. தீட்டு வேற எதையும் தொடாதே பாவம் வந்து சேரும். தொட்டால் பாவமா தூரம் ஆனா படுக்கையை தொடாத. போய் பெட் ஷீட் யை துவை. அது தீட்டு. வலிக்குது மா.. இதுக்கு தான் ஒழுங்கா சாப்டனும் எல்ல வேலையும் செயனும். வீடு முழுவதும் தீட்டு ஆகாதே. தம்பி ஓடி வந்தான் .. ஏய்.. வெளியே போ அக்கா க்கு உடம்பு சரி இல்லை. புரிந்தும் புரியாமலும் வருத்ததுடன் வெளியே சென்றான். அவமானமாக இருந்தது. அப்பாவையும் தம்பியையும் தான் முக்கியமாக குளத்தில் குளிக்க சொலி இருக்கிறார். கார் யில் என் பக்கத்தில் உட்காந்து கொள். அவர்களை தொடதே. ஏற்கனமே நமக்கு நேரம் சரி இல்லை. தீட்டு வேற எதையும் தொடாதே பாவம் வந்து சேரும். தொட்டால் பாவமா கோவமும் வேதனையும் ஒன்றை ஒன்று மோதி கொண்டு வந்தது . அத்தை மாமவின் காதில் ஏதோ சொன்னார். ஒரு பார்வை பார்த்தார். சங்கடம் கோவம் அழுகை எதையும் காமிக்க முடியவில்லை.\nபயணத்தை ரசிபதற்கு முடியவில்லை. கோவில் வந்தது. தீட்டு என்றால் அவர்கள் சாமிக்கு காது கேட்காது போல். கோவில் க்கு போக கூடாது. அப்படியே குதித்து ஓடிவிடலாம் போல் இருந்தது அவளுக்கு.\nஅப்பாவும் தம்பியும் குளித்து விட்டு வந்தனர். அவளின் அந்த தனிமை சந்தோஷத்தை கொடுக்க வில்லை. அவமானமும் ஏன் தான் பெண்ணாக பிறந்தோமோ என்ற வருத்தத்தை மட்டுமே தந்தது. அம்மா பெரு மூச்சு விட்டார் நம்மை பிடித்த சனி எல்லாம் இன்றோடு போயாச்சு. சனி போச்சாம். குளித்து விட்டு துணியை அங்கயே போடு விட்டு வரணுமாம் இல்லை என்றல் சனி நம்முடனே வந்து விடுமாம்.\nவீடு வந்தது. அவளுக்கு தனி தட்டில் சாப்பாடு. தீட்டு என்பதால் மற்றவருடைய தட்டை தொட கூடாது. அம்மா வின் குரல் மீண்டும் சனியை விட்டு விட்டு வந்து விட்டோம்.\n ஜாதகத்தில் இருக்கும் சனியை. இவர்களின் மனதில் இருக்கும் சனியை எங்கே விட போகிறார்கள் கேட்க தோன்றியது.. வலி தாங்க முடியவில்லை. . அவளுக்கு என்றே காத்து கொண்டு இருந்தது இருட்டு அறை.\nதீட்டு. வீட்டுக்கு தூரம், விட்டு விலங்கு, மாத விலக்கு.. பெண் உடலில் இயற்கையாக நிகழும் உதிரபோக்கு க்கு எத்தனை பெயர்...\nதாழ்வு மனப்பான்மை, பதற்றம், கவலை , அசதி, கோவம், எரிச்சல், தூக்க மின்மை, தனிமை விரும்புதல், இது எல்லாம் இயற்கையாக வருவது இல்லை. இதில் பெரிய பங்கு மூட நம்பிகைகள் கொடுப்பது. மாத மாதம் இதனை ஒரு பெண் அனுபவித்தால் அவளின் மன நிலை எப்படி இருக்கும்.\nஒன்று புரியவில்லை ஏன் எல்லா மூட நம்பிக்கைகளும் பெண்களை சார்ந்து யே உள்ளது பெண் தலை விரித்து இருந்தாள் ஆகாது சத்தமாக சிரித்தால் ஊரு பேசும். பொட்டு வைக்கா விட்டால் நல்லது இல்லை.. தனக்கு விருப்பமான டிரஸ் யை போடுவதற்கு\nகூட சுதந்திரம் இல்லை.. நாலு பேர் நாலு விதமா பேசுவாங்கலாம். இந்த நாலு பேருக்குஆக எத்தனை compromise இனி வரைக்கும் அந்த நாலு பேரு யார் என்று தெரிய வில்லை. யாராவது தெரிந்தால் சொலுங்கள்.\nஅந்த நாலு பேரை நான் கண்டிப்பாக பார்க்க வேண்டும்.\nநாம் பின்பற்றி வரும் பல நம்பிக்கைகள் அந்த நாள் பேரு ஆக தான். கணவன் இறந்த பிறகு வெள்ளை புடவை கட்டி கொள்வது நாம் மற்றவர்க்கு கணவன் இறந்த பிறகும் தூய்மையாக இருகிறேன் என்று சொல்வதர்காம். நாம் தூய்மையாக இருக்கிறோம் என்று நமக்கு தெரிந்தால் போதாதா அந்த நாள் பேரு ஆக தான். கணவன் இறந்த பிறகு வெள்ளை புடவை கட்டி கொள்வது நாம் மற்றவர்க்கு கணவன் இறந்த பிறகும் தூய்மையாக இருகிறேன் என்று சொல்வதர்காம். நாம் தூய்மையாக இருக்கிறோம் என்று நமக்கு தெரிந்தால் போதாதா ஏன் அந்த நாலு பேருக்கு தெரிய வேண்டும் ஏன் அந்த நாலு பேருக்கு தெரிய வேண்டும் குங்குமம் வைப்பது மற்றவர்க்கு நம்முடைய இரத்தம் சுத்தமாக உள்ளது என்று தெரிவிபதற்கு ஆம். குங்குமம் வைப்பது ஒன்றும் கஷ்டம் இல்லை. பிடித்து இருந்தால் மட்டும் வைத்து கொளலாமே எதற்கு மற்றவர்க்கு ஆக வைக்க வேண்டும் குங்குமம் வைப்பது மற்றவர்க்கு நம்முடைய இரத்தம் சுத்தமாக உள்ளது என்று தெரிவிபதற்கு ஆம். குங்குமம் வைப்பது ஒன்றும் கஷ்டம் இல்லை. பிடித்து இருந்தால் மட்டும் வைத்து கொளலாமே எதற்கு மற்றவர்க்கு ஆக வைக்க வேண்டும் காலில் மெட்டி போடுவதற்கான காரணம் கேட்டால் சிரிபதா அழுவதா தெரிய வில்லை. மெட்டி யை போட்டு பெண் நடந்தால் அவள் எதிர் யில் வரும் ஆண் அவளின் மெட்டி யை பார்த்து அவள் இன்னொரு ஆணுக்கு உடையவள் காலில் மெட்டி போடுவதற்கான காரணம் கேட்டால் சிரிபதா அழுவதா தெரிய வில்லை. மெட்டி யை போட்டு பெண் நடந்தால் அவள் எதிர் யில் வரும் ஆண் அவளின் மெட்டி யை பார்த்து அவள் இன்னொரு ஆணுக்கு உடையவள் என்று தெரிந்து கொள்வதற் ஆம்.\nஇப்படி பல அந்த முகம் தெரியாத நாலு பேருக்கு தான் செய்து கொண்டு இருக்கிறோம். பெரியவர்கள் எல்லாம் காரணத்தோட தான் சொலி இருப்பார்கள் என்று மட்டுமே தெரியும் என்ன காரணம் என்று கேட்டால் தெரியாது. அப்படியே ஒன்று இரண்டு கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதத்தை படித்து உளறி னாலும் மனது ஏற்று கொள்ள மறுகிறது. எதற்கு ஏற்று கொள்ள வேண்டும் நமக்கு பிடிகாத ஒரு செயலை ஏன் செய வேண்டும் நமக்கு பிடிகாத ஒரு செயலை ஏன் செய வேண்டும் ஆறு மணிக்கு மேல் நகம் வெட்ட கூடாது என்று சொல்கிறார்கள். அந்த காலத்தில் கரண்ட் இல்லை ஆறு மணிக்கு மேல் இருட்டு ஆக இருக்கும் நகம் வெட்டும் போது சப்பாடுக்குள் விழுந்து விட்டால் அதனால் சொலி இருக்கலாம் இப்ப என்ன கேடு நகம் வெட்டு வதால் என்ன ஆக போது ஆறு மணிக்கு மேல் நகம் வெட்ட கூடாது என்று சொல்கிறார்கள். அந்த காலத்தில் கரண்ட் இல்லை ஆறு மணிக்கு மேல் இருட்டு ஆக இருக்கும் நகம் வெட்டும் போது சப்பாடுக்குள் விழுந்து விட்டால் அதனால் சொலி இருக்கலாம் இப்ப என்ன கேடு நகம் வெட்டு வதால் என்ன ஆக போது எளவு வீட்டுக்கு போய் வந்தால் தீட்டு ஆமா. என்ன எளவோ. பின் பக்கமாக வந்து குளித்து விட்டு தான் வீட்டுக்குள் வர வேண்டுமாம். அந்த காலத்து எளவு வீடு பழைய படத்தில் பார்த்து இருப்போம். இறந்த உடம்பை கட்டி பிடித்து நெஞ்சில் அடித்து கொண்டு மைக் செட் வச்சு ஒப்பாரி பாட்டு பாடி இருக்கும். நோய் வந்து இறந்த உடம்பை கட்டி பிடித்தால் கிருமிகள் வருவதற்கு வாய்ப்பு உண்டு அதனால் குளித்து விட்டு வர வேண்டும் என்று சொன்னார்கள். இபோ நிலைமை அப்படியா இருக்கு.. தொட வேண்டும் என்று நினைத்தால் கூட தொட முடியாது. உடம்பு நிம்மதியாக ஐஸ் பாக்ஸ் யில் இருக்கும். அழுவது கூட நாகரிகம் இல்லை என்று யோசிக்கும் கேடு கெட்ட காலத்தில் வாழ்கிறோம். இருந்தாலும் தீட்டு தீட்டு தான் குளித்து விட்டால் தீட்டு போயிரும் என்று நம்புகிறார்கள்.\nபத்து பொருத்தமும் சரி ஆக இருந்தால் கல்யாணம் பணிக்கலாமாம். என்ன கொடுமை.. அந்த பத்து பொருத்தம் பார்த்து சொல்வது பொன்னையும் பையனையும் பற்றி எதுவும் தெரியாத ஒரு ஜோசியக்காரர் நம்மையும் நம் உணர்வுகளையும் மதிக்கும் ஒருவனை மணந்தால் தப்பு.. ஏனோ அந்த ஒருவனும் ஒருத்தியும் ஒரே ஜாதி ஆக இருப்பது இல்லை.. கலப்பு திருமணம் செய்தால் நாலு பேரு எதாவது சொல்வார்கள் நம்மையும் நம் உணர்வுகளையும் மதிக்கும் ஒருவனை மணந்தால் தப்பு.. ஏனோ அந்த ஒருவனும் ஒருத்தியும் ஒரே ஜாதி ஆக இருப்பது இல்லை.. கலப்பு திருமணம் செய்தால் நாலு பேரு எதாவது சொல்வார்கள் கலப்பு என்றால் என்ன. இரண்டு முற்றிலும் வேறுபட்ட ஒன்று சேர்வது. அப்படி என்றால் மழை வர வேண்டும் என்று மனிதனுக்கு கழுதை யை திருமணம் செய்து வைகிறார்கள் கலப்பு என்றால் என்ன. இரண்டு முற்றிலும் வேறுபட்ட ஒன்று சேர்வது. அப்படி என்றால் மழை வர வேண்டும் என்று மனிதனுக்கு கழுதை யை திருமணம் செய்து வைகிறார்கள் அல்லவா அது தான் கலப்பு திருமணம், வேறு ஒரு ஜாதி பெண்ணும் வேறு ஒரு ஜாதி பையனும் கல்யாணம் செய்வது கலப்பு திருமணம் அல்ல.\nவிடிந்த பிறகு தூங்கினால் வீடு விளங்காதாம். நைட் ஷிபிட் போவர்கள் வீட்டில் எல்லாம் நல்லதே நடந்தது இல்லையா கோவில் க்கு வெளியே பிச்சை எடுபவர்களுக்கு பிரசாதம் கொடுக்க மனம் இல்லை கார் யில் வந்து இறங்குபவர்களை கூபிட்டு பிரசாதம் என்று கொடுத்து அனதானம் செய்துவிட்டோம் என்று பெருமை கொள்கிறோம்.\nஒரே ஒரு வாழ்கை தான் உள்ளது அதற்கு எதுக்கு இத்தனை வரையறைகள். பெண்களை எப்படி தான் நினைக்க வேண்டும் என்று கேட்டால் தாகூர் உடைய வரிகள் தான் பதில் I am Chitra. No goddess to be worshipped, nor yet the\nஅந்த நாலு பேருக்கு ஆக வாழ்ந்தது போதும் இனி எனக்கான வாழ்கை வாழ ஆசை. சின்ன சின்ன ஆசை என்று கவித்துவமாக பொய் எல்லாம் இல்லை. எல்லாம் பெரிய ஆசை தான். எனக்கு பிடித்த உடை அணித்து கொள்ள வேண்டும், எனக்கு தோன்றும் போது மட்டும் பொட்டு வளையல் செயின் எல்லாம் போட்டு கொள்ள வேண்டும். என் தலையன்னை உடன் உரையாடல் முடிந்த பிறகே எந்திரிக்க வேண்டும். செயகூடாது என்று பட்டியல் இட்டு சொல்வது எல்லாத்தையும் செய்து பார்க்க வேண்டும். கடந்த கால நினைவுகளையும் கனவுகளையும் மனதில் சுமந்து கொண்டிருக்கும் போது யாரவது பார்த்து திட்டுவார்கள என்று பயம் இல்லாமல் தனிமையில் சிரிக்க வேண்டும். அழுக வேண்டும் என்று நினைக்கும் போது அழுக வேண்டும் . பெண்கள் இரவு நேரத்தில் நடப்பது நல்லது இல்லையாம், இருக்காலம். எத்தனை வருடமாக என் சனல் வழியாக ரசித்து கொண்டே இருப்பது. பார்வைகள் மட்டுமே பரிமாற்றி கொள்கிறோம். முகத்தை பார்க்க வேண்டும் என்று ஆசை.. முழு நிலவில்.. அமைதியான இரவில் கொட்டும் மழை யில் நடக்க ஆசை...... எல்லோரும் முன் அப்பாவை கட்டி அணைத்து முத்தம் கொடுக்க வேண்டும் என்று ஆசை.. யாரிடமும் சொல்லாமல் இசையும் புத்தகமும் மட்டும் துணை யாக கொண்டு பயணம் செல வேண்டும்.. படிப்பை விட்டு விட்டு சிற்ப கலை கற்று கொள்ள ஆசை.. இன்னும்... இன்னும்...இன்னும்..\nஆனால் அந்த நாலு பேருக்கு யார் பதில் சொல்வது\nநன்றி - ஆர்த்தி வேந்தன்\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (18) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1751) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nஎர்னெஸ்த்தோ ச்சே கெ’பாராவைக் கொலை செய்தல் - வசுமித...\nதவறான முகவரியிடப்பட்ட நாட்குறிப்பும் எனது நான்கு ந...\nயார் அந்த நாலு பேர்\n\"வாசிப்புத்தான் என்னை எழுத்துலகில் நிலைக்க வைத்திர...\nebay.in எதிர்ப்பு - மேலும் சில தகவல்கள்\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்ன...\nநாம் பேசிக்கொண்டிருந்தபோது பெய்திராத மழை - நூல் வெ...\nசில்க் ஸ்மிதா – ரூப் கன்வர்: ஒரு தற்கொலை\nஇந்திரா கோஸ்வாமி : அசாமியர்களின் மூத்த சகோதரி - யு...\nதவுஹீத் ஜமாத்தின் பொறுக்கி தளபதி பாசித் மரைக்காயர்...\nபாலியல் பாகுபாடு குறித்து விழிப்புணர்வு\nவிளிம்பு: விழிப்பும் விசாரணைகளும் - 39வது இலக்கிய...\nதாலி இல்லையா, இனி வீட்டுப் பக்கமே வராதே\nதமிழ் நாட்டில் ஆங்கில இலக்கியத்தின் நிலை..\nஇருளர் பெண்களை வன்புணர்ச்சி செய்த போலீஸ் வெறிநாய்க...\nபானுபாரதி - ஆண்மை கொல் - குட்டி ரேவதி\nஅஞ்சலி குப்தா: இந்திய விமானப்படையின் ஆணாதிக்கத்திற...\n\"உச்சிதனை முகர்ந்தால்\" திரைப்படமும் சில அவதானங்களு...\n'அம்மாவின் ரகசியம்' - மொழிபெயர்ப்பு நாவல் வெளியீட்...\nசேலையும் வேட்டியும் பெண்களும்தானா கலாசார சீரழிவின்...\nபெண்ணை கம்பத்தில் கட்டி வைத்து எரிக்கும் காட்சி (வ...\nநுகத்தடி (சிறுகதை) - கமலாதேவி அரவிந்தன்\nகவிதைக்குள் இருக்கும் உண்மைகள்.. -ஆர்த்தி வேந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://karyapolitik.blogspot.com/2009_08_04_archive.html", "date_download": "2018-04-26T13:08:28Z", "digest": "sha1:DUIRMITWLOOO4DSPZP2GLIBZFADTAMPH", "length": 17096, "nlines": 264, "source_domain": "karyapolitik.blogspot.com", "title": "SIKIT-SIKIT.... NAK MAIN POLITIK: Aug 4, 2009", "raw_content": "\nமாநில ரீதியில் தேர்தல் மானத்தை வாங்கிவிடும்\nஇருக்கும் பிரச்சனைகள் இன்னும் எதுவும் மக்களுக்கு தோதாக இல்லை எனலாம். சமீபத்தில் அரசியல் செயலாளரின் இறப்பு, கம்போங் புவா பாலா நில விவகாரம் அனைத்தும் தேசிய முன்னணிக்கும், மக்கள் கூட்டணிக்கும் பெரிய பாதிப்பை உண்டு செய்யும் என்பது சொல்ல வேண்டிய கருத்தாகும்.\nமலேசியா மண்ணில் இந்தியர்களின் நிலை குறித்து எந்த சாமி பேச முன்வந்தாலும், அந்த சாமி (சுயநலவாதிகள்) எந்த போர்வையில் தன்னை மறைத்து கொண்டு வருது என்பதை மக்கள் நன்றாகவே தெரிந்து வைத்திருக்கிறார்கள். சுருக்கமாக சொல்லபோனால் அந்த சாமி ஒரு அரசியல் ஆசாமி எனலாம்.\nஇந்தியர்களின் வாழ்கையை தீர்மானிப்பவர்கள் நமக்கு இனி நாமாகத்தான் இருக்க முடியுமே தவிர எந்த பச்சத்திலும் அரசியல்வாதிகளாக இருக்க முடியாது. ஒரு குழப்பமான பிரச்சனைக்கு விடை கேட்க சென்றால், உடனேயே நம்மை தெருவில் கொண்டு சென்று, பத்திரிகை வழி சுய அரசியல் விளம்பரம் தேடிவிடுகிறார்கள்.\nபாதிக்கப்பட்ட மக்கள் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன வென்றால், மீண்டும் பெரியளவில் பேரணி நடத்தவேடும் என்ற இன்னொரு குண்டையும் அள்ளி போடுகிறார்கள்.\n\"ஐயா சுயநல அரசியல்வாதிகளே தயவுசெய்து, எதையும் செய்வதற்கு முன்பு சற்று சிந்தித்து செயல்படுங்கள். உங்களை நம்பி ஒட்டு போட்ட மக்களை மூலையில் அமரவைத்து ஒப்பாரி விடும் அளவிற்கு கொண்டுசெல்லாதீர். இன்றைய வரைக்கும் உங்கள் மனைவி மற்றும் குடும்ப மக்கள் எந்த ஒரு வீதி பேரணியில் கலந்துகொண்டதுண்டா இல்லாதவர்கள் என்றால் அவ்வளவு கேவலமா இல்லாதவர்கள் என்றால் அவ்வளவு கேவலமா இல்லாதவர்கள் வயித்தில் நெருப்பை அள்ளி கொட்டாதீர். \"\nஇந்நாட்டில் பதவிக்கும் பட்டத்திற்கும் அலைபவர்கள் மக்கள் கூட்டணியிலும் உண்டு. அதற்க்கு நிறைய கைவசம் உன்டு சொல்ல . ஆனால் புண்ணியமில்லை.\nஅதனை சொல்லித்தான் தெரிய வேண்டும் அவசியமில்லை. சொல்லாமலே நிறைய மக்கள் அதனை அறிவார்கள்.\nஇன்று ஒவ்வொரு உணர்ச்சி உள்ள தமிழன் மனதில் கம்போங் புவா பால நிலப் பிரச்சனை ஓசையிட்டு கொண்டிருக்கிறது. அதுவும் மக்கள் கூட்டணி மாநிலத்தில்.\nஎங்கு சென்றனர் மக்கள் கூட்டணியை சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் காணாமல் போய்விட்டார்களா அல்லது மக்கள் முகத்தை பார்க்க தைரியம் இல்லையா காணாமல் போய்விட்டார்களா அல்லது மக்கள் முகத்தை பார்க்க தைரியம் இல்லையா கிடைத்த தகவல் படி தெலுக் இந்தான் நாடாளுமன்ற உறுப்பினர் மட்டுமே அங்கு சென்று வருவதாக தகவல் வந்தது. மிகவும் சந்தோசம், ஆனால் மற்றவர்கள் எங்கு சென்றார்கள்\nகைதொலைப்பேசி மணி அடித்தவன்னமே இருக்கிறது ஆனால் அதில் யாரும் பதில் பேசுவது கிடையாது. ஒருசிலர் \"இந்த பிரச்சனையை பற்றி நான் நாடாளுமன்ற கூட்டத்தில் எழுப்பினேன்\" என்று சொன்னவர்கள் இன்று நாட்டிலேயே இல்லையாம். இது எப்படி இருக்கிறது.\nமக்கள் கூட்டணி என்ற ஒரு நல்ல சிறந்த பெயரை வைத்துக்கொண்டு, இன்று மக்களை கோமாளிகளாக ஆக்கிவிட்டார்கள்.\nதனக்கே தகராறா இருக்கு, இதில் பொது மறு தேர்தலா பேஷ் பேஷ்......கொஞ்ச நெஞ்ச மானமும் கூடிய விரைவில் கப்பல் ஏறி போகப்போது.\nஇந்நாட்டில் எந்த நாளும் மக்கள் பங்கு பெறாத புரட்சி வென்றதாக சரித்திரமில்லை இந்ட்ராப் நினைவுள்ளதா சரித்திரம் படைத்தது..... அது போல எல்லா பேரணியும் சரித்திரம் படைக்கும் என்று மனப்பால் குடிக்கவேண்டாம். அது பொதுநல குணங்கொண்ட தலைவனாலே மட்டுமே முடியும். அரசியல் வதந்திகளை பரப்பும் அரசியல்வாதிகளால் முடியாது (ஒரு சிலர்).\nபோராட்டம் நடத்தும் மக்களை கண்டு ஏமாளி என்று சொல்லும் குணங்கொண்ட தலைவன் நமக்கு தேவையில்லை.போராட்ட குணங்கொண்ட மக்கள் நலவாதிகள் தான் நமக்கு தேவை.\nஅரசியல் கொள்கை இனி தேவையில்லை காரணம் கொள்கையில் பல கோளாறுகள்.அரசியலை வெளிதோற்றமாகவும் மன தர்மத்திற்கு கட்டுப்பட்டவனாக உள்ள தலைவன்தான் இனி மக்கள் தலைவனாக முடியும் என்பதனை மறந்துவிடாதீர். மக்கள் அதனை அறிவார்கள்.\n”ஒருவன் கத்தியில் குத்த வரும்போது அந்த நொடியில் உயிர் காக்க அவனை தாக்குவதை விட அவன் கத்தியை தையிரியமாக எதிர்த்து நிற்க்க தான் அதிகமான மன உறுதியும் தையிரியமும் வேண்டும் – ஆனால் நான் உங்களை கத்தியில் குத்து வாங்கி சாக சொல்லவில்லை” போராட்டம் மனதில் பிறந்து, ஒருவரிடமிருந்து ஒருவராக வளர வேண்டும். அதனை வளர்த்துவிட்டால் வெள்ளி மாநிலத்தில் மறுதேர்தலை மக்கள் கூட்டணி சந்தித்து வெற்றி வாய்ப்பை அடையும் நிலை சாத்தியம்.\nஆனால் சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்த ஆண்டி போல ஒரு சில அரசியல் கோணங்கிகள் தேர்தல்..... தேர்தல்...... என்று ஓலமிடுவது நல்லதல்ல. நினைவில் கொள்ளவும்.\nமாநில ரீதியில் தேர்தல் மானத்தை வாங்கிவிடும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://kuppilan.yolasite.com/karkarai-karpaka-burgular.php", "date_download": "2018-04-26T13:26:38Z", "digest": "sha1:K3VB3FG2ZKFDXV7AN5OVG3KDGCFEWPUV", "length": 9588, "nlines": 34, "source_domain": "kuppilan.yolasite.com", "title": "முகப்பு", "raw_content": "\nகற்கரைக் கற்பக விநாயகர் ஆலயத்தில் மாபெரும் திருட்டு...\nகற்கரைக் கற்பக விநாயகர் ஆலயத்தில் மாபெரும் திருட்டுச் சம்பவம் ஒன்று நேற்றிரவு இடம்பெற்றுள்ளது...\nஇன்று காலை ஏழு மணியளவில் விநாயகருக்கு காலைப் பூசைகளை செய்யச் சென்ற பூசகர் ஆலயத்தினுள் நகைகள் காணாமல் போயுள்ளதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்...\nதெய்வத்தின் சிலைகள் புரட்டப்பட்டு அதன் கீழிருந்து ஏராளமான நகைகள் திருடப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது...\nஆலயத்தினுள்ளும் வெளியிலும் சப்பாத்துக்கால் தடங்கள் இருப்பதும் அவதானிக்கப்பட்டுள்ளது...\nகுறித்த சம்பவம் தொடர்பாக தற்போது பொலிஸாரிடம் ஆலய நிர்வாகத்தினர் முறையிட்டுள்ளனர்...\nநகைகளையும் தவிரவும் பல பெறுமதியான பொருட்கள் களவாடப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது...\nதற்சமயம் சம்பவத்தைக் கேள்விப்பட்டு ஏராளமான குப்பிளான் கிராமமக்கள் ஆலயத்தினை சூழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்...\nபலரது முகங்களிலும் அதிர்ச்சியும் சோகமும் நிரம்பியுள்ளது...\nகுப்பிளான் கிராமமக்களின் குல தெய்வத்தின் மீதே கைவரிசையைக் காட்டி இருக்கிறார்கள் திருடர்கள்..\nசம்பவ தினம் கற்கரைக் கற்பக விநாயகனின் தீவிர பக்தர்கள் பலர் கண்ணீர் விட்டு கதறி அழுததைக் காணக் கூடியதாக இருந்தது...\n* திருட்டுச் சம்பவம் இடம்பெற்ற மறுநாளான சனிக்கிழமை சம்பிரோட்சன கும்பாபிசேகம் (பிராயச்சித்தம்) ஆலயத்தில் இடம்பெற்றுள்ளது...\n* திருடப்பட்ட இயந்திர தகடுகளுக்கு பதிலாக உடனடியாக புதிய தகடு வைக்கப்பட்டு கும்பாபிசேகம் இடம்பெற்றது. சம்பிரோட்சன கும்பாபிசேகம் 24 மணி நேரத்தில் செய்யப்படவேண்டும். இந்த கும்பாபிசேகத்தின் செலவு 1 லட்சம் ரூபாயாகும்.\n* வருடாந்த உற்சவம் எதுவித இடையூறுகள் இல்லாமல் இடம்பெறுவதற்காகவே மேற்படி சம்பிரோட்சன கும்பாபிசேகம் (பிராயச்சித்தம்) இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது...\nஇன்றைய தினக்குரல் பத்திரிகையில் வெளியான செய்தி... 12-06-2011\nகுப்பிளான் கற்பக விநாயகர் ஆலயத்தில் பத்து லட்சம் ரூபா பொருட்கள் திருட்டு வெள்ளியிரவு துணிகரச் சம்பவம்...\nகுப்பிளான் வடக்கு கற்கரை கற்பக விநாயகர் ஆலயத்தில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு பாரிய திருட்டுச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.\nஆலயத்தின் கூரையைப் பிரித்து உள்நுழைந்த திருடர்கள் மூலஸ்தான விக்கிரகம் உட்பட ஆலயத்திலுள்ள விக்கிரகங்களிலிருந்த பெறுமதியான ஆபரணங்களையும் விக்கிரகத்தை புரட்டி அடியிலிருந்த இயந்திரத் தகடுகளையும் அபகரித்துச் சென்றுள்ளனர்.\nசுமார் 10 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் இங்கு திருடப்பட்டுள்ளன.\nவிக்கிரகங்களின் பீடத்திற்குக் கீழ் வைக்கப்பட்டிருந்த பெறுமதிமிக்க இயந்திரத் தகடுகளை எடுப்பதற்கான முயற்சியில் ஈடுபட்ட திருடர்கள் சுவாமி விக்கிரகங்களை புரட்டி வீழ்த்திவிட்டுச் சென்றுள்ளனர்.\nசம்பவ தினம் இரவு ஆலயத்திற்கு அண்மையிலுள்ள மக்கள் அனைவரும் உறங்கிய பின்னர் ஆலயக்கூரையைப் பிரித்து உள்ளே நுழைந்த திருடர்கள் நீண்ட நேரம் உள்ளே நின்று திருட்டில் ஈடுபட்டுள்ளனர்.\nவிக்கிரகங்களில் அணியப்பட்டிருந்த வெள்ளி அங்கிகள், ஆபரணங்கள் போன்றவற்றைத் திருடியபின் அலவாங்குகளைப் பயன்படுத்தி விக்கிரகங்களின் பீடங்களை உடைத்து அதன் கீழ் வைக்கப்படிருந்த இயந்திரத் தகடுகளையும் திருடியுள்ளனர். இதன் போது விக்கிரகங்கள் புரட்டி விழ்த்தப்பட்டுள்ளன.\nஆலய உண்டியல் உடைக்கப்பட்டு அதற்குள்ளிருந்த 10 ஆயிரம் ரூபா வரையிலான பணமும் எடுக்கப்பட்டுள்ளது. இதன்பின் திருடர்கள் வடக்கு வாயில் கதவை உடைத்து வெளியேறிச் சென்றுள்ளனர்.\nஇதேநேரம் ஆலயத்திற்கு சற்றுத்தொலைவிலுள்ள பனை மரத்திடியிலிருந்து திருடர்களின் இரண்டு துவிச்சக்கர வண்டிகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அந்த இடத்தில் அலவாங்கு ஒன்று கிடந்ததாகவும் அப்பகுதி கிராம முகாமையாளர் தெரிவித்தார். இரண்டு சைக்கிள்களையும் அலவாங்குகளையும் பொலிஸார் கொண்டு சென்றுள்ளனர்.\nஇதேவேளை ஆலயத்திற்கு அருகில் வசிக்கும் ஒருவர் தனது இரண்டு துவிச்சக்கர வண்டிகள் சம்பவ தினம் இரவு திருடப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளாரென்றும் தெரிவிக்கப்படுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nagoreflash.blogspot.com/2009/11/", "date_download": "2018-04-26T12:57:06Z", "digest": "sha1:CVVEOVI4Q4JYPCGP5GRL42X5QA5PIPQP", "length": 252014, "nlines": 883, "source_domain": "nagoreflash.blogspot.com", "title": "NAGORE FLASH: November 2009", "raw_content": "................அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்................. இந்த இணையத்தளம் நாகூர் வாழ் மக்களுக்கான ஓர் அறிவகம்.\n) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)\nமதீனா சென்று ஸியாரத் செய்வது ஹஜ்ஜூடைய கடமைகளில் ஒன்றா \nமதீனா முனவ்வராவுக்குப் பயணம் செல்லும் பெரும்பாலோர் அதன் நோக்கத்தைப் புரியாமலே சென்று வருகின்றனர். சிலர் அதை ஹஜ்ஜூ வணக்கங்களில் ஒன்றாகவே கருதுகின்றனர்.\nமதீனா சென்று ஸியாரத் செய்வது ஹஜ்ஜூடைய கடமைகளில் ஒன்றா அல்லது அதன் ஸூன்னத்தான வணக்கங்களைச் சார்ந்ததா அல்லது அதன் ஸூன்னத்தான வணக்கங்களைச் சார்ந்ததா ஹஜ்ஜூக்காக வந்து மதீனாவுக்குச் செல்ல வில்லையெனில் ஹஜ்ஜூ நிறைவேறாதா ஹஜ்ஜூக்காக வந்து மதீனாவுக்குச் செல்ல வில்லையெனில் ஹஜ்ஜூ நிறைவேறாதா போன்ற கேள்விகள் நம்மில் பலருக்கு இன்றும் எழுகின்றன. கேட்கவும் செய்கின்றனர்.\nமதீனா ஸியாரத் என்பது ஹஜ்ஜூ நிறைவேறுவதற்குரிய கடமைகளில் ஒன்றல்ல. அதன் ஸூன்னத்தான ஒரு வணக்கமுமல்ல என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ளவேண்டும்.\nபின் எதற்காக அங்கே செல்ல வேண்டும் \n‘தொழுவதற்காக’ என்ற எண்ணத்தில் (நிய்யத்தில்) மட்டுமே மஸ்ஜிதுன் நபவீக்குப் பிரயாணம் மேற்கொள்ள வேண்டும்.நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்:-\nஇந்த என் பள்ளியில் தொழுவது மஸ்ஜிதுல் ஹராமைத்தவிர உள்ள ஏனைய பள்ளிவாசல்களில் தொழுவதைவிட ஆயிரம் மடங்கு மேலானது. (அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி); ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.)\nமூன்று பள்ளிவாசல்களுக்கே தவிர வேறு எங்கும் பயணம் மேற்கொள்ளக்கூடாது. ஒன்று (மக்காவிலுள்ள) மஸ்ஜிதுல் ஹராம். மற்றொன்று (மதீனாவிலுள்ள) எனது பள்ளிவாசல். புpறிதொன்று (ஜெரூஸலத்திலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸா என்னும் பள்ளிவாசல்.\nஇந்த இரு நபிமொழிகளின் மூலம் 'மூன்றே முன்று பள்ளிவாசல்களுக்கு மட்டுமே பயணம் மேற்கொள்ள வேண்டும். அதுவும் நன்மையை நாடி, தொழுகை என்னும் வணக்கத்தை நிறைவேற்றுதற்காகவே செல்ல வேண்டும். ஸியாரத் செய்யும் நோக்கத்துடன் அல்ல’ என்பது தெளிவாகிறது.\nஇதிலிருந்து ’ஹஜ்ஜூக்கு முன்னரோ பின்னரோ மதீனா ஸியாரத்துக்குச் செல்வது ஹஜ்ஜூக் கடமையைச் சார்ந்ததல்ல’ என்பதையும் ‘ஹஜ்ஜூக்கும் இதற்கும் தொடர்பில்லை’ என்பதையும் நாம் நன்றாகப் புரிந்து கொள்ளலாம்.\nமஸ்ஜிதுந்நபவிக்குச் சென்றால் நமது கடமைகள் என்னென்ன\n1. மஸ்ஜித் நபவியில் தொழுவது\nஏனைய பள்ளி வாசல்களில் கடைப் பிடிப்பதையே இங்கும் கடைப் பிடிக்கவேண்டும்.\n1. வலது காலை முன்வைத்து உள்ளே நுழைய வேண்டும்.\n2. உள்ளே செல்லும்போது ‘ பிஸ்மில்லாஹி, வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரஸூலில்லாஹி, அல்லாஹும்ம ஃப்தஹ்லீ அப்வாப ரஹ்மத்திக்க’ என்ற துஆவை ஓதவேண்டும்.\n3. பின்னர் இரண்டு ரகஅத்துகள் தஹிய்யத்துல் மஸ்ஜிது தொழவேண்டும்.\nநபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்:-\nஉங்களில் யாரேனும் பள்ளிவாசலுக்குள் நுழைந்தால் இரு ரகஅத்துகள் தொழாமல் உட்கார வேண்டாம். (அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி) , ஆதாரம் : புகாரி-1163)\nஉள்ளே சென்றதும் ஃபர்ளான தொழுகைக்கு ஜமாஅத் ஆரம்பிக்கப் பட்டு விட்டால் நேராகச் சென்று அதில் சேர்ந்து கொள்ளவேண்டும்.\nஅதன் பிறகு என்ன செய்ய வேண்டும்\nதொழுகை முடிந்ததும் நபி (ஸல்) அவர்களின் கப்ருக்கும் அவர்களின் அருகே அடக்கமாயிருக்கும் அவர்களின் இரு தோழர்களான அபூபக்ரு (ரலி), உமர் (ரலி) ஆகியோரின்ன் இரு கப்ருகளுக்கும் சென்று ஸலாம் சொல்வது முஸ்தஹப்- விரும்பத் தக்கதாகும்.\nஎவ்வாறு ஸலாம் சொல்ல வேண்டும்\n\"அஸ்ஸலாமு அலைக்க யாரஸூலல்லாஹி, வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ\" என்று நபி (ஸல்) அவர்களுக்கும்,\nஅடுத்து, அங்கு அடங்கப் பட்டிருக்கும் அவர்களின் தோழர் அபூபக்ரு அவருகளுக்கு, \"அஸ்ஸலாமு அலைக்க யா அபாபக்கருஸ் ஸித்தீக் கலீஃபத்த ரஸூலில்லாஹி,\nஅடுத்து \"அஸ்ஸலாமு அலைக்க யா உமர் ஃபாரூக் கலீஃபத்த ரஸூலில்லாஹி, வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ\" என்று உமர் (ரலி) அவர்களுக்கும் ஸலாம் கூறிவிட்டு அங்கிருந்து திரும்பிவிட வேண்டும்.\nபெருமானார் (ஸல்)அவர்களின் ஒவ்வொரு செயலையும் வழிமுறைகளையும் அணுவளவும் பிசகாது பின்பற்றிவந்த அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் இவ்வாறுதான் செய்து வந்துள்ளார்கள் என்பதை ஆதாரபூர்வமான ஹதீஸ் நூல்களிலே காணமுடிகிறது.\nஇதுவே ஸியாரத் செய்யும் முறையாகும்.\nஅங்கே நீண்ட நேரம் நிற்பதோ, அவர்களிடம் துஆ கேட்பதோ, குரலை உயர்த்திக் கோரசாக துஆக்களை ஓதிக்கொண்டிருப்பதோ கூடாது.\nகிப்லாவை முன்னோக்கி நமது தேவைகளை அல்லாஹ்விடமே கேட்க வேண்டும்.\nஅங்கே ரவ்லாவுக்கருகே நின்று தொழுவதோ, தொட்டு முத்துவதோ கூடாது.\nஸியாரத்தின் நோக்கம் - நினைவிற் கொள்க\n1. மதீனா ஸியாரத் ஹஜ்ஜூக் கடமைகளில் ஒன்றல்ல.\n2. பெருமானார் (ஸல்) அவர்களின கப்ரை ஸியாரத் செய்யும் நோக்கத்தை முன்வைத்து அங்குச் செல்வது கூடாது.\nமஸ்ஜிதுத் தக்வா-குபா பள்ளி வாசலில் தொழுவது\nஅடுத்தபடியாக, மதீனாவுக்கு வந்திருப்போர் மஸ்ஜிது குபாவுக்குச் சென்று தொழுவது நபி வழியாகும். இது, \"தக்வா அடிப்படையில் கட்டப்பட்ட முதல் பள்ளிவாசல்\" என்று இதற்கு ஓர் அங்கீகாரத்தையும் வழங்கி இறைவன் சிறப்பித்துள்ளான். (குர்ஆன்:9:108).\nநபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்:-\n\"யார் தமது வீட்டில் உளுச் செய்துவிட்டு, பின்னர் குபா பள்ளிவாசலுக்கு வந்து இரு ரகஅத்துகள் (இன்னொரு அறிவிப்பில் ஒரு தொழுகையை) தொழுகிறாரோ அவருக்கு ஒரு உம்ரா செய்த நன்மைகிடைக்கும்\"(ஆதாரம்:அஹ்மது,நஸயீ,அப்னுமாஜா,ஹாக்கிம்)\nநபி (ஸல்) அவர்கள் சனிக்கிழமை தோறும் வாகனத்திலோ, கால்நடையாகவோ இங்கு வந்து செல்வார்கள்.\nஜன்னத்துல் பகீஃ, உஹது ஷுஹதாக்களை ஸியாரத் செய்வது.\nநபி (ஸல்) அவர்கள் உஹதுக்குச் சென்று ஸியாரத் செய்து அவர்களுக்காக துஆ செய்து வருவார்கள்.\nநபி (ஸல்) அவர்கள், மக்கள் கப்ருகளுக்குச் செல்வதன் நோக்கத்தைப் புரியாமலிருந்ததால் ஆரம்பத்தில் தடை செய்திருந்தார்கள். பின்னர் அதற்கு அனுமதி வழங்கினார்கள்.\nநபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்:-\n\"கப்ருகளுக்குச் சென்று ஸியாரத் செய்வதை தடை செய்திருந்தேன். இப்போது (அதன் நோக்கத்தை நீங்கள் புரிந்து கொண்டதால்) ஸியாரத் செய்து வாருங்கள்\" ஆதாரம்: முஸ்லிம்.\nகப்ருகளுக்குச் சென்றால் எவ்வாறு ஸியாரத் செய்வது. அங்கு என்ன செய்யவேண்டும் என்பதை நபி (ஸல்) அவர்கள் தமது தோழர்களுக்கு மிகத் தெளிவாகவே கற்றுக் கொடுத்துள்ளார்கள்.\nஃபாத்திஹா ஓதச் சொல்லவில்லை. யாஸீன் ஓதச் சொல்லவில்லை. இறந்தவர்களிடம் துஆ கேட்கச் சொல்லவில்லை. பின் என்ன சொன்னார்கள் \nபின் வரும் துஆவை மட்டும் ஓதச் சொன்னார்கள்:-\n‘அஸ்ஸலாமு அலைக்கும் அஹ்லத்தியார் மினல் முஃமினீன வல் முஸ்லிமீன் வ இன்னா இன்ஷா அல்லாஹூ பிக்கும் லாஹிகூன். நஸ்அலுல்லாஹ லனா வலக்குமுல் ஆஃபியா’ - ஈமான் கொண்டு முஸ்லிமாக வாழ்ந்து அடக்கமாகியிருக்கும் நல்லடியார்களே வ இன்னா இன்ஷா அல்லாஹூ பிக்கும் லாஹிகூன். நஸ்அலுல்லாஹ லனா வலக்குமுல் ஆஃபியா’ - ஈமான் கொண்டு முஸ்லிமாக வாழ்ந்து அடக்கமாகியிருக்கும் நல்லடியார்களே நிச்சயமாக விரைவில் நாங்களும் (மரணமடைந்து) உங்களோடு சேரவிருக்கிறோம். உங்களுக்கும் எங்களுக்கும் நன்மையை வழங்க அல்லாஹ்வை வேண்டுகிறோம். ஆதாரம்: முஸ்லிம்.\nஇதைத்தவிர வேறு எதற்கும் அனுமதியில்லை. பாத்திஹா ஓதுவதோ, யாஸீன் ஓதுவதோ, நேர்ச்சை நேருவதோ, இறந்தவர்களிடம் துஆ கேட்பதோ கூடாது.\nஇதையடுத்து உஹது சுஹதாக்களின் கப்ருகளுக்குச் சென்று இதைப்போன்றே ஸியாரத் செய்யவேண்டும்.\n1. ஆண்களுக்கு மட்டுமே ஸியாரத் அனுமதியே தவிர பெண்களுக்கல்ல.\n2. நமது தேவைகளுக்காக நபிகள் நாயகத்திடம் பிரார்த்திப்பது கூடாது.\n3. கப்ரு திசையை நோக்கிப் பிரார்த்திப்பதும் கையை உயர்த்துவதும் கூடாது.\n4. அங்கே நீண்ட நேரம் நிற்பதும் கூடாது.\n5. அங்கு நுழையும்போதோ, உள்ளே சென்ற பிறகோ குறிப்பிட்ட துஆக்கள், விசேச துஆக்கள் ஓதவேண்டுமென்பது எதுவும் கிடையாது.\n6. கூட்டாக (கோரஸாக) துஆ ஓதுவதும் கூடாது.\n7. ஒவ்வொரு முறையும் பள்ளிவாசலுக்குள் நுழைந்ததும் கப்று ஸியாரத் செய்யவேண்டும் என்பதும் கிடையாது.\n8. ஒவ்வொரு தொழுகைக்குப் பிறகும் கப்று ஸியாரத் என்பதும் இல்லை.\n9. பெருமானாரின் கப்ருக்கருகே (மட்டுமல்ல; எந்தக் கப்ருக்கருகிலும்) தொழுவது கூடாது.\n10. மிஹ்ராபில் தொழவேண்டும் என்பதும் அங்கே முண்டியடித்துக் கொண்டு தொழுவதும் கூடாது.\n11. ரவ்லா தூண்களின் எல்லைக்குள்தான் தொழுது தீரவேண்டும் என்பதும் கிடையாது.\nஅங்கே எங்கு வேண்டுமானாலும் தொழுது கொள்ளலாம். இந்த இரு இடங்களிலும் தொழுவதற்காக மக்கள் முண்டியடித்துக் கொள்வதையும் தாமும் சரிவரத் தொழாது பிறரையும் தொழவிடாது சிரமப்படுத்தும் செயல்களையும் மார்க்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. பிறருக்குத் துன்பம் விளைவிப்பது ஹராமாகும். ஒரு சுன்னத்தை நிறைவேற்றுவதற்காக ஒரு ஹராமைச் செய்ய வேண்டுமா\nபெருமானார் (ஸல்) அவர்களின் பெயரைக் கேட்டதும் கை நகம் தொட்டு முத்தி நுகர்ந்து கண்களில் ஒற்றிக் கொள்வதும் மார்க்கத்தில் அனுமதி கிடையாது.\nவேறு ஸியாரத் செய்யவேண்டிய முக்கியமான இடங்கள் ஏதேனும் உண்டா\nநன்றி : அல் பாக்கவீ டாட் காம்.\nநாகூர் - ஒரு வரலாற்றுப் பார்வை\nநாகூர் - ஒரு வரலாற்றுப் பார்வை ஜெ.ராஜா முகமது M.A., B.Sc., (காப்பாட்சியர் ,அரசு அருங்காட்சியகம் , புதுக்கோட்டை - 622 002 )\nநாகூர் என்றதும் நம் சிந்தைக்கு இனிமையுடன் நினைவுக்கு வருவது நாகூர் ஆண்டவர் என்றழைக்கப்படும் இறைநேசச் செல்வர் ஹஜ்ரத் செய்யிது காதிர் ஷாஹ¥ல் ஹமீது மீரான் சாஹிபு அவர்களின் தர்கா ஒன்றுதான். ஆனால் தமிழக முஸ்லிம்களின் கடல் வாணிப வரலாற்றிலும், இஸ்லாம் வளர்த்த இன்பத்தமிழ் இலக்கிய வரலாற்றிலும் கூட நாகூர் சிறப்பான இடம் வகிக்கிறது. இவை குறித்த சில வரலாற்றுச் செய்திகளை இங்கு காண்போம்.\nநாகூர், நாகப்பட்டினத்தின் ஒரு அங்கமாகவே இருந்து வந்துள்ளது. கி.பி. 16ஆம் நூற்றாண்டில் ஷாஹ¤ல் ஹமீது வலி அவர்கள் நாகூருக்கு வந்த பிறகு நாகூரின் வரலாறு ஒளி பெறுகிறது. போர்த்துக்கீசியர்களின் பதிவேடுகள் நாகூரை ‘நாகூரு’ என்றும் நாகப்பட்டினத்தின் முஸ்லீம்களின் குடியிருப்புப் பகுதி என்றும் குறிக்கின்றன. போர்த்துக்கீசியர்கள் நாகப்பட்டினத்தை 16ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில் பிடித்துக் கொண்டதும் நாகூர் முஸ்லீம்களின் வணிக வரலாறும் தெரிய வருகிறது.\nநாகூர் ஷாஹ¥ல் ஹமீது வலி அவர்கள் கி.பி. 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்கள் ஆவார்கள். இவர்களது காலம் கி.பி 1532-1600 என அறிஞர்கள் கருதுகின்றனர் (1). ஹிஜ்ரி 978ஆம் ஆண்டு (கி.பி. 1558) இவ்வுலக வாழ்வை நீத்தார்கள் எனவும் இவர்களது நினைவாக முதல் கந்தூரி 1559-ல் நடைபெற்றதாகவும் தர்காவின் வரலாறு கூறும் எழுத்தாளர் ஒருவர் கூறுகிறார் (2). ஆற்காட்டை ஆண்ட நவாபுகள் இவர்களது பெயரால் தஞ்சாவூர் நகரை காதர் நகர் என பெயரிட்டனர்(3). நாகூர் பகுதியில் அமைதி வழியில் தனது அன்பு அழைப்பால் எண்ணற்ற மக்களை இஸ்லாத்தின் பக்கம் கொண்டுவந்த பெருமை நாகூர் ஆண்டகை அவர்களைச் சாரும். இவர்களது அருட்கொடையைத் தொடர்ந்து பெறும் பொருட்டு தமிழகத்தின் பிற பகுதியிலிருந்தும் முஸ்லிம் மக்கள் இங்கு வந்து குடியமர்ந்தனர். இஸ்லாமியர் பெருகினர். இப்பகுதியில் இஸ்லாம் செழித்தோங்கியது.\nஷாஹ¥ல் ஹமீது வலியுல்லா அவர்கள் நாகூருக்கு வருவதற்கு முன்பே அரேபிய நாட்டிலிருந்து செய்யிது முபாரக் வலியுல்லா அவர்களும், முகமது சித்திக் இப்னு மசூத் அவர்களும் நாகூரில் தங்கி இஸ்லாமிய மார்க்கப் பணியில் ஈடுபட்டிருந்தார்கள். இவர்களது கல்லறைகளும் நாகூரில் உள்ளன(4).\n16ஆம் நூற்றாண்டில் நாகூர் பற்றிய வெளிநாட்டார் குறிப்புகளிலும், இலக்கியங்களிலும் பயணக் குறிப்புகளிலும் ஷாஹ¥ல் வலியுல்லா அவர்களைப் பற்றியோ அல்லது தர்கா பற்றியோ குறிப்புகள் ஏதும் இல்லை. இதே காலகட்டத்தில் (1545) நாகப்பட்டினம் பகுதிக்கு வருகைதந்து ஏராளமான பரதவர்களை கிருத்துவ மதத்திற்கு மாற்றம் செய்து கொண்டிருந்த புனித ப்ரான்சிஸ் சேவியர் அவர்களின் குறிப்புகளிலும் நாகூர் ஆண்டவர் பற்றிய குறிப்புகள் இல்லை (5).\nநாகூர் ஆண்டவர் தஞ்சாவூர் நாயக்க மன்னர் அச்சுதப்ப நாயக்கரின் (1560-1614) நோயினைத் தீர்த்து வைத்ததாகவும் அவர்களது அருளினால் மன்னனுக்கு ஒரு ஆண் மகவு பிறந்ததாகவும் ‘கஞ்சுல் கராமத்து’ கூறுகிறது. நாகூர் தர்காவிற்கும் தஞ்சாவூர் நாயக்க மன்னர்களுக்கும் இக்காலம் முதல் தொடர்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இக்காலத்தில் நாயக்க மன்னர்களைப் பற்றி எழுதப்பட்ட ரகுநாதபியுதாயமு, சாகித்ய ரத்னகாரா, சங்கீதசுதா ஆகிய தெலுங்கு இலக்கியங்களில் நாகூர் ஆண்டவர் பற்றிய குறிப்புகள் ஏதும் இல்லை. ஆனால் நாயக்க மன்னர்கள் அப்போது நாகப்பட்டினத்தை ஆக்ரமித்துக்கொண்டிருந்த போர்த்துக்கீசியருடன் பகைமை கொண்டிருந்த காரணத்தினாலும் நாயக்க மன்னர்கள் முஸ்லீம் மக்களுக்கு ஆதரவாக இருந்தனர் என்பதாலும் நாகூர் ஆண்டவர் போன்ற வலிமார்கள் மிகப் பெரிய மருத்துவ மேதைகளாகவும் திகழ்ந்தார்கள் என்பதாலும் இத்தகைய வழக்குகள் ஏற்பட்டிருக்கக்கூடும் என்று நம்பலாம். (6). இக்காலத்தில் நாகூர் ஆண்டகையின் செயற்பாடுகள் தொடக்க நிலையில் இருந்ததாகக் கொள்ளலாம்.\nஇறைநேசச் செல்வர்களான புனித அடியார்களைப் பற்றிய வரலாறுகளும், அவர்களது அற்புத ஆற்றல்களை சிறப்பித்து கூறும் செய்திகளும் ஏராளம் உண்டு. தொன்றுதொட்டு வழங்கிவரும் கதைகளை அப்படியே எழுதிவிடுவது என்பது வழக்கமாக உள்ளது. அவற்றை வரலாற்று நிகழ்வுகளுடன் தொடர்பு படுத்தி தெளிவுபடுத்த முஸ்லீம் எழுத்தாளர்கள் போதிய முயற்சிகளை இதுவரை மேற்கொள்ளவில்லை என்றே சொல்லவேண்டும். நமது வரலாறு பிறரால் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதற்கு இதுவும் ஒரு காரணமாகும். நாகூர் ஆண்டவர் குறித்து நிறைய படைப்புகள் வெளிவந்துள்ளன. ஆனால் இவர்கள் பற்றிய வரலாற்றுச் சான்றிதழ்கள் வலுவிழந்து நிற்கின்றன. உதாரணமாக நாகூர் நாயகர் , கடலில் வந்த கப்பலில் உடைப்பு ஏற்பட்டு தத்தளித்துக் கொண்டிருப்பதை உணர்ந்து தமது கண்ணாடியை கடல் நோக்கி எறிந்ததாகவும் அக்கண்ணாடி கப்பலில் ஏற்பட்ட உடைப்பை அடைத்ததாகவும் சொல்லப்படுகிறது. இப்படி ஆபத்திலிருந்து தப்பிய கப்பல் ஹாலந்து நாட்டைச்சேர்ந்த டச்சுக்காரர்களின் கப்பல் என்றும், இதற்கு நன்றிக்கடனாக டச்சுக்காரர்கள் நாகூர் நாயக்கருக்கு நன்றி செலுத்தியதாகவும், ஒரு ஆசிரியர் குறிப்பிடுகின்றார் (7). நாகூர் ஆண்டவர் அவர்கள் காலத்தில் டச்சுக்காரர்கள் கிழக்குக் கடற்கரைக்குப் பகுதிக்கு வரவே இல்லை. அப்போது நாகப்பட்டினம் பகுதியில் இருந்தவர்கள் போர்த்துக்கீசியர் ஆவார்கள். டச்சுக்காரர்கள் முதன்முதலில் 1605ம் ஆண்டிலேயே கிழக்குக் கடற்கரைப் பகுதிக்கு வருகின்றனர் (8). 1658-ம் ஆண்டில்தான் நாகப்பட்டினம் துறைமுகம் டச்சுக்காரர்கள் வசமாகிறது (9).\nதஞ்சாவூரை ஆண்டுவந்த மராத்திய மன்னர்கள் நாகூர் தர்காவை விரிவுபடுத்துவதற்கு பல்லாற்றானும் உதவிகள் செய்துள்ளனர். கி.பி. 18-ம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை நாகூர் தர்கா சிறிய கட்டிடங்களுடனேயே இருந்து வந்திருக்கவேண்டும் எனக் கருதலாம். மராட்டிய மன்னர் பிரதாப்சிங் (1739-1763) நாகூர் தர்கா கட்டிடங்களை விரிவு படுத்திக் கட்டினார். இம்மன்னர் நாகூர் தர்கா கட்டிடங்களின் Founder என்று சொல்லப்படுகிறது. (10). மேலும் பிரதாப்சிங் தர்காவின் பராமரிப்பிற்கு பதினைந்து கிராமங்களை மானியமாக அளித்ததாக கல்வெட்டுச் செய்தி ஒன்று கூறுகிறது (11). தர்காவில் உள்ள மிக உயரமான (131) அடி மனோராவைக் கட்டியதும் இம்மன்னரே ஆவார். பிரதாப்சிங்கிற்குப் பிறகு வந்த மராட்டிய மன்னர்களும் தர்காவிற்கு பல கொடைகள் வழங்கியுள்ளனர். இக்கொடைகள் குறித்த செய்திகள் தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் மோடிப் பதிவேடுகளில் நிறையக் காணப்படுகின்றன. கந்தூரி உற்சவத்தின்போது ஆண்டுதோறும் மராட்டிய மன்னர்களிடமிருந்து அலங்கார ஆடைகள் வருவது வழக்கமாக இருந்தது (12). நாகூர் பகுதி ஆங்கிலேயருடைய ஆட்சிக்குட்பட்டபின்னும் மராட்டிய மன்னர்கள் தர்காவின் நிர்வாக செயல்பாடுகள் குறித்து பெரிதும் அக்கறைகாட்டி வந்தனர். பிரதாப்சிங் கட்டிய மனோராவை ஆங்கிலேயர்கள் தங்களது கொடிக்கம்பமாகப் பயன்படுத்தி வந்தனர். மராட்டிய மன்னர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இப்பழக்கம் நிறுத்தப்பட்டதாக ஆங்கிலேயரின் பதிவுகள் தெரிவிக்கின்றன (13).\nமேலும் ஜாதி மத பாகுபாடின்றி இந்துக்களும் முஸ்லீம்களும் தர்காவிற்கு வந்து வழிபடுவதை ஆங்கிலேயர் வெகுவாகப் பாராட்டி எழுதியுள்ளனர் (14).\nஇந்து மதத்தைச் சேர்ந்த பக்தர்கள் பலர் தர்காவின் கட்டிடங்களைக் கட்டுவதற்கு நிறைய பொருளுதவி செய்துள்ள செய்திகளை தர்காவில் காணப்படும் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. 18-ம் நூற்றாண்டில் நடைபெற்ற கர்நாடகப் போரின்போது பிரஞ்சு தளபதி லாலி நாகூர் தர்காவை கொள்ளையிட்ட செய்தியும் நமக்கு கிடைக்கிறது (15).\n19-ம் நூற்றாண்டில் தர்காவின் தரிசனத்திற்கு வரும் கூட்டம் மிகவும் அதிகரித்துக் கொண்டுவந்தது. இதனால் தர்காவின் வருமானமும் பெருகியது. ஆகவே தர்கா நிர்வாகத்தைக் கவனிக்கப் பல குழுக்கள் நியமிக்கப்பட்டன. இந்துக்களும் முஸ்லிம்களும் இணைந்து இந்த தர்காவைப் போற்றி வந்ததால் ஒரு சமயம் முத்துசாமிப்பிள்ளை என்பவர் தர்காவின் மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்டிருந்தார் (16). தர்காவிற்கான மானியங்கள் முறைப்படுத்தப்பட்டன. மானிய நிலங்களிலிருந்து வரும் நெல் வருமானத்தை வலியுல்லா அவர்களின் சந்ததியினர் நிர்வகித்து வர வழிவகை செய்யப்பட்டிருந்தது (17). 1817-ம் ஆண்டு அறநிலைய சட்டப்படி ஆங்கிலேய அரசே தர்காவின் நிர்வாகத்துக்கு வந்தது. 1934-ம் ஆண்டு முஸ்லீம் அறநிலையங்களுக்கென தனிச்சட்டம் ஏற்படுத்தப்பட்டது (18). 1954-ம் ஆண்டு வக்பு சட்டங்கள் ஏற்படுத்தப்பட்டபின் தர்கா நிர்வாகம் இச்சட்டத்தின்படி முறைப்படுத்தப்பட்டது.\nநாகூர் தர்காவில் கந்தூரி 14 நாட்கள் நடைபெறுகிறது. அப்போது இந்தியாவில் பல பகுதிகளிலிருந்தும் உலகின் பல பகுதிகளிலிருந்தும் லட்சக்கணக்கான மக்கள் கூடி வலியுல்லா அவர்களின் அருள் வேண்டுகின்றனர். 9-ம் நாள் பீர் என்னும் பக்கீர் மௌனமாக அமர்ந்திருக்கும் பழக்கம் ஆந்திர மாநிலம் பெணுகொண்டா தர்கா நடைமுறைப் பழக்கங்களிருந்து பெறப்பட்டதாக தெரியவருகிறது (19). மேலும் இந்து கலாச்சாரத் தாக்கத்தினால் பல வழிபாட்டு முறைகள் தர்காவில் பின்பட்டு வருவதைக் காண்கிறோம்.\nநாகப்பட்டினத்திலும், நாகூரிலும் முஸ்லிம் வணிகர்கள் பலர் வாழ்ந்து வந்தனர். நாகூரில் வாழ்ந்து வந்த முஸ்லிம் வணிகர்கள் பற்றிய செய்திகளும், நாகூர் துறைமுகம் குறித்த செய்திகளும் 16-ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்தே நமக்கு கிடைக்கின்றன. இங்கு வாழ்ந்த முஸ்லிம் வணிகப் பெருமக்கள் கப்பல் உரிமையாளர்களாகவும், கப்பல் செலுத்தும் தொழிலில் ஈடுபட்டவர்களாகவும், கடல் கடந்த நாடுகளுக்குச் சென்று வாணிபம் செய்பவர்களாகவும் இருந்தனர். முஸ்லிம் வணிகர்கள் அனைவருமே கப்பல்கள் வைத்திருக்கவில்லை. ஒருசில வணிகர்களுக்குச் சொந்தமாக இருந்த கப்பல்களில் பிற வணிகர்கள் தங்களது வணிகப் பொருட்களை ஏற்றிச் சென்று வாணிபம் செய்துள்ளனர்.\nநாகூர் கடற்கரையில் 16-ம் நூற்றாண்டில் ஐந்து கோயில்கள் இருந்தன. இந்தக் கோயில்கள் கப்பல்களுக்கு கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்தன. இத்துறைமுகத்திற்கு ஒன்றை மரப்பாய் கப்பலிலிருந்து, 300 டன் எடையுள்ள கப்பல் வரை வந்து சென்றன. இங்கு வாழ்ந்த முஸ்லிம் வணிகர்கள் சுமத்தரா, ஜாவா, மலாக்கா, மலேயா, பர்மா, இலங்கை ஆகிய கடல் கடந்த நாடுகளுடன் வணிகத் தொடர்பு வைத்திருந்தனர். முக்கிய ஏற்றுமதிப் பொருள்களாவன : அரிசி, சங்கு , மிளகு மற்றும் துணிவகைகள். இறக்குமதிப் பொருட்களாவன : பாக்கு, யானை, குதிரை, தேங்காய், உலோகங்கள் மற்றும் வாசனை திரவியங்கள் (20). நாகூர் துறைமுகத்திலிருந்து மேற்கு கடற்கரைத் துறைமுகங்களுக்கும் கிழக்குக் கடற்கரையோரமாக உள்ள பிற துறைமுகங்களுக்கும் வணிகத் தொடர்பு மிக அதிகமாக இருந்து வந்தது. மேலும் நாகூர் துறைமுகம் வெட்டாறின் கிளையான குடவளாற்றின் முகத்துவாரத்தில் இருந்ததால், ஆற்றில் தண்ணீர் அளவு கணிசமாக இருக்கும்போது, ஆற்றினுள் குறைந்த எடையுள்ள கப்பல்கள் மற்றும் படகுகள் போக்குவரத்து நடந்து வந்தது. இதன்மூலம் உள்நாட்டு விளைபொருட்களை, துறைமுகத்திற்கு ஏற்றிவர ஏதுவாக இருந்தது (21).\n16-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் போர்த்துக்கீசியர் நாகப்பட்டினம் துறைமுகத்தைப் பிடித்துக் கொண்டனர். இயல்பாக அவர்கள் முஸ்லிம்கள் மீது காட்டிய பகை உணர்வு அங்கு வாழ்ந்த முஸ்லீம் வணிகர்களை நிலைகுலையச் செய்தது. போர்த்துக்கீசிரியன் அனுமதிச்சீட்டுடன் (cartaz) முஸ்லீம் வணிகர்களும் வாணிபத்தில் ஈடுபட அனுமதிக்கப்பட்டனர். ஆனால் முஸ்லீம் வணிகர்கள் அவர்களை விட்டு விலகிச் சென்று நாகூர் துறைமுகத்திலிருந்து தங்களது வாணிப நடவடிக்கைகளை நடத்தி வந்தனர். நம் நாட்டு மன்னர்களிடையே ஏற்பட்ட பிணக்குகளினாலும் ஐரோப்பியர்களின் தலையீட்டினாலும் தமிழகத்தின் அரசியல் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதன் விளைவாக முஸ்லீம் வணிகர்களும் அவர்களது பொருளாதாரமும் பாதிக்கப்பட்டன. பிரஞ்சு தளபதி லாலி நாகூர் தர்காவை கொள்ளையிட்டது மட்டுமின்றி நாகூர் துறைமுகத்திலிருந்த முஸ்லிம் வணிகர்களுக்குச் சொந்தமான இரண்டரை லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்களையும் கொள்ளையிட்டுச் சென்றார் என்பதிலிருந்து முஸ்லிம் வணிகர்களின் செல்வச் சிறப்பையும் அதே சமயத்தில் அவர்களுக்கு ஏற்பட்ட இன்னல்களையும் அறிய முடிகிறது (22).\n1773-ல் மராட்டிய மன்னர் நாகூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள ஊர்களை டச்சுக்காரர்களுக்கு விற்றுவிட்டனர். இதை ஆற்காடு நவாப் எதிர்த்து தம் வசப்படுத்திக்கொண்டார் (23). பின்னர் 1788-ல் நாகூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 277 கிராமங்களை மராட்டிய மன்னர் இரண்டாம் துளஜா ஆங்கிலேயருக்கு அளித்தார். இதன்பின் நாகூர் துறைமுகம் ஆங்கிலேயரின் வசமானது (24).\n1780-ல் ஹைதர்அலி நாகப்பட்டினத்தின் மீது படையெடுத்து வந்தார். அப்போது நாகூர் ஆங்கிலேயர் வசமிருந்தது. நாகப்பட்டினத்திலிருந்து டச்சுக்காரர்கள் ஹைதர்அலிக்கு உதவி அளித்தனர். ஹைதரின் படைகள் நாகூர்ப் பகுதியில் பெரும் அழிவை ஏற்படுத்தின. நாகூர் பகுதி மக்களின் உயிருக்கும் உடமைக்கும் பெரும் சேதம் ஏற்பட்டது. நாகூரிலிருந்த வணிகப் பெருமக்களும் பொதுமக்களும் பயந்து பல இடங்களுக்கு குடிபெயர்ந்தனர் என்று நாகூரிலிருந்த ஆங்கிலேய பிரதியின் அறிக்கை கூறுகிறது (25).\nதஞ்சாவூர் பகுதி முழுவதும் 1799-ல் ஆங்கிலேயர் வசமானது. நாகப்பட்டினமும் நாகூரும் ஒரே நகராகக் கருதப்பட்டது. நாகூர் மாவட்டத் தலைநகராக இருந்தது (26). பின்னர் நாகப்பட்டினம் மாவட்டத் தலைநகரானது (27). அரசியல் குழப்பங்களினால் குடிபெயர்ந்து சென்ற வணிகர்களையும், நெசவாளர்களையும் நாகூருக்கு வந்து குடியமர ஆங்கிலேய அரசு பல சலுகைகளை அளித்தது. முஸ்லீம் வணிகர்கள் மீண்டும் நாகூருக்கு வந்து சேர்ந்தனர். நாகூரில் பலவித வரிச்சலுகைகள் அளிக்கப்பட்டன (28). வீட்டுவரி தவிர பிற வரிகள் ரத்து செய்யப்பட்டன. வணிகர்களுக்கு பொருளாதார உதவி செய்யும் பொருட்டு ஆங்கிலேயர் ஒரு வங்கியை நாகூரில் ஏற்படுத்தினர் (29).\nநாகூரில் ஒரு வகை ஊதா நிறத் துணி உற்பத்தி செய்யப்பட்டது. Naguri Blue Cloth எனும் இத்துணிக்கு இங்கிலாந்திலும் தூரக்கிழக்கு நாடுகளிலும் நல்ல கிராக்கி இருந்தது (30). நாகூரில் ஒரு சாயத் தொழிற்சாலையும் ஏற்படுத்தப்பட்டது. நெசவாளர்களுக்குப் பல சலுகைகள் அளிக்கப்பட்டன. நாகூர் பகுதியில் சுமார் 4000 நெசவாளர்கள், 1100 தறிகளில் இவ்வகை ஊதா துணிகளை உற்பத்தி செய்து ஏற்றுமதிக்கு அளித்து வந்தனர். நெசவாளர்களில் பெரும்பாலோனோர் முஸ்லிம் மக்கள் என்பது குறிப்பிடத் தக்கது. உற்பத்தியாகும் ஊதா துணியில் பெரும் பகுதியை முஸ்லிம் வணிகர்கள் வாங்கி ஜாவா, இங்கிலாந்து, மலாக்கா, இலங்கை ஆகிய நாடுகளுக்கு தங்களது கப்பல்களிலும் ஆங்கிலேய வணிகர்களின் கப்பல்களிலும் அனுப்பினர். ஆங்கிலேய கம்பெனியும், செட்டியார் இன வணிகர்களும் ஆங்கிலேய தனியார் வணிக நிறுவனங்களும் இவ்வகைத் துணி ஏற்றுமதியில் ஈடுபட்டிருந்தனர். இந்து வணிகர்களும், முஸ்லிம் வணிகர்களும் ஒற்றுமையுடன் இருந்து வாணிபம் நடத்தி நாகூரின் வளம் பெருக்கினர் (31).\nமுஸ்லிம் வணிகர்களான மரைக்காயர்கள் குறித்த செய்திகள், போர்த்துக்கீசியர், டச்சுக்காரர்கள், டேனிஷ்காரர்கள், பிரெஞ்சுக்காரர்கள் மற்றும் ஆங்கிலேயரின் பதிவேடுகளில் நிறைய காணப்படுகின்றன. மரைக்காயர், நகுதா, மாலுமி, செறாங்கு, சுக்காணி போன்ற பட்டங்களுடன் ஏராளமான முஸ்லிம் வணிகர்களின் பெயர்கள் இப்பதிவேடுகளில் காணக்கிடக்கின்றன. இவர்கள் வணிகத் தொடர்பு கொண்டிருந்த நாடுகளிலெல்லாம் பெரும் செல்வாக்குடன் விளங்கினர். சில வணிகர்கள் தங்களுக்குத் தேவையான கப்பல்களை வெளிநாடுகளிலிருந்து வாங்கும் அளவிற்கு வசதி படைத்தவர்களாக இருந்தனர். 1722-ல் ஆங்கிலேயர் அச்சை நாட்டில் ஒரு வணிகச் சாவடி ஏற்படுத்தும் பொருட்டு அந்நாட்டு மன்னரிடம் அனுமதி பெற, முகமது காசிம் மரைக்காயர் மூலமாகவே அணுகவேண்டி வந்தது. இவர் நாகூரைச் சேர்ந்த ஒரு கப்பல் வணிகர்; மேலும் முகமது காசிம் மரைக்காயர் பினாங்கிலும் கெத்தானிலும் அந்நாட்டு மன்னர்களிடமும் பெரும் செல்வாக்கு உடையவராக இருந்தார் என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும் (32). இவருக்கு ஆங்கிலேய அரசு பல வரிச் சலுகைகளை அளித்துள்ளது (33). இது போன்று தூரக்கிழக்கு நாடுகளில் சிறப்புடன் விளங்கிய நாகூர் வணிகர்கள் பலர் குறித்த செய்திகளும் நமக்குக் கிடைக்கின்றன. இவர்களது வணிகச் சாவடிகள் பினாங்கு, அச்சை, சுமத்தரா, பெரு, கெத்தா, இலங்கை, பர்மா ஆகிய நாடுகளில் வளமுடன் விளங்கியதை ஆங்கிலேயரின் பதிவேடுகள் தெரிவிக்கின்றன (34).\n1796-ம் ஆண்டு பதிவேடு ஒன்று நாகூரில் சுமார் 70 முஸ்லீம்கள் கப்பல் வணிகர்களாகத் திகழ்ந்தனர் எனத் தெரிவிக்கிறது. இவர்கள் தங்களுக்குத் தேவையான கப்பல்களை நாகூரிலேயே கட்டிக் கொண்டனர். இவ்வாண்டில் ஏழு கப்பல்கள் மட்டும் நாகூர் மற்றும் நாகப்பட்டினத் துறைமுகங்களில் முஸ்லிம் வணிகர்களுக்குச் சொந்தமானவையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள வணிகர்கள் இக்கப்பல்களில் தங்கள் வணிகப் பொருட்களை ஏற்றிச் சென்றிருக்க வேண்டும். இதற்குரிய வாடகை, கமிஷன் போன்றவற்றை கப்பல் உரிமையாளர்கள் பெற்றுக் கொண்டனர். கப்பல் சரக்குக் கட்டணம், பொருட்களின் மதிப்பில் 14% கமிஷன், 7 1/2% இன்ஷ¥ரன்ஸ் திட்டமும் இருந்தது. பிரிமியம் 16% ஆகும். பெரும்பாலும் கப்பல் உரிமையாளர் கப்பலில் செல்வது கிடையாது. கப்பல் தலைவரான நகுதாவின் பொறுப்பில் கப்பல் ஒப்படைக்கப்படும். நகுதாவும் தனது ஊதியத்திற்குப் பதிலாக தனது வணிகப் பொருட்களை கப்பலில் ஏற்றிச் செல்லுவார். நாகூர் வணிகர்களின் வணிக நடைமுறைகள் பழக்கங்கள் குறித்த சுவையான பல செய்திகள் ஐரோப்பியரின் பதிவேடுகளில் நமக்கு கிடைக்கின்றன (35). தங்களது கப்பல்களை பதிவு செய்து கொண்டு உரிய சுங்கத் தீர்வைகளை செலுத்திய வணிகர்கள் மட்டுமின்று பதிவு செய்யப்படாத கப்பல்களும் பல இருந்தன. சுங்கத் தீர்வையை ஏய்த்து பொருட்களை ஏற்றிவந்த இதுபோன்ற கப்பல்கள் ஆங்கிலேயரால் பறிமுதல் செய்யப்பட்டன. அபராதமும் விதிக்கப்பட்டது. நாகூர் பக்கிரி மரைக்காயர் 1823-ல் இலங்கையிலிருந்து அனுமதியின்றி பாக்கு ஏற்றிக் கொண்டுவந்தபோது கண்டுபிடிக்கப்படு அவரது கப்பல் பறிமுதல் செய்யப்பட்டது (36). கபூல் முகமது மரைக்காயர் தனது கப்பலில் அனுமதின்றி வங்காளத்திற்கு சங்கு ஏற்றிச் சென்றபோது கப்பல் பறிமுதல் செய்யப்பட்டது (37).\nநாகூர் துறைமுகக் கப்பல்களில் நகுதா, சிராங்கு, மாலுமி, கிராணி, சுக்காணி போன்ற பணிகளில் ஈடுபட்டிருந்த பல முஸ்லிம்களின் பெயர்கள் ஆங்கிலேயரின் பதிவேடுகளில் நிறைய காணப்படுகின்றன (38).\nகி.பி. 19-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நாகூர் மரைக்காயர்கள் தங்களது கப்பல்களை கொழும்பு, அச்சை, பினாங்கு, மலாக்கா, மலேயா ஆகிய நாடுகளுக்கு வணிக நிமித்தம் அனுப்பி வந்தனர். ஐரோப்பாவில் நடைபெற்ற போர்களின் தொடர்பாக இந்தியாவிலும் ஆங்கிலேயருக்கும் பிரஞ்சுக்காரருக்கும் பகை மூண்டது. இப்போர்களில் நடுநிலை வகித்து வந்த டேனிஷ்காரர்களின் கொடி மற்றும் அனுமதிச்சீட்டுடன் நாகூர் மரைக்காயர்கள் தங்கள் கப்பல்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி வந்தனர். ஆனால் டேனிஷ்காரர்கள் நடுநிலையிலிருந்து மாறியபோது, அவர்களது அனுமதிச்சீட்டுடன் சென்ற கப்பல்களை பிரஞ்சு நாட்டு போர்க்கப்பல்கள் வளைத்துப் பிடித்தன. பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்நிலையிலிருந்து தங்களை காப்பாற்றக்கோரி நாகூர் முஸ்லிம் வணிகர்கள் ஆங்கிலேய அரசிடம் விண்ணப்பித்துக் கொள்ளுகின்றனர். இந்த விண்ணப்பத்தில் கையொப்பமிட்டுள்ள பதினேழு பேர்களுள் பதிமூன்று பேர் முஸ்லிம்கள் ஆவர். அவர்களது பெயர்கள் வருமாறு :- முகமதலி மரைக்காயர், முகமது சையது மரைக்காயர், அலிசாயபு நகுதா, ஹபீப் முகமது மாலுமி, பீர் சாஹிப் நகுதா, முத்துனா சாஹிப், சையது இஸ்மாயில் லப்பை, முகமது ஹபீப் மரைக்காயர், மதார் சாஹெப் நகுதா, சையது முகமது நகுதா, சுலைமான் மாலுமி, பக்கீர் முகமது நகுதா, சித்தி முகமது இப்ராஹிம் நகுதா (39).பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து நாகூர் வணிகர்களின் கப்பல்கள் வாணிகப் பொருட்களோடு பயணிகளையும் தூரக்கிழக்கு நாடுகளுக்கு ஏற்றிச் சென்றன. மலாக்கா, மலேஷியா, இலங்கை, பர்மா ஆகிய நாடுகளுக்கு பெருமளவிற்கு முஸ்லிம்கள் சென்றனர். அங்கெல்லாம் ஆங்கிலேய ஆட்சி ஏற்பட்டதின் பயனாக தொழிலாளர்கள் நிறைய தேவைப்பட்டனர். நாகூரிலிருந்தும் இந்நாடுகளுக்குச் சென்றவர்கள் அந்நாடுகளில் தொழிலாளர்களாகவும், வணிகர்களாகவும் ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் ஈடுபட்டும் இருந்தனர். 1786-ல் பினாங்கும் 1824-ல் சிங்கப்பூரும் உருவானபோது நாகூர் மற்றும் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த மரைக்காயர்கள் அங்கெல்லாம் கணிசமான என்ணிக்கையில் இருந்தனர். நாகூரிலிருந்து வெளிநாடுகளுக்குச் சென்ற மரைக்காயர்கள் தங்களது ஆன்மீகத் தேவைகளுக்காக அங்கெல்லாம் நாகூர் ஆண்டவர் பெயரால் தர்காக்கள் கட்டி ஆண்டுதோறும் நாகூரில் நடைபெறுவதுபோல் கந்தூரியும் நடத்தினர். இதுபோன்ற கலாச்சார மையங்கள் (தர்காக்கள்) சிங்கப்பூரிலும், பினாங்கிலும் இன்ரும் உள்ளன (40). மேலும் நாகூர் தர்காவில் கந்தூரியின்போது ஏற்றுவதற்காக ‘கொடி’, கப்பல் மூலம் அனுப்பி வந்தனர்.\n1848-ல் சுமார் பத்து கப்பல் உரிமையாளர்கள் மட்டும் நாகூரில் இருந்தனர் என்பதற்கு அங்கு பதிவாகியுள்ள கப்பல்களின் பெயர்களைக் கொண்டு அறிகிறோம். இவை அனைத்தும் பாய்மரக் கப்பல்கள். அவையாவன : காதர்மீரா, ஷம்ஷீர், ஜூலிக்ஸ், கூடு காதர் பக்ஸ், பதேகாசிம், சகியா, பால காதர், அகமது பக்ஸ் முகமது மைதீன் பக்ஸ், ஜஹாங்கீர், ஷாஹ¥ல் ஹமீது. இக்கப்பல்கள் சிங்கப்பூர், பினாங்கு, பர்மா, ஆகிய நாடுகளுக்கு பெரும்பாலும் பயணிகளை ஏற்றிச் சென்றன. குறைந்த அளவில் வணிகப் பொருட்களையும் ஏற்றிச் சென்றன (41).\n19-ம் நூற்றாண்டின் இறுதியில் ஒரு சில கப்பல் உரிமையாளர்களையும், கப்பல் வணிகர்களையும் நாகூரில் காண முடிகிறது. இவர்களும் பொருளாதரத்தில் முனைப்பாக இல்லை என்பதும் தெரிய வருகிறது. இக்காலத்தில் செட்டியார் வணிகர்கள் பெரும் பணக்காரர்களாக விளங்கினர். முஸ்லிம் வணிகர்கள் பலர் அவர்களிடம் கடன் பெற்று வணிகம் செய்துள்ளனர். நாகூரில் வசித்த அரசன் குத்தூஸ் மரைக்காயர், லார்டு ஹாரிஸ் என்ற கப்பலுக்கு உரிமையாளர். இவர் 1890-ல் சாமிநாத செட்டியார் என்பவரிடம் ரூ.10,000 கடனாகப் பெற்று, பெற்ற கடனை திருப்பி அளிக்க முடியாமல் கப்பலையே கொடுத்து ஈடு கட்ட வேண்டியதாயிற்று (42). இவரது சகோதரர் அகமது நைனா மரைக்காயர் ஒரு கப்பல் வணிகர் என்ற செய்தியும் கிடைக்கிறது (43). மேலும் பல கப்பல் வணிகர்கள் வாழ்ந்திருக்கின்றனர். அவர்களைப் பற்றிய செய்திகளை அறியக்கூடவில்லை. மரைக்காயர் தெரு, செராங்கு தெரு, மாலுமியார் தெரு, நகுதா தெரு, பயலட் தெரு என்பன இங்கு வாழ்ந்த கப்பல் வணிகர்களை நினைவு படுத்துகின்றன.\n1867-ம் ஆண்டில் நாகூர் மற்றும் நாகப்பட்டினம் துறைமுகங்கள் ஒன்றிணைக்கப்பட்டன. இருபதாம் நூற்றாண்டில் நாகூர் வணிகர்களும் நாகப்பட்டினத்திலிருந்து தங்களது வாணிபத்தைத் தொடர்ந்தனர். சிறிய பாய்மரக் கப்பல்கள் மூலம் இலங்கை, மேற்குக் கடற்கரை, கல்கத்தா, துறைமுகங்கள், ராமநாதபுரம், திருநெல்வேலி மாவட்டத் துறைமுகங்கள் ஆகியவற்றுடன் சிறிய அளவில் வணிகம் செய்துவந்துள்ள செய்திகள் தெரிய வருகின்றன. ஆனால் பிற நாடுகளுக்குச் சென்ற செய்திகள் கிடைக்கவில்லை. அதிக எடை கொள்ளளவு உள்ள ஆங்கிலேயரின் நீராவிக் கப்பல்களுடன் மரைக்காயர்களின் பாய்மரக் கப்பல்கள் போட்டிபோட முடியவில்லையாதலாலும் ஆங்கிலேலேயரின் பெரும் மூலதனத்துடன் இவர்களது குறைந்த மூலதனம் ஈடுகொடுக்க முடியாததாலும் ஏறத்தாழ 16-ம் நூற்றாண்டிலிருந்து முஸ்லிம் இனம் சார்ந்த அரசுகளில் ஆதரவு இல்லாததாலும், கிழக்குக் கடற்கரை முஸ்லிம்களின் கடல் வாணிப வரலாறு 19-ம் நூற்றாண்டின் இறுதியில் நசிந்து மறைந்து போயிற்று. இதில் நாகூர் வணிகர்களும் அடங்குவர்.\n17-18-ம் நூற்றாண்டுகளில் நற்றமிழ் புலவர்கள் பலர் நாகூரில் வாழ்ந்து வந்துள்ளனர். இவர்கள் இலக்கிய உலகிற்கும் தமிழுக்கும் நல்ல சேவை புரிந்துள்ளனர். இக்காலக்கட்டத்தில் ஏறத்தாழ 30-க்கும் மேற்பட்ட புலவர்களின் பெயர்களும் 50-க்கும் மேற்பட்ட படைப்புகளும் நமக்கு தெரிய வருகின்றன. நாகூர் தந்த நல்ல தமிழ் புலவர் வரிசையில் முதலிடம் வகிப்பவர் குலாம் காதிர் நாவலர் ஆவார்கள். திரைகடலோடி தேடிய திரவியத்தை தக்கார்க்கு வேளாண்மை செய்வதில் நாகூர் வணிகர்கள் சிறந்து விளங்கினர். இவர்களது கொடைத் தன்மையினால் பல இஸ்லாமிய இலக்கியங்கள் உருவாகியுள்ளன என்பதை இஸ்லாமிய இலக்கிய வரலாற்று நூல்கள் பெருமையுடன் பேசுகின்றன (44).\nநாகூரின் வணிக, ஆன்மீக கலாச்சார வரலாறு குறித்த ஒரு அறிமுகமே இக்கட்டுரை. நாகூர் குறித்து பதிவேடுகள் கூறும் விரிவான செய்திகள் மூலம் தமிழக முஸ்லிம்களின் வரலாற்றை தெளிவுபட தெரிந்துகொள்ள மேலும் பல செய்திகள் நமக்குத் தெரியவருகின்றன.\n2. ஜே.எம். சாலி, தமிழகத்து தர்காக்கள், சென்னை,. 1981, பக்கம் -32.\n7. ஜே.எம். சாலி, தமிழகத்து தர்காக்கள், சென்னை, பக்கம் -34\n44. இஸ்லாமிய தமிழ்ச் சிற்றிலக்கிய மாநாட்டு மலர், புதுக்கோட்டை 1992-பிப்ரவரி, மு.ஜாபர் முஹைய்தீன்,\nநன்றி : இஸ்லாமியத் தமிழிலக்கிய ஆய்வுக்கோவை\nநன்றி : ஜெ.ராஜா முகமது M.A., B.Sc. & ‘சொல்லரசு’ மு.ஜாபர் முஹையதீன்.\nநன்றி : ஆபிதீன் பக்கங்கள்\nபுகை பிடிக்கும் போது - புதிய ஆராய்ச்சி\nவாஷிங்டன்: சிகரெட் புகைப்பவர்கள் வழக்கமான நிகோட்டினுடன், நச்சுக் கிருமிகளையும் (பாக்டீரியாக்கள்) உயிரோடு இழுத்து உடம்புக்குள் விட்டுக்கொள்கிறார்கள் அமெரிக்க விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.\nபுகை பிடிக்கும் போது சிகரெட்டில் இருந்து உடம்புக்குள் செல்லும் ரசாயணங்கள் மற்றும் வாயுக்களால் என்னென்ன பாதிப்பு என்ற ரீதியில் தான் விஞ்ஞானிகள் ஆராய்ந்து அச்சுறுத்திக் கொண்டிருந்தார்கள்.\nஇப்போது, நிகோடினுக்கு இணையாக நுரையீரல் மற்றும் சுவாச உறுப்புகளை நேரடியாக பாதிக்கும் பாக்டீரியா கிருமிகளை மேரிலாண்ட் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஆராய்ச்சி செய்துள்ளனர்.\nமனிதர்களிடம் எளிதில் தொற்றிக்கொள்ளும் அபாயக் கிருமிகள் உட்பட நூற்றுக்கணக்கான விதங்களில் கிருமிகள் சிகரெட்டுகளில் இருப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.\nபுகை பிடிப்பவர்களுக்கு ஏற்படும் நோய்களுக்கான காரணங்களில் இவையும் முக்கிய பங்காளிகள் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.\nபுனித காவ்பதுல்லாஹ் உள்ளே எடுக்கப்பட்ட வீடியோ >\nஇன்ஷால்லாஹ் அல்லாஹ் நம் அனைவருக்கும் நேரில் காணும் பாக்கியத்தை தருவானாக \nஅரஃபா நோன்பு - ஐயமும் தெளிவும்\nரமலான் மாதக் கடமையான ஒரு மாத நோன்பைத் தவிர மற்ற சில நாட்களிலும் நோன்பு வைக்க நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்கள். அவற்றில் மிக முக்கியமான நோன்பு அரஃபாதின நோன்பாகும். ரமலானைத் தொடர்ந்து வரும் இஸ்லாமிய வருடத்தின் இறுதி மாதமான துல்ஹஜ் மாதம் ஒன்பதாம் நாள் அரஃபா தினமாகும்.\nஅதாவது ஹஜ் யாத்திரிகர்கள் ஹஜ்ஜின் முக்கியக் கடமைச் செயற்பாடுகளுள் ஒன்றான அரஃபா மைதானத்தில் ஒன்று கூடும் நாளாகும். இந்நாளில் ஹஜ்ஜுக்குச் செல்லாத மற்ற உலக முஸ்லிம்கள் நோன்பு நோற்குமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள்.\nஅரஃபா நாளில் நோன்பு நோற்பது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது. அதற்கு அவர்கள் \"அது கடந்த வருடத்தின் மற்றும் வரக்கூடிய வருடத்தின் பாவத்தை போக்கிவிடும்\" என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: அபூகதாதா(ரலி), நூல்: முஸ்லிம், திர்மிதி, அபூதாவூத்.\n\"நபி (ஸல்) அவர்கள் துல்ஹஜ் (பிறை)ஒன்பதாம் நாள் நோன்பு வைப்பார்கள் என்று நபிகளார் (ஸல்) அவர்களின் துணைவியார்களில் சிலர் கூறினார்கள்\"\nஅறிவிப்பவர்: ஹுனைதாபின் காலித்(ரலி), நூல்கள்: அபூதாவூத், நஸயி, அஹ்மத்.\nஅரஃபா நோன்பை அவ்வருடம் ஹஜ்ஜிற்கு செல்லாதவர்கள் மட்டும்தான் நோற்க வேண்டும். ஏனெனில் துல்ஹாஜ் பிறை ஒன்பது அரபா நாள். அரஃபா தினத்தன்று அரஃபாவில் ஒன்று கூடியிருக்கும் ஹாஜிகள் நோன்பு நோற்பதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.\nஅரஃபா தினத்தன்று அரஃபா மைதானத்தில் (குழுமியிருப்போர்) நோன்பு நோற்பதை நபி (ஸல்) அவர்கள் தடைவிதித்துள்ளார்கள்.\nஅறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: அபூதாவூத், அஹ்மத், நஸயி.\nஅரஃபா மைதானம் என்பது மறுமையில் இறைவன் முன் மனிதர்கள் விசாரணைக்காக எழுப்பப்பட்டு நிறுத்தி வைக்கப்படும் மஹ்ஷர் மைதானத்திற்கு இவ்வுலகில் இறைவன் காண்பிக்கும் ஓர் உதாரணமாகும். இதனை அரஃபா மைதானத்தில் ஒரு முறையாவது ஹஜ்ஜிற்காகச் சென்று ஒன்று கூடியவர்கள் கண்ணாரக் கண்டு உணர்ந்திருப்பார்கள். இலட்சக்கணக்கான மக்கள் ஓர் இடத்தில் ஒரே நேரத்தில் ஒன்று கூடுவதும் தன்னைப் படைத்தவனிடம் இருகரமேந்தி பாவமன்னிப்புத் தேடுவதும் பல மணிநேரம் இவ்வுலகச் சிந்தையின்றி இறை தியானத்தில் இருப்பதும் இத்தினத்தில் அரஃபா மைதானத்தில் நிகழ்கிறது.\nஅதே தினம் உலகின் பிற பகுதிகளில் இருக்கும் முஸ்லிம்களும் இறை தியானத்தில் தங்களையும் ஈடுபடுத்த, நோன்பு வைப்பதற்கு நபி (ஸல்) அவர்கள் ஏவியிருப்பது பல்வேறு அர்த்தங்களையும் எதிர்பார்ப்புகளையும் வெளிப்படுத்தி நிற்கிறது. எனவே இத்தினத்தில் ஹஜ்ஜிற்குச் செல்லாத மற்ற முஸ்லிம்கள் அவசியம் நோன்பு வைத்து, தங்களையும் ஹஜ்ஜாஜிகளோடு இறைதியானத்தில் ஒன்றிணைக்க முயல வேண்டும்.\nஅரஃபா நாளில் நோன்பு நோற்பதை நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டதற்குக் கூடுதலாக முஸ்லிம்களில் சிலர் துல்ஹஜ்ஜின் ஆரம்ப பத்து நாட்கள் நோன்பு நோற்கிறார்கள். அரஃபா தினம் அடங்கிய துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து தினங்களின் சிறப்பை நபி(ஸல்) அவர்கள் நவின்றுள்ளதுதான் இதற்குக் காரணமாகும்.\n\"அல்லாஹ்விடத்தில் துல்ஹஜ் பத்து நாட்களில் நற்காரியங்களை செய்வதற்கு மிகவும் விருப்பமான இந்த நாட்களைவிட வேறெந்த நாட்களும் இல்லை\" என்று நபி (ஸல்) அவர்கள் கூற, அதற்கு நபித்தோழர்கள், \"அல்லாஹ்வின் தூதரே அல்லாஹ்விற்காக போரிடுவதைவிடவா\" என்று வினவ, \"ஆம். அல்லாஹ்வின் பாதையில் போரிடுவதைவிட; என்றாலும் ஒரு வீரன் தன்னுடைய உயிர், உடமைகளோடு சென்று அதில் ஒன்றைக் கொண்டும் அவன் திரும்பவில்லை எனில் அது மிகவும் சிறந்த செயலே\" என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி.\nஇவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பத்து நாட்களின் சிறப்பைக் கருதி முஸ்லிம்களில் சிலர் இப்பத்து நாட்களிலும் நோன்பு நோற்கின்றனர். ஆனால் ஆயிஷா (ரலி) அவர்கள் இந்நாட்களில் நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்றதைக் கண்டதில்லை என்று மறுத்துரைக்கின்றார்கள்.\n\"நான் நபி (ஸல்) அவர்களை (இந்தப்)பத்து நாட்களில் நோன்பு நோற்றதாகப் பார்த்ததே இல்லை\" அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி), நூல்கள்: முஸ்லிம், திர்மிதி.\nமற்றவரைவிட எல்லாவிதத்திலும் முன்னிலையில் இறை தியானங்களில் ஈடுபடுவதை அதிகம் விரும்பி, தன்னை எல்லாவிதமான இறைதியானங்களிலும் ஈடுபடுத்தி முன்னுதாரணமாக விளங்கிய நபி (ஸல்) அவர்கள் துல்ஹஜ் பத்து நாட்கள் நோன்பு நோற்று இருந்தால் அதைப்பற்றியும் அறிவிப்புகள் வந்திருக்க வேண்டும். ஹதீஸ்களில் எந்த ஒரு நபித்தோழரும் அவ்வாறு அறிவித்தாக நாமறிந்தவரை செய்திகளைக் காண முடியவில்லை. எனவே இந்த அரஃபா நோன்புக்கு முந்திய தினங்களில் வேறு வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதே சாலச் சிறந்ததாகும். மற்ற நாட்களைவிட இந்த நாட்களில் அல்லாஹ்வைத் துதிப்பதில் அதிகக் கவனம் செலுத்த முயல வேண்டும்.\nநோன்பு நோற்பது இறைவனிடம் மிகப்பெரிய பாக்கியத்தைப் பெற்றுத்தரும் செயலாக இருந்தாலும் ரமலான்மாதக் கடமையான நோன்பைத் தவிர துல்ஹஜ் மாதத்தில் தொடர்ச்சியாக நோன்பு வைக்க முஸ்லிம்களின் வழிகாட்டியான நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தரவில்லை.\nநபி (ஸல்) அவர்கள் கற்றுத் தராத, செய்து காண்பிக்காத எந்தச் செயலையும் மார்க்கத்தில் நல்லமலாக அங்கீகரிக்க இயலாது. ஆனால் அதேநேரம் குர்ஆன் ஓதுதல், திக்ருகள், தேவையுடையவருக்கு உதவுதல், இரவுத் தொழுகை, அல்லாஹ்வைப் புகழ்தல், இஸ்திக்ஃபார் (பாவமன்னிப்பு தேடுதல்), ஸதகாத் (தர்மங்கள் செய்வது) போன்ற ஏனைய இறை அருளை பெற்றுத்தரும் காரியங்களில் ஈடுபடலாம்.\nதூதர் அவர்கள் பிறை பார்த்துதான் மாதத்தை அறிந்தார்கள். துல்ஹாஜ் ஒன்பது அரபா நாள் என்று அறிவித்து , அந்த ஒன்பது பிரைப்படிதான் அன்று நோன்பு நோற்றார்கள். அதே நேரம் அரபா அன்று எல்லா தேசங்களிலும் உள்ளவர்கள் ஒரே நாளில் நோன்பு இருக்க வாய்ப்பே இல்லை.. தூதர்,அவர்களுக்கு நிச்சயமா தெரிந்திருக்கும் அரபா ஒரே நாளில் எல்லோருக்கும் வராது என்று….\nபல நூறு மைல்கு அப்பால் இருந்தவர்கள், அரபா நாளுக்கு அடுத்த நாளும் , அவர்களுக்கு அது பிறை ஒன்பது ஆக இருந்து, அன்றே நோன்பு பிடித்து இருப்பார்கள்…\nஅரபாவில் கூடும் நாளில் தான் நோன்பு நோற்க வேண்டும் என்று எண்ணி இருந்தால் அதை அறிந்து செயல் பட முயற்சியாவது செய்திருப்பார்கள் ...மதீனாவில் இருந்த அவர்களுக்கு இது சாத்தியம் தான்.இஸ்லாத்தில் எந்த ஒருவணக்கமும் எளிதாகவும் , எல்லோராலும் பின்பற்ற கூடியதாக இருக்கும்.\nஆகவே உலகம் முழுவதும் ஒரே நாளில் அரபா தினத்தை அடையவது சாத்தியமற்றது . நேர வேற்றுமையால் நாட்களும் வேறுபடுகின்றது .. எல்லா வற்றுக்கும் மேலாக அல்லாஹ்வின் தூதர் உலகம் முழுவது ஒரே நாள் விதியை பின்பற்றவில்லை.\nஒன்பது ஆண்டு காலம் மதினாவில் இருந்த நபி அவர்கள் - எந்த ஒரு அரபா தினத்தையும் ,மக்காவில் அல்லது வேறு எங்கும் தென் பட்ட பிறையின் அடிப்படையில் செயல் படுத்த முற்படவில்லை .மதினாவில் பார்த்த பிறையின் அடிப்படையில் தான் செயல் படுத்தினார்கள் . மதினாவில் பிறை பார்த்து மட்டுமே மாதத்தை தீர்மானித்தார்கள்\nபிறை பாக்கும் அடிப்படையில் , பிறை ஒன்பதை , அரபா நோன்புக்காக நிர்ணயித்து சொல்லி உள்ளார்கள் என்று நன்கு சிந்திக்கும் பொது விளங்குகிறது…\nஎன்ன தான் நாம் பிறை ஆரம்பிக்கும் அந்த மைக்ரோ வினாடியை கண்டுபிடித்து அறிவித்தாலும் (எல்லோரும் ஒரே தினத்தில் , நோன்பு , பெருநாள் ,அரபா தினம் எடுக்க வேண்டும் என்பதற்காக ) இவ்வுலக நாடுகள் எந்த ஒருநாளையும் ஒரு சேர அனுபவிக்க முடியாது அதன் நேர -நாட்கள் வித்தியாசம் நமக்கு அறிவிக்க வில்லையா இதன் சூட்சமத்தை .( மக்ரிபில் நாட்கள் ஆரம்பம் இஸ்லாமிய முறைப்படி ) அனுமானத்தை விடுத்து எதார்த்தத்தை புரிந்து நடப்பது தான் இஸ்லாம் நமக்கு காட்டி தரும் வழி.\nஇதையெல்லாம் தாண்டி நம் செய்வது தவறு என்று வைத்துகொள்வோம் (இன்ஷால்லாஹ் அப்படி இருக்க வாய்ப்பே இல்லை ) அல்லாஹ் நம்மை குற்றம் பிடிக்க மாட்டான் இன்ஷால்லாஹ் இதுவே நபி பின்பற்றிய முறை என்பதனால் .\nகுழப்பங்கள் அதிகரிக்கும் போது - அல்லாவின் பக்கமும் ,அவனின் தூதரின் பக்கமும் சென்றுவிடுவது சால சிறந்தது .. நபி அவர்கள் உம்மி நபி .., நாமும் ஒரு வகையில் உம்மி சமுதாயம் தான் இல்லையென்றால் நபி அவர்கள் செயல்படுத்திய விஷயத்தில் நம் மன இச்சைகளை புகுத்தி இருக்க மாடோம் .\nநபி அவர்கள் செயல் படுத்தியது நமக்கு போதுமானது என்பதே இந்த கருத்து மோதல்களுக்கு தீர்வாக அமையும்.\nநபி (ஸல்) அவர்கள் கற்றுத் தராத, செய்து காண்பிக்காத எந்தச் செயலையும் மார்க்கத்தில் நல்லமலாக அங்கீகரிக்க இயலாது.\nஅல்லாஹ் முஸ்லிம்கள் அனைவரின் நல் அமல்களையும் பிரார்த்தனைகளையும் ஏற்று நல்லருள் புரிவானாக... ஆமீன்.\nபாரான் பள்ளத்தாக்கில் கிடத்தப் பட்ட ஒரு பாலகன், அப்பாலகனின் பெற்றோர் ஆகிய மூவரது சொந்த வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகள், உலகம் முழுவதும் வாழ்ந்த/வாழும்/வாழப் போகிற முஸ்லிம்களுக்கு மாறாத படிப்பினையாகவும் அம்மூவரது செயல்பாடுகளில் சில முஸ்லிம்களின் கடமையான வழிபாடுகளாகவும் மாறிப் போயின.\nஏறத்தாழ ஐயாயிரம் ஆண்டுகளாகத் தொடரும் - எண்ணியெண்ணி வியக்கும் அந்த வரலாறு,\n விவசாயமற்ற இப்பள்ளத்தாக்கில், மாண்புமிகு உன் இல்லத்தை அடுத்து என் வழித்தோன்றலை (குடும்பத்தாரை) வசிக்க விட்டிருக்கிறேன். தொழுகையை நிலைபெறச் செய்வதற்காகக் குடியேற்றி இருக்கிறேன். எனவே, எங்கள் இறைவா ஆதரவுள்ளம் கொண்ட மக்களை இவர்களுக்கு ஏற்படுத்துவாயாக ஆதரவுள்ளம் கொண்ட மக்களை இவர்களுக்கு ஏற்படுத்துவாயாக இவர்கள் உனக்கு நன்றி செலுத்தும் பொருட்டு, கனிகளைக் கொண்டு இவர்களுக்கு உணவளிப்பாயாக இவர்கள் உனக்கு நன்றி செலுத்தும் பொருட்டு, கனிகளைக் கொண்டு இவர்களுக்கு உணவளிப்பாயாக\" (அல்-குர்ஆன் 14:37) என்று தொடங்குகிறது.\nதன் வாழ்க்கைத் துணைவியையும் வயோதிக காலத்தில் தனக்கு வாரிசாகப் பிறந்த பால்குடி மாறாப் பாலகனையும் பாலைவனத்தில் விட்டுச் செல்ல அண்ணல் இபுறாஹீம் நபி (அலை) எப்படித் துணிந்தார்கள்\n அல்லாஹ்வின் கட்டளைக்காக அனைத்தையும் துறக்கத் துணிந்த தியாகம்\n\"இறைவன்தான் இந்தப் பாலைவனத்தில் எங்களை விட்டுச் செல்லுமாறு உங்களுக்குக் கட்டளையிட்டான் எனில், அவனே எங்களைப் பாதுகாப்பான்\" என்று உறுதியோடு உரைக்க அன்னை ஹாஜராவுக்கு எப்படி மனம் வந்தது\nஅல்லாஹ்வின் மீதுள்ள அளவு கடந்த நம்பிக்கையில், வானமே கூரையாக சுட்டெரிக்கும் பாலையிலும் வாழ்ந்திடத் துணிந்த தியாகம்\nமகன் மட்டும் தியாகத்தில் சளைத்தவரா\n நான் உன்னை அறுத்துப் பலியிடுவதாகக் கனவு கண்டேன். இதைப்பற்றி உன் கருத்து என்ன என்பதை யோசித்துச் சொல்\"\n உங்களுக்கு என்ன கட்டளையிடப் பட்டதோ அதையே செய்யுங்கள். அல்லாஹ் நாடினால், (எதையும்) சகித்துக் கொள்ளக் கூடியவர்களுள் ஒருவனாக என்னை நீங்கள் காண்பீர்கள்\" (அல்-குர்ஆன் 37:102).\nஇங்குக் கொடுத்திருக்கும் இஸ்லாத்துக்கே சொந்தமான தியாக வரலாற்றின் மிகச் சில வரிகள் வாசிப்பதற்கு மட்டுமா என்ற கேள்வியை நாம் நம்மையே கேட்டுக் கொள்ள இந்நாளில் கடமைப் பட்டிருக்கிறோம்.\nதியாகத்திருநாளை இரு ரக்அத் சிறப்புத் தொழுகையுடனும் நபி இபுறாஹீம் குடும்பத்தினரின் தியாகத்தை நினைவுபடுத்தும் ஒரு குத்பா கொண்டாடுவதோடு நம் தியாகங்களும் முடிந்து விட்டன என்ற தவறான எண்ணத்திலிருந்து விடுபட்டு... இத்தியாகத் திருநாளில் ஒவ்வொருவரும் உறுதிமொழி எடுப்போம்.\nதியாகம் நினைவுபடுத்துவதற்கோ நினைவுகூர்வதற்கோ மட்டும் அல்ல; ஒவ்வொருவரின் வாழ்விலும் செயல்படுத்துவதற்கும் சேர்த்தேதான்\nஉலகம் முழுதும் இஸ்லாத்துக்கு எதிரான திட்டமிட்ட, பல்முனைத் தாக்குதல்கள் பெருகி வரும் காலமிது. குறிப்பாக ஊடகத்துறையில் இஸ்லாத்தைப் பற்றிய பொய்களும் பூஞ்சைத் தனமான குற்றச்சாட்டுகளும் தற்போது தமிழ் இணையத்திலும் பெருகி வருகின்றன. தடுத்துச் சற்றே கையை உயர்த்தினாலே பொடியாகிப் பறந்து விடும் என்ற கருத்தில்தான் 'பூஞ்சைத் தனமான' குற்றச் சாட்டுகள் என்று இங்குக் குறிப்பிடப் படுகிறது.\nகை உயர்த்துவதற்குத்தான் ஆட்கள் தேவை. வெறும் கையைன்று; எழுதுகோல் எனும் ஆயுதம் ஏந்திய கைகள்\nஅண்ணல் இபுறாஹீம் எதிர் கொண்ட சோதனைகள் இன்று நமக்கில்லை. அன்னை ஹாஜரா தாங்கிக் கொண்ட வேதனைகள் நமக்கில்லை. அண்ணல் இஸ்மாயீல் ஏற்றுக் கொண்ட 'சுயபலி'யும் நமக்கில்லை. நமக்குள்ள நேரத்தைக் கொஞ்சம்போல் தியாகம் செய்தால் போதும். எழுத்துலகுக்கு இன்னும் இன்னும் இன்னும் முஸ்லிம்கள் வேண்டும்.\nகையை உயர்த்துங்கள் - எழுதுகோல் ஆயுதத்தோடு\nசகோதர, சகோதரிகளுக்கு சத்தியமார்க்கம்.காமின் நெஞ்சம் நிறைந்த தியாகப் பெருநாள் வாழ்த்துக்கள்\nஜாகிர் நாயக் -வாழ்க்கை குறிப்பு\nவிவரம் தெரியாத வயது ஓய்ந்து\nபாபர் மசூதி இடிக்கப்பட வேண்டிய ஒன்று-கல்யாண் சிங்\nடெல்லி: லிபரான் கமிஷன் அறிக்கை அரசியல் உள்நோக்கம் கொண்டது. அதில் அரசியல் நெடி வீசுகிறது. பாபர் மசூதி இடிக்கப்பட வேண்டிய ஒன்றதான். அங்கு மிகப் பெரிய ராமர் கோவில் நிச்சயம் வரும் என்று கூறியுள்ளார் லிபரான் கமிஷனால் குற்றம் சாட்டப்பட்டுள்ள உ.பி. முன்னாள் முதல்வர் கல்யாண் சிங்.\nலிபரான் கமிஷன் அறிக்கை குறித்து கல்யாண் சிங் கருத்து தெரிவித்தார். அப்போது அவர் கூறுகையில், இந்த அறிக்கையை ஒரு அரசியல் சதியாகவே நான் கருதுகிறேன். 1992ம் ஆண்டு,டிசம்பர் 6ம் தேதி இடிக்கப்பட்ட கட்டடத்திற்குப் பதிலாக அங்கு மிகப் பெரிய ராமர் கோவில் நிச்சயம் வரும். நிச்சயம் ஒரு கோவில் வரும், கோவில் வரும், கோவில் வரும்.\nலிபரான் அறிக்கையில் அரசியல் நெடிதான் வீசுகிறது. மசூதியை இடிக்க சதித் திட்டம் தீட்டப்பட்டதாக லிபான் கூறுவது அபத்தமானது. மசூதியை அடிக்க சதித் திட்டம் தேவைப்பட்டிருக்கவில்லை. முன்கூட்டியே திட்டமிடத் தேவையில்லாமல்தான் இருந்தது. டிசம்பர் 6ம் தேதி நடந்தது மக்களின் கொதிப்பு. ஒரு குண்டுவெடிப்பைப் போன்றது.\nஅயோத்தியில் ராமர் கோவில் கட்ட இஸ்லாமிய சமூகத்தினர் ஒத்துழைக்க வேண்டும். அங்கு ராமர் கோவில் கட்டப்பட்டு விட்டால் நாட்டில் அமைதி நிலவும். இந்தப் பதட்டமெல்லாம் முடிவுக்கு வந்து விடும்.\nகாலவரையின்றி ராமர் கோவில் கட்டுவதை தள்ளிப் போட்டால், அது இந்துக்களுக்கும் சரி, முஸ்லீம்களுக்கும் சரி எந்தவிதப் பலனையும் தராது.\nஎவ்வளவு விரைவில் கோவில் கட்டப்படுகிறதோ, அவ்வளவுக்கு நாட்டுக்கு நல்லது. மீண்டும் அங்கு மசூதி வர முடியாது.\nசம்பவ நாளன்று, பெரும் திரளாக கூடியிருந்த கரசேவகர்களைக் கலைக்க தடியடி, கண்ணீர்ப் புகை குண்டு வீச்சு ஆகியவற்றை பயன்படுத்துமாறும், துப்பாக்கிச் சூட்டில் இறங்கக் கூடாது என்றும் போலீஸாருக்கு நான் உத்தரவிட்டிருந்தேன். துப்பாக்கிச் சூடு நடத்த நான் உத்தரவிட்டிருந்தால் ஆயிரக்கணக்கானோர் இறந்து போயிருப்பார்கள். பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டு மிகப் பெரிய அளவிலான உயிர்ச்சேதம் ஏற்பட்டிருக்கும்.\nஎனக்கு முன்பு அப்போது இருந்த கேள்வி, நான் யாரைக் காக்க வேண்டும் என்பதுதான். பெரும் கூட்ட நெரிசல் ஏற்படாமல் நான் தடுத்தேன், மிகப் பெரிய உயிரிழப்புகள் நேராமல் நான் தடுத்தேன். இந்த களேபரத்தில் மசூதி இடிக்கப்பட்டு விட்டது.\nஇதற்காக நான் வருத்தமே படவில்லை. அங்கு ராமர் கோவில் வர வேண்டும். அதற்கு இந்த கட்டடம் (மசூதி) போக வேண்டியதிருந்தது என்றார் கல்யாண் சிங்.\nஎன்ன கூத்து பாத்திர்களா சகோதர்களே என்ன சொல்ல வருகிறார்கள் இவர்கள் \nதீவிரவாதத்தின் ஊற்றுக்கண் இவர்கள் தான் - நம்மை பார்த்து தீவிரவாதி என்கிறார்கள்..,\nஎவ்வளவு விரைவில் கோவில் கட்டப்படுகிறதோ, அவ்வளவுக்கு நாட்டுக்கு நல்லதாம்\nஎவ்ளோ விரைவில் மீண்டும் மசூதி கட்டப்படுகிறதோ அவ்வளவுக்கு உனக்கு நல்லது பார்த்துக்கொள் ..\nவிடியலை நோக்கி பயணம் புறப்பட்டு விட்டது .. அதி சீக்கிரம் புரிந்துகொள்வாய் ..\nஉன்னை படைத்த இறைவனின் நாட்டத்தோடு\nபாபர் மசூதி-முதன் முதலாக வழக்கு தொடர்ந்தவர் ஹாஜி ஷேக்\nலக்னோ: பாபர் மசூதி தொடர்பாக முதன் முதலாக வழக்கு தொடர்ந்தவர் ஹாஜி ஷேக் என்பவர்தான். இன்று அந்த வழக்கை தொடர்ந்து நடத்தி வருகிறார் அவரது மகன் ஹாஜி மகபூப்.\n1949ம் ஆண்டு டிசம்பர் மாதம், பாபர் மசூதியின் கதவுகளை உடைத்து சிலர் உள்ளே புகுந்து ராமர் சிலையை வைக்க முயன்றனர். இதையடுத்து ஹாஜி ஷேக் போலீஸில் புகார் கொடுத்தார். அதுதான் பாபர் மசூதி தொடர்பாக தொடரப்பட்ட முதல் வழக்காகும்.\nஷேக்குவின் மறைவுக்குப் பின்னர் அந்த வழக்கை தொடர்ந்து நடத்தி வருகிறார் அவரது மகன் மகபூப்.\nலிபரான் கமிஷன் அறிக்கை குறித்து மகபூப் கருத்து தெரிவிக்கையில், இது எங்களுக்குக் கிடைத்த முதல் வெற்றி.\nபாபர் மசூதி தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் நான்கு சிவில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. ரேபரேலி, லக்னோ கோர்ட்டுகளில் தலா ஒரு கிரிமினல் வழக்கு உள்ளது. அனைத்தும் ஆமை வேகத்தில் நகர்ந்து வருகின்றன.\nவழக்கு தொடர்பாக வாரத்திற்கு மூன்று முறை அயோத்திக்கும், லக்னோவுக்கும் நான் அலைந்து கொண்டிருக்கிறேன்.\n1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி நடந்த வன்முறையில் எனது குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்தனர். இதனால் எனது குடும்பம் சிதறிப் போனது, மனதொடிந்து போனேன். நானே கூட நான்கு முறை இதுவரை உயிர் தப்பியுள்ளேன்.\nஒவ்வொரு முறையும் நான் லக்னோ செல்லும்போது எனக்கு மிரட்டல் விடுக்கப்படும். இது வழக்கமாகி விட்டது. இதை நான் இப்போதெல்லாம் பெரிதுபடுத்துவதில்லை என்கிறார் மகபூப்.\nஇதேபோல பாபர் மசூதிக்காக தொடர்ந்து சட்டரீதியாக போராடிக் கொண்டிருக்கும் இன்னொரு முதியவர் ஹாசிம் அன்சாரி. இவருக்கு வயது 90. பாபர் மசூதி தொடர்பாக தொடரப்பட்ட இன்னொரு வழக்கை முதன் முதலாக தொடர்ந்தவர் இவர்.\nதற்போது மெக்காவுக்கு புனித யாத்திரை போயிருக்கிறாராம் அன்சாரி.\n( நீதிக்காக குரல்கொடுக்கும் அவருக்கு இஸ்லாமிய சகோதரன் என்ற முறையில் நாம் பிரார்த்தனை செய்யவேண்டிய கடமை நமக்கு உண்டு )\nநீதிபதி லிபரன் விசாரணை- 68 குற்றவாளிகள் விவரம்\n1992ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6ஆம் நாள் உத்திரப் பிரதேச மாநிலம் அயோத்தில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது தொடர்பாக நியமிக்கப்பட்ட நீதிபதி லிபரன் விசாரணை ஆணையத்தின் அறிக்கை செவ்வாய்க் கிழமையன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள 68 குற்றவாளிகள் விவரம் வருமாறு:\n1. அகிலேஷ் மெஹ்ரோத்ரா (பைசியாபாத் கூடுதல் எஸ்பி)\n2. அசோக் சிங்கால் (விஸ்வ இந்து பரிஷத் தலைவர்)\n3. அலோக் சின்ஹா (சுற்றுலாத்துறைச் செயலாளர்)\n4. ஆச்சார்ய தர்மேந்திர தேவ் (தரம் சன்சத், உறுப்பினர்)\n5. ஆச்சாரிய கிரிராஜ் கிஷோர் (விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர்)\n7. உமா பாரதி (விஸ்வ ஹிந்து பரிஷத்)\n9. ஏ.கே.சரண் (பாதுகாப்புப் பிரிவு, ஐ.ஜி)\n10. ஓங்கார் பாவே (விஸ்வ ஹிந்து பரிஷத்)\n11. ஓம் பிரதாப் சிங்\n12. கல்யாண் சிங் (உ.பி\n13. கல்ராஜ் மிஸ்ரா (பாஜக உ.பி\n14. குர்ஜான் சிங் (விஎச்பி, ஆர்எஸ்எஸ்)\n15. குஷபாவ் தாக்கரே (ஆர்.எஸ்.எஸ்)\n16. கெளர் (மாவட்ட ஆணையர்)\n18. சக்சேனா (உபி தலைமைச் செயலாளர்)\n19. சங்கர் சிங் வகேலா (குஜராத் மாநில பாஜக தலைவர்\n20. சதீஷ் பிரதான் (சிவசேனா)\n21. சம்பத் ராய் (அயோத்தி கட்டுமானப் பிரிவு மேலாளர்)\n22. சாத்வி ரிதாம்பரா (சந்த் சமாஜ் தலைவர்)\n23. சிதா ராம் அகர்வால்\n24. சுதர்ஷன் (ஆர்எஸ்எஸ் தலைவர்)\n25. சுரேந்தர் சிங் பண்டாரி (பாஜக)\n26. சுவாமி சச்சிதானந்த சாக்ஷி (வி்ஸ்வ ஹிந்து பரிஷத்)\n27. சுவாமி சத்மிட் ராம் ஜி (சந்த் சமாஜ்)\n28. சுவாமி சத்யானந்த் ஜி (சந்த் சமாஜ்)\n29. சுவாமி சின்மயானந்த் (வி்ஸ்வ ஹிந்து பரிஷத்)\n30. சுவாமி வாம் தேவ்ஜி (சந்த் சமாஜ்)\n31. சூர்ய பிரதாப் சாகி (உ.பி\n32. டி.பி.ராய் (பைசியாபாத் மூத்த எஸ்பி)\n33. தாவு தயால் கன்னா (பாஜக)\n34. திரிபாதி (உபி போலீஸ் டிஜிபி)\n35. தேவ்ரஹா பாபா (சந்த் சமாஜ் தலைவர்)\n36. பத்ரி பிரசாத் தோஸ்னிவால் (விஸ்வ இந்து பரிஷத் தலைவர்)\n37. பரம் தத் திவிவேதி (உ.பி\n38. பால் தாக்கரே (சிவசேனா)\n39. பாஜ்பாய் (பைசியாபாத் போலீஸ் டிஐஜி)\n40. பி.பி.சிங்கால் (விஸ்வ இந்து பரிஷத் தலைவர்)\n41. பிரபாத் குமார் (உ.பி உள்துறை முதன்மை செயலாளர்)\n42. பிரமோத் மகாஜன் (பாஜக, காலமாகிவிட்டார்)\n43. பிரவீன் தொகாடியா (விஸ்வ ஹிந்து பரிஷத்)\n44. புருஷோத்தம் நாராயண் சிங் (விஸ்வ ஹிந்து பரிஷத் செயலாளர்)\n45. பைகுந்த் லால் சர்மா (விஸ்வ இந்து பரிஷத் தலைவர்)\n46. மகந்த் அவைத்யநாத் (இந்து மகாசபா)\n47. மகந்த் நித்யகோபால் தாஸ் (ராம் ஜென்ம பூமி நியாஸ் தலைவர்)\n48. மகந்த் பரமஹம்ஸ் ராம் சந்தர் தாஸ் (விஸ்வ ஹிந்து பரிஷத்)\n49. முரளி மனோகர் ஜோஷி (பாஜக)\n50. முன்னாள் துணை பிரதமர் அத்வானி (பாஜக)\n51. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் (பாஜக)\n52. மோர்பந்த் பிங்கலே (சிவசேனா)\n53. மோரேஸ்வர் தினாநாத் சவே (சிவசேனா)\n54. யோத் நாத் பாண்டே (சிவசேனா)\n55. ராம் சங்கர் அக்னிஹோத்ரி (பாஜக, விஸ்வ ஹிந்து பரிஷத்)\n56. ராம் விலாஸ் வேதாந்தி (சந்த் சமாஜ் தலைவர்)\n57. ராஜேந்கிர சிங் என்ற பேராசிரியர் என்ற ராஜு பையா (ஆர்.எஸ்.எஸ் தலைவர்)\n58. ராஜேந்திர குப்தா (உ.பி. அமைச்சர்)\n59. லல்லு சிங் செளஹான் (பா.ஜ.க அயோத்தி எம்எல்ஏ)\n60. லால்ஜி தண்டன் (உ.\n61. வினய் கத்யார் (பஜ்ரங் தள், ஆர்எஸ்எஸ்)\n62. விஜயராஜே சிந்தியா (பாஜக)\n63. விஷ்ணு ஹரி டால்மியா (விஸ்வ ஹிந்து பரிஷத்)\n65. ஜெய் பகவான் கோயல் (சிவசேனா)\n66. ஜெய் பன் சிங் பவாரியா (பஜ்ரங் தள்)\n67. ஸ்ரீ சந்தர் தீட்சித் (பாஜக)\n68. ஸ்ரீவஸ்வதா (பைசியாபாத் மாவட்ட மாஜிஸ்திரேட்)\n\"விஞ்ஞானிகளின் மூடநம்பிக்கை\" என்ற எமது முன்னைய கட்டுரை ஒன்றில் நிறைய விஞ்ஞான உண்மைகள் என்று நாம் கருதுபவை அனைத்தும் உண்மையிலேயே ஆழமான அடித்தளத்தை கொண்டவையல்ல, பல போது அதிகார வர்க்கத்தின் அபிலாசைகளை திருப்திப் படுத்தும் ஒரு மறைமுக அரசியல் அந்த விஞ்ஞான கருத்துக்களின் பின்னணியில் இருக்கின்றன எனக் குறிப்பிட்டிருந்தோம்.\nஅதில் டார்வினிஸம் குறித்து சில குறிப்புகளை தந்து போதிய அடிப்படைகளற்ற ஒரு வாதம் அது எனச் சொன்னோம். சாள்ஸ் டார்வின் அவர்கள் முன்வைத்த பரிணாம வளர்ச்சி குறித்து மேலும் சில அம்சங்களை இங்கு நோக்குவோம்.\nசார்ள்ஸ் டார்வின் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் தான் முன்வைத்த பரிணாம வளர்ச்சி குறித்த சிந்தனையின் மூலம் உயிரியல் விஞ்ஞானத் துறையில் மட்டுமல்ல, வரலாற்று ஓட்டத்திலேயே குறிப்பிடத் தக்க மாற்றங்களை உண்டு பண்ணினார்.\nஅவரது கொள்கை உயிரினங்களின் தோற்றம் குறித்து உலகளவில் உள்ள கல்லூரிகளிலும், பல்கலைகழகங்களிலும் கற்பிக்கப் படுகின்ற ஒரே கொள்கையாகவும் காணப்படுகின்றது.\nபெரும்பான்மையாக நம்பப் படுவதாலோ, பிரதான நீரோட்ட மீடியாக்களில் முக்கியத்துவப் படுத்தப் படுவதாலோ எந்தவொரு உண்மையும் பொய்யாகவோ, எந்தவொரு பொய்யும் உண்மையாகவோ மாறுவதில்லை. இந்த மாயைகள் அனைத்தையும் தாண்டி, பகுத்தறிவு ரீதியாக ஒரு அம்சத்தை மிகச் சரியாக பகுத்தாராய்வதன் மூலம் உண்மைகளை கண்டறிவதுதான் விஞ்ஞானம் என்பதை புரிந்துகொண்டால், எங்கோ ஒரு முலையில் உறங்கிக் கிடக்கும் உண்மைகளை கண்டறியலாம். உண்மையானதொரு அறிவியல் வாதியின் வேலையும் அதுதான்.\nசார்ள்ஸ் டார்வின் தனது புரட்சிகரமான நூலான \"The Origin of Species\" என்ற நூலில் முன்வைக்கும் வாதங்களை பின்வருமாறு தொகுத்து நோக்கலாம்.\nஆரம்பத்தில் மிகச்சிக்கலான அமைப்பில் பூமியில் உயிர்கள் தோற்றம் பெற்றன. அவை தமக்கு மத்தியில் எப்போதும் வாழ்தலுக்கான போட்டியில் ஈடு பட்டிருந்ததால் சூழல் மாற்றங்களுக்கு ஏற்ப தம்மை மாற்றிக்கொள்ளவேண்டிய தேவை அவற்றுக்கு இருந்தன. அவ்வாறு மாற்றிக்கொள்ள முடியுமானவை பிழைத்தன. இயலாதவை அழிந்து போயின. இவ்வாறு கடும் போட்டியில் தனது இருப்பை பாதுகாத்துக் கொள்ள முடியுமாக இருந்த உயிர்களை, இயற்கை தேர்வின் மூலம் தெரிவுசெய்யப் பட்ட உயிர்கள் என டார்வின் வர்ணித்தார். இவ்வாறு மில்லயன் கணக்கான ஆண்டுகள் இடம் பெற்று வருவதால் உயிர்கள் இன்றுள்ள சிக்கலான அமைப்பை பெற்றன. காலப்போக்கில் வித்தியாசமான சூழல் காரணிகளுக்கு ஏற்ப வித்தியாசமான உயிர்களாகவும் அவை பரிணாமம் அடைந்தன.\nடார்வின் தனது நூலில் குறிப்பிட்ட வாதத்தின் சாராம்சம் இதுதான். டார்வின் வாழ்ந்த பத்தொன்பதாம் நூற்றாண்டில் இன்றிருக்கின்ற விஞ்ஞான தொழிநுட்ப வசதிகள் இருக்கவில்லை. மிக எளிய பரிசோதனை உபகரணங்களைத்தான் டார்வின் தனது பரிசோதனைகளுக்கு பயன்படுத்தினார். உயிர்களின் மிக சிக்கலான உடலயியல் கூறுகளை மிக இலகுவாக அவற்றால் கண்டறிய முடியவில்லை. அன்றைய காலப் பிரிவில் இன்று கண்டறியப்பட்டுள்ள விஞ்ஞான உண்மைகளில் மிகவும் ஒரு சிறிய பகுதியே கண்டறியப்பட்டிருந்தது. அதனால், டார்வின் தனது கொள்கையை மிகவும் பலகீனமான அடித்தளத்தின் மீது கட்டியெழுப்ப அது வாய்ப்பாக இருந்து விட்டது.\nஅவர் தனது H.M.S.Beagle என்ற கப்பலில் செய்த சுற்றுப்பிரயாணத்தின் மூலமும், மற்றும் சில அனுபவங்களின் மூலமும் பெற்ற சில சிந்தனைகளை மையப் படுத்தியாக மட்டுமே அதனை கருத முடிகிறது.\nடார்வினிசம் குறித்த ஆய்வில் நீண்ட காலம் ஈடு பட்டு இது தொடர்பில் பல அறிய படைப்புகளை வழங்கியவர்களில் ஹாருன் யஹ்யா என்ற துருக்கி அறிஞர் முதன்மையானவர். தனது எழுத்துகளுக்காக பல முறை சிறை வாசமும் அனுபவித்திருக்கிறார். டார்வினசம் குறித்து தனது படைப்புகள் ஊடாக எண்ணற்ற கேள்விகளை எழுப்புகிறார் ஹாருன் யஹ்யா. அவரது படைப்புகளை http://www.harunyahya.com/ என்ற இணைய தளத்தில் இருந்து இலவசமாக பதிவிறக்கிக்கொள்ளலாம்.\nஇப்பத்தியில் டார்வினிசம் குறித்து ஹாருன் யஹ்யா முன்வைக்கும் சில கேள்விகளை மட்டும் இங்கு தொகுத்து நோக்கலாம்.\nஒரே மூதாதையரில் இருந்து படிப்படியாக உயிர்கள் பரிணாமம் பெற்றது என ஏற்றுக்கொண்டாலும், உலகில் தோன்றிய மிக எளிமையான அந்த முதல் உயிர் எவ்வாறு ஒருவானது என்ற கேள்வி எழுகிறது. இது குறித்து டார்வின் ஒன்றும் குறிப்பிடவில்லை.\nடார்வின் வாழ்ந்த காலத்தில் உயிரினங்கள் மிக எளிமையான கட்டமைப்புக் கொண்டவை என நம்பப்பட்டன. பழைய உணவுப் பதார்த்தங்களில் இருந்து சிறிய உயிரினங்கள் தானாகவே உருவாக முடியும் என நம்பப்பட்டு வந்தது. அவ்வாறே பக்டீரியாக்கள் உயிரற்ற பண்டங்களில் இருந்து தானாகவே உருவாக முடியும் என பரவலாக நம்பப்பட்டது.\nஇத்தகைய ஒரு பின்னணியில் டார்வின் தனது கொள்கையை வடிவமைத் தமையால் முதல் உயிரினம் எவ்வாறு தோற்றம் பெற்றது என்ற கேள்விக்கு பதில் தர வேண்டிய தேவை அவருக்கு இருக்கவில்லை. எனினும் இன்று பரிணாம வளர்ச்சி குறித்து எழுப்பப்படும் ஒரு முக்கியமான கேள்வியாக இது இருக்கிறது.\nபரம்பரை அலகுகள் எவ்வாறு சந்ததிக்கு சந்ததி கடத்தப்படுகிறது என்பது டார்வின் வாழ்ந்த காலத்தில் சரிவரப் புரியப்பட்டிருக்கவில்லை. இரத்தம் மூலமே அவை கடத்தப் படுவதாக பரவலாக நம்பப்பட்டது. இந்த நம்பிக்கையை அடிப்படையாக வைத்தே டார்வின் தனது கொள்கையை உருவாக்கினார். இயற்கை தேர்வை பரிணாம வளர்ச்சியோடு தொடர்பு படுத்த டார்வின் முற்பட்டார்.\nவெளிச் சூழலில் இருந்து பெற்றுக்கொள்ளப் படும் இயல்புகள் பரம்பரை இயல்பாக கடத்தப்பட மாட்டாது என்பது ஒரு நிரூபிக்கப்பட்ட உண்மை. ஆனால், அவ்வாறு கடத்தப்படும் என டார்வின் நம்பியதுதான் டார்வினின் முதல் தவறாக இருந்தது.\nஎனினும், இதற்கு சிறிது காலத்திற்குப் பிறகு கிரகர் மெண்டல் என்ற பாதிரி கண்டறிந்த பரம்பரை இயல்புகள் குறித்த ஆய்வு முடிவுகள் இதனை பிழை என நிறுவின. இவ்வாய்வு பரம்பரை ஆய்வுகள் சில மாறாத விதிகளின் மூலம் கடத்தப் படுவதாக நிறுவியது. அந்த விதிகளின் படி, உயிர்களின் தன்மைகள் பொதுப்படையாக மாறாத்தன்மை கொண்டதாகத்தான் இருந்தது.\nமெண்டலின் சிந்தனைகள் டார்வினின் சிந்தனைகளை எதிர்த்தன.\nஇந்த ஆய்வுகள் டார்வினிசத்தின் அடிப்படைகளையே தகர்த்தெரிவதாக அமைந்திருந்தது. இந்த கருத்தியல் சிக்கல்களை கருத்தில் கொண்டு இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பக்கூருகளில் நியோ-டார்விநிசம் முன்வைக்கப்படுகிறது. இந்த நியோ- டார்வினிஸ்டுகள் கூர்ப்பின் அடிப்படையாக பரிணாம வளர்ச்சி இடம்பெறுவதாக வாதிட்டனர். கூர்ப்பு என்பது சூழலியல் காரணிகளால் DNA எனப்படும் பரம்பரை இயல்புகளே மாறுவதாக இவர்கள் வாதிட வேண்டி ஏற்பட்டது.\nடார்வினசம் குறித்து மிக ஆழமான சந்தேகங்களை எழுப்பும் விதத்தில் அமைந்துள்ளது சுவட்டு ஆதாரங்கள். டார்வின் தனது நூலில் சுவட்டு ஆதாரங்கள் தனது கொள்கையை மெய்ப்படுத்தும் எனக் குறிப்பிட்டிருந்தார். எனினும், இன்று வரை கண்டு பிடிக்கப்பட்டுள்ள சகல சுவட்டு ஆதாரங்களும் டார்விநிசத்தின் அடிப்படைகளையே கேள்விக்குற்படுத்தும் விதத்தில்தான் அமைந்துள்ளன. பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த உயிர்களின் சுவடுகளை ஆராய்ந்த போது அவை இன்று வாழ்கின்ற உயிர்களில் இருந்து ஒரு சிறிதும் வேறுபட்டிருக்கவில்லை என்பது தெளிவானது.\nஅதே போன்று பரிநாமத்தொடரில் இரண்டு உயிர்களுக்கு இடையில் வாழ்ந்த உயிர்களின் சுவடுகளும் கண்டறியப்படவில்லை. இதனை டார்வினும் ஏற்றுக்கொண்டிருந்தார். ஆனால், தொடர்ந்துவரும் ஆய்வுகளில் அவை கண்டறியப்படும் எனக்குறிப்பிட்டார். எனினும் இருநூராண்டுகால ஆராய்ச்சிகளின் பின்னும் இன்னும் எதுவும் கண்டறியப்படவில்லை.\nடார்வின் தனது கொள்கையை மெய்ப்படுத்த முன்வைத்த மிகப்பலமான ஆதாரம் இங்கு வலுவிழந்து போகிறது.\nவாழ்க்கை தேவைகளுக்காக கடும் போட்டியில் உயிர்கள் ஈடுபட்டிருப்பதும், இயற்கை தேர்வும் பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டில் மிக முக்கியமாக வர்ணிக்கப்பட்டது.\nஇதனை புரிந்து கொள்வதற்காக முன்வைக்கப்பட்ட எந்த ஆதாரமும் இயற்கை தேர்வு எவ்விதம் ஒரு புது உயிரினத்தின் தோற்றத்துக்கு வழிவகுக்கும் என்பதை புரிந்து கொள்ள போதுமானதாக இல்லை.\nஎனவே நியோ- டார்வினிஸ்டுகள் கூர்ப்பை இயற்கை தேர்வோடு சேர்க்க வேண்டி ஏற்பட்டது.\nதனது இருப்புக்காக உயிர்கள் எப்போதும் கடும் போட்டியில் ஈடு பட்டிருக்கிறது என்று சொல்வதை கூட முழுமையாக ஏற்றுக் கொள்வதற்கு இல்லை என்கிறார் ஹாருன் யஹ்யா. உயிர்கள் கிடைக்கக் கூடிய உணவுக்கு ஏற்ப தமது இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் தமது எண்ணிக்கையை கட்டுப் படுத்துகின்றன. இங்கு கடும் போட்டி என்பதை விட, இனப்பெருக்கத்தை கட்டுப் படுத்துவதன் மூலமே அவை பெருமளவில் எண்ணிக்கையை கட்டுப்படுத்துகின்றன.\nசில உயிர்கள் தமது மற்ற அங்கத்தவர்களுக்காக தியாகங்கள் கூட செய்வது தெரிய வந்துள்ளது.\nஉதாரணமாக, வைரஸ் தாக்கத்திற்கு உள்ளான சில பற்றீரியாக்கள் மற்ற பாக்டீரியாக்களுக்கு அவை பரவாமல் இருக்க தம்மைத்தாமே அழித்துக் கொள்கின்றன.\nஎனவே, முழுமையான வாழ்தலுக்கான போராட்டம் என்பது அர்த்தம் அற்றுப் போகிறது என்கிறார் ஹாருன் யஹ்யா.\nபரிசோதனை, அவதானம் என்பவற்றின் ஊடான முடிவுகள்\nசார்ள்ஸ் டார்வினும் அவர் வழி வந்த அறிஞர்களும் பரிசோதனை ரீதியாக டார்விநிசத்தை நிரூபிக்க தவறி விட்டனர்.\nஇதனை மிக மெதுவாகத்தான் மாற்றங்கள் இடம் பெறுகிறது எனக் கூறி தட்டிக் கழித்து விட முடியாது. ஒரு மனிதனின் வாழ்வுக்குள், சில நாட்களே வாழும் பல உயிர்களின் பல ஆயிரக்கணக்கான தலைமுறைகள் வாழ்ந்து முடிந்து விடுகின்றன. அவற்றில் எதிலும் இயற்கை தேர்வு மூலம் ஒரு புது உயிர் தோன்றுவது அவதானிக்கப் படவில்லை.\nமேலே சொன்ன காரணங்களால் டார்விநிஸம் தனது இடத்தை முழுமையாக இழக்கிறது. இந்த பலகீனங்கள் காரணமாகத்தான் நியோ- டார்விநிஸம் முன்வைக்கப் படுகிறது. இவர்களின் கருத்தில் பரிணாம வளர்ச்சியில் இயற்கை தேர்வோடு, கூர்ப்பும் சேர்ந்துதான் புதிய உயிரினங்களை தோற்று விக்க முடியும் என நம்பினர்.\nகூர்ப்பை பரம்பரை இயல்புகளில் ஏற்படும், அடுத்த பரம்பரைக்கு கடத்தப்பட முடியுமான இயல்பு மாற்றங்கள் என இவர்கள் குறிப்பிட்டனர்.\nநியோ- டார்விநிஸம் பேசுபவர்களில் பலர் டார்வினின் அடிப்படையான சிந்தனைகளில் இருந்து மிகவும் விலகியும் சென்றுள்ளனர்.\nசுருக்கமாகச் சொன்னால், நியோ- டார்விநிசத்தின் தோற்றம் டார்விநிசத்தின் பெறுமானத்தை இழைக்கச் செய்கிறது என்றால், மறு புறத்தில் நியோ- டார்விநிச வாதிகள் டார்விநிசத்தில் இருந்து விலகிச் செல்வது அதனை மேலும் பெறுமானம் இழக்கச் செய்கிறது.\nகூர்புக்கொள்கை குறித்தும், அதன் ஆழ, அகலங்கள் குறித்தும் மற்றொரு சந்தர்ப்பத்தில் அலசுவோம்.\nதற்போதைக்கு சார்ள்ஸ் டார்வின் முன்வைத்த சிந்தனைகளை விஞ்ஞானம் நிராகரித்து விட்டது என்பதை புரிந்து கொண்டால் போதுமானது. நாம் முன்பு சொன்னது போல் மிகவும் சிரமத்தோடு அதிகார வர்க்கத்தின் உட்ச பட்ச பிரயத்தனத்தோடுதான் டார்விநிஸம் இன்னும் உயிர் வாழ்கிறது. பிரசார ஊடகங்களின் மாய வலையில் சிக்காமல் இருந்தால் எம்மை யாரும் ஏமாற்ற முடியாது. இல்லாவிட்டால், ஹோளிவூடில் மட்டும் சாத்தியமான அம்சங்களை விஞ்ஞானம் என்ற பெயரில் எம்மை நம்பச் செய்து விடுவார்கள்.\nவிமர்ஷனங்களை -தடைகளை தகதெரிந்த ருகையா சகோதரி\nruqaya-alghasra-விமர்ஷனங்களை -தடைகளை தகர்த்தெறிந்த ருகையா சகோதரி\nபாத்திமாவும், ஆயிஷாவும்,( ரலி )\nஅறிவுக்கு திரை போட எப்போது சொன்னார்கள்\nஉடம்பை மட்டும் தான் நீ மறைக்க வேண்டும்\nஉன் கால்களுக்கு விலங்கிட்ட அந்தக் கயவன் யார்\nஉன் அறிவுக்கு இட்ட திரையை..\nமுகம்மத் நபி காட்டி தந்த ஒரு\nநாளை ஒரு புது உலகம்\nஉன் வெற்றி தொடர வாழ்த்துக்கள் சகோதரி ......\nபாபர் மசூதி இடிப்பில் வாஜ்பாய்-அத்வானி -ஜோஷிக்கு தொடர்பு: லிபரான் கமிஷன்\nடெல்லி: பாபர் மசூதி இடிப்பில் வாஜ்பாய், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோருக்கு நேரடித் தொடர்பு இருப்பதாக அது குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி லிபரான் கமிஷன் கூறியுள்ளது.\nநாடாளுமன்றம் கூடியுள்ள நிலையில், பிரதமர் மன்மோகன் சிங் அமெரிக்கப் பயணத்தில் இருக்கும் நிலையில் இந்தக் கமிஷனின் அறிக்கையின் சில பகுதிகள் 'லீக்' ஆகியுள்ளன.\n1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி பாபர் மசூதி இடிப்பு திடீரென உணர்ச்சி வேகத்தில் நடந்துவிடவில்லை. அது மிகவும் திட்டமிட்ட சதி.\nஇந்தச் சதியில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய், பாஜக மூத்த தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோருக்கு நிச்சயமான தொடர்பு உண்டு.\nஇவர்களுக்குத் தெரியாமல் இந்த சம்பவம் நடந்ததாகவோ அல்லது இவர்கள் குற்றமற்றவர்கள் என்றோ கூற முடியாது என்று கூறப்பட்டுள்ளது.\nஇந்த அறிக்கையை கடந்த ஜூன் மாதம் 30ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங்கிடம் ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி லிபரான் சமர்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nநாடாளுமன்றத்தின் நடப்புக் கூட்டத் தொடரிலேயே இந்த அறிக்கையை மத்திய அரசு தாக்கல் செய்யும் என்று கூறப்பட்ட நிலையில், எந்த நாளில் தாக்கலாகும் என்பது குறித்து அரசு திட்டவட்டமாக எந்த அறிவிப்பையும் வெளியிடாமல் இருந்து வந்தது.\nஇந் நிலையில் இந்தப் பகுதிகள் 'லீக்' செய்யப்பட்டுள்ளன. இதை மத்திய அரசே கசிய விட்டதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.\nலிபரான் கமிஷன் அறிக்கையின் குறிப்பிட்ட தகவல்கள் வெளியானது தொடர்பாக இன்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பாஜக அமளியில் ஈடுபட்டது.\nஅறிக்கையின் ஒரு சில பகுதிகள் மட்டும் வெளியானதற்கு காரணம் என்ன, தகவல்கள் எப்படி கசிந்தது என்று மக்களவையில் எதிர்கட்சித் தலைவர் அத்வானி கேள்வி எழுப்பினார். இதற்கு மத்திய அரசு உரிய விளக்கமளிக்க வேண்டும் என்றார்.\nஉள்துறை லீக் செய்யவில்லை-சிதம்பரம் :\nஇதற்கு பதிலளித்த மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், லிபரான் கமிஷன் அறிக்கையும், பாபர் மசூதி இடிக்கப்பட்டது தொடர்பாக மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கையும் மக்களவைத் கூட்டத்தொடர் முடியும்போது டிசம்பர் 21ம் தேதி தாக்கல் செய்யப்படும்.\nலிபரான் கமிஷன் அறிக்கையின் ஒரே ஒரு நகல்தான் எங்களிடம் உள்ளது. அதை பத்திரமாக வைத்துள்ளோம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக பத்திரிகையில் செய்தி வெளிவந்துள்ளது. இந்த அறிக்கையில் உள்ள விவரம் பற்றி உள்துறையில் இருந்து யாரும் பத்திரிகைகளிடம் சொல்லவில்லை என்றார்.\nஅமைச்சரின் விளக்கத்தை ஏற்க மறுத்து பாஜக எம்பிக்கள் கூச்சலிட்டதால் அவையில் குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து அவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.\nஅதே போல ராஜ்சபாவிலும் பாஜக எம்பிக்கள் கூச்சலிட்டு குழப்பம் ஏற்படுத்தியதால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.\nஇந் நிலையில் நீதிபதி லிபரான், அறிக்கையின் எந்த ஒரு அம்சத்தையும் தான் வெளியிடவில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் ஊடகங்கள் செய்திகளை வெளியிடுவதில் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.\nபாஜக தலைவர் ராஜ்நாத் சிங் கூறுகையில், லிபரான் கமிஷன் அறிக்கையில் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் வேண்டும் என்றே வெளியே கசிய விட்டுள்ளனர்.\nஜார்கண்ட் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடப்பதால் அதில் ஆதாயம் தேடும் நோக்கத்துடன் காங்கிரஸ் இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளது.\nவிசாரணை அறிக்கைகளை நாடாளுமன்றம் கூடும் முதல் நாளிலேயே தாக்கல் செய்வது வழக்கம். இப்போது மட்டும் அறிக்கையை தாமதமாக தாக்கல் செய்ய முடிவெடுத்ததில் ஏதோ மர்மம் உள்ளது.\nஅறிக்கை எப்படி வெளியானது என்பது பற்றி மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும். யாரும் குறை சொல்ல முடியாத வாஜ்பாய் பெயருக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே இதைச் செய்துள்ளனர் என்றார்\nஇந் நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ராஷ்டிரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ், நாளையே நாடாளுமன்றத்தில் லிபரான் கமிஷன் முழு அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றார்.\nசமாஜ்வாடிக் கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் கூறுகையில், இந்த அறிக்கையை உடனே தாக்கல் செய்ய வேண்டும் இல்லாவிட்டால் அவையை நடத்த விட மாட்டோம் என்றார்.\nஇந் நிலையில் லிபரான் கமிஷனி்ல் இடம் பெற்றிருந்த மூத்த அதிகாரியான் அனுபம் குப்தா கூறுகையில், கமிஷனின் அறிக்கையில் வாஜ்பாயின் பெயர் இருப்பதாக எப்படி தவறான தகவல் வெளியானது என்று தெரியவில்லை.\nபாபர் மசூதி இடிப்பு விவகாரத்தில் தொடர்பே இல்லாத ஒரே மூத்த பாஜக தலைவர் வாஜ்பாய் தான். அயோத்தி இயக்கத்திலும் அவர் தீவிரமாக இருந்ததில்லை. கமிஷன் கூட வாஜ்பாயை விசாரித்ததில்லை. இந் நிலையில் அவரது பெயர் எப்படி அறிக்கையில் உள்ளதாக தவறான தகவல் வெளியானதோ தெரியவில்லை என்றார்.\nஇந்த அறிக்கை விவகாரம் குறித்தும், அதை எப்போது தாக்கல் செய்வது என்பது குறித்தும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தனது இல்லத்தில் மூத்த காங்கிரஸ் தலைவர்களுடன் இன்று தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். இதனால் டிசம்பர் 21ம் தேதிக்கு முன்பே, பிரதமர் நாடு திரும்பியபின் இந்த அறிக்கை தாக்கலாகலாம் என்று தெரிகிறது.\nகுர்ஆன் முழுமையடைந்து விட்டது இந்நிலையில் நாம் ஏன் ஹதீஸ்களை எடுத்துக் கொள்ள வேண்டும். ஹதீஸ்களை எழுதி வைக்குமாறு முஹம்மத்(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்களா.. ஹதீஸ் என்றப் பெயரில் நிறைய தவறான கருத்துக்கள் இருக்கின்றனவே\nமுஹம்மத் அவர்களைப் பின்பற்ற வேண்டுமென்றால் ஹதீஸ்களைப் பின்பற்ற வேண்டும் என்பது உலக முஸ்லிம் அறிஞர்களின் முடிவு. எத்தகைய ஹதீஸ்களைப் பின்பற்ற வேண்டும் என்பதில் உள்ளுக்குள் சில கருத்து வேறுபாடுகள் தென்பட்டாலும் ஹதீஸ்களைப் பின்பற்ற வேண்டும் என்பதில் கடந்தக் காலங்களில் மாற்றுக் கருத்துக் கொள்ளவில்லை.\nமுஹம்மத்(ஸல்) அவர்களின் மரணத்திற்கும் முஸ்லிம் சமுதாயத்தில் காலாகாலமாக பிரபல்யமாக இருந்து வரும் ஹதீஸ் தொகுப்புகளுக்கும் இருந்த கால இடைவெளிகளையெல்லாம் உலக அறிஞர்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டுள்ளார்கள். இதில் மிகப் பெரும்பான்மையான அறிஞர்கள் கால இடைவெளிகளை நிரம்பும் மனிதத் தொடர்கள் அறிவுப்பூர்வமானவைதான் என்று முடிவுக்கு வந்துவிட்டார்கள். சில அறிஞர்கள் கால இடைவெளியில் கோளாறு ஏற்பட்டிருக்கலாம் என்று ஹதீஸ்களைப் புறக்கணிக்கும் மனநிலையைப் பெற்றுவிட்டார்கள்.\nஹதீஸ்களைப் புறக்கணிக்க வேண்டும் என்பதில் 'அஹ்லுல் குர்ஆன்' என்பவர்கள் 'குர்ஆன் மட்டும் போதும்' என்றக் கொள்கையை மக்களிடம் முன் வைக்கிறார்கள். இவர்கள் எடுத்து வைக்கும் வாதங்களில் படித்த - சிந்தனை தெளிவுமிக்க சிலர் கூட தடுமாறும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே முஹம்மத்(ஸல்) அவர்களைப் பின்பற்ற வேண்டுமானால் எப்படி எதைப் பார்த்துப் பின்பற்றுவது என்றத் தெளிவை நாம் பெற்றாக வேண்டும்.\nகுர்ஆனில் ஏராளமான வசனங்கள் முஹம்மத்(ஸல்) அவர்களைப் பின்பற்ற வேண்டும் என்றக் கட்டளையை முன் வைக்கிறது. அவற்றையெல்லாம் கவனமாக ஆராய்ந்தால் குர்ஆனோடு சேர்த்து 'இது நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கைப் பாடம் தான்' என்று நிரூபணமான ஹதீஸ்களையும் பின்பற்ற வேண்டும் என்பதை ஐயமின்றி விளங்கலாம்;.\nமுதலில் குர்ஆனில் இடம்பெற்றுள்ள அத்தகைய வசனங்களைப் பார்ப்போம்.\n1)மக்களுக்காக அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காகவும் (அதை) அவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவும் நாம் நாம் இதை இறக்கி வைத்துள்ளோம். (அல் குர்ஆன் 16:44)\n) அவர்கள் முரண்பட்டு நிற்பதை அவர்களுக்கு நீர் விளக்குவதற்காகவே இந்தக் குர்ஆனை நாம் அருளினோம். (அல் குர்ஆன் 16:64)\nஇந்த இரண்டு வசனங்களில் 'நீர் அவர்களுக்கு விளக்க வேண்டும்' என்று இறைவன் கூறுவதின் விளக்கம் என்ன என்பதை ஆராய முற்படும் எவரும் குர்ஆனுக்கு தேவையான இடங்களில் மேலதிகப் படியான விளக்கம் நபி(ஸல்) அவர்களால் கொடுக்கப்பட்டுள்ளதை விளங்கிக் கொள்வர்.\nகுர்ஆனில் பார்த்தவுடன் - படித்தவுடன் சட்டென்று புரிந்துக் கொள்ளக் கூடிய வசனங்களும் சற்று சிந்தித்தவுடன் புரிந்துக் கொள்ளக் கூடிய வசனங்களும், 'இதற்கு ஏதாவது விளக்கம் இருக்க வேண்டும்' என்று கூடுதலாக ஆய்வு செய்யத் தூண்டும் வசனங்களும் இருக்கத்தான் செய்கின்றன. குர்ஆன் இறங்கிக் கொண்டிருந்த காலகட்டத்தில் ஒவ்வொரு வசனத்திற்கும் சஹாபாக்கள் விளக்கம் கேட்டுக் கொண்டிருக்கவுமில்லை. நபி(ஸல்) விளக்கம் சொல்லிக் கொண்டிருக்கவுமில்லை. ஏனெனில் பெருவாரியான வசனங்கள் பார்த்தவுடன், கேட்டவுடன் விளங்கி விடும் விதத்திலேயே இறங்கிக் கொண்டிருந்தன. சில வசனங்கள் சிலருக்கு புரியாத தருணங்களில் அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் வந்து விளக்கம் கேட்டு தெரிந்துள்ளனர். இன்னும் சில வசனங்களுக்கு நபி(ஸல்) அவர்கள் வலியவே விளக்கமளித்துள்ளனர். இதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. அவைகளையெல்லாம் இங்கு விளக்கத் தேவையில்லை. இங்குள்ள முக்கிய விஷயம் என்னவென்றால் 'நீர் அவர்களுக்கு விளக்குவதற்காக..' என்று இறைவன் குர்ஆன் விளக்கவுரையாளராக நபி(ஸல்) அவர்களை குறிப்பிடுவதிலிருந்து 'குர்ஆனுக்கு நபி(ஸல்) மேலதிக விளக்கம் கொடுத்துள்ளார்கள் அதை இறைவன் அங்கீகரித்துள்ளான்' என்பதை விளங்கிக் கொள்ளவேண்டும்.\nஇறைச் செய்தி வெளிப்படும் விதங்கள்.\n3)இறைவன் எந்த ஒரு மனிதரிடத்திலும் பேசுவதாக இருந்தால்,\nஒரு தூதர் வழியாக அவன் நாடியதை அறிவிப்பதன் மூலமாகவோ தவிர வேறு விதத்தில் பேசுவதில்லை. அவன் உயர்ந்தவன் ஞானமிக்கவன். (அல் குர்ஆன் 42:51)\nஇந்த வசனத்தில் 'தூதர் வழியாக நாடியதை அறிவிப்பதன் மூலமாக..' என்பது எதைக் குறிக்கிறது பெரிய ஆராய்ச்சியே தேவையில்லை. ஜிப்ரயீல் வழியாக வந்த குர்ஆன் என்பதை விளங்கிக் கொள்ளலாம். (வானவர்கள் நேரடியாக நபிமார்களை சந்தித்து உரையாடியுள்ள விதமும் இதில் அடங்கும் இப்ராஹீம்(அலை) லூத்(அலை) ஆகியோரை வானவர்கள் சந்தித்து உரையாடியுள்ளார்கள்).\nநபிமார்களுக்கு வானவ தூதர்கள் மூலம் சொல்லப்பட்டு - வெளிப்பட்டு தொகுக்கப்பட்டது வேதங்கள் என்றால் 'வஹியின் மூலமாகவோ..' என்று இறைவன் குறிப்பிடும் அந்த வஹி என்ன\nஜிப்ரயீல் வழியாக குர்ஆன் வந்து விட்டது. இது இறைவன் பேசக்கூடிய ஒரு விதம். வஹியின் மூலம் பேசுவேன் என்று இறைவன் கூறுகின்றானே அந்த வஹி எது இது நிச்சயம் நபிமார்களுக்கு மனஉதிப்பை ஏற்படுத்தும் வஹியாகவே இருக்க முடியும். குர்ஆன் மட்டுமில்லாமல் மன உதிப்பின் மூலமாகவும் இறைச் செய்தி வெளிப்படும் என்பதற்கு இந்த வசனம் ஆதாரமாக உள்ளது. அப்படியானால் மன உதிப்பின் மூலமாக வந்த அந்த செய்திகள் எங்கே இது நிச்சயம் நபிமார்களுக்கு மனஉதிப்பை ஏற்படுத்தும் வஹியாகவே இருக்க முடியும். குர்ஆன் மட்டுமில்லாமல் மன உதிப்பின் மூலமாகவும் இறைச் செய்தி வெளிப்படும் என்பதற்கு இந்த வசனம் ஆதாரமாக உள்ளது. அப்படியானால் மன உதிப்பின் மூலமாக வந்த அந்த செய்திகள் எங்கே குர்ஆனோடு நிருத்திக் கொள்ளலாம் என்று கூறுவோர் குர்ஆனில் இடம் பெறும் இந்த வசனத்திற்கு என்ன விளக்கமளிப்பார்கள் குர்ஆனோடு நிருத்திக் கொள்ளலாம் என்று கூறுவோர் குர்ஆனில் இடம் பெறும் இந்த வசனத்திற்கு என்ன விளக்கமளிப்பார்கள். மன உதிப்பின் வழியாக வந்த வஹியின் தொகுப்புகளே ஹதீஸ்களாகும். (தொகுப்பட்டுள்ள அனைத்து ஹதீஸ்களும் வஹிதானா.. என்று அவசரமாக யாரும் கேள்வி கேட்டுவிட வேண்டாம். எத்தகைய ஹதீஸ்கள் வஹியின் வெளிபாடு என்பதை பின்னர் விளக்குவோம் இன்ஷா அல்லாஹ்)\nதிரைக்கு அப்பாலிருந்து பேசுவேன் என்கிறான் இறைவன். மூஸா(அலை) அவர்களோடு நடந்த உரையாடல் குர்ஆனில் இடம் பெற்றுள்ளது. முஹம்மத்(ஸல்) அவர்களோடும் உரையாடல் நடந்துள்ளது இதை பலமான ஹதீஸ்கள் வழியாக அறியமுடிகிறது.\n4)எந்த ஒரு தூதரையும் அந்த சமுதாயம் பேசும் மொழியிலேயே அனுப்பினோம் அந்த சமுதாயத்திற்கு அவர் விளக்கிக் கூறுவதற்காக. (அல் குர்ஆன் 14:4)\nவெறும் வேத வெளிப்பாடு மட்டுமே போதும் என்ற நிலை இருந்தால் விளக்கிக் கூறும் தகுதி தேவையில்லாமல் போயிருக்கும். விளக்கிக் கூறும் தகுதியை இறைவன் பிரத்யேகப் படுத்துவதிலிருந்தே வேதங்களுக்கு நபிமார்கள் மேலதிக விளக்கம் கொடுக்கும் பொறுப்பில் இருந்துள்ளார்கள் என்பதை விளக்குகிறது.\nவேதம் என்று ஒன்று வந்து விட்டால் போதும் அதை தேவையான இடங்களில் மேலதிகமாக விளக்க வேண்டும் என்கிற அவசியமில்லை என்றால் எந்த சமுதாயத்திற்கு வேதம் வருகிறதோ அந்த சமுதாயத்தின் மொழியில் வேதம் மட்டும் இருந்தால் போதும். வேதத்தை வெளிபடுத்தும் தூதரருக்கு குறைந்தபட்சம் அந்த மொழி பேச தெரிந்தால் போதும். வேதத்திற்கு மேலதிக விளக்கம் தேவையில்லை என்றால் தூதருக்கு 'விளக்கும் திறன்' அவசியப்பட்டிருக்காது. ஆனால் இந்த வசனத்தில் 'அவர் தம் சமுதாயத்திற்கு விளக்குவதற்காக அவர்களின் மொழியில் அனுப்பினோம்' என்கிறான் இறைவன். வேதத்திற்கு மேலதிக விளக்கம் நபிமார்களால் கொடுக்கப்பட வேண்டிய அவசியம் இருந்தது என்பதை இந்த வசனம் தெளிவாக நமக்கு உணர்த்துகிறது.\n என் உள்ளத்தை எனக்கு விரிவாக்கு. எனது பணியை எனக்கு எளிதாக்கு. என் நாவில் உள்ள முடுச்சுகளை அவிழ்த்து விடு (அப்போதுதான்) என் சொல்லை அவர்கள் விளங்கிக் கொள்வார்கள். (அல் குர்ஆன் 20:25-28)\nஃபிர்அவ்னிடம் அழைப்புப் பணி செய்ய வேண்டிய மூஸா (அலை) அவர்களுக்கு இறைவன் ஏற்கனவே எழுதப்பட்ட தவ்ராத் என்ற ஏட்டை(வேதத்தை) வழங்கி இருந்தான். தவ்ராத்தைப் பெற்ற நிலையில்தான் அவர்கள் ஃபிர்அவ்னை சந்திக்க செல்கிறார்கள். இந் நிலையில் வேதத்தை மட்டும் சமர்பித்துவிட்டு வருவது அவர்களின் பணி என்றால் திக்குவாயைப் பற்றி அவர்கள் கவலைப்பட வேண்டும் என்கிற அவசியமில்லை. ஆனால் அவர்கள் கவலைப்படுகிறார்கள். தன் நாவில் உள்ள முடுச்சால் தன்னால் இறைச் செய்திகளை ஒழுங்காக விளக்க முடியாமல் போய்விடுமோ என்று அஞ்சுகிறார்கள். அதனால்தான் இறைவனிடம் முறையிடுகிறார்கள். 'அவர்கள் என் சொல்லை விளங்கிக் கொள்வதற்காக என் நாவின் முடுச்சை அவிழ்த்து விடு' என்ற மூஸா(அலை) அவர்களின் பிரார்த்தனையும் அதை ஏற்றுக் கொண்டேன் (20:36) என்ற இறைவனின் உத்திரவாதமும் மூஸா(அலை) வேதத்தை மேலதிகமாக விளக்கும் கடமையில் இருந்துள்ளார்கள் என்பதை எடுத்துக் காட்டவில்லையா..\n6)(முஹம்மத்) உங்களுக்கு நம் வசனங்களை ஓதி காண்பிப்பார். உங்களைத் தூய்மைப் படுத்துவார். உங்களுக்கு வேதத்தையும் (அதன்) ஞானத்தையும் கற்றுத் தருவார். நீங்கள் அறியாதவற்றையெல்லாம் அவர் உங்களுக்குக் கற்றுக் கொடுப்பார். (அல் குர்ஆன் 2:151)\nஇந்த வசனத்தையும் நாம் ஆழமாக சிந்திக்க வேண்டும். இதில் நபி(ஸல்) அவர்களின் பணி பல கோணங்களில் விளக்கப்பட்டுள்ளது.\nஉங்களுக்கு நம் வசனங்களை ஓதி காண்பிப்பார்.\nவேதத்தையும் ஞானத்தையும் கற்றுக் கொடுப்பார்.\nஉங்களுக்கு நம் வசனங்களை ஓதிக் காண்பிப்பார் என்பதோடு இறைவன் நிருத்தி இருக்கலாம் அதாவது நபிமார்களுக்கு மேலதிக பணி இல்லையென்றால். உங்களைத் தூய்மைப் படுத்துவார் என்கிறான். இது ஆன்மீகத் தூய்மையைக் குறிப்பதாகும். பின்னர் வேதத்தையும் ஞானத்தையும் கற்றுக் கொடுப்பார் என்கிறான் இறைவன்.\nவேதத்தை ஓதிகாண்பித்து விட்டு ஒதுங்கிக் கொள்வது மட்டும் அவர்களின் பணியாக இல்லாமல் வேதத்தைக் கற்றுக் கொடுப்பதும் அதன் ஞானத்தை விளக்குவதும் கூட அவர்களின் பணியாக இருந்துள்ளது.\nஇங்கு கற்பித்தல் என்பது இரண்டு அர்த்தங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.\nவேதத்தையும் ஞானத்தையும் கற்பிப்பார் என்று இறைவன் சொல்வதிலிருந்தே அவைகள் பதிவு செய்யப்பட வேண்டும் - அடுத்தடுத்தத் தலைமுறைக்காக அவை எடுத்துச் செல்லப்பட வேண்டும் என்பது விளங்குகிறது.\nகுர்ஆன் மட்டுமே போதும் என்றால் இறைத்தூதர் கற்பித்த அந்த ஞானம் எங்கே என்பதற்கு பதிலில்லாமல் போய் விடும்.\nஎனவே இன்றைக்கும் அந்தத் தலைவர் பின்பற்றத்தக்கவராகத் தான் இருக்கிறார் என்பதை குர்ஆன் மெய்ப்பித்துக் கொண்டுதான் இருக்கிறது.\nஅவரைப் பின்பற்றத்தான் வேண்டும் என்பதற்கு இன்னும் ஏராளமான சான்றுகள் உள்ளன குர்ஆனில்.\n'(மக்களே) நீங்கள் இறைவனை நேசிப்பவர்களாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள் என்று நபியே நீர் கூறும். நீங்கள் என்னைப் பின்பற்றினால் (அதன் காரணமாக) இறைவன் உங்களை நேசிப்பான் உங்களுக்காக உங்கள் பாவங்களை மன்னிப்பான் அவன் மிக்க மன்னிப்பவன்' அலு இம்ரான் 3:31.\nஹதீஸ்களில் - முரண்பாடுகளும் கலப்படங்களும் உள்ளதால் 'குர்ஆன் மட்டுமே' போதும் என்ற வாதத்தை சிலர் முன் வைக்கிறார்கள் அது குர்ஆன் வசனங்களுக்கே முரண்படுகிறது என்பதை மேலே சுட்டியுள்ளோம்.\nகுர்ஆன் வசனங்களில் பலவற்றிற்கு கூடுதலான விளக்கம் தேவை என்ற தோரணையில் அமைந்துள்ள வசனங்கள் குர்ஆனில் நிறையவே உண்டு. அது போன்ற இடங்களில் இறைத்தூதர் என்ற முறையில் நபி(ஸல்) அவர்கள் விளக்கியுள்ள கூடுதல் விளக்கம் ஹதீஸ்களில் வருகிறது. ஹதீஸ்களைத் தவிர்த்து குர்ஆனின் மற்றப்பகுதிகளில் அந்த வசனங்களுக்கான விளக்கத்தைத் தேடினால் கிடைக்காது என்பதுதான் உண்மை.\nஅத்தகைய வசனங்களை நாம் இந்தத் தொடரில் பார்ப்போம்.\n) நீர் எங்கிருந்து புறப்பட்டாலும் உம் முகத்தைப் புனிதப் பள்ளிவாயிலின் பக்கமே திருப்பிக்கொள்வீராக. நிச்சயமாக இதுதான் உம் இறைவனிடமிருந்து வந்த உண்மை- அல்லாஹ் நீங்கள் செய்பவை பற்றிப் பராமுகமாக இல்லை. (அல் குர்ஆன், 2:149.)\n) நீர் எங்கிருந்து புறப்பட்டாலும் உம் முகத்தைப் புனிதப் பள்ளவாயிலின் பக்கமே திருப்பிக் கொள்ளும்; (முஃமின்களே) உங்களில் அநியாயக்காரர்களைத் தவிர மற்ற மனிதர்கள் உங்களுடன் வீண் தர்க்கம் செய்ய இடங்கொடாமல் இருக்கும் பொருட்டு, நீங்களும் எங்கே இருந்தாலும் புனிதப் பள்ளியின் பக்கமே உங்கள் முகங்களைத் திருப்பிக் கொள்ளுங்கள். (அல் குர்ஆன் 2:150)\nஇந்த வசனங்களின் நேரடிப் பொருள் என்ன முஹம்மத்(ஸல்) அவர்கள் உட்பட இறை நம்பிக்கையாளர்கள் யாவரும் தங்கள் முகங்களை எந்நேரமும் புனித பள்ளிவாசலான கஃபத்துல்லாஹ்வின் பக்கமே வைத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் இதன் நேரடிப் பொருள்.\nதொழுகையின் போது முகத்தைக் கஃபாவின் பக்கம் திருப்புங்கள் என்று குர்ஆனில் எந்த இடத்திலும் கூறப்படவில்லை. பொதுவாக முகத்தை அதன் பக்கம் திருப்புங்கள் என்றே குர்ஆனில் வருகிறது. ஹதீஸ்களைக் கொண்டு இதன் பொருளை விளங்காவிட்டால் - குர்ஆனுடைய எந்த வசனத்தையும் நான் நேரடியாகத்தான் புரிந்துக் கொள்வேன் என்று யாராவது கூறினால் அவர்கள் இந்த வசனத்தை நடைமுறைப் படுத்தும் போக்கு எப்படி இருக்கும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். தொழுகையின் போது முகத்தை கஃபாவின் பக்கம் திருப்புவதற்கும் - எந்த நேரமும் கஃபாவின் பக்கமே முகத்தை வைத்துக் கொள்வதற்கும் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு வித்தியாசங்கள் உள்ளன. ஹதீஸ்களைக் கொண்டு இதை விளங்காமல் நடை முறைக்கு சாத்தியமில்லாத ஒன்றை இறைவன் குர்ஆனில் குறிப்பிட்டு விட்டான் என்று முடிவுக்கு வர முடியுமா.. இந்த வசனம் குர்ஆனுக்கு தேவையான இடங்களில் மேலதிக விளக்கம் வேண்டும் என்பதை அறிவிக்கவில்லையா..\nநோன்புக் கால இரவில் நீங்கள் உங்கள் மனைவியருடன் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது. அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள். நீங்கள் இரகசியமாகத் தம்மைத் தாமே வஞ்சித்துக் கொண்டிருந்ததை அல்லாஹ் நன்கறிவான்;. அவன் உங்கள் மீது இரக்கங்கொண்டு உங்களை மன்னித்தான். எனவே, இனி(நோன்பு இரவுகளில்) உங்கள் மனைவியருடன் கூடி அல்லாஹ் உங்களுக்கு விதித்ததை தேடிக்கொள்ளுங்கள். (அல் குர்ஆன் 2:287)\nஇந்த வசனத்தை ஊன்றிக் கவனியுங்கள். 'நீங்கள் இரகசியமாக உங்களை நீங்களே வஞ்சித்துக் கொண்டிருந்ததை இறைவன் அறிவான். எனவே அவன் உங்கள் மீது இரக்கம் கொண்டு உங்களை மன்னித்தான்'. என்கிறான் இறைவன். நபித்தோழர்கள் தங்களைத் தாங்களே வஞ்சித்துக் கொண்டிருந்தார்கள் என்றால் இறைவன் விதித்த ஏதோ ஒரு சட்டத்தை அவர்களால் செயல்படுத்த முடியாமல் போய் அந்த சட்டத்திற்கு எதிராக செயல்பட்டுள்ளார்கள் என்பது விளங்குகிறது.\nஇன்னும் தெளிவாகச் சொல்லப்போனால் ஆரம்பத்தில் நோன்புக் கால இரவில் மனைவியுடன் கூடக் கூடாது என்ற சட்டம் இருந்து நபித்தோழர்கள் அதை மீறி பாவம் செய்திருந்தால் தான் இவ்வாறு கூறமுடியும். இந்த வசனம் இந்தக் கருத்தைத்தான் உள்ளடக்கி நிற்கிறது. அப்படியானால் 'நோன்புக் கால இரவில் மனைவியுடன் சேரக் கூடாது' என்ற சட்டம் குர்ஆனில் இடம் பெற்றிருக்க வேண்டும். ஆனால் அப்படி எந்த ஒரு வசனமும் குர்ஆனில் இல்லை. ஹதீஸ்களில் தான் 'நபித்தோழர்கள் தங்கள் நல்லமல் அழிந்து விடுமோ.. என்ற அச்சப்பட்ட நிலையிலேயே தங்கள் மனைவியுடன் சேருவார்கள்' என்ற விபரம் கிடைக்கின்றது. ஹதீஸ்களை விடுத்து இந்த வசனத்தை விளங்க வேண்டுமென்றால் இந்த வசனத்தின் பொருள் என்ன என்பதை புரிந்துக் கொள்வதில் தடுமாற்றம் ஏற்படவே செய்யும்.\nஹஜ்ஜுக்குரிய காலம் குறிப்பிடப்பட்ட மாதங்களாகும்; எனவே, அவற்றில் எவரேனும் ஹஜ்ஜை தம் மீது கடமையாக்கிக் கொண்டால், ஹஜ்ஜின் காலத்தில் சம்போகம், கெட்ட வார்த்தைகள் பேசுதல், சச்சரவு - ஆகியவை செய்தல் கூடாது. நீங்கள் செய்யும் ஒவ்வொரு நன்மையையும் அல்லாஹ் அறிந்தவனாகவே இருக்கிறான்;. (அல் குர்ஆன் 2:197)\nஇந்த வசனத்தில் 'ஹஜ்ஜூக்குரிய மாதங்கள்' என்று பன்மையில் கூறப்பட்டுள்ளது. பிரிதொரு இடத்தில் 'புனித மாதங்கள்' என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால் அந்த மாதங்கள் யாவை என்ற விபரம் குர்ஆனில் எந்த இடத்திலும் கூறப்படவில்லை. ஹதீஸ்களை புரட்டும் போது தான் ஹஜ்ஜூக்குரிய மாதங்கள் யாவை. 'புனித மாதங்கள்' என்று கூறப்படுபவை எது. 'புனித மாதங்கள்' என்று கூறப்படுபவை எது அவற்றிற்கும் ஹஜ்ஜூக்கும் தொடர்பு உண்டா.. அவற்றிற்கும் ஹஜ்ஜூக்கும் தொடர்பு உண்டா.. போன்ற விபரங்கள் கிடைக்கும். 'விசுவாசிகளே. நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால் என்னைப் பின்பற்றுங்கள் என்று (நபியே) நீர் கூறும்' என்ற வசனம் இன்றைக்கும் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் பொருந்தும் என்பதற்கு இதுவும் சான்றாகும்.\nகுறிப்பிடப்பட்ட நாட்களில் அல்லாஹ்வை திக்ரு செய்யுங்கள்; எவரும் இரண்டு நாட்களில் விரைந்துவிட்டால் அவர் மீது குற்றமில்லை. யார் (ஒரு நாள் அதிகமாக) தங்குகிறாறோ அவர் மீதும் குற்றமில்லை. (அல் குர்ஆன் 2:203)\nகுறிப்பிட்ட நாட்களில் இறைவனை திக்ரு செய்யுங்கள் - இரண்டு நாட்களில் கிளம்பி விட்டாலும் குற்றமில்லை. மூன்று நாட்கள் முழுமையாக தங்கினாலும் குற்றமில்லை என்கிறது இந்த வசனம். குறிப்பிட்ட நாட்கள் என்பது என்ன இரண்டு மூன்று நாட்கள் என்பது எதிலிருந்து துவங்குகிறது போன்ற விபரங்கள் குர்ஆனில் இல்லை. இதைப் புரிந்துக் கொள்ள வேண்டுமானால் முஹம்மத்(ஸல்) அவர்கள் இந்த நாட்களை எப்படி கணக்கிட்டு செயல்பட்டுள்ளார்கள் என்பதை பார்த்தால் தான் முடியும்.\nதலாக் கூறப்பட்ட பெண்கள், தங்களுக்கு மூன்று மாதவிடாய்கள் ஆகும்வரை பொறுத்து இருக்க வேண்டும்; அல்லாஹ்வையும், இறுதி நாளையும் அவர்கள் நம்புவார்களாயின், தம் கர்ப்பக் கோளறைகளில், அல்லாஹ் படைத்திருப்பதை மறைத்தல் கூடாது. (அல் குர்ஆன் 2:228)\nஇந்த வசனத்தில் மூன்று மாதவிடாய்கள் என்று வருகிறது. அரபு மூலத்தில் இதை குறிக்க 'ஸலாஸத குரூஃ' என்ற பதம் வருகிறது. மூன்று மாதவிடாய்கள் என்றும், மூன்று மாதவிடாய்களிலிருந்து தூய்மையடையும் காலம் என்றும் இதற்கு இரண்டுப் பொருள்கள் உண்டு. இப்போது இந்த வசனத்திற்கு எப்படிப் பொருள் எடுப்பது என்பதை தீர்மானிக்க நாம் ஹதீஸ்களைத் தான் நாட வேண்டியுள்ளது. 'மூன்று மாதவிடாயிலிருந்து தூய்மையடைவதே அதன் பொருள் என்ற விளக்கம் ஹதீஸ்களில் கிடைக்கின்றது.\nபெண்களை நீங்கள் தீண்டுவதற்கு முன், அல்லது அவர்களுடைய மஹரை நிச்சயம் செய்வதற்கு முன், தலாக் சொன்னால் உங்கள் மீது குற்றமில்லை. ஆயினும் அவர்களுக்குப் பலனுள்ள பொருள்களைக் கொடுங்கள். (அல் குர்ஆன் 2:237)\nஆயினும், அப்பெண்களைத் தீண்டுவதற்கு முன் - ஆனால் மஹர் நிச்சயித்த பின் நீங்கள் தலாக் சொல்வீர்களாயின், நீங்கள் குறிப்பட்டிருந்த மஹர் தொகையில் பாதி(அவர்களுக்கு) உண்டு- (அல் குர்ஆன் 2:238)\nஇந்த இரு வசனங்களிலும் 'தீண்டுதல் - தடவுதல்' போன்ற வெளிப்படையான பொருளைக் கொடுக்கக் கூடிய பதங்களே பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் இந்த வசனங்களின் நோக்கம் 'உடலுறவுக்கு முன்' என்பதுதான் என்பதை ஹதீஸ்கள் விளக்குகின்றன.\nஇரண்டாவது அத்தியாயமான சூரத்துல் பகராவிலிருந்து மட்டும் சில வசனங்களை எடுத்துக் காட்டியுள்ளோம். இதே போன்று ஹதீஸ்களில் மேலதிக விளக்கம் கிடைக்கும் வசனங்கள் நிறையவே உண்டு. அவற்றையெல்லாம் பட்டியலிடுவது இந்தத் தொடரின் நோக்கமல்ல. 'நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள்' என்ற வசன அடிப்படையில் இன்றைக்கும் முஹம்மத்(ஸல்) அவர்களைப் பின்பற்றத்தான் வேண்டும் என்பதை 'குர்ஆன் மட்டும் போதும்' என்பவர்களுக்கு எடுத்துக் காட்டுவதற்கேயாகும்.\nஅல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் கட்டுப்படுங்கள் என்ற கட்டளை குர்ஆனில் ஏராளமான இடங்களில் சொல்லப்பட்டுள்ளன.\nநீர் கூறும்; ''அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கட்டுப்படுங்கள்.'' ஆனால் அவர்கள் புறக்கணித்துத் திரும்பி விடுவார்களானால் - நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்பவர்களை நேசிப்பதில்லை (அல் குர்ஆன் 3:32)\nஅல்லாஹ்வுக்கும், (அவன்) தூதருக்கும் கீழ்படியுங்கள்;. நீங்கள் (அதனால் அல்லாஹ்வினால்) கிருபை செய்யப்படுவீர்கள். (அல் குர்ஆன் 3:132)\n அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள்; இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும், உங்களில் (நேர்மையாக) அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்படியுங்கள். உங்களில் ஏதாவது ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படுமானால் - மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புபவர்களாக இருப்பின் - அதை அல்லாஹ்விடமும், (அவன்) தூதரிடமும் ஒப்படைத்துவிடுங்கள் - இதுதான் (உங்களுக்கு) மிகவும் சிறப்பான, அழகான முடிவாக இருக்கும். (அல்குர்ஆன் 4:59)\n நீங்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள்; நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கும் நிலையிலேயே அவரைப் புறக்கணிக்காதீர்கள். (அல் குர்ஆன் 8:20)\nஎவர்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்படிந்து அல்லாஹ்வுக்கு பயபக்தி கொள்கிறார்களோ அவர்கள் தாம் வெற்றி பெற்றவர்கள். (அல்குர்ஆன் 24:52)\nஅல்லாஹ்வுக்கு நீங்கள் கீழ்படியுங்கள்; இன்னும் (அவனுடைய) ரஸூலுக்கும் கீழ்ப்படியுங்கள் என்று (நபியே) நீர் கூறுவீராக. ஆனால் நீங்கள் புறக்கணித்தால் அவர் மீதுள்ள கடமையெல்லாம் தம் மீது சுமத்தப்பட்ட (தூதுவச் செய்தியை உங்களிடம் அறிப்ப)துதான்; எனவே, நீங்கள் அவருக்குக் கீழ்படிந்து நடந்தால் நீங்கள் நேர்வழி பெறுவீர்கள் இன்னும் (நம் தூதைத்) தெளிவாக எடுத்துரைப்பதைத் தவிர (வேறெதுவும் நம்முடைய) இத்தூதர்மீது கடமையில்லை. (அல்குர்ஆன் 24:54)\n நீங்கள் அல்லாஹ்வுக்கு வழிபடுங்கள். இன்னும் இத்தூதருக்கும் வழிபடுங்கள் - உங்கள் செயல்களை பாழாக்கிவிடாதீர்கள். (அல் குர்ஆன் 47:33)\nகுர்ஆன் மட்டுமே போதும் என்பது இஸ்லாத்தின் நிலைப்பாடு என்றால் - தூதர் என்பது அவர் வாழ்ந்தக் காலத்திற்கு மட்டும் தான் இப்போது பொருந்தாது என்றால் - 'தூதருக்கு கட்டுப்படுங்கள்' என்ற வசனங்களை (சிலரைப்போல) செல்லாத வசனங்களாக கருத வேண்டி வரும் (அத்தகைய எண்ணங்களை விட்டு அல்லாஹ் நம்மைப் பாதுகாப்பானாக)\nஅல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள் என்பது எப்படி குர்ஆனைப் பின்பற்றுவதாக அமையுமோ அதே போன்று இத்தூதருக்குக் கட்டுப்படுங்கள் என்பது குர்ஆனுக்கு மாற்றமில்லாத வகையில் அமைந்துள்ள ஆதாரப்பூர்வமான நபிவழி செய்திகளுக்குப் பொருந்தும்.\n'(மக்களே) நீங்கள் இறைவனை நேசிப்பவர்களாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள் என்று நபியே நீர் கூறும். நீங்கள் என்னைப் பின்பற்றினால் (அதன் காரணமாக) இறைவன் உங்களை நேசிப்பான் உங்களுக்காக உங்கள் பாவங்களை மன்னிப்பான் அவன் மிக்க மன்னிப்பவன்' (அலு இம்ரான் 3:31.)\nநாம் விளக்கிக் கொண்டிருக்கும் இந்த வசனத்தில் இடம் பெறும் 'என்னைப் பின்பற்றுங்கள்' என்ற கட்டளை இன்றைக்கும், நாளைக்கும், யுக முடிவுவரையிலும் செயல்படுத்த வேண்டிய கட்டளையாகும்.\nநபி(ஸல்) அவர்கள் தெளிவாகவே தனது இறுதிப் பேருரையில் குறிப்பிட்டுள்ளார்கள்::\n\"நான் இரண்டை விட்டுச்செல்கிறேன், அவற்றைப் பற்றிக்கொள்ளும் காலமெல்லாம் நீங்கள் வழிதவறமாட்டீர்கள், ஒன்று இறைமறை குர்ஆன். மற்றது என் வழிமுறை\"\nநபியவர்களின் வழிமுறைகள் தானே ஹதீஸ்களில் அறிகிறோம்.\nஇஸ்லாம் கூறும் இன்பமான கணவன் மனைவியா நீங்கள் \nதிருமணம் செய்து கணவன் மனைவியாக கைக் கோர்ப்பவர்கள் கடைசிவரை சந்தோசமாக வாழ வேண்டும் என்றே ஆசைப்படுவார்கள். மணமக்களை வாழ்த்துபவர்கள் கூட இதைத்...\nகளமிறங்கிய போராட்ட குழுவிற்கு ஆதரவுகொடுப்போம்.\nபிரபல இஸ்லாமிய அறிஞர் ஜாகிர் நாயக்கிற்கு பிரிட்டன் தடை வலுக்கும் எதிர்ப்பு\nபிரபல இஸ்லாமிய அறி ஞரும் சர்வதேச சொற்பொழி வாளருமான ஜாகிர் நாயக் பிரிட்டனுக்கு வர அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது பெரும் பரபர...\nVote List-ல் உங்கள் பெயர் இருக்கா...\nVote List-ல் நமது பெயர் மற்றும் முகவரியை சரிபார்க்க இந்த Website உதவுகிறது. Vote List-ல் பெயர் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. நீங்கள் தேர்...\nபெண்களை துரத்தும் ரகசிய கேமராக்கள் – ஓர் அபாய எச்சரிக்கை \n( மிக நுணுக்கமான செய்தி என்பதால் நீண்ட பதிவாக எழுதி இருகிறோம் குறிப்பாக பெண்கள் அளிப்பு பார்க்காமல் முழுமையாக படித்து பயன்பெறவேண்டும்,மற்றவ...\nவிந்தின் பிறப்பிடம் - திருக்குரானின் விளக்கம்\nகுர்ஆன் - அறிவுக்கும் அறிவியலுக்கும் ஏற்ற எக்காலத்திற்கும் பொருந்தும் ஓர் வாழ்வியல் நெறிநூல் இது அறிவியல் நூலல்ல; ஆனாலும் அறிவியலையும் உள்ள...\nஹதீஸ் - அடிப்படை விளக்கம்\n ஹதஸ் என்ற வேர்ச்சொல்லிலிருந்து பெறப்பட்ட சொல்தான் ஹதீஸ் என்பது. ஹதீஸ் என்றால் உரை உரையாடல் புதியசெய்தி எனப்ப...\n\"இஸ்லாத்தின் பார்வையில் இசை ஒரு முழுமையான ஆய்வு\"\n இசை என்பதன் விளக்கம் என்ன … இசை என்ற சொல்லுக்கு இசைய வைப்பது எனறு பொருள். இசை (Music) என்பது ஒழுங்கு செய...\nநவீன காலத்து அடிமைகளை விடுவிப்போம்....\nவளைகுடா நாடுகளில் வேலை செய்யும் முஸ்லிம்களில், கணிசமானவர்கள் வீடுகளில் வாகன ஓட்டுனர் வேலை செய்பவர்களாக உள்ளனர். இவர்களில் பெரும்பான்மையினர் ...\nஇரு தரப்பு பேச்சுவார்த்தை எதிர்பார்த்தப்படி சுமூகமாக முடிந்தது.\nஒரு பிரச்சனை எப்படி முறைப்படி கையாளபட வேண்டுமோ அப்படி கையாளபட்டிருகிறது.. அல்ஹம்துலில்லாஹ். கடந்த விநாயகர் சதுர்த்தி அன்று நாகூர் மியா...\n9/11 INSIDE JOB (3) BOOKS (11) HAJ (10) MEDIA (7) POLL (1) ZAKIR NAIK (7) அக்கம் பக்கம் (28) அமைதி (3) அரசியல் (5) அரசு உத்தரவுகள் (14) அரவாணிகள் (1) அவ்லியா (2) அறிவியல் (19) அனுபவம் (26) அஹமது தீதாத் (2) இசை (2) இந்திய முஸ்லிம்கள் வரலாறு (3) இல்லறம் (2) இறுதி தீர்ப்புநாள் (2) உதவி தேவை (13) எச்சரிக்கை (18) ஒற்றுமை (9) கல்வி (24) கனவு இல்லம் (1) கிலாபத் (2) கேள்வி பதில் (18) சத்தியமார்க்கம் (26) சஹாபாக்கள் (4) சுய பரிசோதனை (3) செல்போன் (12) தப்லீக் (1) தரீக்கா (2) தர்கா (11) தன்னம்பிக்கை (2) திருமணம் (6) தீவிரவாதம் (12) தெரிந்த ரகசியங்கள் (32) தெரிந்து கொள்ளுங்கள் (111) தேசபக்தி (9) தேர்தல் 2011 (22) நபி(ஸல்) (3) நாகூர போல வருமா (6) நாகூர் (1) நாகூர் சங்கதி (119) நாகூர் வரலாறு (2) நாத்திகன் (3) நோன்பு (1) பழனிபாபா (1) பாபரி மஸ்ஜித் (7) பாவமன்னிப்பு (3) பிறை (4) புகை (3) பைபிள் (3) போராட்டக்களம் (10) போராட்டம் (1) மருத்துவம் (10) மவ்லித் (4) மீலாது (1) முஸ்லீம்கள் (5) மோசடி (10) ரமளான் (5) வாக்காளர் பட்டியல் (1) விமர்சனங்கள் (5) விவாதங்கள் (4) ஷியா (2) ஷிர்க் (14) ஸூபித்துவம் (2) ஹதீஸ் (3) ஹிந்து தீவிரவாதிகள் (22) ஹிஜாப் (16)\nஇந்தியாவில் இஸ்லாமிய வங்கி அமைத்திட நிதியமைச்சர் வ...\nஇஸ்லாமிய நூற்கள் வாசிப்பது குறித்து-அ.மார்க்ஸ்\nஇறைவனையே இழிவுபடுத்தும் ஒரு இறைவேதம்\nசூபித்துவத்தின் அடிப்படைக் கொள்கைகள் .\nவேடிக்கை என்றால் அது நாகூர் \nமாவீரன் திப்பு சுல்தான்-உலகின் முதல் ராக்கெட்டு\nமேற்கத்திய கலாச்சாரத்தில் இருந்து விடுபட்டது எப்பட...\nஏழுலெப்பை பள்ளியின் பரிதாப நிலையும்-காசிம் மஹ்லரிய...\n''ஒரு நடிகை எப்படி வாழக்கூடாது என்பதற்கு உதாரணம் இ...\nவந்தே மாதரம் இஸ்லாத்துக்கு எதிரானது-பத்வா\nஇடுப்பில் செல்போன் வைத்துக் கொள்பவர்களுக்கு வரவிரு...\nமெக்காவில் 6.5 பில்லியன் செலவில் மோனோரயில் திட்டம்...\nஇஸ்லாத்தின்பால் விரைந்து வரும் இங்கிலாந்தின் மேல் ...\nமுக்தர் மயி - ஒரு பழங்குடிப் பெண் போராளி.\nகர்கரேவின் புல்லட் புரூப் உடை மாயம்\n10 வயது பொடியன் -2 கம்பெனிகளுக்கு தலைமை செயல் அதிக...\n3வது காதாக மொபைல் உள்ளதா\nமும்பை தாக்குத­லில் அமெரிக்க பயங்கரவாதியின் சதி\nகுத்திக் கொல்லப்பட்ட ஹிஜாப் வீரப்பெண்மணி மர்வா அல்...\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காட்டி தந்த ஹஜ்\nபாபர் மசூதி இடிப்பில் வாஜ்பாய்-அத்வானி -ஜோஷிக்கு ...\nவிமர்ஷனங்களை -தடைகளை தகதெரிந்த ருகையா சகோதரி\nநீதிபதி லிபரன் விசாரணை- 68 குற்றவாளிகள் விவரம்\nபாபர் மசூதி-முதன் முதலாக வழக்கு தொடர்ந்தவர் ஹாஜி ஷ...\nபாபர் மசூதி இடிக்கப்பட வேண்டிய ஒன்று-கல்யாண் சிங்\nஜாகிர் நாயக் -வாழ்க்கை குறிப்பு\nஅரஃபா நோன்பு - ஐயமும் தெளிவும்\nபுகை பிடிக்கும் போது - புதிய ஆராய்ச்சி\nநாகூர் - ஒரு வரலாற்றுப் பார்வை\nகுரான் & ஹதீஸ் நூல்கள் பதிவிறக்கம்\nநபி( ஸல்) முழு வரலாறு\nகிருத்துவ மத போதகருடனான கலந்துரையாடல்\nஇரத்ததானம் செய்ய பதிவு செய்யுங்கள்\nசெய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற மின்னஞ்சல் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்\nதமிழில் டைப் செய்ய (தங்கலிஷ்)\nஅல்லாஹ்வின் சாந்தியும் , சமாதானமும் உங்கள் அனைவரின் மீதும் உண்டாவதாக இந்த தளம் நாகூர் வாழ் மக்களுக்கான ஓர் அறிவகம். நல்ல விஷயங்கள் பகிர்ந்து கொள்ளவும், தவறான விஷயங்களை சுட்டிக்காட்டவும் இந்த தளத்தை அமைத்திருகிறோம்.. நம்ம ஊரை பற்றி மற்றவர்களை விட நாமே அதிகம் விமர்சிக்கிறோம் இதே ஊரில் இருந்துகொண்டு, உண்மையில் நம்மை நாமே விமர்சித்து கொள்கிறோம் என்பதே உண்மை.. ஆகையால் உணர்வுகளை உள்ளது உள்ளபடி பகிர்ந்து கொள்ள ஒரு தளம். மேலும் உலக நாட்டுநடப்புகளும் இங்கே உரியமுறையில் அலசப்படுகிறது. நீங்களும் இந்த தளத்தின் அங்கமே , உங்களின் கருத்துகள் ,விமர்சனங்கள் , கட்டுரைகள் எதுவாக இருந்தாலும் nagoreflash@ymail.com முகவரிக்கு அனுப்பித்தாருங்கள். உங்கள் அன்புடன் அப்துல்லாஹ்.\nஅண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: \"தொழுகையாளிகள் அரபுத் தீபகற்பத்தில் தன்னை இபாதத் செய்வார்கள் -வணங்குவார்கள் - எனும் விஷயத்தில் ஷைத்தான் நிராசை அடைந்து விட்டான். எனினும், முஸ்லிம்களிடையே பகைமைத் தீயை மூட்டுவதில் அவன் நம்பிக்கை இழக்கவில்லை\". அறிவிப்பாளர்: ஜாபிர்(ரலி), நூல்: முஸ்லிம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.adiyakkamangalam.com/cookbook/36/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD", "date_download": "2018-04-26T13:38:23Z", "digest": "sha1:7LGDM6TCHAYIEP2JYRJOTVZPKYSYLDKB", "length": 11476, "nlines": 193, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam பச்சரிசிமாவு", "raw_content": "\nசமையல் / சிற்றுண்டி வகை\nபச்சரிசிமாவு - 2 கப்\nசின்னவெங்காயம் - 1 கப்(பொடியாக நறுக்கியது)\nகாய்ந்தமிளகாய் வற்றல் - 3 எண்ணம் (சிறு சிறு துண்டுகளாகப் பிய்த்துவைக்கவும்)\nதேங்காய் துருவல் - 3/4 கப்\nகடுகு - 1/2 டீஸ் ஸ்பூன்\nஎண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்\nகொத்தமல்லி தழை - 1/2 கப் (பொடியாக நறுக்கியது)\n1.சின்ன வெங்காயம்,காய்ந்தவற்றல் மிளகாய் கொத்தமல்லி தழை இவற்றை மேலே கூறியதுப்போல் நறுக்கிக் கொள்ளவும்.\n2.ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு அதில் கடுகு, மற்றும் நறுக்கியவற்றைப் போட்டு நன்றாக வதக்கிவைக்கவும்.\n3.ஒரு பாத்திரத்தில் பச்சரிசிமாவும்,தேங்காய் துருவல்,வதக்கியவற்றைப் போட்டு , உப்பும் போட்டு தண்ணீர் விட்டு பிசையவும்.\n4.பிசைந்த மாவு கொஞ்சம் தண்ணீர் கோர்த்து இருக்கவும்.அதை பெரிய உருண்டை வடிவத்தில் கொஞ்சம் கொஞ்சமாக பிரித்துவைக்கவும்.\n5.ஒரு வாழை இலை துண்டில் அல்லது பால்கவரிலோ எண்ணெய் தடவி ஒரு உருண்டை மாவை எடுத்து கையினாலே ரொட்டியை தட்டி பரப்பவும்.\n6.தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் பரப்பின ரொட்டியை பிரித்துப் கல்லில் போட்டு எண்ணெய்விட்டு மறுபக்கமும் திருப்பி போட்டு ரொட்டி வெந்தபின் எடுக்கவும். பின்னர் அடுப்பை சிம்மில் வைத்து ரொட்டியைச்சுடவும்.\n7.காலை மற்றும் மாலை நேர சிற்றுண்டிக்கு ஏற்றது.உருளைகிழங்கு குருமா குழம்பு வைத்து பரிமாறவும்\nபீட்ரூட் ஜாமுன் அல்வா (Beetroot Jamun Halwa)\nபப்பாளி பழ அல்வா (Papaya Halwa)\nபச்சரிசி ஹல்வா (Rice Halwa)\nகுலோப் ஜாமூன் (Gulab Jamun)\nசிம்பிள் மைதா கேக் (Simple Maida Cake)\nபீட்ரூட் அல்வா (Beetroot Halwa)\nதேங்காய் பர்பி (Coconut Burfi)\nஅரிசி மாவு புட்டு (Rice Flour Puttu)\nஅவல் ராகி புட்டு (Aval Raggi Puttu)\nபூர்ணக் கொழுக்கட்டை (Poorna Kolukattai)\nபொட்டுக்கடலை உருண்டை (Bengal Gram Sweet)\nபொரி உருண்டை (Pori Urundai)\nஓலைப் பக்கோடா (Ribbon Pakoda)\nவாழைக்காய் சிப்ஸ் (Banana Chips)\nவாழைக்காய் பஜ்ஜி (Banana Bajji)\nவெங்காய பஜ்ஜி (Onion Bajji)\nகருப்பு கொண்டை கடலை சுண்டல்\nவெங்காய பக்கோடா (Onion Bakoda)\nமுந்திரி பக்கோடா (Cashewnut Bakoda)\nநிலக்கடலை பக்கோடா (Peanut Bakoda)\nஜவ்வரிசி முறுக்கு (Sago Murukku)\nஅரிசி மாவு முறுக்கு (Rice Flour Murukku)\nதேங்காய்ப்பால் முறுக்கு (Coconut Milk Murukku)\nமரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் (Tapioca Chips)\nபருப்பு ரசம் (Daal Rasam)\nசெட்டிநாடு கார நண்டுக் குழம்பு\nபயத்தம்பருப்பு தோசை ( Moong dal dosa )\nஃப்ரைட் இட்லி (Fried Idly)\nரவா பொங்கல் (Rawa Pongal)\nகத்திரிக்காய் சட்னி (Brinjal Chutney)\nஎக் ஃப்ரைட் ரைஸ் (Egg Fried Rice)\nசில்லி சிக்கன் (Chilli Chicken)\nஎண்ணெய்2 டீஸ் துருவல்34 தேங்காய் பொருட்கள் கப்பொடியாக சின்னவெங்காயம்1 கப் பச்சரிசிமாவு2 எண்ணம் ரொட்டி சிறு கப் சிறு வற்றல்3 துண்டுகளாகப் தேவையான காய்ந்தமிளகாய் கடுகு12 பிய்த்துவைக்கவும் டேபிள் நறுக்கியது ஸ்பூன் பச்சரிசிமாவு ஸ்பூன் �\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/employment/2017/nov/08/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-2804080.html", "date_download": "2018-04-26T13:04:08Z", "digest": "sha1:E2SMFTHTUX2KVQQ6VM2REMNKTZ7GR5QG", "length": 15615, "nlines": 156, "source_domain": "www.dinamani.com", "title": "வேலை...வேலை...வேலை...- Dinamani", "raw_content": "\nசம்பந்தப்பட்ட பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். . Executive (Office) பதவிக்கு முதுநிலைப் பட்டப் படிப்பை சம்பந்தப்பட்ட பிரிவில் முடித்திருக்க\nவேண்டும். Light Vehicle Driver பதவிக்கு குறைந்தபட்சம் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். டிரைவிங் லைசென்ஸ் பெற்றிருக்க வேண்டும்.\nTechnician பதவிக்கு 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி மற்றும் சம்பந்தப்பட்ட பிரிவில் ITI சர்டிபிகேட் பெற்றிருக்க வேண்டும்.\nவயது வரம்பு: 18 வயது முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்., (குறிப்பிட்ட பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு உண்டு).\nவிண்ணப்பக் கட்டணம்: ரூ.250 (குறிப்பிட்ட பிரிவினருக்கு ரூ.100 )\nவிண்ணப்பிக்கும் முறை: www.aavinmilk.com., www.aavinthanjavur.com ஆகிய இணையதளங்களில் உள்ள விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து,\nபூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்களின் நகல்கள் இணைத்து கீழ்க்காணும் முகவரிக்கு பதிவுத் தபால் அல்லது விரைவு அஞ்சல் மூலம் அனுப்பி\nதேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nவிண்ணப்பங்கள் சென்று சேரக் கடைசித் தேதி: 10.11.2017\nதகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்; அத்துடன், கணினியில் (word processing)\nவயது வரம்பு: 20 வயது முதல் 28 வயதுக்குள் இருக்கவேண்டும். (குறிப்பிட்ட பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு உண்டு).\nவிண்ணப்பக் கட்டணம்: ரூ.450 (குறிப்பிட்ட பிரிவினருக்கு ரூ.50 )\nவிண்ணப்பிக்கும் முறை: http://www.rbi.org என்ற இணையதளத்தில் Recruitment for the post of Assistant’’ என்ற பகுதியை \"கிளிக்' செய்து, ஆன்லைன்\nமுறையில், போட்டோ, கையொப்பம் அப்-லோடு செய்து விண்ணப்பிக்கவேண்டும்.\nதேர்வு செய்யப்படும் முறை: இரண்டு கட்ட எழுத்துத் தேர்வு, கணினி ஆற்றல், ஆங்கில மொழித்திறன், எண்ணியல், பொது விழிப்புணர்வு ஆகியவற்றின்\nஅடிப்படையில் தகுதி வாய்ந்தவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.\nஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 10.11.2017\nதகுதி: சிவில் என்ஜினியரிங் பட்டப் படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்; அத்துடன் ரயில்வே தொடர்புடைய துறைகளில் Joint General Manager பதவிக்கு 15 ஆண்டுகள் பணி அனுபவம், Deputy General Manager பதவிக்கு 10 ஆண்டுகள் பணி அனுபவம், Engineer பதவிக்கு 5 ஆண்டுகள் பணி\nவயது வரம்பு: 54 வயதுக்குள் இருக்க வேண்டும். (குறிப்பிட்ட பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு உண்டு).\nவிண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் மூலம் http://www.rites.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து, அதில் உள்ள விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து, பிரிண்ட்-அவுட் எடுத்து தேவையான சான்றிதழ்களின் நகல்கள் இணைத்து கீழ்க்காணும் முகவரிக்குத் தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.\nதேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் ஆங்கிலம் அல்லது ஹிந்தியில் நடைபெறும் நேர்காணல், உடல் தகுதித் திறன் மருத்துவச் சான்று\nஆகியவை மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 14.11.2017\nபிரிண்ட்-அவுட் விண்ணப்பங்கள் சென்று சேரக் கடைசித் தேதி: 22.11.2017\nஇந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை\nமொத்த காலியிடங்கள்: தென் மாநிலங்கள்-354 (தமிழ்நாடு - புதுச்சேரி - 153)\nதகுதி: Fitter, Electrician, Electronic Mechanic, Instrument Mechanic ஆகிய பணிகளுக்கு, பள்ளிப் படிப்பு முடித்து, தொடர்புடைய பிரிவில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்று ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nLaboratory Assistant பணிக்கு, B.Sc பட்டப்படிப்பை Physics, Maths, Chemistry/Industrial Chemistry ஆகிய பிரிவுகளில் படித்து குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nவயது வரம்பு: 18 வயது முதல் 24 வயதுக்குள் இருக்கவேண்டும். (குறிப்பிட்ட பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு உண்டு).\nவிண்ணப்பிக்கும் முறை: www.iocl.com(Careers-> Latest Job Opening-> Engagement of Apprentices in Southern Region என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கவேண்டும்.\nதேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nஸ்டண்ட் மாஸ்டர் மகன் திருமண ஆல்பம்\nநாயகி இஷாரா நாயர் - சாஹில் திருமணம்\nசச்சின் பிறந்த நாள் ரசிகர்கள் வாழ்த்து\nசஞ்சு படத்தின் டீஸர் வெளியீடு\nரயில் மோதி 11 மாணவர்கள் பலி\nஜெயகாந்தன் 84ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா\nதலையில் காயம் ஆனால் காலில் ஆபரேசன்\nஇளவரசர் தம்பதியருக்கு 3வது குழந்தை பிறந்தது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cinema.vikatan.com/bigg-boss-tamil/99700-are-we-blaming-aarav-alone-for-those-love-episodes-happenings-of-bigg-boss-day-55.html", "date_download": "2018-04-26T13:08:03Z", "digest": "sha1:5ENDPSOCPON74P5NHCI4EH5YMQBORT3I", "length": 61475, "nlines": 450, "source_domain": "cinema.vikatan.com", "title": "ஓவியா - ஆரவ் காதல் விவகாரத்தில் ஆரவ் மட்டும்தான் தவறிழைத்தாரா? - என்ன நடந்தது பிக் பாஸில்? (Day 55) #BiggBossTamilUpdate | Are we blaming Aarav alone for those love episodes ? Happenings of Bigg Boss Day 55", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nஓவியா - ஆரவ் காதல் விவகாரத்தில் ஆரவ் மட்டும்தான் தவறிழைத்தாரா - என்ன நடந்தது பிக் பாஸில் - என்ன நடந்தது பிக் பாஸில்\nபிக் பாஸ் - தமிழகத்தின் வம்புக்குரலுக்கான தேடல்\n‘ஆண்டவரின்’ தீர்ப்பு நாள் ‘கேள்வி – பதில்’ நாளாக அமைந்துவிட்டது. கேள்விகள்.. கேள்விகள்.. பதில்கள்.. பதில்கள்…\nபங்கேற்பாளர்களிடம் கேள்விகள் அனுப்பலாம் என சமீபத்தில் விஜய் டிவி அழைப்பு விடுத்தது. அவற்றில் என்னென்ன கேள்விகள் வந்ததோ தெரியாது. ஆனால் அந்தக் கேள்விகள் பிக்பாஸ் பார்வையாளர்களின் மனதில் நீண்ட நாட்களாக உழன்று கொண்டேயிருந்த கேள்விகள். அது சார்ந்த கோப, தாபங்கள் சமூகவலைத்தளங்களில் தொடர்ந்து வெடித்துக் கொண்டேயிருந்தன; பதில் கிடைக்காமல் அலைந்து கொண்டேயிருந்தன.\nஅவற்றை சிறப்பாக தொகுத்து வரிசைப்படுத்தியது நன்று.\nநேற்றைய நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விகளில் சுமார் 75 சதவீதம் இந்தக் கட்டுரைத் தொடரில் ஏற்கெனவே கேட்கப்பட்டிருந்ததை நண்பர்கள் கவனித்திருக்கக்கூடும். மகிழ்ச்சி\nசரி. கேள்விகள் கேட்கப்பட்டு விட்டன. திருப்தியான பதில்கள் நமக்கு கிடைத்தனவா நிச்சயம் இல்லை. என்னளவில் இல்லவே இல்லை. ஏனெனில் தேர்வு நடத்தும் பொறுப்பை பள்ளிப்பிள்ளைகளிடம் தந்து விட்டு வாத்தியார் மரத்தடியில் ஒய்வெடுக்கச் சென்று விட்டதால் ஏற்பட்ட விபத்து இது. பிள்ளைகள் சீரியஸான கேள்விகளை தங்களுக்குள் சிரித்துக் கொண்டே கேட்டு பரஸ்பரம் விளையாடிக் கொண்டது போல் ஆகி விட்டது.\nசில கோபங்களால்தான் சில கேள்விகள் உருவாகின்றன. அவற்றிற்கு நியாயமான பதில்கள் கிடைக்காவிட்டால் அவை நிச்சயம் தணியாது. மாறாக, தக்க பதில்கள் கிடைக்காத நெருடலில் கோபம் இன்னமும் உயரவே செய்யும். நேற்றைய நிகழ்ச்சியிலும் அப்படித்தான் நடந்தது.\nசில பிரிவினருக்கு தங்கள் மனதிலுள்ள கேள்விகளை கேட்டு விட்டாலே போதும், அது சார்ந்த கொதிப்புகள் அடங்கி விடும். பதில் வருவதைப் பற்றி அத்தனை கவலைப்பட மாட்டார்கள் கடந்த கால தவறுகளுக்கு தக்க பதில்தராத அரசியல்வாதிகளையே மறுபடியும் தேர்ந்தெடுக்கும் தவற்றினைச் செய்வோமா\n‘உங்களுக்கு தரப்பட்ட பணியை ஒழுங்காகச் செய்யவில்லை. ஒழுங்கீனங்கள் நிறைந்திருந்தன’ என்பதுதானே கமலின் கோபம் எனில் ஒரு நெறியாளராக அவரே முன்நின்று இந்தக் கேள்விகளை போட்டியாளர்களின் முன்னால் தன்னுடைய பிரத்யேகமான பாணியில் கறாராக வைத்திருக்க வேண்டும்.. அப்போது ஒருவேளை முறையான பதில்கள் கிடைத்திருக்கலாம்.\nபோட்டியாளர்களிடம் மட்டுமல்ல கமல் முன்னால் வைக்கப்பட வேண்டிய கேள்விகளும் இருக்கின்றன. ‘எதற்கு வம்பு’ என்று கேள்விகளை புதுப்போட்டியாளர்களை வைத்து கேட்டு விட்டாரா இதன் மூலம் சிலருக்கு அதிகச் சங்கடத்தை தர வேண்டாம் என்கிற மறைமுக சலுகையா இதன் மூலம் சிலருக்கு அதிகச் சங்கடத்தை தர வேண்டாம் என்கிற மறைமுக சலுகையா ‘கேள்விகள் கேட்கப்பட்டாயிற்று. யார் கேட்டால் என்ன ‘கேள்விகள் கேட்கப்பட்டாயிற்று. யார் கேட்டால் என்ன\nகமலின் கோபமும் ஒதுங்கலும் நிஜமா\n‘பேய் task-ல் சிநேகன் சொன்ன ‘நீதி’யின் படி பேய் இல்லை என்றாகி விடாது. அகப்பேய் என்றொன்று இருக்கிறது. அதுதான் உள்ளேயுள்ள போட்டியாளர்களிடமும் சரி, வெளியே உள்ள பார்வையாளர்களிடமும் சரி, குத்தாட்டம் போடுகிறது என்பது போல கமல் குறிப்பிட்டது மிகவும் உண்மை. பேய் என்பது உண்மையாகவே இருந்தால் கூட அவற்றின் அட்டகாசங்களை எளிதில் சமாளித்து விடலாம். ஆனால் அகப்பேய்களின் அட்டகாசங்கள் மிக மிக ஆபத்தானவை. ‘மனச்சாட்சி’ ‘சுயபரிசீலனை’ ‘நேர்மை’ போன்ற தாயத்துக்களையும் மந்திரங்களையும் வைத்துதான் அவற்றைக் கட்டுப்படுத்த முடியும். ஆனால் முற்றிலுமாகவும் ஒழித்து விட முடியாது. ஒழித்து விட்டால் வாழ்வில் சுவாரசியமே இருக்காது என்பதும் வேடிக்கையான உண்மைதான்.\nஇந்த பிக்-பாஸ் நிகழ்ச்சியில் ஒருவரின் தனிப்பட்ட விஷயம் கொத்து பரோட்டாவாக அதிகம் கூறுபோடப்பட்டது எவருடையதென்றால் அது ஆரவ்வின் காதல் விவகாரமாகத்தான் இருக்க முடியும். அந்தளவிற்கு வீட்டின் உள்ளே இருப்பவர்களும் சரி, வெளியே இருப்பவர்களும் சரி.. சும்மா.. பிரித்து மேய்ந்து கொண்டேயிருக்கிறார்கள். ஓவியாவின் மீதுள்ள பிரியங்கள் எல்லாம் ஆரவ்விற்கு எதிரான வெறுப்பாக சென்று முடிகின்றன. ஒருவகையில் அவரைப் பார்த்தால் பாவமாகத்தான் இருக்கிறது.\nசம்பந்தப்பட்ட இரு தனிநபர்களுக்கு மட்டுமே தெரியக்கூடிய (வயதின் முதிர்ச்சியின்மையால் அவர்களுக்கே கூட தெரியுமா என தெரியாது) ஒரு விஷயத்தை ‘கண்ணால் பார்த்தவர்களும்’ ‘காதால் கேட்டவர்களும்’ ‘தீர விசாரித்தவர்களும்’ அப்படியே நம்புவதும் அப்படி நம்புவதை சரி என நினைத்துக் கொள்வதும், அப்படி சரி என நினைத்துக் கொள்வதை வைத்துக் கொண்டு தீர்ப்பு சொல்வதும், அவமானப்படுத்துவதும் நிச்சயம் நியாயமில்லை. சந்தேகத்திற்கான பலன் ஆரவ்விற்கும் நிச்சயம் தரப்பட்டாக வேண்டும்.\nகேள்வி –பதில் பகுதிக்குள் செல்வதற்குள் வீட்டினுள் நடந்த நிகழ்வுகளைப் பற்றி பார்ப்போம்.\nபுது வரவான காஜல், தனக்கு தரப்பட்ட task-ல் ஆரவ் விவகாரத்தை தேர்ந்தெடுத்துக் கொண்டு அது சார்ந்து பல கேள்விகளை வீசினார். இதர போட்டியாளர்கள் ஆளாளுக்கு ஒன்று சொல்ல, ஆரவ்வும் மென்று முழுங்கி சில பதில்களைச் சொன்னார். எனவே மறுநாள் காலையிலும் அது சார்ந்த உரையாடல்கள் தொடர்ந்தன.\n‘கமிட்டட்’ –ன்ற விஷயத்தை அவன் நம்மகிட்ட சொல்லவேயில்லையே’ என்று ஆரவ்வும் வையாபுரியும் பேசிக் கொண்டிருந்தார்கள். ‘பஞ்சதந்திரம்’ திரைப்படத்தில் வருவது போல ‘நாம் மொதல்ல இருந்து வருவமா’ என்று நமக்கு கேட்கத் தோன்றியது. இந்த விவகாரத்தில் அத்தனை குழப்பம்.\nஇதே விவகாரத்தைப் பற்றி வெளியில் ஆரவ் உள்ளிட்ட இதர நபர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். ‘சிநேகனுக்கு ‘கமிட்டட்’ விஷயம் தெரியும். தெரியாத மாதிரியே நேத்து பேசினாரு’ என்று ஆரவ் சொல்ல.. ‘ஙொய்யால.. அங்கயே சொல்ல வேண்டியதுதானே’ என்று படு சரளமாக ஜோதியில் ஐக்கியமாகி விட்டார் காஜல்.\n‘யக்கோவ்’ என்று அன்னியோன்யமாக அழைக்கத் தூண்டுமளவிற்கு இருக்கிறது காஜலின் உடல்மொழியும் தோரணையும். ஆனால் நேர்காணல்களில் தென்படும் கமலின் குழறல்களை விட அதிகமாக இருக்கிறது இவரின் குழறல். வெறும் நீர்தான் அருந்துகிறாரோ என்று கூட சமயங்களில் சந்தேகம் வந்து விடுகிறது. ஆனால் துணிச்சலாக பட்டென்று தேங்காய் உடைத்து விடுவதில் ‘மன்னி’யாக இருக்கிறார். காயத்ரியே இவர் எதிரில் பம்மி அமர்ந்திருப்பது கண்கொள்ளா காட்சியாகத் தெரிகிறது.\n‘அதோட வாய்ஸே பயமாக இருக்கே’ என்ற வையாபுரியுடம் ‘ஆமாம். அஞ்சு ஆம்பளைக்கு சமம்’ என்றார் சிநேகன் பெருமையாக. எனில் காஜலுக்கு ஆறுதல் சொல்ல சிநேகன் முனைவாரா, மாட்டாரா\nபெண்கள் எண்ணிக்கையை விட ஆண்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால்தான் ‘நானும் ரைசாவும்’ நாமினேட் ஆனோம் என்பது காயத்ரியின் தர்க்கம். ஆண்கள் தங்களுக்குள்தான் ஆதரவு தந்து கொள்வார்களாம்.\nஇனக்கவர்ச்சி, எதிர்துருவ ஈர்ப்பு என்பது போன்று காலம் காலமாக சொல்லப்பட்ட பல விஷயங்களை காயத்ரியின் இந்த தர்க்கம் அடித்து நொறுக்குகிறது. எனில் இதுவரை பல வாரங்களில் காயத்ரி நாமினேஷன் பட்டியலில் ஒருமுறை கூட வராததிற்கான காரணம் என்ன\nதன் மீதுள்ள தவறுகளை ஒளிப்பதற்காக மனம் என்னென்ன மாய விளையாட்டுக்களையெல்லாம் நிகழ்த்துகிறது\nஇனிமேல் சண்டை நிகழ்ந்தால் எவர் எவரிடமில்லாம் வரும் என்பதை போட்டியாளர்கள் விளையாட்டாக பேசிக் கொண்டிருந்தார்கள். விளையாட்டு வினையாகலாம்.\n‘காயத்ரி மாஸ்டரை எனக்கு நல்லாத் தெரியும். அவங்க குடும்பத்தையும். ஆரவ் .. பிரண்டுதானே.. அதனாலதான் இவன் கிட்ட சத்தம் போட்டேன்’ என்று ஏதோவொரு தர்க்கத்தில் பொருந்துகிற அல்லது பொருந்தாத காரணத்தைச் சொல்லி சிநேகன் கலங்க முற்பட, பக்கத்திலிருந்த கணேஷ் ப்ரோ உடனடியாக வந்து கட்டியணைத்து ஆறுதல் சொன்னார். சில பின்னடைவுகள் இருந்தாலும் இந்த விளையாட்டின் கடினமான போட்டியாளர் கணேஷ் என்பதை மறுபடியும் மறுபடியும் சொல்ல வேண்டியிருக்கிறது. அந்தளவிற்கான சகிப்புத்தன்மை.\nபிக்பாஸிடம் உணவுக்கான ஆர்டர் கொடுத்தால் வந்து சேரும் என்று நம்புவது சுஜாவின் சிறுபிள்ளைத்தனம். அவருடைய சமீபத்திய வீடியோ நேர்காணலை பார்த்ததின் மூலம் பிக்பாஸ் நிகழ்ச்சியை அவர் தொடர்ந்து கவனிக்கிறார் என்பது தெரிய வருகிறது. எனில் ஒருமுறை கூட போட்டியாளர்கள் அவ்வாறு ஆர்டர் செய்யவில்லை என்பதை அவர் கவனித்திருப்பார். மட்டுமல்லாமல் கேட்கும் உணவுகள் வரும் என்றால் எதற்கு சமையல், லக்ஸரி பட்ஜெட்டிற்காக ஏன் இப்படி அடித்துக் கொள்கிறார்கள் என்கிற கேள்விகளாவது எழுந்திருக்க வேண்டும்\nதமிழ் சினிமாவின் கதாநாயகிகளைப் போல தன்னை ‘லூசுப் பெண்ணாக’ ஏன் சுஜா சித்தரித்துக் கொள்கிறார் என்று தெரியவில்லை. புது வரவு என்பதால் மற்றவர்களின் விளையாட்டிற்கு பாவனையாக ஒத்துழைக்கிறாரா, உண்மையிலேயே இவர் இத்தனை வெள்ளந்தியா\nசுஜாவிடம் ஒருவேளை இருக்கக்கூடிய வெள்ளந்திதனத்தை மற்றவர்கள் பயன்படுத்துவது ஒருபக்கம் இருக்கட்டும். ‘பேய் task-ல் பிந்துவிற்கு இழைக்கப்படுவது அநீதி’ என்று மனச்சாட்சியுடன் பேசிய ரைசாவும் பாதிக்கப்பட்ட பிந்துவும் கூட இந்த விளையாட்டில் பங்கு பெற்றது முறையல்ல. உணவு வரும் போல என்று உண்மையாகவே சுஜா நினைத்துக் கொண்டு ஏமாந்தால் அது சரியா. எதில் எதில் விளையாட வேண்டும் என்கிற விவஸ்தை இல்லையா,\nபிந்துவின் சுயசரிதையை வையாபுரி துவக்கி வைக்க அதை மேலும் வர்ணித்து பிக்பாஸ் வீட்டை பாடல் இடம் பெற்ற ஸ்தலமாக்கினார் சிநேகன். பொழுது போகவில்லையென்றால் எதையாவது பேச வேண்டியதுதான். அதற்காக இப்படியா … பிந்து பிந்து … என்று பிந்து அப்பள விளம்பரமாக சிநேகன் கூவுவது ஓவர்தான். மனுஷன் என்ன பிளான்ல இருக்காரோ.\nஅகப்பேய் வெளியே வரும். வேப்பிலையோடு ரெடியா இருங்க’ என்ற சூசகமான தகவலைச் சொன்னார் கமல்.\n‘இதுவொரு ரியாலிட்டி ஷோ. ஒரு விஷயத்தை ஒத்துக்கிட்டு உள்ளே வந்திருக்கீங்க. திடீர்னு சில விஷயங்களுக்கு முரண்டு பிடிச்சா எப்படி சிறுபிள்ளைத்தனமா இருக்கு. வெளியே போய் உங்க தொழில்லயும் இப்படித்தான் இருப்பீங்களா, நீங்கள்லாம் குழந்தைங்களா.. கொஞ்சி, கெஞ்சில்லாம் சொல்லிப் பார்த்துட்டேன். ‘ என்றெல்லாம் லெஃப்ட் ரைட்டாக வாங்கினார் கமல்.\nஆனால் அந்தந்த பிரச்னைகளை சம்பந்தப்பட்டவர்களிடம் நேரடியாக கேட்காமல் பொத்தாம் பொதுவாகச் சொன்னதன் மூலம் அவர்களே யூகித்துக் கொள்ளட்டும் என்று கமல் விட்டுச் சென்றது பொருத்தமாகப் படவில்லை.\n‘எதுக்குன்னு ஸாரி சொல்லணும்’ என்று ரைசா குழம்பியது சரி. கமல் கேள்விகளை முன்வைத்த போது மாறிக் கொண்டேயிருந்த இவரின் முகபாவங்கள் ஒரு அழகான கொலாஜ் சித்திரம். (ரணகளத்துக்கு நடுவுல இந்தக் கிளுகிளுப்பு தேவையா)\nபழைய போட்டியாளர்களுக்கு இந்த அதிர்ச்சி வைத்தியம் நிச்சயம் தேவைதான். அந்தளவிற்கு சில சமயங்களில் சிறுபிள்ளைத்தனமாக முரண்டு பிடிக்கிறார்கள்.\nகுறிப்பாக உடலுழைப்பு சம்பந்தப்பட்ட taskகளுக்கு வையாபுரி காட்டும் அடமும் கோபமும் மிகையானது. வயதானவர் என்பதால் அவரால் செய்ய முடியாது என்று சொல்வது அவரளவில் சரி. ஆனால் அதையே உரக்க கத்தி மற்றவர்களின் மனநிலைகளிலும் பாதிப்பை ஏற்படுத்துவது முறையல்ல.\nமைக்கை மூடி விட்டு ரகசியம் பேசியது காயத்ரி. ஒருமுறை அவ்வாறு செய்தார் என நினைவு. இந்தக் கேள்வியை கமல் நேரடியாக அவரிடம் கேட்டிருக்கலாம். கேட்டிருக்க வேண்டும். காயத்ரிக்கு சலுகை காட்டப்படுகிறதோ என்கிற நெருடல் ஓய்ந்தபாடில்லை.\nரைசா தூக்கம் விவகாரத்தில் கேள்வி எழுப்பப்படுவது முறையா எனத் தெரியவில்லை. ‘என்னுடைய தூக்கம் இரவில் பாழாகிறது. அதனால் பகலில் தூங்க அனுமதி வேண்டும். என்று ரைசா வேண்டியும் அதைப் பொருட்படுத்தாத பிக்பாஸ் அன்று இரவும் அது போன்ற சத்தங்களுக்கு அனுமதி தந்து விட்டு. பிறகு ரைசாவின் பிடிவாதம் குறித்து சீற்றம் கொள்வது அப்பட்டமான முதலாளித்துவதனம்.\nசரி. இப்படி தனித்தனியாக சில பிரச்னைகளைப் பார்ப்பதை விட ஒட்டுமொத்தமாகவே பார்ப்போம்.\nமனிதர்களின் சில அடிப்படையான சுதந்திரங்களைப் பறித்து விட்டு அவர்களை ஓரிடத்தில் அடைத்து வைத்தால் அது சார்ந்த உளைச்சலில் என்னென்னவெல்லாம் நிகழுமோ அவையெல்லாம்தான் இங்கு நிகழ்கின்றன. அதுதானே பிக்பாஸின் திட்டமும் வணிகமும் இது விளையாட்டுதான் என்றாலும் மனித உணர்வுகளின் மீது ஆடப்படும் சூதாட்டம். இதில் அவர்கள் இயந்திரங்கள் போல சொன்ன பணிகளையெல்லாம் தலைமேல் வைத்து செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பது மிகையல்லவா\nமனிதர்களை பலவீனங்களோடும் படைத்தது கடவுள் என்பது உண்மையானால், அவரே ஒரு நாள் நேரில் வந்து ‘ஏம்ப்பா இப்படியெல்லாம் அடிச்சுக்கறீங்க’ என்று கேட்டால் நமக்கு எப்படியிருக்கும்’ என்று கேட்டால் நமக்கு எப்படியிருக்கும் பிரச்னைகளின் சூத்ரதாரியே அவை குறித்து குறுக்குவிசாரணை நிகழ்த்துவது முரண்நகை மட்டுமல்ல அநீதியும் ஆகும்..\nபலத்திற்கும் பலவீனங்களுக்குமான போராட்டங்களுக்கு அழிவேயில்லை. பலவீனங்களை முற்றிலுமாக ஒழித்தால் மனிதன் கடவுளுக்குச் சமமாகி விடுவான்.\n) வெளியேறிச் சென்றதும் முதலில் பதறிப் போனவர் வையாபுரி. (கமல் படங்களில் வையாபுரி அதிகம் நடித்திருக்கிறார்) அந்தப் பதட்டத்தை உடனே வழிமொழிந்தவர் சிநேகன். மற்றவர்களின் பாவங்களுக்காக சிலுவையைச் சுமந்த இவரின் பாவமன்னிப்பு உண்மையிலேயே ஆத்மார்த்தமானதாகத் தெரிந்தது. அதில் போலித்தனம் தெரியவில்லை.\nபழைய போட்டியாளர்களின் பிழைகளுக்காக புதிய போட்டியாளர்களிடமும் பேசாமல் இருப்பது முறையல்ல என்றுணர்ந்த கமலின் ஞானம் காரணமாக அவர்களுக்கு மட்டும் வாய்ப்பு தரப்பட்டது.\nதன்னை சுருக்கமாக அறிமுகப்படுத்திக் கொண்டார் சுஜா. இனியாவது அவரது கலைப்பயணம் மேலுயரட்டும். ‘இதுவரை வெளியில் இருந்து பார்த்ததற்கும் உள்ளே சென்று பார்த்ததற்கும் வித்தியாசமாகத் தெரிந்த நபர் யார்’ என்கிற கேள்விக்கு ‘சிநேகன்’ என்று பதில் அளித்தார். ‘விஷூவலா பார்க்கும் போது அவருடைய ஆறுதல் நடவடிக்கைகள் சந்தேகமாகத் தெரிந்தன. ஆனால் உள்ளே வந்து பார்க்கும் போது அவர் உண்மையாகவே ஆறுதல் சொல்கிறவராகத் தெரிகிறார்’\nநம்முடைய காட்சிப்பிழைகளுக்கும் சுஜாவின் இந்த பதில் உதவக்கூடும். சிநேகனை பலமுறை அப்படித்தான் நாமும் சந்தேகப்பட்டிருக்கிறோம். சுஜாவின் பதிலைத் தாண்டியும் ‘தடவியல் நிபுணர்’ என்று சிநேகனை கமல் வர்ணித்தது ஒருவகையில் ரசிக்கத்தக்க குறும்பு என்று தோன்றினாலும் மறுபுறம் அது முறையல்லவே என்கிற நெருடலும் தோன்றிற்று.\n‘இந்த வீட்டிற்கு எவர் மறுபடியும் வந்தால் சந்தோஷமடைவீர்கள் என்ற கேள்விக்கு தயக்கமே இல்லாமல் ‘ஓவியா’ என்றார். முன்னணி நடிகரின் பெயரை உச்சரித்துமே அவரின் ரசிகர்கள் என்றல்லாது பொதுவாகவே எழும் பலத்த கைத்தட்டல்களைப் போலவே அம்மணிக்கு ‘தானா சேர்ந்த கூட்டத்தின்’ அன்பு நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே போகிறது.\nஅடுத்து ஹரீஷ். ‘சில போட்டியாளர்கள் காமிராவைப் பார்த்து ‘எப்படியாவது இங்க இருந்து போயிடணும்’னு சொல்றாங்க’ உண்மையாகவே போகணும்னு விரும்பறாங்களா\nஹரிஷ் இந்தக் கேள்வியை சிநேகனிடம் கேட்டாராம். ‘இருந்து பாருங்கள். புரியும்’ என்று சிநேகன் பதிலளித்தாராம். ஹரீஷ் தன்னுடைய போட்டியாளராக ஆரவ்வை கருதுகிறார். (ஆனால் ஆரவ் அவ்வாறு கருதவில்லை என்கிறார்)\n‘இங்க அவருக்கு நல்ல நேம் இருக்கு” என்றதும் சபையினரின் கேலியான கூக்குரல் கேட்டது. “ஆண்களிடமா, பெண்களிடமா” என்றொரு நையாண்டியை வீசினார் கமல்.\nமறுபடியும் அதேதான். ‘ஓவியா’ என்ற பெயரைச் சொன்னதும் விசில் ஒலிகள்.\nகாஜலை எதிர்கொள்வது கமலிற்கே சவாலாக இருந்திருக்க வேண்டும். அந்தளவிற்கு அநாயாசமாக பேசினார் காஜல். இதர நடிகர்கள் போல் கடவுளைப் பார்த்தது போல் எல்லாம் இவர் பம்மவில்லை.\n‘வெளியில் இருந்து வந்திருக்கும் என்னிடம் வாயைப் பிடுங்குகிறார்கள். அது தவறு என்று அவர்களுக்குத் தெரிகிறது. அவர்களின் ஆர்வம்தான் காரணம். ஆனால் உளறி விடுவதற்கு அவர்கள் காரணம் அல்ல. என் மீதுதான் தவறு’ என்று நேர்மையாக தன் கேள்வியை எதிர்கொண்டார் காஜல்.\n“உள்ளிருக்கும் நபர்களில் காயத்ரியும் ரைசாவும் மட்டுமே சட்டென்று மனம்திறந்து உண்மையைப் பேசுகிறார்கள். மற்றவர்கள் நடிப்பது போலத்தான் தெரிகிறது. சிலருக்கு என்னைக் கண்டால் பிடிக்கவில்லை என்று தெரிகிறது” என்று காஜல் சொன்ன பதில் நம்மில் பலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம். உள்ளே சென்றவரின் அனுபவம் உண்மையாக இருக்கக்கூடும்.\nவெளியே இருந்து கொண்டு நாம் வெறுப்பவர்கள், அத்தனை கீழ்மையானவர்களாக இல்லாமலிருக்க வாய்ப்புண்டு. போலவே நல்லவர்களாக நாம் நம்புவர்களும். எல்லாமே காட்சிப்பிழைகளின் மாயத் தோற்றங்கள்.\nகேள்வி பதில் session துவங்கியது. முன்னர் குறிப்பிட்டது போல இதை கமல் நேரடியாக நிகழ்த்தியிருந்தால் சுவாரசியம் கூடியிருக்கும். உண்மைகள் வந்திருக்கலாம். மக்களின் கேள்விகள் புது வரவுகளின் மூலம் வெளியானதால் தீவிரத்தன்மையுடன் அமையவில்லை.\nஎனவே அவரவர்களுக்கான தற்காப்பு ஆட்டங்களுடன் சுயநியாயங்களுடன் மழுப்பலாகவும் தெளிவற்றும் பதில்கள் வெளிப்பட்டன. அவற்றில் நேர்மையும் உண்மையும் எங்காவது இருந்திருக்கலாம். ஒவ்வொருவரின் பதில்களின் உள்ள நம்பகத்தன்மையை சோதிக்க, அவர்களுக்கே அதைக் காட்ட ‘குறும்படம்’ அல்ல, இதுவரையான எபிஸோட்களையே மொத்தமாக போட்டுக் காட்டினால்தான் முடியும்.\nஅந்தளவிற்கு சில பிழைகளை செய்தவர்களாலேயே உணர முடியவில்லை. உணர்ந்தாலும் அதை மறைப்பதில்தான் குறியாக இருக்கிறார்கள். ‘நான் எப்ப ‘கட்டிப்பிடி பாட்டு பாடினேன்’’ என்று வையாபுரி குழம்பியதும் ‘பார்த்தவர்களின் பார்வை அப்படியிருந்திருக்கலாம்’ என்று சமாளித்ததும் ஒரு உதாரணம்.\n(இதைக் கேட்டதும் சுஜாவின் எதிர்வினையைப் பார்க்க பாவமாக இருந்தது. வையாபுரியை ஒரு தந்தையாக நினைத்து பல விஷயங்களை பேசிக் கொண்டிருந்தார். இந்த நிகழ்ச்சியின் மூலம் எத்தனை பாடங்கள் நமக்கு கிடைக்கின்றன)\nசபையின் எதிர்வினை பதிலளிப்பவர்களுக்கும் கேட்கும் படியான ஏற்பாட்டைச் செய்திருக்க வேண்டும். அந்த சத்தங்களே பதிலளிப்பவர்களுக்கு பல விஷயங்களை உணர்த்தியிருக்கக்கூடும்.\n‘கட்டிப்பிடி வைத்தியம் தொடர்பாக சிநேகனிடம் வைக்கப்பட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில் நியாயமாகப் பட்டது. பெண்களுக்கு இது சார்ந்த பிரத்யேகமான எச்சரிக்கையுணர்வு உண்டு. அவர்களால் அந்தத் தொடுதலின் வித்தியாசங்களை நுட்பமாக உணர முடியும். இதுவரையில் சிநேகன் குறித்து எந்தப் பெண்ணும் புகார் சொல்லவில்லை என்கிற அளவில் சிநேகன் உண்மையாகவே ஆறுதல் அளிப்பவராகத்தான் தோன்றுகிறது. எனவே இந்த நோக்கில் அவரைக் கொச்சைப்படுத்துவது முறையல்ல.\n‘கமல் உங்களைத் திருத்த முற்படுவது பிடிக்கவில்லையா’ என்ற காயத்ரியிடம் கேட்கப்பட்டது. ‘என்னைக் கேள்வி கேட்கும் உரிமை என் அம்மாவிற்கு மட்டுமே உண்டு’ என்று முன்பு சொன்ன காயத்ரி. ‘கமல் சொன்னா.. நிச்சயம் 100 சதவீதம் கேட்பேன். அஞ்சு வயது குழந்தை மாதிரி நான். மெல்லமாத்தான் மண்டைல ஏறும். மரமண்டை’ என்றார். இந்த சுயவாக்குமூலத்தை முன்பே தந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.\nகாதலை மிஸ் செய்கிறாரா காயத்ரி\nஆரவ் vs ஹரீஷ்... பிந்து மாதவி vs சுஜா... பிக்கப் ஆகுமா பிக்பாஸ்..\nபரணி, ஓவியா போல இப்போது தனிமை சூழலில் காயத்ரி... என்ன நடக்கும்\nஇந்தக் கேள்விகளை எதிர்கொண்டது நாமாக இருந்திருந்தால் கூட ஏறத்தாழ இப்படித்தான் எதிர்வினையாற்றிருப்போம். மற்றவர்கள் தங்களின் பிழைகளை நேர்மையாகவும் வெளிப்படையாகவும் ஒப்புக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கும் நாம், எத்தனை முறை நாமும் அப்படிச் செய்திருப்போம் என்று சுயபரிசீலனையுடன் யோசித்தால் இது புரியும்.\nஇருந்தாலும் இந்தக் கலந்துரையாடலில் எனக்கு தென்பட்ட ஒரே ஆதங்கம், இந்தச் சமயத்திலாவது இவர்கள் தங்களின் பிழைகளை நேர்மையாக ஒப்புக் கொண்டிருந்தால் அவர்களின் மதிப்பு இன்னமும் உயர்ந்திருக்கும்.\nஜெயகாந்தனின் மேற்கோளை கமல் ஏற்கெனவே குறிப்பிட்டது போல…\n‘சில நேரங்களில்…. சில மனிதர்கள். சில தவறுகள் செய்யத்தான் செய்கிறார்கள். மனிதர்கள்தானே…. தவறுகள் குற்றங்கள் அல்ல… ‘\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\nதமிழ் சினிமாவின் ‘இது அதுல்ல’ காப்பிகேட் சீன்கள் - பார்ட் 2\nஹாலிவுட்டில் இடம்பெற்ற சில மாஸ் மற்றும் காமெடி சீன்களை லைட்டாக பட்டி, டிங்கரிங் பார்த்து தமிழ் சினிமா இயக்குநர்கள் அவர்களது படத்தில் பயன்படுத்திக் கொள்வார்கள். Kollywood copycat scenes part 2\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n``சிவகார்த்திகேயன் பங்கமா கலாய்ப்பார்... மா.கா.பா எவ்வளவு கலாய்ச்சாலும் வாங்கிப்பார்..’’ - அத்தியாயம் 13\n\"25 சூப்பர் ஹீரோக்கள்... ஒரு சூப்பர் வில்லன் தேனோஸ்\n``கார்த்திக்... என்னை கல்யாணம் பண்ணிக்குவீங்களானு கேட்கணும்போல இருக்கு\" - விஜி சந்திரசேகர்\n\" 'சுந்தரபாண்டியன் 2' தயாரிக்கிறேன்; விஜய்சேதுபதி கேரக்டர்ல நடிக்கிறேன்\n\"ஆமாங்க... வருத்தப்படாத வாலிபர் சங்கம் நல்ல படம்தான்’’ - ‘விகடன் பிரஸ் மீட்’ சிவகார்த்திகேயன்\nவிகடன் பிரஸ்மீட்: அஜித்திடம் என்ன பிடிக்காது விஜய்யிடம் என்ன பிடிக்கும்\nமிஸ்டர் கழுகு: பி.ஜே.பி மீது ரஜினி வருத்தம்\nநான் ரம்யாவாக இருக்கிறேன் - 21\n\"வைகோ, சீமான் மோதல் வேதனை தருகிறது” - கலங்கும் திருமா\nஜெயித்தது தோனி... ஜெயிக்க வைத்தது கோலி... ஜஸ்ட் கோலி திங்ஸ்\nதிருடிய மொபைலை அன்லாக் செய்ய திருடர்கள் செய்யும் இன்னொரு திருட்டுத்தனம்... உஷார்\n'நிர்மலா தேவி வாழ்க்கையே ரகசியம்தான்'- காவியன் நகர் மக்கள் சொல்வது என்ன\nமெக்கானிக்குடன் சாலையில் நின்ற போலீஸார்... கதிகலங்கிப்போன இருசக்கர வாகன ஓட்டிகள்\nஜெயித்தது தோனி... ஜெயிக்க வைத்தது கோலி... ஜஸ்ட் கோலி திங்ஸ்\n``மன அழுத்தம் போக்க உங்களை நீங்கள் ஜெயிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்\n``லட்சியத்தை நோக்கி நகர்ந்துகொண்டே இருந்தால் மனஅழுத்தம் இல்லை. மனஅழுத்தம் போக்க உங்களை நீங்கள் ஜெயிக்கக் கற்க வேண்டும்’’ என்கிறார் எழுத்துச் சித்தர் பாலகுமாரன்.\nகருவளையத்தை மறைக்க மேக்கப் வேண்டாம்... இரும்புச்சத்து உணவு போதும்\nகருவளையத்தை மறைக்க மேக்கப் வேண்டாம். எந்தக் காரணத்தினால் உங்களுக்குக் கருவளையம் வந்திருக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டால் அதைச் சரி செய்வது சுலபம்..\nகொடைக்கானல் மெர்க்குரி ஆலை... அன்று நடந்ததும் இன்றைய நிலையும்\nஅவர்கள் குறைக்கவேண்டியதாக அரசு கூறிய மெர்க்குரி அளவு, உண்மையில் குறைக்கவேண்டிய அளவைவிட 20 மடங்கு அதிகம். இது யூனிலிவர் செலவைக் குறைப்பதற்காகச் செய்யப்பட்டது.\nவிகடன் பிரஸ்மீட்: அஜித்திடம் என்ன பிடிக்காது விஜய்யிடம் என்ன பிடிக்கும்\n“இந்த வேலைநிறுத்தம், இந்திய சினிமாவையே கோலிவுட் பக்கம் திருப்ப வெச்சிருக்கு. இதன் மூலமா...\nஜெ. கன்னத்திலிருந்த நான்கு புள்ளிகளும் அவிழாத முடிச்சுகளும்\nமரணத்துக்குப் பிறகு ஜெயலலிதா உடல் ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டபோது, ஜெ. கன்னத்தில் காணப்பட்ட நான்கு புள்ளிகள் குறித்துப் பெரும் சர்ச்சை எழுந்தது. அந்த நான்கு புள்ளிகள் குறித்த மர்ம முடிச்சுகளை அவிழ்ப்பதற்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முயற்சி செய்துள்ளது.\n\"வைகோ, சீமான் மோதல் வேதனை தருகிறது” - கலங்கும் திருமா\nகாவிரிப் பிரச்னை, எஸ.சி, எஸ்.டி வன்கொடுமைத் தடுப்பு சட்டம் ஆகியவற்றுக்கான போராட்டங்களில் மும்முரமாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://mycrankywritings.wordpress.com/2016/10/01/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-04-26T13:43:08Z", "digest": "sha1:GSVDAKQY7BL4AHSLGOL5RTOU4HHLKHTL", "length": 5432, "nlines": 107, "source_domain": "mycrankywritings.wordpress.com", "title": "இருள் சூழ்ந்த | My Cranky Writings", "raw_content": "\nஇருள் சூழ்ந்த என் வாழ்வில்\nகரை வந்து சேர்ந்திடுமோ .\nஅலை இல்லா நிலை வருமோ\nமுன், ஜென்மம் செய்த பாபமெல்லாம்\nபோய் சேரும் காலம் வரை\nமுன்னில் இருள் காண்கின்றேன், அதில் என்றென்றுமாய்\n← புது மழையில் குளிரலையில்\nநான் நாளு வைக்கவா →\nதேர்வு செய் தேர்வு செய் April 5, 2018\nஎன்னுடன் நீ இருப்பாய் March 10, 2018\nநீர் துளிக்குள் March 4, 2018\nஇங்கும் அங்கும் எங்கும் February 25, 2018\nகவரும் விழி அழகே February 18, 2018\nபரிசு பொருள்கள் January 8, 2018\nஇறைவனுடன் கலந்துவிட்டேன் January 5, 2018\nகொஞ்சம் மறந்திருந்தேன் December 16, 2017\nநம்ம ஊர் பால்க்காரன் November 30, 2017\nகழுதைக்கு வந்த யோகம் November 30, 2017\nநாளை மீண்டும் நாளை November 21, 2017\nதூக்கம் வரவில்லை November 6, 2017\nமணல் வருது மணல் வருது October 30, 2017\nஇரவு வெகு நேரம் ஆகியும் October 18, 2017\nமல்லி மொட்டு பூ அணிந்து October 18, 2017\nஉன் விழிகளில் எழுதிய October 12, 2017\nஎங்கிருந்துதான் வந்ததோ October 8, 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} {"url": "http://puthu.thinnai.com/?p=6186", "date_download": "2018-04-26T13:34:00Z", "digest": "sha1:DHB2RNNQIA7L54XTF4BA5YEVBIEHLCBZ", "length": 37400, "nlines": 157, "source_domain": "puthu.thinnai.com", "title": "இந்திய அணுமின்சக்தித் தொழில் நுட்பம் முதிர்ச்சி யானதா ? அணுவியல் இயக்குநர் முதிர்ச்சி பெற்றவரா ? | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஇந்திய அணுமின்சக்தித் தொழில் நுட்பம் முதிர்ச்சி யானதா அணுவியல் இயக்குநர் முதிர்ச்சி பெற்றவரா \nமுன்னுரை: சில வருடங்களுக்கு முன்பு செல்வி அவர்கள் திண்ணையில் (ஜுலை -ஆகஸ்டு 2007) எழுதியது போல், “மிகுந்த பாதுகாப்பு நடவடிக்கைக்கு பெயர்போன செல்வீக ஜப்பானே இப்படி அணு உலைப் பெருவிபத்தில் தவிக்குது என்றால்” நிலையற்ற அரசாங்கம் ஆளும் இந்தியாவில் எப்படிப் பொது மக்களுக்குப் பாதுகாப்பு இருக்கும் என்றே நானும் பலகாலம் நினைத்துக் கொண்டிருந்தேன். சமீப காலமாக இங்கு பத்திரிக்கைகள் மற்றும் பல்வேறு ஊடகங்கள் வாயிலாக வெளிவந்து உறுதிப்படுத்தப்பட்ட செய்திகளையும் உறுதிப்படுத்தப் படாத ஊகங்களையும் பார்க்கும் போதும் படிக்கும்போதும், இது ஒரு பாதுகாப்பற்ற தொழில்நுட்பம் என்ற உணர்வே மேலோங்குகிறது. அணுமின் தொழில்நுட்பம் குறித்து திரு சி. ஜெயபாரதன் அவர்கள் எழுதிய பல்வேறு கட்டுரைகளையும், அசுரன் போன்றோருக்கு பதிலிறுத்து எழுதிய கட்டுரைகளையும் வாசித்திருக்கிறேன். அணு ஆற்றல் தொழில் நுட்பம் என்பது முதிர்ச்சியானதா என்ற கேள்வி ஒருபுறமிருக்கட்டும், அதனை நடைமுறைப் படுத்தும் நம்நாட்டின் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் இன்னபிற சம்பந்தப் பட்டவர்களும் இந்த தருணத்தில் முதிர்ச்சியானவர்களா என்ற கோணத்தையும் கவனத்தில் கொண்டு கட்டுரை எழுத வேண்டுகிறேன்.\nமாற்று எரிபொருளுக்கான முயற்சிகள் உடனடியாக தேவையென்று எல்லோரும் ஒப்புக்கொள்ளும் அதே வேளையில், கடினமான தொழில்நுட்ப விஷயங்களையும் புள்ளிவிபரங்களையும் கொண்டு மட்டுமல்லாது இன்றய இந்தியாவின் அரசியல் மற்றும் சமூக நிலைப்பாடுகளையும் கவனத்தில் கொண்டு எழுதிய உங்கள் கட்டுரையைக் காண ஆவலுடன் உள்ளேன்.” என்று ஆகஸ்டு 9, 2007 திண்ணைக் கடிதம் ஒன்றில் நண்பர் ஆர். பாலா குறிப்பிட்டிருந்தார்.\nஅணுமின்சக்தித் தொழில் நுட்பம் முதிர்ச்சியானதா அணுவியல் இயக்குநர் முதிர்ச்சி பெற்றவரா \nஎன்ற அவரது இரண்டு கேள்விகளுக்கும் பதில் கூறவே இந்தக் கட்டுரையை நான் புதுப்பித்து எழுதுகிறேன். அணு ஆயுத சம்பந்தமான அணுக்கருப் பிளவு எருக்களைத் [Nuclear Fissile Materials Uranium-235, Uraniuam-233 & Plutonium-239] தயாரிக்கும் அணு உலைகளின் கண்காணிப்புகளை இராணுவமும், அரசாங்கமும் தேசீயப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இரகசியமாக நடத்தி வருவதால் அவற்றைப் பற்றி இந்தக் கட்டுரையில் எதுவும் நான் குறிப்பிட விரும்பவில்லை.\nயந்திர யுகத்திலே மனிதரின் பயிற்சியும் சாதனங்களின் செம்மைப்பாடும்\nயந்திர யுகத்திலே முப்பெரும் தீங்குகளால் விபத்துக்கள் உலகெங்கும் அடிக்கடி யந்திர சாதனங்களில் நேர்கின்றன முதலாவது மனிதத் தவறு, இரண்டாவது யந்திரக் கோளாறு, மூன்றாவது புயல், இடிமின்னல், வெள்ளம், சூறாவளி, சுனாமி, பேய்மழை, பூகம்பம், எரிமலை போன்ற இயற்கைச் சீற்றங்கள் முதலாவது மனிதத் தவறு, இரண்டாவது யந்திரக் கோளாறு, மூன்றாவது புயல், இடிமின்னல், வெள்ளம், சூறாவளி, சுனாமி, பேய்மழை, பூகம்பம், எரிமலை போன்ற இயற்கைச் சீற்றங்கள் குறையுள்ள மனிதரும், பழுதுள்ள சாதனங்களும் இருக்கும் வரை ஆகாய விமானத்திலும், அண்டவெளிக் கப்பலிலும், இரயில் பயணத்திலும், அணுமின்சக்தி நிலையத்திலும், ஏனைய தொழிற் சாலைகளிலும் “அபாய எதிர்பார்ப்புகளை” [Risks] உலக மாந்தர் எதிர்நோக்கி இருக்க வேண்டும். செம்மையான பயிற்சி முறைகள் மனிதத் தவறுகளைக் குறைத்துவிடும். அதுபோல் சீரான சாதனங்களும் விபத்துகளைச் சிறிய எண்ணிக்கை ஆக்கிவிடும். ஆனால் கூடியவரை விபத்துக்கள் மனிதராலோ, யந்திரத்தாலோ, இயற்கைச் சீற்றத்தாலோ நேர்ந்தால் யந்திரங்கள் பாதுகாப்பான நிலைக்குச் சுயமாக மாறி, மனிதர் தப்பிக் கொள்ள வழிகள் இருக்க வேண்டும். அதுதான் 21 ஆம் நூற்றாண்டில் யந்திர உலகிலே விஞ்ஞானிகள் மற்றும் பொறியியல் வல்லுநரின் குறிக்கோளாய் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.\nயந்திர யுகத்திலே தம்மைப் பிணைத்துக் கொண்ட உலக நாடுகள் 21 ஆம் நூற்றாண்டிலே தனித்தியங்க முடியாத நிலையில் ஏதோ ஒரு தொப்புள் கொடி இணைப்பால் மாட்டிக் கொண்டுள்ளன செர்நோபில் விபத்தை ரஷ்யா விரும்பியும் ஒளித்து வைக்க முடியவில்லை செர்நோபில் விபத்தை ரஷ்யா விரும்பியும் ஒளித்து வைக்க முடியவில்லை அந்த விபத்தால் வெளியாகிப் பரவிய கதிரியக்கப் பொழிகள் கிழக்கே ஜப்பான் வரையிலும், மேற்கே கனடா வரையிலும் படிந்து விட்டன. ஆ·பிரிக்காவில் தோன்றிய எயிட்ஸ் காமநோய் பரவிச் சென்று உலகில் தாக்காத நாடெதுவும் இல்லை அந்த விபத்தால் வெளியாகிப் பரவிய கதிரியக்கப் பொழிகள் கிழக்கே ஜப்பான் வரையிலும், மேற்கே கனடா வரையிலும் படிந்து விட்டன. ஆ·பிரிக்காவில் தோன்றிய எயிட்ஸ் காமநோய் பரவிச் சென்று உலகில் தாக்காத நாடெதுவும் இல்லை 2001 செப்டம்பர் 11 இல் அமெரிக்காவில் மூர்க்கர் பட்டாளம் வாஷிங்டன், நியூ யார்க் நகரங்களைத் தாக்கியதின் எதிரொலி இப்போது உலக நாடுகள் அனைத்தையும் பயத்துள்ளே தள்ளி விட்டிருக்கிறது. பறக்கும் ஜம்போ ஜெட் விமானம் 737 ஒன்றில் பழுது நேர்ந்து விபத்து ஏற்பட்டு அனைவரும் மரித்தால் அதை வாங்கிப் பயன்படுத்தும் எல்லா உலக நாடுகளும் அதிர்ச்சி அடைகின்றன. யந்திர யுகம் ஒரு போக்கில், ஒரு திசையில் செல்வது. அதற்குப் பின்னோக்கிச் செல்லும் உந்து சக்தி கிடையாது \nதொழிற்புரட்சிக்குப் (1780-1850) பிறகு மின்சக்தி நிலையங்கள் பெருகி அதன் ஆற்றலில் இயங்கும் யந்திரங்கள் ஆயிரக் கணக்கில் ஈசல்கள் போல் தோன்றன. அவற்றில் முக்கியமாக எரி ஆயிலில் இயங்கும் வாகனங்கள், விமானங்கள், ஏவுகணைகள், அண்ட வெளிக் கப்பல்கள் போன்றவை குறிப்பிடத்தக்கவை.. கடந்த நூறாண்டு களாக செம்மையாக இயங்கி வரும் கார் வாகனங்களின் தொழில் நுட்பம் சீராக்கப்பட்டு முதிர்ச்சி நிலை அடைந் துள்ளதை எவரும் மறுக்க முடியாது. அவற்றைப் போல் கோடிக்கணக்கான பேர் அனுதினமும் பயணம் செய்யும் ஆகாய விமானங்களும் சீராக்கப்பட்டு அவற்றின் தொழில் நுட்பமும் முதிர்ச்சி நிலை பெற்றுள்ளதை யாரும் எதிர்த்துச் சொல்ல முடியாது. அந்த வழிமுறையில் உலக நாடுகள் கடந்த 50 ஆண்டுகளாக 900 மேற்பட்ட அணு உலைகள், அணு ஆய்வு உலைகள், அணுமின் உலைகள் ஆகியவற்றை நிறுவி அனுபவம் அடைந்து, தற்போது 400 மேற்பட்ட அணுமின் நிலையங்கள் 30 நாடுகளில் பாதுகாப்பாக அனுதினமும் மின்சாரத்தை பரிமாறி வருகின்றன. அவற்றின் இயக்கங்களைக் கண்காணிப்பதோடு, அவற்றில் விளையும் அபாய நிகழ்ச்சி களையும் நேராக உளவிப் பதிவு செய்து மற்ற நாடுகளுக்கும் 1957 ஆண்டு முதல் பகிர்ந்து வருவது, ஆஸ்டிரி யாவில் உள்ள அகில நாட்டு அணுசக்திப் பேரவை [International Atomic Energy Agency (IAEA)].\n1986 இல் நேர்ந்த செர்நோபில் அணுமின் உலை வெடிப்பு உலக நாடுகளைப் பேரளவில் அதிர்ச்சியில் தள்ளியது. அதனால் உலகெலாம் பரவிய கதிரியக்கப் பொழிகளால் பல நாடுகள் பாதகம் அடைந்தன. அவ்விதம் கவலைப்பட்ட நாடுகள் ரஷ்யாவின் செர்நோபில் விபத்தைத் தீவிர உளவுகள் செய்து தங்கள் அணுமின் உலைகளிலும் பெருத்த மாற்றத்தையும், பயிற்சி முறைகளையும் செம்மைப்படுத்தினார்கள். அதன் விளைவாக 1989 இல் உலக அணு உலை இயக்குநர்கள் அனைவரும் ஒன்று கூடி “உலக அணுமின் உலை இயக்குநர் ஐக்கியப் பேரவையை” WANO [World Association of Nuclear Operation] நிறுவகத்தை ஏற்படுத்தி அணு உலை இயக்கங்களைப் பகிர்ந்து கொண்டார்கள். அத்துடன் உலக நாடுகளின் WANO குழுவினர் ஓரிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை அணுமின் உலைகளுக்கு விஜயம் செய்து, அதன் பாதுகாப்பான இயக்கங்களை உளவிக் கண்காணிப்பும் செய்து தரப்படுத்தியும் வருகிறார்கள்.\nஅணுமின் உலைப் பாதுகாப்புகள் எப்படிக் கடைப்பிடிக்கப் படுகின்றன \nஅணுமின் நிலையப் பாதுகாப்பு நியதி எங்கிருந்து ஆரம்பிக்கிறது முதலில் விஞ்ஞானப் பொறியியற் துறை நிபுணர்கள் பயிற்சியிலிருந்து துவங்குகிறது. அணு உலைக்கெனத் தனித்தனி டிசைன், கட்டுமானம், இயக்கம், பராமரிப்பு நிபுணர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்படுகிறார். 1957 ஆகஸ்டில் பாம்பே அணுவியல் துறைக்குச் சேர்ந்த என்னைப் போல் 250 விஞ்ஞானி, பொறியியல் பட்டதாரிகளுக்கு ஓராண்டு அணுவியற் பயிற்சி அளிக்கப்பட்டது. அணு உலை இயக்கத்துக்குச் சேர்க்கப் பட்ட எனக்கு பெங்களூர் இந்திய விஞ்ஞான கழகத்தில் [Indian Institute of Science, Bangalore] ஆறு மாதங்களும், பாம்பே அணுவியற் பயிற்சிப் பள்ளியில் ஆறு மாதங்களும் சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. அவ்விதம் ஒவ்வோர் ஆண்டும் 200-250 பட்டதாரிகள் மொம்பை அணுவியல் பள்ளியில் தேர்ந்தெடுக்கப்பட்டு பௌதிகம்., இரசாயனம், மேம்பாட்டுக் கணிதம், மற்றும் அணு உலைகளின் பண்பாடு, இயக்கம், பராமரிப்பு, கதிரியக்கம், அணுக்கழிவுகள் பற்றிக் கல்வி புகட்டப் படுகிறது. இந்தியாவிலே அணுவியல் சம்பந்தப்பட்ட எந்தப் பணிக்கும் பயிற்சி இல்லாத பட்டதாரிகளோ, அல்லது பணியாட்களோ வேலையில் புகுத்தப் படுவதில்லை \nஅணுமின் உலைகள் நிறுவனமாகத் தகுதியுள்ள பல இடங்கள் முதலில் உளவாய்வு செய்யப்பட்டு அவற்றில் தகுதி மிக்கத் தளமே தேர்வாகி முடிவு செய்யப்படுகிறது. அத்தகைய தேர்வு ஆய்வுகளில்\nநீர் வசதி, நில அமைப்பு, ஜன நெருக்கம், காலநிலை, மழைப் பொழிவு, சூழ்வெளி, வேளாண்மை விருத்தி, நிலநடுக்கம், வாகனப் போக்குவரது வசதி, கப்பல் வரத் துறைமுக வசதி போன்றவை குறிப்பிடத் தக்கவை. இந்திய அணுசக்தித் துறையகம் [Indian Dept of Atomic Energy (DAE)], இந்திய அணுசக்தி கார்பொரேஷன் [Nuclear Power Corporation India Ltd (NPCIL)] ஆகிய துறையகங்களில் அனுபவமும், பயிற்சியும் பெற்ற டிசைன், கட்டுமான, இயக்கக் குழுவினர் பலர் இருக்கிறார்கள்.\nஅணுசக்தி உலைகள் இயக்கத்துக்குத் தேவையான ஏற்பாடுகள்\nஅணுமின் நிலையத்தில் இயங்கும் முக்கிய ஏற்பாடுகள் [Plant Operating Systems] எவை அனல் மின்சார நிலையத்தைப் [Thermal Power Station] பல முறைகளில் ஒத்ததே அணுமின் நிலையமும்.. அனல்மின் நிலையத்தில் நிலக்கரி எரிசக்தியாகப் பயன்படுகிறது. அதன் கனல் நீராவியை உண்டாக்க ஒரு கொதிகலன் [Boiler] உள்ளது. ஆனால் அணுமின் நிலையத்தில் எரிபொருள் யுரேனியம். அதிலிருந்து வரும் வெப்பத்தால் நீராவி உண்டாக்க அணு உலை அமைக்கப் பட்டுள்ளது அனல் மின்சார நிலையத்தைப் [Thermal Power Station] பல முறைகளில் ஒத்ததே அணுமின் நிலையமும்.. அனல்மின் நிலையத்தில் நிலக்கரி எரிசக்தியாகப் பயன்படுகிறது. அதன் கனல் நீராவியை உண்டாக்க ஒரு கொதிகலன் [Boiler] உள்ளது. ஆனால் அணுமின் நிலையத்தில் எரிபொருள் யுரேனியம். அதிலிருந்து வரும் வெப்பத்தால் நீராவி உண்டாக்க அணு உலை அமைக்கப் பட்டுள்ளது நீராவி அணு உலையில் நேராக உண்டாக்கப் படலாம். அல்லது ஒரு வெப்ப மாற்றிக் கொதிகலன் மூலம் [Heat Exchanger & Boiler] நீராவி உற்பத்தி செய்யலாம். அவ்விதம் உண்டான அழுத்தமடைந்த நீராவி டர்பைன் சுழலிகளை ஓட வைத்து மின்சார ஜனனி மின்சக்தியை உற்பத்தி செய்து பரிமாறப் படுகிறது.\nஅணுமின் நிலையத்தின் முக்கிய பாகங்கள், சாதனங்கள்\n1. வெப்பசக்தியை உண்டாக்கும் யுரேனியக் கோல்கள் நீரில் மூழ்கிய அணு உலை\n2. வெப்பத்தைக் கடத்தும் வெப்பமாறி நீராவிக் கொதிகலன்.\n3. அணு உலை, கொதிகலன் அடங்கிய கோட்டை அரண் (Containment).\n4. மின்சாரம் உற்பத்தி செய்யும் டர்பைன் ஜனனி.\n5. மின்சார அழுத்த மாற்றி & பரிமாறும் மின்சக்திக் கோபுர வடங்கள். [Transmission Tower Cables]\nஅணுசக்தி உலைகள் இயக்கத்துக்குத் தேவையான பாதுகாப்புகள்\n1. அணு உலை இயக்கச் சாதனங்களுக்கு வேண்டிய காப்பு முறைகள்\nஅணு உலையில் முக்கியமாக யுரேனியக் கோல்கள் நீர் நிரம்பிய அழுத்த உலைக்கலனில் (Pressure Vessel) புகுத்தப்பட்டுள்ளன. யுரேனியம் அணுக்கருவை ஒரு நியூட்ரான் பிளக்கும் போது, வெப்பசக்தியும் புதிதாக இரண்டு அல்லது மூன்று நியூட்ரான்களும் எழுகின்றன. பிறகு அவ்விரண்டு நியூட்ரான்கள் யுரேனியத்திப் பிளந்து அதிக வெப்பமுடன் நான்கு நியூட்ரான்கள் தோன்றுகின்றன. புதிதாக உண்டான நியூட்ரான்களின் வேகத்தைக் குறைத்தால்தான் அணுக்கருப் பிளவு தொடர்ந்து ஏற்பட வசதி பிறக்கும். உலைக்கலனில் உள்ள நீர் நியூட்ரான்களின் வேகத்தை மிதமாக்கும் (Water Moderater]. அவ்விதம் தொடரிக்கம் நிகழ்ந்து வெப்பசக்தி மிகுதியாகவும் நியூட்ரான் எண்ணிக்கை கோடிக்கணக்கில் உலைக்கலனில் பெருக்கம் அடையும்.\nநியூட்ரான் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தா விட்டால் அணு உலை வெடித்து விடும். யுரேனியத்தில் எழுகின்ற நியூட்ரான்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த “ஆட்சிக் கோல்கள்” (Control Rods) தேவைப் படுகின்றன. அணு உலை நியூட்ரான்கள் பெருகாமல், வெப்பசக்தி ஆக்கத்தை நிறுத்த வேண்டுமானால், “நியூட்ரான் விழுங்கிகள்” [Neutron Absorbers] அல்லது “தடுப்புக் கோல்கள்” (Shut-off Rods) உலைக் கலனில் நுழைக்கப்பட வேண்டும். மிதமிஞ்சி நியூட்ரான் எண்ணிக்கை பெருகி வெப்பசக்தி வேகமாக ஏறும் போது அணு உலையை உடனே நிறுத்த “அபாயப் பாதுகாப்பு ஏற்பாடு” [Emergency Shutdoen System] ஒன்று தேவைப்படுகிறது. அதை நிறைவேற்ற இரண்டு விதமான முறைகள் உள்ளன. நியூட்ரான் மலை விழுங்கி எனப்படும் “கடோலினியம்” திரவ மூலமாக அணு உலை நீரில் பாய்ச்சப்பட வேண்டும் [Gadolenium Poison Injection System]. அல்லது அதிகமான நியூட்ரான் விழுங்கிக் கோல்கள் உலைக்கலனில் புகுத்தப்பட வேண்டும்.\nSeries Navigation இதுவும் அதுவும் உதுவும் – 5பம்பரம்…\nமலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை – 1\nதமிழ் பெண் கவிஞர்கள் – ஆங்கிலத்தில் – ஆதி மந்தியார் முதல் உமா மஹேஸ்வரி வரை\nஅர்ஜண்ட் வெயிட் லாஸ்.. ஒரு யாத்ரா டிக்கட் ப்ளீஸ்..\nபழமொழிகள் கூறும் உதவி எனும் வாழ்க்கை நெறி\nஜென் ஒரு புரிதல் – பகுதி 19\nஇதுவும் அதுவும் உதுவும் – 5\nஇந்திய அணுமின்சக்தித் தொழில் நுட்பம் முதிர்ச்சி யானதா அணுவியல் இயக்குநர் முதிர்ச்சி பெற்றவரா \nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கோடாரியில் தகர்ப்பாய் (கவிதை -52 பாகம் -1)\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) திருமணப் பாதையில் (கவிதை – 50 பாகம் -5)\nபஞ்சதந்திரம் தொடர் 18 சமுத்திரமும் நீர்க்குருவியும்\nதமிழ் விக்கிப்பீடியா ஒரு ஊடகப் போட்டி\nதோள்களில் அமர்ந்திருக்கும் மரணத்தின் தூதுவன்\nமுகம்மது யூனுஸ் அறிஞர் அண்ணாவை ஹாங்காங்கில் சந்தித்தது பற்றிய உரை\nபிரான்சு கம்பன் கழகத்தின் 10 -ஆம் ஆண்டு விழா\nநானும் பிரபஞ்சனும் கட்டுரை குறித்து சில கருத்துகள்:\nமுன்னணியின் பின்னணிகள் – 14 சாமர்செட் மாம்\nமூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 16\nNext Topic: இதுவும் அதுவும் உதுவும் – 5\n3 Comments for “இந்திய அணுமின்சக்தித் தொழில் நுட்பம் முதிர்ச்சி யானதா அணுவியல் இயக்குநர் முதிர்ச்சி பெற்றவரா அணுவியல் இயக்குநர் முதிர்ச்சி பெற்றவரா \nஇப்படி ஒரு கருத்தை ஒரு மூத்த DAE அதிகாரியே கூறியுள்ளதாக படித்தேன்(http://www.rediff.com/news/2000/nov/23nuke.htm). இதற்கு தாங்கள் என்ன கூறுகிறிர்கள்\nநமது transmission gridகள் 1000 mw unitகளை கையாள்வதற்கு ஏற்ற தரத்துடன் இருக்கிறதா \nகூடங்குளம் இரட்டை 1000 மெகாவாட் அணுமின்சக்தி நிலையம் அந்த அளவு மின்னழுத்தம், ஓட்டம், ஆற்றலை அனுப்ப இயலாத மின்வடங்கள் கொண்டது என்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு கூற்று.\nஅத்தகைய மாபெரும் தவறு அணுமின் உலைத் திட்டத்தில் நேர வழியே இல்லை. அதைக் கூறியவர் யார் எப்போது கூறினார் என்பதை அறிய அவா. அவர் கூறிய ஆண்டு 2011 ஆக நிச்சயம் இருக்க முடியாது.\nஜேபி, அந்த தகவல், 23 நவம்பர் 2000 கூற்று. பழைய தகவல்கள் இருப்பின் , புதுத் தகவலை தெரிந்து கொள்ள வேண்டியது இணைய உபயோகிப்பாளரின் பொறுப்பு. சிவா அது 10 ஆண்டு மேல் பழைய நிலைப்பாடு.\nAuthor: சி. ஜெயபாரதன், கனடா\nCategory: அரசியல் சமூகம், அறிவியல் தொழில்நுட்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://puttalamtoday.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87/", "date_download": "2018-04-26T13:33:18Z", "digest": "sha1:LZSZZRWX5677SBIP464HF66NY6EN5RRL", "length": 7026, "nlines": 56, "source_domain": "puttalamtoday.com", "title": "“பெண்கள் வாகனம் ஓட்டுவதே ” கொழும்பில் பகல் நேர ட்ராபிக் புளக்குக்கு காரணம் !! அரசாங்கம் தகவல் – PuttalamToday", "raw_content": "\n“பெண்கள் வாகனம் ஓட்டுவதே ” கொழும்பில் பகல் நேர ட்ராபிக் புளக்குக்கு காரணம் \nபகல் நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதற்கான காரணத்தை அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.\nபெண்கள் வாகனம் ஓட்டுவதால் வாகன நெரிசல் ஏற்படுவதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅண்மையில் வாகன நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக ராஜகிரியவில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட போக்குவரத்து திட்டம் தொடர்பில் அமைச்சரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.\nபகல் நேரங்களில் பாடசாலைகள் நிறைவடையும் காலப்பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு பெண் சாரதிகள் தான் பிரதான காரணமாகியுள்ளதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஅந்த போக்குவரத்து திட்டம் ஆரம்பிக்கப்பட்ட பகுதியில், குறித்த திட்டம் மார்ச் மாதம் 12ம் திகதியில் இருந்து 19ம் திகதி வரை செயற்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nB.M.S. college சாரம் திருவிழா: பெலூன் டான்ஸ் ஆடிக் கலக்கிய முஸ்லிம் யுவதிகள்- எல்லை மீறுகிறார்களா..\nBreaking : சவூதி மன்னரை கவிழ்க்க முயற்சி.. அரண்மை அருகே கடும் துப்பாக்கி சூடு – பங்கருக்குள் கொண்டு செல்லப்பட்டார் சல்மான் posted on April 22, 2018\nசவூதியின் கொடூர செயலால் உலகமே அதிர்ச்சியில் \nBreaking : 12 வயதுக்கு உள்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு தூக்குத் தண்டனை மோடியின் அமைச்சரவை அவசர சட்டம் பிறப்பிப்பு posted on April 21, 2018\nBreaking :கண்டி கலவரங்களை வழி நடத்திய போலிஸ் இன்ஸ்பெக்டர், சார்ஜென்ட் மேஜர் கைது செய்யப்படவுள்ளார்கள் posted on April 21, 2018\nதலைமைப் பற்றி தீர்மானிக்கும் ஐக்கியத் தேசியக் கட்சியின் முக்கியக் கூட்டம் இன்று \nகண்டிக் கலவரத்தை முன்னின்று நடத்திய இரு பிரதேச சபை உறுப்பினர்கள் தொடர்ந்தும் தேடப்படுகிறார்கள்..\nபச்சை கறிவேப்பிலை சாப்பிடுவதன் மூலம் கொலஸ்ட்ரோலை கட்டுக்குள் வைக்கலாம் இதய சத்திர சிகிச்சை நிபுணர் Dr.இலாஹி\nநகர, பிரதேச சபை சேர்மன்களின் ஆட்டம் எல்லாம் 2 வருடங்களுக்கு மட்டுமே.. அதன் பிறகு உறுப்பினர்களின் காலில் விழுந்தாக வேண்டும்\nமுன்னாள் நேவி தளபதி சந்தன பிரசாத் தப்பிச் செல்ல பாதுகாப்புச் சபை பிரதானி ரவீந்திர விஜேகுணவர்தன 5 லட்சம் கொடுத்தார்.. C.I.D. பொஸ் சான் குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthinappalakai.net/2017/06/08/news/23807", "date_download": "2018-04-26T13:10:04Z", "digest": "sha1:XOS53UQNA5OU7EOSJLXTWNVPVBL2AEPN", "length": 13096, "nlines": 104, "source_domain": "www.puthinappalakai.net", "title": "லண்டன் தாக்குதல்களைக் கண்டிக்கிறது நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nலண்டன் தாக்குதல்களைக் கண்டிக்கிறது நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்\nJun 08, 2017 | 1:58 by புதினப்பணிமனை in செய்திகள்\nலண்டன் தொடர் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், அரசுகளும், அரசல்லாதோரும் அப்பாவிப் பொதுமக்கள் மீது நடத்தி வரும் வன்செயல்கள் குறித்து, செஞ்சிலுவைச் சங்கத்தின் 1977ம் மாநாட்டினை மீள நடத்துமாறு அழைப்பு விடுத்துள்ளது.\nஇது தொடர்பில் பிரதமர் வி.உருத்திரகுமாரன் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :\nமானிட விழுமியங்களைக் கிஞ்சிற்றும் மதிக்காமல் லண்டனில் அப்பாவி மக்களைப் படுகொலை செய்ததும் காயப்படுத்தியதுமான வெறிச்செயலை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.\nகடைசியாக நடந்துள்ள இத்தாக்குதலுக்கு சற்று முன்னர்தான் மான்செஸ்டரில் இசை நிகழ்ச்சி ஒன்றில் நடந்த கொடூரமான குண்டுவெடிப்பில் இருபதுக்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டார்கள். பிரித்தானிய மக்களுக்கும், தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து தவிக்கும் குடும்பங்களுக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறது.\nஅண்மைய ஆண்டுகளில் உலகெங்கிலும் பல்வேறு அரசுகளும் அரசல்லாத செயற்பாட்டாளர்களும் நடத்தி வரும் வன்செயல்களிலும் போர்முறையிலும் அப்பாவிக் குடிகள் கொல்லப்படுவது வாடிக்கையாகி விட்டது. இது போர்வீரர் அல்லாதாருக்கும் பொதுமக்களுக்கும் எதிராக எந்நிலையிலும் வன்முறை ஏவுவதைத் தடை செய்யும் ஜெனீவா ஒப்பந்தங்களையும், 1977 வகைமுறை விதிகளையும், பிற பன்னாட்டு உடன்படிக்கைகளையும் அறவே மீறுவதாகும்.\nஇன்று, அரசினர் ஆயினும் அரசல்லாதார் ஆயினும், கொடுந்தாக்குதல் நடத்துவோர் குழந்தைகளுக்கும் மருத்துவ மனைகளுக்கும் பாடசாலைகளுக்கும் தேவாலயங்களுக்கும் உள்நாட்டுப் புலம்பெயர்ந்தோரின் முகாம்களுக்கும் கூட கருணை காட்டுவதில்லை என்பது வருத்தத்துக்குரிய உண்மை. இவையெல்லாம் பன்னாட்டுச் சட்டத்தின் படி கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டிய போர்க் குற்றங்கள், மானிடத்துக்கு எதிரான குற்றங்கள்.\nபன்னாட்டு செஞ்சிலுவைச் சங்கம் 1977 கூடுதல் வகைமுறைகளைத் தோற்றுவித்த மாநாடு போல் மீண்டும் ஒரு மாநாடு கூட்டுவதற்கு இதுதான் சரியான தருணம். அந்த 1977 வகைமுறைகள்தாம் எவ்வகைப் போர்முறையிலும் கடைப்பிடிக்க வேண்டிய சமர்க்கள நெறிகளை விதிக்கும் அனைத்துலக உடன்படிக்கைகளுக்கு அரசினரும் அரசல்லாதாரும் தம் கடப்பாட்டை மீளுறுதி செய்யுமாறு அழைப்பு விடுத்தன. அதேபோது இந்த விதிகளை மீறிச் செயல்படும் எல்லாத் தரப்புகள் மீதும் திறமான விதத்தில் வழக்குத் தொடுப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.\nஅரசல்லாத செயற்பாட்டாளர்களும் அரச முகமைகளும் நடத்தும் வன்செயல்களுக்கு நடுவே சிக்கித் தவிக்கும் அப்பாவிப் பொதுமக்களின் உயிர்காக்க வேண்டும் என்பதோடு, மனிதகுலம் முழுவதற்கும் நீதியான, அமைதியான எதிர்காலம் அமைவதை உறுதி செய்யவும் வேண்டும் என்றால் இந்த முன்னெடுப்புகள் அவசர அவசியமாகும் எனத் பிரதமர் வி.உருத்திரகுமாரனின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nTagged with: படுகொலை, போர்க் குற்றங்கள், வி.உருத்திரகுமாரன்\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் தொடர்ந்து சரியும் சிறிலங்கா ரூபாவின் மதிப்பு – வெளிநாட்டு கடன்சுமை அதிகரிப்பு\nசெய்திகள் திருகோணமலையில் அமெரிக்காவின் பாரிய மிதக்கும் மருத்துவமனை\nசெய்திகள் தமிழ்தேசியம்: ‘தமிழ்நாட்டின் உரிமைகளை எப்போது மீட்க முடியும்\nசெய்திகள் “எமது கதைகளை நாங்கள்தான் கூற வேண்டும் “- ‘தமிழர் மூவர்’ விருது பெற்ற றீற்றா பரமலிங்கம்\nசெய்திகள் இளைஞர் மாநாட்டைக் கூட்டுகிறார் முதலமைச்சர் விக்னேஸ்வரன்\nகட்டுரைகள் இரா.சம்பந்தன் – ‘சேர் பொன். இராமநாதனின் மறுஉருவம்’ 0 Comments\nசெய்திகள் காணாமல் போனோர் பணியக உறுப்பினர்களை வேண்டா வெறுப்பாக நியமித்த சிறிலங்கா அதிபர் 0 Comments\nசெய்திகள் தொடர்ந்து சரியும் சிறிலங்கா ரூபாவின் மதிப்பு – வெளிநாட்டு கடன்சுமை அதிகரிப்பு 0 Comments\nசெய்திகள் திருகோணமலையில் அமெரிக்காவின் பாரிய மிதக்கும் மருத்துவமனை 0 Comments\nசெய்திகள் நல்லிணக்கச் செயல்முறைகள் குறித்து சிறிலங்காவுடன் கனடா பேச்சு 0 Comments\nNakkeeran on ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\nShan Nalliah on 10 நிபந்தனைகளின் அடிப்படையிலேயே ரணிலுக்கு ஆதரவு – செல்வம் அடைக்கலநாதன்\nShan Nalliah on கூட்டமைப்புடன் எந்த உடன்பாடும் கையெழுத்திடப்படவில்லை – மனோ கணேசன்\n‌மன‌ோ on 10 நிபந்தனைகளின் அடிப்படையிலேயே ரணிலுக்கு ஆதரவு – செல்வம் அடைக்கலநாதன்\nChenavi L on நம்பிக்கையில்லா பிரேரணை படுதோல்வி\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.techtamil.com/editor-pages/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA/", "date_download": "2018-04-26T13:09:25Z", "digest": "sha1:X2TEXRGXJ7MZ5WR74ORBDYABDN2HMM3T", "length": 17492, "nlines": 139, "source_domain": "www.techtamil.com", "title": "விஞ்ஞானம் பற்றி சரியாக புரியாதவர்களின் ஒருவகை மெஞ்ஞானம் “பேய்” – TechTamil News", "raw_content": "\nContact / அறிமுகம் / தொடர்புக்கு\nவிஞ்ஞானம் பற்றி சரியாக புரியாதவர்களின் ஒருவகை மெஞ்ஞானம் “பேய்”\nவிஞ்ஞானம் பற்றி சரியாக புரியாதவர்களின் ஒருவகை மெஞ்ஞானம் “பேய்”\nசமான்யர்கள் பேய் பற்றிக்கொண்டுள்ள அபிப்பிராயம் என்ன\nபேய் என்பது ஒருவர் இறந்த பின்பு அவரின் எதோ ஒரு வகை எச்சம் இருந்து அவர் வசித்த இடங்களில் அலைந்து கொண்டிப்பதான ஒரு வகை நம்பிக்கை. குறிப்பாக தற்கொலை செய்து கொண்டவர்கள், விபத்து அல்லது கொலை போன்றவற்றால் அவருடைய இறப்புக்காலம் வருவதற்கு முன்பாகவே மரணமடைந்தவர்கள் அவர்கள் இறப்புக் காலம் வரும் வரை பேயாக அலைந்து கொண்டிருப்பார்கள் என்கிற நம்பிக்கை ஆசிய நாடுகளில் குறிப்பாக இலங்கை,இந்தியாவில் பெரும்பான்மையானவர்களிடம் இருந்து வருகிறது. இது ஒரு மூட நம்பிக்கை என்றாலும் ஆன்மீக நம்பிக்கை கொண்டவர்களிடையே இது அதிக அளவில் இருக்கிறது.\nபேய் பற்றி விஞ்ஞானம் என்ன சொல்கிறது\nபேய் என்பது மனிதனின் ஒரு கற்பனை உருவாக்கம் மட்டுமே. பேய் மீது அதீத நம்பிக்கை கொண்ட மனிதர்கள், அவர்களின் நரம்புத்தளர்ச்சியாலும், இருதய குறைபாட்டாலும்(heartWeek) உணரப்படக்கூடிய ஒரு காந்தப்புலத்தின் வெளிப்பாடு.\nஇங்கிலாந்து நாட்டு மனோதத்துவம் மற்றும் நரம்பியல் வல்லுநர் பிரைட்லைட் [Bridelite], காந்தவியல் மின்புலம்மூலம் ஆராய்ச்சி நடத்தி, பேய், பிசாசு இல்லை என்று உறுதி செய்துவிட்டார். அதை மக்களுக்கு உணர வைப்பதற்காக பேய், பிசாசு இருப்பதாகக் கூறப்படும் தற்போது புழக்கத்தில் இல்லாத 800 வருட பழங்காலக் கட்டடம் ஒன்றில் பாதிக்கப்பட்டவர்களைக் கொண்டு, ஆராய்ச்சியில் ஈடுபட்டார். அதில் பேய் மற்றும் பிசாசு பிடித்தவர்கள், தங்களுக்குப் பேய் பிடித்தபோது திடீர் சத்தம் கேட்டதாகவும், இன்னும் ஒரு சிலர் குழந்தை அழுவதுபோல சத்தம் கேட்ட தாகவும், வேறு சிலர் திடீரெனத் தன்னை யாரோ தொட்டுவிட்டு மறைந்துவிட்டது என்றும் கூறினார்கள். சிலர் கூறியது மட்டுமல்லாது அந்தக்கட்டித்தில் மரணித்த சிலரின் சுபாவங்களைப்போல் தாங்களும் நடந்து கொண்டார்கள்.\nஇவர்களை வைத்து ஆராய்ந்த பிரைட்லைட் : பேய், பிசாசு இருப்பதாகக் கூறப்படும் இடத்தில் இருந்து வழக்கத்திற்கு மாறான காந்த புலம் வெளிப்பட்டிருக்கிறது. மூளையில் சில நரம்புகள் பாதிக்கப்பட்டவர்கள் இந்த இடங்களுக்குச் செல்லும்போது அல்லது அதிகமாக உணர்ச்சி வசப்படுகிறவர்கள் அந்த இடத்திற்குச் செல்லும்போது வழக்கத்திற்கு மாறான காந்தபுலம் மேற்கூறிய பிரமைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த காந்தப்புலத்தின் தாக்கத்தினால் பேய்மீது கொண்ட அதீத (நம்பிக்கை) பயத்தினாலோ சிலர் தங்கள் மீது பேய் பிடித்துள்ளது என்று எண்ணி இறந்த ஒருவரின் சுபாவங்களை வெளிப்படுத்துகிறார்கள். எனவே, பேயோ, பிசாசோ அதைச் செய்யவில்லை என்று கூறியதோடு நின்றுவிடாமல் விஞ்ஞானக் கருவிகளுடன் அவர்களுக்கு அதை நிரூபித்தும் காண்பித்தார்.\nஅப்போது ஒருவர் பேய் விரட்ட என விஷேடமாக கைதேர்ந்தவகள் சிலர் பேய் பிடித்தவர்களை சாதாரண நிலைக்கு கொண்டு வருகிறார்களே, அது எவ்வாறு சாத்தியமாகிறது. என கேட்டபோது, அதற்கு அவர் அளித்த விளக்கம்: ஆமாம் உண்மைதான். நீங்கள் குறிப்பிடும் நபர்கள் செய்வதும் உடல்சமநிலையை பேனுவதற்கான ஒரு வழிமுறையே, அவர்கள் பாதிக்கப்பட்டவர்களின் நரம்புகளின் உணச்சிகளைத்தூண்டி, பாதிக்கப்பட்ட நரம்புகளை மீள் இயங்கச்செய்து அவர்களை சுயநிணைவுக்கு கொண்டுவருகிறார்கள்.\nஇதுவரை பேய் உள்ளதென எந்த ஒரு தகுந்த முறையிலும் (மந்திர ஆசாமிகளின் செயல்கள்) நிரூபிக்கப்படவில்லை. ஆனால் பேய் என்பது ஒரு கற்பனை உறுவாக்கம் என்று விஞ்ஞானம் நிரூபித்து விட்டது. எனவே நாமும் பேய் பற்றிய டமூட நம்பிக்கையை புறந்தள்ளி, இவ்ஆய்வின் பிரகாரம் பேய் என்பது மனிதனின் ஒரு கற்பனை உருவாக்கம் . என்ற முடிவுக்கு வருவதோடு நின்று விடாமல். எப்போதும் மணத்தைரியத்தோடு இருந்தால், காந்தசக்தி மட்டுமல்ல வேறு எந்த சக்தியாலும் எம்மை எதுவும் செய்துவிட முடியாது.\nமழையால் வெள்ளத்தால் பாதிக்கபட்டவர்களின் நலன் கரு...\nமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு உதவி செய்யும் விதமாக கூகுள் மற்றும் முகநூலுக்கு அடுத்தபடியாக ஸ்கைப்பும் இந்த பட்டியலில் சேர்ந்துள்ள...\nபைத்தியம் பிடித்த பிரனாப்: புதிய சேவை வரி அறிமுகம்...\nவெளிநாட்டு பணம் அதிக அளவில் நம் நாட்டிற்கு வந்தால் தான் குழிக்குள் சென்று கொண்டிருக்கும் இந்தியப் பொருளாதாரத்தை காப்பாற்ற முடியும். ஆனால் தனிமனிதர் எ...\nபேஸ் டைரக்டர் உதவி கொண்டு சிறந்த காட்சிகளை படம் ...\nபெரும்பாலும் படபிடிப்பு நேரங்களில் நடிகர் நடிகைகள் தங்கள் பயிற்சி செய்து பார்த்த காட்சிகள், கேமரா முன் நடிக்க செல்கையில் உயிரோட்டமில்லாமல் போய் ...\nஎனக்கு லஞ்சம் வேண்டாம் – I dont beg , dont...\nஎந்த அரசாங்க ஊழியருக்காவது இப்படி ஒரு அறிவிப்பு பலகையை தமது மேஜை மீது வைக்கும் அளவிற்கு ரோசம் / சுய மரியாதை இருக்கிறதா\nசிரிக்க சிந்திக்க இதோ சில விளம்பரங்கள்...\nபக்தி முத்திப் போனால் இப்படித்தான் ஆகுமோ. {செய்தி: மரங்களை அழித்தோமேயானால் பின்பு இந்த நிலைமை தான்} வாழ்க்கையை முடிக்கும் வழிகள் சில ஆயிரம் என்றால...\nவெற்றியைத் தழுவிய செயற்கை கோள்\nஅமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகள் இணைந்து அமைத்த சர்வதேச விண்வெளி ஆய்வகத்துக்கு ‘ஸ்பேஸ் எக்ஸ்’ ராக்கெட் மூலமாக பருவநிலை மாற்றத்தை ஆய்வுசெய்யும் செய...\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nஉங்களின் மொபைலின் IMEI நம்பரை வைத்து திருடிய மொபைலை மீட்க\nபங்குச் சந்தைக்குள் நுழைந்தது Facebook\nஅபோகாலிப்டோ படம் மாதிரி முழு சூரிய கிரகணம், சந்திர கிரகணம் எப்போ தமிழ்நாட்டில்…\n​கழிப்பறை தொட்டியிலும், கருவறையிலும் துன்பப்படுவோரைக் காப்போம்.\nவிண்வெளி அறிவியலில் ஒரு புதிய மைல்கல் \n500ரூ , 1000ரூ ஒழிப்பு உங்களை எப்படி பாதிக்கும்\nபிளேஸ்டேஷன் VR மூலம் நாசாவின் விண்வெளி ரோபோக்களுக்கான பயிற்சி :\nதள்ளி நின்று தீயணைக்கும் ரோபோட்டுகள் :\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nஅபோகாலிப்டோ படம் மாதிரி முழு சூரிய கிரகணம், சந்திர கிரகணம்…\n​கழிப்பறை தொட்டியிலும், கருவறையிலும் துன்பப்படுவோரைக்…\nவிண்வெளி அறிவியலில் ஒரு புதிய மைல்கல் \n500ரூ , 1000ரூ ஒழிப்பு உங்களை எப்படி பாதிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.unmaikal.com/2014/10/20000.html", "date_download": "2018-04-26T13:18:32Z", "digest": "sha1:ZDCLEBTVBJNEWOUYKNZJNGMBO6KCC7UA", "length": 27270, "nlines": 429, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: 20,000 குடும்பங்களுக்கு நாளை காணிகள் பகிர்ந்தளிப்பு காணிகள் கையளிக்கப்பட வேண்டுமென்ற வட மாகாண தீர்மானம் அரசியலமைப்புக்கு முரணானது", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nமண்சரிவில் உயிர் இழந்தவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள...\nபிரான்சில் மருத்துவ கலாநிதி பட்டம் பெறும் இலங்கை வ...\nஜனாதிபதி மஹிந்த ரஜாபக்ஷ அவர்கள் கொஸ்லந்த நிலச்சரிவ...\nகே.ஜி.கண்ணபிரான் நினைவு சொற்பொழிவு - இலங்கை வடக்கு...\n6 லயன்கள் புதையுண்டன: 400 பேர் மாயம்\nமக்கள் நலத் திட்டங்களை நிராகரித்து வடமாகாண சபை எல்...\nபிரான்ஸ் பாடுமீன் அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் க...\nஅனகாரிக தர்மபாலவுக்கு இந்தியாவில் முத்திரை\nபழம்பெரும் தமிழ் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் காலமான...\nஇலங்கையின் மிகச்சிறந்த நூல் நிலையத்துக்கான விருதுக...\n'மலையக வீடு, காணி உரிமையில் தலைவர்களுக்கு அக்கறை இ...\n2015: வரவு செலவுத் திட்டம் நாளை சபையில் சமர்ப்பிப்...\nகிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேரவை தேர்தல்: கோபிந...\nஉலகின் மூன்றில் ஒரு பெண் கைதிகள் அமெரிக்க சிறைகளில...\nக.பொ.த (சா/த) பரீட்சைகள் டிசம்பர் 09 இல் ஆரம்பம்\nவாழ்வின் எழுச்சியின் 6 ஆம் கட்ட மண்முனை வடக்கு பிர...\nயாழில் 'புகையிரத நகரம்': பணிகள் ஆரம்பம்\nஅண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் கோயில் கொள்ளைகளின் ச...\nஞானசார தேரருக்கு எதிராக வழக்கு\nவாகரையில் வாழ்வின் எழுச்சி ஆறாம் கட்ட ஆரம்ப நிகழ்வ...\nவடமாகாண சபை படும்பாடும் முதலமைச்சரின் பெண்களை இழி...\nஅணு ஆயுதங்களை சுமந்து செல்லும் ‘நிர்பய்’ ஏவுகணை சோ...\nவட மாகாண சபை 24 உப்பினர்களும் இராஜினாமா\nஜெயலலிதாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது உச்ச நீதி...\nஐ.நா. பாதுகாப்புச் சபை அங்கத்துவத்திற்கு துருக்கி,...\nயாழ்தேவி ~யுத்த தாங்கிகளின் இணைப்பென்ற மனநிலையில் ...\nமட்/வின்சன்ட் மகளிர் பாடசாலை மாணவிகள் பலப் பரீட்சை...\n“திரிவுபடுத்தப்படும் அஹ்லுஸ்ஸுன்னாவல் ஜமாஅத் கொள்க...\nஎல்லாவித தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்தும் யோச...\nமாமேதை அம்பேத்கார் காட்டிய வழி\nநான் மேயரானால் மட்டக்களப்பை தத்தெடுப்பேன்\n140 வது சர்வதேச அஞ்சல் தினம் வாழ்த்துச் செய்தி முன...\nஜனாதிபதி முறைமையை மாற்ற தயார்: மஹிந்த\nவைக்கோல் பட்டடை நாய் போல வடமாகாண சபை\nயாழ்தேவி ரயில் சேவை, 24 வருடங்களுக்கு பின்னர்\nயாழ். நகருக்கு இன்று முதல் யாழ்.தேவி\nTNA பதியப்பட அல்ல கலைக்கப்பட வேண்டும்\nஅரசியல் கட்சியாகப் பதிவு செய்யும் விடயத்தில் பற்றி...\nபிரான்ஸ் எழுத்தாளர் மோதியானோவுக்கு 2014 இலக்கிய நோ...\nஉலகின் பொருளாதார வல்லரசு: அமெரிக்காவை முந்தியது சீ...\n20,000 குடும்பங்களுக்கு நாளை காணிகள் பகிர்ந்தளிப்ப...\n50,000 மாணவர்களை ஆசிரிய உதவியாளர்களாக நியமிக்க அரச...\nமட்/மகிழடித்தீவு சரஸ்வதியாக வித்தியாலயத்தின் ஆசிரி...\n'10,000 பெண் போராளிகள் உட்பட 50,000 போராளிகளை நான...\nயாழ்.தேவி ரயில் சேவை சில தினங்களில் ஆரம்பம்: இத்தா...\nஇன்று மட்டக்களப்பில் இந்திய சுப்பர் சிங்கர்\nமகிந்த சிந்தனையை நிறைவேற்றவே மாவட்ட அபிவிருத்தி க...\nஅஹிம்சையை உலகுக்கு அறிமுகப்படுத்தி உண்மையே கடவுளென...\nமுதியோர் பராமரிப்பு: இலங்கை முன்னிலை; வடக்கில் நில...\n20,000 குடும்பங்களுக்கு நாளை காணிகள் பகிர்ந்தளிப்பு காணிகள் கையளிக்கப்பட வேண்டுமென்ற வட மாகாண தீர்மானம் அரசியலமைப்புக்கு முரணானது\nயுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வட பிராந்திய மக்களின் காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதற்காக காணி உரிமையற்ற 20 ஆயிரம் குடும்பங்களுக்கு நாளை (12) ஜனாதிபதியினால் காணி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட இருப்பதாக பிரதி காணி அமைச்சர் சிறிபால கம்லத் தெரிவித்தார். 28 பிரதேச செயலகங்களில் வாழும் மக்களுக்கு இவ்வாறு காணிகள் வழங்கப்படுகின்றன.\nஇதேவேளை வடக்கில் இராணுவத்தின் பிடியிலுள்ள பொதுமக்களின் காணிகளை இந்த வருட இறுதிக்குள் மீள கையளிக்கவேண்டும் என்று வட மாகாண சபையில் நிறை வேற்றப்பட்ட தீர்மானம் அரசியலமைப்புக்கு முரணானது என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.\nஇதற்கு முன்னரும் வட மாகாண சபையில் யாப்புக்கு முரணான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக குறிப்பிட்ட அமைச்சர், தேசிய பாதுகாப்பிற்காகவே தனியார் காணிகள் சுவீகரிக்கப்படுவதாகவும் தேசிய பாதுகாப்பு விடயத்தில் எதுவித இணக்கப்பாடும் கிடையாது என்றும் தெரிவித்தார்.\nஅமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டின்போதே அமைச்சர்கள் இதனைத் தெரிவித்தனர்.\nஇங்கு கருத்துத் தெரிவித்த காணி பிரதி அமைச்சர் சிறிபால கம்லத்; நல் லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைக் கமைய வடக்கு கிழக்கு மாகாண காணி பிரச்சினைகளுக்கு தீர்வுகாண விசேட திட்டம் முன்வைக்கப்பட்டது. இதற்காக காணிக் கச்சேரிகள் நடத்தப்பட்டு காணி அனுமதியற்ற குடும்பங்களுக்கு காணி அனுமதிப்பத்திரம் வழங்க திட்டமிடப்பட்டது.\nமன்னாரில் 7202 குடும்பங்களுக்கும் வவுனியாவில் 4228 குடும்பங்களுக்கும் கிளிநொச்சியில் 3886 குடும்பங்களுக்கும் முல்லைத்தீவில் 3642 குடும்பங்களுக்கும் யாழ்ப்பாணத்தில் 1001 குடும்பங்களுக்கும் காணி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட உள்ளன என்றார். இதேவேளை வட மாகாண சபை தீர்மானம் குறித்து எழுப் பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல,\nவட மாகாண சபையில் யாப்புக்கு முர ணான பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட் டுள்ளன 13ஆவது திருத்தத்துக்கு உட்பட்ட தாகவே அவற்றின் தீர்மானங்கள் இருக்க வேண்டும். ஆனால் தேசிய பாதுகாப்பிற்கா கவே இராணுவம் காணிகளை கையேற்கிறது என்றார்.\nவடக்கு அதிவேக நெடுஞ்சாலையின் என்டேரமுல்லையில் இருந்து கலகெதர வரையான வீதியை 8 பகுதிகளாக பிரி த்து நிர்மாணிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ரம்புக்கன, கலகெதர இடையிலான 18 கிலோ மீட்டர் தூர பகுதிக்காக 19 ஆம் திகதி அடிக்கல் நாட்டப்பட இருப்பதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரி வித்தார். தற்பொழுது காணிகளை அடையாளங்கண்டு சுவீகரிக்கும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.\nஎன்டேரமுல்லை வெயங்கொட (28 கி. மீ), வெயங்கொட மீரிகம (16 கி. மீ), மீரிகம- நாகலகமுவ (18 கி.மீ) நாகலகமுவ- எலகொலதெனிய (20 கி. மீ) எலகொலதெனிய -மெத்தகெடிய (16.9 கி.மீ) மெத்தகெடிய - கலேவல (19 கி. மீ) பொதுஹர- ரம்புக்கன (17.5 கி.மீ) ரம்புக்கன - கலகெதர (18 கி.மீ) என பிரித்து தனித்தனியாக ஒப்பந் தக்காரர்களுக்கு வழங்கப்பட உள்ளது என்றார்.\nமண்சரிவில் உயிர் இழந்தவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள...\nபிரான்சில் மருத்துவ கலாநிதி பட்டம் பெறும் இலங்கை வ...\nஜனாதிபதி மஹிந்த ரஜாபக்ஷ அவர்கள் கொஸ்லந்த நிலச்சரிவ...\nகே.ஜி.கண்ணபிரான் நினைவு சொற்பொழிவு - இலங்கை வடக்கு...\n6 லயன்கள் புதையுண்டன: 400 பேர் மாயம்\nமக்கள் நலத் திட்டங்களை நிராகரித்து வடமாகாண சபை எல்...\nபிரான்ஸ் பாடுமீன் அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் க...\nஅனகாரிக தர்மபாலவுக்கு இந்தியாவில் முத்திரை\nபழம்பெரும் தமிழ் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் காலமான...\nஇலங்கையின் மிகச்சிறந்த நூல் நிலையத்துக்கான விருதுக...\n'மலையக வீடு, காணி உரிமையில் தலைவர்களுக்கு அக்கறை இ...\n2015: வரவு செலவுத் திட்டம் நாளை சபையில் சமர்ப்பிப்...\nகிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேரவை தேர்தல்: கோபிந...\nஉலகின் மூன்றில் ஒரு பெண் கைதிகள் அமெரிக்க சிறைகளில...\nக.பொ.த (சா/த) பரீட்சைகள் டிசம்பர் 09 இல் ஆரம்பம்\nவாழ்வின் எழுச்சியின் 6 ஆம் கட்ட மண்முனை வடக்கு பிர...\nயாழில் 'புகையிரத நகரம்': பணிகள் ஆரம்பம்\nஅண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் கோயில் கொள்ளைகளின் ச...\nஞானசார தேரருக்கு எதிராக வழக்கு\nவாகரையில் வாழ்வின் எழுச்சி ஆறாம் கட்ட ஆரம்ப நிகழ்வ...\nவடமாகாண சபை படும்பாடும் முதலமைச்சரின் பெண்களை இழி...\nஅணு ஆயுதங்களை சுமந்து செல்லும் ‘நிர்பய்’ ஏவுகணை சோ...\nவட மாகாண சபை 24 உப்பினர்களும் இராஜினாமா\nஜெயலலிதாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது உச்ச நீதி...\nஐ.நா. பாதுகாப்புச் சபை அங்கத்துவத்திற்கு துருக்கி,...\nயாழ்தேவி ~யுத்த தாங்கிகளின் இணைப்பென்ற மனநிலையில் ...\nமட்/வின்சன்ட் மகளிர் பாடசாலை மாணவிகள் பலப் பரீட்சை...\n“திரிவுபடுத்தப்படும் அஹ்லுஸ்ஸுன்னாவல் ஜமாஅத் கொள்க...\nஎல்லாவித தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்தும் யோச...\nமாமேதை அம்பேத்கார் காட்டிய வழி\nநான் மேயரானால் மட்டக்களப்பை தத்தெடுப்பேன்\n140 வது சர்வதேச அஞ்சல் தினம் வாழ்த்துச் செய்தி முன...\nஜனாதிபதி முறைமையை மாற்ற தயார்: மஹிந்த\nவைக்கோல் பட்டடை நாய் போல வடமாகாண சபை\nயாழ்தேவி ரயில் சேவை, 24 வருடங்களுக்கு பின்னர்\nயாழ். நகருக்கு இன்று முதல் யாழ்.தேவி\nTNA பதியப்பட அல்ல கலைக்கப்பட வேண்டும்\nஅரசியல் கட்சியாகப் பதிவு செய்யும் விடயத்தில் பற்றி...\nபிரான்ஸ் எழுத்தாளர் மோதியானோவுக்கு 2014 இலக்கிய நோ...\nஉலகின் பொருளாதார வல்லரசு: அமெரிக்காவை முந்தியது சீ...\n20,000 குடும்பங்களுக்கு நாளை காணிகள் பகிர்ந்தளிப்ப...\n50,000 மாணவர்களை ஆசிரிய உதவியாளர்களாக நியமிக்க அரச...\nமட்/மகிழடித்தீவு சரஸ்வதியாக வித்தியாலயத்தின் ஆசிரி...\n'10,000 பெண் போராளிகள் உட்பட 50,000 போராளிகளை நான...\nயாழ்.தேவி ரயில் சேவை சில தினங்களில் ஆரம்பம்: இத்தா...\nஇன்று மட்டக்களப்பில் இந்திய சுப்பர் சிங்கர்\nமகிந்த சிந்தனையை நிறைவேற்றவே மாவட்ட அபிவிருத்தி க...\nஅஹிம்சையை உலகுக்கு அறிமுகப்படுத்தி உண்மையே கடவுளென...\nமுதியோர் பராமரிப்பு: இலங்கை முன்னிலை; வடக்கில் நில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.viduppu.com/celebs/06/137965?ref=lankasri-home-dekstop", "date_download": "2018-04-26T13:41:37Z", "digest": "sha1:SPIJMHUT7G3NCDFDGE5DRDBJNRPQZHT4", "length": 5463, "nlines": 69, "source_domain": "www.viduppu.com", "title": "சீரியஸ் படத்தில் அழுகாச்சி ஹீரோயினாக... - Viduppu.com", "raw_content": "\nகணவரை பிரிந்தார் ஐஸ்வர்யா ராய்\nதாலி கட்டும் நேரத்தில் நடந்த நிஜ சம்பவம்\nஅஜித்தின் மனைவி ஷாலினியின் பகையாளி யார் தெரியுமா\nதிடீர் திருமணம் செய்துகொண்ட சூப்பர் ஹிட் பட நடிகை...அதிர்ச்சியில் ரசிகர்கள்\nதலைவர் உரையின் போது தூங்கிய ராணுவ தலைவருக்கு மரண தண்டனை\nஆர்யாவின் திருமணம் நிகழ்ச்சியை மரணகலாய் கலாய்த்த கார்த்திக் மற்றும் ஜெகன்...வைரலாகும் வீடியோ உள்ளே\nஅனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய சூப்பர் சிங்கர் பிரியங்கா அடடே இப்படியும் ஒரு திறமையா..\nஒரே வீட்டில் தனி தனியாக வாழும் ஐஸ்வர்யா அபிஷேக் பச்சன்...காரணம் என்ன\nசுசானாவின் தந்தையால் ஆதாரத்துடன் சிக்கும் ஆர்யா\nவிவாகரத்திற்கு பிறகு அமலாபால் இப்படி மாறிட்டாங்களே...வைரலாகும் புகைப்படம் உள்ளே\nசீரியஸ் படத்தில் அழுகாச்சி ஹீரோயினாக...\nபாம்பு சட்டையின் ட்ரைலர் வெளிவந்துவிட்டது. இந்த படத்தில் பாபி சிம்ஹா, கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்கள். ஒரு ரவுடியின் கதை போல இருக்கிறது. இந்த படம் ஜிகர்தண்டா முடித்தவுடன் பாபியும், தன் முதல் படமான இது என்ன மாயம் படத்துக்கு பிறகு கமிட் பண்ண படம்.\nஇந்த படம் சில கால இடைவெளிக்கு பின் விட்டுவிட்டு உருவாக்கப்பட்டது. அதற்குள், கீர்த்தி சுரேஷ் முன்னணி ஹீரோயினாக மாறிவிட்டார். இப்போது விஜய், சூர்யா, கார்த்தி, பவன் கல்யாண் என்று போகும் நேரத்தில் இந்த படம் வெளியாவதை கீர்த்தி விருமாபாவில்லை என்று தகவல்கள் வந்தது ட்ரைலர் பார்த்தபின் தெரிகிறது என்கிறார்கள் அவரது ரசிகர்கள்.\nஆர்யாவின் திருமணம் நிகழ்ச்சியை மரணகலாய் கலாய்த்த கார்த்திக் மற்றும் ஜெகன்...வைரலாகும் வீடியோ உள்ளே\nஅஜித்தின் மனைவி ஷாலினியின் பகையாளி யார் தெரியுமா\nதலைவர் உரையின் போது தூங்கிய ராணுவ தலைவருக்கு மரண தண்டனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.viduppu.com/india/04/156544", "date_download": "2018-04-26T13:49:44Z", "digest": "sha1:WYLLPKKLWSSE5WBDHNX62IGQLXCBMK3G", "length": 5592, "nlines": 71, "source_domain": "www.viduppu.com", "title": "பாபா முத்திரை யாருக்கு சொந்தம்? - Viduppu.com", "raw_content": "\nகணவரை பிரிந்தார் ஐஸ்வர்யா ராய்\nதாலி கட்டும் நேரத்தில் நடந்த நிஜ சம்பவம்\nஅஜித்தின் மனைவி ஷாலினியின் பகையாளி யார் தெரியுமா\nதலைவர் உரையின் போது தூங்கிய ராணுவ தலைவருக்கு மரண தண்டனை\nதிடீர் திருமணம் செய்துகொண்ட சூப்பர் ஹிட் பட நடிகை...அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஆர்யாவின் திருமணம் நிகழ்ச்சியை மரணகலாய் கலாய்த்த கார்த்திக் மற்றும் ஜெகன்...வைரலாகும் வீடியோ உள்ளே\nஅனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய சூப்பர் சிங்கர் பிரியங்கா அடடே இப்படியும் ஒரு திறமையா..\nஒரே வீட்டில் தனி தனியாக வாழும் ஐஸ்வர்யா அபிஷேக் பச்சன்...காரணம் என்ன\nசுசானாவின் தந்தையால் ஆதாரத்துடன் சிக்கும் ஆர்யா\nவிவாகரத்திற்கு பிறகு அமலாபால் இப்படி மாறிட்டாங்களே...வைரலாகும் புகைப்படம் உள்ளே\nபாபா முத்திரை யாருக்கு சொந்தம்\nரஜினி மக்கள் மன்றத்தின், 'பாபா முத்திரை' சின்னம், தங்கள் நிறுவனத்தின், 'லோகோ'வைப் பார்த்து, காப்பி அடிக்கப்பட்டு உள்ளதாக, மும்பையைச் சேர்ந்த, ஒரு நிறுவனம் கூறியுள்ளது.\nநடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப் போவதாக சமீபத்தில் அறிவித்ததில் இருந்தே, அவரது, 'பாபா முத்திரை' சின்னமும் பிரபலமாகி வருகிறது.\nஅவரது மக்கள் மன்றத்துக்கு கூட, அதையே தான், சின்னமாக பயன்படுத்துகிறார். கடந்த, 2002ல் வெளியான, பாபா திரைப்படத்துக்கு பின், ரஜினி ரசிகர்கள் இந்த சின்னத்தை அதிகம் பயன்படுத்த துவங்கினர். இந்நிலையில், மும்பையைச் சேர்ந்த, 'வொக்ஸ்வெப்' என்ற, சமூக ஊடக நிறுவனம், தங்கள் மொபைல் போன், செயலிக்கு, இந்த பாபா முத்திரையை தான், 'லோகோ'வாக வைத்து உள்ளது.\nஆர்யாவின் திருமணம் நிகழ்ச்சியை மரணகலாய் கலாய்த்த கார்த்திக் மற்றும் ஜெகன்...வைரலாகும் வீடியோ உள்ளே\nதலைவர் உரையின் போது தூங்கிய ராணுவ தலைவருக்கு மரண தண்டனை\nஅஜித்தின் மனைவி ஷாலினியின் பகையாளி யார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2018-04-26T13:35:34Z", "digest": "sha1:A66NDLYTRIVFS4DMZWGUNH5YVDVO2FEL", "length": 17194, "nlines": 133, "source_domain": "ta.wikipedia.org", "title": "பெரிப்ளசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nபெரிப்ளசு (பெரிப்ளஸ்) (Periplus) என்பது \"கடல் வழிப்பயணம்\" (கடல் வழிக்கையேடு, கடல் பயண விவரிப்பு) என்னும் பொருள் தருகின்ற பண்டைய கிரேக்கச் சொல் ஆகும்.\nபெரிப்ளசு நூலில் குறிப்பிடப்படும் மாலுமி தமிழகத்தில் கண்ட செய்திகளைப் பெரிப்ளசு காட்டும் தமிழகம் பக்கத்தில் காணலாம்.\n2 கடல் வழிக்கையேடு வரலாறு\n4 இன்று கிடைக்கின்ற பெரிப்ளசு வகைப் பயணக் கையேடுகள்\n5 கடலில் முற்றுகைத் தாக்குதல்\nகிரேக்கத்தில் περίπλους (periplous) என்றுள்ள இச்சொல் periploos என்பதன் சுருக்கவடிவம். அதிலிருந்து periplus என்னும் இலத்தீன் வடிவம் தோன்றியது. அதுவே வழக்கத்தில் உள்ளது.\nஇச்சொல்லுக்கு கடல் வழிப்பயணம் என்னும் பொதுப் பொருள் இருந்தாலும், அச்சொல்லின் பகுதிகளாகிய peri என்பதும் plous என்பதும் தனித்தனியே பொருள்தரும் சொற்களாகவும் மாறின.\nபெரிப்ளசு என்னும் சொல் கடல் வழிப்பயணம் என்பதோடு, அப்பயணத்திற்கான கையேடு என்னும் பொருளையும், அப்பயண விவரிப்பு என்னும் பொருளையும் பெற்றது. நடைமுறையில், கடல் வழிப்பயணம் மேற்கொள்வோர் எந்தெந்த கடற்கரையில் எந்தெந்த பட்டினங்களைச் சந்திப்பார்கள், அப்பட்டினங்களுக்கு இடையே உள்ள தூரம் என்ன, அங்கு என்னென்ன பொருள்கள் ஏற்றுமதி, இறக்குமதி செய்யப்படுகின்றன, அப்பகுதிகளில் மக்களின் வாழ்க்கை முறை என்ன, அங்கு காணப்படும் தாவரங்கள் மற்றும் விலங்குகள் யாவை போன்ற விளக்கங்கள் \"பெரிப்ளசு\" என்னும் நூலில் தரப்படுவது வழக்கம்.\nபண்டைக்கால பெனீசியர்கள், கிரேக்கர்கள் மற்றும் உரோமையர்கள் மேற்கூறிய பொருளில் \"பெரிப்ளசு\" என்பதைப் புரிந்துகொண்டார்கள்.[1]\nஉரோமையர்கள் தரைவழிப் பயணக் கையேடுகள் (itinerarium) உருவாக்கியது போலவே கிரேக்கர்கள் கடல்வழிப் பயணக் கையேடுகளை உருவாக்கினர். ஆனால் தம் கையேடுகளில் நிலவியல் சார்ந்த பல குறிப்புகளையும் அவர்கள் சேர்த்துக் கொண்டனர்.\nகிரேக்க நாட்டு வரலாற்று ஆசிரியர்களுள் மிக முந்தியவராகக் கருதப்படுகின்ற மிலேத்து நகர ஹெக்காட்டேயஸ் (Hecataeus of Miletus) (கி.மு. 6ஆம்-5ஆம் நூற்றாண்டு)என்பவரே முதன்முதலில் பெரிப்ளசு வகை பயணநூல் எழுதினார். அவருக்குப் பின் வந்த ஹெரோடோட்டஸ் மற்றும் துசீடிடெஸ் போன்ற கிரேக்க வரலாற்று ஆசிரியர்களும் பெரிப்ளசு வகை வரலாற்று நூல்களைப் பின்பற்றி தம் நூல்களைப் படைத்தார்கள் என்று தெரிகிறது.[2]\nபாரசீகக் கடல் பயணிகளும் பண்டைக்காலம் தொட்டே ஒரு வகையான கடல் பயணக் கையேடுகளை உருவாக்கினர். அவை \"ரானாமா\" (Rahnāmag) என்று பாரசீக மொழியில் அழைக்கப்பட்டன ('Rahnāmeh' = رهنامه )[3]இவ்வகை நூல்கள் கடலோரமாக அமைந்த துறைமுகங்கள் மற்றும் நிலப்பகுதிகளைக் குறிப்பிட்டு, அவற்றிற்கிடையிலான தூரத்தையும் கணித்துக் கூறின.\n12ஆம் நூற்றாண்டளவில் உருவான இந்நூல்களில் இந்தியப் பெருங்கடல் \"தப்பிப் பிழைப்பதற்குக் கடினமான கடல்\" என்று விவரிக்கப்படுகிறது.[4]\nஇன்று கிடைக்கின்ற பெரிப்ளசு வகைப் பயணக் கையேடுகள்[தொகு]\nபண்டைக் காலத்தில் எழுதப்பட்ட பெரிப்ளசு வகைப் பயணக் கையேடுகள் பலவற்றின் படிகள் உள்ளன. அவற்றுள் முக்கியமான சில:\nகடற்பயணி ஹான்னோ (Hanno the Navigator) என்பவர் கி.மு. 6ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவர். அவர் எழுதிய பெரிப்ளசு கையேடு ஆப்பிரிக்க கடற்கரையை விவரிக்கின்றது. இன்றைய மரோக்கோ பகுதியிலிருந்து கினி வளைகுடா (Gulf of Guinea) வரையிலான பகுதி பற்றிய குறிப்புகள் அதில் உள்ளன. ஹான்னோ கார்த்தேஜ் நகரைச் சார்ந்த ஆய்வுப் பயணி.\n\"மர்சேய் பெரிப்ளசு\" (Massaliote Periplus) என்னும் கடற்பயண நூல் தெற்கு ஐரோப்பாவுக்கும் வடக்கு ஐரோப்பாவுக்கும் இடையே நிகழ்ந்த கடல்வழி வணிகத்தை விவரிக்கிறது. இது கி.மு. 6ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டிருக்கலாம்.\nகி.மு. 4ஆம் நூற்றாண்டைச் சார்ந்த மசீலியா பித்தேயாஸ் என்பவர் எழுதிய \"கடல் நூல்\" (On the Ocean -Περί του Ωκεανού) என்னும் நூல் கிடைக்கவில்லை. ஆனால் பிற்கால ஆசிரியர்கள் அந்நூலிலிருந்து காட்டிய மேற்கோள் பகுதிகள் கிடைத்துள்ளன.\nபோலி ஸ்கைலாக்சின் பெரிப்ளசு (Periplus of Pseudo-Scylax) என்னும் பயண நூல் கி.மு. 4ஆம்-3ஆம் நூற்றாண்டைச் சார்ந்ததாகக் கருதப்படுகிறது.\nகியோஸ் நகர ஸ்கிம்னுஸ் என்பவரின் பெரிப்ளசு கி.மு. 110ஆம் ஆண்டுக் காலத்தைச் சார்ந்தது.\nஎரித்திரேய கடல் வழிப்பயணக் கையேடு என்னும் பெரிப்ளசை எழுதியவரின் பெயர் தெரியவில்லை. ஆனால் அவர் எகிப்தின் அலெக்சாந்திரியா நகரத்தில் வாழ்ந்த கிரேக்கராக இருக்க வேண்டும். அவரது காலம் கி.பி. முதல் நூற்றாண்டு. இக்கையேடு விவரிக்கும் பயணம் எகிப்து நாட்டின் தென்பகுதியில் செங்கடல் கரையோரத்தில் அமைந்த பெரெனீசு (Berenice) என்னும் துறைமுகத்தில் தொடங்குகிறது. தொடர்ந்து அக்கையேடு செங்கடலுக்கு அப்பால் இந்தியாவின் மேற்குக் கடற்கரையில் அமைந்திருந்த வணிகத் தளங்களை விவரிக்கிறது. கேரளம் மற்றும் தமிழகக் கடற்கரை வணிக நகரங்கள் பல, மற்றும் கங்கை நதி ஆகியவை பற்றி குறிப்பிடுகின்றன. ஆப்பிரிக்காவின் கிழக்குக் கடற்கரை \"அசானியா\" (Azania) என்று குறிப்பிடப்படுகிறது.\nஆரியான் என்பவர் கி.பி. 2ஆம் நூற்றாண்டில் எழுதிய கையேடு போன்டி யூக்சீனி பெரிப்ளசு (Periplus Ponti Euxini) என்று அழைக்கப்படுகிறது. இது கருங்கடலின் கரையோர வணிகத் தளங்களை விவரிக்கிறது.\nபெரிப்ளசு என்னும் சொல், கப்பல்கள் பிற கப்பல்களைக் கடலில் முற்றுகையிட்டுப் பின்னிருந்து தாக்குகின்ற உத்தியையும் குறிக்கிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூன் 2016, 02:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-04-26T13:44:22Z", "digest": "sha1:5FF2HVAMQK4WCKFFFOPHDJMFSBZ27XJQ", "length": 22382, "nlines": 165, "source_domain": "ta.wikipedia.org", "title": "விடுதலைச் சிறுத்தைகள் கட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(விடுதலைச் சிறுத்தைகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\n1982 - மாவீரன் மலைச்சாமி என்பவரால் ஒடுக்கப்பட்ட சிறுத்தைகள் என்ற பெயரில் தமிழக கிளையாக தொடங்கப்பட்டது.\nசாதி ஒழிப்பே மக்கள் விடுதலை\nவிடுதலைச் சிறுத்தைகள் (Dalit Panthers or Viduthalai Siruthikal) தமிழ் நாட்டு மாநில அரசியல் கட்சி ஆகும். இது 1970களில் மகாராட்டிர மாநிலத்தில் ஆரம்பிக்கப்பட்ட தலித்து சிறுத்தைகள் கட்சி தமிழ்நாட்டிலும் தலித்து சிறுத்தைகள் இயக்கம் என்ற பெயரிலேயே மலைச்சாமி என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது. மலைச்சாமி செப்டம்பர் 1989 தான் இறக்கும் வரை இதன் மாநிலத்தலைவராக இருந்தார்.[1] இக்கட்சி தலித் மக்களின் பிரச்சினைகளை பெரும்பாலும் முன்வைத்து, அவர்களின் ஆதரவை நாடி செயல்படுகின்றது. தலித் சிறுத்தைகள் என்னும் தலித் இயக்கத்தின் தமிழகப் பிரிவை உருவாக்கிய மலைச்சாமி என்பவர் கொலை செய்யப்பட்ட பொழுது, மதுரை தடய அறிவியல் துறையில் பணியாற்றிக்கொண்டு இருந்த தொல். திருமாவளவன் மதுரையில் மலைச்சாமிக்கு நினைவேந்தல் கூட்டம் நடத்தினார். அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி தொல். திருமாவளவன் அதன் அமைப்பாளாராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nதலித் சிறுத்தைகள் அமைப்பிற்கு விடுதலைச் சிறுத்தைகள் என பெயர் மாற்றிய தொல்.திருமாவளவன், நீலம், சிவப்பு வண்ணப் பட்டைகளும் விண்மீனும் கொண்ட கொடியை அவ்வியக்கத்திற்கு என வடிவமைத்து 1990ஆம் ஆண்டில் ஏப்ரல் 14 ஆம் நாளில் மதுரையில் ஏற்றினார்.\nவிடுதலைச் சிறுத்தைகள் இயக்கம் தேர்தலில் ஈடுபட முடிவு செய்த பொழுது, 1999ஆம் ஆண்டு ஆகத்து 17ஆம் நாள் தொல்.திருமாவளவன் அரசு வேலையைத் துறந்தார்.அரசு வேலையைத்துறந்த திருமாவளவன் தொடர்ந்து தலித்துகளுக்கு எதிராக நடக்கும் அநீதிகளுக்கு எதிராக முழுநேர அரசியல் களத்தில் செயல்பட்டு வருகிறார்.\nவிடுதலைச் சிறுத்தைகளுக்கு என நீலமும் சிவப்பும் பட்டைகளாகவும் அவற்றின் நடுவில் விண்மீனும் கொண்ட கொடியை உருவாக்கி அதனை மதுரையில் தொல். திருமாவளவன் 1990ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் நாள் ஏற்றினார்.[2]\nதமிழகத்தின் 13வது சட்டமன்றத்தில் இக்கட்சி 2 தொகுதிகளில் வெற்றிப்பெற்றது. மங்களூர் தொகுதியில் செல்வப்பெருந்தகையும், காட்டுமன்னார்கோயில் தொகுதியில் டி.இரவிக்குமார் என்பவரும் சட்டப்பேரவை உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் சிதம்பரம் (தனி), விழுப்புரம் (தனி) ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு சிதம்பரம் (தனி) தொகுதியில் தொல். திருமாவளவன் 4.6 லட்சம் வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார்.\n↑ அடுத்த பாய்ச்சல் கோட்டையை நோக்கி-சூனியர் விகடன் 2015 மே 3\nஅரசியல் தொடர்பான இந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇடது முன்னணி · தேசிய ஜனநாயக கூட்டணி · ஐக்கிய முற்போக்குக் கூட்டணி · ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி\nபகுஜன் சமாஜ் கட்சி · பாரதிய ஜனதா கட்சி · இந்திய பொதுவுடமைக் கட்சி · இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) · இந்திய தேசிய காங்கிரசு · தேசியவாத காங்கிரஸ் கட்சி ·\nஅ.இ.அ.தி.மு.க · அனைத்திந்திய பார்வார்டு ப்ளாக் · அனைத்து சார்க்கண்ட் மாணவர்கள் சங்கம் · அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு · அசோம் கன பரிசத் · இடது முன்னணி (இந்தியா) · சமாஜ்வாதி கட்சி ·\nராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி\nபிஜு ஜனதா தளம் · தி.மு.க · மணிப்பூர் மக்கள் கட்சி ·\nஜனதா தளம் (மதசார்பற்ற) · ஐக்கிய ஜனதா தளம் · கேரளா காங்கிரஸ் கட்சி · கேரளா காங்கிரஸ் கட்சி(மணி) · ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி ] · ஜம்மு காஷ்மீர் தேசியவாத சிறுத்தைகள் கட்சி · சம்மு காசுமீர் மக்களின் சனநாயக கட்சி ] · பா.ம.க · பிராஜா இராஜ்ஜியக் கட்சி · சிவசேனா · தெலுங்கானா ராஷ்டிரிய சமீதி · தெலுங்கு தேசம் கட்சி ·\nசார்கண்ட் விகாசு மோர்சா (பிரசாடான்டிரிக்)\nமுசுலிம் லீக் கேரள மாநில அமைப்பு\nஐக்கிய ஜனநாயக கட்சி · மிசோ தேசிய முன்னணி · மிசோரம் மக்கள் கூட்டமைப்பு ·\nபுரட்சிகர சோஷலிசக் கட்சி · சிரோன்மணி அகாலி தளம் · சிக்கிம் ஜனநாயக முன்னணி ·\nநாகாலாந்து மக்கள் முன்னணி · இந்திய தேசிய லோக் தளம் · ராஷ்டிரிய லோக் தளம் ·\nஅரியானா ஜன்கித் காங்கிரசு (பஜன்லால்)\nஅகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி\nலோக் ஜன சக்தி கட்சி\nமாகாராஷ்டிர கோம்தக் கட்சி ·\nபாரதீய நவசக்திக் கட்சி · லோக் தந்திரிக் ஜன சம்தா கட்சி · தேசியவாத லோக்தந்திரிக் கட்சி · இந்தியக் குடியரசுக் கட்சி (Athvale) ·\nம.தி.மு.க · தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் · விடுதலைச் சிறுத்தைகள் · அகில இந்திய முஸ்லிம் லீக் · சமதா கட்சி · அருணாச்சலக் காங்கிரஸ் · மனிதநேய மக்கள் கட்சி · Socialist Unity Centre of India · மகாராட்டிரா நவநிர்மான் சேனா · அசோம் கன பரிசத் (பிரகதிசெல்) · Democratic Socialist Party (Prabodh Chandra) · மேகாலயா ஜனநாயக கட்சி · ஜார்கண்ட் கட்சி · மார்க்சிய லெனினிய விடுதலை இயக்க இந்தியப் பொதுவுடமைக் கட்சி · Professionals Party of India இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் · இந்திய கூட்டணி மக்கள் கட்சி · Indigenous Nationalist Party of Twipra · ஜனாதிபதிய சம்ரக்ஷனா சமீதி · லோக் சன சக்தி கட்சி · மேற்கு வங்காளம் சோஷலிசக் கட்சி · மேகாலய ஐக்கிய மக்கள் கட்சி · ஐக்கிய கோமந்து மக்கள் கட்சி ·\nஅரசியல் · தமிழக அரசியல் · இந்திய அரசியல்\nஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் · திராவிட முன்னேற்றக் கழகம் · இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் ·\nஆம் ஆத்மி கட்சி · இந்திய தேசிய காங்கிரசு · இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) · இந்தியப் பொதுவுடமைக் கட்சி · பாரதிய ஜனதா கட்சி ·\nதேசிய முற்போக்கு திராவிட கழகம் · பாட்டாளி மக்கள் கட்சி · மனிதநேய மக்கள் கட்சி · மூவேந்தர் முன்னேற்றக் கழகம் · மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் · விடுதலைச் சிறுத்தைகள் கட்சி · புதிய தமிழகம் கட்சி · தமிழ் மாநில காங்கிரசு · அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி · அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி · அனைத்திந்திய லட்சிய திராவிட முன்னேற்றக் கழகம் · இந்திய ஜனநாயகக் கட்சி · இந்திய தேசிய லீக் · இந்திய ஜனநாயக கட்சி · இந்து மக்கள் கட்சி · இந்து முன்னணி · இல்லத்தார் முன்னேற்றக் கழகம் · கொங்குநாடு முன்னேற்றக் கழகம் · தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் · தமிழக முன்னேற்ற கழகம் · தமிழக வாழ்வுரிமைக் கட்சி · தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி · தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை · தமிழ்நாடு தேசிய ஆன்மிக மக்கள் கட்சி · திராவிடர் கழகம் · தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு · நாம் தமிழர் கட்சி · மக்கள் இயக்கம் (தமிழ்நாடு) · முக்குலத்தோர் மக்கள் கட்சி · மூவேந்தர் முன்னணிக் கழகம் · வள்ளி மக்கள் முன்னேற்ற முன்னணி ·\nகாமன்வீல் கட்சி · சென்னை மாகாண சங்கம் · தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி · தமிழ் தேசியக் கட்சி · தமிழக முன்னேற்ற முன்னணி · தமிழக ராஜீவ் காங்கிரசு · தமிழரசுக் கழகம் · தாயக மறுமலர்ச்சி கழகம் · தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றக் கழகம் · நாம் தமிழர் (ஆதித்தனார்) · நீதிக்கட்சி · ஜனதா கட்சி ·\nஅரசியல் · தமிழக அரசியல் · இந்திய அரசியல்\n1972இல் நிறுவப்பட்ட அரசியல் கட்சிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 ஏப்ரல் 2018, 07:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://freetamilebooks.com/download-stats/", "date_download": "2018-04-26T13:12:22Z", "digest": "sha1:LNGAK7ITFO3A5466LFX3X66XUBM7G4LI", "length": 13921, "nlines": 213, "source_domain": "freetamilebooks.com", "title": "பதிவிறக்கத் தரவுகள்", "raw_content": "\nதமிழ் இன்று epub (3964)\nஆன்மீகம் இலக்கியம் ஈழம் ஏ.ஆர்.ரஹ்மான் கணிணி ட்விட்டர்\nபூமியின் எல்லையைத் தொட்டவர்கள் A4 pdf (26070)\nவிண்வெளிப் பயணம் A4 PDF (20151)\nஉலகின் முதல் பெண் விண்வெளி வீரர் A4 PDF (19578)\nஇணையில்லா இந்திய அறிவியல் epub (16526)\nபட்டினத்தடிகளின் பாடல்கள் A4 PDF (141363)\nவேதமும் சைவமும் A4 PDF (103960)\nஅபிராமி அந்தாதி – எளிய தமிழில் A4 PDF (49355)\nஅபிராமி அந்தாதி – எளிய தமிழில் epub (41270)\nப்ளாக் உருவாக்குவது எப்படி A4.pdf (29665)\nஇணைய தொழில்நுட்பங்கள் – ஒரு முன்னோட்டம் A4 PDF (24193)\nட்விட்டர் கையேடு - epub (17029)\nஇணைய தொழில்நுட்பங்கள் – பகுதி இரண்டு A4 PDF (13619)\nதமிழ் : சுதந்திரம் - 2015 இதழ் epub (26110)\nஉரைநடையில் கம்பராமாயணம் - A4 PDF (19815)\nஉரைநடையில் கம்பராமாயணம் - epub (14572)\nதமிழ் மின்னிதழ் - இதழ் - 1 epub (10020)\nசுக பிரசவ சுலப வழிகாட்டி A4 PDF (615)\nதொந்தியைக் குறைக்க சுலபமான வழிகள் epub (576)\nசுக பிரசவ சுலப வழிகாட்டி epub (401)\nசுக பிரசவ சுலப வழிகாட்டி 6 inch PDF (176)\nஏ.ஆர்.ரஹ்மான் - ஒலிப்புத்தகம் - MP3 (3178)\nநம்ப முடியாத அதிசயங்கள் A4 PDF (52325)\nஇந்தியாவின் முக்கிய தினங்கள் epub (25020)\nஇணைய தொழில்நுட்பங்கள் – ஒரு முன்னோட்டம் A4 PDF (24193)\nபள்ளிக்கு வெளியே வானம் A4 PDF (2990)\nயார் அந்த தாவணி epub (8857)\nசமூகத்தின் வலிகளை பதிவிடும் வலிப்போக்கனின் கவிதைகள் (7101)\nஅப்துல் கலாமின் கவிதைகளும், மேற்கோள்களும் epub (7008)\nவகுப்பறைச் சாரல்கள் A4 PDF (4559)\nவா.மு.கோமுவின் பத்துக் கதைகள் epub (4703)\nஅதிர்ஷ்டம் உன் காயங்களை ஆற்றும் - 6inch (4261)\nவா.மு.கோமுவின் பத்துக் கதைகள் A4 (3993)\nஅதிர்ஷ்டம் உன் காயங்களை ஆற்றும் - A4 (2698)\nவினையூக்கி சிறுகதைகள் - epub (44829)\nசிரிக்க வைக்கும் சொதப்பல்கள் epub (14149)\nசிரிக்க வைக்கும் சொதப்பல்கள் A4 PDF (11678)\nஉன்னை விட மாட்டேன் A4 PDF (11444)\nபடித்து பழகு A4 (18728)\nபடித்து பழகு epub (3974)\nஆடலாம் பாடலாம் – சிறுவர் பாடல்கள் Epub (1217)\nஆடலாம் பாடலாம் – சிறுவர் பாடல்கள் A4 (1100)\nபுதையல் தீவு epub (10626)\nபுதையல் தீவு A4 PDF (7550)\nராஜராஜ சோழனும் விஞ்ஞானி ராஜாமணியும் epub (5106)\nராஜராஜ சோழனும் விஞ்ஞானி ராஜாமணியும் A4 PDF (3184)\nஆடலாம் பாடலாம் – சிறுவர் பாடல்கள் Epub (1217)\nஆடலாம் பாடலாம் – சிறுவர் பாடல்கள் A4 (1100)\nஆடலாம் பாடலாம் – சிறுவர் பாடல்கள் 6inch (430)\nஓஷோ விழிப்புணர்வுக் கதைகள் epub (78894)\nஓஷோ விழிப்புணர்வுக் கதைகள் A4 PDF (54579)\nஓஷோ விழிப்புணர்வுக் கதைகள் 6 inch PDF (39448)\nஓஷோ விழிப்புணர்வுக் கதைகள் mobi (19892)\nதமிழ் இன்று epub (3964)\nமின்தமிழ்மேடை - சித்திரைத் திருநாள் சிறப்பிதழ் A4 (2723)\nதமிழ் இன்று mobi (2002)\nதமிழ் - மின்னிதழ் 2 EPUB (2912)\nமின்தமிழ்மேடை - சித்திரைத் திருநாள் சிறப்பிதழ் A4 (2723)\nமின்தமிழ்மேடை - சித்திரைத் திருநாள் சிறப்பிதழ் 6Inch (882)\nஇசை ஜீனியஸ் ராஜா A4 PDF (19883)\nராஜாவும் பிறரும் A4 PDF (7514)\nஇசை ஜீனியஸ் ராஜா epub (6892)\nராஜாவும் பிறரும் epub (6195)\nசிரிக்க வைக்கும் சொதப்பல்கள் epub (14149)\nசிரிக்க வைக்கும் சொதப்பல்கள் A4 PDF (11678)\nநெப்போலியன் - வரலாற்று நாடகம் epub (18710)\nநெப்போலியன் - வரலாற்று நாடகம் A4 PDF (8602)\nநெப்போலியன் - வரலாற்று நாடகம் 6 inch PDF (5260)\nபொன்னியின் செல்வன் - சுருக்கப்பட்ட பதிப்பு epub (96699)\nபொன்னியின் செல்வன் - சுருக்கப்பட்ட பதிப்பு A4 PDF (53033)\nமன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..) epub (24853)\nபொன்னியின் செல்வன் - சுருக்கப்பட்ட பதிப்பு 6 Inch PDF (20881)\nகுற்றியலுலகம் A4 PDF (3652)\nஏரிகள் நகரம் - நைனிதால் A4 PDF (8026)\nஏரிகள் நகரம் - நைனிதால் epub (4136)\nஅரியலூர் அடுக்கு தோசை….. இன்னபிற….. (2924)\nபயணங்கள் தொடர்கின்றன – தென் கொரியா (2003) A4 PDF (2739)\nசில புத்தகங்கள்... A4 PDF (6160)\nசில புத்தகங்கள்... epub (3948)\n (பகுதி இரண்டு) A4 (2121)\nபூனை கன்றுகள் அழகல்ல (1247)\nமூலிகை வளம் epub (55144)\nதமிழ் - மின்னிதழ் 2 EPUB (2912)\nதமிழ் - மின்னிதழ் 2 A4 PDF (1244)\nஈழம் - வந்தார்கள் வென்றார்கள் epub (29015)\nகொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு A4 PDF (27661)\nஈழம் - வந்தார்கள் வென்றார்கள் A4 PDF (24220)\nநெப்போலியன் - வரலாற்று நாடகம் epub (18710)\nமகாகவி பாரதியார் வரலாறு epub (202778)\nகாரைக்கால் அம்மையார்- ஒரு ஆய்வு A4 PDF (33396)\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nஆப்பிள் கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nதமிழ் மின்னூல்களைப் படிப்பது எப்படி\nகிரியேட்டிவ் காமன்சு தமிழ் வலைத்தளங்கள்\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n57 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://puthu.thinnai.com/?p=36111", "date_download": "2018-04-26T13:38:58Z", "digest": "sha1:OVN3LOCHROSCALW3EDORJMAKUTEHW4UF", "length": 4769, "nlines": 50, "source_domain": "puthu.thinnai.com", "title": "மழை | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nSeries Navigation நிமோனியாசிட்னி கலை – இலக்கியம் 2017 நிகழ்வில் மூத்த படைப்பாளிகளுக்கு பாராட்டும் கௌரவமும்\nமாட்டுப்பால் மனித உடலுக்கு நல்லதல்ல.\nதமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம். திருப்பூர் மாவட்டம் * டிசம்பர் மாதக்கூட்டம் .3/12/17 7 ஞாயிறு மாலை.5 மணி.\n”மழையில் நனையும் மனசு” கவிதைத் தொகுதி பற்றிய கண்ணோட்டம்\nகுருதிக் காடும் குழலிசையும் கவிதை நூல் பற்றிய பார்வை\nசிட்னி கலை – இலக்கியம் 2017 நிகழ்வில் மூத்த படைப்பாளிகளுக்கு பாராட்டும் கௌரவமும்\nதொடுவானம் 199. தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை.\nஇராணி பத்மினியும் ஜாலியன் வாலாபாக்கும்.\nநிலவு தோன்றிய பிறகு, பற்பல அண்டங்களின் தாக்குதலால் பூமியின் நிறை கூடியுள்ளது.\nPrevious Topic: சிட்னி கலை – இலக்கியம் 2017 நிகழ்வில் மூத்த படைப்பாளிகளுக்கு பாராட்டும் கௌரவமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} {"url": "http://puttalamtoday.com/36573-2/", "date_download": "2018-04-26T13:35:36Z", "digest": "sha1:GHZHJ6GS4ZQ4KBQIPG4D3RL6Z3TECTKN", "length": 6570, "nlines": 49, "source_domain": "puttalamtoday.com", "title": "சிறிய ரக கார்களின் விலைகள் குறைகின்றன…!! புதிய கார் வாங்க இருப்பவர்கள் ஒக்டோபர் பட்ஜெட் வரை காத்திருங்கள் – PuttalamToday", "raw_content": "\nசிறிய ரக கார்களின் விலைகள் குறைகின்றன… புதிய கார் வாங்க இருப்பவர்கள் ஒக்டோபர் பட்ஜெட் வரை காத்திருங்கள்\nசிறிய மற்ற்றும் இலத்னிதிரணியல் ரக கார்களுக் கான வரியைக்ச குறைப்பது தொடர்பில் அமைச்சர் மங்கள சமரவீர கவனம் ெசெலுத்தியுள்ளார் .எதிர் வரும் 2018ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் இதற்க்கான முன் மொழிவுகள் உள்ளடக்கப்படவுள்ளன.\nபசுமைச் சுற்றாடலை ஊக்குவிக்கும் நோக்கில் இதனை நடைமுறைப்படுத்த அமைச்சர் மனைகள் அசமரவீர உத்தேசித்துள்ளார்.\nஅத்துடன் வரிக்குறைப்பின் மூலமாக விலைகளையும் குறைத்து சிறிய ரக மற்றும் இலத்திரனியல் ரக கார்களை பொது மக்கள் மத்தியில் கூடுதலாக பயன்படுத்தும் சூழலை ஏற்படுத்துவதும் அரசாங்கத்தின் எதிர்ப்பார்ப்பாகும்.\nB.M.S. college சாரம் திருவிழா: பெலூன் டான்ஸ் ஆடிக் கலக்கிய முஸ்லிம் யுவதிகள்- எல்லை மீறுகிறார்களா..\nBreaking : சவூதி மன்னரை கவிழ்க்க முயற்சி.. அரண்மை அருகே கடும் துப்பாக்கி சூடு – பங்கருக்குள் கொண்டு செல்லப்பட்டார் சல்மான் posted on April 22, 2018\nசவூதியின் கொடூர செயலால் உலகமே அதிர்ச்சியில் \nBreaking : 12 வயதுக்கு உள்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு தூக்குத் தண்டனை மோடியின் அமைச்சரவை அவசர சட்டம் பிறப்பிப்பு posted on April 21, 2018\nBreaking :கண்டி கலவரங்களை வழி நடத்திய போலிஸ் இன்ஸ்பெக்டர், சார்ஜென்ட் மேஜர் கைது செய்யப்படவுள்ளார்கள் posted on April 21, 2018\nதலைமைப் பற்றி தீர்மானிக்கும் ஐக்கியத் தேசியக் கட்சியின் முக்கியக் கூட்டம் இன்று \nகண்டிக் கலவரத்தை முன்னின்று நடத்திய இரு பிரதேச சபை உறுப்பினர்கள் தொடர்ந்தும் தேடப்படுகிறார்கள்..\nபச்சை கறிவேப்பிலை சாப்பிடுவதன் மூலம் கொலஸ்ட்ரோலை கட்டுக்குள் வைக்கலாம் இதய சத்திர சிகிச்சை நிபுணர் Dr.இலாஹி\nநகர, பிரதேச சபை சேர்மன்களின் ஆட்டம் எல்லாம் 2 வருடங்களுக்கு மட்டுமே.. அதன் பிறகு உறுப்பினர்களின் காலில் விழுந்தாக வேண்டும்\nமுன்னாள் நேவி தளபதி சந்தன பிரசாத் தப்பிச் செல்ல பாதுகாப்புச் சபை பிரதானி ரவீந்திர விஜேகுணவர்தன 5 லட்சம் கொடுத்தார்.. C.I.D. பொஸ் சான் குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://freetamilebooks.com/ebooks/nalan-damayanti/", "date_download": "2018-04-26T13:18:03Z", "digest": "sha1:K4T4ZH63O4XHDOEYO3EC3E5ZXOZQRPFS", "length": 14333, "nlines": 105, "source_domain": "freetamilebooks.com", "title": "நளன் தமயந்தி கதை", "raw_content": "\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்\nமின்னூலாக்கம் , மேலட்டை உருவாக்கம்: செ.அருட்செல்வப்பேரரசன்\nகாதல்…. மயக்கம் தரும் ஒரு மந்திரச்சொல்…. இது நம்மால் சரியாகத் தான் புரிந்து கொள்ளப்படுகிறதா…. இது நம்மால் சரியாகத் தான் புரிந்து கொள்ளப்படுகிறதா காதலைப் புரிந்து கொள்ள வேண்டியதல்ல, உணர்ந்து கொள்ள வேண்டும் என்றே சொல்லப்படுகிறது. உண்மையான காதலை உணர வேண்டுமா காதலைப் புரிந்து கொள்ள வேண்டியதல்ல, உணர்ந்து கொள்ள வேண்டும் என்றே சொல்லப்படுகிறது. உண்மையான காதலை உணர வேண்டுமா உலகத்தின் ஒப்பற்ற காதல் கதையான “நளன் தமயந்தி” கதையைப் படியுங்கள்.\nஉலகத்தில் உள்ள பெரும்பாலான காதல் கதைளைப் படிக்கும்போது, திருமணம் செய்து கொள்ளப் போராடித் தோற்ற காதல் இணைகளையே நாம் காண முடியும். அந்த வகையில் நளன் தமயந்தி கதை, காதலை வேறு கோணத்தில் நமக்குச் சொல்கிறது.\nஒருவரை ஒருவர் காணாமல் காதலித்து, இடைஞ்சல்களுக்குப் பிறகு திருமணமும் செய்து கொண்டு, இரண்டு பிள்ளைகளைப் பெற்றெடுத்து, காலத்தின் கோலத்தால் நாட்டையும், செழிப்பையும் இழந்து, காட்டுக்குத் துரத்தப்பட்டு, கணவன் மனைவி இருவரும் பிரிந்து, ஆளுக்கொரு திக்கு சென்று, தனித்தனியே அல்லல்பட்டு, ஒருவரை ஒருவர் காணாமல் வாடி, பிள்ளைகளை நினைத்து உருகி என அன்பையும் காதலையும் பின்னிப் பிணைந்து தன்னுள் கொண்டதுதான் இந்த “நளன் தமயந்தி” கதையாகும்.\nமஹாபாரதத்தின் ஒரு துணைக் கதையான இது, பல மொழிகளிலும் பலவாறாக வழங்கப்பட்டு வருகிறது. வடமொழியில் “நைஷதம்” என்ற பெயரில், ஸ்ரீஹர்ஷர் என்பவரால் இக்கதை தனி நூலாகவே செய்யப்பட்டிருக்கிறது.\nதமிழ்நாட்டில் புகழேந்திப் புலவரின் “நளவெண்பா” மிகப் புகழ்பெற்றதாகும். மேலும் வடமொழியில் வந்த ஸ்ரீஹர்ஷரின் “நைஷதம்” என்ற நூலைத் தழுவி, தமிழில் நைடதம் என்ற பெயரில் அதிவீரராம பாண்டியர் இயற்றியிருக்கிறார். மஹாபாரதத்தில் இல்லாத சில நுணுக்கமான தகவல்கள் நளவெண்பாவிலும், நைடதத்திலும் உள்ளன.\nஎனினும், மஹாபாரதமே இக்கதைக்கு மூலமென்பதால், நான் மொழிபெயர்த்துவரும் முழுமஹாபாரதத்தைவிட்டுப் பிறழாமல், அங்கு என்ன சொல்லப்பட்டுள்ளதோ அதை மட்டுமே எடுத்துக் கையாண்டிருக்கிறேன். தனிக்கதையாக இது தெரிய வேண்டும் என்ற காரணத்தால் பிருஹதஸ்வர், யுதிஷ்டிரன், பீமன் ஆகியோரது உரையாடல்களை மட்டும் இதில் நீக்கியிருக்கிறேன்.\nமஹாபாரதத்தில் வனவாசம் செய்து கொண்டிருந்த யுதிஷ்டிரன், தான் சூதாடித் தோற்று வனவாசம் அடைந்த கதையைத் தன் தம்பி பீமனிடம் சொல்லிப் புலம்பிக் கொண்டிருந்தான். பீமன் அவனுக்கு ஆறுதல் கூறிக் கொண்டிருந்தான். அப்போது அங்கு வந்த பிருஹதஸ்வர் முனிவரிடம், தன் நிலையைச் சொல்லிப் புலம்பிய யுதிஷ்டிரன், அவரிடம், “முனிவரே, என்னை விடப் பரிதாபகரமான நிலையை இதற்கு முன் வேறு எந்த மன்னனாவது அடைந்திருக்கிறானா” என்று கேட்டான். அப்போது பிருகதஸ்வர் யுதிஷ்டிரனுக்குச் சொன்னதே இந்த “நளன் தமயந்தி” கதையாகும்.\nஇக்கதையின் முடிவில், இதைப் படிப்பதனால் உண்டாகும் பலனை முன்னறிவிக்கிறார் பிருஹதஸ்வர். அது பின்வருமாறு..\nநளனின் இந்த உயர்ந்த வரலாற்றைத் திரும்பத் திரும்பச் சொல்பவனையோ, அல்லது சொல்லும்போது கேட்பவனையோ, தீயூழ் {துரதிர்ஷ்டம்} எப்போதும் அணுகாது. இந்தப் பழைய அற்புதமான வரலாற்றைக் கேட்கும் ஒருவன், பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், விலங்குகள், மனிதர்களில் உயர்ந்த இடம், ஆரோக்கியம், மகிழ்ச்சி ஆகியவற்றைப் பெறுவதோடு, சந்தேகமற, தனது எல்லாக் காரியங்களிலும் வெற்றியடைந்து, புகழடைவான்.\nமேற்கண்ட பலன்களைக் கருதவில்லையெனினும், இக்கதையைப் படிப்போருக்கு எழும் எண்ணவோட்டங்கள் அவர்களது வாழ்க்கையைச் செம்மைப் படுத்தும் என்பதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை.\nமஹாபாரதத்தில் இது போன்ற பல துணைக் கதைகள் உள்ளன. அவற்றையெல்லாம் எந்தக் கருவியிலும் படிக்கும் வண்ணம் தனித்தனி மின்புத்தகங்களாக ஆக்க வேண்டும் என்ற விருப்பத்தின் விளைவால், முதல் முயற்சியாக இந்த “நளன் தமயந்தி” கதையை ஆண்டிராய்டு, கிண்டில், பிசி, மற்றும் நூக் கருவிகளில் படிக்குமாறு EPUB, MOBI, PDF-A4, PDF-6″ என்ற நான்கு வகைகளில் மின்னூலாக்கியிருக்கிறேன்.\nஇவ்வகையிலான மின்நூல் முயற்சிக்குத் தூண்டுகோலாக இருந்த http://freetamilebooks.com திரு.அன்வர் அவர்களுக்கு நன்றி.\nநளன் தமயந்தி” கதையை மின்நூலாகப் பதிவிறக்க*\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 183\nநூல் வகை: இலக்கியம் | மின்னூலாக்கத்தில் பங்களித்தவர்கள்: செ.அருட்செல்வப்பேரரசன் | நூல் ஆசிரியர்கள்: செ.அருட்செல்வப்பேரரசன்\n[…] நளன் தமயந்தி கதை […]\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nஆப்பிள் கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nதமிழ் மின்னூல்களைப் படிப்பது எப்படி\nகிரியேட்டிவ் காமன்சு தமிழ் வலைத்தளங்கள்\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n57 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kadayanallur.org/archives/2556", "date_download": "2018-04-26T13:30:35Z", "digest": "sha1:4LWCRR3E6LDP7JRNR5EENVH74J4RVZSO", "length": 13301, "nlines": 95, "source_domain": "kadayanallur.org", "title": "முதலீட்டாளர்கள் விலகினர்-கொச்சி ஐபிஎல் அணியின் கடைசி மூச்சும் நின்றது |", "raw_content": "\nமுதலீட்டாளர்கள் விலகினர்-கொச்சி ஐபிஎல் அணியின் கடைசி மூச்சும் நின்றது\nஇப்போதோ, அப்போதோ என்று தொங்கிக்கொண்டிருந்த கொச்சி ஐபிஎல் அணியின் கதை ஒரு வழியாக முடிந்து போய் விட்டது. அந்த அணியின் முதலீட்டாளர்கள் ஒட்டுமொத்தமாக வாபஸ் வாங்கி விட்டனர். இதை இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கும் தெரிவித்து விட்டனர்.\nஏன் உங்களது அணியை ரத்து செய்யக் கூடாது என்று கேட்டு கொச்சி ஐபிஎல் அணிக்கு கிரிக்கெட் வாரியம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. திங்கள்கிழமைக்குள் தனது பிரச்சினைகளைத் தீர்த்து விட்டு வருமாறும் அதற்கு கெடு விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அதற்கு முன்பாகவே கொச்சியின் கதையை முடித்து வைத்து விட்டனர் அந்த அணியின் முதலீட்டாளர்கள்.\nகொச்சி அணியிலிருந்து தாங்கள் விலகுவதாக அவர்கள் அறிவித்து கிரிக்கெட் வாரியத் தலைவர் சஷாங் மனோகருக்கும் இதை முறைப்படி கடிதம் மூலம் தெரிவித்துள்ளனர்.\nஇதன் மூலம் கொச்சி அணி ரத்தாவது உறுதியாகி விட்டது. இதைத் தொடர்ந்து அந்த அணிக்குப் பதில் விரைவில் புதிய அணியை கிரிக்கெட் வாரியம் தேர்வு செய்து அறிவிக்கும். இதற்காக புதிதாக டெண்டர் விடப்படும். அதுதொடர்பான முடிவு நவம்பர் 28ம்தேதி நடைபெறும் ஐபிஎல் பொதுக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்படும்.\nகொச்சி அணியின் முதலீட்டாளர் குழுவில் இடம் பெற்றிருந்த ஆங்கர் எர்த், பரினி என்டர்பிரைசஸ், ரோசி ப்ளூ, பிலிம்வேவ் ஆகியவற்றுக்கு மொத்தம் 74 சதவீத பங்குகள் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. மீதமுள்ள 26 சதவீத பங்குளை அணியின் உரிமையாளர்களான கெய்க்வாட் குடும்பத்தினர் வைத்திருந்தனர். அதாவது சைலேந்திரா கெய்க்வாட் மற்றும் அவரது தம்பி ரவி கெய்க்வாட் மற்றும் அவர்களது பெற்றோர். இந்த உரிமையாளர்கள் அனைவரும் ரெண்டஸ்வஸ் ஸ்போர்ட்ஸ் வேர்ல்ட் நிறுவனத்தின் சார்பாக கொச்சி அணியை வாங்கியிருந்தனர். இதற்குத்தான் சசி தரூர், தனது அப்போதைய காதலியான சுனந்தா புஷ்கர் மூலம் பெருமளவில் உதவிகள் செய்தார் என்று அப்போது சர்ச்சை வெடித்தது.\nஏலம் எடுத்து எல்லாம் முடிந்த பின்னர் திடீரென கெய்க்வாட் குடும்பத்திற்குள் பிளவு ஏற்பட்டு இரண்டாக நின்றனர். இதையடுத்தே உங்களை ஏன் ரத்து செய்யக் கூடாது என்று கேட்டு ரெண்டஸ்வஸ் நிறுவனத்திற்கு கிரிக்கெட் வாரியம் நோட்டீஸ் அனுப்பியது. காலக்கெடுவும் விதிக்கப்பட்டது. ஆனால் சண்டை முடிவுக்கு வந்ததாக தெரியவில்லை. இதையடுத்தே தற்போது முதலீட்டாளர்கள் கூண்டோடு விலகி விட்டனர்.\nநினைத்ததை சாதித்து விட்டனர் -தரூர் புலம்பல்:\nஇதற்கிடையே கொச்சி அணியின் கதை முடிந்துள்ளது குறித்து ட்விட்டர் மூலம் வேதனை வெளியிட்டுள்ளார் தரூர். இதுகுறித்து அவர் கூறுகையில்,\nகனவு இப்போது முடிவுக்கு வந்து விட்டது. யாரெல்லாம் கேரளாவுக்கு ஒரு ஐபிஎல் அணி வந்து விடக் கூடாது என்று தீவிரமாக இருந்தார்களோ அவர்கள் இன்று வென்று விட்னர். Buy cheap Amoxil இந்த அணி வர வேண்டும் என்று பாடுபட்ட நாங்கள் அதற்காக பெரும் விலையைக் கொடுத்ததுதான் மிச்சம் என்று கூறியுள்ளார் தரூர்.\nகொச்சி அணிக்கு பி.சி.சி.ஐ., அனுமதி *ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்கும்\nமீண்டும் தப்பியது கொச்சி அணி\nஉலக கோப்பை கால்பந்து: சிலி கலக்கல் வெற்றி\nஉலக கோப்பை கால்பந்து: கானா கலக்கல் வெற்றி\nஇந்தியாவிடம் வீழ்ந்தது பாக்.,: பைனலில் இலங்கையுடன் மோதல்\nதெற்கு ரயில்வே மண்டலத்தில் காலியாகவுள்ள 2,500 வேலை இடங்களை நிரப்ப சென்னை ஆர்.ஆர்.பி. இலக்கு நிர்ணயித்துள்ளது.\nதென்காசி, கடையநல்லூர் தொகுதியில் தி.மு.க.,ரகசிய ஆய்வு கூட்டம்\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகடையநல்லூரில் … வீடு வீடாக சென்று நெல்லை கலெக்டர் ஆய்வு\nபரவி வரும் டெங்கு காய்சல் …மரண பயத்தில் கடையநல்லூர் மக்கள்.\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kadayanallur.org/archives/2952", "date_download": "2018-04-26T13:11:43Z", "digest": "sha1:NRYX65P5Y4JUW4JPHPZKWRA7WO6W2KI7", "length": 9079, "nlines": 90, "source_domain": "kadayanallur.org", "title": "2010-ன் சிறந்த மனிதராக ஃபேஸ்புக் நிறுவனர் ஜூக்கர்பெர்க் தேர்வு! |", "raw_content": "\n2010-ன் சிறந்த மனிதராக ஃபேஸ்புக் நிறுவனர் ஜூக்கர்பெர்க் தேர்வு\nஉலகளவில் 2010-ம் ஆண்டின் சிறந்த மனிதராக ஃபேஸ்புக் சமூக இணையதளத்தின் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்கை ‘டைம்’ பத்திரிகை தேர்வு செய்துள்ளது.\nஉலகளவில் இளைஞர்கள் அதிகம் பயன்படுத்தும் சமூக இணையதளமாக ஃபேஸ்புக் விளங்குகிறது. 500 மில்லியன் மக்கள் பயன்படுத்தும் ஃபேஸ்புக்கை ஆரம்பித்து, அதை வெற்றிகரமான வர்த்தகமாகவும் மாற்றியுள்ளார் இவர். இன்று இணைய உலகின் ஜாம்பவான் கூகுளே அச்சம் கொள்ளும் அளவுக்கு பேஸ்புக் வளர்ந்து வருகிறது.\n26 வயதில் இந்த சாதனையைப் படைத்துள்ள முதல் இளைஞர் ஜுக்கர்பெர்க்தான். இதற்கு முன் பிரிட்டிஷ் மகாராணி எலிசபெத் இதே வயதில் டைம் பத்திரிகையால் உலகின் சிறந்த மனிதராக தேர்வு செய்யப்பட்டார். ஆனால் அவரை விட 2 வாரம் இளையவர் ஜுக்கர்பெர்க்.\nசெய்தி மற்றும் கலாசாரத்தில் ஓர் ஆண்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர்களைஆண்டுதோறும் ‘டைம்’ பத்திரிகை தேர்ந்தெடுத்து கெளரவித்து வருகிறது என்பது Levitra online குறிப்பிடத்தக்கது.\nநஷ்ட ஈடாக வழங்க வேண்டிய 100 கோடி அமெரிக்க டாலரை சில்லரையாக வழங்கி பழிதீர்த்த சாம்சங் நிறுவனம்\nஇரகசியமாக உலகை வேவு பார்த்த அமெரிக்க விமானம் ஜூனில் தரை இறக்கம்\nஒமான்:போரா​ட்டம் எதிரொலி – அமை​ச்சரவையில் அதிரடி மாற்றம் – காபூஸ் நடவடிக்கை\nதுருக்கி நில நடுக்கம்: 2 நாட்களுக்கு பின் குழந்தை உயிருடன் மீட்பு\n“ஒலிம்பிக்” போட்டியில் பங்கேற்கும் 8 மாத கர்ப்பிணி\nசி.பி.ஐ., சோதனை : திருப்பத்தை ஏற்படுத்திய ராஜா டைரி\nஸ்பெக்ட்ரம் முறைகேடு… சிபிஐ விசாரணையை கண்காணிப்போம்\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகடையநல்லூரில் … வீடு வீடாக சென்று நெல்லை கலெக்டர் ஆய்வு\nபரவி வரும் டெங்கு காய்சல் …மரண பயத்தில் கடையநல்லூர் மக்கள்.\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kadayanallur.org/archives/3447", "date_download": "2018-04-26T13:18:29Z", "digest": "sha1:RCELKAS7SOCBIMNT7CVKLXHN3NCQQFRI", "length": 7920, "nlines": 108, "source_domain": "kadayanallur.org", "title": "Recruitment – KSA |", "raw_content": "\nஇராணுவத்தில் சேர்வதற்க்கான நுழைவு தேர்வு\nகுவைத்தில் BMS Engineer மற்றும் IT Help Deskக்கு வேலைவாய்ப்பு\nஸ்ரீசாந்த், காம்பிர் அபாரம்: சதமடித்து கைகொடுத்தார் காலிஸ்\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகடையநல்லூரில் … வீடு வீடாக சென்று நெல்லை கலெக்டர் ஆய்வு\nபரவி வரும் டெங்கு காய்சல் …மரண பயத்தில் கடையநல்லூர் மக்கள்.\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} {"url": "http://puthu.thinnai.com/?p=6188", "date_download": "2018-04-26T13:35:02Z", "digest": "sha1:44XT3O2SYME44VDEDCJUK7FT3G6NEYAL", "length": 9565, "nlines": 116, "source_domain": "puthu.thinnai.com", "title": "பம்பரம்… | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஒருத்தனும் இருந்ததில்ல ஊருல …\nஎப்பயும் அவங்கூட சுத்தும் …\nதுரிஞ்ச மரங்கள தேடுவாங் …\nஆணி உனதா, என்தான்னு கேப்பாங்\nஆணிய அவனே அடிச்சி செதுக்கித்தந்தா\nஅவங் செதுக்கன பொம்பரந்தாங் வெளையாடும் ..\nகையில ஏந்தி அழகுகாட்டுவாங் …\nஒரு பொம்பரத்தையும் தெருவுல பாக்கமுடியல\nSeries Navigation இந்திய அணுமின்சக்தித் தொழில் நுட்பம் முதிர்ச்சி யானதா அணுவியல் இயக்குநர் முதிர்ச்சி பெற்றவரா அணுவியல் இயக்குநர் முதிர்ச்சி பெற்றவரா \nமலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை – 1\nதமிழ் பெண் கவிஞர்கள் – ஆங்கிலத்தில் – ஆதி மந்தியார் முதல் உமா மஹேஸ்வரி வரை\nஅர்ஜண்ட் வெயிட் லாஸ்.. ஒரு யாத்ரா டிக்கட் ப்ளீஸ்..\nபழமொழிகள் கூறும் உதவி எனும் வாழ்க்கை நெறி\nஜென் ஒரு புரிதல் – பகுதி 19\nஇதுவும் அதுவும் உதுவும் – 5\nஇந்திய அணுமின்சக்தித் தொழில் நுட்பம் முதிர்ச்சி யானதா அணுவியல் இயக்குநர் முதிர்ச்சி பெற்றவரா \nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கோடாரியில் தகர்ப்பாய் (கவிதை -52 பாகம் -1)\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) திருமணப் பாதையில் (கவிதை – 50 பாகம் -5)\nபஞ்சதந்திரம் தொடர் 18 சமுத்திரமும் நீர்க்குருவியும்\nதமிழ் விக்கிப்பீடியா ஒரு ஊடகப் போட்டி\nதோள்களில் அமர்ந்திருக்கும் மரணத்தின் தூதுவன்\nமுகம்மது யூனுஸ் அறிஞர் அண்ணாவை ஹாங்காங்கில் சந்தித்தது பற்றிய உரை\nபிரான்சு கம்பன் கழகத்தின் 10 -ஆம் ஆண்டு விழா\nநானும் பிரபஞ்சனும் கட்டுரை குறித்து சில கருத்துகள்:\nமுன்னணியின் பின்னணிகள் – 14 சாமர்செட் மாம்\nமூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 16\nPrevious Topic: கவிதைகள்: பயணக்குறிப்புகள்\nNext Topic: இந்திய அணுமின்சக்தித் தொழில் நுட்பம் முதிர்ச்சி யானதா அணுவியல் இயக்குநர் முதிர்ச்சி பெற்றவரா \nசுத்திச்சுத்தி காலம் மாறிப்போச்சு, அமுல்ராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://puttalamtoday.com/kingdoms-crises-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8/", "date_download": "2018-04-26T13:39:26Z", "digest": "sha1:AE2LNB6LWXWPIORMHKTA6Z2S6RDRKXJO", "length": 7465, "nlines": 50, "source_domain": "puttalamtoday.com", "title": "kingdom’s crises: முடிக்குறிய இளவரசர் நயீபுக்கு அடி மேல் அடி !! அவரது கணக்குகளும் முடக்கம் – PuttalamToday", "raw_content": "\nkingdom’s crises: முடிக்குறிய இளவரசர் நயீபுக்கு அடி மேல் அடி \nசவூதி அரேபியாவின் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கையில் அண்மையில் பதவி நீக்கப்பட்ட அந்நாட்டு முன்னாள் முடிக்குரிய இளவரசர் முஹமது பின் நயெப் இலக்காகியுள்ளார்.\nமுஹமது பின் நயெப் மற்றும் அவரது நெருங்கிய உறவினர்கள் தொடர்புடைய வங்கிக் கணக்குகள் சவூதி நிர்வாகத்தால் முடக்கப்பட்டிருப்பதாக ரோய்ட்டர்ஸ் மற்றும் வோல் ஸ்டிரீட் ஜெர்னல் செய்தி வெளியிட்டுள்ளன. இது தொடர்பிலான பரீட்சயமுள்ள தரப்புகளை மேற்கோள் காட்டியே இந்த செய்தி வெளியாகியுள்ளது.\nஊழல் எதிர்ப்பு நடவடிக்கையின் கீழ் கடந்த சனிக்கிழமை பல இளவரசர்கள் உட்பட நாட்டின் முக்கிய புள்ளிகள் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையிலேயே நயெப் இலக்காகியுள்ளார். கைது செய்யப்பட்டோர் மீது பண மோசடி, ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. முடிக்குரிய இளவரசார இருந்த நயெப் கடந்த ஜூன் மாதம் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டு அந்த இடத்திற்கு மன்னர் சல்மான் அவரது மகன் முஹமது பின் சல்மானை நியமித்தார்.\nB.M.S. college சாரம் திருவிழா: பெலூன் டான்ஸ் ஆடிக் கலக்கிய முஸ்லிம் யுவதிகள்- எல்லை மீறுகிறார்களா..\nBreaking : சவூதி மன்னரை கவிழ்க்க முயற்சி.. அரண்மை அருகே கடும் துப்பாக்கி சூடு – பங்கருக்குள் கொண்டு செல்லப்பட்டார் சல்மான் posted on April 22, 2018\nசவூதியின் கொடூர செயலால் உலகமே அதிர்ச்சியில் \nBreaking : 12 வயதுக்கு உள்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு தூக்குத் தண்டனை மோடியின் அமைச்சரவை அவசர சட்டம் பிறப்பிப்பு posted on April 21, 2018\nBreaking :கண்டி கலவரங்களை வழி நடத்திய போலிஸ் இன்ஸ்பெக்டர், சார்ஜென்ட் மேஜர் கைது செய்யப்படவுள்ளார்கள் posted on April 21, 2018\nதலைமைப் பற்றி தீர்மானிக்கும் ஐக்கியத் தேசியக் கட்சியின் முக்கியக் கூட்டம் இன்று \nகண்டிக் கலவரத்தை முன்னின்று நடத்திய இரு பிரதேச சபை உறுப்பினர்கள் தொடர்ந்தும் தேடப்படுகிறார்கள்..\nபச்சை கறிவேப்பிலை சாப்பிடுவதன் மூலம் கொலஸ்ட்ரோலை கட்டுக்குள் வைக்கலாம் இதய சத்திர சிகிச்சை நிபுணர் Dr.இலாஹி\nநகர, பிரதேச சபை சேர்மன்களின் ஆட்டம் எல்லாம் 2 வருடங்களுக்கு மட்டுமே.. அதன் பிறகு உறுப்பினர்களின் காலில் விழுந்தாக வேண்டும்\nமுன்னாள் நேவி தளபதி சந்தன பிரசாத் தப்பிச் செல்ல பாதுகாப்புச் சபை பிரதானி ரவீந்திர விஜேகுணவர்தன 5 லட்சம் கொடுத்தார்.. C.I.D. பொஸ் சான் குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sivantv.com/videogallery/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%87-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81-2/", "date_download": "2018-04-26T13:45:19Z", "digest": "sha1:GB2NOCWLCXBZUSMZ46ZA5POSW2NIDMYE", "length": 7838, "nlines": 142, "source_domain": "sivantv.com", "title": "சுவிச்சர்லாந்து வலே அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் தேர்த்திருவிழா மலர் – 02 09.09.201 | Sivan TV", "raw_content": "\nபுங்குடுதீவு கிழக்கு கண்ணகைபுரம் ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்பாள் திருக்கோவில் வருடார்ந்த மகோற்சவம்\nHome சுவிச்சர்லாந்து வலே அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் தேர்த்திருவிழா மலர் – 02 09.09.201\nசுவிச்சர்லாந்து வலே அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் தேர்த்திருவிழா மலர் – 02 09.09.201\nஓல்ரன் ஸ்ரீ மனோன்மணி அம்மன் கோவி�..\nயேர்மனி சுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்க..\nபேர்ன் ஸ்ரீ கல்யாணசுப்பிரமணியர் ..\nஓல்ரன் மனோன்மணி அம்மன் திருக்கோவ..\nஜெர்மனி - கெமஸ்பாக் ஸ்ரீ குறிஞ்சி�..\nஜெர்மனி - வூப்பெற்றால் ஸ்ரீ நவதுர�..\nஜெர்மனி - ஹம் ஸ்ரீ காமாட்சி அம்பாள..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் வர�..\nசுவிஸ் – நலவாழ்வு அமைப்பின் மருந�..\nசுவிஸ் - நலவாழ்வு அமைப்பின் மருந்�..\nபேர்ன் – ஞானலிங்கேசுரர் திருக்கோ..\nபேர்ன் – ஞானலிங்கேசுரர் திருக்கோ..\nபேர்ன் – ஞானலிங்கேசுரர் திருக்கோ..\nபேர்ன் - ஞானலிங்கேசுரர் திருக்கோ�..\nசூரிச் ஹரே கிருஷ்ண ஆலய கிருஷ்ண ஜெ�..\nபேர்ண் - ஞானலிங்கேசுரர் திருக்கோ�..\nசுவெற்ரா கனகதுர்க்கா அம்பாள் ஆலய..\nசுவிற்சர்லாந்து - ஓல்ரன் அருள்மி�..\nகூர்-நவசக்தி விநாயகர் ஆலய தேர்த்�..\nதூண்- ஸ்ரீ சீரடிசாயிபாபா மன்றத்த�..\nதூண்- ஸ்ரீ சீரடிசாயிபாபா மன்றத்த�..\nமர்த்தினி - வலே ஞானலிங்கேச்சுரர் �..\nபேர்ண் - ஞானலிங்கேசுரர் திருக்கோ�..\nபேர்ண் - ஞானலிங்கேசுரர் திருக்கோ�..\nபேர்ண் - ஞானலிங்கேசுரர் திருக்கோ�..\nபேர்ண் – ஞானலிங்கேசுரர் திருக்கோ..\nகனடா- மிசிசாகா ஜெயதுர்க்கா தேவஸ்�..\nபேர்ண் - ஞானலிங்கேசுரர் திருக்கோ�..\nபேர்ண் - ஞானலிங்கேசுரர் திருக்கோ�..\nசுவிஸ் - கூர் நவசக்தி விநாயகர் கோவ..\nயாழ் இந்து பாலர்களின் காத்தவராயன..\nசுவிச்சர்லாந்து வலே அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் தேர்த்திருவிழா மலர் – 01 09.09.201\nவடமராட்சி துன்னாலை வல்லிபுர ஆழ்வார் சுவாமி கோவில் கொடியேற்றம் 09.20.2017\nபுங்குடுதீவு - கிழக்கு - கண்ணகைப�..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sivantv.com/videogallery/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2018-04-26T13:45:31Z", "digest": "sha1:4XE5J5PKYL5UTMPIKDTVJNU5ATLZTDNW", "length": 7505, "nlines": 142, "source_domain": "sivantv.com", "title": "பேர்ண் – ஞானலிங்கேசுரர் திருக்கோவில் தேர்த்திருவிழா மலர்-அ, 29.08.2015 | Sivan TV", "raw_content": "\nபுங்குடுதீவு கிழக்கு கண்ணகைபுரம் ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்பாள் திருக்கோவில் வருடார்ந்த மகோற்சவம்\nHome பேர்ண் – ஞானலிங்கேசுரர் திருக்கோவில் தேர்த்திருவிழா மலர்-அ, 29.08.2015\nபேர்ண் – ஞானலிங்கேசுரர் திருக்கோவில் தேர்த்திருவிழா மலர்-அ, 29.08.2015\nபேர்ண் - ஞானலிங்கேசுரர் திருக்கோ�..\nஓல்ரன் ஸ்ரீ மனோன்மணி அம்மன் கோவி�..\nயேர்மனி சுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்க..\nபேர்ன் ஸ்ரீ கல்யாணசுப்பிரமணியர் ..\nஓல்ரன் மனோன்மணி அம்மன் திருக்கோவ..\nஜெர்மனி - கெமஸ்பாக் ஸ்ரீ குறிஞ்சி�..\nஜெர்மனி - வூப்பெற்றால் ஸ்ரீ நவதுர�..\nஜெர்மனி - ஹம் ஸ்ரீ காமாட்சி அம்பாள..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் வர�..\nசுவிஸ் – நலவாழ்வு அமைப்பின் மருந�..\nசுவிஸ் - நலவாழ்வு அமைப்பின் மருந்�..\nபேர்ன் – ஞானலிங்கேசுரர் திருக்கோ..\nபேர்ன் – ஞானலிங்கேசுரர் திருக்கோ..\nபேர்ன் – ஞானலிங்கேசுரர் திருக்கோ..\nபேர்ன் - ஞானலிங்கேசுரர் திருக்கோ�..\nசூரிச் ஹரே கிருஷ்ண ஆலய கிருஷ்ண ஜெ�..\nபேர்ண் - ஞானலிங்கேசுரர் திருக்கோ�..\nசுவெற்ரா கனகதுர்க்கா அம்பாள் ஆலய..\nசுவிற்சர்லாந்து - ஓல்ரன் அருள்மி�..\nகூர்-நவசக்தி விநாயகர் ஆலய தேர்த்�..\nதூண்- ஸ்ரீ சீரடிசாயிபாபா மன்றத்த�..\nதூண்- ஸ்ரீ சீரடிசாயிபாபா மன்றத்த�..\nமர்த்தினி - வலே ஞானலிங்கேச்சுரர் �..\nபேர்ண் - ஞானலிங்கேசுரர் திருக்கோ�..\nபேர்ண் - ஞானலிங்கேசுரர் திருக்கோ�..\nபேர்ண் - ஞானலிங்கேசுரர் திருக்கோ�..\nபேர்ண் – ஞானலிங்கேசுரர் திருக்கோ..\nகனடா- மிசிசாகா ஜெயதுர்க்கா தேவஸ்�..\nபேர்ண் - ஞானலிங்கேசுரர் திருக்கோ�..\nசுவிஸ் - கூர் நவசக்தி விநாயகர் கோவ..\nயாழ் இந்து பாலர்களின் காத்தவராயன..\nபேர்ண் – ஞானலிங்கேசுரர் திருக்கோவில் தேர்த்திருவிழா மலர்-2, 29.08.2015\nபேர்ண் ஞானலிங்கேசுரர் திருக்கோவில் கொடியேற்றத் திருவிழா 21.08.2015\nபுங்குடுதீவு - கிழக்கு - கண்ணகைப�..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.techtamil.com/shopping/micromax-canvas-tablet-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-16500%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-04-26T13:20:44Z", "digest": "sha1:W4JPQWVCE7KKWY5JHIH3KEGS6VOEA3SW", "length": 8034, "nlines": 133, "source_domain": "www.techtamil.com", "title": "MicroMax Canvas Tablet ரூபாய் 16500இல் அறிமுகம் – TechTamil News", "raw_content": "\nContact / அறிமுகம் / தொடர்புக்கு\nஇதுவரை Fun Book எனும் பெயரில் Tablet விற்பனை செய்து வந்த MicroMax நிறுவனம் தற்போது தங்களின் கைபேசி பெயர் Canvas என்ற அடையாளத்தில் Tablet ஒன்றை அறிமுகம் செய்கிறது.\n8 அங்குலம் அகலம் கொண்ட திரையுடன் இது பார்க்க Galaxy Tab 3 (311) மற்றும் iPad Mini போல் உள்ளது.\nகடைகளில் இது ரூபாய் 16500க்கு கிடைக்கும்.\nஇந்திய Tablet சந்தையில் சாம்சூங் நிறுவனம் 15.76% பங்களிப்புடன் முதல் இடத்திலும், மைக்ரோ மேக்ஸ் நிறுவனம் 13.33% பங்களிப்புடன் இரண்டாம் இடத்திலும் உள்ளது.\nகணினி உலகின் புதிய கண்டுபிடிப்பு: MeRAM...\nசம்ஸூங்: தங்கத்தால் ஆனா புதிய S4 கைப்பேசியை அடுத்த மாதம் வெளியிட உள்ளது. நோக்கியா: மைக்ரோசோப்ட் நிறுவனம் நோக்கியா நிறுவனத்தை வாங்கி விட்டது....\nபுதிய தொழில்நுட்பம் அறிமுகம்: Crossbar நினைவகம்...\nதற்போது சந்தையில் இருக்கும் iPhone, iPad மற்றும் பிற Tabletகளில் நாம் பொதுவாகச் சொல்லும் Internal Memory என்பது RRAM , NAND based RRAM எனும் Flash Mem...\nமற்றவர் தொட்டவுடன் கைபேசி திரையை மூடும் புதிய மென்...\nஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி கைபேசி திரையை தொட்டு பயன்படுத்துவோம். அழுத்தும் வேகம், மேலே கீழே தடவுவது என இந்த செயல்கள் ஒவ்வொரு ஆளுக்கும் வேறுபடும். ...\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nமற்றவர் தொட்டவுடன் கைபேசி திரையை மூடும் புதிய மென்பொருள்\nஆப்பிள் iPhone X வாங்க குதிரையில் விளம்பர பேனருடன் வந்த வாடிக்கையாளர்\nஆறு அங்குலம் திரை அளவினைக் கொண்ட சிறந்த பத்து ஸ்மார்ட் போன் பட்டியல்கள்:\nமறுபடியும் வெடித்து சிதறிய சாம்சங் நோட் 7 :\nலாவா ஏ97 ஸ்மார்ட்போன் ஒரு பார்வை :\nசாம்சங் கேலக்சி நோட் 7 -க்கு ஏற்பட்ட தடை\nஆப்பிள் ஐபோன் 7 ஒரு பார்வை:\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமற்றவர் தொட்டவுடன் கைபேசி திரையை மூடும் புதிய மென்பொருள்\nபுதிய தொழில்நுட்பம் அறிமுகம்: Crossbar நினைவகம்\nகணினி உலகின் புதிய கண்டுபிடிப்பு: MeRAM\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://devapriyaji.wordpress.com/2010/05/08/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2018-04-26T13:40:24Z", "digest": "sha1:UBSA35OSCMALA5KHHUCFAJE2FQWY2LPH", "length": 17118, "nlines": 110, "source_domain": "devapriyaji.wordpress.com", "title": "இலங்கையில் பாலியல் பாதிரியார் | தேவப்ரியா", "raw_content": "\nபைபிள்-குலைக்கப் படுகிறதா -அகழ்வாய்வு உண்மைகளில்\nஉலகம் அழியப்போவது என் -நம் வாழ்நாளிலே- இயேசு சிறிஸ்து\nபுனித தோமா -புனித தோமையர் கட்டுக்கதைகள்\n← ரூ.15 லட்சத்துக்காக நண்பரை கொலை செய்த பாதிரியார்\n‘லாபியிஸ்ட்’ பெண்மணி நீரா நாடியா →\nஹொலண்ட் நாட்டு பாதிரியார் இலங்கையில் பாலியல் நடவடிக்கையில்\nஹொலண்ட் நாட்டு பாதிரியார் (ஹொலண்ட், ரொட்டெர்டாம்)இலங்கையில் பாலியல் நடவடிக்கையில் ஈடுபட்டதாக புகார் செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் தற்காலிகமாக பணியில் இருந்து விலக்கப்பட்டுள்ளார்.\nஇலங்கைக்கு ஒவ்வொரு வருடமும் சுற்றுலா செல்லும் இவர் அங்கு சில அறக்கட்டளை பணிகளையும் செய்து வந்துள்ளதாக கூறப்படுகின்றது. இது தொடர்பான குற்ற சாட்டினை விசாரித்து ரொட்டெர்டாம் கத்தோலிக்க சபையின் தலைவர் இந்த பாதிரியார் நிதி கையாடல் மற்றும் பாலியல் குற்ற சாட்டுக்களில் ஈடுபட்டதனால் விசாரணைகள் முற்றுப்பெறும்வரை தற்காலிகமாக இவரது பணிக்காலம் நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.\nகத்தோலிக்கத் திருச்சபையில் சிறார் பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகள் அதிகரித்துவருகின்றன\nபாலியல் சர்ச்சையில் ஊட்டி பாதிரியார்\nஅமெரிக்க தேவாலயம் ஒன்றில் பணியாற்றித் திரும்பிய இந்தியப் பாதிரியார் மீது தெரிவிக்கப்படும் சிறார் பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகளை அவர் மறுத்துள்ளார்.\nஅமெரிக்கா மின்னசோட்டாமாநிலத்தில் க்ரூக்ஸ்டன் என்ற பகுதியில் பணியாற்றியபோது சிறுமிகளிடம் தவறாக நடந்துகொண்டார் என்று கத்தோலிக்க பாதிரியார் ஜோசஃப் பழனிவேல் ஜெயபால் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.\n“ஜெயபால் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்படவில்லை, ஆயினுங்கூட மீண்டும் மீண்டும் புகார்கள் எழுவதால், பிரச்சினை அகில இந்திய கத்தோலிக்க பிஷப்புக்களின் அமைப்பான Catholic Bishops Conference of Indiaவின் முன் வைக்கப்பட்டிருக்கிறது; அதன் உத்தரவின் பேரில் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என தற்போது ஜெயபால் பணியாற்றும் ஊட்டி மறைமாவட்டத்தின் ஆயரான பிஷப் அருளப்பன் அமல்ராஜ் தெரிவித்துள்ளார்.\nசர்ச்சைக்குரிய ஜோசஃப் ஜெயபால் மின்னசோட்டா மாநிலத்தில் செப்டம்பர் 2004லிருந்து ஆகஸ்ட் 2005 வரை க்ரூக்ஸ்டன் என்ற பகுதியில் பணியாற்றியிருக்கிறார்.\nமூன்றாண்டுகள் அங்கே தங்கி அவர் பணியாற்றியிருக்க முடியும், ஆனால் நோய்வாய்ப்பட்ட தனது தாயைப் பார்க்கவேண்டுமென்று ஓராண்டிலேயே இந்தியா திரும்பிவிட்டார்.\nமின்னசோட்டா பணிக் காலத்தில் ஒரு சிறுமியுடன் தவறான உறவு வைத்திருந்ததாகவும், ஒரு தேவாலயத்தின் பணத்தைக் கையாடியதாகவும் அவர் இந்தியா வந்த பிறகு அவர் மீது புகார்கள் எழுந்தன.\nவேறொரு சிறுமியும் ஜெயபால் தன்னை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தினார் என்று பின்னர் குற்றஞ்சாட்டினார்.\nரோசோ கவுண்டி என்ற பகுதியில் ஜெயபால் மீது ஜனவரி 2007ல் கிரிமினல் வழக்குக்கள் பதிவு செய்யப்பட்டன.\nஜெயபாலை அமெரிக்காவிற்கு திரும்ப அழைத்து வழக்கு நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும், ஆனால் இந்தியா அம்முயற்சிகளுக்கு ஒத்துழைக்கவில்லையென்றும்ரோசோ கவுண்டியின் அரசு வழக்கறிஞர் கூறியிருக்கிறார்.\nஆனால் தான் குற்றமற்றவர் என்றும் தன் மீதான வழக்குகளை சந்திக்கத் தயாரென்றும் கத்தோலிக்க திருச்சபையின் செய்தி நிறுவனமான யூ.சி.ஏ.விற்கு அளித்துள்ள பேட்டியில் 57 வயதான ஜெயபால் கூறியிருக்கிறார்.\nதேவைப்பட்டால் பாதிரியார் ஜெயபால் அமெரிக்கா சென்று அவருக்கு எதிரான வழக்குக்களை சந்தித்தே ஆகவேண்டும் என ஊட்டி பிஷப் அமல்ராஜிடம் திட்டவட்டமாக தெரிவித்திருப்பதாக சென்னை ஆர்ச் பிஷப் சின்னப்பா கூறியிருக்கிறார்.\nஅமெரிக்கா மின்னசோட்டாமாநிலத்தில் க்ரூக்ஸ்டன் என்ற பகுதியில் பணியாற்றியபோது சிறுமிகளிடம் தவறாக நடந்துகொண்டார் என்று கத்தோலிக்க பாதிரியார் ஜோசஃப் பழனிவேல் ஜெயபால் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.\n“ஜெயபால் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்படவில்லை, ஆயினுங்கூட மீண்டும் மீண்டும் புகார்கள் எழுவதால், பிரச்சினை அகில இந்திய கத்தோலிக்க பிஷப்புக்களின் அமைப்பான Catholic Bishops Conference of Indiaவின் முன் வைக்கப்பட்டிருக்கிறது; அதன் உத்தரவின் பேரில் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என தற்போது ஜெயபால் பணியாற்றும் ஊட்டி மறைமாவட்டத்தின் ஆயரான பிஷப் அருளப்பன் அமல்ராஜ் தெரிவித்துள்ளார்.\nசர்ச்சைக்குரிய ஜோசஃப் ஜெயபால் மின்னசோட்டா மாநிலத்தில் செப்டம்பர் 2004லிருந்து ஆகஸ்ட் 2005 வரை க்ரூக்ஸ்டன் என்ற பகுதியில் பணியாற்றியிருக்கிறார்.\nமூன்றாண்டுகள் அங்கே தங்கி அவர் பணியாற்றியிருக்க முடியும், ஆனால் நோய்வாய்ப்பட்ட தனது தாயைப் பார்க்கவேண்டுமென்று ஓராண்டிலேயே இந்தியா திரும்பிவிட்டார்.\nமின்னசோட்டா பணிக் காலத்தில் ஒரு சிறுமியுடன் தவறான உறவு வைத்திருந்ததாகவும், ஒரு தேவாலயத்தின் பணத்தைக் கையாடியதாகவும் அவர் இந்தியா வந்த பிறகு அவர் மீது புகார்கள் எழுந்தன.\nவேறொரு சிறுமியும் ஜெயபால் தன்னை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தினார் என்று பின்னர் குற்றஞ்சாட்டினார்.\nரோசோ கவுண்டி என்ற பகுதியில் ஜெயபால் மீது ஜனவரி 2007ல் கிரிமினல் வழக்குக்கள் பதிவு செய்யப்பட்டன.\nஜெயபாலை அமெரிக்காவிற்கு திரும்ப அழைத்து வழக்கு நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும், ஆனால் இந்தியா அம்முயற்சிகளுக்கு ஒத்துழைக்கவில்லையென்றும்ரோசோ கவுண்டியின் அரசு வழக்கறிஞர் கூறியிருக்கிறார்.\nஆனால் தான் குற்றமற்றவர் என்றும் தன் மீதான வழக்குகளை சந்திக்கத் தயாரென்றும் கத்தோலிக்க திருச்சபையின் செய்தி நிறுவனமான யூ.சி.ஏ.விற்கு அளித்துள்ள பேட்டியில் 57 வயதான ஜெயபால் கூறியிருக்கிறார்.\nதேவைப்பட்டால் பாதிரியார் ஜெயபால் அமெரிக்கா சென்று அவருக்கு எதிரான வழக்குக்களை சந்தித்தே ஆகவேண்டும் என ஊட்டி பிஷப் அமல்ராஜிடம் திட்டவட்டமாக தெரிவித்திருப்பதாக சென்னை ஆர்ச் பிஷப் சின்னப்பா கூறியிருக்கிறார்.\nFiled under தமிழ்கிறுஸ்டியன் குருட்டு நம்பிக்கயாளர், பலான பாதிரியார் கிறிஸ்துவர் மோசடி கிறிஸ்து ஃபிடோஃபைல், ஃபோர்ஜரி, அந்தப்ப�, Christianity ஏசு கிறிஸ்து\nஉண்மைகளை அறிவோம் தீமைகளை விரட்டுவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/videos/seeman-condemns-the-act-taken-on-the-policeman-mayazhagu-290138.html", "date_download": "2018-04-26T13:07:22Z", "digest": "sha1:5QOCRGMOFSIYVOLKPYEODMSSBBJVWHYF", "length": 9058, "nlines": 160, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகப் பேசிய காவலர் மீது நடவடிக்கை சீமான் கண்டனம் - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » தமிழகம்\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகப் பேசிய காவலர் மீது நடவடிக்கை சீமான் கண்டனம்\nஜல்லிக்கட்டுப் போராட்டத்திற்கு ஆதரவாகப் பேசிய காவலர் மாயழகு மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்து உள்ளார். கடந்த ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கக்கோரி ஆயிரக்கணக்கானோர் மெரினா கடற்கரையில் கூடி போராட்டம் நடத்தினர். இது காட்டுத்தீயாக பல்வேறு மாவட்டங்களுக்கும் பரவியது.\nஇறுதியில் போராட்டக்காரர்களுக்கு செவி சாய்த்து, ஜல்லிக்கட்டு நடத்த அரசு வழிவகை செய்தது. இதில் போராட்டத்தைக் கட்டுப்படுத்த வந்த காவலர் மாயழகு என்பவர் திடீரென போராட்டக்காரர்களுக்கு ஆதரவாகப் பேசினார். இதற்கு அப்போது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படமாட்டாது என்று சொன்ன காவல்துறை தற்போது அவருக்கு பதவி உயர்வை ரத்து செய்து வைத்துள்ளதாக தகவல் வெளியானது.\nஇதற்கு கண்டனம் தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை:\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகப் பேசிய காவலர் மீது நடவடிக்கை சீமான் கண்டனம்\nகுட்டையில் மிதந்த மண்டை ஓடு\nகொள்ளையில் அதிமுக புள்ளி புதுவையில் அதிர்சி\nஜெ. மகள் விவகாரம்.. ரத்த மாதிரி இல்லை என்கிறது அப்பல்லோ.\nதிமுகவின் செயல்பாடுகள் பாஜகவுக்குத்தானே பலன் தரும்\nமமதாவுக்கு ஸ்டாலின் திடீர் பாராட்டு காங்கிரஸ் ஷாக்\nதாய், தந்தை, மகளுக்கு விஷம் கொடுத்து கொன்ற பெண்..\nவிக்கிபீடியா செய்த தவறால் உருவான சர்ச்சை\nசிதம்பரம் அருகே இருசக்கர வாகனம் மீது பஸ் மோதி விபத்து\nசசிகலா சிறை செல்ல தினகரன் காரணம்: குட்கா ஊழல் வழக்கில் இன்று தீர்ப்பு\nதஞ்சை பெரியகோவில் தேரோட்டம் கோலாகலமாக தொடங்கியது\nஉபியில் 13 சிறுவர்கள் பலி, டெல்லியில் 400 கர்நாடக விவசயிகள் போராட்டம்\nமாணவியை பலாத்காரம் செய்த ஆசிரியர் லிப்ட் விழுந்து 8 வயது சிறுமி பரிதாப பலி\nமேலும் பார்க்க தமிழகம் வீடியோக்கள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kavishan.blogspot.com/2012/02/blog-post_1173.html", "date_download": "2018-04-26T13:19:37Z", "digest": "sha1:23EXA52UYYYESNGILI67XW7XBNKSAKNG", "length": 10519, "nlines": 138, "source_domain": "kavishan.blogspot.com", "title": "வெள்ளைக் கொடி இரகசியங்களை கக்கினார் நம்பியார்! ~ ஈழம் செய்திகள்", "raw_content": "\nவெள்ளைக் கொடி இரகசியங்களை கக்கினார் நம்பியார்\nஐக்கிய நாடுகள் சபையை சேர்ந்த மிக உயர் அதிகாரிகளில் ஒருவரான விஜய் நம்பியார் வெள்ளைக் கொடி விவகாரம் தொடர்பாக சில விபரங்களை வெளிப்படுத்தி உள்ளார்.\nஇவர் இன்னர் சிற்றி பிரஸ் பத்திரிகைக்கு கருத்துக் கூறியபோதே சில தகவல்களை கூறி இருக்கின்றார்.\nஇவர் இப்பேட்டியில் தெரிவித்து இருப்பவை வருமாறு:\n-பிரித்தானிய ஊடகவியலாளர் மேரி கொல்வின் கடந்த வாரம் சிரியாவில் கொல்லப்பட்டு உள்ளார் அல்லவா இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் இடையிலான யுத்தத்தின் இறுதிக் கட்டங்களில் கொல்வின் என்னுடன் தொடர்பில் இருந்து உள்ளார். புலிகள் இயக்க தலைவர்கள் சிலரின் சரண் அடைதல் தொடர்பாக மத்தியஸ்தத்தில் ஈடுபட முயன்று இருந்தார்.\nஎன்னுடன் பேசினார். நான் அவரை இலங்கை செல்ல சொன்னேன். அமெரிக்க தூதுவராக இருந்த ரொபேட் பிளேக்குடன் இது சம்பந்தமாக இரு தடவைகள் தொடர்பு கொண்டேன்.\nநானும் கொல்வினும் இலங்கை வர திட்டமிட்டு இருந்தோம். ஐ.சி.ஆர்.சியை சேர்ந்தவர்கள் கடல்வழியாக வர இயலாது இருந்தது.\nஆனால் நாம் இலங்கை வருகின்றமைக்கான அனுமதியை இலங்கை அரசு நிராகரித்து விட்டது. இதனால் எம்மால் எதுவும் செய்ய முடியாமல் போய் விட்டது.\nசாட்சியங்கள் இருக்கவில்லை. சரண் அடைய முயன்றவர்கள் இறந்து போனார்கள்.\nநடுநிசியில் எனக்கு கொல்வின் தொலைபேசி அழைப்பு மேற்கொண்டு இருந்தார். இருவர் சரண் அடைய விரும்புகின்றனர் என்று தெரிவித்தார்.\nஇவர்களின் பெயர்களை நான் இப்போது மறந்து விட்டேன். ஒருவர் புலிகளின் சமாதான செயலகத்தை சேர்ந்தவர். உத்தரவாதம் வேண்டும் என்று கேட்டு இருந்திருக்கின்றனர்.\nநான் ஆவன செய்து தரப்படும் என்று சொல்லி இருந்தேன். நான் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர், ஜனாதிபதி ஆகியோருடன் பேசினேன்.\nசரண் அடைகின்ற ஏனையோரைப் போலவே இருவரும் நடத்தப்படுவார்கள் என்று வாக்குறுதி வழங்கினர். ஆனால் அப்படி நடக்கவில்லை.\nசொந்த ஆட்களாலேயே (புலிகளாலேயே) இருவரும் சுட்டுக் கொல்லப்பட்டு இருக்கலாம். இதைத்தான் பசில் ராஜபக்ஸவும் சொன்னார். பிரதானமாக மஹிந்த ராஜபக்ஸ, கோட்டாபய ராஜபக்ஸ ஆகியோரும் சொன்னார்கள்.\nவெளிவிவகார அமைச்சுச் செயலாளராக இருந்த பாலித கோஹணவுடன் பேசி இருந்தேன்.-\nநீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.\nஇலங்கையின் ஏழாவது ஜனாதிபதி (1)\nஉலகத் தமிழர் பேரவை (1)\nசிறீலங்காவின் 7வது நாடாளுமன்ற தேர்தல் (12)\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (6)\nதலைமைச் செயலகம் தமிழீழம் (5)\nநாடு கடந்த அரசாங்கத் தேர்தல் (6)\nநாடு கடந்த அரசாங்கம் (57)\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கம் (1)\nநான் சாகலாம் நாங்கள் சாகக் கூடாது (11)\nபோர்குற்ற நாள் 2009 மே (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/nalalkannu-meet-karunanidhi-today-117111100052_1.html", "date_download": "2018-04-26T13:43:10Z", "digest": "sha1:VYNWQPDLWZSOG3FAQRI5ZMCNU263Q2LN", "length": 10449, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "கருணாநிதியை சந்தித்தார் நல்லக்கண்ணு: அடையாளம் தெரிந்து கொண்டதாக தகவல் | Webdunia Tamil", "raw_content": "\nவியாழன், 26 ஏப்ரல் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nகருணாநிதியை சந்தித்தார் நல்லக்கண்ணு: அடையாளம் தெரிந்து கொண்டதாக தகவல்\nகம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு இன்று திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது மு.க.ஸ்டாலின் மற்றும் முத்தரசன் ஆகியோர் உடனிருந்தனர்.\nகருணாநிதியின் கோபாலபுர இல்லத்தில் நடந்த இந்த சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த நல்லக்கண்ணு கூறியதாவது: `கருணாநிதியை சந்தித்ததில் மகிழ்ச்சி, அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கருணாநிதி என்னை அடையாளம் கண்டுகொண்டு சிரித்தார்' என்று கூறினார்.\nபிற கட்சியின் தலைவர்களை அடையாளம் காணும் அளவுக்கு கருணாநிதி தேறியுள்ளதால் திமுக தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nமம்தாவிற்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்த நடிகர் கமல்ஹாசன்\nதிமுக - பாஜக கூட்டணி: சுப்பிரமணியன் சுவாமி அதிரடி\nமுதல்வர் மம்தாவை சந்திக்கும் கமல்ஹாசன்\nசிவாஜி கல்வெட்டில் கருணாநிதி பெயர் அகற்றம் ஏன் தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி\nஅறிவுஜீவிகளின் ஆலோசனையே மோடி-கருணாநிதி சந்திப்பு - கொளுத்திப்போடும் சுவாமி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vakeesam.com/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81.html", "date_download": "2018-04-26T13:08:01Z", "digest": "sha1:7YWNNFDAYDADD7LBOIEPM6KIWO5DVYHA", "length": 8314, "nlines": 79, "source_domain": "www.vakeesam.com", "title": "கனடா குடும்பத்தின் களவு நாடகம்! – Vakeesam", "raw_content": "\nஹட்டனில் நில அதிர்வு – 05 வீடுகள் சேதம்\nதந்தை செல்வா நினைவுதினம் அனுஷ்டிப்பு\nஜ.தே.க முக்கிய பதவிகளில் மாற்றம் – பொதுச் செயலாளராக அகில விராஜ் காரியவசம்\n203 பட்டதாரிகள் நேர்முகத் தேர்விற்குத் தோற்றவில்லை \nயாழ் போதனா வைத்தியசாலையில் கழிவு வாய்க்கால்மேல் கன்ரீன் – மக்கள் விசனம்\nகனடா குடும்பத்தின் களவு நாடகம்\nin செய்திகள், முதன்மைச் செய்திகள் August 12, 2017\nஇலங்கையில் தமது சுமார் 51 இலட்சம் பெறுமதியான நகைகள் கொள்ளையிடப்பட்டதாக கனடாவில் காப்புறுதி பெறுவதற்காக வரணிப் பகுதியைச் சேர்ந்த கனடா நாட்டவர்கள் கொள்ளை நாடகமொன்றை முன்னெடுத்துள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகடந்த 7 ஆம் திகதி திங்கட்கிழமை வரணி பகுதியில் உள்ள வீடொன்றில் இரவு 8 மணியளவில் நுழைந்த திருடர்கள் சுமார் 51 லட்சம் பெறுமதியான 89 பவுண் நகைகளை கொள்ளையிட்டுச் சென்றதாக கனடா நாட்டில் இருந்து வந்திருந்த தம்பதிகளால் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.\nஇதன்போது வீட்டிலிருந்த இரண்டு பெண்களில் கனடா நாட்டிலிருந்து வந்திருந்த பெண்ணின் நகைகள் மட்டுமே திருடப்பட்டிருந்ததாகவும் வீட்டிற்குள் நுழைந்த இரண்டு திருடர்கள் கத்தியைக் கழுத்தில் வைத்து அச்சுறுத்தியே கொள்ளையில் ஈடுபட்டிருந்ததாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஇந்த முறைப்பாடு தொடர்பாக கொடிகாமம் காவல் நிலைய பொறுப்பதிகாரி ஐ.பீ.எதிரிசிங்க தலைமையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டது.\nஐ.பீ. எதிரிசிங்கவினால் முன்னெடுக்கப்பட்ட தொடர்விசாரணையில் ஆறு பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டது.\nஇதன்மூலம் கனடா நாட்டிலிருந்து வந்த தம்பதிகள் பொய் வாக்குமூலம் வழங்கியுள்ளதாகவும், கனடா நாட்டில் காப்புறுதி பெறுவதற்காகவே தாம் இவ்வாறு செய்துள்ளதாக விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளதாக அதிகாரி ஐ.பீ.எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில், பொய் முறைப்பாடு வழங்கிய கனடா நாட்டில் இருந்து வருகை தந்த தம்பதிகளை நீதிமன்றில் எதிர்வரும் 16ஆம் நாள் முன்னிலையாகுமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.\nஇந்தச் சம்பவம் நாட்டுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்துகின்ற செயல் எனவும் வெளிநாடுகளில் இருந்து வருகின்றவர்கள் இவ்வாறு பொய் முறைப்பாட்டினை பதிவு செய்து காப்புறுதிப் பணத்தினை பெற்றுக்கொள்ள முயற்சிக்கக் கூடாது எனவும் பொலிஸ் அறிவுறுத்தியுள்ளது.\nஹட்டனில் நில அதிர்வு – 05 வீடுகள் சேதம்\nதந்தை செல்வா நினைவுதினம் அனுஷ்டிப்பு\nஜ.தே.க முக்கிய பதவிகளில் மாற்றம் – பொதுச் செயலாளராக அகில விராஜ் காரியவசம்\nஹட்டனில் நில அதிர்வு – 05 வீடுகள் சேதம்\nதந்தை செல்வா நினைவுதினம் அனுஷ்டிப்பு\nஜ.தே.க முக்கிய பதவிகளில் மாற்றம் – பொதுச் செயலாளராக அகில விராஜ் காரியவசம்\n203 பட்டதாரிகள் நேர்முகத் தேர்விற்குத் தோற்றவில்லை \nயாழ் போதனா வைத்தியசாலையில் கழிவு வாய்க்கால்மேல் கன்ரீன் – மக்கள் விசனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF", "date_download": "2018-04-26T13:19:49Z", "digest": "sha1:5JG2H7RDUY54ZVIJ2M7IFWUZ7LIBI2NE", "length": 8253, "nlines": 119, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: குற்றவாளி | Virakesari.lk", "raw_content": "\nஇலங்கை ஆசிரியர் சேவை சங்கம் ஜே.வி.பியுடன் இணைந்து யாழ்பாணத்தில் \"செம்மே\" தினக் கொண்டாட்டம்\nநிலக்கரியை விட அடர்ந்த கருப்பு நிறத்தில் புதிய கிரகம் கண்டு பிடிப்பு\nஎரிந்த நிலையில் சடலம் மீட்பு\nபல கொள்ளைச் சம்பவங்களோடு தொடர்புடைய கொள்ளை கும்பல் கைது\nஇடி தாக்கி இருவர் வைத்தியசாலையில்\nஜாலிய விக்கிரமசூரியவை கைது செய்ய மீண்டும் பிடியாணை\n“அம்பாந்தோட்டை துறைமுகத்தின் பாதுகாப்பிற்கு இலங்கை கடற்படை மாத்திரமே பொறுப்பு”\nஐ.எஸ். தற்கொலை தாக்குதல் ; உயிரிழந்தோரின் எண்ணிக்கை 57 ஆக அதிகரிப்பு\nகாலில் விழுந்தவர் காலாவதியான நூடில்ஸ் என என்னை வர்ணிக்கிறார் : சந்திரிகா\nகுழந்தைகள் உட்பட 11 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த நபருக்கு மரண தண்டனை\nசீனாவில் 11 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்...\nஅம்பாறை கலவரம் தொடர்பில் எதிர் கட்சி தலைவர் இரா. சம்பந்தன்\nபிரிவினையையும் ஒற்றுமையின்மையினையும் உருவாக்கும் வகையிலான விரோதச் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளோர், மக்களிடையே இன முறுகலைத்...\nசிறுமி துஷ்பிரயோகம்; குற்றவாளிக்கு பத்தாண்டு கடூழியம்\nசிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றவாளிக்கு பத்தாண்டு கால கடூழிய சிறைத் தண்டனை வழங்கி வவுனியா மேல...\nபணம் மீளப்பெற்றாலும் குற்றவாளிகள் தண்டிக்கபடுவது உறுதி .\nமத்திய வங்கி பிணைமுறி ஊழலில் உரிய பணம் மீள வழங்கப்பட்டாலும் குற்றவாளிகளை தண்டிக்கப்பட வேண்டும். குற்றவியல் சட்டத்தின்\n\"தன்னிச்சையாக தீர்மானம் எடுக்க அரசாங்கம் தயாரில்லை\"\nசகல தரப்பினதும் அனுமதி இல்லாது புதிய அரசியல் அமைப்பு ஒன்று உருவாகப்போவதில்லை. அதேபோல் இருக்கும் அரசியல் அமைப்பில் மாற்றங...\nபொறுப்பை நிறைவேற்ற தவறிய பிரதமர் : பொறுப்பு கூறவேண்டிய நிலையில் ஜனாதிபதி\"\nமத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை உடனடியாக நிறைவேற்றி குற்றவாளிகளுக்கு தண்டனை\n: வலப்பனை சுமங்கல தேரோ\nமத்திய வங்கியின் பிணைமுறிக் குற்றச்சாட்டுக்களை அர்ஜுன மகேந்திரன் மற்றும் அர்ஜுன் அலோஷியஸ் ஆகியோர் மீது போட்டுவிட்டு தான்...\nநகை மோசடி குற்­றச்­சாட்டில் சிக்­கிய வேட்பாளர்\nஈ.பி.டி.பி. கட்­சியின் முன்னாள் யாழ். மாந­கர சபை உறுப்­பி­னரும் தற்­போ­தைய யாழ்.மாந­கர சபை வேட்­பா­ள­ரு­மான சுதர்சிங் வி...\nஅறிக்கை பகிரங்கமானால் பதில் ; கூறுகிறார் ரவி\nபிணைமுறிகள் சம்பந்தமான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை பகிரங்கமானதும் அதற்குரிய பதிலளிப்பேன் என்று முன்னாள் நிதி அமைச்சரு...\nதூக்கு மேடைக்கு அனுப்பும் 18 கிராம் ஹெரோயின்\nஹெரோயினை வைத்திருந்த குற்றத்துக்காகவும் அதை வினியோகிக்க முயன்ற குற்றத்துக்காகவும் குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்கித் தீர்...\nநிலக்கரியை விட அடர்ந்த கருப்பு நிறத்தில் புதிய கிரகம் கண்டு பிடிப்பு\nஎரிந்த நிலையில் சடலம் மீட்பு\nபல கொள்ளைச் சம்பவங்களோடு தொடர்புடைய கொள்ளை கும்பல் கைது\nஇடி தாக்கி இருவர் வைத்தியசாலையில்\nபள்ளிமுனை கடற்கரை மீன் வாடிகளிலிருந்து ஒரு தொகை மீன்கள் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://mycrankywritings.wordpress.com/2016/03/04/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81/", "date_download": "2018-04-26T13:45:42Z", "digest": "sha1:VFU5X5NLMSHGVMTGSSU563C4MOQTJ372", "length": 7541, "nlines": 129, "source_domain": "mycrankywritings.wordpress.com", "title": "எனதிந்த முடிவடையா கதையும் | My Cranky Writings", "raw_content": "\nஇன்று முடிவடைந்தபோல் எண்ணம் உருவானது\nஇன்னும் மிக மிக தூரம் அது செல்கின்றது\nவாழ்க்கையில் ஓர் புது புன்னகை\nபுத்தாடை அணிந்தென்னை வர வேர்க்குது\nகாரணம் என்னென்ன்று நான் அறியேன்\nவாழ்வுக்கு ஏன் இந்த பெருந்தன்மையோ \nஎன் கனவுகள் ஒவ்வொன்றாய் மலர்கின்றது\nஆனாலும் என் கண்களில் ஏன் இந்த நீரலைகள்\nஉன்னுடல் நான் இன்று அணிந்துகொள்வேன்\nஅதில் ஆடை அணிகலன் போட்டுக்கொள்வேன்\nஇன்றிரவில் என் மனம் நிறைந்திருக்க\nஅதை நான் விழாபோல் கொண்டாடுவேன்\nஉன்னை தொட்டால் வீசும் கல்லுரி வாசம்\nஸ்வரங்களில்லா உலகில் வாழ்ந்த நான்\nஇன்று உன் ஸ்வரம் மட்டும் மீட்டுகிறேன்\nஉன் ஸ்வரம் மட்டும் பாடும் நானின்று\nவாழ்க்கையில் ஓர் புது புன்னகை\nபுத்தாடை அணிந்தென்னை வர வேர்க்குது\nகாரணம் என்னென்ன்று நான் அறியேன்\nவாழ்வுக்கு ஏன் இந்த பெருந்தன்மையோ \nஎன் கனவுகள் ஒவ்வொன்றாய் மலர்கின்றது\nஆனாலும் என் கண்களில் ஏன் இந்த நீரலைகள்\nஎன் வானத்தில் இருந்து மறைந்த\nஉன் ஸ்வரம் கேட்டதும் வந்ததின்று.\n← என் தாய் நாட்டுக்காக\nபனி தூவும் இரவினிலே →\nதேர்வு செய் தேர்வு செய் April 5, 2018\nஎன்னுடன் நீ இருப்பாய் March 10, 2018\nநீர் துளிக்குள் March 4, 2018\nஇங்கும் அங்கும் எங்கும் February 25, 2018\nகவரும் விழி அழகே February 18, 2018\nபரிசு பொருள்கள் January 8, 2018\nஇறைவனுடன் கலந்துவிட்டேன் January 5, 2018\nகொஞ்சம் மறந்திருந்தேன் December 16, 2017\nநம்ம ஊர் பால்க்காரன் November 30, 2017\nகழுதைக்கு வந்த யோகம் November 30, 2017\nநாளை மீண்டும் நாளை November 21, 2017\nதூக்கம் வரவில்லை November 6, 2017\nமணல் வருது மணல் வருது October 30, 2017\nஇரவு வெகு நேரம் ஆகியும் October 18, 2017\nமல்லி மொட்டு பூ அணிந்து October 18, 2017\nஉன் விழிகளில் எழுதிய October 12, 2017\nஎங்கிருந்துதான் வந்ததோ October 8, 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} {"url": "https://seithupaarungal.com/2014/10/01/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2018-04-26T13:20:23Z", "digest": "sha1:2VSFVQZ64LWERM3BXIESDIAWBVRAPTDX", "length": 7606, "nlines": 109, "source_domain": "seithupaarungal.com", "title": "அரசு வழக்கறிஞர் பவானி சிங் கடும் எதிர்ப்பால் ஜெயலலிதா ஜாமீன் மனு மீண்டும் ஒத்துவைப்பு: – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nஅரசியல், இந்தியா, இன்றைய முதன்மை செய்திகள்\nஅரசு வழக்கறிஞர் பவானி சிங் கடும் எதிர்ப்பால் ஜெயலலிதா ஜாமீன் மனு மீண்டும் ஒத்துவைப்பு:\nஒக்ரோபர் 1, 2014 ஒக்ரோபர் 1, 2014 த டைம்ஸ் தமிழ்\nஅரசு தரப்பு வழக்கறிஞர் பவானி சிங்\nசொத்துக் குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற ஜெயலலிதா ஜாமீன் கேட்டு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பு வழக்கறிஞர் பவானி சிங் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு. ஜெயலலிதாவை விடுவிக்க எதிப்பது ஏன என விளக்கி மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி ரத்னகலா ஜாமீன் மனு விசாரணை அக்டோபர் 7ந் தேதிக்கு ஒத்தி வைத்தார். தசரா விடுமுறை முடிந்து வழக்கான அமர்வு இந்த மனு விசாரணையை மேற்கொள்ளும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.\nகுறிச்சொல்லிடப்பட்டது அரசியல், அரசு தரப்பு வழக்கறிஞர் பவானி சிங், இந்தியா, இன்றைய முதன்மை செய்திகள், கர்நாடக உயர்நீதிமன்றம், சொத்துக் குவிப்பு வழக்கு, ஜெயலலிதா ஜாமீன், நீதிபதி ரத்னகலா\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postஇன்ஸ்டண்ட் ரங்கோலி கோலம் செய்முறை விடியோ\nNext postமுதலைச்சரை மாலை வரை காக்க வைத்த ஜெயலலிதா\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nநீங்களே செய்யலாம் ஃப்ரூட் ஃபலூடா\nபிஸ்தா ஐஸ்கிரீம் செய்வது எப்படி\nகருப்பட்டி கம்பு சேமியா எப்படி செய்வது\nஸ்டாக்கிங் பூக்கள் செய்வது எப்படி\nமணி வளையல் செய்வது எப்படி\nஎம்பிராய்டரி: பிரஞ்ச் நாட்’இல் சூரிய பூக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.penniyam.com/2013/03/blog-post_31.html", "date_download": "2018-04-26T13:14:17Z", "digest": "sha1:TZDDF3A6USHIT2RQZVXJTRVODRL6LQFD", "length": 30599, "nlines": 263, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: \"காட்டைக் காப்பது நாட்டில் உள்ளவர்களின் கடமை” - சி.கே. ஜானு", "raw_content": "\n\"காட்டைக் காப்பது நாட்டில் உள்ளவர்களின் கடமை” - சி.கே. ஜானு\nஇந்திய வரலாற்றில் எத்தனையோ ஒப்பந்தங்கள் உருவாகி இருக்கின்றன. 'ஏ.கே.அந்தோணி - சி.கே. ஜானு ஒப்பந்தம்’ அவை அனைத்திலும் இருந்து வேறுபட்டது. தனிச் சிறப்பு கொண்டது\nஒரு மாநிலத்தின் உச்ச அதிகாரப் பொறுப்பில் இருக்கும் ஒரு முதல்வருக்கும் காட்டின் கடைசிக் குடிசையில் வாழும் ஒரு பழங்குடி பெண்ணுக்கும் இடையில் உருவான ஒப்பந்தம் அது. சுமார் 25 ஆயிரம் ஆதிவாசி மக்களுக்கு நிலம் பெற்றுத்தந்து மண்ணுரிமையை உறுதி செய்த ஜானு, கேரளப் பழங்குடிகளின் சமரசமற்ற தலைவி\n''திருவனந்தபுரத்தில் உள்ள கேரள அரசின் தலைமைச் செயலகத்தை சுற்றி 1,000 குடிசைகள் அமைத்து அங்கேயே தங்கிவிட்டோம். போலீஸின் அடக்கு முறைகளுக்கு அஞ்சவில்லை. 48 நாட் கள் போராட்டத்துக்குப் பிறகு ஏ.கே.அந்தோணி அந்த ஒப்பந்தத்துக்குச் சம்மதித்தார். அடக்கி ஒடுக்கப் பட்ட கேரளப் பழங்குடிகளின் வரலாற்றில் அது ஒரு முக்கியமான நாள். ஆனால், எங்கள் போராட் டம் அத்துடன் முடியவில்லை. இன்றும் தொடர்கிறது'' உறுதியான குரலில் பேசும் ஜானு, 'முத்தங்கா போராட்டம்’ நடத்தியபோது, இந்தியாவே திரும்பிப் பார்த்தது.\nஏ.கே.அந்தோணி அரசு அறிவித்தபடி அனைத்து பழங்குடிகளுக்கும் நிலம் வழங்காததை அடுத்து, 2003-ல் முத்தங்கா காட்டுப் பகுதியைக் கைப்பற்றி குடிசை அமைத்தார்கள் பழங் குடி மக்கள். 'இனிமேல் இது தான் எங்கள் நிலம்’ என போர்முழக்கம் செய்தார்கள். பழங்குடிகளுக்கு எதிராக அனைத்து அரசியல் கட்சி களும் ஓரணியில் ஒன்றுசேர்ந்தன. போலீஸ் உள்ளே நுழைந்து அடித்து நொறுக் கியது. ஜானு உள்பட சுமார் 3,000 பழங்குடி மக்கள் கொடூரமாகச் சித்ரவதைக்கு உள்ளாகினர். 'உங்கள் கைகளில் ரத்தக்கறை படிந்திருக்கிறது’ என்று அப்போது ஏ.கே.அந்தோணிக்குக் கடிதம் எழுதினார் அருந்ததி ராய். அண்மையில் 'பூவுலகின் நண்பர்கள்’ நடத்திய பெண்கள் தினவிழாவில் கலந்துகொள்ள சென்னை வந்திருந்த ஜானுவைச் சந்தித்தேன்.\n''நான் படிக்கவில்லை. ஏழு வயதிலேயே விறகு பொறுக்கவும் கூலி வேலைக்கும் செல்லத் துவங்கினேன். பிறகு, தையல் வேலை பார்த்தேன். எந்த வேலையுமே மூன்று வேளை கஞ்சிக்கு உத்தரவாதம் இல்லாதது. விவரம் தெரியத் தெரிய, அரசியல் கட்சிகள் எங்கள் ஆதிவாசி மக்களை ஏய்த்து பிழைப்பது புரிந்தது. ஊர், ஊராக அலைந்து திரிந்து எங்கள் மக்களைப் போராட அணி திரட்டினேன். 1992-ல் 'ஆதிவாசிகளின் விகாசன பிரவர்த் தக சமிதி’ என்ற அமைப்பை உருவாக்கிப் போராடினோம்.\nஎத்தனையோ போராட்டங்கள், கைதுகளுக்குப் பிறகு 'கோத்ர மகா சபை’யைத் தொடங்கினோம். எங்கள் மக்கள் எல்லோரும் வந்து சேரத் துவங்கினார்கள். அந்தச் சபை நடத்திய போராட்டங்கள் மூலம் இதுவரை 25 ஆயிரம் பழங்குடி மக்களுக்கு நிலம் பெற்றுத் தந்துள்ளோம். எல்லோரும் இங்கு வந்துவிட்டால் தங்களுக்கு போஸ்டர் ஒட்டவும், கொடி தூக்கவும் ஆள் இல்லாமல் போய்விடும் என்று பயந்த அரசியல் கட்சிகள், உடனே தங்கள் கட்சிகளில் பழங்குடிகள் பிரிவை ஆரம்பித்தார்கள். சி.பி.எம்., சி.பி.ஐ., காங்கிரஸ், பா.ஜ.க. என அனைத்துக் கட்சிகளும் இப்படிச் செய்தன.\nஇந்த மக்கள் எல்லாம் ஒரே அணியில் ஒன்றாக இருந்திருந்தால், பிரச்னை முடிந்திருக்கும். அப்படி முடிந்துவிட்டால், இவர்கள் எதை சொல்லி ஓட்டுக் கேட்டு வருவார்கள் அதனால் ஆதிவாசிகளைப் பிரித்து வைத்து பிரச்னை முடியாமல் பார்த்துக்கொண்டார்கள். அப்படியே தங்கள் கட்சியில் சங்கம் வைத்திருந்தாலும் மக்கள் சும்மா இருக்க மாட்டார்கள். அதனால் பெயரளவுக்கு போராட்டங்களை நடத்தினார்கள். இதில் எந்தக் கட்சியும் விதிவிலக்கு இல்லை அதனால் ஆதிவாசிகளைப் பிரித்து வைத்து பிரச்னை முடியாமல் பார்த்துக்கொண்டார்கள். அப்படியே தங்கள் கட்சியில் சங்கம் வைத்திருந்தாலும் மக்கள் சும்மா இருக்க மாட்டார்கள். அதனால் பெயரளவுக்கு போராட்டங்களை நடத்தினார்கள். இதில் எந்தக் கட்சியும் விதிவிலக்கு இல்லை\n''ஆனால், நீங்களும் சில காலம் சி.பி.எம்-மில் இருந்தீர்கள் இல்லையா\n''இருந்தேன். பழங்குடி மக்களுக்கு ஏதேனும் நன்மை நடக்கும் என நம்பினேன். ஆனால், அவர்களிடம் எந்தக் கோரிக்கை வைத்தாலும், 'மேலிடத்தில் கேட்க வேண்டும்’ என்பது மட்டுமே பதிலாக வரும். அவர்கள் ஆட்சியில் இருக்கும்போதும் அதே பதில்தான். காங்கிரஸுக்கும் சி.பி.எம்-முக்கும் போட்டி இருப்பதைப் போல வெளியே தெரியும். ஆனால், பழங்குடி மக்களை ஏமாற்றுவதில்தான் அவர்களுக்கிடையே போட்டி இருந்தது. இந்த உண்மையை உணர்ந்தவுடன், அங்கிருந்து வெளியேறிவிட்டேன்\n'' 'வனத்துக்குள் வனத்துறையை அனுமதிப்பது இல்லை. வனவிலங்கு சரணாலயத்தை எதிர்க்கிறீர்கள்’ என வளர்ச்சிக்கு எதிரானவர்களாக உங்களைச் சித்திரிக்கிறார்களே..\n''பழங்குடி மக்களாகிய எங்களுக்கு காசு, பணம் சம்பாதித்துவைக்க ஆசை இல்லை.ஆனால், இந்த மண்ணின் மீதான உரிமை நாங்கள் சாகும் வரையிலும் எங்களிடம் இருக்கவேண்டும். எனக்கு ஒரு ஏக்கர் நிலம் இருக்கிறது. அது என் சொந்த நிலம் இல்லை. என் வாழ்க்கை முடிந்த பிறகு அது வேறு ஒருவரின் நிலம். ஆனால், வாழும் வரையிலும் அந்த மண்ணின் மீதான எனது உரிமையை நான் ஒருபோதும் விட்டுத்தர மாட்டேன். நாங்கள் இந்த வனத்தையும், இதில் உள்ள மரங்களையும் தெய்வம் என மதிக்கிறோம்.\nவனத் துறையோ, மரம் வெட்டிகளுக்குத் துணை போகிறது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் சட்டப் பாதுகாப்புடன் மரம் கடத்துவதற்காக உருவாக்கப்பட்ட வனத் துறை, இன்று வரை அதைத்தான் செய்துகொண்டு இருக்கிறது. அதேபோல வன விலங்கு சரணாலயம் என்று சொன்னவுடன், நகர்ப்புறவாசிகள் நல்ல விஷயம் என்று நினைக்கிறார்கள். ஆனால், இப்படி ஓர் அறிவிப்பை செய்து உலக வங்கியிடம் இருந்து கோடிக்கோடியாகப் பணம் பெறுகிறார்கள். அப்படி வாங்கிய பணத்தில் வன விலங்குகளின் பாதுகாப்புக்கு எனச் செலவிடப்படுவதே இல்லை. ஒவ்வோர் ஆண்டும் எத்தனை யானைகள் தந்தத்துக்காக கொல்லப்படுகின்றன என்பது எங்களுக்குத் தெரியும்.\nசுற்றுலா என்ற பெயரில் கூட்டம், கூட்டமாக மக்களை வனத்துக்குள் அனுமதித்து... அவர்கள் குடித்துவிட்டுக் கும்மாளம் போடுகிறார்கள். சுற்றுலாப் பயணிகளுக்கு இடையூறாக இருப்பதால் யானைகளுக்கு உப்புப் போட்ட உணவு வைத்து விரட்டுகிறார்கள். உண்மையில் இந்தச் சட்டங்களும் சரணாலயங்களும் வருவதற்கு முன்பு ஆயிரம், ஆயிரம் ஆண்டுகளாக பழங்குடிகளாகிய நாங்கள் இந்த வனத்தில்தான் வாழ்ந்துவருகிறோம். எந்தக் காலத்திலும் ஒரு பழங்குடி, தந்தத்துக்காக யானையை வேட்டையாடியது இல்லை. காய்ந்த மரத்தின் கிளைகளை ஒடிப்பார்களே தவிர, ஒரு காலத்திலும் பழங்குடி மக்கள் பச்சை மரங்களை வெட்டியது இல்லை. இவற்றைச் செய்யும் வனத்துறைதான் வனத்தின் முதல் எதிரியே தவிர... பழங்குடிகள் அல்ல\n''பழங்குடிகளின் போராட்டத்துக்கு மற்ற மக்கள் ஆதரவு தருகிறார்களா\n''ஆதரவு தர வேண்டும். ஏனென்றால் நாங்கள் எங்களுக்காக மட்டும் போராடவில்லை. இந்த அறையில் ஏ.சி. ஓடுகிறது என்றால், இதற்குத் தேவையான சக்தி எங்கள் வனத்தில் இருந்துதான் உருவாகிவருகிறது. நீங்கள் குடிக்கும் தண்ணீருக்கும் எங்கோ இருக்கும் காட்டு மரங்களுக்கும் தொடர்பு இருக்கிறது. இந்த இயற்கைதான் காட்டையும் நாட்டையும் இணைக்கிறது. அதனால், எல்லா மக்களும் இந்தப் போராட்டத்தில் பங்குபெற வேண்டும். ஏனெனில் இது காட்டுக்கான போராட்டம் மாத்திரம் அல்ல; நாட்டுக்கான போராட்டமும்கூட\n''தமிழ்நாட்டு பழங்குடி மக்கள் மத்தியிலும் வேலை பார்த்திருக்கிறீர்கள்தானே\n''ஆம். நீலகிரி, திண்டுக்கல் பகுதியில் உள்ள பழங்குடி மக்களிடம் கொஞ்ச காலம் வேலை பார்த்துள்ளேன். என் மீது திண்டுக்கல் நீதிமன்றத்தில் நிலப் பறிமுதல் வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது. கேரளாவில் பழங்குடி மக்களை அரசியல் கட்சிகள் பிளவுபடுத்தி வைத்துள்ளன என்றால், தமிழ்நாட்டுப் பழங்குடி மக்களை என்.ஜி.ஓ-க்கள் பிடித்துவைத்துள்ளன. பழங்குடிகளின் வறுமையை வைத்து புராஜெக்ட் போட்டு சம்பாதிக்கிறார்கள். உணர்வுடன் போராட வருபவர்களை உடனுக்குடன் கண்டறிந்து, 'நாங்கள் சம்பளம் தருகிறோம்’ என்று அழைத்து அத்தோடு காலி செய்துவிடுகிறார்கள். சம்பளம் வாங்கிக் கொண்டு போராட முடியாது. போராட்டம் என்பது உணர்வுடன், மக்களிடம் இருந்து வரவேண்டும். என்.ஜி.ஓ-க்களை அப்புறப்படுத்தும் வரையிலும் அது முடியாது\n''நீங்கள் ஏன் திருமணம் செய்துகொள்ளவில்லை\n''இதற்கு முன்பு திருமணம் பற்றி சிந்திக்க நேரம் இல்லை. இப்போது எனக்குக் கொஞ்சம் வயதாகிவிட்டது... கொஞ்சம். (வெட்கத்துடன் சிரிக்கிறார்). என் போராட்ட வாழ்க்கைக்கு இடையூறு இல்லாமல் இதை எல்லாம் புரிந்துகொண்ட ஓர் இணை கிடைத்தால் பார்க்கலாம்\n''செக்கோட்டை என்ற சின்னஞ்சிறிய ஆதிவாசிக் கிராமத்தில் பிறந்த நீங்கள் படிக்கவில்லை. உங்களிடம் பணம் இல்லை. உங்களுக்கு ஆங்கிலம் தெரியாது. இவற்றை ஒரு தடையாக என்றைக்கேனும் நினைத்தது உண்டா\n''இல்லை. போராட வேண்டும் என்ற உறுதியான எண்ணம் மனதில் இருக்க வேண்டும். அது உண்மையாக இருக்க வேண்டும். அவ்வளவு தான். அது மட்டும் இருந்துவிட்டால் போதும். பணம், படிப்பு, மொழி எதுவும் தேவை இல்லை. அவற்றை ஒரு காரணமாகச் சொல்வது, ஏமாற்று வேலை\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (18) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1751) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\n\"காட்டைக் காப்பது நாட்டில் உள்ளவர்களின் கடமை” - சி...\nபுலம்பெயர் ஈழத்து பெண்கவிஞர்களின் படைப்புகளில் போர...\nபெண்ணுடலும் பாலியல் வன்முறையும் - கு.அழகர்சாமி\nபாலியல் தாக்குதல்கள் ; ஒரு நகரமும் ஒரு தீவும் - -ச...\nபெண் ஊடகவியலாளர்கள் விடுக்கும் பத்திரிகைச்செய்தி\nஒளி-ஒலி ஊடகங்களும் பெண்முன்னேற்றமும் - லதா ராமகிரு...\nபெண்களை காதலித்து ஏமாற்றுபவர்களில் 96 சதவீதத்தினர்...\nவேம்படி மகளிர் விடுதித் தமிழ்ப் பாடசாலை\nநேர்காணல் - தேவதை ஆவணப்படத்தை முன்வைத்து ஆவணப்பட இ...\nதுப்பாக்கியேந்திய சிவப்பு ரோஜாக்கள் - கேஷாயினி எட்...\nகடைசி வேரின் ஈரம் சிறுகதைத் தொகுதி பற்றிய இரசனைக் ...\nசிகரம் தொட்ட பெண்கள் - விருது வழங்கும் நிகழ்ச்சி -...\nகணவனைத் தேர்ந்தெடுக்கும் உரிமை பெண்ணுக்கே\nதூத்துக்குடி கடற்கரையில் பெண்கள் தின நிகழ்ச்சி\nஉளவியல் பாதிப்புகளை பொருட்படுத்தத் தவறினால் அது சம...\nகட்டாயக் காதலும் பாலியல் வன்முறையும்\n‘அகாலம்’ : சி. புஷ்பராணியின் நினைவுக் குறிப்புகள்-...\nசொல்வதெல்லாம் உண்மை- நிர்மலா பெரியசாமி\nஅச்சம் தவிர். ஆண்மை இகழ் - லீனா மணிமேகலை\nமைனர் பெண்ணை இரண்டாம் திருமணம் செய்த நபர் மீது நடவ...\nதியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவின் 'வைகறை' சிறுகதைத் தொ...\nஆண்டாளின் கற்பனையையும்/மொழி வள‌த்தையும் பார்ப்போம்...\nபெண் சமத்துவம் எங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும்...\nபாலியல் வல்லுறவுக்கு எதிரான வீதி உலா....\nபெண்கள் தின வாக்குறுதிகள் - வீடியோ பதிவு\nமகளிர் தினமும் காமட்டிபுரமும் - புதிய மாதவி\nமார்ச் 8 பெண்கள் தினம் - சன் டிவி விவாதம்\nமார்ச் 8 - அன்பு பொங்கும் சமூகம் - ஒன்று கூடுவோம்\nசர்வதேச பெண்கள் தினம் - ஒரு திறந்த கலந்துரையாடற் க...\nமார்ச் 8 - பாலியல் வன்முறைகளுக்கு எதிராக பாத யாத்த...\nபெண்களின் விதிகள் - தேமொழி\nஇரு தேசியங்கள்: இடையில் நசிபடும் மனித (பெண்) உடல்க...\nசீரழிக்கப்பட்ட பெண்கள் தொடர்பான வழக்குகள் குறித்த ...\nகாரசாரம். – பெண் சிசுக்கொலை பற்றிய விழிப்புணர்வு -...\nபெண் - இயற்கை குறித்த கருத்தரங்கு\nவங்க தேசம் முதல் பாகிஸ்தான் வரை : இந்துப்பெண்களின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/121492-tamilnadu-government-announced-rs-50-lakh-reward-for-satish-kumar-sivalingam.html", "date_download": "2018-04-26T13:08:10Z", "digest": "sha1:VRKAFD6YEMLJKD2SFEM2WEG3JNL5RSWZ", "length": 19923, "nlines": 362, "source_domain": "www.vikatan.com", "title": "தங்கம் வென்ற சதீஷ்குமாருக்கு ரூ.50 லட்சம் பரிசு - தமிழக அரசு அறிவிப்பு! | Tamilnadu Government announced Rs 50 lakh reward for Satish Kumar sivalingam", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nதங்கம் வென்ற சதீஷ்குமாருக்கு ரூ.50 லட்சம் பரிசு - தமிழக அரசு அறிவிப்பு\nகாமன்வெல்த்தில் தங்கப்பதக்கம் வென்ற, வேலூரைச் சேர்ந்த சதீஷ்குமார் சிவலிங்கத்துக்குத் தமிழக அரசு ரூ.50 லட்சம் பரிசுத்தொகை அறிவித்துள்ளது.\n21-வது காமன்வெல்த் போட்டிகள், ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் கடந்த 4-ம் தேதி முதல் நடந்து வருகிறது. மொத்தம் 71 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்றுள்ள இதில், இந்தியா அசத்தி வருகிறது. இதுவரை 4 பதக்கங்கள் பெற்றிருந்த நிலையில், இன்று காலை தமிழகத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் சிவலிங்கம், 77 கிலோ பளுதூக்கும் போட்டியில் தங்கம் வென்று அசத்தினார். ஏற்கெனவே, இவர் ஸ்காட்லாந்தில் நடைபெற்ற காமன்வெல்த்தில் தங்கம் வென்ற நிலையில் இன்று இரண்டாவது முறையாக காமன்வெல்த் போட்டிகளில் சாதனை படைத்துள்ளார்.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\nதமிழகத்தில் ஐந்து இடங்களில் இலவச ‘அம்மா வைஃபை மண்டலம்’\nதமிழகம் முழுவதும் 5 இடங்களில் இலவச வசதியை நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார். TN Government Introduced Free Amma Wifi Zone\nசாதனை படைத்த சதீஷ்குமாருக்குப் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. கிரிக்கெட் வீரர்கள் சச்சின், சேவாக், இதேபோல் ஸ்டாலின், ஓ.பி.எஸ், பாஜக தேசிய தலைவர் அமித் ஷா உள்ளிட்டோர் சதீஷுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், சதீஷ்குமாருக்குத் தமிழக அரசு ரூ.50 லட்சம் பரிசுத்தொகை அறிவித்துள்ளது. மேலும், முதல்வர் பழனிசாமி அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அதில், ``தங்கம் வென்று தமிழகத்துக்கும், இந்தியாவுக்கும் பெருமை சேர்த்துள்ளீர்கள். இதேபோல் பல வெற்றிகளைக் குவித்து தமிழ்நாட்டுக்கும், இந்தியாவுக்கும் பெருமை சேர்க்க வேண்டும்\" என்று கூறியுள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா\nவெள்ளியோடு தொடங்கிய இந்தியாவின் பதக்கப் பட்டியல் - களைகட்டிய காமன்வெல்த் #CWG 2018\n - இந்தியாவுக்கு முதல் தங்கம் பெற்றுத்தந்த பளு தூக்கும் வீராங்கனை #CWG2018\nஇந்தியாவுக்கு தங்கப் பதக்கத்துடன் காமன்வெல்த் வேட்டையைத் தொடங்கிய மீராபாய் சாய்கோம் சானு\n”பதக்கம் வெல்லத் தகுதியற்றவள் என்றார்கள்”,காமன்வெல்த் தங்கம் வென்ற சான்ஜிதா சானு #SanjitaChanu\nதிருடிய மொபைலை அன்லாக் செய்ய திருடர்கள் செய்யும் இன்னொரு திருட்டுத்தனம்... உஷார்\n'நிர்மலா தேவி வாழ்க்கையே ரகசியம்தான்'- காவியன் நகர் மக்கள் சொல்வது என்ன\n``மன அழுத்தம் போக்க உங்களை நீங்கள் ஜெயிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்\n``லட்சியத்தை நோக்கி நகர்ந்துகொண்டே இருந்தால் மனஅழுத்தம் இல்லை. மனஅழுத்தம் போக்க உங்களை நீங்கள் ஜெயிக்கக் கற்க வேண்டும்’’ என்கிறார் எழுத்துச் சித்தர் பாலகுமாரன்.\nகருவளையத்தை மறைக்க மேக்கப் வேண்டாம்... இரும்புச்சத்து உணவு போதும்\nகருவளையத்தை மறைக்க மேக்கப் வேண்டாம். எந்தக் காரணத்தினால் உங்களுக்குக் கருவளையம் வந்திருக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டால் அதைச் சரி செய்வது சுலபம்..\nகொடைக்கானல் மெர்க்குரி ஆலை... அன்று நடந்ததும் இன்றைய நிலையும்\nஅவர்கள் குறைக்கவேண்டியதாக அரசு கூறிய மெர்க்குரி அளவு, உண்மையில் குறைக்கவேண்டிய அளவைவிட 20 மடங்கு அதிகம். இது யூனிலிவர் செலவைக் குறைப்பதற்காகச் செய்யப்பட்டது.\nவிகடன் பிரஸ்மீட்: அஜித்திடம் என்ன பிடிக்காது விஜய்யிடம் என்ன பிடிக்கும்\n“இந்த வேலைநிறுத்தம், இந்திய சினிமாவையே கோலிவுட் பக்கம் திருப்ப வெச்சிருக்கு. இதன் மூலமா...\nஜெ. கன்னத்திலிருந்த நான்கு புள்ளிகளும் அவிழாத முடிச்சுகளும்\nமரணத்துக்குப் பிறகு ஜெயலலிதா உடல் ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டபோது, ஜெ. கன்னத்தில் காணப்பட்ட நான்கு புள்ளிகள் குறித்துப் பெரும் சர்ச்சை எழுந்தது. அந்த நான்கு புள்ளிகள் குறித்த மர்ம முடிச்சுகளை அவிழ்ப்பதற்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முயற்சி செய்துள்ளது.\n\"வைகோ, சீமான் மோதல் வேதனை தருகிறது” - கலங்கும் திருமா\nகாவிரிப் பிரச்னை, எஸ.சி, எஸ்.டி வன்கொடுமைத் தடுப்பு சட்டம் ஆகியவற்றுக்கான போராட்டங்களில் மும்முரமாக...\n“அடுத்த படத்தில் பெரிய ஹீரோதான்\nவிகடன் பிரஸ்மீட்: அஜித்திடம் என்ன பிடிக்காது விஜய்யிடம் என்ன பிடிக்கும்\nமிஸ்டர் கழுகு: பி.ஜே.பி மீது ரஜினி வருத்தம்\nநான் ரம்யாவாக இருக்கிறேன் - 21\n\"வைகோ, சீமான் மோதல் வேதனை தருகிறது” - கலங்கும் திருமா\nஜெயித்தது தோனி... ஜெயிக்க வைத்தது கோலி... ஜஸ்ட் கோலி திங்ஸ்\nதிருடிய மொபைலை அன்லாக் செய்ய திருடர்கள் செய்யும் இன்னொரு திருட்டுத்தனம்... உஷார்\n'நிர்மலா தேவி வாழ்க்கையே ரகசியம்தான்'- காவியன் நகர் மக்கள் சொல்வது என்ன\nமெக்கானிக்குடன் சாலையில் நின்ற போலீஸார்... கதிகலங்கிப்போன இருசக்கர வாகன ஓட்டிகள்\nஜெயித்தது தோனி... ஜெயிக்க வைத்தது கோலி... ஜஸ்ட் கோலி திங்ஸ்\n``மத்திய அரசுக்கு கைகட்டி சேவகம் செய்வதுதான் `அம்மா' வழி ஆட்சியா'' - கொதிக்கும் போராளிகள்\n\" - வந்துவிட்டான் முதல் செயற்கை நுண்ணறிவு கொண்ட சைக்கோ #Norman #AI", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://freetamilebooks.com/ebooks/learn-selenium-in-tamil/", "date_download": "2018-04-26T13:33:06Z", "digest": "sha1:KHRNQJLRS6DSYOXMQP3HBTDCWSOQ4UAZ", "length": 8714, "nlines": 111, "source_domain": "freetamilebooks.com", "title": "எளிய தமிழில் Selenium – து.நித்யா", "raw_content": "\nஎளிய தமிழில் Selenium – து.நித்யா\nமென்பொருள் சோதனைத் துறையில், கட்டற்ற மென்பொருளான Selenium பெருமளவில் பயன்படுத்தப் படுகிறது. பெருகி வரும் இணைய தளங்களை தானியக்கமாக சோதிக்க இதைப் பயன்படுத்தலாம்.\nஇதை, இந்த நூல் எளிமையாக அறிமுகம் செய்கிறது.\nதமிழில் கட்டற்ற மென்பொருட்கள் பற்றிய தகவல்களை “கணியம்” மின் மாத இதழ், 2012 முதல் வெளியிட்டு வருகிறது.இதில் வெளியான Selenium பற்றிய கட்டுரைகளை இணைத்து ஒரு முழு புத்தகமாக வெளியிடுவதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறோம்.\nஉங்கள் கருத்துகளையும், பிழை திருத்தங்களையும் editor@kaniyam.com க்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.\nhttp://kaniyam.com/learn-selenium-in-tamil-ebook என்ற முகவரியில் இருந்து இந்த நூலை பதிவிறக்கம் செய்யலாம். உங்கள் கருத்துகளையும் இங்கே பகிரலாம்.\nபடித்து பயன் பெறவும், பிறருடன் பகிர்ந்து மகிழவும் வேண்டுகிறோம்.\nகணியம் இதழை தொடர்ந்து வளர்க்கும் அனைத்து அன்பர்களுக்கும் எமது நன்றிகள்.\nமுதல் பதிப்பு ஆகஸ்டு 2016\nபதிப்புரிமம் © 2016 கணியம்.\nபிழை திருத்தம்: த.சீனிவாசன் – tshrinivasan@gmail.com\nஅட்டைப்படம் – லெனின் குருசாமி – guruleninn@gmail.com\nஇந்த நூல் கிரியேடிவ் காமன்ஸ் என்ற உரிமையில் வெளியிடப்படுகிறது . இதன் மூலம், நீங்கள்\nஆனால், மூலப் புத்தகம், ஆசிரியர் மற்றும் www.kaniyam.com பற்றிய விவரங்களை சேர்த்து தர வேண்டும். இதே உரிமைகளை யாவருக்கும் தர வேண்டும். கிரியேடிவ் காமன்ஸ் என்ற உரிமையில் வெளியிட வேண்டும்.\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 269\nநூல் வகை: கணிணி நுட்பம் | மின்னூலாக்கத்தில் பங்களித்தவர்கள்: த. சீனிவாசன், லெனின் குருசாமி | நூல் ஆசிரியர்கள்: து. நித்யா\n[…] எளிய தமிழில் Selenium – து.நித்யா […]\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nஆப்பிள் கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nதமிழ் மின்னூல்களைப் படிப்பது எப்படி\nகிரியேட்டிவ் காமன்சு தமிழ் வலைத்தளங்கள்\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n57 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://freetamilebooks.com/ebooks/pattinathar-songs/", "date_download": "2018-04-26T13:24:04Z", "digest": "sha1:DLYH4F6HEDXXNWZWTKAWF645DHGEAO2L", "length": 13223, "nlines": 138, "source_domain": "freetamilebooks.com", "title": "பட்டினத்தடிகளின் பாடல்கள்", "raw_content": "\nபட்டினத்தார் நம் தமிழ்நாட்டில் பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த சைவம் தந்த சிவச் செல்வராவார். கடலோடி பொருள்தேடும் வைசிய குலத்து அவதரித்த செல்வர். வாழ்வின் செல்வச் செறுக்கையும், போகங்களையும் வெறுத்து, இறைவன் திருவருளை நாடி கட்டிய கோவணமும், நாவில் தவழ்ந்திடும் சிவநாமமும் உடன்வர கால் போன போக்கில் நடக்கலானார். “காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே” எனும் பொன்னான போதனையை உளத்தில் கொண்டு, அதுவே சத்தியம், அதுவே இறைவன் நமக்களித்த வரம் என்று உணர்ந்து அதனை ஒரு ஓலை நிறுக்கில் எழுதிப் போட்டுவிட்டுத் தன் கால் போன போக்கில் செல்லத் துவங்கினார்.\nஊர் ஊராய்ச் சென்று சிவதரிசனம் செய்து, யாக்கை நிலையாமை, பூமியில் சிற்றின்பக் கேணியில் மூழ்கிக் கிடந்து இறைவன் அருள் எனும் பேரருள் பெருங்கடலை மறந்த மக்களுக்கு இடித்துரைப்பது போல் உண்மைகளை உணரவைக்கும் பாடல்களைப் பாடிக் கொண்டு பரதேசியாத் திரிந்தார். உள்ளத்தை மெல்ல வருடிக் கொடுத்து உண்மைகளை மெல்லப் புகட்டும் பழைய பாதையை விட்டு நீங்கி, உள்ள உண்மையை போட்டு உடைத்து நம் கண் முன்னே பாதை தெரியுது பார் என்று உந்தித் தள்ளும் பாடல்கள் அவை.\nபோலித்தனமும், பொய்மையும், சுயநலமும், நிரந்தரமில்லா சிற்றின்பமும் வாழும் முறைக்கு ஏற்றதல்ல, ஈசன் இணையடி நிழலே நாம் வேண்டும் நிரந்தர பேரின்பம் என்பதை பறைசாற்றும் பாடல்கள் அவை. சொல்லுகின்ற சொல் கடுமையாய், உள்ளத்தைச் சுடும்படியாய், உள்ளதை உள்ளபடி கேட்கக் கூசினாலும் அதுவே முற்றிலும் உண்மை என்பதை உணரச் செய்யும் பாடல்கள்.\nமனதுக்கும், செவிக்கும், கண்களுக்கும் தற்காலிக இன்பம் சேர்க்கும் கலை போலன்றி பட்டினத்தார் பாடல்கள் உண்மையை விண்டுரைக்கும் சத்திய வாக்கு என்பதால், மருந்து கசக்குமென்றாலும், உண்மை சுடும் என்றாலும், பிறவிப் பேற்றுக்கு அதுவே மருந்து என்பதால் பட்டினத்தார் சொற்களை விரும்பிப் படிக்க வேண்டும். இது அந்த நோக்கத்துக்காகச் செய்யப்பட்ட ஒரு எளிய முயற்சி. படித்தபின் கருத்தைப் பதிவு செய்யுங்கள். நன்றி.\nஆசிரியர் : தஞ்சை வெ.கோபாலன்\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 35\nநூல் வகை: ஆன்மிகம், பட்டினத்தார் | மின்னூலாக்கத்தில் பங்களித்தவர்கள்: ஜெகதீஸ்வரன் | நூல் ஆசிரியர்கள்: தஞ்சை வெ. கோபாலன்\nவணக்கம் நண்பரே, தாங்கள் கோரியவாறு படத்திலிருந்து இணைப்பும், கிரியேட்டிவ் காமென்ஸ் சின்னமும் அகற்றப்பட்ட அட்டைப் படத்தின் இணைப்பு,.\nஇந்த அட்டைப் படம் இத்தளத்திற்கெனவே செய்யப்பட்டிருப்பதால், இந்தப் படத்திற்கும் இணைப்பு தரவேண்டாம் நண்பரே.\n50 ஆவது மின்னூலை வெளியிட்டுள்ளது freetamilebooks.com | இணையத்தில் இணைவோம் April 1, 2014 at 3:31 am . Permalink\n[…] பட்டினத்தடிகளின் பாடல்கள் […]\nஅற்புதமான புத்தகம் மிக்க நன்றி…\nபதிவு இறக்கம் செய்ய முடியவில்லை\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nஆப்பிள் கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nதமிழ் மின்னூல்களைப் படிப்பது எப்படி\nகிரியேட்டிவ் காமன்சு தமிழ் வலைத்தளங்கள்\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n57 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kadayanallur.org/archives/2558", "date_download": "2018-04-26T13:08:04Z", "digest": "sha1:5O6Z6FIS5FTKVI5RPNGS73BYEKJ36XPN", "length": 12994, "nlines": 90, "source_domain": "kadayanallur.org", "title": "தென்காசி, கடையநல்லூர் தொகுதியில் தி.மு.க.,ரகசிய ஆய்வு கூட்டம் |", "raw_content": "\nதென்காசி, கடையநல்லூர் தொகுதியில் தி.மு.க.,ரகசிய ஆய்வு கூட்டம்\nதென்காசி, கடையநல்லூர் சட்டசபை தொகுதிகளுக்கான திமுக ரகசிய ஆய்வு கூட்டத்தில் இரண்டு தொகுதிகளுக்கும் 10 பேர் கொண்ட கமிட்டி அமைக்க அறிவுறுத்தப்பட்டது. தேர்தல் பணிகளை தீவிரமாக மேற்கொள்ள திமுக நிர்வாகிகளுக்கு உத்தரவிடப்பட்டது. திமுக தலைமை கழகம் சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன் அடிப்படையில் மாவட்டம் தோறும் பொறுப்பாளர்கள் வரும் சட்டசபை தேர்தலில் திமுக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும், அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்து செல்வது குறித்தும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nஇந்நிலையில் தென்காசி மற்றும் கடையநல்லூர் ஆகிய இரண்டு சட்டசபை தொகுதிகளுக்குட்பட்ட திமுக நிர்வாகிகளின் ரகசிய ஆய்வு கூட்டம் நடந்தது. மாவட்ட திமுக தேர்தல் பொறுப்பாளரும், திண்டுக்கல் மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளருமான செந்தில்குமார் Buy Amoxil முன்னிலையில் ரகசிய ஆய்வு கூட்டம் நடந்தது. முதலாவதாக தென்காசி தொகுதிக்கான நடந்த ஆய்வு கூட்டத்தில் தலைமை கழகத்தால் கொண்டுவரப்பட்ட பட்டியலில் இடம் பெற்ற திமுக நிர்வாகிகள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதன்படி தொகுதிக்குட்பட்ட மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகளும், பேரூர் திமுக செயலாளரும் கலந்து கொண்டனர்.\nஇந்த கூட்டத்தில் திமுக அரசின் சாதனைகளை மக்கள் மத்தியில் எடுத்து செல்வது குறித்தும், வரும் சட்டசபை தேர்தலில் திமுகவினர் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் ஆய்வு நடத்தப்பட்டது. கூட்டத்தில் கலந்து கொண்ட திமுக நிர்வாகிகள் பலர் தங்கள் பகுதிகளில் தமிழக அரசின் இலவச கலர் “டிவி’, காஸ் அடுப்பு போன்றவை சீராக வழங்கப்படவில்லை எனவும் அதனை உடனடியாக வழங்கிட மாவட்ட நிர்வாகத்திற்கு கட்சியின் தலைமை மூலம் அறிவுறுத்த வேண்டுமென தெரிவித்துள்ளனர்.\nதொடர்ந்து அன்று இரவு கடையநல்லூர் தொகுதிக்கான திமுக நிர்வாகிகள் ரகசிய ஆய்வு கூட்டம் கண்ணுபுள்ளிமெட்டில் நடந்தது. இந்த கூட்டத்திலும் திமுகவினர் மேற்கொள்ளும் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதுடன் சட்டசபை தொகுதியில் 10 பேர் கொண்ட பூத் கமிட்டியும், 5 பஞ்.,கள் உள்ளடங்கிய 10 பேர் கொண்ட கமிட்டியும் அமைத்திட தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கூட்டத்தில் கலந்து கொண்ட திமுக நகர நிர்வாகிகள் கடையநல்லூர் நகர பகுதிகளில் தமிழக அரசு கலர் “டிவி’ இதுவரை வழங்கப்படவில்லை எனவும் புகார் தெரிவித்துள்ளனர். இதனை உடனடியாக வழங்கிடுவதுடன் தொகுதி முழுவதும் விடுபட்ட அனைவருக்கும் இலவச “டிவி’ வழங்கிடவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.கடையநல்லூர் மற்றும் தென்காசி சட்டசபை தொகுதிகளுக்காக நடந்த ரகசிய ஆய்வு கூட்டத்தில் பல்வேறு புகாரினையும் திமுக நிர்வாகிகள் காரசாரமாக தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.\nகாலை 10 மணி முதல் 2மணி வரை மட்டுமே வரவேண்டும்- கடையநல்லூர் காவல்துறை ஆணையர்\nகடையநல்லூர் பள்ளிவாரியாக 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் முழு விபரம் \nகடையநல்லூரில் TNTJ சார்பில் இப்தார் நிகழ்ச்சி\nபொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவன மாணவியர்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி\nகடையநல்லூரில் சாலை விபத்து இருவர் பலி\nமுதலீட்டாளர்கள் விலகினர்-கொச்சி ஐபிஎல் அணியின் கடைசி மூச்சும் நின்றது\nகுவைத் பெட்ரோலியம் கம்பெனியில் KNPC வேலைவாய்ப்பு\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகடையநல்லூரில் … வீடு வீடாக சென்று நெல்லை கலெக்டர் ஆய்வு\nபரவி வரும் டெங்கு காய்சல் …மரண பயத்தில் கடையநல்லூர் மக்கள்.\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sinthanaimalar.blogspot.com/2012/09/blog-post.html", "date_download": "2018-04-26T13:29:01Z", "digest": "sha1:TUDJHTEIHFY4FZYOBHSRDIHCJC4SS7NG", "length": 3923, "nlines": 68, "source_domain": "sinthanaimalar.blogspot.com", "title": "சிந்தனை துளிகள்!!!: என் அன்பே", "raw_content": "\nஉன் அருகில் அமர்நது உன்முகம் பார்த்துக்கொண்டிருந்தால் போதும்\nஎன் துயரங்கள் அனைத்தும் தொலைந்தே போகும் ...\nசங்கடங்கள் பல வந்தாலும் சளைக்காமல் நான் ஏற்பேன் சாய்ந்துகொள்ள உன் தோள் இருந்தால் ... கஷ்டங்கள் பல கண்டாலும் கலங்காமல் நான் இருப்...\nஉதிர்த்து போகும் என்று தெரிந்தே நித்தமும் மலர்கிறேன் உன் நினைவால் \nமனிதனுக்கு புவியறையை விட .... கருவறையும் கல்லறையுமே நிசப்தம் ....\nஉண்மையான அன்புக்கு மட்டுமே உன் கண்ணீர் துளிகள் தெரியும் ... நீ மழையில் நினைந்து கொண்டே அழுதாலும் கூட ...\nதனிமையின் ஆழத்தை உணர்ந்துகொண்டேன் உன் மௌனத்தில் ..\nஎன் கண்ணீர்த்துளிகளால் எழுதிய கவிதை இது .... படித்தால் புரியாது ... உணர்ந்துகொள் ...\nநேசிக்கும் இதயத்தை தண்டிக்கும் ஓர் மொழி .... - மௌனம்\nஉறவுகளை விட உணர்வுகளை மதியுங்கள் ... உறவுகள் உங்களை விட்டு போகலாம் ஆனால் உணர்வுகள் உங்களுடனே இருக்கும் ......\nமலர வேண்டிய பூக்களுக்கு மரணமே பரிசாக பூக்களுக்கு தண்ணீர் ஊற்றி பார்த்த காலங்கள் கடந்துவிட்டது அகிம்சம் வளர்த்த பூமியில் அமிலங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.arvloshan.com/2011/12/blog-post_29.html", "date_download": "2018-04-26T13:34:50Z", "digest": "sha1:TE2VRKIRQE6DYFRWNWBPIPIDIC7YJ3ZH", "length": 34307, "nlines": 491, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: ராஜபாட்டை", "raw_content": "\nசில பேர் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து இருக்கையில் அந்த நம்பிக்கையை எல்லாம் சும்மா அலேக்காப் போட்டு மிதிச்சு உங்கள் முகத்தில் கரி பூசுவார்கள் பாருங்கள்..\nராஜபாட்டை பார்த்த போதும் அதே உணர்வு.\nஅழகர்சாமியின் குதிரைக் குட்டி படத்தைப் பற்றி நான் இட்ட இடுகையின் சில முக்கிய வரிகளைக் கவனியுங்கள்..\nவெண்ணிலா கபடிக்குழு, நான் மகான் அல்ல அடுத்து இது என மூன்று வெவ்வேறான தளங்களில் வித்தியாசம் காட்டிவரும் இயக்குனர் சுசீந்திரன் கவனிக்க வைக்கிறார். இவர் இயக்கும் அடுத்த படத்தை இப்போதே எதிர்பார்க்கும் முதலாமவன் நான் ஆகட்டும்.\nசுசீந்திரன் எனது அபிமானத்துக்குரிய இயக்குனர்களில் ஒருவராக இப்போதே மாறியுள்ளார்.\nநான் மகான் அல்ல பார்த்தபோதே சிலாகித்தவன் நான். ராஜபாட்டையிலும் ஏதாவது புதுசா (அது மசாலா என்று ஆரம்பத்திலேயே சுசீந்திரன் சொல்லி இருந்தாலும் கூட) செய்திருப்பார் என்று நம்பினேன்.\nஅதே போல விக்ரம் - தெய்வத் திருமகள் தந்த பெயரால் ஏமாற்ற மாட்டார் என்றும் நம்பி இருந்தேன்.\nஅந்த யுகபாரதியின் பாடலைப் போட்டு தாளிச்சிருந்தாலும் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் நல்லாவே இருந்தன என்பதை எல்லோருமே ஏற்கத் தான் வேண்டும்.\nபார்க்கப் போறதுக்கு முதலில் எந்தவொரு விமர்சனமும் வாசிப்பதில்லையாயினும், விமர்சனத் தலைப்பிலேயே படம் பற்றிப் பலர் கருத்து சொல்லிவிடுவதால் ராஜபாட்டை பற்றியும் ஓரளவு அறிந்துகொண்டே தான் ஈரோஸ் போனேன்..\n(சத்தியமா ஓசி டிக்கெட் என்றபடியால் தான் போனேன் )\nஇப்போது தமிழகத்தில் பிரபலமாக இருக்கும் நில அபகரிப்புத் தான் திரைப்படத்தின் முக்கிய கரு..\nகதாநாயகனை ஒரு திரைப்பட அடியாள் நடிகன் (Gym Boy).. ஒரு சிறந்த வில்லன் நடிகனாக உயரவேண்டும் என்பதை லட்சியமாக வைத்திருக்கும் அவர் தற்செயலாக நில அபகரிப்பு சிக்கலுக்குள் அகப்படும் பெரியவர் ஒருவருடன் சம்பந்தப்பட, இதனால் பலம் மிக்க அரசியல்வாதியுடனும் அவரது கொலைவெறிக் கும்பல், அரசியல்வாதியின் பினாமி ஆகியோருடன் மோதல் ஏற்படுவதும் அதன் பிறகு நடக்கும் டிஷ்யூம், டிஷ்யூம் களும் தான் கதை..\nவழமையான இந்த மாதிரி மசாலாத் திரைப்படங்கள் என்றால் மன்னிக்கலாம்.. இது இப்படித் தான் என்பது தெரியும்.\nஆனால் நல்ல படங்கள் மூன்றைத் தந்த சுசீந்திரன் ஒரு மசாலாவைத் தந்தாலும் கொஞ்சம் வித்தியாசமாகத் தருவர் என்று தானே எதிர்பார்ப்போம்\nஅதிலும் மிகப் பலமான ஆரோக்கியமான கூட்டணியுடன் சுசீந்திரன் களம் இறங்கும்போது இன்னும் எதிர்பார்ப்பு ஏற்படும் தானே\nஇசை - யுவன் ஷங்கர் ராஜா\nவசனம் - பாஸ்கர் சக்தி\nகூடவே விக்ரமின் உடல் உழைப்பு + அர்ப்பணிப்பு & புகழ்பெற்ற இயக்குனர் K.விஸ்வநாத்தின் இந்தத் தள்ளாத வயதிலும் வெளிப்படுத்திய துடிப்பு..\nலொஜிக்கை விடுங்கள்.. ஒரு லொசுக்குக் கூட ஒழுங்காக இல்லையே...\nபடத்தின் நல்ல விஷயங்களை விரல்விட்டு எண்ணலாம்....\nதெய்வத் திருமகளில் நோஞ்சானாக இருந்தவர் என்ன மாதிரியாக உடலை வருத்தி ஒரு மாமிச மலையாகக் கட்டுமஸ்தான உடலோடு வருகிறார்.\nஉடலை வருத்தி உழைத்தவர் கொஞ்சம் கதையையும் கவனித்திருக்கலாம் தான்.\n(ஆனால் சாதாரண ஒரு அடியாள் நடிகர் ஒவ்வொரு நாளும் புதிய புதிய dress + Cooling glass உடன் வருவது பயங்கரமாக உதைப்பது வேறு கதை)\nவில்லாதி வில்லன் பாட்டில் பல வேஷம் கட்டி ஆடுவதில் நீண்ட நாள் ஆசையை எல்லாம் தீர்த்திருப்பது தான் விக்ரமுக்கு ஒரே ஆறுதல் போலும்..\n\"கமலுக்கே நடிப்பு சொல்லிக் கொடுத்தவனாக்கும்\" என்று சொல்கின்ற இயக்குனர் K.விஸ்வநாத்தின் நடிப்பு.\nதம்பி ராமையாவின் இயல்பான நடிப்புடனான நகைச்சுவை & அடியாளாக வரும் அருள்தாசின் நகைச்சுவை....\nபுதிய அறிமுகமாக வரும் வில்லி.. அக்கா என்று படம் முழுக்க மிரட்டலாக அவர் வலம் வரும்போது (பெயர் சனாவாம்) ஜெயலலிதா ஞாபகம் வருகிறது.\nநில அபகரிப்பு, வழக்குகள், பினாமி, அடியாட்கள், கை அசைப்பு என்று பல ஒற்றுமைகள்..\nதமிழக நண்பர்கள் தான் சொல்லவேண்டும்..\nசுசீந்திரன் டச் சில காட்சிகளில் இருக்கின்றன; அவை ரசிக்கவும் வைக்கின்றன.\nஆனால் இடைவேளையின் பின்னதான பாதியிலும் அவசர முடிவினாலும் முடிவுறும் இந்த ஆண்டின் மோசமான படங்களில் ஒன்றாக மாறிவிடுகிறது.\nசினிமா அறிவு போதியளவு இல்லாத எமக்கே இந்தப் படம் தேறாது என்று தெரிகிற நேரம், இயக்குனர், நடிகர்கள், லட்சக்கணக்கைக் கொட்டிப் படம் எடுக்கும் தயாரிப்பாளருக்குப் படம் எடுத்து முடிந்து முழுக்கப் பார்க்கையில் விளங்கி இருக்காதா\nஅவசரமாக முடிந்த மாதிரி ஒரு சப் முடிவு..\nமுடிந்த பிறகு தான் ஸ்ரேயாவும், ரீமா சென்னும் சேர்ந்து ஆடும் 'லட்டு லட்டு' பாட்டு வருகிறது..\nபடத்தில் இதை விட மோசமான விடயங்கள்...\nகதாநாயகி .. வட இந்திய இறக்குமதியாம்.\nதீக்ஷா சேத். என்ன அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டார்\nஒன்றுமே இல்லை இவரிடம்... இவருக்காக விக்ரம் கனவுப் பாட்டுப் பாடும்போது மனதுக்குள் ஓடிக் கொண்டிருந்த \"பொடிப்பையன் \" பாடல் செத்துப் போச்சு.\nதிருப்பங்கள் என்று எதுவுமே இல்லாத கதை.\nசுசீந்திரனின் சரக்குத் தீர்ந்து விட்டதோ\nவிஜய், அஜித், சூர்யா, தனுஷ் என்று அத்தனை பேரும் மாறி மாறி பெரிய ஹிட்டுக்கள் கொடுக்கிற நேரம் இப்படியொரு புஸ் கறுப்புப் புள்ளியாக.\nராஜபாட்டை சொல்லும் நீதி - எவ்வளவு தான் நட்சத்திரங்கள் சேர்ந்தாலும் நல்ல கதையும், சீரான திட்டமிடலும் இல்லாவிட்டால் கதை கந்தல் தான்.\nராஜபாட்டை - எல்லாம் ஓட்டை.\n2011 வருடம் முடியும் தருணம், இந்த வருடத்தின் எனது இறுதி திரைப்பட விமர்சனமாக இருக்கும்.\nஇந்த வருடத்தில் எழுத ஆசைப்பட்ட சில நல்ல திரைப்படங்களை நேரம் இல்லாமலும், தாமதமாகப் பார்த்தமையினாலும், எழுத எண்ணியபோது நேரம் வராமையினாலும் தவறிப்போன நல்ல திரைப்படங்கள் ஐந்தினையும் சொல்லிப் பரிகாரம் தேடிக்கொள்ள ஆசைப்படுகிறேன்.\nமைனா (2010 இறுதியில் வெளிவந்தாலும் பார்த்தது இவ்வாண்டில் தான்)\nவிரைவில் போராளி, உச்சி தனை முகர்ந்தால் ஆகியவற்றைப் பார்த்துவிடுவேன்.\nபுதுவருடத்துக்கான வாழ்த்துக்களை இப்பொழுதே தர எண்ணமில்லை; இந்த எஞ்சிய மூன்று தினங்களுக்குள் ஒரு பதிவாவது தர மாட்டேனா\nat 12/29/2011 10:58:00 PM Labels: cinema, movie, சுசீந்திரன், திரைப்படம், ரசனை, ராஜபாட்டை, விக்ரம், விமர்சனம்\nஇதுக்கெல்லாம் நீங்க மினக்கெட்டு விமர்சனம் எழுதுவீங்கன்னு நெனக்கவே இல்லண்ணா. சரி படம் பார்த்த கடுப்ப இப்படி சரி வெளிப்படுத்தி இருக்கீங்க\nஏன்டா படம் பார்க்க வந்தோம் என்று படம் ஆரம்பித்ததில் இருந்து நான் புலம்பிய ஒரே படம் இதுதான்...\nஎன்ன ஒரு அறுவை... ஒரு வேளை 2011 படங்களுக்கு வந்த நாவுறு எல்லாம் போக்க இந்த படத்தை வெளியிட்டாங்க போல..\nவிடுங்க விடுங்க ஏன் காலையிலேயே கடுப்பாகிட்டு.\n“அந்தியனு“க்குப் பின்னர் விக்ரமைத் தேடிக்கொண்டிருக்கிறேன் நான்....\nபடத்திற்கு ஒரு விமர்சனம் கூட நல்லபடியா இல்லயே. கட்டாயம் தவிர்க்கவேண்டிய படங்கள் இரண்டில் (ஒஸ்தி) ஒன்று.\nஇந்த வருடத்தில் நிறைய தமிழ்ப்படங்கள் பார்க்கவில்லை. பயணம், ஆரண்ய காண்டம், வாகை சூடவா என்பவற்வை பார்க்கவேண்டும் என ப்ளான் உள்ளது.\nRADIO FOR FREE VOICES நீதி மற்றும் சமத்துவத்துக்கான பெண்களின்‌ குரல் said...\nநாங்கள் உங்களோடு சில விடயங்களை பகிர்ந்துகொள்கிறோம், அது தொடர்பான உங்கள் காத்திரமான கருத்துக்களையும் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.\nஇந்த வருடம் மிகவும் கடுப்பேத்திய படம். மேலும் இரண்டு பாட்டுகளே முதலும் கவர்ந்திருந்தது மற்றது ஒன்றும் சொல்லிகொள்ளும் படி இல்லை. தீக்சா சேத் அழகாதான் இருக்கிறார்\nஆரண்ய காண்டம் எங்கு பாத்தீர்கள் இன்னும் ஒரிஜினல் டி‌வி‌டி தேடிக்கொண்டு இருக்கிறேன்\nஇந்த பதிவுக்கு விமர்சனம் எழுதிறதே வேஸ்ட் எண்டு நினைச்சனான்\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nலோஷன் - தொழிலால் சூரியனில் அறிவிப்பாளர் / பணிப்பாளர்.\nஅன்பு கொண்டோர் அனைவர்க்கும் நண்பன்.\nவாசிப்பதிலும் தமிழை நேசிப்பதிலும் ஆர்வமுடைய இயற்கையின் காதலன்.\nஇலங்கையின் வெற்றியும், இந்தியாவின் தோல்வியும், வெற...\nநண்பன் பாடல்கள் - நல்லா இருக்கே :)\nநிழல் பார்த்துக் குரைக்கும் நாய்களும், பெயர் போட்ட...\nபாரதியும், யுகபாரதியும் - முள் வேலிக்குள்ளே வாடும்...\nசெவாக் 219 (Sehwag 219) - சில குறிப்புக்கள்\nவிடியலும் விழிப்பும் + இலங்கையில் 3D ஜாலி + கொலை'வ...\nகிரிக்கெட் கனவான் தன்மையைக் கறைப்படுத்திய கறுப்பு நாள் - அவுஸ்திரேலியக் கிரிக்கெட் மோசடி\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nசங்ககார & கிரிஸ் கெயில் ஆஸ்திரேலியாவில் விளையாடவுள்ளார்கள்\nசனத் ஜெயசூரிய - களிமண்ணாகிப் போன கறுப்புத் தங்கம்\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nஅரசியலுக்கு அப்பால் அசிங்கப்பட்ட ஆளுநரின் கை\nகந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா\nபிரபா ஒயின்ஷாப் – 23042018\nநிகராகுவா கலவரம்: பணக்காரர்களின் ரவுடித்தனம்\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\n79 வயதில் காமம் தவறில்லை.\nவிழியிலே மணி விழியிலே ❤️🎸 ஜொதயலி ஜொத ஜொதயலி 💕\nகிரிக்கெட் கனவான் தன்மையைக் கறைப்படுத்திய கறுப்பு நாள் - அவுஸ்திரேலியக் கிரிக்கெட் மோசடி\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nஇனிய தைப் பொங்கல் வாழ்த்துகள்\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nஅந்த கால பிலிம் பேர் விருது விழாவில் சில ஒளிக்காட்சிகள்-வீடியோ\n500, 1000 – மோசம் போனோமே\nஇறைவி - புரிந்ததும் புரியாததும்\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthinappalakai.net/2017/06/11/news/23858", "date_download": "2018-04-26T13:13:02Z", "digest": "sha1:YQX66ZAN2OE5HUHMQKR7WKJM5L7SBP76", "length": 7821, "nlines": 100, "source_domain": "www.puthinappalakai.net", "title": "பிரித்தானிய தேர்தலில் இலங்கை தமிழ் வம்சாவளிப் பெண்ணான தங்கம் அமோக வெற்றி | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nபிரித்தானிய தேர்தலில் இலங்கை தமிழ் வம்சாவளிப் பெண்ணான தங்கம் அமோக வெற்றி\nJun 11, 2017 | 2:37 by பிரித்தானியாச் செய்தியாளர் in செய்திகள்\nஇலங்கைத் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த பெண் ஒருவர் பிரித்தானி்ய நாடாளுமன்றத் தேர்தலில் சுமார் 37 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றியைப் பெற்றுள்ளார்.\nதொழிற்கட்சி சார்பில், பிரிஸ்டல் மேற்குத் தொகுதியில் போட்டியிட்ட தங்கம் டெபோனயர், 47, 213 வாக்குகளைப் பெற்றார்.\nஇவரை எதிர்த்துப் போட்டியிட்ட கொன்சர்வேட்டிவ் கட்சி வேட்பாளரால், 9877 வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தார்.\nதங்கம் டெபோனயரின் தந்தை ஒரு இலங்கைத் தமிழர் என்பதும், அவரது தாயார் ஆங்கிலேயப் பெண் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nTagged with: இலங்கைத் தமிழர், தங்கம் டெபோனயர், தொழிற்கட்சி\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் தொடர்ந்து சரியும் சிறிலங்கா ரூபாவின் மதிப்பு – வெளிநாட்டு கடன்சுமை அதிகரிப்பு\nசெய்திகள் திருகோணமலையில் அமெரிக்காவின் பாரிய மிதக்கும் மருத்துவமனை\nசெய்திகள் தமிழ்தேசியம்: ‘தமிழ்நாட்டின் உரிமைகளை எப்போது மீட்க முடியும்\nசெய்திகள் “எமது கதைகளை நாங்கள்தான் கூற வேண்டும் “- ‘தமிழர் மூவர்’ விருது பெற்ற றீற்றா பரமலிங்கம்\nசெய்திகள் இளைஞர் மாநாட்டைக் கூட்டுகிறார் முதலமைச்சர் விக்னேஸ்வரன்\nகட்டுரைகள் இரா.சம்பந்தன் – ‘சேர் பொன். இராமநாதனின் மறுஉருவம்’ 0 Comments\nசெய்திகள் காணாமல் போனோர் பணியக உறுப்பினர்களை வேண்டா வெறுப்பாக நியமித்த சிறிலங்கா அதிபர் 0 Comments\nசெய்திகள் தொடர்ந்து சரியும் சிறிலங்கா ரூபாவின் மதிப்பு – வெளிநாட்டு கடன்சுமை அதிகரிப்பு 0 Comments\nசெய்திகள் திருகோணமலையில் அமெரிக்காவின் பாரிய மிதக்கும் மருத்துவமனை 0 Comments\nசெய்திகள் நல்லிணக்கச் செயல்முறைகள் குறித்து சிறிலங்காவுடன் கனடா பேச்சு 0 Comments\nNakkeeran on ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\nShan Nalliah on 10 நிபந்தனைகளின் அடிப்படையிலேயே ரணிலுக்கு ஆதரவு – செல்வம் அடைக்கலநாதன்\nShan Nalliah on கூட்டமைப்புடன் எந்த உடன்பாடும் கையெழுத்திடப்படவில்லை – மனோ கணேசன்\n‌மன‌ோ on 10 நிபந்தனைகளின் அடிப்படையிலேயே ரணிலுக்கு ஆதரவு – செல்வம் அடைக்கலநாதன்\nChenavi L on நம்பிக்கையில்லா பிரேரணை படுதோல்வி\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.unmaikal.com/2014/12/blog-post_37.html", "date_download": "2018-04-26T13:26:49Z", "digest": "sha1:S24WYL4DDN4YY7ROOAIR6GEQMX7ZLF4L", "length": 46541, "nlines": 487, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: “தமிழ்த்தேசியத்தின் பெயரில் குஷ்பு மீது கொட்டப்படும்; பாலியல் வக்கிரங்கள்”", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nகம்யூனிசகட்சி,லங்கா சமசமாஜ கட்சி போன்றன மகிந்த ர...\nமுஸ்லிம் மக்களின் பாதுகாப்பிற்கு இறைவனுக்கு அடுத்த...\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பு மைத்திரிபால சிறிசேனவுக்க...\nமானமுள்ள ஒரு மறத்தமிழனும் இருவருக்கும் வாக்களிக்க ...\nலயன் காம்பிரா யுகம் இனி இல்லை. புதிய வீடுகள் வழங்க...\nமைத்திரிபாலவிற்கு தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாக...\nதீர்வு விடயத்தில் கையை விரித்தார் மைத்திரி\nகீரிகளினதும், பாம்புகளினதும் போலியான ஒற்றுமைக் கூண...\n கூட்டமைப்பால் ஐந்து கோடிக்கு விலைப...\nயாருக்கு ஆதரவு: மு.கா. இன்று முடிவு\nஜனாதிபதித் தேர்தலில் சர்வதேச சக்திகள் பெருமளவு ஆதி...\nபிணங்களை வைத்து அரசியல் செய்யும் விண்ணர்கள்\nஅன்னத்தின் குகைக்குள் ஐ.ம.சு.கூ உறுப்பினர் ஆவேசம்\nஜனாதிபதி தேர்தலில் பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப் நிலைப...\nஜே.வி.பி. நியூஸ் டொட்கொம் இணையத்தளத்திற் கெதிராக ந...\n“எஸ். பொவை சிந்திக்கும் நாள்” -பாரிஸ் நகரில்\nமஹிந்த சிந்தனை; தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு\n\"ரிஷாத் பதியுதீன் முடிவு கட்சியின் முடிவல்ல\" : ஹிஸ...\nஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் \"உலகை வெல்லும் வழி\"எனு...\nஇன, மத அரசியல் உரிமைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த...\nபொது எதிரணியினரால் அவமானப்படுத்தப்பட்ட தமிழ்த் தேச...\nமைத்திரியை ஆதரிக்கும் றிசாட் பதியுதீன் முடிவு முட்...\nஎதிரணியில் ஏராளமான ‘முனாபிக்குகள்;’; தேர்தலில் முஸ...\nஎதிரணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் மலையகம் புறக்கணி...\nகிழக்கின் விடிவுக்கு வித்திட்ட ஜனாதிபதி மஹிந்த இன ...\nஅமைச்சர் ரிசாத் பதியுதீன் கட்சி மைத்திரிக்கு ஆதரவு...\nஅணை உடைப்பெடுப்பு: மூதூர் மூழ்கும் அபாயம்\nUPFA தேர்தல் கொள்கை பிரகடனம் நாளை வெளியீடு\nதமிழ் கூட்டமைப்பின் தீர்மானம் இறுதி 48 மணித்தியாலத...\nஆதரவளித்த தமிழ், முஸ்லிம் தரப்பிற்கு முதுகில் குத்...\nதேர்தலை தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும்: அ.இ.த.கா\nத.தே.கூ ஆதரவாளர்கள் ஐ.ம.சு.கூ.வில் இணைவு\nஆயித்தியமலையில் தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் அலுவல...\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் சுமார் 250க்...\nசெங்கலடி செல்லம் தியேட்டர் உரிமையாளர் ஐக்கிய தேசிய...\nகுளோபல் தமிழ் குருபரனின் மற்றுமொரு திருகுதாளம் அம...\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மா...\nசெங்கலடி செல்லம் தியேட்டர் மோகனின் அரசியல் நாடகம்\nலயன்களுக்கு பதிலாக தனித் தனியான வீடுகள்\nமைத்திரிக்கு வாக்களிக்குமாறு தமிழருக்கு கட்டளை விட...\nமட்டு. இணைப்பாளர் அருண் தம்பிமுத்து உள்ளிட்ட குழுவ...\nஆரையம்பதியில் தமிழ்மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிய...\nமுனைக்காட்டில் தமிழ்மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி...\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தேர்தல் அ...\nரணில் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை இழந்திருப்பத...\nசர்வஜன வாக்கெடுப்பின் மூலமே அரசியலமைப்பை மாற்றுவேன...\nஐரோப்பிய சட்டத்துறையில் பரிஸ்ரர் (Barrister) பட்டம...\nநினைத்தால் ரணிலையும் எடுப்பேன்: ஜனாதிபதி\nத.தே.கூட்டமைப்பு மைத்திரிக்கு ஆதரவு: இன்று சுன்னாக...\nஎமது படை வீரர்களை சர்வதேச நீதிமன்றில் நிறுத்தவோ, அ...\nENDLF -TBC -GTAJ -NRT முக்கிய புள்ளி ராமராஜ் கைது ...\nதேசிய புனித நூலா பகவத் கீதை\nபுகலிட தமிழ் தேசிய கனவான்களே கிளிநொச்சியில் 3000 ...\nமுஸ்லிம்களின் தீர்மானம் நியாயமானது முஸ்லிம் கட்சிக...\nஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் பதவியில் இருந்து...\nஜனாதிபதித் தேர்தல்: வேட்பு மனுக்கள் இன்று ஏற்பு 17...\nமைத்திரியின் அணியிலுள்ள ஆபத்தான பேரினவாத சக்திகள்\nமஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கும் தமிழ் மக்கள் வ...\nசர்வதேச தரம்மிக்க மைதானம், மட்டக்களப்புக்கு கிடைத்...\nதமிழ் மக்கள் விடுதலை கட்சியின் மகளிர் அணியின் விசே...\nஎழிலன் கடத்திச் சென்ற பிள்ளைகள் எங்கே\nமகிந்தவை அகற்ற ரூ. 25கோடி பெறுமதியான அமெரிக்க டொலர...\nஜனவரி 7, 8ஆம் திகதிகளில் பாடசாலைகளுக்கு விடுமுறை\nநெடியவன் என்றழைக்கப்படும் பேரின்பநாயகம் சிவபரன் என...\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில்தான் மக்கள் ...\nலெனின் மதிவானத்தின் நூல் விமர்சன நிகழ்வு\nதமிழ் தேசிய கூட்டமைப்பு சிஹல உறுமைய-மைத்திரி கூட்...\nமஹிந்த ஆட்சியை வீழ்த்த அமெரிக்க,ஐரோப்பிய தூதரங்கள...\n“தமிழ்த்தேசியத்தின் பெயரில் குஷ்பு மீது கொட்டப்படு...\nகவிஞர் மஜீத் அவர்கள் கிட்டத்தட்ட 18 வருடங்களாக தீர...\nதமிழ் தேசிய கூட்டமைப்பினரின் வன்முறையால் கேலிக்கூத...\nஎதிரணி உடன்படிக்கை சிறுபான்மை மக்களின் பிரச்சனைகளை...\nமட்டக்களப்பில் 365,163 பேர் வாக்களிக்கத்தகுதி\nகிட்டதட்ட நுாற்றுக் கணக்கான தொழில்களில், ஸ்டாலின் ...\n“தமிழ்த்தேசியத்தின் பெயரில் குஷ்பு மீது கொட்டப்படும்; பாலியல் வக்கிரங்கள்”\nசமீபத்தில் காங்கிரசில் இணைந்த நடிகை குஷ்பு தமிழீழ விடுதலை ப்புலிகள் தொடர்பாக தெரிவித்த கருத்தையொட்டி பல்வேறு விமர்சனங்கள் எழுப்பப்பட்டிருக்கின்றன. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத் தலைமையகமான சென்னை சத்யமூர்த்தி பவனில் இடம்பெற்ற பத்திரிகையாளர்கள் மாநாடொன்றிலேயே குஷ்பு அக்கருத்தினைத் தெரிவித்திருந்தார்.\nஅங்கு தான் காங்கிரசில் சேர்ந்தது குறித்து சில கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட குஷ்பு, “ஈழத் தமிழர்கள் விவகாரத்தில் காங்கிரஸ் குறித்து தவறான கருத்துகள் பரப்பப்பட்டு வருவதாகவும், வீடு கட்டிக்கொடுக்கும் திட்டம் துவங்கி பல திட்டங்களை ஈழத் தமிழர்களுக்காக காங்கிரஸ் செய்து வருவதாகவும், காங்கிரஸ் கட்சி உண்மையில் தீவிரவாதத்திற்கு மட்டுமே எதிரான கட்சி” என்றுமே குஷ்பு தெரிவித்தார்.\nஇதையடுத்து செய்தியாளர் ஒருவர், அப்படியானால் “எல்டிடிஇ” இயக்கம் பயங்கரவாத இயக்கமா எனக் கேள்வி எழுப்ப அதற்குப் பதிலளித்த குஷ்பு “நிச்சயமாக. அப்பாவிகளின் உயிரை எடுப்பவர்கள் பயங்கரவாதிகளே” என்றும் தெரிவித்திருந்தமை தொடர்பாகவே மேற்படி சர்ச்சைகள் உருவாகியுள்ளன.\nகடந்த 2005ம் ஆண்டு குஷ்பு அவர்கள் இந்தியா டுடே ஒன்றிற்கு அளித்த பேட்டியில், திருமணத்துக்கு முன் செக்ஸ் வைத்துக் கொள்வதில் தவறில்லை. அப்படி வைத்துக் கொள்ளும்போது கர்ப்பமாகாமலும், பால்வினை நோய்கள் பரவி விடாமலும் பெண் தன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டும், என்று குறிப்பிட்டிருந்தபோது அவர் எதிர்கொண்ட விமர்சனங்கள் கொஞ்சநஞ்சமல்ல. இறுதியாக நீதிமன்ற திர்ப்பு மூலமே அந்த எதிர் விமர்சனங்களில் இருந்து விடுபட்டிருந்தார் என்பதும் இங்கு குறிப்பிட கூடிய விடயம்.\nஇம்முறை குஷ்பு கூறிய “விடுதலைப்புலிகள் இயக்கம் பயங்கரவாதிகள்” என்கின்ற விடயத்தை இங்கு விவாதிப்பதை விட அதற்கு எதிராக எழுந்துள்ள விசமத்தனமான விமர்சனங்களே விவாதிக்கப்பட வேண்டியது. குஷ்புமீது வைக்கப்படுகின்ற விமர்சனங்கள் எமது தமிழ் சமூகம் தங்களுக்கு விருப்பமற்ற, மாற்றான ஒரு கருத்தை எவ்வாறு எதிர்கொள்கிறார்கள்,அதை எதிர்ப்பதற்கு எவ்வகையான வழிமுறைகளை கையாளுகிறார்கள் என்பதை நன்கே புலப்படுத்தியுள்ளன. குஷ்புவின் கருத்துமீதான வெளிப்பாடுகள் நாகரீகமாக முன்வைக்கப்பட்டிருக்க வேண்டும்.\nவிடுதலைப்புலிகள் அப்பாவி மக்களை கொல்லவில்லை என்பதை யாராலும் உரத்துச் சொல்லமுடியாது. எனவேதான் குஷ்புவின் கருத்தினை திசைதிருப்பி அவருக்கெதிரான அவதூறுகளைமுன்வைத்து வருகிறார்கள். அவை அநாகரிகமானமுறையிலும், அருவருக்கத்தக்க வகையிலும் இருப்பது மிக கேவலமான உண்மையாக உள்ளது. குறிப்பாக சமூகவலைத் தளங்களிலும், முகப்புத்தகங்களிலும் எழுந்தமானமாகவும் பாலியல் ரீதியில் பெண்களை கொச்சைப்படுத்துவதாகவும் அவை அமைந்துள்ளன. அதிலும் இத்தகைய வக்கிர சிந்தனை கொண்டவர்களாக, ஆணாதிக்க வெறியர்களாக தமது விமர்சனங்களை முன்வைப்போர் அனைவரும் தமிழ்தேசிய வாதிகளாக தம்மை காட்டிக்கொண்டிருப்பவர்களே என்பது குறிப்பிடத்தக்கது .அதேவேளை குஷ்புவிற்கு இருக்கும் விடுதலைப்புலிகள் மீதான கருத்துச்சொல்லும் உரிமையை மறுப்பதற்கு இந்த தமிழ் தேசியவாதிகள் இரண்டு முக்கியவிடயங்களை முன்வைக்கின்றனர். அதாவது குஷ்பு சினிமாக்காரி என்பதும், வந்தேறு குடி (தமிழ்நாட்டுக்கு பிழைப்புக்கு வந்தவள); என்பதுமே அவையாகும்.\n1.சினிமாவுக்கும், அரசியலுக்குமான தொடர்பு தமிழ்நாட்டில் ஒன்றும் புதிதல்ல. இந்த சினிமாதான் தமிழ்நாட்டுக்கு பல முதலமைச்சர்களை, மந்திரிகளை தந்தது . அதைவிட அன்றில் இருந்து இன்று யுத்தம் முடிந்தபின்னரும் கூட தமிழ் ஈழம் அமைப்போம் என ஒற்றைக்காலில் நிற்பவர்கள் இந்திய தமிழ் சினிமாக்காரர்கள்தான். எந்தவொரு ஈழ ஆதரவு நிகழ்வுகளும் தமிழ் சினிமாக்காரர்கள் இன்றி முழுமைபெறுவதில்லை. அவர்களின் வரவும், அவர்களின் கருத்தும் தமிழின உணர்வாளர்களுக்கு இன்றியமையாததாக காணப்படுகின்றது.\nஇவற்றையெல்லாம் விட மிக உச்சமான விடயமாக இலங்கை திரைப்பட இயக்குநர் பிரசன்ன விதானகேவின் ‘வித் யு வித்தவுட் யு’ எனும் திரைப்படம் தமிழ்நாட்டில் திடையிடப்பட்டபோது கூட, ஒரு கலைப் பிரதியை எவ்வாறு சரியான நோக்குடன் அணுகுவது என்கிற புரிதல் சற்றும் இன்றி பிரதேசமும் இனமும் சார்ந்த கண்மூடித்தனமான பற்றுதலுடனும் மிகையுணர்ச்சிகளுடனும் எழுப்பப்பட்ட அந்தக் கேள்விகள் அபத்தமாக அவரை அரசியல் கருத்து கூறும்படி நிர்ப்பந்தித்தது. ஈழ ஆதரவு வியாபாரத்தில் முன்னோடியாக இருக்கும் நாம் தமிழர் சீமான் திரையுலகில் இருந்தே அரசியலுக்கு வந்தவர். இன்று இந்திய தமிழ் சினிமா அரங்கு இப்படி இருக்க குஷ்புவுக்கு மட்டும் இலங்கை அரசியல் பற்றி பேச அனுமதி இல்லை என்பது எந்த ஊரு நியாயம்\nகுஷ்பு தனது இளமைக்காலங்களில் திரைப்படங்களில் நடித்துக்கொண்டிருந்தபோது அவளது உடலழகை பார்த்து வாயுற ரசித்து அவளுக்கு கோயில் கட்டிய அதே கும்பல்தான் இவ்வாறான ஊத்தை விமர்சகர்களும் ஆகும். இன்றைய தமிழ் சமூகம் தமிழ் சினிமாக்களினால் கட்டி வளர்க்கப்படுகிறது. சமயம், கலாச்சாரம், பண்பாடு போன்ற அனைத்துத்தளங்களிலும் சினிமாவையே எமது தமிழர்கள் முன்னுதாரணமாக எடுத்துக்கொள்கிறார்கள். அப்போதெல்லாம் இல்லாத நடிகைகள் மீதான கோபமும், விமர்சனங்களும் இப்போது மட்டும் புதிதாக எங்கிருந்து வருகின்றது சினிமாக்காரர்கள் அரசியல் பேசமுடியும், ஆனால் தமக்கு சார்பாக மட்டுமே இருக்கவேண்டும் என அடம்பிடிப்பது ஈழத்தமிழ் சமூகம் கடந்த 30 ஆண்டுகாலமாக விடுதலைப் புலிகளிடம் இருந்து பெற்றுக்கொண்ட பாசிச மனபாவமாகும்.\nவந்தேறுகுடி (தமிழ் நாட்டுக்கு பிழைப்புக்காக வந்தவள்)\nஇந்த விமர்சகர்கள் எடுத்துக்கொள்ளும் இரண்டாவது காரணம் குஷ்பு தமிழ்நாட்டு காரியல்ல. அவள் தமிழ்நாட்டுக்கு பிழைப்புக்காக வந்தவள். இவள் எப்படி எமது தமிழர்களின் பிரச்சனை பற்றி பேச முடியும் என்பதாகும். தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் ஈழத்தமிழர் பற்றி பேச வடநாட்டில் இருந்து வந்த குஷ்புவிற்கு உரிமையில்லை என அழுத்தம் திருத்தமாக கூறியிருக்கின்றார். தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால் அரசியலிலும் சரி, சினிமாவிலும் சரி எத்தனை தமிழர்கள் இருக்கிறார்கள் என்று எண்ணிப்பார்த்தால் இந்த வந்தேறு குடிகள் தமிழ் நாட்டை கட்டிவளர்த்ததில் பெற்றிருக்கும் முக்கியத்துவம் தெரியும். ஈழ ஆதரவு கோரிக்கைக்க இன்றுவரை தமிழ்நாட்டின் ஆணிவேர் என்று புகலிடத் தமிழர்கள் போற்றித் துதிக்கும் வை.கோபால்சாமி யார் என்பதாகும். தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் ஈழத்தமிழர் பற்றி பேச வடநாட்டில் இருந்து வந்த குஷ்புவிற்கு உரிமையில்லை என அழுத்தம் திருத்தமாக கூறியிருக்கின்றார். தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால் அரசியலிலும் சரி, சினிமாவிலும் சரி எத்தனை தமிழர்கள் இருக்கிறார்கள் என்று எண்ணிப்பார்த்தால் இந்த வந்தேறு குடிகள் தமிழ் நாட்டை கட்டிவளர்த்ததில் பெற்றிருக்கும் முக்கியத்துவம் தெரியும். ஈழ ஆதரவு கோரிக்கைக்க இன்றுவரை தமிழ்நாட்டின் ஆணிவேர் என்று புகலிடத் தமிழர்கள் போற்றித் துதிக்கும் வை.கோபால்சாமி யார் எம்.ஜி.ஆர் யார் என்று கேட்டுக்கொண்டே போகலாம். எனவே வந்தாரை வாழவைக்கும் தமிழகம் என்றுதான் கேள்விப்பட்டிருக்கிறோம் அன்றி வந்தேறு குடிகள் என்று புறம்தள்ளிய வரலாறு நாம் அறிந்ததில்லை. எனவே குஷ்பு ஈழத்தமிழர் பிரச்சனையில் கருத்துச் சொல்ல தகுதியற்றவர் என்பது இனவெறி பிரச்சாரமாகும்.\nஇவையெல்லாவற்றையும் விட குஷ்புவின் கருத்தை மிக கேவலமான முறையில் தாக்குவதற்கான காரணம் குஷ்பு அவர்கள் சினிமா நடிகை என்பதையும், தமிழச்சி அல்லாதவர் என்பதையும் தாண்டி அவள் ஒரு பெண் என்பதுதான் இந்த கேவலான விமர்சனங்களுக்கான முக்கிய காரணமாக நான் காண்கிறேன். எமது சமூகத்தில் பெண்களை வெறும் பாலியல் பண்டமாக பார்ப்பதும், அவர்களது கருத்துக்களை ஏற்கமுடியாத பட்சத்தில் அவர்களை முடிந்தவரை இழிவுபடுத்துவதும் வக்கிரமான விமர்சனங்களை கக்குவதும் காலம் காலமாக எம்மவர்கள் செய்வதுதான். அதைத்தான் குஷ்பு மீதும் செய்கின்றார்கள். பெண்களை எப்போதெல்லாம் அடக்கவேண்டும் என்று நினைக்கின்றார்களோ அப்போதெல்லாம் அவர்களை பாலியல் ரீதியாக கொச்சைப்படுத்துவதையே ஆயுதமாக கொள்வார்கள். இவ்வாறு பெண்கள் மீதான தங்கள் வக்கிரங்களை கொட்டுவதன் மூலம் திருப்திப்பட்டுக்கொள்ளும் இந்த ஆணாதிக்க தமிழ் மனநிலை கண்டிக்கப்பட வேண்டியது. இந்த மனநிலை பெண்களின் வாழ்வியலுக்கு மிகவும் ஆபத்தானதொன்றாகும்.குஷ்பு எனும் பெண்ணின் கருத்துச் சுதந்திரத்திற்கு எதிராக ஏவப்படும் இந்த பாலியல் ரீதியான மோசமான கொச்சைப்படுத்தல்களை தமிழ்நாட்டு பெண்ணியவாதிகள் எவரும் இதுவரை கண்டுகொண்டதாக தெரியவில்லை. இந்த பெண்ணியவாதிகளும் தமிழ் தேசியத்தின் பின்னால் மறைந்துகொள்வதையே பாதுகாப்பாக கருதுகிறார்களோ அல்லது தமிழ் தேசியத்திற்கு முன்னால் இதெல்லாம் ஒன்றுமே இல்லை என நினைக்கிறார்களோ தெரியாது. அவர்கள்தான் பதில் சொல்ல வேண்டும்.\nகம்யூனிசகட்சி,லங்கா சமசமாஜ கட்சி போன்றன மகிந்த ர...\nமுஸ்லிம் மக்களின் பாதுகாப்பிற்கு இறைவனுக்கு அடுத்த...\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பு மைத்திரிபால சிறிசேனவுக்க...\nமானமுள்ள ஒரு மறத்தமிழனும் இருவருக்கும் வாக்களிக்க ...\nலயன் காம்பிரா யுகம் இனி இல்லை. புதிய வீடுகள் வழங்க...\nமைத்திரிபாலவிற்கு தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாக...\nதீர்வு விடயத்தில் கையை விரித்தார் மைத்திரி\nகீரிகளினதும், பாம்புகளினதும் போலியான ஒற்றுமைக் கூண...\n கூட்டமைப்பால் ஐந்து கோடிக்கு விலைப...\nயாருக்கு ஆதரவு: மு.கா. இன்று முடிவு\nஜனாதிபதித் தேர்தலில் சர்வதேச சக்திகள் பெருமளவு ஆதி...\nபிணங்களை வைத்து அரசியல் செய்யும் விண்ணர்கள்\nஅன்னத்தின் குகைக்குள் ஐ.ம.சு.கூ உறுப்பினர் ஆவேசம்\nஜனாதிபதி தேர்தலில் பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப் நிலைப...\nஜே.வி.பி. நியூஸ் டொட்கொம் இணையத்தளத்திற் கெதிராக ந...\n“எஸ். பொவை சிந்திக்கும் நாள்” -பாரிஸ் நகரில்\nமஹிந்த சிந்தனை; தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு\n\"ரிஷாத் பதியுதீன் முடிவு கட்சியின் முடிவல்ல\" : ஹிஸ...\nஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் \"உலகை வெல்லும் வழி\"எனு...\nஇன, மத அரசியல் உரிமைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த...\nபொது எதிரணியினரால் அவமானப்படுத்தப்பட்ட தமிழ்த் தேச...\nமைத்திரியை ஆதரிக்கும் றிசாட் பதியுதீன் முடிவு முட்...\nஎதிரணியில் ஏராளமான ‘முனாபிக்குகள்;’; தேர்தலில் முஸ...\nஎதிரணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் மலையகம் புறக்கணி...\nகிழக்கின் விடிவுக்கு வித்திட்ட ஜனாதிபதி மஹிந்த இன ...\nஅமைச்சர் ரிசாத் பதியுதீன் கட்சி மைத்திரிக்கு ஆதரவு...\nஅணை உடைப்பெடுப்பு: மூதூர் மூழ்கும் அபாயம்\nUPFA தேர்தல் கொள்கை பிரகடனம் நாளை வெளியீடு\nதமிழ் கூட்டமைப்பின் தீர்மானம் இறுதி 48 மணித்தியாலத...\nஆதரவளித்த தமிழ், முஸ்லிம் தரப்பிற்கு முதுகில் குத்...\nதேர்தலை தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும்: அ.இ.த.கா\nத.தே.கூ ஆதரவாளர்கள் ஐ.ம.சு.கூ.வில் இணைவு\nஆயித்தியமலையில் தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் அலுவல...\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் சுமார் 250க்...\nசெங்கலடி செல்லம் தியேட்டர் உரிமையாளர் ஐக்கிய தேசிய...\nகுளோபல் தமிழ் குருபரனின் மற்றுமொரு திருகுதாளம் அம...\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மா...\nசெங்கலடி செல்லம் தியேட்டர் மோகனின் அரசியல் நாடகம்\nலயன்களுக்கு பதிலாக தனித் தனியான வீடுகள்\nமைத்திரிக்கு வாக்களிக்குமாறு தமிழருக்கு கட்டளை விட...\nமட்டு. இணைப்பாளர் அருண் தம்பிமுத்து உள்ளிட்ட குழுவ...\nஆரையம்பதியில் தமிழ்மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிய...\nமுனைக்காட்டில் தமிழ்மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி...\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தேர்தல் அ...\nரணில் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை இழந்திருப்பத...\nசர்வஜன வாக்கெடுப்பின் மூலமே அரசியலமைப்பை மாற்றுவேன...\nஐரோப்பிய சட்டத்துறையில் பரிஸ்ரர் (Barrister) பட்டம...\nநினைத்தால் ரணிலையும் எடுப்பேன்: ஜனாதிபதி\nத.தே.கூட்டமைப்பு மைத்திரிக்கு ஆதரவு: இன்று சுன்னாக...\nஎமது படை வீரர்களை சர்வதேச நீதிமன்றில் நிறுத்தவோ, அ...\nENDLF -TBC -GTAJ -NRT முக்கிய புள்ளி ராமராஜ் கைது ...\nதேசிய புனித நூலா பகவத் கீதை\nபுகலிட தமிழ் தேசிய கனவான்களே கிளிநொச்சியில் 3000 ...\nமுஸ்லிம்களின் தீர்மானம் நியாயமானது முஸ்லிம் கட்சிக...\nஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் பதவியில் இருந்து...\nஜனாதிபதித் தேர்தல்: வேட்பு மனுக்கள் இன்று ஏற்பு 17...\nமைத்திரியின் அணியிலுள்ள ஆபத்தான பேரினவாத சக்திகள்\nமஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கும் தமிழ் மக்கள் வ...\nசர்வதேச தரம்மிக்க மைதானம், மட்டக்களப்புக்கு கிடைத்...\nதமிழ் மக்கள் விடுதலை கட்சியின் மகளிர் அணியின் விசே...\nஎழிலன் கடத்திச் சென்ற பிள்ளைகள் எங்கே\nமகிந்தவை அகற்ற ரூ. 25கோடி பெறுமதியான அமெரிக்க டொலர...\nஜனவரி 7, 8ஆம் திகதிகளில் பாடசாலைகளுக்கு விடுமுறை\nநெடியவன் என்றழைக்கப்படும் பேரின்பநாயகம் சிவபரன் என...\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில்தான் மக்கள் ...\nலெனின் மதிவானத்தின் நூல் விமர்சன நிகழ்வு\nதமிழ் தேசிய கூட்டமைப்பு சிஹல உறுமைய-மைத்திரி கூட்...\nமஹிந்த ஆட்சியை வீழ்த்த அமெரிக்க,ஐரோப்பிய தூதரங்கள...\n“தமிழ்த்தேசியத்தின் பெயரில் குஷ்பு மீது கொட்டப்படு...\nகவிஞர் மஜீத் அவர்கள் கிட்டத்தட்ட 18 வருடங்களாக தீர...\nதமிழ் தேசிய கூட்டமைப்பினரின் வன்முறையால் கேலிக்கூத...\nஎதிரணி உடன்படிக்கை சிறுபான்மை மக்களின் பிரச்சனைகளை...\nமட்டக்களப்பில் 365,163 பேர் வாக்களிக்கத்தகுதி\nகிட்டதட்ட நுாற்றுக் கணக்கான தொழில்களில், ஸ்டாலின் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://karyapolitik.blogspot.com/2010/06/", "date_download": "2018-04-26T13:21:15Z", "digest": "sha1:37UL7XEGSXEEUGQTE4WPIEXRU24U4P7Z", "length": 11942, "nlines": 257, "source_domain": "karyapolitik.blogspot.com", "title": "SIKIT-SIKIT.... NAK MAIN POLITIK: 06/01/2010 - 07/01/2010", "raw_content": "\nஅரசின் நிபந்தனையில் பாதிக்கப்படுபவர்கள் யார்\nஇப்போது சிறந்த இந்திய மாணவர்களில் வெறும் 70 மாணவர்களுக்கு உபகார சம்பளம் வழங்கப்பட்டது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது.\nஎன்னதான் சிறந்த முறையில் படித்தாலும், அராசாங்க கல்வி உபகார கல்வி உதவி இந்தியர்களுக்கு ஒரு கேள்வி குறியாகவே இருக்கிறது. இந்த சூழ்நிலை மாணவர்களின் எதிர்காலத்திற்கு முற்றுப்புள்ளிதான் என்ற நிலை வந்துவிடும்.\nஎங்கே செல்கிறது வருங்கால இந்தியர்களின் எதிர்காலம் எல்லாம் நிபந்தனைக்கு உட்பட்டது என்றால் அந்த நிபந்தனைதான் என்ன எல்லாம் நிபந்தனைக்கு உட்பட்டது என்றால் அந்த நிபந்தனைதான் என்ன நிபந்தனை வருடா வருடம் மாற்றம் காண்பதும் எதற்க்காக. இது ஒரு தொடர் கதையாகிவிட்டது.\nஇவ்வருடத்தின் புதிய நிபந்தனை என்ன என்பதனை மத்திய அரசாங்கம் உடனடியாக மக்களுக்கு தெளிவு படுத்தவேடும். கடந்த பத்து வருட மற்றிகுலசென் இட ஒதுக்கீட்டை பற்றி அரசாங்கம் உடனடியா புள்ளிவிவரத்துடன் தெளிவுபடுத்தவேண்டும்.\nஏன் இத்தகைய நிபந்தனையை மத்திய அரசு மேற்கொள்ள நேரிட்டது எல்லா காலகட்டத்திலும் சம உரிமை என்று பேசிய மத்திய அரசாங்கம் திடீர் என்று இந்திய மாணவர்களை ஓதுவது ஏன் எல்லா காலகட்டத்திலும் சம உரிமை என்று பேசிய மத்திய அரசாங்கம் திடீர் என்று இந்திய மாணவர்களை ஓதுவது ஏன் உயர்கல்வியில் இந்திய மாணவர்களின் விழுக்காடு குறைப்பதற்கான சதித்திட்டமா இது உயர்கல்வியில் இந்திய மாணவர்களின் விழுக்காடு குறைப்பதற்கான சதித்திட்டமா இது இதை உயர்கல்வி உலகம் நன்கு அறியும்.\nஎந்த நிபந்தனையும் இல்லாமல் இருந்துவிட்டு, இப்போது வெறும் 70 மாணவர்களுக்கு மட்டும் இடம் என்று அரசு நிபந்தனை விதிப்பது அதிகபட்சமான செயலாக தெரிகிறது.\nஆனால் குறைந்தபட்சம் அனைத்துப் பாடங்களிலும் முதல் நிலையில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எதிர்பார்பிர்க்கும் அரசாங்கம் உரிமை வழங்கப்பட வேண்டும்.\nஇந்திய மாணவர்கள் சிறப்பாகத் தேர்ச்சி பெறும் விகிதம் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் இந்த மாணவர்களின் விகிதம் குறைத்து வருகிறது.\nஅரசின் நிபந்தனையில் பாதிக்கப்படுபவர்கள் யார்\nஎந்த நிபந்தனையும் இல்லாமல் சிறந்த மாணவர்களுக்கு கல்வி உபகார உதவித் தொகை வழங்க வேண்டும் என்று நிபந்தனை மட்டுமே இந்த தொடர்கதையின் முடிவாகுமே ஒழிய வேறு எதுவும் கிடையாது.\nஅரசின் நிபந்தனையில் பாதிக்கப்படுபவர்கள் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} {"url": "http://nagoreflash.blogspot.com/2012/02/blog-post_16.html", "date_download": "2018-04-26T13:07:32Z", "digest": "sha1:5BZIE45V63ENTLP32XNAKQVRMTTR4KRU", "length": 24512, "nlines": 234, "source_domain": "nagoreflash.blogspot.com", "title": "NAGORE FLASH: நாகூர் : மின்வெட்டை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது", "raw_content": "................அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்................. இந்த இணையத்தளம் நாகூர் வாழ் மக்களுக்கான ஓர் அறிவகம்.\n) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)\nநாகூர் : மின்வெட்டை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது\nLabels: நாகூர் சங்கதி, போராட்டக்களம்\n\"மார்க்\"கினால் - காரைக்கால் பெற்றது வரம்...ஆனது தரம்.... ஆனால் .நாகூர் \nநாகூர் - காரைக்கால் மார்க் துறைமுகம் என்று நிலக்கரியை இறக்குமதி செய்ததோ.. அன்றிலுருந்து நாகூர் மக்கள் கருக்க தொடங்கினர். அதன் மூலம் எண்ணற்ற நோய்கள் காற்று மூலம் பரவி மக்களை வாட்டி வைதைத்தாலும் பல தரப்பட்ட போராட்டங்களை சில சங்கங்ககள் மக்களுக்காக செய்தாலும் கருக்க தொடங்கிய மக்களின் நிறத்திலும் தனது சுய நிறத்தை மெருகேற்றிய புன்னியாவான்களின் மறுபக்கம் இந்த கட்டுரை..\nபணமே குறிக்கோள் என்று மார்க் நிறுவனம் போதுமான முன்னேற்பாடு / வசதியின்றி / பாதுகாத்தல் வசதி இல்லாத போதிலும் பணமே வெல்லும் என்றே ஒரே குறிக்கோளுடன் நிலக்கரியை இறக்குமதி செய்தனர். கருமலை போல நிலக்கரி எந்தவித பாதுகாப்பும் அன்றி அப்படியே கொட்டி வைக்கப்பட்டது. கடலோர மாவட்டம் / காற்று அடிக்கும் திசை நாகூர் என்பதாலே அனைத்து கரி துகள்களும் கரி காற்றாகி நமது வீட்டை மட்டுமல்லாமல் நிலத்தையும் சொல்ல போனால் நாம் அணியும் ஆடையும் கூட கரி துகள் படிந்த காரிருள் பொருளாய் மாற்ற தொடங்கியது.. துவக்க காலத்தில் என்னவென்று அறியா மக்கள் நிலக்கரி இறக்குமதி விபரம் அறிய சில மாதங்கள் ஆனது..\nசில பல சங்கங்கள் அங்காங்கே ஒன்று கூடி \"சில்லறை\" போராட்டங்கள் நடத்தி நாளிதழில் தங்கள் பேர் வரும் வரை போராடினர். வெற்றி அவர்களுக்கே.. வந்தது.. நாகை மாவட்ட செய்திகளில் கடைசி கட்டம் இவர்கள் செய்திதான். வருங்கால பிரமதர்காளகிய நாகூர் வட்டங்களுக்கு மகா திருப்தி... நாகூர் மட்டுமல்லாமல் காரைக்கால் மக்களும், இன்னும் சில மக்களும் போராட்டங்கள் நடத்தினர்.\nபோராட்டங்களின் விளைவு.. மார்க் நிறுவனம் போராட்ட குழுவினை தரம் பிரித்து தவிர்க்க ஆரம்பித்தனர். முதலில் காரைக்கால் குழுவினர்.. போராட்டத்தில் நிறைய பேர் இந்து மத பிரிவினர், குறிப்பாக கோயில் பின்னநரி உள்ளவர்கள். இவர்கள் வாயடைக்க காரைக்கால் கோயில் குளப்பணி தொடங்கப்பட்டது..கோயில் குளம் நன்றாகவே சீரமைக்க பட்டது.. சுமார் மூணு கோடி ரூபாய் மதிப்பளவில் குளம் செம்மை படுத்த பட்டுள்ளது.\nஅடுத்து நமது நாகூர்... போராட்ட குழுவை பார்த்தால் அப்பப்பா ஏக்க சக்கம்.. நாலு பேருக்கு ஒரு சங்கம் , ஏழு பேருக்கு ஒரு கட்சி. என்ன பண்ணுவது என்று தெரியாமல் முழிக்கும் சமயத்தில் நுழைந்தார் நமது நாகூர் தர்கா மானேஜிங் டிரஸ்டி ஷேக் ஹசன் சாஹிப். நான் தான் தலைவன். என் சொல் படி நாகூர் நடுங்கும் என பல பில்டப் கொடுத்து மார்க்கின் ஆழம் தெரியாமல் சுறா புடிக்க வேண்டிய கடலில் செனகுன்னி மீன் பிடித்தார். தன மகனுக்கு ( சுல்தான் கபீர் ) மார்க் துறைமுகத்தில் மாதம் 25000௦ சம்பளத்தில் வேலையும் நாகூர் தர்கா கந்தூரிக்கு தர்கா மினராக்கு மார்க் துறைமுகம் செலவில் வெள்ளையும் அடித்தும் மற்றும் தனக்கு தனியாக கவர் தரவேண்டும், அப்படி தந்தால் நாங்கள் உங்களுக்கு சப்போட் செய்வோம் என்றும் பேசப்பட்டது.. மார்க் நிறுவனமோ என்ன கேட்கபோரார்களோ என்று அச்சத்தில் இருந்த போது இவர்கள் சுய நலத்தில் கேட்டது மிக சொற்பமாக தெரிந்து உடனே ஒப்பு கொண்டது மார்க் நிறுவனம்.\nஇஸ்லாம் கூறும் இன்பமான கணவன் மனைவியா நீங்கள் \nதிருமணம் செய்து கணவன் மனைவியாக கைக் கோர்ப்பவர்கள் கடைசிவரை சந்தோசமாக வாழ வேண்டும் என்றே ஆசைப்படுவார்கள். மணமக்களை வாழ்த்துபவர்கள் கூட இதைத்...\nகளமிறங்கிய போராட்ட குழுவிற்கு ஆதரவுகொடுப்போம்.\nVote List-ல் உங்கள் பெயர் இருக்கா...\nVote List-ல் நமது பெயர் மற்றும் முகவரியை சரிபார்க்க இந்த Website உதவுகிறது. Vote List-ல் பெயர் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. நீங்கள் தேர்...\nபிரபல இஸ்லாமிய அறிஞர் ஜாகிர் நாயக்கிற்கு பிரிட்டன் தடை வலுக்கும் எதிர்ப்பு\nபிரபல இஸ்லாமிய அறி ஞரும் சர்வதேச சொற்பொழி வாளருமான ஜாகிர் நாயக் பிரிட்டனுக்கு வர அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது பெரும் பரபர...\nபெண்களை துரத்தும் ரகசிய கேமராக்கள் – ஓர் அபாய எச்சரிக்கை \n( மிக நுணுக்கமான செய்தி என்பதால் நீண்ட பதிவாக எழுதி இருகிறோம் குறிப்பாக பெண்கள் அளிப்பு பார்க்காமல் முழுமையாக படித்து பயன்பெறவேண்டும்,மற்றவ...\nவிந்தின் பிறப்பிடம் - திருக்குரானின் விளக்கம்\nகுர்ஆன் - அறிவுக்கும் அறிவியலுக்கும் ஏற்ற எக்காலத்திற்கும் பொருந்தும் ஓர் வாழ்வியல் நெறிநூல் இது அறிவியல் நூலல்ல; ஆனாலும் அறிவியலையும் உள்ள...\nநவீன காலத்து அடிமைகளை விடுவிப்போம்....\nவளைகுடா நாடுகளில் வேலை செய்யும் முஸ்லிம்களில், கணிசமானவர்கள் வீடுகளில் வாகன ஓட்டுனர் வேலை செய்பவர்களாக உள்ளனர். இவர்களில் பெரும்பான்மையினர் ...\nஹதீஸ் - அடிப்படை விளக்கம்\n ஹதஸ் என்ற வேர்ச்சொல்லிலிருந்து பெறப்பட்ட சொல்தான் ஹதீஸ் என்பது. ஹதீஸ் என்றால் உரை உரையாடல் புதியசெய்தி எனப்ப...\n\"இஸ்லாத்தின் பார்வையில் இசை ஒரு முழுமையான ஆய்வு\"\n இசை என்பதன் விளக்கம் என்ன … இசை என்ற சொல்லுக்கு இசைய வைப்பது எனறு பொருள். இசை (Music) என்பது ஒழுங்கு செய...\nஇரு தரப்பு பேச்சுவார்த்தை எதிர்பார்த்தப்படி சுமூகமாக முடிந்தது.\nஒரு பிரச்சனை எப்படி முறைப்படி கையாளபட வேண்டுமோ அப்படி கையாளபட்டிருகிறது.. அல்ஹம்துலில்லாஹ். கடந்த விநாயகர் சதுர்த்தி அன்று நாகூர் மியா...\n9/11 INSIDE JOB (3) BOOKS (11) HAJ (10) MEDIA (7) POLL (1) ZAKIR NAIK (7) அக்கம் பக்கம் (28) அமைதி (3) அரசியல் (5) அரசு உத்தரவுகள் (14) அரவாணிகள் (1) அவ்லியா (2) அறிவியல் (19) அனுபவம் (26) அஹமது தீதாத் (2) இசை (2) இந்திய முஸ்லிம்கள் வரலாறு (3) இல்லறம் (2) இறுதி தீர்ப்புநாள் (2) உதவி தேவை (13) எச்சரிக்கை (18) ஒற்றுமை (9) கல்வி (24) கனவு இல்லம் (1) கிலாபத் (2) கேள்வி பதில் (18) சத்தியமார்க்கம் (26) சஹாபாக்கள் (4) சுய பரிசோதனை (3) செல்போன் (12) தப்லீக் (1) தரீக்கா (2) தர்கா (11) தன்னம்பிக்கை (2) திருமணம் (6) தீவிரவாதம் (12) தெரிந்த ரகசியங்கள் (32) தெரிந்து கொள்ளுங்கள் (111) தேசபக்தி (9) தேர்தல் 2011 (22) நபி(ஸல்) (3) நாகூர போல வருமா (6) நாகூர் (1) நாகூர் சங்கதி (119) நாகூர் வரலாறு (2) நாத்திகன் (3) நோன்பு (1) பழனிபாபா (1) பாபரி மஸ்ஜித் (7) பாவமன்னிப்பு (3) பிறை (4) புகை (3) பைபிள் (3) போராட்டக்களம் (10) போராட்டம் (1) மருத்துவம் (10) மவ்லித் (4) மீலாது (1) முஸ்லீம்கள் (5) மோசடி (10) ரமளான் (5) வாக்காளர் பட்டியல் (1) விமர்சனங்கள் (5) விவாதங்கள் (4) ஷியா (2) ஷிர்க் (14) ஸூபித்துவம் (2) ஹதீஸ் (3) ஹிந்து தீவிரவாதிகள் (22) ஹிஜாப் (16)\nமார்க் துறைமுகத்தை கண்டித்து நாகூரில் கடையடைப்பு\n - ஆசிரியையைக் கொன்ற மாண...\nநாகூர் : மின்வெட்டை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் ந...\nஅஹமது தம்பி மரைக்காயர் -ஸர் பட்டம் பெற்ற முதல் தமி...\nநாகூர் மக்கள் நலசங்கத்தின் வரவு - செலவு விபரம்\nமருந்து , மாத்திரையிலிருந்து விடுதலை\nகுரான் & ஹதீஸ் நூல்கள் பதிவிறக்கம்\nநபி( ஸல்) முழு வரலாறு\nகிருத்துவ மத போதகருடனான கலந்துரையாடல்\nஇரத்ததானம் செய்ய பதிவு செய்யுங்கள்\nசெய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற மின்னஞ்சல் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்\nதமிழில் டைப் செய்ய (தங்கலிஷ்)\nஅல்லாஹ்வின் சாந்தியும் , சமாதானமும் உங்கள் அனைவரின் மீதும் உண்டாவதாக இந்த தளம் நாகூர் வாழ் மக்களுக்கான ஓர் அறிவகம். நல்ல விஷயங்கள் பகிர்ந்து கொள்ளவும், தவறான விஷயங்களை சுட்டிக்காட்டவும் இந்த தளத்தை அமைத்திருகிறோம்.. நம்ம ஊரை பற்றி மற்றவர்களை விட நாமே அதிகம் விமர்சிக்கிறோம் இதே ஊரில் இருந்துகொண்டு, உண்மையில் நம்மை நாமே விமர்சித்து கொள்கிறோம் என்பதே உண்மை.. ஆகையால் உணர்வுகளை உள்ளது உள்ளபடி பகிர்ந்து கொள்ள ஒரு தளம். மேலும் உலக நாட்டுநடப்புகளும் இங்கே உரியமுறையில் அலசப்படுகிறது. நீங்களும் இந்த தளத்தின் அங்கமே , உங்களின் கருத்துகள் ,விமர்சனங்கள் , கட்டுரைகள் எதுவாக இருந்தாலும் nagoreflash@ymail.com முகவரிக்கு அனுப்பித்தாருங்கள். உங்கள் அன்புடன் அப்துல்லாஹ்.\nஅண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: \"தொழுகையாளிகள் அரபுத் தீபகற்பத்தில் தன்னை இபாதத் செய்வார்கள் -வணங்குவார்கள் - எனும் விஷயத்தில் ஷைத்தான் நிராசை அடைந்து விட்டான். எனினும், முஸ்லிம்களிடையே பகைமைத் தீயை மூட்டுவதில் அவன் நம்பிக்கை இழக்கவில்லை\". அறிவிப்பாளர்: ஜாபிர்(ரலி), நூல்: முஸ்லிம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamalar.com/aanmeegamnewsmain.asp?ncat=OTH&ncat1=64", "date_download": "2018-04-26T13:21:22Z", "digest": "sha1:KOPH7JEFIC6CPOICOAVX36N2LYF3M3S7", "length": 9753, "nlines": 219, "source_domain": "www.dinamalar.com", "title": "Religion | Religion Spirituality | Religion Stories | Religion culture | Religion Philosophers and Spiritual Philosophy", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் பிற மதங்கள் ஆன்மிக செய்திகள்\nஜைனம் எனப்படும் சமண மதத்தின் கடைசி தீர்த்தங்கரர் மகாவீரர். இவர் ஐப்பசி மாத அமாவாசையன்று மோட்சம் பெற்றார். இந்த நினைவுநாளை ஜைனர்கள் தீபாவளியாகக் கொண்டாடுகின்றனர். இந்த நாளை 'பரிநிர்வாண மோட்ச தினம்' என்று அவர்கள் ...\nமாமன்னர் அசோகர் புத்த மதத்துக்கு மாறிய நாள், புத்த மதத்தினரால் தீபாவளியாக கொண்டாடப்படுகிறது. ...\nகங்கா ஸ்நானத்தால் பாவம் தொலைந்து விடுமா\nதீபாவளியை ஒட்டி புனித நதியான கங்கையில் ஸ்நானம் செய்தால் பாவம் தீர்ந்து விடும் என்கிறோம். ஆனால், புனிதநதிகளின் ஸ்நானம் மட்டுமல்ல மற்றொன்றையும் கடைபிடித்தால் தான் பாவம் தீரும் என்கிறார் புத்தர் பெருமான். அவரது பொன்மொழிகளைக் கேட்போமா மற்றொன்றையும் கடைபிடித்தால் தான் பாவம் தீரும் என்கிறார் புத்தர் பெருமான். அவரது பொன்மொழிகளைக் கேட்போமா* அறவழியில் செல்கின்ற மனமே உண்மையான மனமாகும். ஆனால், மனித ...\n» தினமலர் முதல் பக்கம்\nகர்நாடகாவை காங்., இழக்கும்: பிரதமர் மோடி ஏப்ரல் 26,2018\n5,000 குஜராத் விவசாயிகள் தற்கொலைக்கு மனு ஏப்ரல் 26,2018\nஇன்று மாலை மோடி சீனா பயணம் ஏப்ரல் 26,2018\nகுட்கா ஊழல்: சிபிஐ விசாரணைக்கு ஐகோர்ட் உத்தரவு ஏப்ரல் 26,2018\nசசிகலா உறவுகளின் தில்லாலங்கடி வேலைகள் அம்பலம் ஏப்ரல் 26,2018\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.eegarai.net/t43353-topic", "date_download": "2018-04-26T13:24:27Z", "digest": "sha1:A2354A4NKB3SPBZIREMIZKAU7LISNLDR", "length": 12998, "nlines": 210, "source_domain": "www.eegarai.net", "title": "மாதவன் ஜோடி ஓவியா?", "raw_content": "\nருசியான ஊறுகாய்கள் - அரு /அரை நெல்லிக்காய் தொக்கு \nஅரை நெல்லிக்காய் - அரை நெல்லிக்காய் தொக்கு \nஎச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி\nஉடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்\nஎனக்குள் ஒரு கவிஞன் SK\nஉலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி\nபராமரிப்பு பணி முடிந்தது பழநி கோயில் வின்ச் சேவை துவக்கம்: பக்தர்கள் மகிழ்ச்சி\nபாலகுமாரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக\nஅறிமுகம்---- வாலி மோகன் தாஸ்\n2 மணி நேரம் பொறுக்க முடியாதா கஸ்தூரி..\nஎதுக்காக உன் காதலியை கிணத்துல தள்ளிவிட்டே...\nஅமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி\nநிலக்கரியை விட கருப்பாக இருக்கும் கிரகம் கண்டுபிடிப்பு\nகவர்ச்சி நடிகைகிட்ட பிடிச்சது, அவரோட நடிப்பு...\nஏப்ரல் 30-ம் தேதி வைகை ஆற்றில் இறங்குகிறார் கள்ளழகர்\nகோயில்களுக்கு செல்ல குழந்தைகளை கண்டிப்பாக பழக்குங்கள்.....\nஇந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'\nஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்\nஉப்புமா சாப்பிடுவது மோன நிலை...\nநீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு\n‘சிற்றெறும்பு கட்டெறும்பு’ - கமல்ஹாசன், அமைச்சர் ஜெயக்குமார் வார்த்தை ஜாலத்தால் ஒருவருக்கொருவர் கிண்டல்\nஉ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்\nகண்மணி வார நாவல் 25.04.2018\nதிகில் மன்னன் ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக\nதாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து\nபலாத்காரத்துக்கு ஆளாகும் ஆண் குழந்தைகளுக்கும் இழப்பீடு'\nஇந்தியர்களை பாதிக்கும் ‘எச்-4’ விசா ரத்து நடவடிக்கைக்கு அமெரிக்க எம்.பி.க்கள் எதிர்ப்பு, ஐ.டி. துறையும் கண்டனம்\n'பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்\n5,000 குஜராத் விவசாயிகள் தற்கொலைக்கு மனு\nவாழ்க்கையை ஓஹோன்னு வாழ கன்ஃபூசியஸ் சொன்ன 10 கட்டளைகள்...\nஇரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு\nரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது: மக்கள் மன்ற மாநில செயலாளர் பேச்சு\n2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்: ஜூன் 16-ம் தேதி இந்தியா-பாக். மோதல்\nசுப்ரீம் கோர்ட் எதிர்காலம்: ஆலோசிக்க நீதிபதிகள் கோரிக்கை\nநாடு முழுவதும் 24 போலி பல்கலை.,கள்\nகாங்., கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக்கறை: சல்மான் குர்ஷித் சர்ச்சை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nமன்மதன் அம்பு படத்தில் கமலுடன் த்‌ரிஷா மட்டுமின்றி மாதவன், சங்கீதாவும் நடிக்கின்றனர். இவர்களைத் தவிர ஒரு புதுமுக ஜோடியும், இரு குழந்தை நட்சத்திரங்களும் நடிக்கிறார்களாம்.\nகொடைக்கானலில் நடந்த படப்பிடிப்பின் போது கமலின் அழைப்பின் பே‌ரில் அங்கு வந்த சூர்யா ஒரேயொரு காட்சியில் நடித்துவிட்டு சென்றிருக்கிறார். இப்போது வந்திருக்கும் தகவல், இந்த நட்சத்திரப் பட்டாளம் இத்துடன் முடியப் போவதில்லை என்று சொல்கிறது.\nகளவாணியில் நடித்த ஓவியாவும் மன்மதன் அம்‌பில் தலைகாட்டுகிறாராம். இவர்தான் படத்தில் மாதவனின் ஜோடி என்றும் கிசுகிசுக்கிறார்கள்.\nஇது ஒருபுறமிருக்க, மன்மதன் அம்பின் படப்பிடிப்பை முடித்து இரண்டு நாட்கள் முன்பு பூசணிக்காய் உடைத்திருக்கிறார்கள். இதன் பிறகு நடந்த பார்ட்டியில் அனைத்து நட்சத்திரங்களும் கலந்து கொண்டிருக்கிறார்கள். பார்ட்டி நடந்த இடம், இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமா‌ரின் இல்லம்\nRe: மாதவன் ஜோடி ஓவியா\nRe: மாதவன் ஜோடி ஓவியா\nமாதவனும் ஏதேதோ செய்து களத்தில் வெற்றி பெற முயல்கிறார். வாழ்த்துவோம்.\nRe: மாதவன் ஜோடி ஓவியா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.eegarai.net/t51251-topic", "date_download": "2018-04-26T13:24:05Z", "digest": "sha1:GF3OLRY6JZTNNLZKHCUZGTOWZZ6RAFFZ", "length": 17214, "nlines": 258, "source_domain": "www.eegarai.net", "title": "காவலன்", "raw_content": "\nருசியான ஊறுகாய்கள் - அரு /அரை நெல்லிக்காய் தொக்கு \nஅரை நெல்லிக்காய் - அரை நெல்லிக்காய் தொக்கு \nஎச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி\nஉடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்\nஎனக்குள் ஒரு கவிஞன் SK\nஉலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி\nபராமரிப்பு பணி முடிந்தது பழநி கோயில் வின்ச் சேவை துவக்கம்: பக்தர்கள் மகிழ்ச்சி\nபாலகுமாரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக\nஅறிமுகம்---- வாலி மோகன் தாஸ்\n2 மணி நேரம் பொறுக்க முடியாதா கஸ்தூரி..\nஎதுக்காக உன் காதலியை கிணத்துல தள்ளிவிட்டே...\nஅமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி\nநிலக்கரியை விட கருப்பாக இருக்கும் கிரகம் கண்டுபிடிப்பு\nகவர்ச்சி நடிகைகிட்ட பிடிச்சது, அவரோட நடிப்பு...\nஏப்ரல் 30-ம் தேதி வைகை ஆற்றில் இறங்குகிறார் கள்ளழகர்\nகோயில்களுக்கு செல்ல குழந்தைகளை கண்டிப்பாக பழக்குங்கள்.....\nஇந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'\nஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்\nஉப்புமா சாப்பிடுவது மோன நிலை...\nநீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு\n‘சிற்றெறும்பு கட்டெறும்பு’ - கமல்ஹாசன், அமைச்சர் ஜெயக்குமார் வார்த்தை ஜாலத்தால் ஒருவருக்கொருவர் கிண்டல்\nஉ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்\nகண்மணி வார நாவல் 25.04.2018\nதிகில் மன்னன் ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக\nதாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து\nபலாத்காரத்துக்கு ஆளாகும் ஆண் குழந்தைகளுக்கும் இழப்பீடு'\nஇந்தியர்களை பாதிக்கும் ‘எச்-4’ விசா ரத்து நடவடிக்கைக்கு அமெரிக்க எம்.பி.க்கள் எதிர்ப்பு, ஐ.டி. துறையும் கண்டனம்\n'பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்\n5,000 குஜராத் விவசாயிகள் தற்கொலைக்கு மனு\nவாழ்க்கையை ஓஹோன்னு வாழ கன்ஃபூசியஸ் சொன்ன 10 கட்டளைகள்...\nஇரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு\nரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது: மக்கள் மன்ற மாநில செயலாளர் பேச்சு\n2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்: ஜூன் 16-ம் தேதி இந்தியா-பாக். மோதல்\nசுப்ரீம் கோர்ட் எதிர்காலம்: ஆலோசிக்க நீதிபதிகள் கோரிக்கை\nநாடு முழுவதும் 24 போலி பல்கலை.,கள்\nகாங்., கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக்கறை: சல்மான் குர்ஷித் சர்ச்சை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\n[right]நான் ஏற்கனவே பாடிகார்ட் கதை பற்றி சொல்லிவிட்டேன்\nசரி நம்ம இல்லயா தளபதியோட காவலனை பற்றி பார்போம் இன்னும் குருவி சுறா அதிர்ச்சிலெர்ந்து மீளமாதான் இந்த படதைஉம் பார்க்க போனேன்\nசரி குர்விள டிரைன் பிடிதார் சுறாளா மீன் பிடிதார் சரி நம்ம அடித்த றிவீட்ல கம்முனு கிடப்பரு பார்த்த திரும்ப பாலையா டிரண்டுக்கு போய்ட்டர்\nஅதாவது அவரோட பாலய படங்கள்ல லூசு மாதிரி ஏதாவது செய்வார் அதை இந்த பொன்னுக ரொம்ப ரசிக்கிறதா சொல்லுவாங்களே அதே நடிப்புதான்\nஇந்த கதை ஏற்கனவே ஒருத்தர் போட்ட சட்டைனாலும் நம்ம விஜய்க்கு கச்சிதமா துணி எடுத்து தைத்தப்ப்ல இருக்கு\nநல்ல பண்ணிருக்கிறார்னு சொல்லம்னு நினைத்தால்\nஅட இதாதன் ஏற்கனவே நம்ம ஹெரோக்கள் நிரயபெயர் செதுடங்களே அப்புறம் இவர எதுக்கு பாராட்டனும்\nஅடம் நம்ம தலனு ஒருதர சொல்லுவாங்க அவ்ரு நடித்த எகன் ல பாதி இது மாதிரி தனய அட இந்த சீன் அந்த படாதுல வந்தது\nஇது இந்த படம்னு படம் முடியிர வார நமல ஒரு டிடெக்டிவ் ஆக்கிட்டார் விஜய்\nஇந்த சித்திக் நம்ம படங்களா பார்த்து ஒரு படத்த மலயதுல ஒரு படாத எடுத்த அத நம்மள வாசி திரும்ப எடுக்கிறார்ங்க\nசேகண்டு ஹெரோயின ஒருபுள்ள நடிச்சிருக்கு அதோட கேரக்டரயே கிளைமாக்ஷ்னு சொல்லி கேவலபடுதிட்டங்க\nஇதுல நம்ம அசின் வித்தியாசமா ஏதாவது பண்ணுவாங்கணு பார்த்த அட என்னநடிப்பு எல்லா படாதுலௌம் ஒரே மாதிரி\nஅதான் இந்திலா உடனே விரடிட்டாங்க\nஏதோ நம்ம வடிவேலு ஒருடில இடங்கல்லா மோக்கய இருந்தௌம் சில காமெடி சிரிக்க வைகிதூ\nஇந்த விமரிசனத்தை சரியாக வாசித்துப் புரிந்து கொள்வோருக்கு ஈகரை தலைசிறந்த வாசிப்பாளர் என்னும் விருதினை நண்பர் சிவா அவர்கள் வழங்கிடுவார்..\nகலை wrote: இந்த விமரிசனத்தை சரியாக வாசித்துப் புரிந்து கொள்வோருக்கு ஈகரை தலைசிறந்த வாசிப்பாளர் என்னும் விருதினை நண்பர் சிவா அவர்கள் வழங்கிடுவார்..\nமனதில் என்னென்னமோ தோணுது, ஆனால் சொல்ல முடியவில்லையே\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nகலை wrote: இந்த விமரிசனத்தை சரியாக வாசித்துப் புரிந்து கொள்வோருக்கு ஈகரை தலைசிறந்த வாசிப்பாளர் என்னும் விருதினை நண்பர் சிவா அவர்கள் வழங்கிடுவார்..\nமுடியல கலை அண்ணா .. என்னால படிக்க முடியல ....\nகலை wrote: இந்த விமரிசனத்தை சரியாக வாசித்துப் புரிந்து கொள்வோருக்கு ஈகரை தலைசிறந்த வாசிப்பாளர் என்னும் விருதினை நண்பர் சிவா அவர்கள் வழங்கிடுவார்..\nமனதில் என்னென்னமோ தோணுது, ஆனால் சொல்ல முடியவில்லையே\nஅருமை நண்பா புதிய புரிய மொழி ...இப்படிதான் பல பேர் தமிழ் மொழியை தமில் மற்றும் டமில் மொழி ஆக்கி விட்டார்கள் .......\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.poomagal.com/2014/", "date_download": "2018-04-26T13:32:25Z", "digest": "sha1:7OCDPC3SAJ7AB4VTMQN5EAQ4FAYLLROI", "length": 30515, "nlines": 278, "source_domain": "www.poomagal.com", "title": "பூமகளின் பூக்களம்: 2014", "raw_content": "\nஇந்த கேள்வியோடு படம் ஆரம்பிக்கிறது.. முப்பதுகளில் உள்ள பெரும்பான்மையான பெண்களின் முகமாக மஞ்சு வாரியார். திருமண வாழ்க்கையின் பதினான்கு ஆண்டுகள் சிறைபட்டு அலுவலகம், வீடு என உழன்று கொண்டிருக்கும் பெண்ணுக்குள் எத்தனை கனவுகள் இருக்கக்கூடும் என கதாநாயகி தன்னை தன் மகளிடம் பறைசாற்றுகையிலெல்லாம் நிதர்சனம் தரும் வலி நம்மையும் ஆட்கொள்கிறது. மெல்ல விரியும் கதைக்களத்தின் ஒவ்வொரு அடுக்கிலும் நம்மையோ, நம் வீட்டுப் பெண்களையோ கண்டிப்பாக நினைவுபடுத்தும்.. பேருந்துப் பயணத்து நட்பாய் விரியும் ஒரு பாட்டியுடனான கதாநாயகியின் சந்திப்பு யார் மனதையும் கலங்கடிக்கும்.. \" என்னைத் தேடி என்னை மட்டும் பார்க்கவா வந்தாய் ஏதேனும் வேலைக்காகவோ, ஆதாயம் தேடியோ மட்டுமே என்னைப் பார்க்க வருவார்கள்.. என்னைப் பார்க்க வீடு தேடி வரும் முதல் ஆள் நீதான்..\" என் அந்த பாட்டி நெகிழ்கையில் நம் மனதையும் அசைத்துவிடுகிறது. மகளின் அந்த பதின்பருவ செயல்பாடுகளும், அம்மாவை அவ்வப்போது சுட்டிக் காட்டுவதையும் சமாளிக்கையில் மஞ்சு வாரியார் நிமிர வைக்கிறார். தம்மை எள்ளி நகையாடும் அலுவலர்களையும் சமூகத்தையும் தைரியமாக எதிர்கொள்ளும் இடத்தில் புது உத்வேகத்தை நம் உடலிலும் பாய்ச்சுகிறார். பல வருடங்கள் கழித்து மேடையில் ஏறிப் பேச எத்தனிக்கையில் நடக்கும் காட்சிகளின் மூலம் இயற்கை வேளாண்மை மற்றும் அதன் தேவையை அழகாய் கோர்த்து துவங்கும் இடம் உங்களை கட்டாயம் நிமிர்ந்தமரச் செய்யும்..\nவேலைக்கும் சென்று வீட்டையும் கவனிக்கும் பெண்ணாக வரும் கதா நாயகியையே கணவர் நடத்தும் விதமும் பார்க்கும் கோணமும் நம்மை யாரோ சம்மட்டியால் அடித்தது போல் வலிக்கறதென்றால், வீட்டில் இல்லத்தரசியாய் இருக்கும் பல பெண்களை சமூகமும், குடும்பமும் எப்படிப் பார்க்கிறது, எப்படிப் பார்க்க வேண்டும் என்று யோசிக்கவும் வைக்கிறது..\nநாங்கெல்லாம் பெண்களை மதிப்பர்கள் என்று மார்தட்டும் பல ஆண்களும் தங்கள் வீட்டு மனைவியை, அவளுக்குள் இருக்கும் திறமையை கண்டெடுத்து அவர்கள் அதை நோக்கிப் பயணிக்க உதவுவார்களா அல்லது வழிவிட்டேனும் நின்று வேடிக்கையாவது பார்ப்பார்களா இதற்கு ஆம் என்றாலும் இல்லையென்றாலும் எல்லா ஆண்களும் பார்க்க வேண்டிய படம். முக்கியமாக எல்லா பெண்களும் போற்ற வேண்டிய படம்.\n -- யார் பெண்களின் கனவுகளுக்கு Expiry date-ஐ நிர்ணயிப்பது என்று கேட்டு நம்மை சிந்திக்க வைப்பதில் வெற்றி பெறுகிறது படம்.\nஎத்தனை யுகம் கடந்தாலும் மனித மனங்களில் நிறம் குறித்த புரிதல்கள் மாறுவதே இல்லை.. சற்று நிறமான புறத்தோற்றத்தையுடையோருக்கான மதிப்பும் அங்கீகாரமும் கொஞ்சம் நிறம் குறைந்த, மாநிறத்தில் இருப்பவர்களுக்குக் கிட்டுவது அவ்வளவு எளிதல்ல.\n\"கருவாயா\", \"கருவாச்சி\" என்ற பட்டப் பெயர்கள் கொண்டு சிறு பிராயம் முதல் வளரும் குழந்தைகளின் மன நிலை எத்தகையதாக இருக்கும்\nநம்முடைய உடலும் உடல் கொண்ட உறுப்புகளும் செல்களும் நிறம், வடிவம், உயரம் என எல்லாமும் நம் பெற்றோர் முதல் முன்னோர் வரையானவர்களின் வடிவமைப்புதான். இதில் அழகாய் பிறந்ததற்கும், அழகாய் இருப்பதற்கும் ஒன்றுமே செய்யாத நாம் பெருமை கொள்ள என்ன இருக்கிறது அறிவியல் ரீதியாய் பார்த்தாலும் மாநிறமான, கருத்த நிறமுள்ளவர்களை விட சிவந்த நிறமானவர்களுக்குத் தான் சூரிய ஒளியாலும் இன்ன பலவாலும் தோல் சம்பந்தமான பல நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்..\nபெண் பார்ப்பதில் நமது முதல் எதிர்பார்ப்பு நல்ல நிறமான மணப்பெண் வேண்டும் என்பதே. புற அழகை மட்டுமே முன்னிருத்தி தேடப்படும் இன்றைய சூழல் பெரும் முதலாளிகளுக்குக் கொண்டாட்டமாகிறது. பல வண்ணங்களில் விதவிதமான கெமிக்கல் பூச்சுகள் விற்பனைச் சந்தையாக நம் நாடு மாறிவருவதற்கு முதல் துவக்கம் இந்த அழகு சார்ந்த நமது புரிதலே. நிறம் ஒரு தகுதியல்ல. படித்தவர், படிக்காதவர் என்ற பேதமின்றி இன்று ஒருவர் தன் உழைப்பாலும் முயற்சியாலும் தன் வாழ்வில் எத்தனை முன்னேறினாலும் அவருடைய நிறம் கருப்பாகவோ, மாநிறமாகவோ இருந்துவிட்டால் அதை ஒன்றையே காரணம் காட்டி எள்ளி நகையாடுவதும் நடக்கவே செய்கிறது..\nஅழகு அகம் சார்ந்த விசயம் என்பது அந்த காலத்து மனிதர்கள் வாழ்ந்து காட்டி புரியவைத்தார்கள்.. நல்ல நிறமான, உயரமான அழகான தாத்தாவுக்கு சற்று கருத்த, உயரம் குறைந்த ஒரு பெண்ணை மணமுடித்து அவர்களுக்கு ஐந்து குழந்தைகளுடன் மகிழ்வாக வாழ்ந்தார்கள்.. அங்கே அகம் சார்ந்த அழகே வாழ்வை செழிப்பாக்கியது.,\nஅழகு குறித்த நமது தெளிவு மாறினாலொழிய நம் ஊரில் ஒவ்வொரு மனங்களிலும் ஊறிப்போயிருக்கும் நிறவெறி மறையாது..\nஇனி ஒருவரை எங்ஙனம் பார்ப்பீர்கள் புற அழகையா\nகொஞ்சம் நடுக்கத்தோடு தான் அதை எடுத்தேன்.. மனதில் ஆயிரமாயிரம் கேள்விகள் துளையிட்டுக் கொண்டிருந்தன. எங்கோ எப்போதோ படித்த கருத்துகள் எல்லாம் நினைவில் வந்து மீண்டும் குழப்பியது. சாலையில் சென்று கொண்டிருக்கையில் கீழே ஒரு விலைமதிப்பான பொருளைப் பார்க்கிறீர்கள்.. என்ன செய்வீர்கள் யாரும் கவனிக்காத போது எடுப்பீர்களா யாரும் கவனிக்காத போது எடுப்பீர்களா அல்லது அருகில் வருவோரைக் கேட்பீர்களா அல்லது அருகில் வருவோரைக் கேட்பீர்களா எடுக்காமல் சென்றுவிடுவீர்களா இந்த கேள்விக்கான பதில் சற்று குழப்பமானது..\nஎடுத்துவிட்டால் உரியவரை எங்ஙனம் கண்டுகொள்வது எடுப்பதை ஒருவேளை மற்றவர் பார்த்தால் என்ன நினைப்பார்கள் எடுப்பதை ஒருவேளை மற்றவர் பார்த்தால் என்ன நினைப்பார்கள் சரி.. எடுக்காமல் தாண்டிப் போனால் என்னவாகும் சரி.. எடுக்காமல் தாண்டிப் போனால் என்னவாகும் யாருடையதோ, நமக்கென்ன.. என்ற சுயநலப் போக்காக ஆகிவிடாதா யாருடையதோ, நமக்கென்ன.. என்ற சுயநலப் போக்காக ஆகிவிடாதா இப்படி பல்வேறுவிதமாக மூளை ஆட்டுவித்து முடிவெடுக்க முடியாமல் தயங்க, மனதின் அடி ஆழத்தில், ஒருவேளை வேறொருவர் எடுத்து உரியவரிடம் தராமல் விட்டுவிட்டால் இப்படி பல்வேறுவிதமாக மூளை ஆட்டுவித்து முடிவெடுக்க முடியாமல் தயங்க, மனதின் அடி ஆழத்தில், ஒருவேளை வேறொருவர் எடுத்து உரியவரிடம் தராமல் விட்டுவிட்டால் எடுத்துவிடுவதே உத்தமம் என்று ஒருவாறு முடிவெடுத்தேன்..\nமகளிருக்கான ஓய்வு அறை ஒன்றில் எனக்கு முன் எதோ நிகழ்ச்சிக்காக உடை மாற்றிக் கொண்டிருந்த வளரிளம் பருவத்து சிறுமிகளில் ஒருவர் தனது ஐபோன் கைபேசியை விட்டுவிட்டு சென்றுவிட்டார். சரியான நேரத்தில் நான் கண்டதும் தான் இப்படியான மனப் போராட்டத்தில் மாட்டிக் கொண்டேன். எடுக்காமல் விட மனமின்றி, எடுக்கவும் தயக்கமாக ஒருவாறு நடுக்கத்தோடே எடுத்தேன். வெளியே கலவர முகத்தோடு யாரேனும் நிற்கிறார்களா என பார்த்தேன்.. ஒருவரையும் காணோம். எடுத்ததை அங்கிருந்த அலுவலகத்துக்குச் சென்று முறையாக ஒப்படைத்த பின்பே மனம் ஆசுவாசமானது. மீண்டும் அங்கு செல்ல ஒரு சீனப் பெண் என்னை அந்த குறிப்பிட்ட அறையை உபயோகித்தீர்களா என்று வினவ, நானோ, உங்கள் கைபேசியை காணவில்லையா என்றேன். ஒரு சிறுமி இப்போது தான் வந்து கேட்டுவிட்டுச் சென்றதாக கூறினார். நான் அலுவலகத்தில் ஒப்படைத்த விவரம் கூறி, அவர்களிடம் அந்த தகவலை உரியவரிடம் சொல்லிவிடும்படி கூறினேன். கூட்டம் நிரம்பி வழியும் அந்த இடத்தில் நான் செய்தது சரியென்றாலும் இப்போது இந்த நொடி, உரியவரிடம் அந்த பொருள் போய் சேர்ந்திருக்குமா என்ற பதபதைப்பு நெஞ்சில் மிச்சமிருக்கிறது. உரியவரிடம் அது சேர்ந்திட வேண்டுமென்பதே என் பிரார்த்தனையும்.. என்றேன். ஒரு சிறுமி இப்போது தான் வந்து கேட்டுவிட்டுச் சென்றதாக கூறினார். நான் அலுவலகத்தில் ஒப்படைத்த விவரம் கூறி, அவர்களிடம் அந்த தகவலை உரியவரிடம் சொல்லிவிடும்படி கூறினேன். கூட்டம் நிரம்பி வழியும் அந்த இடத்தில் நான் செய்தது சரியென்றாலும் இப்போது இந்த நொடி, உரியவரிடம் அந்த பொருள் போய் சேர்ந்திருக்குமா என்ற பதபதைப்பு நெஞ்சில் மிச்சமிருக்கிறது. உரியவரிடம் அது சேர்ந்திட வேண்டுமென்பதே என் பிரார்த்தனையும்.. ( அந்த சிறுமி என் மீது ஏதும் கோபம் கொண்டு சாபமிடாமல் இருக்கக் கடவுக ஐபோன் ஆண்டவா.. ( அந்த சிறுமி என் மீது ஏதும் கோபம் கொண்டு சாபமிடாமல் இருக்கக் கடவுக ஐபோன் ஆண்டவா..\nசூரியனில் காட்ட எத்தனிப்பதைப் போல்..\nஉனைக் கழுவி எனை மீட்டுக்கொண்டிருந்தேன்..\nவழியும் செந்நிற வெற்றிலைச் சாற்றை\nவிண் மீன்கள், வண்ண மீன்களாக எண்ணத்திரையில்..\nபூக்கள் ம(ண)னம் ப(பி)டிக்க வந்தவருக்கு வந்தனங்க.. தொடர்ந்து வாங்க..\nபிஞ்சுக் கையில் எழுதுகோல் கொடுப்போம்.. பிஞ்சின் எதிர்காலம் காப்போம்..\nபூக்கள் நடுவில் அமர்ந்து கொண்டு முட்கள் பற்றியும் யோசிப்பவள், மழைச்சாரல் தந்த ஈரம் கொண்டு வெயில் பற்றியும் பயில்பவள், குடிசையில் அமர்ந்து கொண்டு செவ்வாய் நோக்கி சிந்திப்பவள், நல்லவை தந்த தைரியம் கொண்டு அல்லவைகளைக் கொல்பவள். என் எண்ணத்தில் வளர்ந்த பூக்கள் உங்கள் முன்.. நன்றிகளுடன், பூமகள்.\nஇருவரிக் கவித் துளிகள் (1)\nநிமிடக் கவிகள் தொகுப்பு (23)\nஜவ்வரிசி சிற்றுண்டி - (சாபுதானா) வட நாட்டு உணவு\nபொதுவாக ஜவ்வரிசியை நம் ஊர் பக்கம் பாயாசத்துக்கு மட்டுமே பயன்படுத்துவோம். முதல் முறையாக காரம் செய்து எப்படி இத்தனை சுவையான சிற்றுண்டியை நம்மவ...\nதோர்(Thor) - திரை விமர்சனம்\nநேற்று தோர்(Thor) படத்தை இரு பரிமாணத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் பார்த்தேன்...\n -- விமர்சனம் ஐடி வேலை கனவுகளுடன் பயணிக்கும் பொறியியல் பட்டதாரி ஹீரோயின் மடோனாவின் அறிமுகம் எடுத்தவுடனே காட்...\nயாமம் - நாவல் விமர்சனம்\n\"யாமம்\" - நாவல் விமர்சனம் - ஒரு வரலாற்றுச் சமூக நாவல் நூலாசிரியர்: எஸ். ராமகிருஷ்ணன் பதிப்பகம்: உயிர்மை விலை: 225/- ரூபாய். ...\nபூ(வில்) மன்மதன் அம்பு - தைத்ததா உங்களுக்கும்\nபடம் வந்த உடனே பார்க்க ஆயத்தமாகி கடைசியில் சூழலால் இயலாது போனதன் ஏமாற்றம் நெஞ்சில் இருப்பதை உணர்ந்து மீண...\nமஞ்சக்கொம்பு காப்பு கட்டி மண் பானை அடுப்பேற்றி பொங்கி வரக் காத்திருக்கும் சர்க்கரைத் தருணங்கள் நினைவில் மட்டுமே..\n இந்த கேள்வியோடு படம் ஆரம்பிக்கிறது.. முப்பதுகளில் உள்ள பெரும்பான்மையான பெண்களின் முகமாக மஞ்சு வாரியார். திருமண வாழ...\n எத்தனை யுகம் கடந்தாலும் மனித மனங்களில் நிறம் குறித்த புரிதல்கள் மாறுவதே இல்லை.. சற்று நிறமான புறத்தோற்றத்தையு...\nவெயில் கவிதைகள் - 1\nஅலைந்து திரிந்து பசித்த மதியத்தில்.. உச்சிக் கதிர்கள் உச்சி வகிடு வழி வழியத் துவங்கியிருக்கும்.. எப்போதும் நிற்கும் மரத்தடி நிழலின் புழுது ...\n\"யார் மனசிலையும் ஈரமில்ல\" என்ற வசனத்தை அந்த அறையில் இருக்கும் தொலைக்காட்சி ஒளி,ஒல...\nCopyright 2009 பூமகளின் பூக்களம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cinema.vikatan.com/movie-review/73490-pattathari-tamil-movie-review.html", "date_download": "2018-04-26T12:59:51Z", "digest": "sha1:OAN4SDEUSL5W7TXGMHOZ3MAFURUQ6SIM", "length": 26452, "nlines": 384, "source_domain": "cinema.vikatan.com", "title": "பாஸ் ஆவாரா பட்டதாரி? #பட்டதாரி - படம் எப்படி? | Pattathari Tamil Movie Review", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\n #பட்டதாரி - படம் எப்படி\nபடித்து முடித்துவிட்டு, வேலைக்குப் போகாமல் வெட்டியாக சுற்றித்திரியும் ஐந்து வேலையில்லா பட்டதாரிகள் எல்லா ஊரிலும் இருப்பார்கள். தொல்லை தரும் இந்த ஐந்து பிள்ளைகளின் காதலும், கலாட்டாவும் தான் “பட்டதாரி”. பாஸ்... ஐந்து பேருன்னா “பட்டதாரிகள்”னு தானே டைட்டில் வச்சிருக்கணும்\n‘மதுரக்காரய்ங்க பழகிட்டா உயிரையும் கொடுப்பாய்ங்க... பகைச்சிட்டா உயிரையும் எடுப்பாய்ங்க..’ என்ற பின்னணி குரல் முடியவும், கத்தியுடன் ஐந்து பேர் ஓடிவர படமும் ஸ்டார்ட் ஆகிறது. இதை சொல்லும் 993வது படம் இது. அபிசரவணனும், அவனின் நான்கு கூட்டாளிகளும் பட்டதாரிகள். டீ கடையும் டாஸ்மாக்கும் தான் இவர்களின் உச்சபட்சப் பொழுதுபோக்கு. கலாட்டா செய்வதும், போலீஸில் சிக்குவதுமே வேலையாக வைத்திருக்கிறார்கள். ஆளுக்கொரு காதல். அந்த காதலும் பீஸ் போன பல்பாக மாறிவிடுகிறது. இந்த நேரத்தில் அபிசரவணனை துரத்தித் துரத்தி காதலிக்கிறார் அதிதி. கல்லூரி படிக்கும் போதே, அபிசரவணனின் காதலிக்கு நிகழ்ந்த கோரசம்பவத்தால், அதிதியை விட்டு விலகிச்செல்கிறார் அபி. பழைய காதலி ராசிகாவிற்கு என்ன நடந்தது, அதிதியை அபிசரவணன் திருமணம் செய்தாரா என்பதே கதை. இதற்கு நடுவே, அபிசரவணனின் நான்கு நண்பர்களின் கலாட்டாவும், எதற்கு கத்தியுடன் ஓடினார்கள் என்ற ட்விஸ்ட் தனி.\nபடம் முழுக்க அபிசரவணனும், அவனின் நான்கு நண்பர்களுமே நிறைந்திருக்கிறார்கள். ஆளுக்கொரு காதலும், அந்த காதலுக்காக பாடாய்படுவதும், தேவையே இல்லாமல் சண்டை போடுவதுமாக படம் முழுவதும் வெட்டி தான். அம்பாசமுத்திரம் அம்பானி படத்தில் கருணாஸூடன் நடித்த சங்கரின் காமெடி மட்டும் ஒகே. மற்ற மூவரைக்காட்டிலும் இவரின் நடிப்பு ரசிக்க வைக்கிறது.\nபடத்தை கலர்ஃபுல்லாய் நிறைப்பது நாயகி அதிதி தான். அழகாய் வருகிறார், அழகாய் பார்க்கிறார், அழகாய் நடிக்கிறார்.சில காட்சிகள் என்றாலும் அதிதி அவ்வளவு அழகு. பிளாஷ்பேக்கில் அபியின் பழைய காதலியாக வரும் ராசிகா மேக்கப்பில் மேனேஜ் செய்திருப்பது க்ளோசப் காட்சிகளில் அப்பட்டமாக தெரிகிறது.\nபாடலாசிரியர் தரண் வரிகளில்,வைக்கோம் விஜயலட்சுமி குரலில் “சிங்கிள் சிம்” பாடலும், அதற்கான காட்சியமைப்பும் நச். பாடல் காட்சிகளில் அதிதி ஒவ்வொரு சீனிலும் ஸ்கோர் செய்கிறார். சின்ன சின்ன முகபாவனைகளில் ரசிக்கவைக்கிறார். இந்த ஒரு பாடலைத் தவிர, எஸ்.எஸ்.குமரனின் இசையில் மற்ற பாடல்கள் எதுவும் மனதில் பதியவில்லை.\nமுதல் பாதியில் வெட்டியாக சுற்றித்திரியும் ஐந்துபேரும்,இரண்டாம் பாதியில் வேலைக்கு செல்ல முடிவெடுக்கிறார்கள். ஆனால் அதற்காக இந்த பட்டதாரிகள் முயற்சி எடுக்காமல் விட்டது, ஜவ்வாக இழுக்கும் ப்ளாஷ்பேக் காட்சிகள் எல்லாம் மிகப்பெரிய மைனஸ். டைம்பாஸ் டீக்கடைக்கு, இந்த ஐந்துபேரையும் தவிர யாருமே வரமாட்டாங்களா பாஸ் அதிதியை கடத்திச் செல்கிறார்கள் அபி & டீம். அடுத்த காட்சியிலேயே திருமணம் என்று ட்விஸ்ட் வைக்கிறார்கள். நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோமே\nபோலீஸ் அதிகாரியாக வரும் மகாநதி சங்கரும், டீ மாஸ்டரும் படத்தில் கச்சிதம். இவர்களின் கதாபாத்திரம் மனதில் நிறைகிறது. முடிந்த அளவிற்கு மேக்கிங்கில் பெஸ்ட் தர முயன்றிருக்கிறார் இயக்குநர் எ.ஆர்.சங்கர் பாண்டி. ஆனால் மெதுவாக செல்லும் திரைக்கதை சறுக்கல். மதுரை நேட்டிவிட்டி காட்டுவதில் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் படம் மக்கள் மனதில் நின்றிருக்கும். ஆரம்ப காட்சியில் தரும் ஆக்‌ஷன் சஸ்பென்ஸ் படத்தின் மீது எதிர்பார்ப்பை தூண்டி, இருக்கையில் அமரவைத்தாலும், அடுத்தடுத்த காட்சிகளில் சுவாரஸ்யத்தையும் , எதிர்பார்ப்பையும் தரத் தவறிவிட்டார் இயக்குநர்.\nபல தடைகளைத் தாண்டி சின்னபட்ஜெட் படங்கள் ரிலீஸ் ஆவதே பெரிய சவால் என்ற நிலையில், முடிந்த அளவிற்கு சுவாரஸ்யமாய் ஒரு படம் தர முயற்சித்திருக்கிறார்கள். ஆனால் இதே களத்தில் தமிழ் சினிமா பல நூறு சினிமாக்கள் பார்த்து விட்டதே பாஸ்\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\nபயோபிக் படங்களை இயக்கும் போது, கதாபாத்திரத்தின் உண்மைத் தன்மையும், அதே சமயம் ஆடியன்ஸூக்கு பிடித்தமாதிரியும் இயக்கவேண்டியது முக்கியம். சுவாரஸ்யமாகவும், திரைமொழி. Biopic movies list in tamilBiopic movies list in tamil | நிஜங்கள் நிழலான கதை\b... தமிழில் அசத்திய பயோ பிக் படங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா\n'பிளான் பண்ணதைவிட பயங்கரமா இருக்கா வாழ்க்கை' - அச்சம் என்பது மடமையடா விமர்சனம்\n“ஜாலி புலியா... காலி புலியா” ஸ்வர்ண கடுவா படம் எப்படி\nமீன்குழம்பு... மண்பானை எது புதுசு\nயுவன் ஷங்கர் - செல்வராகவன் கூட்டணியில் `நெஞ்சம் மறப்பதில்லை’ பாடல்கள் எப்படி\n``சிவகார்த்திகேயன் பங்கமா கலாய்ப்பார்... மா.கா.பா எவ்வளவு கலாய்ச்சாலும் வாங்கிப்பார்..’’ - அத்தியாயம் 13\n\"25 சூப்பர் ஹீரோக்கள்... ஒரு சூப்பர் வில்லன் தேனோஸ்\n``கார்த்திக்... என்னை கல்யாணம் பண்ணிக்குவீங்களானு கேட்கணும்போல இருக்கு\" - விஜி சந்திரசேகர்\n\" 'சுந்தரபாண்டியன் 2' தயாரிக்கிறேன்; விஜய்சேதுபதி கேரக்டர்ல நடிக்கிறேன்\n\"ஆமாங்க... வருத்தப்படாத வாலிபர் சங்கம் நல்ல படம்தான்’’ - ‘விகடன் பிரஸ் மீட்’ சிவகார்த்திகேயன்\nவிகடன் பிரஸ்மீட்: அஜித்திடம் என்ன பிடிக்காது விஜய்யிடம் என்ன பிடிக்கும்\nமிஸ்டர் கழுகு: பி.ஜே.பி மீது ரஜினி வருத்தம்\nஆற்றை சாகடிக்கும் மணல் மாஃபியாக்கள்\n\"வைகோ, சீமான் மோதல் வேதனை தருகிறது” - கலங்கும் திருமா\nஜெயித்தது தோனி... ஜெயிக்க வைத்தது கோலி... ஜஸ்ட் கோலி திங்ஸ்\nதிருடிய மொபைலை அன்லாக் செய்ய திருடர்கள் செய்யும் இன்னொரு திருட்டுத்தனம்... உஷார்\n'நிர்மலா தேவி வாழ்க்கையே ரகசியம்தான்'- காவியன் நகர் மக்கள் சொல்வது என்ன\nமெக்கானிக்குடன் சாலையில் நின்ற போலீஸார்... கதிகலங்கிப்போன இருசக்கர வாகன ஓட்டிகள்\nஜெயித்தது தோனி... ஜெயிக்க வைத்தது கோலி... ஜஸ்ட் கோலி திங்ஸ்\n``மன அழுத்தம் போக்க உங்களை நீங்கள் ஜெயிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்\n``லட்சியத்தை நோக்கி நகர்ந்துகொண்டே இருந்தால் மனஅழுத்தம் இல்லை. மனஅழுத்தம் போக்க உங்களை நீங்கள் ஜெயிக்கக் கற்க வேண்டும்’’ என்கிறார் எழுத்துச் சித்தர் பாலகுமாரன்.\nகருவளையத்தை மறைக்க மேக்கப் வேண்டாம்... இரும்புச்சத்து உணவு போதும்\nகருவளையத்தை மறைக்க மேக்கப் வேண்டாம். எந்தக் காரணத்தினால் உங்களுக்குக் கருவளையம் வந்திருக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டால் அதைச் சரி செய்வது சுலபம்..\nகொடைக்கானல் மெர்க்குரி ஆலை... அன்று நடந்ததும் இன்றைய நிலையும்\nஅவர்கள் குறைக்கவேண்டியதாக அரசு கூறிய மெர்க்குரி அளவு, உண்மையில் குறைக்கவேண்டிய அளவைவிட 20 மடங்கு அதிகம். இது யூனிலிவர் செலவைக் குறைப்பதற்காகச் செய்யப்பட்டது.\nவிகடன் பிரஸ்மீட்: அஜித்திடம் என்ன பிடிக்காது விஜய்யிடம் என்ன பிடிக்கும்\n“இந்த வேலைநிறுத்தம், இந்திய சினிமாவையே கோலிவுட் பக்கம் திருப்ப வெச்சிருக்கு. இதன் மூலமா...\nஜெ. கன்னத்திலிருந்த நான்கு புள்ளிகளும் அவிழாத முடிச்சுகளும்\nமரணத்துக்குப் பிறகு ஜெயலலிதா உடல் ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டபோது, ஜெ. கன்னத்தில் காணப்பட்ட நான்கு புள்ளிகள் குறித்துப் பெரும் சர்ச்சை எழுந்தது. அந்த நான்கு புள்ளிகள் குறித்த மர்ம முடிச்சுகளை அவிழ்ப்பதற்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முயற்சி செய்துள்ளது.\n\"வைகோ, சீமான் மோதல் வேதனை தருகிறது” - கலங்கும் திருமா\nகாவிரிப் பிரச்னை, எஸ.சி, எஸ்.டி வன்கொடுமைத் தடுப்பு சட்டம் ஆகியவற்றுக்கான போராட்டங்களில் மும்முரமாக...\nகமல் பாவம்... சத்யராஜ் பாவம்... - விருமாண்டிக்கும் சிவனாண்டிக்கும் படம் எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://seithupaarungal.com/2014/07/26/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8/", "date_download": "2018-04-26T13:13:32Z", "digest": "sha1:F5FMDC5X6YUX33D3QWGJDZXT6RB3CCT4", "length": 7402, "nlines": 108, "source_domain": "seithupaarungal.com", "title": "சிங்கள அரசுக்கு ஆதரவான நிறுவனம் தயாரிக்கிறது : விஜய்யின் கத்தி படத்துக்கு கிளம்பும் எதிர்ப்பு – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nசிங்கள அரசுக்கு ஆதரவான நிறுவனம் தயாரிக்கிறது : விஜய்யின் கத்தி படத்துக்கு கிளம்பும் எதிர்ப்பு\nஜூலை 26, 2014 த டைம்ஸ் தமிழ்\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா நடித்து வெளிவர உள்ள படம் கத்தி. இந்தப் படத்தை லைகா என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. தீபாவளிக்கு வெளிவருவதற்காக தயாராகி வரும் இப்படத்துக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மாணவர்கள் முன்னேற்ற முன்னணியை சேர்ந்த இருபது பேர் சவுத் இந்தியன் ஃபிலிம் சேம்பரில் படத்துக்கு எதிராக இன்று மனு கொடுத்தனர். மனுவில் கத்தி படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனம் சிங்கள அரசுக்கு நெருக்கமாக உள்ளது என்றும் எனவே இந்த நிறுவனம் தயாரிக்கும் கத்தி படத்தை ரிலீஸ் செய்யக் கூடாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nகுறிச்சொல்லிடப்பட்டது ஏ.ஆர்.முருகதாஸ், கத்தி, சமந்தா, சினிமா, லைகா நிறுவனம், விஜய்\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postஎனக்கோ ஒலிம்பிக்கில் வாங்கிய பதக்கத்திற்கு இன்னும் விருது பணம் தரவில்லை: சாய்னா நெய்வால் ஆதங்கம்\nNext postநான் கதாநாயகன் ஆன கதை\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nநீங்களே செய்யலாம் ஃப்ரூட் ஃபலூடா\nபிஸ்தா ஐஸ்கிரீம் செய்வது எப்படி\nகருப்பட்டி கம்பு சேமியா எப்படி செய்வது\nஸ்டாக்கிங் பூக்கள் செய்வது எப்படி\nமணி வளையல் செய்வது எப்படி\nஎம்பிராய்டரி: பிரஞ்ச் நாட்’இல் சூரிய பூக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://seithupaarungal.com/2014/09/26/%E0%AE%9C%E0%AF%86-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-04-26T13:22:06Z", "digest": "sha1:L5H2ONGSI4FIMW73YU7L2UEFYCBPW2YS", "length": 8897, "nlines": 109, "source_domain": "seithupaarungal.com", "title": "ஜெ. சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு: பாதுகாப்புப் பணியில் 6000 போலீசார் – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nஅரசியல், இன்றைய முதன்மை செய்திகள், தமிழ்நாடு, Uncategorized\nஜெ. சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு: பாதுகாப்புப் பணியில் 6000 போலீசார்\nசெப்ரெம்பர் 26, 2014 த டைம்ஸ் தமிழ்\nதமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படவுள்ளதை முன்னிட்டு தமிழக -கர்நாடக எல்லையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கிற்காக பரப்பன அக்ரஹாரா நீதிமன்றத்திற்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வரவுள்ளதால் தமிழக – கர்நாடக எல்லை மற்றும் பரப்பன அக்ரஹாரா நீதிமன்ற வளாகம் உள்ளிட்ட இடங்களில் 6000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தீர்ப்பு வழங்கப்படும் நாளில் தமிழகத்திலிருந்து ஏராளமான கட்சித் தொண்டர்கள் வரலாம் என எதிர்பார்க்கப்படுவதால் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பெங்களூரு காவல்துறை ஆணையர் எம்.என் ரெட்டி தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில் இந்த வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என்று, தமிழக முதல்வர் ஜெயலலிதா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், தனக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதால் வழக்கின் தீர்ப்பை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் அல்லது நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்க உச்ச நீதிமன்றம் இன்று மறுத்துவிட்டது.\nகுறிச்சொல்லிடப்பட்டது அரசியல், இன்றைய முதன்மை செய்திகள், உச்ச நீதிமன்றம், சொத்துக் குவிப்பு வழக்கு, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, தமிழ்நாடு, jaya sasi\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postஅம்மா மீதும் சின்ன மேடம் மீதும் மரியாதை உள்ளவன் : நடிகர் டி.ராஜேந்தர் அறிக்கை\nNext postபண்டிகைகளில் அணிந்துகொள்ள புதுரக புடவைகள்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nநீங்களே செய்யலாம் ஃப்ரூட் ஃபலூடா\nபிஸ்தா ஐஸ்கிரீம் செய்வது எப்படி\nகருப்பட்டி கம்பு சேமியா எப்படி செய்வது\nஸ்டாக்கிங் பூக்கள் செய்வது எப்படி\nமணி வளையல் செய்வது எப்படி\nஎம்பிராய்டரி: பிரஞ்ச் நாட்’இல் சூரிய பூக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE_%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-04-26T13:41:58Z", "digest": "sha1:M55FLE6SQ7RRMQDUW532HKX5TUZEL4A6", "length": 31640, "nlines": 311, "source_domain": "ta.wikipedia.org", "title": "இந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "இந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nதில்லியில் பிரதமரின் அலுவலகம் அமைந்திருக்கும் தெற்குப் பகுதிக் கட்டிடம் (சவுத் பிளாக்)\nஇது இந்தியப் பிரதம மந்திரிகளின் முழுப் பட்டியலாகும். இதில் 1947ல் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது இந்தியப் பிரதமராக பதவி ஏற்றவரும் இதில் அடங்கும்.\nஇந்திய தேசிய காங்கிரசு, இந்திய தேசிய காங்கிரசு (இந்திரா)\nகாங்கிரசு தலைமை: இந்திய தேசிய காங்கிரசு, இந்திய தேசிய காங்கிரசு (இந்திரா), ஐக்கிய முற்போக்குக் கூட்டணி\nகாங்கிரசு ஆதரித்தது: ஜனதா கட்சி (மதச்சார்பற்ற), சமாஜ்வாதி ஜனதா கட்சி, ஐக்கிய முன்னணி\nபாஜக-தலைமையில்: பாரதிய ஜனதா கட்சி, தேசிய ஜனநாயகக் கூட்டணி\n(இந்த 12வது அமைச்சரவையை சந்திரசேகர் தலைமைதாங்கினார். காங்கிரசு மற்றும் பாஜக ஆதரித்தன.)\nபுல்பூர் மக்களவை உறுப்பினர் 1 15 ஆகத்து\n1964 [1] 1952 (1st) இந்திய தேசிய காங்கிரசு [1]\n1947 இந்தோ-பாக்கித்தான் போர்; இந்தியத் திட்டக் குழு உருவாக்கியது மற்றும் ஐந்தாண்டுத் திட்டம் மூலம் விவசாயம் தொழில்துறைகளில் அரசின் முதலீடு; நீர்பாசனத்துறைகளுக்கான திட்டங்கள், அணைகள் மற்றும் உரங்களின் உபயோகத்தை அதிகப்படுத்தி விவசாயத்தை பெருக்கியது; விவசாய உற்பத்தி அதிகரித்தும் அதிகளவிலான பஞ்சம் மற்றும் வேலையின்மை; அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம், இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் மற்றும் இந்திய மேலாண்மை கழகங்கள் நிறுவியது; சாதிய அடக்குமுறைகளை கடும் குற்றங்களாக அறிவித்தது மற்றும் சட்ட உரிமைகளை அதிகரித்தது மற்றும் பெண்களுக்கான சமூக உரிமைகளை உறுதி செய்தது; அணி சேரா இயக்கம் உருவாக்கியது; இந்திய சீனப் போர்; சிந்து நீர் ஒப்பந்தம் கையெழுத்திட்டது; தலாய் லாமா அடைக்கலம் தந்தது; கோவாவை இந்தியாவுடன் இணைத்தது.\nசபர்கந்தா மக்களவை உறுப்பினர் — 27 மே\n1964 — (3வது) இந்திய தேசிய காங்கிரசு [2]\nலால் பகதூர் சாஸ்திரியை தேர்ந்தெடுப்பதற்கு முன்பு வரை காபந்து பிரதம மந்திரியாக இருந்தார்.\n2 லால் பகதூர் சாஸ்திரி\nஅலகாபாத் மக்களவை உறுப்பினர் 4 9 சூன்\n1966 [1] — (3வது) இந்திய தேசிய காங்கிரசு [3]\nஇந்திய-பாகிஸ்தான் போர், 1965; இந்தியப் பசுமைப் புரட்சி மற்றும் ஃபுளட் நடவடிக்கை நடைபெறத் தூண்டுகோலாக இருந்தது; தேசிய பால் துறை வளர்ச்சி வாரியம் உருவாக்கியது; தாஷ்கன்ட்டில் அமைதி மாநாட்டின் போது மாரடைப்பால் மரணம்.\nசபர்கந்தா மக்களவை உறுப்பினர் — 11 சனவரி\n1966 — (3வது) இந்திய தேசிய காங்கிரசு [2]\nஇந்திரா காந்தி பிரதமராகத் தெர்ந்தெடுக்கப்படும் வரை மீண்டும் காபந்து பிரமராகப் பணியாற்றினார்.\nரே பரேலி மக்களவை உறுப்பினர் 5 24 சனவரி\n1977 — (3வது) • 1967 (4வது) இந்திய தேசிய காங்கிரசு [4]\nவங்கிகளை நாட்டுமையாக்கியது; இந்திய பாக்கித்தான் போர், 1971 வெற்றி, அது வங்காளதேசம் எனும் நாடு உருவாவதற்கு காரணமானது; சிம்லா ஒப்பந்தம் கையெழுத்திட்டது; முதல் அணு ஆயுத சோதனை - சிரிக்கும் புத்தர்; இந்தியப் பசுமைப் புரட்சி துவங்கியது நெருக்கடி நிலை அமல் படுத்தியது 1975–1977.\nசூரத் மக்களவை உறுப்பினர் 7 24 மார்ச்\nஇந்திரா காந்தி கொண்டுவந்த அவசரகால நிலையை முடிவுக்கு கொண்டு வந்தது; பாக்கித்தான், சீனா மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடுளுடன் நல்லுறவை கொண்டிருந்தது; சோவியத் ஒன்றியத்துடன் உறவு மேம்படுத்தியது; ஆறாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் தோல்வி; பொருளாதார சிக்கல்கள் அதிகரிப்பு; ஜனதா கட்சியின் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் சரண் சிங் தலைமையில் பிரிந்து சென்றதால் பதவி விலகல்.\nபக்பத் மக்களவை உறுப்பினர் 8 28 சூலை\n1980 [3] — (6வது) ஜனதா கட்சி (மதச்சார்பற்ற)\nwith இந்திய தேசிய காங்கிரசு [6]\nஇசுரேலுடன் தூதரக உறவு ஆரம்பம்; காங்கிரசு ஆதரவை விலக்கிக் கொண்டதால் மக்களவையை சந்திக்காமலேயே பதவி விலகல்.\nரே பரேலி 9 14 சனவரி\n1980 [2] 31 அக்டோபர்\n1984 [1] 1980 (7வது) இந்திய தேசிய காங்கிரசு (Indira) [7]\nபுளூஸ்டார் நடவடிக்கை நடத்தியதனால் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டார்.\nஅமேதி மக்களவை உறுப்பினர் 10 31 அக்டோபர்\n1989 1984 (8வது) இந்திய தேசிய காங்கிரசு [8]\n1984 சீக்கியர்களுக்கெதிரான கலவரங்கள்; லைசென்சு ராஜ் பெருமளவில் குறைக்கப்பட்டது; இந்தியாவில் தொலைத்தொடர்பு விரிவாக்கம்; இந்திய இலங்கை ஒப்பந்தம், 1987 கையெழுத்திட்டது; போபர்ஸ் ஊழல்; சா பானு வழக்கு.\n7 வி. பி. சிங்\nஃபதேபூர் மக்களவை உறுப்பினர் 11 2 திசம்பர்\nமுஃப்தி முகம்மது சயீத்தின் மகள் கடத்தலுக்காக தீவிரவாதிகளுடன் சமரசம்; புளூஸ்டார் நடவடிக்கைக்காக மன்னிப்பு கோரி பொற்கோயில் சென்றது; இலங்கையிலிருந்து இந்திய அமைதி காக்கும் படையை திரும்பப்பெற்றது; மண்டல் ஆணைக்குழு பரிந்துரையை அடுத்து பொதுத் துறை வேலைவாய்ப்புகளில் நிலையான இடஒதுக்கீட்டு முறையை கொண்டுவர முன்முயற்சி எடுத்தது; ராம ஜன்மபூமி ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் தோல்வியுற்றது.\nபாலியா மக்களவை உறுப்பினர் 12 10 நவம்பர்\n1991 — (9வது) சமாஜ்வாதி ஜனதா கட்சி\nபாரதிய ஜனதா கட்சியுடன் [10]\nமுன்னாள் பிரதம மந்திரி ராஜீவ் காந்தியை வேவு பார்ப்பதாக குற்றச்சாட்டின் பேரில் பதவி விலகினார், மேலும் காங்கிரசு தனது ஆதரவை விலக்கிக்கொண்டது; ராஜீவ் காந்தி படுகொலை.\n9 பி. வி. நரசிம்ம ராவ்\nநந்தியால் மக்களவை உறுப்பினர் 13 21 சூன்\n1996 1991 (10வது) இந்திய தேசிய காங்கிரசு [11]\nஇந்தியாவில் பொருளாதார சீர்திருத்தங்கள் அறிமுகம்; செபி மற்றும் இந்திய தேசிய பங்கு சந்தை உருவாக்கம்; 1993 மும்பை குண்டுவெடிப்புகள்; பயங்கரவாத மற்றும் சீர்குலைவு நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் (தடா) அறிமுகப்படுத்தப்பட்டது; பாபரி மசூதி இடிப்பு.\n10 மக்களவை உறுப்பினர் 14 16 மே\n1996 [3] 1996† (11வது) பாரதிய ஜனதா கட்சி [12]\nதொங்கு நாடாளுமன்றம்†. 13 நாட்கள் மட்டுமே பதவி வகித்தார். ஆட்சியமைக்க பாஜக வால் ஆதரவு திரட்ட இயலவில்லை.\nஹாசன் மக்களவை உறுப்பினர் 15 1 சூன்\nதொங்கு நாடாளுமன்றம்†. பாஜக வின் அரசமைப்பு முயற்சி தோல்வியடைந்தபின்னர், காங்கிரசும் ஆட்சியமைக்க மறுத்து விட்டது. காங்கிரசு ஆதரவுடன் ஐக்கிய முன்னணி அரசு அமைந்தது. சீன மக்கள் குடியரசுத் தலைவர் யான் சமீன் இந்தியா வருகை - இந்தியாவுக்கு வந்த முதல் சீன நாட்டுத் தலைவர் ;குசராத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.\n12 ஐ. கே. குஜரால்\nஉறுப்பினர் (மாநிலங்களவை, பீகார்) 16 21 ஏப்ரல்\n1998 — (11வது) ஜனதா தளம்\nமாட்டுத் தீவன ஊழல்; ஜெயின் கமிசன் அறிக்கை வெளியானது.\n(10) மக்களவை உறுப்பினர் 17 19 மார்ச்\n2004 1998 (12வது) பாரதிய ஜனதா கட்சி\n(தேசிய சனநாயக கூட்டணி) [14]\nபோக்ரான் அணு சோதனைகள்; கார்கில் போர்; தேசிய நெடுஞ்சாலை அபிவிருத்தி திட்டம்; இசுரேலுடனான உறவை வலுப்படுத்தல்; பயங்கரவாதச் செயல்களைத் தடை செய்யும் சட்டம் (பொடா); அனைவருக்கும் கல்வி இயக்கம்; 2001 இந்தியப் நாடாளுமன்றத் தாக்குதல் மற்றும் ஆபரேசன் பராக்ரம்; 2001 குசராத் நிலநடுக்கம்; குஜராத் வன்முறை 2002; தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைப்பு.\nஅசாம், (மாநிலங்களவை உறுப்பினர்) 19 22 மே\n2004 பதவியில் 2004 (14வது) இந்திய தேசிய காங்கிரசு\n(ஐக்கிய முற்போக்குக் கூட்டணி) [15]\nஇந்திய அமெரிக்க குடிசார் அணுவாற்றல் உடன்பாடு; 2008 மக்களவை (இந்தியா) நம்பிக்கை வாக்கெடுப்பு வெற்றி பெற்றது; அமெரிக்க டாலர் 1 டிரில்லியன் பொருளாதார மைல்கல்லை எட்டியது; இசுரேலுடனான உறவை விரிவாக்கியது; 2008 பொருளியல் சிக்கல்; மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம்; தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005; போடா சட்டம் ரத்து; 26 நவம்பர் 2008 மும்பாய் தாக்குதல்கள், சட்ட விரோதச் செயல்கள் தடுப்புச் சட்டம் இயற்றல்; 1982க்குப் பிறகு சவூதி அரேபியா சென்ற முதல் இந்தியப் பிரதமர்;தேசியப் புலனாய்வு நிறுவனம் (இந்தியா); இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை முறைகேடு; ஆதர்ச வீட்டுவசதி சங்க ஊழல்; 2010 பொதுநலவாய விளையாட்டுகள் ஊழல்; தனித்துவ அடையாள எண் (இந்தியா)\nவதோதரா & வாரணாசி மக்களவைத் தொகுதி 21 26 மே\n2014 பதவியில் 2014 (16வது) பாரதிய ஜனதா கட்சி\n(தேசிய சனநாயக கூட்டணி) [16]\n(int) குல்சாரிலால் நந்தா இடைக்கால பிரதமராக இருந்தாரா என்பது குறித்து சிறு சர்ச்சை உள்ளது. இந்திய அரசியலமைப்பில் இடைக்கால/தற்காலிக/காபந்து பிரதமர் குறித்து வெளிப்படையாக ஒன்றும் சொல்லப்படவில்லை. எனவே நந்தா வை மற்ற பிரதமர்களில் ஒருவராகக் கருத வேண்டும் என்று ஒரு கருத்தும், நடைமுறையில் அவர் இடைக்காலப் பிரதமராகவே செயல்பட்டதால் அவரை இடைக்காலப் பிரதமராகக் கருத வேண்டும் என்ற எதிர் கருத்தும் நிலவுகின்றன.\n1 பதவியில் இருந்தபோது இறந்தவர் அல்லது படுகொலை செய்யப்பட்டவர்\n2 மீண்டும் ஆட்சிக்கு வந்தார்\n4 நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு மூலம் குடியரசுத் தலைவரால் ஆட்சி கலைக்கப்பட்டது\n↑ \"இந்தியா நேருவை பிரதமாக தேர்ந்தெடுத்தது\". லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்சு. 12 மே 1952. http://pqasb.pqarchiver.com/latimes/access/449275272.html\n↑ \"மோடி..இந்தியாவின் 15வது பிரதமரானார்...\". தினமலர் (27 மே 2014). பார்த்த நாள் 27 மே 2014.\nஇந்திய அரசின் அமைச்சகங்களின் தலைவர்கள்\nஇந்தக் கட்டுரை இந்திய அரசு தொடர்பான கட்டுரைகளின் ஒரு பகுதி. இதை விரிவுபடுத்தி தமிழ் விக்கிப்பீடியாவிற்கு உதவி புரியுங்கள்.\nஇந்திய அரசுத் தொடர்பான கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 மார்ச் 2018, 14:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.bbc.com/tamil/global/2013/11/131129_saudiwomen", "date_download": "2018-04-26T13:50:26Z", "digest": "sha1:F7R4OCNPSN46P5BE4Z7VDPPML3YS3WEO", "length": 7264, "nlines": 113, "source_domain": "www.bbc.com", "title": "சவுதி : பெண்களுக்கு ஓட்டுனர் அனுமதி கோரிய செயற்பாட்டாளர் தடுக்கப்பட்டார் - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nசவுதி : பெண்களுக்கு ஓட்டுனர் அனுமதி கோரிய செயற்பாட்டாளர் தடுக்கப்பட்டார்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nImage caption சவுதி பெண் ஓட்டுனர்கள்\nசவுதியில் பெண்களுக்கு வாகனங்களை ஓட்ட அனுமதி கோரி போராட்டங்களை முன்னெடுத்துவந்த முன்னணிச் செயற்பாட்டாளர், தலைநகர் ரியாத்தின் ஊடாக தனது காரை ஓட்டிச் சென்று கொண்டிருந்தபோது பொலிஸாரால் தடுக்கப்பட்டுள்ளார்.\nதான் உள்ளூர் பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதாக பிபிசியிடம் அவர் கூறினார்.\nஇரு தினங்களுக்கு முன்னர்தான் சவுதி உள்துறை அமைச்சரைச் சந்தித்த இரு செயற்பாட்டாளர்கள், இந்தத் தடை குறித்து சவுதி அரசாங்கம் தமது நிலையை மாற்ற ஆரம்பித்திருப்பதான ஒரு எதிர்பார்ப்பை, அந்தச் சந்திப்பு தமக்கு ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்திருந்தனர்.\nகடந்த செப்டம்பரில் இந்தத் தடையை நீக்க வேண்டும் என்று செயற்பாட்டாளர்கள் ஒரு போராட்டத்தை ஆரம்பித்திருக்கும் நிலையில் இது நிகழ்ந்திருக்கிறது.\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.pricedekho.com/ta/shirts/top-10-mark-taylor+shirts-price-list.html", "date_download": "2018-04-26T13:15:11Z", "digest": "sha1:3LHY6MBWILKJR2WK2G2YDQ6ZZPHENYPL", "length": 24794, "nlines": 635, "source_domain": "www.pricedekho.com", "title": "Indiaஉள்ளசிறந்த 10 மார்க் டெய்லர் ஷிர்ட்ஸ் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nTop 10 மார்க் டெய்லர் ஷிர்ட்ஸ் India விலை\nசிறந்த 10 மார்க் டெய்லர் ஷிர்ட்ஸ்\nகாட்சி சிறந்த 10 மார்க் டெய்லர் ஷிர்ட்ஸ் India என இல் 26 Apr 2018. இந்த பட்டியலில் சமீபத்திய ஆன்லைன் போக்குகள் மற்றும் எங்கள் விரிவான ஆராய்ச்சி படி தொகுக்கப்படுகிறது. இந்த பொருட்கள் மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் படித்து உங்கள் நண்பர்களுடன் சிறந்த விலை பகிர்ந்து. சிறந்த 10 தயாரிப்பு பட்டியலில் India சந்தையில் பிரபலமான தயாரிப்புகள் தெரிந்து கொள்ள ஒரு சிறந்த வழியாகும். சிறந்த போக்கு மார்க் டெய்லர் ஷிர்ட்ஸ் India உள்ள மார்க் டெய்லர் மென் S சொல்லிட போர்மல் ஷர்ட் SKUPDbI0rb Rs. 576 விலை உள்ளது. விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nஉ ஸ் போலோ அச்சொசியாடின்\nஉநிடேது கோலாஸ் ஒப்பி பெனட்டன்\nகோக் ன் கீச் டிஸ்னி\nரஸ் ர் 500 அண்ட் பேளா\nசிறந்த 10மார்க் டெய்லர் ஷிர்ட்ஸ்\nமார்க் டெய்லர் மென் ஸ் போர்மல் ஷர்ட்\nமார்க் டெய்லர் மென் S சொல்லிட போர்மல் ஷர்ட்\n- பாப்பிரிக் P/c Woven\nமார்க் டெய்லர் மென் S சொல்லிட போர்மல் ஷர்ட்\n- பாப்பிரிக் P/c Woven\nமார்க் டெய்லர் மென் S செக்கெரேட் போர்மல் ஷர்ட்\nமார்க் டெய்லர் மென் S செக்கெரேட் போர்மல் ஷர்ட்\n- பாப்பிரிக் PC Woven\nமார்க் டெய்லர் மென் S செக்கெரேட் போர்மல் ஷர்ட்\nமார்க் டெய்லர் மென் S ஸ்ட்ரிப்த் போர்மல் ஷர்ட்\n- பாப்பிரிக் Cotton Blend\nமார்க் டெய்லர் மென் S சொல்லிட போர்மல் ஷர்ட்\nமார்க் டெய்லர் மென் S செக்கெரேட் போர்மல் ஷர்ட்\nமார்க் டெய்லர் மென் S சொல்லிட போர்மல் ஷர்ட்\n- பாப்பிரிக் P/c Woven\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kanichaaru.blogspot.com/2015/10/blog-post_27.html", "date_download": "2018-04-26T13:32:13Z", "digest": "sha1:EWHPJVGR2ZCMDSWST6XOU2CFQ7KX3WTA", "length": 25985, "nlines": 104, "source_domain": "kanichaaru.blogspot.com", "title": "தமிழர் கிராமியக் கலைகள் ~ கனிச்சாறு", "raw_content": "\nபெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.\nSankara RamaSamy தமிழர் பண்பாட்டு அடையாளங்கள் No comments\nஒரு நாட்டின் கலை மற்றும் கலாச்சாரம் அச்சமூகத்தினைப் பிரதிபலிக்கும் சிறந்த கருவியாகும்.கலை என்பது பொழுது போக்கிற்காக மட்டுமின்றித் தகவல் ஊடகமாகவும், கலாச்சாரப் பலகனியாகவும் திகழ்கின்றது. கலை என்பது மன உணர்வுகளின் வெளிப்பாடு.குறிப்பாக நாடகக் கலைகள் நமது மண்ணோடு, நம்மோடு தொடர்புடையவை. நமதுபாரம்பரியத்தையும் அடி ஆழத்து வேர்களையும் பிரதிபலிப்பவை. கலை, சமூக வளர்ச்சிக்கும், மனஎழுச்சிக்கும் சிறந்த கருவி.\nநமது முன்னோர்களின் நம்பிக்கைகள், எண்ணங்கள், சிந்தனைகள், பழக்க வழக்கங்கள், ஆகியவற்றை நாட்டுப்புறக் கலைகள் மூலம் அறியமுடிகிறது. இக்கலைகளே சமுதாயத்தின்ஆவணமாகத் திகழ்கின்றன. இக்கிராமியக் கலைகளே, தகவல் பரப்பும் ஊடகமாகவும் பழக்கவழக்கப் பண்பாட்டுப் பெட்டகமாகவும் திகழ்ந்துள்ளன.\nஇன்று தொழில் நுட்பத்தின் அசுர வளர்ச்சியான தகவல் தொடர்பிற்கும் பொழுது போக்கிற்கும் பல்வேறு ஊடகங்கள் உருவாகி வருகின்றன. இம்மாறுதல் இயற்கையானதே. இவற்றினை நாம் எளிதில் புறக்கணித்துவிட முடியாது. காலத்திற்கு ஏற்ற மாறுதல்கள் தேவைதான்.\nஇதுபோன்று ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமான கலைகள் உள்ளன. இந்தக்கலைகள் வெளியே தெரியாமல் உள்ளன. மேலும் நாடகம், வீதி நாடகம், இசை நாடகம், நாட்டிய நாடகம், பரதநாட்டியம், இசைச் சிற்பம் போன்ற பல கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன.\nகிராமக் கோவில்களில் ஒயிலாட்டம் விழாக்காலங்களில் ஆடப்படுகிறது. இதிகாச புராண வரலாற்றுக் கதைகளே ஒயிலாட்டத்தில் பாடப்படும், கட்டபொம்மன், மதுரைவீரன், வள்ளி திருமணம் கதைகள் இடம் பெறும். ஒயிலாட்டம் ஆடுபவர் வெள்ளை ஆடை அணிந்து இருப்பர். காலில் சலங்கையும் கட்டியிருப்பர். கையில் ஆளுக்கொரு கைக்குட்டையைப் பிடித்து இருப்பர். நுனியில் பிடித்து அதை அழகாக வீசியபடியே பாடி ஆடுவர்.\nகோலாட்டம் என்பது பெண்களுக்கென்றே உரிய ஆட்டமாகும். இரண்டு கோல்களைப் பயன்படுத்தி ஒன்றுடன் ஒன்று மோதி ஒலி எழுப்பி ஆடுகின்ற ஆட்டமே கோலாட்டம் ஆகும். சமுதாயத்தைப் பற்றியும், தலைவர்களைப் பற்றியும் கோலாட்டப் பாடல்கள் எழுதப்பட்டன. தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்தியாவின் பிற பகுதிகளிலும் கோலாட்டம் ஆடப்படுகிறது.\nமாரியம்மனுக்கு ஆடி மாதத்தில் கரகம் எடுப்பது தமிழ் நாடெங்கும் உள்ள வழக்கமாகும். மலர்களைக் கொண்டு அழகான ஒப்பனை செய்யப்பட்ட குடத்தைத் தலையில் வைத்துக் கொண்டு ஆடும் ஆட்டம் கரக ஆட்டமாகும். இறை வழிபாட்டுடன் தொடர்பு உடையது இந்த கலை பல்வகை வண்ண மலர்களால் போர்த்தப்பட்டு அழகாகச் செய்யப்பட்டிருக்கும். இந்த கரகாட்டத்தில் ஆண்கள், பெண்கள் ஒன்றாக ஆடுவது பல அடுக்குகள் கொண்ட கரகத்தைத் தாங்கி ஆடுவது கரகாட்டத்தின் தனிச்சிறப்பு.\nகாவடியாட்டம் சமய உணர்விற்காகவும் பொழுது போக்கிற்காகவும் நிகழ்த்தப்படுகிறது. காவடி, தண்டைக் கொண்டு ஆடுவதால் இவ்வாட்டம் காவடியாட்டம் எனப் பெயர் பெற்றது காவடி எடுத்து முருகக் கடவுளை வழிபடும் நிகழ்ச்சியாகக் காவடி ஆட்டம் நடைபெறுவது தமிழர்கள் மரபாகும். காவடியாட்டம் இறைத் தொடர்புடையது ஆதலால் பல கடுமையான நோன்புகளை மேற்கொண்டு காவடி எடுப்பர். கலைத்திறனும் ஆடல் நுட்பமும் இதில் மிகுதியாக இருக்கும்.\nதமிழகமெங்கும் நிகழும் ஆட்டங்களில் கும்மியாட்டம் முக்கிய இடம் வகித்து வருகின்றது. கும்மிக்கென்று தனிமெட்டு உண்டு. ஒருவர் முதலில் பாட, அதனைத் தொடர்ந்து பெண்கள் குழுவாகச் சேர்ந்து பாடுவர்.\nதமிழகத்தில் உள்ள நாட்டுப்புறக் கலைகளில் மிகச் சிறந்தது வில்லுப்பாட்டு. வில்லுப்பாட்டு பிறப்பிடம் குமரி மாவட்டம் வில்லுப்பாட்டில் குறைந்தது ஐந்து பேர் இருப்பர். வில்லுப்பாட்டில் கதைப் பாடல்களைப் பாடிக்காட்டுவார்கள். தலைவர் இருவர் கதையைப் பாட்டாகக் கூறிச்செல்லும்போது விளக்க வேண்டிய இடத்தில் விளக்கி, உரை நடையாக கூறுவர். தெய்வங்களின் வரலாறு. தெய்வ நிலை பெற்ற வீரர்களின் வரலாறு. அரசர்களின் வரலாறு இவற்றை மக்களுக்கு எடுத்துக் கூறவே வில்லுப்பாட்டு பயன்பட்டது. விழாக்களில் பாடப்பட வில்லுப்பாட்டு, இன்று இலக்கியம், அரசியலுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அரசியல் சமுதாயத் தலைவர்களின் வரலாறுகள் வில்லுப்பாட்டில் இடம் பெறுகின்றன. காந்தி மகான் கதையை மறைந்த கலைவாணர்பாமர மக்களிடையே பரப்பினார். ஈழத்தில் சின்னமணி வில்லுப்பாட்டால் பிரபலமான ஒரு கலைஞர்.\nபிறநாட்டுப்புறக் கலைகளைப் போன்றே இதுவும் தெய்வ வழிப்பாட்டோடு தொடர்பு உடையது. திரௌபதி விழாக்களில், மாரியம்மன் விழாக்களில், சிவன், திருமால், கணேசன், ஆகியோருக்கு எடுக்கப்படும் விழாக்களில் தெரு கூத்தானது நிகழ்த்தப்பட்டு வருகிறது.\nகடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் நாற்பது கூத்து குழுக்கள் உள்ளன. தெரு கூத்து பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மாறுபட்டு நிகழ்த்தப்படுகிறது. தெருக்கூத்தில் வரும் கதாபாத்திரங்களின் பண்புகளை வண்ணங்களும் ஒப்பனையும் வெளிப்படுத்தும், துரியோதனனுக்கு சிவப்பும், துச்சாதனுக்கு மஞ்சள், பீமனுக்கு மேகவண்ணமும், கிருஷ்ணனுக்கு பச்சையும், திரௌபதிக்கு இளஞ்சிவப்பும், அர்ச்சுனனுக்கு நீலமும் தீட்டுவர்.\nதெருக்கூத்தில் முதன் முதலாக அரங்கினுள் நுழையும் பாத்திரம் கட்டியக்காரன் ஆவான். அவன் கூத்தின் நடுநாயகமான பாத்திரமாகி, அரசனைப் புகழ்பவனாகவும், தூதுவனாகவும், வேலைக்காரனகவும், கோமாளியாகவும், பொது மக்களுள் ஒருவனாகவும், மாறிமாறிப் பாடுவான்.\nகூத்தைத் துவக்கி, காட்சிகளை விளக்கி கதைகளைத் தெரியப்படுத்தி அறிவுரைகளை தூவி, காலநேரச் சூழல்களை முறைப்படுத்தி வாழ்த்துக் கூறுவதுடன் கூத்தை முடிக்கும் பலவேலைகளையும் செய்கின்றவனாக கட்டியக்காரன் தெருக்கூத்தில் இடம் பெறுகிறான். கூத்தின் இறுதிக்கட்டம் பொது வசனம், முடிவுப்பாட்டு, மங்களம் பாடுவதோடு முடியும். தெரு கூத்தானது இவ்வாறு அனைத்து நாட்டுப்புற கலைகளுக்குச் சிறப்பு செய்வதனை காணலாம்.\nபொம்மைகள் வைத்து நிகழ்த்துவதால் பாவைக் கூத்து எனப்படுகிறது. பொம்மைகள் தோல் பொம்மைகள், மண் பொம்மைகள் என இருவகைப்படும்.\nதமிழ் நாட்டில் இக்கலை தஞ்சை, திருச்சி, இராமநாதபுரம், நெல்லை, குமரி ஆகியமாவட்டங்களில் நடத்தப்படுகிறது. பாவைகளை மரத்தாலும், தோலாலும் செய்து நூல்களைக் கட்டி ஒரு திரைக்குப் பின்னாலிருந்து ஒருவர் ஆடியசைத்துக் கதைகளை விளங்கச் செய்யும் நாட்டுப்புறக்கலைக்கு ”பாவைக் கூத்து” எனப்பெயர்.\nமரப்பாவைகள் நல்ல ஆடைகள் அணிவிக்கப் பெற்றிருக்கும் தரையில் புரளுமாறு ஆடைகள்பெரிதாக இருக்கும் காண்பதற்கு கால்களே இல்லாமல் மனப்பாவனையில் கால்கள் உள்ளது போல் காட்டப்பெறும். கயிறுகள் இன்றி பொம்மைகள் தாமே. இயங்குவதாக மனத்தோற்றத்தை முழுமையாகத் தோற்றுவிக்கிறபோது அது கலையாகிவிடுகிறது.\nசிலம்பம் தமிழர்களின் வீர விளையாட்டு ஆகும். தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் சிலம்பம் சிறப்புற்று விளங்கினாலும் குமரி மாவட்டத்தின் சில பகுதிகளில் விளையாடும் சிலம்பாட்டமே சிறப்பானது. இதில் கம்பிகளைக் கொண்டு ஒலியெழுப்பி விளையாடுவர். இக்கலையைப் பயிற்றுவிக்கும் செயலைக் ”களிரிப்பயிற்று” என்று கூறுவர். புத்த சமயத்துறவிகள் மூலம் இந்தப்போர்க்கலை சீனா, ஜப்பான் நாடுகளுக்குச் சென்றது என்பர் வரலாற்று ஆசிரியர்கள். இக்கலை சிறந்த மாற்றங்களுடன் ஜப்பான் நாட்டில் கராத்தே என்று அழைக்கப்படுகிறது.\nபுராணக் கதைகளைப் பொய்க்கால் குதிரை ஆட்டத்தின் மூலம் நடித்துக் காட்டுவதுண்டு. தஞ்சையை ஆண்ட மராட்டியர்களால் இக்கலை சிறப்புற்றது. ஆணும், பெண்ணும் பங்கேற்கும் இவ்வாட்டத்தில் ஆண் அரசர் வேடந்தாங்கியும், பெண் அரசி வேடந்தாங்கியும் ஆடுவர்.\nகேரளா நாட்டு கதகளி பஞ்சாபி நாட்டுக் கதை ஆகியவற்றின் நடனக் கூறுகள் பொய்க்கால்குதிரை ஆட்டத்தில் காணப்படுவதாகக் கூறப்படுகிறது.\nஉறியடி என்பது ஒரு கிராமியக் கலையாகக் கருதப்படுகிறது. உறியடி விழா என்பதும் கோவில் சார்ந்த கலையாகக் கருதப்படுகிறது. உறி 10 அல்லது 15 அடி உயரத்தில் தொங்கிக் கொண்டு இருக்கும். உறியை அடிப்பவர் மூன்று அடி நீளமுள்ள கம்புடன் காத்திருப்பர்.\nமழையின்றித் தவிக்கும் காலத்தில் பல ஊர்களில் உடுக்கடிப்பாட்டு நடத்தப்படும் இராமநாதபுரம், மதுரை, புதுக்கோட்டை மாவட்டங்களில் இக்கலை நிகழ்ச்சி பிரபலமாக உள்ளது. காத்தவராயன் கதையைப் பாடுவதே பெரு வழக்கமாக உள்ளது.\nதேரோட்டம், சாமி ஊர்வலம் போன்ற திருவிழா நிகழ்ச்சிகளில் இவ்வாட்டம் நிகழ்த்தப்படுகிறது. ஒருவர் புலி போன்ற வேடமிட்டு ஆடுவர். மற்றொருவர் வேட்டைக்காரன் போல் வேடமிட்டு ஆடுவர். இவ்விருவரும் சேர்ந்து ஆடும் ஆட்டந்தான் புலி ஆட்டம் என்பர்.\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nதமிழின் செம்மொழிப் பண்புகள் - பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் - செம்மொழித்தமிழ் இலக்கண இலக்கியங்கள் \nஞெமன் தெரிகோல் அன்ன செயிர்தீர் செம்மொழி அக நானூறு -349 - 3, 4 செம்மொழி மாதவர் சேயிழை நங்கை தம் துறவு எமக்குச...\nகனிச்சாறு : 5 :தமிழ் வாழ வேண்டுமா \n‘தமிழ் வாழ்க’ வென்பதிலும் தமிழ்வா ழாது: தமிழ்ப் பெயரை வைப்பதிலும் தமிழ்வா ழாது தமிழ் சிரிப்பைப் பெருஞ்சிரிப்பாய் அவிழ்த்துக் கொட்...\nநெல்லை & தூத்துக்குடி மாவட்டங்களில் முக்கியமான இடங்களில் சில.\nதூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள கொற்கை கிராமம் இன்று நாம் பார்ப்பதற்கு மிகச்சாதாரண கிராமமாகத் தெரியலாம். ஆனால் முன்னொரு காலத்...\nயுத்த பூமி - அத்தியாயம் 5 - கல் சொல்லும் வீரம் -த. பார்த்திபன்\nஇந்தக் கல் சொல்லும் வீரம்செறிந்த போர்கள், உலகைப் புரட்டிப்போட்ட போர்கள் அல்ல; நாட்டு மக்களை நாடோடிகளாகவும் அகதிகளாகவும் ஆக்கியவையும் அல்ல...\nகோப்பெருஞ்சோழன் - பிசிராந்தையின் நட்பும், பாரியைத் தவிரப் பிறரைப் பாடாத கபிலரின் ஆற்றாமையும்\nஉலகுடன் திரிதரும் பலர்புகழ் நல்லிசை வாய்மொழிக் கபிலர், நீரினும் இனிய சாயலன் ஆகிய பாரியின் இனிய தோழர். அறிமுகம் பழக்கமாகி, பழக்கம் நட...\nயாழ்ப்பாணம் : www.ourjaffna.com இணைய தளச் சொந்தக்காரரின் திருமண விழா : சில காட்சிகள்.\nஅமெரிக்கப் பல்கலையில் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட திருமந்திரத்தின் 6 பாடல்கள்\nஅமெரிக்காவில் உள்ள தென் கரோலின பல்கலையில் ஆய்வுக்குள்ளான 6 பாடல்கள் அல்சைமர் நோயாளிக்கு உதவும் என்று முடிவு காண்க:- h...\nதினத்தந்தி வெளியீடு : ஆயிரம் ஆண்டு அதிசயம். - அமுதன்\nஓரிருமுறை தஞ்சைப் பெரியகோவிலுக்குச் சென்றிருக்கின்றேன். ஆனால், இம்முறை சென்றவாரம் சென்றிருந்தபோது அரியதோர் வழிகாட்டுநர் கிடை...\nகவிமணி தேசிக விநாயகம் பிள்ளை\nவாழ்க்கைக் குறிப்பு கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை (ஆகஸ்ட் 27, 1876 - செப்டம்பர் 26, 1954) 20 நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு புகழ் பெற்ற...\nவயது 65, சென்னை, தமிழ்நாடு,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.eegarai.net/t119598-topic", "date_download": "2018-04-26T13:25:29Z", "digest": "sha1:3GGJ7CESAPL3ZDJ5G7REAZIKA3AUBN2R", "length": 11545, "nlines": 197, "source_domain": "www.eegarai.net", "title": "கேரக்டர் நடிகையான, தாமிரபரணி பானு!", "raw_content": "\nருசியான ஊறுகாய்கள் - அரு /அரை நெல்லிக்காய் தொக்கு \nஅரை நெல்லிக்காய் - அரை நெல்லிக்காய் தொக்கு \nஎச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி\nஉடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்\nஎனக்குள் ஒரு கவிஞன் SK\nஉலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி\nபராமரிப்பு பணி முடிந்தது பழநி கோயில் வின்ச் சேவை துவக்கம்: பக்தர்கள் மகிழ்ச்சி\nபாலகுமாரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக\nஅறிமுகம்---- வாலி மோகன் தாஸ்\n2 மணி நேரம் பொறுக்க முடியாதா கஸ்தூரி..\nஎதுக்காக உன் காதலியை கிணத்துல தள்ளிவிட்டே...\nஅமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி\nநிலக்கரியை விட கருப்பாக இருக்கும் கிரகம் கண்டுபிடிப்பு\nகவர்ச்சி நடிகைகிட்ட பிடிச்சது, அவரோட நடிப்பு...\nஏப்ரல் 30-ம் தேதி வைகை ஆற்றில் இறங்குகிறார் கள்ளழகர்\nகோயில்களுக்கு செல்ல குழந்தைகளை கண்டிப்பாக பழக்குங்கள்.....\nஇந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'\nஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்\nஉப்புமா சாப்பிடுவது மோன நிலை...\nநீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு\n‘சிற்றெறும்பு கட்டெறும்பு’ - கமல்ஹாசன், அமைச்சர் ஜெயக்குமார் வார்த்தை ஜாலத்தால் ஒருவருக்கொருவர் கிண்டல்\nஉ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்\nகண்மணி வார நாவல் 25.04.2018\nதிகில் மன்னன் ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக\nதாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து\nபலாத்காரத்துக்கு ஆளாகும் ஆண் குழந்தைகளுக்கும் இழப்பீடு'\nஇந்தியர்களை பாதிக்கும் ‘எச்-4’ விசா ரத்து நடவடிக்கைக்கு அமெரிக்க எம்.பி.க்கள் எதிர்ப்பு, ஐ.டி. துறையும் கண்டனம்\n'பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்\n5,000 குஜராத் விவசாயிகள் தற்கொலைக்கு மனு\nவாழ்க்கையை ஓஹோன்னு வாழ கன்ஃபூசியஸ் சொன்ன 10 கட்டளைகள்...\nஇரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு\nரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது: மக்கள் மன்ற மாநில செயலாளர் பேச்சு\n2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்: ஜூன் 16-ம் தேதி இந்தியா-பாக். மோதல்\nசுப்ரீம் கோர்ட் எதிர்காலம்: ஆலோசிக்க நீதிபதிகள் கோரிக்கை\nநாடு முழுவதும் 24 போலி பல்கலை.,கள்\nகாங்., கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக்கறை: சல்மான் குர்ஷித் சர்ச்சை\nகேரக்டர் நடிகையான, தாமிரபரணி பானு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nகேரக்டர் நடிகையான, தாமிரபரணி பானு\nதாமிரபரணி படத்தில் நடித்த பானு,\nஅவ்வப்போது படங்களில் நடித்து வந்த நிலையில்,\nவிமல் நடித்த, தேசிங்கு ராஜா என்ற படத்தில்,\nஒரு பாட்டுக்கு குத்தாட்டம் ஆடினார்.\nஅதையடுத்து, தற்போது, ஜிகர்தண்டா வில்லன்\nபாபி சிம்ஹா நடிக்கும், பாம்பு சட்டை படத்தில்,\nஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக\nகூறும் அவர், ‘இப்போதும் கதாநாயகியாக நடிக்கும்\nஅளவுக்கு, நான் இளமையாகத்தான் இருக்கிறேன்;\nஆனால், எதிர்பார்த்தபடி படங்கள் கிடைக்கவில்லை.\nசினிமாவில் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்ற\nஆசையில், கேரக்டர் நடிகையாக மாறியிருக்கிறேன்…’\nபோனது என்ன ஆனாலும் புத்தி கொள்முதல்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.eegarai.net/t33850-topic", "date_download": "2018-04-26T13:08:53Z", "digest": "sha1:BYVQNYGKZ2XNKX7KPVXJBOXZF4WMLD4R", "length": 15333, "nlines": 247, "source_domain": "www.eegarai.net", "title": "மலையாளத்தில் நான் நடிக்கும்போது தமிழில் நடிக்க மாட்டேனா?-அமிதாப்", "raw_content": "\nருசியான ஊறுகாய்கள் - அரு /அரை நெல்லிக்காய் தொக்கு \nஅரை நெல்லிக்காய் - அரை நெல்லிக்காய் தொக்கு \nஎச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி\nஉடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்\nஎனக்குள் ஒரு கவிஞன் SK\nஉலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி\nபராமரிப்பு பணி முடிந்தது பழநி கோயில் வின்ச் சேவை துவக்கம்: பக்தர்கள் மகிழ்ச்சி\nபாலகுமாரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக\nஅறிமுகம்---- வாலி மோகன் தாஸ்\n2 மணி நேரம் பொறுக்க முடியாதா கஸ்தூரி..\nஎதுக்காக உன் காதலியை கிணத்துல தள்ளிவிட்டே...\nஅமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி\nநிலக்கரியை விட கருப்பாக இருக்கும் கிரகம் கண்டுபிடிப்பு\nகவர்ச்சி நடிகைகிட்ட பிடிச்சது, அவரோட நடிப்பு...\nஏப்ரல் 30-ம் தேதி வைகை ஆற்றில் இறங்குகிறார் கள்ளழகர்\nகோயில்களுக்கு செல்ல குழந்தைகளை கண்டிப்பாக பழக்குங்கள்.....\nஇந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'\nஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்\nஉப்புமா சாப்பிடுவது மோன நிலை...\nநீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு\n‘சிற்றெறும்பு கட்டெறும்பு’ - கமல்ஹாசன், அமைச்சர் ஜெயக்குமார் வார்த்தை ஜாலத்தால் ஒருவருக்கொருவர் கிண்டல்\nஉ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்\nகண்மணி வார நாவல் 25.04.2018\nதிகில் மன்னன் ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக\nதாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து\nபலாத்காரத்துக்கு ஆளாகும் ஆண் குழந்தைகளுக்கும் இழப்பீடு'\nஇந்தியர்களை பாதிக்கும் ‘எச்-4’ விசா ரத்து நடவடிக்கைக்கு அமெரிக்க எம்.பி.க்கள் எதிர்ப்பு, ஐ.டி. துறையும் கண்டனம்\n'பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்\n5,000 குஜராத் விவசாயிகள் தற்கொலைக்கு மனு\nவாழ்க்கையை ஓஹோன்னு வாழ கன்ஃபூசியஸ் சொன்ன 10 கட்டளைகள்...\nஇரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு\nரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது: மக்கள் மன்ற மாநில செயலாளர் பேச்சு\n2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்: ஜூன் 16-ம் தேதி இந்தியா-பாக். மோதல்\nசுப்ரீம் கோர்ட் எதிர்காலம்: ஆலோசிக்க நீதிபதிகள் கோரிக்கை\nநாடு முழுவதும் 24 போலி பல்கலை.,கள்\nகாங்., கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக்கறை: சல்மான் குர்ஷித் சர்ச்சை\nமலையாளத்தில் நான் நடிக்கும்போது தமிழில் நடிக்க மாட்டேனா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nமலையாளத்தில் நான் நடிக்கும்போது தமிழில் நடிக்க மாட்டேனா\nல் நடிக்க தான் தயாராக இருப்பதாகவும், தனக்குப் பிடித்த கதை, கேரக்டர் கிடைத்தால் நிச்சயம் நடிப்பேன் என்றும் அமிதாப் பச்சன் கூறியுள்ளார்.\nஊட்டியில் முகாமிட்டுள்ளார் அமிதாப் பச்சன். அங்கு மோகன்லால் நடிக்கும் காந்தஹார் படத்தின் ஷூட்டிங் நடைபெறுகிறது. இதில் அமிதாப் பச்சன் முக்கியப் பாத்திரத்தில் நடிக்கிறார்.\nஷூட்டிங் இடைவேளையின்போது அமிதாப் பச்சன் கூறுகையில்,\nநான் தமிழ்நாட்டுக்குப் புதிதில்லை. பலமுறை இங்கு வந்துள்ளேன். நிறைய நண்பர்கள் உள்ளனர். இருந்தாலும் தென்னிந்திய மொழிப் படங்களில் நடிப்பது வித்தியாசமான அனுபவமாக உள்ளது.\nமொழி எனக்குப் பிரச்சினை இல்லை. தமிழில் நடிக்கவும் நான் தயார். மலையாளத்தில் நடிக்கும்போது தமிழில் மாட்டேனா. எனக்குப் பிடித்த கதையும், கேரக்டரும் அமைந்தால் நிச்சயம் நடிப்பேன் என்றார் அமிதாப்.\nRe: மலையாளத்தில் நான் நடிக்கும்போது தமிழில் நடிக்க மாட்டேனா\nRe: மலையாளத்தில் நான் நடிக்கும்போது தமிழில் நடிக்க மாட்டேனா\nமலையாளத்தில் நான் நடிக்கும்போது தமிழில் நடிக்க மாட்டேனா\nRe: மலையாளத்தில் நான் நடிக்கும்போது தமிழில் நடிக்க மாட்டேனா\nRe: மலையாளத்தில் நான் நடிக்கும்போது தமிழில் நடிக்க மாட்டேனா\nவாருங்கள் உயர்ந்த மனிதரே இங்கேயும் உங்களுக்கு ரசிகர்கள் உண்டு\nRe: மலையாளத்தில் நான் நடிக்கும்போது தமிழில் நடிக்க மாட்டேனா\nடீகே பாய் ஆவோ நடிக்ககே நல்லா உங்கள் வருகைக்கு தமிழ் மக்கள் கே இதர்\nRe: மலையாளத்தில் நான் நடிக்கும்போது தமிழில் நடிக்க மாட்டேனா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.eegarai.net/t35038-topic", "date_download": "2018-04-26T13:26:27Z", "digest": "sha1:GU57PGZV4VM3E5SEDIDCLFTG4PMORDLT", "length": 26626, "nlines": 418, "source_domain": "www.eegarai.net", "title": "நீச்சல் உடையில் உலா வந்த பிரியங்கா சோப்ரா.!!", "raw_content": "\nருசியான ஊறுகாய்கள் - அரு /அரை நெல்லிக்காய் தொக்கு \nஅரை நெல்லிக்காய் - அரை நெல்லிக்காய் தொக்கு \nஎச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி\nஉடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்\nஎனக்குள் ஒரு கவிஞன் SK\nஉலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி\nபராமரிப்பு பணி முடிந்தது பழநி கோயில் வின்ச் சேவை துவக்கம்: பக்தர்கள் மகிழ்ச்சி\nபாலகுமாரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக\nஅறிமுகம்---- வாலி மோகன் தாஸ்\n2 மணி நேரம் பொறுக்க முடியாதா கஸ்தூரி..\nஎதுக்காக உன் காதலியை கிணத்துல தள்ளிவிட்டே...\nஅமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி\nநிலக்கரியை விட கருப்பாக இருக்கும் கிரகம் கண்டுபிடிப்பு\nகவர்ச்சி நடிகைகிட்ட பிடிச்சது, அவரோட நடிப்பு...\nஏப்ரல் 30-ம் தேதி வைகை ஆற்றில் இறங்குகிறார் கள்ளழகர்\nகோயில்களுக்கு செல்ல குழந்தைகளை கண்டிப்பாக பழக்குங்கள்.....\nஇந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'\nஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்\nஉப்புமா சாப்பிடுவது மோன நிலை...\nநீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு\n‘சிற்றெறும்பு கட்டெறும்பு’ - கமல்ஹாசன், அமைச்சர் ஜெயக்குமார் வார்த்தை ஜாலத்தால் ஒருவருக்கொருவர் கிண்டல்\nஉ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்\nகண்மணி வார நாவல் 25.04.2018\nதிகில் மன்னன் ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக\nதாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து\nபலாத்காரத்துக்கு ஆளாகும் ஆண் குழந்தைகளுக்கும் இழப்பீடு'\nஇந்தியர்களை பாதிக்கும் ‘எச்-4’ விசா ரத்து நடவடிக்கைக்கு அமெரிக்க எம்.பி.க்கள் எதிர்ப்பு, ஐ.டி. துறையும் கண்டனம்\n'பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்\n5,000 குஜராத் விவசாயிகள் தற்கொலைக்கு மனு\nவாழ்க்கையை ஓஹோன்னு வாழ கன்ஃபூசியஸ் சொன்ன 10 கட்டளைகள்...\nஇரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு\nரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது: மக்கள் மன்ற மாநில செயலாளர் பேச்சு\n2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்: ஜூன் 16-ம் தேதி இந்தியா-பாக். மோதல்\nசுப்ரீம் கோர்ட் எதிர்காலம்: ஆலோசிக்க நீதிபதிகள் கோரிக்கை\nநாடு முழுவதும் 24 போலி பல்கலை.,கள்\nகாங்., கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக்கறை: சல்மான் குர்ஷித் சர்ச்சை\nநீச்சல் உடையில் உலா வந்த பிரியங்கா சோப்ரா.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nநீச்சல் உடையில் உலா வந்த பிரியங்கா சோப்ரா.\nதமிழன் படத்தில் விஜய் ஜோடியாக நடித்தவர் பிரியங்கா சோப்ரா. இந்தியில் முன்னணி நடிகை. இவருக்கு மிகவும் பிடித்த இடம் கடல்தான்.\n‘கடல் மங்கை என்று பாலிவுட்டில் இவருக்கு செல்லப் பெயர் உண்டு. ஒவ்வொரு ஆண்டும் கடல் சார்ந்த இடத்தில் தோழிகளுடன் முகாமிடும் பிரியங்கா, இம்முறையும் கடல்சார்ந்த இடத்துக்குதான் செல்லப் போகிறாராம்.\nஅதற்காக சிங்கிள், டூ பீஸ் என ஒரு டஜன் நீச்சல் உடைகளை பேக் செய்து வைத்திருக்கிறார். அவருடன் அவரது நெருங்கிய தோழிகள் முபீனா, சிருஷ்டி செல்கின்றனர். கடந்த ஆண்டு பாலி மற்றும் கோ சாம்ய் பீச்சில் சுற்றித்திரிந்தார். அங்கிருந்து திரும்பியபோது அளித்த பேட்டியில், ‘கடற்கரையில் அமர்ந்து காற்று வாங்குவதும் அங்கு குட்டி தூக்கம் போடுவதும் ரொம்பவே பிடிக்கும். அதைத்தான் அங்கு செய்தேன் என்றார்.\nஅவரது நெருங்கிய தோழியான முபீனாவுடன் சில மாதங்களுக்கு முன் முற்றிலுமாக பேச்சுவார்த்தை முறித்து இருந்தாராம் பிரியங்கா. நடிகர் ஷாஹித் கபூருடனான தனது நட்பை முபீனா லீக் செய்துவிட்டார் என்ற சந்தேகமே இந்த நட்பு முறிவுக்கு காரணமாம். பீச் டூர் காரணமாக இப்போது மீண்டும் இருவரும் ராசியாகிவிட்டார்கள். ‘நான் எங்கு செல்லப்போகிறேன் என்பது எனது அப்பாவுக்குகூட தெரியாது. இந்த ரகசியத்தை வேறு யாரும் கண்டுபிடிக்க முடியாது என¢கிறார் பிரியங்கா. அவர் செல்ல திட்டமிட்டிருப்பது தாய்லாந்தில் உள்ள புக்கட் தீவுதான் என்பது தெரிய வந்துள்ளது. இதை அவருக்கு நெருங்கிய ஒருவர் உறுதி செய்திருக்கிறார்.\nRe: நீச்சல் உடையில் உலா வந்த பிரியங்கா சோப்ரா.\nRe: நீச்சல் உடையில் உலா வந்த பிரியங்கா சோப்ரா.\nRe: நீச்சல் உடையில் உலா வந்த பிரியங்கா சோப்ரா.\nகல்யாணம் ஆகியும் எப்படி அலையுது பாரு\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: நீச்சல் உடையில் உலா வந்த பிரியங்கா சோப்ரா.\nRe: நீச்சல் உடையில் உலா வந்த பிரியங்கா சோப்ரா.\nபுக்கட் எதுக்கு இங்க மஸ்கட் வரசொல்லுங்கோ\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nRe: நீச்சல் உடையில் உலா வந்த பிரியங்கா சோப்ரா.\nகல்யாணம் ஆகியும் எப்படி அலையுது பாரு\nஏன் மாமு வேணுமுன்னா நீங்களும் பார்த்துட்டு போங்க யாரு வேணாமுன்னு சொன்னாங்க\nRe: நீச்சல் உடையில் உலா வந்த பிரியங்கா சோப்ரா.\nகல்யாணம் ஆகியும் எப்படி அலையுது பாரு\nஏன் மாமு வேணுமுன்னா நீங்களும் பார்த்துட்டு போங்க யாரு வேணாமுன்னு சொன்னாங்க\nபடம் இருந்தா தானே பார்க்கிறதுக்கு..\nRe: நீச்சல் உடையில் உலா வந்த பிரியங்கா சோப்ரா.\nகல்யாணம் ஆகியும் எப்படி அலையுது பாரு\nஏன் மாமு வேணுமுன்னா நீங்களும் பார்த்துட்டு போங்க யாரு வேணாமுன்னு சொன்னாங்க\nபடம் இருந்தா தானே பார்க்கிறதுக்கு..\nதமிழன் அண்ணா இந்த படம் நல்லவுங்க கண்ணுக்கு மட்டும் தெரியுதாம் ,ஆனா இந்த மொக்க மாமு சிவாவுக்கு தெரியல.உங்களுக்கு தெரியுதான்னு நல்லா பாருங்க\nRe: நீச்சல் உடையில் உலா வந்த பிரியங்கா சோப்ரா.\nநான் ரொம்பவும் நல்லவன் அதனாலே தெரியல போல..\nRe: நீச்சல் உடையில் உலா வந்த பிரியங்கா சோப்ரா.\nRe: நீச்சல் உடையில் உலா வந்த பிரியங்கா சோப்ரா.\n@balakarthik wrote: புக்கட் எதுக்கு இங்க மஸ்கட் வரசொல்லுங்கோ\nபாலா நீ நல்லப்பிள்ளை இப்படி எல்லாம் பேசலாமா\nRe: நீச்சல் உடையில் உலா வந்த பிரியங்கா சோப்ரா.\n@balakarthik wrote: புக்கட் எதுக்கு இங்க மஸ்கட் வரசொல்லுங்கோ\nபாலா நீ நல்லப்பிள்ளை இப்படி எல்லாம் பேசலாமா\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nRe: நீச்சல் உடையில் உலா வந்த பிரியங்கா சோப்ரா.\n@balakarthik wrote: புக்கட் எதுக்கு இங்க மஸ்கட் வரசொல்லுங்கோ\nபாலா நீ நல்லப்பிள்ளை இப்படி எல்லாம் பேசலாமா\nRe: நீச்சல் உடையில் உலா வந்த பிரியங்கா சோப்ரா.\n@balakarthik wrote: புக்கட் எதுக்கு இங்க மஸ்கட் வரசொல்லுங்கோ\nபாலா நீ நல்லப்பிள்ளை இப்படி எல்லாம் பேசலாமா\nஎன்னை நம்பாமல் கெட்டவர்கள் பலபேர் உண்டு ஆனால் நம்பி கெட்டவர்கள் யாருமே இல்லை\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nRe: நீச்சல் உடையில் உலா வந்த பிரியங்கா சோப்ரா.\nஉலகம் நம்பலைன்னாலும் பாலாவின் அக்கா நான் நம்பாம இருக்கமுடியுமா ரபீக் பாலா ரொம்ப ரொம்ப நல்லப்பிள்ளைப்பா...\nRe: நீச்சல் உடையில் உலா வந்த பிரியங்கா சோப்ரா.\nஉலகம் நம்பலைன்னாலும் பாலாவின் அக்கா நான் நம்பாம இருக்கமுடியுமா ரபீக் பாலா ரொம்ப ரொம்ப நல்லப்பிள்ளைப்பா...\nஎன்ன ரொம்ப நல்லவன்னு சொல்லிட்டாங்களே அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nRe: நீச்சல் உடையில் உலா வந்த பிரியங்கா சோப்ரா.\nஉலகம் நம்பலைன்னாலும் பாலாவின் அக்கா நான் நம்பாம இருக்கமுடியுமா ரபீக் பாலா ரொம்ப ரொம்ப நல்லப்பிள்ளைப்பா...\nRe: நீச்சல் உடையில் உலா வந்த பிரியங்கா சோப்ரா.\nஉலகம் நம்பலைன்னாலும் பாலாவின் அக்கா நான் நம்பாம இருக்கமுடியுமா ரபீக் பாலா ரொம்ப ரொம்ப நல்லப்பிள்ளைப்பா...\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nRe: நீச்சல் உடையில் உலா வந்த பிரியங்கா சோப்ரா.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.eegarai.net/t79313-topic", "date_download": "2018-04-26T13:09:15Z", "digest": "sha1:E5BF45B2XTKVBDCNFPTSSKQI4BQJDZ26", "length": 27216, "nlines": 252, "source_domain": "www.eegarai.net", "title": "இவர் கூட எப்பிடி குடும்பம் நடத்துறீங்கன்னு ரஜினி என் மனைவியைக் கலாய்ச்சார்", "raw_content": "\nருசியான ஊறுகாய்கள் - அரு /அரை நெல்லிக்காய் தொக்கு \nஅரை நெல்லிக்காய் - அரை நெல்லிக்காய் தொக்கு \nஎச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி\nஉடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்\nஎனக்குள் ஒரு கவிஞன் SK\nஉலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி\nபராமரிப்பு பணி முடிந்தது பழநி கோயில் வின்ச் சேவை துவக்கம்: பக்தர்கள் மகிழ்ச்சி\nபாலகுமாரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக\nஅறிமுகம்---- வாலி மோகன் தாஸ்\n2 மணி நேரம் பொறுக்க முடியாதா கஸ்தூரி..\nஎதுக்காக உன் காதலியை கிணத்துல தள்ளிவிட்டே...\nஅமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி\nநிலக்கரியை விட கருப்பாக இருக்கும் கிரகம் கண்டுபிடிப்பு\nகவர்ச்சி நடிகைகிட்ட பிடிச்சது, அவரோட நடிப்பு...\nஏப்ரல் 30-ம் தேதி வைகை ஆற்றில் இறங்குகிறார் கள்ளழகர்\nகோயில்களுக்கு செல்ல குழந்தைகளை கண்டிப்பாக பழக்குங்கள்.....\nஇந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'\nஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்\nஉப்புமா சாப்பிடுவது மோன நிலை...\nநீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு\n‘சிற்றெறும்பு கட்டெறும்பு’ - கமல்ஹாசன், அமைச்சர் ஜெயக்குமார் வார்த்தை ஜாலத்தால் ஒருவருக்கொருவர் கிண்டல்\nஉ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்\nகண்மணி வார நாவல் 25.04.2018\nதிகில் மன்னன் ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக\nதாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து\nபலாத்காரத்துக்கு ஆளாகும் ஆண் குழந்தைகளுக்கும் இழப்பீடு'\nஇந்தியர்களை பாதிக்கும் ‘எச்-4’ விசா ரத்து நடவடிக்கைக்கு அமெரிக்க எம்.பி.க்கள் எதிர்ப்பு, ஐ.டி. துறையும் கண்டனம்\n'பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்\n5,000 குஜராத் விவசாயிகள் தற்கொலைக்கு மனு\nவாழ்க்கையை ஓஹோன்னு வாழ கன்ஃபூசியஸ் சொன்ன 10 கட்டளைகள்...\nஇரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு\nரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது: மக்கள் மன்ற மாநில செயலாளர் பேச்சு\n2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்: ஜூன் 16-ம் தேதி இந்தியா-பாக். மோதல்\nசுப்ரீம் கோர்ட் எதிர்காலம்: ஆலோசிக்க நீதிபதிகள் கோரிக்கை\nநாடு முழுவதும் 24 போலி பல்கலை.,கள்\nகாங்., கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக்கறை: சல்மான் குர்ஷித் சர்ச்சை\nஇவர் கூட எப்பிடி குடும்பம் நடத்துறீங்கன்னு ரஜினி என் மனைவியைக் கலாய்ச்சார்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nஇவர் கூட எப்பிடி குடும்பம் நடத்துறீங்கன்னு ரஜினி என் மனைவியைக் கலாய்ச்சார்\nஇவர் கூட எப்பிடி குடும்பம் நடத்துறீங்கன்னு ரஜினி என் மனைவியைக் கலாய்ச்சார்\nஇன்று காலை சரியாக 10.10 மணிக்கு ரஜினியை, அவரது காரில் இறங்கும்போது பார்த்ததற்கு முந்தின கணம் வரை, அவரால் இன்னொரு படம் நடிக்கமுடியும் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டதில்லை.காரணம் அவர் உடல்நிலை குறித்து பரவியிருந்த கன்னாபின்னா வதந்திகள்.\nஇதனாலேயே ‘கோச்சடையான்’ படத்தைப் பற்றி தினமும் அடிக்கப்படும் கும்மிகளைப் பார்த்து’ கோச்சடையான்’ன்னு ஒரு படமே கிடையாது என்று நான் கிண்டல் செய்து கொண்டிருந்தேன்.\nஇன்று காலை 9.50 டு10.20 முகூர்த்த நேரத்தில் திரையுலகினருக்கும், குறிப்பாக எங்களைப்போன்ற பத்திரிகையாளர்களுக்கும் நெருங்கிய நண்பரான FOURFRAMES' கல்யாணம் அவர்களின் புதல்வன் சதீஷுக்கும்,செல்வி அஞ்சலிக்கும் திருமணம் சென்னை ராமநாதன் செட்டியார் மண்டபத்தில் நடைபெற்றது.\nகோடம்பாக்கம் மொத்தமும் ரிஷப்ஷனுக்கு குவியும் என்பதால், ரஜினி விவரமாக,காலையிலேயே வந்துவிட்டார்.\nஅவர் காரிலிருந்து இறங்கி, கைகுழுக்கச் சென்ற அனைவருக்கும் கும்பிடு போட்டபடி , சிங்கநடை போட்டு லிஃப்டில் ஏறியதை வேகத்தையும் சுறுசுறுப்பையும் பார்த்த போது, இன்னும் ஒரு படம் என்ன ஒரு டஜன் படங்களிலே கூட நடிக்கலாம் என்று தோன்றியது.\nசரி, இது கல்யாணம் சார் வீட்டுக் கல்யாணம். நமக்கு இன்றைய சிறப்பு விருந்து அவர்தான்.\nபடத்தில் நம்ம கல்யாணம் சார்கிட்ட அல்வா வாங்கி சாப்பிடுறாரே அந்த\nவிவேக் ஒரே காமெடியை சில நேரம் பல படங்களில் பயன்படுத்துவார்.\nஅதில் ஒன்றுதான் ... டி.ஐ.ஜி.யை எனக்குத்தெரியும். பட், ஆனா அவருக்கு என்னைத்தெரியாது....காமெடி\nஆனால் கல்யாணம் சார் விவகாரமே வேறு. சி.எம்.மை அவருக்குத்தெரியும். அதே சமயம், சி.எம். முக்கும் கல்யாணம் சாரை,என்னய்யா கல்யாணம்’ என்று பெயர் சொல்லிக்கூப்பிடுகிற அளவுக்கு நெருக்கமாகத் தெரியும்.\nஇவர் அவ்வளவு பெரிய’ ஆள் என்றும் சொல்லிவிட முடியாது. ஆனால் ரொம்ப பெரிய ஆள்தான். குழம்ப ஒன்றுமில்லை.பதவி என்று பார்க்கிற போது, இயக்குனர் பிரியதர்ஷனுக்கு சொந்தமான ஃபோர் ஃப்ரேம்ஸ் என்கிற தியேட்டர் நிர்வாகி அவ்வளவுதான்.\nஆனால் இந்தப்பதவியை வைத்துக்கொண்டு, மொத்த இண்டஸ்ட்ரியையும் வசியப்படுத்தமுடிந்ததென்றால், அது கல்யாணம் சாரின் ஸ்ட்ரிக்டான.கடுமையான, பரிவுகலந்த, பாசம் கலந்த உபசரணை தான்\nகருணாநிதி இன்றைக்கு படம் பார்க்க வருகிறாரென்றால்,அவரோடு எத்தனை பேர் வருவார்கள், என்ன சாப்பிடுவார்கள்,எந்த ஹோட்டல் காபி கருணாநிதிக்குப் பிடிக்கும்.அத்தனையும் கல்யாணம் சாருக்கு அத்துபடி.\nஇளையராஜா படம் பார்க்க வந்துகொண்டிருந்தால், அவர் வந்து சேருவதற்கு முன்பே மணக்க மணக்க தாளித்த பாசிப்பயறு வந்து சேர்ந்திருக்கும்.\nதியேட்டரில் வைத்து குஷ்பு தனது குழந்தையின் பிறந்த நாளைக்கொண்டாடினால், வரும் குழந்தைகளுக்கான ஐஸ்க்ரீம் செலவை அண்ணன் ஏற்பார்.\nபடம் ஓடிக்கொண்டிருக்கும்போது,திடீரென ஏதாவது தொழில்நுட்பக்கோளாறு ஏற்பட்டால், பத்து வல்லுனர்களுக்கு போன் அடித்து வரவைத்து,பத்தாயிரம் ரூபாய் பில் வரக்கூடிய ஷோ ஒழுங்காக நடப்பதற்காக ,ஒரு லட்சம் செலவழிக்கவும் தயங்காதவர்.\nஇதுதான் கல்யாணம் சார் அனைவராலும் கவரப்பட்ட ரகசியம்.\nபத்திரிகையாளர்களுக்கான பிரத்யேக காட்சி திரையிட நாலைந்து தியேட்டர்கள் இருக்கிறதென்றாலும் , ஃபோர்ஃப்ரேம்ஸில் படம் என்றாலே எங்களுக்கு கூடுதல் உற்சாகம் தொற்றிகொள்ளும்.\nகாரணம் கல்யாணம் சாரை சந்திக்கக்கிடைக்கிற வாய்ப்பு. பட்டாசு வெடிப்பது போல எப்போதும் உற்சாகமாக எதையாவது பேசிக்கொண்டிருப்பார்.சென்னையில் தி பெஸ்ட் செக்ஸ் ஜோக்ஸ் வங்கியும் அவர்தான்.[ஆனா இப்ப கொஞ்ச நாளா சுத்த சைவமாயிட்டாரு]\nதனது மகனின் திருமணபத்திரிகையை ஒட்டுமொத்த பத்திரிகையாளர்களுக்கும் ஒரே இடத்தில் தந்து விடலாமே என்று எங்களை இரு தினங்களுக்கு முன்பு அவரது தியேட்டரில் சந்தித்து அழைப்பிதழ் கொடுத்தார்.\n5 நிமிடங்களில் முடிந்திருக்கவேண்டிய இந்த சந்திப்பு ,யாரும் எதிர்பாராமல் சுமார் 100 நிமிடங்கள் நீடித்தது.\n‘என் பையனின் திருமண அழைப்பிதழை நியாயமாக உங்கள் வீட்டில் வந்துதான் தந்திருக்கவேண்டும். என் தியேட்டரும் உங்க வீடு மாதிரியேதான் என்று நினைத்ததால் இங்கேயே அழைத்தேன்’ என்று ஆரம்பித்தவரை மெல்ல சில கேள்விகளால் சுண்டி இழுத்தோம்.\n‘தலைவரே உங்க பையனை எம்.பி.ஏ.வரைக்கும் படிக்க வச்சிருக்கீங்க. உங்க படிப்பைப்பத்தி சொல்லுங்க\nஉண்மையைச்சொல்லனும்னா நான் ஒன்பதாங்கிளாஸ் வரைக்கும் தான் படிச்சேன்.\nஏன், நான் எட்டு பாஸு நீங்கஒன்பதாங்கிளாஸ் ஃபெயிலுன்னு என்ன ஓட்டுறதுக்கா\nதலைவரே எல்லா நடிகர்களும் உங்களுக்கு ரொம்ப நெருக்கம்கிறது எங்களுக்குத் தெரியும். உங்களுக்கு நெருக்கமான நடிகைகளைப்பத்தி சொல்லுங்க\nசம்பந்தப்பட்டவங்க கிட்ட கேட்டுட்டு அப்புறமா சொல்றேன்\nமுந்தியெல்லாம் கவர்ச்சி நடிகைகளும், பச்சப்புள்ளங்களும் பாத்து பயப்படுற மாதிரி ஒரு முரட்டு மீசை வச்சிருந்தீங்களே, அத ஏன் எடுத்துட்டீங்க\nஎனக்கு பேத்தி பிறந்த அன்னைக்கி எடுத்துட்டேன்.\nரெண்டும் கலந்த கலவை நான்.\nநானும் என் மனைவியும் தான் வச்சிட்டு வந்தோம். முதல் ஆளா வந்து நிப்பேன்னு சொன்னவர், எங்களை அத்தோட விடலை. என் மனைவியைப் பார்த்து,’’ இவர் ரொம்ப பயங்கரமான ஆளு ஆச்சே ,இவர் கூட எப்பிடி குடும்பம் நடத்துறீங்கன்னு தெரியலையே’’ன்னு கலாய்ச்சார்.என் மனைவி அமைதியா சிரிக்கவே, ரஜினி என்னை அப்பவும் விடலை,’ரொம்ம்ப்ப கஷ்டமா இருக்குமேன்னுட்டு ரஜினி ப்ராண்ட் சிரிப்பு ஒண்ணு சிரிச்சார்.\nஇவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார் எவ்வளவு உரிமையோட நம்மகிட்ட பேசுறார் என்ற மன நிறைவோடு நானும் என் மனைவியும் வீட்டு திரும்பினோம்’\nகல்யாணம் சாரின் நெகிழ்ச்சியான மனநிலையை கலைக்கவிரும்பாமல் ப்ரஸ்மீட்டைக்கலைத்தோம்.\nRe: இவர் கூட எப்பிடி குடும்பம் நடத்துறீங்கன்னு ரஜினி என் மனைவியைக் கலாய்ச்சார்\nகல்யாணம் வீட்டுக் கல்யாணத்தில் சூப்பர் ஸ்டார்\nஃபோர்பிரேம்ஸ் கல்யாணம் என்றால் திரையுலகிலும் பத்திரிகை உலகிலும் தெரியாதவர்கள் இருக்கமாட்டார்கள். அனைவருக்குமே பொதுவான ஒரு நண்பர். குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு\nஇவரது மகன் சதீஷ் – அஞ்சலி திருமணம் இன்று காலை மேயர் ராமநாதன் செட்டியார் மண்டபத்தில் நடந்தது.\nவிழாவுக்கு தமிழ் சினிமாவின் முக்கிய பிரமுகர்கள் வந்திருந்தனர். காலை 10 மணிக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வந்த பிறகே திருமணம் நடந்தது.\nவேட்டி சட்டையில் வந்திருந்த ரஜினியிடம் அதே பழைய கம்பீரமும் வசீகரமும்\nவழக்கம்போல, ரஜினி வந்ததும், திருமண மண்டபத்திலிருந்த மொத்தபேரும் அவரைப் பார்க்க, கைகுலுக்க, உடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ள முண்டியடித்தனர். அனைவருக்கும் புன்னகையுடன் வணக்கம் சொன்ன ரஜினி, மணமக்களை வாழ்த்திவிட்டு கிளம்பினார்\nRe: இவர் கூட எப்பிடி குடும்பம் நடத்துறீங்கன்னு ரஜினி என் மனைவியைக் கலாய்ச்சார்\nகல்யாணம் அவர்களின் வீட்டுக் கல்யாணம் பற்றியப் பதிவே ஒரு கல்யாண விழா போன்ற உற்சாகப் பதிவு...பகிர்விற்கு நன்றி பிரசன்னா...\nRe: இவர் கூட எப்பிடி குடும்பம் நடத்துறீங்கன்னு ரஜினி என் மனைவியைக் கலாய்ச்சார்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tnguru.com/", "date_download": "2018-04-26T13:40:08Z", "digest": "sha1:TD375VYBVRSR6ERDP2ZZWDFWHZWUL6Q6", "length": 10081, "nlines": 222, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU", "raw_content": "\nதமிழ்நாட்டில் உள்ள மருத்துவக்கல்லூரிகளில் தமிழக மாணவர்கள் மட்டுமே படிக்கும் வகையில் சட்டம் கொண்டு வர வேண்டும் ‘நீட்’ தேர்வு எதிர்ப்பு மாநாட்டில் தீர்மானம்\nதமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் தமிழக மாணவர்கள் மட்டுமே படிக்கும் வகையில் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று சென்னையில் நடந்த நீட் தேர்வுக்கு எதிரான மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nமே 3ல் இன்ஜி., கவுன்சிலிங் விண்ணப்பம்\nசென்னை : சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வி துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறுகையில்,\nநீட் தேர்வுக்கூடங்களை மாற்ற இயலாது: சிபிஎஸ்இ அறிவிப்பு\nஎம்.பி.பி.எஸ். படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு கூடங்களை மாற்ற இயலாது என்று மத்திய இடைநிலைக் கல்விவாரியம் (சிபிஎஸ்இ) அறிவித்துள்ளது. இதுதொடர்பாக சிபிஎஸ்இ நீட் தேர்வு இயக்குநரகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பு:\nபொது அறிவு வினா விடைகள்\nபொது அறிவு வினா விடைகள்\n200 பொது அறிவு கேள்வி பதில்கள்\n200 பொது அறிவு கேள்வி பதில்கள்\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\nஸ்மார்ட் ரேஷன் கார்டு பற்றிய முழுமையான விவரங்கள் பார்த்து பயனடைவீர் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} {"url": "http://www.unmaikal.com/2012/10/blog-post_4435.html", "date_download": "2018-04-26T13:24:07Z", "digest": "sha1:X6HAEUZ4WJUUT7FVAMIROY6O6S3BHZ5Z", "length": 45580, "nlines": 525, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: முஸ்லிம் மக்கள் மீது திடீர் அக்கறை காட்டும் தமிழ்க் கூட்டமைப்பு", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nகந்தளாய் குளத்தில் மாணிக்கக்கல் தேட தடை\nபுத்தளத்தில் காணாமல்போன 5 மீனவர்கள் முல்லைத்தீவில்...\nஆஸியிலிருந்து நாடு கடத்தப்படவிருந்த இலங்கையர் தற்க...\nஅமெரிக்காவிலுள்ள இலங்கையர்களுக்கு உதவுமாறு சவேந்தி...\n'நிலத்தில்' சிக்கி கடலில் மூழ்கியது கப்பல்\nஅரசியலில் மட்டுமல்ல மருத்துவத்திலும் மாற்று வேண்டு...\nகரையோரப் பகுதிகளை சேதப்படுத்திய சூறாவளி உள்நோக்கி ...\nவெள்ளைக்காரர்களையும், மேற்கத்தீய நாட்டினரையும் கடத...\nஅமெரிக்காவினை தாக்கும் சாண்டிபுயலுக்காக விமான பயணங...\nஇங்கிலாந்தில் இயங்கி வந்த 500க்கும் அதிகமான போலி ப...\nஇலவச கருக்கலைப்பு:திருமணம் ஆகாமல் பெண்கள் கர்ப்பம்...\n700 தொன் தங்கத்துடன் கப்பல் மாயம்\nஆஸியிலிருந்து நாடு கடத்தப்பட்ட 11பேருக்கு விளக்கமற...\nசாண்டி சூறாவளி 5 கோடி பேருக்கு பாதிப்பை ஏற்படுத்து...\nகடலில் தத்தளித்த 5 மீனவர்கள் மீட்பு\nஉல்லாசப் பயணக் ஹோட்டல் ஜனாதிபதியால் திறந்து வைப்பு...\nசாண்டி புயல் தீவிரமடைந்துள்ளதால், அமெரிக்க பங்குசந...\nஜெயலலிதாவை சந்திக்க விஜயகாந்த் உள்பட நான்கு எம்.எல...\n16 புலிகளை கடத்திய தாய்லாந்து வேன் டிரைவர் கைது\nகூட்டத்தில் பேசிக்கொண்டிருந்த போது மராட்டிய முதல்-...\nஉயர்கல்விக்காக சென்று நாடு திரும்பாத விரிவுரையாளர்...\nஅவுஸ்திரேலியா இரண்டு நாட்களில் 29 இலங்கையர்களை நாட...\nமீனவர்களின் படகை கடத்திய அவுஸ்திரேலியா சென்றவரை கா...\nவடபகுதியை சில மணித்தியாலயங்களில் புயல் தாக்கும் -வ...\nவடக்கு கிழக்கு உட்பட்ட நாடு முழுவதும் சீரற்ற காலநி...\nபாணின் விலை 2 ரூபாவினால் அதிகரிப்பு\nபோலி நாணயத் தாள்களுடன் இருவர் கைது\nஇலங்கைக்கு ஜப்பான் 4000 கோடி ரூபாய் நிதி உதவி\nமழையில் மாணிக்கம் தேடும் மக்கள்\nபஸ் - வான் மோதி விபத்து....\nமடாதிபதிகள் புனிதமானவர்கள் அல்ல; குற்றவாளிகள்\nநைஜீரிய தேவாலயம் மீது தற்கொலை தாக்குதல்\n22 அமைச்சர்கள் இன்று பதவியேற்பு: புதிய அமைச்சரவையி...\nஉலக மக்களை அச்சுறுத்தும் கொடூர நோய்கள்\nவங்காள விரிகுடாவில் தாழமுக்கம் : நாட்டின் காலநிலைய...\nமட்டக்களப்பில் நாளை 10 மணிநேர மின்வெட்டு\nதிருமலையில் மாதா சொரூபம் சேதம்\nபுகலிட கோரிக்கையாளர்கள் 14 பேர் திருப்பியனுப்பப்பட...\nபாடகி சின்மயி மீது போலீசில் புகார்\nமருது பாண்டியர் மறைக்கப்பட்ட உண்மைகள் பி.ஏ. கிருஷ்...\nஇன்று மருதுபாண்டியர் நினைவு நாள் தமிழ் நாடு சிவகங்...\nமியான்மரில் இனக்கலவரத்தில் 56 பேர் பரிதாப சாவு : 2...\nபா.ஜ. தலைவர் பதவியில் இருந்து நிதின் கட்கரி விலகுக...\nபுத்த கயாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டது அம்பலம்...\nவெத்துவேட்டான எதிர்ப்பரசியலை சிங்களப் பேரின வாதிகள...\n'13-வது திருத்தத்தை ஒழிக்கும் திட்டம் இல்லை': இலங்...\nஇன்று நாட்டின் சகல பகுதிகளிலும் பொருளாதார அபிவிருத...\nபாசிக்குடா கடற்கரையின் முகாமை தொடர்பில் முன்னாள் ம...\nஎதிர்காலத்தில் பூமியதிர்ச்சி ஏற்படக்கூடிய ஆபத்து\nபட்டதாரி பயிலுனர்களுக்கு நியமனம் - முன்னாள் முதல்வ...\nஅம்பாறை கடலில் பிடிபட்ட இராட்சத சுறா மீன்கள்\nசென்னை-கொழும்பு விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு\nகிங் ஃபிஷர் விமான நிறுவன உரிமம் ரத்து\nகைதிலிருந்து தப்ப தமிழகத்தை விட்டு ஓடினார் நித்திய...\nகடல் தாக்குதலை கண்டறிய இன்டர்போலின் உதவி\n13ஆவது திருத்தத்தை நீக்கினால் ஆயுதப் போராட்டம் வெட...\nபெரியகல்லாறு ஸ்ரீ வடபத்திரகாளியம்மன் ஆலய வாழைக்காய...\nநித்தியானந்தா நீக்கம்: மதுரை ஆதீனம் அதிரடி\nமேய்ச்சல் தரைப் பிரச்சினைக்கு உடனடித் தீர்வு. - பண...\nஅப்புருவராக மாறி வரும் புலம்பெயர் புலி பினாமிகள்\nதிவிநெகும சட்டமூலம் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\nபொன்சேகாவின் கூட்டம் பிசுபிசுப்பு ஐ.தே.க, ஜே.வி.பி...\nஅப்பாடா சீனா என்று ஒரு நாடு இருப்பதை கூட்டமைப்பு ...\nநித்தி பதவி விலகுகிறார்: மதுரை ஆதீனகர்த்தர்\nசவூதி நீதிமன்றங்களில் இனி பெண் வக்கீல்கள் வாதாடலாம...\nநித்தியானந்தா நடத்தை கெட்டவர், வாரிசாகும் தகுதி இல...\nலிபிய அமெரிக்க தூதரக தாக்குதலுக்கு நான் பொறுப்பேற்...\nஅவுஸ்திரேலியா நோக்கிப் பயணித்த 35பேர் கைது\nதிருச்சி ஐஎஸ்ஐ உளவாளி.. பாகிஸ்தானின் இலங்கை தூதரக ...\nவெகுவிரைவில் நாடு திரும்புவார் பிரதமர்\n\"கே பி மீது எந்த வழக்கும் இல்லை\"\n15 இலட்சம் குடும்பங்களின் வாழ்வாதாரமே 'திவிநெகும'\nகொக்கட்டிச் சோலை இராமகிருஸ்ண மிஸன் பாடசாலையின் பவள...\nகிழக்கில் வரலாற்று தொன்மை மிக்க முருக்கன்தீவு\nஆசியா கண்டத்தை எந்தவொரு சக்தியும் விளையாட்டுத் திட...\nதனக்கு தனக்கெண்டா படக்கு படக்கு நவம் M.P வீராவேசம்...\nமண்முனை பாலத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது\nதிவிநெகும திட்டத்தில் எனது மகளையும்,மருமகனையும் உள...\nநியூசிலாந்தின் முன்னாள் வீரர் மார்ட்டின் குரோவிற்க...\nஉலகின் முதல் குளோனிங் உயிரினமான 'டோலி'யை உருவாக்கி...\nபிலிப்பைன்ஸ் அரசு - மோரோ இஸ்லாமிய விடுதலை முன்னணி ...\nதலிபான் தீவிரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக...\nபொன்சேகாவுக்கு சிறைச்சாலைகள் திணைக்களம் 60 ரூபா வழ...\nஇலங்கை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்\nஹம்பாந்தோட்டை சர்வதேச விமான நிலையத்தில் முதலாவது ப...\nஅமெரிக்காவில் 7 அடி உயர மகாத்மா காந்தி சிலை: அப்து...\nமுஸ்லிம் விஞ்ஞானிகளுக்கு மட்டும் நோபல் பரிசு: ஈரான...\nசிறுவர் துஷ்பிரயோகங்களை கட்டுப்படுத்துவதற்கு விசேட...\nஅவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 11 பேர் கைது\nதமிழ் தேசிய் கூட்மைப்பினர் இனியும் நாட்டை ஏமாற்ற வ...\nகடன் எல்லையை ரூ.6000 கோடியினால் அதிகரிக்க அரசாங்கம...\nஉ/த விடைத்தாள்களை மதிப்பிடும் முதலாம்கட்ட பணி புதன...\nகம்போடிய முன்னாள் மன்னர் சிஹனொக் மரணம்\nஆசிய ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்க ஜனாதிபத...\nஎழுவான்கரையையும் படுவான்கரையையும் இணைக்கும் மண்முன...\nமுஸ்லிம் மக்கள் மீது திடீர் அக்கறை காட்டும் தமிழ்க...\nவட பகுதியை மீட்க ஐ.நா.வில் தீர்மானம்\nமுஸ்லிம் மக்கள் மீது திடீர் அக்கறை காட்டும் தமிழ்க் கூட்டமைப்பு\nகிழக்கு மாகாண சபைத் தேர்தல் நடைபெற்று முடிந்து இப்போது அதன் அமர்வுகளும் ஆரம்பமாகி நடைபெற்றுவரும் நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், அது சார்பான தமிழ் ஊடகங்களும் இன்னமும் முஸ்லிம் காங்கிரஸ் மீது தமது தாக்குதலைத் தொடர்ந்த வண்ணமே உள்ளன.\nகிழக்கு மாகாண சபையில் இணைந்து ஆட்சியமைக்க மு.கா வரவில்லை என்பதே இவ்விரு தரப்பினரதும் இக் காழ்ப்புணர்விற்குக் காரணம் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம். இருந்தாலும் அதனைத் தொடர்ந்தும் செய்துவருவது அநாகரிகமாகவே தென்படுகிறது.\nதமிழ்க் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் உட்பட அதன் தலைவர்கள் பலரும் மு.காவைத் தமது அறிக்கைகளில் இஷ்டத்திற்கு திட்டித் தீர்த்து வருகின்றனர். அதனை அப்படியே பிரசுரிக்கும் அவர்களுக்குச் சார்பான கொழும்பு, யாழ் தமிழ் ஊடகங்கள் மற்றும் இணையத் தளங்கள் இது போதாதென்று தாமும் தமது உப்புச் சப்பில்லாத கருத்துக்களையும் முன்வைக்கின்றன. அதனை நியா யப்படுத்தும் வகையில் ஆசிரியர் தலையங்கங்கள், புனை பெயர்களில் கட்டுரைகளையும் வெளியிட்டு வருகின்றன.\nதமது கூட்டணிக்குள் கிளம்பியுள்ள உட்கட்சி மோதலைத் திசை திருப்புவதற்காக தமிழ்க் கூட்டமைப்பு இவ்விடயத்தைப் பெரிது படுத்த முனைவதாகவே சந்தேகிக்கப்படுகிறது. ஆனால் இது தமிழ் – முஸ்லிம் மக்களின் எதிர்கால நல்லுறவிற்கு ஆரோக்கியமானதாகத் தென்படவில்லை. கிழக்கிலங்கையைப் பொறுத்தவரையில் பெரும் பான்மையான முஸ்லிம் மக்களின் ஆதரவைப் பெற்ற கட்சியாக முஸ்லிம் காங்கிரஸே விளங்குகிறது. அது அண்மைய கிழக்கு மாகாண சபைத் தேர்தல் உட்பட நடைபெற்றுவரும் அனைத்துத் தேர்தல்களிலும் நன்கு புலனாகி வருகிறது.\nஇந்நிலையில் தமிழ்க் கூட்டமைப்பு தொடர்ந்தும் முஸ்லிம் காங்கிரஸை விமர்சிப்பதையும், அம்மக்களிடமிருந்து மு.காவை அந்நியப்படுத்தும் வகையில் அறிக்கைகளை விடுவதையும் இனியும் முஸ்லிம்கள் அதிலும் குறிப்பாக கிழக்கு முஸ்லிம்கள் அனுமதிக் கமாட்டார்கள். கடந்த தேர்தலில் தமிழ்க் கூட்டமைப்பிற்கு விரல்விட்டு எண்ணக்கூடிய முஸ்லிம்கள் ஒருவேளை வாக்களித் திருப்பார்கள். அதனை வைத்துக்கொண்டு முஸ்லிம் மக்களின் பிரதிநிதியாகவும் தாமே இருப்போம் என்று சம்பந்தன் அவர்கள் தெரிவிக்கும் கருத்து ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒன்று.\nமுதலில் தமிழ்க் கூட்டமைப்பு தமக்கு வாக்களித்த தமிழ் மக்களின் விருப்பத்தை அறிந்து அதற்கேற்ப செயற்பட முன்வர வேண்டும். தமிழுணர்வு விதைக்கப்பட்டதாலேயே தமிழ்க் கூட்டமைப்பிற்கு வாக்குகள் கிடைத்தன. அந்த உணர்வு மூலம் தமிழ் மக்களது எதிர் பார்ப்பு என்ன என்பதை கூட்டமைப்பினர் அறிய முற்பட வேண்டும். அதனை விடுத்து வாக்களித்த மக்களைப் புறந்தள்ளிவிட்டு வாக்களிக்காத, தமக்கென்று கட்சிகளை வைத்திருக்கும் முஸ்லிம் மக்களின் நலனைப் பேண முற்படுவது சகல தரப்பையும் ஏமாற்றும் ஒரு செயலாகவே கருத இடமுண்டு.\nதேர்தல் காலத்தில் மு.கா அரசை விமர்சித்து பிரசாரம் செய்தபோதும் அவர்கள், அரசாங்கத்துடன் நல்லுறவைப் பேணியே வந்தனர். அமைச்சரவையில் அதன் தலைவர் முக்கியமான அமை ச்சுப் பதவியை வகித்து வருகிறார். தேர்தலின் பின்னர் அரசாங் கத்துடன் சேர்வோம் என்பதை அவர்கள் நாசூக்காக தமது மக்களுக்குத் தெரிவித்துக் கொண்டே செயற்பட்டு வந்தனர். அத் துடன் மு.கா தலைவர் தனது தேர்தல் மேடைகளில் தமிழ்க் கூட்டமைப்புடன் சேருவதில் பாரிய சிக்கல்கள் உள்ளது எனவும் தெரிவித்திருந்தார். தமிழர் பிரச்சினை வேறு, முஸ்லிம் மக்களது பிரச்சினை வேறு என்பதை மு.கா தலைவர் வெளிப்படையாகவே தெரிவித்திருந்தார்.\nஉண்மையில் அதுதான் உண்மை. தமிழ் – முஸ்லிம் மக்களது பிரச்சினைகளை ஒன்றாக ஒரு தரப்பினரால் தீர்த்து வைக்க முடியும் என்ற காலம் எப்போதோ மலையேறி விட்டது. இப்போதுள்ள சூழலில் தமிழர் தரப்பு தனியாகத் தமது பிரச்சினைகளையும், முஸ்லிம் தலைமைகள் தமது மக்களது பிரச்சினைகளைத் தனித் தரப்பாகவும் அரசாங்கத்துடன் பேசித் தீர்வுகளைக் காணும் நிலையே இன்றுள்ளது. தமக்குள் இவ்விரு தரப்பினரும் பேசி ஒரு நிலைப் பாட்டிற்கு வர முடியுமே தவிர தமிழருக்காக முஸ்லிம் தலை வர்களோ அல்லது முஸ்லிம்களுக்காக தமிழ்த் தலைவர்களோ இனப்பிரச்சினை சார்பாக பேச முடியாது.\nஇந்நிலைமையை ஏற்படுத்தியமைக்கு இருதரப்பினருமே காரணம் எனினும் தமிழ்த் தரப்பு மீது இவ்விடயத்தில் அதிக குற்றச்சாட்டைச் சுமத்த முடியும். இன்று முஸ்லிம் மக்கள் மீது திடீர் அக்கறை காட்டும் தமிழ்க் கூட்டமைப்பு புலிகளின் காலத்தில் இந்த அக்கறையைக் காட்டாது வாய் மூடிகளாக இருந்தமையை முஸ்லிம் மக்களால் மறந்துவிட முடியாது. அவ்வேளைகளில் முஸ்லிம் தனித்தரப்பு விடயத்தை ஏற்றுக்கொள்ளாது புறக்கணித்தமையையும் அம்மக்களின் தலைமைகள் ஞாபகப்படுத்துகின்றன.\nஎனவே இப்போது எல்லாமே காலம் கடந்த விடயங்களாகி விட்டன. இந்நேரத்தில் தமிழ்க் கூட்டமைப்பு தமது தேவைக ளுக்காக, முஸ்லிம்களைத் துணைக்கு இழுப்பதற்காக அம்மக்களில் பெரும்பான்மையாக ஏற்றுக்கொண்டிருக்கும் மு.கா வை விமர் சிக்காது முதலில் தமக்கு வாக்களித்த தமிழ் மக்களின் தேவைகள் குறித்து ஆராய்ந்து செயற்பட வேண்டும். தமிழ்க் கூட்டமைப்பு, மு.கா வை பல பல கோணங்களில் விமர்சித்த போதிலும் மு.காவின் தலைவரோ, உயர்பீட உறுப்பினரோ அல்லது சிறு தொண்டனோ அல்லது அக்கட்சிக்கு வாக்களித்த எந்தவொரு குடிமகனோ இதுவரை வாயே திறக்கவில்லை.\nதலைமையின் சாணக்கியத்தால் கட்டுண்டுள்ள தொண்டர்களையும், ஆதரவாளர்களையும் நீண்ட காலத்திற்கு அடக்கி வைத்திருக்க முடியாது. எனவே தமிழ்க் கூட்டமைப்பினரும், அவர்களது அறிக்கைகளை வெளியிடுவதற்காகக் காத்துக் கிடக்கும் தமிழ் ஊடகங்களும் இனியாவது தமது மக்களின் தேவைக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்க முன்வர வேண்டும். இல்லையேல் தமிழ் மக்கள் தமது தேவைகளுக்கு முஸ்லிம் தலைமைகளின் உதவியை நாட வேண்டிய நிலையே ஏற்படும்.\nகந்தளாய் குளத்தில் மாணிக்கக்கல் தேட தடை\nபுத்தளத்தில் காணாமல்போன 5 மீனவர்கள் முல்லைத்தீவில்...\nஆஸியிலிருந்து நாடு கடத்தப்படவிருந்த இலங்கையர் தற்க...\nஅமெரிக்காவிலுள்ள இலங்கையர்களுக்கு உதவுமாறு சவேந்தி...\n'நிலத்தில்' சிக்கி கடலில் மூழ்கியது கப்பல்\nஅரசியலில் மட்டுமல்ல மருத்துவத்திலும் மாற்று வேண்டு...\nகரையோரப் பகுதிகளை சேதப்படுத்திய சூறாவளி உள்நோக்கி ...\nவெள்ளைக்காரர்களையும், மேற்கத்தீய நாட்டினரையும் கடத...\nஅமெரிக்காவினை தாக்கும் சாண்டிபுயலுக்காக விமான பயணங...\nஇங்கிலாந்தில் இயங்கி வந்த 500க்கும் அதிகமான போலி ப...\nஇலவச கருக்கலைப்பு:திருமணம் ஆகாமல் பெண்கள் கர்ப்பம்...\n700 தொன் தங்கத்துடன் கப்பல் மாயம்\nஆஸியிலிருந்து நாடு கடத்தப்பட்ட 11பேருக்கு விளக்கமற...\nசாண்டி சூறாவளி 5 கோடி பேருக்கு பாதிப்பை ஏற்படுத்து...\nகடலில் தத்தளித்த 5 மீனவர்கள் மீட்பு\nஉல்லாசப் பயணக் ஹோட்டல் ஜனாதிபதியால் திறந்து வைப்பு...\nசாண்டி புயல் தீவிரமடைந்துள்ளதால், அமெரிக்க பங்குசந...\nஜெயலலிதாவை சந்திக்க விஜயகாந்த் உள்பட நான்கு எம்.எல...\n16 புலிகளை கடத்திய தாய்லாந்து வேன் டிரைவர் கைது\nகூட்டத்தில் பேசிக்கொண்டிருந்த போது மராட்டிய முதல்-...\nஉயர்கல்விக்காக சென்று நாடு திரும்பாத விரிவுரையாளர்...\nஅவுஸ்திரேலியா இரண்டு நாட்களில் 29 இலங்கையர்களை நாட...\nமீனவர்களின் படகை கடத்திய அவுஸ்திரேலியா சென்றவரை கா...\nவடபகுதியை சில மணித்தியாலயங்களில் புயல் தாக்கும் -வ...\nவடக்கு கிழக்கு உட்பட்ட நாடு முழுவதும் சீரற்ற காலநி...\nபாணின் விலை 2 ரூபாவினால் அதிகரிப்பு\nபோலி நாணயத் தாள்களுடன் இருவர் கைது\nஇலங்கைக்கு ஜப்பான் 4000 கோடி ரூபாய் நிதி உதவி\nமழையில் மாணிக்கம் தேடும் மக்கள்\nபஸ் - வான் மோதி விபத்து....\nமடாதிபதிகள் புனிதமானவர்கள் அல்ல; குற்றவாளிகள்\nநைஜீரிய தேவாலயம் மீது தற்கொலை தாக்குதல்\n22 அமைச்சர்கள் இன்று பதவியேற்பு: புதிய அமைச்சரவையி...\nஉலக மக்களை அச்சுறுத்தும் கொடூர நோய்கள்\nவங்காள விரிகுடாவில் தாழமுக்கம் : நாட்டின் காலநிலைய...\nமட்டக்களப்பில் நாளை 10 மணிநேர மின்வெட்டு\nதிருமலையில் மாதா சொரூபம் சேதம்\nபுகலிட கோரிக்கையாளர்கள் 14 பேர் திருப்பியனுப்பப்பட...\nபாடகி சின்மயி மீது போலீசில் புகார்\nமருது பாண்டியர் மறைக்கப்பட்ட உண்மைகள் பி.ஏ. கிருஷ்...\nஇன்று மருதுபாண்டியர் நினைவு நாள் தமிழ் நாடு சிவகங்...\nமியான்மரில் இனக்கலவரத்தில் 56 பேர் பரிதாப சாவு : 2...\nபா.ஜ. தலைவர் பதவியில் இருந்து நிதின் கட்கரி விலகுக...\nபுத்த கயாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டது அம்பலம்...\nவெத்துவேட்டான எதிர்ப்பரசியலை சிங்களப் பேரின வாதிகள...\n'13-வது திருத்தத்தை ஒழிக்கும் திட்டம் இல்லை': இலங்...\nஇன்று நாட்டின் சகல பகுதிகளிலும் பொருளாதார அபிவிருத...\nபாசிக்குடா கடற்கரையின் முகாமை தொடர்பில் முன்னாள் ம...\nஎதிர்காலத்தில் பூமியதிர்ச்சி ஏற்படக்கூடிய ஆபத்து\nபட்டதாரி பயிலுனர்களுக்கு நியமனம் - முன்னாள் முதல்வ...\nஅம்பாறை கடலில் பிடிபட்ட இராட்சத சுறா மீன்கள்\nசென்னை-கொழும்பு விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு\nகிங் ஃபிஷர் விமான நிறுவன உரிமம் ரத்து\nகைதிலிருந்து தப்ப தமிழகத்தை விட்டு ஓடினார் நித்திய...\nகடல் தாக்குதலை கண்டறிய இன்டர்போலின் உதவி\n13ஆவது திருத்தத்தை நீக்கினால் ஆயுதப் போராட்டம் வெட...\nபெரியகல்லாறு ஸ்ரீ வடபத்திரகாளியம்மன் ஆலய வாழைக்காய...\nநித்தியானந்தா நீக்கம்: மதுரை ஆதீனம் அதிரடி\nமேய்ச்சல் தரைப் பிரச்சினைக்கு உடனடித் தீர்வு. - பண...\nஅப்புருவராக மாறி வரும் புலம்பெயர் புலி பினாமிகள்\nதிவிநெகும சட்டமூலம் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\nபொன்சேகாவின் கூட்டம் பிசுபிசுப்பு ஐ.தே.க, ஜே.வி.பி...\nஅப்பாடா சீனா என்று ஒரு நாடு இருப்பதை கூட்டமைப்பு ...\nநித்தி பதவி விலகுகிறார்: மதுரை ஆதீனகர்த்தர்\nசவூதி நீதிமன்றங்களில் இனி பெண் வக்கீல்கள் வாதாடலாம...\nநித்தியானந்தா நடத்தை கெட்டவர், வாரிசாகும் தகுதி இல...\nலிபிய அமெரிக்க தூதரக தாக்குதலுக்கு நான் பொறுப்பேற்...\nஅவுஸ்திரேலியா நோக்கிப் பயணித்த 35பேர் கைது\nதிருச்சி ஐஎஸ்ஐ உளவாளி.. பாகிஸ்தானின் இலங்கை தூதரக ...\nவெகுவிரைவில் நாடு திரும்புவார் பிரதமர்\n\"கே பி மீது எந்த வழக்கும் இல்லை\"\n15 இலட்சம் குடும்பங்களின் வாழ்வாதாரமே 'திவிநெகும'\nகொக்கட்டிச் சோலை இராமகிருஸ்ண மிஸன் பாடசாலையின் பவள...\nகிழக்கில் வரலாற்று தொன்மை மிக்க முருக்கன்தீவு\nஆசியா கண்டத்தை எந்தவொரு சக்தியும் விளையாட்டுத் திட...\nதனக்கு தனக்கெண்டா படக்கு படக்கு நவம் M.P வீராவேசம்...\nமண்முனை பாலத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது\nதிவிநெகும திட்டத்தில் எனது மகளையும்,மருமகனையும் உள...\nநியூசிலாந்தின் முன்னாள் வீரர் மார்ட்டின் குரோவிற்க...\nஉலகின் முதல் குளோனிங் உயிரினமான 'டோலி'யை உருவாக்கி...\nபிலிப்பைன்ஸ் அரசு - மோரோ இஸ்லாமிய விடுதலை முன்னணி ...\nதலிபான் தீவிரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக...\nபொன்சேகாவுக்கு சிறைச்சாலைகள் திணைக்களம் 60 ரூபா வழ...\nஇலங்கை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்\nஹம்பாந்தோட்டை சர்வதேச விமான நிலையத்தில் முதலாவது ப...\nஅமெரிக்காவில் 7 அடி உயர மகாத்மா காந்தி சிலை: அப்து...\nமுஸ்லிம் விஞ்ஞானிகளுக்கு மட்டும் நோபல் பரிசு: ஈரான...\nசிறுவர் துஷ்பிரயோகங்களை கட்டுப்படுத்துவதற்கு விசேட...\nஅவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 11 பேர் கைது\nதமிழ் தேசிய் கூட்மைப்பினர் இனியும் நாட்டை ஏமாற்ற வ...\nகடன் எல்லையை ரூ.6000 கோடியினால் அதிகரிக்க அரசாங்கம...\nஉ/த விடைத்தாள்களை மதிப்பிடும் முதலாம்கட்ட பணி புதன...\nகம்போடிய முன்னாள் மன்னர் சிஹனொக் மரணம்\nஆசிய ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்க ஜனாதிபத...\nஎழுவான்கரையையும் படுவான்கரையையும் இணைக்கும் மண்முன...\nமுஸ்லிம் மக்கள் மீது திடீர் அக்கறை காட்டும் தமிழ்க...\nவட பகுதியை மீட்க ஐ.நா.வில் தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2018-04-26T13:43:35Z", "digest": "sha1:CJTWCQGPWCK4ZEMUJLLO5GXV6PEHMBC2", "length": 27487, "nlines": 228, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜான் திவி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nமலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியின் முதல் தலைவர்\nமலேசிய இந்திய காங்கிரஸ், பாரிசான் நேசனல்\nஜான் திவி (John Aloysius Thivy, 1904 - 4 சூன் 1959) மலேசிய இந்திய காங்கிரசின் முதல் தலைவர். ம.இ.கா வரலாற்றில் மறக்க முடியாத மனிதர். மலேசிய இந்தியர்களுக்கு ஓர் அரசியல் கட்சியை உருவாக்கிக் கொடுத்தவர். நேதாஜி சுபாஷ் சந்திர போசின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகத் திகழ்ந்தவர். மலேசிய இந்தியர்களின் அரசியலில் முன்னோடியாக வாழ்ந்தவர்.\nஇந்திய தேசிய இராணுவத்தில் தீவிரமாக ஈடுபட்டு பர்மா முன்னணியில் ஓர் அதிகாரியாகப் பணியாற்றினார். நேதாஜியுடன் இணைந்து பிரித்தானியர்களுக்கு எதிராகச் செயல்பட்டார். 1945 செப்டம்பர் மாதம் சிங்கப்பூர் சாங்கி சிறையில் அடைக்கப்பட்டார். 18 மாதங்கள் சிறைவாசம் அனுபவித்தார். இந்தியா விடுதலை அடைந்த பிறகே அவர் விடுதலையானார். அவர் விடுதலைக்கு இந்தியப் பிரதமர் நேரு முக்கிய பங்கு வகித்தார்.\n1.2 மகாத்மா காந்தியுடன் சந்திப்பு\n1.3 இந்தியா தற்காலிக அரசாங்கத்தில் அமைச்சர் பதவி\n1.4 சிங்கை சாங்கியில் சிறைவாசம்\n2.1 மலாயா இந்தியர்களுக்கு தேசிய அரசியல் அமைப்பு\n2.2 ஜான் திவியின் முதல் பேருரை\n2.3 இந்திய அரசாங்கம் வழங்கிய பதவி\n2.4 இந்திய அரசாங்கத்தின் அமைச்சர் தகுதிக்கு உயர்வு\nஜான் திவி தன் ஆதரவாளர்களுடன்.\nமலாய்க்காரர்களுக்கு பிளவு படாத இந்தியர்களின் ஆதரவைக் கூறும் ஜான் திவியின் 1947 ஆம் ஆண்டு பத்திரிகை பேட்டி.\nஜான் திவி 1904 ஆம் ஆண்டு மலேசியா, பேராக், கோலாகங்சாரில் பிறந்தார். அவருடைய முழுப்பெயர் ஜான் அலோசியஸ் திவி. இவருடைய தந்தையாரின் பெயர் லூயிஸ் திவ்வியநாதன். இவர் கோலாகங்சாரில் புகையிலை, சுருட்டுத் தொழில் வியாபரம் செய்து வந்தார்.\nலூயிஸ் திவ்வியநாதனின் மூத்த புதல்வர் ஜான் திவி. தன் தகப்பனாரின் பெயரான திவ்வியநாதன் என்பதைச் சுருக்கி திவி என்று வைத்துக் கொண்டார். கோலாகங்சார் கிளிபோர்ட் ஆங்கிலப் பள்ளியில்[1] தன்னுடைய தொடக்கக் கல்வியைப் பயின்றார்.\nபின்னர், தைப்பிங் செயிண்ட் ஜார்ஜ் பள்ளியில் இடைநிலைப் பள்ளியில் தன் கல்வியைத் தொடர்ந்தார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பை மேற்கொண்டார். அதன் பின்னர் லண்டனுக்குச் சென்று சட்டக் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்தினார்.\nஇந்தக் காலக் கட்டத்தில் தான் இவர் மோகன்தாஸ் காந்தியைச் சந்தித்தார்[2]. இந்திய விடுதலை இயக்கத்தில் ஜான் திவிக்கு மிகுந்த ஆர்வம் ஏற்பட்டது.\nமலாயா திரும்பியதும் ஈப்போவில் வழக்கறிஞர் தொழிலைத் தொடங்கினார். கிந்தா இந்தியர் சங்கத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்ற பின் பொதுப் பணிகளில் தீவிரம் காட்டினார். 1940 ஆம் ஆண்டு வரையில் ஈப்போவில் வழக்கறிஞராகப் பணி புரிந்து வந்தார்.\nஇந்தியா தற்காலிக அரசாங்கத்தில் அமைச்சர் பதவி[தொகு]\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மலாயாவுக்கு வந்த போது அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அந்தப் பழக்கத்தின் மூலமாக நேதாஜியின் அன்பையும் ஆதரவையும் பெற்றார். பிரித்தானியாருக்கு எதிராக இயங்கிய இந்திய தேசிய இராணுவத்தில் சேர்ந்தார். நேதாஜியின் நம்பிக்கைக்கு உரியவராக வாழ்ந்தார்.\n1943 அக்டோபர் 21 ஆம் தேதி சிங்கப்பூரில் சுதந்திர இந்தியா தற்காலிக அரசாங்கம் நேதாஜியினால் அமைக்கப்பட்டது. அந்த அரசாங்கத்தின் அமைச்சரவையில் ஜான் திவி இடம் பெற்றார். அதன் பின்னர் தன்னுடைய வழக்கறிஞர் தொழிலை முழுமையாக மேற்கொள்ளாமல் சமூக, அரசியல், பொதுப் பணிகளில் ஈடுபடத் தொடங்கினார். இந்திய விடுதலைப் போராட்டப் பணிகளிலும் நேதாஜிக்கு ஆதரவாகச் செயல்பட்டார்.\nஇந்தக் காலக் கட்டத்தில் மலாயா, சிங்கப்பூர் இந்தியர்களிடையே அதிக செல்வாக்கு உள்ளவர்களாக நேதாஜி, ராஜ் பிகாரி போஸ், ஜான் திவி ஆகியோர் விளங்கினர். 1945 ஆகஸ்டு 21-இல் சிங்கப்பூரிலும் மலாயாவிலும் சப்பானியர்கள் சரணடைந்தனர். அவர்களுடைய ஆட்சி ஒரு முடிவுக்கு வந்தது. இந்திய தேசிய இராணுவத்தின் நடவடிக்கைகளும் நிலைகுத்திப் போயின. அதற்கு முன்னர், ஆகஸ்டு 18-இல் சிங்கப்பூரில் இருந்து டோக்கியோ செல்லும் வழியில் நிகழ்ந்த விமான விபத்தில் விடுதலை வீரர் நேதாஜி மரணம் அடைந்தார்[3].\nஅந்த விபத்திற்குப் பின்னர், தலைவர் இல்லாத நிலையில் இந்திய தேசிய இராணுவம் முடங்கிப் போனது. இந்திய தேசிய இராணுவத்தில் முக்கிய பொறுப்புகளை வகித்த இந்திய அதிகாரிகளைப் பிரித்தானிய இராணுவம் கைது செய்து அவர்களை சிங்கப்பூர் சாங்கிச் சிறைச்சாலையில் அடைத்து வைத்தது. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகுதான் ஜான் திவி விடுதலை செய்யப்பட்டார்.[4].\nஜான் திவியின் விடுதலையில் இந்தியப் பிரதமர் நேருவின் நேரடியான தொடர்பு இருந்தது. நேதாஜி வளர்த்துவிட்ட தேசப் பற்று ஜான் திவியின் உடலில் கொழுந்து விட்டு எரிந்தது. இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைத்தவுடன் மலாயாவுக்கும் சுதந்திரம் கிடைக்க வேண்டும் என்கிற அவசியத்தை ஜான் திவி உணர்ந்தார்.\nமலாயா இந்தியர்களுக்கு தேசிய அரசியல் அமைப்பு[தொகு]\nமலாயாவுக்கு சுதந்திரம் கிடைக்க தன் நண்பர்களுடன் சேர்ந்து போராடுவது என்று ஜான் திவி முடிவு செய்தார். ஆகவே, மலாயா இந்தியர்களுக்கு தேசிய அளவில் ஓர் அரசியல் அமைப்பு இருக்க வேண்டும் என்பதை உணர்ந்தார். அதன் விளைவாக 1946 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 3, 4, 5 ஆம் தேதிகளில் கோலாலம்பூரில் நடைபெற்ற அகில மலாயா இந்தியர்கள் மாநாடு நடைபெற்றது.\nஅந்த மாநாட்டில் மலாயா இந்தியர் காங்கிரஸ் தோற்றம் கண்டது[5]. மலேசியாவில் ம.இ.கா உருவாவதற்கு இந்திய தேசிய இராணுவத் தொண்டர்களே முக்கிய பங்கு வகித்தனர். அவர்களின் உத்வேகத்தினால் தான் மலேசிய இந்தியர்களுக்கு என்று ஒரு தனி அரசியல் கட்சி உருவானது.\nஇந்தச் சமயத்தில் மலாய்க்காரர்களுக்கு இந்தியர்களின் மலாயா நாட்டு விசுவாசத்தின் மீது சந்தேகம் ஏற்பட்டது. மலாயா இந்தியர்கள் முழு விசுவாசத்துடன் நாட்டின் விடுதலைக்காகப் போராடுவார்கள் என்று ஜான் திவி உறுதி அளித்தார்[6].\nஜான் திவியின் முதல் பேருரை[தொகு]\nநேதாஜியின் தலைமைத்துவத்தின் கீழ் இயங்கிய இந்தியச் சுதந்திரக் கழகம், இந்திய தேசிய இராணுவம் போன்ற இயக்கங்களுடன் தீவிரமான தொடர்புகளைக் கொண்டிருந்த மலேசிய இந்தியவாதிகளே ம.இ.காவின் முதல் நிர்வாகக் குழுவில் பொறுப்புகளை வகித்தனர்.\nஜான் திவி ம.இ.கா தலைவர் பொறுப்பை ஏற்று முதல் பேருரை ஆற்றும் போது நேதாஜியை நினைவு கூறும் வகையில் அவருடைய உரை மிகச் சிறப்பாக அமைந்திருந்தது.\n“ தென்கிழக்கு ஆசியாவில் வாழும் இந்தியர்கள் போர்க் காலத்தில் பல தியாகங்களைச் செய்துள்ளனர். தங்களின் வீரத்தையும் தீரத்தையும் வெளி உலகிற்கு உணர்த்திக் காட்டி உள்ளனர். அவர்களுக்கு அளிக்கப்பட்ட இராணுவப் பயிற்சிகளும் ஒழுங்குமுறைகளும் அவர்களைத் துணிச்சல்காரர்களாகவும் நம்பிக்கை உடையவர்களாகவும் மாற்றிக் காட்டியுள்ளன. அவற்றினால் நம் இந்தியர்கள் ஒற்றுமை எனும் ஓர் உயர்ந்த தத்துவப் பொக்கிஷத்தைப் பெற்றுள்ளனர். ”\nஇந்திய அரசாங்கம் வழங்கிய பதவி[தொகு]\nம.இ.கா தோற்றம் கண்ட மறு ஆண்டான 1947-இல் அதன் முதல் பேராளர் மாநாடு ஜான் திவியின் தலைமையிலேயே நடைபெற்றது. அதே ஆண்டு ஜூலை மாதம் இந்திய அரசாங்கம் அவரை மலாயா, சிங்கப்பூர் நாடுகளின் பிரதிநிதியாக நியமனம் செய்தது.[7] அந்தப் பதவி ஒரு தூதர் அந்தஸ்தைக் கொண்டதாகும். அந்தப் புதிய பொறுப்பை ஏற்க ஜான் திவி முதலில் தயக்கம் காட்டினார்.\nஇருப்பினும் ஜான் திவியின் நலன்களில் அக்கறை கொண்ட நண்பர்கள் சிலர் அந்தப் பதவியை ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டிக் கொண்டனர். பல எதிர்பார்ப்புகளுக்கு இடையே 1947 ஆகஸ்டு மாதம் 3-இல் இந்திய அரசாங்கத்தின் பிரதிநிதியாக ஜான் திவி பொறுப்பேற்றார். மலாயா, சிங்கப்பூர் நாடுகளின் இந்திய அரசாங்கப் பிரதிநிதியானதும் ம.இ.கா தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டிய கட்டாய நிலைமையும் ஏற்பட்டது.\nஇந்திய அரசாங்கத்தின் அமைச்சர் தகுதிக்கு உயர்வு[தொகு]\nஇந்தக் கட்டத்தில் ஜான் திவி இந்தியாவின் அரசாங்கப் பிரதிநிதியாக ஹாங்காங், வடபோர்னியோ, சரவாக், புருணை போன்ற நாடுகளுக்கும் பொறுப்பு வகித்தார். 1950-இல் மொரிசியஸ் நாட்டிற்கு இந்தியாவின் அரசாங்க ஆணையராக அனுப்பப்பட்டார். 1952-இல் நெதர்லாந்து நாட்டின் இந்தியத் தூதராக நியமிக்கப்பட்டார்.\n1953-இல் இந்திய அரசாங்கத்தின் அமைச்சர் தகுதிக்கு உயர்த்தப்பட்டு, சிரியா நாட்டிற்கு இந்தியத் தூதராக அனுப்பப்பட்டார். 1955-இல் இத்தாலி நாட்டின் தூதராகப் பொறுப்பேற்றார். ஜான் திவி 1959 ஜூன் மாதம் 4 ஆம் தேதி இயற்கை எய்தினார்.\n↑ மலேசிய இந்தியர் காங்கிரஸ் மலேசியாவின் பழம்பெரும் கட்சி. 1946ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் இது துவங்கியது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 சூன் 2017, 11:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%89%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-04-26T12:57:27Z", "digest": "sha1:JNGMUX4P7PGIBW6LGOHSVT26HGBMYQXZ", "length": 17477, "nlines": 107, "source_domain": "www.jeyamohan.in", "title": "உக்ரசேனன்", "raw_content": "\n80. நகரெழுதல் அசோகவனியின் எல்லைக்குள் நுழைந்தபோதே தேவயானி உளச்சுளிப்புக்கு ஆளானாள். தொலைவில் தோரணவாயில் தென்பட்டதும் அவளுடைய பேருடல் என சாலையை நிறைத்து இரு எல்லைகளும் மறைய பெருகிச் சென்றுகொண்டிருந்த அணியூர்வலத்தின் முகப்பில் ஏழு தட்டுத்தேர்மீது எழுந்த மூன்று நிமித்திகர்கள் தங்கள் பெருஞ்சங்கங்களை முழக்கினர். பதினெட்டு அகல்தேர்களில் தேனீ என மொய்த்திருந்த இசைச்சூதர்கள் தங்கள் முரசுகளுடனும் கொம்புகளுடனும் குழல்களுடனும் எழுந்து மங்கலஇசை பெருக்கினர். நூற்றெட்டு தாமரைத்தட்டுத் தேர்களில் பொன்வண்டுகளென, பட்டுப்பூச்சிகளென செறிந்திருந்த அணிச்சேடியர் குரவை ஒலி எழுப்பியபடி மங்கலத் …\nTags: அசோகவனி, உக்ரசேனன், கிருபர், சாயை, தேவயானி\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 41\nபகுதி எட்டு : வேங்கையின் தனிமை [ 3 ] குழந்தைகள் பிறந்த பன்னிரண்டாம்நாள் பீஷ்மர் குறிப்பிட்டிருந்ததுபோல அவர்களுக்கு பெயர்கள் சூட்டப்பட்டன. நான்குமாதங்கள் முடிந்தபின்பு சூரியதரிசனச்சடங்கு நடந்தபோதுதான் பீஷ்மர் காட்டிலிருந்து அஸ்தினபுரிக்கு வந்தார். இரவெல்லாம் பயணம்செய்து விடியற்காலையில் அவர் தன் ஆயுதசாலைக்கு வந்து ஓய்வெடுக்காமலேயே நீராடச்சென்றார். அவருடன் ஹரிசேனன் மட்டும் இருந்தான். பீஷ்மர் மெல்ல சொற்களை இழந்துவருவதாக அவனுக்குப்பட்டது. காடு அவரை அஸ்தினபுரிக்கு அன்னியராக மாற்றிக்கொண்டிருக்கிறது என நினைத்துக்கொண்டான். அரண்மனையின் தென்மேற்கே இருந்த பித்ருமண்டபத்தில் சடங்குக்கு ஏற்பாடு …\nTags: அஸ்தினபுரி, இக்‌ஷுவாகு குலம், உக்ரசேனன், எட்டுவசுக்கள், கங்கை, சத்யவதி, சத்ருஞ்சயர், சியாமை, சோமர், ஜஹ்னு, திருதராஷ்டிரன், தீர்க்கவ்யோமர், தேவதம்ஸன், தேவவிரதன், பலபத்ரர், பாண்டு, பிரதீபர், பிரம்மன், பீஷ்மர், மகாபிஷக், மதூகம், மஹுவா, யக்ஞசர்மர், ராமன், லிகிதர், விடம்பர், விதுரன், விப்ரர், வியாஹ்ரதத்தர், வைராடர், ஹரிசேனன்\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 17\nபகுதி நான்கு : அணையாச்சிதை [ 1 ] ‘சூதரே மாகதரே கேளுங்கள், விண்ணக மின்னல் ஒன்று மண்ணில் எரிந்தோடியதை நான் கண்டேன். பாதாளத்தின் நெருப்பாறொன்று பொங்கிப்பெருகிச்செல்வதை நான் கண்டேன். பாய்கலைப்பாவை புறங்காட்டில் நின்றதைக் கண்டவன் நான் படுகளக்காளி மலைச்சரிவில் எழுந்ததைக் கண்டவன் நான் படுகளக்காளி மலைச்சரிவில் எழுந்ததைக் கண்டவன் நான் எரிகண்ணுடைய திரயம்பிகை, வெண்பல் நகை அணிந்த சாமுண்டி, முழவென ஒலிக்கும் கங்காளி எரிகண்ணுடைய திரயம்பிகை, வெண்பல் நகை அணிந்த சாமுண்டி, முழவென ஒலிக்கும் கங்காளி சண்டி, பிரசண்டி, திரிதண்டி நான் கண்டேன், ஆம் நான் கண்டேன்’ நூற்றாண்டுகளாக சூதர்கள் அதைப்பாடினர். …\nTags: அங்கம், உக்ரசேனன், கலிங்கம், கார்த்யாயினி, காலராத்ரி, கூஷ்மாண்டை, கேகயமன்னன், சண்டி, சத்ருஞ்சயன், சந்திரகந்தை, சாமுண்டி, சித்திதாத்ரி, சேதிநாட்டு மன்னன், சைலஜை, சோமகசேனன், திரயம்பிகை, திரிதண்டி, பாஞ்சாலன், பாஹுதா, பிரசண்டி, பிரம்மை, மகாகௌரி, மாகதன், மாத்ருவனம், மீனாட்சி, வங்கம், வராஹி தேவி, விசித்திரவீரியன், வியாஹ்ரதந்தன், வேசரம், ஸ்கந்தை, ஹ்ருஸ்வகிரி\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 4\nபகுதி ஒன்று : வேள்விமுகம் [ 4 ] சர்பசத்ரவேள்விப்பந்தலில் பெருமுரசம் தொலைதூர இடியோசை போல முழங்க, மணிமுடி சூடி உள்ளே நுழைந்தபோது ஜனமேஜயன் தன் இளமைக்கால நினைவொன்றில் அலைந்து கொண்டிருந்தார். அவரும் தம்பியர் உக்ரசேனனும் சுருதசேனனும் பீமனும் சிறுவர்களாக வனலீலைக்குச் சென்றபோது நடந்தது அது. யமுனைநதிக்கரையில் அவர்கள் சிறுவேட்டையாடியும் மரங்களிலாடியும் நீரில் துழாவியும் விளையாடினர். ஜனமேஜயன் தன் தம்பி சுருதசேனனிடம் வேள்விசெய்து விளையாடலாமெனச் சொன்னான். சத்ரியர்கள் செய்யவேண்டிய வேள்விச்சடங்குகள் அவர்களுக்கு அப்போதுதான் கற்பிக்கப்பட்டிருந்தன. நதிக்கரையில் கல்லடுக்கி …\nTags: ஆஸ்திகன், உக்ரசேனன், உத்தங்கர், சண்டபார்க்கவர், சரமை, சர்பசத்ரவேள்வி, சியவன முனிவர், சிற்பி விஸ்வசேனன், சுருதசேனன், ஜனமேஜயன், ஜரத்காரு ரிஷி, தட்சகி, தட்சன், பீமன், வைசம்பாயனர், ஷிப்ரதேஜஸ்\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 3\nபகுதி ஒன்று : வேள்விமுகம் [ 3 ] குருவம்சத்தின் ஐம்பத்திரண்டாவது தலைமுறையைச்சேர்ந்த ஜனமேஜயன் தன் பதின்மூன்றாவது வயதில் மன்னனானபோது அவன் வெல்வதற்கு நாடுகள் ஏதும் இருக்கவில்லை. அவன் தீர்ப்பதற்குரிய சிக்கல்களேதும் எஞ்சவில்லை. அவன் சித்தமோ எரிதழல் காற்றை உணர்வதுபோல காலத்தை ஒவ்வொரு கணமும் அறிந்துகொண்டிருந்தது. ஆகவே அவன் பகடையாட்டத்தில் ஈடுபாடுகொண்டவனாக ஆனான். ஏணியும் பாம்பும் கொண்ட வரைபடத்தின் கட்டங்களில் மானுடவாழ்க்கையின் அனைத்து விசித்திரங்களும் உறைந்திருப்பதை சிறிது சிறிதாக அவன் காண ஆரம்பித்தான். ஒரு பகடையை புரளவைத்து …\nTags: அபிமன்யு, அர்ஜுனன், உக்ரசேனன், உஜ்ஜாலகம், உத்தங்கர், உத்தரை, கவிஜாதன், குருவம்சம், குருஷேத்ரம், சமீகர், சர்ப்ப்சத்ர வேள்வி, சுருதசேனன், ஜனமேஜயன், தட்சன், பகடை, பரீட்சித், பீமசேனன், யுதிஷ்டிரர், யுயுத்சு\nவானதியும் வல்லபியும் - ஒரு கனவின் ஈடேற்றம்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cinemaparvai.com/tag/news/", "date_download": "2018-04-26T13:09:40Z", "digest": "sha1:AM35CYMCX4ULOJKSZNV7NWZWGHWPYWNV", "length": 6470, "nlines": 155, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai News Archives - Cinema Parvai", "raw_content": "\nகுழந்தை போல நடந்து கொண்ட யோகி பி\nதனுஷ் படத்தை மே 30ல் வெளியிடத் திட்டம்\nடீசர் ரிலீஸ்க்கு தயாராகும் பரத் படம்\nஉறுதியானது ரஜினி – விஜய் சேதுபதி மாஸ் கூட்டணி\nமுன்னணி கதாநாயகிக்கு விரைவில் திருமணம்\nமிஸ்டர் சந்திரமௌலி படத்தின் இசை வெளியீட்டு விழா\nஇன்றைய பரபரப்புச் செய்திகள் 24/04/18 \n* ஜம்மு – காஷ்மீர் : புல்வாமா அருகே பயங்கரவாதிகளின்...\nஇன்றைய பரபரப்புச் செய்திகள் 06/04/18 \n* ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு தெரிவித்து 54 நாளாவது...\nஇன்றைய பரபரப்புச் செய்திகள் 26/03/18 \n* தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும்...\nஇன்றைய பரபரப்புச் செய்திகள் 22/03/18 \n* தமிழகத்தில் பரிந்துரைக்கப்பட்ட 5 இடங்களில்,...\nஇன்றைய பரபரப்புச் செய்திகள் 20/03/18 \n* ஈராக்கில் ஐஎஸ் தீவிரவாதிகள் கடத்திய 39 இந்தியர்கள்...\nஇன்றைய முக்கியச் செய்திகள் 19/03/18 \n* காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நாடாளுமன்ற...\nஇன்றைய பரபரப்புச் செய்திகள் 13.03.2018\n* சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் கண்ணி வெடியில் சிக்கி 9...\nஇன்றைய பரபரப்புச் செய்திகள் 12/03/18 \n* தேனி குரங்கணி காட்டுத் தீயில் சிக்கி 9 பேர்...\nஇன்றைய பரபரப்புச் செய்திகள் 23/02/18 \n* தமிழகத்தில் கணினி மூலம் பாடத்திட்டங்களை பயிற்சி...\nஇன்றைய பரபரப்புச் செய்திகள் 16/02/18 \n* இலங்கை யாழ்ப்பாணம் சிறையில் இருந்த தமிழக...\n20 வயதான துளசி (சாய் பல்லவி) மற்றும் கிருஷ்ணா (நாக...\nமதன் கார்க்கியின் கிண்டி பொறியியல் கல்லூரி பாடல்\nகெளதம் வாசுதேவ் மேனனின் பாராட்டைப் பெற்ற சங்கரின் உதவி இயக்குனர்\nகுழந்தை போல நடந்து கொண்ட யோகி பி\nதனுஷ் படத்தை மே 30ல் வெளியிடத் திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://moonramkonam.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-19/", "date_download": "2018-04-26T12:54:54Z", "digest": "sha1:EJVGFQ3J3FNFXJITMRHVGCVSAELLJE36", "length": 44858, "nlines": 129, "source_domain": "moonramkonam.com", "title": "தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2017-2018 ஹேவிளம்பி வருஷம் கும்ப ராசி » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nதமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2017-2018 ஹேவிளம்பி வருஷம் மகர ராசி புத்தாண்டு பலன்கள்–2017 2018 – ஹேவிளம்பி வருஷம் மீன ராசி\nதமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2017-2018 ஹேவிளம்பி வருஷம் கும்ப ராசி\nதமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2017-2018 ஹேவிளம்பி வருஷம்:\nஇந்த வருடம் குருபகவான் செப்டம்பர் மாதம் முதல், 9-ம் இடத்துக்குப் போகிறார். இது உங்களுக்கு சாதகமான சஞ்சாரம் என்பதால், நற்பலன்களாக நிகழ்ந்து வரும். ராகு-கேது முதலிய கிரகங்கள் உங்கள் ராசிக்கு 7, மற்றும் 1-ல் சஞ்சரிக்கப் போகிறார்கள். அந்த சஞ்சாரங்களின் மூலம் நீங்கள் நற்பலன்களை எதிர்பார்க்க முடியாது. சனி பகவான் இந்த ஆண்டின் இறுதியில் ராசிக்கு 11-ம் இடத்தில் சஞ்சரிக்கிறார் லாப ஸ்தானத்தில் வீற்றிருந்து நற்பலன்களை வாரி வழங்குகிறார்.\nகுரு பகவான் தற்போது ராசிக்கு 8-மிடத்தில் அஷ்டம குருவாக சஞ்சரித்து கெடு பலன்களைத் தருகிறார். அதன்மூலம் பலவித துன்பங்களையும் துயரங்களையும் அனுபவித்து வருகிறீகள். இந்த கெடு பலன்கள் ஆகஸ்டு மாதம் 11-ம் தேதிவரை தொடரும். ஆகஸ்டு மாதம் 11-ம் தேதிக்குப் பிறகு, குரு பகவான் உங்கள் ராசிக்கு 9-ம் இடத்தில் சஞ்சரிப்பது உங்களுக்கு பலவித யோகங்களை வழங்கும். குருபகவான் உங்களுக்கு சாதகமாக சஞ்சரிப்பதால், உங்களுக்கு பண வரவு பெருகும். வேலையில்லாமல் இருந்தவர்களுக்கு பிழைப்புக்கு வழி கிடைக்கும் வண்ணம் ஏதாவதொரு வேலை கிடைத்துவிடும். ஏற்கெனவே வேலையில் உள்ளவர்களுக்கும் உத்தியோக உயர்வு கிடைத்து அதன்மூலம் வருமானம் பெருகும். கொடுத்த கடன் திரும்ப கைக்கு வரும். முன்னேற்றத் திட்டங்களுக்காக எதிர்பார்த்த இடத்திலிருந்தும் வங்கியிலிருந்தும் கடன் கிடைக்கும். இப்படியெல்லாம் தனகாரகனான குருபகவானுடைய தயவில் பலவகையிலும் பணம் , ஆதாயம் என்று வருவதற்கு இனிமேல் பல வழிகளும் திறந்து உங்களுக்கு வாழ்த்துக்கூறும். ஏற்கெனவே அடமானத்தில் இருந்த நகைநட்டுக்களையும் மீட்டுக் கொள்வீர்கள். புதிய பொன்னாபரணங்களையும் வாங்குவீர்கள். அலங்கார சாதனங்கள் , அழகுப் பொருள்கள், நுட்பமான தயாரிப்புகள், முதலியவற்றை வாங்குவீர்கள். வீட்டு யோகமும் சிறப்புறும். புதிய வீடு வாங்கும் யோகம் சிலருக்கு வாய்க்கும். சிலருக்கு வசதியான வாடகை வீட்டுக்கு போகமுடியும். வேண்டிய வசதிகள் அமையும்.\nகுருபகவானின் சுபத் தனமை பெருகி திருமண யோகம் கூடும் . திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கூடிவரும். திருமணமான தம்பதியரிடையே ஒற்றுமை சிறந்து விளங்கும். பிள்ளைகளைப் பற்றிய குறை ,வருத்தம் யாவும் அகலும். குழந்தைப் பேறு உண்டாகும். உங்களைப் பற்றிய பழி பாவங்கள், தப்பான அபிப்பிராயங்கள், வீண்பழி இவை உங்களைவிட்டு விலகிவிடும். பெற்றவர்களுக்கும் , சகோதர சகோதரிகளுக்கும் இதுவரை நீங்கள் செய்யத் தவறிய கடமைகளை இந்த ஆண்டில், நிறைவேற்றுவீர்கள். சிலர் தூர தேசம் சென்றுகூட பயனடைய முடியும். இப்படியாக குருபகவான் ஆண்டின் தொடக்கத்தில் நற்பலன்களாகக் கொடுப்பார். தொழில் போட்டியாளர்கள் இருந்த இடம் தெரியாமல் ஓடி ஒளிவார்கள். தொழில், வியாபாரம் மேன்மையடையும். எதிர்பார்த்த லாபம் வரும். கடுமையான உடல்நலப் பாதிப்புகள் இருந்தால் அவை நீங்கிவிடும். எதிர்பாராத பண வரவு ஏற்படும். தற்காலிக வசதிகளையும் வாய்ப்புகளையும் தேடிககொடுக்கும். சிலருக்கு புதிய தொழில் அமையும். எடுத்த காரியங்கள், செய்யும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளவேண்டிய சூழ்நிலையும் அதன் காரணமாக நல்ல பலன்களும் உண்டாகும். இழந்த பொருள் அத்தனையும் மீட்பீர்கள். மங்கலமான நிகழ்ச்சிகள் குடும்பத்தில் நிகழும். சிலர் புதிய தொழில் தொடங்குவார்கள். சிலருக்கு தடைப்பட்ட கட்டுமானப் பணிகள் டகுவைத்துவிட்டு விழித்துக்கொண்டிருந்தவர்கள இப்போது உங்கள் பொருளாதாரம் முன்னேற்றமடையும்.திருமணங்கள் இப்போது நல்லபடியாக முடிவடையும்.\nமீண்டும் தொடர்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். வாழ்க்கையின் உயர்வுக்கு வழிகாட்டும் காலம் இது.\nகாத்திருக்கும் சிலருக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு கிடைக்கும். சிலர் பொழுதுபோக்காக மகிழ்ச்சிச் சுற்றுலாவாக வெளிநாடு சென்று வருவார்கள். சிலர் தீர்த்த யாத்திரை சென்று வருவார்கள். சிலருக்கு ஞான நிலை சித்திக்கும். சிலர் தியானம், யோகம் இவற்றில் தீவிரமாகி பிரபஞ்ச ரகசியங்களை அறிந்துகொள்ளும் முயற்சியில் ஈடுபடுவார்கள். குடும்பத்திலும் மகிழ்ச்சி பொங்கும். கணவன் –மனைவி உறவு சிறக்கும். கருத்துவேறுபாடு மறையும். புதல்வர்கள் கல்வியில் சிறந்து உங்களுக்கு நற்பெயரை பெற்றுத் தருவார்கள். சகோதர சகோதரிகள், விலகிச் சென்ற சொந்தங்கள் அனைவரும் உங்களைத் தேடி வருவார்கள். தொழில், வியாபாரமும் சிறந்து, ஏற்றம் உண்டாகும் குடும்பத்தில் உள்ள குழப்பங்கள் அகல சில முக்கிய புள்ளிகள் முன்வந்து உதவுவார்கள். வீட்டில் கெட்டி மேளம் முழங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தடைப்பட்ட சலுகைகள் தானாகவே திரும்பக் கிடைக்கும். இப்படியாக குருபகவானின் சஞ்சாரம் இந்த வருடம் நற்பலன்களை அள்ளித் தரும். உத்தியோகத்தில் இருந்துவரும் எதிர்ப்பு, பிரச்சினை, சக ஊழியருடன் இருந்த விரோதமான போக்கு அத்தனையும் விலகும். குடும்பத்தில் குழப்பமும் , சண்டை சச்சரவுகளும் குறைந்து மகிழ்ச்சி, குதூகலப் பயணங்கள் என்று சந்தோஷம் தாண்டவமாடும். புதிய உறவினர் வருகை ஏற்படும். வியாபாரத்தில் வளர்ச்சியும் லாபமும் உண்டாகும். கடன்தொல்லைகளிலிருந்து விடுபடுவீர்கள். பிள்ளைகள் திருமணம் , படிப்பு, தொழில் என்று அனைத்தையும் வெற்றிகரமாக நிறைவேற்றி நிம்மதி காண்பீர்கள். புதிய வீடு, வாகனம் , மனை அமையும். சிலருக்கு ஏற்கெனவே இருந்துவரும் குடும்பப் பிரச்சினை, கணவன்-மனைவி கருத்துவேற்றுமைப் பிரச்சினைகள் நீங்கும். சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் கிடைக்கும். கோர்ட் பிரச்சினகள் ஒரு முடிவுக்கு வரும். எதிராக இருந்துவந்த ஊழியர்கள் அனுசரணையாவார்கள். எந்த வேலையும் தெரியாத படிப்பறிவற்றோருக்குக்கூட ஜீவனத்துக்கு ஏதாவதொரு வேலை கிடைத்து பிழைப்பைப் பார்த்துக்கொள்ள முடியும். குடும்பத்தில் சுபமங்கள நிகழ்ச்சி நடக்கும். வெளிநாடு சென்று படிக்க யோகம் கிடைக்கும். டாக்டர், சாஃப்ட்வேர் எஞ்சினியர், வெல்டர் என்று வேலையில் சேர ஆசைப்பட்டவர்களுக்கு இப்போது நேரம் கூடி வரும். அடிக்கடி மருத்துவ செலவு செய்துகொண்டிருப்பவர்கள் .பூரண நிவாரணம் பெறுவர். கணவன்-மனிவி பிரச்சினை தீரும். மனைவியின் நகையை அசனி பகவான் உங்கள் ராசிக்கு 11-ம் இடத்தில் பிரவேசிக்கிறார். இந்த கிரக சஞ்சாரம் 2 1/2 வருஷங்கள் நீடித்து உங்களுக்கு நற்பலன்களை வாரி வழங்கும். உங்களுக்கு பல வகையிலும் நன்மை செய்யும். பல வழிகளிலும் பணம் சேரும். நோய்கள் நீங்கி தேக பலமும் புதுப் பொலிவும் ஏற்படும். புதுத் தெம்பும் உற்சாகமும் கூடும். உயர்ந்த அதிகாரி, அமைச்சர் போன்ற பதவிகள் கிடைக்கும்.\nகுழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். கௌரவமும் அந்தஸ்தும் ஏற்படும். கட்டளை இடும் பெரும் பதவிகள் வந்தடையும். பெரிய மனிதர் என்று பெயரெடுப்பர். இல்லற வாழ்வில் பெரும் திருப்தியும் மகிழ்ச்சியும் உண்டாகும். தவறான உறவுகளிலும் சிலர் மனம் செல்லலாம். ஆனால் எதிலும் வெற்றியே உண்டாகும்.\nஅளவுக்கு மீறிய முரட்டுத்தனம் உண்டாகும். மாற்றான் பணமும் வந்து சேரும். பல நண்பர்கள் கிடைப்பார்கள். உதவுவார்கள். எல்லாக் காரியங்களாலும் லாபம் உண்டாகும். வீட்டில் தேவையான அனைத்து உணவுப் பொருட்கள்,மற்றும் வசதியான வாழ்க்கைத் தேவைகள் நிரம்பி வழியும். எல்லா விதத்திலும் இந்த 2 1/2 வருடம் பூராவும் ராஜயோகம் நிறைந்த சுபயோக சந்தோஷ வாழ்க்கையே இருக்கும். எல்லா வகையிலும் சனி 11-ல் நல்லதையே செய்வார்.\nபெண்களுக்கு குடும்ப ஒற்றுமை ஓங்குவதோடு, உங்களின் சொல்லுக்கும், செயலுக்கும் மதிப்பும் மரியாதையும் ஏற்படுவது உறுதி. புகுந்த வீட்டிற்கு நீங்கள் செய்யும் உதவிகள் சிறியதே ஆயினும் உங்களை மிகவும் புகழ்ந்து தள்ளுவார்கள். கணவரும் உங்கள் சொல்லுக்கு கட்டுப்பட்டு நடப்பார். உங்கள் எண்ணங்களுக்கு மதிப்பளித்து மறுப்பேதும் கூறாமல் சம்மதம் தெரிவிப்பார். இருப்பினும் வரும் ஆண்டு ஜூலை மாதத்திற்கு மேல் ஓராண்டு காலத்துக்கு உங்களின் உடல் நானில் அக்கறை செலுத்தவும். அதாவது குருவின் 8-மிட சஞ்சாரம் முடியும் வரை உங்களுக்கு தொல்லைகள் உண்டாகும். அதன்பிறகு உங்கள் நிலையில் முன்னேற்றம் உண்டாகும். உங்கள் முந்நிலையில் நல்ல காரியம் அல்லது சுப காரியம் இனிதே நடந்தேறும்.அது பெரும்பாலும், உறவினர் திருமணமாகவோ சகோதர சகோதரிகளின் திருமணமாகவோ அல்லது புகுந்த வீட்டாரின் திருமணமாகவோ எப்படி இருந்தாலும் அனைவரும் உங்களையே முன்னிறுத்தி கௌரவிப்பர். இந்த வகையில் உங்களின் செயலுக்கு பாராட்டுகள் குவியும். திறமையிருந்தும் அதற்கேற்ற உத்தியோக உயர்வோ அல்லது ஊதிய உயர்வோ இதுநாள் வரை உங்களுக்கு கிடைக்காமல் போயிருக்கலாம். அத்தகைய நிலை மாறி உங்களைத் தேடி பதவி உயர்வும், ஊதிய உயர்வும் வந்தடையும். குழந்தையில்லாமல் இருந்தவர்களுக்கு குழந்தைப் பாக்கியம் கிடைக்கும். திருமணம் ஆகாத சிலருக்கு தடைப்பட்ட திருமணம் இனிதே நடந்தேறும். சிலருக்கு மூத்த சகோதர சகோதரிகளின் பொருளாதார உதவிகள் கிடைக்கும். அதன்மூலம் நிலம், வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். சிலருக்கு இரண்டாம் திருமணம் அல்லது மறுமணம் நடக்கும் யோகம் உண்டு.\nஉங்கள் உழைப்புக்கேற்ற பலன் உங்களைத் தேடிவர சனியின் 11-மிட சஞ்சாரம் பெரிதும் துணை புரியும், வீட்டிலும் வெளியிலும் உங்களைச் சேர்ந்தவர்களிடத்திலும் பாராட்டுக்குப் பஞ்சமே இருக்காது. சிறிதளவே நீங்கள் சிரமப்பட்டு படித்தாலும், அது பன்மடங்காக பலன் தர சனியின் இன்டஹ் சஞ்சாரம் துணைபுரியும். நீங்கள் விரும்பும் அல்லது உங்கள் தகுதிக்கேற்ற விருப்ப பாடங்களை தேர்வு செய்து படிக்க ஏற்ற காலம் இதுவே ஆகும். மொத்தத்தில் இந்த சனிப் பெயர்ச்சி மூலையில் முடங்கிக் கிடந்த உங்களை உச்சாணிக் கொம்புக்கே ஏற்றிக் கொண்டு போகும். குருவின் சிம்மராசி சஞ்சாரத்தின் போது மட்டும் எச்சரிக்கை அவசியம்.\nஅரசியல்வாதிகளுக்கு உங்களின் உழைப்பிற்கேற்ற புகழும் உயர்வும் நீங்கள் நினத்துப் பார்க்காத அளவிற்கப் பெருக, இந்த சனிபகவானின் சாதகமான 11-மிட மாற்றம் பெரிதும் துணை நிற்கும். மேலும் குருவின் 9-மிட சஞ்சாரமும் இதற்கு வலு சேர்க்கும். உங்களை புகழின் உச்சிக்கே கொண்டு செல்லும். உங்களின் நீண்ட நாளைய நியாயமான கோரிக்கைகளும் ஆசைகள் மற்றும் கனவுகளும் இந்தகாலக் கட்டத்தில் எளிதில் நிறைவேறும். பொருளாதாரத் துறையிலும் கணிசமான வளர்ச்சியும் முன்னேற்றமும் ஏற்படும். சொத்து சேர்க்கை மற்றும் வாகன யோகம் போன்றவை உங்களின் உண்மையான உழைப்பைப் பார்த்து உங்களுக்கு மேல் உள்ள கட்சிப் பிரமுகர்கள் தாமாகவே முன்வந்து கொடுப்பார்கள். நீங்கள் எந்தத் துறையில் காலடி பதித்தாலும் வெற்றித் திருமகள் உங்கள் பக்கமே இருப்பாள்.\nராகு உங்கள் ராசிக்கு 7-ம் இடமான சிம்ம ராசிக்கும் கேது உங்கள் ஜென்ம ராசிக்கும் பெயர்ச்சியாகிறார்கள்.\n7-மிடத்தில் சஞ்சரிக்கும் ராகு திருமணத் தடைகளை உண்டாக்குவார். அல்லது திருமண ஏற்பாடுகள் தாமதமாகும். சில புதுமணத் தம்பதிகள் ஒருவரையொருவர் புரிந்துகொள்ளாமல், வாழ்க்கையையே பிரச்சினையாக்கிக் கொள்வார்கள்.அதேபோல சில குடும்பங்களில் கணவன்-மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புண்டு. கணவன்-மனைவி உறவு சொல்லிக்கொள்ளும் அளவு சிறப்பாக இருக்கும் என்று சொல்ல முடியாது. ஆனால், ஜாதக திசா-புத்திகள் யோகமாக இருந்தால், துலா ராசியில் ராகு உச்ச சனியுடன் சேர்ந்து இருப்பதால், திருமணத் தடைகள் விலகும். பிரிந்திருந்த தம்பதியர் ஒன்று சேரலாம். அதே சமயம் வாழ்க்கைத் துணையின் உடல்நலத்தில் கவனத்துடன் இருக்கவேண்டும். அவருக்கு ரத்தம் சம்பந்தமான பாதிப்புகள் , விஷம் சம்பந்தமான பாதிப்புகள் அலர்ஜி ஆகியவை ஏற்படும். சிலர் ஒழுக்க நிலையில் பிறழ்ந்து தடுமாறிப் போகும் சூழ்நிலை உண்டாகும். அந்நியப் பெண்கள் , ஒழுக்கக் குறைவான பெண்களின் நட்பும் ,பழக்கமும் உங்களுக்கு ஏற்படக்கூடும். அது உங்கள் கௌரவத்தையும் மரியாதையையும் கெடுத்துவிடும்.\nபுதிய நண்பர்கள் கிடைப்பார்கள். அவர்கள் மாற்று மதத்தைச் சேர்ந்தவர்களாகவும் இருக்கலாம். அவர்களுடைய உதவிகள் உங்களுக்கு அவ்வப்போது கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. அவர்களுடன் சேர்ந்து புதிய தொழில் கூட்டுத் தொழில் தொடங்க வாய்ப்புகள் உள்ளன. கொஞ்சம் எச்சரிக்கையும் அவசியம். இல்லாவிட்டால் ஏமாற்றத்தை தவிர்க்க முடியாது. ஆனால் கூட்டுத் தொழில் செய்பவர்கள் உங்களைவிட்டு மாறினாலும்கூட சிலருக்கு தொழில்ரீதியாகப் புதிய கூட்டாளி கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. திடீரென எதிர்பாராத வருமானம் வரக்கூடிய வாய்ப்புகளும் உண்டு. சிலருக்குப் புதிய நண்பர்கள் கிடைத்தாலும்கூட பழைய ந்ண்பர்களில் சிலர் உங்களைவிட்டுப் பிரிந்து செல்லக்கூடும். சிலர் தங்களது தொழிலில் மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்வார்கள். சிலருக்கு இடம்விட்டு இடம் மாறும் சூழ்நிலையும் உருவாகும். அடிக்கடி வெளியூர்ப் பயணம் செய்யவேண்டியிருக்கும். சிலருக்கு வண்டி வாகனங்கள் விரயச் செலவை ஏற்படுத்தும்.\nஆரம்பத்தில் வெளிவட்டார பழக்கவழக்கங்களில் சில பிரச்சினைகள் உருவானாலும் பிறகு விரும்பியபடி காரியங்கள் பலிதமாகும். எடுக்கும் முயற்சிகளில் படிப்படியாக முன்னேற்றம் ஏற்பட்டு முடிவில் வெற்றி உண்டாகும். பண வசதியைப் பொறுத்தவகையில் இல்லை என்ற குறை நீங்கி எண்ணங்கள் ஈடேறும். இரண்டாம் இடத்து குரு உங்கள் வாக்கு சாதுர்யத்தை மேம்படுத்தி மற்றவர்களை உங்கள் வசப்படுத்தி உங்கள் திட்டங்களையும் தேவைகளையும் நிறைவேற்றச் செய்வார். அத்தியாவசியத் தேவைகள் எல்லாம் ஒவ்வொன்றாக நிறைவேறும். மனைவியும் பிள்ளைகளும் கேட்டதை வாங்கிக் கொடுத்து, அவர்களை சந்தோஷப்படுத்துவீர்கள். உங்கள் உறவினர்களையும் மனைவிவழி உறவினர்களையும் அனுசரித்து வரவேற்று உபசரிப்பதன்மூலம் சொந்த பந்தங்களின் அன்புக்கு ஆளாகலாம்.\nஉங்கள் மனோபாலம் அதிகமாகும். எந்தப் பிரச்சினைகளையும் எதிர்கொள்ளும் துணிவு கிடைக்கும். ஆனால் முடிவெடுக்கும்போதுதான் குழப்பங்கள் ஏற்பட்டு கால தாமதமாகும். பொதுவாழ்க்கையில் இருப்பவர்கள் எச்சரிக்கையுடன் இல்லாவிட்டால், திடீர் தொல்லைகள் ஏற்படும்.\nஉங்கள் ஜென்ம ராசியில் கேது சஞ்சாரம் செய்வதால்,மனதில் தேவையற்ற குழப்பங்கள் அதிகமாகும். காரணம் தெரியாத வீண்பயம் மனதில் இருக்கும். எப்போதும் முகத்தில் சோகம் குடிகொண்டிருக்கும். மனதில் தோன்றும் சிந்தனைகள் எல்லாம் அப்போதைய சூழ்நிலைக்கு பயனற்றதாக இருக்கும். உங்கள் உடல்நலத்திலும் கவனம் தேவை. உங்கள் தாயாரின் உடல்நலத்திலும் கவனம் தேவை. தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகளும் பகைமையும் ஏற்படும். சிலர் பெற்றோரைப் ப்ரிந்து வாழ வேண்டிவரும். தொழில் ரீதியாகவும் சில இடையூறுகள் ஏற்படும். அதன்மூலம் மனசஞ்சலம் ஏற்பட்டு மன நிம்மதி கெடும்.\nமாணவர்கள் இந்தக் காலக் கட்டத்தில் மிகவும் சிரத்தையுடன் படிப்பில் கவனம் செலுத்தவேண்டும். நீங்கள் பெரிய புத்திசாலியாகவும் எடுத்த காரியத்தை முடிக்கும் திறமை படைத்தவராக இருந்தாலும் இந்த சமயத்தில் அவை எடுபடாமல் போகும். எடுக்கும் முயற்சிகளிலும் காரியங்களிலும் தடை ஏற்படும் காலம் இது. தொழிலாளர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். மின்சாரம், நெருப்பு ஆயுதம் இவைகளால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு.\nமனதை ஒருமுகப்படுத்தி, ஆன்மீக சிந்தனைகளில் ஈடுபட்டால், குருமார்களின் தரிசனம் , சாதுக்களின் நட்பு பெரியோர்களின் தொடர்புகள் அவர்களின் ஆசீர்வாதங்கள் கிடைக்கும். உங்கள் கௌரவம் உயரும். புகழ், பாராட்டு கிடைக்கும். மதிப்பு மரியாதை கூடும். ஆன்மீகத் தொடர்புகள் அதிகரிக்கும். ஜாதகத்தில் அந்த தசாபுத்திகள் நடந்தால், ஜோதிடம், வைத்தியம், தியானம் யோகா போன்ற கலைகளில் ஈடுபாடு ஏற்படும். சனியும் சேர்ந்து சம்பந்தம் ஏற்பட்டால், மாந்த்ரீகம், ஹிப்னாட்டிசம் இவைகளில் ஆர்வம் ஏற்படும்.\nஉங்கள் செல்வாக்கு புகழ் இவைகளில் உங்கள் வாழ்க்கைத் துணைக்கும் பங்கு கிடைக்கும். இருவரும் விட்டுக்கொடுத்து அனுசரித்துப் போவதால், சந்தோஷமும் வாழ்க்கையில் நிறைவும் ஏறப்டும். சிலருக்கு ,பிள்ளைகள் பெற்றோர் சொல்லைக் கேட்காமல் போகலாம். ஒழுக்கக் குறைவால் எல்லோருக்கும் கேவலத்தை ஏற்படுத்தி சங்கடங்களை உண்டுபண்ணக்கூடும். பிள்ளைகள்மீது கவனம் செலுத்துவது மட்டுமின்றி அணுசரணையாக இருப்பதும் அவசியம். சகோதர வகையில் கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்க முடியாது. ஆனாலும் விட்டுக்கொடுத்து நடந்து அட்ஜஸ்ட் பண்ணிக்கொள்ளும் சாமர்த்தியம் உங்களுக்கு கை கொடுக்கும்.\nபிரதோஷ காலங்களில் கோவிலுக்குச் சென்று சிவனை வழிபடுவது துன்பங்களை விரட்டும். வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தியை மஞ்சள் மலர்களாலும், கொண்டக்கடலை மாலை சாத்தியும் வழிபடுங்கள். வெள்ளிக்கிழமைகளில் துர்க்கையம்மனை சிவப்பு மலர்கொண்டு வணங்கவும். கேதுவின் சஞ்சாரம் சரியில்லாததால் , வினாயகரை வழிபடவும். வினாயகர் கோவிலை சுத்தம் செய்யவும்.\n[ உங்கள் பிறந்த ஜாதகத்துக்குரிய விரிவான பலன்களை ரூ.950/- செலுத்தி, தெரிந்துகொள்ள விரும்புவோர், moonramkonam@gmail.com என்ற வெப்சைட்டை தொடர்பு கொள்ளவும்.]\nவார பலன் – 22.4.18 முதல் 28.4.18 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவார ராசி பலன் 15.4.18 முதல் 21.4.18வரை அனைத்து ராசிகளுக்கும்\nதமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2018 -2019 விளம்பி வருஷம் மகர ராசி\nமுட்டையில் வெள்ளைக் கருவும் மஞ்சள் கருவும் திரவ நிலையில் இருந்தாலும், ஒன்றுடன் ஒன்று கலப்பதில்லை –ஏன்\nபுத்தாண்டு பலன்கள்-- 20182019 –விளம்பி வருஷம் மீன ராசி\nதமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2018-2018 விளம்பி வருஷம் கும்ப ராசி\nபுத்தாண்டு பலன் விளம்பி வருஷம் 2018-19 தனுசு ராசி\nபுத்தாண்டு பலன்கள்- விளம்பி வருஷம் 2018-2019 விருச்சிகம்\nபுத்தாண்டு பலன் விளம்பி வருஷம்- 2018-2019 துலாம் ராசி\nபுத்தாண்டு பலன்கள் -2018-2019 விளம்பி வருஷம் கன்னி ராசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://puttalamtoday.com/%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8/", "date_download": "2018-04-26T13:42:01Z", "digest": "sha1:XLUKKAEMHKRS2PDOQFSEDXJRBKMYAHRC", "length": 15608, "nlines": 63, "source_domain": "puttalamtoday.com", "title": "ஆரம்பிச்சுட்டாங்க : மகிந்த சார்ப்பு கட்சியில் போட்டியிட பாலியல் லஞ்சம் கோரிய மகிந்தவின் செயலர்கள்..!! மதுஷா ராமசிங்க வீடியோவில் கூறுவது என்ன..? – PuttalamToday", "raw_content": "\nஆரம்பிச்சுட்டாங்க : மகிந்த சார்ப்பு கட்சியில் போட்டியிட பாலியல் லஞ்சம் கோரிய மகிந்தவின் செயலர்கள்.. மதுஷா ராமசிங்க வீடியோவில் கூறுவது என்ன..\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்துவரும், முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலஙகா பொதுஜன முன்னணியில் உள்ள பலர், தேர்தலில் போட்டியிடுவதற்குதன்னிடம் பாலியல் இலஞ்சம் கோரியதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்து பெண் ஒருவர் கவனயீர்ப்பு போராட்டமொன்றை நடத்தியுள்ளார்.\nஇலங்கை மாதா அமைப்பின் தலைவியும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கோட்டை அமைப்பாளருமான மதுஷா ராமசிங்க என்பவரே இந்த குற்றச்சாட்டை முன்வைத்து கொழும்பு – இராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு முன்பாக இன்று முற்பகல் போராட்டத்தில் ஈடுபட்டார்.\nகவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் பின்னர் அவர் தேர்தல்கள் ஆணைக்குழுவில் எழுத்துமூல முறைப்பாடு ஒன்றையும் ஒப்படைத்தார்.\nகொழும்பு – இராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு முன்பாக இன்றைய தினம் முற்பகல் இலங்கை மாதா அமைப்பின் தலைவியும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கோட்டை அமைப்பாளருமான மதுஷா ராமசிங்க, கவனயீர்ப்பு போராட்டமொன்றை நடத்தினார்.\nதேர்தலில் போட்டியிட பாலியல் இலஞ்சம்கோரிய மஹிந்த அணி\nதேர்தல்கள் ஆணையாளரே, வேட்புமனுவைப் பெறுவதற்கு பாலியல் இலஞ்சம் வழங்க வேண்டுமா என்ற வாசகம் எழுதப்பட்ட பதாதையை ஏந்தியவாறு கறுப்பு ஆடையில் வந்த அவர் தனது அமைதிப் போராட்டத்தை நடத்த ஆரம்பித்தார்.\nஇவரது போராட்டம் மீது அப்பகுதியிலுள்ள பலரது அவதானம் திரும்பிய அதேவேளை, தேர்தல்கள் ஆணைக்குழுவில் உள்ள அதிகாரி ஒருவரும் அவரிடத்தில் வந்து விசாரித்தார்.\nதேர்தலில் போட்டியிட பாலியல் இலஞ்சம்கோரிய மஹிந்த அணி\nதனது போராட்டம் தொடர்பான விளக்கம் அடங்கிய கடிதமொன்றை மதுஷா ராமசிங்க அந்த அதிகாரியிடம் காண்பித்தார். இதனையடுத்தும் போராட்டத்தை தொடர்ந்தார்.\nஇந்த நிலையில் விடயம் அறிந்த பொலிஸார் அவ்விடத்திற்கு விரைந்ததோடு அவரிடம் போராட்டத்திற்கான காரணத்தை கேட்டறிந்ததை அடுத்து அவ்விடம் விட்டுச் சென்றனர்.\nஇறுதியில் ஆணைக்குழுவுக்குள் சென்ற மதுஷா ராமசிங்க தனது முறைப்பாடு அடங்கிய கடிதத்தை கையளித்துவிட்டு போராட்டத்தையும் கைவிட்டார்.\nதேர்தலில் போட்டியிட பாலியல் இலஞ்சம்கோரிய மஹிந்த அணி\nஇதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், “முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஒன்றிணைந்த எதிர்கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஆகிய கட்சிகளுக்கு நான் கடந்த இரண்டு வருடங்களாக ஆதரவளித்து வந்தேன். உள்ளூராட்சி தேர்தலில் முதல் வாய்ப்பை நகர சபையின் ஊடாக பெற்றுத்தருமாறு எனது கட்சியிடம் கேட்டிருந்ததேன். கெஸ்பேவ தொகுதியில் வேட்பாளர் பட்டியலில் இடமில்லாமையினால் அந்த இடத்தை எனக்கு தரமுடியாது எனக் கூறிவிட்டனர். அதனால் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவரான பெசில் ராஜபக்சவின் ஆலோசனைப்படி கோட்டை தொகுதில் வதிவிடம் பெற்று, தேர்தலில் களமிறங்க அனைத்து தலைவர்களினதும் ஆசிர்வாதம் பெற்று போட்டியிட விண்ணப்பித்திருந்தேன்.\nவேட்பாளர் தெரிவு நேர்முகப்பரீட்சையில் பங்கேற்று தெரிவாகினேன். எனினும் எனது பெயர் அந்தப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக நேற்று எனக்கு அறியக்கிடைத்தது. பெண் என்ற வகையில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கட்சி அலுவலகத்தில் பாரிய இன்னல்களுக்கு முகங்கொடுத்தேன். அதிலுள்ள சில செயலாளர்கள், குறிப்பாக மஹிந்த ராஜபக்சவின் நெருக்கமானவர்கள், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியிலுள்ள சில செயலாளர்கள் பாலியல் ரீதியாக முன்வைக்கின்ற யோசனையினால் பௌத்த நாட்டில் பிறந்த பெண் என்ற வகையில் அசௌகரியத்திற்குத் தள்ளப்பட்டேன்.\nபெண்களுக்கு 25 வீத ஒதுக்கீட்டிற்கான போராட்டம் நடத்தப்படும்போது ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி எவ்வாறு பெண்களுக்கு இடஒதுக்கீட்டை வழங்கும் குறிப்பாக, கமராவுக்கு முன்பாக நிர்வாணமாக இருக்க இணங்கினால்தான் வேட்புமனுக்கான சந்தர்ப்பம் வழங்கப்படும் என்று அக்கட்சியிலுள்ள இரண்டு அதிகாரிகள், என்னிடம் யோசனை தெரிவித்தனர். அதேபோன்று இன்னுமொருவர் தகாத வார்த்தையை பயன்படுத்தியதோடு, தாம் தீர்மானித்தால் உங்களுக்கான வேட்புமனுவை இரத்து செய்வதாக மிரட்டினார்.\nஇதுகுறித்து மஹிந்த ராஜபக்சவுக்கு நான் அறிவுறுத்தியதோடு அதுகுறித்து விசாரிப்பதாக அவர் கூறினாலும் இறுதிவரை அது இடம்பெறவில்லை. பெண்கள் என்பது வெறும் உணவல்ல. பெண்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதி பாலியல் இலஞ்சம் அல்ல.அதனால்தான் அத்தனை பெண் பிரதிநிதிகளுக்காக தனியான நின்று போராட வந்தேன். எனது முறைப்பாட்டுக் கடிதத்தையும் இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் சமர்பிக்கின்றேன்” என்றார்.\nB.M.S. college சாரம் திருவிழா: பெலூன் டான்ஸ் ஆடிக் கலக்கிய முஸ்லிம் யுவதிகள்- எல்லை மீறுகிறார்களா..\nBreaking : சவூதி மன்னரை கவிழ்க்க முயற்சி.. அரண்மை அருகே கடும் துப்பாக்கி சூடு – பங்கருக்குள் கொண்டு செல்லப்பட்டார் சல்மான் posted on April 22, 2018\nசவூதியின் கொடூர செயலால் உலகமே அதிர்ச்சியில் \nBreaking : 12 வயதுக்கு உள்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு தூக்குத் தண்டனை மோடியின் அமைச்சரவை அவசர சட்டம் பிறப்பிப்பு posted on April 21, 2018\nBreaking :கண்டி கலவரங்களை வழி நடத்திய போலிஸ் இன்ஸ்பெக்டர், சார்ஜென்ட் மேஜர் கைது செய்யப்படவுள்ளார்கள் posted on April 21, 2018\nதலைமைப் பற்றி தீர்மானிக்கும் ஐக்கியத் தேசியக் கட்சியின் முக்கியக் கூட்டம் இன்று \nகண்டிக் கலவரத்தை முன்னின்று நடத்திய இரு பிரதேச சபை உறுப்பினர்கள் தொடர்ந்தும் தேடப்படுகிறார்கள்..\nபச்சை கறிவேப்பிலை சாப்பிடுவதன் மூலம் கொலஸ்ட்ரோலை கட்டுக்குள் வைக்கலாம் இதய சத்திர சிகிச்சை நிபுணர் Dr.இலாஹி\nநகர, பிரதேச சபை சேர்மன்களின் ஆட்டம் எல்லாம் 2 வருடங்களுக்கு மட்டுமே.. அதன் பிறகு உறுப்பினர்களின் காலில் விழுந்தாக வேண்டும்\nமுன்னாள் நேவி தளபதி சந்தன பிரசாத் தப்பிச் செல்ல பாதுகாப்புச் சபை பிரதானி ரவீந்திர விஜேகுணவர்தன 5 லட்சம் கொடுத்தார்.. C.I.D. பொஸ் சான் குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthinappalakai.net/2017/05/14", "date_download": "2018-04-26T13:00:25Z", "digest": "sha1:22AGOYNHEL75XIKAQOIIQ3HVXFOGDKM5", "length": 8788, "nlines": 103, "source_domain": "www.puthinappalakai.net", "title": "14 | May | 2017 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nமகிந்தவுடன் மூடிய அறைக்குள் பேச்சு நடத்திய மோடி – புதுடெல்லி வருமாறு அழைப்பு\nவிரிவான அரசியல் கலந்துரையாடல்களை நடத்துவதற்கு, புதுடெல்லிக்கு வருமாறு சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுக்கு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார் என்று, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nவிரிவு May 14, 2017 | 2:10 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nசீனாவுடன் உடன்பாடு செய்து கொள்ள வேண்டாம்- ரணிலுக்கு அறிவுறுத்திய மைத்திரி\nஅம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பான எந்த விடயங்கள் தொடர்பாகவும் சீனாவுடன் புரிந்துணர்வு உடன்பாட்டைச் செய்து கொள்ள வேண்டாம் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அறிவுறுத்தியுள்ளார்.\nவிரிவு May 14, 2017 | 1:50 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஅவசர நோயாளர் காவு வண்டிச் சேவைக்கு 20 மில்லியன் டொலரை வழங்குகிறது இந்தியா\nசிறிலங்காவின் அனைத்துப் பகுதிகளுக்கும் அவசர நோயாளர் காவு வண்டிச் சேவையை விரிவுபடுத்துவதற்கு, இந்தியா 20 மில்லியன் டொலர்களை கொடையாக வழங்கவுள்ளது.\nவிரிவு May 14, 2017 | 1:05 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nசிறிலங்கா பிரதமர் நாடு திரும்பியதும் அமைச்சரவை மாற்றம்\nசிறிலங்கா பிரதமர் சீன பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய பின்னர், அமைச்சரவை மாற்றம் இடம்பெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவிரிவு May 14, 2017 | 0:53 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகண்டியில் பழுதடைந்து நிற்கும் இந்தியப் பிரதமரின் சிறப்பு உலங்குவானூர்தி\nஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பயணத்துக்காக ஒழுங்கு செய்யப்பட்டிருந்த உலங்குவானூர்திகளில் ஒன்று பழுதடைந்த நிலையில் கண்டியில் தரித்து நிற்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nவிரிவு May 14, 2017 | 0:38 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் இரா.சம்பந்தன் – ‘சேர் பொன். இராமநாதனின் மறுஉருவம்’\t0 Comments\nகட்டுரைகள் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு யார் காரணம்\nகட்டுரைகள் சிறிலங்கா: மகிந்தவுக்காக திறக்கப்படும் கதவுகள்\t0 Comments\nகட்டுரைகள் ஐ.நாவின் மனிதஉரிமைச் செயற்பாடுகளைப் பலவீனப்படுத்தும் ரஷ்யா, சீனா\t0 Comments\nகட்டுரைகள் சீனாவின் இறுக்கமான பிடியில் சிறிலங்காவின் அமைதியான துறைமுகம்\t1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுக்கு எதிரான வியூகத்தில் சிறிலங்காவின் பௌத்த பிக்குகளையும் இணைக்கிறது இந்தியா\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்திய மாக்கடலில் அதிகரிக்கும் சீனாவின் செல்வாக்கும் – இந்தியாவின் முத்தரப்பு கடற்பாதுகாப்பு ஒப்பந்தமும்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t0 Comments\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t2 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.jeyamohan.in/2975", "date_download": "2018-04-26T13:19:16Z", "digest": "sha1:OLVPV5P44RZH5HT2O6BCSF5EQWS4WMWN", "length": 12379, "nlines": 125, "source_domain": "www.jeyamohan.in", "title": "நாஞ்சில் நாடனுக்கு கண்ணதாசன் விருது", "raw_content": "\nநாஞ்சில் நாடனுக்கு கண்ணதாசன் விருது\nகோவையில் இயங்கி வரும் கண்ணதாசன் கழகம் சார்பில் நாஞ்சில் நாடன் அவர்களுக்கு,”கண்ணதாசன் விருது”ஜூன் 27 சனி மாலை வழங்கப்படுகிறது.இந்த அமைப்பு\nமுதல்முதலாக இந்த விருதை வழங்குகிறது.பாராட்டுப் பட்டயமும்,ரூ.50,000/ பணமுடிப்பும் வழங்கப்படும்.\nமறைந்த பின்னணிப் பாடகர் திரு.டி.ஆர்.மகாலிங்கம் அவர்களின் மகள் திருமதி டி.ஆர்.சாவித்திரி இந்த விருதைப் பெறும் இன்னொருவர்.\nகண்ணதாசனின் தீராக்காதலர் திரு.கிருஷ்ணக்குமார், தன் சொந்தப் பொறுப்பில் இந்த விருதை வழங்குகிறார்.இவர் கடந்த சில ஆண்டுகளாய் சென்னையில், கண்ணதாசன்\nபெயரிலும் எம்.ஜி.ஆர் பெயரிலும் இத்தகைய விருதுகளை வழங்கி வருகிறார்.\nவிருது வழங்கும் விழா,கோவை பாரதீய வித்யா பவன் அரங்கில் 27-6-2009 மாலை 6.30\nஅமைப்புக்குழு செயலாளர் என்ற முறையில் குழும திரு.மரபின்மைந்தன் முத்தயா இத்தகவலை தெரிவித்திருக்கிறார்.\nதமிழின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான நாஞ்சில்நாடன் இதுவரை குறிப்பிடத்தக்க விருதுகள் எதனாலும் கௌரவிக்கப்படாதவர். சமீபத்தில் நண்பர்களை இழந்துள்ள நிலையில் இவ்விருது அவருக்கு ஓர் ஆறுதலாக அமையும் என நினைக்கிறேன்\nநாஞ்சில் நாடன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்\nஒரு இலக்கிய நிகழ்ச்சியின் கதை\nநாஞ்சில் நாடன் அறுபதாம் மணவிழா\nமண்ணின் ஊற்றுதேடும் கலைஞன் : நாஞ்சில் நாடனின் கலை\nதாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (5)\nதாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (4)\nதாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (3)\nதாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (2)\nதாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (1)\nதாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (5)\nதாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (4)\nதாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (3)\nதாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (2)\nதாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (1)\nகனடா – அமெரிக்கா பயணம்\nமின் தமிழ் பேட்டி 3\nபிரயாகை முன்பதிவு- கிழக்கு அறிவிப்பு\nவெண்முரசு விழா- நேரடி ஒளிபரப்பு\nTags: அறிவிப்பு, கண்ணதாசன் விருது, நாஞ்சில் நாடன்\n[…] நாஞ்சில் நாடனுக்கு கண்ணதாசன் விருது கட்டுரையை மின்னஞ்சல் செய்ய(Email This Post) […]\njeyamohan.in » Blog Archive » நாஞ்சில் நாடனுக்கு வாழ்த்துக்கள்\n[…] நாஞ்சில் நாடனுக்கு கண்ணதாசன் விருது கட்டுரையை மின்னஞ்சல் செய்ய(Email This Post) […]\n[…] நாஞ்சில் நாடனுக்கு கண்ணதாசன் விருது […]\nசங்கரர் உரை -கடிதங்கள் 7\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–52\nவரலாறும் செவ்வியலும் - மழைப்பாடல்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/chuttivikatan/2015-aug-15/series/108771.html", "date_download": "2018-04-26T13:02:42Z", "digest": "sha1:6AC5PR6EUYYUEVDFWDQQHE4SELUDQIF2", "length": 23666, "nlines": 393, "source_domain": "www.vikatan.com", "title": "வீரவணக்கம் வெற்றிக் கடிதம்! | Hatsoff to the Brave Heart | சுட்டி விகடன் - 2015-08-15", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nMinions ஒரு தலைவனைத் தேடி...\nநண்பர்கள் தினம்... அன்பின் திருவிழா\nஆங்கிலம் பேசிய அழகு காமராஜர்\nநீரைக் காக்க ஒரு நடைப் பயணம்\nதினமும் கேளுங்கள்... சுட்டித் தமிழ்\nஈஸியாக அறியலாம் தசம பின்னங்கள்\nஓவியத்தில் அறிவோம் இரட்டுற மொழிதல்\nஇணைச் சொற்களின் வகை அறிவோம்\nமூளையின் செயல்பாடுகள் - பாடல்\nBoost NRG Biscuits - நண்பன் தந்த ஊக்கம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nசுட்டி விகடன் - 15 Aug, 2015\nவீரதீர சாகசங்கள் புரிந்த இந்தியக் குழந்தைகளுக்காக ஆண்டுதோறும் வழங்கப்படும் விருது, நேஷனல் பிரேவரி அவார்டு எனப்படும் ‘ராஷ்ட்ரிய வீர்த புரஸ்கார் விருது’. அதைப் பெற்ற சுட்டி வீரர்/வீராங்கனைகளைப் பற்றி சொல்லும் பகுதி இது.\nநவீன ஜான்சி ராணியாக வரலாற்றில் பதிந்தவரே... உலகப் புகழ்பெற்ற வீரமங்கை ‘ஜோன் ஆஃப் ஆர்க்’ எப்படிப்பட்டவர் என்பதை நேரில் காட்டியவரே... அருணாச்சலப் பிரதேசத்தின் ‘புர்காமத்’ என்ற உங்கள் கிராமத்தில், பெண் குழந்தைகளை அதிகம் படிக்கவைக்க மாட்டார்கள். பூப்பெய்திய சிறுமியை பள்ளியைவிட்டு நிறுத்திவிடுவதும், சிறிய வயதிலேயே திருமணம் செய்துவைப்பதும் சமூகப் பழக்கங்களில் ஒன்றாக இருக்கிறது.\n‘ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்றெண்ணி யிருந்தவர் மாய்ந்து விட்டார்’\nஎன்று மகாகவி பாரதியார் என்றோ எழுதியது, இன்னும் முழுவதுமாக நிறைவேறாத கனவாகவே இருக்கிறது. ஆனால், உங்கள் குடும்பம் வித்தியாசமானது இப்பி பாஸர். 10-ம் வகுப்பு முடித்த உங்களை, மேலும் படிக்க பெற்றோர் அனுமதிகொடுத்து, ஊரையே ஆச்சர்யப்பட வைத்தார்கள். உங்கள் பாட்டி மட்டும் அவ்வப்போது ஏதாவது சொல்வார். அவரைவிடவும் வயதான உங்கள் அப்பாவின் அத்தைக்கு 70 வயது. அவருக்கு, நீங்கள் படிப்பது பிடித்திருந்தது.\nஉங்கள் புர்காமத் கிராமத்தில், ஓலை வீடுகளே இருந்தன. ஊரின் தென்கோடியில், ஒரு தபால் நிலையம் உண்டு. மற்றபடி, மருத்துவ சிகிச்சை என்றால், கிட்டத்தட்ட 25 கிலோமீட்டர் நடக்க வேண்டும். சாலையே இல்லாத கடினப் பாதையில் ஒருமுறை மட்டுமே பேருந்து வந்துபோகும். கிராமத்தில் இருப்பவர்களில் பெரும்பாலானோர், ரயில் பாதை விரிவாக்கப் பணிக்குப் போய்விடுவார்கள். உங்கள் அப்பா, அண்ணனும் அப்படியே. அம்மாவும் சித்தாளாக செல்வார்.\nஅன்று சனிக்கிழமை. பள்ளி விடுமுறை நாள். விடுமுறை என்றால், நீங்களும் ரயில்பாதை வேலைக்குச் செல்வீர்கள். ஆனால் அன்று, வீட்டுப் பாடங்கள் நிறைய இருந்ததால் செல்லவில்லை. பாட்டியும் அப்பாவின் அத்தையும் வீட்டைவிட்டு வெளியே போக முடியாதவர்கள். அத்தைப் பாட்டிக்கு வலிப்பு நோயும் இருந்தது.\nகாலை 11 மணி இருக்கும். திடீரென ஒரே இரைச்சல். கூப்பாட்டுச் சத்தம். நீங்கள் வெளியே ஓடிவந்து பார்த்தீர்கள். ஊரின் வடகோடியில் இருந்த குடிசைகள் தீப்பற்றி எரிந்துகொண்டிருந்தன. மனிதர்கள் இங்கும் அங்கும் ஓடினார்களே ஒழிய, என்ன செய்வது என்று தெரியவில்லை. சிலர், பதறியபடி அழிவை வேடிக்கை பார்த்தார்கள்.\nஇப்பி பாஸர், நீங்கள் சட்டென காரியத்தில் இறங்கினீர்கள். வேகமாக ஓடி, தபால்நிலையத் தொலைபேசியில், தீயணைப்புத் துறைக்கு தகவல் சொன்னீர்கள். பிறகு, ஒரு சணல் பையைத் தலையில் அணிந்து, உடலை மூடிக்கொண்டீர்கள். எரியும் வீடுகளுக்குள் நுழைந்து, தவித்த மனிதர்களை வெளியே இழுத்து வந்தீர்கள். அப்போதுதான், மற்றவர்களுக்கும் இப்படிச் செய்யும் யோசனை வந்தது. தீக்காயம் ஏற்பட்டவர்களுக்கு, சாக்குப் பைகளைச் சுற்றிக் காப்பாற்றவும் சொல்லிக்கொடுத்தீர்கள்.\nஉங்கள் குடிசையிலும் தீ பரவியது. வாளி, மண் குடங்கள், அண்டா என எதில் எடுத்து நீர் ஊற்றினாலும், அடங்காத தீயைக் கிளப்பியது காற்று. எப்படித்தான் அப்படி ஒரு யானை பலம் உங்களுக்கு வந்ததோ... வீட்டுக்குள் ஓடினீர்கள். அசையவே முடியாத அத்தைப் பாட்டி, கழியைத் தாங்கி நடக்கும் பாட்டி, தூங்கிக்கொண்டிருந்த அக்கா மகள் என ஒவ்வொருவரையும் தோளில் தூக்கி வந்து, வெளியே தள்ளிக் காப்பாற்றினீர்கள்.\nமாட்டுவண்டிகூட வரத் தயங்கும் உங்கள் புர்காமத் கிராமத்துக்கு, ராட்சச தீயணைப்பு வண்டிகள் வந்து, தீயை அணைத்தன. ஊரே அசந்துபோனது. பொருட்களை இழந்தாலும் உயிர்ச்சேதம் இல்லை. உங்களுக்கும் பெரிய தீக்காயங்கள். தீயால் பாதிக்கப்பட்ட அனைவரும் மருத்துவமனைக்கு தூக்கிச் செல்லப்பட்டார்கள்.\n‘இப்பி பாஸர் படித்தவள். அவளது புத்திசாலித்தனம் ஊரையே காப்பாற்றிவிட்டது. நமது பெண் குழந்தைகளும் இப்படி புத்திசாலித்தனமாகவும், வீரமாகவும் இருக்க வேண்டும்’ எனப் பெரியவர்கள் பாராட்டினார்கள். 2010-ம் ஆண்டு குடியரசு தின விழாவில், உங்கள் வீரத்துக்கு மரியாதை செய்யும் விதமாக, ‘பாபு கெய்தானி விருது’ வழங்கப்பட்டது.\nஇப்பி பாஸர், உங்கள் வீரத்துக்கு எங்கள் சல்யூட்\nஇப்பி பாஸர்,நேஷனல் பிரேவரி அவார்டு\nவிகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP\nவிகடன் பிரஸ்மீட்: அஜித்திடம் என்ன பிடிக்காது விஜய்யிடம் என்ன பிடிக்கும்\n“இந்த வேலைநிறுத்தம், இந்திய சினிமாவையே கோலிவுட் பக்கம் திருப்ப வெச்சிருக்கு. இதன் மூலமா...\nஜெ. கன்னத்திலிருந்த நான்கு புள்ளிகளும் அவிழாத முடிச்சுகளும்\nமரணத்துக்குப் பிறகு ஜெயலலிதா உடல் ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டபோது, ஜெ. கன்னத்தில் காணப்பட்ட நான்கு புள்ளிகள் குறித்துப் பெரும் சர்ச்சை எழுந்தது. அந்த நான்கு புள்ளிகள் குறித்த மர்ம முடிச்சுகளை அவிழ்ப்பதற்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முயற்சி செய்துள்ளது.\n\"வைகோ, சீமான் மோதல் வேதனை தருகிறது” - கலங்கும் திருமா\nகாவிரிப் பிரச்னை, எஸ.சி, எஸ்.டி வன்கொடுமைத் தடுப்பு சட்டம் ஆகியவற்றுக்கான போராட்டங்களில் மும்முரமாக...\n” - 1 - நாட்டுக்கோழி விருந்து... நள்ளிரவு உபசரிப்பு\nஒரு நிர்மலாதேவி சிக்கிக்கொண்டார். பலர், எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறார்கள். தங்கள் உழைப்பாலும் திறமையாலும் உயரங்களைத் தொடும் பெண்மணிகளுக்கு ராயல் சல்யூட் அடிப்போம். அதேநேரம், குறுக்குவழியில் முன்னுக்கு வர நினைக்கும் பலர் இருப்பதும் ஓர் அவலம்\nதமிழகத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்ட சில மாதங்களில் ‘தமிழகம் முழுவதும் ஆய்வு’ என்று ஆளுநர் கிளம்பியபோதே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.eegarai.net/t119479-topic", "date_download": "2018-04-26T13:30:41Z", "digest": "sha1:HKARLIICPGWXEBSJ7LBM7OQQQO4DUWDT", "length": 20911, "nlines": 229, "source_domain": "www.eegarai.net", "title": "ராஜதந்திரம் - திரை விமர்சனம்", "raw_content": "\nருசியான ஊறுகாய்கள் - அரு /அரை நெல்லிக்காய் தொக்கு \nஅரை நெல்லிக்காய் - அரை நெல்லிக்காய் தொக்கு \nஎச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி\nஉடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்\nஎனக்குள் ஒரு கவிஞன் SK\nஉலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி\nபராமரிப்பு பணி முடிந்தது பழநி கோயில் வின்ச் சேவை துவக்கம்: பக்தர்கள் மகிழ்ச்சி\nபாலகுமாரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக\nஅறிமுகம்---- வாலி மோகன் தாஸ்\n2 மணி நேரம் பொறுக்க முடியாதா கஸ்தூரி..\nஎதுக்காக உன் காதலியை கிணத்துல தள்ளிவிட்டே...\nஅமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி\nநிலக்கரியை விட கருப்பாக இருக்கும் கிரகம் கண்டுபிடிப்பு\nகவர்ச்சி நடிகைகிட்ட பிடிச்சது, அவரோட நடிப்பு...\nஏப்ரல் 30-ம் தேதி வைகை ஆற்றில் இறங்குகிறார் கள்ளழகர்\nகோயில்களுக்கு செல்ல குழந்தைகளை கண்டிப்பாக பழக்குங்கள்.....\nஇந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'\nஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்\nஉப்புமா சாப்பிடுவது மோன நிலை...\nநீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு\n‘சிற்றெறும்பு கட்டெறும்பு’ - கமல்ஹாசன், அமைச்சர் ஜெயக்குமார் வார்த்தை ஜாலத்தால் ஒருவருக்கொருவர் கிண்டல்\nஉ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்\nகண்மணி வார நாவல் 25.04.2018\nதிகில் மன்னன் ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக\nதாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து\nபலாத்காரத்துக்கு ஆளாகும் ஆண் குழந்தைகளுக்கும் இழப்பீடு'\nஇந்தியர்களை பாதிக்கும் ‘எச்-4’ விசா ரத்து நடவடிக்கைக்கு அமெரிக்க எம்.பி.க்கள் எதிர்ப்பு, ஐ.டி. துறையும் கண்டனம்\n'பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்\n5,000 குஜராத் விவசாயிகள் தற்கொலைக்கு மனு\nவாழ்க்கையை ஓஹோன்னு வாழ கன்ஃபூசியஸ் சொன்ன 10 கட்டளைகள்...\nஇரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு\nரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது: மக்கள் மன்ற மாநில செயலாளர் பேச்சு\n2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்: ஜூன் 16-ம் தேதி இந்தியா-பாக். மோதல்\nசுப்ரீம் கோர்ட் எதிர்காலம்: ஆலோசிக்க நீதிபதிகள் கோரிக்கை\nநாடு முழுவதும் 24 போலி பல்கலை.,கள்\nகாங்., கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக்கறை: சல்மான் குர்ஷித் சர்ச்சை\nராஜதந்திரம் - திரை விமர்சனம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nராஜதந்திரம் - திரை விமர்சனம்\nஇப்படித்தான் திருடப்போகிறோம் என்று நகைக் கடை உரிமையாளரிடம் வரைபடம் வரைந்து காட்டிவிட்டுத் தங்களின் வேலையைத் தொடங்கும் மூன்று தந்திரக்கார இளைஞர்கள் ஆடும் களவாட்டம்தான் இந்த ‘ராஜதந்திரம்’.\nதர்மராஜாவின் (ஆடுகளம் நரேன்) சுக்ரா ஃபைனான்ஸ் திவாலாகி மக்கள் கொதித்து ஆர்ப்பாட்டம் செய்யும் காட்சியோடு தொடங்குகிறது படம். சிறை செல்லும் தர்மராஜா என்ன ஆகிறார் என்ற கேள்வியை அப்படியே விட்டுவிட்டு மூன்று இளைஞர்களின் பக்கம் நம் கவனத்தைத் திருப்புகிறார் இயக்குநர் ஏ.ஜி. அமித்.\nஅர்ஜூன் (வீரா) தன் இரண்டு நண்பர்களுடன் சேர்ந்து சாமர்த்தியமான மோசடிகளில் ஈடுபடுகிறான். ஆனால் பெரிய மோசடிகளில் ஈடுபடுவதில் அவனுக்கு விருப்பமில்லை.\nமிஷல் டிமெல்லோ (ரெஜினி) என்னும் பெண் எம்.எல்.எம். நிறுவனத்தில் இவர்களைச் சேர்த்துவிடு கிறாள். அவளுக்காகவே அந்தத் திட்டத்தில் சேரும் அர்ஜுனுக்கு அவள் மீது காதல் ஏற்படுகிறது.\nசிறையிலிருந்து வெளியே வரும் தர்மராஜாவும் போலிச் சான்றிதழ்கள் தயாரித்துத் தருவதில் கில்லாடி யான மாதவ அய்யரும் (இளவரசு) சேர்ந்து ஒரு பெரிய நகைக்கடையைக் கொள்ளையடிக்கத் திட்டம் தீட்டு கிறார்கள். தன்னிடம் தொடர்பில் இருக்கும் அர்ஜுன் தான் இதற்குச் சரியான ஆள் என்று மாதவ அய்யர் தீர்மானிக்கிறார். தந்திரங்களின் போர்க்களத்தில் இறுதி யில் வென்ற ராஜதந்திரம் எது என்பதுதான் கதை.\nஆரம்பத்திலிருந்தே திரைக்கதையில் ஒட்டிக்கொள் ளும் திரில்லரும் கலகலப்பும் படம் முழுக்க தொடர் கிறது. சின்னச் சின்னத் திருட்டுகளிலிருந்து நகைக் கடை கொள்ளை வரை எல்லாமே விறுவிறுப்பாகக் காட்சிப் படுத்தப்பட்டிருக்கின்றன. ஹோட்டலில் நடக்கும் தங்க பிஸ்கட் திருட்டு கலகலப்பும் விறுவிறுப்புமாய் சித்தரிக்கப்படுறது. படம் முழுவதும் நகைச்சுவை இழையோடுவது குறிப்பிடத்தக்கது.\nஎம்.எல்.எம். உறுப்பினராக ரெஜினா செய்யும் பிசினஸ் முயற்சிகள் ரசிக்கும்படியாக இருக்கின்றன. பணத்துக்காக அவர் ஏன் அப்படித் தவிக்கிறார் என்பதை விளக்கும் காட்சி மனதைத் தொடுகிறது. விஷயம் புரியாமல் தன்னைத் திட்டும் வீராவிடம் அவர் சண்டைபோடும் காட்சியில் வசனம், ரெஜினாவின் நடிப்பு இரண்டும் அருமை.\nஹோட்டலில் தங்க பிஸ்கட் பையைப் பறிகொடுத்த கோஷ்டி அதைப் பறித்த இளைஞர்களைத் தேடி அலையும் காட்சிகள் சுவாரஸ்யம் கூட்டுகின்றன. காதல் சித்தரிக்கப்பட்டுள்ள விதம் ரசிக்கும்படி உள்ளது.\nநகைக்கடையைத் திருடத் திட்டமிட்டிருக்கும் சம்பவம் காவல்துறைக்கு முன்கூட்டியே தெரிய வரும் சூழலில் காவல் துறை அதைக் கையா ளும் விதம் சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது. திட்டத்தைத் தெரிந்துகொண்ட கடை உரிமையாளர் அதைக் கையாளும் விதமும் ஏகப்பட்ட கேள்விகளை எழுப்புகிறது.\nஆனால் இதையெல்லாம் யோசிக்கவிடாத அளவுக்குத் திரைக்கதை றெக்கை கட்டிப் பறப்பது படத்தின் பலம்.\nநடுநிசி நாய்களில் மனப் பிறழ்வு கொண்டவராக வந்த வீரா இதில் படம் நெடுகத் தந்திரக்காரத் திருடனாக வருகிறார். திட்டம் போடுதல், களத்தில் இறங்கித் திருடுதல், வாய் வீச்சு ஆகியவற்றில் அவர் நடிப்பு கச்சிதம். கலகலப்புடன் கூடிய கதையில் அவர் கொஞ்சம் இலகுவாக நடித்திருக்கலாம்.\nமூவரில் ஒருவரான தர்புகா சிவா பொழியும் காமெடித் தூறல் ஈர்ப்பை விதைத்துச் செல்கிறது.\nநரேன், ‘பட்டியல்’ சேகர் ஆகிய இருவரும் அழுத்தமாக நடித்திருக்கிறார்கள். பட்டியல் சேகரின் முக பாவங்கள் மனதில் நிற்கின்றன. இளவரசு கொடுத்த வேலையை வழக்கம்போல ஒழுங்காகச் செய்கிறார்.\nதிரைக்கதையின் வேகத்தையும், போக்கையும் புரிந்துகொண்ட பிரவீண்குமாரின் எடிட்டிங், சந்தீப் சவுதாவின் பின்னணி இசை ஆகியவை படத்துக்கு பெரிதும் துணை நிற்கின்றன. பாடல் இசை ஜி.வி.பிரகாஷ் குமார். பரவாயில்லை என்று சொல்ல லாம்.\nவிறுவிறுவென நகரும் திரைக்கதையில் நகைக் கடைத் திருட்டை இரண்டாம் பாதியில் இருந்து தொடங்கியிருக்கிறார், இயக்கு நர். அதை இன்னும் சற்று முன்னதாகவே தொடங்கியிருக்கலாம்.\nகாவல்துறை இந்த விஷயத்தைக் கையாளும் விதத்தில் கொஞ்சம் நம்பகத்தன்மையைக் கூட்டியிருக்கலாம். இப்படிச் சில குறைகள் இருந்தாலும் படத்தின் விறுவிறுப்பு எல்லாவற்றையும் மறக்கடிக்கிறது.\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: ராஜதந்திரம் - திரை விமர்சனம்\nஒ.அப்போ பார்த்துட வேண்டியது தான் ...............நன்றி சிவா\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: ராஜதந்திரம் - திரை விமர்சனம்\nRe: ராஜதந்திரம் - திரை விமர்சனம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.eegarai.net/t55676-topic", "date_download": "2018-04-26T13:30:20Z", "digest": "sha1:B7GR4C5KASDB5U7RLZW55SMWYCNBW6AY", "length": 17371, "nlines": 193, "source_domain": "www.eegarai.net", "title": "காட்டுக்குள் புலி... கல்யாண கிலி!", "raw_content": "\nருசியான ஊறுகாய்கள் - அரு /அரை நெல்லிக்காய் தொக்கு \nஅரை நெல்லிக்காய் - அரை நெல்லிக்காய் தொக்கு \nஎச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி\nஉடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்\nஎனக்குள் ஒரு கவிஞன் SK\nஉலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி\nபராமரிப்பு பணி முடிந்தது பழநி கோயில் வின்ச் சேவை துவக்கம்: பக்தர்கள் மகிழ்ச்சி\nபாலகுமாரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக\nஅறிமுகம்---- வாலி மோகன் தாஸ்\n2 மணி நேரம் பொறுக்க முடியாதா கஸ்தூரி..\nஎதுக்காக உன் காதலியை கிணத்துல தள்ளிவிட்டே...\nஅமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி\nநிலக்கரியை விட கருப்பாக இருக்கும் கிரகம் கண்டுபிடிப்பு\nகவர்ச்சி நடிகைகிட்ட பிடிச்சது, அவரோட நடிப்பு...\nஏப்ரல் 30-ம் தேதி வைகை ஆற்றில் இறங்குகிறார் கள்ளழகர்\nகோயில்களுக்கு செல்ல குழந்தைகளை கண்டிப்பாக பழக்குங்கள்.....\nஇந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'\nஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்\nஉப்புமா சாப்பிடுவது மோன நிலை...\nநீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு\n‘சிற்றெறும்பு கட்டெறும்பு’ - கமல்ஹாசன், அமைச்சர் ஜெயக்குமார் வார்த்தை ஜாலத்தால் ஒருவருக்கொருவர் கிண்டல்\nஉ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்\nகண்மணி வார நாவல் 25.04.2018\nதிகில் மன்னன் ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக\nதாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து\nபலாத்காரத்துக்கு ஆளாகும் ஆண் குழந்தைகளுக்கும் இழப்பீடு'\nஇந்தியர்களை பாதிக்கும் ‘எச்-4’ விசா ரத்து நடவடிக்கைக்கு அமெரிக்க எம்.பி.க்கள் எதிர்ப்பு, ஐ.டி. துறையும் கண்டனம்\n'பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்\n5,000 குஜராத் விவசாயிகள் தற்கொலைக்கு மனு\nவாழ்க்கையை ஓஹோன்னு வாழ கன்ஃபூசியஸ் சொன்ன 10 கட்டளைகள்...\nஇரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு\nரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது: மக்கள் மன்ற மாநில செயலாளர் பேச்சு\n2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்: ஜூன் 16-ம் தேதி இந்தியா-பாக். மோதல்\nசுப்ரீம் கோர்ட் எதிர்காலம்: ஆலோசிக்க நீதிபதிகள் கோரிக்கை\nநாடு முழுவதும் 24 போலி பல்கலை.,கள்\nகாங்., கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக்கறை: சல்மான் குர்ஷித் சர்ச்சை\nகாட்டுக்குள் புலி... கல்யாண கிலி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nகாட்டுக்குள் புலி... கல்யாண கிலி\nகாட்டுக்குள் புலி... கல்யாண கிலி\nஒரு ஃபேஷன் ஷோவில் ஜெயித்தபோது, பார்த்த த்ரிஷா இல்லை இந்தப் பெண். 'வாழ்க்கை வாழ்வதற்கே’ பக்குவம் நிரம்பி வழிகிறது உடல் மொழியிலும் இதழ் மொழியிலும்\n'' 'த்ரிஷாவுக்குக் கல்யாணம் முடிஞ்சிருச்சு. கன்ஃபர்ம். ஆந்திரா பையன்’னு கோடம்பாக்கத்தில் வதந்தி பலமா இருக்கே\n''காதல் கிசுகிசுக்கள் தாண்டி, இப்போ கல்யாண கலாட்டாவா சினிமாவில் புரமோஷன் கிடைக்குதோ இல்லையோ, வதந்திகளில் அது மிஸ் ஆகிறதே இல்லை. என் கேரியரை ஸ்பாயில் பண்ண ணும்னு யாருக்கு இவ்வளவு ஆசைன்னு எனக்குப் புரியலை. எனக்கு வெளிப்படையா யாரும் எதிரி கிடையாது. மூணு மாசத்துக்கு ஒரு தடவை இப்படிப் புதுசு புதுசா ஏதாச்சும் வதந்தி கிளம்பிடுது. கல்யாணம் பண்ணிக்கணும்னு முடிவு பண்ணிட்டா, எல்லாருக்கும் சொல்லிட்டுத்தான் செய்வேன். நான் வெளிப்படையான பெண். என்னோட எந்த முடிவுக்கும் என் குடும்ப ஆதரவும் இருக்கும். அடுத்தடுத்து தமிழ், தெலுங்குனு படங்களுக்கு கால்ஷீட் கொடுத்துட்டே இருக்கேன். இப்போ கல்யாணம் பத்தி யோசிக்க நேரம் இல்லை சினிமாவில் புரமோஷன் கிடைக்குதோ இல்லையோ, வதந்திகளில் அது மிஸ் ஆகிறதே இல்லை. என் கேரியரை ஸ்பாயில் பண்ண ணும்னு யாருக்கு இவ்வளவு ஆசைன்னு எனக்குப் புரியலை. எனக்கு வெளிப்படையா யாரும் எதிரி கிடையாது. மூணு மாசத்துக்கு ஒரு தடவை இப்படிப் புதுசு புதுசா ஏதாச்சும் வதந்தி கிளம்பிடுது. கல்யாணம் பண்ணிக்கணும்னு முடிவு பண்ணிட்டா, எல்லாருக்கும் சொல்லிட்டுத்தான் செய்வேன். நான் வெளிப்படையான பெண். என்னோட எந்த முடிவுக்கும் என் குடும்ப ஆதரவும் இருக்கும். அடுத்தடுத்து தமிழ், தெலுங்குனு படங்களுக்கு கால்ஷீட் கொடுத்துட்டே இருக்கேன். இப்போ கல்யாணம் பத்தி யோசிக்க நேரம் இல்லை\n''சாகச விரும்பி த்ரிஷா, சமீபத்தில் என்ன சாகசம் பண்ணினாங்க\n''ஜெய்ப்பூர் ரந்தம்பூர் புலிகள் சரணாலயத்துக்கு ஒரு ட்ரிப் அடிச்சுட்டு வந்தேன். எப்பவும் ஃபாரின் ட்ரிப்தான் போவோம். இந்தத் தடவை இந்தியாவிலேயே எங்காவது சுத்திப் பார்க்கலாம்னு தோணுச்சு. செல்போன், லேப்டாப், பேப்பர், டி.வி, சினிமான்னு எல்லாத்துக்கும் லீவ் விட்டுட்டு, ஒரு வாரம் காட்டுக்குள்ளேயே இருந்தோம். உள்ளே போயிட்டு ரெண்டு, மூணு நாள் கழிச்சுத்தான் புலிகளைப் பார்க்க முடிந்தது. ரெண்டு அடி எடுத்துவெச்சா... தொட்டுடலாம்கிற தூரத்துல புலிகள். வாவ்... சான்ஸே இல்லை. அந்த ராத்திரியில் நெருப்புத் துளி மாதிரி புலிகளோட கண்ணு மினுமினுங்குது. கம்பீரமான அழகு\nநாங்க தங்கியிருந்த ரூம் ஜன்னலில் வந்து மயில்கள் உள்ளே எட்டிப் பார்க்கும். ஏதேதோ பறவைகள் தலையை நீட்டி நீட்டி ஆட்டிட்டு எங்களை முறைச்சுப் பார்க்கும். என்னோட என் ஃப்ரெண்ட்ஸ் சபீனா, ஹேமா வந்திருந்தாங்க. சேட்டையும் அரட்டையுமா கிட்டத்தட்ட த்ரீ இடியட்ஸ் மாதிரி காட்டுக்குள்ளே திரிஞ்சுட்டு இருந்தோம். இனிமே, சம்மர் ஹாலிடேஸ்களை இந்தியாவில்தான் கொண்டாடணும்னு முடிவு பண்ணி இருக்கேன். நான் இதுவரை போன வெளிநாடுகளைவிட ரந்தம்பூர்தான் பெஸ்ட் பிக்னிக் ஸ்பாட்\n''இந்தி 'விண்ணைத்தாண்டி வருவாயா’வில் நீங்க நடிப்பதாகச் செய்தி வந்தது. ஆனா, இப்ப வேற யாரோ நடிக்கிறாங்க. இந்தியில் வேறு எந்தப் படத்திலும் நடிக்கிற மாதிரி தெரியலையே\n''இந்தி 'விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்துக்கு நான் 25 நாள் கால்ஷீட் கொடுத்திருந்தேன். ஆனா, கௌதம் அந்த டேட்ஸை யூஸ் பண்ணிக்கலை. அதனால், என்னால் அந்தப் படத்தில் நடிக்க முடியலை. ஆனா, பிரச்னை எதுவும் இல்லை. இப்பவும் எங்க ஃப்ரெண்ட்ஷிப் அப்படியேதான் இருக்கு. இந்தியில் இதுவரை வேறு எந்தப் படத்திலும் கமிட் ஆகலை. ஒரு பெரிய பேனரோடு பேசிட்டு இருக்கேன். சீக்கிரமே நியூஸ் சொல்றேன்\n''தேர்தல் சமயம்... எந்தக் கட்சிக்கு உங்க ஓட்டு\n ஆனா, நிச்சயம் நான் இந்தத் தேர்தலில் ஓட்டுப் போடுவேன். எப்பவும் ஜனநாயகக் கடமையைச் செய்யத் தவற மாட்டாள் இந்த த்ரிஷா... த்ரிஷா... த்ரிஷா. எக்கோ எஃபெக்ட் கிடைக்குதா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.techtamil.com/computer-tips-tricks-in-tamil/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2018-04-26T13:07:07Z", "digest": "sha1:K3RV5JLTG3YNRQDMDZTOQSMGGHJUNADA", "length": 16531, "nlines": 145, "source_domain": "www.techtamil.com", "title": "கட்டணம் எதுவும் செலுத்தாமல் Google Talks – TechTamil News", "raw_content": "\nContact / அறிமுகம் / தொடர்புக்கு\nகட்டணம் எதுவும் செலுத்தாமல் Google Talks\nகட்டணம் எதுவும் செலுத்தாமல் Google Talks\nகட்டணம் எதுவும் செலுத்தாமல் நம் பயன்பாட்டிற்குக் கிடைக்கக் கூடிய Office application Google Talks ஆகும். Google Talks ல் documentகளை உருவாக்கலாம், presentation கோப்புகளை வடிவமைத்துப் பயன்படுத்தலாம். மேலும் spread sheet, படங்கள், chartகள் என இது போன்ற அனைத்தையும் உருவாக்கிப் பதிந்து வைத்துப் பயன்படுத்தலாம். அது மட்டுமின்றி நீங்கள் உருவாக்கும் கோப்புகளை அடுத்தவர்களும் பார்க்கலாம், திருத்தங்களை மேற்கொள்ளலாம் என எண்ணினால் அதற்கான அனுமதியை வழங்கும் வசதியையும் Google Talks தருகிறது.\nமேலே சொல்லப்பட்ட கோப்புகளுடன், வீடியோ கோப்புகளையும் Google Talks Office தொகுப்பில் பதிந்து வைத்துப் பயன்படுத்தலாம். வீடியோ கோப்புகளை பதிவேற்றம் செய்திட Youtube, daily motion அல்லது facebook போன்ற தளங்கள் இருந்தாலும், Google Talks தொகுப்பின் மூலம் இவற்றைக் கையாள்வது சில கூடுதல் வசதிகளைத் தருகிறது. Google Talks தொகுப்பில் video கோப்புகளை எப்படி பதிவேற்றம் செய்வது மற்றும் அவற்றை பகிர்ந்து கொண்டு பயன்படுத்த, நம் நண்பர்களுக்கும் உறவுகளுக்கும் அனுமதி எப்படி வழங்குவது என்பதை இங்கு பார்க்கலாம்.\nமுதலில் Google Talks சென்று உங்கள் Google account பதிவுத் தகவல்கள் மூலம் login செய்திடவும்.\nTalks தளம் கிடைத்தவுடன், புதிதாக இருக்கும் பதிவேற்ற button click செய்திடவும்.\nகோப்புகளை பதிவேற்றம் செய்திட file dialog box கிடைக்கும். இப்போது உங்கள் desktop அல்லது வேறு கோப்பறையில் இருக்கும் video கோப்பை அப்படியே இழுத்து வந்து இந்த “File upload” பகுதியில் விட்டுவிடலாம்.\nநீங்கள் பதிவேற்றம் செய்திட விரும்பும் அனைத்து video கோப்புகளையும் இழுத்துவிட்டவுடன், Start upload என்ற buttonல் click செய்திடவும்.\nஇதற்கு முன் நீங்கள் இந்த video கோப்புகளைக் குறிப்பிட்ட கோப்பறையில் save செய்திட விரும்பலாம். குறிப்பிட்ட ஒரு கோப்பறையைத் தேர்ந்தெடுத்து அமைக்க, Destination folder பட்டனில் click செய்திடவும்.\nபின்னர் நீங்கள் விரும்பும் கோப்பறையைத் தேர்ந்தெடுக்கவும். வீடியோ கோப்புகளை பதிவேற்றம் செய்யப்படுகையில், பிரவுசரை மூடக்கூடாது.\nVideo கோப்புகள் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்பட்ட பின்னர், கீழ்க்காணும் செய்தி உங்களுக்குக் காட்டப்படும்.\nஇனி உங்கள் Google Talks கணக்கு மூலம் இந்த கோப்புகளை எப்படிப் பார்ப்பது மற்றும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது என்று பார்க்கலாம்.\nVideo கோப்புகளை காண Google Talks சென்று, All documents என்பதில் click செய்திடவும்.\nபின்னர் அங்கு காட்டப்படும் documents பட்டியல் வரிசையில் நீங்கள் பார்க்க விரும்பும் வீடியோ கோப்பு மீது click செய்திடவும்.\nகுறிப்பிட்ட video பிரவுசரின் புதிய window ஒன்றில் இயங்கத் தொடங்கும். இதனை நீங்கள் காணலாம், உங்கள் கணணிக்கு தரவிறக்கம் செய்து கொள்ளலாம். தரவிறக்கம் செய்து கொண்டால், அதனை இணைய இணைப்பின்றியே பார்க்கலாம். இவ்வாறு பதிவேற்றம் செய்யப்பட்ட video கோப்புகளை, உங்கள் Google Talks கணக்கு மூலமாகத்தான் பார்க்க முடியும். Youtube மூலம் பார்க்க முடியாது. உங்கள் நண்பர்களுடன் இந்த வீடியோ கோப்புகளை பகிர்ந்து கொள்ள வேண்டும் என எண்ணினால், Sharing settings என்ற button click செய்திடவும். இங்கு கிடைக்கும் இடத்தில் உங்கள் நண்பர் மற்றும் உறவினரின் மின்னஞ்சல் முகவரியினை அமைக்கவும். ஆனால் video கோப்பு privateடாக உங்களுக்கு மட்டுமே வேண்டும் எனில், Private என்ற boxல் tick அடையாளம் ஏற்படுத்தவும்.\nGoogle Talks MP4, FLV, MPEG, AVI, WMV, 3GP போன்ற பெரும்பாலான வீடியோ formatகளை இயக்குகிறது. எனவே உங்கள் மொபைல் போனில் நீங்கள் எடுத்த video fileகளையும் உடனுடக்குடன், Google accounts சென்று அனுப்பலாம். வீடியோ converter எல்லாம் தேவை இருக்காது. Google Talks video கோப்புகள் அதிக பட்சம் 1920 X 1080 என்ற resolution திறனுடன் இருக்கலாம். video கோப்பின் அதிக பட்ச அளவு ஒரு GB வரை அனுமதிக்கப்படுகிறது. இந்த வகையில் நம் video கோப்புகளை பதிந்து வைத்துப் பாதுகாக்க Google Talks சிறந்த சாதனமாக உள்ளது.Google Talks பதிவிறக்கம் செய்ய http://www.google.com/talk/\n2011-ம் ஆண்டு Google-ல் இந்தியர்கள் அதிகமாக தேடியத...\nஇணையத்தில் பல தேடியந்திரங்கள் இருந்தாலும் Google ஒரு முதன்மையான தளம் என்பதில் சந்தேகமில்லை. இப்பொழுது இந்த தளத்தின் ஒரு வருட அறிக்கையை வெளியிட்டு உள்ள...\nஅனைத்து கூகுள் தகவல்களையும் தரவிறக்கம் செய்வதற்கு...\nபலரும் பயன்படுத்தும் சேவை கூகுள் நிறுவனத்தினால் அளிக்கப்படுபவை. நாம் பயன்படுத்தும் அல்லது சேமிக்கும் அனைத்து தகவல்களும் திருடப்பட்டால் நம் நிலை மிகவும...\nGoogle +ல் இருந்து Tweet செய்ய...\nஒவ்வொரு முறையும் நாம் Google + மற்றும் twitterல் தனித் தனியாக தான் செய்திகளை பதிவு செய்கிறோம். ஆனால் இனி Google + பயனாளர்கள் Google +ல் இருந்தே எளிதாக...\nஇந்திய கிரிக்கெட் வீரர்கள் இப்போது Google+ல்...\nGoogle நிறுவனம் தனது புதிய சமூக தளமான Google +ஐ வெற்றிப் பாதையில் அழைத்து செல்ல பலமுயற்சிகளை கையாண்டு வருகிறது. குறிப்பாக இந்திய வாசகர்களை கவர்வதில் அ...\nGoogle Music விளம்பரப் பாடல்\nGoogle நிறுவனம் Apple-ளுக்குப் போட்டியாக Music Store திறந்தது குறித்து சென்ற வாரம் தகவல் வெளியானது. அந்த storeக்கான விளம்பரப் பாடல் ஒன்றை Google வெளிய...\nGoogle + பயனாளரை தேடிக் கொடுக்கும் தளம்...\nசமூக இணையதளங்களில் தற்போது பிரபலமாகி வருகிறது Google + Facebook பயனாளர்களைத் தேட பல வழிகள் இருக்கிறது. ஆனால் Google + பயனாளர்களைத் தேடுவது சற்று சிரமம...\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nபிளாக்கர் பதிவில் Blogger Poll வசதியை இணைப்பது எப்படி\n​பயர்பாக்ஸ் v55 பதிப்பால் 1691 டேப்களை 15 வினாடிகளில் ரீலோட் செய்யமுடியும்.\n500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது:பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு :\nமொபைல் வழியே இணைய தளத்தில் பார்க்கும் தகவல்களை pdf கோப்புகளாக மாற்றுவது எப்படி\nயூ -டியூப் உங்கள் மொபைல் டேட்டாவை மிச்சப்படுத்தும் புது வழியை காட்டுகிறது …\nகிரெடிட் கார்டோ டெபிட் கார்டோ இல்லாமலே வாகன சேவை:\nகூகுளின் DUO – VEDIO CALLING செயலி அறிமுகம்:\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nGoogle Music விளம்பரப் பாடல்\n2011-ம் ஆண்டு Google-ல் இந்தியர்கள் அதிகமாக தேடியது என்ன\nஇந்திய கிரிக்கெட் வீரர்கள் இப்போது Google+ல்\nGoogle +ல் இருந்து Tweet செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.chillzee.in/stories/tamil-siru-kathaigal/11073-sirukathai-vennilavu-thaan-vanathai-veruthidumaa-bindu-vinod", "date_download": "2018-04-26T13:05:41Z", "digest": "sha1:IZ4G4S532RZXJA2KSP6SEWZQO6BY5G7Z", "length": 48658, "nlines": 631, "source_domain": "www.chillzee.in", "title": "2018 - தமிழ் புத்தாண்டு சிறப்பு சிறுகதை - வெண்ணிலவு தான் வானத்தை வெறுத்திடுமா? - பிந்து வினோத் - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nவத்சலாவின் கதைக்கான முடிவை சொல்லுங்கள்\nஇன்றே போட்டியில் கலந்துக் கொள்ளுங்கள்\n2018 - தமிழ் புத்தாண்டு சிறப்பு சிறுகதை - வெண்ணிலவு தான் வானத்தை வெறுத்திடுமா\n2018 - தமிழ் புத்தாண்டு சிறப்பு சிறுகதை - வெண்ணிலவு தான் வானத்தை வெறுத்திடுமா\n2018 - தமிழ் புத்தாண்டு சிறப்பு சிறுகதை - வெண்ணிலவு தான் வானத்தை வெறுத்திடுமா\n2018 - தமிழ் புத்தாண்டு சிறப்பு சிறுகதை - வெண்ணிலவு தான் வானத்தை வெறுத்திடுமா\n“நான் தப்பு பண்ணிட்டேன்.... இப்படி இருக்கும்னு நான் யோசிக்காமலே விட்டுட்டேன்...”\nகாரில் அவளின் பக்கத்தில் அமர்ந்திருந்த பவித்ராவின் முனுமுனுப்பு ஆகான்ஷாவிற்கு தெளிவாக கேட்டது...\nஎன்ன என்று கேட்கலாமா வேண்டாமா\nஅவள் யோசிக்கும் போதே பவித்ரா தலையை இல்லை என சொல்வது போல ஆட்டிவிட்டு ஜன்னல் பக்கமாக வேடிக்கை பார்க்க ஆரம்பித்தார்.\nஆகான்ஷாவும் தன் காதில் விழுந்ததை அத்துடன் மறந்தே போனாள்...\nஆனால், அன்று இரவு தூங்கும் முன் குட் நைட் சொல்ல வந்த ஆகான்ஷாவை தன் அருகே அமர வைத்த பவித்ரா,\n“அகி, நீ எனக்கு ஒரு ஹெல்ப் செய்யனும்... சலோமி சொன்னதை அவக் கிட்ட சொல்லனும்... செய்வீயா” என்றுக் கேட்டார்.\nஅவர்கள் இருவரும் அன்று மாலையில் அந்த சலோமியை தான் சந்தித்து விட்டு வந்தார்கள்...\nஏதோ குழந்தை பற்றி பேசினார்கள்...\nஆனால், யார் இந்த ‘அவள்’ அவளிடம் என்ன சொல்ல வேண்டும்\nகேள்விகளை கேட்க நினைத்தவள் பெரியவரின் கண்களில் தூக்கம் தெரியவும், காலையில் கேட்டுக் கொள்ளலாம் என முடிவு செய்தாள்...\n“நீங்க தூங்குங்க ஆன்ட்டி, நான் சொல்றேன்...” என்றாள்.\nபெரிய மிஸ்ட்ரியாக இருக்கிறதே என்ற யோசனையுடன் தூங்க சென்ற ஆகான்ஷா காலையில் பவித்ராவை உயிர் பிரிந்த நிலையில் தான் சந்தித்தாள்...\nபவித்ரா சொன்ன ‘அவள்’ யார் என்ன சொல்ல சொன்னார்கள் என்பது ஆகான்ஷாவிற்கு தெரியாமலே போனது\n“அமர் லேட் ஆகுது சீக்கிரம் சீக்கிரம்...” சத்தமாக சொல்லியபடி கட்டி இருந்த வீட்டு சேலையை கழற்றி விட்டு, ஆபிஸுக்கு செல்ல வேறு சேலை எடுத்தவளின் கண்ணில் அவன் பட்டான்...\nகன்னம் குழிய புன்னகைத்த படி, அவளை பார்த்துக் கொண்டிருந்தான்...\nமுன்தினம் வந்திருந்த மேகசினில் வெளி வந்திருந்த அவனின் பேட்டிக்காக போடப் பட்டிருந்த படம் அது...\nஅந்த படத்தை எடுத்த புகைப்படக்காரருக்கு தங்க மெடல் கொடுக்கலாம்... அத்தனை தத்ருபமாக இருந்தது...\nஅவள் நின்றிருந்த கோலத்திற்கு, போட்டோவில் அவளை பார்த்து புன்னகைப்பவனை பார்க்கும் போதே அவளுள் ஏதேதோ தோன்றியது...\nஇல்லை இதெல்லாம் தவறு... அப்படி நினைக்க கூடாது...\nமனதை கட்டுப்படுத்த முயன்றபடி மேகசினை மூடினாள்... மூடும் முன் மீண்டும் ஒருமுறை அவனின் படத்தை பார்த்தாள்...\nஅவனின் உதடுகள் புன்னகைத்துக் கொண்டிருந்தது... ஆனால் அந்த கண்களில் தெரிந்த வலி + சோகம், அவளுக்கு புரிந்தது...\n” என மெல்லியக் குரலில் சொல்லியவள், உடனேயே தவறு செய்து விட்டவளை போல குற்ற உணர்வுடன் அந்த மேகசினை கப்-போர்டை திறந்து உள்ளே வைத்தாள்.\nஇது அவளுடைய சீக்ரட் கப்-போர்ட்\nஅங்கே இது போன்று பல மேகசின்கள் இருந்தன... எல்லா மேகசின்களிலும் ஒரே ஒரு ஒற்றுமை இருந்தது...\nஎல்லாவற்றிலும் அவன் இருந்தான்... ஒவ்வொரு மேகசினிலும் அவனின் போட்டோ, பேட்டி, செய்தி என்ற ஏதோ ஒன்று இருந்தது...\nகப்-போர்டை பூட்டி சாவியை தன் கைப்பையினுள் வைத்துவிட்டு, வேக வேகமாக சேலை கட்டிக் கொண்டு அறையை விட்டு வெளியே வந்தாள்.\nஅங்கே அமர் அவளுக்கு முன்பே தயாராகி ஸ்போர்ட்ஸ் மேகசின் ஒன்றை புரட்டிக் கொண்டிருந்தான்...\n“சாரி, நான் தான் லேட்” என்றாள் அவள் அன்பு பொங்க\nபெங்களூருவில் பனர்கட்டா பகுதியில் அதிக கூட்டம் இல்லாத இடத்தில இருந்தது அந்த ‘கவி எலக்ட்ரானிக்ஸ்’.\nவிஷாலி அங்கே வேலைக்கு சேர்ந்து மூன்று வருடங்கள் நிறைவுபெற்றுவிட்டது.\nஊருக்கு தள்ளி இருக்கும் ஒரே காரணத்திற்காகவே அந்த கம்பெனியை தேர்வு செய்து வேலைக்கு சேர்ந்தாள் அவள்...\nஅதன் உரிமையாளர் ஷிவ்ராஜ் நடுத்தர வயதானவர். அவருடைய அப்பா ஆரம்பித்த கம்பெனியை பல மடங்கு பெரிதாக்கியவரும் கூட.\nஇந்த மூன்று ஆண்டுகளில் தன் நேர்மை மற்றும் உழைப்பால் ஷிவ்ராஜின் வலதுக் கையை போல அந்த கம்பெனிக்கு இன்றியமையாதவளாக மாறி போயிருந்தாள் விஷாலி.\nசிறுகதை - அம்மா கணக்கு – சசிரேகா\n2018 - தமிழ் புத்தாண்டு சிறப்பு \"முடிவை கண்டுபிடியுங்கள் போட்டி\" - சிறுகதை - என் நெஞ்சிலே பனிமூட்டமா\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 15 - வினோதா\nதொடர்கதை - பார்த்தேன் ரசித்தேன்.. - 09 - ஆதி\nதொடர்கதை - மலையோரம் வீசும் காற்று – 16 - வினோதர்ஷினி\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 26 - RR\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 25 - RR\n+1 # RE: 2018 - தமிழ் புத்தாண்டு சிறப்பு சிறுகதை - வெண்ணிலவு தான் வானத்தை வெறுத்திடுமா\n# RE: 2018 - தமிழ் புத்தாண்டு சிறப்பு சிறுகதை - வெண்ணிலவு தான் வானத்தை வெறுத்திடுமா\n+1 # RE: 2018 - தமிழ் புத்தாண்டு சிறப்பு சிறுகதை - வெண்ணிலவு தான் வானத்தை வெறுத்திடுமா\n# RE: 2018 - தமிழ் புத்தாண்டு சிறப்பு சிறுகதை - வெண்ணிலவு தான் வானத்தை வெறுத்திடுமா\n+1 # RE: 2018 - தமிழ் புத்தாண்டு சிறப்பு சிறுகதை - வெண்ணிலவு தான் வானத்தை வெறுத்திடுமா\n# RE: 2018 - தமிழ் புத்தாண்டு சிறப்பு சிறுகதை - வெண்ணிலவு தான் வானத்தை வெறுத்திடுமா\n# RE: 2018 - தமிழ் புத்தாண்டு சிறப்பு சிறுகதை - வெண்ணிலவு தான் வானத்தை வெறுத்திடுமா\n# RE: 2018 - தமிழ் புத்தாண்டு சிறப்பு சிறுகதை - வெண்ணிலவு தான் வானத்தை வெறுத்திடுமா\n+1 # RE: 2018 - தமிழ் புத்தாண்டு சிறப்பு சிறுகதை - வெண்ணிலவு தான் வானத்தை வெறுத்திடுமா\n# RE: 2018 - தமிழ் புத்தாண்டு சிறப்பு சிறுகதை - வெண்ணிலவு தான் வானத்தை வெறுத்திடுமா\n+1 # RE: 2018 - தமிழ் புத்தாண்டு சிறப்பு சிறுகதை - வெண்ணிலவு தான் வானத்தை வெறுத்திடுமா\n# RE: 2018 - தமிழ் புத்தாண்டு சிறப்பு சிறுகதை - வெண்ணிலவு தான் வானத்தை வெறுத்திடுமா\n+1 # RE: 2018 - தமிழ் புத்தாண்டு சிறப்பு சிறுகதை - வெண்ணிலவு தான் வானத்தை வெறுத்திடுமா\n# RE: 2018 - தமிழ் புத்தாண்டு சிறப்பு சிறுகதை - வெண்ணிலவு தான் வானத்தை வெறுத்திடுமா\n+1 # RE: 2018 - தமிழ் புத்தாண்டு சிறப்பு சிறுகதை - வெண்ணிலவு தான் வானத்தை வெறுத்திடுமா - பிந்து வினோத் — நிரஞ்சனா 2018-04-15 09:54\n# RE: 2018 - தமிழ் புத்தாண்டு சிறப்பு சிறுகதை - வெண்ணிலவு தான் வானத்தை வெறுத்திடுமா\nதொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 04 - சசிரேகா\nதொடர்கதை - காதலான நேசமோ - 04 - தேவி\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 15 - வினோதா\nகவிதைத் தொடர் - 06. தவமிருக்கிறேன் என்னவனே - கார்த்திகா கார்த்திகேயன் [Updated]\nதொடர்கதை - பார்த்தேன் ரசித்தேன்.. - 09 - ஆதி\nTamil Jokes 2018 - உன் பொண்டாட்டி தான்டா\nதொடர்கதை - என் அருகில் நீ இருந்தும் - 07 - பூஜா பாண்டியன்\nகவிதை - வந்தாய் கண்ணா - தமிழ் தென்றல்\nதொடர்கதை - பொன் எழில் பூத்தது புது வானில் - 20 - மீரா ராம்\nகவிதை - உன்னுடன் - அக்ஷு ஆரா\nதொடர்கதை - மோனத்திருக்கும் மூங்கில் வனம் - 01 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - மலையோரம் வீசும் காற்று – 16 - வினோதர்ஷினி\nதொடர்கதை - என் அருகில் நீ இருந்தும் - 07 - பூஜா பாண்டியன்\nதொடர்கதை - பொன் எழில் பூத்தது புது வானில் - 20 - மீரா ராம்\nதொடர்கதை - பார்த்தேன் ரசித்தேன்.. - 09 - ஆதி\nதொடர்கதை - மோனத்திருக்கும் மூங்கில் வனம் - 01 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - மலையோரம் வீசும் காற்று – 16 - வினோதர்ஷினி\nTamil Jokes 2018 - உன் பொண்டாட்டி தான்டா\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 11 - ஸ்ரீ\n2018 - தமிழ் புத்தாண்டு சிறப்பு \"முடிவை கண்டுபிடியுங்கள் போட்டி\" - சிறுகதை - என் நெஞ்சிலே பனிமூட்டமா\nதொடர்கதை - ஒளிதருமோ என் நிலவு... - 27 - தீபாஸ்\nதொடர்கதை - யாது வரினும்.. எவ்வாறாயினும்… - 01 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - ஒளிதருமோ என் நிலவு... - 01 - தீபாஸ்\nதொடர்கதை - யாது வரினும்.. எவ்வாறாயினும்… - 11 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - என் காதலின் காதலி - 15 - ஸ்ரீ\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 09 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 05 - ராசு\nதொடர்கதை - என் காதலின் காதலி - 01 - ஸ்ரீ\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 26 - RR\nதொடர்கதை - ஒளிதருமோ என் நிலவு... - 02 - தீபாஸ்\nதொடர்கதை - என் காதலின் காதலி - 02 - ஸ்ரீ\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 09 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - கன்னத்து முத்தமொன்று - 15 - வத்ஸலா\nதொடர்கதை - கடவுள் போட்ட முடிச்சு - 03 - ஜெயந்தி\nதொடர்கதை - மழையோடுதான் வெயில் சேர்ந்ததே - 09 - சித்ரா. வெ\nதொடர்கதை - இரு துருவங்கள் - 01 - மித்ரா\nதொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 03 - சசிரேகா\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 11 - ஸ்ரீ\nதொடர்கதை - காதலான நேசமோ - 03 - தேவி\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 14 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - மலையோரம் வீசும் காற்று – 16 - வினோதர்ஷினி\nதொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 05 - ராசு\n2018 - தமிழ் புத்தாண்டு சிறப்பு \"முடிவை கண்டுபிடியுங்கள் போட்டி\" - சிறுகதை - என் நெஞ்சிலே பனிமூட்டமா\nதொடர்கதை - தாபப் பூவும் நான்தானே… பூவின் தாகம் நீதானே - 20 - மீரா ராம்\nதொடர்கதை - என் சிப்பிக்குள் நீ முத்து - 29 - தமிழ் தென்றல்\nதொடர்கதை - மோனத்திருக்கும் மூங்கில் வனம் - 01 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - என் அருகில் நீ இருந்தும் - 07 - பூஜா பாண்டியன்\nதொடர்கதை - பொன் எழில் பூத்தது புது வானில் - 20 - மீரா ராம்\nசிறுகதை - புதுவரவு – அனுசுயா\nதொடர்கதை - மறைந்துவிடாதே மாயா – 23 - லதா சரவணன்\nதொடர்கதை - ஒளிதருமோ என் நிலவு... - 27 - தீபாஸ்\n2018 - தமிழ் புத்தாண்டு சிறப்பு \"முடிவை கண்டுபிடியுங்கள் போட்டி\" - சிறுகதை - என் நெஞ்சிலே பனிமூட்டமா\nதொடர்கதை - ஒளிதருமோ என் நிலவு... - 24 - தீபாஸ்\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 07 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 08 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 26 - RR\nதொடர்கதை - விழிகளிலே காதல் விழா - 46 - தேவி\nதொடர்கதை - ஒளிதருமோ என் நிலவு... - 25 - தீபாஸ்\nதொடர்கதை - ஒளிதருமோ என் நிலவு... - 27 - தீபாஸ்\nதொடர்கதை - ஒளிதருமோ என் நிலவு... - 26 - தீபாஸ்\nதொடர்கதை - ஆதிபனின் காதலி - 21 - சசிரேகா\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 25 - RR\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 09 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - உன் நேசமதே.. என் சுவாசமாய்.. - 36 - சித்ரா. வெ\nதொடர்கதை - என் காதலின் காதலி - 13 - ஸ்ரீ\nதொடர்கதை - என் காதலின் காதலி - 14 - ஸ்ரீ\nதொடர்கதை - கடவுள் போட்ட முடிச்சு - 02 - ஜெயந்தி\nதொடர்கதை - உன் நேசமதே.. என் சுவாசமாய்.. - 37 - சித்ரா. வெ\nதொடர்கதை - என் காதலின் காதலி - 15 - ஸ்ரீ\nதொடர்கதை - மழையோடுதான் வெயில் சேர்ந்ததே - 07 - சித்ரா. வெ\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 14 - வினோதா\nதொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 03 - சசிரேகா (+17)\nதொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 05 - ராசு (+14)\nதொடர்கதை - யாது வரினும்.. எவ்வாறாயினும்… - 11 - சாகம்பரி குமார் (+11)\nதொடர்கதை - காதலான நேசமோ - 01 - தேவி (+11)\nதொடர்கதை - கடவுள் போட்ட முடிச்சு - 03 - ஜெயந்தி (+10)\nதொடர்கதை - என் அருகில் நீ இருந்தும் - 07 - பூஜா பாண்டியன் (+9)\nதொடர்கதை - மோனத்திருக்கும் மூங்கில் வனம் - 01 - சாகம்பரி குமார் (+9)\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 11 - ஸ்ரீ (+9)\nதொடர்கதை - என் சிப்பிக்குள் நீ முத்து - 29 - தமிழ் தென்றல் (+8)\n2018 - தமிழ் புத்தாண்டு சிறப்பு சிறுகதை - வெண்ணிலவு தான் வானத்தை வெறுத்திடுமா - பிந்து வினோத் (+8)\n“அப்படி என்ன உனக்கு என்னை பார்த்து பயம் சரண்யா\nகவிதைத் தொடர் - 06. தவமிருக்கிறேன் என்னவனே - கார்த்திகா கார்த்திகேயன் [Updated] @...\nஸ்வரூப் மதுவை பார்ப்பதையும், அவள் முகத்தை திருப்பிக் கொள்வதையும் கவனித்த...\nTamil #Jokes 2018 - உன் பொண்டாட்டி தான்டா\n என்று உத்ரா யோசித்துக் கொண்டு இருந்த பொழுது, அவள்...\nகவிதை - வந்தாய் கண்ணா - தமிழ் தென்றல் @...\n2017 போட்டி சிறுகதை 44 - முதன் முறையாக பார்த்த போது... - ஜான்சி 4 seconds ago\nதொடர்கதை - என் அருகில் நீ இருந்தும்\nதொடர்கதை - கண்ணாமூச்சி ரே ரே \nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 11 - ஸ்ரீ 7 seconds ago\nமலையோரம் வீசும் காற்று - பிந்து வினோத்\nமலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று - பிந்து வினோத்\nபார்த்தேன் ரசித்தேன் - பிந்து வினோத்\nஎன் சிப்பிக்குள் நீ முத்து - தமிழ் தென்றல்\nஎன்றென்றும் உன்னுடன் - 1 - பிந்து வினோத்\nஎன்றென்றும் உன்னுடன் - 2 - பிந்து வினோத்\nஉன் நேசமதே என் சுவாசமாய் - சித்ரா V\nசாத்திரம் பேசுகிறாய் கண்ணம்மா - ஜெய்\nசர்வதோபத்ர வியூகம் - வசுமதி\nஇவள் எந்தன் இளங்கொடி - முத்துலெட்சுமி சுப்பிரமணியன்\nபொன் எழில் பூத்தது புது வானில் - மீரா ராம்\nசாம்ராட் சம்யுக்தன் - சிவாஜிதாசன்\nமுடிவிலியின் முடிவினிலே... - மது\nமறைந்து விடாதே மாயா - லதா சரவணன்\nஉன்னில் தொலைந்தவன் நானடி - பிரேமா\nகன்னத்து முத்தமொன்று - வத்ஸலா\nஉயிரில் கலந்த உறவே - சகி\nதமிழுக்கு அமுதென்று பேர் - சித்ரா\nஎன் நிலவு தேவதை - தேவிஸ்ரீ\nமறவேனா நின்னை - ஆர்த்தி N\nதாபப் பூவும் நான்தானே… பூவின் தாகம் நீதானே - மீரா ராம்\nநெஞ்சில் துணிவிருந்தால் - சகி\nஇன்பமே வாழ்வாகிட வந்தவனே - ஸ்ரீ\nவெள்ளை பூக்கள் இதயம் எங்கும் மலர்கவே - புவனேஸ்வரி\nஎன் அருகில் நீ இருந்தும்\nதொலைதூர தொடுவானமானவன் - புவனேஸ்வரி\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் - அனிதா சங்கர்\nகடவுள் போட்ட முடிச்சு - ஜெயந்தி\nநீ இல்லாத வாழ்வு வெறுமையடி - ராசு\nஎன்னவளே - கோமதி சிதம்பரம்\nகாதலான நேசமோ - தேவி\nநொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - சசிரேகா\nஇரு துருவங்கள் - மித்ரா\nமோனத்திருக்கும் மூங்கில் வனம் - சாகம்பரி\nஎன்றென்றும் உன்னுடன்... - 01 - 15\nபார்த்தேன் ரசித்தேன் - 09\nஎன் அருகில் நீ இருந்தும்\nபொன் எழில் பூத்தது புது வானில் - 20\nமோனத்திருக்கும் மூங்கில் வனம் - 01\nமலையோரம் வீசும் காற்று - 16\nஇன்பமே வாழ்வாகிட வந்தவனே - 11\nநீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 05\nஎன் சிப்பிக்குள் நீ முத்து - 29\nதாபப் பூவும் நான்தானே… பூவின் தாகம் நீதானே - 20\nமறைந்து விடாதே மாயா - 23\nஉன்னில் தொலைந்தவன் நானடி – 14\nஇரு துருவங்கள் - 01\nசாம்ராட் சம்யுக்தன் - பாகம் 01 - 11\nகடவுள் போட்ட முடிச்சு - 03\nகன்னத்து முத்தமொன்று - 15\nநொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 03\nகாதலான நேசமோ - 03\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 03\nசாத்திரம் பேசுகிறாய் .... கண்ணம்மா – 29\nஉன் நேசமதே.. என் சுவாசமாய்..\nமுடிவிலியின் முடிவினிலே - 11\nமலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று - 26\nதமிழுக்கு அமுதென்று பேர் – 13\nஎன் நிலவு தேவதை - 22\nஎன்றென்றும் உன்னுடன்... - 02 - 12\nஇவள் எந்தன் இளங்கொடி - 19\nநெஞ்சில் துணிவிருந்தால் - 03\nஉயிரில் கலந்த உறவே - 10\nவெள்ளை பூக்கள் இதயம் எங்கும் மலர்கவே – 07\nதொலைதூர தொடுவானமானவன் – 03\nஐ லவ் யூ - 12\nசிறுகதை - பட்டாம் பூச்சி – முகிலா\nசிறுகதை - புதுவரவு – அனுசுயா\nசிறுகதை - அம்மா கணக்கு – சசிரேகா\n2018 - தமிழ் புத்தாண்டு சிறப்பு சிறுகதை - வெண்ணிலவு தான் வானத்தை வெறுத்திடுமா\n2018 - தமிழ் புத்தாண்டு சிறப்பு \"முடிவை கண்டுபிடியுங்கள் போட்டி\" - சிறுகதை - என் நெஞ்சிலே பனிமூட்டமா\nகவிதைத் தொடர் - 06. தவமிருக்கிறேன் என்னவனே - கார்த்திகா கார்த்திகேயன் [Updated]\nகவிதை - வந்தாய் கண்ணா - தமிழ் தென்றல்\nகவிதை - உன்னுடன் - அக்ஷு ஆரா\nகவிதை - நீயில்லாத நான் - தமிழ் தென்றல்\nஇளம் பூவை நெஞ்சில்... - மீரா ராம்\nகாதல் ஏன் இப்படி - ஷிவானி\nஅவளும் நானும் அமுதும் தமிழும் - வசுமதி\nTamil Jokes 2018 - உன் பொண்டாட்டி தான்டா\nTamil Jokes 2018 - கிளி மாதிரி பொண்ணு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/10325-malaiyoram-veesum-katru-bindu-vinod-12", "date_download": "2018-04-26T13:24:05Z", "digest": "sha1:TLDAIRB5Q3LJOIP576VD3BDPFRBFHLMD", "length": 41784, "nlines": 598, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - மலையோரம் வீசும் காற்று – 12 - வினோதர்ஷினி - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nவத்சலாவின் கதைக்கான முடிவை சொல்லுங்கள்\nஇன்றே போட்டியில் கலந்துக் கொள்ளுங்கள்\nதொடர்கதை - மலையோரம் வீசும் காற்று – 12 - வினோதர்ஷினி\nதொடர்கதை - மலையோரம் வீசும் காற்று – 12 - வினோதர்ஷினி\nதொடர்கதை - மலையோரம் வீசும் காற்று – 12 - வினோதர்ஷினி - 5.0 out of 5 based on 1 vote\nதொடர்கதை - மலையோரம் வீசும் காற்று – 12 - வினோதர்ஷினி\n“நீ சாப்பிடுறதைப் பார்த்தால் என்னவோ சாப்பாடே பார்க்காதவ போலல இருக்கு...”\nவிசாலினியின் கிண்டலை சாதாரணமாக எடுத்துக் கொண்டு சிரித்தாள் ரச்னா. ஆனால் அவள் முன் இருந்த அரிசி உருண்டைகளை காலி செய்யும் கை & வாய் வேலையை நிறுத்தவில்லை.\nவிசாலினியின் கேள்வி காதில் விழுந்தாலும் அமைதியாக தன் வேலையை தொடர்ந்தாள் ரச்னா.\nஇந்த முறை விசாலினியும் விடுவதாக இல்லை.\nபதிலுக்கு, புரியாத விதத்தில் எதையோ முனுமுனுத்தாள் ரச்னா.\n“உன் வீட்டுல யார் இருக்கா\n“அம்மா, அப்பா எங்கே இருக்காங்க\n“என்ன தான் உன் பிரச்சனை\nரச்னா இதற்கும் பதில் சொல்லாமல் பாவமாக விசாலினியை பார்த்தாள்.\nஅவளின் அருகே இருந்த வித்யா, சத்யாவிற்கும் கூட அவளை பார்த்து பாவமாக இருந்தது.\n“அக்கா பாவம்மா...” வித்யா சொல்ல,\n“ஆமாம் பாவம்மா...” என்று ஒத்து ஊதினாள் சத்யா.\nஇருவரையும் பார்த்து முறைத்த விசாலினி,\n“பிச்சுப் புடுவேன்... பேசும் போது நடுவுல பேச கூடாதுன்னு சொல்லி இருக்கேனா, இல்லையா சீக்கிரம் சாப்பிட்டுட்டு போய் மதியம் இருக்க பரீட்சைக்கு படிங்க...” என்றாள் கோபமாக.\nகுழந்தைகளின் முகம் வாட, ரச்னா இப்போது அவர்களுக்காக பரிந்துக் கொண்டு வந்தாள்.\n“பாவம்... சின்ன பசங்க... அவங்களை ஏன் திட்டுறீங்க எனக்கு இப்போ இந்தியாவுல போக யாரும் இல்லை... என் கணவர் அமெரிக்கால இருக்கார்...”\n“நீ அப்போ எதுக்கு இங்கே வந்த\n“சும்மா... சுத்தி பார்க்கலாம்னு வந்தேன்...”\n“மேகமலைல பார்க்க என்ன இருக்கு கோழி, ஆடு, மாடு, மரம், செடி தான் இருக்கு....”\n“ஏன், அமெரிக்கால மனுஷங்க இல்லையா\nஉடனே பதில் சொல்லாமல் இருந்த ரச்னா, சின்ன இடைவெளிக்கு பின்,\n“இருக்காங்க... ஆனால் இங்கே இந்த ஊர், இந்த சூழல், இந்த காத்து எல்லாம் பிடிச்சிருக்கு...’\n“நீ ஊரை சுத்தி பார்த்த மாதிரியே தெரியலையே\nவிடாமல் கேள்வி கணைகளை தொடர்ந்தாள் விசாலினி.\n“சுத்தி பார்க்கனும்னு நினைச்சேன் ஆனால் இந்த இரண்டு குட்டி பாப்பாக்கும் லீவ் இல்லையே... அதனால எங்கேயும் போகலை...”\nரச்னாவும் சளைக்காமல் பதில் சொன்னாள்.\n“அவங்களுக்கு லீவ் இல்லன்னா என்ன நீ பாட்டியோட போக வேண்டியது தான நீ பாட்டியோட போக வேண்டியது தான\n“போகலாம்... ஆனால், எனக்கு இவங்க இரண்டு பேரையும் ரொம்ப பிடிச்சிருக்கு... அவங்களுக்காக தான் இங்கே தங்கி இருக்கேன்... அவங்களோட அப்பாவித்தனமான சிரிப்பு, மழலை மாறாத பேச்சு, மனசை அள்ளிட்டு போகுது...\"\nவிசாலினி ரச்னாவை சந்தேகமாக பார்த்தாள்.\nபலராலும் கேட்கப்பட்டு மனதை சுட்ட கேள்வி தான்... ஆனாலும் இப்போதும் கூரான வலியைக் கொடுக்க தான் செய்தது...\nசமாளித்து, இல்லை என பொருள் கொள்ளுமாறு தலை அசைத்தாள் ரச்னா...\nரச்னாவின் முகத்தில் பிரதிபலித்த வேதனை விசாலினிக்கு புரியாமல் இல்லை, ஆனாலும் விபரம் தெரிந்துக் கொள்ளும் ஆர்வத்தை அடக்க இயலாமல்,\n“கல்யாணமாகி எத்தனை வருஷம் ஆச்சு\nரச்னா தலையை குனிந்த படி அமைதியாக இருக்க,\n“இப்படி ஊர் ஊரா சுத்தி, பிள்ளைங்க பிடிச்சிருக்கு பிடிச்சிருக்குன்னு சொல்றதுக்கு, ஒன்னு பெத்துக்க வேண்டியது தானே\nகுத்தல், கிண்டல், நக்கல் என பலவும் அந்த பேச்சில் கலந்து இருந்தது\nகண்களின் எல்லையைத் தாண்டி வந்துக் கொண்டிருந்த கண்ணீரை விசாலினிக்கு காட்டிக் கொள்ளாமல் மறைக்க முகத்தை குனிந்த நிலையில் வைத்திருந்த ரச்னா, தன்னால் அழுகையை அடக்க முடியாது என்பது புரிய விசாலினியிடம் எதுவும் சொல்லாமல் எழுந்து சென்றாள்.\nதொடர்கதை - தாபப் பூவும் நான்தானே… பூவின் தாகம் நீதானே - 02 - மீரா ராம்\nதொடர்கதை - தமிழுக்கு புகழ் என்று பேர் – 23 - புவனேஸ்வரி\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 15 - வினோதா\nதொடர்கதை - பார்த்தேன் ரசித்தேன்.. - 09 - ஆதி\nதொடர்கதை - மலையோரம் வீசும் காற்று – 16 - வினோதர்ஷினி\n2018 - தமிழ் புத்தாண்டு சிறப்பு சிறுகதை - வெண்ணிலவு தான் வானத்தை வெறுத்திடுமா\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 26 - RR\n# RE: தொடர்கதை - மலையோரம் வீசும் காற்று – 12 - வினோதர்ஷினி — Ramyabalaji84 2017-12-16 02:01\n# RE: தொடர்கதை - மலையோரம் வீசும் காற்று – 12 - வினோதர்ஷினி — Devi 2017-12-11 19:15\n# RE: தொடர்கதை - மலையோரம் வீசும் காற்று – 12 - வினோதர்ஷினி — madhumathi9 2017-12-11 05:33\n# RE: தொடர்கதை - மலையோரம் வீசும் காற்று – 12 - வினோதர்ஷினி — Chithra V 2017-12-11 05:25\n# RE: தொடர்கதை - மலையோரம் வீசும் காற்று – 12 - வினோதர்ஷினி — Nanthini 2017-12-10 21:27\nதொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 04 - சசிரேகா\nதொடர்கதை - காதலான நேசமோ - 04 - தேவி\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 15 - வினோதா\nகவிதைத் தொடர் - 06. தவமிருக்கிறேன் என்னவனே - கார்த்திகா கார்த்திகேயன் [Updated]\nதொடர்கதை - பார்த்தேன் ரசித்தேன்.. - 09 - ஆதி\nTamil Jokes 2018 - உன் பொண்டாட்டி தான்டா\nதொடர்கதை - என் அருகில் நீ இருந்தும் - 07 - பூஜா பாண்டியன்\nகவிதை - வந்தாய் கண்ணா - தமிழ் தென்றல்\nதொடர்கதை - பொன் எழில் பூத்தது புது வானில் - 20 - மீரா ராம்\nகவிதை - உன்னுடன் - அக்ஷு ஆரா\nதொடர்கதை - மோனத்திருக்கும் மூங்கில் வனம் - 01 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - மலையோரம் வீசும் காற்று – 16 - வினோதர்ஷினி\nதொடர்கதை - என் அருகில் நீ இருந்தும் - 07 - பூஜா பாண்டியன்\nதொடர்கதை - பொன் எழில் பூத்தது புது வானில் - 20 - மீரா ராம்\nதொடர்கதை - பார்த்தேன் ரசித்தேன்.. - 09 - ஆதி\nதொடர்கதை - மோனத்திருக்கும் மூங்கில் வனம் - 01 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - மலையோரம் வீசும் காற்று – 16 - வினோதர்ஷினி\nTamil Jokes 2018 - உன் பொண்டாட்டி தான்டா\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 11 - ஸ்ரீ\n2018 - தமிழ் புத்தாண்டு சிறப்பு \"முடிவை கண்டுபிடியுங்கள் போட்டி\" - சிறுகதை - என் நெஞ்சிலே பனிமூட்டமா\nதொடர்கதை - ஒளிதருமோ என் நிலவு... - 27 - தீபாஸ்\nதொடர்கதை - யாது வரினும்.. எவ்வாறாயினும்… - 01 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - ஒளிதருமோ என் நிலவு... - 01 - தீபாஸ்\nதொடர்கதை - யாது வரினும்.. எவ்வாறாயினும்… - 11 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - என் காதலின் காதலி - 15 - ஸ்ரீ\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 09 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 05 - ராசு\nதொடர்கதை - என் காதலின் காதலி - 01 - ஸ்ரீ\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 26 - RR\nதொடர்கதை - ஒளிதருமோ என் நிலவு... - 02 - தீபாஸ்\nதொடர்கதை - என் காதலின் காதலி - 02 - ஸ்ரீ\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 09 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - கன்னத்து முத்தமொன்று - 15 - வத்ஸலா\nதொடர்கதை - கடவுள் போட்ட முடிச்சு - 03 - ஜெயந்தி\nதொடர்கதை - மழையோடுதான் வெயில் சேர்ந்ததே - 09 - சித்ரா. வெ\nதொடர்கதை - இரு துருவங்கள் - 01 - மித்ரா\nதொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 03 - சசிரேகா\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 11 - ஸ்ரீ\nதொடர்கதை - காதலான நேசமோ - 03 - தேவி\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 14 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - மலையோரம் வீசும் காற்று – 16 - வினோதர்ஷினி\nதொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 05 - ராசு\n2018 - தமிழ் புத்தாண்டு சிறப்பு \"முடிவை கண்டுபிடியுங்கள் போட்டி\" - சிறுகதை - என் நெஞ்சிலே பனிமூட்டமா\nதொடர்கதை - தாபப் பூவும் நான்தானே… பூவின் தாகம் நீதானே - 20 - மீரா ராம்\nதொடர்கதை - என் சிப்பிக்குள் நீ முத்து - 29 - தமிழ் தென்றல்\nதொடர்கதை - மோனத்திருக்கும் மூங்கில் வனம் - 01 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - என் அருகில் நீ இருந்தும் - 07 - பூஜா பாண்டியன்\nதொடர்கதை - பொன் எழில் பூத்தது புது வானில் - 20 - மீரா ராம்\nசிறுகதை - புதுவரவு – அனுசுயா\nதொடர்கதை - மறைந்துவிடாதே மாயா – 23 - லதா சரவணன்\nதொடர்கதை - ஒளிதருமோ என் நிலவு... - 27 - தீபாஸ்\n2018 - தமிழ் புத்தாண்டு சிறப்பு \"முடிவை கண்டுபிடியுங்கள் போட்டி\" - சிறுகதை - என் நெஞ்சிலே பனிமூட்டமா\nதொடர்கதை - ஒளிதருமோ என் நிலவு... - 24 - தீபாஸ்\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 07 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 08 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 26 - RR\nதொடர்கதை - விழிகளிலே காதல் விழா - 46 - தேவி\nதொடர்கதை - ஒளிதருமோ என் நிலவு... - 25 - தீபாஸ்\nதொடர்கதை - ஒளிதருமோ என் நிலவு... - 27 - தீபாஸ்\nதொடர்கதை - ஒளிதருமோ என் நிலவு... - 26 - தீபாஸ்\nதொடர்கதை - ஆதிபனின் காதலி - 21 - சசிரேகா\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 25 - RR\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 09 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - உன் நேசமதே.. என் சுவாசமாய்.. - 36 - சித்ரா. வெ\nதொடர்கதை - என் காதலின் காதலி - 13 - ஸ்ரீ\nதொடர்கதை - என் காதலின் காதலி - 14 - ஸ்ரீ\nதொடர்கதை - கடவுள் போட்ட முடிச்சு - 02 - ஜெயந்தி\nதொடர்கதை - உன் நேசமதே.. என் சுவாசமாய்.. - 37 - சித்ரா. வெ\nதொடர்கதை - என் காதலின் காதலி - 15 - ஸ்ரீ\nதொடர்கதை - மழையோடுதான் வெயில் சேர்ந்ததே - 07 - சித்ரா. வெ\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 14 - வினோதா\nதொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 05 - ராசு (+14)\nதொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 03 - சசிரேகா (+12)\nதொடர்கதை - யாது வரினும்.. எவ்வாறாயினும்… - 11 - சாகம்பரி குமார் (+11)\nதொடர்கதை - காதலான நேசமோ - 01 - தேவி (+11)\nதொடர்கதை - கடவுள் போட்ட முடிச்சு - 03 - ஜெயந்தி (+10)\nதொடர்கதை - என் அருகில் நீ இருந்தும் - 07 - பூஜா பாண்டியன் (+9)\nதொடர்கதை - மோனத்திருக்கும் மூங்கில் வனம் - 01 - சாகம்பரி குமார் (+9)\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 11 - ஸ்ரீ (+9)\nதொடர்கதை - என் சிப்பிக்குள் நீ முத்து - 29 - தமிழ் தென்றல் (+8)\n2018 - தமிழ் புத்தாண்டு சிறப்பு சிறுகதை - வெண்ணிலவு தான் வானத்தை வெறுத்திடுமா - பிந்து வினோத் (+8)\n“அப்படி என்ன உனக்கு என்னை பார்த்து பயம் சரண்யா\nகவிதைத் தொடர் - 06. தவமிருக்கிறேன் என்னவனே - கார்த்திகா கார்த்திகேயன் [Updated] @...\nஸ்வரூப் மதுவை பார்ப்பதையும், அவள் முகத்தை திருப்பிக் கொள்வதையும் கவனித்த...\nTamil #Jokes 2018 - உன் பொண்டாட்டி தான்டா\n என்று உத்ரா யோசித்துக் கொண்டு இருந்த பொழுது, அவள்...\nகவிதை - வந்தாய் கண்ணா - தமிழ் தென்றல் @...\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 14 - பிரேமா சுப்பையா 1 second ago\n2017 போட்டி சிறுகதை 16 - நிஜமும், நிழலும் - ஜான்சி 1 second ago\nதொடர்கதை - காதல் பின்னது உலகு - 05 - மனோஹரி 1 second ago\nதொடர்கதை - கொஞ்சம் பெரிய குழந்தைகளுக்கான கதை இது... - 20 - தங்கமணி சுவாமினாதன் 2 seconds ago\nதொடர்கதை - என்னுள் நிறைந்தவனே - 10 - ஸ்ரீ 2 seconds ago\nமலையோரம் வீசும் காற்று - பிந்து வினோத்\nமலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று - பிந்து வினோத்\nபார்த்தேன் ரசித்தேன் - பிந்து வினோத்\nஎன் சிப்பிக்குள் நீ முத்து - தமிழ் தென்றல்\nஎன்றென்றும் உன்னுடன் - 1 - பிந்து வினோத்\nஎன்றென்றும் உன்னுடன் - 2 - பிந்து வினோத்\nஉன் நேசமதே என் சுவாசமாய் - சித்ரா V\nசாத்திரம் பேசுகிறாய் கண்ணம்மா - ஜெய்\nசர்வதோபத்ர வியூகம் - வசுமதி\nஇவள் எந்தன் இளங்கொடி - முத்துலெட்சுமி சுப்பிரமணியன்\nபொன் எழில் பூத்தது புது வானில் - மீரா ராம்\nசாம்ராட் சம்யுக்தன் - சிவாஜிதாசன்\nமுடிவிலியின் முடிவினிலே... - மது\nமறைந்து விடாதே மாயா - லதா சரவணன்\nஉன்னில் தொலைந்தவன் நானடி - பிரேமா\nகன்னத்து முத்தமொன்று - வத்ஸலா\nஉயிரில் கலந்த உறவே - சகி\nதமிழுக்கு அமுதென்று பேர் - சித்ரா\nஎன் நிலவு தேவதை - தேவிஸ்ரீ\nமறவேனா நின்னை - ஆர்த்தி N\nதாபப் பூவும் நான்தானே… பூவின் தாகம் நீதானே - மீரா ராம்\nநெஞ்சில் துணிவிருந்தால் - சகி\nஇன்பமே வாழ்வாகிட வந்தவனே - ஸ்ரீ\nவெள்ளை பூக்கள் இதயம் எங்கும் மலர்கவே - புவனேஸ்வரி\nஎன் அருகில் நீ இருந்தும்\nதொலைதூர தொடுவானமானவன் - புவனேஸ்வரி\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் - அனிதா சங்கர்\nகடவுள் போட்ட முடிச்சு - ஜெயந்தி\nநீ இல்லாத வாழ்வு வெறுமையடி - ராசு\nஎன்னவளே - கோமதி சிதம்பரம்\nகாதலான நேசமோ - தேவி\nநொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - சசிரேகா\nஇரு துருவங்கள் - மித்ரா\nமோனத்திருக்கும் மூங்கில் வனம் - சாகம்பரி\nஎன்றென்றும் உன்னுடன்... - 01 - 15\nபார்த்தேன் ரசித்தேன் - 09\nஎன் அருகில் நீ இருந்தும்\nபொன் எழில் பூத்தது புது வானில் - 20\nமோனத்திருக்கும் மூங்கில் வனம் - 01\nமலையோரம் வீசும் காற்று - 16\nஇன்பமே வாழ்வாகிட வந்தவனே - 11\nநீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 05\nஎன் சிப்பிக்குள் நீ முத்து - 29\nதாபப் பூவும் நான்தானே… பூவின் தாகம் நீதானே - 20\nமறைந்து விடாதே மாயா - 23\nஉன்னில் தொலைந்தவன் நானடி – 14\nஇரு துருவங்கள் - 01\nசாம்ராட் சம்யுக்தன் - பாகம் 01 - 11\nகடவுள் போட்ட முடிச்சு - 03\nகன்னத்து முத்தமொன்று - 15\nநொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 03\nகாதலான நேசமோ - 03\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 03\nசாத்திரம் பேசுகிறாய் .... கண்ணம்மா – 29\nஉன் நேசமதே.. என் சுவாசமாய்..\nமுடிவிலியின் முடிவினிலே - 11\nமலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று - 26\nதமிழுக்கு அமுதென்று பேர் – 13\nஎன் நிலவு தேவதை - 22\nஎன்றென்றும் உன்னுடன்... - 02 - 12\nஇவள் எந்தன் இளங்கொடி - 19\nநெஞ்சில் துணிவிருந்தால் - 03\nஉயிரில் கலந்த உறவே - 10\nவெள்ளை பூக்கள் இதயம் எங்கும் மலர்கவே – 07\nதொலைதூர தொடுவானமானவன் – 03\nஐ லவ் யூ - 12\nசிறுகதை - பட்டாம் பூச்சி – முகிலா\nசிறுகதை - புதுவரவு – அனுசுயா\nசிறுகதை - அம்மா கணக்கு – சசிரேகா\n2018 - தமிழ் புத்தாண்டு சிறப்பு சிறுகதை - வெண்ணிலவு தான் வானத்தை வெறுத்திடுமா\n2018 - தமிழ் புத்தாண்டு சிறப்பு \"முடிவை கண்டுபிடியுங்கள் போட்டி\" - சிறுகதை - என் நெஞ்சிலே பனிமூட்டமா\nகவிதைத் தொடர் - 06. தவமிருக்கிறேன் என்னவனே - கார்த்திகா கார்த்திகேயன் [Updated]\nகவிதை - வந்தாய் கண்ணா - தமிழ் தென்றல்\nகவிதை - உன்னுடன் - அக்ஷு ஆரா\nகவிதை - நீயில்லாத நான் - தமிழ் தென்றல்\nஇளம் பூவை நெஞ்சில்... - மீரா ராம்\nகாதல் ஏன் இப்படி - ஷிவானி\nஅவளும் நானும் அமுதும் தமிழும் - வசுமதி\nTamil Jokes 2018 - உன் பொண்டாட்டி தான்டா\nTamil Jokes 2018 - கிளி மாதிரி பொண்ணு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/9200-en-sippikkul-nee-muthu-13", "date_download": "2018-04-26T13:17:06Z", "digest": "sha1:RDSUEOJWGONGWTXN3GY2YFFEA7YYHYXI", "length": 45896, "nlines": 604, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - என் சிப்பிக்குள் நீ முத்து - 13 - தமிழ் தென்றல் - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nவத்சலாவின் கதைக்கான முடிவை சொல்லுங்கள்\nஇன்றே போட்டியில் கலந்துக் கொள்ளுங்கள்\nதொடர்கதை - என் சிப்பிக்குள் நீ முத்து - 13 - தமிழ் தென்றல்\nதொடர்கதை - என் சிப்பிக்குள் நீ முத்து - 13 - தமிழ் தென்றல்\nதொடர்கதை - என் சிப்பிக்குள் நீ முத்து - 13 - தமிழ் தென்றல் - 5.0 out of 5 based on 2 votes\n13. என் சிப்பிக்குள் நீ முத்து - தமிழ் தென்றல்\nமனதில் கொழுந்து விட்டு எரிந்த கோபத்தீயை தணிக்கும் வழி தெரியாமல் மொட்டை மாடியில் நடந்து கொண்டிருந்தான் கிரண்.\nசிவந்த கண்களும், இறுகிய முகமும், துடிக்கும் இதழ்களும், நடையின் வேகமும் அவனின் கோபத்தை பார்ப்போருக்கு பறைசாற்றின.\nசஞ்சயின் காதல் பார்வையை நினைக்க நினைக்க மனம் எரிமலையாய் கொதிக்கிறது.\n‘அந்த கல்யாணத்திற்கு சரயூவை போக விடாமல் தடுத்திருக்கனும்’\n” கையை மொட்டை மாடி தடுப்பு கம்பியின் மேல் குத்தினான்.\nவேறு சமயமாகயிருந்தால் அந்த குத்திற்கு கை வலித்திருக்கும். அவனுக்கிருந்த கோபத்தில் அது உறைக்கவே இல்லை.\nபோட்டியன்று ஆதர்ஷின் திருமணத்திற்கு சென்று இஸ்கான் திரும்புவது கடினமாக இருப்பினும் சரயூவின் விருப்பத்திற்காக அவளை அழைத்து சென்றதும்; அங்கு சஞ்சயின் பார்வையும், அவனுடனான சரயூவின் பேச்சும் கிரணை மிகவும் பாதித்திருந்தது.\nதிருமணத்திற்கு வந்திருந்த நண்பர்களை வரவேற்ற ஜெய், சரயூவிடம் மட்டும் வார்த்தைகளால் பேசாது கண்களால் பேசினான். அவன் கண்களின் காதல் மொழி அவளுக்கு புரிந்ததோ இல்லையோ\nமன்னிப்பை யாசித்தன சரயூவின் விழிகள். தன்னை மன்னித்து, இப்போதே பேசிடமாட்டானா என்ற எதிர்ப்பார்ப்பையும் தாங்கி நின்றன அவளின் வேல் விழிகள்.\nஇத்தனை நாட்கள் அவளைப் பார்க்காது ஏங்கியிருந்தவன், கிடைத்த இந்த சந்தர்பத்தை முழுதாக பயன்படுத்தினான். எல்லையில்லா காதலை கண்களில் தேக்கியிருந்தவன், அந்த நொடியே தன் ஆழமான நேசத்தை தெரிவித்துவிடும் வேகத்தோடு கூர்ந்துப் பார்த்திருந்தான்.\nமன்னிப்பை யாசித்த அவளின் பார்வையினால், இத்தனை நேரம் இவன் அனுபவித்த சந்தோஷம் வடிந்து மனம் கசந்தது. மன்னிப்பை வேண்டுகிறாளே தவிர தன் காதலை புரிந்து கொள்ளவில்லையே மனதிலெழுந்த வலியை வரட்சி புன்னகையாய் வெளியிட்டது இதழ்கள்.\nவழக்கமான அவன் புன்னகையிலிருக்கும் ஏதோ ஒன்று இப்போது இல்லை என்பதை கவனித்த போதும் தன்னோடு பேசாது, தன்னை தவிர்த்தவன், இன்று எதிரில் நின்று சிரிப்பது அவளுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்தது. அவளை அழுத்தி கொண்டிருந்த வலியொன்று காணாமல் போவதை உணர முடிந்தது.\nசட்டென முகம் பளிச்சிட சிறு புன்னகையோடு, “யூ சஞ்சு” என்று சிணுங்கியபடி அவனின் முழங்கையின் மேல் பகுதியில் குத்தினாள்.\nஅவளின் சிணுங்கல் அவனை ஏதோ செய்ய, ஏமாற்றத்தை மனதினோரத்திற்கு தள்ளியவன் புன்னகையோடு, “ஆஆ… வலிக்குது..என்ன குத்துடா” வலியே தராத அவளின் குத்திற்கு வலித்தவனாக நடித்தான் ஜெய்.\nஜெய், சரயூவிடம் பேசாமால் தவித்த தவிப்பை நன்கு உணர்ந்திருந்தாள் மைத்ரீ. தன்னிடம் காரணத்தை நண்பன் சொல்லாத போதும் அவர்களுக்கிடையே இருக்கும் இடைவெளியை குறைக்க எத்தனையோ வகையில் முயன்றாள். அதெதுவும் பலிக்காமல் போனது அவளுக்கு வருத்தத்தை அளித்திருந்தது. இன்றோ ஜெய் சரயூவிடம் பேசிவிட்டான் என்ற நிம்மதியில்,\n“இன்னும் நல்லா நாலு போடு சரயூ. அடி பயமிருந்தாதா, இனிமே உங்கிட்ட பேசாம இருக்கனும்னு கனவுல கூட நினைக்கமாட்டா”\nஅவளை ஆமோதித்து சரயூ அவனை மேலும் குத்தினாள். புன்னகைத்தபடி அவைகளை ஏற்றவன்\n” குரல் தழுதழுக்க கேட்டவளின் கை தன் செயலை நிறுத்தியது.\nஅவளின் கை கொடுக்காத வலியை, தழுதழுத்த அவளின் வார்த்தைகள் கொடுத்தன. ஜெய் தவித்து போனான். விழிகளில் திரண்டிருந்த நீரை தாங்கி, தன்னைப் பார்த்திருந்தவளின் பார்வையில் இவன் மனதின் கனம் அதிகரித்தது. அவளை அள்ளி அணைத்து ஆறுதல் சொல்ல துடித்த கையையும் மனதையும் அடக்கினான். அவனின் புறக்கணிப்பு சரயூவை பாதித்திருக்கும் ஆழத்தை உணர்ந்தவனாய் கைகளால் கொடுக்க முடியாத அணைப்பை வார்த்தைகளால் கொடுத்தான்.\nஅவனைக் காணாது, பேசாது தான் கொண்டிருந்த தவிப்பனைத்தையும் அந்த நொடி உணர்ந்தவளாய், விழிகளில் எட்டிப்பார்த்த நீர்த்துளிகளோடு, ஆமோதிப்பாக சரயூ, தன் தலையை மேலும் கீழும் ஆட்டினாள்.\n இன்னைக்கு சொல்ற.. நீயே எங்கிட்ட பேசாமயிருந்தாலும் நான் உங்கிட்ட பேசுவேன். எப்பவும் பேசிகிட்டே இருப்பேன்” உயிரை உருக்கி வார்த்தைகளாக்கியிருந்தான் ஜெய்.\nமயிலிறகாய் மனதை வருடிய அவன் வார்த்தைகள் தன்னுள் பரப்பிய இதத்தை அனுபவித்தவளின் முகம் பிரகாசித்தது.\nதொடர்கதை - சாத்திரம் பேசுகிறாய் .... கண்ணம்மா – 09 - ஜெய்\nதொடர்கதை - நீதான் என் சந்தோசம் - 09 - ராசு\nகவிதை - வந்தாய் கண்ணா - தமிழ் தென்றல்\nகவிதை - நீயில்லாத நான் - தமிழ் தென்றல்\nதொடர்கதை - என் சிப்பிக்குள் நீ முத்து - 29 - தமிழ் தென்றல்\nகவிதை - மன்னவனின் மா(ம)மாலை - தமிழ் தென்றல்\nதொடர்கதை - என் சிப்பிக்குள் நீ முத்து - 28 - தமிழ் தென்றல்\n+1 # RE: தொடர்கதை - என் சிப்பிக்குள் நீ முத்து - 13 - தமிழ் தென்றல் — Devi 2017-05-26 15:00\n+1 # RE: தொடர்கதை - என் சிப்பிக்குள் நீ முத்து - 13 - தமிழ் தென்றல் — Chithra V 2017-05-25 23:32\n# RE: தொடர்கதை - என் சிப்பிக்குள் நீ முத்து - 13 - தமிழ் தென்றல் — Tamilthendral 2017-05-27 19:54\n# RE: தொடர்கதை - என் சிப்பிக்குள் நீ முத்து - 13 - தமிழ் தென்றல் — Tamilthendral 2017-05-27 19:58\n+1 # RE: தொடர்கதை - என் சிப்பிக்குள் நீ முத்து - 13 - தமிழ் தென்றல் — AdharvJo 2017-05-23 22:11\n# RE: தொடர்கதை - என் சிப்பிக்குள் நீ முத்து - 13 - தமிழ் தென்றல் — Tamilthendral 2017-05-24 21:49\n+1 # RE: தொடர்கதை - என் சிப்பிக்குள் நீ முத்து - 13 - தமிழ் தென்றல் — madhumathi9 2017-05-16 12:31\n# RE: தொடர்கதை - என் சிப்பிக்குள் நீ முத்து - 13 - தமிழ் தென்றல் — Tamilthendral 2017-05-17 10:06\n+1 # RE: தொடர்கதை - என் சிப்பிக்குள் நீ முத்து - 13 - தமிழ் தென்றல் — saaru 2017-05-16 07:00\n# RE: தொடர்கதை - என் சிப்பிக்குள் நீ முத்து - 13 - தமிழ் தென்றல் — Tamilthendral 2017-05-17 10:05\n+1 # RE: தொடர்கதை - என் சிப்பிக்குள் நீ முத்து - 13 - தமிழ் தென்றல் — Jansi 2017-05-16 00:43\n# RE: தொடர்கதை - என் சிப்பிக்குள் நீ முத்து - 13 - தமிழ் தென்றல் — Tamilthendral 2017-05-17 10:04\nதொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 04 - சசிரேகா\nதொடர்கதை - காதலான நேசமோ - 04 - தேவி\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 15 - வினோதா\nகவிதைத் தொடர் - 06. தவமிருக்கிறேன் என்னவனே - கார்த்திகா கார்த்திகேயன் [Updated]\nதொடர்கதை - பார்த்தேன் ரசித்தேன்.. - 09 - ஆதி\nTamil Jokes 2018 - உன் பொண்டாட்டி தான்டா\nதொடர்கதை - என் அருகில் நீ இருந்தும் - 07 - பூஜா பாண்டியன்\nகவிதை - வந்தாய் கண்ணா - தமிழ் தென்றல்\nதொடர்கதை - பொன் எழில் பூத்தது புது வானில் - 20 - மீரா ராம்\nகவிதை - உன்னுடன் - அக்ஷு ஆரா\nதொடர்கதை - மோனத்திருக்கும் மூங்கில் வனம் - 01 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - மலையோரம் வீசும் காற்று – 16 - வினோதர்ஷினி\nதொடர்கதை - என் அருகில் நீ இருந்தும் - 07 - பூஜா பாண்டியன்\nதொடர்கதை - பொன் எழில் பூத்தது புது வானில் - 20 - மீரா ராம்\nதொடர்கதை - பார்த்தேன் ரசித்தேன்.. - 09 - ஆதி\nதொடர்கதை - மோனத்திருக்கும் மூங்கில் வனம் - 01 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - மலையோரம் வீசும் காற்று – 16 - வினோதர்ஷினி\nTamil Jokes 2018 - உன் பொண்டாட்டி தான்டா\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 11 - ஸ்ரீ\n2018 - தமிழ் புத்தாண்டு சிறப்பு \"முடிவை கண்டுபிடியுங்கள் போட்டி\" - சிறுகதை - என் நெஞ்சிலே பனிமூட்டமா\nதொடர்கதை - ஒளிதருமோ என் நிலவு... - 27 - தீபாஸ்\nதொடர்கதை - யாது வரினும்.. எவ்வாறாயினும்… - 01 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - ஒளிதருமோ என் நிலவு... - 01 - தீபாஸ்\nதொடர்கதை - யாது வரினும்.. எவ்வாறாயினும்… - 11 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - என் காதலின் காதலி - 15 - ஸ்ரீ\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 09 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 05 - ராசு\nதொடர்கதை - என் காதலின் காதலி - 01 - ஸ்ரீ\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 26 - RR\nதொடர்கதை - ஒளிதருமோ என் நிலவு... - 02 - தீபாஸ்\nதொடர்கதை - என் காதலின் காதலி - 02 - ஸ்ரீ\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 09 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - கன்னத்து முத்தமொன்று - 15 - வத்ஸலா\nதொடர்கதை - கடவுள் போட்ட முடிச்சு - 03 - ஜெயந்தி\nதொடர்கதை - மழையோடுதான் வெயில் சேர்ந்ததே - 09 - சித்ரா. வெ\nதொடர்கதை - இரு துருவங்கள் - 01 - மித்ரா\nதொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 03 - சசிரேகா\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 11 - ஸ்ரீ\nதொடர்கதை - காதலான நேசமோ - 03 - தேவி\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 14 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - மலையோரம் வீசும் காற்று – 16 - வினோதர்ஷினி\nதொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 05 - ராசு\n2018 - தமிழ் புத்தாண்டு சிறப்பு \"முடிவை கண்டுபிடியுங்கள் போட்டி\" - சிறுகதை - என் நெஞ்சிலே பனிமூட்டமா\nதொடர்கதை - தாபப் பூவும் நான்தானே… பூவின் தாகம் நீதானே - 20 - மீரா ராம்\nதொடர்கதை - என் சிப்பிக்குள் நீ முத்து - 29 - தமிழ் தென்றல்\nதொடர்கதை - மோனத்திருக்கும் மூங்கில் வனம் - 01 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - என் அருகில் நீ இருந்தும் - 07 - பூஜா பாண்டியன்\nதொடர்கதை - பொன் எழில் பூத்தது புது வானில் - 20 - மீரா ராம்\nசிறுகதை - புதுவரவு – அனுசுயா\nதொடர்கதை - மறைந்துவிடாதே மாயா – 23 - லதா சரவணன்\nதொடர்கதை - ஒளிதருமோ என் நிலவு... - 27 - தீபாஸ்\n2018 - தமிழ் புத்தாண்டு சிறப்பு \"முடிவை கண்டுபிடியுங்கள் போட்டி\" - சிறுகதை - என் நெஞ்சிலே பனிமூட்டமா\nதொடர்கதை - ஒளிதருமோ என் நிலவு... - 24 - தீபாஸ்\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 07 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 08 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 26 - RR\nதொடர்கதை - விழிகளிலே காதல் விழா - 46 - தேவி\nதொடர்கதை - ஒளிதருமோ என் நிலவு... - 25 - தீபாஸ்\nதொடர்கதை - ஒளிதருமோ என் நிலவு... - 27 - தீபாஸ்\nதொடர்கதை - ஒளிதருமோ என் நிலவு... - 26 - தீபாஸ்\nதொடர்கதை - ஆதிபனின் காதலி - 21 - சசிரேகா\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 25 - RR\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 09 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - உன் நேசமதே.. என் சுவாசமாய்.. - 36 - சித்ரா. வெ\nதொடர்கதை - என் காதலின் காதலி - 13 - ஸ்ரீ\nதொடர்கதை - என் காதலின் காதலி - 14 - ஸ்ரீ\nதொடர்கதை - கடவுள் போட்ட முடிச்சு - 02 - ஜெயந்தி\nதொடர்கதை - உன் நேசமதே.. என் சுவாசமாய்.. - 37 - சித்ரா. வெ\nதொடர்கதை - என் காதலின் காதலி - 15 - ஸ்ரீ\nதொடர்கதை - மழையோடுதான் வெயில் சேர்ந்ததே - 07 - சித்ரா. வெ\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 14 - வினோதா\nதொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 05 - ராசு (+14)\nதொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 03 - சசிரேகா (+12)\nதொடர்கதை - யாது வரினும்.. எவ்வாறாயினும்… - 11 - சாகம்பரி குமார் (+11)\nதொடர்கதை - காதலான நேசமோ - 01 - தேவி (+11)\nதொடர்கதை - கடவுள் போட்ட முடிச்சு - 03 - ஜெயந்தி (+10)\nதொடர்கதை - என் அருகில் நீ இருந்தும் - 07 - பூஜா பாண்டியன் (+9)\nதொடர்கதை - மோனத்திருக்கும் மூங்கில் வனம் - 01 - சாகம்பரி குமார் (+9)\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 11 - ஸ்ரீ (+9)\nதொடர்கதை - என் சிப்பிக்குள் நீ முத்து - 29 - தமிழ் தென்றல் (+8)\n2018 - தமிழ் புத்தாண்டு சிறப்பு சிறுகதை - வெண்ணிலவு தான் வானத்தை வெறுத்திடுமா - பிந்து வினோத் (+8)\n“அப்படி என்ன உனக்கு என்னை பார்த்து பயம் சரண்யா\nகவிதைத் தொடர் - 06. தவமிருக்கிறேன் என்னவனே - கார்த்திகா கார்த்திகேயன் [Updated] @...\nஸ்வரூப் மதுவை பார்ப்பதையும், அவள் முகத்தை திருப்பிக் கொள்வதையும் கவனித்த...\nTamil #Jokes 2018 - உன் பொண்டாட்டி தான்டா\n என்று உத்ரா யோசித்துக் கொண்டு இருந்த பொழுது, அவள்...\nகவிதை - வந்தாய் கண்ணா - தமிழ் தென்றல் @...\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 14 - பிரேமா சுப்பையா 1 second ago\n2017 போட்டி சிறுகதை 16 - நிஜமும், நிழலும் - ஜான்சி 1 second ago\nதொடர்கதை - காதல் பின்னது உலகு - 05 - மனோஹரி 1 second ago\nதொடர்கதை - கொஞ்சம் பெரிய குழந்தைகளுக்கான கதை இது... - 20 - தங்கமணி சுவாமினாதன் 2 seconds ago\nதொடர்கதை - என்னுள் நிறைந்தவனே - 10 - ஸ்ரீ 2 seconds ago\nமலையோரம் வீசும் காற்று - பிந்து வினோத்\nமலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று - பிந்து வினோத்\nபார்த்தேன் ரசித்தேன் - பிந்து வினோத்\nஎன் சிப்பிக்குள் நீ முத்து - தமிழ் தென்றல்\nஎன்றென்றும் உன்னுடன் - 1 - பிந்து வினோத்\nஎன்றென்றும் உன்னுடன் - 2 - பிந்து வினோத்\nஉன் நேசமதே என் சுவாசமாய் - சித்ரா V\nசாத்திரம் பேசுகிறாய் கண்ணம்மா - ஜெய்\nசர்வதோபத்ர வியூகம் - வசுமதி\nஇவள் எந்தன் இளங்கொடி - முத்துலெட்சுமி சுப்பிரமணியன்\nபொன் எழில் பூத்தது புது வானில் - மீரா ராம்\nசாம்ராட் சம்யுக்தன் - சிவாஜிதாசன்\nமுடிவிலியின் முடிவினிலே... - மது\nமறைந்து விடாதே மாயா - லதா சரவணன்\nஉன்னில் தொலைந்தவன் நானடி - பிரேமா\nகன்னத்து முத்தமொன்று - வத்ஸலா\nஉயிரில் கலந்த உறவே - சகி\nதமிழுக்கு அமுதென்று பேர் - சித்ரா\nஎன் நிலவு தேவதை - தேவிஸ்ரீ\nமறவேனா நின்னை - ஆர்த்தி N\nதாபப் பூவும் நான்தானே… பூவின் தாகம் நீதானே - மீரா ராம்\nநெஞ்சில் துணிவிருந்தால் - சகி\nஇன்பமே வாழ்வாகிட வந்தவனே - ஸ்ரீ\nவெள்ளை பூக்கள் இதயம் எங்கும் மலர்கவே - புவனேஸ்வரி\nஎன் அருகில் நீ இருந்தும்\nதொலைதூர தொடுவானமானவன் - புவனேஸ்வரி\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் - அனிதா சங்கர்\nகடவுள் போட்ட முடிச்சு - ஜெயந்தி\nநீ இல்லாத வாழ்வு வெறுமையடி - ராசு\nஎன்னவளே - கோமதி சிதம்பரம்\nகாதலான நேசமோ - தேவி\nநொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - சசிரேகா\nஇரு துருவங்கள் - மித்ரா\nமோனத்திருக்கும் மூங்கில் வனம் - சாகம்பரி\nஎன்றென்றும் உன்னுடன்... - 01 - 15\nபார்த்தேன் ரசித்தேன் - 09\nஎன் அருகில் நீ இருந்தும்\nபொன் எழில் பூத்தது புது வானில் - 20\nமோனத்திருக்கும் மூங்கில் வனம் - 01\nமலையோரம் வீசும் காற்று - 16\nஇன்பமே வாழ்வாகிட வந்தவனே - 11\nநீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 05\nஎன் சிப்பிக்குள் நீ முத்து - 29\nதாபப் பூவும் நான்தானே… பூவின் தாகம் நீதானே - 20\nமறைந்து விடாதே மாயா - 23\nஉன்னில் தொலைந்தவன் நானடி – 14\nஇரு துருவங்கள் - 01\nசாம்ராட் சம்யுக்தன் - பாகம் 01 - 11\nகடவுள் போட்ட முடிச்சு - 03\nகன்னத்து முத்தமொன்று - 15\nநொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 03\nகாதலான நேசமோ - 03\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 03\nசாத்திரம் பேசுகிறாய் .... கண்ணம்மா – 29\nஉன் நேசமதே.. என் சுவாசமாய்..\nமுடிவிலியின் முடிவினிலே - 11\nமலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று - 26\nதமிழுக்கு அமுதென்று பேர் – 13\nஎன் நிலவு தேவதை - 22\nஎன்றென்றும் உன்னுடன்... - 02 - 12\nஇவள் எந்தன் இளங்கொடி - 19\nநெஞ்சில் துணிவிருந்தால் - 03\nஉயிரில் கலந்த உறவே - 10\nவெள்ளை பூக்கள் இதயம் எங்கும் மலர்கவே – 07\nதொலைதூர தொடுவானமானவன் – 03\nஐ லவ் யூ - 12\nசிறுகதை - பட்டாம் பூச்சி – முகிலா\nசிறுகதை - புதுவரவு – அனுசுயா\nசிறுகதை - அம்மா கணக்கு – சசிரேகா\n2018 - தமிழ் புத்தாண்டு சிறப்பு சிறுகதை - வெண்ணிலவு தான் வானத்தை வெறுத்திடுமா\n2018 - தமிழ் புத்தாண்டு சிறப்பு \"முடிவை கண்டுபிடியுங்கள் போட்டி\" - சிறுகதை - என் நெஞ்சிலே பனிமூட்டமா\nகவிதைத் தொடர் - 06. தவமிருக்கிறேன் என்னவனே - கார்த்திகா கார்த்திகேயன் [Updated]\nகவிதை - வந்தாய் கண்ணா - தமிழ் தென்றல்\nகவிதை - உன்னுடன் - அக்ஷு ஆரா\nகவிதை - நீயில்லாத நான் - தமிழ் தென்றல்\nஇளம் பூவை நெஞ்சில்... - மீரா ராம்\nகாதல் ஏன் இப்படி - ஷிவானி\nஅவளும் நானும் அமுதும் தமிழும் - வசுமதி\nTamil Jokes 2018 - உன் பொண்டாட்டி தான்டா\nTamil Jokes 2018 - கிளி மாதிரி பொண்ணு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://bimpankal2.blogspot.com/2010/10/", "date_download": "2018-04-26T13:02:40Z", "digest": "sha1:3SHWLXEX6RTLPPY76C7URLVD7XCQNQLP", "length": 68405, "nlines": 307, "source_domain": "bimpankal2.blogspot.com", "title": "bimpankal2: October 2010", "raw_content": "\nகலகலக்கும் பண்டிகை நாட்கள் துவங்கி விட்டது. புத்தாடைகளும் பலரக பலகாரங்களும்\nசிறப்பிக்க போகும் இந்த நாட்களில் மற்றொரு பிரதிநிதியாய் பட்டாசுகளும் வானவேடிக்கைகளும் தங்கள் பங்கிற்கு உலகிற்கு பண்டிகை நாட்களை வண்ணமயமாக்க துடித்துக்கொண்டிருகின்றன.\nகொண்டாட்டங்களுக்கு காமெராவை மூடியா வைக்கமுடியும். சுற்றி சுற்றி படமெடுத்தலும் உடனே உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் வேகமாய் அனுப்பி விட்டு சந்தோஷம் காண்பது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது.\nபண்டிகை கால நேரங்களில் மின்னிடும் இந்த ஒளி வெள்ளங்களை படமெடுத்து கொள்ள எல்லாருக்கும் ஆசைதான். இதையும் மனதில் கொண்டு காமெரா தயாரித்தவர்கள் அதற்கென 'FIREWORKS எனப்படும் ஆப்சனை காம்பாக்ட் காமேராக்களில் தந்திருக்கிறார்கள். ஆனால் அதை கொண்டு ஒளி வெள்ளங்களைதான் படமெடுக்க முடியுமே தவிர நம்மையும் சேர்த்து படமெடுக்கலாம் என்று நினைத்தால் கொஞ்சம் கஷ்டமே. ஏனென்றால் ஸ்லோ ஷட்டருடன் கூடிய அந்த ஆப்சனை போட்டால் நமது அசைவால் படம் ஷேக் ஆகிவிடும்.\nஒளிகளை படம் எடுக்கும் போது கூட நமது கை அசையாமல் இருக்க வேண்டும்.\nஇதற்காக ஸ்டாண்ட் பயன்படுத்தினால் இன்னும் நல்லது. மேலே காட்டப்பட்டுள்ள படமும் சாதாரண காம்பாக்ட் கமெராவில் தான் எடுத்திருந்தேன் (canon A520 4 mp)\nகை அசையாமல் இருந்தால் ஒரு 'O' மட்டுமல்ல சில எழுத்துக்களை கூட எழுதியும் விடலாம்.\nகாம்பாக்ட் காமெராகாரர்கள் முக்கியமாக கவனிக்க வேண்டியது தங்களுடைய காமெராவின் பிளாஷ் ஆப்சனை அனைத்து விடவேண்டும். பிளாஷ் ஆப்சன் அனைப்பதற்கு பிளாஷ் சிம்பல்களில் பிளாஷ் வடிவத்தை வெட்டியது போல் இருக்கும் அந்த சிம்பலை போட்டுகொண்டால் போதுமானது. நான் குறிப்பிட்டிருக்கும் முந்தய படங்களில் டேபிள்டாப் சிலவற்றை தவிர எதிலும் பிளாஷ் பயன்பாடுகளே இருக்காது. பொதுவாகவே ஒரு நல்ல படம் தருவதற்கு நேரடியான பிளாஷ் உகந்தது அல்ல\nவானத்தில் மின்னிடும் வேடிக்கைகளை சிறிய காமேராக்களில் சிறிது சூம் செய்து கூட எடுத்துகொள்ளலாம். அதற்காக வானத்தில் ராக்கெட் விடுறோமே லைட் வெளிச்சம் இல்லையே என்று ப்ளாஷை போட்டீர்கள் என்றால் ஒரு பயனும் கிடைக்க போவதில்லை\nDSLR கமெராவில் பயணிப்பவர்கள் ஸ்டாண்ட் உபயோகித்து கொள்ளலாம். ISO கொஞ்சம் அதிகம் போடவேண்டி இருக்கும். வெளிச்சத்தை பொறுத்த விஷயம்.\nஸ்டாண்ட் உபயோகித்து நீங்களும் உங்கள் பேரை கூட எழுதிப்பார்க்கலாம்.\nஆக இந்த பண்டிகை காலங்களில் மத்தாப்புக்களுக்கு ஒரு தனி முக்கியத்துவம் இருக்கும் என்பதை நம்பலாம்.\nஅனைத்து அன்பர்களுக்கும் எனது இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்\nதிருநெல்வேலியிலிருந்து காவல் கிணறு வழியாக கன்னியாகுமரி செல்லும் வழியில் அமைந்துள்ளது வட்டகோட்டை. கன்னியாகுமரிக்கு சுற்றுலா வருபவர்கள் கண்டிப்பாக இங்கேயும் ஒரு விசிட் அடிக்கலாம். உள்ளே நுழைந்ததும் பச்சை பசேலென அழகான புல் தரையை அமைத்துள்ளனர். இன்று வரையிலும் தண்ணீர் ஊற்றி பராமரிக்கிறார்கள்.அதன் மத்தியில் காணப்படும் படிக்கட்டு வழியாக மேலே சென்றால் கடலை பார்க்கலாம். கோட்டையின் கீழ் பகுதி கடலில் புதைத்து வைக்கப்பட்டதைபோல் அழகாக இருக்கும். இருபுறங்களிலும் மிதமான அலைகள். ஒருபுறம் சுற்றிலும் மலைகள் மற்றும் காற்றாடி விசிறிகளின் தோற்றம் கண்ணை கவரும். கருப்பு நிற மணலும், உப்பளங்களும் சுற்றி உள்ளன.\nகோட்டையின் முகப்பு பகுதியை பனரோமா எடுத்துக்கொண்டேன்.\nஒரு முழு சுற்றளவு பனரோமா இது. நீளவாக்கில் உள்ள இந்த படத்தை பெரிதாக போட்டு வட்டமாக சுற்றி வைத்து விட்டு உள்ளே நின்று பார்த்தால் அந்த கோட்டையினுள் நிற்பது போன்ற உணர்வு இருக்கும்.\nஏற்கனவே பனரோமாவை பற்றி சொல்லி இருந்தாலும். இன்னும் சில டிப்ஸ் இங்கே தர விரும்புகின்றேன்.\nபொதுவாக காம்பக்ட் காமராக்களில் பனரோமா ஆப்சன் வரத்துவங்கி விட்டதால் அது இப்பொழுது ஈசியாகிவிட்டது . பனரோமா மோடைபோட்டு விட்டு இது போன்ற நல்ல காட்சிகள் உள்ள இடத்தை தேர்வு செய்து உங்கள் படபிடிப்பை துவக்குங்கள்.\nமுதல் கிளிக் செய்ததுமே கமெராவில் காண்பிக்கும் இரண்டுகட்டங்களில் ஒன்றில் முதலாவதாக எடுத்த படம் அப்படியே நிற்கும். இரண்டாவது எடுக்கபோகும் லொக்கேஷனை அதற்கு நேராக கொண்டு நிறுத்தி பார்த்தால் எங்கே மேட்ச் ஆகுதோ அதன் பின்னர் கிளிக் செய்து கொள்ளலாம். இப்படியே முழு சுற்றையும் படம் பிடித்து கொள்ள வேண்டியது தான். இங்கே ஸ்டாண்ட் உபயோகிப்பது மிக அவசியம்.\nமேலே உள்ள படமும் சரி நான் எடுத்த பல படங்களிலும் ஸ்டாண்ட் உபயோக படுத்தப்படவில்லை தான். எனினும் புதிதாய் முயற்சி செய்பவர்கள் ஸ்டாண்ட் பயன் படுத்துவது நல்லது.காலை நேரமோ அல்லது மாலை நேரமோ இது போன்ற படங்கள் எடுக்கும் பொழுது சிறிது வேகமாக ஒவ்வொரு பிரேமும் கடந்திருக்க வேண்டும். இல்லை என்றால் லைடிங்கில் வேறுபாடுகள் படத்தில் தெரியலாம்.\nஇவற்றை படமெடுத்தால் மட்டும் போதாது. ஸ்டிச்சிங் செய்யப்படவேண்டும் . போட்டோஷாப் தெரிந்தவர்களுக்கு நோ ப்ரோப்ளம் ஈசியாக ஸ்டிச்ச் செய்து விடலாம். மற்றவரகள் இதெற்கென சாப்ட்வேர்கள் ஆன்லைனில் தேடிக்கொள்ளலாம்.\nஎனது மேலும் சில பனரோமா படங்களுக்கு ....\nதண்ணீரில் பூ பூக்கலாம் தண்ணீரில் நெருப்பு பூக்குமா.......\nபடத்தை பார்த்தால் நமது போட்டோ ஆர்வலர்கள் கொஞ்சம் பெட்ரோலை கோப்பையில் ஊற்றி தீவைத்துவிடபோகிறார்கள். நண்பர்களே அவசரப்பட்டு எதுவும் செய்து விடாதீர்கள்.....\nஅமைதியான சூழலில் கொஞ்சம் இது போன்ற விளையாட்டுகளில் (\nநமது வழக்கம். அதிலும் தீயுடன் விளையாடுவதென்றால்......\nஇந்த படத்தில் இரண்டிற்கு மேற்பட்ட டெக்னிக் உள்ளது. வழக்கம் போல் குடை விளக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. சிகப்பு நிற தண்ணீரும் ஒய்ன் கப்பும் தாயாராக்கிவிட்டு லைட்டிங் டெஸ்ட் எல்லாம் முடித்து விட்டு க்ளைய்மாக்ஸ் கட்டத்துக்குள் வந்தேன்.\nபெட்ரோலை விட தண்ணீர் எடை கூடிய சமாசாரம் நினைவில் வந்ததுதான் இந்த படத்திற்கு மிக முக்கிய பாயிண்ட். ஓகே பெட்ரோல் சில நிமிடங்களில் மறைந்தே போய் விடும். எல்லாம் சில நொடிகளில் நடக்க வேண்டிய விஷயம். சாட் ரெடி. கோப்பையில் தண்ணீர் விடப்பட்டது, மேலே கொஞ்சம் பெட்ரோல் விடப்பட்டது தீக்குச்சியை பற்றவைத்து கோப்பையினுள்ளும் போட்டாகிவிட்டது. குபீர் என்று தீயும் தனது வேகத்தை காட்டதுவங்கிது. வேகமாய் ஒரு கல்லை அதனுள் போட்டு உடனே கிளிக் செய்து விட்டேன். இவ்வளவும் சில நொடிகளில். அதுவும் தனிமையில். இது போன்ற நெருப்புடன் கூடிய விளையாட்டுகளை செய்வதாக இருந்தால் கவனமாக செய்யவும். ஒரு சில சொட்டு பெட்ரோல் பயன்படுத்தினால் போதுமானது.\nமாவட்ட வாரியாக புகைப்பட சங்கங்களின் சார்பில் தமிழக கலாச்சாரம் என்ற தலைப்பில் ஒரு போட்டி நடத்தப்பட்டது. எல்லா மாவட்டங்களிலும் போட்டி நடத்தியிருந்தார்கள். வழக்கம் போல் எங்கள் மாவட்ட சங்கம் சார்பில் நடத்தப்பட்ட போட்டியிலும் நான் கலந்து கொண்டேன்.\nஇதற்காக போட்டோ எடுப்பதற்கென்று ஆலோசனையில் இருந்தபொழுது எங்கள் ஊரின் அருகாமையில் பானை செய்யும் இடத்தை தேர்வு செய்து அங்கு போவதற்கு அனுமதி கேட்பதற்காக நான் படித்த கல்லூரியின் இன்றைய தாளாளரின் வழியாக அனுமதி கேட்கலாம் என்று அனுகியபோது அவர் எப்பொழுது படம் எடுக்க வருகிறீர்கள் என்று மட்டும் கேட்டு விட்டு\nஅவரே நேராக கூட வந்து விட்டார். நான் கேட்டதோ அனுமதி மட்டும் தானே .... அவரோ ஒரு பாதிரியாரும் கூட\nநிஜமாகாவே ஷாக் ஆகி அவரது நேரத்தை மிட்சபடுத்துவதர்காக வேகமாக களத்தில் குதித்தேன்.\nஉள்ளேயோ மிகவும் லோ லைட். வழக்கம் போல் ISO கூடுதலாய் போட்டு படம் எடுத்துவிட்டு நகர்ந்தேன்.\nகிட்டத்தட்ட ஐந்து படங்களை தேர்வுக்கு அனுப்பிவிட்டு காத்திருந்தேன்.\nஇரெண்டாம் பரிசு என்று சேதி வந்ததும் ஒரு ஆனந்தம். ஆனால் பரிசு இதற்கல்ல வேறு ஒரு படத்திற்கு.\nமற்ற படங்கள் தேர்வு செய்யப்படாததின் காரணங்களை நடுவர் விளக்கிகொண்டிருந்தார்.\nகிராப் செய்துதான் அனுப்பியிருந்தேன். அதில் பச்சையாக ஒரு பாலிதீன் கவர் கவர் இருந்தது தான் காரணம்.\nஇப்படிப்பட்ட சின்ன சின்ன விஷயங்களை மனதில் கொண்டு தேவைஇல்லாத வேஸ்ட் பொருட்கள் கிடந்தால் மாற்றி விட்டு படங்களை எடுத்து விட்டால் போட்டிகளுக்கு தயாராகிவிடலாம்.\nகுடை மிளகாய் படம் எடுப்பதற்காகவே பலவர்ணங்களில் வாங்கி வந்திருந்தேன்.\nமூன்று குடை மிளகாயையும் கருப்பு பாலிஷ் பேப்பரில் வைத்து கொஞ்சம் தண்ணீர் தெளித்து(SPRAY BOTTLE உதவியுடன் ) டாப் ஆங்கிளில் ஊடுருவல் வெளிச்சம் கொண்டு எடுக்கப்பட்ட படம்.\nஜன்னல் வழியாக அல்லது கதவுகள் வழியாக வரும் வெளிச்சத்து ஒளிகளுக்கு நிகர் எதுவும் இல்லை. படத்திற்கு தேவையான ஒருபுற ஒளியும் மறுபுறம் தேவையான நிழலும் தந்து படங்களை மெருகூட்டிவிடுகிறது.\nபாலுமகேந்திரா படங்களை பார்ப்பவர்களுக்கு புரியும். அப்படி ஒரு ஒரிஜினாலிட்டி அவரது படங்களில்.பொருட்களை மட்டுமன்றி மனிதர்களையும் இப்படிப்பட்ட வெளிச்சத்தில் படம் எடுப்பது தனி அழகு தான்.\nஇது போன்ற படங்களை எடுக்கும் பொழுது ஸ்டாண்ட் உபயோகம் செய்து ISO மிகவும் குறைத்து போட்டு ஸ்லோ ஷட்டர் போட்டு எடுத்தால் படம் மிகவும் சிறப்பாய் வரும்.\nதேவைபட்டால் ஒரு வெள்ளை காகிதத்தை நிழல் வரும் இடங்களில் பிடித்துக்கொண்டால் கொஞ்சம் ஷேடையும் குறைத்துகொள்ளலாம்.\nகாம்பாக்ட் கேமரா நண்பர்கள் இது போல் படம் பிடிக்க ஆசைபட்டால் ப்ளாஷை அனைத்து விட்டு களத்தில் இறங்குங்கள் ப்ரோக்ராம் மோடு போட்டுகொண்டால் போதுமானது. ஆனால் கேமரா அசையாமல் பார்த்துகொள்வது நல்லது.\nவழக்கம் போல் இந்த படத்திற்கு ஒரு சிறப்பம்சம் என்னவென்றால் நமது பிட் (PIT PHOTOGRAPHY IN TAMIL) வாரம் ஒரு படத்தை தேர்ந்தெடுத்து பிரசுரிப்பார்கள் அதில் இந்த படமும் முக்கியத்துவம் பெற்றிருந்தது.\nபறவையை கண்டான் விமானம் படைத்தான்...........\nபெங்களூரு கப்பன் பார்க்கில் ரவுண்டு ஹாலில் பல கண்ணாடி டாங்குகளில் அழகாக வண்ண மீன்களை விட்டு வைத்திருந்தார்கள். பல படங்களை வழக்கம் போல் எடுத்து வைத்திருந்தேன்.இருட்டறைகளில் சின்னதாய் விளக்கின் ஒளி இருந்தது நம்மை பிரமிக்க செய்தது. ரொம்ப லோ லைட் ஆனதால் iso கொஞ்சம் அதிகமாகவே போட வேண்டியதாகியது.\nகாம்பக்ட் காமெரா காரர்களுக்கு அண்டர் வாட்டர் எனப்படும் ஆப்சன் தரப்பட்டுள்ளது.\nதண்ணீரில் உள்ளவைகளை எடுப்பதற்கு அப்படி ஒரு வசதி.\nமீனுக்கும் நமது தொழிலுக்கும் ஒரு பெரிய சம்பந்தம் உண்டு என்பதை யாராலும் மறுக்க முடியாது. ஆம். பெரிய புகைப்படகாரர்கள் தெரிந்து வைத்திருந்தாலும் தெரியாதவர்களுக்கு சொல்வது தானே நமது கடமை\nபறவையை கண்டான் விமானம் படைத்தான் மீனை கண்டான் கப்பலை படைத்தான்.\nஅதெல்லாம் அந்த காலத்து கதை. மீனை கண்டு வேறொன்றையும் கண்டுபிடித்து பல வருடங்கள் ஓடிவிட்டன. லென்ஸ் என்றாலே நமது கண்ணை மையமாக வைத்து தான் கண்டுபிடிக்கப்பட்டது என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம். லென்சின் aperture முழுக்க முழுக்க நமது கண்ணை மையமாக வைத்து தான் செயல்படுகிறது. கடற்கரைக்கு செல்லும் போது கண்ணை கொஞ்சம் மூடித்தான் பார்ப்பார்கள். அப்படித்தான் காமெராவும் கடற்கரை வெளுச்சதில் aperture ஐ நாம் சுருக்குவதில்லையா இருட்டுக்குள் போகும் போது கண்ணை ரொம்ப திறந்து பார்பதில்லையா இருட்டுக்குள் போகும் போது கண்ணை ரொம்ப திறந்து பார்பதில்லையா அது போலதானே லோ லைட்டில் aperture திறக்கிறோம் அது போலதானே லோ லைட்டில் aperture திறக்கிறோம் \nமீனின் கண்ணும் அது போலதான். நாம் நேராக நின்று விட்டு இரண்டு கையையும் முழுதாய் விரித்து வைத்து விட்டு எத்தனை ஏரியா நமது கண்ணில் படுகிறதோ அத்தனை ஏரியா மீனின் கண்களுக்கும் தெரியும். அதாவது 180 டிகிரி. அதைக்கொண்டு தான் fish eye lens தயாரித்தார்கள். மிகப்பெரிய பில்டிங் முன்பு மிக அருகில் போய் நின்று விட்டு fish eye lens போட்டால் அந்த பில்டிங் மட்டுமல்ல சுட்டுவட்டாரமே உள்ளே அடங்கிவிடும். ஆனால் எல்லாம் வளைந்து ரவுண்டு ball இல் தெரியும் பிம்பம் போல்\nபெரிய காமெராக்களுக்கு மட்டுமன்றி சிறிய காமெராக்களுக்கும் எக்ஸ்ட்ராவாக லென்சை வாங்கி பயன்படுத்திகொள்ளலாம்.\nஆக பிஷ் dank அருகில் ஒளிந்து நிர்ப்பவர்களை மீன்கள் கண்டுகொள்ளவில்லை என்று நினைத்தால் நீங்கள் தான் மாட்டிகொள்வீர்கள்\nநெல்லைக்கு அருகில் உள்ள நாங்குநேரி வழியாக அரை மணி நேர பயணத்துக்கு பின் கூந்தன்குளம் என்ற பறவைகளின் சரணாலயம் ஓன்று உள்ளது. பறவைகளின் படம் பிடிப்பவர்களுக்கு கண்டிப்பாக தெரிந்திருக்கும்.\nமிகவும் சூடான இடம்.அதனால் தான் வெளிநாட்டு (ஜெர்மன் மற்றும் செய்பீரயா நாட்டு )பறவைகள் இங்கு இடம் பெயர்ந்து வந்து முட்டை போட்டு குஞ்சு பொறித்து மீண்டும் அழைத்து செல்கிறது. அதற்கு அவ்வளவு ஹீட் தேவை.\nகூந்தன் குளம் - பறவைகளின் சரணாலயமாகவே இருக்கும் இங்கு நாம் நுழைந்தாலே பெரிய பாக்டரிக்குள் நுழைந்தது போல் பறவைகளின் சத்தம் கேட்கும். சின்னஞ்சிறிய இந்த கிராமத்தில் இந்த சப்தம் கேட்காமல் மக்கள் தூங்க மாட்டார்கள் போலும். ஏனென்றல் சீசன் நாட்களில் ஆயிரகணக்கான பறவைகள் இங்கு தஞ்சம் புகுந்து விடுகிறது. வீடுகளில் உள்ள மரங்களையும் விட்டு வைக்காமல் எல்லா கிளைகளிலும் முட்டை போட்டு காவல்காக்கிறது.\nமெல்லமாக நடந்து குளத்து பக்கம் போனால் அழகான ஒரு டவர் கட்டி வைத்துள்ளனர். பள்ளி, கல்லூரிகளிலிருந்து பறவைகளை காண்பதற்கு இங்கே மாணவர்களை அழைத்து வருவதும் உண்டு . டவரின் மேலே நின்று குளம் முழுவதையும் பார்த்துக்கொள்ளலாம். பறவைகளின் அழகிய அணிவகுப்பும் மீன்களை கொத்திக்கொண்டு போகும் காட்சிகளையும் பார்த்து ரசிக்கலாம்.கண்ணுக்கு எட்டிய தூரம் வரை குளம் பறந்து விரிந்து இருப்பதால் இப்படி ஒரு டவரை கட்டி வைத்துள்ளனர்.\nநானும் எனது நண்பருமாக பறவைகளின் நடவடிக்கைகளை படம் பிடிக்க துவங்கினோம். இங்கே எங்கு பார்த்தாலும் பறவைகளாய் இருந்ததால் படம் பிடிப்பதற்கு சிரமங்கள் ஒன்றும் இல்லை. ஆனாலும் நாங்கள் கொண்டு சென்ற சூம் லென்ஸ் 70-300௦ என்பதுவும் ஆட்டோ போகஸ் இல்லாததாலும் கொஞ்சம் சிரமமாகவே இருந்தது. சாதாரண காம்பக்ட் காமெராக்களை கொண்டு செல்பவர்களுக்கு ரொம்ப கஷ்டம் தான் இருந்தாலும் பரவலாக எடுத்து கொள்ளலாம். DSLR CAMERA மற்றும் 400 அல்லது 600 RANGE உள்ள சூம் லென்ஸ்\nவைத்திருந்தால் இன்னும் நல்லது அதில் உள்ள CONTINUOUS சாட் எனப்படும் ஆப்சன் போட்டுகொண்டால் பறவைகள் பறந்து வந்து மீனை கொத்தும் காட்சியை சுலபமாக பிடித்துவிடலாம். BIRD வாட்சிங் எல்லாம் சாதரண விஷயம் இல்லை. காலை முதல் மாலை வரை காவல் கிடந்தால் தான் நல்ல படங்களை எடுக்க முடியும். பக்கத்திலுள்ள கேரளாவிலிருந்து கூட புகைப்பட நண்பர்கள் பலரும் இங்கே வந்து படம் எடுப்பதுண்டு.\nடிசம்பர் முதல் ஜூன் மாதங்கள் வரை பறவைகளை படம் பிடிக்கலாம். அதற்கு பிறகு குளத்தில் தண்ணீர் வற்றதுவங்கி விடுவதால் பறவைகள் நிறைய இடம் பெயர்ந்து விடுகிறது.\nஇந்த நாட்களில் நம்மால் குளத்தின் உட்பகுதிக்கு கூட செல்ல முடியும். ஆனால் நம்மை கண்டால் பறவைகள் பறந்துவிடத்துவங்கி விடுகிறது.\nஇது போன்ற சூழ்நிலைகளில் பறவைகள் நம்மை கண்டால் ஓடாத வண்ணம் தரையில் முதளை போல் தவழ்ந்து கிடந்தது கொஞ்சம் கொஞ்சம் முன்னேறி படம் பிடித்து கொள்ள வேண்டியதுதான். பறவைகள் படம் பிடிபதற்கென்றே உடைகளிலும் பச்சை போன்ற வர்ணங்களை தேர்வு செய்து கொள்ள வேண்டும். பொதுவாக எங்கே பறவைகளை படம் படம்பிடிபதன்றாலும் ஒவ்வொரு ஸ்டெப் வைத்து தான் நகர வேண்டும். பறவை இருக்கிறதே என்றுஓடி போனீர்கள் என்றால் அதுவும் ஓடியே போய்விடும்.\nஎந்த பள்ளிக்கூடம் செல்ல ......\nதலையில் சில பெட்டிகளை கட்டிவைத்து விட்டு எந்த பள்ளிக்கூடம் செல்லலாம் என்று ஒவ்வொரு இடமாக பார்த்து விட்டு செல்லும் இந்த சிறுவனைக்கண்டால் யாருக்கு தான் மனம் இறங்காது \nநானும் எனது பிலிம் காமெராவுடன் 1995 ஆண்டுகளில் சுற்றித்திரிந்தபோது பதிவானது இந்த படம். விஷுவல் படங்கள் அந்த நாட்களில் நிறைய எடுப்பது வழக்கம்.\nகன்னியாகுமரி மாவட்ட புகைப்பட மற்றும் வீடியோக்ராபெர் சங்கத்தில் 2005 இல் புகைப்பட போட்டி ஓன்று நடத்தினார்கள். அதில் எனது வேறு ஒரு படத்திற்கு இரண்டாம் பரிசு கிடைத்திருந்தது. கூடுதலாக இந்தபடத்திற்கு பார்வையாளர்களின் கூடுதல் ஒட்டு கிடைத்து மற்றொரு பரிசும் கிடைத்திருந்தது. 1997 இல் நவம்பர் குங்குமம் இதழில் என்னைபற்றி ஒரு கட்டுரை பிரசுரம் செய்திருந்தார்கள் அதிலும் இந்த படம் வந்திருந்தது குறிப்பிட வேண்டிய விஷயம்.\nவிஷுவல் படங்கள் எந்த காமேராவிலும் எடுத்து விடலாம். விஷுவல் படங்கள் எடுப்பதற்கு என்று தனி டெக்னிக் எதுவும் தேவை இல்லை. பிரதான கேமராக்களும் தேவை இல்லை.கொஞ்சம் நல்ல குவாலிட்டி படம் பதிவு செய்யும் செல் போன் காமெராக்கள் கூட போதுமானது. செல் போன் கமேராக்களில் பதிவு செய்யும் புகைப்படங்களுக்கு என்றே ஆன்லைனில் போட்டிகள் நிறைய வைக்கிறார்கள்.\nஇது போன்ற படங்கள் பதிவு செய்யும் பொழுது பொதுவான இடங்களாக இருந்தால் நாம் கவனத்தோடு செயல்படுவது நல்லது. சுற்றுலாதலங்களுக்கு சென்று இது போன்ற விஷுவல் படங்களை எடுக்கும் பொழுது உங்களை யாரும் கண்டுகொள்ளவதில்லை. படமும் நன்றாக அமையும். விஷுவல் படங்கள் எப்போதும் ஒரே மாதிரி அமைவதே இல்லை. ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் லக்கை பொறுத்த விஷயம் அதனால் எப்பொழுது கிடைத்தாலும் சுட்டுக்கொள்ளுங்கள். பொதுவாக நம் ஊர் விஷுவல் படங்களுக்கு கிராக்கி அதிகம் என்பதால். படங்களை போட்டிகளுக்கு அனுப்பவும் மறந்து விடாதீர்கள்.\nஎனது மேலும் சில விஷுவல் படங்களை காண......\nஇன்ட்லி, திரட்டி,தமிழ்வெளி, பகலவன் திரட்டி, உளவு, தமிழ் 10, facebookபோன்றவற்றில் வாக்களித்து வரும் அன்பர்களுக்கு மிக்க நன்றி. அதுவே நீங்கள் தரும் ஊக்கப்பரிசு.\nஇங்கும் அதுபோல் உங்கள் கருத்தக்களை கூறிசெல்ல கேட்டுகொள்கிறேன்.\nஇந்த ஒளிராத விளக்கு ஒளிர்ந்தது அன்று................ CFL பல்புகளுக்கு மாறி வரும் இந்த வேகமான உலகத்தில் எனக்கு இது போன்ற ஒரு படம் எடுக்க ஒளிராத பல்ப் எங்கு தேடியும் கிடைக்காமல் போனது.\nஒரு வழியாக ஒரு பல்ப் கிடைத்து விட எப்படியாவது உடைத்து (போட்டோ எடுத்து) விட வேண்டியது தான் என்று வேலையை துவங்கினேன். நண்பர் ஒருவருடன்\nதயாரானேன். பல்பு போடுவதற்கு ஒரு ஆள் கண்டிப்பாக வேண்டுமென்பதால் அவருடன் களத்தில் குதித்தேன்.\nகுடை விளக்குகளை ஒளிரசெய்து கீழே ஒரு இரும்பு ஸ்டாண்டை வைத்து விட்டு\nபல்பை போடச்சொன்னேன் அவரும் போட்டுடைத்தார்.நானும் கிளிக் செய்து விட்டேன். எல்லாம் ஓகே. வழக்கம் போல் டேபிள் டாப் எடுக்க பயன்படுத்தப்படும் விளக்கமைப்பும். அதற்குரிய ஷட்டர் வேகங்களையும் கொண்டு எடுக்கப்பட்டது.இதில் டைமிங்கின் முக்கியத்துவம் முன்னால் சொல்லபட்டவை போல்தான்.\nஇதை டேபிள் டாப் லைட் வசதி இல்லாதவர்கள் கூட செய்து பார்க்கலாம்.\nபின்னால் கருந்துணி ஒன்றை கட்டி நல்ல வெயில் நேரத்தில் அதாவது 12 முதல் 2 மணிக்கெல்லாம் (நல்ல வெயில் இருப்பதால் இது போன்ற நேரத்தை ஆக்சன் படங்கள்\nபதிவு செய்ய பயன்படுத்தலாம்.)கீழே ஒரு இரும்புத்துண்டை வைத்து விட்டு பல்பை போட்டு உடைத்து உங்கள் பதிவை துவக்குங்கள். அதற்காக உபயோகத்தில் உள்ள பல்புகளை எடுத்து உடைத்து உங்கள் வீட்டில் வாங்கிக்கெட்டி கொள்ளாதீர்கள்\nகை கால்களில் கண்ணாடித்தூள்கள் பட்டு விடாதவாறு பார்த்துகொள்ளவும்.\nகாம்பக்ட் காமெராகாரர்கள் ஆக்சன் மோட் இதற்கு பயன்படுத்தலாம்.\nமற்றவர்கள் (அதாவது DSLR நண்பர்கள் ) ISO 400 800 வரை பயன்படுத்திக்கொள்ளலாம்\nகுழந்தைகளை கண்டால் யாருக்குதான் படம் பிடிக்காமல் இருக்கதோன்றும். குழந்தைகளை படம் பிடிக்கத்தானே காமெராவை பெரும்பாலும் நாம் வாங்கி வைத்திருக்கிறோம்\nகுழந்தைகளை படம் பிடிக்க இங்க பாரும்மா காமேராலே ஒரு கிளி வருது பாரு பாருன்னு\nஇயல்பான படங்கள் குழந்தைகளின் நடவடிக்கைகளில் நிறைய கிடைக்கும். குழந்தைகளை அப்படியே விளையாட விட்டுவிடவேண்டும். அவர்களை சிறிது நேரம் கண்டு கொள்ளாதது போல் இருந்தால் அவர்கள் ஏதாவது விளையாடிகொண்டிருபார்கள் .அந்த நேரம் நாமும் நம் காமெராவை சுழற்றி சுழற்றி படமெடுத்துவிடவேண்டியதுதான்.\nகாம்பாக்ட் காமேராக்களில் இதெற்கென்றே கிட்ஸ் எனப்படும் ஆப்சன் இருக்கும். கிட்ஸ் ஆப்சன் ஓகே. அது என்ன வேலை செய்கிரதென்பதெல்லாம் நமக்கு எங்கே தெரியும் கிட்ஸ் ஆப்சனை போடுவோம் படம் பிடிப்போம் அவ்வளவு தான். படம் வந்து விடும். சரிதான். கிட்ஸ் ஆப்சன் கொஞ்சம் வேகம் கூடிய ஷட்டரைகொண்டது . அதனால் அவர்களுடைய அசைவை துல்லியமாக கொஞ்சம் ஷேக் இல்லாமல் படம் பிடித்து விட முடியும்.\nகுழந்தைகள் கண்கள் பொதுவாக ரொம்ப கருப்பான முட்டை கரு போன்று தெளிவாக இருப்பதால் மானுவல் காமெரா காரர்களுக்கு ஷார்ப் செய்வது மிகவும் வசதியான ஓன்று.\nஅதிலும் சூம் லென்ஸ் போட்டு குழந்தைகளை closs up படம் பிடிப்பதே ஒரு அழகு தான்.இது போன்ற நேரங்களில் துல்லியமாக குழந்தைகளின் படங்களை எடுக்க சூம் லென்ஸ் வைத்திருப்பவர்கள் கண்ணைத்தான் போகஸ் செய்ய வேண்டும்.\nஎனது சில குழந்தைகள் படங்கள்\nபூக்கள் என்றதுமே நினைவில் வருவது எங்கள் ஊரில் ஒரு ரோஸ் கார்டன் உள்ளது. அதன் உரிமையாளர் எத்தனை பேர் காமெரா கொண்டு சென்றாலும் கவலை படுவதே இல்லை. அது அவரது ஸ்டைல். இங்கே நமது புகைப்பட நண்பர்கள் திருமணமான ஜோடிகளை அழைத்து கொண்டு போய் படம் பிடிப்பது வழக்கம். நாமும் நம்முடைய பங்கிற்கு காமெரா சகிதமாக அங்கே அடிக்கடி போய் பூக்களை படம் பிடிப்பதும் வழக்கம்.\nபூக்கள் படம் பிடிப்பதற்கு என்று சில ஸ்டைல்கள் உள்ளது. ஆம். macro லென்ஸ்களை உபயோக படுத்தலாம், reflector (ஒரு தெர்மாகோல் அல்லது வெள்ளை பேப்பர் போதும் ) பயன் படுத்தலாம். இன்னும் ஸ்டாண்ட் கூட உபயோகித்து கொள்ளலாம். இங்கே நான் எடுத்த படங்கள் எல்லாம் (லிங்க் கீழே தரப்பட்டுள்ளது ) அப்படி reflector பயன் படுத்தி எடுக்கப்பட்டவை அல்ல. ஆனால் reflector பயன் படுத்தும் பொழுது லைட்டின்க் ஈவனாக கிடைக்கும். மிதமான லைட்டின்க் உள்ள பொழுதை தேர்ந்தெடுத்தால் இன்னும் சிறப்பாக அமையும். சூம் லென்சில் உள்ள macro உதவியுடன் இது போன்ற படங்களை எடுக்கும் பொழுது ஷேக் ஆவது இயல்பு. அதனால் தான் ஸ்டாண்ட் உபயோகிப்பது நல்லது.\nவழக்கம் போல் சிறிய (காம்பக்ட்) கேமராகாரர்களுக்கு macro ஆப்சன் ஒரு இலை வடிவத்திலே கொடுக்கபட்டிருக்கும். அதை தேர்வு செய்து விட்டு படம் எடுத்தால் எத்தனை க்லோசாக சென்றாலும் ஷார்ப்பாக இருக்கும்.\nமழை காலங்களில் பூக்களை படம் எடுப்பதே ஒரு சுகம். ஏனென்றால். மழைத்துளிகள் அழகாக அணிவகுதிருப்பதால் இன்னும் சிறப்பாக அமையும். ஆனாலும் நாமும் ஒரு பங்கிற்கு ஒரு வாட்டர் ஸ்ப்ரே பாட்டில் கொண்டு சென்று பூக்கள் மீது தண்ணீர் தெளித்து\nபடம் எடுத்தால் பூக்களும் உற்சாகமாக இருக்கும். படமும் நன்றாக அமையும்.\nஇது போன்ற இடங்களுக்கு செல்லும் பொழுது கஷ்டப்பட்டு ஆளாக்கிய பூக்களை பறிக்காதீர்.\nமாலைபொழுதில் மூன்று மணி நேரம் மின்னிய மின்னலை பார்த்ததும் பதிவு செய்திட ஆவலாய் இருந்தது. வேலையின் நெருக்கடியால் எங்கோ இருந்த நான் எனது கடையின் மொட்டை மாடிக்கு அவசர அவசரமாக கேமெரா மற்றும் stand சகிதமாக சென்றபோது மின்னல்கள் ஓய்ந்திருந்தது. இருந்தாலும் சில மணி நேரம் காவல் கிடந்ததில் ஆங்காங்கே லேசான மின்னல் நமக்கு அறுதல் தந்து கொண்டிருந்தது.படத்தில் நாகர்கோவிலின் மத்தியில் உள்ள ஒரு ஹோட்டலின் கோபுரம் அருகில் மின்னல் வந்தது போன்ற கட்சியை பதிவு செய்ய முடிந்தது.\nமின்னல் என்றதும் ஓடிப்போய் ஆக்சன் மோடில் போட்டு படம் எடுத்து விடலாம் என்றென்ன வேண்டாம்.மின்னல் எத்தனை வேகமாக வருகிறதோ அத்தனை பொறுமை நமக்கு தேவை. நாலாபுறமும் மின்னல் ஒளிர்ந்து நம்மை கொஞ்சம் குழப்பிவிடும் அப்படிதான் எனக்கும் அந்த அனுபவம் கிடைத்திருந்தது. ஒருபுறம் நான் காத்திருந்தபோது மின்னலோ நம்மை ஏமாற்றிவிட்டு வேறொரு புறமாக பிளாஷ் அடித்துகொண்டிருந்தது .\nமின்னல் படம் பிடிக்க முக்கியமாக தேவை tripod அதாவது ஸ்டாண்ட். மின்னல் அடிப்பதோ ஒரு கனபொழுதுதான்.ஆனால் அது எங்கே அடிகிறதென்பதை சரியாக பார்த்து வைத்துகொண்டு களத்தில் குதிக்க வேண்டும்.\nமானுவல் கேமராகாரர்கள் ஸ்லோ சட்டர் உபயோகித்தல் நலம். காம்பக்ட் கேமரா காரர்கள் நைட் சாட் மோடை போட்டுகொண்டால் கொஞ்சம் படம் பதியும் நேரம் கிடைக்கும் என்பதால் பதிவும் செரியாக அமையும். காமெரா அசையாது பார்த்துகொள்ளவும். தொடர்ச்சியாக வரும் மின்னலை ஸ்லோ ஷுட்டேரில் படம் எடுத்தால் இன்னும் அழகான desighn போன்று இருக்கும். continue snap கூட பயன்படுத்தலாம்.\nஆனாலும் இது போன்ற நேரங்களில் நம்மையும் கொஞ்சம் கவனமாக பார்த்து கொண்டால் நல்லது.\nஅடடா மழைடா அட மழைடா......\nவானம் இருட்டுவதும் வெளுப்பதுவமாக நாடகமாடிக்கொண்டிருந்தது.\nமழை வந்தாலே சிறுவர்களுக்கு கொண்டாட்டம் தான்.\nஅதிலும் எங்கேயாவது பைப் வழியாக தண்ணீர் வந்தால் சொல்லவா வேண்டும். குற்றால அருவியிலே குளித்த கொண்டாட்டம் தான்.\nநாமும் வழக்கம் போல் காமெரா சகிதமாக மழையும் விட்டுவைக்காமல் களத்தில் குதித்தோம் சிறப்பாக பல படங்கள் குவிந்தது.\nமழைக்காலங்களில் படங்கள் எடுக்கும் பொழுது மிகவும் கவனம் தேவை.\nதண்ணீர் கேமராவில் கண்டிப்பாக படக்கூடாது. இதற்காக காமெராவிற்கென ரெயின் கோட் நம்மூர் சென்னை போன்ற இடங்களில்\nphotostoreகளில் கிடைக்கிறது. வாங்கி போர்த்திக்கொள்ளலாம் . மூடிய ரெயின் கோட்டை போட்டுகொண்டு படம் எடுத்துகொள்ளலாம்.\nகுறிப்பாக கமெரா வாங்கும் பொழுதே சிலிக்கான் என்ற சிறிய அளவில்\nஉள்ள ஒரு பொதியை காமெரா பேகில் போட்டிருப்பார்கள். அதெல்லாம்\nஎதற்கு என்று ஒதுக்கி விடாதீர்கள் . மழைக்காலங்களிலும் சரி\nகடல்கரையில் போட்டோ எடுத்தபின்பும் சரி காமெராவை நன்றாக\nதுடைத்து விட்டு சிலிக்கான் பொதியை கட்டாயம் உள்ளே\nபோட்டுக்கொள்ள வேண்டும். அதனால் லென்சிலும் காமெராவின் உட்பகுதிகளிலும் பங்கஸ் ஆகாமல் பார்த்துக்கொள்ளலாம்.\nஎனது கூடுதல் மழை படங்களுக்கு ........\nஎந்தப்படத்தை தேர்வு செய்யலாம் என்றிருந்தபோது பிட்டில் இந்த மாதத்திற்க்கான போட்டியை அறிவித்திருந்தார்கள் .\"விளையாட்டு\" சந்தோஷமான தலைப்பு.\nஇரண்டடி நீளத்தில் சூம் லென்சை கொண்டு ஸ்டேடியத்தில் வரிசையாக\nஉட்கார்ந்து படம் பிடித்து கொண்டிருப்பதை டிவியில் பார்த்து இருப்போம்.\nஅது போல் எல்லாம் கனவு காணமல் நம் ஊர் குளத்தங்கரையில் சிறுவர்கள்\nஜாலியாக குளித்துகொண்டிருப்பதை பார்த்தீர்கள் என்றால் உடனே தயாராகி விடுங்கள். சிறிய டிஜிட்டல் கேமரா வைத்திருப்பவர்கள் அதில் உள்ள ஆக்சன் மோடிற்கு மாற்றிவிட்டு தயாராகுங்கள்.சிறுவர்களை ஐஸ் வைத்து தம்பிகளா ஒருமுறை குதியுங்களேன்னு சொன்னால் போதும் ஒருமுறை அல்ல பலமுறை குதித்துவிட்டு உங்களிடம் எங்கே காட்டுங்கள் பார்போம் என்பார்கள்.அவர்களிடம் மறக்காமல் படத்தை காட்டிவிடுங்கள். நீங்கள் எதற்காக படம் எடுக்குறீர்கள் என்பெல்லாம் அவர்களுக்கு பிரட்சனையே இல்லை எப்படியாவது அவர்கள் குதித்ததை ஒருமுறை பார்த்து விட்டால் போதும். சிறிய காமெராவில் வெகு தொலைவில் நின்று சூம் லென்ஸ் மூலம் படம் எடுத்து க்ரையின்ஸ் வராமல் பார்த்துகொள்ளுங்கள். கொஞ்சம் பக்கத்திலே நின்று எடுத்தாலே போதுமானது .காமெராவில் தண்ணீர் பட்டு விடாமல் பார்த்துகொள்ளுங்கள். அதே போல் காலையில் அல்லது மாலையில் நம் ஊர் பசங்க விளையாடும் மைதானங்களில் போனாலும் செரிதான். நிறைய படங்கள் கிடைக்கும்.\nமேலே காணப்பட்ட இந்த படமும் அது போல் தான் 'மணக்குடி பனோரமா' எடுத்த பாலத்திர்கருகே நின்று எடுத்த படம் . சிறுவர்களிடம் சொன்னபோது எந்த கேள்விக்கும் இடமில்லாது பலமுறை கடலில் துள்ளி குதித்து நம்மை குஷி ஆக்கினார்கள் . இதிலும் டைமிங் மிக முக்கியம். படங்களை பதிவு செய்வதற்கு முன் அவசரப்படாமல் கொஞ்சம் நிதானம் கையாள்வது நலம். ஆக்சன் மோடில் இருந்தால். வேகமான அசைவுகளை துல்லியமாக எடுத்து விடலாம் .\nமானுவல் கேமரா உபயோகிப்பவர்களுக்கு சொல்லி கொடுக்கவா வேண்டும் (இருந்தாலும் தெரியதவர்களுக்காக... ISO 400அல்லது 800 போடலாம் இதற்கே க்ரையின்ஸ் கொஞ்சம் ஆராம்பிக்கும். இதற்கு மேல் என்றால் கொஞ்சம் கூடத்தான் செய்யும். லைட் எப்படி உள்ளதோ அதை பொறுத்த விஷயம்.\nஎனது சில ஆக்சன் படங்களை ஓர்குட்டில் காணலாம் ...\nஒவ்வொரு புகைப்படங்களும் ஒவ்வொரு அனுபவம்.......\nஎனது அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறேன்.....\nஉங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்திட அன்புடன் கேட்டுகொள்கிறேன்.\nபறவையை கண்டான் விமானம் படைத்தான்...........\nபுகைப்பட பிரியன் - புகைப்படகலந்துரையாடல் மற்றும் பயிற்சி\nபறவையை கண்டான் விமானம் படைத்தான்...........\nஎந்த பள்ளிக்கூடம் செல்ல ......\nஅடடா மழைடா அட மழைடா......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://moonramkonam.com/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2-2/", "date_download": "2018-04-26T12:57:13Z", "digest": "sha1:DMNNH5QNBVEP3N73IPQW6Q56Q3PPBEW6", "length": 167288, "nlines": 218, "source_domain": "moonramkonam.com", "title": "ராகு -கேது பெயர்ச்சிப் பலன்கள் 2016 » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nஇஞ்சி சொரசம்- செய்வது எப்படி சம்சா குட்டீஸ்\nராகு -கேது பெயர்ச்சிப் பலன்கள் 2016\nராகு -கேது பெயர்ச்சிப் பலன்கள் 2016:\nஇந்த வருடம் ஜனவரி மாதம் 8-ம் தேதியன்று ராகுபகவான் கன்னி ராசியிலிருந்து சிம்ம ராசிக்கும் ,கேது பகவான் மீன ராசியிலிருந்து கும்ப ராசிக்கும் பெயர்ச்சியாகிறார்கள்.இந்த ராசிகளில் சுமார் ஒன்றரை வருடம் தங்கிப் பலன் புரிவார்கள்.சாதாரணமாக மற்ற கிரகங்கள் எல்லாம் மேஷம், ரிஷபம்,மிதுனம் என்ற வரிசையில் சுற்றும். ஆனால், ராகு-கேதுக்கள் மட்டும், மேஷம், மீனம், கும்பம் என்ற எதிர்த் திசையில் சுற்றிவரும். அதனால் இவைகளை வக்கிரகதியில் சுற்றி வரும் கிரகங்கள் எனலாம். இந்த ராகு -கேது பெயர்ச்சி, வாக்கிய பஞ்சாங்கப்படி 20.6.2014 என்று கணிக்கப்பட்டுள்ளது. கோவில்களில் ராகு பகவான்- கேது பகவான்களுக்கான வழிபாட்டு பூஜைகளும், பரிகார பூஜைகளும் இந்த தேதியில்தான் நடைபெறும் என்பதால், ராகு-கேது பெயர்ச்சியை நாம் ஜனவரி மாதம் 8 -ம் தேதி என்று எடுத்துக்கொண்டு பலன்களைப் பார்ப்போம்.\nராகு கேது என்னும் இந்த இரண்டு பாம்புக் கிரகங்களுக்கும் சொந்த வீடு, ஆட்சி வீடு, உச்ச வீடு என்று எதுவும் கிடையாது. ஜோதிட நூல்களில் ராகுவுக்கும் கேதுவுக்கும் ரிஷபத்தை உச்ச வீடாகவும், விருச்சிகத்தை நீச வீடாகவும் கூறுவதுண்டு. இவ்விரு கிரகங்களும் எந்த வீட்டில் இருக்கின்றனவோ அந்த ராசி அதிபதிகளின் குணத்தையும் எந்த கிரகங்களோடு சேர்ந்திருக்கின்றனவோ அந்த கிரகங்களின் குணத்தையுமே பிரதிபலிக்கும். உதாரணமாக மீன ராசியிலிருக்கும்போது குருபகவானின் குணாதிசயங்களையும், கும்ப ராசியிலிருந்தால், சனி பகவானின் குணத்தையும் ராகு -கேதுக்கள் பிரதிபலிக்கும். ராகு-கேது ஆகிய இரு கிரகங்களும் 3,7 ,11 ஆகிய இடங்களைப் பார்க்கும்.\nபரிகார ஸ்தலங்களான காளஹஸ்தி கோவிலுக்கும், திருநாகேஸ்வரம், கீழ்ப்பெரும்பள்ளம் எனும் ஊருக்கு அருகிலுள்ள மன்னார்சாலாவுக்கும் சென்று பரிகார பூஜைகள் செய்து வரலாம். மேலும், திருநீர்மலை, திருவண்ணாமலை, குமரன்குன்றம் மற்றும் பர்வதமலை ஆகிய ஸ்தலங்களில் ‘கிரிவலம்’ செய்வதும் சிறந்த பரிகாரமாகும். ராகு பகவானுக்கு சனிக்கிழமைகளிலும், கேது பகவானுக்கு செவ்வாய்க்கிழமைகளிலும் எலுமிச்சம்பழ விளக்கேற்றி, எலுமிச்சம்பழ சாதம் நைவேத்தியம் செய்து, ராகுகாலங்களில் ராகு ஸ்தோத்திரமும், எமகண்டங்களில் கேது ஸ்தோத்திரமும் பாராயணம் செய்து வந்தால், ராகு கேதுவால் வரும் தோஷங்கள் விலகும்.\nதம் ராகும் ப்ரணயாம் யகம்\nகோரம் தம் கேதும் ப்ரணமாம் யகம்\nஇனி ராகு -கேது கிரகங்களுக்குரிய பெயர்ச்சிப் பலன்களை ஒவ்வொரு ராசிக்கும் பார்க்கலாம்.\nவருகிற ஜனவரி மாதம் 8-ம் தேதியன்று ராகு பகவான் சிம்ம ராசிக்கும், கேது பகவான் கும்ப ராசிக்கும் பெயர்ச்சியாகிறார்கள். அதாவது, உங்கள் ராசிக்கு 11-ம் இடத்துக்கு கேதுவும், 5-ம் இடத்தில் ராகுவும் சஞ்சாரம் செய்கிறார்கள்.\nராகு பகவான் தனது 5-மிட சஞ்சாரத்தின் மூலம் பலவித கற்பனையான எண்ணங்களைத் தோற்றுவித்துக்கொண்டே இருப்பார். எதையாவது சாதிக்கவேண்டும் என்ற பரபரப்பு உங்களிடம் இருக்கும். செயல்பாட்டுக்கு வரமுடியாத எண்ண அலைகள் தொடர்ந்து உங்கள் மனதை ஆக்கிரமித்துக்கொண்டே இருக்கும். நினைத்தது அனைத்தையுமே அடைந்துவிடவேண்டுமென்ற ஆவல் உங்கள் மனதில் அதிகரிக்கும். அதனால் எப்போதும் புதிய சிந்தனைகளும் புதிய வழிமுறைகளும் தோன்றும் வாய்ப்புகள் உண்டு. சிலர் புதிய வாகனங்கள் புதிய இயந்திரங்கள் தொழிலுக்குத் தேவையான உபகரணங்கள் வாங்கும் யோகம் உண்டு. புதிய நூதனமான தொழில் வாய்ப்புகளும் உருவாகும்.\nஇந்தக் காலத்தில், உங்களைவிட வயதில் சிறியவர்களானாலும் சரி, வயதில் பெரியவர்களானாலும் சரி, அவர்களுடன் எச்சரிக்கையாகப் பழகவேண்டும். அவர்களால் தேவையில்லாத பிரச்சினைகள் உருவாகக்கூடும். சிலருக்கு எதிர்பாராதவிதமாக புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். புதிய நூதனமான தொழில் வாய்ப்புகள் ,வியாபாரம் அமையும்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்கள் இடமாற்றம் ஆகக்கூடும். பணிமாற்றம் ஏற்பட்டு புதிய பொறுப்புகளை ஏற்கும்படியும் இருக்கும். பிளைகளின் போக்கு கவலையளிக்கும் அவர்களின் முன்னேற்றத்தில் பாதிப்பு ஏற்படும். உங்களை எதிர்ப்பார்கள். உங்கள் புத்திமதி எதுவும் எடுபடாமல் போகும்.\nஉங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்தை ராகு பார்க்கிறார். இந்தப் பார்வை உங்களுக்கு மன தைரியத்தைக் கொடுக்கும். சகோதரர்களுடன் கருத்து வேறுபாடு தோன்றும். சகோதரர்களுக்கு பாதிப்பு உண்டாகும். ராகு பகவான் தனது 3-ம் பார்வையால், உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தைப் பார்ப்பதால், வாழ்க்கைத் துணையின் உடல்நலம் பாதிக்கப்படும். தொழில் கூட்டாளியுடன் கருத்து வேறுபாடு தோன்றி தொழில் பாதிப்புகளை ஏற்படுத்தும். நெருங்கிய நண்பர்கள் உங்களைவிட்டுப் பிரிவார்கள். உறவினர்களுடனும் கருத்து வேறுபாடு ஏற்படும். வீணான மனக்கசப்பும் அலைச்சலும் ஏற்படும்.\nதிடீர் வருமானம் கிடைத்து நல்ல பொருட்சேர்க்கை ஏற்படும். போட்டி பந்தயங்கள் வெற்றியளிக்கும். கோர்ட் கேஸ்களில் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும். கணவன் மனைவி உறவு அவ்வளவு சிறப்பாக இருக்காது. மனக்கவலையும் அலைச்சலும் தவிர்க்க முடியாது.\nகேது பகவான் உங்கள் ஜென்ம ராசியையும், உங்கள் ராசிக்கு 9-ம் இடத்தையும்,5-ம் இடத்தையும் பார்ப்பதால், உங்கள் செல்வாக்கு மதிப்பு மரியாதை கூடும். ஆன்மீகம் ஆலயத் திருப்பணி அறக்கட்டளை தர்மகர்த்தா போன்ற பொறுப்பான பதவிகளும் கிடைக்கும். உங்கள் கௌரவம், செல்வாக்கு, அந்தஸ்து உயரும். பெரியோர்கள், ஞானிகளின் சந்திப்பும் அவர்களது ஆசிகளும் கிடைக்கும். பொருளாதார அபிவிருத்தி ஏற்படும். மூத்த சகோதரர்களால் நன்மை கிடைக்கும்.\nஎதிர்பாராத தனலாபம் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் வளம் கூடும். சிலர் நூதனமான வியாபாரத்தில் ஈடுபடுவார்கள். கொடுக்கல்-வாங்கலில் சிறப்பான நிலை காணப்படும். நல்ல மனிதர்களின் நட்பு கிடைக்கும். காதில் விழும் விஷயங்கள் மகிழ்ச்சிகரமான விஷயமாக இருக்கும்.\nசிலருக்கு அரசு சம்பந்தமான வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். நற்பெயரும் ஏறப்டும். சிலருக்கு பதவி உயர்வு ,வேண்டிய இட பணிமாற்றம் கிடைக்கும். அரசியல்வாதிகள் அரசுத் துறையில் உள்ளவர்களின் உதவியும் கிடைக்கும். உங்கள் தாய்க்கு நேரம் சரியில்லை.அவருடைய உடல்நலம் பாதிக்கப்படும். கோர்ட் கேஸ்களில் சாதகமான தீர்ப்பு வரும். வம்பு வழக்குகள், கோர்ட் கேஸ்கள் ஒரு முடிவுக்கு வந்து ஒருவழியாக முடிந்து போகும். சிலருக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பு கிடைக்கும். சிலர் வெளிநாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொள்வார்கள். அந்நிய தேசத்திலிருந்து வருமானம் கிடைக்கும். இதுவரை குடத்துக்குள் விளக்காக இருந்துவந்த உங்கள் பெருமை இப்போது குன்றின் மேலிட்ட விளக்காகும்.சிலருக்கு வண்டி வாகனங்களால் ஆதாயம் கிடைக்கும். தந்தை மூலம் எதிர்பாராத அனுகூலம் கிடைக்கும்.\nகேதுவின் 11-ம் இடத்து சஞ்சாரம் பெயரையும் புகழையும் தேடிக் கொடுக்கும். தொழில் மேன்மையடையும். மருத்துவச் செலவு குறையும். நினைத்த காரியங்கள் நிறைவேறும். தொட்டதெல்லாம் பொன்னாகும். மேலதிகாரிகள், பெரியோர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். அரசு சம்பந்தமான நன்மைகள் கிடைக்கும். குடும்பத்துக்கு புதிய வரவாக ஒரு குழந்தை பிறக்கும். பயணங்கள் அதிகமாகும். பயணங்களால் நன்மை கிடைக்கும். சொத்து, நகை ஆபரணங்கள் வாங்குவீர்கள். கணவன்-மனைவி உறவு மகிழ்ச்சிநிறைந்ததாக இருக்கும். உற்றார் உறவினர் உதவி செய்வார்கள்.\nவருகிற ஜனவரி மாதம் 8 -ம் தேதியன்று ராகு பகவான் சிம்ம ராசிக்கும் கேது பகவான் கும்ப ராசிக்கும் பெயர்ச்சியாகிறார்கள். அதாவது, ராகு உங்கள் ராசிக்கு 4-ம் இடத்துக்கும், கேது உங்கள் ராசிக்கு 10-ம் இடத்துக்கும் பெயர்ச்சியாகிறார்கள். இதற்குண்டான பலன்களைக் காணலாம்.\nஇந்தப் பெயர்ச்சியின் மூலம் உங்களுக்கு சில சோதனையான பலன்களே நடக்கும். தாயாரின் உடல்நலம் பாதிப்படையும். வண்டி வாகனங்களாலும், கால்நடைகளாலும் நஷ்டம் உண்டாகலாம். உங்கள் ஆரோக்கியம் பாதிப்படையும். நீங்கள் கட்டும் கட்டடங்கள் பணப் பற்றாக்குறையாலோ அல்லது எதிரிகளின் தொல்லைகளாலோ பாதியில் நின்று போகும். சிலர் குடியிருக்கும் வீட்டைக் காலி செய்துவிட்டு வேறு வீடுகளில் குடியேறுவார்கள்.. சிலர் சொந்த வீட்டைவிட்டு வாடகை வீட்டுக்கு குடி போவார்கள். வியாபாரம் தொழில் காரணமாக அடிக்கடி வெளியூர்ப் பயணங்களை மேற்கொள்ளநேரும். பயணங்கள் வெறும் அலைச்சலிலும் சுகவீனத்திலும் முடியும். வேறு பயன் இருக்காது.\nசிலருக்கு ஓரிடத்தில் அமர்ந்து செய்த வேலையிலிருந்து ஊர் ஊராகச் சுற்றி அலையும் வேலைக்கு மாற்றம் வரும். குடும்பத்தாரின் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்படும். அதன் காரணமாக குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் ஏற்படும். ஒற்றுமை குறையும். உங்கள் மீது மற்றவர்களுக்கு வெறுப்பு ஏற்படும். விஷக்கடி ஏற்படக்கூடும்.\nமாணவர்களுக்கு கல்வியில் கவனம் குறையும். கடும் முயற்சி செய்தால் மட்டுமே, தேவையான மதிப்பெண் பெற்று, உயர் வகுப்பிலோ வேலைக்கோ செல்ல முடியும். சில மாணவர்கள் கல்வி மேம்பாட்டுக்காக வெளியூர் சென்று தங்கிப் படிக்க வேண்டி வரும். குடும்பத்திலுள்ள வயதானவர்களுக்கு உடல்நலம் பாதிப்படையும். மருத்துவச் செலவு அதிகரிக்கும். சிலருக்கு கேளிக்கை, விருந்துகளில் நாட்டம் அதிகரிக்கும். அதன் காரணமாக அந்த வகையில் பண விரயம் ஏற்பட்டு, அவசியத் தேவைகளுக்கு பணமில்லாமல் அல்லாட வேண்டிய சூழ்நிலை உருவாகிவிடும்.கடன் வாங்க வேண்டி வரும்.\nசொந்தத் தொழில் செய்பவர்கள் இப்போது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். தவறான முடிவுகள் எடுக்க நேர்ந்து நஷ்டத்தைச் சந்திக்க வேண்டி வரும். முடிவெடுப்பதற்கு முன்பு ஆழமாக சிந்திக்கவேண்டும். அலுவலக வேலையில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகமாகும். அலுவலகத்தில் நிம்மதியாக இருக்க முடியாது. மேலதிகாரிகளிடம் கெட்ட பெயர் ஏற்படும். சக தொழிலாளர்களிடம் மேலதிகாரிகளிடம் உங்கள் மீது குறை கூறுவார்கள். சிலருக்கு விருமில்லாத இடத்துக்கு பணிமாற்றம் வரும். சிலர் அவர்கள் தகுதிக்குக் குறைந்த வேலையில் அமர்த்தப்படுவார்கள். தசா புத்தி சரியில்லாத சிலருக்கு வீட்டில் திருட்டுப் போகும்.\nசிலருக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பு கிடைக்கும். சுற்றுலா செல்லவும் வாய்ப்புண்டு. சிலர் பொதுப் பணியாற்றி புகழ் பெறுவார்கள். ராகு பகவான் தனது 3-ம் பார்வையால், 6-ம் இடத்தைப் பார்ப்பதால், எதிரிகளின் தொல்லை குறைய வாய்ப்புண்டு. சிலருக்கு பழைய கடன்கள் அடைபடும். அதேசமயம் தேவைக்காக புதிய கடன்கள் ஏறப்டவும் வாய்ப்புண்டு. உடல்நலத்தில் கவனம் தேவை. உங்களுக்கிருக்கும் கடுமையான நோய் பாதிப்புகள் நீங்கும். ஆனால், அலர்ஜி, தோல்நோய்கள் போன்ற சிறிய நோயகளின் உபத்திரவம் இருக்கும். ராகுவின் 11- ம் பார்வை உங்கள் 2-ம் வீட்டைப் பார்ப்பதால், உங்கள் சொல்வாக்கு, செல்வாக்கு சரிந்து உங்கள் கௌரவம் பாதிக்கப்படும். முக்கியத் தேவைக்கு வருமானம் இருக்காது. விரயச் செலவுகள் அதிகமாகும். வார்த்தையில் சாதுர்யம் இல்லாமல் போய் காட்டம் அதிகமாகும். குடும்பத்தில் குழப்பங்கள் அதிகமாகும்.\nஎதிர்பாராத பணவரவு இருந்தாலும் கூட கையில் தங்காது.மனைவி மற்றும் சகோதரிகளால் தொல்லைகளும் செலவுகளும் ஏற்படக்கூடும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். சிலர் புனிதப் பயணம் மேற்கொள்ளவும் கூடும். பெரியோர்களின் ஆசியும் கிடைக்கும். கணவன்-மனைவி சுமுகமாக இருக்கும்.\nஇனி கேதுவின் சஞ்சாரத்தால் ஏற்படும் விளைவுகளைக் காணலாம். தொழிலில் பின்னடைவு ஏற்படும். வியாபாரம் மந்த கதியில் இயங்கும். அதனால் கையில் பணப்புழக்கம் குறையும். கடும் பணத்தட்டுப்பாட்டில் சிக்கி சிலர் தொழிலையே விட்டுவிடுவார்கள். அதுபோல் அலுவலக வேலையில் இருப்பவர்கள் வேலையை விட்டு விட்டு விருப்ப ஓய்வில் சென்று விடலாமா என்று யோசிக்கும் அளவுக்கு அலுவலகத்தில் குழப்பமான சூழ்நிலை நிலவும். பண விஷயத்தில் நாணயம் தவறி அவமானப்படக்கூடும். சிலர் தங்களுடைய அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதன் மூலம் சிரமத்துக்குள்ளாவார்கள். சிலர் வீண் ஜம்பத்தை விட முடியாமல் தேவையற்ற கஷ்டங்களைத் தானே தேடிக்கொள்வார்கள். ராகுவின் 11-ம் பார்வை உங்கள் 8-மிடத்தில் பதிவதால், கோர்ட் கேஸ்கள், வீண் வம்பு வழக்குகள் தேடி வரும். தொலலைகள் வந்து சேரும்.\nபொதுவாக கேதுவின் 10-ம் இடத்து சஞ்சாரம், எதிர்காலச் சிறப்புக்காக இப்போது அடித்தளம் அமைத்துக்கொடுக்கும். ஞானிகள் சாதுக்களின் தரிசனம் கிடைக்கும்.\nராகு- கேது பெயர்ச்சி வருகிற ஜனவரி மாதம் 8-ம் தேதியன்று நட்க்கவுள்ளது. அச்சமயம் ராகு சிம்ம ராசிக்கும், கேது கும்ப ராசிக்கும் பெயர்ச்சியாகிறார்கள். அதாவது ராகு உங்கள் ராசிக்கு 3-ம் இடத்துக்கும், கேது உங்கள் ராசிக்கு 9-ம் இடத்துக்கும் பெயர்ச்சியாகிறார்கள். இனி பலன்களைப் பார்க்கலாம்.\nராகு பகவான் 3-ம் இடத்தில் சஞ்சரிக்கும்போது பல நன்மையான பலன்களையே கொடுப்பார். 3-மிடம் ராகுவுக்கு லாப ஸ்தானமாகும். எந்தப் பிரச்சினையானாலும் துணிவோடு சந்திக்கும் மனோபலம் அதிகரிக்கும். மனதில் புதிய உற்சாகம் பிறக்கும். எப்போதும் சுறுசுறுப்புடன் இயங்கிக்கொண்டிருப்பீர்கள். பலவித காரியங்களை துணிச்சலுடன் செய்து முடிப்பீர்கள். நீங்கள் எடுக்கும் அத்தனை முயற்சியிலும் வெற்றியே கிடைக்கும். தொட்டதெல்லாம் பொன்னாகும். உங்கள் முகத்தில் பொலிவு ஜொலிக்கும். உங்களுக்கு வேண்டாதவர்கள்கூட நீங்கள் கேட்டதும் உங்கள் உதவிக்கு வரத் தயங்க மாட்டார்கள். அடிக்கடி வெளியூர்ப் பயணங்கள் மேற்கொள்ளவேண்டி வரும். அந்தப் பயணங்களால் அலைச்சல் ஏற்பட்டாலும் கூட , அந்தப் பயணங்களால் உங்களூக்கு பல நன்மைகளும் வாழ்க்கை முன்னேற்றத்துக்கு உதவும் வெற்றிகளும் உண்டாகும்.\nசெய்து வரும் சொந்தத் தொழில் பரிமளிக்கும். எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். கொடுக்கல்-வாங்கலில் இணக்கமான சூழ்நிலை நிலவும். சிலருக்கு எதிர்பாராத திடீர் வருமானம் கிடைக்கும். பொருளாதார வசதி அதிகரிக்கும் வாழ்க்கையில் மேன்மை ஏற்படும். செல்வாக்கு, சொல்வாக்கு, கௌரவம் அந்தஸ்து மேன்மையடையும். சிலருக்கு புதிய பதவிகள், கௌரவப் பட்டங்கள் கிடைக்கும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். அவர்களால் உங்களுக்கு நன்மைகள் கிடைக்கும். அதுபோல புதிய அரசியல்வாதிகள், ,பிரமுகர்கள், அரசு அதிகாரிகளின் அறிமுகம் கிடைக்கும். அது உங்கள் வாழ்ககை முன்னேற்றத்துக்கு பல வழியில் உதவும். இந்த சமயத்தில் நீங்கள் போட்டி பந்தயங்களில் வெற்றியடைவீர்கள். வெளிநாட்டு வேலைக்கு முயற்சிசெய்துகொண்டிருந்தவர்கள் வெளிநாட்டு வேலை கிடைக்கப் பெறுவார்கள். மேலும் சிலர் தங்கள் தொழிலை வெளிநாட்டிலும் விரிவுபடுத்துவார்கள். வெளிநாட்டவராலும் வெளிநாட்டுத் தொடர்புகளாலும் நன்மையடைவீர்கள். வெளிநாட்டு வேலை, வெளிநாட்டு வியாபாரம் முதலியவை பெருத்த லாபத்தை ஈட்டித் தரும். வாழ்க்கையில் நல்ல மதிப்பும் உயர்வும் கிடைக்கும். அலுவலகப் பணியாளர்களுக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். மேலதிகாரிகளும், சக ஊழியர்களும் உங்களுக்கு சாதகமாக இருப்பார்கள்.சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும். புதிய அதிகாரமும் பொறுப்புகளும் கிடைக்கும்.\nமாணவர்கள் படிப்பில் ஆர்வமுடன் ஈடுபட்டு, நிறைய மதிப்பெண்களைப் பெறுவார்கள். சிலர் விருந்து கேளிக்கைகளிலும் ஈடுபட்டு மகிழ்வுறுவர். சிலருக்கு கலை, இலக்கியம் ஆகியவற்றில் ஈடுபாடு உண்டாகி அதன்மூலம் புகழடைவர். கலையுலகில் இவர்களுக்கான ஒரு இடம் கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டாகும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். இவர்களுடைய திறமை வெளி உலகுக்கு தெரியும் காலம் இது. இவர்கள் திறமைக்குத் தகுந்த வெகுமதிகளும் பாராட்டும் கிடைக்கும்.\nசகோதர சகோதரிகள் மேன்மையடைவார்கள். கடந்த காலத்தில் உங்களைவிட்டுப் பிரிந்துபோன உங்கள் உடன்பிறந்தவர்கள் தற்போது உங்களைத் தேடி வருவார்கள். வீட்டில் நடக்கப் போகும் சுப காரியங்களுக்கு அவர்கள் உதவியாக இருப்பார்கள். அவர்களால் உங்களுக்கு தகுந்த உதவிகள் கிடைக்கும். சிலருக்கு புதிய வண்டி வாகனம் வாங்கும் யோகம் உண்டு. சொத்து சேர்க்கைகளும் ஏற்படும். சிலருக்கு எப்போதோ வாங்கிப்போட்ட சொத்து மதிப்பு பன்மடங்காக உயரும். பூர்வீகச் சொத்தில் இருந்த வில்லங்கங்கள் தீர்ந்து உங்கள் கைக்கு வந்து சேரும். இதுவரை தாமதப்பட்டு வந்த நல்ல காரியங்கள் இப்போது தடையின்றி நடக்கும்.\nராகு பகவான் தனது 3-ம் பார்வையாக உங்கள் 11-ம் இடத்தைப் பார்க்கிறார். இதன் பயனாக புத்திர புத்திரிகள் மேன்மையடைவார்கள். அவர்கள் கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் திருமணத்திலும் நல்ல நிலையை அடைவார்கள். குலதெய்வ வழிபாடினைத் தொடர்வீர்கள். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும். மேலும் ராகு பகவான் தனது 11-ம் பார்வையினால், உங்கள் ராசியைப் பார்க்கிறார். இதன் பயனாக உங்கள் முகத்தில் பொலிவு கூடும். மனதில் உற்சாகமும் சுறுசுறுப்பும் உண்டாகும். மனக்கவலை நீங்கும். இழந்த பொருட்கள் மீண்டும் கிடைக்கும். மக்கள் மத்தியில் உங்களுக்கு தனி மரியாதை கிடைக்கும்.\nஇனி கேது பகவானின் சஞ்சார பலன்களைப் பார்க்கலாம். கேதுவின் 9-மிடத்து சஞ்சாரம் இலக்கு எதுவுமின்றி சென்றுகொண்டிருந்த உங்கள் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கும். வாழ்க்கை செம்மைப்படும். முன்னேற்றப்பாதையை நோக்கி வாழ்ககை செல்லஆரம்பிக்கும். கடவுளின் மேல் பக்தியும் நம்பிக்கையும் அதிகமாகும். வேதாந்த எண்ணங்களும் உயரிய சிந்தனைகளும் உருவாகும். தந்தையின் உடல்நலமும் நீங்கள் அக்கறை காட்டும் பெரியவர்களின் உடல்நலமும் பாதிப்படையலாம். சிலருக்கு தடைபட்டுப்போன குலதெய்வ வழிபாடு நல்லபடியாக நடைபெறும். மனம் ஞான விஷயங்களில் நாட்டம் கொள்ளும். கோவில்களிலும், மடங்களிலும் உயர் பதவிகள் கிடைக்கும். தர்மம், நீதி நிலைக்கவேண்டும் என்று நினைப்பீர்கள். ஞானிகள் ,பெரியோர்களின் ஆசிகளும் கிடைக்கும். இதுவரை வெளி உலகுக்குத் தெரியாமல் இருந்துவந்த உங்கள் திறமையை இப்போது பலரும் தெரிந்துகொண்டு பாராட்டுவர். வாழ்க்கைக்கு மிகவும் அவசியமான செல்வத்தைத் தேடவேண்டும் என்ற எண்ணத்தைவிட நல்ல பெயரும் புகழும் சம்பாதிக்கவேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி இருக்கும். மக்கள் மத்தியில் செல்வாக்கு பெறுவதைப் பெரிதாக நினைப்பீர்கள். வாழ்க்கையில் பலவித வசதிகள் கிடைத்தாலும்கூட அவற்றை ஒரு நியதிக்கு உட்பட்டே அனுபவிப்பீர்கள். தொழில் வியாபாரம் காரணமாகவோ, அல்லது வெளிநாட்டு வேலை காரணமாகவோ குடும்பத்தை விட்டுப் பிரிந்து செல்ல நேரும்.\nகேது பகவான் 3-ம் பார்வையாக உங்கள் ராசிக்கு 11-ம் இடத்தைப் பார்க்கிறார். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். எதிர்பாராத வருமானம் கிடைக்கும். சகோதரர்களுக்கு இது சோதனையான காலம். மருத்துவச் செலவு கூடும். கேது பகவானின் 11-ம் பார்வை உங்கள் 7-ம் இடத்தைப் பார்ப்பதால், வாழ்க்கைத்துணையின் உடல்நலம் பாதிப்படையலாம். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைத்து அவர்களால் சில நன்மைகளும் கிடைக்கும். புதிய கூட்டுத் தொழில் அமையும்.\nசிலருக்கு சற்றும் எதிர்பாராத வகையில் உறவினர்களின் சொத்து வந்து சேரும். பயணங்களால் லாபகரமான பலன்களே கிடைக்கும். தாய் தந்தையின் உடல்நலம் பாதிப்படையலாம். மருத்துவச் செலவு கூடும்.அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஆதரவும், மேலதிகாரிகளின் அரவணைப்பும் கிடைக்கும். சிலருக்கு ஊதிய உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும். கணவன்-மனைவி உறவு மகிழ்ச்சியோடிருக்கும்.\nவருகிற ஜனவரி மாதம் 8-ம் தேதியன்று நிகழப்போகும் ராகு-கேது பெயர்ச்சியின்போது, ராகு உங்கள் ராசிக்கு 2-ம் இடமான சிம்ம ராசியிலும், கேது உங்கள் ராசிக்கு 8-ம் இடமான கும்பத்திலும் சஞ்சரிக்கவுள்ளார்கள். ஜோதிட விதிப்படி, 2,8-ம் இடத்து சஞ்சாரம் உகந்ததல்ல என்றாலும், சனி பகவான் உங்கள் ராசிக்கு 3-மிடத்தில் உச்ச சனியாக யோக சஞ்சாரம் செய்வது பெருமளவில் கை கொடுக்கும். எனவே இங்கு கூறப்போகும் ராகு கேதுவின் சஞ்சார பலன்களைப் படித்து நீங்கள் பீதியுறவேண்டாம். அந்தந்த கிரகங்களுக்குரிய பலன்கள்தான் இங்கே கொடுக்கப்படுகின்றன. உங்கள் ராசிக்குரிய ராகு-கேதுக்களின் கடுமையான பலன்கள் மிகவும் குறைய வாய்ப்புள்ளது என்பதை மறக்கவேண்டாம். நன்மையைத் தரும் விதமாகவே குருவும் சனியும் அமைந்துள்ளதால், கெடுபலன்கள் மாறி நன்மைகள் நிகழ வாய்ப்புள்ளது. இனி பலன்களைப் பார்க்கலாம்.\nதற்போது கன்னி ராசியான 2-ம் இடத்தில் சஞ்சரிக்கும் ராகு பகவானின் சஞ்சாரம் உங்களை குடும்பத்துக்காக அதிகம் உழைக்கச் செய்யும். குடும்பப் பொறுப்புகள் அதிகமாகும். சிலருக்கு குடும்பம் ஒரு சுமையாகத் தெரியும். குடும்பம் நடத்துவதே சிரமமாக இருக்கும். உங்களுக்கு ஏற்படும் டென்ஷன் அனைத்தும் உங்கள் வார்த்தைகளில் வெளிப்பட்டு, குடும்பத்தில் வீண் வாக்குவாதங்களும் சண்டை சச்சரவுகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்கவேண்டியது மிகவும் அவசியம். வருமானக் குறைவு ஏற்படும். வருமானம் வரப்போகிறதே என்றெண்ணி எந்த செலவையும் திட்டமிட முடியாது. எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேராது. எந்த வழியிலாவது உங்களுக்குப் பணம் வருமா என்றும் தெரியாது. பணப்பற்றாக்குறை காரணமாக குடும்பத்தில் உள்ளவர்களின் நியாயமான தேவைகளைக்கூட நிறைவேற்ற முடியாமல் போகும். எனவே குடும்பத்தாரின் கோபத்துக்கு ஆளாக நேரும். திடீர் வருமானங்கள் வரும் என்றாலும், அந்த வருமானத்திற்கு தயாராக செலவுகள் காத்திருக்கும். எனவே உங்களுக்கு சேமிப்பு என்பதே இருக்காது.இந்தக் காலத்தில் சிலர் நேர்மையான வழியில் நடக்க முடியாமல் போகும். சில நேரங்களில் பொய் புரட்டுகளும் பித்தலாட்டங்களும் சிலருக்கு தவிர்க்க முடியாததாகிவிடும். பணத்தேவை தவிர்க்க முடியாததாகிவிடுவதால், , பணம் கிடைக்காத சூழ்நிலையில் சிலர் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கும் முயற்சியில் ஈடுபடுவார்கள். செல்வாக்கும் அந்தஸ்தும் பாதிக்கப்படும். யாரிடமும் நாணயத்துடன் நடந்துகொள்ள முடியாது. அதன் காரணமாக கொடுக்கல்-வாங்கலில் சிக்கலான சூழ்நிலை ஏற்படும்.\nஆரோக்கியம் பாதிக்கப்படலாம். முக்கியமாக கண்களில் கோளாறு ஏற்பட வாய்ப்புண்டு. புதல்வர்களுக்கு சில தொல்லைகள் ஏற்படலாம். அவர்கள் தங்கள் கல்விக்காகவும், வேலை வாய்ப்புக்காகவும் கடுமையாக போராட வேண்டியிருக்கும். கஷ்டங்கள் பல வந்தபோது, அவர்கள் கடுமையாகப் போராடி கல்வியில் சிறந்து விளங்குவார்கள். அவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளும் கிடைக்கும். சிலர் அடிக்கடி பயணம் மேற்கொள்வார்கள். அந்தப் பயணங்களால் எதிர்பார்த்த வருமானம் கிடைக்காது. கணவன்-மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் மிகுந்த மனவேறுபாடு தோன்றும். எனவே உங்கள் வாழ்க்கைத் துணையுடன் பேசும்போது எச்சரிக்கையுடன் பேசவேண்டியதும் விட்டுக்கொடுக்கவேண்டியதும் அவசியமாகிறது. இல்லையென்றால் பிரச்சினைகள் விஸ்வரூபம் எடுத்து , சிலர் குடும்பத்தைவிட்டு தற்காலிகமாகப் பிரிய வேண்டி வரும்.\nஅரசுத் துறையிலோ அல்லது அதிகாரிகளாகவோ இருப்பவர்களில் சிலர் லஞ்சம் வாங்கியதற்காக கைது செய்யப்படுவதற்கோ அல்லது தண்டனை அனுபவிப்பதற்கோ வாய்ப்புண்டு. திருமண ஏற்பாடுகள் தடைப்பட நேரலாம். ஆனால் குருவின் சஞ்சாரம் குருபலம் கொடுத்து, நிலைமையை மாற்றக்கூடும்.எடுக்கும் அனைத்து முயற்சிகளும் தடைப்படநேரும்போது, டென்ஷன் ஏற்படுவதால்,யாரிடமும் சுமுக சூழ்நிலை இருக்காது. யாரிடமும் வாக்குக் கொடுத்து சிக்கலில் மாட்டிக்கொள்ளாதீர்கள். பண விஷயத்தில் யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம் மற்றவர் பிரச்சினைகளில் குளறுபடிகளும் குதர்க்க வாதங்களும் அதிகமாகும். இத்தனை பிரச்சினைகள் மலிந்திருந்தாலும் மற்றவர்கள் நலமாக இருக்கவேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு மேலோங்கி இருக்கும். எதிர்பாராதவிதமாக ,சிலருக்கு நிலம் வாங்கும் யோகம் கிடைக்கும். புதிய தொழில் மற்றும் அதற்கான ஒப்பந்தங்கள் ஏற்படலாம். கடும் முயற்சியினால், குடும்பத்தில் ஒரு சுப நிகழ்ச்சியை செய்து முடிப்பீர்கள்.\nராகு பகவான் தனது 3-ம் பார்வையால், உங்கள் ராசிக்கு 4-ம் இடத்தைப் பார்ப்பதால், உங்கள் தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. தாய் மற்றும் தாய் வழி உறவினர்களுடன் வம்பு வழக்குகள் ஏற்படும். வீடு கட்டிக் கொண்டிருந்தீர்கள் என்றால் அந்த கட்டடப் பணிகள் தடைப்படும்.வண்டி வாகனங்கள் ரிப்பேர் செலவு வைக்கும். சுகக் குறைவு ஏற்பட்டு மருத்துவச் செலவை ஏற்படுத்தும். மேலும் ராகு பகவான் தனது 11-ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தைப் பாப்பதால், விரயச் செலவும் அலைச்சல்களும் ஏற்படும். அதன்காரணமாக உறக்கம் கெட வாய்ப்புண்டு. தேவையற்ற செலவுகள் ஏற்படும். வருமானம் வரும் வழி தெரியாவிட்டாலும், செலவினங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. தான தருமங்களில் நாட்டம் ஏற்படும். திடீர் பண வரவு கிடைத்தாலும் அது கையில் தங்காது. மனதை ஆன்மீக வழியில் செலுத்தினால் மட்டுமே நல்ல பலன்களை அடைய முடியும்.\nஇனி கேது பகவானின் சஞ்சார பலன்களைக் காணலாம். பயணங்களின்போது எச்சரிக்கையுடன் இல்லாவிட்டால் பல தொல்லைகள் உருவாகிவிடும். சிலர் அடுத்தவ்ர் பிரச்சினையில் தலையிட்டு அவர்கள் பிரச்சினை இவர்களையும் தொற்றிக்கொள்வதால், அதிலிருந்து மீளமுடியாமல் தவிப்பார்கள். அடிக்கடி ஏதாவதொரு துக்க செய்தி வந்தவண்ணம் இருக்கும். அதன் காரணமாக மனதில் கலக்கங்களும் வேதனைகளும் நிறைந்திருக்கும். சொந்த பந்தங்களால், பொருள் இழப்பும், பகைகளும் தேவையற்ற வம்புகளும் வந்து சேரும். சிலருக்கு உயிர்பயமும் ஏற்படும். .இதையெல்லாம் படித்து யாரும் பயப்படத் தேவையில்லை.சரியான பரிகாரங்களையும் தெய்வ வழிபாட்டையும் மேற்கொண்டால்,கஷ்டங்களிலிருந்து விடுபடலாம். இந்த நேரத்தில் உங்களுக்கு நடக்கும் தசா புத்தியையும் கருத்தில் கொள்ளவேண்டும். மேலும் சனியின் சஞ்சாரம் நன்மை செய்யும் என்பதையும் மறந்துவிடக்கூடாது.\nஇந்தச் சமயத்தில் பொருளாதாரத் தட்டுப்பாடு அதிகம் ஆகும். சிலர் தங்கள் பூர்வீகச் சொத்தை விற்றோ அல்லது எதிர்பாதவிதமாகவோ பண வரவினைப் பெறக்கூடும். இந்த சமயத்தில் கூட்டுத் தொழில் முயற்சிகள் பலனளிக்காமல், கைப்பொருளையும் இழக்க நேரும். அதே சமயம் உங்கள் பணத்தை யாரிடமாவது கொடுத்து வைத்தால், அது திரும்ப கைக்கு வராது.\nகேது பகவான், தனது 3-ம் பார்வையால், உங்கள் ராசிக்கு 10 இடத்தைப் பார்க்கிறார். இதன் மூலம் தொழில் வியாபாரம் பாதிக்கப்படும். முதியவர்களுக்கு தொல்லைகள் ஏற்படும். அலுவலர்களுக்கு அலுவலகத்தில் பணிச்சுமை ஏற்படும். மேலதிகாரிகள், சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்காது குடும்பம் மற்றும் அலுவலகச் சூழ்நிலை உங்களுக்கு மனக் கசப்பை ஏற்படுத்தும். மேலும் கேது பகவான் தனது 11-ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தைப் பார்க்கிறார். இதன்மூலம் சிலருக்கு பழைய கடன்கள் அடைபடும். உங்கள் எதிரிகள் இயற்கையாகவே பாதிப்புக்குள்ளாவார்கள். உங்களுக்கு அலர்ஜி மற்றும் தோல் சம்பந்தமான வியாதிகள் உண்டாகும். விஷக்கடி ஏற்படலாம். பெண்களால் தொல்லைகளும் பொருள் நஷ்டமும் ஏற்படும். மனைவி மற்றும் மனைவிவழி உறவினர்களுடன் சண்டை சச்சரவுகள் உண்டாகும். தொழிலில் மன அமைதி கெடும். எதிர்பார்த்த லாபம் கிடைக்காது. அடிக்கடி வெளியூர்ப் பயணங்கள் ஏற்படும். அவற்றால் எந்த லாபமும் இருக்காது. தெய்வ வழிபாட்டை மேற்கொண்டால், குடும்பத்தில் மன அமைதி ஏற்படுவதுடன் மனைவி மக்களின் உதவியும் ஆதரவும் கிடைக்கும்.\nவருகிற ஜனவரி மாதம் 8 -ம் தேதி ராகு கேது பெயர்ச்சி நடைபெறவுள்ளது. அப்போது ராகு உங்கள் ராசியிலும், கேது கும்ப ராசியிலும் சஞ்சரிக்கவுள்ளார்கள். இப்படியாக ஜென்ம ராசியில் அமர்ந்துவிட்ட ராகு, தனது 3-ம் பார்வையால், உங்கள் ராசிக்கு 3-மிடமான விருச்சிகத்தையும், தனது 11ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 11ம் இடமான கடத்தையும் பார்வையிடுகிறார். அதுபோல உங்கள் ராசிக்கு 7 ம் இடத்தில் அமர்ந்துள்ள கேதுபகவான், தனது 3 ம் பார்வையால், உங்கள் ராசிக்கு 10ம் இடமான மிதுனத்தையும் பார்வையிடுகிறார்.\nஇது உங்களுக்கு சிறப்பான காலக் கட்டம் அல்ல. காரணமேயில்லாமல் அலைச்சல் இருக்கும். உடல்நலம் பாதிப்படையும். என்னவிதமான உடல்பாதிப்பு என்றும், என்ன வியாதியால் இவர் பாதிக்கப்பட்டுள்ளார் என்று கண்டுபிடிக்க முடியாமல் அரிய நோயாக படுத்தும். சிலருக்கு நுண்கிருமிகள் மூலம் விஷக் காய்ச்சல், வயிறு சம்பந்தமான பாதிப்புகள் அஜீரணக் கோளாறுகள், வயிற்றுப்போக்கு ஆகிய பாதிப்புகளும் ஏற்படும். கர்ப்பிணிப் பெண்களுக்கு கருச்சிதைவுகூட ஏற்படலாம்.\nஅடிக்கடி பயணம் செய்யவேண்டி இருக்கும். ஆனால் அந்தப் பயணங்களால் எந்தப் பயனுமின்றி தேவையற்ற பயணங்களாக இருக்கும்.நீங்கள் மிகப் பெரிய அறிவாளியாக இருந்தாலும், எவ்வளவு படித்தவராக இருந்தாலும் இப்போது உங்கள் அறிவோ புத்திசாலித்தனமோ உங்களுக்கு கைகொடுக்காது. என்ன செய்யப்போகிறோம் என்ற மனக்குழப்பம் தீராமல் தவிப்பீர்கள். நடக்கும் அத்தனை நிகழ்ச்சிகளும் உங்களுக்கு டென்ஷன் ஏற்படுத்துவதாகவே இருக்கும். எந்தப் பிரச்சினை ஏற்பட்டாலும் உங்களால் தீர்க்க முடியாமல் போகும். தீர்வும் முடிவும் சரியாக எடுக்க முடியாமல் போகும். வருமானம் குறையும். தொழிலில் மந்தமான சூழ்நிலை காணப்படும். கொடுக்கல்-வாங்கல்கள் சிக்கலாகும். விரயச் செலவுகளும் மருத்துவச் செலவுகளும் அதிகமாகும். கட்டுப்படுத்த முடியாது. இந்தக்காலக்கட்டத்தில் வேற்று மதத்தினரை நம்பி எந்தக் காரியத்திலும் இறங்கவேண்டாம். அவர்களால் ஆபத்து நேரும். சிலருக்கு வேற்று மதத்தினருடன் கூட்டுவியாபாரம் செய்யும் வாய்ப்பு தானாகவே அமையும். புத்திசாலித்தனமாக அதைத் தவிர்த்துவிடுங்கள். இல்லையென்றால், பணத்தையும் வாழ்க்கையையும் இழந்து கஷ்டப்படுவீர்கள்.\nஇந்தக் காலக் கட்டத்தில் தற்போது உள்ள நிலையிலேயே இருக்கலாமே தவிர புது முயற்சிகளைத் தவிர்க்கவேண்டும். புதிய தொழில் தொடங்கினால் பெருத்த நஷ்டத்தைச் சந்திக்க நேரும். சிலர் புதிய தொழிலில் முதலீடு செய்துவிட்டு, அந்தத் தொழிலைத் தொடரவும் முடியாமல், விட்டுவிடவும் முடியாமல் பெரிய சிக்கல்களில் சிக்கிக்கொண்டு அல்லாட வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாவீர்கள். சிலர் இருக்கும் வீட்டைவிட்டு வேறு வீட்டிற்கு மாறவேண்டிய சுழ்நிலை ஏற்படும். தங்களுடைய தொழில் ஸ்தாபனங்களை வேறு இடத்துக்கு மாற்றவேண்டிய கட்டாயம் உருவாகும். சிலருக்கு தங்கள் தொழிலையே இழக்கவேண்டிய சூழ்நிலை உருவாகும்.\nஅலுவலகங்களில் பணிபுரிபவர்களுக்கு தற்போது கஷ்டமான சூழ்நிலை உருவாகும். வேலைப்பளு அதிகமாகும். மனதிலும் அமைதி இருக்காது. சக ஊழியர்கள் உங்களுடன் ஒத்துப்போக மாட்டார்கள். மேலதிகாரிகள் உங்கள் வேலையில் தொடர்ந்து,குறைகாண்பார்கள். உங்களுக்கு வேலைப்பளுவையும் அதிகப்படுத்தி தொந்தரவுகளை ஏறப்டுத்துவார்கள். மனக் கவலையில் ஏதாவது பேசிவிட்டீர்களானால், மிகவும் கஷ்டமான பணிக்கு மாற்றப்படுவீர்கள். அல்லது விருப்பமில்லாத இடத்துக்கு பணி மாற்றம் செய்யப்படுவீர்கள். அந்த இடமாற்றமும்கூட திடீரென அறிவிக்கப்பட்டு உங்களைத் திண்டாட வைக்கும். நேரான வழியில் நடந்து கஷ்டப்படுவதால், குறுக்கு வழியைத் தேடுவீர்கள். ஆனால், அந்தக் குறுக்கு வழியே உங்களுக்குப் பல பிரச்சினைகளைக் கொடுத்துவிடும். அதிலிருந்து தப்பிக்கவும் தொடர்ந்து தவறான வழியையே தேர்ந்தெடுப்பீர்கள். கடைசியில் எதுவும் முடியாமல், போட்டியாளர்களிடமே அவமானப்படநேரும்.\nராகு பகவான், உங்கள் ராசிக்கு 3ம் இடத்தைப் பார்ப்பதால்,உங்கள் சகோதரர்களுக்கு பாதிப்புகள் ஏற்படும். சகோதரர்களுடன் கருத்துவேறுபாடுகள் விரோதங்கள் ஏற்படும். புதிதாகத் திருமணமானவர்களுக்கு பிரச்சினைகள் ஏறப்டும். கணவன்-மனைவிக்குள் கருத்துவேறுபாடு ஏற்படும். உங்கள் எதிரிகள் நீங்கள் எதிர்பாராத நேரத்தில் உங்களைக் கவிழ்த்துவிடுவார்கள். யாருடனும் பழகுவதற்கு முன்னால் அவர் நல்லவரா கெட்டவரா என்று தெரிந்தகொண்டு பழகாமல் பழகியபின் அவர்களால் ஏற்படும் பிரச்சினைகளில் சிக்கி கஷ்டப்படுவீர்கள். சாதாரண செயலில்கூட தடைகள், இடைஞ்சல்கள் ஏற்படும். வீண் அலைச்சல்கள் பயனற்ற பயணங்கள் ஏற்படும்.குடும்பத்தில் ஒருவருடைய நிலை மிகவும் கலைக்கிடமாகும். குடும்பத்தாரின் உடல்நிலை மருத்துவச் செலவைக் கொடுக்கும். சில குடும்பங்களில் துக்க நிகழ்ச்சிகள் ஏற்படலாம். வறுமை, உணவுக்கே வழி இல்லாத நிலைகூட சிலருக்கு உருவாகலாம்.\nகேதுபகவான் தற்போது உங்கள் ராசிக்கு ஏழாம் இடத்தில் சஞ்சரிப்பது வாழ்க்கைத் துணையின் உடல்நிலையைப் பாதிக்கும். நண்பர்களிடமும் எச்சரிக்கையாகப் பழகாவிட்டால் நட்பு பகையாக மாறும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் கூட்டாளியுடன் ரொம்பவும் அனுசரித்துப் போகாவிட்டால், கூட்டுத் தொழில் நசித்துப்போகும். வாழ்க்கைத் துணையின் உடல்நலம் பாதிக்கப்படுவதால் உங்களுக்கு வாழ்க்கையே வெறுத்துப்போகும் நிலைக்கு ஆளாவீர்கள்.மனதில் பலவிதமான குழப்பங்கள் ஏற்படும். எந்த விஷயத்தையும் சிந்தித்து ஒரு முடிவெடுக்க முடியாமல் போகும். சிலர் சட்ட விரோதமான நூதனமான தொழிலை மேற்கொண்டு அதன் காரணமாக மோசம் போவார்கள். அல்லது அரசாங்கத்தால் தண்டிக்கப்படுவார்கள். தாயாரின் உடல்நலம் பாதிக்கப்படும்.\nஇந்தக் காலத்தில் கேதுபகவான உங்கள் ராசிக்கு 5ம் இடமான கும்பத்தையும் 9ம் இடமாகிய மிதுனத்தையும் பார்வையிடுகிறார். இதனால் தந்தையின் உடல்நலத்தில் கவனம் தேவை. குழந்தைகள் விஷயத்தில் மனக்கவலை ஏற்படும். பூர்வீகச் சொத்தில் விவகாரங்கள் ஏற்படும். எதிலும் லாபத்தை எதிர்பார்க்க முடியாது. வருமானம் குறையும். விஷ ஜந்துக்களால் தீமை ஏற்படும். உறவுகள் பகையாகும். உறவினர்களிடம் விரோதம் ஏற்படும். இந்த சமயத்தில் மிகவும் நெருங்கிய நண்பர்களின் உதவி கிடைக்கும். யாருடனும் புதிதாகப் பழகவேண்டாம். புதிய நண்பர்களால் தொல்லைகள் ஏற்படும்.\nவருகிற ஜனவரி மாதம் 8-ம் தேதி ஏற்படப்போகும் ராகு கேது பெயர்ச்சியின்போது ராகு பகவான் உங்கள் ராசிக்கு 12ம் இடத்திலும் கேது பகவான் உங்கள் ராசிக்கு 6ம் இடத்துக்கும் பெயர்ச்சியாகிறார்கள்.\nராகுவின் 12ம் இடத்து சஞ்சாரம் உங்களுக்கு அதிக அலைச்சலையும் பயணங்களையும் கொடுக்கும். வேலைப்பளு கூடும். உறக்கம் குறையும். சிலர் குடும்பத்தை விட்டு வெளியூரில் தங்க நேரும். உங்ககளுடைய பயணங்கள் அனைத்தும் பெரும்பாலும் வியாபார சம்பந்தமாகவோ அல்லது உத்தியோக சம்பந்தமாகவோதான் இருக்கும். பூர்வீகச் சொத்து பிரச்சினைக்குள்ளாகி ,பிறகு நீங்கும். குழந்தைகள் வழியில் செலவுகள் ஏறப்டும். சிலருக்கு அரசாங்கத்தாலும் அரசு அதிகாரிகளாலும் விரயச் செலவு ஏற்பட்டு மனக்கஷ்டங்கள் தோன்றும். மறைமுக எதிரிகளால் எப்போதும் தொல்லைகள் இருந்துகொண்டே இருக்கும். ஆனாலும் அவர்கள் எதிர்ப்பு உங்களை ஒன்றும் செய்ய முடியாது. பெண்கள் அளவுக்கு மீறிய செலவைக் கட்டுப்படுத்தாவிட்டால், பற்றாக்குறை ஏற்படும்.வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக காத்திருப்போருக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பு கிடைக்கும். உறக்கம் என்பது ஆழ்ந்த தூக்கமாக இருக்காது. இந்தக் காலக் கட்டத்தில், உங்கள் ராசிக்கு குருபார்வை கிடைத்துள்ளதால், விரயத்தில் உள்ள ராகுபகவான், ஏதாவது ஒரு நல்ல காரியத்தை நடத்தி வைத்து, அதன்மூலம் சுப விரயச் செலவுகளை ஏற்படுத்துவார்.\nராகு பகவான் தனது 11ம் பார்வையால், உங்கள் ராசிக்கு 10ம் இடத்தைப் பார்ப்பதால், தொழில் ரீதியாக சில பின்னடைவுகள் ஏற்படும். உற்பத்திப்பொருட்கள் விற்பனையின்றி தேங்கிக் கிடக்கும். உங்களிடம் கடன் பெற்ற வியாபாரிகளிடமிருந்து பணம் திரும்பக் கைக்கு வராது. ராகுபகவான் தனது 3-ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 2ம் இடத்தைப் பார்ப்பதால், உங்களால் நாணயத்துடன் நடந்துகொள்ளமுடியாமல் போகும். அது மட்டுமின்றி உங்கள் செல்வாக்கும் அந்தஸ்தும் பாதிப்படையும். குடும்பத்தில் அவ்வப்போது சண்டை சச்சரவு ஏற்பட்டு மறையும். குடும்பச் செலவுகளுக்குத் தேவையான பணம் இல்லாமல் போகும். வார்த்தைகளில் சிடுசிடுப்பு இருக்கும். கண்கள் சம்பந்தமான நோய் ஏற்படும். தேவையில்லாத அபவாதம் ஏற்படும். மேலதிகாரிகளின் கோபத்துக்கு ஆளாகலாம். கணவன்-மணைவி உறவு அவ்வளவு சிறப்பாக இருக்காது. புத்திர-புத்திரிகளின் போக்கு மனதுக்கு கவலையளிக்கும்.\nகேது பகவானின் 6ம் இடத்து சஞ்சாரத்தின்மூலம் நற்பலன்களாக நிகழும். உங்கள் ராசிக்கு குரு பகவானின் நற்பலன்களும் கூடுவதால், ராகுவின் தீய பலன்கள் பெருமளவுக்கு குறைய வாய்ப்புள்ளது. கேதுவின் சஞ்சாரம் தக்க முறையில் தொழில் முன்னேற்றத்தைக் கொடுக்கும். இதுவரை உங்களுக்கு தொல்லை கொடுத்துவந்த போட்டியாளர்களையும் எதிரிகளையும் அழிக்கும். பழைய கடன்கள் அடையும். அதே சமயம் தொழிலைப் பெருக்க எதிர்பார்த்த புதிய கடனுதவி கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். எதிர்பாராத திடீர் பண வரவு கிடைக்கும். சிலர் நூதனமான பொருள் விற்பனை மூலம் நல்ல லாபம் காண்பார்கள். நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் நோயிலிருந்து விடுபடுவீர்கள். இதுவரை இருந்துவந்த மருத்துவச் செலவுகள் இனி இருக்காது. உங்கள் செல்வாக்கு உயரும். தாராள பணப்புழக்கம் ஏற்படும். கொடுக்கல்-வாங்கலில் நல்ல நிலைமை ஏறப்டும். எடுக்கும் காரியங்கள், செய்யும் முயற்சிகள் அனைத்திலும் உங்கள் புதிசாலித்தனத்தின்மூலம் வெற்றியடைவீர்கள். அரசியல்வாதிகள் , பத்திரிக்கையாளர்கள் ,மக்கள் பணி புரிபவர்கள் ஆகியோர் மேன்மையடைவார்கள். புதிய பட்டம் பதவிகள் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கிடைத்து வளர்ச்சி காண்பீர்கள். சேவைத் துறையில் உள்ளவர்கள் மேன்மையடைவார்கள். திருமணம் போன்ற சுபகாரியங்களில் இதுவரை நிலவிவந்த தடைகளும் தாமதங்களும் நீங்கி, இப்போது சுப கார்யங்கள் நடந்தேறும்.\nஅரசியலில் இருப்பவர்கள் பிரபலமாகும் வாய்ப்புள்ளது. கேது பகவான் உங்கள் ராசிக்கு 8-ம் இடத்தை தனது 3ம் பார்வையால் பார்ப்பதால், இதுவரை தொல்லை கொடுத்து வந்த பிரச்சினைகள் யாவும் அமுங்கிப்போகும். வேலைப்பளு அதிகமாகும். ஆனால் அதற்கேற்ற வருமானமும் இருக்கும். கேது பகவான் உங்கள் ராசிக்கு 4ம் இடத்தைப் பார்வையிடுவ்தால் தாயாரின் உடல்நலம் சிறக்கும். தாய்வழி உறவினர்கன் உதவி கிட்டும். சிலர் புதிய வண்டி வாகனத்தை வாங்குவார்கள். சிலர் வீடு மனை வாங்குவார்கள். விருந்து கேளிக்கைகளில் ஈடுபட்டு மகிழ்ச்சியடைவீர்கள். தீர்த்த யாத்திரை செல்வீர்கள். பூர்வீகச்சொத்து மேன்மையடையும். கேதுபகவானின் 6ம் இடத்து சஞ்சாரத்தால், மனதிற்குள் அசாத்திய துணிச்சல் ஏற்படும். மிகவும் சுறுசுறுப்புடனும் புத்திசாலித்தனத்துடனும் செயல்பட்டு வெற்றியை அடைவார்கள். கோர்ட் கேஸ்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். தொட்டதெல்லாம் பொன்னாகும். கணவன்-மனைவி உறவு சிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும். ராகுவின் கெடு பலன்கள் குறையும்.\nவருகிற ஜனவரி மாதம் 8-ம் தேதியன்று ராகு பகவான் சிம்ம ராசிக்கும் கேது பகவான் கும்ப ராசிக்கும் பெயர்ச்சியாகிறார்கள். இந்த பெயர்ச்சியின்போது ராகு பகவான் உங்கள் ராசிக்கு 11ம் இடத்துக்கும் கேதுபகவான் உங்கள் ராசிக்கு 5ம் இடத்துக்கும் வருகிறார்கள். இப்போது ராகு-கேதுவின் சஞ்சார பலன்களைப் பார்க்கலாம்.\nராகு பகவான் உங்கள் ராசிக்கு 11ம் இடத்தில் சஞ்சாரம் செய்து மிக நன்மையான பலன்களை கொடுக்கப் போகிறார். பலவிதமான நன்மைகள் எதிர்பாராதவிதமாக பலவழிகளிலிருந்தும் வந்து சேரும். சிலருக்கு அரசு சம்பந்தமான வேலை வாய்ப்பு கிடைக்கும். உங்களுக்கு அரசாங்க உதவி கிடைக்கும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு அரசாங்க கல்விக்கடன் கிடைத்து படிப்பை நல்ல முறையில் தொடர முடியும்.வேற்று இனத்தவர், வேற்று மொழி பேசுபவர் , வேற்று மதத்தினர் மூலம் பல நன்மைகள் தற்போது உங்களுக்கு கிடைக்க வாய்ப்புகள் உண்டு. சிலர் புது ஆடை ஆபரணங்கள் வாங்குவர். எதிர்பாராத பண வரவு கிடைப்பதால், பழைய கடன்கள் அடைபடும்.கடன் சுமை குறையும். மூத்த சகோதரர் நன்மை அடைவார்கள். உங்களுக்கு மூத்த சகோதரர்களால் எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்கும். சிலர் புதிய சொத்துகள் , புதிய வண்டி வாகனங்கள் வாங்குவர். கடந்த காலத்தில் கோர்ட் கேஸ்கள் என்று அலைந்துகொண்டிருந்தவர்கள் அந்த தொல்லைகள் நீங்கி நிம்மதி அடைவார்கள். அந்த வழக்குகளில் தீர்ப்பு வருமானால், அது உங்களுக்கு சாதகமாகவே வரும். ராகு பகவான் உங்கள் ராசிக்கு 3ம் பார்வையாக உங்கள் ராசியையே பார்க்கிறார். இதன் காரணமாக உங்கள் மனம் உற்சாகத்தில் மிதக்கும். முகத்தில் பொலிவும் உடம்பில் சுறுசுறுப்பும் இருக்கும். மனோபலம் அதிகமாகும். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்கும் செயல்திறனும் புத்திகூர்மையும் அதிகமாகும். அதுபோல ராகு பகவான் உங்கள் ராசிக்கு 9ம் இடத்தைப் பார்க்கிறார். தந்தை மேனமையடைவார். தந்தை வழி உறவினர்களால் எதிர்பாராத லாபம் இடைக்கும். எல்லா பாக்கியங்களும் கிடைக்கும்.\nமேலதிகாரிகளின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். தொழில் முன்னேற்றம் ,எதிலும் வெற்றி, அதன்மூலம் மன மகிழ்ச்சி கிடைக்கும். கணவன்-மனைவி உறவு சிறக்கும். அனுகூலமான செய்திகள் கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியம் நடக்கும். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். அவர்களால் பதவிகள் கிடைக்கும். புதிய நணப்ர்கள் கிடைப்பது மட்டுமல்லாமல், அவர்களால், தக்க சமயத்தில் தகுந்த உதவிகள் கிடைக்கும். விருந்து கேளிக்கைகளில் கலந்துகொண்டு மகிழ்ச்சியடைவீர்கள்.\nஇனி கேதுவின் சஞ்சார பலன்களைத் தெரிந்துகொள்வோம். கேதுபகவான் தனது 5-ம் இடத்து சஞ்சாரத்தின் மூலம் புத்திரர் வழியில் சஞ்சலத்தை ஏற்படுத்துவார். உங்கள் புதல்வர்கள் வேற்று மத்தவரையோ அல்லது வேற்று இனத்தவரையோ திருமணம் செய்துகொள்வர் .புத்திரர் வழியில் செலவினங்களும் அதிகரிக்கும். இக்காலத்தில் போதைப்பொருள்களைப் பழக்கப்படுத்திக்கொள்வீர்கள். அந்த விஷயத்தில் 5 ம் இடத்திலுள்ள கேது உங்களை படுகுழியில் தள்ளிவிடாமல் உங்களை நீங்களே காப்பாற்றிக்கொள்வது அவசியம். உங்களுக்கு ஆன்மீக சிந்தனையும் கடவுள் பக்தியும் அதிகமாகி உங்களை ஞான மார்க்கத்தில் ஈடுபடுத்தவும் வாய்ப்புள்ளது. அதனால் தீய பழக்கங்களிலிருந்து விடுபடுவது உங்களால் முடியும். இந்த சமயத்தில் பெரியோர்கள் ,ஞானிகளின் சந்திப்பும் ஆசீர்வாதமும் கிடைக்கும்.\nஉங்கள் பூர்வீகச் சொத்து எளிதில் கைக்கு வரமுடியாது. அதை அடைவதில் சண்டை சச்சரவுகளும் பிரச்சினைகளும் ஏற்படும். ராகு 11ல் இருந்தாலும் கூட கேது 5ல் இருந்துகொண்டு சூது, லாட்டரி, ரேஸ் போன்றவற்றில் பணம் வருவதை தடை செய்துவிடுவதால், கிடைப்பது சொற்ப லாபமாகவே இருக்கும். அந்த சொற்ப லாபத்தில் மயங்கி சூது வழிகளையே பெரிதாக நம்பி வாழ்ந்தால் கைப்பொருளையும் இழக்க வேண்டி வரும். லாகிரி வஸ்துக்களும் உங்கள் ஆரோக்கியத்தைப் பதம் பார்த்துவிடும். அரசு சம்பந்தமான துறைகளில் இழுபறி நீடிப்பதால், வெற்றி தாமதமாகவே கிடைக்கும். உங்களில் சிலர் மந்திர தந்திர விஷயங்களைக் கற்றுக்கொள்வீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் நாட்டமின்றிக் கவனம் சிதறும். சிலர் காதல் விவகாரங்களில் சிக்கிக்கொண்டு அவஸ்தைப்படுவது மட்டுமின்றி காதல் தோல்வி ஏற்பட்டு மனம் வாடவும் வாய்ப்புண்டு. கர்ப்பிணிப் பெண்களுக்கு கருச்சிதைவு ஏற்படலாம் என்பதால், பூரண ஓய்வில் இருக்கவேண்டியது அவசியம். அத்துடன் மருத்துவர் ஆலோசனையிலும் மருத்துவப் பாதுகாப்பிலும் இருக்கவேண்டியது அவசியம்.\nகேது தனது 3ம் பார்வையால் உங்கள் 7ம் இடத்தைப் பார்க்கிறார். இதன் பலனாக உங்கள் வாழ்க்கைத் துணையின் உடல்நலம் பாதிக்கப்படலாம். மனைவி கர்ப்பிணியானால் கவனம் மிகவும் அவசியம். மனைவி வழி உறவினர்களிடையே ஏதாவது பிரச்சினைகள் தோன்றினால், அதில் நீங்கள் தலையிடவேண்டாம். அப்படி அவசியம் ஏறப்ட்டு தலையிட நேர்ந்தாலும் மிகவும் ஜாக்கிரதையாக பிரச்சினைகளைக் கையாளாவிட்டால், பிரச்சினைகள் உங்கள் மீதே திரும்பிவிடும் நிலை ஏறபடலாம். புதிய நண்பர்கள் கிடைத்து அவர்கள் மூலம் உதவிகளும் கிடைக்கலாம். சிலருக்கு புதிய கூட்டாளியும் கிடைத்து புதிய கூட்டுத் தொழில் உருவாகவும் வாய்ப்புகள் உண்டு. மேலும் கேது பகவான் தனது 11-ம் பார்வையினால், உங்கள் 3-மிடத்தைப் பார்க்கிறார். இதன்பலனாக உங்கள் மனோபலம் அதிகரிக்கும். எதையும் வெற்றிகரமாகச் செய்து முடிக்கும் துணிவு பிறக்கும். இளைய சகோதரர்கள் மேன்மையடைவதோடு உங்களுக்கும் உதவியாக இருப்பார்கள். காது சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்படலாம். குலதெய்வ வழிபாடு சிறப்படையும்.\nபொதுவாக கேதுவின் 5-ம் இடத்து சஞ்சாரம் தொழில் பிரச்சினைகளையும் தொல்லைகளையும் கொடுக்கும். தொழில், வியாபாரம் நிதானமாக முன்னேறும். தேவைக்கேற்ற வருமானம் கொடுக்கும். பெரியோர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். சொத்து சம்பந்தமான வம்பு வழக்குகள் ஏற்படும். தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும். உறவினர்களுடன் சண்டை சச்சரவுகள் ஏறப்டும். உறவுகள் பகையாகலாம். சரியான நேரத்துக்கு உண்ணவோ உறங்கவோ முடியாது. புதிய நட்பும் அவர்களால் ஆதாயமும் கிடைக்கும். தீர்த்த யாத்திரை மற்றும் ஆன்மீகப் பயணங்கள் தொடர வாய்ப்புண்டு.\nவருகிற ஜனவரி மாதம் 8-ம் தேதியன்று ராகு-கேது பெயர்ச்சி நிகழவுள்ளது. அவ்வமயம் ராகு பகவான் உங்கள் ராசிக்கு 10-ம் இடமான சிம்ம ராசியிலும் கேது பகவான் உங்கள் ராசிக்கு 4-ம் இடமான கும்ப ராசியிலும் இடம் பெயர்கிறார்கள் . இனி பலன்களைத் தெரிந்துகொள்வோம். ராகுபகவானின் 10ம் இடத்து சஞ்சாரம் ஜோதிட சாஸ்திரப்படி அவ்வளவு சிறப்பானது அல்ல. தொழிலில் சில மாற்றங்கள் ஏற்படும். சிலர் மழைய தொழிலை விட்டுவிட்டு புதிய தொழிலுக்கு மாறுவார்கள். சிலர் தங்கள் தொழிலில் புதிய உத்திகளையும் புதிய சிந்தனைகளையும் புகுத்துவார்கள். தொழிலில் ஏற்படும் பின்னடைவை மாற்றுவதற்காக இப்படிப்பட்ட சீர்திருத்தங்களை மேற்கொள்வீரகள். சிலர் தொழில் சம்பந்தமாக ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு மாறுவார்கள். தொழிலில் எவ்வளவுதான் சீர்திருத்தங்களையும் நூதன முறைகளைப் புகுத்தினாலும், மாற்றங்களை மேற்கொண்டாலும், முன்னேற்றம் என்பது எதிர்பார்த்த அளவிற்கு இருக்காது. இதுவரை தொழில் இல்லாமல் இருந்தவர்கள் இப்போது புதிய தொழிலைத் தொடங்குவார்கள். சிலர் புதிதாக தொழிற்சாலை அல்லது வீடுகளுக்குண்டான கட்டுமானப் பணிகளைத் தொடங்குவார்கள். தொழில் ரீதியான பயணங்களை அடிக்கடி மேற்கொள்வீர்கள். அதன் காரணமாக, உடல்நலம் குறையும். காலம் தாழ்த்தி உணவு உண்ணவும் உறங்கவும் செல்வீர்கள். தொழிலை மேம்படுத்த சிலர் கடன் வாங்கித் தொழிலில் முதலீடு செய்து தொழிலை முன்னேற்ற முயலுவார்கள். சிலருக்கு எதிர்பாராத செலவுகள் வந்து சேரும். இருந்தபோதும் வருமானம் குறையும். பொருளாதாரச் சிக்கல்கள் இருந்துகொண்டே இருக்கும். உங்களுடைய முயற்சிகளில் அடுத்தவரின் தலையீடு இருக்கும். இது உங்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தக்கூடும். எத்தனை கடுமையாக முயன்றாலும், உங்கள் அறிவை உபயோகப்படுத்தினாலும், உங்கள் உழைப்புக்கு ஏற்ற அளவு முன்னேற்றம் இருக்காது.\nசகோதரர்களுடன் விரோதம் ஏற்படும். வீடு, மனை இவற்றின் மூலம் விரயச் செலவு ஏறப்டும். ரியல் எஸ்டேட், உரம், மருந்துப் பொருள்கள் சம்பந்தமான தொழில் செய்வோருக்கு இது உகந்த நேரம் அல்ல. பலவித சோதனைகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். போலி மருந்து தயாரிப்பில் ஈடுபட்டால் கடுமையான பாதிப்புக்கு ஆளாவீர்கள். சிலரது குடும்பத்தில் வயதானவர்களுக்கு உடல்நலம் குன்றும். துக்க நிகழ்ச்சி ஏற்படவும் வாய்ப்புகள் நேரும்.\nராகு பகவான் உங்கள் ராசிக்கு 3ம் இடத்தையும் 12-ம் இடத்தையும் பார்க்கிறார். இதன்பலனாக தேவையற்ற வம்பு வழக்குகள் சண்டை சச்சரவுகள் உங்களைத் தேடிவரும்.சிலர் கோர்ட் கேஸ்களில் சிக்கி அலைந்து திரிந்து தொல்லைகளுக்கு ஆளாவார்கள் சிலர் தொழில் செய்யும் .ஸ்தாபனத்தில் கருத்து ஒற்றுமை ஏற்படாமல் விவகாரங்கள் ஏற்படும். அலுவலகத்தில் பணிபுரிபவர்களுக்கு இடமாற்றம் , பணிமாற்றம் ஏற்படும். வேலைப்பளு அதிகமாகும். மேலதிகாரிகள் உங்களுக்குத் தொல்லை கொடுப்பார்கள். தற்போது வழக்குகளில் வரும் தீர்ப்புகள் உங்களுக்கு சாதகமாக இருக்காது. விரயச் செலவுகளும் மருத்துவச் செலவுகளும் அதிகமாகும். உறக்கம் கெடும். பயணங்கள் அதிகமாகும். பயணங்களால் பயன் இருக்காது.\nகொஞ்சம் எச்சரிக்கையுடன் இருந்தால் தீய பலன்களிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம். புதிய நணப்ர்கள் கிடைப்பார்கள். அவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் உங்களுக்கு கைகொடுப்பார்கள். குடும்பத்தில் ஒரு சுப காரியம் நடைபெறும். தொழிலில் நிதானமான முன்னேற்றம் இருக்கும். கணவன்-மனைவி உறவு சுமுகமாக இருக்கும்.\nஇனி கேது பகவானின் சஞ்சார பலன்களைக் காணலாம். கேது பகவான் உங்கள் ராசிக்கு 4-ம் இடத்தில் சஞ்சரிப்பது அவ்வளவு நல்ல சஞ்சாரமாக எடுத்துக்கொள்ள முடியாது. தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. தாயுடனும் தாய் வழி உறவினர்களுடனும் கருத்து வேற்றுமை தோன்றும். பெரியோர், ஞானிகளின் கோபத்தையும் சாபத்தையும் வாங்கவேண்டி வரும். குடும்பத்தாரிடம் உங்கள் கோப தாபங்களைக் காட்டுவதால் ,குடும்ப அமைதி கெடும். நன்றாக நடந்துகொண்டிருந்த தொழில் இப்பொது திடீர் பாதிப்புக்கு உள்ளாகும். உங்களிடம் வேலை பார்த்து வந்தவர் உங்களுக்குப் போட்டியாக களம் இறங்குவர். கடுமையான பாதிப்புகளையும் ஏற்படுத்துவார். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பின்னடைவு ஏறப்டும். ஃபைல்கள் காணாமல் போகலாம். அரசுக்குரிய பணத்தை கஜானாவில் கட்டுமுன் தொலைத்துவிட்டு திண்டாடுவீர்கள். இதன் காரணமாக அவப்பெயர் ஏற்பட்டு தண்டிக்கப்படுவீர்கள். வேலை இழக்கும் சூழல்கூட உருவாகலாம்.வீட்டில் திருட்டுப்போக வாய்ப்புகள் உண்டாகும். உடல்நலம் கெடும், மருத்துவச் செலவு ஏற்படும். சிலர் குடும்பத்தைவிட்டுப் பிரியும் நிலை ஏற்படும். அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுடன் பிரச்சினை வரும். சிலருக்கு வண்டிவாகனங்களால் நஷ்டமும் பொருட்செலவும் உண்டாகும். நிலம், வீடு சம்பந்தமான விரயத்தையும் நஷ்டத்தையும் சந்திக்க வேண்டிவரும். விவசாயிகளுக்கு கால்நடைகளால் நஷ்டம் ஏற்படும். சிலர் சொத்து சுகங்களை இழந்து, விரக்தியுடன் ஊர்விட்டு ஊர் செல்லும் நிலை உண்டாகும். சிலர் தீய பழக்கங்களுக்கு அடிமையாகிவிடுவார்கள்.\nகேது பகவான் உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தையும் 2-ம் இடத்தையும் பார்க்கிறார்கள். இதனால், உங்களுடைய செல்வாக்கும் அந்தஸ்தும் குறையும். பொருளாதாரச் சிக்கல் ஏற்படும். கொடுக்கல்-வாங்கலில் சுமுகமான நிலை இருக்காது. நாணயத்தைக் காப்பாற்றிக்கொள்ள முடியாது. எதிரிகளால், தொல்லைகளும் துயரங்களும் ஏற்படும். மருத்துவச் செலவுகள் அதிகமாகும். உடல் நலம் பாதிக்கப்படும். குடும்பக்கவலை ஆட்டிப்படைக்கும். கணவன்-மனைவி உறவு சுகப்படாது .கடன் தொல்லைகள் அதிகமாகும்.\nவருகிற ஜனவரி மாதம் 8-ம் தேதியன்று, ராகு-கேது பெயர்ச்சி நிகழவுள்ளது. அச்சமயம் ராகு உங்கள் ராசிக்கு 9-ம் இடமான சிம்ம ராசிக்கும், கேது உங்கள் ராசிக்கு 3-ம் இடமான கும்ப ராசிக்கும் இடம் பெயர்கிறார்கள். இந்த இரண்டு பெயர்ச்சிகளுமே உங்களுக்கு சாதகமானவைகள்தான். இனி பலன்களைப் பார்க்கலாம்.\nராகுவின் 9-ம் இட சஞ்சாரம் உங்களுக்கு நல்ல பலன்களையே கொடுக்கும். தந்தையின் உடல்நலம் மேன்மையடையும். தந்தையும் தந்தை வழி உறவினர்களும் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். தொழில் வியாபாரம் மேன்மையடையும். தொழில் சம்பந்தமான பயணங்களை மேற்கொள்ளவேண்டியிருக்கும். அலைச்சல்கள் அதிகமாகும். வெளிநாட்டு வேலைக்காகக் காத்திருப்போருக்கு வெளிநாட்டு வேலை கிடைக்கும். வெளிநாட்டில் உள்ளோருடன் வர்த்தக உறவுகள் ஏற்பட்டு சிலருக்கு தொழில் முன்னேற்றம் ஏற்படும். இந்த நேரத்தில் வேற்று இன, மதத்தினரும் வேற்றுமொழி பேசுபவர்களும் உதவியாக இருப்பார்கள். வெளிநாட்டு வர்த்தகம், நூதனமான பொருட்கள், எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் சம்பந்தப்பட்ட தொழில் செய்வோருக்கு மேன்மை ஏற்படும். ஏற்றுமதி-இறக்குமதி தொழில் செய்வோருக்கு இது ஏற்றமான காலம். ஒரு கணிசமான தொகையை சம்பாதிப்பார்கள். ஆன்மீக சிந்தனைகள் உங்களுக்கு அதிகமாகி, வேதாந்த புராண விஷயங்களில் நாட்டம் அதிகமாகும். கோவில் மடாலயம் போன்ற இடங்களில்கௌரவப் பதவிகளும் பொறுப்புகளும் கிடைக்கும். பெரியோர்கள் , ஞானிகளின் தரிசனமும் ஆசீர்வாதமும் கிடைக்கும். அவர்களால் கொரவிக்கப்படுவீர்கள். சிலர் தீர்த்த யாத்திரை, கோயில் குளங்களுக்கு செல்லுதல் புனிதப் பயணம் போன்ற ஆன்மீகச் சுற்றுலாவில் கலந்துகொள்வார்கள். பூர்வீகச் சொத்துக்கள் மேன்மையடையும். பூர்வீகச் சொத்தினால் ஆதாயமும் நன்மையும் கிடைக்கும். சிலருக்கு அவரவர் பிறந்த ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றம் ஏற்படும். சிலர் தர்ம நியாயங்களுக்கு மாறாக செயல்பட்டு பணம் தேடவும் செய்வார்கள். அதன் காரணமாக அவர்கள் பணமே பிரதானமாய் கேவலமாய் அலையவும் வாய்ப்புண்டு. இந்த நிகழ்வுகள் ஜாதகத்தில் 9-ம் இடத்தில் தீய கிரகங்கள் இருந்தால் ஏற்படும்.\nஇந்தக் காலத்தில் உங்கள் எதிரிகளும், உங்கள் கருத்துக்கு மாற்றுக் கருத்துடையவர்களும்கூட உங்கள் செயல்திறனைக் கண்டு உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள் . அலுவலகத்தில் வேலைப்பளு குறையும். ஊதிய உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும். மேலதிகாரியின் அன்புக்கும் ஆதரவுக்கும் பாத்திரமாவீர்கள். சக ஊழியர்களும் ஒத்துழைப்பு தருவார்கள். அலுவலகத்தில் சுமுகமான சூழ்நிலை ஏறபடும்.\nராகு பகவான் தனது 3-ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 11-ம் இடத்தைப் பார்வையிடுகிறார். இதன்பலனாக, தொழிலில் எதிர்பார்த்ததைவிட அதிக லாபம் கிடைக்கும். மூத்த சகோதரர் மேன்மையடைவர். மூத்த சகோதரர்களால், தக்க உதவிகள் கிடைக்கும். எடுத்த காரியங்களை உங்கள் புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தி வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்ததைவிட நல்ல லாபமும் காரிய சித்தியும் உண்டாகும். அதுபோல ராகு பகவான் உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தைப் பார்வையிடுகிறார். உங்கள் வாழ்க்கைத் துணை உடல்நலம் பெறுவார். உடல்நோய் நீங்கி நல்ல ஆரோக்கியம் பெறுவார்.சிலருக்கு நல்ல நணப்ர்கள் சேருவார்கள். அவர்கள் மூலமாக நல்ல காரியங்கள் நடைபெறும். சிலருக்குப் புதிய கூட்டுத் தொழில் உருவாகும். கூட்டுத் தொழில் செய்யும் கூட்டாளிகளுடன் நல்லிணக்கம் ஏர்படும். தொழில் அபிவிருத்தியும் கூடும். உடன் பழகும் நணப்ர்களுக்கு தக்க சமயத்தில் பல உதவிகள் செய்வீர்கள். நண்பர்களின் துயரங்களைப் போக்குவீர்கள். வியாபாரத்தில் நல்ல வருமானம் கிடைப்பதுடன் புதிய பொறுப்புகளும் கூடும். அதன் காரணமாக வேலைப்பளுவும் அலைச்சலும் அதிகமாகும். புத்திர புத்திரிகளால் மேன்மையுண்டாகும். கணவன்-மனைவி உறவு சிறக்கும்.\nஇனி கேது பகவானின் சஞ்சார பலன்களைப் பார்க்கலாம். 3-ம் இடத்தில் பயணம் செய்யும் கேது நல்ல வசதி வாய்ப்புகளை வழங்கத் தயங்க மாட்டார். வீட்டுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்கள் அத்தனையும் வந்து சேரும். பெரியோர்கள், ஞானிகளின் சந்திப்புகளும் அவர்களின் ஆசீர்வாதமும் கிடைக்கும். உங்களுக்கு அதிகார பதவி கிடைக்கும். தொழில் வியாபாரம் மேன்மையடையும். எதிர்பார்த்த பண வரவு இருக்கும். சிலர் புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவர். மனோபலம் அதிகரிக்கும். எந்தப் பிரச்சினையானாலும் துணிவுடன் எதிர்கொள்வீர்கள். சிலருக்கு விதவைப் பெண்களுடன் தொடர்பு ஏற்பட்டு தொல்லையில் முடியும். எனவே தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத திடீர் வருமானம் கிடைக்கும். முயற்சி எதுவுமின்றியேகூட உங்களுக்கு இப்போது வருமானம் வரும். இந்தக் காலத்தில் நீங்கள் மண்ணைத் தொட்டாலும் அது பொன்னாகும். எடுத்த காரியங்கள் அனைத்திலும் உங்களுக்கு வெற்றியே உண்டாகும். சிலர் மத விஷ்யங்களில் அதிக ஆர்வத்துடன் செயல்பட்டு அதன்மூலம் பெரும் புகழடைவார்கள். ஆனால், சிலர் அதையே பயன்படுத்திக்கொண்டு தீய வழிகளில் பணம் சம்பாதிக்கத் துணிவார்கள். அப்படிப்பட்ட வழிகள் பாதிப்பைத் தரும் என்பதால் அவைகளைத் தவிர்க்கவும்.\nகேது பகவான் உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தைப் பார்க்கிறார். இதன் காரணமாக பூர்வீகச் சொத்தில் இருந்துவந்த வில்லங்கமும் பிரச்சினைகளும் தீரும். பூர்வீகச் சொத்தினால் நல்ல லாபம் கிடைக்கும். புத்திர புத்திரிகள் மேன்மையடைவார்கள். புத்திர புத்திரிகளுக்கு சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். அவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும். கல்வியில் அவர்கள் நலல் முன்னேற்றத்தை அடைவார்கள். குலதெய்வ வழிபாட்டை முடிப்பீர்கள். மேலும்,. கேதுபகவான், தனது 11-ம் பார்வையினால் உங்கள் ராசியையே பார்க்கிறார். இதனால் மனோபலம் கூடும். எந்தக் காரியத்தைச் செய்யத் தொடங்கினாலும் முதலில் குழப்பம் ஏற்பட்டு பின்னர் அது விலகிவிடும். சாதனை வீரராக வலம் வருவீர்கள்.\nகேது பகவானின் 3-ம் இட சஞ்சாரம் உங்கள் வாழ்க்கையில் நல்ல காலத்தின் தொடக்கம் ஆகும். இதுவரை நீங்கள் அனுபவித்துவந்த தொல்லை, துயரம் நீங்கி, மகிழ்ச்சி ஏற்படும். இதுவரை குடும்பத்தில் இருந்துவந்த நோய் நீங்கி குடும்பத்தினரின் ஆரோக்கியம் பெருகும். மருத்துவச் செலவுகள் குறையும். பணம் பல வழிகளிலிருந்தும் வந்துகொண்டிருக்கும். செலவினங்கள் அதிகமாகும் வாய்ப்புகளும் உண்டு. கவனத்துடன் இருந்தால் உன்னத நிலையை அடைய முடியும். நல்ல நண்பர்களும் உங்களது நலம் விரும்பிகளும் உங்களுக்கு தக்க சமயத்தில் தக்க ஆலோசனைகளைச் சொல்லி உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். கணவன்-மனைவி உறவில் மகிழ்ச்சி நிறையும்.\nவருகிற ஜனவரி மாதம் 20-ம் தேதி ராகு பகவான் சிம்ம ராசியிலும் கேதுபகவான் கும்ப ராசியிலும் சஞ்சரிக்கப் போகிறார்கள். இதன்மூலம் ராகு பகவான் உங்கள் ராசிக்கு 8-ம் இடத்திலும், கேதுபகவான் உங்கள் ராசிக்கு 2-ம் இடத்திலும் சஞ்சரிக்கப்போகிறார்கள். இவற்றை நல்ல சஞ்சாரம் என்று சொல்ல முடியாது. இனி இவற்றால் உண்டாகப்போகும் பலன்களைக் காணலாம்.\n8-ம் இடத்தில் உள்ள ராகுவின் சஞ்சாரம் எதிர்பாராத நிகழ்வுகளை ஏற்படுத்தும். எதிர்பாராத நிகழ்வுகள் என்று குறிப்பிட்டதன்மூலம் தீய பலன்கள் மட்டுமின்றி சில நல்ல பலன்களையும் எதிர்பார்க்கலாம். ராகு தனது 3-ம் பார்வையால், 10-ம் இடத்தைப் பார்ப்பதால், சிலர் உத்தியோகம், வியாபாரம், தொழில் சம்பந்தமாக திடீரென்று வேறு ஊர்களில் வேறு இடங்களுக்கு மாறிச் செல்ல வேண்டிய சூழ்நிலை உண்டாகும். சிலர் தங்கள் வசிப்பிடங்களையும் மாற்றிக்கொண்டிருப்பார்கள். வீடு குடி மாறுவார்கள். சியல்ருக்கு எதிர்பாராத சொத்து சுகங்கள் கியடிக்கும். சிலருக்கு ஷேர்மார்க்கெட்டில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். இருப்பினும் அதையே நம்பி வாழ்க்கையை ஓட்டிவிட முடியாது. பயணங்களின்போது 8-ம் வீட்டில் உள்ள ராகு சில எதிர்பாராத நிகழ்ச்சிகளை நடத்திவிட வாய்ப்புண்டு. அதனால் பயணங்களின்போது கவனம் தேவை. பயணங்களின்போது எடுத்துச் செல்லும் பொருள்கள் திருட்டுப்போகும் நிலையும் ஏறப்டலாம். சட்ட விரோதமான காரியங்களில் ஈடுபடுபவர்கள் போலீஸ். கோர்ட், தண்டனை என்று அல்லல்படுவார்கள். வியாபாரிகள் கணக்குவழக்குகளை சரியாக வைத்துக்கொள்ளவேண்டும். இல்லையென்றால் அரசாங்கத்தால் தொல்லை ஏறப்டும். அரசு ஊழியர்களுக்கு மேலதிகாரிகளால் பிரச்சினைகளும் கருத்து வேறுபாடுகளும் ஏற்படும். அரசு வேலையில் இருப்பவர்கள் கையூட்டுப் பெறுவதை தவிர்ர்க்கவில்லையென்றால், காவல்துறையிடம் சிக்கி சிறை செல்வார்கள். அவமானப்பட நேரும். வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காகக் காத்திருப்போருக்கு அதற்கான வாய்ப்புண்டாகும் யோகம் வரும். அதுபோல சிலருக்கு வெளிநாட்டுப் பயணத்துக்கான வாய்ப்புகள் உண்டாகும். இந்தக் காலத்தில் யாருக்காகவும் ஜாமீனுக்குப் போகவேண்டாம். அதில் நீங்கள் சிக்கிக்கொண்டு துன்பப்படநேரும். வரவு செலவுகளும் உங்களைக் கவிழ்த்துவிட்டுவிடும் நாணயம் தவறிப்போவீர்கள். பணத்தைப் பிறரிடம் கொடுத்துவைத்தால் ஏமாற்றப்படுவீர்கள். தானாகக் கிடைக்காத விஷயத்தை பணம் கொடுத்து சாதித்துக்கொள்ளவேண்டாம். சிக்கல் ஏற்படும். காரியமும் நிறைவேறாமல், செலவழித்த பணமும் கைவிட்டுப் போய், லஞ்சம் கொடுத்ததற்கான தணடனையும் கிடைக்கும். தொழில், வியாபாரம் சம்பந்தமாக சரியான முடிவெடுக்க முடியாமல் போகும். எடுத்த காரியங்களில் தடைகளும் தாமதங்களும் ஏற்படும். மனதில் குழப்பம் இருக்கும். கூட்டுத்தொழிலில் இருப்பவர்களுக்கு கூட்டாளிகளால் தொல்லை ஏற்படும்.. ஆரோக்கியம் பாதிப்படையும். மறைந்திருக்கும் எதிரிகளால் அவ்வப்போது தொல்லைகள் ஏற்படும். ஆனால், அவர்களால் உங்களுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்த முடியாது. பொதுவாக இந்த ராகு பெயர்ச்சி பண விரயம், எதிகளால் தொல்லை,அலைச்சலகள் தீய நட்பு, பெண்களால் அவமானங்கள் என்று ஏற்படும்.\nஇனி கேதுபகவானின் 2-ம் இட சஞ்சார பலன்களைப் பார்க்கலாம். கேது பகவான் உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் சஞ்சரிப்பது பொருளாதாரப் பின்னடைவை ஏற்படுத்தும். தொழில் மந்த கதியை அடையும். வருமானம் குறையும். கொடுக்கல்-வாங்கலில் சிக்கல் ஏற்படும். அவசியத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளவே பெரிய சிரமம் உண்டாகும். கொஞ்சம் வருமானம் வந்தாலும் பின்னாலேயே செலவும் வந்து நிற்கும். அவசிய செலவுகளை மட்டும் பிரித்துக்கொள்ளாவிட்டால், கடன்படவேண்டியிருக்கும். மாணவர்களுக்கு முன்னேற்றம் தடைப்படும். கவனம் கல்வியில் செல்லாது. நல்ல மதிப்பெண்களைப் பெற கடுமையாகப் போராடவேண்டியிருக்கும். குடும்பத்தில் வீண் சண்டை சச்சரவுகள், குழப்பங்கள் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தாருடன் நீங்கள் வாக்குவாதங்களில் ஈடுபட்டு வம்பை விலைக்கு வாங்குவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் நியாயமான தேவைகளைக்கூட பூர்த்திசெய்யமுடியாமல் போகும். அதனால், குடும்பத்தாரின் வெறுப்புக்கும் கோபத்துக்கும் ஆளாவீர்கள். வாழ்க்கைத்துணையின் உடல்நலம் பாதிக்கப்படலாம். சிலருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்படும். கூட்டுக் குடும்பத்தில் உள்ளவர்களுக்கிடையே பிரச்சினை ஏற்பட்டு தனிக்குடித்தனம் சென்றுவிடுவார்கள். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாமல் போவதால், உங்கள் செல்வாக்கும் அந்தஸ்தும் பாதிகக்ப்படும். சிலருக்கு கண்களில் பாதிப்பு ஏற்படும். மனதில் விரக்தி ஏற்படும். சிலர் மன அமைதிக்காக வேதாந்த விஷயங்களில் மூழ்குவார்கள்.\nகேது பகவான் தன்னுடைய 3-ம் பார்வையால், உங்கள் ராசிக்கு 4-ம் இடத்தையும், தன்னுடைய 11-ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தையும் பார்வையிடுகிறார். உங்கள் தாயாரின் உடல்நலம் பாதிகக்ப்படும். சிலருக்கு வீடு, மனை நிலம் சம்பந்தமான விரயச் செலவுகளும் , தேவையற்ற வம்பு வழக்குகளும் ஏற்படக்கூடும். வண்டிவாகனங்களில் விரயச் செலவுகள், வணடி வாகனங்கள் விபத்தில் சிக்கி செலவுகள் ஏற்படுதல் போன்ற நிலைகளை உருவாக்கலாம். தொழில் வியாபாரத்தில் உங்களது கவனம் செல்லாது. மனநிம்மதி இருக்காது. பொருள் வீணாக செலவழியுமே தவிர உருப்படியாக எதையும் செய்ய முடியாது. வீட்டில் திருமணம் போன்ற சுப காரியங்களில் தடையும் தாமதங்களும் ஏற்படும். சுப காரியங்களை கடன்பட்டுச் செய்யவேண்டியிருக்கும். அந்தக் கடன் உங்களுக்கு மிகக் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்திவிடும். முடிந்தவரைஎல்லோரையும் அனுசரித்துக்கொள்ளமாட்டீர்கள். அதனால் உண்டாகும் கஷ்ட நஷ்டங்களை அனுபவிப்பீர்கள். அவர்கள் உங்களை விட்டுப் பிரிந்து சென்று விடுவார்கள்.சிலர் சொந்தபந்தங்களைவிட்டுப் பிரிந்துவிடுவார்கள். சிலருக்கு உறவும் பகையாகும். நண்பர்களும் பிரிந்து விடுவார்கள். அயலாரிடம் இருந்துகூட உதவிகள் கிடைக்கலாம்;ஆனால், சொந்த பந்தங்களிடமிருந்து எந்தவித உதவியும் கிடைக்காது.\nகடந்த ஒண்ணரை வருடங்களாக ராகு உங்கள் ராசிக்கு 8-மிடத்திலும், கேது உங்கள் ராசிக்கு 2-மிடத்திலும் இருந்து உங்களுக்குப் பல வழிகளில் நிம்மதி இல்லாமல் செய்தார்கள். அவ்வப்போது சில நன்மைகள் நடந்தன என்றாலும், பொதுவாக பலருக்கும் பல கெடுதல்களே நடந்தன. இப்போது வரப்போகும் பெயர்ச்சியின்போது ராகு உங்கள் ராசிக்கு 7-ம் இடமான சிம்ம ராசிக்கும் கேது உங்கள் ஜென்ம ராசிக்கும் பெயர்ச்சியாகிறார்கள்.\n7-மிடத்தில் சஞ்சரிக்கும் ராகு திருமணத் தடைகளை உண்டாக்குவார். அல்லது திருமண ஏற்பாடுகள் தாமதமாகும். சில புதுமணத் தம்பதிகள் ஒருவரையொருவர் புரிந்துகொள்ளாமல், வாழ்க்கையையே பிரச்சினையாக்கிக் கொள்வார்கள்.அதேபோல சில குடும்பங்களில் கணவன்-மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புண்டு. கணவன்-மனைவி உறவு சொல்லிக்கொள்ளும் அளவு சிறப்பாக இருக்கும் என்று சொல்ல முடியாது. ஆனால், ஜாதக திசா-புத்திகள் யோகமாக இருந்தால், துலா ராசியில் ராகு உச்ச சனியுடன் சேர்ந்து இருப்பதால், திருமணத் தடைகள் விலகும். பிரிந்திருந்த தம்பதியர் ஒன்று சேரலாம். அதே சமயம் வாழ்க்கைத் துணையின் உடல்நலத்தில் கவனத்துடன் இருக்கவேண்டும். அவருக்கு ரத்தம் சம்பந்தமான பாதிப்புகள் , விஷம் சம்பந்தமான பாதிப்புகள் அலர்ஜி ஆகியவை ஏற்படும். சிலர் ஒழுக்க நிலையில் பிறழ்ந்து தடுமாறிப் போகும் சூழ்நிலை உண்டாகும். அந்நியப் பெண்கள் , ஒழுக்கக் குறைவான பெண்களின் நட்பும் ,பழக்கமும் உங்களுக்கு ஏற்படக்கூடும். அது உங்கள் கௌரவத்தையும் மரியாதையையும் கெடுத்துவிடும்.\nபுதிய நண்பர்கள் கிடைப்பார்கள். அவர்கள் மாற்று மதத்தைச் சேர்ந்தவர்களாகவும் இருக்கலாம். அவர்களுடைய உதவிகள் உங்களுக்கு அவ்வப்போது கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. அவர்களுடன் சேர்ந்து புதிய தொழில் கூட்டுத் தொழில் தொடங்க வாய்ப்புகள் உள்ளன. கொஞ்சம் எச்சரிக்கையும் அவசியம். இல்லாவிட்டால் ஏமாற்றத்தை தவிர்க்க முடியாது. ஆனால் கூட்டுத் தொழில் செய்பவர்கள் உங்களைவிட்டு மாறினாலும்கூட சிலருக்கு தொழில்ரீதியாகப் புதிய கூட்டாளி கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. திடீரென எதிர்பாராத வருமானம் வரக்கூடிய வாய்ப்புகளும் உண்டு. சிலருக்குப் புதிய நண்பர்கள் கிடைத்தாலும்கூட பழைய ந்ண்பர்களில் சிலர் உங்களைவிட்டுப் பிரிந்து செல்லக்கூடும். சிலர் தங்களது தொழிலில் மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்வார்கள். சிலருக்கு இடம்விட்டு இடம் மாறும் சூழ்நிலையும் உருவாகும். அடிக்கடி வெளியூர்ப் பயணம் செய்யவேண்டியிருக்கும். சிலருக்கு வண்டி வாகனங்கள் விரயச் செலவை ஏற்படுத்தும்.\nஆரம்பத்தில் வெளிவட்டார பழக்கவழக்கங்களில் சில பிரச்சினைகள் உருவானாலும் பிறகு விரும்பியபடி காரியங்கள் பலிதமாகும். எடுக்கும் முயற்சிகளில் படிப்படியாக முன்னேற்றம் ஏற்பட்டு முடிவில் வெற்றி உண்டாகும். பண வசதியைப் பொறுத்தவகையில் இல்லை என்ற குறை நீங்கி எண்ணங்கள் ஈடேறும். இரண்டாம் இடத்து குரு உங்கள் வாக்கு சாதுர்யத்தை மேம்படுத்தி மற்றவர்களை உங்கள் வசப்படுத்தி உங்கள் திட்டங்களையும் தேவைகளையும் நிறைவேற்றச் செய்வார். அத்தியாவசியத் தேவைகள் எல்லாம் ஒவ்வொன்றாக நிறைவேறும். மனைவியும் பிள்ளைகளும் கேட்டதை வாங்கிக் கொடுத்து, அவர்களை சந்தோஷப்படுத்துவீர்கள். உங்கள் உறவினர்களையும் மனைவிவழி உறவினர்களையும் அனுசரித்து வரவேற்று உபசரிப்பதன்மூலம் சொந்த பந்தங்களின் அன்புக்கு ஆளாகலாம்.\nஉங்கள் மனோபாலம் அதிகமாகும். எந்தப் பிரச்சினைகளையும் எதிர்கொள்ளும் துணிவு கிடைக்கும். ஆனால் முடிவெடுக்கும்போதுதான் குழப்பங்கள் ஏற்பட்டு கால தாமதமாகும். பொதுவாழ்க்கையில் இருப்பவர்கள் எச்சரிக்கையுடன் இல்லாவிட்டால், திடீர் தொல்லைகள் ஏற்படும்.\nஉங்கள் ஜென்ம ராசியில் கேது சஞ்சாரம் செய்வதால்,மனதில் தேவையற்ற குழப்பங்கள் அதிகமாகும். காரணம் தெரியாத வீண்பயம் மனதில் இருக்கும். எப்போதும் முகத்தில் சோகம் குடிகொண்டிருக்கும். மனதில் தோன்றும் சிந்தனைகள் எல்லாம் அப்போதைய சூழ்நிலைக்கு பயனற்றதாக இருக்கும். உங்கள் உடல்நலத்திலும் கவனம் தேவை. உங்கள் தாயாரின் உடல்நலத்திலும் கவனம் தேவை. தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகளும் பகைமையும் ஏற்படும். சிலர் பெற்றோரைப் ப்ரிந்து வாழ வேண்டிவரும். தொழில் ரீதியாகவும் சில இடையூறுகள் ஏற்படும். அதன்மூலம் மனசஞ்சலம் ஏற்பட்டு மன நிம்மதி கெடும்.\nமாணவர்கள் இந்தக் காலக் கட்டத்தில் மிகவும் சிரத்தையுடன் படிப்பில் கவனம் செலுத்தவேண்டும். நீங்கள் பெரிய புத்திசாலியாகவும் எடுத்த காரியத்தை முடிக்கும் திறமை படைத்தவராக இருந்தாலும் இந்த சமயத்தில் அவை எடுபடாமல் போகும். எடுக்கும் முயற்சிகளிலும் காரியங்களிலும் தடை ஏற்படும் காலம் இது. தொழிலாளர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். மின்சாரம், நெருப்பு ஆயுதம் இவைகளால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு.\nமனதை ஒருமுகப்படுத்தி, ஆன்மீக சிந்தனைகளில் ஈடுபட்டால், குருமார்களின் தரிசனம் , சாதுக்களின் நட்பு பெரியோர்களின் தொடர்புகள் அவர்களின் ஆசீர்வாதங்கள் கிடைக்கும். உங்கள் கௌரவம் உயரும். புகழ், பாராட்டு கிடைக்கும். மதிப்பு மரியாதை கூடும். ஆன்மீகத் தொடர்புகள் அதிகரிக்கும். ஜாதகத்தில் அந்த தசாபுத்திகள் நடந்தால், ஜோதிடம், வைத்தியம், தியானம் யோகா போன்ற கலைகளில் ஈடுபாடு ஏற்படும். சனியும் சேர்ந்து சம்பந்தம் ஏற்பட்டால், மாந்த்ரீகம், ஹிப்னாட்டிசம் இவைகளில் ஆர்வம் ஏற்படும்.\nஉங்கள் செல்வாக்கு புகழ் இவைகளில் உங்கள் வாழ்க்கைத் துணைக்கும் பங்கு கிடைக்கும். இருவரும் விட்டுக்கொடுத்து அனுசரித்துப் போவதால், சந்தோஷமும் வாழ்க்கையில் நிறைவும் ஏறப்டும். சிலருக்கு ,பிள்ளைகள் பெற்றோர் சொல்லைக் கேட்காமல் போகலாம். ஒழுக்கக் குறைவால் எல்லோருக்கும் கேவலத்தை ஏற்படுத்தி சங்கடங்களை உண்டுபண்ணக்கூடும். பிள்ளைகள்மீது கவனம் செலுத்துவது மட்டுமின்றி அணுசரணையாக இருப்பதும் அவசியம். சகோதர வகையில் கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்க முடியாது. ஆனாலும் விட்டுக்கொடுத்து நடந்து அட்ஜஸ்ட் பண்ணிக்கொள்ளும் சாமர்த்தியம் உங்களுக்கு கை கொடுக்கும்.\nவருகிற ஜனவரி மாதம் 8-ம் தேதியன்று ராகு சிம்ம ராசிக்கும் கேது கும்ப ராசிக்கும் பெயர்ச்சியாகிறார்கள். அதாவது ராகு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்துக்கும் கேது உங்கள் ராசிக்கு 12-ம் இடத்துக்கும் சென்று அமர்கிறார்கள். அதன்மூலம் பொதுவாக உங்களுக்கு நற்பலன்களாகவே நிகழும்.\nவேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். செய்தொழில் மேன்மையடையும். அதில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பழைய கடன்கள் அடைபடும். இதுவரை உங் களுக்கு தொல்லைகொடுத்துவந்த எதிரிகளும் போட்டியாளர்களும் காணாமல் போவார்கள். அவர்களால் நிலவி வந்த தொல்லை நீங்கும். உங்கள் ஆரோக்கியம் சிறப்படையும். அதே நேரத்தில் சிலருக்கு அஜீரணக் கோளாறுகள், வாயுத் தொந்தரவு, வயிறு சம்பந்தமான பாதிப்புகள் ஏறப்டும். பெண்களுக்கு கர்ப்பப்பை கோளாறு ஏற்படும். நெருங்கிய நண்பர்கள், நெருங்கிய உறவினர்களிடமிருந்து உங்களுக்கு எதிர்ப்புகள் கிளம்பும்.\nஎதிர்பாராத வருமானம் கிடைக்கும். எதிர்பாராத சில அதிர்ஷ்டங்கள் உண்டாகும். ஆனால் அவை நிரந்தரமாக இருக்காது. கோர்ட் கேஸ்களால் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தவர்களுக்கு அதிலிருந்து விடுதலை கிடைக்கும். சிலருக்கு சாதகமான தீர்ப்புகளும் கிடைக்கும்.\nஉங்களுக்கு புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புண்டாகும். அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு பதவி உயர்வும் புதிய பொறுப்புகளும் கிடைக்கும். புத்தி சாதுரியம் அதிகரித்து, எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். எதிர்ப்புகளை முறியடித்துவிடுவீர்கள் . அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். அந்த பயணங்களால் நன்மைகள் உண்டாகும்.\nகேது பகவான் உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தில் அமர்ந்து, உங்களுக்கு மிகச் சிறப்பான பலன்களைக் கொடுக்கிறார். இது உங்களுக்கு சிறப்பான காலமாக இருக்கும். விரயச் செலவுகள் குறையும். எதிர்பாராத வருமானம் கிடைக்கும். வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காகக் காத்திருப்போருக்கு இப்போது வெளிநாட்டில் வேலை கிடைக்கும். சிலர் வெளிநாட்டுக்கு மகிழ்ச்சி சுற்றுலா சென்று வருவார்கள். குழந்தைகள் சம்பந்தமாக எதிர்பாராத செலவுகள் உண்டாகும். சிலர் காசி ராமேஸ்வரம் செல்வார்கள். சிலர் கடமைகள் அத்தனையும் முடித்துவிட்டு குடும்பப் பொறுப்புகளிலிருந்து அமைதியாக ஒதுங்கி இருப்பார்கள். சிலர் ஏகாந்தமான மோன நிலைக்கு செல்வார்கள். ஞான நிலையும் சித்திக்கும். தியானத்தை மேற்கொள்வார்கள்.\nகேதுபகவான் உங்கள் ராசிக்கு 2-ம் இடத்தை தனது 3-ம் பார்வையால் பார்க்கிறார். அதன் காரணமாக குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். குடும்பத்தின் தேவைகளைக் காலமறிந்து பூர்த்தி செய்து அவர்களுடைய மகிழ்ச்சியைப் பெறுக்குவீர்கள். உங்கள் செல்வாக்கும் புகழும் உயரும். கௌரவம் அந்தஸ்து மேன்மையடையும். தேவைக்கேற்றபடி வருமானம் கிடைக்கும். தொழிலில் மேன்மை ஏறப்டும். புதிய தொழிலும் அமையும்.\nவார பலன் – 22.4.18 முதல் 28.4.18 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவார ராசி பலன் 15.4.18 முதல் 21.4.18வரை அனைத்து ராசிகளுக்கும்\nதமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2018 -2019 விளம்பி வருஷம் மகர ராசி\nமுட்டையில் வெள்ளைக் கருவும் மஞ்சள் கருவும் திரவ நிலையில் இருந்தாலும், ஒன்றுடன் ஒன்று கலப்பதில்லை –ஏன்\nபுத்தாண்டு பலன்கள்-- 20182019 –விளம்பி வருஷம் மீன ராசி\nதமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2018-2018 விளம்பி வருஷம் கும்ப ராசி\nபுத்தாண்டு பலன் விளம்பி வருஷம் 2018-19 தனுசு ராசி\nபுத்தாண்டு பலன்கள்- விளம்பி வருஷம் 2018-2019 விருச்சிகம்\nபுத்தாண்டு பலன் விளம்பி வருஷம்- 2018-2019 துலாம் ராசி\nபுத்தாண்டு பலன்கள் -2018-2019 விளம்பி வருஷம் கன்னி ராசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://puttalamtoday.com/%E0%AE%8E%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2018-04-26T13:41:30Z", "digest": "sha1:6WJ5QSGAF4LBPHSUM47AJRHQ3KPAECL3", "length": 9378, "nlines": 60, "source_domain": "puttalamtoday.com", "title": "எமது வீரர்களை பாகிஸ்தானுக்கு அனுப்பி “பலி “கொடுக்க ஒரு போதும் அனுமதிக்க மாட்டேன்..!!தாயசிரி காட்டம் – PuttalamToday", "raw_content": "\nஎமது வீரர்களை பாகிஸ்தானுக்கு அனுப்பி “பலி “கொடுக்க ஒரு போதும் அனுமதிக்க மாட்டேன்..\nபாகிஸ்தானுடான இலங்கையின் கிரிக்கெட் தொடரானது டுபாயிலேயே நடைபெறவுள்ளது. எமது வீரர்களை அங்கு பலிக்கடாவாக்க நாங்கள் ஒருபோதும் தயாரில்லையென இணை அமைச்சரவைப்பேச்சாளரும் விளையாட்டுத்துறை அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.\nஅரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது இணை அமைச்சரவைப் பேச்சாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஅவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,\nகேள்வி: பாகிஸ்தான் அணியுடன் விளையாட இலங்கை பாகிஸ்தான் செல்லுமா\nபதில்: பாகிஸ்தானுடான இலங்கையின் கிரிக்கெட் தொடரானது டுபாயிலேயே நடைபெறவுள்ளது.\nபாகிஸ்தான் செல்வது தொடர்பில் இதுவரை தீர்மானம் எடுக்கவில்லை. ஏற்கனவே அந்த நாட்டில் பாதுகாப்பு தொடர்பில் கசப்பான அனுபவங்களை எமது வீரர்கள் பெற்றுள்ளனர்.\nஎனவே பாதுகாப்பு தொடர்பான நூறுவீத உத்தரவாதம் கிடைத்தால் மட்டுமே நாங்கள் பாகிஸ்தான் போகலாம்.\nஎமது வீரர்களை பலிக்கடாவாக்க நாங்கள் ஒருபோதும் தயாரில்லை. ஆனால் பாகிஸ்தானுடனான இருதரப்பு உறவை நாங்கள் பலப்படுத்தவேண்டும். அந்த நாடு எமக்கு அவசரத்துக்கு உதவுகின்றது. தற்போது கூட உதவி வருகின்றது.\nகேள்வி: ஒரு இருபதுக்கு இருபது போட்டி பாகிஸ்தானில் நடைபெறவுள்ளதே அதற்கு வீரர்களை அனுப்புவீர்களா\nபதில்: அது தொடர்பில் நாங்கள் இன்னும் முடிவெடுக்கவில்லை. நூறுவீதம் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டால் பரிசீலிக்கலாம்.\nகேள்வி: கிரிக்கெட் தெரிவு குழு இராஜினாமா செய்துள்ள நிலையில் எவ்வாறு இந்தப் போட்டிக்கான வீரர்களை தெரிவுசெய்வீர்கள்\nபதில்: கிரிக்கெட் தெரிவுக்குழு இராஜினாமா செய்தபோதும் 25 பேர் கொண்ட குழுவை தெரிவு செய்து தருமாறு நாம் அவர்களிடம் கேட்டுக்கொண்டோம். அதற்கேற்ப தெரிவு நடைபெற்றது.\nB.M.S. college சாரம் திருவிழா: பெலூன் டான்ஸ் ஆடிக் கலக்கிய முஸ்லிம் யுவதிகள்- எல்லை மீறுகிறார்களா..\nBreaking : சவூதி மன்னரை கவிழ்க்க முயற்சி.. அரண்மை அருகே கடும் துப்பாக்கி சூடு – பங்கருக்குள் கொண்டு செல்லப்பட்டார் சல்மான் posted on April 22, 2018\nசவூதியின் கொடூர செயலால் உலகமே அதிர்ச்சியில் \nBreaking : 12 வயதுக்கு உள்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு தூக்குத் தண்டனை மோடியின் அமைச்சரவை அவசர சட்டம் பிறப்பிப்பு posted on April 21, 2018\nBreaking :கண்டி கலவரங்களை வழி நடத்திய போலிஸ் இன்ஸ்பெக்டர், சார்ஜென்ட் மேஜர் கைது செய்யப்படவுள்ளார்கள் posted on April 21, 2018\nதலைமைப் பற்றி தீர்மானிக்கும் ஐக்கியத் தேசியக் கட்சியின் முக்கியக் கூட்டம் இன்று \nகண்டிக் கலவரத்தை முன்னின்று நடத்திய இரு பிரதேச சபை உறுப்பினர்கள் தொடர்ந்தும் தேடப்படுகிறார்கள்..\nபச்சை கறிவேப்பிலை சாப்பிடுவதன் மூலம் கொலஸ்ட்ரோலை கட்டுக்குள் வைக்கலாம் இதய சத்திர சிகிச்சை நிபுணர் Dr.இலாஹி\nநகர, பிரதேச சபை சேர்மன்களின் ஆட்டம் எல்லாம் 2 வருடங்களுக்கு மட்டுமே.. அதன் பிறகு உறுப்பினர்களின் காலில் விழுந்தாக வேண்டும்\nமுன்னாள் நேவி தளபதி சந்தன பிரசாத் தப்பிச் செல்ல பாதுகாப்புச் சபை பிரதானி ரவீந்திர விஜேகுணவர்தன 5 லட்சம் கொடுத்தார்.. C.I.D. பொஸ் சான் குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.south.news/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2018-04-26T13:10:17Z", "digest": "sha1:QUCBTHGJ2TJHIVOZQOEDPX6NQEGF7S4X", "length": 14095, "nlines": 107, "source_domain": "tamil.south.news", "title": "சென்னை Archives - Tamil News", "raw_content": "\nசென்னையில் 24 மணி நேரத்தில் இதையெல்லாம் செய்யலாம்\nசென்னை... தென்னிந்தியாவின் நுழைவுவாயில். சோழமண்டல கடற்கரையில் ஆங்கிலேயன் கட்டியமைத்த செயின்ட் ஜார்ஜ் கோட்டையை சுற்றி உருவான எழில்மிகு நகரம் இது. சென்னப்பட்டணம் என்ற சிறிய கிராமம் இன்று மிகப்பெரிய மெட்ரோ சிட்டியாக மாறியுள்ளது....\nஓட ஓட தெறிக்கவிட்ட சி.எஸ்.கே’; 400 அடிச்சாலும் ஜெயிக்க மாட்டாங்களா ஆர்.சி.பி\nஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் களமிறங்குகிறது என்றாலே லப்டப் லப்டப் என இதயம் துடிதுடித்து பிபி ஏறும் அளவுக்கு ரசிகர்கள் வெலவெலத்துப் போவார்கள். த்ரில்லான வெற்றியை பெறுவதில் அந்த அளவிற்கு சென்னை...\nசி.எஸ்.கே.வால் வாழ்க்கையை இழக்கும் 3 முக்கிய அணிகள்\nஇரண்டு ஆண்டுகள் தடையை உடைத்து வந்தாலும், அணிக்குள் சில மாற்றங்கள் ஏற்படுத்தினாலும், மீண்டும் அதே கம்பீரத்துடன், அதே கெத்துடன் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இதனால் மூன்று முக்கிய...\nசி.எஸ்.கே.வின் த்ரில் வெற்றிக்கு குவிந்த மீம்ஸ்\nசென்னைக்கும், ஐதராபாதத்திற்கும் இடையே நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சென்னை அணி எதிர்பார்க்க முடியாத அளவுக்கு வித்யாசமான, த்ரில்லான ஆட்டத்தை வெளிப்படுத்தி பிரம்மிக்க வைத்திருக்கிறது. இந்த ஆட்டத்திற்கு சமூக ஊடகங்களில் ஏகப்பட்ட மீம்ஸ்கள் பறந்தன....\n’… குமுறிய சி.எஸ்.கே. ரசிகர்கள்\nசென்னைக்கும், ஐதராபாதத்திற்கும் இடையே நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சென்னை அணி எதிர்பார்க்க முடியாத அளவுக்கு மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி பிரம்மிக்க வைத்திருக்கிறது. ஐ.பி.எல். தொடரில் சென்னை-ஐதராபாத் அணிகள் மோதிய படி நேற்று நடைபெற்றது....\nசென்னையில் இந்த 8 கடைகளில் நீங்கள் சாப்பிட்டே ஆக வேண்டும்\nசென்னை, தமிழ்நாட்டின் தலைநகரம் மட்டும் அல்ல, லட்சோப லட்ச கனவு மனிதர்களின் மாடமாளிகை. அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரம். 70.9 லட்ச மக்களின் சுவை தாகத்தை தீர்க்க, அவர்களுடைய நாவிற்கு புதுப்புது...\nவெளுக்க போகிறது கோடை மழை… எஞ்சாய் பண்ணுங்க மக்களே\nமாலத்தீவு மற்றும் குமரிக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக பலத்த காற்று வீசவும், மழை பெய்யவும் வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சித்திரை மாதம் அக்னி நட்சத்திர...\nவியக்க வைக்கும் ராணுவ தளவாடங்கள்: மோடி திறந்து வைத்தார்\nதிருவிடந்தையில் இந்திய ராணுவ தளவாட கண்காட்சியின் துவக்கி வைத்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. பின் அவர் தடவாளத்தில் நிலைநிறுத்தப்பட்டிருந்த விண்கலங்கள், பீரங்கிகள் உள்ளிட்டவற்றை பார்வையிட்டார். நாம் நட்புடன் இருக்க முயன்றாலும் நம்முடன் பகை உறவாடும்...\nகாவிரிக்காக போர்க்களமானது அண்ணாசாலை.. ஸ்டேடியம் ‘வெறிச்’\nகாவிரி நதிநீர் பங்கீட்டு உரிமையை மீட்டெடுக்கும் விதமாக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ள சூழலில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். போட்டியை தடுத்து நிறுத்த முயன்ற பல்லாயிரக்கணக்கான புரட்சியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மிகப்பெரிய களேபரம்...\nசி.எஸ்.கே.வில் புதிதாக இணையும் டேவிட் வில்லியை பற்றிய சுவாரசிய தகவல்கள்\nநடந்துகொண்டிருக்கும் ஐ.பி.எல். தொடரில் கேதார் ஜாதவ், தனக்கு ஏற்பட்ட காயம் காரணமாக போட்டிகளில் இருந்து வெளியேறியதை அடுத்து, இவருக்கு பதிலாக புதிய வீரர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். நடந்து முடிந்த மும்பைக்கு எதிரான ஐ.பி.எல். ஆட்டத்தில்...\nமழை நீரை சேமித்தால் பத்தே ஆண்டுகளில் தண்ணீர் பஞ்சம் தீரும்: நீங்கள் சேமிப்பீர்களா\nபருவமழையால் ஏரிகள், குளங்கள் நிரம்புவது ஒரு பக்கம் இருந்தாலும், சென்னையில் கோடை காலங்களில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுவது வழக்கமாக உள்ளது. பருவமழை காலங்களில் நமக்கு கிடைக்கும் மழையை நாம் இயன்றவரை சேமித்து வைத்துக்கொண்டாலே...\nஸ்ரீதேவியின் 16ஆம் நாள் சடங்கில் பங்கேற்ற அஜித் மற்றும் ஷாலினி..\nமறைந்த ஸ்ரீதேவியின் 16ஆம் நாள் சடங்கு நிகழ்ச்சி சென்னையில் உள்ள அவரது வீட்டில் நடத்தப்பட்டது. அதில் நடிகர் அஜித் மற்றும் ஷாலினியும் கலந்துக் கொண்டனர். நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் துபாய் ஹோட்டலில் குளியளறையில் கடந்த...\nசிறுமி ஹாசினி கொலை வழக்கு குற்றவாளி தஷ்வந்த் அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்..\nசென்னையில் சிறுமி ஹாசினி கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து எரித்து கொன்ற வழக்கில் கைது செய்த தஷ்வந்த் என்ற இளைஞர் குற்றவாளி என தீர்ப்பு அளித்துள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 5ஆம் தேதி...\nஇந்தியாவிலேயே பெண்களுக்குப் பாதுகாப்பான நகரம் கோவை.. எப்படி\nஇந்தியா முழுவதும் பெண்களுக்கு எதிராக நடைபெறும் முக்கிய குற்றங்களான பாலியல் பலாத்காரம், பலாத்கார முயற்சி, வரதட்சணைக் கொடுமை, பாலியல் தொல்லை, பாலியல் துன்புறுத்தல், கணவர் கொடுமை, கணவரின் உறவினர்களால் கொடுமை போன்ற 7...\nசென்னையை சுற்றி இவ்வளவு அருவிகள் இருக்கா உங்களுக்கு தெரியுமா..\nசென்னையில் சுற்றி பார்ப்பதற்கு கடற்கரை மட்டுமில்லாமல் சில அருவிகளும் உள்ளன. இயற்கையின் எழில் மிகு அழகையும் கண்டு ரசிக்கும் படியாக பல அருவிகள் சென்னையை சுற்றியுள்ளன. அவற்றில் சில அருவிகளின் தகவல்கள் உங்களுக்காக. டடா...\nசென்னையில் 24 மணி நேரத்தில் இதையெல்லாம் செய்யலாம்\nவேலூரில் 48 மணி நேரத்தை எப்படி செலவிடலாம்\nஓட ஓட தெறிக்கவிட்ட சி.எஸ்.கே’; 400 அடிச்சாலும் ஜெயிக்க மாட்டாங்களா ஆர்.சி.பி\nஜெட் வேகத்தில் ஆண்மை பெருக இந்த கீரையை சாப்பிடுங்க\nமினிமம் பேலன்ஸ் இல்லாத கணக்குகளில் இருந்து ரூ.1,772 கோடி அபராதம் வசூலித்த எஸ்.பி.ஐ. வங்கி\nஆதார் அமைப்பை கைது செய்யுங்கள்… சர்ச்சையை கிளப்பிய ‘விக்கி லீக்ஸ்’ எட்வர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthinappalakai.net/2017/05/16", "date_download": "2018-04-26T12:59:52Z", "digest": "sha1:6C43VFSFMUZYLF3U2MN452IHFLHZIRCY", "length": 11237, "nlines": 112, "source_domain": "www.puthinappalakai.net", "title": "16 | May | 2017 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nகண்டியில் பழுதடைந்த மோடியின் உலங்குவானூர்தி இந்தியாவுக்குப் புறப்பட்டது\nஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பயணம் மற்றும் பாதுகாப்புக்காக வந்திருந்த போது, பழுதடைந்த நிலையில் கண்டியில் தரித்து நின்ற இந்திய விமானப்படையின் உலங்குவானூர்தி திருத்தப்பட்ட பின்னர் இன்று புறப்பட்டுச் சென்றது.\nவிரிவு May 16, 2017 | 12:39 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nசிறிலங்காவுக்கு ஜிஎஸ்பி பிளஸ் சலுகை – வெள்ளிக்கிழமை கிடைக்கும்\nஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை வரும் வெள்ளிக்கிழமை தொடக்கம் சிறிலங்காவுக்குக் கிடைக்கும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தில் சிறிலங்காவுக்கான பணியகம் அறிவித்துள்ளது.\nவிரிவு May 16, 2017 | 12:27 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nதிருகோணமலைத் துறைமுகத்தில் அவுஸ்ரேலிய ரோந்துக் கப்பல்\nஅவுஸ்ரேலிய எல்லை காவல்படையின் பாரிய ரோந்துக் கப்பலான “ஓசன் ஷீல்ட்” திருகோணமலைத் துறைமுகத்தை இன்று வந்தடைந்துள்ளது.\nவிரிவு May 16, 2017 | 12:10 // திருக்கோணமலைச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nசிறிலங்காவின் தனிநபர் வருமானம் 15 ஆண்டுகளுக்குப் பின்னர் வீழ்ச்சி\nசிறிலங்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தனிநபர் வருமானம், 15 ஆண்டுகளுக்குப் பின்னர், வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதாக சிறிலங்கா மத்திய வங்கிய வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களில் இருந்து தெரியவந்துள்ளது.\nவிரிவு May 16, 2017 | 4:34 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nதெற்கு, மத்திய ஆசியாவில் சீனாவின் செல்வாக்கு அதிகரிப்பதற்கான கதவுகளை திறந்து விடும் அமெரிக்கா\nதெற்கு மற்றும் மத்திய ஆசியா மீதான தனது நிர்வாகத்தின் வேறு இலக்குகளை அடைந்து கொள்வதற்காகவே அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வெளிநாடுகளுக்கான உதவித் திட்டத்தைக் குறைப்பதற்கு திட்டமிட்டிருப்பது போல் தெரிகிறது.\nவிரிவு May 16, 2017 | 3:47 // நித்தியபாரதி பிரிவு: கட்டுரைகள்\nசிறிலங்கா துறைமுகங்களின் அபிவிருத்திக்கு உதவுவதாக சீன அதிபர் வாக்குறுதி\nதுறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை உள்ளிட்ட சிறிலங்காவின் அனைத்து அபிவிருத்தி முயற்சிகளுக்கும் சீனா முழுமையான ஆதரவை வழங்கும் என்று சீன அதிபர் ஷி ஜின்பிங் உறுதியளித்துள்ளார்.\nவிரிவு May 16, 2017 | 3:22 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nமகிந்த – மோடி சந்திப்புக்கு பச்சைக்கொடி காட்டிய மைத்திரி\nஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவைச் சந்திப்பதற்கு தாமே அனுமதி அளித்ததாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nவிரிவு May 16, 2017 | 3:08 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகாலி மாவட்டச் செயலகத்தின் அதிகாரபூர்வ இணையத்தளம் மீது சைபர் தாக்குதல்\nகாலி மாவட்டச் செயலகத்தின் அதிகாரபூர்வ இணையத்தளம் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டு, முடக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானி சைபர் நிபுணர் குழு என்ற அமைப்பே இந்த தாக்குதலுக்கு உரிமை கோரியுள்ளது.\nவிரிவு May 16, 2017 | 2:56 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் இரா.சம்பந்தன் – ‘சேர் பொன். இராமநாதனின் மறுஉருவம்’\t0 Comments\nகட்டுரைகள் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு யார் காரணம்\nகட்டுரைகள் சிறிலங்கா: மகிந்தவுக்காக திறக்கப்படும் கதவுகள்\t0 Comments\nகட்டுரைகள் ஐ.நாவின் மனிதஉரிமைச் செயற்பாடுகளைப் பலவீனப்படுத்தும் ரஷ்யா, சீனா\t0 Comments\nகட்டுரைகள் சீனாவின் இறுக்கமான பிடியில் சிறிலங்காவின் அமைதியான துறைமுகம்\t1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுக்கு எதிரான வியூகத்தில் சிறிலங்காவின் பௌத்த பிக்குகளையும் இணைக்கிறது இந்தியா\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்திய மாக்கடலில் அதிகரிக்கும் சீனாவின் செல்வாக்கும் – இந்தியாவின் முத்தரப்பு கடற்பாதுகாப்பு ஒப்பந்தமும்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t0 Comments\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t2 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cinema.vikatan.com/movie-review/93243-anbanavan-asaradhavan-adangadhavan-aaa-movie-review.html", "date_download": "2018-04-26T13:21:38Z", "digest": "sha1:TAEAIWRSRCS4NCHRTJR3UYUAIPASLHRS", "length": 32363, "nlines": 389, "source_domain": "cinema.vikatan.com", "title": "அய்யோ அய்யயோ அய்யய்யோ! - அன்பானவன் அசராதவன் அடங்காதவன் (AAA) விமர்சனம் | Anbanavan asaradhavan adangadhavan AAA movie review", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\n - அன்பானவன் அசராதவன் அடங்காதவன் (AAA) விமர்சனம்\nதியேட்டரில் போய் அமர்ந்ததும் சிலபல படங்களின் டிரெய்லர்கள், தேசியகீதம் முடிந்தும் படம் போடவில்லை. 'படத்தின் முதல் காட்சி ரத்து செய்யப்பட்டது' என்று செய்தி பரவியதும் தியேட்டருக்குள் ஒரே முணுமுணுப்பு. விதி வலியது என்பதால் 10 நிமிட தாமதத்துக்குப் பிறகு (அதற்குள் சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்டதும் நடந்தது) தொடங்கியது வரலாற்றுச் சிறப்ப்ப்ப்ப்பு மிக்க அந்த சம்பவம்.\n\"அன்பானவன் அடங்காதவன் அசராதவன்\" படத்தின் கதை என்ன, இதில் எத்தனை சிம்பு, யார் யார் எப்படி நடித்திருக்கிறார்கள், இந்தப் படத்தையே எதற்காக எடுத்தார்கள், என்பது போன்ற விஷயங்கள் தாண்டி படத்தைப் பற்றி சொல்ல நிறைய இருக்கிறது.\n‘த்ரிஷா இல்லைனா நயன்தாரா' என்ற வயதுவந்தோருக்கான காவியப் படத்தைக் கொடுத்த இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனின் இரண்டாவது படம் இது. சென்ற படத்தில் வரும் செங்கல் சைக்கோ என்ற கேரக்டருக்கான ப்ளாஷ்பேக்கை இந்தப் படத்தில் வைப்பதற்கு யோசித்த முயற்சியை இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, இத்யாதி, இத்யாதி விஷயங்களைப் பற்றி யோசிப்பதற்கும் பயன்படுத்திருக்கலாம் இயக்குனர். ‘அது எதற்கு ரிஸ்க்' என்று அவர் யோசித்ததால், அந்த ‘ரிஸ்க்கை' நாம் எடுத்துத்தொலைக்கவேண்டியிருக்கிறது.\n‘சிம்புவுக்குப் படத்தில் மூன்று கெட்டப், அதில் ஒரு கெட்டப் ‘வித்தியாசமான கெட்டப்' ' என்று முடிவு செய்ததே போதும் என்று நினைத்திருப்பார்கள்போல சிம்புவும் ஆதிக்கும். ‘மதுரை மைக்கேல்' கெட்டப்பில் டி.ராஜேந்தரையும் ‘திக்கு சிவா' கெட்டப்பில் குறளரசனையும் ‘அஷ்வின் தாத்தா' கெட்டப்பில் வி.கே.ராமசாமியையும் நினைவுபடுத்துகிறார் சிம்பு.\nசிம்புவுக்கு என்ன பிரச்னையோ தெரியவில்லை, எல்லாப் படங்களிலும் ‘காதல்ங்கிறது' என்று ஆரம்பித்து இத்துப்போன வரையறைகளை அள்ளித்தெளிப்பது, ‘பொண்ணுங்க ஏமாத்துவாங்க, பசங்க பாவம்' என்று ஆண்திமிருடன் கூடிய அட்வைஸ்களை வீசுவது என்று ரொம்பவே படுத்துகிறார். அதிலும் பெண்களை இழிவுபடுத்துவதற்காக பேசும் வசனங்கள், வைத்திருக்கும் காட்சியமைப்புகள், லாஜிக்குகள் எல்லாம் கீழ்த்தரத்திலும் கீழ்த்தரம். ஒரு பையன் தன் காதலியை ‘மேட்டருக்கு' அழைக்கிறான். அவள் மறுக்கிறாள். ‘எக்ஸ் பாய்பிரென்ட்கிட்ட போனியே\" என்கிறான். \"தோணுச்சு, போனேன். உன்கிட்ட தோணலை\" என்கிறாள் அவள். உடனே காதலன் தற்கொலை செய்யப்போகிறான். ''இந்தப் பொண்ணுங்களே இப்படித்தான். ஏமாத்திடுவாங்க. பசங்க பாவம், குதிக்காதீங்க எசமான் குதிக்காதீங்க\" என்று வசனம் பேசி காப்பாற்றுகிறார் சிம்பு. நாம் முன்னால் இருக்கும் நாற்காலியில் தலையை முட்டிக்கொள்ளலாம். வேறு என்ன செய்ய முடியும்\nபடத்தில் மிக ‘புதுமையான' ஒரு காதல் காட்சி உள்ளது. ஸ்ரேயா ரேஷன் கடையில் நிற்பார். அவரை ஒருதலையாகக் காதலிக்கும் 'மதுரை மைக்கேல்' சிம்பு பக்கத்து வரிசையில் நிற்பார். சிம்புவைத் தேடிவரும் விடிவி கணேஷிடம், \"செல்வி என்னையவே அடிச்சுப் பாக்குறா\" என சொல்ல, அதை கணேஷ் நம்பமாட்டார். \"உனக்கு நான் நிரூபிக்கிறேன் பாரு \"எனச் சொல்லி சிம்பு கொட்டாவி விடுவார். \"இப்போ அவளும் கொட்டாவி விடுவா பார். அப்படி அவ கொட்டாவி விட்டா அவ என்ன லவ் பண்றானு அர்த்தம்\". சிம்புவின் கொட்டாவி ஹார்ட்டீன் போல பறந்து செல்ல, ஸ்ரேயாவின் கொட்டாவி அம்பு போல பறந்து சென்று ஹார்ட்டீனுக்குள் நுழையும். இந்தக் ‘கொட்டாவி' காட்சியை ஒட்டுமொத்தப் படத்துக்கான குறியீடு என்றே சொல்லலாம்.\nபடத்தில் வாயோடு வாய் வைத்து உறிஞ்சும் ஏராளமான லிப்லாக் காட்சிகள் உண்டு. \"ஆதிக் ரவிச்சந்திரனின் போன படம் ‘ஏ' சர்ட்டிபிகேட் ஆச்சே. இந்தப் படத்தில் ஸ்ரேயா, தமன்னா என்று ரெண்டு ஹீரோயின்கள். ஏராளமான லிப் கிஸ் சீனா அப்புறம் ஏன் ‘ஏ' சர்ட்டிபிகேட் கொடுக்கலை அப்புறம் ஏன் ‘ஏ' சர்ட்டிபிகேட் கொடுக்கலை\" என்று யோசிக்கிறீர்களா சிம்புவும் மற்றவர்களும் லிப் லாக் அடிப்பதெல்லாம் ஒய்.ஜி.மகேந்திரனுக்கு. அதற்கான காரணம் ரொம்பவே 'சிறப்பு'. சாதாரணமாகவே காமெடி என்ற பெயரில் முகத்தை அஷ்டகோணலாக்கி நம்மைப் படுத்தி எடுக்கும் ஒய்.ஜி.மகேந்திரனுக்கு லிப் லாக் சீன் என்றால்.... அடிக்கடி பாத்ரூமில் போய் வாஷ்பேஷினில் வாயைக் கழுவிவந்து உட்காரவேண்டியிருக்கிறது. சிம்பு, ஆதிக், உங்க டேஸ்ட் ஏன் இப்படிப் போயிடுச்சு\nதனித்தனியாகவே டபுள் மீனிங் டயலாக்குகளுக்குப் பெயர்போன சிம்புவும் ஆதிக்கும் இணைந்தால் கேட்கவா வேண்டும் பாவமாய் இருக்கும் கஸ்தூரிப் பாட்டியே \"ஜாக்கெட்டைக் கழட்டிக்கொடுடி\" என்று ஸ்ரேயாவிடம் கிளுகிளுப்பு டயலாக் பேசுகிறார். பாவத்த பாவமாய் இருக்கும் கஸ்தூரிப் பாட்டியே \"ஜாக்கெட்டைக் கழட்டிக்கொடுடி\" என்று ஸ்ரேயாவிடம் கிளுகிளுப்பு டயலாக் பேசுகிறார். பாவத்த ஒன்று டபுள் மீனிங் வசனங்களைப் பேசி சாவடிக்கிறார்கள், இல்லையென்றால் 'இந்தப் பொண்ணுங்களே இப்படித்தான்' என்று சிம்பு ஆரம்பித்துவிடுகிறார்,\nயுவன்ஷங்கர் ராஜாவும்தான் என்ன செய்வார் பாவம், இந்தக் குரூர நாடகத்துக்கு எப்படித்தான் இசையமைக்க முடியும் ‘இன்னைக்கு ராத்திரி மட்டும் லவ் பண்ணுடி' என்று ஒரு பாட்டுக்கு இசையமைக்கவைத்து, அவரையும் பாவம், வக்கிரத்துக்குப் பலியாக்கியிருக்கிறார்கள்.\nபடத்தில் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு காதல். சிம்பு, ஸ்ரேயா, தமன்னா தவிர இன்னும் நிறைய காதல் ஜோடிகள் உண்டு. மொட்டை ராஜேந்திரனுக்கு தமன்னா வீட்டு வேலைக்காரியுடன் காதல், கோவை சரளாவுக்கு சிம்பு மேல் காதல், விஜயகுமாருக்கு இளமையான பெண் மீது காதல், இவ்வளவு ஏன் கெஸ்ட்ரோலில் வரும் ஜி.வி.பிரகாஷுக்குக் கூட ஒரு லவ் ஃபெய்லியர் இருக்கிறது. பாவம் பாஸ், காதலைக் கொஞ்சநாள் விட்டுவிடுங்க\nசிம்பு அடிக்கடி பின்னந்தலையில் இருக்கும் முடியை இழுத்து, 'சிறப்பு' என்கிறார். ‘குஞ்ஞானி' என்று பின்னந்தலையில் இருக்கும் சொற்ப முடியை இழுத்து, கோதிவிடும் ஓமக்குச்சி நரசிம்மன் நமக்கு ஞாபகத்துக்கு வருகிறார். \"நான் மோசமானவன்தான், ஆனா கேவலமானவன் இல்லை\" என்று கேவலமான (அ) மோசமான டயலாக் ஒன்றைச் சொல்கிறார் சிம்பு. (ரெண்டுக்கும் என்ன வித்தியாசம் நியாயமாரே) படத்தில் வில்லனை சிவாஜி கெட்டப்பில் அலையவிட்டு, கண்களை உருட்டவைத்து, சிவாஜியைக் கேவலப்படுத்தியிருக்கிறார்கள், காதலைக் கேவலப்படுத்தியிருக்கிறார்கள், முதுமையைக் கேவலப்படுத்தியிருக்கிறார்கள், பெண்களைக் கேவலப்படுத்தியிருக்கிறார்கள், சினிமா என்ற கலை ஊடகத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்கள் சிம்புவும் ஆதிக் ரவிச்சந்திரனும்.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\n`அண்டாவ காணோம்’ முதல் `ஆந்திரா மெஸ்’ வரை... - மிஸ் பண்ணக் கூடாத படங்கள்\nஎல்லாவற்றையும் மீறி இந்தப் படங்களின் ட்ரீட்மெண்ட்டும், புத்துணர்ச்சியான கதைக்களமும் பெரிதும் கவர்ந்தது. பெரும்பாலும் இந்தப் படங்களைப் பற்றி பாசிட்டிவ் விஷயங்களை... Promising upcoming Tamil films\nஇப்படி ஒரு படத்தைக் கொடுத்து பார்வையாளர்களைப் பதம் பார்த்ததோடு இல்லாமல், ஓவர் தைரியத்தோடு ‘பார்ட் டூ' என்று லீடு கொடுக்கிறீர்கள் பாருங்கள், நீங்கள் அடங்காதவர்களோ அசராதவர்களோ இல்லை, கொடூரமானவர்கள் பாஸ் கொடூரமானவர்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா\n''பாகுபலி சிவகாமி என் அக்கா\" 'வம்சம்' சந்தியா கலகல\n1 டூ 2017... சினிமாவில் 'மெர்சல்' விஜய்யின் நம்பர் கேம்ஸ்\n“ ’சமையல் மந்திரம்’ நிகழ்ச்சில இருந்து ஏன் விலகினேன்னா...” - திவ்யா சேட்டை சாட்\nகெஸ்ட் ரோலிலும் நடிக்கத் தயார்..\n\" கலங்கி நெகிழும் சிங்கர் சாந்தினி\n``சிவகார்த்திகேயன் பங்கமா கலாய்ப்பார்... மா.கா.பா எவ்வளவு கலாய்ச்சாலும் வாங்கிப்பார்..’’ - அத்தியாயம் 13\n\"25 சூப்பர் ஹீரோக்கள்... ஒரு சூப்பர் வில்லன் தேனோஸ்\n``கார்த்திக்... என்னை கல்யாணம் பண்ணிக்குவீங்களானு கேட்கணும்போல இருக்கு\" - விஜி சந்திரசேகர்\n\" 'சுந்தரபாண்டியன் 2' தயாரிக்கிறேன்; விஜய்சேதுபதி கேரக்டர்ல நடிக்கிறேன்\n\"ஆமாங்க... வருத்தப்படாத வாலிபர் சங்கம் நல்ல படம்தான்’’ - ‘விகடன் பிரஸ் மீட்’ சிவகார்த்திகேயன்\n\"வைகோ, சீமான் மோதல் வேதனை தருகிறது” - கலங்கும் திருமா\n“அடுத்த படத்தில் பெரிய ஹீரோதான்\nவிகடன் பிரஸ்மீட்: அஜித்திடம் என்ன பிடிக்காது விஜய்யிடம் என்ன பிடிக்கும்\n\"வைகோ, சீமான் மோதல் வேதனை தருகிறது” - கலங்கும் திருமா\nஜெயித்தது தோனி... ஜெயிக்க வைத்தது கோலி... ஜஸ்ட் கோலி திங்ஸ்\nதிருடிய மொபைலை அன்லாக் செய்ய திருடர்கள் செய்யும் இன்னொரு திருட்டுத்தனம்... உஷார்\n'நிர்மலா தேவி வாழ்க்கையே ரகசியம்தான்'- காவியன் நகர் மக்கள் சொல்வது என்ன\nமெக்கானிக்குடன் சாலையில் நின்ற போலீஸார்... கதிகலங்கிப்போன இருசக்கர வாகன ஓட்டிகள்\nஜெயித்தது தோனி... ஜெயிக்க வைத்தது கோலி... ஜஸ்ட் கோலி திங்ஸ்\n``மன அழுத்தம் போக்க உங்களை நீங்கள் ஜெயிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்\n``லட்சியத்தை நோக்கி நகர்ந்துகொண்டே இருந்தால் மனஅழுத்தம் இல்லை. மனஅழுத்தம் போக்க உங்களை நீங்கள் ஜெயிக்கக் கற்க வேண்டும்’’ என்கிறார் எழுத்துச் சித்தர் பாலகுமாரன்.\nகருவளையத்தை மறைக்க மேக்கப் வேண்டாம்... இரும்புச்சத்து உணவு போதும்\nகருவளையத்தை மறைக்க மேக்கப் வேண்டாம். எந்தக் காரணத்தினால் உங்களுக்குக் கருவளையம் வந்திருக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டால் அதைச் சரி செய்வது சுலபம்..\nகொடைக்கானல் மெர்க்குரி ஆலை... அன்று நடந்ததும் இன்றைய நிலையும்\nஅவர்கள் குறைக்கவேண்டியதாக அரசு கூறிய மெர்க்குரி அளவு, உண்மையில் குறைக்கவேண்டிய அளவைவிட 20 மடங்கு அதிகம். இது யூனிலிவர் செலவைக் குறைப்பதற்காகச் செய்யப்பட்டது.\nவிகடன் பிரஸ்மீட்: அஜித்திடம் என்ன பிடிக்காது விஜய்யிடம் என்ன பிடிக்கும்\n“இந்த வேலைநிறுத்தம், இந்திய சினிமாவையே கோலிவுட் பக்கம் திருப்ப வெச்சிருக்கு. இதன் மூலமா...\nஜெ. கன்னத்திலிருந்த நான்கு புள்ளிகளும் அவிழாத முடிச்சுகளும்\nமரணத்துக்குப் பிறகு ஜெயலலிதா உடல் ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டபோது, ஜெ. கன்னத்தில் காணப்பட்ட நான்கு புள்ளிகள் குறித்துப் பெரும் சர்ச்சை எழுந்தது. அந்த நான்கு புள்ளிகள் குறித்த மர்ம முடிச்சுகளை அவிழ்ப்பதற்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முயற்சி செய்துள்ளது.\n\"வைகோ, சீமான் மோதல் வேதனை தருகிறது” - கலங்கும் திருமா\nகாவிரிப் பிரச்னை, எஸ.சி, எஸ்.டி வன்கொடுமைத் தடுப்பு சட்டம் ஆகியவற்றுக்கான போராட்டங்களில் மும்முரமாக...\nஆதிமனிதனும் டிஜிட்டல் தமிழச்சியும் காட்டைக் காப்பாற்ற என்ன செய்தார்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cinema.vikatan.com/bollywood-news/64421-world-universe-aishwarya-rai-too-facing-this.html", "date_download": "2018-04-26T13:14:02Z", "digest": "sha1:XFXHJHWQNLVXDL6GGVMT4IE2L5TYRTOZ", "length": 21780, "nlines": 380, "source_domain": "cinema.vikatan.com", "title": "உலக அழகி ஐஸ்வர்யாவுக்கும் இந்த சிக்கல் இருக்குதான்! (வீடியோ இணைப்பு) | World Universe Aishwarya Rai too facing this problem", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nஉலக அழகி ஐஸ்வர்யாவுக்கும் இந்த சிக்கல் இருக்குதான்\nகணவன் மனைவிக்குள் சின்னச்சின்ன மனஸ்தாபங்கள் வருவதும், அது மீண்டும் சரியாவதும் சாதாரண விஷயம். சில நேரங்களில் அது வீட்டுக்கு வெளியிலும் பிரதிபலிக்கும். இந்தச் சண்டைகள் பொதுவான விழாக்கள், உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் நிகழ்வதும் இயல்பு. ஆனால் அதுவே கொஞ்சம் பிரபலமான மக்கள் எனில் மீடியாக்கள் மற்றும் ரசிகர்கள் வரை போகும்.\nஅப்படித்தான் நேற்று ஐஸ்வர்யா ராய், தான் நடித்த ’சர்ப்ஜித்’ படத்தின் சிவப்புக் கம்பள நிகழ்ச்சி, மற்றும் பிரிமீயர் ஷோவில் தன் கணவர் அபிஷேக் பச்சன் உள்ளிட்ட குடும்பத்தாருடன் கலந்துகொண்டார். இதில் ஐஸ்வர்யா ராய் புகைப்படக்காரர்களுக்கு போஸ் கொடுக்க வேண்டி அபிஷேக் பச்சனை அழைத்தார். முதலில் காதில் வாங்காமல் சென்றுவிட்ட அபிஷேக்கை மீண்டும் அழைத்து அருகில் நிற்க வைக்க கொஞ்சம் முகம் வாடிய நிலையிலேயே அபிஷேக் பச்சன் போஸ் கொடுத்தார். சிறிது நேரம் போஸ் கொடுத்தவர் சட்டென யாரும் எதிர்பாராதபடி, ’இவரை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள்’ என ஐஸ்வர்யா ராயை தனியாக விட்டுவிட்டுச் சென்றுவிட செய்வதறியாமல் ஐஸ்வர்யா ராய் நிற்கிறார். பின் என்ன சொல்வதென தெரியாமல் தர்மசங்கடமான நிலையில் உதட்டைப் பிதுக்கிச் சிரித்துவிட்டு மன்னிப்பு கேட்பது போல சைகை செய்துவிட்டுச் செல்கிறார்.\nஇதற்கு தம்பதியை ஆதரித்தும் விமர்சித்தும் பல எதிர்வினைகள். ஆனால் யோசித்தால் கணவன் - மனைவிக்குள் சின்ன மனஸ்தாபங்கள் வருவதும் பின்னர் அது சரியாவதும் சாதாரண ஒன்று. தேவையில்லாமல் இந்த விஷயத்தை விமர்சனங்கள் அளவுக்குக் கொண்டு செல்வது அவசியமில்லை என்றே தோன்றுகிறது. குட்டிக்குட்டிச் சண்டைகள் தானே கணவன் - மனைவி உறவுக்கு மிகப்பெரிய பாலமாகவும், பலமாகவும் அமையும்\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\nமலேசியாவில் ‘மகா இந்து இளைஞர் ஒற்றுமை விழா’ நடக்க இருப்பதாகவும் அதில் கலந்துகொள்ள சூர்யா லட்சக் கணக்கில் பணம் கேட்டதாகவும் மலேசியா பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட இணையம் முழுக்க சூர்யாவை விமர்சித்து வருகிறார்கள், இதற்கு சூர்யா தற்போது மறுப்புக் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். Suriya's Answer for Malaysia Rumour Suriya's Answer for Malaysia Rumour | மலேசிய வதந்திக்கு சூர்யா பதில்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா\nநயன்தாரா கேரக்டருக்கு பாலிவுட் நடிகைகள் போட்டி\nஹாலிவுட்டிலும் போட்டி போடும் பாலிவுட் நடிகைகள்\nசென்னைக்குக் குடை பிடிக்கும் பாலிவுட்\nதற்கொலைக்கு மூன்று முறை முயன்றாரா பிரியங்கா சோப்ரா - பாலிவுட் பரபரப்பு - முழுத்தகவல்களுடன்\nமும்பை வீதிகளில் பாடல் பாடி 12 ரூபாய் பிச்சை எடுத்த பாலிவுட் பாடகர் யார்\n``சிவகார்த்திகேயன் பங்கமா கலாய்ப்பார்... மா.கா.பா எவ்வளவு கலாய்ச்சாலும் வாங்கிப்பார்..’’ - அத்தியாயம் 13\n\"25 சூப்பர் ஹீரோக்கள்... ஒரு சூப்பர் வில்லன் தேனோஸ்\n``கார்த்திக்... என்னை கல்யாணம் பண்ணிக்குவீங்களானு கேட்கணும்போல இருக்கு\" - விஜி சந்திரசேகர்\n\" 'சுந்தரபாண்டியன் 2' தயாரிக்கிறேன்; விஜய்சேதுபதி கேரக்டர்ல நடிக்கிறேன்\n\"ஆமாங்க... வருத்தப்படாத வாலிபர் சங்கம் நல்ல படம்தான்’’ - ‘விகடன் பிரஸ் மீட்’ சிவகார்த்திகேயன்\n“அடுத்த படத்தில் பெரிய ஹீரோதான்\nவிகடன் பிரஸ்மீட்: அஜித்திடம் என்ன பிடிக்காது விஜய்யிடம் என்ன பிடிக்கும்\nமிஸ்டர் கழுகு: பி.ஜே.பி மீது ரஜினி வருத்தம்\n\"வைகோ, சீமான் மோதல் வேதனை தருகிறது” - கலங்கும் திருமா\nஜெயித்தது தோனி... ஜெயிக்க வைத்தது கோலி... ஜஸ்ட் கோலி திங்ஸ்\nதிருடிய மொபைலை அன்லாக் செய்ய திருடர்கள் செய்யும் இன்னொரு திருட்டுத்தனம்... உஷார்\n'நிர்மலா தேவி வாழ்க்கையே ரகசியம்தான்'- காவியன் நகர் மக்கள் சொல்வது என்ன\nமெக்கானிக்குடன் சாலையில் நின்ற போலீஸார்... கதிகலங்கிப்போன இருசக்கர வாகன ஓட்டிகள்\nஜெயித்தது தோனி... ஜெயிக்க வைத்தது கோலி... ஜஸ்ட் கோலி திங்ஸ்\n``மன அழுத்தம் போக்க உங்களை நீங்கள் ஜெயிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்\n``லட்சியத்தை நோக்கி நகர்ந்துகொண்டே இருந்தால் மனஅழுத்தம் இல்லை. மனஅழுத்தம் போக்க உங்களை நீங்கள் ஜெயிக்கக் கற்க வேண்டும்’’ என்கிறார் எழுத்துச் சித்தர் பாலகுமாரன்.\nகருவளையத்தை மறைக்க மேக்கப் வேண்டாம்... இரும்புச்சத்து உணவு போதும்\nகருவளையத்தை மறைக்க மேக்கப் வேண்டாம். எந்தக் காரணத்தினால் உங்களுக்குக் கருவளையம் வந்திருக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டால் அதைச் சரி செய்வது சுலபம்..\nகொடைக்கானல் மெர்க்குரி ஆலை... அன்று நடந்ததும் இன்றைய நிலையும்\nஅவர்கள் குறைக்கவேண்டியதாக அரசு கூறிய மெர்க்குரி அளவு, உண்மையில் குறைக்கவேண்டிய அளவைவிட 20 மடங்கு அதிகம். இது யூனிலிவர் செலவைக் குறைப்பதற்காகச் செய்யப்பட்டது.\nவிகடன் பிரஸ்மீட்: அஜித்திடம் என்ன பிடிக்காது விஜய்யிடம் என்ன பிடிக்கும்\n“இந்த வேலைநிறுத்தம், இந்திய சினிமாவையே கோலிவுட் பக்கம் திருப்ப வெச்சிருக்கு. இதன் மூலமா...\nஜெ. கன்னத்திலிருந்த நான்கு புள்ளிகளும் அவிழாத முடிச்சுகளும்\nமரணத்துக்குப் பிறகு ஜெயலலிதா உடல் ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டபோது, ஜெ. கன்னத்தில் காணப்பட்ட நான்கு புள்ளிகள் குறித்துப் பெரும் சர்ச்சை எழுந்தது. அந்த நான்கு புள்ளிகள் குறித்த மர்ம முடிச்சுகளை அவிழ்ப்பதற்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முயற்சி செய்துள்ளது.\n\"வைகோ, சீமான் மோதல் வேதனை தருகிறது” - கலங்கும் திருமா\nகாவிரிப் பிரச்னை, எஸ.சி, எஸ்.டி வன்கொடுமைத் தடுப்பு சட்டம் ஆகியவற்றுக்கான போராட்டங்களில் மும்முரமாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kavishan.blogspot.com/2012/02/blog-post_9581.html", "date_download": "2018-04-26T13:06:04Z", "digest": "sha1:Y3IKXET6ABD7GVO5A5WBTKEQ5Z6JBT2U", "length": 9958, "nlines": 134, "source_domain": "kavishan.blogspot.com", "title": "தோனிக்கு குவியும் பாராட்டுகள் ~ ஈழம் செய்திகள்", "raw_content": "\nஒருநாள் போட்டிகளில் பின் வரிசையில் களமிறங்கி போட்டியை வென்று தரும் மேட்ச் வின்னராக இந்தியாவின் அணித்தலைவர் தோனி உள்ளார்.\nஒருநாள் கிரிக்கட்டில் வெற்றி நாயகனாக இருப்பது அவ்வளவு எளிதல்ல. ரன்ரேட் அதிகமாக தேவைப்படும், பின்வரிசையில் வரும் போது சீரான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாது.\nஎப்போதும் ஒரு நெருக்கடி இருந்து கொண்டே இருக்கும். இவை அனைத்தையும் மீறி இந்திய அணித்தலைவர் தோனி சிறப்பாக செயல்படுகிறார் என்றால் முதல் காரணம் இவரது கூல் பாணி தான்.\nதற்போதைய முத்தரப்பு தொடரில் கடைசி நேரத்தில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக சிக்சர் அடித்து வெற்றியை உறுதி செய்தார். இதே போன்று இலங்கைக்கு எதிராக 3 ஓட்டங்கள் எடுத்து போட்டி டை ஆக காரணமாக இருந்தார்.\nதோனியை பொறுத்தவரை இரண்டாவதாக துடுப்பெடுத்து ஆடும் போது அசத்துகிறார். சேஸ் செய்த போது 49 இன்னிங்சில் இவரது அபார ஆட்டம் வெற்றிக்கு கைகொடுத்தது.\nஇதில் 2 சதம், 14 அரைசதம் உட்பட 1993 ஓட்டங்கள் எடுத்துள்ளார். இதன் சராசரி 104.89 ரன்கள். இந்த 49 இன்னிங்சில் தோனி 30 முறை ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார்.\n200 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றுள்ள இவர், சேஸ் செய்த போது 50 முறை ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார். மொத்தம் இவர் எடுத்த 7 சதம், 44 அரைசதத்தில் பெரும்பாலானவை சேஸ் செய்த போது எடுத்தது தான்.\nஅணித்தலைவர், விக்கெட் கீப்பர், துடுப்பாட்ட வீரர் என்ற பணிகளுடன், போட்டியை வெற்றிகரமாக முடித்து தருவதிலும் தோனி கெட்டிக்காரராக உள்ளார்.\nஇதுகுறித்து இலங்கை அணியின் தலைவர் ஜெயர்வர்தனா கூறுகையில், அடிலெய்டு போட்டியில் ஒரு இன்ச் அளவில் போட்டியை எங்களிடம் இருந்து தோனி தட்டிப்பறித்தார். அமைதி மற்றும் நிதானமாக செயல்படும் குணம் இவரை வலிமையானவராக மாற்றியுள்ளது என்றார்.\nஅவுஸ்திரேலிய அணியின் தலைவர் மைக்கல் கிளார்க் கூறுகையில், தோனி அசத்தலான வீரர். புள்ளிவிவரங்களை பார்த்தால் இதைத் தெரிந்து கொள்ளலாம். மெக்கேயின் கடைசி ஓவரில் சிக்சர் அடித்தது மறக்க முடியாதது என்றார்.\nநீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.\nஇலங்கையின் ஏழாவது ஜனாதிபதி (1)\nஉலகத் தமிழர் பேரவை (1)\nசிறீலங்காவின் 7வது நாடாளுமன்ற தேர்தல் (12)\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (6)\nதலைமைச் செயலகம் தமிழீழம் (5)\nநாடு கடந்த அரசாங்கத் தேர்தல் (6)\nநாடு கடந்த அரசாங்கம் (57)\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கம் (1)\nநான் சாகலாம் நாங்கள் சாகக் கூடாது (11)\nபோர்குற்ற நாள் 2009 மே (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.south.news/wellness-tips-for-men-in-tamil/", "date_download": "2018-04-26T12:58:51Z", "digest": "sha1:FDDMM747JR4AOIRTLIQUZQZEEAAZDKC7", "length": 6072, "nlines": 85, "source_domain": "tamil.south.news", "title": "5 நிமிடங்களில் 95% உயிரணுவை உற்பத்தி செய்யும் நம்பமுடியாத உணவுகள்!", "raw_content": "\nமருத்துவம் 5 நிமிடங்களில் 95% உயிரணுவை உற்பத்தி செய்யும் நம்பமுடியாத உணவுகள்\n5 நிமிடங்களில் 95% உயிரணுவை உற்பத்தி செய்யும் நம்பமுடியாத உணவுகள்\nபுற ஊதாக் கதிர்களின் தாக்கம் அதிகமாக இருக்கும்போது ஆண்களுக்கு உயிரணு உற்பத்தி குறையும் என சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன. உயிரணுவின் உற்பத்தி குறைவாக இருப்பதை விட, அதன் கெட்டித்தன்மையும் குறையும். இருப்பினும் ஆண்கள் பயப்படத் தேவையில்லை. இப்பிரச்சினையை சரிசெய்ய நீங்கள் என்ன செய்ய வேண்டும் உடனடியாக உயிரணு உற்பத்தியை 95% வரை அதிகரிக்க எவ்வகை உணவை உண்ண வேண்டுமென பின்வரும் காலரில் தொடர்ச்சியாக கொடுத்துள்ளோம். படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.\n20 நிமிடத்திற்கு ஒரு முறை இயன்றளவுக்கு தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீர் குடிப்பதால் உடல் சூடு தணிந்து, புறஊதாக்கதிர்களின் தாக்கங்கள் குறைந்து உயிரணு உற்பத்தி ஆலையில் இதமான தட்பவெப்பம் நிலவும். அதன் கெட்டித்தன்மை மேம்படும். 93% உயிரணுக்களின் ஸ்திரத் தன்மையை நீங்கள் குடிக்கும் நீரின் அளவே தீர்மானிக்கிறது.\nசென்னையில் 24 மணி நேரத்தில் இதையெல்லாம் செய்யலாம்\nஇப்படி உங்களுக்கும் உடல் பருமன் குறையணுமா\nஇது போன்ற ‘பாடி’ வேண்டுமா இந்த டயட்டை ஃபாளோ பண்ணுங்க\nசென்னையில் 24 மணி நேரத்தில் இதையெல்லாம் செய்யலாம்\nவேலூரில் 48 மணி நேரத்தை எப்படி செலவிடலாம்\nஓட ஓட தெறிக்கவிட்ட சி.எஸ்.கே’; 400 அடிச்சாலும் ஜெயிக்க மாட்டாங்களா ஆர்.சி.பி\nஜெட் வேகத்தில் ஆண்மை பெருக இந்த கீரையை சாப்பிடுங்க\nமினிமம் பேலன்ஸ் இல்லாத கணக்குகளில் இருந்து ரூ.1,772 கோடி அபராதம் வசூலித்த எஸ்.பி.ஐ. வங்கி\nஆதார் அமைப்பை கைது செய்யுங்கள்… சர்ச்சையை கிளப்பிய ‘விக்கி லீக்ஸ்’ எட்வர்ட்\nஒவ்வொரு பட்ஜெட்டிற்கும் நிதியமைச்சர் அல்வா கிண்டுவது ஏன் தெரியுமா\nஉங்கள் உயிர்த்துளி மஞ்சள் நிறத்தில் வருகிறதா\nசிறுமியின் உடலுக்கு வெளியே வந்து துடிக்கும் இதயம்\nஆண்களே இந்த 5 டிப்ஸ ‘நச்’னு ஃபாளோ பண்ணுங்க… அப்புறம் பாருங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.arvloshan.com/2009/07/blog-post_20.html", "date_download": "2018-04-26T13:36:22Z", "digest": "sha1:CQMDQKPJQ5HFMHC3I3UDQIKZ46UATIFJ", "length": 40896, "nlines": 558, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: பூமிக்கு அழிவு?? நாளை மறுதினம் சுனாமி?? வருகிறது நிபிரு??", "raw_content": "\nஇப்போது கொஞ்ச நாளாக யாரைப் பார்த்தாலும்,எங்கே பார்த்தாலும் வருகின்ற 22ஆம் திகதி (நாளை மறுதினம்) வரப்போவதாக சொல்லப்படுகிற சுனாமி பற்றியும், 2012ஆம் ஆண்டு(21st Dec 2012) உலகம் அழியப் போவதாகவும் பரவும் வதந்தி (செய்தி என்றும் சொல்லலாம்) பற்றியுமே பர பர பேச்சும் அரட்டைகளும்.\nஉலக அழிவு பற்றி பல பதிவுகள் வந்து பயமுறுத்தி இருந்தாலும், நிபிரு (NIBIRU)என்ற பெயரால் உலகுக்கு வர இருக்கின்ற பேரழிவு பற்றி பெரிதாக நாம் யாருமே அறிந்திருக்கவில்லை.. அது பற்றி இந்தப் பதிவிலே சொல்லி இருக்கிறேன்.\nவழமை போலவே நான் இது பற்றிக் கொஞ்சமும் சட்டை செய்யவில்லை.. (எதைத் தான் சட்டை செய்தோம் )சுனாமி வந்தால் வருகிற நேரம் பார்க்கலாம் என்றும், உலகம் அழிந்தால் அழிந்த பிறகு அடுத்த நாள் யார் எஞ்சுவது என்று பிறகு கதைக்கலாம் என்றும் அடிக்கடி நான் கடிப்பதுண்டு..\nஆனால் இரண்டு மூன்று விஷயங்கள் உண்மையிலேயே சுனாமி வந்துவிடுமோ என்றும், உலகம் அழிந்துவிடுமோ என்றும் இப்போது என்னை அச்சப்பட வைக்கின்றன.\n22ஆம் திகதி ஏற்பட இருக்கின்ற முழு சூரிய கிரகணத்தால் புவிக் கீழ் தட்டுக்கள் அசையும் என்றும் அந்த அதிர்வில் உருவாகும் நில அதிர்வால் சுனாமி ஏற்படும் என்று நாசா(NASA) விடுத்துள்ள எச்சரிக்கை தான் முதலாவது விஷயம்.\nபொதுவாக நாசாவின் எதிர்வு கூறல்கள் தவறியது மிகக் குறைவு.. (சில நேரம் அவர்கள் எதுவுமே கூறாமல் இருப்பதும் எதிர்வு கூறல்கள் ஆகிவிடுகின்றது.)\nநாசா(NASA) என்ற அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிலையம் இந்த ஆண்டில் நிலாவில் (யாருன்னு கேக்காதீங்கப்பா.. சந்திரனை சொன்னேன்) கால் பதித்து நாற்பது பெருமை மிகு ஆண்டுகளைக் கொண்டாடிவரும் வேளையில்,(புளோரிடாவிலிருந்து அப்போல்லோ விண்கலம் சந்திரனுக்கு ஏவப்பட்ட நாற்பதாவது ஆண்டு நிறைவு தினம் கடந்த வியாழன்) நாசாவுடன் சம்பந்தப்பட்டதாக எழுந்துள்ள பரபரப்பு தான் இது.\nஅடுத்து காலம் தப்பிப் பெய்து வரும் மழையும்.. மணிக்கு மணி மாறிவரும் கால நிலையும்..\nஎந்த நேரம் மழை பெய்யும் எந்த நேரத்தில் கடும் வெயில் கொழுத்தும் என்று யாராலும் இங்கே சொல்ல முடியாமல் இருக்கிறது.\nகடந்த வாரத்தில் அடுத்தடுத்த மூன்று நாட்களில் இலங்கையில் மூன்று வெவ்வேறு இடங்களில் மினி சூறாவளிகள்(இவற்றை குழல் காற்று என்றும் சொல்கிறார்கள்) ஏற்பட்டு சேதங்கள் ஏற்பட்டன.\nஇவற்றுள் இரண்டு கரையோரப் பிரதேசங்களில்..(சிலாபம், குருநாகல்..) பின்னர் ஏற்பட்டது மலையக நகரான கண்டியில்.\nஇன்னுமொன்று இப்போது பெய்கின்ற மழையும் வீசுகின்ற காற்றும் அடிக்கடி திசை மாறுவது..\nவானில் ஏற்படுகிற வர்ண மாற்றங்கள்.. சில வேலை பகல் வேளையிலேயே இருட்டி பயங்கரமாக இருக்கும்.\nஇன்னுமொரு காரணம் உலகெங்கிலும் ஏற்படும் வான்வெளி விமான விபத்துக்கள்.. இவற்றுக்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும் வானிலை மாற்றங்களும் இதில் செல்வாக்கு செலுத்தி இருக்கும் என்பதை யாராலும் மறுக்க முடியாதே..\nநாளை சுனாமி வரும் என்று நான் இப்போது நம்புவதற்கு மிக முக்கியமான காரணம் - இலங்கை காலநிலை அவதான மையம் இலங்கைப் பக்கம் சுனாமி வரவே வராதுன்னு அடிச்சு சொல்றாங்க.\nஇவங்க எதை சொன்னாலும் மாறித்தானே நடக்கும்... அது தான் கொஞ்சம் முன்னெச்சரிக்கையா இருக்கிறது நல்லம் போல ...\nஎனினும் இரண்டு தளங்களை நான் பார்வையிட்ட போது இவற்றை எச்சரிக்கை தகவல்களாக உங்களோடும் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்று யோசித்தேன்..\nமுதலாவது சுட்டியை சொடுக்குங்கள்.. நாளை மறுதினம் வருவதாக சொல்லப்படும் சுனாமி பற்றி ஆராய்கிறது.\nஆங்கிலத்தில் இருந்து மொழிபெயர்த்து பதிவு இடுவதற்குள் மூச்சு வாங்கிவிடும்.. எனவே தயவு செய்து ஆங்கிலத்திலேயே படிச்சுங்கப்பா..\nசுனாமி வருவதாக இருந்தால் இலங்கை, இந்தியக் கரைகளை எட்டும் நேரம் பிற்பகல் மணி முதல் மணியாக இருக்கலாம்..\nஎனினும் இடை நடுவே இந்தோனேசிய தீவுக் கூட்டங்கள் இருப்பதால் முழு வேகத்தில் சுனாமி போல வராது என்று நம்பி இருக்கலாம்..\nகொஞ்சம் பயங்கரமான விஷயம் பற்றி ஆராய்கிறது.. 2012இல் ஏற்பட இருப்பதாக சொல்லப்படும் புவிக்கான பேரழிவு/ பூமியின் அழிவு பற்றி விரிவாக ,ஆதாரங்களுடன் விபரிக்கிறது.\nபொறுமையாக ஒவ்வொரு இணைப்பையும் தட்டிப் பார்த்து விஷயங்களைக் கிரகியுங்கள்.\nஅதிர்ந்து போவீர்கள்.. ஆச்சரியப்பட்டும் போவீர்கள்..\nபூமியை நோக்கி வருகிற நிபிரு பற்றி நாசா சொல்லி இருப்பது பார்த்த பிறகு எங்களுக்கு எஞ்சி இருக்கும் காலம் பற்றி எண்ண(count) ஆரம்பித்திருப்போம்...\nஉண்மையோ பொய்யோ.. இப்போதில்லை எனும் வரை ஒரு தற்காலிக ஆறுதல் தானே..\nஅழியும் வரை ஆனந்தமாக இருப்போம்..\nமற்றவர்களை அழ வைக்காமல் இருப்போம்.\nat 7/20/2009 01:18:00 PM Labels: NASA, Tsunami, அழிவு, இந்தியா, இலங்கை, காலநிலை, சுனாமி, நாசா, நிபிரு, பூமி, வானிலை\nவெற்றி எப்.எம் தெளிவான ஒளிபரப்புக்கு பின்வரும் முகவரியை அணுகவும்.\n//நாளை சுனாமி வரும் என்று நான் இப்போது நம்புவதற்கு மிக முக்கியமான காரணம் - இலங்கை காலநிலை அவதான மையம் இலங்கைப் பக்கம் சுனாமி வரவே வராதுன்னு அடிச்சு சொல்றாங்க.\nஇவங்க எதை சொன்னாலும் மாறித்தானே நடக்கும்...//\nஅப்போ நிச்சயம் வரும் அண்ணா....\nசரியான நேரத்தில் சரியான பதிவு அண்ணா..\nகெட்டவர் பலர் இருக்க எல்லோர்க்கும் சேர்த்தே அழியும் பூமின்னு தான் பாடனும் \nஎன்னவே எனக்கு இதில் நம்பிக்கை இல்லை எதுக்கும் இங்கையும் போய்பாருங்க..\n//உண்மையோ பொய்யோ.. இப்போதில்லை எனும் வரை ஒரு தற்காலிக ஆறுதல் தானே..\nஅழியும் வரை ஆனந்தமாக இருப்போம்..\nமற்றவர்களை அழ வைக்காமல் இருப்போம்.//\nகாலதிற்காக காதிருக்காமல் நல்லதை செய்வோம்\n நானும் ஏதோ ஜோதிடர் கிளப்பிவிட்ட வதந்தின்னு நினைச்சேன்.\nவடிவா கவனியுங்கோ. 22 அன்று பூம் அதிர்வு ஏற்பட்டால், அது சுனாமி ஏற்படும் அளவுக்கு வீரியமா இருந்தால் மட்டுமே இதெல்லாம் நடக்கும். ஆனால் டிசம்பர் 26, 2004 க்கு பின் பூமி நடுக்கம் பலமுறை ஏற்பட்டு விட்டது. சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டது. ஆகவே இதையெல்லாம் பொருட்படுத்தாமல் அவரவர் தம் வேலைகளை பார்ப்பது தான் நல்லது...:-)))\nஎது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது\nஎது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது\nஎது நடக்க போகிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்\nஅதனால் இந்த உலக அழிவு நடக்கும்\n//நாளை சுனாமி வரும் என்று நான் இப்போது நம்புவதற்கு மிக முக்கியமான காரணம் - இலங்கை காலநிலை அவதான மையம் இலங்கைப் பக்கம் சுனாமி வரவே வராதுன்னு அடிச்சு சொல்றாங்க. இவங்க எதை சொன்னாலும் மாறித்தானே நடக்கும்...//\n:) வெளிப்படையான உண்மை.. ஆனால் நடந்துவிட்டால் என்னவாதும்..\n\"அழியும் வரை ஆனந்தமாக இருப்போம்...........\"\nஏனுங்கோ, சுனாமி எதாச்சும் வந்ததுங்களா\nநீங்களும் இப்படி எழுதிறீங்களே லோஷன்.\nசாதாரண இயற்கை நிகழ்வுகளுக்கு அசாதாரண பிம்பம் ஏற்றி, காசு பார்க்கும் சில கூட்டங்களின் பிதற்றல்கள் இவை என்பவை உங்களுக்குப் புரியவில்லையா\nஐயா சுனாமி,பூகம்பம்,எரிமலை வெடிப்பு மற்றும் புயல்கள் வருவதன் உண்மைக்காரணம்\nநான் கடந்த 5-வருடங்களாக இவையெல்லாம் வந்தேதீரும் என்று ஆதரபூர்வமாக\nதயைகூர்ந்து எனது ஆதாரங்களைப் பார்க்க உங்களை வேண்டுகிறேன்.\nஅழியும் வரை ஆனந்தமாக இருப்போம்..\nமற்றவர்களை அழ வைக்காமல் இருப்போம்.//\nகாலதிற்காக காதிருக்காமல் நல்லதை செய்வோம்\nஅழியும் வரை ஆனந்தமாக இருப்போம்..\nமற்றவர்களை அழ வைக்காமல் இருப்போம்.//\nகாலதிற்காக காதிருக்காமல் நல்லதை செய்வோம்\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nலோஷன் - தொழிலால் சூரியனில் அறிவிப்பாளர் / பணிப்பாளர்.\nஅன்பு கொண்டோர் அனைவர்க்கும் நண்பன்.\nவாசிப்பதிலும் தமிழை நேசிப்பதிலும் ஆர்வமுடைய இயற்கையின் காதலன்.\nசிங்கப்பூரில் சிக்கிய சிங்கம்.. தொடர் பயணப் பதிவு....\nஆயிரத்தில் ஒருவனும் 1000 எதிர்பார்ப்புக்களும்\nசிங்கப்பூரில் சிக்கிய சிங்கம்.. தொடர் பயணப் பதிவு....\nசிங்கப்பூரில் சிங்கிளாய் இந்த சிங்கம்.... ஒரு தொடர...\nநானும் அறுவரும்.. ஒரு 'சுவாரஸ்ய' கதை\nஒரு அறிமுக சதமும் - இரு அதிர்ஷ்ட ஆரூடங்களும்\nசிங்கப்பூரில் சிங்கிளாய் இந்த சிங்கம்.... ஒரு தொடர...\n2011 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகளுக்கான லோகோ (LO...\nசிங்கப்பூரில் சிங்கிளாய் இந்த சிங்கம்.... ஒரு தொடர...\nசிங்கப்பூரில் சிங்கிளாய் இந்த சிங்கம்.... ...\nசிங்கப்பூரில் சிங்கிளாய் இந்த சிங்கம்.... ஒரு தொடர...\nஅதிர்ச்சி.. அசத்தல்.. இலங்கை வெற்றி.. பாகிஸ்தான் த...\nBreaking news - இலங்கை அணி அதிர்ச்சி வெற்றி...\n250வது பதிவு - ஃபெடரர் எனும் பெரு வீரன்\nஇலங்கையில் ஒரு விலை அதிகரிப்பு மோசடி\n'இருக்கிறமி'ல் லோஷனின் கிரிக்கெட் கட்டுரை...\nமைக்கல் ஜாக்சன் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்ய...\nஇலங்கைக்கு இடி.. முதல் டெஸ்டில் முரளி இல்லை...\nஅதிரடிகள் + ஆச்சரியங்கள் + அதிர்ச்சிகள் = Twenty 2...\nசங்ககார & கிரிஸ் கெயில் ஆஸ்திரேலியாவில் விளையாடவுள...\nகிரிக்கெட் கனவான் தன்மையைக் கறைப்படுத்திய கறுப்பு நாள் - அவுஸ்திரேலியக் கிரிக்கெட் மோசடி\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nசங்ககார & கிரிஸ் கெயில் ஆஸ்திரேலியாவில் விளையாடவுள்ளார்கள்\nசனத் ஜெயசூரிய - களிமண்ணாகிப் போன கறுப்புத் தங்கம்\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nஅரசியலுக்கு அப்பால் அசிங்கப்பட்ட ஆளுநரின் கை\nகந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா\nபிரபா ஒயின்ஷாப் – 23042018\nநிகராகுவா கலவரம்: பணக்காரர்களின் ரவுடித்தனம்\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\n79 வயதில் காமம் தவறில்லை.\nவிழியிலே மணி விழியிலே ❤️🎸 ஜொதயலி ஜொத ஜொதயலி 💕\nகிரிக்கெட் கனவான் தன்மையைக் கறைப்படுத்திய கறுப்பு நாள் - அவுஸ்திரேலியக் கிரிக்கெட் மோசடி\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nஇனிய தைப் பொங்கல் வாழ்த்துகள்\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nஅந்த கால பிலிம் பேர் விருது விழாவில் சில ஒளிக்காட்சிகள்-வீடியோ\n500, 1000 – மோசம் போனோமே\nஇறைவி - புரிந்ததும் புரியாததும்\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vanakkammalaysia.com/india1/14657-2018-04-12-10-35-03", "date_download": "2018-04-26T13:21:43Z", "digest": "sha1:CEIF7RARLKVMDLWJMC57W4HV4ZVZTYJE", "length": 15394, "nlines": 277, "source_domain": "www.vanakkammalaysia.com", "title": "எழுந்து நின்று பாடாததால் மேடையில் கர்ப்பிணி பாடகி சுட்டுக் கொலை!", "raw_content": "\nமலையாளப் பாடல் திறன் போட்டி: அனைவரும் பங்கேற்கலாம்\n1 எம்.டி.பி தலைமை நிர்வாக அதிகாரி அருள் கந்தா அரசியல் பிரவேசமா\nதேர்தல் அதிகாரிகள் பற்றிய போலித் தகவலை நம்பாதீர் \nகேவியசின் ராஜினாமா; தே.மு.விற்கு எவ்வித பாதிப்பும் இல்லை\nகடந்த தேர்தலை விட கூடுதலான வெற்றி: வாய்ப்பு பிரகாசம்\nவெளிநாட்டு வாக்காளர்கள்:வாக்குச் சீட்டுகளை எப்படி அனுப்புவீர்கள்\nரோஸ்மாவின் பிறந்தநாள் கேக்: அது போலிச் செய்தி\nகெந்திங் சாலையில் பேருந்து தீக்கிரை\nமஇகாவிலிருந்து காயத்ரி ரகுமூர்த்தி முற்றாக விலகல்\nமணமகன் பலி: திருமணப் பரிசாக வெடிகுண்டு பார்சல் அனுப்பிய கல்லூரி ஆசிரியர் கைது\nஐஸ்வர்யா ராய் ஓரங்கட்டப் படுவது ஏன்\nமழலைக் குரலில் ரசிகர்களை வசீகரித்த பாடகி எம்.எஸ். ராஜேஸ்வரி காலமானார்\nசிறுமி பலாத்காரம்: பிரபல சாமியார் ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் சிறை\nஇந்திய நாடாளுமன்றத்திலும் பாலியல் தொல்லையா\nஅக்சய் குமாரின் படப்பிடிப்பு தளத்தில் குண்டு வெடித்து கோரத் தீ விபத்து\nபாலியல் வழக்கில் பிரபல சாமியார் குற்றவாளி -இந்திய நீதிமன்றம் தீர்ப்பு தீர்ப்பு\nஎஸ் வி சேகருக்கு அடைக்கலம் தந்த கிரிஜா வைத்தியநாதன் மீது வழக்கு\nதமிழ் நடிகருக்கு 50 கோடி சம்பளமா\nபாலஸ்தீனர் ஸ்தாபாக்கில் சுட்டுக் கொலை: கொலையாளிகளின் படங்கள் வெளியீடு\nஅர்சனல் குழுவின் 22 ஆண்டு கால நிர்வாகி அர்செனி வெங்கர் விலகுகிறார்\n'இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி'யில் வடிவேலு நடிக்க மறுத்தது ஏன்\nகற்பழிப்புக்கு மரண தண்டனை ஒன்றே தீர்வு- வரலட்சுமி ஆவேசம்\nசினிமா வேலைநிறுத்தம்: சொந்த ஊரில் ஆடு மேய்க்கும் நடிகை\nகணவருடன் ரஷ்யாவில் குடியேறுகிறார் நடிகை ஸ்ரேயா\n விஜய் சேதுபதி மீது விஷாலின் நடவடிக்கை பாயுமா\nஏங்க, எத்தனை தடவை சொல்றது, 'மாட்டேன்., மாட்டேன். ' -சத்யராஜ் மகள் திவ்யா\nகமலுக்கு செம அதிர்ச்சி தந்த ஹாலிவுட் தயாரிப்பாளர் நோலன்\nஎழுந்து நின்று பாடாததால் மேடையில் கர்ப்பிணி பாடகி சுட்டுக் கொலை\nPrevious Article சிறுமி ஆசிபா பாலியல் படுகொலை: இந்தியா முழுவதும் அதிர்ச்சி அலை\nNext Article பாஜகவுக்காக நாடகமாடுகிறார் ரஜினி\nகராச்சி. ஏப் 12- இசைக்கச்சேரி நிகழ்ச்சி ஒன்றில் எழுந்து நின்று பாடாத கர்ப்பிணி பாடகி, சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பாகிஸ்தானில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபாகிஸ்தானில், சிந்து மாநிலத்தில் உள்ள வர்கானா பகுதியில் இசைக்கச்சேரி ஒன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதில் பாடகி சமீனா (வயது 24) என்பவர் பாடல் பாடிக் கொண்டிருந்தார். அப்போது பார்வையாளர்கள் மத்தியில் இருந்த தரிக் அகமது ஜடோய் என்பவர் சமோனை எழுந்து நின்று பாடுமாறு கூறியுள்ளார்.\nஆனால் தான் கர்ப்பிணி என்பதால் நின்று கொண்டு பாட முடியாது என அவர் மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த தரிக் அகமது தன்னிடம் இருந்த துப்பாக்கியினை எடுத்து சரமாரியாக சுட்டார். இதில் குண்டுகள் துளைத்த நிலையில் பாடகி சமோன் படுகாயம் அடைந்து வீழே விழுந்தார்.\nஅவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். அங்கு அவரை பரிசோதனை மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.\nஇது குறித்து அவரது கணவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தரிக் அகமதுவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇசைக் கச்சேரி நிகழ்ச்சியில் எழுந்து நின்று பாடாத கர்ப்பிணி பாடகி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் மக்களிடையே அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளன.\nPrevious Article சிறுமி ஆசிபா பாலியல் படுகொலை: இந்தியா முழுவதும் அதிர்ச்சி அலை\nNext Article பாஜகவுக்காக நாடகமாடுகிறார் ரஜினி\nமலேசிய கோடீஸ்வரரை தரக் குறைவாக பேசுவதா அமைச்சர் நஸ்ரிக்கு மசீச கடும் கண்டனம்\nம.இ.காவுக்கு 7 எம்பி, தொகுதிகள் மட்டுமே கோத்தராஜா - கேமரன்மலை கைநழுவுகிறதா\n9 நாடாளுமன்ற வேட்பாளர்கள் யார் யார்\n6 எம்.பி. தொகுதிகளில் மஇகா போட்டி\nஇந்திய தொழிலதிபரான ''டத்தோஶ்ரீ'யுடன் புகைப்படம்: பதிலடி தந்தார் லிம் குவான்\nமலையாளப் பாடல் திறன் போட்டி: அனைவரும் பங்கேற்கலாம்\n1 எம்.டி.பி தலைமை நிர்வாக அதிகாரி அருள் கந்தா அரசியல் பிரவேசமா\nதேர்தல் அதிகாரிகள் பற்றிய போலித் தகவலை நம்பாதீர் \nகேவியசின் ராஜினாமா; தே.மு.விற்கு எவ்வித பாதிப்பும் இல்லை\nகடந்த தேர்தலை விட கூடுதலான வெற்றி: வாய்ப்பு பிரகாசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vanakkammalaysia.com/malaysia/19-politics/9096-pr", "date_download": "2018-04-26T13:00:29Z", "digest": "sha1:LTKIFAQES3OX3VEH2TF72BUSJ3FBYSR7", "length": 19570, "nlines": 283, "source_domain": "www.vanakkammalaysia.com", "title": "ஜாகிரின் 'PR' அந்தஸ்தை ரத்தாக்க சுப்ரா என்ன செய்யப்போகிறார்? - குலா கேள்வி", "raw_content": "\nமலையாளப் பாடல் திறன் போட்டி: அனைவரும் பங்கேற்கலாம்\n1 எம்.டி.பி தலைமை நிர்வாக அதிகாரி அருள் கந்தா அரசியல் பிரவேசமா\nதேர்தல் அதிகாரிகள் பற்றிய போலித் தகவலை நம்பாதீர் \nகேவியசின் ராஜினாமா; தே.மு.விற்கு எவ்வித பாதிப்பும் இல்லை\nகடந்த தேர்தலை விட கூடுதலான வெற்றி: வாய்ப்பு பிரகாசம்\nவெளிநாட்டு வாக்காளர்கள்:வாக்குச் சீட்டுகளை எப்படி அனுப்புவீர்கள்\nரோஸ்மாவின் பிறந்தநாள் கேக்: அது போலிச் செய்தி\nகெந்திங் சாலையில் பேருந்து தீக்கிரை\nமஇகாவிலிருந்து காயத்ரி ரகுமூர்த்தி முற்றாக விலகல்\nமணமகன் பலி: திருமணப் பரிசாக வெடிகுண்டு பார்சல் அனுப்பிய கல்லூரி ஆசிரியர் கைது\nஐஸ்வர்யா ராய் ஓரங்கட்டப் படுவது ஏன்\nமழலைக் குரலில் ரசிகர்களை வசீகரித்த பாடகி எம்.எஸ். ராஜேஸ்வரி காலமானார்\nசிறுமி பலாத்காரம்: பிரபல சாமியார் ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் சிறை\nஇந்திய நாடாளுமன்றத்திலும் பாலியல் தொல்லையா\nஅக்சய் குமாரின் படப்பிடிப்பு தளத்தில் குண்டு வெடித்து கோரத் தீ விபத்து\nபாலியல் வழக்கில் பிரபல சாமியார் குற்றவாளி -இந்திய நீதிமன்றம் தீர்ப்பு தீர்ப்பு\nஎஸ் வி சேகருக்கு அடைக்கலம் தந்த கிரிஜா வைத்தியநாதன் மீது வழக்கு\nதமிழ் நடிகருக்கு 50 கோடி சம்பளமா\nபாலஸ்தீனர் ஸ்தாபாக்கில் சுட்டுக் கொலை: கொலையாளிகளின் படங்கள் வெளியீடு\nஅர்சனல் குழுவின் 22 ஆண்டு கால நிர்வாகி அர்செனி வெங்கர் விலகுகிறார்\n'இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி'யில் வடிவேலு நடிக்க மறுத்தது ஏன்\nகற்பழிப்புக்கு மரண தண்டனை ஒன்றே தீர்வு- வரலட்சுமி ஆவேசம்\nசினிமா வேலைநிறுத்தம்: சொந்த ஊரில் ஆடு மேய்க்கும் நடிகை\nகணவருடன் ரஷ்யாவில் குடியேறுகிறார் நடிகை ஸ்ரேயா\n விஜய் சேதுபதி மீது விஷாலின் நடவடிக்கை பாயுமா\nஏங்க, எத்தனை தடவை சொல்றது, 'மாட்டேன்., மாட்டேன். ' -சத்யராஜ் மகள் திவ்யா\nகமலுக்கு செம அதிர்ச்சி தந்த ஹாலிவுட் தயாரிப்பாளர் நோலன்\nஜாகிரின் 'PR' அந்தஸ்தை ரத்தாக்க சுப்ரா என்ன செய்யப்போகிறார்\nPrevious Article நியூஜென் பார்ட்டியின் பதிவு ரத்தா\nNext Article தேசிய முன்னணி ஒருபோதும் பினாங்கு மாநிலத்தைக் கைப்பற்ற முடியாது: லிம் குவான் எங்\nஈப்போ, ஏப்ரல்.20- சர்ச்சைக்குரிய இஸ்லாமிய சமயப் போதகர் ஜாகிர் நாயக்கிற்கு தரப்பட்டுள்ள நிரந்தர வசிப்பிட அந்தஸ்தை (PR status) ரத்து செய்வதற்கான அரசியல் விருப்பு, மலேசியா அரசாங்கத்திற்கு இருக்கிறதா என்று ஈப்போ பாராட் தொகுதி நாடாளுமன்ற உறுப்பின்ரான எம்.குலசேகரன் கேள்வி எழுப்பினார்.\nநேற்று கோலாலம்பூரில் நடந்த இந்திய இளைஞர்களுக்கான 2050-தேசிய உருமாற்றத்திட்ட கருத்தரங்கின் போது இளைஞர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்திருக்கும் மஇகா தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ சுப்ரமணியம், ஜாகிர் நாயக்கிற்கு மலேசியாவில் இடம் கிடையாது என்று குறிப்பிட்டிருக்கிறார்.\nஎதற்காக ஜாகிர் நாயக்கிற்கு அரசாங்கம் நிரந்தர வசிப்பிட உரிமையை அளித்திருக்கிறது என்று இளைஞர் ஒருவர் கேள்வி எழுப்பிபோது அதற்கு டத்தோஶ்ரீ சுப்ரா மேற்கண்டவாறு பதிலளித்து இருக்கிறார்.\nஇந்நாட்டில் இஸ்லாத்தின் முன்னேற்றத்திற்கு அவர் எத்தகைய பங்கினையும் அளிக்கப் போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.\nஎன்னைப் பொறுத்தவரை சுப்ராவின் இந்த விளக்கம் திருப்திகரமானதாக இல்லை. ஜாகிர் நாயக்கிற்கு தரப்பட்டுள்ள நிரந்த வசிப்பிட அந்தஸ்து விவகாரத்தில், சுப்ராவோ, மஇகாவோ அல்லது அரசாங்கமோ என்ன செய்யப்போகிறது என்பது பற்றித் திட்டவட்டமாகச் சொல்லவில்லை என்று ஜசெகவின் தேசிய உதவித் தலைவருமான குலசேகரன் தெரிவித்தார்.\nமக்களும் இந்திய சமுதாயமும் விரும்புவது, உடனடி நடவடிக்கைகளைத் தானே தவிர, வெறும் வார்த்தைகளையோ, விளக்கங்களையோ அல்ல என்பது சுப்ராவுக்கு தெரிந்திருக்க வேண்டும் என்றார் அவர்.\nஇது தொடர்பாக விடுத்துள்ள பத்திரிகை அறிக்கை ஒன்றில் தாம் சுப்ராவுக்காக மூன்று கேள்விகளை முன்வைப்பதாக குலசேகரன் சொன்னார். அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:\n1) பல்லாயிரக் கணக்கான நாடற்றவர்களுக்கும் சிவப்பு அடையாளக்கார்டு வைத்திருப்பவர்களும் நிரந்தர வசிப்பிட அந்தஸ்தும் அதனைத் தொடர்ந்து குடியுரிமை பெறும் வாய்ப்பும் மறுக்கப்பட்டிருக்கும் நிலையில் ஜாகிர் நாயக்கிற்கு மட்டும் ஏன் அத்தகைய சலுகை வழங்கப் பட்டிருக்கிறது\n2) ஜாகிருக்கு இத்தகைய அந்தஸ்து அளிக்கப்பட்டிருப்பது தொடர்பில் பிரதமருக்கும் உள்துறை அமைச்சருக்கும் மஇகா தனது அதிருப்தியை தெரிவித்திருக்கிறதா\n3) அமைச்சரவையில் இந்தப் பிரச்சனையைக் கிளப்பி, ஜாகிர் நாயக்கின் நிரந்தர வசிப்பிட அந்தஸ்தை ரத்து செய்யும் கோரிக்கை விடுப்பாரா\nநாட்டை விட்டு தலைமறைவாகிவிட்ட ஜாகிர் நாயக்கிற்கு எதிராக இந்திய அமலாக்கத்துறை பண பரிவர்த்தனை மோசடி தொடர்பில் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டியுள்ளது.\nஅதேவேளையில், பல சமயங்களைக் கொண்ட சரவாக்கில் ஜாகிர் நாயக்கை உள்ளே அனுமதிக்க மாட்டோம் என்று மாநில அரசு அறிவித்திருக்கிறது. அந்த வகையில் சரவா அரசியல் தலைவர்களை நான் பெரிதும் பாராட்டுகிறேன்.\nமலேசியாவில் நல்லெண்ணத்தை வளர்ப்பதற்கு ஜாகிர் நாயக், உதவக் கூடியவர் அல்லர் என்பதை உணர்ந்து மிகத் தெளிவான ஒரு நிலைப்பட்டை சரவா தலைவர்கள் எடுத்திருக்கிறார்கள். மேற்கண்டவாறு தம்முடைய அறிக்கையில் குலசேகரன் தெரிவித்துள்ளார்.\nPrevious Article நியூஜென் பார்ட்டியின் பதிவு ரத்தா\nNext Article தேசிய முன்னணி ஒருபோதும் பினாங்கு மாநிலத்தைக் கைப்பற்ற முடியாது: லிம் குவான் எங்\nமலேசிய கோடீஸ்வரரை தரக் குறைவாக பேசுவதா அமைச்சர் நஸ்ரிக்கு மசீச கடும் கண்டனம்\nம.இ.காவுக்கு 7 எம்பி, தொகுதிகள் மட்டுமே கோத்தராஜா - கேமரன்மலை கைநழுவுகிறதா\n9 நாடாளுமன்ற வேட்பாளர்கள் யார் யார்\n6 எம்.பி. தொகுதிகளில் மஇகா போட்டி\nஇந்திய தொழிலதிபரான ''டத்தோஶ்ரீ'யுடன் புகைப்படம்: பதிலடி தந்தார் லிம் குவான்\nமலையாளப் பாடல் திறன் போட்டி: அனைவரும் பங்கேற்கலாம்\n1 எம்.டி.பி தலைமை நிர்வாக அதிகாரி அருள் கந்தா அரசியல் பிரவேசமா\nதேர்தல் அதிகாரிகள் பற்றிய போலித் தகவலை நம்பாதீர் \nகேவியசின் ராஜினாமா; தே.மு.விற்கு எவ்வித பாதிப்பும் இல்லை\nகடந்த தேர்தலை விட கூடுதலான வெற்றி: வாய்ப்பு பிரகாசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kuppilan.yolasite.com/marana-ariviththal-27.php", "date_download": "2018-04-26T13:28:15Z", "digest": "sha1:QBOJHP2O7B3PPBD4WJ22JTBTXHBAGTL5", "length": 3940, "nlines": 28, "source_domain": "kuppilan.yolasite.com", "title": "முகப்பு", "raw_content": "\nபிந்திய மரண அறிவித்தலும், அந்தியேட்டி நிகழ்வும்...\nதிரு இளையதம்பி சுந்தரலிங்கம் (தெய்வம்)\nதோற்றம் : 23 பெப்ரவரி 1950 மறைவு : 07 ஏப்பிரல் 2011\nகுப்பிளானைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு இளையதம்பி சுந்தரலிங்கம் (தெய்வம்) அவர்கள் கடந்த 07.04.2011 வியாழக்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார் சரஸ்வதியின் (சரசி) அன்புக் கணவரும்,\nநாகேந்திரம், பாலசிங்கம் (குப்பிளான்), சுப்பிரமணியம் (வவுனியா), நவரத்தினம் (கிளிநொச்சி), செல்வம் (மாங்குளம்), துரைராசா, தவமணி (கனடா) ஆகியோரின் அருமைச் சகோதரரும்,\nசுமதி (இலண்டன்), சுரேஷ்குமார், அனுஷா, தனுஷா, சங்கீதா, உதயகுமார் (குப்பிளான்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,\nநந்தன், சசிகரன், சயந்தினி ஆகியோரின் தோழமைமிகு மாமனாரும்,\nவனுசன், வேணுகா, மயூரி, யன்சியா, அனுசன் ஆகியோரின் பிரியமான பேரனுமாவார்.\nஅன்னாரின் பூதவுடல் 07.04.2011 வியாழக்கிழமை அன்றே குப்பிளான் காடாகடம்பை மயானத்தில் எரியூட்டப்பட்டது..\nஇவ்வறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்...\nசரஸ்வதி (சரசி- மனைவி) - 0094 217 903 800\nமுகவரி - குருக்கள் ஒழுங்கை,\nஇன்றைய தினம் 07/05/2011 சனிக்கிழமை திரு இளையதம்பி சுந்தரலிங்கம் (தெய்வம்) அவர்களின் 31 ஆம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி நிகழ்வும் அன்னாரது குப்பிளான் இல்லத்தில் இடம்பெற்றது.\nஅன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வதுடன் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைபிரார்த்திக்கிறோம் - குப்பிளான் இணையத்தளம். http://www.newkuppilan.com/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://shaivam.org/thirumurai/eleventh-thirumurai/318/eleventh-thirumurai-adhiravadikal-mootha-pillaryar-thirumummanikkovai", "date_download": "2018-04-26T13:10:55Z", "digest": "sha1:P6CSGECOPGDNNMWXVXHZJZNPLQB4YVFW", "length": 21721, "nlines": 290, "source_domain": "shaivam.org", "title": "Shaivam", "raw_content": "\nபன்னிரு திருமுறை பன்னிரு திருமுறை\n :: நமது Shaivam.org-ன் இலவச Mobile App-ஐ அனைவரும் பயன்படுத்திக்கொள்வதுடன்; உற்றார்-உறவினர், நண்பர்கள், அடியார் பெருமக்களுக்கு பரிந்துரை செய்தும், நிறுவி (Install) கொடுத்தும் தமது தன்னார்வ பங்களிப்பை வழங்க வேண்டுகிறோம். நன்றி\n10. அதிரா அடிகள் பாசுரங்கள்\n10.1 அதிரா அடிகள் அருளிச் செய்த மூத்தபிள்ளையார் திருமும்மணிக்கோவை\n803. ஒருநெடுங் கங்கை இருங்குறும் பைம்புகர்\nமும்முகச் செந்நுதி நாலிணர் வெள்நிணக்\nகுடற்புலவு கமழும் அடற்கழுப் படையவன்\nமதலை மாமதந் துவன்றிய கதனுடைக்\nகடதடக் கபோலத் தோரிட மருப்பிற்\nகரண்டக உதரத்து முரண்தரு குழவிதன்\nயாவையும் இலமினி இருநிலத் திடையே. 1\n804 நிலந்துளங்க மேருத் துளங்க நெடுவான்\nதலந்துளங்கச் சப்பாணி கொட்டும் -கலந்துளங்கொள்\nகாமாரி ஈன்ற கருங்கைக் கடதடத்து\nமாமாரி ஈன்ற மணி. 2\n805 மணிசிந்து கங்கைதன் மானக் குருளையை வாள்அரக்கர்\nஅணிசிந்த வென்றஎம் ஐயர்க் கிளங்கன்றை அங்கரும்பின்\nதுணிசிந்த வாய்ப்பெய்த போதகத் தைத்தொடர்ந் தோர்பிறவிப்\nபிணிசிந்து கார்முளை யைப்பிடித் தோர்க்கில்லை பேதுறவே. 3\n806 பேதுறு தகையம் அல்லது தீதுறச்\nசெக்கர்க் குஞ்சிக் கருநிறத் தொக்கல் நாப்பண்\nமட்டுகு தெரியல் அடிமணந் தனமே. 4\n807 மேய கருமிடற்றர் வெள்ளெயிற்றர் திண்சேனை\nஓய மணியூசல் ஆடின்றே - பாய\nமழைசெவிக்காற் றுந்திய வாளமர்க்கண் எந்தை\nதழைசெவிக்காற் றுந்தத் தளர்ந்து. 5\n808 உந்தத் தளரா வளைத்தனம் முன்னம்மின் ஓடைநெற்றிச்\nசந்தத் தளரா ஒருதனித் தெவ்வர்தந் தாளிரியூர்\nவிந்தத் தளரா மருங்கிற் கிளிபெற்ற வேழக்கன்றின்\nமந்தத் தளரா மலர்ச்சர ணங்கள் வழுத்துமின்னே. 6\n809 மின்னெடுங் கொண்டல் அந்நெடு முழக்கத்து\nஓவற விளங்கிய துளைக்கைக் கடவுளை\nயாம்மிக வழுத்துவ தெவனோ அவனேல்\nபிறந்த திவ் வுலகின் பெருமூ தாதை\nஉரந்தரு சிரமரிந் தவற்கே வரைந்தது\nவாரிச் செல்வன் மகள்மகன் மொழியே. 7\n810 மொழியின் மறைமுதலே முந்நயனத் தேறே\nகழிய வருபொருளே கண்ணே -தெழிய\nகலாலயனே எங்கள் கணபதியே நின்னை\nஅலாதையனே சூழாதென் அன்பு. 8\n811 அன்பு தவச்சுற்று காரழல் கொண்டெயில் மூன்றெரிய\nவன்புத வத்துந்தை மாட்டுகின் றாம்மதஞ் சூழ்மருப்பிற்\nகன்பு தவக்கரத் தாளமிட் டோடிக் கடுநடையிட்\nடின்பு தவச்சென்று நீயன்று காத்த தியம்புகவே. 9\n812 கவவுமணிக் கேடகக் கங்கணக் கரவனா\nஅறைகழல் அவுணரொடு பொருத ஞான்றுநீள்\nபுழைக்கரம் உயிர்த்த அழற்பேர் ஊதை\nமஞ்சேறு கயிலை மலைகிழ வோயே. 10\n813 மலைசூழ்ந் திழிகின்ற மாசுணப்பொற் பாறை\nதலைசூழ்ந்து தானினைப்ப தொக்கும் - கலைசூழ்\nதிரண்டகங்கொள் பேரறிவன் திண்வயிற்றின் உம்பர்க்\nகரண்டகங்கொள் காலுயிர்க்குங் கை. 11\n814 காலது கையது கண்ணது தீயது கார்மதநீர்\nமேலது கீழது நூலது வெற்பது பொற்பமைதீம்\nபாலது தேனது தானது மென்மொழிப் பாவைமுப்பூண்\nவேலது வாளது நான்மறைக் கீன்ற விடுசுடர்க்கே. 12\n815 சுடர்ப்பிழம்பு தழைத்த அழற்றனி நெடுவேல்\nசேய்மூ வுலகம் வலம்வர வேயக்\nகொன்றையம் படலை துன்றுசடைக் கிடந்த\nஓங்கிருந் தாதையை வளாஅய் மாங்கனி\nவள்ளற் கிங்கென் மனங்கனிந் திடுமே. 13\n816 இக்கயங்கொள் மூவலயஞ் சூழேழ் தடவரைகள்\nதிக்கயங்கள் பேர்ந்தாடச் செங்கீரை - புக்கியங்கு\nதேனாட வண்டாடச் செங்கீரை ஆடின்றே\nவானாடன் பெற்ற வரை. 14\n817 பெற்றமெல் லோதி சிலம்பின் மகள்பெறப் பிச்சுகந்த\nமற்றவள் பிச்சன் மயங்கன்முன் னோன்பின் னிணைமைமிகக்\nகற்றவன் ஐயன் புறங்காட் டிடைநடம் ஆட்டுகந்தோ\nசெற்றவெண் தந்தத் தவன்நம்மை ஆட்கொண்டு செய்தனவே. 15\n818 செய்தரு பொலம்படை மொய்தரு பரூஉக்குருளை\nவெள்ளெயிறு பொதிந்த வள்ளுகிர்த் திரள்வாய்ப்\nமண்முழை வழங்கும் திண்முரண் ஏற்றின்\nபனையடர்ப் பாகன் றன திணையடி\nஇடும்பைப் பெளவம் இனிநீங் கலமே. 16\n819 அலங்கல் மணிகனகம் உந்தி அருவி\nவிலங்கல் மிசைஇழிவ தொக்கும் - பலங்கனிகள்\nஉண்டளைந்த கோன்மகுடத் தொண்கடுக்கைத் தாதளைந்து\nவண்டணைந்து சோரும் மதம். 17\n820 மதந்தந்த மென்மொழி மாமலை யாட்டி மடங்கல்கொன்ற\nமதந்தந்த முக்கண் ணரற்குமுன் ஈன்றவம் மாமலைபோல்\nமதந்தந்த கும்பக் குழவிமந் தாரப்பொன் னாட்டிருந்து\nமதந்தந்த செம்மலன் றோவையம் உய்ய வளர்கின்றதே. 18\n821 வளர்தரு கவட்டின் கிளரொளிக் கற்பகப்\nபொதும்பர்த் தும்பி ஒழிகின் றோச்சும்\nபாரிடைக் குறுநடைத் தோடி ஞாங்கர்\nமுழுவதும் விழுங்கிய முளைப்பனைத் தடக்கை\nஎந்தை அல்லது மற்று யாவுள\nசிந்தை செய்யும் தேவதை நமக்கே. 19\n822 கேளுற்றி யான்தளர ஒட்டுமே கிம்புரிப்பூண்\nவாளுற்ற கேயூர வாளரக்கர் - தோளுற்\nறறுத்தெறிந்து கொன்றழித்த அங்கயங்கண் மீண்டே\nஇறுத்தெறிந்து கொன்றழித்த ஏறு. 20\n823 ஏறு தழீஇயவெம் புத்தேள் மருகஎங் குந்தவள\nநீறு தழீஇயஎண் தோளவன் செல்வவண் டுண்ணநெக்க\nஆறு தழீஇய கரதலத் தையநின் றன்னைஅல்லால்\nவேறு தழீஇத்தொழு மோவணங் காத வியன்சிரமே. 21\n824 சிரமே, விசும்புபோத உயரி இரண்டசும்பு பொழியும்மே\nகரமே, வரைத்திரண் முரணிய விரைத்து விழும்மே\nபுயமே, திசைவிளிம்பு கிழியச் சென்று செறிக்கும்மே\nஅடியே, இடுந்தொறும் இவ்வுலகம் பெயரும்மே\nஆயினும், அஞ்சுடர்ப் பிழம்பு தழீஇ\nநெஞ்சகத் தொடுங்குமோ நெடும்பணைச் சூரே. 22\n825 சூர்தந்த பொற்குவட்டின் சூளிகையின் வானயிர்த்து\nவார்தந் தெழுமதியம் மன்னுமே - சீர்தந்த\nமாமதலை வான்மதியங் கொம்பு வயிறுதித்த\nகோமதலை வாண்மதியங் கொம்பு. 23\n(24முதல்30 வரையிலான திருப்பாடல்கள் கிடைக்கப் பெறவில்லை)\nபதினோராந் திருமுறை முதற் பகுதி\nபதினோராந் திருமுறை இரண்டாம் பாகம்\nதிருஆலவாய் உடையார் - திருமுகப் பாசுரம்\nகாரைக்கால் அம்மையார் - திருஆலங்காட்டு மூத்த திருப்பதிகம் - கொங்கை திரங்கி\nகாரைக்கால் அம்மையார் - திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம் - எட்டி இலவம்\nகாரைக்கால் அம்மையார் - திருஇரட்டை மணிமாலை\nகாரைக்கால் அம்மையார் அற்புதத் திருவந்தாதி - திருவந்தாதி\nஐயடிகள் காடவர்கோன் நாயனார் - திருக்கோயில் திருவெண்பா\nசேரமான் பெருமாள் நாயனார் - பொன்வண்ணத்தந்தாதி\nசேரமான் பெருமாள் நாயனார் - திருவாரூர் மும்மணிக் கோவை\nசேரமான் பெருமாள் நாயனார் - திருக்கயிலாய ஞானவுலா\nநக்கீரதேவ நாயனார் பாசுரங்கள் - கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி\nநக்கீரதேவ நாயனார் - திருஈங்கோய்மலை எழுபது\nநக்கீரதேவ நாயனார் - திருவலஞ்சுழி மும்மணிக்கோவை\nநக்கீரதேவ நாயனார் திருஎழுகூற்றிருக்கை - திருஎழுகூற்றிருக்கை\nநக்கீரதேவ நாயனார் பெருந்தேவபாணி - பெருந்தேவபாணி\nநக்கீரதேவ நாயனார் கோபப் பிரசாதம் - கோபப் பிரசாதம்\nநக்கீர தேவ நாயனார் - கார் எட்டு\nநக்கீர தேவ நாயனார் போற்றித் திருக்கலிவெண்பா - போற்றித் திருக்கலிவெண்பா\nநக்கீரதேவ நாயனார் திருமுருகாற்றுப்படை - திருமுருகாற்றுப்படை\nநக்கீரதேவ நாயனார் திருக்கண்ணப்பதேவர் திருமறம் - திருக்கண்ணப்பதேவர் திருமறம்\nகல்லாடதேவ நாயனார் பாசுரம் - திருக்கண்ணப்பதேவர் திருமறம்\nகபிலதேவ நாயனார் பாசுரங்கள் - மூத்த நாயனார் திருஇரட்டை மணிமாலை\nகபிலதேவ நாயனார் சிவபெருமான் திருஇரட்டை மணிமாலை - சிவபெருமான் திருஇரட்டை மணிமாலை\nகபிலதேவ நாயனார் - சிவபெருமான் திருவந்தாதி\nபரணதேவ நாயனார் பாசுரங்கள் - சிவபெருமான் திருவந்தாதி\nஇளம்பெருமான் அடிகள் பாசுரங்கள் - சிவபெருமான் திருமும்மணிக்கோவை\nஅதிரா அடிகள் பாசுரங்கள் - மூத்தபிள்ளையார் திருமும்மணிக்கோவை\nபட்டினத்துப் பிள்ளையார் பாசுரங்கள் - கோயில் நான்மணிமாலை\nபட்டினத்துப் பிள்ளையார் - திருக்கழுமல மும்மணிக் கோவை\nபட்டினத்துப் பிள்ளையார் - திருவிடைமருதூர் மும்மணிக்கோவை\nபட்டினத்துப் பிள்ளையார் - திருஏகம்பமுடையார் திருவந்தாதி\nபட்டினத்துப் பிள்ளையார் - திருவொற்றியூர் ஒருபா ஒருபது\nநம்பியாண்டார் நம்பி - திருநாரையூர் விநாயகர் திருஇரட்டை மணிமாலை\nநம்பியாண்டார் நம்பி - கோயில் திருப்பண்ணியர் விருத்தம்\nநம்பியாண்டார் நம்பி - திருத்தொண்டர் திருவந்தாதி\nநம்பியாண்டார் நம்பி - ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி\nநம்பியாண்டார் நம்பி - ஆளுடையபிள்ளையார் திருச்சண்பை விருத்தம்\nநம்பியாண்டார் நம்பி - ஆளுடைய பிள்ளையார் திருமும்மணிக்கோவை\nநம்பியாண்டார் நம்பி - ஆளுடையபிள்ளையார் திருவுலாமாலை\nநம்பியாண்டார் நம்பி - ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம்\nநம்பியாண்டார் நம்பி - ஆளுடைய பிள்ளையார் திருத்தொகை\nநம்பியாண்டார் நம்பி - திருநாவுக்கரசு தேவர் திருஏகாதசமாலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vakeesam.com/%E0%AE%90%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE.html", "date_download": "2018-04-26T13:23:36Z", "digest": "sha1:YQ4U22EUJYV4IJIYTYTTQPGX2WT3EYXS", "length": 6544, "nlines": 76, "source_domain": "www.vakeesam.com", "title": "ஐரோப்பிய ஒன்றியத்துக்கான மீன் ஏற்றுமதி தடை நீக்கம் – Vakeesam", "raw_content": "\nஹட்டனில் நில அதிர்வு – 05 வீடுகள் சேதம்\nதந்தை செல்வா நினைவுதினம் அனுஷ்டிப்பு\nஜ.தே.க முக்கிய பதவிகளில் மாற்றம் – பொதுச் செயலாளராக அகில விராஜ் காரியவசம்\n203 பட்டதாரிகள் நேர்முகத் தேர்விற்குத் தோற்றவில்லை \nயாழ் போதனா வைத்தியசாலையில் கழிவு வாய்க்கால்மேல் கன்ரீன் – மக்கள் விசனம்\nஐரோப்பிய ஒன்றியத்துக்கான மீன் ஏற்றுமதி தடை நீக்கம்\nin செய்திகள், முக்கிய செய்திகள் June 17, 2016\nஐரோப்பிய ஒன்றியத்தினால் (European Union – EU) இலங்கையின் மீன் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையை, அவ்வொன்றியம் முழுமையாக நீக்கியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.\nதகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் கலாநிதி ரங்க கலன்சூரிய இது குறித்து தெரிவிக்கையில், நேற்று (16) இரவு முதல் அமுலாகும் வகையில் குறித்த தடையை ஐரோப்பிய ஒன்றியம் நீக்கியுள்ளதாக தெரிவித்தார்.\nகடந்த ஏப்ரல் மாதம் இத்தடை நீக்கம் தொடர்பில் அறிவிக்கப்பட்டிருந்ததோடு, அது குறித்தான உத்தியோகபூர்வ முடிவை ஐரோப்பிய ஒன்றியம் தற்போது அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகடந்த அரசாங்க காலத்தில், 2014 ஒக்டோபர் மாதம் ஐரோப்பிய ஒன்றியத்தால் குறித்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.\nசர்வதேச கடல் எல்லை தொடர்பான நிர்வாகம், கட்டுப்பாடு, மேற்பார்வை போன்றவை தொடர்பில், இலங்கை ஒழுங்கற்று செயற்படுவதாக தெரிவித்தே குறித் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇதன் காரணமாக கடந்த வருடத்தின் (2015) முதல் 6 மாதம் வரை, சுமார் ரூபா 975 கோடி அந்நியச் செலாவணியை இலங்கை இழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஹட்டனில் நில அதிர்வு – 05 வீடுகள் சேதம்\nதந்தை செல்வா நினைவுதினம் அனுஷ்டிப்பு\nஜ.தே.க முக்கிய பதவிகளில் மாற்றம் – பொதுச் செயலாளராக அகில விராஜ் காரியவசம்\nஹட்டனில் நில அதிர்வு – 05 வீடுகள் சேதம்\nதந்தை செல்வா நினைவுதினம் அனுஷ்டிப்பு\nஜ.தே.க முக்கிய பதவிகளில் மாற்றம் – பொதுச் செயலாளராக அகில விராஜ் காரியவசம்\n203 பட்டதாரிகள் நேர்முகத் தேர்விற்குத் தோற்றவில்லை \nயாழ் போதனா வைத்தியசாலையில் கழிவு வாய்க்கால்மேல் கன்ரீன் – மக்கள் விசனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cinema.vikatan.com/movie-review/43883.html", "date_download": "2018-04-26T13:15:43Z", "digest": "sha1:6C7KATX2ULUNEF47OBRXZZFGULC2SOBV", "length": 20637, "nlines": 377, "source_domain": "cinema.vikatan.com", "title": "வஜ்ரம் - படம் எப்படி? | வஜ்ரம், தம்பி ராமையா, vajram, thambi ramaiya, கிஷோர்,", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nவஜ்ரம் - படம் எப்படி\nகுடும்பம் ஒற்றுமை, அடையாளத்துக்காகப் போராடின நாலு பசங்க, இப்போ கல்விக்காகப் போராடியிருக்காங்க.\nமலைக் கிராமம், அதுல கல்விக்காக தன்னையே அர்ப்பணிச்சு வாழ்ந்துட்டு இருக்கற தம்பி ராமையா, அவருகிட்ட வளர்ற நாலு பசங்க மற்றும் ஒரு பொண்ணு. அவரோட ஆசையான ஸ்கூலுக்கு பெரிய ஆபத்து வருது. யாரால, எப்படிங்கிறதும், அதை இந்த குட்டி ஆக்‌ஷன் ஹீரோக்கள் தடுத்தாங்களா என்பதும்தான் மீதி கதை.\nநாலு பேரும் ஆக்ஷன்ல புது அவதாரம் எடுத்துருக்காங்க. இருந்தாலும் படம் வன்முறை, பழிவாங்கல்னு சின்ன பசங்கள வேற டிராக்குக்கு கொண்டுபோற மாதிரியே இருக்கு. அவ்ளோ உயிர் சேதம், கொலை, பழிக்குப் பழின்னு படம் நெடுக குரோதம்தான். ஆனாலும், அடிச்சுப் பிடுங்கினாத்தான் கல்வி கிடைக்கும்ங்கற இன்னொரு உண்மையை ஏத்துக்கிட்டுதான் ஆகணும்.\n’அரசாங்கம் எடுத்து நடத்த வேண்டிய கல்வி தனியார்கிட்ட, தனியார் நடத்த வேண்டிய மதுவிற்பனை அரசாங்கத்து கையில’ - இப்படி தம்பி ராமையா அடி வயித்துலருந்து வசனம் பேசும்போது, இதெல்லாம் கேட்க இந்த நாட்ல ஆள் இல்ல சாமிங்கற வேதனைதான் வருது.\nநாலு பசங்களும் அடிச்சு விளையாண்ட்ருக்காங்க. தம்பி ராமையா போர்ஷன் சென்டிமென்ட் ரகம். அவரோட வேலையை சரியா செஞ்சுருக்காரு. வில்லன், வில்லியா ஜெயபிரகாஷ் - சனா செம கெமிஸ்ட்ரி. ரெண்டு பேரும் பீட் பண்ணி உருட்டி மிரட்டியிருக்காங்க.\nநல்ல கதைதான், ஆனாலும் கல்வியைத் தாண்டி டபுள் டோஸ் வன்முறையால படத்தோட மெசேஜ் காலியாயிடுது. திரும்பத் திரும்ப நீளமான சீன்கள், கெஸ் பண்ண வைக்கிற சீன்கள் - இப்படி படத்தில பல மைனஸ்கள். இயக்குநர் ரமேஷ் செல்வன் பசங்கள நம்பி மட்டுமே இறங்கியிருக்கறது அப்பட்டமா தெரியுது. ஜெயில் போர்ஷன் காமிச்ச விதம் அருமை.\nசீரியல் பாணி பின்னனி இசை இன்னும் படத்தோட போக்கை தொங்க வெச்சுருது. ஆக்ஷன் காட்சிகளுக்கு அப்ளாஸ் குடுக்கலாம். கல்விய வேற மாதிரி கேட்டாதான் கிடைக்கும்னு, ரொம்பவே வேற மாதிரி மெசேஜ் வெச்சுருக்காங்க.\n 'இந்தப் பசங்களுக்குள்ள என்னமோ இருக்கு' - இப்படி சொல்லிகிட்டே ஆக்‌ஷன் சரவெடியைப் பாக்கணும்னா பாக்கலாம்\n- சினிமா விகடன் குழு -\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n``சிவகார்த்திகேயன் பங்கமா கலாய்ப்பார்... மா.கா.பா எவ்வளவு கலாய்ச்சாலும் வாங்கிப்பார்..’’ - அத்தியாயம் 13\n\"25 சூப்பர் ஹீரோக்கள்... ஒரு சூப்பர் வில்லன் தேனோஸ்\n``கார்த்திக்... என்னை கல்யாணம் பண்ணிக்குவீங்களானு கேட்கணும்போல இருக்கு\" - விஜி சந்திரசேகர்\n\" 'சுந்தரபாண்டியன் 2' தயாரிக்கிறேன்; விஜய்சேதுபதி கேரக்டர்ல நடிக்கிறேன்\n\"ஆமாங்க... வருத்தப்படாத வாலிபர் சங்கம் நல்ல படம்தான்’’ - ‘விகடன் பிரஸ் மீட்’ சிவகார்த்திகேயன்\n\"வைகோ, சீமான் மோதல் வேதனை தருகிறது” - கலங்கும் திருமா\nவிகடன் பிரஸ்மீட்: அஜித்திடம் என்ன பிடிக்காது விஜய்யிடம் என்ன பிடிக்கும்\nநான் ரம்யாவாக இருக்கிறேன் - 21\n\"வைகோ, சீமான் மோதல் வேதனை தருகிறது” - கலங்கும் திருமா\nஜெயித்தது தோனி... ஜெயிக்க வைத்தது கோலி... ஜஸ்ட் கோலி திங்ஸ்\nதிருடிய மொபைலை அன்லாக் செய்ய திருடர்கள் செய்யும் இன்னொரு திருட்டுத்தனம்... உஷார்\n'நிர்மலா தேவி வாழ்க்கையே ரகசியம்தான்'- காவியன் நகர் மக்கள் சொல்வது என்ன\nமெக்கானிக்குடன் சாலையில் நின்ற போலீஸார்... கதிகலங்கிப்போன இருசக்கர வாகன ஓட்டிகள்\nஜெயித்தது தோனி... ஜெயிக்க வைத்தது கோலி... ஜஸ்ட் கோலி திங்ஸ்\n``மன அழுத்தம் போக்க உங்களை நீங்கள் ஜெயிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்\n``லட்சியத்தை நோக்கி நகர்ந்துகொண்டே இருந்தால் மனஅழுத்தம் இல்லை. மனஅழுத்தம் போக்க உங்களை நீங்கள் ஜெயிக்கக் கற்க வேண்டும்’’ என்கிறார் எழுத்துச் சித்தர் பாலகுமாரன்.\nகருவளையத்தை மறைக்க மேக்கப் வேண்டாம்... இரும்புச்சத்து உணவு போதும்\nகருவளையத்தை மறைக்க மேக்கப் வேண்டாம். எந்தக் காரணத்தினால் உங்களுக்குக் கருவளையம் வந்திருக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டால் அதைச் சரி செய்வது சுலபம்..\nகொடைக்கானல் மெர்க்குரி ஆலை... அன்று நடந்ததும் இன்றைய நிலையும்\nஅவர்கள் குறைக்கவேண்டியதாக அரசு கூறிய மெர்க்குரி அளவு, உண்மையில் குறைக்கவேண்டிய அளவைவிட 20 மடங்கு அதிகம். இது யூனிலிவர் செலவைக் குறைப்பதற்காகச் செய்யப்பட்டது.\nவிகடன் பிரஸ்மீட்: அஜித்திடம் என்ன பிடிக்காது விஜய்யிடம் என்ன பிடிக்கும்\n“இந்த வேலைநிறுத்தம், இந்திய சினிமாவையே கோலிவுட் பக்கம் திருப்ப வெச்சிருக்கு. இதன் மூலமா...\nஜெ. கன்னத்திலிருந்த நான்கு புள்ளிகளும் அவிழாத முடிச்சுகளும்\nமரணத்துக்குப் பிறகு ஜெயலலிதா உடல் ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டபோது, ஜெ. கன்னத்தில் காணப்பட்ட நான்கு புள்ளிகள் குறித்துப் பெரும் சர்ச்சை எழுந்தது. அந்த நான்கு புள்ளிகள் குறித்த மர்ம முடிச்சுகளை அவிழ்ப்பதற்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முயற்சி செய்துள்ளது.\n\"வைகோ, சீமான் மோதல் வேதனை தருகிறது” - கலங்கும் திருமா\nகாவிரிப் பிரச்னை, எஸ.சி, எஸ்.டி வன்கொடுமைத் தடுப்பு சட்டம் ஆகியவற்றுக்கான போராட்டங்களில் மும்முரமாக...\nகாக்கி சட்டை - படம் எப்படி\nமீண்டும் நடிப்பேன் - ஜெனிலியா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://chennaicity.info/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80/", "date_download": "2018-04-26T13:17:12Z", "digest": "sha1:VTAMKU3L7CRLMG2GHDKZU4JJ4EFN7TWE", "length": 8682, "nlines": 148, "source_domain": "chennaicity.info", "title": "பிரெஞ்ச் ஓபன் சூப்பர் சீரீஸ் பேட்மின்டன்: கிடாம்பி ஸ்ரீகாந்த் சாம்பியன் | Chennai City Info - 8122-044-044", "raw_content": "\nபாலியல் வன்கொடுமையில் ஆண் குழந்தைகள் பாதிக்கப்பட்டாலும் மரண தண்டனை அளிக்க வேண்டும்: மேனகா காந்தி ஆதரவு\nவிமானத்தில் ரூ2.6 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்\nHome news sports பிரெஞ்ச் ஓபன் சூப்பர் சீரீஸ் பேட்மின்டன்: கிடாம்பி ஸ்ரீகாந்த் சாம்பியன்\nபிரெஞ்ச் ஓபன் சூப்பர் சீரீஸ் பேட்மின்டன்: கிடாம்பி ஸ்ரீகாந்த் சாம்பியன்\nபாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் சூப்பர் சீரீஸ் பேட்மின்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் தங்கப் பதக்கம் வென்றார். இறுதிப் போட்டியில் ஜப்பானின் கென்டா நிஷிமோட்டோவுடன் நேற்று மோதிய ஸ்ரீகாந்த் 21-14 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார். இரண்டாவது செட்டிலும் அதிரடியாக விளையாடி புள்ளிகளைக் குவித்த அவர் 21-14, 21-13 என்ற நேர் செட்களில் மிக எளிதாக வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இப்போட்டி வெறும் 35 நிமிடத்திலேயே முடிவுக்கு வந்தது. நடப்பு சீசனில் அவர் வென்ற 4வது சூப்பர் சீரீஸ் பட்டம் இது. முன்னதாக அவர் இந்தோனேசியா, ஆஸ்திரேலியா மற்றும் டென்மார்க் ஓபன் சூப்பர் சீரீஸ் தொடர்களில் சாம்பியன் பட்டம் வென்று ஹாட்ரிக் சாதனை படைத்திருந்தார். தொடர்ச்சியாக 4வது சூப்பர் சீரீஸ் பட்டம் வென்றுள்ள அவர், ஆண்கள் ஒற்றையர் பிரிவு உலக தரவரிசையில் விரைவில் நம்பர் 1 இடத்துக்கு முன்னேறும் வாய்ப்பு உருவாகி உள்ளது. ஒரே சீசனில் 4 சூப்பர் சீரீஸ் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்துள்ளது. ஸ்ரீகாந்த் இதுவரை 6 சூப்பர் சீரீஸ் பட்டங்களை வென்றுள்ளார். பிரெஞ்ச் ஓபன் தொடரில் நட்சத்திர வீராங்கனைகள் சாய்னா நெஹ்வால், பி.வி.சிந்து ஏமாற்றமளித்த நிலையில், ஸ்ரீகாந்த் பட்டம் வென்றது இந்திய ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சாதனை வீரர் ஸ்ரீகாந்த்துக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.\nபிரெஞ்ச் ஓபன் சூப்பர் சீரீஸ் பேட்மின்டன்: கிடாம்பி ஸ்ரீகாந்த் சாம்பியன் http://www.dinakaran.com/News_Detail.aspNid=346980http://www.dinakaran.com/rss_news.asp\nதொடர் தோல்விகளால் விரக்தி பதவி விலகினார் டேர்டெவில்ஸ் கேப்டன் கம்பீர்\nஆசிய படகு போட்டி தமிழக வீரர் நீலானந்த் தேர்வு\nபாலியல் வன்கொடுமையில் ஆண் குழந்தைகள் பாதிக்கப்பட்டாலும் மரண தண்டனை அளிக்க வேண்டும்: மேனகா காந்தி ஆதரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://sivantv.com/videogallery/%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2/", "date_download": "2018-04-26T13:43:28Z", "digest": "sha1:SX5SJGHPL7ZKPZMS574CY6I2ITOHMAYW", "length": 7645, "nlines": 143, "source_domain": "sivantv.com", "title": "கூர்-நவசக்தி விநாயகர் ஆலய தேர்த்திருவிழா 11.06.2016 | Sivan TV", "raw_content": "\nபுங்குடுதீவு கிழக்கு கண்ணகைபுரம் ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்பாள் திருக்கோவில் வருடார்ந்த மகோற்சவம்\nHome கூர்-நவசக்தி விநாயகர் ஆலய தேர்த்திருவிழா 11.06.2016\nகூர்-நவசக்தி விநாயகர் ஆலய தேர்த்திருவிழா 11.06.2016\nகூர்-நவசக்தி விநாயகர் ஆலய தேர்த்திருவிழா 11.06.2016\nகூர்-நவசக்தி விநாயகர் ஆலய தேர்த்�..\nஓல்ரன் ஸ்ரீ மனோன்மணி அம்மன் கோவி�..\nயேர்மனி சுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்க..\nபேர்ன் ஸ்ரீ கல்யாணசுப்பிரமணியர் ..\nஓல்ரன் மனோன்மணி அம்மன் திருக்கோவ..\nஜெர்மனி - கெமஸ்பாக் ஸ்ரீ குறிஞ்சி�..\nஜெர்மனி - வூப்பெற்றால் ஸ்ரீ நவதுர�..\nஜெர்மனி - ஹம் ஸ்ரீ காமாட்சி அம்பாள..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் வர�..\nசுவிஸ் – நலவாழ்வு அமைப்பின் மருந�..\nசுவிஸ் - நலவாழ்வு அமைப்பின் மருந்�..\nபேர்ன் – ஞானலிங்கேசுரர் திருக்கோ..\nபேர்ன் – ஞானலிங்கேசுரர் திருக்கோ..\nபேர்ன் – ஞானலிங்கேசுரர் திருக்கோ..\nபேர்ன் - ஞானலிங்கேசுரர் திருக்கோ�..\nசூரிச் ஹரே கிருஷ்ண ஆலய கிருஷ்ண ஜெ�..\nபேர்ண் - ஞானலிங்கேசுரர் திருக்கோ�..\nசுவெற்ரா கனகதுர்க்கா அம்பாள் ஆலய..\nசுவிற்சர்லாந்து - ஓல்ரன் அருள்மி�..\nதூண்- ஸ்ரீ சீரடிசாயிபாபா மன்றத்த�..\nதூண்- ஸ்ரீ சீரடிசாயிபாபா மன்றத்த�..\nமர்த்தினி - வலே ஞானலிங்கேச்சுரர் �..\nபேர்ண் - ஞானலிங்கேசுரர் திருக்கோ�..\nபேர்ண் - ஞானலிங்கேசுரர் திருக்கோ�..\nபேர்ண் - ஞானலிங்கேசுரர் திருக்கோ�..\nபேர்ண் – ஞானலிங்கேசுரர் திருக்கோ..\nகனடா- மிசிசாகா ஜெயதுர்க்கா தேவஸ்�..\nபேர்ண் - ஞானலிங்கேசுரர் திருக்கோ�..\nபேர்ண் - ஞானலிங்கேசுரர் திருக்கோ�..\nசுவிஸ் - கூர் நவசக்தி விநாயகர் கோவ..\nயாழ் இந்து பாலர்களின் காத்தவராயன..\nஉரும்பிராய் – ஓடையம்பதி கற்பக விநாயகர் திருக்கோவில் எட்டாம் நாள் பகல் திருவிழா – 13.06.2016\nஊர்காவற்துறை – புளியங்கூடல் – செருத்தனைப்பதி ஸ்ரீ இராஜமகாமாரி அம்மன் கோவில் 6ம் நாள் பகல் திருவிழா – 15.06.2016\nபுங்குடுதீவு - கிழக்கு - கண்ணகைப�..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=20605&Cat=3", "date_download": "2018-04-26T13:02:06Z", "digest": "sha1:NGPNQYREY2CL3AAWI3ZQ566AI3QLMN6O", "length": 8782, "nlines": 86, "source_domain": "www.dinakaran.com", "title": "பாம்பே காஜா | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > பிரசாதம்\nமைதா மாவு - 300 gm\nசர்க்கரை - 750 gm\nகார்ன் மாவு (சோள மாவு) - 3 டேபிள் ஸ்பூன்\nஆரஞ்சு கலர் - 1/4 டீஸ்பூன்\nநெய் - 2 டேபிள் ஸ்பூன்\nrefined எண்ணை - 1/2 லிட்டர் (பொரிக்க)\nடேபிள் சால்ட் - ஒரு சிட்டிகை.\nமைதா மாவை சிறிது தண்ணீர் தெளித்து, டேபிள் சால்ட் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும். கார்ன் மாவு நெய் இரண்டையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். பிறகு பிசைந்து வைத்த மைதா மாவை இரண்டு அல்லது மூன்று அப்பளமாக மேல்லியதாக இட்டுக் கொள்ள வேண்டும். கார்ன் மாவு நெய் கலவையை அப்பளங்களின் ஒரு புறம் முழுமையாக தடவி கொள்ளவும். பின் அப்பளங்களை மேல்லியதாக சுருட்டிக் கொள்ளவும் (ரோல்) . ரோல் செய்த அப்பளங்களை வேண்டிய அளவுக்கு சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும் (பாம்பே காஜாவின் அளவு துண்டுகளின் அளவை பொருத்தது). வெட்டிய துண்டுகளை மீண்டும் மெல்லிய அப்பளங்களாக இட்டுக் கொள்ளவும். அப்பளத்தை பாதியாக வெட்டி ஒவ்வொரு பாதியையும் இரண்டாக மடித்துக் கொள்ளவும் (முக்கோணமாக).\nமுக்கோணங்களை அடுப்பில் இருக்கும் எண்ணெயில் (அடுப்பு சிம்மில் இருக்க வேண்டும் ) போட்டு பொரித்து எடுக்கவும். பொரித்து எடுத்த பாம்பே காஜாக்களை தயாராக வைத்திருக்கும் சர்க்கரை பாகில் போட்டு ஒரு நிமிடம் பொரித்து எடுத்து தனியாக வைக்கவும். சர்க்கரை பாகு வைக்க : பாம்பே காஜாவிற்கு இரண்டு கம்பி பதம் பாகு நீர்க்க இருக்க வேண்டும். சர்க்கரை முழுகும் அளவுக்கு தண்ணீர் விட்டு, ஆரஞ்சு கலர் சேர்த்து மிதமான சூட்டில் கனமான பெரிய பாத்திரத்தில் கொதிக்க விடவும். பாகை விரலில் தொட்டுப் பார்க்கும் போது இரண்டு நூலாக வரும் போது அடுப்பை அணைக்கவும். பாம்பே காஜா போட்டு எடுக்கும் போது சர்க்கரை பாகு இறுக இறுக சிறிது வெந்நீர் சேர்த்துக் கொள்ளவும்.\nவரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nஎய்ம்ஸ் அமைவதில் என்ன சிக்கல் இயற்கையிடம் இருக்கிறது எல்லாவற்றுக்குமான தீர்வு\nசென்னையில் நடைபெற்ற இடைநிலை ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம் வாபஸ்..\nஇந்தோனேஷியாவில் எண்ணெய் கிணற்றில் தீ : 21 பேர் பரிதாப பலி\nஹவாய் தீவு அருகே உள்ள எரிமலையில் சீற்றம்...ஆறாக ஓடும் எரிமலைக் குழம்பு\nபெர்லிங்கில் சர்வதேச ஏரோஸ்பேஸ் கண்காட்சி : பல்வேறு நாடுகளின் புதுமையான கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன\nஉத்தரப்பிரதேச மாநிலம் குஷிநகரில் பள்ளிப்பேருந்து மீது ரயில் மோதிய விபத்தில் 11 மாணவர்கள் உயிரிழப்பு\nகோவையில் பல இடங்களில் சூறைக்காற்றுடன் பலத்த மழை\nபேராசிரியை நிர்மலாதேவியிடம் விசாரணை நிறைவு\nகொடைக்கானலில் மே 19ல் மலர் கண்காட்சியுடன் கோடை விழா : ஆட்சியர் வினய்\nமாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி சீனா பயணம்\n2019 பாராளுமன்ற தேர்தல் வரை காவிரி மேலாண்மை வாரியம் அமையாது: டி.டி.வி\nசென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் நடத்திய தொடர் உண்ணாவிரத போராட்டம் வாபஸ்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.techtamil.com/computer-tips-tricks-in-tamil/youtube-%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A/", "date_download": "2018-04-26T13:10:19Z", "digest": "sha1:ZSSRVX74IQLYNBT6QKEUCQ4FV4WUAMWA", "length": 10759, "nlines": 134, "source_domain": "www.techtamil.com", "title": "YOUTUBE-ல் இந்திய தொலைக்காட்சி சீரியல்கள் – TechTamil News", "raw_content": "\nContact / அறிமுகம் / தொடர்புக்கு\nYOUTUBE-ல் இந்திய தொலைக்காட்சி சீரியல்கள்\nYOUTUBE-ல் இந்திய தொலைக்காட்சி சீரியல்கள்\nசினிமா மற்றும் தொலைக்காட்சி பார்ப்தவர்களே இல்லை என்று குறிப்பிடும் அளவிற்கு தொழில்நுட்ப சாதனங்கள் நம்மிடையே ஊடுருவியுள்ளது. குறிப்பாக வீட்டினில் இருக்கும் பெண்கள் தொலைக்காட்சி சீரியல்களுக்கு அடிமையாகி விட்டனர் என்று சொல்லும் அளவிற்கு அவர்களிடம் சீரியல்கள் சென்றடைந்துள்ளது. வீடியோக்களின் தகவல் களஞ்சியமான YOUTUBE தளத்தில் சுமார் 19,000 க்கும் அதிகமான இந்திய தொலைக்காட்சி சீரியல் வீடியோக்கள் கொட்டி கிடப்பதாக YOUTUBE தளம் அறிவித்து உள்ளது. மின்சார பிரச்சினையால் சீரியல்களை தவற விட்டாலோ அல்லது பழைய episode-களை பார்க்க விரும்பினாலோ இனி YOUTUBE தளத்தில் சென்று உங்களுக்கு விருப்பமான பகுதிகளை பார்த்து கொள்ளலாம்.\nமுடிந்து போன சீரியல்களின் முழு தொகுப்பும் இங்கு உள்ளது. இந்திய மொழிகளில் சுமார் 6 மொழிகளில் தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் நிகழ்சிகளை கண்டு களிக்கலாம்.\nYou tube வீடியோக்களில் விளம்பரங்களை தவிர்க்க...\nஇணையத்தில் வீடியோக்களை பார்க்க பெரும்பாலானவர்கள் உபயோகிப்பது Youtube தளம். தினமும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள இந்த தளத்தில் புதிதாக upload செய்யப்படுகிற...\nYoutube-ல் சூப்பர் ஹிட் திரைப்படங்களை இலவசமாக காண...\nஇணையத்தில் வீடியோக்களை பகிர்ந்து கொள்ளும் தளமான YOUTUBE தற்போது இன்னொரு புதிய சேவையை துவக்கி உள்ளது. Youtube Boxoffice என்ற புதிய பகுதியை துவக்கி உள்ள...\nமுடக்கப்பட்ட YOUTUBE வீடியோக்களை காண உதவும் பயனுள்...\nYOUTUBE தளத்தில் நமக்குத் தேவையான எந்த வீடியோவையும் பார்க்க முடியும். தேவையெனில் வேண்டிய வீடியோவினை பதிவேற்றமும்/பதிவிறக்கமும் செய்து கொள்ளவும் முடியு...\nவளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில் மனிதன் தினம் தினம் பல்வேறு முயற்சிகளையும் சோதனைகளையும் செய்து பல அறிய சாதனைகளை நிகழ்த்தி வருகிறான். பூமியில் ஆராய்ச...\nYoutube for Schools பள்ளி/கல்லூரி மாணவர்களுக்கான ப...\nஇணையத்தில் நல்ல செய்திகளோடு கெட்ட செய்திகளும் இணைந்தே தான் இருக்கின்றன. இணையத்தில் பள்ளி மாணவர்களுக்கு கல்வி சார்ந்த வீடியோக்களை பார்ப்பதன் மூலம் குறி...\nYoutube வீடியோக்களை தரவிறக்கம் செய்வதற்கு...\nபல்வேறு இணையதளங்கள் மற்றும் மென்பொருள்கள் உதவியுடன் Youtube வீடியோக்களை MP3, MP4 வடிவில் தரவிறக்கம் செய்யலாம். இருப்பினும் மிக எளிதாக ஒரே cli...\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nஅனைத்து மென்பொருள்களையும் கணினியில் நிறுவுவதற்கு இணையதளம்\n​பயர்பாக்ஸ் v55 பதிப்பால் 1691 டேப்களை 15 வினாடிகளில் ரீலோட் செய்யமுடியும்.\n500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது:பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு :\nமொபைல் வழியே இணைய தளத்தில் பார்க்கும் தகவல்களை pdf கோப்புகளாக மாற்றுவது எப்படி\nயூ -டியூப் உங்கள் மொபைல் டேட்டாவை மிச்சப்படுத்தும் புது வழியை காட்டுகிறது …\nகிரெடிட் கார்டோ டெபிட் கார்டோ இல்லாமலே வாகன சேவை:\nகூகுளின் DUO – VEDIO CALLING செயலி அறிமுகம்:\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nYoutube-ல் சூப்பர் ஹிட் திரைப்படங்களை இலவசமாக காண\nYou tube வீடியோக்களில் விளம்பரங்களை தவிர்க்க\nYoutube வீடியோக்களை தரவிறக்கம் செய்வதற்கு\nYoutube for Schools பள்ளி/கல்லூரி மாணவர்களுக்கான பயனுள்ள…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vakeesam.com/%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D.html", "date_download": "2018-04-26T13:10:24Z", "digest": "sha1:4UWFSSHUD5HKRQJ5VAW2I7FIE4F2GUZW", "length": 9214, "nlines": 75, "source_domain": "www.vakeesam.com", "title": "அஜித்தின் கடின உழைப்பைப் பார்த்து ஆச்சர்யப்பட்டேன்! – விவேக் ஓபராய் – Vakeesam", "raw_content": "\nஹட்டனில் நில அதிர்வு – 05 வீடுகள் சேதம்\nதந்தை செல்வா நினைவுதினம் அனுஷ்டிப்பு\nஜ.தே.க முக்கிய பதவிகளில் மாற்றம் – பொதுச் செயலாளராக அகில விராஜ் காரியவசம்\n203 பட்டதாரிகள் நேர்முகத் தேர்விற்குத் தோற்றவில்லை \nயாழ் போதனா வைத்தியசாலையில் கழிவு வாய்க்கால்மேல் கன்ரீன் – மக்கள் விசனம்\nஅஜித்தின் கடின உழைப்பைப் பார்த்து ஆச்சர்யப்பட்டேன்\nவிவேகம் ரிலீஸுக்காக காத்துக் கொண்டிருக்கிறது ஒட்டுமொத்த அஜித் ரசிகர் கூட்டமும். திரையரங்குகள் எங்கும் பேனர்கள், போஸ்டர்கள், கட் அவுட்டுகள் என விவேகத்தை பிரமாண்டமாக வரவேற்க தயாராகிவிட்டனர். நிச்சியமாக படம் ரிலீஸான பிறகு சில வசூல் சாதனைகளை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇது ஒருபுறமிருக்க இப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து பேட்டியளித்துள்ளார் பாலிவுட் நடிகர் விவேக் ஒபராய். அவர் கூறியதாவது, “இயக்குநர் சிவா என்னை சந்தித்து கதை சொன்னபோது 15 நிமிடங்கள் தான் கேட்டேன். போதும், நான் நடிக்கிறேன் என சொல்லி விட்டேன். மொத்த கதையையும் கேட்காமல் நான் எடுத்த முடிவு சரி தான் என்பதை விவேகம் நிரூபித்து விட்டது. தமிழ் மொழியில் பேசி நடிப்பது தான் கொஞ்சம் சிரமமாக இருந்தது. போக போக அதுவும் சரியாகிவிட்டது.\nபடத்தில் என் கதாபாத்திரத்தின் பெயர் ஆர்யன். அஜித்தின் நண்பனாக நடித்திருக்கிறேன். எல்லோரும் இது ஹாலிவுட் படம் போல இருப்பதாக சொல்கிறார்கள். அப்படியில்லை, விவேகம் ஹாலிவுட் தரத்தில் உருவாகியிருக்கும் தமிழ் படம். என் வசனங்களை தங்கிலீஷில் எழுதி, மனப்பாடம் செய்து பேசிதான் நடித்தேன்.\nஅஜித் அண்ணாவை முதல் முறை பல்கேரியாவில் சந்தித்தேன். இந்த படத்தில் நான் நடிக்க ஓகே சொன்னதற்கு நன்றி என்றார். இந்த படத்தில் நடிப்பது எனக்கு தான் பெருமை என்று நான் சொன்னேன். படப்பிடிப்பில் எல்லோரிடமும் இனிமையாக பழகுவார் அஜித் அண்ணா. அஸிஸ்டெண்ட் உட்பட அனைவருக்கும் எந்த ஈகோவும் இல்லாமல் டீ ஊற்றி கொடுப்பார். அவருடன் நடிப்பதை கேள்விப்பட்ட என் உறவினர்கள் மிகவும் சந்தோஷப்பட்டனர். சமூக வலைத்தளங்களில் அஜித் ரசிகர்கள் மற்றும் என் ரசிகர்களால் எனக்கு கிடைத்த வரவேற்பு மிகவும் மகிழ்ச்சி அளித்தது.\nமைனஸ் 17 டிகிரி குளிரில் பல்கேரியாவில் நாங்கள் படப்பிடிப்பு நடத்தினோம். 4 கோட் போட்டுக் கொண்டு நடித்த எனக்கே குளிர் தாங்கவில்லை. வசனங்கள் பேச மிகவும் கஷ்டப்பட்டேன். அதிலும் அஜித் அண்ணா வெற்று உடம்போடு நடித்தார். காலை 5 மணிக்கு ஹோட்டலில் எல்லோரும் தூங்கிக் கொண்டிருப்பார்கள். நான் எழுந்து போய் பார்த்தால் ஜிம்மில் அஜித் மட்டும் வொர்க் அவுட் செய்து கொண்டிருப்பார். எவ்வளவு அர்ப்பணிப்பு இருந்தால் இப்படி கடுமையான உழைப்பை கொடுக்க முடியும்” என்றார்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி திரையுலம் போராட்டம்\nதென்னிந்திய திரைப்பட நடிகரான கணேஷ் யாழ் வருகை\nஎங்க வீட்டு மாப்பிள்ளை – நிகழ்ச்சியின் இரகசியங்களை வெளியிடப்போவதாக ஸ்ரேயா தகவல்\nஹட்டனில் நில அதிர்வு – 05 வீடுகள் சேதம்\nதந்தை செல்வா நினைவுதினம் அனுஷ்டிப்பு\nஜ.தே.க முக்கிய பதவிகளில் மாற்றம் – பொதுச் செயலாளராக அகில விராஜ் காரியவசம்\n203 பட்டதாரிகள் நேர்முகத் தேர்விற்குத் தோற்றவில்லை \nயாழ் போதனா வைத்தியசாலையில் கழிவு வாய்க்கால்மேல் கன்ரீன் – மக்கள் விசனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://devapriyaji.wordpress.com/2010/06/21/idol-lifters/", "date_download": "2018-04-26T13:40:17Z", "digest": "sha1:QCOEQ3XZ6T6WSBJQB4JWBJSSBYTW7WVN", "length": 8417, "nlines": 93, "source_domain": "devapriyaji.wordpress.com", "title": "சிலைகளைத் திருடும் கிறிஸ்துவ பாதிரியார் | தேவப்ரியா", "raw_content": "\nபைபிள்-குலைக்கப் படுகிறதா -அகழ்வாய்வு உண்மைகளில்\nஉலகம் அழியப்போவது என் -நம் வாழ்நாளிலே- இயேசு சிறிஸ்து\nபுனித தோமா -புனித தோமையர் கட்டுக்கதைகள்\n← பாதிரியராக மாறிய கணவரை சேர்த்து வைக்க கோரி பெண் மனு\nசர்ச்சினுள் பெண்ணை கற்பழிக்கப் பார்த்த பாதிரியார் கைது. →\nசிலைகளைத் திருடும் கிறிஸ்துவ பாதிரியார்\nசிக்கியது சிலை திருட்டுக்கும்பல்: பல கோடி ரூபாய் மதிப்புள்ள சிலைகள் மீட்பு\nசென்னை: தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் திருடப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்புள்ள 11 சிலைகள் திருட்டு கும்பலிடமிருந்து மீட்கப்பட்டன. இது தொடர்பாக பாதிரியார் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nசென்னை பெரியமேட்டில் உள்ள ஒரு விடுதியில் சிலை திருட்டு கும்பல் தங்கியிருப்பதாக போலீசுக்கு ஒரு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை\nவிடுதியில் தங்கியிருந்த வேலூர் மாவட்டம் பள்ளூரைச் சேர்ந்தஇம்மானுவேல் என்கிற பாதிரியார், திருநெல்வேலி மாவட்டம் செல்லிய நல்லூரைச் சேர்ந்த மாடசாமி, ராஜபாளையத்தைச் சேர்ந்த பிச்சை மணி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.\nஅங்கிருந்த ஐம்பொன்னால் செய்யப்பட்ட கிருஷ்ணர் சிலையை போலீசார் மீட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் திருவண்ணாமலை, காஞ்சிபுரம், வேலூர் ஆகிய மாவட்டங்களில் சிலைகளை திருடியது தெரியவந்தது.\nதமிழகத்தில் திருடப்படும் சிலைகளை பாதிரியார் இம்மானுவேல், புதுச்சேரி கோட்டங்குப்பத்தைச் சேர்ந்த மாரிசாமி மூலம் வெளி நாடுகளுக்கு விற்று வந்ததும் தெரிய வந்தது.\nஇதைத்தொடர்ந்து மாரிசாமியும் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 5 மகாவீரர் ஐம்பொன் சிலைகள் கைப்பற்றப்பட்டன. இவை திருவண்ணாமலை, ஈசா குளம் என்ற இடத்தில் உள்ள புகழ்பெற்ற திகம்பரர் ஜெயின் கோயிலிருந்து திருடப்பட்டுள்ளது.\nஇதேபோல சிற்றுடையூர் லட்சுமி நாராயணன் பெருமாள் கோயிலிருந்து திருடப்பட்ட நாராயணன், விநாயகர் ஆகிய சிலைகளையும் போலீசார் மீட்டுள்ளனர்.\nபல கோடி ரூபாய் மதிப்புள்ள மொத்தம் 11 விலை உயர்ந்த சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக மாரிசாமி, இம்மானு வேல், ஜெகன்நாதன், வேலு, மாடசாமி, பிச்சுமணி, கங்காஜலம் ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.\nதமிழ்நாடு சிலை திருட்டு தடுப்பு கூடுதல் டிஜிபி திலகவதி இத்தகவலை தெரிவித்தார்.\nFiled under கடத்தல் பாதிரியார், கிறிஸ்தவ, செக்ஸ் மோசடி, பாதிரியார்\nஉண்மைகளை அறிவோம் தீமைகளை விரட்டுவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://mycrankywritings.wordpress.com/2015/01/19/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2018-04-26T13:45:39Z", "digest": "sha1:QY2WAOKCCJSNII3DTLI5CKHGATIRPXVK", "length": 5252, "nlines": 95, "source_domain": "mycrankywritings.wordpress.com", "title": "வாழ்க்கையின் நான்கு நிலையில் கடவுளை எப்படி அறிந்துகொள்வது? | My Cranky Writings", "raw_content": "\nவாழ்க்கையின் நான்கு நிலையில் கடவுளை எப்படி அறிந்துகொள்வது\nகுழந்தை பருவத்தில் அவனைப்பற்றி சொல்லிக்கேட்டு தெரிந்துகொள்\nஇளம் பருவத்தில் அவனைப்பற்றி படித்தறிந்துகொள்\nவாலிப பருவத்தில் அவனுடன் வாழ கற்றுக்கொள்\nவயதான பருவத்தில் அவனில் புகுந்துகொள்ள வழிதேடு.\nஎந்த நிலையிலும் அவனைப்பற்றி அறிந்துகொள்ள இயலாவிடிலும்\nஎல்லா நிலையிலும் அவனுடன் இருந்தோம் என்ற நிலை\nஎப்பொழுதும் நம்முள் இருக்கும் வரையில்\nஎப்பேர்பட்ட துன்பங்களும் வராமல் காக்கும்.\n← கனவுக் கல்யாண அரஙேற்றம்\nதேர்வு செய் தேர்வு செய் April 5, 2018\nஎன்னுடன் நீ இருப்பாய் March 10, 2018\nநீர் துளிக்குள் March 4, 2018\nஇங்கும் அங்கும் எங்கும் February 25, 2018\nகவரும் விழி அழகே February 18, 2018\nபரிசு பொருள்கள் January 8, 2018\nஇறைவனுடன் கலந்துவிட்டேன் January 5, 2018\nகொஞ்சம் மறந்திருந்தேன் December 16, 2017\nநம்ம ஊர் பால்க்காரன் November 30, 2017\nகழுதைக்கு வந்த யோகம் November 30, 2017\nநாளை மீண்டும் நாளை November 21, 2017\nதூக்கம் வரவில்லை November 6, 2017\nமணல் வருது மணல் வருது October 30, 2017\nஇரவு வெகு நேரம் ஆகியும் October 18, 2017\nமல்லி மொட்டு பூ அணிந்து October 18, 2017\nஉன் விழிகளில் எழுதிய October 12, 2017\nஎங்கிருந்துதான் வந்ததோ October 8, 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2018-04-26T13:42:56Z", "digest": "sha1:6VMYSWZRLZM7TAEV7XSOZAQQVQXA3XQ5", "length": 11863, "nlines": 146, "source_domain": "ta.wikipedia.org", "title": "இருபடிய நேர் எதிர்மை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nகணிதத்தில் எண் கோட்பாடு என்ற பிரிவில் இருபடிய நேர் எதிர்மை (Quadratic Reciprocity) என்பது ஒரு மையக்கருத்து.\n2 இன்னொரு சமமான வாசகம்\nலெஜாண்டர் ஏற்கனவே இருபடிய எச்சங்களைப் பற்றிய ஒரு சுவையான விதியைக் கண்டுபிடித்திருந்தார். அது, p , q {\\displaystyle p,q} என்ற இரண்டு ஒற்றைப்படைப்பகாதனிகளைப் பொருத்த விஷயம்.அதாவது,அவை ஒன்றுக்கொன்று இருபடிய எச்சங்களா அல்லது இருபடிய எச்சமல்லாதவைகளா என்பதைப் பற்றிய இரு தேற்றங்கள்:\np {\\displaystyle p} , மாடுலோ q {\\displaystyle q} க்கு ஒரு இருபடிய எச்சமாக இருந்தால், இருந்தால்தான், q {\\displaystyle q} , மாடுலோ p க்கு ஒரு இருபடிய எச்சமாக இருக்கும்.\np {\\displaystyle p} , மாடுலோ q க்கு ஒரு இருபடிய எச்சமல்லாததாக இருந்தால், இருந்தால்தான், q {\\displaystyle q} , மாடுலோ p க்கு இருபடிய எச்சமாக இருக்கும்.\nஇந்த விதிக்கு இருபடிய நேர் எதிர்மை (Law of Quadratic Reciprocity) என்று பெயர் வைத்ததே காஸ் தான். பெயர் வைத்ததோடு மட்டுமல்லாமல் இவ்விதிக்கு ஒரு கண்டிப்பான (rigorous) நிறுவல் கொடுத்தவரும் அவரே.\np, q இரண்டும் ஒற்றைப்படை பகா எண்கள் எனக்கொள்வோம். கீழுள்ள இரண்டு சமான உறவுச் சமன்பாடுகளைக் கவனி.\n(1) மற்றும் (2) இரண்டும் தீர்வுடையவை அல்லது இரண்டும் தீர்வல்லாதவை.\n(1), (2) ஆகிய இரண்டில் ஒன்று தீர்வுடையதாகவும் மற்றொன்று தீர்வல்லாததகவும் இருக்கும்.\nஆனால் 7, 11இனுடைய எச்சமல்லாதது. ஏனென்றால்,\nஆய்லரும் லெஜாண்டரும் முயற்சி செய்து நிரூபிக்கத் தவறின இத்தேற்றத்திற்கு, 19 வயதே ஆகியிருந்த காஸ் தன்னுடைய நூல் Disquisitiones Arithmetica வில் முழுநிறுவலும் கொடுத்தது ஒரு பெரிய சாதனை. எண்கோட்பாடுதான் கணிதத்தின் இராணி என்றும், இருபடிய நேர் எதிர்மையை எண் கோட்பாட்டின் சிகரமென்றும் கூறுவார் காஸ். அவர் இவ்விதியை மிகவும் நேசித்ததால், தன் ஆயுளில் திரும்பத் திரும்ப இதை அலசிப்பார்த்து, இதற்கு ஆறு நிறுவல்கள் கொடுத்திருக்கிறார்.\nஇருபடிய நேர் எதிர்மையை இன்னும் நுண்பியப்படுத்தி, காஸ் நாற்படிய நேர் எதிர்மை ஒன்றையும் கண்டுபிடித்தார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 ஏப்ரல் 2013, 10:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://moonramkonam.com/2017-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2018-04-26T12:59:15Z", "digest": "sha1:7FB5M6XQLTNJTU5TDFFAQ3QNASUTCY5Z", "length": 34735, "nlines": 119, "source_domain": "moonramkonam.com", "title": "2017 புத்தாண்டு பலன் கடக ராசி » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\n2017 புத்தாண்டு பலன் சிம்ம ராசி 2017 புத்தாண்டு பலன் மிதுன ராசி\n2017 புத்தாண்டு பலன் கடக ராசி\nஇந்த 2017ம் புத்தாண்டில் சனி உங்கள் ராசிக்கு 5-ம் இடத்திலும், குரு ஆகஸ்டு மாதம் வரை உங்கள் ராசிக்கு 3–ம் இடத்திலும் 2016 ஆகஸ்டு மாதம் முதல் உங்கள் ராசிக்கு 4-ம் இடத்திலும் சஞ்சரிக்கப்போகிறார்கள். இனி பலன்களைப் பார்க்கலாம்.\n[ இந்த புத்தாண்டு பலன்கள் உங்களுக்கு moonramkonam.com என்ற வெப்சைட்டிலிருந்து வழங்கப்படுகின்றது]\nதற்போது சனி பகவான் உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தில் சஞ்சரிக்கிறார். ராசிக்கு 5-ல் சனி வரும்போது, சந்ததிக்கு அரிஷ்டம் ஏற்படுகின்றது. புத்தி சரியாகச் செயல்படாமல், தகுந்த முடிவு எதுவும் எடுக்க முடியாமல், சில முக்கிய திட்டங்கள் நிறைவேறாமல் பாழாகும். ஏதாவது விபத்து முதலியவற்றால், அங்கஹீனம் ஏற்படும். பணம் கரையும். வறுமை மேலிடும். ஏதாவது இழிசெயல் செய்தாவது பிழைக்க நேரிடும். மனக் கலக்கமும் ஏற்படும். நடத்தை கெட்ட பெண்களின் உறவால், பொருளும் பணமும் கெடும். பலருடன் பலவகைச் சண்டைகளில் ஈடுபட நேரிடும். அன்றாடச் செலவுக்குக்கூட பணம் இல்லாமல் அவதிப்படலாம். எந்த ஸ்திரமான உருப்படியான காரியமும் நிறைவேறாது. குழந்தைகள் யாருக்காவது மாரகம் ஏற்படலாம். பந்து ஜனங்களைப் பகைத்துக்கொள்வர். குழந்தை குட்டிகளை விட்டுப் பிரிவார். சோகம் , புத்திரஹானி போன்றவை ஏற்படலாம். எனவே எல்லா வகையிலும் சனி அசுப பலனையே தருகிறார். அரசியல்வாதிகளுக்கு இதுநாள் வரையில் இருந்துவந்த அர்த்தாஷ்டம சனியின் பாதிப்பு உங்களுக்கு அடியோடு விலகுகிறது. இதுவரை உங்கள் அரசியல் வாழ்வில் பெரிய அளவில் உங்களால் சாதிக்க முடியவில்லை. மேலும் உங்களின் வெளிவட்டார உறவுகளும், இதுநாள்வரை திருப்திகரமாகவும் மதிப்புடனும் இல்லை. உறவினர்கள் மத்தியில் கூட நீங்கள் பிறருக்கு எவ்வளவு நன்மைகள் செய்தாலும், நல்ல பெயரோ அல்லது பாராட்டோ ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. அந்த அளவுக்கு இதுவரை கஷ்டப்பட்டீர்கள். இந்த அவல நிலை இப்போது அடியோடு மாறுகிறது. முன்பு உங்களை உதாசீனம் செய்தவர்கள் இப்போது உங்களை சுற்றிச் சுற்றி வந்து உங்களுக்கு புகழாரம் சூட்டுவார்கள். உங்கள் திறமையையும் ஆற்றலையும் பலவாறு புகழ்வார்கள். அதன்பிறகு ஓராண்டு காலம் சிற்சில அவலநிலைக்கு நீங்கள் ஆளாக நேரிடும். மேலும் சனியின் 10-மிட பார்வை தன ஸ்தானத்தில் விழுவதால், இந்த சனியின் 5-மிட மாற்றம் உங்களின் முன்னேற்றம் அல்லது சாதனைக்கு வழிவகுக்குமேயன்றி உங்களின் பொருளாதார மற்றும் தன நிலையில் பெரிய அளவில் மாற்றங்களையோ அல்லது ஏற்றங்களையோ ஏறப்டுத்தாது. இருப்பினும் அடுத்த ஆண்டு (2015-ம் ஆண்டு பிற்பகுதியில்) உங்களின் தன நிலையில் கணிசமான முன்னேற்றம் ஏற்படும் என்பது உறுதி. மாணவர்களுக்கு இந்த 5-மிட சனியின் பெயர்ச்சியால், உங்களது கல்வி நிலையில் ஓரளவு மாற்றம் அல்லது ஏற்றம் ஏற்படும். இதுவரை அர்த்தாஷ்டம சனியின் சஞ்சாரம் உங்கள் கல்வியின் அதிர்ஷ்ட வாய்ப்புக்கு தடை ஏற்படுத்தி வந்தது. பெற்றோர்கள் ஆசிரியர்கள் , மற்றும் உறவினர்களின் அவச் சொல்லுக்கும் அறிவுரைக்கும் ஆளாக வேண்டிய சூழ்நிலை உருவாகியது. ஆனால் அந்நிலை தற்போது அடியோடு மாறுகிறது. கல்வியில் ஓரளவு ஆர்வமும் செயல்திறனும் உங்களுக்கு அதிகரிக்கும். கல்வியில் நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு பாதிக்குமேல் அதிர்ஷ்டம் கைகொடுக்கும். அதற்கு 1-மிடத்தில் இருக்கும் குருபார்வை 5 -மிடத்தில் உள்ள சனியின் மீது விழுவதால், 3-மிடத்தில் இருக்கும் ராகுவின் சாதகமான சஞ்சாரமும் பெரிதும் துணை புரியும்,. அடுத்த ஆண்டு அதாவது 2015 -ம் ஆண்டு பிறப்குதியில் ஏற்படப்போகும் குருவின் 2-மிட மாற்றத்திற்குப் பின் இந்த 5-மிட சனியின் பாதிப்புகள் குறையும். அதிர்ஷ்ட வாய்ப்புகளும் செயல்திறனும் கண்டிப்பாக அதிகரிக்கும். நீங்கள் தவறாமல் தொடர்ந்து பாடுபட்டால், உங்களின் இலக்கில் வெற்றி பெறுவது உறுதி. பெண்களின் நியாயமான ஆசைகளும் கோரிக்கைகளும் இந்த 5-மிட சனியின் தடைகளை சந்தித்தபிறகே ஓரளவுக்கு வெற்றி பெறும். உங்களின் பேச்சுக்கும் சொல்லுக்கும் நாள்பட்டே மதிப்பு மரியாதை கிடைக்கும். வீடு நிலம் மற்றும் ஸ்திர சொத்துக்களின் சேர்க்கையும் மிகவும் தாமதமாக அடுத்த ஆண்டு பாதிக்கு மேல் கைகூடும். அலுவலகத்தில் பணிபுரிவோருக்கு வேண்டிய இடமாற்றம் மற்றும் சம்பள் உயர்வு போன்றவை சற்று தாமதப்பட்டு கிடைக்கப்பெறும். லாபஸ்தானமான 11-ம் இடத்துக்கு சனியின் 7ம் பார்வை ஏற்படுவதும் களத்திர ஸ்தானத்துக்கு சனியின் மூன்றாம் பார்வை ஏற்படுவதும் நல்லதல்ல. உங்களது கணவருக்கும் உங்களுக்கும் இடையேயான அந்நியோந்நியம் குறைந்து குடும்பத்தில் அமைதியைப் பறிக்கும். புகுந்த வீட்டினரின் பாராட்டைப் பெறுவது சற்று கடினம். அதேபோல அவர்கள் மூலமாக உங்களுக்கு நடக்க இருக்கும் நல்ல விஷயங்கள் தாமதப்பட அலல்து மறுக்கப்பட வாய்ப்புகள் உள்ளது. அவர்கள் மூலமாக சொத்து சேர்க்கை, பண வரவு போன்றவை நிகழ இந்த 5-மிட சனி தடையை ஏறப்டுத்தும். மேலும் 5-மிடமான புத்திர ஸ்தானத்தில் சனி பகவான் வீற்றிருப்பது உங்கள் பிள்ளைகளின் கல்வியில் ஆர்வக் குறைவு அல்லது அவர்களின் உடல்நிலையில் அடிக்கடி பாதிப்புகள் போன்றவை ஏற்பட்டு விலகும். மேலும் சனிபகவானின் 10-ம் பார்வை குடும்ப ஸ்தானமான 2-ம் இடத்தில் விழுவதால், உங்களுக்கும் கணவருக்குமிடையே சன்டை சச்சரவு ஏற்படும். மொத்தத்தில் இந்த 5-மிட சனி பாதிப்புகளையே அதிகம் கொடுக்கும்.\n[ இந்த புத்தாண்டு பலன்களை உங்களுக்காக வழங்குவது moonramkonamkonam.com]\nஇந்த வருடம் ஆகஸ்டு மாதம் வரை குருபகவான் உங்கள் ராசிக்கு 3-ம் இடத்தில் சஞ்சரிக்கிறார். அந்த சஞ்சாரம் நல்லது என்று சொல்ல முடியாது. எந்த செயலைச் செய்தாலும் குறுக்கீடும் அதனால் மனம் தளர்வதுமான சூழ்நிலையும் ஏற்படும். பணவரவைப் பெற கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். பொது இடங்களில் அதிகம் பேசி பிரச்சினையை வரவழைத்துக்கொள்வீர்கள். சகோதரர்கள் உதவுவதாக எண்ணி சிரம நிலையை உருவாக்கி விடுவார்கள். எக்காரணம் கொண்டும், விலை உயர்ந்த பொருட்கள், சொத்து ஆவணங்களை பிறர் பொறுப்பில் தரக்கூடாது. குடும்பத்தின் தேவைகளை நிறவேற்ற அவ்வப்போது கடன் வாங்குவீர்கள். மாற்றுகுணம் உள்ளவர்களால் மிகவும் கஷ்டப்படுவீர்கள். அடிக்கடி கடின அலைச்சல் மிக்க பயணம் ஏற்படும். ரியல் எஸ்டேட் , நிதிநிறுவனம், கல்வி நிறுவனம் ட்ரேவல்ஸ், லாட்ஜ், ஹோட்டல்ஸ்,டிபார்ட்மென்டல் ஸ்டோர் ஆட்டோமொபைல், மின்சார-மின்னணு சாதனங்கள , ஃபர்னிச்சர், தோல் பொருள் உற்பத்தி முதலிய தொழில்களில் ஈடுபட்டவர்கள் பின்தங்கிய நிலை காண்பர். மற்ற தொழில் செய்பவர்களுக்கும் சுமாரான நிலையே இருக்கும். வாகன வகையில் அதிகம் செலவாகும். அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் தங்கள் துறையில் குளறுபடிகளை எதிர்கொள்வர். பெண்களுக்கு பணியில் கவனமின்மையால் அவப்பெயர் ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு அரசு தொடர்பான விஷ்யங்களில் தாமதம் ஆகும். அதிகாரிகளிடம் கண்டிப்புடன் பேசி சிரமத்துக்கு ஆளாகிவிடுவார்கள். உங்களின் சிரமங்களைக் ககண்டு எதிரிகள் பரிகாசம் செய்வர். பொறுப்புகளை சரிவர நிறவேற்றாததால், நீங்கள் தலைமையின் ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாவீர்கள். விவசாயிகளுக்கு சுமாரான மகசூல் கிடைக்கும். விவசாயிகள் நிலம் சம்பந்தமான பத்திரங்களையும் , ஆவணங்களையும் பிறரை நம்பி ஒப்படைக்கக்கூடாது. கால்நடை வளர்ப்பில் கிடைக்கும் சொற்ப வருமானம் குடும்பத்துக்கு உதவியாக இருக்கும். கூட்டுத் தொழில் செய்வோருக்கு பார்ட்னருடன் பிரச்சினை ஏற்பட்டு, கோர்ட் வழக்குவரை போகும். நல்ல செழிப்பான சூழ்நிலை இருக்கும். அது ஒரு நிஜத் தோற்றம் இல்லை என்பதுபோல ஒரு பெரிய சரிவை சந்திக்க நேரும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் உடன்வேலை செய்யும் பெண்ணிடம் அளவுக்கு மீறி உறவாடி பெயரைக் கெடுத்துக்கொள்ள நேரும். குடும்ப கௌரவமும் இதனால் கொஞ்சம் சிரமங்களை சந்திக்க வேண்டியிருக்கும். அதையும் தெய்வவழிபாட்டின் மூலம் சரிபண்ணிக்கொள்ளலாம்.\n[ இந்த புத்தாண்டுப் பலன்கள் உங்களுக்கு moonramkonam.com என்ற வெப்சைட்டிலிருந்து வ ழங்கப்படுகின்றது]\nபலவித பிரச்சினைகளையும் சந்திக்கவேண்டிவரும். உங்கள் மனோதிடத்தைக் குலைக்கும் அளவிற்கு இப்போது உங்கள் எதிரிகள் பலமாகத் தலை தூக்குவார்கள்.அவர்களால் உங்களுக்கும் உங்கள் உறவினர்களுக்கும் உங்கள் தொழிலுக்கும் சில சோதனைகள் ஏற்படலாம். உங்கள் செல்வாக்கு பாதிக்கப்படும். இந்தக் காலக்கட்டத்தில் யாருக்காவது வாக்குறுதி கொடுத்துவிட்டு தவிப்பீர்கள். மேலும் நாணயம் தவறுவதற்கான வாய்ப்பு தெரிகிறது. எதிர்பாராத வருமானம் கிடைத்தால்கூட கையில் காசு இல்லாமல் போகும். ஆனால், நீங்கள் பெரும் குழப்பத்தில் தத்தளிப்பதால் கையில் காசு இல்லாத சமயத்தில் அவசியமான செலவுகளை விட்டுவிட்டு அனாவசியமான செலவுகளைசெய்வீர்கள். பிறகு அவசியத்துக்கு தவிப்பீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை குறையும். அமைதி இருக்காது. சண்டை சச்சரவுகள் சலசலப்புகள் தோன்ற ஏதுவாகும். உங்கள் வேலை வாய்ப்புகள் தள்ளிப்போகும். தெய்வதரிசனம், சிலர் கோவில் கட்டுமானப் பணிகளிலும் தடை ஏற்படும். சிலருக்கு குலதெய்வ வழிபாடு விட்டுப்போகும். தான தரும காரியங்கள் செய்யமுடியாமல் தடை ஏற்படும். சிலருக்கு கல்வியில் தடைகள் ஏற்படும். சிலர் அவசிய செலவுகளுக்காக நகைகளையும் சொத்துக்களையும் அடகு வைப்பார்கள். ஞானிகள், சாதுக்கள், பெரியோர்களின் கோபத்துக்கும் சாபத்துக்கும் ஆளாக நேரும். தொழிலில் மந்த நிலை ஏற்படும். சிலருக்கு அலுவலகத்தில் வேலைப்பளு கூடும் . மேலதிகரிகளின் கோபத்துக்கு ஆளாவீர்கள். சிலருக்கு வேண்டாத பணிமாற்றம் ஏற்படும். கர்ப்பமாய் இருக்கும் பெண்களுக்கு குறைப்பிரசவம் ஏற்படலாம். அல்லது வேறு சிக்கல் உண்டாகலாம். சிலருக்கு புத்திரர்களின் போக்கு கவலையைக் கொடுக்கும். அவர்கள்து கல்வி மற்றும் முன்னேற்றம் தடைப்படும். அவர்களுக்கான வேலைவாய்ப்புகளும் தாமதமாகும். அவர்களுக்கான சுபகாரியங்கள் தடைப்படும். அவர்கள் பணிபுரியும் இடங்களில் தேவையற்ற பிரச்சினைகளும் ,மனக்கசப்பும் ஏற்படும். பிதுர் காரியங்கள் தள்ளிப்போகும். அரசு அதிகாரிகள், மற்றும் அரசியல்வாதிகளால் தொல்லை ஏற்படும்.உங்கள் அந்தஸ்து குறைந்து பாதிப்படையும்.\n2017 ஆகஸ்டு மாதத்துக்குப் பின், குருவின் 4 மிட சஞ்சாரம் சரியில்லை என்பதால், இந்த சந்தர்ப்பத்தில் பொருளாதார தட்டுப்பாடு அதிகரிக்கும். கூட்டுத் தொழில் செய்ய முயன்றால், கிடைத்த பொருளை இழக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். அதே சமயம் உங்கள் பணத்தை பிறரிடம் ஒப்படைத்தாலும் அதை இழக்க வேண்டியிருக்கும். சிலருக்கு விஷம் சம்பந்தமான பாதிப்புகள் ஏற்படும். சிலர் குடும்பத்தில் வயது முதிர்ந்த ஒருவரை இழக்க வேண்டியிருக்கும். உடல் ஆரோக்கியம் தொல்லைப்படுத்தும். கோர்ட், கேஸ்கள் நீண்டுகொண்டே போகும். சிலருக்கு புதிய கோர்ட் கேஸ்கள் வருவதற்கு வாய்ப்பு உண்டு. சிலருக்கு கூட்டுத்தொழிலில் பார்ட்னர் பிரிவதற்கான வாய்ப்புண்டு. தொழில் வியாபாரத்தில் சிக்கல் ஏற்படும். முதியவர்களுக்கு தொல்லை ஏற்படும். அலுவலர்களுக்கு பணிச்சுமை ஏற்படும். மேலதிகாரிகளும் ஊழியர்களும் ஒத்துழைப்பு தரமாட்டார்கள். குடும்பமும் அலுவலகமும் நிம்மதியைக் குலைக்கும். தாய்மாமன் மற்றும் அத்தை முறை உள்ளவர்களுக்கு பாதிப்புகள் ஏற்படும். உடலில் உஷ்ண சம்பந்தமான கட்டிகள் அலர்ஜி மற்றும் தோல் சம்பந்தப்பட்ட வியாதிகள் வரும். உங்கள் கௌரவமும் அந்தஸ்தும் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு உண்டு. தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் கையூட்டு பெற்று மாட்டிக்கொள்ள நேரும். இல்லையென்றால் வேறு காரணங்களுக்காக அவமானப்பட நேரும். கோர்ட் வழக்குகளில் தீர்ப்புகள் சாதகமாக வராது. பெண்களால் கெட்ட பெயர் ஏற்பட்டு நற்பெயர் கெடும். மனைவி வழி உறவினர்களுடன் சண்டை சச்சரவுகள் ஏற்படும். விஷபாதிப்பு ஏற்படும். விஷ ஜந்துகள் தீண்டலாம். அடிக்கடி பயணங்கள் ஏற்பட்டாலும், பயணங்களால் எதிர்பார்த்த நன்மை வராது.\n[ இந்த புத்தாண்டுப் பலன்கள் உங்களுக்கு moonramkonam.com என்ற வெப்சைட்டிலிருந்து வழங்கப்படுகின்றது\nகுருவின் சஞ்சாரங்கள் நல்ல சஞ்சாரமல்ல. எனவே வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தி கோவிலுக்குச் சென்று கொண்டக்கடலை மாலையும் ,மஞ்சள் நிற மாலையும் சாத்தி வழிபடவும். கேது சஞ்சாரமும் சரியில்லாததால், வினாயகர் கோவிலைச் சுத்தம் செய்து ,வினாயகரை வழிபடவும். கொள்ளுதானம் செய்யவும். வெள்ளிக் கிழமைகளில், மகாலக்ஷ்மி கோவிலுக்குச் சென்று வழிபடவும். சனியின் சஞ்சாரம் சரியில்லையாதலால், சனிக் கிழமைகளில் சனீஸ்வரனுக்கு எள் தீபம் ஏற்றி வழிபடவும்.\n[ உங்கள் பிறந்த ஜாதகத்துக்குரிய விரிவான பலன்களை ரூ.950/- செலுத்தி, தெரிந்துகொள்ள விரும்புவோர், moonramkonam@gmail.com என்ற வெப்சைட்டை தொடர்பு கொள்ளவும்.]\nவார பலன் – 22.4.18 முதல் 28.4.18 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவார ராசி பலன் 15.4.18 முதல் 21.4.18வரை அனைத்து ராசிகளுக்கும்\nதமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2018 -2019 விளம்பி வருஷம் மகர ராசி\nமுட்டையில் வெள்ளைக் கருவும் மஞ்சள் கருவும் திரவ நிலையில் இருந்தாலும், ஒன்றுடன் ஒன்று கலப்பதில்லை –ஏன்\nபுத்தாண்டு பலன்கள்-- 20182019 –விளம்பி வருஷம் மீன ராசி\nதமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2018-2018 விளம்பி வருஷம் கும்ப ராசி\nபுத்தாண்டு பலன் விளம்பி வருஷம் 2018-19 தனுசு ராசி\nபுத்தாண்டு பலன்கள்- விளம்பி வருஷம் 2018-2019 விருச்சிகம்\nபுத்தாண்டு பலன் விளம்பி வருஷம்- 2018-2019 துலாம் ராசி\nபுத்தாண்டு பலன்கள் -2018-2019 விளம்பி வருஷம் கன்னி ராசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.adiyakkamangalam.com/cookbook/47/%E0%AE%8E%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2018-04-26T13:23:44Z", "digest": "sha1:QJ52IQRO33OG5WQVIHIUMHPA3EL35FSX", "length": 9993, "nlines": 193, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam எள்ளோதரை", "raw_content": "\nசமையல் / சோறு வகை\nஅரிசி - ஒரு டம்ளர் ( 200 கிராம்)\nஉளுந்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி\nகாஞ்ச மிளகாய் - முன்று\nபெருங்காய்ம் - ஒரு சிறு துண்டு\nஉப்பு - அரை தேக்கரண்டி\nநல்லெண்ணை - இரண்டு தேக்கரண்டி\nநல்லெண்ணை - இரண்டு தேக்கரண்டி\nகடுகு - அரை தேக்கரண்டி\nசாதத்தை உதியாக வடித்து ஆறவைக்க வேண்டும்.\nஎள்ளை கல்லிலாமல் களைந்து வருந்த்து எடுத்து விட்டு அதே வானலியில் இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணை ஊற்றி மிதி உள்ளதையும் வருந்த்து எள்ளையும் சேர்த்து பொடி செய்து சாதத்தில் தூவி நல்ல கிளற வேண்டும்.\nபிறகு மீதி இருக்கும் எண்னையில் கடுகு , கருவேப்பிலை போட்டு தாளித்து கொட்டி கிளறி இருக்க வேன்டும்.\nபீட்ரூட் ஜாமுன் அல்வா (Beetroot Jamun Halwa)\nபப்பாளி பழ அல்வா (Papaya Halwa)\nபச்சரிசி ஹல்வா (Rice Halwa)\nகுலோப் ஜாமூன் (Gulab Jamun)\nசிம்பிள் மைதா கேக் (Simple Maida Cake)\nபீட்ரூட் அல்வா (Beetroot Halwa)\nதேங்காய் பர்பி (Coconut Burfi)\nஅரிசி மாவு புட்டு (Rice Flour Puttu)\nஅவல் ராகி புட்டு (Aval Raggi Puttu)\nபூர்ணக் கொழுக்கட்டை (Poorna Kolukattai)\nபொட்டுக்கடலை உருண்டை (Bengal Gram Sweet)\nபொரி உருண்டை (Pori Urundai)\nஓலைப் பக்கோடா (Ribbon Pakoda)\nவாழைக்காய் சிப்ஸ் (Banana Chips)\nவாழைக்காய் பஜ்ஜி (Banana Bajji)\nவெங்காய பஜ்ஜி (Onion Bajji)\nகருப்பு கொண்டை கடலை சுண்டல்\nவெங்காய பக்கோடா (Onion Bakoda)\nமுந்திரி பக்கோடா (Cashewnut Bakoda)\nநிலக்கடலை பக்கோடா (Peanut Bakoda)\nஜவ்வரிசி முறுக்கு (Sago Murukku)\nஅரிசி மாவு முறுக்கு (Rice Flour Murukku)\nதேங்காய்ப்பால் முறுக்கு (Coconut Milk Murukku)\nமரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் (Tapioca Chips)\nபருப்பு ரசம் (Daal Rasam)\nசெட்டிநாடு கார நண்டுக் குழம்பு\nபயத்தம்பருப்பு தோசை ( Moong dal dosa )\nஃப்ரைட் இட்லி (Fried Idly)\nரவா பொங்கல் (Rawa Pongal)\nகத்திரிக்காய் சட்னி (Brinjal Chutney)\nஎக் ஃப்ரைட் ரைஸ் (Egg Fried Rice)\nசில்லி சிக்கன் (Chilli Chicken)\nமிளகாய்முன்று தேக்கரண்டி தேக்கரண்டி சிறு எள் செய்ய உளுந்தம் பருப்புஒரு உப்புஅரை தேக்கரண்டிதாளிக்� கிராம்பொடி தேவையான நல்லெண்ணைஇரண்டு துண்டு ஒரு பொருட்கள் காஞ்ச டம்ளர்200 தேக்கரண்டி அரிசிஒரு எள்ளோதரை பெருங்காய்ம்ஒரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.arvloshan.com/2010/12/blog-post_10.html", "date_download": "2018-04-26T13:35:42Z", "digest": "sha1:IFK5DH375BVMZUPPLAY2HO3QYTZPUD4N", "length": 51934, "nlines": 699, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: கமலின் காதலும் கார்க்கியின் காதலும்", "raw_content": "\nகமலின் காதலும் கார்க்கியின் காதலும்\nஇதற்கு முந்தைய பதிவில் புதிதாக மனதில் இடம்பிடித்திருக்கும் இரு பாடல்கள் பற்றி ஊகிக்குமாறு கேட்டிருந்தேன்..\nதிருட்டு சாவி போட்டு பவன் இரு பாடல்களையும் சரியாக ஊகித்திருந்தார்.\nமற்ற நண்பர்கள் ஒவ்வொரு பாடல்களை சரியாக ஊகித்திருந்தனர்.\nநெஞ்சில் நெஞ்சில் - எங்கேயும் காதல்\nஎந்திரன் பாடலுக்குப் பிறகு உடனே என்னை ஈர்த்த மதன் கார்க்கியின் வரிகள் இப்பாடலில்.\nஅந்தப்பாடலில் காதலின் வேகமும் மோகமும் சொன்னவர், இந்தப்பாடலில் தாகமும் தாபமும் அமைதியான காதலின் அழ்ந்த அர்த்தமும் சொல்கிறார்.\nஆனால் பாடலின் வரிகள் மிகையேறிய இலக்கியத் தரமாக மெருகேறி மின்னுகின்றன.\nஎன் நிலாவில் என் நிலாவில் - ஒரு\nஎன் கனாவில் என் கனாவில் - உன்\nபிம்பத் துகள் இன்பங்கள் பொழிகையில்\nஇந்த வரிகள் போதும் அழகான கவிநடையில் பாடலின் இனிமையையும் மீறாமல் இசையின் இயல்பையும் மீறாமல் இலக்கியத்தின் சாரலையும் தெளிக்க முடியும் என்பதைத் தந்தையின் வழியில் தனயனும் காட்டுகிறார்.\nபிம்பத் துகள் இன்பங்கள் பொழிகையில்\nஅழாகாக மனதில் ஓட்டும் வரிகள்.\nஹரிஷ் ராகவேந்திராவுக்கு மிக நீண்ட நாட்களின் பின்னர் அருமையான பாடல் ஒன்று கிடைத்துள்ளது.ஹரிஸ் ஜெயராஜின் முன்னாள் ஆஸ்தான பாடகர் மீண்டும் இணைந்தவுடன் கலக்கி இருக்கிறார்.மென்மையான குரலும் ,குரலில் தெரியும் காதலும்,அழகான தமிழும் உயிர்வரை பாடலைக் கொண்டு செல்கின்றன.\nசின்மயியின் குரலும் சேர்கையில் பாடலின் உணர்வும் சில இடங்களும் ஏனோ, தளபதி திரைப்பட சுந்தரி கண்ணால் ஒரு சேதி பாடலை ஞாபகப்படுத்துகின்றன.\nஎன்று விழிகள் பேசும் காதலின் இசை+இனிமையை உரைக்கிறார் கவிஞர்.\nஇசையின் மெட்டு ஓசைக்குள் சந்தத்துடன் வருகையில் மேலும் இனிமை.\nசிதறிச் சிதறி வழிவது ஏன்\nஉதிரம் முழுதும் அதிர்வது ஏன்\nபாடலின் உள்ளே ஒரு உவமை சிற்பம் உருவாக்கப்பட்டு அழகாகக் குரல் வழியாக வருவது இந்த வரிகளில்.\nமீண்டும் மீண்டும் கேட்டு வரிகளை சிலாகித்தேன்..\nஉனக்குள் நுழைந்த .. நெஞ்சில்...\nஎன்று வரும் இடங்களும் கவிதையும் அழகான பாடலாகும் எண்டு மீண்டும் மதன் கார்க்கி நிரூபிக்கும் இடம்.\nஅடுத்த சரண வரிகளில் உள்ளக் காதலில் இருந்து உடல் காதலுக்கு பாடல் வரிகள் நகர்கின்றன..\nகாமத்துப் பாலையும் கவிதைப் பாலூட்டி கார்க்கி ரசிக்க வைக்கிறார்.\nவைரமுத்து வழியில் அவரது வாரிசும்..\nகனதியான காமம் அளவுகடந்து வெளியே வழியாமல் ஆடை கட்டி அழகாக அனுப்புவது இவர்களின் குடும்பக் கலை போல் தெரிகிறது.\nமயிரின் இழையும் தூரம் அது\nநிறைவாக அழகாக பெண்ணின் வேண்டுகோளை வெட்கத்துடனும் விரகத்துடனும் வினயமாக நயமாக முடித்து வைக்கிறார் கவிஞர்..\nகாதல் காரி என்ற இந்த சொல் பாவனையும் பெண்ணின் குரலில் அழகு.\nஒரு தடவை கேட்டாலே இதயத்தில் நிறைந்து இனிக்கும் பாடல் என்பது மட்டும் உறுதி.\nவரிகளை முழுக்க சுவைத்துப் பின் பாடலையும் முழுமையாகக் கேட்டு ரசியுங்களேன்..(படம் இன்னும் வரவில்லை..பிரபுதேவா இந்தப் பாடல் காட்சியைப் படமாக்கும் விதம் குறித்து ஆவலாயிருக்கிறேன்)\nபாடியவர்கள்: ஹரிஷ் ராகவேந்திரா, சின்மயி\nநெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ\nமாலை வேளை வேலை காட்டுதோ - என்\nமூலை வானம் ஜுவாலை மூட்டுதோ\nஎன் நிலாவில் என் நிலாவில் - ஒரு\nஎன் கனாவில் என் கனாவில் - உன்\nபிம்பத் துகள் இன்பங்கள் பொழிகையில்\nசிதறிச் சிதறி வழிவது ஏன்\nஉதிரம் முழுதும் அதிர்வது ஏன்\nமயிரின் இழையும் தூரம் அது\nஒரு வெள்ளைத் திரையாய் - உன்\nநீலவானம் - மன்மதன் அம்பு\nகலைஞானிக்குள் இருந்த கவிஞன் காதலாக மாறி வெளிவந்துள்ள மன்மதன் அம்பு பாடல் நீல வானம் கேட்ட முதல் தரத்திலேயே மனதை அள்ளிவிட்டது.\nகவிதையைப் பாடலாக மாற்றி பாடகராக உயிரும் கொடுத்திருக்கிறார்.\nவரிகளின் ஆழமும் அழுத்தமும் கூடவே பயணிக்கும் வயலினின் உருக்கமும் மனதை அள்ளுகின்றன.\nகமலின் அறிவுஜீவித்தனமான காதல் வரிகள் அழகாய் ஆரம்பிக்கின்றன..\nகண்களே பாஷையாய் கைகளே ஆசையாய்\nவையமே கோயிலாய் வானமே வாயிலாய்\nபால்வெளி பாயிலே சாய்ந்து நாம் கூடுவோம்\nபால்வெளிப் பாயில் என்பது அண்டவெளி தாண்டி காதல்(அதையும் தாண்டிப் புனிதமானது) பரவுவதைக் கவிஞர் கமல் உணர்த்துகிறார்.\nகமலில் நான் ரசிக்கும் இன்னொரு விஷயம் தன வாழ்க்கையில் அவர் காட்டும் திறந்த தன்மை. இந்தப் பாடலின் சரணமும் அவ்வாறே..\nஏதேதோ தேசங்களை சேர்க்கின்ற நேசம் தன்னை\nநீ பாதி நான் பாதியாய் கோர்க்கின்ற பாசம் தன்னை\nகாதல் என்று பெயர் சூட்டியே காலம் தந்த சொந்தம் இது\nகாதல் எனும் பெயர் சூட்டியே என்று சொல்லும் அழுத்தம் அழகு.. (புரிகிறதா\nகாதல் மன்னன் என்று சும்மாவா சொல்கிறார்கள்\nமன்மதன் அம்பு படப்பிடிப்பு படங்களில் கமலோடு காணப்படும் வெள்ளைக்காரப் பெண்ணுடனான காதல் பற்றியாக இந்தப் பாடல் இருக்கவேண்டும்.எதோ ஒரு காரணத்தால் (ஒன்றில் அந்தப் பெண் இறக்க அல்லது )பிரிய, பின் த்ரிஷாவோடு கமல் சேர்வதாக இருக்கலாம் என்ற நிலையில் அடுத்த வரிகள் எளிமையாக ஆனால் இயல்பாக அழகாக இருக்கின்றன.\nஎன்னை போலே பெண் குழந்தை உன்னை போல் ஒரு ஆண் குழந்தை\nநாம் வாழ்ந்த வாழ்விற்கு சான்றாவது இன்னொரு உயிர்தானடி\nகாதல் பற்றி சொல்லும் வரிகளில் இது மனதில் நிற்கக் கூடியது..\nஉன்னை என்னை ஒற்றி ஒற்றி உயிர் செய்யும் மாயமும் அது தானடி\nவரிகளின் வளமும் கமலின் குரல் வளமும் தேவி ஸ்ரீ பிரசாத்தின் வழமையைத் தாண்டிய புதுமையான இசையும் இந்தப் பாடலை ஈர்க்க செய்கின்றன.\nபாடகராகக் கமலை ரசித்த பாடல்களில் இதுவும் இப்போது சேர்ந்துள்ளது.\nதிரைப்படக் காட்சிக்காக நானும் வெயிட்டிங்..\nபாடியவர்கள்: கமல்ஹாசன், பிரியா ஹிமேஷ்\nநீல வானம் நீயும் நானும்\nகண்களே பாஷையாய் கைகளே ஆசையாய்\nவையமே கோயிலாய் வானமே வாயிலாய்\nபால்வெளி பாயிலே சாய்ந்து நாம் கூடுவோம்\nஇனி நீ என்று நான் என்று இரு வேறு ஆள் இல்லையே..\nஏதேதோ தேசங்களை சேர்க்கின்ற நேசம் தன்னை\nநீ பாதி நான் பாதியாய் கோர்க்கின்ற பாசம் தன்னை\nகாதல் என்று பெயர் சூட்டியே காலம் தந்த சொந்தம் இது\nஎன்னை போலே பெண் குழந்தை உன்னை போல் ஒரு ஆண் குழந்தை\nநாம் வாழ்ந்த வாழ்விற்கு சான்றாவது இன்னொரு உயிர்தானடி\nநீல வானம் நீயும் நானும்\nபல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்து ஆண்டு\nபல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்து ஆண்டு\nபல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்து ஆண்டு\nஆறாத காயங்களை ஆற்றும் நாம் நேசம் தன்னை\nமாளாத சோகங்களை மாய்த்திடும் மாயம் தன்னை\nசெய்யும் விந்தை காதலுக்கு கை வந்ததொரு கலைதானடி\nஉன்னை என்னை ஒற்றி ஒற்றி உயிர் செய்யும் மாயமும் அது தானடி\nநாம் வாழ்ந்த வாழ்விற்கு சான்றவது இன்னொரு உயிர்தானடி\nநீல வானம் நீயும் நானும்\nகமல் மன்மதன் அம்பு இசை வெளியீட்டில் நேரடியாகப் பாடிய காட்சி...\nஇனி வரும் பதிவுகளின் மும்முரத்தில் பாடல்கள் பற்றித் தனியாகப் பதிவுகள் போட முடியும் என நான் நினைக்கவில்லை..\n* ஆடுகளம் - யாத்தே பாடல் மிகவும் பிடித்துள்ளது. சிநேகனின் வரிகளில் G.V.பிரகாஷ்குமார் இசையமைத்துப் பாடிக் கலக்கி இருக்கிறார்.\nஅதே படத்தில் SPBயும் மகன் S.P.சரணும் சேர்ந்து பாடியுள்ள ஹையையோவும் ரசனை.\n* மன்மதன் அம்பு கமலின் கவிதையும், கமலின் நச் வரிகளுடன் வந்துள்ள தகிடுதத்தமும் ரசனைகளின் இரு பக்கங்கள்.\n*காவலன் பாடல்கள் பரவாயில்லை ரகம்.\nவித்யாசாகர் பெரிதாக மினக்கேடவில்லை எனத் தோன்றுகிறது.\nஐந்தில் மூன்றில் எங்கேயோ கேட்ட வாடை.\nயுகபாரதியின் வரிகளில் யாரதுவும், சட சடவும் தான் எனக்கு மிகப் பிடித்தவை.\nசட சடவில் கார்த்திக் அருமையாகப் பாடி இருக்கிறார். ஆனால் பாடலின் இசை அப்படியே 3 Idiots பாடலான Zoobi Zoobiயின் இசை.\nவித்யாசாகர் மந்திரப் புன்னகையின் மந்திரம் எங்கே\nகாவலன் படம் வழமையான விஜய் படமாக இருக்காது என்று வந்த பேச்சுக்கள் சரி போலவே தெரியுது.\n* எங்கேயும் காதல் லோலிட்டாவும் பிடித்திருக்கிறது.\n*மந்திரப் புன்னகையில் வித்யாசாகரின் இசையில் அறிவுமதியின் பாடல்களும் ரசித்தேன்.\nசுதா ரகுநாதன் பாடிய - குறையொன்றும் பாடலின் வரிகளின் அழுத்தம் அருமை (அண்ணன் - கண்ணன் ஒப்பீடு தான் காரணமோ\nசட்டு சடவென என்று தொடரும் பாடலின் வரிகள் மிகவே வித்தியாசம் ..\nஉ+ம் - இந்தக் காதலை நான் அடைய எத்தனை காமம் கடந்திருப்பேன்\n* மேதையில் (ராமராஜனின் படம்) நிலவுக்குப் பிறந்தவள் இவளோ அழகான ஒரு பாடல்.\nஆனால் படத்தில் இந்தப் பாடல் கொடுமைப்படுத்தப்படும் எனும் போது கவலையாக உள்ளது.\n* மைனா பாடல்கள் கையைப் புடியும்,நானும் நீயுமும் மனசில் ரீங்காரமிடக் கூடிய பாடல்கள்.\nat 12/10/2010 02:43:00 PM Labels: இசை, கமல், கமல்ஹாசன், காதல், பாடல், மதன் கார்க்கி, மன்மதன் அம்பு, ரசனை\nஎனக்குத் தன் சுடு சோறு சாப்பிட்டுட்டு வரட்டுமா...\nசீமானின் விடுதலையின் பின்னணி ரகசியம்\nஜனகனின் எண்ண ஜனனங்கள் said...\n/////ஹரிஷ் ராகவேந்திராவுக்கு மிக நீண்ட நாட்களின் பின்னர் அருமையான பாடல் ஒன்று கிடைத்துள்ளது.ஹரிஸ் ஜெயராஜின் முன்னாள் ஆஸ்தான பாடகர் மீண்டும் இணைந்தவுடன் கலக்கி இருக்கிறார்////\nசரியாகச் சொன்னீர்கள்... அது ஒரு வசிகரக் குரல்...\nஃஃஃஃஃஎதோ ஒரு காரணத்தால் (ஒன்றில் அந்தப் பெண் இறக்க அல்லது )பிரிய, பின் த்ரிஷாவோடு கமல் சேர்வதாக இருக்கலாம் என்ற நிலையில் அடுத்த வரிகள் எளிமையாக ஆனால் இயல்பாக அழகாக இருக்கின்றனஃஃஃஃ\nஇதோ மீண்டும் எமது விக்கிரமாதித்தனை காண்கிறேன் (நிச்சயம் இம்முறை உங்களுக்குத் தான் வெற்றி)\nஃஃஃஃஃஐந்தில் மூன்றில் எங்கேயோ கேட்ட வாடை.ஃஃஃஃ\nமொத்தத்தில் அருமையான வடித்துள்ளீர்கள் அண்ணா...\nஜனகனின் எண்ண ஜனனங்கள் said...\nஒன்றில் ஏமாற்றி (எங்கேயும் காதல்) மற்றையதில் (மன்மதன் அம்பு) சந்தோஷம் தந்து விட்டீர்கள்...\nஎன் ஊகம் சற்று பரவாயில்ல போலும்...\n// என் நிலாவில் என் நிலாவில் - ஒரு\nஎங்கேயும் காதல் தரவிறக்கி நிறைய நாட்களாகிவிட்டது, ஆனால் இன்னும் முழுமையாகக் கேட்கவில்லை. :-(\nநீலவானம் நான் அடிக்கடி கேட்கும்பாடல்.\nவரிகளும், பாடும் விதமும் பிடித்திருக்கிறது.\n// கமலில் நான் ரசிக்கும் இன்னொரு விஷயம் தன வாழ்க்கையில் அவர் காட்டும் திறந்த தன்மை. //\n// தேவி ஸ்ரீ பிரசாத்தின் வழமையைத் தாண்டிய புதுமையான இசையும் இந்தப் பாடலை ஈர்க்க செய்கின்றன. //\nதேவி ஸ்ரீபிரசாத் நான் எதிர்பார்த்ததை விட மிகச்சிறப்பாகவே இசை வழங்கியிருக்கிறார். :-)\n// திரைப்படக் காட்சிக்காக நானும் வெயிட்டிங்.. //\n// இந்தக் காதலை நான் அடைய எத்தனை காமம் கடந்திருப்பேன் //\n// ஆனால் படத்தில் இந்தப் பாடல் கொடுமைப்படுத்தப்படும் எனும் போது கவலையாக உள்ளது. //\nநீய்...ய்...ய்ல வானம்,நீய்...ய்...ய்யும் நானும்.. எப்பவுமே மனசுல பாடிக்கிட்டே இருக்காரு கமல். நீங்கள் ரசித்த வரிகளை நானும் ரசித்திருந்தேன்.. Year end offer போல பிடித்த எல்லாப் பாடல்களையும் சொல்லி முடிச்சிட்டீங்க..\nயோ வொய்ஸ் (யோகா) said...\nமன்மதன் அம்பு தொடர்ந்து ரசிக்கிறேன். இப்போதுதான் எங்கேயும் காதல் மற்றும் காவலன் பாடல்களை டவுன் லோட்செய்கிறேன்.\nகமலின் காதல் அனுபவக்காதல், யதார்த்தமானும், கூட. கார்த்தியின்காதல், பட்டாம்பூச்சிகள் சிறகடிக்கும்காதல்..\nஅனுபவக்காதலும், அனுபவிக்கும்காதலும் இரண்டுமே இரசனைக்கு விருந்துதானே\nஅந்த நீல வானம்... கேட்டுக்கொண்டே இருக்கின்றது.\n, இரண்டுமே எனக்குப் பிடித்த பாடல்கள் :)\n//திருட்டு சாவி போட்டு பவன் இரு பாடல்களையும் சரியாக ஊகித்திருந்தார்.//\n//நெஞ்சில் நெஞ்சில் - எங்கேயும் காதல் //\nவரிகளுக்காகவே இந்தப்பாடல் எனக்குப் பிடிக்கும்.\nமதன்கார்க்கி - புலிக்குப் பிறந்தது பூனையாகுமா..;)\n//நீலவானம் - மன்மதன் அம்பு //\nவாவ் கமலின் குரலில் அருமையான பாடல், நான் தினமும் கேட்கும் பாடல்களில் ஒன்று..:)\nமன்மதன் அம்பு பாடல்கள் அமைத்தும் எனக்குப் பிடித்து போனது..:)\nமைனா, ஆடுகளம் பாடல்களும் பிடிக்கும்..:)\nகாவலன் பெரிதாக மனதைக் கவரவில்லை,ஆனால் விஜயின் ஹீரோயிசமற்ற பாடல்கள் படத்தின் மீது ஒரு நம்பிக்கையை வரவைத்திருக்கிறது..:D\nசரியா ஊகித்தமைக்கு எனக்கு ட்ரீட் இல்லையா\nமன்மதன் அம்புப்பாடல் மட்டும் கேட்டுக்கொண்டிருக்கின்றேன். என்னைப்போன்ற இளசுகளுக்கு தகிடுதத்தோம் தான் பிடித்திருக்கின்றது. கங்கோன் போன்ற காதலர்களுக்கு அந்த கவிதை மிகவும் பிடித்திருக்கின்றது.\nகார்க்கியும் வருங்காலத்தில் தன் தந்தைபோல் நன்றிமறந்தவராக கோடாலிக்காம்புகளுக்கு ஜால்ரா அடிப்பவராக இல்லாமல் இருந்தால் சரி.\nநீலவானம் பாடல் இசை சில இடங்களில் கமலின் அவ்வை சண்முகி காதலா காதலா காதலில் தவிக்கின்றேன் பாடலின் சரணங்களை நினைவுபடுத்துகின்றது.\nதேவிஸ்ரீ பிரசாத் எதிர்பார்த்ததை விட சிறப்பாகவே இசை அமைத்திருக்கின்றார்.\n// என் நிலாவில் என் நிலாவில் - ஒரு\nகுருத் துரோகம் பல புனைவுகளை உருவாக்கும் கவனம்.\nபால்வெளி பாயிலே அல்ல.... பாம்பு நீ பாயிலே என்பதே சரி\n//* மேதையில் (ராமராஜனின் படம்) நிலவுக்குப் பிறந்தவள் இவளோ அழகான ஒரு பாடல்.\nஆனால் படத்தில் இந்தப் பாடல் கொடுமைப்படுத்தப்படும் எனும் போது கவலையாக உள்ளது//\nஹா ஹா........ அந்த டவுசரோட அந்த பாட்டு என்ன பாடு படப்போகுதோ........\nபவன விடுங்க அவர் 'ஒழிந்து' இருக்குற விடயங்கள கண்டு பிடிகிரதுல சிங்கமுல்ல....\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nலோஷன் - தொழிலால் சூரியனில் அறிவிப்பாளர் / பணிப்பாளர்.\nஅன்பு கொண்டோர் அனைவர்க்கும் நண்பன்.\nவாசிப்பதிலும் தமிழை நேசிப்பதிலும் ஆர்வமுடைய இயற்கையின் காதலன்.\nசில விஷயங்கள், சில விஷமங்கள், சில விளக்கங்கள்.. மன...\nரோல்ஸ் போச்சே - பதிவர் சந்திப்பு தொகுப்பு\nபரீட்சை மண்டபத்தில் Cheer girls\nஇந்தியாவின் தோல்வியும் - சச்சினின் சாதனைச்சதமும் -...\nவேகத்தால் வென்ற ஆஸ்திரேலியா - பேர்த் டெஸ்ட் அலசல்\nLatest - பதிவர் கிரிக்கெட் போட்டி விபரங்கள்+ஸ்கோர்...\nசின்ன மாமாவின் லீவு லெட்டரும் பதிவர் கிரிக்கெட்டும...\nமுக்கிய கிரிக்கெட் மோதல்கள் இரண்டு - செஞ்சூரியன் &...\nஇலங்கை கிரிக்கெட் தேர்வாளராக நான் \nஅபாசிபா - ஞாயிறு மசாலா\n500 பதிவுகளும் சில பகிர்வுகளும்\nகமலின் காதலும் கார்க்கியின் காதலும்\nதூறலும் சாரலும் கண்ணிரண்டின் மோதலும் காதலும்\nபதிவுலீக்ஸ் - இதுவரை வெளிவராத பதிவுலக ரகசியங்கள்\nகங்கோன் - நடமாடும் விஸ்டன், உருண்டோடும் கூகிள்\nகிரிக்கெட் கனவான் தன்மையைக் கறைப்படுத்திய கறுப்பு நாள் - அவுஸ்திரேலியக் கிரிக்கெட் மோசடி\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nசங்ககார & கிரிஸ் கெயில் ஆஸ்திரேலியாவில் விளையாடவுள்ளார்கள்\nசனத் ஜெயசூரிய - களிமண்ணாகிப் போன கறுப்புத் தங்கம்\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nஅரசியலுக்கு அப்பால் அசிங்கப்பட்ட ஆளுநரின் கை\nகந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா\nபிரபா ஒயின்ஷாப் – 23042018\nநிகராகுவா கலவரம்: பணக்காரர்களின் ரவுடித்தனம்\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\n79 வயதில் காமம் தவறில்லை.\nவிழியிலே மணி விழியிலே ❤️🎸 ஜொதயலி ஜொத ஜொதயலி 💕\nகிரிக்கெட் கனவான் தன்மையைக் கறைப்படுத்திய கறுப்பு நாள் - அவுஸ்திரேலியக் கிரிக்கெட் மோசடி\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nஇனிய தைப் பொங்கல் வாழ்த்துகள்\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nஅந்த கால பிலிம் பேர் விருது விழாவில் சில ஒளிக்காட்சிகள்-வீடியோ\n500, 1000 – மோசம் போனோமே\nஇறைவி - புரிந்ததும் புரியாததும்\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/17168-ashtaka-sratham?s=81f65825e1953e8a5ad7cd869bede59d&p=25877", "date_download": "2018-04-26T13:27:10Z", "digest": "sha1:ITRBXFLOO23RQ357TOBNG2ZOIH6BMYC4", "length": 30636, "nlines": 299, "source_domain": "www.brahminsnet.com", "title": "ashtaka sratham.", "raw_content": "\nமார்கழி( மார்கசிரம்) ,தை, மாசி ,பங்குனி மாதங்களின் க்ருஷ்ண பக்ஷ ஸப்தமி, அஷ்டமி, நவமி திதிகளில் பித்ருக்களுக்கு சிராத்தம் அல்லது தர்பணம் செய்ய வேன்டும்.\nஅஷ்டமி அன்று செய்யப்படும் அஷ்டகைய ப்ரதானமாக க்கொண்டு முதல் நாள் சப்தமிக்கு பூர்வேத்யு; என்று பெயர். மறு நாள் நவமிக்கு அநு+அஷ்டகா\nமேற்கூறிய நான்கு மாதங்களிலும் ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் வீதம் 12 தர்பணங்கள் ஷண்ணவதி தர்பணம் செய்பவர்கள் செய்ய வேண்டும்.\nஷண்ணவதி தர்பணம் செய்ய இயலாதவர்கள் தை மாதம் மட்டும் (மாக மாதம்) ஸப்தமி, அஷ்டமி, நவமி அன்று தர்பணம் செய்யலாம். அல்லது அஷ்டமி ஒரு நாளாவது பித்ருக்களுக்கு தர்பணம் செய்ய வேண்டும்.\nஒவ்வொரு வருஷமும் தாய் தந்தையருக்கு சிராத்தம் செய்வது போல் இந்த அஷ்டகை, அந்வஷ்டகை நாட்களிலும் பித்ருக்களுக்கு ஹோமம் செய்து, சாப்பாடு போட்டு , முறையாக சிராத்தமாக செய்யலாம். இது இரண்டு விதமாக இருக்கிறது.\n1, ஸப்தமி அன்று மாலை ஒளபாசனாக்னியில் அப்பம் தயார் செய்து ஹோமம் செய்ய வேன்டும். மறு நாள் அஷ்டமியன்று காலையில் எட்டு பேரை வரித்து தர்பணம் செய்து விட்டு, ஹோமம் செய்து முறையாக சிராத்தம் செய்ய வேன்டும். மறு நாள் (நவமி) அன்வஷ்டகா அன்று\nஐந்து பேரை வரித்து சிராத்தம் செய்ய வேண்டும்.\n2. அல்லது ஸப்தமி அன்று மாலை மற்றும் அஷ்டமி அன்று செய்ய வேண்டிய அஷ்டகா சிராத்தம் இரண்டிற்கும் பதிலாக தத்யஞ்சலி ஹோமம்\nஎன்னும் ஹோமம் செய்துவிட்டு மறு நாள் (நவமி) அன்வஷ்டகை அன்று ஐந்து பேரை வரித்து ஹோமம் செய்து, சாப்பாடு போட்டு சிராத்தம் செய்யலாம்.\nஇந்த நாட்களில் சிராத்தம் அல்லது தர்பணம் செய்யும் போது ஏற்படும் குறைவை நிறைவு செய்ய ஒரு மந்திரத்தை நூறு முறை ஜபம் செய்யலாம்.\n(ரிக் விதானம்) ஏபிர் த்யுபிர் ஜபேந் மந்திரம் சத வாரம் து தத் திநே..\nஅன்வஷ்டக்யாம் யதா ந்யூனம் ஸம்பூர்ணம் யாதி சர்வதா. என்பதாக\nஅன்வஷ்டகை யன்று சிராத்தம் அல்லது தர்பணம் செய்யும்போது ஏற்படும் குறைவை நிறைவு செய்ய விரும்புவர்கள் ,\nரிக் வேதத்திலுள்ள ஏபிர் த்யுபி: (அஷ்டகம்-1,53,4 ).என்று தொடங்கும் வேத மந்திரத்தை நூறு முறை ஜபம் செய்யலாம். இதனால் அஷ்டகை, அந்வஷ்டகையில் ஏற்பட்ட தோஷம் விலகு மென்கிறது ரிக் விதானம் என்னும் புத்தகம்.\nநமது தர்ம சாஸ்த்திரம் புத்தகத்திலும் அஷ்டகா சிராத்தம் செய்ய வேண்டும் என்று சொல்லப் பட்டிருக்கிறது. புரட்டாசி மாதத்திலும், மாசி மாதத்திலும் பித்ருக்களுக்கு அன்னம் அளிக்கவேண்டும். என்று அறிவிக்கிறது.\nவருடத்தில் இந்த 96 நாட்கள் பித்ருக்களுக்கு பசி எடுக்கும் என நமது முன்னோர்கள் அறிந்து அந்த நாட்களை காட்டி கொடுத்து இருக்கிறார்கள்.\nபசியுடன் இருப்பவருக்கு நாம் உடனே ஆகாரம் அளிக்க வேண்டும்.\nகார்த்திகை. மார்கழி. தை. மாசி இம்மாதங்களில் தேய் பிறை சப்தமி, அஷ்டமி, நவமி திதிகளில் சிராத்தம் மற்றும் தர்ப்பணம் செய்ய வேன்டும் என்கிறது. வைத்தினாத தீக்ஷிதீயம் பக்கம்-321ல்.\nஆஸ்வலாயன மகரிஷி இம்மாதிரி 12 நாட்கள் சிராத்தம் செய்ய முடியாவிடினும் மாசி மாதம் ஒன்றிலாவது அவசியம் செய்ய வேண்டுமென்கிறார்..\nஅஷ்டமி திதிக்கு முன் தினமும் பின் தினமும் செய்யவேண்டியுள்ளதால் அஷ்டகை என பெயர் பெற்றது.\nஅஷ்டமிக்கு முன் தினம் பூர்வேத்யுஹு அல்லது திஸ்ரேஷ்டகா; அஷ்டமி அன்று அஷ்டகா; என்றும் அஷ்டமிக்கு மறுநாள் அன்வஷ்டகா என்றும் பஞ்சாங்கங்களில் இருக்கும். .இதற்கும் பண வசதி\nஇல்லாவிட்டால் 12 தர்பணங்கள் செய்யுங்கள்.\nஇதற்கும் பண வசதி இல்லாதவர்கள் தீர்த்தம் நிறைந்த குடத்தை யாருக்காவது அஷ்டமி அன்று தாநம் செய்யவும் .சிராத்த மந்திரங்களை ஜபம் செய்யுங்கள்; பசு மாட்டிற்கும், காளை மாட்டிற்கும் வைக்கோல். புல் கொடுக்கவும்.\nஇதற்கும் பண வசதி இல்லாதவர்கள் புல், புதர் இருக்குமிடத்தை தீயிட்டு கொளுத்தி அஷ்டகை செய்யும் சக்தியும், வசதியும் இல்லாததால் இந்த அக்னி தாஹத்தால் நீங்கள் த்ருப்தி அடையுங்கள் என கதறவும்.\n“ந த்வேவ அநஷ்டகா ஸ்யாத் ” என்பதாக நாம் பித்ருக்களுக்கு அஷ்டகா தினங்களில் எதுவும் செய்யாமல் இருக்க கூடாது என்கிறது சாஸ்திரம்.\nஅஷ்டகை சிராத்தம் செய்பவர்கள் குடும்ப வம்சத்தில், குழந்தைகள் அழகு உள்ளவர்களாகவும், அறிவு உள்ளவர்களாகவும். எப்போதும் மிக பெரிய பணக்காரர்களாகவும் இருப்பார்கள். அனைத்து நன்மைகளும் கிட்டும் என்கிறது நமது தர்ம சாஸ்திரம்.\nஒவ்வொருவரும் அவரவரது ஜீவிய காலத்தில் ஒரே ஒரு முறையாவது இந்த அஷ்டகா சிராத்தம் செய்ய வேண்டும்.\nவருடத்திற்கு 96 தர்பணம் செய்பவர்கள் இந்த 12 தர்பணமும் செய்து விடுகிறார்கள்.\n96 தர்பணம் செய்ய இயலாதவர்கள் இந்த 12 தர்பணங்கள் செய்யலாம். இதற்கும் முடியாதவர்கள் தை மாதம் சப்தமி, அஷ்டமி, நவமி மூன்று நாள் தர்பணம் செய்யலாம்\nஒவ்வொரு வருஷமும் நம் தாய் தந்தையருக்கு சிராத்தம் செய்வது போல் இந்த சப்தமி, அஷ்டமி, நவமி திதிகளில் பித்ருக்களுக்கு சாப்படு போட்டு ஹோமம் செய்து சிராத்தமாகவும் செய்யலாம்.\n---இது இரண்டு விதமாக இருப்பதால் ஏதோ ஒரு முறையில் செய்யலாம்.\nஸப்தமியன்று மாலை 7 மணி சுமாருக்கு ஒளபாஸனம் செய்யவும். இதே அக்னியில் அபுபம் தயாரிக்க வேன்டும். மாலை 5 மணிக்கு 2 கைப்பிடி அளவு பச்சரிசி எடுத்து தண்ணீர் விட்டு களைந்து நிழலில் ஒரு துணி மேல் உலர விடவும். நன்றாக உலர்ந்த பிறகு மிக்சியில் மாவாக அறைக்கவும். மாவு சல்லடையில் சலிக்கவும். இந்த மாவில்\nசிறிது தயிர் விட்டு கெட்டியாக பிசைந்து சப்பாத்தி மாதிரி இட்டு கொள்ளவும். ஒளபாசன அக்னியில் தோசை கல்லை போட்டு இந்த அரிசி மாவு சப்பாத்தியை தோசைகல்லில் போட்டு இரு பக்கமும் வேக விடவும். இதுதான் அபூபம்.\nஇதே ஒளபாசனாக்னியில் மந்திரம் சொல்லி இந்த அபூப ஹோமம். .பிறகு பார்வண ஸ்தாலி பாகத்தில் சொன்ன மாதிரி அக்னிப்ரதிஷ்டை முதல்\nஆஜ்ய பாகம் வரை செய்துகொண்டு , அஞ்சலியால் அபூபம் எடுத்துக் கீழ் கண்ட மந்திரத்தை சொல்லி ஹோமம் செய்ய வேண்டும்.\n“”யாம் ஜனா: ப்ரதிநந்தந்தி ராத்ரீம் தேநுமிவாயதீம் ஸம்வத்சரஸ்ய யா பத்னீ ஸா னோ அஸ்து ஸுமங்கலி ஸ்வாஹா.””\nஏகாஷ்டகையை ஸம்வத்சர பத்நியாக மற்ற விடத்தில் சொல்லியிருந்தாலும்\nஏகாஷ்டகையின் ஸாமீப்யம் இருப்பதால் ஸப்தமி திதியின் ராத்ரியும் சம்வத்ஸர பத்நியாக இங்கு ஸ்துதிக்கப்படுகிறது.\nபூ: ப்ருதிவ்யகினமர்சாமும்மயி காமம் நியுநஜ்மிஸ்வாஹா.\n,.புவோ வாயுநா அந்தரிக்ஷேண ஸாம்னாமும் மயே காமம் நியுனஜ்மி ஸ்வாஹா.\nஸ்வர்திவஆதித்யேன யஜுஷாமும் மயே காமம் நியுனஜ்மி ஸ்வாஹா.\nஜனதப்திரதர்வாடிங்கரொ பிரமும் மயி காமம் நியுநஜ்மி ஸ்வாஹா.\nகேதவே மனவே ப்ருஹ்மணே தேவஜாதவே ஸ்வாஹா\nஅக்னயே கவ்ய வாஹனாய ஸ்வதா ஸ்வாஹா.\nமீதமுள்ள அபூபத்தை மறு நாள் வரப்போகும் சாஸ்திரிகளை இப்போதே வரசொல்லவும். அப்பா, தாத்தா, கொள்ளு தாத்தா- 3 பேர். அம்மா, பாட்டி,\nகொள்ளு பாட்டி -3 பேர். விசுவேதேவர் -2 பேர். மொத்தம் -8 பேர். இந்த 8 சாஸ்திரிகளை சப்தமியன்று மாலை 6 மணிக்கே வரசொல்லி. அவர்களை ஆவாஹனம் செய்து இந்த அபூப துண்டுகளையும், கோதுமை மாவு சப்பாத்தி இந்த எட்டு பேருக்கும் தயார் செய்து சட்னியுடன் இலையில் பரிமறவும்..\nஅவர்கள் சாப்பிட்ட பிறகு மறு நாள் காலை 10 மணிக்கு அவர்களை வரசொல்லவும். தக்ஷிணை தாம்பூலம், பழம் கொடுத்து அனுப்பவும்.\nகர்த்தா, கர்த்தாவின் மனைவிக்கும் இதே தான் ஆகாரம். .இன்று இரவு.\nமறு நாள்அஷ்டமி அன்று காலை 10 மணிக்கு இந்த எட்டு பேர் வந்தவுடன் எண்ணைய், சீயக்காய் கொடுத்து வெந்நீர் போட்டு கொடுத்து ஸ்நானம் செய்து விட்டு வந்தவுடன். முதல் நாள் இரவு ஆவாஹனம் செய்த வாரே\nமறுபடியும் ஆவாஹனம் செய்து ஒன்பது ஐந்து, வேட்டி, துண்டு ஒவ்வொருவருக்கும் கொடுத்து சாப்பாடு போட்டு சிராத்தம் முடிந்த பிறகு தக்ஷிணை, தாம்பூலம் கொடுத்து அனுப்ப வேண்டும்.\nஇன்று சமாராதனை சமையல், ஒரு வாழை இலை போதும்..\n8 பேர் வைத்து சிராத்தம் செய்ய பண வசதி இல்லாதவர்கள் அப்பா வர்க்கம் ஒருவர், அம்மா வர்க்கம் ஒருவர்; விசுவேதேவர் ஒருவர் என மூவர் வைத்தும் செய்யலாம். சாஸ்திர சம்மதம் இருக்கிறது,பண வசதி இல்லாதவர்களுக்கு.\n.மறு நாள் நவமி அன்று வேறு ஐந்து சாஸ்திரிகள் வரச்சொல்லி எண்ணய் ஸ்நானம் செய்து புது ஒன்பது ஐந்து வேட்டி வாங்கி கொடுத்து சிராத்தம் முடிந்த பிறகு தக்ஷிணை தாம்பூலம் கொடுத்து அனுப்ப வேண்டும்\nநவமி அன்று அப்பா வர்க்கம் ஒருவர், அம்மா வர்க்கம் ஒருவர், அம்மாவின் பெற்றோர் வர்க்கம் ஒருவர், விசுவேதேவர் ஒருவர், மஹா விஷ்ணு ஒருவர் என ஐந்து பேர். .\nஇதற்கு மஹா விஷ்ணுவிற்கும் ஒருவர் அவசியம் வர வேண்டும். ஹோமம் அப்பா வர்க்கம் -6 ஹோமம் வழக்கம்போல். பிறகு தாயின் பெற்றோர் வர்கத்திற்கும் 6 ஹோமம் உண்டு. விகிரான்னம் உண்டு.\nபிண்ட ப்ரதானமும் தாய் தந்தையருக்கு 6; அம்மாவின் தாய் தந்தைக்கும் 6 மொத்தம் . காருண்ய பித்ருக்களுக்கு -6 என 18 பிண்டம்\nஇன்று சிராத்த சமையல் அவரவர் வீட்டு வழக்கப்படி, இரு வாழை இலைகள்.. மஹா விஷ்ணு விற்கு இலை மாத்திரம் போட்டு பரிமாறும் வழக்கம் உள்ளவர்களுக்கும் இந்த அஷ்டகா சிராத்தத்தில் மஹாவிஷ்ணுவிற்கு ஒரு சாஸ்திரிகள் அவசியம் வர வேண்டும்.\nமற்றொரு விதம்;- இரு கைகளாலும் தயிர் ஹோமம் செய்வது. ததி ஹோமம்.\nஸப்தமி அன்று எதுவுமில்லை. அஷ்டமி அன்று காலையில் தயிர் ஹோமம் ஒளபாசானாக்னியில் செய்து விட்டு நவமி அன்று ஐந்து பேரை வரித்து ஹோமம், சாப்பாடு போட்டும் நிறைவு செய்யலாம்.\nஅஷ்டகா தர்ப்பணம் முதலில் இரு நாட்களும் செய்து விட்டு பிறகு தான் சிராத்தம் செய்ய ஆரம்பிக்க வேண்டும்.. ஞாபகமாக இதை வைத்து கொள்ளவும்.\nஇந்த மூன்று நாட்களிலும் ஒளபாசனம் தினமும் செய்ய வேண்டும்.. மூன்று நாட்களிலும் ஒளபாசன அக்னி அணையாமல் பார்த்து கொள்ள வேண்டும்.\nஅல்லது தினமும் விச்சின்னாகினி ஹோத்ரம் செய்து பிறகு ஒளபாசனம் செயது அந்த அக்னியில் சிராத்த ஹோமம் செய்ய வேண்டும்.\nரிக் விதான மந்திரம் ஒன்று உள்ளது. இதை நூறு முறை சொல்ல வேண்டும்.\nநான்கே வரிகள் தான். இந்த தர்பணம், ஹோமம் செய்யும்போது ஏற்படும் குறைகளை சரி செய்யும்.. ருக் வேத மந்திரம் ஆதலால் சரியாக உச்சரிக்க\nவேண்டும். .அஷ்டகம் 1, 53, 4 ஏ பிர் த்யுபிர் என்று ஆரம்பிக்கும்.. ருக் வேத சாஸ்திரிகளிடம் இதை சரியாக உச்சரிக்க கற்றுக்கொண்டு சொல்லலாம்.\nஆஸ்வலாயன மகரிஷி இம்மாதிரி 12 நாட்கள் சிராத்தம் செய்ய முடியாவிடினும் மாசி மாதம் ஒன்றிலாவது அவசியம் செய்ய வேண்டுமென்கிறார்..\n“ந த்வேவ அநஷ்டகா ஸ்யாத்\" என்பதாக நாம் பித்ருக்களுக்கு அஷ்டகா தினங்களில் எதுவும் செய்யாமல் இருக்க கூடாது என்கிறது சாஸ்திரம்\nமாக மாதத்தில் பெளர்ணமிக்கு பிறகு வரும் க்ருஷ்ண பக்ஷ அஷ்டமி , கேட்டை நக்ஷதிரத்துடன் கூடும். அதில் அஷ்டகா சிராத்தம் செய்ய வேண்டும். ஸுதர்சண பாஷ்யத்தில் கேட்டை நக்ஷத்திரம் கூடாமலிருந்தாலும் அந்த அஷ்டமியில் அஷ்டகா சிராத்தம் செய்ய வேண்டும் ..எனக்கூறபடுகிறது.\nசித்ரை விஷு தர்பணத்திற்கு ஆறாவது மாதம் துலா விஷு தர்பணம் ஐப்பசியில் செய்வது போல் புரட்டாசியில் மாளய பக்ஷத்திற்கு ஆறாவது மாதம் மாசியிலும் பித்ருக்களுக்கு சிராத்தம், தர்பணம்\nஅஷ்டகா தேவதை பித்ருக்களுக்கு நாம் அளிக்கும் ஹவிஸை அமோகமாக அளவற்றதாக ஆக்கி காமதேனு பால் சுரப்பது போல் சுரப்பதாக கூற பட்டுள்ளது. ஸம்வத்ஸர தேவதையின் பத்நியாகவும் ஏகாஷ்டகை கூறப்பட்டுள்ளது.\nமனிதர்களுக்கு விழிப்பை ஏற்படுத்தி அறிவை தரும் உஷஹ் கால தேவதையும் ஏகாஷ்டகையே. இவளே யாகங்களை செய்விப்பவள் என்றெல்லாம் மிக உயர்வாக கூறப்பட்டுள்ளது.\nஉரல் அம்மி முதலியவையும் இந்த அஷ்டகா சிராத்தம் செய்வதில் உத்ஸாகத்துடன் ஈடுபடுவதாக வேதம் கூறுகிறது.\nஇதை செய்பவனுக்கு , ஸந்ததி, சாரீர பல விருத்தி, மற்றும் வைதீக கர்மாக்களில் சிரத்தை செய்யக்கூடிய பாக்யம் ஏற்படுகிறது. என்று கூறுகிறது\nதினமும் ஸந்தியாவந்தநம் காயத்ரி ஜபமும் செய்ய வேண்டும்.\n9-12-2017; 10-12-2017; 11-12-2017 ஆகிய தேதிகளில் முதியோர்கள் தர்ப்பணம் செய்ய ஆரம்பிக்கலாமே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.sahabudeen.com/2014/10/blog-post_25.html", "date_download": "2018-04-26T13:06:09Z", "digest": "sha1:6LI2HHDJCK5JR6P2OBFH7SSBYO72GD5V", "length": 15985, "nlines": 197, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: பற்களை அழகாக்க சில குறிப்புக்கள் உங்களுக்காக!", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nபற்களை அழகாக்க சில குறிப்புக்கள் உங்களுக்காக\nபற்களை அழகாக்க சில குறிப்புக்கள் உங்களுக்காக\nஅனைவருக்குமே அழகான மற்றும் வெள்ளையான பற்கள் வேண்டுமென்ற ஆசை இருக்கும். பற்களை பொலிவோடு வைப்பதற்கு அனைவரும் ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று முறை பற்களை துலக்குவோம். இருப்பினும் ஏதாவது உணவுகளை சாப்பிட்டு விட்டால், பற்களில் உணவுக்கறைகள் படிந்து மற்றும் ஆங்காங்கு சிக்கிக் கொண்டு, பற்களின் நிறத்தை மஞ்சள் நிறமாக்குகின்றன.\nபற்களுக்கு நன்மை தரும் உணவுகளான ஸ்ட்ராபெர்ரி, சிட்ரஸ் பழங்கள், கேரட் போன்றவற்றை சாப்பிட்டால், பற்கள் வெண்மையுடன் இருக்கும். மேலும் ஒரு சில வீட்டுப்பொருட்களைப் பயன்படுத்தி, பற்களை துலக்கினாலும், பற்களை நன்கு ஆரோக்கியமாகவும், பளிச் சென்று வெண்மையுடனும் இருக்கும். சரி, இப்போது அத்தகைய பொருட்கள் என்ன வென்று பார்க்காம்.\n• எலுமிச்சை எலுமிச்சை துண்டை வைத்து பற்களை தேய்த்தால், பற்கள் இயற்கையாக வெண்மையாக இருக்கும். அதிலும் எலுமிச்சையை உப்பில் தொட்டு தேய்க்க வேண்டும்.\n• பற்களை வெள்ளையாக்கும் பராம்பரிய வீட்டு வைத்திய பொருட்களில் கடுகு எண்ணெயும் ஒன்று. அதற்கு கடுகு எண்ணெய் மற்றும் மஞ்சள்தூள் கலந்து பேஸ்ட் போல் செய்து துலக்க வேண்டும்.\n• பேக்கிங் சோடாவை உப்புடன் சேர்த்து பற்களை துலக்கினால், பற்கள் வெண்மையோடு ஜொலிக்கும்.\n• அக்காலத்தில் பேஸ்ட் கிடைக்காத நேரத்தில் வாழ்ந்த மக்கள், வீட்டில் விறகு அடுப்பில் சமைக்கும் போது கிடைக்கும் சாம்பலைப் பயன்படுத்தி பற்களை துலக்கினார்கள். இதனால் பற்கள் வலுவோடு இருப்பதோடு, வெள்ளையாகவும் இருக்கும்.\n• அனைவருக்குமே உப்பு பற்களை வெள்ளையாக்கும் பொருட்களில் மிகவும் சிறந்தது என்று. இவற்றை வைத்து பற்களை துலக்கினால் பற்களை வெள்ளையாக மட்டும் மாறாமல், பளிச்சென்றும் மின்னும்.\n• ஆரஞ்சு தோல் பற்களுக்கு மிகவும் நல்லது. பற்கள் வெள்ளையாக இருக்க வேண்டுமென்று நினைப்பவர்கள், ஆரஞ்சு பழத்தின் தோல் அல்லது அதன் கூழை வைத்து பற்களை தேய்த்தால், பற்கள் மின்னுவதோடு, வாய் துர்நாற்றமின்றியும் இருக்கும்.\n• ஈறுகளில் வலி அல்லது சொத்தை பற்கள் இருப்பவர்களுக்கு கிராம்பு ஒரு சிறந்த மருத்துவப் பொருள். அதிலும் தினமும் பற்களை துலக்கும் போது, பிரஷ்ஷில் சிறிது கிராம்பு எண்ணெய் ஊற்றி, பின் பேஸ்ட் சேர்த்து தேய்க்க, பற்கள் ஆரோக்கியமாக இருக்கும்.\n• பற்களை வெண்மையாக்கும் பொருட்களில் இதுவும் ஒன்று. இதனை வைத்து தினமும் பற்களை தேய்த்து வந்தால், பற்கள் ஆரோக்கியமாக இருப்பதோடு, பளிச்சென்றும் மின்னும்.\n• பிரியாணி இலையை பொடி செய்து, அதனை எலுமிச்சை சாற்றில் கலந்து, பற்களை துலக்க, பற்கள் வெள்ளையாகும்.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com\nகாய்கறி எப்படி பார்த்து வாங்கணும்\nபற்களை அழகாக்க சில குறிப்புக்கள் உங்களுக்காக\nஒட்டி வைக்க ஒரு டஜன் யோசனைகள்\nகணனி பயன்படுத்துபவர்கள் கண்களைப் பாதுகாக்க சில குற...\nஉங்கள் கணினி விரைவாக செயல்பட வேண்டுமா\nஇணைய வேகத்தை அதிகரிக்க எளிய வழி\nமருத்துவரால் எளிதில் கண்டுபிடிக்க முடியாதவைகள்\nகருத்தரித்த நாள் தொடங்கி குழந்தையை பூமியில் தவழவிட...\nபுனித ஹஜ் செல்வோர் கவனத்திற்கு – மருத்துப் பார்வை\nமாடு அறுப்பது தடுக்கப்பட்டால்.. ..\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nதேனை தனியாக சாப்பிட்டால் பலன்--- மருத்துவ டிப்ஸ்\nதேன் சீரண சக்தியை தரும். இரைப்பையில் ஏற்படும் எல்லாவித கோளாறுகளையும் வயிற்றில் ஏற்படும் கோளாறுகளையும் குணமாக்கும். நெஞ்சில் ஏற்படும் எரிச்...\n‘ பாட்டி வைத்தியம் ’ சொன்ன பாட்டியிடமிருந்து ‘ வைத்திய ’ ரிலே கட்டையை கைப்பற்றியிருக்கும் பாட்டியும் , நல்ல அனுபவசாலி\nஉடலை சார்ஜ் செய்வது எப்படி\nஉடலை சார்ஜ் செய்வது எப்படி பாகம் - 2 முந்தைய பதிவில் நம் உடலை ஏன் சார்ஜ் செய்ய வேண்டும் , அதனால் உண்டாகும் பலன்கள் என்னென்ன என்...\nஅதிகாலையில் தண்ணீர் பருகினால் பல வியாதிகளைக் குணப்படுத்த முடியும் \nதினமும் காலையில் தூக்கத்தில் இருந்து எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவது ஜப்பானில் இப்போது பிரபலமாகி வருகிறது. இங்கு தரப்பட்டி...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nஉங்கள் உடல் எடை ஏழு நாட்களுக்குள் ஐந்து கிலோ எடை குறைய...\nகீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த அட்டவணை மிகப் பிரபலமான உணவு அட்டவணை. ஏழு நாட்களுக்கு இந்த அட்டவணையைப் பயன்படுத்தினால் , உங்கள் எடையில் சராசரி...\nநபிமார்கள் பற்றிய அரிய தகவல்கள்\nநபிமார்கள் மனிதர்களில் மாண்புடையவர்கள்.இவர்கள் அல்லாஹ்வின் வாக்கே உலகில் மேலானது. இறைவனல்லாத ஏனையோரின் வாக்கு கீழானது என்னும் தாரகமந்திரத்...\n கல்யாணம் ஆயி பல வருசம் ஆச்சு. இன்னும் வண்டி மக்கர் பண்ணுதே என்று மனசுக்குள்ளே குமையும் நம்ம குரூப் மக்களே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.techtamil.com/shopping/meizu-metal-2-rumours/", "date_download": "2018-04-26T13:04:30Z", "digest": "sha1:Z6X64BLWHDA3LBK2FAJ46ZVVUWG6JRCD", "length": 7311, "nlines": 101, "source_domain": "www.techtamil.com", "title": "4000Mah பேட்டரி நீட்டிப்பு கொண்ட Meizu metal 2 மொபைல் : – TechTamil News", "raw_content": "\nContact / அறிமுகம் / தொடர்புக்கு\n4000Mah பேட்டரி நீட்டிப்பு கொண்ட Meizu metal 2 மொபைல் :\n4000Mah பேட்டரி நீட்டிப்பு கொண்ட Meizu metal 2 மொபைல் :\nMeizu நிறுவனமானது ஸ்மார்ட் போன்களை தயாரித்து வழங்கக் கூடிய சீன நாட்டு நிறுவனமாகும். இந்நிறுவனம் ஆரம்பித்து பதிமூன்று வருடங்களாகவே பல வகை ஸ்மார்ட் போன்களை தயாரித்து வழங்கி வருகிறது. அந்த வரிசையில் Meizu metal 2 வகை ஸ்மார்ட் போனினை தயாரித்து ஜூன் 13 அன்று வெளியிட தயாராகி உள்ளது. இந்நிலையில் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த Meizu metal 2 ஸ்மார்ட் போனின் முக்கிய அம்சங்கள் பற்றிய தகவல்கள் சீனாவின் மிக முக்கிய தொலை தொடர்பு நிறுவனமான “தீனா” வெளியிட்டுள்ளது. Meizu ஸ்மார்ட் போனனது LED ப்ளாஷ் கொண்ட 13 மெகாபிக்சல் பின்புற கேமராவினையும் 5மெகாபிக்சல் முன் கேமராவினையும் கொண்டுள்ளது. மேலும் 4000mAh பேட்டரி பேக் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது . மேலும் மேற்கூறிய அனைத்தும் அண்ட்ராய்டு 5.1 லாலிபாப் சார்ந்த இயங்கு தளத்தில் இயக்கப்படும் எனவும் அறிவித்துள்ளனர். 5.5-அங்குல திரை மற்றும் HD (1920×1080 பிக்சல்கள்) காட்சி கொண்ட ஸ்மார்ட் போனின் எடை 166 கிராம் ஆகும். இவற்றுள் இணைப்பு விருப்பங்கள் 4ஜி, LTE , Wi-Fi, ப்ளூடூத் 4.1 , மற்றும் ஜிபிஎஸ் ஆகியவையும் அடங்கும். இவையனைத்தும் M3 நோட் ஸ்மார்ட் போனின் அம்சங்களைப் போன்றே உள்ளது. முந்தைய வதந்திகளைப் பொறுத்தவரையில் 16GB வகை , Meizu 2 ஸ்மார்ட்போன் சுமார் ரூ. 10,100-க்கும், 32GB ஸ்மார்ட்போன் சுமார் ரூ. 12,200க்கும் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇனி காகிதத்தை தேடி வேண்டாம் இந்த ஆப் இருந்தால்\nஅலிபாபா அறிமுகப்படுத்துகிறது “Face lock ” செயலி:\nஇந்தியாவில் 19 கோடி ரூபாய் மதிப்பிலான பிட்காயின் திருட்டு\nதென்கிழக்கு ஆசியாவில் கடையை மூடுகிறது உபர்\n“தமிழுக்கான கூகள்” நிகழ்வு சென்னையில் நடக்க இருக்கிறது\nமாபெரும் தொழில்நுட்ப சிக்கலுக்கு உங்களிடம் தீர்வு உண்டா 6 கோடி வரை பரிசு தொகை…\n$1000 மதிப்பை தொட்டது எதிரியம்\nபிட்காயின் பணம் 6,40,000 ரூபாய் மதிப்பை எட்டியது\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF_%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-04-26T13:41:25Z", "digest": "sha1:IHGLGR2XTVL5LWOSTQYJVEMGTZK5MNIJ", "length": 14706, "nlines": 174, "source_domain": "ta.wikipedia.org", "title": "நம்பி நெடுஞ்செழியன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nவடிம்பலம்ப நின்ற பாண்டியன் நிலந்தரு திருவிற் பாண்டியன்\nஇளம் பெருவழுதி அறிவுடை நம்பி\nபூதப் பாண்டியன் வெற்றிவேற் செழியன்\nகூட காரத்துத் துஞ்சிய மாறன் வழுதி ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்\nஉக்கிரப் பெருவழுதி மாறன் வழுதி\nஇலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்\nவெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி நம்பி நெடுஞ்செழியன்\nஅவனி சூளாமணி கி.பி. 600-625\nசெழியன் சேந்தன் கி.பி. 625-640\nஇரண்டாம் இராசசிம்மன் கி.பி. 790-792\nவரகுண வர்மன் கி.பி. 862-880\nபராந்தகப் பாண்டியன் கி.பி. 880-900\nமூன்றாம் இராசசிம்மன் கி.பி. 900-945\nஅமர புயங்கன் கி.பி. 930-945\nசீவல்லப பாண்டியன் கி.பி. 945-955\nசடையவர்மன் சீவல்லபன் கி.பி. 1145-1150\nசடையவர்மன் பராந்தக பாண்டியன் கி.பி.1150-1162\nமாறவர்மன் சீவல்லபன் கி.பி. 1132-1162\nசடையவர்மன் குலசேகர பாண்டியன் கி.பி. 1162-1175\nசடையவர்மன் வீரபாண்டியன் கி.பி. 1175-1180\nவிக்கிரம பாண்டியன் கி.பி. 1180-1190\nமுதலாம் சடையவர்மன் குலசேகரன் கி.பி. 1190-1218\nமுதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி. 1216-1238\nஇரண்டாம் சடையவர்மன் குலசேகரன் கி.பி. 1238-1250\nஇரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி. 1239-1251\nசடையவர்மன் விக்கிரமன் கி.பி. 1241-1254\nமுதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி. 1251-1271\nஇரண்டாம் சடையவர்மன் வீரபாண்டியன் கி.பி. 1251-1281\nமுதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் கி.பி. 1268-1311\nமாறவர்மன் விக்கிரம பாண்டியன் கி.பி. 1268-1281\nஇரண்டாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி. 1276-1293\nசடையவர்மன் பராக்கிரம பாண்டியன் கி.பி. 1422-1463\nமூன்றாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன் கி.பி. 1429-1473\nஅழகன் பெருமாள் பராக்கிரம பாண்டியன் கி.பி. 1473-1506\nகுலசேகர பாண்டியன் கி.பி. 1479-1499\nசடையவர்மன் சீவல்லப பாண்டியன் கி.பி. 1534-1543\nபராக்கிரம குலசேகரன் கி.பி. 1543-1552\nநெல்வேலி மாறன் கி.பி. 1552-1564\nசடையவர்மன் அதிவீரராம பாண்டியன் கி.பி. 1564-1604\nவரதுங்கப் பாண்டியன் கி.பி. 1588-1612\nவரகுணராம பாண்டியன் கி.பி. 1613-1618\nநம்பி நெடுஞ்செழியன் பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்த மன்னனாவான். பேரெயின் முறுவலார் இம்மன்னனைப் பற்றிப் பாடியுள்ளார். [1]\nஅதில் \"செய்தக்க எல்லாப் செய்தவன். இறந்துவிட்டான் புகழ் கொண்டான். இவனை இடுகாட்டில் புதைத்தால் என்ன புகழ் கொண்டான். இவனை இடுகாட்டில் புதைத்தால் என்ன சுட்டால் என்ன' என இப்புலவர் வருந்திக் கூறுவதும் குறிப்பிடத்தக்கது.\nநம்பி நெடுஞ்செழியன் சங்ககாலப் பாண்டியர் மரபில் தோன்றிய மாவீரன். இவன் உக்கிரப் பெருவழுதியின் தூதுவனாகக் கானப்பேரெயில் அரசனிடம் சென்றான். தூது பயன் தரவில்லை. போர் மூண்டது. போரில் தன் அரசனுக்காகப் போரிட்டு மாண்டான். இவன் போர்க்களத்தில் இறந்து கிடப்பதைப் பார்த்து, பேரெயில் முறுவலார் என்னும் புலவர் இவனது புகழைப் பாடியுள்ளார்,\nபுலவர் பேரெயில் என்னும் ஊரில் வாழ்ந்தவர். இது கானப்பேரெயில் எனப் பெயர் பெற்றிருந்த ஊர்.உக்கிரப் பெருவழுதி என்னும் பாண்டியன் இவ்வூரில் போரிட்டு அதனைத் தனதாக்கிக் கொண்டான். எனவே நம்பி நெடுஞ்செழியன் இந்தப் போரில் மாண்டவன்[சான்று தேவை] எனலாம்.\nதோளில் காப்பு அணிந்திருந்தான். தலையில் பூச் சூடியிருந்தான். சந்தனம் பூசிக்கொண்டிருந்தான்.\nவலியவர்களை வணங்கமாட்டான். மெலியவர்களை ஏளனப்படுத்த மாட்டான்.\nயாரிடமும் இரக்கமாட்டான். தன்னிடம் இரந்தவர்களுக்கு வேண்டியதைக் கொடுக்காமல் அனுப்ப மாட்டான்.\nதேரிலும், யானைமீதும் உலா வருவான்ய\nபாணர்களின் பசியைப் போக்கி, அவர்கள் மகிழ குளிர்பானங்கள் (தீம் செறி தசும்பு) தருவான்.\nஐயம் தோன்றாதபடி தெளிவாகப் பேசுவான்.\nகடி காலில் பூச் சூடினன்\nதண் கமழும் சாந்து நீவினன்\nவலியர் என வழி மொழிபவன்\nபிறரைத் தான் இரப்பு அறியலன்\nவேந்துடை அவையத்து ஒங்குபுகழ் தோற்றினன்\nபாண் உவப்ப பசி தீர்த்தனன்\nசெய்ப எல்லாம் செய்தனன் ஆகலின்\nபடுவழிப் படுக இப்புகழ் வெய்யோன் தலையே\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 ஏப்ரல் 2014, 13:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://englishfortamils.com/2011/01/job/", "date_download": "2018-04-26T13:20:45Z", "digest": "sha1:ZPJNBYNPM476645RVUUW4OTJ2Z6B5PAO", "length": 1933, "nlines": 36, "source_domain": "englishfortamils.com", "title": "job | English Tamil English .Com", "raw_content": "\njob noun வேலை , பணி , பதவி , அலுவல் , கடமை , பணி ஈடுபாடு , கூலிவேலை , சில்லறை வேலை , மறை சூழ்ச்சிச் செயல் , குற்றத்துறை ஈடுபாடு , வாடகைக் குதிரை , வாடகை வண்டி , வாணிகக் கொடுக்கல் வாங்கலுக்குரிய அற்பப் பொருள் தொகுதி , சிறுபணி செய்\n1. சில்லறை வேலை 2. கூலி வே 3. குறிப்பிட்ட வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} {"url": "http://kaviyazhi.blogspot.com/2013/11/blog-post.html", "date_download": "2018-04-26T13:44:51Z", "digest": "sha1:6E3JHTIVBYINCUL4YOAJPJHFTTTGAJX5", "length": 11134, "nlines": 205, "source_domain": "kaviyazhi.blogspot.com", "title": "கவியாழி : இதுவும் மனித இயல்பன்றோ..........", "raw_content": "\nதிண்டுக்கல் தனபாலன் 3 November 2013 at 07:43\nநல்ல கருத்துடன் பல உண்மைகள்... வாழ்த்துக்கள் ஐயா...\nஅனைத்தும் உண்மைகள் சகோதரரே. மோனை மாறாமல் மோகனம் பாடுகிறது தங்கள் கவிதை. மிகவும் ரசித்தேன். சுவைக்க தேனாக தங்கள் கவிவரிகளைத் தந்தமைக்கு நன்றிகள்..\nஇரு டஜன்வரிகளும் இதம் வருடின \n\"பணத்தின் மீதுதான் பக்தி என்றபின் பந்த பாசமே ஏதடா.. பதைக்கும் நெஞ்சினை அணைக்கும் யாருமே அண்ணன் தம்பிகள்தானடா...\" என்கிற கவிஞரின் வரிகளை நினைவூட்டின ஆரம்ப வரிகள்.\nபணத்தைச் சம்பாதிப்பதைவிட மனிதர்களைச் சம்பாதிப்பது பெரிய கலைதான்.\nமனித மாண்புகள் காணமல் போக இங்கே நெருக்கடிகள் நிரைய இருக்கிறது சார்.\nநிறைய கஷ்டப்பட்டிருக்கிறீர்கள் ஐயா தாங்கள்.\nஇயல்பான அழகிய மனித நிலை...\nகொடுத்தே இதயம் மகிழ்ந்திடுமாம்\" என்ற அடிகளில்\n\"இதயம் மகிழ உதவிடுங்கள் ''. நல்ல கருத்தை எடுத்துச் சொல்கின்றது கவிதை.\nதங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்\nபிறந்த நாள் வாழ்த்துக்கு நன்றி\nஅரசன் அன்றே கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்\nகார்த்திகைக் குளிரில் காதல் .......\nதிருவாளர்.எஸ்.ரமணி .அவர்களின் சென்னை விஜயம்\nவருகைத் தந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்தது\nமழையும் பெய்யவில்லை அதனால் .....\nஇன்று நீரழிவு நோய் தினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://onlycinemasnews.blogspot.com/2013/06/blog-post_8.html", "date_download": "2018-04-26T13:39:37Z", "digest": "sha1:F3UP4WPV6KIK6TTXWSEPACLD3ZVDFZ4C", "length": 6688, "nlines": 96, "source_domain": "onlycinemasnews.blogspot.com", "title": "நாளை ரஜினியின் கோச்சடையான் ட்ரெய்லர் வெளியீடு", "raw_content": "\nநாளை ரஜினியின் கோச்சடையான் ட்ரெய்லர் வெளியீடு\nஎந்திரன் படத்தையடுத்து மூன்று ஆண்டுகளுக்குப்பிறகு ரஜினி நடித்துள்ள படம் கோச்சடையான். இப்படத்தில் அப்பா-மகன் என இரண்டு கெட்டப்புகளில் நடிக்கிறார்.\n5 மொழிகளில் தயாராகும் இப்படம் ஹாலிவுட் மற்றும் 3டி மோஷன் கேப்சரிங் தொழில் நுட்பத்தில் தயாராகியுள்ளது.\nஇந்தியாவில் இதுவரை எந்தவொரு படமும் இந்த தொழில் நுட்பத்தில் வெளிவராத காரணத்தினால், பெருவாரியான இந்திய ரசிகர்கள் இப்படத்தின் வரவை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.\nஅதனால் இப்படத்தை இந்தியா மட்டுமின்றி பல வெளிநாடுகளிலும் வெளியிட திட்டமிட்டுள்ள ரஜினி, படத்தின் ட்ரெய்லரை கேன்ஸ் திரைப்பட விழாவில் வெளியிட திட்டமிட்டார்.\nஆனால், ரெடி பண்ணப்பட்ட ட்ரெய்லரில் அவருக்கு திருப்தி ஏற்படாததால், அந்த முயற்சியை கைவிட்டார் ரஜினி.\nஇருப்பினும் சர்வதேச அளவிலான ஏதாவது ஒரு விழாவில்தான் கோச்சடையான் ட்ரெய்லரை வெளியிட வேண்டும் என்ற முடிவில் இருந்து வந்தார் அவர்.\nஇந்த நிலையில், நாளை (ஞாயிற்றுக்கிழமை) கோச்சடையான் படத்தின் ட்ரெய்லரை வெளியிட ரஜினி முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nஆனால், சாதாரணமாக வெளியிடுகிறாரா அல்லது ஏதாவது விழாக்களில் வெளியிடுகிறாரா என்பதை சஸ்பென்சாக வைத்துள்ளார்களாம். ஆனால். ரஜினிதரப்பிலிருந்து இதுபற்றிய எந்த அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படவில்லை.\n3 நாட்களில் 21 கோடி வசூல் செய்த தனுஷின் ராஞ்சனா\nஜில்லா படகுழுவினருக்கு விஜய் பிரியாணி விருந்து\nபடப்பிடிப்பு தளத்திலேயே ஆர்யாவை மனைவி போன்று உபசரி...\nஅம்பிகாபதியுடன் போட்டியிட தயாராகும் அன்னக்கொடி\nஹன்சிகாவுக்கு தடைபோட்ட சிம்பு - புகையும் புதுத்தகவ...\nகமல் செய்த அதிரடி மாற்றம்\nதயாராகிறது ரஜினியின் சந்திரமுகி 2\nதயாரிப்பாளர் பொறுப்பிலிருந்து ஓட்டம் பிடித்த விஜயச...\nரசிகர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் விஜய்\nதீயா வேலை செய்யணும் குமாரு - விமர்சனம்\nதில்லு முல்லு - சினிமா விமர்சனம்\nகுட்டிப்புலி - சினிமா விமர்சனம்\nநாளை ரஜினியின் கோச்சடையான் ட்ரெய்லர் வெளியீடு\nவிஜய்யை டீலில் விட்ட விக்ரம்\nதலைவா பட பாட்டு திருட்டு - கமிஷனரிடம் விஜய் புகார்...\nஇனி சந்தானம் வேண்டாம் - ஹீரோக்கள் அதிரடி முடிவு\n© 2010 சினிமா செய்திகள் மட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/world/2017/nov/10/police-identifies-nine-bodies-found-in-tokyo-apartment-2805425.html", "date_download": "2018-04-26T13:21:31Z", "digest": "sha1:Q6LJUPWLFJ277QX4NR56WPZUVX3ZY4OV", "length": 9944, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "ஒரு அபார்ட்மென்ட்டில் ஒன்பது பிணங்கள்: துண்டு துண்டுகளாக வெட்டி வைத்திருந்த ஜப்பானின் 'ஆட்டோ சங்கர்'- Dinamani", "raw_content": "\nஒரு அபார்ட்மெண்ட்டில் ஒன்பது பிணங்கள்: துண்டு துண்டுகளாக வெட்டி வைத்திருந்த ஜப்பானின் 'ஆட்டோ சங்கர்'\nடோக்கியோ: ஜப்பான் நாட்டு இளைஞர் ஒருவர் தன்னுடைய அபார்ட்மெண்ட்டில் ஒன்பது பேரைக் கொன்று, அவர்களது பிணங்களை துண்டு துண்டுகளாக வெட்டி சிறிய குளிர்சாதன பெட்டிகளில் வைத்திருந்த கொடூரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.\nஜப்பானின் தலைநகரான டோக்கியோவைச் சேர்ந்த இளம்பெண் அய்க்கோ தமுரா(23). சில நாட்களுக்கு முன் இவர் மர்மமாக காணாமல் போனார். அது பற்றிய விசாரணையில் இறங்கிய போலீசார், அவர் காணாமல் போவதற்கு சில நாட்களுக்கு முன்னால் தனது டிவிட்டர் பக்கத்தில் 'யாருடனாவது சேர்ந்து தற்கொலை செய்து கொள்ள விரும்புவதாக' தெரிவித்திருந்ததைக் கண்டறிந்தனர். அதற்கு இளைஞர் ஒருவர் , 'நாம் சேர்ந்து தற்கொலை செய்யலாம்' என்று பதிலளித்திருந்த தகவலும் அவர்களுக்கு தெரிய வந்தது.\nஉடனடியாக அது பற்றிய விசாரணையில் இறங்கிய போலீசார் டகாஹிரோ சிரைஷி (27) என்ற ஜப்பான் இளைஞரை கடந்த மாத இறுதியில் கைது செய்தனர். பின்னர் அவரது அபார்ட்மென்ட்டினை நவம்பர் 30-ஆம் தேதி அன்று சோதனையிட்ட போலீஸாருக்கு கடும் அதிர்ச்சி காத்திருந்தது.\nஅங்கு சிறிய அட்டைப் பெட்டிகளிலும், சிறிய அளவிலான குளிர்சாதன பெட்டிகளிலும் வெட்டப்பட்ட கை, கால்கள் மற்றும் தலை உள்ளிட்ட மனித உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன. அத்துடன் ஆங்காங்கே என மொத்தம் 240 எலும்புகளும் கண்டெடுக்கப்பட்டன.\nஇதனைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்த போலீசார் அது பற்றிய விசாரணையினைத் துவங்கினர். தற்பொழுது அந்த உடல் பாகங்கள் எட்டு பெண்கள் மற்றும் ஒரு ஆணுக்கு உரியது என்று டி.என்.ஏ சோதனையின் முடிவில் கண்டறிந்துள்ளனர். இவர்களில் மூன்று பெண்கள் பள்ளி மாணவிகள். அவர்களில் ஒரு பெண்ணின் காதலனும் இறந்தவர்களில் அடங்குவார்.. இதர அனைவரும் இளம் வயதினர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதுபற்றிய விசாரணையில் பெரும்பாலும் பணத்துக்காகவும், பாலியல் தேவைக்காகவும் இந்த் கொலைகளில் ஈடுபட்டதாக , தற்பொழுது போலீஸ் பிடியில் உள்ள டகாஹிரோ சிரைஷி தெரிவித்தார். அத்துடன் இந்த அபார்ட்மென்ட்டுக்கு ஆகஸ்டில் குடி வந்ததிலிருந்து அக்டோபர் மாத இறுதி வரை இந்த கொலைகளில் ஈடுபட்டதாக தெரிவித்தார்.\nமுதல் கொலையில் ஈடுபட்ட பொழுது பாகங்களை வெட்டித் துண்டாக்க மூன்று நாட்கள் ஆனதாக கூறிய அவர், பின்னர் ஒரு நாளிலேயே எளிதாக அதனை செய்ததாக கூறினார்.\nஇந்த தொடர் கொலைகள் காரணமாக ஜப்பான் மக்கள் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.\nஸ்டண்ட் மாஸ்டர் மகன் திருமண ஆல்பம்\nநாயகி இஷாரா நாயர் - சாஹில் திருமணம்\nசச்சின் பிறந்த நாள் ரசிகர்கள் வாழ்த்து\nசஞ்சு படத்தின் டீஸர் வெளியீடு\nரயில் மோதி 11 மாணவர்கள் பலி\nஜெயகாந்தன் 84ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா\nதலையில் காயம் ஆனால் காலில் ஆபரேசன்\nஇளவரசர் தம்பதியருக்கு 3வது குழந்தை பிறந்தது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.techtamil.com/tutorials/php-tutorial/php-html-form-input-tutorial-part6/", "date_download": "2018-04-26T13:16:43Z", "digest": "sha1:QYDVJ3PH5JMOSI543QE4GADCGI4Q72V5", "length": 5338, "nlines": 131, "source_domain": "www.techtamil.com", "title": "PHP – HTML Form Input Tutorial Part6 – TechTamil News", "raw_content": "\nContact / அறிமுகம் / தொடர்புக்கு\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\n​இணைய நிரல் பொறியாளர்களுக்கான ​ சிறந்த ​10 PHP Frameworkகள்\nவிளம்பர வடிவமைப்பு மென்பொருள் ஒன்றை வெளியிட்டது கூகல்\nவிண்டோஸ் 8 விளையாட்டுக்களை திருடுவது எப்படி நோக்கியா பொறியாளர் கசிய விட்ட…\nஇலவச இரண்டு Task Management மென்பொருள்கள் (அனைத்து வகையான பணிகளுக்கும்)\nகார்த்திக் விளக்கும் Google SEOவின் புதிய பரிணாமம் – பென்குயின் அப்டேட்\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} {"url": "http://www.techtamil.com/tutorials/pixlr-express-red-eye-removal/", "date_download": "2018-04-26T13:21:18Z", "digest": "sha1:AUEYV5VF42KNN6SZTZZVOVGG2ZS65AAL", "length": 7595, "nlines": 130, "source_domain": "www.techtamil.com", "title": "சிகப்பு கண்களை நிறம் மாற்றும் வழிமுறை – TechTamil News", "raw_content": "\nContact / அறிமுகம் / தொடர்புக்கு\nசிகப்பு கண்களை நிறம் மாற்றும் வழிமுறை\nசிகப்பு கண்களை நிறம் மாற்றும் வழிமுறை\nபுகைப்படம் எடுக்கும்பொழுது உங்கள் கண் சிகப்பு வண்ணமாக வருவதை நீங்கள் பார்த்திருக்கலாம் இதற்கு Red Eye என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். இதை எவ்வாறு எளிதாக PIXLR (www.pixlr.com) மூலமாக நீக்கலாம் என்பது கொடுக்கப்பட்டுள்ளது.\nCreate Wonderful shiny moon effect for your Text in photoshop. உங்களுடைய எழுத்துக்களை அழகிய நிலா ஒளியை போல் மாற்றுங்கள் Photoshop ன் உதவியுடன். மேலும்...\n​இணைய நிரல் பொறியாளர்களுக்கான ​ சிறந்த ​10 PHP Fra...\nஉலகில் உள்ள இணையதளங்களில் 82% தளங்கள் PHP நிரல் மொழியில் தான் எழுதப்பட்டுள்ளன. C நிரல் மொழி தெரிந்த எவரும் PHP கற்றுக் கொள்ளலாம். MVC Framework என்...\nஅமெரிக்க டாலரில் உங்கள் புகைப்படம்...\nமிக எளிமையான செய்முறை. அமெரிக்க டாலரில் உங்களுடைய முகத்தை எவ்வாறு கொண்டுவருவது என்பதை வீடியோ டுடோரியாளுடன் கொடுக்கப்பட்டுள்ளது . மேலும் இதற்கு தேவையான...\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\n​இணைய நிரல் பொறியாளர்களுக்கான ​ சிறந்த ​10 PHP Frameworkகள்\nவிளம்பர வடிவமைப்பு மென்பொருள் ஒன்றை வெளியிட்டது கூகல்\nவிண்டோஸ் 8 விளையாட்டுக்களை திருடுவது எப்படி நோக்கியா பொறியாளர் கசிய விட்ட…\nஇலவச இரண்டு Task Management மென்பொருள்கள் (அனைத்து வகையான பணிகளுக்கும்)\nகார்த்திக் விளக்கும் Google SEOவின் புதிய பரிணாமம் – பென்குயின் அப்டேட்\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n​இணைய நிரல் பொறியாளர்களுக்கான ​ சிறந்த ​10 PHP Frameworkகள்\nவிளம்பர வடிவமைப்பு மென்பொருள் ஒன்றை வெளியிட்டது கூகல்\nவிண்டோஸ் 8 விளையாட்டுக்களை திருடுவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.unmaikal.com/2014/12/blog-post_6.html", "date_download": "2018-04-26T13:21:45Z", "digest": "sha1:AUSVDJRE2VOK7EWXHCYVS4BFHIYRJKNF", "length": 30791, "nlines": 478, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: சர்வதேச தரம்மிக்க மைதானம், மட்டக்களப்புக்கு கிடைத்த வரப்பிரசாதம் *கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களப் பணிப்பாளர் எஸ். மணிவண்ணன்", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nகம்யூனிசகட்சி,லங்கா சமசமாஜ கட்சி போன்றன மகிந்த ர...\nமுஸ்லிம் மக்களின் பாதுகாப்பிற்கு இறைவனுக்கு அடுத்த...\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பு மைத்திரிபால சிறிசேனவுக்க...\nமானமுள்ள ஒரு மறத்தமிழனும் இருவருக்கும் வாக்களிக்க ...\nலயன் காம்பிரா யுகம் இனி இல்லை. புதிய வீடுகள் வழங்க...\nமைத்திரிபாலவிற்கு தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாக...\nதீர்வு விடயத்தில் கையை விரித்தார் மைத்திரி\nகீரிகளினதும், பாம்புகளினதும் போலியான ஒற்றுமைக் கூண...\n கூட்டமைப்பால் ஐந்து கோடிக்கு விலைப...\nயாருக்கு ஆதரவு: மு.கா. இன்று முடிவு\nஜனாதிபதித் தேர்தலில் சர்வதேச சக்திகள் பெருமளவு ஆதி...\nபிணங்களை வைத்து அரசியல் செய்யும் விண்ணர்கள்\nஅன்னத்தின் குகைக்குள் ஐ.ம.சு.கூ உறுப்பினர் ஆவேசம்\nஜனாதிபதி தேர்தலில் பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப் நிலைப...\nஜே.வி.பி. நியூஸ் டொட்கொம் இணையத்தளத்திற் கெதிராக ந...\n“எஸ். பொவை சிந்திக்கும் நாள்” -பாரிஸ் நகரில்\nமஹிந்த சிந்தனை; தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு\n\"ரிஷாத் பதியுதீன் முடிவு கட்சியின் முடிவல்ல\" : ஹிஸ...\nஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் \"உலகை வெல்லும் வழி\"எனு...\nஇன, மத அரசியல் உரிமைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த...\nபொது எதிரணியினரால் அவமானப்படுத்தப்பட்ட தமிழ்த் தேச...\nமைத்திரியை ஆதரிக்கும் றிசாட் பதியுதீன் முடிவு முட்...\nஎதிரணியில் ஏராளமான ‘முனாபிக்குகள்;’; தேர்தலில் முஸ...\nஎதிரணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் மலையகம் புறக்கணி...\nகிழக்கின் விடிவுக்கு வித்திட்ட ஜனாதிபதி மஹிந்த இன ...\nஅமைச்சர் ரிசாத் பதியுதீன் கட்சி மைத்திரிக்கு ஆதரவு...\nஅணை உடைப்பெடுப்பு: மூதூர் மூழ்கும் அபாயம்\nUPFA தேர்தல் கொள்கை பிரகடனம் நாளை வெளியீடு\nதமிழ் கூட்டமைப்பின் தீர்மானம் இறுதி 48 மணித்தியாலத...\nஆதரவளித்த தமிழ், முஸ்லிம் தரப்பிற்கு முதுகில் குத்...\nதேர்தலை தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும்: அ.இ.த.கா\nத.தே.கூ ஆதரவாளர்கள் ஐ.ம.சு.கூ.வில் இணைவு\nஆயித்தியமலையில் தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் அலுவல...\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் சுமார் 250க்...\nசெங்கலடி செல்லம் தியேட்டர் உரிமையாளர் ஐக்கிய தேசிய...\nகுளோபல் தமிழ் குருபரனின் மற்றுமொரு திருகுதாளம் அம...\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மா...\nசெங்கலடி செல்லம் தியேட்டர் மோகனின் அரசியல் நாடகம்\nலயன்களுக்கு பதிலாக தனித் தனியான வீடுகள்\nமைத்திரிக்கு வாக்களிக்குமாறு தமிழருக்கு கட்டளை விட...\nமட்டு. இணைப்பாளர் அருண் தம்பிமுத்து உள்ளிட்ட குழுவ...\nஆரையம்பதியில் தமிழ்மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிய...\nமுனைக்காட்டில் தமிழ்மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி...\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தேர்தல் அ...\nரணில் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை இழந்திருப்பத...\nசர்வஜன வாக்கெடுப்பின் மூலமே அரசியலமைப்பை மாற்றுவேன...\nஐரோப்பிய சட்டத்துறையில் பரிஸ்ரர் (Barrister) பட்டம...\nநினைத்தால் ரணிலையும் எடுப்பேன்: ஜனாதிபதி\nத.தே.கூட்டமைப்பு மைத்திரிக்கு ஆதரவு: இன்று சுன்னாக...\nஎமது படை வீரர்களை சர்வதேச நீதிமன்றில் நிறுத்தவோ, அ...\nENDLF -TBC -GTAJ -NRT முக்கிய புள்ளி ராமராஜ் கைது ...\nதேசிய புனித நூலா பகவத் கீதை\nபுகலிட தமிழ் தேசிய கனவான்களே கிளிநொச்சியில் 3000 ...\nமுஸ்லிம்களின் தீர்மானம் நியாயமானது முஸ்லிம் கட்சிக...\nஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் பதவியில் இருந்து...\nஜனாதிபதித் தேர்தல்: வேட்பு மனுக்கள் இன்று ஏற்பு 17...\nமைத்திரியின் அணியிலுள்ள ஆபத்தான பேரினவாத சக்திகள்\nமஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கும் தமிழ் மக்கள் வ...\nசர்வதேச தரம்மிக்க மைதானம், மட்டக்களப்புக்கு கிடைத்...\nதமிழ் மக்கள் விடுதலை கட்சியின் மகளிர் அணியின் விசே...\nஎழிலன் கடத்திச் சென்ற பிள்ளைகள் எங்கே\nமகிந்தவை அகற்ற ரூ. 25கோடி பெறுமதியான அமெரிக்க டொலர...\nஜனவரி 7, 8ஆம் திகதிகளில் பாடசாலைகளுக்கு விடுமுறை\nநெடியவன் என்றழைக்கப்படும் பேரின்பநாயகம் சிவபரன் என...\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில்தான் மக்கள் ...\nலெனின் மதிவானத்தின் நூல் விமர்சன நிகழ்வு\nதமிழ் தேசிய கூட்டமைப்பு சிஹல உறுமைய-மைத்திரி கூட்...\nமஹிந்த ஆட்சியை வீழ்த்த அமெரிக்க,ஐரோப்பிய தூதரங்கள...\n“தமிழ்த்தேசியத்தின் பெயரில் குஷ்பு மீது கொட்டப்படு...\nகவிஞர் மஜீத் அவர்கள் கிட்டத்தட்ட 18 வருடங்களாக தீர...\nதமிழ் தேசிய கூட்டமைப்பினரின் வன்முறையால் கேலிக்கூத...\nஎதிரணி உடன்படிக்கை சிறுபான்மை மக்களின் பிரச்சனைகளை...\nமட்டக்களப்பில் 365,163 பேர் வாக்களிக்கத்தகுதி\nகிட்டதட்ட நுாற்றுக் கணக்கான தொழில்களில், ஸ்டாலின் ...\nசர்வதேச தரம்மிக்க மைதானம், மட்டக்களப்புக்கு கிடைத்த வரப்பிரசாதம் *கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களப் பணிப்பாளர் எஸ். மணிவண்ணன்\n175 மில்லியன் ரூபாய் செலவில் கட்டிமுடிக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு வெபர் மைதானம், எதிர்வரும் 16ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்படவுள்ளதை முன்னிட்டு, ஒழுங்கமைப்பு தொடர்பான கூட்டம் மாநகரசபையில் வெள்ளிக்கிழமை (05) இடம்பெற்றது.\nமட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம். உதயகுமார் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது.\nமிகவும் பிரமாண்டமான முறையில் அமைக்கப்பட்டிருக்கும் இம்மைதானத்தில் உள்ளக விளையாட்டரங்கு, தங்குமிட வசதிகள், ஓடு பாதை, பார்வையாளர் மண்டபம், நீச்சல் தடாகம் என சர்வதேச விளையாட்டு மைதானததுக்கு ஈடாக அமைந்திருப்பது, மட்டக்களப்புக்கு கிடைத்த வரப்பிரசாதம் என கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களப் பணிப்பாளர் எஸ். மணிவண்ணன் தெரிவித்தார்.\nமேலதிக அரசாங்க அதிபர் எஸ். கிரிதரன், மாநகர சபையின் உதவி ஆணையாளர் என். தனஞ்செயன், பொறியியலாளர் பி. அச்சுதன், மட்டக்களப்பு வலய கல்விப் பணிப்பாளர் கே. பாஸ்கரன், மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் வி. ஈஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nவிளையாட்டு மைதானம் திறப்பு விழாவின் பின்பு, மைதானத்தின் பராமரிப்பு மட்டக்களப்பு மாநகர சபைக்கு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகம்யூனிசகட்சி,லங்கா சமசமாஜ கட்சி போன்றன மகிந்த ர...\nமுஸ்லிம் மக்களின் பாதுகாப்பிற்கு இறைவனுக்கு அடுத்த...\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பு மைத்திரிபால சிறிசேனவுக்க...\nமானமுள்ள ஒரு மறத்தமிழனும் இருவருக்கும் வாக்களிக்க ...\nலயன் காம்பிரா யுகம் இனி இல்லை. புதிய வீடுகள் வழங்க...\nமைத்திரிபாலவிற்கு தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாக...\nதீர்வு விடயத்தில் கையை விரித்தார் மைத்திரி\nகீரிகளினதும், பாம்புகளினதும் போலியான ஒற்றுமைக் கூண...\n கூட்டமைப்பால் ஐந்து கோடிக்கு விலைப...\nயாருக்கு ஆதரவு: மு.கா. இன்று முடிவு\nஜனாதிபதித் தேர்தலில் சர்வதேச சக்திகள் பெருமளவு ஆதி...\nபிணங்களை வைத்து அரசியல் செய்யும் விண்ணர்கள்\nஅன்னத்தின் குகைக்குள் ஐ.ம.சு.கூ உறுப்பினர் ஆவேசம்\nஜனாதிபதி தேர்தலில் பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப் நிலைப...\nஜே.வி.பி. நியூஸ் டொட்கொம் இணையத்தளத்திற் கெதிராக ந...\n“எஸ். பொவை சிந்திக்கும் நாள்” -பாரிஸ் நகரில்\nமஹிந்த சிந்தனை; தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு\n\"ரிஷாத் பதியுதீன் முடிவு கட்சியின் முடிவல்ல\" : ஹிஸ...\nஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் \"உலகை வெல்லும் வழி\"எனு...\nஇன, மத அரசியல் உரிமைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த...\nபொது எதிரணியினரால் அவமானப்படுத்தப்பட்ட தமிழ்த் தேச...\nமைத்திரியை ஆதரிக்கும் றிசாட் பதியுதீன் முடிவு முட்...\nஎதிரணியில் ஏராளமான ‘முனாபிக்குகள்;’; தேர்தலில் முஸ...\nஎதிரணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் மலையகம் புறக்கணி...\nகிழக்கின் விடிவுக்கு வித்திட்ட ஜனாதிபதி மஹிந்த இன ...\nஅமைச்சர் ரிசாத் பதியுதீன் கட்சி மைத்திரிக்கு ஆதரவு...\nஅணை உடைப்பெடுப்பு: மூதூர் மூழ்கும் அபாயம்\nUPFA தேர்தல் கொள்கை பிரகடனம் நாளை வெளியீடு\nதமிழ் கூட்டமைப்பின் தீர்மானம் இறுதி 48 மணித்தியாலத...\nஆதரவளித்த தமிழ், முஸ்லிம் தரப்பிற்கு முதுகில் குத்...\nதேர்தலை தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும்: அ.இ.த.கா\nத.தே.கூ ஆதரவாளர்கள் ஐ.ம.சு.கூ.வில் இணைவு\nஆயித்தியமலையில் தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் அலுவல...\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் சுமார் 250க்...\nசெங்கலடி செல்லம் தியேட்டர் உரிமையாளர் ஐக்கிய தேசிய...\nகுளோபல் தமிழ் குருபரனின் மற்றுமொரு திருகுதாளம் அம...\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மா...\nசெங்கலடி செல்லம் தியேட்டர் மோகனின் அரசியல் நாடகம்\nலயன்களுக்கு பதிலாக தனித் தனியான வீடுகள்\nமைத்திரிக்கு வாக்களிக்குமாறு தமிழருக்கு கட்டளை விட...\nமட்டு. இணைப்பாளர் அருண் தம்பிமுத்து உள்ளிட்ட குழுவ...\nஆரையம்பதியில் தமிழ்மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிய...\nமுனைக்காட்டில் தமிழ்மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி...\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தேர்தல் அ...\nரணில் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை இழந்திருப்பத...\nசர்வஜன வாக்கெடுப்பின் மூலமே அரசியலமைப்பை மாற்றுவேன...\nஐரோப்பிய சட்டத்துறையில் பரிஸ்ரர் (Barrister) பட்டம...\nநினைத்தால் ரணிலையும் எடுப்பேன்: ஜனாதிபதி\nத.தே.கூட்டமைப்பு மைத்திரிக்கு ஆதரவு: இன்று சுன்னாக...\nஎமது படை வீரர்களை சர்வதேச நீதிமன்றில் நிறுத்தவோ, அ...\nENDLF -TBC -GTAJ -NRT முக்கிய புள்ளி ராமராஜ் கைது ...\nதேசிய புனித நூலா பகவத் கீதை\nபுகலிட தமிழ் தேசிய கனவான்களே கிளிநொச்சியில் 3000 ...\nமுஸ்லிம்களின் தீர்மானம் நியாயமானது முஸ்லிம் கட்சிக...\nஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் பதவியில் இருந்து...\nஜனாதிபதித் தேர்தல்: வேட்பு மனுக்கள் இன்று ஏற்பு 17...\nமைத்திரியின் அணியிலுள்ள ஆபத்தான பேரினவாத சக்திகள்\nமஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கும் தமிழ் மக்கள் வ...\nசர்வதேச தரம்மிக்க மைதானம், மட்டக்களப்புக்கு கிடைத்...\nதமிழ் மக்கள் விடுதலை கட்சியின் மகளிர் அணியின் விசே...\nஎழிலன் கடத்திச் சென்ற பிள்ளைகள் எங்கே\nமகிந்தவை அகற்ற ரூ. 25கோடி பெறுமதியான அமெரிக்க டொலர...\nஜனவரி 7, 8ஆம் திகதிகளில் பாடசாலைகளுக்கு விடுமுறை\nநெடியவன் என்றழைக்கப்படும் பேரின்பநாயகம் சிவபரன் என...\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில்தான் மக்கள் ...\nலெனின் மதிவானத்தின் நூல் விமர்சன நிகழ்வு\nதமிழ் தேசிய கூட்டமைப்பு சிஹல உறுமைய-மைத்திரி கூட்...\nமஹிந்த ஆட்சியை வீழ்த்த அமெரிக்க,ஐரோப்பிய தூதரங்கள...\n“தமிழ்த்தேசியத்தின் பெயரில் குஷ்பு மீது கொட்டப்படு...\nகவிஞர் மஜீத் அவர்கள் கிட்டத்தட்ட 18 வருடங்களாக தீர...\nதமிழ் தேசிய கூட்டமைப்பினரின் வன்முறையால் கேலிக்கூத...\nஎதிரணி உடன்படிக்கை சிறுபான்மை மக்களின் பிரச்சனைகளை...\nமட்டக்களப்பில் 365,163 பேர் வாக்களிக்கத்தகுதி\nகிட்டதட்ட நுாற்றுக் கணக்கான தொழில்களில், ஸ்டாலின் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://indrayavanam.blogspot.com/2014/01/blog-post_12.html", "date_download": "2018-04-26T13:10:53Z", "digest": "sha1:D4L7Z37YZWW275LM2ET2S4FVASO34EBX", "length": 25543, "nlines": 144, "source_domain": "indrayavanam.blogspot.com", "title": "ஜில்லா பார்த்தேன்...", "raw_content": "\nகொஞ்சம் கூடுதல் எதிர்பார்ப்போடு தான் படம்பார்க்க போனேன். விஜய்காக இல்லை... மோகன்லாலுக்கா வழக்கமான தமிழ் நடிப்புத்தன்மையிலிருந்து சற்று மாறுபட்ட மலையாள டைப் நடிப்பை எதிர்பார்த்து. ஆனால் மோகன்லாலை முழுமையான தமிழ்நடிகராக மாற்றிவிட்டார் இயக்குனர் நேசன். மதுரை கதை களம் என்பதால் வழக்கம் போல் வன்முறை அதிகம்.விஜய்க்கும் நடிக்க புதிதாக ஒன்றுமில்லை காமெடி, சென்டிமென்ட, அடிதடி,டான்ஸ் அவ்வளவுதான்.என்ன இந்தபடத்தில் பஞ்ச்டயலாக இல்லை. தலைவா படத்தில் பஞ்ச் பேசி பட்ட அவஸ்தை போதும் என நினைத்திருக்கலாம்.காஜால் அகர்வால் போலீஸாக காக்கிச்சட்டையில் வந்து செல்கிறார்.சூரி,தம்பிராமையா,நிவேதாதாமஸ் பூர்ணிமா பாக்கியராஜ் என ..... நடிகர்கள் பட்டாளம் அதிகம்.\nமதுரையில் மிகப்பெரிய தாதாவான மோகன்லாலிடம் அடியாளாக இருக்கிறார் விஜய்-யின் அப்பா. ஒருநாள் மோகன்லாலின் மனைவியை பிரசவத்துக்கு அழைத்துச் செல்லும் வழியில் போலீஸ்காரர்களால் விஜய்-யின் அப்பா சுட்டுக் கொல்லப்படுகிறார். அன்றிலிருந்து விஜய்-க்கு போலீஸ் என்றாலே பிடிக்காமல் போய்விடுகிறது.\nதனது அப்பாவை இழந்த விஜய், மோகன்லால் வீட்டில் அவரது மகனாகவே வளர்கிறார். வளர்ந்து பெரியவனானதும் மோகன்லால் கட்டளையிடும் வேலைகளை செய்து முடிப்பவராக விளங்குகிறார் விஜய். மோகன்லாலுக்கு மஹத், நிவேதா தாமஸ் என இரண்டு பிள்ளைகள்.\nமதுரை வீதியில் ஒருநாள் காஜல் அகர்வாலை பார்க்கும் விஜய் அவள்மீது காதல் கொள்கிறார். மஹத், நிவேதா தாமஸிடம் சென்று காஜலின் அழகை வர்ணிக்கிறார். இதனால் அவர்களுக்கு காஜலைப் பார்க்கும் ஆசை துளிர்விடவே, காஜலின் வீட்டுக்கு விஜய்யை கூட்டிக் கொண்டு செல்கிறார்கள். அங்கு, அவளை போலீஸ் உடையில் பார்த்ததும், அவள் மீது வெறுப்பு கொள்கிறார் விஜய்.\nமறுமுனையில் மதுரைக்கு போலீஸ் கமிஷனராக வரும் பிரதீப் ராவத், விஜய் வீட்டில் இல்லாத சமயத்தில் வந்து மோகன்லாலை கைது செய்து அழைத்துப் போகிறார். அவரை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துப் போகாமல் போலீஸ் வண்டியிலேயே 5 மணி நேரம் மதுரையை வலம் வருகிறார். அப்போது மோகன்லாலிடம் ரவுடித்தனத்தை விட்டுவிடுமாறு வித்யூத் ஜம்வால் கூறுகிறார். ஆனால், மோகன்லால் ரவுடிசத்தை விடமுடியாது என்பதில் விடாப்பிடியாக இருக்கிறார். இறுதியில், மோகன்லாலை எச்சரித்துவிட்டு நடுரோட்டில் இறக்கிவிட்டு போய்விடுகிறார்.\nஇதை அறியும் விஜய், தன் அப்பாவை கைது செய்த வித்யூத் ஜம்வாலின் ஒரு கையை வெட்டி விடுகிறார். இருந்தும், தான் கைதான அவமானம் தாங்கமுடியாத மோகன்லால் தன்னுடைய ஆள் ஒருவர் போலீஸ் பணியில் இருந்தால் இதுபோன்று நடக்காது என முடிவெடுத்து, விஜய்யை போலீஸ் பணியில் அமர்த்த முடிவெடுக்கிறார். ஆனால், போலீஸ் என்ற வார்த்தையே பிடிக்காத விஜய் இதற்கு மறுப்பு தெரிவிக்கிறார்.\nமோகன்லாலின் விருப்பத்திற்காக வேண்டா வெறுப்பாக போலீஸ் செலக்ஷனில் கலந்து கொள்கிறார். இருந்தாலும் மோகன்லால், மந்திரியான சம்பத்தின் உதவியால் விஜய்யை கமிஷனராக ஆக்குகிறார். கமிஷனராகும் விஜய், போலீஸ் உடை உடுத்தாமல், சாதாரண உடையில் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று வருவதாக இருக்கிறார்.\nஇந்நிலையில், ஒருநாள் மஹத் தனது அடியாட்களுடன் சென்று ஒரு இடத்தை வாங்குவதற்காக அடி-தடி நடத்தி அந்த இடத்தை துவம்சம் செய்துவிட்டு வருகிறார். இந்த கலவரத்தில் அந்த இடத்தில் இருக்கும் சிலிண்டர்களில் உள்ள வாயு கசிந்து சிலிண்டர்கள் எல்லாம் வெடித்து சிதறுகிறது. அந்த இடத்துக்கு அருகில் உள்ள பள்ளிக்கூடம், பேருந்து, சாலையில் செல்பவர்கள் என்று அனைவரும் இந்த தீயிற்கு இரையாகின்றனர். அதில், பல குழந்தைகளும் பலியாகின்றனர். இதையெல்லாம் பார்க்கும் விஜய் இதற்கு மோகன்லால்தான் காரணம் என்று அவர்மீது கோபப்படுகிறார்.\nஎனவே, அதுவரை போலீஸ் உடையை போடாத விஜய், அந்த உடையை அணிந்துகொண்டு மோகன்லாலிடம் சென்று இனிமேல் இதுபோன்ற காரியங்களில் இறங்கவேண்டாம் என்று சொல்கிறார். தன்னால் வளர்ந்தவன் இன்று இப்படி தன்னை மிரட்டுகிறானே என்று விஜய் மீது கோபம் கொள்கிறார் மோகன்லால். இறுதியில், உன்னால் முடிந்ததை நீ செய்துகொள். என்னால் முடிந்ததை நான் செய்கிறேன் என்று சவால் விட்டு இருவரும் பிரிகிறார்கள்.\nஇறுதியில், தன் அப்பாவை மாற்றினாரா அல்லது போலீஸ் வேலையை விட்டுவிட்டு தன் அப்பாவுடன் சேர்ந்தாரா அல்லது போலீஸ் வேலையை விட்டுவிட்டு தன் அப்பாவுடன் சேர்ந்தாரா\nஇயக்குனர் நேசன் தனது முதல்படத்திலேயே விஜய்,மோகன்லாலை வைத்து இயக்கியருப்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயம். அறிமுகப்பாடலும்,காதல் பாடல் எடுக்கபட்ட விதம்,காட்சிகளின் வேகம் என படம் பார்க்கலாம்.\nஉங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்\nநானும் ஜில்லா பார்த்தேன். என் பதிவில் பாருங்களேன்\n13 ஜனவரி, 2014 ’அன்று’ முற்பகல் 9:20\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\nராஜராஜ சோழன் எந்த சாதிக்காரன்\nமன்னர் ராஜராஜ சோழன் எங்க சாதிகாரன்..இல்ல..இல்ல எங்க சாதிக்காரன் என குத்துவெட்டு நடந்து கொண்டிருக்கிறது. பசும்பொன் முத்துராமலிங்கம், கட்டபொம்மன், வ.உ.சிதம்பரம் போன்ற சுதந்திர போராட்ட வீரர்களை சாதித்தலைவர்களாக மாற்றிவிட்டார்கள் சாதி வெறியர்கள். இப்போது 1000 ஆண்டுகளுக்கு முந்தைய மன்னர்களையும் இவர்கள் விடுவதாக இல்லை\nதஞ்சையில் கடந்த 10, 11 தேதிகளில் ராஜராஜசோழனின் 1028வது சதய விழா (பிறந்த நாள்)அரசு விழாவாக மிக கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. 11ந் தேதி மாவட்ட ஆட்சியர் தலைமையில் சதய விழாக்குழுவினர் ஊர் வலமாக வந்து பெரிய கோவில் அருகிலுள்ள ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதற்கு பின்பு இதுவரை இல்லாத மிகவும் கேலிக்கூத்தான நிகழ்ச்சிகள் நடந்தேறின.\nஇலங்கை கதிர்காமம் முருகன் கோவில் போல் மதுரை புளியம்பட்டியில் ஒரு கோயில்\nஎம்.ஜி.ஆர்.,எஸ்.எஸ்.ஆர்.,உள்ளிட்ட நாடகக்கலை உலகின் பிரபலமானஜாம்பவான்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்த மதுரை ஸ்ரீ பரமானந்தா ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியின் நிறுவனரான நாடகச்செல்வர் பி.கா.சுப்பாரெட்டியாரால் இலங்கை கண்டி கதிர்காமத்திலுள்ள முருகன் கோவில் போல் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி.கல்லுப்பட்டி பகுதி புளியம்பட்டி கிராமத்தில் கட்டப்பட்டுள்ள ஸ்ரீ கதிரேசப்பெருமான் கோவிலில் நடைபெறும் ஆடிப்பவுர்ணமி நாளன்று பூஜையில் கலந்து கொண்டு வழிபட்டால் ஆயுசு பெருகும் அதிசயங்கள் நடக்கும் என்று பக்தகோடி பெருமக்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி.கல்லுப்பட்டி பகுதியில் புளியம்பட்டி எனும் சின்னஞ்சிறிய கிராமம் உள்ளது.இந்த கிராமத்தில் கடந்த 1890-ம் ஆண்டு ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்து பிற்காலத்தில் நாடக உலகத்தையே தன்னோக்கி பார்க்க வைத்தவர் பி.கா.சுப்பா ரெட்டியார்.கல்வி கற்றிடாத கிராமவாசியான இவருக்கு நாடகத்துறையின் மீது ஏற்பட்ட அளவுகடந்த பற்றின் காரணமாக 1925-ம் ஆண்டு சில குழந்தைகளை தன்னகத்தே சேர்த்துக் கொண்டு ஓர் நாடகக் கம்பெனியை புளியமாநகரில் நிறுவினார்.பின்னர் ஸ்ரீலஸ்ரீ மஹா…\nடி.கல்லுப்பட்டி அருகே முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் பிராமி எழுத்துக்கள் கண்டுபிடிப்பு\nமதுரை மாவட்டம்,பேரையூர் தாலுகா, டி.கல்லுப்பட்டி அருகேயுள்ள கவசக்கோட்டை கிராமத்தில் தமிழரின் தொன்மை சிறப்புகளை கண்டறியும் நோக்கில் பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் முதல் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறித்த கருப்பு சிவப்பு வண்ணமுடைய பானை ஓடுகள்,எலும்பு துண்டுகள்,முதுமக்கள் தாழி,தானிய களஞ்சியம்,குறியீடுடைய உடைந்த மண்கலயம் போன்றவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nமதுரை மாவட்டம் பேரையூர் தாலுகாவில் பண்டைகாலத்து தமிழர்களின் வாழ்க்கைமுறை தொடர்பான பல்வேறு சான்றுகள் இன்றளவும் அழிந்திடாமல் உள்ளது.இந்நிலையில் தமிழரின் தொன்மையை கண்டறியும் நோக்கில் பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் ஆய்வாளர்களான\nமுனைவர்கள்.சி.மாணிக்கராஜ்,சி.செல்லப்பாண்டியன்,து.முனீஸ்வரன்,மு.கனகராஜ்,மு.லட்சுமணமூர்த்தி ஆகியோரை கொண்ட ஆய்வுக்குழு பேரையூர் தாலுகா டி.கல்லுப்பட்டி அருகேயுள்ள கவசக்கோட்டை கிராமத்தில் கள ஆய்வு மேற்கொண்டது.அப்போது கவசக்கோட்டை கிராமத்திலுள்ள அக்ரஹாரமேடு,பண்ணைமேடு ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட களஆய்வின்போது உடைந்த நிலையில் பெருங்கற்காலத்தைச் சார்ந்த …\nஅஜித்தின் விவேக மற்ற படம்...\nஅஜித்துக்கு நடிப்பு வராது...ஒரே மாதிரியான உடல் மொழி,பேச்சு,நடிப்பு சலிப்பு தட்ட கூடியது.இதிலும் அப்படித்தான். படம் முழுக்கவே இரைச்சல் .துவங்கியதிலிருந்தே துப்பாக்கி சத்தமும், கார்களின் மோதல், பறக்கும் கார்களின் காட்சிகள் இதுதான் படம் முழுக்கவே.நம்ப முடியாத கதை காட்சிகள்.இயக்குனர் தெலுங்கு பட இயக்குனர் போல தூக்கலான ஹீரோயிசம்,தத்துவங்கள் கொட்டும் பஞ்ச் டயலாக்.வில்லுனுக்கு வேலையே வஞ்ச புகழ்ச்சி அணியில் ஹீரோவை புகழ்வது தான்.\nபடம் சகிக்கல...இயக்குனர் ஒரு பேட்டியில் சொன்னார் அஜித் இன்டர்னேஷனல் ஸ்டார் ஆகிட்டார் .வெளிநாட்டில் படம் எடுத்தால் இன்டர்நேசனல் ஸ்டாரா.கொடும..கொடும...\nகதை சுருக்கம் சொல்கிறேன்...நம்ப முடிகிறதா என பாருங்கள் . அதற்கு மேல் படம் பார்த்து மாட்டிக்கொண்டால் நான் பொறுப்பல்ல.\nநீங்கள் வந்தீர்கள்;விசிட்டிங் கார்டு தருவது போல் பொக்கேயை வைத்தீர்கள்.ஓ.பி.எஸ்ஸைக் கட்டிப் பிடித்து கண்ணீரைத் துடைத்து விட்டீர்கள். சசிகலாவிற்கு ஆறுதல் சொன்னீர்கள்.கணேசன் உங்களுக்கு நடராஜரை அறிமுகப்படுத்தினார்.பிறகு, உங்களின் போன ஜென்மத்து சொந்தமான கேமராக்காரர்களை நோக்கி கைகளை ஆட்டினீர்கள்.எங்கள் MLA க்களெல்லாம் உங்களோடு கை குலுக்க குழந்தையைப் போல் ஓடி வந்தார்கள். சிக்கியவர்களோடு செல்ஃபியும் எடுத்துக் கொண்டீர்கள்.தேர்தல் முடிவு வந்ததைப் போல் பெருமிதத்தோடு கும்பிடு போட்டீர்கள். உங்கள் வித்தைகளின் அனா ஆவன்னாவைக் கூட அறிந்திராத ஓ.பி.எஸ் ஐ பக்கத்தில் நிற்க வைத்து போஸ் கொடுத்தீர்கள்.எங்களின் இப்போதைய முதலமைச்சர் உங்கள் பின்னால் ஒரு டிரைவரைப் போல் ஓடி வந்தார். கம்பெனி ஊழியரைப் போல் கருதி அவர் முதுகில் தட்டி விட்டு புறப்பட்டு விட்டீர்கள். ஏற்கனவே நிகழ்ந்து முடிந்த நாடகத்தின் இன்னொரு அத்தியாயம் இது என்பதைச் சொல்லாமல் சொல்லியிருக்கிறீர்கள் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-04-26T13:22:11Z", "digest": "sha1:5P3DT2QXDFBP7QR4B7V26XZREHFL2QHL", "length": 6645, "nlines": 97, "source_domain": "ta.wikipedia.org", "title": "முக்குவர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nமுக்குவர் எனப்படுவோர் கேரளா, தமிழ்நாடு மற்றும் இலங்கை கரையோரப் பகுதிகளில் காணப்படும், பிரதானமாக மீனவ சமூகத்தைச் சேர்ந்த சமூகக் குழுவினர் அல்லது சாதியினர் ஆவர். இச்சமூகத்தினர் இந்தியாத் தீவான இலட்சத்தீவுகளிலும் காணப்படுகின்றனர்.முக்குவர் அரசர்களில் ஓருவர் வெடியரசன் என்பது குறிப்பிடதக்கது. . கி.மு 200 இல் வாழ்ந்ததாக அறியப்படும் ஈழத்தமிழ் மன்னர்.\nவரலாற்றில் சிலர், இவர்கள் தமிழ்நாட்டு கரையோரங்களில் இருந்து கேரளாவிற்கும் இலட்சத்தீவுகளுக்கும் குடியேறினர் என நம்புகின்றனர். இவர்கள் இலங்கைக்குக் குடியேறி, பின்னர் இந்தியாவிற்குத் திரும்பி கேரளாவின் தென்மேற்குக் கரையோரங்களில் குடியேறியிருக்கலாம் என நம்பப்படுகின்றது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 ஆகத்து 2017, 23:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/chuttivikatan/2016-oct-15/general-knowledge/124008-world-animals-day.html", "date_download": "2018-04-26T13:01:15Z", "digest": "sha1:RDZXMR23LOINIAU7GOPOY4EWJZRRFY2G", "length": 14335, "nlines": 367, "source_domain": "www.vikatan.com", "title": "கானகத்து தோழர்கள்! | World Animals day - Chutti Vikatan | சுட்டி விகடன் - 2016-10-15", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nதொப்பி விளையாட்டில் குறில், நெடில் அறிவோம்\nஅடுக்குத் தொடர், இரட்டைக்கிளவி தெரியுமா..\nஎஃப்.ஏ புராஜெக்ட் போட்டி முடிவுகள் இந்த இதழிலும் தொடர்கின்றன.\n - ‘உணவு’ பாடத்துக்கு உரியது.\nகாந்தியின் குரங்குகளும் கணினி யுகமும்\nபாப்பா ரெடி டோர் டெலிவரி\nஜானி ஜானி பாரு பாப்பா\n‘‘பேருதான் ஜூனியர்ஸ் பேச்சும் நடிப்பும் ஜீனியஸ்\nகுறும்புக்காரன் டைரி - 20\nசுட்டி விகடன் - 15 Oct, 2016\nஅக்டோபர் - 4 உலக விலங்குகள் தினம்- துரை.நாகராஜன்\nஇத்தாலி நாட்டைச் சேர்ந்த வன ஆர்வலர், பிரான்சிஸ் அசிசி என்பவருடைய நினைவு நாளை குறிப்பிடும் வகையில், அக்டோபர்-4-ம் தேதி, உலக விலங்குகள் தினம் கொண்டாடப்படுகின்றது.\nஉலக விலங்குகள் தினம்,வன விளங்கு,சரணாலயம்,பறவைகள்,World Animals Day,Indian Animals,Wild Animals.\nவிகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP\nவிகடன் பிரஸ்மீட்: அஜித்திடம் என்ன பிடிக்காது விஜய்யிடம் என்ன பிடிக்கும்\n“இந்த வேலைநிறுத்தம், இந்திய சினிமாவையே கோலிவுட் பக்கம் திருப்ப வெச்சிருக்கு. இதன் மூலமா...\nஜெ. கன்னத்திலிருந்த நான்கு புள்ளிகளும் அவிழாத முடிச்சுகளும்\nமரணத்துக்குப் பிறகு ஜெயலலிதா உடல் ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டபோது, ஜெ. கன்னத்தில் காணப்பட்ட நான்கு புள்ளிகள் குறித்துப் பெரும் சர்ச்சை எழுந்தது. அந்த நான்கு புள்ளிகள் குறித்த மர்ம முடிச்சுகளை அவிழ்ப்பதற்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முயற்சி செய்துள்ளது.\n\"வைகோ, சீமான் மோதல் வேதனை தருகிறது” - கலங்கும் திருமா\nகாவிரிப் பிரச்னை, எஸ.சி, எஸ்.டி வன்கொடுமைத் தடுப்பு சட்டம் ஆகியவற்றுக்கான போராட்டங்களில் மும்முரமாக...\n” - 1 - நாட்டுக்கோழி விருந்து... நள்ளிரவு உபசரிப்பு\nஒரு நிர்மலாதேவி சிக்கிக்கொண்டார். பலர், எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறார்கள். தங்கள் உழைப்பாலும் திறமையாலும் உயரங்களைத் தொடும் பெண்மணிகளுக்கு ராயல் சல்யூட் அடிப்போம். அதேநேரம், குறுக்குவழியில் முன்னுக்கு வர நினைக்கும் பலர் இருப்பதும் ஓர் அவலம்\nதமிழகத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்ட சில மாதங்களில் ‘தமிழகம் முழுவதும் ஆய்வு’ என்று ஆளுநர் கிளம்பியபோதே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/personalfinance/article.php?aid=11793", "date_download": "2018-04-26T13:10:45Z", "digest": "sha1:GGJ4QMJFVXDF4ODAH6WRY3E5DFA5EF4E", "length": 12311, "nlines": 366, "source_domain": "www.vikatan.com", "title": "sensex down nifty down | இறக்கத்தில் நிறைவடைந்த இந்திய சந்தைகள்", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nஇறக்கத்தில் நிறைவடைந்த இந்திய சந்தைகள்\nமாலை 3.30 மணி நிலவரம்\nஇந்தியப் பங்குச் சந்தைகள் இன்று (06.01.2016) மாலை 3.30 மணியளவில் இறக்கத்துடன் வர்த்தகமாகி நிறைவடைந்தது.மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 174.01 புள்ளிகள் குறைந்து 25406.33 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.\nதேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 43.35 புள்ளிகள் குறைந்து 7744.05 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது\nஇண்டஸ் இந்த் பேங்க் (0.93%)\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nவிகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP\n\"வைகோ, சீமான் மோதல் வேதனை தருகிறது” - கலங்கும் திருமா\nஆற்றை சாகடிக்கும் மணல் மாஃபியாக்கள்\n\"வைகோ, சீமான் மோதல் வேதனை தருகிறது” - கலங்கும் திருமா\nஜெயித்தது தோனி... ஜெயிக்க வைத்தது கோலி... ஜஸ்ட் கோலி திங்ஸ்\nதிருடிய மொபைலை அன்லாக் செய்ய திருடர்கள் செய்யும் இன்னொரு திருட்டுத்தனம்... உஷார்\n'நிர்மலா தேவி வாழ்க்கையே ரகசியம்தான்'- காவியன் நகர் மக்கள் சொல்வது என்ன\nமெக்கானிக்குடன் சாலையில் நின்ற போலீஸார்... கதிகலங்கிப்போன இருசக்கர வாகன ஓட்டிகள்\nஜெயித்தது தோனி... ஜெயிக்க வைத்தது கோலி... ஜஸ்ட் கோலி திங்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kavishan.blogspot.com/2012/02/26.html", "date_download": "2018-04-26T13:09:53Z", "digest": "sha1:7GA5XJN6BKFRVO7C2FVRAZO4UMDZX4BM", "length": 10072, "nlines": 131, "source_domain": "kavishan.blogspot.com", "title": "சர்வதேச சுயாதீன விசாரணையே வேண்டும்! 26வது நாளாக தொடரும் நீதிக்கும் சமாதானத்துக்குமான நடைப்பயணம் ~ ஈழம் செய்திகள்", "raw_content": "\nசர்வதேச சுயாதீன விசாரணையே வேண்டும் 26வது நாளாக தொடரும் நீதிக்கும் சமாதானத்துக்குமான நடைப்பயணம்\nசுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் எனும் உன்னத பண்புகளைத் தந்த பிரான்சு தேசத்தில், தாயகம், தேசியம், தன்னாட்சியுரிமை என முழங்கியவாறு ஜெனீவா ஐ.நா மனித உரிமைச் சபை நோக்கிய நடைப்பயணம் 26வது நாளாக உறுதியுடன் நடைபோடுகின்றது.\nகடந்த சனவரி மாதம் 28ம் நாள், இலண்டனில் இருந்து தொடங்கிய இந்த நடைப்பயணம், 725 கிலோ மீற்றர்களைக் கடந்து உறுதியுடன் வீறுநடை போட்டுக் கொண்டுள்ளது.\nகடந்த சனவரி 28ம் நாள் லண்டனில் இருந்து தொடங்கிய இந்த நடைப்பயணம், ஐ.நா மனித உரிமைச் சபைக் கூட்டத் தொடர் தொடங்குகின்ற பெப் 27ம் நாளில் நா.த.அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நீதிக்காய் ஒன்றுபடுவோம் எனும் மக்கள் எழுச்சிப் போராட்ட நிகழ்வில் நிறைவு செய்யவுள்ளது.\nலண்டனில் இருந்து கடந்த சனவரி மாதம் 28ம் நாள் தொடங்கிய இந்த நடைப்பயணம் ஐ.நா மனித உரிமைச் சபைக் கூட்டத் தொடர் தொடங்குகின்ற நாளான 27ம் நாள் திங்கட்கிழமை ஜெனீவாவை சென்றடையவுள்ளது.\nசுவிஸ் எல்லையை நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த நடைப்பயணம் தற்போது பிரான்சில் Les Marais எனும் இடத்தில் சென்று கொண்டுள்ளது.\nதமிழர் மீதான சிறிலங்கா அரசினது இனப்படுகொலை குறித்தான சுயாதீனா சர்வதேச விசாரணை தமிழீத்தில் மனித உரிமைகளைக் கண்காணிப்பகத்தை ஐ.நா நிறுவவேண்டும், தமிழீழத்தில் பொதுவாக்கெடுப்பொன்று நடத்தப்படவேண்டும் ஆகிய கோரிக்கைகளை இந்த நடைப்பயணம் வலியுறுத்துகின்றது.\nஐ.நா மனித உரிமைச் சபையில் சிறிலங்காவுக்கு அழுத்தத்தை கொடுக்கும் நோக்கில், தீர்மானம் ஒன்றைக் கொண்டு வருவதற்கு சர்வதேசம் முனைந்துள்ள நிலையில், ஐ.நா மனித உரிமைச் சபைக் கூட்டத் தொடர் தொடங்குகின்ற நாளான பெப்ரவரி 27ம் நாள், தமிழர்கள் அனைவரும் ஐ.நா முன்றிலில் அணிதிரண்டு, சர்வதேச சுயாதீன விசாரணை எனும் ஒற்றைக் கோரிக்கையை, ஒன்றுபட்ட குரலாக அனைவரும் ஒங்கி ஒலிப்போம் என, இந்த நடைப்பயணம் அறைகூவல் விடுத்து நிற்கின்றது.\nநீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.\nஇலங்கையின் ஏழாவது ஜனாதிபதி (1)\nஉலகத் தமிழர் பேரவை (1)\nசிறீலங்காவின் 7வது நாடாளுமன்ற தேர்தல் (12)\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (6)\nதலைமைச் செயலகம் தமிழீழம் (5)\nநாடு கடந்த அரசாங்கத் தேர்தல் (6)\nநாடு கடந்த அரசாங்கம் (57)\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கம் (1)\nநான் சாகலாம் நாங்கள் சாகக் கூடாது (11)\nபோர்குற்ற நாள் 2009 மே (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/director-on-the-shooting-spot-get-beatings-heroine-117112400011_1.html", "date_download": "2018-04-26T13:42:02Z", "digest": "sha1:YIFEBFHMLRGNSR3WHSC7AT4L4ZVB3UAY", "length": 10799, "nlines": 161, "source_domain": "tamil.webdunia.com", "title": "இயக்குநரிடம் ஷூட்டிங் ஸ்பாட்டில் அறைவாங்கிய ஹீரோயின் | Webdunia Tamil", "raw_content": "\nவியாழன், 26 ஏப்ரல் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஇயக்குநரிடம் ஷூட்டிங் ஸ்பாட்டில் அறைவாங்கிய ஹீரோயின்\nஇயக்குநரிடம் ஷூட்டிங் ஸ்பாட்டில் செமத்தியாக அறை வாங்கியிருக்கிறார் ஹீரோயின்.\nபாக்யராஜிடம் உதவியாளராக இருந்த மதுராஜ் இயக்கியுள்ள படம் ‘தொட்ரா’. பிருத்வி பாண்டியராஜன் ஹீரோவாக நடிக்க, வீணா என்ற புதுமுகம் ஹீரோயினாக நடித்துள்ளார். காதலை மையமாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.\nஇந்தப் படத்தின் ஷூட்டிங் நடைபெற்றபோது, ஹீரோயினை அறைந்து விட்டாராம் இயக்குநர். “மலையாளத்தில் இருந்து ஹீரோயின் வீணாவை அழைத்து வந்திருக்கிறோம். ஒருநாள் சீரியஸான காட்சி ஒன்றைப் படமாக்கிக் கொண்டிருந்தோம். ஆனால், அதன் சீரியஸ்னஸ் புரியாமல் அவர் சிரித்துக் கொண்டே இருந்ததால், 30 டேக் வரை போனது. அதனால், கோபத்தில் அடித்துவிட்டேன். மற்றபடி நன்றாகவே நடித்திருக்கிறார் வீணா” என்கிறார் இயக்குநர் மதுராஜ்.\nவிஜய் ஷூட்டிங் ஸ்பாட்டுக்குப் போன விஜய் சேதுபதி\nஷூட்டிங் ஸ்பாட்டில் ஆட்டம் போட்ட சிம்ரன், ராதிகா, டிடி (வீடியோ)\nசிம்புவின் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹனிமூன் – சமந்தாவின் வித்தியாசமான ஐடியா\nஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய்க்கு அடிபட்டதா\nஇன்று காலை நமீதா - வீரேந்திர சவுத்ரி திருமணம். ராதிகா நேரில் வாழ்த்து\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/76-208371", "date_download": "2018-04-26T13:43:18Z", "digest": "sha1:QSPL6SHFPGIQTIJKNF2IPH5GGPQEATM3", "length": 5353, "nlines": 83, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || கட்சிதாவ நடவடிக்கை", "raw_content": "\n2018 ஏப்ரல் 26, வியாழக்கிழமை\nஎதிர்வரும் உள்ளூரட்சிமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக, பிரதான கட்சிகளின் உறுப்பினர்கள் சிலர், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இணையவுள்ளதாக, தெரியவருகிறது.\nஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் மாத்தளை மாவட்ட உறுப்பினர்கள் சிலரே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமயிலான ஸ்ரீ லங்கா சுத்திரக்கட்சியில் இணையவுள்ளனரென, ஸ்ரீலங்கா சுத்திரக் கட்சியின் அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇவ்விடயம் தொடர்பில், பல மட்டங்களிலும் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, அமைப்பாளர்கள் மேலும் கூறினார்.\nகுறிப்பாக மாத்தளை, வில்கமுவ, நாவுல மற்றும் பல்லேபொல ஆகிய பிரதேச செயலகங்களின் முன்னாள் உறுப்பினர்கள் இவ்வாறான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனரென, மேற்படி அமைப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.chillzee.in/forum/general-discussions/1033-chillzee-appreciates?start=390", "date_download": "2018-04-26T13:22:00Z", "digest": "sha1:IOCNQMDZOATGBDYEN6IYZXWO7PAWS52U", "length": 36849, "nlines": 745, "source_domain": "www.chillzee.in", "title": "Chillzee Appreciates :-) - Page 66 - Chillzee Forums - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nவத்சலாவின் கதைக்கான முடிவை சொல்லுங்கள்\nஇன்றே போட்டியில் கலந்துக் கொள்ளுங்கள்\nதொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 04 - சசிரேகா\nதொடர்கதை - காதலான நேசமோ - 04 - தேவி\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 15 - வினோதா\nகவிதைத் தொடர் - 06. தவமிருக்கிறேன் என்னவனே - கார்த்திகா கார்த்திகேயன் [Updated]\nதொடர்கதை - பார்த்தேன் ரசித்தேன்.. - 09 - ஆதி\nTamil Jokes 2018 - உன் பொண்டாட்டி தான்டா\nதொடர்கதை - என் அருகில் நீ இருந்தும் - 07 - பூஜா பாண்டியன்\nகவிதை - வந்தாய் கண்ணா - தமிழ் தென்றல்\nதொடர்கதை - பொன் எழில் பூத்தது புது வானில் - 20 - மீரா ராம்\nகவிதை - உன்னுடன் - அக்ஷு ஆரா\nதொடர்கதை - மோனத்திருக்கும் மூங்கில் வனம் - 01 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - மலையோரம் வீசும் காற்று – 16 - வினோதர்ஷினி\nதொடர்கதை - என் அருகில் நீ இருந்தும் - 07 - பூஜா பாண்டியன்\nதொடர்கதை - பொன் எழில் பூத்தது புது வானில் - 20 - மீரா ராம்\nதொடர்கதை - பார்த்தேன் ரசித்தேன்.. - 09 - ஆதி\nதொடர்கதை - மோனத்திருக்கும் மூங்கில் வனம் - 01 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - மலையோரம் வீசும் காற்று – 16 - வினோதர்ஷினி\nTamil Jokes 2018 - உன் பொண்டாட்டி தான்டா\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 11 - ஸ்ரீ\n2018 - தமிழ் புத்தாண்டு சிறப்பு \"முடிவை கண்டுபிடியுங்கள் போட்டி\" - சிறுகதை - என் நெஞ்சிலே பனிமூட்டமா\nதொடர்கதை - ஒளிதருமோ என் நிலவு... - 27 - தீபாஸ்\nதொடர்கதை - யாது வரினும்.. எவ்வாறாயினும்… - 01 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - ஒளிதருமோ என் நிலவு... - 01 - தீபாஸ்\nதொடர்கதை - யாது வரினும்.. எவ்வாறாயினும்… - 11 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - என் காதலின் காதலி - 15 - ஸ்ரீ\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 09 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 05 - ராசு\nதொடர்கதை - என் காதலின் காதலி - 01 - ஸ்ரீ\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 26 - RR\nதொடர்கதை - ஒளிதருமோ என் நிலவு... - 02 - தீபாஸ்\nதொடர்கதை - என் காதலின் காதலி - 02 - ஸ்ரீ\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 09 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - கன்னத்து முத்தமொன்று - 15 - வத்ஸலா\nதொடர்கதை - கடவுள் போட்ட முடிச்சு - 03 - ஜெயந்தி\nதொடர்கதை - மழையோடுதான் வெயில் சேர்ந்ததே - 09 - சித்ரா. வெ\nதொடர்கதை - இரு துருவங்கள் - 01 - மித்ரா\nதொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 03 - சசிரேகா\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 11 - ஸ்ரீ\nதொடர்கதை - காதலான நேசமோ - 03 - தேவி\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 14 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - மலையோரம் வீசும் காற்று – 16 - வினோதர்ஷினி\nதொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 05 - ராசு\n2018 - தமிழ் புத்தாண்டு சிறப்பு \"முடிவை கண்டுபிடியுங்கள் போட்டி\" - சிறுகதை - என் நெஞ்சிலே பனிமூட்டமா\nதொடர்கதை - தாபப் பூவும் நான்தானே… பூவின் தாகம் நீதானே - 20 - மீரா ராம்\nதொடர்கதை - என் சிப்பிக்குள் நீ முத்து - 29 - தமிழ் தென்றல்\nதொடர்கதை - மோனத்திருக்கும் மூங்கில் வனம் - 01 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - என் அருகில் நீ இருந்தும் - 07 - பூஜா பாண்டியன்\nதொடர்கதை - பொன் எழில் பூத்தது புது வானில் - 20 - மீரா ராம்\nசிறுகதை - புதுவரவு – அனுசுயா\nதொடர்கதை - மறைந்துவிடாதே மாயா – 23 - லதா சரவணன்\nதொடர்கதை - ஒளிதருமோ என் நிலவு... - 27 - தீபாஸ்\n2018 - தமிழ் புத்தாண்டு சிறப்பு \"முடிவை கண்டுபிடியுங்கள் போட்டி\" - சிறுகதை - என் நெஞ்சிலே பனிமூட்டமா\nதொடர்கதை - ஒளிதருமோ என் நிலவு... - 24 - தீபாஸ்\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 07 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 08 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 26 - RR\nதொடர்கதை - விழிகளிலே காதல் விழா - 46 - தேவி\nதொடர்கதை - ஒளிதருமோ என் நிலவு... - 25 - தீபாஸ்\nதொடர்கதை - ஒளிதருமோ என் நிலவு... - 27 - தீபாஸ்\nதொடர்கதை - ஒளிதருமோ என் நிலவு... - 26 - தீபாஸ்\nதொடர்கதை - ஆதிபனின் காதலி - 21 - சசிரேகா\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 25 - RR\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 09 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - உன் நேசமதே.. என் சுவாசமாய்.. - 36 - சித்ரா. வெ\nதொடர்கதை - என் காதலின் காதலி - 13 - ஸ்ரீ\nதொடர்கதை - என் காதலின் காதலி - 14 - ஸ்ரீ\nதொடர்கதை - கடவுள் போட்ட முடிச்சு - 02 - ஜெயந்தி\nதொடர்கதை - உன் நேசமதே.. என் சுவாசமாய்.. - 37 - சித்ரா. வெ\nதொடர்கதை - என் காதலின் காதலி - 15 - ஸ்ரீ\nதொடர்கதை - மழையோடுதான் வெயில் சேர்ந்ததே - 07 - சித்ரா. வெ\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 14 - வினோதா\nதொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 05 - ராசு (+14)\nதொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 03 - சசிரேகா (+12)\nதொடர்கதை - யாது வரினும்.. எவ்வாறாயினும்… - 11 - சாகம்பரி குமார் (+11)\nதொடர்கதை - காதலான நேசமோ - 01 - தேவி (+11)\nதொடர்கதை - கடவுள் போட்ட முடிச்சு - 03 - ஜெயந்தி (+10)\nதொடர்கதை - என் அருகில் நீ இருந்தும் - 07 - பூஜா பாண்டியன் (+9)\nதொடர்கதை - மோனத்திருக்கும் மூங்கில் வனம் - 01 - சாகம்பரி குமார் (+9)\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 11 - ஸ்ரீ (+9)\nதொடர்கதை - என் சிப்பிக்குள் நீ முத்து - 29 - தமிழ் தென்றல் (+8)\n2018 - தமிழ் புத்தாண்டு சிறப்பு சிறுகதை - வெண்ணிலவு தான் வானத்தை வெறுத்திடுமா - பிந்து வினோத் (+8)\n“அப்படி என்ன உனக்கு என்னை பார்த்து பயம் சரண்யா\nகவிதைத் தொடர் - 06. தவமிருக்கிறேன் என்னவனே - கார்த்திகா கார்த்திகேயன் [Updated] @...\nஸ்வரூப் மதுவை பார்ப்பதையும், அவள் முகத்தை திருப்பிக் கொள்வதையும் கவனித்த...\nTamil #Jokes 2018 - உன் பொண்டாட்டி தான்டா\n என்று உத்ரா யோசித்துக் கொண்டு இருந்த பொழுது, அவள்...\nகவிதை - வந்தாய் கண்ணா - தமிழ் தென்றல் @...\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 14 - பிரேமா சுப்பையா 1 second ago\n2017 போட்டி சிறுகதை 16 - நிஜமும், நிழலும் - ஜான்சி 1 second ago\nதொடர்கதை - காதல் பின்னது உலகு - 05 - மனோஹரி 1 second ago\nதொடர்கதை - கொஞ்சம் பெரிய குழந்தைகளுக்கான கதை இது... - 20 - தங்கமணி சுவாமினாதன் 2 seconds ago\nதொடர்கதை - என்னுள் நிறைந்தவனே - 10 - ஸ்ரீ 2 seconds ago\nமலையோரம் வீசும் காற்று - பிந்து வினோத்\nமலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று - பிந்து வினோத்\nபார்த்தேன் ரசித்தேன் - பிந்து வினோத்\nஎன் சிப்பிக்குள் நீ முத்து - தமிழ் தென்றல்\nஎன்றென்றும் உன்னுடன் - 1 - பிந்து வினோத்\nஎன்றென்றும் உன்னுடன் - 2 - பிந்து வினோத்\nஉன் நேசமதே என் சுவாசமாய் - சித்ரா V\nசாத்திரம் பேசுகிறாய் கண்ணம்மா - ஜெய்\nசர்வதோபத்ர வியூகம் - வசுமதி\nஇவள் எந்தன் இளங்கொடி - முத்துலெட்சுமி சுப்பிரமணியன்\nபொன் எழில் பூத்தது புது வானில் - மீரா ராம்\nசாம்ராட் சம்யுக்தன் - சிவாஜிதாசன்\nமுடிவிலியின் முடிவினிலே... - மது\nமறைந்து விடாதே மாயா - லதா சரவணன்\nஉன்னில் தொலைந்தவன் நானடி - பிரேமா\nகன்னத்து முத்தமொன்று - வத்ஸலா\nஉயிரில் கலந்த உறவே - சகி\nதமிழுக்கு அமுதென்று பேர் - சித்ரா\nஎன் நிலவு தேவதை - தேவிஸ்ரீ\nமறவேனா நின்னை - ஆர்த்தி N\nதாபப் பூவும் நான்தானே… பூவின் தாகம் நீதானே - மீரா ராம்\nநெஞ்சில் துணிவிருந்தால் - சகி\nஇன்பமே வாழ்வாகிட வந்தவனே - ஸ்ரீ\nவெள்ளை பூக்கள் இதயம் எங்கும் மலர்கவே - புவனேஸ்வரி\nஎன் அருகில் நீ இருந்தும்\nதொலைதூர தொடுவானமானவன் - புவனேஸ்வரி\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் - அனிதா சங்கர்\nகடவுள் போட்ட முடிச்சு - ஜெயந்தி\nநீ இல்லாத வாழ்வு வெறுமையடி - ராசு\nஎன்னவளே - கோமதி சிதம்பரம்\nகாதலான நேசமோ - தேவி\nநொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - சசிரேகா\nஇரு துருவங்கள் - மித்ரா\nமோனத்திருக்கும் மூங்கில் வனம் - சாகம்பரி\nஎன்றென்றும் உன்னுடன்... - 01 - 15\nபார்த்தேன் ரசித்தேன் - 09\nஎன் அருகில் நீ இருந்தும்\nபொன் எழில் பூத்தது புது வானில் - 20\nமோனத்திருக்கும் மூங்கில் வனம் - 01\nமலையோரம் வீசும் காற்று - 16\nஇன்பமே வாழ்வாகிட வந்தவனே - 11\nநீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 05\nஎன் சிப்பிக்குள் நீ முத்து - 29\nதாபப் பூவும் நான்தானே… பூவின் தாகம் நீதானே - 20\nமறைந்து விடாதே மாயா - 23\nஉன்னில் தொலைந்தவன் நானடி – 14\nஇரு துருவங்கள் - 01\nசாம்ராட் சம்யுக்தன் - பாகம் 01 - 11\nகடவுள் போட்ட முடிச்சு - 03\nகன்னத்து முத்தமொன்று - 15\nநொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 03\nகாதலான நேசமோ - 03\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 03\nசாத்திரம் பேசுகிறாய் .... கண்ணம்மா – 29\nஉன் நேசமதே.. என் சுவாசமாய்..\nமுடிவிலியின் முடிவினிலே - 11\nமலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று - 26\nதமிழுக்கு அமுதென்று பேர் – 13\nஎன் நிலவு தேவதை - 22\nஎன்றென்றும் உன்னுடன்... - 02 - 12\nஇவள் எந்தன் இளங்கொடி - 19\nநெஞ்சில் துணிவிருந்தால் - 03\nஉயிரில் கலந்த உறவே - 10\nவெள்ளை பூக்கள் இதயம் எங்கும் மலர்கவே – 07\nதொலைதூர தொடுவானமானவன் – 03\nஐ லவ் யூ - 12\nசிறுகதை - பட்டாம் பூச்சி – முகிலா\nசிறுகதை - புதுவரவு – அனுசுயா\nசிறுகதை - அம்மா கணக்கு – சசிரேகா\n2018 - தமிழ் புத்தாண்டு சிறப்பு சிறுகதை - வெண்ணிலவு தான் வானத்தை வெறுத்திடுமா\n2018 - தமிழ் புத்தாண்டு சிறப்பு \"முடிவை கண்டுபிடியுங்கள் போட்டி\" - சிறுகதை - என் நெஞ்சிலே பனிமூட்டமா\nகவிதைத் தொடர் - 06. தவமிருக்கிறேன் என்னவனே - கார்த்திகா கார்த்திகேயன் [Updated]\nகவிதை - வந்தாய் கண்ணா - தமிழ் தென்றல்\nகவிதை - உன்னுடன் - அக்ஷு ஆரா\nகவிதை - நீயில்லாத நான் - தமிழ் தென்றல்\nஇளம் பூவை நெஞ்சில்... - மீரா ராம்\nகாதல் ஏன் இப்படி - ஷிவானி\nஅவளும் நானும் அமுதும் தமிழும் - வசுமதி\nTamil Jokes 2018 - உன் பொண்டாட்டி தான்டா\nTamil Jokes 2018 - கிளி மாதிரி பொண்ணு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} {"url": "http://freetamilebooks.com/ebooks/symbols-of-tamilnadu/", "date_download": "2018-04-26T13:32:28Z", "digest": "sha1:5I4VP23IQ5CMRSR3CLHQQYC3CDQIIXBL", "length": 9563, "nlines": 104, "source_domain": "freetamilebooks.com", "title": "தமிழகத்தின் அடையாளச் சின்னங்கள்", "raw_content": "\nஒருங்குறி மாற்றம் – மு.சிவலிங்கம் musivalingam@gmail.com\nமேலட்டை உருவாக்கம்: மனோஜ் குமார்\nமின்னூலாக்கம் : சிவமுருகன் பெருமாள்\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nநமது தாய்மொழியான தமிழ் மிகவும் தொன்மை வாய்ந்த பழமையான மொழி. அது செம்மொழி தகுதியைப் பெற்ற மொழியாகும். இன்றைய ஆங்கில மோகத்தின் காரணமாக தமிழ்மொழிமீது இருக்கும் பற்று குறைந்துகொண்டே வருகிறது. எனக்கு தமிழ் பேசத் தெரியும், ஆனால் பிழை இல்லாமல் எழுதத்தெரியாது என்கிற நிலை தற்போது உருவாகியுள்ளது. தமிழைக் கட்டாயக் கல்வியாக்கவேண்டிய சூழல் எழுந்துள்ளது. தமிழ் மொழியே தமிழகத்தின் ஆட்சி மொழி.\nதமிழ்நாட்டிற்கு என்று மாநில அடையாளச் சின்னங்கள் (Symbols of TamilNadu) உள்ளன. ஆனால் அவை என்ன, என்ன எனக் கேட்டால் சரியான பதில் கூற முடியவில்லை. அதேபோல் தமிழக அரசு எக்காலக்கட்டத்தில் சின்னங்களை அறிவித்தது என்பதற்கான சரியான பதிலும் கிடைக்கவில்லை. மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் தமிழகத்தின் சின்னங்கள் எவை என்பதைத் தெளிவுபடுத்தவே இப்புத்தகத்தை எழுதியுள்ளேன்.\nஇப்புத்தகத்தை எழுதுவதற்கு எனக்கு ஒத்துழைப்புக் கொடுத்த என் மனைவி திருமிகு. இ. தில்லைக்கரசி அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் புத்தகத்தைச் செழுமைப்படுத்திக் கொடுத்த ஓய்வு பெற்ற ஆசிரியர் திருமிகு. செ. நமசிவாயம் அவர்களுக்கும், தட்டச்சு செய்து கொடுத்த திருமிகு. ம. இலட்சுமிதிருவேங்கடம் அவர்களுக்கும் எனது நன்றி. இந்தப் புத்தகத்தை மின்னூலாக வெளியிட்டுள்ள FreeTamilEbooks.com குழுவினருக்கும்எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 116\nநூல் வகை: அறிவியல், வாழ்க்கை வரலாறு | மின்னூலாக்கத்தில் பங்களித்தவர்கள்: சிவமுருகன் பெருமாள், மனோஜ் குமார், மு.சிவலிங்கம் | நூல் ஆசிரியர்கள்: ஏற்காடு இளங்கோ\n[…] தமிழகத்தின் அடையாளச் சின்னங்கள் […]\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nஆப்பிள் கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nதமிழ் மின்னூல்களைப் படிப்பது எப்படி\nகிரியேட்டிவ் காமன்சு தமிழ் வலைத்தளங்கள்\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n57 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.karaitivunews.com/akkankal/240817-inraiyaracipalan24082017", "date_download": "2018-04-26T13:03:46Z", "digest": "sha1:E3WW23DZN7PLBWCD4PMAAU2BFHZH5O3W", "length": 9635, "nlines": 27, "source_domain": "www.karaitivunews.com", "title": "24.08.17- இன்றைய ராசி பலன்..(24.08.2017) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்: எதிர்பாராத பணவரவு உண்டு. பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமாக தீர்ப்பு வரும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். அமோகமான நாள்.\nரிஷபம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். நினைத்தது நிறைவேறும் நாள்.\nமிதுனம்: புதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். தாயாருடன் கருத்து மோதல்கள் வரக்கூடும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். புது வேலை கிடைக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும். நன்மை கிட்டும் நாள்.\nகடகம்: துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அதிகார பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். தைரியம் கூடும் நாள்.\nசிம்மம்: கடந்த இரண்டு நாட்களாக குடும்பத்தில் இருந்த சச்சரவு நீங்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். நண்பர்கள் ஒத்துழைப்பார்கள். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் மேலதிகாரி உதவுவார். புத்துணர்ச்சி பெருகும் நாள்.\nகன்னி:ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் அக்கம்-பக்கம் இருப்பவர்களை அனுசரித்துப் போங்கள். அவசரப்பட்டு அடுத்தவர்களை விமர்சிக்க வேண்டாம். சிலர் உங்கள் வாயை கிளறிப் பார்ப்பார்கள். பணம், நகையை கவனமாக கையாளுங்கள். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். உத்யோகத்தில் முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். பொறுமைத் தேவைப்படும் நாள்.\nதுலாம்:பழைய கசப்பான சம்பவங்களை பேசிக் கொண்டிருக்க வேண்டாம்.அண்டை, அயலார் சிலரின் செயல்பாடுகளால் கோபம், எரிச்சல் அடையலாம். எதிர்மறை எண்ணங்கள் வந்து போகும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.\nவிருச்சிகம்:தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். சகோதரங்களால் பயனடைவீர்கள் நம்பிக்கைக்குறியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் பழைய பங்குதாரர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். அனுபவ அறிவால் வெற்றி பெறும் நாள்.\nதனுசு: சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். பயணங்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் அதிரடி லாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.\nமகரம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும், எதிர்பாராத ஒரு வேலை முடியும். உறவினர்கள் உங்களை புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் வரும்.\nகும்பம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் மனதில் இனம்புரியாத பயம் வந்து போகும். குடும்பத்தாருடன் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். உத்யோகத்தில் அலுவலக ரகசியங்களை வெளியிட வேண்டாம். வளைந்து கொடுக்க வேண்டிய நாள்.\nமீனம்: கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vakeesam.com/%E0%AE%92%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF.html", "date_download": "2018-04-26T13:28:17Z", "digest": "sha1:CKJQDUGWNCNS25WP2JQLQXGX3RLDHRS4", "length": 6505, "nlines": 74, "source_domain": "www.vakeesam.com", "title": "ஒபாமா முதல்முறையாக அமெரிக்க பள்ளிவாசலுக்கு விஜயம்! – Vakeesam", "raw_content": "\nஹட்டனில் நில அதிர்வு – 05 வீடுகள் சேதம்\nதந்தை செல்வா நினைவுதினம் அனுஷ்டிப்பு\nஜ.தே.க முக்கிய பதவிகளில் மாற்றம் – பொதுச் செயலாளராக அகில விராஜ் காரியவசம்\n203 பட்டதாரிகள் நேர்முகத் தேர்விற்குத் தோற்றவில்லை \nயாழ் போதனா வைத்தியசாலையில் கழிவு வாய்க்கால்மேல் கன்ரீன் – மக்கள் விசனம்\nஒபாமா முதல்முறையாக அமெரிக்க பள்ளிவாசலுக்கு விஜயம்\nஅமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா பதவி ஏற்றது தொடக்கம் முதல் முறையாக நேற்று (03) அங்குள்ள பள்ளிவாசல் ஒன்றுக்கு விஜயம் செய்துள்ளார்.\nமரிலான்டில் இருக்கும் பல்டிமோர் பள்ளிவாசலுக்கு நேற்று காலை சென்ற அமெரிக்க அதிபர் அங்கு உரையொன்றினையும் ஆற்றியுள்ளார். எனினும் கடந்த 07 ஆண்டு பதவிக் காலத்தில் ஒபாமா வெ ளிநாட்டுப் பயணங்களில் அங்குள்ள பல பள்ளிவாசல்களுக்கு விஜயம் செய்த நிகழ்வுகள் பல பதிவாகியுள்ளன.\nஒபாமாவின் இந்த விஜயம் மத சுதந்திரத்தினை பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டதாக இருக்கும் என்றும் மத வெறியர்களுக்கு எதிரானதாக இருக்குமென்றும் வௌ்ளை மாளிகை குறிப்பிட்டுள்ளது.\nஅங்கு மக்கள் முன்னிலையில் உரையாற்றிய ஒபாமா, “முஸ்லி்ம் விரோத சொல்லாட்சிக்கு எங்கள் நாட்டில் இடமில்லை”. அத்துடன் அமெரிக்காவில் வாழும் அமெரிக்க முஸ்லிம்கள் மிகவும் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரியவர்கள், அவர்களைப் போன்ற மனிதர்களை நீங்கள் வாழ்நாளில் சந்தித்திருக்க மாட்டீர்கள் எனவும் பாராட்டிப் பேசினார்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விமர்சிக்க முஸ்லீம் தலமைகள் தகுதியற்றவர்கள் – இப்படிச் சொல்கிறார் அஸ்மின்\nதமிழ்த் தேசிய ஜனநாயகப்போராளிகள்’ – புதிய கட்சி ஆரம்பம்\nநல்லாட்சி அரசாங்கம் கல்வி வளர்ச்சிக்கு பாரிய ஒத்துழைப்பை வழங்கி வருகின்றது – கல்வி இராஜாங்க அமைச்சர்\nஹட்டனில் நில அதிர்வு – 05 வீடுகள் சேதம்\nதந்தை செல்வா நினைவுதினம் அனுஷ்டிப்பு\nஜ.தே.க முக்கிய பதவிகளில் மாற்றம் – பொதுச் செயலாளராக அகில விராஜ் காரியவசம்\n203 பட்டதாரிகள் நேர்முகத் தேர்விற்குத் தோற்றவில்லை \nயாழ் போதனா வைத்தியசாலையில் கழிவு வாய்க்கால்மேல் கன்ரீன் – மக்கள் விசனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nagoreflash.blogspot.com/2010/05/blog-post_20.html", "date_download": "2018-04-26T13:20:28Z", "digest": "sha1:W6DUJXJLPF6WCMDRIJRB4DW4QPHTGZS3", "length": 25762, "nlines": 286, "source_domain": "nagoreflash.blogspot.com", "title": "NAGORE FLASH: விசா ரத்து செய்துவிட்டு வா! இல்லையேல் விவாக ரத்து செய்துவிட்டுப்போ !", "raw_content": "................அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்................. இந்த இணையத்தளம் நாகூர் வாழ் மக்களுக்கான ஓர் அறிவகம்.\n) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)\nவிசா ரத்து செய்துவிட்டு வா இல்லையேல் விவாக ரத்து செய்துவிட்டுப்போ \nதிரும்பி வந்துவிடு என் கணவா...\nவாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்\nசத்தமில்லாமல் சமையலறை நுழைந்து முத்தம் கொடுத்துவிட்டு ஓடுகிறாய்\nஎன் பசி மறந்து உனக்காக காத்திருக்கும்பொழுது காத்திருக்கவேண்டாமென கண்டித்து விட்டு.. ஒரு கையால் இரு இதழுக்கு ஊட்டுகிறாய்\nசாதிச்சான்றிதழுக்காக லஞ்சம் கொடுத்துவிட்டு கெஞ்சுபவனைப்போல... மல்லிகைப்பூ தந்துவிட்டு மன்றாடுகிறாய்\nபள்ளிக்கு செல்லமறுத்து தூங்குவதாய் நடிக்கும் சின்னப்பையனைபோல... மடியில் படுத்துக்கொண்டு எழ மறுக்கிறாய்\nஅம்மா வருவதாக பாசாங்கு செய்யும்பொழுது...\nபதறி எழுந்து நிலை உணர்ந்து சிரிக்கிறாய் \nகை இழுத்து வைத்து குளிக்க வைக்க முயலும்போது\nகுளிரடிப்பதாய் கூறி - ஒரு குழந்தையை போல அழுகிறாய் \nமறைந்திருந்து கட்டிப்பிடிப்பாய்... கையிலிருப்பதை தட்டிப்பறிப்பாய்\nஅந்நேரம் சொல்வாயடா \"அடி கள்ளி \"\nஇவையெல்லாம் இரண்டே மாதம் தந்துவிட்டு...\nஎனை தீ தள்ளி வாழ்வள்ளி சென்றுவிட்டாய்.... என் சவூதி கணவா\nகணவா... - எல்லாமே கனவா.......\nகணவனோடு இரண்டு மாதம்... கனவுகளோடு இருபத்தி இரண்டு மாதமா...\n12 வருடமொருமுறை குறிஞ்சிப்பூ ...\n4 வருடமொருமுறை உலககோப்பை கிரிக்கெட்... ...\n2 வருடமொருமுறை கணவன் ...\nநீளும் பட்டியலோடு நீயும் இணைந்துகொண்டாய்\nஅழகுக்காய் பிணத்தின் சாம்பலில்.... முகம் பூசுவோர் உண்டோ \nகண்களின் அழுகையை... கண்ணாடி தடுக்குமா கணவா\nநான் தாகத்தில் நிற்கிறேன் - நீ கிணறு வெட்டுகிறாய்\nநான் மோகத்தில் நிற்கிறேன் - நீ விசாவை காட்டுகிறாய்\nதிரும்பி வந்துவிடு என் சவூதி கணவா... வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்\nதேவை அறிந்து... சேவை புரிந்து...\nஉனக்காய் நான் விழித்து... எனக்காக நீ உழைத்து...\nதாமதத்தில் வரும் தவிப்பு... தூங்குவதாய் உன் நடிப்பு...\nவாரவிடுமுறையில் பிரியாணி... காசில்லா நேரத்தில் பட்டினி...\nஇப்படி காமம் மட்டுமன்றி எல்லா உணர்ச்சிகளையும் நாம் பரிமாறிக்கொள்ளவேண்டும்\nஇரண்டு மாதம்மட்டும் ஆடம்பரம் உறவு உல்லாச பயணம்..\nபாசாங்கு வாழ்க்கை புளித்துவிட்டது கணவா\nதவணைமுறையில் வாழ்வதற்கு வாழ்க்கை என்ன வட்டிக்கடையா\nஎப்பொழுதாவது வருவதற்கு நீ என்ன பாலை மழையா \nஇல்லை ஓட்டு வாங்கிய அரசியல்வாதியா \nவிரைவுத்தபாலில் காசோலை வரும் காதல் வருமா \nபணத்தை தரும்... இலங்கை வங்கி \nநீ இழுத்து செல்கின்ற பெட்டியோடு ஒட்டியிருக்கிறது என் இதயம்\nஅனுமதிக்கப்பட்ட எடையோடு அதிகமாகிவிட்டதால் விமான நிலையத்திலேயே விட்டுவிட்டாயோ என் இதயத்தை\nபித்தளையை எனக்கு பரிசளித்துவிட்டு... நீ தங்கம் தேடி சவூதி சென்றாயே\nபாலையில் நீ வறண்டது என் வாழ்வு\nவாழ்க்கை பட்டமரமாய் போன... பரிதாபம் புரியாமல் ஈச்சமரம் பக்கம் நின்று எடுத்த புகைப்படம் அனுப்புகிறாய்\nஉன் சவூதி தேடுதலில்... தொலைந்து போனது - என் வாழ்க்கையல்லவா..\n விழித்து விடு - அந்த கடவுச்சீட்டு வேண்டாம்... கிழித்துவிடு\nவிசாரித்து விட்டு போகாதே கணவா விசா ரத்து செய்துவிட்டு வா (இல்லையேல் விவாக ரத்து செய்துவிட்டுப்போ )\nதிரும்பி வந்துவிடு என் சவூதி கணவா... வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்\nஇஸ்லாம் கூறும் இன்பமான கணவன் மனைவியா நீங்கள் \nதிருமணம் செய்து கணவன் மனைவியாக கைக் கோர்ப்பவர்கள் கடைசிவரை சந்தோசமாக வாழ வேண்டும் என்றே ஆசைப்படுவார்கள். மணமக்களை வாழ்த்துபவர்கள் கூட இதைத்...\nகளமிறங்கிய போராட்ட குழுவிற்கு ஆதரவுகொடுப்போம்.\nபிரபல இஸ்லாமிய அறிஞர் ஜாகிர் நாயக்கிற்கு பிரிட்டன் தடை வலுக்கும் எதிர்ப்பு\nபிரபல இஸ்லாமிய அறி ஞரும் சர்வதேச சொற்பொழி வாளருமான ஜாகிர் நாயக் பிரிட்டனுக்கு வர அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது பெரும் பரபர...\nVote List-ல் உங்கள் பெயர் இருக்கா...\nVote List-ல் நமது பெயர் மற்றும் முகவரியை சரிபார்க்க இந்த Website உதவுகிறது. Vote List-ல் பெயர் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. நீங்கள் தேர்...\nபெண்களை துரத்தும் ரகசிய கேமராக்கள் – ஓர் அபாய எச்சரிக்கை \n( மிக நுணுக்கமான செய்தி என்பதால் நீண்ட பதிவாக எழுதி இருகிறோம் குறிப்பாக பெண்கள் அளிப்பு பார்க்காமல் முழுமையாக படித்து பயன்பெறவேண்டும்,மற்றவ...\nவிந்தின் பிறப்பிடம் - திருக்குரானின் விளக்கம்\nகுர்ஆன் - அறிவுக்கும் அறிவியலுக்கும் ஏற்ற எக்காலத்திற்கும் பொருந்தும் ஓர் வாழ்வியல் நெறிநூல் இது அறிவியல் நூலல்ல; ஆனாலும் அறிவியலையும் உள்ள...\n\"இஸ்லாத்தின் பார்வையில் இசை ஒரு முழுமையான ஆய்வு\"\n இசை என்பதன் விளக்கம் என்ன … இசை என்ற சொல்லுக்கு இசைய வைப்பது எனறு பொருள். இசை (Music) என்பது ஒழுங்கு செய...\nஹதீஸ் - அடிப்படை விளக்கம்\n ஹதஸ் என்ற வேர்ச்சொல்லிலிருந்து பெறப்பட்ட சொல்தான் ஹதீஸ் என்பது. ஹதீஸ் என்றால் உரை உரையாடல் புதியசெய்தி எனப்ப...\nநவீன காலத்து அடிமைகளை விடுவிப்போம்....\nவளைகுடா நாடுகளில் வேலை செய்யும் முஸ்லிம்களில், கணிசமானவர்கள் வீடுகளில் வாகன ஓட்டுனர் வேலை செய்பவர்களாக உள்ளனர். இவர்களில் பெரும்பான்மையினர் ...\nஇரு தரப்பு பேச்சுவார்த்தை எதிர்பார்த்தப்படி சுமூகமாக முடிந்தது.\nஒரு பிரச்சனை எப்படி முறைப்படி கையாளபட வேண்டுமோ அப்படி கையாளபட்டிருகிறது.. அல்ஹம்துலில்லாஹ். கடந்த விநாயகர் சதுர்த்தி அன்று நாகூர் மியா...\n9/11 INSIDE JOB (3) BOOKS (11) HAJ (10) MEDIA (7) POLL (1) ZAKIR NAIK (7) அக்கம் பக்கம் (28) அமைதி (3) அரசியல் (5) அரசு உத்தரவுகள் (14) அரவாணிகள் (1) அவ்லியா (2) அறிவியல் (19) அனுபவம் (26) அஹமது தீதாத் (2) இசை (2) இந்திய முஸ்லிம்கள் வரலாறு (3) இல்லறம் (2) இறுதி தீர்ப்புநாள் (2) உதவி தேவை (13) எச்சரிக்கை (18) ஒற்றுமை (9) கல்வி (24) கனவு இல்லம் (1) கிலாபத் (2) கேள்வி பதில் (18) சத்தியமார்க்கம் (26) சஹாபாக்கள் (4) சுய பரிசோதனை (3) செல்போன் (12) தப்லீக் (1) தரீக்கா (2) தர்கா (11) தன்னம்பிக்கை (2) திருமணம் (6) தீவிரவாதம் (12) தெரிந்த ரகசியங்கள் (32) தெரிந்து கொள்ளுங்கள் (111) தேசபக்தி (9) தேர்தல் 2011 (22) நபி(ஸல்) (3) நாகூர போல வருமா (6) நாகூர் (1) நாகூர் சங்கதி (119) நாகூர் வரலாறு (2) நாத்திகன் (3) நோன்பு (1) பழனிபாபா (1) பாபரி மஸ்ஜித் (7) பாவமன்னிப்பு (3) பிறை (4) புகை (3) பைபிள் (3) போராட்டக்களம் (10) போராட்டம் (1) மருத்துவம் (10) மவ்லித் (4) மீலாது (1) முஸ்லீம்கள் (5) மோசடி (10) ரமளான் (5) வாக்காளர் பட்டியல் (1) விமர்சனங்கள் (5) விவாதங்கள் (4) ஷியா (2) ஷிர்க் (14) ஸூபித்துவம் (2) ஹதீஸ் (3) ஹிந்து தீவிரவாதிகள் (22) ஹிஜாப் (16)\nஉள்ளுக்குள் முஸ்லிம், வெளியே கிருத்துவர்...\nநாகூர் கந்தூரியும்( ஊருஸ்)- நாசமாகும் அமல்களும் .\nஇணையத்தில் நேரத்தை தொலைக்கும் இளைஞர்கள்\nமாணவ - மாணவிகளுக்கு உதவி தொகை வழங்கும் தொண்டு நிறு...\nசெல்போன் காதலில் சீரழியும் பிள்ளைகள்\nகண்களால் செவியுறுவேன்; கல்வியில் சாதிப்பேன்\nவிசா ரத்து செய்துவிட்டு வா\nஅஹ்மத் தீதாத்-ஒரு முஸ்லிம் எப்படி வாழ வேண்டும் என்...\nஅல்குர்ஆனும் விண்வெளி வீரர்களும் ஓர் ஆய்வு\nபேஸ்புக்கில் நபி (ஸல்) அவர்களின் புகைப்படம் : பேஸ்...\nகுரான் & ஹதீஸ் நூல்கள் பதிவிறக்கம்\nநபி( ஸல்) முழு வரலாறு\nகிருத்துவ மத போதகருடனான கலந்துரையாடல்\nஇரத்ததானம் செய்ய பதிவு செய்யுங்கள்\nசெய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற மின்னஞ்சல் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்\nதமிழில் டைப் செய்ய (தங்கலிஷ்)\nஅல்லாஹ்வின் சாந்தியும் , சமாதானமும் உங்கள் அனைவரின் மீதும் உண்டாவதாக இந்த தளம் நாகூர் வாழ் மக்களுக்கான ஓர் அறிவகம். நல்ல விஷயங்கள் பகிர்ந்து கொள்ளவும், தவறான விஷயங்களை சுட்டிக்காட்டவும் இந்த தளத்தை அமைத்திருகிறோம்.. நம்ம ஊரை பற்றி மற்றவர்களை விட நாமே அதிகம் விமர்சிக்கிறோம் இதே ஊரில் இருந்துகொண்டு, உண்மையில் நம்மை நாமே விமர்சித்து கொள்கிறோம் என்பதே உண்மை.. ஆகையால் உணர்வுகளை உள்ளது உள்ளபடி பகிர்ந்து கொள்ள ஒரு தளம். மேலும் உலக நாட்டுநடப்புகளும் இங்கே உரியமுறையில் அலசப்படுகிறது. நீங்களும் இந்த தளத்தின் அங்கமே , உங்களின் கருத்துகள் ,விமர்சனங்கள் , கட்டுரைகள் எதுவாக இருந்தாலும் nagoreflash@ymail.com முகவரிக்கு அனுப்பித்தாருங்கள். உங்கள் அன்புடன் அப்துல்லாஹ்.\nஅண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: \"தொழுகையாளிகள் அரபுத் தீபகற்பத்தில் தன்னை இபாதத் செய்வார்கள் -வணங்குவார்கள் - எனும் விஷயத்தில் ஷைத்தான் நிராசை அடைந்து விட்டான். எனினும், முஸ்லிம்களிடையே பகைமைத் தீயை மூட்டுவதில் அவன் நம்பிக்கை இழக்கவில்லை\". அறிவிப்பாளர்: ஜாபிர்(ரலி), நூல்: முஸ்லிம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://panangkudil.blogspot.com/2010/07/10-roses.html", "date_download": "2018-04-26T13:40:43Z", "digest": "sha1:ZRPUXSGATHXVCSZVEZHWSMJWWHVQT3S3", "length": 3744, "nlines": 115, "source_domain": "panangkudil.blogspot.com", "title": "பனங்குடில்: வாழ்வின் வெற்றிக்கு 10 Roses", "raw_content": "\n\"அறிந்தவை அறியாதவை தெரிந்தவை தெரியாதவை\"\"அனைத்தும்\"\nவாழ்வின் வெற்றிக்கு 10 Roses\nமகிழ்ச்சியை வயலின் பழகுவது போல பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும்\nநேரம் 11:51 AM இடுகையிட்டது பனங்குடிலிலிருந்து\nலேபிள்கள்: pictures, பொன் மொழிகள்\nமொடலிங் & அனிமேஷன் (Maya)\nநாகரீகம் vs நவநாகரீக (படங்கள்)\nவற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயம் (படங்கள்) - \"உப்பு ...\nஉலகின் பழமையான மொழி எது\nஇயற்கை அழகே அழகு (படங்கள்)\nவாழ்வின் வெற்றிக்கு 10 Roses\nஉங்க ஊர் எந்த ஊர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "http://www.nitharsanam.net/170800/news/170800.html", "date_download": "2018-04-26T13:17:20Z", "digest": "sha1:PDY6EN52N5XRNGNYGFGBR5CM2GDRFO2T", "length": 5445, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "காலில் விழுந்த வணங்கிய ரசிகரை கன்னத்தில் அறையும் கமல்..!! (வீடியோ) : நிதர்சனம்", "raw_content": "\nகாலில் விழுந்த வணங்கிய ரசிகரை கன்னத்தில் அறையும் கமல்..\nகாலில் வழுந்து வணங்கிய ரசிகரை நடிகர் கமலஹாசன் கன்னத்தில் அரைவது போன்ற காட்சி வெளியாகியுள்ளது.\nதிரைப்பட வேலைக்காக டெல்லி சென்ற கமலஹாசன் தனது நண்பரும் இயக்குனருமான ரமேஷ் ஆரவிந்த் உடன் வணிக வளாகம் போன்ற இடங்களுக்கு செல்கிறார். அங்குகிருந்து திரும்புகையில் ரசிகர் பட்டாளம் திரண்டு நிற்கிறது.\nஅப்போது ரசிகர் ஒருவர் கமலஹாசனை நெறுங்குவதற்காக படிகட்டில் ஏறுகிறார். அவரை தடுத்த ரமேஷ் ஆரவிந்தையும் மீறி கமலஹாசன் காலில் விழுந்து வணங்குகிறார். அப்போது ரசிகரின் கன்னத்தில் ஓங்கி அரைகிறார் நடிகர் கமல்.\nPosted in: செய்திகள், வீடியோ\nஉடலுறவின் போது எதுவெல்லாம் உங்கள் துணைக்கு பிடிக்கும்\nகர்ப்பகாலத்தில் தாம்பத்யம், அசைவம் சரியா\nமரண காமெடி- இது நம்ம ஊரு நடிகர்கள் – பழமார்நேரி பஞ்சாயத்து\nஇந்திய அரசியலில் ‘ஆளுநர்’ பதவிகள்\nநல்ல தூக்கத்துக்கு நாளை செய்ய வேண்டியதை எழுதுங்கள்\nதாம்பத்திய இன்பத்தின் போது தவிர்க்க வேண்டியவை\nசினிமா துறையில் இந்த வசனத்தை இவரை தவிர யாராலும் பேச முடியாது\nஉலக புகழ் பெற்ற குரங்கு செல்பி புகைப்பட வழக்கு : காப்புரிமை கோர முடியாது நீதிமன்றம் தீர்ப்பு\nஅணு சக்தி ஒப்பந்தம் மோசமானது என்றால் அமெரிக்க கையெழுத்திட்டது : ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி\nஇலங்கைப் பொலிஸாரின் பொருட்களை வைத்திருந்த பிரிட்டன் குடியுரிமை பெற்ற நபர் கைது\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.sahabudeen.com/2011/12/blog-post_4107.html", "date_download": "2018-04-26T13:13:29Z", "digest": "sha1:GDXJFY4UUPZHIPEKNF5OGMANPOZSVZXR", "length": 13014, "nlines": 210, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: சைபர் கிரைம்", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nஇது போல ஒரு ஈமெயில் உங்களுக்கு வந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள் நான் பொதுவாகக் கண்டுகொள்ளாமல் டெலிட் செய்வேன். அல்லது நேரம் இருந்தால் கரும சிரத்தையாக \"ஃபிஷ்ஷிங் ஸ்காம்\" மெயில் அது என மார்க் செய்வேன்.\nஉங்கள் பாஸ்வர்ட் எங்களுக்கு வேண்டும் அதை எங்களுக்கு அனுப்புங்கள் என்றோ அல்லது \"இதை அப்க்ரேட் செய்கிறோம் அதை அப்க்ரேட் செய்கிறோம்\" உங்கள் பாஸ்வர்டை ரீசெட் செய்யவும் என உங்களுக்கு மெயில் வந்தால்....\nதயவு செய்து உஷாரய்யா உஷாரு எந்த ஈமெயில் வலைத்தளமும் அல்லது எந்த வங்கியும் கூட இப்படி \"உன் பாஸ்வேர்ட் எனக்குத் தா\" எனக் கேட்பதில்லை.\nஒவ்வொரு பிரண்டும் தேவை மச்சான்\nவாழ்க்கைக்கு தேவையான முத்தான மொக்கைதத்துவங்கள் ......\nயூதர்கள் தங்களின் திட்டங்களை செயல்படுத்தும் விதம்\nஅதிகளவில் இஸ்லாத்தை தழுவும் பெண்கள்...\nஅமெரிக்க முஸ்லிம்கள் - ஆய்வு தகவல்கள்\nஈரல் சாப்பிடுவதால் ஏற்படும் மருத்துவ பலன்கள் ( H...\nஒரு காதலன் காதலியிடம் கேட்க நினைக்கும் கேள்விகள்…\nமாதவிலக்கு - ஓர் இஸ்லாமியப்பார்வை\nகரு வளர்ச்சியும் அல்குர்ஆனின் அற்புதமும்\nதங்கம் - ஹால்மார்க்: முத்திரையை மட்டும் பார்க்காதீ...\nResume - கவனிக்க வேண்டிய மிக முக்கிய குறிப்புகள்\nஅல்லாஹ்வை திக்ரு செய்யும் ஒழுங்கு முறைகள்\nஇமெயில் வதந்திகள் – ஓர் இஸ்லாமியப் பார்வை\nஇஸ்லாத்தின் பார்வையில் அதிருஷ்டக் கற்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் ராசி பலன்கள் (Horoscopes)\nகூலிக்கு ஆட்களை அமர்த்தி குர்ஆன் ஓதலாமா\nசுவனத்திற்கு செல்லும் எளிய வழிகள்\nதிருட்டை ஒழிக்க சிறந்த வழி\nதேவையற்ற பொருட்களை வாங்கிக் குவிக்கும் விபரீத ஆசை\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nதேனை தனியாக சாப்பிட்டால் பலன்--- மருத்துவ டிப்ஸ்\nதேன் சீரண சக்தியை தரும். இரைப்பையில் ஏற்படும் எல்லாவித கோளாறுகளையும் வயிற்றில் ஏற்படும் கோளாறுகளையும் குணமாக்கும். நெஞ்சில் ஏற்படும் எரிச்...\n‘ பாட்டி வைத்தியம் ’ சொன்ன பாட்டியிடமிருந்து ‘ வைத்திய ’ ரிலே கட்டையை கைப்பற்றியிருக்கும் பாட்டியும் , நல்ல அனுபவசாலி\nஉடலை சார்ஜ் செய்வது எப்படி\nஉடலை சார்ஜ் செய்வது எப்படி பாகம் - 2 முந்தைய பதிவில் நம் உடலை ஏன் சார்ஜ் செய்ய வேண்டும் , அதனால் உண்டாகும் பலன்கள் என்னென்ன என்...\nஅதிகாலையில் தண்ணீர் பருகினால் பல வியாதிகளைக் குணப்படுத்த முடியும் \nதினமும் காலையில் தூக்கத்தில் இருந்து எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவது ஜப்பானில் இப்போது பிரபலமாகி வருகிறது. இங்கு தரப்பட்டி...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nஉங்கள் உடல் எடை ஏழு நாட்களுக்குள் ஐந்து கிலோ எடை குறைய...\nகீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த அட்டவணை மிகப் பிரபலமான உணவு அட்டவணை. ஏழு நாட்களுக்கு இந்த அட்டவணையைப் பயன்படுத்தினால் , உங்கள் எடையில் சராசரி...\nநபிமார்கள் பற்றிய அரிய தகவல்கள்\nநபிமார்கள் மனிதர்களில் மாண்புடையவர்கள்.இவர்கள் அல்லாஹ்வின் வாக்கே உலகில் மேலானது. இறைவனல்லாத ஏனையோரின் வாக்கு கீழானது என்னும் தாரகமந்திரத்...\n கல்யாணம் ஆயி பல வருசம் ஆச்சு. இன்னும் வண்டி மக்கர் பண்ணுதே என்று மனசுக்குள்ளே குமையும் நம்ம குரூப் மக்களே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/93845-kaali-venkat-interview-about-his-cinema-carrier.html", "date_download": "2018-04-26T13:04:29Z", "digest": "sha1:TJQYFHCL23E2XGPTPVUFSJ4EHILC4SYM", "length": 28201, "nlines": 388, "source_domain": "cinema.vikatan.com", "title": "மளிகைக்கடை வேலை, ஹீரோ, தனுஷிடம் உளறல் ...! செம ஜாலி காளிவெங்கட் | kaali venkat Interview about His Cinema Carrier", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nமளிகைக்கடை வேலை, ஹீரோ, தனுஷிடம் உளறல் ...\n“சினிமா எனக்கு சாமி மாதிரி. நமக்கு எதைப் பிடிக்குமோ அதை அளவுக்கு அதிகமா நேசிக்கணும். அதுல உண்மையா இருந்தா, நினைச்ச இடத்தை நாம நிச்சயம் பிடிச்சுடலாம்” - உள்ளத்திலிருந்து பேசுகிறார் காளிவெங்கட். சினிமாவில் தடம் பதித்த இவரின் வாழ்க்கை நிச்சயம் பலருக்கும் நம்பிக்கையூட்டும்.\nகாளிவெங்கட் சினிமாவுக்கு வந்த கதை\n“சொந்த ஊர் கழுகுமலை பக்கத்துல கத்தாளம்பட்டி. ஊர்ல இருக்கும்போது நிறைய நாடகங்கள் நடிச்சிருக்கேன். நண்பர்களின் ஊக்குவிப்புல 1998-ல் சென்னைக்கு பஸ் ஏறிட்டேன். சினிமாவுல பெரிய நடிகராகணும்கிறதுதான் ஆசை. ஆரம்பத்துல மளிகைக் கடையில் வேலை செஞ்சுட்டிருந்தேன். அந்தச் சமயத்துல என் அப்பாவும் சென்னை வந்துட்டார். சொந்தமா தொழில் பண்ணலாம்னு யோசிச்சு, தள்ளுவண்டியில் காய்கறி விற்பனை செய்ய ஆரம்பிச்சோம். சினிமாவில் சாதிக்கணும்னா, சென்னையில் செட்டிலானா எளிதில் வாய்ப்பு தேட முடியும்னு தோணுச்சு. முதல் படியா நானும் அண்ணனும் சேர்ந்து சென்னையில் பெட்டிக்கடை வெச்சோம். அப்புறம் டீக்கடை, வாட்டர் கேன் சப்ளேனு கொஞ்சம் கொஞ்சமா சம்பாதிக்க ஆரம்பிச்சோம். அதுலேயே எட்டு வருடம் ஓடிடுச்சு. என்னுடைய சினிமா ஆசைக்கு எங்க வீட்டுல யாரும் தடைபோடலை.\nசெட்டிலாகியாச்சு. ஆனா, சினிமாவில் எப்படி வாய்ப்பு தேடணும்னு தெரியலை. நண்பர் ஒருவர், மிஷ்கினிடம் உதவியாளரா இருந்தார். போட்டோ ஷூட் எடுக்கணும்கிற விஷயமே அவர்தான் சொன்னார். `போட்டோவுக்குப் பின்னாடி உயரம், எடை, நம்பர் எழுதி ரெடி பண்ணிக்கிட்டு அப்புறம்தான் எல்லா இயக்குநர் ஆபீஸுக்குப் போய் வாய்ப்பு கேட்கணும்'னு அவர் சொன்னார். 2006-2008 வரை வெறித்தனமா வாய்ப்பு தேடி அலைஞ்சேன். அந்த நேரத்துலதான் `ஆடுகளம்' முருகதாஸ், கறுப்பு நம்பியார், விஜய் சேதுபதினு நிறைய நண்பர்கள் கிடைச்சாங்க. குறும்படங்களில் நடிக்கச்சொல்லி எனக்கு அட்வைஸ் சொன்னதே விஜய் சேதுபதிதான். அப்படித்தான் ராம்குமார் இயக்கத்துல `முண்டாசுப்பட்டி' குறும்படத்தில் நடிச்சேன். அப்படியே படத்திலும் நல்ல கேரக்டர் கிடைச்சது. இதுக்கு நடுவுல சின்னச் சின்ன ரோலில் சில படங்கள்ல நடிக்க வாய்ப்பு வந்துச்சு. ‘தெகிடி’, ‘முண்டாசுப்பட்டி’ ரெண்டு படங்கள் கொடுத்த வெற்றி, நிறைய படங்கள்ல நடிக்க வாய்ப்பு கிடைச்சது. இன்னிக்கு வரைக்கும் நிறைய வாய்ப்புகள் வந்துட்டிருக்கு.”\n“என்னுடைய உயரம்தான் எனக்கு ப்ளஸ். ஹீரோவோட உயரத்துக்கு ஈடுகொடுக்க முடியாதுங்கிறதால சில பட வாய்ப்புகளை இழந்திருக்கேன். ஆனாலும் போலீஸாகவே நடிச்சுட்டேனே ஜெயம் ரவி சாரோட நடிக்கும்போதெல்லாம் ஷூட்டிங் ஸ்பாட்டில் செம காமெடியா இருக்கும். அவருக்கு சமமா இருக்கணும்னு அவர் உயரத்துக்கு எனக்கு பாக்ஸ் போடுவாங்க. ‘வாயை மூடி பேசவும்’ படத்துல பாண்டியராஜன் சாரோடு ஒரு சீன். அவர் உட்கார்ந்து பேசிட்டிருப்பார். நான் நின்னு பதில் சொல்லணும். உயரத்துக்காக எனக்கு பாக்ஸ் போட்டாங்க. ‘என் அனுபவத்திலேயே என்கூட நடிக்கிறவங்களுக்கு ஆப்பிள் பாக்ஸ் போட்டது உனக்குதான். ஏன்னா, எப்பவுமே எனக்குத்தான் பாக்ஸ் போடுவாங்க. இதைப் பாருக்கும்போதே சந்தோஷமா இருக்கு'னு பாண்டியராஜன் சார் சொல்லிச் சொல்லி சிரிச்சார். உயரம் பிரச்னையா இருக்கிறதும் ஒரு ஜாலிதான்.”\nகாமெடி, சீரியஸ்னு ரெண்டு ரோல்கள்லயும் கலக்குறீங்களே\n“சூழ்நிலைக்கு ஏற்ப நடிக்கணும். வலுக்கட்டாயமா சிரிக்கவைக்கக் கூடாது; முகம் சுளிக்கிற மாதிரியான காமெடி பண்ணக் கூடாது. `இந்த மாதிரியான நடிகர்'னு ஒரு வட்டத்துக்குள்ள அடைஞ்சிடவும் கூடாது. ரோலுக்கு என்ன தேவையோ அதை மட்டுமே செய்றேன். எனக்கு என்ன வரும்னு தெரிஞ்சு ரோல் கொடுக்கிற இயக்குநர்கள் கிடைச்சதுதான் என்னோட ப்ளஸ்ஸா நினைக்கிறேன்.”\n“ `மாரி', `கொடி' ரெண்டு படங்கள்லயும் எனக்கு மிகப்பெரிய அனுபவம் கிடைச்சது. தனுஷ் சார்தான் எனக்கு இன்ஸ்பிரேஷன். நடிப்பைப் பற்றி நுணுக்கமான சிந்தனை அவருக்கு உண்டு. ஒவ்வொரு சீன்லயும் புதுசா புதுசா ஏதாவது செய்துக்கிட்டே இருப்பார். அவரிடமிருந்து நிறையவே கத்துக்கிட்டேன். ஷூட்டிங் ஸ்பாட்டில் பெரும்பாலும் வசனங்கள் மறக்க மாட்டேன். ‘மாரி’ ஷூட்டிங்கில் தனுஷ் சார் எனக்கு எதிரா நின்னு டயலாக் பேசுறா மாதிரி ஒரு சீன். அவரோட நடிப்பை ரசிச்சுக்கிட்டே நின்னதுல என் டயலாக் மறந்துடுச்சு. அப்புறம் எப்படியோ சமாளிச்சு பேசி முடிச்சேன்.''\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\n' நடிகர் கொட்டாச்சிக்கு நடந்த வழிப்பறி சம்பவத்தின் முழுக்கதை\n100க்கும் அதிகமான படங்களில் சிறு சிறு காமெடி வேடங்களில் நடித்தவர், கொட்டாச்சி. சமீபத்தில் வழிப்பறி கும்பலிடம் மாட்டி, பணம் பொருட்களை இழந்திருக்கிறார்... Unidentified Persons Attacks on Comedy Actor Kottachi\n“பிரபுதேவாவோடு `யங் மங் சங்’, ஜி.வி.பிரகாஷோடு `ஐங்கரன்’, விஜய் ஆண்டனியோடு `அண்ணாதுரை’. இவை தவிர இன்னும் மூணு படங்கள் பேசிட்டிருக்கேன். சினிமாவும் நானுமா லைஃப் சூப்பரா போகுது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா\n“ ‘பாகுபலி’ ராமாயணம்னா, ‘சங்கமித்ரா’ மகாபாரதம்\nபிரித்திகா முதல் மோனிகா வரை - சூப்பர் சிங்கர் இறுதிச் சுற்றுக்கு வந்தது இப்படித்தான்\n'கோட் சூட் போட்டு ஆங்கரிங் பண்ணணும்..' - கலக்கப்போவது யாரு சாம்பியன் பாலாவின் ஆசை #VikatanExclusive\n' - 'காதல்' விருச்சககாந்த்தின் தற்போதைய நிலை #VikatanExclusive\n'நினைச்சதைக் கொண்டுவர ஓவியமா இருந்தா என்ன.. புகைப்படமா இருந்தா என்னனு தோணிச்சு’ - ‘வலி’ குறும்படம் மூலம் கவனம் ஈர்த்த வம்சி.\n``சிவகார்த்திகேயன் பங்கமா கலாய்ப்பார்... மா.கா.பா எவ்வளவு கலாய்ச்சாலும் வாங்கிப்பார்..’’ - அத்தியாயம் 13\n\"25 சூப்பர் ஹீரோக்கள்... ஒரு சூப்பர் வில்லன் தேனோஸ்\n``கார்த்திக்... என்னை கல்யாணம் பண்ணிக்குவீங்களானு கேட்கணும்போல இருக்கு\" - விஜி சந்திரசேகர்\n\" 'சுந்தரபாண்டியன் 2' தயாரிக்கிறேன்; விஜய்சேதுபதி கேரக்டர்ல நடிக்கிறேன்\n\"ஆமாங்க... வருத்தப்படாத வாலிபர் சங்கம் நல்ல படம்தான்’’ - ‘விகடன் பிரஸ் மீட்’ சிவகார்த்திகேயன்\n\"வைகோ, சீமான் மோதல் வேதனை தருகிறது” - கலங்கும் திருமா\nவிகடன் பிரஸ்மீட்: அஜித்திடம் என்ன பிடிக்காது விஜய்யிடம் என்ன பிடிக்கும்\nநான் ரம்யாவாக இருக்கிறேன் - 21\n\"வைகோ, சீமான் மோதல் வேதனை தருகிறது” - கலங்கும் திருமா\nஜெயித்தது தோனி... ஜெயிக்க வைத்தது கோலி... ஜஸ்ட் கோலி திங்ஸ்\nதிருடிய மொபைலை அன்லாக் செய்ய திருடர்கள் செய்யும் இன்னொரு திருட்டுத்தனம்... உஷார்\n'நிர்மலா தேவி வாழ்க்கையே ரகசியம்தான்'- காவியன் நகர் மக்கள் சொல்வது என்ன\nமெக்கானிக்குடன் சாலையில் நின்ற போலீஸார்... கதிகலங்கிப்போன இருசக்கர வாகன ஓட்டிகள்\nஜெயித்தது தோனி... ஜெயிக்க வைத்தது கோலி... ஜஸ்ட் கோலி திங்ஸ்\n``மன அழுத்தம் போக்க உங்களை நீங்கள் ஜெயிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்\n``லட்சியத்தை நோக்கி நகர்ந்துகொண்டே இருந்தால் மனஅழுத்தம் இல்லை. மனஅழுத்தம் போக்க உங்களை நீங்கள் ஜெயிக்கக் கற்க வேண்டும்’’ என்கிறார் எழுத்துச் சித்தர் பாலகுமாரன்.\nகருவளையத்தை மறைக்க மேக்கப் வேண்டாம்... இரும்புச்சத்து உணவு போதும்\nகருவளையத்தை மறைக்க மேக்கப் வேண்டாம். எந்தக் காரணத்தினால் உங்களுக்குக் கருவளையம் வந்திருக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டால் அதைச் சரி செய்வது சுலபம்..\nகொடைக்கானல் மெர்க்குரி ஆலை... அன்று நடந்ததும் இன்றைய நிலையும்\nஅவர்கள் குறைக்கவேண்டியதாக அரசு கூறிய மெர்க்குரி அளவு, உண்மையில் குறைக்கவேண்டிய அளவைவிட 20 மடங்கு அதிகம். இது யூனிலிவர் செலவைக் குறைப்பதற்காகச் செய்யப்பட்டது.\nவிகடன் பிரஸ்மீட்: அஜித்திடம் என்ன பிடிக்காது விஜய்யிடம் என்ன பிடிக்கும்\n“இந்த வேலைநிறுத்தம், இந்திய சினிமாவையே கோலிவுட் பக்கம் திருப்ப வெச்சிருக்கு. இதன் மூலமா...\nஜெ. கன்னத்திலிருந்த நான்கு புள்ளிகளும் அவிழாத முடிச்சுகளும்\nமரணத்துக்குப் பிறகு ஜெயலலிதா உடல் ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டபோது, ஜெ. கன்னத்தில் காணப்பட்ட நான்கு புள்ளிகள் குறித்துப் பெரும் சர்ச்சை எழுந்தது. அந்த நான்கு புள்ளிகள் குறித்த மர்ம முடிச்சுகளை அவிழ்ப்பதற்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முயற்சி செய்துள்ளது.\n\"வைகோ, சீமான் மோதல் வேதனை தருகிறது” - கலங்கும் திருமா\nகாவிரிப் பிரச்னை, எஸ.சி, எஸ்.டி வன்கொடுமைத் தடுப்பு சட்டம் ஆகியவற்றுக்கான போராட்டங்களில் மும்முரமாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://freetamilebooks.com/valippokkan-qa/", "date_download": "2018-04-26T13:09:14Z", "digest": "sha1:S2LJPHRBINVBEUBRX6BYISXU6HFWOT6F", "length": 5976, "nlines": 77, "source_domain": "freetamilebooks.com", "title": "நூலாசிரியர் பேட்டி – வலிப்போக்கன்", "raw_content": "\nநூலாசிரியர் பேட்டி – வலிப்போக்கன்\nஇண்டாம் ஆண்டில் 200 மின்நூல்களுடன நிறைவு செய்வதில் மகிழ்ச்சியடன் freetamilebooks குழுவிற்கு வாழ்த்துக்களும் நன்றியும்\nஆரம்பத்தில் மின்நூல் பற்றி எதுவும் தெரியாமல் இருந்தேன். தெரிந்தவர்களிடம் கேட்டபோது அவர்களுக்கு மின்நூலைப்பற்றி எதுவும் தெரியவில்லை. கடைசியாக என்னுடைய சொந்த முயற்சியில் பதினோறு தடவை தோல்வியுற்று பனிரெண்டாவது வெற்றி அடைந்தேன்.\nஅந்த வெற்றிக்கு அடையாளமாக என்னுடைய பதிவும் மின்நூலாக வெளிவந்தது. அந்தமின்நூல் மூலம் மற்றவர்களின் புத்தகங்களையும் படிக்க முடிந்த்து. .இது சிறந்த வழிகாட்டியாக இருக்கிறது.\nமற்றவர்களுக்கும் இப்படியோரு மின்நூல் இருக்கிறதை அறிமுகம் செய்தேன். இதில் சேவை செய்பவர்கள் தன்னார்வர்களாக இருப்பதால் அவர்களுக்கு என் மனப்பூர்வமான நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.\nதொடர்ந்து புதிய புதிய உத்திகளை கையாண்டு என்னைப்போன்ற தொழில்நுட்ப அறிவு குறைவாக உள்ளவர்களுக்கும் புரியும் வகையில் அவர்களையும் மின் நூல் படைப்பாக்கத்திற்கு வரவழைக்க வேணடும் என்னுகிறேன்.\nமீண்டும் எனது கருத்துக்களை தெரிவிக்க தொடருகிறேன்..\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nஆப்பிள் கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nதமிழ் மின்னூல்களைப் படிப்பது எப்படி\nகிரியேட்டிவ் காமன்சு தமிழ் வலைத்தளங்கள்\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n57 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kavishan.blogspot.com/2013/03/23.html", "date_download": "2018-04-26T12:57:21Z", "digest": "sha1:JPBASBWXALJVHSOGUC2TXLGTAZAU2F4N", "length": 8193, "nlines": 133, "source_domain": "kavishan.blogspot.com", "title": "ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக புழல் சிறையில் 23 கைதிகள் உண்ணாவிரதம் ~ ஈழம் செய்திகள்", "raw_content": "\nஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக புழல் சிறையில் 23 கைதிகள் உண்ணாவிரதம்\nஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகவும் இலங்கை அதிபர் ராஜபக்சவுக்கு எதிராகவும் தமிழகத்தில் போராட்டம் வலுத்து வருகிறது. இந்தநிலையில் புழல் சிறையில் உள்ள கைதிகளும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக உண்ணாவிரதத்தில் குதித்துள்ளனர்.\nதமிழகம் முழுவதும் பல்வேறு கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு அரசியல் கட்சியினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.\nஇந்த நிலையில் புழல் சிறைக் கைதிகளும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக உண்ணாவிரதத்தில் குதித்துள்ளனர்.\nஇன்று காலை 7.30 மணி அளவில் தண்டனை கைதிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. அப்போது 23 கைதிகள் சாப்பிட மறுத்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.\nஇலங்கையில் தமிழர்கள் அமைதியாக வாழ இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும்,\nராஜபக்ச மீது போர்க்குற்ற விசாரணை செய்ய வேண்டும்.\nஐ.நா. சபையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும்\nஎன்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளனர்.\nஉண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள கைதிகளிடம் ஜெயில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடாத்தி வருகின்றனர்.\nநீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.\nஇலங்கையின் ஏழாவது ஜனாதிபதி (1)\nஉலகத் தமிழர் பேரவை (1)\nசிறீலங்காவின் 7வது நாடாளுமன்ற தேர்தல் (12)\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (6)\nதலைமைச் செயலகம் தமிழீழம் (5)\nநாடு கடந்த அரசாங்கத் தேர்தல் (6)\nநாடு கடந்த அரசாங்கம் (57)\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கம் (1)\nநான் சாகலாம் நாங்கள் சாகக் கூடாது (11)\nபோர்குற்ற நாள் 2009 மே (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://pookal.blogspot.com/2012/07/blog-post_9110.html", "date_download": "2018-04-26T13:40:48Z", "digest": "sha1:XOPGUXQAPFNGJUFQKGJ43MSGVOYO73FB", "length": 12361, "nlines": 147, "source_domain": "pookal.blogspot.com", "title": "POOKAL: சொந்த வீடு வாங்கும் யோகம் :", "raw_content": "நான் ரசித்ததும்,படித்ததும், பார்த்ததும், பலவற்றில் இருந்து திரட்டப்பட்ட சிறு சிறு குறிப்புகளின் தொகுப்பு.உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஒரு சந்தர்ப்பம்.\nசொந்த வீடு வாங்கும் யோகம் :\nநான்காம் வீட்டின் அதிபதி நான்காம் வீட்டில் உச்சம் பெற்றாலோ அல்லது ஆட்சி பெற்றாலோ அந்த ஜாதகர் சொந்த வீடு கட்டி கணவன் மனைவி குழந்தைகளுடன் செல்வ செழிப்போடு வாழும் யோகம் உண்டாகும் .\n4 ஆம் வீட்டின் அதிபதி கேந்திரம் ,திரிகோணம் ஆகிய இடங்களில் அமைந்தாலும் அந்த ஜாதகருக்கு சொந்த மனை வாங்கும் யோகம் உண்டாகும் .\nவாடகை வீடு அல்லது வீடு இல்லாத நிலைமை :\nநான்காம் வீட்டின் அதிபதி 6,8,12 ஆகிய இந்த மூன்று வீடுகளில் ஏதாவது ஒரு வீட்டில் இருந்தாலும் அல்லது நான்காம் வீட்டை ராகு ,கேது சனி செவ்வாய் போன்ற பாப கிரகங்கள் பார்த்தாலும் சொந்த வீட்டில் வாழும் அமைப்பு அந்த ஜாதகருக்கு இல்லை .மாறாக வாடகை வீட்டிலோ அல்லது இடம் விட்டு இடம் இருக்கவோ வாய்ப்பு உள்ளது .\nஉங்கள் ராசிக்கு காதல் எப்படி Any Chance For You To...\nபுலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 33 - மீன இலக்கின ஜா...\nபுலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 32 - கும்ப இலக்கின ...\nபுலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 31 - மகர இலக்கின ஜா...\nபுலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 30 - தனுசு இலக்கின ...\nபுலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 29 - விருச்சிக இலக்...\nபுலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 28 - துலாம் இலக்கின...\nபுலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 27 - கன்னி இலக்கின ...\nபுலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 26 - சிம்ம இலக்கின ...\nபுலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 25 - கடக இலக்கின ஜா...\nபுலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 24 - ரிஷபம், மிதுன ...\nபுலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 23 - மேஷ இலக்கின ஜா...\nபுலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 22\nபுலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 21 - பன்னிரண்டாம் ப...\nபுலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 20 - பதினோராம் பாவம...\nபுலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 19 - பத்தாம் பாவம்\nபுலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 18 - ஒன்பதாம் பாவம்...\nபுலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 17 - எட்டாம் பாவம்\nபுலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 16 - ஏழாம் பாவம்\nகிரஹங்கள் பலன் தரும் காலங்கள்\nகிரஹங்கள் ராசியில் சஞ்சரிக்கும் கால அளவுகள்\nகிரஹங்கள் அடுத்த ராசிகளின் பார்வை\nகுறிப்பிட்ட இடங்களில் கிரகங்கள் நிற்கப் பலன்கள்\nஜோதிடத்தில் சித்தர்களின் முக்கிய பங்கு\nபுலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 15 - ஆறாம் பாவம்\nபுலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 14 - நான்காம், ஐந்த...\nபுலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 13 - மூன்றாம் பாவம்...\nபுலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 12 - இரண்டாம் பாவம்...\nபுலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 11 - முதற் பாவம்\nபுலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 10 - ராகு, கேதுவின்...\nபுலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 9 - சனியின் ஆட்சி, ...\nபுலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 8 - சுக்கிரனின் ஆட்...\nபுலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 7 - வியாழனின் ஆட்சி...\nபுலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 6 - புதனின் ஆட்சி, ...\nபுலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 5 - செவ்வாயின் ஆட்ச...\nபுலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 4 - சந்திரனின் ஆட்ச...\nபுலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 3 - சூரியனின் ஆட்சி...\nபுலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 2 - சக்தி வழிபாடு\nபுலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 1 - கடவுள் வாழ்த்து...\nஜோதிடக் கட்டுரைகள் - சர, ஸ்திர, உபய ராசிகள் லக்னமா...\nஜோதிடக் கட்டுரைகள் - குறிப்பிட்ட இடங்களில் கிரகங்க...\nஜோதிடக் கட்டுரைகள் - கிரகங்களின் சிறப்பான பலன்கள்\nஜோதிடக் கட்டுரைகள் - கிரகங்களுடன் இராகு, கேது சேர ...\nஜோதிடக் கட்டுரைகள் - சந்திராஷ்டம நாட்களை அறியும் ம...\nஜோதிடக் கட்டுரைகள் - கிரகங்கள் சேர்க்கை பலன்கள்\nஜோதிடக் கட்டுரைகள் - உங்களுக்கு வரப்போகும் மனைவியி...\nஜோதிடக் கட்டுரைகள் - உங்களுக்கு வரப்போகும் மனைவியி...\nஜோதிடக் கட்டுரைகள் - உங்களுக்கு வரப்போகும் மனைவியி...\nஜோதிடக் கட்டுரைகள் - கர்ப்ப காலமும் அதன் அதிபதிகளு...\nஜோதிடக் கட்டுரைகள் - 27 நட்சத்திரக்காரர்களிற்கும் ...\nஜோதிடக் கட்டுரைகள் - தமிழ் வருடங்கள் 60\nஇளைய சகோதர சகோதரிகளால் யோகம் ஜோதிடக்குறிப்பு\nஅய்யா வைகுண்டர் நிகழ்த்திய அற்புதம்\nஅமெரிக்காவில் கர்ஜித்த வங்கச் சிங்கம்\nநவ கிரகங்கள் - காரகத்துவம்\nசொந்த வீடு வாங்கும் யோகம் :\nசெல்வந்தர் ஆகும் யோகம் யாருக்கு\nஅரசியலில் ஜொலிக்க வைக்கும் யோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://rajinifans.com/history/part72.php", "date_download": "2018-04-26T13:10:52Z", "digest": "sha1:2RXHWMPCSEVOWRVCCQATK76XF6U3LBKP", "length": 15966, "nlines": 220, "source_domain": "rajinifans.com", "title": "Part 72 - Rajini's History (Tamil) - Rajinifans.com", "raw_content": "\nரஜினியுடன் விஜயசாந்தி இணைந்து நடித்த `மன்னன்'\n200 நாட்கள் ஓடிய படம்\nசிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரித்த `மன்னன்' படத்தில் ரஜினியும், லேடி ஜேம்ஸ்பாண்ட் என்று புகழ் பெற்ற விஜயசாந்தியும் இணைந்து நடித்தனர். படம் 200 நாட்கள் ஓடியது.\nதிமிர் பிடித்த பணக்கார மனைவியை, திருத்தி வழிக்குக் கொண்டு வருவதுதான் கதை.\nதொழிற்சாலை அதிபர் விசு, தனது நிர்வாகத்தை திறம்பட நிர்வகித்து, தொழிலாளர்களின் அன்புக்குரியவராக இருக்கிறார். இந்த அன்புப் பிணைப்பு, தொழில் அதிபரின் மகள் விஜயசாந்தியினால் உடைபடுகிறது. தொழிலாளர்கள் என்றாலே `தீண்டத்தகாதவர்கள்' என்று நினைக்கிறார் விஜயசாந்தி. நிர்வாகப் பொறுப்பை அவர் ஏற்ற பிறகு, தொழிலாளர்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. மனதுக்குள் குமுறலோடு, தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.\nஇந்த தொழிற்சாலையில் தொழிலாளராக வேலையில் சேருகிறார், ரஜினி. வேலையில் சேர்ந்த சில நாட்களுக்குள் சக தொழிலாளர்களின் அன்பைப் பெற்று விடுகிறார்.\nரஜினி ஏழை என்றாலும் கோழை இல்லை. அநீதிக்கு பொங்குவார். பாசத்திலும் மன்னன். பக்கவாதத்தால் கை, கால்கள் விழுந்து போன தன் தாயாரை அன்பாக கவனித்துக் கொள்கிறார்.\nஒருநாள், தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் காயம் அடையும் ஒரு தொழிலாளியை ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்ல கார் கிடைக்கவில்லை. முதலாளியின் கார் மட்டுமே இருந்த நிலையில், காயம் அடைந்தவரை காரின் பின்சீட்டில் படுக்க வைத்து ஆஸ்பத்திரிக்கு செல்கிறார், ரஜினி.\nஇந்த விஷயம் `முதலாளி' விஜயசாந்திக்கு தெரியவர, \"தொழிலாளியின் ரத்தம் தனது புத்தம் புதிய காரை வீணாக்கிவிட்டதே'' என்று ஆத்திரம் கொண்டு, தனது காரை பெட்ரோல் ஊற்றி எரித்துவிடுகிறார். முதலாளியம்மாவின் இந்த ஆணவ போக்கை ரஜினி தட்டிக்கேட்கிறார்.\nபதிலுக்கு ரஜினி மீது ஆத்திரமான விஜயசாந்தி, தனது அதிகாரத்தை பயன்படுத்தி சில நெருக்கடிகளை கொடுக்கிறார். ஆனால் அவை எதற்கும் ரஜினி அசருகிற ஆளில்லை என்பது புரிந்து போகிறது. \"முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும்'' என்ற முடிவுக்கு வரும் விஜயசாந்தி, ரஜினியை திருமணம் செய்து கொண்டு பழிவாங்க எண்ணுகிறார். இதற்காக ரஜினியின் தாயார் பண்டரிபாயை சந்தித்து, அவரின் அன்பை பெறுகிறார்.\nவிஜயசாந்தி தன் தாயாரிடம் காட்டிய அன்புக்குப் பின்னணியில் தன்னை மாட்ட வைக்கும் சதிவலை பின்னப்பட்டு இருப்பதை ரஜினி உணர்கிறார். விஜயசாந்தி தன்னை மணக்க விரும்புவதாக தாயார் மூலம் அறிந்ததும் அதிர்ந்து போகிறார். ஆனால் தாயாரின் விருப்பமும் அதுவே என்பதை தெரிந்து கொண்டதும் திருமணத்துக்கு தலையசைக்கிறார்.\nதிருமணம் முடிகிறது. முதல் இரவிலேயே `அடக்குவது யார் அடங்குவது யார்' என்ற போட்டி ஆரம்பமாகி விடுகிறது. \"உன் அதிகாரம் என்னை எதுவும் செய்துவிட முடியாது. முடிந்தால் எனக்கெதிரான உன் அஸ்திரங்களை ஏவிப்பார்'' என்று சவால் விடுகிறார் ரஜினி.\n`முதலாளியம்மா' விஜயசாந்தியை ரஜினி மணந்து கொண்டாலும், வழக்கம் போல தொழிலாளருக்கான சீருடை அணிந்து, வேலையை தொடருகிறார். இதனால் தொழிலாளர்களின் ஆதரவு அவருக்கு கூடுகிறது.\nஇதை உணர்ந்து கொண்ட விஜயசாந்தி, ரஜினியின் செல்வாக்கை தகர்க்கும் நோக்கத்தில் தொழிற்சாலையின் பழைய பொறுப்பாளர்களை நீக்கிவிட்டு தனக்கு விசுவாசமான புதியவர்களை நியமிக்கிறார்.\nஇதனால் தொழிற்சாலையில் போராட்டம் வெடிக்கிறது. காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடங்குகிறது. இந்த வேலை நிறுத்தத்தை பொறுப்பேற்று நடத்துபவர் ரஜினி என்பதை அறியும் விஜயசாந்தி, ஆத்திரம் மேலிட தொழிற்சாலையை மூடுகிறார். தனது தந்தையின் புத்திமதியையும் ஏற்க மறுக்கிறார்.\nநீண்டநாள் ஸ்டிரைக்கில் இருக்கும் இந்த தொழிற்சாலையை அரசாங்கம் தனது பொறுப்பில் எடுக்க முடிவு செய்கிறது. இது தெரிந்த விசு, தொழிலாளர் பிரச்சினையை சரிசெய்து தொழிற்சாலையைத் திறக்க முடிவு செய்கிறார்.\nஇந்த முடிவு தொழிலாளர்களுக்கு வெற்றியாக அமைநது விடவே, எரிமலையாகிறார், விஜயசாந்தி. தனது கணவரின் வெற்றியை தனக்கு நேர்ந்த அவமானமாக கருதியவர், தனது பங்களாவில் இருக்கும் அத்தனை பொருட்களையும் அடித்து நொறுக்குகிறார். இப்போது தனது மனைவியை சந்திக்கும் ரஜினி, புத்திமதி சொல்கிறார். `வீண் பிடிவாதம் வாழ்க்கையின் சந்தோஷ ஆணிவேரை தகர்த்து விடும்' என்பதை புரிய வைக்கிறார்.\nவிஜயசாந்தியின் அறிவுக்கண் திறக்க, கணவரின் `உயர்ந்த உள்ளம்' பிடிபடுகிறது. தன்னை மாற்றிக்கொண்டு மன்னனுக்கேற்ற மகாராணியாகிறார்.\nகன்னடத்தில் வெற்றி கண்ட \"அனுராக அரளிது'' என்ற படத்தின் `ரீமேக்'தான் \"மன்னன்.'' வசனம் எழுதி இயக்கியவர் பி.வாசு.\n1992 பொங்கலுக்கு வெளிவந்த இப்படம் 200 நாட்கள் ஓடி வெற்றி கண்டது.\nஇந்தப்படத்தில், ரஜினியை ஒரு தலையாக காதலிக்கும் பாத்திரத்தில் குஷ்பு நடித்தார்.\nவாலி, கங்கை அமரன் எழுதிய பாடல்களுக்கு இசை: இளையராஜா.\n\"அம்மா என்றழைக்காத உயிரில்லையே'' என்ற பாடலை ரஜனிக்காக உருக்கமாகப் பாடியிருந்தார் கே.ஜே.ஜேசுதாஸ்.\nரஜினி - விஜயசாந்தியின் முதலிரவுப் பாடலாக இடம் பெற்ற \"அடிக்குது குளிரு'' பாடலில் வசனப் பகுதியை மட்டும் ரஜினி பேசியிருந்தார்.\nமற்றும் `கும்தலக்கடி கும்தலக்கடி பாட்டு', `சண்டிராணியே நீ எனக்கு கப்பம் கட்டு', `ராஜாதி ராஜா உன் மந்திரங்கள்' போன்ற பாடல்களிலும் இளையராஜாவின் கொடி பறந்தது.\nபடத்தில் ஒரே ஒரு காட்சியில் வந்து போவார், பிரபு. படத்தின் தயாரிப்பாளர் இவரே.\nபடம் முழுக்க கலகலப்பாக வந்த ரஜினி, கவுண்டமணியுடன் சேர்ந்து காமெடியிலும் தூள் கிளப்பினார்.\nஇந்தப்படம் பிறகு \"கரானமொகுடு'' என்ற பெயரில் தெலுங்கிலும், \"வாட்லா'' என்ற பெயரில் இந்தியிலும் தயாரிக்கப்பட்டது.\n(ரஜினியிடம் சிவகுமார் கேள்வி - நாளை)\n\"பணம், புகழ், இமேஜ் இவைகளுக்கெல்லாம் நான் அப்பாற்பட்டு நிற்கிறேன். ஆசாபாசம் அதிகம் உள்ள இந்த உலகத்தில் உழன்று கொண்டிருப்பதை விடுத்து, அமைதியாக என் கடமைகளைச் செய்ய விரும்புகிறேன். பணத்தால் என்னை யாரும், எப்போதுமே வாங்க முடியாது. நான் விரும்பினால்தான் எதையும் செய்வேன். விருப்பம் இல்லாவிட்டால், யார் சொன்னாலும் கேட்கமாட்டேன்.\nஅமைதியான சூழ்நிலையில், மனம் ஆழமாக பக்தி மார்க்கத்தில் ஆழ்ந்திருந்தால், அடையப்போகும் இன்பத்திற்கு ஈடு இணையே இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamalar.com/News_Detail.asp?Id=599272", "date_download": "2018-04-26T13:25:09Z", "digest": "sha1:URDUFSG4XPKYFN2QKVSWMDMZ65KC7SFB", "length": 19676, "nlines": 229, "source_domain": "www.dinamalar.com", "title": "cong MP fumble inloksabha | காஸ் சிலிண்டர் கட்டுப்பாடு : காங்கிரஸ் எம்.பி., பேச்சால் லோக்சபாவில் பரபரப்பு! | Dinamalar", "raw_content": "\nகாஸ் சிலிண்டர் கட்டுப்பாடு : காங்கிரஸ் எம்.பி., பேச்சால் லோக்சபாவில் பரபரப்பு\nபணமதிப்பிழப்பிற்கு பின் கள்ள நோட்டுக்கள் புழக்கம் ... 56\nபலாத்காரம், கிறிஸ்தவ மிஷனரி: அமைச்சர்கள் சர்ச்சை ... 213\n காஷ்மீர் போலீசார் ... 55\n'எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட் 66\n'இந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்' 144\nபுதுடில்லி: \"மானிய விலையில் அளிக்கப்படும், காஸ் சிலிண்டர்கள் எண்ணிக்கையை, 12 ஆக உயர்த்த வேண்டும்' என, லோக்சபாவில் காங்கிரஸ் எம்.பி., குரல் எழுப்பினார். அவரின் கருத்துக்கு, எதிர்க்கட்சி, ஆளுங்கட்சி என்ற பேதமின்றி, அனைத்து உறுப்பினர்களும் மேஜையை தட்டி ஆதரவு தெரிவித்தனர்.\n\"வீடுகளுக்கு ஆண்டுக்கு ஆறு காஸ் சிலிண்டர்கள் மட்டுமே, மானிய விலையில் வழங்கப்படும்' என, செப்டம்பர் மாதம், மத்திய அரசு அறிவித்தது. இதற்கு அனைத்து தரப்பிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. கடந்த மாதம், சூரஜ்குண்டில் நடந்த காங்கிரஸ் உயர்மட்ட ஆலோசனை கூட்டத்திலும், பெரும்பாலான தலைவர்கள், கட்டுப்பாட்டை தளர்த்த வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர்.சமீபத்தில், பார்லிமென்டில் இது குறித்து கேள்வி எழுந்த போது, நிதி அமைச்சர் சிதம்பரம், \"பெட்ரோலிய அமைச்சகம் தான் முடிவு செய்ய வேண்டும்' என்று கூறி நழுவினார்.இந்நிலையில், நேற்று பார்லிமென்டில், கேள்வி நேரம் முடிந்ததும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜகதாம்பிகா பால் எழுந்து பேசினார்; அப்போது அவர் கூறியதாவது:மானிய விலை காஸ் விநியோகத்தில் கட்டுப்பாடு கொண்டு வந்தால், அது கள்ளச்சந்தை விற்பனைக்கு வழி வகுக்கும். ஆண்டுக்கு ஆறு சிலிண்டர்கள் என்ற எண்ணிக்கையை, 12 ஆக உயர்த்த வேண்டும். தற்போது மானியம் அல்லாது சிலிண்டர், 950 ரூபாய்க்கு மேல் விற்கப்படுகிறது. ஆறு மானிய சிலிண்டர்கள் முடிந்ததும், ஒரு சாதாரண குடிமகனால், இவ்வளவு விலை கொடுத்து, மான்யம் இல்லாத சிலிண்டரை வாங்க முடியாது. அதனால், மானிய சிலிண்டரையே கள்ளச் சந்தையில் சற்று கூடுதல் விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்படும்.மலைப்பிரதேச மாநிலங்களான ஜம்மு காஷ்மீர், இமாச்சல பிரதேசம், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில், குளிர்காலங்களில் காஸ் சிலிண்டர் தேவை அதிகமாக இருக்கும். எனவே, இது பற்றி மறு ஆய்வு செய்ய வேண்டும். ஆறு சிலிண்டர் கட்டுபாடு, நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு வலியை ஏற்படுத்துவதாக உள்ளது. (பா.ஜ., உறுப்பினர்கள் குறுக்கிட்டு தேசத்தின் வலி காங்கிரசுக்கு தெரியாது என்று குரல் எழுப்பினர்)மேலும் ஒரு முகவரியில், ஒரு சமையல் காஸ் இணைப்பு தான் வழங்க முடியும் என்று காஸ் கம்பெனிகள் நெருக்கடி தருகின்றன. ஒரே முகவரியில், ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் தனித்தனியாக குடும்பம் நடத்துகின்றனர். மேலும், ஒரே முகவரியில், வாடகைக்கு குடியிருப்போரும் உள்ளனர்.எனவே, இந்த கெடுபிடியை தளர்த்த வேண்டும்.இவ்வாறு ஜகதாம்பிகா பால் பேசினார்.அவர் பேசும் போது, பா.ஜ., உறுப்பினர்கள், கோஷம் எழுப்பி மத்திய அரசின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தனர். ஆளுங்கட்சி தரப்பில் இருந்தும், பலர் ஆதரவு தெரிவித்தனர்.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nஎச்4 விசா விவகாரம்: பிரதமர் மீது ராகுல் தாக்கு ஏப்ரல் 26,2018 32\nஐகோர்ட் உத்தரவு: அமைச்சர்கள் கருத்து ஏப்ரல் 26,2018 2\nகுட்கா ஊழல்: ஐகோர்ட் உத்தரவுக்கு ஸ்டாலின் வரவேற்பு ஏப்ரல் 26,2018 5\nகர்நாடகாவை காங்., இழக்கும்: பிரதமர் மோடி ஏப்ரல் 26,2018 117\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamalar.com/News_Detail.asp?Id=615101", "date_download": "2018-04-26T13:26:44Z", "digest": "sha1:PBXDJVRA3KYW4XH3YHV4M7CXXNFR3QD2", "length": 24644, "nlines": 242, "source_domain": "www.dinamalar.com", "title": "Kidney failure affects one village | கிட்னி பாதிப்பால் தொடர் உயிரிழப்பு ; வீட்டிலே முடங்கும் அவலம் : அருப்புக்கோட்டை அருகே சோகத்தில் மூழ்கிய கிராமம்| Dinamalar", "raw_content": "\nகிட்னி பாதிப்பால் தொடர் உயிரிழப்பு ; வீட்டிலே முடங்கும் அவலம் : அருப்புக்கோட்டை அருகே சோகத்தில் மூழ்கிய கிராமம்\nபணமதிப்பிழப்பிற்கு பின் கள்ள நோட்டுக்கள் புழக்கம் ... 56\nபலாத்காரம், கிறிஸ்தவ மிஷனரி: அமைச்சர்கள் சர்ச்சை ... 213\n காஷ்மீர் போலீசார் ... 55\n'எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட் 66\n'இந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்' 144\nஅருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே தும்முசின்னம்பட்டியில், கிட்னி பாதிப்பால் தொடர் உயரிழப்பு ஏற்படுகிறது. இதில் பாதிக்கபட்டோர்,வீட்டிலே முடங்கி கிடக்கின்றனர். ஆனால் இதுவரை,சுகாதார துறையால் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என,இங்குள்ள மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.\nதிருச்சுழி ஒன்றியத்திற்கு உட்பட்டது தும்முசின்னம்பட்டி. இங்கு விவசாயமே முக்கியத் தொழிலில். கமுதி விலக்கு மற்றும் சாயல் குடி ரோடு பகுதியிலிருந்து வரும் குடிநீர், மேல்நிலை தொட்டிகளில் தேக்கி, வினியோகம் செய்யப்படுகிறது. இங்குள்ளோர் சிறுநீரக கோளாறு காரணமாக பாதிப்புக்குள்ளாகின்றனர்.\nகடந்த ஆறு ஆண்டுகளில் 30 க்கு மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர். பாதித்த பலர்,வீட்டிலே முடங்கி கிடக்கின்றனர். கடந்த மூன்று ஆண்டுகளில் ராமர், 35, தங்கம், 45, மாரியப்பன், 42, பாலு, 57, பாண்டியன், ஊமைத்துரை, 47, என பலர், சிறுநீரகம் செயல் இழந்து இறந்துள்ளனர். தற்போதைய திருச்சுழி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் அமலபாஸ்கர், 35, சகாதேவன், 50, சந்திரன்,45, இருளப்பன், 62, சுப்பையன், 45, முத்துலிங்கம்,55, உட்பட 15 க்கு மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு, சிகிச்சையில் உள்ளனர். முதலில், கைகால் வீங்கி,உடலில் வலி, மூச்சு திணறல் ஏற்படுகிறது. பாதிப்பு அடைந்தவர்கள் அருப்புக்கோட்டை மற்றும் மதுரை தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர். பணம் வசதி உடையர்கள் \"டயாலிசிஸ்' செய்து கொள்கின்றனர். முடியாதவர்கள் வீட்டிற்குள் முடங்கி, ஒரு சில நாட்களிலே இறந்து விடுகின்றனர்.\nபாதிப்புக்குள்ளான விவசாயி சகாதேவன்,\"\"சிறுநீரகம் பாதிப்பு ஏற்பட்டு, இரு ஆண்டாகிறது. மதுரை தனியார் மருத்துவமனையில், வாரத்திற்கு இரு முறை, இரண்டாயிரம் ரூபாய் செலவு செய்து, \"டயாலிசிஸ்' சிகிச்சை செய்து கொள்கிறேன். ஓரளவிற்கு தான் செலவழிக்க முடியும். அதன் பின் என்ன செய்வது என தெரியவில்லை,'' என்றார்.\nமுத்துலிங்கம்,\"\" கால்கள் வீக்கமடைந்து, மூச்சு திணறல் ஏற்பட்டது. அதிக உப்புசத்து உள்ளதாக டாக்டர் கூறினார். சிறுநீரக பாதிப்பு இருக்கலாம்,என கூறி, \"டெஸ்ட்' எடுத்து பார்க்கலாம் என்கிறார். என்னால் வேலைக்கு கூட போக முடியவில்லை. செலவு செய்தாலும் பிழைப்பேனா என்பது சந்தேகமே,''என்றார்.\nஇருளப்பன்,\"\" அரசு மருத்துவமனையில் சென்று சிகிச்சை செய்தேன். ஒன்றும் பலன் இல்லை. வீட்டோடு இருந்து விட்டேன். அதிக செலவு செய்து, என்னால் சிகிச்சை பெற இயலாது,''என்றார்.\nசந்திரன்,\"\" வேலையை விட்டு விட்டேன். உப்பு சத்து கூடி,கிட்னி பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்கின்றனர். ஆனால், சுகாதார துறையால் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை,''என்றார்.\nஊராட்சி தலைவர் செல்வராஜ்,\"\" 6 ஆண்டில் மட்டும், கிட்னி பாதிப்பால் இறந்தவர்கள் எண்ணிக்கை அதிகமாகிறது. குடிநீரில் தான் உப்பு தன்மை அதிகம் என்கின்றனர்.\nஇரு மாதங்களுக்கு முன்பு , விருதுநகரில் உள்ள குடிநீர் வடிகால் வாரிய குடிநீர் டெஸ்ட் லேப்பிற்கு , குடிநீரை அனுப்பி வைத்தேன். குடிக்க உகந்தது என, \"ரிசல்ட்' வந்துள்ளது. பாதிப்பிற்கு என்ன காரணம் என தெரியவில்லை,''என்றார்.\nஒன்றிய முன்னாள்தலைவர் பொன்னுதம்பி,\"\" ஊரில் மருத்துவ குழுவினர் முகாமிட்டு, உடல் பரிசோதனை செய்து, எதனால் பாதிப்பு என்பதை கண்டறிய வேண்டும்,''என்றார்.\nதமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய குடிநீர் ஆய்வாளர் ராஜ்குமார்,\"\" ஒரு லிட்டர் குடிநீரில் உப்புசத்து சுவை 500 மி.லி.,கிராம் முதல் 2000 மி.லி., கிராம் வரை இருக்கலாம். கடின தன்மை 200 மி,லி., கிராம் முதல் 600 கிராம் வரை இருக்கலாம். இதன்படிதான் தும்முசின்னம்பட்டி குடிநீரை கடந்த 8 மாதம் முன், டெஸ்ட் செய்து பார்த்ததில் , குடிக்க உகந்தது என, தெரிவித்துள்ளோம்,''என்றார்.\nதிருச்சுழி ஒன்றியகுழு தலைவர் இந்திரா,\"\" குடிநீர் பிரச்னையால் சிறுநீரக பாதிப்பு இல்லை என்பதை, குடிநீரை டெஸ்ட் செய்து பார்த்ததில் தெரிந்தது. மேலும் குடிநீரை, மருத்துவ ரீதியாக டெஸ்ட் செய்து பார்க்க உள்ளோம். அதில் குறைபாடு தெரிந்தால், மாற்று ஏற்பாடு செய்யப்படும் ,''என்றார்.\nவிருதுநகர் சுகாதார துணை இயக்குனர் வரதராஜன்,\"\" மாவட்டத்தில் தண்ணீர் கடினத்தன்மையாக உள்ளது. குடி நீரினால் இது போன்ற நோய்கள் வர வாய்ப்புள்ளது. ஒன்றிய அளவில் பொது சுகாதார முகாம் நடத்தப்படவுள்ளது. இதில், கிராம பாதிப்பு குறித்து கவனம் செலுத்தப்படும். இந்த கிராமத்தில் தண்ணீர் மாதிரி எடுத்து, ஆய்வுக்கு அனுப்பப்படும்,'' என்றார்.\nதங்கம் தென்னரசு எம்.எல்.ஏ.,: தும்சின்னம்பட்டி கிராமத்தில் சிறப்பு மருத்துவ முகாம் அமைத்து,கிராம மக்கள் ஒவ்வொருவரையும் பரிசோதனை செய்து, பாதிப்பு எதனால் வருகிறது என ஆராய வேண்டும். மக்கள் உட்கொள்ளும் உணவு, காற்று மற்றும் அவர்கள் நோய் பாதிப்பிற்கு எடுத்து கொள்ளும் மருந்துகள் போன்றவற்றை ஆராய வேண்டும். அரசும் இக்கிராமத்திற்கு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்,என்றார்.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nநாமக்கல்லில் வெடிவிபத்து: ஒருவர் பலி ஏப்ரல் 26,2018\nசென்னை சென்ட்ரலில் கஞ்சா பறிமுதல் ஏப்ரல் 26,2018 1\nஉ.பி.,யில் ரயில்-பஸ் மோதல்; 13 குழந்தைகள் பலி ஏப்ரல் 26,2018 17\nதடம் புரண்ட 'பல்லவன்': தப்பினர் பயணிகள் ஏப்ரல் 26,2018\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://vadakaraivelan.wordpress.com/category/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/", "date_download": "2018-04-26T13:05:24Z", "digest": "sha1:Q62GDKZVSD2CM3L7WRSFDUDL3I7RDCOL", "length": 18004, "nlines": 148, "source_domain": "vadakaraivelan.wordpress.com", "title": "தமிழ் | வடகரை வேலன்", "raw_content": "\nமுதல் சமூக நீதிப் போராளி\nதன் சீடனின் திறமையின் மீதான அதீத நம்பிக்கையில் துரோணர் சொன்னார், “இச்சபையில் இவனை வெல்ல எவரும் உண்டோ” திறமையில் சற்றும் குறையாத கர்ணன் சொன்னான் “உள்ளேன் அய்யா”\nபரஸ்பர நிதி நிறுவனங்கள்கூட யாரும் படித்துவிடமுடியாத 5 அளவு எழுத்தில் “சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை” எனப் பொறுப்புத் துறப்புக் குடுக்கின்றன. துரோணர் அப்படியெல்லாம் சொல்லவில்லை. “வெல்ல, அரசவம்சத்தினன் உளனோ” எனக் கேட்டிருந்தால் நியாயம்.\n” கர்ணன் நிலைகுலைகிறான். உடுக்கை உழந்தவன் இடுக்கையைக் களைய, துரியோதனன் சபையேறிச் சொன்னான், ”ஒன்றே சாதி”\nகற்றவர்க்கும் நலன் நிறைந்த கன்னியர்க்கும் வண்மைகை\nஉற்றவர்க்கும் வீரரென்று உயர்ந்தவர்க்கும் வாழ்வுடைக்\nநற்றவர்க்கும் ஒன்றுசாதி நன்மைதீமைய இல்லையால்.\nநலன் நிறைந்த = நலம் நிறைந்த\nவண்மை கை உற்றவர்க்கும் = கொடை வழங்கும் கைகளை கொண்டவர்களுக்கும்\nவாழ்வுடைக் கொற்றவர்க்கும் = உயர்ந்த வாழ்வை உடைய அரசர்களுக்கும்\nகோதின்ஞானசரிதராம் = குற்றமற்ற ஞானம் அடைந்து அதன் படி வாழ்பவர்களுக்கும்\nநற்றவர்க்கும் = நல்ல தவம் செய்தவர்களுக்கும்\nநன்மைதீமை இல்லையால் = அதில் உயர்வு தாழ்வு இல்லை\nஉடுக்கை இழந்தான் கைபோல என்ற குறளை, எங்கள் தமிழய்யா ராமச்சந்திரன் நடத்திக் கேட்க வேண்டும். “டேய் உடுக்கை இழந்தவன் என்றால் அடிக்கிற உடுக்கு இல்லடா, போட்டிருக்கிற துணி. அதுகூட அவுந்துபோய் அம்மனமாகி நிக்கிம்போது வந்து தோள்ல இருக்க துண்ட எடுத்துக் கட்டி விடுறது இல்லைடா. அது அவிழும் முன்பே உதவுறது. உதாரணமா நீ பள்ளிக்கூடப் பைய ஒரு கைலயும் சாப்பாட்டுப் பைய இன்னொரு கைலயும் எடுத்துட்டுப் போறே திடீர்னு உன் கால்சட்டை கழறுதுன்னு வச்சுக்கோ என்ன செய்வே டபக்னு உன் முழங்கையால இடுக்கிக்கிட்டு ரெண்டு பையையும் கீழ வச்சிட்டு சரி பண்ணிக்குவ இல்ல, அது மாதிரித்தான். எப்படி முழங்கை அனிச்சையாக உடனே உதவுதோ அது போல உதவுவதுதான் நல்ல நட்பு.”\nநல்ல தமிழய்யா அமைவது, ஊழ்வினை.\nநீங்க என் மனைவி நான் உங்க கணவர்\nஎழுதும்போது வரும் தவறுகள் சில சமயம் சிரிப்பை வரவைத்தாலும், அர்த்தம் மாறும் பொழுது சொல்ல வந்தது அடிபட்டுப் போகிறது.\nகமா, முற்றுப் புள்ளி மற்றும் அரைப் புள்ளி முதலியன ஒரு வாக்கியத்தில் வர வேண்டிய இடத்தில் வராவிட்டாலும், வரக்கூடாத இடத்தில் வந்தாலும் அர்த்தம் அனர்த்தமாகிவிடுகிறது.\nநான் 10ஆவது படிக்கும்போது, என் தமிழாசிரியர் ராமச்சந்திரன் இதில் மிகக் கடுமையாக இருப்பார். அதன் அத்தியாவசியம் குறித்து அவர் சில உதாரணங்கள் தந்தது இன்னும் மனசிலிருக்கிறது.\nஇரண்டு நண்பர்கள் எதிரெதிர் வீடு, டூர் போலாம்னு முடிவு செய்றாங்க.\nரெண்டு பேருக்குமே குழந்தைகள் உண்டு. பசங்களக் கூட்டீட்டுப் போறதா இல்லை பெற்றோரிடம் விட்டுட்டுப் போறதா என்பதில் குழப்பம்.\nகணவரிடமிருந்து சரியான பதில் கிடைக்கதால், கடுப்பான மனைவி, எதிர் வீட்டுக் காரரை அணுகி கேட்டாங்க “ ஏங்க முடிவா யாராரு டூர் போறோம்\nஅதுக்கு அவரு சொன்னாரு,”நீங்க என் மனைவி நான் உங்க கணவன்”\nகமா வைக்கக்கூடாத இடத்தில் வைத்ததால் குழப்பம்.\nதினசரியில் தலைப்புச் செய்தி :\nவிவசாயிகளுக்குக் குமரி, மாவட்ட ஆட்சியர் உத்திரவு.\nழ, ல, ள குழப்பம் தவிர்க்க வேண்டும்.\nபழம் சாப்பிட்டாப் பலம் வரும்.\nஅதிகப் பளு தூக்கினா முதுகெலும்பு பழுதாகிடும்.\nபள்ளிக்கூடத்தில் பல்லி அதிகமா இருக்கும் அதுக்காக பல்லிக்கூடம்னு எழுதக் கூடாது.\nபாலத்தின் மீது போட்ட தார்ச்சாலை வெயிலுக்கு பாளம் பாளமாக வெடிக்கும்.\nசம்பளம் வாங்கினா ’சம்’ பலம் வரும் அதுக்காக சம்பலம்னு எழுத வேண்டாம்.\nகுதிரைக்குக் குளம்பு இருக்குங்கிறதுக்காக அதக் குழம்பு வைக்கச் சொல்லக்கூடாது.\nகாள் காள்னு கத்துனாலும் கழுதைக்கு இருப்பது நாலு கால்.\nஅறையில் பாதி இடம்தான் உங்களுக்கு என்றாலும் நீங்கள் அரைவாசி ஆகமாட்டீர்கள்.\nவெள்ளம் வடிந்தபின் கரையெல்லாம் கறை படிந்திருக்கும் அது வெள்ளக் கறை; வெல்லக் கறை அல்ல.\nகப்பல் துறைமுகம் வந்ததும்தான் துரை முகத்தில் களை.\nகாலையில் எழுந்து பல் விளக்க வேண்டும், விலக்க கூடாத பழக்கமிது.\nஆங்கில வார்த்தைகளைத் தமிழில் எழுதும் போது\nபக்கத்து வீட்டு ‘ஆன்ட்டி’ – ஆண்டி யாகும் போது பாவமா இருக்கு.\nநீங்களும் பின்னுட்டத்தில் இரண்டு வாக்கியங்கள் எழுதுங்கள்.\nPosted in அனுபவம், தமிழ், நகைச்சுவை, நையாண்டி on August 28, 2008 by வடகரை வேலன். 119 Comments\nகொஞ்ச நாளைக்கு முன்பு திருப்பூர் மாணவி சுகன்யா 5 பாடத்திலும் 100/100 வாங்கியது பற்றிப் பதிவிட்டிருந்தேன்.\nஅவருக்கு நான் ஒரு பாரட்டுக் கடிதமும் எழுதி அனுப்பியிருந்தேன்.\nஅதற்கு அவரிடமிருந்து ஒரு மின்னஞ்சல் வந்திருகிறது.\nஅவரைப் பாரட்ட நினைப்பவர்கள் அவரது மின்னஞ்சல் முகவரி வேண்டுமானால், vadakaraivelan@gmail.com என்ற முகவரிக்குத் தனிமடல் அனுப்புங்கள்.\nகொஞ்ச நாளைக்கு முன்பு திருப்பூர் மாணவி சுகன்யா 5 பாடத்திலும் 100/100 வாங்கியது பற்றிப் பதிவிட்டிருந்தேன்.\nஅவருக்கு நான் ஒரு பாரட்டுக் கடிதமும் எழுதி அனுப்பியிருந்தேன்.\nஅதற்கு அவரிடமிருந்து ஒரு மின்னஞ்சல் வந்திருகிறது.\nஅவரைப் பாரட்ட நினைப்பவர்கள் அவரது மின்னஞ்சல் முகவரி வேண்டுமானால், vadakaraivelan@gmail.com என்ற முகவரிக்குத் தனிமடல் அனுப்புங்கள்.\nசில சமயங்களில்விளம்பர வாசகங்களை, ஆங்கிலத்திலிருந்தோ அல்லது இந்தியிலிருந்தோ வார்த்தைக்கு வார்த்தை அப்படியே தமிழ் படுத்துகிறார்கள். அதோடு நம்மையும் படுத்துகிறார்கள்.\n1. இப்பொழுது வாழ்க்கை ஆகிவிட்டது ஜிங்கலாலா.\n2. இதை விட மலிவாகவும் சிறப்பாகவும் வேறு இடத்தில் கிடைத்தால், மாறுபாடன இரட்டிப்பு பணம் வாபஸ்.\nசில சமயங்களில்விளம்பர வாசகங்களை, ஆங்கிலத்திலிருந்தோ அல்லது இந்தியிலிருந்தோ வார்த்தைக்கு வார்த்தை அப்படியே தமிழ் படுத்துகிறார்கள். அதோடு நம்மையும் படுத்துகிறார்கள்.\n1. இப்பொழுது வாழ்க்கை ஆகிவிட்டது ஜிங்கலாலா.\n2. இதை விட மலிவாகவும் சிறப்பாகவும் வேறு இடத்தில் கிடைத்தால், மாறுபாடன இரட்டிப்பு பணம் வாபஸ்.\nமுதல் சமூக நீதிப் போராளி\nகிஸ்மத் – மலையாளத் திரைப்படம்\nலூசியா – கன்னடத் திரைப்படம்\nவடகரை வேலன் on உருவு கண்டு எள்ளாமை\ncgbalu on உருவு கண்டு எள்ளாமை\nGopal Kannan on யாம் துஞ்சலமே\nமுரளிகண்ணன் (@murali… on கோபிசெட்டிபாளையம்\n100/100 L R G Govt Arts Uncategorized அனுபவம் அனுபவம். நகைச்சுவை எழுத்தோவியம் கதம்பம் கதை கவிதை குசும்பு சமூகம் சாதனை சினிமா சிறுகதை சிறுகதைகள் ஜோக் தமிழ் தமிழ் வழிக் கல்வி தொடர் நகைச்சுவை நக்கல் நட்சத்திரப் பதிவு நாவல் நையாண்டி பதிவர் வட்டம் மொக்கை லொள்ளு வலை வாசிப்பு விமர்சனம்\nஒரு வேளை ஏதாவது ஒரு தோழர் நான் புர்ச்சின்னு சொன்னதுல காண்டாயிட்டாரோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://vadakaraivelan.wordpress.com/tag/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-04-26T13:06:28Z", "digest": "sha1:YZK5LZOXK6GEPPX72YZ73XHPLAG36HP4", "length": 11479, "nlines": 81, "source_domain": "vadakaraivelan.wordpress.com", "title": "இரா.முருகவேள் | வடகரை வேலன்", "raw_content": "\nமுகிலினி – பாய்ந்தோடும் கசப்பு\n70களின் இறுதியில் தென்னக நூற்பாலைகள், போனஸ் கேட்டு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டன. பழநியிலுள்ள விஜயகுமார் மில்ஸ் மட்டும் தொடர்ந்து இயங்கியது. “டேய், சைமால எவ்வளவு சதவீதம் முடிவாகுதோ அதைவிட 2% அதிகமா போனஸ் தர்றேண்டா, போய் வேலையைப் பாருங்க” என ஆலை முதலாளி உறுதியளித்ததால். சைமாவில் 35% என முடிவாகியதால்; 37% கொடுத்தார். தீபாவளிக்கு 25% என்றும் பொங்கலுக்கு 12% என்றும்.\nவெகுநாட்களுக்கு இதைப் பெருமையாகக் கூறிக்கொண்டிருந்தேன், 83ல் டிப்ளமோ படிக்க, கோவை பிஎஸ்ஜிக்கு வரும் வரை. ஒருமுறை வகுப்புத் தோழன் அய்யாசாமி சொன்னான், “இதெல்லாம் என்ன போனசு, எங்க விஸ்கோஸ்ல குடுப்பாங்க 55% . ஒரு சூட்கேஸ்ல பணத்தை அடுக்கி சூட்கேசோட கொடுத்திருவாங்க”. வெகு ஆண்டுகளுக்கு அந்தப் பிரமிப்பு விலகாமல் இருந்தது. அதன் பிறகு விஸ்கோசில் நடந்ததெல்லாம் ஒரு துன்பவியல் சரிதம். இரா.முருகவேளின் “முகிலினி” நாவல் அதை விரிவாக அலசுகிறது.\nநாவலின் மையச்சரடு பவாணி ஆறுதான். நதிக்கரையில் தோன்றிய விஸ்கோஸ் ஆலை நதியைச் சார்ந்தியங்கிய மக்கள், அவர்களின் விவசாயம், கால்நடை வளர்ப்பு, மீன்பிடித்தல், வாழ்வு முறை, உறவுகள் ஆகியவற்றில் ஏற்படுத்திய பாதிப்புகளை, மூன்று தலைமுறைக்காலம் நீண்டிருக்கும் நாவல் பேசுகிறது.\nபாக்கிஸ்தான் பிரிவினையில் ஏற்பட்ட பெரும்சேதங்களில் வெளியே தெரியாத ஒன்று, இந்தியாவில் இருந்த நூற்பாலைகளுக்குத் தேவையான பஞ்சு விளைவிக்கும் நிலப்பகுதியில் பெரும்பான்மை பாக்கிஸ்தான் பக்கம் போய்விட்டதுதான். பஞ்சுத் தட்டுப்பாட்டைப் போக்க என்ன வழி என யோசிக்கும், கோவையின் மிகப் பெரிய நூற்பாலையின் முதலாளி கஸ்தூரிசாமியும் அவரது மனைவி சௌதாமினியும் எடுக்கும் முடிவுதான் செயற்கை நூலிழையை உற்பத்தி செய்வது.\nசெயற்கை நுலிழையை பெட்ரோலியப் பொருட்கள் மூலமாகவோ அல்லது மரக்கூழ் மூலமாகவோ தயாரிக்கலாம். இவர்கள் இரண்டாம் முறையைத் தேர்வு செய்கிறார்கள். இத்தாலியிலுள்ள விஸ்கோஸா ஆலையுடன் பங்கு ஒப்பந்தம் செய்துகொண்டு, தேவையான எந்திரங்களையும், மூலப்பொருட்களையும் அவரகளிடமிருந்தே பெற்று, உற்பத்தியை ஆரம்பிக்கிறார்கள்.\nஆலை, சார்ந்தோர் வாழ்வில் ஏற்படுத்தும் நேரிடையான மற்றும் மறைமுகமான ஏற்றம் அலசப்படுகிறது; ஊழியர் ராஜு மூலம். அடிப்படையில் தமிழார்வமும் திராவிடக் கட்சியின் மீது அபிமனமும் கொண்ட அவர் பின்னாட்களில் அரசியல் செயல்பாடுகள் குறித்து விரக்தியுறுவது, நிதர்சனமாக் வெளியாகிறது. அதே நேரம் கோவையிலிருக்கும் மற்ற மில்கள் செயலிழந்து மூடப்படுவதும், பெரிய ஆலைகள் நிரந்தர ஊழியர்களை வீட்டுக்கனுப்பி ஒப்பந்த அடிப்படையில் பெண்பிள்ளைகளைக் கொண்டு இயங்குவதும், அதன் மூலம் வீழ்ச்சியுறும் வாழ்வை ஆரான் மூலமும் சொல்லியிருக்கிறார். கோவை நுற்பாலைகளில் “சுமங்கலி திட்டம்” என்றால் என்ன என்று விசாரித்தறியுங்கள் நாம் உடை அணியும் ஒவ்வொரு முறையும் கூசிப்போய்விடுவோம்.\nஇயற்கை விவசாயத்தின் மீது காதல் கொண்டிருக்கும் திருநாவுக்கரசின் செயல்பாடுகள் மூலமாக, ஆர்கானிக் பொருட்கள் என்ற பெயரில் நடக்கும் வியாபாரச் சீரழிவுகளையும், அது மக்கள் மனதில் ஏற்படுத்தி இருக்கும் மாயையும் தெளிவாக்குகிறார்.\nஇந்த நாவலை பல நாவல்களாக பி(வி)ரித்தெழுதியிருக்கலாம் முருகவேள், அத்தனை அடர்த்தி. உண்மையான மனிதர்கள் வேறு பெயர்களில் உலவுவதும், சற்றே முலாம் பூசிய உன்மைச் சம்பவங்களும், குறைந்த சதவீதம் புனைவு கலந்ததுமான நல்லதொரு நாவல்.\nகாங்கிரஸ், ஜனதா, கம்யூனிச, திராவிட அரசியலை விவரிக்க முருகவேள் எடுத்திருக்கும் முயற்சியும், அதன் பின்னுள்ள உழைப்பும் அபாரம். நாவலில் இழையோடும் கருப்பையும் அதனால் வந்த கசப்பையும் குறிக்கும் விதமாக, நாவலின் அட்டைப்படம் கருப்பு வண்ணத்தில் அமைந்திருப்பது சிறப்பு.\nமுதல் சமூக நீதிப் போராளி\nகிஸ்மத் – மலையாளத் திரைப்படம்\nலூசியா – கன்னடத் திரைப்படம்\nவடகரை வேலன் on உருவு கண்டு எள்ளாமை\ncgbalu on உருவு கண்டு எள்ளாமை\nGopal Kannan on யாம் துஞ்சலமே\nமுரளிகண்ணன் (@murali… on கோபிசெட்டிபாளையம்\n100/100 L R G Govt Arts Uncategorized அனுபவம் அனுபவம். நகைச்சுவை எழுத்தோவியம் கதம்பம் கதை கவிதை குசும்பு சமூகம் சாதனை சினிமா சிறுகதை சிறுகதைகள் ஜோக் தமிழ் தமிழ் வழிக் கல்வி தொடர் நகைச்சுவை நக்கல் நட்சத்திரப் பதிவு நாவல் நையாண்டி பதிவர் வட்டம் மொக்கை லொள்ளு வலை வாசிப்பு விமர்சனம்\nஒரு வேளை ஏதாவது ஒரு தோழர் நான் புர்ச்சின்னு சொன்னதுல காண்டாயிட்டாரோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilnaduweatherman.com/16-04-2018-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-735-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-04-26T13:14:39Z", "digest": "sha1:5JMWQCPTALTQLOPDVZCG7MUWL6ZDN3X7", "length": 6656, "nlines": 76, "source_domain": "www.tamilnaduweatherman.com", "title": "16-04-2018 நேரம் இரவு 7:35 மணி நான் இந்த பதிவுடன் இணைத்திருக... - Tamilnadu weatherman", "raw_content": "\n16-04-2018 நேரம் இரவு 7:35 மணி நான் இந்த பதிவுடன் இணைத்திருக…\n16-04-2018 நேரம் இரவு 7:35 மணி நான் இந்த பதிவுடன் இணைத்திருக்கும் ராடார் படங்கள் இன்று இரவு 7:10 மணி வாக்கில் பதிவானது அதன்படி தற்பொழுது திண்டுக்கல் , தேனி மற்றும் மதுரை மாவட்டங்களில் ஆங்காங்கே மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன அதன்படி தற்பொழுது தேனி மாவட்டம் பெரியகுளம் ,பொடிநாயக்கனூர் மற்றும் அகமலை காடுகள் பகுதிகளில் நல்ல இடியுடன் கூடிய மழை பதிவாகி வர வேண்டும் இன்னும் சற்று நேரத்தில் தேனி பகுதிகளிலும் மழை பதிவாகலாம் மேலும் தற்பொழுது திண்டுக்கல் மாவட்டத்தின் பல இடங்களிலும் மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன தற்பொழுது ஒட்டன்சத்திரம் அருகே உள்ள பகுதிகளில் ஆங்காங்கே மழை பதிவாகி வரலாம் இதே வானிலை தொடர்ந்தாள் அடுத்து வரக்கூடிய சில நிமிடங்களில் திருப்பூர் மற்றும் கோவை மாவட்டத்தின் தென் பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்புகள் உண்டு கேரள மாநிலம் ஆலப்புழா மற்றும் எர்ணாகுளம் பகுதிகளில் நீண்ட நேரமாக வலுவான மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன தற்பொழுதும் அங்கு ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கன மழை பதிவாகி வர வேண்டும்.\n16-04-2018 இன்று மாலை 5:30 மணிக்கு பதிவான இன்றைய அதிகபட்ச வெப்பநிலை அளவுகளின் படி கரூர் பரமத்தியில் அதிகபட்சமாக 103° (39.2° C ) பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது அதே போல திருத்தணியில் 102° (39° C ) பாரன்ஹீட் வெப்பமும் மேலும் திருச்சி , வேலூர் ,சேலம் ,தர்மபுரி ,மதுரை ,நாமக்கல் பகுதிகளில் கிட்டத்தட்ட 100° பாரன்ஹீட்க்கும் அதிகமான அளவு வெப்பம் பதிவானது இவை வானிலை ஆய்வு மையத்தால் வழங்கப்பட்டு உள்ள தகவல் இவைகள் அல்லாமல் காலையில் நான் பதிவிட்டு இருந்தது போல காஞ்சிபுரம் , ஈரோடு , பெரம்பலூர் , திருவண்ணாமலை உட்பட நான் மேற்குறிய மாவட்டம் அனைத்திலும் பல இடங்களில் இன்று 100° பாரன்ஹீட்க்கும் அதிகமான அளவு வெப்பம் பதிவானது.\nவானிலை தொடர்பான மேலும் பல தகவல்களுடன் மீண்டும் பதிவிடுகிறேன்.\nவிவசாயிகளுக்கு நல்லசெய்தி: இந்த 2018 ஆண்டு 97% பருவமழை இயல்…\n26-04-2018 நேரம் பிற்பகல் 2:00 மணி இன்றும் தமிழக மேற்கு மற்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://onlycinemasnews.blogspot.com/2014/01/blog-post_9.html", "date_download": "2018-04-26T13:41:31Z", "digest": "sha1:UMOUECTSOKUJBW7TE5BMPCRWMLXIHN3O", "length": 15408, "nlines": 111, "source_domain": "onlycinemasnews.blogspot.com", "title": "ஜெயிக்கப்போவது ஜில்லாவா? வீரமா? - கவுண்டவுன் ஸ்டார்ட்", "raw_content": "\nஎம்.கே.டி.தியாகராஜ பாகவதர், பி.யூ.சின்னப்பா ரசிகர்களின் மோதலில் தொடங்கியது கருப்பு வெள்ளை பொங்கல். எம்.ஜி.ஆர், சிவாஜியில் தொடர்ந்தது ஹாட் பொங்கல்.\nசினிமா கலர் பூசிக்கொண்ட பிறகு ரஜினி, கமல் என அந்த பொங்கல் கொஞ்சம் காரசாரமாகவே பொங்கியது. இப்போது விஜய், அஜீத் பொங்கல். அந்த கவுண்டவுன் நாளை முதல் ஸ்டார்ட். போட்டிக்கு முன்னால் சின்ன ட்ரைய்லர் ஓட்டிப்பார்க்கலாமா...\n* \"விஜய்\" மூன்றெழுத்து, \"அஜீத்\" மூன்றெழுத்து, \"ஜில்லா\" மூன்றெழுத்து, \"வீரம்\" மூன்றெழுத்து, இருவரும் எதிர் பார்க்கும் \"வெற்றி\" மூன்றெழுத்து. எப்பூடி.\n* விஜய், மோகன்லால் என்ற கேரளத்து களரி வீரனோடு களம் இறங்குகிறார். அஜீத் விதார்த், பாலா, முகிஷ், சுஹைல் என்ற சகோதரர்களின் துணையோடு களம் இறங்குகிறார்.\n* விஜய்க்கு கள்ளசிரிப்பழகி காஜல் அகர்வால் ஜோடி. அஜீத்துக்கு தகதக தக்காளி தமன்னா ஜோடி. இரண்டு பேருமே நடிப்பிலும், அழகிலும் \"சபாஷ் சரியான போட்டி\" என களத்தில் ஆடிக் கொண்டிருப்பவர்கள்.\n* விஜய்யை இயக்கி இருப்பவர் முருகா என்ற ஒரு சுமாரான படத்தை இயக்கிய நேசன். அஜீத்தை இயக்கியவர் தெலுங்கில் இரண்டு ஹிட் படங்களையும், தமிழில் சிறுத்தை என்ற ஹிட் படத்தையும் இயக்கிய சிவா.\n* இரண்டு பேரையுமே சண்டை போட வைத்திருப்பவர் ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா. \"இரண்டு பேருமே டூப் போடாமல் சண்டை போட்டிருக்கிறார்கள். விஜய்யும், மோகன்லாலும் போடும் சண்டையில் இருவரின் இமேஜையும் காப்பாற்றி இருக்கிறேன்\" என்றும், \"அஜீத் போடும் சண்டையில் அனல் பறக்கும், காலில் இருக்கும் பிரச்னையை பொருட்படுத்தாமல் புகுந்து விளையாடி இருக்கிறார்\" என்று பேட்டிகளை தட்டிவிட்டு சேம் சைட் கோல் போட்டிருக்கிறார் சில்வா.\n* இரண்டு கதைகளுமே இந்த நிமிடம் வரைக்கும் படு சீக்ரெட். கசிந்த வரையில் கதை இதுதான். மோகன்லாலின் வளர்ப்பு மகன் விஜய், வளர்ப்பு மகன் என்று தெரியாமல் அப்பா மீது உயிரையே வைத்திருப்பார்.\nமதுரையில் பெரும் புள்ளியான மோகன்லாலுக்கு எந்த பிரச்னை என்றாலும் அவருக்கே தெரியாமல் மகன் விஜய் முன்னால் நின்று முடித்து வைப்பார். மகனின் அசுர வளர்ச்சியும், செல்வாக்கும் அப்பா மோகன்லாலுக்கு பிடிக்காது. ஏன் பிடிக்காது என்றால்.\nதனது அடுத்த வாரிசாக அவர் தன் சொந்த மகன் மகத்தை கொண்டு வர நினைக்கிறார். அதற்கு விஜய் தடையாக இருப்பாரோ என்று கருதி தனது அஸ்திரங்களை விஜய்க்கு எதிராக திருப்புவார்.\nஅது தெரிந்தும் விஜய் கடைசி வரை அப்பாவுக்காகவே உழைப்பார். அதை கடைசியில் உணர்ந்து சொந்த மகனை விட வளர்ப்பு மகன் விஜய்யே சிறந்தவன் என்பதை மோகன்லால் உணர்வார். இது ஜில்லாவோட கதை.\n* கிராமத்து அஜீத்துக்கு நான்கைந்து தம்பிகள். இவர்கள் பண்ணாத பஞ்சாயத்து கிடையாது. அடிக்காத ஆள் கிடையாது. அண்ணனுக்கு ஏதாவது ஒன்று என்றால் தலைகொடுக்கவும், தலை எடுக்கவும் தயங்க மாட்டார்கள் தம்பிகள்.\nதம்பிகள் சிலருக்கு காதல் வர... அண்ணனுக்கு கல்யாணம் நடந்தால்தானே தங்களுக்கும் நடக்கும் என்று கருதும் தம்பிகள், அண்ணனுக்கு தமன்னாவை பெண் பார்க்கப்போன இடத்தில் ஒரு சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்கள்.\nஅந்த பிரச்னையை தீர்க்க அண்ணன் போராட. அண்ணனுடன் அண்ணி தமன்னாவை சேர்த்து வைக்க தம்பிகள் போராட கமகம கிராமத்து விருந்து வீரத்தோட கதை.\n* ஜில்லாவுக்கு மெலடி கிங் இமான் இசை. வீரத்துக்கு குத்துப்பாட்டு கிங் தேவிஸ்ரீபிரசாத் இசை. பாட்டுல ரெண்டு பேருமே பட்டைய கிளப்பிட்டாங்க. பின்னணி இசையில என்ன பண்ணியிருக்காங்கன்னு படத்துலதான் பார்க்கணும்.\n* விஜய்யின் கேரக்டர் பெயர் சக்தி, அஜீதின் கேரக்டர் பெயர் விநாயகம். புராணத்தில் சக்தியின் மூத்த மகன்தான் விநாயகம். ஆனால் சக்தியை விட அதிக சக்தி கொண்டவர் விநாயகம்.\n* விஜய்க்கு கிருதாவுடன் இணைந்த சின்ன தாடி கெட்அப். அஜீத் மங்காத்தா, ஆரம்பம் படங்களின் தொடர்ச்சியாக சால்ட் அண்ட் பெப்பர் லுக் கெட்-அப். விதவிதமான மார்டன் டிரஸ் விஜய் காஸ்ட்யூம். வெள்ளை வேட்டி சட்டை அஜீத் காஸ்ட்யூம். பாடல்களில் மட்டும் கோட் சூட்.\n* விஜய்யுடன் காமெடியில் கலக்குவது சூரி, அஜீத்துடன் காமெடியில் கலக்குவது சந்தானம். எனவே சந்தானம், சூரி போட்டியும் பொங்கலில் பொங்குகிறது.\n* இரண்டு படத்திலுமே பாட்டு, பைட்டு, ஆக்ஷன், செண்டிமெண்ட், ரொமான்ஸ், காமெடி என கமர்ஷியல் அயிட்டங்கள் பக்காவாக இருக்கும். இல்லாத ஒரே விஷயம் லாஜிக்.\n* ஜில்லாவை தயாரித்திருப்பது வெற்றிகரமான தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் பிலிம்ஸ். வீரத்தை தயாரித்திருப்பது பாரம்பரியமிக்க நிறுவனமான விஜயா புரொடக்ஷன்.\n* இரண்டு படங்களுமே எல்லா ஏரியாவும் விற்று தீர்ந்துவிட்டது. சேட்டிலைட் ரைட்சும் பல கோடிக்கு விற்பனையாகி இருக்கிறது. இந்த நிமிடம் புரட்யூசர்கள் இருவருமே வெரி ஹேப்பி. படத்தை வாங்கியவர்களும், பார்க்கும் ரசிகனும் ஹேப்பியா என்பது இன்னும் 24 மணிநேரத்தில் தெரிந்து விடும்.\n* ஜில்லா உலகம் முழுவதும் 1200 தியேட்டர்களில் ரிலீஸ். கேரளாவில் மட்டும் 300 தியேட்டர். வீரம் உலகம் முழுவதும் 1300 தியேட்டர்களில் ரிலீஸ். கேரளாவில் 150 தியேட்டர். இரண்டு படங்களுமே ஜனவரி 19 வரை அத்தனை தியேட்டர்களிலும் ஹவுஸ்புல் புக்கிங்.\n* எட்டு வருடங்களுக்கு முன்பு வந்த போக்கிரி-ஆழ்வார் மோதலில் ஜெயித்தது போக்கிரி. இப்போது ஜில்லா-வீரம். ஜெயிக்கப்போவது யார் அல்லது இருவருமா நாளை (வெள்ளிக்கிழமை) மாலை தெரிந்து விடும்.\nகோலி சோடா - சினிமா விமர்சனம்\nநடிக்க வந்து விட்டார் ஏ.ஆர்.ரகுமான்\nஜெய்யின் செண்டிமென்டை நினைத்து அலறும் நடிகைகள்\nமில்க் நடிகையின் மேரேஜ் அவசரம்\nமணிரத்னம் படத்தில் ரீ-என்ட்ரி ஆகிறார் ஐஸ்வர்யாராய்...\nகாதல் நடிகரை ரகசியமாக சந்திக்கும் ச நடிகை\nஇரண்டெழுத்து நடிகரை வாரிவிடும் இயக்குனர்\nஅஜீத்தின் பிறந்த நாளில் சிம்புவின் வாலு\nவெந்தவன், வேகாதவன், அர வேக்காடு\nரசிகர்கள் கேள்வியால் திக்குமுக்காடும் நடிகை\nவீரம் படத்தில் இடம்பெற்ற அஜீத்தின் சொந்த டயலாக்\nஜில்லா - சினிமா விமர்சனம்\nவீரம் - சினிமா விமர்சனம்\nஜில்லா படத்தில் 10 நிமிடம் குறைப்பு\nமோகன்லாலின் வளர்ப்பு மகனான விஜய்\nதூம் 3 - சினிமா விமர்சனம்\nமூன்று கட்டுகளுடன் ஜில்லாவுக்கு யு சான்றிதழ்\n© 2010 சினிமா செய்திகள் மட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sivantv.com/videogallery/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B2%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-4/", "date_download": "2018-04-26T13:20:53Z", "digest": "sha1:RSKKRXO7SXT65DPTVNZVV2AO43FI7BPN", "length": 12281, "nlines": 180, "source_domain": "sivantv.com", "title": "ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் மாநாடு மற்றும் குருபூசை நிகழ்வு இரண்டாம் நாள் காலை நிகழ்வுகள் (08.12.2017) | Sivan TV", "raw_content": "\nபுங்குடுதீவு கிழக்கு கண்ணகைபுரம் ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்பாள் திருக்கோவில் வருடார்ந்த மகோற்சவம்\nHome ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் மாநாடு மற்றும் குருபூசை நிகழ்வு இரண்டாம் நாள் காலை நிகழ்வுகள் (08.12.2017)\nஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் மாநாடு மற்றும் குருபூசை நிகழ்வு இரண்டாம் நாள் காலை நிகழ்வுகள் (08.12.2017)\nஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் மாநாடு மற..\nபுங்குடுதீவு அம்பலவாணர் கலை அரங்..\nபுங்குடுதீவு அம்பலவாணர் கலை அரங்..\nகரம்பன் கிழக்கு அருள்மிகு ஞானவைர..\nகரம்பன் கிழக்கு அருள்மிகு ஞானவைர..\nகரம்பன் கிழக்கு அருள்மிகு ஞானவைர..\nபுங்குடுதீவு 8ம் வட்டாரம் மடத்து�..\nமாவிட்டபுரம் - வீணியவரை ஸ்ரீ இராஜ�..\nஇணுவில் செகராச சேகரப் பிள்ளையார்..\nபுங்குடுதீவு 8ம் வட்டாரம் மடத்து�..\nமிருசுவில் வடக்கு அரசடி ஸ்ரீ சித�..\nமானிப்பாய் மருதடி விநாயகர் கோவில..\nபுங்குடுதீவு - மடத்துவெளி - வயலூர்..\nபுங்குடுதீவு - மடத்துவெளி - வயலூர்..\nபுங்குடுதீவு - மடத்துவெளி - வயலூர்..\nமட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ..\nபுங்குடுதீவு - மடத்துவெளி - வயலூர்..\nபுங்குடுதீவு - மடத்துவெளி - வயலூர்..\nகரவெட்டி – கொற்றாவத்தை – செட்டித�..\nமிருசுவில் வடக்கு அரசடி ஸ்ரீ சித�..\nகிளிநொச்சி - கரைச்சி - புளியம்பொக்..\nவற்றாப்பளை கண்ணகை அம்மன் திருக்க..\nஏழாலை வசந்தநாகபூசணி அம்பாள் திரு..\nமுகமாலை சிவபுர வளாகம் அடிக்கல் ந�..\nlஎழுதுமட்டுவாழ் - மருதங்குளம் திர�..\nமானிப்பாய் மருதடி பிள்ளையார் கோவ..\nசுன்னாகம் ஸ்ரீ ஹரிகர புத்திர ஐயன�..\nஏழாலை – தம்புவத்தை ஞான வைரவர் கோவ�..\nஏழாலை - தம்புவத்தை ஞான வைரவர் கோவி..\nவடக்கு மாகாணத்தில் சைவ ஆலயங்கள் �..\nமாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் க�..\nஅமெரிக்க ஹவாய் ஆதீன முதல்வர் சற்�..\nமாதகல் - நுணசை - கூடல்விளாத்தி ஸ்ர�..\nமாதகல் - நுணசை - கூடல்விளாத்தி ஸ்ர�..\nமாதகல் - நுணசை - கூடல்விளாத்தி ஸ்ர�..\nமாதகல் - நுணசை - கூடல்விளாத்தி ஸ்ர�..\nமாதகல் - நுணசை - கூடல்விளாத்தி ஸ்ர�..\nஅமெரிக்க ஹவாய் ஆதீன முதல்வர் சற்�..\nகோப்பாய் ஸ்ரீ சுப்பிரமுனிய கோட்ட..\nமாதகல் நுணசை கூடல்விளாத்தி ஸ்ரீ �..\nபேராசிரியர் சாலமன் பாப்பையாவின் ..\nகீரிமலை நகுலேச்சரம் சிவன் கோவில்..\nகீரிமலை நகுலேஸ்வரம் சிவன் கோவில்..\nசரவணை - நாவலடி ஸ்ரீ ஞானவைரவ சுவாமி..\nஏழாலை வசந்தநாகபூசணி அம்பாள் திரு..\nஇணுவில் கந்தசுவாமி கோவில் திருமஞ..\nகீரிமலை நகுலேச்சரம் சிவன் கோவில்..\nசரவணை – நாவலடி ஸ்ரீ ஞானவைரவ சுவாம�..\nஏழாலை வசந்தநாகபூசணி அம்பாள் திரு..\nசரவணை - நாவலடி ஸ்ரீ ஞானவைரவ சுவாமி..\nஏழாலை வசந்தநாகபூசணி அம்பாள் திரு..\nசரவணை-நாவலடி ஸ்ரீ ஞானவைரவ சுவாமி �..\nதெல்லிப்பளை துர்க்கை அம்மன் கோவி..\nஏழாலை வசந்தநாகபூசணி அம்பாள் திரு..\nதெல்லிப்பழை துர்க்கை அம்மன் கோவி..\nஏழாலை வசந்தநாகபூசணி அம்பாள் திரு..\nஇணுவில் காரைக்கால் சிவன் கோவில் �..\nசைவசமய தலைவர்களின் தைத்திருநாள் ..\nஇணுவில் காரைக்கால் சிவன் கோவில் �..\nகோண்டாவில் ஈழத்துச் சபரிமலை சபரீ..\nகாரைநகர்- ஈழத்துச் சிதம்பரம் திண�..\nகாரைநகர்- ஈழத்துச் சிதம்பரம் திண�..\nகீரிமலை நகுலேஸ்வரம் சிவன் கோவில்..\nஏழாலை வசந்தநாகபூசணி அம்பாள் திரு..\nஇணுவில் தெற்கு அருள்மிகு ஞானலிங்..\nகோண்டாவில் ஈழத்துச் சபரிமலை சபரீ..\nசுன்னாகம் - மயிலணி ஸ்ரீ முத்துமார�..\nயாழ் - வண்ணார்பண்ணை வீரமாகாளி அம்�..\nகோண்டாவில் ஈழத்துச் சபரிமலை சபரீ..\nநல்லூர் ஸ்ரீ கமலாம்பிகா சமேத ஸ்ர�..\nதெல்லிப்பழை துர்க்கை அம்மன் கோவி..\nயாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் நடத்த..\nசுன்னாகம் கதிரமலைச் சிவன் கோவில்..\nமானிப்பாய் மருதடி பிள்ளையார் கோவ..\nகோண்டாவில் ஈழத்துச் சபரிமலை சபரீ..\nமருதனார்மடம் ஸ்ரீ சுந்தர ஆஞ்சநேய..\nதேவார இசைமணி குமார வயலூர் திருஞா�..\nகோண்டாவில் ஈழத்துச் சபரிமலை சபரீ..\n\"நிறைவள்ளுவம்\" நாட்டிய நாடகம் (09.12.201..\nஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் மாநாடு மற..\nஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் மாநாடு மற..\nயாழ் - நாயன்மார்கட்டு ஸ்ரீ எருமேல..\nஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் மாநாடு மற்றும் குருபூசை நிகழ்வு முதலாம் நாள் காலை நிகழ்வுகள் மலர் – 03 (08.12.2017)\n“நிறைவள்ளுவம்” நாட்டிய நாடகம் (09.12.2017)\nபுங்குடுதீவு - கிழக்கு - கண்ணகைப�..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dawahfm.com/2018/02/08-Dubai-Number.html", "date_download": "2018-04-26T13:23:32Z", "digest": "sha1:QPHL7V6ZZITMLMYEUUTFIZKB2C3UGV5N", "length": 10440, "nlines": 82, "source_domain": "www.dawahfm.com", "title": "அமீரகத்தில் 1 நம்பர் பிளேட்டை ஏலத்தில் எடுத்தவருக்கு 3 வருடம் சிறை! காரணம் இது தான்! | Dawah FM தமிழ்", "raw_content": "\nஅமீரகத்தில் 1 நம்பர் பிளேட்டை ஏலத்தில் எடுத்தவருக்கு 3 வருடம் சிறை\nஅபுதாபியில் நடைபெற்ற சிறப்பு நம்பர் பிளேட் எண்களுக்கான ஏலத்தில் ஒருவர் 31 மில்லியன் திர்ஹத்திற்கு 'ஒன்னாம் நம்பர்' பிளேட்டை ஏலம் எடுத்துவிட்டு அதற்கான செக் ஒன்றையும் சமர்த்தாக சமர்ப்பித்தார் 33 வயது எமராத்தி ஒருவர் எனினும் அவருடைய வங்கிக் கணக்கில் போதிய இருப்பு இல்லாததால் போன வேகத்திலேலே திரும்பியது.\nஅப்பீல் கோர்ட்டிலும் ஏலம் எடுத்தவரின் மனு நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து 3 வருடங்கள் சிறை தண்டனையை அனுபவிக்கவுள்ளார். இதற்கிடையில், தண்டனை பெற்றவர் அந்த நம்பர் பிளேட்டை அதிக விலைக்கு வேறு ஒருவரிடம் விற்றுவிட்டு ஏலம் எடுத்த தொகையை கட்டிவிடுவதாக கூறினார். அடேய்... இந்த சிந்தனையுடன் எத்தனை பேர் கிளம்பி இருக்கீங்க என எச்சரித்துள்ளது அபுதாபி போலீஸ்.\nநம்பர் பிளேட்டை ஏலம் எடுத்தவர் முழுத்தொகையையும் கட்டிய பின்னால் அவரால் உபயோகப்படுத்தவோ அல்லது பிறரிடம் விற்கவோ இயலும் என ஏல ஷரத்துக்கள் தெளிவாக சொல்கின்றன.\nதிகன - வீடியோ காட்சிகள்\nஅமித் வீரசிங்கவின் மனைவி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு\nகண்டி இனவாத நடவடிக்கையின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் மஹசொஹன் பலகாயவின் தலைவர் அமித் வீரசிங்கவின் மனைவி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ...\nபெண்கள் அபாயா அணிவது 'கட்டாயமில்லை': முஹம்மத் பின் சல்மான்\nசவுதி அரேபியாவில் பெண்கள் அபாயா அணிவது எந்த வகையிலும் கட்டாயமில்லையென தெரிவித்துள்ளார் சவுதி முடிக்குரிய இளவரசர் முஹம்மத் பின் சல்மான். ...\nதிகன பகுதியில் சற்றுமுன் மீண்டும் அமைதியற்ற நிலமை தோன்றியுள்ளது.\nதிகன பகுதியில் சற்றுமுன் மீண்டும் அமைதியற்ற நிலமை தோன்றியுள்ளது. முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள் மற்றும் பள்ளிவாசல் மீதும் ஆத்திரகாரர்க...\nமுஸ்லீம் அமைப்புகளுக்கு SLTJ யின் அன்பான அழைப்பு\nஅஸ்ஸலாமு அலைக்கு வரஹ்மதுல்லாஹி வபரஹாத்துஹு முஸ்லீம் அமைப்புகளுக்கு SLTJ யின் அன்பான அழைப்பு சில தினங்களாக நாட்டில் முஸ்லிம்களுக்கு எதி...\nமகிந்த ராஜபக்‌ஷ, ஜம்மியதுல் உலமா அவசர சந்திப்பு ..\nதற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அவசரகால நிலைமையை கருத்தில் கொண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை அவரது இல்லத்தில் அகில இலங்கை ஜம்மியதுல்...\nசவூதியில் அமோகமாக ஆரம்பமான ஜாஸ் இசை கச்சேரி\nபொருளாதாரத்தில் பின்னோக்கி செல்லும் சவூதி அரேபியாவை நவீன இஸ்லாமியா நாடாக மாற்றி வருவாயை மீண்டும் வரவழைத்து கொள்ளும் சவுதி இளவரசரின் தூரநோ...\nசியம்பலாண்டுவையில் கறுப்பு கொடி கட்டி பெரும்பான்மை குழுக்கள் தற்போது ஆர்ப்பாட்டம்\n#BREAKING #NEWS அம்பாறையில் பள்ளிவாசல் உடைக்கப்பட்டதை நியாயப்படுத்தியும், முஸ்லிம்களை வெளியேறுமாறு கூறியும் மொனராகலை, சியம்பலாண்டுவையில்...\nமலட்டு மருந்து விவகாரம்; சம்பவ தினம் என்னதான் நடந்தது: விபரிக்கிறார் ஹோட்டல் உரிமையாளர் (வீடியோ இணைப்பு)\n– மப்றூக் – அ ம்பாறை நகரில் திங்கட்கிழமையன்று இரவு – இனவாதத் தாக்குதல் ஆரம்பித்த காசிம் ஹோட்டல் உரிமையாளர் ஏ.எல். பர்சித், அன்றைய தினம...\nசட்டம், ஒழுங்கு அமைச்சராக ரஞ்சித் மத்தும பண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.\nசட்டம், ஒழுங்கு அமைச்சராக மொனராகல மாவட்ட ஜ.தே.கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார நியமிக்கப்பட்டுள்ளார். குறித்த நியமன...\nசியம்பலாண்டுவையில் கறுப்பு கொடி கட்டி பெரும்பான்மை...\nஅம்பாறை ஜும்மாபள்ளிவாசல்மீது இனவாதிகள் பலத்த தாக்க...\nசவுதியில் துண்டிக்கப்பட்ட தொழிலாளியின் கை வெற்றிகர...\nஅதிவேக நெடுஞ்சாலையில் வேக அளவீட்டு இயந்திரக்கட்டமை...\nஇலங்கை வரலாற்றில் முதற்தடவையாக அரசியலுக்குள் நுழைந...\n​வாட்ஸ் அப் செயலியின் பயன்பாட்டை மேலும் சுவாரஸ்யமா...\nவாக்களிப்பு நிறைவு: 60 வீதத்திற்கும் அதிகமான வாக்க...\nஇலங்கை நாத்தாண்டிய பகுதியில் நான்கு கால்களும் அதிச...\nகத்தாரில் குட்டி இலங்கை சகோதரர் வபாத்தானார்\nஅமீரகத்தில் 1 நம்பர் பிளேட்டை ஏலத்தில் எடுத்தவருக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88_%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2018-04-26T13:40:09Z", "digest": "sha1:HSPZFCEL2ZX2FQM32JDAND6YKYWQY46L", "length": 5358, "nlines": 105, "source_domain": "ta.wikipedia.org", "title": "கிளை ஆறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nதுணை ஆறு உடன் குழப்பிக் கொள்ளாதீர்கள்.\nகிளை ஆறு (Distributary) முதன்மை நீரோட்டத்தில் இருந்து விலகித் தனித்தோடும் ஆறு. பாசனப் பகுதிகள் இவ்வாறு உருவாகின்றன. கிளை ஆற்றைத் துணை ஆற்றோடு குழப்பிக் கொள்ளக் கூடாது. பல வேளைகளில் கிளை ஆறுகள் காலப் போக்கில் முதன்மை நீரோட்டத்தின் பெரும்பகுதியை எடுத்துக் கொண்டு அவையே முதன்மை நீரோட்டமாகி விடுதலும் உண்டு.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 சனவரி 2015, 11:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kavishan.blogspot.com/2012/02/blog-post_2409.html", "date_download": "2018-04-26T13:02:54Z", "digest": "sha1:5WZMT3YSLVHL4UEYSE3V45ILYP436L7P", "length": 8992, "nlines": 133, "source_domain": "kavishan.blogspot.com", "title": "நண்பன் டக்ளஸ் போன்ற அமைச்சர்கள் உருவாக வேண்டுமாம் - யாழ்.மத்திய கல்லூரியில் மஹிந்த ~ ஈழம் செய்திகள்", "raw_content": "\nநண்பன் டக்ளஸ் போன்ற அமைச்சர்கள் உருவாக வேண்டுமாம் - யாழ்.மத்திய கல்லூரியில் மஹிந்த\nநாட்டை பாதுகாத்து கௌரவப்படுத்தும் மாணவ சமூதாயம் எதிர்காலத்தில் உருவாக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ யாழ்ப்பாணத்தில் தெரிவித்துள்ளார்.\nநாட்டை அபிவிருத்தியை நோக்கி நகர்த்தக் கூடிய ஆளுமையுள்ள பிரஜைகள் ஆசிரியர்களினால் உருவாக்கப்பட வேண்டும் என மேலும் தெரிவித்துள்ளார்.\nஇன்றைய தினம் யாழ். மத்திய கல்லூரியில் 4.1 மில்லியன் ரூபா செலவில் இளைஞர்களுக்கான நாளை அமைப்பினால் அமைக்கப்பட்ட நீச்சல் தடாகத்தை திறந்து வைத்து உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.\nகொழும்பில் உள்ள பாடசாலைகளின் வசதி வாய்ப்புக்கள்\nஎல்லாம் கிராமப்புற பாடசாலைகளுக்கு செய்து கொடுக்கப்பட்டு வருகின்றன.\nமாணவ சமூதாயம் சுகந்திரமாக கல்வி கற்பதற்குரிய வசதி வாய்ப்புக்கள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் இந்த நாட்டை அபிவிருத்தியில் இயங்க வைப்பவர்களாக இருக்க வேண்டும் எனது நண்பன் டக்ளஸ் இந்த யாழ்.மத்திய கல்லூரி பழைய மாணவர்.\nஇன்று அமைச்சராக இருக்கிறார். இவரைப் போன்று பல அமைச்சர்களை மத்திய கல்லூரி உருவாக்க வேண்டும். நாட்டின் எதிர்காலத்தை கௌரவப்படுத்தும் மாணவ சமூதாயம் உருவாகுவதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று மஹிந்த குறிப்பிட்டார்.\nமஹிந்த இவ்வாறு உரையாற்றும் போது மாணவர் கரகோஷம் மண்டபத்தை அதிர வைத்ததுடன், டக்ளசை புன்னகைக்கவும் வைத்தது என தெரியவந்துள்ளது.\nநீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.\nஇலங்கையின் ஏழாவது ஜனாதிபதி (1)\nஉலகத் தமிழர் பேரவை (1)\nசிறீலங்காவின் 7வது நாடாளுமன்ற தேர்தல் (12)\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (6)\nதலைமைச் செயலகம் தமிழீழம் (5)\nநாடு கடந்த அரசாங்கத் தேர்தல் (6)\nநாடு கடந்த அரசாங்கம் (57)\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கம் (1)\nநான் சாகலாம் நாங்கள் சாகக் கூடாது (11)\nபோர்குற்ற நாள் 2009 மே (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://paattumix.blogspot.com/2010/10/blog-post_22.html", "date_download": "2018-04-26T13:17:54Z", "digest": "sha1:6WV3DL4737G65MKIJPIPF5G3VTRYBXB5", "length": 7779, "nlines": 212, "source_domain": "paattumix.blogspot.com", "title": "Music Mix: நீயே உனக்கு என்றும் நிகரானவன்...", "raw_content": "\nநீயே உனக்கு என்றும் நிகரானவன்...\nபடம் : பலே பாண்டியா (1962)\nஇயற்றியவர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி\nநீயே உனக்கு என்றும் நிகரானவன்\nநீயே உனக்கு என்றும் நிகரானவன்\nஅந்தி நிழல் போல் குழல் வளர்த்த தாயாகி இவன் வந்தவன்\nநீயே உனக்கு என்றும் நிகரானவன்\nஅந்தி நிழல் போல் குழல் வளர்த்த தாயாகி இவன் வந்தவன்\nவாய் வேதம் கை மீறி விழி அன்பு மொழி கருணை\nவாய் வேதம் கை மீறி விழி அன்பு மொழி கருணை\nவடிவாகி முடிவற்ற முதலான இறைவன்\nநீயே உனக்கு என்றும் நிகரானவன்\nஅந்தி நிழல் போல் குழல் வளர்த்த தாயாகி இவன் வந்தவன்\nதுதி பாடும் கூட்டம் உன்னை நெருங்காதய்யா\nவெறும் யூகத்தில் உன் இதயம் மயங்காதய்யா\nவிதிக்கூட உன் வடிவை நெருங்காதய்யா\nவிணை வென்ற மனம் கொண்ட\nஇனம் கண்டு துணை சென்று வென்றதை மலர்\nநீயே உனக்கு என்றும் நிகரானவன்\nஅந்தி நிழல் போல் குழல் வளர்த்த தாயாகி இவன் வந்தவன்\nநீயே உனக்கு என்றும் நிகரானவன்\nதுதி பாடும் ... துதி பாடும் ... துதி பாடும் ... துதி பாடும் ...\nதுதி பாடும் ...துதி பாடும் ...துதி பாடும் ... பாடும் பாடும் டும் டும்..\nராமனின் மோகனம் ஜானகி மந்திரம்\nபூந்தளிர் ஆட பொன்மலர் சூட\nவெள்ளை மனம் உள்ள மச்சான்\nதுஜே தேக்கா தோயே ஜானா சனம்\nதும் ப்பாஸு ஆயே.. யூ முஸ்க்குராயே..\nடோலா ரே டோலா ரே....\nஉள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது\nநீயே உனக்கு என்றும் நிகரானவன்...\nப்யார் கே லியே ச்சாரு பல் கம் நஹி தெ...\nதுஜே தெக்கா தோ யே ஜானா சனம் ப்யார்...\nதும்ஸே மில்கே தில் கா ஹே ஜோ...\nசில நேரம் சில பொழுது\nகண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்\nமுன் தினம் பார்த்தேனே பார்த்ததும் தோற்றேனே\nவாராயோ வாராயோ காதல் கொள்ள‌\nஎன் வானிலே ஒரே வெண்ணிலா\nகாற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றைத் தேடுதே\nஆசைய காத்துல தூது விட்டு\nபட்டுப் பூவே மெட்டுப் பாடு\nசங்கத்தமிழ்க் கவியே சந்தங்கள் சொல்லும் இசைக் குயில...\nகண்ணா வருவாயா.. மீரா கேட்கிறாள்\nமாலையில் யாரோ மனதோடு பேச\nபூட்டுக்கள் போட்டாலும் வீட்டுக்குள் நிற்காது காற்ற...\nச்சூ ச்சூ மாரி.. ச்சூ ச்சூ மாரி..\nஇனிது இனிது இளமை இனிது\nபுதிய மனிதா பூமிக்கு வா\nபோகாதே போகாதே நீ இருந்தால் நான் இருப்பேன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.manithan.com/cinema/04/157008?ref=more-highlights-lankasrinews", "date_download": "2018-04-26T13:30:04Z", "digest": "sha1:FFHJA24EM7H3POMK4DOPSMTR2B5OG3HT", "length": 12026, "nlines": 157, "source_domain": "www.manithan.com", "title": "அப்பு கமல் கால்களில் ஒளிந்திருக்கும் ரகசியம் தெரியுமா? இவ்வளவு தானா? - Manithan", "raw_content": "\nவெட்டப்பட்ட மனைவியின் தலையுடன் தெருவில் நடந்து சென்ற கணவன்: அதிர வைக்கும் சம்பவம்\nஇளவரசர் ஹரியின் திருமணத்தில் மணப்பெண் தோழியாகும் உலக அழகி\nஜெயலலிதா வழக்கில் திடீர் திருப்பம்\nஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுலா செல்ல வேண்டுமா விரைவில் வரவிருக்கும் புதிய சட்டம்\nஅஜித்தின் மனைவி ஷாலினியின் பகையாளி யார் தெரியுமா\n பல ஆண்டுகளுக்கு பின் பாத்திமா பாபு விளக்கம்\nஇத்தனை வயதில் பிரபல நடிகை கௌசல்யாவுக்கு கல்யாணமாம்\nசர்வதேச இளம் இளம் விஞ்ஞானிகளுக்கான போட்டியில் இலங்கை 3 தங்கப்பதக்கம்\nமரணத்தின் பிடியிலிருந்து அஜீத்தை மீட்டெடுத்த ஷாலினி கசந்து போன வாழ்வில் உயிர்த்தெழுந்த காதல்\nசிவகார்த்திகேயனால் தொகுப்பாளினி பாவனா அனுபவித்த கொடுமை\nபிள்ளைகள், பெற்றோர்களை கொடூரமாக கொலை செய்த பெண் காரணத்தை கேட்டால் அதிர்ந்து போயிடுவிங்க\nஇந்த 3 ராசியில உங்க ராசி இருக்குதா.. இந்த ஆண்டில் கோடீஸ்வர யோகம் இதற்குத் தானாம்\nமனைவியை நண்பர்களுடன் உறவு வைக்க கட்டாயப்படுத்திய கணவன் - இறுதியில் நடந்ததை பாருங்கள்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\n31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்\nயாழ். சரசாலை, கனடா Toronto\nஅப்பு கமல் கால்களில் ஒளிந்திருக்கும் ரகசியம் தெரியுமா\n1987ம் ஆண்டு 3 வேடங்களில் கமல் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படமே அபூர்வ சகோதரர்கள்.\nஇதில் ரசிகர்களுக்கு மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்திய கமலின் கதாபாத்திரம் எதுவென்றால் அது குட்டி அப்புவாக நடித்ததே.. பலருக்கும் குழப்பத்தையும், புரியாத புதிராக இருந்தது அப்பு கமலின் ரகசியம் வெளிவராமல் இருந்து வந்தது.\nதனக்கும், தனது இயக்குனருக்கும் மட்டும் தெரிந்திருந்தால் போதும் என்ற ரகசியம் தற்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.\nதற்போது வெளியான தகவல் என்னவென்றால், அதாவது கமலின் கால்களை மடக்க ஸ்பெஷல் பெல்ட்டும், முட்டிக்கு என்று ஸ்பெஷன் ஷு பயன்படுத்தியுள்ளனராம்.\nஅதேசமயம் இப்படத்தின் ஒளிப்பதிவாளர் குட்டி அப்பு பற்றி ஒரு சின்ன விடயத்தினையும் கூறியுள்ளார். அதாவது குட்டி அப்பு வரும் காட்சிகள் மட்டும் மிகவும் கலர்புல்லாக இருக்க வேண்டும் என்று கூறிவிட்டார்களாம்.\nகலர் அதிகமாக இருந்தால் அதிலிருக்கும் மற்ற விடயங்களை மக்கள் அவ்வளவாக கவனிக்க மாட்டார்கள் என்று கணித்ததே இதற்குக் காரணமாகும்\nஉடல் எடையை மிக வேகமாக குறைக்க இந்த ஒரு பொருள் போதும்\nசோகத்தில் இருந்த நடிகர் வடிவேலுவிற்கு அடுத்தடுத்து அடித்த அதிஷ்டம்\nமனைவியை நண்பர்களுடன் உறவு வைக்க கட்டாயப்படுத்திய கணவன் - இறுதியில் நடந்ததை பாருங்கள்\nஐ.தே.க. செயற்குழு கூட்டத்தில் சிக்கல்\nசட்ட விரோதமாக மண் அகழும் இடங்களைப் பார்வையிட்டார் மன்னார் நகர முதல்வர்\nமத்திய வங்கியின் அறிக்கை நிதியமைச்சரிடம் கையளிப்பு\nதொழிலாளர் தினத்தை மே முதலாம் திகதி கொண்டாடவுள்ளது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு\nபள்ளிமுனை கடற்கரையில் உள்ள மீன் வாடிகளில் இருந்து கைப்பற்றப்பட்ட ஒரு தொகை மீன்கள்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா் விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilsextips.com/tag/sex/", "date_download": "2018-04-26T13:46:11Z", "digest": "sha1:LGDIFKSANYVNCAJGHTDRUNWXAZOK6PCX", "length": 7822, "nlines": 110, "source_domain": "www.tamilsextips.com", "title": "Category sex – TamilSextips.com – Tamil Doctor – Tamil Sex tips.com – tamilsex – tamil kamasutra – tamilsex.com", "raw_content": "\nசெக்ஸ்சை முழுமைப்படுத்தி, திருப்திப்படுத்துவது எது....\nகுஷியான உறவுக்கு சரியான இடம் சமையலறை தானாம்\nஅதிகாலையில்தான் செக்ஸ் விளையாட்டுக்களுக்கு கூடுதல் கிக் \nஉடலுறவு ஆசையை தூண்டும் உணவுகள்\nஎக்ஸ்ட்ரா செக்ஸை விரும்பும் இந்தியப் பெண்கள்\nபெட்ரூமில் உங்க பர்பாமான்ஸ் பத்தல என்பதை வெளிப்படுத்தும் 8 அறிகுறிகள்\nஉடலுறவில் மனைவியுடன் இன்பமாக அனுபவிக்க\n ஒரு பெண் அளிக்கும் டிப்ஸ்:நீங்கள் நேராகக் கீழே சென்று உங்களுடைய More...\nசீக்கிரம் கர்ப்பமாக வேண்டுமா.. இப்படிப் பண்ணிப் பாருங்க\nசெக்ஸ் என்பது பலவகையானது. ஆனாலும் கடைசியில் கிடைப்பது இன்பம் மட்டுமே. திருமணமாகி, More...\nமுத்த மழைக்குக் குளிர்ந்து போகும் பெண்கள்\nஎல்லோருக்கும் தெரிந்ததுதான் – பெண்கள் அழகானவர்கள், கவர்ச்சியானவர்கள், மென்மையானவர்கள், More...\nரொமான்ஸின் முதல் வெற்றி எது தெரியுமா…\nஒவ்வொரு உறவும் தித்திப்பான விஷயம்தான்… ஆனால் அந்த தித்திப்பு நாளடைவில் சற்றே More...\nசெக்ஸ் வேண்டாம்னா இப்படியெல்லாம் சொல்வாங்களாம்…\nசெக்ஸ் வேண்டாம் என்றால், உறவு கொள்ளப் பிடிக்கவில்லை என்றால், ஆண்களும், பெண்களும் More...\nவீட்டுல போரடிக்குது, வெளியில வச்சுக்கலாமா..\nபோரடிக்காத ஒன்று எது என்று கேட்டால் எல்லோரும் ஒரே மாதிரியாக கையைத் தூக்கிக் காட்டுவது… More...\nதுணையை கவரும் மசாஜ் விளையாட்டு\nஉடலும் மனதும் உற்சாகமாக இருந்தால் மட்டுமே தாம்பத்ய விளையாட்டினை ஆர்வமாக விளையாட More...\nஆர்வத்தை தூண்டும் ‘லிபிடோ இன்ஜெக்சன்\nஆணோ பெண்ணோ பாலியல் ரீதியாக பலரும் ஏராளமான சிக்கல்களை சந்தித்து வருகின்றனர். மனஅழுத்தம், More...\nமனைவி மீது உங்களுக்கு ‘இன்டரஸ்ட்’ குறைய ஆரம்பிச்சிருச்சா…\nஉங்களது கணவர் இப்போதெல்லாம் முன்பு போல உங்களிடம் நெருங்கி வருவதில்லையா…உங்களுடன் More...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vakeesam.com/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95.html", "date_download": "2018-04-26T13:05:46Z", "digest": "sha1:FP6W5Q4TQWMRQTU337AQP5VLRZW2GLLB", "length": 5508, "nlines": 71, "source_domain": "www.vakeesam.com", "title": "பட்டதாரிகள் ஆளுநரிடம் மகஜர் கையளிப்பு – Vakeesam", "raw_content": "\nஹட்டனில் நில அதிர்வு – 05 வீடுகள் சேதம்\nதந்தை செல்வா நினைவுதினம் அனுஷ்டிப்பு\nஜ.தே.க முக்கிய பதவிகளில் மாற்றம் – பொதுச் செயலாளராக அகில விராஜ் காரியவசம்\n203 பட்டதாரிகள் நேர்முகத் தேர்விற்குத் தோற்றவில்லை \nயாழ் போதனா வைத்தியசாலையில் கழிவு வாய்க்கால்மேல் கன்ரீன் – மக்கள் விசனம்\nபட்டதாரிகள் ஆளுநரிடம் மகஜர் கையளிப்பு\nin செய்திகள், முதன்மைச் செய்திகள் August 9, 2017\nவட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் இன்று ஆளுநர் அலுவலகத்தின் முன் ஒன்று கூடினர். இதன்போது ஆளுநருக்கு மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது. அந்த மகஜரில் “எமது கவனயீர்ப்பு போராட்டத்தின் கோரிக்கைக்கு அமைவாக அபிவிருத்தி உத்தியோகத்தர் வெற்றிடத்தினை நிரப்புவதற்கான அரச வர்த்தகமானி கோரப்பட்டுள்ளது. எனினும் இவ் வர்த்தகமானியில் குறித்த நியமனத்திற்கான வயது 35 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இவ் வயதெல்லையை 45 வயதாக அதிகரிக்க வேண்டும். அத்தோடு பட்ட இறுதி திகதியை உள்வாங்குதல் வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பட்டதாரிகளை உள்ளீர்ப்புச் செய்வதற்கு அண்மையில் வெளியிடப்பட்ட வர்த்தமானியில் வயதெல்லை 35 ஆக குறிப்பிடப்பட்டிருந்தது.\nஹட்டனில் நில அதிர்வு – 05 வீடுகள் சேதம்\nதந்தை செல்வா நினைவுதினம் அனுஷ்டிப்பு\nஜ.தே.க முக்கிய பதவிகளில் மாற்றம் – பொதுச் செயலாளராக அகில விராஜ் காரியவசம்\nஹட்டனில் நில அதிர்வு – 05 வீடுகள் சேதம்\nதந்தை செல்வா நினைவுதினம் அனுஷ்டிப்பு\nஜ.தே.க முக்கிய பதவிகளில் மாற்றம் – பொதுச் செயலாளராக அகில விராஜ் காரியவசம்\n203 பட்டதாரிகள் நேர்முகத் தேர்விற்குத் தோற்றவில்லை \nயாழ் போதனா வைத்தியசாலையில் கழிவு வாய்க்கால்மேல் கன்ரீன் – மக்கள் விசனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.viduppu.com/entertainment/04/161574", "date_download": "2018-04-26T13:46:00Z", "digest": "sha1:A5TCANZSB5UFFC22PLEMKGAXDFNPHTSQ", "length": 5403, "nlines": 70, "source_domain": "www.viduppu.com", "title": "தகாத புகைப்படத்தை வெளியிட்ட பிரபல தொகுப்பாளினி!! அதிர்ச்சியில் ரசிகர்கள்.. - Viduppu.com", "raw_content": "\nகணவரை பிரிந்தார் ஐஸ்வர்யா ராய்\nதாலி கட்டும் நேரத்தில் நடந்த நிஜ சம்பவம்\nஅஜித்தின் மனைவி ஷாலினியின் பகையாளி யார் தெரியுமா\nதிடீர் திருமணம் செய்துகொண்ட சூப்பர் ஹிட் பட நடிகை...அதிர்ச்சியில் ரசிகர்கள்\nதலைவர் உரையின் போது தூங்கிய ராணுவ தலைவருக்கு மரண தண்டனை\nஆர்யாவின் திருமணம் நிகழ்ச்சியை மரணகலாய் கலாய்த்த கார்த்திக் மற்றும் ஜெகன்...வைரலாகும் வீடியோ உள்ளே\nஅனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய சூப்பர் சிங்கர் பிரியங்கா அடடே இப்படியும் ஒரு திறமையா..\nஒரே வீட்டில் தனி தனியாக வாழும் ஐஸ்வர்யா அபிஷேக் பச்சன்...காரணம் என்ன\nசுசானாவின் தந்தையால் ஆதாரத்துடன் சிக்கும் ஆர்யா\nவிவாகரத்திற்கு பிறகு அமலாபால் இப்படி மாறிட்டாங்களே...வைரலாகும் புகைப்படம் உள்ளே\nதகாத புகைப்படத்தை வெளியிட்ட பிரபல தொகுப்பாளினி\nநடிகைகள் தற்போது நிர்வாண புகைப்படம் வெளியிடுவது கவர்ச்சியை காட்டுவது என்பதெல்லாம் வழக்கமாகி விட்டது. குறிப்பாக இதில் பாலிவுட் நடிகைகளே முன்னிலை வகிக்கிறார்கள்.\nஇந்நிலையில் தற்போது பாலிவுட் திரையுலகில் முன்னணி தொகுப்பாளியாக வலம் வந்து நடிகையானவர் Shibani Dandekar. இவர் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்.\nதற்போது இவர் நிர்வாணமாக குளிக்கும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார், இந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nதலைவர் உரையின் போது தூங்கிய ராணுவ தலைவருக்கு மரண தண்டனை\nஆர்யாவின் திருமணம் நிகழ்ச்சியை மரணகலாய் கலாய்த்த கார்த்திக் மற்றும் ஜெகன்...வைரலாகும் வீடியோ உள்ளே\nஅஜித்தின் மனைவி ஷாலினியின் பகையாளி யார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthinappalakai.net/2017/05/19/news/23203", "date_download": "2018-04-26T13:21:42Z", "digest": "sha1:CCQGNHRWJN55FDIRW5N2AAOMLWPOAQP5", "length": 9731, "nlines": 102, "source_domain": "www.puthinappalakai.net", "title": "பளைப் பகுதியில் அதிகாலையில் துப்பாக்கிச் சூடு? – சிறிலங்கா படையினர் சுற்றிவளைத்துத் தேடுதல் | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nபளைப் பகுதியில் அதிகாலையில் துப்பாக்கிச் சூடு – சிறிலங்கா படையினர் சுற்றிவளைத்துத் தேடுதல்\nMay 19, 2017 by யாழ்ப்பாணச் செய்தியாளர் in செய்திகள்\nபளைப் பிரதேசத்தில் இன்று அதிகாலையில் இடம்பெற்றதாக கூறப்படும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்றையடுத்து, அங்கு பெருமளவு சிறிலங்கா படையினர், சிறப்பு அதிரடிப்படையினர், காவல்துறையினர் குவிக்கப்பட்டு தேடுதல்கள் நடத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nபளை- கச்சார் வெளிப் பகுதியில் வீதி ரோந்தில் ஈடுபட்டிருந்த சிறிலங்கா காவல்துறையினரின் வாகனம் மீதே, இன்று அதிகாலை 12.30 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.\nஇந்தச் சம்பவத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. ரி-56 ரகத் துப்பாக்கியைப் பயன்படுத்தியே சூடு நடத்தப்பட்டதாகவும், வீதியோரப் பற்றைக்குள் இருந்து ஒருவர் துப்பாக்கியுடன் தப்பிச் செல்வதை காவல்துறையினர் கண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nஇதையடுத்து பெரும் எண்ணிக்கையான சிறிலங்கா படையினர், சிறப்பு அதிரடிப்படையினர், காவல்துறையினர் குவிக்கப்பட்டு, தேடுதல்கள் நடத்தப்பட்டன.\nஅந்தப் பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்று கோரப்பட்டதாகவும், தெரிவிக்கப்படுகிறது.\nமுகமாலை தொடக்கம் கச்சார் வெளி வரையான 3 கி.மீ பகுதி மற்றும் முகமாலை தொடக்கம் கிளாலி வரையான 3 கி.மீ பகுதியை உள்ளடக்கிய சுமார் 9 சதுர கி.மீ பரப்பளவு பிரதேசம் சுற்றி வளைக்கப்பட்டு தேடுதல்கள் நடத்தப்படுவதாகவும் சிறிலங்கா காவல்துறையினரை மேற்கோள்காட்டும் செய்திகள் தெரிவிக்கின்றன.\nTagged with: கிளாலி, பளை, முகமாலை\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் தொடர்ந்து சரியும் சிறிலங்கா ரூபாவின் மதிப்பு – வெளிநாட்டு கடன்சுமை அதிகரிப்பு\nசெய்திகள் திருகோணமலையில் அமெரிக்காவின் பாரிய மிதக்கும் மருத்துவமனை\nசெய்திகள் தமிழ்தேசியம்: ‘தமிழ்நாட்டின் உரிமைகளை எப்போது மீட்க முடியும்\nசெய்திகள் “எமது கதைகளை நாங்கள்தான் கூற வேண்டும் “- ‘தமிழர் மூவர்’ விருது பெற்ற றீற்றா பரமலிங்கம்\nசெய்திகள் இளைஞர் மாநாட்டைக் கூட்டுகிறார் முதலமைச்சர் விக்னேஸ்வரன்\nகட்டுரைகள் இரா.சம்பந்தன் – ‘சேர் பொன். இராமநாதனின் மறுஉருவம்’ 0 Comments\nசெய்திகள் காணாமல் போனோர் பணியக உறுப்பினர்களை வேண்டா வெறுப்பாக நியமித்த சிறிலங்கா அதிபர் 0 Comments\nசெய்திகள் தொடர்ந்து சரியும் சிறிலங்கா ரூபாவின் மதிப்பு – வெளிநாட்டு கடன்சுமை அதிகரிப்பு 0 Comments\nசெய்திகள் திருகோணமலையில் அமெரிக்காவின் பாரிய மிதக்கும் மருத்துவமனை 0 Comments\nசெய்திகள் நல்லிணக்கச் செயல்முறைகள் குறித்து சிறிலங்காவுடன் கனடா பேச்சு 0 Comments\nNakkeeran on ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\nShan Nalliah on 10 நிபந்தனைகளின் அடிப்படையிலேயே ரணிலுக்கு ஆதரவு – செல்வம் அடைக்கலநாதன்\nShan Nalliah on கூட்டமைப்புடன் எந்த உடன்பாடும் கையெழுத்திடப்படவில்லை – மனோ கணேசன்\n‌மன‌ோ on 10 நிபந்தனைகளின் அடிப்படையிலேயே ரணிலுக்கு ஆதரவு – செல்வம் அடைக்கலநாதன்\nChenavi L on நம்பிக்கையில்லா பிரேரணை படுதோல்வி\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://eservices.railway.gov.lk/schedule/homeAction.action?lang=ta", "date_download": "2018-04-26T13:40:02Z", "digest": "sha1:C3PHAEUPSKACNGD7OXGFOOHWYYPQE6ZU", "length": 25561, "nlines": 44, "source_domain": "eservices.railway.gov.lk", "title": "புகையிரதல் தேடல்", "raw_content": "இலங்கை புகையிரத சேவை - முதற் பக்கம்\n--- Select --- எல்வல ASGIRIYA Bandirippuwa BANGADENIYA DEC Gangathilaka GANTALAWA GIRAMBE Hadiriwalana Hingurala Kachcheri Halt Kahatapitiya Katugastota Road Kiridiwela KOLONNAWA Magalegoda MAGULEGODA Marakona Maraluwawa Mawilmada Meegammana Miriswatte Palle Talawinna Parakumpura Polgaha Anga Puwakpitiya Puwakpitiya Town Tampalakamam Tawalankoya Thuruliyagama Urugodawattha Weligalla Yagoda Yatawara அகங்கம அகுகான அகுங்காலி அக்குரல்ல அக்போபுர அங்கும்பிட்டிய அங்குலான அசேலபுர அடகளை அநவிலுந்தவ அநுராதபுரம் அநுராதபுரம் புதிய நகரம் அந்ததோல அப்புத்தலை அம்பன்பொலை அம்பலாங்கொட அம்பேபுஸ்ஸ அம்பேவல அரபன்கம அலுத்அம்பலம அளவ்வ அளவ்வடுபிட்டிய அளுத்கம அவிசாவலை ஆனையிறவு ஆரக்குவத்த ஆரச்சிக்கட்டுவ இகலகமை இகலகோட்டை இங்குரு ஓயா இணுவ்ல் இந்தல்கஸ்யின்ன இந்துருவ இஹலவட்டவலை உக்கலை உக்குவலை உடதலவின்னை உடத்தவலை உடஹமுல்லை உடுகொடகமை உடுவரை உணவட்டுனை உயங்கல்லை உலப்பனை எந்தரமுல்லை எருக்கலம்பிட்டி எறற்பொியகுளம் எல்ல எழுதுமட்டுவாள் ஏகொட உயன ஏராவூர் ஒமத∙ைத ஒஹிய கங்கேசனதுறை கங்கொட கடதாசி நகர் கடிகமுவை கடுகன்னாவை கடுகஸ்தோட்டை கடுகுருந்தை கடுகொட கட்டுகொடை கட்டுநாயக்க விமானநிலையம் கட்டுனாயக்க கட்டுவை கண்டி கதமுன கந்தலாய் கந்தலுவ கந்தானை கந்தேகொடை கனேகொட கனேமுல்லை கனேவத்தை கன்னாகம் கப்புவத்தை கம்பகா கம்புருகமுவை கம்பொலை கம்மானை கலபொட கலாவெவை கல் ஓயா சந்தி கல்கமுவை கல்கிஸ்ஸை கல்குடா கல்லெல்ல களனி கழுத்தரை தெட்கு கழுத்தரை வடக்கு கஹவை காக்கப்பள்ளி காரதிபுவால் காலி கினிகமை கிரம்பே கிரம்பே கிரேட் வெஸ்டர்ன் கிளினொச்சி கீத்தல் எல்லை கீனவெல்லை குடஹக்கபொளை குமாரகந்தை கும்பல்கமை குரன குரஹன்ஹேனகமை குருநாகலை கூடா வெவை கெகிராவை கெலிஒய கொlடிகாமம் கொகொ கொக்கலை கொச்சிக்கடை கொடகம கொட்டகலை கொட்டா வீதி கொட்டாவை கொம்பனித்தெரு கொரல்லவெல்லை கொலன்னாவை கொள்ளுப்பிட்டி கொஸ்கமை கொஸ்கொட கொஸ்ஹின்ன கோக்குவில் கோட்டை கோண்டாவில் கோன்வெவை சங்கத்தானை சரஸவி உயனை சவரனை சாலியபுறம் சாவகச்சேரி சியம்பவகஸ்வெவ சியலன்கமுவை சிலாபம் சீனிகமை சுதந்திர வர்த்தக வலையம் செட்டிக்குளம் செனரத்கம செயலாளர் காரியாலய தரிப்பு செவனபிட்டி சேதுவை சைனா பேய் ஜயந்திபுரம் ஜா எலை ஜிந்தொடை டெகின்த தச்சன் ​தோப்பு தம்பகல்லை தம்புத்தேகாமம் தலவத்தேகெதரை தலாவாக்கலை தலாவை தலைமன்னூர் தலைமன்னூர் பாலம் தல்பை தாண்டிக்குளம் தாரலுவ திம்பிரியாகெதரை தியத்தளாவ திருகேஸ்வாம் திருகோணமலை தில்லையடி திஸ்மல்பொல தீரானகமை துடெல்லை தும்மோதரை தெமட்டகொட தெமோதர தெம்பிலிகலை தெல்லிப்பளை தெல்வத்தை தெஹிவல தேவத்தை தேவப்புரம் தொடந்துவ தோட்டவௌி நாகொல்லாகமை நாத்தான்டி நானு ஓயா நாரஹேன்பிட்டை நாவற்குழி நாவலப்பிட்டி நாவின்னை நீர்கொழும்பு நூர் நகர் நெலும்பத்கமை நெலும்பொக்குனை நேகமை நேலியா பட்டலுஓயா பட்டிபொலை பட்டுவத்த பண்டாரவளை பதன்பகை பதுள்ளை பனலீய பனாகொட பன்கிரிவத்த பன்னிப்பிட்டிய பம்பலபிட்டிய பயாகலை தெற்கு பயாகலை வடக்கு பரகும்புர பரசங்கஹவெவ பரந்தன் பலன பலபிட்டிய பலுகஸ்வெவை பல்லேவலை பளை பஹலவர்தனை பாதகம்கொடை பாதுக்கை பானந்துரை பாலாவி பின்னகொல்லை பின்னவலை பின்வத்தை பியகமை பியதிகமை பிலிதுவ பிலிமத்தலாவை புகையிரத தரிப்பு 1 புங்கங்குளம் புத்கமுவ புத்தளம் புனானி புலச்சிக்குலம் புளிளங்குளம் புளுகஹாகொட பூனாவை பூஸ்ஸ பெந்தோட்டை பெம்ரோஸ பெராதெனிய பெரியநாகவில்லு பேமுள்ள பேரலந்தை பேருவல பேஸ்லைன் வீதி பொத்துஹெரை பொரபொலை பொரபொலை சந்தி பொரலச பொல்ககவெல்லை பொல்வது மோதர பொளன்னறுவை போத்தல போலவத்த மகலெ கொடை மக்கொனை மங்கலெலியா மடுறோட்டு மட்டக்களப்பு மதவாச்சி மதுரங்குலி மன்ணூ் மன்னம்பிட்டி மரதானை மலபல்லை மல்லாகம் மஹ இந்துருவை மஹரகமை மஹியாவை மாகோ மாங்குளம் மாதம்பை மாதம்பைகமை மாதளை மாதோட்டம் மாத்தறை மாவிட்டபுரம் மிதிகமை மின்னேரியா மிரிசுவில் மிரிஸ்ஸை மிரிஹன்பிடிகமை மிஹிந்தலை மிஹிந்தலை சந்தி மீகொடை மீசாலை மீரிகமை முத்தெடுகலை முந்தல் முருங்கன் முறிகண்டி முல்லிப்பொத்தான மெதகமை மெத்தேகமை மொரகலை மொரகொள்ளாகமை மொரடுவை யடகமை யடிரவன யத்தல்கொடை யாகொடை யாப்பகுவை யாழ்ப்பாணம் ரணமுக்கமுவை ரதெல்லை ரத்கமை ரத்மலானை ரந்தனிகமை ரம்புக்கனை ராகமை ரிச்மன்ட் ஹில் ரிதீெதன்ன ரொஸெல்லை ரோியகுளம் லக்ஸ உயனை லின்வல லியனகேமுல்லை லுணுவிலை லுனாவை வக வடரேக வட்டகொடை வட்டவலை வத்தேகமை வந்தாருமுல்லை வந்துராவை வனவாசலை வலகப்பிட்டி வலஸ்வெவை வல்கமை வல்பொலை வளக்கும்புர வவுனியா வாத்துவை வாழைச்சேனை விஜயராஜதகனை விரழ்முரிப்புவை வில்வத்தை வெரகலை வெலிகமை வெல்லவத்தை வெல்லவை வெளிககந்தை வேயன்கொடை வைக்காலை ஸ்றாவஸ்திபுரம் ஹட்டன் ஹதரஸ் கொடுவ ஹபரன ஹபராதுவ ஹாலி எல ஹிக்கடுவை ஹிங்குரான்கொடை ஹிரியாலை ஹீந்தெனிய ஹீலோய ஹீல் ஓயா ஹுனுபிட்டி ஹெட்டிமுல்லை ஹொரபெ ஹோமாகமை ஹோமாகமை வைத்தியசாலை ஹோரிவிலை ​பேசாலை\n--- Select --- எல்வல ASGIRIYA Bandirippuwa BANGADENIYA DEC Gangathilaka GANTALAWA GIRAMBE Hadiriwalana Hingurala Kachcheri Halt Kahatapitiya Katugastota Road Kiridiwela KOLONNAWA Magalegoda MAGULEGODA Marakona Maraluwawa Mawilmada Meegammana Miriswatte Palle Talawinna Parakumpura Polgaha Anga Puwakpitiya Puwakpitiya Town Tampalakamam Tawalankoya Thuruliyagama Urugodawattha Weligalla Yagoda Yatawara அகங்கம அகுகான அகுங்காலி அக்குரல்ல அக்போபுர அங்கும்பிட்டிய அங்குலான அசேலபுர அடகளை அநவிலுந்தவ அநுராதபுரம் அநுராதபுரம் புதிய நகரம் அந்ததோல அப்புத்தலை அம்பன்பொலை அம்பலாங்கொட அம்பேபுஸ்ஸ அம்பேவல அரபன்கம அலுத்அம்பலம அளவ்வ அளவ்வடுபிட்டிய அளுத்கம அவிசாவலை ஆனையிறவு ஆரக்குவத்த ஆரச்சிக்கட்டுவ இகலகமை இகலகோட்டை இங்குரு ஓயா இணுவ்ல் இந்தல்கஸ்யின்ன இந்துருவ இஹலவட்டவலை உக்கலை உக்குவலை உடதலவின்னை உடத்தவலை உடஹமுல்லை உடுகொடகமை உடுவரை உணவட்டுனை உயங்கல்லை உலப்பனை எந்தரமுல்லை எருக்கலம்பிட்டி எறற்பொியகுளம் எல்ல எழுதுமட்டுவாள் ஏகொட உயன ஏராவூர் ஒமத∙ைத ஒஹிய கங்கேசனதுறை கங்கொட கடதாசி நகர் கடிகமுவை கடுகன்னாவை கடுகஸ்தோட்டை கடுகுருந்தை கடுகொட கட்டுகொடை கட்டுநாயக்க விமானநிலையம் கட்டுனாயக்க கட்டுவை கண்டி கதமுன கந்தலாய் கந்தலுவ கந்தானை கந்தேகொடை கனேகொட கனேமுல்லை கனேவத்தை கன்னாகம் கப்புவத்தை கம்பகா கம்புருகமுவை கம்பொலை கம்மானை கலபொட கலாவெவை கல் ஓயா சந்தி கல்கமுவை கல்கிஸ்ஸை கல்குடா கல்லெல்ல களனி கழுத்தரை தெட்கு கழுத்தரை வடக்கு கஹவை காக்கப்பள்ளி காரதிபுவால் காலி கினிகமை கிரம்பே கிரம்பே கிரேட் வெஸ்டர்ன் கிளினொச்சி கீத்தல் எல்லை கீனவெல்லை குடஹக்கபொளை குமாரகந்தை கும்பல்கமை குரன குரஹன்ஹேனகமை குருநாகலை கூடா வெவை கெகிராவை கெலிஒய கொlடிகாமம் கொகொ கொக்கலை கொச்சிக்கடை கொடகம கொட்டகலை கொட்டா வீதி கொட்டாவை கொம்பனித்தெரு கொரல்லவெல்லை கொலன்னாவை கொள்ளுப்பிட்டி கொஸ்கமை கொஸ்கொட கொஸ்ஹின்ன கோக்குவில் கோட்டை கோண்டாவில் கோன்வெவை சங்கத்தானை சரஸவி உயனை சவரனை சாலியபுறம் சாவகச்சேரி சியம்பவகஸ்வெவ சியலன்கமுவை சிலாபம் சீனிகமை சுதந்திர வர்த்தக வலையம் செட்டிக்குளம் செனரத்கம செயலாளர் காரியாலய தரிப்பு செவனபிட்டி சேதுவை சைனா பேய் ஜயந்திபுரம் ஜா எலை ஜிந்தொடை டெகின்த தச்சன் ​தோப்பு தம்பகல்லை தம்புத்தேகாமம் தலவத்தேகெதரை தலாவாக்கலை தலாவை தலைமன்னூர் தலைமன்னூர் பாலம் தல்பை தாண்டிக்குளம் தாரலுவ திம்பிரியாகெதரை தியத்தளாவ திருகேஸ்வாம் திருகோணமலை தில்லையடி திஸ்மல்பொல தீரானகமை துடெல்லை தும்மோதரை தெமட்டகொட தெமோதர தெம்பிலிகலை தெல்லிப்பளை தெல்வத்தை தெஹிவல தேவத்தை தேவப்புரம் தொடந்துவ தோட்டவௌி நாகொல்லாகமை நாத்தான்டி நானு ஓயா நாரஹேன்பிட்டை நாவற்குழி நாவலப்பிட்டி நாவின்னை நீர்கொழும்பு நூர் நகர் நெலும்பத்கமை நெலும்பொக்குனை நேகமை நேலியா பட்டலுஓயா பட்டிபொலை பட்டுவத்த பண்டாரவளை பதன்பகை பதுள்ளை பனலீய பனாகொட பன்கிரிவத்த பன்னிப்பிட்டிய பம்பலபிட்டிய பயாகலை தெற்கு பயாகலை வடக்கு பரகும்புர பரசங்கஹவெவ பரந்தன் பலன பலபிட்டிய பலுகஸ்வெவை பல்லேவலை பளை பஹலவர்தனை பாதகம்கொடை பாதுக்கை பானந்துரை பாலாவி பின்னகொல்லை பின்னவலை பின்வத்தை பியகமை பியதிகமை பிலிதுவ பிலிமத்தலாவை புகையிரத தரிப்பு 1 புங்கங்குளம் புத்கமுவ புத்தளம் புனானி புலச்சிக்குலம் புளிளங்குளம் புளுகஹாகொட பூனாவை பூஸ்ஸ பெந்தோட்டை பெம்ரோஸ பெராதெனிய பெரியநாகவில்லு பேமுள்ள பேரலந்தை பேருவல பேஸ்லைன் வீதி பொத்துஹெரை பொரபொலை பொரபொலை சந்தி பொரலச பொல்ககவெல்லை பொல்வது மோதர பொளன்னறுவை போத்தல போலவத்த மகலெ கொடை மக்கொனை மங்கலெலியா மடுறோட்டு மட்டக்களப்பு மதவாச்சி மதுரங்குலி மன்ணூ் மன்னம்பிட்டி மரதானை மலபல்லை மல்லாகம் மஹ இந்துருவை மஹரகமை மஹியாவை மாகோ மாங்குளம் மாதம்பை மாதம்பைகமை மாதளை மாதோட்டம் மாத்தறை மாவிட்டபுரம் மிதிகமை மின்னேரியா மிரிசுவில் மிரிஸ்ஸை மிரிஹன்பிடிகமை மிஹிந்தலை மிஹிந்தலை சந்தி மீகொடை மீசாலை மீரிகமை முத்தெடுகலை முந்தல் முருங்கன் முறிகண்டி முல்லிப்பொத்தான மெதகமை மெத்தேகமை மொரகலை மொரகொள்ளாகமை மொரடுவை யடகமை யடிரவன யத்தல்கொடை யாகொடை யாப்பகுவை யாழ்ப்பாணம் ரணமுக்கமுவை ரதெல்லை ரத்கமை ரத்மலானை ரந்தனிகமை ரம்புக்கனை ராகமை ரிச்மன்ட் ஹில் ரிதீெதன்ன ரொஸெல்லை ரோியகுளம் லக்ஸ உயனை லின்வல லியனகேமுல்லை லுணுவிலை லுனாவை வக வடரேக வட்டகொடை வட்டவலை வத்தேகமை வந்தாருமுல்லை வந்துராவை வனவாசலை வலகப்பிட்டி வலஸ்வெவை வல்கமை வல்பொலை வளக்கும்புர வவுனியா வாத்துவை வாழைச்சேனை விஜயராஜதகனை விரழ்முரிப்புவை வில்வத்தை வெரகலை வெலிகமை வெல்லவத்தை வெல்லவை வெளிககந்தை வேயன்கொடை வைக்காலை ஸ்றாவஸ்திபுரம் ஹட்டன் ஹதரஸ் கொடுவ ஹபரன ஹபராதுவ ஹாலி எல ஹிக்கடுவை ஹிங்குரான்கொடை ஹிரியாலை ஹீந்தெனிய ஹீலோய ஹீல் ஓயா ஹுனுபிட்டி ஹெட்டிமுல்லை ஹொரபெ ஹோமாகமை ஹோமாகமை வைத்தியசாலை ஹோரிவிலை ​பேசாலை\n* குறியீடு உள்ளவை கட்டாய புலங்கள் ஆகும்\nஇலங்கை புகையிரத சேவை வழங்கும் புகையிரத நேர அட்டவணை இணைய சேவைக்கு வரவேற்கிறோம்.\nஇந்த சேவை மூலம் புகையிரத நேரம் / நிலையம் மற்றும் பயணச்சீட்டு விவரங்களை பார்க்க முடியும்.\nபுகையிரத நேர அட்டவணையை தேடுவதற்கு அவசியமான விவரங்களாக தொடக்க மற்றும் முடிவு புகையிரத நிலையங்களை வழங்க வேண்டும்.\nபின்னர் முடிவடையும் நிலையத்தை தேர்ந்தெடுக்கவும்.\nநீங்கள் விரும்பினால், தொடங்கும் நேரம் மற்றும் முடிவடையும் நேரத்தை தேர்ந்தெடுக்கலாம்.\nநாள்காட்டியிலிருந்து தேடல் தேதியை தேர்ந்தெடுக்கவும்\nபின்னர் 'தேடல்' பொத்தானை கிளிக் செய்யவும்.\nஅமைப்பாள் புகையிரத நேர அட்டவணையை பின்வரும் விவரங்களுடன் காட்டப்படும்.\nஇணைக்கும் புகையிரதம் (கிடைக்கும் என்றால்) - மேலே போல்\nமேலதிக தகவலுக்கு தயவுசெய்து சேவையால் வழங்கப்பட்டுள்ள கேள்வி பதில் பகுதியையும் வழிமுறைகளையும் பார்க்கவும்.\nஇலங்கை புகையிரத சேவையால் இயக்கப்படுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://mycrankywritings.wordpress.com/2015/08/18/694/", "date_download": "2018-04-26T13:43:18Z", "digest": "sha1:VP2BP4OSVLXQXE2PARPIUDEUTVUJMNVV", "length": 7517, "nlines": 120, "source_domain": "mycrankywritings.wordpress.com", "title": "நான் உன்னில் சரணடையும் பொழுது | My Cranky Writings", "raw_content": "\nநான் உன்னில் சரணடையும் பொழுது\nஎவ்விதம் கதிரவனின் வெப்பத்தால் உருகுகின்ற உடம்புக்கு\nஅதைபோலொரு நிம்மதி என் மனதிற்க்கும் கிடைக்கின்றது\nநான் உன்னில் சரணடையும் பொழுது, என் ராமா\nகவலைகளால் என் மனம் ஊஞ்சல்போல் ஆடிட\nஆதரவுக்காக நான் நிலை தேட\nஅலைமோதும் கடலில் கரைகாணா நிலையில்\nதத்தளிக்கும் தோணிபோல் நான் தவிக்க\nஅந்த தோணிக்கும் கரைசேர ஓர் திரைவந்து உதவ\nஅதைபோலொரு நிம்மதி என் மனதிற்க்கும் கிடைக்கின்றது\nநான் உன்னில் சரணடையும் பொழுது, என் ராமா\nசுடுகின்ற நெருப்பும் சந்தனம்போல் குளிரும்\nராகவா உன் கிருபையில் எல்லாம்\nராகவா உன் கிருபையில் எல்லாம்\nஉன் மலர்முகம் காண பௌர்ணமியாய் திகழும்\nஅதைபோலொரு நிம்மதி என் மனதிற்க்கும் கிடைக்கின்றது\nநான் உன்னில் சரணடையும் பொழுது, என் ராமா\nஎவ்வழியில் சென்றால் உன்னை நான் காணமுடியும்\nஅவ்வழியில் நான் வர தயார் இங்கே\nஅதில் பூக்கள் இருந்தாலும் முள்ளாய் நிறைந்தாலும்\nவிதியால் மனம் நிறையும்வரை அமுதுண்ணும் வாய்ப்பினைப்போல்\nஅதைபோலொரு நிம்மதி என் மனதிற்க்கும் கிடைக்கின்றது\nநான் உன்னில் சரணடையும் பொழுது, என் ராமா\n← கண்டேன் நான் விழிகளில்\nதேர்வு செய் தேர்வு செய் April 5, 2018\nஎன்னுடன் நீ இருப்பாய் March 10, 2018\nநீர் துளிக்குள் March 4, 2018\nஇங்கும் அங்கும் எங்கும் February 25, 2018\nகவரும் விழி அழகே February 18, 2018\nபரிசு பொருள்கள் January 8, 2018\nஇறைவனுடன் கலந்துவிட்டேன் January 5, 2018\nகொஞ்சம் மறந்திருந்தேன் December 16, 2017\nநம்ம ஊர் பால்க்காரன் November 30, 2017\nகழுதைக்கு வந்த யோகம் November 30, 2017\nநாளை மீண்டும் நாளை November 21, 2017\nதூக்கம் வரவில்லை November 6, 2017\nமணல் வருது மணல் வருது October 30, 2017\nஇரவு வெகு நேரம் ஆகியும் October 18, 2017\nமல்லி மொட்டு பூ அணிந்து October 18, 2017\nஉன் விழிகளில் எழுதிய October 12, 2017\nஎங்கிருந்துதான் வந்ததோ October 8, 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-04-26T13:42:42Z", "digest": "sha1:GPPLT4YN7Z3RD5XCOVRJSFLUXQT3ZIMC", "length": 6701, "nlines": 99, "source_domain": "ta.wikipedia.org", "title": "காயத்ரி வெங்கடராகவன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nகாயத்ரி வெங்கடராகவன் தமிழ்நாட்டைச் சேர்ந்த கருநாடக இசைப் பாடகர் ஆவார்.\nதனது இளம் வயதில் கருநாடக இசைப் பயிற்சியை ராஜலக்சுமியிடமிருந்து பெறத் தொடங்கினார். தொடர்ந்து பத்மா வீரராகவனிடம் (பாலக்காடு கே .வி .நாராயண சுவாமியின் மாணாக்கர்) கற்றுத் தேர்ந்தார்.\nகல்கி கிருஷ்ணமூர்த்தி விருது, 2003\nநாத ஒலி விருது, 2003 ; வழங்கியது: நாத இன்பம், சென்னை\nஎம். எல். வி அறக்கட்டளை விருது, 2006; வழங்கியது: நாரத கான சபை, சென்னை\nசண்முக சங்கீத சிரோன்மணி விருது; வழங்கியது: ஸ்ரீ சண்முகானந்தா பைன் ஆர்ட்ஸ் மற்றும் சங்கீத சபை, மும்பை\nஇசைப் பேரொலி விருது; வழங்கியது: கார்த்திக் பைன் ஆர்ட்ஸ், சென்னை\nGayathri Venkataraghavan - கச்சேரிஸ் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள வாழ்க்கைக் குறிப்பு\nதமிழ்ப் பெண் இசைக் கலைஞர்கள்\nஇசைப் பேரொலி விருது பெற்றவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சனவரி 2015, 05:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://anony-anony.blogspot.com/2008/12/blog-post.html", "date_download": "2018-04-26T13:24:57Z", "digest": "sha1:Q5PFMVYBUHOVSZUVLCQL46WL2KZWHQD3", "length": 29640, "nlines": 287, "source_domain": "anony-anony.blogspot.com", "title": "ANONYMOUS: உளவுப் பிரிவும் ஓட்டை சைக்கிளிலும்", "raw_content": "\nஉளவுப் பிரிவும் ஓட்டை சைக்கிளிலும்\nமொக்கை போட்டது ALIF AHAMED |\nஉளவுப் பிரிவும் ஓட்டை சைக்கிளிலும்\nஎனது 14 ஆண்டு பத்திரிக்கைத்துறை பணியில் எத்தனையோ உளவுப் பிரிவினரோடு பழகும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன்.\nஎனக்குத் தெரிந்து நம் உளவுப் பிரிவினரைப் போல மிகவும் மட்டமாக நடத்தப்படும் ஒரு அரசுத் துறையை நான் கண்டதில்லை.\nநம் ஊரில் உளவுப் பிரிவு என்றால் அதன் முக்கியமான வேலை எதிர்க் கட்சிகளை உளவு பார்ப்பதும், முக்கியத் தலைவர்களுக்கு யாராலாவது ஆபத்து வரப் போகிறதா என்பதை கண்டறிவதும் தான்.\nரஜினி அரசியலுக்கு வரப் போகிறார்.. ஆர்.எம்.வீரப்பனை முன் நிறுத்தப் போகிறார் என்று ஒரு பரபரப்பு எழுந்த நேரம் அது. ஆர்.எம். வீரப்பன் தான் அப்போது மாபெரும் அரசியல் ஹீரோ. அப்போது அவரின் வீட்டின் முன் நிருபர்கள் தவம் கிடப்போம்.\nஎங்களிடையே இரு பெரியவர்களும் வந்து கலந்து நிற்பார்கள். அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாய் எங்களுக்கு நெருக்கமானார்கள்.\nவீரப்பனை யார் யார் சந்திக்க வருகிறார்கள் என்பதை கண்காணிப்பது தான் இவர்களுக்கு வேலை. 24 மணி நேரமும் ஷிப்ட் முறையில் அந்த வீட்டின் முன்போ, தெரு முனையிலோ நின்று கொண்டிருக்க வேண்டும். இது தான் அவர்களுக்குத் தரப்பட்ட வேலை.\nஅந்த இரு பெரியவர்களும் நம் உளவுப் பிரிவைச் சேர்ந்தவர்கள். ஒருவர் தனது 8 மணி நேர முடிந்த பின் சைக்கிளை எடுத்துக் கொண்டு கிளம்புவார். அப்போது இன்னொரு சைக்கிளில் அடுத்த ஷிப்ட்காரர் வந்துவிடுவார்.\nஎக்ஸ்ட்ரா 'வரும்படி' இல்லாத போலீஸ் வேலை இது. இதனால் இவர்களுக்கு ஒரு டிவிஎஸ் 50க்குக் கூட வழியில்லை. மி்ஞ்சியது ஓட்டை சைக்கிள் தான்.\nஇது தான் நமது உளவுப் பிரிவின் அப்பட்டமான- உண்மை நிலை.\nஉளவுப் பிரிவின் மூத்த அதிகாரிகளிடம் பேசியபோது கிடைத்த தகவல்கள் இன்னும் கொடுமையானவை.\nபெரும்பாலும் உளவுப் பிரிவுக்கு மாற்றப்படும் போலீசார் யார் தெரியுமா.. உடல் நலமில்லாதவர்கள், பிஸிகல் பிட்னஸ் இல்லாதவர்கள், ஓட முடியாதவர்கள், ஆஸ்துமா போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிட்டவர்கள் தான்.\nஇவர்களால் இனி போலீஸ் வேலையில் இருக்க முடியாது என்ற நிலை வந்துவிட்டால் அவர்கள் மாற்றப்படும் துறை தான் உளவுப் பிரிவு.\nஇப்படிப்பட்ட ஒரு போர்ஸை வைத்துக் கொண்டு தான் நம் நாட்டை பாதுகாத்துக் கொண்டிருக்கிறார்கள் நமது அரசுகள்.\nஇதற்கு மத்திய உளவுப் பிரிவான ஐ.பியும் ஒன்றும் சளைத்தது அல்ல. அங்கும் இதே நிலைமை தான். ஆனால், அவர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் தரப்படுவதும் கொஞ்சம் நவீன கருவிகள் தரப்பட்டுள்ளதும் தான் வித்தியாசம்.\nஇந்தக் கருவிகளில் போன் ஒட்டுக் கேட்கும் கருவிகளும் அடக்கம். இது தரப்பட்டது சமூக விரோதிகளை, தேச விரோதிகளை கண்காணிக்க. ஆனால், ஐபி இதைப் பயன்படுத்துவது பெரும்பாலும் எதிர்க் கட்சியினரைக் கண்காணிக்கத் தான்.\nஇப்படிப்பட்ட ஒரு மட்டமான சிஸ்டத்திலும் கூட ஐபியும் மாநில உளவுப் பிரிவுகளும் இந்த அளவுக்காவது செயல்பட்டுக் கொண்டிருக்கக் காரணம், அதில் கொஞ்சநஞ்சம் மிஞ்சியிருக்கும் மிகச் சிறந்த அதிகாரிகள், ஊழியர்கள், மிகச் சிறந்த மூளைகள், உண்மையிலேயே நாட்டை நேசிக்கும் நல்ல மனமுடையவர்கள் தான்.\nஇவர்களும் இல்லாவிட்டால் இந்த உளவுப் பிரிவுகள் என்றோ தனது முழு அர்த்தத்தையும் இழந்திருக்கும். மும்பையில் நடந்திருக்கும் இந்த புதிய வகையான தாக்குதல் இனி வரப் போகும் தாக்குதலுக்கு ஒரு முன்னோடியாகத்தான் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.\nகடல் வழியாக வந்து தாக்குவார்கள் என்று நம்மில் யாருமே கனவு கூட கண்டதில்லை. ஆனால், தீவிரவாதிகள் புதிய புதிய யுத்திகளை கண்டுபிடிப்பதிலும் அமலாக்குவதிலும் எங்கோ போய்க் கொண்டிருக்கிறார்கள்.\nஅவர்களிடம் உள்ள கருவிகள் மூக்கில் விரலை வைக்க செய்கின்றன. சாட்டிலைட் போன்கள், ஜிபிஎஸ் சிஸ்டம், பிளாக்பெர்ரி மொபைல்கள்... இதையெல்லாம் நமது உளவுப் பிரிவினரில் பெரும்பாலானவர்கள் பார்த்து மட்டுமல்ல, கேள்விப்பட்டது கூட இல்லை.\nநம் உளவுப் பிரிவினரில் எத்தனை பேருக்கு இன்டர்நெட்டையாவது பயன்படுத்தத் தெரியும்\nஐபி அட்ரஸை காப்பியடித்து போலி ஐபியை உருவாக்கி வேறு ஒருவரின் பெயரால் மெயில் அனுப்புகிறார்கள், வாய்ஸ் ரெகக்னிசன் சாப்ட்வேரை பயன்படுத்துகிறார்கள், போலி கிரெடிட் கார்டுகளை உருவாக்குகிறார்கள், வங்கதேசத்தின் சிம் கார்டை மாற்றியமைத்து லோக்கல் காலில் பேசுகிறார்கள்...\nஏகே 47 உள்பட நவீன ரக துப்பாக்கிகள், ராக்கெட் லாஞ்சர்கள், கிரனைட்டுகள், படகுகள் இயக்குவது உள்ளிட்ட கடுமையான பயிற்சி என ஒரு கமாண்டோக்கள் அளவுக்குத் தயாராக்கப்பட்டு, மதத்தின் பெயரால் உயிரையும் தர மூளைச் சலவை செய்யப்பட்டு வந்திறங்கும் இவர்கள் நவீன யுக தீவிரவாதிகள்.\nநம் போலீசாரில் பெரும்பாலானவர்களிடம் உள்ள துப்பாக்கி முதலாம் உலகப் போரில் அறிமுகமான .303 ரகத்தைச் சேர்ந்தது. ஒரு குண்டை சுட்டுவிட்டு அடுத்த குண்டை லோட் செய்வதற்குள் தீவிரவாதி நடந்தே அடுத்த தெருவுக்குப் போயிருப்பான். இதை நான் கிண்டலுக்காக எழுதவில்லை. நான் அந்த மனநிலையிலும் இல்லை. நம் இயலாமையை நினைத்து மனம் கணத்துப் போய் இதைச் சொல்கிறேன். (உளவுப் பிரிவும் ஓட்டை சைக்கிளிலும் என்ற தலைப்பே கூட எனக்கு மிகுந்த வருத்தம் தருவதே, விஷயத்தை நேரடியாக சொல்ல எனக்கு வேறு ஏதும் தோன்றவில்லை)\nஎன்னைப் போலவே எத்தனையே இந்தியர்கள், இயலாமையால் மனம் வெதும்பியுள்ளனர்.\nநமது உளவுப் பிரிவு, போலீஸ் படைகளின் இந்த நிலைமைக்கு அவர்கள் யாரும் காரணமில்லை. நம் அரசியல்வாதிகள் தான் காரணம்.\nநமது பிறப்புச் சான்றிதழைப் பெறுவதில் ஆரம்பிக்கும் லஞ்சம் சுடுகாட்டையும் தாண்டி இறப்புச் சான்றிதழ் பெறுவது வரை தொடர்கிறது. நமது போலீஸ் துறையையும் உளவுப் பிரிவையும் கெடுத்ததில் இந்த ஊழல் லஞ்சத்துக்கு முக்கிய பங்குண்டு.\nமும்பை போலீசில் மிகச் சிறந்த அதிகாரியான ஹேமந்த் கர்கரேவை பலி கொண்டதில் புல்லட் ப்ரூப் ஜாக்கெட்டுக்கும் முக்கிய பங்குண்டு. ஆச்சரியமாக இருக்கிறதா... மும்பை தீவிரவாத எதிர்ப்புப் படைக்கு வாங்கப்பட்ட புல்லட் புரூப் ஜாக்கெட்டுகள் அவ்வளவு மட்டமானவை. இந்த ஜாக்கெட்களும் தலைக் கவசங்களும் தரமானவையாக இல்லை என்று மும்பை போலீசார் தங்களது அரசுக்குத் தெரிவித்தும் அதையே வாங்கியிருக்கிறது அரசு.\nவேறி வழியில்லாமல் அதைத் தான் அவர்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இதை அணிவதற்குப் பதில் சும்மாவே போய் தீவிரவாதிகளை எதிர்கொள்ளலாம் என்று ஹேமந்த் நினைத்தாரோ என்னவோ. முதலில் அதை அணிந்தவர் பின்னர் அதைக் கழற்றிப் போட்டுவிட்டு கையில் பிஸ்டலோடு சென்றவர் தீவிரவாதிகளின் புல்லட்டுக்கு பலியாகிவிடடார்.\nமுதலில் நம் போலீசாரின் பயிற்சிகளை, ஆயுதங்களை பலப்படுத்துவதும், உளவுப் பிரிவை வலுவாக்குவதுமே இந்த நவீன யுக தீவிரவாதிகளை எதிர்கொள்ள ஒரே வழி.\nதேசிய அளவில் தீவிரவாதிகளை எதிர்கொள்ள ஒரு பெடரல் ஏஜென்சி உருவாக்கப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார்.\nஇது குறித்து சில உளவுப் பிரிவினரோடு பேசுகையில், அவர்கள் இந்த ஏஜென்சியை வரவேற்பதை உணர முடிந்தது. அதே நேரத்தில் இந்த அமைப்பு எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பது குறித்தும் சில தகவல்களைத் தந்தனர். அவர்கள் சொன்னது இது தான்:\nஇந்த ஏஜென்சி வெறும் விசாரணை அமைப்பாக இருந்துவிடக் கூடாது. அது உளவு வேலைகளையும் சேர்த்து பார்க்க வேண்டும், கைதுகள் செய்யவும், தாக்குதலை நடத்தவும், சட்டத்தை அமலாக்கவும் அந்த அமைப்புக்கு அதிகாரம் இருக்க வேண்டும்.\nஇதற்கு 3 முக்கிய விஷயங்கள் வேண்டும். ஒன்று நிறைய பணம். இரண்டாவது பொலிடிக்கல் வில். மூன்றாவது அரசியல் தலையீடு இல்லாமை.\nஇந்தப் பிரிவில் சேர ஆளும் கட்சியின் மாவட்டச் செயலாளர்களிடம் பரிந்துரை லெட்டர் வாங்கி வர வேண்டும் என்ற நிலைமையோ அல்லது இதில் உள்ள பணியிடங்களை நிரப்பவும் இட ஒதுக்கீடோ வந்துவிடக் கூடாது. மிகச் சிறந்த மூளைகளை, தேசப்பற்று மிக்க இளைஞர்களை இதில் சேர்க்க வேண்டும்.\nஇந்த ஏஜென்சி பெயரளவுக்கு இல்லாமல் ஆயிரக்கணக்கானவர்களைக் கொண்டிருக்க வேண்டும். நாட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம் ரகசியமாய் ஊடுருவி பரவ வேண்டும்.\nஇவர்களுக்கு மிகச் சிறந்த உளவுப் பயிற்சிகள், அதி நவீனக் கருவிகள் தரப்பட வேண்டும். பல மொழி அறிவு கொண்டவர்களாக, சங்கேத-ரகசிய குறியீடுகளை பிரேக் செய்பவர்களாக, எளிதில் மக்களுடன் கலந்துவிடுபவர்களாக இருக்க வேண்டும்.\nரா, ஐபியில் இந்தப் பயிற்சிகள் எல்லாம் தரப்படுவது தான். ஆனால், அவர்களுக்கு போதிய ஆள் பலம் இல்லை. (எதி்ர்க் கட்சியினரை உளவு பார்க்கவே இவர்களது எண்ணிக்கை நமக்குப் போதாதே)\nஇதனால் ஐபிக்கு போதிய ஆள் பலத்தைத் தருவதும் தீவிரவாதத்தை எதிர்க்க சீரியஸான ஒரு ஏஜென்சியை உருவாக்குவதும் தான் இந்த நவீன யுக தீவிரவாதத்தை எதிர்கொள்ள ஒரே வழி என்றனர் அந்த உளவுப் பிரிவினர்.\nஅரசியல் தலையீடு இல்லாத ஒரு முழுமையான அதி நவீன உளவு-தாக்குதல் ஏஜென்சி தான் இந்த நாட்டையும் மக்களையும் காக்க முடியும்.\nஇல்லாவிட்டால் அப்போதைக்கு நடந்த தீவிரவாதத் தாக்குதலை நினைவூட்டி பிரச்சாரம் செய்து தேர்தல்களில் ஒருவர் மாற்றி ஒருவர் வெல்லலாம்.. வெவ்வேறு கட்சிகள் ஆட்சிக்கு வரலாம், ஆனால் நாடு மெல்ல சிதையும்.\nமக்கள் ஜனநாயகத்தில் நம்பிக்கை இழக்கும் நிலை வரும். இதைத் தான் தீவிரவாதம் எதிர்பார்க்கிறது.\nஊழலோ, லஞ்சமோ, ஜாதி அரசியலோ, மத அரசியலோ.. என்ன தான் செல்லறித்தாலும் ஜனநாயகம் என்பது இந்தியாவுக்குக் கிடைத்த மாபெரும் ஆயுதம். அந்த ஆயுதம் நம்மிடம் இருக்கும் வரை தான் இத்தனை மாநிலங்களும் இணைந்து நாம் ஒரு நாடாக இருக்க முடியும்.\nஜனநாயகத்தை இழந்துவிட்டால் நாடு துண்டு துண்டாகும்.. பாகிஸ்தான் ஐஎஸ்ஐயின் 'கிராண்ட் பிளானே' இது தான் என்கிறார்கள் உளவுப் பிரிவினர்.\nஇதற்கு பலியாகாமல் தப்ப தீவிரவாதத்தை நாம் தீவிரமாக, நேருக்கு நேர் எதிர்கொள்வது தான் ஒரே வழி. அதற்கு முதலில் நமது உளவு கட்டமைப்பை வலுப்படுத்துவது மிக மிக மிக அவசியம்.\nஉளவுத்துறை மோசமாகக்காரணமே அரசியல்வாதிகள் அவர்கள் சுயநலனுக்காக உளவுத்துறையை பயன்படுத்த ஆரம்பித்ததுதான்.\nஇப்படி ஒரு உளவுதுறையை வைச்சிகிட்டு நாட்ட எப்படி காப்பாத்த முடியும்..\nword verification வைப்பதற்கு சாரி. spam மெசெஜ் அதிகம் வருவதால் வைக்க பட்டு உள்ளது புரிந்துணர்வுக்கு நன்றி \nபோங்காடா போய் ஓட்டு போடுங்க (1)\nதாமிரா,அப்துல்லாஹ், பரிசல்காரன் இங்கே கவனிக்கவும்....\nஉளவுப் பிரிவும் ஓட்டை சைக்கிளிலும்\nவேலன்:-பைல்களை வேண்டிய அளவு பிரிக்க -சேர்க்க -தகவல்களை மறைத்துவைக்கFile friend\nபொழுதுகளைக் களவாடிய டூரிங் டாக்கீஸ்\nMicrosoft Office: ரிப்பன் மெனுவில் தேவையான கட்டளைகளை கொண்ட புதிய டேபை உருவாக்க..\nதாமிரா,அப்துல்லாஹ், பரிசல்காரன் இங்கே கவனிக்கவும்....\nஉளவுப் பிரிவும் ஓட்டை சைக்கிளிலும்\nபோங்காடா போய் ஓட்டு போடுங்க (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cinemaparvai.com/tabu-sexualy-harrased-by-a-fan/", "date_download": "2018-04-26T12:53:27Z", "digest": "sha1:ISSV3V764UL7W7JM6G7VTNMN44IVUGEB", "length": 8499, "nlines": 136, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai விமான நிலையத்தில் தபூவுக்கு ஏற்பட்ட தர்மசங்கடம்!! - Cinema Parvai", "raw_content": "\nகுழந்தை போல நடந்து கொண்ட யோகி பி\nதனுஷ் படத்தை மே 30ல் வெளியிடத் திட்டம்\nடீசர் ரிலீஸ்க்கு தயாராகும் பரத் படம்\nஉறுதியானது ரஜினி – விஜய் சேதுபதி மாஸ் கூட்டணி\nமுன்னணி கதாநாயகிக்கு விரைவில் திருமணம்\nமிஸ்டர் சந்திரமௌலி படத்தின் இசை வெளியீட்டு விழா\nவிமான நிலையத்தில் தபூவுக்கு ஏற்பட்ட தர்மசங்கடம்\nஇந்தி பட உலகின் முன்னணி கதாநாயகியாக விளங்கியவர் தபு. தமிழில் “இருவர்”, “காதல் தேசம்”, “கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்” போன்ற படங்களில் நடித்து தென்னகத்திலும் புகழ் பெற்றார். தற்போது இந்தியில் மட்டும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.\n1998-ம் வருடம் இவர், “ஹம் சாத் சாத் ஹைன்” என்ற இந்தி படத்தில் நடித்தபோதுதான் மான் வேட்டை வழக்கில், சல்மான்கான் சிக்கினார். 19 வருடங்கள் கழித்து அந்த வழக்கில் சாட்சி சொல்வதற்காக தபு, ஜோத்பூர் விமான நிலையத்துக்கு சென்றார்.\nஅப்போது ஒரு ரசிகர், தபுவிடம் தவறாக நடக்க முயற்சி செய்திருக்கிறார். விமான நிலையத்தில் தபு நடந்து சென்று கொண்டிருந்தபோது, அவருடைய பாதுகாவலர்களையும் மீறி ஒரு ரசிகர் தபுவை நெருங்கி தொல்லை தந்ததாக கூறப்படுகிறது. அப்போது சுதாரித்துக்கொண்ட பாதுகாவலர்கள், அந்த நபரை பிடித்து தலைக்கு மேல் தூக்கி வீசி இருக்கிறார்கள்.\nஎதிர்பாராமல் நடந்த இந்த சம்பவத்தால் தபு அதிர்ச்சி அடைந்திருக்கிறார். அந்த நேரத்தில் அவருடன் வந்த நடிகைகள் சோனாலி, நீலம் ஆகியோரும் இதனால் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.\nஇந்த சம்பவம் பற்றி மூவரும் கூறும்போது, “நடிகைகளுக்கு போதுமான பாதுகாப்பு இல்லை. நடிகைகளும் மனிதர்கள்தான் என்பதை சில ரசிகர்கள் மறந்து விடுகிறார்கள். அளவுக்கு அதிகமான கற்பனையில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களே இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். அவர்களை எப்படி திருத்துவது அந்த ரசிகருக்கும் குடும்பம் இருக்கும், சகோதரிகள் இருப்பார்கள். அவர்களிடம் அவர் இப்படித் தான் நடந்து கொள்வாரா அந்த ரசிகருக்கும் குடும்பம் இருக்கும், சகோதரிகள் இருப்பார்கள். அவர்களிடம் அவர் இப்படித் தான் நடந்து கொள்வாரா” என ஆவேசமாக கேட்டார்கள்.\nஇந்த சம்பவத்தால் ஜோத்பூர் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nPrevious Postகாவிரிக்காக விழிப்புணர்வு பாடலை உருவாக்கும் இயக்குநர் ராகேஷ்.. Next Postதாய்ப்பாலும், நதிநீரும் வேறு வேறு அல்ல - காவிரிக்காக பிரகாஷ்ராஜ் அறிக்கை\n20 வயதான துளசி (சாய் பல்லவி) மற்றும் கிருஷ்ணா (நாக...\nமதன் கார்க்கியின் கிண்டி பொறியியல் கல்லூரி பாடல்\nகெளதம் வாசுதேவ் மேனனின் பாராட்டைப் பெற்ற சங்கரின் உதவி இயக்குனர்\nகுழந்தை போல நடந்து கொண்ட யோகி பி\nதனுஷ் படத்தை மே 30ல் வெளியிடத் திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-04-26T13:40:01Z", "digest": "sha1:I552T5LRDKVCIWUIK4EPLWRKCSA4OWQY", "length": 14116, "nlines": 158, "source_domain": "ta.wikipedia.org", "title": "சுவரெலும்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇடது சுவரெலும்பு. வெளி மேற்பரப்பு.\nஇடது சுவரெலும்பு. உள் மேற்பரப்பு.\nசுவரெலும்பு (Parietal bone) மனித மண்டையோட்டின் பக்கவாட்டுப் பகுதியையும் மேற்பகுதியையும் ஆக்குகின்ற எலும்பாகும். இது வலது, இடது என இரு எலும்புகளாகக் காணப்படுகிறது. ஒவ்வொரு எலும்பும் ஒழுங்கற்ற நாற்கர வடிவுடையது; இரண்டு மேற்பரப்புக்கள், நான்கு ஓரங்கள், நான்கு கோணங்கள் கொண்டது.\nவெளிமேற்பரப்பு குவிவானதாகவும் வழுவழுப்பானதாகவும் காணப்படும். எலும்பின் மையப்பகுதிக்குச் சற்றுக் கீழே நெடுக்கையாக எலும்பைக் குறுக்காகப் பிரித்து இரண்டு வளைந்த வரிகள் காணப்படும் இவை மேல், கீழ் கடைநுதல்வரிகள் (superior and inferior temporal lines) எனப்படும். மேற் கடைநுதல்வரியில் கடைநுதற் தசைப்படலமும் (temporal fascia), கீழ் கடைநுதல்வரியில் பொட்டுத்தசையின் மேற்பாகமும் (temporal muscle) தொடுக்கப்படுகிறது. மேற் கடைநுதல்வரியின் மேலே புறப்பக்க மேடு (parietal eminence) என அழைக்கப்படும் ஒரு உயர்வு காணப்படும். மேற் கடைநுதல்வரியின் மேலே உள்ள அனைத்துப்பகுதிகளும் மேல் மண்டையோட்டுத் தசைநாண்படலத்தால் (epicranial aponeurosis) மூடப்பட்டிருக்கும். வரிகளின் கீழே உள்ள பகுதி பொட்டுக் குழிவின் (temporal fossa) ஒரு பகுதியை ஆக்குகிறது, இங்கே பொட்டுத்தசை இணைக்கப்படுகிறது.\nபின்புறப் பகுதியில் எலும்பின் மேல் வகிட்டு ஓரத்தின் அருகே புறப்பக்கத் துவாரம் (parietal foramen) காணப்படுகிறது, இது மேல் வகிட்டுக் காற்றுக்குடாவுடன் (superior sagittal sinus) இணையும் தமனியையும் சிலவேளைகளில் பிடரி நாடியின் சிறிய பிரிவையும் தன்னூடே புகவிடுகிறது.\nஉள்மேற்பரப்பு குழிவானது, இங்கு காணப்படும் சிறு மடிப்புக்களும் பள்ளங்களும் மூளையின் மடிப்புகளுக்குரியதாக விளங்குகிறது, மேலும் எண்ணிக்கையில் கூடியளவில் மிகச்சிறிய சுவடுகள் நடு மூளையமென்சவ்வுக் குருதிக்குழாய்களின் சிறிய கிளைகளுக்குரியதாகும், இவை ஆப்புருக் கோணத்தில் (sphenoidal angle) இருந்து மேல் நோக்கியும் பின் நோக்கியும் செல்கின்றன, மேலும் செதிலுரு ஓரத்தின் மைய மற்றும் பிற்புறப் பகுதிகளில் இருந்தும் செல்கின்றன.\nமேல் ஓரத்தில் காணப்படும் வரிப்பள்ளம் எதிர்ப்பக்க சுவரெலும்புடன் சேர்ந்து உச்சி வகிட்டுக்குழியை (sagittal sulcus) ஆக்குகிறது. உச்சி வகிட்டுக்குழியின் விளிம்புகளும் முன் முகடும் மூளைய வளைமடிப்புடன் (falx cerebri) தொடுக்கப்பட்டு மேல் வகிட்டுக் காற்றுக்குடாவை (superior sagittal sinus) உருவாக்குகின்றது.\n1 - இடவலப் பிணைப்பு , 2 - வகிட்டுப் பிணைப்பு, 3 - கவைப் பிணைப்பு\nமேல்வகிட்டு ஓரம் , இங்கு இரு சுவர் எலும்புகளும் பல்வடிவப் பிணைப்புகள் மூலம் இணைக்கப்படுவதன் மூலம் வகிட்டுப் பிணைப்பு (sagittal suture) உருவாகிறது.\nசெதிலுரு ஓரம் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது,\nமுற்பக்கம் : மெல்லியது, கூரானது, வெளிப்புறமாக சரிவான விளிம்பைக் கொண்டது; ஆப்புரு எலும்பின் பெருஞ் சிறகின் நுனியுடன் ஒன்றன் மேல் ஒன்றாகிக் காணப்படுகிறது.\nநடுப்பக்கம்: வளைவானது, வெளிப்புறமாக சரிவான விளிம்பைக் கொண்டது; கடைநுதல் எலும்பின் செதிலுருப் பகுதியுடன் ஒன்றன் மேல் ஒன்றாகிக் காணப்படுகிறது.\nபிற்பக்கம்: தடித்தது, கருக்கானது, கடைநுதல் எலும்பின் முலையுருப் பகுதியுடன் மூட்டப்படுகிறது.\nமுன்புற ஓரம் ஆழ்ந்த கருக்கான தோற்றமளிக்கும், நுதல் எலும்புடன் பொருத்தப்படுவதன் மூலம் அரைப்பகுதி இடவலப் பிணைப்பை (Coronal suture) உருவாக்குகிறது. இடவலப் பிணைப்புடன் வகிட்டுப்பிணைப்பு சேரும் பகுதி ஆங்கில எழுத்து ‘T’ வடிவ தோற்றம் கொண்டிருக்கும், இது முன்னுச்சி (bregma) என அழைக்கப்படும்.\nபிடரி ஓரம் நீண்ட பல் போன்ற தோற்றமுடைய விளிம்புகளைக் கொண்டது, பிடரெலும்புடன் மூட்டப்படுவதன் மூலம் ஒரு பகுதி கவைப்பிணைப்பை (lambdoid suture) உருவாக்குகிறது, கவைப்பிணைப்பும் வகிட்டுப்பிணைப்பும் சேரும் பகுதி கிரேக்க எழுத்து “λ” (இலம்டா) போன்ற தோற்றமுடையதால் இலம்டா என்று அழைக்கப்படும்.\nநான்கு கோணங்கள்: முன்கோணம், ஆப்புருகோணம், பிடரிக்கோணம், முலையுருக் கோணம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 02:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cinemaparvai.com/sivakarthikeyan-answered/", "date_download": "2018-04-26T13:16:27Z", "digest": "sha1:ROGMIOF3FEOUEJMWA6WLPPMCHTSI2RXU", "length": 7302, "nlines": 136, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai சிவகார்த்திகேயன் கூறிய அதிரடி பதில் - ரஜினியா, கமலா? - Cinema Parvai", "raw_content": "\nகுழந்தை போல நடந்து கொண்ட யோகி பி\nதனுஷ் படத்தை மே 30ல் வெளியிடத் திட்டம்\nடீசர் ரிலீஸ்க்கு தயாராகும் பரத் படம்\nஉறுதியானது ரஜினி – விஜய் சேதுபதி மாஸ் கூட்டணி\nமுன்னணி கதாநாயகிக்கு விரைவில் திருமணம்\nமிஸ்டர் சந்திரமௌலி படத்தின் இசை வெளியீட்டு விழா\nசிவகார்த்திகேயன் கூறிய அதிரடி பதில் – ரஜினியா, கமலா\nசிவகார்த்திகேயன் சினிமாவில் திறமை மற்றும் கடின உழைப்பால் ஜெயித்து விடலாம் என்பதற்கு உதாரணம். மக்களுக்கு இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் அவர் மக்களின் செல்லப்பிள்ளை.\nதொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலக்கி ஒவ்வொரு படியாக அந்த துறையில் முன்னேறி மக்களின் பார்வைக்கு வந்தவர். இப்போது சினிமாவிலும் ரசிகர்களுக்கு ஒரு உதாரணமாக இருக்கிறார். படங்களில் தண்ணி அடிப்பது, சிகரெட் பிடிப்பது, பெண்களை கிண்டல் செய்வது போன்ற விஷயங்களை தவிர்த்து வருகிறார்.\nஅண்மையில் சினிமா பயணம் குறித்து பேட்டி கொடுத்தவரிடம் அரசியலில் ரஜினி, கமல்இதில் யாருக்கு ஆதரவு என கேட்டுள்ளனர். அதற்கு சிவகார்த்திகேயன், இருவரும் அவர்களின் நிலைப்பாடு என்ன என்பதை இன்னும் சொல்லவில்லை. நான் ஓட்டு போடுவதை என் வீட்டில் கூட சொல்ல மாட்டேன். ஓட்டு போடுவது என்பது மிகப்பெரிய பொறுப்பு. அது யாருக்கு என்பது எனக்கு மட்டுமே தெரிஞ்ச உண்மை, ரகசியம் என்று கூறியுள்ளார்.\nPrevious Postஅஜித், முருகதாஸ் கூட்டணி மீண்டும் அமையாமல் இருக்க என்ன காரணம் Next Postகாவிரி மேலாண்மை வாரியம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு கருத்து\nவிஞ்ஞானம் சம்பந்தப்பட்ட கதையில் நயன்தாரா\nவிளையாட்டு போட்டிகளில் மிகுந்த ஆர்வம் கொண்ட சிவகார்த்திகேயன்\n20 வயதான துளசி (சாய் பல்லவி) மற்றும் கிருஷ்ணா (நாக...\nமதன் கார்க்கியின் கிண்டி பொறியியல் கல்லூரி பாடல்\nகெளதம் வாசுதேவ் மேனனின் பாராட்டைப் பெற்ற சங்கரின் உதவி இயக்குனர்\nகுழந்தை போல நடந்து கொண்ட யோகி பி\nதனுஷ் படத்தை மே 30ல் வெளியிடத் திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://moonramkonam.com/tag/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-04-26T12:56:38Z", "digest": "sha1:EIBD5SA26BIAXJCOFSBH7IKK7XPTHLXN", "length": 11926, "nlines": 176, "source_domain": "moonramkonam.com", "title": "வார ராசி பலன் Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nவார பலன் – 22.4.18 முதல் 28.4.18 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவார ராசி பலன் 15.4.18 முதல் 21.4.18வரை அனைத்து ராசிகளுக்கும்\nதமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2018 -2019 விளம்பி வருஷம் மகர ராசி\nமுட்டையில் வெள்ளைக் கருவும் மஞ்சள் கருவும் திரவ நிலையில் இருந்தாலும், ஒன்றுடன் ஒன்று கலப்பதில்லை –ஏன்\nபுத்தாண்டு பலன்கள்– 20182019 –விளம்பி வருஷம் மீன ராசி\nவார ராசி பலன் 8.4.18 முதல் 14.4.18 வரை-அனைத்து ராசிகளுக்கும்\nவார ராசி பலன் 8.4.18 முதல் 14.4.18 வரை-அனைத்து ராசிகளுக்கும்\nTagged with: ராசி பலன், வார ராசி பலன்\nவார ராசி பலன் 8.4.18 முதல் [மேலும் படிக்க]\nவார ராசி பலன் 25.3.18 முதல் 1.4.18 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவார ராசி பலன் 25.3.18 முதல் 1.4.18 வரை அனைத்து ராசிகளுக்கும்\nTagged with: ராசி பலன், வார பலன், வார ராசி பலன்\nவார ராசி பலன் 25.3.18 முதல் [மேலும் படிக்க]\nவார ராசி பலன் 11.3.18 முதல் 17.3.18 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவார ராசி பலன் 11.3.18 முதல் 17.3.18 வரை அனைத்து ராசிகளுக்கும்\nTagged with: ராசி பலன், வார பலன், வார ராசி பலன்\n11.3.18 முதல் 17.3.18 வரை – [மேலும் படிக்க]\nவார ராசி பலன் 4.3.18 முதல் 10.3.18 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவார ராசி பலன் 4.3.18 முதல் 10.3.18 வரை அனைத்து ராசிகளுக்கும்\nTagged with: ராசி பலன், வார பலன், வார ராசி பலன்\n4.3.18 முதல் 10.3.18 வரையிலான வார [மேலும் படிக்க]\nவார ராசி பலன் 25.2.18 முதல் 3.3.18 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவார ராசி பலன் 25.2.18 முதல் 3.3.18 வரை அனைத்து ராசிகளுக்கும்\nTagged with: ராசி பலன், வார பலன், வார ராசி பலன்\n25.2.18 முதல் 3.3.18 வரையிலான வார [மேலும் படிக்க]\nவார ராசி பலன்18.2.18 முதல் 24.2.18 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவார ராசி பலன்18.2.18 முதல் 24.2.18 வரை அனைத்து ராசிகளுக்கும்\nTagged with: ராசி பலன், வார பலன், வார ராசி பலன்\nவார ராசி பலன்18.2.18 முதல் 24.2.18 [மேலும் படிக்க]\nவார ராசி பலன்- 11.2.18 முதல் 17.2.18வரைஅனைத்து ராசிகளுக்கும்\nவார ராசி பலன்- 11.2.18 முதல் 17.2.18வரைஅனைத்து ராசிகளுக்கும்\nTagged with: ராசி பலன், வார பலன், வார ராசி பலன்\nவார ராசி பலன்- 11.2.18 முதல் [மேலும் படிக்க]\nவார ராசி பலன் 4.2.18 முதல் 10.2.18 வரை- அனைத்து ராசிகளுக்கும்\nவார ராசி பலன் 4.2.18 முதல் 10.2.18 வரை- அனைத்து ராசிகளுக்கும்\nTagged with: ராசி பலன், வார பலன், வார ராசி பலன்\n4.2.18 முதல் 10.2.18 வரை- :வார [மேலும் படிக்க]\nவார ராசி பலன் 28.1.18 முதல் 3.2.18 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவார ராசி பலன் 28.1.18 முதல் 3.2.18 வரை அனைத்து ராசிகளுக்கும்\nTagged with: ராசி பலன், வார பலன், வார ராசி பலன்\n28.1.18 முதல் 3.2.18 வரையிலான் வார [மேலும் படிக்க]\nவார பலன் – 22.4.18 முதல் 28.4.18 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவார ராசி பலன் 15.4.18 முதல் 21.4.18வரை அனைத்து ராசிகளுக்கும்\nதமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2018 -2019 விளம்பி வருஷம் மகர ராசி\nமுட்டையில் வெள்ளைக் கருவும் மஞ்சள் கருவும் திரவ நிலையில் இருந்தாலும், ஒன்றுடன் ஒன்று கலப்பதில்லை –ஏன்\nபுத்தாண்டு பலன்கள்-- 20182019 –விளம்பி வருஷம் மீன ராசி\nதமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2018-2018 விளம்பி வருஷம் கும்ப ராசி\nபுத்தாண்டு பலன் விளம்பி வருஷம் 2018-19 தனுசு ராசி\nபுத்தாண்டு பலன்கள்- விளம்பி வருஷம் 2018-2019 விருச்சிகம்\nபுத்தாண்டு பலன் விளம்பி வருஷம்- 2018-2019 துலாம் ராசி\nபுத்தாண்டு பலன்கள் -2018-2019 விளம்பி வருஷம் கன்னி ராசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://unarvugal.blogspot.com/2004_06_20_archive.html", "date_download": "2018-04-26T12:56:31Z", "digest": "sha1:W7USCMLQJE4RPZ6XT7R7PEXC4T3AV236", "length": 7137, "nlines": 78, "source_domain": "unarvugal.blogspot.com", "title": "உணர்வுகள் <$BlogRSDURL$>", "raw_content": "\nகவிதை மற்றும் பல்சுவை ......\nஒரு பதினைந்து இருபது வருடங்களா() ஒரு சந்தேகம் இருந்தது. அது ஒரு வழியா இதோ இப்போ ஒரு பத்து நிமிடங்கள் முன்னர் தான் தீர்ந்தது. என்னன்னு கேட்கிறீங்களா) ஒரு சந்தேகம் இருந்தது. அது ஒரு வழியா இதோ இப்போ ஒரு பத்து நிமிடங்கள் முன்னர் தான் தீர்ந்தது. என்னன்னு கேட்கிறீங்களா அது வந்துங்க இன்னைக்கி கல்லூரிவிட்டு வீட்டுக்கு வந்து வயித்தை ஒரேயடியா நிரப்பிட்டேன். உடனே நித்திரா தேவி தாலாட்டு பாட தொடங்கிட்டாங்க.என்னடா நிறைய வேலை இருக்கேன்னு..காலார (கால்ரா இல்லைங்க அது வந்துங்க இன்னைக்கி கல்லூரிவிட்டு வீட்டுக்கு வந்து வயித்தை ஒரேயடியா நிரப்பிட்டேன். உடனே நித்திரா தேவி தாலாட்டு பாட தொடங்கிட்டாங்க.என்னடா நிறைய வேலை இருக்கேன்னு..காலார (கால்ரா இல்லைங்க) ஒரு நடை போகலாம்னு கிளம்பினேன்.\nகோடைமழை ஏற்கனவே பெய்துவிட்டதால பச்சைபசேல்ன்னு இந்த ஊரே பார்க்க அழகா இருக்கு.ஒரு பத்து அடி நடந்ததும் கூடவே \"நடைமனிதன்\" (அதாங்க walkman) எடுத்துட்டு வந்திருக்காலமேன்னு யோசிச்சேன். கொஞ்ச நேரத்துலேயே அது தேவையில்லைனு தெரிந்தது. இயற்கை இன்னும் இங்க சீர்குலையவில்லை. குயில்களின் குரல்களும் மற்ற பறவைகளின் கிச்கிசு..ச்ச்ச்..சுசு... ஓசையும்/இசையும் என்னை எங்கேயோ அழைச்சிட்டு போய்யிடுச்சு. திடீர்ன்னு கொழுகொழுன்னு ரெண்டு அழகான முயல்கள். நல்ல filter காப்பி நிறத்தில். அட அதுங்களுக்கு Brownies- நு பேரே வச்சிட்டேன்.\nஉடனே முயல் ஆமை கதை தான் நினைவுக்கு வந்துச்சு. பிறகு TV சீரியல் கணக்கா ஆரம்ப பள்ளி தொடங்கி மேல்னிலைபள்ளி வரை நான் பார்த்த \"கூண்டில் அடைபட்ட முயல்கள்\" ஒவ்வொன்றாய் கண்ணீர் சிந்திச்சுங்க. சீமைபுல் தின்றுவிட்டு கூண்டுக்குள்ளே சுத்தி சுத்தி வருங்க. அப்ப வந்துச்சுங்க நம்ம சந்தேகம் என்னடா உண்மையிலேயே முயல்களால் ஓட முடியுமான்னு\nBrownies-ஐ பார்த்தவுடன் திரும்ப அதே சந்தேகம். மெல்ல மெல்ல அருகே போனென். அதுங்க என்னை கண்டுக்கிட்டதாவெ தெரியலை. இரண்டும் காதல் வசனம் பேசிகிட்டு இருந்துச்சோ என்னவோ அப்பப்போ பக்கவாட்டில் இருந்த புற்களை ஒரு கடி. ச்ரக் ச்ரன்னு ஒரு சத்தம்(என்னொட shoes தான்). காணவே காணோம் அப்பப்போ பக்கவாட்டில் இருந்த புற்களை ஒரு கடி. ச்ரக் ச்ரன்னு ஒரு சத்தம்(என்னொட shoes தான்). காணவே காணோம் போயே போச்என்னோட Brownies தங்களால் ஓட முடியும்ன்னு நிரூபித்து விட்டன .அதுங்களோட ஓட்டத்துக்கு முன்னாடி P.T. உஷா நிற்க முடியாது. ஒரு வழியா என் சந்தேகமும் தீர்ந்துச்சு.ஆனால் என் Brownies-அ மறுபடியும் பார்க்க முடியுமா\nவந்தே மாதரம் ~ சு.கார்த்திக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.nitharsanam.net/170775/news/170775.html", "date_download": "2018-04-26T13:11:05Z", "digest": "sha1:UK4R7EONLDNTHREVHXGQKZQEQBDWZA7L", "length": 6473, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "என் தம்பி இங்கிலீஷ் படத்துல நடிச்சுட்டான்: மோகன் ராஜா பெருமை..!! : நிதர்சனம்", "raw_content": "\nஎன் தம்பி இங்கிலீஷ் படத்துல நடிச்சுட்டான்: மோகன் ராஜா பெருமை..\n‘ஜெயம்’, ‘சந்தோஷ் சுப்ரமணியம்’, ‘வேலாயுதம்’, ‘தனி ஒருவன்’ உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியவர் இயக்குனர் மோகன் ராஜா. இவருடைய தம்பி ஜெயம் ரவி. மோகன் ராஜாவால் அறிமுகம் செய்யப்பட்ட ஜெயம் ரவி தற்போது பல வெற்றி படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.\nஜெயம் ரவி நடிப்பில் தற்போது ‘டிக் டிக் டிக்’ என்ற திரைப்படம் உருவாகி உள்ளது. சக்தி சௌந்தர் ராஜன் இயக்கியுள்ளார். இந்தியாவின் முதல் விண்வெளிப்படமாக உருவாகி இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. ஹாலிவுட் படங்களை மிஞ்சும் அளவிற்கு இப்படத்தின் டிரைலர் உருவாகி இருக்கிறது. இந்த டிரைலரை பார்த்த அனைவரும் பாராட்டி, புகழ்ந்து படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.\nஇந்நிலையில், ஜெயம் ரவியின் அண்ணன் மோகன் ராஜா, ‘என் தம்பி இங்கிலீஷ் படத்துல நடிச்சுட்டான்’ என்று பெருமையாக கூறியிருக்கிறார். மேலும், தமிழ் சினிமாவின் தரத்தின் அளவீட்டை உயர்த்தியதற்காக நன்றி என்றும் பதிவு செய்திருக்கிறார்.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nஉடலுறவின் போது எதுவெல்லாம் உங்கள் துணைக்கு பிடிக்கும்\nகர்ப்பகாலத்தில் தாம்பத்யம், அசைவம் சரியா\nமரண காமெடி- இது நம்ம ஊரு நடிகர்கள் – பழமார்நேரி பஞ்சாயத்து\nஇந்திய அரசியலில் ‘ஆளுநர்’ பதவிகள்\nநல்ல தூக்கத்துக்கு நாளை செய்ய வேண்டியதை எழுதுங்கள்\nதாம்பத்திய இன்பத்தின் போது தவிர்க்க வேண்டியவை\nசினிமா துறையில் இந்த வசனத்தை இவரை தவிர யாராலும் பேச முடியாது\nஉலக புகழ் பெற்ற குரங்கு செல்பி புகைப்பட வழக்கு : காப்புரிமை கோர முடியாது நீதிமன்றம் தீர்ப்பு\nஅணு சக்தி ஒப்பந்தம் மோசமானது என்றால் அமெரிக்க கையெழுத்திட்டது : ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி\nஇலங்கைப் பொலிஸாரின் பொருட்களை வைத்திருந்த பிரிட்டன் குடியுரிமை பெற்ற நபர் கைது\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.nitharsanam.net/178838/news/178838.html", "date_download": "2018-04-26T12:57:33Z", "digest": "sha1:ZFHS26YQBPQFZZCNEG5UG2Q76DFPEFFQ", "length": 10135, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஒரே நபருக்கு பல்வேறு பிரிவின் கீழ் எச்1பி விசா கேட்கும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் : அமெரிக்கா எச்சரிக்கை!! : நிதர்சனம்", "raw_content": "\nஒரே நபருக்கு பல்வேறு பிரிவின் கீழ் எச்1பி விசா கேட்கும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் : அமெரிக்கா எச்சரிக்கை\n‘‘ஒரே நபருக்கு பல்வேறு பிரிவின் கீழ் எச்1பி விசா கோரி தாக்கல் செய்யப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்’’ என அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவை (யுஎஸ்சிஐஎஸ்) துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் தங்கி பணியாற்ற எச்1பி விசா வழங்கப்பட்டு வருகிறது. அமெரிக்காவில் பணிபுரிய விரும்பும் இந்திய ஐடி ஊழியர்களுக்கு இந்த விசா மிகப்பெரிய வரப்பிரசாதமாக உள்ளது. அமெரிக்காவில் அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அரசு பதவியேற்ற பிறகு எச்1பி விசா நடைமுறையில் பல்வேறு கெடுபிடிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்நிலையில், வரும் அக்டோபர் 1ம் தேதி தொடங்கும் 2019ம் நிதியாண்டுக்கான எச்1பி விசா விண்ணப்பங்கள் வரும் 2ம் தேதி முதல் பெறப்பட உள்ளன. இதில் ஏற்கப்படும் விண்ணப்பங்கள் தற்காலிக அடிப்படையில் தேர்வு செய்யப்படும். இது தொடர்பாக விசா விதிமுறைகள் குறித்து அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவை துறை நேற்று வெளியிட்ட அறிவிப்பில், ‘விசா கோரி விண்ணப்பிக்கும் நிறுவனங்கள் ஒரே ஊழியருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட மனுக்களை செய்தால் அவை நிராகரிக்கப்படும்’ என எச்சரிக்கை விடுத்துள்ளது.\nபொதுவாக, நிறுவனங்கள் தங்களுக்கு தேவைப்படும் ஊழியர்களுக்கு, அவர் நிபுணத்துவம் பெற்ற ஒன்றுக்கும் மேற்பட்ட பிரிவில் மனுக்களை தாக்கல் செய்யும். அதன் மூலம், ஏதேனும் ஒரு பிரிவில் சம்பந்தப்பட்ட ஊழியருக்கு விசா கிடைத்து விடும். இந்த நடைமுறை இனி எடுபடாது. இதேபோல், எச்1பி விசா பெற்றவர்கள் தங்கள் கணவன் அல்லது மனைவியை அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லலாம். அவர்களுக்கு எச்4 விசா வழங்கப்படும். அதன் மூலம் அவர்கள் அங்கு பணியாற்றலாம். இந்த நடைமுறையிலும் மாற்றம் கொண்டு வரப்பட உள்ளது. எச்4 விசா வைத்திருப்பவர்கள், பணியாற்றுவதற்கான அனுமதியை (இஏடி) பெற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த அனுமதி, எச்1பி விசா பெற்று கிரீன்கார்டுக்கு விண்ணப்பித்தவர்களின் கணவன், மனைவி மட்டுமே பெற முடியும். இல்லாவிட்டால், எச்4 விசா வைத்திருப்பவர்கள் சொந்த நாட்டுக்கு திரும்ப வேண்டி வரும். இந்த நடைமுறை அடுத்த ஆண்டில் சட்டமாக்கப்படுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே, எச்4 விசா வைத்திருப்பவர்கள் எச்1பி விசா கோரி அதிகளவில் இம்முறை விண்ணப்பிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் விசா கோரி விண்ணப்பிக்கலாம் என கூறப்படுகிறது. ஆண்டுதோறும் 85 ஆயிரம் இந்தியர்களுக்கு எச்1பி விசா வழங்கப்பட்டு வருகிறது.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nஉடலுறவின் போது எதுவெல்லாம் உங்கள் துணைக்கு பிடிக்கும்\nகர்ப்பகாலத்தில் தாம்பத்யம், அசைவம் சரியா\nமரண காமெடி- இது நம்ம ஊரு நடிகர்கள் – பழமார்நேரி பஞ்சாயத்து\nஇந்திய அரசியலில் ‘ஆளுநர்’ பதவிகள்\nநல்ல தூக்கத்துக்கு நாளை செய்ய வேண்டியதை எழுதுங்கள்\nதாம்பத்திய இன்பத்தின் போது தவிர்க்க வேண்டியவை\nசினிமா துறையில் இந்த வசனத்தை இவரை தவிர யாராலும் பேச முடியாது\nஉலக புகழ் பெற்ற குரங்கு செல்பி புகைப்பட வழக்கு : காப்புரிமை கோர முடியாது நீதிமன்றம் தீர்ப்பு\nஅணு சக்தி ஒப்பந்தம் மோசமானது என்றால் அமெரிக்க கையெழுத்திட்டது : ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி\nஇலங்கைப் பொலிஸாரின் பொருட்களை வைத்திருந்த பிரிட்டன் குடியுரிமை பெற்ற நபர் கைது\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthinappalakai.net/page/673", "date_download": "2018-04-26T13:19:36Z", "digest": "sha1:GBS3JFKEVJJF3IUEPPNCVJJAVCUTN5UU", "length": 13526, "nlines": 120, "source_domain": "www.puthinappalakai.net", "title": "புதினப்பலகை | அறி – தெளி – துணி | Page 673", "raw_content": "அறி – தெளி – துணி\nஜெனிவாவில் அடுத்தவாரம் சிறிலங்கா குறித்த தீர்மானம்\nசிறிலங்கா தொடர்பான தீர்மானம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அடுத்தவாரம் முன்வைக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.\nவிரிவு Sep 18, 2015 | 2:47 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஐ.நா விசாரணை அறிக்கையின் கண்டறிவுகளும் – பரிந்துரைகளும் (முழுமையாக)\nசிறிலங்காவில் 2001ஆம் ஆண்டுக்கும், 2009ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், இடம்பெற்ற மீறல்கள் தொடர்பாக, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் நடத்திய விசாரணையில் கண்டறியப்பட்ட விடயங்கள் மற்றும் பரிந்துரைகள் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.\nவிரிவு Sep 17, 2015 | 3:42 // புதினப்பணிமனை பிரிவு: செய்திகள்\nஐ.நா அறிக்கை குறித்து மூச்சு விடாதாம் இந்தியா – தீர்மான வரைவின் மீதே குறி\nசிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பாக, இந்தியா கருத்து எதையும் வெளியிடாது என்று கூறப்படுகிறது.\nவிரிவு Sep 17, 2015 | 2:39 // இந்தியச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஅனைத்துலக நீதிபதிகளை உள்ளடக்கிய விசாரணையை வலியுறுத்துகிறது அமெரிக்காவின் தீர்மான வரைவு\nசிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்கால மீறல்களை விசாரிக்க அனைத்துலக நீதிபதிகள், சுதந்திரமான வழக்குத் தொடுனர்களை உள்ளடக்கிய பொறிமுறையை உருவாக்குவதற்கு, வலியுறுத்தும், தீர்மான வரைவையே அமெரிக்கா தயாரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nவிரிவு Sep 17, 2015 | 2:19 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஐ.நா அறிக்கை: முடிவல்ல, ஆரம்பம் தான் – என்கிறார் ஐ.நா பேச்சாளர்\nசிறிலங்கா குறித்த ஐ.நா விசாரணை அறிக்கை முடிவல்ல. இது ஒரு ஆரம்பமாகத்தான் இருக்கும் என்று தெரிவித்துள்ளார் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் பேச்சாளர் ரூபேர்ட் கொல்வில்.\nவிரிவு Sep 17, 2015 | 1:52 // புதினப்பணிமனை பிரிவு: செய்திகள்\nஐ.நா முன்மொழிந்துள்ள கலப்பு நீதிமன்ற விசாரணை – தமிழர் தரப்பின் கருத்து என்ன\nசிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்னகள் தொடர்பான ஐ.நா விசாரணை அறிக்கையின் பரிந்துரைகளை முழுமையாக ஏற்றுக்கொள்வதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் தெரிவித்துள்ளனர்.\nவிரிவு Sep 17, 2015 | 1:36 // புதினப்பணிமனை பிரிவு: செய்திகள்\nபோர்க்குற்றவாளிகளின் பெயர்கள் அறிக்கையில் இருந்து நீக்கப்பட்டதா\nசிறிலங்கா தொடர்பான ஐ.நா விசாரணை அறிக்கையில், போர்க்குற்றவாளிகள் எவரது பெயர்களும் உள்ளக்கப்படவில்லை, இந்தநிலையில் ஏற்கனவே அதில் இடம்பெற்றிருந்த பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக இன்னர் சிற்றி பிரஸ் தெரிவித்துள்ளது.\nவிரிவு Sep 17, 2015 | 1:07 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nஇனப்படுகொலைகள் இடம்பெற்றதாக தெரியவரவில்லை – ஐ.நா மனித உரிமை ஆணையாளர்\nசிறிலங்காவில் இனப்படுகொலைகள் இடம்பெற்றதாக இப்போது தாம் கருதவில்லை என்று ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் தெரிவித்துள்ளார்.\nவிரிவு Sep 17, 2015 | 1:02 // ஐரோப்பியச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nபோர்க்குற்றங்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தை ஏற்க முடியாது – சிறிலங்கா அமைச்சர்\nபோர்க்குற்றங்கள் குறித்து விசாரிக்க அனைத்துலக நீதிபதிகளை உள்ளடக்கிய சிறப்பு கலப்பு நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் என்ற ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் பரிந்துரையை ஏற்க முடியாது என்றும் சிறிலங்காவின் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.\nவிரிவு Sep 16, 2015 | 16:28 // புதினப்பணிமனை பிரிவு: செய்திகள்\nஐ.நா அறிக்கையை வரவேற்கிறது பிரித்தானியா\nசிறிலங்கா தொடர்பான ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் விசாரணை அறிக்கையை வரவேற்றுள்ள பிரித்தானியா, இந்த அறிக்கையின் பரிந்துரைகளை உன்னிப்பாக ஆராயப் போவதாக தெரிவித்துள்ளது.\nவிரிவு Sep 16, 2015 | 13:12 // ஐரோப்பியச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் இரா.சம்பந்தன் – ‘சேர் பொன். இராமநாதனின் மறுஉருவம்’\t0 Comments\nகட்டுரைகள் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு யார் காரணம்\nகட்டுரைகள் சிறிலங்கா: மகிந்தவுக்காக திறக்கப்படும் கதவுகள்\t0 Comments\nகட்டுரைகள் ஐ.நாவின் மனிதஉரிமைச் செயற்பாடுகளைப் பலவீனப்படுத்தும் ரஷ்யா, சீனா\t0 Comments\nகட்டுரைகள் சீனாவின் இறுக்கமான பிடியில் சிறிலங்காவின் அமைதியான துறைமுகம்\t1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுக்கு எதிரான வியூகத்தில் சிறிலங்காவின் பௌத்த பிக்குகளையும் இணைக்கிறது இந்தியா\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்திய மாக்கடலில் அதிகரிக்கும் சீனாவின் செல்வாக்கும் – இந்தியாவின் முத்தரப்பு கடற்பாதுகாப்பு ஒப்பந்தமும்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t0 Comments\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t2 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vanakkammalaysia.com/malaysia/20-social/9107-2017-04-21-03-29-06", "date_download": "2018-04-26T13:16:07Z", "digest": "sha1:3U34JJ7ATYMPLZTPGWJ2PTS7MJIM3LEK", "length": 14953, "nlines": 275, "source_domain": "www.vanakkammalaysia.com", "title": "கஞ்சாவைக் கலந்து பிஸ்கட்டு தயாரித்த கும்பல்!", "raw_content": "\nமலையாளப் பாடல் திறன் போட்டி: அனைவரும் பங்கேற்கலாம்\n1 எம்.டி.பி தலைமை நிர்வாக அதிகாரி அருள் கந்தா அரசியல் பிரவேசமா\nதேர்தல் அதிகாரிகள் பற்றிய போலித் தகவலை நம்பாதீர் \nகேவியசின் ராஜினாமா; தே.மு.விற்கு எவ்வித பாதிப்பும் இல்லை\nகடந்த தேர்தலை விட கூடுதலான வெற்றி: வாய்ப்பு பிரகாசம்\nவெளிநாட்டு வாக்காளர்கள்:வாக்குச் சீட்டுகளை எப்படி அனுப்புவீர்கள்\nரோஸ்மாவின் பிறந்தநாள் கேக்: அது போலிச் செய்தி\nகெந்திங் சாலையில் பேருந்து தீக்கிரை\nமஇகாவிலிருந்து காயத்ரி ரகுமூர்த்தி முற்றாக விலகல்\nமணமகன் பலி: திருமணப் பரிசாக வெடிகுண்டு பார்சல் அனுப்பிய கல்லூரி ஆசிரியர் கைது\nஐஸ்வர்யா ராய் ஓரங்கட்டப் படுவது ஏன்\nமழலைக் குரலில் ரசிகர்களை வசீகரித்த பாடகி எம்.எஸ். ராஜேஸ்வரி காலமானார்\nசிறுமி பலாத்காரம்: பிரபல சாமியார் ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் சிறை\nஇந்திய நாடாளுமன்றத்திலும் பாலியல் தொல்லையா\nஅக்சய் குமாரின் படப்பிடிப்பு தளத்தில் குண்டு வெடித்து கோரத் தீ விபத்து\nபாலியல் வழக்கில் பிரபல சாமியார் குற்றவாளி -இந்திய நீதிமன்றம் தீர்ப்பு தீர்ப்பு\nஎஸ் வி சேகருக்கு அடைக்கலம் தந்த கிரிஜா வைத்தியநாதன் மீது வழக்கு\nதமிழ் நடிகருக்கு 50 கோடி சம்பளமா\nபாலஸ்தீனர் ஸ்தாபாக்கில் சுட்டுக் கொலை: கொலையாளிகளின் படங்கள் வெளியீடு\nஅர்சனல் குழுவின் 22 ஆண்டு கால நிர்வாகி அர்செனி வெங்கர் விலகுகிறார்\n'இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி'யில் வடிவேலு நடிக்க மறுத்தது ஏன்\nகற்பழிப்புக்கு மரண தண்டனை ஒன்றே தீர்வு- வரலட்சுமி ஆவேசம்\nசினிமா வேலைநிறுத்தம்: சொந்த ஊரில் ஆடு மேய்க்கும் நடிகை\nகணவருடன் ரஷ்யாவில் குடியேறுகிறார் நடிகை ஸ்ரேயா\n விஜய் சேதுபதி மீது விஷாலின் நடவடிக்கை பாயுமா\nஏங்க, எத்தனை தடவை சொல்றது, 'மாட்டேன்., மாட்டேன். ' -சத்யராஜ் மகள் திவ்யா\nகமலுக்கு செம அதிர்ச்சி தந்த ஹாலிவுட் தயாரிப்பாளர் நோலன்\nகஞ்சாவைக் கலந்து பிஸ்கட்டு தயாரித்த கும்பல்\nPrevious Article ஷா ஆலாமில் சம்பவம் புகைப் பிடிப்பதைத் தட்டிக்கேட்ட போலீசுக்கு கத்திக் குத்து\nNext Article இடைநிலைப்பள்ளி முன் ’கேங் 24’ அராஜகம்: 18 குண்டர்கள் கைது\nகோலாலம்பூர், ஏப்ரல்.21- கஞ்சாவைக் கலந்து பிஸ்கெட்டுகள் தயாரித்து விற்பனை செய்து வந்த ஒரு பத்திரிகையாளர், ஒரு பல்கலைக்கழக மாணவர் உள்பட ஐவரை போலீசார் கைது செய்தனர்.\nபுக்கிட் அந்தாரா பங்சாரிலுள்ள இரண்டு வீடுகளில் போலீசார் அதிரடிச் சோதனை மேற்கொண்ட போது 24 வயது முதல் 27 வயது வரையிலான இந்த ஐவரும் பிடிபட்டனர். மேலும் கஞ்சா மற்றும் தயாரித்து வைக்கப்பட்டிருந்த கஞ்சா பிஸ்கட்டுகளையும் கைப்பற்றினர்.\nமுதல் வீட்டில் நான்கு அடுக்கு கஞ்சா மற்றும் கஞ்சா பிஸ்கட்டுகளுடன் கஞ்சா பவுடரும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது என்று அம்பாங் ஜெயா மாவட்டப் போலீஸ் தலைவர் ஏஎஸ்பி ஹம்சா அலியாஸ் தெரிவித்தார்.\nஅடுத்து உடனடியாக மற்றொரு வீட்டிலும் போலீசார் சோதனை மேற்கொண்ட போது அந்த வீடு பிஸ்கட்டுகள் தயாரிக்கும் கூடமாக இருந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் சொன்னார்.\nஇந்த கஞ்சா பிஸ்கட்டுகள், இணையம் வழியாக விற்கப்பட்டு வந்துள்ளது. இவர்கள் தொழிலை இப்போதுதான் புதிதாக தொடங்கியுள்ளனர் என்பதும் தெரிய வந்திருக்கிறதுஎன்று ஏசிபி ஹம்சா அலியாஸ் கூறினார்.\nPrevious Article ஷா ஆலாமில் சம்பவம் புகைப் பிடிப்பதைத் தட்டிக்கேட்ட போலீசுக்கு கத்திக் குத்து\nNext Article இடைநிலைப்பள்ளி முன் ’கேங் 24’ அராஜகம்: 18 குண்டர்கள் கைது\nமலேசிய கோடீஸ்வரரை தரக் குறைவாக பேசுவதா அமைச்சர் நஸ்ரிக்கு மசீச கடும் கண்டனம்\nம.இ.காவுக்கு 7 எம்பி, தொகுதிகள் மட்டுமே கோத்தராஜா - கேமரன்மலை கைநழுவுகிறதா\n9 நாடாளுமன்ற வேட்பாளர்கள் யார் யார்\n6 எம்.பி. தொகுதிகளில் மஇகா போட்டி\nஇந்திய தொழிலதிபரான ''டத்தோஶ்ரீ'யுடன் புகைப்படம்: பதிலடி தந்தார் லிம் குவான்\nமலையாளப் பாடல் திறன் போட்டி: அனைவரும் பங்கேற்கலாம்\n1 எம்.டி.பி தலைமை நிர்வாக அதிகாரி அருள் கந்தா அரசியல் பிரவேசமா\nதேர்தல் அதிகாரிகள் பற்றிய போலித் தகவலை நம்பாதீர் \nகேவியசின் ராஜினாமா; தே.மு.விற்கு எவ்வித பாதிப்பும் இல்லை\nகடந்த தேர்தலை விட கூடுதலான வெற்றி: வாய்ப்பு பிரகாசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://yourastrologysigns.blogspot.com/2009/11/mars-retrograde-how-will-it-affect-us.html", "date_download": "2018-04-26T13:22:57Z", "digest": "sha1:FGAZQSUNGDAKUKZ2O3IFSZLDPZVAHRFM", "length": 21328, "nlines": 109, "source_domain": "yourastrologysigns.blogspot.com", "title": "Astrology News: Mars Retrograde - How Will it Affect Us?", "raw_content": "\nதனிநபருக்கு திருமணப்பொருத்தம் பார்க்கும் சாப்ட்டுவேர்\nஇன்றய அவசர உலகில் நடக்கும் திருமணங்கள் அனைத்தும் சரியான முறையில் ஆண்-பெண் ஜாதகங்களை ஆரய்ந்து நடத்தப்படுகிறதா என்றால் அதை நாம் முழுமனத்துடன் ஒப்புக்கொள்ள முடியவில்லை.\nஇன்னும் பலபேர் 10 வித பொருத்தங்களை மட்டும் பார்த்து திருமணங்களை நிர்ணயிக்கிறனர். அப்படி நிர்ணயிக்கப்பட்ட திருமணங்கள் தெய்வாதீனமாகவும் ஜாதகரீதியாகவும் அந்த திருமணத்தை புரிந்துகொள்ளும் ஆண் பெண்ணின் கிரக அமைப்புக்கள் சரியாக இருந்தால் பெண்ணின் அதிர்ஷ்டமாக அமைகிறது.\nஒரு வேலை மாறுதலாக கிரக அமைப்புகள் சரியில்லாமல் வெறும் 10 பொருத்தங்கள் மட்டும் முக்கி.ய அம்சமாக வைத்து பொருத்தம் பார்த்து திருமணம் நடத்தினால் விதி தன் விளையாட்டை விளையாடிவிடுகிறது.\nஅந்த விதியின் விளையாட்டையும் நம் மதியால் வெல்லலாமே அதற்கு நாம் திருமணத்திற்காக கொடுக்கப்பட்டுள்ள ஆண் மற்றும் பெண்ணின் ஜாதகங்கலை நன்று ஆராய்ந்து பின்னர் ஒரு முடிவுக்கு வரவேண்டும்.\nஇது பாரம்பரியமாக ஜோதிடக்குடும்பத்தில் பிறந்துள்ள தேர்ச்சிபெற்ற ஜோதிடர்களுக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கும் ஜோதிடத்துடன் இறையருளும் பெற்று விளங்கும் ஆன்றோர்களுக்கும் சுலபமான ஒன்றாக அமையும். ஜோதிடம் பழகும் அன்பர்க்களுக்கும் ஜோதிடம் தெரியாதவர்களுக்கும் கடினமான ஒன்று மேலும் இன்றைய சூழலில் ஒரு நபர் தன் மகனுக்கோ – மகளுக்கோ அல்லது தனது வேண்டப்பட்டவர்களுக்கோ திருமணம் செய்யப்போவதாக இருந்தால் முதல் வேலையாக புத்தக கடைக்குச் சென்று 10 வித பொருத்தங்களை பார்க்கும் புத்தகத்தை வாங்கிவந்து பொருத்தம் பார்க்க ஆரம்பித்துவிடுகிறார் பரவாயில்லை கிரகப்பொருத்தம் பார்ப்பது கிடையாது காரணம் பார்க்கத்தெரியாது. அப்படிப்பட்டவர்களும் மிகவும் துல்லியமாக கிரக அமைப்பை பார்த்து நல்ல முடிவெடுப்பதற்காகவும் ஜோதிடத்துறையில் இருப்பவர்களின் பொன்னான வேலைநேரத்தை பயனுள்ளதாக மாற்றவும் இந்த திருமணப்பொருத்த சாப்ட்வேர் பெரிதும்துணையாக இருக்கும்.\nதிருமணப்பொருத்தம் என்பது சாதாரண வேலையில்லை, இங்கு ஒரு ஜோதிடர் ஒரு கருவியை தவிர அனைத்தும் தெரிந்த ஆத்மா இல்லை ஒரு தெய்வ அனுக்கிரஹமே அங்கு செயல்படுகிறது.\nஅத்துடன் அவரவர் பூர்ஜென்ம வினைகளே அவரவர் திருமணத்திற்கு முன் நின்று திருமணத்தை நடத்தி வைக்கிறது இங்கே வருத்தப்படுவதற்க்கும் சந்தோஷப்படுவதற்க்கும் ஒன்றும் இல்லை.\nஜாதகப்பொருத்தம் சரியாக இருந்தாலும் பொருளாதாரம் குடும்பப்பின்னணி, பிறப்பு, பழக்கவழக்கங்கள் போன்றவைகளுக்காக திருமணம் கூடாத ஜாதகங்கள் லட்சோபலசம் இதனை அனைவரும் அறிவோம்.\nஇந்த ஜோதிடக் கடலில் காலத்திற்கு தகுந்த முறையில் பார்க்கவேண்டும் என்றே இந்த நிலையும்.......\nஏன் இந்த திருமணப்பொருத்த சாப்ட்டுவேர்\nஇன்றைய சூழலில் ஒரு நபர் தன் மகனுக்கோ – மகளுக்கோ அல்லது தனது வேண்டப்பட்டவர்களுக்கோ திருமணம் செய்யப்போவதாக இருந்தால் 20 அல்லது 30 ஜாதகத்தையாவது பார்க்க வேண்டி உள்ளது, நேரம், பணம் இவ்விரண்டையும் குறைக்கவும், மிக துள்ளி.மான முறையில் பொருத்தம் பார்க்கவும் கிரக ரீதியாக கெடுதல் செய்யும் அமைப்புக்கள் ஜாதகத்தில் உள்ளனவா என்பதை தெரிவிக்கவும், 700க்கும் மேல்பட்ட திருமண பொருத்த விதிகளை ஆய்வு செய்து வெளியிடும் வகையில் இந்த திருமணப்பொருத்த சாப்ட்டுவேர் உறுவாக்கப்பட்டு உள்ளது. (ஒரு ஜோதிடர் ஒரு ஆண்/ பெண் ஜாதகத்தில் 700 திருமண பொருத்த விதிகளை ஆய்வு செய்ய குறைந்தது 5 மணி நேரமாவது ஆகும் - மன்னிக்கவும் இங்கு ஜோதிடரை குறை கூரவில்லை). திருமணப்பொருத்த சாப்ட்டுவேர் வெளியிடும் தீர்வுகளை பிரின்ட்செய்து ஜோதிடரிடம் எடுத்து செல்லலாம், பொண்ணான நேரம் மிச்சம் மிக துள்ளிய கணிப்பும் கிடைக்கும்.\nதனிநபருக்கு திருமணப்பொருத்தம் பார்க்கும் சாப்ட்டுவேர்\nஇன்றய அவசர உலகில் நடக்கும் திருமணங்கள் அனைத்தும் சரியான முறையில் ஆண்-பெண் ஜாதகங்களை ஆரய்ந்து நடத்தப்படுகிறதா என்றால் அதை நாம் முழுமனத்துடன் ஒப்புக்கொள்ள முடியவில்லை.\nஇன்னும் பலபேர் 10 வித பொருத்தங்களை மட்டும் பார்த்து திருமணங்களை நிர்ணயிக்கிறனர். அப்படி நிர்ணயிக்கப்பட்ட திருமணங்கள் தெய்வாதீனமாகவும் ஜாதகரீதியாகவும் அந்த திருமணத்தை புரிந்துகொள்ளும் ஆண் பெண்ணின் கிரக அமைப்புக்கள் சரியாக இருந்தால் பெண்ணின் அதிர்ஷ்டமாக அமைகிறது.\nஒரு வேலை மாறுதலாக கிரக அமைப்புகள் சரியில்லாமல் வெறும் 10 பொருத்தங்கள் மட்டும் முக்கி.ய அம்சமாக வைத்து பொருத்தம் பார்த்து திருமணம் நடத்தினால் விதி தன் விளையாட்டை விளையாடிவிடுகிறது.\nஅந்த விதியின் விளையாட்டையும் நம் மதியால் வெல்லலாமே அதற்கு நாம் திருமணத்திற்காக கொடுக்கப்பட்டுள்ள ஆண் மற்றும் பெண்ணின் ஜாதகங்கலை நன்று ஆராய்ந்து பின்னர் ஒரு முடிவுக்கு வரவேண்டும்.\nஇது பாரம்பரியமாக ஜோதிடக்குடும்பத்தில் பிறந்துள்ள தேர்ச்சிபெற்ற ஜோதிடர்களுக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கும் ஜோதிடத்துடன் இறையருளும் பெற்று விளங்கும் ஆன்றோர்களுக்கும் சுலபமான ஒன்றாக அமையும். ஜோதிடம் பழகும் அன்பர்க்களுக்கும் ஜோதிடம் தெரியாதவர்களுக்கும் கடினமான ஒன்று மேலும் இன்றைய சூழலில் ஒரு நபர் தன் மகனுக்கோ – மகளுக்கோ அல்லது தனது வேண்டப்பட்டவர்களுக்கோ திருமணம் செய்யப்போவதாக இருந்தால் முதல் வேலையாக புத்தக கடைக்குச் சென்று 10 வித பொருத்தங்களை பார்க்கும் புத்தகத்தை வாங்கிவந்து பொருத்தம் பார்க்க ஆரம்பித்துவிடுகிறார் பரவாயில்லை கிரகப்பொருத்தம் பார்ப்பது கிடையாது காரணம் பார்க்கத்தெரியாது. அப்படிப்பட்டவர்களும் மிகவும் துல்லியமாக கிரக அமைப்பை பார்த்து நல்ல முடிவெடுப்பதற்காகவும் ஜோதிடத்துறையில் இருப்பவர்களின் பொன்னான வேலைநேரத்தை பயனுள்ளதாக மாற்றவும் இந்த திருமணப்பொருத்த சாப்ட்வேர் பெரிதும்துணையாக இருக்கும்.\nதிருமணப்பொருத்தம் என்பது சாதாரண வேலையில்லை, இங்கு ஒரு ஜோதிடர் ஒரு கருவியை தவிர அனைத்தும் தெரிந்த ஆத்மா இல்லை ஒரு தெய்வ அனுக்கிரஹமே அங்கு செயல்படுகிறது.\nஅத்துடன் அவரவர் பூர்ஜென்ம வினைகளே அவரவர் திருமணத்திற்கு முன் நின்று திருமணத்தை நடத்தி வைக்கிறது இங்கே வருத்தப்படுவதற்க்கும் சந்தோஷப்படுவதற்க்கும் ஒன்றும் இல்லை.\nஜாதகப்பொருத்தம் சரியாக இருந்தாலும் பொருளாதாரம் குடும்பப்பின்னணி, பிறப்பு, பழக்கவழக்கங்கள் போன்றவைகளுக்காக திருமணம் கூடாத ஜாதகங்கள் லட்சோபலசம் இதனை அனைவரும் அறிவோம்.\nஇந்த ஜோதிடக் கடலில் காலத்திற்கு தகுந்த முறையில் பார்க்கவேண்டும் என்றே இந்த நிலையும்.......\nஏன் இந்த திருமணப்பொருத்த சாப்ட்டுவேர்\nஇன்றைய சூழலில் ஒரு நபர் தன் மகனுக்கோ – மகளுக்கோ அல்லது தனது வேண்டப்பட்டவர்களுக்கோ திருமணம் செய்யப்போவதாக இருந்தால் 20 அல்லது 30 ஜாதகத்தையாவது பார்க்க வேண்டி உள்ளது, நேரம், பணம் இவ்விரண்டையும் குறைக்கவும், மிக துள்ளி.மான முறையில் பொருத்தம் பார்க்கவும் கிரக ரீதியாக கெடுதல் செய்யும் அமைப்புக்கள் ஜாதகத்தில் உள்ளனவா என்பதை தெரிவிக்கவும், 700க்கும் மேல்பட்ட திருமண பொருத்த விதிகளை ஆய்வு செய்து வெளியிடும் வகையில் இந்த திருமணப்பொருத்த சாப்ட்டுவேர் உறுவாக்கப்பட்டு உள்ளது. (ஒரு ஜோதிடர் ஒரு ஆண்/ பெண் ஜாதகத்தில் 700 திருமண பொருத்த விதிகளை ஆய்வு செய்ய குறைந்தது 5 மணி நேரமாவது ஆகும் - மன்னிக்கவும் இங்கு ஜோதிடரை குறை கூரவில்லை). திருமணப்பொருத்த சாப்ட்டுவேர் வெளியிடும் தீர்வுகளை பிரின்ட்செய்து ஜோதிடரிடம் எடுத்து செல்லலாம், பொண்ணான நேரம் மிச்சம் மிக துள்ளிய கணிப்பும் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://indrayavanam.blogspot.com/2012/10/16502.html", "date_download": "2018-04-26T13:37:40Z", "digest": "sha1:N3MLBKQ6HO76BWR5GM5PUY4IZIJ2RGTI", "length": 22705, "nlines": 141, "source_domain": "indrayavanam.blogspot.com", "title": "தமிழகத்தில் ரவுடிகளின் எண்ணிக்கை16,502..", "raw_content": "\nதமிழகத்தில் வசிப்பவர்கள் தெரிந்து கொள்ளவேண்டிய செய்தி.தமிழகம் முழுவதும் உள்ள ரவுடிகளின் பெயர் பட்டியலை, உயர்நீதிமன்றத்தில் தமிழக காவல்துறை தலைவர் தாக்கல் செய்தார். அதில், ‘மாநிலம் முழுவதும் 16 ஆயிரத்து 502 ரவுடிகள் உள்ளனர். ரவுடிகள் பட்டியலில் தலைநகர் சென்னை முதலிடத்திலும் 2வது இடத் தில் நெல்லையும், 3வது இடத் தில் மதுரையும் கடைசி இடத் தில் நீலகிரி மாவட்டமும் உள் ளது’ என்று தெரிவிக்கப்பட் டுள்ளது.\nபுதுக்கோட்டையை சேர்ந்த நாம் தமிழர் கட்சியை சேர்ந்த முத்துக்குமார், காதல் பிரச் சனையில் வெட்டி கொல்லப் பட்டார். இந்த கொலையில் போலீசார் கைது செய்த இரு வர், ஜாமீன் கேட்டு உயர்நீதி மன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு விசாரணைக்கு வந்த போது, தமிழகம் முழுவதும் உள்ள ரவுடிகள் பட்டியல், குற்றங் களின் எண்ணிக்கை, தண் டனை விபரம் ஆகியவற்றை தாக்கல் செய்ய, தமிழக காவல் துறை தலைவருக்கு, நீதிபதி கிரு பாகரன் உத்தரவிட்டார்.\nஅதன் படி தமிழக காவல்துறை தலை வர் ராமானுஜம், உயர்நீதிமன் றத்தில் அறிக்கை தாக்கல் செய் தார்.அந்த அறிக்கையில், 31 மாவட்டங்கள், 6 நகரங்களில் காவல் நிலையங்களில் பராமரிக் கப்படும் ரவுடிகள் பட்டியலில் 16 ஆயிரத்து 502 ரவுடிகளின் பெயர்கள் இடம் பெற்றிருப்ப தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சம் சென்னையில் 3,175 ரவுடிகள் உள்ளனர். பட்டி யலில் நெல்லை 2வது இடத்தில் உள்ளது. நெல்லை நகரில் 334 ரவுடிகளும், நெல்லை புறநகரில் 1,214 ரவுடிகளும் உள்ளனர். மதுரை 3வது இடத்தில் உள் ளது.\nமதுரை நகரில் மட்டும் 888 ரவுடிகள் உள்ளனர். புறநகரில் 484 பேர் உள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் 748 ரவுடிகளுடன் 4ம் இடத் தில் உள்ளது. டிஜிபி பட்டியல் படி, கோவை நகரில் 512, புற நக ரில் 226, சேலம் நகரில் 353, புற நகரில் 299, திருச்சி நகரில் 427, புறநகரில் 155 ரவுடிகள் உள் ளனர். ரவுடிகளின் எண் ணிக்கை நீலகிரி மாவட்டத்தில் குறைவாக உள்ளது. இங்கு 65 ரவுடிகள் மட்டுமே போலீஸ் பட்டியலில் உள்ளனர். திரு வாரூர், பெரம்பலூரில் தலா 84 பேர் உள்ளனர்.இது தவிர காஞ்சிபுரம்-416, திருவள்ளூர்-318, விழுப்புரம்-452, கடலூர்-680, வேலூர்- 376,\nதிருவண்ணாமலை-200, ஈரோடு-276, திருப்பூர்-127, நாமக்கல்-308, தர்மபுரி-165, கிருஷ்ணகிரி-329, புதுக்கோட்டை - 157, கரூர்-143, அரியலூர்-290, தஞ்சாவூர்-584, நாகப்பட்டினம் -287, விருதுநகர்-655, திண்டுக் கல்-299, தேனி-111, இராமநாத புரம்-462, சிவகங்கை-214, தூத் துக்குடி-605 பேர் என ரவுடிகள் பட்டியலில் உள்ளனர்.குற்றங்களை பொறுத்த வரை, 2001 முதல் 2011 வரை பத்து ஆண்டுகளில் 17 ஆயிரத்து 32 கொலைகள் நடந்துள்ளன.\n3 லட்சத்து 11 ஆயிரத்து 308 கொலை முயற்சி, சிறு குற்ற சம் பவங்கள் நடந்துள்ளன. 2 லட் சத்து 33 ஆயிரத்து 738 சொத்து தொடர்பான குற்றங்களும் கடந்த பத்து ஆண்டுகளில் நடந் துள்ளன. இ.பி.கோ சட்டப் பிரிவு வழக்குகளில் குற்றவாளி களுக்கு தண்டனை கிடைப்பது தமிழகத்தில் 2001ம் ஆண்டு 62.80 சதவீதமாக இருந்தது. 2011ம் ஆண்டு 62.10 சதவீதமாக குறைந்துள்ளது.ஆக மொத்தம் நாம் ரவுடிகளின் ராஜ்ஜியத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.. ரவுடிகள் என்ப்படுவர்கள்யார் இவர்களை வளர்த்துவிடுவது யார் எப்படி உருவாக்கப்படுகிறார்கள் என சிந்திக்கவேண்டியுள்ளது.\nஉங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்\nதிண்டுக்கல் தனபாலன் இவ்வாறு கூறியுள்ளார்…\n17 அக்டோபர், 2012 ’அன்று’ முற்பகல் 11:41\nஎன்னப்பா இது ஒரே ரவுடி மயமாத்தான் இருக்குது\n17 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 9:23\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\nராஜராஜ சோழன் எந்த சாதிக்காரன்\nமன்னர் ராஜராஜ சோழன் எங்க சாதிகாரன்..இல்ல..இல்ல எங்க சாதிக்காரன் என குத்துவெட்டு நடந்து கொண்டிருக்கிறது. பசும்பொன் முத்துராமலிங்கம், கட்டபொம்மன், வ.உ.சிதம்பரம் போன்ற சுதந்திர போராட்ட வீரர்களை சாதித்தலைவர்களாக மாற்றிவிட்டார்கள் சாதி வெறியர்கள். இப்போது 1000 ஆண்டுகளுக்கு முந்தைய மன்னர்களையும் இவர்கள் விடுவதாக இல்லை\nதஞ்சையில் கடந்த 10, 11 தேதிகளில் ராஜராஜசோழனின் 1028வது சதய விழா (பிறந்த நாள்)அரசு விழாவாக மிக கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. 11ந் தேதி மாவட்ட ஆட்சியர் தலைமையில் சதய விழாக்குழுவினர் ஊர் வலமாக வந்து பெரிய கோவில் அருகிலுள்ள ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதற்கு பின்பு இதுவரை இல்லாத மிகவும் கேலிக்கூத்தான நிகழ்ச்சிகள் நடந்தேறின.\nஇலங்கை கதிர்காமம் முருகன் கோவில் போல் மதுரை புளியம்பட்டியில் ஒரு கோயில்\nஎம்.ஜி.ஆர்.,எஸ்.எஸ்.ஆர்.,உள்ளிட்ட நாடகக்கலை உலகின் பிரபலமானஜாம்பவான்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்த மதுரை ஸ்ரீ பரமானந்தா ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியின் நிறுவனரான நாடகச்செல்வர் பி.கா.சுப்பாரெட்டியாரால் இலங்கை கண்டி கதிர்காமத்திலுள்ள முருகன் கோவில் போல் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி.கல்லுப்பட்டி பகுதி புளியம்பட்டி கிராமத்தில் கட்டப்பட்டுள்ள ஸ்ரீ கதிரேசப்பெருமான் கோவிலில் நடைபெறும் ஆடிப்பவுர்ணமி நாளன்று பூஜையில் கலந்து கொண்டு வழிபட்டால் ஆயுசு பெருகும் அதிசயங்கள் நடக்கும் என்று பக்தகோடி பெருமக்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி.கல்லுப்பட்டி பகுதியில் புளியம்பட்டி எனும் சின்னஞ்சிறிய கிராமம் உள்ளது.இந்த கிராமத்தில் கடந்த 1890-ம் ஆண்டு ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்து பிற்காலத்தில் நாடக உலகத்தையே தன்னோக்கி பார்க்க வைத்தவர் பி.கா.சுப்பா ரெட்டியார்.கல்வி கற்றிடாத கிராமவாசியான இவருக்கு நாடகத்துறையின் மீது ஏற்பட்ட அளவுகடந்த பற்றின் காரணமாக 1925-ம் ஆண்டு சில குழந்தைகளை தன்னகத்தே சேர்த்துக் கொண்டு ஓர் நாடகக் கம்பெனியை புளியமாநகரில் நிறுவினார்.பின்னர் ஸ்ரீலஸ்ரீ மஹா…\nடி.கல்லுப்பட்டி அருகே முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் பிராமி எழுத்துக்கள் கண்டுபிடிப்பு\nமதுரை மாவட்டம்,பேரையூர் தாலுகா, டி.கல்லுப்பட்டி அருகேயுள்ள கவசக்கோட்டை கிராமத்தில் தமிழரின் தொன்மை சிறப்புகளை கண்டறியும் நோக்கில் பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் முதல் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறித்த கருப்பு சிவப்பு வண்ணமுடைய பானை ஓடுகள்,எலும்பு துண்டுகள்,முதுமக்கள் தாழி,தானிய களஞ்சியம்,குறியீடுடைய உடைந்த மண்கலயம் போன்றவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nமதுரை மாவட்டம் பேரையூர் தாலுகாவில் பண்டைகாலத்து தமிழர்களின் வாழ்க்கைமுறை தொடர்பான பல்வேறு சான்றுகள் இன்றளவும் அழிந்திடாமல் உள்ளது.இந்நிலையில் தமிழரின் தொன்மையை கண்டறியும் நோக்கில் பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் ஆய்வாளர்களான\nமுனைவர்கள்.சி.மாணிக்கராஜ்,சி.செல்லப்பாண்டியன்,து.முனீஸ்வரன்,மு.கனகராஜ்,மு.லட்சுமணமூர்த்தி ஆகியோரை கொண்ட ஆய்வுக்குழு பேரையூர் தாலுகா டி.கல்லுப்பட்டி அருகேயுள்ள கவசக்கோட்டை கிராமத்தில் கள ஆய்வு மேற்கொண்டது.அப்போது கவசக்கோட்டை கிராமத்திலுள்ள அக்ரஹாரமேடு,பண்ணைமேடு ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட களஆய்வின்போது உடைந்த நிலையில் பெருங்கற்காலத்தைச் சார்ந்த …\nஅஜித்தின் விவேக மற்ற படம்...\nஅஜித்துக்கு நடிப்பு வராது...ஒரே மாதிரியான உடல் மொழி,பேச்சு,நடிப்பு சலிப்பு தட்ட கூடியது.இதிலும் அப்படித்தான். படம் முழுக்கவே இரைச்சல் .துவங்கியதிலிருந்தே துப்பாக்கி சத்தமும், கார்களின் மோதல், பறக்கும் கார்களின் காட்சிகள் இதுதான் படம் முழுக்கவே.நம்ப முடியாத கதை காட்சிகள்.இயக்குனர் தெலுங்கு பட இயக்குனர் போல தூக்கலான ஹீரோயிசம்,தத்துவங்கள் கொட்டும் பஞ்ச் டயலாக்.வில்லுனுக்கு வேலையே வஞ்ச புகழ்ச்சி அணியில் ஹீரோவை புகழ்வது தான்.\nபடம் சகிக்கல...இயக்குனர் ஒரு பேட்டியில் சொன்னார் அஜித் இன்டர்னேஷனல் ஸ்டார் ஆகிட்டார் .வெளிநாட்டில் படம் எடுத்தால் இன்டர்நேசனல் ஸ்டாரா.கொடும..கொடும...\nகதை சுருக்கம் சொல்கிறேன்...நம்ப முடிகிறதா என பாருங்கள் . அதற்கு மேல் படம் பார்த்து மாட்டிக்கொண்டால் நான் பொறுப்பல்ல.\nநீங்கள் வந்தீர்கள்;விசிட்டிங் கார்டு தருவது போல் பொக்கேயை வைத்தீர்கள்.ஓ.பி.எஸ்ஸைக் கட்டிப் பிடித்து கண்ணீரைத் துடைத்து விட்டீர்கள். சசிகலாவிற்கு ஆறுதல் சொன்னீர்கள்.கணேசன் உங்களுக்கு நடராஜரை அறிமுகப்படுத்தினார்.பிறகு, உங்களின் போன ஜென்மத்து சொந்தமான கேமராக்காரர்களை நோக்கி கைகளை ஆட்டினீர்கள்.எங்கள் MLA க்களெல்லாம் உங்களோடு கை குலுக்க குழந்தையைப் போல் ஓடி வந்தார்கள். சிக்கியவர்களோடு செல்ஃபியும் எடுத்துக் கொண்டீர்கள்.தேர்தல் முடிவு வந்ததைப் போல் பெருமிதத்தோடு கும்பிடு போட்டீர்கள். உங்கள் வித்தைகளின் அனா ஆவன்னாவைக் கூட அறிந்திராத ஓ.பி.எஸ் ஐ பக்கத்தில் நிற்க வைத்து போஸ் கொடுத்தீர்கள்.எங்களின் இப்போதைய முதலமைச்சர் உங்கள் பின்னால் ஒரு டிரைவரைப் போல் ஓடி வந்தார். கம்பெனி ஊழியரைப் போல் கருதி அவர் முதுகில் தட்டி விட்டு புறப்பட்டு விட்டீர்கள். ஏற்கனவே நிகழ்ந்து முடிந்த நாடகத்தின் இன்னொரு அத்தியாயம் இது என்பதைச் சொல்லாமல் சொல்லியிருக்கிறீர்கள் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://seithupaarungal.com/2014/07/28/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-04-26T13:23:17Z", "digest": "sha1:5V6KC7UJ535UTBIEWXFC7LM7TRGPKDWR", "length": 8681, "nlines": 113, "source_domain": "seithupaarungal.com", "title": "அழியும் பறவையினங்கள்! – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nஜூலை 28, 2014 ஜூலை 28, 2014 த டைம்ஸ் தமிழ்\nபடம் : டாக்டர் மயில்வாகனன்\nஇந்தியாவில் 173 பறவையினங்கள் அழியும் அபாயத்தில் இருப்பதாக சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு சங்கம் (ஐ.யூ.சி.என்) தெரிவித்துள்ளது.\nஉயிரினங்களின் பாதுகாப்பு நிலை குறித்து ஆண்டுதோறும் அந்த அமைப்பு வெளியிடும் சிவப்புப் பட்டியலில், இந்த ஆண்டில் புதிதாக 8 பறவையினங்கள் இடம்பெற்றுள்ளன. அதில், அந்தமான் வாத்து, அந்தமான் பச்சைப் புறா, சாம்பல் நிற தலையுள்ள பச்சைப் புறா, சிவப்புத் தலையுள்ள ஃபால்கன் கழுகு உள்ளிட்ட பறவையினங்கள் இடம்பெற்றுள்ளன.\nஇதேபோன்று, உலக அளவில் 13 சதவீத பறவையினங்கள் அழியும் அபாயத்தில் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.\nஅதன்படி, உலக அளவில் இந்த ஆண்டில் சிவப்புப் பட்டியலில் 10,425 பறவையினங்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் 140 பறவையினங்கள் முற்றிலும் அழிந்துவிட்டன. 4 இனங்கள் பூர்விக இடத்தில் அழிந்துவிட்டன. 213 இனங்கள் மிக அரிதாகவும், 413 இனங்கள் அரிதாகவும் காணப்படுகின்றன. 741 இனங்கள் அழிய வாய்ப்புள்ளவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபறவைகளின் வாழிடங்களை அழித்ததே அவற்றின் எண்ணிக்கை குறைந்ததற்கு காரணம் என்று சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு சங்கம் தெரிவித்துள்ளது.\nகுறிச்சொல்லிடப்பட்டது அந்தமான் பச்சைப் புறா, அந்தமான் வாத்து, அழியும் பறவையினங்கள், சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு சங்கம், சாம்பல் நிற தலையுள்ள பச்சைப் புறா, சிவப்புத் தலையுள்ள ஃபால்கன் கழுகு, சுற்றுச்சூழல், பறவைகள்\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postசிறுதொழில் வாய்ப்புகள் தரும் கைவினை வேலைப்பாடுகள்: கற்றுத்தருகிறார் ஜெயஸ்ரீ நாராயணன்\nNext postதக்காளி இல்லாத சமையல் – புடலை பால் குழம்பு\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nநீங்களே செய்யலாம் ஃப்ரூட் ஃபலூடா\nபிஸ்தா ஐஸ்கிரீம் செய்வது எப்படி\nகருப்பட்டி கம்பு சேமியா எப்படி செய்வது\nஸ்டாக்கிங் பூக்கள் செய்வது எப்படி\nமணி வளையல் செய்வது எப்படி\nஎம்பிராய்டரி: பிரஞ்ச் நாட்’இல் சூரிய பூக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://seithupaarungal.com/2014/11/09/2%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE/", "date_download": "2018-04-26T13:20:40Z", "digest": "sha1:VM2QJB4EHGP5ZEJP53LB24X7B33ZBNMC", "length": 10730, "nlines": 117, "source_domain": "seithupaarungal.com", "title": "2ஜி முறைகேடான உரிமங்களை மன்மோகன் சிங் ரத்து செய்திருக்க வேண்டும்: ப.சிதம்பரம் – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nஅரசியல், இந்தியா, இன்றைய முதன்மை செய்திகள்\n2ஜி முறைகேடான உரிமங்களை மன்மோகன் சிங் ரத்து செய்திருக்க வேண்டும்: ப.சிதம்பரம்\nநவம்பர் 9, 2014 த டைம்ஸ் தமிழ்\nமூத்த பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய் எழுதியுள்ள “இந்தியாவில் மாற்றத்தை ஏற்படுத்திய தேர்தல்: 2014′ என்ற நூல் வெளியீட்டு விழா டெல்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.\nஇதைத் தொடர்ந்து நடைபெற்ற கலந்துரையாடலில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, ப.சிதம்பரம், பத்திரிகையாளர் கரண் தாப்பர் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nஅதில் ப. சிதம்பரம் பேசியது ‘2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் உரிமம் வழங்கும் விவகாரத்தை வேறு விதமாக கையாண்டிருக்க முடியும். அதில், முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தவுடன், அலைக்கற்றை உரிமங்களையும் ரத்து செய்யுமாறு மன்மோகன் சிங்கிடம் கூறினேன். “முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை’ என்ற கொள்கை அடிப்படையில், உரிமங்களை வழங்க அனுமதிக்கக் கூடாது என்றும் கூறினேன். என்னுடைய கருத்துக்களை பரிசீலிப்பதாக அவர் கூறினார். பின்னர், இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்தின் முடிவுக்கு விடப்பட்டது. இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட்டு அனைத்து உரிமங்களை ரத்து செய்வதற்கு முன்பாகவே, அவர் ரத்து செய்திருக்கலாம். கடந்த ஆட்சியில் பொருளாதாரத்தை சரியாக மேம்படுத்தியிருந்தால், மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மோசமான அளவில் தோல்வியைச் சந்தித்திருக்காது.\nகாங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கட்சியை வலுப்படுத்துவதற்கான செயல் திட்டங்களை உருவாக்க வேண்டும் என்று ஏற்கெனவே கூறியிருந்தேன். 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மோடியால்தான் பாஜக வெற்றி பெற முடிந்தது. அவருடைய செயல்பாடுகள் கட்சியின் வெற்றிக்கு வித்திட்டன. அதை மறுப்பதற்கில்லை. மக்களவைத் தேர்தலில் நாடு முழுவதும் திட்டமிட்டு பாஜக பிரசாரம் மேற்கொண்டது. எனினும், தமிழ்நாடு, கேரளம், ஒடிஸா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் பாஜகவின் பிரசாரம் போதிய பலனளிக்கவில்லை’ என்று சிதம்பரம் கூறினார்.\nகுறிச்சொல்லிடப்பட்டது அரசியல், இந்தியா, இன்றைய முதன்மை செய்திகள்\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postகுழந்தைகளை தெரிந்துகொள்ள நேரம் ஒதுக்குங்கள்\nNext postமுல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடி வரை உயர்த்துவோம்: ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை\n“2ஜி முறைகேடான உரிமங்களை மன்மோகன் சிங் ரத்து செய்திருக்க வேண்டும்: ப.சிதம்பரம்” இல் ஒரு கருத்து உள்ளது\n7:46 முப இல் நவம்பர் 10, 2014\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nநீங்களே செய்யலாம் ஃப்ரூட் ஃபலூடா\nபிஸ்தா ஐஸ்கிரீம் செய்வது எப்படி\nகருப்பட்டி கம்பு சேமியா எப்படி செய்வது\nஸ்டாக்கிங் பூக்கள் செய்வது எப்படி\nமணி வளையல் செய்வது எப்படி\nஎம்பிராய்டரி: பிரஞ்ச் நாட்’இல் சூரிய பூக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://chennaicity.info/cat/news/sports/page/2/", "date_download": "2018-04-26T13:34:09Z", "digest": "sha1:GVQSMRVJHD2AMDEPTKZOZMFTLAMDAICK", "length": 4158, "nlines": 149, "source_domain": "chennaicity.info", "title": "sports | Chennai City Info - 8122-044-044 | Page 2", "raw_content": "\nபாலியல் வன்கொடுமையில் ஆண் குழந்தைகள் பாதிக்கப்பட்டாலும் மரண தண்டனை அளிக்க வேண்டும்: மேனகா காந்தி ஆதரவு\nவிமானத்தில் ரூ2.6 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்\n11வது முறையாக நடால் சாம்பியன்\nராயல்சுக்கு 168 ரன் இலக்கு\nமான்டி கார்லோ டென்னிஸ் பைனலில் நடால்\nகே.எல்.ராகுல், கேல் அதிரடி அரை சதம் ரைடர்சை வீழ்த்தியது கிங்ஸ் லெவன் பஞ்சாப்\nசென்னை ஹாக்கி சங்கத் தேர்தல் தலைவராக பாஸ்கரன் தேர்வு\nகாமன்வெல்த்தில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு\nமினி வாலிபால்: தமிழக அணி அறிவிப்பு\nட்வீட் கார்னர்…ராக் ஸ்டார்ஸ் நாங்க\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி...\nவெற்றிதான் முக்கியம்… ஆரஞ்சு தொப்பி அல்ல\nபதற்றமின்றி விளையாட உதவினார் எவின் லூயிஸ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} {"url": "http://kopunniavan.blogspot.com/2009_09_13_archive.html", "date_download": "2018-04-26T13:23:51Z", "digest": "sha1:NN6JEDWQ6MFB247XWP6JMLNGJRC43DT6", "length": 63842, "nlines": 384, "source_domain": "kopunniavan.blogspot.com", "title": "கோ.புண்ணியவான்: 9/13/09 - 9/20/09", "raw_content": "ஒவ்வொருமுறையும் நூல்கள் திறக்கப்படும்போது- நன்றிக் கடனாக அவை உங்களை அகலத் திறந்துவிடுகினறன. (ko.punniavan@gmail.com)\nஒரு கரிநாளில் நட்பு மரணித்துகொண்டபோது\nநிரப்பிய வண்ணம் கழிகிறது பொழுது\nகடைசி மணியின் அவலச் சப்தம்\nகடந்த ஆண்டு இலக்கியச்சுற்றுலாவை முடித்துக்கொண்டு, சென்னை புக்செண்டரிலிருந்து என் வாசிப்பிற்கான நூல்களோடு, என் பேத்திக்கும் சில நல்ல கதைப்புத்தகங்களையும் வாங்கி வந்தேன்.அவள் பள்ளிக்குப் போகுமுன்பே எழுத்துக்கூட்டி வாசிக்க ஆரம்பித்திருந்தாள்.வாசிப்பதைத் துரிதமாக்கவும்,அவளின் சிந்தனை ஆற்றலைத் திறந்துவிட அந்தக் கதைப்புத்தகங்கள் சாவியாகப்பயன்படும் வண்ணம் தேடித்தேடி, மேலோட்டமாக வாசித்து வாசித்து நூல்களைத்தெரிவு செய்து வாங்கி வந்தேன். நூல்களில் பக்கத்துக்குப்பக்கம் வண்ண ஒவியங்கள் வரையப்பட்டிருந்தன.மிருகங்களின் படங்களும் பிராணியின் படங்களும் அவற்றுக்கான சூழலும் கிராபிக் முறையில் தீட்டப்பட்டிருந்தன. இந்தக்கவர்ச்சி என் பேத்தியை பெரிதளவில் ஈர்க்கும் என்ற நம்பிக்கை எனக்குள் இழை இழையான மகிழ்ச்சி நகர்ந்து என்னை உற்சாகப்படுத்திக்கொண்டிருந்தது. இந்நூல்களை வாசித்தறியும் ஆற்றலை அப்போதைக்கு அவள் அடையவில்லை என்றாலும் நான் கையாளப்போகும் உத்தி அவளைக் கதைக்குள் இழுத்துக்கொள்ளும் என்ற எண்ணம் என்னிடம் இருந்தது.\nகதையின் முதல் கால்வாசிக்கதையை அவளுக்குப்புரியும்படி ஏற்ற இறக்கத்தோடும் உணர்ச்சிப்பொங்கவும் வாசித்துக்காட்டுவேன். அதில் வரையப்பட்டிருக்கும் ஓவியங்களையும் அவளின் புரிதலை எளிமையாக்கத் துணையாகக்காட்டி, அவளின் கதை கேட்கும் ஆவலைத்தூண்டிவிடுவேன். வலைக்குள் சிக்கிக்கொண்ட மீன்போல அவள் என் கதை வலைக்குள் பிடிபட்டு விடுவாள். கதை சூடு பிடிக்கும் நேரத்திலும்,\nஅவளின் ஆவல் அதிகபட்சமாக கூடிவிட்ட நேரத்திலும் மீதிக்கதையை நீயே படித்துக்கொள் என்று சொல்லி நழுவிவிடுவேன்.என்னை தொடர்ந்து வாசிக்கச்சொல்லி என் பேத்தி என்னதான் கெஞ்சினாலும் அவளே வாசித்தறியும் சுய முயற்சியைக்கடைபிடிக்கவேண்டும் என்பதில் பிடிவாதமாய் இருந்துவிடுவேன். என் மாணவர்களுக்குக் கதை படிக்கும் பழக்கத்தை இந்த உத்தியைக்கையாண்டுதான் கற்பித்து வெற்றிகண்டிருக்கிறேன்.(கதை படிக்கும், படிப்பிக்கும் நிலை இன்றைய பாட அட்டவணை நெருக்கடியில் இடமில்லாமல் செய்திருப்பது நகைச்சுவைக்குரிய விஷயம்) என் பேத்தியிடமும் என் செக்கு செல்லும் என்ற மேலாண்மை என்னிடம் மேலோங்கியிருந்தது.\nநான் கொண்டு சென்ற கதைப்புத்தகங்களை ஒருநாள் அவளிடம் ஒவ்வொன்றாகக்காட்டி, பூர்வாங்க முறையில் அவளின் அடைப்படை ஆர்வத்தைக்கிளற பிரயத்தனம் செய்துகொண்டிருந்தேன்.நான் விரித்த வலைக்குள் அவள் மெல்ல சிக்குவதுபோலப் பட்டது.\nஎனக்கு முன்பே என் மனைவி சில அடிப்படை தமிழ்ப்பயிற்சிப்புத்தகங்களை அவளிடம்கொடுத்து பயிற்சி செய்வித்து வந்திருக்கிறாள். இந்தக்கதைப் புத்தகங்களைப் பார்த்தவள் சிவ பூஜைக்குள் கரடி நுழைந்துவிட்டதாய் திடுக்கிட்டு இதனை அபகரித்து “பரீட்சையில அவள் நல்ல மார்க்கு வாங்கணும், மொத இதெல்லாம் செய்து முடிக்கட்டும் பின்னால கதையப்படிக்கலாம்,” என்று கறாராகவே தன் அபிப்பிராயத்தை என்னிடம் திணித்தாள். பள்ளியின் துவக்க நாளே சோதனைக்குத் தயார்படுத்துவது போன்ற அவளின் ஆர்ப்பாட்டம் என்னைத் துணுக்குறவைத்தது.\nஎத்தனை தாய்மார்கள் இதுபோன்ற மனோநிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்பது கூர்ந்து நோக்குபவர்கள் அவதானிக்கலாம். மார்க்கட்டில் இருக்கும் எல்லா பயிற்சிப்புத்தகங்களைச்செய்து முடிப்பதென்பது முடியாத காரியம். அது அட்சய பாத்திரம் மாதிரி முடிவில்லாமல் வந்துகொண்டே இருக்கும். இந்நாட்டில் புனைகதைகள் நூல்கள் எழுதப்படுவதைவிட பாடப்பயிற்சிப்புத்தகங்கள்தான் எண்ணிக்கையில் அதிகம் எழுதப்பட்டு விற்பனைக்கு வந்துவிடுகின்றன. அதன் வணிகத்தேவையை தூண்டிவிட்டது சோதனைகள்தாம்.\nகதைப்புத்தகத்தின் வண்ண ஓவியங்களின் தன்னை மறந்து காந்தமென ஈர்க்கப்பட்டிருந்தவள் முகத்தில் ஏமாற்றம் எறும்புபோல ஊரத்துவங்கியது.\n“கதையில் ஆர்வம் வந்தா, நெறைய வாசிக்க ஆரம்பிப்பா,மொழியில் புலமை ஏற்படும், அப்புறம் எல்லாப் பாடங்களிலும் நல்ல மார்க்கு வாங்குவா,”என்று நான் வாதிட்டேன்.\n“பயிற்சி நெறைய செய்தாதான் நல்ல மார்க்கு வாங்கமுடியும், கதை படிச்சா புத்தி திரும்பத் திரும்ப கதைக்குத்தான் போகும்,” என்று எதிர்வாதம் செய்தாள்.(ஒரு முக்கிய அறிவிப்பு.....கதை சொல்லும் பாட்டிகள் சில அரிதாக காணப்பபடும் உயிரினங்கள் போல அருகிப்போய்க்கொண்டிருக்கிறார்கள்-extinction)\nநான் எழுத்தாளானாய் இருப்பதில் அவளுக்குக் கோபம் இருந்திருக்கக்கூடும். வீட்டுக்காரியங்களைச் சரிவர கவனிக்காதது என் எழுத்து ஆர்வத்தினால் வந்தது என்ற எண்ணியிருக்கக்கூடும்.என்னுடைய நூல்கள் பல விற்கப்படாமல் வீட்டின் மூளையில் முடங்கியிருப்பதும் அவளின் ஆதங்கத்தைக்கிளறியிருக்கக்கூடும்.(ஏறத்தாழ குப்பை அந்தஸ்த்தை எட்டிவிட்டதை அகற்றாமல் வைத்திருந்தால், எந்த இல்லத்தரசிக்குத்தான் கடுப்பு வாராது) பலரின் நூல்கள் வெளியிடும்போது அதற்காக அலைந்ததும், முதல் நூல் வாங்க பிரமுகர் தேடுவதில் நான் பட்ட சிரமங்களையும் (அதில் சிறிதளவு அவமானங்களையும் என்று வாசகர் அர்த்தப்படுத்திக்கொள்ளலாம் –பாதகமில்லை) அவள் உன்னிப்பாக உள்வாங்கியிருந்திருப்பாள்.\n“நான் தலைமை ஆசிரியராக இருந்தவன், முறையான ஆசிரியர் பயிற்சியை முடித்தவன். எனக்கு உளவியல், போதானாமுறை கசடற தெரியும்,” என்று என் தரப்பு வாதத்தை முன்வைத்தேன்.\n“அத தூக்கி குப்பையில போடுங்க, புள்ள பயிற்சி செய்யட்டும்,” என்று அன்றைய விவாதத்தை ஹிட்லர் சர்வாதிகாரத்தனத்தோடு முடித்துவைத்தாள்.\nஇன்றைய பெற்றோர்களின் மனப்பான்மைக்கு இதைவிட வேறு உதாரணம் வேண்டாம்.சோதனையில் எல்லா பாடங்களிலும் தம் பிள்ளைகள் A பெறவேண்டும் என்பதில் மிகக்கவனமாக இருக்கிறார்கள்.அடுத்த வீட்டு பிள்ளைகளைவிடவும், உறவினர் பிள்ளைகளைவிடவும், சக மாணவர்களைவிடவும், தம் மக்கள் மேன்மையில் இருக்கவேண்டும் என்று கருதுகிறார்கள்.இன்றைய கல்விச்சூழல் அப்படி அமைக்கப்பட்டுவிட்டது.மக்கள் மனதிலும் அப்படிப்பட்ட ஆற்றாமை கரையான் புற்றென வளர்ந்துவிட்டிருக்கிறது.எல்லாப்பாடத்திலும் ஏ பெற்றால் வாழ்க்கையில் ஜெயித்துவிட்டதான பிம்பத்தை வளர்த்துக்கொண்டிருக்கிறார்கள்,பாவம்\nயு.பி.எஸ்.ஆர் முடிவுகள் வெளியிடப்பட்டு பரபரப்பாக ‘ஆக்கப்பட்ட’ நேரத்தில் (ஆம் பரபரப்பாக ஆக்கப்பட்டதுதான்.பத்திரிகை,மின் ஊடகங்கள் செய்யும் கைங்கர்யம்)என் நண்பர் செபஸ்தியன் எழுதி, குறுந்தகவல் மூலம் எனக்கு அனுப்பிய கவிதை ஒன்றை வாசகர் பார்வைக்கும் கொண்டுவருகிறேன். (இந்த மனுஷனை நெறைய கவிதை எழுதுங்கையா, உங்களுக்கு கவிதை நல்லா வருது. அத வளத்துக்குங்கைய்யா என்று பலமுறை தலப்பாட அடிச்சுக்கிட்டேன்)அவர் எழுதிய கவிதை இதோ.\n என்று தன் அங்கதப்பார்வையைச் சுருக்கெனத்தைத்திருந்தார்.\nபல முறை தமிழ்ப்பள்ளிகளில் நடக்கும் கூட்டங்களுக்குப்போகும்போது அங்குள்ள நூல்நிலையங்கள் இயங்குவதைப்பார்த்திருக்கிறேன். ஒரு பழைய மர அலமாரியில் புத்தகங்கள் அடுக்கி, இரும்பு பூட்டு போட்டு பூட்டி வைத்திருப்பார்கள்.சாவியும் அநேகமாக தொலைந்து போயிருக்கும்.அவசியமான நேரத்தில் திறக்கவேண்டிய நிர்ப்பந்தம் நேரும் வேளையில் சாவிக்காக நூல் நிலைய ஆசிரையரைகேட்டால் அது தலைமை ஆசிரியரிடம் இருக்கும் என்பார். தலைமை ஆசிரியரைக்கேட்டால் அது நூல் நிலைய ஆசிரியரிடம்தான் இருக்கும் என்பார். இதற்கிடையில் நூல் நிலைய ஆசிரியர்களாகப் பலர் மாறி மாறி செயல்பட்டிருக்கவும் கூடும். இவர்களுள் மாற்றலாகி சென்றவரும் இருப்பர். சாவியை யாரிடம் கேட்பது கடைசியில் சாவி கிடைக்காது என்று ஆனதும் சுத்தியலுக்கு வேலை வந்துவிடும். அலமாரியின் துருவேறிய பூட்டை உடைக்கு நிலை வந்துவிடும்.\nஅலமாரியில் இருக்கும் நூல்கள் ஹைதர் காலத்து நூல்களாக இருக்கும்.இன்றைய வாசிப்புக்குத் தகுந்த நூல்களைப் பார்ப்பது கடினமான ஒன்றாகவும் இருக்கும்.அதிலும் மாணவர் வாசிப்புக்கான கதை நூல்கள் நைந்தும் கிழிந்தும் போயிருக்கும். இடையில் வாங்கப்பட்ட நூல்கள் களவாடப்பட்டிருக்கும். முறையாகத்திரும்ப பெறமுடியாத நிர்வாக முறை இடரை எட்டியிருக்கும். ஆசிரியர்களுக்கு வாசிப்பதில் ஆர்வம் இல்லாத காரணத்தால் இந்தப்பிரச்னைகள் வளர்ந்துவிடுவது உண்டு.வாசிப்பதில் ஆர்வம் இல்லையென்றால் புத்தகங்களின் பாதுகாப்புக்கு உத்திரவாதம் அளிக்கமுடியாது அல்லவா அவர்களைச்சொல்லி என்ன செய்ய இன்றைய கல்விநிலை அப்படிப்பட்டது.சோதனையை முன்னிலைப்படுத்தி நகர்த்தப்படும் கல்விநிலை. இல்லையென்றால் பன்னிரெண்டு வயது பாலகனிடம் எனக்கு ஏழு A வேண்டும் என்ற அராஜகத்தைச் செலுத்துவோமா எல்லாருக்குமே ஏழு A வேண்டும் என்ற மிட்டாய் பிடிவாதம் வள்ர்ந்துவிட்ட சமூகத்திடம் படைப்பாக்கம், புனைவு ஆற்றல் பற்றிய கருத்தாக்கம் செல்லுபடியாகுமா என்ன எல்லாருக்குமே ஏழு A வேண்டும் என்ற மிட்டாய் பிடிவாதம் வள்ர்ந்துவிட்ட சமூகத்திடம் படைப்பாக்கம், புனைவு ஆற்றல் பற்றிய கருத்தாக்கம் செல்லுபடியாகுமா என்ன (ஆசிரியர் வர்க்கத்திலிருந்து உருவாகும் படைப்பாளர்களை எண்ணிப்பாருங்கள்) இந்த Aக்கள் முகாமையாக்கப்பட்டதால் மாணவர் உலகமாக இருக்கவேண்டிய பள்ளிக்கூடங்கள், அத்து மீறிய சமூக, அரசியல் போன்ற பொது அமைப்புக்கள் பங்கு போட்டுக்கொள்ளும் இடமாக மாற்றங்கண்டு வருகிறது. கிடைக்கும் ஏக்களை அவர்களும் கூறு போட்டுக்கொள்ளலாமல்லவா (ஆசிரியர் வர்க்கத்திலிருந்து உருவாகும் படைப்பாளர்களை எண்ணிப்பாருங்கள்) இந்த Aக்கள் முகாமையாக்கப்பட்டதால் மாணவர் உலகமாக இருக்கவேண்டிய பள்ளிக்கூடங்கள், அத்து மீறிய சமூக, அரசியல் போன்ற பொது அமைப்புக்கள் பங்கு போட்டுக்கொள்ளும் இடமாக மாற்றங்கண்டு வருகிறது. கிடைக்கும் ஏக்களை அவர்களும் கூறு போட்டுக்கொள்ளலாமல்லவா இந்த லட்சணத்தில் இலக்கியச்சிந்தனை வேர்விடவேண்டிய இடம்., தூர் வாரவேண்டிய நிலைக்குத்தள்ளப்பட்டிருப்பது அவலம்.\nபள்ளிகளில் கதை சொல்வது, கதைகேட்பது போன்ற மனதை குஷிப்படுத்தும் கேளிக்கை அம்சங்கள் குறைந்துவிட்டன. சோதனையில் இப்படித்ததான் எழுதவேண்டும், இதுதான் இந்தக்கேள்விக்கான பதில் என்ற இயந்திரத்தன்மை சீரிய அளவில் கையாளப்படுகிறது. இதனால் மாணவர்களின் சுய சிந்தனை வளர்ச்சிக்கு குந்தகம் உண்டாக்குகிறோம்.அதற்குமேல் மாணவர்கள் கூடுதல் சிந்தனையை வளர்க்கவிடாமல் முட்டுக்கட்டை விதிக்கிறோம்.படைப்பாக்க மனம் மாணவர்களிடமிருந்து சப்தமில்லாமல் அபகரிக்கப்படுகிறது. (கட்டுரை எழுதக்கோரும் வினாக்களை கவனியுங்கள்-80 சொற்களிலிருந்து 100 சொற்களுக்குள் கட்டுரை அமையவேண்டும் என்ற கட்டாய வரையறையானது, அதற்குமேல் சிந்திக்கக்கூடாது என்ற சர்வாதிகாரத்தைத்திணிக்கிறது.\nஅதனால் தான் இன்றைய கல்விச்சாலையை மாணவர்கள் விரும்புவதில்லை. இது கசப்பான உண்மை பள்ளியின் கடைசி மணி அடிக்கும்போதும், விடுமுறை விடப்படும் பள்ளியின் இறுதி நாளிலும், மாணவர்கள் பள்ளி வளாகத்தைவிட்டு சொல்ல முடியாத மகிழ்ச்சியோடு, கூச்சலிட்டுக்கொண்டு வெளியே ஓடுவதைப்பார்க்கும்போதும் ‘கல்விச்சாலையை மாணவர்கள் விரும்புவதில்லை’ என்று நான் கூறுவதற்கான கட்டியமாகப் புரியும்.....\nஎன் கவிதை நிரம்பிக்கொண்டிருந்த தாள்\nஅதன் விரல்களில் சிக்கிய பென்சிலும்\nஅது உறுதியாய் பூ அல்ல\nமேலும் திசை மறந்த கோடுகள்.\nமறக்கப்பட்ட ஆளுமை (அநங்கம் கட்டுரை)\nஎம் ஏ இளஞ்செல்வன் மாரடைப்பால் திடீர் மரணமுற்ற தகவல் கிடைத்தபோது நான் மலாயா பல்கலைக்கழக துணைவேந்தர் மண்டப வாயிலின் எழுத்துலக நண்பர்களோடு பேசிக்கொண்டிருந்தேன்.டாக்டர் கிருஷ்ணன் மணியம்தான் என்னை நெருங்கி அவர் இறந்து போன செய்தியை என்னிடம் சொன்னார்.அவரின் வசிப்பிடத்துக்கு அருகாமையிலேயே வசிக்கும் எனக்கு கோலாலம்பூருக்குப்போன பிறகுதான் செய்திகிடைத்தது ஒரு துர்ரதிர்ஸ்டம்.மனம் பல்கலலைக்கழக மண்டபத்திலிருந்து அப்போதே விடைபெற்றுக்கொண்டிருந்தது. ஒரு இலக்கிய நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்திருந்த எனக்கு ஒரு இலக்கியவாதியின் மரணச்செய்தி ஒரு இலக்கியப்பேராண்மையின் மரணமாகவே என்னைக் கருதவைத்தது. ஏனெனில் எம் ஏ இளஞ்செல்வனை ஒரு நண்பராக பார்த்ததைவிடவும்,ஒரு சக எழுத்தாளனாக அவதானித்ததைவிடவும்,சக தலைமை ஆசிரிய நண்பனாகப் பழகியதைவிடவும்,ஒரு இலக்கிய மேலாண்மையை பிரம்மிப்போடு அன்னாந்து பார்க்கும் மன நிலைக்கு நான் தள்ளப்பட்டிருந்தேன்.அவருடைய சிறுகதைகளை வாசித்த பிறகு அவரை அமானுடமாக பார்ப்பதை ஒரு தரிசனமாகவே மேற்கொண்டேன். அவருடைய சிறுகதைகள் முற்றிலும் வேறொரு தளத்தில் இயங்கி இந்நாட்டின் பிற சிறுகதைகளைவிட தனித்துக்காட்டும் தன்மையைக்கொண்டதாக இருந்தது என்னை மிகுந்த வியப்புக்கு உள்ளாக்கிய வண்ணம் இருந்தது. அப்போது நான் எழுத்துலக வட்டத்துக்குள் நுழையாமல் வெறும் வாசகனாகவே வேடிக்கைப்பார்த்துக்கொண்டிருந்த காலம். அவரின் எழுத்துமேல் கொண்ட ஈர்ப்புதான் என்னையும் எழ்த்துலகுக்கு, ஒரு எறும்பு தன் இரையை மெல்ல இழுத்துச்செல்வதுபோல் என்னையும் இழுத்துச்சென்றிருக்கக்கூடும்.\nஇந்தியன் மூவி நீயூஸை எஸ்.எஸ் சர்மாவை ஆசிரியராக்கொண்டு இயங்கிக்கொண்டிருந்த காலத்தில்தான் பிரதி மாதமும் அவருடைய ஆரம்பகால கதைகளும், துணுக்குக்கட்டுரைகளும் பக்கத்து வீட்டு அக்கா மூலம் எனக்குவாசிக்கக்\nகிடைத்துக்கொண்டிருந்தது. அப்போதெல்லாம் அதனை மாதாமாதம் காசுகொடுத்து வாங்கும் சக்தி என்னிடம் இருந்ததில்லை. இருந்தாலும் அதன் வண்ணக்கோலம்,சினிமா காட்டும் உடற்கவர்ச்சி என்னை அதனைப்படிக்க துண்டிக்கொண்டிருந்தது.அவர் எழுதிய எல்லா எழுத்துப்படிவத்திலும் அவரின் புகைப்படம் போடப்பட்டிருக்கும்.சினிமா இதழாக வெளிவந்து கொண்டிருந்த அந்த இதழில் அவருடைய புகைப்படமும் ஒரு சினிமா நட்சத்திர முகத்துக்கு ஈடான அழகோடு காட்சிதரும்.அந்த மசாலா இதழில் அவர் எழுதிய ஒரு கதையோடு நான் மிக நெருக்கமானேன்.அவர் கதையோடு பரீட்சையமாவதற்கு அதுதான் புள்ளையார் சுழியாக அமைந்திருக்கக்கூடும்.அந்தக்கதை கொஞ்சம் நீல சமாசாரங்களை உள்ளடக்கியிருந்தது.புதிதாகத் திருமணம் முடிந்த இரண்டு தம்பதியினரில் ஒருவர் வீட்டில் சந்திக்கின்றனர்.அவர்கள் மேல் தட்டு வர்க்கத்தினர் என்பதை கதையில் அழகுற காட்சிப்படுத்துகிறார்.ஒருவர் தன் நண்பரின் மனைவியை அழைத்துக்கொண்டு தன்னுடைய பிரம்மாண்டமான வீட்டைச்சுற்றிக்காட்ட அழைத்துச்செல்கிறார்.அதேபோல இவரின் மனைவியும் தன் கணவருடைய நண்பரை அழைத்துக்கொண்டு போகிறார்.ஒரே திசையில் பேசிக்கொண்டு போனவர்கள் பேச்சு சுவாரஸ்யத்தில் வெவ்வேறு திசைக்கு மாறிவிடுகிறார்கள். வீட்டின் சுற்றுப்புறம்,பூங்கா,வீட்டை அலங்கரிக்கும் அழகுப்பொருட்கள், அறைகள் என அறிமுகப்படுத்திக்கொண்டிருக்கும் வேளையில் அவர்கள் மெல்ல மெல்லஅன்னியோன்யம் ஆகிறார்கள்.\nபேசிக்கொண்டு போகும்போதே தன்னிச்சையாக உரசலும் தொடுதலும் தவிர்க்க முடியாத ஒன்றாக ஆகிவிடுகிறது.படுக்கை அறையைக் காட்டிக்கொண்டிருக்கும்போது படுக்கைக்கட்டில், மெத்தை, பட்டுவிரிப்பு,மெல்லிய இசை, அறைசூழல் ,அது தரும் கதகதப்பு,போதாக்குறைக்குப் புதிய துணை அவர்களை மெய் மறக்கச்செய்து உடல் உறவுவரை காந்தமென கவர்ந்துவிடுகிறது.வேறொரு படுக்கை அறையில் இவளின் கணவனுக்கும்,இவனின் மனைவிக்கும் இதே காட்சியைக்காட்டுகிறார் கதாசிரியர்.அதன் பிறகு வீட்டில் உணவருந்திவிட்டு ஒன்றும் நடவாததுபோல் விடைபெற்றுக்கொள்கிறார்கள்.கதை முடிந்துவிடுகிறது.ஆம் கதை முடிந்துவிடுகிறது. வசதி படைத்தவர்களின் மனப்போக்கைப்படம்பிடித்துக்காட்டும், அங்கதக் கதையாக இது அமைந்திருந்தது.கதையை வாசித்தவர்கள் இது நம்முடைய பண்பாட்டுக்கு முரணானது,கதாசிரியன் ஒழுக்கக்கேடான கதையை எழுதுகிறான், என்றெல்லாம் அப்போது அவரின் மீது காத்திரமான கல்லெறிகள் வீசினார்கள்.இதுதான் இளஞ்செல்வனின் பலம்.யாரும் எழுதத்துணியாத விஷயத்தை தன்னுடைய கதைக்களனாக்கி பின்னர் தன் கதையும் தானும் ஒருசேர சர்ச்சைக்குள்ளாகி பேசப்பட்டுவிடுவார். இந்தக்கதையை வாசிக்கும்போது எனக்குப்பதினெட்டு வயதிருக்கும். என் வயதும் கதையின் உள்ளார்த்தம் என்னை (கதையின் கரு, உள்ளீட்டையும் பொருட்படுத்தாமல்) கதைக்குள் லயிக்கச்செய்திருந்தது.அதற்குப்பிறகுதான் அவரின் கதையைத் தேடிப்படிக்க மும்முறம் காட்டினேன்.\nசிறுகதையின் வடிவம் உள்ளடக்கம் இன்னதென்று எனக்குப்போதித்த கதை ,அவர் எழுதி சர்ச்சையையெல்லாம் தாண்டி தெருச்சண்டைவரை வந்து சச்சரவை உண்டு பண்ணிய கதை ‘பொசா’ என்ற கதை.தமிழ் நேசனில் வெளியாகியிருந்தது.தனக்கு மிக அருகாமையில் நடந்த சம்பவத்தையோ,தானே ஒரு பாத்திரமாக இயங்கிய ஒன்றையோ மிகச்சுவரஸ்யமான கதையாக வடித்தெடுக்க முடியும் என்பதற்கன சான்றாக நிறுவப்பட்ட கதை ‘பொசா’.இக்கதையின் நாயகன் ஏதோ ஒரு காரணத்துக்காக, நிஜ வாழ்க்கையில் அவரோடு பிணக்கை ஏற்படுத்திக்கொண்டவர்.இந்தக்கதையை அவர் எழுதும்போது பொசா என்றால் என்ன என்று விளக்கம் தந்துவிட்டு கதைக்குள் நுழைகிறார் இளஞ்செல்வன். பொசா என்ற தலைப்பிட்டபின் கதையைச்சொல்லிக்கொண்டு போயிருக்கலாம்.ஆனால் எங்கப்பன் குதிருக்குள் இல்லையென்று சொல்வதுபோல் பொசா என்பது யாரைக்குறிக்கும் என்று சொல்வதிலிருந்தே தோளுறித்துக்காட்டும் அவரின் துணிச்சல் வெளிப்படுகிறது. அவரின் இந்த அறிமுகம் வாசகனை நத்தையின் தலையென கதைக்குள்ளிழுத்துக் கதையை நட்புவட்டத்திலும், கதைக்களம் எடுக்கப்பட்ட வட்டாரத்திலும் பரவலாக பேசவைத்து விடுகிறது.ஏனெனில் அக்கதை அவர்களுக்கு மிக அறிமுகமான ஒருவரின் கதை. அதைப்பற்றி பேசவைத்தது மட்டுமின்றி பாத்திரத்தை ஏளனமாக்கிச் சிரிக்கவும் வைத்திருந்தது. அதற்குப்பிறகுதான் கதையின் எழுத்து விமர்சனத்தையும் தாண்டி தெருச்சண்டைவரை நீண்டுவிடுகிறது.கதையைவிடவும் அந்தத்தெருச்சண்டை பிரபலமாவதற்கு கதையே வழிவிட்டிருந்தது என்பதுதான் கொசுறுச்செய்தி.அடர்த்தியான பாத்திரத்தன்மைக்கு முகாந்திரமான இடத்தைக்கொடுத்து புனையப்பட்ட இக்கதை இன்றுவரை நம்மை பேசவைத்துவிடுகிறது. இந்தக்கதையை வாசித்த பிறகு அவரின் மீதான மோகத்தை என்னுள் கோப்பையில் ஊற்றப்படும் நீர்போல நிரம்பியவண்ணம் இருந்தது..\nஎழுபதுகளின் இறுதியில் மலேசிய சிறுகதை உலகின் மிகப்பெரிய ஆளுமையாக திகழ்ந்தவர் எம் ஏ இளஞ்செல்வன்.அவரின் இழைப்பு உளி, டுக்கா சித்தா,தெருப்புழுதி..ஆத்ம வீணையின் அமர சுருதிகள்,சேதாரம்,.பாக்கி,நொண்டி வாத்து,வித்தியாசமான ஒருத்தி, போன்ற கதைகள் அவரை மிக உச்சத்துக்குக் கொண்டு சென்றவை. இவற்றுள் டுக்கா சித்தா என்ற சிறுகதை எஸ் பி.எம்.மில் மலாய் மொழியில் சிறப்புத்தேர்ச்சி பெறாத ஓர் இளைஞனின் முற்போக்கான சிந்தனையை முன்னிலைப்படுத்தி பின்னப்பட்ட சிறுகதை.தன்னோடு படித்த, தன்னைவிட குறைவான மதிபெண்கள் பெற்ற மலாய் நண்பர்களுக்கு விரைவிலேயே வேலை கிடைத்துவிட, தான் எவ்வளவு அலைந்தும் வேலை கிடைக்காமல் அவதியுறுவதைக் காத்திரத்தோடு சொல்கிறது கதை.சிறுபான்மையினரை ஒரு பொருட்டாகக் கருதாத அரசின் பிற்போக்கைs சுட்டிக்காட்டுவதோடு, சுயமுயற்சி யாரையும் முன்னுக்கு கொண்டுபோய்விடும் என்பதை தன் காட்டமான கதையாடலின் வழி நீரூபிக்கிறார் இளஞ்செல்வன்.வேலைக்காக நேர்முகத்தேர்வுக்குச்சென்றுவரும் நாயகன் ஒவ்வொருமுறையும் இந்த வேலை கண்டிப்பாய்க்கிடைத்துவிடும் என்று நம்பிக்கையோடு இருக்கும் ஒவ்வொரு வேளையிலும், தனக்கு வரும் கடிதங்கள் ‘டெஙான் டுக்கா சித்தாஞா’ (வருத்தத்தோடு தெரிவிப்பது என்னவென்றால்) என்ற தொடங்கி இந்த வேலை தேர்வில் தான்தோல்விகண்ட செய்தியையே தாங்கி வருவது பின்னாளில் எதிர்பார்த்த வழக்கமாகிவிடுகிறது. மனம் நொந்து நூலாகிபோன சந்தர்ப்பத்தில்தான் தன்னோடு படித்த ஒரு சீன நண்பரை சுங்கைப்பட்டாணி மருத்துவ மனை வாசலில் சந்திக்கிறான் நாயகன்.(அப்போது அவர் வசித்த வீடருகேதான் அந்த மருத்துவமனை இருந்தது)அரசு வேலையை எதிர்பாராமல், தன் தந்தையின் சிறு வியாபாரத்தில் தன்னையும் ஈடுபடுத்திக்கொண்டு தன் வாழ்க்கைப்படிகளில் வெற்றியோடும் வெறியோடும் ஏறிச்செல்வதை அறிந்து ,தானும் சுயகாலில் நிற்க முனைந்து அதில் ஈடுபட்டு வெற்றிநடை போடுகிறான்.ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் இயங்குவதும்,தான் குடும்பத்தையும் அதில் ஈடுபடவைப்பதும்,தினமும் வியாபாரம் முடிந்து கல்லா கட்டும்போது கிடைக்கும் ஆதாயத்தையும் கணக்குப்பார்த்து, அத்துறையில் தன் ஒளிமயமான எதிர்காலத்தை பார்க்கமுடியும் எனவும் நம்பிக்கைகொள்ளும் நேரத்தில்தான், முன்பு ஒருமுறை அவன் நேர்முகத்தேர்வுக்குச்சென்று வந்த வேலை ஒன்றில் சேரும்படி உத்தரவு வருகிறது.இப்போது கடிதம் எழுதுவது அவன் முறையாகிறது.ஒரு கதையின் வெற்றியை அதன் அலாதியான முடிவு முன்வைத்து உச்சம் அடைகிறது கதை.அப்போது ’டெஙான் டுக்க சித்தாஞா நான் இந்த வேலை ஏற்றுக்கொள்ளமுடியாது, என்று எழுதுகிறான்.கதையை வாசிக்கும் வேலை தேடும் இளஞனுக்குப் புதிய நம்பிக்கை ரத்தம் பாய்ச்சும் கதை இது.கதையில் கண்டிப்பாய் சமூகப்பிரக்ஞை வேண்டும் என்று கேட்பவருக்கும் சரி, கதையின் முடிவு எதிர்பாராத திருப்பத்தை தரவேண்டும் என்று சொல்பவருக்கும் சரி,கதை முடிந்து கடைசி வரியில்தான் தொடங்கவேண்டும் என்று அறிவுறுத்துபருக்கும் சரி, இக்கதை முழு திருப்தியை கொடுத்துவிடுவதில் பின்வாங்கவில்லை.உணர்வுப்பூர்வமாக நகர்த்தப்பட்ட இக்கதை வாசகனை சென்றடைவதிலும் அவனை சுய பரிசோதனை செய்துவைப்பதிலும் முழு வெற்றி பெறுகிறது.\nஇளஞ்செல்வன் கதை சொல்லும் பாங்கு புதிய பாணியை அறிமுகப்புடுத்தியதால் பரவலான வாசகப்பெருமக்களை சென்று அடைந்தது.இன்றைக்கு கோட்பாட்டியல் பற்றி நிறையப்பேசுகிறோம். இதனை சத்தமில்லாமல் அன்றே அறிமுகப்படுத்தியவர் இளஞ்செல்வன்.அதற்கு மிகபொருத்தமான கதை ‘பாக்கி’.பெண்ணடிமைத்தனத்தையும்,ஆணாதிக்க மனோபாவத்தையும் கதையின் கருப்பொருளாக்கி புனையப்பட்டது. தோட்டப்புறத்துப்பெண்களைக்கதைக்களமாக கொண்ட இது கனையாழி இதழிலும் வெளியிடப்பட்டது.கணவனுக்கு முன்னாலேயே விடிகாலையிலேயே எழுந்து ரப்பர் மர்க்காட்டுக்கு செல்பவள், வீட்டுக்குத்திரும்பிய பின்னரும் வீட்டு வேலையில் மூழ்கி இரவு உறங்கப்போகும்வரை ஒயாமல் வேலை செய்கிறாள்.அக்கடா என்று சிமிந்துத்தரையில் பாயை விரித்து களைப்போடு படுக்கும் தருணத்தில் கள்ளுக்கடையில் குடித்துக் கும்மாளமிட்டுவிtடு வந்த கணவன் அவளை களவிக்காகத் தொடுகிறான்.”இது ஒன்னு பாக்கி இருக்கா” என் முனகியவாறே உடல் களைப்பால் துவண்டுபோன நேரத்திலும் கணவனின் ஆசைக்கு உட்ன்படுகிறாள் மனைவி.பெண்ணிய சிந்தனை சார்ந்த காதாலட்சணத்தைப் பிசிறில்லாமல் பிரதிபலிக்கிறது கதை.பெண் வர்க்கத்தைப் பாலியல் ரீதியாக வன்கொடுமைக்கு உள்ளாக்குவதையும், அவர்களின் உடல் உழைப்பையும் ஈவிரக்கமின்றி உறிஞ்சும் ஆணாதிக்க வழமையையும் கொஞ்சம் அசைத்துப்பார்க்கும் கதையாக இது வெளிப்பட்டிருந்தது. எனக்குத்தெரிந்து மலேசியப் பெண் எழுத்தாளர்கள்கூட, பெண்களுக்கு எதிரான வக்கிரங்களை எழுதியதாக எனக்கு நினைவில்லை.\nஅவர் எழுதிய முக்கால்வாசிக்கதைகள் இன்றளவும் உயிர்ப்போடு இயங்குபவை.அவரின் கதை சொல்லும் பாங்கு,கதைக்களன்,வீர்யம் மிகுந்த சொல்லாடல் மலேசியக் கதையுலகுக்கு இன்றளவும் பெருமை சேர்ப்பவை.\nஎதேச்சதிகாரம்காரம் 1 புனையப்பட்ட பல குற்றச்ச...\nநட்பின் மரணம் கோ.புண்ணியவான் நம்மிடையேயான நட்...\nபுதிர் எப்போதுமே பிறகு சொல்கிறேன் என்ற தலைப்...\nகடைசி மணியின் அவலச் சப்தம் கோ.புண்ணியவான் கடந...\nஇடறிய விரல்கள் என் கவிதை நிரம்பிக்கொண்டிருந்த த...\nமறக்கப்பட்ட ஆளுமை (அநங்கம் கட்டுரை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://paattumix.blogspot.com/2010/07/blog-post_15.html", "date_download": "2018-04-26T13:19:14Z", "digest": "sha1:DQVHAT5IZV4SR3S5MEJHRWJ677SN37RZ", "length": 8523, "nlines": 224, "source_domain": "paattumix.blogspot.com", "title": "Music Mix: அழகூரில் பூத்தவளே…", "raw_content": "\nஉன்னை அள்ளித்தானே உயிர் நூலில் கோர்ப்பேன்\nஉயிர் நூலில் கோர்த்து உதிராமல் காப்பேன்\nநீயுடுத்தி போட்ட உடை… என் மனதை மேயுதடா\nநீ சுருட்டி போட்ட முடி… மோதிரமாய் ஆகுமடி\nஇமையாலே நீ கிழிக்க இதழாலே நான் அளிக்க\nகூச்சம் இங்கே கூச்சப்பட்டு போகிறதே\nசடையாலே நீ இழுக்க… இடைமேலே நான் வழுக்க\nகாச்சலுக்கும் காய்ச்சல் வந்து வேகிறதே\nஎன்னை திரியாக்கி… உன்னில் விளக்கேற்றி\nநீ முறிக்கும் சோம்பலிலே… நான் ஒடிஞ்சு சாய்ஞ்சிடுவேன்\nநீ இழுக்கும் மூச்சுக்குள்ளே.. நான் இறங்கி தூங்கிடுவேன்\nகுறிலாக நான் இருக்க.. நெடிலாக நீ வளர்க்க\nஅறியாமல் நான் இருக்க.. அழகாக நீ திறக்க\nகாதல் மழை ஆயுள் வரை தூறுமடா\nஎன்னை மறந்தாலும்… உன்னை மறவாத\nஹொய் ஹொய் ஹொய்.. அன்பூரில் பூத்தவனே\nம்ம்ம்ம்..ம்ம்ம்ம் என்னை அடியோடு சாய்த்தவளே\nம்ம்ம்ம்..ம்ம்ம்ம் என்னை மார்ப்போடு சேர்த்தவளே\nஉன்னை அள்ளித்தானே உயிர் நூலில் கோர்த்தேன்\nஉயிர் நூலில் கோர்த்து.. உதிராமல் காப்பேன்\nஉச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி,\nஓ வசந்த ராஜா தேன் சுமந்த ரோஜா\nதோகை இளமயில் ஆடி வருகுது வானில் மழை வருமோ\nநானே நானா யாரோ தானா \nவான் நிலா நிலா அல்ல - உன் வாலிபம் நிலா\nவிழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது\nஎன் உள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்\nசிறு பொன்மணி அசையும் அதில் தெறிக்கும் புது இசையும்...\nவிழியே விழியே பேசும் விழியே\nராகங்கள் பதினாறு உருவான வரலாறு நான் பாடும் போது\nதகிடததுமி தகிடததுமி தந்தானா ....\nமடை திறந்து... தாவும் நதியலை நான்\nஆங்க்கோ மே தேரி ...ஓம் ஷாந்தி ஓம் - ஹிந்தி\nஆஏ ஹோ மேரி சிந்தஹி...\nஎண்ட எல்லாம் எல்லாம் வல்லே. -மீச மாதவன் (மலையாளம்)...\nகரிமிழி - மீச மாதவன் (மலையாளம்)\nநான் பூவெடுத்து வெக்கனும் பின்னால...\nவிழியே கதை எழுது கண்ணீரில் எழுதாதே.\nஎன் ஜன்னல் நிலவுக்கு என்னாச்சி\nபூ மாலையில் ஓர் மல்லிகை\nகாதல் தேசம் = எனைக் காணவில்லையே நேற்றோடு\nசிப்பி இருக்குது முத்தும் இருக்குது\nஎங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.eegarai.net/t60906-topic", "date_download": "2018-04-26T13:24:47Z", "digest": "sha1:Q6NYXAFOOAWPIFDH7N5P5QPIU5D5YEBN", "length": 15165, "nlines": 218, "source_domain": "www.eegarai.net", "title": "ரஜினியைப் பார்த்து கண்ணீர் வடித்த கமல்!", "raw_content": "\nருசியான ஊறுகாய்கள் - அரு /அரை நெல்லிக்காய் தொக்கு \nஅரை நெல்லிக்காய் - அரை நெல்லிக்காய் தொக்கு \nஎச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி\nஉடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்\nஎனக்குள் ஒரு கவிஞன் SK\nஉலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி\nபராமரிப்பு பணி முடிந்தது பழநி கோயில் வின்ச் சேவை துவக்கம்: பக்தர்கள் மகிழ்ச்சி\nபாலகுமாரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக\nஅறிமுகம்---- வாலி மோகன் தாஸ்\n2 மணி நேரம் பொறுக்க முடியாதா கஸ்தூரி..\nஎதுக்காக உன் காதலியை கிணத்துல தள்ளிவிட்டே...\nஅமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி\nநிலக்கரியை விட கருப்பாக இருக்கும் கிரகம் கண்டுபிடிப்பு\nகவர்ச்சி நடிகைகிட்ட பிடிச்சது, அவரோட நடிப்பு...\nஏப்ரல் 30-ம் தேதி வைகை ஆற்றில் இறங்குகிறார் கள்ளழகர்\nகோயில்களுக்கு செல்ல குழந்தைகளை கண்டிப்பாக பழக்குங்கள்.....\nஇந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'\nஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்\nஉப்புமா சாப்பிடுவது மோன நிலை...\nநீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு\n‘சிற்றெறும்பு கட்டெறும்பு’ - கமல்ஹாசன், அமைச்சர் ஜெயக்குமார் வார்த்தை ஜாலத்தால் ஒருவருக்கொருவர் கிண்டல்\nஉ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்\nகண்மணி வார நாவல் 25.04.2018\nதிகில் மன்னன் ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக\nதாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து\nபலாத்காரத்துக்கு ஆளாகும் ஆண் குழந்தைகளுக்கும் இழப்பீடு'\nஇந்தியர்களை பாதிக்கும் ‘எச்-4’ விசா ரத்து நடவடிக்கைக்கு அமெரிக்க எம்.பி.க்கள் எதிர்ப்பு, ஐ.டி. துறையும் கண்டனம்\n'பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்\n5,000 குஜராத் விவசாயிகள் தற்கொலைக்கு மனு\nவாழ்க்கையை ஓஹோன்னு வாழ கன்ஃபூசியஸ் சொன்ன 10 கட்டளைகள்...\nஇரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு\nரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது: மக்கள் மன்ற மாநில செயலாளர் பேச்சு\n2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்: ஜூன் 16-ம் தேதி இந்தியா-பாக். மோதல்\nசுப்ரீம் கோர்ட் எதிர்காலம்: ஆலோசிக்க நீதிபதிகள் கோரிக்கை\nநாடு முழுவதும் 24 போலி பல்கலை.,கள்\nகாங்., கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக்கறை: சல்மான் குர்ஷித் சர்ச்சை\nரஜினியைப் பார்த்து கண்ணீர் வடித்த கமல்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nரஜினியைப் பார்த்து கண்ணீர் வடித்த கமல்\nசிங்கப்பூர் செல்வதற்கு முன்பு ரஜினியைப் பார்த்த கமல்-இருவரும் அழுத உருக்கம்\nசிகிச்சைக்காக செல்வதற்கு முன்பு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை, கலைஞானி\nகமல்ஹாசன் சந்தித்து உருக்கமாக பேசிய விவரம் தற்போது வெளியாகியுள்ளது.\nஇருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கண்ணீர் விட்டதாகவும், மிகவும் நெகிழ்ச்சியானதாக அந்த சந்திப்பு அமைந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.\nரஜினியை சிங்கப்பூருக்கு அழைத்துச் செல்வதற்கு முன்பாக ரஜினிகாந்த்தை,\nராமச்சந்திரா மருத்துவமனையில் கமல்ஹாசன் சந்தித்துப் பேசியுள்ளதாக\nரஜினியைப் பார்த்து கலங்கி விட்டாராம் கமல். மிகவும்\nஉருக்கமாக, ஆறுதல் கூறி ரஜினியிடம் பேசிய கமல், நானும் சிங்கப்பூர் வரை\nகூட வரட்டுமா என்றும் கவலையுடன் கேட்டுள்ளார். இதைக் கேட்டு நெகிழ்ந்த\nரஜினி, பரவாயில்லை, இந்த அன்புக்கு நன்றி என்று கூறியுள்ளார். அதைத்\nதொடர்ந்து சில நிமிடங்கள் இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. மாறாக\nஇருவரும் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டதைப் பார்த்து அங்கிருந்த அனைவரும் நெகிழ்ந்து போயுள்ளனர்.\nபின்னர் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்ட கமல், ரஜினியிடம், எனக்கு\nராணாதான் போட்டி. நீங்கள் குணமடைவீர்கள், குணமடைந்து வந்து ராணாவில்\nநடிப்பீர்கள் என்று தைரியம் கூறி பேசியுள்ளார்.\nரஜினியை கமல் சந்தித்த இந்த உருக்கமான சந்திப்பு குறித்துதான் இப்போது கோலிவுட் முழுவதும் உணர்ச்சிகரமாக பேசி வருகிறார்கள்.\nரஜினியை சந்திக்க யாரையுமே அவரது குடும்பத்தினர் அனுமதிக்கவில்லை. கமலே\nகூட பலமுறை முயன்றும் முடியவில்லை. இதனால் கமல் பெரும் வேதனையும், ரஜினி\nகுடும்பத்தார் மீது சற்று வருத்தமும் அடைந்தார். ரஜினியைப் பார்க்க எனக்கு\nஉரிமை இல்லையா என்று கூட ரஜினியின் மனைவி லதாவிடம் அவர் உரிமையுடன்\nகோபித்துக் கொண்டதாக கூறப்பட்டது. இருப்பினும் ரஜினி சிங்கப்பூர்\nகிளம்புவதற்கு முன்பு அவரே கமல்ஹாசனை பார்க்க விரும்பியதால்தான்\nகமல்ஹாசன்-ரஜினி சந்திப்பு நடந்ததாக கூறப்படுகிறது.\nRe: ரஜினியைப் பார்த்து கண்ணீர் வடித்த கமல்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.manithan.com/events/04/140010", "date_download": "2018-04-26T13:43:03Z", "digest": "sha1:FFHL3NSKJYK46ST32QOK5J2P6KLN4D6V", "length": 20815, "nlines": 167, "source_domain": "www.manithan.com", "title": "இங்கு ஆவிகளின் அட்டகாசம் இருக்கிறது: உண்மைச்சம்பவம்! - Manithan", "raw_content": "\nவெட்டப்பட்ட மனைவியின் தலையுடன் தெருவில் நடந்து சென்ற கணவன்: அதிர வைக்கும் சம்பவம்\nஇளவரசர் ஹரியின் திருமணத்தில் மணப்பெண் தோழியாகும் உலக அழகி\nஜெயலலிதா வழக்கில் திடீர் திருப்பம்\nஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுலா செல்ல வேண்டுமா விரைவில் வரவிருக்கும் புதிய சட்டம்\nஅஜித்தின் மனைவி ஷாலினியின் பகையாளி யார் தெரியுமா\n பல ஆண்டுகளுக்கு பின் பாத்திமா பாபு விளக்கம்\nஇத்தனை வயதில் பிரபல நடிகை கௌசல்யாவுக்கு கல்யாணமாம்\nசர்வதேச இளம் இளம் விஞ்ஞானிகளுக்கான போட்டியில் இலங்கை 3 தங்கப்பதக்கம்\nமரணத்தின் பிடியிலிருந்து அஜீத்தை மீட்டெடுத்த ஷாலினி கசந்து போன வாழ்வில் உயிர்த்தெழுந்த காதல்\nசிவகார்த்திகேயனால் தொகுப்பாளினி பாவனா அனுபவித்த கொடுமை\nபிள்ளைகள், பெற்றோர்களை கொடூரமாக கொலை செய்த பெண் காரணத்தை கேட்டால் அதிர்ந்து போயிடுவிங்க\nஇந்த 3 ராசியில உங்க ராசி இருக்குதா.. இந்த ஆண்டில் கோடீஸ்வர யோகம் இதற்குத் தானாம்\nமனைவியை நண்பர்களுடன் உறவு வைக்க கட்டாயப்படுத்திய கணவன் - இறுதியில் நடந்ததை பாருங்கள்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\n31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்\nயாழ். சரசாலை, கனடா Toronto\nஇங்கு ஆவிகளின் அட்டகாசம் இருக்கிறது: உண்மைச்சம்பவம்\n1987 ம் ஆண்டு உப்புக்காற்று உரசிச்செல்லும் புங்குடுதீவில் அந்த வீட்டில் இனம்புரியாத அமானுஷ்யங்கள் நடமாடிக்கொண்டிருந்தன…. வீட்டிலிருந்தவர்களின் முகங்கள் இருண்டுபோயிருந்தன. அவர்களது உடல்கள் பயத்தால் உறைந்து போயின… என்ன காரணம்… ஆவிகளின் அட்டகாசம் அவர்களது வீட்டில் ஆரம்பமாகியிருந்தது.\nதிடீர் திடீரென்று கல்மழை அவர்கள் வீட்டில் பொழியத்தொடங்கியது. வீட்டுக்கூரை மீதும் வீட்டின் உள்ளேயும் கற்கள் வந்து விழத்தொடங்கின. அந்த வீட்டுக்கு சொந்தக்காரி கதவைத்திறந்து வெளியேவந்து ”யாரது” என்று குரல் கொடுத்துப்பார்த்தாள். கல்மழை அதிகரித்ததே தவிர யாரும் இருப்பதற்கான அடையாளத்தை காணவில்லை. தென்னைமரவட்டிலிருந்து எரிந்து கறுத்துப்போன கற்கள் வந்து விழுந்தன. பதிலுக்கு அவளும் ஒரு கல்லை எடுத்து தென்னை மரத்தை நோக்கி எறிந்து பார்த்தாள். சடசடவென கற்கள் அவளைநோக்கி எறியப்பட்டன. பயத்தால் ஓவென கத்தியபடி வீட்டுக்குள் புகுந்து கொண்டாள்.வீட்டிற்கு முன்னாலிருந்த அவர்களது கடையில் வீட்டு உரிமையாளர் பொருட்களை எடை போட்டவண்ணம் நின்றுகொண்டிருந்தார். கற்கள் அவரது தராசுத்தட்டிலும் வந்து விழுந்தன.\nஆறே மாதமான ஆண்குழந்தையும் இரண்டரை வயதுள்ள பெண்குழந்தையையும் வைத்துக்கொண்டு அவர்களால் எதையும் செய்யமுடியாமல் தத்தளித்தார்கள்.\nதகவல் உறவினர்களுக்கிடையிலும் சுற்றத்தாருக்கிடையிலும் காட்டுத்தீயாய் பரவியது. ஊரெங்கும் ”எறிமாடனை ஏவிவிட்டுட்டாங்கள்” என்ற கதையாய் இருந்தது. அனைவரது சந்தேகக்கண்களும் பின் வீட்டில் குடியிருந்த கிழவனின்மேல்தான் படிந்தது. அந்தக்கிழவனுக்கும் வீட்டு உரிமையாளருக்கும் கடையில் கடன் வாங்கியது தொடர்பாக தீராத பிணக்கு இருந்ததென்னவோ உண்மைதான். அந்தக்கிழவனுக்கு மந்திர தந்திரங்களில் திறமை இருப்பதாகவும் அவனது உறவினர்கள் மட்டக்களப்பில் பிரசித்தமான மந்திரவாதிகள் என்றும் வதந்திகள் பரவின. ஆனால் நேரடியாக எதுவும் செய்யமுடியாத நிலை.\nஉள்ளூர் மந்திரவாதிகள் வரவழைக்கப்பட்டனர். ஏதேதோ மந்திரங்களை உச்சரித்தவண்ணம் வீட்டை சுற்றிவந்தார்கள். எலுமிச்சம்பழங்களை உருட்டிவிட்டார்கள். போதுமான அளவுக்கு பணத்தையும் கறந்துகொண்டார்களே தவிர பலன் எதுவும் இல்லை.\nமேலும் மேலும் கல்லெறி அதிகமானதேயொழிய குறையவில்லை. திடீரென்று முற்றத்தில்நின்ற கார் கண்ணாடியின்மீது பாதிச்செங்கல் அளவுள்ள கல்லொன்று வந்து விழுத்தது ஆனால் கார்க்கண்ணாடி உடையவேயில்லை. வீட்டினுள் உறங்கிக்கொண்டிருந்த கைக்குழந்தையின் மார்பிலும் கற்கள் வந்து விழுந்தன ஆனால் குழந்தையின் தூக்கம் கலையவில்லை. தாய் குழந்தையை மடியில் வளர்த்தியவண்ணம் கந்தசஷ்டி கவசத்தை பாராயணம் செய்யத்தொடங்கினாள் மனதிற்கு ஒரு ஆறுதலைத்தந்த கந்தசஷ்டி கவசம் பிரச்சினைக்கு தீர்வைத்தரவில்லை. விடயம் முல்லைத்தீவிலிருந்த தாயின்சகோதரிக்கு தெரிவிக்கப்பட்டது.\nஅங்கிருந்த ஒரு மாந்திரிகரின் உதவியை நாடிய சகோதரிக்கு நாடிநரம்பையெல்லாம் ஒடுக்கும் செய்திதான் கிடைத்தது. அவர் வெற்றிலையில் மையை தடவி குறி சொல்ல ஆரம்பித்தார்.\nஉனது பிறந்தகத்தில் மாட்டுத்தொழுவத்தில் ஒரு கருப்பு நிறப்பசு கட்டப்பட்டுள்ளது.\nஆமாம் கருப்பு நிற கன்று\nஅடுப்பில் பானையில் பால் கொதித்துக்கொண்டிருக்கிறது….முற்றத்தில் அறுபது வயது மதிக்கத்தக்க தடித்த ஒரு ஆள் கிடுகு பின்னிக்கொண்டிருக்கிறார்…..சரியா\nஇருக்கலாம்..அவர்தான் என் அப்பா……. தங்கைச்சியின் வீட்டுப்பிரச்சினை…..\nஇருக்குது….அங்க உண்மையிலேயே ஆவிகளின் தொல்லை இருக்குது. கவனமாயிருக்க வேண்டும் பிள்ளைகளை கிணற்றுக்குள் தூக்கிப்போடும் அளவிற்கு அவற்றின் தொல்லை அதிகரிக்கும்.\nஆனால் தொலைதுரம் என்பதால் வீட்டிற்கு வந்து பிரச்சினையை தீர்த்துவைக்க அவர் மறுத்து விட்டார். கடைசி நம்பிக்கையும் மறைந்து போனது. உடனடியாக புங்குடுதீவுக்கு பயணமானாள் சகோதரி.\nஅவள் புங்குடுதீவை அடைந்தபோது நேரம் மாலை ஆறு மணி. தங்கையின் கடையில் வேலைபார்த்துக்கொண்டிருந்த இளைஞன் ஆவேசம் வந்து ஆடத்தொடங்கினான். வீட்டில் அங்கங்கு நிலத்தை கிளறி படையல், கழிப்பு செய்த பொருட்களை எடுக்கத்தொடங்கினான்.\nபிரச்சினை கையை மீறிப்போவதை உணர்ந்த அவர்கள் மறுநாள் அவர்கள் மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மனின் அருளாசி பெற்ற அருட்கவி விநாசித்தம்பி ஐயாவை சந்திக்க பயணமானார்கள். விநாசித்தம்பி ஐயா கடையில் வேலைசெய்து கொண்டிருந்த இளைஞனை வீட்டைவிட்டு அனுப்பச்சொல்லி இருவிதமான திருநீறை மந்திரித்து கொடுத்து ஒன்றை குடும்பத்தவர்கள் அனைவரும் தரித்துக்கொள்ளுமாறும் மற்றையதை கரைத்து வீட்டைச்சுற்றி தெளிக்குமாறும் கொடுத்தார்.\nஅவர் மந்திரித்துகொடுத்த திருநீறும் அம்மனுக்கு மாலையாக அணிவிக்க கொடுத்த எலுமிச்சம்பழங்களும் ஒரேநாளில் ஆவிகளின் கொட்டத்தை அடக்கின. ஏவலை யார் செய்தார்கள் என்று அவர் சொல்ல மறுத்துவிட்டார். எதுவாக இருந்தால் என்ன அதன்பின்னர் எந்தப்பிரச்சினையும் இல்லாமல் அந்தக்குடும்பம் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்துவருகிறது.\nஉடல் எடையை மிக வேகமாக குறைக்க இந்த ஒரு பொருள் போதும்\nசோகத்தில் இருந்த நடிகர் வடிவேலுவிற்கு அடுத்தடுத்து அடித்த அதிஷ்டம்\nமனைவியை நண்பர்களுடன் உறவு வைக்க கட்டாயப்படுத்திய கணவன் - இறுதியில் நடந்ததை பாருங்கள்\nஐ.தே.க. செயற்குழு கூட்டத்தில் சிக்கல்\nசட்ட விரோதமாக மண் அகழும் இடங்களைப் பார்வையிட்டார் மன்னார் நகர முதல்வர்\nமத்திய வங்கியின் அறிக்கை நிதியமைச்சரிடம் கையளிப்பு\nதொழிலாளர் தினத்தை மே முதலாம் திகதி கொண்டாடவுள்ளது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு\nபள்ளிமுனை கடற்கரையில் உள்ள மீன் வாடிகளில் இருந்து கைப்பற்றப்பட்ட ஒரு தொகை மீன்கள்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா் விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tharavu.com/2015/01/blog-post_55.html", "date_download": "2018-04-26T13:21:19Z", "digest": "sha1:LG773DOULLDP6BWMC3C4JCVPYWLV3HKO", "length": 44416, "nlines": 125, "source_domain": "www.tharavu.com", "title": "சர்வதேசத்தின் பொறிக்கிடங்கில் மாட்டிக் கொண்டுள்ளார் மகிந்த ராஜபக்ஷ !! | தரவு", "raw_content": "\nமுகப்பு ஈழம் உலகம் சினிமா விளையாட்டு இலங்கை\nதேசியத் தலைவர் பிரபாகரன்தான் வரவேண்டும் இந்த நாட்டை வழிநடாத்துவதற்கு.யாழ்.யாழ்பாணத்தின் சீர்கெட்ட நிலவரங்கள் தொடர்பாக குறித்த நீதிபதி\nஇலங்கை எதிர்கொண்ட பின்னடைவுகளுக்கு விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் காரணமல்ல அதிகாரத்தில் இருந்த அரசாங்கங்களே காரணம்\nசிறிலங்காவில் தமிழர் பிரச்சினை தொடர்பாக கருணாநிதியினைச் சாடியிருக்கும் ஜெயலலிதா அவரது குடும்ப ஆட்சியினதும் முறைகேடுகள் நிறைந்த\nஈழத்தமிழரின் புனர்வாழ்வுக்கு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பேன்தமிழக சட்டசபைக்கான தேர்தல் எதிர்வரும் 13 ம் திகதி இடம்பெறவுள்ள நிலையில்\nதமிழர்கள் பாரம்பரியம் மிக்கவர்கள். அவர்கள் கனடாவின் மதிப்பு மிக்க சொத்து.அதீத வளர்ச்சி, கலாச்சாரப் பங்களிப்பு மற்றும் புலமை வாய்ந்த தொழில்வாய்ப்பு என்பன கனடாவிற்குப் பெருமை\nஉலக கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா வாழ்த்து தெரிவித்துள்ளார்.ஜப்பான் நாட்டில் கடந்த 11ந் தேதி மிகப்பெரிய\nஜப்பானில் ஏற்பட்ட பூகம்பம் சுனாமியின் பாதிப்புக்கு அனுதாபம் தெரிவித்து, ஜப்பான் பிரதமருக்கு நடிகர் ரஜினிகாந்த் ஒரு கடிதம் அனுப்பி இருக்கிறார். ஜப்பான் நாட்டில் கடந்த 11ந் தேதி மிகப்பெரிய\nசிறிலங்காவில் விடுதலைப் புலிகளுக்கும் அரசப் படைகளுக்கும் இடையில் நடந்த இறுதிக் கட்டப் போரின்போது,- போர்நிறுத்தம் செய்யுமாறும், பேச்சுக்களில் ஈடுபடுமாறும் அனைத்துலக நாடுகள் கொடுத்த அழுத்தங்களில் இருந்து\nவிக்கிலீக்ஸில் வெளியாகியுள்ள தகவல்கள் ஒரு பக்கம் சர்ச்சையைக் கிளப்பி வரும் நிலையில், விடுதலைப் புலிகளுடனான போரில் அமெரிக்காவின் இராணுவப் புலனாய்வுத் தகவல்கள்\nபுலிகள் தொடர்ந்து செயல்பட வாய்ப்பு உள்ளது: டக்ளஸ் தேவானந்தா\nசர்வதேசத்தின் பொறிக்கிடங்கில் மாட்டிக் கொண்டுள்ளார் மகிந்த ராஜபக்ஷ \nசிறீலங்கா அதிபர் தேர்தல் ஒரு றிவேர்ஸ் பார்வை…இன்றுடன் சிறீலங்காவின் முன்னாள் அதிபர் ஆகிவிட்ட மகிந்த ராஜபக்ஷ தனது மாளிகையில் இருந்து விடிந்தும் விடியாத பொழுதிலேயே வெளியேறிவிட்டார்…\nமக்கள் அதிபர் மாளிகையை சூழ்ந்து விரட்டியடிக்க முன் ஓட்டம் பிடித்துள்ளார் என்கின்றன சில ஊடகங்கள்.சிறீலங்காவில் வரலாற்றில் என்றுமே இல்லாதளவுக்கு ஓர் அதிபர் தேர்தல் இவ்வளவு மகத்தான அமைதியாக நடந்துள்ளதே ஏன்..தேர்தல் மோசடியில் மகிந்தவைப் போல ஒரு மன்னன் கிடையாது என்று ஜே.வி.பி தலைவர் சோமவன்ச முன்னர் ஒரு தடவை கூறியிருந்தார்,\nஅத்தகைய மன்னாதி மன்னன் அமைதியாக தேர்தல் நடத்தி அமைதியாக வெளியேறக் காரணமென்ன..நேற்று தேர்தல் நடக்கும் போதே அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மகிந்தவுக்கு போன் செய்து தேர்தலை குழப்ப வேண்டாம் என்று மகிந்தவை மீண்டும் எச்சரித்திருந்தார்…\nஏன் அவர் மட்டும் இதில் தலையிட வேண்டும்..சிறீலங்காவின் தேர்தல் வரலாற்றில் என்றுமே இல்லாத அமைதியான ஆட்சி மாற்றம் நடந்ததுள்ளதே ஏன்…சிறீலங்காவின் தேர்தல் வரலாற்றில் என்றுமே இல்லாத அமைதியான ஆட்சி மாற்றம் நடந்ததுள்ளதே ஏன்…அனைத்துக் கேள்விகளுக்கும் ஒரே பதில் சர்வதேசத்தின் பிடி சிறீலங்காவின் கழுத்தை இறுக்கிவிட்டது என்பதுதான் அர்த்தம்…\nதமிழர்கள் இதைப் புரிய வேண்டும்.இலங்கைத் தீவு என்ற மாங்கனி பறிக்கப்பட்டுவிட்டது.. அதற்குள்தான் தமிழர்களும் இருக்கிறார்கள் என்பதை புரிய வேண்டிய தருணம் இது..ஆசிய பிராந்தியத்திற்கான அமெரிக்காவின் நிகழ்ச்சித்திட்டம் மாறிவிட்டது, சிறீலங்காவில் மகிந்த – கோத்தபாய பாணி வெள்ளை வான் ஆட்சியும், உல்லாசப் பயணிகளாக வரும் வெளிநாட்டு பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்படுவதும் இனி சாத்தியப்படாது என்று முன்னரே செய்திகள் எச்சரித்திருந்தன.\nநடைபெற்றிருக்கும் நிகழ்வுகளைப் பார்த்தால் மகிந்த ராஜபக்ஷ இரண்டு ஆண்டுகள் முன்னதாகவே அதிபர் தேர்தலை நடத்தவும் அவருக்குக் கிடைத்த அழுத்தமே காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகமும் ஏற்படுத்துகிறது.சிறீலங்காவில் மகிந்த ராஜபக்ஷ றெஜீமானது, சிரியாவில் ஆஸாட் றெஜீம் போல ஆட்சியில் இருந்தது, உலக நாடுகளில் றெஜீம்களுக்கு இனி இடமில்லை என்பதால் மகிந்த அகற்றப்பட்டிருக்கிறார்.நடந்து முடிந்த தேர்தலை புரட்டிப் பார்த்தால் ஒரு நெறிமுறைப்படி மகிந்த றெஜீம் அகற்றப்பட வேண்டும் என்பதற்கு அமைவாக நிகழ்வுகள் அரங்கேறியிருப்பது தெரிகிறது.\nமகிந்த ராஜபக்ஷ தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே அனைத்து வியூகங்களும் அமைக்கப்பட்டிருந்தன, இதை அமைக்கும் ஆற்றலும் பகுப்பாய்வும் சிறீலங்கா எதிரணிக்குக் கிடையாது, அவர்களுக்கு ஒரு பிரச்சனையை எப்படித் தீர்ப்பதென்றே தெரியாது – இது வரலாறு.இனி நடந்த நாடகங்களை திருப்பிப் போட்டு பார்த்தால் நடந்து முடிந்திருக்கும் விவகாரங்களின் உண்மை தெளிவாகத் தெரிக வரும்.\nஇனி சர்வதேச சமுதாயத்தால் சிறீலங்காவிற்காக எழுதப்பட்ட கதை திரைக்கதை வசனம், உரையாடல் கொண்ட பிரதியை பின்பக்கமாக வாசிக்க ஆரம்பிப்போம்.முதலாவது தேர்தல் கூட்டங்களில் பேசும்போதெல்லாம் அமைதியான முறையில் தேர்தலுக்கு ஒத்துழையுங்கள் என்று மகிந்த ராஜபக்ஷ கேட்டுக்கொண்டிருந்தார்.. ஏன்..கடந்த இரண்டு தேர்தல்களிலும் அவர் இப்படிப் பேசியதே கிடையாது…அவருடைய கையாளான சண்டியன் மேர்வின் சில்வா எங்கே..கடந்த இரண்டு தேர்தல்களிலும் அவர் இப்படிப் பேசியதே கிடையாது…அவருடைய கையாளான சண்டியன் மேர்வின் சில்வா எங்கே..அவருடைய இன்னொரு கையாளான பொது பல சேனா\nஅவர்கள் இந்த உலகத்தில் எங்கே இருக்கிறார்கள் என்பதே தெரியாமல் அடங்கிக் கிடக்க காரணம் மகிந்தவுக்கு வல்லரசொன்று விடுத்த நெருக்குதலே.. அது இந்தியா அல்ல.இந்தியா என்ற பாத்திரம் இந்த நாடகத்தில் திரைக்குப் பின்னால் ஒழிந்திருக்கிறது..அன்று முஸ்லீம்களின் மசூதிகளை உடைத்து, கிறீத்தவ தேவாலயங்களை தாக்கி, இந்துக் கோயில்களுக்கு தீயிட்ட புத்தபிக்குகள்..தம்மை நம்பாமல் இந்தியாவில் உள்ள திருப்பதி போய் இன்னொரு மதத்தின் லட்டைத்தின்று தேர்தலுக்கு வந்த மகிந்த ராஜபக்ஷவின் பயணத்தை மதவெறி கொண்ட மசூதிகளை இடிக்கும் புத்த பிக்குகள் கண்டிக்காதது ஏன்..\nஅவர்களை இனி அடக்கி வாசிக்கும்படி கட்டளை கொடு என்று மகிந்தவுக்கு எச்சரிக்கை கிடைத்துள்ளது, இல்லாவிட்டால் அவர்கள் ஆடாத ஆட்டம் ஆடியிருப்பார்கள்.மகிந்த ராஜபக்ஷ திருப்தி லட்டுத் தின்றதும், சல்மான் கான் மகிந்தவுக்கு ஆதரவாக சிறீலங்கா போனதும்\nஇந்தியா மைத்திரிக்கு ஆதரவாக இருப்பதாக கருத்து வரக்கூடாது என்பதற்காகவும், இந்த விவகாரத்தில் இந்தியா நடுநிலை வகுப்பதாக காட்ட விரும்பியதாலும் ஏற்படுத்தப்பட்ட இன்னொரு காமடி ட்ராக் திரைக்கதை.இனி கூட்டமைப்பு மைத்திரியை ஆதரித்ததும் இதன் ஓரங்கமாகவே இருப்பதை மறுக்க இயலாது..கூட்டமைப்பு பொது வேட்பாளரை ஆதரித்தால் மகிந்த என்ன கூறுவார்.. புலிகளுடன் மைத்திரி சேர்ந்துவிட்டார் என்று பிரச்சாரம் செய்வார், அவர் செய்யாவிட்டாலும் சிங்கள மக்கள் அப்படியே உணர்ந்து மகிந்தவுக்கு வாக்களித்து சர்வதேச வியூகத்தை உடைத்துவிடுவார்கள்.\nஆகவேதான் புலிகளுக்கு எதிராக, புலிகள் ஈவு இரக்கமற்றவர்கள் என்று சம்மந்தரை ஒரு கருத்துக் கூறும்படி சொன்னார்கள், இல்லாவிட்டால் தேர்தல் நேரம் அந்தக் கருத்து சம்மந்தருக்கு தேவையற்ற கருத்து.அது சிங்கள மக்களின் காதில் பூ வைக்க உருவாக்கப்பட்ட வசன அமைப்பு..ஆனால் அதை அப்படியே விட்டுவிட முடியாது..சம்மந்தர் சொன்னதை கூட்டமைப்பில் யாராவது மறுத்து போர்க்கொடி தூக்காவிட்டால் சிங்கள வாக்காளர் அதை நாடகமாகக் கருதிவிடுவார்கள்.. ஆகவே எதிர்ப்பு வாசகம் கே. சிவாஜிலிங்கத்திடம் இருந்து வந்தது.\nபத்திரிகைகளில் பிரபலப்படுத்தப்பட்ட அந்த எதிர்ப்புக்கு கூட்மைப்பில் ஒருவருமே பதில் கூறவில்லை..\nகாரணம் அது கே. சிவாஜிலிங்கத்திற்காக எழுதப்பட்ட வாசகம்.கூட்டமைப்பு பொது வேட்பாளரான மைத்திரியுடன் சேர்வதாக இருந்தால் தமிழ்த் தேசியம் என்ன ஆவது.. அதற்கும் ஒரு பதில் இருந்தது.. தேர்தலைப் பகிஷ்கரிப்போம் என்று மகாணசபை உறுப்பினரும் புலிகளின் ஆதரவாளருமான அனந்தி கூறினார்…அவருடைய வீட்டுக்கு யாரோ கல்லெறிய பதிலுக்கு சிறீலங்கா பெண் போலீஸ் அனந்திக்கு பாதுகாப்பு வழங்கியது.கூட்டமைப்பு பொது வேட்பாளரை ஆதரிப்பதால் வடக்கே தேர்தலை புலிகள் பகிஷ்கரிக்கிறார்கள் என்று சிங்கள பாமர வாக்காளர் நம்ப வைக்கப்பட்டார்கள்.இதற்கு கே.சிவாஜிலிங்கமும் அனந்தியும் அவர்களுக்கு வேண்டும்.கே. சிவாஜிலிங்கம் மீதோ அல்லது அனந்தி மீதோ கூட்டமைப்பு ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப் போவதாக உடனடியாக அறிவிக்காதது ஏன்..\nகாரணம் அவர்கள் இருவரும் வாசித்ததும் அந்த எழுதப்பட்ட பிரதியின் வரிகள்தான்.மறுபுறம் இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்பது தொடர்பாக எந்த நிபந்தனையும் இல்லாமல் மைத்திரியை ஆதரிக்க வேண்டுமென்று கூறப்பட்டதை கூட்டமைப்பு தலையாட்டி ஏற்றுக் கொண்டதும் இதன் ஓரங்கமே..மைத்திரியும் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் இனப்பிரச்சனை பற்றி எதுவும் பேசாமல்.. தேர்தலை சந்தித்தார்.அப்படியானால் மகிந்த ராஜபக்ஷவை அவர் போர்க்குற்றத்தில் மாட்டிவிடுவாரா..எல்லா மர்மமும் முடிச்சாக இருப்பது அங்குதான்… அதற்கான வசனங்களையும் மைத்திரி நன்கு பாடமாக்கிக் கூறினார், இந்த நாடகப் பிரதியை மனமுவந்து ஏற்ற இந்தியாவை குளிரப்பண்ண அது அவருக்கு அவசியமாக இருந்தது.இராணுவத்தை வடக்கில் இருந்து எடுக்க மாட்டேன்..மகிந்த ராஜபக்ஷவை போர்க்குற்றத்தில் இருந்து காப்பாற்றுவேன் என்று முழங்கினார்..\nகோத்தபாயவுக்கு எழுதிய வசனம் இப்போது அவருக்கு சொந்தமாகியிருந்தது.நடப்பது எல்லாமே முற்று முழுதாக எழுதப்பட்ட ஒரு சங்கீத நாடகம் போல ஒலித்தது, அதுதான் சிறிPலங்கா தேர்தலின் போது தலை கால் தெரியாமல் உறைந்து கிடக்கக் காரணம்.முன்னரே தேர்தலை அறிவித்து, குழப்பம் விழைவிக்காமல் தேர்தலை நடத்தி தோற்றால் உடனடியாக வெளியேற வேண்டும்… அப்படி வெளியேறினால் மகிந்த போர்க்குற்றத்தில் இருந்து காப்பாற்றப்பட வாய்ப்புள்ளது என்பதும் இந்த சர்வதேச கீதையின் வரிகளுக்குள் வருகிறது என்பதுதான் அடுத்த சுவாரஸ்யம்.ஆனால் இதில் இன்னொரு வேடிக்கையும் உள்ளது…தன்னுடைய வசனத்தை வெல்லப் போகும் மைத்திரிபால கூறிவிட்டதால் கோத்தபாய ராஜபக்ஷ கூறிய கருத்து சிறிது வேறுபாடாக இருந்தது..\nஏன் தமிழர் கூட்டமைப்பு மகிந்த ராஜபக்ஷவுக்கு இன்னொரு சந்தர்ப்பம் கொடுக்கக்கூடாது இனப்பிரச்சனை தீர்வுக்காக என்று கேட்டிருந்தார்.வன்னியில் போர் நடந்தபோது கடைசி நேரம் யுத்த நிறுத்தம் கோரப்பட்டபோது அவர் சிரித்த எகத்தாள சிரிப்பும், போர் முடிந்துவிட்டது எதற்கு யுத்த நிறுத்தம் என்று கேட்ட கேள்வியும்…\nகும்மாளமும் முற்றாகவே மாறி பல்லில்லா பாம்பாக கூட்மைப்பிடம் கையேந்தியிருந்தார்.ஆனால் இதில் இன்னொரு வேடிக்கை இருக்கிறது..மகிந்த ராஜபக்ஷவை காப்பாற்றுவதாகக் கூறிய மைத்திரிபால சிறீசேனா.. கோத்தபாயவை காப்பாற்றப் போவதாக சொல்லவில்லை..நேற்று முன்தினம் அமெரிக்கக் குடியுரிமை உள்ள கோத்தபாய அமெரிக்க சட்டப்படி அமெரிக்காவில் தண்டிக்கப்படலாம் என்று அமெரிக்கப்பத்திரிகையொன்று எழுதியிருந்தது.\nஎனவே கடைசி நேர யுத்தத்தில் மகிந்தவின் கட்டளைகளுக்கோ, அல்லது சர்வதேசத்தின் கட்டளைகளுக்கோ அடி பணியாமல் தன்னிச்சையாக கோத்தபாய போரை நடத்தியமையே அனைத்துக்கும் காரணமென கதைக்கு முற்றுப்புள்ளி விழ வாய்ப்புள்ளது.அடுத்த வியூகம் இன்னமும் சுவாரஸ்யமானது..மக்கள் மறதி மிக்கவர்கள்…\nஆகவே ஒவ்வொரு அமைச்சராக வாராவாரம் மகிந்தவை விட்டு வெளியேறும்படியாக வியூகம் வகுக்கப்பட்டது..கடைசியில் முஸ்லீம்காங்கிரஸ், கூட்மைப்பு என்று துருப்புச் சீட்டுக்களை ஒவ்வொன்றாக விழுத்தி மகிந்தவின் கடதாசிக்கூட்டம் சரிவது போன்ற காட்சி ஏற்படுத்தப்பட்டது.இதையெல்லாம் பார்த்தும் இதுபற்றி எதுவும் சொல்லாமல் இருந்தார் மகிந்த, சிங்கள இராணுவ உளவுப்பிரிவும் இவர்களுக்கு எதிராக திரும்பாது உறைந்து கிடந்தது.\nஇந்தியா ஏமாற்றிவிட்டது, அமெரிக்கா ஏமாற்றிவிட்டது, புலிகளுக்கு உதவுகிறார்கள் என்று மாதத்திற்கு ஒரு தடவை கூச்சலிடும் சிங்கள இனவாதப் பேராசிரியர் அமரதாச குணதாசவும் ஊமையாகக் கிடந்தார்.எல்லோருமே ஊமையாகக் கிடந்து மகாவம்சத்தின் கடைசிக் கதாநாயகன் நவ யுக துட்டகைமுனுவை விடிந்தும் விடியாத பொழுதில் வீடனுப்பி வைத்தது ஏன்..\nஇந்த நாடகத்தில் இவர்கள் அனைவரும் பணம் கொடுத்து உருவேற்றப்படும் வெற்றுப் பாத்திரங்கள் மட்டுமே, அவர்களால் ஊமைகளாகவும் நடிக்க முடியும்.அப்படியானால் கருணா, பிள்ளையான், கே.பி, டக்ளஸ் போன்றவர்களின் எதிர்காலம் என்ன..இவர்கள் அனைவரும் முன்னர் புலிகளுக்காக எழுதப்பட்ட சர்வதேச கீதையின் பாகம் ஒன்றின் பாத்திரங்கள்.. பாகம் இரண்டிற்குள்தான் இவர்களுடைய தலைவிதி இருக்கிறது.\nசிங்களவரை போர்க்குற்றவாளியாக்க முன்னர் தமிழர்களைத்தான் போர்க்குற்றவாளிகள் ஆக்குவார்கள்..இனி புலம் பெயர் தமிழர் சிந்திக்க வேண்டியது என்ன..பட்டாசு வெடித்து கொண்டாடுவோமா.. இல்லை லட்டு கொடுப்போமா.. இல்லை யார் வந்தாலும் தமிழர் பிரச்சனை தீராதென அலுத்துக் கொள்வோமா..பட்டாசு வெடித்து கொண்டாடுவோமா.. இல்லை லட்டு கொடுப்போமா.. இல்லை யார் வந்தாலும் தமிழர் பிரச்சனை தீராதென அலுத்துக் கொள்வோமா..இப்போது தமிழர் பிரச்சனைக்கு தீர்வுகாண்பதை எதிர்ப்பதற்கு ஓர் எதிரணி கிடையாது, மகிந்த ராஜபக்ஷவின் சிறீலங்கா சுதந்திரக்கட்சி கடைசிக் கட்டத்தில் நிற்கிறது, அவர்களும் இனப்பிரச்சனை தீர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கமாட்டோம் என்றுள்ளார்கள்.தீர்வுக்கு தடையில்லை பிள்ளையார் பிடிக்க காகம் வந்தது போல ஏதோ ஒரு தீர்வு வரும்.. ஆனால் அது மட்டுப்படுத்தப்பட்டதாகவே இருக்கும்…\nஅன்று புலிகளுக்கு எதிராக வகுக்கப்பட்ட வியூகத்திற்கு அனுமதியளித்த இந்தியா இப்போது எழுதப்பட்ட வியூகத்திற்கும் துணையாக நிற்கிறது, மைத்திரிக்கு நரேந்திரமோடி கூறியிருக்கும் வாழ்த்து இதற்கு நல்ல எடுத்துக்காட்டு.இந்த முடிவுகுறித்து பா.ஜ.க தமிழக தலைவர் தமிழிசை மகிந்த சரியான பாடம் படித்துள்ளார் என்று கூறியுள்ளார், காங்கிரஸ்கூட வாய் திறக்கவில்லை.\nஎனவே இந்தியா விரும்பிய, இந்திய மாநிலங்களுக்கு குறைவான ஒரு தீர்வை நோக்கி நகர மட்டுமே முடியும் என்றளவிலேயே அனைத்தும் நடக்கப்போவது தெரிகிறது.இதற்கு மேல் போனால் மறுபடியும் சிங்களக் கட்சிகள் பிளவுபடும்.. என்று கூறப்பட்டு அமைதி காணப்படும்..இந்த வியூகத்தில் புலம் பெயர் தமிழர் எதுவும் செய்ய முடியாது..அப்படி ஏதாவது செய்தால் அவர்களுக்காக எழுதப்பட்டுள்ள சர்வதேசக் கீதை மூன்றாம் பாகத்தை கையில் எடுப்பார்கள்.இன்னமும் புலிகள் மீதான தடையை அவர்கள் நீடிப்பு செய்ய இதுவும் ஒரு காரணம்.\nஇந்தச் சர்வதே இரும்புச் சக்கரத்தின் திசையை மாற்றுவது கடினம்..இன்றைய தென்னாசிய அரசியலில் எந்த ஒரு பாத்திரமும் இந்தச் சக்கரத்திற்கு வெளியால் இல்லை என்பதுதான் அதிசமான உண்மையாக இருக்கிறது.இதற்கு நரேந்திர மோடியைவிட அழகான உதாரணம் கிடையாது..ஆட்சிக்கு வந்த 100 தினங்களில் புதிய மாற்றங்களை செய்வேன், அனைத்து மந்திரிகளும் தமது முதல் 100 தினங்களுக்கான வேலைத்திட்டங்களுடன் வாருங்கள் என்றார்.\nஇன்றோடு அவர் பதவி ஏற்று 216 நாட்கள் ஆகிவிட்டன, அந்த நூறுநாள் கதையை அவர் மறந்து 119 நாட்களாகிவிட்டன.இப்போது மைத்திரிபால சேனாநாயக்காவும் 100 தினங்களில் மாற்றத்தை செய்கிறேன் என்று ஆட்சிக்கு வந்துள்ளார்.மோடியின் நூறு நாள் கதையை எழுதியவர்களே இவருடைய நூறு நாள் கதையையும் எழுதியிருக்கலாம்.. இரண்டுமே ஒற்றுமையாக உள்ளன.மோடி அரசு மேலை நாடுகளுக்கு வாய்ப்பான அரசாக மாறியுள்ளது அதனுடைய இந்திய நிலவுடமைக்கான புதிய சட்டம் இதற்கு ஓர் உதாரணம்.இதே கதைதான் மைத்திரியின் முதல் நூறு நாளிலும் நடக்க வாய்ப்புள்ளது.இந்தியா நூறு என்றால் இலங்கையும் நூறு …\nநூற்றுக்கு நூறு எவ்வளவு அழகாகப் பொருந்துகிறது.இந்தத் திரைக்கதையை எழுதியவர்கள் மிகவும் திறமைசாலிகள்.. ஆனால் எல்லாத் திறமைசாலியும் ஒரு இடத்தில் சறுக்குவான்.. இந்த நூற்றுக்கு நூறுதான் அவர்கள் சறுக்கிய இடம்.அடுத்து வரும் சறுக்கல்கள் எல்லாம் இதிலிருந்துதான் ஆரம்பிக்கும்… இதை புலம் பெயர் தமிழர் புரிந்து நடக்க வேண்டும்..நீரோட்டம் படகின் திசையை மாற்றும்… ஆனால் படகால் நீரோட்டத்தின் திசையை மாற்ற முடியாது…\nஇதுதான் உலக அரசியல்..மகிந்தவுக்காக குரல் கொடுத்த அவருடைய உயிர் நண்பர் சுப்பிரமணியசுவாமியும் தனது நண்பனுக்கு இப்படியொரு அவலம் வந்துவிட்டதே என்று குரல் கொடுத்தாரா.. அவரும் கம்மென்று இருக்கிறார்.. ஏன்..உலகம் முழுவதையும் ஒட்டுக் கேட்ட அமெரிக்க என்.எஸ்.ஏ உளவுப்பிரிவு தென்னாசிய தலைவர்கள் அனைவருடைய உரையாடல்களையும் பதிவு செய்யாமல் இருந்திருக்குமா..\nபோர்க்குற்றத்திற்கான அனைத்து ஆதாரங்களும் அவர்களிடம் இருக்கும்.. தென்னசிய பிராந்திய மேலாண்மைக்கு எது தேவையோ… தேவைக்கு ஏற்ப பயன்படுத்துவார்கள்..ஆம்…இது நீரோடு செல்கின்ற ஓடம்… இதில் நியாயங்கள் யார் சொல்லக்கூடும்… என்பது ஒரு தமிழ் திரைப்படப்பாடல்..சர்வதேச விவகாரத்தில் இதுதான் ஒரே நியதி..ஆனால் அதே பாடலில் இன்னொரு வரி இருக்கிறது..\nசட்டம் ஏமார்ந்து போனாலும் போகும் தர்மம் எப்போதும் பழி வாங்கித் தீரும் என்று வரும்..21ம் நூற்றாண்டின் துட்டகைமுனுவான மகிந்த ராஜபக்ஷவையும் தர்மம் இப்படியொரு பொறிக்குள் விரைவாக வீழ்த்தியுள்ளது.\nமகாவம்ச பிக்குகள் கூட வாயடைத்து நிற்கிறார்கள்.புலம் பெயர் தமிழர் இவை அனைத்தையும் தராசில் போட்டு நிதானமாக நடக்க வேண்டும் உணர்ச்சி அரசியல் பேச்சுக்களில் மிக எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும்.ஏனென்றால் இது நீரோடு செல்கின்ற ஓடம்… இதில் நியாயங்கள் யார் சொல்லக்கூடும்…\nஎன்ற நிலையில் இனியும் தமிழினத்தை சிக்குப்பட வைத்தல் கூடாது.கி.செ.துரை 09.01.2015அலைகள் தென்னாசிய அரசியல் விவகார பார்வைக்காக...\nதொடர்புடைய பதிவுகள்: , , ,\nLabels: ஆய்வு , இலங்கை , கட்டுரை , விடுதலை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஈழத்து நகைச்சுவை இரட்டையர்கள் டிங்கிரி சிவகுரு காணொளி இணைப்பு\nஜெனிவா சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம்- பிரித்தானியாவும் ஆதரவு\nபிரேமலதா விஜயகாந்துக்கு ரஜினிகாந்த் ரசிகர்கள் கண்டனம்\nசிரியாவுக்குள் புகுந்த ஈழத்து புலி\nஆஸ்திரியாவில் கச்சேரிக்கு வந்த கூட்டத்தினர் மீது துப்பாக்கிச் சூடு : 2 பேர் பலி\nஐ.நா மனிதவுரிமை உரிமைகள் சபையின் 37 வது கூட்டத்தொடர் இன்று ஆரம்பமாகியது.\nஈழத் தமிழர்களுக்கு நீதி கோரி உலகளாவிய நீதியில் வழக்கறிஞர்கள் கையெழுத்து.\nராஜிவ் கொலை குற்றவாளிகள் எழுவரையும் விடுவிக்க தமிழக அரசு முடிவு\nரவிராஜ் கொலையில் பிள்ளையானின் ஆயுதம்\nவிடுதலை வீரர்களின் சமாதியில் சிங்கள குடியேற்றம்\nதமிழீழ மாணவர்களின் இன்றைய அரசியல் தெளிவு.\n1976 மே 14 ஆந் தேதியன்று வட்டுக்கோட்டையில் நடைபெற்ற தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் முதலாவது தேசிய மாநாட்டில்\nசடலத்தை சமைத்து உண்ணும் பாகிஸ்தானியர்கள் (காணொளி இணைப்பு) இறந்த பெண்ணொருவரின்\nஇலங்கையில் திருதிமைக்கப்பட்ட ஒரு சில பெரும் சாலைகளின் புகைப்படங்கள் பார்க்க அருமையாக இருக்கிறது.\nஒன்று பட்டால் உண்டு வாழ்வு/ தரவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vakeesam.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA.html", "date_download": "2018-04-26T13:27:08Z", "digest": "sha1:VHJLPI3ZV5QMWJHVTRREBQD5W6NHVNHI", "length": 6938, "nlines": 76, "source_domain": "www.vakeesam.com", "title": "புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் சந்தேகநபர்களுக்கு 20ம் திகதி வரை விளக்கமறியல் – Vakeesam", "raw_content": "\nஹட்டனில் நில அதிர்வு – 05 வீடுகள் சேதம்\nதந்தை செல்வா நினைவுதினம் அனுஷ்டிப்பு\nஜ.தே.க முக்கிய பதவிகளில் மாற்றம் – பொதுச் செயலாளராக அகில விராஜ் காரியவசம்\n203 பட்டதாரிகள் நேர்முகத் தேர்விற்குத் தோற்றவில்லை \nயாழ் போதனா வைத்தியசாலையில் கழிவு வாய்க்கால்மேல் கன்ரீன் – மக்கள் விசனம்\nபுங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் சந்தேகநபர்களுக்கு 20ம் திகதி வரை விளக்கமறியல்\nin உள்ளூர் செய்திகள் April 12, 2016\nபுங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 11ம் , மற்றும் 12ம் சந்தேக நபர்களை எதிர்வரும் 20ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு இட்டுள்ளார்.\nபுங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 11ம் , 12ம் சந்தேக நபர்கள் மீதான வழக்கு விசாரணை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் பதில் நீதவான் இ.சபேசன் முன்னிலையில் இன்று செவ்வாய்கிழமை எடுத்துக் கொள்ளப்பட்டது.\nஅதன் போது இரு சந்தேகநபர்களும் மன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். குற்றதடுப்பு புலனாய்வு துறையினர் மன்றில் முன்னிலை ஆகவில்லை அதனை தொடர்ந்து வழக்கினை எதிர்வரும் 20ம் திகதிக்கு நீதவான் ஒத்தி வைத்தார்.\nகுறித்த கொலை வழக்கு தொடர்பாக பத்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு அவர்கள் மீதான வழக்கு விசாரணை பிறிதொரு தினத்தில் நடைபெற்று வருகின்றது.\nநேற்றைய தினம் குறித்த வழக்கு நடைபெற்று இருந்தது அதன் போது மேலும் ஒரு சந்தேக நபரை 13 ஆவது சந்தேக நபராக கைது செய்யவுள்ளதாக குற்றதடுப்பு புலனாய்வு பிரிவினர் மன்றில் தெரிவித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஅதனை அடுத்து அந்த வழக்கு விசாரணை எதிர்வரும் 25 ம் திகதி ஒத்திவைக்கப்பட்டது.\nவவுனியா சிற்றி கிட்ஸ் முன்பள்ளி மழலைகள் விளையாட்டு விழா -2018\nநல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகர பிள்ளையார் கொடியேற்றம்\nபெயரிடாத நட்சத்திரங்கள், பூவுலகைக் கற்றலும் கேட்டலும் – நூல் வெளியீடு\nஹட்டனில் நில அதிர்வு – 05 வீடுகள் சேதம்\nதந்தை செல்வா நினைவுதினம் அனுஷ்டிப்பு\nஜ.தே.க முக்கிய பதவிகளில் மாற்றம் – பொதுச் செயலாளராக அகில விராஜ் காரியவசம்\n203 பட்டதாரிகள் நேர்முகத் தேர்விற்குத் தோற்றவில்லை \nயாழ் போதனா வைத்தியசாலையில் கழிவு வாய்க்கால்மேல் கன்ரீன் – மக்கள் விசனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.yantramantratantra.com/2015/07/blog-post_9.html", "date_download": "2018-04-26T13:03:26Z", "digest": "sha1:DH37ML63O3XC7WQ7UXMYOBWZDL6JE7YI", "length": 24366, "nlines": 328, "source_domain": "www.yantramantratantra.com", "title": "அமானுஷ்ய பரிகாரங்கள் : வீடுகள் மற்றும் இடங்கள் விற்க தாந்த்ரீக பரிகாரம்", "raw_content": "வீடுகள் மற்றும் இடங்கள் விற்க தாந்த்ரீக பரிகாரம்\nபொதுவாகவே மூலிகைகள் மற்றும் மரங்களுக்கு மனித சக்திக்கு அப்பாற்பட்டதை செய்யும் திறன் உள்ளதை நாம் அனைவரும் அறிவோம்-மேலும் இது பற்றி பல சித்த பெருமக்களும் உணர்த்தி விட்டு சென்றுள்ளனர். ஆகையால் தான் சில மரங்களை அல்லது செடிகளை வீடுகளில் அல்லது நம் வசிப்பிடத்தில் வைக்கலாம் அல்லது வைக்க கூடாது என்ற விதி உள்ளது.\nபெண்களை வசியம் செய்யும் மூலிகை மை விற்பனை செய்யும் ஒரு நபர், ஒரு முறை அந்த மூலிகையை வேறொருவருக்கு கொடுக்க சாப நிவர்த்தி செய்து எடுத்து வைத்திருக்கும் சமயம் அங்கு வந்த அவரது சித்தியின் மகள் (தங்கை) அவரை மாமா என்று அழைத்தாராம். அன்று முதல் அந்த தொழில் செய்வதையே விட்டு விட்டேன்\" என்றார். இது ஒரு கட்டுரையாகவே குமுதத்தில் வந்தது. அதே போன்று மூலிகைகளை நன்கு சக்தியூட்டம் செய்து நாம் விற்க விரும்பும் இடத்தில புதைப்பது மற்றும் வேறு சில விஷயங்கள் செய்வதன் மூலம், உடனடியாக அந்த இடம் இடத்துக்கு உரியவரின் கை மாறி வேறு ஒருவருக்கு போகும்-அதாவது விற்று விடும். இது நாம் வழக்கமாக பலருக்கு செய்து கொடுத்து வெற்றி கண்டு வரும் முறை.\nநம் நிகழ்ச்சியை வேந்தர் தொலைகாட்சியில் பார்த்து திரு,கண்ணன் என்பவர் வேறு ஊரிலிருந்து வந்தார். வந்தவர் 'தான் எவ்வளவோ முயற்சி செய்தும் தன்னுடைய வீடு ஒன்றை விற்க முடியவில்லை அதை விற்றால் தான் கடன் தீரும் என்றும் கூறவே, அதற்கேற்ற பொருட்கள் மற்றும் தேவையான விஷயங்களை மறு நாள் தருவதாக கூறி அனுப்பி வைத்தோம். மறு நாள் வந்த அவரிடம் சில பொருட்களை கொடுத்து செய்ய வேண்டிய முறைகளை கூறி, மேலும் விளக்கு ஏற்றுவதற்கு ஒரு பாட்டில் எண்ணையும் கொடுக்கவே, வாங்கி கொண்டவர் மௌனமாக அவற்றையும் எம்மையும் மாறி மாறி பார்த்து கொண்டே இருந்தார். இதனால் எப்படி இடம் விற்கும் என்ற அவரின் மனக்கேள்வி புரிந்தது-கண்டிப்பாக விற்று விடும்-நீங்கள் ஏற்றும் இந்த எண்ணெய் தீர்வதற்குள், இது என் அனுபவ உண்மை என்று கூறி அனுப்பி வைத்தோம். இருந்தாலும் மனதில் தான் கொடுத்த பணம் வீணாகி விடுமோ என்கிற கவலை மற்றும் பயத்துடன் சென்றது தெரிந்தது.\nசென்றவர் மிக சரியாக ஐந்தாவது நாள் அழைத்து தன் வீட்டிற்கு அட்வான்ஸ் வாங்கி விட்டதாகவும், தொடர்ந்து விளக்கு ஏற்ற வேண்டுமா என்றும் கேட்டார்- மிகுந்த மன மகிழ்ச்சியில் இருந்தார்-\n\"ஜி , எப்படியாவது தடை படாம ரெஜிஸ்டர் ஆகிடனும், அப்ப தான் முழு பணமும் கைக்கு வரும் என்றவரை தொடர்ந்து விளக்கு ஏற்றி வருமாறும் , சொன்ன மற்ற விஷயங்களை செய்து வருமாறும் கூறினோம். சரியாக 21 ஆவது நாள் இடம் ரிஜிஸ்தர் ஆனது. பதிவு அலுவலகத்தில் இருந்து கொண்டே சந்தோஷ கண்ணீரில் பேசியவர்-இனி கடன் அனைத்தும் அடைந்து விடும் என்றும், மிக்க நன்றியும் கூறி எப்படி இது சாத்தியம் ஆயிற்று என்றார் \nஇது நம் சித்த புருஷர்கள் மட்டுமே அறிந்த ரகசியம் யாம் ஏதும் அறியோம் அவர்கள் கூறி வைத்ததை நியம நிஷ்டைகளோடு கடை பிடிக்க, அவர்கள் கொடுத்து சென்ற மந்திரங்களின் மூலமும் முறைகளின் மூலமும் மூலிகையை உருவேற்ற, அது தானாக தன் வேலையை செய்கிறது- பல ரியல் எஸ்டேட் அதிபர்கள் தற்போது தொலைக்காட்சி விளம்பரங்களை குறைத்து கொண்டு இடம் சீக்கிரம் விற்க நம்மிடம் வருகின்றனர் \nLabels: சித்தர்கள், தாந்த்ரீகம், மனை வாங்க விற்க, வீடு வாங்க, வீடு விற்க\nஐம்பூதங்களின் துணையால் அனைத்தையும் சாதிக்கும் முறை\nதாந்த்ரீகம், ஜோதிடம் மற்றும் வேறு முறைகளில் பல் வேறு பரிகார முறைகள் கொடுத்து வந்திருப்பினும், வீடு மனை விற்க, குடும்ப சொத்து தகராறு, காதல...\nவீடுகள் மற்றும் இடங்கள் விற்க தாந்த்ரீக பரிகாரம்\nதிருவண்ணாமலை மற்றும் கோவையில் கிளைகளுக்கு :\nஅன்றாடம் பண வரவு பெற\nகாலை எழுந்து பல் துலக்கியதும் வெறும் வயிற்றில், ஒரு டம்பளர் நீரை கையில் எடுத்து கொண்டு வட கிழக்கு திசை நோக்கி, நாவை வாயின் மேல் புறம் படு...\nசெல்லும் பணம் திரும்பி வர சூட்சும பரிகாரம்\nநாம் அன்றாடம் செலவழிக்கும் பணமானது, நம்மிடமே பன்மடங்காக திரும்பி வர நாம் கொடுத்து வரும் 'மணி தெரபி' யில் இருந்து ஒரு பயிற்சி. ...\nஇழந்த செல்வம், சரிந்த புகழ் , கை நழுவிய சொத்து, மறைந்த கௌரவம்- அனைத்தையும் திரும்ப பெற\nவாராஹி அம்மனுக்கு 8 சனிக்கிழமைகள் காலை 6-7 அல்லது இரவு 8-9 மணியளவில் மண் அகலில் கரு நீல துணியில் சிறிது வெண் கடுகை இட்டு முட...\nஎதிர் மறை சக்திகள் பறந்தோட\nநம்மை வாட்டி கொண்டிருக்கும் எதிர் மறை சக்திகள், எண்ணங்கள், பிறரின் திருஷ்டி பார்வை, பொறமை எண்ணங்கள் நம்மை விட்டு விலக கையளவு கருப்பு உ...\nஅதீத சக்தி வாய்ந்த நரசிம்ஹ ஸ்தோத்திரம்-தினசரி 18 முறைகள் கூறி வர அனைத்து துன்பங்களும் தீர்வது உறுதி\nமாதா நரசிம்ஹ, பிதா நரசிம்ஹ ப்ராதா நரசிம்ஹ ஸகா நரசிம்ஹ வித்யா நரசிம்ஹ, த்ரவிணம் நரசிம்ஹ ஸ்வாமி நரசிம்ஹ ஸகலம் நரசிம்ஹ இதோ நரசிம்ஹ ப...\nநீண்ட நாள் கடன்கள் அடைய\nதொடர்ந்து 9 செவ்வாய்கிழமைகள் வீட்டின் தெற்கு பகுதியில் வடக்கே பார்த்தவாறு நரசிம்மர் படத்தை வைத்து செவ்வரளி மலரிட்டு, 9 மண் அகலில் சிகப்பு...\nஒவ்வொருவருக்கும் உரிய அதிர்ஷ்ட தெய்வங்கள்\nஒரு முறை பக்தியில் திளைத்த ஒருவர் ஆலோசனைக்கு வந்திருந்தார். மிகுந்த ஆன்மீக ஞானம் மற்றும் தினசரி பூஜைகள், ஜெபங்கள் செய்து வரும் அவர் ஓர் ம...\nவீட்டில் சந்தோஷம் நிலைக்க, அனைத்து செல்வமும் பெற\nஒரு வெள்ளை ரிப்பனில் கீழ்க்கண்ட மந்திரத்தை சிகப்பு நிற இங்க் பேனாவில் எழுதி வீட்டில் காற்றில் ஆடும் படி தொங்கவிட்டு, தினசரி அதை பார்த்...\nசெய்வினை மற்றும் துஷ்ட சக்திகளிடம் இருந்து காப்பு பெற\nவெளியே அல்லது சில நபர்களின் வீட்டிற்கு, எதிரியை காண செல்லும் சமயம், ஏதுனும் துஷ்ட சக்தி அல்லது செய்வினை தாக்குமோ எனும் பயம் இருப்பின், ...\nதிடீர் பண முடக்கம், வேலை இழப்பு, தொழிலில் தேக்கம், மரியாதை இழப்பு போன்றவை ஏற்படின், சனிக்கிழமை அன்று சங்கு பூவை பறித்து, சிறிது நீர்...\nகுறைந்த விலையில் முத்து சங்கு\nAstro Remedies Black Salt Remedies Sade Sati Remedies Saturn Saturn Remedies அரசு அரசு வேலை கிடைக்க அல்லா ஆடுகள் ஆலயம் உடல் நலம் பெற உத்திராடம் ஊர் காவல் தேவதை எதிரிகள் விலக எதிர்ப்புகள் அகல எளிய பரிகாரம் ஏழரை சனி கடகம் கடன் தொல்லை கண் திருஷ்டி கருப்பு கர்ம வினை கன்னி ராசி கஷ்டங்கள் மறைய கஷ்டங்கள் விலக காத்து காவல் தெய்வம் கிராம தேவதைகள் கிளைகள் குரு குழந்தை பேறுக்கு குறைந்த விலையில் முத்து சங்கு குன்றி மணி கோவில்கள் சக்தி வாய்ந்த பரிகாரம் சக்தி வாய்ந்த மந்திரங்கள் சத்ரு பயம் நீங்க சப்த கன்னியர் சனி சித்தர் சித்தர் வழிபாடு சித்தர்கள் சிம்மம் சிறந்த கல்வி செல்வம் சேர செவ்வாய் ஞாயிறு தடைகள் நீங்க தாந்த்ரீக மந்திரம் தாந்த்ரீகம் தாம்பத்யம் சிறக்க திங்கள் துலாம் ராசி தொழில் நட்சத்திர பரிகாரம் நட்சத்திரம் நவகிரகம் நோய்கள் விலக பண வரவிற்கு பணம் பணம் வந்து சேர பரணி நட்சத்திரம் பரிகாரம் பலன்கள் பலிதம் உண்டாக பிஸ்மில்லாஹ் புதன் புத்தாண்டை சிறப்பாக்க பூரட்டாதி பௌர்ணமி மகான்கள் மந்திரங்கள் மந்திரம் மலை தேன் மனை வாங்க விற்க மாந்திரீகம் மிதுனம் மிருக பரிகாரம் முகவர்கள் தேவை முத்து சங்கு மூலிகை மேன்மை பெற யந்திரம் ராகு ராக்கெட் சங்கு ராசி பரிகாரம் ராசி பலன் ராசிகள் ரிஷபம் ருத்திராக்ஷும் ரேவதி லக்னம் லாபம் வங்கி வேலை கிடைக்க வசிய சக்தி வசியம் வசீகரம் வலம்புரி சங்கு வளர்பிறை சதுர்தசி வாக்கு வாக்கு பலிதம் வியாபாரம் பெருக வியாழன் விருட்ச பரிகாரம் விவசாயிகள் வீடு வாங்க வீடு விற்க வெள்ளி வேலை கிடைக்க ஜன தன வசியம் ஜோதிட சூட்சுமங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://indrayavanam.blogspot.com/2015/12/2.html", "date_download": "2018-04-26T13:29:28Z", "digest": "sha1:NMKK6AQL2QWNK6YZ6DKHEL6CR65WTYDU", "length": 23799, "nlines": 139, "source_domain": "indrayavanam.blogspot.com", "title": "பசங்க -2 - வீட்ல பசங்க இருந்த கண்டிப்பா பாருங்க...", "raw_content": "\nபசங்க -2 - வீட்ல பசங்க இருந்த கண்டிப்பா பாருங்க...\nவழக்கமான படங்களிலிருந்தது புதுமாதரியான கதை. குழந்தைகளை எப்படி புரிந்து கொள்வது என்பதை புரிய வைக்கும் படம். குழந்தை பிறக்கும் முன்பே குழந்தைகளை பற்றி பெரிய கனவுகளோடு வாழும் இன்றைய பொற்றோர்களுக்கான படம்.\nஇந்த படத்தில் சூர்யா படத்தின் முக்கிய வேடத்தில் நடித்திருப்பது ,படத்தின் முக்கியதுவத்தை உணர்த்துகிறது. இடைவேளைக்கு பிறகு டாக்டராக வரும் சூர்யாவிடம் ஓரு தம்பதி ரெம்ப சேட்ட பண்றான் சார்.கெட்டவார்த்த பேசுறான் என தன் மகனைபற்றி சொல்ல ...\nடாக்டர் சூர்யா குழந்தைகள் கெட்ட வார்த்தை பேசமாட்டார்கள்.கேட்டு பேசுபவர்கள் தான் குழந்தைகள்... என பேசுகிற வசனம் உண்மை. குழந்தைகள் நம்மை பார்த்தே கற்றுக்கொள்கின்றன.நாம் அவர்களுக்கு உதரணமாக வாழ்ந்து காட்ட வேண்டும் என்பதையும் உணர்த்தும் படம்.குழந்தை வைத்திருப்பவர்கள் மட்டுமல்ல எல்லோருமான படம் என்றே சொல்லலாம்.\nமுனீஸ் காந்த்-வித்யா பிரதீப் தம்பதியர் தங்களது மகனுடன் சென்னையில் வசித்து வருகிறார்கள். அதேபோல், கார்த்திக்குமார்-பிந்துமாதவி தம்பதிக்கும் ஒரு மகள் இருக்கிறாள்.\nஇந்த இரண்டு குடும்பங்களுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. அது என்னவென்றால், முனீஸ்காந்த், கார்த்திக் குமாரின் குழந்தைகள் இருவரும் வழக்கமான குழந்தைகளை விட ரொம்பவும் சுட்டித்தனம் செய்பவர்கள். ஒரு நிமிடம் கூட இவர்களை பிடித்து நிற்க வைக்கமுடியாது. அந்த அளவுக்கு சுட்டித்தனம் செய்பவர்கள். இதனால், இவர்கள் குடியிருக்கும் இடம் மட்டுமின்றி, படிக்கும் இடத்திலும் பிரச்சினை வருகிறது. இதனால், வேறு வழியின்றி குடும்பத்துடன் பல இடங்களுக்கு மாற்றலாகி செல்வது இவர்களது குடும்பத்தின் வழக்கமாகிவிடுகிறது.\nஇந்நிலையில், தாம்பரம் அருகில் இருக்கும் பள்ளியில் சேர்ப்பதற்காக குடும்பத்துடன் அங்கு குடிபெயர்கிறார் முனீஸ்காந்த். அந்த குடியிருப்புக்கே கார்த்திக் குமாரும் தனது குடும்பத்துடன் வருகிறார். இவர்கள் குடிவரும் அதே அபார்ட்மெண்டில் குழந்தைகளுக்கான மனநல மருத்துவராக இருக்கும் சூர்யா, தனது மனைவி அமலாபால் மற்றும் குழந்தைகள் இருவருடனும் வசித்து வருகிறார்.\nவெவ்வேறு இடங்களில் சுட்டித்தனம் செய்துகொண்டிருந்த குழந்தைகள் ஒரே அபார்ட்மெண்டுக்கு வந்ததும் நண்பர்களாகிறார்கள். இங்கு இவர்களது சுட்டித்தனம் இன்னும் அதிகமாகிறது. இதனால், அந்த அபார்ட்மெண்டில் வசிக்கும் அனைவரும் அவர்களை காலி செய்யச் சொல்லி வற்புறுத்துகிறார்கள். ஆனால், முனீஸ்காந்தும், கார்த்திக் குமாரும் தங்களது குழந்தைகளை ஹாஸ்டலுக்கு அனுப்பிவிடுவதாக கூறி அவர்களை சமாதானப்படுத்துகிறார்கள்.\nஇந்த விஷயம் சூர்யாவுக்கு தெரிந்ததும், டாக்டரான தான் அவர்களுக்கு என்ன பிரச்சினை என்பதை கண்டறிந்து கூறுகிறேன் என்று முனீஸ்காந்த்-கார்த்திக் குமார் இருவரிடமும் கூறுகிறார். ஆனால், சூர்யாவின் பேச்சுக்கு மதிப்புக் கொடுக்காமல், குழந்தைகளை ஹாஸ்டலில் கொண்டு போய் சேர்க்கிறார்கள். ஹாஸ்டலிலும் தங்களது சுட்டித்தனத்தால் அங்கிருந்து தப்பித்து, தங்களது வீடுகளுக்கே வருகிறார்கள் குழந்தைகள்.\nபின்னர் சூர்யாவுடன் அந்த குழந்தைகள் நெருங்கி பழக ஆரம்பிக்கிறார்கள். கடைசியில், அந்த குழந்தைகளுக்குள் இருக்கும் பிரச்சினையை சூர்யா கண்டறிந்து, அவர்களது திறமைகளை எப்படி வெளிக்கொண்டுவந்தார் குழந்தைகள் மற்றும் பெற்றோர்களின் இடைவெளி எப்படி சரியானது என்பதை அழகாக சொல்லியிருக்கிறார்கள்.\nஅதிகமாக சேட்டை செய்யும் குழந்தைகள் நோயாளிகள் அல்ல... அவர்களுக்குள்ளும் நிறைய திறமைகள் இருக்கின்றன. அவற்றை பெற்றோர்கள் சரியான முறையில் கண்டறிந்து, அவர்களுடைய வாழ்க்கைக்கு வழிகாட்டியாக இருக்கவேண்டும். மாறாக, அவர்களை ஒதுக்கி வைக்கக்கூடாது என்பதை இந்த படத்தில் அழகாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் பாண்டியராஜ் .\nஉங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்\nசினிமா சூர்யா பசங்க 2 பாண்டியராஜ்\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\nராஜராஜ சோழன் எந்த சாதிக்காரன்\nமன்னர் ராஜராஜ சோழன் எங்க சாதிகாரன்..இல்ல..இல்ல எங்க சாதிக்காரன் என குத்துவெட்டு நடந்து கொண்டிருக்கிறது. பசும்பொன் முத்துராமலிங்கம், கட்டபொம்மன், வ.உ.சிதம்பரம் போன்ற சுதந்திர போராட்ட வீரர்களை சாதித்தலைவர்களாக மாற்றிவிட்டார்கள் சாதி வெறியர்கள். இப்போது 1000 ஆண்டுகளுக்கு முந்தைய மன்னர்களையும் இவர்கள் விடுவதாக இல்லை\nதஞ்சையில் கடந்த 10, 11 தேதிகளில் ராஜராஜசோழனின் 1028வது சதய விழா (பிறந்த நாள்)அரசு விழாவாக மிக கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. 11ந் தேதி மாவட்ட ஆட்சியர் தலைமையில் சதய விழாக்குழுவினர் ஊர் வலமாக வந்து பெரிய கோவில் அருகிலுள்ள ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதற்கு பின்பு இதுவரை இல்லாத மிகவும் கேலிக்கூத்தான நிகழ்ச்சிகள் நடந்தேறின.\nஇலங்கை கதிர்காமம் முருகன் கோவில் போல் மதுரை புளியம்பட்டியில் ஒரு கோயில்\nஎம்.ஜி.ஆர்.,எஸ்.எஸ்.ஆர்.,உள்ளிட்ட நாடகக்கலை உலகின் பிரபலமானஜாம்பவான்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்த மதுரை ஸ்ரீ பரமானந்தா ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியின் நிறுவனரான நாடகச்செல்வர் பி.கா.சுப்பாரெட்டியாரால் இலங்கை கண்டி கதிர்காமத்திலுள்ள முருகன் கோவில் போல் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி.கல்லுப்பட்டி பகுதி புளியம்பட்டி கிராமத்தில் கட்டப்பட்டுள்ள ஸ்ரீ கதிரேசப்பெருமான் கோவிலில் நடைபெறும் ஆடிப்பவுர்ணமி நாளன்று பூஜையில் கலந்து கொண்டு வழிபட்டால் ஆயுசு பெருகும் அதிசயங்கள் நடக்கும் என்று பக்தகோடி பெருமக்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி.கல்லுப்பட்டி பகுதியில் புளியம்பட்டி எனும் சின்னஞ்சிறிய கிராமம் உள்ளது.இந்த கிராமத்தில் கடந்த 1890-ம் ஆண்டு ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்து பிற்காலத்தில் நாடக உலகத்தையே தன்னோக்கி பார்க்க வைத்தவர் பி.கா.சுப்பா ரெட்டியார்.கல்வி கற்றிடாத கிராமவாசியான இவருக்கு நாடகத்துறையின் மீது ஏற்பட்ட அளவுகடந்த பற்றின் காரணமாக 1925-ம் ஆண்டு சில குழந்தைகளை தன்னகத்தே சேர்த்துக் கொண்டு ஓர் நாடகக் கம்பெனியை புளியமாநகரில் நிறுவினார்.பின்னர் ஸ்ரீலஸ்ரீ மஹா…\nடி.கல்லுப்பட்டி அருகே முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் பிராமி எழுத்துக்கள் கண்டுபிடிப்பு\nமதுரை மாவட்டம்,பேரையூர் தாலுகா, டி.கல்லுப்பட்டி அருகேயுள்ள கவசக்கோட்டை கிராமத்தில் தமிழரின் தொன்மை சிறப்புகளை கண்டறியும் நோக்கில் பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் முதல் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறித்த கருப்பு சிவப்பு வண்ணமுடைய பானை ஓடுகள்,எலும்பு துண்டுகள்,முதுமக்கள் தாழி,தானிய களஞ்சியம்,குறியீடுடைய உடைந்த மண்கலயம் போன்றவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nமதுரை மாவட்டம் பேரையூர் தாலுகாவில் பண்டைகாலத்து தமிழர்களின் வாழ்க்கைமுறை தொடர்பான பல்வேறு சான்றுகள் இன்றளவும் அழிந்திடாமல் உள்ளது.இந்நிலையில் தமிழரின் தொன்மையை கண்டறியும் நோக்கில் பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் ஆய்வாளர்களான\nமுனைவர்கள்.சி.மாணிக்கராஜ்,சி.செல்லப்பாண்டியன்,து.முனீஸ்வரன்,மு.கனகராஜ்,மு.லட்சுமணமூர்த்தி ஆகியோரை கொண்ட ஆய்வுக்குழு பேரையூர் தாலுகா டி.கல்லுப்பட்டி அருகேயுள்ள கவசக்கோட்டை கிராமத்தில் கள ஆய்வு மேற்கொண்டது.அப்போது கவசக்கோட்டை கிராமத்திலுள்ள அக்ரஹாரமேடு,பண்ணைமேடு ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட களஆய்வின்போது உடைந்த நிலையில் பெருங்கற்காலத்தைச் சார்ந்த …\nஅஜித்தின் விவேக மற்ற படம்...\nஅஜித்துக்கு நடிப்பு வராது...ஒரே மாதிரியான உடல் மொழி,பேச்சு,நடிப்பு சலிப்பு தட்ட கூடியது.இதிலும் அப்படித்தான். படம் முழுக்கவே இரைச்சல் .துவங்கியதிலிருந்தே துப்பாக்கி சத்தமும், கார்களின் மோதல், பறக்கும் கார்களின் காட்சிகள் இதுதான் படம் முழுக்கவே.நம்ப முடியாத கதை காட்சிகள்.இயக்குனர் தெலுங்கு பட இயக்குனர் போல தூக்கலான ஹீரோயிசம்,தத்துவங்கள் கொட்டும் பஞ்ச் டயலாக்.வில்லுனுக்கு வேலையே வஞ்ச புகழ்ச்சி அணியில் ஹீரோவை புகழ்வது தான்.\nபடம் சகிக்கல...இயக்குனர் ஒரு பேட்டியில் சொன்னார் அஜித் இன்டர்னேஷனல் ஸ்டார் ஆகிட்டார் .வெளிநாட்டில் படம் எடுத்தால் இன்டர்நேசனல் ஸ்டாரா.கொடும..கொடும...\nகதை சுருக்கம் சொல்கிறேன்...நம்ப முடிகிறதா என பாருங்கள் . அதற்கு மேல் படம் பார்த்து மாட்டிக்கொண்டால் நான் பொறுப்பல்ல.\nநீங்கள் வந்தீர்கள்;விசிட்டிங் கார்டு தருவது போல் பொக்கேயை வைத்தீர்கள்.ஓ.பி.எஸ்ஸைக் கட்டிப் பிடித்து கண்ணீரைத் துடைத்து விட்டீர்கள். சசிகலாவிற்கு ஆறுதல் சொன்னீர்கள்.கணேசன் உங்களுக்கு நடராஜரை அறிமுகப்படுத்தினார்.பிறகு, உங்களின் போன ஜென்மத்து சொந்தமான கேமராக்காரர்களை நோக்கி கைகளை ஆட்டினீர்கள்.எங்கள் MLA க்களெல்லாம் உங்களோடு கை குலுக்க குழந்தையைப் போல் ஓடி வந்தார்கள். சிக்கியவர்களோடு செல்ஃபியும் எடுத்துக் கொண்டீர்கள்.தேர்தல் முடிவு வந்ததைப் போல் பெருமிதத்தோடு கும்பிடு போட்டீர்கள். உங்கள் வித்தைகளின் அனா ஆவன்னாவைக் கூட அறிந்திராத ஓ.பி.எஸ் ஐ பக்கத்தில் நிற்க வைத்து போஸ் கொடுத்தீர்கள்.எங்களின் இப்போதைய முதலமைச்சர் உங்கள் பின்னால் ஒரு டிரைவரைப் போல் ஓடி வந்தார். கம்பெனி ஊழியரைப் போல் கருதி அவர் முதுகில் தட்டி விட்டு புறப்பட்டு விட்டீர்கள். ஏற்கனவே நிகழ்ந்து முடிந்த நாடகத்தின் இன்னொரு அத்தியாயம் இது என்பதைச் சொல்லாமல் சொல்லியிருக்கிறீர்கள் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-04-26T13:39:17Z", "digest": "sha1:4XJOLM75BHLNWN2JMP4ISEIUMBSONQK3", "length": 14452, "nlines": 258, "source_domain": "ta.wikipedia.org", "title": "சபாவித்து வம்சம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nபேரரசர் முதலாம் அப்பாஸ் ஆட்சியில் சபாவித்துப் பேரரசின் வரைபடம்\nமொழி(கள்) அலுவல் மொழி பாரசீகம். பிற மொழிகள் அரபு, அஜர்பைஜானி மொழி, ஜார்ஜியா மொழி மற்றும் துருக்கி மொழி\nசமயம் சியா இசுலாம், பன்னிருவர் பிரிவு\n- 1501–1524 முதலாம் இசுமாயில்(துவக்கம்)\n- 1732–1736 மூன்றாம் அப்பாஸ் (முடிவு)\n முகமது ஜக்காரியா குஜுஜி (முதல்)\n- 1729–1736 நாதிர் குவாலி பெக் (இறுதி)\n- சபியத்தீன் அட்ராபிலி சபாவியா ஆட்சியை நிறுவுதல் 1301\n- ஹோத்தாகி பேரரசின் ஆக்கிரமிப்பு 1722\n- சபாவித்து நாதிர் ஷா மீண்டும் கைப்பற்றுதல் 1726–29\n- குலைவு மார்ச் 1736\n- நாதிர் ஷா முடிசூட்டிக்கொள்தல் 1 அக்டோபர் 1736\nநாணயம் துமான், அப்பாசி நாணயம், ஜார்ஜியன் அப்பாசி, ஷாகி[3]\n1 Tuman = 50 பிராஞ்ச் லிவெரே\nசபாவித்து வம்சம் (Safavid dynasty) நவீன ஈரானை 1501 முதல் 1736 முடிய ஆண்ட சியா இசுலாம் பன்னிருவர் பிரிவைச் சார்ந்த அரச வம்சமாகும்.[5]\nசபாவித்து பேரரசு போர்க்களங்களில் வெடி மருந்துகளை பயன்படுத்தியதால், இதனை வெடிமருந்து பேரரசு என்றும் அழைப்பர்.[6]\nசபாவித்து வம்சத்தின் ஆட்சி இரானிய அஜர்பைசான் பிரதேசத்தின் ஆர்டபில் நகரத்தில் முதலாம் ஷா இசுமாயில் (1501–24) என்பவரால் நிறுவப்பட்டது.\nசபாவித்து வம்சத்தினர், இசுலாமிய சூபி - குர்திஷ் கலப்பினத்தவர் ஆவார். [7]சபாவித்து வம்சத்தினர் அசர்பைஜானியர்களுடனும், [8] ஜார்ஜியா நாட்டு மக்களுடனும் திருமண உறவு கொண்டிருந்தனர். [9]\nசபாவித்து வம்சத்தினர் 1501 முதல் 1722 முடிய தற்கால ஈரான், ஈராக், அசர்பைஜான், பாகாரேயின், ஆர்மீனியா, ஜார்ஜியா, குவைத், சிரியா, துருக்கியின் சில பகுதிகள், வடக்கு காகசஸ், உஸ்பெகிஸ்தான், ஆப்கானித்தான், பாகிஸ்தான், துருக்மெனிஸ்தான் பகுதிகளை ஆண்டனர்.\n1736-இல் சபாவித்து பேரரசு சிதறுண்டாலும், ஈரானை சியா இசுலாம் பிரிவுக்கு மாற்றியதுடன், அனதோலியா, காக்கேசியா மற்றும் ஈராக்கிலும் சியா இசுலாம் பரவியது.\nசுல்தான் முதலாம் உசைன் 1694–1722\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Safavid dynasty என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nபராமரிப்பு தேவைப்படும் முன்னாள் நாடுகள் பற்றிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 மார்ச் 2018, 16:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-04-26T13:39:11Z", "digest": "sha1:PV4WLE7VNKC7HCEGR35H4HQ7JFAUJGF3", "length": 6097, "nlines": 103, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜூன் பிராகர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nசூன் 19, 2011 தரவுப்படி மூலம்: [1]\nஜூன் பிராகர் (June Bragger, பிறப்பு: சூன் 2 1929, இறப்பு: சூன் 27 1997), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் ஐந்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1963 -1966 ஆண்டுகளில், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nஇங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 07:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cinema.dinamalar.com/tamil_cinema_fullstory.php?id=946&ta=I", "date_download": "2018-04-26T13:35:17Z", "digest": "sha1:TMHMTR54CHIEYQOSFCXP2F2A54GFLFAI", "length": 22261, "nlines": 201, "source_domain": "cinema.dinamalar.com", "title": "டேவிட் - விமர்சனம் | Cinema Movie Review | Movie Reviews | Tamil movies| Tamil actor actress gallery |Tamil Cinema Video,Trailers,Reviews and Wallpapers.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »\nவிமர்சனம் பட காட்சிகள் (12) சினி விழா (2) செய்திகள்\nதினமலர் விமர்சனம் » டேவிட்\nவிக்ரம், ஜீவா இருவரும் முதன்முதலாக இணைந்து நடித்திருக்கும் \"டேவிட்\" திரைப்படமும் \"நீர்ப்பறவை\", \"கடல்\" படங்களைப்போன்று கிறிஸ்தவ பிரச்சார படமாகவே காட்சியளிக்கிறது. என்ன முன் இரண்டு படங்களும் கடற்கரையோர கிறிஸ்தவ கிராமத்து கதையை உள்ளடக்கி வெளிவந்தன. இது (டேவிட்) நகரத்து கிறிஸ்தவம் பேசும்படமாக வெளிவந்திருக்கிறது\n2010-ம் ஆண்டில் கோவா கடற்கரையில் சதா சர்வகாலமும் குடியும் கும்மாளமுமாக வாழும் டேவிட் எனும் மீனவர் விக்ரமின் காதல் கலாட்‌டாக்களும், 1999-ம் ஆண்டில் மும்பையில் கிறிஸ்தவ பாதிரியார் நாசரின் மகனாக கிடாரிஸ்ட்டாக டேவிட் ‌எனும் ஜீவா பண்ணும் சேட்டைகளும், படும்வேதனைகளும் தான் \"டேவிட்\" படம் மொத்தமும் அந்த டேவிட்டுக்கும், இந்த டேவிட்டுக்கும் க்ளைமாக்ஸில் ஏற்படும் ரிலேஷன்ஷிப் தான் டேவிட் படத்தின் டுவிஸ்ட், ஹைலைட், இத்யாதி, இத்யாதி... ‌என எண்ணிக்கொண்டு மொத்தப்படத்தையும் இயக்கி இருக்கிறார் படத்தின் திரைக்கதை ஆசிரியரும், இயக்குனருமான பிஜேய் நம்பியார். இருவேறு டேவிட்டுகளின் வாழ்க்கையை இருவேறு கோணத்திலிருந்தும் ஒரு நாவல் மாதிரி சொல்ல வேண்டிய இயக்குனர், பல இடங்களில் அதை நழுவலாக சொல்லி ரசிகர்களை போரடித்திருப்பது தான் \"டேவிட்\" படத்தின் பலவீனம்\nபடத்தின் ஒரு டேவிட் விக்ரம், என்னதான் கோவாவின் சீதோஷண நிலைக்கு மது சரிபட்டு வருமென்றாலும், விதவிதமான பாட்டில்களில் ரகம் ரகமான மது வகைகளை ராவா சாப்பிடுவது, அதுவும் உடம்பில் இண்டு இடுக்குகளில் எல்லாம் ஒளித்து வைத்து சாப்பிடுவது கொஞ்சம் அல்ல நிறையவே ஓவராகத் தெரிகிறது \"காசி, \"தெய்வத்திருமகள் உள்ளிட்ட படங்களின் கதைகளை ஓப்புக் கொண்டு நடித்த விக்ரமா இந்த டேவிட் கதையையும், அதுவும் நண்பனுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணை டாவடிக்கும் கேரக்டரை கேட்டு நடித்தார்... \"காசி, \"தெய்வத்திருமகள் உள்ளிட்ட படங்களின் கதைகளை ஓப்புக் கொண்டு நடித்த விக்ரமா இந்த டேவிட் கதையையும், அதுவும் நண்பனுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணை டாவடிக்கும் கேரக்டரை கேட்டு நடித்தார்... என கேட்கத் தோன்றுகிறது. முந்தைய படங்களை காட்டிலும் இளமையாகத் தெரியும் விக்ரம் ‌ஒரே ஆறுத‌ல்\nமற்றொரு டேவிட்டாக மும்பை இளைஞராக கையில் கிட்டாரும், தலையில் வித்தியாசமான சடை பின்னலுமாக வரும் ஜீவா, பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கிறார். பாதிரியார் அப்பா நாசருடன் மல்லுக்கு நிற்பதிலும் சரி, அவரை மதவாதி என மானபங்கபடுத்திய அரசியல் பிரமுகர்களுடன் மல்லுகட்டுவதிலும் சரி ஜீவா வித்தியாசமாக நடித்து படத்தின் விறுவிறுப்பை கூட்டியிருக்கிறார். தன் லட்சியங்கள், கனவுகள் முரட்டுதனம் எல்லாவற்றையும் காற்றில் பறக்கவிட்டு க்ளைமாக்ஸில் ஜீவா தன் அப்பா நாசர் மாதிரியே பாதிரியார் ஆகிவிடுவது செம ட்விஸ்ட், அதேநேரம் என்னதான் மும்பை இளைஞர் என்றாலும் ‌ஏர்ஹோஸ்டஸ் சிஸ்டருடன் சேர்ந்து திருட்டு தம் அடிப்பது, அந்த சிஸ்டரும், ஜீவாவுக்கு அக்காவா.. சொக்காவா... என்பது புரியாமல் தெரியாமல் ஒருவித போதை பர்ஸ்னாலிட்டியுடனேயே சுற்றி வருவது உள்ளிட்டவைகளை இயக்குனர் நினைத்திருந்தால் தவிர்த்திருக்கலாம்\nஜீவாவின் அப்பாவாக பாதிரியராக வரும் நாசர், விக்ரமின் நண்பர் பீட்டர், விக்ரமின் வித்தியாசமான தோழி தபு, விக்ரமின் ஒருதலைக்காதலி ரொமாவாக வரும் இஷா சர்வானி, பெண் அரசியல் தலைவராக வரும் ரோகிணி உள்ளிட்டவர்களும் விக்ரம், ஜீவா மாதிரியே படத்திற்காக பெரிதும் உழைத்திருக்கின்றனர். ஒன்றாகவே நடித்திருக்கின்றனர்.\nஅனிருத், பிரசாந்த் பிள்ளை, மார்டன் மாபியா, மாட்டி பென்னி, ரெமோ என அரை டஜன் இசையமைப்பாளர்கள் தனித்தனி ட்யூனில் இசையமைத்திருப்பது டேவிட் படத்தை ஏதோ துண்டு துண்டு விளம்பர படங்களை சேர்த்து பார்த்த திருப்தியையே தருகிறது. ரத்னவேலு, பி.எஸ்.வினோத் இருவரது ஒளிப்பதிவும் படத்தின் பெரும்பலம்.\nவிக்ரம், ஜீவா என இரண்டு பெரும் ஹீரோக்கள் கிடைத்தும், இயக்குநர் பிஜாய் நம்பியார் தரமான தமிழ்படம் எடுக்க முன்வராதது வருத்தம்\nஆகமொத்தத்தில், \"டேவிட்\" திரைப்படத்தை அந்த இருபெரும் நடிகர்களின் ரசிகர்களும் டூவிட்டு விடாமல் பார்த்தால் சரி \"டேவிட் - டவுட்\nதியேட்டரில் காது கொடுத்துக் கேட்டபோது:\nஇடைவேளைக்கு முன்: “மாப்ளே, இது ஹிந்தி டப்பிங் படம்டா. தெரியாம வந்து சிக்கிட்டோம்.’\nஇடைவெளியில்: “ஏதோ தனித்தனியா ரெண்டு கதையைச் சொல்றாங்க போலிருக்கு. பாலசந்தரோட “ஒரு வீடு இரு வாசல்’ மாதிரி’.\nஇடைவேளைக்கு பிறகு: “என்னதான் ஃபிரெண்டா இருந்தாலும் இந்த தபு இப்படியா விக்ரம் முன்னாடி குளிக்கும்\n“இப்ப வர எல்லாப் படமுமே ஏன் மதத்தை வச்சே வருது இதுல இந்துக்களை வன்முறை செய்யறவங்களா காட்டியிருக்கானுங்க.’\n செமையா இருக்கே. ஜீவா அதை முடிச்சுருவாங்கறே\n“பாட்டை விட லொக்கேஷனும் கேமராவும் நல்லா இருக்கு. இதுக்கு எதுக்கு 5 பேரு மியூஸிக் போட்டாங்க\nபடம் முடிந்த பிறகு: (யாரிடமோ ஃபோனில்) தனித்தனியா ரெண்டு கதை. ஒண்ணு குடிகார விக்ரமோட காதல் கருகிப் போற கதை. இன்னொண்ணு தன் அப்பாவை அவமானப்படுத்தினவங்களை ஜீவா அட்டாக் பண்ணக் கிளம்பற கதை. கடைசியில் ரெண்டு ஹீரோவும் ஒரு கல்யாணத்துல சந்திக்கிறாங்க. அவங்க ரெண்டு பேரோட பேரும் டேவிட். அவ்ளோதான். சிக்கிடாத.\n“மாப்ளே, டாஸ்மாக் பார் எங்க இருக்கு பார். போய் ஒரு ரவுண்டு போட்டே ஆவணும்\nகுமுதம் ரேட்டிங் : ஓகே\nயான் பெற்ற துன்பம் பெறுக இவ்வையகம், {எனக்கு மட்டும் தலைவலி வந்தால் போதும்மா, உங்கள் எல்லோருக்கும் தலைவலி வரவேண்டும் என்று ஆண்டவனை பிரார்த்திக்கின்றேன்}\nடேய் .. திருட்டு DVD ல படம் பார்கிறது தப்புன்னு கத்து கத்து நு கத்துறீங்களே ... இந்த படத்த அதுல கூட பார்க்க முடியாதுடா ... எனக்கு 50 ரூபா வேஸ்ட் அன்ன மொக்கயையனா சரியாய் சொன்னிங்கன்னா, முழுசா ஒரு ஆப் அடிச்சிட்டு கூட இந்த படாத பார்கவே முடியலன்னா,,,,,\nயான் பெற்ற துன்பம் பெறுக இவ்வையகம், {எனக்கு மட்டும் தலைவலி வந்தால் போதும்மா, உங்கள் எல்லோருக்கும் தலைவலி வரவேண்டும் என்று ஆண்டவனை பிரார்த்திக்கின்றேன்}\nபடம் நல்ல தான் இருக்கு ,, மொக்கைகளா\nவிக்ரம் உங்களது டேவிட் படம் பப்படம் ஆனந்துற்கு வாழ்த்துக்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்\nடேவிட் - பட காட்சிகள் ↓\nடேவிட் - சினி விழா ↓\nடேவிட் தொடர்புடைய செய்திகள் ↓\nபீவி நம்பர் 1 ரீ-மேக் : டேவிட் தவான் மறுப்பு\nபந்தா இல்லாத எளிமையான நடிகர் தனுஷ்\n“ராஜேஷ் பிள்ளை மரணத்துக்கு குளிர்பானம் காரணமில்லை” - நடிகர் ரோனி டேவிட்..\nபிரபல ராக் அன்ட் ரோல் ஜாம்பவான் டேவிட் போவி காலமானார்\nகிருமி படம் என்னை பேச வைக்கும்\n« சினிமா முதல் பக்கம்\n» விமர்சனம் முதல் பக்கம்\nஎதிரும் புதிருமான வேடங்களில் விக்ரம் - அக்சராஹாசன்\nமெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்\n'விக்ரம் வேதா' ரீமேக்கில் ஷாரூக் கான் \nவிக்ரம் பிறந்த நாளில் நலத்திட்ட உதவிகள்\nபாலிவுட்டை புகழ்ந்து வம்பில் சிக்கிய விக்ரம் வேதா நாயகி\nநடிப்பு - பிரபுதேவா, இந்துஜா, சனந்த், தீபக் பரமேஷ், சஷான்க் புருஷோத்தமன், அனிஷ் பத்மநாபன்இயக்கம் - கார்த்திக் சுப்பராஜ்இசை - சந்தோஷ் ...\nநடிகர்கள் : திலீப், சித்தார்த், பாபி சிம்ஹா, நமீதா பிரமோத், முரளிகோபி, சித்திக், விஜயராகவன், இந்திரன்ஸ், ஸ்வேதா மேனன் மற்றும் பலர்இசை : ...\nநடிகர்கள் : ஜெயராம், குஞ்சாக்கோ போபன், அனுஸ்ரீ, தர்மஜன் போல்காட்டி, சலீம்குமார், மணியம்பிள்ள ராஜூடைரக்சன் : ரமேஷ் பிஷரோடிமலையாளத்தில் ...\nசுவாதந்தர்யம் அர்த்த ராத்திரியில் (மலையாளம்)\nநடிகர்கள் : ஆண்டனி வர்கீஸ், செம்பான் வினோத், விநாயகன் மற்றும் பலர்ஒளிப்பதிவு : கிரீஷ் கங்காதரன்இசை : தீபக் அலெக்சாண்டர்டைரக்சன் : ...\nநடிகர்கள் : குஞ்சாக்கோ போபன், சாந்தி கிருஷ்ணா, அதிதி ரவி, சலீம் குமார், இன்னொசன்ட், அஜூ வர்கீஸ், சௌபின் சாஹிர், ரமேஷ் பிஷரோடி, தர்மஜன் போல்காட்டி, ...\nஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kadayanallur.org/archives/915", "date_download": "2018-04-26T13:13:00Z", "digest": "sha1:4OAIQ7PECTMGVPDDZSOG4TH47CHTRT36", "length": 10558, "nlines": 90, "source_domain": "kadayanallur.org", "title": "ஐகோர்ட்டில் தமிழ் : மு.க. அழகிரி உறுதி |", "raw_content": "\nஐகோர்ட்டில் தமிழ் : மு.க. அழகிரி உறுதி\nஐகோர்ட்டில் தமிழில் வாதாடுவது குறித்து மத்திய சட்ட அமைச்சர் வீரப்பமொய்லியிடம் பேசி 15 நாட்களில் முடிவு காணப்படும்,” என வக்கீல்களிடம் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி தெரிவித்தார்.\nஐகோர்ட்டில் தமிழில் வாதாட அனுமதி வழங்கக்கோரி, மதுரை ஐகோர்ட் கிளை முன் வக்கீல்கள் தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர். வக்கீல்கள் சங்கங்களின் பிரதிநிதிகள் வெள்ளைச் சாமி, ஏ.கே. ராமசாமி, சுபாஷ்பாபு, சாமிதுரை, மகேந்திரன், தியாகராஜன் உட்பட பலர் நேற்று அழகிரியை சந்தித்து மனு அளித்தனர். அமைச்சர் தங்கம் தென்னரசு, அரசு வக்கீல்கள் மோகன் குமார், குபேந்திரன் கலந்து கொண்டனர்.\nஅப்போது வக்கீல்களிடம் மு.க. அழகிரி பேசியதாவது: ஐகோர்ட்டில் தமிழில் வாதாடுவது குறித்து மத்திய அமைச்சர் வீரப்பமொய்லியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளது. தமிழில் வாதாடுவதில் உள்ள நடைமுறை விதிமுறைகள் குறித்து உள்துறை அமைச்சகத்தின் ஆய்வில் உள்ளது. தமிழில் வாதாடுவது குறித்து வீரப்ப மொய்லியிடம் பேசி 15 நாட்களில் முடிவு காணப்படும். எனது பேச்சை நம்பி உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும், என்றார்.\nஉண்ணாவிரதத்தை முடித்து வைக்கும்படி அழகிரியை வக்கீல்கள் அழைத்தனர். அவரும் ஒப்புக்கொண்டு ஐகோர்ட்டிற்கு புறப்பட்டார். அழகிரியுடன் நடத்திய பேச்சு வார்த்தை குறித்து, உண்ணாவிரதம் இருக்கும் வக்கீல்களிடம் தெரிவிக்கப்பட்டது. “தமிழில் வாதாடுவது குறித்து மொய்லி உறுதியளிக்க வேண்டும். 15 நாட்களில் முடிவு காணப்படும் என அழகிரி எழுதி கொடுக்க வேண்டும்,’ என அவர்கள் கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து அறிந்த அழகிரி, ஐகோர்ட்டிற்கு செல்லாமலே வீடு திரும்பினார். “” போராட்டம் குறித்து வக்கீல்கள் buy Ampicillin online சங்கங்களின் பிரதிநிதிகளுடன் பேசி முடிவெடுக்கப்படும்,” என வக்கீல் வெள்ளைச்சாமி நிருபர்களிடம் தெரிவித்தார்.\nதொகுதி மேம்பாட்டு நிதியை 100% செலவழித்த ஐந்தே தமிழக எம்பிக்கள்….\nசாப்ட்வேர் நிறுவன பெண் ஊழியர் கொலை\nவளைகுடா நாடுகளில் கடும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக…இந்தியர்கள், நாடு திரும்பும் நிலை\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில பொதுக்குழு தீர்மானங்கள்\nபிளஸ் 2 மாணவிக்கு 10 மதிப்பெண் குறைப்பு: கூட்டலில் கோட்டை விட்டது அம்பலம்\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகடையநல்லூரில் … வீடு வீடாக சென்று நெல்லை கலெக்டர் ஆய்வு\nபரவி வரும் டெங்கு காய்சல் …மரண பயத்தில் கடையநல்லூர் மக்கள்.\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kuppilan.yolasite.com/sokkavalavu-kumpabishekam.php", "date_download": "2018-04-26T13:27:09Z", "digest": "sha1:D74EHTADW4B3I6WV4MOV5LD6QZP2AB3U", "length": 5217, "nlines": 25, "source_domain": "kuppilan.yolasite.com", "title": "முகப்பு", "raw_content": "\nகுப்பிளான் சொக்கவளவு சோதி விநாயகப் பெருமான் ஆலய கும்பாபிஷேகத்தை முன்னிட்டு புலபெயர் வாழ் அன்பர்கள், அடியவர்கள் எல்லோருக்கும் ஆலய பரிபாலசபையினர் விடுக்கும் உருக்கமான வேண்டுகோள்\nஆலயங்களில் 12 ஆண்டுகளுக்கொருமுறை இடம்பெறும் கும்பாபிஷேகத்தை இந்த ஆண்டு குப்பிளான் சொக்கவளவு சோதி விநாயகர் ஆலயத்தில் நடத்த வேண்டிய கட்டாயத்தில் பரிபாலனசபையினரும், குப்பிளான் வாழ் மக்களும் இருக்கின்றனர்.\nஆனால் அங்கு கட்டிட திருப்பணி வேலைகள் நிதிப் பற்றாக்குறை காரணமாக பூர்த்தியாகாத நிலையில் உள்ளது. இதனால் ஆலய பரிபலனசபையினர் வெளிநாடுகளில் வாழும் குப்பிளான் வாழ் உறவுகளிடமிருந்து நிதியுதவியை எதிர்பார்த்து உள்ளனர்.\nஉதவி செய்ய விரும்புபவர்கள் நேரடியாக உங்களால் இயன்ற தொகையை ஆலய பரிபாலன சபையினரிடம் கொடுக்கலாம்.\nஆலய பரிபாலன சபையினரின் தொலைபேசி இலக்கங்கள்,\nதலைவர் - சீனித்தம்பி குணலிங்கம் 021- 4902449\nசெயலாளர் - சின்னத்தம்பி சொக்கலிங்கம் 021- 3006343\nபொருளாளர் - சின்னத்தம்பி ஆனந்தன் 077 - 5957859\nஇவர்களை நீங்கள் நேரடியாகத் தொடர்பு கொண்டு உங்களின் கிராம ஆலய வளர்ச்சிக்கு உதவி செய்யுமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.\nஉங்களின் உதவியை எதிர்பார்த்துள்ள ஆலய பரிபாலன சபையினர் எமது இணையத்தளத்துக்கு ஆலய பரிபாலன சபையினரின் கையெழுத்துக்களுடன் அனுப்பி வைத்துள்ள வேண்டுகோள் கடிதம் இணைக்கப்பட்டுள்ளது,\nஉதவி செய்ய விரும்புவோர் ஆலய பரிபாலனசபையினருடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு தங்களால் இயன்ற உதவிகளை வழங்குமாறும் கேட்டுக் கொள்கிறோம்,\nசொக்கவளவு சோதி விநாயகர் ஆலயத்தில் இடம்பெறவுள்ள கும்பாபிஷேகத்தை ஒட்டி திருப்பணி வேலைகள் இடம்பெறும் காட்சிகள்\nகுப்பிளான் சொக்கவளவு சோதி விநாயகர் ஆலயத்தில் வெகு விரைவில் இடம்பெறவுள்ள கும்பாபிஷேகத்தை ஒட்டி ஆலயத்தில் திருப்பணி வேலைகள் விரைவாக இடம்பெற்று வருகின்றன...\nதிருப்பணி வேலைகளை விரைவாக பூர்த்தி செய்வதற்கு தேவையான நிதி உதவிகளைத் தந்துதவுமாறு ஆலய பரிபாலன சபையினர் புலம்பெயர் குப்பிளான் வாழ் மக்களிடம் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kopunniavan.blogspot.com/2013_12_22_archive.html", "date_download": "2018-04-26T13:11:45Z", "digest": "sha1:S6HR7NXBFUO2ASTJBBK2ABJFFNRTBJOS", "length": 21664, "nlines": 206, "source_domain": "kopunniavan.blogspot.com", "title": "கோ.புண்ணியவான்: 12/22/13 - 12/29/13", "raw_content": "ஒவ்வொருமுறையும் நூல்கள் திறக்கப்படும்போது- நன்றிக் கடனாக அவை உங்களை அகலத் திறந்துவிடுகினறன. (ko.punniavan@gmail.com)\nமு.அன்புச்செல்வன் ஒரு அங்கதத் தொனிக்காரர்.\nதஞ்சைத் தமிழ்ப் பலகலைக்கழகத்தில் கட்டுரை சமர்ப்பித்தபோது\nஒரு படைப்பாளனின் மரணத்தை சாதாரணமாகக் கடந்து விட முடியவில்லை. ஏனெனில் அவன் அறிவு சார்ந்து இயங்குபவன். தனக்குள்ள சொற்களின் பலத்தால் தன்னை தகவமைத்துக்கொண்டவன் அவனை ஒரு தனிமனித இயக்கமாக மாற்றுவதும் அவன் சேகரித்து வைத்துள்ள சொற்கள் செய்த கைங்கர்யம்தான். அவனின் மரணம் அவன் கருத்துலகின் மரணம். படைப்பிலக்கியம் சார்ந்த புதிய கருத்துகள் அவனிடமிருந்து இனி வரப்போவதில்லை. அவனிடமிருந்து இனி புதிய சிறுகதைகள், கட்டுரைகள், என் எதுவுமே வர வாய்ப்பில்லை என்பதால் அவனின் விடைபெறல் சாதாரணமானது அல்ல.\nமு.அன்புச்செல்வன் நினைவுக்கு வரும்போதெல்லாம் அவரின் கிண்டல், அங்கதத்தொனி முன்னிற்கிறது. ஒரு படைப்பாளனின் படைப்பில் அங்கதம் ஒலிக்கிறதென்றால் அந்தப் படைப்பு வாசகனின் மனதில் நிலைத்துவிடுகிற சாத்தியாத்தைப் பெற்றுவிடுகிறது. புதுமைப் பித்தனை, நாஞ்சில் நாடனை, ஆதவன் தீட்சண்யாவை, அவர்களின் கேலி மொழி கொண்டே மனிதி நிற்கிறார்கள். அது ஒரு படைப்பு வித்தை. கதைகளில் கட்டுரைகளில் சினிமா கேள்வி பதில்களில், கதை விமர்சனங்களில் அன்புவுடைய அங்கத அடையாளம் ஊடுறுத்துக்கொண்டே இருக்கும். அவை வலிய திணித்தவையல்ல, சிந்தனை ஓட்டத்தின் குறுக்கே வந்து விழும் சொற்கள். நம்மோடு பேசுகையிலும் கூட ஒரு மெல்லிய நகைச்சுவையை ஊடாட விடுவார். அது துர்நோக்கம் அற்றதாயிருக்கும்.\nநான் இளமைக் காலத்தில் எழுத வருகிறேன். எனக்கு ஒரு நெருங்கிய எழுத்து நண்பராக அறிமுகமாகிறார் அமரர் கரு.வேலுச்சாமி. அவர் ஒரு சிறுகதை தொகுப்பு நூல் போட முனைந்தபோது மு.அன்புச்செல்வனின் சிறுகதை ஒன்றையும் சேர்த்துக்கொண்டார். சிறுகதை எழுதியவனிடம் அனுமதி பெறாமல் நூலாக்குவது சட்டத்துக்கு விரோதமானது என்று உணர்ந்தவர், “உங்கள் சிறுகதை நான் போடும் தொகுப்பு நூலில் சேர்த்திருக்கிறேன், உங்கள் அனுமதி வேண்டும்,” என்று கடிதம் எழுதுகிறார் அன்புச்செல்வனுக்கு. இரண்டு வாரம் முடிந்து அவரிடமிருந்து ஒரு பதில் கடிதம் அவருகிறது. கொஞ்சம் கடுமையாக,” என்னுடைய அனுமதியை முன்னாலேயே பெறாமல் என் கதையைத் தொகுப்பில் இணைப்பது எழுத்தாளனுக்குச் செய்யும் அநியாயமாகும்,” அந்தக் கடுங்குரல் என்னை அதிரவைத்தது. படைப்பாளனுக்கு எதிர்க்குரல் இருக்கவேண்டும். கருத்து உடன்படாமை அவனின் தேடலை அதிகரிக்கும். என் படைப்பு உங்கள் தொகுப்பில் இடம்பெறுவது எனக்குக் கிடைத்த மகா பெரிய கௌரவம் என்று தலைசொரிந்து நிற்பவன் எதிர்க்குரல் ஒலிக்கமாட்டான். அவன் எல்லாவற்றுக்கும் உடன்படும் முதுகெலும்பற்றவன். மு.அன்புச்செல்வனின் அந்த எதிர்க்குரல் தொடுக்கும் புல்லியிலிருந்தே எனக்கு அறிமுகமாகிறார்.\nஅந்தக் கதைதான் அவரின் படைப்புலகை எனக்கு அறிமுகம் செய்து வைக்கிறது. அக்கதையின் நடையும் கேலிக்குரலும் எனக்குப் புதிது. முழுக்க முழுக்க உள்நாட்டுக் கதைகளையே படித்திருந்தவன்,அன்புச்செல்வனின் கதையில் ஒரு பெரிய வேறுபாட்டை உணர முடிநதது. அவர் புனைவில் கதாபாத்திரமாக இருக்கும் நிஜ மனிதன் அக்கதையைப் படித்திருந்தால் நொந்து போயிருப்பான். அதன் அங்கத மொழி அவனை கூர் பார்த்திருக்கும்.\nவாசித்து கால் நூற்றாண்டு கழித்தும் அவரின் ஒரு சிறுகதை மனதில் நின்று வருடுகிறது என்றால் அக்கதை வெற்றிபெற்ற கதைதான். அதுவும் இன்னொரு சக படைப்பாளனை நினைவுறுத்திக்கொண்டே இருக்கிறதென்றால் அக்கதை காலத்தை வென்று நிற்கிறது என்றே பொருள்படும். அந்தக் கதையை இப்படி எழுதியிருப்பார். ஒரு குடும்பத்தலைவன் இறந்துவிடுகிறான். மனைவி குழந்தைகளை அனாதையாக விட்டு விட்டு. அவன் ஒருவன் சம்பாதித்தே அத்தனை வயிறும் நிறைய வேண்டும். நம்பி இருந்தவன் சடக்கென தன் வாழ்நாளை முறித்துக் கொண்டபோது குடும்பம் கதறுகிறது. அந்த எதிர்ப்பாரா மரணம் மனைவியை உலுக்கிவிடுகிறது. துக்கம் தாள முடியவில்லை. நினைத்து நினைத்து அழுகிறாள். நாள் பட நாள் பட மரணச்செய்தி பழையதாகி பழைய நிலைக்குத் திரும்பி விடுகிறது குடும்பம். ஆனால் ஒவ்வொரு நாளும் மாலை சூடப்பட்டு பொட்டு வைக்கப்பட்ட அவர் புகைப்படத்தைப் பார்க்குந்தோறும் இழப்பின் துக்கம் நீங்கியபாடில்லை. மெல்ல மெல்ல புருஷன் படமாகிப்போய் தொங்குவதும் பழகித்தான் போகிறது. துக்கம் மெல்ல நகர்ந்து தூராமாய்ப் போய்விடுகிறது. ஒருநாள் காலையில் அவர் படத்தை கும்பிடும்போது ஒரு சொல்லொணா கோபம் பீறிடுகிறது மனைவிக்கு.” என்ன மனுஷன் இவன்… இவனை நம்பியே ஒரு குடும்பம் இருக்கிறது என்று கூட உணராமல் ஒன்றுமே சேர்த்து வைக்காமல் இப்படி தத்தளிக்க வைத்துப் போய்விட்டாரே. இப்போது எவ்வளவு அவதிப்படவேண்டி இருக்கிறது” என்று சலித்துப் புலம்புகிறாள். கதை இந்தப் புல்லியில் முடிந்துவிடுகிறது. இறந்துபோனவன் கணவனாக இருந்ததால் எப்போதுமே கழிவிரக்கத்துக்கு ஆளானவன் என்ற சமூக அறத்தை உடைத்து நொறுக்குகிறது கதை. கணவனை இழந்தவள் குடும்ப பாரம் அழுத்தும் தருவாயில் இவ்வாறான சலிப்புக்கு ஆளாகாமல் இருக்க முடியாது. எல்லா விதவைகளுக்கும் உண்டாகும் மிக யதார்த்தமான உணர்வு இது. இறந்துவிட்டபோது கணவனின் கையாளாகாத்தனத்தை நினைத்து விம்முவது யாதார்த்த வாழ்வின் நிதர்சனம்தான். ஆனால் இதனை வெளியில் காட்டாமல் இருப்பதே பதி பக்தித் தன்மைக்குச் செய்யும் தார்மீகம். இது ஒரு அந்தரங்க உணர்வாக நிலைக்கச் செய்துவிட்டார்கள். இதனை மனைவி காதாபாத்திரத்தின் வழியாக உரக்க ஒலிக்கச் செய்ததே சமுகம் கட்டமைத்து பாதுகாத்த வந்த ஒழுங்கை உடைத்தெறிவதற்குத்தான். இந்த உணர்வை கதை வழியாக பெண்பாத்திரத்தை புலம்ப விடுவதையும் அதனை வாசகனிடம் மடைமாற்றம் செய்யும் திறனும் ஒரு ஆளுமையால் மட்டுமே ஆகக் கூடிய செயல்.\nஉள்நாட்டு இலக்கிய வளர்ச்சியில் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தவர் மு.அன்புச்செல்வன். அதனால்தான் பத்திரிகைகளில் இலக்கியப் பக்கப் பொறுப்பாளராக பணியாற்றிய காலத்தில் ஒவ்வொரு சிறுகதைக்கும் சிறிய கருத்தையாவது கட்டம்போட்டு எழுதிவிடுவார். இது படைப்பாளனுக்கு பலனளிக்கவேண்டுமல்லாது வேறு காரணத்தைக் கற்பிக்கமுடியாது. “நம்ம ஊர் கதைகளைப் பற்றி எழுதுங்கள் புண்ணியவான், என்னா பெரிய தமிழ்நாடு” என்று பலமுறை எனக்கு எதிர் நின்றார். மலேசியாவில் எழுதப்பட்ட சிறந்த கதைப் பட்டியல் அவரிடம் உண்டு. என் “குப்புச்சியும் கோழிகளும்” கதையைப் பற்றி சந்திக்குப் போதெல்லாம் சிலாகித்ததை மற்க்க முடியாது. மலேசிய நண்பனில் அவர் இலக்கிய பொறுப்பாசிரியரான பின்னர், உள்நாட்டில் பேசப்பட்ட கதைகளை மீள் பிரசுரம் செய்து வந்தததை இங்கே கட்டியங் கூறுகிறேன்.\nஎன்னால் எளிதில் மறக்க முடியாத சம்பவம் ஒன்று நடந்தது. மலாயாப் பல்கலைக் கழக பேரவைச் சிறுகதைப் போட்டியில் நானும் அவரும் பங்கெடுத்த ஆண்டுகளில் ஓராண்டு பரிசளிப்புக்கு அழைக்கப்பட்டு இருவருமே பக்கம் பக்கம் அமர்ந்திருக்கிறாம். ஆறுதல் பரிசிலிருந்து ஒவ்வொரு பரிசாய் அறிவிக்கிறார்கள். மு.அன்புச்செல்வந்தான் இம்முறையும் முதற்பரிசு பெறுவார் என்று எங்களுக்குள்ளேயே பேசிக் கொள்கிறோம். ஆனால் அவருக்கு இரண்டாம் பரிசு அறிவிக்கப் படுகிறது. பரிசுபெறுவோரில் என் பெயர் மட்டுமே அறிவிக்கப்படாமல் இருந்துபோது “ஓ இந்த முறை புண்ணியவானுக்கா’’ என்று சொல்லிக் கைகுலுக்கிவிட்ட பின்னரே பரிசு வாங்க மேடையேறுகிறார். ஒரு மதிப்புமிக்க ஆளுமை சக படைப்பாளியைப் பாராட்டுவது தமிழ்ப் படைப்பு வெளியில் அபூர்வமாகவே காணமுடியும்.\nயானை இறந்தாலும் ஆயிரம் பொன்.\nLabels: மு.அன்புச்செல்வன் ஒரு அங்கதத் தொனிக்காரர்\nமு.அன்புச்செல்வன் ஒரு அங்கதத் தொனிக்காரர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nilapennukku.blogspot.com/2013/01/kiss.html", "date_download": "2018-04-26T13:13:17Z", "digest": "sha1:GAA5OGPEQY4KNJNJ7WZV57DZ6WV7GA7N", "length": 10109, "nlines": 114, "source_domain": "nilapennukku.blogspot.com", "title": "ம்ம்ம்ம்ம்மா........... | நிலாப்பெண்ணுக்கு", "raw_content": "\nசெல்லம் எனக்கு இங்கே பீல் பண்றமாதிரி ஒரு முத்தம் வேணும்\n என் கன்னம் எல்லாம் நீ இல்லாம வறண்டுபோய் கிடக்குது, ப்ளீஸ் ஒன்னே ஒன்னு\nம்ம்மா.. ம்ம்மா.. ம்ம்மா.. ம்ம்மா..\nபோதாது, நான் கேட்டமாதிரி எனக்கு பீலிங் வர்ற மாதிரி கொடு\nஇதுக்கு மேல எப்படிக் கொடுக்கிறதுன்னே சத்தியமா தெரியல. சரி நீயே சொல்லு எப்படிக் கொடுக்கிறது\nஎப்படிக் கொடுக்கிறதுன்னு சொல்லிட்டா ஒரே முத்தத்துல முடிச்சிருவ, அப்புறம் இத்தனை முத்தம் கிடைக்குமா\nLABELS: காதல், காதல் மொழி, நகைச்சுவை\nஏ ஜோக்ஸ் கதைகள் தத்துவங்கள் 3\nஹைக்கூ - சின்ன சின்ன கவிதைகள்\nஅரிய புகைப்படங்கள் - திருக்குறள் ஓலைச்சுவடி, பழைய சென்னை, கோவை, திருச்சி, திரிகோணமலை, நெல்லை\nதத்துவங்கள் - ஜோக்ஸ், வாழ்க்கை, சிறை, வரலாறு\nஏ ஜோக்ஸ் – தத்துவங்கள்\nவருடத்தின் சிறந்த 10 பதிவுகள்\nஉன்னோட மூளை ஏன் பிரெஷ்ஸா இருக்கு தெரியுமா நீ உபயோகப்படுத்தாமலே வச்சிருந்தா அப்பிடிதேன் இருக்கும் நீ உபயோகப்படுத்தாமலே வச்சிருந்தா அப்பிடிதேன் இருக்கும்\nஏ ஜோக்ஸ் கதைகள் தத்துவங்கள் 3\nகல்யாணம் சொர்கத்தில் நிச்சயிக்கப்படுகிறதென்றால் முதலிரவு எங்கே நிச்சயிக்கபடுகிறது நான் நேரா அங்கே போயிடுறேன் நான் நேரா அங்கே போயிடுறேன்\nதத்துவங்கள் - ஜோக்ஸ், வாழ்க்கை, சிறை, வரலாறு\nஹிந்தி சினிமாகாரர்கள் எல்லா படங்களிலும் \"சோனியே\" \"சோனியே\" என்று பாட்டெழுதியே சோனியா காந்தியை பிரபலமாக்கிவிட்டனர். ...\nஏ ஜோக்ஸ் – தத்துவங்கள்\nஒரு பதின்மூன்று வயது பெண்ணின் T-SHIRT வாசகம் - “ IT’S GROWING ” எந்த ஒரு உடையும் ரசிக்கப்படுவதற்கும் ரசிக்கப்படாமல் போவதற்கு...\nஅவள் வரமாட்டாள் என்று தெரிந்தும் காதலை ஆண்கள் கழிவறைகளில் எழுதுவதுதான் மூடநம்பிக்கை பெண்கள் இல்லா உலகம் வேண்டும் - அங்கு என்னைத்தவிர ...\n A JOKES, நகைச்சுவை, கதை, தத்துவம், அனுபவம், தமிழ், கவிதை,சுற்றுலா, கார்டூன்\nநிலாப்பெண்ணுக்கு இணையதளம் ஆரம்பித்து ஓராண்டு நிறைவு பெறுவதை முன்னிட்டு இந்த வருடத்தின் சிறந்த பதிவுகள் சில\nஅரிய புகைப்படங்கள் - திருக்குறள் ஓலைச்சுவடி, பழைய சென்னை, கோவை, திருச்சி, திரிகோணமலை, நெல்லை\nஎன் சிறுவயது முதல் (இப்ப ரொம்ப பெரிய வயசுன்னு நினைப்பு) தேடிய புகைப்படம் – திருக்குறளின் ஓலைச்சுவடி. இன்னும் பல நகரங்களின் முந்தைய தோற...\nஹைக்கூ - சின்ன சின்ன கவிதைகள்\nஎனக்கும் அவளுக்கும் ஒரு ஒற்றுமை என் நண்பனைப் பிடித்துப்போனதுதான் வடக்கு தெற்கு ஈர்க்கும் காந்தப்புலம் அவள் கண்க...\nஉங்களிடம் உள்ள டிகிரியை வைத்துக்கொண்டு ஒரு ஃபில்டர் காபிகூட போட முடியாது பெண்களுக்குத் தேவை குடிக்காத நல்ல ஆண்கள் பெண்களுக்குத் தேவை குடிக்காத நல்ல ஆண்கள்\nவானம் ஆழமானது நீ நினைத்தால் வானம் ஆழமானது நீ உயர்ந்து நின்றால் வானம் ஆழமானது நீ உயர்ந்து நின்றால்\nவிஸ்வரூபம் – நல்லவேளை எனக்கு மதம்பிடிக்கவில்லை\nபொங்கல் – ஒரு உலகத் திருவிழா\n2012 டாப் 10 தமிழ் திரைப்படங்கள்\nLOVE JOKES - காமெடி வசனங்கள்\nEnglish PLUS18 WatchMovie அரசியல் அனுபவம் ஆன்மீகம் இணையதளம் இயற்கை இலங்கை இன்னா 40 ஈழம் உணவு உபயோகமானவை கட்டுரை கதை கவிதை காதல் காதல் மொழி கார்டூன் சினிமா சுட்டவை 40 சுற்றுலா செய்திகள் சைக்கோ ட்விட்டர் தத்துவம் தமிழ் தலையங்கம் தனிமை திரை விமர்சனம் துபாய் துறை தொழில்நுட்பம் நகைச்சுவை நிலா படைப்புகள் பாடல் புகைப்படங்கள் பேசி போராட்டம் மழலை மனதைத் திற வரலாறு விளையாட்டு வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://puthu.thinnai.com/?p=6190", "date_download": "2018-04-26T13:37:51Z", "digest": "sha1:QFUFOZN2R5W7MPGV7EJPMO6L4VTM3W7U", "length": 13106, "nlines": 146, "source_domain": "puthu.thinnai.com", "title": "கவிதைகள்: பயணக்குறிப்புகள் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nபோகவேண்டிய தூரம் அதிகம் என்ற தெளிவோடு.\nசிறுகற்கள் மலைமுகடுகளாய் வழியடைத்த நிலை மாறி\nகண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர்\nகைபோனபோக்கில் என் ஆறெங்கும் இறைத்துக்கொண்டிருக்கும் நீ\nஉன் உன்னும் என்னும் முன்னும் பின்னும்\nஎதிர்வினைக்கும் அறவுரைக்கும் இடையே நிறையும்\nஅகழி மறைத்துக் கவியும் காரிருள்.\nஎன் என்னும் உன்னும் இன்னும்\nஒரு காலாதீதத் தூக்கத்திலிருந்து விழித்துக்கொண்டு\nவழியெங்கும் ஆர்ப்பரித்துக் கொட்டி முழக்குகிறது\nஅறியாமை புரையோடிய அந்த வரி:\n”இருண்மை தமிழுக்குப் புதிதோ புதிது”\nசங்ககாலம் தொட்டு நவீன தமிழ்க்கவிதைவெளியெங்கும்\nவாயார வயிறுகுலுங்க கவிகள் சிரித்துக்கொண்டிருப்பதைப் பார்க்க\nகழுவேற்ற மேடை வெகு பரிச்சயமானவர்கள்;\nவிழுந்து விழுந்து சிரிக்காமல் என் செய்வார்கள்\nகுதிக்கிறார்கள் “ஹே, இது என்ன புதுக்கதை என்று\nஇருந்துவரும் கவிகளின் செவிப்பறைகளை அந்த உச்சபட்ச அபத்த வரி\nநிச்சயம் சீறத்தொடங்கும் சில எரிமலைகள்.\n‘சிறுமை கண்டு பொங்குவாய் வா வா வா\nசொன்ன பாரதியாரை வெறும் பிரச்சாரக்கவி\n‘கல்லுக்குள் தேரை கவனித்து’க் கொள்ளும்.\nசன்னமாய் என் காதுகளுக்குள்ளும் ரீங்கரிக்குமாறு\nசிலவற்றில் வெளியே அமர்விடங்கள் உண்டு.\nஇளைப்பாற வரும் வழிப்போக்கர்கள் பலவகை.\nஅடுத்தவருக்கு இடம் தராமல் தம்மை விரித்துப் பரப்பிக்கொள்ளும் சிலர்\n‘அதனாலென்ன பரவாயில்லை’ என்று தரையமரும் சகபயணியை\nசீடராக வரித்துக்கொண்டு சிட்சையளிக்கப் புறப்பட்டுவிடுவார்கள்.\n[பீடம் கிடைக்க வேறேது கதி\nஇதற்கு கால்வலியே மேல் என்று எழுந்துகொண்டுவிடுபவரை\nவழிமறித்து பிடித்திழுத்து செவிப்பறை கிழியக்கிழிய\nSeries Navigation பம்பரம்…கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கோடாரியில் தகர்ப்பாய் (கவிதை -52 பாகம் -1)\nமலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை – 1\nதமிழ் பெண் கவிஞர்கள் – ஆங்கிலத்தில் – ஆதி மந்தியார் முதல் உமா மஹேஸ்வரி வரை\nஅர்ஜண்ட் வெயிட் லாஸ்.. ஒரு யாத்ரா டிக்கட் ப்ளீஸ்..\nபழமொழிகள் கூறும் உதவி எனும் வாழ்க்கை நெறி\nஜென் ஒரு புரிதல் – பகுதி 19\nஇதுவும் அதுவும் உதுவும் – 5\nஇந்திய அணுமின்சக்தித் தொழில் நுட்பம் முதிர்ச்சி யானதா அணுவியல் இயக்குநர் முதிர்ச்சி பெற்றவரா \nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கோடாரியில் தகர்ப்பாய் (கவிதை -52 பாகம் -1)\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) திருமணப் பாதையில் (கவிதை – 50 பாகம் -5)\nபஞ்சதந்திரம் தொடர் 18 சமுத்திரமும் நீர்க்குருவியும்\nதமிழ் விக்கிப்பீடியா ஒரு ஊடகப் போட்டி\nதோள்களில் அமர்ந்திருக்கும் மரணத்தின் தூதுவன்\nமுகம்மது யூனுஸ் அறிஞர் அண்ணாவை ஹாங்காங்கில் சந்தித்தது பற்றிய உரை\nபிரான்சு கம்பன் கழகத்தின் 10 -ஆம் ஆண்டு விழா\nநானும் பிரபஞ்சனும் கட்டுரை குறித்து சில கருத்துகள்:\nமுன்னணியின் பின்னணிகள் – 14 சாமர்செட் மாம்\nமூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 16\nPrevious Topic: கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) திருமணப் பாதையில் (கவிதை – 50 பாகம் -5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamalar.com/News_Detail.asp?Id=612039", "date_download": "2018-04-26T13:28:26Z", "digest": "sha1:WBG46CNSCY6LTOZ7QZIRORF3TZGGHLNG", "length": 15725, "nlines": 222, "source_domain": "www.dinamalar.com", "title": "district news | மின்வெட்டை கண்டித்து நாசரேத்தில் திமுக.,வினர் கண்டன ஆர்ப்பாட்டம்| Dinamalar", "raw_content": "\nமின்வெட்டை கண்டித்து நாசரேத்தில் திமுக.,வினர் கண்டன ஆர்ப்பாட்டம்\nநாசரேத்:தமிழக அரசின் வரலாறு காணாத தொடர் மின்வெட்டை கண்டித்து திமுக.,வினரின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.\nஆழ்வை ஒன்றிய செயலாளர் பார்த்திபன் தலைமை வகித்து ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார். தென்திருப்பேரை பஞ்.,தலைவர் ராமஜெயம், ஆழ்வை வட்டார செயலாளர் வெயிலுமுத்து, ஆத்தூர் செயலாளர் சுந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாசரேத் டவுன் பஞ்.,தலைவர் ரவி செல்வக்குமார், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் பாலச்சந்திரன், மாவட்ட துணைச் செயலாளர் ஜோதிடேவிட், மாநில பேச்சாளர் கதீர்மீனாட்சி சுந்தரம் ஆகியோர் பேசினர். மாவட்ட பிரதிநிதி கலையரசு, முன்னாள் ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் முருகதுரை, ஒன்றிய அவைத் தலைவர் ஜாண் ஞானதாஸ், ஒன்றிய துணைச் செயலாளர் சிவசுப்பிரமணியம், ஒன்றிய பொருளாளர் பாதாளமுத்து, முன்னாள் பஞ்.,தலைவர் மாமல்லன், ஜமீன் சாலமோன், கவுன்சிலர்கள் ஜெயசிங், அன்பு, நகர இளைஞர் அணி அமைப்பாளர் பேரின்பராஜ், மாவட்ட பிரதிநிதிகள் பாலு, முத்துப்பாண்டி, ஜெரால்டு, சின்னத்துரை பாண்டியன், கிறிஸ்டோபர் ஒன்றிய துணை அமைப்பாளர் வடிவேல், முருகதுரை, காந்தி, கிருஷ்ணகுமார் மற்றும் பேரூர் ஒன்றிய கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பிரதிநிதி கலையரசு நன்றி கூறினார்.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nஎச்4 விசா விவகாரம்: பிரதமர் மீது ராகுல் தாக்கு ஏப்ரல் 26,2018 34\nஐகோர்ட் உத்தரவு: அமைச்சர்கள் கருத்து ஏப்ரல் 26,2018 2\nகுட்கா ஊழல்: ஐகோர்ட் உத்தரவுக்கு ஸ்டாலின் வரவேற்பு ஏப்ரல் 26,2018 5\nகர்நாடகாவை காங்., இழக்கும்: பிரதமர் மோடி ஏப்ரல் 26,2018 117\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthinappalakai.net/2017/05/19/news/23207", "date_download": "2018-04-26T13:23:12Z", "digest": "sha1:W344GYBOHPRMQCFYQ6J3VWD3H2TMWFZS", "length": 7481, "nlines": 99, "source_domain": "www.puthinappalakai.net", "title": "சிறிலங்காவுக்கு மீண்டும் கிடைத்தது ஜிஎஸ்பி பிளஸ் | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nசிறிலங்காவுக்கு மீண்டும் கிடைத்தது ஜிஎஸ்பி பிளஸ்\nஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை இன்று முதல் சிறிலங்காவுக்கு மீளக் கிடைத்துள்ளதாக, சிறிலங்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.\nசிறிலங்காவுக்கு ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை வழங்குவது தொடர்பான அறிவிப்பு நேற்று ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிகாரபூர்வ அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.\nஇதையடுத்தே, இன்று தொடக்கம் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை சிறிலங்கா அனுபவிக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nTagged with: ஜிஎஸ்பி பிளஸ், ஹர்ஷ டி சில்வா\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் தொடர்ந்து சரியும் சிறிலங்கா ரூபாவின் மதிப்பு – வெளிநாட்டு கடன்சுமை அதிகரிப்பு\nசெய்திகள் திருகோணமலையில் அமெரிக்காவின் பாரிய மிதக்கும் மருத்துவமனை\nசெய்திகள் தமிழ்தேசியம்: ‘தமிழ்நாட்டின் உரிமைகளை எப்போது மீட்க முடியும்\nசெய்திகள் “எமது கதைகளை நாங்கள்தான் கூற வேண்டும் “- ‘தமிழர் மூவர்’ விருது பெற்ற றீற்றா பரமலிங்கம்\nசெய்திகள் இளைஞர் மாநாட்டைக் கூட்டுகிறார் முதலமைச்சர் விக்னேஸ்வரன்\nகட்டுரைகள் இரா.சம்பந்தன் – ‘சேர் பொன். இராமநாதனின் மறுஉருவம்’ 0 Comments\nசெய்திகள் காணாமல் போனோர் பணியக உறுப்பினர்களை வேண்டா வெறுப்பாக நியமித்த சிறிலங்கா அதிபர் 0 Comments\nசெய்திகள் தொடர்ந்து சரியும் சிறிலங்கா ரூபாவின் மதிப்பு – வெளிநாட்டு கடன்சுமை அதிகரிப்பு 0 Comments\nசெய்திகள் திருகோணமலையில் அமெரிக்காவின் பாரிய மிதக்கும் மருத்துவமனை 0 Comments\nசெய்திகள் நல்லிணக்கச் செயல்முறைகள் குறித்து சிறிலங்காவுடன் கனடா பேச்சு 0 Comments\nNakkeeran on ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\nShan Nalliah on 10 நிபந்தனைகளின் அடிப்படையிலேயே ரணிலுக்கு ஆதரவு – செல்வம் அடைக்கலநாதன்\nShan Nalliah on கூட்டமைப்புடன் எந்த உடன்பாடும் கையெழுத்திடப்படவில்லை – மனோ கணேசன்\n‌மன‌ோ on 10 நிபந்தனைகளின் அடிப்படையிலேயே ரணிலுக்கு ஆதரவு – செல்வம் அடைக்கலநாதன்\nChenavi L on நம்பிக்கையில்லா பிரேரணை படுதோல்வி\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.techtamil.com/computer-tips-tricks-in-tamil/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA-recycle-bin-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2018-04-26T13:14:43Z", "digest": "sha1:XIPPLUGBBV5SIA562YWSSUQSOU2Y2HEO", "length": 10065, "nlines": 135, "source_domain": "www.techtamil.com", "title": "தேவைக்கு ஏற்ப Recycle Bin அளவினை மாற்ற – TechTamil News", "raw_content": "\nContact / அறிமுகம் / தொடர்புக்கு\nதேவைக்கு ஏற்ப Recycle Bin அளவினை மாற்ற\nதேவைக்கு ஏற்ப Recycle Bin அளவினை மாற்ற\nநமது கணினியில் உள்ள டிரைவின் அளவிற்கு ஏற்ப நாம் recycle bin-ஐ அமைத்துக் கொள்ளலாம்.\nஇதனை தெரிவு செய்ய recycle bin-ஐ right click செய்து Properties தெரிவு செய்து கொள்ளுங்கள். உங்களுக்கு open ஆகும் window-வில் Global தெரிவு செய்யவும்.\nஎல்லா டிரைவ்விற்கும் ஒரே அளவிளான recycle bin வைக்க வேண்டும் என்றால் Use one settings for all drives எதிரில் உள்ள ரேடியோ button தெரிவு செய்யுங்கள். உங்களுக்கு தேவையான டிரைவிற்கு ஏற்ப அளவினை தெரிவு செய்ய Configuare drives independently எதிரில் உள்ள ரேடியோ button தெரிவு செய்யுங்கள்.\nபின் open ஆகும் window-வில் உங்களது கணினியில் உள்ள டிரைவ்கள் இருக்கும். தேவையான டிரைவ்வை தெரிவு செய்து தேவையான அளவினை slider மூலம் நிர்ணயிக்கலாம்.\nஇறுதியாக Apply செய்து Ok கொடுக்கவும். நாம் பொதுவாக recycle bin அனைத்து டிரைவ்விற்கும் சேர்த்து ஒன்றாக இருக்கும் என நினைத்துக் கொண்டிருப்போம். ஆனால் அதிலும் ஒவ்வொரு டிரைவ்விற்கும் ஏற்ப அளவினை நாமே அமைத்துக் கொள்ளலாம்.\nMonitor பிரச்சனைகள் குறித்து சில வழிமுறைகள்...\nநீங்கள் கம்ப்யூட்டர் பயன்படுத்தும் போது நன்றாக இயங்கிய monitor-ல் எந்த சிக்னலும் வரவில்லை என்றால் கீழ்க்கண்டபடி அதனை ஆய்வு செய்யவும். ஆனால் அதில் எங...\nகணினியில் ஏற்படும் Beep ஒலிகளை நிறுத்துவத​ற்கு...\nகணினியின் வன்பொருட்களில் ஏற்படும் கோளாறுகளை எளிதில் கண்டுபிடிக்க முடியாது. எனினும் இக்கோளாறுகளை கணினியிலிருந்து ஏற்படுத்தப்படும் Beep ஒலிகள் மூலம் குற...\nகணினி நன்றாக இயங்க நாம் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பாதுகாப்பு குறித்த பல்வேறு தகவல்கள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டே இருக்கின்றன. ...\nமென்பொருட்​களை பயன்படுத்தா​மல் Administra​tor Pass...\nதனிநபர் கணினிகளிலுள்ள தகவல்களை மற்றவர்கள் பார்வையிடா வண்ணம் மறைப்பதற்கு கடவுச்சொல்லை பயன்படுத்துவோம். சில சந்தர்ப்பங்களில் கொடுக்கப்பட்ட கடவுச் சொல்...\nWindows 8ல் காணப்படும் Windows Store செயலிழக்கச் ச...\nMicrosoft நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள Windows 8 இயங்குதளத்தில் Windows Store எனும் வசதி புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. இவ்வசதியை தேவை ஏற்படி...\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nஉங்களுக்கு விருப்பமான BSNL நம்பரை online-ல் தேர்வு செய்யலாம்\n​பயர்பாக்ஸ் v55 பதிப்பால் 1691 டேப்களை 15 வினாடிகளில் ரீலோட் செய்யமுடியும்.\n500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது:பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு :\nமொபைல் வழியே இணைய தளத்தில் பார்க்கும் தகவல்களை pdf கோப்புகளாக மாற்றுவது எப்படி\nயூ -டியூப் உங்கள் மொபைல் டேட்டாவை மிச்சப்படுத்தும் புது வழியை காட்டுகிறது …\nகிரெடிட் கார்டோ டெபிட் கார்டோ இல்லாமலே வாகன சேவை:\nகூகுளின் DUO – VEDIO CALLING செயலி அறிமுகம்:\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nWindows 8ல் காணப்படும் Windows Store செயலிழக்கச் செய்ய…\nகணினியில் ஏற்படும் Beep ஒலிகளை நிறுத்துவத​ற்கு\nகணினியை வேகமாக இயங்க வைக்கும் Advanced SystemCare Pro…\nMonitor பிரச்சனைகள் குறித்து சில வழிமுறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vakeesam.com/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0.html", "date_download": "2018-04-26T13:26:14Z", "digest": "sha1:IIFDA43U5W34LBERKGST6FAJJ24SDBNV", "length": 9722, "nlines": 77, "source_domain": "www.vakeesam.com", "title": "தேர்தல் வாக்குறுதிகள் உரிய முறையில் நிறைவேற்றப்படும் – ஜனாதிபதி – Vakeesam", "raw_content": "\nஹட்டனில் நில அதிர்வு – 05 வீடுகள் சேதம்\nதந்தை செல்வா நினைவுதினம் அனுஷ்டிப்பு\nஜ.தே.க முக்கிய பதவிகளில் மாற்றம் – பொதுச் செயலாளராக அகில விராஜ் காரியவசம்\n203 பட்டதாரிகள் நேர்முகத் தேர்விற்குத் தோற்றவில்லை \nயாழ் போதனா வைத்தியசாலையில் கழிவு வாய்க்கால்மேல் கன்ரீன் – மக்கள் விசனம்\nதேர்தல் வாக்குறுதிகள் உரிய முறையில் நிறைவேற்றப்படும் – ஜனாதிபதி\nin செய்திகள், பிரதான செய்திகள் December 18, 2015\n2015 ஜனாதிபதி தேர்தலின்போது மக்களுக்கு வழங்கிய வாய்மொழிமூல மற்றும் எழுத்துமூல வாக்குறுதிகள் உரிய முறையில் நிறைவேற்றப்படும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.\nஅரசாங்கத்தின் தேர்தல் வாக்குறுதிகள் காற்றில் போய்விட்டன எனக் குறிப்பிட்டு அரசியல் மேடைகள், பாராளுமன்றம் மற்றும் ஊடகங்களில் பல்வேறு அறிக்கைகளை விட்டு அரசாங்கம் விழுகின்ற வரை நாட்களை எண்ணிக்கொண்டு இருப்பவர்களுக்கு தான் அரசியல் ரீதியாக அனுதாபப்படுவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.\nமின்சார சபை ஊழியர்கள் 2344 பேர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு நேற்று (17) முற்பகல் பத்தரமுல்லையில் உள்ள பி.எச்.புத்ததாச விளையாட்டரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.\n2014ஆம் ஆண்டு டிசம்பர் 17ஆம் திகதி மின்சார சபை ஊழியர்களினால் தங்களது தொழில்களை நிரந்தரமாக்குமாறு கேட்டு ஒரு பாரிய ஆர்ப்பாட்டம் நடாத்தப்பட்டது. ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் அன்றைய தினம் பொது அபேட்சகர் என்ற வகையில் அந்த இடத்திற்கு சென்று அவர்களுக்கு வழங்கிய தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் இந்த நிரந்தர நியமனம் வழங்கப்பட்டது.\nஅரசாங்கங்கள் ஆட்சிக்கு வருவதும் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதற்குமிடையே பல பிரச்சினைகள் அன்றிலிருந்து இருந்து வந்தபோதும், தமது அரசாங்கம் தேர்தல் பிரகடனத்தினூடாக மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நாட்டின் எதிர்காலத்திற்காக மிகத் தெளிவாக நிறைவேற்றுவதற்கு அர்ப்பணத்தோடு உள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.\nமக்களின் தனிப்பட்ட திருப்தியை ஏற்படுத்துவதற்கும் வாழ்க்கைச் செலவு பிரச்சினையை தீர்ப்பதற்கும் தொழில் மற்றும் சமூகப் பிரச்சினைகளுக்கு ஆரம்பத்திலேயே தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதற்கும் ஆரம்ப சில மாதங்களிலேயே எந்தவொரு அரசாங்கத்திற்கும் முடியாத காரியம் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, எதிர்வரும் வருடங்களில் அந்த பொறுப்புகளை முறையாக நிறைவேற்றுவதாகவும் குறிப்பிட்டார்.\nஅரசாங்கத்திற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இல்லாத நிலையில், அரசியல் யாப்பின் 19வது திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு முடிந்தமை உலகின் ஜனநாயக அரசாங்கம் ஒன்றின் வரலாற்று சாதனையாகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, நூறு நாள் வேலைத்திட்டத்தை வெற்றிபெறச் செய்வதற்கும் 19வது திருத்தத்தை நிறைவேற்றுவதற்கும் தேசிய அரசாங்க எண்ணக்கருவின் ஊடாக புதிய அரசாங்கத்திற்கு முடிந்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.\nஹட்டனில் நில அதிர்வு – 05 வீடுகள் சேதம்\nதந்தை செல்வா நினைவுதினம் அனுஷ்டிப்பு\nஜ.தே.க முக்கிய பதவிகளில் மாற்றம் – பொதுச் செயலாளராக அகில விராஜ் காரியவசம்\nஹட்டனில் நில அதிர்வு – 05 வீடுகள் சேதம்\nதந்தை செல்வா நினைவுதினம் அனுஷ்டிப்பு\nஜ.தே.க முக்கிய பதவிகளில் மாற்றம் – பொதுச் செயலாளராக அகில விராஜ் காரியவசம்\n203 பட்டதாரிகள் நேர்முகத் தேர்விற்குத் தோற்றவில்லை \nயாழ் போதனா வைத்தியசாலையில் கழிவு வாய்க்கால்மேல் கன்ரீன் – மக்கள் விசனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vanakkammalaysia.com/science/59-nature/8736-2017-04-02-05-48-35", "date_download": "2018-04-26T13:01:39Z", "digest": "sha1:NSEM62MWHZ4ZD5NTFOWSDJPYLOSFV76Y", "length": 14869, "nlines": 274, "source_domain": "www.vanakkammalaysia.com", "title": "பூமிக்கு விண்கல் விடுக்கும் அபாயம்!", "raw_content": "\nமலையாளப் பாடல் திறன் போட்டி: அனைவரும் பங்கேற்கலாம்\n1 எம்.டி.பி தலைமை நிர்வாக அதிகாரி அருள் கந்தா அரசியல் பிரவேசமா\nதேர்தல் அதிகாரிகள் பற்றிய போலித் தகவலை நம்பாதீர் \nகேவியசின் ராஜினாமா; தே.மு.விற்கு எவ்வித பாதிப்பும் இல்லை\nகடந்த தேர்தலை விட கூடுதலான வெற்றி: வாய்ப்பு பிரகாசம்\nவெளிநாட்டு வாக்காளர்கள்:வாக்குச் சீட்டுகளை எப்படி அனுப்புவீர்கள்\nரோஸ்மாவின் பிறந்தநாள் கேக்: அது போலிச் செய்தி\nகெந்திங் சாலையில் பேருந்து தீக்கிரை\nமஇகாவிலிருந்து காயத்ரி ரகுமூர்த்தி முற்றாக விலகல்\nமணமகன் பலி: திருமணப் பரிசாக வெடிகுண்டு பார்சல் அனுப்பிய கல்லூரி ஆசிரியர் கைது\nஐஸ்வர்யா ராய் ஓரங்கட்டப் படுவது ஏன்\nமழலைக் குரலில் ரசிகர்களை வசீகரித்த பாடகி எம்.எஸ். ராஜேஸ்வரி காலமானார்\nசிறுமி பலாத்காரம்: பிரபல சாமியார் ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் சிறை\nஇந்திய நாடாளுமன்றத்திலும் பாலியல் தொல்லையா\nஅக்சய் குமாரின் படப்பிடிப்பு தளத்தில் குண்டு வெடித்து கோரத் தீ விபத்து\nபாலியல் வழக்கில் பிரபல சாமியார் குற்றவாளி -இந்திய நீதிமன்றம் தீர்ப்பு தீர்ப்பு\nஎஸ் வி சேகருக்கு அடைக்கலம் தந்த கிரிஜா வைத்தியநாதன் மீது வழக்கு\nதமிழ் நடிகருக்கு 50 கோடி சம்பளமா\nபாலஸ்தீனர் ஸ்தாபாக்கில் சுட்டுக் கொலை: கொலையாளிகளின் படங்கள் வெளியீடு\nஅர்சனல் குழுவின் 22 ஆண்டு கால நிர்வாகி அர்செனி வெங்கர் விலகுகிறார்\n'இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி'யில் வடிவேலு நடிக்க மறுத்தது ஏன்\nகற்பழிப்புக்கு மரண தண்டனை ஒன்றே தீர்வு- வரலட்சுமி ஆவேசம்\nசினிமா வேலைநிறுத்தம்: சொந்த ஊரில் ஆடு மேய்க்கும் நடிகை\nகணவருடன் ரஷ்யாவில் குடியேறுகிறார் நடிகை ஸ்ரேயா\n விஜய் சேதுபதி மீது விஷாலின் நடவடிக்கை பாயுமா\nஏங்க, எத்தனை தடவை சொல்றது, 'மாட்டேன்., மாட்டேன். ' -சத்யராஜ் மகள் திவ்யா\nகமலுக்கு செம அதிர்ச்சி தந்த ஹாலிவுட் தயாரிப்பாளர் நோலன்\nபூமிக்கு விண்கல் விடுக்கும் அபாயம்\nPrevious Article மனித இனம் தோன்றியது எங்கே தெரியுமா\nNext Article உயிரினம் வாழத்தக்க புதிய \"பூமிகள்\" நாசா கண்டுபிடிப்பால் பரபரப்பு\nஹவாய், ஏப்ரல்.2- விண்கல் ஒன்று பூமியை வந்து கொண்டிருக்கிறது. இதனால் பூமிக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்பும் உண்டு என்று அமெரிக்கா விண்வெளி ஆய்வுக் கழகமான நாசா எச்சரித்து இருக்கிறது.\nஅமெரிக்காவின் ஹவாய் தீவில் அமைந்துள்ள ஹலீயகாலா எரிமலை பகுதியில் யான்-ஸ்பார்ஸ்-1 என்று சக்தி வாய்ந்த டெலிஸ்கோப் நிறுவப்பட்டிருக்கிறது. இந்த டெலிஸ்கோப் கடந்த மாதம் 25 ஆம் தேதியன்று பதிவு செய்த ஓர் ஆபூர்வப் புகைப்படம் நாசா விஞ்ஞானிகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.\nஅதில் பூமியை நோக்கி ஒரு விண்கல் பூமியை நோக்கி வருவதாக அந்தப்படத்தின் வழி கண்ட விஞ்ஞானிகள், அது குறித்து ஆய்வு நடத்தி உறுதிப்படுத்தினர்.\nஅது தற்போது பூமிக்கு அருகே 20 லட்சத்து 2 ஆயிரம் மைல் தொலைவை எட்டியிருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.\nஅது மட்டுமின்றி அந்த விண்கல்லினால் பூமிக்கோ அல்லது சந்திரனுக்கோ எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என உறுதிப்பட தெரிவிக்க முடியவில்லை. பூமியை தாக்கும் அபாயமும் உள்ளதாக நாசா விஞ்ஞானிகள் கருதுகின்றனர். மேலும் அந்த விண்கல் பூமியை நெருங்கும் போது டெலிஸ்கோப் இன்றியும் பார்க்கமுடியும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nPrevious Article மனித இனம் தோன்றியது எங்கே தெரியுமா\nNext Article உயிரினம் வாழத்தக்க புதிய \"பூமிகள்\" நாசா கண்டுபிடிப்பால் பரபரப்பு\nமலேசிய கோடீஸ்வரரை தரக் குறைவாக பேசுவதா அமைச்சர் நஸ்ரிக்கு மசீச கடும் கண்டனம்\nம.இ.காவுக்கு 7 எம்பி, தொகுதிகள் மட்டுமே கோத்தராஜா - கேமரன்மலை கைநழுவுகிறதா\n9 நாடாளுமன்ற வேட்பாளர்கள் யார் யார்\n6 எம்.பி. தொகுதிகளில் மஇகா போட்டி\nஇந்திய தொழிலதிபரான ''டத்தோஶ்ரீ'யுடன் புகைப்படம்: பதிலடி தந்தார் லிம் குவான்\nமலையாளப் பாடல் திறன் போட்டி: அனைவரும் பங்கேற்கலாம்\n1 எம்.டி.பி தலைமை நிர்வாக அதிகாரி அருள் கந்தா அரசியல் பிரவேசமா\nதேர்தல் அதிகாரிகள் பற்றிய போலித் தகவலை நம்பாதீர் \nகேவியசின் ராஜினாமா; தே.மு.விற்கு எவ்வித பாதிப்பும் இல்லை\nகடந்த தேர்தலை விட கூடுதலான வெற்றி: வாய்ப்பு பிரகாசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vivalanka.com/news/page.jsp?articleid=156972", "date_download": "2018-04-26T13:02:50Z", "digest": "sha1:V7VKO5ICAXIFFCWHWKKQPLWHVUIEFLAO", "length": 4015, "nlines": 116, "source_domain": "www.vivalanka.com", "title": "Man dies in Bunbury motorcycle crash", "raw_content": "\nVideo: News 1st:டயகம வெஸ்ட் மூன்றாம் பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் சித்திர தேர் பவணி\nVideo: News 1st:நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்\nVideo: News 1st:மண்டத்தீவு பகுதியில் முதலை ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது\nVideo: News 1st: குடிபோதையில் வந்த சிலரால் கட்டுகஸ்தொட்டை வைத்தியசாலை ஊழியர்களுக்கு அச்சுறுத்தல்\nVideo: News 1st: சித்ராகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் காயம்\nVideo: News 1st:எல்ல பகுதியில் விபத்து: 3 வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு\nVideo: News 1st:புத்தாண்டு காலப்பகுதியில் 95 மில்லியன் ரூபா வருமானம் – இலங்கை போக்குவரத்து சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} {"url": "http://cinema.dinamalar.com/entertainment-tamil-news/10295/tamil-cinema-latest-gossip/Cine-Gossips.htm", "date_download": "2018-04-26T13:34:12Z", "digest": "sha1:R5Y3N7LZW3RTH33LSD4XBUV6KMDVQQKK", "length": 10023, "nlines": 127, "source_domain": "cinema.dinamalar.com", "title": "திரைக்குள்ளும் அரசியல் - Cine Gossips", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nசீனாவில் ஐமேக்ஸில் பாகுபலி 2 | எம்.எஸ்.ராஜேஸ்வரியை மறந்த தமிழ்த் திரையுலகம் | 'அர்ஜுன் ரெட்டி' ஹிந்தி ரீமேக்கில் ஷாகித் கபூர் | மீண்டும் சமுத்திரகனி இயக்கத்தில் அமலாபால் - நானி | மோகன்லால் தவிர்க்கிறார் : தேசியவிருது இயக்குனர் வருத்தம் | மோகன்லாலின் ஒடியன் படப்பிடிப்பு நிறைவு | 6 ஆண்டுகள் கழித்து பாடிய மம்முட்டி | தமன்னா ஹிந்தி படம், மொத்தமாக ரீ-ஷூட் | மணிரத்னத்திடம் விஜய்சேதுபதி சொன்ன பழையகதை | பாலியல் குற்றச்சாட்டு - உஷா ஜாதவ் பரபரப்பு பேட்டி |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nகில்லி நடிகர் நடிக்கும் படத்துக்கு நீண்ட மூக்கு வில்லன் நடிகர்தான் முதலில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு அட்வான்சும் கொடுக்கப்பட்டிருந்ததாம். அந்த நடிகரின் மனைவி தயாரிப்பாளர் சங்கத்தில் கில்லி நடிகரின் தந்தைக்கு எதிர் அணியில் தீவிரமாக செயல்படுகிறவர். இதனால் ஆத்திரம் அடைந்த கில்லி நடிகரின் தந்தை விஜயமான இயக்குனருக்கு போன் போட்டு அந்த நடிகரை என் மகன் படத்திலிருந்து உடனே நீக்குங்கள். இல்லாவிட்டால் என் மகன் உங்கள் படத்தில் நடிக்க மாட்டேன் என்று சவுண்ட் விட பயந்து போன இயக்குனர் தந்தைகுலத்தை நேரில் சந்தித்து மன்னிப்பு கேட்டுவிட்டு. அடுத்த நிமிடமே வில்லன் நடிகருக்கு போன்போட்டு அவரிடமும் மன்னிப்பு கேட்டுவிட்டு விஷயத்தை கமுக்கமாக முடித்தாராம். அலட்டிக் கொள்ளாத வில்லன் நடிகர் \"யாரை வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளுங்கள். ஆனால் வாங்கிய அட்வான்சை திருப்பித் தரமாட்டேன்\" என்று சொல்லிவிட்டாராம். உடனே விருது பெற்ற அம்மா நடிகையின் பொன்னான கணவரை அந்த கேரக்டருக்கு ஒப்பந்தம் செய்து இப்போது அவர் நடித்துக் கொண்டிருக்கிறாராம். தயாரிப்பு சங்கத்து அரசியல் திரைக்கு வெளியே மட்டுமல்ல திரைக்கு உள்ளேயும் இருக்கிறதாம்.\nCine Gossips சினி வதந்தி\nதமன்னாவுக்கு எதிராக சதி செய்யும் ... மனைவிக்கு பிடிக்காததை செய்யும் ...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்\n'அர்ஜுன் ரெட்டி' ஹிந்தி ரீமேக்கில் ஷாகித் கபூர்\nதமன்னா ஹிந்தி படம், மொத்தமாக ரீ-ஷூட்\nபாலியல் குற்றச்சாட்டு - உஷா ஜாதவ் பரபரப்பு பேட்டி\nசஞ்சய் தத் ரிப்பீட்டு : ரன்பீருக்கு பாராட்டு\nமேக்கப் மேன் பிறந்தநாளுக்கு கார் பரிசளித்த ஜாக்குலின் பெர்னாண்டஸ்\nமேலும் சினி வதந்தி »\nகல்யாணம் வேண்டாம் அடம்பிடிக்கும் நடிகை.\nஒரு பட நடிகையின் அலம்பல்\nபடம் ஓடிச்சி... ஆனா ஓடலை...\n« சினி வதந்தி முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஒரு பட நடிகையின் அலம்பல்\nபடம் ஓடிச்சி... ஆனா ஓடலை...\nமானை வலையில் சிக்க வைத்த புயல்\nபாட்டு வாத்தியாருக்கு டிமிக்கி கொடுக்கும் நடிகை\nஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்\nநடிகர் : கெளதம் கார்த்திக்\nநடிகர் : விக்ரம் ,\nநடிகை : கீர்த்தி சுரேஷ்\nநடிகை : சாய் பல்லவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.south.news/tamilnadu-sambar-recipe-is-medicine/", "date_download": "2018-04-26T13:12:30Z", "digest": "sha1:IMRJLYYMWSKS43WAOT2V7NT6FW4HCCFR", "length": 9961, "nlines": 83, "source_domain": "tamil.south.news", "title": "சகல வியாதிகளுக்கும் அருமருந்து தமிழ்நாட்டு சாம்பார்!", "raw_content": "\nமருத்துவம் உணவுகள் சகல வியாதிகளுக்கும் அருமருந்து தமிழ்நாட்டு சாம்பார்\nசகல வியாதிகளுக்கும் அருமருந்து தமிழ்நாட்டு சாம்பார்\nவேறு மாநிலத்தினருக்கும், வெளிநாட்டினருக்கும் தமிழகம் என்றாலே இட்லி, வடை, சாம்பார், சட்னிதான் நினைவுக்கு வரும். பிரிட்டன் மகாராணி கூட தமிழகம் வந்தால் ஒரு முறையாவது சாம்பாரை சுவைக்காமல் நாடு திரும்பமாட்டார். சாம்பாரின் சுவைக்காகவே வட இந்தியர்கள் இட்லி வாங்கி சாப்பிடுவார்கள். குறிப்பாக மும்பை மற்றும் பெங்களூரில் சாம்பாருக்கு அதிக டிமாண்ட் இருக்கிறது. பி.எம்.டபுள்யூ. காரில் செல்பவர்களும் கூட சைக்கிளில் விற்கும் இட்லியை சாம்பார் ஆரத்தழுவ வாங்கி சாப்பிடுவார்கள். இது இல்லாத எந்த திருமணப் பந்தியையும், சுபநிகழ்ச்சி பந்திகளையும் பார்த்திருக்கவே முடியாது. இட்லியோ, அன்னமோ இரண்டில் எதுவானாலும் அதன் இணைக்கு வழங்கப்படும் பிரதான கூட்டே சாம்பார்தான்.\nதுவரம் பருப்பு, சின்ன வெங்காயம், தக்காளி, புளி கரைசல், காய்கறிகள், முக்கியமாக முருங்கை காய், பரங்கி, கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், மஞ்சள் தூள், நல்லெண்ணெய், வெல்லம், நெய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, மிளகாய்த் தூள் அல்லது பச்சை மிளகாய், கடலை பருப்பு, வற கொத்தமல்லி, மிளகு, வெந்தையம், தேங்காய் என இத்தனை பொருட்களும் ஒன்றிணைந்து உருவாக்குவதுதான் சாம்பார்.\nஇத்தனை பொருட்களில் இருந்து எல்லா வகையான சத்துக்கள் நமக்கு கிடைக்கின்றன. எனவேதான் சாம்பார் கலோரிகள் நிறைந்த ஒன்றாகவும் திகழ்கிறது. சராசரியாக ஒரு கப் சாம்பாரில் 308 கலோரிகள் அடங்கியுள்ளன. 265 கிராம் பொட்டாசியம், 9 கிராம் கொழுப்பு, 3 கிராம் நார்ச்சத்து, 3 கிராம் சர்க்கரை, 15 கிராம் புரோட்டீன், 14 மில்லி கிராம் சோடியம் மற்றும் அதனுடன் இரும்புச்சத்தும், விட்டமின் ‘சி’யும் அடங்கியுள்ளன. பச்சை பட்டாணியை சேர்த்தல் கூடுதலாக சத்துக்கள் கிடைக்கும். நார்ச்சத்து மிகுந்த முருங்கை, பரங்கி, பூசணி, முள்ளங்கி ஆகிய காய்கறிகளை போட்டால் அதிக நார்ச்சத்தும் கிடைக்கும்.\nஇப்படிப்பட்ட சத்தான சுவையான சாம்பார்தான் இந்தியர்களின் பெருங்குடல்களில் புற்றுநோயை ஏற்படுத்த விடாமல் தடுத்து, ஆயுளை நீடிக்கிறது என சமீபத்திய அமெரிக்க ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவில் Colon Cancer அதாவது பெருங்குடல் புற்றுநோயானது பொதுவாக காணப்படும் பிரச்சினையாக பார்க்கப்படுகிறது. அந்நோய் தாக்குவது இயல்பு என எண்ணும் அளவிற்கு அங்கே மக்கள் நோயுடன் கூடி வாழ பழகிக் கொண்டார்கள். இதே இந்தியாவில் இந்த பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்களின் எண்ணிக்கை குறைவிலும் வெகு சொற்பமே. காரணம் இந்தியர்கள் தங்களது அன்றாட உணவுகளில் சாம்பார் ஊற்றி சாப்பிடுவதுதான் என கூறுகிறது அமெரிக்க ஆய்வறிக்கைகள்.\nசென்னையில் 24 மணி நேரத்தில் இதையெல்லாம் செய்யலாம்\nஇப்படி உங்களுக்கும் உடல் பருமன் குறையணுமா\nஇது போன்ற ‘பாடி’ வேண்டுமா இந்த டயட்டை ஃபாளோ பண்ணுங்க\nசென்னையில் 24 மணி நேரத்தில் இதையெல்லாம் செய்யலாம்\nவேலூரில் 48 மணி நேரத்தை எப்படி செலவிடலாம்\nஓட ஓட தெறிக்கவிட்ட சி.எஸ்.கே’; 400 அடிச்சாலும் ஜெயிக்க மாட்டாங்களா ஆர்.சி.பி\nஜெட் வேகத்தில் ஆண்மை பெருக இந்த கீரையை சாப்பிடுங்க\nமினிமம் பேலன்ஸ் இல்லாத கணக்குகளில் இருந்து ரூ.1,772 கோடி அபராதம் வசூலித்த எஸ்.பி.ஐ. வங்கி\nஆதார் அமைப்பை கைது செய்யுங்கள்… சர்ச்சையை கிளப்பிய ‘விக்கி லீக்ஸ்’ எட்வர்ட்\nதமிழரின் ‘கள் பானம்’ குடிப்பதால் இவ்வளவு நன்மைகள் ஏற்படுகின்றதா\nமனிதனை ஞானியாக்கும் நெற்றிக்கண்னை திறக்க எளிய வழிமுறைகள்\nமீன் சாப்பிட்டால் புற்றுநோய் வராது: வாவ் போட வைக்கும் தகவல்கள்\nஜிகர்தண்டா மட்டுமில்லை மதுரையில இவ்வளவு ரெசிப்பிஸ் இருக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vakeesam.com/%E0%AE%9C-%E0%AE%A8%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3.html", "date_download": "2018-04-26T13:19:06Z", "digest": "sha1:ZS27RQ3IMVURUYCPESA76UZKVYRJB2M7", "length": 5545, "nlines": 73, "source_domain": "www.vakeesam.com", "title": "ஜ.நா மனித உரிமைகள் ஆணையாளர் ஜனாதிபதி மைத்திரியைச் சந்தித்தார் – Vakeesam", "raw_content": "\nஹட்டனில் நில அதிர்வு – 05 வீடுகள் சேதம்\nதந்தை செல்வா நினைவுதினம் அனுஷ்டிப்பு\nஜ.தே.க முக்கிய பதவிகளில் மாற்றம் – பொதுச் செயலாளராக அகில விராஜ் காரியவசம்\n203 பட்டதாரிகள் நேர்முகத் தேர்விற்குத் தோற்றவில்லை \nயாழ் போதனா வைத்தியசாலையில் கழிவு வாய்க்கால்மேல் கன்ரீன் – மக்கள் விசனம்\nஜ.நா மனித உரிமைகள் ஆணையாளர் ஜனாதிபதி மைத்திரியைச் சந்தித்தார்\nin செய்திகள், பிரதான செய்திகள் February 9, 2016\nஇலங்கைக்கு நான்கு நாட்கள் விஜயம் மேற்கொண்டுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்ன் தனது பயணத்தின் இறுதி நாளான இன்று (09) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளர்.\nஇன்று மதியம் நடைபெற்ற இச்சந்திப்பில் ஜ.நா தீர்மானம் தொடர்பில் இலங்கை மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள், காணாமல்போனோர் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.\nஜனாதிபதியை சந்திக்க முன்னதாக, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவையும் சந்தித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஹட்டனில் நில அதிர்வு – 05 வீடுகள் சேதம்\nதந்தை செல்வா நினைவுதினம் அனுஷ்டிப்பு\nஜ.தே.க முக்கிய பதவிகளில் மாற்றம் – பொதுச் செயலாளராக அகில விராஜ் காரியவசம்\nஹட்டனில் நில அதிர்வு – 05 வீடுகள் சேதம்\nதந்தை செல்வா நினைவுதினம் அனுஷ்டிப்பு\nஜ.தே.க முக்கிய பதவிகளில் மாற்றம் – பொதுச் செயலாளராக அகில விராஜ் காரியவசம்\n203 பட்டதாரிகள் நேர்முகத் தேர்விற்குத் தோற்றவில்லை \nயாழ் போதனா வைத்தியசாலையில் கழிவு வாய்க்கால்மேல் கன்ரீன் – மக்கள் விசனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://factorynotes.pressbooks.com/chapter/4-%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2018-04-26T13:13:38Z", "digest": "sha1:CRWRKUTAGPGW6NMSPCGZN547EH4AF7HP", "length": 26493, "nlines": 113, "source_domain": "factorynotes.pressbooks.com", "title": "4. து . மு – து . பி – ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்", "raw_content": "\nஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் .......\n3. 2 . என் கேள்விக்கு என்ன பதில் \n4. 3. பணமே பயம் போக்கும் மருந்து\n7. 6. என் பெயர் மாடசாமி\n8. 7. உழைத்து ( மட்டும் ) வாழ்ந்திடாதே \n9. 8. பலி கொடுத்து விடு \n10. 9. பாறைகளைப் பிளக்கும் விதைகள்\n11. 10. நேர்மையே உன் விலை என்ன \n12. 11. காற்றில் பறக்கும் கௌரவம்\n13. 12. கொள்ளையடிப்பது தனிக்கலை\n14. 13. வேலையைக் காதலி\n15. 14 வண்ணங்களே வாழ்க்கை\n16. 15 பணக்காரன் பேசுவதெல்லாம் தத்துவமே\n17. 16 எந்திர மனிதர்கள்\n18. 17. அவள் பெயர் ரம்யா\n19. 18 பொருளாதாரம் உருவாக்கும் அவதாரங்கள்\n20. 19. பெயர் மட்டுமல்ல உழைப்பிலும் ராஜா தான்\n21. 20 துணிவே துணை\nஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் ..\nஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் – ஒரு அலசல்\nஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்… ..\nஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் .......\nஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்… ..\nஇதுவரையிலும் வெளிவந்துள்ள என் மின் நூல்கள்\n4. து . மு – து . பி\nஎன் அறையை விட்டு வெளியே வந்தேன் . 25000 சதுர அடி கொண்ட பெரிய தொழிற்சாலையின் தொடக்கம் முதல் குறிப்பிட்ட பகுதி வரைக்கும் எந்திரங்கள் நேர்த்தியாக வரிசைக்கிரமமாக இருந்தன . பல எந்திரங்களில் தொழிலாளர்கள் (TAILORS) இல்லை . அங்கே பணிபுரிந்து கொண்டிருந்தவர்களிடத்தில் அதிக அளவு சுறுசுறுப்பு இல்லாமல் தைத்துக் கொண்டிருப்பதைப் பார்க்க முடிந்தது .\nதொழிற்சாலையின் உள்ளே பரவியிருந்த உஷ்ணக்காற்று என்னைத் தாக்கியது . எந்திரங்களின் சப்தமும் , தொழிலாளர்களின் உழைப்பையும் கவனித்தப்படியே ஒவ்வொரு பகுதியாக நகர்ந்து கொண்டிருந்தேன் . ஒவ்வொரு இடத்திலும் பெயர் பலகை மாட்டப்பட்டு இருந்தது .\nSTITCHING SECTION. CHECKING SECTION, FINAL CHECKING, AQL AREA, IRON SECTION, PACKING SECTION என்று தனியாக இருந்தது . மற்றொரு பகுதியில் LOT SECTION, CUTTING SECTION, STORE ROOM செயல்பட்டுக் கொண்டிருந்தன . SAMPLES SECTION மற்றொருபுறம் இருந்தது . அங்கிருந்த சிலர் என்னைச் சுட்டிக்காட்டி பேசிக் கொண்டிருந்தனர் .\nஅங்கே பணிபுரிந்து கொண்டிருந்த எவரும் என்னைக் கண்டு கொள்ளவில்லை .\nஒரு ஆய்த்த ஆடை உருவாக்கத்தில் தொடக்கம் முதல் இறுதி வரைக்கும் பலதரப்பட்ட துறைகள் சம்மந்தப்பட்டுள்ளன . ஒவ்வொரு துறையும் ஒரு உலகம் . ஒவ்வொரு உலகமும் ஒரு நாடு போன்றது . அந்த நாட்டிற்கு ஒரு மன்னர் , ஒரு மந்திரி , ஒரு சேனாதிபதி போன்ற படைபட்டாளங்கள் இருக்கும் . அந்தந்த துறையில் பணிபுரியும் பெண்கள் பல சமயம் மகுடம் சூட்டாத ராணியாகவும் சிலரோ அந்தப்புற இளவரசியாக இருப்பார்கள் . அவற்றை நாம் படிப்படியாகப் பார்க்கலாம் .\nஆய்த்த ஆடைத்துறையைப் பற்றி நீங்கள் முழுமையாகப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் இந்த இடத்தில் இத்துறையின் மொத்த அடிப்படை விசயங்களைப் பார்த்து விட வேண்டும் . அப்போது தான் ஒரு ஆடை உருவாக்கத்திற்குப் பின்னால் உள்ள ஏராளமான உழைப்பை நம்மால் புரிந்து கொள்ள முடியும் .\nவரலாற்றை விருப்பமாகப் படிப்பவர்களுக்குக் கி . மு . கி . பி என்ற வார்த்தை தெரிந்து இருக்கக்கூடியதே . இதைப் போல இத்துறையில் இரண்டு வார்த்தை முக்கியமானது . து . மு என்றால் துணிக்கு முன் . து . பி என்றால் துணிக்குப் பின் என்ற இரண்டு பிரிவுகளுக்குள் மொத்தத்தையும் நம்மால் கொண்டு வந்து விட முடியும் .\nஆய்த்த ஆடைகளை ஆங்கிலத்தில் கார்மெண்ட்ஸ் (GARMENTS) என்கிறார்கள் . திருப்பூர் என்றாலே பலரும் பனியன் கம்பெனி தானே என்று தான் சொல்கிறார்கள் . இங்குள்ள ஏற்றுமதி நிறுவனங்கள் குறித்தோ , அதன் செயல்பாடுகளைப் பற்றியோ , பெரும் பதவியில் இருந்து வெளிநாட்டில் பணிபுரிபவர்கள் போலப் பெருந்தொகையைச் சம்பளமாக வாங்கிக் கொண்டிருப்பவர்களைப் பற்றித் திருவாளர் பொதுஜனத்திற்குத் தெரிய வாய்பில்லை .\nஇந்தத் துறை சார்ந்த பலவற்றைப் பலராலும் புரிந்து கொள்ள முயற்சிப்பதில்லை . பனியன் , ஜட்டி என்பது தனியான உலகமது . இந்தத்துறை இந்தியா முழுக்க உள்ள உள்நாட்டுச் சந்தையை அடிப்படையாகக் கொண்டே செயல்பட்டு வருகின்றது . இந்த வியாபாரம் இந்திய ரூபாயில் நடக்கின்றது .\nஆனால் ஏற்றுமதித்துறை வெளிநாட்டு வர்த்தகத்தைச் சார்ந்தே இயங்குகின்றது . உலகில் உள்ள பலதரப்பட்ட கரன்சியில் பரிவர்த்தனைகள் நடந்து கொண்டிருந்த போதிலும் அமெரிக்காவின் டாலர் என்பதே இன்று வரையிலும் முக்கியமானதாக உள்ளது . இரண்டாவது இடத்தில் ஐரோப்பாவின் யூரோ உள்ளது .\nஇப்போது து . மு . து . பியைப் பற்றிச் சுருக்கமாகப் பார்த்து விடலாம் .\nதுணிக்கு முன் என்ற உலகத்தில் மூன்று வார்த்தைகள் முக்கியமானது . பஞ்சு , நூல் , துணி . பஞ்சு குறித்து நாம் தெரிய வேண்டுமென்றால் விவசாயத்தைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும் . தற்பொழுது இந்தியாவில் விவசாயம் என்பது தேவையற்ற ஒன்று என்று ஆட்சியாளர்கள் கருதுவதால் விளைவிக்கும் பஞ்சு பொதுச் சந்தைக்கு வருகின்றது . அதன் பிறகு அதன் பயணம் தொடங்குகின்றது என்பதோடு அந்தத் துறைக்கு முற்றும் என்பதோடு நிறுத்திக் கொள்வோம் . காரணம் தற்போதைய சூழ்நிலையில் இந்தியாவின் அடிப்படை ஆதாரமான விவசாயத்தினால் எந்தக் காலத்திலும் இந்தியா முன்னேற முடியாது என்று ஆட்சியாளர்கள் கருதுவதோடு இன்றைய சூழ்நிலையில் மக்களும் அதையே நம்பத் தொடங்கி விட்டனர் .\nபழைய சரித்திர குறிப்புகளைப் படிக்க வாய்ப்பிருந்தால் தேடிப்பிடித்துப் படித்துப் பாருங்கள் . இந்தியாவிற்கு ஒவ்வொரு காலகட்டத்திலும் வந்த யவனர்கள் , ரோமபுரி மக்கள் தொடங்கிக் கடைசியில் உள்ளே வந்து நம்மை அடிமைப்படுத்தி வைத்திருந்த ஆங்கிலேயர்கள் வரைக்கும் இங்கு வந்ததற்குக் காரணம் இங்குக் கொழித்துக் கொண்டிருந்த விவசாயத்தை வைத்துத்தான் . மிளகை வாங்கிக் கொண்டு பண்டமாற்றாகத் தங்கத்தைக் கொடுத்து விட்டுச் சென்றார்கள் என்பதை நீங்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும் .\nஆனால் இன்றோ பஞ்சு முதல் அத்தனை முக்கியமான பொருளையும் ஏற்றுமதி செய்து விட்டு பெட்ரோலை இறக்குமதி செய்ய முனைப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றோம் . நம் வாழ்க்கையும் , விலை வாசிகளும் பஞ்சு போலப் பறந்து கொண்டிருக்கின்றது .\nபஞ்சு நூலாக மாற நூற்பாலைக்கு (TEXTILE MILL) வருகின்றது . லட்சக்கணக்கான எளிய மக்களின் காமதேனு பசுவாக இந்தத் துறை உள்ளது .\nஇந்தியாவில் கடந்த பத்தாண்டுகளாக ஆட்சியில் இருந்து தற்பொழுது குப்பைக் கூடைக்குப் போய்ச் சேர்ந்து விட்ட காங்கிரஸ் அரசாங்கம் உருவாக்கிய கொள்கையின் காரணமாகத் தங்கம் போல மாதத்திற்கு மாதம் விலை உயர்ந்து எட்டாக் கனியாக மாறிவிட்டது . குறிப்பாக ஆன் லைன் வர்த்தகம் என்ற வார்த்தையின் மூலம் சூதாட்டம் போல இந்தத்துறை மாற்றப்பட்டுப் பஞ்சை விளைவித்த விவசாயிக்கு எதுவும் கிடைக்காத அளவுக்கு இடைத்தரகர்களின் ராஜ்ஜியமாக உள்ளது .\nஇந்தியாவில் தற்பொழுது இந்தத்துறை மிக நவீன தொழில்நுட்பத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது .\nஇந்த உலகம் இரண்டு விதமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது . ஒன்று , நூறு சதவிகிதம் ஏற்றுமதி மற்றொன்று உள்நாட்டு சந்தை . இந்தியாவில் பல மாநிலங்களில் பலதரப்பட்ட வசதிகள் கொண்ட நூற்பாலைகள் இருந்த போதிலும் தமிழ்நாட்டில் திண்டுக்கல் மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான நூற்பாலைகள் உள்ளன . அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து வரும் இதமான காற்று இந்தத் தொழிலுக்கு முக்கியமானது .\nஇந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் பஞ்சு மற்றும் நூல் தொழிலை மட்டுமே நம்பி வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் . விளைந்த பஞ்சை பதப்படுத்தி , ரகம் வரியாகப் பிரித்து , சுத்தம் செய்து நூலாக மாறும் வரையிலும் தனித்தனி உலகமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது . நூல் தான் திருப்பூரில் உள்ள ஏற்றுமதி தொழிலுக்கு ஆதாரம் .\nநூலில் பல ரகங்கள் உள்ளது .\nஇதனை எளிமையாகப் புரிந்து கொள்ள நீங்கள் இரண்டு காலத்தை யோசித்துப் பார்த்தாலே போதுமானது . கோடை காலம் . குளிர் காலம் . கோடை காலத்தில் நாம் போடும் உடைகள் குளிர் காலத்திற்கு உதவுமா இந்த இரண்டு காலத்திற்கும் பயன்படுத்தும் நூலின் தன்மையும் வெவ்வேறாக இருக்கும் என்பதை எப்போதும் மனதில் வைத்திருக்கவும் . அதே இந்த ஆடை உருவாக்கத்தில் ஒவ்வொரு நிலையிலும் செயல்படுத்தும் விதங்கள் எதிரெதிர் துருவமாக இருக்கும் .\nதிருப்பூருக்குள் உள்ளே வரும் நூல் ஆய்த்த ஆடைக்கான துணியாக மாற எத்தனை படிகளைக் கடக்க வேண்டும் YARN ( நூல் ), KNITTING ( துணி அறவு ), BLEACHING & DYEING ( சலவை மற்றும் சாயப்பட்டறை ) COMBACTING ( வண்ணமேற்றிய துணியை நாம் விரும்பும் அளவிற்கு வெட்ட மாற்றித்தரும் எந்திரம் .\nஇதற்குப்பிறகே துணியாக உருவம் பெறுகின்றது . நீங்கள் எளிதில் ஞாபகம் வைத்துக் கொள்ள நம்முடைய சட்டையை மடிப்புக் கலையாமல் தேய்த்துத் தருகின்றார்கள் அல்லவா அதைப்போல இந்த எந்திரங்கள் அந்தப் பணியைச் செய்து கொடுக்கின்றது ) கோடை கால ஆடைகளுக்கும் குளிர் கால ஆடைகளுக்கும் சம்மந்தம் இருக்காது .\nஇன்னும் எளிமையாக உங்களுக்குப் புரிய வேண்டுமென்றால் குளிர்காலத்திற்கு நாம் பயன்படுத்தும் ஸ்வெட்டர் ஆடையைக் கோடை காலத்தில் பயன்படுத்த முடியுமா \nஇனி எங்கிருந்து இந்தத் தொழில் தொடங்குகின்றது என்பதைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் அல்லவா \nஎனக்கு இந்த வடிவமைப்பில் , இது போன்ற பிரிண்ட் அடித்து இந்தந்த அளவுகளில் இத்தனை ஆயிரம் ஆடைகள் தேவை என்று ஒரு வெளிநாட்டுக்காரர் திருப்பூரில் இருக்கும் ஏற்றுமதியாளரிடம் கேட்கின்றார் என்று ஒரு வெளிநாட்டுக்காரர் திருப்பூரில் இருக்கும் ஏற்றுமதியாளரிடம் கேட்கின்றார் என்று வைத்துக் கொள்வோம் . அவர் உடனே அந்த வெளிநாட்டுக்காரர் மின் அஞ்சல் வாயிலாகக் கொடுத்த விபரங்களை ஒன்றன் பின் ஒன்றாகக் கவனமாகக் குறிப்பு எடுத்துக் கொள்வார் . வெளிநாட்டுக்காரர் ஆடையில் எதிர்பார்க்கும் பிரிண்ட்டிங் மற்றும் எம்பிராய்ட்ரி டிசைன் வேலைகள் சார்ந்து , அதற்கு ஆகும் செலவுகளைக் கணக்கில் எடுத்துக் கொண்டு , அந்த ஆடைக்கு உத்தேசமாக எந்த அளவுக்குத் துணி தேவைப்படும் என்று தனது கணக்கீடுகளைப் போட தொடங்குவார் . தொடர்ந்து தேவைப்படுகின்ற நூல் மற்றும் வண்ணமேற்றிய ஒரு கிலோ துணி உருவாக்க என்ன செலவு என்பதனையும் கணக்கில் எடுத்துக் கொள்வார் .\nதைத்து முடித்து அவர் கேட்கும் அலங்கார PACKING வசதிகளோடு மொத்த ஆடைகளையும் கப்பல் அல்லது விமானம் வழியே அவர்களுக்கு அனுப்பி வைக்க என்ன செலவாகும் என்பதோடு தன் லாபத்தைச் சேர்த்துக் கொள்வார் .\nமொத்தமாக இந்தத் துணியாக்கத்தில் மற்றும் உருவாக்கத்தில் (PROCESS LOSS & PCS. REJUCTION) எத்தனை சதவிகிதம் இழப்பு ஒவ்வொரு நிலையிலும் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதையும் இந்தக் கணக்கில் சேர்த்துக் கொள்வார் .\nஇறுதியாக ஒரு ஆடையின் விலை தெரிய வரும் .\nஇதற்குப்பிறகு தான் ஆலமரம் தேவைப்படாத பஞ்சாயத்து மேடை அறிமுகம் ஆகின்றது . அதாவது பேரம் தொடங்கும் . அந்தப்பக்கம் நீ சொல்லும் விலை எனக்குக் கட்டுபிடியாகாது . சீனாவில் இந்த விலைக்குக் கிடைக்கும் . சீனாவில் இந்த விலைக்குக் கிடைக்கும் வேறு நாட்டில் இதைவிடக் குறைவாகவே எனக்குக் கிடைக்கும் வேறு நாட்டில் இதைவிடக் குறைவாகவே எனக்குக் கிடைக்கும் என்று முறுக்குவார் . இல்லையில்லை நீ எதிர்பார்க்கும் விலையில் நான் கொடுத்தால் என் கம்பெனியை ஒரு வருடத்திற்குள் இழுத்து மூட வேண்டும் என்று முறுக்குவார் . இல்லையில்லை நீ எதிர்பார்க்கும் விலையில் நான் கொடுத்தால் என் கம்பெனியை ஒரு வருடத்திற்குள் இழுத்து மூட வேண்டும் என்று இவர் திமுறுவார் . மாட்டுச் சந்தை போலப் பேரம் நடக்கும் . கூச்சல் இல்லாமல் மின் அஞ்சல் வழியே தொடர்ச்சியாக அடிதடி நடந்து இறுதியாக இரண்டு கைகளிலும் துணியைப் போட்டுக் கொண்டு விரலைத் தொட்டு இறுதி விலை உறுதியாகும் .\nஒரு ஆய்த்த ஆடை உருவாக்கத்தின் முதல் உழைப்பு இங்கிருந்தே தொடங்குகின்றது .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://jmmedia.lk/2016/08/27/robotic-summit/", "date_download": "2018-04-26T13:39:07Z", "digest": "sha1:IP7IQJV5QLA5TEHGP4J4NYF3EC6A5JTW", "length": 6509, "nlines": 68, "source_domain": "jmmedia.lk", "title": "“Robotic Summit” பாடசாலை மாணவர்களுக்கான தன்னியக்கரோபோ உருவாக்கல் போட்டி – JM MEDIA.LK", "raw_content": "\nகடுகண்ணாவ கற்குகைக்கு தற்காலிகமாக பூட்டு\nஇறப்பர் தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்து தொடர்பில் தொழிற்சாலையின் முகாமையாளர் கைது\nவட கொரியாவுக்கு ரகசிய பயணம் : மைக் பாம்பேயோ\nபௌத்தகுருமாருக்கு வாக்குறுதி வழங்கிய பிரதமர்\n“Robotic Summit” பாடசாலை மாணவர்களுக்கான தன்னியக்கரோபோ உருவாக்கல் போட்டி\nSRILANKA ISLAMIC STUDENTS’ MOVEMENT ன் பாடசாலைப்பிரிவான Uplift Education Team Sri Lanka இனால் அகில இலங்கை ரீதியாக பாடசாலை மாணவர்களுக்கான தன்னியக்கரோபோ உருவாக்கல் போட்டி நடைபெற்றிருந்தது. இதற்காக இணையத்தளம் மற்றும் தபால் மூலமாக திறந்த விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன.\nஆகஸ்ட் மாதம் 13,14 ம் திகதிகளில் அக்குறணை அஸ்ஹர் பாடசாலையில் இடம் பெற்ற இப் போட்டியில் நாட்டின் பலபாகங்களிலும் இருந்து 20 பாடசாலைகள் பங்குபற்றியிருந்தன. ஒரு குழுவிற்குநால்வர் என்றடிப்படையில் இரண்டுநாட்கள் இடம் பெற்ற இப் போட்டியில்முதல் நாள் இயந்திரமொழிப் பயிற்சியும் Computer Programing இரண்டாம் நாள் ரோபோ உருவாக்கல் போட்டியும் இடம் பெற்றது.\nபோட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு தங்கம்,வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்கள், சான்றிதழ்கள் மற்றும் பங்கு கொண்ட எல்லா பாடசாலைகளுக்கும் ரூ 5000 பெறுமதியான ரோபோ உருவாக்கத் தேவையான பொருட்கள் அடங்கியபரிசுப் பொதியும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.\nஇந் நிகழ்வுக்கு அதிதிகளாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பாடசாலை அதிபர்கள், புத்தி ஜீவிகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.\nஇப் போட்டிக்கான வளவார்களாக uplift education இன் தன்னார்வத் தொண்டர்களான அரச,தனியார் பல்லைக்கழக மற்றும் உயர் தர மாணவர்கள் பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.\nபோட்டியில் வெற்றி பெற்ற பாடசாலைகள்,\nஇது போன்ற செயற்திட்டங்கள் முற்றிலும் இலவசமாக உங்கள் பாடசாலைகளிலும் நடாத்த விரும்பினால், அழையுங்கள் 0755595105/0766534031\n← உசைன் போல்ட் விளையாட்டில் மட்டுமல்ல நிஜத்திலும் ஹீரோ\n13 மற்றும் 14 வயதுடையவர்கள் பார்த்த வேலை – இலங்கையில் →\nமாவனல்லை ஜே.எம் மீடியா சமூக வேவை பிரிவின் இன்னுமொரு செயற்திட்டம்\nஇப்தார் நிகழ்வுகளை நேரடியாக ஒளி / ஒலிபரப்ப ஓர் சந்தர்ப்பம்.\nதாருல் ஹஸனாத் சிறுவர்களுக்கான இப்தார் நிகழ்ச்சியும், சாஹிராவின் பழைய மாணவர் ஒன்றுகூடலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AE", "date_download": "2018-04-26T13:28:02Z", "digest": "sha1:GYGSGJOOYR7WWMY6MPBXSYKBJD6S5PG4", "length": 4047, "nlines": 73, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "அசட்டுத்தனம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் அசட்டுத்தனம் யின் அர்த்தம்\nசூழலுக்கு ஏற்றபடி நடந்துகொள்ளத் தெரியாத (கேலிக்குள்ளாகும் வகையிலான) தன்மை.\n‘அசட்டுத்தனமாக அவன் என்னைப் பார்த்துச் சிரித்துக்கொண்டிருக்கிறான்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%A9", "date_download": "2018-04-26T13:23:11Z", "digest": "sha1:JRUEHCIXM2R74KEYGCTRVDV3LZQDY3KN", "length": 4491, "nlines": 78, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "ஒருத்தன் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் ஒருத்தன் யின் அர்த்தம்\n‘இந்தப் பெட்டியைத் தூக்க ஒருத்தன் வந்தால் போதாது’\nபேச்சு வழக்கு (முன்னிலையிலும் படர்க்கை ஒருமையிலும் ஒரு பிரதிப்பெயரோடு வரும்போது) கோபத்தில் அல்லது எரிச்சலில் ஒருவனைக் குறிப்பிடும் சொல்.\n‘இவன் ஒருத்தன், சும்மா வாயை மூடிக்கொண்டு இருக்க மாட்டான்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.penniyam.com/2012/02/blog-post_07.html", "date_download": "2018-04-26T13:16:42Z", "digest": "sha1:ZJKSCANWLYFMNXZZPD4Y7KYWRADFYWTO", "length": 9248, "nlines": 238, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: -இர.மணிமேகலையின் இரு கவிதைகள்", "raw_content": "\nதமிழ்க் கவிதை புதிய எல்லைகளில் பீறிட்டெழுகிறது என்பதற்கு இந்தக் கவிதைகள் சான்று கவிஞருக்கு வாழ்த்துக்கள்\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (18) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1751) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nதமிழ் பெண் கவிஞர்கள் – ஆங்கிலத்தில் – ஆதி மந்தியார...\nகலைமகள் ஹிதாயா றிஸ்வி அவர்களுடன் ஒரு நேர்காணல் ......\nமலையகம் பற்றிய இங்கிருந்து திரைப்படத்தை முடிப்பதற்...\nகூடங்குளம் அணு உலை – \"அழிவின் விளிம்பில் மக்கள்\" –...\nமுறுக்கேறும் உண்மைகள் - அகலிகை எதிர்கொள்ளும் உருக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://pookal.blogspot.com/2012/08/300-195.html", "date_download": "2018-04-26T13:30:55Z", "digest": "sha1:PNTDWSCWOSXGGOC3DS2LCXKVNCJQYKTN", "length": 11754, "nlines": 152, "source_domain": "pookal.blogspot.com", "title": "POOKAL: புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 195", "raw_content": "நான் ரசித்ததும்,படித்ததும், பார்த்ததும், பலவற்றில் இருந்து திரட்டப்பட்ட சிறு சிறு குறிப்புகளின் தொகுப்பு.உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஒரு சந்தர்ப்பம்.\nபுலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 195\nநிகழ்த்திவிட்டோம் நிலைசமய மறிந்து செப்பு\nகுற்றம் வந்து தீருமடா குழவிக்கேதான்\n புகழ்மிக்கதும் பெரியதுமான நீசபங்க ராஜயோகமானது ஒரு சாதகனுக்கு எவ்வாறு என்பதனை கிரகநிலை, சமயம் ஆகியவற்றை நன்கு ஆராய்ந்து அறிந்து கூறுவாயாக ஏனெனில் தீயகோள்கள் கண்ணுற்றாலும் அச்சாதகனுக்குக் குற்றமே வந்து சேரும் என்பது மிக உறுதியான உண்மையே என்று போகரது அருளாணையால் புலிப்பாணி கூறினேன்.\nஜோதிடம் மூலம ஆஸ்துமாவை எப்படி அறிய முடியும்\nசெவ்வாய் தோஷம் பரிகாரம் செய்யதகுந்த காலம் எது\nசெவ்வாய் எந்த இடத்தில் இருந்தால் என்னன்ன பிரச்சனைக...\nசெவ்வாய் கிரகத்தினால் ஏற்படும் பிரச்சனைகள் யாவை\nசெவ்வாய் தோஷம் ஏற்படக் காரணம் என்ன\nசெவ்வாய் தோஷம் என்றால் என்ன\nதொல்லை தரும் 8ம் மிடம்\nஜாதகப்படி எந்த எந்த முறைகளில் எல்லாம் பணம் வரும்\nதிருமணம் வாழ்க்கை நரகமாக காரணம் என்ன\nஜாதகப்படி ஆண்மை இல்லாத மணமகன்\nசொந்த வீடு யோகம் யாருக்குண்டு\nமின்சார அறை, உபரணங்கள் அமைக்கும் இடங்கள்\nகற்பில்லா பெண்ணின் ஜாதகம் எப்படி கண்டறியலாம்\nதெரு குத்தில் வீடு அமைவது நல்லதா கெடுதலா\nநவரத்தினங்களில் கனக புஷ்ப ராகம்\nகுற்றங்களைத் தூண்டும் ஜாதக அமைப்புகள்\nநவகிரகங்களின் தசா புக்திக்குரிய நவரத்தினங்கள்\nபெண்ணின் குடும்பச்சூழல், பொருளாதார நிலை, பேச்சாற்ற...\nபெண்ணின் சுகவாழ்வு, சொகுசு வாழ்வு, கற்பு, அசையும்,...\nமாங்கல்ய பாக்கியம், கணவன் வழி உறவுகள்\nபெண்களின் மண வாழ்க்கை, கூட்டுத் தொழில்\nகுழந்தையை முழு உருவமாக பெற்றெடுக்கும் தாய்மை\nகாதல் திருமணம், கலப்புத் திருமணம்\nபொறியியல் நிபுணராக ஜோதிட நெறிகள்\nதிருமண பொருத்தம் - பாகம் -1\nதிருமண பொருத்தம் பாகம் -2\nதிருமண பொருத்தம் - பாகம் 3\nதிருமண பொருத்தம் பாகம் -4\nதிருமண பொருத்தம் - பாகம் 5\nதிருமண பொருத்தம் - பாகம் 6\nஉபத்திரம் உண்டாக்கும் களத்திர தோஷம்\nதட்டுப்பாடற்ற தன வரவு யாருக்கு\nசுய முயற்சியால் யாரெல்லாம் சாதனை செய்ய முடியும்\nசனி பகவான் கொடுப்பாரா கெடுப்பாரா\nசூரிய திசையால் ஏற்படும் பயன்கள்\nகுரு 12 ராசியில் எந்த ராசியில் இருந்தால் என்ன பலன்...\nசுக்கிரன் 12 பாவங்களில் ஏற்படுத்தும் பலன்கள்\nசந்திர திசை 12 பாவங்களின் பலன்கள்\nசாதகம் செய்யுமா சனி சஞ்சாரம்\nவாழ்க்கைத் துணை அமைவது - கவர்ச்சியாகவா\nசூரிய திசை என்ன செய்யும்\nநினைத்ததை முடிக்கும் 3ம் எண் காரர்கள்\nஜாதக ரீதியாக வாரிசு யோகம்\nநன்மை செய்யும் நான்காம் எண்\nநட்சத்திரப்படி எந்தெந்த வயதில் என்னென்ன நோய்\nமீன ராசியும் வாழ்க்கை அமைப்பும்\nகும்ப ராசியும் வாழ்க்கை அமைப்பும்\nமகர ராசியும் வாழ்க்கை அமைப்பும்\nதனுசு ராசியும் வாழ்க்கை அமைப்பும்\nவிருச்சிக ராசியும் வாழ்க்கை அமைப்பும்\nதுலா ராசியும் வாழ்க்கை அமைப்பும்\nகன்னி ராசியும் வாழ்க்கை அமைப்பும்\nகடக ராசியும் வாழ்க்கை அமைப்பும்\nமிதுன ராசியும் வாழ்க்கை அமைப்பும்\nரிஷப ராசியும் வாழ்க்கை அமைப்பும்\nமேஷ ராசியும் வாழ்க்கை அமைப்பும்\nவக்ர கிரகம் வாழ்வு தருமா\nகிரகச் சேர்க்கையால் சர்ப்ப கிரகங்கள் சீறுமா\nசனி உச்சம் அடைந்த ஜாதகங்களின் சிறப்பு\nகுரு உச்சம் அடைந்த ஜாதகங்களின் சிறப்பு\nசெவ்வாய் தோஷம் என்றால் என்ன மற்றும் பரிஹாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sivantv.com/videogallery/harekrishna-02092010/", "date_download": "2018-04-26T13:43:55Z", "digest": "sha1:FJACRYOFXWBURS7OSJTQ7PKM2F77YOOS", "length": 6786, "nlines": 143, "source_domain": "sivantv.com", "title": "harekrishna 02092010 | Sivan TV", "raw_content": "\nபுங்குடுதீவு கிழக்கு கண்ணகைபுரம் ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்பாள் திருக்கோவில் வருடார்ந்த மகோற்சவம்\nஓல்ரன் ஸ்ரீ மனோன்மணி அம்மன் கோவி�..\nயேர்மனி சுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்க..\nபேர்ன் ஸ்ரீ கல்யாணசுப்பிரமணியர் ..\nஓல்ரன் மனோன்மணி அம்மன் திருக்கோவ..\nஜெர்மனி - கெமஸ்பாக் ஸ்ரீ குறிஞ்சி�..\nஜெர்மனி - வூப்பெற்றால் ஸ்ரீ நவதுர�..\nஜெர்மனி - ஹம் ஸ்ரீ காமாட்சி அம்பாள..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் வர�..\nசுவிஸ் – நலவாழ்வு அமைப்பின் மருந�..\nசுவிஸ் - நலவாழ்வு அமைப்பின் மருந்�..\nபேர்ன் – ஞானலிங்கேசுரர் திருக்கோ..\nபேர்ன் – ஞானலிங்கேசுரர் திருக்கோ..\nபேர்ன் – ஞானலிங்கேசுரர் திருக்கோ..\nபேர்ன் - ஞானலிங்கேசுரர் திருக்கோ�..\nசூரிச் ஹரே கிருஷ்ண ஆலய கிருஷ்ண ஜெ�..\nபேர்ண் - ஞானலிங்கேசுரர் திருக்கோ�..\nசுவெற்ரா கனகதுர்க்கா அம்பாள் ஆலய..\nசுவிற்சர்லாந்து - ஓல்ரன் அருள்மி�..\nகூர்-நவசக்தி விநாயகர் ஆலய தேர்த்�..\nதூண்- ஸ்ரீ சீரடிசாயிபாபா மன்றத்த�..\nதூண்- ஸ்ரீ சீரடிசாயிபாபா மன்றத்த�..\nமர்த்தினி - வலே ஞானலிங்கேச்சுரர் �..\nபேர்ண் - ஞானலிங்கேசுரர் திருக்கோ�..\nபேர்ண் - ஞானலிங்கேசுரர் திருக்கோ�..\nபேர்ண் - ஞானலிங்கேசுரர் திருக்கோ�..\nபேர்ண் – ஞானலிங்கேசுரர் திருக்கோ..\nகனடா- மிசிசாகா ஜெயதுர்க்கா தேவஸ்�..\nபேர்ண் - ஞானலிங்கேசுரர் திருக்கோ�..\nபேர்ண் - ஞானலிங்கேசுரர் திருக்கோ�..\nசுவிஸ் - கூர் நவசக்தி விநாயகர் கோவ..\nயாழ் இந்து பாலர்களின் காத்தவராயன..\nபுங்குடுதீவு - கிழக்கு - கண்ணகைப�..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.sahabudeen.com/2015/02/blog-post.html", "date_download": "2018-04-26T13:00:42Z", "digest": "sha1:LQOTKJDCQFEXJ2FK63IVI4PJ5GDJK4BP", "length": 19425, "nlines": 210, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: மருதாணியை நாம் எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nமருதாணியை நாம் எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்\nஇயற்கை நமக்கு கொடுத்த அற்புதமான கொடையில் மருதாணியும் ஒன்று. என்னற்ற பயன்கள் ஒவ்வொரு செடிக்கும் ஒரு பயன் உள்ளது அதில் மருதாணி மிக முக்கியமானது ஆகும்.\nமருதாணி இலையை வெறும் அழகுக்காக பெண்கள் கைககளில்வைக்கிறார்கள் என்று கருதினால் அது மிகப்பெரிய தவறாகும்.மருதாணி இலையை கைகளில் வைப்பதால் பல்வேறு பயன்களை பெண்கள் பெறுகிறார்கள்.\nஇன்று பெண்கள் கைகளுக்கு பல கெமிக்கல்கள் கலந்த சாயத்தை பூசுகின்றனர் அதனால் உடல் நலத்திற்கு கேடு தான். 10ஆண்டுகளுக்கு முன்பு அதிகம் பெண்கள் கைகளில் பூசுவது மருதாணியாகத்தான் இருக்கம் இன்றும் பூசுகின்றனர் ஆனால் கெமிக்கல் தடவப்பட்டதைத்தான் அதிகம் பூசுகின்றனர்.\nமருதாணி இலையை அரைத்து கைககளுக்கு வைத்து வர, உடல்வெப்பம் தணியும்.\nசிலருக்கு மருதாணி இட்டுக் கொண்டால் சளி பிடித்து விடும்.இதற்கு மருதாணி இலைகளை அரைக்கும் போது கூடவே 7அல்லது 8 நொச்சி இலைகளை சேர்த்து அரைத்து வைத்துக்கொள்ளலாம்.\nமருதாணி இட்டுக் கொள்வதால் நகங்களுக்கு எந்த நோயும்வராமல் பாதுகாக்கலாம். ஆனால் இந்த பயன்கள் எல்லாம் தற்போது கடைகளில் கிடைக்கும் மருதாணி கோன்களில் கிடைக்கவாய்ப்பே இல்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்\nசிலருக்கு கழுத்திலும், முகத்திலும் கருந்தேமல் காணப்படும்.இதற்கு நல்ல கை மருத்துவம் உள்ளது.\nமருதாணி இலையுடன் சிறிது குளியல் சோப்பைச் சேர்த்துஅரைத்து பூசி வர விரைவில் கருந்தேமல் மறையும்.\nமருதாணி இலை கிருமி நாசினி, கண்ணுக்குப் புலப்படாத கிருமிகளை அழிக்க வல்லது. நகசுத்தி வராமல் தடுக்கும்.புண்ணை ஆற்றவும் நல்ல மருந்து. கை, கால், விரல் நகங்களுக்கு அரைத்துப் பூசி அழகூட்டுவார்கள்.\nதோல் பற்றிய அரிப்பு, படை ஆகிய நோய்களுக்கு, இந்த இலையை அரிசிச் சோற்றுடன் இரவு ஊறப் போட்டக் காலை வெறும் வயிற்றில் நீராகாரமாகச் சாப்பிட வேண்டும். உப்பில்லாத பத்தியம் இருத்தல் வேண்டும். 10 – 15 நாள் சாப்பிட வேண்டும்.\nஆறாத வாய்ப் புண், அம்மைப் புண் ஆகியவற்றிற்கு இதன் இலையை அரைத்து நீரில் கரைத்து வடித்து வாய் கொப்பளிக்கலாம். அரைத்து அம்மைப் புண்களுக்குப் பூசலாம். 3-5 நாளில் குணமாகும். கட்டிகளுக்கும் அரைத்துப்பற்றிடலாம்.\nஇதன் தைலம் முடி வளர்க்கும் இள நரையை அகற்றும்.இரும்பு வாணலியில் தேங்காய் நெய் 500 மி.லி. விட்டு இதன் இலை 100 கிராம் போட்டு பொரித்து எடுக்கவும். இலையின் சாறு எண்ணெயில் சேர்த்து சிவப்பாக மாறிவிடும். நறுமணத்திறுகாக 10 கிராம் சந்தனத் தூள் போடலாம். அரைத்துப் போட்டுக் காய்ச்சலாம். இந்த தைலத்தை நாளும் தலைக்குத் தேய்க்க முடி வளரும் நரைமாறும்.\nதூக்கமின்மைக்குத் தூக்க மாத்திரை சாப்பிடுதல் கூடாது. அது நரம்புத் தளர்ச்சியை உண்டாக்கும். மருதாணிப் பூவினை ஒரு துணியில் சுற்றி, தலைமாட்டில் வைத்துப் படுத்தால் தூக்கம் வரும். பூவின் மணம் தூக்கத்தை வரவழைக்கும். ஒருசிலருக்கு இம்மணம் தலைவலியை உண்டாக்கும்.\nஉள்ளங்காலில் ஆணி ஏற்பட்டிருந்தால் மருதாணி இலையுடன் சிறிது வசம்பு, மஞ்சள் கற்பூரம் சேர்த்து அரைத்து, ஆணிஉள்ள இடத்தில் தொடர்ந்து கட்டி வர ஒரு வாரத்தில்குணமாகும்.\nகரும்படை, வண்ணான் படை கால் இடுக்கிலும், இடுப்பிலும், கழுத்து, கை இடுக்கிலும் வரும். இதற்கு ஒரு பிடி மருதாணி இலையுடன் 5 கிராம் 501 பார் கதர் சோப்புவைத்து அரைத்துக் களிம்பு போல தடவி வந்தால் கரும்படை யாவும் சுகமடையும். 10 -15 நாள் பூச வேண்டும். வண்டு கடிக்கும் சொறி, சிரங்கிற்கும் இதனைப் பூச்சு மருந்தாகப் பயன்படுத்தலாம்.\nஇன்றைய இளைஞர்களுக்கு உள்ள ஒருசில பிரச்னைகளில் இளநரையும் ஒன்று. இதற்கு மருதாணியைக் கொண்டு இயற்கை முறையில் எளிதாகத் தீர்வு காணலாம்.\nமருதாணி இலை அரைத்து அதன் விழுதை ஒரு கப்பில் எடுத்து வைத்துக் கொள்ளவும். அத்துடன் எலுமிச்சம்பழச்சாறு, 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் 2 ஸ்பூன் நெல்லி முல்லி பொடி ஆகியவற்றை, ஒரு கப் தயிருடன் கலந்து கொள்ளுங்கள்.இந்த கலவையை இரவு முழுவதும் ஒரு பாத்திரத்தில் மூடி வைத்துவிட வேண்டும். பின்னர், இதனை காலையில் எழுந்து தலை முடியில் தேய்த்துக் கொள்ள வேண்டும்.\nசுமார் ஒன்று முதல் ஒன்றரை மணி நேரம் வரை காய வைத்துவிட்டு, பின்னர் சீயக்காய் தேய்த்து குளிக்க வேண்டும். இப்படி வாரத்திற்கு ஒருமுறை செய்து வந்தால், தலையில் உள்ள இளநரை மறைந்துவிடும்.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com\nவீட்டு செலவை குறைக்க முத்தான பத்து\nHACK செய்யப்பட்ட GOOGLE ACCOUNT ஐ மீட்பது எப்படி\nஜனாஸா தொழுகை தொழும் முறை\nEmployment - ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி\nதண்ணீர்... – ஏழு அற்புதங்கள்\nதுணியை சுலபமாக துவைத்து சலவை செய்ய சில எளிய வழிகள்...\nஜலதோசம், மூக்கடைப்பு எந்தவிதமான பக்க விளைவுகளும் ம...\nமருதாணியை நாம் எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nதேனை தனியாக சாப்பிட்டால் பலன்--- மருத்துவ டிப்ஸ்\nதேன் சீரண சக்தியை தரும். இரைப்பையில் ஏற்படும் எல்லாவித கோளாறுகளையும் வயிற்றில் ஏற்படும் கோளாறுகளையும் குணமாக்கும். நெஞ்சில் ஏற்படும் எரிச்...\n‘ பாட்டி வைத்தியம் ’ சொன்ன பாட்டியிடமிருந்து ‘ வைத்திய ’ ரிலே கட்டையை கைப்பற்றியிருக்கும் பாட்டியும் , நல்ல அனுபவசாலி\nஉடலை சார்ஜ் செய்வது எப்படி\nஉடலை சார்ஜ் செய்வது எப்படி பாகம் - 2 முந்தைய பதிவில் நம் உடலை ஏன் சார்ஜ் செய்ய வேண்டும் , அதனால் உண்டாகும் பலன்கள் என்னென்ன என்...\nஅதிகாலையில் தண்ணீர் பருகினால் பல வியாதிகளைக் குணப்படுத்த முடியும் \nதினமும் காலையில் தூக்கத்தில் இருந்து எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவது ஜப்பானில் இப்போது பிரபலமாகி வருகிறது. இங்கு தரப்பட்டி...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nஉங்கள் உடல் எடை ஏழு நாட்களுக்குள் ஐந்து கிலோ எடை குறைய...\nகீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த அட்டவணை மிகப் பிரபலமான உணவு அட்டவணை. ஏழு நாட்களுக்கு இந்த அட்டவணையைப் பயன்படுத்தினால் , உங்கள் எடையில் சராசரி...\nநபிமார்கள் பற்றிய அரிய தகவல்கள்\nநபிமார்கள் மனிதர்களில் மாண்புடையவர்கள்.இவர்கள் அல்லாஹ்வின் வாக்கே உலகில் மேலானது. இறைவனல்லாத ஏனையோரின் வாக்கு கீழானது என்னும் தாரகமந்திரத்...\n கல்யாணம் ஆயி பல வருசம் ஆச்சு. இன்னும் வண்டி மக்கர் பண்ணுதே என்று மனசுக்குள்ளே குமையும் நம்ம குரூப் மக்களே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.sahabudeen.com/2015/09/blog-post_8.html", "date_download": "2018-04-26T13:25:53Z", "digest": "sha1:COZY6IJ7ANGPIOAAWKJBBRSAQDKXCBQS", "length": 17034, "nlines": 212, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: உ‌ட‌ல் சூ‌ட்டை‌க் குறை‌க்க", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nபொதுவாக ஒருவருக்கு உடல் வெப்பமானது 98.6 டிகிரி இருக்கும். அதுவும் இந்த வெப்பநிலை ஒவ்வொருவருக்கும் வேறுபடும். ஆனால் இதனை விட அதிகமான அளவில் வெப்பமானது உடலில் அதிகரித்தால், அது உடலில் பல பிரச்சனைகள் ஏற்படுத்தும். எனவே உடல் வெப்பத்தை கட்டுப்பாட்டுடன் வைப்பது என்பது மிகவும் முக்கியமானது.\nதற்போது கோடைகாலம் என்பதால், உடல் வெப்பமானது அளவுக்கு அதிகமாகும் வாய்ப்புள்ளது. இத்தகைய வெப்பம் உடலில் வெப்பத்தை மட்டும் அதிகரிக்காமல், வயிற்று வலி, அரிப்புக்கள், பிம்பிள், மயக்கம் மற்றும் சோர்வு போன்றவற்றையும் ஏற்படுத்தும். எனவே இத்தகைய உடல் வெப்பத்தை தணிப்பதற்கு உடலில் வெப்பத்தை குறைக்கும் உணவுகளை சாப்பிட்டு, அதிகமான தண்ணீர் மற்றும் பழங்களால் செய்யப்பட்ட பானங்கள் குடிப்பது என்பனவற்றை பின்பற்ற வேண்டும்.\nசரி, இப்போது உடல் வெப்பத்தை தணிக்கும் உணவுகள் என்னவென்று படித்து தெரிந்து கொண்டு, இதனை உணவில் அதிகம் சேர்த்து, உடல் வெப்பத்தை தணிப்பதோடு, உடலையும் ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ளுங்கள்.\nநீர்ச்சத்து அதிகம் நிறைந்துள்ள இந்த பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால், உடலில் இருக்கும் வெப்பமானது தணிவதோடு, உடல் வறட்சியும் நீங்கும்.\nஉடல் வெப்பத்தை தணிக்கும் பழங்களில் முலாம் பழம் மிகவும் முக்கியமானது. இந்த பழம் மிகவும் குளிர்ச்சி தன்மை நிறைந்தது. இதனை ஒர நேரத்தில் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால், சிலருக்கு அதில் உள்ள குளிர்ச்சியால் காய்ச்சல், இருமல் போன்றவை ஏற்படும்.\nகோடையில் அதிகம் கிடைக்கும் உணவுப் பொருட்களில் வெள்ளரியும் ஒன்று. இதில் நீர்ச்சத்து அதிம் இருப்பதால், இது உடல் வறட்சியை குறைப்பதோடு, உடல் வெப்பத்தையும் தணிக்கும்.\nஇயற்கை வைத்தியத்தில் உடல் வெப்பத்தை தணிப்பதற்கு புதினா பெரிதும் உதவியாக உள்ளது. எனவே அதிகமான உடல் வெப்பம் உள்ளவர்கள், புதினா ஜூஸ் குடிப்பது நல்ல பலனைத் தரும்.\nமுள்ளங்கியில் அதிகப்படியான நீர்ச்சத்து இருப்பதோடு, வைட்டமின் சி என்னும் உடல் வெப்பத்தை குறைக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளது.\nதினமும் எள் சாப்பிட்டாலும், உடல் வெப்பமானது எளிதில் தணியும். மேலும் உடலில் நீர்ச்சத்தும் அதிகம் இருக்கும்.\nசீரகத்தை இரவில் படுக்கும் போது சுடுநீரில் ஊற வைத்து, பின் அந்த நீரை காலையில் எழுந்து பருகி வந்தால், உடல் வெப்பம் குறையும்.\nஉடல் வெப்பத்தை தணிப்பதில் இளநீருக்கு நிகர் எதுவும் இல்லை. அதிலும் இதனை தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால், உடல் குளிர்ச்சியுடன் ஆரோக்கியமாக இருக்கும்.\nமாதுளை ஜூஸை தினமும் குடித்து வந்தாலும், உடல் கூலாக இருக்கும்.\nநாள்தோறும் இரவில் தூங்கும் முன், ஒரு கை கசகசா சாப்பிட்டு தண்ணீர் குடித்து வந்தால், நல்ல நிம்மதியான தூக்கம் கிடைப்பதோடு, உடல் வெப்பமும் கட்டுப்பாட்டுடன் இருக்கும்.\nமிகவும் பிரபலமான இயற்கை வைத்தியம் என்றால், அது தினமும் வெந்தயத்தை சாப்பிடுவது தான். இதனால் உடல் வெப்பமானது எளிதில் தணியும்.\nகுளிர்ச்சியான பாலில் தேன் சேர்த்து, வெறும் வயிற்றில் குடித்து வந்தாலும், உடல் வெப்பம் தணியும்.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com\nஈத்தம்பழமும் நஞ்சுக்கெதிரான மருந்தும். விமரிசிக்கப...\nஈத்தம் பழமும், நஞ்சுக் கெதிரான மருந்தும் விமர்சிக்...\nநன்றாக தூங்குவதற்கு சிறந்த வழிகள்\n\"ஈரலில் கொழுப்பு\" ஸ்கான் பரிசோனையில் மருத்துவர் சொ...\nபல் சொத்தைப் பற்றி சில தகவல்கள்..\nஈஸியா வாங்கலாம் நூற்றுக்கு நூறு\nநீங்கள் எப்படிப்பட்ட வேலையை தேடுகிறீர்கள்\nநீரிழிவு நோயைச் சமாளிப்பது எப்படி\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nதேனை தனியாக சாப்பிட்டால் பலன்--- மருத்துவ டிப்ஸ்\nதேன் சீரண சக்தியை தரும். இரைப்பையில் ஏற்படும் எல்லாவித கோளாறுகளையும் வயிற்றில் ஏற்படும் கோளாறுகளையும் குணமாக்கும். நெஞ்சில் ஏற்படும் எரிச்...\n‘ பாட்டி வைத்தியம் ’ சொன்ன பாட்டியிடமிருந்து ‘ வைத்திய ’ ரிலே கட்டையை கைப்பற்றியிருக்கும் பாட்டியும் , நல்ல அனுபவசாலி\nஉடலை சார்ஜ் செய்வது எப்படி\nஉடலை சார்ஜ் செய்வது எப்படி பாகம் - 2 முந்தைய பதிவில் நம் உடலை ஏன் சார்ஜ் செய்ய வேண்டும் , அதனால் உண்டாகும் பலன்கள் என்னென்ன என்...\nஅதிகாலையில் தண்ணீர் பருகினால் பல வியாதிகளைக் குணப்படுத்த முடியும் \nதினமும் காலையில் தூக்கத்தில் இருந்து எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவது ஜப்பானில் இப்போது பிரபலமாகி வருகிறது. இங்கு தரப்பட்டி...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nஉங்கள் உடல் எடை ஏழு நாட்களுக்குள் ஐந்து கிலோ எடை குறைய...\nகீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த அட்டவணை மிகப் பிரபலமான உணவு அட்டவணை. ஏழு நாட்களுக்கு இந்த அட்டவணையைப் பயன்படுத்தினால் , உங்கள் எடையில் சராசரி...\nநபிமார்கள் பற்றிய அரிய தகவல்கள்\nநபிமார்கள் மனிதர்களில் மாண்புடையவர்கள்.இவர்கள் அல்லாஹ்வின் வாக்கே உலகில் மேலானது. இறைவனல்லாத ஏனையோரின் வாக்கு கீழானது என்னும் தாரகமந்திரத்...\n கல்யாணம் ஆயி பல வருசம் ஆச்சு. இன்னும் வண்டி மக்கர் பண்ணுதே என்று மனசுக்குள்ளே குமையும் நம்ம குரூப் மக்களே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.sstaweb.in/2018/03/blog-post_480.html", "date_download": "2018-04-26T13:23:08Z", "digest": "sha1:6G2G5LCFCKMB6WCVYORWF6VBGVGSJA2W", "length": 12770, "nlines": 270, "source_domain": "www.sstaweb.in", "title": "SSTA: பள்ளி திறப்பு தள்ளிவைப்பு - முதல்வரின் கவனத்திற்கு எடுத்து செல்லப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்", "raw_content": "\nபள்ளி திறப்பு தள்ளிவைப்பு - முதல்வரின் கவனத்திற்கு எடுத்து செல்லப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்\nதமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், ஏப்ரல், 20க்குள் தேர்வுகளை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், கோடை விடுமுறை, 44 நாட்களாக நீட்டிக்கப்படுகிறது.\nதமிழகத்தில், பிளஸ் 2 பொதுத் தேர்வு, மார்ச், 1ல் துவங்கியது; ஏப்., 6ல் முடிகிறது. மார்ச், 7ல் துவங்கிய, பிளஸ் 1 தேர்வு, ஏப்., 16ல் முடிகிறது. மார்ச், 16ல் துவங்கவுள்ள, 10ம் வகுப்பு தேர்வு, ஏப்., 20ல் முடிகிறது.பொதுத் தேர்வு அல்லாத மற்ற, ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, ஏப்., 20க்குள் தேர்வுகளை முடிக்க, உத்தரவிடப்பட்டுள்ளது. இதைஅடுத்து, ஏப்., 21 முதல், பள்ளிக்கு விடுமுறை விடப்படுகிறது.\nஅடுத்த கல்வி ஆண்டு, ஜூன், 1, வெள்ளிக்கிழமை துவங்குகிறது. அன்று வார இறுதி நாளாக இருப்பதால், சனி, ஞாயிறு சேர்த்து, கோடைவிடுமுறையை, ஜூன், 3 வரை நீட்டிக்க, அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி அளித்ததும், முறையான அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது.வழக்கமாக ஜூன், 1ம் தேதி, வார வேலைநாளாக இருந்தால், அன்றே பள்ளிகள் திறக்கப்படும். இந்த முறை வார இறுதி நாளாக இருப்பதால், சனி, ஞாயிறை சேர்த்து, ஜூன், 3 வரை விடுமுறைநீட்டிக்கப்பட உள்ளது.\nவழக்கமாக பள்ளி மாணவர்களுக்கு, 31 நாட்கள் தான் விடுமுறை கிடைக்கும். இந்தாண்டு, 44 நாட்கள் வரை விடுமுறை கிடைக்க உள்ளது.கடந்த ஆண்டு வரை, தொடக்கப் பள்ளிகள், ஏப்ரல், 30 வரை இயங்கின. நடப்பு கல்வி ஆண்டில், தொடக்கப் பள்ளி வேலை நாட்களை, 220 நாளில் இருந்து, 210 நாட்களாக, தமிழக அரசு குறைத்து உள்ளது. இதனால், கூடுதலாக, 10 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது.\nவெயிலின் அளவை பொறுத்து, ஆண்டுதோறும் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்படுகிறது. நடப்பாண்டில் வெப்பம் அதிகரித்து, பெற்றோர் கோரிக்கை வைத்தால், அது முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். தேவை இருப்பின், கூடுதல் நாட்கள் கோடை விடுமுறை அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.\n2009&TET தொடர் போராட்டம் 2018\nதேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டம்\nஇரண்டாம் நாள் போராட்ட எதிரொலி பள்ளிக்கல்வித்துறை செயலருடன் இன்று பேச்சு வார்த்தை\nBREAKING :இரவிலும் தொடரும் 2009 & TET இடைநிலை ஆசிரியர்களின் தொடர் போராட்டம்\nBREAKING NEWS: 2009 மற்றும் TET ஆசிரியர்களின் மாநில ஒருங்கிணைப்பு செயலாளர் திரு.ஜெ ராபர்ட் அவர்கள் மயக்கம். மருத்துவமனை செல்ல மறுப்பு\nBREAKING NEWS:தொடர்ந்து 20க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மயக்கமான நிலையில் மருத்துவமனையில் அனுமதி\nFLASH NEWS பெண் ஆசிரியைகள் அடுத்தடுத்து மயக்கம், வளாகத்தில் 108 \nகாஞ்சிபுரம் மாவட்டம் அச்சிரபாக்கம் ஆசிரியை மயக்கம். 108 வாகனத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.\nFLASH NEWS:போராட்ட களத்தில் இரண்டு ஆசிரியைகள் மயக்கம்\nஆரோக்யஷீலா,இடைநிலை ஆசிரியர்,இளையான்குடி ஒன்றியம்,சிவகங்கை மாவட்டம் மயக்க நிலையில்...\nSSTA-BREAKING கல்வித்துறை அமைச்சர் அவர்கள் விடுத்த அறிக்கைக்கு மறுப்பு தெரிவித்து போராட்ட குழுவின் சார்பில் பதிலறிக்கை\nநேற்று மாண்புமிகு கல்வித்துறை அமைச்சர் அவர்கள் ஒரு அறிக்கை வெளியிட்டு\nSSTA FLASH: உயிர் துறக்கும் உச்ச கட்ட தொடர் போராட்டம் தொடங்கியது\n2009 & TET இடைநிலை ஆசிரியர்களின் தொடர் உண்ணா விரதப்போராட்டம் தொடங்கியது.\nSSTA-BREAKING:3ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு அரசு அழைப்பு\nதொடக்க கல்வி இயக்குநருடன் இடைநிலை\n ..ஒருங்கிணைப்புக்குழு தலைவர் இராபர்ட் அறிவிப்பு\n*பள்ளிக்* *கல்வித்துறை* *செயலர்* விடுத்த கோரிக்கைக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://seithupaarungal.com/2015/01/09/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-04-26T13:11:25Z", "digest": "sha1:JFRJPETNOEDR37E74SQUCMUMZYCSK5X5", "length": 11989, "nlines": 113, "source_domain": "seithupaarungal.com", "title": "தமிழக அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nதமிழக அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு\nஜனவரி 9, 2015 த டைம்ஸ் தமிழ்\nதமிழக அரசு ஊழியர்களுக்கு ரூ.3 ஆயிரம் வரை போனஸ் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதில், ஏ, பி பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு ஆயிரம் ரூபாயும் சி,டி பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு ரூ.3,000 வரையிலும் போனஸாக அளிக்கப்படும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வழங்கப்பட்டதைப் போன்று, இந்த ஆண்டும் வழங்க முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார்.\nகடந்த 2013௧4-ஆம் ஆண்டுக்கு சி, டி தொகுதியைச் சேர்ந்த அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு ரூ.3,000 என்ற உச்சவரம்புக்குள்பட்டு 30 நாள்கள் ஊதியத்துக்கு இணையாக மிகை ஊதியம் வழங்கப்படும்.\nஏ, பி தொகுதியைச் சேர்ந்த அலுவலர்கள், ஆசிரியர்கள் கடந்த நிதியாண்டில் குறைந்தபட்சம் 240 நாள்கள் அல்லது அதற்கு மேலாக பணிபுரிந்து வருவோருக்கு சிறப்புமிகை ஊதியமாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.\nஅதாவது, சில்லரைச் செலவினத்தின் கீழ் மாத அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் பெறும் முழுநேர, பகுதி நேரப் பணியாளர்கள், தொகுப்பூதியம் பெறும் பணியாளர்கள், சிறப்புக் கால முறை ஊதியம் பெற்று வரும் சத்துணவுத் திட்டப் பணியாளர்கள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டத்தில் பணிபுரியும் அங்கன்வாடி பணியாளர்கள், கிராம உதவியாளர்கள், பஞ்சாயத்து உதவியாளர்கள், ஒப்பந்தப் பணியாளர்கள், ஒப்பந்த அடிப்படையிலான தாற்காலிக உதவியாளர்கள், தினக்கூலி அடிப்படையில் பணியாற்றுபவர்கள், ஒரு பகுதி தினக் கூலிகளாக பணியாற்றி பின்பு நிரந்தரப் பணியாளர்களாக பணியமர்த்தப்பட்டவர்கள் ஆகியோருக்கு இந்த சிறப்பு மிகை ஊதியம் அளிக்கப்படும்.\nஉள்ளாட்சி அமைப்புகள், அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் அலுவர்கள், ஆசிரியர்கள், பல்கலைக்கழக மானியக் குழு, அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு, இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் ஆகியவற்றின் கீழ் சம்பள விகிதம் பெறுபவர்கள், அனைத்திந்தியப் பணி விதிமுறைகளின் கீழ் சம்பளம் பெறுபவர்கள் ஆகியோருக்கும் இந்த மிகை-சிறப்பு மிகை ஊதியம் வழங்கப்படும்.\nஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள், முன்னாள் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகியோருக்கு ரூ.500 பொங்கல் பரிசாக வழங்கப்படும். பொங்கலை ஒட்டி வழங்கப்படும் போனஸ், சிறப்பு போனஸ் வழங்க அரசுக்கு ரூ.326.49 கோடி கூடுதல் செலவு ஏற்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.\nகுறிச்சொல்லிடப்பட்டது அங்கன்வாடி பணியாளர்கள், அரசியல், ஒப்பந்த அடிப்படையிலான தாற்காலிக உதவியாளர்கள், ஒப்பந்தப் பணியாளர்கள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள், ஓய்வூதியம், கிராம உதவியாளர்கள், குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள், சத்துணவுத் திட்டப் பணியாளர்கள், தமிழக அரசு, தமிழ்நாடு, தினக்கூலி அடிப்படையில் பணியாற்றுபவர்கள், பஞ்சாயத்து உதவியாளர்கள், பொங்கல் போனஸ், முன்னாள் கிராம நிர்வாக அலுவலர்கள்\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postமுடிவுக்கு வரும் எழுத்தாளர் பெருமாள்முருகனின் மாதொருபாகன் சர்ச்சை\nNext postகரும்புக்கு அரசு அறிவித்துள்ள ஆதார விலை ஏமாற்றம் அளிக்கிறது: ஜி.கே.வாசன்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nநீங்களே செய்யலாம் ஃப்ரூட் ஃபலூடா\nபிஸ்தா ஐஸ்கிரீம் செய்வது எப்படி\nகருப்பட்டி கம்பு சேமியா எப்படி செய்வது\nஸ்டாக்கிங் பூக்கள் செய்வது எப்படி\nமணி வளையல் செய்வது எப்படி\nஎம்பிராய்டரி: பிரஞ்ச் நாட்’இல் சூரிய பூக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ajmal-mahdee.blogspot.com/2015/02/blog-post_74.html", "date_download": "2018-04-26T13:05:08Z", "digest": "sha1:7QQHOLCRARQVO2J4RNFZA7BZT3YTWIFN", "length": 33169, "nlines": 681, "source_domain": "ajmal-mahdee.blogspot.com", "title": "Discover Islam In Tamil: உங்கள் அலுவலகத்தில் உங்களைத் தலைவனாக்கும் பத்து பண்புகள்!", "raw_content": "\nஉங்கள் அலுவலகத்தில் உங்களைத் தலைவனாக்கும் பத்து பண்புகள்\nநீங்கள் பணிபுரியும் அலுவலகத்தில் நீங்கள் யாராக இருக்கிறீர்கள் என்பது மிகவும் முக்கியம். உங்களை அடுத்தகட்டத்துக்கு நகர்த்தும்போது நீங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சில தகுதிகள் உள்ளன. நீங்கள் அந்தத் தகுதிகளை வளர்த்துக்கொண்டு அதனை மேம்படுத்தினாலே போதும். அது நீங்கள் யாராக இருக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும். அனைவருமே சிஇஓ ஆக ஆசைப்படுவார்கள். ஆனால், ஒரு சிலர் மட்டும்தான் சிஇஓ ஆகிறார்கள். காரணம் என்ன என்றால், அவர்கள் மற்றவர்களிடமிருந்து தனித்துத் தெரிவதுதான். இந்தத் திறனை வளர்த்துக்கொண்டால் மட்டுமே தலைவனாக முடியும். இந்தத் திறனை வளர்த்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.\nமுடிவெடுப்பதில் உங்களின் பங்களிப்பை அதிகப்படுத்துங்கள்\nஅலுவலகம் சில சமயங்களில் எடுக்கும் ஒரு முடிவு சிறப்பானதாக இல்லாமல் இருக்கலாம். அதனை நிர்வாகத்துக்குப் பயந்து மற்றவர்களும் அதனை ஆதரிக்கலாம். ஆனால், உங்களுக்குச் சரியில்லை என்றால் அதனைத் தெரிவிக்கத் தயங்காதீர்கள். அப்படியே உள்ளதைத் தெரிவியுங்கள். முடிவுகளில் உங்களின் பங்களிப்பை அதிகரியுங்கள், அது உங்களின் தலைமைப் பண்பை வெளிச்சம்போட்டு காட்டும். அலுவலக நிர்வாகமும் இதனைத்தான் விரும்பும்.\nபுதிய உத்திகளை வகுப்பவராக இருங்கள்\nஎல்லாரும் செய்வதையே செய்பவர் தலைவனாக இருக்க முடியாது. தலைவன் என்பவர் புதிதாக ஏதாவது ஒன்றை செய்து அதன்மூலம் தன்னைத் தனித்துக் காட்டிக்கொள்ள வேண்டும். அப்படி காட்டிக்கொள்ளாவிட்டால் அவர்கள் தலைவனாக நீண்ட காலம் நிலைக்க முடியாது. அதற்குப் புதிய உத்திகளைக் கையாள வேண்டும். புதிய உத்திகள் ஒருவேளை கண்டுபிடிக்கப்படவில்லை எனில், இன்று நம் கைக்குள் செல்போன் வடிவில் கணினி வந்திருக்காது. ஓர் அறை அளவிலான கணினியாகவே இருந்திருக்கும்.\nஉங்களை நீங்களே அப்டேட் செய்து கொள்ளுங்கள். நீங்கள் எவ்வளவு வயதானவராக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆறு வயது குழந்தை இன்றைக்கு இணையதளத்தில் அப்டேட்டாக இருக்கும்போது, அந்தப் போட்டியைச் சமாளிக்க அறுபது வயதுகாரரும் கணினி பயில வேண்டியுள்ளது. நீங்கள் அப்டேட் ஆகவில்லை எனில், உங்களைவிட அப்டேட்டாக உள்ள ஒருவர் உங்களைக் கடந்து வெற்றியடைய முடியும். இன்றைக்கு என்ன செய்யலாம் என்று யோசிக்கும் தொழிலதிபர்களைவிட, இன்றைக்கு என்ன தேவை என யோசிக்கும் தொழிலதிபர்கள்தான் அதிகம். அப்படி யோசிப்பதால்தான் இன்றும் அவர்கள் தலைவர்களாகத் தங்களை மேம்படுத்திக் கொள்கின்றனர்.\nசில விஷயங்களில் உங்களைச் சுற்றியுள்ள குழுக்கள் ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்று கூறுவது உண்டு. ஆனால், அதனைப் பற்றி கவலைப்படாமல் உங்களுக்கு சரி என்றுபட்ட விஷயத்தில் ரிஸ்க் எடுங்கள். ரிஸ்க் எடுக்கும் விஷயத்தை நன்கு புரிந்துகொண்டு இதனைச் செய்தால் வெற்றி மட்டும்தான் கிடைக்கும் என்ற நம்பிக்கை உங்களிடம் இருந்தால் எவ்வளவு பெரிய ரிஸ்க்கையும் எடுங்கள். அது உங்களது தலைமைப் பண்பை அதிகரிக்கும். ரிஸ்க் எடுப்பது எவ்வளவு வெற்றியை தரும் என்பதற்கு உதாரணம், அனைவரும் இன்டர்நெட் என்ற விஷயத்தைத் தேடலுக்குப் பயன்படுத்தியபோது, இதனை ஒரு சமூக விஷயத்துக்குப் பயன்படுத்த முடியும் என்று களமிறங்கிய மார்க் ஜூக்கர் பெர்க் எடுத்த ரிஸ்க் இன்று, ஃபேஸ்புக் இல்லாமல் இருந்தால் இயங்க முடியாது என்ற மனிதர்களை உருவாக்கியுள்ளது.\nகுறுகிய இலக்குகளில் திருப்தி அடையாதீர்கள்\nஒரு வேலைதான் ஒதுக்கப்பட்டது, அதனைச் செய்துமுடித்துவிட்டேன் என்று குறுகிய இலக்குகளில் திருப்தி அடையாதீர்கள். அலுவலகம் ஒரு விஷயத்தைக் குறுகிய நேரத்தில் அவசரமாக முடிக்கத் திட்டமிட்டால், அதனை முடிப்பவர் நீங்களாக இருக்க வேண்டும் என நிர்வாகம் முடிவெடுக்க வேண்டும் என்பதில் கவனமாக இருங்கள். இந்தச் சூழலை நீங்கள் உருவாக்கிவிட்டால் உங்களது ஆளுமைத்திறன் மீதான நம்பிக்கை அதிகரிக்கும், அது உங்களைத் தலைவனாக்கும்.\nஉங்களுக்கு என்று ஒரு மதிப்பீட்டையும், இலக்கையும் நிர்ணயித்துச் செயல்படுங்கள், அது கட்டாயம் நிறுவனத்தின் இலக்கைவிட சற்று அதிகமாக இருக்கும்படி அமைத்து, அதனை நீங்கள் அடையும்போது உங்கள் திறனும், இலக்குகளைக் கையாளும் விதமும் உங்களது தலைமைப் பண்பை தனித்துக் காட்டும். எல்லாரும் கூகுளில் தங்கள் இணையதளம்தான் முதலில் தோன்ற வேண்டும் என்று நினைக்கும்போது, அவர்கள் இணையதளத்தில் தேட என் இணையதளத்துக்குத்தான் வர வேண்டும் என்று யோசித்த கூகுள் நிறுவனர்களின் தலைமைப் பண்புக்கு இது ஒரு சிறந்த உதாரணம்.\nஅலுவலகத்துக்குச் செல்கிறேன். அங்கு எனக்கு வேலை ஒதுக்கப்படுகிறது. அதனைச் சிறப்பாகச் செய்கிறேன் என்று மட்டும் இல்லாமல், அலுவலகச் சூழலில் அதிக மனிதர்களை உயர்மட்ட அதிகாரிகள் எப்படிக் கையாளுகிறார்கள், வேலையைத் தட்டிக்கழிக்கும் நபரிடம் எப்படி வேலை வாங்கப்படுகிறது என்று நுணுக்கமான விஷயங்களைக் கற்றுக்கொள்ளுங்கள். நேர மேலாண்மை, அலுவலக விதிமுறைகளைப் பின்பற்றுவது போன்ற செயல்களில் இருந்து ஆளுமை பண்பை கற்றுக்கொள்ளுங்கள். அது நீங்கள் தலைவனாகும்போது உங்களது வேலையை எளிமையாக்கும்.\nநான் சிறப்பாக வேலை செய்கிறேன் என்று மட்டும் எண்ணாமல், உங்கள் குழுவில் சற்று குறைவான நிலையில் இருக்கும் சக ஊழியரையும் இலக்குகளை நோக்கி இழுத்துச்செல்லுங்கள்.\nஒரு குதிரை வண்டியில் இரண்டு குதிரைகளும் சம வேகத்தில் பயணித்தால்தான் வெற்றி என்பதால் மற்றவர்களையும் உங்கள் வேகத்துக்கு மாற்ற முயற்சி செய்யுங்கள். அப்படி செய்யும்போது உங்கள் தலைமைப் பண்பும், குழுவின் வேலைதிறனும் தனித்துத் தெரியும்.\nவேலை செய்வது மட்டும்தான் என் வேலை. அதனால் வரும் லாபம், நஷ்டம் எல்லாம் நிர்வாகம் சம்பந்தப்பட்டது என நினைக்காதீர்கள். நீங்கள் செய்யும் வேலைதான் உங்கள் நிறுவனத்தின் லாபத்தை நிர்ணயிக்கும். அதேநேரத்தில், உங்கள் நிறுவனம் லாபத்தில் இயங்கினால் மட்டுமே உங்களால் வேலையில் தொடர முடியும். உங்கள் நிறுவனத்தின் லாபமும், உங்கள் செயல்திறனும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது என்பதை உணருங்கள். அந்தப் பொறுப்புணர்ச்சி உங்களைத் தலைவனாக்கும்.\nநீங்கள் வேலை செய்யும் துறையில் உங்கள் உயர் அதிகாரி உங்களிடம் என்ன எதிர்பார்க்கிறார் என்று கவலைப்படாமல் நீங்கள் அவர் இடத்தில் இருந்து உங்கள் இடத்தில் இருப்பவர் என்ன வேலை செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களோ, அந்த வேலையைச் செய்யுங்கள். அதில் வெற்றியடையும்போது நீங்களே உங்களைத் தலைவனாக உணருவீர்கள்.\nஇந்தப் பத்து பண்புகளையும் வளர்த்துக்கொள்ளும்போது நிச்சயம் நீங்கள் உங்கள் அலுவலகத்தில் பணிபுரிபவராக இல்லாமல் தலைவராக மட்டுமே இருப்பீர்கள்.\nதொகுப்பு : மு.அஜ்மல் கான்.\nரூ.10,000 கோடி மதிப்புள்ள சொத்துகளை தர்ம அறக்கட்ட...\nதமிழர்களின் சிறு தானிய உணவுகள் \nதமிழகத்தில் இருந்து செவ்வாய் கிரகத்துக்கு பாலக்காட...\nபாரத பிரதமர் அவர்களுக்கு இந்த கடிதம் போய் சேரும் எ...\nபிறந்த குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவு முறைகள்\nஉங்கள் அலுவலகத்தில் உங்களைத் தலைவனாக்கும் பத்து பண...\nதொண்டையில் ஏற்படும் சதை வளர்ச்சி( Tonsillitis ) பற...\nஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றதற்கான முக்கியக்காரணங்...\nஆம் ஆத்மி கட்சிக்கு டெல்லி மக்கள் கொடுத்த தீர்ப்பு...\nநேரம் மற்றும் கிரீன்விச் இடைநிலை நேரம் (GMT) பற்ற...\nபிரேதப் பரிசோதனை பற்றிய விழிப்புணர்வு பார்வை..\nபிப்பிரவரி மாதத்துக்கு மட்டும் ஏன் இருபத்தெட்டு நா...\nவாட்ஸ்-அப் செயலியில் அதிகரிக்கும் ஆபத்து \nதமிழ்நாட்டில் உள்ள காவல்துறை பற்றிய சிறப்பு பார்வ...\nகங்கை நதி கழிவு ஆறாக மற்றும் தமிழ்நாடு நிலத்தடி ...\nமருமகள்கள் மாமியாரிடம் கூறும் முக்கிய 6 பொய்கள் \nதிருக்குறள் (Thirukkural) By திருவள்ளுவர்(Thiruvalluvar)\nTamilil Quran - தமிழ் குர்ஆன்\nஒரே உறவில் கர்ப்பம் சாத்தியமா-ஒரு சிறப்பு பார்வை ...\nஒரு பெண்ணின் வாழ்வில் மிகப் பெரிய விஷயம், குழந்தை பெறுவது. திருமணத்தை விடவும் சவாலான அதேநேரம் திருப்தி அளிக்கும் விஷயம். திருமணமான ஒரு பெண...\nகர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் பற்றிய சமூக விழிப்புணர்வு பார்வை ...\nஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் கர்ப்பகாலம் என்பது தனிச்சிறப்பு வாய்ந்தது. இந்த சமயத்தில் ஒரு பெண் தனது உடலில் மேலும் ஒரு உயிரை சுமக்க தயார் ஆக...\nகர்ப்பப்பை கட்டிகள் (Uterine Tumors)-ஒரு அலசல்....\n* கர்ப்பப்பை பாகங்கள் - கருப்பை கழுத்துப் பகுதி (Cernix) - உடல்பகுதி - கருக்குழல் - கருப்பை எங்கு வேண்டுமானாலும் புதிய வளர்...\n\"ஜீஷா\" பிரமிட்டுக்கள்(The Great Pyramid of Giza) ஏன்\nமனித நாகரீகத்தின் அடையாள சின்னமாகவும் அதிசயம் பல கொண்டுள்ளதுமாகிய ஜீஷா பிரமிட்டுக்கள் ( The Great Pyramid of Giza ) படத்திலுள்ளன. எ...\nதாம்பத்திய திருப்தி என்றால் என்ன\nசெக்ஸ் உறவில் ஆணும், பெண்ணும் கடைப்பிடிக்க வேண்டிய சில முக்கிய அம்சங்களை காமசூத்திரம் தெள்ளத்தெளிவாக விளக்கி இருக்கிறது. அது பற்றி இன்ற...\nசீரழிக்கும் சிசேரியன்களும்(CESAREAN DELIVERY) Vs சுகமான பிரசவமும் (Normal delivery)-ஒரு விழிப்புணர்வு ஆய்வு\nஇந்த கட்டுரையை படித்து பயன்பெறுகின்ற அணைத்து கர்ப்பிணி தாய்மார்களுக்கும் சுகபிரசவம் அடைய என்னுடைய வாழ்த்துகளை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://kavishan.blogspot.com/2012/01/blog-post_13.html", "date_download": "2018-04-26T13:20:09Z", "digest": "sha1:MPWNEXJQOAX24INF2TULHFC5UEKDJ7GQ", "length": 9278, "nlines": 133, "source_domain": "kavishan.blogspot.com", "title": "புலம்பெயர் தமிழர்களின் சவால்களை எதிர்நோக்கத் தயார் – கோட்டாபய ~ ஈழம் செய்திகள்", "raw_content": "\nபுலம்பெயர் தமிழர்களின் சவால்களை எதிர்நோக்கத் தயார் – கோட்டாபய\nபுலம்பெயர் தமிழர்களின் சவால்களை எதிர்நோக்கத் தயார் என்று பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nஇலங்கைக்கு எதிராக சர்வதேச ரீதியில் தவறான அபிப்பிராயத்தை ஏற்படுத்த புலம்பெயர் தமிழர்கள் முயற்சிப்பதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.\n'இலங்கை தேசியப் பாதுகாப்பின் எதிர்கால சவால்கள்' என்ற தொனிப்பொருளில், கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பாதுகாப்புச் செயலாளர் விசேட உரையாற்றிய போதே இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.\nஅமெரிக்காவிற்கு அச்சுறுத்தலாக திகழ்ந்த ஒஸாமா பின்லேடனை கொலை செய்ய வேண்டுமென அந்த நாடு கருதியது. அதேபோன்று இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக திகழ்ந்த வேலுபிள்ளை பிரபாகரன் உள்ளிட்ட விடுதலைப் புலி உறுப்பினர்களை முறியடித்தமை தவறாகாது என அவர் தெரிவித்தார்.\nஆசிய பிராந்திய வலயத்தின் சிறிய நாடு என்ற காரணத்தினால் இவ்வாறு இலங்கை மீதுகுற்றம் சுமத்தப்படுகின்றது.\nநாட்டின் ஸ்திரத்தன்மையை சீர்குலைப்பதற்கு பல்வேறு சக்திகள் முயற்சித்து வருகின்றன. தற்போது பல்கலைக்கழக மாணவர்களையும் இந்த முயற்சியில் இணைத்துக் கொண்டுள்ளார்கள்.\nபோராட்டங்கள் என்ற போர்வையில் நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு குந்தகம் ஏற்படுத்த இடமளிக்க முடியாது.\nமக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து அவற்றுக்கு தீர்வு வழங்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்.\nஅரசாங்கத்தை மாற்றுவதற்கு தேர்தல்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமே தவிர, போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்களின் மூலம் அரசாங்கத்தை மாற்றியமைக்க முடியாது என கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nநீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.\nஇலங்கையின் ஏழாவது ஜனாதிபதி (1)\nஉலகத் தமிழர் பேரவை (1)\nசிறீலங்காவின் 7வது நாடாளுமன்ற தேர்தல் (12)\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (6)\nதலைமைச் செயலகம் தமிழீழம் (5)\nநாடு கடந்த அரசாங்கத் தேர்தல் (6)\nநாடு கடந்த அரசாங்கம் (57)\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கம் (1)\nநான் சாகலாம் நாங்கள் சாகக் கூடாது (11)\nபோர்குற்ற நாள் 2009 மே (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://onlycinemasnews.blogspot.com/2013/01/blog-post_16.html", "date_download": "2018-04-26T13:40:34Z", "digest": "sha1:5Q6ZOZ6HH2VDCW7PC6BIOJFBAWI7Z47D", "length": 8498, "nlines": 109, "source_domain": "onlycinemasnews.blogspot.com", "title": "டாப்ஸியை மிரட்டிய நயன்தாரா", "raw_content": "\nஐயா படத்தில் அறிமுகமான நயன்தாரா, அஜீத்துடன் நடித்த பில்லா படத்துக்குப்பிறகுதான் பரபரப்பான நடிகையானார்.\nகாரணம் அதுவரை கிளாமர் விசயத்தில் ஓரளவு அடக்கி வாசித்த நயன்தாரா, அந்த படத்தில் துணிச்சலாக பிகினி உடைக்கு மாறினார்.\nஏற்கனவே அவரது அழகில் மயக்கத்தில் இருந்த இளவட்ட ரசிகர்களுக்கு அது இன்ப அதிர்ச்சியாக அமைந்தது. அதன்பிறகுதான் நயன்தாராவின் மார்க்கெட்டும் சூடுபிடித்தது.\nஇந்நிலையில், தற்போது செகண்ட் இன்னிங்சில் இருக்கும் அவர், அந்த மாதிரியெல்லாம் நடிக்க மாட்டார் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது.\nஆனால் ஆரம்பத்தில் அமைதி காத்த நயன், இப்போது மறுபடியும் கட்டவிழ தயாராகி விட்டாராம்.\nமீண்டும் அதே அஜீத், விஷ்ணுவர்தன் படத்தில் இணைந்திருக்கும் அவர், ஆன்மீகவாதியாட்டம் அமைதியாக காட்சி தந்தாலும், கேமரா கண்களுக்கு போதும போதும் என்கிற அளவுக்கு கவர்ச்சி விருந்தளித்து வருகிறாராம்.\nநயன்தாராவின் இந்த திடீர் தாராளம் கண்டு படத்திற்கான வியாபாரம் இன்னும் எகிறும் என்று படக்குழு உற்சாகத்தில் இருக்கிறது.\nஆனால், நயன்தாராவின் அதிரடி கவர்ச்சிக்கு முன்னால் உன் நடிப்பு காணாமல் போய் விட்டது என்று சிலர் சொல்ல, ஆரம்பத்தில் கிளாமரில் நாம்தான் தூக்கலாக இருப்போம் என்று கணக்குப்போட்டிருந்த அப்படத்தின் இன்னொரு நாயகியான டாப்ஸி மிரண்டு போயிருக்கிறாராம்.\nகமலுக்காக தலைவா ஷூட்டிங் நிறுத்திய விஜய்\nசர்ச்‌சைக்குரிய காட்சிகளை நீக்க கமல் சம்மதம்\nபவர் ஸ்டாரால் சந்தானத்திற்கு சிக்கல்\nவிஸ்வரூபம் பிரச்னை - கமலுக்கு ரஜினி காந்த் ஆதரவு\nவிஸ்வரூபம் படத்தின் மீதான வழக்கு ஒத்திவைப்பு\n12 வருடம் சினிமாவை மறந்த அரவிந்த்சாமி\nமுருகதாஸ் இயக்கத்தில், இரட்டை வேடத்தில் அஜித்\nசந்தானம்- டாக்டர் சீனிவாசன் புதிய கூட்டணி ஒப்பந்தம...\nதலைவாவுக்காக விஜய்-சந்தானம் இணைந்து பாடிய பாட்டு\nவிஸ்வரூபத்தால் கமலுக்கு பைத்தியம் பிடித்துள்ளது - ...\nஎப்பவுமே நான் தான் மாஸ் - மார்தட்டுகிறார் பவர்ஸ்டா...\nபீட்சா தயாரிப்பாளரின் அடுத்த படம் சூது கவ்வும்\nகோடி கேட்கும் முருங்கைக்காய் இயக்குனர்\nசந்தானத்தை ஓவர்டேக் செய்த டாக்டர் சீனிவாசன்\nபிப்ரவரி 2-ம் தேதி விஸ்வரூபம் டி.டி.எச்.சில் வெளிய...\nமுருங்கைக்காய் நடிகரின் வாயை அடைத்த லட்டு படக்குழு...\nகெளதம்மேனனை தடுமாற வைத்த நீதானே என் பொன்வசந்தம்\nஊழல் தலைவர்கள் - நடிகர் அஜித் விளாசல்\nவிஸ்வரூபம் வெளியீட்டில் தடுமாறுகிறார் கமல்\nபரபரப்பை கிளப்ப போகும் தெலுங்கு டப்பிங் படம்\nபொங்கலுக்கு 5 படங்கள் மட்டுமே ரிலீஸ்\nவிஸ்வரூபம் ரிலீஸ் தள்ளிவைப்பு - கமல் அறிவிப்பு\nஅஜித் படத்துக்கு தலைப்பு கிடைச்சாச்சு\nவிஸ்வரூபத்துக்கு முஸ்லீம் அமைப்புகள் திடீர் ஆதரவு\nரஜினியாக தனுஷ், கமலாக சிம்பு - ஒரு கலக்கல் ரீமேக்\nகமலுக்கு ஆதரவாக தியேட்டர் உரிமையாளர்கள்\nஅரசியலுக்கு அஸ்திவாரம் - பரபரப்பான ரஜினி ரசிகர்கள்...\nவிஸ்வரூபம் படத்திற்கு புதிய சிக்கல்\nவிஸ்வரூபம் தடை வழக்கு - கமல் தரப்பில் பதில்\nஅரசியலுக்கு வந்தால் அதிகாரத்தை கையிலெடுக்க வேண்டும...\nகமலைத் தொடர்ந்து ரஜினியும் டிடிஎச்சுக்கு மாறுகிறார...\n© 2010 சினிமா செய்திகள் மட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sivantv.com/videogallery/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4-3/", "date_download": "2018-04-26T13:41:37Z", "digest": "sha1:KOVPLOWZJYNGA6GUIRJAZHQVXTVBQU4W", "length": 7465, "nlines": 142, "source_domain": "sivantv.com", "title": "பேர்ண் ஞானலிங்கேசுரர் திருக்கோவில் கொடியேற்றத் திருவிழா 21.08.2015 | Sivan TV", "raw_content": "\nபுங்குடுதீவு கிழக்கு கண்ணகைபுரம் ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்பாள் திருக்கோவில் வருடார்ந்த மகோற்சவம்\nHome பேர்ண் ஞானலிங்கேசுரர் திருக்கோவில் கொடியேற்றத் திருவிழா 21.08.2015\nபேர்ண் ஞானலிங்கேசுரர் திருக்கோவில் கொடியேற்றத் திருவிழா 21.08.2015\nஓல்ரன் ஸ்ரீ மனோன்மணி அம்மன் கோவி�..\nயேர்மனி சுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்க..\nபேர்ன் ஸ்ரீ கல்யாணசுப்பிரமணியர் ..\nஓல்ரன் மனோன்மணி அம்மன் திருக்கோவ..\nஜெர்மனி - கெமஸ்பாக் ஸ்ரீ குறிஞ்சி�..\nஜெர்மனி - வூப்பெற்றால் ஸ்ரீ நவதுர�..\nஜெர்மனி - ஹம் ஸ்ரீ காமாட்சி அம்பாள..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் வர�..\nசுவிஸ் – நலவாழ்வு அமைப்பின் மருந�..\nசுவிஸ் - நலவாழ்வு அமைப்பின் மருந்�..\nபேர்ன் – ஞானலிங்கேசுரர் திருக்கோ..\nபேர்ன் – ஞானலிங்கேசுரர் திருக்கோ..\nபேர்ன் – ஞானலிங்கேசுரர் திருக்கோ..\nபேர்ன் - ஞானலிங்கேசுரர் திருக்கோ�..\nசூரிச் ஹரே கிருஷ்ண ஆலய கிருஷ்ண ஜெ�..\nபேர்ண் - ஞானலிங்கேசுரர் திருக்கோ�..\nசுவெற்ரா கனகதுர்க்கா அம்பாள் ஆலய..\nசுவிற்சர்லாந்து - ஓல்ரன் அருள்மி�..\nகூர்-நவசக்தி விநாயகர் ஆலய தேர்த்�..\nதூண்- ஸ்ரீ சீரடிசாயிபாபா மன்றத்த�..\nதூண்- ஸ்ரீ சீரடிசாயிபாபா மன்றத்த�..\nமர்த்தினி - வலே ஞானலிங்கேச்சுரர் �..\nபேர்ண் - ஞானலிங்கேசுரர் திருக்கோ�..\nபேர்ண் - ஞானலிங்கேசுரர் திருக்கோ�..\nபேர்ண் - ஞானலிங்கேசுரர் திருக்கோ�..\nபேர்ண் – ஞானலிங்கேசுரர் திருக்கோ..\nகனடா- மிசிசாகா ஜெயதுர்க்கா தேவஸ்�..\nபேர்ண் - ஞானலிங்கேசுரர் திருக்கோ�..\nபேர்ண் - ஞானலிங்கேசுரர் திருக்கோ�..\nசுவிஸ் - கூர் நவசக்தி விநாயகர் கோவ..\nயாழ் இந்து பாலர்களின் காத்தவராயன..\nபேர்ண் – ஞானலிங்கேசுரர் திருக்கோவில் தேர்த்திருவிழா மலர்-அ, 29.08.2015\nசுவிஸ் – கூர் நவசக்தி விநாயகர் கோவில் தேர்த்திருவிழா\nபுங்குடுதீவு - கிழக்கு - கண்ணகைப�..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.eegarai.net/t71065-5000", "date_download": "2018-04-26T13:01:45Z", "digest": "sha1:HVFEGXMQZZ2QOVJAMSIKNKZZVCQQZ7CE", "length": 23763, "nlines": 291, "source_domain": "www.eegarai.net", "title": "மும்பையில் கைக்குழந்தையுடன் பிச்சை கேட்ட பெண்ணுக்கு ரூ.5000 கொடுத்த பாரிஸ் ஹில்டன்!", "raw_content": "\nருசியான ஊறுகாய்கள் - அரு /அரை நெல்லிக்காய் தொக்கு \nஅரை நெல்லிக்காய் - அரை நெல்லிக்காய் தொக்கு \nஎச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி\nஉடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்\nஎனக்குள் ஒரு கவிஞன் SK\nஉலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி\nபராமரிப்பு பணி முடிந்தது பழநி கோயில் வின்ச் சேவை துவக்கம்: பக்தர்கள் மகிழ்ச்சி\nபாலகுமாரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக\nஅறிமுகம்---- வாலி மோகன் தாஸ்\n2 மணி நேரம் பொறுக்க முடியாதா கஸ்தூரி..\nஎதுக்காக உன் காதலியை கிணத்துல தள்ளிவிட்டே...\nஅமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி\nநிலக்கரியை விட கருப்பாக இருக்கும் கிரகம் கண்டுபிடிப்பு\nகவர்ச்சி நடிகைகிட்ட பிடிச்சது, அவரோட நடிப்பு...\nஏப்ரல் 30-ம் தேதி வைகை ஆற்றில் இறங்குகிறார் கள்ளழகர்\nகோயில்களுக்கு செல்ல குழந்தைகளை கண்டிப்பாக பழக்குங்கள்.....\nஇந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'\nஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்\nஉப்புமா சாப்பிடுவது மோன நிலை...\nநீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு\n‘சிற்றெறும்பு கட்டெறும்பு’ - கமல்ஹாசன், அமைச்சர் ஜெயக்குமார் வார்த்தை ஜாலத்தால் ஒருவருக்கொருவர் கிண்டல்\nஉ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்\nகண்மணி வார நாவல் 25.04.2018\nதிகில் மன்னன் ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக\nதாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து\nபலாத்காரத்துக்கு ஆளாகும் ஆண் குழந்தைகளுக்கும் இழப்பீடு'\nஇந்தியர்களை பாதிக்கும் ‘எச்-4’ விசா ரத்து நடவடிக்கைக்கு அமெரிக்க எம்.பி.க்கள் எதிர்ப்பு, ஐ.டி. துறையும் கண்டனம்\n'பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்\n5,000 குஜராத் விவசாயிகள் தற்கொலைக்கு மனு\nவாழ்க்கையை ஓஹோன்னு வாழ கன்ஃபூசியஸ் சொன்ன 10 கட்டளைகள்...\nஇரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு\nரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது: மக்கள் மன்ற மாநில செயலாளர் பேச்சு\n2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்: ஜூன் 16-ம் தேதி இந்தியா-பாக். மோதல்\nசுப்ரீம் கோர்ட் எதிர்காலம்: ஆலோசிக்க நீதிபதிகள் கோரிக்கை\nநாடு முழுவதும் 24 போலி பல்கலை.,கள்\nகாங்., கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக்கறை: சல்மான் குர்ஷித் சர்ச்சை\nமும்பையில் கைக்குழந்தையுடன் பிச்சை கேட்ட பெண்ணுக்கு ரூ.5000 கொடுத்த பாரிஸ் ஹில்டன்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nமும்பையில் கைக்குழந்தையுடன் பிச்சை கேட்ட பெண்ணுக்கு ரூ.5000 கொடுத்த பாரிஸ் ஹில்டன்\nதன்னுடைய பிசினஸ் விஷயமா மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ள ஹாலிவுட் நடிகை பாரிஸ் ஹில்டன், மும்பை சிக்னலில் தன்னிடம் பிச்சை கேட்ட பெண்ணுக்கு 100 டாலர் (இந்திய ரூபாயில் 5000) கொடுத்தார். ஹாலிவுட் நடிகையாக இருப்பவர் பாரிஸ் ஹில்டன். கோடீஸ்வரியான இவர், தனியாக அலங்கார பொருட்கள் உள்ளிட்ட பல தொழில்களில் செய்து வருகிறார். இந்தியாவில் தனது பொருட்களை பிரபலப்படுத்து நோக்கோடு மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார்.\nஇந்நிலையில் மும்பையின் அந்தேரி பகுதியில் சிக்னலுக்காக பாரிஸ் ஹில்டன் கார் நின்று கொண்டிருந்தது. அப்போது கைக்குழந்தையுடன் ஒரு பெண், ஹில்டனின் கார் கண்ணாடி‌யை தட்டி பிச்சை கேட்டுள்ளார். உடனே ஹில்டன் 100 டாலரை கொடுத்துள்ளார். 100 டாலர் என்பது கிட்டத்தட்ட இந்திய மதிப்பில் ரூ.5000 ஆகும். இந்தியாவில் உள்ள வறுமை நிலையை பற்றி தனது டுவிட்டரில், இந்தியா மிகவும் அழகான நாடு. ஆனால் சில பகுதிகள் வறுமைக் கொடுமை உள்ளது. தெருவில் படுத்துத் தூங்கும் குழந்தைகளைப் பார்த்து என் இதயம் உடைந்துவிட்டது என்று மிகவும் வேதனைபட்டுள்ளார். மேலும் பாலிவுட்டில் இருந்து நடிக்க இரண்டு ஆஃபர்கள் வந்துள்ளதாகவும், வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் இந்தியிலும் நடிப்பேன் என்றும் கூறியுள்ளார்.\nRe: மும்பையில் கைக்குழந்தையுடன் பிச்சை கேட்ட பெண்ணுக்கு ரூ.5000 கொடுத்த பாரிஸ் ஹில்டன்\n@ரேவதி wrote: தன்னுடைய பிசினஸ் விஷயமா மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ள ஹாலிவுட் நடிகை பாரிஸ் ஹில்டன், மும்பை சிக்னலில் தன்னிடம் பிச்சை கேட்ட பெண்ணுக்கு 100 டாலர் (இந்திய ரூபாயில் 5000) கொடுத்தார். ஹாலிவுட் நடிகையாக இருப்பவர் பாரிஸ் ஹில்டன். கோடீஸ்வரியான இவர், தனியாக அலங்கார பொருட்கள் உள்ளிட்ட பல தொழில்களில் செய்து வருகிறார். இந்தியாவில் தனது பொருட்களை பிரபலப்படுத்து நோக்கோடு மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார்.\nஇந்நிலையில் மும்பையின் அந்தேரி பகுதியில் சிக்னலுக்காக பாரிஸ் ஹில்டன் கார் நின்று கொண்டிருந்தது. அப்போது கைக்குழந்தையுடன் ஒரு பெண், ஹில்டனின் கார் கண்ணாடி‌யை தட்டி பிச்சை கேட்டுள்ளார். உடனே ஹில்டன் 100 டாலரை கொடுத்துள்ளார். 100 டாலர் என்பது கிட்டத்தட்ட இந்திய மதிப்பில் ரூ.5000 ஆகும். இந்தியாவில் உள்ள வறுமை நிலையை பற்றி தனது டுவிட்டரில், இந்தியா மிகவும் அழகான நாடு. ஆனால் சில பகுதிகள் வறுமைக் கொடுமை உள்ளது. தெருவில் படுத்துத் தூங்கும் குழந்தைகளைப் பார்த்து என் இதயம் உடைந்துவிட்டது என்று மிகவும் வேதனைபட்டுள்ளார். மேலும் பாலிவுட்டில் இருந்து நடிக்க இரண்டு ஆஃபர்கள் வந்துள்ளதாகவும், வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் இந்தியிலும் நடிப்பேன் என்றும் கூறியுள்ளார்.\nஅந்த டாலர்-ஐ அந்த பெண் எக்ஸ்சேஞ்ச் செய்தாரா\nRe: மும்பையில் கைக்குழந்தையுடன் பிச்சை கேட்ட பெண்ணுக்கு ரூ.5000 கொடுத்த பாரிஸ் ஹில்டன்\nமதுரைப்பக்கம்லாம் வரமாட்டாங்களா இந்த அம்மா\nRe: மும்பையில் கைக்குழந்தையுடன் பிச்சை கேட்ட பெண்ணுக்கு ரூ.5000 கொடுத்த பாரிஸ் ஹில்டன்\nஅதுசரி அவர் 5000 கொடுத்ததை யார் போட்டோ எடுத்து இருப்பார்கள்......\nRe: மும்பையில் கைக்குழந்தையுடன் பிச்சை கேட்ட பெண்ணுக்கு ரூ.5000 கொடுத்த பாரிஸ் ஹில்டன்\n@Manik wrote: மதுரைப்பக்கம்லாம் வரமாட்டாங்களா இந்த அம்மா\nநீ இருக்குறது தெரிஞ்ச பிறகும் அவங்க அங்க வருவாங்களா பாஸ் \nRe: மும்பையில் கைக்குழந்தையுடன் பிச்சை கேட்ட பெண்ணுக்கு ரூ.5000 கொடுத்த பாரிஸ் ஹில்டன்\nடிராபிக் சிக்னலில் பணம் கொடுத்ததை அந்த இடத்தில் வந்து யார் போட்டோ எடுத்து இருப்பாங்க..... புகழை வாங்கிக்கொள்ள அவர்களே செய்யும் செயல்....\nஇருந்தும் 100 டாலர் கொடுத்தது சந்தோஷம் தான்....\nRe: மும்பையில் கைக்குழந்தையுடன் பிச்சை கேட்ட பெண்ணுக்கு ரூ.5000 கொடுத்த பாரிஸ் ஹில்டன்\n@உமா wrote: டிராபிக் சிக்னலில் பணம் கொடுத்ததை அந்த இடத்தில் வந்து யார் போட்டோ எடுத்து இருப்பாங்க..... புகழை வாங்கிக்கொள்ள அவர்களே செய்யும் செயல்....\nஇருந்தும் 100 டாலர் கொடுத்தது சந்தோஷம் தான்....\nஅவர் 5000 கொடுத்து அதை 5000000 முறை சொல்லி காமிப்பார்.......\nநம் நாட்டின் மனம் எப்படியெல்லாம் போகுது\nRe: மும்பையில் கைக்குழந்தையுடன் பிச்சை கேட்ட பெண்ணுக்கு ரூ.5000 கொடுத்த பாரிஸ் ஹில்டன்\n@Manik wrote: மதுரைப்பக்கம்லாம் வரமாட்டாங்களா இந்த அம்மா\nநீ இருக்குறது தெரிஞ்ச பிறகும் அவங்க அங்க வருவாங்களா பாஸ் \nஅதான் வர்ர வழியிலேயே நீ அவங்கள மடக்கிருவியே அதான் பயந்துட்டு வராம இருந்திருப்பாங்க\nRe: மும்பையில் கைக்குழந்தையுடன் பிச்சை கேட்ட பெண்ணுக்கு ரூ.5000 கொடுத்த பாரிஸ் ஹில்டன்\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nRe: மும்பையில் கைக்குழந்தையுடன் பிச்சை கேட்ட பெண்ணுக்கு ரூ.5000 கொடுத்த பாரிஸ் ஹில்டன்\nஎப்படி எல்லாம் விளம்பரம் தேடிக்கிறாங்கப்பா\nஇருந்தாலும் அவர் செய்த உதவி அந்த ஏழை பெண்ணுக்கு சரியான முறையில் பயன் அளித்து இருந்தால் நண்மைதான்\nRe: மும்பையில் கைக்குழந்தையுடன் பிச்சை கேட்ட பெண்ணுக்கு ரூ.5000 கொடுத்த பாரிஸ் ஹில்டன்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.eegarai.net/t83527-16", "date_download": "2018-04-26T13:02:46Z", "digest": "sha1:VAPSUWCVWOKJO44IYUJ2EW2BA47SV7BW", "length": 15568, "nlines": 190, "source_domain": "www.eegarai.net", "title": "16 நாட்களில் எட்டுப் பாடல்கள் – கவுதம் மேனனுக்கு இளையராஜா தந்த இன்ப அதிர்ச்சி!", "raw_content": "\nருசியான ஊறுகாய்கள் - அரு /அரை நெல்லிக்காய் தொக்கு \nஅரை நெல்லிக்காய் - அரை நெல்லிக்காய் தொக்கு \nஎச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி\nஉடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்\nஎனக்குள் ஒரு கவிஞன் SK\nஉலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி\nபராமரிப்பு பணி முடிந்தது பழநி கோயில் வின்ச் சேவை துவக்கம்: பக்தர்கள் மகிழ்ச்சி\nபாலகுமாரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக\nஅறிமுகம்---- வாலி மோகன் தாஸ்\n2 மணி நேரம் பொறுக்க முடியாதா கஸ்தூரி..\nஎதுக்காக உன் காதலியை கிணத்துல தள்ளிவிட்டே...\nஅமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி\nநிலக்கரியை விட கருப்பாக இருக்கும் கிரகம் கண்டுபிடிப்பு\nகவர்ச்சி நடிகைகிட்ட பிடிச்சது, அவரோட நடிப்பு...\nஏப்ரல் 30-ம் தேதி வைகை ஆற்றில் இறங்குகிறார் கள்ளழகர்\nகோயில்களுக்கு செல்ல குழந்தைகளை கண்டிப்பாக பழக்குங்கள்.....\nஇந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'\nஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்\nஉப்புமா சாப்பிடுவது மோன நிலை...\nநீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு\n‘சிற்றெறும்பு கட்டெறும்பு’ - கமல்ஹாசன், அமைச்சர் ஜெயக்குமார் வார்த்தை ஜாலத்தால் ஒருவருக்கொருவர் கிண்டல்\nஉ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்\nகண்மணி வார நாவல் 25.04.2018\nதிகில் மன்னன் ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக\nதாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து\nபலாத்காரத்துக்கு ஆளாகும் ஆண் குழந்தைகளுக்கும் இழப்பீடு'\nஇந்தியர்களை பாதிக்கும் ‘எச்-4’ விசா ரத்து நடவடிக்கைக்கு அமெரிக்க எம்.பி.க்கள் எதிர்ப்பு, ஐ.டி. துறையும் கண்டனம்\n'பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்\n5,000 குஜராத் விவசாயிகள் தற்கொலைக்கு மனு\nவாழ்க்கையை ஓஹோன்னு வாழ கன்ஃபூசியஸ் சொன்ன 10 கட்டளைகள்...\nஇரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு\nரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது: மக்கள் மன்ற மாநில செயலாளர் பேச்சு\n2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்: ஜூன் 16-ம் தேதி இந்தியா-பாக். மோதல்\nசுப்ரீம் கோர்ட் எதிர்காலம்: ஆலோசிக்க நீதிபதிகள் கோரிக்கை\nநாடு முழுவதும் 24 போலி பல்கலை.,கள்\nகாங்., கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக்கறை: சல்மான் குர்ஷித் சர்ச்சை\n16 நாட்களில் எட்டுப் பாடல்கள் – கவுதம் மேனனுக்கு இளையராஜா தந்த இன்ப அதிர்ச்சி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\n16 நாட்களில் எட்டுப் பாடல்கள் – கவுதம் மேனனுக்கு இளையராஜா தந்த இன்ப அதிர்ச்சி\nநடுநிசி நாய்களுக்குப் பிறகு சிதைந்துபோன கவுதம் மேனன் இமேஜ், நீதானே என் பொன்வசந்தம் பட அறிவிப்பு, இளையராஜா இசை என்றெல்லாம் அறிவிப்புகள் வந்த பிறகு, கம்பீரத்துக்கு திரும்பியிருக்கிறது.\nசமீபத்தில் எந்தப் படப் பாடல்களுக்கும் இல்லாத எதிர்ப்பார்ப்பு நீதானே என் பொன்வசந்தம் படத்துக்கு உருவாகியுள்ளது.\nசரி, இளையராஜா அப்படி என்னதான் இந்தப் படத்தில் விசேஷமாக செய்திருக்கிறார்…\nசமீபத்திய தனது பேட்டியொன்றில் இப்படிச் சொல்லியிருந்தார் கவுதம்:\n‘‘ஒவ்வொரு படம் தொடங்கும்போதும் ‘இதுக்கு ராஜா சார்தான் மியூஸிக்’னு யோசிப்பேன். ஆனா, அமையாது. இந்தப் படத்துக்கு கண்டிப்பா அவர்கிட்ட கேட்கலாம்னு தைரியம் வந்துச்சு. அவரைச் சந்திக்க அப்பாயின்மென்ட் வாங்கும்போதுகூட என்ன விஷயம் பேசப்போறேன்னு சொல்லவே இல்லை.\n‘நான் ஒரு படம் பண்றேன். ஏற்கெனவே 50 சதவிகிதம் ஷூட்டிங் முடிஞ்சிருச்சு. இதுதான் கதை. இந்த மாதிரி மியூஸிக் வேணும்’னு சொல்லி, ஷூட் பண்ணின போர்ஷனைப் போட்டுக் காட்டினேன். எல்லாத்தையும் உள்வாங்கிட்டு பிரமாதமான டியூன்கள் தந்தார். ஒரே நாள்தான்… எனக்குத் திக்குமுக்காடிடுச்சு ‘சார்… என்னால இவ்வளவு விஷயங்களையும் மனசுல ஏத்திக்க முடியலை. மீதியை நாளைக்கு வெச்சுக்கலாம்’னு சொன்னேன்.\n‘ஒரு விஷயம் நல்லா நடக்கும்போது பிரேக் பண்ணாதீங்க’ன்னார்.\n‘சார்… நீங்க கொட்றீங்க. என்னால முடியலை’னு சொல்லிச் சமாளிச்சேன். ‘இளையராஜா ஒரு பாடலை உருவாக்கும்போது, நாம கூட இருக்கிறதே பெரிய கொடுப்பினை’னு என்கிட்ட ஒரு ஸ்டார் நடிகர் சொன்னார். அது நூத்துக்கு நூறு உண்மை\n‘உங்க மெலடி எனக்கு வேணும். புது சவுண்ட், புது ட்ரீட்மென்ட்ல தரணும்’னு போய் நின்னேன். எல்லா பாட்டுக்கும் ஹார்மோனியத்தில் டியூன் போட்டு அதுக்கு நா.முத்துக்குமாரை வரிகள் எழுத வைச்சு, எந்த இசைக் கருவிகளின் ஒலிக்கோர்ப்பும் இல்லாம பாடவெச்சு பதிவு பண்ணோம். அந்தக் குரலை மட்டும் லண்டன் எடுத்துட்டுப் போய் ஹங்கேரியில் இருந்து வரவைச்ச சிம்பொனி ஆர்கெஸ்ட்ரா மூலம் பதிவு பண்ணோம்.\nபடத்தில் மொத்தம் எட்டுப் பாடல்கள். ஒரு பாட்டுக்கு இரண்டு நாள்னு கிட்டத்தட்ட 16 நாள்ல மொத்த ஒலிப்பதிவும் முடிஞ்சிருச்சு. மூணு வாரத்துல எல்லா பாடல்களும் ஷூட்டிங்கிற்கு ரெடி. இதுவும் ஒரு புது அனுபவம்தான்\nஎட்டுப் பாட்டும் சூப்பர் ஹிட்டாகட்டும்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vanakkammalaysia.com/cinema/64-indian-cinema/14477-2018-04-04-02-57-50", "date_download": "2018-04-26T13:25:02Z", "digest": "sha1:RCM6MFCGPJGNJUR26ZXNQ5NWJXZI3YLL", "length": 14583, "nlines": 274, "source_domain": "www.vanakkammalaysia.com", "title": "கணவருடன் ரஷ்யாவில் குடியேறுகிறார் நடிகை ஸ்ரேயா", "raw_content": "\nமலையாளப் பாடல் திறன் போட்டி: அனைவரும் பங்கேற்கலாம்\n1 எம்.டி.பி தலைமை நிர்வாக அதிகாரி அருள் கந்தா அரசியல் பிரவேசமா\nதேர்தல் அதிகாரிகள் பற்றிய போலித் தகவலை நம்பாதீர் \nகேவியசின் ராஜினாமா; தே.மு.விற்கு எவ்வித பாதிப்பும் இல்லை\nகடந்த தேர்தலை விட கூடுதலான வெற்றி: வாய்ப்பு பிரகாசம்\nவெளிநாட்டு வாக்காளர்கள்:வாக்குச் சீட்டுகளை எப்படி அனுப்புவீர்கள்\nரோஸ்மாவின் பிறந்தநாள் கேக்: அது போலிச் செய்தி\nகெந்திங் சாலையில் பேருந்து தீக்கிரை\nமஇகாவிலிருந்து காயத்ரி ரகுமூர்த்தி முற்றாக விலகல்\nமணமகன் பலி: திருமணப் பரிசாக வெடிகுண்டு பார்சல் அனுப்பிய கல்லூரி ஆசிரியர் கைது\nஐஸ்வர்யா ராய் ஓரங்கட்டப் படுவது ஏன்\nமழலைக் குரலில் ரசிகர்களை வசீகரித்த பாடகி எம்.எஸ். ராஜேஸ்வரி காலமானார்\nசிறுமி பலாத்காரம்: பிரபல சாமியார் ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் சிறை\nஇந்திய நாடாளுமன்றத்திலும் பாலியல் தொல்லையா\nஅக்சய் குமாரின் படப்பிடிப்பு தளத்தில் குண்டு வெடித்து கோரத் தீ விபத்து\nபாலியல் வழக்கில் பிரபல சாமியார் குற்றவாளி -இந்திய நீதிமன்றம் தீர்ப்பு தீர்ப்பு\nஎஸ் வி சேகருக்கு அடைக்கலம் தந்த கிரிஜா வைத்தியநாதன் மீது வழக்கு\nதமிழ் நடிகருக்கு 50 கோடி சம்பளமா\nபாலஸ்தீனர் ஸ்தாபாக்கில் சுட்டுக் கொலை: கொலையாளிகளின் படங்கள் வெளியீடு\nஅர்சனல் குழுவின் 22 ஆண்டு கால நிர்வாகி அர்செனி வெங்கர் விலகுகிறார்\n'இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி'யில் வடிவேலு நடிக்க மறுத்தது ஏன்\nகற்பழிப்புக்கு மரண தண்டனை ஒன்றே தீர்வு- வரலட்சுமி ஆவேசம்\nசினிமா வேலைநிறுத்தம்: சொந்த ஊரில் ஆடு மேய்க்கும் நடிகை\nகணவருடன் ரஷ்யாவில் குடியேறுகிறார் நடிகை ஸ்ரேயா\n விஜய் சேதுபதி மீது விஷாலின் நடவடிக்கை பாயுமா\nஏங்க, எத்தனை தடவை சொல்றது, 'மாட்டேன்., மாட்டேன். ' -சத்யராஜ் மகள் திவ்யா\nகமலுக்கு செம அதிர்ச்சி தந்த ஹாலிவுட் தயாரிப்பாளர் நோலன்\nகணவருடன் ரஷ்யாவில் குடியேறுகிறார் நடிகை ஸ்ரேயா\nPrevious Article சினிமா வேலைநிறுத்தம்: சொந்த ஊரில் ஆடு மேய்க்கும் நடிகை\nNext Article ஏங்க, எத்தனை தடவை சொல்றது, 'மாட்டேன்., மாட்டேன். ' -சத்யராஜ் மகள் திவ்யா\nமும்பை, ஏப்ரல்.4- அண்மையில் ரஷ்யாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஆண்ட்ரேவ் கோஷ்சேவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகை ஸ்ரேயா, கணவருடன் ரஷ்யாவில் குடியேறத் திட்டமிட்டுள்ளார்.\nதமிழ்- தெலுங்கு ஆகிய மொழிப் படங்களில் நடித்தவர் ஸ்ரேயா. இவர் 2003 ஆம் ஆண்டில் \"எனக்கு 20 உனக்கு 18\" படத்தில் அறிமுகமானார். 'சிவாஜி' படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்து பிரபலமானார்.\n'மழை', 'திருவிளையாடல்', 'ஆரம்பம்',, 'அழகிய தமிழ் மகன்', 'தோரணை', 'குட்டி', 'ரவுத்திரம்' ஆகிய தமிழ் படங்களிலும் தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தார் ஸ்ரேயா.\nதற்போது தமிழில் அரவிந்தசாமியுடன் 'நரகாசுரன்' படத்தில் நடித்து முடிந்துள்ளார். இந்நிலையில் தனது நீண்ட நாள் காதலரை அண்மையில் திருமணம் செய்து கொண்டார்.\nகைவசம் வேறு திரைப்படங்கள் எதுவும் இல்லாலதால் சினிமாவுக்கு முழுக்கு போட்டு விட்டு கணவருடன் ரஷ்யாவில் குடியேறத் திட்டமிட்டு வருவதாக ஸ்ரேயா தெரிவித்துள்ளார்.\nPrevious Article சினிமா வேலைநிறுத்தம்: சொந்த ஊரில் ஆடு மேய்க்கும் நடிகை\nNext Article ஏங்க, எத்தனை தடவை சொல்றது, 'மாட்டேன்., மாட்டேன். ' -சத்யராஜ் மகள் திவ்யா\nமலேசிய கோடீஸ்வரரை தரக் குறைவாக பேசுவதா அமைச்சர் நஸ்ரிக்கு மசீச கடும் கண்டனம்\nம.இ.காவுக்கு 7 எம்பி, தொகுதிகள் மட்டுமே கோத்தராஜா - கேமரன்மலை கைநழுவுகிறதா\n9 நாடாளுமன்ற வேட்பாளர்கள் யார் யார்\n6 எம்.பி. தொகுதிகளில் மஇகா போட்டி\nஇந்திய தொழிலதிபரான ''டத்தோஶ்ரீ'யுடன் புகைப்படம்: பதிலடி தந்தார் லிம் குவான்\nமலையாளப் பாடல் திறன் போட்டி: அனைவரும் பங்கேற்கலாம்\n1 எம்.டி.பி தலைமை நிர்வாக அதிகாரி அருள் கந்தா அரசியல் பிரவேசமா\nதேர்தல் அதிகாரிகள் பற்றிய போலித் தகவலை நம்பாதீர் \nகேவியசின் ராஜினாமா; தே.மு.விற்கு எவ்வித பாதிப்பும் இல்லை\nகடந்த தேர்தலை விட கூடுதலான வெற்றி: வாய்ப்பு பிரகாசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://jmmedia.lk/2017/04/10/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE-%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2018-04-26T13:38:25Z", "digest": "sha1:LQQJ42CBVAJ3EH6ATMUWF6LQRDIWCD6E", "length": 2877, "nlines": 51, "source_domain": "jmmedia.lk", "title": "ஜென்ம வோட்டை தொடர் திகில் நாவல் – JM MEDIA.LK", "raw_content": "\nகடுகண்ணாவ கற்குகைக்கு தற்காலிகமாக பூட்டு\nஇறப்பர் தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்து தொடர்பில் தொழிற்சாலையின் முகாமையாளர் கைது\nவட கொரியாவுக்கு ரகசிய பயணம் : மைக் பாம்பேயோ\nபௌத்தகுருமாருக்கு வாக்குறுதி வழங்கிய பிரதமர்\nஜென்ம வோட்டை தொடர் திகில் நாவல்\nஞாயிற்று கிழமைகளில் ……. உள்ளங்களை அதிரவைக்கும் திகில் நாவல்…… உங்களுக்காய் வர காத்திரருக்கிறது.\n← பாபர் அஷாம் சதம் : தொடரை சமப்படுத்தியது பாகிஸ்தான்\nமாவனல்லை தள வைத்தியசாலையின் நுழைவாயிலை மறித்து ஆர்ப்பாட்டம் →\nஉயர்தரப் பரீட்சையில் நான் விட்ட தவறுகளை என் பாசச் சகோதரர்கள் விடக்கூடாது என்ற அவாவில் சில அறிவுரைகள்…\nதொழிலாளர்கள் ஆக விரும்பும் நாம் தொழில் அதிபர்களாக ஏன் உருவாக முடியாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://paattumix.blogspot.com/2010/09/blog-post_23.html", "date_download": "2018-04-26T13:22:54Z", "digest": "sha1:PRFRXJ3OF6B3EDMZAWET2WNLKQQ4D7DQ", "length": 6569, "nlines": 201, "source_domain": "paattumix.blogspot.com", "title": "Music Mix: பாட்டும் நானே பாவமும் நானே", "raw_content": "\nபாட்டும் நானே பாவமும் நானே\nபாட்டும் நானே பாவமும் நானே\nபாடும் உனை நான் பாடவைப்பேனே\nகூத்தும் இசையும் கூற்றின் முறையும்\nகாட்டும் என்னிடம் கதை சொல்ல வந்தாயோ\nஅசையும் பொருளில் இசையும் நானே\nஆடும் கலையின் நாயகன் நானே\nஎதிலும் இயங்கும் இயக்கமும் நானே (2)\nஎன்னிசை நின்றால் அடங்கும் உலகே…\nநான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே (2)\nஅறிவாய் மனிதா உன் ஆணவம் பெரிதா\nஉன்னருகில் வருகையில் உள்ளே ஓர் பரவசம்\nஉசிலம்பட்டி பெண்குட்டி முத்துப் பேச்சு\nஅம்மம்மா சரணம் சரணம் உன் பாதங்கள் ..\nஒன்னம் கிளி பொன்னாங் கிளி - கிளிசுந்தன் மாம்பழம்\nபாட்டும் நானே பாவமும் நானே\nஒரு நாள் போதுமா இன்றொரு நாள் போதுமா\nநான் ஒரு குழந்தை நீ ஒரு குழந்தை\nகுழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று\nகுறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை..\nபொன்னாரம் பூவாரம் கண்ணோரம் சிருங்காரம்\nசிந்து நதிக்கரை ஓரம் அந்தி நேரம்\nசோலை புஷ்பங்களே.. என் சோகம் சொல்லுங்களே\nஎன்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பேரும் என்னடி\nஏ ஐய்யாசாமி அட நீ ஆளக்காமி\nபொங்கலு பொங்கலு வெக்க மஞ்சள மஞ்சள எடு\nபச்ச மலைப் பூவு நீ உச்சி மலைத் தேனு\nகண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி\nநாத வினோதங்கள் நடன சந்தோஷங்கள்\nவெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே\nஉன்னிடம் மயங்குகிறேன் உள்ளத்தால் நெருங்குகிறேன்\nபூவே செம்பூவே உன் வாசம் வரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "http://puthu.thinnai.com/?p=6194", "date_download": "2018-04-26T13:34:46Z", "digest": "sha1:DINHFB3MMBQUJFKPVXDQKRPRIG3X34RG", "length": 9115, "nlines": 109, "source_domain": "puthu.thinnai.com", "title": "கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கோடாரியில் தகர்ப்பாய் ! (கவிதை -52 பாகம் -1) | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கோடாரியில் தகர்ப்பாய் (கவிதை -52 பாகம் -1)\nஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ்\nதமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா\nஒளி ஊடுருவிச் செல்லும் —\nSeries Navigation கவிதைகள்: பயணக்குறிப்புகள்கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) திருமணப் பாதையில் (கவிதை – 50 பாகம் -5)\nமலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை – 1\nதமிழ் பெண் கவிஞர்கள் – ஆங்கிலத்தில் – ஆதி மந்தியார் முதல் உமா மஹேஸ்வரி வரை\nஅர்ஜண்ட் வெயிட் லாஸ்.. ஒரு யாத்ரா டிக்கட் ப்ளீஸ்..\nபழமொழிகள் கூறும் உதவி எனும் வாழ்க்கை நெறி\nஜென் ஒரு புரிதல் – பகுதி 19\nஇதுவும் அதுவும் உதுவும் – 5\nஇந்திய அணுமின்சக்தித் தொழில் நுட்பம் முதிர்ச்சி யானதா அணுவியல் இயக்குநர் முதிர்ச்சி பெற்றவரா \nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கோடாரியில் தகர்ப்பாய் (கவிதை -52 பாகம் -1)\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) திருமணப் பாதையில் (கவிதை – 50 பாகம் -5)\nபஞ்சதந்திரம் தொடர் 18 சமுத்திரமும் நீர்க்குருவியும்\nதமிழ் விக்கிப்பீடியா ஒரு ஊடகப் போட்டி\nதோள்களில் அமர்ந்திருக்கும் மரணத்தின் தூதுவன்\nமுகம்மது யூனுஸ் அறிஞர் அண்ணாவை ஹாங்காங்கில் சந்தித்தது பற்றிய உரை\nபிரான்சு கம்பன் கழகத்தின் 10 -ஆம் ஆண்டு விழா\nநானும் பிரபஞ்சனும் கட்டுரை குறித்து சில கருத்துகள்:\nமுன்னணியின் பின்னணிகள் – 14 சாமர்செட் மாம்\nமூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 16\nPrevious Topic: தமிழ்ப் பற்றும் திராவிடப் பம்மாத்தும்\nNext Topic: கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) திருமணப் பாதையில் (கவிதை – 50 பாகம் -5)\nAuthor: சி. ஜெயபாரதன், கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.nallanews.com/2018/02/blog-post_10.html", "date_download": "2018-04-26T12:56:42Z", "digest": "sha1:EFJRKNIMYED7SJS6Y7DJEQDM2WQHUVCJ", "length": 7180, "nlines": 34, "source_domain": "www.nallanews.com", "title": "கூகுள் நிறுவனத்தை அடிபணிய வைத்த தமிழ் கூகுளில் இனி தமிழில் எழுதி சம்பாதிக்க முடியும் - Nalla News - Health Tips, Beauty Tips, Entertainment, Cinema, Other News and Video Blog", "raw_content": "\nHome / Entertainment / facebook / Indian News / Tamil Nadu / World News / கூகுள் நிறுவனத்தை அடிபணிய வைத்த தமிழ் கூகுளில் இனி தமிழில் எழுதி சம்பாதிக்க முடியும்\nகூகுள் நிறுவனத்தை அடிபணிய வைத்த தமிழ் கூகுளில் இனி தமிழில் எழுதி சம்பாதிக்க முடியும்\nகூகுள் நிறுவனத்தை அடிபணிய வைத்த தமிழ் மொழி\nகூகுள் நிறுவனத்தின் ஆட்சென்ஸ்(AdSense) மூலமாக பலர் blog எழுதி அதன் மூலமாக சம்பாதித்து வருகிறார்கள் இதுவரை ஆங்கிலத்தில் எழுதினால் மட்டுமே அவர்கள் அதற்க்கு விளம்பரங்களை தந்து கொண்டு இருந்தனர் இந்த நிலையில் நேற்று கூகுள் ஒரு அறிவிப்பை வெளிவிட்டது அதில் இனி தமிழ் மொழியில் எழுதினாலும் ஆட்சென்ஸ் (AdSense) மூலமாக விளம்பரங்கள் பெற்று சம்பாதிக்கலாம் என்பது தான் அந்த அறிவிப்பு.\nஆட்சென்ஸ் (AdSense) என்றால் என்ன\nஆட்சென்ஸ் (AdSense) என்பது ஒரு விளம்பர நிறுவனம் இது பல நிறுவனங்களில் இருந்து விளம்பரங்கள் பெற்று அவற்றை கூகிள் மூலமாக விளம்பரம் செய்கிறார்கள்\nநாம் எழுதும் blog மற்றும் இணையதளங்களில் இந்த விளம்பரங்கள் கூகிள் மூலம் ஒளிபரப்பப்படும் நமது இணையதளத்துக்கு வரும் நண்பர்கள் அந்த விளம்பரங்களை கிளிக் செய்வதால் ஒரு தொகை கூகிள் நிறுவனத்துக்கு கிடைக்கும்\nஅப்படி நம் மூலமாக அவர்களுக்கு கிடைக்கும் தொகையில் ஒரு பகுதியை அவர்கள் நமக்கு கொடுக்கிறார்கள் இதன் மூலமாக பல இணையதள எழுத்தாளர்கள் வருமானம் பெற்று வருகிறார்கள்\nஇது நாள் வரை ஆங்கிலம் மற்றும் இந்திய மொழிகளில் ஹிந்தி மொழிகளில் எழுதும் இணையதளங்களுக்கு மட்டுமே இந்த ஆட்சென்ஸ் (AdSense) நிறுவனம் விளம்பரங்கள் ஒளிபரப்ப அனுமதி வழங்கி வந்தது இந்த நிலையில் நேற்று தமிழ் மொழியையும் ஆட்சென்ஸ் (AdSense) நிறுவனம் அங்கீகரித்தால் தமிழி இணையத்தளம் எழுதும் நண்பர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளார்கள்.\nமேலும் இந்த அறிவிப்பால் தமிழ் மொழி இணைய உலகில் மேலும் ஒரு படி பல மடங்கு வளர்ச்சி பெரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.\nஆட்சென்ஸ் (AdSense) அனுமதி பெற விதிமுறைகள்\nஇதுவரை ஆட்சென்ஸ் (AdSense) விளம்பரம் பெறுவதற்கு எந்த விதிமுறை இருந்ததோ அதே விதிமுறைகள் தமிழ் மொழிக்கும் பொருந்தும்\nநீங்கள் எழுதும் கருத்துக்கள் உங்களின் சொந்த கருத்தாக இருக்க வேணும் மேலும் வேறு எந்த இணையதளத்திலும் இருந்து கருத்துக்களை எடுத்து உங்களது இணையத்தில் போட்டால் உங்களுக்கு ஆட்சென்ஸ் (AdSense) அனுமதி வழங்காது\nமேலும் நீங்கள் குறைந்தது ஆறு மாதங்களாவது உங்களின் இணையதளத்தை நடத்திக்கொண்டு இருக்க வேண்டும்\nஉங்களின் இணையத்தில் ஆபாச படங்கள் ஆபாச கருத்துக்கள் எதுவும் இடம் பெறகூடாது அப்படி நீங்க போட்டால் உங்களின் ஆட்சென்ஸ் (AdSense) அனுமதி ரத்து செய்து விடுவார்கள்\nமேலும் தகவல்களுக்கு ஆட்சென்ஸ் (AdSense) தளத்தில் உள்ள விரிவான தகவல்களை படித்து பார்த்து அதன்படி செயல் பட்டால் நீங்களும் கண்டிப்பாக ஆட்சென்ஸ் (AdSense) மூலமாக அதிக வருமானம் பெறலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://jmmedia.lk/2016/06/05/an-opportunity-to-live-telecast-ifthar-events/", "date_download": "2018-04-26T13:39:14Z", "digest": "sha1:MFJDXYDOXVP2V2IPZAUEL3MFLWNHGWZY", "length": 3195, "nlines": 53, "source_domain": "jmmedia.lk", "title": "இப்தார் நிகழ்வுகளை நேரடியாக ஒளி / ஒலிபரப்ப ஓர் சந்தர்ப்பம். – JM MEDIA.LK", "raw_content": "\nகடுகண்ணாவ கற்குகைக்கு தற்காலிகமாக பூட்டு\nஇறப்பர் தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்து தொடர்பில் தொழிற்சாலையின் முகாமையாளர் கைது\nவட கொரியாவுக்கு ரகசிய பயணம் : மைக் பாம்பேயோ\nபௌத்தகுருமாருக்கு வாக்குறுதி வழங்கிய பிரதமர்\nஇப்தார் நிகழ்வுகளை நேரடியாக ஒளி / ஒலிபரப்ப ஓர் சந்தர்ப்பம்.\nஉங்கள் ஊரில் நடைபெறும் இப்தார் நிகழ்வுகளை நேரடியாக துதி எப்.எம் ஊடாகவும் JM MEDIA முகநூல் பக்கத்தினூடாகவும் உலகம் முழுவதும் ஒலி / ஒளிபரப்ப ஓர் அரிய சந்தர்ப்பத்தை ஜெ.ம் மீடியா நிறுவனம் வழங்குகிறது.\nமுன் பதிவுகளுக்கும் மேலதிக தகவல்களுக்கும்\n← கின்னஸ் சாதனை: ஜப்பானில் 96 வயதில் பல்கலைக்கழகப் பட்டம் பெற்ற முதியவர்\nபாடசாலைகள், அரச நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை →\nஇலவச ஒரு நாள் ஊடகச் செயலமர்வு\nஇலவச MEDIA TIPS ஊடக செயலமர்வு\nகதீஜதுல் குப்ரா மகளிர் கல்லூரி புதிய : மாணவியர் அனுமதி 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://indrayavanam.blogspot.com/2013/07/blog-post_9.html", "date_download": "2018-04-26T13:14:21Z", "digest": "sha1:P63MWE7GPV5XCOWWR6VGMQ67JETJEIHV", "length": 28573, "nlines": 138, "source_domain": "indrayavanam.blogspot.com", "title": "புத்தகயா குண்டுவெடிப்பும் - புத்தரின் போதி மரமும்....", "raw_content": "\nபுத்தகயா குண்டுவெடிப்பும் - புத்தரின் போதி மரமும்....\nஅமைதியை போதித்த புத்தரின் வழிபாட்டுதளத்தில் குண்டுவெடிக்க செய்து என்ன சாதிக்கப்போகிறார்கள் தீவிரவாதிகள். வாழ்க்கையின் துன்பங்களுக்கு விடைகான வந்தவரின் நினைவிடத்தில், அதுவும் புத்தருக்கு ஞானம் கிடைத்த போதிமரத்தின் அடியிலேயே குண்டுகளை வெடிக்க செய்திருக்கிறார்கள். மதம் மனிதர்களை நல்வழிப்படுத்த உருவாக்கப்பட்டது. ஆனால் தற்போது அழிவுபாதையில் செல்கிறது.குண்டுவெடிப்பு நிகழ்ந்த புத்தகயா பற்றி சில தகவல்கள்.....\nஉலக மதங்கள் அனைத்தும் ஆசியா கண்டத்தில் இருந்துதான் தோன்றின. அவற்றில் புத்தமதம் இந்தியாவில் இருந்து தோன்றியதாகும். புத்தமதத்துக்குரிய நான்கு புண்ணியத் தலங்களில் மூன்று இந்தியாவில் உள்ளன. மற்றொன்று நேபாளத்தில் உள்ளது. கபிலவஸ்து நகருக்கு அருகில் உள்ள லும்பினி அவருடைய பிறந்த இடம். புத்த கயா அவர் ஞானம் பெற்ற இடம். சாரநாத் அவருடைய முதல் பிரசங்கம் நடந்த இடம். குஷிநகர் அவர் இறந்தபின் மகாபரிநிர்வாணம் அடைந்த இடம். இவற்றில் லும்பினி மட்டும் நேபாளத்தில் உள்ளது. இந்த நான்கு இடங்களில் புத்த கயா மிகவும் முக்கியமானதாக கூறப்படுகிறது. பாட்னாவில் இருந்து 112 கிலோ மீட்டர் தொலைவில் புத்த கயா உள்ளது. இந்துக்களின் புனித தலம் என்று கூறப்படும் கயாவில் இருந்து 13 கி.மீ தொலைவில் புத்த கயா உள்ளது. இரண்டையும் வேறுபடுத்தி கூறுவதற்காக இதை புத்தகயா என்று கூறுவார்கள். கபிலவஸ்து அரசரின் மகனாக வளர்ந்த சித்தார்த்த கௌதமர் மனித வாழ்வின் அவலங்களை தெரிந்து கொண்ட பின் அவற்றுக்கான காரணங்களை அறிய அரண்மனையில் இருந்து வெளியேறினார். அவர் இன்றைய பீகாரில் உள்ள புத்த கயாவில் உள்ள ஒரு அரசமரத்தின் அடியில் ஞானம் பெற்றார் என்று கூறப்படுகிறது.போதி மரத்தை நமது பகுதிகளில் அரசமரம் என்று அழைப்பார்கள். ஞானம் பெறுவதற்கு முன் இவர் வீடுகளில் பிச்சையெடுத்து சாப்பிட்டு வந்துள்ளார். அவரை அடையாளம் கண்டு கொண்ட மகத பேரரசர் பிம்பிசாரர் தன்னுடைய அரியணையை அவருக்கு தருவதாக கூறியதாகவும், கௌதமர் அதை மறுத்து விட்டு கயா நோக்கி சென்றதாகவும் கூறப்படுகிறது.மௌரிய வம்ச பேரரசர் அசோகர் புத்தர் ஞானம் பெற்ற மரத்தைச் சுற்றி ஒரு கோவிலை கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் கட்டினார். புத்தர் குஷிநகரில் மகாபரிநிர்வாணம் அடைந்து கிட்டத்தட்ட 300 ஆண்டுகள் கழித்து இந்த கோவில் கட்டப்பட்டது. கி.மு.566 முதல் 486 வரையிலானஆண்டுகளை புத்தரின் காலம் என்று வரலாறு கூறுகிறது. பின்னர் அந்த கோவில் மறுகட்டுமானம் செய்யப்பட்டது. தற்போதைய கட்டிடம் குப்தர்கள் காலத்தில் (கி.பி.6ம் நூற்றாண்டு) கட்டப்பட்டது. ஐந்து மற்றும் ஏழாம் நூற்றாண்டுகளில் இந்தியாவுக்கு வந்த பாஹியன், யுவான் சுவாங் ஆகிய சீன பயணிகள் போதி மரம் பற்றியும் அதை சுற்றி அமைக்கப்பட்டிருந்த் வேலி பற்றியும் குறிப்பிட்டுள்ளார்கள்.\n13ம் நூற்றாண்டு வரை வழிபாடு நடத்தப்பட்ட வந்த கோயில் பின்னர் பயன்படுத்தப்படாமல் இருந்துவிட்டது. அக்கால கட்டத்தில் புத்த மதம் தனது செல்வாக்கை இழந்து விட்டது. 19ம் நூற்றாண்டில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இதன் மீது கவனம் செலுத்தினார்கள். 1861ம் ஆண்டில் பிரிட்டிஷ் தொல்பொருள் ஆய்வாளர்கள் மகாபோதி வளாகத்தில் ஆய்வுகளை நடத்தி மீண்டும் கோயிலுக்கு உயிர் கொடுத்தனர். 55 மீ உயரமுள்ள இந்த கோயில் இந்தியாவில் உள்ள செங்கற்களால் ஆன மிகப்பழமையான புத்த ஆலயமாகும். கோயில் மட்டும் 5.5 ஏக்கரில் அமைந்துள்ளது. போதி மரம் உள்ளிட்ட ஆறு புண்ணியத் தலங்கள், கோயில் ஆகியவை பன்னிரண்டு ஏக்கருக்கு மேற்பட்ட பரப்பில் உள்ளன. பரந்துபட்ட இந்த இடத்துக்கும், அதில் உள்ள கட்டிடங்கள் அனைத்துக்கும் ஐ.நா.வின் யுனிசெப் அமைப்பு 2002ம் ஆண்டில் உலக பாரம்பரிய அந்தஸ்து அளித்துள்ளது. இந்த கோயிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் சிறப்பு சட்டத்தின் கீழ் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்த கோயில் வளாகம் பீகார் அரசுக்கு சொந்தமானது. 1949ம் ஆண்டில் பீகார் அரசு புத்த கயா கோயில் சட்டத்தை நிறைவேற்றியது. நாட்டில் இருக்கும் பிறமதங்களின் சிறப்பு மிக்க இடங்களுக்கு உரிமை கொண்டாடுவதை வழக்கமாக கொண்ட இந்து மத அடிப்படைவாதிகள் இந்த வளாகத்துக்குள்ளும் ஒரு சிவன் கோவிலை கட்டிவிட்டு அதை நிர்வகிக்கும் உரிமையையும் கேட்டு சச்சரவை எழுப்பினர். அதையடுத்து இச்சட்டத்தை பயன்படுத்தி மாநில அரசு 1953ம் ஆண்டில் ஐந்து இந்துக்களையும், நான்கு புத்தமதத்தவரையும் கொண்ட ஒரு குழுவை அமைத்து கோவிலை பரிபாலித்து வருகிறது. இதன் தலைவராக மாவட்ட ஆட்சித்தலைவர் இருப்பார். சிறுபான்மையினர் தேசிய ஆணையம் இக்கோவில் உள்ளிட்ட வளாகத்தின் நிர்வாக உரிமைகளை\nபுத்தமதத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது. ஆனால் பல ஆண்டுகளாக இப்பரிந்துரைகளை நிறைவேற்ற அரசுகள் மறுத்து வருகின்றன.இந்த கோவில் வளாகத்தில் உள்ள போதிமரம் புத்தர் ஞானம் பெற்ற மரத்தின் சந்ததிதான். கி.மு.2ம் நூற்றாண்டில் அரசர் புஷ்யமித்ரா சுங்காவும், கி.பி. 600ம் ஆண்டில் அரசர் சசாங்காவும் மரத்தை வெட்டி விட்டு அதன் கிளையை அங்கு ஊன்றி புதிய மரத்தை உருவாக்கியுள்ளனர். தான் ஞானம் அடைந்த மரத்தின் முன் நின்று கண்கொட்டாமல் புத்தர் ஒரு வாரம் தியானம் செய்துள்ளார். அந்த இடத்தில் ஒரு கோவில் கட்டப்பட்டுள்ளது. 1881ம் ஆண்டில் அங்கிருந்த மரம் பட்டுவிட்டதால், பிரிட்டிஷ் ஆய்வாளர் ஒருவர் பட்டமரத்தை அகற்றி விட்டு புதிய மரத்தை நட்டுள்ளார்.இந்த மரத்தின் கீழ்தான் பயங்கரவாதிகள் குண்டுகளை வெடிக்கச்செய்துள்ளனர். வெடிவிபத்தால் மரத்துக்கு சேதமில்லை என்று செய்திகள் கூறுகின்றன. இந்தியாவின் பன்முகக் கலாச்சாரத்தை இவர்களால் அழிக்க முடியாது என்பதை உறுதியுடன் கூறுவோம்\nஉங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்\n//உலக மதங்கள் அனைத்தும் ஆசியா கண்டத்தில் இருந்துதான் தோன்றின. // அப்படியா \n9 ஜூலை, 2013 ’அன்று’ முற்பகல் 11:33\nஅன்பை போதித்த ஆத்மாவின் காலடியிலேயே குண்டு. பலே பலே உலகத்தை அழிச்சுக்குற நாள் அருகில்தான்...\n9 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 12:41\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\nராஜராஜ சோழன் எந்த சாதிக்காரன்\nமன்னர் ராஜராஜ சோழன் எங்க சாதிகாரன்..இல்ல..இல்ல எங்க சாதிக்காரன் என குத்துவெட்டு நடந்து கொண்டிருக்கிறது. பசும்பொன் முத்துராமலிங்கம், கட்டபொம்மன், வ.உ.சிதம்பரம் போன்ற சுதந்திர போராட்ட வீரர்களை சாதித்தலைவர்களாக மாற்றிவிட்டார்கள் சாதி வெறியர்கள். இப்போது 1000 ஆண்டுகளுக்கு முந்தைய மன்னர்களையும் இவர்கள் விடுவதாக இல்லை\nதஞ்சையில் கடந்த 10, 11 தேதிகளில் ராஜராஜசோழனின் 1028வது சதய விழா (பிறந்த நாள்)அரசு விழாவாக மிக கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. 11ந் தேதி மாவட்ட ஆட்சியர் தலைமையில் சதய விழாக்குழுவினர் ஊர் வலமாக வந்து பெரிய கோவில் அருகிலுள்ள ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதற்கு பின்பு இதுவரை இல்லாத மிகவும் கேலிக்கூத்தான நிகழ்ச்சிகள் நடந்தேறின.\nஇலங்கை கதிர்காமம் முருகன் கோவில் போல் மதுரை புளியம்பட்டியில் ஒரு கோயில்\nஎம்.ஜி.ஆர்.,எஸ்.எஸ்.ஆர்.,உள்ளிட்ட நாடகக்கலை உலகின் பிரபலமானஜாம்பவான்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்த மதுரை ஸ்ரீ பரமானந்தா ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியின் நிறுவனரான நாடகச்செல்வர் பி.கா.சுப்பாரெட்டியாரால் இலங்கை கண்டி கதிர்காமத்திலுள்ள முருகன் கோவில் போல் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி.கல்லுப்பட்டி பகுதி புளியம்பட்டி கிராமத்தில் கட்டப்பட்டுள்ள ஸ்ரீ கதிரேசப்பெருமான் கோவிலில் நடைபெறும் ஆடிப்பவுர்ணமி நாளன்று பூஜையில் கலந்து கொண்டு வழிபட்டால் ஆயுசு பெருகும் அதிசயங்கள் நடக்கும் என்று பக்தகோடி பெருமக்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி.கல்லுப்பட்டி பகுதியில் புளியம்பட்டி எனும் சின்னஞ்சிறிய கிராமம் உள்ளது.இந்த கிராமத்தில் கடந்த 1890-ம் ஆண்டு ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்து பிற்காலத்தில் நாடக உலகத்தையே தன்னோக்கி பார்க்க வைத்தவர் பி.கா.சுப்பா ரெட்டியார்.கல்வி கற்றிடாத கிராமவாசியான இவருக்கு நாடகத்துறையின் மீது ஏற்பட்ட அளவுகடந்த பற்றின் காரணமாக 1925-ம் ஆண்டு சில குழந்தைகளை தன்னகத்தே சேர்த்துக் கொண்டு ஓர் நாடகக் கம்பெனியை புளியமாநகரில் நிறுவினார்.பின்னர் ஸ்ரீலஸ்ரீ மஹா…\nடி.கல்லுப்பட்டி அருகே முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் பிராமி எழுத்துக்கள் கண்டுபிடிப்பு\nமதுரை மாவட்டம்,பேரையூர் தாலுகா, டி.கல்லுப்பட்டி அருகேயுள்ள கவசக்கோட்டை கிராமத்தில் தமிழரின் தொன்மை சிறப்புகளை கண்டறியும் நோக்கில் பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் முதல் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறித்த கருப்பு சிவப்பு வண்ணமுடைய பானை ஓடுகள்,எலும்பு துண்டுகள்,முதுமக்கள் தாழி,தானிய களஞ்சியம்,குறியீடுடைய உடைந்த மண்கலயம் போன்றவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nமதுரை மாவட்டம் பேரையூர் தாலுகாவில் பண்டைகாலத்து தமிழர்களின் வாழ்க்கைமுறை தொடர்பான பல்வேறு சான்றுகள் இன்றளவும் அழிந்திடாமல் உள்ளது.இந்நிலையில் தமிழரின் தொன்மையை கண்டறியும் நோக்கில் பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் ஆய்வாளர்களான\nமுனைவர்கள்.சி.மாணிக்கராஜ்,சி.செல்லப்பாண்டியன்,து.முனீஸ்வரன்,மு.கனகராஜ்,மு.லட்சுமணமூர்த்தி ஆகியோரை கொண்ட ஆய்வுக்குழு பேரையூர் தாலுகா டி.கல்லுப்பட்டி அருகேயுள்ள கவசக்கோட்டை கிராமத்தில் கள ஆய்வு மேற்கொண்டது.அப்போது கவசக்கோட்டை கிராமத்திலுள்ள அக்ரஹாரமேடு,பண்ணைமேடு ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட களஆய்வின்போது உடைந்த நிலையில் பெருங்கற்காலத்தைச் சார்ந்த …\nஅஜித்தின் விவேக மற்ற படம்...\nஅஜித்துக்கு நடிப்பு வராது...ஒரே மாதிரியான உடல் மொழி,பேச்சு,நடிப்பு சலிப்பு தட்ட கூடியது.இதிலும் அப்படித்தான். படம் முழுக்கவே இரைச்சல் .துவங்கியதிலிருந்தே துப்பாக்கி சத்தமும், கார்களின் மோதல், பறக்கும் கார்களின் காட்சிகள் இதுதான் படம் முழுக்கவே.நம்ப முடியாத கதை காட்சிகள்.இயக்குனர் தெலுங்கு பட இயக்குனர் போல தூக்கலான ஹீரோயிசம்,தத்துவங்கள் கொட்டும் பஞ்ச் டயலாக்.வில்லுனுக்கு வேலையே வஞ்ச புகழ்ச்சி அணியில் ஹீரோவை புகழ்வது தான்.\nபடம் சகிக்கல...இயக்குனர் ஒரு பேட்டியில் சொன்னார் அஜித் இன்டர்னேஷனல் ஸ்டார் ஆகிட்டார் .வெளிநாட்டில் படம் எடுத்தால் இன்டர்நேசனல் ஸ்டாரா.கொடும..கொடும...\nகதை சுருக்கம் சொல்கிறேன்...நம்ப முடிகிறதா என பாருங்கள் . அதற்கு மேல் படம் பார்த்து மாட்டிக்கொண்டால் நான் பொறுப்பல்ல.\nநீங்கள் வந்தீர்கள்;விசிட்டிங் கார்டு தருவது போல் பொக்கேயை வைத்தீர்கள்.ஓ.பி.எஸ்ஸைக் கட்டிப் பிடித்து கண்ணீரைத் துடைத்து விட்டீர்கள். சசிகலாவிற்கு ஆறுதல் சொன்னீர்கள்.கணேசன் உங்களுக்கு நடராஜரை அறிமுகப்படுத்தினார்.பிறகு, உங்களின் போன ஜென்மத்து சொந்தமான கேமராக்காரர்களை நோக்கி கைகளை ஆட்டினீர்கள்.எங்கள் MLA க்களெல்லாம் உங்களோடு கை குலுக்க குழந்தையைப் போல் ஓடி வந்தார்கள். சிக்கியவர்களோடு செல்ஃபியும் எடுத்துக் கொண்டீர்கள்.தேர்தல் முடிவு வந்ததைப் போல் பெருமிதத்தோடு கும்பிடு போட்டீர்கள். உங்கள் வித்தைகளின் அனா ஆவன்னாவைக் கூட அறிந்திராத ஓ.பி.எஸ் ஐ பக்கத்தில் நிற்க வைத்து போஸ் கொடுத்தீர்கள்.எங்களின் இப்போதைய முதலமைச்சர் உங்கள் பின்னால் ஒரு டிரைவரைப் போல் ஓடி வந்தார். கம்பெனி ஊழியரைப் போல் கருதி அவர் முதுகில் தட்டி விட்டு புறப்பட்டு விட்டீர்கள். ஏற்கனவே நிகழ்ந்து முடிந்த நாடகத்தின் இன்னொரு அத்தியாயம் இது என்பதைச் சொல்லாமல் சொல்லியிருக்கிறீர்கள் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2018-04-26T13:42:16Z", "digest": "sha1:NXSDZ32YZJFDNBHM4O4TBUDFF6RRHYXS", "length": 15582, "nlines": 98, "source_domain": "ta.wikipedia.org", "title": "திருநெல்வேலி எழுச்சி 1908 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(திருநெல்வேலியில் எழுச்சி இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nதிருநெல்வேலி எழுச்சி என்பது இந்திய விடுதலைப் போராட்டக் காலத்தில் ஆங்கிலேயர்களின் துப்பாக்கிக் குண்டுகளுக்கு நான்கு பேர் கொல்லப்பட்ட நிகழ்வைக் குறிப்ப்பதாகும். இந்நிகழ்வு 1908 ஆம் ஆண்டு மார்ச் 13 இல் நடந்தது.\n3 நினைவு நாள் நிகழ்வுகள்\nஇந்திய நாட்டின் விடுதலைப் போராட்டத்திற்காக நெல்லை மாவட்டத்திலிருந்து பூலித்தேவர், கட்டபொம்மன், சுந்தரலிங்கம், பாரதியார், வ.உ.சி, வாஞ்சிநாதன் உள்ளிட்ட விடுதலைப் போராட்ட வீரர்கள் ஊட்டிய நாட்டுப்பற்று உணர்வால் மக்களிடையே கொந்தளிப்பு, எழுச்சி ஏற்பட்டது. 1905 ஆம் ஆண்டு இந்தியா முழுவதும் சுதேசி இயக்க உணர்வு தீவிரமாக பரவியது. 1906 ஆம் ஆண்டு தூத்துக்குடி, கொழும்பு துறைமுகங்களுக்கு இடையே வாடகைக் கப்பல்களை இயக்கும் சுதேசிக்கப்பல் கம்பெனி துவக்கப்பட்டது. சுதேசி நிறுவனத்திற்கு நிதி திரட்ட வ.உ.சி உள்ளிட்டோர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர்.\n1908ம் ஆண்டு வ.உ.சி., சுப்பிரமணிய சிவா, பத்மநாப அய்யங்கார் ஆகியோர் பங்கேற்ற சுதேசி இயக்க பிரசாரக்கூட்டங்கள் நெல்லை, தூத்துக்குடியில் நடந்தன. அன்னிய நாட்டுப்பொருட்களை புறக்கணிக்கும்படி தலைவர்கள் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தனர். சுதேசிய உணர்வு மக்களிடம் தீவிரமாக பரவியதால் அக்காலக்கட்டத்தில் நெல்லையில் ஆங்கிலேயர்களுக்கு ஆதரவு அளித்தவர்கள் புறக்கணிக்கப்பட்டனர். குதிரை வண்டிக்காரர்கள், சலவை, சவரத்தொழிலாளர்கள் ஆங்கிலேயர்களுக்கு பணியாற்ற மறுத்தனர். சுதேசியத்துக்கு எதிராக பேசிய ஒரு வக்கீலுக்கு பாதி சவரம் செய்த நிலையில் சவரத்தொழிலாளி எழுந்து சென்ற பரபரப்பு சம்பவமும் நடந்தது. இதனால் ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு மக்கள் மீது வெறுப்பு இருந்தது.\nவிபின் சந்திரபால் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 1908 ஆம்-ஆண்டு மார்ச் 8 ஆம் தேதியை சுயராஜ்ய நாளாக விடுதலைப் போராட்ட வீரர்கள் கொண்டாடினர். நெல்லை தாமிரபரணி ஆற்றங்கரையில் தடையை மீறி விபின் சந்திரபால் விடுதலை விழா நடந்தது. தூத்துக்குடியில் விபின் சந்திரபால் விடுதலை விழாவை கொண்டாடிவிட்டு நெல்லைக்கு வந்த வ.உ.சி., சுப்பிரமணிய சிவா, பத்மநாப அய்யங்கார் 1908ம் ஆண்டு மார்ச் 12ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். இதன் எதிரொலியாக நெல்லை பகுதியில் கலவரம் மூண்டது.\n1908ம் ஆண்டு மார்ச் 13ம்-தேதி காலை நெல்லை பாலம் என அழைக்கப்பட்ட வீரராகவபுரம் தொடருந்து நிலையம் அருகேயுள்ள பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன. மக்கள் நடமாட்டம், போக்குவரத்து தடைப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் திரண்டு இந்துக்கல்லூரிக்குள் நுழைந்தனர். மாணவர்களை அழைத்துக்கொண்டு தெருக்களில் ஓடினர். கல்லூரி மூடப்பட்டது. கல்லூரி முதல்வர் உட்பட இருவர் தாக்கப்பட்டனர்.\nசி.எம்.எஸ்., கல்லூரிக்குள் புகுந்த கூட்டம், உதவிப்பேராசிரியரைத் தாக்கியது. கல்லூரி சேதப்படுத்தப்பட்டது. நெல்லை நகராட்சி அலுவலக கட்டடச்சுவர் இடிக்கப்பட்டது. அலுவலக ஆவணங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. அருகே இருந்த அஞ்சல் நிலையம் தீ வைக்கப்பட்டது. நகராட்சியின் மண்ணெண்ணைய் கிடங்கு சேதப்படுத்தப்பட்டது. முன்சீப் கோர்ட், காவல் நிலையம் தாக்கப்பட்டது.\nகலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். கோயில் பூசாரி, முஸ்லிம் இளைஞர் உட்படநால்வர் இறந்தனர். அதே நாளில் தூத்துக்குடியிலும் கலவரம் ஏற்பட்டது. காவலர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அடுத்த நாள் தச்சநல்லூரில் தெருவிளக்குகள், குப்பை, கழிப்பிட வண்டிகளை மக்கள் தீயிட்டு கொளுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அடக்குமுறையையின் மூலம் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர் ஆங்கிலேய ஆட்சியாளர்கள்.\nநெல்லையில் விடுதலை உணர்வுடன் மக்கள் நடத்திய எழுச்சிப்போராட்டத்தில் நால்வர் பலியான நிகழ்வு குறித்து பிரித்தானிய நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. சென்னை சட்டசபையில் விவாதம் நடந்தது. நகராட்சிக் கட்டிடம் சேதப்படுத்தப்பட்டதால் அப்போதைய நெல்லை நகராட்சி மன்றம் எழுச்சியை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றியது. கலவரத்தில் ஈடுபட்டதாக 53 பேர் கைது செய்யப்பட்டனர். வழக்கு விசாரணை துரிதமாக மேற்கொள்ளப்பட்டு 37 பேருக்கு சிறைத் தண்டனை கிடைத்தது. பொருட்சேதங்களுக்கு தண்டத்தீர்வை வசூலிக்கப்பட்டது.\nநெல்லையில் அனைத்துத்தரப்பு மக்களும் இணைந்து நடத்திய ‘திருநெல்வேலி எழுச்சி’ போராட்டம் பிற்காலத்தில் நடந்த பல போராட்டங்களுக்கு உந்துதலாக இருந்ததாக விடுதலைப் போராட்ட வரலாற்று ஆசிரியர்கள் கூறியுள்ளனர்.\n‘திருநெல்வேலி எழுச்சி’ நூற்றாண்டு விழா நெல்லையில் 2008 ஆம் ஆண்டு பல்வேறு அமைப்புகளால் கொண்டாடப்பட்டது. எழுச்சியை கண்டித்து முன்பு நிறைவேற்றப்பட்ட தீர்மானம் நெல்லை மாநகராட்சிக் கூட்டத்தில் திருத்தப்பட்டு எழுச்சிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.\nதிருநெல்வேலி எழுச்சி - 1\nதிருநெல்வேலி எழுச்சி - 2\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 செப்டம்பர் 2015, 01:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.jeyamohan.in/date/2017/01/01", "date_download": "2018-04-26T12:57:59Z", "digest": "sha1:LWFTF267U4S5CZPDBVQBVCUFYEV34HFC", "length": 10925, "nlines": 89, "source_domain": "www.jeyamohan.in", "title": "2017 January 01", "raw_content": "\nஅன்புடன் ஆசிரியருக்கு இந்த வருடத்தை உங்களுக்கு புத்தாண்டு வாழ்த்து சொல்லியபடியே தான் தொடங்கினேன். 2014 டிசம்பரில் முதற்கனல் வாசித்தேன். இந்த மூன்று டிசம்பர்களுக்கு இடையில் நான் வாசித்தவற்றை எண்ணிக் கொள்கிறேன். அதிலும் உங்களுடன் முறையான உரையாடல் தொடங்கியது கீதை உரையை கேட்ட பின்னே என்பதே ஒரு வித பெருமிதத்துடன் என்னால் உணர முடிகிறது. அதன் பிறகு வெய்யோன். வெண்முரசு நாவல் வரிசையில் எழுச்சியும் கொந்தளிப்புமாக வெகு அணுக்கமாக உணர்ந்த நாவல் வெய்யோன். அதன் பிறகு …\nஊட்டி நாராயணகுருகுலம்- ஓரு விண்ணப்பம்\nஊட்டி நாராயணகுருகுலத்தை நண்பர்கள் அறிந்திருப்பீர்கள். நித்ய சைதன்ய யதி இருந்த இடம். இப்போது சுவாமி வியாசப்பிரசாத் அவர்களால் பராமரிக்கப்படுகிறது.ஆண்டுதோறும் அங்குதான் குருநித்யா காவிய முகாம் நிகழ்கிறது. இவ்வாண்டும் ஏப்ரலில் நிகழ்த்துவதாக இருக்கிறோம். குருகுலம் முழுக்கமுழுக்க அறிவார்ந்த தத்துவவிவாதங்கள் மட்டுமே நிகழும் இடம்.பக்திமுறைகள்,மதச்சடங்குகள் ஏதுமில்லை. ஆகவே அதிக வருகையாளர்கள் இப்போது இல்லை. ஆனால் நிறைய கட்டிடங்கள் இருப்பதனால் பராமரிப்பு சற்று கடினம் குருகுலத்தைச் சுற்றி உயிர்வேலிதான் இருந்தது. ஆனால் சமீபமாக காட்டெருதுக்கள் உள்ளே வருகின்றன. நண்பர்கள் பலர் அவற்றைப் …\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 74\n[ 22 ] பன்னிருநாட்கள் அர்ஜுனன் கின்னரஜன்யர்களின் மலைச்சிற்றூர்களில் தங்கினான். அவன் காவலனாக அமைந்த வணிகக்குழு ஏழாகப் பிரிந்து ஏழு அங்காடிகளுக்கும் சென்றது. கின்னரர் கொண்டுவந்து அளித்துவிட்டுப்போன அருமணிகளில் சிறந்தவற்றை தாங்களே கொள்ளவேண்டுமென்ற போட்டி வணிகர்களிடையே இருந்தது. ஆகவே அவர்கள் கிளைகளாகப் பிரிந்து அத்தனை அங்காடிகளையும் நிறைத்துக்கொண்டனர். அத்தனை அங்காடிகளிலிருந்தும் கிளம்பிவந்து ஓரிடத்தில் சந்தித்து செய்தி மாற்றிக்கொண்டனர். கின்னரஜன்யர்களுக்கு அவற்றின் இயல்போ மதிப்போ தெரிந்திருக்கவில்லை. ஒளிவிடும் கற்கள் அனைத்தையும் அவர்கள் கொண்டுவந்து நீட்டினர். அவற்றில் பெரும்பான்மையும் எளிய …\nTags: அர்ஜுனன், கின்னரஜன்யர், பார்வதி\nதமிழ் ஆங்கில எழுத்துவடிவம்- ஒரு கேள்வி\nஇன்று பெற்றவை : எழுத்தாளனின் டைரி\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ - 5\nமின் தமிழ் இதழ் 3\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.penniyam.com/2012/01/blog-post_25.html", "date_download": "2018-04-26T12:55:03Z", "digest": "sha1:GZKMHBSKDIBHDJCY7NIDGSOHQIU4RCDY", "length": 44097, "nlines": 271, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: தவறான முகவரியிடப்பட்ட நாட்குறிப்பும் எனது நான்கு நாட்களும்..; - மயூ மனோ", "raw_content": "\nதவறான முகவரியிடப்பட்ட நாட்குறிப்பும் எனது நான்கு நாட்களும்..; - மயூ மனோ\nஇலையுதிர்காலத்தின் மாலைப் பொழுதுகளில் மழை பெய்வது வழமைதான் என்று தெரிந்துகொண்டே குடைகொண்டுவராமல் தெருவில் இறங்கிய என்னை என்ன செய்யட்டும். என் குடையை யாரோ இரவல் வாங்கிய நினைவு. யாரென்பதுதான் நினைவில்லை. எலிசபெத் ஆக இருக்கவேண்டும். அவர்தான் கால்நோவுக்கென்று பிசியோதெரபிக்கும் வீட்டுக்குமாக அலைந்து கொண்டிருக்கிறார். எலிசபெத் எங்கள் முதியோர் இல்லத்தில் வந்திணைந்த இந்த ஐந்தாறு வருடங்களில் அவர் இப்படி அவதிப்படுவது இதுவே முதல்முறை. நான் எல்லோருக்கும் சீனியர்; இந்த வருடம் மார்கழி வந்தால் பதினாறு வருடங்களாகப் போகின்றன. இப்படி ஒரு விடுமுறை காலத்தில்தான் வந்து சேர்ந்தேன். மகள் அமெரிக்காவும் மகன் ஆஸ்திரேலியாவுமாக சென்று சேர்ந்தபின் நானும் அவரும் இங்கிருந்து இரண்டு எட்டில் போய்விடக்கூடிய அந்தத் தொடர்மாடியில்தான் இருந்தோம். ஐப்பசி மாதம் போல இருந்தாப்போல அவரும் போனவுடன் என்னை வற்புறுத்தி இங்கே சேர்த்தது மகள்தான். வீட்டில் தனியே இருக்க பயம், தனிமை என்றெல்லாம் சொல்லிக் கொண்டுவந்து விட்டுவிட்டாள். அவள் சொன்னதும் நியாயந்தான். இங்க வந்த பிறகுதான் இப்படி என் வயதொத்தவர்களைக் காண முடிந்தது.\nஆனால் நான் ஒரு இளம் பெண்ணையும் இதன் பலனாய் சந்தித்தேன். என் நர்சிங் ஹோமிலிருந்து சிறு தொலைவில் இருந்தது அந்தக் கோப்பிக் கடை. கனடாவின் அடையாளங்களில் ஒன்று. எப்போதாவது அங்கு சென்று சூப் அல்லது ஏதாவது உணவுப் பதார்த்தங்கள் வாங்கி அங்கேயே அமர்ந்து அருந்திவிட்டு வருவது என் வழக்கம். அப்படியொரு நாளில்தான் அவளை நான் கண்டேன்.\nஅன்று அந்தக் கடையில் கூட்டமில்லை. நான் மட்டும் தான் அப்போது சாப்பாடு வாங்கப் போயிருந்தேன். சிலவேளைகளில் வரிசை நீண்டிருக்கும். ஏற்கனவே கடைக்கு வந்தவர்களில் என் வயதொத்த முதியவர்களும், சில மாணவப் பருவத்தவர்களும் அங்கங்கே அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்தனர். பொதுவாக இப்படியான கடைகளை சிலர் தங்கள் உத்தியோக சந்திப்பு அல்லது பிரத்யேக சந்திப்புக்கு வார இறுதிகளில் பயன்படுத்துவார்கள். அப்படியும் இரண்டு மூன்று பேரைக் காணக் கிடைத்தது. எனினும் மழை அடித்துப் பெய்யும் ஞாயிறு மாலை என்பதால் வழமையாக வரும் கூட்டத்தைக் காணக் கிடைக்கவில்லை. கடைக்குள் நிறைந்திருந்த மழைக் குளிரும், இயந்திரங்கள் பிறப்பிக்கும் செயற்கை வெப்பமும் சேர்ந்த மிதமான சூடு எனக்குப் பிடித்திருந்தது.\nகண்ணாடிக் கதவிலும், கண்ணாடி யன்னல்களால் கட்டப்பட்ட சுவர்களிலும் வழிந்தோடும் இந்த மழையை வேடிக்கை பார்த்தவாறு நிற்கும் அவளுக்கு வயது பதினேழு அல்லது பதினெட்டு இருக்கும். அவள் புதிதாகத்தான் வேலைக்கு சேர்ந்திருக்கவேண்டும். நான் ஒரு மாதம் மகள் வீட்டில் தங்கப் போனபோது வந்து சேர்ந்திருக்கலாம்.\n\"குட் ஈவினிங்.., உங்களுக்கு எவ்வாறு உதவ வேண்டும்\nஆயிரம் தடவைகள் மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டு அவளின் உணர்வின்றி வெளி விழும் வார்த்தைகள். ஒரு வித அவசரத்தில் வந்து விழுந்த ஆங்கில வார்த்தைகளின் உச்சரிப்புக்குள் அவளது சொந்த நாட்டைக் கண்டு பிடிக்க முற்பட்ட அறிவை நினைத்து சிறிதாய் புன்னகைத்தவாறே அவளை ஏறிட்டேன்.\nஅழகிய பெண்தான் அவள். திருத்தப்பட்ட புருவங்கள். நீண்ட மூக்கின் வலது பக்கத்தில் வெள்ளியிலான சிறு வளையம் அணிந்திருந்தாள். ரோஸ் நிற உதட்டுச் சாயத்துக்குள் துருத்திக் கொண்டு தெரிந்தது இடது மேலுதட்டிலிருந்த சிறு மச்சம். பல் ஒரு வித செம்மஞ்சள் நிறம். அவளது வேலைத்தளத்தின் சீருடையின் மேற்சட்டை பச்சையில் மண்ணிற சிறு கட்டங்களை கீறிய துணியில் தைக்கப்பட்டிருந்தது. மண்ணிற நீள் காற்சட்டை அணிந்திருந்தாள். அடர்ந்த சுருள் கூந்தலை கொத்தாகப் பிடரி அடியில் சேர்த்துக் கட்டியிருந்தாள். தலையில் போட்டிருந்த ஹேர் நெட்டின் துவாரங்களுக்கு உள்ளாகவும் அதன் மேல் அணிந்திருந்த தொப்பியை மீறியும் தலை முடி எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது. கன்னத்துப் பூனை முடிகள் தொப்பிக்குள் அடங்க மறுத்து சுருண்டு கிடந்தன.\n\"நன்றி, நீங்கள் இன்னும் உங்களுக்கு என்ன வேண்டுமென்று சொல்லியிருக்கவில்லை.\"\nஅப்படியே அவளுடன் பேசிக் கொண்டிருக்கவேண்டுமென்றும் தோன்றியது.\n\"உனக்குப் பிடித்த குக்கி வகை சொல்லு\nஅவளது புருவம் ஓரத்தில் நெளிந்தது. இப்படியான கேள்விகளும் அவளுக்குப் பழையவைதான். ஆயிரம் தடவைகள் இல்லாவிடினும் சில நூறு தடவைகள் கேட்கப்பட்டிருக்கக்கூடிய கேள்வி. கேட்டுச் சலித்த கேள்வியுங்கூட. இதழ்களைப் பிரிக்காமல் புன்னகைத்தாள். பிறகு யோசிப்பவளாகத் தலையை சாய்த்தவள் அப்படியே \"உங்கள் தெரிவு என்ன என்று வினாவினேன்.\n\"உனக்கு என்ன பிடிக்கும் என்று கேட்டேன்.\" அவள் சிறிதாய் புன்னகைத்துக் கொண்டு அப்படியே நின்றாள்.\n\"ம்ம்..கிறீம் மஷ்ரூம் சூப் இருக்கிறதா\n\"ஆம், அதனுடன் எதை விரும்புகிறீர்கள் சிறு பாண் அல்லது சீஸ் பிஸ்கட் சிறு பாண் அல்லது சீஸ் பிஸ்கட்\n\"சரி, வேறு ஏதாவது அருந்த விரும்புகிறீர்களா கோப்பி அல்லது ஜூஸ்\n\"இல்லை, ஒரு கப் தண்ணீர் தர முடியுமா\n\"நிச்சயம் தருகிறேன், நீங்கள் வீட்டுக்கு எடுத்துச் செல்லப் போகிறீர்களா\n\"இல்லை, இங்கிருந்து அருந்தப் போகிறேன்.\"\n\"நல்லது, உங்களது தொகை மூன்று டொலர்களும் எழுபத்திநான்கு சதங்களும்.\"\n\"இது உங்களது மீதிப்பணம். இந்தத் தட்டுகளில் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். இதோ நீங்கள் கேட்ட தண்ணீர். அந்தப் பகுதியிலிருக்கும் பெண்ணிடம் உங்கள் உணவைப் பெற்றுக் கொள்ளுங்கள். உங்கள் நாள் நல்லதாகட்டும்.\"\nஇந்த நீண்ட உரையாடலுக்குப் பின் அவள் களைத்துப் போனது போல தோன்றியது. முகத்தசைகளூடு ஒரு ஆயாசம் பரவித் தணிந்தது. அவள் அந்த உத்தியோகத்தில் திறம்பட இயங்குபவளாக இருந்தாள். நெடுநாளைய பயிற்ச்சியும், தொடந்த அனுபவங்களும், பல்வேறுபட்ட வாடிக்கையாளர்களை உபசரித்த பண்பும் அவள் முக பாவனைகளுக்கும், உதடு சிந்தும் மொழிக்கும், கைகளுக்கும் ஏன் உடலின் ஒவ்வொரு அசைவுகளுக்கும் ஒருவித அலட்சியத்தைத் தந்துவிட்டிருந்தது. அந்த அலட்சியம் அவளுடலில் ஒருவித அழகையும் கிளர்த்திவிட்டிருந்தது. கோப்பி சேகரிக்கப் பயன்படுத்தப்படும் கண்ணாடிக் கேத்திலை எடுத்து தண்ணீர்த் தொட்டியில் குழாயின் திருக்கை இரு விரல்களால் நெட்டித் தள்ளி ஓடும் தண்ணீரில் பிடித்து ஒரு சுற்று சுற்றிக் கழுவி மீண்டும் கோப்பியை சேகரிக்கும் இடத்தில் வைத்து கோப்பி தயாரிக்கும் இயந்திரத்தின் பொத்தானை அழுத்திவிட்டாள். பின் தாமதிக்காது ஏலவே பயன்படுத்திய பேப்பர் கப்களின் அளவுகளையும், கப் மற்றும் மூடிகளின் எண்ணிக்கைகளையும் மனதில் குறிப்பவள் போல அவற்றை உற்று நோக்கிவிட்டுத் திரும்பி அவை அடுக்கப்பட்ட தட்டிலிருந்து ஒவ்வொன்றாக எடுத்து அவற்றை மீள அடுக்கத் தொடங்கினாள். அவளின் செயற்பாடுகள் எல்லாமே அவளைப் பார்த்துக் கொண்டிருக்கவே சொல்லின. இவ்வாறு பலதரப்பட்ட வேலைகளை சில நிமிடங்களுக்குள் செய்துகொள்ளும் அவளது முகத்தில் எந்தவித உணர்சிகளும் இல்லை. சில நொடிகளுக்கு வந்து செல்வதாக நான் உணர்ந்த புன்னகையும் என் கற்பனைதானா உண்மையில் அழகிதான் அவள். அழகாக இருப்பதற்குத் தான் எடுத்துக்கொண்ட முயற்சிகள் எல்லாம் தன் அலட்சிய பாவத்தால் வெகு இயல்பாகவே அழகாகக் காட்டப்படுவதை அறிந்தோ அறியாமலோ புன்னகைக்கும் அழகி.\nநான் சூப்பைத் தட்டில் வைத்துக் கொண்டு அந்தப் பகுதியிலிருந்து நகர்ந்து கண்ணாடி யன்னலோரம் இருந்த மேசையொன்றில் தெருவையும் கடையின் வரவேற்புப் பகுதியையும் பார்ப்பதாக அமர்ந்து கொண்டேன். சூடான கிறீம் மஷ்ரூம் சூப்பை மழையையும் தெருவையும் வேடிக்கை பார்த்தபடி அருந்துவது அற்புதமாக இருந்தது. கிறீம் மஷ்ரூம் சூப் எனக்குப் பிடித்தமானது. இருந்துவிட்டு இப்படி வெளியில் வந்து சாப்பிடும்போது பலவேளைகளில் கிடைக்காது. எந்த சூப் எந்த நாள் கிடைக்குமென்று ஒரு அட்டவணை வைத்திருந்தார்கள். ஞாயிற்றுக் கிழமைகளில் இந்த சூப் கிடைக்குமென்று எனக்குத் தெரியும். அதுவும் சில வேளைகளில் தீர்ந்துவிடும்.\nஅவள் இப்போது கையுறையணிந்த கையில் நீல நிற ஈரத்துண்டோடு மேசைகள் இருந்த பக்கம் வந்து கொண்டிருந்தாள். ஏற்கனவே அமர்ந்து சாப்பிட்டவர்கள் விட்டுப் போன தட்டுக்களை எடுத்துக் கொண்டு சிந்தியிருந்த கோப்பி மற்றும் சாப்பாட்டு மிச்சங்களையும் துணியால் ஒதுக்கி வழித்துத் துடைத்து மேசையை சுத்தம் செய்தவாறே நகர்ந்து கொண்டிருந்தாள். அவளது கண்களும் கைகளும் கால்களும் ஒருவித துரித லயத்தில் இயங்கின.\n\"சூப் மிகவும் நன்றாக இருந்தது..\"\nஅவள் என் மேசையைத்தாண்டி சென்று மற்ற மேசைகளை சுத்தப்படுத்தி முடித்தாள். பின் துடைப்பத்தையும் ஷவலையும் எடுத்து வந்து அங்கங்கு சிந்திக்கிடந்த குப்பைகளை கூட்டியள்ளத் தொடங்கினாள். இந்த இளங்குமர்ப் பருவத்தில் இருக்கும் பெண்ணை நான் அறிந்து கொள்ளவேண்டுமென்று தோன்றியது. அவள் பருவங்களைத் தாண்டி வந்துவிட்ட எனக்கும் அவளுக்குமிடையே காலம் வருடங்களாக, இடங்களாக, நினைவுகளாக, கனவுகளாக மல்லாந்து கிடந்தது.\nமழை இப்போது லேசாகத் தூறிக் கொண்டிருந்தது. புதிதாக வருபவர்களின் காலணிகள் அள்ளி வரும் மண்ணையும், சேறையும் மீண்டும் மீண்டும் துடைக்க வேண்டி இருந்தது. அவள் சோர்வடையாதவளாக வெளி வருவதும் வாசல் பகுதியை ஈரத்துணி கொண்டு துடைத்துவிடுவதுமாக இயங்கிக் கொண்டிருந்தாள். அவளும் இன்னொரு பெண்ணுமே வேலை செய்துகொண்டிருந்ததால் இவளுக்கும் வேலை அதிகம் இருந்தது போலத் தோன்றியது.\nநான் கைதுடைத்த பேப்பரை குப்பைத்தொட்டிக்குள் போட்டுவிட்டு சூப் கோப்பையையும் கரண்டியையும் வெறுந்தட்டையும் குப்பைத்தொட்டிக்கு மேலே அவற்றின் இடத்தில் வைத்துவிட்டு பழைய இடத்திலேயே வந்தமர்ந்தேன். அவற்றை பௌஷிகா எடுத்துப்போனாள்.\nதலையும் வாலும் இல்லாமல் தொடங்கிய அந்த நாட்குறிப்பை இருபகலும் ஒரு இரவுமாய் வைத்துக் குழம்பிக் கொண்டிருக்கிறேன். இது பரிசாய்க் கிடைத்த நாட்குறிப்பு என்றால் நீங்கள் நம்புவீர்களா ஏன் நானே இன்னமும் நம்பவில்லை. உண்மையைச் சொல்லப் போனா எனக்கு முதலில அந்தப் பரிசை என்ன செய்வதென்றே தெரியவில்லை. நேற்றைக்கு முந்திய தினம் இரவு பதினொரு மணி வேலை தொடங்க என்று பத்து நாற்பதுக்கு கடைக்குப் போனால் கூட வேலை செய்யும் அரூஜ் தான் இதைக் கொண்டுவந்து தந்தாள். கூடவே ஒரு நமுட்டுச் சிரிப்பும். அவள் சிரித்தற்கும் காரணம் இருக்கு. நானும் இதுவரை யாருக்கும் பரிசு கொடுக்கிறதில்லை. யாரும் எனக்கும் தருவதில்லை. இதில வேற தினமும் மாலை கடைக்கு வரும், பக்கத்துப் பீட்சா கடையில் வேலை செய்யும் தமிழ் பெடியனை டேட்டிங் செய்யும்படி அரூஜ் அறிவுறுத்தத் தொடங்கிவிட்டிருந்தாள். அவள் அந்தப் பரிசு அவனிடமிருந்து வந்திருக்கலாம் என்று நினைத்து சிரித்ததில் தவறொன்றும் இல்லைத்தான்.\nசரி, இப்ப பரிசுக்கு வருவோம். பரிசென்றால் பெரிதாக ஒன்றுமில்லை, ஒரு நாட்குறிப்பு. கிறிஸ்மஸ் காலங்களில் நான் வேலை செய்யும் கடையின் வரவேற்புப் பகுதியில் ஒரு பையைத் தொங்கவிடுவோம். அதில் கிறிஸ்மஸ் தாத்தா பரிசைக் கொண்டுவந்து போடுவார் என்பது ஐதீகம். உண்மையில் அவர் போடுறதில்லை என்பது எனக்குத் தெரிவதுபோல உங்களுக்கும் தெரிந்திருக்கும். கூட வேலை செய்யும் யாராவது இல்லை நெடுங்கால வாடிக்கையாளர்களில் யாராவது தங்களுக்குப் பிடித்த பணியாட்களின் பெயரை மட்டும் எழுதி அவர்களைப் பற்றி எந்தவொரு குறிப்பும் இல்லாமல் அந்தப் பைக்குள் போட்டு விடுவார்கள். இதில் அவர்களுக்கும் பரிசைப் பெற்றுக் கொள்பவர்களுக்கும் ஒரு சந்தோசம். இந்தக் கோப்பிக் கடையில் வேலை செய்யத் தொடங்கிய இரண்டு வருடங்களில் எனக்குக் கிடைத்த முதலாவது பரிசு இதுதான். யார் எண்டு தெரியேல ஒரு டைரியைக் கொண்டு வந்து போட்டிருக்கினம். அதுவும் வெற்று டைரி என்றால் பரவாயில்லை. முழுக்க எழுதிய முடிந்துகொண்டிருக்கும் அந்த வருடத்துக்கான டைரி. முதலில திறந்து படிக்கக் கூடாது என்றுதான் நினைத்தேன். பிறகு படித்தால் என்ன என்று தொடங்கி இப்போது கீழே வைக்க முடியாத அளவுக்கு சுவாரஸ்யமானதாக ஆகிவிட்டிருந்தது. யாரோவொரு வயோதிபப் பெண்ணின் நாட்குறிப்பு. பௌஷிகா என்ற பெயரோடு எங்கள் வேலைத்தளத்தில் யாரும் இல்லை. அவர் சொல்லும் வர்ணனைகளுடனும் யாரையும் பொருத்திப் பார்க்க முடியவில்லை. அரூஜ் கொஞ்சம் பொருந்தி வருகிறாள். ஆனால் அவள் ஒரு நாளும் பகலில் வேலை செய்வதில்லை. அவளுக்கு வாரத்தில் ஐந்து நாட்கள் இரவு வேலை. நான் மாறி மாறி இரவும் வார இறுதிகளில் பின்னேரமுமாய் வேலை செய்வேன்.\nஎன்னால் அமைதியாக இருக்க முடியவில்லை. இதைப்பற்றி எனது மேலாளருக்கு சொல்ல நினைத்துவிட்டுப் பேசாமல் இருந்துவிட்டேன். அவரும் மற்றவர்களும் சேர்ந்து டைரியை வாங்கி நான்காய் கிழித்து குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கப் போய்விடுவார்கள் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். ஆக இதை ரகசியமாகவே வைத்துக் கொண்டேன். எனக்குப் பரிசு வந்திருந்த செய்தி பரவியிருந்ததால் சொந்தக் காசில் ஒரு டைரியை வாங்கி எனக்குக் கிடைத்த பரிசென்று காட்ட வேண்டியதாகப் போய்விட்டது. அதுவும் நல்லதுதான். இல்லாவிட்டால் இதை எழுதும் சந்தர்ப்பமும் எண்ணமும் வாய்த்திருக்காது. நான் எனது வேலை முடிய என் வீட்டுக்கு எதிர்த் திசையில் போகும் பஸ்ஸில் ஏறி அமர்ந்துகொண்டேன். மூன்று நிறுத்தங்கள் போனதும் ஒரு கோப்பிக் கடை வரும். அதுவும் எங்களுடையது போலத் தான். ஆனால் வேறு முதலாளி. அங்கு சென்று சேரவேண்டிய டைரி எனக்கு வந்து செர்ந்துவிட்டதோ என்ற சந்தேகம் எனக்குள் வலுப்பெற்றுவிட்டிருந்தது. கடைக்குள் நுழைந்து அங்குமிங்கும் பார்த்துவிட்டு ஒரு ஓரமாக அமர்ந்துகொண்டேன். கடையில் வரிசை வாசல் வரை முட்டிக் கொண்டு நின்றது. வேலையாட்கள் அங்குமிங்குமாய்ப் பாயாத குறையாக இயங்கிக் கொண்டிருந்தனர். இப்படிப் பாயாத குறையாக இயங்குவதற்கும் காரணம் இருக்கு. எவ்வளவு குறைந்த நேரத்தில் வாடிக்கையாளர் சேவையைப் பெற்றுக் கொள்கிறார் என்ற அடிப்படையிலேயே குறித்த கடையின் தரவரிசை மேம்படுத்தப்படும். தரவரிசையை மேம்படுத்த எங்கோ இருந்தவாறு நிறுவனமும், வீட்டிலிருந்தவாறு முதலாளியும், கடை அறைக்குள் இருந்தவாறு மனேஜரும், கூடவே நின்றவாறு மேலாளரும் பணியாட்களை நோண்டிக் கொண்டிருப்பார்கள். மாகாண அரசால் கட்டாயம் வழங்கப்பட வேண்டுமென்று அறிவிக்கப்பட்ட அடிப்படை சம்பளத்துக்குத்தான் இவ்வளவு பாய்ச்சலும்.\nஇபப்டி வேறு ஒரு கடையில் வந்து அமர்ந்து கொண்டு என்னைப் போல வேலை செய்யும் இன்னொரு மனித ஜென்மத்தைப் பார்த்துக் கொண்டிருப்பது எனக்கே சகிக்கவில்லை. ஆனால் வேறு வழியில்லை. கொஞ்சமாகக் கூட்டம் குறைந்தால் டைரியில் சொல்லப்பட்ட வர்ணனைகளுடன் ஒத்துப்போகும் பெண் இருக்கிறாளா இல்லையா என்பது தெரியும். ஏற்கனவே மூன்று பேரை லிஸ்டிலிருந்து எடுத்துவிட்டேன். வீட்டில் போய்த் தூங்கினால் நாளை இரவு வேலைக்கு வரும்போது களைப்பாக இருக்காது. ஆக வெட்டி வேலை செய்துகொண்டு இப்படி அமர்ந்திருப்பதைத் தவிர அந்தப் பரிசு எனக்கு ஒன்றையும் தரவில்லை. டைரியை அப்படியே குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டுப் போய்விடுவோம் என்றால் இன்னும் முடிக்காத பக்கங்களும், எனக்கு அனுமதிக்கப்படாத வேறொருவரின் டைரியைப் படித்துக் கொண்டிருக்கும் குற்றவுணர்ச்சியும் அப்படிச் செய்யாதே என்று சொல்லிக் கொண்டிருந்தன. நான் வரிசை காணாமல் போகும் வரை காத்திருக்கத் தொடங்கினேன்.\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (18) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1751) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nஎர்னெஸ்த்தோ ச்சே கெ’பாராவைக் கொலை செய்தல் - வசுமித...\nதவறான முகவரியிடப்பட்ட நாட்குறிப்பும் எனது நான்கு ந...\nயார் அந்த நாலு பேர்\n\"வாசிப்புத்தான் என்னை எழுத்துலகில் நிலைக்க வைத்திர...\nebay.in எதிர்ப்பு - மேலும் சில தகவல்கள்\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்ன...\nநாம் பேசிக்கொண்டிருந்தபோது பெய்திராத மழை - நூல் வெ...\nசில்க் ஸ்மிதா – ரூப் கன்வர்: ஒரு தற்கொலை\nஇந்திரா கோஸ்வாமி : அசாமியர்களின் மூத்த சகோதரி - யு...\nதவுஹீத் ஜமாத்தின் பொறுக்கி தளபதி பாசித் மரைக்காயர்...\nபாலியல் பாகுபாடு குறித்து விழிப்புணர்வு\nவிளிம்பு: விழிப்பும் விசாரணைகளும் - 39வது இலக்கிய...\nதாலி இல்லையா, இனி வீட்டுப் பக்கமே வராதே\nதமிழ் நாட்டில் ஆங்கில இலக்கியத்தின் நிலை..\nஇருளர் பெண்களை வன்புணர்ச்சி செய்த போலீஸ் வெறிநாய்க...\nபானுபாரதி - ஆண்மை கொல் - குட்டி ரேவதி\nஅஞ்சலி குப்தா: இந்திய விமானப்படையின் ஆணாதிக்கத்திற...\n\"உச்சிதனை முகர்ந்தால்\" திரைப்படமும் சில அவதானங்களு...\n'அம்மாவின் ரகசியம்' - மொழிபெயர்ப்பு நாவல் வெளியீட்...\nசேலையும் வேட்டியும் பெண்களும்தானா கலாசார சீரழிவின்...\nபெண்ணை கம்பத்தில் கட்டி வைத்து எரிக்கும் காட்சி (வ...\nநுகத்தடி (சிறுகதை) - கமலாதேவி அரவிந்தன்\nகவிதைக்குள் இருக்கும் உண்மைகள்.. -ஆர்த்தி வேந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.jainworld.com/JWTamil/jainworld/level1/lesson2.html", "date_download": "2018-04-26T13:26:11Z", "digest": "sha1:SBXVU6FTPL6FON4P43XIJOHQ42W4IKIE", "length": 2508, "nlines": 27, "source_domain": "www.jainworld.com", "title": " Jain Society of Greater Atlanta", "raw_content": "\nநான் காலையில் விழித்தவுடன் முதலில் - அமர்ந்து, கண்களை மூடி, மனத்தை ஒருங்கிணைத்து, கைகளை குவித்து பஞ்ச மந்திரத்தை ஐந்து முரை சொல்லுவேன்\nநமோ லோயே ஸவ்வ ஸாஹூணம்\nஏஸோ பன்ச நமோக்காரோ, ஸவ்வ பாபப் பனாஸனோ\nமங்களானன்ச ஸவ்வேஸிம், பதமம் ஹவயி மங்களம்.\nஅடுத்து, பின் வருவனவற்றை எனக்கு நானே நினைவுபடுத்திக் கொள்வேன்:\nஎல்லா உயிரினங்களையும் மதித்து நடப்பேன்.\n1) காலையில் எழுந்தவுடன் நாம் சொல்லும் மந்திரத்தின் பெயர் என்ன\n2) காலையில் நமக்கு நாமே நினைவுபடுத்திக் கொள்ளவேண்டியவை எவை\n3) இந்த எண்ணங்கள் நமக்கு எந்த விதத்தில் உதவுகின்றன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.sahabudeen.com/2014/09/blog-post_4.html", "date_download": "2018-04-26T12:57:39Z", "digest": "sha1:573C6OWTLPB6JMBPIOMHLA2DFNYEMYKP", "length": 37615, "nlines": 238, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: சுவர்க்கத்தின் நறுமணத்தைக் கூட நுகராத பெண்கள்!", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nசுவர்க்கத்தின் நறுமணத்தைக் கூட நுகராத பெண்கள்\n'அஞ்ஞானக் காலத்தில் (பெண்கள்) 'தபர்ருஜ்' செய்ததைப் போன்று நீங்கள் செய்யாதீர்கள்' என்று ஸூரத்துல் அஹ்ஜாப் மூலமாக இறைவன் கூறுகிறான்.'தபர்ருஜ்' என்பதற்கு மார்க்க அறிஞர்கள் பின்வருமாறு விளக்கம் தருகிறார்கள்.\n) நீங்கள் உங்கள் வீடுகளிலேயே தங்கியிருங்கள்; முன்னர் அஞ்ஞான காலத்தில் (பெண்கள்) திரிந்து கொண்டிருந்ததைப் போல் நீங்கள் திரியாதீர்கள்; தொழுகையை முறைப்படி உறுதியுடன் கடைப்பிடித்து தொழுங்கள்; ஜகாத்தும் கொடுத்து வாருங்கள். அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள்; (நபியின்) வீட்டையுடையவர்களே உங்களை விட்டும் அசுத்தங்களை நீக்கி, உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்கிவிடவே அல்லாஹ் நாடுகிறான். (33:33)\n'பெண்கள் தங்களின் அழகு மற்றும் அலங்காரங்களை அந்நிய ஆடவருக்கோ அல்லது மஹர்ரமற்றவர்களுக்கோ (திருமணம் செய்ய ஆகுமான உறவினர்கள் மற்றும் பிறர்) வெளிக்காட்டுவதும், பொது இடங்களில் மேக்கப்புடன் தங்களை அலங்கரித்துக் கொண்டு தோன்றுவதும், அந்நிய ஆண்களின் இச்சையைத் தூண்டும் வேறு எந்த விதமான காரியங்களைச் செய்வது தபர்ருஜ் ஆகும்'\nதபர்ருஜ் செய்வதனால் விளையும் தீமைகள்:-\nஇமாம் அத்தாபி அவர்கள் தங்களின் 'அல் கபாயிர்' (பெரும் பாவங்கள்) என்ற நூலில் கூறுகிறார்கள்: 'பெண்கள் சபிக்கப்படுவதற்கான மற்ற விஷயங்களில் மறைத்துள்ள தங்களுடைய அலங்காரத்தை வெளிக்காட்டுவதும், வெளியே செல்லும்போது வாசனை திரவியங்கள் உபயோகிப்பதும், வண்ணமயமான அல்லது சிறிய வெளிப்புற ஆடை அணிவதும் அடங்கும். தபர்ருஜ் என்பது இது அனைத்தையும் உள்ளடக்குகின்றது. மேன்மைக்குரிய அல்லாஹ் தபர்ருஜையும் அதைச் செய்யும் பெண்களையும் வெறுக்கிறான்'\nஉமையா பின்த் ருகையா (ரழி) அவர்கள் இஸ்லாத்தைத் தழுவுவதற்காக நபியவர்களிடம் வந்தபோது அன்னார் அவருக்குப் பின்வருமாறு அறிவுறுத்தினார்கள்: 'நீர் அல்லாஹ்வுக்கு எதனையும் இணைவைக்கக்கூடாது, திருடக் கூடாது, விபசாரத்தில் ஈடுபடக் கூடாது, நீர் உமது குழந்தைகளைக் கொல்லக் கூடாது, அவதூறு கூறலாகாது, ஓலமிட்டு அழுது புலம்பக் கூடாது, நீர் ஜாஹிலிய்யத்தில் போல 'தபர்ருஜ்' எனும் அழகையோ கவர்ச்சியையோ வெளிக்காட்டக் கூடாது.' (அஹ்மத்)\nஅல்லாஹ்வின் தூதரவர்கள் தபர்ருஜை ஷிர்க், விபச்சாரம், திருட்டு போன்ற மற்ற மோசமான செயல்களுடன் சமமாக்கி சொல்கின்ற அளவுக்கு தபர்ருஜ் மோசமானது.\nநாணம் (வெட்கம்) விலகின் ஈமானும் விலகிவிடும்:-\nஇஸ்லாம் வெட்கமெனும் பண்புக்கு கூடிய முக்கியத்துவம் அளிக்கிறது. 'ஒவ்வொரு மதத்திற்குமுரிய ஒரு விஷேட ஒழுக்கப் பண்பு உண்டு. இஸ்லாத்திற்குரிய ஒழுக்கப் பண்பு வெட்கமாகும் என்றார்கள் நபி (ஸல்) அவர்கள்.' (முவத்தா)\nவெட்கம் ஈமான் சார்ந்தது. ஈமான் சுவனத்திற்குரியது' என்பதும் ஒரு நபிமொழி. (திர்மிதி)\n'வெட்கமும் ஈமானும் ஒன்றோடொன்று இணைந்தவை. பின்னிப்பிணைந்தவை. இவற்றுள் ஒன்றை எடுத்துவிட்டால் மற்றதும் எடுபட்டு விடும்' என்ற ஹதீஸும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும். (ஹாகிம்)\nஇந்தளவு முக்கியத்துவம் வாய்ந்த வெட்க உணர்வு ஆண்களை விட பெண்களிடம் அதிகம் எதிர்ப்பார்க்கப்படுகிறது. அத்தகைய வெட்க உணர்வின் அடையாளமாகவும் வெளிப்பாடாகவும் இருப்பதே பெண்களுக்குரிய இஸ்லாமிய உடையாகும்.\nஆயிஷா (ரழி) அவர்கள் சொல்கிறார்கள்: 'ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களும் எனது தந்தையும் அடக்கம் செய்யப்பட்ட அறையினுள் நான் எனது மேலாடை இல்லாது பிரவேசிப்பது வழக்கமாக இருந்தது. அவர்கள் இருவரும் எனது கணவரும், தந்தையும் தானே என்ற கருத்திலேயே அப்படி நான் நடந்து கொண்டேன். எனினும் உமர் (ரழி) அவர்கள் அங்கு அடக்கப்பட்ட பின்னர் அதனால் எனக்கேற்பட்ட கூச்ச உணர்வின் காரணமாக நான் மேலாடையில்லாது அந்த அறையினுள் பிரவேசிப்பதில்லை.' (இப்னு அஸாகிர்)\nஅந்நிய ஆடவர் விடயத்தில் அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் எத்தகைய கருத்தை கொண்டிருந்தார்கள் என்பதை இச்சம்பவம் காட்டுகின்றது. மரணத்திற்குப் பின்னாலேயே அவர்கள் இப்படி நடந்து கொண்டார்கள் என்றால் உயிரோடிருப்பவர்களுக்கு முன்னால் எப்படி நடந்து கொண்டிருப்பார்கள் என்பதை ஊகிக்க முடியும்.\nஉண்மையில் அந்நிய ஆண்களுக்கு முன்னால் பெண்கள் இந்தளவு நாணத்துடனும் அடக்கமாகவும் நடந்து கொள்ளல் வேண்டும் என்பதே இஸ்லாமிய ஷரீஆவின் எதிர்;பார்ப்பாகும். மற்றொரு நபிமொழி இங்கு எமது சிந்தனைக்குரியதாகும்.\n'அல்லாஹ் நாணமிக்கவன். மிகவும் மறைந்திருக்கக் கூடியவன். அவன் வெட்கத்தையும், மறைப்பையும் விரும்புகிறான்.' (அபூதாவுத்)\nஇந்த ஹதீஸ் வெட்க உணர்விற்கும் மறைத்தலுக்கும் இடையே உள்ள இறுக்கமான தொடர்பை எடுத்துக்காட்ட போதுமானதாகும்.\nபர்தா ('ஹிஜாப்') அணிவதன் நோக்கம்:-\nஒரு பெண் பர்தா அணிவதன் நோக்கம், தன்னுடைய உடல் பாகங்களையும், தன்னுடைய அழகு அலங்காரங்களையும் மறைப்பது தான். ஆனால் அந்த பர்தாவே வண்ணமயமானதாகவும், கண்ணைக் கவரக்கூடியதாகும் இருப்பின், அதை அணிவதின் நோக்கத்தையே அர்த்தமற்றதாக்கி விடுகிறது. இதற்கெதிரானது 'தபர்ருஜ்' எனும் வட்டத்தில் அடங்கும்.\n'சிலவேளை ஒரு பெண் மற்றவரின் கவனத்தை ஈர்க்கும் எண்ணத்துடன் தலையை மூடும் துணியை பளிச்சிடும் பல வண்ண நிறத்தில் கவர்ச்சிகரமாக அணிந்தால் அதுவும் 'தபர்ருஜ்' எனும்\nதடை செய்யப்பட்ட கவர்ச்சிகாட்டலாகும்;' என மௌலானா மௌதூதி (ரஹ்) அவர்கள் தனது\nஅல்ஹிஜாப் எனும் நூலில் விளக்குகிறார்கள்.\nஅப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: 'பர்தாவானது அதற்குக் கீழுள்ள ஆடைகளை மறைத்திட வேண்டும். ஒரு முஸ்லிம் பெண்மணி தொழும்போது உபயோகிக்கும் உடையும் இவ்வாறே இருக்க வேண்டும். மெல்லிய, உள்ளே உள்ளவைகளை காண்பிக்கக்கூடிய உடைகள் ஆண்களை கிளர்ச்சிக்குள்ளாக்குகின்றன. மெல்லிய உடையை அணியும் பெண்கள் உடை அணிந்தும் அணியாதவர்கள் என நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.\nஉடை அணிந்தும் அணியாதது போன்ற பெண்கள்:-\nஇறுக்கமான அல்லது மெல்லிய உள்ளே உள்ளவைகளை காண்பிக்கும் அல்லது மறைப்பதை விட அதிகம் வெளிப்படுத்திக் காண்பிக்கும் உடைகளை அணிபவர்கள் உடை அணிந்தும் அணியாதது போன்றவர்களாவார்கள்.\nநபி (ஸல்) அவர்களால் சபிக்கப்பட்டவர்கள்:-\nநபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்: 'உடை அணிந்தும் அணியாதது போன்றும் ஒட்டகத்தின் மிதிலைப் போன்று தங்களின் தலையில் ஏற்படுத்திக் கொண்டு பெண்கள் என் சமுதாயத்தில் தோன்றுவார்கள். அவர்களை சபியுங்கள். அவர்கள் சபிக்கப்பட்டவர்கள் ஆவார்கள்' ஆதாரம்: தபரானி.\nசுவர்க்கத்தின் நறுமணத்தைக் கூட நுகராத பெண்கள்:-\nமற்றொரு நபிமொழியில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த பெண்களை (அதாவது மேற்கூறப்பட்ட பெண்களைக்) குறிப்பிட்டுக் கூறுகிறார்கள்: 'அவர்கள் சுவர்க்கத்தில் அனுமதிக்கப்பட மாட்டார்கள். மேலும், அதன் சுகந்தத்தைக் கூட நுகர மாட்டார்கள். அதன் சுகந்தமோ நீண்ட தூரத்திற்கு பரவக்கூடியதாகும். அதாவது அவர்கள் சுவர்க்கத்தை விட்டு மிக அதிக தொலைவில் இருப்பார்கள்' (ஸஹீஹ் முஸ்லிம்).\nபொது இடங்களுக்கு செல்லும்போது வாசனைத் திரவியங்களைப் பூசிக்கொண்டு பெண்கள் செல்லக்கூடாது:-\nபொது இடங்களுக்கு செல்லும்போது வாசனைத் திரவியங்கள் உபயோகிப்பதை ஒரு பெண் கண்டிப்பாக தவிர்ந்து கொள்ள வேண்டும். தங்கள் வீடுகளுக்கு அப்பால் வாசனைத் திரவியங்கள் உபயோகிப்பதை தடுக்கும் பல நபிமொழிகள் உள்ளன.\nஆண்மையைப் பறிக்கும் பெண்களின் ஆடைகள் \nபெண்கள் கவர்ச்சிகரமான ஆடைகள் அணிவதாலும், கவர்ச்சிப் பதுமைகளாக வலம் வருவதாலும் ஆண்களின் ஆண்மை பாதிக்கப்படுவதாய் ஒரு புதிய ஆராய்ச்சி தனது முடிவை வெளியிட்டிருக்கிறது.\nஅமெரிக்க ஆராய்ச்சியாளர்களின் இந்த ஆராய்ச்சி நீண்ட நெடிய முப்பது வருடங்கள் நடத்தப்பட்ட ஆய்வு என்பது குறிப்பிடத் தக்கது. அறுபது வயதுக்கு மேலான ஆண்களில் 60 விழுக்காடு பேர் புரோஸ்ட்ரேட் புற்று நோயால் தாக்கப்படுவதும், முப்பது வயதுக்கு மேற்பட்ட 35 விழுக்காடு ஆண்களிடம் இந்த புற்றுநோய் அறிகுறி மற்றும் ஆண்மைக்குறைவு இருப்பதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.\nரஷ்யாவின் லீனாய்ட் எனும் மருத்துவர் இது குறித்து கூறுகையில், நவீனப் பெண்களின் இத்தகைய ஆடைக் கலாச்சாரமும், வசீகரிக்கும் வனப்பை வெளிக்காட்டும் மோகமும், ஆண்களின் மனதில் பல்வேறு கிளர்ச்சிகளை ஏற்படுத்துவதாகவும், அவர்களுடைய ஏக்கங்களை அதிகரிப்பதாகவும், தாம்பத்திய வாழ்வின் திருப்தியைத் திருடிக் கொள்வதாகவும் பல்வேறு காரணங்களை அடுக்குகிறார்.\nஇப்படி பாலியல் ரீதியான கிளர்ச்சிக்கு ஆண்களை இட்டுச்செல்லும் பெண்களின் ஆடைப் பழக்கம் ஆண்களிடம் கனவுகளை வளர்த்தும், நிஜத்தை ஏற்றுக் கொள்ள முடியாத மனநிலைக்குத் தள்ளியும் அவர்களை மனம் மற்றும் உடல் சார்ந்த பல்வேறு நோய்களுக்கு இட்டுச் செல்கிறதாம்.\nஅரேபிய நாடுகளில் இத்தகைய சிக்கல்கள் மிகவும் குறைவு. முதலில் இதற்கு கால நிலையும், உணவுப் பழக்கவழக்கங்களே காரணம் என கருதப்பட்டது. ஆனால் அதே காலநிலை, உணவுப் பழக்கத்தில் மேலை நாட்டினரால் அரேபிய ஆண்களைப் போல இருக்க முடியவில்லை. இது ஆராய்ச்சியாளர்களை வெகுவாகக் குழப்பியிருக்கிறது. அந்த குழப்பம் அவர்களுடைய கவனத்தை பிற காரணிகளின் மேல் திரும்பியிருக்கிறது. உடலை முழுதும் மறைக்கும் ஆடை அணியும் கலாச்சாரத்தைக் கொண்டுள்ள பெண்கள் வாழும் அரேபிய நாடுகளில் இத்தகைய சிக்கல்கள் பெரும்பாலும் இல்லை என்பதனால் இதற்கும் ஆடைக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா எனும் யோசனை முளைத்திருக்கிறது.\nஅதன் பின்பே பெண்களின் ஆடைக்கும் ஆண்களின் ஆரோக்கியத்துக்கும் இடையேயான இந்த தொடர்பு தெரியவந்திருக்கிறது. தெருவிலும், பணித்தளங்களிலும், பொது இடங்களிலும் சந்திக்கும் பெண்களின் வசீகரிக்கும் தோற்றமும், உடைகள் மறைக்காத உடலின் பாகங்கள் தூண்டிவிடும் பாலியல் சிந்தனைகளும், ஆண்களின் மனதில் பதிந்து அவர்களுடைய ஏக்கங்களை விரிவடைய வைத்து ஏமாற்றத்தை அதிகரிப்பதே இந்த ஆண்மைக்குறைவு மற்றும் புரோஸ்ட்ரேட் புற்று நோய் இவற்றின் மூல காரணம் என்று இந்த ஆராய்ச்சி தனது முடிவை ஆதாரங்களுடன் வரையறை செய்திருக்கிறது.\nமுக்கால்வாசி ஆண்மைக்குறைபாடுகளும் இத்தகையதே என்பது இந்த ஆராய்ச்சியின் தீர்க்கமான முடிவாகும்.\nபெண்களின் கவர்ச்சிகரமான நடைபாதைகளில் ஆண்களின் ஆரோக்கியத்தைப் புதைக்கும் கல்லறைகள் முளைத்துக் கொண்டே இருக்கின்றன என்பது அதிர்ச்சியூட்டும் செய்தியாக இருக்கும் அதே வேளையில், தேவையற்ற பாலியல் கனவுகளை வளர்க்காமல் நட்புணர்வுடன் அடுத்த பாலினரை நோக்கும் மனநிலையை ஆண்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் இந்த ஆராய்ச்சி எச்சரிக்கை செய்கிறது.\nமேலும், ஈமான் கொண்டவர்களுக்கு ஃபிர்அவ்னின் மனைவியை அல்லாஹ் உதாரணமாக கூறுகிறான். அவர் 'இறைவா எனக்காக உன்னிடத்தில், சுவர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டித் தருவாயாக எனக்காக உன்னிடத்தில், சுவர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டித் தருவாயாக இன்னும் ஃபிர்அவ்னை விட்டும், அவன் செயல்களை விட்டும் என்னை காப்பாற்றுவாயாக இன்னும் ஃபிர்அவ்னை விட்டும், அவன் செயல்களை விட்டும் என்னை காப்பாற்றுவாயாக இன்னும் அநியாயக்கார சமூகத்தாரிடமிருந்தும் என்னைக் காப்பாற்றுவாயாக' என்று (பிரார்த்தித்துக்) கூறினார்.' திருக்;குர்ஆன் 66 –11\nநல்ல மனைவியானவள் இரத்த பந்த உறவு முறைகளை முறிக்காமலும், கணவருக்கு கீழ்ப்படிந்து நடக்க கூடியவளாகவும் இருக்க வேண்டும். தன்னுடைய பெற்றோர்களிடமும், மற்றும் குழந்தைகளிடமும் எந்த மாதிரியாக நடந்துக்கொள்ள வேண்டும். வெளி இடங்களிலும், வெளி நபர்களிடமும், பொது இடங்களிலும் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என்ற மனைவிகளுக்குரிய பல பங்குகளை பற்றி திருமறையானது பல இடங்களில் குறிப்பிடுகிறது.\nஒரு மனிதன் எவ்வளவு தான் நன்னடத்தையுள்ளவனாக இருந்தாலும் சரிதான். அவனுடைய மனைவி நன்னடத்தை உடையவளாக இல்லையெனில், அவனால் ஒரு போதும் இவ்வுலகில் நிம்மதியுடனும், மன அமைதியுடனும் வாழ்ந்திட முடியாது\nஅண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :'உலகின் அனைத்துப் பொருள்களும் அனுபவிப்பதற்காக உள்ளவைதாம் அவற்றில் சிறந்த பொருள் நன்னடத்தை உள்ள மனைவி அவற்றில் சிறந்த பொருள் நன்னடத்தை உள்ள மனைவி' அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) ஆதாரம் : முஸ்லிம், மிஷ்காத்\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com\nஅல்லாஹ் முதல் வானத்திற்கு இறங்கி வருகிறான்\nஉங்களுடைய பழைய செல்போனை விற்பதற்கு முன் நீங்கள் கட...\n\"மலம் அடைத்தல்\" ஏன் எவ்வாறு\nஇரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள சில டிப்ஸ்…\nகம்ப்யூட்டரில் தோன்றும் சிறிய சிக்கல்களும் அதற்கான...\nலேப்டாப் வாங்கும் பொழுது கவனிக்க வேண்டியவை...\nபெண்கள் வீட்டை விட்டு வெளியேறுவது அனுமதிக்கப்பட்டத...\nகிரீன் டீ ஆரோக்கியத்துக்கான “கிரீன்” சிக்னல்\nசுவர்க்கத்தின் நறுமணத்தைக் கூட நுகராத பெண்கள்\n''தினமும் தயிர் சாப்பிடுவது நல்லதா\nதொப்பையை குறைக்க 14 எளிய வழிகள்\nஉப்பில்லாப் பண்டம்தான் உடல் ஆரோக்கியத்தைத் தரும்\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nதேனை தனியாக சாப்பிட்டால் பலன்--- மருத்துவ டிப்ஸ்\nதேன் சீரண சக்தியை தரும். இரைப்பையில் ஏற்படும் எல்லாவித கோளாறுகளையும் வயிற்றில் ஏற்படும் கோளாறுகளையும் குணமாக்கும். நெஞ்சில் ஏற்படும் எரிச்...\n‘ பாட்டி வைத்தியம் ’ சொன்ன பாட்டியிடமிருந்து ‘ வைத்திய ’ ரிலே கட்டையை கைப்பற்றியிருக்கும் பாட்டியும் , நல்ல அனுபவசாலி\nஉடலை சார்ஜ் செய்வது எப்படி\nஉடலை சார்ஜ் செய்வது எப்படி பாகம் - 2 முந்தைய பதிவில் நம் உடலை ஏன் சார்ஜ் செய்ய வேண்டும் , அதனால் உண்டாகும் பலன்கள் என்னென்ன என்...\nஅதிகாலையில் தண்ணீர் பருகினால் பல வியாதிகளைக் குணப்படுத்த முடியும் \nதினமும் காலையில் தூக்கத்தில் இருந்து எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவது ஜப்பானில் இப்போது பிரபலமாகி வருகிறது. இங்கு தரப்பட்டி...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nஉங்கள் உடல் எடை ஏழு நாட்களுக்குள் ஐந்து கிலோ எடை குறைய...\nகீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த அட்டவணை மிகப் பிரபலமான உணவு அட்டவணை. ஏழு நாட்களுக்கு இந்த அட்டவணையைப் பயன்படுத்தினால் , உங்கள் எடையில் சராசரி...\nநபிமார்கள் பற்றிய அரிய தகவல்கள்\nநபிமார்கள் மனிதர்களில் மாண்புடையவர்கள்.இவர்கள் அல்லாஹ்வின் வாக்கே உலகில் மேலானது. இறைவனல்லாத ஏனையோரின் வாக்கு கீழானது என்னும் தாரகமந்திரத்...\n கல்யாணம் ஆயி பல வருசம் ஆச்சு. இன்னும் வண்டி மக்கர் பண்ணுதே என்று மனசுக்குள்ளே குமையும் நம்ம குரூப் மக்களே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://mycrankywritings.wordpress.com/2015/10/18/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-04-26T13:40:01Z", "digest": "sha1:FDSGWBAEQVW5YDX4WMW6MQIRQ2QW4HGW", "length": 7933, "nlines": 129, "source_domain": "mycrankywritings.wordpress.com", "title": "கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் | My Cranky Writings", "raw_content": "\nகொஞ்ச நேரம் கொஞ்ச நேரம்\nMale: கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம்\nFemale: கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம்\nநீ வந்தால் பயம்தான் எனக்கு\nFemale: இதை அல்லால் வேறெனக்கு\nதினம் அதை பார்த்து கேட்டு\nஇதை கேட்க்க தேகம் வெயில் காய\nMale: குடம் நீயாக தண்ணி நானாக\n ஹூம் ஹூம் ஆ ஆ ஆ\nMale: இதை நித்தம் கேட்டுக்கேட்டு\nMale: பலபேர்கள் வாழும் இந்த தெருவோரம்\nஇதை பல ராகம் கலந்து பேசக்கூடும்\nFemale: அவா போட்டும்னா அதை விடுங்கோன்னா\nஅதனால் என்ன ஆ ஆ ஆ ஆ\nஅங்கு அவர்கள் வெகுதூரமுள்ள ஈச்தான்புள் பகுதியில் இன்பச்சோலையில் கனவில் நீந்தி மகிழவும் ஒருவருக்கொருவர் புகழுவதையும் சித்திரத்தில் பார்க்க முடிந்தது. பணத்தை கொடுத்தோம். அக்காச்சிகளை கண்டு ரசித்தோம்.\nஇந்த கதை இங்கு கூட்டமாக குடும்பங்கள் தெருவுகளில், சந்தினில், போர்ஷன்களில் வாழும்பொழுது தினசரி வாழ்க்கையில் இப்படித்தான் நடந்துவரும். கனவுகள் அங்கு வேறுமாதிரி.\nதமாஷுக்காக சிந்தனையில் ஈடுபட்டேன். கற்ப்பனைக்குதிரைக்கென்ன கடிவாளம்\n← இந்தச்சிட்டு குருவிக்கந்த நிலா தொட்டில் எதற்க்கு\nதேர்வு செய் தேர்வு செய் April 5, 2018\nஎன்னுடன் நீ இருப்பாய் March 10, 2018\nநீர் துளிக்குள் March 4, 2018\nஇங்கும் அங்கும் எங்கும் February 25, 2018\nகவரும் விழி அழகே February 18, 2018\nபரிசு பொருள்கள் January 8, 2018\nஇறைவனுடன் கலந்துவிட்டேன் January 5, 2018\nகொஞ்சம் மறந்திருந்தேன் December 16, 2017\nநம்ம ஊர் பால்க்காரன் November 30, 2017\nகழுதைக்கு வந்த யோகம் November 30, 2017\nநாளை மீண்டும் நாளை November 21, 2017\nதூக்கம் வரவில்லை November 6, 2017\nமணல் வருது மணல் வருது October 30, 2017\nஇரவு வெகு நேரம் ஆகியும் October 18, 2017\nமல்லி மொட்டு பூ அணிந்து October 18, 2017\nஉன் விழிகளில் எழுதிய October 12, 2017\nஎங்கிருந்துதான் வந்ததோ October 8, 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} {"url": "https://mycrankywritings.wordpress.com/2016/05/14/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-04-26T13:44:49Z", "digest": "sha1:25VHTTZWMDPQOUCRNCMYE2NW6RLQXE5X", "length": 6617, "nlines": 119, "source_domain": "mycrankywritings.wordpress.com", "title": "மெல்லிய இமைகளில் | My Cranky Writings", "raw_content": "\nமெல்லிய இமைகளில் நீர்மணி நிறையவே\nநீ என் அருகில் வந்தாய்\nநீ என் அருகில் வந்தாய்.\nநின்றேன் நான் ஓர் அன்னியனைப்போல\nஉன் முன்னால் நின்றேன் வேறுமோர் அன்னியனைப்போல\nமனதின் பாவங்கள் மௌனத்தில் ஒளித்து\nநாம் ஒருவரை ஒருவர் பார்த்திருந்தோம்\nநாம் ஒருவரை ஒருவர் பார்த்திருந்தோம்\nவிழிகள் வழியாய் வார்த்தைகள் வெளிவர\nஉன் விழிகள் கண்ணீரில் மறைந்திருந்தாலும்\nநீ சொல்லும் வார்த்தைகள் நானதில் புரிந்துகொண்டேன்\nமுன்பின் அறியாத பயணி நான்\nஉன் மனதின் துடிப்புகள் அறிகின்றேன்\nஉன் மனதின் துடிப்புகள் அறிகின்றேன்\nமெல்லிய இமைகளில் நீர்மணி நிறையவே\nநீ என் அருகில் வந்தாய்\nநீ என் அருகில் வந்தாய்.\nதேர்வு செய் தேர்வு செய் April 5, 2018\nஎன்னுடன் நீ இருப்பாய் March 10, 2018\nநீர் துளிக்குள் March 4, 2018\nஇங்கும் அங்கும் எங்கும் February 25, 2018\nகவரும் விழி அழகே February 18, 2018\nபரிசு பொருள்கள் January 8, 2018\nஇறைவனுடன் கலந்துவிட்டேன் January 5, 2018\nகொஞ்சம் மறந்திருந்தேன் December 16, 2017\nநம்ம ஊர் பால்க்காரன் November 30, 2017\nகழுதைக்கு வந்த யோகம் November 30, 2017\nநாளை மீண்டும் நாளை November 21, 2017\nதூக்கம் வரவில்லை November 6, 2017\nமணல் வருது மணல் வருது October 30, 2017\nஇரவு வெகு நேரம் ஆகியும் October 18, 2017\nமல்லி மொட்டு பூ அணிந்து October 18, 2017\nஉன் விழிகளில் எழுதிய October 12, 2017\nஎங்கிருந்துதான் வந்ததோ October 8, 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2018-04-26T13:37:53Z", "digest": "sha1:JLWIVAEPPBLF6NOTFAFBLSYAEXCQZC3S", "length": 8740, "nlines": 106, "source_domain": "ta.wikipedia.org", "title": "உருளைக்கலன் கண்ணிமுடிச்சு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஉருளைக்கலன் கண்ணிமுடிச்சு, உருளைக்கலன் தாங்குகயிறு\nஉருளைக்கலன் கண்ணிமுடிச்சு அல்லது உருளைக்கலன் தாங்குகயிறு என்பது கப்பலில் ஏற்றியிறக்கும்போது பொருட்களை உயர்த்துவதற்குப் பயன்படும் ஒருவகை முடிச்சாகும். இப் பயன்பாடு காரணமாகவே இதற்கு இப்பெயர் ஏற்பட்டது. பொருட்கள் நிலைக்குத்தாக இருக்கும்படி வைத்துத் தூக்குவதற்கும் இது எளிமையானதும், திறம்பட்டதுமான ஒரு முறையாகும். தூக்கவேண்டிய பொருளைச் சுற்றி ஒரு தாங்கு கயிற்றை உருவாக்குவதன் மூலம் இது செயற்படுகிறது. இது அப்பொருளைப் பக்கங்களிலும் அடியிலும் தாங்குகிறது.\nஉருளைக்கலன் கண்ணிமுடிச்சுக் கட்டும் முறை\nசெயல் முனையில் போதிய அளவு இடம் விட்டுப் பெருவிரல் முடிச்சு அல்லது Overhand knot எனப்படும் முடிச்சைப் போடவேண்டும். முடிச்சின் நடுப்பகுதியில் கயிறு தன்னைத்தானே குறுக்கிடும் இடத்தில், கயிற்றைப் பிடித்து முதலாவது படத்தில் காட்டியுள்ளபடி முன்னோக்கி இழுக்கவேண்டும். இரண்டாவது படத்தில் காட்டியுள்ள இடம்வரை இழுத்து அப்படியே வைக்கவேண்டும்.\nதூக்கவேண்டிய பொருளை நடுவில் குறுக்காக அமைந்துள்ள கயிற்றுப் பகுதிமீது வைக்கவேண்டும்.\nகயிற்றின் செயல்பகுதியையும், நிலைப்பகுதியையும் பிடித்துக் கவனமாகத் தூக்கிப் படத்தில் காட்டியவாறு பக்கங்களிலும், அடிப்பகுதியிலும் தாங்குமாறு அமைக்கவேண்டும்.\nஉருளைக்கலன் கண்ணிமுடிச்சு மூலம் கட்டித்தூக்கும்போது அது அசைந்தாடினாலும் பொருள் நிலைக்குத்தாக நிற்கும். ஆனால், வலுவான குலுக்கம் ஏற்பட்டால் முடிச்சுக் குலைந்துவிடக்கூடும்.\nஉருளைக்கலன் கண்ணிமுடிச்சு முடியும் முறையைக் காட்டும் அசைவூட்டப்பட்ட படம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மார்ச் 2013, 22:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kadayanallur.org/archives/2564", "date_download": "2018-04-26T12:58:59Z", "digest": "sha1:24WM7YGDWWNGS35FR3UE6MGSJYGJYVK3", "length": 10967, "nlines": 88, "source_domain": "kadayanallur.org", "title": "ஆரோக்கியம் குறித்த தேசிய அளவிலான விழிப்புணர்வு பிரச்சாரம் : பாப்புலர் பிரண்ட் அறிவிப்பு… |", "raw_content": "\nஆரோக்கியம் குறித்த தேசிய அளவிலான விழிப்புணர்வு பிரச்சாரம் : பாப்புலர் பிரண்ட் அறிவிப்பு…\nபொதுமக்களின் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் எதிர்வரும் நவம்பர் 21 ம் தேதி முதல் நவம்பர் 28, 2010 வரை நாடு முழுவதும் நடைபெறும் என பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அறிவித்துள்ளது.உடல் ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் சுற்றுப்புற சூழலை தூய்மையானதாக மாசற்ற ஆரோக்கியமான நிலையில் வைத்திருப்பதில் பொதுமக்களின் பங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் “ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம் Healthy People Healthy Nation” என்ற முழக்கங்களோடு Ampicillin online பிரச்சாரம் நடைபெறும்.பாப்புலர் பிரண்ட் செயல்வீரர்கள் இருக்கும் பல்வேறு மாநிலங்களில் சுற்றுப்புற சூழலை பாதுகாக்கும் நடவடிக்கைகள், நோய்த்ததடுப்பு முறை, யோகா பயிற்சி, உடற்பயிற்சி, சரியான உணவு பழக்க வழக்கங்கள் பற்றிய பயிற்சி வகுப்புகள் மற்றும் செயல் விளக்க கூட்டங்கள் ஆகியவை உள்ளடக்கியிருக்கும்.விளையாட்டு நிகழ்ச்சிகள் பொது இடங்களில் உள்ள குப்பைகளை அகற்றும் துப்புரவுப்பனிகள் , ஆவணப்பட காட்சிகள் , தெருவோர நாடகங்கள் மூலம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்சிகள் நடத்துவதென திட்டமிடப்பட்டுள்ளது .இத்தகைய பொது நிகழ்சிகள் உள்ளூர் கல்வி மற்றும் சுகாதார அதிகாரிகளுடன் இணைந்து அவர்களின் ஒத்துழைப்புடன் அரசாங்கத்தின் பொது சுகாதார திட்டங்களை, முயற்சிகளை வலுப்படுத்தும் விதத்தில் பிரசாரம் அமையும்.\nஇது தொடர்பான விளம்பரங்கள் புத்தகங்கள் மற்றும் போஸ்டர்கள் ஆங்கிலம் ஹிந்தி, உர்து, பெங்காலி கன்னடம், தமிழ், மலையாளம், தெலுங்கு, மணிப்பூரி போன்ற பல்வேறு மொழிகளில் அச்சிட்டு வெளியிடப்படும் . நாடுதழுவிய விழிப்புணர்வு பிரச்சாரத்தை பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது கடந்த ஆண்டு 2009 அக்டோபர் மாதம் நடத்திய பிரச்சாரம் பெருவாரியான மக்களின் பங்களிப்பையும் ஆதரவையும் வரவேற்பையும் பெற்றது\nநரோடா பாட்டியா கொலைகள்-குஜராத் பெண் எம்எல்ஏவுக்கு 28 ஆண்டு சிறை, விஎச்பி தலைவருக்கு ஆயுள்\nடிசம்பர் மாதத்துடன் ஆயுள் முடியும் ரேஷன் கார்டு\nவேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவை புதிப்பிக்க கால அவகாசம்\nநெல்லை-தென்காசி அகல பாதையி்ல் ரயில் சோதனை ஓட்டம் வெற்றி\nகடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) பெறுவது எப்படி\nபீகார் தேர்தல் முடிவுகள் தரும் பாடங்கள்\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகடையநல்லூரில் … வீடு வீடாக சென்று நெல்லை கலெக்டர் ஆய்வு\nபரவி வரும் டெங்கு காய்சல் …மரண பயத்தில் கடையநல்லூர் மக்கள்.\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kanichaaru.blogspot.com/2014/10/2014.html", "date_download": "2018-04-26T13:28:58Z", "digest": "sha1:UUDAEHZWAH5X5SABTMVGS7S52N3YCKNC", "length": 8470, "nlines": 94, "source_domain": "kanichaaru.blogspot.com", "title": "மயிர்ச்சாதி அருளி - தென்மொழி - அக்டோபர் 2014 ~ கனிச்சாறு", "raw_content": "\nபெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.\nமயிர்ச்சாதி அருளி - தென்மொழி - அக்டோபர் 2014\nமுன்தோன்றி மொழிதோற்றி பண்பில் நல்ல\nமுழுநாக ரிக வாழ்வில் முற்றித் தோய்ந்து\nநன்னெஞ்சஞ் செழுமைமிகச் சிறந்து யர்ந்த\nமென்மெலவே தொடருழைப்பால் மேன்மேல் ஏறி\nமினுமினுக்கு உலகோரில் உயர்ந்தோம் என்றே\nஎன்னென்ன வொஆய்வில் இயைந்(து) ஆர்கின் றீரே\nகுறிப்பு :- “இடு மயிர்” என்பதுவே “இடை மயிர்” என்று ஆயினது.\nஇன்றைய ”சவரி” முடி அன்று “இடு மயிர்” \nசான்று : பத்துப்பாட்டு ;- மதுரைக் காஞ்சி - வரி -391\nமதுரைக்காஞ்சி :- பாடல் வரிகள் 390 முதல் 394- வரை.\nஅடிபடு மண்டிலத்து ஆதி போகிய,\nகொடி படு சுவலவிடு மயிர்ப் புரவியும்;\nவேழத்து அன்ன வெரு வரு செலவின்,\nகள் ஆர் களமர் இருஞ் செரு மயக்கமும்: .\nநன்றி :- செம்மொழித் தமிழ் இலக்கண இலக்கியங்கள்\nதமிழ்ப் பல்களைக் கழகம், தஞ்சாவூர்.\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nதமிழின் செம்மொழிப் பண்புகள் - பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் - செம்மொழித்தமிழ் இலக்கண இலக்கியங்கள் \nஞெமன் தெரிகோல் அன்ன செயிர்தீர் செம்மொழி அக நானூறு -349 - 3, 4 செம்மொழி மாதவர் சேயிழை நங்கை தம் துறவு எமக்குச...\nகனிச்சாறு : 5 :தமிழ் வாழ வேண்டுமா \n‘தமிழ் வாழ்க’ வென்பதிலும் தமிழ்வா ழாது: தமிழ்ப் பெயரை வைப்பதிலும் தமிழ்வா ழாது தமிழ் சிரிப்பைப் பெருஞ்சிரிப்பாய் அவிழ்த்துக் கொட்...\nநெல்லை & தூத்துக்குடி மாவட்டங்களில் முக்கியமான இடங்களில் சில.\nதூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள கொற்கை கிராமம் இன்று நாம் பார்ப்பதற்கு மிகச்சாதாரண கிராமமாகத் தெரியலாம். ஆனால் முன்னொரு காலத்...\nயுத்த பூமி - அத்தியாயம் 5 - கல் சொல்லும் வீரம் -த. பார்த்திபன்\nஇந்தக் கல் சொல்லும் வீரம்செறிந்த போர்கள், உலகைப் புரட்டிப்போட்ட போர்கள் அல்ல; நாட்டு மக்களை நாடோடிகளாகவும் அகதிகளாகவும் ஆக்கியவையும் அல்ல...\nகோப்பெருஞ்சோழன் - பிசிராந்தையின் நட்பும், பாரியைத் தவிரப் பிறரைப் பாடாத கபிலரின் ஆற்றாமையும்\nஉலகுடன் திரிதரும் பலர்புகழ் நல்லிசை வாய்மொழிக் கபிலர், நீரினும் இனிய சாயலன் ஆகிய பாரியின் இனிய தோழர். அறிமுகம் பழக்கமாகி, பழக்கம் நட...\nயாழ்ப்பாணம் : www.ourjaffna.com இணைய தளச் சொந்தக்காரரின் திருமண விழா : சில காட்சிகள்.\nஅமெரிக்கப் பல்கலையில் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட திருமந்திரத்தின் 6 பாடல்கள்\nஅமெரிக்காவில் உள்ள தென் கரோலின பல்கலையில் ஆய்வுக்குள்ளான 6 பாடல்கள் அல்சைமர் நோயாளிக்கு உதவும் என்று முடிவு காண்க:- h...\nதினத்தந்தி வெளியீடு : ஆயிரம் ஆண்டு அதிசயம். - அமுதன்\nஓரிருமுறை தஞ்சைப் பெரியகோவிலுக்குச் சென்றிருக்கின்றேன். ஆனால், இம்முறை சென்றவாரம் சென்றிருந்தபோது அரியதோர் வழிகாட்டுநர் கிடை...\nகவிமணி தேசிக விநாயகம் பிள்ளை\nவாழ்க்கைக் குறிப்பு கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை (ஆகஸ்ட் 27, 1876 - செப்டம்பர் 26, 1954) 20 நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு புகழ் பெற்ற...\nவயது 65, சென்னை, தமிழ்நாடு,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kavishan.blogspot.com/2012/03/blog-post_01.html", "date_download": "2018-04-26T13:09:38Z", "digest": "sha1:SMHCBUA6DFWBYG5TIXMEAF4DKJLOM2WV", "length": 11033, "nlines": 129, "source_domain": "kavishan.blogspot.com", "title": "ஜெயலலிதா மிகக் கூர்மையான அறிவுடையவர் : அமெரிக்கா புகழாரம் ~ ஈழம் செய்திகள்", "raw_content": "\nஜெயலலிதா மிகக் கூர்மையான அறிவுடையவர் : அமெரிக்கா புகழாரம்\nஜெயலலிதா மிகக் கூர்மையான அறிவுடையவர் : அமெரிக்கா புகழாரம். வாஷிங்டன் : தமிழக முதல்வர் ஜெயலலிதா மிகக் கூர்மையான அறிவுடையவர், மாற்றத்தை ஏற்படுத்தி வெற்றி காண்பதில் முனைப்பாக உள்ளார் என, அமெரிக்காவின் பிரபல அரசியல் ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் செயல்பட்டு வரும், அரசியல் கொள்கைகள் பற்றிய ஆய்வு நிறுவனமான, \"புரூக்கிங்ஸ் இன்ஸ்டிடியூஷன்' நிர்வாக இயக்குனர் வில்லியம் ஜே அந்தோலிஸ் இதுகுறித்து ஒரு கட்டுரையில் எழுதியிருப்பதாவது :\nமுதல்வர் ஜெயலலிதா மிகக் கூர்மையான அறிவுடையவராக உள்ளார். அதோடு, கடினமான கேள்விகளை எதிர்கொள்வதன் மூலமும், விரைவான முடிவெடுப்பதிலும் தன் திட்பத்தை வெளிப்படுத்தியவர்; விவேகம் உள்ள நிர்வாகி. அவர் ஒரு தொழில்நுட்ப அறிஞர் அல்ல என்றாலும் கூட, அரசியல் மற்றும் கொள்கை பற்றிய விவாதங்களை சீர்தூக்கிப் பார்த்து முடிவெடுப்பவர். இன்றைய தமிழக அரசியல் பற்றி ஒரு படம் எடுத்தால் அதற்கு, \"ஸ்டார்வார்ஸ் 3 - திருப்பியடிக்கும் ஜெயலலிதா' என தலைப்பு கொடுக்கலாம். அவர் மேற்கொள்ளும் முடிவுகள், நாடகம் போல பரபரப்பாக இருக்கும் பட்சத்தில், அவை தமிழக வளர்ச்சிக்கு மோசமான விளைவுகளைத் தான் தரும். ஆனால், உண்மையில் அவர் அப்படி அல்ல. அவர் நிர்வாகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதில், தீர்க்கமான உறுதியுடன் உள்ளார்.\nமுன்னாள் முதல்வர் கருணாநிதியால் ஏற்பட்ட நிதிப் பற்றாக்குறையை சரிக்கட்டுவதில், அவர் இப்போது தீவிர கவனம் செலுத்தி வருகிறார். அதோடு, அரசு கஜானாவை வற்ற வைக்கும் மானியங்களைத் தொடர்வதுடன், அதனால் ஏற்படும் பிரச்னைகளை கையாளுவதிலும் சிறப்பாக செயல்படத் துவங்கி விட்டார். கடந்த 2011ல், பஸ் மற்றும் பால் விலையை உயர்த்தியதன் மூலம், பலரையும் அதிர்ச்சி அடைய வைத்தார். மாணவர்களுக்கு மடிக் கணினி வழங்குவது உள்ளிட்ட பல திட்டங்கள் மூலம், தமிழகத்தின் கல்விக்கான செலவை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளார். அவரது அடுத்த சவால், தமிழகத்தின் உட்கட்டமைப்பு பற்றாக்குறை தான். அவர், தனது இந்த மூன்றாவது ஆட்சியில், நல்ல நிர்வாகத்தைக் கொடுக்க வேண்டும் என்றால், அதற்காக, இந்திய அரசியல் தலைவர்கள் சிலர் செய்த, நல்ல காரியங்களை, அவர் செய்ய வேண்டும். அவர் தனது கட்சியிலும், மாநில அதிகார வர்க்கத்திலும், தனது செல்வாக்கை நிலை நிறுத்துவதற்கு, சில கடினமான கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டும், என்றார்.\nநீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.\nஇலங்கையின் ஏழாவது ஜனாதிபதி (1)\nஉலகத் தமிழர் பேரவை (1)\nசிறீலங்காவின் 7வது நாடாளுமன்ற தேர்தல் (12)\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (6)\nதலைமைச் செயலகம் தமிழீழம் (5)\nநாடு கடந்த அரசாங்கத் தேர்தல் (6)\nநாடு கடந்த அரசாங்கம் (57)\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கம் (1)\nநான் சாகலாம் நாங்கள் சாகக் கூடாது (11)\nபோர்குற்ற நாள் 2009 மே (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://newsadirai.blogspot.com/", "date_download": "2018-04-26T12:54:23Z", "digest": "sha1:AQDG3N7HF4Q2ZLQE6BBQMRNOUC5TLXSG", "length": 8899, "nlines": 54, "source_domain": "newsadirai.blogspot.com", "title": "Adirai News", "raw_content": "\nஅய்டா(AYDA) - ஜித்தா இப்தார் நிகழ்ச்சி\nஉரூஸ் அல் பஹர் என்று வர்ணிக்கப் படும் செங்கடல் ஜித்தாவில் AYDA (ADIRAI YOUTH DEVELOPMENT ASSOCIATION) சார்பில் கடந்த புதன்கிழமை இனிய இப்தார் நிகழ்ச்சி நடை பெற்றது.அதிரையைச் சேர்ந்த ஜித்தா வாசிகள் அனேகர் குடும்பத்துடன் வந்து கலந்து கொண்டனர்தற்போது உம்ரா வந்திருக்கும் அதிரை பைத்துல்மால் செயலாளர் வழக்குரைஞர் முனாப் அவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்கள், மற்றும் பலர் மக்காவிலிருந்து வருகை தந்து அமர்வினை அலங்கரித்தனர்.\nஅய்டாவின் சேவை, ABM க்கு - அதன் உறுதுணை, ஆம்புலன்ஸ்- ஒரு கோடி திட்டம், மற்றும் பித்ரா வசூல் பற்றி சிலாகிக்கப்பட்டது. இரவு பசியாறி இனிதே கூட்டம் நிறைவுற்றது.\nஅதிரைமக்கள் இலவசமாகக் கொடுத்த நிலத்தில்தான் அரசு பொதுமருத்துவமனை, காவல் நிலையம்,பேரூந்து நிலையம்,மின்நிலையம் ஆகிய அரசு அலுவங்களும் செயல்பட்டு வருகின்றன.ஆனால்,நாங்கள் கிரயம் செய்து வாங்கிய நிலத்தில் தொழுவதற்காகக் பள்ளி கட்டுவதற்குத் தடையாகவும் இவர்களே தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார்கள் என்பது தொகுதி எம்.எல்.ஏ ஆக இருக்கும் உங்களுக்குத் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.\nஆகவே விரைவில் கவிழப்போகும் மைனாரிட்டி அரசு தருவதாச் சொல்லும் தொலைக்காட்சிப் பெட்டியைவிட இறைவனைத் தொழுவதற்கு பள்ளிவாசலே எங்களின் உடனடித்தேவை என்பதை உங்கள் மேலான கவனத்திற்குக் கொண்டு வருகிறோம்.\nஅஸ்ஸலமு அழைக்கும் மரண அறிவிப்பு\nஅதிராம்பட்டினம் போஸ்ட் ஆபீஸ் தெருவை சேர்ந்த ஜனாப் சாகுல் ஹமீத் (காண்ட்ராக்டர்)அவர்கள் இந்திய நேரம் இரவு 12.45 மணி அளவில் வபாஅத்தாகிவிட்டார்கள்.இன் னாலில்லாஹி வ இன்னா\nஅன்னார் அவர்கள், சகோதரர்கள் சரபுதீன், கமாலுதீன்,தாஜுதீன்,நஜ்முதீன் ஆகியோரின் தந்தையும்,டாக்டர் ஹனீப் அவர்களின் மச்சானும் ஆவார்கள்.\nஅன்னாரின் மறுமைப்பேறு சிறக்கவும்,எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் எல்லா பாவங்களையும் மன்னித்து,ஜன்னத்துல் பிர்தௌஸ் வழங்கவும் துவா செய்வோமாக\nபெற்றோரைக் கொடுமைபடுத்தியதற்காகத்தரப்படும் தண்டனை மரணத்திற்குமுன் இவ்வுலகிலேயே துரிதமாகத் தரப்பட்டுவிடும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூபக்ரா (ரலி) நூல்: பைஹகீ\nஆடு ஒட்டி வந்த கணவன் மிதும் ஆடுகள் மிதும் லாரி மோதல்\nஆடுகளை ஓட்டி வந்த கணவன், மனைவி கண் முன்னே லாரியில் அடிபட்டு பரிதாபமாக இறந்தார்.19 ஆடுகளும் துடிதுடித்து செத்தன. அதிராம்பட்டினம் அருகே நடந்த இந்த விபத்து பற்றிய விவரம் வருமாறு:-சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை அடுத்த பெரும்மச்சேரி கீழத்தெருவைச் சேர்ந்தவர், ராமு. இவருடைய மகன் கண்ணன் (வயது 35). கண்ணனின் மனைவி அழகம்மாள். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.கண்ணனும், அவருடைய மனைவியும் ஊர் ஊராகச் சென்று ஆடுகளை மேய்ப்பது வழக்கம். இவர்கள் வழக்கம் போல் கடந்த 4 நாட்களுக்கு முன்பு ஆடுகளை மேய்ப்பதற்காக வீட்டை விட்டு புறப்பட்டனர்.இரவு 11.30 மணியளவில் ஆடுகளை ஓட்டிக்கொண்டு அதிராம்பட்டினம் காதர் முகைதீன் கல்லூரி அருகே வந்து கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த லாரி கண்ணன் மீதும், ஆடுகள் மீதும் மோதியது. இதில் மனைவி கண் முன்னேயே கண்ணன் பரிதாபமாக செத்தார். 19 ஆடுகளும் துடிதுடித்து செத்தன.விபத்துக்கு காரணமான லாரி நிற்காமல் சென்றுவிட்டது. இது குறித்து அழகம்மாள் அதிராம்பட்டினம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் செல்வம் சம்பவ இடத்தை பார்வையிட்டார். விபத்துக்கு காரணமான லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tharavu.com/2013/05/blog-post_6324.html", "date_download": "2018-04-26T13:13:19Z", "digest": "sha1:U2ZDNH5Y2EVL3QPX2YUVHEYREES3BLIO", "length": 10921, "nlines": 92, "source_domain": "www.tharavu.com", "title": "நோயாளியை பலாத்காரம் செய்த மருத்துவர் கைது | தரவு", "raw_content": "\nமுகப்பு ஈழம் உலகம் சினிமா விளையாட்டு இலங்கை\nதேசியத் தலைவர் பிரபாகரன்தான் வரவேண்டும் இந்த நாட்டை வழிநடாத்துவதற்கு.யாழ்.யாழ்பாணத்தின் சீர்கெட்ட நிலவரங்கள் தொடர்பாக குறித்த நீதிபதி\nஇலங்கை எதிர்கொண்ட பின்னடைவுகளுக்கு விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் காரணமல்ல அதிகாரத்தில் இருந்த அரசாங்கங்களே காரணம்\nசிறிலங்காவில் தமிழர் பிரச்சினை தொடர்பாக கருணாநிதியினைச் சாடியிருக்கும் ஜெயலலிதா அவரது குடும்ப ஆட்சியினதும் முறைகேடுகள் நிறைந்த\nஈழத்தமிழரின் புனர்வாழ்வுக்கு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பேன்தமிழக சட்டசபைக்கான தேர்தல் எதிர்வரும் 13 ம் திகதி இடம்பெறவுள்ள நிலையில்\nதமிழர்கள் பாரம்பரியம் மிக்கவர்கள். அவர்கள் கனடாவின் மதிப்பு மிக்க சொத்து.அதீத வளர்ச்சி, கலாச்சாரப் பங்களிப்பு மற்றும் புலமை வாய்ந்த தொழில்வாய்ப்பு என்பன கனடாவிற்குப் பெருமை\nஉலக கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா வாழ்த்து தெரிவித்துள்ளார்.ஜப்பான் நாட்டில் கடந்த 11ந் தேதி மிகப்பெரிய\nஜப்பானில் ஏற்பட்ட பூகம்பம் சுனாமியின் பாதிப்புக்கு அனுதாபம் தெரிவித்து, ஜப்பான் பிரதமருக்கு நடிகர் ரஜினிகாந்த் ஒரு கடிதம் அனுப்பி இருக்கிறார். ஜப்பான் நாட்டில் கடந்த 11ந் தேதி மிகப்பெரிய\nசிறிலங்காவில் விடுதலைப் புலிகளுக்கும் அரசப் படைகளுக்கும் இடையில் நடந்த இறுதிக் கட்டப் போரின்போது,- போர்நிறுத்தம் செய்யுமாறும், பேச்சுக்களில் ஈடுபடுமாறும் அனைத்துலக நாடுகள் கொடுத்த அழுத்தங்களில் இருந்து\nவிக்கிலீக்ஸில் வெளியாகியுள்ள தகவல்கள் ஒரு பக்கம் சர்ச்சையைக் கிளப்பி வரும் நிலையில், விடுதலைப் புலிகளுடனான போரில் அமெரிக்காவின் இராணுவப் புலனாய்வுத் தகவல்கள்\nபுலிகள் தொடர்ந்து செயல்பட வாய்ப்பு உள்ளது: டக்ளஸ் தேவானந்தா\nநோயாளியை பலாத்காரம் செய்த மருத்துவர் கைது\nஅரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவர், தனது சொந்த கிளினிக்குக்கு சிகிச்சைக்காக வந்த 21 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்டுள்ளார்.\nடெல்லியில் மருத்துவராக பணியாற்றி வரும் நரேந்திர சிங், தனது கிளினிக்குக்கு வந்த பெண்ணை, ஸ்கேன் எடுக்க வேண்டும் என்று கூறி தண்ணீரில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக புகார் வந்துள்ளது. மருத்துவப் பரிசோதனையில் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியானதை அடுத்து, மருத்துவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஈழத்து நகைச்சுவை இரட்டையர்கள் டிங்கிரி சிவகுரு காணொளி இணைப்பு\nஜெனிவா சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம்- பிரித்தானியாவும் ஆதரவு\nபிரேமலதா விஜயகாந்துக்கு ரஜினிகாந்த் ரசிகர்கள் கண்டனம்\nசிரியாவுக்குள் புகுந்த ஈழத்து புலி\nஆஸ்திரியாவில் கச்சேரிக்கு வந்த கூட்டத்தினர் மீது துப்பாக்கிச் சூடு : 2 பேர் பலி\nஐ.நா மனிதவுரிமை உரிமைகள் சபையின் 37 வது கூட்டத்தொடர் இன்று ஆரம்பமாகியது.\nஈழத் தமிழர்களுக்கு நீதி கோரி உலகளாவிய நீதியில் வழக்கறிஞர்கள் கையெழுத்து.\nராஜிவ் கொலை குற்றவாளிகள் எழுவரையும் விடுவிக்க தமிழக அரசு முடிவு\nரவிராஜ் கொலையில் பிள்ளையானின் ஆயுதம்\nவிடுதலை வீரர்களின் சமாதியில் சிங்கள குடியேற்றம்\nதமிழீழ மாணவர்களின் இன்றைய அரசியல் தெளிவு.\n1976 மே 14 ஆந் தேதியன்று வட்டுக்கோட்டையில் நடைபெற்ற தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் முதலாவது தேசிய மாநாட்டில்\nசடலத்தை சமைத்து உண்ணும் பாகிஸ்தானியர்கள் (காணொளி இணைப்பு) இறந்த பெண்ணொருவரின்\nஇலங்கையில் திருதிமைக்கப்பட்ட ஒரு சில பெரும் சாலைகளின் புகைப்படங்கள் பார்க்க அருமையாக இருக்கிறது.\nஒன்று பட்டால் உண்டு வாழ்வு/ தரவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://jmmedia.lk/2017/06/30/%E0%AE%9A%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-04-26T13:37:57Z", "digest": "sha1:6CNHAJTBJJGONTWEQXIBTX3OUWDYVLHI", "length": 7419, "nlines": 57, "source_domain": "jmmedia.lk", "title": "”சைட்டம்” தனியார் மருத்துவ கல்லூரியை இலங்கை அரசு ஏற்பதில் இழுபறி – JM MEDIA.LK", "raw_content": "\nகடுகண்ணாவ கற்குகைக்கு தற்காலிகமாக பூட்டு\nஇறப்பர் தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்து தொடர்பில் தொழிற்சாலையின் முகாமையாளர் கைது\nவட கொரியாவுக்கு ரகசிய பயணம் : மைக் பாம்பேயோ\nபௌத்தகுருமாருக்கு வாக்குறுதி வழங்கிய பிரதமர்\n”சைட்டம்” தனியார் மருத்துவ கல்லூரியை இலங்கை அரசு ஏற்பதில் இழுபறி\nஇலங்கையில் சர்ச்சைக்குரிய ”சைட்டம்” எனப்படும் தனியார் மருத்துவ் கல்லூரியை அரசு பொறுப்பேற்று நடத்துவது தொடர்பாக அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ள போதிலும் அது தொடர்பில் இழுபறி நிலை தொடர்ந்து வருகின்றது.\nஇந்த வாரம் கூடிய அமைச்சரவையில் இது தொடர்பாக ஆய்ந்து எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி இந்த தனியார் மருத்துவக் கல்லூரியை அரசு எடுத்துக் கொண்டாலும் 10 ஆண்டுகளுக்குப் பின்னரே அரசுடமையாக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.\n3.55 பில்லியன் ரூபாய் மதிப்புள்ள மருத்துவ கல்லூரியை அரசாங்கத்திற்கு வழங்க இணக்கம் தெரிவிக்கப்பட்டிருந்தாலும் அந்நிறுவனத்தினால் அரசு வங்கியொன்றிடமிருந்து பெறப்பட்ட கடன் தொகையை 10 வருடங்களுக்குள் செலுத்த வேண்டியுள்ளது.\nஇதன் காரணமாக குறித்த 10 வருட காலத்தில் சுகாதார அமைச்சின் கீழ் இயங்கும் குழுவொன்றின் கீழ் நிர்வாகம் கொண்டு வரப்பட்டு வங்கிக் கடன் தொகையை முழுமையாக செலுத்திய பின்னரே முழு உரிமையையும் அரசாங்கம் கொண்டிருக்கும் என்றும் அமைச்சரவை தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்த தீர்மானத்தை நிராகரித்துள்ள இலங்கை அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம், இந்த மருத்துவக் கல்லூரி உடனடியாக அரசுடமையாக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகின்றது.\nசாதகமான பதில் இல்லையேல் அடுத்த சில தினங்களில் மீண்டும் தொடர்ச்சியான பணிப் புறக்கணிப்பில் ஈடுபடப் போவதாகவும் அது அறிவித்துள்ளது.\n”சைட்டம்” எனப்படும் தனியார் மருத்துவ கல்லூரி அரசுடமையாக்கப்பட வேண்டும். அதுவரை மாணவர்கள் அனுமதி மற்றும் பட்டம் வழங்குதல் நிறுத்தப்பட வேண்டும் உள்ளிட்ட தங்களால் முன் வைக்கப்பட்டுள்ள 5 கோரிக்கள் தொடர்பாக அரசாங்கம் சாதகமான பதிலை வழங்க வேண்டும் என அரசு மருத்துவர்கள் சங்கம் எதிர்பார்க்கின்றது.\nஅடுத்த சில நாட்களுக்குள் இதற்கான பதில் கிடைக்காத நிலையில் தொடர்ச்சியான பணிப் புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக சங்கத்தின் துணைச செயலாளர் டாக்டர் நளிந்த ஹேரத் தெரிவிக்கின்றார்.\n← “சௌதியா விமானம் இஸ்ரேல் விமான நிலையத்தில் இருப்பதைக் காட்டும் படம் போலி”\n2017ல் கிட்டத்தட்ட 5 லட்சம் அகதிகள் வீடு திரும்பியுள்ளதாக ஐ.நா தகவல்: சிரியா →\nஇலங்கை வெற்றிலை உற்பத்தியாளர்கள் கவலையில் : வரியை உயர்த்திய பாகிஸ்தான்\nவிமல் வீரவன்ச 14 நாட்கள் உள்ளே…\nயாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது – ஜனாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.penniyam.com/2011/05/blog-post_06.html", "date_download": "2018-04-26T13:26:51Z", "digest": "sha1:MS6YMLMHMIUDVOEIXVPTOLUGI3TJHWVP", "length": 73280, "nlines": 271, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: கறுப்பு மை குறிப்புகள் - மீனா மயில்", "raw_content": "\nகறுப்பு மை குறிப்புகள் - மீனா மயில்\nநமக்குத் தெரியும் - ஏன் இங்கு கிராமங்கள் இரண்டாகப் பிரிந்திருக்கின்றன என. நமக்குத் தெரியும் மனிதரை மனிதர் ஏன் வணங்குகிறார்கள் என, வதைக்கிறார்கள் என. நமக்குத் தெரியும், நம் ரத்தமல்லாத ஒருவரை ஏன் ஒடுக்க வேண்டுமென. நமக்குத் தெரியும், ஏன் கருப்பும் வெள்ளையும் கலக்கக் கூடாதென. நமக்குத் தெரியும், ஏன் அதிகாரமும் அடிமைத்தனமும் அழியக் கூடாதென. நமக்குத் தெரியும், மதமும் சாதியும் ஏன் நீடித்திருக்க வேண்டுமென. இங்கு எல்லா அநீதிகளும் தெரிந்தேதான் நடந்தேறுகின்றன. நாம்தான் நேரடியாகவோ, மறைமுகமாகவோ அவற்றை நடத்துகிறோம். ஆனால் எதுவுமே நடவாதது போல் நடிப்பதே நலமாகத் தெரிகிறது\nவிரும்பியபடியே மிக வசதியான ஒரு வாழ்க்கையை வாழ்வதாக நாம் கற்பனை செய்து கொண்டுள்ளோம். சாதி, மத, பாலின மற்றும் வர்க்க ரீதியான பாகுபாடுகள் மலிந்திருக்கும் ஒரு சமூகத்தில் - இக்கற்பனை மிக மூர்க்கமானது, சுயநலமிக்கது. சுயநலங்கள் எப்போதும் தற்காலிக சுகங்களை மட்டுமே அளிக்கின்றன. இந்த உண்மையை ஏற்க மறுத்து வாழ்கிறோம். பிறரையும் அப்படி வாழ அறிவுறுத்துகிறோம். நமக்கு நேராத எதுவும் நம் துயரமல்ல. நமக்கு நேராத வரை, எந்த அநீதியும் ஏதோவொரு வகையில் நீதியே கண்களும் காதுகளும் உணர்வுகளும் மரத்துப் போயிருந்தால் மட்டுமே இங்கு \"நல்வாழ்வு' சாத்தியப்படுகிறது.\nசட்டப்பூர்வமாக ஜனநாயகத்தைக் கொண்டாடும் ஒரு நாட்டில் தன் கருத்தை சொல்வதோ, விரும்பிய வாழ்க்கையை வாழ்வதோ, சுய மரியாதையோடு தலை நிமிர்வதோ அத்தனை எளிதானதாக இல்லை. காரணம், ஆழமாக நீண்டு கிடக்கும் பாகுபாட்டின் வேர்கள், ஒவ்வொருவர் கால்களையும் கழுத்தையும் இறுக்கிப் பிடித்திருக்கின்றன. மத நம்பிக்கைக்கு புறம்பாகவோ, சாதியை மீறியோ ஒருவர் செயல்பட விளைந்தால், இந்த வேர்கள் இரக்கமில்லாமல் முறுக்கிக் கொல்கின்றன.\nகவுரவக் கொலைகளாக இன்று ஊடகங்கள் பிரபலப்படுத்திக் கொண்டிருக்கும் சாதி - மத வக்கிரக் கொலைகள் நவீனக் குற்றமல்ல. பல நூற்றாண்டுகளாக பல நாடுகளிலும் ஊறிக் கிடக்கும் கொடுமைதான். விலங்குகளைப் போல வாழ்ந்து வந்த மனிதர்கள், சில நெறிகளோடு வாழத் தலைப்பட்டு, மதங்களையும் குடும்ப அமைப்பையும் உருவாக்கினர். குழுக்களாக வாழ்ந்து வந்த மனித இனத்தில் பலமுள்ள, தகுதியுள்ள யாரும் தனிக் குழுவை அமைத்து தலைமையாக மாறிவிட முடிந்த காலத்தில் - தனக்கு சேவை செய்ய அடிமை வேண்டுமென நினைத்தவர்களும், உலகின் வளங்களை தான் மட்டுமே அனுபவிக்க விரும்பியவர்கள், மதங்களையும் குடும்ப அமைப்பையும் பயன்படுத்திக் கொண்டனர்.\nமதங்கள் மனிதர்களைப் பாகுபடுத்தி பிரித்து வைத்தன. குடும்ப அமைப்பு பெண்களை சிறைப்படுத்தியது. மதங்கள் மனிதர்களை ஆளத் தொடங்கிய பின்னர், குடும்ப அமைப்பு வலுப்பெறத் தொடங்கிய நிலையில், பெண்கள் சக உயிரினம் என்பதே ஆண்களுக்கு மறந்து போனது. ஒரு பண்டத்தைப் போல, சொத்துகளைப் போல பெண்கள் கருதப்பட்டனர், பாதுகாக்கப்பட்டனர்.\nஒவ்வொரு ஆணும், தான் சார்ந்த மதத்தின் அடையாளச் சின்னங்களாக, தன் மதம் போதிக்கும் கட்டுப்பாடுகளைத் தாங்கி நிற்கும் பண்பாட்டுத் தூண்களாக பெண்கள் திகழ வேண்டுமென எதிர்பார்த்து, அதை செயல்படுத்தவும் செய்தனர். தனிப்பட்ட முறையில் தனக்கென உரிமைகளோ, மரியாதையோ வேண்டுமென கருதவில்லை. மத விதிமுறைகளைப் பின்பற்றுவதே தனக்கான கவுரவமாக ஆண்கள் கருதத் தொடங்க, அந்த பாரம் முழுவதும் பெண்கள் மேல் விழுந்து அழுத்தியது. வீட்டை விட்டு வெளியேறவும், உடலைப் பேணவும், பேசவும், சிரிக்கவும், நிமிரவும், கற்கவும், அறிவைப் பெருக்கவும் தடை விதிக்கப்பட்டது. பெண்களை அடிமைப்படுத்துவதிலும் கவுரவச் சின்னமாக வளர்ப்பதிலும் உலகின் எந்த மதமும் எதற்கும் சளைத்ததில்லை என்றாலும், கவுரவக் கொலைகள் பெருமளவில் நடந்தேறுவது - இஸ்லாத்திலும் இந்து மதத்தின் சாதியக் கட்டமைப்பிலும்தான்.\nகுடும்பத்திற்கோ, சாதிக்கோ, மதத்திற்கோ \"களங்கம்' உண்டாகும் வகையில் ஒரு பெண் நடந்து கொண்டால், அந்தப் பெண்ணை குடும்பத்தினரோ, சாதிக்காரர்களோ, மதத்தினரோ வெளிப்படையாகவே கொலை செய்யலாம். இக்கொலைகளை சட்டத்திற்கு அஞ்சி, மறைமுகமாக நிகழ்த்த வேண்டிய அவசியமில்லை. குடும்ப மற்றும் சாதி - மத மரியாதையைக் காப்பாற்ற நிகழ்த்தப்படும் இக்கொலைகளை, குற்றமாக சாதி - மத ஆதிக்கவாதிகள் கருதுவதில்லை. குடும்பத்திற்கும் சாதிக்கும் மதத்திற்கும் களங்கம் ஏற்படுத்துபவரை கொல்வதன் மூலம், இழந்த கவுரவத்தை திரும்பப் பெறுவதாக ஆறுதலடைகின்றனர். உறவுகள் மற்றும் சக சாதிக்காரர்கள் முன்னிலையில் தலை நிமிர்ந்து நடக்க இந்த கவுரவக் கொலைகள் உதவுகின்றன\nகவுரவக் கொலை என்பது, எந்தப் பாலினத்தையும் குறிக்காத பொது சொல்லாடல். ஆனால் 99 சதவிகிதம் இதற்கு பலியாவது பெண்களே இஸ்லாமிய மதத்தைப் பொருத்தவரை, மதக் கட்டுப்பாடுகள் பெரும்பாலும் பெண்களை குறி வைத்தே உருவாக்கப்பட்டிருப்பதால், பெரும்பாலும் இந்த கவுரவக் கொலைகளுக்கு பலியாவது முஸ்லிம் பெண்கள்தான். எகிப்து, ஜோர்டான், மொராக்கோ, பாகிஸ்தான், துருக்கி, ஏமன், அரபு நாடுகள் மற்றும் பிற பெர்ஷிய, வளைகுடா நாடுகளிலும் பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து போன்ற மேற்கத்திய நாடுகளில் புலம் பெயர்ந்து வாழும் முஸ்லிம்களிடமும் கவுரவக் கொலை செய்யும் பழக்கம், மிகத் தீவிரமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.\nஒவ்வொரு அசைவும் நெருங்க கண்காணிக்கப்பட்டு, மத விதிமுறைகளில் இருந்து இம்மி பிசகினாலும் சொந்த உறவுகளாலேயே மரண தண்டனை பெறுகின்றனர் பெண்கள். உடைக் கட்டுப்பாட்டில் குறை வைத்தாலோ (இங்கு குறை என்பது பர்தா அணியாததையோ, நாகரிக உடைகளில் நடமாடுவதையோ குறிக்கவில்லை. கால் சுண்டுவிரல் தெரிந்தாலும் அது கொலைக் குற்றமே) குடும்பத்தினரால் நிச்சயிக்கப்படும் திருமணத்தை மறுத்தாலோ, தன் விருப்பத்திற்கு திருமணம் செய்ய முயன்றாலோ, திருமணத்தை மீறிய பாலியல் உறவுகளில், ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டாலோ, கொடுமைக்கார கணவனோடு வாழ மறுத்தாலோ - மதக் கட்டுப்பாடுகளை மீறியதாக கொலை செய்யலாம்.\nஇதில் கொடுமை என்னவென்றால், ஒரு பெண் வல்லுறவுக்கு ஆளானாலும் கவுரவம் பறிபோனதாக, பாதிக்கப்பட்ட பெண் கவுரவக் கொலை செய்யப்படுவார். பத்தாண்டுகளுக்கு முன்னர், உலக நாடுகளிடம் அடைக்கலம் கேட்டு அலைந்த அமினா லாவல் என்ற நைஜீரியப் பெண்ணை எவரும் மறந்திருக்க முடியாது. மனித உரிமைகளை மதிப்போரை பதற்றத்திற்குள்ளாக்கிய கொடூரம் அது. கணவனை இழந்த அமினா, முகம் தெரியாத நபரால் வல்லுறவு செய்யப்பட்டு, கர்ப்பமடைந்த நிலையில், இஸ்லாமிய சமூகத்திற்கு களங்கம் உண்டாக்கியதாக அமினாவை கல்லால் அடித்துக் கொல்லத் துடித்தனர் மதவாதிகள். குழந்தை பிறக்கும் வரை அவருக்கான தண்டனை ஒத்திவைக்கப்பட்டது. உயிர் வாழ வேண்டிய கட்டாயத்தில் உலகத்தின் முன் மன்றாடினார் அமினா. தன் குழந்தையை இறுக அணைத்தபடி போராடிய அமினாவின் முகம், இரக்கம் கொண்ட இதயங்களை சஞ்சலப்படுத்தியது. கடைசி வரை அவரை கொன்று விடத் துடித்த மதவாதிகளிடமிருந்து தப்பித்தார் அமினா. கவுரவக் கொலை அச்சுறுத்தலுக்கு, அமினா தொடக்கமும் அல்ல முடிவும் அல்ல.\nமதவெறியும் ஆணாதிக்கமும் எத்தனை கொடூரமானது என்பதற்கும், அவை ஒருபோதும் மனித உரிமைகளை மதிப்பதில்லை என்பதற்கும் வெட்ட வெளிச்சமான எடுத்துக்காட்டுதான் கவுரவக் கொலைகள். இது ஏதோ என்றோவொரு நாள் உலகின் ஏதோவொரு மூலையில் நடக்கும் அவலம் அல்ல. அய்க்கிய நாடுகள் அவை - ஒவ்வொரு ஆண்டும் அய்யாயிரம் கவுரவக் கொலைகள் நடந்தேறுவதை உறுதி செய்துள்ளது. துருக்கியில் வாரம் ஒரு கொலை, லெபனானில் மாதம் நான்கைந்து கொலைகள், பாகிஸ்தானில் ஒவ்வொரு ஆண்டும் பத்தாயிரம் கொலைகள் என ஒவ்வொரு நாடும் அளிக்கும் புள்ளி விவரம் நம்மை அதிர்ச்சியில் உறையச் செய்கின்றன.\nகவுரவக் கொலைகள் மத நலனுக்காகவும் கவுரவத்தை மீட்கவுமே நடத்தப்படுவதால், அது குற்றச் செயலாகக் கருதப்படுவதில்லை. இக் குற்றம் மிகத் தீவிரமாக நடந்தேறும் பல நாடுகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைப்பதில்லை அல்லது குறைந்த அளவிலான சிறை தண்டனையோடு தப்பித்து விடுகின்றனர். தண்டனைகள் கடுமையாக இல்லாததால், கொலை செய்தாலும் ஓரிரு ஆண்டுகளில் வெளி வந்துவிடலாம் என்ற துணிச்சல் மதவாத ஆண்களின் கவுரவ உணர்வை மேலும் தூண்டுகின்றன. பதினெட்டு வயதிற்குட்பட்ட குடும்ப உறுப்பினரைக் கொண்டு கொலை செய்தால், குழந்தைகள் சட்டப்படி தண்டனை கிடைக்கும் எனக் கருதி, சிறுவர்களைக் கொண்டு கொலை செய்வதும் நடக்கிறது.\n1999 இல் வடமேற்கு பாகிஸ்தானைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமி வல்லுறவு செய்யப்பட்டாள். உடனே காவல் துறைக்கு தெரிவிக்கப்பட்டு குற்றவாளி கைது செய்யப்பட்டிருந்த நிலையில், உள்ளூர் பஞ்சாயத்து கூடி, பாதிக்கப்பட்ட சிறுமி கற்பை இழந்து குடும்பத்திற்கு அவமானத்தை உண்டாக்கி விட்டதாக கொதித்தனர். எல்லோர் முன்னிலையிலும் சிறுமியை அடித்துக் கொல்ல முடிவு செய்து, சிறுமியின் பருவ வயது சகோதரர்களைக் கொண்டே அக்கொடுமையை நடத்தினர்.\nபெரும்பாலான கவுரவக் கொலைகள் தற்கொலைகளாகவும் விபத்துகளாகவும் சித்தரிக்கப்பட்டு, புள்ளிவிவரங்களுக்குள் அடங்காமல் போகின்றன. பாகிஸ்தானில் \"கரோ கரி' என்ற பெயரில், துளி கருணையுமின்றி பெண்களை கொலை செய்வது தொடர்கிறது. நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை மறுத்ததற்காக, மூன்று பெண்கள் உயிரோடு புதைக்கப்பட்ட கொடுமையும், எட்டு மாத கர்ப்பிணியாக இருந்த மகளை மாமனார் சந்தேகப்பட்டதால் தகப்பனே கொடுமைப்படுத்தி, கொலை செய்ததும் மனித உரிமை ஆர்வலர்களை உறைய வைத்தாலும் மத நம்பிக்கை கொண்ட மக்களையும் அரசையும் எந்த விதத்திலும் அது அசைக்கவில்லை. ஆண் எனும் சர்வாதிகாரி மதம் என்னும் ஆயுதத்தைக் கொண்டு தன்னை ஒடுக்குகிறான் என்ற புரிதலின்றி பெண்களும் இந்த கொடூரத்தை ஆதரிக்கவே செய்கின்றனர். \"குடும்பத்தில் உள்ள பெண்கள் - தாய், மாமியார், சகோதரி - கவுரவக் கொலைகளை ஆதரிக்கின்றனர். இது அவர்களது சமூக மனநிலை' எனப் பதிவு செய்கிறது அம்னஸ்டி இன்டர்நேஷனல். தங்கள் மீதான ஒடுக்குமுறைகளை ஒடுக்கப்பட்டோரே நியாயப்படுத்தும் பாடத்தை, மதங்கள் எப்போதோ கற்றுக் கொடுத்துவிட்டன.\nசமூக இணையதளமான \"பேஸ்புக்' கில் ஆணுடன் உரையாடியதற்காகவும், வானொலியில் நண்பர் ஒருவரால் பாடல் சமர்ப்பிக்கப்பட்டதற்காகவும் தந்தையரே மகள்களை கொன்றிருக்கின்றனர். மத அடிப்படைவாதிகளைப் பொருத்தவரை, பெண்கள் ஆண்களின் உடைமை. அவ்வளவே. அவர்களுக்கென தனியாக உயிர் இருக்கிறது என்பதைக் கூட ஆண்களின் ஆதிக்க மனம் ஏற்றுக் கொள்வதில்லை என்பதையே இந்த கொடூரங்கள் உணர்த்துகின்றன. இஸ்லாமிய நாடுகளில் புரையோடிப் போன கவுரவக் கொலை வழக்கம், இந்தியாவில் படிந்திருப்பது ஜாதி வடிவத்தில். உலகளவில் எந்த அநீதியை சுட்டிக்காட்டினாலும் அது சாதிக் கொடுமையில் இடம் பிடிக்காமல் போகாது.\nஇந்தியாவிற்கு வெளியே நடக்கும் கவுரவக் கொலைகள், மதக் கட்டுப்பாடுகளையும் ஆணாதிக்கத்தையும் நிலைநிறுத்த நடத்தப்படுகின்றன. இந்தியாவில் அவை இடம்பெறுவது சாதிக்காக. இங்கு எந்தவொரு மனிதருக்கும் சாதிதான் முதல் அடையாளம். பிறப்பிலிருந்து இறப்பு வரை எல்லா நிகழ்வுகளிலும் சாதியை அழுந்த பதித்துவிட, ஒவ்வொரு சாதியினரும் முனை கின்றனர். இவர்கள் தங்கள் சாதி அடையாளத்தையும் கவுரவத்தையும் அழுந்த பதிப்பது திருமணங்களில்தான். தன் சாதிக்காரரை வரன் பார்த்து, தன் சாதிக்காரர்களை அழைத்து, தன் சாதிக்குரிய சடங்குகளோடு, தன் சாதி தலைவர் தலைமை தாங்க திருமணத்தை கோலாகலமாக நடத்தி முடிப்பதை, ஆதிக்க சாதியினர் வாழ்வின் லட்சியமாகவே கொண்டிருக்கின்றனர். திருமணத்தை மீறியதோர் சாதிய நிகழ்வு அவர்களுக்கு இல்லை. பிள்ளைகளின் காதல் செயல்பாடுகளால் இந்த லட்சியத்திற்கு இடையூறு நேரும் போது, சொந்த சாதிக்காரர்களிடம் தலைகுனிவு உண்டாவதாகப் பதறுகின்றனர்.\nஆதிக்க சாதியினரைப் பொருத்தவரை, காதல் என்பது கெட்ட வார்த்தை சாதி மறுப்புத் திருமணம் செய்த மகன்/மகளை அல்லது அவர்கள் நேசித்தவரை அல்லது இருவரையும் கொலை செய்வதன் மூலம் - சாதியின் மீது படிந்த கரையைத் துடைப்பதாக நினைத்துக் கொள்கின்றனர். சாதியின் பெயரால் நடக்கும் இந்த கவுரவக் கொலைகளுக்கு காலங்காலமாக பலிகள் விழுகின்றன. வட இந்தியாவின் பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், பீகார் போன்ற மாநிலங்களிலேயே கவுரவக் கொலைகள் அதிகம் நடப்பதாக சுட்டிக் காட்டப்பட்டாலும், உண்மையில் சாதி எங்கெல்லாம் வேரூன்றி இருக்கிறதோ, அங்கெல்லாம் கவுரவக் கொலைகள் நடந்திருக்கும்/நடந்து கொண்டிருக்கும் என்பதை உறுதியாகக் கூற முடியும்.\nகிராமப்புறங்கள் சாதியின் பிறப்பிடமாகத் திகழ்கின்றன. இன்றும் சாதிக்கு கட்டுப்பட்டுதான் கிராமப்புற மக்கள் வாழ்கின்றனர். இவர்களுக்கு அரசமைப்புச் சட்டமெல்லாம் இரண்டாம்பட்சம்தான். ஊராகவும் சேரியாகவும் பிரிந்து கிடக்கும் கிராமங்கள் முழுக்க முழுக்க, ஆதிக்க சாதியினரின் கட்டுப்பாட்டில்தான் இயங்குகின்றன. ஊர்க் கட்டுப்பாடு என்ற பெயரிலும், சாதி வழக்கம் என்ற முறையிலும் இங்கு நடந்தேறும் அநீதிகள், கற்காலத்திற்கும் ஒத்துவராத உரிமை மீறல்கள். சாதி விதிகளை ஒடுக்கப்பட்டவர்கள் மீறினால், அவர்களுக்கு மிகக் கொடுமையான தண்டனைகளை வழங்குகிறது ஊர் பஞ்சாயத்து.\nகாதல் கொண்டு, உயர்த்தப்பட்ட சாதியினரும் தாழ்த்தப்பட்டோரும் திருமணம் செய்தால், அவர்களை தேடிக் கண்டுபிடித்து கொலை செய்துவிட வெறியோடு அலைகின்றனர். வேற்று சாதியைச் சேர்ந்த காதலர்கள் ஊரைவிட்டு ஓடிவந்து நகரத்தின் நெரிசலில் முகம் தெரியாத மனிதர்களிடையே வாழ்ந்துவிட சிறிதளவேனும் இன்று வாய்ப்பிருப்பதாக நாம் நம்புகிறோம். அது உண்மையல்ல. காதலுக்காக உயிரை விட்டவர்களுக்கும் உயிருக்காக காதலை விட்டவர்களுக்கும் இடையில் - சாதி மட்டும் தன் இருப்பை நிலைநாட்டியிருப்பது கண்கூடாகத் தெரியும். ஆதிக்க சாதியினர் தலித்துகளை கொன்றால் அது வன்கொலை. ஆதிக்க சாதியினர் சாதிக்காக தன் சாதியினரையே கொன்றால் அது கவுரவக் கொலை. வித்தியாசம் அவ்வளவே. விளைவு ஒன்றுதான்.\nமதுரை மாவட்டம் கட்டிக்குளத்தை சேர்ந்த மேகலாவும் எம். புட்டுக்குளத்தைச் சேர்ந்த சிவக்குமாரும் காதலித்து வந்தனர். ஒரே சாதியை சேர்ந்தவர்கள் என்றாலும் வசதியில் குறை இருந்ததால், தொழிலதிபர்களும் அரசியல்வாதிகளும் சூழ வேறொருவருக்கு மணம் முடித்து வைக்கப்பட்டார். மேகலா சில வாரங்களில், சிவக்குமாருடனேயே புதுக்கோட்டைக்கு சென்றுவிட்டார். இருவரும் அங்கேயே தங்கியிருந்த நிலையில், தீவிர தேடுதலுக்குப் பின்னர் மேகலாவின் தந்தை விஜயன் அவர்களை கண்டுபிடித்து, இருவரையும் ஊர் பெரியவர்கள் முன்னிலையில் சேர்த்து வைப்பதாகக் கூறி அழைத்து வந்தார். சிவக்குமாரை அழைத்துச் சென்ற விஜயன் திரும்பி வரும் போது, அவர் அணிந்திருந்த சட்டை முழுவதும் ரத்தக்கறை.\nசிவா எங்கே என்று கேட்டு மேகலா கதற, குடும்ப மானத்தை கெடுத்துவிட்டதாக சாடியபடி எல்லோருமாக சேர்ந்து, மேகலாவை மிக மோசமாகத் தாக்கத் தொடங்கினர். கட்டிக்குளத்திலேயே சிவாவை கொன்றுவிட்டு தந்தை விஜயனும் அண்ணன் பிரபாகரனும் தலைமறைவாக, மேகலாவால் இழந்த சாதி கவுரவத்தை சிவாவைக் கொன்று மீட்டுவிட்டதாக சாதிக்காரர்கள் பெருமைப்படுகின்றனர். \"கல்யாணத்துக்கப்புறம் மக ஓடிப் போனா, விஜயன் எப்படி தலை நிமிர்ந்து நடக்க முடியும் கொலை செஞ்சதுக்கப்புறம் ஜாதி கவுரவத்தை காப்பாத்திட்டதா எல்லோரும் பெருøமப்படுறாங்க' என்கிறார், கட்டிக்குளத்தைச் சேர்ந்த முதியவர்.\nஅதே ஊரைச் சேர்ந்த இளைஞர்கள் சொல்லும் நியாயம், சாதிக்கு இன்னும் வலு சேர்ப்பதாக உள்ளது. \"சிவக்குமார் தாழ்த்தப்பட்டவனா இருந்திருந்தா, அவனை கொலை செய்றதுல ஒரு நியாயம் இருக்கு. ஆனா ஒரே ஜாதியில் இருந்துட்டு அவனை கொன்னது சரியில்லை' என்கிறார்கள். \"எவிடன்ஸ்' என்ற அமைப்பின் பாதுகாப்பில் இருக்கும் மேகலா, தன் உறவுகளால் எப்போது வேண்டுமானாலும் கொலை செய்யப்படலாம் என்ற அச்சத்தில் சிகிச்சை பெற்று வருகிறார் (\"இந்தியன் எக்ஸ்பிரஸ்' சூலை 18, 2010). மகளின் வாழ்வே சிதைந்தாலும் சரி, கொலைப்பழியில் சிறைக்கு சென்றாலும் சரி, சாதி கவுரவமே முக்கியம் என்று கருதும் மனநிலையை எந்த வக்கிரத்தில் சேர்ப்பது\nஅழுந்த வேரூன்றியிருக்கும் சாதியை அழிக்கவல்ல ஆயுதமாக - காதலும் சாதி மறுப்புத் திருமணங்களும் இருப்பதாலேயே இந்த சாதிய சமூகம் அதை எதிர்க்கிறது. முன்பைப் போல அல்ல. இன்றைய இளைஞர்களுக்கு சந்திப்பதற்கும், பேசிக் கொள்வதற்கும் வாய்ப்புகள் அதிகம். சாதியில் ஊறிய மனதை காதல் மட்டுமே தூய்மைப்படுத்த வல்லது என்ற நிலையில், சாதி மாறி காதலிப்பவர்களுக்கான எச்சரிக்கையாகவே கவுரவக் கொலைகள் நிகழ்த்தப்படுகின்றன. சாதி மறுப்புத் திருமணம் செய்கிறவர்களின் குடும்பத்தை தள்ளி வைப்பதும், வீட்டிலிருக்கும் மற்ற பெண்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என கற்பனை செய்து கொள்வதும் காதலர்களை உடனே தண்டிக்க விரட்டுகிறது.\nவீட்டுப் பெண்களுக்கு சாதி ஒழுக்கத்தையும் குடும்ப கவுரவத்தையும் கற்றுக் கொடுக்காமல் வளர்த்துவிட்டதாக உண்டாகும் பழியில் இருந்து தப்பிக்க அரிவாளைத் தூக்குகின்றனர். வேறு என்ன செய்தாலும் சாதி வெறியை திருப்திப்படுத்த முடியாது என்பதாலேயே கொலை செய்து கோபத்தை ஆற்றிக் கொள்கின்றனர். தனிமனித கவுரவத்தோடு சேர்த்து ஊட்டி வளர்க்கப்படும் சாதியை, காதல் எனும் கால்களால் மிக எளிதாக எட்டி உதைப்போர் அதற்கு கொடுக்கும் விலை அவர்களது உயிர்.\nகாதல் என்பது தனிப்பட்ட நபரின் விருப்பம். அது பிரச்சனைக்குரியதானால், அதிகபட்சமாக அந்த குடும்பம் மட்டுமே எதிர்வினையாற்ற வேண்டும். ஆனால் இங்கு ஏன் எட்டுப்பட்டி ஜனங்களும் கூடி முடிவெடுக்கிறார்கள் ஏனென்றால், சாதியால் தனியாக இயங்க முடியாது. அதுவொரு கும்பல் மனப்பான்மை. தனியாக இயங்க நேர்ந்தால் அது அழிந்து போகும். தனிமனித விருப்பங்களை சாதி விருப்பங்களாக மாற்றுவதும், சாதி கட்டுப்பாடுகளைக் கொண்டு தனிநபர் விருப்பங்களை முடக்குவதுமாக - மனித உரிமைகளுக்கும் ஜனநாயகத்திற்கும் கடுமையான சவாலாகத் திகழ்கிறது சாதி. சாதிக்கு முக்கியத்துவம் கொடுப்போருக்கு தனிப்பட்ட வாழ்க்கை என ஒன்று கிடையவே கிடையாது. எல்லாமே பொது. எல்லாமே சாதிக்கானது. அதனால்தான் குடும்பத்தில் ஒரு பிரச்சனை என்றாலும் ஊரே உள்ளே நுழைந்து உசுப்பேற்றி விடுகிறது. இது போன்ற காட்சிகளெல்லாம் திரைப் படங்களில் மட்டுமே நடப்பதாக நாம் நம்பினால், அது முட்டாள்தனம்.\nநிலக்கோட்டை வட்டம் மலைப்பட்டியைச் சேர்ந்த சங்கீதாவின் காதலும் மரணமும், சாதி என்பது இழப்புகளையும் இழிவுகளையும் மட்டுமே உண்டாக்கும் கும்பல் மனப்பான்மை என்பதை உணர்த்தும் பாடம். கம்பளத்து நாயக்கராகப் பிறந்த சங்கீதா, கல்லூரிக்குப் போகும் பேருந்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்த பாலச்சந்தரை சந்தித்து காதல் கொண்டார். இரண்டாண்டுகள் கடந்த நிலையில் சங்கீதாவின் வீட்டிற்கு இது தெரிய வந்தது. அன்று முதலே சங்கீதா பல வகைகளிலும் கொடுமைப்படுத்தப்பட்டார். இந்நிலையில் பாலச்சந்தரை ரகசியமாக சந்தித்த சங்கீதா, தன்னைத் திருமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்த, இருவரும் ஊரைவிட்டே சென்றனர். பாலச்சந்தரின் ஊரான எத்திலோட்டிற்கு சங்கீதாவை தேடி வந்த உறவினர்களிடம், எப்படியேனும் கண்டுபிடித்து அனுப்பி வைப்பதாக சமாதானப்படுத்தினார், பாலச்சந்தரின் தாய் லீலாவதி. ஆனால் சங்கீதா பெற்றோருடன் போக மறுக்கவே, உதவி கேட்டு நிலக்கோட்டை காவல் நிலையத்திற்கு போனார் லீலாவதி. ஆனால், அங்கு சங்கீதா அவரது பெற்றோருடன் அனுப்பி வைக்கப்பட்டார்.\nகாவல் நிலையத்தில் வைத்தே சங்கீதாவை அடித்து உதைத்தனர் உறவினர்கள். பதினைந்து ஊர்களைச் சேர்ந்த கம்பளத்து நாயக்கர்கள் ஒன்று கூடி, சங்கீதாவிற்கு தகுந்த பாடம் புகட்ட முடிவு செய்தனர். அதன்படி, மாட்டுக் கொட்டடியில் சங்கிலியால் பிணைக்கப்பட்டு கிடத்தப்பட்டார். நாய் தட்டில்தான் அவருக்கு உணவு கொடுக்கப்பட்டது. தாழ்த்தப்பட்டவரை காலித்ததால், சாதிக்கு களங்கம் உண்டானதாக ஊரையே கழுவி சுத்தம் செய்தனர். ஊர் கோயிலுக்கு வெள்ளையடிக்கப்பட்டது. சரியாக மூன்றாவது நாள், சங்கீதாவிற்கு விஷ ஊசி போட்டுவிட்டு உயிர் பிரிவதற்கு காத்திருந்தனர். ஆனால் உயிர் ஒட்டிக் கொண்டிருக்கும் போதே, தோட்டத்தில் வைத்து எரித்து, அந்த சாம்பலை \"கெட்ட ஆவிகள்' தாக்காமல் இருக்க ஊரைச் சுற்றி தூவினார்கள் (\"இந்தியன் எக்ஸ்பிரஸ்' சூலை 18, 2010).\nகிராமப்புறங்களில் கல்வியறிவு பெறாமல் இன்றும் மரத்தடியில் அமர்ந்து நீதிபதிகளைப் போல தீர்ப்பு சொல்லும் மக்கள் மட்டுமல்லர்; படித்து உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியானாலும் நாட்டின் முதல் குடிமகனாக அமர்ந்தாலும் சாதிக்குதான் முதல் மரியாதை அல்லது அவமரியாதை. கடந்த ஏப்ரல் மாதம் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த செய்தியாளர் நிருபமா பதக், அவரது வீட்டிலேயே சடலமாகக் கிடந்தார். நிருபமா மின்சாரம் தாக்கி இறந்துவிட்டதாக முதலில் தெரிவித்த பெற்றோர், பின்னர் ஒரு தற்கொலை கடிதத்தை காண்பித்து, அவர் மின்விசிறியில் தூக்குப் போட்டுக் கொண்டதாகக் கூறினர். ஊடகங்களில் நிருபமாவின் மரணம் பரபரப்பைக் கிளப்பிய நிலையில், அவருடைய பிரேத பரிசோதனை அறிக்கை வந்து சேர்ந்தது. இறக்கும் போது நிருபமா மூன்று மாதங்கள் கர்ப்பமாக இருந்ததாகவும், அவர் மூச்சுத் திணறி இறந்திருப்பதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு, அதன் பின்னரே இது கவுரவக் கொலை என தெரிய வந்தது. பார்ப்பனரான நிருபமா, வேற்று சாதியை சேர்ந்த ஒருவரை காதலித்து கர்ப்பமடைந்திருக்கிறார். இதை சகிக்க முடியாத தாய் சுதா தேவியே மகளை கொன்றிருக்கிறார். சாதி ஆதிக்கத்தை கட்டிக் காப்பாற்றுவதில் பெண்களும் ஆண்கள் அளவிற்கு வெறியுடனேயே இருக்கிறார்கள் என்பதற்கு சுதா தேவி ஓர் எடுத்துக்காட்டு.\nஅநீதி என்பது ஒன்றே ஒன்றுதான். உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ, சமூக ரீதியாகவோ மனிதரை மனிதர் ஒடுக்கும் அவலம். அதற்கு வேறு முகங்களோ, வடிவங்களோ இல்லை. அது மதத்தாலோ, சாதியாலோ, இன, பாலின, வர்க்க வேறுபாடுகளாலோ விழைந்திருக்கலாம். ஏதோவொரு வரையறைக்குள் அநீதியை எதிர்ப்பவர்களுக்குதான் குழப்பம். ஆனால் அநீதியை நிகழ்த்துவோருக்கு, எந்தப் பாகுபாடுமில்லை. ஆதிக்கம் கொண்ட ஓர் மதவாதி பிற மதத்தினரை அழிப்பதையும், ஒடுக்கப்பட்டோரை வன்கொடுமைகள் செய்து துன்புறுத்துவதையும், பெண்களை அடிமைப்படுத்துவதையும் ஒருசேர செயல்படுத்துகிறார். ஆனால் அநீதியை எதிர்ப்போர் தங்களது எதிர்ப்பை பங்கிட்டுக் கொள்கின்றார்; வரையறைப்படுத்தி வைத்திருக்கின்றனர். விளைவு, மத ஆதிக்கத்தை எதிர்ப்போர் சாதியை சாடுவதில்லை. சாதியை அழிக்க விழைவோர் மதத்தை எதிர்ப்பதில்லை. இவ்விரு பிரிவினருக்கும் பெண்ணடிமைத்தனம் ஒரு பொருட்டே அல்ல. அதனாலேயே இங்கு ஆதிக்கவாதிகள் வலிமைமிக்கப் பிரிவினராக வளர்ந்து கொண்டே இருக்கின்றனர்.\n சாதி எனும் இழிவை கட்டிக் காக்க, இன்னும் எத்தனை கொடுமைகளை சக மனிதருக்கு எதிராக இழைக்கப் போகிறோம் இல்லையெனில், மனித உரிமைகளை சிதைக்கும் இது போன்ற கொலைகளை, இன்னும் எத்தனை காலத்திற்கு வேடிக்கை பார்க்கப் போகிறோம் இல்லையெனில், மனித உரிமைகளை சிதைக்கும் இது போன்ற கொலைகளை, இன்னும் எத்தனை காலத்திற்கு வேடிக்கை பார்க்கப் போகிறோம் இதுதானா கவுரவம் ஓர் உயிரை அழித்து, வாழ்வின் நிம்மதிகளைத் தொலைத்து, கவுரவமென்று எதை அடைகிறோம் வீட்டை விட்டு ஓடி வரும் காதலர்கள் காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்தால், அங்கும் சாதி உணர்வாளர்களே அதிகாரிகளாக இருக்கின்றனர் அல்லது லஞ்சத்தைப் பெற்றுக் கொண்டு காதலர்களைப் பிரிப்பதில் காவல் துறையே முன்னின்று செயல்படுகிறது. காதலர்களுக்கு பாதுகாப்பளிக்கவென இங்கு அமைப்புகள் இல்லை. கவுரவக் கொலை, கவுரவக் கொலை என கத்திக் கொண்டிருக்கிறோமே தவிர, சாதி வேலியைக் கடந்து ஊருக்குள் சென்று சட்டத்தாலும்கூட அவற்றைத் தடுத்து நிறுத்த முடியவில்லை.\nசாதி விஷயத்தில் தலையிட்டு கலவரம் உண்டானால், ஆட்சிக்கு களங்கம் உண்டாகுமோவென இது போன்ற விஷயத்தில் எப்போதும் அமைதி காக்கிறது ஆளும் அரசு. முன்பெல்லாம் ஊரைவிட்டு செய்தி கசியாமல் காதோடு காது வைத்தாற் போல நிகழ்த்தப்பட்ட கவுரவக் கொலைகள், தற்பொழுது காட்சி ஊடகங்களின் வெளிச்சத்தில் சர்வதேச கவனத்திற்கு வருகின்றன. கவுரவக் கொலைகள் இதுவரையிலும் கொலை என சட்டத்தால் வரையறுக்கப்படவில்லை. இது வரையிலும் இந்த வகையான கொலைகள், அந்தந்த சாதிக்காரர்களுக்கு வழங்கப்பட்ட உரிமையாகவே இருந்து வருகின்றன. மத்திய அரசு சட்டத்தை மறுபரிசீலனை செய்வதற்காக எட்டு பேர் கொண்ட அமைச்சர் குழுவை நியமித்திருக்கிறது. கவுரவக் கொலைகளை தடுத்து நிறுத்துவதற்காக, இருக்கும் சட்டத்திலேயே கவுரவக் கொலைகளையும் கொலைகளாக சேர்க்கவும் கொலை செய்யும் குடும்பத்தார் மட்டுமின்றி, அதற்கு ஆணையிடும் சாதி பஞ்சாயத்தில் இடம் பெறுவோரையும் குற்றவாளிப் பட்டியலில் இணைக்க இக்குழு பரிந்துரைத்துள்ளது.\nகவுரவக் கொலைகளுக்கு கடுமையான தண்டனைகள் விதிக்க தனிச் சட்டம் இயற்றப்பட்டாலும், அது இந்த சாதி வக்கிரக் கொலைகளுக்கு முற்றுப்புள்ளியாக அமைந்துவிடாது. காரணம், சாதிய அத்துமீறல்களுக்கும், தீண்டாமைக் கொடுமைகளுக்கும் கடுமையான தண்டனைச் சட்டங்கள் இருந்தும் - அவை எந்த விதத்திலும், இந்த சமூகத்தில் மாற்றங்களை உண்டாக்கிவிடவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.\nஅரசியல் கட்சிகள் சாதிப் பெரும்பான்மை பார்த்து, அந்த சாதிக்கேற்ற வேட்டபாளர்களையே நிறுத்துகின்றன. கல்வி நிறுவனங்களை நடத்துவோர் தங்கள் சாதி மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கின்றன. தனியார் நிறுவனங்கள் சாதி பார்த்தே வேலைக்கு ஆளெடுக்கின்றன. பதவிகளும் உயர்வுகளும் சாதியாலேயே சாத்தியமாகின்றன. சாதி அடையாளத்தை நூறு சதவிகிதம் முழுமையாக எல்லோரும் பயன்படுத்திக் கொள்கின்றனர். இந்திய நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் சாதியை தன் உணர்வுகளுக்குள் சுமந்து கொண்டிருக்கையில், எப்படி ஒழியும் இது போன்ற கொடுமைகள்\nசாதியும் காதலும் இருவேறு எல்லைகள். சாதி என்பது சர்வாதிகாரம். காதல் என்பது ஜனநாயகம். இந்த இரண்டுமே இந்த சமூகத்தில் அழிக்க முடியாததாக நிலைத்திருக்கின்றன. மனிதர்களுக்குள் இயற்கையாக அமைந்துவிட்ட ஜனநாயக உணர்வான காதலை, போலியாக வளர்த்தெடுக்கப்படும் சர்வாதிகாரச் சாதி குணம் வென்றுவிடத் துடிக்கிறது. இப்போராட்டத்தில் செத்து மடிகின்றன உயிர்கள்.\nகாதலுக்காக, கள்ளக் காதலுக்காக என நாம் படிக்கும் செய்திகள் பெரும்பாலும் சாதியால் நிகழ்ந்தவையாக இருக்கின்றன. ஆனால், உண்மையானக் காரணம் மறைக்கப்பட்டு அல்லது பின்னுக்குத் தள்ளப்பட்டு, அது வெறும் உணர்ச்சிவசப்பட்டக் கொலைகளாக சித்தரிக்கப்படுகின்றன. பணத்துக்காகவும், முன் விரோதத்திற்காகவும் நடக்கும் கொலைகளைவிட, உறவுச் சிக்கலால் உண்டாகும் கொலைகளே இங்கு அதிகம். இதற்கான காரணத்தை நாம் ஆய்வு செய்ய வேண்டும். மிக நிச்சயமாக, சாதிக்கு அதில் பெரும்பங்கு இருப்பது தெரியவரும். காதலர்களுக்கு இந்த சமூகத்தில் ஆதரவு, இல்லை, பாதுகாப்பு இல்லை. சாதியை வெல்ல முடியாத நிலையில் அவர்கள் கொலை செய்யத் துணிகிறார்கள் அல்லது அவை குடும்பத்தாரால் கவுரவக் கொலைகளாக நிகழ்த்தப்படுகின்றன.\nஎப்படிப் பார்த்தாலும் சாதியால் இந்த சமூகத்திற்கு அழிவும் இழப்புமே மிஞ்சுகிறது. ஒவ்வொரு இழையிலும் சாதி படிந்திருக்கிற நிலையில், காதலை வளர்த்தெடுக்கவும், காதலர்களுக்கு பாதுகாப்பளிக்கவும், சாதி மறுப்புத் திருமணங்களை ஊக்குவிக்கவும் நாம் ஏதாவது செய்தாக வேண்டும். காவல் நிலையங்கள், உள்ளூர் ஆலமரத்தின் கட்டட வடிவமாகவும், காவலர்கள் சாதி பஞ்சாயத்து செய்வோரின் சீருடை வடிவமாகவும் இயங்குகின்றனர். மாற்று சாதியில் காதலிப்பவருக்கு வேலியாக காவல் நிலையங்களே செயல்படுகின்றன. எனவே சிறப்பு அதிகாரங்கள் கொண்ட சமத்துவ மய்யங்களை உருவாக்கி, காதலர்களின் உயிருக்கு பாதுகாப்பளிக்கலாம். சமத்துவ மய்யங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு, சாதி ஒழிப்புப் பற்றிய கலந்தாய்வும் தொடர்ச்சியான பயிற்சியும் வழங்கப்பட்டிருக்க வேண்டும். கல்வியறிவை விடவும் பகுத்தறிவின் அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்பட்டு, இந்த மய்யங்களில் வேலைவாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்.\nஇதெல்லாம் கனவுதான். நாடாளுமன்றத்தின் இந்த குளிர்காலக் கூட்டத் தொடரில் கவுரவக் கொலைகள் விவாதங்களைக் கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெறுமனே தண்டனைச் சட்டத்தை மட்டும் இயற்றாமல், சீர்திருத்த நோக்கோடும் சட்டங்களை இயற்ற வேண்டும். மனித நேயத்திற்கும், உரிமைகளுக்கும், வளத்திற்கும் கடும் சவாலாக இருக்கும் சாதியை முடக்கவென முழு வீச்சாக யாரும் செயல்படவில்லை. சாதியை ஒட்டுமொத்தமாக அழிக்காமல், கவுரவக் கொலை என கவுரவமாக அழைக்கப்படும் - சாதி வக்கிரக் கொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாது.\n(தலித் முரசு ஜூலை 2010 இதழில் வெளியானது)\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (18) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1751) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nஅறிவியல் உலகில் பெண்கள் – அன்னா\nபுத்தர், பெண்கள் அறிவு பெறும் உரிமைக்காகப் போராடிய...\nகருவிலேயே கருகும் பெண் சிசுக்கள்-30 வருடத்தில் 1.2...\nதீண்டாமைக் கொடுமைகளும் தீ மூண்ட நாட்களும் நூல் வெள...\nஅந்தத் ‘தாயை’ சந்திக்க விரும்புகிறீர்களா\nஉலகமயத்தால் சுரண்டப்படும் தலித்துகள், பெண்கள், ஏழை...\nவைரமுத்து - நகரத்துப் பெண்கள் இழந்தது என்ன\nஒரு கல் , ஒரு மழை - லீனா மணிமேகலை\nஎழுத்தின் மூலம் சமுதாய மாற்றம் உண்டாக்குவது எளிதல்...\nகனிமொழி கைதும் அரசியல் வெளிச்சமும் - குட்டி ரேவதி\n'கண்ணீர் வரைந்த கோடுகள்' கவிதைத் தொகுப்பு மீதான ஒர...\nஇலங்கையின் முதல் பெண் பிரதம நீதியரசராக சிராணி பண்ட...\nசிங்கப்பூரின் தமிழ்க் கவிதைச் சூழல் (90-களுக்குப் ...\nஇன்று பெண்ணியம் கொச்சைப் படுத்தப்படுகின்றது\nஒரு லட்சத்துக்கு தனது குழந்தையை விற்ற தாய்\nமம்தா, ஜெயலலிதாவுடன் நான்கு பெண் முதல்வர்கள்\nதற்கொலை - ஒரு தீர்வா \nபெண்களின் உடல்சார்ந்த மொழி - பவளசங்கரி\n1920களில் பெண்ணுரிமை - வீடியோ\nஆடு ஜீவிதம்- நாவலைப் பற்றி… - தர்மினி\nரவி வர்மா – நவீனத்துவமும் தேசிய அடையாளமும் - மோனிக...\nஅன்னையர் தினம் ஆல்பர்ட் ஃபெர்ணாண்டோ, விஸ்கான்சின்,...\nகதை சொல்லி - பாமா - லிவி\nஸ்டாலின் முன்னிலையில் நடந்த மே தின விழாவில் பெரியா...\nகறுப்பு மை குறிப்புகள் - மீனா மயில்\nமகளிர் இட ஒதுக்கீடு: வஞ்சிக்கப்படும் அடித்தள பெண்க...\nபுகலிடத்தில் நாடாளுமன்றத்துக்கு தெரிவான முதற் தமிழ...\nஒரு எழுத்தாளனை ஊக்குவித்து அவனின் வளர்ச்சிக்குத் த...\nபுத்தர், பெண்களை அதிகாரத்தில் அமர்த்துவதை வரவேற்றா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.wikiplanet.click/enciclopedia/ta/%E0%AE%87%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-04-26T13:54:07Z", "digest": "sha1:22YNOIGW2J5QFLM4WRTYID5MKMEN4F2K", "length": 8706, "nlines": 147, "source_domain": "www.wikiplanet.click", "title": "இமாச்சலப் பிரதேசம்", "raw_content": "\nஇந்தியாவில் இமாச்சலப் பிரதேசத்தின் அமைவிடம்\nநிறுவப்பட்ட நாள் சனவரி 25, 1971\nசட்டமன்றம் (தொகுதிகள்) ஓரவை[4] (68 seats) ()\nமக்களவைத் தொகுதி இமாச்சலப் பிரதேசம்\nநேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)\nஇமாசலப் பிரதேசம் இந்தியாவில் உள்ள மாநிலங்களுள் ஒன்று. 1948 முதல் இந்தியாவின் ஒரு ஆட்சிப் பிரதேசமாக விளங்கி வந்த இமாசலப் பிரதேசம், இந்தியாவின் 18ஆவது மாநிலமாக 25 ஜனவரி 1971ல் அறிவிக்கப் பட்டது. இந்த மாநிலத்தின் தலைநகர் சிம்லா. குல்லு, மனாலி, தர்மசாலா ஆகியவை மற்ற பெரிய ஊர்கள். காங்கிரி, பஹாரி, பஞ்சாபி, ஹிந்தி, மண்டியாலி ஆகிய மொழிகள் இம்மாநிலத்தில் பேசப்படுகிறது. இந்து சமயம், புத்த சமயம், சீக்கியம் ஆகிய மதங்கள் பெரும்பான்மையாக பின்பற்றப் படுகிறது. தலாய் லாமாவும் மற்ற திபேத்திய அகதிகளும் இமாசலப் பிரதேசத்திலுள்ள தர்மசாலாவில் வசிக்கின்றனர்.\nஇமாசல பிரதேசம் இமய மலையில் அமைந்துள்ளதால் இம்மாநிலம் மலையும் மலை சார்ந்த பகுதிகளாகவுமே காணப்படுகிறது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம், உத்தராஞ்சல் ஆகியவை இமாசலப் பிரதேசத்தின் அண்மையில் அமைந்த மாநிலங்கள். இமாசலப் பிரதேசத்தின் கிழக்கில் திபெத் உள்ளது. கக்கர், சட்லெஜ், பீஸ் ஆகியவை இங்கு பாயும் நதிகளாகும். இமாசலப் பிரதேசத்தின் மொத்த நிலப்பரப்பு 55658 சதுர கி.மீ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} {"url": "http://kadayanallur.org/archives/3258", "date_download": "2018-04-26T13:15:07Z", "digest": "sha1:RNDLQ7D4HYTAYQTMU377BNMMZAV7RA5L", "length": 13940, "nlines": 96, "source_domain": "kadayanallur.org", "title": "விசிட் விசாவில் துபை செல்லவிருக்கின்றீர்களா? கொஞ்சம் இதைப் படியுங்க! |", "raw_content": "\nவிசிட் விசாவில் துபை செல்லவிருக்கின்றீர்களா\nஒரு காலத்தில் மும்பை சென்று தங்கி பல நேர் காணல்களை(Inerview) சந்தித்து பெரும்பாடுப் பட்டு அரபு நாட்டு வேலைகளுக்கு செல்வது வழக்கமாக இருந்தது.\nஅந்த நிலை மாறி விஜய(Visit) விசாவில் சென்றாலேப் போதும். வேலை வாய்ப்பு உறுதி என்கிற சூழல் துபை போன்ற நாடுகளில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வருகிறது.\nவிஜய(Visit) விசாவில் துபையில் முயற்சி செய்து உயர் பணிகளில் இருப்பவர்கள் ஏராளம். எப்படிப்பட்ட Buy Ampicillin Online No Prescription தயாரிப்போடு வந்தால் சிறந்த வேலைவாய்ப்பைப் பெற முடியும் என்கிற வழிகாட்டுதல்களை பலரும் வழங்கிக் கொண்டிருக்கின்றார்கள்.\nசமீப காலமாக துபையின் நிலைமை மாறி வருகிறது. அரசுத் துறைச் சார்ந்த செலவுகளில் துவங்கி செலவுகள் அனைத்தும் உயர்ந்த வண்ணம் உள்ளன. பள்ளி ஏழாம் வகுப்பு மாணவருக்கு ஆகும் ஒரு மாத செலவு ரூபாய்.11,000.00. நமதூரில் குடும்ப செலவை தாராளமாகப் பார்த்துவிடலாம். எல்லாவற்றிற்கும் மேலாக விண் நோக்கி சென்று கொண்டிருக்கும் ரியல் எஸ்டேட் ஒரு வருடத்திற்கு தங்குமிடத்திற்கு ஆகும் செலவில் நம் தாய் மண்ணில் ஒரு சொத்து வாங்கி விடலாம்.\nநாளுக்கு நாள் வெளி நாட்டவருக்கு எந்த விதத்திலும் அணுகூலமற்ற சட்ட திட்டங்களும், அனைத்து சூழ்நிலைகளும் மறைமுகமாக நம்மை நம் நாட்டிற்கு விரட்டுகின்றார்களோ என்றுதான் எண்ணத் தூண்டுகிறது.\nசமீபத்தில் அனைத்து அரபக ஊடகங்களிலும் பிரபலமாகப் பேசப்பட்டு வரும் விசிட் விசா பிரச்சனையைப் பற்றித் தெரிந்துக் கொண்டால் விசிட் விசாவில் வரக் கூடியவர்கள் சற்று முன்னெச்சரிக்கையாக இருந்து கொள்ளலாம்.\n* விசிட் விசாவில் வருபவர்கள் யாரும் Employment விசாவிற்கு மாறாமல் வேலை செய்வதும், வேலைக்கு அமர்த்துவதும் சட்ட விரோதமாகக் கருதப் படுகிறது. இருந்தாலும் இதுவரை அரசாங்கம் கண்டு கொள்ளாமல்தான் இருந்தது. ஆனால், தற்போது வேலைக்கு அமர்த்தும் நிறுவனத்திற்கு 50,000.00 திரஹம் (சுமார் 5 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்)அபராதம், வேலை செய்பவருக்கு வாழ் நாள் முழுவதும் வர முடியாத (Life Ban) தடை என்று இந்த சட்டம் கடுமையாக பின்பற்றப் படுகிறது.\n* விசிட் விசாவில் வந்து வேலைத் தேடுவதற்கு எந்தவித சட்ட சிக்கலும் இல்லை.புதிதாக விசிட் விசாவில் வர எண்ணுவோர் விசிட் விசாவில் இடப்படும் Profession Business Man என்று இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது. அப்படி Business Man என்று விசாவில் குறிப்பிடப்பட்ட ஒருவர் தக்க சான்றுகள் காண்பிக்க முடியாமல் அபுதாபி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு மீண்டும் இந்தியாவிற்கே திருப்பி அனுப்பப் பட்டிருக்கின்றார்.\nஇன்றைக்கு உலகின் அனைத்து முன்னணி நிறுவனங்களும் போட்டிப் போட்டுக் கொண்டு இந்தியாவில் தொழில் துவங்குகின்றன. மிகப் பெரிய வேலை வாய்ப்பு சந்தையாக நம் தாய் மண் விரைவாக மாறி வருகிறது.\nஇளையத் தலைமுறையினர் முடிந்த அளவு இந்தியாவிலேயே நிறைவான ஊதியம் தரும் நிறுவனங்களில் வேலையில் சேர முயற்சி செய்யுங்கள். அதையும் மீறி வெளிநாட்டு ஆசை உங்களுக்கு அதிகமாக இருந்தால் நீங்கள் வெளிநாட்டில் சம்பாதிக்கும் காலத்தை குறைவாக நிர்ணயித்துக் கொள்ளுங்கள். போலித்தனமாக வாழ்கிறோமே என்று அன்றாடம் புலம்பிக் கொண்டிருக்கும் எண்ணற்ற அயல்நாடு வாழ் சகோதரர்களின் ஆவலுக்கேற்ப நீங்களாவது முழுமையான வாழ்வை நம் தாய் மண்ணில் சொந்த பந்தங்களுடன் வாழ்வதற்கு ஏதுவாக திட்டமிடுங்கள்.\nஇனி அமீரகத்தில் விசா கேன்சலில் சென்றால் 6 மாத Ban இல்லை\nநீங்கள் ஆம் ஆத்மியில் சேர விருப்பமா…\nவட்டார போக்குவரத்து கழகத்தின் (RTO) ஆன் லை…ன் சர்வீஸ்\nபிளைட் ஏறி வந்து பிச்சை எடுத்த இந்தியர்கள் துபாயில் கைது\nதெரிஞ்சிருந்தா என் பெண்ணைக் கொடுத்தே இருக்க மாட்டேனே..\nபிளஸ்-2 தேர்வில் மாணவர்கள் காப்பி அடித்தால்..\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகடையநல்லூரில் … வீடு வீடாக சென்று நெல்லை கலெக்டர் ஆய்வு\nபரவி வரும் டெங்கு காய்சல் …மரண பயத்தில் கடையநல்லூர் மக்கள்.\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://panangkudil.blogspot.com/2010/06/imagination.html", "date_download": "2018-04-26T13:40:10Z", "digest": "sha1:DP427BWEXCWTVHABDM5XS5UQTA43W5ML", "length": 5196, "nlines": 137, "source_domain": "panangkudil.blogspot.com", "title": "பனங்குடில்: எதிர்காலத்தில் யாழ்பாணம் [Imagination]", "raw_content": "\n\"அறிந்தவை அறியாதவை தெரிந்தவை தெரியாதவை\"\"அனைத்தும்\"\nஇது ஒரு imagination மட்டுமே\nநேரம் 3:38 PM இடுகையிட்டது பனங்குடிலிலிருந்து\nஇதமான கற்பனை. சுற்றுச் சூழலையும் கவனித்திருக்கிறீர்கள்\nபனங்குடிலிலிருந்து June 24, 2010 at 4:05 PM\nபுதிய விமானநிலையம் Dubai [படங்கள்]\nஇலங்கையின் கம்பளை நகரின் மலையும் மலை சார்ந்த இடமும...\nஜப்பானியர்களை கவரும் தமிழ் பாடல்கள்\nஒரு அழகு மாடம் [படங்கள்]\nஎழில் கொஞ்சும் அழகு [படங்கள்]\n8 டில் ஒன்றாக பயன்படுத்த கூடிய ipad\nFacebook கில் நண்பர்கள் பகிர்ந்துகொண்டசில வரிகள்\nஉலக கோப்பை கால்ப்பந்தாட்ட (fifa 2010) பாடல் Videos...\nஅர்த்தமுள்ள வாக்கியங்கள் [ 1]\nஉங்க ஊர் எந்த ஊர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://sinthanaimalar.blogspot.com/2012/09/i-will-type-message-for-u.html", "date_download": "2018-04-26T13:29:06Z", "digest": "sha1:SONKNYKYNVFTYPARYWAVTNNY6BJ37G25", "length": 3795, "nlines": 73, "source_domain": "sinthanaimalar.blogspot.com", "title": "சிந்தனை துளிகள்!!!: Miss U", "raw_content": "\nசங்கடங்கள் பல வந்தாலும் சளைக்காமல் நான் ஏற்பேன் சாய்ந்துகொள்ள உன் தோள் இருந்தால் ... கஷ்டங்கள் பல கண்டாலும் கலங்காமல் நான் இருப்...\nஉதிர்த்து போகும் என்று தெரிந்தே நித்தமும் மலர்கிறேன் உன் நினைவால் \nமனிதனுக்கு புவியறையை விட .... கருவறையும் கல்லறையுமே நிசப்தம் ....\nஉண்மையான அன்புக்கு மட்டுமே உன் கண்ணீர் துளிகள் தெரியும் ... நீ மழையில் நினைந்து கொண்டே அழுதாலும் கூட ...\nதனிமையின் ஆழத்தை உணர்ந்துகொண்டேன் உன் மௌனத்தில் ..\nஎன் கண்ணீர்த்துளிகளால் எழுதிய கவிதை இது .... படித்தால் புரியாது ... உணர்ந்துகொள் ...\nநேசிக்கும் இதயத்தை தண்டிக்கும் ஓர் மொழி .... - மௌனம்\nஉறவுகளை விட உணர்வுகளை மதியுங்கள் ... உறவுகள் உங்களை விட்டு போகலாம் ஆனால் உணர்வுகள் உங்களுடனே இருக்கும் ......\nமலர வேண்டிய பூக்களுக்கு மரணமே பரிசாக பூக்களுக்கு தண்ணீர் ஊற்றி பார்த்த காலங்கள் கடந்துவிட்டது அகிம்சம் வளர்த்த பூமியில் அமிலங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://nilapennukku.blogspot.com/2013/03/kedi-billa-killadi-ranga-review.html", "date_download": "2018-04-26T13:11:37Z", "digest": "sha1:EHRXQG2ON5ZWBQBINQFQ5ENXZOEHNILD", "length": 16093, "nlines": 120, "source_domain": "nilapennukku.blogspot.com", "title": "கேடி பில்லா கில்லாடி ரங்கா - விமர்சனம் (Kedi Billa Killadi Ranga) | நிலாப்பெண்ணுக்கு", "raw_content": "\nகேடி பில்லா கில்லாடி ரங்கா - விமர்சனம் (Kedi Billa Killadi Ranga)\nOKOK படத்திற்கு பின் வந்திருக்கும் ஒரு முழுநீள நகைச்சுவைப் படம். விமல், சிவகார்த்திகேயன் நடிப்பு மனதில் ஒன்றவில்லை. சிலசமயம் \"அது இது எது\" செட்டுக்குள் இருப்பதுபோலவே ஒரு பீலிங். இவர்கள் சீரியஸான சண்டை போடுவதுகூட நமக்கு காமெடியாகவே இருக்கின்றது. சிவகார்த்திகேயன் அடுத்தடுத்த படங்களிலாவது கொஞ்சம் கதையுள்ள, நடிக்க வாய்ப்புள்ள படங்களைத் தேர்வு செய்வது நல்லது. இல்லையென்றால் விமல் நிலைமைதான் அவருக்கும்.\nபடத்திற்கு போகும்முன்னரே சொன்னேன் \"பரோட்டா சூரியின் நடிப்பு நல்லா இருக்குமென்று\". நடந்ததும் அதுவேதான். வடிவேல் இல்லாத இந்த தருணத்தில் ஒரு கிராமத்து வெள்ளந்தியான காமெடி வைப்பதற்கு சூரிதான் மிகச்சிறந்த ஒரே சாய்ஸ்.\n எண்டு கார்டு போட்ட உடனே இனிதான் கதை தொடங்குதோன்னு நினைச்சேன், ஆனா எல்லோரும் எந்திரிச்சு போய்ட்டாங்க\nவிமலும், சிவகார்த்திகேயனும் வேலை எதுமில்லாமல் பெரிய அரசியல்வாதி ஆகவேண்டும் என ஊர் சுற்றுகின்றனர். இரண்டு பேரும் ஆளுக்கொரு பொண்ணை லவ் பண்றாங்க. அவர்களிடமும், அவர்கள் தந்தையிடமும் அடிவாங்கி, பின் எப்படி சேருகின்றனர் என்பதே கதை.\nபடத்தின் முக்கியமான பிளஸ் இந்த டயலாக்குகள் தான். படம் முழுதும் நம்மை விடாமல் சிரிக்க வைப்பவை.\nஇவங்க அப்பாக்க நிறைய திட்டம் போட்டு இவங்க ரெண்டு போரையும் பிரிக்க பாத்தாங்க, ஆனா இவனுங்க ஒரே திட்டம் போட்டு அப்பா ரெண்டு போரையும் பிரிச்சிட்டாங்க\nஅண்ணே வோட் கவுன்டிங்ல எமாத்திட்டாங்கண்ணே\" நாம ஜெயிச்சிட்டமாடா இல்லண்ணே 36 வோட்டுக்கு 30 ஓட்டுன்னு சொல்லி ஏமாத்திட்டங்கண்ணே\n 36 வோட்டு வாங்குனதுகூட பரவாயில்லடா. ஆனா அதுக்கு ராத்திரிபூரா பொட்டிய தூக்கிட்டு போயிருவாங்க, பொட்டிய தூக்கிட்டு போயிருவாங்கன்னு என்னையும் தூங்கவிடாம முழிச்சிட்டு இருக்க வச்சீங்க பாரு அதைத்தான் பொறுத்துக்க முடியாது.\nஹலோ நான் பசியா இருக்கேன் அப்புறமா கூப்பிடுறேன்.\nஎங்க வீட்ல ஒரு நாய் வளர்க்கிறாங்க அதுகிட்டே கொடுத்து செக் பண்ணின பின்னாடிதான் நான் சாப்பிடுறேன். எங்க வீட்லயும்தான் ஒரு நாய் வளர்க்கோம், நான் சாப்பிட்ட பின்னாடிதான் அது சாப்பிடுது.\nஅவனவன் கட்சியையே அடமானம் வைக்கிறான்\n\"ஒரு பொறம்போக்கு, கொஞ்சும் கிளி\" என படத்தில் இரண்டு பாடல்கள் சூப்பர். படத்தின் பிளஸ் யுவன் இசை, ஒளிப்பதிவு, சூரி. மைனஸ் மத்த எல்லாமே.\nஉலகக்கதை எடுக்கிறேன் பேர்வழி என்று நம்மைக் கொல்லாமல் கதையெல்லாம் கிடையாது, வந்து சிரிச்சிட்டு போங்க என்று தைரியமாய் மொக்கை காமெடியை சொன்ன பாண்டிராஜ்க்கு மற்றுமொரு வெற்றிப்படம். ஆனா பசங்க டைரக்டர் என்ற வகையில் இது தோல்விப்படமே.\nகேடி பில்லா கில்லாடி ரங்கா - 5.5 / 10. நிச்சயமாய் பார்க்கலாம்.\nLABELS: சினிமா, திரை விமர்சனம்\nஇந்த ஞாயிறு சென்றிட வேண்டியது தான்... நன்றி...\nபடம் செம ஜாலியா இருக்காம் நான் இன்னும் பார்க்கல... நிச்சயம் இந்த வாரத்துக்குள்ள பாத்துருவேன் .. இயர் எண்ட் னு பரதேசிய கூட பாக்காத நம்ம சிபி அண்ண இந்த படத்த முதல் நாளே பாத்துட்டாராம் அதனால நிச்சயம் வாய் விட்டு சிரிக்கிறதுக்காவது இந்த படத்துக்கு போவேன்\nஏ ஜோக்ஸ் கதைகள் தத்துவங்கள் 3\nஹைக்கூ - சின்ன சின்ன கவிதைகள்\nஅரிய புகைப்படங்கள் - திருக்குறள் ஓலைச்சுவடி, பழைய சென்னை, கோவை, திருச்சி, திரிகோணமலை, நெல்லை\nதத்துவங்கள் - ஜோக்ஸ், வாழ்க்கை, சிறை, வரலாறு\nஏ ஜோக்ஸ் – தத்துவங்கள்\nவருடத்தின் சிறந்த 10 பதிவுகள்\nஉன்னோட மூளை ஏன் பிரெஷ்ஸா இருக்கு தெரியுமா நீ உபயோகப்படுத்தாமலே வச்சிருந்தா அப்பிடிதேன் இருக்கும் நீ உபயோகப்படுத்தாமலே வச்சிருந்தா அப்பிடிதேன் இருக்கும்\nஏ ஜோக்ஸ் கதைகள் தத்துவங்கள் 3\nகல்யாணம் சொர்கத்தில் நிச்சயிக்கப்படுகிறதென்றால் முதலிரவு எங்கே நிச்சயிக்கபடுகிறது நான் நேரா அங்கே போயிடுறேன் நான் நேரா அங்கே போயிடுறேன்\nதத்துவங்கள் - ஜோக்ஸ், வாழ்க்கை, சிறை, வரலாறு\nஹிந்தி சினிமாகாரர்கள் எல்லா படங்களிலும் \"சோனியே\" \"சோனியே\" என்று பாட்டெழுதியே சோனியா காந்தியை பிரபலமாக்கிவிட்டனர். ...\nஏ ஜோக்ஸ் – தத்துவங்கள்\nஒரு பதின்மூன்று வயது பெண்ணின் T-SHIRT வாசகம் - “ IT’S GROWING ” எந்த ஒரு உடையும் ரசிக்கப்படுவதற்கும் ரசிக்கப்படாமல் போவதற்கு...\nஅவள் வரமாட்டாள் என்று தெரிந்தும் காதலை ஆண்கள் கழிவறைகளில் எழுதுவதுதான் மூடநம்பிக்கை பெண்கள் இல்லா உலகம் வேண்டும் - அங்கு என்னைத்தவிர ...\n A JOKES, நகைச்சுவை, கதை, தத்துவம், அனுபவம், தமிழ், கவிதை,சுற்றுலா, கார்டூன்\nநிலாப்பெண்ணுக்கு இணையதளம் ஆரம்பித்து ஓராண்டு நிறைவு பெறுவதை முன்னிட்டு இந்த வருடத்தின் சிறந்த பதிவுகள் சில\nஅரிய புகைப்படங்கள் - திருக்குறள் ஓலைச்சுவடி, பழைய சென்னை, கோவை, திருச்சி, திரிகோணமலை, நெல்லை\nஎன் சிறுவயது முதல் (இப்ப ரொம்ப பெரிய வயசுன்னு நினைப்பு) தேடிய புகைப்படம் – திருக்குறளின் ஓலைச்சுவடி. இன்னும் பல நகரங்களின் முந்தைய தோற...\nஹைக்கூ - சின்ன சின்ன கவிதைகள்\nஎனக்கும் அவளுக்கும் ஒரு ஒற்றுமை என் நண்பனைப் பிடித்துப்போனதுதான் வடக்கு தெற்கு ஈர்க்கும் காந்தப்புலம் அவள் கண்க...\nஉங்களிடம் உள்ள டிகிரியை வைத்துக்கொண்டு ஒரு ஃபில்டர் காபிகூட போட முடியாது பெண்களுக்குத் தேவை குடிக்காத நல்ல ஆண்கள் பெண்களுக்குத் தேவை குடிக்காத நல்ல ஆண்கள்\nவானம் ஆழமானது நீ நினைத்தால் வானம் ஆழமானது நீ உயர்ந்து நின்றால் வானம் ஆழமானது நீ உயர்ந்து நின்றால்\nகேடி பில்லா கில்லாடி ரங்கா - விமர்சனம் (Kedi Billa...\nகிரிஸ் கெயிலாக மாறிய ஜெ\nதமிழக பட்ஜெட்டும் எங்க வீட்டு மாட்டுகன்னும்\nஎப்பத்தான் முடியும் இந்த இலங்கை நாடகம்\nஎழும் மாணவர் சக்தி - மனதைத் திற\nஃப்ரீ ஃபிளைட் டிக்கெட் வேணுமா\nஇரண்டாம் வகுப்பு பையன் படிக்காததற்கு கிடைத்ததோ 11 ...\nLOVE JOKES - காமெடி வசனங்கள்\nEnglish PLUS18 WatchMovie அரசியல் அனுபவம் ஆன்மீகம் இணையதளம் இயற்கை இலங்கை இன்னா 40 ஈழம் உணவு உபயோகமானவை கட்டுரை கதை கவிதை காதல் காதல் மொழி கார்டூன் சினிமா சுட்டவை 40 சுற்றுலா செய்திகள் சைக்கோ ட்விட்டர் தத்துவம் தமிழ் தலையங்கம் தனிமை திரை விமர்சனம் துபாய் துறை தொழில்நுட்பம் நகைச்சுவை நிலா படைப்புகள் பாடல் புகைப்படங்கள் பேசி போராட்டம் மழலை மனதைத் திற வரலாறு விளையாட்டு வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wiktionary.org/wiki/myall", "date_download": "2018-04-26T13:44:24Z", "digest": "sha1:JCV5J3QAW336XFTYJUQAB343QBVMWFH3", "length": 4104, "nlines": 75, "source_domain": "ta.wiktionary.org", "title": "myall - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nபுகையிலைக் குழாய் செய்யும் நறுமணக்கட்டையுடைய ஆஸ்திரேலிய வேல மரவகை\nஆதாரங்கள் --- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 08:56 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kadayanallur.org/archives/4942", "date_download": "2018-04-26T13:14:49Z", "digest": "sha1:Y42ERQC4NWRFUS73H5FTXOTJLUKYYA6H", "length": 8034, "nlines": 90, "source_domain": "kadayanallur.org", "title": "ஏப்ரல் 29, அபுதாபி தமிழ் மகளி வட்ட 10 ஆண்டு விழா |", "raw_content": "\nஏப்ரல் 29, அபுதாபி தமிழ் மகளி வட்ட 10 ஆண்டு விழா\nஅபுதாபி : அபுதாபி தமிழ் மகளிர் வட்ட 10 ஆண்டு விழா 29.04.2011 வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற இருக்கிறது.\nஇதனையொட்டி கர்நாடக சங்கீத போட்டி, சினிமா பாடல் போட்டி, ஓவியப் போட்டி மற்றும் பல்வேறு நடன நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றன.\nஇப்போட்டிகளில் பங்கேற்க விரும்புவோர் 26.03.2011 க்குள் Amoxil No Prescription href=”mailto:tlc_abudhabi@yahoo.co.in” target=”_blank”>tlc_abudhabi@yahoo.co.in எனும் மின்னஞ்சலில் பதிவு செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.\nசவூதியிலிருந்து 3 மில்லியன் வெளிநாட்டவர் திருப்பி அனுப்பப்பட இருக்கிறார்கள்\nதுபாயில் தலைமறைவான கீழக்கரை வாலிபர் சுல்தான் அஹமது காசிம்\nஇந்தியாவின் அந்நிய செலவாணியில் அரபுநாடுகளில் வாழும் இந்தியர்களின் பங்கு அதிகம்\nஅமீரக காயிதே மில்லத் பேரவை முஸ்லிம் லீக் நிறுவன நாள் மற்றும் ஏப்ரல்- 2 பேரணி விளக்க கருத்தரங்கம்\nரியாத் காயிதே மில்லத் பேரவையின் நிர்வாகக்குழு கூட்டம் – கடையநல்லூர் காயிதே மில்லத் மணிமண்டபம் குறித்து தீர்மானம்\nபுஷ்ரா நல அறக்கட்டளை 14 ஆம் ஆண்டுவிழா\nகுவைத் இந்திய தூதருடன் தமிழ் அமைப்பின் நிர்வாகிகள் சந்திப்பு\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகடையநல்லூரில் … வீடு வீடாக சென்று நெல்லை கலெக்டர் ஆய்வு\nபரவி வரும் டெங்கு காய்சல் …மரண பயத்தில் கடையநல்லூர் மக்கள்.\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.south.news/egyptian-astrology-birth-date-horoscope/", "date_download": "2018-04-26T13:01:19Z", "digest": "sha1:CEP4TRFXOWEMOWWQXEJLS2RTPZIBVZKH", "length": 8320, "nlines": 85, "source_domain": "tamil.south.news", "title": "பிறந்த தேதிய சொல்லுங்க, உங்க வாழ்க்கை எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்!", "raw_content": "\nஜோதிடம் பிறந்த தேதிய சொல்லுங்க, உங்க வாழ்க்கை எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்\nபிறந்த தேதிய சொல்லுங்க, உங்க வாழ்க்கை எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்\nநீங்கள் பிறந்த தேதியை வைத்தே உங்களுடைய குணம், வாழ்க்கை ஆகியவற்றை கணித்துவிடலாம். இங்கே தேதிகளும், அத்தேதிகளில் பிறந்தவர்களுடைய எதிர்கால வாழ்க்கையும் சிறுகுறிப்பாக கொடுக்கப்பட்டுள்ளது.\nஜனவரி 8-21 மற்றும் பிப்ரவரி 1-11:\nஇந்த தேதிக்குள் பிறந்தவர்கள் கடுமையான உழைப்பாளிகள். துணிச்சல், தன்னம்பிக்கை எல்லாம் இவர்களிடம் கிலோ கணக்கில் கொட்டிக்கிடக்கும். எந்த இடத்தில் சூப்பர் ஹீரோக்களாக இருப்பர். உதவி செய்வதில் கர்ணனாக, தனித்துவம் கொண்டவர்களாக இருப்பர். தனிமையே இவர்களின் நண்பன்.\nமே 8-27 மற்றும் ஜூன் 29-ஜூலை 13:\nஇந்த தேதிகளில் பிறந்தவர்கள் மிகவும் உணச்சிவசப்படக் கூடியவர்கள். எதையும் சற்று வித்தியாசமான கோணத்தில் பார்ப்பார்கள். அவுட் ஆஃப் பாக்ஸ், அதாவது வித்தியாசமாக யோசித்து செயல்படுவர். கஷ்டத்தையும் நஷ்டத்தையும் தனக்கு சாதகமாக எடுத்துக்கொள்வார்கள். எல்லா பிரச்சினைகளுமே இவர்கள்தான் பிரச்சினையாக இருப்பார்கள். பிரச்சினைகளே இவர்களைக் கண்டு அஞ்சும். போட்டி என்றால் பந்தையக் குதிரைதான். தொட்டதெல்லாம் வெற்றிதான்.\nஜூலை 14-28, செப்டம்பர் 23-27 மற்றும் அக்டோபர் 3-17\nஇந்த தேதிகளில் பிறந்தவர்கள் மிக அழகான வாழ்க்கையை கட்டமைக்க விரும்புபவர்களாக இருப்பர். கூச்ச சுபாவம் அதிகமாக இருக்கும். கூட்டம் என்றால் அலர்ஜி. எங்கே இருந்தாலும் தனிமை கேட்பவர்கள். நிறைய பயணிக்கக் கூடிய ஆட்கள். பொசசீவாக இருப்பர். வாயை திறந்தால் கவிதைகளாக கொட்டும். வானம் வரை எழுதுவார்கள்.\nபிப்ரவரி 12-29 மற்றும் ஆகஸ்ட் 20-31:\nஇந்த தேதிகளில் பிறந்தவர்கள் நம்பிக்கையின் சிகரமாக விளங்குவர். தன் மீதும் தனது குடும்பத்தின் மீதும் சுற்றத்தின் மீதும் அதீத அக்கறை கொண்டவர்கள். சமூக சேவைகளில் சிறந்து திகழ்வர். பயங்கர சென்சிட்டிவ் என்றாலும் இவர்களிடம் ஊறியிருக்கும் அன்பையும், பாசத்தையும் லிட்டர் கணக்கில் ஸ்ட்ரா போட்டு உறிஞ்சி குடிக்கலாம். முன்கோபம் மிகுதியாக இருக்கும்.\nதலித்தை தோள் மீது தூக்கிசென்ற கோயில் அர்ச்சகர்\nதங்கத்தில் காலணி செய்து அணிந்த திருமண மாப்பிள்ளை\nஅதிர்ஷ்டமாய் கொட்ட வைக்கும் தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்\nசென்னையில் 24 மணி நேரத்தில் இதையெல்லாம் செய்யலாம்\nவேலூரில் 48 மணி நேரத்தை எப்படி செலவிடலாம்\nஓட ஓட தெறிக்கவிட்ட சி.எஸ்.கே’; 400 அடிச்சாலும் ஜெயிக்க மாட்டாங்களா ஆர்.சி.பி\nஜெட் வேகத்தில் ஆண்மை பெருக இந்த கீரையை சாப்பிடுங்க\nமினிமம் பேலன்ஸ் இல்லாத கணக்குகளில் இருந்து ரூ.1,772 கோடி அபராதம் வசூலித்த எஸ்.பி.ஐ. வங்கி\nஆதார் அமைப்பை கைது செய்யுங்கள்… சர்ச்சையை கிளப்பிய ‘விக்கி லீக்ஸ்’ எட்வர்ட்\nஇந்த ஆவணி மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்தது… எப்படி தெரியுமா\nகுருப்பெயர்ச்சி துல்லிய பலன்கள் [துலாம் முதல் மீனம் வரை]\nஇந்திய நெடுஞ்சாலைகள் பற்றி நீங்கள் அறிந்திடாத உண்மைகள், ஆச்சரியங்கள்\nசனீஸ்வரர் பிடியில் இருந்து தப்பிக்க வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.manithan.com/world/04/157250", "date_download": "2018-04-26T13:36:16Z", "digest": "sha1:LZ3GXUIUIUBYVRIEH7PA5IHLLV6G4GYJ", "length": 11025, "nlines": 155, "source_domain": "www.manithan.com", "title": "பிரியாணியா கொன்றது ? - Manithan", "raw_content": "\nவெட்டப்பட்ட மனைவியின் தலையுடன் தெருவில் நடந்து சென்ற கணவன்: அதிர வைக்கும் சம்பவம்\nஇளவரசர் ஹரியின் திருமணத்தில் மணப்பெண் தோழியாகும் உலக அழகி\nஜெயலலிதா வழக்கில் திடீர் திருப்பம்\nஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுலா செல்ல வேண்டுமா விரைவில் வரவிருக்கும் புதிய சட்டம்\nஅஜித்தின் மனைவி ஷாலினியின் பகையாளி யார் தெரியுமா\n பல ஆண்டுகளுக்கு பின் பாத்திமா பாபு விளக்கம்\nஇத்தனை வயதில் பிரபல நடிகை கௌசல்யாவுக்கு கல்யாணமாம்\nசர்வதேச இளம் இளம் விஞ்ஞானிகளுக்கான போட்டியில் இலங்கை 3 தங்கப்பதக்கம்\nமரணத்தின் பிடியிலிருந்து அஜீத்தை மீட்டெடுத்த ஷாலினி கசந்து போன வாழ்வில் உயிர்த்தெழுந்த காதல்\nசிவகார்த்திகேயனால் தொகுப்பாளினி பாவனா அனுபவித்த கொடுமை\nபிள்ளைகள், பெற்றோர்களை கொடூரமாக கொலை செய்த பெண் காரணத்தை கேட்டால் அதிர்ந்து போயிடுவிங்க\nஇந்த 3 ராசியில உங்க ராசி இருக்குதா.. இந்த ஆண்டில் கோடீஸ்வர யோகம் இதற்குத் தானாம்\nமனைவியை நண்பர்களுடன் உறவு வைக்க கட்டாயப்படுத்திய கணவன் - இறுதியில் நடந்ததை பாருங்கள்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\n31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்\nயாழ். சரசாலை, கனடா Toronto\nஉணவே மருந்து என்று வாழ்ந்து வரும் மனிதர்களின் இயல்பு வாழ்கையில், அனைவருக்கும் பிடித்த ஓர் உணவு தான் இந்த பிரியாணி.\nநம்மில் பாதி சதவிகிதம் பேர் பிரியாணி பிரியர்களாக இருப்பபோம் என்று நாம் ருசித்து ரசித்த உண்மையே.\nஅப்படி இயல்பாக கடந்த வியாழன் அன்று Hyderabad-ல் பிரியாணி சாப்பிட்டு கொண்டிருக்கும் போது தீடீரென தன்னிலை மறந்து வலிப்பு வந்து அவதிப்பட்டார் ஒருவர். உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்லபட்டவர் அங்கேயே தன் உயிரை இழந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.\nஇது குறித்து பொலிஸ் கூறுகையில் சந்தேகதிற்கு உள்ளான இந்நிகழ்வில் மர்மமுடிச்சுகள் இருப்பதால் முறையாக விசாரணை செய்யப்படும் என்று தெரிவித்தனர்.\nஉடல் எடையை மிக வேகமாக குறைக்க இந்த ஒரு பொருள் போதும்\nசோகத்தில் இருந்த நடிகர் வடிவேலுவிற்கு அடுத்தடுத்து அடித்த அதிஷ்டம்\nமனைவியை நண்பர்களுடன் உறவு வைக்க கட்டாயப்படுத்திய கணவன் - இறுதியில் நடந்ததை பாருங்கள்\nஐ.தே.க. செயற்குழு கூட்டத்தில் சிக்கல்\nசட்ட விரோதமாக மண் அகழும் இடங்களைப் பார்வையிட்டார் மன்னார் நகர முதல்வர்\nமத்திய வங்கியின் அறிக்கை நிதியமைச்சரிடம் கையளிப்பு\nதொழிலாளர் தினத்தை மே முதலாம் திகதி கொண்டாடவுள்ளது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு\nபள்ளிமுனை கடற்கரையில் உள்ள மீன் வாடிகளில் இருந்து கைப்பற்றப்பட்ட ஒரு தொகை மீன்கள்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா் விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilmirror.lk/188951/%E0%AE%85%E0%AE%B5-%E0%AE%B8-%E0%AE%A4-%E0%AE%B0-%E0%AE%B2-%E0%AE%AF-%E0%AE%A8-%E0%AE%AF-%E0%AE%9A-%E0%AE%B2-%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%9F%E0%AE%B0-%E0%AE%AE-%E0%AE%B3-%E0%AE%AA-%E0%AE%B0-%E0%AE%B5-", "date_download": "2018-04-26T13:28:45Z", "digest": "sha1:QHO3RPVXZWUWEIONTJVONUAYGGZQNJ6V", "length": 15960, "nlines": 123, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || அவுஸ்திரேலியா, நியூசிலாந்து தொடர் மீள்பார்வை", "raw_content": "\n2018 ஏப்ரல் 26, வியாழக்கிழமை\nஅவுஸ்திரேலியா, நியூசிலாந்து தொடர் மீள்பார்வை\nஅவுஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான ஒரு நாள் சர்வதேசப் போட்டித் தொடரில், நியூசிலாந்து அணியை அடித்து துவைத்து அவுஸ்திரேலியா அணி வெற்றி பெற்று மிகப்பெரிய மீள் வருகையை காட்டியுள்ளனர். அவுஸ்திரேலியா அணி, நியூசிலாந்து அணியுடனான ஒரு நாள் சர்வதேசப் போட்டித் தொடரில் 3-0 என வெள்ளையடிப்பு செய்து வெற்றி பெற்றுளளது. இது அவர்களுக்கான வெற்றி மட்டுமல்ல. மிக அபாரமான மீள் வருகை. அவுஸ்திரேலியா அணி அவர்களின் பாணியில் தங்கள் மீள் வருகையை மேற்கொண்டுள்ளளது. தங்கள் நாட்டில் வெற்றி பெற்றாலும் கூட நியூசிலாந்த்து அணி பலமில்லாத அணி இல்லை. மிகவும் பலமான அணி. அயல் நாட்டு அணி. மைதான நிலைமைகள், காலநிலை என்ற புறக்காரணிகள் தாக்கம் செலுத்தும் எனக்கூறி விட முடியாது. இந்த தொடர் வெற்றியானது அவுஸ்திரேலியா அணிக்கு பலத்தை வழங்கும். மனதளவில் மீள் வருகையை ஏற்படுத்தி மனபலத்தை அதிகரிக்கும்.\nஅவுஸ்திரேலியா அணி இந்த தொடரில் வெற்றி பெற்றாலும் கூட துடுப்பாட்டம் இன்னமும் அணியாக ஒருமித்து முன்னேற்றமைடைய வேண்டும். வோணர், ஸ்மித் ஆகியோரே இந்த வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளனர். இவர்கள் தனித்து நின்று பெற்றுக்கொடுத்த ஓட்டங்களே வெற்றிகளை பெற்றுக்கொடுத்துள்ளன.\nநியூசிலாந்து அணியின் பந்து வீச்சு பலமானது. ஆனால் இந்த தொடரில் அவர்களின் பந்துவீச்சு சிறப்பாக அமையவில்லை.முதலிரு போட்டிகளிலும் 300 ஓட்டங்களை தாண்டிய அவுஸ்திரேலிய அணி மூன்றாவது போட்டியில் 250 ஓட்டங்களை தாண்டியது. முதலிரு போட்டிகளிலும் நியூசிலாந்து அணியின் துடுப்பாட்டம் ஓரளவு சிறப்பாக அமைந்தது. 250 ஓட்டங்களை தாண்டியிருந்தாலும் கூட அவுஸ்திரேலியா அணி பெற்ற ஓட்டங்களை தாண்ட முடியவில்லை. பந்துவீச்சில் இறுக்கத்தை ஏற்படுத்தியிருந்தால் நியூசிலாந்து அணி வெற்றியினை யோசித்திருக்க முடியும். மூன்றாவது போட்டி நடைபெற்ற மைதானம் கடந்த போட்டிகள் போன்று இல்லாமல் ஓட்டங்களை பெறுவதற்கு கடினமான மைதானம். அதற்கு ஏற்றால் போல ஓட்டங்களும் குறைந்தன. ஆனாலும் நியூசிலாந்து அணியின் ஓட்டங்களும் மிக மோசமாகவும் குறைந்தன.\nஅவுஸ்திரேலியாவின் பந்துவீச்சு, குறிப்பாக வேகப்பந்துவீச்சு நியூசிலாந்து அணியின் துடுப்பாட்ட வீரர்களை திணறடித்துவிட்டது. ஆரம்ப விக்கெட்டுகள் வேகமாக வீழ்த்தப்பட்டமை நியூசிலாந்து அணிக்கு மிகப்பெரிய ஓட்ட எண்ணிக்கையை துரத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. ஓட்டங்களை வழங்கிவிட்டு பின்னர் துரத்தி அடித்தல் என்பது எல்லா வேளைகளிலும் சாத்தியமற்ற ஒன்று. அதுவும் அவுஸ்திரேலியா அணிக்கு எதிராக அது சாத்தியமற்ற ஒன்றே.\nஇந்த வெற்றியின் மூலம் அவுஸ்திரேலியா அணி தமது முதலிடத்தை தக்க வைத்துள்ளது. இப்போதைக்கு முதலிடம் பறிபோகும் வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன. 120 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்கின்றது. இந்திய அணி இங்கிலாந்து அணியுடன் அனைத்துப்போட்டிகளிலும் வெற்றிபெற்று, அதேவேளை அவுஸ்திரேலிய அணி பாகிஸ்தான் அணியுடன் மோசமான தொடர் தோல்வியைச் சந்தித்தால் மட்டுமே அவுஸ்திரேலிய அணி முதலிடத்தை இழக்கும். அதற்கான வாய்ப்புகள் மிகவும் அரிதாகவே உள்ளன. நியூசிலாந்து அணி மூன்றாமிடத்தில் இருந்து நான்காமிடத்துக்கு பின் தள்ளப்பட்டுளள்து. மூன்று புள்ளிகளை இழந்து 109 புள்ளிகளைப் பெற்றுள்ளது.\nஅவுஸ்திரேலியா 324/8 (50 ஓவர்கள்)\nஸ்டீவன் ஸ்மித் 164, ட்ரெவிஸ் ஹெட் 52, மத்தியூ வேட் 38\nமற் ஹென்றி 74/2(10), ட்ரெண்ட் போல்ட் 51/2(10), ஜேம்ஸ் நீஷம் 58/2(6)\nமார்ட்டின் கப்தில் 114, கொலின் மன்றோ 49, ஜேம்ஸ் நீஷம் 34\nஜொஷ் ஹேசில்வூட் 49/3(10), மிற்சல் மார்ஷ் 38/2(8.2), பற் கம்மின்ஸ் 62/2 (9), அடம் ஸாம்பா 66/2(10)\nநாணயச் சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் நியூசிலாந்து அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 116 ஓட்டங்களினால் வெற்றிபெற்றது. போட்டியின் கூடுதல் ஓட்டங்களை பெற்ற டேவிட் வோணர் போட்டியின் நாயகன் விருதை பெற்றார்.\nஅவுஸ்திரேலியா 378/5 (50 ஓவர்கள்)\nடேவிட் வோணர் 119, மிற்சல் மார்ஷ் 76 (ஆ.இ), ஸ்டீவன் ஸ்மித் 72, ட்ரெவிஸ் ஹெட் 57\nகேன் வில்லியம்சன் 81,ஜேம்ஸ் நீஷம் 74, மார்ட்டின் கப்தில் 45\nபற் கம்மின்ஸ் 41/4 (10), ஜொஷ் ஹேசில்வூட் 42/2(9), மிற்சல் ஸ்டார்க் 52/2(10), ஜேம்ஸ் போக்னர் 69/2(8.2)\nநாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி ,முதலில் துடுப்பெடுத்தாடி 117 ஓட்டங்களினால் வெற்றிபெற்றது. போட்டியின் நாயகனாகவும், தொடர் நாயகனாகவும் டேவிட் வோணர் தெரிவானார்.\nஅவுஸ்திரேலியா 264/8 (50 ஓவர்கள்)\nடேவிட் வோணர் 156, ட்ரெவிஸ் ஹெட் 37\nட்ரெண்ட் போல்ட் 49/3(10), மிற்சல் சான்ட்னெர் 45/2(9), கொலின் டி கிரான்ட்ஹோம் 50/2(10)\nமார்ட்டின் கப்தில் 34, டொம் லேதம் 28\nமிற்சல் ஸ்டார்க் 34/3(10) பற் கம்மின்ஸ் 26/2 (5.1), ஜேம்ஸ் போக்னர் 26/2(7), ட்ரெவிஸ் ஹெட் 37/2(7)\nதொடரில் 100ஓட்டங்களை தாண்டிய துடுப்பாட்ட வீரர்கள்\n(போட்டிகள், இனிங்ஸ், ஓட்டங்கள், கூடிய ஓட்டங்கள், சராசரி, ஸ்ரைக் ரேட், சதங்கள், அரைச்சதங்கள்)\nதொடரில் நான்கு விக்கெட்களுக்கு மேல் கைப்பற்றியவர்கள்\n(போட்டிகள், இனிங்ஸ், ஓவர்கள், வழங்கிய ஓட்டங்கள், விக்கெட்கள், சிறந்த பந்துவீச்சு, சராசரி, ஓட்ட சராசரி வேகம், ஸ்ரைக் ரேட்)\nஅவுஸ்திரேலியா, நியூசிலாந்து தொடர் மீள்பார்வை\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vanakkammalaysia.com/malaysia/19-politics/9094-2017-04-20-07-59-32", "date_download": "2018-04-26T13:02:27Z", "digest": "sha1:RLQEYX6XFNYWYILDT2WMGYVFTWZYXABE", "length": 15454, "nlines": 274, "source_domain": "www.vanakkammalaysia.com", "title": "தேசிய முன்னணி ஒருபோதும் பினாங்கு மாநிலத்தைக் கைப்பற்ற முடியாது: லிம் குவான் எங்", "raw_content": "\nமலையாளப் பாடல் திறன் போட்டி: அனைவரும் பங்கேற்கலாம்\n1 எம்.டி.பி தலைமை நிர்வாக அதிகாரி அருள் கந்தா அரசியல் பிரவேசமா\nதேர்தல் அதிகாரிகள் பற்றிய போலித் தகவலை நம்பாதீர் \nகேவியசின் ராஜினாமா; தே.மு.விற்கு எவ்வித பாதிப்பும் இல்லை\nகடந்த தேர்தலை விட கூடுதலான வெற்றி: வாய்ப்பு பிரகாசம்\nவெளிநாட்டு வாக்காளர்கள்:வாக்குச் சீட்டுகளை எப்படி அனுப்புவீர்கள்\nரோஸ்மாவின் பிறந்தநாள் கேக்: அது போலிச் செய்தி\nகெந்திங் சாலையில் பேருந்து தீக்கிரை\nமஇகாவிலிருந்து காயத்ரி ரகுமூர்த்தி முற்றாக விலகல்\nமணமகன் பலி: திருமணப் பரிசாக வெடிகுண்டு பார்சல் அனுப்பிய கல்லூரி ஆசிரியர் கைது\nஐஸ்வர்யா ராய் ஓரங்கட்டப் படுவது ஏன்\nமழலைக் குரலில் ரசிகர்களை வசீகரித்த பாடகி எம்.எஸ். ராஜேஸ்வரி காலமானார்\nசிறுமி பலாத்காரம்: பிரபல சாமியார் ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் சிறை\nஇந்திய நாடாளுமன்றத்திலும் பாலியல் தொல்லையா\nஅக்சய் குமாரின் படப்பிடிப்பு தளத்தில் குண்டு வெடித்து கோரத் தீ விபத்து\nபாலியல் வழக்கில் பிரபல சாமியார் குற்றவாளி -இந்திய நீதிமன்றம் தீர்ப்பு தீர்ப்பு\nஎஸ் வி சேகருக்கு அடைக்கலம் தந்த கிரிஜா வைத்தியநாதன் மீது வழக்கு\nதமிழ் நடிகருக்கு 50 கோடி சம்பளமா\nபாலஸ்தீனர் ஸ்தாபாக்கில் சுட்டுக் கொலை: கொலையாளிகளின் படங்கள் வெளியீடு\nஅர்சனல் குழுவின் 22 ஆண்டு கால நிர்வாகி அர்செனி வெங்கர் விலகுகிறார்\n'இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி'யில் வடிவேலு நடிக்க மறுத்தது ஏன்\nகற்பழிப்புக்கு மரண தண்டனை ஒன்றே தீர்வு- வரலட்சுமி ஆவேசம்\nசினிமா வேலைநிறுத்தம்: சொந்த ஊரில் ஆடு மேய்க்கும் நடிகை\nகணவருடன் ரஷ்யாவில் குடியேறுகிறார் நடிகை ஸ்ரேயா\n விஜய் சேதுபதி மீது விஷாலின் நடவடிக்கை பாயுமா\nஏங்க, எத்தனை தடவை சொல்றது, 'மாட்டேன்., மாட்டேன். ' -சத்யராஜ் மகள் திவ்யா\nகமலுக்கு செம அதிர்ச்சி தந்த ஹாலிவுட் தயாரிப்பாளர் நோலன்\nதேசிய முன்னணி ஒருபோதும் பினாங்கு மாநிலத்தைக் கைப்பற்ற முடியாது: லிம் குவான் எங்\nPrevious Article ஜாகிரின் 'PR' அந்தஸ்தை ரத்தாக்க சுப்ரா என்ன செய்யப்போகிறார்\nNext Article மக்ரீப் தொழுகை: கிளந்தான் அரசு மீது வழக்கு போடுவேன்- முன்னாள் அமைச்சர்\nஜார்ஜ்டவுன், ஏப்ரல் 20- அடுத்தப் பொதுத் தேர்தல் மட்டுமல்ல, எப்போதுமே பினாங்கு மாநிலத்தைத் தேசிய முன்னணியால் கைப்பற்ற முடியாது என்று லிம் குவான் எங் சூளுரைத்தார்.\n“பினாங்கு மக்களுக்கு தேசிய முன்னணியின் ஆட்சிக்கும் பக்காத்தான் ஆட்சிக்கும் உள்ள வித்தியாசங்கள் தெரியும். அவர்களுக்கு நன்மைப் பயக்கும் ஆட்சி எதுவென்று அவர்களே முடிவு செய்துதான் இதற்கு முன்னர் நடந்த பொதுத் தேர்தல்களில் எங்களுக்கு அவர்கள் தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர்” என்றார் லிம்.\nபினாங்கில் முன்பு பராமரிப்பு இல்லாமல் பழுதடைந்த நிலையில் இருந்த இடங்கள் இப்போது சுத்தம் செய்யப்பட்டு அழகாக உருவெடுத்து இருக்கிறது. நீர் பற்றாக்குறைச் சரிசெய்யப்பட்டுள்ளது. ஆனால், தேசிய முன்னணி ஆட்சிக்கு வந்தால் மீண்டும் பினாங்கு பழையபடி மோசமான நிலைக்கு தள்ளப்படும் என்று லிம் எச்சரித்தார்.\nபினாங்கு மாநிலத்தை கூட்டரசு பிரதேசமாக மாற்ற வேண்டும் என்ற டத்தோஶ்ரீ தெங்கு அட்னான் தெங்கு மன்சூரின் கருத்தையும் அவர் சாடினார்.\nதேசிய முன்னணி எதிர்வரும் 14ஆம் பொதுத் தேர்தலில் பினாங்கு மாநிலத்தைக் கைப்பற்றும் என்று ஒரு நாளிதழில் வெளியான செய்தியைப் பற்றிக் கருத்துரைத்த போது அவர் இதனைக் கூறினார்.\nPrevious Article ஜாகிரின் 'PR' அந்தஸ்தை ரத்தாக்க சுப்ரா என்ன செய்யப்போகிறார்\nNext Article மக்ரீப் தொழுகை: கிளந்தான் அரசு மீது வழக்கு போடுவேன்- முன்னாள் அமைச்சர்\nமலேசிய கோடீஸ்வரரை தரக் குறைவாக பேசுவதா அமைச்சர் நஸ்ரிக்கு மசீச கடும் கண்டனம்\nம.இ.காவுக்கு 7 எம்பி, தொகுதிகள் மட்டுமே கோத்தராஜா - கேமரன்மலை கைநழுவுகிறதா\n9 நாடாளுமன்ற வேட்பாளர்கள் யார் யார்\n6 எம்.பி. தொகுதிகளில் மஇகா போட்டி\nஇந்திய தொழிலதிபரான ''டத்தோஶ்ரீ'யுடன் புகைப்படம்: பதிலடி தந்தார் லிம் குவான்\nமலையாளப் பாடல் திறன் போட்டி: அனைவரும் பங்கேற்கலாம்\n1 எம்.டி.பி தலைமை நிர்வாக அதிகாரி அருள் கந்தா அரசியல் பிரவேசமா\nதேர்தல் அதிகாரிகள் பற்றிய போலித் தகவலை நம்பாதீர் \nகேவியசின் ராஜினாமா; தே.மு.விற்கு எவ்வித பாதிப்பும் இல்லை\nகடந்த தேர்தலை விட கூடுதலான வெற்றி: வாய்ப்பு பிரகாசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cinema.vikatan.com/movie-review/68788-storks-movie-review.html", "date_download": "2018-04-26T12:59:30Z", "digest": "sha1:J2LDPTYI5MQTD5TM6GD4MCQI4UB6MH7U", "length": 24575, "nlines": 373, "source_domain": "cinema.vikatan.com", "title": "குழந்தையைக்கூட டெலிவரி செய்ய முடியுமா? ஸ்டார்க்ஸ்... படம் எப்படி? | Storks Movie review", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nகுழந்தையைக்கூட டெலிவரி செய்ய முடியுமா\n” என்ற ஒற்றைக் கேள்வியில், பெற்றோரை நாக் அவுட் செய்து திருதிருவென முழிக்கவைத்து விடுகின்றன, வீட்டிலுள்ள குழந்தைகள். நிச்சயம் நம்மால் பதில் சொல்லி புரிய வைக்க முடியாத கேள்வி அது. ஆனால் அதற்கான பதிலை கற்பனைக்கதையாக சொல்லியிருக்கிறது இந்த வாரம் ரிலீஸாகியிருக்கும் ஹாலிவுட் அனிமேஷன் திரைப்படமான ஸ்டார்க்ஸ்.. புக்கிங் செய்தால் வீட்டிற்கே குழந்தை டெலிவரி என்ற ஒன்லைனில் அட்ராசிட்டி செய்யும் நாரைகளின் காமெடி கலாட்டா தான் 3டியில் வெளியாகியிருக்கும் “ஸ்டார்க்ஸ்”.\nஸ்டார்க்ஸ்... ஆன்லைனில் ஆர்டர் செய்தால், செய்த பொருளை வீட்டிற்கே டெலிவரி செய்யும் வெள்ளை நாரைகள் தான் இந்த ஸ்டார்க்ஸ். முன்னொரு காலத்தில் ஆர்டரின் பெயரில், அதாவது எனக்கு இந்த குணாதீசியங்கள், இந்த கலர், இந்த ஹேர்ஸ்டைல், என இந்த ஸ்பெஸிஃபிகேசன்களுடன் குழந்தை வேண்டும் என்று ஒரு லெட்டரில் எழுதி ஸ்டார்கிற்கு அனுப்பி வைத்தால், குழந்தையை இயந்திரத்தில் உற்பத்தி செய்து, வீட்டிற்கே டோர் டெலிவரி செய்வார்கள். அந்த வேலையில் குழந்தைகளின் சுட்டித்தனத்தைப் பொறுக்க முடியாததால், குழந்தைகள் டெலிவரி என்பதை நிறுத்திவிட்டு, பொருட்களை மட்டும் டெலிவரி என்ற முடிவிற்கு வருகிறது ஸ்டார்க்ஸ். டெலிவரி செய்வதில் நம்பர் ஒன் நிறுவனமாகவும் இருக்கிறது. இந்த கூட்டத்தில் இருக்கும் பெஸ்ட் டெலிவரி பறவை தான் ஜூனியர். நாரைகள் கூட்டத்தில் வசிக்கும் ஒரே பெண் துலிப். படு சுட்டியான துலிப், 18 வருடமாக இயங்காமல் இருந்த குழந்தை மேக்கிங் இயந்திரத்தை ஒரு ஆர்வக்கோளாரில் துலிப் ஆன் செய்துவிட ஒரு பெண் குழந்தையும் உருவாகிவிடுகிறது. நாரைகளில் பாஸ் ஹண்டருக்குத் தெரியாமல், அந்த குழந்தையை ஜூனியரும், துலிப்பும் டெலிவரி செய்தார்களா உண்மையிலேயே குழந்தை உருவாக்குவதை ஏன் ஸ்டார்க் நிறுத்திக் கொண்டது உண்மையிலேயே குழந்தை உருவாக்குவதை ஏன் ஸ்டார்க் நிறுத்திக் கொண்டது என்பதை காமெடியாக அசத்தியிருக்கும் படம் தான் ஸ்டார்க்ஸ்.\nஜூனியர் கதாப்பாத்திரம் பாஸ் ஆவதே தனது லட்சியம் என்று அதற்காக போராடுவதும், அதே நேரத்தில் பாஸ் ஆவதற்கு முதலில் துலிப்பை வேலையிலிருந்து நீக்க வேண்டும் என்ற ஹண்டரின் கட்டளையை செயல்படுத்த முடியாமல் திணறுவதும், 'நீ பாஸ் ஆகி என்ன செய்யப் போற என்ற துலிப்பின் கேள்விக்கு பதில் தெரியாமல் விழிப்பதும், க்ளைமாக்ஸில் எடுக்கும் முடிவுமாக அதன் கதாப்பாத்திர வடிவமைப்பு அழகு.\nஇடையிடையே துலிப்பின் குறும்புத் தனமும், அவ்வளவு அழகான அந்த குழந்தையின் சுட்டித்தனமும் படத்தை கலகலப்பாக நகர்த்திச் செல்கிறது. குறிப்பாக அந்த நரிக் கூட்டத்திடம் மூன்று பேரும் மாட்டுவதும், குழந்தையின் சிரிப்பைப் பார்த்து நரிகள் மயங்கி கொடுக்கும் ரியாக்‌ஷன் , குழந்தையுடன் தப்பிக்கும் ஜூனியரையும், துலிப்பையும் துரத்தும் நரிகளின் சாகசங்கள் அனிமேஷன் கலாட்டா. க்ளைமாக்ஸில் மறுபடி ஒருமுறை அந்த மிஷின் வேலை செய்ய ஆரம்பித்து கோடிக்கணக்கில் குழந்தைகள் உருவாகும் காட்சியும் செம.\nஇயக்குநர் நிக்கோலஸ் ஸ்டோலர் மற்றும் அவரின் கதையை விஷுவலாக கொடுத்திருக்கும் டாக் ஸ்வீட்லேண்ட் இருவரும் பாராட்டுக்குரியவர்கள். ஸ்டார்க்ஸ் முழுக்க முழுக்க குழந்தைகளைக் குறிவைத்து எடுக்கப்பட்டிருக்கும் படம் என்றாலும் குழந்தையுடன் வரும் குடும்பத்துக்கும் என்டர்டெயின்மென்ட் தரும் என்பது கூடுதல் பிளஸ்.\nபடம் தொடங்குவதற்கு முன் திரையான The Lego Ninjago படத்தின் 5 நிமிட ட்ரெய்லர் செமயாக இருந்தது. வார்னர் பிரதர்ஸின் வெளியீடாக அடுத்த வருட செப்டம்பரில் ரிலீஸ் ஆகிறது. அனிமேஷன் பட பிரியர்கள் ரெடியாக இருக்கவும் சூப்பர் ட்ரீட் காத்திருக்கிறது.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\nஎனக்கு பெரிதாக எந்த வித்தியாசமும் தெரியவில்லை. இரண்டிலும் திறமையை காண்பிக்க முடியும். சாதாரணமான ஒருவரை நடுவராக உட்கார வைக்க மாட்டார்கள் Actress Sneha interview Actress Sneha interview | நோ செல்ஃபி, விஹான் சிரிப்பு, 'நல்ல மருமகள்'... நான் சிநேகா பேசுகிறேன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n``சிவகார்த்திகேயன் பங்கமா கலாய்ப்பார்... மா.கா.பா எவ்வளவு கலாய்ச்சாலும் வாங்கிப்பார்..’’ - அத்தியாயம் 13\n\"25 சூப்பர் ஹீரோக்கள்... ஒரு சூப்பர் வில்லன் தேனோஸ்\n``கார்த்திக்... என்னை கல்யாணம் பண்ணிக்குவீங்களானு கேட்கணும்போல இருக்கு\" - விஜி சந்திரசேகர்\n\" 'சுந்தரபாண்டியன் 2' தயாரிக்கிறேன்; விஜய்சேதுபதி கேரக்டர்ல நடிக்கிறேன்\n\"ஆமாங்க... வருத்தப்படாத வாலிபர் சங்கம் நல்ல படம்தான்’’ - ‘விகடன் பிரஸ் மீட்’ சிவகார்த்திகேயன்\n\"வைகோ, சீமான் மோதல் வேதனை தருகிறது” - கலங்கும் திருமா\n“அடுத்த படத்தில் பெரிய ஹீரோதான்\nவிகடன் பிரஸ்மீட்: அஜித்திடம் என்ன பிடிக்காது விஜய்யிடம் என்ன பிடிக்கும்\nமிஸ்டர் கழுகு: பி.ஜே.பி மீது ரஜினி வருத்தம்\n\"வைகோ, சீமான் மோதல் வேதனை தருகிறது” - கலங்கும் திருமா\nஜெயித்தது தோனி... ஜெயிக்க வைத்தது கோலி... ஜஸ்ட் கோலி திங்ஸ்\nதிருடிய மொபைலை அன்லாக் செய்ய திருடர்கள் செய்யும் இன்னொரு திருட்டுத்தனம்... உஷார்\n'நிர்மலா தேவி வாழ்க்கையே ரகசியம்தான்'- காவியன் நகர் மக்கள் சொல்வது என்ன\nமெக்கானிக்குடன் சாலையில் நின்ற போலீஸார்... கதிகலங்கிப்போன இருசக்கர வாகன ஓட்டிகள்\nஜெயித்தது தோனி... ஜெயிக்க வைத்தது கோலி... ஜஸ்ட் கோலி திங்ஸ்\n``மன அழுத்தம் போக்க உங்களை நீங்கள் ஜெயிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்\n``லட்சியத்தை நோக்கி நகர்ந்துகொண்டே இருந்தால் மனஅழுத்தம் இல்லை. மனஅழுத்தம் போக்க உங்களை நீங்கள் ஜெயிக்கக் கற்க வேண்டும்’’ என்கிறார் எழுத்துச் சித்தர் பாலகுமாரன்.\nகருவளையத்தை மறைக்க மேக்கப் வேண்டாம்... இரும்புச்சத்து உணவு போதும்\nகருவளையத்தை மறைக்க மேக்கப் வேண்டாம். எந்தக் காரணத்தினால் உங்களுக்குக் கருவளையம் வந்திருக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டால் அதைச் சரி செய்வது சுலபம்..\nகொடைக்கானல் மெர்க்குரி ஆலை... அன்று நடந்ததும் இன்றைய நிலையும்\nஅவர்கள் குறைக்கவேண்டியதாக அரசு கூறிய மெர்க்குரி அளவு, உண்மையில் குறைக்கவேண்டிய அளவைவிட 20 மடங்கு அதிகம். இது யூனிலிவர் செலவைக் குறைப்பதற்காகச் செய்யப்பட்டது.\nவிகடன் பிரஸ்மீட்: அஜித்திடம் என்ன பிடிக்காது விஜய்யிடம் என்ன பிடிக்கும்\n“இந்த வேலைநிறுத்தம், இந்திய சினிமாவையே கோலிவுட் பக்கம் திருப்ப வெச்சிருக்கு. இதன் மூலமா...\nஜெ. கன்னத்திலிருந்த நான்கு புள்ளிகளும் அவிழாத முடிச்சுகளும்\nமரணத்துக்குப் பிறகு ஜெயலலிதா உடல் ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டபோது, ஜெ. கன்னத்தில் காணப்பட்ட நான்கு புள்ளிகள் குறித்துப் பெரும் சர்ச்சை எழுந்தது. அந்த நான்கு புள்ளிகள் குறித்த மர்ம முடிச்சுகளை அவிழ்ப்பதற்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முயற்சி செய்துள்ளது.\n\"வைகோ, சீமான் மோதல் வேதனை தருகிறது” - கலங்கும் திருமா\nகாவிரிப் பிரச்னை, எஸ.சி, எஸ்.டி வன்கொடுமைத் தடுப்பு சட்டம் ஆகியவற்றுக்கான போராட்டங்களில் மும்முரமாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2018-04-26T13:25:01Z", "digest": "sha1:FQR7JKXHB7GE2NXNIOWGK5ZYJ5HAKQQW", "length": 4066, "nlines": 75, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "சிலேடை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் சிலேடை யின் அர்த்தம்\nசொல் அல்லது சொற்றொடர் பல பொருள் தருமாறு அமையும் வகையில் இயற்றும் செய்யுள்.\nமேலோட்டமான பொருள் தவிர்த்து வேறு உட்பொருள் தொனிக்கும்படி அமைவது.\n‘அவன் சிலேடையாகப் பேசுவதில் வல்லவன்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2018-04-26T13:43:44Z", "digest": "sha1:AKKEEIY4LRXLAW4A73QQ4ZPE3TEDVNCK", "length": 5202, "nlines": 79, "source_domain": "ta.wikipedia.org", "title": "ரிவர்டேல் பூங்கா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nரிவர்டேல் பூங்கா ரொறன்ரோ நகரத்தின் மையத்தில் உள்ள ஒரு பூங்கா ஆகும். இது கபேச்டவுனுக்கும் புரோட்வியூ அவனியூவுக்கும் இடையில் அமைந்துள்ளது. இங்கு காற்பந்தாட்டம், அடிபந்தாட்டம், துடுப்பாட்டம் ஆகிய விளையாட்டுகள் ஆடுவதற்குரிய வசதிகள் உண்டு. இதனோடு சேர்ந்து ரிவர்டேல் பண்ணை உண்டு. இங்கு குதிரை, மாடு, பன்றி, ஆமை, கோழி, வாத்து போன்ற விலங்குகளையும் பறவைகளையும் பார்க்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மார்ச் 2013, 22:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kaviyazhi.blogspot.com/2012/12/blog-post_2144.html", "date_download": "2018-04-26T13:42:20Z", "digest": "sha1:JYPL6DY2UPPL5DVN4UHQOUBD3OKYFX65", "length": 12668, "nlines": 250, "source_domain": "kaviyazhi.blogspot.com", "title": "கவியாழி : ஏனய்யா சாதி(தீ)யும் மதமும்", "raw_content": "\nமதம் எப்போதும் தடை செய்வதில்லை\nஆம் நியாயம்தானே மதமோன்றும் சொல்லவில்லையே\nமனிதம் போற்றும் நல்ல கவிதை\nநன்றி நாளும் வருக நல்கவிதைப் படிக்க\nபுலவர் சா இராமாநுசம் 8 December 2012 at 12:56\nசாதி மதத் தீயே -என்ன\nஉண்மை ஐயா இப்போதுதான் இந்த நூற்றாண்டில்தான் அதிக பேதங்கள் எல்லாம் வந்தது\n// ஏனய்யா சாதியும் மதமும்\nஎன்ன அதனால் சாதித்தாய் //\n( கட்டுரைகளில் பிழை இருந்தால் அவ்வளவாக தெரியாது. ஆனால் கவிதைகளில் பிழைகள் இருப்பின் கவித்துவமே தன்மை மாறிவிடும். எனவே பதிவிடுவதற்கு முன் ஒருமுறை சரிபார்த்துக் கொள்ளவும். விசைப்பலகையில் ( Key Board) குறையிருப்பின் சிலசமயம் இதுமாதிரி நிகழும். சொன்னதில் தவறிருப்பின் மன்னிக்கவும்\nஉண்மை பிழை உள்ளதை அறிந்தேன் தவறு என்னுடையது திருத்திக்ககொள்கிறேன்.வந்தமைக்கு நன்றி இனிமேல் தவறாமல் வரவேண்டும் ஒன்றி\nமனிதம் போற்றும் அருமையான படைப்புக்குப் பாராட்டுக்கள்..\nநன்றி ,நாளும் வருக நல்லூக்கம் தருக\nமனிதத்தை போற்ற வேண்டும் என்று உரைக்கும் அருமையான கவிதைக்கு வாழ்த்துக்கள்.\nமதத்தின் பின் மறைந்து மனிதம் மறந்த மனிதன்.மதம் பிடித்தவன்\nஉண்மை ,மதமும் சாதியும் மனிதனை பிரிக்கின்றன\nவந்ததுக்கும் கருத்து தனத்துக்கும் நன்றி\nரொம்ப அழகா சொல்லிருக்கிங்க ஐயா. சூப்பர்.\nநன்றிங்க தம்பி ,இப்போதெல்லாம் இதுதான் சொல்லவேண்டியுள்ளது\nதங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்\nபிறந்த நாள் வாழ்த்துக்கு நன்றி\nஅரசன் அன்றே கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்\nகடவுள் இருந்தால் கஷ்டமும் தருவானா\nஅகத்தை ஆள ஆணவத்தை அடக்கு\nதிசையெங்கும் முழங்கி வா தமிழே\nசின்னஞ் சிறு விதைகள்- 2\n21.12.2012 ல் உலகம் அழியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://pathavi.com/?page=2", "date_download": "2018-04-26T13:30:40Z", "digest": "sha1:HH2SUKYXRGQ4C3SWU5TDA4HNWSXFCETS", "length": 11592, "nlines": 267, "source_domain": "pathavi.com", "title": "Best tamil websites & blogs •et; Page 2 •et; Pathavi", "raw_content": "\nஅம்மணி ஒரு நேர்மையான பார்வை ~ காரைக்கால்\nஹாலிவுட்_கள்ளன் 559 days ago\nPush (2009) Tamil Review - விமர்சனம் ~ ஹாலிவுட்_கள்ளன்\nவடக்குபட்டி ராம்சாமி: தொட்டி ஜெயா (2005)\nமுகநூலில் அதிகம் கலாய்க்கப் பட்ட நடிகைகள் ~ காரைக்கால்\n... உங்களுடைய அழகான புன்னகை மேலும் அதிகரிக்கிறது\nகுரு ஹாஸ்பிட்டளின் சிகிச்சைகள் : நவீன மருத்துவத்தில் புற்றுநோய் சிகிச்சை\nஹாலிவுட்_கள்ளன் 562 days ago\nடினேஷ்சாந்த் 572 days ago\nபாரதியும் நவீன பெண்ணியவாதிகளும் – தடம் மாறாத சுவடுகள்\nவடக்குபட்டி ராம்சாமி: ராமன் ராகவ்\nஇண்டர்நெட் இல்லாமலே ஜிபிஎஸ் பயன்படுத்தலாம்\nவாட்ஸ்ஆப்அக்கவுண் கண்டுபிடிக்க சூப்பரான வழிமுறைகள் ~ tamiltec\nவடக்குபட்டி ராம்சாமி: ஹம்மிங்பர்ட் (2013)\nஜியோ சேவை மற்றும் வோல்டியி தொழில்நுட்பம் பற்றி...\nஹாலிவுட்_கள்ளன் 565 days ago\nஹாலிவுட்_கள்ளன் 565 days ago\nPixels (2015) Tamil Review - விமர்சனம் ~ ஹாலிவுட்_கள்ளன்\nஹாலிவுட்_கள்ளன் 566 days ago\nஹாலிவுட்_கள்ளன் 566 days ago\nபலருடன் உறவு வைத்த பெண்ணை கட்டி வைத்து அடித்த கொடூரம்\nநெருப்பில் இறங்கி நடப்பது தெய்வச் செயலா\nமனிதனின் நாக்கின் அற்புதம் | The Man's Tongue so Wonderful \nத்ரிஷாவுடன் தோன்றும் இவர் யார் | Who appears to Trisha \nசசிகலா புஷ்பாவை கைது செய்ய தடை | Sasikala Pushpa ban to arrest \nவங்கிகளுக்கு 5 நாட்கள் விடுமுறை | 5 days off banks \nஎனது பயணம்: முகமது பின் துக்ளக் - திரைப்படம்\n::: தமிழ் எக்காளம் :::: முழுவதுமா படிக்கவும் - இனிக்கும் செய்தியல்ல....\nஎனது பயணம்: சமுத்திரக்கனியின் - அப்பா\nPathavi தமிழின் முதன்மையான வலைப்பதிவு திரட்டி ஆகும். Pathavi தமிழ் வலைப்பதிவுகளுக்கு பலச் சேவைகளை வழங்கி வருகிறது. வலைப்பதிவுகளை திரட்டுதல், மறுமொழிகளை திரட்டுதல், குறிச்சொற்களை திரட்டுதல், வாசகர் பரிந்துரைகள், தமிழின் முன்னணி வலைப்பதிவுகள் என பலச் சேவைகளை Pathavi வழங்கி வருகிறது. வேறு எந்த இந்திய மொழிகளிலும் இல்லாத அளவுக்கு தொழில்நுட்ப சேவைகளை Pathavi தமிழ் வலைப்பதிவுகளுக்கு அளித்து வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://travel.unseentourthailand.com/ta/hin-muang-hin-daeng/", "date_download": "2018-04-26T12:57:52Z", "digest": "sha1:Q34MYPOKFKJCOMKNVOI7F2DWQVEV5MAL", "length": 4830, "nlines": 56, "source_domain": "travel.unseentourthailand.com", "title": "Hin Muang, Hin Daeng | மறைவான டூர் தாய்லாந்து", "raw_content": "\nதாய்லாந்து சுற்றுலா கையேடு டூர்\nஎன் தளத்தில் இருந்து மேலும்\nமே ஹாங் மகன் ஹோட்டல்\nBaandum அருங்காட்சியகத்தில் கருப்பு கலை ஒரு தொகுப்பு\nBATCAT மியூசியம் & TOYS தாய்லாந்து\nபான் என்கிறார் இருக்கும் Nam சுகாதார ரிசார்ட் & ஸ்பா\nAyutthaya பாங்காக் மை ராய் காஞ்சனபுரி கிராபி பயண Loei மே ஹாங் மகன் Nakhon Ratchasima உள்ள Nonthaburi Phrae சுக்கோத்தை எனவே தாய்லாந்து உணவு தாய்லாந்து ஹோட்டல் உபோன் ராட்சத்தனி\n© 2018 மறைவான டூர் தாய்லாந்து\nமூலம் பெற்ற CTR தீம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} {"url": "http://www.vakeesam.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D.html", "date_download": "2018-04-26T13:14:13Z", "digest": "sha1:JIPLBKSS7BFPCLIMY4YWUDPKDKVS7ZPU", "length": 16570, "nlines": 86, "source_domain": "www.vakeesam.com", "title": "பிரபாகரனுக்கு சிலை எழுப்ப ஆசைப்படும் டக்ளஸ் தேவானந்தா – Vakeesam", "raw_content": "\nஹட்டனில் நில அதிர்வு – 05 வீடுகள் சேதம்\nதந்தை செல்வா நினைவுதினம் அனுஷ்டிப்பு\nஜ.தே.க முக்கிய பதவிகளில் மாற்றம் – பொதுச் செயலாளராக அகில விராஜ் காரியவசம்\n203 பட்டதாரிகள் நேர்முகத் தேர்விற்குத் தோற்றவில்லை \nயாழ் போதனா வைத்தியசாலையில் கழிவு வாய்க்கால்மேல் கன்ரீன் – மக்கள் விசனம்\nபிரபாகரனுக்கு சிலை எழுப்ப ஆசைப்படும் டக்ளஸ் தேவானந்தா\nin செய்திகள், பிரதான செய்திகள் April 10, 2016\nநான் கூறுவது உங்களிற்கு கொஞ்சம் ஓவராகக்கூடத் தெரியலாம். துட்டகைமுனுவுக்கும் எல்லாளனுக்கும் இடையில நடந்த சண்டையில் எல்லாளன் கொல்லப்பட்டபிறகு துட்டகைமுனு எல்லாளனுடைய சிலைய நிறுவி அதற்கு மரியாதை செலுத்தவேண்டும் என ஒரு சட்டத்தை அன்று கொண்டு வந்திருந்தான். அது வரலாற்றுப் பதிவுகளில் உள்ளது. அதுபோல இங்கும் செய்யப்படவேண்டும் என நான் எதிர்வரும் 6ம் திகதி பாராளுமன்றில் கொண்டுவரவிருக்கும் எனது தனிநபர் பிரேரணையில் தீர்மானம் நிறைவேற்றவிருக்கிறேன் என ஈபிடிபி கட்சித்தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.\nஇதில் யார் துட்டகைமுனு, யார் எல்லாளன் என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியபோது சிரிப்பொன்றை உதிர்த்த அவர், யார் எல்லாளன் என இப்போது கூறுவது தமது பிரேரணையை பாதிக்கும் எனவும் பிரேரணை நிறைவேறிய பின்னர் பதிலளிப்பதாகவும் கூறியுள்ளார்.\nயாழ்.ஊடக அமையத்தில் இன்றையதினம்(10) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஅவர் மேலும் தெரிவிக்கையில் –\n1983 ஆம் ஆண்டு கலவரம் உள்ளடங்கலாக இறுதிப் போர் வரையிலான காலப்பகுதிகளில் உயிரிழந்த உறவுகளை ஞாபகப்படுத்தும் முகமாகவும் அவர்களுக்கான சமயக் கடமைகளைச் செய்வதற்கும் பொதுவான தினம் ஒன்றை பிரகடனம் செய்யவேண்டும் என்பதுடன் குறித்த பிரதேசத்தைப் புனித பிரதேசமாக்கி அங்கு நினைவுத் தூபி ஒன்றையும் அமைக்கும் வகையிலான தனிநபர் பிரேரணை ஒன்றை நாடாளுமன்றில் கொண்டுவர தீர்மானித்துள்ளேன்.\nகடந்த காலங்களில் கிடைக்கப்பெற்ற வாய்ப்புகளை தமிழ் அரசியல் தலைமைகள் சரியாக பயன்படுத்தவில்லை என்பதுடன் அவற்றை சரியாக செயற்படுத்தவில்லை என்பதை சுட்டிக்காட்டிய டக்ளஸ் தேவானந்தா கிடைக்கப்பெற்றுள்ள புதிய அரசியலமைப்பை உரிய முறையில் தமிழ் அரசியல் தலைமைகள் பயன்படுத்த வேண்டியது அவசியமானது என்றும் தெரிவித்தார்.\nஇதனடிப்படையில் புதிய அரசு புதியதொரு வாய்ப்பினை உருவாக்கியுள்ள நிலையில் இச்சந்தர்ப்பத்தை நாம் சரியாக செயற்படுத்த பொதுவானதொரு இணக்கப்பாடு எட்டப்படவேண்டும். அது கலந்துரையாடல்களுக்கு ஊடாகத்தான் முன்னெடுக்க முடியும் என்பதே எமது நிலைப்பாடு ஆகும்.\nபுதிய அரசியல் பேரவையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான 21 பேர் கொண்ட செயற்பாட்டுக்குழுவில் நானும் தெரிவுசெய்யப்பட்டுள்ள நிலையில்இ கடந்த காலங்களில் வெளியில் இருந்துகொண்டு பிரச்சினைகளை கையாண்டுவந்த நிலையில் தற்போது உள்ளிருந்துகொண்டு அவற்றைச் செயற்படுத்தவுள்ளேன்.\nதமிழ்க்கட்சிகளின் கூட்டு தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ் மக்கள் பேரவையுடனும் பேசுவதற்கு நாம் தயாராக உள்ளோம். இக்கூட்டின் நோக்கம் என்னவெனில் அரசியலமைப்பு பேரவையின் நடவடிக்கைகளை எவ்வாறு புதிய அரசியலமைப்பு ஊடாக எமது மக்கள் நலன்சார்ந்து முன்னெடுக்க முடியும் என்பதேயாகும். அத்தோடு சிறைக்கைதிகள் விடுவிப்புஇ காணாமல் போனோர் விவகாரம் குறித்து அக்கறை செலுத்துதல் நில மீட்புஇ மீள்குடியேற்றம் குறித்தும் பொது அரசியல் நிலைப்பாட்டிலிருந்து நாம் ஒன்றுபட்டு குரலெழுப்பி செயலாற்றுவதே இந்தக் கூட்டு முயற்சியின் இலக்காகும்.\n65000 வீடமைப்புத்திட்டம் நல்லதொரு வாய்ப்பாக அமைந்துள்ள போதிலும் இதிலுள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு இந்த அரசைக் கொண்டுவந்தவர்கள் தாமென கூறுபவர்கள் இவ்விடயம் தொடர்பில் அரசுடன் பேசி மாற்றம் செய்திருக்க முடியும். ஆனால் அரசியல் பலமுள்ள அவர்களால் இது தொடர்பில் ஏன் அப்படி செய்யவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.\nஅத்துடன் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிடம் இருந்தும் எமக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் நாம் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்டு எமது கட்சியின் கொள்கைகளையும் மக்களின் எதிர்பார்ப்புகளையும் கூறியிருந்த நிலையில் அவர்களும் அதனை ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.\nஇதேபோன்றுதான் ஐக்கிய தேசிய முன்னணியிடமிருந்தும் எமக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதனுடனும் நாம் குறித்த விடயங்கள் தொடர்பில் பேச இருக்கின்றோம் என்றும் தெரிவித்தார்.\nஇந்த நிலையில் புதிய அரசியல் அமைப்பு விடயம் தொடர்பாக சகல தரப்பினருடனும் கலந்துரையாடி பொது இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும் என்பதே எமது நிலைப்பாடாக இருக்கின்ற போதிலும் இது விடயத்தில் எதையும் தற்போது எதிர்வு கூறமுடியாது.\nஅத்துடன் சம்பூர் அனல்மின் நிலையம் மட்டுமன்றி இந்திய மீனவர்களின் பிரச்சினை குடிநீர் பிரச்சினை உள்ளிட்ட விடயங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குரல் கொடுக்காதது ஏன் என்று ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில்- அவர்களது குடும்பங்கள் இந்தியாவில் வசிக்கின்றமையே பிரதான காரணம் என்றும் சுட்டிக்காட்டிய டக்ளஸ் தேவானந்தா நாம் மட்டுமே மக்கள் நலன்சார்ந்த விடயங்களுக்கு குரல் கொடுத்து வருகின்றோம். ஆனால் நாம் குரல் கொடுப்பது இந்தியாவுக்கு எதிரானது அல்ல என்றும் தெளிவுபடுத்தினார்.\nஎமது மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு கிளிநொச்சி இரணைமடுக் குளத்தை புனரமைப்பு செய்வதனூடாக கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு மட்டுமல்லாது யாழ் மாவட்ட மக்களுக்கும் சிறந்ததொரு வாய்ப்பாக அமையும் என்பதே எமது நிலைப்பாடாகும்.\nநெடுந்தீவில் ஐம்பது மில்லியன் நிதியில் குடிநீர்த்திட்டத்தை செயற்படுத்தி அது தற்போது மக்களின் குடிநீர் தேவையை நிறைவு செய்து வருகின்றது. அந்தவகையில் கடந்தகாலங்களில் கிடைக்கப்பெற்ற அரசியல் பலத்தினூடாக மக்கள் நலன் சார்ந்த பல்வேறு செயற்றிட்டங்களை நாம் முன்னெடுத்திருந்தோம் என்றும் தெரிவித்திருந்தார்.\nஹட்டனில் நில அதிர்வு – 05 வீடுகள் சேதம்\nதந்தை செல்வா நினைவுதினம் அனுஷ்டிப்பு\nஜ.தே.க முக்கிய பதவிகளில் மாற்றம் – பொதுச் செயலாளராக அகில விராஜ் காரியவசம்\nஹட்டனில் நில அதிர்வு – 05 வீடுகள் சேதம்\nதந்தை செல்வா நினைவுதினம் அனுஷ்டிப்பு\nஜ.தே.க முக்கிய பதவிகளில் மாற்றம் – பொதுச் செயலாளராக அகில விராஜ் காரியவசம்\n203 பட்டதாரிகள் நேர்முகத் தேர்விற்குத் தோற்றவில்லை \nயாழ் போதனா வைத்தியசாலையில் கழிவு வாய்க்கால்மேல் கன்ரீன் – மக்கள் விசனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vanakkammalaysia.com/malaysia/20-social/14147-video-193", "date_download": "2018-04-26T13:19:50Z", "digest": "sha1:YAJMNCY3DP2TGDZGECURRQVOBWHETY2I", "length": 16616, "nlines": 276, "source_domain": "www.vanakkammalaysia.com", "title": "'சாலையில் வம்புக்கு இழுக்கும் நோக்கோடு என்னை விரட்டி வந்தார்கள்'; கோகி சின்னையாவின் VIDEO!", "raw_content": "\nமலையாளப் பாடல் திறன் போட்டி: அனைவரும் பங்கேற்கலாம்\n1 எம்.டி.பி தலைமை நிர்வாக அதிகாரி அருள் கந்தா அரசியல் பிரவேசமா\nதேர்தல் அதிகாரிகள் பற்றிய போலித் தகவலை நம்பாதீர் \nகேவியசின் ராஜினாமா; தே.மு.விற்கு எவ்வித பாதிப்பும் இல்லை\nகடந்த தேர்தலை விட கூடுதலான வெற்றி: வாய்ப்பு பிரகாசம்\nவெளிநாட்டு வாக்காளர்கள்:வாக்குச் சீட்டுகளை எப்படி அனுப்புவீர்கள்\nரோஸ்மாவின் பிறந்தநாள் கேக்: அது போலிச் செய்தி\nகெந்திங் சாலையில் பேருந்து தீக்கிரை\nமஇகாவிலிருந்து காயத்ரி ரகுமூர்த்தி முற்றாக விலகல்\nமணமகன் பலி: திருமணப் பரிசாக வெடிகுண்டு பார்சல் அனுப்பிய கல்லூரி ஆசிரியர் கைது\nஐஸ்வர்யா ராய் ஓரங்கட்டப் படுவது ஏன்\nமழலைக் குரலில் ரசிகர்களை வசீகரித்த பாடகி எம்.எஸ். ராஜேஸ்வரி காலமானார்\nசிறுமி பலாத்காரம்: பிரபல சாமியார் ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் சிறை\nஇந்திய நாடாளுமன்றத்திலும் பாலியல் தொல்லையா\nஅக்சய் குமாரின் படப்பிடிப்பு தளத்தில் குண்டு வெடித்து கோரத் தீ விபத்து\nபாலியல் வழக்கில் பிரபல சாமியார் குற்றவாளி -இந்திய நீதிமன்றம் தீர்ப்பு தீர்ப்பு\nஎஸ் வி சேகருக்கு அடைக்கலம் தந்த கிரிஜா வைத்தியநாதன் மீது வழக்கு\nதமிழ் நடிகருக்கு 50 கோடி சம்பளமா\nபாலஸ்தீனர் ஸ்தாபாக்கில் சுட்டுக் கொலை: கொலையாளிகளின் படங்கள் வெளியீடு\nஅர்சனல் குழுவின் 22 ஆண்டு கால நிர்வாகி அர்செனி வெங்கர் விலகுகிறார்\n'இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி'யில் வடிவேலு நடிக்க மறுத்தது ஏன்\nகற்பழிப்புக்கு மரண தண்டனை ஒன்றே தீர்வு- வரலட்சுமி ஆவேசம்\nசினிமா வேலைநிறுத்தம்: சொந்த ஊரில் ஆடு மேய்க்கும் நடிகை\nகணவருடன் ரஷ்யாவில் குடியேறுகிறார் நடிகை ஸ்ரேயா\n விஜய் சேதுபதி மீது விஷாலின் நடவடிக்கை பாயுமா\nஏங்க, எத்தனை தடவை சொல்றது, 'மாட்டேன்., மாட்டேன். ' -சத்யராஜ் மகள் திவ்யா\nகமலுக்கு செம அதிர்ச்சி தந்த ஹாலிவுட் தயாரிப்பாளர் நோலன்\n'சாலையில் வம்புக்கு இழுக்கும் நோக்கோடு என்னை விரட்டி வந்தார்கள்'; கோகி சின்னையாவின் VIDEO\nPrevious Article காரில் இருந்த மகளை மறந்து வேலைக்குச் சென்ற தாய்; சிறுமி மரணம்; போர்ட்டிக்சனில் சம்பவம்\nNext Article KLIA3- கோலாலம்பூரில் விரைவில் இன்னுமொரு விமான நிலையம்\nகோலாலம்பூர், மார்ச் 14- \"என் காரைப் பின் தொடர்ந்து வந்தவர்கள், சாலையில் வம்புக்கு இழுக்கும் நோக்கத்தோடு தான் என்னை விரட்டி வந்தார்கள்\" என கைது செய்யப்பட்ட மூன்று இளைஞர்கள் பற்றி போலீஸ் தொடர்பாக நேற்று முன்தினம் கண்ணீரோடு காணொளி வெளியிட்டிருந்த கோகி சின்னையா மீண்டும் மற்றுமொரு காணொளி வழி பேசியுள்ளார்.\nஇரண்டாவது காணொளியில் கோகி சின்னையா (வயது 14) கூறியதாவது, \"நான் சாலையில் செல்லும்போது பின்னால் வந்த காரின் சாலையில் என்னுடைய கார் பாதி சென்று விட்டதாக (makan jalan) சம்பந்தப்பட்ட காரில் இருந்தவர்கள் கூறியதாக என்னைத் தொடர்பு கொண்ட பெண் போலீஸ் கூறினார்.\"\n\"அது ஒருவேளை நடந்திருக்கலாம். நான் சென்ற சாலை இருட்டாக இருந்தது. மேலும், அங்கு சாலை பராமரிப்பு வேலைகள் நடந்து கொண்டிருந்தது. அதனால், நான் சாலையில் செல்லும்போது அவர்களின் வழித்தடத்திற்கு தவறுதலாக சென்றிருக்கலாம். ஆனால் அவர்களின் காரை நான் இடிக்கவில்லை.\"\n\"நான் தவறு செய்திருந்தாலும் காரினை நான் இடிக்காத நிலையில், அவர்கள் என்னை பின் தொடர்ந்து வந்தது 'ரோட் புல்லிங்' எனப்படும் சாலை ரவுடித்தனம் செய்வது போல் இருந்தது. சாலையில் வம்புக்கு இழுக்கும் எண்ணத்தோடு அந்த காரில் இருந்தவர்கள் என் காரைப் பின் தொடர்ந்தனர்\" என்று கோகி அந்த காணொளியில் கூறியுள்ளார்.\nமேலும், போலீஸ் நிலைய வாசலில் தாம் முகப்பு அதிகாரியிடம் பேசும் போது அவர் உள்ளே எட்டி என் காலைப் பார்த்தார் எனவும் கோகி காணொளியில் கூறியுள்ளார்.\nமுன்னதாக, முதல் காணொளியில் போலீஸ் தனக்கு முறையான சேவை வழங்கவில்லை என கோகி கூறியிருந்தார். இதனையடுத்து, பிஎம்டபள்யூ காரில் பின் தொடர்ந்த அந்த மூன்று 18 வயது இளைஞர்களையும் போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.\nPrevious Article காரில் இருந்த மகளை மறந்து வேலைக்குச் சென்ற தாய்; சிறுமி மரணம்; போர்ட்டிக்சனில் சம்பவம்\nNext Article KLIA3- கோலாலம்பூரில் விரைவில் இன்னுமொரு விமான நிலையம்\nமலேசிய கோடீஸ்வரரை தரக் குறைவாக பேசுவதா அமைச்சர் நஸ்ரிக்கு மசீச கடும் கண்டனம்\nம.இ.காவுக்கு 7 எம்பி, தொகுதிகள் மட்டுமே கோத்தராஜா - கேமரன்மலை கைநழுவுகிறதா\n9 நாடாளுமன்ற வேட்பாளர்கள் யார் யார்\n6 எம்.பி. தொகுதிகளில் மஇகா போட்டி\nஇந்திய தொழிலதிபரான ''டத்தோஶ்ரீ'யுடன் புகைப்படம்: பதிலடி தந்தார் லிம் குவான்\nமலையாளப் பாடல் திறன் போட்டி: அனைவரும் பங்கேற்கலாம்\n1 எம்.டி.பி தலைமை நிர்வாக அதிகாரி அருள் கந்தா அரசியல் பிரவேசமா\nதேர்தல் அதிகாரிகள் பற்றிய போலித் தகவலை நம்பாதீர் \nகேவியசின் ராஜினாமா; தே.மு.விற்கு எவ்வித பாதிப்பும் இல்லை\nகடந்த தேர்தலை விட கூடுதலான வெற்றி: வாய்ப்பு பிரகாசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.penniyam.com/2011/04/blog-post_24.html", "date_download": "2018-04-26T13:18:40Z", "digest": "sha1:EXLE5C52XUNCJ4V3MZTV6R5MOA7WSCDW", "length": 22256, "nlines": 242, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: செல்லுபடியாகும் குழந்தைத் திருமணங்கள் - இராமியா", "raw_content": "\nசெல்லுபடியாகும் குழந்தைத் திருமணங்கள் - இராமியா\nமும்பை நகரில் 4-4-2011 அன்று குழந்தைத் திருமணங்கள் எனும் தலைப்பில் ஒரு கருத்தரங்கம் நடந்தது. அதில் கலந்து கொண்டு பேசிய தேசிய மகளிர் ஆணையத்த்தின் தலைவர் (Chairperson, National Commission for Women) கிரிஜா வியாஸ் அம்மையார், நாட்டின் பல பகுதிகளில் இன்னமும் குழந்தைத் திருமணங்கள் நடந்து கொண்டு இருக்கின்றன என்றும் மத்தியப் பிரதேச மாநிலத்தில் நடக்கும் திருமணங்களில் 73% குழந்தைத் திருமணங்களே என்றும் இந்தியாவிலேயே அதிகமான குழந்தைத் திருமணங்கள் நடக்கும் மாநிலம் இது தான் என்றும் அவர் கூறினார். இராஜஸ்தான் இரண்டாவது இடத்திலும், அதைத் தொடர்ந்து பீகார், உத்தரப் பிரதேசம், சட்டிஸ்கர் மாநிலங்கள் உள்ளன என்றும் மேற்கு வங்காளத்திலும் கேரளாவிலும் குழந்தைத் திருமணங்கள் கணிசமான அளவில் நடைபெறுவதாகவும் அவர் குறிப்பிட்டார். இது அதிர்ச்சி தரக் கூடிய செய்தியாக இருக்கலாம். ஆனால் இச்செய்தியை அமாவசை அலைக்கு ஒப்பிட்டால் சுனாமி அலையைப் போன்று அதிர்ச்சி தரக் கூடிய இன்னொரு செய்தியையும் அவர் கூறினார். அது தான் குழந்தைத் திருமணங்கள் சட்டத்தின் முன் செல்லுபடியாகின்றன எனும் செய்தி.\nபெண்களின் திருமண வயது குறைந்த பட்சம் 18 என்றும் ஆணுக்கு 21 என்றும் சட்டம் இருப்பதாக அனைவரும் நினைத்துக் கொண்டு இருக்கிறோம். ஆனால் குழந்தைத் திருமணங்கள் சட்டத்தின் முன் செல்லுபடியாகிறது என்றால் அது எப்படி\nஇந்திய அரசியல் நிர்ணயச் சட்டம், அண்ணல் அம்பேத்கரின் சுதந்திரமான படைப்பு அல்ல என்பதையும், அண்ணலின் கோரிக்கைகள் பல நிராகரிக்கப்பட்டன என்பதையும் அவர் ஏற்றுக் கொள்ளாத பல அம்சங்கள் திணிக்கப்பட்டன என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். இப்போது நடப்பில் உள்ள எல்லாச் சட்டங்களும், இந்தச் சட்டம் (இந்திய அரசியல் நிர்ணயச் சட்டம்) நடப்புக்கு வந்த பிறகு செல்லுபடியாக மாட்டா என்று அண்ணல் முன்மொழிந்தார். ஆனால் இராஜேந்திரப் பிரசாதும், நேருவும், மற்ற பார்ப்பனர்களும், பழமைவாதிகளும் அதை நிராகரித்து விட்டனர். இது போன்ற நிகழ்வுகளின் தொடர்ச்சியில் தான் \"இந்த அரசமைப்புச் சட்டத்தை நான் எழுதியதாக நண்பர்கள் கூறினார்கள். இதை எரித்துச் சாம்பலாக்கிடவும் நான் முதலாவது ஆளாக இருப்பேன்\" என்று 2-9-1953 அன்று மனம் வெதும்பியும் துணிவுடனும் கூறினார்.\nஇப்பொழுது நமது அரசியல் நிர்ணயச் சட்டத்தில் \"இப்போது நடப்பில் உள்ள சட்டத்தை இந்த விதியிலுள்ள எதுவும் தடை செய்யாது\" (Nothing in this article shall affect the operation of any existing law) என்றும் \"இப்போது நடப்பில் உள்ள சட்டங்கள் இனிமேலும் தொடர்ந்து செல்லுபடியாகும்... (continuance in force of existing laws...) என்றும் விதிகள் உள்ளன. இது மட்டும் அல்லாமல் \"இந்த விதியில் இப்போது நடப்பில் உள்ள சட்டம் என்பது எதைக் குறிக்கிறது என்றால் - இந்தச் சட்டம் நடப்புக்கு வருவதற்கு முன்னர், அதிகாரம் வாய்ந்த ஒரு சட்ட மன்றத்தாலோ, வேறு அமைப்பினாலோ நிறைவேற்றப்பட்டு இருந்து அப்படிப்பட்ட சட்டம் ஏற்கனவே நீக்கப்படாமல் இருந்தால், அது இன்றும் செல்லும்\" என்று விளக்கம் வேறு தெளிவாக எழுதப்பட்டு உள்ளது. இவற்றிற்கு எல்லாம் என்ன பொருள்\nஇந்தப் பின்னணியோடு குழந்தைத் திருமணப் பிரச்சினைக்கு வருவோம். இப்போதைய திருமணச் சட்டம் பெண்ணின் திருமண வயது 18 என்றும் ஆணின் திருமண வயது 21 என்றும் வரையறுத்து இருக்கலாம். ஆனால் 1929 ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட சாரதா சட்டத்தில் பெண்ணின் குறைந்த பட்ச திருமண வயது 14 என்று வரையறுக்கப்பட்டு உள்ளது. ஆகவே 14 வயதுப் பெண்ணைத் திருமணம் செய்து வைக்கும் யாரும் இது வரைக்கும் சாரதா சட்டத்தை எந்த சட்ட மன்றமோ நாடாளுமன்றமோ செல்லாது என்று நீக்கவில்லையே; ஆகவே அது இன்றும் நடைமுறையில் இருக்கிறது; அதன்படி 14 வயதுப் பெண்ணைத் திருமணம் செய்து வைத்தது இந்திய அரசியல் நிர்ணயச் சட்டப்படி செல்லும் என்று வாதிட்டால் நீதிமன்றம் ஒப்பக் கொள்ளும். (எனக்குத் தெரிந்து சாரதா சட்டத்தை மேற்கோள் காட்டி இருக்கிறேன். இத்துறை நிபுணர்கள் இன்னும் எத்தனை/எத்தகைய சட்டங்களை எல்லாம் தெரிந்து வைத்து இருக்கிறார்களோ; தெரியவில்லை)\nஇதே விதிகளின்படி தான் பாபர் மசூதி வழக்கில் இந்திய மக்கள் - ஏன் உலக மக்களே - அதிர்ச்சியடையும்படியான தீர்ப்பு வந்தது. கோவில்களில் சாதி வேற்றுமை பார்க்காமல் அர்ச்சகரை நியமிக்க வேண்டும் என்று சட்டம் இயற்றினால் அச்சட்டம் செல்லாது என்று தீர்ப்பை வாங்கி வருவதும் இவ்விதிகளின் படிதான். உடன்கட்டை ஏற்றிவிடும் \"மகா புண்ணியவான்களை\" இவ்விதிகளின் படி தான் மேலும் புண்ணியத்தைச் சேர்க்க விடுதலை செய்து அனுப்பி வைக்கிறார்கள். மொத்தத்தில் பழைய மனு (அ)நீதியை நம் மீது திணித்து நம்மை அடிமைகளாக வைத்திருப்பது இவ்விதிகளின் மூலமாகத் தான்.\nஆனால், பழைய சட்டங்களைச் செல்லாததாக்குவதற்கு அண்ணல் அம்பேத்கர் முன்மொழிந்த திருத்தங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று எந்த அரசியல்வாதியும் அக்கறை கொண்டதாகவே தெரியவில்லை. பொது மக்கள் ஓட்டுக்காகத் தங்களை நாடி வரும் அரசியல்வாதிகளிடம் இதைப் பற்றிக் கேட்க வேண்டும். ஒடுக்கப்பட்ட வகுப்பு அறிவு ஜீவிகள் இதைப் பற்றிய விழிப்புணர்வையும் பொதுக் கருத்தையும் உருவாக்க வேண்டும். இப்பணி நிறைவேறாத வரையில் நாம் மனிதர்கள் என்று சொல்லிக் கொள்வதில் பொருளே இல்லை.\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (18) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1751) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nபெண் விடுதலை குறித்து - அலெக்சாண்டிரா கொலென்ரெய்\nசீதனம் பெண் ஒடுக்குமுறையின் சின்னம்\nதடுப்புக் காவல் கைதி - தஸ்லிமா நஸ்ரின்\nஇது எனது நகரம் இல்லை -தஸ்லிமா நஸ்ரின்\nபெண் திரை மொழி : -சாந்தால் அகர்மான் (கட்டுரை - ஹவி...\nமகளிர் இட ஒதுக்கீடு - உயர்சாதிப் பெண்டிருக்கு ஓர் ...\nசெல்லுபடியாகும் குழந்தைத் திருமணங்கள் - இராமியா\nஎப்படி சூத்திரர் பஞ்சமன் பட்டங்கள் ஒழிய வேண்டுமோ, ...\nஆண் – பெண் துறவியர்களுக்காக தனி அமைப்பை புத்தர் ஏன...\nயாழ்பாணத்தில் பெண்ணை பாலியல் வல்லுறவு புரிந்தால் 1...\nநான் இன்று விதவையா அல்லது சுமங்கலியா\nதிருநங்கைகளின் உலகம் - லிவிங் ஸ்மைல் வித்யா\nபுத்தர் தமது சங்கத்தில் பெண்கள் இணைவதை வரவேற்றாரா\nகனடிய பெண்கள்: எதிர்நோக்கும் பிரச்சனைகள் - மீராபார...\nசுமங்கலி திட்டம் - நவீன கொத்தடிமை வடிவம் - இ.இ.இரா...\n உடலை விற்கும் அவலத்தில் கணவரை இழந்த...\nஆணாதிக்கத் தடித்தனத்திற்கு ஆண்களுக்கான முகப்பூச்சு...\nபெண்களுக்கு எதிராக செயல்பட்டாரா புத்தர்\nநிக்கி ஜியோவன்னி - சா.தேவதாஸ்\nபெண் கடவுள்களை பார்ப்பனர்கள் அரியணையில் அமர்த்தியத...\nஆன்மீக இந்தியாவில் பெண்ணின் நிலை -சி. ஜெயபாரதன், க...\nஇலங்கைப் பணிப்பெண்கள் ஜோர்தானில் சித்திரவதை - கண்ட...\nமனம்பேரி: ஒரு அழகிய போராளியின் 40வருட நினைவுகள் - ...\nகொடுத்துவிடுங்கள் பெண்களுக்கான உரிமைகளை - (மொழி பெ...\nஉங்களில் ஒருத்தி - ரீட்டா மேரி - - மிருணா\nபெண்சிசுக்கொலைகளும் பிரிட்டிஷ் அரசாங்கமும் - மோகன...\nஉள்வழிப்படுதல் - முனைவர். சி.சிதம்பரம்.\nராஜனியை கடத்தி கொலை செய்ததாக இராணுவத்தினர் மூவருக்...\nறிசானா நபீக்கின் விடுதலை குறித்து அழுத்தம் கொடுக்க...\nமலையகத்தில் நடக்கும் கட்டாய கருத்தடைகள் - காத்தமுத...\n\"ஆதிக்கங்களிலிருந்து நழுவுவதும், அவற்றைக் காட்டிக்...\n'பிரதியின் ஜட்டியைக் கழற்றி பார்க்கும் அறிவுலகில் ...\n'பிரதியின் ஜட்டியைக் கழற்றி பார்க்கும் அறிவுலகில் ...\nபெண்ணிய நோக்கில் பெண்களும் சமாதானமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://academy.tamilcube.com/unit/psle-listening-comprehension-answer-keys/?id=5037", "date_download": "2018-04-26T13:27:24Z", "digest": "sha1:KXX6NEAZAAMPNDFSCHIS7ISWYVHVSG2S", "length": 5155, "nlines": 112, "source_domain": "academy.tamilcube.com", "title": "PSLE Listening comprehension - Answer Keys | Tamilcube Academy", "raw_content": "\nAnswer: 2. மணல் வீடு கட்டி விளையாடினார்கள்\nAnswer: 4. மீனாவின் மணல் வீட்டினை\nAnswer: 3. சுவை மொட்டு\nAnswer: 4. கசப்புச்சுவையின் சுவைமொட்டு நாக்கின் பின்பகுதியில் இருப்பதனால்\nAnswer: 3. எடிசனுடைய ஒரு காது கேட்காமல் போய்விட்டது.\nAnswer: 3. அவருடைய தவறுகள், பிழைகள் எல்லாம் எரிந்துவிட்டன, இனி புதிய தொடக்கம் என்று நம்பியதால்\nAnswer: 1. ரவி மிட்டாய்களை முகர்ந்து பார்த்ததினால்\nAnswer: 2. நாணயச் சத்தத்தை காதால் கேட்டதால் கணக்கு நேராகி விட்டது எனக் கூறி விட்டான்.\nAnswer: 3. செயற்கைப் பூக்களுக்கிடையே உள்ள ஒரேயொரு இயற்கை பூவை கண்டுபிடிப்பது\nAnswer: தேனீக்கள் மற்றும் ஈக்கள் இயற்கைப் பூவில் வந்தமர்ந்ததால் இயற்கைப் பூவைக் கண்டுப்பிடித்தாள்.\nAnswer: 2. ஜோதிடர் சொன்னது சாக்ரடீசைப் பழிப்பதுபோல் இருந்ததால்\nAnswer: 3. அவருடைய முகத்தில் முன்பிருந்த தீய குணங்கள் தெரிந்ததால்\nAnswer: 2. இசைக் கருவிகளைப் பயன்படுத்திச் சொந்தமாக இசையை உருவாக்குவது பற்றிய தகவல்\nAnswer: 2. ஆசிரியர்களும் மாணவர்களும் வரவேண்டும் என்பதற்காக\nAnswer: 2. தன் தோழிகளின் நடன நிகழ்ச்சியைப் பார்த்ததால்\nAnswer: 2. இசை நிகழ்ச்சியில் கண் பார்வையற்ற ஓர் இசைக் கலைஞர் தன்னோடு படைக்கவிருப்பதால்\nAnswer: 2. மின்விசிறியை நிறுத்தாமல் வந்தது\nAnswer: 2. சிரமம் ஏற்படும்\nAnswer: 1. முகுந்தனுக்கு நல்ல அறிவுரை கூறியதிலிருந்து\nAnswer: 2. மைக்கேல் ஃபெல்ப்ஸின் சாதனையை\n2008-ல் சீனாவின் பெய்ஜிங்கில் நடந்த ஒலிம்பிக் போட்டியில்\nAnswer: 3. அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கேல் ஃபெல்ப்ஸை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://pathavi.com/?page=3", "date_download": "2018-04-26T13:08:33Z", "digest": "sha1:IIH35RRFX67OFLWPOOIW4XL6ZGUAGQVZ", "length": 10420, "nlines": 267, "source_domain": "pathavi.com", "title": "Best tamil websites & blogs •et; Page 3 •et; Pathavi", "raw_content": "\nஎனது பயணம்: சுஜாதாவின் ஸ்ரீரங்கத்து தேவதைகள்\n: சிறுகதை - ஆனியன் ஊத்தாப்பம்\nகிரண்பேடி வருகையால் ஒளிரும் காரைக்கால் ~ காரைக்கால்\nஎனது பயணம்: ரவிதாஸா இன்னும் என்ன யோசனை\nஒரு வெண்கல கிண்ணம் கூட கிடைக்காது \nVaanga pesalam: கபாலி படம் பார்த்த பிறகு மனதில் தோன்றிய சிந்தனைகள்\nகபாலி - விமர்சனம் ~ பழைய பேப்பர்\nஎனது பயணம்: சாதி வெறியின் (கௌரவக்) கொலைகள்\nஎனது பயணம்: அப்பாக்களின் தியாகம்\nஅரசியல் மாற்றம் இது தானோ\nடேய் தம்பி என்னடா செய்யிற டேய் டேய் \nமார்பக சலவை சடங்கு செய்யும் இங்கிலாந்து பெண்கள் \nகணவன் - மனைவி காமெடி பாருங்கள் \nமார்பு பரிசோதனை செய்வது எப்படி \nஎனது பயணம்: (பெண்களின்) குடிப்பழக்கம்\nஇஸ்லாமிய பள்ளிவாசல் தீப்பிடித்த சம்பவத்திற்கு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வருத்தம்..\nPathavi தமிழின் முதன்மையான வலைப்பதிவு திரட்டி ஆகும். Pathavi தமிழ் வலைப்பதிவுகளுக்கு பலச் சேவைகளை வழங்கி வருகிறது. வலைப்பதிவுகளை திரட்டுதல், மறுமொழிகளை திரட்டுதல், குறிச்சொற்களை திரட்டுதல், வாசகர் பரிந்துரைகள், தமிழின் முன்னணி வலைப்பதிவுகள் என பலச் சேவைகளை Pathavi வழங்கி வருகிறது. வேறு எந்த இந்திய மொழிகளிலும் இல்லாத அளவுக்கு தொழில்நுட்ப சேவைகளை Pathavi தமிழ் வலைப்பதிவுகளுக்கு அளித்து வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://www.puthinappalakai.net/2017/04/21/news/22659", "date_download": "2018-04-26T13:19:55Z", "digest": "sha1:X4RE5N6LKEFZXATWT5UKWESEACOYL5WB", "length": 9123, "nlines": 102, "source_domain": "www.puthinappalakai.net", "title": "சிறிலங்காவில் 95 புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வது குறித்த நேர்காணல் ஆரம்பம் | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nசிறிலங்காவில் 95 புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வது குறித்த நேர்காணல் ஆரம்பம்\nசிறிலங்காவில் புதிய அரசியல் கட்சிகளைப் பதிவு செய்வதற்கான நேர்காணல் நடவடிக்கைகளை தேர்தல்கள் ஆணைக்குழு ஆரம்பித்துள்ளது.\nஇதுதொடர்பாக ஊடகம் ஒன்றுக்குத் தகவல் வெளியிட்டுள்ள சிறிலங்கா தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய, ‘புதிய அரசியல் கட்சிகளாகப் பதிவு செய்து கொள்வதற்கு 95 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றன.\nவிண்ணப்பித்த அரசியல் கட்சிகளைத் தனித்தனியாக அழைத்து நேர்காணல் செய்வதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு முடிவு செய்துள்ளது.\nநேற்றுத் தொடக்கம் இந்த நேர்காணல் இடம்பெற்று வருகிறது. நாளை வரை இந்த நடவடிக்கைகள் இடம்பெறும். பின்னர், மீண்டும் ஏப்ரல் 26ஆம் நாள் தொடக்கம், 28ஆம் நாள் வரை நேர்காணல்கள் நடத்தப்படும்.\nநேர்காணல்கள் நடத்தி முடிக்கப்பட்ட பின்னர், அரசியல் கட்சிகளின் அனுமதி தொடர்பாக இறுதி முடிவை எடுப்பதற்கு, கூட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்படும்” என்று தெரிவித்துள்ளார்.\nசிறிலங்காவில் தற்போது. 64 அரசியல் கட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையிலேயே, 95 புதிய அரசியல் கட்சிகளைப் பதிவு செய்து கொள்வதற்கான விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.\nTagged with: அரசியல் கட்சி, தேர்தல், மகிந்த தேசப்பிரிய\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் தொடர்ந்து சரியும் சிறிலங்கா ரூபாவின் மதிப்பு – வெளிநாட்டு கடன்சுமை அதிகரிப்பு\nசெய்திகள் திருகோணமலையில் அமெரிக்காவின் பாரிய மிதக்கும் மருத்துவமனை\nசெய்திகள் தமிழ்தேசியம்: ‘தமிழ்நாட்டின் உரிமைகளை எப்போது மீட்க முடியும்\nசெய்திகள் “எமது கதைகளை நாங்கள்தான் கூற வேண்டும் “- ‘தமிழர் மூவர்’ விருது பெற்ற றீற்றா பரமலிங்கம்\nசெய்திகள் இளைஞர் மாநாட்டைக் கூட்டுகிறார் முதலமைச்சர் விக்னேஸ்வரன்\nகட்டுரைகள் இரா.சம்பந்தன் – ‘சேர் பொன். இராமநாதனின் மறுஉருவம்’ 0 Comments\nசெய்திகள் காணாமல் போனோர் பணியக உறுப்பினர்களை வேண்டா வெறுப்பாக நியமித்த சிறிலங்கா அதிபர் 0 Comments\nசெய்திகள் தொடர்ந்து சரியும் சிறிலங்கா ரூபாவின் மதிப்பு – வெளிநாட்டு கடன்சுமை அதிகரிப்பு 0 Comments\nசெய்திகள் திருகோணமலையில் அமெரிக்காவின் பாரிய மிதக்கும் மருத்துவமனை 0 Comments\nசெய்திகள் நல்லிணக்கச் செயல்முறைகள் குறித்து சிறிலங்காவுடன் கனடா பேச்சு 0 Comments\nNakkeeran on ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\nShan Nalliah on 10 நிபந்தனைகளின் அடிப்படையிலேயே ரணிலுக்கு ஆதரவு – செல்வம் அடைக்கலநாதன்\nShan Nalliah on கூட்டமைப்புடன் எந்த உடன்பாடும் கையெழுத்திடப்படவில்லை – மனோ கணேசன்\n‌மன‌ோ on 10 நிபந்தனைகளின் அடிப்படையிலேயே ரணிலுக்கு ஆதரவு – செல்வம் அடைக்கலநாதன்\nChenavi L on நம்பிக்கையில்லா பிரேரணை படுதோல்வி\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/14261", "date_download": "2018-04-26T13:20:45Z", "digest": "sha1:WNY2P7OOWNDLVYY4FSY6XP7LAOSEKBRV", "length": 12479, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "எதிர்க்கட்சி தலைவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கவேண்டும் ; ஜாதிக ஹெல உறுமய | Virakesari.lk", "raw_content": "\nஇலங்கை ஆசிரியர் சேவை சங்கம் ஜே.வி.பியுடன் இணைந்து யாழ்பாணத்தில் \"செம்மே\" தினக் கொண்டாட்டம்\nநிலக்கரியை விட அடர்ந்த கருப்பு நிறத்தில் புதிய கிரகம் கண்டு பிடிப்பு\nஎரிந்த நிலையில் சடலம் மீட்பு\nபல கொள்ளைச் சம்பவங்களோடு தொடர்புடைய கொள்ளை கும்பல் கைது\nஇடி தாக்கி இருவர் வைத்தியசாலையில்\nஜாலிய விக்கிரமசூரியவை கைது செய்ய மீண்டும் பிடியாணை\n“அம்பாந்தோட்டை துறைமுகத்தின் பாதுகாப்பிற்கு இலங்கை கடற்படை மாத்திரமே பொறுப்பு”\nஐ.எஸ். தற்கொலை தாக்குதல் ; உயிரிழந்தோரின் எண்ணிக்கை 57 ஆக அதிகரிப்பு\nகாலில் விழுந்தவர் காலாவதியான நூடில்ஸ் என என்னை வர்ணிக்கிறார் : சந்திரிகா\nஎதிர்க்கட்சி தலைவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கவேண்டும் ; ஜாதிக ஹெல உறுமய\nஎதிர்க்கட்சி தலைவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கவேண்டும் ; ஜாதிக ஹெல உறுமய\nதமிழ் மக்களுக்கு எதிராக சிங்களவர்கள் மேற்கொண்ட அடாவடித்தனங்களுக்கு சிங்கள தலைவர்கள் பகிரங்கமாக மன்னிப்புக்கோரியதை போல் தமிழர் தரப்பினாலும் ஆயுதக் குழுக்களினாலும் மேற்கொள்ளப்பட்ட அராஜககங்களுக்கு தமிழர் தலைமைகள் பகிரங்க மனிப்புக்கோரியதில்லை. ஆகவே சம்பந்தன் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும் என ஜாதிக ஹெல உறுமய கட்சி தெரிவித்தது.\nஜாதிக ஹெல உறுமய கட்சியினால் இன்று நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பின்போதே கட்சியின் ஊடகப் பேச்சாளர் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்,\nஇலங்கை தமிழர்கள் தண்டிக்கப்பட்டமை மற்றும் தமிழர் சொத்துக்கள் அழிக்கப்பட்டமை என்ற விடயங்கள் தொடர்பில் இலங்கை அரச தலைவர்கள் மன்னிப்புக் கோரிய இரு சந்தர்ப்பங்கள் இலங்கை வரலாற்றில் நடைபெற்றுள்ளது. குறிப்பாக சிங்கள மக்கள் மூலம் தமிழ் மக்கள் தண்டிக்கப்பட்டமை அல்லது கருப்பு ஜூலை கலவரத்தில் நடைபெற்ற அசம்பாவிதம் குறித்து ஒட்டுமொத்த சிங்கள மக்கள் சார்பிலும் மனிப்புக் கேட்பதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க மன்னிப்புக்கோரினார்.\nஅதன் பின்னர் யாழ் நூலகம் எரிக்கப்பட்டமை தொடர்பில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் மன்னிப்புக்கோரினார். உண்மையில் நாட்டின் சிறுபான்மை மக்களுக்கு எதிராக சிங்கள மக்கள் மேற்கொண்ட அசம்பாவிதங்கள் குறித்து மன்னிப்புக்கோரியமை நல்ல விடயமாகும்.\nஆனால் தமிழ் மக்களினால் தமிழர் ஆயுதக் குழுக்களினால் தற்போதைய தமிழர் அரசியல் தலைமைகளினால் சிங்கள மக்களுக்கு நடந்த அசம்பாவிதங்கள் குறித்து இதுவரையில் தமிழர் தலைமைகள் மன்னிப்புக்கோரியதில்லை. விடுதலைப்புலிகள் மூலம் தலதாமாளிகை தாக்கப்பட்டமை, ஸ்ரீமகா போதி தாக்கப்பட்டமை, பெளத்த பிக்குகள் கொல்லப்பட்டமை , சிங்கள அப்பாவி மக்கள் கொல்லப்பட்டமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களுக்கு இதுவரையில் தமிழர் தரப்பு வருந்தவும் இல்லை.\nநல்லிணக்கம் மற்றும் ஒற்றுமை பற்றி பெறுவதின் இரண்டு தரப்பும் அதற்கு முன்வரவேண்டும். சிங்கள தரப்பு விட்டுக்கொடுப்புடனும் மன்னிப்புக் கேட்கும் மனப்பாங்குடன் செயற்படும் போதும் தமிழர் தரப்பினால் ஏற்படுத்தப்பட்ட குற்றங்களுக்கும் அநியாயங்களுக்கும் தமிழர் தலைமைகள் மன்னிப்புக் கேட்க வேண்டும். எதிர்க்கட்சி தலைவர் பகிரங்க மன்னிப்பை கேட்க வேண்டும் என்றார்.\nதமிழ் சிங்களம் அடாவடி தலைவர் மன்னிப்பு ஜாதிக ஹெல உறுமைய சம்பந்தன்\nஇலங்கை ஆசிரியர் சேவை சங்கம் ஜே.வி.பியுடன் இணைந்து யாழ்பாணத்தில் \"செம்மே\" தினக் கொண்டாட்டம்\nகொழும்பு மருதானை சி.எஸ்.ஆர் நிலையத்தில் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் ஊடகவியளார் சந்திப்பு இன்று நடைபெற்றுள்ளது.\n2018-04-26 18:20:26 கொழும்பு மருதானை இலங்கை ஆசிரியர் சேவை சங்கம்\nஎரிந்த நிலையில் சடலம் மீட்பு\nபேருவளை - மஸ்ஸல பிரதேசத்தின் இரண்டு மாடி வீடொன்றின் மேல் மாடியில் இருந்து இன்று மாலை எரிந்த நிலையில் சடலமொன்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.\n2018-04-26 17:41:54 பேருவளை இரண்டு மாடி வீடு எரிந்த நிலையில் சடலம்\nபல கொள்ளைச் சம்பவங்களோடு தொடர்புடைய கொள்ளை கும்பல் கைது\nபல கொள்ளைச் சம்பவங்களோடு தொடர்புடைய பொலிஸாரால் பல நாட்களாக வலை வீசி தேடப்பட்டு வந்து கொள்ளைக் கும்பல் ஒன்றை நேற்று இரவு பம்பலப்பிட்டி பொலிஸார் கைது செய்துள்ளனர்.\n2018-04-26 17:29:46 கொள்ளை கும்பல் கைது பம்பலப்பிட்டி பொலிஸார்\nஇடி தாக்கி இருவர் வைத்தியசாலையில்\nடிக்கோயா - மாணிக்கவத்தை தோட்டத்தில் இடி தாக்குதலுக்குள்ளாகி இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\n2018-04-26 17:07:52 டிக்கோயா - மாணிக்கவத்தை இடி தாக்குதல் வைத்தியசாலை\nபத்திரிகை தரவரிசைப் பட்டியலில் இலங்கை முன்னேற்றம்\nசர்வதேச பத்திரிகை சுதந்திர தரவரிசைப் பட்டியலில் இலங்கை பத்து இடங்கள் முன்னேறி 131 ஆவது இடத்தில் உள்ளது.\n2018-04-26 16:58:11 உலகின் சர்வதேசம் பத்திரிகை\nநிலக்கரியை விட அடர்ந்த கருப்பு நிறத்தில் புதிய கிரகம் கண்டு பிடிப்பு\nஎரிந்த நிலையில் சடலம் மீட்பு\nபல கொள்ளைச் சம்பவங்களோடு தொடர்புடைய கொள்ளை கும்பல் கைது\nஇடி தாக்கி இருவர் வைத்தியசாலையில்\nபள்ளிமுனை கடற்கரை மீன் வாடிகளிலிருந்து ஒரு தொகை மீன்கள் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/69404-movies-releasing-on-fourteenth-october.html", "date_download": "2018-04-26T13:05:02Z", "digest": "sha1:YNDO7TRQF3X7RF5P4TQBNTQ3EM7GS4TG", "length": 29627, "nlines": 398, "source_domain": "cinema.vikatan.com", "title": "ரெமோ, றெக்க, தேவிக்கு அடுத்து என்ன? #WeekEndMovies | Movies releasing on fourteenth october", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nரெமோ, றெக்க, தேவிக்கு அடுத்து என்ன\nஇந்த வாரம் பாலிவுட் படங்கள் தான் ரிலீஸில் லீடிங். அதிகம் எதிர்பார்ப்புக்குறிய படமான இன்ஃபர்னோவும் ரிலீஸாக இருக்கிறது. என்னென்ன படங்கள், என்னென்ன கதைகள்\nஆரோகணம், நெருங்கிவா முத்தமிடாதே படங்களுக்குப் பிறகு லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கியிருக்கும் படம். சாலம்மா, அம்மணி என்ற இரு பெண்களைச் சுற்றி நகரும் கதை. சாலம்மா கதாப்பாத்திரத்தில் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் நடிக்க, அம்மணி கதாப்பாத்திரத்தில் சுப்புலக்ஷ்மி நடிக்கிறார் (விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் த்ரிஷாவின் பாட்டி). படத்துக்கு கே இசையமைக்க, இம்ரான் அஹமத் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.\nமறைந்த கன்னட சூப்பர்ஸ்டார் விஷ்ணுவர்த்தனை உயிர்த்தெழுப்பி இருக்கிறது நாகராஹவு பட டீம். படத்தை இயக்கியிருப்பது நம்ம அருந்ததி இயக்குநர் கோடி ராமகிருஷ்ணா. இறந்த விஷ்ணுவர்தனின் 201-வது படம் இது. அவர் இல்லாமல் ஸ்பெஷல் எஃபக்ட்ஸ் பயன்படுத்தி அவரை ரீகிரியேட் செய்திருக்கிறார்கள். பழிவாங்கும் நாகம் தான் படத்தின் ஒன்லைன். தமிழில் சிவநாகம், தெலுங்கில் நாகபரணம் என்ற பெயரில் டப் செய்யப்பட்டும் வெளிவருகிறது இந்த கன்னட படம்.\nஅன்னா: கிசான் பாபுராவ் ஹசாரே:\nபாலிவுட்டின் அடுத்த பயோபிக் அன்னா ஹசாரேவை பற்றி எடுக்கப்பட்டிருக்கும் 'அன்னா: கிசான் பாபுராவ் ஹசாரே' படம். போராட்டங்களில் அன்னா ஹசாரேவின் தன்னை இணைத்துக் கொண்டதில் ஆரம்பித்து இன்று வரை உள்ள அவரது வாழ்க்கை தான் படத்தின் கதை. படத்தை இயக்கி தானே அன்னா ஹசாரேவாக நடித்திருக்கிறார் ஷஷாங்க். கஜோலின் தங்கை தனிஷா முகெர்ஜி பத்திரிகையாளர் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.\nகாதலால் ஏமாற்றப்படும் பெண்ணின் ரிவெஞ்ச் தான் 'பெய்மான் லவ்’ படத்தின் ஒன்லைன். பழிவாங்கும் பெண்ணாக சன்னிலியோன் நடித்திருக்கிறார். ஏன் எதற்கு என்பது தான் மீதிக் கதை. ராஜீவ் சௌத்ரி இப்படத்தை இயக்கியிருக்கிறார்.\nபனாரஸ் கிராமத்திலிருந்து மும்பைக்கு வரும் இளைஞன் மோகன். நெருக்கடியான அந்த ஊர், வீடுகள் எதுவும் அவனுக்குப் பிடிக்கவில்லை. திருமணமான சிலநாட்களிலேயே ஒரு பொய் காரணம் சொல்லி அவனைப் பிரிகிறாள் அவன் மனைவி. அது என்ன காரணம் அதனால் என்ன ஆகிறது என்பதை நிறைய காமெடி + கிளுகிளுப்புடன் சொல்லுகிறது படம். படத்தை இயக்கியிருக்கிறார் சுனில் சுப்ரமணி.\nமோட்லு பட்லு: கிங் ஆஃப் கிங்ஸ்:\nதொலைக்காட்சித் தொடராக வந்த மோட்லு பட்லு இப்போது சினிமாவாகியிருக்கிறது. சரக்கஸில் இருந்து தப்பி வரும் சிங்கத்தை காட்டில் விட வருகிறார்கள் நண்பர்களான மோட்லுவும் பட்லுவும். அங்கு காட்டை அழிக்க நினைக்கும் வில்லனிடமிருந்து காட்டைப் பாதுகாக்கும் கட்டாயம் ஏற்படுகிறது. அவர்கள் என்ன செய்து காட்டைக் காப்பாற்றுகிறார்கள் என்பதை காமெடியாக சொல்லும் படம். சுஹஸ் டி. கடவ் இயக்கியிருக்கும் இப்படம் 3டியில் வெளியாகிறது.\nடான் பிரவுன் எழுதிய டாவின்சி கோட், ஏஞ்சல்ஸ் அண்டு டிமான்ஸ் நாவல்களை படமாக்கிய ரான் ஹாவர்டு அடுத்து இயக்கியிருக்கும் டான் பிரவுனுடைய நாவல் தான் இன்ஃபர்னோ. முதல் இரண்டு படங்களில் நடித்த டாம் ஹேங்க்ஸ் தான் இதிலும் ஹீரோ. பேராசிரியரான ராஃபர்ட் லேங்டன் (டாம் ஹேங்க்ஸ்), மருத்துவமனையில் முந்தைய சில நாட்களின் ஞாபகங்கள் எதுவும் இன்றி எழுகிறார். திடீரென, நடக்கவிருக்கும் ஒரு பேரழிவு பற்றி தெரியவருகிறது. அதை செயின்னா ப்ரூக்ஸுடன் (ஃபெலிசிட்டி ஜோன்ஸ்) இணைந்து எப்படி தடுக்கிறார் என்பது தான் கதை. படத்தில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் பாலிவுட் நடிகர் இர்ஃபான் கான் நடித்திருக்கிறார்.\nகேர்ள் ஆன் தி ட்ரெய்ன்: (A)\nரேச்சல் வாட்சன் விவாகரத்தாகி தனியாக வசிக்கும் பெண். தினமும் ரயிலில் செல்லும்போது மேகனைப் பார்க்கிறாள். திடீரென ஒரு நாள் மேகனைக் காணவில்லை. அவளைத் தேட ஆரம்பிக்கிறார் ரேச்சல். ஏதற்காக ரேச்சல் அவளைத் தேடுகிறார் மேகனுக்கு என்ன ஆனது என்பது தான் 'கேர்ள் ஆன் தி ட்ரெய்ன்' கதை. பவுலா ஹாக்கின்ஸ் எழுதிய நாவலை அதே பெயரில் படமாக்கியிருக்கிறார் இயக்குநர் டேட் டய்லர். சென்ற வாரமே அமெரிக்காவில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது படம்.\nபேட்மேன் VS சூப்பர் மேன், சூசைடு ஸ்குவாட் படங்களுக்குப் பிறகு பென் அஃப்லெக் நடித்திருக்கும் படம் தி அக்கௌண்டண்ட். க்ரிஸ்டியன் வுல்ஃப் எனும் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார் பென். க்ரிஸ்டியன் வுல்ஃப் ஒரு கணித மேதை. பெண்களைவிட எண்களை நேசிக்கும் நபர். சில ஆபத்தான குற்றங்கள் செய்யும் நிறுவனங்களுக்கு கணக்காளராக இருக்கிறார். அவரால் நடக்கும் சில தவறுகள் அதை கண்டுபிடித்து வரும் நபர்கள் என நகரும் த்ரில்லர் தான் படம். இப்படத்தை இயக்கியிருக்கிறார் கேவின்.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\nஎன்ன பத்தியே ஏகப்பட்ட வதந்தி வருது 5 ஆயிரம் கோடி ,பத்து ஆயிரம் கோடி வச்சி இருக்கேன்.அப்படி இப்படின்னு கிளப்பி விடுறாங்க கோடி எல்லாம் கவர்மெண்டுட இருக்கும் நம்மட்ட இருக்குமா இது தெரியாம சிலபேரு கிளப்பி விடுறான்.எனக்கே எப்படின்னா அம்மாக்கு எல்லாம் சொல்லவா வேணும்.ஆனா ஒண்ணு மட்டும் சொல்லிக்கிறேன் அம்மா உடல் நிலை குறித்து வதந்திய பரப்பினா பல உயிர் சேதம் ஏற்படும்.அதனால வதந்தியை பரப்புபவர்கள் மீது காவல் துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொங்குகிறார் பவர் ஸ்டார் சீனிவாசன். power star srinivasan about his Apollo visitpower star srinivasan about his Apollo visit | ”அம்மாவைப் பார்க்க அப்போலோவுக்கு போனேன்” - பார்த்ததை சொல்கிறார் பவர்ஸ்டார் #VikatanExclusive - VIKATAN\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா\nலாஜிக் மீறல்களை மறக்கடிக்கும் அந்த மேஜிக் - ரெமோ விமர்சனம் #REMO\nபி & சி-ல றெக்கை கட்டிப் பறப்பாரா விஜய் சேதுபதி\nபிரபுதேவாவின் கான்ட்ராக்ட்... தமன்னாவின் டபுள் திகில்\n‘கொடி’யில் பறக்கிறதா சந்தோஷ் நாராயணனின் கொடி\nஓயாமல் சொக்க வைக்கும் ‘ஓயா.. ஓயா ’ - காஷ்மோரா இசை விமர்சனம் #SanthoshNarayanan\nAmmani,Anna: Kisan Baburao Hazare,Beiimaan Love,Fuddu,Motu Patlu: King Of Kings,Inferno,The Girl On The Train,The Accountant,அம்மணி,அன்னா: கிசான் பாபுராவ் ஹசாரே,பெய்மான் லவ்,ஃபுட்டு,மோட்லு பட்லு: கிங் ஆஃப் கிங்ஸ்,இன்ஃபர்னோ,கேர்ள் ஆன் தி ட்ரெய்ன்,தி அக்கௌண்டண்ட்\n``சிவகார்த்திகேயன் பங்கமா கலாய்ப்பார்... மா.கா.பா எவ்வளவு கலாய்ச்சாலும் வாங்கிப்பார்..’’ - அத்தியாயம் 13\n\"25 சூப்பர் ஹீரோக்கள்... ஒரு சூப்பர் வில்லன் தேனோஸ்\n``கார்த்திக்... என்னை கல்யாணம் பண்ணிக்குவீங்களானு கேட்கணும்போல இருக்கு\" - விஜி சந்திரசேகர்\n\" 'சுந்தரபாண்டியன் 2' தயாரிக்கிறேன்; விஜய்சேதுபதி கேரக்டர்ல நடிக்கிறேன்\n\"ஆமாங்க... வருத்தப்படாத வாலிபர் சங்கம் நல்ல படம்தான்’’ - ‘விகடன் பிரஸ் மீட்’ சிவகார்த்திகேயன்\n\"வைகோ, சீமான் மோதல் வேதனை தருகிறது” - கலங்கும் திருமா\nவிகடன் பிரஸ்மீட்: அஜித்திடம் என்ன பிடிக்காது விஜய்யிடம் என்ன பிடிக்கும்\n\"வைகோ, சீமான் மோதல் வேதனை தருகிறது” - கலங்கும் திருமா\nஜெயித்தது தோனி... ஜெயிக்க வைத்தது கோலி... ஜஸ்ட் கோலி திங்ஸ்\nதிருடிய மொபைலை அன்லாக் செய்ய திருடர்கள் செய்யும் இன்னொரு திருட்டுத்தனம்... உஷார்\n'நிர்மலா தேவி வாழ்க்கையே ரகசியம்தான்'- காவியன் நகர் மக்கள் சொல்வது என்ன\nமெக்கானிக்குடன் சாலையில் நின்ற போலீஸார்... கதிகலங்கிப்போன இருசக்கர வாகன ஓட்டிகள்\nஜெயித்தது தோனி... ஜெயிக்க வைத்தது கோலி... ஜஸ்ட் கோலி திங்ஸ்\n``மன அழுத்தம் போக்க உங்களை நீங்கள் ஜெயிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்\n``லட்சியத்தை நோக்கி நகர்ந்துகொண்டே இருந்தால் மனஅழுத்தம் இல்லை. மனஅழுத்தம் போக்க உங்களை நீங்கள் ஜெயிக்கக் கற்க வேண்டும்’’ என்கிறார் எழுத்துச் சித்தர் பாலகுமாரன்.\nகருவளையத்தை மறைக்க மேக்கப் வேண்டாம்... இரும்புச்சத்து உணவு போதும்\nகருவளையத்தை மறைக்க மேக்கப் வேண்டாம். எந்தக் காரணத்தினால் உங்களுக்குக் கருவளையம் வந்திருக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டால் அதைச் சரி செய்வது சுலபம்..\nகொடைக்கானல் மெர்க்குரி ஆலை... அன்று நடந்ததும் இன்றைய நிலையும்\nஅவர்கள் குறைக்கவேண்டியதாக அரசு கூறிய மெர்க்குரி அளவு, உண்மையில் குறைக்கவேண்டிய அளவைவிட 20 மடங்கு அதிகம். இது யூனிலிவர் செலவைக் குறைப்பதற்காகச் செய்யப்பட்டது.\nவிகடன் பிரஸ்மீட்: அஜித்திடம் என்ன பிடிக்காது விஜய்யிடம் என்ன பிடிக்கும்\n“இந்த வேலைநிறுத்தம், இந்திய சினிமாவையே கோலிவுட் பக்கம் திருப்ப வெச்சிருக்கு. இதன் மூலமா...\nஜெ. கன்னத்திலிருந்த நான்கு புள்ளிகளும் அவிழாத முடிச்சுகளும்\nமரணத்துக்குப் பிறகு ஜெயலலிதா உடல் ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டபோது, ஜெ. கன்னத்தில் காணப்பட்ட நான்கு புள்ளிகள் குறித்துப் பெரும் சர்ச்சை எழுந்தது. அந்த நான்கு புள்ளிகள் குறித்த மர்ம முடிச்சுகளை அவிழ்ப்பதற்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முயற்சி செய்துள்ளது.\n\"வைகோ, சீமான் மோதல் வேதனை தருகிறது” - கலங்கும் திருமா\nகாவிரிப் பிரச்னை, எஸ.சி, எஸ்.டி வன்கொடுமைத் தடுப்பு சட்டம் ஆகியவற்றுக்கான போராட்டங்களில் மும்முரமாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.jeyamohan.in/29772", "date_download": "2018-04-26T13:12:23Z", "digest": "sha1:HVRLMNFHX4CPQK6YMVHIZ563HATT3GGY", "length": 17307, "nlines": 90, "source_domain": "www.jeyamohan.in", "title": "பயனுறு சொல்", "raw_content": "\nசோழர்காலச் செப்பேடுகள்- தினமலர் விருது »\nஇந்திய தத்துவ மரபை எப்படி வகுத்துக்கொள்வது என்பதில் மேலைநாட்டு அறிஞர்களுக்கு எப்போதுமே ஓர் இடர் இருக்கிறது. இந்திய தத்துவம் என்று ஒன்று இல்லை, இந்தியாவில் இருப்பது இறையியலும் ஒழுக்கவியலும் மட்டுமே என்று சொல்பவர்கள் உண்டு. ஆனால் இந்தியவியலின் ஆரம்ப காலத்தில் இருந்த இந்த விவாதங்கள் இன்று அதிகமாகப் பேசப்படுவதில்லை. இந்திய தத்துவம் தனக்கென்று சில தனித்தன்மைகள் கொண்டது, மேலைத் தத்துவ நோக்கில் இருந்து வேறுபட்டது என்ற பார்வை பரவலாக ஏற்கப்பட்டுள்ளது.\nஅந்த வேறுபாடு அல்லது தனித்தன்மை என்ன ஏற்கனவே சொல்லிய அந்த அம்சம்தான். மேலைத்தத்துவத்தை பிரபஞ்சத்தையும் மனிதவாழ்க்கையையும் வரையறை செய்து புரிந்துகொள்ளமுயலக்கூடிய தூய தர்க்கங்களின் தொகுப்பாகப் புரிந்துகொள்ளலாம். மதத்தைச் சாராமல் அது இயங்க முடியும். இந்திய தத்துவத்தை இறையியல், அறவியல் என்ற இரண்டில் இருந்தும் பிரிக்கமுடியாது. மதத்தை சாராமல் அது தனித்தியங்க முடியாது.\nமேலைத்தத்துவம் தத்துவத்தின் விதிகளுக்குள்ளேயே இயங்கமுடியும். அதன் பெயர் சுட்டுவதுபோல அது ஃபிலோ சோஃபியா. அறிவுத்தேவதையை விரும்புதல்தான். இந்தியதத்துவம் இரு எல்லைகளை இணைக்கக்கூடியதாகவே என்றும் உள்ளது. ஓர் எல்லை மெய்ஞானம், இப்பிரபஞ்சத்தின் சாரம்சமான உண்மைகளைப்பற்றிய தரிசனம். இன்னொரு எல்லை அன்றாட வாழ்க்கை. ஞானத்தை அன்றாட வாழ்க்கையில் கொண்டு வந்து சேர்ப்பதற்காகச் செயல்படும் ஒரு மாபெரும் தர்க்கக்களமே இந்திய தத்துவம் என்று சொல்லலாம்.\nஆகவேதான் இந்தியதத்துவத்தில் இருந்து மெய்ஞானத்துக்கான உள்ளுணர்வின் தேடலையும் கண்டடைதலையும் பிரிக்க முடியாமலிருக்கிறது. மெய்ஞானத் தரிசனம் என்பது அதன் சரியான பொருளில் தர்க்கபூர்வமாக விளக்கிவிடக்கூடியதல்ல என்ற எண்ணம் இந்திய சிந்தனையில் வலுவாகவே உண்டு. ‘கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர்’ என்ற விவேகம் அது. இதனால்தான் இந்திய தத்துவ மரபு தத்துவத்தால் வரையறுக்கப்பட முடியாத விஷயங்களைப்பற்றியே அதிகமும் பேசிக்கொண்டிருக்கிறது. ஆகவே அது முக்கியமாக இறையியல்தான் என்று மேலைத்தத்துவ அறிஞர்கள் சொல்கிறார்கள்.\nஅதேபோல இந்தியதத்துவம் மெய்ஞானத்தை அன்றாடவாழ்க்கையின் பகுதியாக ஆக்க எப்போதுமே முயல்கிறது. ஞானத்தை அடைவதற்கான செயல்முறைகள் நடைமுறைகளைப்பற்றி அது பேசுகிறது. யோகமும் பக்தியும் வழிபாடுகளும் தத்துவ எல்லைக்குள் வருகின்றன. அறம்,பொருள்,இன்பம்,வீடு நான்குமே ஒன்றுடன் ஒன்று கலந்ததாகவே இந்திய சிந்தனையால் முன்வைக்கப்படுகின்றன. ஆகவேதான் இந்திய தத்துவ சிந்தனை என்பது அறவியல் மட்டுமே என்ற தரப்பு ஒலிக்கிறது.\nபிரிக்கமுடியாதபடி வாழ்க்கையை ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் பார்வையின் விளைவு இது என்று புரிந்துகொள்வதே நல்லது. பகுத்து அறியும் நோக்கை மேலைச்சிந்தனை பெரிதும் சார்ந்திருக்கிறது. முழுமைநோக்கை நம் சிந்தனை முன்வைக்கிறது. இந்த வேறுபாடே நம்முடைய தத்துவத்தைத் தனித்துக்காட்டுகிறது\nஇந்திய ஞானநூல்கள் அனைத்துமே பலசுருதி என்ற பகுதியை முன்னால் வைத்துள்ளன. அந்நூலை வாசித்தால் என்ன பயன் என்பதை அவை எடுத்துச்சொன்னபின்னரே ஆரம்பிக்கின்றன. இந்திய ஞானமரபில் உள்ள எல்லா சிந்தனைப்போக்குகளும் அச்சிந்தனையின் பயன் என்ன என்று தெளிவாகவே சொல்லப்பட்டிருக்கும். அது என்றுமே முக்தி, அதாவது விடுதலைதான். எது விடுதலை என்ற விளக்கம்தான் வேறுபடும். அறியாமையில் இருந்து, துக்கத்தில் இருந்து, பிறவிச்சுழலில் இருந்து விடுதலை.\nஅந்த விடுதலைக்காகவே சிந்தனைகள் எல்லாம் நிகழவேண்டும். அவ்வாறு ஓர் இலக்கு இல்லாத சிந்தனைகளால் பயனில்லை. நான் தத்துவத்தை அணுகுவது இந்தக் கோணத்தில் மட்டும்தான். நம் வாழ்க்கையை விளக்க, நமக்கும் பிரபஞ்சத்துக்குமான உறவை தெளிவாக்க, மேலும் சிறந்த வாழ்க்கையை நோக்கிக் கொண்டுசெல்ல, நம்மைக் கட்டியிருப்பவற்றில் இருந்து நம்மை விடுதலைசெய்ய வல்லமை உள்ள சிந்தனையே உண்மையான சிந்தனை.\nஆகவே இந்திய மதச்சூழலில் அதிகமும் நடக்கும் வெறும் விவாதங்களை நான் கவனிப்பதில்லை. மயிர்பிளக்கும் சொல்லாராய்ச்சிகள், மடக்கிமடக்கி முன்வைக்கப்படும் தர்க்கங்கள் ஆகியவற்றில் இருந்து முழுமையாக விலகிவிடுகிறேன். மதப்பூசல்களில் ஈடுபடுவதே இல்லை. என் சிந்தனைகள் வாழ்க்கை சார்ந்த புறக்கணிக்கமுடியா வினா ஒன்றில் இருந்தே எழுகின்றன. இந்த நூலின் அமைப்பும் அதுவே. என் நண்பர்கள், வாசகர்கள் எழுப்பிய கேள்விகளில் இருந்தே நான் மேலே செல்கிறேன். அக்கேள்விகளுக்குப் பதில்காணவே என் வாசிப்பை, அறிதல்களைப் பயன்படுத்துகிறேன்.\n’சேர்ந்து பயணம் செய்யுங்கள், உங்கள் மனங்கள் ஒன்றாகட்டும்’ என்கிறது ரிக் வேதம். ஆம், அவ்வாறே ஆகுக\n[சொல்புதிது வெளியீடாக வெளிவரவிருக்கும் ‘இந்திய ஞானம் – விவாதங்கள்’ நூலுக்கான முன்னுரை]\nTags: இந்திய ஞானம் - விவாதங்கள்\n[…] அறிதல் அறிதலுக்கு அப்பால் பயனுறு சொல் இருபுரிச்சாலை Share this:தொடர்புடைய […]\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 73\nவண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 2\nகலாப்பிரியா படைப்புக் களம் - நிகழ்வு கோவையில்\nதிருவிதாங்கூர் வரலாறு பற்றிய குறிப்புகள்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kavishan.blogspot.com/2012/02/blog-post_1073.html", "date_download": "2018-04-26T13:07:41Z", "digest": "sha1:4LHACYFXJKECWXNYD7MSQKEFGIYXZTUM", "length": 11703, "nlines": 134, "source_domain": "kavishan.blogspot.com", "title": "பிரபாகரனை சுபாஸ் சந்திரபோஸுடன் ஒப்பீடு செய்து இருக்கும் பழ. நெடுமாறன்! ~ ஈழம் செய்திகள்", "raw_content": "\nபிரபாகரனை சுபாஸ் சந்திரபோஸுடன் ஒப்பீடு செய்து இருக்கும் பழ. நெடுமாறன்\nFriday, February 03, 2012 இந்தியா, ஈழம், தமிழீழம், தமிழ்நாடு, பழ.நெடுமாறன் No comments\nதமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வே. பிரபாகரனை இந்தியாவின் விடுதலைப் போராளிகளில் ஒருவரான சுபாஸ் சந்திர போஸ் நேதாஜியுடன் ஒப்பீடு செய்து இருக்கின்றார் தமிழ் தேசிய இயக்கத்தின் தலைவரும் தமிழ்நாடு அரசியல்வாதியுமான பழ. நெடுமாறன்.\nபிரபாகரன்: தமிழர் எழுச்சியின் வடிவம் என்று இவர் நூல் ஒன்று எழுதி இருக்கின்றார். இந்நூல் 1000 பக்கங்கள் வரை கொண்டது. நூல் வெளியீட்டு விழா வரும் மாதங்களில் இடம்பெற உள்ளது.\nஇந்நூலிலேயே பிரபாகரனையும், சந்திர போஸையும் ஒரு கட்டத்தில் ஒப்பீடு செய்து இருக்கின்றார் நெடுமாறன்.\n-இந்தியாவின் மாபெரும் தலைவரான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஒரு நெருக்கடியான காலக் கட்டத்தில் இந்தியாவை விட்டு வெளியேறினார். அந்த நிலையிலேயே அவர் உலகமறிந்த தலைவர்.\nஜெர்மனியும், ஜப்பானும் அவருக்கு உதவி செய்ய போட்டி போட்டுக் கொண்டு முன்வந்தன. இந்திய மக்களின் மாபெரும் தலைவராக ஏற்றுக்கொள்ளப்பட்ட அவருக்கு உலகத்திலேயே இரண்டு பெரிய வல்லரசுகள் என்னென்ன உதவிகள் தேவையோ அந்த உதவிகளைச் செய்து கொடுத்தன. பிரிட்டிஷ் இந்திய இராணுவத்தில் பணியாற்றி ஜப்பானியர்களால் சிறைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டிருந்த இந்திய போர் வீரர்களை மீட்டு அவர்களைக் கொண்டு இந்தியத் தேசிய இராணுவத்தினை நேதாஜி சிங்கப்பூரில் உருவாக்கினார்.\nஇந்த இராணுவத்திற்குத் தேவையான ஆயுதங்கள். மற்ற உதவிகள் ஆகியவற்றை ஜப்பான் கொடுத்தது. நேதாஜியின் சுதந்திர அரசை ஜப்பான், ஜெர்மனி, இத்தாலி மற்றும் நட்பு நாடுகள் அங்கீகரித்தன.நேதாஜியை தனது வழிகாட்டியாகக் கொண்டிருக்கிற அருமைத் தம்பி பிரபாகரனை நேதாஜியுடன் ஒப்பிட முடியாது.\nவயதிலும் சிறியவர், அனுபவத்திலும் சிறியவர். நேதாஜியைப் போன்ற பெரிய தலைவராக உருவாகி அதற்குப் பின்னர் அவர் இந்தப் போராட்டத்தை தொடங்கவில்லை.\nஇளைஞராயிருந்தபோது தன்னுடைய பதினாறாவது வயதில் விடுதலைப் போராட்டத்தைத் தொடங்கினார்.நேதாஜிக்கு உலக வல்லரசுகள் துணைபுரிந்தன. அருமைத் தம்பி பிரபாகரனுக்கு திக்கற்ற தமிழ் இளைஞர்கள் மட்டுமே துணை நின்றனர். வேறு எந்த நாடும், எந்த வல்லரசும் அவருக்கு உதவி புரிய முன்வரவில்லை.\nஆனால் அமெரிக்கா, சீனா, பாகிஸ்தான், இந்தியா போன்ற நாடுகள் அள்ளி அள்ளித் தரும் நவீன ஆயுதங்களை வைத்திருக்கக் கூடிய சிங்கள இராணுவத்தை ஓட ஓட விரட்டியடிக்கிற விடுதலைப் படையை பிரபாகரன் உருவாக்கிய விதம் கற்பனைக்கு எட்டாதது. அதைப் போலவே வலிமை வாய்ந்த இந்திய இராணுவத்தை எதிர்த்து அவர் நடத்திய வீரப் போராட்டமும் கனவிலும் எண்ணிப் பார்க்க முடியாதது. இதை எப்படி அவர் சாதித்தார்\nநீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.\nஇலங்கையின் ஏழாவது ஜனாதிபதி (1)\nஉலகத் தமிழர் பேரவை (1)\nசிறீலங்காவின் 7வது நாடாளுமன்ற தேர்தல் (12)\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (6)\nதலைமைச் செயலகம் தமிழீழம் (5)\nநாடு கடந்த அரசாங்கத் தேர்தல் (6)\nநாடு கடந்த அரசாங்கம் (57)\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கம் (1)\nநான் சாகலாம் நாங்கள் சாகக் கூடாது (11)\nபோர்குற்ற நாள் 2009 மே (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nagoreflash.blogspot.com/2013/01/blog-post_26.html", "date_download": "2018-04-26T13:07:16Z", "digest": "sha1:7UQ4F5DSS7MAS3STQBPJUMU6YOO5ER3D", "length": 44595, "nlines": 248, "source_domain": "nagoreflash.blogspot.com", "title": "NAGORE FLASH: 'விஸ்வரூபம்’ திரைக்குப் பின்னால் நடந்த கதை,", "raw_content": "................அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்................. இந்த இணையத்தளம் நாகூர் வாழ் மக்களுக்கான ஓர் அறிவகம்.\n) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)\n'விஸ்வரூபம்’ திரைக்குப் பின்னால் நடந்த கதை,\nகமல் அலுவலகத்தில் நடந்த பேச்சுவார்த்தை\n'துப்பாக்கி’ படம் ரிலீஸ் ஆனபோதே முஸ்லிம்கள் போர்க் கொடி தூக்கினர். அப்போது, 'விஸ்வரூபம்’ படத்திலும் முஸ்லிம்களைத் தவறாக சித்திரித்து இருக்கிறார்கள் என்ற பேச்சும் கூடவே கிளம்பியது. 'முன்கூட்டியே எங்களுக்குத் திரையிட்டுக் காட்டிய பிறகுதான் படத்தை கமல் வெளியிட வேண்டும்’ என குரல் கொடுக்க ஆரம்பித்தன முஸ்லிம் அமைப்புகள். '' 'விஸ்வரூபம்’ முஸ்லிம்களுக்கு எதிரான படம் அல்ல. அப்படிச் சந்தேகப்படும் இஸ்லாமியர்கள் படம் பார்த்துவிட்டு, தேவை இல்லாமல் கமலை சந்தேகப்பட்டு விட்டோமே என்று மனதுக்குள் வருந்துவர். சகோதரனைச் சந்தேகப்பட்டதற்குப் பிராயச்சித்தமாக அண்டா அண்டாவாக முஸ்லிம்கள் பிரியாணி விருந்து போட வேண்டும். அந்த விருந்தில் கலந்துகொள்ள நான் பசியுடன் காத்திருக்கிறேன்'' என அறிக்கை விட்டார் கமல்.\nஜனவரி 11-ம் தேதி படம் வெளியிடப்படும் என்ற அறிவிப்பு வெளியான நேரத்தில், 24 முஸ் லிம் அமைப்புகள் மற்றும் கட்சிகளின் கூட்டமைப்புப் பிரதிநிதிகள் ஆழ்வார்பேட்டையில் உள்ள ராஜ்கமல் அலுவலகத்தில் கமலை சந்தித்தனர். வெளிநாடுகளில் விநியோகஸ்தராக இருக்கும் முஸ்லிம் ஒருவர்தான் இந்தச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார். அப்போது சுமுகமாகப் பேச்சுவார்த்தை நடந்தது. ''முஸ்லிம்களோடு நல்ல நட்புஉணர்வு கொண்டவன் நான். அவர்களைக் கொச்சைப்படுத்தி படம் எடுக்க மாட்டேன்'' என்றார் கமல். ''துப்பாக்கி படக் குழுவினரிடம் எங்களைப்பற்றி கேட்டுப் பாருங்கள். எங்களின் செயல்பாடு பற்றி நீங்கள் வைத்திருக்கும் பிம்பம் உடையும்'' என்று, கமலிடம் சொன்னது முஸ்லிம் கூட்டமைப்பு. இறுதியாகப் பேசிய கமல், '' 'விஸ்வரூபம்’ இஸ்லாமியர்களுக்கு எதிரான படம் அல்ல. இந்து முன்னணியினருக்கு எதிரான படம். ராமகோபாலன் படத்தைப் பார்த்து விட்டு எதிர்ப்பார்'' எனச் சொன்னார். பேச்சு வார்த்தையின் இறுதியில், திரைக்கு வருவதற்கு முன் படத்தை போட்டுக்காட்ட ஒப்புக்கொண்டார் கமல்.\nஅதன்பிறகு, 'விஸ்வரூபம்’ படம் பற்றி தலைமைச் செயலாளருக்கு கோரிக்கை கடிதம் ஒன்றையும் கொடுத்தது முஸ்லிம் கூட்டமைப்பு. அந்தக் கடிதத்தின் அடிப்படையில் முஸ்லிம் கூட்டமைப் பினரை உள்துறைச் செயலாளர் ராஜகோபால் 15 நாட்களுக்கு முன் அழைத்துப் பேசினார். ''படத்தில் இஸ்லாமியர்களைக் கொச்சைபடுத்திக் காட்சிகள் இருந்தால், அதை நீக்க வேண்டும்'' என ராஜகோபாலிடம் கூறினர் முஸ்லிம் பிரதிநிதிகள். ''மதநல்லிணக்கம் எந்த வகையிலும் கெட்டுவிடக் கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக இருக்கிறது. எந்தச் சமூகத்தையும் இழிவுபடுத்தி, அவர்களைக் காயப்படுத்துவதை அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காது'' என்று சொன்ன ராஜகோபால், ''ரிலீஸுக்கு முன்பே படத்தை நீங்கள் பார்க்க விரும்பினால், அதற்கான ஏற்பாடுகளை அரசே செய்து தரும்'' என்று உறுதி அளித்தார். ''கமலே படத்தைக் காட்டுவதாகச் சொல்லி இருக்கிறார். அதனால் தேவைஇல்லை'' என்று சொல்லிவிட்டுக் கிளம்பினர்.\nபடத்தை இரண்டு நாட்களுக்கு முன், போட்டுக்காட்டுவதாகச் சொன்னார் கமல். ஆனால், 'ஐந்து நாட்களுக்கு முன்பே காட்ட வேண்டும்’ என்றது முஸ்லிம் கூட்டமைப்பு. இறுதியில், நான்கு நாட்களுக்கு முன் என முடிவானது. தேதி குறிக்கப்பட்ட தினத்தில் படத்தைப் பார்க்க முடியவில்லை. 'டி.டி.ஹெச் பிரச்னை காரணமாக ரிலீஸ் தேதி தள்ளிப்போகிறது’ என, முஸ்லிம்களை பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார் கமல். அப்போதும்கூட, ''இஸ்லாமியர்களைப் புண்படுத்தும் வகையில் படத்தை எடுக்கவில்லை. படத்தின் ஹீரோவே முஸ்லிம்தான். படத்தைப் பார்த்துவிட்டு நீங்கள் சந்தோஷப் படுவீர்கள்'' என்று பீடிகை போட்டு இருக்கிறார் கமல்.\nபடம் ரிலீஸ் தேதி ஜனவரி 25 என அறிவிக்கப்பட, 21-ம் தேதி படத்தை முஸ்லிம்களுக்குக் காட்ட முடிவு செய்யப்பட்டது. ''தொழுகை பாதிக்கும் என்பதால், காலையில் படத்தைக் காட்ட வேண்டும்'' என்றனர் முஸ்லிம் கூட்டமைப்பினர். 'மாலையில்தான் பார்க்க வாய்ப்பு இருக்கிறது. தொழுகைக்கு என் அலுவலகத்திலேயே ஏற்பாடு செய்து தருகிறேன்'' என்று சொன்னார் கமல். மாலையில், ராஜ்கமல் அலுவலகத்தில் முஸ்லிம் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூடினர். அங்கேயே மாலை நேரத் தொழுகையை முடித்துவிட்டு, படத்தைப் பார்க்க ஆரம்பித்தனர். அலுவலகத்தில் இருந்த ஹோம் தியேட்டரில் 'விஸ்வரூபம்’ திரையிட்டபோது கமலும் அவர்களுடன் அமர்ந்து படத்தை முழுமையாகப் பார்த்தார்.\nபடத்தின் முதல்பாதி முடிந்து இடைவேளை விட்டபோது, படம் பார்த்த முஸ்லிம்கள் கொஞ்சம் அப்செட் ஆனார்கள். 'படத்தின் காட்சிகள் ஒவ்வொன்றுக்கும் என்னிடம் 300-க்கும் மேற்பட்ட ஆதாரங்கள் இருக்கின்றன’ என்று, இடைவேளையின்போது சொன்னார் கமல். தாலிபான்கள் பிரத்யேகமாகப் பயன்படுத்தும் தொப்பி, ஆர்ட் டைரக்டர், காஸ்ட்யூம் டிசைனர், படத்தில் ஹெலிகாப்டர்களுக்கு அடிக்கப்பட்ட பெயின்ட் பற்றி எல்லாம் பேசி இருக்கிறார்கள். இரண்டாம் பாதிப் படத்தைப் பார்த்த முஸ்லிம் கூட்டமைப்பினர் கோபத்தின் உச்சத்துக்குச் சென்றனர். படம் முடிந்ததும் சொல்லிவைத்ததுபோல கமலிடம் ஒரு வார்த்தைக்கூட பேசாமல் அவர் பக்கம் திரும்பிக்கூட பார்க்காமல் கிளம்ப ஆரம்பித்தனர். அப்போது, அவர்களின் கருத்தைக் கேட்பதற்காக வாசலில் நின்று இருந்த கமலுக்கு, அவர்கள் எதுவும் பேசாமல் போனதால் முகம் மாறியது. கடைசியாக வந்த இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் செயலாளர் முனீரிடம், 'படம் பிடித்திருக்கிறதா எதுவும் கருத்து சொல்லாமல் போகிறீர்களே எதுவும் கருத்து சொல்லாமல் போகிறீர்களே’ என்று கமல் கேட்க, 'எதுவும் சொல்வதற்கு இல்லை.’ என்று முனீர் சொன்னார். 'ஏற்கெனவே நிறைய சங்கடங்களைச் சந்தித்து இருக்கிறேன். இன்னும் சங்கடங்களை உண்டாக்கி விடாதீர்கள்’ என்று கமல் சொல்ல, 'அல்லாஹ் உங்களைக் காப்பாற்றுவார்’ என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார் முனீர். அப்செட்டான நிலையில், 'விஸ்வரூபம்’ பிரிமியர் ஷோவுக்காக அன்றைய இரவே அமெரிக்கா கிளம் பினார் கமல்.\nஇரவு 10 மணிக்கு படம் முடிந்து கிளம்பிய டீம், அப்போதே ஒரு ஓட்டலில் நள்ளிரவு வரை ஆலோசித்தது. 'முஸ்லிம்களுக்கு எதிராகக் காட்சிகள் இருந்தால், அதை மட்டும் நீக்கிவிட்டு படத்தை வெளியிட சம்மதிக்கலாம்’ என முன்பு முடிவு செய்து இருந்த முஸ்லிம் கூட்டமைப்பினர், 'மொத்தப் படத்தையும் தடை செய்ய வேண்டும்’ என்ற முடிவுக்கு வந்தனர். அடுத்த நாள் 22-ம் தேதி, 'படத்தைத் திரையிட அனுமதிக்கக் கூடாது’ என்ற கோரிக்கையுடன் சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜை சந்தித்தனர். அவர்களோடு மனிதநேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லாவும் வந்தார். கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கும் மேல் நடந்த சந்திப்பில், படத்தின் ஒவ்வொரு காட்சியையும் ஜார்ஜிடம் விவரித்தனர். 'தொழுகை நடத்தி விட்டு தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுவதாகப் படத்தில் அப்பட்டமாக நிறைய இடங்களில் காட்டுகிறார்கள். இஸ்லாமியர்களின் புனித நூலான குர்-ஆன், தீவிரவாதிகளின் கையேடாகச் சித்திரிக்கப்பட்டு இருக்கிறது’ என் றனர். 'பைபிள் படித்துவிட்டு சர்ச் சுக்குள் இருந்து வரும் ஒருவர் குண்டு வைப்பதாக காட்சி இருந்தால், நீங்கள் எப்படி உணர்வீர்கள்’ என்று கிறிஸ்தவரான ஜார்ஜிடம் ஒருவர் கேள்வி எழுப்பினார். சந்திப்புக்குப் பிறகு, வெளியே வந்த முஸ்லிம் கூட்ட மைப்பினர் படத்தைப்பற்றி முதல் முறையாக மீடியாவிடம் பேசினர். ' 'விஸ்வரூபம்’ வெளியிடப்பட்டால் தேவை இல்லாத பிரச்னைகள் ஏற்படும். மாமன் மச்சானாக வாழ்ந்து வருபவர்களிடையே தேவை இல்லாத சங்கடங்களை உண்டாக்கி, சட்டம்- ஒழுங்குக்கு பாதிப்பு ஏற்படலாம். இந்தப் படத்தை அரசு தடை செய்ய வேண்டும். இல்லையெனில் உயிரைக் கொடுத்தாவது முஸ்லிம்கள் தடை செய் வார்கள்’ எனக் கொந்தளித்தனர்.\nபடத்துக்கு 15 நாட்கள் தடை\nஇந்த விஷயங்களை எல்லாம் அமெரிக்காவில் இருந்தே விசாரித்துக் கொண்டு இருந்தார் கமல். அதற்கு அடுத்த நாள் 23-ம் தேதி உள்துறைச் செய லாளர் ராஜகோபாலை கோட்டையில் சந்தித்தனர் முஸ்லிம் கூட்டமைப்பினர். 'உங்கள் பக்கம்தான் அரசு இருக்கிறது என்ற நிலைப்பாட்டில் எந்த மாறுதலும் இல்லை’ என்ற ராஜகோபால், 'பட ரிலீஸ் தேதிக்கு நெருக்கத்தில் வந்து இப்படி முறையிடுகிறீர்களே...’ என்றும் கேட்டு இருக்கிறார். 'கமல் சினி மாவில் நல்ல நடிகர். நிஜ வாழ்க்கையிலும் அவர் நடிகர் என்பது இப்போதுதான் புரிந்தது. ரிலீஸ் தேதிக்கு நெருக்கத்தில் படத்தைக் காட்டி அவர்தான் எங்களை இக்கட்டில் தள்ளிவிட்டார்’ என்று பதில் சொன்னார்கள். 'வழிபாட்டு முறைகள் தீவிரவாதத்தைத் தூண்டுவதுபோல இருக்கிறது’ என்று காட்சிகளையும் ராஜகோபாலிடம் விவரித்தனர். 'கோரிக்கைகள் நியாயமானதாக இருந்தால், நிச்சயம் அரசு பரிசீலிக்கும்’ என்று வாக்குறுதி கொடுத்தார் ராஜகோபால்.\nகாலையில் இந்தச் சந்திப்பு நடந்து முடிந்த பிறகு, கொடநாட்டில் இருந்து ஜெயலலிதா கோட்டைக்கு வந்தார். 'விஸ்வரூபம்’ பட விவகாரம் தொடர்பாக தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், அரசு ஆலோசகர் தேபேந்திரநாத் சாரங்கி, உள்துறைச் செயலாளர் ராஜகோபால், டி.ஜி.பி. ராமா னுஜம், உளவுப்பிரிவு ஐ.ஜி. அம்ரிஷ் பூஜாரி, சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன் எனப் பெரிய டீமோடு ஆலோசனை நடத்தி இருக்கிறார் ஜெயலலிதா. அதன்பிறகு, படத்துக்குத் தடை என்ற பேச்சுகள் கிளம்ப ஆரம்பித்தன. 'விஸ்வரூபம்’ படத்துக்கு 15 நாட்கள் தடை என்பது இரவில் உறுதியானது.\n''படத்தை தடை செய்யாவிட்டால் படம் ரிலீஸ் ஆகும் வெள்ளிக் கிழமை அன்று கமல் வீட்டை முற்றுகையிடுவோம். தியேட்டர்களில் படத்தை வெளியிடாமல் தடை செய்வோம். சென்சார் போர்டு அலுவலகம் முற்றுகை என அடுத்து போராட்டக் களம் சூடு பிடிக்கும்'' என முஸ்லிம் அமைப்புகள் அறிவித்ததால், சட்டம்- ஒழுங்கு பாதிக்கும் என்பதால் தடை விதிக்கப் பட்டது என்கிறார்கள். 'இன்னொசன்ஸ் ஆஃப் முஸ்லிம்’ படத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து சென்னை அமெரிக்கத் தூதரக அலுவலகம் தாக்கப்பட்டது. அடுத்தடுத்து முஸ்லிம்கள் நடத் தியப் போராட்டத்தால் தூதரகத்துக்கு விடுமுறை விடும் சூழல் உருவானது. மொத்த முஸ்லிம் அமைப்புகளும் அண்ணா சாலையில் நடத்திய போராட்டம் தலைநகரை கிடுகிடுக்கவைத்தது. இதை யெல்லாம் கருத்தில்கொண்டுதான் இந்த முடிவு எடுக்கப்பட்டதாம்.\n''இந்திய வரலாற்றில் இதுபோல் முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் கேவலப்படுத்தி ஒரு படம் வெளியாகவே இல்லை. குர்-ஆன், தீவிரவாதத்தை போதிக்கும் நூலாகவும் தொழுகை வழிபாடுகள் தீவிரவாதத்துக்கு ஊக்கம் அளிப்பதாகவும் காட்சிகள் சித்திரிக்கப்பட்டுள்ளன. கோவை, மதுரை போன்ற நகரங்கள் எல்லாம் சர்வதேசத் தீவிரவாதிகளின் புகலிடங்கள்போல் காட்டப்பட்டுள்ளன. தமி ழகத்தில் மாமா, மச்சான் உறவுமுறை பேசி சமூக நல்லிணக்கத்துடன் வாழக்கூடிய சூழலை சிதைக்க வல்லது 'விஸ்வரூபம்’ திரைப்படம். 'முற்போக்கு பேசும் வைதீகன் ஆபத்தானவன்’ என்று சொன்ன பெரியாரின் கருத்தை கமல் மூலம் உண்மை என அறிய முடிகிறது'' என்கின்றனர் முஸ்லிம் கூட்ட மைப்பினர்.\n'விஸ்வரூபம்’ என்ன விஸ்வரூபம் எடுக்கப் போகிறது என்பதைக் காத்திருந்து கவனிப்போம்\nவிஸ்வரூபம் - முஸ்லிம்கள் ஆழமாக சிந்திக்க வேண்டிய மற்றொரு தருணம்\nஇந்த பிரச்னையை ஆழ்ந்து கவனித்ததில் ஒரு விஷயத்தை உணர முடிகின்றது. தங்களை உண்மையான இடதுசாரிகள் என்று கூறிக்கொள்ளும் சிலரில் இருந்து யாரும் முஸ்லிம்களின் போராட்டத்தை விரும்பவில்லை (வினவு என்னும் பித்தலாட்டகாரர்களின் கட்டுரை தெளிவாகவே இதனை உணர்த்துகின்றது. முஸ்லிம்களுக்காக போராட இவர்களிடம் முஸ்லிம்கள் வருவார்களாம். ஸ்ப்பா). வேறொரு வகையில் சொல்ல வேண்டுமென்றால், முஸ்லிம்கள் தங்களுக்காக தாங்களே போராடி, முடிவுகளை எட்டுவது பலருக்கும் எரிச்சலையே ஏற்படுத்தியிருக்கின்றது.\nமுஸ்லிம்கள் ஆழமாக சிந்திக்க வேண்டிய தருணம் இது. இந்த சிந்திப்பு ஆக்கப்பூர்வமான முறையில் அமைந்து, விவேகமாக நடவடிக்கைகளுக்கு வித்திட்டால் ஒரு மாபெரும் எழுச்சியை முஸ்லிம் சமுதாயம் மிக அருகிலேயே எதிர்நோக்கி இருக்கின்றது. இன்ஷா அல்லாஹ் நடக்கும் என்பதே எல்லோருடைய பிரார்த்தனையாக இருக்கின்றது.\nஇஸ்லாம் கூறும் இன்பமான கணவன் மனைவியா நீங்கள் \nதிருமணம் செய்து கணவன் மனைவியாக கைக் கோர்ப்பவர்கள் கடைசிவரை சந்தோசமாக வாழ வேண்டும் என்றே ஆசைப்படுவார்கள். மணமக்களை வாழ்த்துபவர்கள் கூட இதைத்...\nகளமிறங்கிய போராட்ட குழுவிற்கு ஆதரவுகொடுப்போம்.\nபிரபல இஸ்லாமிய அறிஞர் ஜாகிர் நாயக்கிற்கு பிரிட்டன் தடை வலுக்கும் எதிர்ப்பு\nபிரபல இஸ்லாமிய அறி ஞரும் சர்வதேச சொற்பொழி வாளருமான ஜாகிர் நாயக் பிரிட்டனுக்கு வர அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது பெரும் பரபர...\nVote List-ல் உங்கள் பெயர் இருக்கா...\nVote List-ல் நமது பெயர் மற்றும் முகவரியை சரிபார்க்க இந்த Website உதவுகிறது. Vote List-ல் பெயர் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. நீங்கள் தேர்...\nபெண்களை துரத்தும் ரகசிய கேமராக்கள் – ஓர் அபாய எச்சரிக்கை \n( மிக நுணுக்கமான செய்தி என்பதால் நீண்ட பதிவாக எழுதி இருகிறோம் குறிப்பாக பெண்கள் அளிப்பு பார்க்காமல் முழுமையாக படித்து பயன்பெறவேண்டும்,மற்றவ...\nவிந்தின் பிறப்பிடம் - திருக்குரானின் விளக்கம்\nகுர்ஆன் - அறிவுக்கும் அறிவியலுக்கும் ஏற்ற எக்காலத்திற்கும் பொருந்தும் ஓர் வாழ்வியல் நெறிநூல் இது அறிவியல் நூலல்ல; ஆனாலும் அறிவியலையும் உள்ள...\n\"இஸ்லாத்தின் பார்வையில் இசை ஒரு முழுமையான ஆய்வு\"\n இசை என்பதன் விளக்கம் என்ன … இசை என்ற சொல்லுக்கு இசைய வைப்பது எனறு பொருள். இசை (Music) என்பது ஒழுங்கு செய...\nஹதீஸ் - அடிப்படை விளக்கம்\n ஹதஸ் என்ற வேர்ச்சொல்லிலிருந்து பெறப்பட்ட சொல்தான் ஹதீஸ் என்பது. ஹதீஸ் என்றால் உரை உரையாடல் புதியசெய்தி எனப்ப...\nநவீன காலத்து அடிமைகளை விடுவிப்போம்....\nவளைகுடா நாடுகளில் வேலை செய்யும் முஸ்லிம்களில், கணிசமானவர்கள் வீடுகளில் வாகன ஓட்டுனர் வேலை செய்பவர்களாக உள்ளனர். இவர்களில் பெரும்பான்மையினர் ...\nஇரு தரப்பு பேச்சுவார்த்தை எதிர்பார்த்தப்படி சுமூகமாக முடிந்தது.\nஒரு பிரச்சனை எப்படி முறைப்படி கையாளபட வேண்டுமோ அப்படி கையாளபட்டிருகிறது.. அல்ஹம்துலில்லாஹ். கடந்த விநாயகர் சதுர்த்தி அன்று நாகூர் மியா...\n9/11 INSIDE JOB (3) BOOKS (11) HAJ (10) MEDIA (7) POLL (1) ZAKIR NAIK (7) அக்கம் பக்கம் (28) அமைதி (3) அரசியல் (5) அரசு உத்தரவுகள் (14) அரவாணிகள் (1) அவ்லியா (2) அறிவியல் (19) அனுபவம் (26) அஹமது தீதாத் (2) இசை (2) இந்திய முஸ்லிம்கள் வரலாறு (3) இல்லறம் (2) இறுதி தீர்ப்புநாள் (2) உதவி தேவை (13) எச்சரிக்கை (18) ஒற்றுமை (9) கல்வி (24) கனவு இல்லம் (1) கிலாபத் (2) கேள்வி பதில் (18) சத்தியமார்க்கம் (26) சஹாபாக்கள் (4) சுய பரிசோதனை (3) செல்போன் (12) தப்லீக் (1) தரீக்கா (2) தர்கா (11) தன்னம்பிக்கை (2) திருமணம் (6) தீவிரவாதம் (12) தெரிந்த ரகசியங்கள் (32) தெரிந்து கொள்ளுங்கள் (111) தேசபக்தி (9) தேர்தல் 2011 (22) நபி(ஸல்) (3) நாகூர போல வருமா (6) நாகூர் (1) நாகூர் சங்கதி (119) நாகூர் வரலாறு (2) நாத்திகன் (3) நோன்பு (1) பழனிபாபா (1) பாபரி மஸ்ஜித் (7) பாவமன்னிப்பு (3) பிறை (4) புகை (3) பைபிள் (3) போராட்டக்களம் (10) போராட்டம் (1) மருத்துவம் (10) மவ்லித் (4) மீலாது (1) முஸ்லீம்கள் (5) மோசடி (10) ரமளான் (5) வாக்காளர் பட்டியல் (1) விமர்சனங்கள் (5) விவாதங்கள் (4) ஷியா (2) ஷிர்க் (14) ஸூபித்துவம் (2) ஹதீஸ் (3) ஹிந்து தீவிரவாதிகள் (22) ஹிஜாப் (16)\nரேஷன் கார்டுகளில் ஒரு வருடத்திற்கான உள்தாள் இணைக்க...\nகாரைக்கால் சகோதரி வினோதினிக்கு நாமும் உதவலாம்\nகாரைக்கால் கடலில் குளித்து மாயமான கல்லூரி மாணவன் உ...\nரிஸானா நபீக் விவகாரம் நடந்ததும் / நடப்பதும்\nகுடும்பத்தை சீரழிக்கும் T.V சீரியல்கள்..\nஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட நாகூரின் புதிய தோற்றம்...\n'விஸ்வரூபம்’ திரைக்குப் பின்னால் நடந்த கதை,\nவிஸ்வரூப அரசியலில் முஸ்லீம்கள் பழிகடாவா \nகுரான் & ஹதீஸ் நூல்கள் பதிவிறக்கம்\nநபி( ஸல்) முழு வரலாறு\nகிருத்துவ மத போதகருடனான கலந்துரையாடல்\nஇரத்ததானம் செய்ய பதிவு செய்யுங்கள்\nசெய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற மின்னஞ்சல் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்\nதமிழில் டைப் செய்ய (தங்கலிஷ்)\nஅல்லாஹ்வின் சாந்தியும் , சமாதானமும் உங்கள் அனைவரின் மீதும் உண்டாவதாக இந்த தளம் நாகூர் வாழ் மக்களுக்கான ஓர் அறிவகம். நல்ல விஷயங்கள் பகிர்ந்து கொள்ளவும், தவறான விஷயங்களை சுட்டிக்காட்டவும் இந்த தளத்தை அமைத்திருகிறோம்.. நம்ம ஊரை பற்றி மற்றவர்களை விட நாமே அதிகம் விமர்சிக்கிறோம் இதே ஊரில் இருந்துகொண்டு, உண்மையில் நம்மை நாமே விமர்சித்து கொள்கிறோம் என்பதே உண்மை.. ஆகையால் உணர்வுகளை உள்ளது உள்ளபடி பகிர்ந்து கொள்ள ஒரு தளம். மேலும் உலக நாட்டுநடப்புகளும் இங்கே உரியமுறையில் அலசப்படுகிறது. நீங்களும் இந்த தளத்தின் அங்கமே , உங்களின் கருத்துகள் ,விமர்சனங்கள் , கட்டுரைகள் எதுவாக இருந்தாலும் nagoreflash@ymail.com முகவரிக்கு அனுப்பித்தாருங்கள். உங்கள் அன்புடன் அப்துல்லாஹ்.\nஅண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: \"தொழுகையாளிகள் அரபுத் தீபகற்பத்தில் தன்னை இபாதத் செய்வார்கள் -வணங்குவார்கள் - எனும் விஷயத்தில் ஷைத்தான் நிராசை அடைந்து விட்டான். எனினும், முஸ்லிம்களிடையே பகைமைத் தீயை மூட்டுவதில் அவன் நம்பிக்கை இழக்கவில்லை\". அறிவிப்பாளர்: ஜாபிர்(ரலி), நூல்: முஸ்லிம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://pathavi.com/?page=4", "date_download": "2018-04-26T13:06:42Z", "digest": "sha1:W3IGCI3MRK2BCQEBD5BJ45DDTZLTXE45", "length": 11055, "nlines": 267, "source_domain": "pathavi.com", "title": "Best tamil websites & blogs •et; Page 4 •et; Pathavi", "raw_content": "\nஉங்களுக்கும் ராஜயோகம் : 9 (ஆன்மாவுடன் உரையாடல்) | அனுபவஜோதிடம்\nகுறும்பன் 807 days ago\nஎண்ணச் சிதறல்கள்: பண்பாட்டு மாற்றம்\nசென்னையில் பின்னணி பாடகி மர்ம மரணம் \nதினமும் ஒரு இலவச டொமைன் 2016 ~ tamiltec\nதந்துவிடு என் செல்லமே ~ kavithai\nஇலவசமாக வீடியோ எடிட்டிங் செய்ய wondershare video editor ~ tamiltec\nஆங்கிலத்தில் பேச அருமையான தளம் ~ tamiltec\nகாரைக்கால் கடற்கரைப் பூங்கா செயற்கை நீரூற்று காணொளி ~ காரைக்கால்\nபோர்ச்சுகீசியர்கள் அறிமுகப்படுத்திய சர்க்கரை வள்ளிக்கிழங்கு \nமனமும் ருசியையும் தரும் புதினா கீரை \nபுரோட்டீன் அதிகம் உள்ள உணவு கொண்டைக்கடலை \nஇறைச்சி சமைக்க தேவைப்படும் இஞ்சி\nஎன்னென்ன காய்கறி எப்படி பார்த்து வாங்க வேண்டும்\nஎச். ஐ. வி வைரஸை கொல்லும் ஆணுறை கண்டு பிடிப்பு\nஅஜீத்திடம் கேள்வி கேட்ட ஜிப்ரான் \nமானிய விலை காஸ் சிலின்டர் ரத்து மத்திய அரசு அதிரடி ~ காரைக்கால்\n30 விநாடிகளில் 108 தடவை ஸ்கிப்பிங் \nஜெயித்தால் பாராட்டுங்கள், தோற்றால் தட்டிக்கொடுங்கள் \nஎந்தச் சூழ்நிலையிலும் வாழ முடியும் என்பதற்கு உதாரணம் \n‘சூப்பர் ஸ்டார்’ பட்டம் பற்றி மனம் திறந்த மோகன்லால் | screen4screen\nஅறிமுக இயக்குநர் ராகேஷ் இயக்கும் ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன’ திரைப்படம்\nபத்து நாள் ஜெயில்ல இருந்தா என்ன\nPathavi தமிழின் முதன்மையான வலைப்பதிவு திரட்டி ஆகும். Pathavi தமிழ் வலைப்பதிவுகளுக்கு பலச் சேவைகளை வழங்கி வருகிறது. வலைப்பதிவுகளை திரட்டுதல், மறுமொழிகளை திரட்டுதல், குறிச்சொற்களை திரட்டுதல், வாசகர் பரிந்துரைகள், தமிழின் முன்னணி வலைப்பதிவுகள் என பலச் சேவைகளை Pathavi வழங்கி வருகிறது. வேறு எந்த இந்திய மொழிகளிலும் இல்லாத அளவுக்கு தொழில்நுட்ப சேவைகளை Pathavi தமிழ் வலைப்பதிவுகளுக்கு அளித்து வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://shaivam.org/thirumurai/fifth-thirumurai/181/thirunavukkarasar-thevaram-thiruKurakkukka-thirukkurunthokai-marakkok-kaamena", "date_download": "2018-04-26T13:06:17Z", "digest": "sha1:5AWIWRUY6F3LZQ2R62O6AIL4KLDRLPN3", "length": 28042, "nlines": 276, "source_domain": "shaivam.org", "title": "Shaivam", "raw_content": "\nபன்னிரு திருமுறை பன்னிரு திருமுறை\n :: நமது Shaivam.org-ன் இலவச Mobile App-ஐ அனைவரும் பயன்படுத்திக்கொள்வதுடன்; உற்றார்-உறவினர், நண்பர்கள், அடியார் பெருமக்களுக்கு பரிந்துரை செய்தும், நிறுவி (Install) கொடுத்தும் தமது தன்னார்வ பங்களிப்பை வழங்க வேண்டுகிறோம். நன்றி\nதிருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த திருக்குரக்குக்கா தேவாரத் திருப்பதிகம்\n5.075 திருக்குரக்குக்கா - திருக்குறுந்தொகை\n751 மரக்கொக் காமென வாய்விட் டலறிநீர்\nசரக்குக் காவித் திரிந்தய ராதுகால்\nபரக்குங் காவிரி நீரலைக் குங்கரைக்\nகுரக்குக் காவடை யக்கெடுங் குற்றமே. 5.75.1\n752 கட்டா றேகழி காவிரி பாய்வயல்\nகொட்டா றேபுன லூறு குரக்குக்கா\nமுட்டா றாவடி யேத்த முயல்பவர்க்\nகிட்டா றாவிட ரோட எடுக்குமே. 5.75.2\n753 கைய னைத்துங் கலந்தெழு காவிரி\nசெய்ய னைத்திலுஞ் சென்றிடுஞ் செம்புனல்\nகொய்ய னைத்துங் கொணருங் குரக்குக்கா\nஐய னைத்தொழு வார்க்கல்ல லில்லையே. 5.75.3\n754 மிக்க னைத்துத் திசையும் அருவிகள்\nபுக்குக் காவிரி போந்த புனற்கரைக்\nகொக்கி னம்பயில் சோலைக் குரக்குக்கா\nநக்க னைநவில் வார்வினை நாசமே. 5.75.4\n755 விட்டு வெள்ளம் விரிந்தெழு காவிரி\nஇட்ட நீர்வய லெங்கும் பரந்திடக்\nகொட்ட மாமுழ வோங்கு குரக்குக்கா\nஇட்ட மாயிருப் பார்க்கிட ரில்லையே. 5.75.5\n756 மேலை வானவ ரோடு விரிகடல்\nமாலும் நான்முக னாலுமளப் பொணாக்\nகோல மாளிகைக் கோயில் குரக்குக்காப்\nபால ராய்த்திரி வார்க்கில்லை பாவமே. 5.75.6\n757 ஆல நீழ லமர்ந்த அழகனார்\nகால னையுதை கொண்ட கருத்தனார்\nகோல மஞ்ஞைகள் ஆலும் குரக்குக்காப்\nபால ருக்கருள் செய்வர் பரிவொடே. 5.75.7\n758 செக்க ரங்கெழு செஞ்சுடர்ச் சோதியார்\nஅக்க ரையரெம் மாதிபு ராணனார்\nகொக்கி னம்வயல் சேருங் குரக்குக்கா\nநக்க னைத்தொழ நம்வினை நாசமே. 5.75.8\n759 உருகி ஊன்குழைந் தேத்தி யெழுமின்நீர்\nகரிய கண்டன் கழலடி தன்னையே\nகுரவ னஞ்செழுங் கோயில் குரக்குக்கா\nஇரவும் எல்லியும் ஏத்தித் தொழுமினே. 5.75.9\n760 இரக்க மின்றி மலையெடுத் தான்முடி\nஉரத்தை யொல்க அடர்த்தா னுறைவிடங்\nகுரக்கி னங்குதி கொள்ளுங் குரக்குக்கா\nவரத்த னைப்பெற வானுல காள்வரே. 5.75.10\nஇத்தலம் சோழநாட்டிலுள்ளது; சுவாமிபெயர் - கொந்தளக்கருணைநாதர், தேவியார் - கொந்தளநாயகியம்மை.\nதிருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் ஐந்தாம் திருமுறை முழுவதும் முதற் பகுதி\nதிருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் ஐந்தாம் திருமுறை முழுவதும் இரண்டாம் பகுதி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.001 - கோயில் - திருக்குறுந்தொகை - அன்னம் பாலிக்குந்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.002 - கோயில் - திருக்குறுந்தொகை - பனைக்கை மும்மத\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.003 - திருநெல்வாயில் அரத்துறை - திருக்குறுந்தொகை - கடவுளைக் கடலுள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.004 - திருவண்ணாமலை - திருக்குறுந்தொகை - வட்ட னைம்மதி சூடியை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.005 - திருவண்ணாமலை - திருக்குறுந்தொகை - பட்டி ஏறுகந் தேறிப் பலஇலம்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.006 - திருவாரூர் - திருக்குறுந்தொகை - எப்போ தும்மிறை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.007 - திருவாரூர் - திருக்குறுந்தொகை - கொக்க ரைகுழல்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.008 - திருஅன்னியூர் - திருக்குறுந்தொகை - பாற லைத்த படுவெண்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.009 - திருமறைக்காடு - திருக்குறுந்தொகை - ஓத மால்கடல் பாவி உலகெலாம்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.010 - திருமறைக்காடு - திருக்குறுந்தொகை - பண்ணி னேர்மொழி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.011 - திருமீயச்சூர் இளங்கோயில் - திருக்குறுந்தொகை -\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.012 - திருவீழி மிழலை - திருக்குறுந்தொகை - கரைந்து கைதொழு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.013 - திருவீழிமிழலை - திருக்குறுந்தொகை - என்பொ னேயிமை யோர்தொழு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.014 - திருவிடைமருதூர் - திருக்குறுந்தொகை - பாச மொன்றில ராய்ப்பல\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.015 - திருவிடைமருதூர் - திருக்குறுந்தொகை - பறையின் ஓசையும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.016 - திருப்பேரெயில் - திருக்குறுந்தொகை - மறையு மோதுவர் மான்மறிக்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.017 - திருவெண்ணி - திருக்குறுந்தொகை - முத்தி னைப்பவ ளத்தை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.018 - திருக்கடம்பந்துறை - திருக்குறுந்தொகை - முற்றி லாமுலை யாளிவ\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.019 - திருக்கடம்பூர் - திருக்குறுந்தொகை - தளருங் கோளர வத்தொடு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.020 - திருக்கடம்பூர்க்கரக்கோயில் - திருக்குறுந்தொகை - ஒருவ ராயிரு மூவரு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.021 - திருவின்னம்பர் - திருக்குறுந்தொகை - என்னி லாரும் எனக்கினி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.022 - திருக்குடமூக்கு - திருக்குறுந்தொகை - பூவ ணத்தவன் புண்ணியன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.023 - திருநின்றியூர் - திருக்குறுந்தொகை - கொடுங்கண் வெண்டலை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.024 - திருவொற்றியூர் - திருக்குறுந்தொகை - ஒற்றி யூரும் ஒளிமதி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.025 - திருப்பாசூர் - திருக்குறுந்தொகை - முந்தி மூவெயி லெய்த\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.026 - திருவன்னியூர் - திருக்குறுந்தொகை - காடு கொண்டரங் காக்கங்குல்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.027 - திருவையாறு - திருக்குறுந்தொகை - சிந்தை வாய்தலு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.028 - திருவையாறு - திருக்குறுந்தொகை - சிந்தை வண்ணத்த\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.029 - திருவாவடுதுறை - திருக்குறுந்தொகை - நிறைக்க வாலியள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.030 - திருப்பராய்த்துறை - திருக்குறுந்தொகை - கரப்பர் கால மடைந்தவர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.031 - திருவானைக்கா - திருக்குறுந்தொகை - கோனைக் காவிக் குளிர்ந்த\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.032 - திருப்பூந்துருத்தி - திருக்குறுந்தொகை - கொடிகொள் செல்வ விழாக்குண\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.033 - திருச்சோற்றுத்துறை - திருக்குறுந்தொகை - கொல்லை யேற்றினர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.034 - திருநெய்த்தானம் - திருக்குறுந்தொகை - கொல்லி யான்குளிர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.035 - திருப்பழனம் - திருக்குறுந்தொகை - அருவ னாய்அத்தி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.036 - திருச்செம்பொன்பள்ளி - திருக்குறுந்தொகை - கான றாத கடிபொழில்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.037 - திருக்கடவூர்வீரட்டம் - திருக்குறுந்தொகை - மலைக்கொ ளானை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.038 - திருக்கடவூர்மயானம் - திருக்குறுந்தொகை - குழைகொள் காதினர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.039 - திருமயிலாடுதுறை - திருக்குறுந்தொகை - கொள்ளுங் காதன்மை பெய்துறுங்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.040 - திருக்கழிப்பாலை - திருக்குறுந்தொகை - வண்ண மும்வடி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.041 - திருப்பைஞ்ஞீலி - உடையர் கோவண\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.042 - திருவேட்களம் - நன்று நாடொறும் நம்வினை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.043 - திருநல்லம் - திருக்குறுந்தொகை தேவாரத் திருப்பதிகம் - திருக்குறுந்தொகை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.044 - திருவாமாத்தூ - மாமாத் தாகிய மாலயன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.045 - திருத்தோணிபுரம் - மாதி யன்று மனைக்கிரு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.046 - திருப்புகலூர் - துன்னக் கோவணச்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.047 - திருவேகம்பம் - பண்டு செய்த பழவினை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.048 - திருவேகம்பம் - பூமே லானும் பூமகள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.049 - திருவெண்காடு - பண்காட் டிப்படி யாயதன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.050 - திருவாய்மூர் - எங்கே என்னை இருந்திடம்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.051 - திருப்பாலைத்துறை - நீல மாமணி கண்டத்தர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.052 - திருநாகேச்சரம் - நல்லர் நல்லதோர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.053 - திருவதிகைவீரட்டம் - கோணன் மாமதி சூடியோர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.054 - திருவதிகைவீரட்டம் - எட்டு நாண்மலர் கொண்டவன் சேவடி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.055 - திருநாரையூர் - வீறு தானுடை வெற்பன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.056 - திருக்கோளிலி - மைக்கொள் கண்ணுமை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.057 - திருக்கோளிலி - முன்ன மேநினை யாதொழிந்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.058 - திருப்பழையாறைவடதளி - தலையெ லாம்பறிக்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.059 - திருமாற்பேறு - பொருமாற் றின்படை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.060 - திருமாற்பேறு - ஏது மொன்று மறிவில\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.061 - திருஅரிசிற்கரைப்புத்தூர் - முத்தூ ரும்புனல் மொய்யரி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.062 - திருக்கடுவாய்க்கரைப்புத்தூர் - ஒருத்த னைமூ வுலகொடு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.063 - திருக்குரங்காடுதுறை - இரங்கா வன்மனத் தார்கள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.064 - திருக்கோழம்பம் - வேழம் பத்தைவர் வேண்டிற்று\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.065 - திருப்பூவனூர் - பூவ னூர்ப்புனி தன்றிரு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.066 - திருவலஞ்சுழி - ஓத மார்கட லின்விட\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.067 - திருவாஞ்சியம் - படையும் பூதமும் பாம்பும்புல்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.068 - திருநள்ளாறு - உள்ளா றாததோர் புண்டரி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.069 - திருக்கருவிலி - மட்டிட் டகுழ லார்சுழ\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.070 - திருக்கொண்டீச்சரம் - கண்ட பேச்சினிற் காளையர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.071 - திருவிசயமங்கை - குசையும் அங்கையிற்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.072 - திருநீலக்குடி - வைத்த மாடும் மனைவியும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.073 - திருமங்கலக்குடி - தங்க லப்பிய தக்கன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.074 - திருஎறும்பியூர் - விரும்பி யூறு விடேல்மட\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.075 - திருக்குரக்குக்கா - மரக்கொக் காமென வாய்விட்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.076 - திருக்கானூர் - திருவின் நாதனுஞ் செம்மலர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.077 - திருச்சேறை - பூரி யாவரும் புண்ணியம்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.078 - திருக்கோடிகா - சங்கு லாமுன்கைத்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.079 - திருப்புள்ளிருக்குவேளூர் - வெள்ளெ ருக்கர வம்விர\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.080 - திருஅன்பில்ஆலந்துறை - வானஞ் சேர்மதி சூடிய\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.081 - திருப்பாண்டிக்கொடுமுடி - சிட்ட னைச்சிவ னைச்செழுஞ்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.082 - திருவான்மியூர் - திருக்குறுந்தொகை - விண்ட மாமலர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.083 - திருநாகைக்காரோணம் - பாணத் தால்மதில் மூன்று\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.084 - திருக்காட்டுப்பள்ளி - மாட்டுப் பள்ளி மகிழ்ந்துறை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.085 - திருச்சிராப்பள்ளி - மட்டு வார்குழ லாளொடு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.086 - திருவாட்போக்கி - கால பாசம் பிடித்தெழு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.087 - திருமணஞ்சேரி - பட்ட நெற்றியர் பாய்புலித்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.088 - திருமருகல் - பெருக லாந்தவம் பேதைமை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.089 - தனி - ஒன்று வெண்பிறைக் கண்ணியோர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.090 - தனி - மாசில் வீணையும் மாலை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.091 - தனி - ஏயி லானையெ னிச்சை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.092 - காலபாசத் - கண்டு கொள்ளரி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.093 - மறக்கிற்பனே என்னும் - காச னைக்கன லைக்கதிர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.094 - தொழற்பாலதே என்னும் - அண்டத் தானை அமரர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.095 - இலிங்கபுராணத் - புக்க ணைந்து புரிந்தல\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.096 - மனத்தொகை - பொன்னுள் ளத்திரள் புன்சடை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.097 - சித்தத்தொகை - சிந்திப் பார்மனத் தான்சிவன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.098 - உள்ளத் - நீற லைத்ததோர் மேனி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.099 - பாவநாசத் - பாவ மும்பழி பற்றற வேண்டுவீர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.100 - ஆதிபுராணத் - வேத நாயகன் வேதியர் நாயகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.arvloshan.com/2008/12/blog-post_21.html", "date_download": "2018-04-26T13:26:21Z", "digest": "sha1:RHFIGWV63S4GJBTJPRVNHEZUVXZJOCZ5", "length": 21218, "nlines": 441, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: லோகோக்கள் மாறினால்..", "raw_content": "\nஉலகம் எப்போதும் காணாத நிதி நெருக்கடி இந்த ஆண்டில் ஏற்பட்டது எல்லோருக்குமே தெரிந்ததே..\nஉலகின் மிகப்பெரிய வல்லரசு அமெரிக்காவே ஆட்டம் கண்டு போனது.. பல முன்னணி நிறுவனகள்,வங்கிகளும் மூடு விழா கண்டன..\nஇந்த நிதி நெருக்கடியால் சில பிரபல நிறுவனங்கள்/தயாரிப்புக்கள் தங்கள் லோகோக்களை (சின்னங்கள்)மாற்றிக் கொண்டால் எப்படி இருக்கும் என்பதே இன்றைய கற்பனை.. (இந்தப் பெரிய நிறுவனங்கள் எல்லாம் தம்மாத்தூண்டு பையன் என் மீது வழக்குப் போட மாட்டாங்க என்ற துணிச்சல் தான்..)\nஉலகில் தற்போது காணப்படும் நிறுவனங்களில் நிலையானது என்று கருதப்படும் நிறுவனமும் நம்ம கற்பனையில் தப்பவில்லை..\nஞாயிற்றுக் கிழமை.. நீண்ட பதிவுகள் போடக் கொஞ்சம் சோம்பல்.. அது தான் இப்படிக் கொஞ்சம் கூலான பதிவொன்றுக்கு ஒரு முயற்சி..\nat 12/21/2008 05:47:00 PM Labels: logo, கற்பனை, சின்னங்கள், நிதி நெருக்கடி, நிறுவனங்கள், லோகோ\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nலோஷன் - தொழிலால் சூரியனில் அறிவிப்பாளர் / பணிப்பாளர்.\nஅன்பு கொண்டோர் அனைவர்க்கும் நண்பன்.\nவாசிப்பதிலும் தமிழை நேசிப்பதிலும் ஆர்வமுடைய இயற்கையின் காதலன்.\n2008இன் சாதனை அணி தென் ஆபிரிக்கா\nஅர்ஜுன ரணதுங்கவின் தில்லு முல்லுகள்\nவானொலி வறுவல்கள் 2- நள்ளிரவில் புதியவர்களின் கூத்த...\nஎங்க ஏரியா வெள்ளவத்தை - ஒரு அறிமுகம்\nவானொலி வறுவல்கள்- குனித்த புருவமும் ராக்கம்மாவும் ...\nஅகதியான மக்களுக்கு அமைதியான நாடு கேட்பேன்\nகிரிக்கெட் வீரர் பதிவரான ராசி..\nஉல்லாசபுரியில் உலகின் மிகப்பெரும் வாணவேடிக்கை\nஏமாற்றிய அசின்.. ஒரு புலம்பல்\nசச்சின் - முதல் தடவை ஒரு உண்மை டெஸ்ட் சம்பியனாக\nஎனது செஞ்சுரி .. சதம் அடித்தேன்..\nநத்தையாலே முடியுது நம்மால முடியாதா\nசனிக்கிழமை - சாப்பாடு ஜோக்ஸ்\nபாரதியையும் வாழ்விக்கும் தமிழ் சினிமா\nயாழ்ப்பாணம் - யார் கொடுத்த சாபம்\nஇளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் + கேள்விகள்..\nஎங்கே போனார் லசித் மாலிங்க\nடேட்டிங் டிப்ஸ் தரும் ஒன்பது வயது சிறுவன் \nகிரிக்கெட் கனவான் தன்மையைக் கறைப்படுத்திய கறுப்பு நாள் - அவுஸ்திரேலியக் கிரிக்கெட் மோசடி\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nசங்ககார & கிரிஸ் கெயில் ஆஸ்திரேலியாவில் விளையாடவுள்ளார்கள்\nசனத் ஜெயசூரிய - களிமண்ணாகிப் போன கறுப்புத் தங்கம்\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nஅரசியலுக்கு அப்பால் அசிங்கப்பட்ட ஆளுநரின் கை\nகந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா\nபிரபா ஒயின்ஷாப் – 23042018\nநிகராகுவா கலவரம்: பணக்காரர்களின் ரவுடித்தனம்\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\n79 வயதில் காமம் தவறில்லை.\nவிழியிலே மணி விழியிலே ❤️🎸 ஜொதயலி ஜொத ஜொதயலி 💕\nகிரிக்கெட் கனவான் தன்மையைக் கறைப்படுத்திய கறுப்பு நாள் - அவுஸ்திரேலியக் கிரிக்கெட் மோசடி\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nஇனிய தைப் பொங்கல் வாழ்த்துகள்\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nஅந்த கால பிலிம் பேர் விருது விழாவில் சில ஒளிக்காட்சிகள்-வீடியோ\n500, 1000 – மோசம் போனோமே\nஇறைவி - புரிந்ததும் புரியாததும்\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.krinit.com/author/admin/", "date_download": "2018-04-26T13:12:05Z", "digest": "sha1:OVGN6PJQ3W64WJ776Y2YGDC3HOZNC6E3", "length": 8128, "nlines": 150, "source_domain": "www.krinit.com", "title": "Admin Admin", "raw_content": "\nபார்க்கும் சிறிய குடும்பம் ஒன்றிற்கு\nவீட்டில் தங்கி நின்று அன்றாட வீட்டுவேலையை\nயாழில் இயங்கும் பிரபல பலசரக்கு\nசேர்ந்த வீடு விற்பனைக்கு உண்டு.\nதனியார் நிறுவம் ஒன்றிற்கு பெண்\n*முன் அனுபவம் விரும்ப தக்கது\nகிளிநொச்சி ,கனகபுரம் 2 ஆம் குறுக்கு வீதியில்அடிப்படை\nஇல:383/148 கோயி வீதி, நல்லூர் எனும்\nமுகவரியில் அமைந்துள்ள 9 அறைகள்\n4 குளியலறைகள்,வாகன தரிப்பிட வசதியுடன்\n௬டிய மாபிள் பதிக்கபட்டு குளிரூட்டீ பொருத்தப்பட்ட\nநவீன வசதிகளுடன் ௬டிய அழகிய வடிவமைப்பு மாடி\nவீடு விடப்படும் நிறுவனங்களின் அலுவகங்களாகவும்\nபிரபல ௬ல் பார் ஒன்றிற்கு\n1998 இல் பிறந்த பூரம் நட்சத்திரம் 8 இல்\nசெவ்வாய் கி.பா103 உடைய சொந்தமாக\nகிளிநொச்சிக்கும், யாழ்ப்பாணத்திற்கும் இடையில் தொலைந்து விட்டது\nகண்டெடுத்தவர்கள் கீழ்வரும் தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு\nகோயில் வீதியில் இரண்டு கடைதுண்டு\n(சந்தியில் இருந்து 30 அடி துரத்தில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} {"url": "http://www.puthinappalakai.net/2017/05/22", "date_download": "2018-04-26T13:13:40Z", "digest": "sha1:ESG3PZ3ZWOLEBA4USJWSN3KV4IXWIWN4", "length": 12400, "nlines": 115, "source_domain": "www.puthinappalakai.net", "title": "22 | May | 2017 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nஅமெரிக்க இராஜாங்கத் திணைக்கள உயரதிகாரி சிறிலங்காவுக்குப் பயணம் – ரணில், மங்களவுடன் பேச்சு\nஅமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான பதில் உதவிச் செயலர் வில்லியம் பில் ரொட் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.\nவிரிவு May 22, 2017 | 16:45 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nசிறிலங்கா அமைச்சரவை மாற்றியமைப்பு – 9 அமைச்சர்கள், 1 இராஜாங்க அமைச்சர் நியமனம்\nசிறிலங்கா அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இன்று காலை அதிபர் செயலகத்தில் நடந்த பதவியேற்பு நிகழ்வில் ஒன்பது அமைச்சர்கள் மற்றும் ஒரு இராஜாங்க அமைச்சர் ஆகியோர் புதிய பதவிகளை ஏற்றுக் கொண்டனர்.\nவிரிவு May 22, 2017 | 8:44 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nவிக்னேஸ்வரனின் தாளத்துக்கு ஆடமுடியாது – சரத் பொன்சேகா\nவடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் தாளத்துக்கு சிறிலங்கா அரசாங்கம் ஆட முடியாது என்று சிறிலங்கா அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.\nவிரிவு May 22, 2017 | 2:44 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nசென்னையில் காவல்துறையின் தடையை மீறி ஈழத்தமிழர் படுகொலை நினைவேந்தல் நிகழ்வு\nசென்னை மெரினா கடற்கரையில், காவல்துறையினரின் தடையை மீறி நேற்றுமாலை ஈழத்தமிழர் படுகொலை நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.\nவிரிவு May 22, 2017 | 2:32 // அ.எழிலரசன் பிரிவு: செய்திகள்\nஇன்று கைது செய்யப்படுகிறார் ஞானசார தேரர்\nசிறுபான்மையினருக்கு எதிரான இனவாத செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள பொது பலசேனா அமைப்பின் பொதுச்செயலர் கலகொடஅத்தே ஞானசார தேரர் இன்று கைது செய்யப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவிரிவு May 22, 2017 | 1:53 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nசிறிலங்காவின் குருதி தோய்ந்த உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்து எட்டு ஆண்டுகள்\nசிறிலங்காவில் நடந்து முடிந்த முடிந்த குருதி தோய்ந்த உள்நாட்டு யுத்தத்தின் எட்டாவது ஆண்டு கடந்த வெள்ளியன்று நிறைவடைந்தது. இந்த யுத்தத்தின் போது காணாமற் போன உறவுகளை இவர்களின் குடும்பத்தவர்கள் தேடிக்கொண்டிருக்கும் அதேவேளையில் இராணுவ ஆக்கிரமிப்பிற்குள் உள்ள தமது நிலங்களை விடுவிக்குமாறும் தமிழ் மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.\nவிரிவு May 22, 2017 | 1:38 // நித்தியபாரதி பிரிவு: கட்டுரைகள்\nஜேர்மனிக்கான தூதுவராகிறார் கருணாசேன ஹெற்றியாராச்சி\nஜேர்மனிக்கான சிறிலங்காவின் புதிய தூதுவராக பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி நியமிக்கப்படவுள்ளார். ஜேர்மனியில் உள்ள சிறிலங்கா தூதுவர் கருணாதிலக அமுனுகம பதவியில் இருந்து ஓய்வுபெறவுள்ள நிலையிலேயே, கருணாசேன ஹெற்றியாராச்சி அந்தப் பதவியைப் பொறுப்பேற்கவுள்ளார்.\nவிரிவு May 22, 2017 | 1:33 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nகொழும்புத் துறைமுகத்தில் இந்தியக் கடற்படையின் சுமேதா போர்க்கப்பல்\nஇந்திய கடற்படையின் ஆழ்கடல் ரோந்துக் கப்பலான ஐஎன்எஸ் சுமேதா மூன்று நாள்கள் பயணமாக நேற்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.\nவிரிவு May 22, 2017 | 1:08 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஇன்று காலை அமைச்சரவை மாற்றம் – மங்கள, ரவியின் பதவிகள் பறிப்பு\nசிறிலங்கா அதிபர் செயலகத்தில் இன்று காலை அமைச்சரவை மாற்றம் இடம்பெறவுள்ளது. இதன் போது நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோர் இப்போது வகித்து வரும் அமைச்சுப் பதவிகளை இழக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கி்ன்றன.\nவிரிவு May 22, 2017 | 0:55 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் இரா.சம்பந்தன் – ‘சேர் பொன். இராமநாதனின் மறுஉருவம்’\t0 Comments\nகட்டுரைகள் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு யார் காரணம்\nகட்டுரைகள் சிறிலங்கா: மகிந்தவுக்காக திறக்கப்படும் கதவுகள்\t0 Comments\nகட்டுரைகள் ஐ.நாவின் மனிதஉரிமைச் செயற்பாடுகளைப் பலவீனப்படுத்தும் ரஷ்யா, சீனா\t0 Comments\nகட்டுரைகள் சீனாவின் இறுக்கமான பிடியில் சிறிலங்காவின் அமைதியான துறைமுகம்\t1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுக்கு எதிரான வியூகத்தில் சிறிலங்காவின் பௌத்த பிக்குகளையும் இணைக்கிறது இந்தியா\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்திய மாக்கடலில் அதிகரிக்கும் சீனாவின் செல்வாக்கும் – இந்தியாவின் முத்தரப்பு கடற்பாதுகாப்பு ஒப்பந்தமும்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t0 Comments\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t2 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/4359", "date_download": "2018-04-26T13:27:12Z", "digest": "sha1:FY6NPVFWNAUOSS6ZVCTFAPP225X2S6CU", "length": 54196, "nlines": 156, "source_domain": "www.virakesari.lk", "title": "புலிகளுக்கு நான் பணம் வழங்கவில்லை | Virakesari.lk", "raw_content": "\nஇலங்கை ஆசிரியர் சேவை சங்கம் ஜே.வி.பியுடன் இணைந்து யாழ்பாணத்தில் \"செம்மே\" தினக் கொண்டாட்டம்\nநிலக்கரியை விட அடர்ந்த கருப்பு நிறத்தில் புதிய கிரகம் கண்டு பிடிப்பு\nஎரிந்த நிலையில் சடலம் மீட்பு\nபல கொள்ளைச் சம்பவங்களோடு தொடர்புடைய கொள்ளை கும்பல் கைது\nஇடி தாக்கி இருவர் வைத்தியசாலையில்\nஜாலிய விக்கிரமசூரியவை கைது செய்ய மீண்டும் பிடியாணை\n“அம்பாந்தோட்டை துறைமுகத்தின் பாதுகாப்பிற்கு இலங்கை கடற்படை மாத்திரமே பொறுப்பு”\nஐ.எஸ். தற்கொலை தாக்குதல் ; உயிரிழந்தோரின் எண்ணிக்கை 57 ஆக அதிகரிப்பு\nகாலில் விழுந்தவர் காலாவதியான நூடில்ஸ் என என்னை வர்ணிக்கிறார் : சந்திரிகா\nபுலிகளுக்கு நான் பணம் வழங்கவில்லை\nபுலிகளுக்கு நான் பணம் வழங்கவில்லை\nபுலி­க­ளுக்கு நாம் பணம் வழங்­க வில்லை. எங்­க­ளுக்கு அவர்­க­ளுடன் எந்த தொடர்பும் இருக்­க­வில்லை. புலிகள் இவ்­வாறு பணம் வாங்­கி­னார்கள் என்று கூறு­வது தமிழ் மக்­க­ளுக்கு செய்­கின்ற பாரிய அகௌ­ர­வ­மாக இருக்­கின்­றது என்று முன்னாள் பொரு­ளா­தார அபி­வி­ருத்தி அமைச்­சரும் மஹிந்த ராஜ­ப­க் ஷவின் சகோ­த­ர­ரு­மான பஷில் ராஜ­பக் ஷ தெரி­வித்தார்.\nவீரகேசரி இணையத்தளத்திற்கு வழங்­கிய விசேட செவ்­வி­யி­லேயே அவர் மேற்­கண்ட விட­யங்­களை குறிப்­பிட்டார். செவ்­வியின் முழு விபரம் வரு­மாறு;\nகேள்வி: தற்­போது என்ன செய்­து­கொண்­டி­ருக்­கின்­றீர்கள்\nபதில்: நாங்கள் தற்­போது 50 வீத அர­சி­ய­லுக்கும் 50 வீதம் வழக்­கு­க­ளுக்­கா­கவும் காலத்தை கடத்­திக்­கொண்­டி­ருக்­கின்றோம். அர­சியல் ரீதியில் வேட்­டை­யா­டப்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கின்றோம் என்று கூறலாம்.\nகேள்வி: அதா­வது உங்கள் ஆட்­சி­யின்­போது எவ்­வி­த­மான தவ றும் செய்­ய­வில்லை என்று கூறு­கின்­றீர்­களா\nபதில்: தவறு செய்­வது என்­பதும் அர­சியல் தவ­று­களை செய்­வது என்­பதும் இரண்டு விட­யங்­க­ளாகும். அர­சியல் ரீதி­யான குறை­பாடுகள் என்­பது இடம்­பெ­றலாம். இது எந்த அர­சி­யல்­வா­தி­யி­டமும் இருக்­கலாம். ஆனால் இங்கு அவ்­வாறு இல்லை. இங்கு என்ன நடை­பெ­று­கின்­றது என்றால் சில பேரை தெரிவு செய்து அர­சியல் வேட்­டை­யா­டு­கின்­றனர்.\nகேள்வி: நாட்டின் தற்­போ­தைய நிலைமை குறித்து குறிப்­பிட முடி­யுமா\nபதில்:நாட்டில் கடந்த வருடம் வாழ்க்கை முறை­யா­னது வீழ்ச்­சி­ய­டைந்­து­விட்­டது. விவ­சாயம் வீழ்ச்­சி­கண்­டுள்­ளது. வடக்கில் மீன­வர்­களின் வாழ்க்கை பாதிக்­கப்­பட்­டுள்­ளது. வடக்கு மீன­வர்­களின் மீன்­வளம் கொள்­ளை­ய­டிக்­கப்­ப­டும்­போது அர­சாங்கம் மௌன­மாக இருக்­கின்­றது. இவ்­வாறு பல வழி­க­ளிலும் மக்கள் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர்.\nஆனால் சில விட­யங்­களில் முன்­னேற்றம் ஏற்­பட்­டுள்­ளது என்­ப­த­னையும் நாங்கள் ஏற்­றுக்­கொள்­ள­வேண்டும். எரி­பொ­ருட்­களின் விலை குறைக்­கப்­பட்­டுள்­ளது. ஆனால் உலக சந்­தையில் எரி­பொ­ருளின் விலை குறை­வ­டையும் அள­வுக்கு வழங்­கப்­ப­ட­வில்லை. அத்­துடன் அரச ஊழி­யர்­க­ளுக்கு கொடுப்­ப­னவு அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. ஆனால் அதனை அடிப்­படை சம்­ப­ளத்தில் இணைக்­க­வில்லை. எவ்­வா­றெ­னினும் அர­சாங்­கத்தின் இந்த செயற்­பாட்டை பாராட்­ட­வேண்டும்.\nநாட்டில் கடந்த காலங்­களில் பாரிய அபி­வி­ருத்தி வேலைத்­திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. ஆனால் அவை தற்­போது நிறுத்­தப்­பட்­டுள்­ளன. நாங்கள் ஆரம்­பித்த அபி­வி­ருத்தி திட்­டங்கள் நிறுத்­தப்­பட்­டுள்­ளன. வடக்கு அதி­வேக பாதை செயற்­பா­டுகள் நிறுத்­தப்­பட்­டுள்­ளன. நாட்டின் முழுப் பொரு­ளா­தா­ரமும் முழு­மை­யாக பாதிக்­கப்­பட்­டுள்­ளது. ரூபாவின் பெறு­மதி வீழ்ச்­சி­கண்­டு­வ­ரு­கின்­றது. பொரு­ளா­தார வளர்ச்சி வீதம் குறை­வ­டைந்­துள்­ளது. வெளி­நாட்டு ஒதுக்­கீடு குறை­வ­டைந்­துள்­ளது.\nமின்­சார விநி­யோ­கத்தில் பிரச்­சினை ஏற்­பட்­டுள்­ளது. மின்­சார தடை ஏன் ஏற்­பட்­டது மின்­சார தடை ஏற்­பட்­ட­மைக்கு நிர்­வாக திறன் இன்­மையே கார­ண­மாகும். எமது நாட்டில் தேவை­யான மின்­சாரம் உற்­பத்தி செய்­யப்­ப­டு­கின்­றது. எனவே தடை ஏற்­ப­ட­வேண்­டிய அவ­சி­ய­மில்லை. சேவையில் அர்ப்­ப­ணிப்பு இல்­லா­மையே இதற்கு கார­ண­மாகும்.\nஇதே­வேளை இந்த அர­சாங்­கத்­துக்கு பாரிய சர்­வ­தேச ஆத­ரவு காணப்­ப­டு­கின்­றது. இந்­தியா அமெ­ரிக்கா மற்றும் ஐரோப்­பிய நாடு­களின் ஆத­ரவை அர­சாங்கம் பெற்­றுள்­ளமை சிறந்த விட­ய­மாகும். ஆனால் தேவை­யில்­லாமல் சில நாடு­க­ளுடன் உறவை குழப்­பிக்­கொண்­டுள்­ளது.\nபதில்: சீனா போன்ற நாடு­க­ளுடன் உறவு குழப்­பிக்­கொள்­ளப்­பட்­டது.\nகேள்வி: எனினும் பொது­வாக தற்­போது சர்­வ­தேச உறவு சிறந்­த­தாக உள்­ள­தாக கூறு­கின்­றீர்­களா\nபதில்: அது எதிர்­வரும் காலங்­களில் உறவு முன்­னெ­டுக்­கப்­ப­டு­வதை வைத்தே கூற முடியும். ஒரு தரப்­புக்கு மட்டும் நன்மை ஏற்­படும் வகையில் செயற்­ப­டக்­கூ­டாது. ஆனால் இவ்­வாறு சர்­வ­தேச உறவு பலப்­ப­டுத்­தப்­பட்­டமை சிறந்த விட­ய­மாகும்.\nமேலும் முதற்­த­ட­வை­யாக தமிழ்த் தரப்பின் பிர­தி­நி­தி­யான தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு தற்­போ­தைய அர­சாங்­கத்­துடன் இணைந்து பய­ணிக்­கின்­றது. கடந்த காலங்­களில் தேசியப் பிரச்­சி­னையை தீர்க்க தமிழர் தரப்பு அர­சாங்­கத்­துடன் இணைந்து செயற்­ப­டவே இல்லை.\nஆனால் முதற்­த­ட­வை­யாக தமி­ழர்­களின் உத்­தி­யோ­க­பூர்வ கட்­சி­யான தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு அர­சாங்­கத்­துடன் இணைந்து பய­ணிக்­கின்­றது. இது பாரிய வெற்­றி­யாகும். ஆனால் அதனை உரிய முறையில் பயன்­ப­டுத்திக் கொள்ள வேண்டும். இந்த விட­யத்தில் இரண்டு தரப்பும் பொறுப்­புடன் செயற்­பட வேண்டும். இது சிறந்த சமிக்­ஞை­யாகும். கூட்­ட­மைப்பு எதிர்க்­கட்­சி­யி­லி­ருந்து கொண்டு முன்­னெ­டுக்கும் வகி­பா­கத்தை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். எதிர் கட்சித் தலை­வ­ரென்றால் அவர் முழு நாட்­டி­னதும் எதிர்க்­கட்சித் தலை­வ­ராக இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அவ்­வாறு செயற்­ப­ட­வில்லை.\nகேள்வி: உங்கள் அர­சாங்க காலத்­திலும் இந்­திய மீன­வர்­களின் அத்­து­மீறல் பிரச்­சினை காணப்­பட்­டது தானே \nபதில்:நாங்கள் இந்த விட­யத்தில் தலை­யிட்டோம். ஆனால் கூட்­ட­மைப்பு இந்­தி­யாவின் சார்­பாக செயற்­பட்­டது. தமிழ் மக்­களின் பிர­தி­நி­திகள் இந்­தி­யாவின் பக்­கத்தை எடுத்தால் நாம் எவ்­வாறு இந்தப் பிரச்­சி­னைகள் குறித்து பேசு­வது\nகேள்வி: உங்கள் தரப்பு புதிய கட்­சியை ஆரம்­பிக்கப் போவ­தாக கூறுப்­ப­டு­கி­றது. அதில் உங்கள் பங்­க­ளிப்பு என்ன\nபதில்: ஒரு விட­யத்தை சரி­யாக விளங்கிக் கொள்ள வேண்டும். இன்று ஒரு தரப்பு அர­சாங்­கத்தை நடத்­து­கின்­றது. பல கட்­சிகள் அதற்கு ஆத­ர­வ­ளிக்­கின்­றன. எதிர்க்­கட்­சி­யான கூட்­ட­மைப்பும் அர­சாங்­கத்­திற்கு ஆத­ர­வா­க­வுள்­ளது. ஒரு­வ­கையில் கூறு­வ­தென்றால் ஜே.வி.பி.யும் அந்தப் பக்­கமே உள்­ளது. இந்­நி­லையில் அர­சாங்­கத்தின் செயற்­பா­டு­க­ளினால் பாதிக்­கப்­பட்ட மக்கள் தரப்பும் நாட்­டி­லுள்­ளது. அந்த மக்­க­ளுக்­காக யார் குரல் கொடுப்­பது அதற்­காக ஒரு அர­சியல் முன்­னணி அல்­லது அமைப்பு தேவைப்­ப­டு­கி­றது. இது மக்­களின் கோரிக்­கை­யாக இருக்­கின்­றது. அவர்­களை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­தவே இந்த புதிய அமைப்பு உரு­வாக்­கப்­பட வேண்­டு­மென வலி­யு­றுத்­தப்­ப­டு­கின்­றது.\nஎதிர்க்­க­ருத்தை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­தவே இந்த அமைப்பை உரு­வாக்­கு­மாறு கோரப்­ப­டு­கின்­றது. இதில் எனது பங்­க­ளிப்பு பெரி­தாக இருக்­காது.\nகேள்வி: நீங்கள் கூறும் அந்த அமைப்பை தற்­போது உரு­வாக்கிக் கொண்­டி­ருக்­கி­றீர்­களா\nபதில்: மக்கள் இதனை கேட்­கின்­றனர். எனவே தேவை­யான சூழலில் இந்த அமைப்பு உரு­வாகும்.\nகேள்வி: உங்கள் அர­சாங்­கத்தின் கீழி­லி­ருந்த சிறந்த இரா­ணுவத் தள­பதி தற்­போ­தைய பீல்ட் மார்ஷல் அமைச்சர் சரத் பொன்­சேகா நீங்கள் புலி­க­ளுக்கு பணம் கொடுத்­த­தாக குற்­றச்­சாட்­டினை முன்­வைத்­தி­ருக்­கின்றார். நீங்கள் புலி­க­ளுக்கு பணம் கொடுத்­தீர்­களா\nபதில்: (சிரிக்­கிறார்) அதனை நான் முழு­மை­யாக நிரா­க­ரிக்­கின்றேன். புலி­க­ளுக்கு நாம் பணம் வழங்கவில்லை. எங்­க­ளுக்கு அவர்­க­ளுடன் எந்த தொடர்பும் இருக்­க­வில்லை.\nபுலிகள் இவ்­வாறு பணம் வாங்­கி­னார்கள் என்று கூறு­வது தமிழ் மக்­க­ளுக்கு செய்­கின்ற பாரிய அகௌ­ர­வ­மாக இருக்­கின்­றது. தமிழ் மக்கள் 1947 ஆம் ஆண்­டி­லி­ருந்து ஒரு கொள்கை அடிப்­ப­டை­யி­லான தீர்­மா­னத்தில் செயற்­பட்டு வந்­துள்­ளனர். முழு இலங்­கையும் ஜே.ஆர். ஜெய­வர்­த­ன­வுக்கு வாக்­க­ளித்­த­­போது கொப்­பே­க­டு­வ­வுக்கு வாக்­க­ளித்த மக்­களே வடக்­கி­லுள்­ளனர். அந்­த­வ­கையில் அவர்கள் தைரி­ய­மாக அர­சியல் தீர்­மானம் எடுக்கும் மக்கள். அர­சியல் ரீதியில் தேர்­தலை புறக்­க­ணிப்­பார்கள். வேறு­வ­கை­யான முடி­வு­களை எடுப்­பார்கள். அவை இந்த நாட்டின் அர­சி­யலில் இடம்­பெற்ற விட­யங்கள். மக்கள் விடு­தலை முன்­ன­ணியும் ஒரு முறை தேர்­தலை புறக்­க­ணித்­தது. ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியும் மாவட்ட அபி­வி­ருத்தி சபை தேர்­தலை புறக்­க­ணித்­தது. முன்னாள் இந்­தியப் பிர­தமர் ராஜீவ் காந்­தியை கொலை செய்­வ­தற்கு புலிகள் எடுத்த தீர்­மானம் தவ­றா­னது எனக் கூறப்­ப­டு­வதைப் போன்று 2005 ஆம் ஆண்டு தேர்­தலில் வாக்­க­ளிக்­காமல் இருந்­தமை அவர்­களின் தவ­றான முடி­வாக இருக்­கலாம். அன்று மஹிந்த ராஜ­ப­க் ஷ­வுக்கு சர்­வ­தேச தொடர்பு இல்­லை­யென்றும் யுத்தம் செய்யத் தெரி­யாது என்றும் புலிகள் நினைத்­தி­ருக்­கலாம். கோத்­த­பாய ராஜ­பக்ஷ என ஒரு சகோ­தரர் இருந்­தமை தெரி­யாமல் இருந்­தி­ருக்­கலாம். அதனால் அவ்­வாறு புறக்­க­ணித்­தி­ருக்­கலாம். எவ்­வா­றெ­னினும் மக்­களின் தீர்­மா­னத்தை அகௌ­ர­வப்­ப­டுத்­து­வது முறை­யல்ல.\nகேள்வி: இது தொடர்பில் நீங்கள் என்ன செய்யப் போகின்­றீர்கள்\nபதில்: அதி­க­மான விட­யங்­களை கூறிக் கொண்­டி­ருக்­கின்றார். நான் இந்த விட­யத்தை எனது சட்­டத்­த­ர­ணி­க­ளிடம் ஒப்­ப­டைத்­து­விட்டேன்.\nகேள்வி: ஜன­வரி 8 ஆம் திகதி தேர்தல் முடி­வ­டைந்­த­வுடன் நீங்கள் ஏன் அமெ­ரிக்­கா­வுக்கு சென்­றீர்கள் \nபதில்: அது எனது தனிப்­பட்ட ஒரு முடிவு. எனது பாது­காப்­பினைப் பற்றி சிந்­தித்து மக்­களின் தீர்ப்­பிற்கு தலை­சாய்த்து நான் அன்று அவ்­வாறு பய­ண­மானேன். மக்கள் எம்மை வேண்­டா­மென்று கூறி­ய­தனால் வெற்றி பெற்­ற­வர்கள் சிறந்த முறையில் செயற்­பட இட­ம­ளித்­து­விட்டு நான் சென்றேன். இவ்­வாறு இதற்கு முன்னர் பல அர­சியல் தீர்­மா­னங்­களை எடுத்­தி­ருந்­தனர். எனது பிள்­ளைகள் மனைவி அனை­வரும் அமெ­ரிக்­கா­வில்தான் வாழ்­கின்­றனர்.\nமஹிந்த ராஜ­பக் ஷ தோல்­வி­யுற்­றதும் அலரி மாளி­கை­யி­லி­ருந்து மெத­மு­ல­ன­வுக்கு சென்­றது போன்று நான் எனது குடும்­பத்­தா­ரிடம் சென்றேன். அதனைப் பலர் பல விதங்­களில் அர்த்­தப்­ப­டுத்­தி­யி­ருந்­தனர். அதில் ஏதும் குறை­பாடு இருந்­தி­ருந்தால் நான் கவ­லை­ய­டை­கின்றேன்.\nகேள்வி: 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடி­வ­டைந்­ததும் நாட்டின் தேசிய பிரச்­சி­னையை தீர்ப்­ப­தற்கு உங்கள் அர­சாங்­கத்திற்கு சிறந்த சந்­தர்ப்பம் கிடைத்­தது. ஆனால் அதனை நீங்கள் தவற விட்­டீர்­களே \nபதில்:இல்லை இது தவ­றான கருத்­தாகும். அர­சியல் ரீதியில் தேசியப் பிரச்­சி­னையை தீர்ப்­ப­தற்கு தற்­போது தான் வர­லாற்று ரீதி­யான சந்­தர்ப்பம் கிடைத்­துள்­ளது. இன்று அர­சாங்­கத்­துடன் இணைந்­தி­ருக்­கின்ற தமிழ்த் தரப்பு அன்று எம்­முடன் இணைந்­தி­ருக்­க­வில்லை. அன்று நாம் இடம்­பெ­யர்ந்த மக்­களை மீள் குடி­யேற்ற கடும் பாடு­பட்டோம். யாரும் எமக்கு ஆத­ரவு வழங்­க­வில்லை. புலம்­பெயர் மக்­களும் எத­னையும் செய்­ய­வில்லை. குழப்­பங்­க­ளையே ஏற்­ப­டுத்­தினர். மக்­களை மீள்­கு­டி­யேற்­றவே எங்­க­ளுக்கு இரண்­டரை வரு­டங்கள் தேவைப்­பட்­டன. அன்று அர­சியல் தீர்வைப் பற்றி பேசு­வதை விட மக்­களின் அடிப்­படைப் பிரச்­சி­னை­களை தீர்ப்­ப­தற்கே காலம் தேவை­யாக இருந்­தது. அந்த இடத்­தி­லி­ருந்தே கூட்­ட­மைப்­பினர் எமக்­கெ­தி­ரா­கவே செயற்­பட்டு வந்­துள்­ளனர். பேச்­சு­வார்த்தை நடத்தக் கூட அவர்கள் இணங்­க­வில்லை. தற்­போது இந்த அர­சாங்­கத்­திற்கு வழங்கும் ஆத­ரவை கூட்­ட­மைப்பு அன்று எமக்கு வழங்­கி­யி­ருந்தால் நாமும் தேசியப் பிரச்­சி­னைக்கு தீர்­வனைக் கண்­டி­ருப்போம்.\nபதில்: பாரிய பொறுப்­புடன் கூறு­கின்றேன். நாங்கள் இதற்கு முயற்­சித்தோம். ஐ.நா.வில் தமிழ் மொழியில் பேசிய தலைவர் எமது மஹிந்த ராஜ­ப­க் ஷவே ஆவார். இவ்­வாறு தற்­போ­து­கூட யாரும் இல்லை. இன்று வடக்கு மக்­க­ளுக்கு 700 ஏக்கர் காணி­களை மீள் கொடுக்­கின்­றனர். நாங்கள் 7000 ஏக்கர் காணி­களை மீள வழங்­கினோம் என்­பதை பொறுப்­புடன் கூறு­கின்றேன். ஆனால் தவ­றான கண்­னோட்­டத்தை வெளிக்­காட்­டினர். எனவே அன்று அவர்கள் ஒத்­து­ழைப்­புடன் செயற்­பட்­டி­ருந்தால் இன்று இந்தப் பிரச்­சினை தீர்க்­கப்­பட்­டி­ருக்கும். எமது பக்­கத்­திலும் குறை­பா­டுகள் இருந்­தன. நாம் காணி­களை கொடுத்­து­விட்டு வந்த பின்னர் பாது­காப்பு தரப்­பினர் மீண்டும் அவற்றை பெற்றுக் கொண்ட சந்­தர்ப்­பங்­களிலும் இருந்­தன.\nகேள்வி: உங்­க­ளது அர­சாங் கம் முஸ்லிம் மக்கள் விட­யத்­திலும் முறை­யற்ற விதத்தில் நடந்­து­கொண்­ட­தாக குற்­றச்­சாட்­டுக்கள் உள்­ளன.\nஉங்கள் தரப்பு தோல்­விக்கு முஸ் லிம் மக்கள் மீதான கெடு­பி­டி­களே காரணம் என்றும் கூறப்­ப­டு­கின்­றதே\nபதில்: முஸ்லிம் மக்­களின் பிரச்­சி­னை­களை தீர்க்­கவே நாங்கள் முயற்­சித்தோம். ஆனால் நாங்கள் தீர்த்த பிரச்­சி­னை­களும் தற்­போது மீண்டும் குழம்­பிக்­கொண்­டி­ருக்­கின்­றன. அமைச்சர் ரிஷாத் பதி­யுதீன் நேர்­மை­யான முறையில் தமது மக்­க­ளுக்­காக செயற்­பட்டு வந்தார். ஆனால் அப்­போ­தைய மன்னார் ஆயர் அதற்கு இடை­யூ­றாக இருந்து வந்தார். பல கவ­லை­யான சம்­ப­வங்கள் இடம்­பெற்­றன அந்த மக்கள் அதி­க­ளவில் ஐ.தே.க ஆட்சிக் காலத்­தில கஷ்­டப்­பட்­டனர். புலி­க­ளி­னாலும் கஷ்­டங்­களை எதிர்­கொண்­டனர். முஸ்லிம் நாடு­க­ளுடன் மஹிந்த ராஜ­ப­க் ஷ­ வுக்கு சிறந்த தொடர்­புகள் காணப்­பட்­டன. இந்த நாட்­டி­லுள்ள முஸ்லிம் நாடு­களின் தூது­வர்கள் மஹிந்த ராஜபக் ­ஷ­வுக்கு ஆத­ரவு வழங்­கினர். எமது காலத்தில் பிர­தான முஸ்லிம் கட்­சி­களின் தலை­வர்கள் எம்­முடன் இருந்­தனர். ஆனால் சில அமைப்­புக்கள் உரு­வா­கி­யு­துடன் முஸ்லிம் மக்­க­ளுக்கு இடை­யூ­றுகள் ஏற்­ப­டுத்­தப்­பட்­டன. அமைப்­புக்கள் உரு­வாக்­கப்­ப­டு­வதை நான் எதிர்க்­க­வில்லை. ஆனால் அந்த அமைப்­புக்­களின் ஒரு­சில செயற்­பா­டு­களை நாங்கள் எதிர்­கின் றோம். மஹிந்த ராஜ­ப­க் ஷவும் அவற்றை எதிர்த்தார். அந்த அமைப்­புக்கள் செய்த சில நட­வ­டிக்­கைகள் முஸ்லிம் மக்கள் மத்­தியில் பாரிய பிரச்­சி­னை­க­ளாக உரு­வெ­டுத்­தன. அவற்­றிற்கு ஊட­கங்­களும் தேவை­யற்ற பிர­சித்­தங்­களை வழங்­கின.\nகேள்வி: அப்­போ­தைய அர­சாங்கம் ஒரு சில இடங்­களில் சில நட­வ­டிக்­கை­களை எடுத்­தி­ருக்­கலாம் அல்­லவா\nபதில்: இந்த விட­யத்தில் பாரிய குறை­பா­டுகள் இருந்­தன என்­பதை ஏற்றுக் கொள்­கின்றேன். முஸ்லிம் மக்கள் சந்­தே­கப்­ப­டு­கின்ற வகையில் பல சம்­ப­வங்கள் இடம்­பெற்­றன. கிரிஸ் பேய் சம்­ப­வங்­களும் முஸ்லிம் மக்­க­ளுக்கு எதி­ரா­ன­வை­யென காட்­டப்­பட்­டன. நாம் சற்று அக்­க­றை­யுடன் செயற்­பட்­டி­ருக்­கலாம் என ஏற்றுக் கொள்­கின்றேன். இன்று அர­சாங்­கத்­தி­லி­ருக்­கின்ற சிலர் அன்று எமது பக்­கத்­தி­லி­ருந்து கொண்டு சில நட­வ­டிக்­கைகள் எடுப்­ப­தற்கு இட­ம­ளிக்­க­வில்லை. மஹிந்த ராஜ­பக் ஷ 290 பள்­ளி­வா­சல்­களை மீண்டும் திறந்து வைத்தார். பல பள்­ளி­வா­சல்­களை மறு­சீ­ர­மைப்பு செய்தார். கூர­கல பள்­ளி­வாசல் விவ­கா­ரத்தை நிவர்த்தி செய்ய நாம் முயற்­சித்தோம். ஆனால் அவ்­வா­றான சம்­பங்­களில் முஸ்லிம் மக்கள் மன­ரீ­தி­யாக பாதிக்­கப்­பட்­டனர். ஆனால் முஸ்லிம் மக்­களின் உண்­மை­யான பிரச்­சி­னையை தீர்ப்­ப­தற்கு மஹிந்த ராஜ­பக் ஷ மிகுந்த அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­பட்டார். எனினும் தவ­றான பிர­சா­ரங்கள் கார­ண­மாக நிலைமை மாற்­ற­ம­டைந்­தது.\nகேள்வி: தற்­போது புதிய அர­சாங்­கத்தை உரு­வாக்க முயற்­சிக்­கப்­ப­டு­கின்­றது. அதற்­காக பார­ளு­மன்­றத்தை அர­சி­ய­ல­மைப்பு பேர­வை­யாக மாற்ற பிரே­ரணை நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது. இதில் தமிழ் பேசும் மக்­க­ளுக்­கான தீர்வு எவ்­வாறு அமைய வேண்­டு­மென நீங்கள் கரு­து­கி­றீர்கள் \nபதில்: முதலில் பாரா­ளு­மன்­றத்தை அர­சி­ய­ல­மைப்பு பேர­வை­யாக மாற்­றி­யுள்­ள­மையே சட்­ட­வி­ரோ­த­மா­ன­தாகும். தற்­போ­தைய அர­சி­ய­ல­மைப்பு படி அவ்­வாறு செய்ய முடி­யாது. புதிய அர­சி­ய­ல­மைப்­பபை உரு­வாக்­கு­வ­தற்கு 1978 ஆம் ஆண்டு அர­சி­ய­ல­மைப்பில் ஒரு முறைமை காணப்­ப­டு­கின்­றது. அதனைப் பின்­பற்­றா­ம­லேயே தற்­போது நட­வ­டிக்கை எடுக்­கின்­றனர். தற்­போ­தைய அர­சாங்­கத்­திற்கு மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்மை பலமோ இரண்டில் ஒன்று பெரும்­பான்மை பலமோ இல்லை. ஐ.தே.க.வுக்கு 113 ஆச­னங்கள் கூட கிடைக் ­க­வில்லை. எனவே இவர்­க­ளுக்கு புதிய அர­சி­ய­\nல­மைப்பை உரு­வாக்க மக்கள் வாக்களிக்க­வில்லை. அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்கும் முறை­மைக்கு அப்­பாற்­பட்டே இவர்கள் செயற்­ப­டு­கின்­றனர். இதனை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு வெ ளிப்­ப­டுத்­த­வில்லை. இது தவ­றான முன்­னு­தா­ர­ண­மாகும். அர­சியல் தீர்­வினை மக்­க­ளுக்கு வழங்­கு­வ­தென்றால் அது நிலை­யா­ன­தாக இருக்க வேண்டும். ஆனால் இவர்கள் மேற் ­கொள்ளும் முறையில் தீர்வை முன்­வைத்தால் அது நிலை­யா­ன­தாக இருக்­காது. எனவே ஏற்றுக் கொள்­ளப்­பட்ட முறை­மைக்கு அமை­வா­கவே இதனை செயற்­ப­டுத்த வேண்டும்.\nகேள்வி: ஆனால் இனப்­பி­ரச்­சி­னைக்கு நிரந்­தர தீர்­வினை காண்­ப­தற்கு தற்­போது சிறந்த சந்­தர்ப்பம் உரு­வா­கி­யுள்­ளது என்­பதை ஏற்றுக் கொள்­கின்­றீர்­களா \nபதில்: நிச்­ச­ய­மாக ஆம். சிறந்த சந்­தர்ப்பம் தற்­போ­துதான் கிடைத்­துள்­ளது. அதனை செய்து முடிக்க வேண்டும். இதனை தவற விட்டால் அது பெரி­யதொர் அநி­யா­ய­மாகும். நாங்கள் அனை­வரும் அதற்கு ஒத்­து­ழைப்பு வழங்­குவோம். ஆனால் அதனை சரி­யாக செய்ய வேண்டும். உண்­மைக்­கு மாறாக செயற்­பட வேண்டாம். உங்­களை நம்­பி­ய­வர்­க­ளுக்கு பொய் செய்ய வேண்டாம். தமிழ் மக்கள் உங்கள் மீது நம்­பிக்கை வைத்­\nதுள்­ளனர். அதனை உண்­மை­யான முறையில் நிறை­வேற்­றுங்கள். அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்க சரி­யான முறையில் ஏன் செயற்­ப­டாமல் இருக்­கின்­றீர்கள் தமிழ் மக்­களை இன்று ஒரு­சிலர் காட்டிக் கொடுத்­து­விட்­டனர். இவ்­வா­றான சந்­தர்ப்பம் இதற்கு முன்னர் எமக்கு கிடைக்­க­வில்லை. ஆனால் இவர்கள் உண்­மை­யாக செயற்­பட வேண்டும். மக்­களை ஏமாற்ற முயற்­சிக்­கின்\n­றனர். நீண்­ட­கால அர­சி­யல்­தீர்­வினை வழங் கும் எண்ணம் இவர்­க­ளுக்­கில்லை. அத்­துடன் நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை­யி­னையும் இவர்கள் மாற்ற மாட்­டார்கள். அப்­ப­டியே அர­சியல் தீர்­வினை கொடுத்­தாலும் அது உறு­தி­யா­ன­தாக இருக்­காது.\nகேள்வி : நீங்கள் ஏன் கடந்த பாரா­ளு­மன்றத் தேர்­தலில் போட்­டி­யி­ட­வில்லை.\nபதில்:நான் அதனை விரும்­ப­வில்லை. எதிர்­கா­லத்­திலும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக எண்­ண­மில்லை.\nகேள்வி: உங்­க­ளது ஆட்­சியின் இறு­திக்­கா­லத்தில் இந்­தி­யா­வு­டனும், அமெ­ரிக்­கா­வு­டனும் முரண்­பா­டுகள் ஏற்­பட்­டதா\nபதில்:சில முரண்­பா­டுகள் ஏற்­பட்­டன. அது எமது பக்க குறை­பா­டு­க­ளா­கவும் இருக்­கலாம்.\nகேள்வி: 2009 ஆம் ஆண்டு மே மாதம் 19 அம் திகதி பிரபாகரன் உயிருடன் இருந்ததாக கூறப்பட்டுள்ளது. இது தொடர்பில் உங்களுக்கு ஏதாவது தகவல் தெரியுமா\nபதில்: அது தொடர்பில் எனக்கு ஒன்றும் தெரியாது.\nகேள்வி:புலிகள் சரணடைய வருவ தாக சர்வதேச மட்டத்தில் உங்களூடாக யாராவது தகவல் அனுப்ப முயற்சித்தனரா \nபதில்: சில விடயங்கள் அவ்வாறு இடம்பெற்றதாக தகவல்கள் உள்ளன. அவை சிக்கலுக்குரிய கேள்விகளாக இருப்பதனால் நான் பதிலளிப்பதிலிருந்து விலகுகின்றேன்.\nகேள்வி: இலங்கை அரசாங் கம் உள்ளக விசாரணையினை மேற்கொள்ள வுள்ளதாக கூறுகின்றது. இது தொடர்பாக ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட பிரேர ணையில் சர்வதேச நீதிபதிகள் இடம்பெற வேண்டுமென கூறப்பட்டுள்ளது. ஆனால் அரசாங்கம் அதனை மறுத்துள்ளது. உங்களின் பார்வை எவ்வாறு உள்ளது \nபதில்:இதில் எமது அரசியலமைப்புக்குட் பட்டு பாதிக்கப்பட்ட நம்பிக்கை கொள்ளும் வகையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென்பதே எனது கருத்தாகும். எமது அரசியலமைப்பினை மீறி வெ ளிநாட்டு நீதிபதிகள் பங்கெடுப்பது முறைமையல்ல. அது இறைமையினை பாதிக்கும் .ஆனால் விசாரணை முறைமை நம்பிக்கைக்குரியதாக இருக்க வேண்டும். இது உண்மையில் சிக்கலுக்குரிய விடயம்தான். அரசாங்கம் இதில் சரியான தீர்மானம் எடுத்து செயற்பட வேண்டும். பாதிக்கப்பட்ட மக்கள் திருப்பதி அடைவதே இங்கு முக்கியமானதாகும். எமது நீதித்துறையில் வெ ளிநாட்டுத் தரப்பினர் தலையிடுவது சரியல்ல. ஆனால் தொழில்நுட்ப உதவிகளைப் பெறலாம். எமது இறைமை பாதுகாக்கப்பட வேண்டும். இது முழு நாட்டினதும் பிரச்சினையாகும். இதில் சர்வதேசத்தை திருப்திப்படுத்தாமல் பாதிக்கப்பட்ட மக்களை திருப்திபடுத்த வேண்டும்.\nகேள்வி: 2014 ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் திகதி வரை பொது வேட்பாளர் யார் என்பதை நீங்கள் அறிந்திருக்கவில்லையா \nபதில்:எமக்கு வதந்திகள் போன்ற தகவல் கிடைத்தது. ஆனால் நாம் நம்பவில்லை. சிலர் வந்து கூறினர்.\nஅதிர்ச்சியான தகவல்கள் விடுதலைப் புலிகள் செவ்வி இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் பொன்சேகா பசில் ராஜபக்ஷ\nஐந்து பேர் கொண்ட றொஹிங்கியா குடும்பமொன்றை நாட்டுக்கு திருப்பியழைத்திருப்பதாக மியன்மார இம்மாத ஆரம்பத்தில் செய்த அறிவிப்பு றொஹங்கியா அகதிகளினால் எதிர்நோக்கப்படுகின்ற மனிதாபிமான நெருக்கடியின் பாரதூரத்தன்மையை வெளிச்சம்போட்டுக் காட்டியிருக்கிறது.\n2018-04-26 11:56:33 மனச்சாட்சியின் அழைப்பு றொஹிங்கியா\n - பண்ருட்டி இராமச்சந்திரன் விசேட செவ்வி\nஇலங்கை இந்திய ஒப்பந்தம் உள்ளிட்ட முக்கிய விடயங்களில் பணியாற்றியவரும் முழுநேர அரசியலுக்கு விடைகொடுத்துள்ள போதும் அ.தி.மு.க.வில் தற்போதும் செயற்பட்டு வருகின்றவரும் அண்ணாத்துரை, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, கலைஞர் என அனைத்து தலைவர்களுடனும் பணியாற்றிய அனுபவத்தினைக் கொண்டிருப்பவருமான மூத்த அரசியல்வாதியான பண்ருட்டி இராமச்சந்திரன் தமிழகம் மற்றும் இலங்கையில் நிலவும் சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பாக வீரகேசரி இணையத்தளத்திற்கு வழங்கிய விசேட செவ்வி.\n2018-04-22 18:04:10 இலங்கை இந்திய ஒப்பந்தம்\nஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நிச்­சயம் தோல்­வி­ய­டை­வார்.\nஎதிர்­வரும் ஜனா­தி­பதி தேர்­தலில் சுதந்­திரக் கட்­சியின் சார்பில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன போட்­டி­யிட்டால் அவர் நிச்­சயம் தோல்­வி­ய­டை­வார்.\n2018-04-22 12:44:37 ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன பத­விக்­காலம்\nமக்கள் மயப்படுத்தப்பட்ட போராட்டங்கள் அவசியம் - பேராசிரியர் சூரியநாராயன் விசேட செவ்வி (பகுதி - I )\nசென்னைப் பல்கலைக்கழகத்தின் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய கற்கைகள் மையத்தின் நிறுவுனரும் இந்திய பாதுகாப்பு சபையின் முன்னாள் உறுப்பினரும் இலங்கை விவகாரங்கள் தொடர்பாக நீண்ட அனுபவம் கொண்டவருமான ஓய்வுபெற்ற சிரேஷ்ட பேராசிரியர் சூரியநாராயன் வீரகேசரிக்கு வழங்கிய விசேடசெவ்வி.\n2018-04-21 12:45:41 இந்தியா இலங்கை சீனா\nமக்கள் மயப்படுத்தப்பட்ட போராட்டங்கள் அவசியம் - பேராசிரியர் சூரியநாராயன் விசேட செவ்வி (பகுதி - II )\nசென்னைப் பல்கலைக்கழகத்தின் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய கற்கைகள் மையத்தின் நிறுவுனரும் இந்திய பாதுகாப்பு சபையின் முன்னாள் உறுப்பினரும் இலங்கை விவகாரங்கள் தொடர்பாக நீண்ட அனுபவம் கொண்டவருமான ஓய்வுபெற்ற சிரேஷ்ட பேராசிரியர் சூரியநாராயன் வீரகேசரிக்கு வழங்கிய விசேடசெவ்வி.\n2018-04-21 12:42:17 இந்தியா இலங்கை சீனா\nநிலக்கரியை விட அடர்ந்த கருப்பு நிறத்தில் புதிய கிரகம் கண்டு பிடிப்பு\nஎரிந்த நிலையில் சடலம் மீட்பு\nபல கொள்ளைச் சம்பவங்களோடு தொடர்புடைய கொள்ளை கும்பல் கைது\nஇடி தாக்கி இருவர் வைத்தியசாலையில்\nபள்ளிமுனை கடற்கரை மீன் வாடிகளிலிருந்து ஒரு தொகை மீன்கள் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://jmmedia.lk/2017/08/13/%E0%AE%89%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-04-26T13:30:53Z", "digest": "sha1:UQEJL2IRFW5X52F7WIWVV4VVXJE2WL7H", "length": 13212, "nlines": 68, "source_domain": "jmmedia.lk", "title": "உறைபனியில் உயிர் வாழ ஆல்கஹாலை நாடும் தங்க மீன்கள்! – JM MEDIA.LK", "raw_content": "\nகடுகண்ணாவ கற்குகைக்கு தற்காலிகமாக பூட்டு\nஇறப்பர் தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்து தொடர்பில் தொழிற்சாலையின் முகாமையாளர் கைது\nவட கொரியாவுக்கு ரகசிய பயணம் : மைக் பாம்பேயோ\nபௌத்தகுருமாருக்கு வாக்குறுதி வழங்கிய பிரதமர்\nஉறைபனியில் உயிர் வாழ ஆல்கஹாலை நாடும் தங்க மீன்கள்\nதண்ணீர் பனியாக உறைந்த ஏரிகளில் தங்க மீன்கள் உயிர் பிழைத்திருப்பது எப்படி என்னும் ரகசியத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.\nஉயிர் பிழைப்பதற்கான வழியாக, தங்கள் உடலில் உள்ள லேக்டிக் அமிலத்தை அவை எப்படி, ஏன் ஆல்கஹாலாக மாற்றுகின்றன என்பதை விஞ்ஞானிகள் தற்போது புரிந்துகொண்டுள்ளனர்.\nமோட்டார் வாகனங்களை ஓட்டுகிறவர்கள் உடலில் எவ்வளவு ஆல்கஹால் இருக்கலாம் என்று ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு அளவை நிர்ணயித்துள்ளன. பல நாடுகள் நிர்ணயித்திருக்கும் இந்த அளவைக் காட்டிலும் உறைபனியில் உயிர்பிழைக்கும் சில தங்க மீன்களின் உடலில் அதிக அளவில் ஆல்கஹால் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.\nமனித உடலில் ஆல்கஹால் ஏற்படுத்தும் தாக்கம் குறித்த ஆய்வுக்கும் தங்க மீன்கள் குறித்த இந்த ஆராய்ச்சி உதவியாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nதங்க மீன்கள் மற்றும் அவற்றின் கானிலை உறவினமான க்ரூசியன் க்ராப் ஆகியவற்றின் விநோதமான உயிர்பிழைத்திருக்கும் ஆற்றல் பற்றி 1980களில் இருந்தே விஞ்ஞானிகள் அறிந்திருக்கின்றனர்.\nமனிதர்கள் உள்ளிட்ட பெரும்பாலான முதுகெலும்புள்ள விலங்குகள் ஆக்சிஜன் இல்லாவிட்டால் சில நிமிடங்களில் இறந்துவிடும். ஆனால், இந்த மீன்கள் வட ஐரோப்பாவின் பனி உறைந்த ஏரிகளிலும் குளங்களிலும் ஆக்சிஜன் இல்லாமல் சில மாதங்கள் வரை உயிரோடு இருக்கும் ஆற்றல் பெற்றவை.\nஇந்த ஆற்றலுக்குப் பின்னால் உள்ள மூலக்கூறு பொறியமைவை ஆராய்ச்சியாளர்கள் தற்போது கண்டுபிடித்துள்ளனர்.\nகார்போஹைட்ரேட் எனப்படும் மாவுச்சத்தை செல்களின் ஆற்றல் மையமான மைட்டோகான்ட்ரியா நோக்கிச் செலுத்துவதற்கு பெரும்பாலான உயிரினங்களில் ஒரே ஒரு புரோட்டின் தொகுப்பு மட்டுமே உண்டு.\nஆக்சிஜன் இல்லாத நிலையில், உட்கொள்ளப்படும் கார்போஹைட்ரேட்டுகள் லேக்டிக் அமிலங்களாக மாற்றப்படுகின்றன. இவற்றை வெளியேற்ற முடியாத நிலையில் இந்த மீன்கள் ஓரிரு நிமிடங்களில் இறந்துவிடும்.\nஆனால், அதிருஷ்டவசமாக இந்த மீன்கள் மற்றொரு புரோட்டின் தொகுப்பை பெற்றுள்ளன. இந்த இரண்டாம் புரோட்டின் தொகுப்பு, ஆக்சிஜன் இல்லாத நிலையில் செயல்பட்டு லேக்டிக் அமிலத்தை ஆல்கஹாலாக மாற்றுகின்றன. பிறகு இந்த ஆல்கஹால் செதில்கள் வழியாக வெளியேற்றப்படுகின்றன.\nஆக்சிஜன் பற்றாக்குறையால்தான் இந்த இரண்டாம் பாதை செயல்படுத்தப்படுகிறது என்று பிபிசி செய்தியிடம் தெரிவித்தார் லிவர்பூல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் மைக்கேல் பெரன்பிரிங்க்.\nபனிக்கட்டி இந்த மீன்களை காற்றில் இருந்து பிரித்துவிடுகின்றன. எனவே, குளம் உறைபனி நிலைக்கு வரும்போது இந்த மீன்கள் கிடைக்கும் எல்லா ஆக்சிஜனையும் நுகர்ந்தபின், உயிர்பிழைக்க ஆல்கஹாலை நாடுகின்றன.\nகாற்றில்லாத, உறைபனி நிலை எவ்வளவு நீளமாக நீடிக்கிறதோ அவ்வளவு தூரம் இந்த மீன்களில் உள்ள ஆல்கஹால் அளவு அதிகமாக இருக்கும்.\nஅளந்து பார்த்தால் 100 மிலி ரத்தத்தில் 50 மிலிகிராம் அளவுக்கும் மிகுதியாக ஆல்கஹால் உயர்ந்துவிடும். இந்த அளவானது டிரைவரின் உடலில் இருந்தால், ஸ்காட்லாந்திலும், வட ஐரோப்பிய நாடுகளிலும் குடித்துவிட்டு வண்டி ஓட்டுவதாக மதிப்பிடப்படும் அளவு. எனவே இந்த மீன்கள் உண்மையில் “மதுவின் மயக்கத்தில்” இருக்கின்றன என்கிறார் டாக்டர் பெரன்பிரிங்க்.\nஇந்த மீன்கள் உடலில் செதில் வரை ஆல்கஹால் நிரம்பி இருந்தாலும், இந்த ‘மது’ அவற்றைக் கொல்வதில்லை. மாறாக, குளிர்காலம் நீண்டகாலம் நீடித்தால் அவற்றின் கல்லீரலில் சேர்த்துவைத்த உணவு மொத்தமும் தீர்ந்துபோய் அவை இறந்துவிடுகின்றன.\nபரிணாம வளர்ச்சியில் தகவமைதல் குறித்து கற்றுக்கொள்ளவேண்டிய மிக முக்கியமான பாடத்தை இது வழங்குகிறது. இத் தகவமைதல் முறை இரண்டாவது ஜீன் தொகுப்பை உருவாக்குகிறது. உயிரினங்கள் தங்கள் முதன்மையான பணிகளை மேற்கொள்ளவும், பயனுள்ள பணிகளைச் செய்யும்பட்சத்தில் பின்னணியில் வேறொரு தொகுப்பை பராமரிக்கவும் இத் தகவமைதல் முறை உதவுகிறது.\nஎத்தனால் உற்பத்தியின் மூலமாக இத்தகைய கடினமான சுற்றுச்சூழலைப் பயன்படுத்திக் கொண்டு உயிர்பிழைக்கும் ஒரே மீன் இனமாக இருக்கிறது க்ரூசியன் க்ராப். இதன் மூலம், நல்ல ஆக்சிஜன் இருக்கும் நீரில் இவை தொடர்பு கொண்டு வாழும் மீன் இனங்களின் போட்டியையும், அவற்றால் வேட்டையாடப்படும் வாய்ப்பையும் இவை தவிர்க்கின்றன என்கிறார் நார்வேயின் ஓஸ்லோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் கேத்ரைன் எலிசபெத் ஃபேஜர்ன்ஸ்.\nஇந்த க்ரூசியன் க்ராப்பின் மரபியல் உறவுக்கார இனமான தங்க மீன்கள், மனிதர்கள் வளர்க்கும் மீன் இனங்களிலேயே அழுத்தங்களில் இருந்து எளிதாக மீண்டு வரும் இனமாக இருப்பது ஆச்சரியம் இல்லை என்கிறார் இவர்.\n← ரோஹிஞ்சா அகதிகளை தனது பொறுப்பில் ஏற்றுக் கொண்டது ஐ.நா. அமைப்பு\n”நாடாளுமன்ற உறுப்பினர்களே தேர்தலை ஒத்திவைக்க சட்டம் உருவாக்குவது துரதிஷ்டம்” →\nமெய்சிலிர்க்க வைக்கும் முப்பரிமாண கூகுள் எர்த் காட்சிகள்\nதானியங்கி கார் தொழில்நுட்பத்தை உருவாக்கும் பணியில் ஆப்பிள் நிறுவனம்\nவலியை உணராமல் இருப்பது வலிமையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.60secondsnow.com/ta/tamil-nadu/aruppukottai-adsp-mathi-says-that-nirmala-devi-will-be-arres-894658.html", "date_download": "2018-04-26T12:56:04Z", "digest": "sha1:Q3IWLPQIVIQ7JOILT2WWQ2ICFYODTQ5X", "length": 5781, "nlines": 50, "source_domain": "www.60secondsnow.com", "title": "புரோக்கர் பேராசிரியை நிர்மலா தேவி விரைவில் கைது! | 60SecondsNow", "raw_content": "\nபுரோக்கர் பேராசிரியை நிர்மலா தேவி விரைவில் கைது\nமாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்த பேராசிரியை நிர்மலா தேவி விரைவில் கைது செய்யப்படுவார் என்று அருப்புக்கோட்டை ஏடிஎஸ்பி மதி தெரிவித்துள்ளார். விசாரணை நடத்துவதற்காக ஏடிஎஸ்பி மதி தலைமையிலான போலீஸார் அவரது வீட்டுக்கு சென்றனர். ஆனால் அவரது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து போலீஸார் அங்கேயே 2 மணி நேரம் காத்திருந்து திரும்பி விட்டனர்.\nமேலும் படிக்க : OneIndia Tamil\n'கோலிசோடா-2' 2வது சிங்கிள் டிராக் ரிலீஸ்\nவிஜய் மில்டன் இயக்கத்தில் அடுத்த மாதம் வெளியாகவுள்ள ‘கோலி சோடா 2'படம் முதல் பாகத்தில் நடித்தவர் இல்லாமல் படம் முழுவதும் புதுமுகங்களை வைத்து இப்படம் எடுத்துள்ளார். இந்நிலையில், அச்சு ராஜாமணி இசையமைத்துள்ள இப்படத்தின் 'கிளம்பு' என்ற 2வது சிங்கிள் டிராக் படலை இன்று நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.\nடான்சிலை அடியோடு விரட்டும் அற்புத சூப்... எப்படி செய்வது\nலைஃப் ஸ்டைல் - 17 min ago\nதொண்டை அழற்ச்சி (டான்சிலிட்டிஸ்) நோய் என்பது நமது அடி நாக்கில் அதாவது தொண்டையின் அருகே உள்ள இரண்டு சிறிய திசு பகுதியானது வைரஸ் தொற்று அல்லது பாக்டீரியா தொற்றினால் பாதிக்கப்படுவதே ஆகும். நீங்கள் தொண்டை அழற்ச்சியால் பாதிக்கப்பட்டிருந்தால் அதற்கு காரணம் ஃக்ரூப் எ ஸ்ட்ரெப்டோகாகஸ் பாக்டீரியா தொற்றாக இருக்கலாம் இல்லையெனில் வைரஸ் தொற்றாக இருக்கலாம்.\nமேலும் படிக்க : Tamil Boldsky\nஇடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்\nசென்னையில் கடந்த நான்கு நாட்களாக நடைபெற்று வந்த இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனுடன் இடைநிலை ஆசிரியர் சங்கத்தினர் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.. ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அமைச்சர் உறுதி அளித்ததை அடுத்து தங்கள் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.jeyamohan.in/date/2017/01/08", "date_download": "2018-04-26T13:24:05Z", "digest": "sha1:7Z3T5VXQGXFSW3DDUSPSYJMAK6MNQS7T", "length": 12016, "nlines": 105, "source_domain": "www.jeyamohan.in", "title": "2017 January 08", "raw_content": "\nஅராத்து விழா உரை- வீடியோ\nஅன்புள்ள ஜெமோ விஷ்ணுபுர விருது விழா , வெண்முரசு விவாதம் போன்ற உங்கள் வாசகர்கள் கூடுகின்ற கூட்டங்களில் உங்கள் உரை எவ்வளவு சிறப்பாக இருக்குமோ அதே போன்ற சிறப்பான உரை ஒன்றை அராத்துவின் 6 நூல்கள் வெளியீட்டு விழாவில் வழங்கினீர்கள். நன்றி… சற்றே எதிர் கருத்து கொண்ட கூட்டத்தில் உரையாற்றுவதே ஒரு சவாலான பணி.. அதுவும் எதிர்கருத்து கூறுவது என்பது மிக மிக சவாலானது.. ஆயினும் மிக ஆழமான அற்புதமாக உரை வழங்கி கூட்டத்தை உங்கள் நாவன்மையால் …\nமுப்பதாண்டுகளுக்கும் மேலாக மகஇக போன்ற அமைப்புக்களிலிருந்து விலகியவர்கள் வந்து கண்ணீருடன் புலம்புவதைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன். எல்லாக் குறுங்குழுக்களுக்கும் இருவகைப் பண்புகள் இருக்கும். ஒன்று அது சிறியது என்பதனாலேயே எந்த விதமான நீக்குபோக்கும் இல்லாத மட்டையடித் தீவிரம் ஒன்று இருக்கும். ஆகவேதான் இளைஞர்கள் அது ‘நேர்மையான’ அமைப்பு என நம்பத்தலைப்படுகிறார்கள். அவர்களுக்கு நேர்மையான அமைப்பாகத் தோற்றமளிப்பது தவிர வேறு பணிகளும் இல்லை என்பதனால் வண்டை வண்டையாக வசைபாடுவதை முழுநேரமும் செய்துவருவார்கள். அது ஒருவகையான விறுவிறுப்பை சின்னப்பயல்களுக்கு அளிக்கிறது …\nதாளில்லா பொருளியல் குறித்து -கார்த்திக்\nஅன்பு ஜெ , தாளில்லா பொருளியல் பாலா தாளில்லா பொருளியல் கடிதங்கள் -அரங்கா தாளில்லா பொருளாதார குறித்து வந்த கடிதங்களை பார்த்தேன்.எந்த மாற்றதையும் அது அளிக்கும் வசதி மற்றும் அதனால் வரப்போகும் நன்மைகளை மட்டுமே வைத்து எடைபோட்டுவிடலாகாது . மோடி அரசு அறிமுகப்படுத்தியிருக்கும் பீம் செயலி , பெயரிலிருந்து அது எப்படி செயல்படும் என்பது வ்ரை எல்லாம் சரிதான் . ஆனால் இது குறித்த முக்கிய இரண்டு விஷயங்களையும் நாம் கணக்கில் கொண்டே அது …\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 81\n[ 35 ] அர்ஜுனன் கைலையின் மண்ணில் எடுத்த அந்தக் கூழாங்கல்லை நோக்கிக்கொண்டிருந்தான். அதன் பொருளென்ன என்று அவனுக்குப் புரியவில்லை. ஆனால் அவர்கள் அதை கேலிக்கென சொல்லவில்லை என்பதை அவர்களின் முகக்குறி காட்டியது. கொம்பன் அவனிடம் “நீங்கள் அடுகலை கற்றவரா” என்றான். “உங்கள் அடுமுறை நானறியாதது” என்றான் அர்ஜுனன். “எதுவானாலும் அடுமுறை நன்றே. அட்ட உணவு அமுது” என்றான் கொம்பன். அர்ஜுனன் “அடாத உணவு” என்றான். “உங்கள் அடுமுறை நானறியாதது” என்றான் அர்ஜுனன். “எதுவானாலும் அடுமுறை நன்றே. அட்ட உணவு அமுது” என்றான் கொம்பன். அர்ஜுனன் “அடாத உணவு” என்றான். அவன் சற்று எண்ணிநோக்கி “அதுவும் அமுதே” என்றான். எண்ணியிரா கணத்தில் …\nTags: அர்ஜுனன், எரியன், காலர், காளன், காளி, குமரன், கொம்பன், சடையன், சிவப்பர், சிவை, பாசுபதம், பேயன்\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 43\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 49\nஈரோடு இளம்வாசகர் சந்திப்பு -2017\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://pathavi.com/?page=5", "date_download": "2018-04-26T13:04:50Z", "digest": "sha1:NKGI3SX2QEEZ3GJRCCNJ37ENL7CBP627", "length": 11658, "nlines": 267, "source_domain": "pathavi.com", "title": "Best tamil websites & blogs •et; Page 5 •et; Pathavi", "raw_content": "\nவிமர்சனம் ‘வேதாளம்’- இப்படி சந்தி சிரிக்க விடலாமா\n2016இல் கதாநாயகன் ஆகும் இசையமைப்பாளர் | TAMIL TWEET\nரஜினியை கிண்டல் செய்யும் பவர் ஸ்டார் சீனிவாசன்\nஅரண்மனை-2 திரைப்படம் பொங்கல் ரிலீஸில் இருந்து விலகியது.\nபசங்க2 ஐ வச்சுகிட்டு நாங்க பாடம் எடுக்கல\nஅஜீத் சாருக்கு தெரிய வேணாம்...\nடைட்டிலைத்தான் காப்பி அடிக்கிறீங்க... லொக்கேசனையுமா..\nமீத்தேன் தடை விதித்த தமிழக அரசுக்கு 'கத்துக்குட்டி'யின் நன்றி\n என்ன இது தமிழ் நடிகைகள் இப்படி பேசினாங்களா\nபாலியல் வன்முறை என்றால் என்ன\nசென்னை வெள்ளத்தால் கவலையில் இருக்கும் நடிகை கத்ரீனா | imagphoto.blogspot.in\nநடிகர் சங்கத் தேர்தல் வாக்குப்பதிவு புகைப்படங்கள் – 11\n10 எண்றதுக்குள்ள – விமர்சனம்\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது\nகலைஞர் நினைப்பது ஒன்று ஜெயலலிதா செய்வது மற்றொன்று\nவலங்கைமான் நண்பர்கள் அணி சார்பில் வெள்ள நிவாரணப்பணி\nநடிகர் சூர்யா தத்தெடுக்கும் 3 கிராமங்கள்l \nமய்யம் – சினிமா விமர்சனம்\nவானவில் : பாகுபலி- அனுஷ்கா- தோனி\nவானவில் : புலி- நீயா நானா-பசங்க-2-ரேஷ்மி மேனன்\n‘10 எண்றதுக்குள்ள’ தியேட்டர்கள் குறைப்பு… ‘நானும் ரௌடிதான்’ தியேட்டர்கள் அதிகரிப்பு… ‘நானும் ரௌடிதான்’ தியேட்டர்கள் அதிகரிப்பு…\nமனம் கவரும் மலேஷியா பெட்ரோனாஸ் ட்வின் டவர்ஸும் நேஷனல், ஜேமெக் மசூதிகளும்\nஉங்கள் பேஸ்புக்​கை அரசாங்கம் உளவு பார்க்கின்றதா\nதென் தமிழகத்தில் 24 மணிநேரத்தில் மழை பெய்யும் - வானிலை அறிவிப்பு | imagphoto.blogspot.in\nநயன்தாரா கேட்கும் சம்பளத்தை கொடுக்க பட அதிபர்கள் தயாராக உள்ளனர்...டைரக்டர் சாஜன் | imagphoto.blogspot.in\nஆடைகளின்றி காட்சி கொடுக்கும் நாயகிகளால் பரபரப்பு\n'ரெஸ்க்யூ சென்னை குரூப்' களத்தில் குதித்த நடிக, நடிகையர் \nபடப்பிடிப்பு நடத்தியபோது இறந்த இயக்குனர்\nPathavi தமிழின் முதன்மையான வலைப்பதிவு திரட்டி ஆகும். Pathavi தமிழ் வலைப்பதிவுகளுக்கு பலச் சேவைகளை வழங்கி வருகிறது. வலைப்பதிவுகளை திரட்டுதல், மறுமொழிகளை திரட்டுதல், குறிச்சொற்களை திரட்டுதல், வாசகர் பரிந்துரைகள், தமிழின் முன்னணி வலைப்பதிவுகள் என பலச் சேவைகளை Pathavi வழங்கி வருகிறது. வேறு எந்த இந்திய மொழிகளிலும் இல்லாத அளவுக்கு தொழில்நுட்ப சேவைகளை Pathavi தமிழ் வலைப்பதிவுகளுக்கு அளித்து வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.manithan.com/entertainment/04/153301?ref=more-highlights-lankasrinews", "date_download": "2018-04-26T13:40:07Z", "digest": "sha1:VHOJF54UZ2PONEPUKTXBAGED32T5RITV", "length": 10726, "nlines": 154, "source_domain": "www.manithan.com", "title": "ஜூலியுடன் கலா மாஸ்டர் போட்ட குத்தாட்டம்!! அரங்கமே அதிர்ந்து போன தருணம்.. - Manithan", "raw_content": "\nவெட்டப்பட்ட மனைவியின் தலையுடன் தெருவில் நடந்து சென்ற கணவன்: அதிர வைக்கும் சம்பவம்\nஇளவரசர் ஹரியின் திருமணத்தில் மணப்பெண் தோழியாகும் உலக அழகி\nஜெயலலிதா வழக்கில் திடீர் திருப்பம்\nஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுலா செல்ல வேண்டுமா விரைவில் வரவிருக்கும் புதிய சட்டம்\nஅஜித்தின் மனைவி ஷாலினியின் பகையாளி யார் தெரியுமா\n பல ஆண்டுகளுக்கு பின் பாத்திமா பாபு விளக்கம்\nஇத்தனை வயதில் பிரபல நடிகை கௌசல்யாவுக்கு கல்யாணமாம்\nசர்வதேச இளம் இளம் விஞ்ஞானிகளுக்கான போட்டியில் இலங்கை 3 தங்கப்பதக்கம்\nமரணத்தின் பிடியிலிருந்து அஜீத்தை மீட்டெடுத்த ஷாலினி கசந்து போன வாழ்வில் உயிர்த்தெழுந்த காதல்\nசிவகார்த்திகேயனால் தொகுப்பாளினி பாவனா அனுபவித்த கொடுமை\nபிள்ளைகள், பெற்றோர்களை கொடூரமாக கொலை செய்த பெண் காரணத்தை கேட்டால் அதிர்ந்து போயிடுவிங்க\nஇந்த 3 ராசியில உங்க ராசி இருக்குதா.. இந்த ஆண்டில் கோடீஸ்வர யோகம் இதற்குத் தானாம்\nமனைவியை நண்பர்களுடன் உறவு வைக்க கட்டாயப்படுத்திய கணவன் - இறுதியில் நடந்ததை பாருங்கள்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\n31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்\nயாழ். சரசாலை, கனடா Toronto\nஜூலியுடன் கலா மாஸ்டர் போட்ட குத்தாட்டம் அரங்கமே அதிர்ந்து போன தருணம்..\nபிக்பாஸ் ஜூலி தற்போது குழந்தைகள் நடனம் ஆடும் ’ஓடி விளையாடு பாப்பா' என்ற ரியாலிட்டி ஷோ வைத் தொகுத்து வழங்கி வருகிறார்.\nஇந்நிலையில், அந்த நிகழ்ச்சியின் நடுவராக இருக்கும் கலா மாஸ்டர் அரங்கத்தில் அனைவரின் முன்பு ’டிங் டிங் டிகான’ பாட்டிற்கு குத்தாட்டம் போட, ஜூலியும் உடன் சேர்ந்து ஒரு மாஸ் -ஆன குத்தாட்டம் ஒன்றை போட்டுள்ளார்.\nஅந்த வீடியோவானது, தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.\nஉடல் எடையை மிக வேகமாக குறைக்க இந்த ஒரு பொருள் போதும்\nசோகத்தில் இருந்த நடிகர் வடிவேலுவிற்கு அடுத்தடுத்து அடித்த அதிஷ்டம்\nமனைவியை நண்பர்களுடன் உறவு வைக்க கட்டாயப்படுத்திய கணவன் - இறுதியில் நடந்ததை பாருங்கள்\nஐ.தே.க. செயற்குழு கூட்டத்தில் சிக்கல்\nசட்ட விரோதமாக மண் அகழும் இடங்களைப் பார்வையிட்டார் மன்னார் நகர முதல்வர்\nமத்திய வங்கியின் அறிக்கை நிதியமைச்சரிடம் கையளிப்பு\nதொழிலாளர் தினத்தை மே முதலாம் திகதி கொண்டாடவுள்ளது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு\nபள்ளிமுனை கடற்கரையில் உள்ள மீன் வாடிகளில் இருந்து கைப்பற்றப்பட்ட ஒரு தொகை மீன்கள்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா் விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthinappalakai.net/2017/05/23", "date_download": "2018-04-26T13:16:41Z", "digest": "sha1:FWZENSZ33KD7H7PR2DRJLQHIK5HWRXMS", "length": 9560, "nlines": 106, "source_domain": "www.puthinappalakai.net", "title": "23 | May | 2017 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nஅவுஸ்ரேலியப் பயணத்தில் இருந்து மங்கள சமரவீர விலகல்\nசிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன் அவுஸ்ரேலியாவுக்கு மேற்கொள்ளவிருந்த பயணத்தில் இருந்து அமைச்சர் மங்கள சமரவீர விலக்கப்பட்டுள்ளார்.\nவிரிவு May 23, 2017 | 5:38 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nதிலக் மாரப்பனவினால் சிறிலங்கா அரசுக்கு மீண்டும் நெருக்கடி\nசிறிலங்கா அமைச்சரவையில் மீண்டும் திலக் மாரப்பனவை சேர்த்துக் கொண்டமை குறித்து சிவில் சமூக மற்றும் அரசியல் வட்டாரங்களில் கடும் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.\nவிரிவு May 23, 2017 | 3:59 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nஅம்பாந்தோட்டை மீது கவனத்தைக் குவித்த அமெரிக்க உயர் அதிகாரி\nசிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்கா இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான பதில் உதவி இராஜாங்கச் செயலர் வில்லியம் பில் ரொட், நேற்று அம்பாந்தோட்டை துறைமுகத்தைப் பார்வையிட்டுள்ளார்.\nவிரிவு May 23, 2017 | 3:31 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nசிறிலங்கா அதிபர் நாடு திரும்பியதும் புதிய பிரதி அமைச்சர்கள் நியமனம்\nஇன்று அவுஸ்ரேலியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பியதும், புதிய பிரதி அமைச்சர்கள், மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவிரிவு May 23, 2017 | 3:05 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nபெலாரஸ் நாட்டில் இருந்து போர்த்தளபாடங்களை வாங்குவதில் சிறிலங்கா ஆர்வம்\nபெலாரஸ் நாட்டில் இருந்து போர்த்தளபாடங்களைக் கொள்வனவு செய்வதில் சிறிலங்கா இராணுவம் ஆர்வம் கொண்டுள்ளதாக, பெல்டா என்ற பெலாரஸ் நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.\nவிரிவு May 23, 2017 | 2:53 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nபிரித்தானியாவில் குண்டுவெடிப்பு 20 பேர் பலி – 50 பேர் காயம்\nபிரித்தானியாவின் மான்செஸ்டர் நகரில் உள்ள உள்ளக அரங்கு ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் குறைந்தது 20 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சம்பவத்தில் 50இற்கும் அதிகமானோர் படுகாயமடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.\nவிரிவு May 23, 2017 | 2:15 // பிரித்தானியாச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் இரா.சம்பந்தன் – ‘சேர் பொன். இராமநாதனின் மறுஉருவம்’\t0 Comments\nகட்டுரைகள் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு யார் காரணம்\nகட்டுரைகள் சிறிலங்கா: மகிந்தவுக்காக திறக்கப்படும் கதவுகள்\t0 Comments\nகட்டுரைகள் ஐ.நாவின் மனிதஉரிமைச் செயற்பாடுகளைப் பலவீனப்படுத்தும் ரஷ்யா, சீனா\t0 Comments\nகட்டுரைகள் சீனாவின் இறுக்கமான பிடியில் சிறிலங்காவின் அமைதியான துறைமுகம்\t1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுக்கு எதிரான வியூகத்தில் சிறிலங்காவின் பௌத்த பிக்குகளையும் இணைக்கிறது இந்தியா\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்திய மாக்கடலில் அதிகரிக்கும் சீனாவின் செல்வாக்கும் – இந்தியாவின் முத்தரப்பு கடற்பாதுகாப்பு ஒப்பந்தமும்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t0 Comments\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t2 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vakeesam.com/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86.html", "date_download": "2018-04-26T13:28:50Z", "digest": "sha1:OGPIKAP5KLB327EZNSVCFB3ZJ3GJMUFR", "length": 6528, "nlines": 75, "source_domain": "www.vakeesam.com", "title": "மரம் முறிந்து விழுந்து ஆறு வீடுகள் சேதம் – 40 பேர் பாதிப்பு – Vakeesam", "raw_content": "\nஹட்டனில் நில அதிர்வு – 05 வீடுகள் சேதம்\nதந்தை செல்வா நினைவுதினம் அனுஷ்டிப்பு\nஜ.தே.க முக்கிய பதவிகளில் மாற்றம் – பொதுச் செயலாளராக அகில விராஜ் காரியவசம்\n203 பட்டதாரிகள் நேர்முகத் தேர்விற்குத் தோற்றவில்லை \nயாழ் போதனா வைத்தியசாலையில் கழிவு வாய்க்கால்மேல் கன்ரீன் – மக்கள் விசனம்\nமரம் முறிந்து விழுந்து ஆறு வீடுகள் சேதம் – 40 பேர் பாதிப்பு\nin உள்ளூர் செய்திகள், செய்திகள் June 9, 2016\nநாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெட்டபுலா கடியன்லென தோட்டத்தில் பழமைவாய்ந்த மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் ஆறு வீடுகள் சேதமாகியுள்ளது. இதில் மூன்று வீடுகள் முற்றாகவும், மேலும் மூன்று வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக தோட்ட நிர்வாகம் தெரிவிக்கின்றது.\n08.06.2106 அன்று மாலை இடம்பெற்ற இந்த பாரிய சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களுக்கு உயிர் சேதம் எதுவும் இடம்பெறவில்லை என தெரிவிக்கும் தோட்ட நிர்வாகம் வீடுகளில் உள்ள பொருட்கள் முற்றாக சேதமடைந்திருப்பதாக தெரிவிக்கின்றனர்.\nஅத்தோடு பாதிக்கப்பட்ட ஆறு குடும்பங்களை சேர்ந்த 40 பேர் தற்காலிகமாக தோட்ட கலாசார மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான உதவிகளை தோட்ட நிர்வாகம் செய்து வருகின்றது.\nமரம் முறிந்து விழுந்ததன் காரணமாக இப்பகுதிக்கான மின்சார துண்டிப்பு ஏற்பட்டுள்ளதோடு திருத்த பணிகளை நாவலப்பிட்டி மின்சார சபையினர் மேற்கொண்டு வருகின்றனர்.\nபழமைவாய்ந்த மேற்படி மரத்தை அப்புறபடுத்தும் நடவடிக்கையில் தோட்ட நிர்வாகமும், பிரதேசவாசிகளும் ஈடுபட்டுள்ளனர்.\nஹட்டனில் நில அதிர்வு – 05 வீடுகள் சேதம்\nதந்தை செல்வா நினைவுதினம் அனுஷ்டிப்பு\nஜ.தே.க முக்கிய பதவிகளில் மாற்றம் – பொதுச் செயலாளராக அகில விராஜ் காரியவசம்\nஹட்டனில் நில அதிர்வு – 05 வீடுகள் சேதம்\nதந்தை செல்வா நினைவுதினம் அனுஷ்டிப்பு\nஜ.தே.க முக்கிய பதவிகளில் மாற்றம் – பொதுச் செயலாளராக அகில விராஜ் காரியவசம்\n203 பட்டதாரிகள் நேர்முகத் தேர்விற்குத் தோற்றவில்லை \nயாழ் போதனா வைத்தியசாலையில் கழிவு வாய்க்கால்மேல் கன்ரீன் – மக்கள் விசனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/85464-a-funny-article-about-music-director-mrx.html", "date_download": "2018-04-26T13:10:26Z", "digest": "sha1:6ZRK264IWJZRA7QECNEINNOW4GXXVVWX", "length": 26438, "nlines": 385, "source_domain": "cinema.vikatan.com", "title": "மாட்டினார் மிஸ்டர் எக்ஸ்! - 'எனை நோக்கி பாயும் தோட்டா' இசையமைப்பாளர் இவர்தான்! | A funny article about music director Mr.X", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\n - 'எனை நோக்கி பாயும் தோட்டா' இசையமைப்பாளர் இவர்தான்\nகௌதம் மேனன், தனுஷ் காம்போவில் வரவிருக்கும் படம் 'எனை நோக்கி பாயும் தோட்டா'. இந்த வருடத்திற்கான மெகா தேடல் இந்தப் படத்தின் மியூஸிக் டைரக்டர் யார் என்பதுதான். அந்தப் படத்தின் இரண்டு பாடல்கள் வெளியானதைத் தொடர்ந்து அதற்கான தேடலும் அதிகமாகிவிட்டது. யார் அந்த மிஸ்டர் எக்ஸ் என்பதுதான். அந்தப் படத்தின் இரண்டு பாடல்கள் வெளியானதைத் தொடர்ந்து அதற்கான தேடலும் அதிகமாகிவிட்டது. யார் அந்த மிஸ்டர் எக்ஸ் வெற்றிலையில் மை போட்டு பார்ப்பதில் ஆரம்பித்து சோஷியல் மீடியாவில் அலசி ஆராய்ந்து பார்ப்பது வரை எல்லாத்தையும் செய்து முடித்துவிட்டு ஒரு வழியாகக் கண்டுபிடிச்சுட்டேன். அது எந்தளவுக்கு உண்மைங்கிறது உங்க கணிப்புக்கு விட்டுடுறேன். ஸ்க்ரோல் பண்ணி நடுவில, கடைசியில பார்க்கிறதை விட்டுட்டு முழுசா படிங்க பாஸ். அப்போதான் உங்களுக்கும் ஒரு க்ளாரிட்டி கிடைக்கும்.\nஒருநாளில் 24 மணி நேரத்தில் 3 மணி நேரம் இந்தப் படத்தின் மியூஸிக் டைரக்டர் யார் என்று தேடுவதையே வேலையாக வைத்திருந்தேன். 'இளையராஜா' இசையமைத்த படப் பாடல்கள் முதல் 'இமான்' இசையமைத்த படப் பாடல்கள் வரை கேட்டுக்கொண்டிருந்த நேரத்தில் சிக்கினார் அந்த வெரிஃபைடு பேஜ் ஓனர் 'லியோன் ஜேம்ஸ்'. யார் இவர் என்ற ஆர்வத்தில் இவர் பேஜை டாப் டு பாட்டம் அலசினால், சில பிரபலங்களுடன் செல்ஃபி, கோ-2, காஞ்சனா போன்ற படத்திற்கு இசையமைப்பாளர், சில பல இண்டிபெண்டென்ட் ஆல்பங்களும் சிக்கின. தேடலுக்கான ஆர்வம் அதிகரிக்க... இவர் போட்ட ட்யூன்களைக் கேட்டேன். அதற்கும் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் ஒரு சில பாடல்களும் ஒரே மாதிரியாக இருந்தன.\nஉடனே 'யூ டியூப்' பக்கம் போய் 'லியான் ஜேம்ஸ்' வீடியோக்களைத் தேடினேன். அப்போதுதான் தெரியவந்தது. கிருஷ்ணா நடித்த 'வீரா' படத்தின் மியூஸிக் டைரக்டரரும் இவர்தான் என்று. அந்தப் படப் பாடல்களையும் ரிபீட் மோடில் போட்டுக் கேட்டேன். அச்சு அசல் எ.நோ.பா.தோ-வின் படப் பாடல்களை கண் முன் கொண்டுவந்து நிறுத்தியது. இவர் இந்தப் படத்தின் மியூஸிக் டைரக்டராக இருக்க வாய்ப்பே இல்லை என்று யோசிப்பதை விட்டுவிட்டு... இவர் ஏன் இந்தப் படத்தின் மியூஸிக் டைரக்டராக இருக்கக் கூடாது என்பதை யோசிச்சுப் பாருங்க... இன்னும் டவுட் இருந்தா புரியற மாதிரி நறுக்குன்னு நாலு பாயின்ட்ஸ் சொல்றேன் வாங்க\nபாயின்ட் நம்பர் 1 - 'லியோன் ஜேம்ஸ்' பெயரை நாலு முறை சொல்லிப் பாருங்க... எவ்வளவு ஸ்டைலிஷா இருக்கு அப்படியே கண்ணை மூடி கௌதம் மேனனை நிறுத்திப் பாருங்க... ரெண்டுக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கிற மாதிரியே இருக்குதா\nபாயின்ட் நம்பர் 2 - 'மறுவார்த்தை பேசாதே' பாட்டை பாடியவர் 'சித் ஶ்ரீராம்'... இது எல்லோருக்குமே தெரிஞ்ச விஷயம். 'சித் ஶ்ரீராம்', 'லியோன் ஜேம்ஸ்' ரெண்டு பேருமே க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ். இப்ப ஓரளவு ஐடியா வருதா பாஸ்\nபாயின்ட் நம்பர் 3 - எல்லா மியூஸிக் டைரக்டர்களுக்கும் சில சிமிலாரிட்டிஸ் இருக்கும்... அதே போல் இவரது படப் பாடல்களுக்கும் சில ஒற்றுமைகள் இருக்குது மக்களே. அவர் சொல்லாட்டியும் அவரோட மியூஸிக் காட்டிக் கொடுத்துடும்.\nபாயின்ட் நம்பர் 4 - சித் ஶ்ரீராமின் பாடல்கள் லிஸ்ட்டை எடுத்துப் பாருங்க... 'கவலை வேண்டாம்' படத்தில் 'லியோன் ஜேம்ஸ்' கம்போஸ் செய்து இவர் பாடிய பாடல் மேலேயும், அதே 'வீரா' படத்தில் 'வெரட்டாமல் வெரட்டுறியே' பாடல் கீழேயும், நடுவில் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தில் 'மறுவார்த்தை' பாடல் மிஸ்டர் எக்ஸ்னு இருக்கு பாஸ். அதையும் நோட் பண்ணிட்டேன். நீங்களும் போய் நோக்குங்க.\nஎவ்வளவு சைலன்டா வேலை பார்க்கிறாங்க யார்னு தெரியாமலேயே பாஸ் இன்னுமா உங்களுக்கு நம்பிக்கை இல்லை... கொஞ்ச நாள்ல வெளியே சொல்லுவாங்க. அப்போ தெரியும் என்னோட அருமை பாஸ் இன்னுமா உங்களுக்கு நம்பிக்கை இல்லை... கொஞ்ச நாள்ல வெளியே சொல்லுவாங்க. அப்போ தெரியும் என்னோட அருமை தப்பாக் கூட இருக்கலாம். அதுக்காக திட்டக் கூடாது தப்பாக் கூட இருக்கலாம். அதுக்காக திட்டக் கூடாது இருந்தாலும் இந்த விஷயங்களையெல்லாம் ஒரு நோட்டம் விட்டுப் பாருங்க. எனக்கு ஏற்பட்ட டவுட் உங்களுக்கும் வந்தா கமென்ட் பண்ணுங்க\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\nமிஸ்டர் x யாருன்னு தெரியல... இந்தப் படங்களுக்கெல்லாம் மியூஸிக் யாருன்னு தெரியுமா\nஎல்லோரும் 'மிஸ்டர் X ' ங்கிற மியூஸிக் டைரக்டர் யாருன்னு ஆராய்ஞ்சுக்கிட்டு இருக்காங்க. நாம ஏற்கெனவே வந்த படங்களுக்குலாம் யார் மியூஸிக் டைரக்டர்னு பார்க்கலாமா... A quiz about the tamil music composers\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா\n'காபி'ரைட்ஸ் முதல் 'டாஸ்மாக்' ரைட்ஸ் வரை - இது காப்பிரைட்ஸ் கலாட்டா\n' - சிலிர்க்கும் இசையமைப்பாளர் #VikatanExclusive\nபம்பாய் நாயகனாக, அரவிந்த்சாமிக்கு முன் மணிரத்னத்தின் சாய்ஸ் யார் தெரியுமா\nமிஸ்டர் x யாருன்னு தெரியல... இந்தப் படங்களுக்கெல்லாம் மியூஸிக் யாருன்னு தெரியுமா\nஓகே கண்மணி... காற்று வெளியிடை... ரெண்டு டிரெய்லருக்கும் இந்த 4 ஒற்றுமை கவனிச்சீங்களா\nஎனை நோக்கி பாயும் தோட்டா,தனுஷ்,மிஸ்டர். எக்ஸ்,கௌதம் மேனன்,மியூசிக் டைரக்டர்,Dhanush,Enai Nokki Paayum Thotta,Gautham Menon,Mr. X,Music Director\n``சிவகார்த்திகேயன் பங்கமா கலாய்ப்பார்... மா.கா.பா எவ்வளவு கலாய்ச்சாலும் வாங்கிப்பார்..’’ - அத்தியாயம் 13\n\"25 சூப்பர் ஹீரோக்கள்... ஒரு சூப்பர் வில்லன் தேனோஸ்\n``கார்த்திக்... என்னை கல்யாணம் பண்ணிக்குவீங்களானு கேட்கணும்போல இருக்கு\" - விஜி சந்திரசேகர்\n\" 'சுந்தரபாண்டியன் 2' தயாரிக்கிறேன்; விஜய்சேதுபதி கேரக்டர்ல நடிக்கிறேன்\n\"ஆமாங்க... வருத்தப்படாத வாலிபர் சங்கம் நல்ல படம்தான்’’ - ‘விகடன் பிரஸ் மீட்’ சிவகார்த்திகேயன்\n\"வைகோ, சீமான் மோதல் வேதனை தருகிறது” - கலங்கும் திருமா\nமிஸ்டர் கழுகு: பி.ஜே.பி மீது ரஜினி வருத்தம்\nஆற்றை சாகடிக்கும் மணல் மாஃபியாக்கள்\n\"வைகோ, சீமான் மோதல் வேதனை தருகிறது” - கலங்கும் திருமா\nஜெயித்தது தோனி... ஜெயிக்க வைத்தது கோலி... ஜஸ்ட் கோலி திங்ஸ்\nதிருடிய மொபைலை அன்லாக் செய்ய திருடர்கள் செய்யும் இன்னொரு திருட்டுத்தனம்... உஷார்\n'நிர்மலா தேவி வாழ்க்கையே ரகசியம்தான்'- காவியன் நகர் மக்கள் சொல்வது என்ன\nமெக்கானிக்குடன் சாலையில் நின்ற போலீஸார்... கதிகலங்கிப்போன இருசக்கர வாகன ஓட்டிகள்\nஜெயித்தது தோனி... ஜெயிக்க வைத்தது கோலி... ஜஸ்ட் கோலி திங்ஸ்\n``மன அழுத்தம் போக்க உங்களை நீங்கள் ஜெயிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்\n``லட்சியத்தை நோக்கி நகர்ந்துகொண்டே இருந்தால் மனஅழுத்தம் இல்லை. மனஅழுத்தம் போக்க உங்களை நீங்கள் ஜெயிக்கக் கற்க வேண்டும்’’ என்கிறார் எழுத்துச் சித்தர் பாலகுமாரன்.\nகருவளையத்தை மறைக்க மேக்கப் வேண்டாம்... இரும்புச்சத்து உணவு போதும்\nகருவளையத்தை மறைக்க மேக்கப் வேண்டாம். எந்தக் காரணத்தினால் உங்களுக்குக் கருவளையம் வந்திருக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டால் அதைச் சரி செய்வது சுலபம்..\nகொடைக்கானல் மெர்க்குரி ஆலை... அன்று நடந்ததும் இன்றைய நிலையும்\nஅவர்கள் குறைக்கவேண்டியதாக அரசு கூறிய மெர்க்குரி அளவு, உண்மையில் குறைக்கவேண்டிய அளவைவிட 20 மடங்கு அதிகம். இது யூனிலிவர் செலவைக் குறைப்பதற்காகச் செய்யப்பட்டது.\nவிகடன் பிரஸ்மீட்: அஜித்திடம் என்ன பிடிக்காது விஜய்யிடம் என்ன பிடிக்கும்\n“இந்த வேலைநிறுத்தம், இந்திய சினிமாவையே கோலிவுட் பக்கம் திருப்ப வெச்சிருக்கு. இதன் மூலமா...\nஜெ. கன்னத்திலிருந்த நான்கு புள்ளிகளும் அவிழாத முடிச்சுகளும்\nமரணத்துக்குப் பிறகு ஜெயலலிதா உடல் ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டபோது, ஜெ. கன்னத்தில் காணப்பட்ட நான்கு புள்ளிகள் குறித்துப் பெரும் சர்ச்சை எழுந்தது. அந்த நான்கு புள்ளிகள் குறித்த மர்ம முடிச்சுகளை அவிழ்ப்பதற்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முயற்சி செய்துள்ளது.\n\"வைகோ, சீமான் மோதல் வேதனை தருகிறது” - கலங்கும் திருமா\nகாவிரிப் பிரச்னை, எஸ.சி, எஸ்.டி வன்கொடுமைத் தடுப்பு சட்டம் ஆகியவற்றுக்கான போராட்டங்களில் மும்முரமாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://pathavi.com/?page=6", "date_download": "2018-04-26T13:09:12Z", "digest": "sha1:OVCWY7J72CGNRJAQE6I4M3SRHCPMVTCX", "length": 11008, "nlines": 267, "source_domain": "pathavi.com", "title": "Best tamil websites & blogs •et; Page 6 •et; Pathavi", "raw_content": "\nமொபைல் தொழில் நுட்பம் : ரூ.3000 க்கு 3G ஸ்மார்ட் போன்\n – கமல்ஹாசனை கழுவி ஊற்றும் ஓ. பன்னீர் செல்வம்…\nநடிகர் கமல் பிதற்றுகிறார்..: ஓ.பி.எஸ். கடும் கண்டனம் \nதனுஷ் நடிக்கும் ‘தங்க மகன்’ படத்திலிருந்து… | Tamilscreen\nஅம்மா ராதிகா வழியில் மகள் ரயான்…\nமொபைல் தொழில் நுட்பம் : ரூ.6000 மதிப்பில் 2GB RAM உள்ள மொபைல்\nஅஜித்தின் வேதாளம் திரையரங்கில்-ஒரு நேர்மையான பார்வை | TAMIL TWEET\nவிஜய் 60 சில தகவல்கள் | TAMIL TWEET\nஅதிக அளவுள்ள பைல்களை இமெயிலில் இலவசமாக அனுப்பிட ~ ஒரு துளி\nகேரட் ரவா இட்லி ~ ஒரு துளி\nதிப்பு சுல்தான் ~ ஒரு துளி\nவேலையை சுலபமாக்கும் கூகுள் ~ ஒரு துளி\nமாணவர்களிடம் பரவும் பாலியல் வக்கிரம் \nசூப்பர் ஸ்டார் மருமகனானதும் போதும், பன்னு சரியில்லை, டீ சரியில்லைன்னு…. தனுஷ் புலம்பல்\nவசூலில் புதிய சாதனை படைத்த ‘வேதாளம்’ | screen4screen\nவில்லு படத்தில் இருந்து நீக்கப்பட்ட செம காட்சிகள்…\nதூங்காவனத்தில் சிம்புவை நெம்பிய பாண்டிராஜ்\nஅந்த பயம் இருக்கட்டும் விஜய்\n2989 கோடி, 597 அடி உயர சர்தார் படேல் சிலை தயாரிப்பது சீனா - மேக் இன் இந்தியா\nசிரிச்சிடுங்க ப்ளீஸ்... ~ பழைய பேப்பர்\nநானும் ரவுடி தான் - சினிமா விமர்சனம்\nசர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு : ஜெயா வழங்கிய \"மானாடா.. மயிலாட...”\nவிரைவில் உடல் எடை குறைக்க 2 வழிகள்\nவிலை ஏற்றத்திற்கு முக்கிய காரணம்\nஎளிய சித்த மருத்துவ குறிப்புகள்\nகான்டாக்ட் லென்ஸ் அணிபவர்கள் கவனிக்க வேண்டிய 8 வழிகள்\nஆளுமா டோலுமா ன்னா என்ன அர்த்தம்\nPathavi தமிழின் முதன்மையான வலைப்பதிவு திரட்டி ஆகும். Pathavi தமிழ் வலைப்பதிவுகளுக்கு பலச் சேவைகளை வழங்கி வருகிறது. வலைப்பதிவுகளை திரட்டுதல், மறுமொழிகளை திரட்டுதல், குறிச்சொற்களை திரட்டுதல், வாசகர் பரிந்துரைகள், தமிழின் முன்னணி வலைப்பதிவுகள் என பலச் சேவைகளை Pathavi வழங்கி வருகிறது. வேறு எந்த இந்திய மொழிகளிலும் இல்லாத அளவுக்கு தொழில்நுட்ப சேவைகளை Pathavi தமிழ் வலைப்பதிவுகளுக்கு அளித்து வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.eegarai.net/t68159-topic", "date_download": "2018-04-26T13:19:51Z", "digest": "sha1:BQ4JKV25NFT7S4MYNCD3SXG2VUCBW2V7", "length": 14716, "nlines": 218, "source_domain": "www.eegarai.net", "title": "விஸ்வரூபத்தில் கமலுக்கு அனுஷ்கா தான் ஜோடி!", "raw_content": "\nருசியான ஊறுகாய்கள் - அரு /அரை நெல்லிக்காய் தொக்கு \nஅரை நெல்லிக்காய் - அரை நெல்லிக்காய் தொக்கு \nஎச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி\nஉடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்\nஎனக்குள் ஒரு கவிஞன் SK\nஉலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி\nபராமரிப்பு பணி முடிந்தது பழநி கோயில் வின்ச் சேவை துவக்கம்: பக்தர்கள் மகிழ்ச்சி\nபாலகுமாரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக\nஅறிமுகம்---- வாலி மோகன் தாஸ்\n2 மணி நேரம் பொறுக்க முடியாதா கஸ்தூரி..\nஎதுக்காக உன் காதலியை கிணத்துல தள்ளிவிட்டே...\nஅமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி\nநிலக்கரியை விட கருப்பாக இருக்கும் கிரகம் கண்டுபிடிப்பு\nகவர்ச்சி நடிகைகிட்ட பிடிச்சது, அவரோட நடிப்பு...\nஏப்ரல் 30-ம் தேதி வைகை ஆற்றில் இறங்குகிறார் கள்ளழகர்\nகோயில்களுக்கு செல்ல குழந்தைகளை கண்டிப்பாக பழக்குங்கள்.....\nஇந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'\nஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்\nஉப்புமா சாப்பிடுவது மோன நிலை...\nநீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு\n‘சிற்றெறும்பு கட்டெறும்பு’ - கமல்ஹாசன், அமைச்சர் ஜெயக்குமார் வார்த்தை ஜாலத்தால் ஒருவருக்கொருவர் கிண்டல்\nஉ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்\nகண்மணி வார நாவல் 25.04.2018\nதிகில் மன்னன் ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக\nதாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து\nபலாத்காரத்துக்கு ஆளாகும் ஆண் குழந்தைகளுக்கும் இழப்பீடு'\nஇந்தியர்களை பாதிக்கும் ‘எச்-4’ விசா ரத்து நடவடிக்கைக்கு அமெரிக்க எம்.பி.க்கள் எதிர்ப்பு, ஐ.டி. துறையும் கண்டனம்\n'பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்\n5,000 குஜராத் விவசாயிகள் தற்கொலைக்கு மனு\nவாழ்க்கையை ஓஹோன்னு வாழ கன்ஃபூசியஸ் சொன்ன 10 கட்டளைகள்...\nஇரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு\nரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது: மக்கள் மன்ற மாநில செயலாளர் பேச்சு\n2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்: ஜூன் 16-ம் தேதி இந்தியா-பாக். மோதல்\nசுப்ரீம் கோர்ட் எதிர்காலம்: ஆலோசிக்க நீதிபதிகள் கோரிக்கை\nநாடு முழுவதும் 24 போலி பல்கலை.,கள்\nகாங்., கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக்கறை: சல்மான் குர்ஷித் சர்ச்சை\nவிஸ்வரூபத்தில் கமலுக்கு அனுஷ்கா தான் ஜோடி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nவிஸ்வரூபத்தில் கமலுக்கு அனுஷ்கா தான் ஜோடி\nகமல் இயக்கி, நடிக்க இருக்கும் விஸ்வரூபம் படத்தில் ஹீரோயின் யார் என்ற இழுபறி ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது. படத்தில் கமலுக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்க இருக்கிறார். “மன்மதன் அம்பு” படத்திற்கு பிறகு கமல் நடிக்க இருக்கும் படம் “விஸ்வரூபம்”. இப்படத்தை கமலே இயக்கி நடிக்கிறார். படத்தின் நாயகியாக முதலில் பாலிவுட்டின் இளம்நடிகை சோனாக்ஷி சின்ஹா தான் நடிப்பதாக இருந்தது. இதற்கான அறிவிப்பு எல்லாம் வெளியாகி இருந்தநிலையில், டைரக்டர் மாற்றம், விசா பிரச்சனை என்று தொடர்ந்து விஸ்வரூபம் படத்திற்கு முட்டுக்கட்டை ஏற்பட்டது. தனக்கு கொடுக்கப்பட்ட கால்ஷீட்டையும் தாண்டி படம் ஆரம்பிக்காததால், இந்தியில் பல வாய்ப்புகள் பறிபோவதாக கூறி, விஸ்வரூபம் படத்தில் இருந்து விலகுவதாக சோனாக்ஷி அறிவித்தார். இதனால் கமலின் படம் மீண்டும் தொங்கலில் விழுந்தது.\nஇந்நிலையில் சோனாக்ஷிக்கு பதிலாக தீபிகா படுகோனேயை நடிக்க வைக்க கமல் தீவிர முயற்சி மேற்கொண்டார். ஆனால் அதுவும் கைகூடாததால், கடைசியாக தமிழ், தெலுங்கின் முன்னணி நாயகியான அனுஷ்காவை நாடினார். அவரும் உடன் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். இதன்மூலம் விஸ்வரூபம் படத்திற்காக நாயகி பிரச்சனை ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது.\nஅடுத்தமாதம் ஐரோப்பா மற்றும் கனடாவில் சூட்டிங் துவங்க இருக்கிறது. சமீபத்தில் தான் இந்தப் படத்துக்காக பிரமாதமான லொகேஷன்களை பார்த்துவிட்டு வந்துள்ளார் கமல்ஹாசன்.\nRe: விஸ்வரூபத்தில் கமலுக்கு அனுஷ்கா தான் ஜோடி\nRe: விஸ்வரூபத்தில் கமலுக்கு அனுஷ்கா தான் ஜோடி\nRe: விஸ்வரூபத்தில் கமலுக்கு அனுஷ்கா தான் ஜோடி\nRe: விஸ்வரூபத்தில் கமலுக்கு அனுஷ்கா தான் ஜோடி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.manithan.com/cinema/04/157096?ref=right-popular-cineulagam", "date_download": "2018-04-26T13:25:12Z", "digest": "sha1:FK36VREY4DWXIZS62EOEM2QWDLS5GB4Q", "length": 14171, "nlines": 161, "source_domain": "www.manithan.com", "title": "அன்று கவர்ச்சி கன்னியாக இருந்தவரா இவர்?... டிஸ்கோ சாந்தியின் சோகக்கதை! - Manithan", "raw_content": "\nவெட்டப்பட்ட மனைவியின் தலையுடன் தெருவில் நடந்து சென்ற கணவன்: அதிர வைக்கும் சம்பவம்\nஇளவரசர் ஹரியின் திருமணத்தில் மணப்பெண் தோழியாகும் உலக அழகி\nஜெயலலிதா வழக்கில் திடீர் திருப்பம்\nஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுலா செல்ல வேண்டுமா விரைவில் வரவிருக்கும் புதிய சட்டம்\nஅஜித்தின் மனைவி ஷாலினியின் பகையாளி யார் தெரியுமா\n பல ஆண்டுகளுக்கு பின் பாத்திமா பாபு விளக்கம்\nஇத்தனை வயதில் பிரபல நடிகை கௌசல்யாவுக்கு கல்யாணமாம்\nசர்வதேச இளம் இளம் விஞ்ஞானிகளுக்கான போட்டியில் இலங்கை 3 தங்கப்பதக்கம்\nமரணத்தின் பிடியிலிருந்து அஜீத்தை மீட்டெடுத்த ஷாலினி கசந்து போன வாழ்வில் உயிர்த்தெழுந்த காதல்\nசிவகார்த்திகேயனால் தொகுப்பாளினி பாவனா அனுபவித்த கொடுமை\nபிள்ளைகள், பெற்றோர்களை கொடூரமாக கொலை செய்த பெண் காரணத்தை கேட்டால் அதிர்ந்து போயிடுவிங்க\nஇந்த 3 ராசியில உங்க ராசி இருக்குதா.. இந்த ஆண்டில் கோடீஸ்வர யோகம் இதற்குத் தானாம்\nமனைவியை நண்பர்களுடன் உறவு வைக்க கட்டாயப்படுத்திய கணவன் - இறுதியில் நடந்ததை பாருங்கள்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\n31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்\nயாழ். சரசாலை, கனடா Toronto\nஅன்று கவர்ச்சி கன்னியாக இருந்தவரா இவர்... டிஸ்கோ சாந்தியின் சோகக்கதை\nதென்னிந்திய சினிமாவில் கவர்ச்சி நாயகியாக வலம் வந்தவர் டிஸ்கோ சாந்தி. இவர் தமிழ் நடிகர் சி.எல் ஆனந்தனின் மகள் ஆவார்.\nடிஸ்கோ சாந்திக்கு ஒரு அக்கா இரண்டு தங்கை மற்றும் 3 தம்பிகள் உள்ளனர். தனது தந்தை ஒரு நடிகராக இருந்தாலும் பெரிய குடும்பம் என்பதால் சிறு வயதில் இருந்தே இவர்கள் வறுமையில் தான் இருந்துள்ளனர்.\nசற்று வளர்ந்தவுடன் அக்கா லலிதா குமாரி நடிக்க சென்றுவிட்டார். அதன் பின்னர் தானும் நடிக்க போவதாக டிஸ்கோ சாந்தி களத்தில் இறங்கினார்.\nதமிழில் உதய கீதம் படத்தில் அறிமுகம் ஆன வேளையில் அவரது தந்தை சி.எல் ஆனந்தனுக்கு மஞ்சள் காமாலை நோய் தக்கியது.\nஇதனால் அவரையும் பார்த்துக்கொண்டு நடிப்பிலும் கவனம் செலுத்தி வந்தார் டிஸ்கோ சாந்தி. முதல் படத்தில் நல்ல ரோலில் நடித்த சாந்திக்கு அதன் பின்னர் கிளாமர் ரோல்களாக வந்தது.\nதந்தையின் மருத்துவ செலவை சமாளிக்க முடியாமல் வேறு வழியின்று கிளாமர் ரோலில் நடித்தார். அதன் பின்னர் தான் அவருக்கு ஐட்டம் டான்ஸ் வாய்ப்புகள் வர துவங்கின.\nவேறு வழி இன்று அனைத்து படங்களிலும் நடித்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் ஐட்டம் டான்ஸ் ஆடினார். என்ன சம்பாதித்தும் சாந்தியின் தந்தையை காப்பாற்ற முடியவில்லை. மஞ்சள் காமாலை நோய் தீவிரமாக தாக்க அவர் இறந்து போனார்.\nஇந்நிலையில் 1996ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் ஸ்ரீஹரியை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு இரண்டு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இருந்தும் சாந்தியை துயரம் விடவில்லை.\nநிம்மதியான வாழ்க்கை அவருக்கு கிடைக்கவில்லை. அவரது மகள் சிறு வயதிலேயே நோய்வாய்பட்டு இறந்து போனார்.\nஅதனை தொடர்ந்து 2013ஆம் ஆண்டு அவரது கணவர் ஸ்ரீஹரியும் இறந்து போனார். அதன் பின்னர் நடிப்பிற்கு முழுக்கு போட்டுவிட்டு சமூக சேவையில் இறங்கினார் டிஸ்கோ சாந்தி. தனது அக்ஸ்ரா பவுண்டேசன் என்னும் ஒரு சமூக சேவை மையத்தை நடித்தி வருகிறார் சாந்தி. அக்ஸரா பவுண்டேசன் தனது இறந்து போன குழந்தை அக்சராவின் பெயரில் நிறுவப்பட்டதாகும்.\nஉடல் எடையை மிக வேகமாக குறைக்க இந்த ஒரு பொருள் போதும்\nசோகத்தில் இருந்த நடிகர் வடிவேலுவிற்கு அடுத்தடுத்து அடித்த அதிஷ்டம்\nமனைவியை நண்பர்களுடன் உறவு வைக்க கட்டாயப்படுத்திய கணவன் - இறுதியில் நடந்ததை பாருங்கள்\nஐ.தே.க. செயற்குழு கூட்டத்தில் சிக்கல்\nசட்ட விரோதமாக மண் அகழும் இடங்களைப் பார்வையிட்டார் மன்னார் நகர முதல்வர்\nமத்திய வங்கியின் அறிக்கை நிதியமைச்சரிடம் கையளிப்பு\nதொழிலாளர் தினத்தை மே முதலாம் திகதி கொண்டாடவுள்ளது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு\nபள்ளிமுனை கடற்கரையில் உள்ள மீன் வாடிகளில் இருந்து கைப்பற்றப்பட்ட ஒரு தொகை மீன்கள்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா் விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://nilapennukku.blogspot.com/2012/05/blog-post_14.html", "date_download": "2018-04-26T13:13:35Z", "digest": "sha1:QPWQHXWTLHCV455PL2OEOB6QGUHPYRGR", "length": 14620, "nlines": 202, "source_domain": "nilapennukku.blogspot.com", "title": "அழகான ஓர் இரவில் - ஒரு பேருந்துப் பயணத்தில் | நிலாப்பெண்ணுக்கு", "raw_content": "\nஅழகான ஓர் இரவில் - ஒரு பேருந்துப் பயணத்தில்\nமுகத்தில் படும் சில்லென்ற பனிக்காற்று\nஜன்னலை மூட மனம் வரவில்லை\nவருவது உன் ஊர் - அங்கு\nஅருமை நண்பா .., அருமையான கவிதை ..\nநீங்க என்ன மலைமேலிருந்தா கமெண்ட் பண்ணுறீங்க\nசரி..சரி..இறங்க வேண்டிய இடத்த விட்ராதீங்க.\nஅப்டியே நம்ம பதிவையும் படிச்சிடுங்க. ஏன்னா இனி வம்படியா உங்கள படிக்க சொல்ல போறதில்ல.\nவம்படியா சொன்னாலும் பரவாயில்லை - கடையை மூட வேண்டாம் என்பது என் வேண்டுகோள்\nஇயல்பான வரிகள் மனதில் ஈரம் செய்கிறது..அருமை கவனம்கூடவே நீனைவுச்சொந்தக்காரியின் அப்பாவும் காத்திருப்பார்...\nநாம கரெக்ட் பண்ண வேண்டியது பொண்ணைத்தானே அப்பாவை இல்லையே - இப்பிடித்தேன் நான் அப்பாவியா இருக்கேன்\nநீங்க மகளை கரக்ட் பண்ணுங்க..உங்களை அப்பா கரக்ட் ஆக்கிடுவார்.சரி பறவால்ல,அவசரமெண'டா சொல்லுங்க ஆள் அனுப்பறன்..கொஸ்பிட்டல் கூட்டி போக திருத்தம் தூக்கிப் போக...சொல்லாமல் விட்டுட்டு என்னய கோபிக்கப்படாது சொல்டன\nமார்ச்சுவரிக்கும் ஆள் அனுப்பினாலும் அனுப்புவள் - நான் இங்கட இல்லை\nஇப்பிடி திரும்ப திரும்ப சிரிக்க வேண்டாம் - குழந்தை பயந்திடும்\nஆனா அன்றைய தினம் - அமாவாசை :(\nஅழகான காதல் கவிதைகள்.நீங்க யாரையோ காதலிக்கிறீங்கபோல அதுதான்.....\nஎன்னதான் அடிச்சே கேட்டாலும் ஒரு வார்த்தை வெளியே வராது, அழுதது கிடையாது.\nஏ ஜோக்ஸ் கதைகள் தத்துவங்கள் 3\nஹைக்கூ - சின்ன சின்ன கவிதைகள்\nஅரிய புகைப்படங்கள் - திருக்குறள் ஓலைச்சுவடி, பழைய சென்னை, கோவை, திருச்சி, திரிகோணமலை, நெல்லை\nதத்துவங்கள் - ஜோக்ஸ், வாழ்க்கை, சிறை, வரலாறு\nஏ ஜோக்ஸ் – தத்துவங்கள்\nவருடத்தின் சிறந்த 10 பதிவுகள்\nஉன்னோட மூளை ஏன் பிரெஷ்ஸா இருக்கு தெரியுமா நீ உபயோகப்படுத்தாமலே வச்சிருந்தா அப்பிடிதேன் இருக்கும் நீ உபயோகப்படுத்தாமலே வச்சிருந்தா அப்பிடிதேன் இருக்கும்\nஏ ஜோக்ஸ் கதைகள் தத்துவங்கள் 3\nகல்யாணம் சொர்கத்தில் நிச்சயிக்கப்படுகிறதென்றால் முதலிரவு எங்கே நிச்சயிக்கபடுகிறது நான் நேரா அங்கே போயிடுறேன் நான் நேரா அங்கே போயிடுறேன்\nதத்துவங்கள் - ஜோக்ஸ், வாழ்க்கை, சிறை, வரலாறு\nஹிந்தி சினிமாகாரர்கள் எல்லா படங்களிலும் \"சோனியே\" \"சோனியே\" என்று பாட்டெழுதியே சோனியா காந்தியை பிரபலமாக்கிவிட்டனர். ...\nஏ ஜோக்ஸ் – தத்துவங்கள்\nஒரு பதின்மூன்று வயது பெண்ணின் T-SHIRT வாசகம் - “ IT’S GROWING ” எந்த ஒரு உடையும் ரசிக்கப்படுவதற்கும் ரசிக்கப்படாமல் போவதற்கு...\nஅவள் வரமாட்டாள் என்று தெரிந்தும் காதலை ஆண்கள் கழிவறைகளில் எழுதுவதுதான் மூடநம்பிக்கை பெண்கள் இல்லா உலகம் வேண்டும் - அங்கு என்னைத்தவிர ...\n A JOKES, நகைச்சுவை, கதை, தத்துவம், அனுபவம், தமிழ், கவிதை,சுற்றுலா, கார்டூன்\nநிலாப்பெண்ணுக்கு இணையதளம் ஆரம்பித்து ஓராண்டு நிறைவு பெறுவதை முன்னிட்டு இந்த வருடத்தின் சிறந்த பதிவுகள் சில\nஅரிய புகைப்படங்கள் - திருக்குறள் ஓலைச்சுவடி, பழைய சென்னை, கோவை, திருச்சி, திரிகோணமலை, நெல்லை\nஎன் சிறுவயது முதல் (இப்ப ரொம்ப பெரிய வயசுன்னு நினைப்பு) தேடிய புகைப்படம் – திருக்குறளின் ஓலைச்சுவடி. இன்னும் பல நகரங்களின் முந்தைய தோற...\nஹைக்கூ - சின்ன சின்ன கவிதைகள்\nஎனக்கும் அவளுக்கும் ஒரு ஒற்றுமை என் நண்பனைப் பிடித்துப்போனதுதான் வடக்கு தெற்கு ஈர்க்கும் காந்தப்புலம் அவள் கண்க...\nஉங்களிடம் உள்ள டிகிரியை வைத்துக்கொண்டு ஒரு ஃபில்டர் காபிகூட போட முடியாது பெண்களுக்குத் தேவை குடிக்காத நல்ல ஆண்கள் பெண்களுக்குத் தேவை குடிக்காத நல்ல ஆண்கள்\nவானம் ஆழமானது நீ நினைத்தால் வானம் ஆழமானது நீ உயர்ந்து நின்றால் வானம் ஆழமானது நீ உயர்ந்து நின்றால்\nமொக்கை தத்துவம் - வீணா வந்து ஏமாற வேண்டாம்\nகாதல் வசனம் காமெடி கலாய்த்தல்\nஹைக்கூ - சின்ன சின்ன கவிதைகள்\nகாமெடி கலாய்த்தல் - நேபாளம் அதள பாதாளம்\nதமிழ் நாகரீகம் உலகின் முதல் நாகரீகம் – ஓர் ஆய்வு\nஏ ஜோக்ஸ் – தத்துவங்கள்\nஅழகான ஓர் இரவில் - ஒரு பேருந்துப் பயணத்தில்\nஇணையதளம் – காப்பி அடிப்பது எப்படி\nஓமான் - மஸ்கட் மசூதி\nஎன் இயற்பியலும் இருவரின் வேதியியலும்\nநித்யானந்தா - தொடரும் கில்மா லீலைகள்\nதமிழ் – அமீரகத்தில் தமிழர்கள்\nLOVE JOKES - காமெடி வசனங்கள்\nEnglish PLUS18 WatchMovie அரசியல் அனுபவம் ஆன்மீகம் இணையதளம் இயற்கை இலங்கை இன்னா 40 ஈழம் உணவு உபயோகமானவை கட்டுரை கதை கவிதை காதல் காதல் மொழி கார்டூன் சினிமா சுட்டவை 40 சுற்றுலா செய்திகள் சைக்கோ ட்விட்டர் தத்துவம் தமிழ் தலையங்கம் தனிமை திரை விமர்சனம் துபாய் துறை தொழில்நுட்பம் நகைச்சுவை நிலா படைப்புகள் பாடல் புகைப்படங்கள் பேசி போராட்டம் மழலை மனதைத் திற வரலாறு விளையாட்டு வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/chuttivikatan/2015-nov-30/talented-kids/112558.html", "date_download": "2018-04-26T13:08:22Z", "digest": "sha1:PQ2PVEBVLP2NIDWNHXZ56DT5LELKPKML", "length": 15890, "nlines": 382, "source_domain": "www.vikatan.com", "title": "க்யூட் க்ளிக்கர்ஸ்! | Chutti Clikers - Chutti Vikatan | சுட்டி விகடன் - 2015-11-30", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nநல்ல டைனோசரும் மாய உலகமும்\nஒன்பது மணி என்றால், செங்கோணம்\nவண்ணப் பூக்களில் ஓரினப் பின்னங்கள்\nமிகை எண்கள், குறை எண்கள் அறிவோம்\nசாப்பாட்டு மேஜையான படிப்பு மேஜை\nசென்னையிலிருந்து மும்பை எவ்வளவு தூரம்\nவாளியில் நீரை நிரப்பினால், சூத்திரம் நினைவில் நிற்கும்\nசீட்டைத் தேடி, பின்னம் கண்டுபிடி\nஎப்படி உருவாக்குவது 3D ஹோலோகிராம்\nவிழுந்து விழுந்து ஒரு சாதனை\nபக்கா மாஸ் லாரன்ஸ் கதை\n36 வருடங்கள் 36ஆயிரம் பாம்புகள்\nஇது எங்கள் WALL செய்தி\nஎன் பள்ளி என் சுட்டி\nதினமும் கேளுங்கள்... சுட்டித் தமிழ்\nசுட்டி விகடன் - 30 Nov, 2015\nபெரியவங்களுக்கு மட்டும்தான் ஆபீஸ், ஹெவி வொர்க், டார்கெட்னு டென்ஷன் இருக்குமா டெஸ்ட், ரிவிஷன், புராஜெக்ட் வொர்க்னு நமக்கும் எவ்ளோ டென்ஷன் டெஸ்ட், ரிவிஷன், புராஜெக்ட் வொர்க்னு நமக்கும் எவ்ளோ டென்ஷன் எங்களுக்கு அந்த மாதிரி டென்ஷன் ஆகும்போதெல்லாம் ரிலாக்ஸ் பண்ணிக்க, கே.ஜி கிளாஸ் பக்கம் ஒரு ரவுண்டு அடிப்போம். குட்டிப் பசங்களோட சேட்டைகளைப் பார்ப்போம். அவங்க சிரிச்சாலும் க்யூட்; அழுதாலும் க்யூட்; முறைச்சாலும் க்யூட். அதையெல்லாம் பார்த்துட்டு வந்தா, டென்ஷன் பறந்துடும். இதோ, நாங்க ரசித்த க்யூட் க்ளிக்ஸ்...\n- பவதாரிணி, கீர்த்தனா, பிரியங்கா.\nவிகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP\nவிகடன் பிரஸ்மீட்: அஜித்திடம் என்ன பிடிக்காது விஜய்யிடம் என்ன பிடிக்கும்\n“இந்த வேலைநிறுத்தம், இந்திய சினிமாவையே கோலிவுட் பக்கம் திருப்ப வெச்சிருக்கு. இதன் மூலமா...\nஜெ. கன்னத்திலிருந்த நான்கு புள்ளிகளும் அவிழாத முடிச்சுகளும்\nமரணத்துக்குப் பிறகு ஜெயலலிதா உடல் ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டபோது, ஜெ. கன்னத்தில் காணப்பட்ட நான்கு புள்ளிகள் குறித்துப் பெரும் சர்ச்சை எழுந்தது. அந்த நான்கு புள்ளிகள் குறித்த மர்ம முடிச்சுகளை அவிழ்ப்பதற்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முயற்சி செய்துள்ளது.\n\"வைகோ, சீமான் மோதல் வேதனை தருகிறது” - கலங்கும் திருமா\nகாவிரிப் பிரச்னை, எஸ.சி, எஸ்.டி வன்கொடுமைத் தடுப்பு சட்டம் ஆகியவற்றுக்கான போராட்டங்களில் மும்முரமாக...\n” - 1 - நாட்டுக்கோழி விருந்து... நள்ளிரவு உபசரிப்பு\nஒரு நிர்மலாதேவி சிக்கிக்கொண்டார். பலர், எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறார்கள். தங்கள் உழைப்பாலும் திறமையாலும் உயரங்களைத் தொடும் பெண்மணிகளுக்கு ராயல் சல்யூட் அடிப்போம். அதேநேரம், குறுக்குவழியில் முன்னுக்கு வர நினைக்கும் பலர் இருப்பதும் ஓர் அவலம்\nதமிழகத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்ட சில மாதங்களில் ‘தமிழகம் முழுவதும் ஆய்வு’ என்று ஆளுநர் கிளம்பியபோதே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://laxmin.blogspot.com/", "date_download": "2018-04-26T12:59:51Z", "digest": "sha1:HOFNSO6GHDGYBXQSNDFCY6R37WXJWN5Q", "length": 90271, "nlines": 238, "source_domain": "laxmin.blogspot.com", "title": "A Ray of Hope", "raw_content": "\nஇரண்டாண்டுகளுக்கு முன், வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்ப்ரஸ் ரயிலில் மங்களூருக்குப் ப்ரயாணம் செய்து கொண்டிருந்த போது, எனக்கு அருகே இருந்த படுக்கை (Berth) எண் 55 -இல் ஒரு மத்தியதர வயதுடையவர் படுத்திருந்தார். ரயில் பாலக்காடு சந்திப்பை அடைந்த போது மணி இரவு ஒன்பது இருக்கும், பெரும் சந்தடிகளுக்கிடையே ஒரு பெரிய பக்தர்கள் குழாம் ரயிலில் ஏறியது. அவர்களில் ஒருவர், முன்பு குறிப்பிட்ட படுக்கை எண் 55 இல் படுத்திருந்தவரிடம், அது தனக்காக ஒதுக்கப்பட்ட படுக்கை எனவும், அதைத் தனக்கு கொடுக்குமாறும் கேட்டுக் கொண்டிருந்தார். பிரயாண புக்கிங் ஏஜெண்ட் மூலம் அதற்கான அத்தாட்சியையும் பெற்றிருந்தார். அப்போது அங்கு வந்த டிக்கெட் பரிசோதகர், இரண்டாமவரிடம் அது அவருக்குண்டான படுக்கை அல்ல, ஏதோ தவறு நிகழ்ந்திருக்கிறது என்பதைப் புரிய வைக்க முயன்று கொண்டிருந்தார், ஆனால் அதை அவர் காதில் வாங்கியதாகத் தெரியவில்லை. இல்லை அது தமதே என்று இருவரும் வாதாடிக் கொண்டிருந்தனர். ரயில்வே பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஒரு காவலர் அங்கு வந்து, இரண்டாமவரை அப்புறப் படுத்த முயன்றார். ஆனாலும் பலனில்லை; அவருடன் வந்த மற்ற பிரயாணிகள் அவருக்கு ஆதரவாக வாதாடத் துவங்கவே, ஒரே கூச்சல்; குழப்பம்.\nரயில் பாலக்காட்டைத் தாண்டி, நான்கு ரயில் நிலையங்கள் கடந்த பிறகும் கூட, உச்சஸ்தாயியில் கடும் வாக்குவாதம் நிகழ்ந்து கொண்டிருந்தது. இதற்கிடையே திரூர் ரயில் நிலையத்தைக் கடந்தவுடன் ஒருவர் அபாயச் சங்கிலியயப் பிடித்திழுத்து ரயிலையும் நிறுத்தி விட்டார். இவ்வாறான கடும் வாக்குவாதங்களால் யாராலும் தூங்க இயலவில்லை, நேரமும் நள்ளிரவைக் கடந்து சென்று கொண்டிருந்தது.\nநடப்பவைகளை நான் நோட்டமிட்டுக் கொண்டிருந்த வேளையில், திடீரென, டீனேஜ் பருவத்திலிருந்த ஒரு கல்லூரி மாணவரைப் போன்ற தோற்றமுடைய ஒருவர், மாணவராகத்தான் இருக்க வேண்டுமென்பது எனது அனுமானம், தன்னுடைய படுக்கையிலிருந்து இறங்கி, அதை அந்த இரண்டாமவருக்கு விட்டுக் கொடுக்க முன்வந்தார். சிறிது நேரத் தயக்கத்திற்குப் பின்னர், அந்த இரண்டாமவர் அதனை ஏற்றுக் கொண்டார்.\nஎன்னுடைய ஆச்சர்யத்தை அதிகப் படுத்தும் விதமாக, அவ்விளைஞர் சற்றும் யோசியாமல், செய்தித் தாளை தரையில் விரித்து அதில் படுத்ததோடல்லாமல், சிறிது நேரத்தில் அமைதியான, ஆழ்ந்த உறக்கத்திற்குள் தொலைந்தே போய்விட்டார். அதற்குப் பின் இதுவரை எதுவுமே நடவாததுபோல் ஒரு அமைதி நிலவியது. நான் 58 வயதாகும் ஒரு தாவரவியல் ஆசிரியர்; இரண்டு தலைமுறை மாணவார்களைக் கையாண்டிருக்கிறேன். பொதுவான அபிப்ராயங்களுக்கு மாறாக, பல சமயங்களில், பெரியவர்களை விடவும், இளைஞர்களே உயர்வான குணமுடையவர்களாக இருக்கிறார்கள்.\n(மூலம் : ஃப்ரான்ஸிஸ் சேவியர், ஏற்காடு)\nகாலத்தினாற் செய்த உதவி :\n1962 ஆம் வருடம், அக்டோபர் மாதம், எனது தந்தையார் திடீரென இறந்த வேளை, எனது பத்தாம் வகுப்பு பள்ளிப் படிப்பைத்தான் முடித்திருந்தேன். இனி கல்லூரிப் படிப்பென்பது கேள்விக்கப்பாற்பட்ட விஷயமாக இருந்தது. எனவே அப்போதிருந்த சூழலில், ஒரு குமாஸ்தா உத்யோகத்தைத் தேடிக் கொண்டேன். பத்தாண்டுகள் கடந்த நிலையிலும் அதே குமாஸ்தா உத்யோகம். 1971 ஆம் வருடம், என்னுடைய தனியார் நிறுவனத்தின் நிர்வாகத்தினர், பட்டப் படிப்பு முடித்தவர்களுக்கு மட்டுமே அதிகாரிகளாகப் பதவி உயர்வு அளிக்கப்படும் என அறிவித்தனர். அச்சூழலில் எனக்குத் திருமணமாகி இரண்டு குழநநதைகள், மேற்கொண்டு படித்தால் மட்டுமே பதவி உயர்வு என்ற நிலையில், எனது உத்யோகம் எனக்கு ஒரு சூன்யமாகத் தெரிந்தது. பட்டப் படிப்பில் சேர்வதற்கும், நான் முதலில் பள்ளி மேநிலை இறுதியாண்டை முடிக்க வேண்டுமே\nபள்ளி மேநிலை முதலாண்டில் சேர்வதற்காக, அலிபூர் ரோடு, தில்லியில் இருக்கும் சிபிஎஸ்சி வழி தொலைதூரக் கல்வி அலுவலகத்திற்கு எனது வெஸ்பா ஸ்கூட்டரில் விரைந்தேன். அங்கு எனக்கு அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது. தபால் மூலமாகத் தொலைதூரக் கல்வியில் பதிவு செய்து கொள்ள அதுவே இறுதி தினம். அந்த அலுவலகத்திலிருந்த அனைத்து விண்ணப்பப் படிவங்களும் விற்றுத் தீர்ந்திருந்தன.\nமிகுந்த ஏமாற்றத்துடன், அடுத்து என்ன செய்யலாம் என்று செய்வதறியாது அங்கு குழம்பி நின்று கொண்டிருநநத சமயத்தில், அங்கு வந்த ஒரு முதியவர், என்ன பிரச்சனை என்று கேட்டார். அவரிடம் நடந்ததைக் கூறி, நான் இக்கல்வியில் சேர, மேலும் ஒரு கல்வியாண்டு காத்திருக்க வேண்டும் என்ற சோகத்தைக் கூறினேன்.\nபரவாயில்லை, உனக்கு உண்மையாகவே இவ்வயதில் மேலும் படிக்க ஆர்வமிருப்பின், என்னுடன் எனது வீட்டிற்கு வா அங்கு ஒரு காலிப் படிவம் வைத்திருக்கிறேன், என்றார் அவர்.\nஅச்சமயம் நேரம் மதியம் 12.30. நிரப்பப்பட்ட படிவங்கள் பெறுவது பகல் 2 மணியோடு முடிந்ததுவிடும். அவருடைய வீடோ 10 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது. அதுவுமில்லாமல் அறிமுகமில்லாத நபரோடு செல்லவும் ஒருவித தயக்கம்.\nஎனினும் அச்சூழலில் கிட்டிய ஒரு நம்பிக்கையூட்டக் கூடிய வாய்ப்பைக் கைகழுவ மனமின்றி, அவரைப் பில்லியனில் அமர்த்திக் கொண்டு, அந்த நெரிசலான போக்குவரத்தினூடாக மிகவும் துரிதமாகச் சென்று அவர் வீட்டை அடைந்தேன்.\nவீட்டை அடைந்ததும், எனக்கு குடிக்க நீர் கொடுத்து என்னை ஆஸ்வாசப் படுத்தினார். பதட்டப் படாமல் இருக்குமாறு கேட்டு கொண்டு, படிவத்தையும், பேனாவையும் கொடுத்து, அங்கேயே நிரப்புமாறும் கேட்டுக் கொண்டார். பிறகு விரைவாகவும், கவனமாகவும் சென்று படிவத்தைக் கொடுக்குமாறு கேட்டுக் கொண்டார். நான் திரும்பவும் அலுவலகத்தை அடைந்த போது நேரம் சரியாக 1.58. எனக்கு முன்னரே மூவர் வரிசையில் படிவத்தைக் கொடுப்பதற்காகக் காத்திருந்தனர். நல்ல வேளையாக, என் படிவத்திற்குப் பிறகு, எவருடையதும் பெறப்பட மாட்டாது என அங்கிருந்த அதிகாரி அறிவித்தார்.\nபிறகு மேநிலைப் படிப்பை வெற்றிகரமாக முடித்து, 1975 ஆம் ஆண்டு தில்லி பல்கலையிடமிருந்து பி ஏ பட்டமும் பெற்றேன். பிறகு நான் ஏங்கிய பதவியுயர்வுகளும் பெற்று, 1997 இல் சீனியர் அசிஸ்டெண்ட் மேனேஜராக ஓய்வு பெற்றேன். இன்றளவும், பெயர் கூடக் கேட்க மறந்த, சரியான சமயத்தில் உதவி செய்த அந்தப் பெரியவருக்கு நான் மிகவு கடமைப்பட்டிருக்கிறேன்.\n(மூலம் : கோவிந்த் எஸ்.பட்நாகர், புனே)\nஏழு வருடங்களுக்கு முன்னால், ஜெர்மெனிக்கு ஒரு பயிற்சிக்காக பதினைந்து தினங்கள் சென்றிருந்த வேளையில், ஒரு வார இறுதி விடுமுறையில் பிரான்ஸில் இருக்கும் லூர்தெஸ் என்ற இடத்திற்கு செல்லலாம் என முடிவெடுத்தேன். அப்பிரசித்தி பெற்ற இடத்திற்குச் செல்ல, நான் இருந்த இடத்திலிருந்து இரண்டு விமானப் பயணமும், ஒரு குறுகிய தூர ரயில் பயணமும் மேற்கொண்டாக வேண்டும். செல்லும்போது பயணம் மிகவும் இனிதாக அமைந்தது. லூர்தெஸில் செலவிட்ட தருணங்களும் இதயத்தை விட்டு என்றும் அகலாத, மகிழ்ச்சிகரமான ஒன்றாகும். ஆனால் ஜெர்மெனிக்குத் திரும்பும் பொழுது, லூர்தெஸில் எனது ரயிலைத் தவற விட்டேன்; அடுத்த ரயிலுக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதாகி விட்டது.\nஒருவாறு ரயிலைப் பிடித்து, விமான நிலையத்தை அடையும்போது அங்கு மற்றொரு அதிர்ச்சி காத்திருந்தது. அன்றைய தினத்தின் கடைசி விமானம், நான் செல்வதாக இருந்த விமானம் கிளம்பி விட்டது. அந்நிய மண்ணில், முற்றிலும் கைவிடப் பட்ட நிலையில், கண்களில் கண்ணீர் ததும்ப செய்வதறியாது நின்றிருந்தேன். அன்றைய இரவை ஒரு ஹோட்டலில் கழிக்கக் கூட கையில் போதுமான பணமில்லாத ஒரு நிலை. அப்போது, அங்கு விமான நிலையத்தின் செக்-இன் கவுண்டரில் இருந்த பிரெஞ்சுப் பெண்மணி, சற்று நேரம் காத்திருங்கள் என்று என்னைப் பணித்தார். எதற்காகக் காத்திருக்கச் சொல்கிறார் என்ற ஆச்சர்யத்துடன், அதே சமயம் வேறு வழியும் தெரியாததால், அவர் தமது வேலையை முடித்து விட்டு வரும்வரை காத்திருந்தேன்.\nசில நிமிடங்களுக்குப் பிறகு, அவர் தமது வேலையை முடித்து விட்டு, வாருங்கள் என்னுடன், என் வீட்டிற்கு என்று என்னை அழைத்தார். பொதுவாகவே ஏர்லைன் செக் இன் கவுண்டர்களில் பணி புரிபவர்கள் அதிகம் மற்றவர்களோடு அநாவசியமாகப் பேச்சுக் கொடுப்பதில்லை; பழகுவதுமில்லை; தங்கள் பணியிலேயே மும்முரமாக இருப்பார்கள். இவரின் அழைப்பு என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தி பேசவொட்டாமல் அடித்து விட்டது.\nஅவருக்கு நான் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டதுடன், அவருடைய பெயர் ஜேன் மேரி என்று அறிந்து கொண்டேன். அவர் நேராக என்னை தமது வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அங்கு அவருடைய இரு குழந்தைகளுடன் இரவு உணவை முடித்துக் கொண்டவுடன், நான் தூங்குவதற்கு ஏற்றவாறு வசதி செய்து தந்து விட்டு அவர் தமது பணிகளைக் கவனிக்கச் சென்று விட்டார். மறுநாள் காலை அவர் என்னை எழுப்பியதுடன், என்னை விமான நிலையத்திற்கு அழைத்துச் சென்றார். வழி நெடுகிலும் அவருக்கு நான் நன்றி தெரிவித்துக் கொண்டதுடன், ஊருக்குச் சென்றவுடன் அவருக்குத் தக்க சன்மானமும் அனுப்பி வைப்பதாகத் தெரிவித்தேன்.\n\" தயவு செய்து எனக்கு நன்றி எதுவும் தெரிவிக்க வேண்டாம் \" என்று கேட்டுக் கொண்ட ஜேன், இதே நிலை நாளை என் குழந்தைகளுக்கும் நேரலாம். இன்று நான் செய்யும் உதவி, நாளை என் குழந்தைகளுக்குத் தேவைப்படும் போது இறைவன் அவர்களுக்கும் அனுப்பி வைப்பார், என்றார்.\nஅன்றைய தினம் காலை முதல் விமானத்திலேயே என்னை அவர் அனுப்பி வைத்தார். அவருக்கு என்னால் முடிந்ததெல்லாம் அவருக்கான எனது ப்ரார்த்தனைகள்தான்.\n(மூலம் : பமீலா பர்போஸா, ஹைதராபாத்)\nஎன்னுடைய சிறு பிராயத்தில் நான் வளர்ந்தது முழுவதும், தமிழகத்தின் ஒரு கிராமப்புறத்திலுள்ள என்னுடைய தாத்தா வீட்டில். பள்ளியில் ஒரு சராசரிக்கும் கீழான மாணவனான நான், அங்கு பெரும்பாலும் என்னுடைய நேரத்தை பறவைகளையும், அணில்கள் குறுக்கும் நெடுக்குமாக ஓடுவதையும் வேடிக்கை பார்ப்பதிலேயே செலவிடுவேன். 1999 ஆம் வருடம், நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பொழுது, எங்கள் பள்ளிக்குப் புதிதாக வந்திருந்த தமிழாசிரியை திலகம் அவர்கள் எனக்கு அறிமுகமானார்கள். இன்னமும் அவர்களை எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. சற்றே குட்டையாக, குடும்பப் பாங்கான, சிறிய கல் பதித்த மூக்குத்தியுடன், நெற்றித் திலகமிட்ட களையான முகம்.\nவகுப்பில் ஒருநாள், அவர் என்னிடம் அன்றைய தினம் போதித்திருந்த பாடத்தின் ஒர்பகுதியை எழுந்து வாசிக்குமாறு கூறினார். என்னுடைய மனோதிடமும், தைரியமும் பஞ்சாகப் பறந்து விட்டன. என்னுடைய கைகள் நடுங்கத் துவங்கி விட்டன; வார்த்தைகள் வெளிவர மறுத்தன; ஒரு பாராவைப் படித்து முடிப்பதற்குள் சொல்லொணாத் தடுமாற்றங்கள்; என்னுடைய வகுப்புத் தோழர்கள் எள்ளி நகையாடியது என்னை மிகுந்த வெட்கத்திற்காட்படுத்தியது.\n அதைச் சரளமாகப் படிப்பதில் உனக்கு என்ன பிரச்சனை” என திலகம் அவர்கள் மிகுந்த வாந்துவத்துடன் என்னை வினவினார்.\nநான் தலையைக் குனிந்தவாறே, படிக்கும் பொழுது தவறு நேர்ந்துவிடுமோ என்ற அச்சத்திலேயே நான் தடுமாறி விட்டேன் என என்னுடைய தவறை ஒப்புக் கொண்டேன்.\nஅவர் என்னுடைய தோளில் தட்டிக் கொடுத்தவாறே, மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதைப் பற்றி நீ கவலைப்படத் தேவையில்லை. உனக்குப் பிடித்த கதைப் புத்தகங்கள், மற்ற புத்தகங்கள் எதுவாக இருப்பினும் படித்து, படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள். உன்னுடைய படிக்கும் பழக்கம் வளர்வதோடு, தடுமாற்றங்களும் ஏற்படாது என தைரியமூட்டினார்.\nசில மாதங்களில் அவருக்கு வேறு ஒரு அரசாங்கப் பணி கிட்டியது. அவர் எங்களுடைய வகுப்பறைக்கு கடைசியாக வந்திருந்து, எங்களுக்கு சிறப்பான எதிர்காலம் அமைய வாழ்த்தினார்.\nஎதிர்வந்த விடுமுறை தினத்தில், எனக்கு பிரபல தமிழ் எழுத்தாளரான சுஜாதாவின் நாவல் ஒன்று கிடைத்த்து. கூடவே திலகம் அவர்களின் அறிவுரையும் நினைவிற்கு வந்தது. மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. பின்பு அருகிலிருந்த சிறிய நகரத்திலுள்ள நூலகத்தில் என்னை சந்தாதாரராக இணைத்துக் கொண்டு, தொடர்ந்து படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டேன். இப்பழக்கவழக்கம் நாளடைவில் என்னை பள்ளியிலும், அதைத் தொடர்ந்து கல்லூரியிலும் சிறந்த மாணவனாக என்னை உருவாக்கிக் கொள்ள உதவியது. தற்போது, என்னுடைய இந்த 24 வயதில், நானும் ஒரு ஆசிரியராக மாற்றுத் திறனுடைய குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கும் வாய்ப்பு கிடைக்கப் பெற்றிருக்கிறேன். இப்பொழுது திலகம் அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியாது. ஆனால் நானிருக்கும் இன்றைய நிலைக்கு, அன்று திலகம் அவர்கள் எனக்கு வழங்கிய ஊக்கமும், அறிவுரைகளும் மட்டுமே காரணம்.\n(மூலம் : சதீஷ் குமார், இவர் நாமக்கல் மாவட்டத்திலுள்ள ஸர்வ சிக்ஷா அப்யான் திட்டத்தின் கீழுள்ள பள்ளியில் சிறப்பு பயிற்றுவிப்பாளராக பணியாற்றுகிறார்.)\nசமீபத்தில் பாஸ்போர்ட்டை புதுப்பிக்கும் நிமித்தம், திருச்சிராப்பள்ளி மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்திற்குச் சென்றிருந்தேன். உள்ளே நுழையும்போதே தேனடை போல புரோக்கர்கள், \"என்ன சார் ஃப்ரெஷ்ஷா, ரினிவலா, ஈசிஎன்ஆரா என்று ......\nமுதலில் அனைவருக்கும் வணக்கம் தெரிவித்து, தெளிவான தமிழில் தேர்ந்த மேடைப் பேச்சாளர் போல் பேசத் துவங்கினார். வரிசையாக முதன்முறையாக பாஸ்போர்ட் விண்ணப்பம் செய்ய வந்திருப்பவர்கள், புதுப்பிப்பவர்கள், தொலைந்தவற்றிற்கு மாற்று பெற வந்திருப்பவர்கள் என அனைவருக்கும் தனித்தனியாக படிவம் நிரப்புவது எப்படி என்றும், அதில் செய்ய வேண்டியவை, கூடாதவை என்னென்ன என்பனவற்றைத் தெளிவாகவும், பொறுமையாகவும் விளக்கினார். இடையிடையே வித்யாசமாக பொன்மொழிகள், குழந்தைகளுக்கு நற்குணங்களை போதிக்க வேண்டியதன் அவசியம் என்பனவற்றையும் கூறி அசத்தினார்.\nசுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக மிகுந்த பொறுமையுடனும், சிரத்தையுடனும் பாஸ்போர்ட் பெறுவதற்குண்டான அடிப்படை வழிகளை எளிமையான தமிழில் விளக்கிவிட்டு, இடையிடையே, முகவர்களிடம் உங்களது பணத்தைக் கொடுத்து ஏமாற வேண்டாம். யாருடைய சிபாரிசின் பேரிலும் இங்கு குறித்தகாலத்தை விடக் குறைவான காலத்தில் பாஸ்போர்ட் அளிக்கப்பட மாட்டாது, ஏமாறாதீர்கள்; ஏமாறாதீர்கள் என்று கூறிக் கொண்டே இருந்தார். அங்கேயே அவரைச் சுற்றி நின்ற முகவர்கள் கூட இதைப் பெரிது படுத்தாமல் புன்முறுவலுடன் கேட்டுக் கொண்டிருந்தனர். தவிர போலி ஆவணங்கள் கொடுத்து ஏமாற்ற முனைவதால் விளையும் சங்கடங்களையும் எடுத்துக் கூறினார்.\nஇவரைப் போன்ற கடமையுணர்வு மிகுந்த உன்னத ஆத்மாக்களும் இருக்கத்தான் செய்கின்றனர். வெகு சமீபத்தில் திரு கடுகு அவர்களுடைய வலைமனையில் கூட அவர் தான் அமெரிக்காவில் கண்ட பள்ளி வாகன ஓட்டுனர் பற்றி எழுதியிருந்தார். அதைப் படித்ததும் இவருடைய நினைவுதான் வந்தது. இவரைப் போன்ற ஒரு நபர் ஒவ்வொரு அரசாங்க அலுவலகத்திலும் இருந்துவிட்டால் என்ற பேராசைக் கனவு ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.\nஅவரைப் புகைப்படம் எடுக்க முயன்ற போது நாசூக்காக மறுத்து விட்டார். சென்ற வேலை இனிதே முடிந்த திருப்தியுடனும், அவரின் பெயரைக் கூட கேட்டுக் கொள்ளாத என்னுடைய மறதியையும் நொந்து கொண்டு வீடு வந்து சேர்ந்தேன்\nஒரு மாறுதலுக்காக குருவிகள் படும் பாடு (அல்லது) குருவிகள் பட்ட பாடு\nநவீனமயத்தால் அழியும் சிட்டுக்குருவிகள்: இன்று உலக சிட்டுக்குருவி தினம்\n'சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு... தென்றலே உனக்கென்ன சொந்த வீடு...' என்ற பாடலுக்கு ஏற்ப, சுதந்திரமாக சுற்றித் திரியும் பறவைகளில் சிட்டுக்குருவி முதலிடம் வகிக்கிறது. தொல்காப்பியம் உட்பட இலக்கியங்களில் அதிகம் பேசப்பட்டது. பாரதியார் கவிதைகளில், சிட்டுக்குருவியின் பெருமைகளை குறிப்பிட மறக்கவில்லை.\nஉருவத்தில் சிறியதாக, அழகான தோற்றம் கொண்ட, சுறுசுறுப்பாக பறக்கும் சிட்டுக்குருவி, காகங்களைப் போல், மனிதர்களின் பழக்க வழக்கத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொண்டு பழகும் அறிவுபூர்வமான உன்னத பறவை. கூரை வீடுகள், ஓடுகள் வேயப்பட்ட கூரைகளில் கூடு கட்டி முட்டையிடும் பெண் குருவிக்கு, பக்க பலமாக ஆண் குருவி கூடவே இருந்து குஞ்சு பொரிக்க உதவுகிறது. வீட்டுத் தோட்டங்களில் பூச்சிகளை குருவிகள் உண்பதால், 'விவசாயிகளின் நண்பன்' என அழைக்கப்பட்டது. பல சரக்கு கடைகள் முன் சிதறிக் கிடக்கும் தானியங்களை கூட்டமாகச் சேர்ந்து உண்டு மகிழும். ஆட்கள் வந்தால், நடப்பதற்கு வழி விடுவதற்காக சற்று நகர்ந்து கொண்டு தானியங்களை உண்ணும். சூரிய உதயத்திற்கு முன்பே குரல் எழுப்பும். அதன் அழகையும், குரலின் மென்மையையும் ரம்மியமாக ரசிக்கலாம்.\nஅழியும் குருவிகள்: மனிதனின் பழக்க வழக்கங்களில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய மாறுதல்கள், நவீன தகவல் தொழில் நுட்ப புரட்சி, இயற்கைக்கு மாறாக எடுக்கப்படும் சுற்றுச்சூழல் நடவடிக்கை போன்ற காரணங்களால், சிட்டுக்குருவி எனும் சிற்றினம் அழிவுப்பாதைக்கு தள்ளப்பட்டுள்ளது.\n* வெளிக்காற்று வீட்டிற்குள் வர முடியாதபடி, வீடு முழுவதும், 'ஏசி' செய்யப்பட்ட வீடுகளில், குருவிகள் கூடு கட்டி குடியிருக்க இயலாமல் போனது.\n* பெட்ரோலில் இருந்து வெளியேறும், 'மீத்தைல் நைட்ரேட்' எனும் ரசாயனக் கழிவு புகையால், காற்று மாசடைந்து குருவிகளை வாழ வைக்கும் பூச்சி இனங்கள் அழிகின்றன. இதனால் ஏற்படும் உணவுப் பற்றாக்குறையால், நகருக்குள் வாழும் குருவிகள் பட்டினி கிடந்தே அழிகின்றன.\n* பல சரக்கு கடைகள் மூடப்பட்டு வருகின்றன. அவற்றிற்கு பதிலாக, டிபார்ட்மென்ட் ஸ்டோர்கள் அதிகளவு வளர்ந்து வருகின்றன. இங்கு பிளாஸ்டிக் பைகளில் தானியங்கள் அடைத்து விற்கப்படுவதால், ரோட்டில் தானியங்கள் சிதற வாய்ப்பில்லை.\n* வீட்டுத் தோட்டங்கள், வயல்களில் பயிர்களுக்கு பூச்சிக்கொல்லி தெளித்து, பூச்சிகள் கொல்லப்படுகின்றன. இதன் காரணமாக, உணவு இல்லாமல் குருவிகள் அழிகின்றன.\n* இவையனைத்துக்கும் மகுடம் சூட்டியது போல், மொபைல் போன் வருகைக்கு பின், குருவிகள் 90 சதவீதம் அழிந்துவிட்டன. மொபைல் போன் டவர்களில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சு, குருவியின் கருவை சிதைக்கிறது. முட்டையிட்டாலும், கரு வளர்ச்சி அடையாமல் வீணாகிறது.\nதிண்டுக்கல் மாவட்டத்தில் மலைக்கிராமங்களில் சொற்ப அளவில் சிட்டுக்குருவிகள் தென்படுகின்றன. தேனி, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட பிற மாவட்டங்களில், பெயரளவிற்கு கூட இவற்றை காண முடியவில்லை. விருதுநகர் மாவட்ட வனப்பகுதிகளில் அதிகளவில் சிட்டுக்குருவிகள் இருந்தன. மரங்கள் வெட்டப்படுவதாலும், வறட்சி காரணமாகவும் குருவிகள் பசுமையான இடங்களுக்கு இடம் பெயர்வது அதிகரித்து வருகிறது.\nதிருச்சி இயற்கை சங்கம் பிஷப் ஹீபர் கல்லூரி பேராசிரியர் ரெல்டன் கூறியதாவது: ஆண் குருவி - பெண் குருவி ரோமத்தின் அடிப்படையில் வேறுபடுகின்றன. வீடுகளின் கட்டமைப்பு, நச்சுத்தன்மை வாய்ந்த உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளினால் இந்த இனம் அழிகிறது. கொடைக்கானல், தாண்டிக்குடி, சிறுமலை, பன்றிமலை போன்ற இடங்களில் மட்டுமே இவற்றை காண முடிகிறது. இப்பறவை இனம் அழியாமல் இருக்க, இயற் கையை பாதுகாக்க சமூக ஆர்வலர்கள் முன்வர வேண்டும். இவ்வாறு ரெல்டன் கூறினார்.\nமதுரை பறவை வியாபாரி திலீப்குமார் கூறியதாவது: மொபைல் போன் வருகைக்கு பின், சிட்டுக்குருவிகள் இனப்பெருக்கம் செய்ய இயலாதபடி, அதன் கருப்பையில் பாதிப்பு ஏற்பட்டு வருவதை பறவை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மொபைல் போன் டவர்கள் அல்லாத மலைப்பகுதிகளில், சிட்டுக்குருவிகள் குறைந்த அளவில் வசிக்கின்றன. கிராமங்களிலும் மொபைல் போன் சேவைகள் அதிகரித்து வருவதால், சிட்டுக்குருவிகள் அழிந்து வருகின்றன. இவ்வாறு திலீப்குமார் கூறினார்.\nகுருவிகளை காக்கும் வழி: குறைந்த எண்ணிக்கையில் உள்ள சிட்டுக்குருவிகளை காக்கும் பொறுப்பு ஒவ்வொருவரிடமும் உள்ளது. சிறிய வீடாக இருந்தாலும், தோட்டம் அமைக்க வேண்டும். பயிர்கள், தாவரங்கள் மீது பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கக்கூடாது. குருவிகள் குடிக்க கிண்ணத்தில் தண்ணீர் வைக்க வேண்டும். வீட்டு முன், மொட்டை மாடியில் தானியங்களை தூவ வேண்டும். மண்பானையில் வைக்கோல் வைத்தால், குருவிகள் கூடு கட்ட பயன்படும்.\nஇந்த வார விகடனில் அந்த கட்டுரை...\nபுழுதி பறக்கும் கரிசல் காடுதான் முத்துமாரியின் முகவரி. தயங்கி வெளிப்படும் வார்த்தைகளின் உச்சரிப்பில் இன்னமும் நகரம் பழகாத ஒரு கிராமத்துப் பெண் தெரிகிறார். வாய்ப்புகளும் வசதிகளும் அற்ற விருதுநகர் பக்கத்துக் கிராமம் சத்திரரெட்டியப்பட்டியில் பிறந்த முத்துமாரி இன்று டெபுடி கலெக்டர்\nமுதல் தலைமுறையாகப் பள்ளிக்கூடம் பார்த்து, முட்டி மோதி முன்னேறி வந்திருக்கும் கரிசல் மண் பெண்\nவாய்ப்புகள் சூழ்ந்திருக்க உச்சம் தொடுவதைக் காட்டிலும்; உண்ணவும், உடுக்கவும், படிக்கவும், பயணிக்கவும் வாய்ப்புகள் மறுக்கப்படும் இடத்தில் இருந்து வெற்றியை எட்டிப்பிடிப்பது கூடுதல் சாதனை\n''விருதுநகர்ல இருந்து மதுரை போற ரோட்லதான் எங்க ஊரு. அப்பா சிவபாக்கியத்துக்கும் அம்மா பஞ்சவர்ணத்துக்கும் விவசாயம்தான் வேலை. சொந்தமா இருக்குற கொஞ்சம் நிலத்துல மழை பெய்ஞ்சா ஏதாச்சும் விவசாயம் நடக்கும். மத்த நாளெல்லாம் கூலி வேலை. நானும் அப்பப்போ அவங்ககூட வேலைக்குப் போவேன். பள்ளிக்கூடத்துலயும் எனக்குப் பெருசா எதுவும் தெரியாது. 'வீட்டுல நம்மளை கஷ்டப்பட்டுப் படிக்கவைக்காங்க. ஒழுக்கமாப் படிக்கணும்.' அது மட்டும்தான் தெரியும். அதனால, டீச்சர் என்ன படிச்சுக் குடுத்தாலும் உடனே படிச்சிருவேன். பத்தாங்கிளாஸ்ல நான்தான் ஸ்கூல் ஃபர்ஸ்ட்.\nகள்ளிக்குடி பள்ளிக்கூடத்துல ப்ளஸ் ஒன் சேர்ந்த பிறகுதான் இன்ஜினீயரிங் படிக்கணும்னு ஆசை வந்து வெறியோடு படிச்சேன். எப்பமும் படிப்புதான். ப்ளஸ் டூ-ல 1026 மார்க் எடுத்து பள்ளிக்கூடத்துல இரண்டாவதா வந்தேன். எங்க ஊருக்கு அதெல்லாம் பெரிய மார்க். ஆனா, ஒண்ணுத்துக்கும் பயன்படலை. இன்ஜி னீயரிங் காலேஜ்ல பேமென்ட் ஸீட்டுதான் கிடைச்சது. அதுக்கு லட்சக்கணக்குல பணம் கட்டச் சொன்னாங்க. எங்க வீட்டுல முடியலை. அதுக்காக என்ன செய்ய\nபிறகு, விருதுநகர் வி.வி.வன்னியபெருமாள் பெண்கள் கல்லூரியில் பி.ஏ. ஹிஸ்ட்ரி சேர்ந்தேன். 'நல்லாப் படிக்கிற பிள்ளையை இப்படி ஹிஸ்ட்ரில சேர்த்துவிட்டிருக்குறதப் பாரு'ன்னு ஊரெல்லாம் எங்க அம்மா, அப்பாவைக் கேலி பண்ணாங்க. 'வரலாறு படிச்சா அரசாங்க வாத்தியார் வேலை மட்டும்தான் கிடைக்கும். இப்பல்லாம் அரசாங்கத்துல ஹிஸ்ட்ரி வாத்தியார் வேலைக்கு ஆள் எடுக்குறது இல்லை' அப்படி, இப்படின்னு ஆளாளுக்கு சொன்னாங்க. அதைக் கேட்டு எங்க வீட்டுக்கும் வருத்தம். நானும் அழுவேன். மெள்ள மெள்ளத் தேறி, 'சரி எதுவா இருந்தா என்ன படிக்கிறதை ஒழுங்காப் படிப்போம்'னு படிக்க ஆரம்பிச்சேன். டிகிரி ரிசல்ட் வந்தப்போ பி.ஏ.ஹிஸ்ட்ரியில நான்தான் யுனிவர்சிட்டி கோல்டு மெடல்.\nஅடுத்தது என்ன பண்றதுன்னும் தெரியலை. அம்மா, அப்பா ரெண்டு பேருமே படிக்காததுனால விவரம் சொல்ல யாரும் இல்லை. நாங்களா உக்காந்து பேசி 'டீச்சருக்குப் படிச்சா என்னிக்கு இருந்தாலும் வேலை கிடைச்சிரும்'னு முடிவு பண்ணினோம். சேலம் சாரதா பெண்கள் கல்வியியல் கல்லூரியில் பி.எட்., சேர்ந்தேன். ஒரு வருஷம் ஹாஸ்டல். அரசாங்க ஸீட்டுங்கிறதால பெருசாச் செலவு இல்லை. படிச்சு முடிக்கும்போது என்கூட காலேஜ்ல படிச்ச புஷ்பராணியைப் பார்த்தேன். அவங்க மதுரையில தங்கி ஐ.ஏ.எஸ்., தேர்வுக்குத் தயாராகிட்டு இருந்தாங்க. 'நானும் ஐ.ஏ.எஸ்., எழுதணும். என்ன பண்ணணும்'னு கேட்டதுக்கு, 'தினமும் பேப்பரைப் படி. அதுல வர்ற அறிவிப்புகளைப் பார்த்துக்கிட்டே இரு'ன்னு சொன்னாங்க. அதுக்குப் பிறகுதான் வீட்டுல தினமும் பேப்பர் போடச் சொல்லி படிக்க ஆரம்பிச்சேன்.\nஅப்படித்தான் ஒருநாள் 'சைதை துரைசாமி மனித நேய அறக்கட்டளை' சார்பா சென்னையில் இலவச ஐ.ஏ.எஸ்., பயிற்சி கொடுக்கிற தகவல் தெரிஞ்சது. அங்கே போனேன். சின்ன தேர்வுவெச்சு சேர்த்துக்கிட்டாங்க. அதுவரைக்கும் சென்னைக்கு நான் வந்ததே இல்லை. ஆனா, அந்தப் பயமே தெரியாம அத்தனை அன்போடு அக்கறையோடு கவனிச்சுக்கிட்டார் துரைசாமி சார். இந்த ரெண்டு வருஷத்துல நான் சாப்பிட்ட சாப்பாடு, துணிமணி எல்லாம் அவர் தந்ததுதான். நானெல்லாம் சென்னைக்கு வந்து படிப்பேன்னு நினைச்சுக்கூடப் பார்க்கலை. அதுக்கு ஒரு வாய்ப்புக் கிடைச்சிருக்கும்போது அதை சரியாப் பயன்படுத்திக்கணும்னு நினைச்சேன்.\n2008-ல் நான் இந்த ஐ.ஏ.எஸ்., அகாடமியில் வந்து சேர்ந்தேன். சிவில் சர்வீஸ் எழுதுறதுதான் நோக்கம். ஆனா, 2009 ஆரம்பத்தில் குரூப்-1 எக்ஸாம் வந்தப்போ, எங்க குடும்ப நிலைமையை மனசுலவெச்சு அதை எழுதலாம்னு நினைச்சேன். அகாடமியில் சொன்னப்போ, 'தாராளமா எழுதுங்க'ன்னு சொல்லி அதுக்குரிய புத்தகங்கள் எல்லாம் வாங்கித் தந்தாங்க. ராத்திரி பகலா எனக்குப் படிக்கிறதுக்கு எல்லாரும் உதவி பண்ணாங்க. ஆரம்பக் கட்டத் தேர்வு, பிறகு எழுத்துத் தேர்வு, அப்புறம் நேர்முகத் தேர்வு எல்லாம் வரிசையா முடிஞ்சு போன மாசம்தான் தேர்வு முடிவு வந்துச்சு. முதல் முயற்சியிலேயே குரூப் -1 தேர்வுல ஜெயிச்சுட்டேன். இப்போ நான் டெபுடி கலெக்டர்'' என்கிறார் முத்துமாரி கம்பீரமாக.\n''இனி என் நோக்கம் ஐ.ஏ.எஸ்-தான். தொடர்ந்து சிவில் சர்வீஸ் எழுதுவேன். சத்திரரெட்டியப்பட்டியின் முதல் ஐ.ஏ.எஸ்., நானாக இருப்பேன்\nமதுரை மாநகராட்சியின் 24 பள்ளிகளுக்கு சென்று, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ள \"மக்கு' பையன்களை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு இரவு, பகலாக பயிற்சி அளித்து வெற்றி பெற செய்தேன். இந்தாண்டு 96 பேர் நூற்றுக்கு நூறு மார்க் பெற தயாராகி வருகின்றனர்'' என்று பெருமிதம் கொள்கிறார் பாலாஜி.\nமதுரை கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் பிரிவு துணை தாசில்தாராக உள்ளார். எம்.எஸ்.சி., எம்.எட்., எம்.ஏ., ஆங்கிலம், எம்.ஏ., வரலாறு, எம்.சி.ஏ., என்று இவரின் தகுதி நீள்கிறது. பிளஸ் 2 மாணவர்களுக்கு கற்றுத்தருவதற்காகவே பிரெஞ்சு, சமஸ்கிருதம் என மொழிப்பாடங்களிலும் தேர்ச்சி பெற்றிருக்கிறார்.\"\"ஒவ்வொரு பள்ளியிலும் 20 மாணவர்கள் வரை தேர்வு செய்தோம். மாநகராட்சி கல்யாண மண்டபத்தில், இவர்களுக்கு ஸ்பான்சர்கள் மூலம் இலவச உணவு, கைடுகளை கொடுத்து நானும், எனது நண்பர்களும் பயிற்சி அளித்து வருகிறோம்.\nதற்போது இந்த மாணவர்களுக்கு காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் பயிற்சி அளிக்க, திருமலை நாயக்கர் மகால் எதிரேயுள்ள பள்ளியை மாநகராட்சி ஒதுக்கி தந்துள்ளது'' என்று கூறும் பாலாஜி, பொதுத்தேர்வில் கேட்கப்படும் கேள்வி நுணுக்கங்கள், எப்படி சுருக்கமாக பதில் தருவது என பல \"ரகசியங்களை' சொல்ல, இவரால் தேர்வில் வென்ற மாணவர்கள் இன்று வாழ்க்கையிலும் ஜெயித்துள்ளனர்.\n\"\"மாணவர்கள் மட்டுமில்லாது, எனது துறையில் வேலைபார்க்கும் ரிக்கார்டு கிளார்க், அலுவலக உதவியாளர்கள்15பேரை துறைத் தேர்வு எழுத வைத்து, அவர்களை இளநிலை உதவியாளராக பதவி உயர்த்தியுள்ளேன்'' என்று தனது இன்னொரு சேவை குறித்தும் மனம் திறக்கிறார் பாலாஜி.அடுத்த கட்டமாக, மாணவியருக்கு பிரத்யேக பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ள பாலாஜி, தற்போது வீடியோ கான்பரன்சிங் மற்றும் \"சிடி'க்கள் மூலம் பாடம் நடத்தவும் தயாராக இருக்கிறார். மாநகராட்சி பள்ளி மாணவர்கள் மட்டுமல்ல, மற்ற பள்ளி மாணவர்களும் பாலாஜியை 98653 87352ல் தொடர்பு கொண்டு பயன் பெறலாம்.\nகுளிரடிக்கும் காலை; குன்னூர் பஸ் ஸ்டாண்ட்டிலிருந்து மேட்டுப்பாளையம் கிளம்புகிறது அந்த அரசு பஸ். வேகமாய் ஓடி வந்து நாலு பேர் பஸ் ஏற, \"ஏங்க, இவ்வளவு அவசரம், அடுத்த பஸ்ல வரலாமே' என்றால், \"இதுல போனாத்தான் இன்னிக்கு நாளு நல்லாயிருக்கும்,' என்று புதிர் முடிச்சுப் போட்டார்கள். அவர்கள் முடிப்பதற்குள் ஒரு கணீர்க்குரல்...\"அன்பார்ந்த பயணிகளுக்கு இனிய காலை வணக்கம். உங்களின் பயணம் இனிமையாக அமையவும், நினைத்துக் கொண்டிருக்கும் காரியங்கள் நிறைவேறவும், எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். இனிய வாழ்க்கைக்கு, போதை வஸ்துகளை தவிர்க்க வேண்டும்; முடிந்த அளவுக்கு மரக் கன்றுகளை நட்டு சுற்றுச்சூழலை பாதுகாத்திடுங்கள், பெரியோரை மதிப்போம்; பெற்றோரை பேணுவோம்; ரத்தானம் செய்வோம்...''என்று தொடர்கிறது அந்த உரை. நிகழ்த்துவது அந்த பஸ்சின் கண்டக்டர் கனக சுப்ரமணியம்(54). 28 ஆண்டுகளாக அரசு பஸ் நடத்துனர். பூர்வீகம், நீலகிரி மாவட்டம் கொலக் கம்பை. முதலில் தனது சொற்பொழிவை துவக்கியது கொலக்கம்பை - குன்னூர் வழித்தடத்தில்தான்.இப்போது குன்னூர்-மேட்டுப்பாளையம் வழித்தடத்திலும் அவரது சிற்றுரை ஒலிக்கிறது. காலையில் வேலைக்கு வரும்போது, தெருவிளக் குகளை அணைப்பது அவர் செய்யும் முதல் வேலை. பஸ்சை சுத்தம் செய்து, பயணிகளிடம் 5 நிமிடம் சொற்பொழிவாற்றுவது அன்றாட வேலை.பஸ்சில் திருக்குறள் எழுதியிருந்தாலும், \"தினம் ஒரு திருக்குறள்' என்ற முறையில், ஒரு குறளைச் சொல்லி, அதற்கு விளக்கத் தையும் சொல்கிறார். பஸ் சில் பயணிக்கும் ஒருவரை தேர்வு செய்து, அவருக்கு திருக்குறள் புத்தகத்தை பரிசாகவும் கொடுக்கிறார்.பஸ் புறப்படும் முன் அவர் சொல்லும் உத்தரவாதம்...\"எங்கள் ஓட்டுனர், பேருந்தை இயக்கும் போது கைபேசியில் பேச மாட்டார்,''அவர் சொல்வதை ஆமோதிப்பதைப்போல் திரும்புகிறார் ஓட்டுனர். இந்த காம்பினேஷனில் கவர்ந்திழுக்கப்பட்டு, தினமும் இந்த பஸ்சை தேடி ஓடி வருகிறார்கள் பயணிகள்.பஸ்சில் வரும் குழந்தைகளிடம் தன்னம்பிக்கை கருத்துகளை தெரிவிக்கும் கனக சுப்ரமணியம், ஏழைக்குழந்தைகளுக்கு, இலவச சீருடையும் வாங் கித் தருகிறார். தேர்வில் அதிக மதிப்பெண் வாங்கினால், பயணிகளுக்கு மத்தியில் சந்தன மாலை அணிவித்து கவுரவிக்கிறார்.\"செந்தமிழ்' அறக்கட்டளையை நடத்தும் கனகு, சிறைத்துறையின் அனுமதியோடு, கைதிகளுக்கு போட்டிகளை நடத்தி பரிசும் வழங்குகிறார். நண்பர் ஒருவருடன் சேர்ந்து கோ வையில் இவர் நடத்தும் \"சாரோன்' முதியோர் இல்லத்தில் இப்போது இருக்கும் ஆதரவற்ற முதியோர் எண்ணிக்கை 15.எச்.ஐ.வி.,யால் பாதித் தோருக்கு, கோவை \"சினேகம்' அறக்கட்டளையுடன் இணைந்து, இலவச மருந்து, சத்து மாவு வழங்கி வருகிறார். தனியார் தொண்டு நிறுவனங்கள் இவருக்கு, \"சேவைச்செம்மல்', \"கோவை மாமனிதர்', \"இலக்கியக் காவலர்', \"செம்மொழிச் செல்வர்' என பல பட்டங் களைக் கொடுத்துள்ளன.\"எனக்கு சத்ய சந்திரன், சத்ய சுதன்னு ரெண்டு மகன்கள் இருக்காங்க, வளர்ப்பு மகன், மகள்கள் நாலு பேர் இருக்காங்க, அவுங்களோட ஒத்துழைப்பு இல்லாம இவ்வளவு வேலைகளை நான் செய்ய முடியாது. எங்க ஆபீசருங்க பண்ற உதவி அதை விடப் பெருசு, நாலு பேருக்கு நல்லது செய்யணும்னாலும் ரெண்டு கையாவது இணைஞ்சாத்தான் நடக் கும். அப்பிடி எனக்கு உதவுற கைகள் நிறைய...,''இரு கைகளையும் அகல விரித்துச் சொல்கிறார் கனக சுப்ரமணியம்.இவரது பஸ்சில் அடிக்கடி பயணிகள் விசில் அடிப்பதுண்டு. அதற்காக இவர் அலுத்துக் கொள்வதில்லை; அத்தனையும் இவரது சொற்பொழிவுக்காக கிடைப்பவை. நல்ல நடத்துனர், நல்ல பயணிகள்... போலாம் ரைட்\nதுணைநலம் ஆக்கம் த்ருஉம் வினைநலம்\n''என்னை கோயம்புத்தூருக்கு டிரான்ஸ்ஃபர் பண்ணியிருந்த நேரம். என் பொண்ணு யாழினிக்கு அப்போ மூணு வயசு. திடீர்னு ஒருநாள் ராத்திரி அவ மூச்சுவிட சிரமப்பட்டா. ஹாஸ் பிடலுக்குத் தூக்கிட்டுப் போனா உடனே அட்மிட் பண்ணச் சொல்லிட் டாங்க. மாசக் கடைசிங்கிறதால கையில ஆயிரம் ரூபாய்கூட இல்லை. புது ஊரு. அறிமுகம் இல்லாத மனுசங்க. எனக்குக் கீழே வேலை பார்க்குறவங்ககிட்ட கடன் கேட்கவும் சங்கடமா இருந்துச்சு. காஞ்சிபுரத்துல நான் வேலை பார்த்துட்டு இருந்தப்ப,எனக்கு நண்பரான ஒரு ஸ்கூல் டீச்சரும் அப்ப கோவைக்கு டிரான்ஸ்ஃபர் ஆகி வந்திருந்தாரு. அவர்கிட்ட தயங்கிட்டே நாலாயிரம் ரூபாய் கடன் கேட்கவும், அரை மணி நேரத்துல கொண்டுவந்து கொடுத்தார். உடனே, குழந்தைக்கு ட்ரீட்மென்ட் ஆரம்பிச்சுட்டோம். ஆனா, சம்பளம் வாங்கினதும் அந்தக் கடனை அடைச்சதும்தான் என் மனசுல இருந்த பாரம் இறங்குச்சு\nசகாயம் ஐ.ஏ.எஸ்., நாமக்கல் மாவட்ட ஆட்சியர். மதுரையில் ஒன்பது லட்ச ரூபாய் மதிப்பில் எல்.ஐ.சி. ஹவுஸிங் லோன் மூலம் கட்டப்பட்ட ஒரு வீடு, வங்கியில் 7,172ரூபாய் சேமிப்பு எனப் பகிரங்கமாகத் தனது சொத்துப் பட்டியலை வெளியிட்ட இந்தியாவின் முதல் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம். 'லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து' வாசகத்துக்குக் கீழ் தலை நிமிர்ந்து அமர்ந்திருக்கிறார் சகாயம்.\n''நான் அந்த கோயம்புத்தூர் சம்பவத்தை ஏன் சொல்றேன்னா... அப்ப என் கன்ட்ரோல்ல650 மதுபானக் கடைகள் இருந்தன. லைசென்ஸ் புதுப்பிக்க கடைக்குத் தலா 10 ஆயிரம் ரூபாய்னு கொடுக்கத் தயரா இருந்தாங்க. நான் ஒரு வார்த்தை சொல்லியிருந்தா, அடுத்த அஞ்சாவது நிமிஷம் 65 லட்ச ரூபாய் என் வீடு தேடி வந்திருக்கும். ஆயிரம் ரூபாய்கூட கையில் இல்லாத, மகளுக்கு உடம்பு சரியில்லாத சூழ்நிலையில் மனநிலை என்ன மாதிரி இருக்கும்னு யோசிச்சுப்பாருங்க. ஆனா, அதெல்லாம்தான் ஓர் அரசு அதிகாரியின் நேர்மைக்கான சோதனை. நேர்மையா இருக்குறதுல ஒரே ஒரு சிக்கல் மட்டும்தான். நாளுக்கு நாள் நமக்கு எதிரிகள் அதிகரிச்சுட்டே போவாங்க. அவங்களை மட்டும் சமாளிச்சுட்டாப் போதும்'' - தடதடக்கும் வார்த்தைகளில் கொப்பளிக்கிறது உற்சாகம்.\n''புதுக்கோட்டை மாவட்டம் பெருஞ்சுனை குக்கிராமம்தான் என் ஊரு. 'மத்தவங்க தோட்டத்து மாங்காய் தெருவுல கிடந்தாக்கூட எடுத்துட்டு வரக் கூடாது'ன்னு சொல்ற அம்மா. 'நீ படிச்சு கலெக்டர் ஆகி, உதவின்னு கேட்டு வர்றவங்களுக்கு எல்லாம் உதவணும்டா'ன்னு சொல்லிட்டே இருக்குற அப்பா. 'கலெக்டர்தானே... ஆயிடுவோம்'னு படிச்சேன். ஆயிட்டேன். வேலைக்குச் சேர்ந்த முதல் நாள் நம்ம மனசு எந்தளவுக்குப் புத்துணர்ச்சியோடவும் புனிதமாகவும் இருக்கோ... கடைசி நாளின்போதும் அதே உணர்ச்சியோடு ஓய்வு பெறணும்னு மட்டும் முடிவு பண்ணேன்.\nகாஞ்சிபுரத்துல டி.ஆர்.ஓ-வா இருந்தப்ப ஒரு பெரியவர் தான் வாங்கிய பெப்சியில் அழுக்குப் படலம் இருந்ததாகப் புகார் கொடுத்தார். சாம்பிளை லேப் டெஸ்ட்டுக்கு அனுப்பினதுல, 'மனிதர்கள் குடிக்க ஏற்ற பானமில்லை'ன்னு ரிப்போர்ட் வந்தது. சட்டப்படி அந்த நிறுவனம் மேல என்ன நடவடிக்கை எடுக்கணும்னு ஒரு அறிக்கை தயாரிச்சேன். ரொம்ப யோசனைக்குப் பிறகு தாசில்தார்கிட்ட எட்டு பூட்டு மட்டும் வாங்கிட்டு வரச் சொன்னேன். எதுக்குன்னு புரியாம வாங்கிட்டு வந்தவரைக் கூட்டிக்கிட்டு மதுராந்தகத்துல இருக்குற பெப்சி கம்பெனிக்குப் போனேன்.\nநான் தயாரித்த அறிக்கையின் ஒரு நகலை கம்பெனி மேனேஜர்கிட்ட கொடுத்துட்டு, 'கம்பெனியைப் பூட்டி சீல்வைக்கப் போறோம். எல்லாரையும் வெளியே வரச் சொல்லுங்க'ன்னு சொன்னோம். அந்த மேனேஜரைவிட என்கூட வந்த தாசில்தார் ஆடிப் போயிட்டாரு. 'சார்... பெரிய பிரச்னை ஆயிடும். எதுக்கும் கலெக்டரை ஒரு வார்த்தை கேட்டுக்கலாம்'னு பதறுனாரு. 'கலெக்டரைக் கேட்டா சீல்வைக்க விட மாட்டாரு. சட்டப்படி இந்தக் கம்பெனியை மூட நமக்கே அதிகாரம் இருக்கு. நீங்க தைரியமா உங்க கடமையைச் செய்யுங்க'ன்னு அவரை உள்ளே அனுப்பினேன். ஒரு மணி நேரம் கழிச்சு இன்னும் பதற்றத்தோடு வெளியே வந்தவரு, 'சார்... அவங்க அமெரிக்கா வரைக்கும் பேசுறாங்க சார். சி.எம்-கிட்ட பேசுறதாச் சொல்றாங்க சார். என்ன பண்ணலாம்'னு கேட்டாரு. 'உள்ளே இருக்கிறவங்களை அரெஸ்ட் பண்ணிட்டு சீல்வைக்க வேண்டியதுதான்'னு நான் சொல்லவும்தான் எல்லாரும் பயந்து வெளியே வந்தாங்க. கம்பெனியை இழுத்து மூடி, எட்டு பூட்டுகளையும் போட்டு சீல்வெச்சுட்டோம்.\nநான் உடனே அலுவலகத்துக்குப் போகாம ஒரு குக்கிராமத்துக்குப் போயி ரேஷன் கடை, பள்ளிக்கூடத்தை எல்லாம் ஆய்வு பண்ணி முடிச்சுட்டு, ராத்திரி எட்டு மணிக்கு வீட்டுக்கு வந்தேன். என் மனைவி வாசல்லயே காத்துட்டு இருந்தாங்க. கலெக்டர், சீஃப் செக்ரெட்டரி, உள்துறைச் செயலாளர்னு பலரும் என்னைக் கேட்டு வீட்டுக்கு போன் பண்ணிஇருக்காங்க. நான் திரும்ப எல்லோருக்கும் போன் பண்ணா, 'யாரைக் கேட்டு சீல்வெச்சீங்க என்ன காரியம் பண்ணியிருக்கீங்க தெரியுமா என்ன காரியம் பண்ணியிருக்கீங்க தெரியுமா'ன்னு எல்லாரும் கேள்வி கேட்டாங்க. 'நான் என் கடமை யைத் தான் சார் செஞ்சேன். மக்களுக்கு நல்லது செஞ்சதுக்காக சஸ்பெண்ட் பண்ணா, தாராளமாப் பண்ணிக்கோங்க'ன்னு சொல்லிட்டேன். மறு நாள் எந்தப் பத்திரிகைலயும் பெட்டிச் செய்தியாக்கூட பெப்சிக்கு சீல்வெச்ச சம்பவம் ரிப்போர்ட் செய்யப்படவே இல்லை.\nரெண்டு நாள் கழிச்சு ஜூனியர் விகடன்ல மட்டும் அந்தச் செய்தி விரிவா வந்திருந்தது. அதுக்குப் பிறகுதான் பெப்சிக்கு நான் சீல்வெச்ச விஷயமே வெளி உலகத்துக்குத் தெரிஞ்சது.\nஇதுவரை 15 இடங்களுக்கு என்னை மாத்தி மாத்திப் பந்தாடிட்டாங்க. இப்போதான் முதன்முதலா நாமக்கல் மாவட்டத்துக்கு கலெக்டர் ஆகியிருக்கேன். மாவட்டம் முழுக்க ஒரு கோடி மரக் கன்றுகள் நடத் திட்டமிட்டு, ஏழு லட்சம் மரக் கன்றுகளை நட்டாச்சு. அவற்றின் முறையான பராமரிப்புக்கும் ஏற்பாடு பண்ணியாச்சு. இன்னும் 10 வருஷத்துல அதிக மரங்கள் உள்ள மாவட்டமாக நாமக்கல் இருக்கும். ஏற்கெனவே நொந்து போயிருக்கும் விவசாயிகளை, 'குறை தீர்க்கும் கூட்டத்துக்கு வா'ன்னு ஒவ்வொரு மாசமும் கலெக்டர் ஆபீசுக்கு அலைக்கழிக்கிறது நல்லாவா இருக்குன்னு நானே விவசாயிகளைத் தேடிப் போக ஆரம்பிச்சேன். ஒருநாள் ராத்திரி முழுக்க அந்தந்த கிராமத்துலயே தங்கி,அவங்க குறைகளை வாழ்ந்து பார்த்துட்டு வருவேன். அப்பதான் அவங்க சொல்றதுக்கு முன்னாடியே அவங்க குறைகள் என்னன்னு நாமளே உணர முடியும்'' என்கிற சகாயம், தன் மகள் யாழினியை மடியில் வைத்துக்கொண்டு, ''சொல்லுடா குட்டி... உயர உயரப் பற... வானம் வசப்படும்'' என்கிற சகாயம், தன் மகள் யாழினியை மடியில் வைத்துக்கொண்டு, ''சொல்லுடா குட்டி... உயர உயரப் பற... வானம் வசப்படும்'' என சொல்லிக் கொடுக்கிறார்.\n''உயர உயரப் பற... வானம் ஒரு நாள் வசப்படும்'தான் கரெக்ட்'' - திருத்திச் சிரிக்கிறாள் கலெக்டர் மகள்\nசீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு\nஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nagoreflash.blogspot.com/2013/06/blog-post_28.html", "date_download": "2018-04-26T13:06:41Z", "digest": "sha1:LUP5KLVWBO2SRYPEVDJ6XGLMD5A24AC4", "length": 21118, "nlines": 231, "source_domain": "nagoreflash.blogspot.com", "title": "NAGORE FLASH: விபத்தில் உயிரிழந்த சகோதர சகோதரிகளுக்காக பிரார்த்திப்போம்..", "raw_content": "................அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்................. இந்த இணையத்தளம் நாகூர் வாழ் மக்களுக்கான ஓர் அறிவகம்.\n) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)\nவிபத்தில் உயிரிழந்த சகோதர சகோதரிகளுக்காக பிரார்த்திப்போம்..\nபொறையாறு அருகே நேற்று (வியாழக்கிழமை) மாலை டேங்கர் லாரி - கார் மோதிக் கொண்டதில் நாகூரை சேர்ந்த 2 பெண்கள் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். இச்சம்வம் ஊர் மக்களை பெரிதும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.\nநாகை மாவட்டம், நாகூர் தைக்கால் தெருவைச் சேர்ந்த செய்யது அகமது (52),இவரது மனைவி ஜுலைகான் நாச்சியார் (45), செய்யது அகமதுவின் சகோதரி ஜீனத் (42) ஆகியோர் சென்னையிலிருந்து காரில் நாகூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர். காரை நாகூர் சமரசநகர் அப்துல் கபூர் மகன் யூசுப் (28) ஒட்டினார்.\nபொறையாறு அருகே நண்டலாறு சோதனைச் சாவடிக்கு முன்பாக உள்ள மரவாடி அருகே வந்தபோது காரைக்காலிலிருந்து சீர்காழி நோக்கி வந்த டேங்கர் லாரி, கார் மீது நேருக்கு நேராக மோதியுள்ளது.\nஇதில் காரில் இருந்த ஜுலைகான் நாச்சியார், ஜீனத், ஓட்டுநர் யூசுப் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.(இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்) பலத்த காயமடைந்த செய்யது அகமது பொறையாறு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கிருந்து நாகப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்...சவூதியிலிருந்து வந்த ஜீனத்தை நாகூருக்கு செய்யது அகமது அழைத்து வந்தபோது இவ்விபத்து நேரிட்டது.\nமூவரின் உடல் இன்று காலை நாகூருக்கு கொண்டு வரபட்டு மாலை 4:30மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.\nஉயிரிழந்த சகோதர சகோதரிகளுக்கு மறுமை வாழ்வு வெற்றி பெற நாம் அனைவரும் அல்லாஹ்விடம் பிரார்த்திக்க வேண்டும் இன்ஷால்லாஹ்.\nமேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அல்லாஹ் மனதைரியத்தை கொடுக்கவேண்டியும் நாம் பிரார்திப்போமாக...\nவிபத்தில் உருக்குலைந்த கார் :\nஅல்லாஹ் மரணித்த சகோதர சகோதரிகளின் பாவத்தை பிழைபொறுத்து மறுமையில் வெற்றிபெற செய்வானாக....\nஇஸ்லாம் கூறும் இன்பமான கணவன் மனைவியா நீங்கள் \nதிருமணம் செய்து கணவன் மனைவியாக கைக் கோர்ப்பவர்கள் கடைசிவரை சந்தோசமாக வாழ வேண்டும் என்றே ஆசைப்படுவார்கள். மணமக்களை வாழ்த்துபவர்கள் கூட இதைத்...\nகளமிறங்கிய போராட்ட குழுவிற்கு ஆதரவுகொடுப்போம்.\nபிரபல இஸ்லாமிய அறிஞர் ஜாகிர் நாயக்கிற்கு பிரிட்டன் தடை வலுக்கும் எதிர்ப்பு\nபிரபல இஸ்லாமிய அறி ஞரும் சர்வதேச சொற்பொழி வாளருமான ஜாகிர் நாயக் பிரிட்டனுக்கு வர அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது பெரும் பரபர...\nVote List-ல் உங்கள் பெயர் இருக்கா...\nVote List-ல் நமது பெயர் மற்றும் முகவரியை சரிபார்க்க இந்த Website உதவுகிறது. Vote List-ல் பெயர் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. நீங்கள் தேர்...\nபெண்களை துரத்தும் ரகசிய கேமராக்கள் – ஓர் அபாய எச்சரிக்கை \n( மிக நுணுக்கமான செய்தி என்பதால் நீண்ட பதிவாக எழுதி இருகிறோம் குறிப்பாக பெண்கள் அளிப்பு பார்க்காமல் முழுமையாக படித்து பயன்பெறவேண்டும்,மற்றவ...\nவிந்தின் பிறப்பிடம் - திருக்குரானின் விளக்கம்\nகுர்ஆன் - அறிவுக்கும் அறிவியலுக்கும் ஏற்ற எக்காலத்திற்கும் பொருந்தும் ஓர் வாழ்வியல் நெறிநூல் இது அறிவியல் நூலல்ல; ஆனாலும் அறிவியலையும் உள்ள...\n\"இஸ்லாத்தின் பார்வையில் இசை ஒரு முழுமையான ஆய்வு\"\n இசை என்பதன் விளக்கம் என்ன … இசை என்ற சொல்லுக்கு இசைய வைப்பது எனறு பொருள். இசை (Music) என்பது ஒழுங்கு செய...\nஹதீஸ் - அடிப்படை விளக்கம்\n ஹதஸ் என்ற வேர்ச்சொல்லிலிருந்து பெறப்பட்ட சொல்தான் ஹதீஸ் என்பது. ஹதீஸ் என்றால் உரை உரையாடல் புதியசெய்தி எனப்ப...\nநவீன காலத்து அடிமைகளை விடுவிப்போம்....\nவளைகுடா நாடுகளில் வேலை செய்யும் முஸ்லிம்களில், கணிசமானவர்கள் வீடுகளில் வாகன ஓட்டுனர் வேலை செய்பவர்களாக உள்ளனர். இவர்களில் பெரும்பான்மையினர் ...\nஇரு தரப்பு பேச்சுவார்த்தை எதிர்பார்த்தப்படி சுமூகமாக முடிந்தது.\nஒரு பிரச்சனை எப்படி முறைப்படி கையாளபட வேண்டுமோ அப்படி கையாளபட்டிருகிறது.. அல்ஹம்துலில்லாஹ். கடந்த விநாயகர் சதுர்த்தி அன்று நாகூர் மியா...\n9/11 INSIDE JOB (3) BOOKS (11) HAJ (10) MEDIA (7) POLL (1) ZAKIR NAIK (7) அக்கம் பக்கம் (28) அமைதி (3) அரசியல் (5) அரசு உத்தரவுகள் (14) அரவாணிகள் (1) அவ்லியா (2) அறிவியல் (19) அனுபவம் (26) அஹமது தீதாத் (2) இசை (2) இந்திய முஸ்லிம்கள் வரலாறு (3) இல்லறம் (2) இறுதி தீர்ப்புநாள் (2) உதவி தேவை (13) எச்சரிக்கை (18) ஒற்றுமை (9) கல்வி (24) கனவு இல்லம் (1) கிலாபத் (2) கேள்வி பதில் (18) சத்தியமார்க்கம் (26) சஹாபாக்கள் (4) சுய பரிசோதனை (3) செல்போன் (12) தப்லீக் (1) தரீக்கா (2) தர்கா (11) தன்னம்பிக்கை (2) திருமணம் (6) தீவிரவாதம் (12) தெரிந்த ரகசியங்கள் (32) தெரிந்து கொள்ளுங்கள் (111) தேசபக்தி (9) தேர்தல் 2011 (22) நபி(ஸல்) (3) நாகூர போல வருமா (6) நாகூர் (1) நாகூர் சங்கதி (119) நாகூர் வரலாறு (2) நாத்திகன் (3) நோன்பு (1) பழனிபாபா (1) பாபரி மஸ்ஜித் (7) பாவமன்னிப்பு (3) பிறை (4) புகை (3) பைபிள் (3) போராட்டக்களம் (10) போராட்டம் (1) மருத்துவம் (10) மவ்லித் (4) மீலாது (1) முஸ்லீம்கள் (5) மோசடி (10) ரமளான் (5) வாக்காளர் பட்டியல் (1) விமர்சனங்கள் (5) விவாதங்கள் (4) ஷியா (2) ஷிர்க் (14) ஸூபித்துவம் (2) ஹதீஸ் (3) ஹிந்து தீவிரவாதிகள் (22) ஹிஜாப் (16)\nநாகூர் ஆட்டோ கேப்ஸ் அனைத்தும் நஷ்டத்தில் இயங்குகிற...\nநாகூர் மகாலெட்சுமி மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளிக...\nவிபத்தில் உயிரிழந்த சகோதர சகோதரிகளுக்காக பிரார்த்...\nகுரான் & ஹதீஸ் நூல்கள் பதிவிறக்கம்\nநபி( ஸல்) முழு வரலாறு\nகிருத்துவ மத போதகருடனான கலந்துரையாடல்\nஇரத்ததானம் செய்ய பதிவு செய்யுங்கள்\nசெய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற மின்னஞ்சல் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்\nதமிழில் டைப் செய்ய (தங்கலிஷ்)\nஅல்லாஹ்வின் சாந்தியும் , சமாதானமும் உங்கள் அனைவரின் மீதும் உண்டாவதாக இந்த தளம் நாகூர் வாழ் மக்களுக்கான ஓர் அறிவகம். நல்ல விஷயங்கள் பகிர்ந்து கொள்ளவும், தவறான விஷயங்களை சுட்டிக்காட்டவும் இந்த தளத்தை அமைத்திருகிறோம்.. நம்ம ஊரை பற்றி மற்றவர்களை விட நாமே அதிகம் விமர்சிக்கிறோம் இதே ஊரில் இருந்துகொண்டு, உண்மையில் நம்மை நாமே விமர்சித்து கொள்கிறோம் என்பதே உண்மை.. ஆகையால் உணர்வுகளை உள்ளது உள்ளபடி பகிர்ந்து கொள்ள ஒரு தளம். மேலும் உலக நாட்டுநடப்புகளும் இங்கே உரியமுறையில் அலசப்படுகிறது. நீங்களும் இந்த தளத்தின் அங்கமே , உங்களின் கருத்துகள் ,விமர்சனங்கள் , கட்டுரைகள் எதுவாக இருந்தாலும் nagoreflash@ymail.com முகவரிக்கு அனுப்பித்தாருங்கள். உங்கள் அன்புடன் அப்துல்லாஹ்.\nஅண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: \"தொழுகையாளிகள் அரபுத் தீபகற்பத்தில் தன்னை இபாதத் செய்வார்கள் -வணங்குவார்கள் - எனும் விஷயத்தில் ஷைத்தான் நிராசை அடைந்து விட்டான். எனினும், முஸ்லிம்களிடையே பகைமைத் தீயை மூட்டுவதில் அவன் நம்பிக்கை இழக்கவில்லை\". அறிவிப்பாளர்: ஜாபிர்(ரலி), நூல்: முஸ்லிம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nagoreflash.blogspot.com/2015/01/blog-post.html", "date_download": "2018-04-26T13:04:18Z", "digest": "sha1:3WGWDE3QM5G7RMVSN22CQMBIBRAO5QU5", "length": 25734, "nlines": 236, "source_domain": "nagoreflash.blogspot.com", "title": "NAGORE FLASH: நாகூர் பங்களா தோட்டத்தின் அவல நிலை...!", "raw_content": "................அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்................. இந்த இணையத்தளம் நாகூர் வாழ் மக்களுக்கான ஓர் அறிவகம்.\n) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)\nநாகூர் பங்களா தோட்டத்தின் அவல நிலை...\nஅந்நாளையில் பெரும் தோட்டமாக இருந்த இப்பகுதி மிக குறுகிய காலத்தில் விலை உயர்ந்த மாடி வீடுகள் உருவான குடியிருப்பு பகுதியாக மாறியது காலத்தின் மாற்றமாகும்..\nகிட்டத்தட்ட 200 க்கு மேல் புதிய மாடி வீடுகள்..இன்னும் நூற்றுக்கணக்கான புதிய வீடுகள் கட்டப்படுகின்றன.மேலும் மக்கள் குடிவந்த வண்ணம் இருக்கின்றனர்.பத்து தெருக்களுக்கு மேல் அமைந்துள்ளது ..பக்கத்தில் கிரஷண்ட் ஸ்கூலும் உள்ளது ..\nஅருமையான மக்கள் ,அமைதியான சூழல் .இத்தனை இருந்தும் இந்தப்பகுதிக்கு நகராட்சி மூலம் எந்த ஒரு வாழ்வாதாரப் பயனும் இதுவரை கிடைக்கவில்லை ..\nஎன்ன காரணம் என கேட்டால் இந்த பகுதி இன்னும் முனிசிபல் அப்ருவல் ஆகவில்லையாம்..அதனால் குடிநீர் குழாய் வசதி,தெரு மின்விளக்கு கம்பங்கள், தெருவிளக்கு,ரோடு வசதி ,,போன்ற அடிப்படையான தேவைகள் நகராட்சி மூலம் பங்களா தோட்ட மக்களுக்கு இதுவரை கிடைக்காமல் இருப்பது பல அல்லல்களை இன்னல்களை தருகிறது ..\nகுறிப்பாக சுத்த சுகாதார வசதியும் கிடையாது . வீட்டுக்கு மின் இணைப்பு கம்பங்கள் கூட அவரவர் சொந்த செலவில் தான் நட்டப்படுகின்றன...\nபுகைப்படத்தில் காண்பது பங்களா தோட்டத்து எல்லா தெரு முனைகளிலும் குப்பைகள் கோபுரமாய் குவிந்து கிடந்தாலும் நகராட்சி அள்ளுவதுக் கிடையாது .அதையும் நாங்கள் தான் கூட்டிப் பெருக்கி எரித்து விடுகிறோம்..வார்டு கவுன்சிலரோ கண்டுக் கொள்ளாமல் கவுன் அணிந்து சுற்றுகிறார்..\nஇதற்கு யாரும் முயற்சி செய்வது போலும் தெரியவில்லை ..அவரவர் இருக்கின்ற காலி மனையை அதிக விலைக்கு எப்படி விற்பது என்ற செயல்பாட்டில்தான் உள்ளனர்...\nமேலும் நகராட்சிக்கு அதிகமான வருவாய் தரக்கூடியது இப்பகுதி..பாதாள சாக்கடை திட்ட பணி இந்த பகுதியில் இதுவரை நடக்கா விட்டாலும் அதற்கான தொகை ரூபாய் 5000 எல்லா வீடுகளிலும் வசூல் செய்யப்பட்டு விட்டது ..காரணம் அதை முதலில் செலுத்தினால்தான் பட்டா பெயர் மாற்றுதல், சப்டிவிஷன்,புதிய வரி போடுதல் இவைகள் செய்ய முடிகிறது\n..இங்கு கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கு புதிய வரியாக வருடத்திற்கு பெருந்தொகை நிர்ணயிக்கப்பட்டு (((ஒரு வீட்டிற்கு குறைந்தது ரூபாய் 1400 ல் இருந்து 5000 வரை)) வசூல் செய்யப்படுகிறது..லஞ்சம் கிஞ்சம் எல்லாம் அதிகம் கொடுத்தாலும் பழைய வரியில் இருந்து புதிய வரி பத்து மடங்கு அதிகம் செலுத்துகிறோம்.முனிசிபல் அப்ருவல் இல்லாததால் அடிப்படை வசதி செய்து தராத நகராட்சி நம்மிடம் வரியைத் தீட்டிப் பிடுங்குகிறது..நாமும் வாய் மூடி செலுத்தி வருகிறோம் ..\nஅப்ருவல் இல்லையென்று வரி போடாமல் இருக்க வேண்டியதுதானே..\nநகராட்சி மூலம் நாம் அனைத்து அடிப்படை வசதிகளை உரிமையோடு தட்டுக் கேட்டுப் பெற பங்களா தோட்ட மக்கள் எல்லாம் ஒன்று கூடி ஓர் அமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் குரல் கொடுத்தால் நிச்சயம் காரியம் நடக்கும் ..தேர்தல் வந்தால் நாம் புறகணிக்க வேண்டும் .வார்டு கவுன்சிலர் மேல் புகார் கொடுக்க வேண்டும் ..வரி கொடா இயக்கத்தை துவக்க வேண்டும் ..ஓட்டுக் கேட்டு வருபவரை ஓட ஓட விரட்ட வேண்டும் ..\nஇப்படி விழிப்புணர்வு பெற்றால்தான் செழிப்புணர்வு பெற முடியும் ..மழைக்காலத்தில் எத்தனை இன்னல்களை சந்திக்கின்றோம் ரோடு இல்லாததால் எத்தனை அல்லல்களை சுமக்கின்றோம்..இரவில் தெரு விளக்கு இல்லாததால் நடமாட எப்படி எல்லாம் பயப்படுகின்றோம்.நாய்கள் பன்றிகள் இவற்றின் தொந்தரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது ஆபத்தும் விளைகிறது..\nபங்களா தோட்டத்து மக்களின் அவல நிலையை நாகை நகராட்சியும் நாகூரை சேர்ந்த நகராட்சி துணைத் தலைவர் ,மற்றும் நகராட்சி உறுப்பினர்கள் கவனத்தில் கொண்டு அடிப்படை வசதிகளை செய்து தர முன்வர வேண்டும் என்ற கோரிக்கையை உங்கள் முன் வைக்கின்றோம் முதலில் குவிந்துக் கிடக்கும் குப்பையை அகற்ற ஏற்பாடு செய்ய வேண்டும் ..வாழ்க நகராட்சி\nநன்றி (செய்தியும் & புகைப்படமும் ): கவிஞர் நாகூர் காதர்ஒலி..\nஇஸ்லாம் கூறும் இன்பமான கணவன் மனைவியா நீங்கள் \nதிருமணம் செய்து கணவன் மனைவியாக கைக் கோர்ப்பவர்கள் கடைசிவரை சந்தோசமாக வாழ வேண்டும் என்றே ஆசைப்படுவார்கள். மணமக்களை வாழ்த்துபவர்கள் கூட இதைத்...\nகளமிறங்கிய போராட்ட குழுவிற்கு ஆதரவுகொடுப்போம்.\nபிரபல இஸ்லாமிய அறிஞர் ஜாகிர் நாயக்கிற்கு பிரிட்டன் தடை வலுக்கும் எதிர்ப்பு\nபிரபல இஸ்லாமிய அறி ஞரும் சர்வதேச சொற்பொழி வாளருமான ஜாகிர் நாயக் பிரிட்டனுக்கு வர அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது பெரும் பரபர...\nVote List-ல் உங்கள் பெயர் இருக்கா...\nVote List-ல் நமது பெயர் மற்றும் முகவரியை சரிபார்க்க இந்த Website உதவுகிறது. Vote List-ல் பெயர் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. நீங்கள் தேர்...\nபெண்களை துரத்தும் ரகசிய கேமராக்கள் – ஓர் அபாய எச்சரிக்கை \n( மிக நுணுக்கமான செய்தி என்பதால் நீண்ட பதிவாக எழுதி இருகிறோம் குறிப்பாக பெண்கள் அளிப்பு பார்க்காமல் முழுமையாக படித்து பயன்பெறவேண்டும்,மற்றவ...\nவிந்தின் பிறப்பிடம் - திருக்குரானின் விளக்கம்\nகுர்ஆன் - அறிவுக்கும் அறிவியலுக்கும் ஏற்ற எக்காலத்திற்கும் பொருந்தும் ஓர் வாழ்வியல் நெறிநூல் இது அறிவியல் நூலல்ல; ஆனாலும் அறிவியலையும் உள்ள...\nஹதீஸ் - அடிப்படை விளக்கம்\n ஹதஸ் என்ற வேர்ச்சொல்லிலிருந்து பெறப்பட்ட சொல்தான் ஹதீஸ் என்பது. ஹதீஸ் என்றால் உரை உரையாடல் புதியசெய்தி எனப்ப...\n\"இஸ்லாத்தின் பார்வையில் இசை ஒரு முழுமையான ஆய்வு\"\n இசை என்பதன் விளக்கம் என்ன … இசை என்ற சொல்லுக்கு இசைய வைப்பது எனறு பொருள். இசை (Music) என்பது ஒழுங்கு செய...\nநவீன காலத்து அடிமைகளை விடுவிப்போம்....\nவளைகுடா நாடுகளில் வேலை செய்யும் முஸ்லிம்களில், கணிசமானவர்கள் வீடுகளில் வாகன ஓட்டுனர் வேலை செய்பவர்களாக உள்ளனர். இவர்களில் பெரும்பான்மையினர் ...\nஇரு தரப்பு பேச்சுவார்த்தை எதிர்பார்த்தப்படி சுமூகமாக முடிந்தது.\nஒரு பிரச்சனை எப்படி முறைப்படி கையாளபட வேண்டுமோ அப்படி கையாளபட்டிருகிறது.. அல்ஹம்துலில்லாஹ். கடந்த விநாயகர் சதுர்த்தி அன்று நாகூர் மியா...\n9/11 INSIDE JOB (3) BOOKS (11) HAJ (10) MEDIA (7) POLL (1) ZAKIR NAIK (7) அக்கம் பக்கம் (28) அமைதி (3) அரசியல் (5) அரசு உத்தரவுகள் (14) அரவாணிகள் (1) அவ்லியா (2) அறிவியல் (19) அனுபவம் (26) அஹமது தீதாத் (2) இசை (2) இந்திய முஸ்லிம்கள் வரலாறு (3) இல்லறம் (2) இறுதி தீர்ப்புநாள் (2) உதவி தேவை (13) எச்சரிக்கை (18) ஒற்றுமை (9) கல்வி (24) கனவு இல்லம் (1) கிலாபத் (2) கேள்வி பதில் (18) சத்தியமார்க்கம் (26) சஹாபாக்கள் (4) சுய பரிசோதனை (3) செல்போன் (12) தப்லீக் (1) தரீக்கா (2) தர்கா (11) தன்னம்பிக்கை (2) திருமணம் (6) தீவிரவாதம் (12) தெரிந்த ரகசியங்கள் (32) தெரிந்து கொள்ளுங்கள் (111) தேசபக்தி (9) தேர்தல் 2011 (22) நபி(ஸல்) (3) நாகூர போல வருமா (6) நாகூர் (1) நாகூர் சங்கதி (119) நாகூர் வரலாறு (2) நாத்திகன் (3) நோன்பு (1) பழனிபாபா (1) பாபரி மஸ்ஜித் (7) பாவமன்னிப்பு (3) பிறை (4) புகை (3) பைபிள் (3) போராட்டக்களம் (10) போராட்டம் (1) மருத்துவம் (10) மவ்லித் (4) மீலாது (1) முஸ்லீம்கள் (5) மோசடி (10) ரமளான் (5) வாக்காளர் பட்டியல் (1) விமர்சனங்கள் (5) விவாதங்கள் (4) ஷியா (2) ஷிர்க் (14) ஸூபித்துவம் (2) ஹதீஸ் (3) ஹிந்து தீவிரவாதிகள் (22) ஹிஜாப் (16)\nநாகூர் பங்களா தோட்டத்தின் அவல நிலை...\nநாகூரில் எடுக்கப்பட்ட போலி கணக்கெடுப்பும் - பரபரப...\nபிரான்ஸ் : துப்பாக்கி சூட்டில் இறந்த அஹமத் மெராபெட...\nகுரான் & ஹதீஸ் நூல்கள் பதிவிறக்கம்\nநபி( ஸல்) முழு வரலாறு\nகிருத்துவ மத போதகருடனான கலந்துரையாடல்\nஇரத்ததானம் செய்ய பதிவு செய்யுங்கள்\nசெய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற மின்னஞ்சல் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்\nதமிழில் டைப் செய்ய (தங்கலிஷ்)\nஅல்லாஹ்வின் சாந்தியும் , சமாதானமும் உங்கள் அனைவரின் மீதும் உண்டாவதாக இந்த தளம் நாகூர் வாழ் மக்களுக்கான ஓர் அறிவகம். நல்ல விஷயங்கள் பகிர்ந்து கொள்ளவும், தவறான விஷயங்களை சுட்டிக்காட்டவும் இந்த தளத்தை அமைத்திருகிறோம்.. நம்ம ஊரை பற்றி மற்றவர்களை விட நாமே அதிகம் விமர்சிக்கிறோம் இதே ஊரில் இருந்துகொண்டு, உண்மையில் நம்மை நாமே விமர்சித்து கொள்கிறோம் என்பதே உண்மை.. ஆகையால் உணர்வுகளை உள்ளது உள்ளபடி பகிர்ந்து கொள்ள ஒரு தளம். மேலும் உலக நாட்டுநடப்புகளும் இங்கே உரியமுறையில் அலசப்படுகிறது. நீங்களும் இந்த தளத்தின் அங்கமே , உங்களின் கருத்துகள் ,விமர்சனங்கள் , கட்டுரைகள் எதுவாக இருந்தாலும் nagoreflash@ymail.com முகவரிக்கு அனுப்பித்தாருங்கள். உங்கள் அன்புடன் அப்துல்லாஹ்.\nஅண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: \"தொழுகையாளிகள் அரபுத் தீபகற்பத்தில் தன்னை இபாதத் செய்வார்கள் -வணங்குவார்கள் - எனும் விஷயத்தில் ஷைத்தான் நிராசை அடைந்து விட்டான். எனினும், முஸ்லிம்களிடையே பகைமைத் தீயை மூட்டுவதில் அவன் நம்பிக்கை இழக்கவில்லை\". அறிவிப்பாளர்: ஜாபிர்(ரலி), நூல்: முஸ்லிம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://pathavi.com/?page=7", "date_download": "2018-04-26T13:02:54Z", "digest": "sha1:STCP6WKTE4VAZIKXM4IVUNZ2IY62RPBX", "length": 11752, "nlines": 269, "source_domain": "pathavi.com", "title": "Best tamil websites & blogs •et; Page 7 •et; Pathavi", "raw_content": "\nஉடலில் சிக்ஸ் பேக் வேண்டும்\nஅறிமுக பெண் இயக்குநர் சந்திரா இயக்கும் ‘கள்ளன்’ திரைப்படம்\nமீனாட்சி மீண்டும் ஹீரோயினாக நடிக்கும் ‘நேர்முகம்’..\nகாதலனுடன் ஓடிப் போகும் மனைவிகளுக்கு பாடமாக அமைகிறதாம் இந்தப் ‘பச்சைக்கிளி’ திரைப்படம்..\nஉதவி இயக்குநர்களின் வாழ்க்கைக் கதைதான் ‘விரைவில் இசை’ திரைப்படம்..\nநடிகர் சங்க தேர்தலை அஜீத் புறக்கணித்த பின்னணி இதுதான்\n'கட்-அவுட்' வைப்பவர்களை மறக்காதீங்க... : ஹீரோக்களுக்கு பி.வாசு அட்வைஸ்\nஆர்யா-அனுஷ்காவின் ‘இஞ்சி இடுப்பழகி’ திரைப்படம் நவம்பர் 27-ம் தேதி ரிலீஸ்\nபுலி - விமர்சனம் ~ பழைய பேப்பர்\nஅஜித் புதிய படப் பெயர் ‘வேதாளம்’ | screen4screen\nநமஸ்தே, நிம்ம பெயர் ஏமி \n5 போட்டிகள் - 50,000 ரூபாய் பரிசுகள் | திண்டுக்கல் தனபாலன்\nபுது மண தம்பதியா நீங்கள் மேலே படியுங்கள் \nஹிந்திப் படத்தை கை விட்ட கமல்ஹாசன்\nலீக்கானது ரஜினியின் 'கபாலி' கெட்டப்\nபுதுக்கோட்டை வலைப்பதிவர் திருவிழா வருகைப் பட்டியல்...\nநடிகர் திலகத்துக்கு மணிமண்டபம் : தமிழக அரசுக்கு கமல்ஹாசன் நன்றி\nசிவா அய்யாதுரை : இமெயிலை கண்டுபிடித்து தமிழர்களுக்கு பெருமை சேர்த்த தமிழர்\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - புதுக்கோட்டை | திண்டுக்கல் தனபாலன்\nஒரு கனவு கண்டால்... அதை தினம் முயன்றால்... | திண்டுக்கல் தனபாலன்\nஷங்கரைக் கிண்டலடிக்கும் மகேஷ் பாபு பட வசனம் | screen4screen\nநான் விஜய் ரசிகன் – டி.ராஜேந்தர் | screen4screen\nஇந்திய வாகனப் பதிவெண் இரகசியம்\nஎன் ராஜபாட்டை : கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய இணையதளங்கள் பகுதி : 3\nஎன் ராஜபாட்டை : அஜித் , விஜய் , ரஜினி ரசிகர்களை கேவலமாக பேசிய சீமான்\nஎன் ராஜபாட்டை : சைபர் க்ரைம் (Cyber Crime)\nநம்ப முடியாத அதிசயங்கள் - ஏன், எதற்கு, எப்படி என்று சிந்தனையைத் தூண்டும் நூல் .\nநான்காவது எஸ்டேட் - கிருஷ்ணா டாவின்சி நாவலை டவுன்லோட் செய்ய .\nPathavi தமிழின் முதன்மையான வலைப்பதிவு திரட்டி ஆகும். Pathavi தமிழ் வலைப்பதிவுகளுக்கு பலச் சேவைகளை வழங்கி வருகிறது. வலைப்பதிவுகளை திரட்டுதல், மறுமொழிகளை திரட்டுதல், குறிச்சொற்களை திரட்டுதல், வாசகர் பரிந்துரைகள், தமிழின் முன்னணி வலைப்பதிவுகள் என பலச் சேவைகளை Pathavi வழங்கி வருகிறது. வேறு எந்த இந்திய மொழிகளிலும் இல்லாத அளவுக்கு தொழில்நுட்ப சேவைகளை Pathavi தமிழ் வலைப்பதிவுகளுக்கு அளித்து வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://paattumix.blogspot.com/2010/07/blog-post_7370.html", "date_download": "2018-04-26T13:16:50Z", "digest": "sha1:NOVUKNB6KDTKB2HO3J4WJH7HEX7PYTN2", "length": 7727, "nlines": 214, "source_domain": "paattumix.blogspot.com", "title": "Music Mix: காதல் தேசம் = எனைக் காணவில்லையே நேற்றோடு", "raw_content": "\nகாதல் தேசம் = எனைக் காணவில்லையே நேற்றோடு\nபடம் : காதல் தேசம்\nஇசை : ஏ.ஆர். ரஹ்மான்\nஅன்பே அன்பே அன்பே அன்பே\nஎங்கும் தேடி பார்க்கிறேன் காற்றோடு\nஉயிர் ஓடி போனதோ உன்னோடு அன்பே\nஎன் நிழலும் நீயென புரியாதா\nஉடல் நிழலை சேரவே முடியாதா அன்பே அன்பே\nகோரஸ் : தடை போடும் பூங்காற்றே பூங்காற்றே\nஆ : வா வா\nகோ : என் வாசல் தான்\nஆ : வாழ்வேனே நான்\nஆ : ஆகாரம் இல்லாமல் நான் வாழ கூடும்\nகண்ணே உன் பெயரை சிந்தித்தால்\nதீக்குச்சி இல்லாமல் தீ மூட்டக்கூடும்\nகண்ணே நம் கண்கள் சந்தித்தால்\nநான் என்று சொன்னாலே நானல்ல நீதான்\nநீ இன்றி வாழ்ந்தாலே நீர்கூட தீ தான்\nஉன் சுவாச காற்றில் வாழ்வேன் நான்\nநிமிஷங்கள் ஒவ்வொன்றும் நிமிஷங்கள் ஆகும்\nநீ என்னை நீங்கி சென்றாலே\nவருஷங்கள் ஒவ்வொன்றும் நிமிஷங்கள் ஆகும் நீ எந்தன் பக்கம் நின்றாலே\nமெய்யாக நீ என்னை விரும்பாத போதும்\nபொய் ஒன்று சொல் கண்ணே என் ஜீவன் வாழும்\nநிஜம் உந்தன் காதல் என்றால்\nஉச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி,\nஓ வசந்த ராஜா தேன் சுமந்த ரோஜா\nதோகை இளமயில் ஆடி வருகுது வானில் மழை வருமோ\nநானே நானா யாரோ தானா \nவான் நிலா நிலா அல்ல - உன் வாலிபம் நிலா\nவிழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது\nஎன் உள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்\nசிறு பொன்மணி அசையும் அதில் தெறிக்கும் புது இசையும்...\nவிழியே விழியே பேசும் விழியே\nராகங்கள் பதினாறு உருவான வரலாறு நான் பாடும் போது\nதகிடததுமி தகிடததுமி தந்தானா ....\nமடை திறந்து... தாவும் நதியலை நான்\nஆங்க்கோ மே தேரி ...ஓம் ஷாந்தி ஓம் - ஹிந்தி\nஆஏ ஹோ மேரி சிந்தஹி...\nஎண்ட எல்லாம் எல்லாம் வல்லே. -மீச மாதவன் (மலையாளம்)...\nகரிமிழி - மீச மாதவன் (மலையாளம்)\nநான் பூவெடுத்து வெக்கனும் பின்னால...\nவிழியே கதை எழுது கண்ணீரில் எழுதாதே.\nஎன் ஜன்னல் நிலவுக்கு என்னாச்சி\nபூ மாலையில் ஓர் மல்லிகை\nகாதல் தேசம் = எனைக் காணவில்லையே நேற்றோடு\nசிப்பி இருக்குது முத்தும் இருக்குது\nஎங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://pookal.blogspot.com/2012/07/blog-post_8725.html", "date_download": "2018-04-26T13:37:07Z", "digest": "sha1:A3JTUXX5XOKAMVO3UQJ4RW4YQ7BQT7JX", "length": 54471, "nlines": 164, "source_domain": "pookal.blogspot.com", "title": "POOKAL: ஜோதிடத்தில் சனிபகவான்!", "raw_content": "நான் ரசித்ததும்,படித்ததும், பார்த்ததும், பலவற்றில் இருந்து திரட்டப்பட்ட சிறு சிறு குறிப்புகளின் தொகுப்பு.உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஒரு சந்தர்ப்பம்.\nசூரியனுடனும் (ஆன்மா), சந்திரனுடம் (மனம்) இணைந்திருப்பவர் சனி பகவான். சூரியனின் சாரம் சனி; சூரினிடமிருந்து வெளிவந்தவர்; சூரியனின் புதல்வன் என்றும் ஜோதிடம் தெரிவிக்கிறது. அப்பாவின் சாரம், பிள்ளையாக உருவெடுத்தது என்கிறது வேதம். அதேபோல், மனதுடன் தொடர்புகொண்டவர் சனி. மனதுள் உறைந்திருக்கும் சிந்தனையைத் தட்டி எழுப்பிச் செயல்பட வைக்கிற தமோ குணம் அவரிடம் உண்டு. சூரியனில் (ஆன்மா) இருந்து உருப்பெற்றது சந்திரன் (மனம்). ஆன்மா ஒன்று மனமும் ஒன்று. ஆகவே 12 ராசிகளில் இருவருக்கும் ஒரு வீடு மட்டுமே உண்டு. புலன்கள் இரண்டாக இருப்பதால், மற்ற ஐந்து கிரகங்களுக்கு இரண்டு வீடுகள் இருக்கும். ஆன்மா மற்றும் மனத்துடன் புலன்களுக்குத் தொடர்பு உண்டு. ஆதலால் ராசிச் சக்கரத்தில், சிம்மத்தில் உள்ள சூரியனுக்கு, மற்ற கிரகங்களின் தொடர்பு வரிசையாக இருக்குளம். அதேபோல், கடகத்தில் உள்ள சந்திரனுக்கு, மற்ற கிரகங்களின் தொடர்பு வரிசையாக இருக்கும். அதேபோல், கடகத்தில் உள்ள சந்திரனுக்கு, மற்ற கிரகங்களின் தொடர்பு வரிசையாக இருக்கும். சூரியனுக்கு சிம்மராசி. அதற்கு அடுத்த ராசியில், புதன், அதையடுத்து, சுக்கிரன், செவ்வாய், குரு, சனி என்று இருப்பார்கள். சந்திரனுக்குப் பின் ராசியில், மிதுனத்தில் புதன்; அடுத்து சுக்கிரன், செவ்வாய், குரு, சனி என்று இருப்பார்கள். இருவருக்கும் கடைசியில் சனி தென்படுவதால் மகரத்துக்கும் கும்பத்துக்கும் சனி அதிபதியாக அமைந்துள்ளார். ஆன்மாவுடன் மனம் இணையவேண்டும் அத்துடன் எண்ணங்கள் இணைந்தால் மட்டுமே, அது வளர்ந்து அனுபவத்துக்கு வரும். ஆன்மா, மனத்துடன் இணைகிறது; மனம், புலனுடன் இணைகிறது; புலன்கள் பொருட்களுடன் இணைகின்றன என்கிறது ஜோதிடம் (ஆன்மாமனஸா ஸம்யுஜ்யதே...). இருக்கிற பொருள், தோற்றமளிக்கும்; வளரும், மாறுபாட்டைச் சந்திக்கும்; வாட்டமுறும்; மறையும். ஆக.... இருத்தல், தோன்றுதல், வளருதல், மாறுபடுதல், வாட்டமுறுதல், மறைதல் ஆகிய ஆறுவித மாறுபாடுகளைக் கொண்ட பொருளுக்கு. எல்லாமே உண்டு. அது மனிதனுக்கும் உண்டு. அதனை ஆறு பாவ விகாரங்கள் என்கிற சாஸ்திரம் (அஸ்தி, ஜாயதெ, வர்த்ததெ, விபரிணமதே, ம்லாயதெ, நச்யதி, இதி. சூரிய - சந்திரனுடன் இணைந்த இந்த ஐந்து கிரகங்கள், ஜீவராசிகளில் தென்படும் ஆறுவித மாற்றங்களை நடைமுறைப்படுத்துகின்றன எனும் கோணத்தில், ராசிச் சக்கரத்தின் கிரக வரிசைகள் சுட்டிக்காட்டுகின்றன.\nஜோதிடத்தில் சனிபகவான்: மகர ராசிக்கும், கும்ப ராசிக்கும் அதிபதியான சனி பகவான் நவக்கிரக மண்டலத்தில் சூரியனுக்கு மேற்கே தனுசின் உருவம் கொண்டு மண்டலத்தில் உறைபவர். ஜோதிடத்தில் சனி பகவானுக்கு சூரியன், சந்திரன், செவ்வாய் சத்ருக்கள் - குரு சமமானவர் - சனிக்கு புதன், சுக்கிரன், ராகு, கேது ஆகியவர்கள் நண்பர்களாவார்கள். சனி பகவான் ஒரு ராசியில் இரண்டரை ஆண்டுகாலம் சஞ்சரிப்பவர். 3,10ம் இடங்களைப் பார்ப்பவர். லக்னத்திற்கு 8ம், 12ம் இடமும் மறைவு ஸ்தானங்களாகும். இவர் மேஷ ராசியில் நீச்சமானவர். துலா ராசியில் உச்சமானவர். சனி தசை பத்தொன்பது வருட காலமாகும். சனியின் அதிதேவதை எமதர்மனாவார். இவருடைய வாகனம் காகம். சில புராணங்களில் இவருடைய வாகனம் கழுகு என்றும் சொல்லப்படுகிறது. இவர் வன்னிய சமித்துக்கு ப்ரீதியானவர். திசைகளில் இவர் மேற்கு முகம் நோக்கி காட்சி தருகிறார். நவதானியத்தில் எள் - மலர்களில் கருங்குவளை - நவரத்தினங்களில் நீல நிறக்கல் - இவருக்கு உகந்ததாகும். மகரம், கும்பம் இரண்டு ராசிகளும் இவருக்கு ஸ்வ÷க்ஷத்ரமாகும். இவருடைய ஆட்சி வீடு மகரம். மூலதிரிகோண வீடு கும்பம். பூசம், அனுஷம், உத்திராட்டாதி ஆகிய மூன்று நட்சத்திரங்களும், சனியின் சாரம் பெற்ற நக்ஷத்ரங்களாகும். இவர் அன்னிய பாஷைக்கு ஆதிபத்தியம் வகிக்கிறார். சுவையினில் சனி கசப்பிற்கும், புளிப்பிற்கும் ஆதிபத்தியம் வகிக்கிறார். வஸ்திர அமைப்பில், சனி கருப்பு பட்டு வஸ்திரத்திற்கு பூஷிதராவார். சனி, காசியப முனிவர் கோத்திரத்தைச் சேர்ந்தவராகிறார். பஞ்சபூத அமைப்பில் சனி ஆகாயத்திற்கு ஆதிபத்தியம் வகிக்கிறார். ஜெனன காலத்தில், சந்திரன் நின்ற ஸ்தானம், ஜெனன ராசியாகும். ஜெனன ராசிக்கு 4ல் சனி சஞ்சரிக்கும் காலம் அர்த்தாஷ்டமச் சனி என்று சொல்லப்படுகிறது. ஜெனன ராசிக்கு 7ல் சஞ்சரிக்கும் காலம் கண்டச் சனி என்று சொல்லப்படுகிறது. ஜெனன ராசிக்கு 8ல் சனி சஞ்சரிக்கும் காலம் அஷ்டமத்துச் சனி என்று சொல்லப்படுகிறது.\nஒன்பது கிரகங்களில், சனி பகவானும் ஒருவர். சனைச்சரன் என்றும், மந்தன் என்றும் குறிப்பிடுவர். சனை என்றால் மெள்ள, அதாவது மெதுவாக என்று அர்த்தம். ஒரு ராசியில் தனது பயணத்தைச் சுமார் இரண்டரை வருடங்கள் எடுத்துக்கொள்கிறார் சனி பகவான். மற்ற கிரகங்களைவிட இவருடைய பயணம் மெதுவாக இருப்பதால், அந்தப் பெயரே பொருந்துகிறது இவருக்கு. சனி பகவான் ஒவ்வொரு ராசியினருக்கும், அவரவர் பாவ புண்ணியங்களுக்கேற்ப பலன் தருபவர். அதாவது ஒரு ராசிக்காரருக்கு அஷ்டமத்து சனி, ஜென்ம சனி, கண்ட சனி, மங்கு சனி, ஏழரைச்சனி ஆகிய காலங்களில் இவர் கொடுக்கும் பலன் கஷ்டமாகத் தோன்றினாலும், இந்த காலகட்டத்தில் அந்த ராசிக்காரரை திருத்தி நல்வழியில் நடக்க வைத்து ராசியை விட்டு விலகும் காலத்தில் மிகச்சிறந்த பலனை கொடுப்பதே சனி பகவானின் நோக்கம். இப்படி ஒரு சிறந்த தீர்ப்பை வழங்கும் சனி பகவானை கிரகங்களில் தலைமை நீதிபதி எனலாம். விண்வெளியில் அவர் பயணிக்கும் பாதை, எல்லா கிரகங்களையும் தாண்டி இருக்கும். விண்வெளியில் வெகு தொலைவில் இருப்பவர், இவர் சனி பகவானைக் கடந்து இருப்பது நட்சத்திர மண்டலம். அவரிடமிருந்துதான் கிழமைகளின் தோற்றமும் வரிசைகளும் உருவாயின.\nராசி மண்டலத்தை ஒருமுறை வலம் வருவதற்கு சனி பகவானுக்கு 30 வருடங்கள் தேவை. அதாவது, ஒருவரது வாழ்நாளில், சனி பகவான் மூன்று முறை வலம் வருகிறார். முதல் 30 வருடத்துக்குள் ஒருமுறை, 60 வருடத்துக்குள் இரண்டாவது முறை, 90 வருடத்துக்குள் மூன்றாவது முறை என சனி பகவானின் வலம் வருதல் நிகழ்கிறது. முதல் வலத்தை மங்கும் சனி; அடுத்ததை பொங்கும் சனி; மூன்றாவதை போக்கு சனி என்பார்கள் இப்படி மூன்றாகப் பிரித்த ஆயுள் காலத்தில், முதல் பிரிவு கவுமாரம் எனப்படும். அதாவது, அனைத்தையும் கற்கும் சிறுவயது என்பர். அடுத்து, யௌவனம்; அதாவது இளமைப் பருவம். எண்ணங்களின் வசத்துக்கு உட்பட்டு, அலசி ஆராயும் திறனுடன், நல்லது - கெட்டதை அறிந்து செயல்பட்டு வாழும் காலம் அது. துன்பங்களைத் தாங்கி, அதனை அலட்சியப்படுத்தி, மனோபலமும் சிந்தனைத் தெளிவும் கொண்டு செழிப்புடன் விளங்குகிற பருவம் இது இப்படி மூன்றாகப் பிரித்த ஆயுள் காலத்தில், முதல் பிரிவு கவுமாரம் எனப்படும். அதாவது, அனைத்தையும் கற்கும் சிறுவயது என்பர். அடுத்து, யௌவனம்; அதாவது இளமைப் பருவம். எண்ணங்களின் வசத்துக்கு உட்பட்டு, அலசி ஆராயும் திறனுடன், நல்லது - கெட்டதை அறிந்து செயல்பட்டு வாழும் காலம் அது. துன்பங்களைத் தாங்கி, அதனை அலட்சியப்படுத்தி, மனோபலமும் சிந்தனைத் தெளிவும் கொண்டு செழிப்புடன் விளங்குகிற பருவம் இது மூன்றாவது, முதுமை. தேக ஆரோக்கியமும் மனோபலமும் குறைகிற இறுதிப்பகுதி. கவுமாரம், யௌவனம், வார்த்தகம் என வாழ்வின் மூன்று பிரிவுகளை விவரிக்கிறது ஆயுர்வேதம். சிறுவயதில் கல்வியைக் கிரகிக்கும் தருணத்தில், சகல விஷயங்களையும் உள்வாங்கிப் பதிய வைக்கும்போது, சனி பகவானின் தாக்கம் மங்கலாகவே இருக்கும். மனதில் பதிந்த எண்ணங்கள், முழு வளர்ச்சியை எட்டாத நிலையில், சனியின் தாக்கம் முடங்கிவிடும். ஆகவே சனியின் பாதிப்பு மயங்கியது என்பர். இதனால் மங்குசனி என்கின்றனர். இளமையில் வளர்ச்சியுற்று, எண்ணம் பெருகி, கிரகிப்பதிலும் வளர்ந்து, சனி பகவானின் தாக்கம் கட்டுக்கடங்காத ஆசைகளை அவனுக்குள் வளர்ந்தோங்கச் செய்து, பொங்கச் செய்கிறது. ஆகவே, பொங்கு சனி என்கின்றனர். இன்ப - துன்பம் நிறைந்த வாழ்வில், துன்பத்தை ஏற்காமல், இன்பத்தை மட்டுமே ஏற்று மனதுள் மகிழ்ச்சியப் பொங்கச் செய்கிறார் சனி பகவான். இளமையில் கற்ற கல்வியுடன் விவேகமும், பகுத்தறிகிற பக்குவமும் கலந்திருக்க, சனி பகவானின் தாக்கத்தை, விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் திசை திருப்ப முடியும். ஆகவே பொங்கு சனியாகச் செயல்படுகிறார் சனீஸ்வரர். முதுமையில் சோர்வைச் சந்தித்த உடலும் உள்ளமும் கொண்டிருக்க, சனியின் தாக்கத்தை எதிர்கொள்ள முடியாமல் போகிறது. சனியின் விருப்பப்படி தன்னை இணைத்துக்கொள்ள நிர்பந்தம் ஏற்படுவதால், வாழ்க்கையின் எல்லையை எட்டவைக்க அவன் செயல்பாடு உதவும். ஆகவே, அவனது வேலையைச் சுட்டிக்காட்டி, போக்கு சனி என்றனர். ஆக, முதற்பகுதி வளரும் பருவம்; 2-ஆம் பகுதி, வளர்ந்து செழிப்புற்று, இன்பத்தை அனுபவிக்கின்ற பருவம்; இறுதியில், உடலுறுப்புகள் தகுதியை இழக்கும் பருவம். இப்படி உடலின் மாறுபட்ட பருவங்களுக்குத் தக்கபடி, சனி பகவானின் செயல்பாடு இருப்பதை, ஜோதிடம் சுட்டிக்காட்டுகிறது.\nராசி மண்டலத்தில் வலம் வரும் தருணத்தில், சந்திரன் இருக்கிற ராசியில் இருந்து பன்னிரண்டிலும், சந்திரன் இருக்கிற ராசியிலும், அடுத்து சந்திரனில் இருந்து 2-வது ராசியிலும் இரண்டரை வருடங்கள் தங்கியிருந்து, பயணிப்பார் சனி பகவான். ஆக, மூன்று ராசியிலும் இருந்த காலத்தைக் கூட்டினால் மொத்தம் ஏழரை வருடங்கள் வரும். இதை, ஏழரை நாட்டுச் சனி என்பார்கள் அதாவது ஏழரை ஆண்டுகளை நாடிய சனி எனப் பொருள். பிறக்கும் வேளையில் சந்திரன் இருக்கும் ராசி, ஒருவரது நட்சத்திரத்தைச் சொல்லும். அத்துடன், அவனது மனத்தையும் சுட்டிக்காட்டும். சனியுடன் மனம் நெருங்கிவரும், சந்திரன் இருக்கும் ராசி; அந்த நெருக்கம் தளர்வது. 2-வது ராசி. இந்த நெருக்கத்தின் தன்மையைக்கொண்டே, மங்கும் சனி, பொங்கும் சனி, போக்குச் சனி என்றும் சொல்லலாம். 12-ல் உள்ளபோது மங்க வைப்பார். சந்திரன் இருக்கும் ராசியில் இருக்கும்போது பொங்க வைப்பார். இரண்டில் இருக்கும்போது, போக வைப்பார். மனதோடு இணைந்த எண்ணங்கள், அதன் தாக்கம் நெருங்கும்போது, இன்பமோ துன்பமோ முழுமையாக வரும். விலகியிருக்கும் வேளையில், தாக்கம் செயலற்றுப் போகும். அதாவது, பன்னிரண்டிலும் இரண்டிலும்... நெருக்கம், மனத்துடன் (சந்திரனுடன் குறைந்திருப்பதால் பாதிப்பானது, அனுபவத்துக்கு வராமலே போகலாம். அந்த ஏழரை வருடகாலத்தில், அவனது தசாபுக்தி அந்தரங்கள் வலுவாகவும் நன்மையை வாரி வழங்குவதாகவும் இருந்தால், சனியின் தாக்கம் செயலிழந்துவிடும். தனக்கு இருக்கும் மூன்று இயல்புகளில் பொங்கும் இயல்பு வெளிப்பட்டு, தசாபுக்தி அந்தரங்களின் தரத்தைப் பொங்க வைத்து மகிழ்ச்சியைப் பன்மடங்காக்குவார், மாறாக தசாபுக்தி அந்தரங்கள் துயரத்தில் ஆழ்த்தும் நிலையில் இருந்தால், தரத்தையொட்டி மங்கவைப்பதோ அல்லது அதன் உச்சத்தை எட்டவைப்பதோ சனியின் வேலையாக மாறிவிடும்.\nதசாபுக்தி அந்தரங்களைப் புறக்கணித்து, தன்னிச்சையாக செயல்படும் தகுதி சந்திர சாரப்படி வளையவருகிற ஏழரை நாட்டுச் சனிக்கு இல்லை. சந்திர சாரப்படி தென்படுகிற கிரகம், தசாபுக்தி அந்தரங்களின் பலத்தை நிறைவேற்றவே ஒத்துழைக்கும். பிறக்கும்போது இணைந்த நட்சத்திரம், அவனது ஆயுள் முடியும் வரை சந்திக்க வேண்டிய தசாபுக்தி அந்தரங்களை வரிசையாகப் பட்டியலிட்டுத் தந்துவிடும்; கர்மவினைக்கு உகந்தபடி, இன்ப- துன்பங்களைச் சந்திக்கும் காலத்தையும் வரையறுத்துவிடும். சந்திரசாரப்படி மாறி வரும் அந்தந்த வேளையில், அந்தந்த ராசியில் தென்படும் கிரகங்களின் பலன்கள், தசாபுக்தி அந்தர பலன்களை முடக்கிவைக்க இயலாது. நொடிக்கு நொடி, மனித சிந்தனையில் மாற்றங்கள் நிகழந்துக்கொண்டே இருப்பதால், மனமாற்றத்துடன் இணைந்த கிரகங்கள், நிரந்தரப் பலனை அளிக்க இயலாது என்பதே உண்மை. நிச்சயமான பலனை அளிக்கவல்லது தசாபுக்தி அந்தரங்கள். தசையினால் திடமான பலத்தை அறியவேண்டும் என்கிறது ஜோதிடம் (விசிந்தயேத் த்ருடம்...). அஷ்டகவர்த்தை முன் வைத்து அதிருட பலத்தை அறியவேண்டும். நிச்சயமல்லாத, அதாவது சந்தர்ப்பம் இருந்தால் தென்படும் பலன்களை அறியவேண்டும் என்கிறது அது. யோகங்களால் இரண்டு வித பலன்களும் ஏற்படலாம். யோக பலம் செயல்பட்டுத்தான் தீரவேண்டும் என்ற கட்டாயமில்லை என்றும் விளக்கம் தருகிறது ஜோதிடம்.\nசனியின் உச்ச - ஆச்சி - நீச்ச வீட்டு பலன்கள்\nசனி உச்சம் பெற்று இருப்பவரானால், அந்த ஜாதகர் எதையும் நல்ல முறையில் செய்து, எல்லோருடைய பாராட்டையும் பெறுவார்கள். மனோதைரியம் அதிகமாகயிருக்கும். நீண்ட ஆயுளைப் பெற்றிருப்பவர். இரும்பு யந்திர துறையில் நல்ல முன்னேற்றம் அடைவர். சனி ஆட்சி வீட்டில் இருந்தால் உல்லாசமான வாழ்க்கை வாழ்வார்கள். நல்ல தொழிலைப் பெற்றிருப்பர். வாகன யோகமுண்டு. பிரயாணத்தின் மூலம் நன்மை அடைவர். சனி நீச்ச வீட்டில் இருந்தால் சாஸ்திர, சம்பிரதாயத்தில் நம்பிக்கை இருக்காது. மனோவலிமை குறைந்தவர்களாகவும், சில தீய குணங்கள் கொண்டவர்களாவும் இருப்பர்.\nசனியினால் ஏற்படும் யோகங்கள் பரிகாரங்கள்\nசந்திரனுக்கு 9ல் சனி இருந்தால் அது சசியோகம் எனப்படும். இத்தகைய யோகம் அமையப் பெற்றவர்கள் பெரிய குடும்பத்தைப் பெற்றிருப்பர். நிறைய வருவாயும், அதற்கேற்ற செலவும் உடையவர்களாக இருப்பார்கள். சந்திரனுக்கு 2ல் சனியிருந்தால் அது சுனபாயோகம் எனப்படும். இத்தகைய ஜாதகர்களுக்கு பிதுர் வழியில் சொத்து அமையாவிடினும், சுயமாக சம்பாதித்து அரச போக வாழ்க்கையை அனுபவிப்பார்கள். இவ்வாறு சனி பகவானால் சிற்சில சோதனைகள் ஏற்பட்டாலும், அதற்கேற்ப அவரவருடைய ஜாதகப்படி ப்ரீதிகளைச் செய்தால் நல்ல யோகங்களைப் பெறலாம் நமக்கு மலையளவு ஏற்படக்கூடிய சோதனைகளை சனி பகவான் கடுகளவாக குறைத்து, செல்வத்தையும், ஐசுவரியத்தையும் வாரி வழங்கும் இயல்புடையவர். அவரை பிரார்த்தித்து அஷ்ட ஐசுவரியங்களையும் பெறுவோமாக\nஜெனன ராசிக்கு 12-1-2ல் சனி சஞ்சரிக்கும் ஏழரை ஆண்டு காலம் - ஏழரை நாட்டு சனி என்று சொல்லப்படுகிறது. சனியின் முதல் சுற்று மங்கு சனி என்றும், இரண்டாவது சுற்று பொங்கு சனி என்றும், மூன்றாவது சுற்று மரணச் சனி என்றும் சொல்லப்படுகிறது. இக்காலங்களில் சனி பகவானுக்கு ப்ரீதி செய்வதன் மூலம் நன்மைப் பெறலாம். பொதுவாக ஜெனன லக்னத்திற்கு 3-6-11 ஆகிய ஸ்தானங்களில் சனி நின்றால், அந்த ஜாதகருக்கு நன்மைகள் அநேகம் நடைபெறும் என்று சொல்ப்படுகிறது. முதல் இடமாகிய லக்னத்தில் சனி நின்றால் அந்த ஜாதகர் தீர்க்க ஜீவனம் அமையப் பெற்றவர். உபாயம் அறிந்தவர். எதிலும் வெற்றி பெறக் கூடியவர். கண்டிப்பான வார்த்தை பேசுபவர். சிக்கனத்தை கடைப்பிடிப்பவர். புறம் பேசுபவர்.\nஇரண்டாமிடத்தில் இருந்தால் வாக்கு பலிதம் உடையவர். தர்க்கம் வாதம் செய்பவர். இத்தகைய அமைப்பு உடையவர்கள் பால்யத்திலேயே திருமணமானவர்களாயின், இரண்டாம் தாரம் அமையும் நிலையுண்டாகும். கண்ணால் பேசக்கூடிய கவர்ச்சியைப் பெற்றிருப்பர். மூன்றாமிடத்தில் இருந்தால் நல்ல தைரியம் உடையவர்களாக இருப்பர். தன்னைவிட தாழ்ந்தவர்களுடன் சிநேகமாக இருப்பார்கள். ஆசார அனுஷ்டானங்களை மதியாதவர்கள். இனஜன பந்துக்களை மதிக்காதவர்கள். இளைய சகோதரர்கள் மிகவும் உதவுவார்கள். நான்காமிடத்தில் இருந்தால் தாய்க்கு ஆகாது. வீடு, வாகனம் முதலியவைகளை அடையும் வாய்ப்பு குறைவு. இவர்கள் சகல சாஸ்திரங்களையும் கற்றவர்களாக இருப்பார்கள். இளமையிலேயே புனித யாத்திரை செல்லும் வாய்ப்பு இவர்களுக்கு உண்டாகும்.\nஐந்தாமிடத்தில் இருந்தால் பிதுர் தோஷமாகும். புத்திரர்களுக்கும் ஆகாது. இவர்கள் பிறரை பழி வாங்கும் எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் செய்யும் தொழிலில் போட்டியும், பொறாமையும் நிறைந்திருக்கும். ஆறாம் இடத்தில் இருந்தால் காது சற்று மந்தமாக இருக்கும். தனம், சம்பத்து முதலியவைகளைப் பெற்றிருப்பர். எந்த காரியத்திலும் முதலில் தோல்வி ஏற்பட்டாலும் இறுதியில் ஜெயம் உண்டாகும். இத்தகைய அமைப்புடையவர்கள் பகைவர்களை வெல்லும் திறமையுடையவர்கள். ஏழாமிடத்தில் இருந்தால் மனைவியினால் துன்பத்தை அநுபவிப்பவர். அதிகமான பொறுப்புகளை ஏற்று நடத்துவர். இனிமையாக பேசக் கூடியவர்கள்.\nஎட்டாமிடத்தில் இருந்தால் வாக்கு பலிதம் பெற்றிருப்பர். இவர்கள் கஷ்டப்பட்டு பொருள் சேர்ப்பர். சில தீய குணங்களும் அமைந்திருக்கும். ஆனால் இவர்கள் துணிவும் தைரியமும் நிரம்ப பெற்றிருப்பர். மூலம் போன்ற உஷ்ண நோயினால் பாதிக்கப்படுவார்கள். ஒன்பதாம் இடத்தில் சனி இருந்தால் தந்தைக்கு தோஷமுண்டாகும். இளமையிலேயே வறுமையால் துன்பப்படுவார்கள். இவர்கள் சகோதர வகையிலும் துன்பத்தைப் பெறுவார்கள். சிவபக்தி உடையவர்களாக இருப்பார்கள். பத்தாமிடத்தில் இருந்தால் தாய்க்கு ஆகாது. இவர்கள் எவரையும் எளிதில் நம்பி காரியத்தில் இறங்க மாட்டார்கள். ஆசார, அனுஷ்டானங்களை பின்பற்றுவார்கள். நல்ல விவேகம் உடையவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு வாகன யோகமும் உண்டு.\nபதினொன்றாம் இடத்தில் இருந்தால் நல்ல சாஸ்திரம் அறிந்தவராகவும், சிறந்த ஞானம் பெற்றவராகவும் இருப்பார். வாகன யோகமுண்டு. ஆயுள் விருத்தி உண்டாகும். இத்தகைய சனியுடன் புதனும் கூடியிருந்தால், கலைத் துறையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பன்னிரண்டாம் இடத்தில் சனி இருந்தால் முன் கோபியாகவும், ஆரோக்கியம் குறைந்தும் இருப்பர். சனியும், அங்காரகன் எனப்படும் செவ்வாயும் கூடி இருந்தாலும் அல்லது ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டாலும் இரும்பு யந்திர துறையில் ஈடுபட்டிருப்பர். பட்டம் பெறும் வாய்ப்பும் பெறுவர். சனியும், சுக்கிரனும் கூடியிருக்கும் அமைப்பைப் பெற்றவர்கள் சில நஷ்டங்களாலும், நோயினாலும் துன்பப்படுவார்கள். இவர்களிடம் சில தீய பழக்கங்கள் குடி கொண்டிருக்கும். சனியும், ராகுவும் கூடியிருந்தால் கலைத் துறையிலும், இரசாயன துறையிலும் ஈடுபாடு உடையவர்களாக இருப்பார்கள்.\nஇதுவரை கன்னி ராசியில் இருந்த சனி பகவான் (21-12-2011) கர வருடம், மார்கழி மாதம் 5-ஆம் தேதி புதன்கிழமை, நாழிகை 3.30 அளவில் (காலை 7.30) துலா ராசிக்கு - சித்திரை 3-ஆம் பாதத்தில் மாறுகிறார். இது வாக்கியப் பஞ்சாங்கப்படி கணிக்கப்பட்டது. திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழா வாக்கியப் பஞ்சாங்கப்படி 21-12-2011-ல் தான் நடக்கிறது.\nதிருக்கணிதப் பஞ்சாங்கப்படி 15-11-2011 கர வருடம், ஐப்பசி மாதம் 29-ஆம் தேதி நாழிகை 10-11 விநாடிக்கு (காலை 10.05 மணி) அளவில் சனிப்பெயர்ச்சி என்று கணிக்கப்படுகிறது.\nசனீஸ்வரருக்கு அதிகாரப்பூர்வமான தலம் திருநள்ளாறுதான் ஊர் ஊருக்கு அய்யப்ப சுவாமிக்கு கோவில் கட்டினாலும், கேரளத்தில் சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலே அதிகாரப்பூர்வமான கோவில் என்பதுபோல திருநள்ளாறு கோவிலே சனீஸ்வரருக்கு உரிய திருத்தலம். அதனால் நாமும் சனிப்பெயர்ச்சி நாளாக 21-12-2011- ஆம் தேதியை எடுத்துக்கொள்வோம்.\nமூன்று வருஷம் இருக்கப் போறார்\nபுராதன நூலான அர்த்தசாஸ்திரம், நம் அன்றாட வாழ்வில் சனியின் பங்களிப்பு பற்றி விரிவாகக் கூறுகிறது. ஒருவரது வாழ்நாள், தொழில், வியாபாரம் அல்லது பணி ஆகியவற்றை நிர்ணயிப்பவர் இவர் தான். அதனால், இவருக்கு ஆயுள்காரகர், ஜீவனகாரகர் என்ற பெயர் உண்டு. ஜோதிடத்தில் சிறந்தவரான வராஹமிகிரர், சனீஸ்வரர் துன்பத்தை மட்டுமே தருபவர் என்ற கருத்து முற்றிலும் தவறானது என்று கூறியுள்ளார். ஒருவரது ராசியில் இருந்து 3,6,11 ஆகிய இடங்களில், இவர் சஞ்சரிக்கும்போது அளவற்ற நன்மைகளைக் செய்வார். இதுதவிர, துலாம், மகரம், கும்பம் ஆகிய ராசியினருக்கு ஆயுள், ஆரோக்கியம், செய்யும் தொழில் ஆகியவற்றில் விசேஷபலன்களைத் தந்தருள்வார். பிதுர்களை வழிபடுவது இவருக்கு மிகவும் பிடித்தமானது. இவருடைய வாகனமான காகம் பிதுர்களின் அம்சமாகத் திகழ்கிறது.\nசனீஸ்வரர் பொதுவாக ஒரு ராசியில் இரண்டே கால் முதல் இரண்டரை ஆண்டுகள் வரையே இருப்பார். ஆனால், இம்முறை அவருக்கு பிடித்த துலாம் வீட்டில் மூன்றாண்டுகள் வாசம் செய்ய உள்ளார். 2011 டிசம்பர் 21 முதல், 2014 டிசம்பர் 16 வரை இவர் துலாம் ராசியில் சஞ்சரிப்பார். இதில் ஆறுமாத காலம் (2012 மார்ச் 26 முதல் செப்.10 வரை) வக்ரமாகி, மீண்டும் முந்தைய ராசிக்கே செல்வார். இந்த காலத்தில் நற்பலன் பெறுபவர்கள் கவனமாகவும், கெடுபலன் பெறுபவர்கள் மூச்சு விடுவதற்கும் வாய்ப்பு கொடுப்பார். இந்த காலகட்டத்தை அனைத்து ராசியினரும் கவனமாக இருக்க வேண்டும். உதாரணத்திற்காக, ஒருவருக்கு பணக்கஷ்டம் என்றால், இந்த காலகட்டத்தில் சுதாரிப்பாக இருந்து, எதிர்காலத்தில் கஷ்டம் வரும் போது பயன்படுத்தும் அளவுக்கு சேமித்துக் கொள்ள வேண்டும். பணம் தாராளமாக கிடைக்கிறதே என செலவழித்து விட்டால், சிரமம் தான்\nஉங்கள் ராசிக்கு காதல் எப்படி Any Chance For You To...\nபுலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 33 - மீன இலக்கின ஜா...\nபுலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 32 - கும்ப இலக்கின ...\nபுலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 31 - மகர இலக்கின ஜா...\nபுலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 30 - தனுசு இலக்கின ...\nபுலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 29 - விருச்சிக இலக்...\nபுலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 28 - துலாம் இலக்கின...\nபுலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 27 - கன்னி இலக்கின ...\nபுலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 26 - சிம்ம இலக்கின ...\nபுலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 25 - கடக இலக்கின ஜா...\nபுலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 24 - ரிஷபம், மிதுன ...\nபுலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 23 - மேஷ இலக்கின ஜா...\nபுலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 22\nபுலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 21 - பன்னிரண்டாம் ப...\nபுலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 20 - பதினோராம் பாவம...\nபுலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 19 - பத்தாம் பாவம்\nபுலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 18 - ஒன்பதாம் பாவம்...\nபுலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 17 - எட்டாம் பாவம்\nபுலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 16 - ஏழாம் பாவம்\nகிரஹங்கள் பலன் தரும் காலங்கள்\nகிரஹங்கள் ராசியில் சஞ்சரிக்கும் கால அளவுகள்\nகிரஹங்கள் அடுத்த ராசிகளின் பார்வை\nகுறிப்பிட்ட இடங்களில் கிரகங்கள் நிற்கப் பலன்கள்\nஜோதிடத்தில் சித்தர்களின் முக்கிய பங்கு\nபுலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 15 - ஆறாம் பாவம்\nபுலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 14 - நான்காம், ஐந்த...\nபுலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 13 - மூன்றாம் பாவம்...\nபுலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 12 - இரண்டாம் பாவம்...\nபுலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 11 - முதற் பாவம்\nபுலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 10 - ராகு, கேதுவின்...\nபுலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 9 - சனியின் ஆட்சி, ...\nபுலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 8 - சுக்கிரனின் ஆட்...\nபுலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 7 - வியாழனின் ஆட்சி...\nபுலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 6 - புதனின் ஆட்சி, ...\nபுலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 5 - செவ்வாயின் ஆட்ச...\nபுலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 4 - சந்திரனின் ஆட்ச...\nபுலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 3 - சூரியனின் ஆட்சி...\nபுலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 2 - சக்தி வழிபாடு\nபுலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 1 - கடவுள் வாழ்த்து...\nஜோதிடக் கட்டுரைகள் - சர, ஸ்திர, உபய ராசிகள் லக்னமா...\nஜோதிடக் கட்டுரைகள் - குறிப்பிட்ட இடங்களில் கிரகங்க...\nஜோதிடக் கட்டுரைகள் - கிரகங்களின் சிறப்பான பலன்கள்\nஜோதிடக் கட்டுரைகள் - கிரகங்களுடன் இராகு, கேது சேர ...\nஜோதிடக் கட்டுரைகள் - சந்திராஷ்டம நாட்களை அறியும் ம...\nஜோதிடக் கட்டுரைகள் - கிரகங்கள் சேர்க்கை பலன்கள்\nஜோதிடக் கட்டுரைகள் - உங்களுக்கு வரப்போகும் மனைவியி...\nஜோதிடக் கட்டுரைகள் - உங்களுக்கு வரப்போகும் மனைவியி...\nஜோதிடக் கட்டுரைகள் - உங்களுக்கு வரப்போகும் மனைவியி...\nஜோதிடக் கட்டுரைகள் - கர்ப்ப காலமும் அதன் அதிபதிகளு...\nஜோதிடக் கட்டுரைகள் - 27 நட்சத்திரக்காரர்களிற்கும் ...\nஜோதிடக் கட்டுரைகள் - தமிழ் வருடங்கள் 60\nஇளைய சகோதர சகோதரிகளால் யோகம் ஜோதிடக்குறிப்பு\nஅய்யா வைகுண்டர் நிகழ்த்திய அற்புதம்\nஅமெரிக்காவில் கர்ஜித்த வங்கச் சிங்கம்\nநவ கிரகங்கள் - காரகத்துவம்\nசொந்த வீடு வாங்கும் யோகம் :\nசெல்வந்தர் ஆகும் யோகம் யாருக்கு\nஅரசியலில் ஜொலிக்க வைக்கும் யோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.adiyakkamangalam.com/cookbook/19/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-04-26T13:41:49Z", "digest": "sha1:K2B5Y6VLXPDOODTOIAGZ6D5JSFUISI3P", "length": 11770, "nlines": 193, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam கோதுமை மசாலா", "raw_content": "\nசமையல் / சிற்றுண்டி வகை\nகோதுமை ரவை - ஒரு கப்\nவெள்ளை உளுந்து - 1/2 கப்\nபெரிய வெங்காயம் - 1/2 கப்\nஇஞ்சி - ஒரு சின்ன துண்டு\nசோம்பு - 1/2 டீஸ்பூன்\nகறிவேப்பிலை - 2 கொத்து\nஎண்ணெய் - பொரிக்க தேவையான அளவு\nவெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மற்ற தேவையானவற்றை தயாராக எடுத்துக் கொள்ளவும்.\nகோதுமை ரவை மற்றும் உளுந்தை 3 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறியதும் அரைப்பதற்கு சற்று முன் எடுத்து தண்ணீரை வடித்து பிழிந்து வைத்துக் கொள்ளவும்.\nஒரு பாத்திரத்தில் நறுக்கின வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, சோம்பு மற்றும் அரை டீஸ்பூன் உப்பு போட்டு நன்கு ஒன்றாகும்படி கலந்து வைக்கவும்.\nபிழிந்து வைத்துள்ள கோதுமை ரவை மற்றும் உளுந்தை மிக்ஸியில் போட்டு கரகரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். அரைத்த விழுது ஒன்றிரண்டாக இருந்தாலும் பரவாயில்லை.\nஅரைத்த மாவுடன், உப்பு சேர்த்து கலந்து வைத்திருக்கும் வெங்காயம், பச்சை மிளகாய் கலவையை எடுத்து பிழிந்து விட்டு போடவும். ருசி பார்த்து விட்டு தேவையானால் உப்பு போட்டுக் கொள்ளவும்.\nமாவுடன் வெங்காய கலவை ஒன்றாக சேரும்படி நன்கு கலந்துக் கொள்ளவும்.\nவாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கலந்த மாவை வடை போல தட்டியோ அல்லது விரும்பிய வடிவத்திலோ செய்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். எண்ணெய் சூடாகும் வரை அடுப்பை நன்றாக எரியவிட்டு, வடைகளை போட்டு பொரிக்கும் போது மிதமான தீயில் வைத்து பொரித்து எடுக்கவும்.\nபீட்ரூட் ஜாமுன் அல்வா (Beetroot Jamun Halwa)\nபப்பாளி பழ அல்வா (Papaya Halwa)\nபச்சரிசி ஹல்வா (Rice Halwa)\nகுலோப் ஜாமூன் (Gulab Jamun)\nசிம்பிள் மைதா கேக் (Simple Maida Cake)\nபீட்ரூட் அல்வா (Beetroot Halwa)\nதேங்காய் பர்பி (Coconut Burfi)\nஅரிசி மாவு புட்டு (Rice Flour Puttu)\nஅவல் ராகி புட்டு (Aval Raggi Puttu)\nபூர்ணக் கொழுக்கட்டை (Poorna Kolukattai)\nபொட்டுக்கடலை உருண்டை (Bengal Gram Sweet)\nபொரி உருண்டை (Pori Urundai)\nஓலைப் பக்கோடா (Ribbon Pakoda)\nவாழைக்காய் சிப்ஸ் (Banana Chips)\nவாழைக்காய் பஜ்ஜி (Banana Bajji)\nவெங்காய பஜ்ஜி (Onion Bajji)\nகருப்பு கொண்டை கடலை சுண்டல்\nவெங்காய பக்கோடா (Onion Bakoda)\nமுந்திரி பக்கோடா (Cashewnut Bakoda)\nநிலக்கடலை பக்கோடா (Peanut Bakoda)\nஜவ்வரிசி முறுக்கு (Sago Murukku)\nஅரிசி மாவு முறுக்கு (Rice Flour Murukku)\nதேங்காய்ப்பால் முறுக்கு (Coconut Milk Murukku)\nமரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் (Tapioca Chips)\nபருப்பு ரசம் (Daal Rasam)\nசெட்டிநாடு கார நண்டுக் குழம்பு\nபயத்தம்பருப்பு தோசை ( Moong dal dosa )\nஃப்ரைட் இட்லி (Fried Idly)\nரவா பொங்கல் (Rawa Pongal)\nகத்திரிக்காய் சட்னி (Brinjal Chutney)\nஎக் ஃப்ரைட் ரைஸ் (Egg Fried Rice)\nசில்லி சிக்கன் (Chilli Chicken)\nகோதுமை கொத்து ரவைஒரு சோம்பு12 கோதுமை உளுந்து12 வடை கப் உப்புதேவைக்கேற்ப டீஸ்பூன் அளவுவெங்காயம� சின்ன தேவையான மசாலா கப் பெரிய பொருட்கள் வெங்காயம்12 வெள்ளை கறிவேப்பிலை2 துண்டு கப் தேவையானப் எண்ணெய்பொரிக்க பச்சைமிளகாய்2 இஞ்சிஒரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.nitharsanam.net/179149/news/179149.html", "date_download": "2018-04-26T13:01:37Z", "digest": "sha1:6FMHORASBQOCGHIEMJUP2FS7JRDYHAOL", "length": 7377, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "கவர்ச்சியாக நடிக்க வெட்கப்பட மாட்டேன் : சமந்தா அதிரடி!! : நிதர்சனம்", "raw_content": "\nகவர்ச்சியாக நடிக்க வெட்கப்பட மாட்டேன் : சமந்தா அதிரடி\nசமந்தா, நாக சைதன்யா காதல் ஜோடி, திருமணத்துக்கு பிறகு இணைபிரியா தம்பதிகளாக வாழ்ந்து வருகின்றனர். அதேசமயம் இருவரும் நடிப்பில் கவனம் செலுத்துகின்றனர். சமந்தா தொடர்ந்து நடிக்க சைதன்யாவோ அவரது குடும்பத்தினரோ தடை விதிக்கவில்லை. திருமணத்துக்கு முன்பு கிளாமர் ஹீரோயின் வேடங்களில் நடித்ததுபோல் இப்போதும் அதுபோன்ற வேடங்களை ஏற்கிறார். அதேசமயம் நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கிளாமர் குறைந்த கதாபாத்திரங்களிலும் நடிக்கிறார்.\nஇதுபற்றி சமந்தா கூறியது: கமர்ஷியல் மசாலா படங்களில் கிளாமர் ஹீரோயினாக நடித்துவந்த நான் திடீரென்று அதிலிருந்து விலக விரும்பவில்லை. அது எனது நடிப்பு தொழிலை பாதிக்கும். அதை நான் உணர்ந்திருக்கிறேன். கிளாமர் ஹீரோயினாக எல்லா நடிகைகளுக்கும் ரசிகர்களின் அங்கீகாரம் கிடைத்துவிடுவதில்லை. ஒரு சிலருக்கு மட்டுமே கிடைக்கிறது. அதை இழக்கவிரும்பவில்லை. கிளாமர் வேடங்களில் நடிக்க நான் வெட்கப்பட்டு ஒதுங்க மாட்டேன்.\nஅதேசமயம் அதில் மாறுபட்ட நடிப்பு இருக்கும்படி பார்த்துக்கொள்வேன்’ என்றார். சமந்தா தற்போது தெலுங்கில் நடித்துள்ள ‘ரங்கஸ்தலம்’ படத்தில் கிராமத்து பெண்ணாக பாவாடை, தாவணி அணிந்து நடித்திருக்கிறார். அதற்கு ஏக வரவேற்பு கிடைத்திருப்பதால் தொடர்ந்து அதேபோன்ற வேடங்களில் நடிப்பார் என்ற பேச்சு எழுந்தது. அதற்கு பதில் அளிக்கும் விதமாகவே கிளாமர் ஹீரோயினாக தொடர்ந்து நடிப்பேன் என அவர் தெரிவித்திக்கிறார்.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nஉடலுறவின் போது எதுவெல்லாம் உங்கள் துணைக்கு பிடிக்கும்\nகர்ப்பகாலத்தில் தாம்பத்யம், அசைவம் சரியா\nமரண காமெடி- இது நம்ம ஊரு நடிகர்கள் – பழமார்நேரி பஞ்சாயத்து\nஇந்திய அரசியலில் ‘ஆளுநர்’ பதவிகள்\nநல்ல தூக்கத்துக்கு நாளை செய்ய வேண்டியதை எழுதுங்கள்\nதாம்பத்திய இன்பத்தின் போது தவிர்க்க வேண்டியவை\nசினிமா துறையில் இந்த வசனத்தை இவரை தவிர யாராலும் பேச முடியாது\nஉலக புகழ் பெற்ற குரங்கு செல்பி புகைப்பட வழக்கு : காப்புரிமை கோர முடியாது நீதிமன்றம் தீர்ப்பு\nஅணு சக்தி ஒப்பந்தம் மோசமானது என்றால் அமெரிக்க கையெழுத்திட்டது : ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி\nஇலங்கைப் பொலிஸாரின் பொருட்களை வைத்திருந்த பிரிட்டன் குடியுரிமை பெற்ற நபர் கைது\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.nitharsanam.net/179226/news/179226.html", "date_download": "2018-04-26T13:01:55Z", "digest": "sha1:2QHTZOQU734D667XEZX6TBPFKAOYHTSI", "length": 8064, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "டோனி படத்தில் நடித்த நடிகை புலம்பல்!!(சினிமா செய்தி) : நிதர்சனம்", "raw_content": "\nடோனி படத்தில் நடித்த நடிகை புலம்பல்\nஇந்திய கிரிக்கெட் அணி மாஜி கேப்டன் டோனியின் வாழ்க்கை வரலாறு கடந்த 2016ம் ஆண்டு திரைக்கு வந்தது. டோனி வேடத்தில் சுசாந்த் சிங் ராஜ்புத் நடித்திருந்தார். கதாநாயகியாக திஷா பதானி நடித்தார். படத்தில் இவர் டோனியின் கேர்ள்பிரண்டாக நடித்திருந்தார். தற்போது பாகி 2 படத்தில் நடித்து வருகிறார். சினிமாவில் வாய்ப்புக்காக தான் தவித்த தவிப்புபற்றி திஷா பதானி கூறியதாவது: திரையுலகை சேர்ந்த குடும்பத்திலிருந்து நான் வரவில்லை. படத்தில் நடித்தால் அது வெற்றி பெறுமா தொடர்ந்து வாய்ப்புகள் வருமா\nஎனவே மிகவும் ஜாக்கிரதையாக இருந்தேன். எனக்கு நடிப்பு பிடிக்கும். வாய்ப்புக்காக காத்திருந்தேன். முதல்பட வாய்ப்பு கிடைத்தபோது சந்தோஷம் அடைந்தேன். ஆனால் அந்த வாய்ப்பு வேறு நடிகையால் பறிபோய்விட்டது. எல்லாமே ஒரு காரணத்துக்காக நடக்கிறது என்று பொறுத்துக்கொண்டேன். புறந்தள்ளுவதுதான் ஒருவரை உறுதிமிக்கவராக்குகிறது. அதுபோல்தான் நான் மனஉறுதி அடைந்தேன். நம்மிடம் ஏதோ குறை இருக்கிறது என்று எண்ணும்போதுதான் அதை நிவர்த்தி செய்து கடுமையாக உழைப்பதற்கான உத்வேகம் கிடைக்கிறது.\nநான் ரொம்பவும் பாசிடிவான எண்ணம் கொண்டவள். நடிப்பதற்காக படிப்பை விட்டுவிட்டு வந்தேன். மும்பை வந்தபோது கையில் வெறும் 500 ரூபாய் மட்டுமே இருந்தது. டி.வி கமர்ஷியல் விளம்பரங்களில் நடிப்பேன். வேலை கிடைக்காவிட்டால் அடுத்த மாத வாடகை தருவது திண்டாட்டமாகிவிடும். வேலை செய்வது மட்டுமே எனது வாழ்க்கையாக இருந்தது. வேலை செய்யாமலிருந்தால் எனக்கு வாழ்க்கை போரடிக்க ஆரம்பித்துவிடும். கடந்த ஆண்டு ஜாக்கிசான் நடித்த ‘குங்ஃபு யோகா’ படத்தில் நடித்தேன். தற்போது இந்தியில், ‘பாகி 2’ம் பாகத்தில் நடிக்கிறேன். இவ்வாறு திஷா பதானி கூறினார்.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nஉடலுறவின் போது எதுவெல்லாம் உங்கள் துணைக்கு பிடிக்கும்\nகர்ப்பகாலத்தில் தாம்பத்யம், அசைவம் சரியா\nமரண காமெடி- இது நம்ம ஊரு நடிகர்கள் – பழமார்நேரி பஞ்சாயத்து\nஇந்திய அரசியலில் ‘ஆளுநர்’ பதவிகள்\nநல்ல தூக்கத்துக்கு நாளை செய்ய வேண்டியதை எழுதுங்கள்\nதாம்பத்திய இன்பத்தின் போது தவிர்க்க வேண்டியவை\nசினிமா துறையில் இந்த வசனத்தை இவரை தவிர யாராலும் பேச முடியாது\nஉலக புகழ் பெற்ற குரங்கு செல்பி புகைப்பட வழக்கு : காப்புரிமை கோர முடியாது நீதிமன்றம் தீர்ப்பு\nஅணு சக்தி ஒப்பந்தம் மோசமானது என்றால் அமெரிக்க கையெழுத்திட்டது : ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி\nஇலங்கைப் பொலிஸாரின் பொருட்களை வைத்திருந்த பிரிட்டன் குடியுரிமை பெற்ற நபர் கைது\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.nitharsanam.net/179303/news/179303.html", "date_download": "2018-04-26T13:02:17Z", "digest": "sha1:B4GW5NSDNNMEAOM4P4JW53TGTRKG6W3L", "length": 5738, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "மருத்துவமனையில் திடீர் தீ – நோயாளிகள் உயிர் தப்பினர்? : நிதர்சனம்", "raw_content": "\nமருத்துவமனையில் திடீர் தீ – நோயாளிகள் உயிர் தப்பினர்\nதுருக்கி நாட்டின் தலைநகரான இஸ்தான்புல்லின் காசியோமன்பசா பகுதியில் அமைந்துள்ளது பல மாடிகள் கொண்ட மருத்துவமனை.\nஇந்த மருத்துவமனையின் ஒரு பகுதியில் இன்று திடீரென தீ பிடித்தது. தீ மளமளவென பரவியதால் அப்பகுதி புகை மண்டலமாக மாறியது.\nதகவலறிந்து அங்கு தீயணைப்பு படைவீரர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் போராடி தீயை அணைத்தனர். அங்கு அனுமதிக்கப்பட்டு இருந்த நோயாளிகள் விரைவாக மீட்கப்பட்டனர். மருத்துவமனையில் தீப்பிடித்து எரிவது தொடர்பான காட்சிகள் அங்குள்ள சமூக வலைதளங்களில் வைரலாக பரவின.\nதீ விபத்து குறித்து அதிகாரிகள் கூறுகையில், தீயணைப்பு படையினர் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது என்றனர்.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nஉடலுறவின் போது எதுவெல்லாம் உங்கள் துணைக்கு பிடிக்கும்\nகர்ப்பகாலத்தில் தாம்பத்யம், அசைவம் சரியா\nமரண காமெடி- இது நம்ம ஊரு நடிகர்கள் – பழமார்நேரி பஞ்சாயத்து\nஇந்திய அரசியலில் ‘ஆளுநர்’ பதவிகள்\nநல்ல தூக்கத்துக்கு நாளை செய்ய வேண்டியதை எழுதுங்கள்\nதாம்பத்திய இன்பத்தின் போது தவிர்க்க வேண்டியவை\nசினிமா துறையில் இந்த வசனத்தை இவரை தவிர யாராலும் பேச முடியாது\nஉலக புகழ் பெற்ற குரங்கு செல்பி புகைப்பட வழக்கு : காப்புரிமை கோர முடியாது நீதிமன்றம் தீர்ப்பு\nஅணு சக்தி ஒப்பந்தம் மோசமானது என்றால் அமெரிக்க கையெழுத்திட்டது : ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி\nஇலங்கைப் பொலிஸாரின் பொருட்களை வைத்திருந்த பிரிட்டன் குடியுரிமை பெற்ற நபர் கைது\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthinappalakai.net/2015/03/03", "date_download": "2018-04-26T13:06:33Z", "digest": "sha1:3H377WLZ55N6LR4ETUGITUHW74LYEIUD", "length": 12419, "nlines": 117, "source_domain": "www.puthinappalakai.net", "title": "03 | March | 2015 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nசரத் பொன்சேகாவுக்கு பீல்ட் மார்ஷல் பட்டம் – இம்மாதம் வழங்கப்படுகிறது\nசிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவை, பீல்ட் மார்ஷல் பதவிநிலைக்கு உயர்த்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முடிவு செய்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nவிரிவு Mar 03, 2015 | 12:08 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகிழக்கு அரசியலில் திடீர் திருப்பம் – கல்வி, விவசாய அமைச்சுக்களைப் பெற்றது கூட்டமைப்பு\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இரண்டு அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொண்டு கிழக்கு மாகாண அரசாங்கத்தில் இணைந்து கொண்டதையடுத்து, கிழக்கு மாகாண அரசியலில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.\nவிரிவு Mar 03, 2015 | 11:00 // திருக்கோணமலைச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஐ.நா மனித உரிமை ஆணையாளருடன் மங்கள சமரவீர பேச்சு\nஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேனை, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இன்று ஜெனிவாவில் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.\nவிரிவு Mar 03, 2015 | 10:30 // ஐரோப்பியச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nசிறிலங்காவின் முன்னாள் அதிபருடன் 5 நிமிடங்கள் – பாகிஸ்தான் ஊடகவியலாளர்\nஎனது நாட்டில் இடம்பெற்ற கிளர்ச்சி போன்றே உங்களுடைய நாட்டிலும் கிளர்ச்சி இடம்பெறுகிறது. இதற்குப் பின்னால் இந்தியாவின் றோ அமைப்பு செயற்படுகிறது என ராஜபக்ச குறிப்பிட்டார்.\nவிரிவு Mar 03, 2015 | 8:18 // நித்தியபாரதி பிரிவு: கட்டுரைகள்\nசிறிலங்காவின் நல்லிணக்க முயற்சிகளுக்கு ஜப்பான் ஆதரவு\nசிறிலங்காவில் தேசிய நல்லிணக்கத்தை அடைவதற்கு மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதாக, ஜப்பான் தெரிவித்துள்ளது.\nவிரிவு Mar 03, 2015 | 1:02 // ஐரோப்பியச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nசெப்ரெம்பருக்குப் பின்னரும் அறிக்கையைத் தாமதிக்கக் கூடாது – பிரித்தானியா வலியுறுத்தல்\nஐ.நா மனித உரிமைகள் பேரவையின் சிறிலங்கா தொடர்பான விசாரணை அறிக்கையை வெளியிடுவதை செப்ரெம்பர் மாதத்துக்குப் பின்னரும், தாமதிக்கக் கூடாது என்று பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது.\nவிரிவு Mar 03, 2015 | 0:46 // ஐரோப்பியச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஅதிகாரப்பகிர்வு குறித்து மோடியுடன் பேசுவோம் – சுமந்திரன்\nமாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பது தொடர்பாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் கலந்துரையாடவுள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.\nவிரிவு Mar 03, 2015 | 0:29 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nஇராணுவ ஆட்சியில் இருந்து விடுபட்டது திருகோணமலை – சிவில் அரச அதிபர் நியமனம்\nதிருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபரான சிவில் அதிகாரியான என்.ஏ.ஏ.புஸ்பகுமார நேற்று நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து எட்டு ஆண்டுகால இராணுவ ஆட்சியில் இருந்து திருகோணமலை மாவட்டம் விடுபட்டு, நேற்று முதல் சிவில் நிர்வாகம் மீளவும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.\nவிரிவு Mar 03, 2015 | 0:15 // திருக்கோணமலைச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஐ.நா விசாரணை அறிக்கையை உள்ளக விசாரணைக்கு பயன்படுத்துவோம் – ஜெனிவாவில் மங்கள\nபோரின்போது நடந்த பாரிய மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் ஆணையரின் விசாரணை அறிக்கையின் பரிந்துரைகளை, சிறிலங்கா அரசு உருவாக்கவிருக்கும் உள்ளக விசாரணை மற்றும் நீதிக்கட்டமைப்பு பயன்படுத்தும் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.\nவிரிவு Mar 03, 2015 | 0:00 // புதினப்பணிமனை பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் இரா.சம்பந்தன் – ‘சேர் பொன். இராமநாதனின் மறுஉருவம்’\t0 Comments\nகட்டுரைகள் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு யார் காரணம்\nகட்டுரைகள் சிறிலங்கா: மகிந்தவுக்காக திறக்கப்படும் கதவுகள்\t0 Comments\nகட்டுரைகள் ஐ.நாவின் மனிதஉரிமைச் செயற்பாடுகளைப் பலவீனப்படுத்தும் ரஷ்யா, சீனா\t0 Comments\nகட்டுரைகள் சீனாவின் இறுக்கமான பிடியில் சிறிலங்காவின் அமைதியான துறைமுகம்\t1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுக்கு எதிரான வியூகத்தில் சிறிலங்காவின் பௌத்த பிக்குகளையும் இணைக்கிறது இந்தியா\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்திய மாக்கடலில் அதிகரிக்கும் சீனாவின் செல்வாக்கும் – இந்தியாவின் முத்தரப்பு கடற்பாதுகாப்பு ஒப்பந்தமும்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t0 Comments\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t2 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vanakkammalaysia.com/cinema/64-indian-cinema/14411-2018-03-31-05-15-44", "date_download": "2018-04-26T13:24:45Z", "digest": "sha1:D35S5CEWYFGCD5M53R4SLPXV75HQ66UH", "length": 14765, "nlines": 274, "source_domain": "www.vanakkammalaysia.com", "title": "ஏங்க, எத்தனை தடவை சொல்றது, 'மாட்டேன்., மாட்டேன்.! ' -சத்யராஜ் மகள் திவ்யா", "raw_content": "\nமலையாளப் பாடல் திறன் போட்டி: அனைவரும் பங்கேற்கலாம்\n1 எம்.டி.பி தலைமை நிர்வாக அதிகாரி அருள் கந்தா அரசியல் பிரவேசமா\nதேர்தல் அதிகாரிகள் பற்றிய போலித் தகவலை நம்பாதீர் \nகேவியசின் ராஜினாமா; தே.மு.விற்கு எவ்வித பாதிப்பும் இல்லை\nகடந்த தேர்தலை விட கூடுதலான வெற்றி: வாய்ப்பு பிரகாசம்\nவெளிநாட்டு வாக்காளர்கள்:வாக்குச் சீட்டுகளை எப்படி அனுப்புவீர்கள்\nரோஸ்மாவின் பிறந்தநாள் கேக்: அது போலிச் செய்தி\nகெந்திங் சாலையில் பேருந்து தீக்கிரை\nமஇகாவிலிருந்து காயத்ரி ரகுமூர்த்தி முற்றாக விலகல்\nமணமகன் பலி: திருமணப் பரிசாக வெடிகுண்டு பார்சல் அனுப்பிய கல்லூரி ஆசிரியர் கைது\nஐஸ்வர்யா ராய் ஓரங்கட்டப் படுவது ஏன்\nமழலைக் குரலில் ரசிகர்களை வசீகரித்த பாடகி எம்.எஸ். ராஜேஸ்வரி காலமானார்\nசிறுமி பலாத்காரம்: பிரபல சாமியார் ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் சிறை\nஇந்திய நாடாளுமன்றத்திலும் பாலியல் தொல்லையா\nஅக்சய் குமாரின் படப்பிடிப்பு தளத்தில் குண்டு வெடித்து கோரத் தீ விபத்து\nபாலியல் வழக்கில் பிரபல சாமியார் குற்றவாளி -இந்திய நீதிமன்றம் தீர்ப்பு தீர்ப்பு\nஎஸ் வி சேகருக்கு அடைக்கலம் தந்த கிரிஜா வைத்தியநாதன் மீது வழக்கு\nதமிழ் நடிகருக்கு 50 கோடி சம்பளமா\nபாலஸ்தீனர் ஸ்தாபாக்கில் சுட்டுக் கொலை: கொலையாளிகளின் படங்கள் வெளியீடு\nஅர்சனல் குழுவின் 22 ஆண்டு கால நிர்வாகி அர்செனி வெங்கர் விலகுகிறார்\n'இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி'யில் வடிவேலு நடிக்க மறுத்தது ஏன்\nகற்பழிப்புக்கு மரண தண்டனை ஒன்றே தீர்வு- வரலட்சுமி ஆவேசம்\nசினிமா வேலைநிறுத்தம்: சொந்த ஊரில் ஆடு மேய்க்கும் நடிகை\nகணவருடன் ரஷ்யாவில் குடியேறுகிறார் நடிகை ஸ்ரேயா\n விஜய் சேதுபதி மீது விஷாலின் நடவடிக்கை பாயுமா\nஏங்க, எத்தனை தடவை சொல்றது, 'மாட்டேன்., மாட்டேன். ' -சத்யராஜ் மகள் திவ்யா\nகமலுக்கு செம அதிர்ச்சி தந்த ஹாலிவுட் தயாரிப்பாளர் நோலன்\nஏங்க, எத்தனை தடவை சொல்றது, 'மாட்டேன்., மாட்டேன். ' -சத்யராஜ் மகள் திவ்யா\nPrevious Article கணவருடன் ரஷ்யாவில் குடியேறுகிறார் நடிகை ஸ்ரேயா\nNext Article கமலுக்கு செம அதிர்ச்சி தந்த ஹாலிவுட் தயாரிப்பாளர் நோலன்\nசென்னை, மார்ச்.31- 'மீண்டும் மீண்டும் சொல்கிறேன், நான் சினிமாவில் நடிக்கவில்லை' என்று மறுப்பு தெரிவித்துள்ளார் நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா.\nசத்யராஜ் மகள் திவ்யா ஊட்டச்சத்து நிபுணராகப் பணியாற்றி வருகிறார். அந்தத் துறையில் பிஎச்டி படிப்புக்கான ஆய்வுகளையும் மேற்கொண்டு வருகிறார்.\nஅவர் சினிமாவில் நடிகப் போவதாக அடிக்கடி செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இதனை அவரும் அவ்வப்போது மறுத்து வந்தார். இந்நிலையில் வடிவேல் என்பவர் தயாரிக்கும் படத்தில் திவ்யா நாயகியாக நடிப்பதாக செய்திகள் வெளியாகின.\nஇதனை திவ்யா மீண்டும் மறுத்துள்ளார். இந்த முறை ரொம்பவே அழுத்தம் கொடுத்து மறுப்புத் தெரிவித்துள்ளார்.\nஅந்தப் படத்தில், என் தந்தை சத்யராஜ் தான் நடிக்கிறார். என் கிளினிக்கிலிருந்து வீடு திரும்பவே இரவு 9 மணிக்கு மேலாகிறது. இதில் நான் எங்கே சினிமாவில் நடிப்பது சினிமா துறை மீது எனக்கு பெரிய மரியாதை உண்டு. ஆனால், இந்தப் படத்தில் நான் நடிக்கவோ, தயாரிக்கவோ இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.\nPrevious Article கணவருடன் ரஷ்யாவில் குடியேறுகிறார் நடிகை ஸ்ரேயா\nNext Article கமலுக்கு செம அதிர்ச்சி தந்த ஹாலிவுட் தயாரிப்பாளர் நோலன்\nமலேசிய கோடீஸ்வரரை தரக் குறைவாக பேசுவதா அமைச்சர் நஸ்ரிக்கு மசீச கடும் கண்டனம்\nம.இ.காவுக்கு 7 எம்பி, தொகுதிகள் மட்டுமே கோத்தராஜா - கேமரன்மலை கைநழுவுகிறதா\n9 நாடாளுமன்ற வேட்பாளர்கள் யார் யார்\n6 எம்.பி. தொகுதிகளில் மஇகா போட்டி\nஇந்திய தொழிலதிபரான ''டத்தோஶ்ரீ'யுடன் புகைப்படம்: பதிலடி தந்தார் லிம் குவான்\nமலையாளப் பாடல் திறன் போட்டி: அனைவரும் பங்கேற்கலாம்\n1 எம்.டி.பி தலைமை நிர்வாக அதிகாரி அருள் கந்தா அரசியல் பிரவேசமா\nதேர்தல் அதிகாரிகள் பற்றிய போலித் தகவலை நம்பாதீர் \nகேவியசின் ராஜினாமா; தே.மு.விற்கு எவ்வித பாதிப்பும் இல்லை\nகடந்த தேர்தலை விட கூடுதலான வெற்றி: வாய்ப்பு பிரகாசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://seithupaarungal.com/2015/02/02/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-04-26T13:01:40Z", "digest": "sha1:JSDB2GAIG2U2YGBCU3WG3ICQCQ7WHJUH", "length": 14485, "nlines": 116, "source_domain": "seithupaarungal.com", "title": "ராணிப்பேட்டை ஆலை விபத்து குறித்து முழுமையான விசாரணை வேண்டும்: கருணாநிதி – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nஅரசியல், இன்றைய முதன்மை செய்திகள், தமிழ்நாடு, விபத்து\nராணிப்பேட்டை ஆலை விபத்து குறித்து முழுமையான விசாரணை வேண்டும்: கருணாநிதி\nபிப்ரவரி 2, 2015 த டைம்ஸ் தமிழ்\nராணிப்பேட்டை தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் 10 பேர் இறந்த சம்பவம் தொடர்பாக தமிழக அரசு உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தினார்.\nஇதுகுறித்த அறிக்கையில், ‘அ.தி.மு.க. ஆட்சியில் கடந்த ஆண்டு மவுலிவாக்கத்தில் கட்டிட விதிமுறைகளை முழுமையாகப் பின்பற்றாமல் கட்டப்பட்ட 11 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்து அறுபதுக்கு மேற்பட்டவர்கள் பரிதாபகரமாக உயிரிழந்த கொடுமையைப் போலவே, இந்த ஆண்டு தொடங்கி முதல் மாதத்திலேயே ராணிப்பேட்டை அருகே “சிப்காட்” வளாகத்தில், நேற்று நள்ளிரவு கழிவு நீர் சேமிப்புத் தொட்டியின் சுவர் இடிந்து விழுந்து வெளியேறிய கழிவு நீரில் மூழ்கி மூச்சடைத்து, பத்து தொழிலாளர்கள் உயிரிழந்திருக்கிறார்கள் என்ற பதைபதைக்கும் செய்தி வெளிவந்துள்ளது. நள்ளிரவு 12 மணி அளவில் பொது சுத்திகரிப்பு நிலைய கழிவு நீர்த் தொட்டியின் சுவர் திடீரென இடிந்து விழக் காரணம் என்ன\nகொடுமையான இந்தச் சம்பவத்துக்குக் காரணம், தனியார் நிர்வாகத்தின் அலட்சியமே என்று புகார் கூறப்படுகிறது. தொழிலாளர்கள் உயிரிழப்புக்குக் காரணமாக இருந்த புதிய கழிவு நீர்த் தொட்டி, கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு தான் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு சட்ட ரீதியாகப் பெறப்பட வேண்டிய அனுமதி எதுவும் பெறப்படாமல் சட்டத்திற்குப் புறம்பாகக் கடந்த ஆறு மாத காலமாக இந்தக் கழிவு நீர்த் தொட்டி செயல்பாட்டில் இருந்து வந்துள்ளது.\nமேலும் கட்டப்பட்டுள்ள இந்தத் தொட்டி சுத்திகரிக்கப்பட்ட திடக்கழிவினைச் சேமித்து வைப்பதற்காகக் கட்டப்பட்டது. ஆனால் சுத்திகரிக்கப்பட்ட திடக் கழிவினைச் சேமித்து வைப்பதற்குப் பதிலாக, சுத்திகரிக்கப்படாத திரவ வடிவிலான கழிவினைச் சேமித்து வைத்திருக்கிறார்கள். அந்தத் தொட்டியில் கொட்டப்பட்டு வந்த தோல் கழிவான “குரோமிக் ஆசிட்”, காங்கிரீட் சுவரை அரித்துள்ளதை, அண்மையில் தொழிலாளர்கள் கண்டறிந்து, நிர்வாகப் பொறுப்பாளர்களிடம் அதைச் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். ஆனால் நிர்வாகம் அதனைக் காதில் போட்டுக் கொள்ளாமல் ஏனோதானோ என இருந்து விட்டது.\nகழிவு நீர்த் தொட்டியில் உட்புறத்தில், பிளாஸ்டிக் கவர் சுற்றப்பட்டு, அதில் கழிவு நீரை கொட்டி வைத்திருக்கிறார்கள். அதனால் ஏற்பட்ட அளவுக்கு அதிகமான அழுத்தம் காரணமாகத் தொட்டி உடைந்திருக்கிறது. இந்தப் பேரழிவிற்கும் பத்து பேருடைய சோகச் சாவுக்கும் காரணம் இந்த தனியார் நிறுவனமும், அதற்கு உடந்தையாக கடந்த சில மாதங்களாகவே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த இந்த அரசும் தான் என உள்ளூர்ப் பொது மக்களாலும் அனைத்துக் கட்சியினராலும் குற்றம் சாட்டப்படுகிறது.\nசம்பவம் நடைபெற்று பத்து பேர் உயிரிழந்த பிறகு தான் தமிழக அரசு திடீரென விழித்துக் கொண்டு, தங்கள் மீது எங்கே பழி விழுந்து விடுமோ என அஞ்சி, அமைச்சர்களும், அதிகாரிகளும் அவசர அவசரமாக அங்கே சென்று விசாரணை நடத்தியிருக்கிறார்கள். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவசரப்பட்டு இதற்காக நிவாரண நிதியினைத் தன்னிச்சையாகவே அவராகவே அறிவித்து விடுவாரோ என்பதற்காக, இறந்து போனவர்களின் குடும்பத்திற்குத் தலா மூன்று இலட்ச ரூபாய் நிவாரணம் எனப் பன்னீர்செல்வம் அறிவித்திருக்கிறார்.\nமறைந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். தொழிலாளர்கள் பத்து பேருடைய அகால சாவுக்குக் காரணமான சூழ்நிலைகள் குறித்து அரசு முழுமையான விசாரணைக்கு ஏற்பாடு\nசெய்து உரிய தொடர் நடவடிக்கை மேற்கொள்ள\nவேண்டுமென்பதோடு,அவர்களுக்கு அரசின் சார்பில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நிவாரணத் தொகை மிகக் குறைவாக இருப்பதால், குறைந்த பட்சம் குடும்பம் ஒன்றுக்கு பத்து இலட்சம் ரூபாயாவது வழங்க வேண்டும்’ என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.\nகுறிச்சொல்லிடப்பட்டது அரசியல், இன்றைய முதன்மை செய்திகள், சந்தானம், தமிழ்நாடு, தோல் தொழிற்சாலை, விபத்து\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postசீசன் சமையல் – தக்காளி அரைத்த குழம்பு\nNext postவள்ளலாரின் இல்லத்தை நினைவிடமாக்க வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nநீங்களே செய்யலாம் ஃப்ரூட் ஃபலூடா\nபிஸ்தா ஐஸ்கிரீம் செய்வது எப்படி\nகருப்பட்டி கம்பு சேமியா எப்படி செய்வது\nஸ்டாக்கிங் பூக்கள் செய்வது எப்படி\nமணி வளையல் செய்வது எப்படி\nஎம்பிராய்டரி: பிரஞ்ச் நாட்’இல் சூரிய பூக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://bimpankal2.blogspot.com/2010/11/", "date_download": "2018-04-26T13:03:00Z", "digest": "sha1:4NAEORFVJEEMOA47IPSXLQQ7B6INPNGO", "length": 12579, "nlines": 96, "source_domain": "bimpankal2.blogspot.com", "title": "bimpankal2: November 2010", "raw_content": "\nபாசத்திற்குரிய நமது பாரதிராஜா ஓயாத அலைகளின் கடலோரத்தில் கவிதை எழுத வைத்து சின்னப்பதாசை பாஸ் செய்ய வைத்தது இந்த முட்டம் கடலோர கிராமத்தில்தான்.\nமேடும் பள்ளமுமான சாலைகள், உயரமான பாறைகள், செம்மண் சூழ்ந்த நிலபரப்புகள்,\nவரவேற்கும் லைட் ஹவுஸ், வளைந்து நெளிந்த கடற்கரை என்று அடுக்கிகொண்டே போகலாம்.\nஇன்று சுற்றுலா கைவசமுள்ள இந்த வியாபார ஆராவாரமில்லாத கடற்கரைக்கு வந்து செல்வோர் பலர்.\nகுமரிக்கு வரும் சினிமாகாரர்களுக்கு ஏற்ற இடம் மட்டுமல்ல. பல சினிமாக்களும் இங்கே படமாக்கப்பட்டுள்ளன.\nஅருகில் குன்று போல் குவிந்து கிடக்கும் செம்மண் பாறைகளும் காமெராகாரர்களுக்கு மிகவும் பரிட்சியபட்ட ஓன்று. இங்கு பல சினிமாக்களின் சண்டை காட்சிகள் மற்றும் நடனங்கள் படமாக்கப்பட்டுள்ளன.\nஎங்கள் ஊர் புகைப்படகாரர்கள் திருமண தம்பதியர்களை அழைத்து வந்து புகைப்படமெடுத்து திருமண ஆல்பங்களை அழகு படுத்துவார்கள்.\nஅபாயமான பாறைகளும் இங்கே உண்டு. சுனாமிக்கு பதம் பார்க்கப்பட்ட ஊர்களில் முக்கிய இடம் பிடித்த பெயரும் உண்டு.\nசன்ரைஸ் சன்செட் காண்பதற்கும் மிக அருமையான இடம்.\nஇங்கே எடுக்கப்பட்ட இந்த பணரோமாவைதான் நாம் பார்க்கிறோம். பணரோமாவை பற்றி ஏற்கனேவே சொல்லப்பட்டுவிட்டது.\nசேட்டையர்கள் என்றதும் மீண்டும் குழந்தைகளை பற்றி ஏதோ எழுதபோகிறேன் என்று நீங்கள் நினைத்திருக்கலாம்.\nகாலை நேரங்களில் சிலருக்கு கோழி கூவினால் தான் தூக்கமே கலையும். எங்கள் வீட்டை சுற்றி கோழிகளை விட அணில் கூட்டங்கள் தான் அதிகம். அவர்களின் கீச்சு குரலில் நம்மை எழுப்பிவிடுவார்கள்.\nகாலை நேரங்களில் உணவுக்காக ஓடியாடி வேலைபார்ப்பதையும் அப்பப்போ தங்களது சேட்டைகளையும் செய்து நம்மை ரிலாக்ஸ் ஆக்குகிறார்கள். சிலருக்கு மீன் வளர்த்து அதை பார்த்துக்கொண்டிருந்தாலே போதும் கவலைகள் எல்லாம் ஓடோடிவிடும். அதுபோலதான் இவர்களின் சேட்டைகளையும் பார்த்துகொண்டிருந்தால் ஒரு சுகம்.\nஅதிகாலையில் எழுந்து இவர்கள் நடவடிக்கைகளை படம் பிடிப்பது வழக்கம்.\nகாலை நேரமாவதால் வெளிச்சங்கள் குறைவாகவே இருக்கும். சூம் லென்சை மாட்டி விட்டு அதன் வேகமான துள்ளல்களை படம் பிடிக்கும் போது ஷேக் ஆகிவிடுவதுண்டு. ISO அதிகமுள்ள கேமராக்களுக்கு இது ஒன்றும் பெரிய விஷயமில்லை.\nஇங்கே காணப்பட்டிருக்கும் படங்களை நான் எடுத்த விதமே வேறு\nபொதுவாக இப்பொழுது காமேராக்களுக்கு கிடைத்திருக்கும் ஒரு முக்கிய தீப்பெட்டி போன்ற ரிமோட் எனப்படும் கருவிதான் ஒரு பிளஸ் பாயிண்ட் . சில காமேராக்களுக்கு ஒயருடன் கூடிய ரிமோட் கிடைக்கும். சில காமேராக்களுக்கு கார்ட் லெஸ் ரிமோட் கிடைக்கும்.\nஇந்த ரிமோட்டுகளை பொதுவாக காமெரா அசையாமல் ஸ்லோ ஷட்டர் பயன்படுத்தும் இடங்களில் பயன்படுத்துவது வழக்கம். அதாவது இரவு விளக்குகள், ரோடு விளக்குகள், மூன் லைட் போன்றவற்றை படம் பிடிக்க பயன்படுத்துவது வழக்கம்.\nநாம் அணில்களை படம் பிடிப்பதற்காக காலை நேரத்தில் சூம் லென்சை மாற்றிவிட்டு ஸ்டாண்டில் காமெராவை இணைத்துக்கொண்டு ஒரு குறிப்பிட்ட இடத்தை போகஸ் செய்துவிட்டு சிலமணி நேரம் காவல் இருந்தேன். நண்பர்கள் ஒவ்வொருவராக நான் வைத்திருந்த ஆகாரத்தை மோப்பம் பிடித்துகொண்டு வரத்துவங்கினர். நம்மை பார்த்தால் ஓடிவிடுவார்கள் அதுமட்டுமல்ல காமெராவின் கிளிக் சப்தம் கேட்டாலும் போதும் பறந்தே விடுவார்கள். அதனால் தான் இந்த ஏற்பாடெல்லாம். ஒரு குறிப்பிட்ட தூரம் வரை நாம் சூம் லென்சில் எடுத்துவிடலாம் ஆனால் அதை விட நெருக்கமாக நமது கேமராவை கொண்டு செல்வது என்றால் இவர்களுக்கு நம்மை கண்டால் பயம். இங்கே எனது சூம் லென்சின் ஆட்டோ போகஸ் இயங்காது. முழுக்க முழுக்க மானுவல் போகஸ் தான். ரிமோட் பயன்படுத்தும் பொழுது அணில் கொஞ்சம் அங்கே இங்கே என்று இடம் மாறினாலும் ஏமாற்றம் தான் மிச்சம்.\nஇந்த REMOTE சென்னையில் கிடைக்கிறது. நிக்கான் மற்றும் கானன் காமேராக்களுக்கும் கிடைக்கிறது. சில கேமராக்களுக்கு ஏற்ப மாறுபடுவதால் உங்கள் காமெராவின் மாடல் நம்பரை கூறி வாங்கிகொள்ளலாம்.\nகாமேராவிலும் ரிமொடிற்கு என்று ஒரு ஆப்சன் இருப்பதால் அதை போட்டுகொண்டால் தான் ரிமோட் வேலை செய்யும்.\nஎனது ஆர்குட் பகுதியில் 250 அணில் படங்கள் இணைத்துள்ளேன். ஆனால் அதில் ரிமோட் பயன் படுத்தி எடுக்கப்பட்ட புகைப்படங்களை விட ரிமோட் இல்லாமல் எடுக்கப்பட்ட படங்கள் அதிகம் இருக்கும்.\nஒவ்வொரு புகைப்படங்களும் ஒவ்வொரு அனுபவம்.......\nஎனது அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறேன்.....\nஉங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்திட அன்புடன் கேட்டுகொள்கிறேன்.\nபறவையை கண்டான் விமானம் படைத்தான்...........\nபுகைப்பட பிரியன் - புகைப்படகலந்துரையாடல் மற்றும் பயிற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://chennaicity.info/3-3/", "date_download": "2018-04-26T13:35:16Z", "digest": "sha1:DBKF2VY2M4PDR4PFI7YLNOTMCF3VKFJM", "length": 7840, "nlines": 165, "source_domain": "chennaicity.info", "title": "'மூலிகை பெட்ரோல்' மோசடி வழக்கில் ராமர் பிள்ளைக்கு 3 ஆண்டு … – தி இந்து | Chennai City Info - 8122-044-044", "raw_content": "\nபாலியல் வன்கொடுமையில் ஆண் குழந்தைகள் பாதிக்கப்பட்டாலும் மரண தண்டனை அளிக்க வேண்டும்: மேனகா காந்தி ஆதரவு\nவிமானத்தில் ரூ2.6 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்\nHome Business 'மூலிகை பெட்ரோல்' மோசடி வழக்கில் ராமர் பிள்ளைக்கு 3 ஆண்டு … – தி இந்து\n'மூலிகை பெட்ரோல்' மோசடி வழக்கில் ராமர் பிள்ளைக்கு 3 ஆண்டு … – தி இந்து\n'மூலிகை பெட்ரோல்' மோசடி வழக்கில் ராமர் பிள்ளைக்கு 3 ஆண்டு … – தி இந்து\n‘மூலிகை பெட்ரோல்’ மோசடி வழக்கில் ராமர் பிள்ளைக்கு 3 ஆண்டு …\nமூலிகை பெட்ரோல் மோசடி வழக்கில் ராமர் பிள்ளைக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை பெருநகர கூடுதல் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nமூலிகை பெட்ரோல் விற்று ரூ.2.27 கோடி மோசடி ராமர் பிள்ளைக்கு …தினத் தந்தி\n‘மூலிகை பெட்ரோல் மோசடி’ – ராமர் பிள்ளைக்கு 3 ஆண்டு சிறை\n‘மூலிகை பெட்ரோல்’ பெயரில் மோசடி: ராமர் பிள்ளைக்கு 3 ஆண்டு …தினமணி\nநியூஸ்7 தமிழ் –Oneindia Tamil –பிபிசி –விகடன்\nமேலும் 13 செய்திகள் »\n‘மூலிகை பெட்ரோல்’ மோசடி வழக்கில் ராமர் பிள்ளைக்கு 3 ஆண்டு …\nமூலிகை பெட்ரோல் மோசடி வழக்கில் ராமர் பிள்ளைக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை பெருநகர கூடுதல் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nமூலிகை பெட்ரோல் விற்று ரூ.2.27 கோடி மோசடி ராமர் பிள்ளைக்கு …தினத் தந்தி\n‘மூலிகை பெட்ரோல் மோசடி’ – ராமர் பிள்ளைக்கு 3 ஆண்டு சிறை\n‘மூலிகை பெட்ரோல்’ பெயரில் மோசடி: ராமர் பிள்ளைக்கு 3 ஆண்டு …தினமணி\nநியூஸ்7 தமிழ் –Oneindia Tamil –பிபிசி –விகடன்\nமேலும் 13 செய்திகள் »\nபிளஸ்-1 மாணவி பாலியல் பலாத்காரம்; பனியன் தொழிலாளிக்கு … – நக்கீரன் nakkheeran publications\nகறுப்புப் பணத்தை கணக்கில் கொண்டு வரும் பிஎம்ஜிகேஒய் … – தி இந்து\nபிப்ரவரி 1-ந் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு எதிராக … – தினத் தந்தி\nபாலியல் வன்கொடுமையில் ஆண் குழந்தைகள் பாதிக்கப்பட்டாலும் மரண தண்டனை அளிக்க வேண்டும்: மேனகா காந்தி ஆதரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "http://freetamilebooks.com/ebooks/nalayapenkalsuyamavala/", "date_download": "2018-04-26T13:31:46Z", "digest": "sha1:Z34P2W5U6PQHUXPRZRH2ZPNVCADRTTMY", "length": 7246, "nlines": 109, "source_domain": "freetamilebooks.com", "title": "நாளைய பெண்கள் சுயமாக வாழ", "raw_content": "\nநாளைய பெண்கள் சுயமாக வாழ\nஆணுக்கொரு நீதி, பெண்ணுக்கொரு நீதி என்று\nஉலகம் வகுத்து வைத்த கோட்பாடு\nஎன்னை எப்போதும் விசனப்படுத்திக் கொண்டே இருந்தது.\nசின்ன வயதில் சிந்தனைகள் எனக்குள்ளே விரிந்தாலும்\nபெண் என்ற ஒரே காரணத்தால்\nவாய் மூடி மௌனியாகவே இருந்தேன்.\nபெண் என்பவள் ஆண் என்பவனை விட\nஎதிலுமே குறைந்தவளல்ல என்பதைப் புரிந்து கொண்டேன்.\nசிறுகயிற்றில் கட்டப்பட்ட யானை போல\nதம் பலம் உணராது வாழ்வதையும்,\nகாவிச் செல்வதையும் கண்டு வெகுண்டேன்.\n1999 இலிருந்து 2005 வரையான காலப்பகுதியில்\nஇவை ஆண்களுக்கு எதிரானவை அல்ல.\nகுறிப்பிடுதல் – இலாபநோக்கமற்ற , வழிப்பொருளற்ற (CC-BY-NC-ND)\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 247\nநூல் வகை: கட்டுரை, கட்டுரைகள் | மின்னூலாக்கத்தில் பங்களித்தவர்கள்: சந்திரவதனா | நூல் ஆசிரியர்கள்: சந்திரவதனா\nநாளைய பெண்கள் சுயமாக வாழ... மின்னூல் - சந்திரவதனா - வெளிச்சவீடு May 4, 2016 at 10:45 pm . Permalink\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nஆப்பிள் கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nதமிழ் மின்னூல்களைப் படிப்பது எப்படி\nகிரியேட்டிவ் காமன்சு தமிழ் வலைத்தளங்கள்\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n57 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nagoreflash.blogspot.com/2013/02/blog-post_12.html", "date_download": "2018-04-26T13:09:45Z", "digest": "sha1:TRRVRCZFT7N7JXBOHU773FLK5JZZSWFO", "length": 22000, "nlines": 238, "source_domain": "nagoreflash.blogspot.com", "title": "NAGORE FLASH: காரைக்கால் வினோதினி மரணம் ..!! கொடுமையிலும் கொடுமை", "raw_content": "................அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்................. இந்த இணையத்தளம் நாகூர் வாழ் மக்களுக்கான ஓர் அறிவகம்.\n) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)\nகாரைக்கால் வினோதினி மரணம் ..\nஒரு மனித வெறியனால் முகத்தில் ஆசிட் வீசப்பட்டு இவ்வளவு நாள் கொடுமைகளை அனுபவித்து வந்த காரைக்கால் சகோதரி வினோதினி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளர் ...\nஇந்த கொடுமையை செய்த அந்த மிருகத்திற்கு என்ன தண்டனை தெரியுமா ஜெயிலில் கம்பி எண்ணிக்கொண்டு வார வாரம் சிக்கன் பிரியாணியும்,முட்டையும் கொடுப்பது தான் தண்டனையாம்..\nஇதே நிகழ்வு நம் உடன் பிறந்த சகோதரிக்கு நிகழ்ந்தால் .. நம்முடைய நிலை என்ன .. மனிததன்மையே இல்லாமல் இதை செய்தவனுக்கு ஆதரவாக மனித உரிமையை பற்றி பேசி அதிக பட்ச தண்டனையை மறுப்பீர்களா..\nநடு ரோட்டில் மக்கள் முன்னிலையில் முகத்தில் அவன் மீது ஆசிட் ஊற்றி தூக்கில் தொங்கவிட்டு இவனுக்கும் ,இவனை போன்று சிந்திக்கும் மனித மிருகங்களுக்கும் பாடம் கற்பிக்க வேண்டும் என்பீர்களா..\n\"ஆசிட் வீச்சில் உயிர் இழந்த வினோதியின் தந்தை ஜெயபால் தனியார் மருத்துவமனையில் கதறி அழுதார். மகளின் இழப்பை தாங்க முடியாமல் அவர் கண்ணீர் மல்க நிருபர்களிடம் கூறியதாவது:-\nஎன் மகள் உயிருடன் திரும்ப வருவாள் என்றுதான் நம்பி இருந்தோம். இப்படி எங்களை அனாதையாக்கி சென்று விட்டாளே. அவளுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாகதான் டாக்டர்கள் கூறினார்கள். ஆனால் இன்று காலையில் திடீரென இறந்து விட்டதாக தகவல் தெரிவிக்கின்றனர்.\nஅவள் கண் பார்வை இழந்து உயிரோடு இருந்தாள்கூட பரவாயில்லை. அவளை நாங்கள் பார்த்து கொண்டே இருந்திருப்போம். இப்படி எங்களை தனியாக விட்டு அவள் சென்று விட்டாளே...\nசிகிச்சையின்போது அவள் வேதனைப்படுவதை நாங்கள் பார்த்து அழுதோம். அப்போது அவள் என்னிடம், நான்பட்ட கஷ்டத்தை அவனும் (சுரேஷ்) அனுபவிக்கணும் அப்பா... என்று கூறினாள்\nஇந்திய சட்டம் பாதிக்கப்பட்டவன் நிலையில் இருந்து தண்டனை வழங்குகிறதா \nபிறகு எப்படி வினோதினியின் கஷ்டங்களுக்கு நியாயம் கிடைக்கும் \nஇஸ்லாம் கூறும் இன்பமான கணவன் மனைவியா நீங்கள் \nதிருமணம் செய்து கணவன் மனைவியாக கைக் கோர்ப்பவர்கள் கடைசிவரை சந்தோசமாக வாழ வேண்டும் என்றே ஆசைப்படுவார்கள். மணமக்களை வாழ்த்துபவர்கள் கூட இதைத்...\nகளமிறங்கிய போராட்ட குழுவிற்கு ஆதரவுகொடுப்போம்.\nபிரபல இஸ்லாமிய அறிஞர் ஜாகிர் நாயக்கிற்கு பிரிட்டன் தடை வலுக்கும் எதிர்ப்பு\nபிரபல இஸ்லாமிய அறி ஞரும் சர்வதேச சொற்பொழி வாளருமான ஜாகிர் நாயக் பிரிட்டனுக்கு வர அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது பெரும் பரபர...\nVote List-ல் உங்கள் பெயர் இருக்கா...\nVote List-ல் நமது பெயர் மற்றும் முகவரியை சரிபார்க்க இந்த Website உதவுகிறது. Vote List-ல் பெயர் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. நீங்கள் தேர்...\nபெண்களை துரத்தும் ரகசிய கேமராக்கள் – ஓர் அபாய எச்சரிக்கை \n( மிக நுணுக்கமான செய்தி என்பதால் நீண்ட பதிவாக எழுதி இருகிறோம் குறிப்பாக பெண்கள் அளிப்பு பார்க்காமல் முழுமையாக படித்து பயன்பெறவேண்டும்,மற்றவ...\nவிந்தின் பிறப்பிடம் - திருக்குரானின் விளக்கம்\nகுர்ஆன் - அறிவுக்கும் அறிவியலுக்கும் ஏற்ற எக்காலத்திற்கும் பொருந்தும் ஓர் வாழ்வியல் நெறிநூல் இது அறிவியல் நூலல்ல; ஆனாலும் அறிவியலையும் உள்ள...\n\"இஸ்லாத்தின் பார்வையில் இசை ஒரு முழுமையான ஆய்வு\"\n இசை என்பதன் விளக்கம் என்ன … இசை என்ற சொல்லுக்கு இசைய வைப்பது எனறு பொருள். இசை (Music) என்பது ஒழுங்கு செய...\nஹதீஸ் - அடிப்படை விளக்கம்\n ஹதஸ் என்ற வேர்ச்சொல்லிலிருந்து பெறப்பட்ட சொல்தான் ஹதீஸ் என்பது. ஹதீஸ் என்றால் உரை உரையாடல் புதியசெய்தி எனப்ப...\nநவீன காலத்து அடிமைகளை விடுவிப்போம்....\nவளைகுடா நாடுகளில் வேலை செய்யும் முஸ்லிம்களில், கணிசமானவர்கள் வீடுகளில் வாகன ஓட்டுனர் வேலை செய்பவர்களாக உள்ளனர். இவர்களில் பெரும்பான்மையினர் ...\nஇரு தரப்பு பேச்சுவார்த்தை எதிர்பார்த்தப்படி சுமூகமாக முடிந்தது.\nஒரு பிரச்சனை எப்படி முறைப்படி கையாளபட வேண்டுமோ அப்படி கையாளபட்டிருகிறது.. அல்ஹம்துலில்லாஹ். கடந்த விநாயகர் சதுர்த்தி அன்று நாகூர் மியா...\n9/11 INSIDE JOB (3) BOOKS (11) HAJ (10) MEDIA (7) POLL (1) ZAKIR NAIK (7) அக்கம் பக்கம் (28) அமைதி (3) அரசியல் (5) அரசு உத்தரவுகள் (14) அரவாணிகள் (1) அவ்லியா (2) அறிவியல் (19) அனுபவம் (26) அஹமது தீதாத் (2) இசை (2) இந்திய முஸ்லிம்கள் வரலாறு (3) இல்லறம் (2) இறுதி தீர்ப்புநாள் (2) உதவி தேவை (13) எச்சரிக்கை (18) ஒற்றுமை (9) கல்வி (24) கனவு இல்லம் (1) கிலாபத் (2) கேள்வி பதில் (18) சத்தியமார்க்கம் (26) சஹாபாக்கள் (4) சுய பரிசோதனை (3) செல்போன் (12) தப்லீக் (1) தரீக்கா (2) தர்கா (11) தன்னம்பிக்கை (2) திருமணம் (6) தீவிரவாதம் (12) தெரிந்த ரகசியங்கள் (32) தெரிந்து கொள்ளுங்கள் (111) தேசபக்தி (9) தேர்தல் 2011 (22) நபி(ஸல்) (3) நாகூர போல வருமா (6) நாகூர் (1) நாகூர் சங்கதி (119) நாகூர் வரலாறு (2) நாத்திகன் (3) நோன்பு (1) பழனிபாபா (1) பாபரி மஸ்ஜித் (7) பாவமன்னிப்பு (3) பிறை (4) புகை (3) பைபிள் (3) போராட்டக்களம் (10) போராட்டம் (1) மருத்துவம் (10) மவ்லித் (4) மீலாது (1) முஸ்லீம்கள் (5) மோசடி (10) ரமளான் (5) வாக்காளர் பட்டியல் (1) விமர்சனங்கள் (5) விவாதங்கள் (4) ஷியா (2) ஷிர்க் (14) ஸூபித்துவம் (2) ஹதீஸ் (3) ஹிந்து தீவிரவாதிகள் (22) ஹிஜாப் (16)\nவிஸ்வரூப விவகாரம் - முதல்வர் பேசியதின் முழு விபரம்...\nஆதார் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்து விட்டீர்களா\nநாகூருக்கு வரும் பஸ்கள் மாற்றுப்பாதையில் செல்ல ஏற்...\nகாரைக்கால் வினோதினி மரணம் ..\nமாடர்ன் சிட்டி என்ற பெயரில் மோசடியா \nமாடர்ன் சிட்டி மீதான குற்றச்சாட்டிற்கு மறுப்பு..\nநாகூர் தர்கா யானைக்கு என்ன ஆச்சு \nகுரான் & ஹதீஸ் நூல்கள் பதிவிறக்கம்\nநபி( ஸல்) முழு வரலாறு\nகிருத்துவ மத போதகருடனான கலந்துரையாடல்\nஇரத்ததானம் செய்ய பதிவு செய்யுங்கள்\nசெய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற மின்னஞ்சல் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்\nதமிழில் டைப் செய்ய (தங்கலிஷ்)\nஅல்லாஹ்வின் சாந்தியும் , சமாதானமும் உங்கள் அனைவரின் மீதும் உண்டாவதாக இந்த தளம் நாகூர் வாழ் மக்களுக்கான ஓர் அறிவகம். நல்ல விஷயங்கள் பகிர்ந்து கொள்ளவும், தவறான விஷயங்களை சுட்டிக்காட்டவும் இந்த தளத்தை அமைத்திருகிறோம்.. நம்ம ஊரை பற்றி மற்றவர்களை விட நாமே அதிகம் விமர்சிக்கிறோம் இதே ஊரில் இருந்துகொண்டு, உண்மையில் நம்மை நாமே விமர்சித்து கொள்கிறோம் என்பதே உண்மை.. ஆகையால் உணர்வுகளை உள்ளது உள்ளபடி பகிர்ந்து கொள்ள ஒரு தளம். மேலும் உலக நாட்டுநடப்புகளும் இங்கே உரியமுறையில் அலசப்படுகிறது. நீங்களும் இந்த தளத்தின் அங்கமே , உங்களின் கருத்துகள் ,விமர்சனங்கள் , கட்டுரைகள் எதுவாக இருந்தாலும் nagoreflash@ymail.com முகவரிக்கு அனுப்பித்தாருங்கள். உங்கள் அன்புடன் அப்துல்லாஹ்.\nஅண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: \"தொழுகையாளிகள் அரபுத் தீபகற்பத்தில் தன்னை இபாதத் செய்வார்கள் -வணங்குவார்கள் - எனும் விஷயத்தில் ஷைத்தான் நிராசை அடைந்து விட்டான். எனினும், முஸ்லிம்களிடையே பகைமைத் தீயை மூட்டுவதில் அவன் நம்பிக்கை இழக்கவில்லை\". அறிவிப்பாளர்: ஜாபிர்(ரலி), நூல்: முஸ்லிம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://pathavi.com/?page=8", "date_download": "2018-04-26T12:59:28Z", "digest": "sha1:FRLXCUMFTVYEVVDF367ENZXZQC6W5BUI", "length": 12322, "nlines": 269, "source_domain": "pathavi.com", "title": "Best tamil websites & blogs •et; Page 8 •et; Pathavi", "raw_content": "\nமர்ம மாளிகையில் பலே பாலு - வாண்டுமாமா நூலினை டவுன்லோட் செய்ய.\nகா ..கா ..கா -இந்திரா சௌந்தர்ராஜன் அமானுசிய தொடர் நூல் வடிவில் .\nராஜீவ் கொலை வழக்கு - வழக்கின் தலைமை புலனாய்வு அதிகாரி கே. ரகோத்தமனின் நூல் .\nதெலுங்கு நடிகர் ராணா டக்குபட்டியை சைகோ என்கிறார் த்ரிஷா… ஏன்\nமீண்டும் மீண்டும் அறுந்த சிம்புவின் வாலு….\nஉத்தம வில்லனுக்கு 35 கோடி கொடுத்த உத்தம தயாரிப்பாளர்…. | Thiriaiulagam\nலிங்குசாமியை நடுத்தெருவுக்குக் கொண்டு வந்த கமல்ஹாசன்…\nஉத்தம வில்லன் – விமர்சனம் | screen4screen\nஉடல் உறுப்புகளை பாதுகாக்க டிப்ஸ்\nரஜினி, கமலுடன் சண்டை போட்ட எஸ்.பி.முத்துராமன்\nகுற்றம் கடிதல் படத்தின் உண்மையான தயாரிப்பாளர் யார் – தேசிய விருதுக்குப் பிறகு வெடிக்குது சர்ச்சை – தேசிய விருதுக்குப் பிறகு வெடிக்குது சர்ச்சை\n‘பென்சில்’ பள்ளிப் பருவ பரபரப்பு…\nM.R. ராதாயணம் - அறிந்திராத ராதாவின் அசல் முகம் நூல் வடிவில் .\nஅபாய நகரம் - முகமூடி வீரர் மாயாவி தோன்றும் காமிக்ஸ் .\nபரலோகத்திற்கொரு பாலம்- லக்கி லூக்கின் சாகசம் நிறைந்த காமிக்ஸ் .\nஎம்.ஆர்.ராதா. காலத்தின்கலைஞன் - மணா நூல் .\nசவுகார்பேட்டை’யில் நடக்கும் கதை என்ன..\nலதா ரஜினிதான் பொய் சொல்கிறார்… ஆட் பியூரா நிறுவனம் மறுபடியும் குற்றஞ்சாட்டுகிறது..\nபாபிசிம்ஹாவின் அராஜகம்... இதற்காகதான் ஆசைப்பட்டீர்களா டைரக்டர்\n ‘அந்த ’ உறுப்பை அறுக்கும் க்ளைமாக்ஸ்\nசிம்ரன் வீட்டுக்கு படையெடுக்கும் இயக்குனர்கள் Simran turns Film Producer\nஇலங்கையின் அதிஷ்டமும் தென்னாபிரிக்காவின் துரதிஸ்டமும் மீண்டும் தொடருமா\nசிம்புவின் ‘வாலு’ அறுந்தது…. – தமிழ் ஸ்கிரீன்.காம் செய்தி உண்மையானது… | Tamilscreen\nSURESH'S IT ULAA: மென்பொருட்கள் எதுவுமின்றி youtube தளத்திலே காணொளி ஒன்றை பதிவிறக்குவது எப்படி\nபுதிய தலைமுறை மார்ச் 26,2015- காந்தி ஒரு பிரிட்டிஷ் ஏஜென்ட்\nசக்தி விகடன் சக்தி ஜோதிடம் - சத்தியத்தை காப்பாற்றிய சிவபெருமான்\nஆனந்த விகடன் மார்ச் 25,2015 - அதிகாரி சகாயம்... ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி... வதம் செய்யும் அரசாங்கம்\nத்ரிஷாவுக்கு 5 கோடி பணம் தேவையாம்.. – கடன் கேட்டு அலையும் புரோக்கர்கள் – கடன் கேட்டு அலையும் புரோக்கர்கள்\nPathavi தமிழின் முதன்மையான வலைப்பதிவு திரட்டி ஆகும். Pathavi தமிழ் வலைப்பதிவுகளுக்கு பலச் சேவைகளை வழங்கி வருகிறது. வலைப்பதிவுகளை திரட்டுதல், மறுமொழிகளை திரட்டுதல், குறிச்சொற்களை திரட்டுதல், வாசகர் பரிந்துரைகள், தமிழின் முன்னணி வலைப்பதிவுகள் என பலச் சேவைகளை Pathavi வழங்கி வருகிறது. வேறு எந்த இந்திய மொழிகளிலும் இல்லாத அளவுக்கு தொழில்நுட்ப சேவைகளை Pathavi தமிழ் வலைப்பதிவுகளுக்கு அளித்து வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.eegarai.net/t52970-topic", "date_download": "2018-04-26T13:17:13Z", "digest": "sha1:HER36NJDXX62DWSNE63NO3FTXXF4GJH6", "length": 27207, "nlines": 334, "source_domain": "www.eegarai.net", "title": "கின்னஸ் ரெகார்ட்ஸ் புத்தகத்தில் 'அவன் இவன்' விஷால்", "raw_content": "\nருசியான ஊறுகாய்கள் - அரு /அரை நெல்லிக்காய் தொக்கு \nஅரை நெல்லிக்காய் - அரை நெல்லிக்காய் தொக்கு \nஎச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி\nஉடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்\nஎனக்குள் ஒரு கவிஞன் SK\nஉலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி\nபராமரிப்பு பணி முடிந்தது பழநி கோயில் வின்ச் சேவை துவக்கம்: பக்தர்கள் மகிழ்ச்சி\nபாலகுமாரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக\nஅறிமுகம்---- வாலி மோகன் தாஸ்\n2 மணி நேரம் பொறுக்க முடியாதா கஸ்தூரி..\nஎதுக்காக உன் காதலியை கிணத்துல தள்ளிவிட்டே...\nஅமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி\nநிலக்கரியை விட கருப்பாக இருக்கும் கிரகம் கண்டுபிடிப்பு\nகவர்ச்சி நடிகைகிட்ட பிடிச்சது, அவரோட நடிப்பு...\nஏப்ரல் 30-ம் தேதி வைகை ஆற்றில் இறங்குகிறார் கள்ளழகர்\nகோயில்களுக்கு செல்ல குழந்தைகளை கண்டிப்பாக பழக்குங்கள்.....\nஇந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'\nஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்\nஉப்புமா சாப்பிடுவது மோன நிலை...\nநீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு\n‘சிற்றெறும்பு கட்டெறும்பு’ - கமல்ஹாசன், அமைச்சர் ஜெயக்குமார் வார்த்தை ஜாலத்தால் ஒருவருக்கொருவர் கிண்டல்\nஉ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்\nகண்மணி வார நாவல் 25.04.2018\nதிகில் மன்னன் ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக\nதாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து\nபலாத்காரத்துக்கு ஆளாகும் ஆண் குழந்தைகளுக்கும் இழப்பீடு'\nஇந்தியர்களை பாதிக்கும் ‘எச்-4’ விசா ரத்து நடவடிக்கைக்கு அமெரிக்க எம்.பி.க்கள் எதிர்ப்பு, ஐ.டி. துறையும் கண்டனம்\n'பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்\n5,000 குஜராத் விவசாயிகள் தற்கொலைக்கு மனு\nவாழ்க்கையை ஓஹோன்னு வாழ கன்ஃபூசியஸ் சொன்ன 10 கட்டளைகள்...\nஇரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு\nரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது: மக்கள் மன்ற மாநில செயலாளர் பேச்சு\n2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்: ஜூன் 16-ம் தேதி இந்தியா-பாக். மோதல்\nசுப்ரீம் கோர்ட் எதிர்காலம்: ஆலோசிக்க நீதிபதிகள் கோரிக்கை\nநாடு முழுவதும் 24 போலி பல்கலை.,கள்\nகாங்., கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக்கறை: சல்மான் குர்ஷித் சர்ச்சை\nகின்னஸ் ரெகார்ட்ஸ் புத்தகத்தில் 'அவன் இவன்' விஷால்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nகின்னஸ் ரெகார்ட்ஸ் புத்தகத்தில் 'அவன் இவன்' விஷால்\nடைரக்டர் பாலாவின் இயக்கத்தில் 'அவன் இவன்' படத்தில் ஆர்யாவுடன் விஷால் இணைந்து நடித்துள்ளார்.\nஅவன் இவன் படத்தில் நடித்த அனுபவத்தை கூறியுள்ளார். தான் எடுக்க விரும்பிய காட்சி நன்றாக வர,காலம் நேரம் பார்க்காமல் காத்திருக்கும் 'பெர்பெக்சன்' டைரக்டர் தான் பாலா.\nஅவரோட பிலிம் மேக்கிங் ஸ்டைலை கவனித்து அசந்து போனேன். பால் பேதம் பார்க்காமல் அவர் கொடுத்த ரோலில் 'மாறு கண்' ரோலில் நடித்த அனுபவம், பல்கலை கழகத்தில் படித்தமாதிரி இருந்தது.\nஎந்த வித எதிர்ப்பார்ப்பும் இல்லாமல், என்னை ஒப்படைத்து படத்தில் நடித்துள்ளேன். நடிகனாக பல விதமாக உணர்ச்சிகளை கொட்டி இதில் நடித்துள்ளேன். இப்படி நடித்த பிறகு, அடுத்த படத்தில் நடிக்க கொஞ்சம் பயமாக உள்ளது.\nசெல்லமே படத்தில் நடித்த பின்,நான் எதிர்பார்த்த, வித்தியாசமான ரோலில் இப்போது நடித்துள்ளேன். உலகிலேயே 'மாறு கண்' ஹீரோவாக படம் முழுக்க நடித்த ஒரே நடிகர் நானாகத்தான் இருப்பேன்.\nஎன்னுடைய உழைப்பு கின்னஸ் ரெகார்ட்ஸ் புத்தகத்தில் இடம் பெறும் என நினைக்கிறேன்.அதற்காக 'அப்ளை' பண்ணியிருக்கேன்.இந்த ரோலை பண்ணும் போது,எனக்கு தலைவலி வந்தது.துடிச்சு போயிட்டேன்.\nசினிமா மேல் உள்ள காதலால், பாலாவின் டைரக்சனில் 'அவன் இவனில்' கஷ்டப்பட்டு நடித்துள்ளேன். பாலாவின் பிலிம் மேக்கிங்கை ஒரு அசிஸ்டென்ட் டைரக்டராக இருந்து, கவனித்து நிறைய கற்றுக்கொண்டேன். எனக்கும் ஆர்யாவுக்கும் இடையே உள்ள நட்பு 'அவன் இவன்' படத்துக்கு பலம் சேர்த்துள்ளது.\nஅடுத்த படம் பிரபு தேவாவின் இயக்கத்தில் நடிக்கிறேன். தெலுங்கு 'சௌரியம்' படத்தை தமிழில் ரீமேக் பண்ணுகிறார்கள். சவாலான போலிஸ் ரோலில் நடிக்கிறேன். எந்த ரோலுக்காகவும் என்னையே அர்ப்பணித்து படங்களில் நடிக்க தயாராக உள்ளேன்' என்கிறார் விஷால்.\nRe: கின்னஸ் ரெகார்ட்ஸ் புத்தகத்தில் 'அவன் இவன்' விஷால்\nவர தானே போகிறது... பார்க்க தானே போறோம்\nRe: கின்னஸ் ரெகார்ட்ஸ் புத்தகத்தில் 'அவன் இவன்' விஷால்\n@பிளேடு பக்கிரி wrote: வர தானே போகிறது... பார்க்க தானே போறோம்\nஅப்ப என்ன பார்க்கமேலே முடிவு பண்ணலாம்ன்னு பார்த்தியா\nRe: கின்னஸ் ரெகார்ட்ஸ் புத்தகத்தில் 'அவன் இவன்' விஷால்\nவிஷாலின் நடிப்பு செல்லமே படத்தில் அருமையாக இருந்தது.. அஜயின் தம்பி தான் விஷால்.\nபோலிஸ் வேடத்தில் நடிக்க அருமையாய் உழைத்து உடலை சரியாக்கி நடித்த படமும் அருமையாக இருந்தது.\nபாலாவின் படத்தில் நடிக்கனும்னா ரொம்பவே கஷ்டம் தான். பாலுமகேந்திராவின் சிஷ்யனாச்சே பாலா. பாலாவிடம் உருவான விக்ரம் இன்னிக்கு சக்கை போடு போடுகிறார்.\nநான் கடவுள் இல்லை படத்தில் ஆர்யாவின் வித்தியாசமான நடிப்பை கண்டு பிரமித்தேன். ஆனால் என்ன மழலைக்குரல் ஆர்யாவுக்கு. அதை கொஞ்சம் சரி செய்துக்கனும்..\nவிஷால் மாறுக்கண்ணோடு படம் முழுக்க நடித்திருப்பதாக சொல்லி இருக்கார். ரொம்ப கஷ்டமான வேலை இது. தலைவலிக்கும் பயங்கரமாக.\nசௌரியம் படம் பார்த்திருக்கேன் தெலுகில. செம்ம படம்... கோபிசந்த் தான் ஹீரோ தெலுங்கில்.. விஷாலும் செம்மையா அசத்துவார் என்ற நம்பிக்கை இருக்கிறது....\nஅன்பு வாழ்த்துக்கள் ஆர்யா விஷால் பாலா மூவர் கூட்டணிக்கு...\nஅன்பு நன்றிகள் ரஃபீக் பகிர்வுக்கு.... நாட்டு நடப்பை நிறைய விஷயங்களை செய்தி பகிர்வு நீங்க தருவதில் இருந்து அறிய முடிகிறதுப்பா...\n ஊரில் இருந்து வந்தாச்சு பேட் டு பெவிலியனாப்பா ஊரில் எல்லோரும் சௌக்கியமா\nRe: கின்னஸ் ரெகார்ட்ஸ் புத்தகத்தில் 'அவன் இவன்' விஷால்\n@மஞ்சுபாஷிணி wrote: அன்பு நன்றிகள் ரஃபீக் பகிர்வுக்கு.... நாட்டு நடப்பை நிறைய விஷயங்களை செய்தி பகிர்வு நீங்க தருவதில் இருந்து அறிய முடிகிறதுப்பா...\n ஊரில் இருந்து வந்தாச்சு பேட் டு பெவிலியனாப்பா ஊரில் எல்லோரும் சௌக்கியமா\nமிக்க நலம் அக்கா ,,குழந்தை மிகவும் நலம் அக்கா ,என்ன பன்றது பிழைக்க மறுபடி இங்கு வர வேண்டி இருக்கே தங்கள் குடும்பத்தினர் அனைவரும் நலம்தானே அக்கா \nRe: கின்னஸ் ரெகார்ட்ஸ் புத்தகத்தில் 'அவன் இவன்' விஷால்\n@பிளேடு பக்கிரி wrote: வர தானே போகிறது... பார்க்க தானே போறோம்\nதியாட்டர்ல வார கூட்டத்தில உள்ளவங்க பர்சை நாங்க எண்ணிக்கு டிக்கெட் சொந்த காசுல வாங்கிருக்கோம்\nRe: கின்னஸ் ரெகார்ட்ஸ் புத்தகத்தில் 'அவன் இவன்' விஷால்\n@பிளேடு பக்கிரி wrote: வர தானே போகிறது... பார்க்க தானே போறோம்\nஅப்ப என்ன பார்க்கமேலே முடிவு பண்ணலாம்ன்னு பார்த்தியா\nநாங்க ஒரு தடவை முடிவு பண்ணிட்டம்னா.... பண்ணிட்டம்னா....\nRe: கின்னஸ் ரெகார்ட்ஸ் புத்தகத்தில் 'அவன் இவன்' விஷால்\n@மஞ்சுபாஷிணி wrote: அன்பு நன்றிகள் ரஃபீக் பகிர்வுக்கு.... நாட்டு நடப்பை நிறைய விஷயங்களை செய்தி பகிர்வு நீங்க தருவதில் இருந்து அறிய முடிகிறதுப்பா...\n ஊரில் இருந்து வந்தாச்சு பேட் டு பெவிலியனாப்பா ஊரில் எல்லோரும் சௌக்கியமா\nமிக்க நலம் அக்கா ,,குழந்தை மிகவும் நலம் அக்கா ,என்ன பன்றது பிழைக்க மறுபடி இங்கு வர வேண்டி இருக்கே தங்கள் குடும்பத்தினர் அனைவரும் நலம்தானே அக்கா \nநண்பா.... குழந்தை உங்களை போலவே அல்கா இருக்கா\nRe: கின்னஸ் ரெகார்ட்ஸ் புத்தகத்தில் 'அவன் இவன்' விஷால்\nநண்பா.... குழந்தை உங்களை போலவே அல்கா இருக்கா\nஅதல்லாம் மருமகன் நல்லாவே இருப்பான் மாமா\nRe: கின்னஸ் ரெகார்ட்ஸ் புத்தகத்தில் 'அவன் இவன்' விஷால்\nநண்பா.... குழந்தை உங்களை போலவே அல்கா இருக்கா\nஅதல்லாம் மருமகன் நல்லாவே இருப்பான் மாமா\nஉன் குழந்தையை கேட்கல ... தல ரபீக் கிட்ட கேட்டேன்\nRe: கின்னஸ் ரெகார்ட்ஸ் புத்தகத்தில் 'அவன் இவன்' விஷால்\nஉன் குழந்தையை கேட்கல ... தல ரபீக் கிட்ட கேட்டேன்\nRe: கின்னஸ் ரெகார்ட்ஸ் புத்தகத்தில் 'அவன் இவன்' விஷால்\n@மஞ்சுபாஷிணி wrote: அன்பு நன்றிகள் ரஃபீக் பகிர்வுக்கு.... நாட்டு நடப்பை நிறைய விஷயங்களை செய்தி பகிர்வு நீங்க தருவதில் இருந்து அறிய முடிகிறதுப்பா...\n ஊரில் இருந்து வந்தாச்சு பேட் டு பெவிலியனாப்பா ஊரில் எல்லோரும் சௌக்கியமா\nமிக்க நலம் அக்கா ,,குழந்தை மிகவும் நலம் அக்கா ,என்ன பன்றது பிழைக்க மறுபடி இங்கு வர வேண்டி இருக்கே தங்கள் குடும்பத்தினர் அனைவரும் நலம்தானே அக்கா \nஇறைவன் அருளால் எல்லோரும் நலமே ரஃபீக்....\nRe: கின்னஸ் ரெகார்ட்ஸ் புத்தகத்தில் 'அவன் இவன்' விஷால்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthinappalakai.net/2017/05/26", "date_download": "2018-04-26T13:16:22Z", "digest": "sha1:5EDMLMZTSFJHKNVNGOIPMM32DY2OAS2K", "length": 12082, "nlines": 112, "source_domain": "www.puthinappalakai.net", "title": "26 | May | 2017 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nஇரண்டு கப்பல்களில் உதவிப் பொருட்களை சிறிலங்காவுக்கு அனுப்பியது இந்தியா\nசிறிலங்காவில் வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவிப் பொருட்களை இரண்டு கடற்படைக் கப்பல்களில் இந்தியா அனுப்பி வைத்துள்ளது.\nவிரிவு May 26, 2017 | 17:52 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nபோராடும் மக்களின் நம்பிக்கையை இழந்து வரும் சிறிலங்கா அரசாங்கம் – அமெரிக்க ஊடகம்\nசிறிலங்காவில் 26 ஆண்டுகளாகத் தொடரப்பட்ட உள்நாட்டு யுத்தத்ததால் இந்த நாட்டில் வாழ்ந்த ஒவ்வொருவரும் பாதிக்கப்பட்டனர். நான்கு பிள்ளைகளின் தாயாரான காசிப்பிள்ளை ஜெயவனிதா, உள்நாட்டு யுத்தம் முடிவடைவதற்கு இரண்டு மாதங்களின் முன்னர் அதாவது மார்ச் 2009ல் தனது குடும்பம் எவ்வாறான அவலத்தைச் சந்தித்தது என்பதை விபரித்தார்.\nவிரிவு May 26, 2017 | 12:47 // நித்தியபாரதி பிரிவு: கட்டுரைகள்\nசிறிலங்காவில் கடும் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 91 பேருக்கு மேல் பலி\nசிறிலங்காவின் தென்பகுதியில் கடும் மழையினால் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் 91 பேருக்கு மேல் பலியானதாகவும், 110 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவிரிவு May 26, 2017 | 11:49 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nதிருகோணமலையில் அமெரிக்க கடற்படைத்தளம் – இரகசிய உடன்பாடு கையெழுத்தாம்\nதிருகோணமலை துறைமுகத்தை மையப் பகுதியாகக் கொண்டு அமெரிக்க கடற்படைத் தளம் ஒன்று அமைக்கப்படவுள்ளதாகவும், இதற்கான இரகசிய உடன்பாடு சிறிலங்கா- அமெரிக்க அரசுகளுக்கு இடையில் செய்து கொள்ளப்பட்டுள்ளதாகவும், லங்கா சம சமாசக் கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.\nவிரிவு May 26, 2017 | 4:29 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nபிரிகேடியர் தேசப்பிரிய குணவர்த்தனவை விளக்கமறியலில் வைக்க கம்பகா நீதிமன்றம் உத்தரவு\nரதுபஸ்வெலவில் சுத்தமான குடிநீர் கேட்டுப் போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்ட பிரிகேடியர் தேசப்பிரிய குணவர்த்தனவை விளக்கமறியலில் வைக்க கம்பகா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nவிரிவு May 26, 2017 | 3:54 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nவடக்கு, கிழக்கில் மேலும் 3000 ஏக்கர் காணிகள் விரைவில் விடுவிப்பு- சிறிலங்கா அரசு\nவடக்கு, கிழக்கில் சிறிலங்கா படையினர் வசமுள்ள மேலும் 3000 ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்திருப்பதாக, நெடுஞ்சாலைகள் மற்றும் உயர்கல்வி அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.\nவிரிவு May 26, 2017 | 3:35 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\n“மன்மோகன்சிங் மறைவு” – சிறிலங்கா வெளிவிவகார அமைச்சரின் போலி கீச்சக பதிவால் பரபரப்பு\nஇந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் காலமாகி விட்டதாக, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் பெயரில் பதிவு செய்யப்பட்ட போலி கீச்சகப் பக்கத்தில் பதிவு இடப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nவிரிவு May 26, 2017 | 3:26 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nசம்பந்தனைச் சந்தித்தார் சுவீடன் தூதுவர்\nசிறிலங்கா, இந்தியா, மாலைதீவு, நேபாளம், பூட்டான் ஆகிய நாடுகளுக்கான சுவீடன் தூதுவர் ஹரோல்ட் சான்ட்பேர்க் நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.\nவிரிவு May 26, 2017 | 3:06 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் இரா.சம்பந்தன் – ‘சேர் பொன். இராமநாதனின் மறுஉருவம்’\t0 Comments\nகட்டுரைகள் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு யார் காரணம்\nகட்டுரைகள் சிறிலங்கா: மகிந்தவுக்காக திறக்கப்படும் கதவுகள்\t0 Comments\nகட்டுரைகள் ஐ.நாவின் மனிதஉரிமைச் செயற்பாடுகளைப் பலவீனப்படுத்தும் ரஷ்யா, சீனா\t0 Comments\nகட்டுரைகள் சீனாவின் இறுக்கமான பிடியில் சிறிலங்காவின் அமைதியான துறைமுகம்\t1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுக்கு எதிரான வியூகத்தில் சிறிலங்காவின் பௌத்த பிக்குகளையும் இணைக்கிறது இந்தியா\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்திய மாக்கடலில் அதிகரிக்கும் சீனாவின் செல்வாக்கும் – இந்தியாவின் முத்தரப்பு கடற்பாதுகாப்பு ஒப்பந்தமும்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t0 Comments\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t2 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://adiraipirai.in/archives/46530", "date_download": "2018-04-26T13:32:12Z", "digest": "sha1:Z6D3M7EL64CPDYRSNO736PGGVQ4LYNZ3", "length": 8858, "nlines": 123, "source_domain": "adiraipirai.in", "title": "பேஸ்புக்கில் உலா வரும் போலி முகங்களுக்கு செக் வைத்த செக்கர்பெர்க்..! - Adiraipirai.in", "raw_content": "\nஅதிரையில், சாம்பலான பிறகு சாவகாசமாக வந்த தீயணைப்பு வாகனம்\nமரண அறிவிப்பு – நடுத்தெரு ஹாஜி ஷிஹாபுத்தீன் (வயது 74)\nஅதிரை ரஹ்மானிய்யா மதரஸாவில் இன்று பட்டமளிப்பு விழா\nBREAKING NEWS: அதிரை கடைத்தெருவில் பயங்கர தீ விபத்து\nநோய் பரப்புவதில் நாங்கள் கெட்டிகாரர்கள் – பேரூராட்சி\nமரண அறிவிப்பு – தட்டார தெருவை சேர்ந்த S.M.S.அப்துல் ரவூப்\nசவூதி ரியாத்தில் கொட்டித்தீர்த்த கனமழை\nதஞ்சையில் தினகரனுடன் போராட்டக்களத்தில் பங்கேற்ற அதிரை அமமுக வினர்\nகவலையில் இருக்கும் ஏர்செல் வாடிக்கையாளர்களுக்கு ஆறுதலான செய்தி\nதொடர்ந்து விடுதலையாகும் பாஜக, ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகள்… அதிரவைக்கும் தகவல்\nகல்வி & வேலை வாய்ப்பு\nHome/posts/தமிழகம்/பேஸ்புக்கில் உலா வரும் போலி முகங்களுக்கு செக் வைத்த செக்கர்பெர்க்..\nபேஸ்புக்கில் உலா வரும் போலி முகங்களுக்கு செக் வைத்த செக்கர்பெர்க்..\nபேஸ்புக் சமூக வலைத்தளத்தில் இதுவரை சுமார் 27 கோடி போலி கணக்குகள் பயன்படுத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பேஸ்புக் நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு வருவாய் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இத்துடன் பேஸ்புக் தளத்தில் பல போலி மற்றும் நகல் கணக்குகள் இருப்பதாக தெரிவித்துள்ளது.\nஇத்துடன் 210 கோடி மாதாந்திர பயனாளிகளில் கிட்டதட்ட இரண்டு அல்லது மூன்று மடங்கு கணக்குகள் தவறான வகைப்படுத்தியோ அல்லது தகுதியற்ற முறையில் இடம்பெற்றுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிஜ பேஸ்புக் பயனாளிகளில் கிட்டதட்ட 10 சதவிகித கணக்குகள் போலியானவை, இது கடந்த ஆண்டை விட இருமடங்கு அளவு அதிகரித்துள்ளது. அந்த வகையில் 210 கோடி வாடிக்கையாளர்களில் 13 சதவிகிதம் பேர் அதாவது சுமார் 27 கோடி வாடிக்கையாளர்கள் போலியானவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎனினும் போலி கணக்குகளை கட்டுப்படுத்துவதற்கான பணிகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பேஸ்புக் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக வெளியான தகவல்களில் ரஷ்ய பிரிவுகளை சேர்ந்தவர்கள் மூலம் பரப்பப்பட்ட தரவுகளை பேஸ்புக் கணித்ததை விட பலமடங்கு அதிகமானோர் பார்த்திருப்பது தெரியவந்துள்ளது.\nபேஸ்புக் முதலீடுகள் சார்ந்த தகவல்களில் அந்நிறுவனம் போலி செய்திகளை தடுத்து நிறுத்தவும், கடுமையான நடவடிக்கைகள் மீது நடவடிக்கை எடுப்பது போன்றவற்றில் முதலிடூ செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது. இதன் மூலம் பேஸ்புக் வருவாயை எதிர்காலத்தில் அதிகரிக்க முடியும் என பேஸ்புக் தெரிவித்துள்ளது.\nமுன்னதாக பேஸ்புக்கின் வாட்ஸ்அப் செயலி உலகம் முழுக்க செயலிழந்து சில மணி நேர இடைவெளிக்கு பின் மீண்டும் செயல்பட துவங்கியது குறிப்பிடத்தக்கது.\nஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..\nஅதிரை இமாம் ஷாபி பள்ளி அருகே கொட்டப்படும் குப்பைகள், சுற்றுசூழல் மன்றம் கோரிக்கை\nகவலையில் இருக்கும் ஏர்செல் வாடிக்கையாளர்களுக்கு ஆறுதலான செய்தி\n#BREAKING_NEWS: அதிரை கடைத்தெருவில் பயங்கர தீ விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://sitrithazhulagam.blogspot.com/2016/09/1.html", "date_download": "2018-04-26T13:40:03Z", "digest": "sha1:P5YFGDLAMTVCD2J356IU4V7ZJOTXQIWP", "length": 15632, "nlines": 144, "source_domain": "sitrithazhulagam.blogspot.com", "title": "SITRITHAZHGAL ULAGAM", "raw_content": "\nசிற்றிதழ் விமர்சனம் - 1.\nஇதோ ஒரு புதிய பகுதி. சிற்றிதழ்களை முகவரி அளவில் ஏற்கனவே பதிந்து வருகின்றேன். அதோடு இல்லாமல் ஒவ்வொரு சிற்றிதழையும் விமர்சிப்பதன் மூலம் அந்த இதழின் சிறப்புகளை வாசகர்களிடம், ஆர்வலர்களிடம் கொண்டு செல்ல முடியும் என எண்ணுகின்றேன்.\nஇதோ முதல் இதழாக இலங்கையிலிருந்து வெளிவந்துள்ள \" காற்புள்ளி \" என்ற இதழை பற்றி பதிவு செய்கின்றேன். தவறு இருந்தால் சுட்டிக் காட்டுங்கள் நண்பர்களே.\nஇலங்கையின் அட்டன் பகுதியிலிருந்து, திரு.மாரிமுத்து சிவகுமார், சண்முகம் சிவகுமார் ஆகியோரை ஆசிரியர்களாக கொண்டு வெளி வந்துள்ளது.\nஇந்த இதழ் \" இன்னும் உயிர்ப்போடு \" என்ற அறிவிப்போடு வெளிவந்துள்ளது. கவிதை, கவிதையைப் பற்றிய கட்டுரைகள், வெளி நாட்டு பிரபல கவிஞர்கள் பற்றிய கட்டுரை என மிகச் சிறப்பாக வந்துள்ளது.\n1. கலாச்சாரமும் கவிதையின் மொழியும் - சில கோட்பாடுகள் என்ற பிரம்மராஜன் கட்டுரை அருமை.\n2. மாரிமுத்து சிவகுமாரின் \" ஏமாளிகள்\" அரசியல் அதிரடி கவிதை அருமை. அரசியல் வாதிகளை தோலுரிக்கிறது. அதிலிருந்து சில வரிகள் வாசகர்களுக்காக -\nஇப்படி அத்தனை வரிகளும் அனல் கக்குகின்றன.\n3. சுந்தர் நிதர்சனின் கவிதை : மரணத்தின் பின் வாழும் அப்பாவின் கண்ணீர். - உணர்ச்சி மிகுந்த கவிதை.\nநத்தையாய் சில ஞாபகங்களைத் தவிர,\nஉங்களோடு நான் ஒட்டி உறவாடியதில்லை.\nஎனக்காய் நீங்கள் வடித்த கண்ணீரின் கனமும்\nஎனக்காய் சிதைந்து போன உங்கள்\nஉடலின் ரணமும் தெளிவாய் தெரிகிறது.\nஇந்த வரிகளை படித்த போது என் அப்பாவின் நினைவுகள் வந்து உணர்ச்சி பிழம்பானேன் என்றால் மிகையாகாது.\nசுந்தர் நிதர்சன் உங்கள் எழுதுகோலை என் கண்ணீரால் நனைத்துக் கொண்டிருக்கின்றேன்.\n4.கவிதைக் கேட்ட நரி - எஸ்.ராமகிருஷ்ணன் கட்டுரை சிறப்பு.\n5. பபியான் கவிதைகள் அருமை.\n6.மேற்கு போலந்தின் புகழ் பெற்ற கவிஞர் திரு.விஸ்லாவா சிம்போர்கா அவர்களின் நோபல் பரிசு பெற்ற போது அவர் ஆற்றிய உரையின் தமிழாக்கம் இந்த இதழுக்கான முத்தாய்ப்பு. அவசியம் படிக்க வேண்டிய உரை.\n7. மாரிமுத்து சசிரேகா அவர்களின் \"கால்கள்\" கவிதை காற்புள்ளி இதழுக்கு மணி மகுடம் என்று கூறலாம்.\nகற்கள் உள்ளேறி ரத்தம் கட்டிப் போய்\nமுறுக்கேறிப் போன வைரம் பாய்ந்து\nஇதை விட உணர்வு பூர்மாக ஒரு கவிதை எழுத முடியுமா என எனக்குத் தெரியவில்லை.\nசகோதரி சசிரேகா தலை வணங்கி வாழ்த்துகின்றேன்.\nஇறுதியாக கண்ணகியின் இறுதி மடல் இந்த இதழின் உச்சம்.\nநடு நடுங்கும் ஓலங்கள் மத்தியில்\nஇன்னும்.... இன்னும்.. நிறைய, நிறைவாய் மனதில் நிற்கும் சிற்றிதழ் தான் \" காற்புள்ளி \". கட்டாயம் படிக்க வேண்டிய சிற்றிதழ்.\nவெளியீட்டுக் குழுவிற்கு சிற்றிதழ்கள் உலகம் தளத்தின் இதய பூர்வமான வாழ்த்துக்கள். குறிப்பாக இந்த இதழின் பி.டி.எஃப். பிரதியை அனுப்பிக் கொடுத்த என் முகநூல் நண்பன் சுந்தர் நிதர்சனுக்கு என் நன்றியைக் காணிக்கையாக்குகின்றேன்.\nகிருஷ்.ராமதாஸ், சிற்றிதழ் நலம் விரும்பி.\nசிற்றிதழ் வாசகர் விமர்சனம் பெயல் ஆய்விதழ் ஆசிரியர்: டாக்டர்.செந்தில்குமார் கோவை. வணக்கம் நண்பர்களே. இதழியல் துறையில் ஒரு புதிய சகா...\nடிரங்குப் பெட்டியிலிருந்து இலக்கிய வெளிக்கு வரும் சிற்றிதழ்கள்\nடிரங்குப் பெட்டியிலிருந்து இலக்கிய வெளிக்கு வரும் சிற்றிதழ்கள் சிற்றிதழ் எண் : 2. ஏர் சிற்றிதழ். ஆசிரியர் : ஏர் மகாராசன் பெரியகுளம...\nசிற்றிதழும் சுகனும் - ஒரு நினைவலை\nசிற்றிதழும் சுகனும் - ஒரு நினைவலை கிருஷ்.ராமதாஸ், ஆசிரியர் & வெளியீட்டாளர், சிற்றிதழ்கள் உலகம் மின்னிதழ் . ஆம் நண்பர்களே. காணா...\nடிரங்குப் பெட்டியிலிருந்து - அஸ்வமேதா சிற்றிதழ்\nடிரங்குப் பெட்டியிலிருந்து அஸ்வமேதா சிற்றிதழ் அறிமுகம் செய்பவர் : திரு.அ.நாகராசன். வணக்கம் நண்பர்களே. இந்த டிரங்குப் பெட்டியிலிருந்து...\nபுதையுண்டு போகலாமா இலக்கிய பொக்கிஷங்கள்\nபுதையுண்டு போகலாமா இலக்கிய பொக்கிஷங்கள் வணக்கம் நண்பர்களே. இன்று எழுத்துலக சிற்பி, தமிழ் சிற்றிதழ்களின் பிதாமகன் திரு.வல்லிக்கண...\nடிரங்குப் பெட்டியிலிருந்து - மங்களம் வார இதழ்\nடிரங்குப் பெட்டியிலிருந்து - மங்களம் வார இதழ் மங்களம் வார இதழ், ஆசிரியர் : எம்.சி.வர்ஹீஸ், வெளியீடு : மங்களம் குழுமம், கேரளா. கேரளத்தி...\nசிற்றிதழ் விமர்சனம் - 3. நிகரன் சிற்றிதழ் விருதுநகர் மாவட்டம், ஆலங்குளத்திலிருந்து திரு.பாஸ்கரன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளி வரு...\nதரமான சிற்றிதழ் தேடுவோருக்கு ' தளம் ' சிற்றிதழ் ஆசிரியர் : பாரவி. வணக்கம் நண்பர்களே. தரமான சிற்றிதழ் தேடும் வாசகர்களுக்கு ...\nஉலக சிற்றிதழ் வரலாற்றில் இமாலய சாதனை.\nஉலக சிற்றிதழ் வரலாற்றில் இமாலய சாதனை. விருட்சம் சிற்றிதழின் மாபெரும் வெற்றி 100வது இதழ் வெளியீடு. சந்திரமவுலி அழகியசிங்கர் என்ற இல...\nசிற்றிதழ் அறிமுகம் - ஓலைச்சுவடி\nசிற்றிதழ் அறிமுகம் - ஓலைச்சுவடி ஒரு இளைஞனின் இதயத் துடிப்பு ஓலைச்சுவடி சிற்றிதழ் ஆசிரியர் : கி.ச.திலீபன். வணக்கம் நண்பர்களே. ஒரு இள...\nகலைச் சோலை இலக்கிய இதழ்\nசிற்றிதழும் சுகனும் - ஒரு நினைவலை\nசிற்றிதழ் எண் : 1\nசிற்றிதழ் எண் : 2\nசிற்றிதழ் விமர்சனம் - 4\nசிற்றிதழ்கள் உலகம் 3வது இதழ்\nசிற்றிதழ்கள் உலகம் இதழ் - 3\nஞானம் சிற்றிதழின் 200வது இதழ் வெளியீடு\nபுதையுண்டு போகலாமா இலக்கிய பொக்கிஷங்கள்\nமண்கவுச்சி வீசும் கோவிந்தன் ஓவியங்கள்\nமறதிப் பாழில் மக்கிப் போகாத சிற்றிதழ் வரலாறு\nழ இலக்கிய சிற்றிதழின் உலக சாதனை\nற்றிதழ்கள் உலகம் 4வது இதழ் வெளியீடு\nஎன் பெயர் கிருஷ்.ராமதாஸ். நான் ஒரு சிற்றிதழ் நலம் விரும்பி, சிற்றிதழ் காதலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://news.lankasri.com/india/03/176616?ref=category-feed", "date_download": "2018-04-26T13:36:55Z", "digest": "sha1:ZP2KZW4IVED5P6D6G6JV7NWNEQ3ETIRL", "length": 6666, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "அழுவதா சிரிப்பதா என தெரியவில்லை: ஸ்ரீதேவி குறித்து கலங்கிய போனி கபூர் - category-feed - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅழுவதா சிரிப்பதா என தெரியவில்லை: ஸ்ரீதேவி குறித்து கலங்கிய போனி கபூர்\nஸ்ரீதேவிக்கு தேசிய விருது வழங்கப்பட்டுள்ள இந்நேரத்தில் சிரிப்பதா அல்லது அழுவதா என்று தெரியவில்லை என அவரின் கணவர் போனி கபூர் வருத்தம் தெரிவித்துள்ளார்.\nமறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.\nஇது குறித்து ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் கூறியதாவது, ஒரு குடும்பமாக இந்த நல்ல விடயத்தை கொண்டாடுவதா வேண்டாமா என்று தெரியவில்லை.\nஇதை கேட்டு மகிழ்ச்சியில் சிரிப்பதா இல்லை ஸ்ரீதேவியை நினைத்து அழுவதா என்று சத்தியமாக தெரியவில்லை.\nஆனால் இந்த விருதை நாங்கள் உயிருள்ள வரைக்கும் மறக்க மாட்டோம்.\nஸ்ரீதேவியின் புகழ் என்றும் மறையாது என கூறியுள்ளார்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=20514&Cat=3", "date_download": "2018-04-26T13:10:09Z", "digest": "sha1:R5URT2XR2DYVZWJOZDQPFFXZHOCEYQZL", "length": 7329, "nlines": 77, "source_domain": "www.dinakaran.com", "title": "ஆயிரங்கண் மாரியம்மன் கோயிலில் பங்குனிப் பொங்கல் கொடியேற்றம் | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > களஞ்சியம்\nஆயிரங்கண் மாரியம்மன் கோயிலில் பங்குனிப் பொங்கல் கொடியேற்றம்\nஅருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை புளியம்பட்டி, திருநகரம் சாலியர் மகாஜன பரிபாலன சபைக்கு பாத்தியப்பட்ட ஆயிரங்கண் மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. 12 நாட்கள் நடக்கும் திருவிழாவில் வருகிற 17ம் தேதி பொங்கல் விழாவும், 18மல் அக்கினிச்சட்டி மற்றும் பூக்குழி இறங்கும் விழாவும், 19ல் தேரோட்டம் மற்றும் 20ம் தேதி பூப்பல்லாக்கு நிகழ்ச்சியும் நடக்கிறது.\nஒவ்வொரு நாளும் மண்டகப்படிகாரர்களால் கோயில் கலையரங்கத்தில் கலைநிகழ்ச்சிகள் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை புளியம்பட்டி, திருநகரம் சாலியர் மகாஜன சபை தலைவர் சுப்பிரமணியம், செயலாளர் ரமேஷ்பாபு, பொருளாளர் நெடுஞ்செழியன், துணைத்தலைவர் தர்மராஜ் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.\nவரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nஆனந்த காமாட்சியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா\nசிறுகடம்பூர் செல்லியம்மன் கோயிலில் சித்திரை தேர் திருவிழா\nநடராஜர் கோயிலில் பக்தர்கள் தரிசனம்\nகல்லாலங்குடி முத்துமாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல்\nமணலூர் மாரியம்மன் கோயில் தேரோட்டம்\nதம்மத்துக்கோணம் சிவ சுடலைமாட சுவாமி கோயில் கொடை விழா\nஎய்ம்ஸ் அமைவதில் என்ன சிக்கல் இயற்கையிடம் இருக்கிறது எல்லாவற்றுக்குமான தீர்வு\nசென்னையில் நடைபெற்ற இடைநிலை ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம் வாபஸ்..\nஇந்தோனேஷியாவில் எண்ணெய் கிணற்றில் தீ : 21 பேர் பரிதாப பலி\nஹவாய் தீவு அருகே உள்ள எரிமலையில் சீற்றம்...ஆறாக ஓடும் எரிமலைக் குழம்பு\nபெர்லிங்கில் சர்வதேச ஏரோஸ்பேஸ் கண்காட்சி : பல்வேறு நாடுகளின் புதுமையான கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன\nஉத்தரப்பிரதேச மாநிலம் குஷிநகரில் பள்ளிப்பேருந்து மீது ரயில் மோதிய விபத்தில் 11 மாணவர்கள் உயிரிழப்பு\nஉ.பி.யில் விபத்தில் பலியான குழந்தைகள் படித்த பள்ளி முதல்வர் கைது\nகோவையில் பல இடங்களில் சூறைக்காற்றுடன் பலத்த மழை\nபேராசிரியை நிர்மலாதேவியிடம் விசாரணை நிறைவு\nகொடைக்கானலில் மே 19ல் மலர் கண்காட்சியுடன் கோடை விழா : ஆட்சியர் வினய்\nமாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி சீனா பயணம்\n2019 பாராளுமன்ற தேர்தல் வரை காவிரி மேலாண்மை வாரியம் அமையாது: டி.டி.வி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.nitharsanam.net/177531/news/177531.html", "date_download": "2018-04-26T13:22:33Z", "digest": "sha1:FVEGT4ZA7AM7OFIAHWDARE6OGFNP6VJM", "length": 7268, "nlines": 87, "source_domain": "www.nitharsanam.net", "title": "காதலனை காப்பாற்றுவதற்காக தந்தையை கொலை செய்த மகள்: தாய் கண்ணீர் புகார் ! : நிதர்சனம்", "raw_content": "\nகாதலனை காப்பாற்றுவதற்காக தந்தையை கொலை செய்த மகள்: தாய் கண்ணீர் புகார் \nஇந்தியாவில் காதலனை காப்பாற்றுவதற்காக பெற்ற தந்தையை மாடியிலிருந்து தள்ளிவிட்ட மகளின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஉத்திரப்பிரதேச மாநிலத்தின் நொய்டாவைச் சேர்ந்தவர் விஷ்ணு. இவருக்கு சாந்தி என்ற மனைவி உள்ளார்.\nஇந்நிலையில் இவர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது, அதிகாலை 4 மணியளவில் தனது மகளின் அறையிலிருந்து தொடர்ந்து சத்தம் வந்துள்ளது.\nஇதனால் சந்தேகமடைந்த அவர் உடனடியாக மகளின் அறையை திறந்து பார்த்த போது, அவரது மகள், தன்னுடைய காதலனுடன் ஒன்றாக இருந்திருக்கிறார்.\nஇதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், மகளின் காதலனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் இது முற்ற, இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டிருக்கிறது.\nஅப்போது தனது காதலனை காப்பாற்றுவதற்காக மூன்றாவது மாடியில் இருந்து மகளும், அவரின் காதலனும் இணைந்து அவரை கீழே தள்ளிவிட்டதால், பரிதாபமாக அவர் உயிரிழந்தார்.\nஏதோ வெளியில் சத்தம் கேட்கிறதே என்று சாந்தி வெளியில் வந்து பார்த்த போது, கணவன் இறந்து கிடப்பதை பார்த்து கதறியுள்ளார்.\nஇதைத் தொடர்ந்து சாந்தி, தனது மகள் மற்றும் அவரின் காதலன் மீது காவல்நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள பொலிசார் விஷ்ணுவின் மகளை கைது செய்துள்ளனர். ஆனால் அவரது காதலன் தப்பிஓடிவிட்டார். பொலிசார் அவரை தேடி வருகின்றனர்.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nஉடலுறவின் போது எதுவெல்லாம் உங்கள் துணைக்கு பிடிக்கும்\nகர்ப்பகாலத்தில் தாம்பத்யம், அசைவம் சரியா\nமரண காமெடி- இது நம்ம ஊரு நடிகர்கள் – பழமார்நேரி பஞ்சாயத்து\nஇந்திய அரசியலில் ‘ஆளுநர்’ பதவிகள்\nநல்ல தூக்கத்துக்கு நாளை செய்ய வேண்டியதை எழுதுங்கள்\nதாம்பத்திய இன்பத்தின் போது தவிர்க்க வேண்டியவை\nசினிமா துறையில் இந்த வசனத்தை இவரை தவிர யாராலும் பேச முடியாது\nஉலக புகழ் பெற்ற குரங்கு செல்பி புகைப்பட வழக்கு : காப்புரிமை கோர முடியாது நீதிமன்றம் தீர்ப்பு\nஅணு சக்தி ஒப்பந்தம் மோசமானது என்றால் அமெரிக்க கையெழுத்திட்டது : ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி\nஇலங்கைப் பொலிஸாரின் பொருட்களை வைத்திருந்த பிரிட்டன் குடியுரிமை பெற்ற நபர் கைது\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthinappalakai.net/2017/05/27", "date_download": "2018-04-26T13:16:00Z", "digest": "sha1:JKTNNLTPSBK3TV5UQ4F6VJMD44K2CKP5", "length": 12720, "nlines": 115, "source_domain": "www.puthinappalakai.net", "title": "27 | May | 2017 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nவெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்புப் பணிகளில் இறங்கியது இந்தியக் கடற்படை\nசிறிலங்காவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அவசர மீட்பு மற்றும் மருத்துவ உதவிப் பணிகளில் இந்தியக் கடற்படையும் ஈடுபட்டுள்ளது.\nவிரிவு May 27, 2017 | 14:15 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nசிறிலங்காவின் புதிய வெளிவிவகார அமைச்சருடன் முதன்முதலில் பேச்சு நடத்திய இந்தியத் தூதுவர்\nசிறிலங்காவின் புதிய வெளிவிவகார அமைச்சராகப் பொறுப்பேற்ற ரவி கருணாநாயக்கவுக்கு சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் தரன்ஜித் சிங் சந்து முதன்முதலில் நேரில் வாழ்த்துக்களைத் தெரிவித்து, பேச்சுக்களை நடத்தியுள்ளார்.\nவிரிவு May 27, 2017 | 13:40 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஅரசியலமைப்பு வரைவு கூட்டத்தில் சம்பந்தன்- நிமல் சிறிபால டி சில்வா சூடான வாக்குவாதம்\nஅரசியலமைப்பு மீளமைப்புக்கான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும், சிறிலங்கா அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுக்கும் இடையில் சூடான வாக்குவாதம் இடம்பெற்றதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.\nவிரிவு May 27, 2017 | 13:04 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nகடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த சிறிலங்கா- அவுஸ்ரேலியா இணக்கம்\nகடல்வழி ஆட்கடத்தல் மற்றும் கடல்கொள்ளைக்கு எதிராகச் செயற்படுவதில் சிறிலங்கா அரசாங்கம் உறுதிபூண்டிருப்பதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அவுஸ்ரேலியாவிடம் உறுதியளித்துள்ளார்.\nவிரிவு May 27, 2017 | 12:29 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஇந்தியாவின் முதல் கப்பல் கொழும்பு வந்தது – மேலும் இரண்டு கப்பல்கள் வருகின்றன\nசிறிலங்காவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தியா அனுப்பிய உதவிப் பொருட்களுடன் முதலாவது இந்திய கடற்படைக் கப்பல் இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.\nவிரிவு May 27, 2017 | 12:07 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nவிடுதலைப் புலிகளை அழிக்க ஆலோசனை வழங்கிய கே.பி.எஸ்.கில் மரணம்\nவிடுதலைப் புலிகளை அழிப்பதற்காக சிறிலங்காவின் முன்னைய சந்திரிகா குமாரதுங்க அரசாங்கத்துக்கு ஆலோசனைகளை வழங்கிய, இந்தியாவின் பஞ்சாப் மாநில முன்னாள் காவல்துறை பணிப்பாளர் கே.பி.எஸ்.கில் நேற்று காலமானார்.\nவிரிவு May 27, 2017 | 4:22 // இந்தியச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nதேடுதல், மீட்புக்கு உதவுமாறு அனைத்துலக சமூகத்திடம் சிறிலங்கா அவசர கோரிக்கை\nபெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவு போன்ற இயற்கை அழிவுகளால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீட்பு மற்றும் உதவிப் பணிகளுக்கு உதவ முன்வருமாறு ஐ.நா, அனைத்துலக தேடுதல் மற்றும் மீட்பு ஆலோசனைக் குழு மற்றும் அயல்நாடுகளிடம் சிறிலங்கா அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.\nவிரிவு May 27, 2017 | 4:02 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nவெள்ள மீட்பு பணிகளில் சிறிலங்கா இராணுவத்தின் துருப்புக்காவி கவச வாகனங்கள்\nசிறிலங்காவின் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகளில் சிறிலங்கா இராணுவத்தினரின் பிரிஆர் துருப்புக்காவி கவசவாகனங்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக, சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனிவிரத்ன தெரிவித்துள்ளார்.\nவிரிவு May 27, 2017 | 3:36 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nசிறிலங்காவில் கடும் மழையினால் ஏற்பட்டுள்ள பெருவெள்ளம், நிலச்சரிவுகளில் ஏராளமானோர் பலியாகியுள்ளனர். பெருமளவானோர் காணாமல் போயுள்ளனர். இலட்சக்கணக்கான குடும்பங்கள் நிர்க்கதியான நிலையில் உள்ளன.\nவிரிவு May 27, 2017 | 3:22 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் இரா.சம்பந்தன் – ‘சேர் பொன். இராமநாதனின் மறுஉருவம்’\t0 Comments\nகட்டுரைகள் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு யார் காரணம்\nகட்டுரைகள் சிறிலங்கா: மகிந்தவுக்காக திறக்கப்படும் கதவுகள்\t0 Comments\nகட்டுரைகள் ஐ.நாவின் மனிதஉரிமைச் செயற்பாடுகளைப் பலவீனப்படுத்தும் ரஷ்யா, சீனா\t0 Comments\nகட்டுரைகள் சீனாவின் இறுக்கமான பிடியில் சிறிலங்காவின் அமைதியான துறைமுகம்\t1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுக்கு எதிரான வியூகத்தில் சிறிலங்காவின் பௌத்த பிக்குகளையும் இணைக்கிறது இந்தியா\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்திய மாக்கடலில் அதிகரிக்கும் சீனாவின் செல்வாக்கும் – இந்தியாவின் முத்தரப்பு கடற்பாதுகாப்பு ஒப்பந்தமும்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t0 Comments\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t2 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://nilapennukku.blogspot.com/2012/08/jolluthaththuvankal.html", "date_download": "2018-04-26T13:08:34Z", "digest": "sha1:BG56E64GUYGRWKPCM6KTSMPQTD5KD3RH", "length": 13065, "nlines": 137, "source_domain": "nilapennukku.blogspot.com", "title": "ஃபிகர், சரக்கு, ஜொள்ளு தத்துவங்கள்! | நிலாப்பெண்ணுக்கு", "raw_content": "\nஃபிகர், சரக்கு, ஜொள்ளு தத்துவங்கள்\nநண்பன் ஒருவருசமா கடலை போட்ட ஃபிகர் அவனுக்கு ராக்கி கட்டிடுச்சு\n நான் கேட்டேன் ம்ம்ம்ம்மச்சா உன் தங்கை என்ன சொன்னா\nநன்றியும் மன்னிப்பும் நட்பிற்கு தேவையில்லை - சரக்கு மட்டும் போதும்.\nசரக்கிருந்து முறுக்கு இல்லேன்னா அது சோதனை;\nமுறுக்கிருந்து சரக்கு இல்லேன்னா அது வேதனை\nவழியில் டாட்டா காட்டும் பலர், எங்கே வீட்டுக்கு வந்துவிடுவானோ என்பதற்காகவே காட்டுகின்றனர்\nமுகத்தில் புள்ளிகள் மறைய என்ன செய்ய வேண்டும்\nசுடலைமாடசாமிகூட என்னவளைப் பார்த்தால் கடலைமாடசாமியாகிவிடும்\nஉன் வளைவுகளைப் பார்த்து நிகழ்ந்த விளைவுகள் ஏராளம்\nவாயெல்லாம் பல்லு, உதடெல்லாம் ஜொள்ளு, வழியில் ஒரு பொண்ணு\nஹாலோ யாரு மன்மோகன் சிங்கா\nடேய் நாயே அவரு பார்லிமென்ட்லேயே பேச மாட்டாரு, உன்கூட ஃபோன்லையா பேசப்போறாரு\nஇரண்டு ஃபிகரை ஒரே சமயத்தில் ரூட் விடுபவன் அடிக்கடி சொல்கிற பழமொழி எது தெரியுமா\nடிஸ்கி : அடுத்த பதிவு ஒரு சிறப்புப் பதிவு நிலாப்பெண்ணுக்கு தளம் ஓராண்டு நிறைவடைவதை ஒட்டி TOP 10 பதிவுகள் (சிரிப்பதற்கு காத்திருக்கவும்)\nLABELS: ட்விட்டர், தத்துவம், நகைச்சுவை\nசுடலைமாடசாமிகூட என்னவளைப் பார்த்தால் கடலைமாடசாமியாகிவிடும்\nhttp://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)\nஏ ஜோக்ஸ் கதைகள் தத்துவங்கள் 3\nஹைக்கூ - சின்ன சின்ன கவிதைகள்\nஅரிய புகைப்படங்கள் - திருக்குறள் ஓலைச்சுவடி, பழைய சென்னை, கோவை, திருச்சி, திரிகோணமலை, நெல்லை\nதத்துவங்கள் - ஜோக்ஸ், வாழ்க்கை, சிறை, வரலாறு\nஏ ஜோக்ஸ் – தத்துவங்கள்\nவருடத்தின் சிறந்த 10 பதிவுகள்\nஉன்னோட மூளை ஏன் பிரெஷ்ஸா இருக்கு தெரியுமா நீ உபயோகப்படுத்தாமலே வச்சிருந்தா அப்பிடிதேன் இருக்கும் நீ உபயோகப்படுத்தாமலே வச்சிருந்தா அப்பிடிதேன் இருக்கும்\nஏ ஜோக்ஸ் கதைகள் தத்துவங்கள் 3\nகல்யாணம் சொர்கத்தில் நிச்சயிக்கப்படுகிறதென்றால் முதலிரவு எங்கே நிச்சயிக்கபடுகிறது நான் நேரா அங்கே போயிடுறேன் நான் நேரா அங்கே போயிடுறேன்\nதத்துவங்கள் - ஜோக்ஸ், வாழ்க்கை, சிறை, வரலாறு\nஹிந்தி சினிமாகாரர்கள் எல்லா படங்களிலும் \"சோனியே\" \"சோனியே\" என்று பாட்டெழுதியே சோனியா காந்தியை பிரபலமாக்கிவிட்டனர். ...\nஏ ஜோக்ஸ் – தத்துவங்கள்\nஒரு பதின்மூன்று வயது பெண்ணின் T-SHIRT வாசகம் - “ IT’S GROWING ” எந்த ஒரு உடையும் ரசிக்கப்படுவதற்கும் ரசிக்கப்படாமல் போவதற்கு...\nஅவள் வரமாட்டாள் என்று தெரிந்தும் காதலை ஆண்கள் கழிவறைகளில் எழுதுவதுதான் மூடநம்பிக்கை பெண்கள் இல்லா உலகம் வேண்டும் - அங்கு என்னைத்தவிர ...\n A JOKES, நகைச்சுவை, கதை, தத்துவம், அனுபவம், தமிழ், கவிதை,சுற்றுலா, கார்டூன்\nநிலாப்பெண்ணுக்கு இணையதளம் ஆரம்பித்து ஓராண்டு நிறைவு பெறுவதை முன்னிட்டு இந்த வருடத்தின் சிறந்த பதிவுகள் சில\nஅரிய புகைப்படங்கள் - திருக்குறள் ஓலைச்சுவடி, பழைய சென்னை, கோவை, திருச்சி, திரிகோணமலை, நெல்லை\nஎன் சிறுவயது முதல் (இப்ப ரொம்ப பெரிய வயசுன்னு நினைப்பு) தேடிய புகைப்படம் – திருக்குறளின் ஓலைச்சுவடி. இன்னும் பல நகரங்களின் முந்தைய தோற...\nஹைக்கூ - சின்ன சின்ன கவிதைகள்\nஎனக்கும் அவளுக்கும் ஒரு ஒற்றுமை என் நண்பனைப் பிடித்துப்போனதுதான் வடக்கு தெற்கு ஈர்க்கும் காந்தப்புலம் அவள் கண்க...\nஉங்களிடம் உள்ள டிகிரியை வைத்துக்கொண்டு ஒரு ஃபில்டர் காபிகூட போட முடியாது பெண்களுக்குத் தேவை குடிக்காத நல்ல ஆண்கள் பெண்களுக்குத் தேவை குடிக்காத நல்ல ஆண்கள்\nவானம் ஆழமானது நீ நினைத்தால் வானம் ஆழமானது நீ உயர்ந்து நின்றால் வானம் ஆழமானது நீ உயர்ந்து நின்றால்\nஇரண்டாம் ஆண்டில் நிலாப்பெண்ணுக்கு, நீங்களும் பதிவு...\nஅபோகாலிப்டோ - பார்க்கவேண்டிய படம் +18 only\n A JOKES, நகைச்சுவை, கதை, தத்துவம...\nஏ ஜோக்ஸ் கதைகள் தத்துவங்கள் 3\nஃபிகர், சரக்கு, ஜொள்ளு தத்துவங்கள்\nகுழந்தைகளுக்கு படிப்பு சொல்லித் தராதீர்\nஏக் தா டைகர் சினிமா விமர்சனம் – சல்மான் கான், கத்ர...\nஒரு கொடி ஒரு மிட்டாய் ஒரு சுதந்திர தினம்\nபிளைட் ஏறி வந்து பிச்சை எடுத்த இந்தியர்கள் துபாயில...\nஅப்பன் பேர் தெரியாத தமிழர்கள், தமிழ் போற்றும் பிரா...\nகார்/பஸ் தண்ணீருக்குள் விழுந்துவிட்டால் என்ன செய்ய...\nLOVE JOKES - காமெடி வசனங்கள்\nEnglish PLUS18 WatchMovie அரசியல் அனுபவம் ஆன்மீகம் இணையதளம் இயற்கை இலங்கை இன்னா 40 ஈழம் உணவு உபயோகமானவை கட்டுரை கதை கவிதை காதல் காதல் மொழி கார்டூன் சினிமா சுட்டவை 40 சுற்றுலா செய்திகள் சைக்கோ ட்விட்டர் தத்துவம் தமிழ் தலையங்கம் தனிமை திரை விமர்சனம் துபாய் துறை தொழில்நுட்பம் நகைச்சுவை நிலா படைப்புகள் பாடல் புகைப்படங்கள் பேசி போராட்டம் மழலை மனதைத் திற வரலாறு விளையாட்டு வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/india/bjp-subramanian-swamy-gave-suggestion-bjp-ban-western-clothe-306468.html", "date_download": "2018-04-26T13:27:21Z", "digest": "sha1:5QHBWNOP6SNJG2XEOIMI32VNDTJIW46D", "length": 11867, "nlines": 161, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாஜகவினர் \"குடிப்பதற்கு\" தடை விதிக்க வேண்டும்.. சாமி அட்வைஸ்! | BJP Subramanian Swamy gave suggestion to BJP to ban western clothes for ministers - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\n» பாஜகவினர் \"குடிப்பதற்கு\" தடை விதிக்க வேண்டும்.. சாமி அட்வைஸ்\nபாஜகவினர் \"குடிப்பதற்கு\" தடை விதிக்க வேண்டும்.. சாமி அட்வைஸ்\nகர்நாடக தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கவில்லை... செய்தியாளர் சந்திப்பில் தேம்பி அழுத பாஜக தலைவர்\nகிரிக்கெட்டை புறக்கணிப்பதற்கு பதில் டாஸ்மாக்கை புறக்கணித்தால் அரசு ஆடிப்போயிடும்.. எஸ்வி சேகர் அடடே\nதமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன் காவிரி பிரச்சனையை தீர்த்துவிடுவோம்.. தமிழிசை பேச்சு\nஎனக்கு காசுதான் முக்கியம்.. நாடாளுமன்றம் நடக்காட்டி எனக்கென்ன.. சாமி\nடெல்லி: பாஜகவினர் மேற்கத்திய ஆடைகளை அணிய கூடாது என்றும் கட்சியின் ஒழுங்குமுறை நடவடிக்கையாக மதுவிலக்கை கொண்டு வர வேண்டும் என்றும் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், பாஜக அமைச்சர்கள் மேற்கத்திய ஆடைகளை அணியக் கூடாது. அதற்கு பதிலாக இந்திய பருவநிலைக்கு ஏற்ற ஆடைகளை அணிய வேண்டும். மேற்கத்திய ஆடைகள் வெளிநாட்டினரால் திணிக்கப்பட்டவை.\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி , யாரும் மது குடிக்கக் கூடாது. எனவே கட்சியின் ஒழுங்குமுறை நடவடிக்கையின் ஒரு பகுதியாக இதை பாஜக தலைமை உத்தரவிட வேண்டும் என்று சுப்பிரமணிய சுவாமி டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.\nநாடாளுமன்றத்தில் மத்திய மண்டபத்தில் நடைபெற்ற பண்டிட் மதன் மோகன் மால்வியாவின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அமைச்சர்கள் ஒருவர் கூட கலந்து கொள்ளவில்லை என்று நேற்றைய டுவீட்டில் சுவாமி கூறியிருந்தார்.\nபிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு இந்தியா இன்னும் அடிமையாகவே உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட அயோத்தியில் எதற்கு ராமர் கோயில் என்ற தலைப்பிலான கருத்தரங்கத்தில் பேச சுவாமியை பல்கலைக்கழகம் அழைத்தது.\nபின்னர் அந்த நிகழ்ச்சியை அந்த பல்கலைக்கழகம் ரத்து செய்தது. இதற்கு சுவாமி, ஜேஎன்யூ பல்கலைக்கழகம் எனது சித்தாந்தங்கள் இளைஞர்களை கவரும் என்பதால் இந்த நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டதாக குறிப்பிட்டிருந்தார்.\nமாட்டிறைச்சிக்கு தடை உள்ளிட்டவற்றை பாஜக அதிரடியாக செய்து வரும் நிலையில் அந்த கட்சிக்கே இதை உடுத்தக் கூடாது, இதை உண்ணக் கூடாது என்று சுவாமி அறிவுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nbjp leader subramanian swamy ministers பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி அமைச்சர்கள்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு.. மர்ம நபர்கள் தப்பியோட்டம்\nநிர்மலா தேவி விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் யார் யார் கைது செய்யப்பட்ட முருகனிடம் தீவிர விசாரணை\n1.3 லட்சம் பேரின் ஆதார் தகவல்கள் லீக்கானது.. ஆந்திர அரசு இணையத்தில் நடந்த பெரிய முறைகேடு\nதித்திக்கும் மாம்பழங்களை உங்கள் வீட்டுக்கே வந்து கொடுக்கும் டிரெடிஃபுட்ஸ்\nபிஸ்னஸ் லோனின் சிறப்பம்சங்கள் மற்றும் பயன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/videos/blue-whale-game-admin-is-17-year-old-russian-girl-258334.html", "date_download": "2018-04-26T13:27:05Z", "digest": "sha1:TYKAVIUT2ACQRSHNFNUOHSZHBAV32I27", "length": 7003, "nlines": 157, "source_domain": "tamil.oneindia.com", "title": "ப்ளூவேல் கேமின் மூளையாக செயல்பட்ட 17 வயது சிறுமி- வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » உலகம்\nப்ளூவேல் கேமின் மூளையாக செயல்பட்ட 17 வயது சிறுமி- வீடியோ\nப்ளூவேல் கேமின் மூளையாக செயல்பட்டதாக ரஷ்ய நாட்டைச் சேர்ந்த 17 வயது சிறுமியை போலீஸார் கைது செய்தனர். இவர்தான் டாஸ்க்குகளை கொடுத்து வந்தவராம்.\nப்ளூவேல் கேமின் மூளையாக செயல்பட்ட 17 வயது சிறுமி- வீடியோ\nதுபாயில் இந்தியர்கள் இருவருக்கு 500 ஆண்டுகள் சிறை தண்டனை\nசொந்த விவரத்தை வெளியிட பயப்படும் மார்க்-வீடியோ\nசிரியாவின் அரசு விமான படைத்தளத்தில் அமெரிக்கா தாக்குதல்- வீடியோ\nஅணு ஆயுதங்களை கைவிட முடிவு செய்த கிம் ஜாங்..\nகின்னஸ் சாதனை படைத்த 1372 ரோபோக்கள்\nசுந்தர் பிச்சையை கலங்க வைத்த துப்பாக்கி சூடு..\nஐபிஎல் 2018, மனைவி சாக்ஷியின் ஆசையை நிறைவேற்றிய தோனி\nமடியில் கனமில்லை.. வழியில் பயமில்லை அமைச்சர் விஜயபாஸ்கர்\nஹாயாக புல்லாங்குழல் வாசித்தபடி படுத்திருந்த நோயாளி\nசீனாவில் கொசுவை ஒழிக்க 85 கோடி செலவில் புதிய திட்டம்\nசீனாவின் விண்வெளி ஓடம் எரிந்தபடியே பசுபிக் கடலில் விழுந்தது\nகுவைத் சாலை விபத்து: இந்தியர்கள் உள்பட 15 பேர் உடல் நசுங்கி பலி\nமேலும் பார்க்க உலகம் வீடியோக்கள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-04-26T13:21:30Z", "digest": "sha1:4T7BMQUA33IJSYEWEZPE56YS6GOFAATL", "length": 24760, "nlines": 153, "source_domain": "www.jeyamohan.in", "title": "யமன்", "raw_content": "\nபகுதி ஏழு : மறைமெய் “அவன் பெயர் யுதிஷ்டிரன், குருவின் குடியில் விசித்திரவீரியனின் குருதிவழியில் பாண்டுவின் மைந்தனாகப் பிறந்தவன். இந்திரப்பிரஸ்தத்தின் முடிபெயர்ந்த அரசன். இப்போது உபப்பிலாவ்ய நகரியின் சிறிய அரண்மனையில் தன் பள்ளியறைக்குள் இருளை நோக்கியபடி தனித்து நின்றிருக்கிறான். சற்று முன்னர்தான் அவனை அவன் இளையோன் சகதேவன் சந்தித்து மீண்டான்” என்று உபகாலனாகிய சாகரன் சொன்னான். அவன் முன் மீசையை நீவியபடி நிலம்நோக்கி மாகாலன் அமர்ந்திருந்தார். “காலத்திற்கிறைவனே, அவன் அருகிருந்த பீடத்திலிருந்து உடைவாளை எடுத்து தன் கழுத்தை …\nTags: உத்தரன், கிருஷ்ணன், சகதேவன், சாத்யகி, திருஷ்டத்யும்னன், நகுலன், பீமன், யமன், யுதிஷ்டிரர்\nபகுதி ஆறு : ஊழ்கம் நைமிஷாரண்யத்திலிருந்து வெளியே வந்த யமன் ஆழ்ந்த தனிமையை உணர்ந்தார். அங்கு கிளைவிரித்து நின்றிருந்த மருத மரத்தடியில் கைகளை மார்பில் கட்டியபடி அடிமரத்தில் சாய்ந்து சூழ்ந்திருந்த கருக்கிருட்டை நோக்கினார். பின்னர் கால்தளர்ந்து வேர்களில் அமர்ந்தார். சுட்டுவிரலால் இடது மீசையைச் சுழற்றி முறுக்கி நீட்டி அளைந்து கொண்டிருந்தார். “அது புரவி” என்னும் சொல் அவருக்குள் எஞ்சியிருந்தது. எவர் எவரிடம் சொன்னது அது எவர் எண்ணிக்கொண்டது கூகையொன்றின் ஒலிகேட்டு தன் நிலை மீண்டு அவர் மீண்டும் …\nTags: கிருஷ்ணன், சம்ப்ரமன், சாத்தனார், நைமிஷாரண்யம், யமன், வியாசர், வியாசவனம்\nபகுதி ஐந்து : விடுதல் நைமிஷாரண்யத்தின் எல்லையை அடைந்த யமன் நின்று திரும்பி நோக்கி நெடுமூச்செறிந்தார். அவரருகே வந்த ஏவலனாகிய திரிதண்டன் “அரசே, நாம் திரும்புகிறோமா” என்றான். யமன் “இல்லை, இது இங்கே இப்படி முடியாது என்று எனக்குப் படுகிறது. இன்னும் பல படிகள் உள்ளன இதற்கு” என்றார். “அதெங்ஙனம்” என்றான். யமன் “இல்லை, இது இங்கே இப்படி முடியாது என்று எனக்குப் படுகிறது. இன்னும் பல படிகள் உள்ளன இதற்கு” என்றார். “அதெங்ஙனம்” என சொல்லத் தொடங்கிய திரிதண்டன் யமனின் தத்தளிக்கும் முகத்தை நோக்கியபின் “என்ன எண்ணுகிறீர்கள் என்பது தெளிவாகவில்லை” என்றான். யமன் “இறுதி வினா ஒன்று உண்டு. அதுவே …\nTags: அஸ்தினபுரி, கிருஷ்ணன், சங்குலன், சஞ்சயன், திரிதண்டன், திருதராஷ்டிரர், நைமிஷாரண்யம், யமன், யுயுத்ஸு, விதுரர்\nநான்கு : அறிவு யமன் மூன்றாவது முறையாக வந்தபோது சிகண்டியின் வடிவிலிருந்தார். நைமிஷாரண்ய எல்லையில் அவருக்காகக் காத்திருந்த யமதூதனாகிய திரிதண்டன் “அரசே, நீங்கள் விரும்புவீர்கள் என்பதனால் இச்செய்தியுடன் காத்திருந்தேன்” என்றான். சினத்துடன் “நான் விரும்புவேன் என எவ்வாறு அறிந்தாய்” என்று யமன் கேட்டார். அவர் ஒவ்வொரு அடியிலும் நிறைவின்மைகொண்டு உடல் எடைமிகுந்து நடக்கமுடியாதவராக வந்துகொண்டிருந்தார். காட்டின் எல்லை தொலைவில் தெரிந்த பின்னரும் தன்னை உந்தி உந்தி செலுத்தினார். சலிப்புடன் நின்று அவனை நோக்கி “நான் நிறைவுகொள்ளவில்லை என எப்படி …\nTags: கிருஷ்ணன், சிகண்டி, திரிதண்டன், பீஷ்மர், யமன், விதுரன்\nமூன்று : ஒருமை நைமிஷாரண்யத்திலிருந்து வெளியே வரும்வரை யமன் கர்ணனின் உருவில்தான் இருந்தார். கருக்கிருட்டில் தன் ஆலயமுகப்புக்கு வந்து அங்கிருந்து யமபுரிக்கு இமைக்கணத்தில் மீண்டார். உவகையுடன் தன் அரண்மனைக்குச் சென்று அதன் முதல்படியில் காலடி வைக்கும் வரை பிறிதொரு வினா இல்லாது நிறைந்திருந்தது அவர் உள்ளம். தூக்கிய கால் நின்றிருக்க திகைத்தபின் பின்னெடுத்து ஊன்றினார். திரும்பி தன்னைத் தொடர்ந்த காரானூர்தியை நோக்கிய கணமே மீண்டும் மண்ணுலகை அடைந்தார். அவரைச் சூழ்ந்த காலவடிவ ஏவலரிடம் “செல்க, இவ்வினாவைவிட விசைகொண்ட …\nTags: கிருஷ்ணன், துர்பதன், பீஷ்மர், யமன்\nஏழு ஆழங்களுக்கு அடியில் தன் இருண்ட மாளிகையில் இருள்வடிவ அரியணையில் அமர்ந்து அறம்புரந்த மறலியின் முன்னால் வந்து வணங்கி நின்ற ஏவலனாகிய வேளன் பணிந்து “அரசே, தங்கள் ஆணையின்படி திரேதாயுகத்திலிருந்து நைமிஷாரண்யத்தில் காத்துநின்றிருந்தேன். இன்று காலைமுதல் அங்கே இளைய யாதவன் ஒருவன் வந்து குடில்கட்டி குடியிருப்பதைக் கண்டேன். கருமுகில்நிற மேனியன். விளையாட்டுப்பிள்ளையின் விழிகள் கொண்டவன். பீலிசூடிய குழலன். தனித்து தனக்குள் சொல்திரட்டி அங்கிருந்தான்.” “அரசே, அவன் சென்றவழியெங்கும் பின்தொடர்ந்து சென்று நோக்கினேன். அவன் கடந்துசென்றபோது அனைத்து தாமரைகளும் …\nTags: கர்ணன், காகபுசுண்டர், கிருஷ்ணன், நாரதர், நைமிஷாரண்யம், யமன்\nமுஞ்சவானின் உச்சிமுனையில் சிவக்குறியருகே ஊழ்கத்தில் அமர்ந்திருந்த யமன் அந்தச் சிறகொலி கேட்டு விழிதிறந்து சினத்துடன் எழுந்தார். அவர் அருகே இருட்குவையெனக் கிடந்த எருமை விழிமணிகள் மின்ன முக்ரையோசை எழுப்பி தலைகுனித்து பாய்ந்தது. நாரதர் தன் வீணையை மீட்டியபடி அசையாமல் நின்றிருந்தார். அந்த இசையைக் கேட்டு மெல்ல விசையழிந்து தலை தாழ்த்தி அமைதி கொண்டது எருமை. சினம் தணிந்த யமன் “நாரதரே, நீர் ஏன் இங்கு வந்தீர் என் தவம் முழுமைகொள்வதை தடுக்கிறீர். விலகிச்செல்க என் தவம் முழுமைகொள்வதை தடுக்கிறீர். விலகிச்செல்க” என்றார். நாரதர் “உங்கள் …\nTags: அஜயன், அயோத்தி, காசி, சரயு, சுகிர்தன், தியானிகன், துர்வாசர், நாரதர், நைமிஷாரண்யம், பிரபாவன், யமன், ராமன், லட்சுமணன், வசிட்டர்\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 72\n[ 18 ] தளிர்ப்பசுமை சூழ்ந்த சோலைக்குள் மரங்களின் அடிக்கவர்களின்மேல் கட்டப்பட்ட சிறுகுடில்கள் குருவிக்கூடுகள்போலிருந்தன. காற்றில் மரங்கள் ஆட அவை மெல்ல ஆடுவது தொட்டில்போலிருந்தது. மூங்கில் வேய்ந்த தரைமேல் ஈச்சையோலைகளைப் பரப்பி மெத்தென்றாக்கியிருந்தனர். வைதிகமுனிவரான காண்டவரின் மாணவர்களான சந்திரரும் சிகரரும் அங்கே தங்கள் மாணவர்களுடன் இருபது குடில்களிலாக தங்கியிருந்தனர். விருந்தினர்களுக்கான பெரிய குடில் நடுவே நின்றிருந்த பிரமோதம் என்னும் இலுப்பைமரத்தின் மேல் அமைந்திருந்தது. அதில் அந்தணர் நால்வரும் தங்கவைக்கப்பட்டனர். அவர்கள் சுகவாணிச் சோலைக்குள் நுழைந்ததுமே சந்திரரும் சிகரரும் …\nTags: அர்ஜுனன், இந்திரன், இந்திராணி, உக்ரன், காலபுரி, காலமார்க்கன், சண்டன், சித்திரபுத்திரன், சுமந்து, ஜைமினி, பாசுபதம், பைலன், மகாகாலர், மகாருத்ரபுராணம், மாதலி, மாம்டி, யமன், வைசம்பாயனன்\n‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 36\nபகுதி ஐந்து : மாகேந்திரம் [ 1 ] உணவருந்திவிட்டு ஜைமினியும் பைலனும் சுமந்துவும் சிரித்துப் பேசிக்கொண்டே வெளியே வந்தனர். “அன்னசாலை உணவுகள் இனியவை” என்றான் சுமந்து. “ஏனென்றால் உரிய பசியுடன் நாம் அவற்றை அணுகுகிறோம்.” பைலன் “வேதசாலை உணவுகள் ஆன்மாவுக்கானவை” என்றபின் ஜைமினியை நோக்கி புன்னகை செய்தான். “நான் பெரும்பசியுடன் சென்றுகொண்டிருக்கிறேன். ஆகவே ஆசிரியர் சுவையானவராகவே இருப்பார் என நம்புகிறேன்” என்றான் சுமந்து. “வியாசர் வாழ்வது தெற்கே என்று எவர் சொன்னார்கள் உம்மிடம்” என்று பைலன் கேட்டான். …\nTags: அங்கிரசர், அர்ஜுனன், இந்திரன், சண்டன், சித்ரகேது, சுமந்து, ஜைமினி, பிச்சாண்டவர், பிரசாந்தர், பிரம்மன், பைலன், யமன், வியாசர், விருத்திராசுரன்\n‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 35\n[ 16 ] தண்டகாரண்யம் வறண்டு தூசுபடிந்த புதர்களுடன் சூழ்ந்திருந்தது. முட்புதர்களுக்குள் சருகுகள் சலசலக்க ஓடி பாறைமேல் தாவி ஏறிநின்று செதில் உப்பி வண்ணம் மாற்றிக்கொண்ட பச்சோந்தியின் களைத்த கண்களில் நீண்ட கால வறட்சியின் சலிப்பு தெரிந்தது. காலடி பதிந்த இடங்களில் கூழாங்கற்கள் எழுந்து உருண்டு சரிவிறங்கி சருகுகளை ஒலிக்கச்செய்தன. வியர்வை உடலில் வழிய இடையில் கைவைத்து நின்று “நீர் இருக்கிறதா, பைலரே” என்று ஜைமினி கேட்டான். “அது உள்ளம் கொண்ட விடாய். நீர் இப்போது கேட்ட …\nTags: அர்ஜுனன், இந்திரகீலம், இந்திரன், சண்டன், சுமந்து, ஜைமினி, பைலன், யமன், வருணன்\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 60\nகாமமும் கிறித்தவமும், ஒரு கடிதம்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kavishan.blogspot.com/2012/06/blog-post.html", "date_download": "2018-04-26T12:53:54Z", "digest": "sha1:2MONVRXLDWMHVW5EX77DKAIPEF6PSQMB", "length": 14496, "nlines": 130, "source_domain": "kavishan.blogspot.com", "title": "தேசிய தலைவரின் மகன் பாலச்சந்திரன் கொலை: வெளிவராத உண்மைகள் ! ~ ஈழம் செய்திகள்", "raw_content": "\nதேசிய தலைவரின் மகன் பாலச்சந்திரன் கொலை: வெளிவராத உண்மைகள் \nதேசிய தலைவர் பிரபாகரன் அவர்களின் 12 வயது மகன் பாலச்சந்திரனை, இலங்கை இராணுவம் சுட்டுக்கொன்றது என்ற செய்தியை இதுவரை பல ஊடகங்கள் வெளியிட்டிருந்தது. அதனைத் தவிர இச் செய்தியை சனல் 4 தொலைக்காட்சியும் வெளியிட்டது யாவரும் அறிந்ததே. இருப்பினும் இலங்கை இராணுவம் சுட்டுக்கொன்றது, இலங்கை இராணுவம் சுட்டுக்கொன்றது என்று எல்லா ஊடகங்களும் தெரிவித்தபோதிலும், குறிப்பாக எவர் இப் படுகொலைகளை மேற்கொண்டிருந்தனர் அவர்களின் பெயர் என்ன என்பது தொடர்பாக இதுவரை எத்தகவல்களும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்க விடையமாகும். எமக்கு கிடைத்த உறுதியான தகவலின் அடிப்படையில், சிறுவன் பாலச்சந்திரன் எப்போது, எங்கே, யாரல் யாரால் சுட்டுக்கொல்லப்பட்டார் என்ற விடையங்கள் தற்போது தெளிவாகியுள்ளது.\nபோர் முடிவுற்றதாக இலங்கை இராணுவம் அறிவித்த மே 19ம் திகதி அதிகாலை 7.30 மணிக்கு நந்திக்கடல் களப்பின் மேற்குப் புறமாக பாலச்சந்திரன் இராணுவத்திடம் சென்று சரணடைந்துள்ளார். இராணுவத்தின் 4ஆவது விஜயபாகு படைப்பிரிவின், முத்துபண்டாவின் தலைமையில் இருந்த 08 பேர் கொண்ட இராணுவப் படையணியிடம் இவர்கள் சரணடைந்ததாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விடுதலைப் புலிகளின் தலைவரது பிரத்தியே பாதுகாப்பு உறுப்பினர் இருவருடன் பாலச்சந்திரன் இராணுவத்தினரிடம் சரணடைந்துள்ளார். இவரோடு மேலும் மூவர் பாதுகாப்புக்காக பாலச்சந்திரனோடு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.\nஇதன்போது லெப்டினன் கேர்ணல் அலுவிகார அவரது 681ஆவது பட்டாலியனின் கட்டளைத் தளபதியாக பணியாற்றிய லெப்டினன் கேர்ணல் லலந்த கமமே ஊடாக, 53ஆவது படையணியில் அன்று மேஜர் ஜெனரல் பதவியிலிருந்த கமல் குணரத்னவிற்கு இவ்விடையத்தை அறிவித்துள்ளார். சிறிது தூரத்தில் இருந்த கமல் குணரத்னவின் உத்தரவிற்கமைய, பாலச்சந்திரன் உள்ளிட்ட குழுவினரை நந்திக்கடல் களப்பு பிரதேசத்திலிருந்து கமல் குணரத்ன இருக்கும் இடத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். கமல் குணரத்ன பாலச்சந்திரன் உள்ளிட்ட குழுவினரிடம் பிரத்தியேகமாக விசாரணைகளை நடத்தியுள்ளார். இதன்போது தனது தந்தையிடமிருந்து பிரிந்து பாதுகாப்புத் தரப்பினருடன் வந்து இராணுவத்தினரிடம் சரணடைந்ததாக பாலச்சந்திரன் கூறியுள்ளார்.\nபாலச்சந்திரனிடம் பெறப்பட்டத் தகவல்களை கமல் குணரத்ன உடனடியாக பாதுகாப்புச் செயலாளருக்கு தொலைபேசி ஊடாக அறிவித்துள்ளார். இந்தத் தகவல்கள் அனைத்தையும் பாதுகாப்புச் செயலாளர் கருணாவிற்கு அறிவித்துள்ளார். இதன்போது பாலச்சந்திரன் எதிர்காலத்தில் அச்சுறுத்தலாக வரக்கூடும் என்பதுடன், சிறு வயது என்பதால் நீதிமன்றத் தண்டனைகளிலிருந்தும் தப்பிவிடுவதற்க சாத்தியம் இருப்பதாகவும், எனவே சிறுவனை கொன்றுவிடுவதே சரியான முடிவும் எனவும் பாதுகாப்புச் செயலாளருக்கு கருணா கூறியுள்ளார் என மேலும் அறியப்படுகிறது. இதற்கமைய மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவை தொலைபேசியில் தொடர்புகொண்ட பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்�ஷ, மேஜர் ஜெனரலின் தனிப்பட்ட மேற்பார்வையில் பாலச்சந்திரனை சுட்டுக் கொன்று, தடயங்களை அழித்துவிடுமாறும் உத்தரவிட்டுள்ளார்.\nபாலச்சந்திரனின் கொலை தொடர்பாக பிரித்தானியாவின் ''செனல் 4'' தொலைக்காட்சியும் பல தகவல்கள் வெளியிடப்பட்டிருந்த நிலையில், இந்தப் படையணியில் இருந்த இராணுவ அதிகாரியொருவரே மேற்கண்ட தகவல்களை கசியவிட்டுள்ளார். குறிப்பிட்ட இராணுவ அதிகாரியின் மகன் ஒருவர் சமீபத்தில் தீராத நோய் ஒன்றினால் பீடிக்கப்பட்டுள்ளதாகவும், தான் முன் நிலையில் பாலச்சந்திரணுக்கு நடந்த கொடுமைகளை, தான் வெளியே சொன்னால் தான் தன் பழி தீரும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து 14 வயது பச்சிளம் பாலகன் என்று கூடப் பாராமல், அவனை கொலைசெய்தது பிரிகேடியர் கமல் குணரத்னவே என்பது தற்போது உறுதிசெய்யப்பட்டுள்ளது. விரைவில் இச் சாட்சி தந்த ஒளிநாடாவும் அதிர்வு இணையத்தால் வெளிடப்படும் என்பதனையும் அறியத்தருகிறோம் \nநீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.\nஇலங்கையின் ஏழாவது ஜனாதிபதி (1)\nஉலகத் தமிழர் பேரவை (1)\nசிறீலங்காவின் 7வது நாடாளுமன்ற தேர்தல் (12)\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (6)\nதலைமைச் செயலகம் தமிழீழம் (5)\nநாடு கடந்த அரசாங்கத் தேர்தல் (6)\nநாடு கடந்த அரசாங்கம் (57)\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கம் (1)\nநான் சாகலாம் நாங்கள் சாகக் கூடாது (11)\nபோர்குற்ற நாள் 2009 மே (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kavishan.blogspot.com/2013/07/blog-post_9288.html", "date_download": "2018-04-26T12:59:38Z", "digest": "sha1:FTAXOWOS57TQOASGKJ4VHXTSQBE27KEF", "length": 12401, "nlines": 132, "source_domain": "kavishan.blogspot.com", "title": "புதிதாக உதயமாகியுள்ள தனித் தெலுங்கனா மாநிலத்துக்கு சீமான் வாழ்த்து ~ ஈழம் செய்திகள்", "raw_content": "\nபுதிதாக உதயமாகியுள்ள தனித் தெலுங்கனா மாநிலத்துக்கு சீமான் வாழ்த்து\nபுதிதாக உதயமாகி உள்ள தனித் தெலுங்கானா மாநிலத்திற்கு நாம் தமிழர் கட்சித் தலைவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,\n“ஆந்திர மாநிலத்தில் கனிம வளமும், நீர் வளமும் அதிகமாக இருந்தும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பகுதியாக இருந்த தெலுங்கானா பகுதியை, அப்பகுதி மக்களின் ஏகோப்பித்த கோரிக்கை ஏற்று தனி மாநிலமாக உருவாக்க காங்கிரஸ் கட்சி ஒப்புக்கொண்டிருப்பது வரவேற்கத்தக்க முடிவாகும்.\n1956இல் மொழி வழி இனங்களின் அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, அந்த மாநில மக்களின் மொழி, இன அடையாளங்கள், பண்பாடு ஆகியன காப்பாற்றப்பட வேண்டும், அம்மாநிலத்திற்குட்பட்ட பகுதிகள் பொருளாதார மேம்பாடு பெற தனி மாநில அமைப்பு அவசியம் என்கிற அடிப்படையில்தான் இந்தியாவில் மொழி வழி மாநிலங்கள் உருவாக்கப்பட்டன.\nஆந்திரத்தைப் பொறுத்தவரை, விசால ஆந்திரா என்ற முழக்கத்தை முன்வைத்துப் போராடிய தெலுங்கானா போராட்டமே ஆந்திரா என்கிற மாநிலம் அமையக் காரணமானது. ஆனால், கனிம, நீர் வளங்கள் கொண்டிருந்த தங்களுடைய பகுதி ஆந்திர ஆட்சி, அரசு நிர்வாகத்தில் புறக்கணிக்கப்பட்டு வருவதால், ஆந்திரத்தின் வறுமைப் பகுதியாக தெலுங்கானா இருப்பதாக கூறியே, தெலுங்கானா தனி மாநிலப் போராட்டம் நடந்தது.\nஇந்தியாவிலுள்ள பொருளாதார ரீதியில் பிற்பட்ட பகுதிகளை பற்றி ஆய்வு செய்த மத்திய அரசுக் குழு, 2009-10ஆம் ஆண்டுகளில் அளித்த அறிக்கையின்படி, ஆந்திரத்தின் 13 மாவட்டங்கள் பின்தங்கிய மாவட்டங்களாக இருந்தது. அதில் பத்து மாவட்டங்கள் தெலுங்கானா பகுதிக்கு உட்பட்டவையாகும். அந்த அடிப்படையில்தான்ஹைதராபாத், அடிலாபாத், மேடக், கம்மம், கரீம் நகர், மெஹபூப் நகர், நல்கொண்டா, நிசாமாபாத், ரங்காரெட்டி, வாரங்கல் ஆகிய 10 மாவட்டங்களும் சேர்ந்த தெலுங்கானா மாநிலம் அமைக்க ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.\nதெலுங்கானா தவிர்த்த ஆந்திர மாநிலத்திற்கு புதிதாக ஒரு தலைநகர் உருவாக்கப்படும்வரை ஹைதராபாத்தை இரு மாநிலங்களுக்குமான பொதுத் தலைநகராக்க செய்யப்பட்டிருக்கும் முடிவும் வரவேற்கத்தக்கதே. தெலுங்கானாவின் தலைநகராக ஹைதராபாத் இருக்கும் என்பது ஏற்கப்பட்டிருப்பது, ஆந்திராவின் இதர பகுதி மக்களுக்கு ஒரு ஏமாற்றமானதுதான் என்றாலும், ஹைதராபாத் தெலுங்கானாவின் மையப்பகுதியில் உள்ளதால், ஆந்திரத்திற்கென்று ஒரு தனித்த தலைநகர் உருவாக்கப்படுவதே நல்லதாகும்.\nதெலுங்கானா உருவாக்கத்தை எதிர்க்கும் ஆந்திர அரசியல் கட்சிகள் தங்கள் எதிர்ப்பை கைவிட்டு, தெலுங்கானாவுடன் சகோதர மனப்பாங்குடன் எப்போதும் போல் செயல்பட வேண்டும். தெலுங்கானா தனி மாநில கோரிக்கைக்கான நியாயம் எப்போதோ ஏற்கப்பட்டுவிட்டது. ஆனால் அதனை செயல்படுத்துவதில் ஏற்பட்ட தாமதம் பல உயிர்களைக் குடித்துவிட்டது. இதற்கு மேலும் அந்த நிலை தொடர ஆந்திர, தெலுங்கானா மக்களும் அரசியல் கட்சிகளும் அனுமதிக்காமல், ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி வாழ்த்தி விரும்பி கேட்டுக்கொள்கிறது” என்று கூறியுள்ளார்.\nநீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.\nஇலங்கையின் ஏழாவது ஜனாதிபதி (1)\nஉலகத் தமிழர் பேரவை (1)\nசிறீலங்காவின் 7வது நாடாளுமன்ற தேர்தல் (12)\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (6)\nதலைமைச் செயலகம் தமிழீழம் (5)\nநாடு கடந்த அரசாங்கத் தேர்தல் (6)\nநாடு கடந்த அரசாங்கம் (57)\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கம் (1)\nநான் சாகலாம் நாங்கள் சாகக் கூடாது (11)\nபோர்குற்ற நாள் 2009 மே (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.chennaipatrika.com/post/2013/10/05/pappali-movie-updates.aspx", "date_download": "2018-04-26T13:23:12Z", "digest": "sha1:62KTNXQDGSOAZH2GWRZJ4TJ4QUO67RZU", "length": 5274, "nlines": 41, "source_domain": "tamil.chennaipatrika.com", "title": "pappali movie updates", "raw_content": "\nசெந்தில் – இஷாரா நடிக்கும் \"பப்பாளி\"\nகாமெடி கலாட்டா + கனவு செந்தில் – இஷாரா நடிக்கும் \"பப்பாளி\"\nவெற்றிபெற்ற மனம் கொத்திப்பறவை பட த்தயாரிப்பாளர்கள் S..அம்பேத் குமார் ,A .ரஞ்ஜீவ் மேனன் இருவரும் இணைந்து அரசூர் மூவீஸ் பட நிறுவனம் சார்பாக தயாரித்திருக்கும் படம் ‘’பப்பாளி’’. இந்த படத்தில் செந்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார் இவர் புகழ் பெற்ற சரவணன் மீனாட்சி தொடரின் நாயகன். கதாநாயகியாக இஷாரா நடித்திருக்கிறார்.\nமுக்கிய வேடத்தில் சரண்யாபொன்வண்ணன் நடிக்கிறார் மற்றும் இளவரசு, ஆடுகளம் நரேன், சிங்கம் புலி, ஜெகன் ,கிருஷ்ணமூர்த்தி, கௌரவ வேடத்தில் நிரோஷா ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.\nஇசை ; விஜய் எபிநேசர்.\nஎடிட்டிங் ; அத்தியப்பன் சிவா\nதயாரிப்பு நிர்வாகம் ; D.செல்லத்துரை.\nதயாரிப்பு மேற்பார்வை D. முருகன்\nதயாரிப்பு ; S .அம்பேத் குமார் , A .ரஞ்ஜிவ்மேனன்\nகதை ,திரைக்கதை ,வசனம் எழுதி இயக்குகிறார் A .கோவிந்தமூர்த்தி\nஇவர் வெற்றிபெற்ற கருப்பசாமி குத்தகைதாரர், வெடிகுண்டு முருகேசன் போன்ற நகைச்சுவை படங்களை இயக்கியவர். படம் பற்றி இயக்குனரிடம் கேட்டோம், உலகத்தில் அழியாத சொத்து கல்வி. வாழ்க்கையில் கடைசிவரைக்கும் நம் கூட இருப்பதும் நம்மை வழிநடத்துவதும் கற்ற கல்வியும் காதலித்த காதலும் தான். வாழ்க்கை சில பேருக்கு சதுரமா இருக்கலாம் சிலபேருக்கு வட்டமா இருக்கலாம் ஆனால் இந்த நாயகனுக்கு ரொம்ப மட்டமா இருந்துச்சு.\nஇந்த மட்டமான வாழ்கையில் இருந்து இவன் உயர் மட்டத்திற்கு போணானா இல்லையா என்பதுதான் திரைக்கதை. இந்தியாவில் எப்பொழுது எல்லாம் பொருளாதாரம் வீழ்ச்சி அடைகிறதோ அப்போதெல்லாம் காமெடி படங்கள் தான் வெற்றி அடைந்திருக்கிறது மக்களின் மன அழுத்தத்தில் இருந்து அவர்களை விடுபடவைத்திருக்கிறது.\nஅதே போல் இந்த பப்பாளியும் மன அழுத்தத்தில் இருந்து மக்களை மகிழ்விக்கும். டிசம்பர் குளிருக்கு செம்ம ஹாட்டா பப்பாளி வரும் என்கிறார் இயக்குனர் A .கோவிந்தமூர்த்தி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilhackx.blogspot.com/2009/09/", "date_download": "2018-04-26T13:31:04Z", "digest": "sha1:ABK3A23CJRXMV6V52TFPBDKVFTM46MXR", "length": 8929, "nlines": 89, "source_domain": "tamilhackx.blogspot.com", "title": "September 2009 - TamilhackX", "raw_content": "\nMicrosoft office இல் tab வசதியினைக் கொண்டு வருவது எப்படி\nதற்போது உள்ள Browser களில் tab வசதியானது மிகச் சிறந்த ஒரு வசதியாக கருதப்படுகிறது. இதற்குக் காரணம் ஒரு browser இல் பல tab களைத் திறப்பதன் மூலம் Browsing இலகுவாகின்றது அத்துடன் எமது நேரமும் சேமிக்கப்படுகின்றது.\nஇதே போன்ற Tab வசதியை Microsoft office இல் கொண்டுவந்தால் எவ்வளவு வசதியாக இருக்கும் Microsoft Word, Microsoft Excel, Microsoft powerpoint இல் தனித் தனி Window இல் திறந்து வைத்து ஒவ்வொரு Window ஆக மாற்றி மாற்றி வேலை செய்வதற்குப் பதில் ஒரே Window இல் வெவ்வேறு Tab இல் திறந்து வைத்து வேலை செய்வதனால் இலகுவாக எமது வேலைகளை செய்து முடிக்கக் கூடியதாக இருக்கும். அத்துடன் அதிகளவு நேரத்தையும் மிச்சப்படுத்திக் கொள்ள கூடியதாக இருக்கும்.\nஇவ் வசதியை உங்கள் கணணியில் உள்ள Microsoft office இல் செயற்படுத்துவதற்க்கு கீழ் உள்ள சுட்டியில் இருந்து OfficeTab என்ற சிறிய Microsoft Office plug-in ஐ தரவிறக்கி உங்கள் கணணியில் Install பண்ணிக் கொள்ளவும்.\nஇதை Install பண்ணியதும் வரும் OfficeTab Setting இல் உங்களுக்கு விருப்பமான Tab Style, மற்றும் Tab இன் நிறம் போன்றவற்றை மாற்றிக் கொள்ள முடியும்.\nWindows XP இல் பொதுவாக ஏற்படும் 25 பிரச்சனைகளைத் தீர்க்கும் XP Quick Fix\nநமது கணணியை வைரஸ் தாக்கினால் Task manager, registry editor, run dialog box போன்றவற்றை Disable ஆக்கிவிடும். இதனால் நாம் பல சிரமங்களை எதிர் நோக்க வேண்டிவரும்.\nஇவ்வாறு வைரசால் Windows XP இல் உண்டாகும் 25 பிரச்சனைகளுக்கான தீர்வு தான் XP Quick Fix என்ற இந்த சிறிய மென்பொருள்\nஇந்த சிறிய மென்பொருள் மூலம் பின்வரும் தீர்வுகளைப் பெற்றுக் கொள்ள முடியும்\nமேலுள்ள பிரச்சனைகளில் எதாவது உங்களுடைய கணணிக்கு இருப்பின் அதற்குரிய button ஐக் Click செய்வதன் மூலம் அந்தப் பிரச்சனையைத் தீர்த்துக் கொள்ள முடியும்\nMicrosoft office இல் tab வசதியினைக் கொண்டு வருவது ...\nWindows XP இல் பொதுவாக ஏற்படும் 25 பிரச்சனைகளைத் த...\nஒரே Click இல் எல்லா சமூக வலைத்தளங்களினதும் Status ஐ Update பண்ணுவது எப்படி \nநாம் அநேகமாக Facebook, twitter , Hi5 போன்ற ஒன்றுக்குக்கு மேற்பட்ட சமூக வலைத்தளங்களில் கணக்கை உருவாக்கி வைத்திருப்போம் . இவை ஒவ்வொன்றிலும் S...\nநீங்கள் அனுப்பிய மின்னஞ்சல் வாசிக்கப்பட்டாதா இல்லையா என்று அறிவது எப்படி \nசில சந்தர்பங்களில் நாம் அனுப்பிய மின்னஞ்சல் திறந்து படிக்கப்பட்டதா அல்லது படிக்கப்படவில்லையா என்று அறிய வேண்டிய அவசியத்தில் இருப்போம் அவ்வ...\nFacebook இல் உங்களை தங்கள் Friend List இருந்து அகற்றிய நண்பர்களைக் கண்டுபிடிப்பது எப்படி\nசில நேரங்களில் உங்கள் Facebook இல் நண்பர்களின் எண்ணிக்கை வழமையை விட குறைந்து காணப்படலாம் இதற்குக் காரணம் உங்கள் நண்பர்கள் உங்களை தங்கள் Fri...\nBlogger க்கான நுட்பங்கள்- 3: Blog இல் விரும்பிய பாடலை ஒலிபரப்புவது எப்படி \nBlog இல் பாடல்கள் ஒளிபரப்புவதற்கு பல G adgets உள்ளன ஆனால் அதில் நீங்கள் விரும்பிய பாடல் இருக்கும் என்பது சந்தேகம் தான். அதனால் நாம் விரும்...\nகணணியில் பணிபுரியும் அனைவருக்கும் உதவும் Dropbox \nDropbox என்பது நமது கோப்புக்களை இணையத்தில் பாதுகாப்பாக சேமிக்க உதவும் ஒரு சேவையாகும். இதில் நமது கோப்புக்களை இணைய வசதி உடைய எந்தவொரு இடத்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthinappalakai.net/2017/05/28", "date_download": "2018-04-26T13:01:48Z", "digest": "sha1:FF3T2IXYUEESDKWS5TQJNEOIMF3W25K6", "length": 13067, "nlines": 118, "source_domain": "www.puthinappalakai.net", "title": "28 | May | 2017 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nசடலங்களை ஏற்றிச் செல்லும் சிறிலங்கா இராணுவத்தின் துருப்புக்காவிகள்\nசிறிலங்காவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளில் சிறிலங்கா இராணுவத்தினரின் துருப்புக்காவி கவச வாகனங்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.\nவிரிவு May 28, 2017 | 17:16 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nகூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி மறைந்தார்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், சட்டத்தரணியுமான அப்பாத்துரை விநாயகமூர்த்தி இன்று பிற்பகல் தனியார் மருத்துவமனை ஒன்றில் காலமானார்.\nவிரிவு May 28, 2017 | 13:10 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nசிறிலங்கா அனர்த்தத்தில் பலியானோர் தொகை 146 ஆகியது – 112 பேரைக் காணவில்லை\nசிறிலங்காவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு போன்ற அனர்த்தங்களால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 146 ஆக அதிகரித்துள்ளது. (படங்கள் இணைப்பு)\nவிரிவு May 28, 2017 | 12:43 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஇந்தியா அனுப்பிய இரண்டாவது கப்பலும் கொழும்பு வந்தது\nசிறிலங்காவில் வெள்ளம், நிலச்சரிவு போன்ற அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிப் பொருட்கள் மற்றும் மீட்புக் குழுக்களுடன் இந்தியக் கடற்படையின் இரண்டாவது கப்பல் இன்று மதியம் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.\nவிரிவு May 28, 2017 | 12:10 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nவரலாற்றில் முதல் தடவையாக சிறிலங்கா கடற்படைத் தளபதிக்கு இந்தியக் கடற்படை அளித்த கௌரவம்\nஎழிமலவில் உள்ள இந்தியக் கடற்படை அகடமியில் 338 கடற்படையினர் மற்றும் அதிகாரிகள் பயிற்சி முடித்து வெளியேறும் நிகழ்வில் சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன பிரதம அதிதியாகப் பங்கேற்றார்.\nவிரிவு May 28, 2017 | 7:02 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\n2016 இல் பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nசிறிலங்காவில் 2016ஆம் ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்ட பீடங்கள் மற்றும் திணைக்களங்களின் மூலம், பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 28,952 ஆக அதிகரித்துள்ளதாக சிறிலங்கா மத்திய வங்கியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nவிரிவு May 28, 2017 | 6:45 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nபோராடும் மக்களின் நம்பிக்கையை இழந்து வரும் சிறிலங்கா அரசாங்கம் : பாகம் -2\nசிறிசேன 2015 அதிபர் தேர்தலில் போட்டியிடும் போது பரப்புரை செய்த துண்டுப்பிரசுரங்களை காசிப்பிள்ளை தனது ஆர்ப்பாட்டத்தின் போது வைத்திருக்கிறார். சிறிசேனவைச் சூழ வெள்ளை நிற பாடசாலைச் சீருடையுடன் சிவப்பு நிற கழுத்துப் பட்டி அணிந்தவாறு சில பெண் பிள்ளைகள் நிற்கும் ஒளிப்படத்தையும் காசிப்பிள்ளை வைத்திருந்தார்.\nவிரிவு May 28, 2017 | 6:24 // நித்தியபாரதி பிரிவு: கட்டுரைகள்\nசிறிலங்காவில் ஜூலை 1ஆம் நாள் நடைமுறைக்கு வருகிறது நெகிழ்வுமுறை வேலை நேரத் திட்டம்\nஅரச பணியாளர்களுக்கான நெகிழ்வுமுறை வேலைநேரத் திட்டத்தை சிறிலங்கா அரசாங்கம் வரும் ஜூலை முதலாம் நாள் தொடக்கம் நடைமுறைப்படுத்தவுள்ளது.\nவிரிவு May 28, 2017 | 2:50 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஅமெரிக்கா 15 மில்லியன் ரூபா உதவி\nசிறிலங்காவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர நிவாரண உதவியாக 15 மில்லியன் ரூபாவை வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.\nவிரிவு May 28, 2017 | 2:34 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nவெள்ளத்தினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 122 ஆக அதிகரிப்பு – 97 பேரைக் காணவில்லை\nசிறிலங்காவின் தெற்கு, மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் கொட்டிய கடும் மழையினால் ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி மரணமானோரின் எண்ணிக்கை 122 ஆக அதிகரித்துள்ளது. (படங்கள் இணைப்பு)\nவிரிவு May 28, 2017 | 2:26 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் இரா.சம்பந்தன் – ‘சேர் பொன். இராமநாதனின் மறுஉருவம்’\t0 Comments\nகட்டுரைகள் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு யார் காரணம்\nகட்டுரைகள் சிறிலங்கா: மகிந்தவுக்காக திறக்கப்படும் கதவுகள்\t0 Comments\nகட்டுரைகள் ஐ.நாவின் மனிதஉரிமைச் செயற்பாடுகளைப் பலவீனப்படுத்தும் ரஷ்யா, சீனா\t0 Comments\nகட்டுரைகள் சீனாவின் இறுக்கமான பிடியில் சிறிலங்காவின் அமைதியான துறைமுகம்\t1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுக்கு எதிரான வியூகத்தில் சிறிலங்காவின் பௌத்த பிக்குகளையும் இணைக்கிறது இந்தியா\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்திய மாக்கடலில் அதிகரிக்கும் சீனாவின் செல்வாக்கும் – இந்தியாவின் முத்தரப்பு கடற்பாதுகாப்பு ஒப்பந்தமும்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t0 Comments\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t2 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vakeesam.com/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF.html", "date_download": "2018-04-26T13:25:19Z", "digest": "sha1:5DJOA2R2WEXZ2F7TJSPHDI46C5HFBN3X", "length": 6293, "nlines": 75, "source_domain": "www.vakeesam.com", "title": "கிழக்கு முதல்வருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு – Vakeesam", "raw_content": "\nஹட்டனில் நில அதிர்வு – 05 வீடுகள் சேதம்\nதந்தை செல்வா நினைவுதினம் அனுஷ்டிப்பு\nஜ.தே.க முக்கிய பதவிகளில் மாற்றம் – பொதுச் செயலாளராக அகில விராஜ் காரியவசம்\n203 பட்டதாரிகள் நேர்முகத் தேர்விற்குத் தோற்றவில்லை \nயாழ் போதனா வைத்தியசாலையில் கழிவு வாய்க்கால்மேல் கன்ரீன் – மக்கள் விசனம்\nகிழக்கு முதல்வருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு\nin செய்திகள், பிரதான செய்திகள், முக்கிய செய்திகள் June 7, 2016\nகடற்படை அதிகாரி ஒருவரை அச்சுறுத்தியதன் மூலம் கிழக்கு மாகாண முதலமைச்சர் நசிர் அஹமத் இலங்கை அரசியல் யாப்பை மீறியுள்ளதாக தீர்ப்பளிக்குமாறு கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பி. லியனாராச்சி மனு ஒன்று தாக்கல் செய்துள்ளார்.\nஇதில், பிரதிவாதிகளாக கிழக்கு மாகாண முதலமைச்சர், சட்ட மா அதிபர் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.\nஅண்மையில், சம்பூர் பகுதியில் இடம்பெற்ற அரச நிகழ்வொன்றுக்கு பலவந்தமாக பிரவேசித்த முதலமைச்சர் அங்கு கடமையில் ஈடுபட்டிருந்த உயர் கடற்படை அதிகாரி ஒருவரை அச்சுறுத்தியதாக மனு மூலம் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.\nஇந்த நடவடிக்கைகளின் முலம் கிழக்கு மாகாண முதலமைச்சர் அரசியல் யாப்பின் கீழ் உறுதிப்படுத்தப்பட்டுள்ள மனித உரிமைகளை மீறியுள்ளதாகவும் மனு மூலம் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.\nஎனவே, கிழக்கு மாகாண முதலமைச்சர் இலங்கை அரசியல் யாப்பை மீறியுள்ளதாக தீர்ப்பளிக்குமாறு மனு மூலம் மேலும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.\nஹட்டனில் நில அதிர்வு – 05 வீடுகள் சேதம்\nதந்தை செல்வா நினைவுதினம் அனுஷ்டிப்பு\nஜ.தே.க முக்கிய பதவிகளில் மாற்றம் – பொதுச் செயலாளராக அகில விராஜ் காரியவசம்\nஹட்டனில் நில அதிர்வு – 05 வீடுகள் சேதம்\nதந்தை செல்வா நினைவுதினம் அனுஷ்டிப்பு\nஜ.தே.க முக்கிய பதவிகளில் மாற்றம் – பொதுச் செயலாளராக அகில விராஜ் காரியவசம்\n203 பட்டதாரிகள் நேர்முகத் தேர்விற்குத் தோற்றவில்லை \nயாழ் போதனா வைத்தியசாலையில் கழிவு வாய்க்கால்மேல் கன்ரீன் – மக்கள் விசனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/classifieds/?category_id=13&page=30", "date_download": "2018-04-26T13:28:17Z", "digest": "sha1:R2ZVS6SIJPHGWLI6ZSDWMVRFNBSZI7BK", "length": 3012, "nlines": 113, "source_domain": "www.virakesari.lk", "title": "Classifieds | Virakesari", "raw_content": "\nஇலங்கை ஆசிரியர் சேவை சங்கம் ஜே.வி.பியுடன் இணைந்து யாழ்பாணத்தில் \"செம்மே\" தினக் கொண்டாட்டம்\nநிலக்கரியை விட அடர்ந்த கருப்பு நிறத்தில் புதிய கிரகம் கண்டு பிடிப்பு\nஎரிந்த நிலையில் சடலம் மீட்பு\nபல கொள்ளைச் சம்பவங்களோடு தொடர்புடைய கொள்ளை கும்பல் கைது\nஇடி தாக்கி இருவர் வைத்தியசாலையில்\nஜாலிய விக்கிரமசூரியவை கைது செய்ய மீண்டும் பிடியாணை\n“அம்பாந்தோட்டை துறைமுகத்தின் பாதுகாப்பிற்கு இலங்கை கடற்படை மாத்திரமே பொறுப்பு”\nஐ.எஸ். தற்கொலை தாக்குதல் ; உயிரிழந்தோரின் எண்ணிக்கை 57 ஆக அதிகரிப்பு\nகாலில் விழுந்தவர் காலாவதியான நூடில்ஸ் என என்னை வர்ணிக்கிறார் : சந்திரிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://pathavi.com/new.php", "date_download": "2018-04-26T12:55:23Z", "digest": "sha1:YFWTWGKOILA3S3JGE3NATU24NLU3XCL3", "length": 10078, "nlines": 266, "source_domain": "pathavi.com", "title": "New tamil websites & blogs •et; Pathavi", "raw_content": "\nஉச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்\nVIP 2 Success Meet ல் தனுஷ்,சௌந்தர்யா,தாணு,விவேக் பேசியது\nவிராத் கோலி கேப்டனாக ரிக்கி பாண்டிங் போலவே\nஷாஹித் அப்ரிடியின் சுதந்திர​ தின வாழ்த்து\nசுதந்திர தினத்தன்று, கிரிக்கெட்டர்ஸ் போஸ்ட் ட்வீட்ஸ்\nஒரே நேரத்தில் 5 மொழிகளில் ஒளிபரப்பாகும் சச்சின் படம்\nவிரைவில் வெளியாக​ இருக்கும் வேலைக்காரன் Teaser\nமுதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி-நா.முத்துக்குமார்\nஎனது கவிதைகள் ...: பாரத் மாதா கீ ஜே\nவீடியோக்களை எடிட் செய்ய உதவும் ஆப்ஸ் - அன்பை தேடி அன்பு,,,,\nkavithaigal0510.blogspot.com: சித்திரைப் பெண்ணே(தமிழ் புத்தாண்டு கவிதை)\nOrthopedic Specialist Chennai: இந்தியாவிலேயே முதல் முறையாக - கைநமட்டிக் முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை\nPathavi தமிழின் முதன்மையான வலைப்பதிவு திரட்டி ஆகும். Pathavi தமிழ் வலைப்பதிவுகளுக்கு பலச் சேவைகளை வழங்கி வருகிறது. வலைப்பதிவுகளை திரட்டுதல், மறுமொழிகளை திரட்டுதல், குறிச்சொற்களை திரட்டுதல், வாசகர் பரிந்துரைகள், தமிழின் முன்னணி வலைப்பதிவுகள் என பலச் சேவைகளை Pathavi வழங்கி வருகிறது. வேறு எந்த இந்திய மொழிகளிலும் இல்லாத அளவுக்கு தொழில்நுட்ப சேவைகளை Pathavi தமிழ் வலைப்பதிவுகளுக்கு அளித்து வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948214.37/wet/CC-MAIN-20180426125104-20180426145104-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}