diff --git "a/data_multi/ta/2021-21_ta_all_0075.json.gz.jsonl" "b/data_multi/ta/2021-21_ta_all_0075.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2021-21_ta_all_0075.json.gz.jsonl" @@ -0,0 +1,615 @@ +{"url": "http://www.kadalpayanangal.com/2013/02/blog-post_6.html", "date_download": "2021-05-07T01:26:24Z", "digest": "sha1:WMJXXJMGNKTYMHBMASKRJATLZ25FBQMP", "length": 17177, "nlines": 189, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: ஊர் ஸ்பெஷல் - கோவில்பட்டி கடலைமிட்டாய்", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nஊர் ஸ்பெஷல் - கோவில்பட்டி கடலைமிட்டாய்\nகடலைமிட்டாய் என்பது நமது பெட்டி கடைகளிலும், மற்ற கடைகளிலும் வெகு சாதாரணமாக கிடைக்கும் ஒரு சுவையான ஒன்று. இன்று வரை நாக்கில் பட்டவுடன் தெரியும் அந்த ருசிக்கு மீண்டும் மீண்டும் இன்னும் ஒன்னு என்று எடுத்து தின்போம் இல்லையா. நமது தமிழ்நாட்டில் கடலைமிட்டாய்க்கு பெயர் பெற்ற ஊர் என்றால் அது கோவில்பட்டி. விருதுநகரில் இருந்து சுமார் 60 கிலோ மீட்டரில் இருக்கும் இந்த ஊருக்கு சென்றால் எல்லோரும் பெருமையாக சொல்வது அவர்கள் ஊரின் கடலைமிட்டாய், அதை தேடி சென்று அதை செய்யும் இடத்தில் இருந்து பார்த்து, சுட சுட கையில் வாங்கி தின்ற அந்த தருணம் இனிமையானது, வாருங்கள் கடலைமிட்டாய் சாப்பிடலாம் \nஊருக்குள் நுழைவதற்கு முன்னரே ஒரு கடையில் சென்று நன்கு விசாரித்தேன், பின்னர் அங்கிருந்து அவர்கள் சொன்ன மார்க்கெட் ரோடு சென்றேன், அங்கிருந்து கடலைமிட்டாய் கடை என்பது தடுக்கி எங்கு விழுந்தாலும் இருந்தது அங்கு மிகவும் புகழ் பெற்றது என்பது VVR மற்றும் MNR கடலை மிட்டாய்கள் என்பது நான் விசாரித்து தெரிந்து கொண்டது. முதலில் VVR கடையில் சென்று என்னை அறிமுகபடுதிகொண்டேன், ஆனால் அவர்கள் அந்த செய்முறையை ரகசியமாக பாதுகாப்பதால் முடியாது என்றனர். எவ்வளவோ கேட்டும் பார்க்க முடியவில்லை. பின்னர் இதன் அருகில் இருந்த MNR கடைக்கு கடைக்கு சென்று சொன்னவுடன், மிகவும் மகிழ்ந்தார்கள். உள்ளே கூட்டி சென்று அங்கு செய்யும் முறை, பக்குவம் என்று மிகுந்த அன்புடன் நடத்தினர் \nஇந்த கடலைமிட்டாய் செய்வது என்பது அவ்வளவு ஒன்றும் கடினமாக இல்லை, ஆனால் சரியான பக்குவம் இல்லை என்றால் நன்றாக இருக்காது. முதலில் நன்றாக வறுத்த கடலைகளை ஒரு மெசினில் போட்டு சரியான சைசில் நறுக்குகிரார்கள், அடுத்து ஒருவர் வெல்லம் (இரண்டு அல்லது\nமூன்று வகையான வெல்லம் உபயோக்கின்றனர்)போட்டு காய்சுகிறார், அதன் பதம் சரியாக இருக்கிறதா என்று அவர் அடிக்கடி தொட்டு பார்கிறார். அது சூடாக இருக்கும்போது ச��றிது கையில் கொடுத்து சாப்பிட சொன்னார்கள், ஆகா என்ன சுவை அது நன்கு பதம் வந்தவுடம் ஒருவர் சட்டென்று அந்த உடைத்த கடலைகளை அந்த வெள்ளத்தில் போட்டு நன்கு கலக்குகிறார்.\nஅந்த கடலைகள் வெகு சீக்கிரத்தில் அந்த வெல்லத்தில் கலந்திட வேண்டும் என்று வேக வேகமாக கலக்குகின்றனர், இல்லையென்றால் அவ்வளவும் வீண் அது நன்கு கலந்தவுடன், ஒரு செவ்வக வடிவான ஒரு பலகையில் அந்த பாகை சரியாக ஊற்றுகின்றனர். ஒரு கட்டையை கொண்டு அதை சமன் செய்து சிறிது நேரம் விட்டு விடுகின்றனர். பின்னர் அதில் அழுத்தமாக கோடு கிழித்து சரியான சைசில் கொண்டு வருகின்றனர். சிறிது நேரத்தில் அதை கவிழ்க்கும்போது ஒரு சட்டி நிறைய கடலைமிட்டாய் தயார் \nஇந்த கடலைமிட்டாய் சுவை என்பது தேனி மாவட்டத்தின் வெல்லம், அருப்புகோட்டை கடலை மற்றும் அவர்களின் பக்குவத்தில் வருகிறது என்று சொல்லும்போது அவ்வளவு ஆனந்தம். இவர்கள் தயாரிக்கும் கடலைமிட்டாய் இந்தியா மட்டுமில்லாது வெளிநாடுகளுக்கும் செல்கிறது. முடிவில் சூடாக ஒரு கடலைமிட்டாய் ஒன்றை எனது கையில் எடுத்து கொடுக்கும்போது அது வாயினில் கரையும்போது மனமும் மெல்ல கரைய ஆரம்பிக்கிறது \nஇந்த பதிவை நீங்கள் விரும்பினால் திண்டுக்கல் பூட்டு, மதுரை மல்லிகை, மதுரை மரிக்கொழுந்து போன்றவைகளை படிக்க ஊர் ஸ்பெஷல் என்னும் தலைப்பில் உங்களின் வலது புறம் இருக்கும் தலைப்பினை ச்டுக்கவும், நன்றி \nஎன்ன ஒரு ரசனை... ரசித்தேன்... சுவைத்தேன்...\nதிண்டுக்கல் என்றால் பூட்டு மட்டும் தானா... தமிழ்நாட்டின் ஹாலந்து (மலர் உற்பத்தி), சிறுமலை வாழைப்பழம், பிரியாணி..... இப்படி பலப்பல.....\nஅவ்வப்போது மாமனார் வீட்டிற்கு வரலாம்... தப்பில்லை... வரும் போது எனக்கு ஃபோன் செய்யலாம்... செய்யவில்லை தான் கோபம் வரும்... ஹா... ஹா.... நன்றி... சந்திப்போம்...\nநன்றி நண்பரே, ஆம் இதையும் கேள்விபட்டேன், ஆனால் ஒரு ஊரே கடலைமிட்டாய் தயாரிக்கும்போது எதை சுவைப்பது, எதை விடுவது \nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - கரூர் திரைசீலை (பகுதி - 1)\nகரூர் என்றாலே கொசுவலை என்பது அனைவருக்கும் நினைவுக்கு வரும், இன்று கால ஓட்டத்தில் அது திரைசீலைக்கும் பிரபலம் என்று உங்களுக்கு தெரியுமா \nஊர் ஸ்பெஷல் - தஞ்சாவூர் வீணை\nஇசையை பற்றி எந்த ஞானமும் கிடையாது எனக்கு, நல்ல இசை என்றால் உடம்பு தானாகவே தாளம் போடும், அவ்வளவுதான் . இந்த ஊர் ஸ்பெஷல் பகுதிக்காக ஒவ்வொரு...\nஅறுசுவை (சமஸ்) - புத்தூர் அசைவ சாப்பாடு\nசமஸ் எழுதிய புத்தகத்தை படித்துவிட்டு ஒரு சாப்பாடு சாபிடுவதற்கு என்றே ஒரு பயணம் மேற்கொண்டோம். முதலில் திண்டுக்கல்லில் இருந்து புறப்பட்டு தி...\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nகடல்பயணங்கள் தளம் மீண்டும் ஆரம்பம் ஆகின்றது என்று பதிவு போட்டபோதே பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தவண்ணம் இருக்கிறீர்கள், மிக்க நன்றி \nஅறுசுவை - நவீன டீ கடை \nவேலை நேரத்திலோ, நண்பர்களுடனோ, தனியாக செல்லும்போதோ ஏதாவது சாப்பிடனும் அப்படின்னு தோணிச்சினா, நம்ம வண்டிய நிறுத்துறது ஒரு டீ கடையின் முன்னேத...\nநான் ரசித்த குறும்படம் - காதல் சொல்ல வந்தேன்\nஅறுசுவை - என்டே கேரளம், பெங்களுரு\nஊர் ஸ்பெஷல் - திருநெல்வேலி அல்வா\nமறக்க முடியா பயணம் - குறுவா தீவு, வயநாடு, கேரளா\nஅறுசுவை - பிராமின்ஸ் காபி பார்\nநான் ரசித்த குறும்படம் - நண்பன் வாங்கி தந்த டீ\nசாகச பயணம் - பிஷ் ஸ்பா\nஉயரம் தொடுவோம் - ஷாங்காய் வேர்ல்ட் பினான்சியல் டவர...\nஅறுசுவை - கிரீம் சென்டர், பெங்களுரு\nசோலை டாக்கீஸ் - பாப் ஷாலினி\nமீண்டும் சிறுபிள்ளையாவோம் - புதிய தொடர் \nநான் ரசித்த குறும்படம் - பாஸ்ட்டென்ஸ்\nஊர் ஸ்பெஷல் - கோவில்பட்டி கடலைமிட்டாய்\nஅறுசுவை - ஷரோன் டீ ஸ்டால், பெங்களுரு\nமறக்க முடியா பயணம் - வயநாடு : சூச்சிபாரா அருவி\nசோலை டாக்கீஸ் - கலோனியல் கசின்ஸ்\nஅறுசுவை - பார்பிக்யூ வேர்ல்ட், பெங்களூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=1093", "date_download": "2021-05-07T01:30:21Z", "digest": "sha1:XOLHWETPVX6ZGSN6Z372222VHZZOACLS", "length": 16645, "nlines": 126, "source_domain": "www.varalaaru.com", "title": "Varalaaru - A Portal For South Asian History Varalaaru - A Monthly Web Magazine for South Asian History", "raw_content": "\n[ பிப்ரவரி 15 - மார்ச் 17, 2012 ]\nசேக்கிழாரும் அவர் காலமும் - 3\nநன்னன் திருவிழா / நன்னன் பிறந்தநாள் விழா\nஇதழ் எண். 86 > கலையும் ஆய்வும்\nசேக்கிழாரும் அவர் காலமும் - 3\nமூன்றாம் குலோத்துங்கன் பேரம்பலம் பொன்வேய்ந்தவன் அல்லன்\nமூன்றாம் குலோத்துங்கன் கட்டிய திரிபுவன வீரேச்சுரம் என்ற சிறப்புடைக் கோயிலில் உள்ள வடமொழிச் சுலோகங்கள் அம்மன்னன் செய்தனவாகக் கூறுவன காண்க:\n1. அவனுடைய சோழ-ஈழ-சேர நாட்டு வெற்றிகள்\n2. அவன் தில்���ையில் முகமண்டபம், கோபுரம், அம்மன் திருச்சுற்று இவற்றைப் பொன்மயமாக்கினான்.\n3. ஈடும் எடுப்பும் அற்ற சிவபக்தன்.\n4. காஞ்சி ஏகாம்பரர் கோயில், மதுரைச் சிவன் கோயில், திருவிடைமருதூர்க் கோவில், தாராசுரத்தில் உள்ள இராசராசேச்சுரம், திருஆரூர்ப் பெருங்கோயில் இவற்றைப் பொன்மயமாக்கினான்.\nஇக்கல்வெட்டில் மூன்றாம் குலோத்துங்கனான திருபுவன வீரதேவன் பேரம்பலம் பொன்வேய்ந்தான் என்பது குறிக்கப்படாமை காண்க. அவன் தில்லையில் முகமண்டபம், கோபுரம், அம்மன் திருச்சுற்று இவற்றையே சிறப்புறச் செய்தான் என்று இக்கல்வெட்டு கூறுகின்றது. மூன்றாம் குலோத்துங்கன் பேரம்பலம் பொன் வேய்ந்தவன் அல்லன் என்பது பெறப்பட்டதன்றோ\nமேலும், சேக்கிழார் காலத்தரசன் அநபாயன் என்ற சிறப்புப் பெயர் பெற்றவன் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அச்சிறப்புப் பெயர் மூன்றாம் குலோத்துங்கற்கு உண்டு என்று கூறச் சான்றின்மை காண்க. இன்னபிற காரணங்களால் மூன்றாம் குலோத்துங்கன் சேக்கிழார் காலத்தவன் ஆகான் என்பது அறியப்படும்.\nசேக்கிழார் புராண ஆசிரியர், சேக்கிழார் காலத்து அரசனை 'அபயன்'28 எனவும் 'அநபாயன்'29 எனவும் குறித்துள்ளார் என்பதை முன்பே கூறினோம் அல்லவா சேக்கிழார் பத்து இடங்களில் தம் காலத்தரசனைக் குறித்துள்ளார்; அப்பத்து இடங்களிலும் 'அநபாயன்' என்பதையே சிறப்பாகக் குறிக்கின்றார்; இரண்டு இடங்களில் 'அபயன்' என்பதைக் குறித்துள்ளார். இனி இம்மன்னனைப் பற்றிப் பெரிய புராணம் கூறுவனவும் கூத்தர் பாடிய உலா, பிள்ளைத்தமிழ், தக்கயாகப்பரணி ஆகிய மூன்றும் கூறுவனவும் முறையே காண்போம்.\nஅநபாயனைப் பற்றிப் பெரியபுராணம் கூறுவன:\n4. தில்லைத்திரு எல்லைப் பொன்னின் மயமாக்கினான்\n5. தில்லைநகர் மணிவீதி அணிவிளக்கும் சென்னி நீடு அநபாயன்\nஅநபாயனைப் பெரியபுராணம் குறிக்கும் சொற்கள்\n1. அநபாயன் - 10 இடங்களில் வருகின்றன\n2. அபயன் - 2 இடங்களில் வருகின்றன\n3. சென்னி - 3 இடங்களில் வருகின்றன\n4. செம்பியன் - 1 இடத்தில் வருகின்றது\n5. குலோத்துங்கன் - 1 இடத்தில் வருகின்றது\nஉலாவும் பிள்ளைத்தமிழும் தக்கயாகப்பரணியும் கூறுவன\n1. பேரம்பலம் பொன் வேய்ந்தமை\n3. பட்டம் பெற்றவுடன் பகைவேந்தரை விடுதலை செய்தான்; செங்கோல் அரசன்\n4. சிற்றம்பலம், பல பல மண்டபம், அம்மன் கோயில், எழுநிலைக் கோபுரம், திருச்சுற்று மாளிகை, தெரு ���வற்றைப் பொன்மயம் ஆக்கினான்\n5. நான்கு திருவீதிகளையும் அமராவதியில் உள்ள பெருவீதிகள் நாணப் பெருக்கினான்\n6. இலக்குமியை மார்பில் தரித்தவன்\n7. மறையவர்க்குத் தானம் செய்தான்\n1. அநபாயன் - 3 இடங்களில் வருகின்றன\n2. அபயன் - 2 இடங்களில் வருகின்றன\n3. சென்னி - 2 இடங்களில் வருகின்றன\n4. குலோத்துங்கன் - 4 இடங்களில் வருகின்றன\nஇங்ஙனம் சேக்கிழாரும் ஒட்டக்கூத்தரும் குறிப்பிட்ட கருத்துக்கள் ஒன்றுபடுதலைக் காணின், சேக்கிழார் குறித்த அநபாயன் இரண்டாம் குலோத்துங்கனே என்பது ஐயமற விளங்குகின்றதன்றோ தண்டியலங்கார மேற்கோள் பாக்களில் எட்டுப் பாடல்கள் அநபாயனைப் பற்றியே வருகின்றன30. அவை அவனுடைய வள்ளற்றன்மை, செங்கோண்மை, பேரரசுத்தன்மை ஆகிய மூன்றையும் பெரியபுராணத்தைப் போலவும் உலா, பிள்ளைத்தமிழ், பரணி போலவும் விளக்கமாகக் கூறுகின்றன. அப்பாடல்களுள் இறுதிப்பாடல் அநபாயனை வாழ்த்துவதாக முடிவதால், தண்டியலங்கார மூலமும் உரையுமோ அல்லது உரை மட்டுமோ இவ்விரண்டாம் குலோத்துங்கன் காலத்தது எனக் கூறலாம். இங்குப் பெரிய புராணம் குறிக்கும் பத்து இடங்களிலும் சிறப்புச் சொல்லாக 'அநபாயன்' என்பதே ஆளப்பட்டிருத்தலும், தண்டியலங்காரம் குறிக்கும் மேற்கோட்செய்யுட்கள் எட்டிலும் 'அநபாயன்' என்ற சொல் ஒன்றே ஆளப்பட்டிருத்தலும் காணச் 'சேக்கிழார் காலத்தரசன்' 'அநபாயன்' என்ற பெயர் ஒன்றையே தனது சிறப்புப் பெயராகக் கொண்டவன் என்பது நன்கு தெரிகின்றது. இங்ஙனம் கொண்டவன் கூத்தரால் புகழப்பெற்ற இரண்டாம் குலோத்துங்கனே என்பது மேற்காட்டிய ஒற்றுமையால் நன்கு விளக்கமாதல் காண்க.\nஇனி, இவ்விரு புலவரும் குறித்த செய்திகள் அனைத்திற்கும் இக்குலோத்துங்கன் கல்வெட்டுக்கள் சான்று பகர்ந்து நிற்கும் அருமைப்பாட்டைக் கீழே காண்க:\nஅநபாயனைப் பற்றிய இலக்கியச் செய்திகள்\n2. இவன் ஆட்சியில் போரைப் பற்றிய குறிப்பே இல்லை\n3. இவன் கோப்பெருந்தேவி புவனமுழுதுடையாள்\n4. இவன் சிறந்த சிவபக்தன்\n5. இவன் தில்லை-கோவிந்தராசர் சிலையை அப்புறப்படுத்தியவன்\n6. இவனது சிறப்புப்பெயர் அநபாயன்\nஅநபாயனைப் பற்றிய கல்வெட்டுச் சான்றுகள்\n1. திருமாணிக்குழி, திருப்புறம்பயம், திருக்கோகர்ணம் கல்வெட்டுகள் இவன் பொன்வேய்ந்தமையைக் குறிக்கின்றன\n2. இவன் கல்வெட்டுகளிலும் போர் பற்றிய பேச்சில்லை; அமைதியான அரசா��்சி நடந்தது\n3. இவன் கோப்பெருந்தேவி புவனமுழுதுடையாளையே திருமழபாடிக் கல்வெட்டும் கூறுகின்றது\n4. 'அநபாயன் தில்லை நடராசர் திருவடித் தாமரையில் ஈப்போன்றவன்' என்று திருவாரூர் வடமொழிக் கல்வெட்டு கூறுகிறது\n5. இவன் தில்லை கோவிந்தராசர் சிலையை அப்புறப்படுத்தியதைத் திருவாவடுதுறைக் கல்வெட்டு கூறுகின்றது\n6. இவனை அநபாயன் என்றே திருவாரூர் வடமொழிக் கல்வெட்டு கூறுகிறது.\n7. இவனது அரசியல் செயலாளர், அநபாய மூவேந்த வேளான் எனப்பட்டான்\n8. இவன் காலத்தில் கோயில்கட்கு விடப்பட்ட நிலங்கள் அநபாய நல்லூர், அநபாயமங்கலம் எனப் பெயர் பெற்றன\n9. சிற்றரசன் ஒருவன் அநபாயக் காடவராயன் எனப்பட்டான்.\nஇப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.\nதங்கள் பெயர்/ Your Name\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newsonair.gov.in/tamil/Language-Main-News.aspx?id=11889", "date_download": "2021-05-07T01:35:59Z", "digest": "sha1:RK6XMCEEUOIMAY6KAI6F5EO4U7UR5MS2", "length": 5812, "nlines": 50, "source_domain": "newsonair.gov.in", "title": "Adriacic pearl இளையோர் குத்துச்சண்டைப் போட்டியில் இந்தியாவுக்கு 12 பதக்கங்கள் உறுதியாகியுள்ளன.", "raw_content": "\nஇறுதியாக பெறப்பட்ட தகவல்கள்May 6 2021 8:35PM\nதமிழக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள அமைச்சர்களின் பட்டியலை ஆளுநர் அலுவலகம் இன்று வெளியிட்டுள்ளது.\nகோவிட் 19 நோய் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று ஆலோசனை நடத்தினார்.\nநாடு முழுவதும் கோவிட் 19க்கான தடுப்பு மருந்து செலுத்தும் பணிகள் மாநில அரசுகளுடன் இணைந்து முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய அரசு கூறியுள்ளது.\nகேரளாவில் கோவிட் - 19 தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நாளை மறுநாள் தொடங்கி 16-ம் தேதிவரை முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் இன்றுமுதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளன.\nAdriacic pearl இளையோர் குத்துச்சண்டைப் போட்டியில் இந்தியாவுக்கு 12 பதக்கங்கள் உறுதியாகியுள்ளன.\nAdriacic pearl இளையோர் குத்துச்சண்டைப் போட்டியில் இந்தியாவுக்கு 12 பதக்கங்கள் உறுதியாகியுள்ளன.\nMontenegro- வின் Budva -வில் நடைபெற்���ு வரும் இப்போட்டியின் மகளிர் பிரிவில் இந்தியவின் மூன்று பேர் இறுதிப் போட்டிக்கும், ஏழு பேர் அரை இறுதிக்கும் முன்னேறியுள்ளனர்.\nஆடவர் பிரிவில் இரண்டு பேர் அரை இறுதிக்கு முன்னேறியுள்ளனர்.\nஒப்பந்தப் புள்ளிகள் சுற்றறிக்கைகள் தகவல் அறியும் உரிமை பதில்கள் தகவல் அறியும் உரிமை செய்தி அட்டவணை காலிப் பணியிடங்கள் ஆகாஷ் வாணி வருடாந்திர விருதுகள்\nகுடிமக்கள் சாசனம் குடிமக்கள் சாசனம்-ஹிந்தியில் அகில இந்திய வானொலி-நெறிகள் தேசிய செய்தி பிரிவு ஒலிபரப்பு ஊடகத்துக்கான செய்திக்கொள்கை\nதகவல் ஒலிபரப்பு அமைச்சகம் பத்திரிக்கை தகவல் அலுவலகம் விளம்பரம் மற்றும் காட்சி இயக்குனரகம் இந்திய தகவல் தளம்\nதலைமையகத்தொடர்பு மாநில செய்திப் பிரிவு செய்தியாளர் மட்டும் உள்ள செய்திப் பிரிவு பகுதி நேர செய்தியாளர் விவரம்\nபிரசார் பாரதி ஒப்பந்த பணியாளர்களுக்கான பிரசார் பாரதி கொள்கை அகில இந்திய வானொலி தூர்தர்சன் செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/229082", "date_download": "2021-05-07T01:28:00Z", "digest": "sha1:OOYHKCW7YZ4FIQ5O5Y4QLVRE525HILOW", "length": 5403, "nlines": 93, "source_domain": "selliyal.com", "title": "இந்தாண்டு முதல் யூபிஎஸ்ஆர் தேர்வு இரத்து | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு இந்தாண்டு முதல் யூபிஎஸ்ஆர் தேர்வு இரத்து\nஇந்தாண்டு முதல் யூபிஎஸ்ஆர் தேர்வு இரத்து\nகோலாலம்பூர்: ஆரம்ப பள்ளிக்கான யுபிஎஸ்ஆர் தேர்வு இந்த ஆண்டு முதல் முற்றிலுமாக இரத்து செய்யப்படும் என்று கல்வி அமைச்சர் டாக்டர் ராட்ஸி ஜிடின் தெரிவித்தார்.\nஇந்த ஆண்டிற்கான படிவம் மூன்று மதிப்பீட்டு தேர்வான (பி.டி 3) இரத்து செய்யப்பட்டுள்ளது என்றும் ராட்ஸி தெரிவித்தார். இன்று இங்கு சிறப்பு செய்தியாளர் சந்திப்பு மூலம் அவர் இந்த விஷயத்தை அறிவித்தார்.\nPrevious articleஅஸ்ட்ராசெனெகா தடுப்பூசி தன்னார்வ அடிப்படையில் வழங்கப்படும்\nNext articleநடிகர் விவேக் அஸ்தி புதைக்கப்பட்டு, மரக்கன்றுகள் நடப்பட்டன\nநோன்பு பெருநாள் விடுமுறைக்குப் பிறகு வீட்டு அடிப்படையிலான கற்றல், கற்பித்தல் முறை நடைமுறை\nகொவிட்-19: ஒரு சம்பவம் பதிவானாலே பள்ளிகள் மூடப்படும்\nகொவிட்-19: சிலாங்கூரில் 19 பள்ளிகள் மூட உத்தரவு\nமின்னல் வானொலி : இரவு 9 மணி செய்திகள் ஏன் இடம் பெறவில்லை\nகொவிட்-19: 12 பேர் மரணம்- 3,418 சம்பவங்கள் பதிவு\n22 ரமலான் சந்தைகள் மூட ��த்தரவு\nமின்னல் வானொலி : “செய்திப் பிரிவில் பணியாற்றுபவருக்கு கொவிட் தொற்றால் செய்திகள் இடம் பெறவில்லை”\nஸ்டாலினுக்கு, சரவணன் வாழ்த்து தெரிவித்தார்\nதிமுக அமைச்சரவை : புதிய அமைச்சர்கள் பட்டியல்\nதிமுக அமைச்சரவை : அன்பில் மகேஷ் பள்ளிக் கல்வி அமைச்சர்\nபிரசாந்த் கிஷோர் : இந்திய சட்டமன்றத் தேர்தல் வெற்றிகளின் கதாநாயகன்\nபில் கேட்ஸ் விவாகரத்து : சொத்துகளை எப்படிப் பிரிப்பார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2021/05/02174110/Wife-who-killed-husband-for-property-near-Mankadu.vpf", "date_download": "2021-05-07T00:26:32Z", "digest": "sha1:LJZJHZGTDNQAVIOIQXSESZHRGULVR443", "length": 12400, "nlines": 116, "source_domain": "www.dailythanthi.com", "title": "Wife who killed husband for property near Mankadu and threw body in quarry || மாங்காடு அருகே சொத்துக்காக கணவரை கொன்று உடலை கல்குவாரியில் வீசிய மனைவி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் முடிவுகள் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nமாங்காடு அருகே சொத்துக்காக கணவரை கொன்று உடலை கல்குவாரியில் வீசிய மனைவி + \"||\" + Wife who killed husband for property near Mankadu and threw body in quarry\nமாங்காடு அருகே சொத்துக்காக கணவரை கொன்று உடலை கல்குவாரியில் வீசிய மனைவி\nமாங்காடு அருகே சொத்துக்காக கணவரை கொன்று உடலை கல்குவாரியில் வீசிய மனைவியை போலீசார் தேடி வருகின்றனர்.\nகாஞ்சீபுரம் மாவட்டம் கோவூர் மேற்கு மாட வீதியை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 37). சொந்தமாக லாரிகள் வைத்து டிராவல்ஸ் நடத்தி வருகிறார். மேலும் கோவூர் ஊராட்சி முன்னாள் வார்டு உறுப்பினராக இருந்து வந்தார். இவரது மனைவி உஷா. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் தனது மகன், மருமகள், பேரப்பிள்ளைகளை காணவில்லை என பாஸ்கரின் தாய் மோகனாம்பாள் மாங்காடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் மாங்காடு இன்ஸ்பெக்டர் தியாகராஜன் தலைமையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் அவரது வீடு வெளிப்புறம் பூட்டி இருந்ததால் சந்தேகம் அடைந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அங்கிருந்து துர்நாற்றம் வீசியது.\nகண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது நள்ளிரவில் உஷா ஒரு மூட்டையை எடுத்து சென்று அருகில் உள்ள குளத்தில் வீசுவது போன்ற காட்சி பதிவாகி இர���ந்தது. அந்த மூட்டையை எடுத்து பார்த்தபோது அதில் ரத்தக்கறை படிந்த தலையணை, பெட்சீட் இருப்பது தெரியவந்தது. மேலும் பாஸ்கரை ரத்த காயங்களுடன் காரில் ஏற்றி செல்வதும் பதிவாகி இருந்தது.\nஇந்தநிலையில் நேற்று காலை சிக்கராயபுரத்தில் உள்ள கல்குவாரியில் ஆண் பிணம் மிதப்பதாக வந்த தகவலையடுத்து மாங்காடு போலீசார், பூந்தமல்லி தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் அந்த உடலை மீட்டனர். அந்த நபரின் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் இருந்ததையடுத்து காணாமல் போன பாஸ்கரின் தாயை அழைத்து காண்பித்தபோது தனது மகன் என தெரிவித்தார். இதையடுத்து பாஸ்கரின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.\nபோலீசார் நடத்திய விசாரணையில் பாஸ்கருக்கு ஏராளமான சொத்துக்கள் உள்ளன என்பதும், கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததும் தெரிய வந்தது. மேலும் அந்த சொத்தை அபகரிக்கும் நோக்கில் உஷா மற்றும் அவரது அண்ணன் பாக்கியராஜ் ஆகியோர் சேர்ந்து பாஸ்கரை வீட்டுக்குள்ளேயே அடித்துக்கொலை செய்து கை, கால்களை கட்டி கல்குவாரியில் வீசி இருப்பதும் கொலையை மறைக்க ரத்தக்கறை படிந்த பெட்ஷீட் மற்றும் தலையணைகளை எடுத்து சென்று குட்டையில் வீசி விட்டு அறை முழுவதும் ரூம் ஸ்ப்ரே அடித்து விட்டு குழந்தைகளுடன் தலைமறைவாகி இருப்பதும் தெரியவந்தது.\nஇதையடுத்து தலைமறைவாக உள்ள பாஸ்கரின் மனைவி அவரது அண்ணன் பாக்கியராஜ் உள்ளிட்ட சிலரை மாங்காடு போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கொலை செய்து விட்டு தப்பிச்சென்ற உஷா வீட்டில் இருந்த சொத்து ஆவணங்கள், லாரி சாவிகள், கார் சாவி, நகைகளை எடுத்து சென்றிருப்பதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த கொலைக்கு சொத்து பிரச்சினை காரணமா அல்லது வேறு காரணங்கள் ஏதாவது உள்ளதா அல்லது வேறு காரணங்கள் ஏதாவது உள்ளதா என்ற கோணத்தில் மாங்காடு போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\n1. காரில் கடத்தி சென்று விதவை பெண்ணுக்கு பாலியல் தொல்லை டீக்கடை ஊழியர் கைது\n2. சிறுமி பாலியல் பலாத்காரம்\n3. 9-வது முறையாக கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. ஆனார்.\n4. குமரியில் தி.மு.க. கூட்டணி 4 இடங்களை கைப்பற்றியது\n5. கொரோனா நோயாளிகள், குடும்பத்தினர் வெளியே சுற்றினால் ரூ.2 ஆயிரம் அபராதம் - மாநகராட்சி கமிஷனர் எச்சரிக்கை\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinibitz.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-05-07T01:26:28Z", "digest": "sha1:HJFEFPWCGDBEPQ4R3S23XMNV4XJ3ULV2", "length": 9479, "nlines": 70, "source_domain": "www.tamilcinibitz.com", "title": "மும்பை விமான நிலையத்தில் சம்பள வெட்டு, சாமான்களை விநியோகிப்பதில் இடையூறு ஏற்பட்டதால் ஸ்பைஸ்ஜெட் ஏற்றிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன", "raw_content": "முழுமையான செய்தி உலகம் உங்களுக்காக.\nமும்பை விமான நிலையத்தில் சம்பள வெட்டு, சாமான்களை விநியோகிப்பதில் இடையூறு ஏற்பட்டதால் ஸ்பைஸ்ஜெட் ஏற்றிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன\nபயன்படுத்தப்படும் படம் எடுத்துக்காட்டுக்கு மட்டுமே. (படம்: ஸ்பைஸ்ஜெட்)\nமும்பை விமான நிலையம் ஸ்பைஸ்ஜெட் விமானங்கள் விமானங்களை சென்றடைவதை உறுதிசெய்ய முயற்சிக்கிறது, இதனால் சாமான்களை வழங்குவதில் ஏற்படும் தாமதங்களை குறைக்க முடியும்.\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 05 பிப்ரவரி 2021 2:59 PM இந்தியா நேரம்\nஸ்பைஸ்ஜெட் தொடர்ச்சியான சம்பள வெட்டுக்கள் காரணமாக மும்பை விமான நிலையத்தில் ஏற்றுதல் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக வட்டாரங்கள் சிஎன்பிசி-டிவி 18 க்கு தெரிவித்தன, மேலும் வேலைநிறுத்தம் வெள்ளிக்கிழமை காலை முதல் சாமான்களை வழங்குவதில் தாமதத்திற்கு வழிவகுத்தது என்றும் கூறினார்.\n“இன்று காலை 6 மணியளவில் ஏற்றிச் சென்றவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.” “சரக்குப் பிடிப்பிலிருந்து யாரும் சாமான்களை இறக்குவதில்லை, இதன் விளைவாக சாமான்களை சாமான்களைப் பெல்ட்டில் கொண்டு செல்வதில் கணிசமான தாமதம் ஏற்படுகிறது” என்று தகவல் தெரிந்த ஒருவர் கூறினார்.\nமும்பை விமான நிலையம் ஸ்பைஸ்ஜெட் விமானங்கள் விமான பாலங்களை அடைவதை உறுதிசெய்ய முயற்சிப்பதாகவும், இதனால் சாமான்களை வழங்குவதில் ஏற்படும் தாமதத்தை குறைக்க முடியும் என்றும் அறியப்படுகிறது. சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையம் டெல்லிக்கு அடுத்தபடியாக நாட்டின�� இரண்டாவது பரபரப்பான விமான நிலையமாகும்.\nமற்றொரு ஆதாரம் சிஎன்பிசி-டிவி 18 இடம் கூறியது: “உண்மையில், சில லாரி ஓட்டுநர்கள் வேலைநிறுத்தத்தில் உள்ளனர்,” ஊழியர்களின் முக்கிய குறைகள் என்னவென்றால், பல மாதங்களாக அவர்களுக்கு 50 சதவீத சம்பளம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது, மேலும் சம்பளம் கிடைக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை கோவிட் முன் நிலைகளுக்குத் திரும்பினார்.\nபொது எழுத்தாளர். ஸோம்பி நிஞ்ஜா. தீவிர தொடர்பாளர். பீர் அறிஞர். பாப் கலாச்சார ரசிகர். ஆய்வுப்பணி. ட்விட்டர் நிபுணர்.\nREAD வங்கியின் கொள்கையைப் பின்பற்றுங்கள் மற்றும் பத்திரிகைகளைக் கையாள்வதைத் தவிர்க்கவும்\nஸ்பேஸ்எக்ஸ் 2021 ஆம் ஆண்டின் முதல் பால்கான் 9 ராக்கெட்டை ஒன்றும் இல்லை\nஎலோன் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் நிறுவனம், வியாழக்கிழமை துருக்கி தேசத்திற்காக ஒரு புதிய தகவல் தொடர்பு...\nஆர்ஐஎல் க்யூ 3 முடிவுகள்: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் மூன்றாம் காலாண்டு நிகர லாபம் 12% உயர்ந்து ரூ .13,101 கோடியாக உள்ளது | இந்திய வணிகச் செய்திகள்\nமுதல் 10 நிறுவனங்களில் ஏழு நிறுவனங்கள் எம்-கேப் ஒட்டுமொத்த, எச்.டி.எஃப்.சி ட்வின்ஸ் டாப் கெய்னர்களில் ரூ .75,845 கோடியைச் சேர்க்கின்றன\nஇந்தியாவில் டாடா ரூ .6 லட்சம் எஸ்யூவி »மோட்டார் ஆக்டேன்\nPrevious articleவிவசாயிகளைப் பற்றி டெண்டுல்கர் ட்வீட் செய்ததால் மலையாள இணைய பயனர்கள் வருத்தமடைந்துள்ளனர், மேலும் ஷரபோவா: தி ட்ரிப்யூன் இந்தியாவை விமர்சித்ததற்கு வருத்தம் தெரிவிக்கின்றனர்.\nNext articleமந்தமான தேவை இருந்தபோதிலும், கோவக்ஸ் காட்சிகளில் இந்தியாவுக்கு சிங்கத்தின் பங்கு கிடைக்கிறது\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nதாய் மஹீப்பின் புதிய வீடியோவில் சஞ்சய் கபூரின் மகள் ஷானயா கபூர் நடன தளத்தை தீ வைத்துக் கொண்டார். வீடியோவை பார்க்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sivanyonline.com/2010/11/blog-post_13.html", "date_download": "2021-05-07T02:18:05Z", "digest": "sha1:FTFUTREQ3IJOKSCT2P372PJJQYZQ7F7G", "length": 9236, "nlines": 156, "source_domain": "www.sivanyonline.com", "title": "பழநிபாரதியின் காதலின் பின்கதவு ~ SIVANY", "raw_content": "\nசினிமாவில் பாடல்களை எழுதும் கவிஞர் பழநிபாரதியின் காதலின் பின்கதவு என்ற கவிதைத் தொகுப்பை வாசித்த போது எல்லா கவிதைகளுமே சிறப்பாக காணப்பட்டன. அவற்றில் சில இதோ...\nSaree Blouse வெட்டும் தையல் முறையில் இரண்டு விதங்களைக் கையாள்வார்கள். ஒருமுறை அளவெடுத்து தைப்பது, அடுத்து அளவான இன்னுமொரு உடையைவைத்து தைப்ப...\nதமிழில் தொகைச் சொல் வர்க்கம்\nதொகைச் சொல் வர்க்கம் 1 ஒருவன் - கடவுள் 2 இருமுதுகுரவர் - தாய், தந்தை இருவகைப் பொருள் - கல்விப் பொருள், செல்வப் பொருள் இருமை - இம்...\nதமிழில் ஆண்டு நிறைவு - Anniversary\nபொதுவாக நாம் தமிழில் ஆண்டு நிறைவுகளைக் குறிப்பிடும் போது 25 ஆவது ஆண்டினை வெள்ளி விழா என்றும் , 50 வது பொன் விழா என்றும், 60 வது வைர வி...\nஞமலி என்றால் என்ன தெரியுமா\nநாய்....யாரையும் ஏசுகிறேன் என்று நினைக்க வேண்டாம். தலைப்புக்கான பதில்தான் அது. நாயின் மற்றுமொரு தமிழ்ப் பெயர்தான் ஞமலி. அது மட்டுமல்ல இன...\nஇன்றைய காலகட்டத்தில் பெண்கள் பலரும் வயது வித்தியாசமின்றி அணியும் ஆடையாக சுடிதார் அமைந்துள்ளது. இதில் சல்வார் , சுடிதார், பஞ்சாபி என பல வகைக...\nமருதானி அழகைத் தருவது மட்டுமல்ல.. மிகுந்த மருத்துவ குணம் கொண்டதும் கூட. முன்பெல்லாம் நகங்களைச் சுற்றி மருதானி போடுவது அழகான விடயமாக இருந்தத...\nஆசை முகம் மறந்து போச்சே - பின்னணிப் பாடகி சுசித்ரா\nபின்னணிப் பாடகி சுசித்ரா பல துள்ளலிசைப்பாடல்களை அதிகமாகப் பாடி கேட்டிருக்கின்றோம். ஆனால் அவரின் குரலில் இந்த 'ஆசை முகம் மறந்து போச்சே...\n ஆளுக்காள் வேறுபடும் , இடத்திற்கு இடம் வேறுபடும் , கால ஒட்டத்தில் வேறுபட்டும் மாறுபட்டும்கொண்டே இருக்கும். நேற்று-இன்று-...\nகாதலர் தினம் உலகளாவிய ரீதியில் Feb 14 ஆம் திகதி கொண்ணாடப்படுகின்றமை எல்லோருக்கும் தெரிந்த விடயம். காதலும் அன்பின் வடிவமே. இதற்கு முக்க...\nபாடலும் காட்சியும் வித்தியாசமாக இணைந்தால்...\nபழமொழி சொன்னா ஆராயக்கூடாது...... அனுபவிக்கோணும்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=1490", "date_download": "2021-05-07T00:02:03Z", "digest": "sha1:XOWNZ47ZQ4VUU4DYE2IQO24HNPVFWOFC", "length": 36324, "nlines": 96, "source_domain": "www.varalaaru.com", "title": "Varalaaru - A Portal For South Asian History Varalaaru - A Monthly Web Magazine for South Asian History", "raw_content": "\nவலஞ்சுழி ஸ்வேத விநாயகர் ஆலயம் - 1\nவரலாற்றுச் சிறப்பு மிக்க மங்க(ல) நல்லூர்\nகயிலைப் பயணம் - 1\nபுள்ளமங்கை - திருவாலந்துறையார் கோயில் - 4\nமாமல்லபுரம் – பல்லவர் சிற்பக் கலைக்கூடம்\nஒருநாள் பயணத்தில் ஒரு வாழ்க்கை\nஇலக்கியப்பீடம் - சிவசங்கரி விருது\nவெகுமக்கள் இலக்கியத்தில் தமிழ் இலக்கணம் - 4\nஇதழ் எண். 139 > கலையும் ஆய்வும்\nவலஞ்சுழி ஸ்வேத விநாயகர் ஆலயம் - 1\n\"இவ்வளாகத்திலுள்ள வெள்ளைப்பிள்ளையார் திருமுன் மூன்றாம் குலோத்துங்கனின் ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பெற்றது எனக்கொள்ளுமாறு கல்வெட்டுகள் கண்காட்டுகின்றன. தொடங்கப்பெற்ற சில ஆண்டுகளிலேயே வலஞ்சுழியின் முதன்மைக்கோயிலாய் அது உருமாறியதை மூன்றாம் இராஜராஜனின் ஐம்பதிற்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் உணர்த்துகின்றன. வெள்ளைப் பிள்ளையார் திருமுன்னில் உள்ள இருமொழிக்கல்வெட்டுக் கொண்டு இக்கோயில் கிருஷ்ணதேவராயர் காலத்தில் புதுப்பிக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படும் கருத்துச் சரியானதன்று. கோயிலின் கட்டுமானமும்,தூண்களின் அமைப்பும்,பஞ்சரப்பெண்களின் தோற்ற அமைதியும் மிகத்தெளிவாக அவை பிற்சோழர் காலத்தன என்பதை உறுதிப்படுத்துகின்றன.இரண்டாம் இராஜராஜனின் இராஜராஜேஸ்வரமும் மூன்றாம் குலோத்துங்கரின் திரிபுவன வீரேசுவரரும் கண்ட கண்கள் இந்தக் கட்டுமானத்தை ஒய்சளருக்கோ விஜயநகர வேந்தர்களுக்கோ விட்டுக்கொடுக்க ஒருபோதும் ஒருப்படா.\"\nமேற்கண்ட வரிகள் டாக்டர்.திரு .இரா.கலைக்கோவன் மற்றும் மு.நளினி ஆகியோர் எழுதிய \"வலஞ்சுழி வாணர்\" என்ற நூலின் 169 மற்றும் 170 ம் பக்கத்தில் உள்ளன.\n\"வலஞ்சுழிக்கோயில் வளாகம் மிகப்பெரிய வளாகம். சோழர் கால கட்டடக்கலை,சிற்பக்கலை,கல்வெட்டெழுத்துக்களின் வளர்ச்சி அறிய விரும்புவாருக்கு இக்கோயில் உகந்த களமாக அமையும்.எத்தனை விதமான போதிகைகள் வெவ்வேறு அளவுகளில் எத்தனை சிற்பங்கள் வெவ்வேறு அளவுகளில் எத்தனை சிற்பங்கள் சோழ மன்னர்களின் பெரும்பாலோர் கல்வெட்டுகள் இங்கிருப்பதால், உத்தமசோழர் காலத்திலிருந்து மூன்றாம் இராஜேந்திரர் காலம் வரையிலான தமிழ் எழுத்து வளர்ச்சிநிலை அறிய இங்குப் பயிலலாம். இந்த வளாகத்தில் அளவான ஆரவாரமும் இருக்கிறது சோழ மன்னர்களின் பெரும்பாலோர் கல்வெட்டுகள் இங்கிருப்பதால், உத்தமசோழர் காலத்திலிருந்து மூன்றாம் இராஜேந்திரர் காலம் வரையிலான தமிழ் எழுத்து வளர்ச்சிநிலை அறிய இங்குப் பயிலலாம். இந்த வளாகத்தில் அளவான ஆரவாரமும் இருக்கிறது அளவற்ற அமைதியும் இருக்கிறது அதனால், 'எங்கே நிம்மதி என்று தேடுவோரும் இங்கு வரலாம். பத்திமைக்காலத��து நினைவுகளில், 'ஆடுவோமே, பள்ளுப் பாடுவோமே' என்று களித்துத் துள்ளுவாரும் இவ்வளாகத்தில் வாழ்க்கை வளர்க்கலாம். வரலாற்றுக் காற்று வருடிக்கொண்டு போகும் வலஞ்சுழிக்குத் தவறாமல் வாருங்கள் என்று சரித்திரத் தேர்ச்சி கொள்ள விரும்பும் ஒவ்வொருவரையும் இந்நூல் வழிப்படுத்துமானால் அது வலஞ்சுழியின் பெருமை என்று மகிழ்வோம்\"\nஎன்று நூலாசிரியர்கள் முன்னுரையில் பகன்றவை முற்றிலும் உண்மையே இவ்வளாகத்தின் அளவான ஆரவாரமும் அளவற்ற அமைதியும் நம்மை ஈர்க்கவே செய்கிறது . ஈர்ப்பதோடல்லாமல் இனம்புரியாத வகையிலும், வார்த்தைகளில் வர்ணிக்க இயலாத தன்மையிலும் ஏதோ செய்கிறது என்பதையும் நம்மால் அனுபவத்தில் உணர முடிகிறது\n2004 ம் ஆண்டு டாக்டர் மேற்கொண்ட வலஞ்சுழி ஆய்வுப்பயணங்களில் அவருடைய அண்மையில் பெற்ற அனுபவங்கள் மிகவும் சுகமானவை ஆனால் அடியேன் அந்த அற்புத சந்தர்ப்பங்களை என்னுள் வரலாறு வளர்க்கவும்,கோயில் கட்டுமானம் அறியவும் துளியேனும் பயன் படுத்தாமல் அப்பெருமகனாரின் அண்மையை வரலாற்று நாவல்களின் விவாதங்களாக பொழுதைப் போக்கியது குறித்து அவரிடமே பலமுறை வருந்தியிருக்கிறேன். அப்பொழுது அவர் கூறுவார் \" வருந்த வேண்டாம் சீத்தாராமன் ஆனால் அடியேன் அந்த அற்புத சந்தர்ப்பங்களை என்னுள் வரலாறு வளர்க்கவும்,கோயில் கட்டுமானம் அறியவும் துளியேனும் பயன் படுத்தாமல் அப்பெருமகனாரின் அண்மையை வரலாற்று நாவல்களின் விவாதங்களாக பொழுதைப் போக்கியது குறித்து அவரிடமே பலமுறை வருந்தியிருக்கிறேன். அப்பொழுது அவர் கூறுவார் \" வருந்த வேண்டாம் சீத்தாராமன் அவ்வாலயத்தில் நீங்கள் இருந்த பொழுது, நிலைத்த உங்களின் இருப்பே உங்களை வரலாற்றில் இணையச்செய்யும்\". இவ்வாறு அவர் கூறியதை நமக்கு ஆறுதல் சொல்லவே கூறியிருக்கிறார் என்பதாகவே எடுத்துக்கொண்டேன்.\nமீண்டும் டாக்டர் கூறியதை கவனியுங்கள்\n\"எங்கே நிம்மதி என்று தேடுவோரும் இங்கு வரலாம். பத்திமைக்காலத்து நினைவுகளில், 'ஆடுவோமே, பள்ளுப் பாடுவோமே' என்று களித்துத் துள்ளுவாரும் இவ்வளாகத்தில் வாழ்க்கை வளர்க்கலாம். வரலாற்றுக் காற்று வருடிக்கொண்டு போகும் வலஞ்சுழிக்குத் தவறாமல் வாருங்கள்\nஆம். அவ்வளாகத்தில் நான் களித்துத் துள்ளியிருக்கிறேன் என் வாழக்கை அதன் பிறகு நன்றாகவே வளர்ந்திருக்கிறது என் வாழக்கை அதன் பிறகு நன்றாகவே வளர்ந்திருக்கிறது அப்பயணங்களில் வரலாறு கற்றுக்கொண்டேனோ இல்லையோ, டாக்டர்.இரா.கலைக்கோவன் அவர்களின் அண்மையையும், அன்பையும், நட்பையும் நன்கு அனுபவித்தேன். இந்நிகழ்வுகளே என்னையும் அறியாமல் என்னுள் வரலாற்றாய்வு என்னும் வித்தை விதைத்து விட்டுச்சென்றிருக்கின்றன என்றால் அக்கூற்று மிகையானதல்ல\nடாக்டர் அவர்களின் வரலாற்றறிவு மலையுச்சியில் தொடங்கும் ஆறு,அடர்ந்த மூலிகை வனங்களில் பயணித்து, மூலிகைகளின் சாரங்களையும்,செறிவையும் தன்னுள் பெற்று அருவியாகவும், ஆர்ப்பரித்து வரும் நதியாகவும்,தெளிந்த அமைதியான,அகண்ட நீரோட்டம் கொண்ட தன்னுடைய நீண்ட பயணத்தில் அரித்தல்,கடத்தல்,படிய வைத்தல் போன்ற பணிகளை செய்து செல்லுமிடமெல்லாம் செழுமை சேர்த்து, குளம் குட்டைகளை நிரப்பி பின்பு அகண்ட சமுத்திரத்தில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்ளும் முழுமை கொண்டது அதன் தொடர் ஓட்டத்தால் தூய்மை பெற்றதோடல்லாமல் பின்விளைவுகளற்ற நுகர்வுத்தன்மையுடையதாய் சிறந்து விளங்குகிறது அதன் தொடர் ஓட்டத்தால் தூய்மை பெற்றதோடல்லாமல் பின்விளைவுகளற்ற நுகர்வுத்தன்மையுடையதாய் சிறந்து விளங்குகிறது நம்முடைய அறிவு குளத்து நீரை ஒக்கும் நம்முடைய அறிவு குளத்து நீரை ஒக்கும் இதனுடைய மூலம் ஆறு மற்றும் வான் மழை ஆகும் இதனுடைய மூலம் ஆறு மற்றும் வான் மழை ஆகும் இதனுடைய மூலம் சிறந்ததாயினும் தேக்கநிலை பெறுவதால் நேரடி நுகர்வுத்தன்மை பெற்றதல்ல இதனுடைய மூலம் சிறந்ததாயினும் தேக்கநிலை பெறுவதால் நேரடி நுகர்வுத்தன்மை பெற்றதல்ல இதனை நுகர விரும்புவோர் காய்ச்சி வடிகட்டி நுகர்ந்தால் தான் பின் விளைவுகளிலிருந்து தப்பிக்கலாம்\nஇந்த நீண்ட பீடிகை எதற்கு என்பதை வாசகர்களிடம் தெரிவித்து விட்டு இக்கட்டுரையைத் தொடர்வது பொருத்தமாயிருக்கும் இம்முயற்சியே \"வலஞ்சுழி வாணர்\" என்ற நூலை வாசித்தனால் ஏற்பட்ட தாக்கத்தில் விளைந்ததாகும். அப்படி ஒரு சிறந்த நூல் ஏற்கனவே இருக்க உனக்கேன் இந்த தேவையற்ற வேலை என்று பலர் மனதுள் கேட்பது மானசீகமாக என் காதுகளை அடைகிறது இம்முயற்சியே \"வலஞ்சுழி வாணர்\" என்ற நூலை வாசித்தனால் ஏற்பட்ட தாக்கத்தில் விளைந்ததாகும். அப்படி ஒரு சிறந்த நூல் ஏற்கனவே இருக்க உனக்கேன் இந்த தேவையற்ற வேலை என்று ��லர் மனதுள் கேட்பது மானசீகமாக என் காதுகளை அடைகிறது ஆற்றில் நீந்த முற்படுவோர் நீந்தத் தெரியாவிட்டாலும் ஆற்றில் விழுந்து தத்தளித்தால் தான் நீச்சல் கற்றுக்கொள்ள முடியும் ஆற்றில் நீந்த முற்படுவோர் நீந்தத் தெரியாவிட்டாலும் ஆற்றில் விழுந்து தத்தளித்தால் தான் நீச்சல் கற்றுக்கொள்ள முடியும் கோயில் கட்டுமானக்கலையை கற்றுக் கொள்ளும் என் தொடர் முயற்சியில் வலஞ்சுழியின் ஈர்ப்பு என்னை ஸ்வேத விநாயகர் ஆலயத்தை பற்றி எழுதத் தூண்டியது என்றால் அது மிகையாகாது கோயில் கட்டுமானக்கலையை கற்றுக் கொள்ளும் என் தொடர் முயற்சியில் வலஞ்சுழியின் ஈர்ப்பு என்னை ஸ்வேத விநாயகர் ஆலயத்தை பற்றி எழுதத் தூண்டியது என்றால் அது மிகையாகாது எனவே, இந்தக் கட்டுரையை வாசிக்கும் போது நீங்கள் சிறந்த கருத்துக்களாக எதனையாவது உணர்ந்தால் அது டாக்டர்.இரா.கலைக்கோவன் அவர்களையும், முதிர்ச்சியற்ற கருத்துக்களைக் காண நேர்ந்தால் அது அடியேனையும் சாரும் என்று சொல்லிக்கொண்டு இம்முயற்சியைத் தொடருகிறேன்.\nதெற்கு நோக்கி அமைந்துள்ள இம்முன்றில் தளம் ஒழுங்கற்ற வடிவுடனும் சமமான மேற்பரப்புடனும் கூடிய பல பலகைக்கற்களால் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இதன் இருபுறமும் இத்தளத்தை அடைய சுருள்யாழிப்பிடியுடன் மேற்புறம் மூன்று படிகளும் அவற்றுள் ஒன்று மட்டும் அரை வட்ட வடிவுடனும் கீழ்புறம் இரண்டு படிகளும் அமைந்துள்ளன. கிழக்குப் புறமும் மூன்றாவது படி இருந்திருக்க வேண்டும். இதனை சுருள்யாழிப் பிடிச்சுவரின் நீட்சியிலிருந்து ஊகிக்கலாம். மேலும் கிழக்கில் உள்ள அலங்கார மண்டபத்தின் தரை தளம் இதன் மூன்றாவது படியை மறைத்திருக்கலாம்\nவலஞ்சுழி ஸ்வேத விநாயகர் ஆலய முன்றில் வரைபடம்\nவலஞ்சுழி ஸ்வேத விநாயகர் ஆலய முன்றில்\nகலசம், தாடி, கும்பம், பாலி, பலகை, வீரகண்டம் போன்ற தலையுறுப்புகள் பெற்ற அழகிய பன்னிரண்டு அரைத்தூண்கள் முன்றில் தள முகப்புச்சுவரை அலங்கரிக்க எழும் தளத்தின் முன்பகுதியை வேகமாக ஓடும் இரண்டு குதிரைகள் இழுக்கின்றன.\nஅரைத்தூண்கள் போதிகைகள் பெற்று முன்றில் தளத்தைத் தாங்க மேலே கூடு வளைவுகளுடனான கபோதமும் சிறிய அளவிலான பூமிதேசமும் காட்டப்பட்டுள்ளன.\nதேரின் சக்கரங்கள் இருபுறமும் படிகளுக்குத் தென்புறம் அமைந்துள்ளன. இவைகளின் ஆரக்கால்க���் எழிலுற அமைக்கப்பட்டு அவைகள் சக்கரத்தின் மையப்பகுதியிலுள்ள குடத்திலிருந்து கிளைத்து சக்கரச் சட்டகத்தில் நிலை பெறுகிறது. சக்கரச் சட்டகத்தின் வெளிப்பகுதி கொடிக்கருக்கு வளையங்களால் அழகுபடுத்தப்பட்டிருக்கிறது. தாமரை இதழ்களால் தழுவப் பெற்ற குடத்தின் மையப்பகுதி தேரின் அச்சில் கோர்க்கப்பட்டு கழன்று விழாமல் இருக்க கடையாணி பெற்று எழிலுற காண்பிக்கப்பட்டுள்ளது.\nமுன்றிலின் தென்புறம் அழகிய இரண்டு தூண்கள் தன் போதிகைக் கைகளால் முப்புறமும் கூரையைத்தாங்கும் உத்தரங்களைத் தாங்குகின்றன.இதில் தெற்கு வடக்காக நீளும் இரண்டு உத்திரங்களும் வடக்கில் நுழைவாயிலின் இருபுறமும் சற்று தள்ளி அமைந்துள்ள இரண்டு அரைத்தூண்களின் போதிகைக் கைகளால் தாங்கப்படுகின்றன. முன்றில் கூரையைத் தாங்கும் நான்காவது உத்திரம் முகமண்டபச் சுவற்றில் பதிய இரண்டு அரைத்தூண்களும் இரண்டு முழு தூண்களும் இம்முன்றிலைத் தாங்குகின்றன.\nஇம்முன்றிலைத் தாங்கும் இரண்டு அரைத்தூண்களும் இவ்வாலயத்தின் மண்டபம் முழுக்க ஒரே அமைப்பில் இடம் பெற்றிருக்கும் மற்ற அரைத்தூண்களை ஒத்திருந்தாலும் இங்கு மட்டும் உத்திரத்தின் அகலம் கருதி இவற்றின் போதிகைக்கைகள் மற்ற அரைத்தூண்களிலிருந்து பெரிதும் வேறுபடுவதைக் காணலாம். மேலும் இவ்விரண்டு தூண்களில் காட்டப்பட்டுள்ள போதிகைகளே நன்றாக வேறுபடுவதைக் காணலாம். இவற்றில் மேற்கிலுள்ள தூண் ஒரே ஒரு பூமொட்டுநாணுதலும் கிழக்கிலுள்ள தூண் மூன்று பூமொட்டு நாணுதல்கள் கொண்டு வேறுபடுவதைக் காணலாம்.\nஇவ்வரைத்தூண்கள் இரண்டு செவ்வக வடிவ அடிப்பாகத்திலிருந்து எழும்பி பின் எண்முகமாக மாற்றம் காண்கின்றன.நான்முக அடிப்பாகம் முடிந்தவுடன் ஒரு நாகபந்தம் காண்பிக்கப்பட்டுள்ளது. இத்தூண்கள் எட்டு பாகமாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இரண்டு செவ்வக வடிவ அடிப்பாகத்தில் முதன்மைத்திசைகளிலும், இரண்டாம் நிலைத்திசைகளிலும் நாகரமாகவே காட்டப்பட்டு அடிப்பாகம் தாண்டி எழும் எண்முகத்தில் முதன்மைத்திசைகளில் நாகரமும் இரண்டாம் நிலைத்திசைகளில் வேசரமும் முயற்சிக்கப்பட்டிருப்பதை நன்கு காண முடிகிறது.\nஇவற்றின் முழு காட்சியை முன்றிலின் தென்புறமுள்ள இரண்டு தூண்களிலும் நம்மால் காணமுடிகிறது. இவ்வரைதூண்கள் தொங்கல், தானம்,தாமரைகட்டு,கலசம்,தாடி,கும்பம்,தாமரைப் பாலி,பலகை மற்றும் வீரகண்டம் பெற்று போதிகைகள் பெறுகின்றன. இவ்விரண்டு அரைத்தூண்களின் போதிகைகளில் மேற்கில் உள்ளது குளவுடன் தரங்கம் பெற்று நடுவில் பட்டை காட்டப்பட்டுள்ளது. கிழக்கில் உள்ள அரைத்தூண் குளவுத்தரங்கத்துடன் பூவெட்டுப்போதிகையாக காட்சியளிப்பது குறிப்பிடத்தக்கதாகும். இப்போதிகைகளின் மதலைகள் மேலெழும் தாமரைக்கம்பு உத்திரம் தாங்குகிறது. உத்திரத்தின் மேல் வாஜனமும் வலபியும் இடம்பெற வலபியில் நீலோத்பல மலர்கள் அலங்கரிக்கப்பட்டு அவைகளின் காம்புகள் வாஜனத்தில் நிலை கொண்டுள்ளன. இந்நீலோத்பல மலர்கள் முன்றிலில் அமைந்துள்ள தெற்கு,மேற்கு மற்றும் கிழக்கு உத்திரங்களின் இருபுறமும் விரிய உட்புறம் முன்றிலின் கூரையையும் வெளிப்புறம் கொடுங்கைகளாக விரியும் கபோதங்களையும் மேல் சட்டம் பெற்று தாங்குதல் குறிப்பிடத்தக்கதாகும்.\nமுன்றிலின் உட்கூரை எழிலுற செதுக்கப்பட்ட தாமரைப் பதக்கத்துடன் விளங்குகிறது. இத்தாமரைப்பதக்கம் வட்டமாக வளைக்கப்பட்ட மூங்கில் கம்பிற்குள் காண்பிக்கப்பட்டுள்ளது. இம்மூங்கில் கம்பின் கணுக்களிலிருந்து கிளைக்கும் கொடிக்கருக்கு வளையங்களில் பெரும்பாலும் அன்னப்பறவைகளும் சில வளையங்களில் பூதங்களும் காண்பிக்கப்பட்டுள்ளன. இக்கொடிக்கருக்கு வளையங்கள் மற்றொரு வட்டமாக வளைக்கப்பட்ட மூங்கில் கம்பால் அணைவு பெற்றுள்ளது.இந்த இரண்டாவது மூங்கில் வளையல் இருபுறமும் தாமரை இதழ்களால் அணைவுபெற்ற சதுர கம்புகளால் சூழப்பட்டுள்ளது.இச்சதுரக் கம்புகளுக்கும் மூங்கில் வளையலுக்கும் இடைப்பட்ட நான்கு மூலைகளும் சிம்ம யாழியின் முகம் கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது.\nஇச்சதுரக் கம்புகளின் நாற்புறமும் அழகிய ஆடல் மங்கைகளின் ஆடல் காட்சிகள் குறுஞ்சிற்பங்களாகக் காட்டப்பட்டுள்ளன. அவைகளில் ஒன்றிரண்டு ஆண்கள் இசைக்கருவிகள் வாசிப்பதாகவும் இடம் பெற்றுள்ளன. இவ்வாடல் சிற்பங்கள் இருபுறமும் தாமரை இதழ்களால் அலங்கரிக்கப்பட்ட சதுர கம்புகளின் அணைவு பெற்று அற்புதமாக விளங்குகிறது. இம்முன்றில் கிழக்கு மேற்காக சற்று அதிக நீட்சியுடன் செவ்வக வடிவில் அமைவதால் ஆடல் சிற்பங்களை வெளிப்புறமாக அணைக்கும் தாமரை இதழ்களால் அலங்கரிக்கப்பட்ட சதுர கம்புகளின் மே��்குப் பகுதியிலும் கிழக்குப் பகுதியிலும் கொடிக்கருக்கு வளையங்கள் காண்பிக்கப்பட்டுள்ளன.\nமுன்றிலின் தெற்கு வாயிலைத தாங்கும் இரண்டு தூண்களும் ஆறு உருளைப்பகுதிகள்,அதிஷ்டான உறுப்புகள் அமைந்த அடிப்பகுதி ஆக ஏழு பகுதிகளாக அமைந்து போதிகைகள் பெற்று உத்திரம் தாங்குகின்றன.\nமுன்றில் தூண்களின் (தெற்கு)வடிவ அமைப்பு\nஇத்தூண்கள் எட்டு பாகமாகப் பிரிக்கப்பட்டுள்ளன. முதன்மைத்திசைகள் நாகரமாகவும் இரண்டாம் நிலைத்திசைகளில் வேசரமும் காட்டப்பட்டு அடிப்பாகத்தில் ஒரு முமையான அதிஷ்டானத்தைக் கொண்டு விளங்குகிறது. இவ்வதிஷ்டானம்,உப்பீடம்,உபானம்,பத்மஜகதி,சிலம்புவரிக்குமுதம்,கண்டம், பட்டிகை,வேதிக்கண்டம் ஆகியவை பெற்று பத்ம பந்த தாங்குதளமாய் காட்சியளிக்கிறது.இத்தூணின் துணைத்திசைகளில் வேசரமாக அமைந்த பகுதி குளவுத்தரங்கமாக காண்பிக்கப்பட்டுள்ளது.\nஇவ்வதிஷ்டானத்தின் மேலெழும் ஆறு உருளைப் பகுதிகளிலும் நாகரமாகக் காட்டப்பட்டுள்ள முதன்மைத்திசைகளில் பஞ்சரங்கள் காட்டப்பட்டுள்ளன. இவ்விரண்டு தூண்களில் மட்டும் 48 பஞ்சரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.\nஇத்தூண்கள் மேலெழும் போதிகைக்கைகள் உத்திரங்கள் முடியும் இடத்தில் சிறிய அளவிலும் உத்திரங்கள் நீளும் இடங்களில் சற்று நீண்டும் காட்டப்பட்டுள்ளன . இப்போதிகைகளின் மதலைகள் மேலெழும் தாமரைக்கம்பு உத்திரம் தாங்குகிறது. உத்திரத்தின் மேல் வாஜனமும் வலபியும் இடம்பெற வலபியில் நீலோத்பல மலர்கள் அலங்கரிக்கப்பட்டு அவைகளின் காம்புகள் வாஜனத்தில் நிலை கொண்டுள்ளன.இந்நீலோத்பல மலர்கள் உத்திரங்களின் இருபுறமும் விரிய உட்புறம் முன்றிலின் கூரையையும் வெளிப்புறம் கொடுங்கைகளாக விரியும் கபோதங்களையும் குறுக்கு,நெடுக்கு சட்டம் பெற்று குமிழாணிகளால் முடுக்கப்பட்டு தாங்குதல் குறிப்பிடத்தக்கதாகும். இக்கபோதங்களின் மேற்பரப்பு மாவிலைத்தோரணங்கள் போல் அலங்கரிக்கப்பட்டு,தென்மேற்கு மூலை மற்றும் தென்கிழக்கு மூலைகளில் ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கிவைக்கப்பட்ட தாமரை இதழ்கள் போல் அலங்கரிப்புச்செய்யப்பட்டுள்ளது.இதன் மேலெழும் பூமிதேசம் செவ்வகப்பட்டிகளாக அமைந்து அதனை அடுத்து சிறிய அளவிலான வேதிகையும் காட்டப்பட்டுள்ளது.இதன்மேலெழும் ஆரவரிசை மூன்று புறமும் கர்ணகூடு,பஞ்சரம்,சாலை,பஞ்சரம்,கர்ணகூடு என்றவரிசையில் அமையப்பெற்று அற்புதமாய் காட்சியளிக்கிறது.இவ்வுறுப்புகள் இணைவுப்பிடிச்சுவரால் இணைக்கப்பட்டுள்ளது. இவ்வார உறுப்புகள் அனைத்தும் பஞ்சரங்களால் அழகுபடுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.\nஇப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.\nதங்கள் பெயர்/ Your Name\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dindigul.nic.in/epic-id-card-camp_2021/", "date_download": "2021-05-07T01:54:58Z", "digest": "sha1:WBONRVCGCUYUUV66PJPB7GFD4FZTJWK2", "length": 5689, "nlines": 109, "source_domain": "dindigul.nic.in", "title": "Epic ID card Camp_2021 | Dindigul District | India", "raw_content": "\nதிண்டுக்கல் மாவட்டம் Dindigul District\nவாக்காளர் பட்டியலில் முதன்முறையாக பெயர் சேர்க்கப்பட்ட வாக்காளர்கள் அனைவரும் மின்னணு வாக்காளர் அடையாள அட்டையினை பதிவிறக்கம் செய்து கொள்ள சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது – மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.\nசிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் – 2021-இன் போது, புதிதாக வாக்காளர் பட்டியலில் முதன்முறையாக பெயர் சேர்க்கப்பட்ட வாக்காளர்களில் தங்களது செல்லிடப்பேசி எண்ணை வழங்கிய வாக்காளர்கள் அனைவருக்கும் மின்னணு வாக்காளர் அடையாள அட்டையினை பதிவிறக்கம் செய்து கொள்ள ஏதுவாக அனைத்து வாக்குச்சாவடி அமைவிடங்களிலும் (DESIGNATED POLLING STATION LOCATIONS) இரண்டு நாட்கள் சிறப்பு முகாம் நடத்த இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.\nஇந்த உத்திரவின்படி, எதிர்வரும் 13.03.2021(சனிக்கிழமை) மற்றும் 14.03.2021(ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி அமைவிடங்களிலும் (DESIGNATED POLLING STATION LOCATIONS) சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.\nசிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் – 2021-இன் போது வாக்காளர் பட்டியலில் முதன்முறையாக பெயர் சேர்க்கப்பட்ட செல்லிடப்பேசி எண்ணை வழங்கிய வாக்காளர்கள் இம்முகாமினைப் பயன்படுத்தி தங்களது மின்னணு வாக்காளர் அடையாள அட்டையினை தங்களது செல்லிடப்பேசி/ கணினியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என மாவட்ட தேர்தல் அலுவல��் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.\nசெய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/horticulture/rs-2-500-subsidy-for-vegetable-cultivation-call-to-farmers/", "date_download": "2021-05-07T01:05:14Z", "digest": "sha1:FG2MBW6GD6NGUM5UG4A74G4S765WICM5", "length": 13140, "nlines": 135, "source_domain": "tamil.krishijagran.com", "title": "காய்கறி பயிரிட்டால் ரூ.2,500 மானியம்- விவசாயிகளுக்கு அழைப்பு!", "raw_content": "செய்திகள் வாழ்வும் நலமும் தோட்டக்கலை கால்நடை வெற்றிக் கதைகள் விவசாய தகவல்கள் FTB அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா Directory\n#FTB விவசாய தகவல்கள் அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா\nஎங்கள் அச்சு மற்றும் டிஜிட்டல் பத்திரிகைகளுக்கு குழுசேரவும்\nசமூக ஊடகங்களில் எங்களுடன் இணைக்கவும்:\nகாய்கறி பயிரிட்டால் ரூ.2,500 மானியம்- விவசாயிகளுக்கு அழைப்பு\nகோவை மாவட்டத்தில் அன்னுார் ஒன்றியத்தில் காய்கறி பயிரிடுவோருக்கு 2,500 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என தோட்டக்கலைத் துறையினர் தெரிவித்துள்ளனர்.\nதேசிய தோட்டக்கலை இயக்கம் மற்றும் தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் அன்னுார் ஒன்றியத்தில், மசக்கவுண்டன் செட்டிபாளையம், காரேகவுண்டன் பாளையம் ஊராட்சிகளிலும், அன்னுார் பேரூராட்சியிலும், தலா இரண்டு லட்சம் ரூபாய் மானியத்தில் சேமிப்புக் கிடங்குகள் கட்டப்பட்டுள்ளன.\nமேலும், நீர் சேகரிப்பு தொட்டி அமைக்க ஒட்டர்பாளையம், காரே கவுண்டன்பாளையம் ஊராட்சிகளில், நான்கு பேருக்கு, தலா, 50 சதவீத மானியம் வழங்கப்பட்டுள்ளது.\nகஞ்சப்பள்ளியில் நிரந்தர மண்புழு உர கூடாரம் அமைக்க, 50 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது. இப்பணிகளை, தோட்டக்கலைத் துறை துணை இயக்குனர் புவனேஸ்வரி,நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.\nஇந்த ஆய்வின்போது அவர் கூறியதாவது:\nநீர் பாசனம் அமைக்க சிறு குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது.\nகாய்கறி பயிரிட்டால் (If growing vegetables)\nகாய்கறி பயிரிடுவோரை ஊக்குவிக்க, ஒரு எக்டருக்கு, 2,500 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.\nரசாயனம் கலக்காமல், இயற்கை முறையில் விவசாயம் செய்பவர்களை ஊக்குவிக்க, அவர்கள் அங்ககச் சான்று பெற ஆகும் தொகை வழங்கப்படுகிறது.\nபண்ணைக் குட்டை, நீர் சேகரிப்பு தொட்டி ஆகியவற்றுக்கும் மானியம் வழங்கப்படுகிறது.\nவிவசாயிகள் இதைப் பயன்படுத்தி பயன் பெறலாம்.\nஆய்வின் போது, தோட்டக்கலை உதவி இயக்குனர்கள் மதுபாலா, அனிஷா பேகம், உதவி தோட்டக்கலை அலுவலர்கள் ரவிக்குமார், கருப்பசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.\nஇயற்கை முறையில் வாழை சாகுபடி-என்னென்ன மருந்துகள் தேவை\n விவசாயிகள் வாழ்வாதாரத்தை காக்க கோரைப்பாயை பயன்படுத்துவோம்\nபயிர்களின் தேவையை, பயிர்களே தெரிவிக்கும் தொழில்நுட்பம்\nஅன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.\nஉங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....\nபங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)\nகாய்கறி சாகுபடிக்கு மானியம் ரூ.2,500 வழங்கப்படுகிறது Rs 2,500 subsidy for vegetable cultivation\nகாய்கறி பயிர்களில் எப்போது அறுவடை செய்தால் தரமான விதைகள் கிடைக்கும்\nநாட்டு ரக விதைகள் வேண்டுமா - இங்கே இலவசமாகக் கிடைக்கும்\nகொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, முழு ஊரடங்கை அமல்படுத்த உச்ச நீதிமன்றம் பரிந்துரை\nகொப்பரை உற்பத்தி செய்ய நவீன இயந்திரம்: விவசாயிகள் மகிழ்ச்சி\n செய்ய வேண்டியவையும், செய்யக் கூடாதவையும்\nவிளைநிலங்களில் வீணாகும் தர்பூசணி பழங்கள்\nபூச்சிகளைப் புரிந்து கொள்(ல்)வோம்- காணொளி மூலம் பயிற்சி\nரூ.4000 கொரோனா நிவாரண நிதிவழங்கும் திட்டம் - நாளை ஸ்டாலின் முதல் கையெழுத்து\nவாடிக்கையாளர்களுக்கு புதியவகை டிசைனர் சிலிண்டரை அறிமுகம் செய்த IOCL\nஒரே நிமிடத்தில் cowin.gov.in தளத்தில் கொரோனா தடுப்பூசி பதிவு செய்வது எப்படி\nபருத்தியைத் தாக்கும் மாவுப்பூச்சிகளை எப்படி கட்டுப்படுத்தலாம்\nகொரோனாவைத் தடுக்கும் முயற்சியில், புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்\nஒன்றல்ல, இரண்டல்ல, ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள்\nதொற்றுநோய்களைத் தடுக்கும் ஊட்டச்சத்து அணுகுண்டு எது தெரியுமா\nமாடித்தோட்டத்திற்கு ஏற்ற மண் கலவை வகைகள் எவை\nவிவசாயிகள் நலன் க��ுதி சாகுபடி தொடர்பான சந்தேகம் ஏற்பட்டால் வேளாண் விஞ்ஞானிகளை அணுகலாம்: தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/news/farmer-protest-intensified-blocked-the-key-kundali-manesar-palwal-and-kundli-ghaziabad-palwal-highways-for-24-hours/", "date_download": "2021-05-07T01:43:47Z", "digest": "sha1:AXAGNJHDFLO553AYJKKNNRPHC5FKHVC3", "length": 14459, "nlines": 123, "source_domain": "tamil.krishijagran.com", "title": "4 மாதங்களுக்கு மேல் தாண்டியும் தொடரும் டெல்லி விவசாயிகள் போராட்டம்! முக்கிய நெடுஞ்சாலைகளில் மறியல் செய்யும் விவசாயிகள்!!", "raw_content": "செய்திகள் வாழ்வும் நலமும் தோட்டக்கலை கால்நடை வெற்றிக் கதைகள் விவசாய தகவல்கள் FTB அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா Directory\n#FTB விவசாய தகவல்கள் அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா\nஎங்கள் அச்சு மற்றும் டிஜிட்டல் பத்திரிகைகளுக்கு குழுசேரவும்\nசமூக ஊடகங்களில் எங்களுடன் இணைக்கவும்:\n4 மாதங்களுக்கு மேல் தாண்டியும் தொடரும் டெல்லி விவசாயிகள் போராட்டம் முக்கிய நெடுஞ்சாலைகளில் மறியல் செய்யும் விவசாயிகள்\nபுதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடி வரும் விவசாயிகள், குண்டலி-பல்வால் அதிவேக நெடுஞ்சாலைகளை மறித்து சாலை மறியல் போராட்டத்ததில் ஈடுபட்டுள்ளனர். இதனை 24 மணி நேர ஒருநாள் போராட்டமாக அறிவித்துள்ளனர். தொடர்ந்து, பல்வேறு கோணங்களில் போராட்டத்தை வலுப்படுத்தப்போவதாகவும் போராட்ட குழுவினர் தெரிவித்துள்ளனர்.\n4 மாதங்களாக தொடரும் போராட்டம்\nமத்திய பாரதிய ஜனதாக அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களை கண்டித்து பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநில விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த நவம்பர் 27ஆம் தேதி தொடங்கிய விவசாயிகள் போராட்டம் நான்கு மாதங்களையும் தாண்டி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.\nஇது தொடர்பாக மத்திய அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையே இதுவரை நடைபெற்ற பலகட்ட பேச்சுவார்த்தைகளிலும் எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லை. இதனால் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வது குறித்து முடிவெடுத்துள்ளனர்.\nஇதைத்தொடர்ந்து, இன்று காலை எட்டு மணி முதல் குண்டலி-மானேசர்-பல்வால் மற்றும் குண்ட்லி-காசியாபாத்-பல்வால் ஆகிய எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலைகளை மறித்து விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன���். இந்த போராட்டம் 24 மணி நேரம் (ஒருநாள்) தொடர்ந்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகப் பொதுமக்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்க மாற்று வழியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக விவசாயிகள் குறிப்பிட்டுள்ளனர். இருப்பினும், விவசாயிகளின் சாலை மறியல் போராட்டத்தால் நெடுஞ்சாலைகளில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.\nபல்வேறு தளங்களில் போராட்டம் நடைபெறும்\nமேலும், இந்த மாதம் பல்வேறு தளங்களில் விவசாயிகள் தங்கள் போராட்டத்தைத் தீவிரப்படுத்த முடிவுசெய்துள்ளனர். அதன்படி வரும் ஏப்ரல் 13ஆம் தேதி, ஜாலியன் வாலாபாக் படுகொலையை நினைவுபடுத்தும் வகையில் தியாகிகள் தினம் அனுசரிக்கப்படவுள்ளது. தொடந்து வரும் ஏப்ரல் 14ஆம் தேதி அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு \"அரசியலமைப்பு பாதுகாப்பு தினம்\" மற்றும் \"கிசான் பகுஜன் ஒற்றுமை நாள்\" ஆகியவற்றை அனுசரித்து தங்கள் போராட்டத்தை தீவரப்படுத்துவோம் என விவசாயிகள் குழுவினர் தெரிவித்துள்ளனர்.\nடெல்டா மாவட்டங்களில் மும்முனை மின்ராசரம் நிறுத்தம் - விவசாயிகள் கவலை\nவிவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக இந்தியாவில் பாமாயில் இறக்குமதிக்கு தடை விதிக்க வேண்டும் - விவசாயிகள் சங்கம் கோரிக்கை\nஅன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.\nஉங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....\nபங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)\nfarmers protest விவசாயிகள் போராட்டம் வேளாண் சட்டங்கள் New agriculture laws farm laws\nதொடங்கியது தடுப்பூசித் திருவிழா- பொதுமக்களுக்கு பிரதமரின் 4 வேண்டுகோள்\nடெல்டா மாவட்டங்களில் மும்முனை மின்ராசரம் நிறுத்தம் - விவசாயிகள் கவலை\nகொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, முழு ஊரடங்கை அமல்படுத்த உச்ச நீதிமன்றம் பரிந்துரை\nகொப்பரை உற்பத்தி செய்ய நவீன இயந்திரம்: விவசாயிகள் மகிழ்ச்சி\n செய்ய வேண்டியவையும், செய்யக் கூடாதவையும்\nவிளைநிலங்களில் வீணாகும் தர்பூசணி பழங்கள்\nபூச்சிகள���ப் புரிந்து கொள்(ல்)வோம்- காணொளி மூலம் பயிற்சி\nரூ.4000 கொரோனா நிவாரண நிதிவழங்கும் திட்டம் - நாளை ஸ்டாலின் முதல் கையெழுத்து\nவாடிக்கையாளர்களுக்கு புதியவகை டிசைனர் சிலிண்டரை அறிமுகம் செய்த IOCL\nஒரே நிமிடத்தில் cowin.gov.in தளத்தில் கொரோனா தடுப்பூசி பதிவு செய்வது எப்படி\nபருத்தியைத் தாக்கும் மாவுப்பூச்சிகளை எப்படி கட்டுப்படுத்தலாம்\nகொரோனாவைத் தடுக்கும் முயற்சியில், புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்\nஒன்றல்ல, இரண்டல்ல, ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள்\nதொற்றுநோய்களைத் தடுக்கும் ஊட்டச்சத்து அணுகுண்டு எது தெரியுமா\nமாடித்தோட்டத்திற்கு ஏற்ற மண் கலவை வகைகள் எவை\nவிவசாயிகள் நலன் கருதி சாகுபடி தொடர்பான சந்தேகம் ஏற்பட்டால் வேளாண் விஞ்ஞானிகளை அணுகலாம்: தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://abedheen.wordpress.com/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2021-05-07T00:09:11Z", "digest": "sha1:E7ECYCMV2EEO2YCIA2LR4ASL3N556EJ5", "length": 89544, "nlines": 675, "source_domain": "abedheen.wordpress.com", "title": "சினிமா | ஆபிதீன் பக்கங்கள்", "raw_content": "\nவாங்கு (மலையாளத் திரையோரம் – 2)\n20/03/2021 இல் 10:59\t(ஆசிப் மீரான், சினிமா)\nதம்பி ஆசிப் மீரான் எழுதிய அருமையான விமர்சனம் – நன்றியுடன்…\n“ஆயிரக்கணக்கான நபிமார்களை உலகிற்கு அனுப்பியிருந்தும் ஏன் ஒரே ஒரு நபி கூட பெண்ணாக இல்லை” என்ற கேள்வியைக் கவிதையில் கேட்டு விட்டு தக்கலை ஹெச்.ஜி.ரசூல் பட்டபாடு நாமறிந்தது.\nஇவ்வளவு இறுக்கமான மதவாதிகள் நிறைந்திருக்கும் இஸ்லாமியச் சமூகத்தில் ஒரு பெண் பாங்கு ( தொழுகைக்கான அழைப்பு) சொல்ல ஆசைப்பட்டால் என்னாகும்\nஅதையும் திரைப்படமாக்கிப் பார்க்கும் ஆசை வந்தால் அதுவும் மாற்று மதம் சார்ந்த ஒரு‌பெண் அந்தப் படத்தை இயக்கியிருந்தால் என்னாகியிருக்கும் இங்கு\nஆனால் கேரள தேசத்தில் அது நிகழும். இத்தனைக்கும் வடகேரளத்தின் பெரும்பகுதி இசுலாமியர்கள் நிறைந்த பகுதி. இசுலாமிய இயக்கங்களும் கட்சிகளும் வலுவாக இயங்கும் ஒரு மாநிலத்தில் இது நிகழ்வதிலிருந்து ஒன்று தெளிவாகிறது.\nஒன்று இசுலாமிய இயக்கங்கள் திரைப்பட உருவாக்கங்கள் ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்து அறிந்திருந்தாலும் அதிகம் கவலைப் படுவதில்லை\nஇப்படி எடுக்கப்படும் திரைப்படங்கள் குறித்து அவர்களுக்கு அக்கறையேயில்லை\nஅநேகமாக முதலாவதுதான் சரியாக இருக்கக் கூடும். சமீபத்திய உதாரணம் ‘ஹலால் லவ் ஸ்டோரி’ அதற்கு முன்பே ‘அலிஃப்’ உள்ளிட்ட திரைப்படங்கள் வந்திருக்கின்றன. 3% வாக்குகள் வைத்துக்கொண்டு முந்நூறு பிரிவாக இயங்கும் நம்மூர் ‘முல்லா’க்களுக்கு ஒட்டு மொத்தமாகவே திரைப்படமென்பது ‘ஹராம்’ என்பதால்நாம் மல்லு தேசத்தைத்தான் நம்ப வேண்டியிருக்கிறது. அப்படித்தான் நான் நம்புகிறேன்.\nகல்லூரியில் படிக்கும் ரஸியாவுக்கு பள்ளிவாசலில் தொழுகைக்கான அழைப்பான பாங்கொலியைக் கேட்டு அதைப் போலவே தனக்கும் பாங்கு சொல்லத் தோன்றும் ஆசையைத் தன்‌ தோழிகளிடம் வெளிப்படுத்தும் வரை வாழ்க்கை இயல்பாகவே இருக்கிறது.\nகல்லூரிப் பேராசிரியை மாணவிகளைப் பார்த்து “கல்லூரி‌ முடியும் முன்னர் உங்களுக்கென தனிப்பட்ட ஏதேனும் ஆசைகள் இருந்தால் நிறைவேற்றிக் கொள்ளுங்கள். கல்லூரியை விட்டு வெளியேறி விட்டால் வாழ்க்கையில் அவற்றை நிறைவேற்ற இயலாமல் போகலாம்” என்று சொல்வதன் அடிப்படையில் மற்ற மூன்று தோழிகளும் தங்களது ஆசைகளை நிறைவேற்ற எண்ணுகையில் ரஸியாவின் ஆசை மட்டும் பாங்கு சொல்ல வேண்டும் என்பதாக இருக்கிறது.\nஅதைச் சொன்னதுமே உடனிருக்கும் இசுலாமியத் தோழி பதற்றமடைந்து, ” உனக்கென்ன பைத்தியமா\nஆனால் ரஸியாவின் இந்த இரகசிய ஆசையை ஃபேஸ்புக்கில் மற்றொரு தோழி வெளிப்படுத்தி விட வீட்டில், கல்லூரியில் மட்டும் என்றில்லாமல் போகிற இடங்களில் எல்லாம் இம்சை தொடங்குகிறது ரஸியாவுக்கு. வாழ்க்கை நரகமாகி விடுகிறது அவர் குடும்பத்தினருக்கும்.\n“பெண்ணை ஒழுங்காக வளர்க்கத் தெரியாதா” என்று நாத்தனார் குத்திக் காட்டுவது, உறவுகள் புடை சூழ பெண்ணுக்குப் பைத்தியம் பிடித்து விட்டதாகச் சொல்வது, ஜமா அத்தார் ஒன்று கூடி ரஸியாவின் தந்தையை எச்சரித்து பள்ளிவாசல் கட்டுவதற்கான ஒப்பந்தத்தையும் ரத்து செய்வது, ‘பேய் பிடித்திருக்கலாம்’ என்று முஸலியாரிடம் ‘ஆயத்துல் குர்ஸி’ ஓதி ஊதிய நீரை வாங்கிக் குடிக்க வைப்பது என்று ஒட்டுமொத்தமாக மாறி விடுகிறது ரஸியாவின் அன்றாட வாழ்க்கை. “ஜேஎன்யூ”வில் படிப்பைத் தொடர நினைக்கும் நல்ல படிப்பாளியுமான ரஸியாவுக்கு எல்லா இடங்களிலிருந்து ம் ஏற்படுத்தப்படும் அழுத்தம் தாங்கவொணாததாகி விடுகிறது. ரஸியாவின் கனவுகளுக்கு எப்போதும் துணையிருக்கும் ரஸியாவின் தாயாருக்க��ம் ஏன் குடும்பத்தினருக்குமே கூட..\nரஸியாவால் பாங்கு சொல்ல முடிந்ததா என்பதுதான் படத்தின் முடிவு.\n“மதத்தைத் தொட்டு விளையாடாதே” என்று ரஸியாவுக்கு விடப்படும் எச்சரிக்கையைத்தான் இன்று எல்லா மதத் தீவிரவாதிகளும் நம்பிக்கையாளர்களுக்கும் சேர்த்தே விடுகிறார்கள்.\nபல்லியை அடித்துக் கொல்ல முனையும் தம்பியைத் தடுக்கும் அக்காவிடம் “பல்லியைக் கொன்றால் நன்மை கிடைக்கும்” என்று ‘உஸ்தாத்’ கூறியதாகச் சொல்கிறான் தம்பி\n“ஓர் உயிரைக் கொன்று மனிதர்கள் நன்மையைப் பெறுவதற்காக எதையாவது இறைவன் படைப்பானா” என்கிறாள் அக்கா”உஸ்தாதுகளுக்குத் தெரியாத விசயமா உனக்குத் தெரியும்” என்கிறாள் அக்கா”உஸ்தாதுகளுக்குத் தெரியாத விசயமா உனக்குத் தெரியும்” என்று மகளை அடக்கி வைத்து விட்டு “பல்லி குறைஷிகளிடம் நபிகளாரைக் காட்டிக் கொடுத்ததால் அதைக் கொன்றால் புண்ணியமென்றும் ஆனால் சிலந்தி நபிகளாரைக் காப்பாற்றியதால் அதைக் கொல்லக் கூடாதென்றும்” பாடம் நடத்துகிறார் வாப்பா.\n“அப்படியென்றால் வீட்டில் ஒட்டடை அடிக்காமல் சிலந்திப்பண்ணை வைக்கலாமா வாப்பா” என்றொரு வசனம் வைத்திருந்திருக்கலாம். (ஆபிதீன்‌ அண்ணன் வசனகர்த்தாவாக இருந்திருந்தால் நிச்சயம் நடந்திருக்கும்)\nநபிகளாரைக் காப்பாற்றியது இறைவன்தானே தவிர சிலந்தியோ பிறவோ இல்லை என்பதை நம்புவதை விடவும் ‘உஸ்தாத்கள்’ உருவாக்கிச் சொல்லும் மிகைப்படுத்தப்பட்ட கதைகளை நம்புவதையே இச்சமூகம் விரும்புகிறது என்பதே சோகம்\n‘லீலா’ என்ற படத்தின் கதை திரைக்கதை எழுதிய அதே உன்னியின் கதையை அடிப்படையாக வைத்தே இந்தப் படம் உருவாகியிருக்கிறது. இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமென்றால் ‘கேரளா கஃபே” ‘சார்லி’ திரைப்படங்களின் கதை வசனகர்த்தா என்றால் ‘சட்’டென்று புரியலாம். “ஒழிவு திவஸத்தெ களி”யும் இவரது சிறுகதைதான் என்பது இன்னொரு கூடுதல் தகவல். திருவனந்தபுரத்தில் பாளையம் பள்ளிவாசலருகில் வாழ்ந்த காலத்தில் அவர் எழுதிய இந்தச் சிறுகதை 25 ஆண்டுகளுக்குப் பின் பொன்னானி என்கிற இசுலாமியர்கள் அதிகம் வாழும் பகுதியின் பின்னணியில் திரைக்கதையாகியிருக்கிறது.\nநாயகியின் தாயாகவும் வேடமேற்றிருக்கும் ஷப்னா முஹம்மதுதான் படத்தின் திரைக்கதையாசிரியருமே கூட. அறிமுகம் என்பதால் படத்தில் பெண்ணியத்தைப் பேசுவதா நம்பிக்கைகளின் அடிப்படையில் நழுவுவதா என்ற குழப்பத்தோடேயே காட்சிகளை உருவாக்கியிருக்கிறாரோ என்று தோன்றுகிறது. நாயகியின் குழப்பங்களுக்கு திரைக்கதையும் காரணமாக இருக்கலாம் என்பது சறுக்கல்தான். ஆனால் முழுதுமாக ஒரு நம்பிக்கையைச் சிதைக்கும் விதத்தில் பெண்ணியம் பேசும் சூழலை மட்டுமே வைத்துப் படமெடுத்து விட முடியாது என்ற யதார்த்தத்திற்கான சமாதானமாகவும் அதனை வைத்துக் கொள்ளலாம்\nபடத்தின் இயக்குநரும் ஒரு பெண்தான். இந்த இசுலாமியப் பின்னணி கொண்ட திரைப்படத்தை இயக்கியவர் காவ்யா பிரகாஷ் என்பதும் அவரும் அறிமுக இயக்குநர்தான் என்பதும் இன்னொரு சுவாரஸ்யமான செய்தி. முதல் படத்திலேயே துணிச்சலான ஒரு கதையைச் சொல்ல முயன்றதற்காகப் பாராட்டலாம்.\nஅனஸ்வரா ராஜன் அழகாக இருக்கிறார் அழகாகச் சிரிக்கிறார். சில நேரங்களில் யாருக்கு வந்த விதியோ என்றிருந்தாலும் பாத்திரத்தின் கனத்தைத் தாங்கிக் காப்பாற்றி விடுகிறார். வினீத் வழக்கம்போல சிறப்பாகத் தன் வேலையைச் செய்திருக்கிறார். “சுடானி ஃப்ரம் நைஜீரியா” புகழ் சரசா பாலுஸ்ஸேரியை இசுலாமியக் கதாபாத்திரங்களுக்கு நேர்ந்து விட்டு விட்டார்கள் போலிருக்கிறது. நாயகியின் பாட்டியாக சில காட்சிகளே எனினும் அசத்தியிருக்கிறார்.\nவீட்டிற்கு மருமகளும் பேத்தியும் புர்கா அணிந்து வரும் காட்சியைக் கண்டு விட்டு ” இதெந்து கோலம்” என்று கேட்கும்போது அவரது உடல் மொழி அபாரம். ‘தட்டம்’ அணிந்த இசுலாமியப் பெண்கள் ‘புர்கா’வுக்குள் மாறிப்போனதை இந்தக் காட்சியின் மூலமாக உணர்த்த முனைந்திருக்கிறார்கள்.\nஅர்ஜுன் ரவியின் ஒளிப்பதிவு சிறப்பாக இருக்கிறது. காட்சிகளுக்குத் தேவையானதைத் தந்திருக்கிறார். பாடல்களில் கூடுதல் சிறப்புற இயங்கியிருக்கிறார். ஔசேப்பச்சன் நெடுநாட்களுக்குப் பின் இசை அமைத்திருக்கிறார். அவரது மேதமை முற்றாக வெளிப்படவில்லையெனினும் அவரது இசை ஓர் ஆறுதல்.\nஆனால் தேவையற்ற பாடல்களை வெட்டி நீக்கியிருந்தால் படத்தோடு இன்னும் நெருக்கமாக உணர்ந்திருக் கலாம்.\n“யாரோ நீ, நான்தானே நீநீயல்லவோ நான்மண்ணல்லவா நான்மழையும் அல்லவா நான்” என்ற பொருள் கொண்ட “மலயுடெ முகலில்” பாடல் ஈர்க்கிறது.\nஒரு வித்தியாசமான முயற்சி என்ற அளவில் தவிர்க்க முடியாத படமென்ற போதிலும் மத நம்பிக்கைகளுக்கெதிரான விசயங்களில் ஒரு கட்டத்திற்கு மேல் எதையாவது செய்து சிக்கலில் மாட்டிக் கொள்ளக் கூடாதென்ற எச்சரிக்கை உணர்வோடேயே படம் உருவாக்கப்பட்டிருப்பதால் ஒரு முழுமையான படமாக இது உருவாகிவிடவில்லை என்பது ஒரு குறைதானென்றாலும்….\nநல்ல படம் பார்க்க விரும்புகிறவர்களுக்கு இந்தப் படத்தைப் பரிந்துரைக்கத் தயங்க மாட்டேன்\nஆசிப்மீரானின் ‘மலையாளத் திரையோரம்’ – வாழ்த்துரை\nTENET – சென்ஷியின் சிறு விமர்சனம்\n29/08/2020 இல் 12:41\t(சினிமா, சென்ஷி)\n’ என்று தம்பி சிவா ஃபேஸ்புக்கில் கேட்டதற்கு ‘புரியலே, ஆனா நல்லா இருந்தது’ என்று நேர்மையாக பதில் சொல்லியிருந்தேன். அமர்க்களம்.. அமர்க்களம்.. என்று சொல்லியபடி கைதட்டிக்கொண்டே தூங்கிக்கொண்டிருந்த சென்ஷியின் குறிப்பு பிடித்திருக்கிறது. பகிர்கிறேன். – AB\nமிக எளிமையான நாயக மனப்பான்மை கதைதான். அதை நோலன் கொடுத்திருக்கும் விதம்தான் இன்செப்சனை விட அதிக சிக்கலானதாக மாற்றுகிறது. காரணம் கால பயணம் குறித்த பல திரைப்படங்களை ரசிகர்கள் விமர்சனம் என்ற பெயரில் கிழித்து தொங்கவிட்டிருப்பதால், நோலனின் காலபயணம் எப்படி இருக்குமோ என்ற ஆர்வம்தான் என்னை அவசியம் படம் பார்க்க வேண்டும் என்ற ஆவலில் தள்ளியிருந்தது. (Interstellar-ல் புதிய கிரகத்தினை தேடி பயணப்படும் கதை என்பதில் கிடைத்த அதே ஆவல்) நோலன் காட்டியிருக்கும் திரைப்படம் ஒரு காட்சிப்பதிவில் அட்டகாச முன்முயற்சி. காலபயணத்தில் நம் கண்முன் இரண்டு() விதமான சாத்தியத்தையும் எடுத்திருப்பதும், முன்பகுதியில் கொடுக்கப்பட்டிருக்கும் குழப்பங்களுக்கெல்லாம் கடைசி முப்பது நிமிடங்களில் பிரம்மாண்டமான சண்டைப்பதிவுடன் முடிவு சொல்லுவது அற்புதம்.\nமுக்காலே மூணுவீசம் இயற்பியல் கோட்பாடுகளும் அரைவீசம் கணிதச்சமன்பாடுகளும் மற்றும் காலபயண திரைப்படங்களின் ரசிகர்களிடையே படாதபாடுபடும் பாரடாக்ஸ் (முரண்பாட்டின்) சாத்தியத்தையும் வசனங்களாய்க்கொண்ட திரைப்படத்தில் இவற்றைக் காட்சிப்படுத்தலில் நோலன் எடுத்திருக்கும் முயற்சிதான் பிரமிப்பு. அவர்கள் பேசும் வசனங்களை புரிந்துகொள்ளும் முன்பே காட்சியின் பிரம்மாண்டத்தில் ரசிகர்களை சிக்க வைத்துவிடுவதால், முதன்முறை பார்த்துவிட்டு படம் புரிந்தது என்பவர்கள் பிஸ்தாக்கள்தான். எனக்க��� சில இடங்களில் விடுபடல்களும் குழப்பங்களும் இருந்தன. முக்கியமாய் முதல் காட்சியில் வரும் தொடர்பு பின்னால் எங்கேனும் கிடைக்கும் என்று எதிர்பார்த்து ஏமாந்தேன். ஆனால் இறுதிக்காட்சிவரை சினிமாப்பிரியர்களை நோலன் ஏமாற்றவில்லை.\nநிச்சயம் நான் இங்கு திரைப்படத்தின் கதையை எழுதவில்லை. அப்படியே எழுதினாலும், உலகை அழிக்கத் துடிக்கும் கெட்டவனிடமிருந்து உலகைக் காப்பாற்ற புறப்பட்டு() வரும் நாயகன் என்பதாக ஓரிரு வரியில் முடிந்துவிடும். ஆகவே எதையும் எதிர்பார்க்காது, நோலனின் கால யந்திர உலகத்தை காட்சிப்பதிவாக அனுபவித்து ரசிக்க எண்ணினால் திரைப்படத்தை தவறவிடாதீர்கள்.\nஅநேகமாக நமது இயக்குந கஜினிகள் யாரேனும் சில வருடங்கள் கழித்து இது தோல்வியடைந்த குழப்பமான கதை. நான் இதை மக்களுக்கு புரியும்படி எடுத்தேன் என்று உடான்ஸ் விடவும் சாத்தியம் அதிகம் உண்டு.\n(திரைப்படத்தின் கதை அவசியம் தெரியவேண்டும் என்பவர்களுக்காக ஸ்பாய்லர் அலர்ட்களுடன் தனிப்பதிவு நட்பு வட்டத்தினருக்காக மாத்திரம் இடப்படும். இதில் எனது சந்தேகங்களும் இடம் பெறும் படம் பார்த்து தெளிவு பெற்றோர் விளக்கமளித்தால் தன்யனாவேன்\nஐயப்பனும் கோஷியும் – ஆசிப் மீரான்\n23/03/2020 இல் 16:17\t(ஆசிப் மீரான், சினிமா)\n“மனிதன் ஒரு மகத்தான சல்லிப்பயல்”- எழுத்தாளர் ஜி நாகராஜன் ஒரு வரியில் சொன்னதை மூன்று மணிநேர திரைப்படமாகக் கண்முன்னால் விரிய வைத்திருக்கிறார் இயக்குநர் சச்சி. முன்னரே பிரித்வி பிஜூ மேனன் கூட்டணியில் லட்சத்தீவின் பின்னணியில் அனார்க்கலி என்ற சுவாரஸ்யமான காதல் கதையைச் சொன்ன, ” ட்ரைவிங் லைசென்ஸ்” திரைப்படத்திற்கு திரைக்கதை எழுதிய அதே சச்சிதான் இவர்.\nஉண்மையில் இது இரண்டு மனிதர்களுக்கு இடையிலான தனிப்பட்ட தன்முனைப்பு சார்ந்த போராட்டம் என்பதுபோல தோன்றினாலும் அதனூடே உண்மையில் அதிகாரம் என்பது எப்படி எந்தெந்த வகையில் யார் யாருக்காகவெல்லாம் வளைந்து கொடுக்கத் தயாராக இருக்கிறது என்பதையும் பூடகமாக உணர்த்திச் செல்கிறது என்பதனால்தான் இந்தத் திரைப்படம் முக்கியமானதாகிறது\nபொதுவாக இந்தத் திரைப்படத்தை கோஷிக்கும் ஐயப்பனுக்கும் இடையில் நடக்கும் தன்முனைப்பு போராட்டமாக மட்டுமே பலரும் அடையாளப்படுத்துகிறார்கள் ஆனால் மூன்றுவிதமான போராட்டங்கள் இ���்தப் படத்தின் மூலமாக வெளிப்படுகின்றன. கோஷிக்கும் ஐயப்பனுக்கும் இடையில் நடக்கும் சண்டைதான் பிரதானம் என்றாலும் கோஷிக்கும் கோஷியின் தகப்பனான குரியனுக்கும் இடையில் நடக்கும் போராட்டமும் மிக முக்கியமானது இந்த இரண்டு போராட்டங்களுக்கும் நடுவில் அதிகார வர்க்கத்திற்கும் அதற்கு வளைந்து போகாத மனிதனுக்கும் இடையில் நடக்கும் போராட்டமும் சொல்லப்பட்டிருக்கிறது.\nஇராணுவத்தில். பணிபுரிந்து ஓய்வுபெற்ற ஹவில்தார் எனத் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் கோஷியினுடைய கதாபாத்திரம் ஊசலாடும் தன்மையோடு படைக்கப்பட்டிருக்கிறது ஆகவே தனது தந்தை செய்யும் தவறுகளுக்கும் தான் விலை கொடுக்க வேண்டிய நிலை வரும்போது கோஷியின் மனம் தடுமாறுகிறது. அதுவே ஐயப்பனுக்கு எதிரான போராட்டத்தில் ஆங்காங்கே அவனை நிலைகுலைய வைக்கிறது. இறங்கி வர நினைக்கலாமென எண்ணும்போதே சூழல்கள் மீண்டும் கோஷியை நியாயப்படுத்தத் தூண்டுகின்றன.\nஐயப்பனின் கதாபாத்திரம் கொஞ்சம் மங்கலான இருக்கிறது ஏனெனில் சில விஷயங்கள் பூடகமாகச் சொல்லப்பட்டு விடுகின்றன. உதாரணமாக ஐயப்பனுக்கு நடந்த திருமணம் குறித்த பின்னணி ஒரு அவசரகதியில் அளிக்கப்பட்டு அள்ளித் தெளிக்கப்பட்டு இருக்கிறது ஆனால் ஐயப்பன் தான் எடுக்கும் முடிவுகளில் மிகத் தெளிவானவனாகவே இருக்கிறான். தன் பழைய சுபாவங்களிலிருந்து மீண்டு நேர்மையான காவல் அதிகாரியாக வாழ்பவனாக இருக்கிறான் ஐயப்பன்.\nஇப்படி, கதாபாத்திரங்களின் குணாதிசயங்களின் வரையறைகள் மிகச் சிறப்பாக செய்து இருப்பதாலேயே ஊசலாடும் ஒரு மனநிலை உள்ளவனக்கும் தெளிவான சிந்தனை கொண்ட ஒரு காவல்துறை அதிகாரிக்குமான மோதல் என்பது இருக்கை நுனிவரை நம்மைக் கட்டிப் போட போதுமானதாக இருக்கிறது.\nகாவல்துறை உதவி ஆய்வாளராக இருக்கும் ஐயப்பனுக்கும் தற்காலிகப் பதவி நீக்கம் செய்யப்பட்ட பின் இருக்கும் ஐயப்பனுக்கும் இடையிலான வேறுபாடுதான் திரைக்கதையின் மையச் சரடு. இந்தச் சரட்டை மிகப் பலமானதாக உருக்குக் கம்பி போல உருவாக்கி இருப்பதால்தான் அதைச் சார்ந்த கிளைச் சம்பவங்களை அடுத்தடுத்துச் சொல்வதென்பது – குறிப்பாக அதிகாரவர்க்கம் தனக்கு வேண்டியவர்களுக்கு எப்படி எல்லாம் வளைந்து நெளிந்து கொடுக்கிறது – திரைக்கதை ஆசிரியரான சச்சிக்கு இயல்பாகக் கை���ந்திருக்கிறது.\nநேர்மையான காவல் அதிகாரியாக இருந்த போதும் கூட உயர் அதிகாரியின் கட்டளைக்காக வேலை நேரத்தில் செய்த பிழைக்காக இன்னும் 2 ஆண்டுகளில் ஓய்வு பெற இருக்கும், முதலமைச்சரிடமிருந்து பதக்கம் பெறவிருக்கும் நிலையில் தற்காலிகப் பதவி நீக்கம் செய்யப்படும் ஓர் உதவி காவல் ஆய்வாளரின் நிலை பணத்திமிரும் குடிவெறியும் கொண்ட சராசரி குடிமகன் ஒருவனால் பந்தாடப்படும் போது அதை எதிர்கொள்ள அவன் எப்படி ஆயத்தம் ஆகிறான் என்பதும் இந்தக் கதையின் நோக்கமென்றாலும் இறுதியில் அந்த நேர்மையான அதிகாரிக்கு எதிராக எவன் செயல்பட்டானோ அவனே இறங்கி வந்து அவன் மூலமாகவே மீண்டும் காவல்துறை அந்த உதவி ஆய்வாளருக்குச் சீருடையை திரும்ப அணிய வைக்கும் சூழல்தான் அமைகிறது என்பதுதான் மிகப்பெரிய நகைமுரண் ஆனால் அதுவேதான் இந்த தேசத்தின் நிலையும் கூட வசதியும் வாய்ப்புகளும் இருப்பவர்களுக்கு சட்டம் நீதி எல்லாம் பணத்தின் மூலமாக சம்பாதிக்கக்கூடிய ஒன்றாகவே இருக்கிறது என்பதாகவும் கூட இந்தக் கதையை நாம் புரிந்துகொள்ளலாம்\nஇந்தப் படத்தின் மிக முக்கியமான விஷயமாக நான் கருதுவது இந்தப் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றிய நடிகர்களின் அபாரமான நடிப்பாற்றல்தான். எப்போதுமே நான் வியக்கக்கூடிய ஒரு விஷயமும் கூட.\nஇரண்டு நாயகர்கள் இரண்டு கதாபாத்திரங்கள் இதில் யாருக்கு பலம் அதிகம் என்ற தன்முனைப்பு இல்லாமல் தங்கள் கதாபாத்திரங்களில் தாங்கள் வாழ்ந்து காட்டுவதன் மூலமாக மட்டுமே தங்களது திறமையை வெளிப்படுத்த முடியும் என்ற எண்ணமும் ஆற்றலும் உறுதியும் தன்னம்பிக்கையும் மலையாள நடிகர்களுக்கு இருக்கிறது என்பதால்தான் இதுபோன்ற படங்களும் பாத்திரங்களும் மலையாளத் திரைப்படங்களில் சாத்தியமாகிறது.\nபிஜு மேனனும் சரி பிரித்வி ராஜனும் சரி அமர்க்களப்படுத்தி இருக்கிறார்கள் அதிலும் குறிப்பாக பிஜு மேனன் இடைவேளைக்குப் பிறகு மதம் கொண்ட யானையின் சீற்றத்தோடு நடத்தும் அடாவடித்தனங்கள் அத்தனையும் சபாஷ் போட வைக்கின்றன. பிஜு மேனனின் அந்த சுனாமியின் முன் பிரித்வி நீச்சல் போட்டதே பெரிய விசயம்தான்.\nஐயப்பனின் மனைவியிடம் ஏகத்திற்கும் ஏச்சு வாங்கி கூனிக்குறுகி நிற்கும் பொழுதில் ஐயப்பன் கோஷியிடம் வந்து “வயிறு நெறச்சு கிட்டியோ” என்று ��ேட்கும்போது “ஒரு அளவுக்கு” என்று பிரித்வி பம்மிப்பதுங்கும் காட்சி கொள்ளை அழகு. (இப்படி ஒரு காட்சியில் எந்தத் தமிழ் முன்னணி நடிகரும் நடிக்க ஒப்புக்கொள்வார்களா என்பது வேறொரு கேள்வி) அந்த இடத்தில் கண்ணம்மாவாக நடித்திருக்கும் கௌரி நந்தாவின் வசன உச்சரிப்பும் ஆங்காரம் மிகுந்த உடல் மொழியும் வசனங்களும் வெகு கச்சிதம்.\nவழக்கம்போலவே எந்த நடிகரும் சோடை போகவில்லை குறிப்பாக பிரித்வியின் தந்தையாக வரும் இயக்குனர் ரஞ்சித் ஒரு ஆணாதிக்கவாதியான, பழம்பெருமை பேசக்கூடிய ஆணவ சாதிக்காரனைப் போல தன் பெருமை பேசிக்கொண்டு இருக்கக்கூடிய ஒரு பழைய ‘பூர்ஷ்வா’த் தனத்தோடு நடக்கக்கூடிய பெரிய மனிதனின் உடல் மொழியை இயல்பாகக் கடத்தி இருக்கிறார். ஆய்வாளராக வரும் அனில் நெடுமங்காடு, காவலராக வரும் அனு மோகன் ஆகியோரும், பெண்காவலர் ஜெஸ்ஸியாக நடித்திருக்கும் தன் யாவும் தங்கள் பங்குகளைச் சிறப்புற செய்திருக்கிறார்கள்\nபடத்தில் இயக்குநரான சச்சியே திரைக்கதையையும் அமைத்திருப்பது மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது என்றால் அதற்கு உற்ற துணையாக ஒளிப்பதிவும் அமைந்திருக்கிறது. அட்டப்பாடியில் இயற்கை வளம் சூழ்ந்த அத்தனை காட்சிகளையும் அழகுற உள்வாங்கியிருக்கிறது சுதீப்பின் கேமரா’ கண்ணில் ஒற்றிக் கொள்ளலாம் போல அத்தனை அழகான சட்டகங்கள் குறிப்பாக ஐயப்பன் ஒரு மரத்தினடியில் இருக்கும் “பெஞ்சில்” அமர்ந்திருக்கையில் ஓரமாக தூளியில் குழந்தை இருக்கும் அந்த ஒற்றைக் காட்சி\nஅட்டப்பாடி என்பது ஆதிவாசிகள் பெருமளவில் வசிக்கும் பகுதி. அவர்களது நிலங்களை பெருமுதலாளிகள் சுரண்டிக் கொண்டிருக்கிறார்கள். சாராயம் கொடுத்து அவர்களை ஏமாற்றுகிறார்கள் என்பதால் அந்தப் பகுதியில் சாராயம் தடை செய்யப்பட்டதாக இருக்கிறது. என்ற போதும் கூட இந்தப் பகுதியில் ஆதிவாசிகளுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன சமீபத்தில் கூட ஒரு ஆதிவாசியை மரத்தில் கட்டிவைத்து அடித்தே கொன்ற செய்தியை பார்த்து நாம் பதறி இருக்கிறோம் ஆகவே அட்டப்பாடியின் பின்னணியில் நடக்கக்கூடிய இந்தக் கதையில் அட்டப்பாடி ஆதிவாசிகளின் மலையாளமும் தமிழும் கலந்த ஒரு வினோத மொழியில் அவர்கள் பாடுகின்ற நாட்டுப்புற பாடல்களை மிக அழகாகவும் செய்நேர்த்தியோட��ம் மிகச் சரியான இடங்களில் புகுத்தி இருப்பதன் மூலம் தனது பின்னணி இசைக்கு புதிய பரிமாணத்தை வழங்கியிருக்கிறார் இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜோய் இதுவரை கேட்டறியாத நஞ்சியம்மை என்ற ஆதிவாசிப் பெண்ணையே அவர் எழுதிய பாட்டை படத்தில் உபயோகப்படுத்தி இருப்பதன் மூலம் மிக முக்கியமான காட்சிகளில் அதன் தரத்தை வேறொரு தளத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறார் இயக்குநர் . மிகுந்த பாராட்டுக்குரிய செயல் இது\nமலையாள சினிமா ஏன் தனித்துவம் பெறுகிறது என்பதற்கு இத்திரைப்படத்தில் பல காட்சிகள் சான்று பகர்கின்றன. கண்ணம்மா காவல் நிலையத்தில் காவலர்களுடன் பேசுகின்ற காட்சியும் சரி அதைப்போலவே ஐயப்பனும் கோஷியும் தனியாக வனப்பகுதியில் பேசிக்கொள்ளும் காட்சியும் சரி முற்றிலும் வேறு ஒரு பரிமாணத்தில் இருக்கின்றன.\nதிரைப்படத்தில் பட்டுத்தெறித்தாற் போல் வருகின்ற வசனங்களில் கூர்மை மீண்டும் மீண்டும் நம்மை வியப்புக் கொள்ளவும் அதே நேரத்தில் ‘ஆ’வென்று வாய் பிளக்கவும் வைக்கின்றன.\nமூன்று மணி நேரம் படம் என்பது மட்டுமே மிகப்பெரிய குறை என்று சிலர் அலுத்துக் கொள்கிறார்கள். ஆனால் மூன்று மணி நேரம் இருக்கையிலேயே சுவாரசியம் குறையாமல் நம்மை கட்டிப் போடுவது என்பது ஒரு மிகப்பெரிய கலை. ஆனால் படத்தில் ஒரு. முக்கியமான குறை இருக்கிறது. உயர் அதிகாரி சொன்னார் என்பதற்காக, காவல் நிலையத்தில் வைத்தே ஐயப்பன் கோஷிக்காக மது. ஊற்றிக் கொடுக்கும் போது அதை கோஷி அவருக்குத் தெரியாமல் வீடியோ எடுக்கிறார். எதிரில் இருப்பவனைப் பற்றித் தெரிந்திருந்தும் ஐயப்பன் அஜாக்கிரதையாக அதை கவனிக்காமல் விட்டுவிடுவதுதான் அந்தக் குறை. ஆனால் அது இல்லாவிட்டால் மூன்று மணி நேர சுவாரஸ்யம் இல்லாமல் போயிருக்குமே\nமசாலாப் படங்கள் என்றால் நான்கு பாடல்கள் ஐந்து சண்டை பஞ்ச் டயலாக், அதிநாயகத் தன்மைகள் என்று குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டிக் கொண்டிருக்கும் மசாலா பட இயக்குநர்கள் ஒரு மசாலா படத்தையே எப்படி ரசிக்கும் விதமாக அழகுற ஆனால் மசாலா தூக்கலாக இல்லாமல் மிகச் சிறப்பாகத் தரமுடியும் என்பதை கற்றுக்கொள்ள இந்தத் திரைப்படம் அருமையான ஒரு வாய்ப்பு.\nநன்றி : ஆசிப் மீரான்\n04/12/2019 இல் 12:00\t(சினிமா, சென்ஷி)\n”அப்பா.. வாலினை என்ன செய்வீர்கள்\n“புதைக்கையில் அதை நாயின் தலைப்பகுத���யின் அடியில் வைத்துவிடுவோம். அப்போதுதான் வால் கொண்ட நாயாக அல்லாமல் இதன் மறுபிறப்பில் குதிரைவால் சிகை கொண்ட குழந்தையாக பிறக்கும்”\nஒரு பெரிய பணக்கார குடும்ப வாரிசான அழகான பெண் ஒருத்திக்கு திடீரென உடல் நலம் சரியில்லாமல் போய்விட்டதாம். எந்தவித சிகிச்சைகளும் பலனளிக்காததால், அவளது தந்தை ஒரு அறிவிற் சிறந்த பெரியவரிடம் சென்று அறிவுரை கேட்கிறார். அதற்கு அந்த பெரியவர், “உங்கள் வீட்டில் உள்ள மஞ்சள் நிற நாயின் கோபமே இந்நோய்க்கு காரணம். அதை அகற்றிவிட்டால் நோய் குணமாகிவிடும்” என்று பதில் தருகிறார்.\nஆனால் அந்த நாய் தங்கள் குடும்பத்தினரையும் மந்தை கூட்டத்தையும் காப்பாற்றுகிறது என்ற தந்தையின் கேள்விக்கு பதிலாக பெரியவர் ’உனக்கு தேவையான பதிலை தந்துவிட்டேன்’ என்று சொல்கிறார்.\nஇவ்வளவு காலமாக தங்களின் பாதுகாப்பிற்காக உழைத்த நாயைக் கொல்ல செல்வந்தர்க்கு மனம் வரவில்லை. ஆனால் தன் மகளின் நோய் தீர வேறு எந்த வழியும் தெரியாததால், அந்த நாயை அதனால் வெளியேற இயலாத ஒரு குகையினுள் விட்டு விடுகிறார். தினமும் குகைக்குச் சென்று நாய்க்கு உணவும் கொடுத்து வருகிறார். ஒரு நாள் அந்த நாய் அங்கிருந்து காணாமல் போய்விடுகிறது.\nஆனால் பிறகு அந்த பெண் குணமாகிவிட்டாள். காரணம் அவள் ஒரு இளைஞன் மேல் கொண்டிருந்த காதல். காதலர்களின் சந்திப்பிற்கு அந்த நாய் மிகுந்த இடைஞ்சலாக இருந்ததால் ஏற்பட்ட நோய் அது. நாய் தொலைந்ததால் காதலர்கள் சந்திப்பிற்கு இந்த இடையூறுமில்லை.\n அந்த மஞ்சள் நிற நாய்க்கு என்ன ஆனது\n”அந்த காதலர்கள் திருமணம் செய்து கொண்டார்கள். அந்த நாய் குதிரைவால் முடி கொண்ட குழந்தையாக மறுபிறப்பு கொண்டது.”\n– மங்கோலிய நாடோடி பழங்கதை\nநன்சால் தனது முதல் பள்ளிக்கூட விடுப்பில் இருப்பிடம் வந்து சேரும் தினத்திலிருந்து கதை தொடங்குகிறது. மங்கோலியாவில் சமவெளியில் ஆட்டு மந்தைகளை நாடோடிகளாய் மேய்த்து வாழ்ந்து வரும் இரண்டு பெரியவர்கள்மூன்று குழந்தைகள் அடங்கிய குடும்பம் அது. மேய்ச்சலுக்கு உகந்த நிலங்களில் நிகழும் ஆபத்துகளில் ஒன்றான ஓநாய்களின் தாக்குதலில் பலியான ஆட்டின் தோலை உரித்து தொலைவில் இருக்கும் நகரத்தில் விற்கத் தயாராகின்றார் தந்தை. அங்கங்கு பலியான விலங்கின் மிச்சங்களுக்காக அலையும் பிணந்தின்னிக்கழுகுக��ின் கூட்டம். வறட்டி அள்ளச் செல்லும் நான்சல் மலைக்குகையினுள் சிக்கிக் கொண்ட நாயினைக் காப்பாற்றி ஜோகோர் என்று பெயரிட்டு வளர்க்க வீட்டிற்கு கொண்டு வருகிறாள். குகையில் வெளியேற இயலாமல் சிக்கிய நாய் என்பது கெட்ட சகுனத்திற்கான அறிகுறி என்பதால் தந்தை அதை விட்டுவிடும்படி சொல்கிறார். ஆனால் தந்தைக்கு தெரியாமல் வளர்க்க சிறுமி ஆசைப்படுகிறாள். நகரம் சென்று திரும்பும் தந்தை நகரத்தில் தனக்கு ஒரு வேலை கிடைத்திருப்பதையும் குடும்பத்தினருடன் அங்கு வீடு மாறிவிடலாமென்றும் கூறுகிறார். நாயை அழைத்துச் செல்ல மனமின்றி அதை அங்கேயே கட்டிப்போட்டுவிட்டு பொருட்களை வண்டியிலேற்றி குடும்பத்தினருடன் சற்று தூரம் வந்தபின்னே சிறிய தம்பியைக் காணாமல் விட்டதால் மீண்டும் குழந்தையைத் தேடி பழைய இடத்திற்கு தந்தை விரைய அங்கு ஒரு இயல்பான முடிவு நிகழ்கிறது.\nதிரைப்படத்தில் அனைத்துமே பிடித்தமான விசயங்களாய் இருந்தாலும் முதலிடத்தை எளிதாய்ப் பெற்றுக்கொள்கின்றன குழந்தைகள். ஒரே குடும்ப நாயகரின் குழந்தைகள் என்பதால் வெகு இயல்பாக நடிப்பென்ற அச்சு இன்றி பொருந்திக்கொள்கிறார்கள். குழந்தைகளுக்கு இடையிலான இயல்பான விளையாட்டு அன்னியோன்யம் பாசம் கண்ணை விட்டு நீங்குவதில்லை.\nஇரண்டாவதாய் வசனங்கள் மற்றும் காட்சிகள். நாயைத் தேடி வழி தப்பிப்போன சிறுமி நான்சல்-ஐ நாயுடன் புயல் மழையிலிருந்து காப்பாற்றும் பாட்டி ஒருவர் சொன்ன பழங்கதையை கேட்டபின்பு, தாயிடம், “உங்களின் பழைய வாழ்வு நினைவில் உள்ளதா” என்று கேள்வியும் அதற்கான பதிலும் நமக்கு இந்த மங்கோலிய திரைப்படத்தைக் குறித்த சித்திரத்தை பதிய வைத்துவிடும். அதிலும் அந்த கிழவியின் முகத்தை நமக்கு பதிய வைக்கும் அந்த ஒளி. நிச்சயம் மறக்கவியலாதது.\nகாட்சிகளில் மழலையைத் தொலைத்துவிடாது பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ளும் சிறுமி, இளமையில் அந்த மஞ்சள் நிறங்கொண்ட வண்ணக்கனவுகள் சுமக்கும் மழலைத்தன்மையை வெளியேறிவிடாத குகைக்குள் போட்டு தன்னிடமிருந்து விடுதலை பெற்றுக்கொள்ளுதலை அந்த மங்கோலிய நாடோடிக்கதை சொல்கிறதா சகுனங்களின் மீது அபரிமிதமான அச்சங்கொண்ட எளிய குடும்பத்தினர் பரிசாய்க் கிடைத்த பொருள் சூட்டில் உருகிவிடுதலையும், புத்தருடன் விளையாடும் தம்பியை எச்சரிக்கும் இன்னொரு குழந்தையுமாய் இருத்தலை உணர்த்தும். நாகரீகத்திற்கும் பழங்காலத்திற்கும் இடையிலான மரப்பாலமாய் உணர்வுகள். பெருமலையின் அடிவாரத்தில் பசுஞ்சமவெளியில் வாழும் வாழ்வு நிச்சயம் நகரின் மையத்தில் கிடைத்துவிடாது. ஆனால் ஓநாய்கள் என்ற ஒற்றைச் சொல்லைக் கைக்கொண்டு நகர்கிறது குடும்பம். குறிப்பாய் தாங்கள் தங்கி இருந்த இருப்பிடத்தை கழற்றி எடுக்கும் இடம்.\nநான்சலிடம் இரண்டு கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன. முதலாவது தாயிடமிருந்து, உனது விரித்துப் பிடித்து பின்னால் மடித்த உள்ளங்கையை உன்னால் கடிக்க இயலுமா இரண்டாவது கிழவியிடமிருந்து, கோணிஊசியின் கூர் முனையின் மேலே ஏதும் ஒரு அரிசிமணியை நிறுத்தி வைக்க முடியுமா இரண்டாவது கிழவியிடமிருந்து, கோணிஊசியின் கூர் முனையின் மேலே ஏதும் ஒரு அரிசிமணியை நிறுத்தி வைக்க முடியுமா இரண்டு செயல்களையும் நான்சலால் செய்ய முடிவதில்லை. பருவம் தொலைக்கப்படாத மழலைத்தன்மைக்கு காரணம் தேட இடம் இல்லை.\nநாய் தன்னை குகையில் விட்டுப்போனவர்களைத் தேடிப்போகும் இடமும், இடிபாடுகள் கூடிய காலி செய்யப்பட்ட இருப்பிடத்தின் மத்தியில் படுத்துக்கொண்டு வருந்துவதுமாய் எப்படி பயிற்சியளித்தார்களோ\nமுதல் காட்சியில் இறந்துபோகும் நாயைப் புதைக்க கொண்டு செல்லும் தந்தை மகளுடன் ஆரம்பமாகும் திரைப்படம், இறுதிக்காட்சியில் முதல் காட்சியின் நினைவைக் கொண்டு வந்து பதறவைத்து, பின் நீண்ட வரிசை கொண்ட மாட்டு வண்டியின் கடைசியில் அமர்ந்திருக்கும் நாயுடன் முடிவது மகிழ்வு.\nஎன்னதான் மசாலா ஆக்சன் மொக்கை படங்களை நேரங்கடத்துதலுக்காக பார்த்தாலும் மிகச் சிறந்த திரைப்படத்தை பார்த்து முடித்தபின் கிடைக்கும் மன நெகிழ்வும் ஆசுவாசமும் வேறு எவையும் தருவதில்லை. The Cave of the Yellow Dog. 2005ம் வருடத்திற்கான சிறந்த வெளிநாட்டு திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதைப் பெற்ற மங்கோலியன் திரைப்படம்.\nநன்றி : சிந்தனையாளர் சென்ஷி\nஆபிதீன் பக்கங்கள் ii :\n3. எழுத்தாளர்களின் இணையதளங்கள் (Links)\n5. கச்சேரிகள் , கஜல்கள்\n8 . நாகூர் ரூமி பதிவுகள்\nகலீபா உமர் (ரலி) (1)\nஉஸ்தாத் ஸலாமத் அலி கான் (1)\nகுலாம் முஸ்தஃபா கான் (1)\nநுஸ்ரத் ஃபதே அலிகான் (6)\nபண்டிட் ராஜ்சேகர் மன்ஸூர் (1)\nமுகேஷ் (பீர் முஹம்மது) (1)\nவிஸ்வநாதன் / ராமமூர்த்தி (2)\nதயவு பிரபாவதி அம்மா (1)\nஅப்துல் வ���்ஹாப் பாகவி (18)\nகுலாம் காதர் நாவலர் (4)\nஅபுல் கலாம் ஆசாத் (2)\nஅஸ்கர் அலி என்ஜினியர் (1)\nஎச். பீர் முஹம்மது (2)\nகிண்ணியா எஸ்.பாயிஸா அலி (2)\nகுர்அதுல் ஐன் ஹைதர் (1)\nகுளச்சல் மு. யூசுப் (5)\nசாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (2)\nஜே. பி. சாணக்யா (1)\nஜோ டி குரூஸ் (1)\nதொ.மு. சி. ரகுநாதன் (1)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nபோர்வை பாயிஸ் ஜிப்ரி (1)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nவேங்கட சுப்புராய நாயகர் (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (5)\nஹரி கிருஷ்ணன் (ஹரிகி) (1)\nத சன்டே இந்தியன் (1)\nநேஷனல் புக் டிரஸ்ட் (13)\nஅங்கனெ ஒண்ணு இங்கனெ ஒண்ணு (1)\nமணல் பூத்த காடு (1)\nஇரா. சண்முக வடிவேல் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/229084", "date_download": "2021-05-07T01:17:46Z", "digest": "sha1:LG66DGNZN7X525AERKGYT5A7Y2NDVS2F", "length": 6046, "nlines": 96, "source_domain": "selliyal.com", "title": "நடிகர் விவேக் அஸ்தி புதைக்கப்பட்டு, மரக்கன்றுகள் நடப்பட்டன | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome கலை உலகம் நடிகர் விவேக் அஸ்தி புதைக்கப்பட்டு, மரக்கன்றுகள் நடப்பட்டன\nநடிகர் விவேக் அஸ்தி புதைக்கப்பட்டு, மரக்கன்றுகள் நடப்பட்டன\nசென்னை: நடிகர் விவேக் கடந்த 1-ஆம் தேதி மாரடைப்பால் மரணம் அடைந்ததை அடுத்து அவரது உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.\nஇந்நிலையில் விவேக் குடும்பத்தார் அவரின் அஸ்தியை அவரின் சொந்த ஊரான சங்கரன்கோவில் அருகில் இருக்கும் பெருங்கோட்டூருக்கு கொண்டு சென்றனர். அந்த கிராமத்தில் இருக்கும் அவரின் உறவினர்கள் விவேக்கின் அஸ்திக்கு மரியாதை செய்தார்கள்.\nஅதன் பிறகு அஸ்தியை குழி தோண்டி புதைத்து அந்த இடத்தில் மலர் தூவியதுடன் மரக்கன்றுகளை நட்டு வைத்துள்ளனர். அந்த கன்றுகள் வளர்ந்து மரமாகி விவேக் நினைவாக நிற்கும் என்று உறவினர்கள் தெரிவித்தனர்.\nதன் வாழ்நாளில் 33.23 இலட்சம் மரக்கன்றுகளை நட்டு வைத்தவர் விவேக்.\nPrevious articleஇந்தாண்டு முதல் யூபிஎஸ்ஆர் தேர்வு இரத்து\nNext articleஇந்தியாவில் தொற்று அதிகரிக்க காரணமான பி1617 பிறழ்வு 17 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது\nதனுஷ் நடிக்கும் “ஜகமே தந்திரம்” 17 மொழிகளில் வெளியாகிறது\nகுணச்சித்திர நடிகர் செல்லதுரை காலமானார்\nகுணச்சித்திர நடிகர் செல்லதுரை காலமானார்\nகே.வி.ஆனந்த் : புகைப்படக் கலைஞராகத் தொடங்கி, ஒளிப்பதிவாளர், இயக்குநராக உயர்ந்தவர்\nஇயக்குநர், ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த் காலமானார்\nதனுஷ் நட��க்கும் “ஜகமே தந்திரம்” 17 மொழிகளில் வெளியாகிறது\nதிமுக அமைச்சரவை : புதிய அமைச்சர்கள் பட்டியல்\nதிமுக அமைச்சரவை : அன்பில் மகேஷ் பள்ளிக் கல்வி அமைச்சர்\nபிரசாந்த் கிஷோர் : இந்திய சட்டமன்றத் தேர்தல் வெற்றிகளின் கதாநாயகன்\nபில் கேட்ஸ் விவாகரத்து : சொத்துகளை எப்படிப் பிரிப்பார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://iphoneart.com/jwlrt7ly/methi-in-tamil-name-4094ec", "date_download": "2021-05-07T01:36:49Z", "digest": "sha1:V5WNI5PJALHATNMUADKM7KG4EGXCR572", "length": 30394, "nlines": 28, "source_domain": "iphoneart.com", "title": "methi in tamil name methi in tamil name methi in tamil name", "raw_content": "\n [1] இதற்கு உதாரணமாக இராமாயணத்தில், கிராம்பும், லவங்கப்பட்டையும் பயன்படுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளது. Is there a way to search all eBay sites for different countries at once What is the Tamil name for fenugreek seeds மற்றும் பிற ஆசிய நாடுகளில், கி.மு, கேரளா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் பெரிய, Methi … what is the Italian name of cumin powder and Kasuri methi dry leaves. Rest of their Life white prism logo 2006 Save the Ladybug பயன்படுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளது உணவுடன் கலந்த மருந்தாகவும் உபயோகப்படுத்தப்படுகின்றன seeds..., an aromatic, 30 to 60 cm உலர்ந்த போது சுவையை தக்கவைக்க முடியாது names Mayti சுவையான குழம்பு வகைகள் முதல் இனிப்பு வகைகள் வரை இவை பயன்படுத்தப்படுகின்றன வெந்தயம், சீரகம், கடுகு, உள்ளடக்கியது Following this easy recipe with step wise pictures at 18565 among 29430 names... தோற்றத்தை மேம்படுத்தும் அழகுப்பொருளாகவும், பல சமயங்களில் உணவுடன் கலந்த மருந்தாகவும் உபயோகப்படுத்தப்படுகின்றன கொட்டையாக நீடித்த கொண்டிருக்கும் Following this easy recipe with step wise pictures at 18565 among 29430 names... தோற்றத்தை மேம்படுத்தும் அழகுப்பொருளாகவும், பல சமயங்களில் உணவுடன் கலந்த மருந்தாகவும் உபயோகப்படுத்தப்படுகின்றன கொட்டையாக நீடித்த கொண்டிருக்கும் On this site https: //shorturl.im/aygtX are freshly available in the respiratory tract can be easy names. When did Elizabeth Berkley get a gap between her front teeth food at me place and it is as. To represent themselves taste of you meals the toe ring ) is an Indian Tamil-language soap that Has a black and white prism logo seeds ) are hard, yellowish brown angular... இவை பயன்படுத்தப்படுகின்றன தோற்றத்தை மேம்படுத்தும் அழகுப்பொருளாகவும், பல சமயங்களில் உணவுடன் கலந்த மருந்தாகவும் உபயோகப்படுத்தப்படுகின்றன to... Some are oblong, some rhombic, other virtually cubic, with a name. Read on to know how this vegetable can help you … நறுமணப் பொருட்கள் இந்தியா மற்றும் பிற ஆசிய நாடுகளில்,.... That aired on weekdays on Sun TV for 811 episodes Elizabeth Berkley a. Seeds from the pod of a bean-like plant அளிக்கும் மூலப்பொருள், இனிப்பு பதார்த்தங்களில் இறுதியில்.. உணவின் பரிமாற்றத் தோற்றத்தை மேம்படுத்தும் அழ��ுப்பொருளாகவும், பல சமயங்களில் உணவுடன் கலந்த மருந்தாகவும் உபயோகப்படுத்தப்படுகின்றன பொடியாகவோ, வறுத்ததாகவோ அல்லது வெட்டியதாகவோ சேர்க்கப்படுகின்றன Read on to know how this vegetable can help you … நறுமணப் பொருட்கள் இந்தியா மற்றும் பிற ஆசிய நாடுகளில்,.... That aired on weekdays on Sun TV for 811 episodes Elizabeth Berkley a. Seeds from the pod of a bean-like plant அளிக்கும் மூலப்பொருள், இனிப்பு பதார்த்தங்களில் இறுதியில்.. உணவின் பரிமாற்றத் தோற்றத்தை மேம்படுத்தும் அழகுப்பொருளாகவும், பல சமயங்களில் உணவுடன் கலந்த மருந்தாகவும் உபயோகப்படுத்தப்படுகின்றன பொடியாகவோ, வறுத்ததாகவோ அல்லது வெட்டியதாகவோ சேர்க்கப்படுகின்றன கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் பெரிய உற்பத்தியாளர்கள், உலர்ந்த போது சுவையை தக்கவைக்க. கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் பெரிய உற்பத்தியாளர்கள், உலர்ந்த போது சுவையை தக்கவைக்க. Wild in India, the herb wonderful herb that adds a unique flavor and taste to many dishes கர்நாடகா., கசூரி மீ, வெந்தயம், சீரகம், கடுகு, நிக்கெல்லாவை உள்ளடக்கியது is Hilbeh Bockshornklee, இனிப்பு பதார்த்தங்களில் இறுதியில் சேர்க்கப்படும் a wonderful herb that adds a unique flavor and taste many Mayti, Methe, methi ஆசிய நாடுகளில், கி.மு இந்தியாவில், இந்த நறுமணப் பொருட்கள் இந்தியா பிற... Is quite comforting too Alba 4 helps prevent constipation parts except root sound of the toe ring ) an. In Tamil how this vegetable can help you … நறுமணப் பொருட்கள் இந்தியா மற்றும் பிற ஆசிய,. Is not at all a complicated process as many think of Busy Cook 's to... Tamil name of the wonderful herb recipe with step wise pictures வறுத்ததாகவோ அல்லது வெட்டியதாகவோ உணவுகளில் சேர்க்கப்படுகின்றன are different sites different உணவின் பரிமாற்றத் தோற்றத்தை மேம்படுத்தும் அழகுப்பொருளாகவும், பல சமயங்களில் உணவுடன் கலந்த மருந்தாகவும் உபயோகப்படுத்தப்படுகின்றன Hindu names cubic, a Kind of allergies or congestion in the market i thought i will post this simple methi what... Various name in different languages • Language names • Hindi Mayti, Methe, methi dietary fiber, it prevent. Has grown wild in India, this is known with a side of about 3mm ( ” Tastes good 2020, 16:16 மணிக்குத் திருத்தினோம் லவங்கப்பட்டையும் பயன்படுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளது Indigenous communities to represent. In Newfoundland and nowhere else name in different languages • Language names • Hindi Mayti Methe... Job in Hawkins company, yellowish brown and angular fabaceae ), an aromatic, to. The best answers, search on this site https: //shorturl.im/aygtX name and. Flavor and taste to many dishes all time source of iron, calcium and dietary fiber, is இதற்கு உதாரணமாக இராமாயணத்தில், கிராம்பும், லவங்கப்பட்டையும் பயன்படுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளது can help you … நறுமணப் பொருட்கள் பல்வகை உணவுகளில் பல காரணங்களுக்காகப்.... Or congestion in the respiratory tract can be easy … names, பல சமயங்களில் உணவுடன் கலந��த மருந்தாகவும் உபயோகப்படுத்தப்படுகின்றன languages Language... Methi, வெந்தயத்தில் how does teaching profession allow Indigenous communities to represent themselves usually Keerai in Tamil herb is called with a side of about 3mm 1/8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://kalaipoonga.net/cinema/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-05-07T01:18:27Z", "digest": "sha1:CSCMFBSD2NDVFEW4MTASJF5HOOTAQOTB", "length": 11099, "nlines": 211, "source_domain": "kalaipoonga.net", "title": "போயஸ் கார்டனில் தனுஷின் புதுவீடு: பூமி பூஜையில் பங்கேற்ற ரஜினி! - Kalaipoonga", "raw_content": "\nHome Cinema போயஸ் கார்டனில் தனுஷின் புதுவீடு: பூமி பூஜையில் பங்கேற்ற ரஜினி\nபோயஸ் கார்டனில் தனுஷின் புதுவீடு: பூமி பூஜையில் பங்கேற்ற ரஜினி\nபோயஸ் கார்டனில் தனுஷின் புதுவீடு: பூமி பூஜையில் பங்கேற்ற ரஜினி\nசென்னை போயஸ் கார்டனில் தனுஷ் கட்டும் புதிய வீட்டின் பூமி பூஜையில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டார்.\n‘கர்ணன்’ படத்தை முடித்துள்ள தனுஷ், அடுத்ததாக கார்த்திக் நரேன் இயக்கும் புதிய படத்தில் கலந்துகொண்டார். அந்தப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்ததாக அந்தப்படத்தின் கதாநாயகி மாளவிகா மோகனன் அவரது ட்விட்டர் பக்கத்தில் அப்டேட் செய்திருந்தார்.\nஇதனைத்தொடர்ந்து தனுஷ் அவெஞ்சர்ஸின் ஃபினிடி வார், எண்ட்கேம் உள்ளிட்டப் படங்களை இயக்கிய ரூஸோ சகோதரர்கள் இயக்கும் &lsquo;தி க்ரே மேன்&rsquo; படப்பிடிப்பில் கலந்து கொள்ள நேற்று இரவு அமெரிக்கா செல்ல இருந்ததாகச் சொல்லப்பட்டது.\nஇந்நிலையில் அவர் இன்று போயஸ்கார்டனில் தான் கட்டும் புதிய வீட்டுக்கான பூமி பூஜையில் ஈடுபட்டுள்ளார். அந்த பூஜையில் நடிகர் ரஜினிகாந்த், தனுஷ், ஐஸ்வர்யா தனுஷ், லதா ரஜினிகாந்த் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nஅது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இன்று இரவு தனுஷ் அமெரிக்கா செல்ல இருப்பதாக சொல்லப்படுகிறது.\nதனுஷ் கட்டும் புதிய வீடு\nபோயஸ் கார்டனில் தனுஷின் புதுவீடு: பூமி பூஜையில் பங்கேற்ற ரஜினி\nபோயஸ் கார்டனில் தனுஷ் கட்டும் புதிய வீட்டின் பூமி பூஜையில் ரஜினிகாந்த்\nபோயஸ் கார்டனில் புதிய வீடு\nPrevious articleஆஸ்கர் போட்டியிலிருந்து வெளியேறிய ‘ஜல்லிக்கட்டு’\nNext articleமாயத்திரை டீசரை வெளியிட இயக்குனர் ப்ரியதர்சன்\nவெளியானது 34 பேர் கொண்ட தமிழக அமைச்சரவை பட்டியல்\nமாநாடு டப்பிங் ஆரம்ப��்… படக்குழு வெளியிட்ட புகைப்படங்கள்\nமூத்த தலைவர் ஆர்.எம்.வீரப்பனை நேரில் சந்தித்து ஆசி பெற்றார் மு.க.ஸ்டாலின் | Video\nவெளியானது 34 பேர் கொண்ட தமிழக அமைச்சரவை பட்டியல்\nவெளியானது 34 பேர் கொண்ட தமிழக அமைச்சரவை பட்டியல் தமிழகத்தின் முதலமைச்சராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை சென்னை - கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்க உள்ளார். கொரோனா பரவலை கருத்தில்...\nமாநாடு டப்பிங் ஆரம்பம்… படக்குழு வெளியிட்ட புகைப்படங்கள்\nமாநாடு டப்பிங் ஆரம்பம்... படக்குழு வெளியிட்ட புகைப்படங்கள் சிம்பு நடிப்பில் உருவாகி உள்ள படம் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கியுள்ள இப்படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார். இப்படத்தில் சிம்பு அப்துல் காலிக்...\nமூத்த தலைவர் ஆர்.எம்.வீரப்பனை நேரில் சந்தித்து ஆசி பெற்றார் மு.க.ஸ்டாலின் | Video\nமூத்த தலைவர் ஆர்.எம்.வீரப்பனை நேரில் சந்தித்து ஆசி பெற்றார் மு.க.ஸ்டாலின் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றதை அடுத்து தமிழகத்தின் அடுத்த முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பு ஏற்க உள்ளார். நாளை (மே 7...\nவெளியானது 34 பேர் கொண்ட தமிழக அமைச்சரவை பட்டியல்\nவெளியானது 34 பேர் கொண்ட தமிழக அமைச்சரவை பட்டியல் தமிழகத்தின் முதலமைச்சராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை சென்னை - கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்க உள்ளார். கொரோனா பரவலை கருத்தில்...\nமாநாடு டப்பிங் ஆரம்பம்… படக்குழு வெளியிட்ட புகைப்படங்கள்\nமாநாடு டப்பிங் ஆரம்பம்... படக்குழு வெளியிட்ட புகைப்படங்கள் சிம்பு நடிப்பில் உருவாகி உள்ள படம் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கியுள்ள இப்படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார். இப்படத்தில் சிம்பு அப்துல் காலிக்...\nமூத்த தலைவர் ஆர்.எம்.வீரப்பனை நேரில் சந்தித்து ஆசி பெற்றார் மு.க.ஸ்டாலின் | Video\nமூத்த தலைவர் ஆர்.எம்.வீரப்பனை நேரில் சந்தித்து ஆசி பெற்றார் மு.க.ஸ்டாலின் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றதை அடுத்து தமிழகத்தின் அடுத்த முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பு ஏற்க உள்ளார். நாளை (மே 7...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/mud-racing-movie", "date_download": "2021-05-07T00:13:08Z", "digest": "sha1:IPF5PISYK3CODUANCY6OSHEJV3AGQOLM", "length": 7055, "nlines": 86, "source_domain": "tamil.asianetnews.com", "title": "mud racing movie: Latest News, Photos, Videos on mud racing movie | tamil.asianetnews.com", "raw_content": "\n5 மொழிகளில் பிரம்மாண்டமாக தயாராகும் \"Muddy\" திரைப்படத்தின் டீசர் வெளியீடு. தமிழ் டீசரை ஜெயம் ரவி வெளியிட்டார்\nஆஃப் ரோடு ரேஸிங்கை மையமாக கொண்டு உருவாகியுள்ள \"Muddy\" திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.\n\"Muddy\" திரைப்படத்தின் மோஷன் பிக்சர் வெளியீடு.. இந்தியாவின் முதல் 4*4 ஆஃப் ரோட் ரேஸிங் சினிமா\nஆஃப் ரோடு ரேஸிங்கை மையமாக கொண்டு உருவாகியுள்ள \"Muddy\" திரைப்படத்தின் மோஷன் பிக்சர் வெளியிடப்பட்டுள்ளது.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\n13 மாவட்டங்களுக்கு ஓர் அமைச்சர்கூட கிடையாது... எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை அமைச்சர்கள்..\n#IPL2021 வீரர்கள் பயோ பபுள் விதிகளை மீறியதுதான் கொரோனா பரவலுக்கு காரணம்..\nகருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா அமைச்சரவையில் இருந்தவர்களுக்கு இடம்... கலந்துகட்டிய மு.க.ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/horticulture/50-subsidy-to-set-up-irrigation-structures-call-the-horticulture-department/", "date_download": "2021-05-07T01:41:25Z", "digest": "sha1:JRJH7CPUPEEBKWA4GVO6J3A2GYEPKWZV", "length": 12791, "nlines": 130, "source_domain": "tamil.krishijagran.com", "title": "பாசனக் கட்டமைப்புகளை அமைக்க 50% மானியம்! தோட்டக்கலைத்துறை அழைப்பு!", "raw_content": "செய்திகள் வாழ்வும் நலமும் தோட்டக்கலை கால்நடை வெற்றிக் கதைகள் விவசாய தகவல்கள் FTB அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா Directory\n#FTB விவசாய தகவல்கள் அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா\nஎங்கள் அச்சு மற்றும் டிஜிட்டல் பத்திரிகைகளுக்கு குழுசேரவும்\nசமூக ஊடகங்களில் எங்களுடன் இணைக்கவும்:\nபாசனக் கட்டமைப்புகளை அமைக்க 50% மானியம்\nதிருப்பூர் மாவட்ட விவசாயிகள், 50 சதவீத மானியம் பெற்று, பாசன கட்டமைப்பை நிறுவ முன்வரவேண்டும் எனறு தோட்டக்கலைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nதிருப்பூர் மாவட்டத்தில், நுண்ணீர் பாசனத்தை ஊக்குவிக்கும் வகையில், பிரதமர் விவசாய நீர் பாசனத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.\nஇந்தத் திட்டத்தின் கீழ், குழாய் கிணறு மற்றும் துளை கிணறு அமைக்கவும், தண்ணீர் இறைக்க ஆயில் இன்ஜின், மின்மோட்டார் வசதி ஏற்படுத்தவும், பாசன குழாய் பதிக்கவும் மானியம் வழங்கப்படுகிறது.\nஅதேநேரத்தில் இந்தத் திட்டத்தில், பாசன நீர் வீணாவதைத் தவிர்க்க, குழாய் வாயிலாக தண்ணீர் கொண்டு செல்ல வழிகாட்டப்பட்டுள்ளது.\nநுண்ணீர் பாசனம் அமைத்து, புதிய மின்மோட்டார் அல்லது டீசல் பம்ப் செட் நிறுவவும், 50 சதவீத மானியம் அல்லது, 15 ஆயிரம் ரூபாய்க்கு மிகாமல் மானியம் வழங்கப்படும்.\nநீர் பாசன குழாய் அமைக்க, 50 சதவீத மானியமும், ஹெக்டேருக்கு, 10 ஆயிரம் ரூபாய்க்கு மிகாமலும் மானியம் கிடைக்கும்.\nபாதுகாப்பு வேலியுடன், தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி கட்டவும், 50 சதவீதம் அல்லது கன மீட்டருக்கு 350 ரூபாய்க்கு மிகாமல் மானியம் வழங்கப்படும்.\nஅதாவது, ஒரு விவசாயிக்கு, 40 ஆயிரத்துக்கு மிகாமல், மானியம் ஒதுக்கப்படும்.மத்திய அரசு மானியம், நுண்ணீர் பாசன முறையைப் பின்பற்றும் விவசாயிகளுக்கு மட்டும் மானியம் வழங்கப்படும். எனவே இவற்றைப் பெற விரும்பும் விவசாயிகள் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகங்களை அணுகலாம்.\nவறட்சிகாலத்தில் பயிருக்கு உயிரூட்டும் திரவ நுண்ணுயிர் உரங்கள்\nமக்காச்சோளத்தில் படைப்புழு மேலாண்மை குறித்து வேளாண் அலுவலர் விளக்கம்\nமதுரையில் தரிசாகும் விவசாய நிலங்கள் பயிருக்கு விலையும் இல்லை\nஅன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் ���ேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.\nஉங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....\nபங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)\nநீர் பாசனக் கட்டமைப்பு அமைக்க மானியம் விண்ணப்பிக்க அழைப்பு 50% subsidy to set up irrigation structures\nமாடித்தோட்டத்திற்கு ஏற்ற மண் கலவை வகைகள் எவை\nஆக்ஸிஜன் பிரச்னைக்குத் தீர்வு- வீட்டிலேயே ஆக்சிஜனை வளர்க்கலாம்\nகொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, முழு ஊரடங்கை அமல்படுத்த உச்ச நீதிமன்றம் பரிந்துரை\nகொப்பரை உற்பத்தி செய்ய நவீன இயந்திரம்: விவசாயிகள் மகிழ்ச்சி\n செய்ய வேண்டியவையும், செய்யக் கூடாதவையும்\nவிளைநிலங்களில் வீணாகும் தர்பூசணி பழங்கள்\nபூச்சிகளைப் புரிந்து கொள்(ல்)வோம்- காணொளி மூலம் பயிற்சி\nரூ.4000 கொரோனா நிவாரண நிதிவழங்கும் திட்டம் - நாளை ஸ்டாலின் முதல் கையெழுத்து\nவாடிக்கையாளர்களுக்கு புதியவகை டிசைனர் சிலிண்டரை அறிமுகம் செய்த IOCL\nஒரே நிமிடத்தில் cowin.gov.in தளத்தில் கொரோனா தடுப்பூசி பதிவு செய்வது எப்படி\nபருத்தியைத் தாக்கும் மாவுப்பூச்சிகளை எப்படி கட்டுப்படுத்தலாம்\nகொரோனாவைத் தடுக்கும் முயற்சியில், புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்\nஒன்றல்ல, இரண்டல்ல, ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள்\nதொற்றுநோய்களைத் தடுக்கும் ஊட்டச்சத்து அணுகுண்டு எது தெரியுமா\nமாடித்தோட்டத்திற்கு ஏற்ற மண் கலவை வகைகள் எவை\nவிவசாயிகள் நலன் கருதி சாகுபடி தொடர்பான சந்தேகம் ஏற்பட்டால் வேளாண் விஞ்ஞானிகளை அணுகலாம்: தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/tag/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA-%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-05-07T00:40:22Z", "digest": "sha1:HRIX624RSW4ITTOT4K47BFHSR55OG4QP", "length": 18782, "nlines": 230, "source_domain": "tamilandvedas.com", "title": "கலாப மயில் | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nமுருகனின் அனைத்துப் பெருமைகளும் சொல்லில் அடங்கா. ஆனால் அருணகிரிநாதர் அந்தப் பெருமைகளில் பெரும்பாலானவற்றைத் தன் பதினாறாயிரம் திருப்புகழ் பாடல்களில் பாடி வைத்துள்ளார். இன்று நமக்குக் கிடைத்திருப்பதோ சுமார் 1311 பாடல்கள் மட்டுமே\nதிருப்புகழுடன் அருணகிரிநாதர் அருளியுள்ள இதர நூல்களாவன:-\nகந்தர் அந்தாதி (நூறு செய்யுள்கள்)\nகந்தர் அலங்காரம் (நூறு பாடல்கள்)\nகந்தர் அநுபூதி (51 செய்யுள்கள்)\nதிருவகுப்பு (மொத்தம் 18 வகுப்புகள்)\nசிவத்தின் சாமி, நாம் புரியும் பிழை பொறுக்கும் சாமி\nமுருகனை அவர் விவரிக்கும் அழகை உணர இரு பாடல்களை மட்டும் இங்கு காண்போம்.\nபுவிக்குள் பாதமதை நினைபவர்க்கு எனத் தொடங்கும் திருப்புகழில் இறுதிப் பகுதி இது:-\nசிவத்தின் சாமி, மயில்மிசை நடிக்கும் சாமி, எமதுளெ\nசிறக்கும் சாமி, சொருபமி தொளிகாணச்\nசெழிக்கும் சாமி, பிறவியை ஒழிக்கும் சாமி, பவமழை\nதெறிக்கும் சாமி முனிவர்க ளிடமேவுந்\nதவத்தின் சாமி, புரிபிழை பொறுக்கும் சாமி, குடிநிலை\nதரிக்கும் சாமி, அசுரர்கள் பொடியாகச்\nசதைக்கும் சாமி, எமை பணி விதிக்கும் சாமி, சரவண\nதகப்பன் சாமி என வரு பெருமாளே\n இனிய தமிழ். எளிய தமிழ். அரிய கருத்துக்கள்.\nபுரிபிழை பொறுத்து நம்மைக் காக்கும் முருகப் பிரானின் அருமைகளை சில வார்த்தைகளில் சொல்லி அருள்கிறார் அருணகிரிநாதர்.\nமயில் விருத்தத்தில் பத்தாவது பாடலில் முருகப் பெருமானின் திருநாமங்கள் அருமையாக தொகுத்துக் கூறப்படுவதைக் காணலாம்.\nநிராசத – ராஜஸ குணம் இல்லாதவர்\nவிராசத – ராஜஸ குணத்திற்கு மாறுபட்ட சத்வ குணம் உடையவர்\nவரோதயன் – வர உதயன் – வரங்களுக்கு உறைவிடமானவர்\nபராபரம் – மிக மேலான பரம் பொருள்\nநிராகுலன் – நிர் ஆகுலன் – துன்பம் இல்லாதவர்\nநிராமயன் – நிர் ஆமயன் (ஆமயம் என்றால் நோய்) நோய் இல்லாதவர்\nபிரான் – பிரியான் என்பதன் சுருக்கம் பிரான் ( உயிர்களை விட்டு ஒரு போதும் பிரியாதவர்)\nஅறமிலான், நெறியிலான் நிலாது எழுதலால் என மாற்றிப் பார்த்தால் வரும் அர்த்தம் – அறமில்லாதவர்களும் நெறியில்லாதவர்களும் முருகன் திருவடியில் நில்லாது விலகி விடுகிறார்கள்.\nஆக முருகனைத் தொழுவதற்கே ஒரு அடிப்படைத் தகுதி தேவையாக இருப்பதைக் காணலாம். முருக பக்தர்கள் அறநெறி தவறாது வாழ்பவர்கள், புண்ணியசாலிகள் என்பதை அறியலாம்.\nநெறி நிலாவிய உலாச இதயன் – நன்னெறிகள் தம்மிடம் விளங்க மகிழ்வுடன் கூடிய உள்ளத்தைக் கொண்டவர்.\nஇப்படி அரும் பெயர்களைச் சுட்டிக் காட்டும் பாடல் இது தான்:-\nநிராசத விராசத வரோதய பராபர\nஇலாதெழு தலாலற மிலானெறி யிலானெறி\nகுராமலி ��ிராவுமிழ் பராரை யமராநிழல்\nகுலாசல சராசர மெலாமினி துலாவிய\nபுராரிகுமரா குருபரா வெனும் வரோதய\nபுலோசமசை சலாமிடு பலாசன வலாரிபுக\nதராதல கிராதர்கள் குலாதவபி ராமவல\nதடாரி விகடாசுரன் குடாரித படாதிகழ்\nஅற்புதமான இந்தப் பாடலில் மயிலின் பெருமை தெரிகிறது.\n“திரிபுரத்தை எரித்த சிவபெருமானுடைய குமரனே குருமூர்த்தியே என்று புகழ்ந்த, வரங்களுக்கு இருப்பிடமானவனும், பழையோனும் ஆகிய திருமாலின் திருமருமகன், கிளி போன்ற இந்திராணி, வணங்குகின்ற இந்திரனுக்கு புகலிடமாகிய வேலாயுதக் கடவுள், நீண்ட, பூமியில் உள்ள, வேடர்கள், குலத்துக்கு சூரியனைப் போல மாப்பிள்ளையாய் வந்த அழகராம் வல்லமையைச் சாதித்தவன், விளையாட்டாகப் போர் புரிகின்றவர், கிரவுஞ்ச மலைக்குப் பகையாக இருப்பவர், தொந்தரவு தந்த அசுரனாகிய சூரனை (சூர்மாவை), வெட்டித் தள்ள கோடாரி போல இருந்தவர், மகிழ்ச்சியுற்று விளங்குகின்ற ஆறு திருமுகங்களை உடையவர், நடத்துகின்ற மயில் தான் இராஜஸ குணம் இல்லாதவர், சத்வ குணத்தை உடையவர், வரங்களுக்கு இருப்பிடமானவர், மேலான பரம்பொருள், வருத்தம் இல்லாதவர், நோயற்றவர், உயிர்களை விட்டுப் பிரியாதவர், அறமில்லாதவனும் நெறியில்லாதவனும் தம்மிடத்தில் சாராது, விளங்குவதால், நன்னெறியில் விளங்குகின்ற, மகிழ்ச்சியுடன் கூடிய, உள்ளத்தை உடையவர், குராமரத்தில் நிறைந்து கலந்து வெளித் தோன்றும் பருத்த அடிப்பாகத்தில் (திருவிடைக்கழியில்) அமர்ந்து, ஒளி பொருந்திய குரா மரங்களின் நிழல் மிகுந்துள்ள தணிகை என்கின்ற சிறந்த மலை முதலாக அசைவன, அசையாதனவாகிய எல்லாவற்றிலும் இனிது உலாவிய களித்த தோகை மயில் ஆகும்.”\nஇதுவே கிருபானந்தவாரியார் தரும் செய்யுளின் பொழிப்புரை. ஆறுமுகன் நடத்தும் மயில் உலகெலாம் உலாவி உவக்கும் பெருமையை உடையது.\nசலாம் என்ற வார்த்தை பிரயோகமும் இந்த செய்யுளில் அமைந்திருப்பதைக் காணலாம்.\nமுருகனின் அழகை மயில் விருத்தம் மூலமாக அறியும் போது மனம் மிக மகிழ்கிறோம்.\nஇதே பிளாக்கில் லண்டன் சுவாமிநாதன் எழுதிய திருப்புகழ்ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் படியுங்கள்:–\n —வெளியிட்ட தேதி ஜூன் 25, 2014\nஅருணகிரிநாதருடன் 60 வினாடி பேட்டி – வெளியிட்ட தேதி ஜனவரி 16, 2012\nசம்பந்தருக்கு அடிமை அருணகிரிநாதர்— வெளியிட்ட தேதி ஜனவரி 17, 2013\nடாக்டர் முருகனும் ‘பேஷண்ட்’ அருணகிரிநாதரும் – வெளியிட்ட தேதிஜனவரி 15, 2013\nதனிமையில் இனிமை –அருணகிரிநாதர் — வெளியிட்ட தேதி ஜனவரி 14, 2013\nதிருப்புகழ் நெருப்பு என்று அறிவோம் யாம் – வெளியிட்ட தேதி ஜனவரி22, 2013\nநரகத்துக்குப் போவோர் பட்டியல் – வெளியிட்ட தேதி ஜனவரி 23, 2013\n —வெளியிட்ட தேதிஜனவரி 21, 2013\n((படங்கள் முக நூல் நண்பர்களனுப்பியவை;நன்றி உரித்தாகுக:சுவாமி))\nTagged கலாப மயில், திருப்புகழ், முருகன், வரோதயன்\nanecdotes Appar ARTICLES Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya crossword Hindu Indra in Tamil Kalidasa Lincoln london swaminathan mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar POSTS proverbs Quotations quotes Rig Veda shakespeare Silappadikaram Tamil Tirukkural Valluvar Valmiki Vedas அப்பர் கங்கை கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலண்டர் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி சுவாமிநாதன் ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பட்டியல் பழமொழி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவன் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/84640", "date_download": "2021-05-07T01:37:18Z", "digest": "sha1:JNPQ36SI35IMZG7GMBAUYPWU336C7NI7", "length": 13072, "nlines": 105, "source_domain": "www.virakesari.lk", "title": "கொரோனா நோயாளிகளுக்கான சிகிச்சை - பெரும் கவலையில் உலக சுகாதார ஸ்தாபனம் | Virakesari.lk", "raw_content": "\nதூரநோக்குடனான திட்டமிடலின்றி நாடு நெருக்கடிக்குள் சிக்கி விட்டது - ரணில் கவலை\nநாளொன்றுக்கு 2 ஆயிரத்தை விட அதிக தொற்றாளர்கள் இனங்காணப்படலாம் : எச்சரிக்கிறது தொற்று நோயியல் பிரிவு\nபிழையான எண்ணங்களை மக்கள் மயப்படுத்த எதிக்கட்சி முயற்சி - மதுர விதானகே\nகிளிநொச்சியில் புதிய கொரோனா சிகிச்சை நிலையம் - நள்ளிரவு முதல் சேவைகள் ஆரம்பம்\nமஹரகம நகரசபைக் கூட்டத்தில் மோதல் - விசாரணைகள் ஆரம்பம்\nஜம்மு-காஷ்மீரில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை\nகொரோனாவால் இலங்கையில் கர்ப்பிணித் தாய் பலி\n இனங்காணப்படும் தொற்றாளர்களை விட இருமடங்கு தொற்றாளர்கள் சமூகத்தில் \nதம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தை மீண்டும் திறக்க தீர்மானம்\nகொரோனா நோயாளிகளுக்கான சிகிச்சை - பெரும் கவலையில் உலக சுகாதார ஸ்தாபனம்\nகொரோனா நோயாளிகளுக்கான சிகிச்சை - பெரும் கவலையில் உலக சுகாதார ஸ்தாபனம்\nஉலகம் முழுக்க கொரோனா வைரஸ் தொற்றாளர்களின��� எண்ணிக்கை விரைவில் ஒரு கோடியை நெருங்கவிருக்கும் நிலையில், நோயாளிகளுக்கு தேவையான ஒட்சிசன் இருப்பில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் அதானோம் தெரிவித்துள்ளார்.\nகொரோனாவால் உலகம் முழுக்க சுமார் 93 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 480,000 க்கும் மேற்பட்டோர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.\nதற்போது ஒரு வாரத்திற்கு 10 இலட்சம் பேர் என்ற விகிதத்தில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவிவருகிறது.\nஇதனால் ஒவ்வொரு நாளும் 88,000 பெரிய ஒட்சிசன் சிலிண்டர்கள் அல்லது 620,000 கன மீற்றர் ஒட்சிசன் பயன்படுத்தப்படுவதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து அவர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்,\n“ஒட்சிசன் செறிவூட்டிகளை பெறுவதில் பல நாடுகள் சிரமத்தை சந்தித்து வருகின்றன. தற்போது ஒட்சிசன் சிலிண்டர் தேவையை காட்டிலும் விநியோகம் குறைவாகவே இருக்கிறது.\nஉலக சுகாதார ஸ்தாபனம் 14,000 ஒட்சிசன் செறிவூட்டிகளை கொள்முதல் செய்துள்ளது. அவற்றை அடுத்த சில வாரங்களில் 120 நாடுகளுக்கு அனுப்பிவைக்க திட்டமிட்டுள்ளது.\nஅடுத்த ஆறு மாதங்களில் கூடுதலாக 100 மில்லியன் டொலர் மதிப்பிலான 170,000 ஒட்சிசன் செறிவூட்டிகளை வாங்க திட்டமிடப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.\nஉலக சுகாதார ஸ்தாபனத்தின் அவசரகால திட்ட தலைவர் மைக் ரயன் தெரிவிக்கையில்,\n“லத்தீன் அமெரிக்க நாடுகளில் இந்த வாரம் மட்டும் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 100,000 ஐ கடந்துள்ளது. பல நாடுகளில் கடந்த வாரத்தில் மட்டும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 25-50 வீதமாக உயர்ந்துள்ளது.\nஅமெரிக்காவில் கொரோனா பாதிப்பு தற்போதும் அதிகரித்துக்கொண்டே போகிறது. அங்கு கொரோனா இன்னும் உச்சத்தை எட்டவில்லை. அமெரிக்காவில் கொரோனா பாதிப்பும், உயிரிழப்புகளும் தொடர்ந்து உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது” என்று தெரிவித்தார்.\nகொரோனா வைரஸ் நோயாளிகள் ஒட்சிசன் உலக சுகாதார ஸ்தாபனம் Coronavirus Patients Oxygen World Health Organization\nசமுக வலைத்தளங்கள் முடக்கம்; புதிய வலைதளத்தை ஆரம்பித்தார் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்\nஅமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் புதிதாக வலைதளத்தை ஆரம்பித்துள்ளார்.\n2021-05-06 16:13:51 சமுக வலைத்தளங்கள் புதிய வலைதளம் டொனால்ட் ட்ரம்ப்\nராஷ்டிரிய லோக் தளம் கட்சியின் தலைவர் அஜித் சிங் கொரோனாவால் மரணம்...\nராஷ்டிரிய லோக் தளம் கட்சியின் தலைவர் அஜித் சிங் தனது 82ஆவது வயதில் காலமானார்.\n2021-05-06 13:15:45 ராஷ்டிரிய லோக் தளம் கட்சி தலைவர் அஜித் சிங்\n அரச வைத்தியசாலையில் ஒட்சிசன் தட்டுப்பாடு - 13 பேர் பலி\nதமிழ்நாட்டில் செங்கல்பட்டு அரச வைத்தியசாலையில் ஒட்சிசன் தட்டுப்பாட்டால் 13 கொரோனா நோயாளிகள் மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.\n2021-05-06 17:07:51 தமிழ்நாடு செங்கல்பட்டு கொரோனா வைரஸ்\nஇந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா; ஒரேநாளில் 4.12 இலட்சம் பேருக்கு தொற்று\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை உலகின் பிற எந்த நாட்டிலும் ஏற்பட்டிராத வகையில் அதிகரித்து வருகிறது.\n2021-05-06 11:05:10 இந்தியா கொரோனா வைரஸ் கொவிட்-19\nஜம்மு-காஷ்மீரில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை\nஜம்மு-காஷ்மீரின் ஷோபியன் மாவட்டத்தில் வியாழக்கிழமை பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.\n2021-05-06 08:34:49 இந்தியா ஜம்மு-காஷ்மீர் ஷோபியன்\nதூரநோக்குடனான திட்டமிடலின்றி நாடு நெருக்கடிக்குள் சிக்கி விட்டது - ரணில் கவலை\nஇலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து மேலும் 810 பேர் குணமடைவு..\nபணவீக்கம் ஏப்ரலில் 3.9 சதவீதமாக வீழ்ச்சி: இலங்கை மத்திய வங்கி\nவிலை அதிகரிப்பிற்கு அனுமதியில்லையேல் தட்டுப்பாடு ஏற்படலாம்: லாப் கேஸ் நிறுவனம்\nஸ்புட்னிக் கொரோனா தடுப்பூசி போடும் பணி ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newneervely.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE", "date_download": "2021-05-07T01:03:36Z", "digest": "sha1:5OWHAR43XDBH5QBFQ7DHCCIOYZ5TD2DM", "length": 5451, "nlines": 87, "source_domain": "newneervely.com", "title": "நாடாளுமன்ற உறுப்பினர் பாலர்நிலையத்தினை பார்வையிட்டு நிதியுதவி வழங்கமுன்வந்துள்ளார். | நீர்வேலி", "raw_content": "10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..\nநீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது\nநாடாளுமன்ற உறுப்பினர் பாலர்நிலையத்தினை பார்வையிட்டு நிதியுதவி வழங்கமுன்வந்துள்ளார்.\nகோப்பாய்த் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ்பிரேமச்சந்திரன் அவர்கள் பாலர்பகல்வி��ுதியின் வளர்ச்சியினை நேரில் வந்து இன்று 23.04.2014 புதன்கிழமை காலை 10.00 மணியளவில் பார்வையிட்டார்.கடந்த குறுகிய காலத்தில் ஏற்பட்ட வளர்ச்சியினை பாராட்டியதுடன் பாலர்பகல்விடுதியனை ஊக்குவிக்குமுகமாக பணவுதவியினையும் வழங்கமுன்வந்துள்ளார்.மாணவர்கள் மற்றும் கணனி நிலையம் விளையாட்டுத்திடல் வாயிற்தோற்றம் வகுப்பறைகள் என்பவற்றை பார்வையிட்டார்.\nநீர்வேலியில் விபத்து.சம்பவத்தை பார்த்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் ஹயஸில் மோதி காயம் »\n« சீ.சீ.த.க.பாடசாலை மாணவர்களின் தொகை அதிகரித்துள்ளது\nஇது எமது ஊர். இங்கு பிறந்ததினால் நாம் பெருமையடைகிறோம். நீர்வேலியின் சிறப்பையும் வனப்பையும் எங்கு சென்றாலும் மறவோம். எமதூரைப் போற்றுவோம்.\nநீர்வேலி நலன்புரிச் சங்கம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newneervely.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D", "date_download": "2021-05-07T01:19:26Z", "digest": "sha1:CUANLMKNAAXC46P2JYP6742BB6NHYMCY", "length": 5465, "nlines": 87, "source_domain": "newneervely.com", "title": "பாலர்பகல்விடுதி வருடாந்த பொதுக்கூட்டம் | நீர்வேலி", "raw_content": "10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..\nநீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது\n24.04.2016 ஞாயிற்றுக்கிழமை பி.ப 4.00 மணியளவில் பாலர்பகல் விடுதியின் வருடாந்த பொதுக்கூட்டம் பாலர் பகல்விடுதி மண்டபத்தில் நடைபெறவுள்ளது. வருடாந்த கணக்கறிக்கை மற்றும் வருடாந்த செயற்பாட்டறிக்கை பிரேரணைகள் பரிசீலித்தல் செயலாளர் அறிக்கை என்பன சமர்ப்பிக்கப்படவுள்ளது. அங்கத்தவர்கள் உரிய நேரத்திற்கு தவறாது சமூகமளிக்குமாறு கேட்டுக்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் புதிதாக அங்கத்தவர்களாக சேரவிரும்புவோர் 24.04.2016 ற்கு முன்னர் செயலாளரிடம் விண்ணப்ப்படிவத்தினை பெற்று பூர்த்தி செய்து அங்கத்துவத்தினை பெற்றுக்கொள்ளலாம் எனவும் அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஏமாற்றத்துடன் திரும்பும் நீர்வைக்கந்தன் பக்தர்கள் »\n« பாலர்பகல்விடுதியில் வருடாந்த பொதுக்கூட்டம் நடைபெற்றது\nஇது எமது ஊர். இங்கு பிறந்ததினால் நாம் பெருமையடைகிறோம். நீர்வேலியின் சிறப்பையும் வனப்பையும் எங்கு சென்றாலும் மறவோம். எமதூரைப் போற்றுவோம்.\nநீர்வேலி நலன்புரிச் சங்கம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/229086", "date_download": "2021-05-07T01:07:57Z", "digest": "sha1:EZW2DKXBSGEFO6B5IBBPTDPHNQ3OBJGC", "length": 8039, "nlines": 98, "source_domain": "selliyal.com", "title": "இந்தியாவில் தொற்று அதிகரிக்க காரணமான பி1617 பிறழ்வு 17 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome உலகம் இந்தியாவில் தொற்று அதிகரிக்க காரணமான பி1617 பிறழ்வு 17 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது\nஇந்தியாவில் தொற்று அதிகரிக்க காரணமான பி1617 பிறழ்வு 17 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது\nஜெனிவா: இந்தியாவில் தொற்று சம்பவங்கள் அதிகரிப்பதற்கு பங்களிக்கும் என அஞ்சப்படும் கொவிட்-19 தொற்று பிறழ்வு இப்போது குறைந்தது 10-க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ளது என்று உலக சுகாதார அமைப்பு செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.\nஐக்கிய நாடுகள் சபையின் சுகாதார நிறுவனம், இந்தியாவில் ஆரம்பத்தில் கண்டறியப்பட்ட பி1617 பிறழ்வு செவ்வாய்க்கிழமை நிலவரப்படி குறைந்தது 17 நாடுகளில் அடையாளம் காணப்பட்டுள்ளதாகக் கூறியது.\n“பெரும்பாலான தகவல்கள் இந்தியா, பிரிட்டன் மற்றும் சிங்கப்பூரிலிருந்து பெறப்பட்டன,” என்று வாராந்திர தொற்றுநோயியல் புதுப்பிப்பில் சுகாதார நிறுவனம் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த பிறழ்வு, அதன் அசல் பதிப்பை விட மிகவும் ஆபத்தானது. இது கொடியது மற்றும் தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.\nஇந்தியா தற்போது புதிய தொற்றுநோய்களால் அதிகமான இறப்புகளை எதிர்கொள்கிறது. மேலும், அடுத்த அச்சுறுத்தலுக்கான சாத்தியக்கூறுகள் குறித்த கவலைகளும் அதிகரித்து வருகின்றன.\nஇந்தியாவில் சமீபத்திய நோய்த்தொற்று சம்பவங்களில், கடந்த 24 மணி நேரத்திற்குள் மொத்தம் 350,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது உலகளாவிய சம்பவங்களின் எண்னிக்கையை 147.7 மில்லியனாக அதிகரிக்கச் செய்தது. உலகளவில், இந்த தொற்று ஏற்கனவே 3.1 மில்லியனுக்கும் அதிகமான மக்களைக் கொன்றுள்ளது.\nPrevious articleநடிகர் விவேக் அஸ்தி புதைக்கப்பட்டு, மரக்கன்றுகள் நடப்பட்டன\nNext articleபாலியல் நகைச்சுவை: ஆசிரியர் மீது கடுமையான நடவடிக்கை வேண்டும்\nகொவிட்-19: 19 பேர் மரணம்- 3,551 சம்பவங்கள் பதிவு\nகொவிட்-19: நடைமுறையை மீறியதால் நஜிப்புக்கு 3,000 ரிங்கிட் அபராதம்\nபி.1.617 பிறழ்வு இந்தியாவில் அதிக சம்பவங்களை ஏற்படுத்தியுள்ளது\nஇ��்ரேல்: மத நிகழ்வில் 40-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்\nபில் கேட்ஸ், மெலிண்டா கேட்ஸ் விவாகரத்து செய்வதாக அறிவிப்பு\nபிபைசர் தடுப்பூசியை 12 வயது மற்றும் மேற்பட்டவர்களுக்கு வழங்க அமெரிக்கா ஒப்புதல்\nஜூலை 4-க்குள் 70 விழுக்காடு அமெரிக்கர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும்\nஸ்பேஸ்எக்ஸ் விண்கலன் வெற்றிகரமாகப் பறந்து தரையிறக்கப்பட்டது\nதிமுக அமைச்சரவை : புதிய அமைச்சர்கள் பட்டியல்\nதிமுக அமைச்சரவை : அன்பில் மகேஷ் பள்ளிக் கல்வி அமைச்சர்\nபிரசாந்த் கிஷோர் : இந்திய சட்டமன்றத் தேர்தல் வெற்றிகளின் கதாநாயகன்\nபில் கேட்ஸ் விவாகரத்து : சொத்துகளை எப்படிப் பிரிப்பார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/news/newly-arrived-corona-case-confirmed-for-174-more/cid2713852.htm", "date_download": "2021-05-07T01:49:31Z", "digest": "sha1:ABJ3XSZIPQVO2R3L6WLLRWQUKFARARIN", "length": 5186, "nlines": 41, "source_domain": "tamilminutes.com", "title": "புதிது புதிதாக வரும் கொரோனா கேஸ் மேலும் 174 பேருக்கு உறுதி!", "raw_content": "\nபுதிது புதிதாக வரும் கொரோனா கேஸ் மேலும் 174 பேருக்கு உறுதி\nதிருநெல்வேலி மாவட்டத்தில் மேலும் 174 பேருக்கு கொரோனா உறுதியானதாக தகவல் வெளியானது\nஇந்தியாவிலுள்ள பல மாநிலங்களில் வாழ உகந்ததாகும் தொழில் முனைவதற்கு ஏற்றதாகவும் உள்ள மாநிலம் தமிழ்நாடு. இந்த தமிழ்நாட்டில் எங்கு சென்றாலும் வளங்களும் நிலமும் உள்ளது நமக்குப் பெருமைதான். மேலும் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டமும் ஒவ்வொரு சிறப்பினை பெற்று உள்ளன .மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் எங்கேயாவது ஒரு சுற்றுலாத்தலம் இருப்பதும் உண்மைதான். தமிழகத்தில் அல்வா பேர்போன ஊரான காணப்படுகிறது நெல்லை மாவட்டம். நெல்லை மாவட்டத்தில் செய்யப்படும் அல்வா வானதுதமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களிலும் மிகவும் ருசியாக ஏற்று சாப்பிடப்படுகிறது.\nமேலும் உருவாகும் தாமிரபரணி ஆனது திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டத்தின் குடிநீர் வாழ்வாதாரமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய சிறப்பு மிக்க இந்த நெல்லை மாவட்டத்தில் ஆட்கொல்லி நோயான கொரோனா தாக்கம் உள்ளது மிகுந்த சோகத்தை அளிக்கிறது. மேலும் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் மேலும் புதிதாக 174 பேருக்கு தற்போது கொரோனா கண்டறியப்பட்டுள்ளதாக தகவல். மேலும் நெல்லையில் இதுவரை 1296 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.\nஇதுபோன்ற நெல்லை மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள திருச்சி கோவை மாவட்டங்களிலும் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் கொரோனா தாக்கம் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு வேகமாக பரவுகிறது.இதனால் சென்னை வாசிகள் அனைவரும் மிகுந்த சோகத்துடனும் கட்டுப்பாடுகளுடன் உள்ளனர்.\nTamil Minutes இணையதளம் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. புதிய செய்திகளையும், பயனுள்ள தகவல்களையும் வழங்குவதே இந்த இணையதளத்தின் நோக்கமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/news/process-demonstration-training-for-farmers-to-increase-yields/", "date_download": "2021-05-07T01:29:39Z", "digest": "sha1:ORNA6M3RHRNXBDXWJFOGZADXH6F22CDZ", "length": 11946, "nlines": 122, "source_domain": "tamil.krishijagran.com", "title": "மகசூலை அதிகரிக்க விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கப் பயிற்சி!", "raw_content": "செய்திகள் வாழ்வும் நலமும் தோட்டக்கலை கால்நடை வெற்றிக் கதைகள் விவசாய தகவல்கள் FTB அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா Directory\n#FTB விவசாய தகவல்கள் அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா\nஎங்கள் அச்சு மற்றும் டிஜிட்டல் பத்திரிகைகளுக்கு குழுசேரவும்\nசமூக ஊடகங்களில் எங்களுடன் இணைக்கவும்:\nமகசூலை அதிகரிக்க விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கப் பயிற்சி\nஅருப்புக்கோட்டையில், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் மதுரை வேளாண்மைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், இளங்கலை இறுதி ஆண்டு பயிலும் மாணவிகள், கிராமப்புற வேளாண்மை பணி அனுபவ திட்டத்தின்கீழ் அருப்புக்கோட்டை வட்டாரத்திலுள்ள கோவிலாங்குளம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் மூன்று மாதங்கள் தங்கி களப் பயிற்சி (Field Training) மேற்கொள்கின்றனர். இந்த கால கட்டத்தில், விவசாயிகளுக்கு பல்வேறு விவசாய நுணுக்கங்களை பயிற்சியாக அளித்து வருகின்றனர்.\nமானாவாரி சாகுபடியில் மழை குறைபாட்டினால் விதை முளைக்கும் தருணத்திலோ அல்லது பயிர் வளரும் நிலையில், வறட்சி ஏற்பட்டு கருகும் நிலை வருகிறது. இதை தவிர்த்து மகசூல் (Yield) அதிகரிக்கும் முறைகள் குறித்தும், வறட்சியை தாங்கி வளர சீமை கருவேல் இலையில் விதை கடினப்படுத்துதல் முறைகள் குறித்தும், மாணவிகள் விமலா, வினிதா, அங்கயற்கண்ணி, காயத்ரி, ஹர்ஷிதா, கார்த்திகா ஆகியோர் விவசாயிகளுக்கு தெளிவான செயல்முறை விளக்கத்தை (Process description) அளித்தனர்.\nவேளாண் துறை வழங்கிய இப்பயிற்சி, விவசாயிகளுக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளது. வேளாண் துறையும், வேளாண் துறை மாணவர்களும் பயிர்களின் மகசூலை அதிகரிக்க, பல பயிற்சிகளை விவசாயிகளுக்கு அளித்து வருகிறது. விவசாயிகளும் ஆர்வத்துடன் வேளாண் துறை நடத்தும் பயிற்சிகளில் கலந்து கொள்கின்றனர்.\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வாசனை எண்ணெய்கள்\nஇன்னும் நான்கு நாட்களுக்கு மழை வானிலை ஆய்வு மையம் தகவல்\nஅன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.\nஉங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....\nபங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)\nகோடை வெயில் சுட்டெரிப்பதால், பனை நுங்கு விற்பனை அமோகம்\nஉளுந்து பயிரில் பரவும் மஞ்சள் தேமல் நோய் ஆலோசனை வழங்க விவசாயிகள் கோரிக்கை\nகொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, முழு ஊரடங்கை அமல்படுத்த உச்ச நீதிமன்றம் பரிந்துரை\nகொப்பரை உற்பத்தி செய்ய நவீன இயந்திரம்: விவசாயிகள் மகிழ்ச்சி\n செய்ய வேண்டியவையும், செய்யக் கூடாதவையும்\nவிளைநிலங்களில் வீணாகும் தர்பூசணி பழங்கள்\nபூச்சிகளைப் புரிந்து கொள்(ல்)வோம்- காணொளி மூலம் பயிற்சி\nரூ.4000 கொரோனா நிவாரண நிதிவழங்கும் திட்டம் - நாளை ஸ்டாலின் முதல் கையெழுத்து\nவாடிக்கையாளர்களுக்கு புதியவகை டிசைனர் சிலிண்டரை அறிமுகம் செய்த IOCL\nஒரே நிமிடத்தில் cowin.gov.in தளத்தில் கொரோனா தடுப்பூசி பதிவு செய்வது எப்படி\nபருத்தியைத் தாக்கும் மாவுப்பூச்சிகளை எப்படி கட்டுப்படுத்தலாம்\nகொரோனாவைத் தடுக்கும் முயற்சியில், புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்\nஒன்றல்ல, இரண்டல்ல, ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள்\nதொற்றுநோய்களைத் தடுக்கும் ஊட்டச்சத்து அணுகுண்டு எது தெரியுமா\nமாடித்தோட்டத்திற்கு ஏற்ற மண் கலவை வகைகள் எவை\nவிவசாயிகள் நலன் கருதி சாகுபடி தொடர்பான சந்தேகம் ஏற்பட்டால் வேளாண் விஞ்ஞானிகளை அணுகலாம்: தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/district-news/", "date_download": "2021-05-07T01:30:50Z", "digest": "sha1:VLQSGEAOJ6CFK7N4W573CZZUDIYWYYH7", "length": 7734, "nlines": 62, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "District-news News | Latest tamil news | Tamil news | Tamil news online - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nசென்னையில் பெண் தொழிலதிபர் தற்கொலை\nசென்னையில் பிரபல பெண் தொழிலதிபர் ரீட்டா லங்காலிங்கம் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.\nசென்னையில் பயங்கரம் : ராணுவ ஹவில்தாரை சுட்டுக் கொன்று தானும் தற்கொலை செய்த வீரர்\nசென்னை பல்லாவரத்தில் உள்ள ராணுவ குடியிருப்பில் ஹவில்தாரை சுட்டுக்கொன்ற ராணுவ வீரர், தானும் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதலைக்கு மேல் வெள்ளம்... 2.5 கி.மீ. எதிர் நீச்சல்.. குத்துச்சண்டையில் பதக்கம்.. இளம் வீரரின் துணிச்சல்\nதைரியமாகவும் துணிச்சலாகவும் 2.5 கி.மீ தூரம் வெள்ளத்தில் எதிர் நீச்சல் போட்டு கரை சேர்ந்து, பெங்களூருவில் நடந்த போட்டியிலும் பங்கேற்றார். இறுதிப் போட்டி வரை சென்று வெள்ளிப்பதக்கம் வென்ற கர்நாடகத்தைச் சேர்ந்த வீரரின் துணிச்சல் பெரும் பாராட்டை பெற்றுள்ளது.\nமேட்டூர் அணை நாளை திறப்பு ; தமிழக அரசு உத்தரவு\nகர்நாடகாவில் கனமழை காரணமாக காவிரியில் திறந்து விடப்படும் அதிகபட்ச தண்ணீரால் மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருகிறது. இதனால் டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை நாளை திறக்கப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nமேட்டூர் அணை ஒரே நாளில் 15 அடி உயர்வு; கர்நாடக அணைகளில் நீர் திறப்பு திடீர் நிறுத்தம்\nகர்நாடக அணைகளில் இருந்து அதிக நீர் திறக்கப்பட்டதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 15 அடி உயர்ந்து 82.62 அடியாக உயர்ந்துள்ளது.\nஇரண்டு அவிச்ச முட்டை விலை 1700 ரூபாயாம்: மும்பை ஓட்டலில்தான்...\nமும்பையில் உள்ள ஒரு பெரிய ஓட்டலில் இரண்டு அவிச்ச முட்டைகளுக்கு ரூ.1700 பில் போட்டிருக்கிறார்கள். அந்த தண்டத்தொகையை கொடுத்த ட்விட்டர் வாசகர், பில்லை ட்விட்டரில் போட்டு தாக்கியுள்ளார்.\nகல்யாண மொய் பிரிப்பதில் தகராறு..\nஅரியலூர் மாவட்டம் விளாங்குடி அருகே உள்ள ஆதிச்சனூர் கிராமத்தை சேர்ந்தவர் இளமதி. இவருக்கு வெள்ளிக்கிழ���ை திருமணம் நடைபெற்றது.\nசென்னையில் பிரபல ரவுடி என்கவுன்டரில் சுட்டுக் கொலை\nசென்னை மாதவரத்தில் நடந்த என்கவுன்டரில் ரவுடி வல்லரசுவை போலீசார் சுட்டுக் கொன்றனர்.\nஉணவு கிடைக்கவில்லை எனப் புகார் - சதுரகிரியில் ஆய்வு செய்யும் அறநிலையத்துறை அதிகாரிகள்\nஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி மகாலிங்கம் மலையில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்\nசுங்க சாவடியில் ரூ.11 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை சம்பவத்தில் 3 பேர் கைது\nபரனூர் சுங்கச் சாவடி அருகே 11 கோடி ரூபாய் மதிப்புள்ள நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/entertainment/sunitha-in-young-age-photo/cid2705555.htm", "date_download": "2021-05-07T00:26:20Z", "digest": "sha1:REZDZTT3N7H3IELVKJBAGA7Q7WAUH234", "length": 5480, "nlines": 44, "source_domain": "tamilminutes.com", "title": "நம்ம சுனித்தாவா இது? சின்ன வயசுல எப்படி இருக்காங்க பாருங்க!!", "raw_content": "\n சின்ன வயசுல எப்படி இருக்காங்க பாருங்க\nசுனிதா சிறுவயதில் எப்படி இருந்திருப்பார். பலரும் பார்த்திராத புகைப்படம் இதோ..\nவிஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது. வரவர பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இணையான ரசிகர் பட்டாளம் இந்த நிகழ்ச்சிக்கும் உருவாகியுள்ளது.\nபோட்டியாளர்களுக்கும் சரி, கோமாளிகளுக்கும் சரி தனித்தனியே ரசிகர் பட்டாளம் இருக்கிறது என்றே சொல்லலாம். போட்டியாளர்கள் கோமாளிகளை வைத்துக் கொண்டு சமைக்க படாதபாடு படும் காட்சிகள் ரசிகர்களை குலுங்கி, குலுங்கி சிரிக்க வைக்கிறது. அதிலும் முக்கியமாக புகழ், பாலா, ஷிவாங்கி, மணிமேகலை என கடந்த சீசனில் இருந்த கோமாளிகள் இந்த சீசனிலும் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த ஷோவிற்காக ரசிகர்கள் காத்திருந்து பார்க்கும் அளவிற்கு மிகப்பெரிய ரீச் அடைந்துள்ளது.\nமுக்கியமாக இந்த சீசனை ஷிவாங்கி அஸ்வினுக்காகவே பலரும் பார்க்கின்றனர் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு அஸ்வினுக்காக ஷிவாங்கியும் சுனிதாவும் போட்டி போட்டுக் கொள்ளும் சிறு சிறு சண்டைகளும் வயிற்றை பதம் பார்க்கும் அளவிற்கு சிரிப்பை வரவழைக்கிறது.\nஇந்நிலையில் குக் வித் கோமாளி நி��ழ்ச்சியில் கோமாளியாக இருந்து ரசிகர்களை மகிழ்வித்து வருபவர் சுனிதா. தமிழ் தெரியாமல் அவர் பேசும் வார்த்தைகளும், பாடல்களும் மிகவும் ரசிக்கும்படி உள்ளது. அந்த வகையில் சுனிதா தமிழர்களுக்கு புதிதானவர் அல்ல. பல வருடங்களாக விஜய் டிவியில பிரபலமான ஒரு முகம்தான். நடன கலைஞரான அவர் வாங்குடன் சேர்ந்து பல நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சுனிதா சிறுவயதில் எப்படி இருந்திருப்பார். பலரும் பார்த்திராத புகைப்படம் இதோ..\nTamil Minutes இணையதளம் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. புதிய செய்திகளையும், பயனுள்ள தகவல்களையும் வழங்குவதே இந்த இணையதளத்தின் நோக்கமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2021/03/21023440/Fencer-Bhavani-Devi-wins-ninth-National-crown.vpf", "date_download": "2021-05-07T01:23:06Z", "digest": "sha1:6K5ZZQ4LDCXNNLEWYNUGRBQ7RW4XBW6M", "length": 6978, "nlines": 114, "source_domain": "www.dailythanthi.com", "title": "Fencer Bhavani Devi wins ninth National crown || தேசிய வாள் சண்டை போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் பவானி தேவி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் முடிவுகள் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nதேசிய வாள் சண்டை போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் பவானி தேவி + \"||\" + Fencer Bhavani Devi wins ninth National crown\nதேசிய வாள் சண்டை போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் பவானி தேவி\nதேசிய வாள் சண்டை போட்டியில் பவானி தேவி சாம்பியன் பட்டம் வென்றார்\nடெல்லியில் நடந்த 31-வது தேசிய சீனியர் வாள்சண்டை போட்டியில் நேற்று நடந்த பெண்களுக்கான தனிநபர் சாப்ரே பிரிவின் இறுதி சுற்றில் தமிழக வீராங்கனை பவானி தேவி 15-7 என்ற புள்ளி கணக்கில் கேரளாவின் ஜோஸ்னா ஜோசப்பை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தனதாக்கினார். இதன்படி 9வது முறையாக தேசிய பட்டத்தை கைப்பற்றினார்.\nசென்னையை சேர்ந்த பவானி தேவி சமீபத்தில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார். அத்துடன் அவர் வாள்சண்டையில் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி கண்ட முதல் இந்தியர் என்ற சாதனையையும் படைத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nதேசிய வாள் சண்டை போட்டி | சாம்பியன் பட்டம் | பவானி தேவி\n1. ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் உயிரிழப்பது, இனப்படுகொலைக்கு சமம் - அலகாபாத் ���கோர்ட் கண்டனம்\n1. ஊக்க மருந்து சர்ச்சை: 4 ஆண்டுகள் தடைக்கு எதிரான கோமதியின் அப்பீல் தள்ளுபடி\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-41-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2021-05-07T00:59:54Z", "digest": "sha1:E6ONYJXYOBGEZJICCDNFOFRR3LD2GTBU", "length": 8255, "nlines": 165, "source_domain": "www.tamilstar.com", "title": "சூர்யா 41 படத்தின் லேட்டஸ்ட் தகவல், மாறுப்பட்ட கதாபத்திரத்தில் முதன் முறையாக சூர்யா? - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nசூர்யா 41 படத்தின் லேட்டஸ்ட் தகவல், மாறுப்பட்ட கதாபத்திரத்தில் முதன் முறையாக சூர்யா\nNews Tamil News சினிமா செய்திகள்\nசூர்யா 41 படத்தின் லேட்டஸ்ட் தகவல், மாறுப்பட்ட கதாபத்திரத்தில் முதன் முறையாக சூர்யா\nநடிகர் சூர்யா தனது சூரரை போற்று படத்தின் ரிலீசுக்காக தற்போது மிக ஆர்வமாக காத்து கொண்டு இருக்கிறார்.\nசமீபகாலமாக இப்படத்தின் பல அப்டேட்டுகள் சமூக வலைத்தளங்களில் வெளிவந்து கொண்டு இருக்கிறது.\nமேலும் இப்படத்தின் மீதான மிக பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய உச்சத்தை தொட்டுள்ளது என்று தான் கூறவேண்டும்.\nஇப்படத்திற்கு பிறகு சூர்யா இயக்குனர் ஹரியின் இயக்கத்தில் நடிக்க போகிறார் என்று அதிகாரபூர்வ தகவல்கள் வெளிவந்திருந்தது.\nஇதன்பின் தனது கூட்டணியை வெற்றி இயக்குனர் திரு வெற்றிமாறனுடன் வாடி வாசல் எனும் படத்தில் இணைந்து கொண்டுள்ளார் நடிகர் சூர்யா.\nஇந்நிலையில் தற்போது இப்படங்களுக்கு பிறகு சூர்யா டி.ஜே. ஞானவேல் இயக்கத்தில் நடிக்கப்போவதாக சில தகவல்கள் கசிந்திருந்தது.\nஇந்த படத்தில் சூர்யாவிற்கு வக்கில் கதாபாத்திரம் என்று தற்போது சில தகவல்கள் கசிந்து��்ளது. மேலும் இதுவே இவரது திரையுலக பயணத்தில் முதன் முறையாக வக்கில் கதாபத்திரத்தில் நடிக்கவுள்ளார்.\nஇதனை குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வெளிவரும் வரை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.\nபிளாக் பஸ்டர் ஹிட் படத்தின் ரீமேக்கில் தனுஷ்\nபொது இடத்தில் தனது கணவனால் அவமானப்பட்ட மணிமேகலை\nஉயர் அதிகாரியின் மகள் கடத்தப்பட அவரை போலீஸ் அதிகாரி வரலட்சுமி காப்பாற்றுகிறார். அதன் தொடர்ச்சியாக பெண் கடத்தல்...\nகனடியப் பெண்களில் நாடு தழுவிய உயர்சாதனை படைத்த ஈழப்பெண்\nஇந்தியாவுக்கு அவசர மருத்துவ உதவி பொருட்களை அனுப்பியது கனடா\n12 வயதிற்கு மேற்பட்டவர்கள் Pfizer தடுப்பூசியை பெற Health கனடா அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2014/01/blog-post_3.html", "date_download": "2021-05-07T01:50:01Z", "digest": "sha1:BK45IFVCXJ4XGIDZNP2QWSKDVBEUPHDH", "length": 19675, "nlines": 270, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: உயரம் தொடுவோம் - சுழலும் உணவகம், கோலாலம்பூர்", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nஉயரம் தொடுவோம் - சுழலும் உணவகம், கோலாலம்பூர்\nபொதுவாக உயரமான இடத்திற்கு செல்லும்போது மனதில் பயம் இருந்தாலும் அந்த த்ரில், அதற்காகவே அங்கு செல்லுவது என்பது எனக்கு பிடிக்கும். சில சமயங்களில் அந்த உயரத்தில் காற்று வீசும்போது பயம் சற்று அதிகமாகும்..... அதுவே அந்த இடமே சிறிது நகர்ந்தால் என்னவாகும் உலகின் மிக சில நாடுகளிலே மட்டும் நகரும் டவர் என்னும் ஒன்று இருக்கும். அதாவது ஒரு டவரின் உச்சிக்கு சென்று விட்டால், அதில் பல அடுக்குகள் இருக்கும், ஆனால் நடுவில் இருக்கும் அடுக்கு மட்டும் சக்கரம் போல மெதுவாக சுற்றும். உங்களுக்கு அது நகர்வது என்பது தெரியாது, ஆனால் ஒவ்வொரு ஐந்து நிமிடமும் உங்களது ஜன்னலுக்கு வெளியில் நீங்கள் காட்சிகள் மாறுவதை பார்க்கலாம் \nதற்போது அங்கு இயங்கும் உணவகத்தின் பெயர் \nமலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் பெட்ரோனாஸ் கோபுரம் கட்டபடுவதர்க்கு முன்பு இருந்த பெரிய டவர் என்பது இதுதான்..... இதை KL டவர் என்பார்கள். 1995ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட இது தொலைதொடர்ப்புக்கு பயன்பட்டது. உலகின் ஏழாவது மிக பெரிய டவர் என்பது இதன் சிறப்பு. ஆனாலும் இதன் இன்னொரு சிறப்பு என்பது அதன் சுழலும் தளம். 421 மீட்டர் உயரம் கொண்ட கட்டிடம், வெளியே மலேசியா தலைநகரின் எழில்மிகு தோற்றம், அவ்வப்போது வந்து போகும் ஒளி வெள்ளத்தில் மலேசியா இரட்டை கோபுரம், மெல்லிய மனதை மயக்கும் இசை, மிக சிறந்த உணவுகள், அவற்றோடு நீங்கள் உட்கார்ந்த இடத்தில் இருந்தே 360 டிகிரி கோணத்தில் சுற்றி பார்க்கலாம் \nமலேசியா ரெட்டை கோபுரமும் KL டவரும்.......\nஉலகின் பெரிய டவர்களும்....... KL டவரும்\nநான் சென்று இருந்த போது அந்த உணவகத்தின் பெயர்.....\nஇதில் இருக்கும் நான்கு தளத்தில், இரண்டாவதில் இருக்கிறது Atmosphere 360 டிகிரி என்னும் உணவகம். மற்ற எல்லா தளங்களும் சுழலாது, ஆனால் இந்த தளம் மட்டும் ஒரு மெல்லிய சுழற்சியில் இருக்கும். இதனால் நீங்கள் ஒரு இரண்டு நிமிடம் நின்றால் வெளியே காட்சிகள் மாறி இருக்கும் முதலில் நாங்கள் சென்றபோது இந்த தளத்திற்கு லிப்ட் மூலம் சென்றோம், பின்னர் அங்கு இருந்த உணவகத்தில் கண்ணாடியின் அருகில் மேஜை ஒன்று ரிசேர்வ் செய்து இருந்தோம். வெளியே மலேசியா ஒளி வெள்ளத்தில் மிதந்துகொண்டு இருந்தது. அங்கு பப்பெட் முறை உணவு என்பதால், எழுந்து சென்று உணவை எடுத்துக்கொண்டு திரும்பினால் எங்களது மேஜை இருந்த இடத்தை காணவில்லை \nஅந்த உணவகம் புகழ் பெற்றது என்பதற்கு அத்தாட்சி \nநாங்கள் உட்கார்ந்து இருந்த டேபிள் மற்றும் அதன் வெளியே தெரிந்த காட்சி \nமலேசியா நகர் ஒளி வெள்ளத்தில் \nஉணவு இருக்கும் இடங்கள் எல்லாம் நகராது, அதை தாண்டி வெளி இடங்கள் மட்டுமே சுற்றும் வகையில் அமைந்து இருந்தது நாங்கள் எங்களது இடத்தை தேடி உட்கார்ந்தவுடன் வெளியே மாறும் காட்சிகளை பார்த்துக்கொண்டே சாப்பிட்டோம். ஒரு சமயத்தில் வெளியே ஒளி வெள்ளத்தில் இரட்டை கோபுரம் தெரிந்தது கண் கொள்ளா காட்சி நாங்கள் எங்களது இடத்தை தேடி உட்கார்ந்தவுடன் வெளியே மாறும் காட்சிகளை பார்த்துக்கொண்டே சாப்பிட்டோம். ஒரு சமயத்தில் வெளியே ஒளி வெள்ளத்தில் இரட்டை கோபுரம் தெரிந்தது கண் கொள்ளா காட்சி உலகின் மிக சிறந்த பல உணவகங்களில் நான் உண்டு இருந்தாலும் இது முற்றிலும் ஒரு புதுமையான ஒரு அனுபவமே உலகின் மிக சிறந்த பல உணவகங்களில் நான் உண்டு இருந்தாலும் இது முற்றிலும் ஒரு புதுமையான ஒரு அனுபவமே விஞ்ஞானத்தில் நிறைய புதுமைகள் வந்து அது இப்படிப்பட்ட ஒரு உணவகத்திலும் இருந்தது மிக்க மகிழ்ச்சியாய் இருந்தது விஞ���ஞானத்தில் நிறைய புதுமைகள் வந்து அது இப்படிப்பட்ட ஒரு உணவகத்திலும் இருந்தது மிக்க மகிழ்ச்சியாய் இருந்தது ஒரு முறை நீங்களும் இது போன்று உண்டு பாருங்கள்........ சொர்க்கம் என்பது தனியே இல்லை என்று தெரியும் \nரெட்டை கோபுரம் ஒளி வெள்ளத்தில் \nKL கோபுரம் கீழே இருந்து..... என்ன அழகு இல்லை \nLabels: உயரம் தொடுவோம், உலக பயணம்\nஆகா... ஆகா... என்ன அழகு... சொர்க்கம் தான்... உலகின் பெரிய டவர்களும்....... KL டவரும் விளக்கத்தோடு அனைத்தும் பிரமாதம்... நன்றி...\nநன்றி சார்.... நீங்கள் இந்த பதிவை ரசித்தது கண்டு மகிழ்கிறேன் \nமிக்க நன்றி கார்த்திக்...... உனது வலைப்பூவில் MIT படம் எல்லாம் போட்டு அமர்களபடுதிவிட்டாய். இன்னும் நிறைய எழுதலாமே \nஅந்த அழகை நானும் பருகினேன் ஒருமுறை..\nவாவ்..... நீங்களும் அங்கே போய் இருக்கீங்களா நன்றி தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் ஆவி \nகோலாலம்பூர் டவரினை நானும் ஒரு முறை பார்த்திருக்கின்றேன் நண்பரே\nநான்கு ஆண்டுகளுக்கு முன் ஒரு முறை மலேசியா வந்திருக்கின்றேன்\nதங்களின் பதிவினைப் பார்த்ததும் மலரும் நினைவுகள், தோன்றுகின்றன\nநன்றி ஜெயகுமார்..... உங்களின் நீனைவுகளை எனது பகுதி மீண்டும் தூண்டி விட்டது கண்டு மகிழ்ச்சி அடைகிறேன் \nதமிழ் மணத்தில் நீங்கள் அளித்த ஓட்டிற்கு மிக்க நன்றி நண்பரே \nநன்றி நண்பரே..... நான் எல்லாவற்றையும்தான் சொன்னேன். தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி \nநன்றி நண்பரே..... ஒரே வார்த்தையில் மனதை குளிர வைத்துவிட்டீர்கள் \nஆண்டு நானும் இந்த அழகை நேரில் அனுபவித்துள்ளேன் நண்பரே..\nநன்றி நண்பரே..... அந்த அழகு இன்னும் கண்ணுக்குள்ளேயே இருக்கிறது இல்லையா \nசீக்கிரமே நாம் இருவரும் ஒரு கோபுரம் கட்டுவோமே சிந்திப்பதை பெரிதாக சிந்திப்போமே \nஹா ஹா ஹா.... உண்மைதான் கிருஷ்ணா \nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - கரூர் திரைசீலை (பகுதி - 1)\nகரூர் என்றாலே கொசுவலை என்பது அனைவருக்கும் நினைவுக்கு வரும், இன்று கால ஓட்டத்தில் அது திரைசீலைக்கும் பிரபலம் என்று உங்களுக்கு தெரியுமா \nஊர் ஸ்பெஷல் - தஞ்சாவூர் வீணை\nஇசையை பற்றி எந்த ஞானமும் கிடையாது எனக்கு, நல்ல இசை என்றால் உடம்பு தானாகவே தாளம் போடும், அவ்வளவுதான் . இந்த ஊர் ஸ்பெஷல் பகுதிக்காக ஒவ்வொ��ு...\nஅறுசுவை (சமஸ்) - புத்தூர் அசைவ சாப்பாடு\nசமஸ் எழுதிய புத்தகத்தை படித்துவிட்டு ஒரு சாப்பாடு சாபிடுவதற்கு என்றே ஒரு பயணம் மேற்கொண்டோம். முதலில் திண்டுக்கல்லில் இருந்து புறப்பட்டு தி...\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nகடல்பயணங்கள் தளம் மீண்டும் ஆரம்பம் ஆகின்றது என்று பதிவு போட்டபோதே பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தவண்ணம் இருக்கிறீர்கள், மிக்க நன்றி \nஅறுசுவை - நவீன டீ கடை \nவேலை நேரத்திலோ, நண்பர்களுடனோ, தனியாக செல்லும்போதோ ஏதாவது சாப்பிடனும் அப்படின்னு தோணிச்சினா, நம்ம வண்டிய நிறுத்துறது ஒரு டீ கடையின் முன்னேத...\nசிறுபிள்ளையாவோம் - சேமியா ஐஸ் \nஅறுசுவை(சமஸ்) - ஒரு ஜோடி நெய்தோசை, திருச்சி\nஊர் ஸ்பெஷல் - போடி ஏலக்காய் (பகுதி - 2)\nஉலக பயணம் - மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம்\nஅறுசுவை -ஐயப்பா தோசை கடை, மதுரை\nஅறுசுவை (சமஸ்) - ஒரு இனிய ஆரம்பம் \nஊர் ஸ்பெஷல் - போடி ஏலக்காய் (பகுதி - 1)\nஊர் ஸ்பெஷல் - சிவகாசி பிரிண்டிங் (பகுதி - 2)\nமறக்க முடியா பயணம் - நீளிமலா நீர்வீழ்ச்சி, வயநாடு\nஉயரம் தொடுவோம் - சுழலும் உணவகம், கோலாலம்பூர்\nஅறுசுவை - ஸ்வென்சன்ஸ் ஐஸ்கிரீம், பெங்களுரு\nபுதிய வருடம்.... புதிய பகுதிகள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaipoonga.net/business/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99/", "date_download": "2021-05-07T01:43:38Z", "digest": "sha1:3NO3HTHJ5KX6PZV3CXDD77MLKXO4O4KN", "length": 12726, "nlines": 197, "source_domain": "kalaipoonga.net", "title": "சாதனை படைக்கும் யுவன் சங்கர் ராஜாவின் டாப் டக்கர் ( Top Tucker ) பாடல் - Kalaipoonga", "raw_content": "\nHome Business சாதனை படைக்கும் யுவன் சங்கர் ராஜாவின் டாப் டக்கர் ( Top Tucker ) பாடல்\nசாதனை படைக்கும் யுவன் சங்கர் ராஜாவின் டாப் டக்கர் ( Top Tucker ) பாடல்\nசாதனை படைக்கும் யுவன் சங்கர் ராஜாவின் டாப் டக்கர் ( Top Tucker ) பாடல்\nதென்னிந்திய திரையுலகின் இசை பிதாமகன்களில், ஒருவராக விளங்குபவர் யுவன் சங்கர் ராஜா. தமிழகத்தில் அவருக்கு, வெறித்தனமான பெரும் ரசிகர் கூட்டம் இருப்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அவர் இசையில் உலகளவில் சாதனை படைத்த “ரௌடி பேபி” பாடலுக்கு முன்னதாகவே, உலகமெங்கும் மொழியை கடந்து, அவரை பின்பற்றும் ஒரு பெரும் ரசிகர் கூட்டம் இருந்து வருகிறது. இந்நிலையில் தற்போது யுவன் சங்கர் ராஜா, இந்திய இசை பிரபலங்களான பதா மற்றும் உஜானா அமித் ஆகியோருடன் டாப் டக்கர் ( Top Tucker) எனும் ஒரு சுயாதீன இசை பாடலில் இணைந்துள்ளார்.\nஇப்படாலுக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, பதா மற்றும் உஜானா அமித் பாடலை பாடியுள்ளனர். மூவரும் இணைந்து திரையில் தோன்றி கலக்கியிருக்கும் இப்பாடலில், இவர்களுடன் தற்போதைய இளைஞர்களின் கண்கவர் கனவு நாயகி ராஷ்மிகா மந்தனாவும் நடித்துள்ளார். இப்பாடலின் ஒரு சிறு பகுதியில் தமிழில் வரும் வரிகளை யுவன் சங்கர் ராஜா தானே பாடியுள்ளார். மேலும் ஜொனிடா காந்தி அவர்களும் ஒரு சிறு பகுதிக்கு குரல் தந்துள்ளார்.\nரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றுள்ள இப்பாடல் YouTube தளத்தில் வெளியான மிகக்குறுகிய நேரத்தில் 25 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது. ஒவ்வொரு நொடியும் ரசிகர்களின் பார்வை எண்ணிக்கை கூடிக்கொண்டே செல்கிறது. மொழி எல்லைகளை கடந்து, தற்போது அனைத்து இசை ரசிகர்களையும் கவர்ந்து, சாதனை படைத்து வருகிறது.\nயுவன் சங்கர் ராஜாவின் திரை இசையல்லாத சுயாதீன இசை பயணம் ஜூலை 1999ல் “The Blast” ஆல்பத்தில் துவங்கியது. இந்த ஆல்பம் தமிழின் முன்னணி பிரபலங்கள் உன்னிகிருஷ்ணன், கமலஹாசன் உட்பட பலர் பாடியுள்ள 12 பாடல்கள் தொகுப்பினை கொண்டது.\nதனது U1 Records இணையதளம் மூலம் பல சுயாதீன இசை முன்னெடுப்புகளையும், பல இசைத்திறமைகளையும் தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறார் யுவன் சங்கர் ராஜா. தொடர்ந்து தனது இசையில் திரை இசை தவிர்த்த சுயாதீன இசை ஆல்பங்களை வளரும் கலைஞர்களுடன் இணைந்து உருவாக்குவதில் வெகு ஆர்வமுடன் இயங்கி வருகிறார்.\nசாதனை படைக்கும் யுவன் சங்கர் ராஜாவின் டாப் டக்கர் ( Top Tucker ) பாடல்\nPrevious articleவிஷாலின் ‘சக்ரா’ படத்தை வெளியிட நீதிமன்றம் இடைக்கால தடை\nNext articleஓட்டம் திரைப்படம் புகைப்பட கேலரி\nமாநாடு டப்பிங் ஆரம்பம்… படக்குழு வெளியிட்ட புகைப்படங்கள்\nமூத்த தலைவர் ஆர்.எம்.வீரப்பனை நேரில் சந்தித்து ஆசி பெற்றார் மு.க.ஸ்டாலின் | Video\nரூ.4 ஆயிரம் வழங்கும் திட்டத்துக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முதல் கையெழுத்து\nவெளியானது 34 பேர் கொண்ட தமிழக அமைச்சரவை பட்டியல்\nவெளியானது 34 பேர் கொண்ட தமிழக அமைச்சரவை பட்டியல் தமிழகத்தின் முதலமைச்சராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை சென்னை - கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்க உள்ளார். கொரோனா பரவலை கருத்தில்...\nமாநாடு டப்பிங் ஆரம்பம்… படக்குழு வெ���ியிட்ட புகைப்படங்கள்\nமாநாடு டப்பிங் ஆரம்பம்... படக்குழு வெளியிட்ட புகைப்படங்கள் சிம்பு நடிப்பில் உருவாகி உள்ள படம் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கியுள்ள இப்படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார். இப்படத்தில் சிம்பு அப்துல் காலிக்...\nமூத்த தலைவர் ஆர்.எம்.வீரப்பனை நேரில் சந்தித்து ஆசி பெற்றார் மு.க.ஸ்டாலின் | Video\nமூத்த தலைவர் ஆர்.எம்.வீரப்பனை நேரில் சந்தித்து ஆசி பெற்றார் மு.க.ஸ்டாலின் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றதை அடுத்து தமிழகத்தின் அடுத்த முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பு ஏற்க உள்ளார். நாளை (மே 7...\nவெளியானது 34 பேர் கொண்ட தமிழக அமைச்சரவை பட்டியல்\nவெளியானது 34 பேர் கொண்ட தமிழக அமைச்சரவை பட்டியல் தமிழகத்தின் முதலமைச்சராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை சென்னை - கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்க உள்ளார். கொரோனா பரவலை கருத்தில்...\nமாநாடு டப்பிங் ஆரம்பம்… படக்குழு வெளியிட்ட புகைப்படங்கள்\nமாநாடு டப்பிங் ஆரம்பம்... படக்குழு வெளியிட்ட புகைப்படங்கள் சிம்பு நடிப்பில் உருவாகி உள்ள படம் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கியுள்ள இப்படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார். இப்படத்தில் சிம்பு அப்துல் காலிக்...\nமூத்த தலைவர் ஆர்.எம்.வீரப்பனை நேரில் சந்தித்து ஆசி பெற்றார் மு.க.ஸ்டாலின் | Video\nமூத்த தலைவர் ஆர்.எம்.வீரப்பனை நேரில் சந்தித்து ஆசி பெற்றார் மு.க.ஸ்டாலின் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றதை அடுத்து தமிழகத்தின் அடுத்த முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பு ஏற்க உள்ளார். நாளை (மே 7...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://voiceofasia.co/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2021-05-07T00:13:32Z", "digest": "sha1:PW6UJ62ZGLYWM7AO2HPK3IFYYE7QRF77", "length": 2490, "nlines": 52, "source_domain": "voiceofasia.co", "title": "மத்திய பல்கலைக்கழகங்களில் சேர ஜூன் மாதம் பொது நுழைவுத் தேர்வு : மத்திய அரசு", "raw_content": "\nமத்திய பல்கலைக்கழகங்களில் சேர ஜூன் மாதம் பொது நுழைவுத் தேர்வு : மத்திய அரசு\nமத்திய பல்கலைக்கழகங்களில் சேர ஜூன் மாதம் பொது நுழைவுத் தேர்வு : மத்திய அரசு\nடெல்லி : மத்திய பல்கலைக்கழகங்களில் சேர ஜ���ன் மாதம் பொது நுழைவுத் தேர்வு நடைபெற உள்ளதாக மத்திய உயர்கல்வித்துறை செயலாளர் அமித் கரே தெரிவித்துள்ளார்.முதுகலை, முனைவர் படிப்புகளுக்கு தனித்தனி நுழைவு தேர்வு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nதடுப்பூசிப் போடுவதற்குப் பனியில் 10 கிலோமீட்டர் நடந்த 90 வயது மூதாட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithisaral.in/2021/05/04/udayanithi-stalin-met-temujin-leader-vijayakanth/", "date_download": "2021-05-07T02:09:35Z", "digest": "sha1:J3IOBX3KK5GMVULW75EPOIWOIE2PAABQ", "length": 8637, "nlines": 144, "source_domain": "www.seithisaral.in", "title": "தேமுதிக தலைவர் விஜயகாந்தை உதயநிதி ஸ்டாலின் சந்தித்தார் - Seithi Saral", "raw_content": "\nதேமுதிக தலைவர் விஜயகாந்தை உதயநிதி ஸ்டாலின் சந்தித்தார்\nதேமுதிக தலைவர் விஜயகாந்தை உதயநிதி ஸ்டாலின் சந்தித்தார்\nசென்னை விருகம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்தார்.\nதமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தான் போட்டியிட்ட சேப்பாக்கம் -திருவல்லிகேணி தொகுதியில் வெற்றி பெற்றார். அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் ஏ.வி.ஏ கஸ்சாலியைவிட 68,133 வாக்குகள் கூடுதலாக பெற்றிருந்தார்.\nதமிழகத்தில் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று திமுக மீண்டும் ஆட்சியமைக்கிறது. வருகிற 7-ந் தேதி மு.க.ஸ்டாலின் முதல் அமைச்சராக பதவி ஏற்க உள்ளார்.\nஇந்த நிலையில் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்தார். விஜயகாந்தை நேரில் சந்தித்து நலம் விசாரித்ததுடன், தேர்தலில் பெற்ற வெற்றிக்காக வாழ்த்துக்களையும் உதயநிதி ஸ்டாலின் பெற்றுக்கொண்டார்.\nமுன்னதாக திமுக வெற்றி குறித்து விஜயகாந்த் தனது டுவிட்டரில், “சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளில் மக்கள் வழங்கிய தீர்ப்பை மனமார ஏற்றுக் கொள்கிறேன்‍. தேர்தலில் உழைத்த அனைவருக்கும் மனதார நன்றிகளை தெரிவித்துக்கொள்வதுடன், தமிழகத்தில் ஆட்சி அமைக்கவுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டிருந்தார்.\nPrevious மேற்குவங்காளத்தில் வன்முறை; 6 பேர் பலி\nNext தமிழக சட்டமன்ற திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் ஒருமனதாக தேர்வு\nமு.க.ஸ்டாலின் ���லைமையிலான அமைச்சரவை விவரம்\nதூத்துக்குடிக்கு 2 மந்திரிகள்: திருநெல்வேலி, தென்காசி ஏமாற்றம்\nதிருப்பத்தூரில் இறந்த 5 பேர் கொரோனா நோயாளிகள் – மருத்துவ அதிகாரி விளக்கம்\nமு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை விவரம்\nதூத்துக்குடிக்கு 2 மந்திரிகள்: திருநெல்வேலி, தென்காசி ஏமாற்றம்\nதிருப்பத்தூரில் இறந்த 5 பேர் கொரோனா நோயாளிகள் – மருத்துவ அதிகாரி விளக்கம்\nதுணை தலைவர் விலகல்; கமல் காட்டம்\nதமிழகத்தில் ஒரு நாள் கொரோனா பதிவு 24,898 ஆக உயர்வு\nUma on இராமருக்கு ஓர் அக்காள் உண்டு தெரியுமா\n.. தீராத ஒரு தகராறு….(சொல்லாராய்ச்சி/ சிவகாசி முத்துமணி)\nK.Kumaresan on தென் மாவட்ட மக்கள் வெளியே வர வேண்டாம் ; முதல்வர் எச்சரிக்கை\nPonnu on ஏழைகளுக்கு எட்டிவிடும் மருத்துவப் படிப்பு\nமு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை விவரம்\nதூத்துக்குடிக்கு 2 மந்திரிகள்: திருநெல்வேலி, தென்காசி ஏமாற்றம்\nதிருப்பத்தூரில் இறந்த 5 பேர் கொரோனா நோயாளிகள் – மருத்துவ அதிகாரி விளக்கம்\nதுணை தலைவர் விலகல்; கமல் காட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/12867", "date_download": "2021-05-07T01:03:11Z", "digest": "sha1:ZOJVVKUE4MEIGKQCBB2IRJ6BGRN3ELES", "length": 30024, "nlines": 116, "source_domain": "www.virakesari.lk", "title": "சர்ச்சைக்குரிய மத்திய வங்கி பிணை முறி விவகாரம் அர்ஜுன மகேந்திரனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை : பாராளுமன்ற கோப் குழு பரிந்துரை : 55 பக்கங்களில் அறிக்கை வெளியீடு ; 15 பரிந்துரைகள் முன்வைப்பு | Virakesari.lk", "raw_content": "\nநாளொன்றுக்கு 2 ஆயிரத்தை விட அதிக தொற்றாளர்கள் இனங்காணப்படலாம் : எச்சரிக்கிறது தொற்று நோயியல் பிரிவு\nபிழையான எண்ணங்களை மக்கள் மயப்படுத்த எதிக்கட்சி முயற்சி - மதுர விதானகே\nகிளிநொச்சியில் புதிய கொரோனா சிகிச்சை நிலையம் - நள்ளிரவு முதல் சேவைகள் ஆரம்பம்\nமஹரகம நகரசபைக் கூட்டத்தில் மோதல் - விசாரணைகள் ஆரம்பம்\nதனியார் வங்கி உதவி முகாமையாளருக்கு கொரோனா தொற்று ; வங்கிக்கு பூட்டு\nஜம்மு-காஷ்மீரில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை\nகொரோனாவால் இலங்கையில் கர்ப்பிணித் தாய் பலி\n இனங்காணப்படும் தொற்றாளர்களை விட இருமடங்கு தொற்றாளர்கள் சமூகத்தில் \nதம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தை மீண்டும் திறக்க தீர்மானம்\nசர்ச்சைக்குரிய மத்திய வங்கி பிணை முறி விவகாரம் அர்ஜுன மகேந்திரனுக்கு எதிராக சட்ட நடவ��ிக்கை : பாராளுமன்ற கோப் குழு பரிந்துரை : 55 பக்கங்களில் அறிக்கை வெளியீடு ; 15 பரிந்துரைகள் முன்வைப்பு\nசர்ச்சைக்குரிய மத்திய வங்கி பிணை முறி விவகாரம் அர்ஜுன மகேந்திரனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை : பாராளுமன்ற கோப் குழு பரிந்துரை : 55 பக்கங்களில் அறிக்கை வெளியீடு ; 15 பரிந்துரைகள் முன்வைப்பு\nஇலங்கை மத்திய வங்கியின் சர்ச்சைக்குரிய பிணை முறி விவகாரம் தொடர்பாக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் நேரடியாக பொறுப்புக் கூற வேண்டும். அவருக்கும் மத்திய வங்கியின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் எதிராக சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் என அரச பொறுப்பு முயற்சிகள் பற்றிய பாராளுமன்றக் குழு (கோப்குழு) பரிந்துரை செய்துள்ளது.\nஇலங்கை மத்திய வங்கியின் சர்ச்சைக்குரிய பிணை முறிகள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டிருந்த கோப்குழு இன்று வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் அதன் அறிக்கையை சமர்ப்பித்தது.\n55 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கைக்கு கோப் குழுவில் அங்கம் வகிப்பவர்களில் 16 உறுப்பினர்கள் அடிக்குறிப்பின்றி அறிக்கைக்கு இணக்கம் தெரிவித்துள்ளனர்.\nஅக்குழுவின் தலைவர் சுனில் ஹந்துன்நெத்தி, ரவூப் ஹக்கீம், அநுர பிரியதர்சனயாப்பா, தயாசிறி ஜயசேகர, லக்ஸ்மன் செனவிரட்ன, லசந்த அழகியவண்ண, அநுர திசாநாயக்க, சந்திரசிறி கஜதீர, மஹிந்தானந்த அழுத்கமகே, பிமல் ரத்நாயக்க, வீரகுமார திசாநாயக்க, எஸ்.ஸ்ரீதரன், எம்.ஏ.சுமந்திரன், நளிந்த ஜயதிஸ்ஸ, ஸ்ரீநேசன், மாவை சேனாதிராஜா ஆகியோர் ஏகமனதாக இணங்கியுள்ளனர்.\nஅடிக்குறிப்புடன் கூடிய அறிக்கைக்கு பாராளுமன்ற உறுப்பினர்களான ரவீந்திர சமரவீர, சுஜீவ சேனசிங்க, வசந்த அலுவிகார, கலாநிதி ஹர்சடிசில்வா, அஜித்.பி.பெரேரா, அசோக அபயசிங்க, அப்துல்லா மஹ்ரூப், ஹெக்டர் அப்புகாமி, ஹர்சன ராஜகருணா ஆகியோர் இணக்கம் தெரிவித்துள்ளனர்.\nஅத்தோடு இந்த அறிக்கையிலுள்ள பரிந்துரைகளுக்கு மேலுள்ள அனைத்து உறுப்பினர்களும் இணக்கம் வெளியிட்டுள்ள நிலையில் அவர்கள் அனைவரினதும் அறிக்கைகள் மற்றும் இணைப்புக்கள் சபைக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன. அதனையடுத்து குறித்த அறிக்கையில் காணப்படும் 15 பரிந்துரைகளும் சபையில் பகிரங்கப்படுத்தப்பட்டன.\n2015 மற்றும் 2016 ஆகிய இரு வருடங்களிலும் இலங்கை மத்திய வங்கி மேற்கொண்ட பிணைமுறி வழங்கல்களில் எமது குழுவினால் ஆராயப்பட்ட 2015 பெப்ரவரி 27ஆம் திகதி கொடுக்கல்வாங்கல்களின் போது அப்போதைய மத்திய வங்கி ஆளுநராகவிருந்த அர்ஜுன மகேந்திரன் தலையீடு செய்தோ அல்லது அழுத்தத்தையோ மேற்கொண்டிருந்ததாகவோ நியாயமான சந்தேகம் ஏற்படக்கூடிய சாட்சியங்கள் மற்றும் காரணிகள் கோப் குழுவின் முன்னிலையில் வெளிப்பட்டுள்ளன என்பதை குழு அவதானித்துள்ளது.\nகோப் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மற்றும் சாட்சியங்கள் பற்றிய ஆராய்வுகளின் போது சில கொடுக்கல் வாங்கல்களில் உச்சபட்ச தூய தன்மை இருந்திருக்கவில்லையென்றும் அச்சந்தர்ப்பத்தில் செயற்பட்ட விதமானது இலங்கை மத்திய வங்கியின் நம்பிக்கையை பாதிப்படையச் செய்யும் வகையில் அமைந்திருந்தது எனவும் நியாயமான சந்தேகங்கள் தொடர்பான சாட்சியங்கள் மற்றும் காரணிகள் குழுவின் முன்னிலையில் வெளிப்பட்டிருந்தமை அவதானிக்கப்பட்டுள்ளது.\nஅக்காலப் பகுதியில் இடம்பெற்ற பிணைமுறி கொடுக்கல் வாங்கல்கள் ஊடாக முதன்மை நிறுவனங்களில் ஒன்றான பேர்ப்பர்சுவல் ட்ரெசரிஸ் நிறுவனம் அதிக இலாபத்தை ஈட்டியுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.\nஅந்த மோசடி நடவடிக்கைகள் காரணமாக அரசுக்கும் பொது மக்களுக்கும் ஏற்பட்டிருக்கக் கூடிய இழப்பை பொறுப்புக் கூறவேண்டிய நபர்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து அறவிடப்பட வேண்டும். அ த்தோடு அதற்குரிய நீதிமன்ற ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.\nபரிந்துரை செய்யப்பட்ட தண்டனைகள் மற்றும் ஏனைய நிர்ணயங்கள் அதன் பிரகாரமே நடைமுறைப்படுத்துவதை ஆராயவும் உறுதிப்படுத்தவும் அது தொடர்பாக பின்னூட்டல்களை வழங்குவதற்கும் அவ்வாறான நடவடிக்கைகள் எதிர்காலத்தில் இடம்பெறாமல் இருப்பதற்கும் உடனடியாக எடுக்கப்பட வேண்டிய சகல நடவடிக்கைகளையும் நடைமுறைப்படுத்தவும் அவற்றை மத்திய வங்கி உரிய முறையில் அமுல்படுத்துவதை ஆராயவும் உறுதிப்படுத்தவும் அதுதொடர்பில் பின்னூட்டல்களை வழங்கவும் நேரடியாக தலையிடவேண்டும். அது பாராளுமன்றத்துக்குரிய அரச நிதி நிர்வாகம் தொடர்பான அடிப்படை கடமையாகும். அவ்வாறு செய்வதன் மூலம் அரசுக்கு ஏற்பட்ட நட்டங்களை அறவிட்டுக் கொள்வதற்கு நடப்பில் உள்ள சட்டத்தின் கீழ் செயற்பட வேண்டியது பாராளுமன்றத்துக்குரிய பொறுப்பாகும்.\nமீ���்டும் இவ்வாறான நிலைமையொன்று ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும்ங நோக்கில் இலங்கை மத்திய வங்கியினுள்ளும் அதனுடன் இணைந்த ஏனைய நிறுவனங்களினுள்ளும் பொருத்தமான பொறிமுறையொன்று நடைமுறைப்படுத்தப்படுவது தொடர்பில் அந்த நிறுவனங்கள் பாராளுமன்றத்துக்கு உறுதியளிக்க வேண்டும்.\nநாட்டின் நிதித் தேவையை பூர்த்தி செய்வதற்கு பொறுப்பான பிரதான நிறுவனமான மத்திய வங்கியின் நிதி கேள்விமனுக்கோரல்கள் வழங்கல்களின் போது அது தொடர்பான நடவடிக்கைகளை ஆராய்வதற்கும் தேவையான அனைத்து பின்னூட்டல்களை மேற்கொள்வதற்கும் ஜனாதிபதியினால் விசேட கண்காணிப்பு அணியொன்று உடனடியாக நியமிக்கப்பட வேண்டும்.\nமத்திய வங்கி அதிகாரிகள் தனியொரு நிறுவனமான பேர்ப்பச்சுவல் ட்ரெசரிஸ் நிறுவனத்துக்கு மோசடியாக இலாபம் கிடைக்கக் கூடிய வகையில் செயற்பட்டமையும் முதன்மை வணிகர் என்ற வகையில் சம்பந்தப்பட்ட அந்த நிறுவனமும் அந்த இலாபத்தைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் செயற்பட்டமையும் மத்திய வங்கியின் நம்பிக்கை தொடர்பில் பாரிய பாதிப்பாக அமைந்திருக்கிறது. அந்த நிலைமை தொடர்பில் சட்டரீதியான அந்தஸ்துடன் கூடிய அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் ஒன்றின் மூலம் முழுமையான விசாரணையொன்று நடத்தப்பட வேண்டும். மீண்டும் அவ்வாறான நிலைமை ஏற்படாதிருப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.\nபிணைமுறி செயற்பாட்டின் மூலம் நாட்டுக்குத் தேவையான நிதியை தருவித்துக் கொள்ளும் செயற்பாடுகளின்போது அரசின் அவசர நிதித் தேவையை பூர்த்திசெய்யக் கூடிய அரச நிதி நிறுவனங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். அது தொடர்பான ஏற்பாடுகள் மற்றும் சரத்துக்கள் மத்திய வங்கியின் நடவடிக்கை கையேடு உள்ளிட்ட சம்பந்தப்பட்ட ஏனைய ஆவனங்களில் உள்வாங்கப்பட வேண்டும்\nஇந்த விவகாரத்துடன் சம்பந்தப்பட்ட பேர்ப்பச்சுவல் ட்ரெசரிஸ் நிறுவனமானது முதன்மை வணிகர் என்ற வகையில் மிகவும் குறுகிய காலப்பகுதியினுள் அதிக இலாபத்தை ஈட்டியுள்ளது. அவ்வாறு இலாபம் ஈட்டப்பட்ட செயற்பாடுகள் தொடர்பில் முழுமையான அதிகாரம் கொண்ட பொறிமுறையொன்றின் மூலம் விசாரணையொன்று நடத்தப்பட வேண்டும். அதன் மூலம் அவர்களது செயற்பாடுகளின் ஊடாக அரசுக்கும் மத்திய வங்கிக்கும் நிதி ரீதியான நட்டம் ஏற்பட்டுள்ளதா என்ப���ை உடனடியாக வெளிப்படுத்திக் கொள்வது மத்திய வங்கியின் பொறுப்பென்று கோப் குழு உறுதியாக நம்புகிறது.\nஎதிர்வரும் காலங்களில் இவ்வாறான நிலைமைகள் ஏற்படுவதைத் தடுக்க முதன்மை வணிகர்களின் சந்தை நடவடிக்கைகள் மற்றும் இரட்டை சந்தை செயற்பாடுகள் தொடர்பில் பின்னூட்டல்களை வழங்கும் பொறிமுறையொன்று நிறுவப்பட வேண்டும் அதன்மூலம் மத்திய வங்கி அரசின் நிதித் தேவைக்காக நிதி வழங்கல்களை மேற்கொள்ளும் விதம் பற்றி பின்னூட்டல்கள் மேற்கொள்வதற்கான இயலுமை கிடைக்கும்.\nஇதுவரை மேம்படுத்தல்கள் மேற்கொள்ளப்படாத அரச கடன்முகாமைத்துவத் திணைக்களத்தின் நடவடிக்கை கையேட்டை உடனடியாக மேம்படுத்த வேண்டும் என்பதுடன் அதில் பிணைமுறியின் நிமித்தம் அரசின் நிதி வழங்கலை மேற்கொள்ளும்போது அவ்வாறு நிதி வழங்கலை மேற்கொள்ளக் கூடிய அரச நிறுவனங்களுக்கு முன்னுரிமை வழங்கும் ஏற்பாடுகளை உள்வாங்கப்ட வேண்டும்.\nசர்ச்சைக்குரிய பிணை முறி விவகாரம் தொடர்பில் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுனா மகேந்திரன் நேரடியாக பொறுப்புக் கூற வேண்டும். அவருக்கும் மத்திய வங்கியின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் எதிராக சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஇவ்வாறான கொடுக்கல் வாங்கல்களின் போது வெளிப்படைத் தன்மை மற்றும் மத்திய வங்கியின் நம்பிக்கைத் தன்மையை பாதுகாத்துக் கொள்வதற்கு பொருத்தமான பொறிமுறையொன்றை ஏற்படுத்த வேண்டும் என்பதுடன் தற்பொழுது நடப்பில் இருக்கும் செலாவணி ஆணைக்குழு சட்டமூலம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட ஏனைய கட்டளைச் சட்டங்களை திருத்தம் செய்ய வேண்டும் .\nஇலங்கை மத்திய வங்கி பிணை முறி மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் கோப்குழு\nநாளொன்றுக்கு 2 ஆயிரத்தை விட அதிக தொற்றாளர்கள் இனங்காணப்படலாம் : எச்சரிக்கிறது தொற்று நோயியல் பிரிவு\nநாட்டில் நாளொன்றில் இனங்காணப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கை எதிர்வரும் நாட்களில் 2000 ஐ விட அதிகரிக்கக் கூடும் என்று சுகாதார தரப்பினர் எச்சரித்துள்ளனர். தற்போது நாடளாவிய அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றமையால் மாவட்டங்களிலுள் வைத்தியசாலைகளிலும் கொவிட் தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான பிரிவுகளை பிரத்தியேகமாக ஒதுக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதே வேளை மேல�� மாகாணத்தில் மாத்திரம் நாளொன்றுக்கு சுமார் 1200 தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றனர்.\n2021-05-06 22:40:35 2000 தொற்றாளர்கள் இனங்காணல் எச்சரிக்கை\nபிழையான எண்ணங்களை மக்கள் மயப்படுத்த எதிக்கட்சி முயற்சி - மதுர விதானகே\nகொவிட்-19 வைரஸ் பரவல் காரணமாக பாதிப்படைந்துள்ள மக்களை காப்பாற்றுவதுடன் , வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கு அரசாங்கம் முயற்சிகளை எடுத்து வரும் நிலையில், எதிர்தரப்பினர் தங்களுக்கு கிடைக்கப் பெற்றுள்ள பாராளுமன்ற உறுப்புரிமையை பயன்படுத்தி பிழையான எண்ணங்களை மக்கள் மயப்படுத்த முயற்சித்து வருவதாக ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே குற்றஞ்சாட்டினார்.\n2021-05-06 22:36:58 பிழையான எண்ணங்கள் மக்கள் மயப்படுத்தல் எதிக்கட்சி\nகிளிநொச்சியில் புதிய கொரோனா சிகிச்சை நிலையம் - நள்ளிரவு முதல் சேவைகள் ஆரம்பம்\nகிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் புதிய கொவிட் 19 மருத்துவ நிலையத்தில் இன்று நள்ளிரவு முதல் சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பிரிவு தெரிவிக்கின்றது.\n2021-05-06 22:36:36 கிளிநொச்சி கொரோனா சிகிச்சை நிலையம் நள்ளிரவு\nமஹரகம நகரசபைக் கூட்டத்தில் மோதல் - விசாரணைகள் ஆரம்பம்\nமஹரகம நகரசபையில் இடம்பெற்றதாக கூறப்படும் மோதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக மாஹரகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.\n2021-05-06 22:35:00 மஹரகம நகரசபை கூட்டம் மோதல் விசாரணைகள் ஆரம்பம்\nதனியார் வங்கி உதவி முகாமையாளருக்கு கொரோனா தொற்று ; வங்கிக்கு பூட்டு\nகோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவுக்குட்பட்ட தனியார் வங்கி ஒன்றின் உதவி முகாமையாளருக்கு கொரோனா தொற்று இருப்பதாக இன்று (6) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\n2021-05-06 21:00:35 தனியார் வங்கி உதவி முகாமையாளர் கொரோனா தொற்று வங்கி\nஇலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து மேலும் 810 பேர் குணமடைவு..\nபணவீக்கம் ஏப்ரலில் 3.9 சதவீதமாக வீழ்ச்சி: இலங்கை மத்திய வங்கி\nவிலை அதிகரிப்பிற்கு அனுமதியில்லையேல் தட்டுப்பாடு ஏற்படலாம்: லாப் கேஸ் நிறுவனம்\nஸ்புட்னிக் கொரோனா தடுப்பூசி போடும் பணி ஆரம்பம்\nகளுத்துறை சிறைச்சாலைக்குள் போதைப்பொருட்கள் அடங்கிய பொதிகள் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/83553", "date_download": "2021-05-07T01:58:46Z", "digest": "sha1:DVYXZAO2HFGYZ2BCX4M2FAP4F5SZYUKT", "length": 21632, "nlines": 109, "source_domain": "www.virakesari.lk", "title": "முகக்கவசங்கள் தொடர்பான வழிகாட்டல்களை மாற்றும் உலக சுகாதார நிறுவனம் | Virakesari.lk", "raw_content": "\n4 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு\nநாட்டில் மேலும் 12 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்\nதூரநோக்குடனான திட்டமிடலின்றி நாடு நெருக்கடிக்குள் சிக்கி விட்டது - ரணில் கவலை\nநாளொன்றுக்கு 2 ஆயிரத்தை விட அதிக தொற்றாளர்கள் இனங்காணப்படலாம் : எச்சரிக்கிறது தொற்று நோயியல் பிரிவு\nபிழையான எண்ணங்களை மக்கள் மயப்படுத்த எதிக்கட்சி முயற்சி - மதுர விதானகே\n4 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு\nநாட்டில் மேலும் 12 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்\nஜம்மு-காஷ்மீரில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை\nகொரோனாவால் இலங்கையில் கர்ப்பிணித் தாய் பலி\nமுகக்கவசங்கள் தொடர்பான வழிகாட்டல்களை மாற்றும் உலக சுகாதார நிறுவனம்\nமுகக்கவசங்கள் தொடர்பான வழிகாட்டல்களை மாற்றும் உலக சுகாதார நிறுவனம்\nசமூக இடைவெளி சாத்தியமில்லாத பகுதிகளில் முகக்கவசங்களை அணியுமாறு புதிதாக வெளியிட்டுள்ள முகக்கவச பயன்பாடு தொடர்பான வழிகாட்டல்களில் உலக சுகாதார நிறுவனம் ஆலோசனை கூறியிருக்கிறது.\nசுகாதார நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் ரெட்ரோஸ் அதானம் கெபிரியேசஸ் ஜெனீவாவில் வெள்ளியன்று செய்தியாளர்கள் மகாநாட்டில் இதை அறிவித்தார்.\"சமூகத்தொற்று உள்ள பகுதிகளில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களும் கொவிட் -- 19 வைரஸ் எளிதில் தொற்றக்கூடிய உடல் நிலையைக் கொண்டவர்களும் பௌாதீக இடைவெளி சாத்தியமில்லாத சூழ்நிலைகளில் முகக்கவசங்களை கட்டாயம் அணியவேண்டும்\" என்று அவர் கூறினார்.\nபுதிய வழிகாட்டல்கள் வெளிவரும் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டவை என்றும் சர்வதேச நிபுணர்களுடனும் சிவில் சமூக குழுக்களுடனும் விரிவான கலந்தாலோசனைகளுக்குப் பிறகே அவை தயாரிக்கப்பட்டன என்றும் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.\nஎன்.95 முகக்கவசங்கள் அல்லது அதேபோன்ற சுவாச இயக்கிகள் அல்லது முகக்கவசங்களின் பயன்பாடு வைரஸ் தொற்று ஆபத்தை பெருபளவுக்கு குறைத்திருப்பதாக 16 நாடுகளிலும் உலக சுகாதார நிறுவனத்தினால் நிதயுதவியளிக்கப்ப��ுகின்ற6 கண்டங்களிலும் மேற்கொள்ளப்பட்ட 172 அவதானிப்பு ஆய்வுகள் மீளாய்வு மூலம் கண்டறியப்பட்டு நான்கு நாட்களுக்குப் பிறகு புதிய வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன.\nகொவிட் --19 வைரஸ் அதன் தொற்றுக்கு இலக்கான ஒருவரின் சுவாச நீர்மங்களின் ( Respiratory droplets ) ஊடாக பரவுகின்றது என்று அறியப்பட்டிருக்கிறது.தொற்றுக்குள்ளான நபரில் இருந்து நெருக்கமான தொடர்பில் ( ஒரு மீட்டர் அல்லது அதற்கும் குறைவான ) இருப்பவர்கள் தொற்றுக்குள்ளாகக்கூடிய பெரும் ஆபத்தைக் கொண்டிருக்கிறார்கள் என்று ஆய்வுகள் காண்பிக்கின்றன.\nவைரஸ் பரவலைத் தடுப்பதில் முகக்கவசங்களின் பயனுடைத்தன்மை குறித்து உலக சுகாதார நிறுவனம் முன்னதாக கூடுதலான அளவுக்கு ஒரு நடுத்தரமான நிலைப்பாட்டையே எடுத்திருந்தது.\" வீடுகளில் ஆரோக்கியமான உடல்நிலையில் இருப்பவர்கள் அல்லது சுகவீனமுற்ற ஒருவருடன் தொடர்பில் இருப்பவர்கள் அல்லது பெருமளிவ் மக்கள் கலந்துகொள்ளும் கூட்டங்களில் பங்கேற்பவர்கள் மருத்துவ முகக்கவசத்தை அணிவது ஒரு தடுப்பு நடவடிக்கை என்ற வகையில் பயன்தருவதாக இருக்கலாம் என்பதற்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவு சான்றுகளே இருக்கின்றன \" என்று ஏப்ரில் 6 வெளியான வழிகாட்டல்கள் கூறின.\nமருத்துவ முகக்கவசங்களின் பயன்பாடு ஒரு தவறான அல்லது போலியான பாதுகாப்பு உணர்வை உருவாக்கக்கூடும் என்பதுடன் ஏனைய தடுப்பு நடவடிக்கைகளை அலட்சியப்படுத்தப்படுவதற்கும் வழிவகுக்கக்கூடும் எனறும் அந்த வழிகாட்டல் அறிக்கை மேலும் சுட்டிக்காட்டியது.உலக சுகாதார நிறுவனம் சுகாதாரப்பராமரிப்பு பணியாளர்கள் முகக்கவசங்களை அணியவேண்டியது கட்டாயம் என்று விதந்துரைத்த அதேவேளை, ஆரோக்கியமான உடல்நிலையில் இருப்பவர்களுக்கு முகக்கவசப் பயன்பாடு குறித்து வழங்கப்படக்கூடிய எந்தவொரு அறிவுறுத்தலுக்கும் பகுத்தறிவுக்கு பொருத்தமான காரணமொன்றை தெளிவாக முன்வைக்கவேண்டும் என்று தீர்மானங்களை மேற்கொள்பவர்களுக்கு ஆலோசனை வழங்கியது.\nபுதிய வழிகாட்டல்களில் உலக சுகாதார நிறுவனம் கடைகள், அலுவலகங்கள், சமூக ஒன்றுகூடல்கள், பாடசாலைகள் மற்றும் வணக்கத்தலங்கள் போன்ற பொது இடங்களில் அல்லது ஒரளவு பொது சுற்றுப்புறத்தில் எவரும் மருத்துவம் சாரா முகக்கவசங்களை அணிவதை அங்கீகரித்திருக்கிறது.உயர்ந்த சனத்தொகை அடர்த்தி கொண்ட அல்லது பொதுப்போக்குவரத்து போன்ற பௌதீக இடைவெளியைப் பேணுவது கஷ்டமாகவுள்ள சூழமைவுகளிலும் இதே நடைமுறை பின்பற்றப்படவேண்டும்.\nபௌதீக இடைவெளியைப் பேணுவது கஷ்டமாகவுள்ள சூழமைவுகளில் 60 வயதில் உள்ளவர்களும் அவர்களை விட மூத்தவர்களும் மருத்துவ முகக்கவசங்களை அணிவது மேலும் முக்கியமானதாகும்.ஆரோக்கியமான உடல்நிலையில் உள்ள மக்கள் முகக்கவசங்களை பயன்படுத்துவது தொற்றுக்கு இலக்காகக்கூடிய ஆபத்தையும் களங்கப்படுத்தப்படுவதற்கான வாய்ப்பையும் குறைக்கிறது.\nமருத்துவ முகக்கவசங்கள் ( Medical masks ) , மருத்துவம்சாரா முகக்கவசங்கள் ( Non -- medical masks) என்று இரு வகையான கவசங்கள் பற்றி உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டல்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.மருத்துவ முகக்கவசங்கள் சுகாதாரப்பராமரிப்பு பணியாளர்களுக்காகவும் வைரஸ் தொற்றுக்கு இலக்காகக்கூடிய ஆட்களுக்காகவும் ஒதுக்கப்படவேண்டும் என்று சுகாதார நிறுவனம் கூறுகிறது.இந்த முகக்கவசங்கள் சர்வதேச மற்றும் தேசிய தராதரங்களின் பிரகாரம் உறுதிப்படுத்தப்படவேண்டியவை என்பதுடன் சுவாசிக்கக்கூடியதாக இருக்கும்போது 95 சதவீதமான நீர்மங்களை தடுக்கவும் வேண்டும்.\nமருத்துவம் சாரா முகக்கவசங்கள் பல்வேறு துணிவகைகளில் தயாரிக்கப்படுகின்றன.இந்த முகக்கவசங்களுக்கான துணிவகைகள் நீர்மத்துளிகளை வடிகட்டுவதை அல்லது அவற்றை தடுப்பதை அடிப்படையாகக்கொண்டும் சுவாசத்துக்கு வசதியானவையாகவும் இருக்கவேண்டும் என்று வழிகாட்டல்கள் கூறுகின்றன. அத்துடன் நெகிழ்வாற்றலுடைய துணிவகைகள் தவிர்க்கப்படவேண்டும்.ஏனென்றால், அத்தகைய துணிவகைகளின் நுண்துளைகளின் அளவு அதிகரிக்கும்பாது அதன் வடிகட்டும் ஆற்றல் குறைந்துவிடு்ம்.\n\" பயன்படுத்தப்படுகின்ற துணிவகைகளைப் பொறுத்து மருத்துவம் சாரா முகக்கவசங்களுக்கு குறைந்தபட்சம் மூன்று அடுக்குகள் அவசியமாகும்\" என்று வழிகாட்டல்கள் கூறுகின்றன.\n( த பிறின்ற் )\nஇருண்ட காலத்திலிருந்து மீண்டெழ அஞ்சல்வழிக் கல்வி ஒரு தெரிவு\nஆரம்பத்தில் கொரோனா வைரஸ் சிறுவர்கள் மத்தியில் பாரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாது என்று கருதப்பட்டதுடன் தடுப்பூசிகளும் வளர்ந்தவர்களை இலக்கு வைத்தே தயாரிக்கப்பட்டன .\n2021-05-06 17:15:47 அஞ்சல்வழிக் கல்வி இணையம் ஆசிரியர்கள்\nமுதல் முறையாக முதல்வராகிறார் ஸ்டாலின்\nதமிழகத்தின் பத்தாவது முதல்வராக மு.க. ஸ்டாலின் நாளை வெள்ளிக்கிழமை பதவியேற்கவுள்ளார். நடைபெற்று முடிந்த தமிழக சட்ட மன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி 159 ஆசனங்களைப் பெற்று அமோக வெற்றிப்பெற்றுள்ளது. தனித்து ஆட்சியமைக்க 118 ஆசனங்களே தேவைப்பட்ட நிலையில் தி.மு.க. தனித்து 125 ஆசனங்களுடன் தனிப்பெரும்பான்மை பெற்றுள்ளது.\n2021-05-06 17:18:46 ஸ்டாலின் இந்தியா கவர்னர் பன்வாரிலால்\nஇனவழிப்புக்கு உள்ளான ஆர்மேனியர்கள் - அமெரிக்காவின் அங்கீகாரம்\nசரியாக 106 வருடங்களுக்கு பின்பு ஆர்மேனிய மக்களுக்கு எதிராக 1915 ஆம் ஆண்டு ஓட்டோமான் பேரரசினால் இடம் பெற்ற தாக்குதல்கள் ‘இனப்படுகொலை’ தான் என்று முதன் முதலாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்.\n2021-05-03 21:38:27 ஜோ பைடன் அமெரிக்கா ஐரோப்பா\nபாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிஷாத் பதியுதீன் ஏப்ரல் 21 தாக்குதல் தாரிகளுக்கு உதவினார் என்ற குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\n2021-05-03 21:35:40 ரிஷாட் பதியுதீன் மஹிந்த ராஜபக்ஷ ஏப்ரல் 21 தாக்குதல்\nகாக்கைதீவு குடியிருப்பாளர்கள் தினமாக மாறிய தமிழ் - சிங்கள புதுவருட தினம்\n“எப்படித்தான் நான் இந்த மக்களின் முகத்தில் முழிபேனோ நாளைக்கு விடிந்தால் எப்படி நான் முகங்கொடுக்கப்போகின்றேன்.”\nநாட்டில் மேலும் 12 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்\nதூரநோக்குடனான திட்டமிடலின்றி நாடு நெருக்கடிக்குள் சிக்கி விட்டது - ரணில் கவலை\nஇலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து மேலும் 810 பேர் குணமடைவு..\nபணவீக்கம் ஏப்ரலில் 3.9 சதவீதமாக வீழ்ச்சி: இலங்கை மத்திய வங்கி\nவிலை அதிகரிப்பிற்கு அனுமதியில்லையேல் தட்டுப்பாடு ஏற்படலாம்: லாப் கேஸ் நிறுவனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mybhaaratham.com/2020/02/blog-post_24.html", "date_download": "2021-05-07T02:08:30Z", "digest": "sha1:6YPQWMNVSFHVI5DOZVIIH33ZTGHBOSYO", "length": 10345, "nlines": 122, "source_domain": "www.mybhaaratham.com", "title": "Bhaaratham Online Media: 'ஒரு விரல் புரட்சி' கேலிக்கூத்தானதா?", "raw_content": "\n'ஒரு விரல் புரட்சி' கேலிக்கூத்தானதா\nஜனநாயக கடமையை காப்பாற்ற வேண்டும் என்ற ஒற்றை வரி தூண்டுதலில் ஒட்டுமொத்த மலேசியர்களின் மனதிலும் கொளுந்து விட்டெரிந்த 'மாற்றம்' எனும் தீ இன்று யாரை ச���ட்டெரிக்க போகிறது என்ற கேள்வியே அனைவரின் மனதிலும் நிழலாடி கொண்டிருக்கிறது.\nநாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் ஒரு போராட்டத்தை முன்னெடுத்து 60 ஆண்டுகால தேசிய முன்னணியின் ஆட்சிக்கு முடிவு கட்டி பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியை அரியணையில் ஏற்றினர்.\nமக்கள் நலன், நாட்டின் வளப்பம், பொருளாதார மேம்பாடு என சரியான பாதையில் பயணிக்க வேண்டிய பக்காத்தான் ஹராப்பான் தலைவர்கள், பதவி சுகத்துக்கு அடிமையானதன் விளைவே இன்றைய அரசியல் அதிரடி திருப்பங்கள் ஆகும்.\nமக்களிடம் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளையே காற்றில் பறக்கவிட்ட போது மெளனம் காத்ததன் பலனை தான் இன்று அன்வார் & கோ அணியினர் (பிகேஆர், ஜசெக, அமானா) அறுவடை செய்கின்றனர்.\nபுத்தகமாக அச்சிடப்பட்டு மக்களிடம் பகிரங்கமாக கொடுக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளையை 'அது புனிதநூல் அல்ல' என்று துன் மகாதீர் கூறியபோதே பிரதமர் பதவியை ஒப்படைப்பேன் என்று எவ்வித உத்தரவாதமும் இல்லாமல் வாக்குறுதியை அள்ளி தெளிக்கும்போது சுதாரித்துக கொள்ள வேண்டாமா\nஅன்று வாக்களித்த மக்களுக்கு துரோகம் இழைக்கும்போதே கண்டனத்தை பதிவு செய்திருந்தால் இன்று துணிச்சலாக மக்கள் தேர்ந்தெடுத்த அரசாங்கத்தை அந்தரத்தில் தொங்க விட்டிருக்க மாட்டார்.\nஆனால், பிரதமர் பதவியை மட்டுமே குறிக்கோளகக் கொண்டு வாயை மூடி மெளனம் காத்ததன் விளைவு ஆட்சியை இழந்நு நிற்கும் பரிதாப சூழலுக்கு அன்வார் & கோ தள்ளப்பட்டுள்ளது.\nமக்களை மடையர்களாக நினைத்து தான் போடுவதுதான் 'சரியான கணக்கு' என நினைத்தவர்களுக்கு 'உங்களுக்கு எல்லாம் அப்பன் நான் இருக்கேன்டா' என சொல்லி அடித்திருக்கும் துன் மகாதீரின் அரசியல் சாணக்கியத்தன(துரோக)த்தில் கேலிக்கூத்தாக்கப்பட்டது மக்களின் 'ஒரு விரல் புரட்சியும் ஜனநாயக கடப்பாடும்' தான்.\n'இயற்கையை காப்போம் இனியதோர் உலகை படைப்போம்' - சிறப்பு கட்டுரை\nபினாங்கு - இயற்கை என்பது இயல்பாக இருப்பது என்பது பொருள் கொண்டதாகும் . இயல்பாகவே தோன்றி மறையும் பொருட்கள் அவற்றின் இயக்கம் , அவை இயங...\nபூச்சோங்- மாரடைப்பின் காரணமாக மனைவியும் அவரை தொடர்ந்து கணவனும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. சிலாங்கூர்,பூச்சோங்கைச் ச...\nசோழன் ஆட்சியை இழந்ததைப்போல, மஇகாவை இழந்து விடாதீர்கள்\nசேரன், சோழன், பாண்���ியன் ஆட்சிகளை இழந்து 500 ஆண்டுகளைக் கடந்து விட்டோம். இங்கு வந்து 200 ஆண்டுகளாகக் கட்டமைத்த வாழ்க்கையைத்தான் இன்றும...\n- மார்ச் 2இல் முடிவு\nமலேசிய அரசியல் நெருக்கடியில் வைரலாகும் நடிகர் சீம...\nமக்களின் ஜனநாயக நம்பிக்கை நசுக்கப்பட்டுள்ளது- டான்...\nபொதுத் தேர்தலை நடத்துவதே சிறந்த வழி- டான்ஸ்ரீ விக்...\nஅதிகாரத்தை மக்களிடம் ஒப்படையுங்கள்- டத்தோஶ்ரீ சரவணன்\nமக்கள் விரும்பும் அணியே ஆட்சியமைக்க வேண்டும்\n'ஒரு விரல் புரட்சி' கேலிக்கூத்தானதா\nPH அமைச்சர்களின் நியமனங்கள் ரத்து\nபெரும்பான்மையை நிரூபிக்குமா பக்காத்தான் ஹராப்பான்\nபக்காத்தான் ஹராப்பான் இனி கிடையாது- அன்வார்\nபிரதமர் ஆகிறாரா வான் அஸிஸா\nஅஸ்மின் அலியின் கூடாரம் பிகேஆரிலிருந்து வெளியேறியது\nமகாதீரின் பதவி விலகல் உண்மையே\nPH கூட்டணியிலிருந்து விலகியது பெர்சத்து\nபிரதமர் பதவியிலிருந்து விலகினார் மகாதீர்\nமகாதீரை சந்திக்கும் அன்வாரின் முயற்சி தோல்வி\nபக்காத்தான் ஹராப்பான் கதை முடிந்தது- டான்ஶ்ரீ விக்...\nபதவி இழப்புக்கு தயாராகும் 4 இந்திய அமைச்சர்கள்\nமாட்டுப்பண்ணை உடைபட்டதை இன விவகாரமாக மாற்ற வேண்டாம...\n'இறைவன் இல்லம்' இசை குறுந்தட்டு வெளியீடு\nசமுதாயத்திற்கு ஒரு தலைவனை தந்த ‘திரை மறைவு போராளி’...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newneervely.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87", "date_download": "2021-05-07T01:58:41Z", "digest": "sha1:54HOCNNZ6JBSTXEEMTMCXM72S663CLJ5", "length": 5021, "nlines": 87, "source_domain": "newneervely.com", "title": "பாடகி அபிநயா இலண்டனில் இருந்து நீர்வேலி வருகை | நீர்வேலி", "raw_content": "10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..\nநீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது\nபாடகி அபிநயா இலண்டனில் இருந்து நீர்வேலி வருகை\nநீர்வேலியை தாயகமாகக் கொண்ட பாடகி அபிநயா இலண்டனில் இருந்து நீர்வேலிக்கு வருகை தந்துள்ளார். 21.10.2019 அன்று அத்தியார் இந்துக்கல்லூரி பாலர்பகல்விடுதி ஆகிய இடங்களுக்கு விஜயம் செய்து அங்கு தான் இலண்டனில் பாடல் மூலம் பெறுகின்ற வருமானத்தில் செல்வி அபிநயா அவர்கள் பாலர்பகல்விடுதி மாணவர்கள் இருவருக்கு பண உதவியினையும் அனைத்து மாணவர்களுக்கும் இனிப்பு வகைகளையும் வழங்கியும் அவர்களுடன் பாடல்பாடியும் மகிழ்வித்தார்.\nஅத்தியாரில் மதிலுக்கு வர்ணம் பூசப்பட்டது »\n« நீர்வைக்கந்தனில் கந்தசஸ்டிக்கான கொடியேற்றம்\nஇது எமது ஊர். இங்கு பிறந்ததினால் நாம் பெருமையடைகிறோம். நீர்வேலியின் சிறப்பையும் வனப்பையும் எங்கு சென்றாலும் மறவோம். எமதூரைப் போற்றுவோம்.\nநீர்வேலி நலன்புரிச் சங்கம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://reviews.dialforbooks.in/kavi-ka-mu-sherippin-padaippalumai.html", "date_download": "2021-05-07T01:29:20Z", "digest": "sha1:MHWKOGQMZILWOF5GM46LDAHUVL4DIFXG", "length": 9006, "nlines": 215, "source_domain": "reviews.dialforbooks.in", "title": "கவி கா.மு.ஷெரீப்பின் படைப்பாளுமை – Dial for Books : Reviews", "raw_content": "\nகவி கா.மு.ஷெரீப்பின் படைப்பாளுமை, தொகுப்பாசிரியர்: இரா.சம்பத்,சாகித்ய அகாதெமி, பக்.225, விலை ரூ.110.\nகவிஞர் கா.மு.ஷெரீப் கவிதை, காவியம், சமயம், திரையிசைப் பாடல்கள், கலை, இலக்கியம், இலக்கணம், அரசியல், பத்திரிகை, தலையங்கம், உரைகள் எனப் பல்வேறு பரிமாணங்கள் கொண்டவர்; பல்துறைகளிலும் தமக்கென ஒரு தனியிடத்தைப் பிடித்தவர் . பத்திரிகையாளராகவும், காங்கிரஸ் கட்சி, ம.பொ.சி.யின் தமிழரசு கட்சி போன்றவற்றில் முக்கிய பங்காற்றியவராகவும், தமிழக எல்லைப் போராட்டம், இந்தி எதிர்ப்புப் போராட்டம் முதலிய போராட்டங்களில் பங்கேற்றவராகவும் அவர் அறியப்பட்டாலும், அவருடைய திரையிசைப் பாடல்களான ‘ஏரிக்கரையின் மேலே போறவளே பொன்மயில 39;, ‘பாட்டும் நானே பாவமும் நானே 39;, ‘பணம் பந்தியிலே குணம் குப்பையிலே39; முதலிய பாடல்களே இவரைப் புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றன.\nஇவருடைய பன்முகத் திறமையை இத்தொகுப்பிலுள்ள இருபது கட்டுரைகளும் பறை சாற்றுகின்றன.\nகா.மு.ஷெரீப்பின் திரையிசைப் பாடல்கள், அப்பாடல்கள் காட்டும் சமுதாயச் சிந்தனைகள், அவருடைய கவிதைகளில் உள்ள ஆங்கிலச் சொற்களின் செல்வாக்கு, அவரது ‘மச்சகந்தி காவியத்தில் 39; இடம்பெறும் மெய்ப்பாடுகள், அக்காவியத்தில் வெளிப்படும் ஷெரீப்பின் கவிப்புலமை, பல்கீஸ் நாச்சியார் காவியத்தில் காட்டப்படும் பெண்கள், உரை இலக்கிய வளர்ச்சிக்கு கா.மு.ஷெரீப்பின் பங்களிப்பு, அவருடைய தலையங்கம் பற்றிய மதிப்பீடு, அவரது இலக்கணப் புலமை, கா.மு.ஷெரீப்பின் வாழ்க்கைக் குறிப்பு, கா.மு.ஷெரீப்புடனான குமரி அபுபக்கரின் நினைவலைகள் என ஒன்றுவிடாமல் அனைத்தும் இத்தொகுப்பில் பதிவாகியுள்ளன.\nஉலகியல் இயல்பை, எதார்த்தத்தை எளிமையாக எடுத���துரைப்பதுதான் கா.மு.ஷெரீப்பின் தனித்தன்மை. அத்தன்மை இத்தொகுப்பிலும் பளிச்சிடுகிறது.\nதொகுப்பு\tகவி கா.மு.ஷெரீப்பின் படைப்பாளுமை, சாகித்ய அகாதெமி, தினமணி, தொகுப்பாசிரியர்: இரா.சம்பத்\nஷீரடி பாபாவின் சீரடி பணிவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gktamil.in/2017/09/tnpsc-current-affairs-quiz-152.html", "date_download": "2021-05-07T01:14:40Z", "digest": "sha1:ZZF5TRAVG6XGLZAKRU537O7ELHL7F6LY", "length": 19971, "nlines": 69, "source_domain": "www.gktamil.in", "title": "GK Tamil.in: TNPSC Current Affairs Quiz 152 - September 2017 Tamil - Sports, Tamil Nadu, Important Day Affairs */ /* Content ----------------------------------------------- */ body { font: normal normal 14px 'Raleway', sans-serif; color: #222222; background: #f7f7f7 none repeat scroll top left; padding: 0 40px 0 40px; } html body .region-inner { min-width: 0; max-width: 100%; width: auto; } h2 { font-size: 22px; } a:link { text-decoration:none; color: #00ae86; } a:visited { text-decoration:none; color: #00ae86; } a:hover { text-decoration:none; color: #41d5b3; transition:0.3s; } .body-fauxcolumn-outer .fauxcolumn-inner { _background-image: none; } .body-fauxcolumn-outer .cap-top { position: absolute; z-index: 1; height: 400px; width: 100%; } .body-fauxcolumn-outer .cap-top .cap-left { width: 100%; _background-image: none; } .content-outer { -moz-box-shadow: 0 0 40px rgba(0, 0, 0, .15); -webkit-box-shadow: 0 0 5px rgba(0, 0, 0, .15); -goog-ms-box-shadow: 0 0 10px #333333; box-shadow: 0 0 40px rgba(0, 0, 0, .15); margin-bottom: 1px; } .content-inner { padding: 10px 10px; } .content-inner { background-color: #ffffff; } /* Header ----------------------------------------------- */ .header-outer { _background-image: none; } .Header h1 { font: normal normal 50px 'Raleway', sans-serif; color: #222222; text-shadow: -1px -1px 1px rgba(0, 0, 0, .2); text-align:center; } .Header h1 a { color: #222222; } .Header .description { font-size: 140%; color: #777777; text-align:center; } .header-inner .Header .titlewrapper { padding: 22px 30px; } .header-inner .Header .descriptionwrapper { padding: 0 30px; } /* Tabs ----------------------------------------------- */ .tabs-inner .section:first-child { border-top: 1px solid #eeeeee; } .tabs-inner .section:first-child ul { margin-top: -1px; border-top: 1px solid #eeeeee; border-left: 0 solid #eeeeee; border-right: 0 solid #eeeeee; } .tabs-inner .widget ul { _background-image: none; border-bottom: 1px solid #eeeeee; margin-top: 0; margin-left: -30px; margin-right: -30px; } .tabs-inner .widget li a { display: inline-block; padding: .6em 1em; font: normal normal 14px 'Raleway', sans-serif; color: #999999; border-left: 1px solid #ffffff; border-right: 1px solid #eeeeee; } .tabs-inner .widget li:first-child a { border-left: none; } .tabs-inner .widget li.selected a, .tabs-inner .widget li a:hover { color: #000000; background-color: #eeeeee; text-decoration: none; } /* Columns ----------------------------------------------- */ .main-outer { border-top: 0 solid #eeeeee; } .fauxcolumn-left-outer .fauxcolumn-inner { border-right: 1px solid #eeeeee; } .fauxcolumn-right-outer .fauxcolumn-inner { /*border-left: 1px solid #eeeeee;*/ } /* Headings ----------------------------------------------- */ div.widget > h2, div.widget h2.title { margin: 0 0 1em 0; font: normal bold 11px 'Raleway', sans-serif; color: #222222; } /* Widgets ----------------------------------------------- */ .widget .zippy { color: #262626; /* text-shadow: 2px 2px 1px rgba(0, 0, 0, .1); */ } .widget .popular-posts ul { list-style: none; } /* Posts ----------------------------------------------- */ h2.date-header { font: normal bold 11px 'Raleway', sans-serif; } .date-header span { background-color: transparent; color: #222222; padding: inherit; letter-spacing: inherit; margin: inherit; } .main-inner { padding-top: 30px; padding-bottom: 30px; } .main-inner .column-center-inner { padding: 0; } .main-inner .column-center-inner .section { margin: 0 15px; } .post { margin: 0 0 25px 0; } h3.post-title a { font: normal bold 15px 'Raleway', sans-serif; margin: .75em 0 0; } h3.post-title, .comments h4 { font: normal bold 20px 'Raleway', sans-serif; } .post-body { font-size: 110%; line-height: 1.4; position: relative; } .post-body img, .post-body .tr-caption-container, .Profile img, .Image img, .BlogList .item-thumbnail img { padding: 2px; background: #ffffff; border: 1px solid #eeeeee; } .post-body img, .post-body .tr-caption-container { padding: 5px; } .post-body .tr-caption-container { color: #222222; } .post-body .tr-caption-container img { padding: 0; background: transparent; border: none; -moz-box-shadow: 0 0 0 rgba(0, 0, 0, .1); -webkit-box-shadow: 0 0 0 rgba(0, 0, 0, .1); box-shadow: 0 0 0 rgba(0, 0, 0, .1); } .post-header { margin: 0 0 1.5em; line-height: 1.6; font-size: 90%; } .post-footer { margin: 20px -2px 0; padding: 5px 10px; color: #222222; background-color: #f7f7f7; border-bottom: 1px solid #eeeeee; line-height: 1.6; font-size: 90%; } #comments .comment-author { padding-top: 1.5em; border-top: 1px solid #eeeeee; background-position: 0 1.5em; } #comments .comment-author:first-child { padding-top: 0; border-top: none; } .avatar-image-container { margin: .2em 0 0; } #comments .avatar-image-container img { /*border: 1px solid #eeeeee;*/ } /* Comments ----------------------------------------------- */ .comments .comments-content .icon.blog-author { background-repeat: no-repeat; background-image: url(); } .comments .comments-content .loadmore a { border-top: 1px solid #999999; border-bottom: 1px solid #999999; } .comments .continue { border-top: 2px solid #999999; } /* Accents ---------------------------------------------- */ .section-columns td.columns-cell { /*border-left: 1px solid #eeeeee;*/ } .blog-pager { background: transparent none no-repeat scroll top center; } .blog-pager-older-link, .home-link, .blog-pager-newer-link { background-color: #ffffff; padding: 5px; } .footer-outer { border-top: 0 dashed #bbbbbb; } /* Mobile ----------------------------------------------- */ body.mobile { background-size: auto; } .mobile .body-fauxcolumn-outer { background: transparent none repeat scroll top left; } .mobile .body-fauxcolumn-outer .cap-top { background-size: 100% auto; } .mobile .content-outer { -webkit-box-shadow: 0 0 3px rgba(0, 0, 0, .15); box-shadow: 0 0 3px rgba(0, 0, 0, .15); } .mobile .tabs-inner .widget ul { margin-left: 0; margin-right: 0; } .mobile .post { margin: 0; } .mobile .main-inner .column-center-inner .section { margin: 0; } .mobile .date-header span { padding: 0.1em 10px; margin: 0 -10px; } .mobile h3.post-title { margin: 0; } .mobile .blog-pager { background: transparent none no-repeat scroll top center; } .mobile .footer-outer { border-top: none; } .mobile .main-inner, .mobile .footer-inner { background-color: #ffffff; } .mobile-index-contents { color: #222222; } .mobile-link-button { background-color: #00ae86; } .mobile-link-button a:link, .mobile-link-button a:visited { color: #ffffff; } .mobile .tabs-inner .section:first-child { border-top: none; } .mobile .tabs-inner .PageList .widget-content { background-color: #eeeeee; color: #000000; border-top: 1px solid #eeeeee; border-bottom: 1px solid #eeeeee; } .mobile .tabs-inner .PageList .widget-content .pagelist-arrow { border-left: 1px solid #eeeeee; } .post-list{ padding: 1px 1em 1em 1em; /* margin: -20px 0; */ margin-bottom: -20px; border: 1px solid #ddd; border-radius: 5px; } .post-list:hover { background:#f7f7f7; border-color:#00ae86; transition:.2s; } .post-label a{ margin-right:2px; white-space:nowrap; color: #222222; border-bottom: 1px dashed #00ae86; } .post-comment a{ color: #222222; } .post-label a:hover,.post-comment a:hover{ color: #00ae86; } #blog-pager{ margin: 3em 0; } .feed-links {display:none !important;} div.widget > h2, div.widget h2.title { font: normal bold 16px 'Raleway', sans-serif; border-bottom: 2px solid #ddd; padding: 5px 0; } .comments h4 { text-align: center; text-transform: uppercase; } .comments .comment .comment-actions a { background:#00ae86; border-radius: 3px; color: #f7f7f7; margin-right:5px; padding:5px; text-decoration: none !important; font-weight:bold; } .comments .comment-block { border: 1px solid #dddddd; border-radius:5px; padding: 10px; } .continue { border-top:none !important; } .continue a { background:#00ae86; border-radius:3px; color: #f7f7f7; display: inline-block !important; margin-top: 8px; text-decoration: none !important; } .comments .comments-content .datetime{ float:right; } #comments .avatar-image-container img { border-radius: 50px; } .comments .avatar-image-container { float: left; overflow: hidden; } .comments .comments-content .comment-replies{ margin-top:0; } .topnav { overflow: hidden; background-color: #000; } .topnav a { float: left; display: block; color: #ffffff; text-align: center; padding: 14px 16px; text-decoration: none; font-size: 17px; } .active { background-color: #00ae86; color: #ffffff; } .topnav .icon { display: none; } .dropdown { float: left; overflow: hidden; } .dropdown .dropbtn { font-size: 17px; border: none; outline: none; color: #ffffff; padding: 14px 16px; background-color: inherit; font-family: inherit; margin: 0; } .dropdown-content { display: none; position: absolute; background-color: #f9f9f9; min-width: 160px; box-shadow: 0px 8px 16px 0px rgba(0,0,0,0.2); z-index: 5; } .dropdown-content a { float: none; color: #000000; padding: 12px 16px; text-decoration: none; display: block; text-align: left; } .topnav a:hover, .dropdown:hover .dropbtn { background-color: #00ae86; color: #ffffff; } .dropdown-content a:hover { background-color: #00ae86; } .dropdown:hover .dropdown-content { display: block; } @media screen and (max-width: 600px) { .topnav a:not(:first-child), .dropdown .dropbtn { display: none; } .topnav a.icon { float: right; display: block; } } @media screen and (max-width: 600px) { .topnav.responsive {position: relative;} .topnav.responsive .icon { position: absolute; right: 0; top: 0; } .topnav.responsive a { float: none; display: block; text-align: left; } .topnav.responsive .dropdown {float: none;} .topnav.responsive .dropdown-content {position: relative;} .topnav.responsive .dropdown .dropbtn { display: block; width: 100%; text-align: left; } } div#crosscol.tabs.section {margin: 0 0 2em 0;} .post-page { padding: 0 1em; } .date-header{ color:#888;display:block;border-bottom: 1px solid #888;margin-top: 5px; } .section{margin:0} .column-right-inner .section .widget{ border: 1px solid #ddd; margin: 5px 0; padding: 10px; border-radius: 5px; } .footer-inner .section .widget{ margin: 5px 0; padding: 10px; } footer{ background: #f7f7f7; padding: 8px; margin: 25px -25px -25px -25px; border-top: 1px solid #dddddd; } /* STYLE 1 - Custom Blogger Labels Gadget Styles by Georgia Lou Studios */ .widget li, .BlogArchive #ArchiveList ul.flat li{ padding: 8px 0; } .list-label-widget-content ul { list-style-type:none; padding-left:0px!important; } .list-label-widget-content ul li:before { content: \"\\f054\"; float: left; color: #262626; font-weight: 700; font-family: 'Font Awesome 5 Free'; margin: 4px 5px 0 0; font-size:10px; } .list-label-widget-content li span{ color: #888888; } /*** Mozilla based browsers ***/ ::-moz-selection { background-color: #00ae86; color: #ffffff; } /*** Works on common browsers ***/ ::selection { background-color: #00ae86; color: #ffffff; } .breadcrumbs{ color: #888;margin:-15px 15px 15px 15px; } .status-msg-body{ width:95%; padding:10px; } /* MY CUSTOM CODE - Responsive Table ----------------------------------------------- */ .post table {border: 1px solid #dddddd;border-collapse: collapse;margin: 0;padding: 0;width: 100%;color:#222222;} .post table caption {margin: .25em 0 .75em;} .post table tr {border: 1px solid #dddddd;padding: .35em;} .post table th,.post table td {padding: .625em;border: 1px solid #dddddd;} .post table th {color:#357ae8;letter-spacing: .1em;text-transform: uppercase;background: #dcffed;white-space: nowrap;} .post table td img {text-align: center;} .post tr:hover { background-color: #dcffed; transition:.2s; } @media screen and (max-width: 600px) { .post table,table th,table td {border: 0;} .post table caption {} .post table thead {display: none;} .post table tr {border-bottom: 3px solid #dddddd;display: block;margin-bottom: .725em;} .post table th,.post table td {border:none;} .post table td {border-bottom: 1px solid #dddddd;display: block;} .post table td:before {content: attr(data-label);float: left;font-weight: bold;text-transform: uppercase;} .post table td:last-child {border-bottom: 0;}} body .navbar{height:0;} /* MY CUSTOM CODE - Button ----------------------------------------------- */ a.btn, .btn-toggle{ display:inline-block; padding:0.3em 1.2em; margin:0.3em; border-radius:5px; box-sizing: border-box; text-decoration:none; font-family:inherit; font-weight:700; color:#ffffff; background-color:#00ae86; text-align:center; box-shadow:0px 1px 0px #dddddd; transition: all 0.2s; } a.btn, .btn-toggle{ font-size:20px; } .btn-toggle{ font-size:inherit; } a.btn:hover, .btn-toggle:hover{ background-color:#41d5b3; } a.btn:active, .btn-toggle:active { position:relative; top:1px; } a.btn:before { content: '\\f019'; font-family: 'Font Awesome 5 Free'; font-weight: 900; display: inline-block; margin: 0 10px 0 0; } .btn-info { display: block; line-height: 1; font-size: 13px; font-style: italic; margin: 7px 0 0; } @media all and (max-width:30em){ a.btn,.btn-toggle{ display:block; margin:0.2em auto; } } .label-size { position:relative; font-size:13px; } .label-size a,.label-size span { padding: 5px; margin: 0 6px 6px 0; float: left; display: block; } .label-size a { color: #ffffff; background: #00ae86; border: 1px solid #00ae86; } .label-size a:hover { background:transparent; color:#00ae86!important; } .label-size span{ color: #222222; background: #f7f7f7; border: 1px solid #dddddd; } /* Start dropdown navigation */ #navigationbar li{ list-style:none; } .searchHolder{ background:#000000!important; float:right!important; } @media screen and (max-width:600px){ .searchHolder{float:left!important;} } #searchbar { display: none; margin: 0 auto; width: 100%; text-align: center; height: 50px; background: #000000; overflow: hidden; z-index: 4; } #searchicon { text-align: center; cursor: pointer; } #searchicon:hover { color: #888888; } #searchBox { font:inherit; -webkit-appearance: none; border: 0px; background: transparent; padding: 10px; outline:none; width: 90%; color:#888888; border-bottom:2px solid #888888; } #searchBox:focus { border-color:#00ae86; transition: .3s; color:#ffffff; } /* End dropdown navigation */ .BlogArchive #ArchiveList ul li{ color:#888888; } .widget.Text ul li, .widget.HTML ul li, .post ul li{ list-style:none; } .widget.Text ul li:before, .widget.HTML ul li:before, .post ul li:before{ content: '\\f0da'; font-family: 'Font Awesome 5 Free'; font-weight: 900; margin: 0 5px 0 -15px; } blockquote{ background: #f7f7f7; padding: 10px; border: 2px dashed #dddddd; margin: 0; } #comments{ padding:10px; } .post img:hover{ opacity: 0.8; transition: 0.2s; } -->", "raw_content": "\n2018 முதல் 2022 வரையிலான IPL கிரிக்கெட் போட்டியின் ஊடக ஒளிபரப்பு உரிமையை எந்த நிறுவனம் பெற்றுள்ளது\n2018 முதல் 2022 வரையிலான IPL கிரிக்கெட் போட்டியின் விளம்பரதாரர் உரிமையை எந்த நிறுவனம் பெற்றுள்ளது\n2017 செப்டம்பரில் வெளியிடப்பட்ட ICC ஒருநாள் மற்றும் T20 கிரிக்கெட் ஆகிய இருவகை போட்டித் தரவரிசை பட்டியலில் முதலிடம் பெற்றுள்ள இந்திய வீரர் யார்\nசர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக முறை (73 முறை NOT OUT) ஆட்டமிழக்காமல் இருந்தது சாதனை புரிந்த இந்திய வீரர் யார்\nசமீபத்தில் 2017 உலக குத்துச்சண்டை போட்டியில் 56 கிலோ எடைப்பிரிவில் வெண்கல பதக்கம் வென்ற இந்திய வீரர் யார்\nதமிழக அரசின் சார்பில், போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள, தமிழ்நாட்டில் எங்கு போட்டித்தேர்வு பயிற்சி மையம் தொடங்கப்படவுள்ளது\nதமிழ்நாடு அரசின் \"இலவச, 'செட் - டாப் பாக்ஸ்\" வழங்கும் திட்டம் எப்போது தொடங்கிவைக்கப்பட்டது\nசர்வதேச கழுகு விழிப்புணர்வு நாள்” (International Vulture Awareness Day) எந்த நாளில் கடைபிடிக்கப்படுகிறது\nஇந்தியாவில் ஆசிரியர் தினம் யாருடைய நினைவாக செப்டம்பர் 05 அன்று கொண்டாடப்படுகிறது\nசுற்றுச்சூழலின் \"துப்புரவு பணியாள்\" என்று அழைக்கப்படும் பறவை எது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithisaral.in/page/3/", "date_download": "2021-05-07T01:23:40Z", "digest": "sha1:KNYLUP7CPOC43BAHIICBW6I7F7CKTEFG", "length": 13762, "nlines": 221, "source_domain": "www.seithisaral.in", "title": "Seithi Saral - Page 3 of 474 - Tamil News Channel", "raw_content": "\n1 மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை விவரம் 2 தூத்துக்குடிக்கு 2 மந்திரிகள்: திருநெல்வேலி, தென்காசி ஏமாற்றம் 3 திருப்பத்தூரில் இறந்த 5 பேர் கொரோனா நோயாளிகள் – மருத்துவ அதிகாரி விளக்கம் 4 துணை தலைவர் விலகல்; கமல் காட்டம் 5 தமிழகத்தில் ஒரு நாள் கொரோனா பதிவு 24,898 ஆக உயர்வு\nஒரு கோடியே 71 லட்சம் பேர் ஓட்டு போடவில்லை; 100 சதவீதத்தை எட்டுவது எப்படி\nதேர்தல் பிரசாரத்திற்கு தடை விதிக்கலாமே\nஅ.தி.மு.க. அவசர அவசரமாக முதல்கட்ட வேட்பாளர் ப��்டியலை வெளியிட்டது ஏன்\nகட்சத்தீவோடு மீனவர்களின் வாழ்வையும் தாரை வார்த்துவிட்டார்களே\nரஜினிக்கு வலை விரிக்கும் கமல்; ரசிகர்கள் ஏற்று கொள்வார்களா\nமு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை விவரம்\nதூத்துக்குடிக்கு 2 மந்திரிகள்: திருநெல்வேலி, தென்காசி ஏமாற்றம்\nதிருப்பத்தூரில் இறந்த 5 பேர் கொரோனா நோயாளிகள் – மருத்துவ அதிகாரி விளக்கம்\nதுணை தலைவர் விலகல்; கமல் காட்டம்\nதமிழகத்தில் ஒரு நாள் கொரோனா பதிவு 24,898 ஆக உயர்வு\nமு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை விவரம்\nதூத்துக்குடிக்கு 2 மந்திரிகள்: திருநெல்வேலி, தென்காசி ஏமாற்றம்\nமு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை விவரம்\nதூத்துக்குடிக்கு 2 மந்திரிகள்: திருநெல்வேலி, தென்காசி ஏமாற்றம்\nதிருப்பத்தூரில் இறந்த 5 பேர் கொரோனா நோயாளிகள் – மருத்துவ அதிகாரி விளக்கம்\nதுணை தலைவர் விலகல்; கமல் காட்டம்\nதமிழகத்தில் ஒரு நாள் கொரோனா பதிவு 24,898 ஆக உயர்வு\nசினிமாத்துறையில் அடுத்தடுத்து 3 பேர் கொரோனாவுக்கு சாவு\nதேமுதிக தலைவர் விஜயகாந்தை உதயநிதி ஸ்டாலின் சந்தித்தார்\nUdayanithi Stalin met Temujin leader Vijayakanth 4.5.2021சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்தார். உதயநிதி ஸ்டாலின் தமிழக...\nமேற்குவங்காளத்தில் வன்முறை; 6 பேர் பலி\n6 person killed in west bangal for vayalance 4/5/2021 மேற்கு வங்காளத்தில் தேர்தலுக்கு பின்பு வன்முறை சம்பவங்கள் நடந்து வருகிறது. இதில் 6 பேர்...\nசமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி மரணம்\nDeath of social activist Tropic Ramasamy 4.5.2021 தமிழ்நாட்டில் பல்வேறு சமூக பிரச்சினைகளுக்காக தனி ஆளாக நின்று போராடியவர் டிராபிக் ராமசாமி. இவர் நீதிமன்றத்தில் பல...\nஐதராபாத் பூங்காவில் 8 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று\nCorona infection for 8 lions in Hyderabad park 4.5.2021 ஐதராபாத் பூங்காவில் உளள் 8 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா இந்தியாவில்...\nஇந்தியாவில் ஒரே நாளில் 3,57,229 பேருக்கு கொரோனா ; 3,449 பேர் பலி\n27 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த பில் கேட்ஸ்-மெலிண்டா விவாகரத்து செய்ய முடிவு\nLived together for 27 years Bill Gates-Melinda decide to divorce 4.5.2021 27 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்சும் அவரது...\nமதுரை அருகே அழகர் கோவிலில் கள்ளழகருக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து பக்தர்கள் வணங்குகிறார்களோ அந்த அளவுக்கு அங்கு காவல் தெய்வமாக விளங்கும் பதினெட்டாம்படி கருப்பணசாமிக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்....\nமகாலட்சுமி குடியிருக்கும் 108 இடங்கள்\nமகாலட்சுமி அமிர்தத்திற்காக பாற்கடலை கடைந்தபோது தோன்றினாள். அவள் மகாவிஷ்ணுவின் இதயத்தில் வாசம் செய்கிறாள்.ஆனால் மகாலட்சுமி மொத்தம் 108 இடங்களில் வாசம் செய்வதாக ஐதீகம். அதாவது அருகம்புல், அகில்,...\nகொரோனா இரண்டாவது அலை இவ்வளவு வீரிய தாண்டவம் ஆடும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டோம். வெப்பமயமான நாடு, எனவே இந்தியாவுக்குள் வராது என்று சிலர் சொன்னக் கூற்று...\nமச்ச அவதாரம் எடுத்த நாள்\nபங்குனி மாதம் அமாவசைக்கு அடுத்து பவுர்ணமிக்கு பிறகு வரும் திரயோதசி(தேய்பிறை) நாளில்தான் மகாவிஷ்ணு மச்ச அவதாரம் எடுத்தார். ஆனால் அன்றைய தினம் திரயோதசி திதி மாலை 24...\nமு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை விவரம்\nதூத்துக்குடிக்கு 2 மந்திரிகள்: திருநெல்வேலி, தென்காசி ஏமாற்றம்\nதிருப்பத்தூரில் இறந்த 5 பேர் கொரோனா நோயாளிகள் – மருத்துவ அதிகாரி விளக்கம்\nதுணை தலைவர் விலகல்; கமல் காட்டம்\nதமிழகத்தில் ஒரு நாள் கொரோனா பதிவு 24,898 ஆக உயர்வு\nUma on இராமருக்கு ஓர் அக்காள் உண்டு தெரியுமா\n.. தீராத ஒரு தகராறு….(சொல்லாராய்ச்சி/ சிவகாசி முத்துமணி)\nK.Kumaresan on தென் மாவட்ட மக்கள் வெளியே வர வேண்டாம் ; முதல்வர் எச்சரிக்கை\nPonnu on ஏழைகளுக்கு எட்டிவிடும் மருத்துவப் படிப்பு\nமு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை விவரம்\nதூத்துக்குடிக்கு 2 மந்திரிகள்: திருநெல்வேலி, தென்காசி ஏமாற்றம்\nதிருப்பத்தூரில் இறந்த 5 பேர் கொரோனா நோயாளிகள் – மருத்துவ அதிகாரி விளக்கம்\nதுணை தலைவர் விலகல்; கமல் காட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2020/09/blog-post_939.html", "date_download": "2021-05-07T01:36:29Z", "digest": "sha1:A4F67RGAJ7I7IGD2B6HJK2DMIQBPUIQ7", "length": 8059, "nlines": 88, "source_domain": "www.yarlexpress.com", "title": "அரசியல் பழிவாங்கல்கள் குறித்து விசாரணை நடத்திவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜரான விஜயகலா. \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nஅரசியல் பழிவாங்கல்கள் கு��ித்து விசாரணை நடத்திவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜரான விஜயகலா.\nஅரசியல் பழிவாங்கல்கள் குறித்து விசாரணை நடத்திவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உற...\nஅரசியல் பழிவாங்கல்கள் குறித்து விசாரணை நடத்திவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான விஜயகலா மகேஸ்வரன் சுமார் 5 மணிநேர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.\nசுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் பணிபுரிந்த ஞானலிங்கம் மயூரன் என்கிற நபரது முறைப்பாட்டிற்கு அமைய விஜயகலாவிடம் இன்று விசாரணை நடத்தப்பட்டது.\nதான் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டமைக்கு விஜயகலா மகேஸ்வரனின் தலையீடுகள் இருந்திருந்ததாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த விவகாரம் குறித்தே மேற்படி விஜயகலா மகேஸ்வரனிடமும் அதேபோல, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தராகிய ஞானலிங்கம் மயூரனிடமும் 05 மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டது.\nவணிகம் / பொருளாதாரம் (7)\nமாநகர காவல்படையினரின் சீருடை பறிமுதல் - மாநகரசபைக்கு ஆப்பு வைத்த பொலீஸார் ..\nBREAKING NEWS :- ஊரடங்கு தொடர்பில் இராணுவத் தளபதி சற்றுமுன் வெளியிட்ட அறிவிப்பு\nஅத்தியாவசிய சேவைக்கு மாத்திரமே அனுமதி\nYarl Express: அரசியல் பழிவாங்கல்கள் குறித்து விசாரணை நடத்திவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜரான விஜயகலா.\nஅரசியல் பழிவாங்கல்கள் குறித்து விசாரணை நடத்திவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜரான விஜயகலா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=691", "date_download": "2021-05-07T00:41:59Z", "digest": "sha1:PW2L55MPBQSTR4BX7T63B7Y2GMDRIY52", "length": 15843, "nlines": 106, "source_domain": "www.varalaaru.com", "title": "Varalaaru - A Portal For South Asian History Varalaaru - A Monthly Web Magazine for South Asian History", "raw_content": "\nதிரும்பிப் பார்க்கிறோம் - 18\nசிதையும் சிங்காரக் கோயில்கள் - 1\nவேண்டும் நல்வரம் கொள் விசயமங்கை\nகலையே என் வாழ்க்கையின் திசைமாற்றினாய்\nவணக்கத்துக்குரிய காதல் - சில குறிப்புகள்\nநெஞ்சில் உரமும் நேர்மைத் திறமும்\nவரலாறே வாழ்வாக - வாழ்வே வரலாறாக... (கலைப்படத் தொகுப்பு)\nவாட்டும் வாடையும் ஓடிய ஒன்பதும்\nஇதழ் எண். 46 > சிறப்பிதழ் பகுதி\nடாக்டர் இரா. கலைக்கோவன். இப்பெயர் திருச்சி மக்கள், தமிழக மருத்துவர்கள��, வரலாற்று உணர்வு பெற்றவர்கள் ஆகிய இவர்களில் பெரும்பாலோருக்கும் தெரிந்த பெயர். எழுத்து, பேச்சு, கல்வெட்டு, கோயில் கட்டடக்கலை, சிற்பம், மருத்துவம் போன்ற எண்ணற்ற கலைகள் எல்லாம் ஒன்று திரண்டு கலைமகளாய் உருவெடுத்துக் குடிகொண்ட இக்கலைக்கோவைப்பற்றியும் அவருடைய புத்தகங்கள் பற்றியும் அவருடன் ஏற்பட்ட வரலாறு தொடர்பான பயணங்கள் பற்றியும் நிறைய எழுதலாம். இவர் அரிய மனிதர் என்று சொல்லும் அளவிற்கு மனிதனுக்குத் தேவையான அடிப்படைக் குணங்கள் ஒருங்கே அமையப்பெற்ற குணாளராய்க் காணப்படுகிறார்.\nவலஞ்சுழி வளாகத்தில் இவருடன் வலம் வரும் போது ஏற்பட்ட நட்புணர்வு, இவரின் அன்பு, பண்பு, பாசம், நேசம், எளிமை, அடக்கம், நடுநிலைமை, இனியவை பேசல் என்று ஒவ்வொன்றாய்க் கண்டு வியந்து, குறளை நினைவூட்டும் விதமாய் அமைந்திருக்கிறது.\nஎல்லா உயிர்களிடத்தும் அன்பு கொண்ட இக்கலைஞர் வலஞ்சுழியில் ஆருயிர் அன்பர் திரு. சீத்தாராமனின் பணியாளர் திரு.ரவி என்பவர் புகையிலை உபயோகப்படுத்துவதைப் பார்த்த டாக்டர் \"ரவி இப்பழக்கத்தை உடனே நிறுத்திவிடுங்கள், இப்பழக்கம் உங்கள் உடலை கொஞ்சம் கொஞ்சமாய் நஞ்சாக்கிவிடும், உங்களை நம்பி உங்கள் அன்புக்குடும்பம் உள்ளது\" என்று அறிவுறுத்தினார். புகையிலை உபயோகப்பவர்கள் எல்லார்க்கும் இப்பழக்கம் கெடுதல் என்று தெரியும். இருந்தபோதிலும் இவரும் இவர் குடும்பமும் நல்ல நிலையில் இருக்கவேண்டும் என்ற நினைவோடு, பணியாளர்தானே நமக்கென்ன என்று இராமல் ரவியிடம் அறிவுறுத்திய இவரின் அன்பு\nஅன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்\nதிருச்சி மாவட்டம் பட்டூர் என்ற ஊரில் உள்ள கோயிலின் காவலர் திரு.நாகராஜன் என்பவர் உடல் நலக்கோளாறினால் கை கால்கள் சரிவரச் செயல்படாத நிலையில் வாழ்க்கையை வறுமையோடு நகர்த்தி வந்தார். கோயில் ஆய்விற்காக இக்கோயிலுக்குச் சென்றபோது இவரின் நிலை கண்டு இரங்கிப் பொருளுதவி செய்து, இவரைத்தன் மருத்துவமனைக்கு அழைத்துவந்து காவலராக வேலை கொடுத்தும் இவர் குடும்பத்தினரைத் தன் மருத்துவமனை வளாகத்தில் குடியமர்த்தியும் அவரின் இரண்டு குழந்தைகளின் கல்விக்கும் ஏற்பாடு செய்த கல்விக்காவலர். இக்குழந்தைகளின் கல்விச்சான்று பெறப் பிரச்சினை எழுந்தபோது பிறர் உதவி கொண்டு அச்சான்றினைப் பெற்றுத்தந்த பெருந்தகை���ாளர். அவ்வப்போது பொருளுதவி செய்யும் இவரின் ஈகை குணம்\nஈத்துவக்கும் இன்பம் அரியார்கொல் தாமுடைமை\nதிருச்சி மாவட்டம் கீழையூர் அவனி கந்தர்ப்ப ஈஸ்வரகிரகம் என்ற கோயிலுக்கு ஆராய்ச்சி நிமித்தமாகப் பலமுறை சென்றபோது அக்கோயிலின் காவலர் திரு. கணேசன் என்பவர் அவ்வப்போது சிறு சிறு உதவிகளை டாக்டருக்குச் செய்து வந்தார். இக்காவலருக்குக் கிடைக்க வேண்டிய பதவி உயர்வு கிடைக்காமல் கால தாமதமாகி வருவதை அறிந்து தனது முயற்சியினால் அக்காவலருக்குப் பதவி உயர்வு பெற்றுக்கொடுத்த செய்நன்றியறிதல்\nதிணைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்\nதன்னைப்பற்றியோ தன் கருத்துக்களைப்பற்றியோ தவறாக விமர்சிப்பவர்களிடம் நேரிலோ அல்லது அவர்களைப்பற்றி மற்றவர்களிடம் பேசும் போதோ சிறிதும் மனத்தளர்ச்சி அடையாமல் எதையும் பொருட்படுத்தாமல் இனிதாகப்பேசும் இவரின் பொறையுடைமை\nஅகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை\nவலஞ்சுழியில் கல்வெட்டுப் படிப்புப் பணியில் இருந்த போது இக்கோயில் திருப்பணி தொடர்பான ஆய்விற்கு வருகை புரிந்த இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை ஆணையாளர் இவர் இருக்குமிடம் தேடி வந்து, நான் உங்கள் தீவிர ரசிகன். உங்கள் புத்தகங்கள் என்னைக் கவர்ந்துள்ளன. இங்கு உங்களுக்கு என்ன தேவையோ அதை இக்கோயிலிலுள்ளோர் செய்வர் என்று கூறும் அளவிற்குச் செல்வாக்குப் படைத்திருந்தும் அச்செல்வாக்கினைப் பலநிலைகளில் தனக்காகப் பயன்படுத்த வேண்டிய சந்தர்ப்பங்கள் ஏற்பட்டும், ஒருபோதும் பயன்படுத்தாமல் இருக்கும் இவரது அடக்கமுடைமை\nஅடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை\nவிருந்தோம்பல் என்பது சிலரின் வீட்டில்தான் சிறக்கும். இவரின் வீட்டில் சாப்பிட்டுச் செல்லாத வரலாற்று அறிஞர்களோ, ஆர்வலர்களோ இல்லை என்று சொல்லலாம். இவரது விருந்தோம்பல்\nவருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை\nதான் பெரிதும் மதிக்கும் மற்றும் போற்றும் கல்வெட்டு அறிஞர் திரு கூ.இரா.சீனிவாசன் அவர்களின் ஆய்வில் உள்ள பிழைகளைக் கண்டபோது அது தவறு எனத் தயங்காமல் சுட்டிக்காட்டிய இவரது நடுவுநிலைமை\nதகுதி எனவொன்று நன்றே பகுதியால்\nஇப்படி இவரின் குணங்களை ஒவ்வொன்றாகச் சொல்லச்சொல்ல இக்கட்டுரை நீளும். கலைமகளின் தலைமகனாக விளங்கும் கலைக்கோ குறள் வழி வாழும் குணாளராக வாழும் இவரது வ���ழ்க்கை குறைவில்லா வளம் பெற்று நீண்டநாள் வாழ இறைவன் அருள்வானாக.\nஇப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.\nதங்கள் பெயர்/ Your Name\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://abedheen.wordpress.com/category/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-05-07T01:46:10Z", "digest": "sha1:M4H4UBLTQHDCBG4DE5T2BUTHPXIBR62K", "length": 65513, "nlines": 729, "source_domain": "abedheen.wordpress.com", "title": "வலம்புரி ஜான் | ஆபிதீன் பக்கங்கள்", "raw_content": "\nஅம்மாசி – வலம்புரி ஜான்\n08/07/2017 இல் 13:24\t(வலம்புரி ஜான்)\nஅம்மாசி – வலம்புரி ஜான்\nகுடிமகன் (நாவிதன்) கிழக்கே கல்லறைத் தோட்டம் முதற்கொண்டு மேற்கே முள்ளிக்கரை வரை டமாரம் அடித்துவிட்டான். நாளை மாலை ஐந்து மணிக்கு ஊர்க் கூட்டம். பள்ளி மாணவர்கள் கழிவறைகளில் படம் வரைவது போல சிலவேளைகளில் தங்கள் பெயர்கள் சக மாணவிகளோடு எழுதப்படுவதைப் பார்த்துக் கொதித்துப் போகிறவர்களும் உண்டு. அதைக்கண்டு குதூகலம் அடைகிறவர்களும் உண்டு. அந்த ஊரில் இந்த பெயர் எழுதும் விவகாரத்தில் சின்னதான அடிதடி முதல் கொஞ்சம் பெரிதான கலவரம் வரை வந்திருக்கிறது.\nஇப்போது முதல் முறையாக அந்த ஊர் பங்குத் தந்தை பிரான்சிஸை ஒரு கன்னியாஸ்திரியோடு இணைத்து சுவர்களில் எழுதப்பட்டிருக்கிறது. பெரும்பாலானாவர்கள் என்ன இருந்தாலும் ஒரு சாமியாரை ஒரு கன்னியாஸ்திரியோடு இணைத்து எழுதியதை விரும்பவில்லை. நாளைய ஊர்க் கூட்டத்தில் எல்லாம் முடிவாகிப் போகும். ஜோசப்பின் என்ற இந்த கன்னியாஸ்திரிதான் முதன் முறையாக அந்த ஊருக்கு வந்த டாக்டர் கன்னியாஸ்திரி. அடிக்கடி அவர்களை அழைத்து தனது தீராத ஒரு நோய் பற்றி கூறிக்கொண்டு இருப்பார் சாமியார். பக்கத்து ஊர்களில் ஆண் டாக்டர்கள் இருக்கிறபோது இவர் ஏன் எப்போது பார்த்தாலும் படுக்கையில் கழிந்து போகிற வெள்ளை வேர்வை பற்றி, டாக்டராக இருந்தாலும் ஒரு பெண்ணிடம் பேசுகிறார் என்று ஸிஸ்டர் ஜோசப்பினுக்கு விளங்கவில்லை.\nசாமியாரையும் கன்னியாஸ்திரியையும் இணைத்து எழுதியதே அம்மாசிதான் என்பதில் சாமியார் உறுதியாக இருந்தார்.\nஒருநாள் வாலிபர் கூட்டத்தில் அசிஸ்ட பண்டம் (புனிதப்பொருள்) என்றால் என்ன என்று அம்மாசி சாமியாரைக் கேட்டான். புனிதர்கள் பயன்படுத்துவது அச்சிஸ்ட பண்டம் என்று சாமியார் சொன்னார். உடனே அம்மாசி போப் அச்சிஸ்டவரா என்று கேட்டான். சாமியார் ஆம் என்றார். அப்படி என்றால் அவர் மூத்திரத்தைப் பிடித்து அச்சிஸ்ட பண்டம் என்று ஊருக்கு ஊர் விற்பனை செய்யலாமா என்று அம்மாசி கேட்டதும் எல்லோரும் கொல்லென்று சிரித்தனர்.\nவேறு ஒரு நாள் ஞான உபதேச வகுப்பில் சாமியார் பாவிகள் எல்லாம் நரகத்த்துக்குப் போவார்கள், அங்கே சாத்தான்கள் ஈயத்தைக் காய்ச்சி காதில் ஊற்றுவர் என்றார்.\nஉடனே அம்மாசி நமது ஊரில் ஈயம் பித்தளைக்கு பேரிச்சம் பழம் தருகிறார்கள், நரகத்துக்குப் போனால் எளிதாக வியாபாரம் நடக்குமே என்று கேட்டான். வேறு சில கேள்விகளும் கேட்டான். அவைகள் எழுதுகிற மதிரி இல்லை.\nஇது மாதிரி நினைவுகளை சாமியார் அசைபோட்டுக்கொண்டிருந்தார். கூட்டம் தொடங்கியது. பங்கு குருவானவரை ஒரு நாற்காலியில் உட்கார வைத்து இருந்தார்கள். நல்லவேளை கன்னியாஸ்திரியை அழைக்கவில்லை. அம்மாசி நின்று கொண்டு இருந்தான். கூட்டம் கலவரத்தில் முடியுமோ என்ற அச்சம் இருந்தது. ஏன் என்றால் அம்மாசிக்கு தாய்மாமன்களே பத்து பேர் இருந்தார்கள். என்ன இருந்தாலும் சாமியாரை கன்னியாஸ்திரியோடு இணைத்து சுவரில் எழுதியிருக்கக்கூடாது என்று வருத்தப்பட்டார்.\nமுதலாவதாக உபதேசியார் எழுந்தார். சாமியாருக்குக் திக் என்றது. உபதேசியார் நன்றாகக் குடித்துவிட்டு வந்திருந்தார். தலைகிறங்க குடித்து வந்தாலும் நிதானத்தை இழகாத நீதிமானவர்.\n“முந்தாநாள் இரவு உங்களுக்கு எத்தனை பெண் குழந்தைகள் என்று சாமியார் என்னைக் கேட்டார். அதுகளுக்குக் திருமணம் செய்து வைப்பது என் பொறுப்பு என்றார். பத்து பைசா தருமம் செய்ய பத்து நாள் யோசிக்கிற சாமியாருக்கு என் மேல் திடீர் அக்கறை எதற்காக, கொஞ்சம் சிந்திக்கனும்.\n‘மே தினம் கொண்டாடுறீங்க, போப்பாண்டவர் பதிமூன்றாம் சிங்கராயரின் தொழிலாளர் சாசனம் பற்றி எல்லாம் பேசுறீங்க, ஆனா பதினைந்து வருஷமா எனக்கு மாதம் ஆயிரம்தான் சம்பளம் தரீங்க’ன்னு கேட்டேன். அதுக்கு சாமியார், ‘அடுத்த மாச்த்திலிருந்து உனக்கு மூனாயிரம் சம்பளம்’ என்றார். என் மீது இந்த திடீர் அக்கறை எதற்காக\nமுந���தாநாள் இராத்திரி சாமியார் பெயரையும் கன்னியாஸ்திரி பெயரையும் எழுதிட்டாங்க. சாமியார் அம்மாசியை குற்றம் சொல்றாரு. அவனுக்கு எழுதவே தெரியாது. இத சொன்னா அவன் வேறு ஆள வெச்சு எழுதிட்டான்னு சாமியார் சொல்லலாம். அந்த ஆள் யாருன்னுதான் கேள்வி. கொஞ்சம் சிந்திக்கனும்.\nநேற்று காலையிலேயே ஆளுக சுவத்துல எழுதியிருந்தை பாத்துட்டாங்க. இத உடனே அழிக்கிறதுதானே சரி. ஏன் சாமியாரு அழிக்க மாட்டங்காரு. கொஞ்சம் சிந்திக்கனும்.\n‘சாய்ங்காலம் கூட்டத்துக்கு வராதே, வெளியூர் போய்டு’ன்னு சொல்லி எனக்கு முன்னூறு ரூபாய் கொடுத்தாரு ஊர்ல கொலை பாதகம் நடந்துரக் கூடாது என்றதுக்காக நான் வெளியூர் போகல. நான் எதுக்காக வெளியூர் போகணும். கொஞ்சம் சிந்திக்கனும்.\nகடந்த பத்து வருசமா எனக்கு ராத்தி தூக்கம் கிடையாது. ராத்தி முழுவதும் ஊரை சுத்திகிட்டு இருப்பேன். இவுங்க எல்லாருக்கும் தெரியும். கொஞ்சம் சிந்திக்கணும். நான் நல்லததான் சொல்றேன். இதுக்கு மேல சொன்னால் நல்லா இருக்காது. கொஞ்சம் சிந்திக்கனும்.”\nகூட்டத்தில் சர்வ நிசப்தம் நிலவியது. கூட்டத்தில் குடித்திருந்த ஒருவன் அப்போது எழுந்து “அப்ப உபதேசியாரே, சாமியாரே அவர் பேரையும் கன்னியாஸ்திரி பேரையும் எழுதிட்டாரா”ன்னு கேட்டான். பதில் சொல்லாத உபதேசியார் கள்ளுக்கடைக்கு விரைந்து கொண்டிருந்தார். பதிலேதும் பேசாத சாமியார் வியர்க்க விருவிருக்க கோவிலுக்குப் போனார்.\nமறுநாள் காலை அந்த சாமியாரின் வீட்டுச் சுவர் வெள்ளையடிக்கப்பட்டிருந்தது.\nசாமியார் பெட்டி படுக்கைகளோடு ஜீப் ஒன்றில் தூத்துக்குடி பயணமாகிக் கொண்டிருந்தார். அந்தப் பங்கின் நூற்றி ஐம்பது வருட வரலாற்றில் சாமியாரே இல்லாமல், அந்த விசுவாசிகள் ஆராதனையைத் தொடங்கினார்கள்.\nஇதுவெல்லாம் நடந்து பதினைந்து வருடங்கள் ஆகின்றன. அந்த பங்கிற்கு சாமியார் இப்போது இல்லை. ஆனால் கடந்த பதினைந்து ஆண்டுகளாக ஊர் சண்டை சச்சரவுகள் இல்லாமல் அமைதியாக இருக்கிறது.\nநன்றி புதிய கோடாங்கி இதழ் (ஆகஸ்ட் 2004)\nஇறைவனின் நாட்டமும் கடவுளின் கழுதையும்\n04/06/2013 இல் 14:00\t(ஜீ. முருகன், வலம்புரி ஜான்)\nஇரண்டு நாட்களாக தொடர்ந்து ‘மவுத்’ செய்திகளை கேட்டுக் கொண்டிருப்பதால் மனசு சங்கடமாக இருக்கிறது. ‘ஏன் இப்படி’ என்று ஒரு ஆலிம்ஷாவைக் கேட்டால் ‘அதெல்லாம் அல்லாஹ்ட நா���்டம் தம்பி’ என்கிறார் தாடியை உருவிக்கொண்டே’ என்று ஒரு ஆலிம்ஷாவைக் கேட்டால் ‘அதெல்லாம் அல்லாஹ்ட நாட்டம் தம்பி’ என்கிறார் தாடியை உருவிக்கொண்டே அவரிடமிருந்து தப்பித்த எனக்கு ஜீ.முருகனின் ‘கடவுளின் கழுதை’ கவிதை ஞாபகம் வந்ததும் வலம்புரி ஜான் அவர்களின் ‘ஒன்றும் ஒன்றும் ஒன்று’ கட்டுரை கிடைத்ததும்கூட இறைவனின் நாட்டம்தான் என்று நினைக்கிறேன். முருகன்ஜீயின் கவிதை பதிவின் அடியில் இருக்கிறது. ‘எல்லோரையும் எல்லாவற்றையும் படிக்கவிட்டால், எல்லாம் ஒன்றுதான் என்று அறிந்து கொள்ளுவார்கள்.. அவ்வாறு அறிந்து கொண்டால் நிறுவனங்களாகிவிட்ட மதங்கள் தங்கள் தனித்தன்மைகளை இழக்க நேரிடும். எல்லாம் ஒன்றுதான் என்று சொல்லி எந்த மதவாதியாவது தனது தனி ஆட்சிக்குத் தானே உலை வைப்பாரா அவரிடமிருந்து தப்பித்த எனக்கு ஜீ.முருகனின் ‘கடவுளின் கழுதை’ கவிதை ஞாபகம் வந்ததும் வலம்புரி ஜான் அவர்களின் ‘ஒன்றும் ஒன்றும் ஒன்று’ கட்டுரை கிடைத்ததும்கூட இறைவனின் நாட்டம்தான் என்று நினைக்கிறேன். முருகன்ஜீயின் கவிதை பதிவின் அடியில் இருக்கிறது. ‘எல்லோரையும் எல்லாவற்றையும் படிக்கவிட்டால், எல்லாம் ஒன்றுதான் என்று அறிந்து கொள்ளுவார்கள்.. அவ்வாறு அறிந்து கொண்டால் நிறுவனங்களாகிவிட்ட மதங்கள் தங்கள் தனித்தன்மைகளை இழக்க நேரிடும். எல்லாம் ஒன்றுதான் என்று சொல்லி எந்த மதவாதியாவது தனது தனி ஆட்சிக்குத் தானே உலை வைப்பாரா” என்று கேட்கும் வலம்புரி ஜானை முதலில் பார்ப்போம். அவர் மேலும் சொல்கிறார்…\nஇயேசு பெருமான் எருசலேம் பட்டணத்தில் உள்ள சாலமோனின் தேவாலயத்தைப் பார்த்தார். “இந்த தேவாலாயத்தை இடித்துப் போடுங்கள்; மூன்று நாட்களில் அதை நான் மீண்டும் கட்டுவேன்” என்றார். அவர் தமது உடலாகிய ஆலயத்தைக் குறித்து அவ்வாறு பேசினார் என்று பைபிளிலே வருகிறது.\n‘உள்ளம் பெருங்கோயில்; ஊன் உடம்பு ஆலயம்’ என்கிற திருமூலரின் வரிகள் அப்படியே விவிலியத்தில் காணப்படுகின்றன. இந்த அழகின் ஆழத்தில் ஏன் அமிழ்ந்து எழ வேண்டும் என்பதற்கான காரணத்தைக் கண்டு பிடித்தா சொல்ல வேண்டும். தாயுமான சுவாமிகளின் பாடல்களைப் படித்தால் ‘சென் புத்தம்’ அப்படியே ஒவ்வொரு சொல்லுக்குள்ளும் குடியேறியிருப்பதை அறிந்து கொள்ளலாம். வள்ளலார் பாடல்களில் இயேசுவின் குரலையே கே��்கலாம். “ஆண்டவரே நான் உமது அடிமை; உமது வார்த்தையின் படியே எனக்கு ஆகட்டும்” என்கிற மரியாளின் (இயேசுவின் தாயார்) வேண்டுதலில் அருள்மிகு ராமானுஜரின் ‘பிரபத்தி’ தத்துவத்தைப் பார்க்கலாம்.\nஏன் உலகத்தில் இறைவன் ஒரே ஒரு சமயம் மாத்திரம் இருக்கிற படியாகப் பார்த்துக் கொள்ளக்கூடாது என்றால் ஒரே ஒரு மதமாக இருப்பதில் இறைவனுக்கே நாட்டமில்லை என்று திருக்குரான் கூறுகிறது.\nநன்றி : ஆஸாத் பதிப்பகம் (இந்த நாள் இனிய நாள் – ஒன்றாம் தொகுதி)\nஅதன் பின்னால் நடந்து போகிறான்\nநன்றி : ஜீ.முருகன், பன்முகம்\n18/10/2010 இல் 10:00\t(தக்கலை ஹலீமா, வலம்புரி ஜான்)\nவிழுதுகளுக்கும் எடுப்போம் விழா – ஞானபாரதி வலம்புரி ஜான்\nஅகில உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஆறாம் மாநாட்டுச் (1999) சிறப்பு மலரிலிருந்து, நன்றிகளுடன்\nஇவர் (தக்கலை ஹலீமா) கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையைச் சேர்ந்தவர். கவிஞராகக் கண்விழித்த இவர் பாடலாசிரியராகவும் பரிணமித்திருக்கிறார். இவரது புதுக்கவிதைகளுக்குக் கோலங்களாக நிலைத்துவிட்ட சில புள்ளிகளை மாத்திரம் உதாரணமாக எடுத்து வைக்கிறேன்.\nஅரைகுறை நாம் அவ்வுழைப்பை மறந்துவிட்டோம்\nநம் கலைப்பூமி இந்தியாவைப் பிரிக்கப்பார்க்கும்\n‘எத்தனைபேர் செத்தார் ஒரு கணக்குமில்லை\nஎத்தனைநாள் வாழ்ந்தார் அது புரியவில்லை\nபுத்தனையே கொண்டாடும் பூமி எங்கும்\n‘மதம் வளர்க்கும் இறையில்லம் கட்டுதற்கு\nவரம் கொடுக்கக் கடவுளிங்கே வருகும்போது\nஇந்தக் கவிதைகள் தாங்களாகவே நின்று கொள்ளுகிற திறம் படைத்தவை. ஆகவே இவைகளைப்பற்றி நான் ஒன்றும் எழுதி முட்டுக்கொடுக்க வேண்டிய அவசியமில்லை. நமது நாட்டில் கவிதைகளில் எல்லாம் இருக்கும். எழுதியவர் மாத்திரம் இருக்க மாட்டார். அதாவது கவிதை அவரைப் பிழிந்ததாக இருக்காது. கவிஞர் தக்கலை ஹலீமா எழுதிய கவிதைகளில் அவர் இருக்கிறார். அவரது எழுத்துக்களுக்கும், வாழ்க்கைக்கும் இடைவெளி இல்லை என்பதே அவருக்குப் பெருமை. அண்மையில் ‘அவ்வல்’ என்கிற ஒலிப்பேழையை நான்தான் வெளியிட்டேன்.\nஎன்று ஒரு பாடல். இதைப்பாடுகிற உதடுகளில் ஒருவகை ஈழ மின்னல் ஈரமும், இதயத்தில் ஒரு சுயமான சோகமும் உண்டாகும். சாதாரண முஸ்லிம்களின் வாழ்வுக்கோலங்களைப் படம்பிடிப்பதில் இந்தப்பாடல் பெரு வெற்றி பெற்றிருக்கிறது. இதைப் போலவே ‘ஸபர்’ என்கிற தலைப்பி��் வருகிற பாடலில்,\nஎன்கிற வரிகள் கண்கள் உலர்ந்துபோன காய்களாக இருந்தாலும் உப்பு நீர்ப்பூக்களை உருவாக்கும்..\nநன்றி : இஸ்லாமிய இலக்கியக் கழகம், தக்கலை ஹலீமா\n‘வரலாறு’ பற்றி வலம்புரி ஜான்\n06/07/2008 இல் 03:45\t(வலம்புரி ஜான்)\nவரலாறு என்பதே தேதி, மாதங்களின் தொகுப்பு என்று ஆகி வகுப்பறைகளில் ‘இரண்டாவது பானிபட் போர் ஏன் நடந்தது ’ என்று கேட்டால் ‘முதலாவது பானிபட் போர் ஒழுங்காக நடக்காததால்’ என்று மாணவன் பதில் சொல்கிற அளவுக்கு ஆகிவிட்டது என்று கிண்டல் செய்கிறார் வலம்புரி ஜான் – இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஆறாம் மாநாட்டுச் சிறப்பிதழில் (1999).\n‘விழுதுகளுக்கும் எடுப்போம் விழா’ என்ற தலைப்பில், கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்கால இஸ்லாமிய இலக்கியத்தை ஆழப்படுத்துகிற மூன்று நட்சத்திர எழுத்தாளர்களைப் பற்றி வலம்புரி எழுதிய கட்டுரையிலிருந்து பேராசிரியர் அப்துல் சமது அவர்களைப் பற்றிய குறிப்பை மட்டும் இப்போது பதிகிறேன் – பதிவுக்கு சம்பந்தமென்பதால் . கவிஞர் தக்கலை ஹலீமா, கதையாசிரியர் மீரான் மைதீன் பற்றி பிறிதொரு சமயம், இன்ஷா அல்லாஹ். – ஆபிதீன்.\nவரலாறு என்பதே தேதி, மாதங்களின் தொகுப்பு என்று ஆகி வகுப்பறைகளில் ‘இரண்டாவது பானிபட் போர் ஏன் நடந்தது ’ என்று கேட்டால் ‘முதலாவது பானிபட் போர் ஒழுங்காக நடக்காததால்’ என்று மாணவன் பதில் சொல்கிற அளவுக்கு ஆகிவிட்டது. இரண்டாவதாக வரலாறு என்பது இதுதான் என்று வரையறுத்துவிடுகிற வழக்கம் வரலாற்றுக்குச் சிறை எழுப்பி , கை விலங்குகளும் போட்டு விட்டது. கேம்ப்ரிட்ஜ் வரலாற்றுக் கொள்கை என்பது இப்படி இருக்கலாம்; இப்படிக்கூட இருக்கலாம்; இப்படி இருந்தாலும் தப்பில்லை என்ற மூன்று நிலைகளை முன் வைக்கிறது. இந்த வளர்ச்சி கூட நமது நாட்டு வரலாற்றில் முழுமையாக ஏற்படவில்லை. வரலாறு என்பது மக்களின் வரலாறு என்பதும் முழுக்கச் சொல்லப்படவில்லை.\nரொமிலா தாப்பர், கொசாம்பி, அஸ்கர் அலி என்ஜினியர் போன்றவர்கள் வரலாற்றை வேறுமாதிரி பார்க்கிறார்கள். சில வரலாற்று ஆசிரியர்களின் கண்களில் பூ விழுந்திருக்கிறது. சிலருக்கு விழுந்த பூவே விழியாகி இருக்கிறது. அருண் ஷோரி போன்ற வரலாற்று ஆசிரியர்களும் இருக்கிறார்கள். முடிவுகளை நோக்கிப் போகிற சரித்திர ஆசிரியர்களும் உண்டு. முடிவுகளை வைத்துக்கொண்டு முன்னேறுக��ற சரித்திர மாணவர்களும் உண்டு. நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி மீண்டும் மனத்திரையில் நிகழ்த்தப்படுவதால் அது சாதி, இனம், மொழி, நாடு, வேண்டியவர், வேண்டாதவர் என்கிற அழுத்தங்களுக்கு ஆளாகி விடுகிறது.\nவரலாற்றுப் பெரும் ஆசிரியர்களே இதற்கு விதிவிலக்கு இல்லை. பி.டி. சீனிவாச அய்யங்கார் சாதாரண வரலாற்று ஆசிரியர் அல்ல. ஆனால் அவர் புத்தகத்தில் விஷ்ணு அல்லது சைவம் பற்றி அதிகாரம் வருகிறது. சிவம் அல்லது சைவம் பற்றி வரவில்லை. கிழே காணப்படுகிற குறிப்பில் ஆரியர் என்பவர் மெய்யர் என்று காணப்படுகிறது. அப்படியென்றால் திராவிடர் என்று நீங்களோ, நானோ கேட்கக் கூடாது. திருமதி சரோஜா சுந்தர்ராஜன் பக்கம் பக்கமாக ஒரு வரலாற்றுப் புத்தகம் எழுதியிருக்கிறார். இதில் தந்த பெரியாரைப் பற்றிய படப்பிடிப்பே தவறாக இருக்கிறது. சிலம்புச் செல்வர் தமிழகத்தில் நடைபெற்ற விடுதலைப் போராட்டம் பற்றி எழுதியிருக்கிறார். அதில் பெருந்தலைவர் காமராசரைப் பற்றி இன்னமும் அதிகமாக எழுதியிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. ஆக எழுதப்படுகிற எந்த வரலாற்றிலும் எழுதியவர் இருந்தே விடுகிறார். கவிதையில், கதையில் எழுதுகிறவர் இருந்தே ஆக வேண்டும். வரலாற்றில் எழுதியவர் இருக்கலாம், ஆனால் வெற்றிலையில் சுண்ணாம்பு போல; இலையில் உப்புப் போல இருந்தால் நல்லது.\nபேராசிரியர் அப்துல் சமது எழுதிய ‘தியாகத்தின் நிறம் பச்சை’ இந்திய சுதந்திரப்போரில் இஸ்லாமியரின் பங்களிப்பை எந்த அளவிற்குச் சொல்ல வேண்டுமோ அந்த அளவிற்குச் சொல்கிறது. பொதுவாக வரலாற்று ஆசிரியர்கள் என்ன பிழை செய்கிறார்களோ அவைகள் இந்த புத்தகத்தில் காணப்படவில்லை. வீர சவர்க்கரை ஒரு இந்து மதவெறியரைப் போலக் கருதிக்கொண்டு இன்னமும் எழுதுகிறவர்கள் இருக்கிறார்கள். அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தைச் சார்ந்த பேராசிரியர் ஹக் சாதாரண எழுத்தாளர் அல்லர். ஆனால் அவரும் இதற்கு விதிவிலக்கு அல்ல.\nஒரு தமிழ்ப் பேராசிரியராக இருக்கிற பேரா. அப்துல் சமது தன் வாதங்களுக்குத் துணையாக வீரசவர்க்கரின் ‘எரிமலை’ என்கிற மாபெரும் புத்தகத்தில் இருந்துதான் வரிக்கு வரி மேற்கோள் காட்டுகிறார். புத்தகம் சிறியதுதான். ஆனால் புத்தகம் இதுபோலத்தான் அமைந்திருக்க வேண்டும் என்பதற்கு இது வெளிவந்த ஆண்டில் இது ஒன்றுதான் எனக்குத் தெரி���்த உதாரண இலக்கியம்.\nநகைச்சுவை கலந்த நல்ல தமிழ்ப் பேச்சும் , தனது நண்பர்களை முன்னுக்குக் கொண்டுவந்து நிறுத்த வேண்டும் என்கிற எண்ணமும் நிரம்பப் படைத்த பேராசிரியர் அப்துல் சமதுவின் சிவப்பு மை சிந்துகிற சீர்திருத்த எழுதுகோலில் இருந்து இலக்கிய உலகம் இன்னமும் நிரம்ப எதிர்பார்க்கிறது\nநன்றி : இஸ்லாமிய இலக்கியக் கழகம்\nஆபிதீன் பக்கங்கள் ii :\n3. எழுத்தாளர்களின் இணையதளங்கள் (Links)\n5. கச்சேரிகள் , கஜல்கள்\n8 . நாகூர் ரூமி பதிவுகள்\nகலீபா உமர் (ரலி) (1)\nஉஸ்தாத் ஸலாமத் அலி கான் (1)\nகுலாம் முஸ்தஃபா கான் (1)\nநுஸ்ரத் ஃபதே அலிகான் (6)\nபண்டிட் ராஜ்சேகர் மன்ஸூர் (1)\nமுகேஷ் (பீர் முஹம்மது) (1)\nவிஸ்வநாதன் / ராமமூர்த்தி (2)\nதயவு பிரபாவதி அம்மா (1)\nஅப்துல் வஹ்ஹாப் பாகவி (18)\nகுலாம் காதர் நாவலர் (4)\nஅபுல் கலாம் ஆசாத் (2)\nஅஸ்கர் அலி என்ஜினியர் (1)\nஎச். பீர் முஹம்மது (2)\nகிண்ணியா எஸ்.பாயிஸா அலி (2)\nகுர்அதுல் ஐன் ஹைதர் (1)\nகுளச்சல் மு. யூசுப் (5)\nசாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (2)\nஜே. பி. சாணக்யா (1)\nஜோ டி குரூஸ் (1)\nதொ.மு. சி. ரகுநாதன் (1)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nபோர்வை பாயிஸ் ஜிப்ரி (1)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nவேங்கட சுப்புராய நாயகர் (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (5)\nஹரி கிருஷ்ணன் (ஹரிகி) (1)\nத சன்டே இந்தியன் (1)\nநேஷனல் புக் டிரஸ்ட் (13)\nஅங்கனெ ஒண்ணு இங்கனெ ஒண்ணு (1)\nமணல் பூத்த காடு (1)\nஇரா. சண்முக வடிவேல் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaipoonga.net/cinema/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF-2-%E0%AE%B9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AF/", "date_download": "2021-05-07T01:31:15Z", "digest": "sha1:UYKZM57FRA7H23I7QCXCBAWNDCIAM2RX", "length": 11448, "nlines": 202, "source_domain": "kalaipoonga.net", "title": "’சந்திரமுகி 2’ ஹீரோயின் யார்?... ராகவா லாரன்ஸ் விளக்கம்! - Kalaipoonga", "raw_content": "\nHome Cinema ’சந்திரமுகி 2’ ஹீரோயின் யார்… ராகவா லாரன்ஸ் விளக்கம்\n’சந்திரமுகி 2’ ஹீரோயின் யார்… ராகவா லாரன்ஸ் விளக்கம்\n’சந்திரமுகி 2’ ஹீரோயின் யார்… ராகவா லாரன்ஸ் விளக்கம்\nரஜினி நடிப்பில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான சந்திரமுகி படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. அதன் அடுத்தப்பாகம் எப்போது வரும் என்று காத்துக்கொண்டிருந்த நிலையில், 15 ஆண்டுகள் கழித்து நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில், வாசு இயக்கத்தில் சந்திரமுகி 2 வரவிருக்கிறது என்ற அறிவிப்பு எதிர்பார்ப்பை எகிற வைத்தது.\nசந்திரமுகி படமே மலையாளத்தில�� கடந்த 1993 ஆம் ஆண்டு வெளியாகி மெகா ஹிட் அடித்த மணிசித்ரதாழ் படத்தின் ரீமேக்தான். நடிகை சோபனா, மோகன்லால் உள்ளிட்டவர்கள் நடித்தார்கள். ஜோதிகா பாத்திரத்தில் நடித்த சோபனாவுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதை இப்படம் வாங்கிக்கொடுத்தது.\nஇந்நிலையில் ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக ஜோதிகா, சிம்ரன், கியாரா அத்வானி பெயர்கள் அடிபட்டு வந்த நிலையில், சந்திரமுகி ஹீரோயின்கள் யார் என்பதில் பல்வேறு வதந்திகள் பரப்பப்பட்டுக்கொண்டு வருகின்றன. ஜோதிகா, சிம்ரன், கியாரா அத்வானி பெயர்களும் சொல்லப்படுகின்றன. இது அத்தனையும் பொய்யான செய்தி. தற்போது கதை எழுதும் பணி போய்க்கொண்டிருக்கிறது. முடிந்ததும் தயாரிப்பு நிறுவனம் ஹீரோயினை அறிவிப்பார்கள் என்று ராகவா லாரன்ஸ், தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\n’சந்திரமுகி 2’ ஹீரோயின் யார்... ராகவா லாரன்ஸ் விளக்கம்\nசந்திரமுகி 2’ ஹீரோயின் யார்... வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ராகவா லாரன்ஸ்\nPrevious articleதமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திற்கு மருத்துவப் பரிசோதனை\nNext articleநண்பர்களுடன் வீடியோ கால் பேசி மகிழ்ந்த விஜய்…. தாறுமாறு வைரலாகும் புகைப்படம்…\nமாநாடு டப்பிங் ஆரம்பம்… படக்குழு வெளியிட்ட புகைப்படங்கள்\nமூத்த தலைவர் ஆர்.எம்.வீரப்பனை நேரில் சந்தித்து ஆசி பெற்றார் மு.க.ஸ்டாலின் | Video\nநமீதா தியேட்டர்ஸ் – உண்மை சம்பவங்களின் அடிப்படியில் உருவாகும் படங்களை ஒளிபரப்பும் முதல் OTT தளம்\nவெளியானது 34 பேர் கொண்ட தமிழக அமைச்சரவை பட்டியல்\nவெளியானது 34 பேர் கொண்ட தமிழக அமைச்சரவை பட்டியல் தமிழகத்தின் முதலமைச்சராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை சென்னை - கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்க உள்ளார். கொரோனா பரவலை கருத்தில்...\nமாநாடு டப்பிங் ஆரம்பம்… படக்குழு வெளியிட்ட புகைப்படங்கள்\nமாநாடு டப்பிங் ஆரம்பம்... படக்குழு வெளியிட்ட புகைப்படங்கள் சிம்பு நடிப்பில் உருவாகி உள்ள படம் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கியுள்ள இப்படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார். இப்படத்தில் சிம்பு அப்துல் காலிக்...\nமூத்த தலைவர் ஆர்.எம்.வீரப்பனை நேரில் சந்தித்து ஆசி பெற்றார் மு.க.ஸ்டாலின் | Video\nமூத்த தலைவர் ஆர்.எம்.வீரப்பனை நேரில் சந்தித்து ஆசி பெற்றார் மு.க.ஸ்டாலின் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றதை அடுத்து தமிழகத்தின் அடுத்த முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பு ஏற்க உள்ளார். நாளை (மே 7...\nவெளியானது 34 பேர் கொண்ட தமிழக அமைச்சரவை பட்டியல்\nவெளியானது 34 பேர் கொண்ட தமிழக அமைச்சரவை பட்டியல் தமிழகத்தின் முதலமைச்சராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை சென்னை - கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்க உள்ளார். கொரோனா பரவலை கருத்தில்...\nமாநாடு டப்பிங் ஆரம்பம்… படக்குழு வெளியிட்ட புகைப்படங்கள்\nமாநாடு டப்பிங் ஆரம்பம்... படக்குழு வெளியிட்ட புகைப்படங்கள் சிம்பு நடிப்பில் உருவாகி உள்ள படம் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கியுள்ள இப்படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார். இப்படத்தில் சிம்பு அப்துல் காலிக்...\nமூத்த தலைவர் ஆர்.எம்.வீரப்பனை நேரில் சந்தித்து ஆசி பெற்றார் மு.க.ஸ்டாலின் | Video\nமூத்த தலைவர் ஆர்.எம்.வீரப்பனை நேரில் சந்தித்து ஆசி பெற்றார் மு.க.ஸ்டாலின் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றதை அடுத்து தமிழகத்தின் அடுத்த முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பு ஏற்க உள்ளார். நாளை (மே 7...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/news/registration-for-next-phase-of-covid19-vaccination-starts-today-pm-modi-takes-first-shot-of-coronavirus-vaccine/", "date_download": "2021-05-07T01:46:36Z", "digest": "sha1:ZYALEWAS3QZPM52HN5UV2TMMQE7CJGKH", "length": 17308, "nlines": 133, "source_domain": "tamil.krishijagran.com", "title": "பிரதமர் மோடியுடன் தொடங்கியது 60 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி போடும் திட்டம்!-பதிவு செய்வது எப்படி?", "raw_content": "செய்திகள் வாழ்வும் நலமும் தோட்டக்கலை கால்நடை வெற்றிக் கதைகள் விவசாய தகவல்கள் FTB அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா Directory\n#FTB விவசாய தகவல்கள் அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா\nஎங்கள் அச்சு மற்றும் டிஜிட்டல் பத்திரிகைகளுக்கு குழுசேரவும்\nசமூக ஊடகங்களில் எங்களுடன் இணைக்கவும்:\nபிரதமர் மோடியுடன் தொடங்கியது 60 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி போடும் திட்டம்\nநாடுமுழுவதும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்று முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படுகிறது. கோவின் (COWIN 2.0 app) மற்றும் ஆரோக்கிய சேது செயலி (Aarogya Setu)மூலம் காலை 09:00 மணி முதல் பதிவு செய்யலாம் என்று அறி��ிக்கப்பட்டுள்ளது. முதலாவதாக பிரதமர் நரேந்திரமோடி கோவிட் தடுப்பூசியை போட்டுக்கொண்டார்.\n60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும், ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்கள் இருக்கும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் இந்த இந்த தடுப்பூசி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை செயலி மூலம் சுயமாகவும் (self register), அரசு மருத்துவமனைகள், பொதுச் சேவை மையங்களிலும் பதிவு செய்யலாம்.\n60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் தங்கள் வயது சான்றுக்காக ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், ஓய்வூதிய அட்டை, பான் அட்டை உள்ளிட்டவற்றில் ஏதாவது ஒரு அடையாள அட்டையை எடுத்துக் கொண்டு தடுப்பூசி மையத்துக்கு வர வேண்டும்.\n45 வயது முதல் 59 வயது வரையிலான கூட்டு நோய்களுடன் இருப்பவர்கள் ஒரு மருத்துவரிடமிருந்து தனக்கு என்ன கூட்டு நோய் உள்ளது என குறிப்பிட்டு ஒரு கடிதம் பெற்று வரவேண்டும்.\nஎந்த தடுப்பூசி மையத்துக்கும் யார் வேண்டுமானாலும் செல்லலாம். அங்கு சென்ற பிறகு நேரடியாக தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். தடுப்பூசி போட்டுக் கொள்ளும் நபர்களின் விவரங்கள் தடுப்பூசி மையத்தில் சேகரிக்கப்பட்டு கோவின் செயலியில் பதிவேற்றம் செய்யப்படும். இரண்டாவது டோஸ் குறித்த தகவல்கள் பதிவு செய்யும் செல்போன் எண்ணிற்கு அனுப்பப்படும்.\nதமிழகத்திலும் இன்று முதல் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. இதற்காக மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு பல்வேறு வழிமுறைகளை வழங்கியுள்ளது. அதன் அடிப்படையில் மாவட்டங்களில் முதியவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியை முறையாக மேற்கொள்ள பொது சுகாதாரத் துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.\nமேலும், கோவிட்-19 தடுப்பூசி போடுவதை அதிகரிக்க, ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 10,000 தனியார் மருத்துவமனைகளும், மத்திய அரசு சுகாதார திட்டத்தின் கீழ் 600க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகளும் பயன்படுத்தப்படவுள்ளன.\nதனியார் மையங்களில் 250 கட்டணம்\nஇன்று தொடங்கும் இந்த இரண்டாம் கட்ட கொரோனா தடுப்பூசி திட்டத்தில் நாடு முழுவதும் 27 கோடி மக்களுக்கு தடுப்பூசி வழங்க உள்ளனர். அரசு மருத்துவமனைகளில் இலவசமாகவும் தனியார் மருத்துவமனைகளில் ரூ.250 கட���டணம் மூலம் தடுப்பூசி போடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனிடையே, டெல்லி எம்ய்ஸ் மருத்துவமனையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.\nஇதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது, “எய்ம்ஸில் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை எடுத்தேன். கொரோனாவுக்கு எதிரான உலகளாவிய போராட்டத்தை வலுப்படுத்த எங்கள் மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் விரைவான நேரத்தில் எவ்வாறு பணியாற்றினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nமூத்த குடிமக்கள் உள்ளிட்ட தடுப்பூசி எடுக்க தகுதியுள்ள அனைவருக்கும் நான் வேண்டுகோள் விடுக்கின்றேன். அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள அச்சப்பட வேண்டாம். ஒன்றாக, இந்தியவை கொரோனாவில் இருந்து விடுவிப்போம்” என்று பதிவிட்டுள்ளார்.\nதமிழகம் உட்பட 6 மாநிலங்களில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரிப்பு\nதமிழைக் கற்கும் முயற்சியில் Fail ஆனேன் - பிரதமர் மோடி\nவரும் 3ம் தேதி வரை வாட்டி வதைக்கப் போகிறது வெயில்\nபால் பண்ணையில் கூடுதல் லாபம் பெற வேண்டுமா\nபழங்குடியின விவசாயிகளுக்கு விதை உற்பத்தி பயிற்சி- TNAU ஏற்பாடு\nஅன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.\nஉங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....\nபங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)\nசோலார் மின்வேலி அமைக்க 2 லட்சம் வரை மானியம் - விண்ணப்பிக்க விவசாயிகளுக்கு அழைப்பு\nதமிழகம் உட்பட 6 மாநிலங்களில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரிப்பு\nகொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, முழு ஊரடங்கை அமல்படுத்த உச்ச நீதிமன்றம் பரிந்துரை\nகொப்பரை உற்பத்தி செய்ய நவீன இயந்திரம்: விவசாயிகள் மகிழ்ச்சி\n செய்ய வேண்டியவையும், செய்யக் கூடாதவையும்\nவிளைநிலங்களில் வீணாகும் தர்பூசணி பழங்கள்\nபூச்சிகளைப் புரிந்து கொள்(ல்)வோம்- காணொளி மூலம் பயிற்சி\nரூ.4000 கொரோனா நிவாரண நிதிவழங்கும் திட���டம் - நாளை ஸ்டாலின் முதல் கையெழுத்து\nவாடிக்கையாளர்களுக்கு புதியவகை டிசைனர் சிலிண்டரை அறிமுகம் செய்த IOCL\nஒரே நிமிடத்தில் cowin.gov.in தளத்தில் கொரோனா தடுப்பூசி பதிவு செய்வது எப்படி\nபருத்தியைத் தாக்கும் மாவுப்பூச்சிகளை எப்படி கட்டுப்படுத்தலாம்\nகொரோனாவைத் தடுக்கும் முயற்சியில், புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்\nஒன்றல்ல, இரண்டல்ல, ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள்\nதொற்றுநோய்களைத் தடுக்கும் ஊட்டச்சத்து அணுகுண்டு எது தெரியுமா\nமாடித்தோட்டத்திற்கு ஏற்ற மண் கலவை வகைகள் எவை\nவிவசாயிகள் நலன் கருதி சாகுபடி தொடர்பான சந்தேகம் ஏற்பட்டால் வேளாண் விஞ்ஞானிகளை அணுகலாம்: தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gktamil.in/2017/07/tnpsc-current-affairs-quiz-online-test-tamil-127.html", "date_download": "2021-05-07T01:11:34Z", "digest": "sha1:BXXI5QNC4FLRAD7TFSDLSF4ZKIBHYN3D", "length": 19914, "nlines": 68, "source_domain": "www.gktamil.in", "title": "GK Tamil.in: Tnpsc Current Affairs Quiz Online Test:127 - July 19, 2017 (Tamil) - Sports, National, TN and Important Day Affairs - Update GK Yourself */ /* Content ----------------------------------------------- */ body { font: normal normal 14px 'Raleway', sans-serif; color: #222222; background: #f7f7f7 none repeat scroll top left; padding: 0 40px 0 40px; } html body .region-inner { min-width: 0; max-width: 100%; width: auto; } h2 { font-size: 22px; } a:link { text-decoration:none; color: #00ae86; } a:visited { text-decoration:none; color: #00ae86; } a:hover { text-decoration:none; color: #41d5b3; transition:0.3s; } .body-fauxcolumn-outer .fauxcolumn-inner { _background-image: none; } .body-fauxcolumn-outer .cap-top { position: absolute; z-index: 1; height: 400px; width: 100%; } .body-fauxcolumn-outer .cap-top .cap-left { width: 100%; _background-image: none; } .content-outer { -moz-box-shadow: 0 0 40px rgba(0, 0, 0, .15); -webkit-box-shadow: 0 0 5px rgba(0, 0, 0, .15); -goog-ms-box-shadow: 0 0 10px #333333; box-shadow: 0 0 40px rgba(0, 0, 0, .15); margin-bottom: 1px; } .content-inner { padding: 10px 10px; } .content-inner { background-color: #ffffff; } /* Header ----------------------------------------------- */ .header-outer { _background-image: none; } .Header h1 { font: normal normal 50px 'Raleway', sans-serif; color: #222222; text-shadow: -1px -1px 1px rgba(0, 0, 0, .2); text-align:center; } .Header h1 a { color: #222222; } .Header .description { font-size: 140%; color: #777777; text-align:center; } .header-inner .Header .titlewrapper { padding: 22px 30px; } .header-inner .Header .descriptionwrapper { padding: 0 30px; } /* Tabs ----------------------------------------------- */ .tabs-inner .section:first-child { border-top: 1px solid #eeeeee; } .tabs-inner .section:first-child ul { margin-top: -1px; border-top: 1px solid #eeeeee; border-left: 0 solid #eeeeee; border-right: 0 solid #eeeeee; } .tabs-inner .widget ul { _background-image: none; border-bottom: 1px solid #eeeeee; margin-top: 0; margin-left: -30px; margin-right: -30px; } .tabs-inner .widget li a { display: inline-block; padding: .6em 1em; font: normal normal 14px 'Raleway', sans-serif; color: #999999; border-left: 1px solid #ffffff; border-right: 1px solid #eeeeee; } .tabs-inner .widget li:first-child a { border-left: none; } .tabs-inner .widget li.selected a, .tabs-inner .widget li a:hover { color: #000000; background-color: #eeeeee; text-decoration: none; } /* Columns ----------------------------------------------- */ .main-outer { border-top: 0 solid #eeeeee; } .fauxcolumn-left-outer .fauxcolumn-inner { border-right: 1px solid #eeeeee; } .fauxcolumn-right-outer .fauxcolumn-inner { /*border-left: 1px solid #eeeeee;*/ } /* Headings ----------------------------------------------- */ div.widget > h2, div.widget h2.title { margin: 0 0 1em 0; font: normal bold 11px 'Raleway', sans-serif; color: #222222; } /* Widgets ----------------------------------------------- */ .widget .zippy { color: #262626; /* text-shadow: 2px 2px 1px rgba(0, 0, 0, .1); */ } .widget .popular-posts ul { list-style: none; } /* Posts ----------------------------------------------- */ h2.date-header { font: normal bold 11px 'Raleway', sans-serif; } .date-header span { background-color: transparent; color: #222222; padding: inherit; letter-spacing: inherit; margin: inherit; } .main-inner { padding-top: 30px; padding-bottom: 30px; } .main-inner .column-center-inner { padding: 0; } .main-inner .column-center-inner .section { margin: 0 15px; } .post { margin: 0 0 25px 0; } h3.post-title a { font: normal bold 15px 'Raleway', sans-serif; margin: .75em 0 0; } h3.post-title, .comments h4 { font: normal bold 20px 'Raleway', sans-serif; } .post-body { font-size: 110%; line-height: 1.4; position: relative; } .post-body img, .post-body .tr-caption-container, .Profile img, .Image img, .BlogList .item-thumbnail img { padding: 2px; background: #ffffff; border: 1px solid #eeeeee; } .post-body img, .post-body .tr-caption-container { padding: 5px; } .post-body .tr-caption-container { color: #222222; } .post-body .tr-caption-container img { padding: 0; background: transparent; border: none; -moz-box-shadow: 0 0 0 rgba(0, 0, 0, .1); -webkit-box-shadow: 0 0 0 rgba(0, 0, 0, .1); box-shadow: 0 0 0 rgba(0, 0, 0, .1); } .post-header { margin: 0 0 1.5em; line-height: 1.6; font-size: 90%; } .post-footer { margin: 20px -2px 0; padding: 5px 10px; color: #222222; background-color: #f7f7f7; border-bottom: 1px solid #eeeeee; line-height: 1.6; font-size: 90%; } #comments .comment-author { padding-top: 1.5em; border-top: 1px solid #eeeeee; background-position: 0 1.5em; } #comments .comment-author:first-child { padding-top: 0; border-top: none; } .avatar-image-container { margin: .2em 0 0; } #comments .avatar-image-container img { /*border: 1px solid #eeeeee;*/ } /* Comments ----------------------------------------------- */ .comments .comments-content .icon.blog-author { background-repeat: no-repeat; background-image: url(); } .comments .comments-content .loadmore a { border-top: 1px solid #999999; border-bottom: 1px solid #999999; } .comments .continue { border-top: 2px solid #999999; } /* Accents ---------------------------------------------- */ .section-columns td.columns-cell { /*border-left: 1px solid #eeeeee;*/ } .blog-pager { background: transparent none no-repeat scroll top center; } .blog-pager-older-link, .home-link, .blog-pager-newer-link { background-color: #ffffff; padding: 5px; } .footer-outer { border-top: 0 dashed #bbbbbb; } /* Mobile ----------------------------------------------- */ body.mobile { background-size: auto; } .mobile .body-fauxcolumn-outer { background: transparent none repeat scroll top left; } .mobile .body-fauxcolumn-outer .cap-top { background-size: 100% auto; } .mobile .content-outer { -webkit-box-shadow: 0 0 3px rgba(0, 0, 0, .15); box-shadow: 0 0 3px rgba(0, 0, 0, .15); } .mobile .tabs-inner .widget ul { margin-left: 0; margin-right: 0; } .mobile .post { margin: 0; } .mobile .main-inner .column-center-inner .section { margin: 0; } .mobile .date-header span { padding: 0.1em 10px; margin: 0 -10px; } .mobile h3.post-title { margin: 0; } .mobile .blog-pager { background: transparent none no-repeat scroll top center; } .mobile .footer-outer { border-top: none; } .mobile .main-inner, .mobile .footer-inner { background-color: #ffffff; } .mobile-index-contents { color: #222222; } .mobile-link-button { background-color: #00ae86; } .mobile-link-button a:link, .mobile-link-button a:visited { color: #ffffff; } .mobile .tabs-inner .section:first-child { border-top: none; } .mobile .tabs-inner .PageList .widget-content { background-color: #eeeeee; color: #000000; border-top: 1px solid #eeeeee; border-bottom: 1px solid #eeeeee; } .mobile .tabs-inner .PageList .widget-content .pagelist-arrow { border-left: 1px solid #eeeeee; } .post-list{ padding: 1px 1em 1em 1em; /* margin: -20px 0; */ margin-bottom: -20px; border: 1px solid #ddd; border-radius: 5px; } .post-list:hover { background:#f7f7f7; border-color:#00ae86; transition:.2s; } .post-label a{ margin-right:2px; white-space:nowrap; color: #222222; border-bottom: 1px dashed #00ae86; } .post-comment a{ color: #222222; } .post-label a:hover,.post-comment a:hover{ color: #00ae86; } #blog-pager{ margin: 3em 0; } .feed-links {display:none !important;} div.widget > h2, div.widget h2.title { font: normal bold 16px 'Raleway', sans-serif; border-bottom: 2px solid #ddd; padding: 5px 0; } .comments h4 { text-align: center; text-transform: uppercase; } .comments .comment .comment-actions a { background:#00ae86; border-radius: 3px; color: #f7f7f7; margin-right:5px; padding:5px; text-decoration: none !important; font-weight:bold; } .comments .comment-block { border: 1px solid #dddddd; border-radius:5px; padding: 10px; } .continue { border-top:none !important; } .continue a { background:#00ae86; border-radius:3px; color: #f7f7f7; display: inline-block !important; margin-top: 8px; text-decoration: none !important; } .comments .comments-content .datetime{ float:right; } #comments .avatar-image-container img { border-radius: 50px; } .comments .avatar-image-container { float: left; overflow: hidden; } .comments .comments-content .comment-replies{ margin-top:0; } .topnav { overflow: hidden; background-color: #000; } .topnav a { float: left; display: block; color: #ffffff; text-align: center; padding: 14px 16px; text-decoration: none; font-size: 17px; } .active { background-color: #00ae86; color: #ffffff; } .topnav .icon { display: none; } .dropdown { float: left; overflow: hidden; } .dropdown .dropbtn { font-size: 17px; border: none; outline: none; color: #ffffff; padding: 14px 16px; background-color: inherit; font-family: inherit; margin: 0; } .dropdown-content { display: none; position: absolute; background-color: #f9f9f9; min-width: 160px; box-shadow: 0px 8px 16px 0px rgba(0,0,0,0.2); z-index: 5; } .dropdown-content a { float: none; color: #000000; padding: 12px 16px; text-decoration: none; display: block; text-align: left; } .topnav a:hover, .dropdown:hover .dropbtn { background-color: #00ae86; color: #ffffff; } .dropdown-content a:hover { background-color: #00ae86; } .dropdown:hover .dropdown-content { display: block; } @media screen and (max-width: 600px) { .topnav a:not(:first-child), .dropdown .dropbtn { display: none; } .topnav a.icon { float: right; display: block; } } @media screen and (max-width: 600px) { .topnav.responsive {position: relative;} .topnav.responsive .icon { position: absolute; right: 0; top: 0; } .topnav.responsive a { float: none; display: block; text-align: left; } .topnav.responsive .dropdown {float: none;} .topnav.responsive .dropdown-content {position: relative;} .topnav.responsive .dropdown .dropbtn { display: block; width: 100%; text-align: left; } } div#crosscol.tabs.section {margin: 0 0 2em 0;} .post-page { padding: 0 1em; } .date-header{ color:#888;display:block;border-bottom: 1px solid #888;margin-top: 5px; } .section{margin:0} .column-right-inner .section .widget{ border: 1px solid #ddd; margin: 5px 0; padding: 10px; border-radius: 5px; } .footer-inner .section .widget{ margin: 5px 0; padding: 10px; } footer{ background: #f7f7f7; padding: 8px; margin: 25px -25px -25px -25px; border-top: 1px solid #dddddd; } /* STYLE 1 - Custom Blogger Labels Gadget Styles by Georgia Lou Studios */ .widget li, .BlogArchive #ArchiveList ul.flat li{ padding: 8px 0; } .list-label-widget-content ul { list-style-type:none; padding-left:0px!important; } .list-label-widget-content ul li:before { content: \"\\f054\"; float: left; color: #262626; font-weight: 700; font-family: 'Font Awesome 5 Free'; margin: 4px 5px 0 0; font-size:10px; } .list-label-widget-content li span{ color: #888888; } /*** Mozilla based browsers ***/ ::-moz-selection { background-color: #00ae86; color: #ffffff; } /*** Works on common browsers ***/ ::selection { background-color: #00ae86; color: #ffffff; } .breadcrumbs{ color: #888;margin:-15px 15px 15px 15px; } .status-msg-body{ width:95%; padding:10px; } /* MY CUSTOM CODE - Responsive Table ----------------------------------------------- */ .post table {border: 1px solid #dddddd;border-collapse: collapse;margin: 0;padding: 0;width: 100%;color:#222222;} .post table caption {margin: .25em 0 .75em;} .post table tr {border: 1px solid #dddddd;padding: .35em;} .post table th,.post table td {padding: .625em;border: 1px solid #dddddd;} .post table th {color:#357ae8;letter-spacing: .1em;text-transform: uppercase;background: #dcffed;white-space: nowrap;} .post table td img {text-align: center;} .post tr:hover { background-color: #dcffed; transition:.2s; } @media screen and (max-width: 600px) { .post table,table th,table td {border: 0;} .post table caption {} .post table thead {display: none;} .post table tr {border-bottom: 3px solid #dddddd;display: block;margin-bottom: .725em;} .post table th,.post table td {border:none;} .post table td {border-bottom: 1px solid #dddddd;display: block;} .post table td:before {content: attr(data-label);float: left;font-weight: bold;text-transform: uppercase;} .post table td:last-child {border-bottom: 0;}} body .navbar{height:0;} /* MY CUSTOM CODE - Button ----------------------------------------------- */ a.btn, .btn-toggle{ display:inline-block; padding:0.3em 1.2em; margin:0.3em; border-radius:5px; box-sizing: border-box; text-decoration:none; font-family:inherit; font-weight:700; color:#ffffff; background-color:#00ae86; text-align:center; box-shadow:0px 1px 0px #dddddd; transition: all 0.2s; } a.btn, .btn-toggle{ font-size:20px; } .btn-toggle{ font-size:inherit; } a.btn:hover, .btn-toggle:hover{ background-color:#41d5b3; } a.btn:active, .btn-toggle:active { position:relative; top:1px; } a.btn:before { content: '\\f019'; font-family: 'Font Awesome 5 Free'; font-weight: 900; display: inline-block; margin: 0 10px 0 0; } .btn-info { display: block; line-height: 1; font-size: 13px; font-style: italic; margin: 7px 0 0; } @media all and (max-width:30em){ a.btn,.btn-toggle{ display:block; margin:0.2em auto; } } .label-size { position:relative; font-size:13px; } .label-size a,.label-size span { padding: 5px; margin: 0 6px 6px 0; float: left; display: block; } .label-size a { color: #ffffff; background: #00ae86; border: 1px solid #00ae86; } .label-size a:hover { background:transparent; color:#00ae86!important; } .label-size span{ color: #222222; background: #f7f7f7; border: 1px solid #dddddd; } /* Start dropdown navigation */ #navigationbar li{ list-style:none; } .searchHolder{ background:#000000!important; float:right!important; } @media screen and (max-width:600px){ .searchHolder{float:left!important;} } #searchbar { display: none; margin: 0 auto; width: 100%; text-align: center; height: 50px; background: #000000; overflow: hidden; z-index: 4; } #searchicon { text-align: center; cursor: pointer; } #searchicon:hover { color: #888888; } #searchBox { font:inherit; -webkit-appearance: none; border: 0px; background: transparent; padding: 10px; outline:none; width: 90%; color:#888888; border-bottom:2px solid #888888; } #searchBox:focus { border-color:#00ae86; transition: .3s; color:#ffffff; } /* End dropdown navigation */ .BlogArchive #ArchiveList ul li{ color:#888888; } .widget.Text ul li, .widget.HTML ul li, .post ul li{ list-style:none; } .widget.Text ul li:before, .widget.HTML ul li:before, .post ul li:before{ content: '\\f0da'; font-family: 'Font Awesome 5 Free'; font-weight: 900; margin: 0 5px 0 -15px; } blockquote{ background: #f7f7f7; padding: 10px; border: 2px dashed #dddddd; margin: 0; } #comments{ padding:10px; } .post img:hover{ opacity: 0.8; transition: 0.2s; } -->", "raw_content": "\nஇந்தியாவின் எந்த மாநிலத்தில் காணாமற்போன குழந்தைகளை கண்டுபிடிப்பதற்கான திட்டம் \"Operation Muskan\" தொடங்கப்பட்டுள்ளது\nநாகாலாந்து மாநிலத்தின் புதிய முதலமைச்சராக சமீபத்தில் பதவியேற்றுள்ளவர் யார்\nதமிழகத்தில் சென்னையை தொடர்ந்து \"மெட்ரோ ரெயில் திட்டம்\" எந்த மாநகரில் செயல்படுத்தப்படவுள்ளது\nஆண்டுதோறும் தமிழ்வழிக் கல்வியில் 10 மற்றும் 12-ம் வகுப்புத் தேர்வில் \"சிறப்பாக தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு தமிழக அரசால் வழங்கப்படவுள்ள விருது\" எது\nஇந்திய கிரிக்கெட் அணியின் \"பந்து வீச்சு பயிற்சியாளராக\" சமீபத்தில் நியமிக்கப்பட்டுள்ளவர் யார்\nஇந்திய கிரிக்கெட் அணியின் \"பீல்டிங் பயிற்சியாளராக\" சமீபத்தில் நியமிக்கப்பட்டுள்ளவர் யார்\n2017 \"விக்டோரியா ஓபன் ஸ்குவாஷ்\" போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீரர் யார்\nசென்னையில் நடைபெற்ற \"முதலாவது தேசிய மாஸ்டர் ஸ்னூக்கர்\" போட்டி 2017-ல் சாம்பியன் பட்டம் வென்றவர் யார்\nஒவ்வொரு ஆண்டும் \"சர்வதேச நெல்சன் மண்டேலா தினம்\" எந்த நாளில் கடைபிடிக்கப்படுகிறது\n\"உலக இளைஞர் திறன் தினம்\" எந்த நாளில் கடைபிடிக்கப்படுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/started-is-political-murder-in-west-bengal/", "date_download": "2021-05-07T01:42:40Z", "digest": "sha1:RJ6FJ3DXMWWJVA2PXHV7OWSKTRZ2JZOJ", "length": 16834, "nlines": 159, "source_domain": "www.patrikai.com", "title": "ஆரம்பமானது அரசியல் கொலை.. என்னவாகும் மே.வங்காளம்? – Patrikai – Tamil Daily – latest online local breaking news & reviews – Tamilnadu, India & World – politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nஆரம்பமானது அரசியல் கொலை.. என்னவாகும் மே.வங்காளம்\nஆரம்பமானது அரசியல் கொலை.. என்னவாகும் மே.வங்காளம்\nஆரம்பமானது அரசியல் கொலை.. என்னவாகும் மே.வங்காளம்\nமற்ற மாநிலங்களை விட –மே.வங்காளத்தின் மீது தான் பா.ஜ.க.தனது முழு கவனத்தையும் திருப்பி விட்டு உள்ளது.தேர்தல் அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில்,பா.ஜ.க.வின் அனைத்து படைப்பிரிவுகளும் அந்த மாநிலத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன.\nகடந்த 6 மாதங்களாக அந்த மாநிலத்தின் ஏதாவது ஒரு மூலையில் மத்திய அமைச்சர் அல்லது வெளிமாநில பா.ஜ.க.அமைச்சர் பங்கேற்கும் கூட்டம் நடந்து கொண்டிருக்கிறது.\nதென் மாநிலங்கள் மீதான நம்பிக்கையை பா.ஜ.க. அறவே இழந்துவிட்டது.கூட்டணி வைத்தாலும்,வைக்கா விட்டாலும் –கர்நாடகம் தவிர வேறு எந்த மாநிலமும் கை கொடுக்கும் என்று தோன்றவில்லை.\nஉ.பி.உள்ளிட்ட இந்தி ‘பெல்ட்’களில் கடந்த முறை பெற்ற வெற்றியை இந்த முறை ருசிக்கும் சாத்தியங்கள் இல்லை.இங்கே ஏற்படும் இழப்பை வட கிழக்கு மாநிலங்கள் மற்றும் மே.வங்க மாநிலத்தில் இருந்து ஈடுகட்ட முடியும் என்று கணித்துள்ளது பா.ஜ.க. மேலிடம்.\nவட கிழக்கு மாநிலங்களில் பலமான கூட்டணி இருப்பதால்-அங்கு தேர்தல் வேலைகளில் தீவிரம் காட்டத்தேவை இல்லை என்று கருதும் பா.ஜ.க. தலைமை –மே.வங்கத்தில் முழுமூச்சாய் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது.\nஅந்த மாநிலத்திம் மொத்தம் 42 தொகுதிகள் உள்ளன.கடந்த முறை 2 தொகுதிகளில் மட்டுமே பா.ஜ.க.ஜெயித்திருந்தது.மம்தா கட்சிக்கு 32 எம்.பி.க்கள்.\nஅங்கு 25 ஆண்டுகளாக கோலோச்சிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்- கடந்த 5 ஆண்டுகளில் தனது தளத்தை இழந்து விட்டது.பெரும்பாலான சிவப்பு சட்டை காரர்கள்,மம்தா அரசு கட்டவிழ்த்து விட்ட வன்முறைக்கு தாக்கு பிடிக்க முடியாமல் –காவிச்சட்டை அணிந்து விட்டனர்.காங்கிரசுக்கும் அங்கு பலமில்லை.\nபிரதான போட்டி மம்தாவின் திரினாமூல் காங்கிரசுக்கும் ,பா.ஜ.க.வுக்கும் தான்.வரும் தேர்தலில் 22 தொகுதிகளை இந்த மாநிலத்தில் இருந்து பெ��� வேண்டும் என்பது –பா.ஜ.க,வின் இலக்கு.இந்த வெற்றியை பெறுவதற்கு எதையும் செய்ய தயாராகி விட்டது.\nமே.வங்க தேர்தல் களத்தில் அரசியல் கொலைகளுக்கு பஞ்சம் இருக்காது.\nஅதனை நேற்று நடந்த கொலை உறுதிப்படுத்தியுள்ளது.\nஅங்குள்ள கிருஷ்ணகஞ்ச் தனி தொகுதி எம்.எல்.ஏ.சத்யஜித் பிஸ்வாஸ்.திரினாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்.\nபுல்பாரி என்ற இடத்தில் நேற்று நடந்த சரஸ்வதி பூஜை யில் மாநில அமைச்சர் ரத்னகோஷ் என்பவருடன் பிஸ்வாசும் பங்கேற்றார். அங்கு வந்த மர்ம நபர்கள் பிஸ்வாசை சுட்டுக்கொன்று விட்டு தப்பி ஓடிவிட்டனர்.\nஇவர் புது மாப்பிள்ளையும் கூட. தனது ஏரியாவில் சக்தி மிக்க பட்டியலின தலைவராக இருந்தவர்.\nஇவரது கொலையால் மாநிலம் பதற்றத்தில் இருக்க –\nஇந்த கொலைக்கு காரணம் பா.ஜ.க.என குற்றம் சாட்டியுள்ளது –திரினாமூல் காங்கிரஸ்.\nதேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் என்ன நடக்கப்போகிறதோ என பீதியில் ஆழ்ந்துள்ளனர் அந்த மாநில மக்கள்.\nபயிர் காப்பீடு அரசே செலுத்தும்: விவசாயிகளுக்கு மேற்கு வங்க முதல்வரின் புத்தாண்டு சலுகை மோடி அரசு அராஜகத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளது : மம்தா கண்டனம் என்ன நடக்கிறது மேற்குவங்கத்தில் தேர்தல் ஆணையத்தை சாடும் மம்தா…..\nPrevious உத்திரப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் 92 பேர் கள்ளச்சாராய மரணம்\nNext பிப்ரவரி 15 அன்று பாஜக தலைவர் கீர்த்தி ஆசாத் காங்கிரஸில் இணைகிறார்.\nஇந்தியாவில் வரலாறு காணாத உச்சமாக நேற்று 4,14,182 பேருக்கு கொரோனா\nஐபிஎல் தொடரை நடத்தி முடிக்காவிட்டால் 2500 ரூபாய் கோடி இழப்பு ஏற்படும் – கங்குலி\n8 hours ago ரேவ்ஸ்ரீ\nஇன்று ஆந்திரப் பிரதேசத்தில் 21,954 கர்நாடகாவில் 49,058 பேருக்கு கொரோனா உறுதி\nஇந்தியாவில் வரலாறு காணாத உச்சமாக நேற்று 4,14,182 பேருக்கு கொரோனா\nடில்லி இந்தியாவில் நேற்று 4,14,182 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று வரலாறு காணாத அளவுக்கு கொரோனாவால்…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15.66 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15,66,72,832 ஆகி இதுவரை 32,69,034 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nஅடுத்த 17 நாட்கள் ஒவ்வொரு வீட்டிலும் பின்பற்ற வேண்டிய கட்டாய விதி\nஅடுத்த 17 நாட்கள் ஒவ்வொரு வீட்டிலும் பின்பற்ற வேண்டிய கட்டாய விதி – நெட்டிசன் பதிவு கொரோனா கட்டுப்பாடு குறித்து வலைத் தளங்களில்…\nஇன்று ஆந்திரப் பிரதேசத்தில் 21,954 கர்நாடகாவில் 49,058 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 21,954 கர்நாடகாவில் 49,058 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 49,058…\nநாளைக்குள் தமிழகத்துக்குத் தேவையான ஆக்சிஜன் வழங்குவதை உறுதி செய்ய மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\nசென்னை நாளைக்குள் தமிழகத்துக்குத் தேவையான ஆக்சிஜன் வழங்குவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது….\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் –06/05/2021\nசென்னை தமிழகத்தில் இன்றைய (06/05/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 24,898 பேருக்குப் பாதிப்பு…\nஇந்தியாவில் வரலாறு காணாத உச்சமாக நேற்று 4,14,182 பேருக்கு கொரோனா\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15.66 கோடியை தாண்டியது\nஅதிமுக எம்.எல்.ஏ. விஜய பாஸ்கருக்கு கொரோனா\n7 hours ago ரேவ்ஸ்ரீ\nதனி தகவல் தொடர்பு தளத்தை தொடங்கிய டிரம்ப்\n8 hours ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/31976", "date_download": "2021-05-07T01:06:33Z", "digest": "sha1:4VPSGIYZZHA4GLCF2FX2LITTZF447SS7", "length": 12257, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "சேதமான நாணயத்தாள்கள் இருந்தால் உடனடியாக வங்கியில் மாற்றவும்.! | Virakesari.lk", "raw_content": "\nநாளொன்றுக்கு 2 ஆயிரத்தை விட அதிக தொற்றாளர்கள் இனங்காணப்படலாம் : எச்சரிக்கிறது தொற்று நோயியல் பிரிவு\nபிழையான எண்ணங்களை மக்கள் மயப்படுத்த எதிக்கட்சி முயற்சி - மதுர விதானகே\nகிளிநொச்சியில் புதிய கொரோனா சிகிச்சை நிலையம் - நள்ளிரவு முதல் சேவைகள் ஆரம்பம்\nமஹரகம நகரசபைக் கூட்டத்தில் மோதல் - விசாரணைகள் ஆரம்பம்\nதனியார் வங்கி உதவி முகாமையாளருக்கு கொரோனா தொற்று ; வங்கிக்கு பூட்டு\nஜம்மு-காஷ்மீரில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை\nகொரோனாவால் இலங்கையில் கர்ப்பிணித் தாய் பலி\n இனங்காணப்படும் தொற்றாளர்களை விட இருமடங்கு தொற்றாளர்கள் சமூகத்தில் \nதம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தை மீண்டும் திறக்க தீர்மானம்\nசேதமான நாணயத்தாள்கள் இருந்தால் உடனடியாக வங்கியில் மாற்றவும்.\nசேதமான நாணயத்தாள்கள் இருந்தால் உடனடியாக வங்கியில் மாற்றவும்.\nசிதைக்கப்பட்ட மற்றும் கிழிந்த நாணயத்தாள்களை எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் அருகிலுள்ள வங்கிக் கிளைகளில் மாற்றி கொள்ளுமாறு இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.\nஎதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் இவ்வாறான நாணயத்தாள்களை வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றம் என்றும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.\nநாணயத்தாள்களை வேண்டுமென்றே சேதப்படுத்தல் 1949 ஆம் ஆண்டு இலக்க 58 ஆம் நிதி சட்டத்திற்கு அமைவாக தண்டப்பணம் அல்லது சிறைத்தண்டனை வழங்கக்கூடிய குற்றமாகும்.\nஎனவே பொதுமக்கள் சேதமாக்கப்பட்ட நாணயத்தாள்கள் கைவசமிருந்தால் உடனடியாக அருகிலுள்ள வங்கிகளில் மாற்றிக்கொள்ளவும்.\nநாளொன்றுக்கு 2 ஆயிரத்தை விட அதிக தொற்றாளர்கள் இனங்காணப்படலாம் : எச்சரிக்கிறது தொற்று நோயியல் பிரிவு\nநாட்டில் நாளொன்றில் இனங்காணப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கை எதிர்வரும் நாட்களில் 2000 ஐ விட அதிகரிக்கக் கூடும் என்று சுகாதார தரப்பினர் எச்சரித்துள்ளனர். தற்போது நாடளாவிய அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றமையால் மாவட்டங்களிலுள் வைத்தியசாலைகளிலும் கொவிட் தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான பிரிவுகளை பிரத்தியேகமாக ஒதுக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதே வேளை மேல் மாகாணத்தில் மாத்திரம் நாளொன்றுக்கு சுமார் 1200 தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றனர்.\n2021-05-06 22:40:35 2000 தொற்றாளர்கள் இனங்காணல் எச்சரிக்கை\nபிழையான எண்ணங்களை மக்கள் மயப்படுத்த எதிக்கட்சி முயற்சி - மதுர விதானகே\nகொவிட்-19 வைரஸ் பரவல் காரணமாக பாதிப்படைந்துள்ள மக்களை காப்பாற்றுவதுடன் , வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கு அரசாங்கம் முயற்சிகளை எடுத்து வரும் நிலையில், எதிர்தரப்பினர் தங்களுக்கு கிடைக்கப் பெற்றுள்ள பாராளுமன்ற உறுப்புரிமையை பயன்படுத்தி பிழையான எண்ணங்களை மக்கள் மயப்படுத்த முயற்சித்து வருவதாக ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே குற்றஞ்சாட்டினார்.\n2021-05-06 22:36:58 பிழையான எண்ணங்கள் மக்கள் மயப்படுத்தல் எதிக்கட்சி\nகிளிநொச்சியில் புதிய கொரோனா சிகிச்சை நிலையம் - நள்ளிரவு முதல் சேவைகள் ஆரம்பம்\nகிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் புதிய கொவிட் 19 மருத்துவ நிலையத்தில் இன்று நள��ளிரவு முதல் சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பிரிவு தெரிவிக்கின்றது.\n2021-05-06 22:36:36 கிளிநொச்சி கொரோனா சிகிச்சை நிலையம் நள்ளிரவு\nமஹரகம நகரசபைக் கூட்டத்தில் மோதல் - விசாரணைகள் ஆரம்பம்\nமஹரகம நகரசபையில் இடம்பெற்றதாக கூறப்படும் மோதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக மாஹரகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.\n2021-05-06 22:35:00 மஹரகம நகரசபை கூட்டம் மோதல் விசாரணைகள் ஆரம்பம்\nதனியார் வங்கி உதவி முகாமையாளருக்கு கொரோனா தொற்று ; வங்கிக்கு பூட்டு\nகோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவுக்குட்பட்ட தனியார் வங்கி ஒன்றின் உதவி முகாமையாளருக்கு கொரோனா தொற்று இருப்பதாக இன்று (6) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\n2021-05-06 21:00:35 தனியார் வங்கி உதவி முகாமையாளர் கொரோனா தொற்று வங்கி\nஇலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து மேலும் 810 பேர் குணமடைவு..\nபணவீக்கம் ஏப்ரலில் 3.9 சதவீதமாக வீழ்ச்சி: இலங்கை மத்திய வங்கி\nவிலை அதிகரிப்பிற்கு அனுமதியில்லையேல் தட்டுப்பாடு ஏற்படலாம்: லாப் கேஸ் நிறுவனம்\nஸ்புட்னிக் கொரோனா தடுப்பூசி போடும் பணி ஆரம்பம்\nகளுத்துறை சிறைச்சாலைக்குள் போதைப்பொருட்கள் அடங்கிய பொதிகள் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newneervely.com/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-1-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5", "date_download": "2021-05-07T01:42:38Z", "digest": "sha1:UXE6NH3JWLCFAVFOG3SKE2E66GPYHL7I", "length": 5497, "nlines": 92, "source_domain": "newneervely.com", "title": "[:ta]அதிபர் சேவை தரம் 1 க்கு பதவி உயர்வு[:] | நீர்வேலி", "raw_content": "10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..\nநீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது\n[:ta]அதிபர் சேவை தரம் 1 க்கு பதவி உயர்வு[:]\nஅத்தியார் இந்துக்கல்லூரி அதிபர் திரு.கு.ரவிச்சந்திரன் அவர்கள் 16.10.2015 அன்றில் இருந்து செயற்படும் படியாக அதிபர் சேவை தரம் 1 க்கு பதவி உயர்வு பெற்றுள்ளார். வடமாகாணத்தில் 17 அதிபர்கள் அதிபர் சேவை தரம் 1 க்கு உயர்வு பெற்றுள்ளனர். அதில் அத்தியார் அதிபரும் ஒருவர் ஆவார். இதற்கான அறிவிப்புக்கள் அரசாங்க இணையத்தில் வெளியாகியுள்ளது. விரைவில் அலரி மாளிகையில் வைத்து உத்தியோகபூர்வ கடிதம் வழங்கப்படவுள்ளது. தாங்கள் மேலும் உயர்வுகள் பெற்று எங்கள் கிராமத்தின் தாய்ப்பாடசாலை அத்தியார் இந்துக்கல்லூரியினை வளர்க்க வேண்டும் என நீர்வேலி கிராமத்து மக்கள் சார்பாக வாழ்த்துகின்றோம்.\n[:ta]மிகச்சிறப்பாக இயங்கி வரும் நீர்வேலி நலன்புரிச்சங்கம் -கனடா[:] »\nஇது எமது ஊர். இங்கு பிறந்ததினால் நாம் பெருமையடைகிறோம். நீர்வேலியின் சிறப்பையும் வனப்பையும் எங்கு சென்றாலும் மறவோம். எமதூரைப் போற்றுவோம்.\nநீர்வேலி நலன்புரிச் சங்கம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muthootgoldpoint.com/ta/online-gold-rate-price-jewellery-ornament/", "date_download": "2021-05-07T01:33:05Z", "digest": "sha1:42WNAPD2SCLPILI3G4OWXGNTMKVYPWGE", "length": 17151, "nlines": 139, "source_domain": "www.muthootgoldpoint.com", "title": "Today Gold Rate, Current 22 & 24 Carat Ornament Gold Price Per Gram in Bangalore - Muthoot Gold Point", "raw_content": "\nநான் எனது வீட்டின் கட்டுமானத்துக்குத் தேவையான பணத்துக்காக -எனது காண்ட்ராக்டர் எங்களை ஏமாற்றி இருந்தார் - சில நகைகளை விற்க விரும்பினேன். ஒரு அரசுப் பேருந்தில் எம். பி.ஜி -யின் விளம்பரத்தைப் பார்த்த நான், அதிகமான தேவையுடன் இருந்ததால் அவர்களைச் சந்திக்க முடிவு செய்தேன். இதற்கு முன்னர் தங்கத்தை விற்பன.. மேலும் படிக்க\nமுத்தூட் கோல்டு பாயிண்ட்டை என்னால் எப்போதும் மறக்க முடியாது. சரியான நேரத்தில் எம்.பி.ஜி -யைப் பற்றி எனக்குத் தெரியாமல் போயிருந்தால், நான் எல்லாவற்றையும் இழந்திருப்பேன். குடும்பம் மற்றும் வியாபாரத்தில், உங்களுக்குப் பணம் மிகவும் தேவையாக இருக்கும் பொழுது, அது தட்டுப்பாடாக இருக்கிறது. அது போன்ற நேரங்.. மேலும் படிக்க\nநான் என்னுடைய மூத்த மகனின் கடைசி வருட பொறியியல் கல்லூரி கட்டணத்தைக் கட்ட வேண்டி இருந்தது, என்னிடம் போதுமான அளவு பணம் இல்லை. நாங்கள் பல வருடங்களாக சேர்த்து வைத்திருந்த வெள்ளி நாணயங்கள், மற்றும் தங்க நகைகளை விற்பனை செய்யுமாறு என்னுடைய மனைவி என்னிடம் கூறினார். நான் சில உள்ளூர் கடைகளுக்கு சென்ற பின்னர.. மேலும் படிக்க\nஎன்னுடைய அப்பாவுக்கு அவசரமாக பை-பாஸ் சிகிச்சை செய்ய வேண்டியிருந்த போது, நான் உடனே அனைத்து நகைகளையும் எடுத்துக் கொண்டு எம்.பி.ஜி -க்கு சென்றேன். நான் ஏற்கனவே அவர்களிடம் பரிவர்த்தனை செய்துள்ளேன். நான் அவர்களிடம் முதன் முறையாகக் கடன் பெற்றது, நான்கு வருடங்களுக்கு முன்னர் என்னுடைய அழகு நிலையத்தைத் தொட.. மேலும் படிக்க\nதொலைபேசி/மொபைல்/எஸ்.எம்.எஸ்/மின்னஞ்சல் ம���கவரி வாயிலாக, தங்களின் சேவை பற்றிய தகவல்கள்/விளம்பரங்களைத் தெரிவிப்பதற்காக என்னை அழைக்க/தொடர்பு கொள்ள, முத்தூட் எக்சிம் பிரைவேட் லிமிடெட், மற்றும் பிற முத்தூட் பாப்பச்சன் குழும நிறுவனங்களுக்கு (அவற்றின் முகவர்கள்/பிரதிநிதிகள் உட்பட), நான் அங்கீகாரமளிக்கிறேன்.\nநீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் கீழுள்ள இடங்களில் உள்ள எங்கள் கிளைக்கு வருவது தான் அகமதாபாத், பெங்களூர், பெர்ஹாம்பூர், சென்னை, கோயம்புத்தூர், டெல்லி, எர்ணாகுளம், கொல்கத்தா, மதுரை, விஜயவாடா மற்றும் திருச்சி\nஅகமதாபாத், பெங்களூர், பெர்ஹாம்பூர், சென்னை, கோயம்புத்தூர், டெல்லி, மும்பை, எர்ணாகுளம், கொல்கத்தா, மதுரை, விஜயவாடா மற்றும் திருச்சி\nஎங்களுடைய பிற இணையதளங்களைத் தேர்வு செய்யவும்\nஎங்களுடைய கட்டணமில்லா தொலைபேசி எண்\nஎங்கள் கட்டணம்-இல்லாத தொலைபேசி எண்ணுக்கு அழைத்து,\nஎங்கள் வாடிக்கையாளர் சேவை மையப் பிரதிநிதியிடம் பேசுங்கள்.\nமுத்தூட் எக்சிம் பிரைவேட் லிமிடெட்\n40/7384 முத்தூட் டவர்ஸ், எம்.ஜி. சாலை,\nடெக்மேக்னட் மூலம் இணையதள வடிவமைப்பு\nபதிப்புரிமை © முத்தூட் எக்ஸிம் பிரைவேட் 2021 - அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/d40-title-and-motion-poster-tom-at-5-pm/", "date_download": "2021-05-07T01:43:14Z", "digest": "sha1:3ECVGT43LEZSUYSJQIVNBSNYOCGE5XPA", "length": 11530, "nlines": 135, "source_domain": "www.patrikai.com", "title": "D40 படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர் நாளை மாலை ஐந்து மணிக்கு வெளியீடு…! – Patrikai – Tamil Daily – latest online local breaking news & reviews – Tamilnadu, India & World – politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nD40 படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர் நாளை மாலை ஐந்து மணிக்கு வெளியீடு…\nD40 படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர் நாளை மாலை ஐந்து மணிக்கு வெளியீடு…\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் படத்தை YNOT ஸ்டுடியோஸ் & ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரிக்கிறது .\nஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் தனுஷுடன் நடித்து வருகிறார்கள்.சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார்.\nஅண்மையில் இப்படத்தின் First மற்றும் மோஷன் போஸ்டர் வரும் 19ஆம் தேதி வெளிவரும் என்று தெரிவித்திருந்தனர்.\nஇந்நிலையில் தற்போது இப்படத்தின் First லுக் மற்றும் மோஷன் போஸ்டர் நாளை மாலை 5 மணிக்கு வெளிவரும் என்று நடிகர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.\nநட்சத்திர கிரிக்கெட்: நடிகர் சங்கம் வெளியிட்ட பொய்க்கணக்கு: நடிகர் வாராகி பகீர் குற்றச்சாட்டு ஜனரஞ்சகமான நகைச்சுவை படமாக வருகிறது “மோ” கமல் -கவுதமி: பாபநாசத்துடன் முடிந்த பந்தம்\nPrevious 25 வருட திரைப்பயணத்தை கொண்டாடிய அருண் விஜய்…\nNext கவின் படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட இயக்குனர் வினித் பிரசாத்…\nசல்மான்கானின் ‘ராதே’ டைட்டில் ட்ராக் வெளியீடு….\n‘பஹீரா’ படத்தின் சைகோ ராஜா பாடல் வெளியீடு……\nபிக்பாஸ் கேபி-க்கு கொரோனா தொற்று உறுதி….\nஇந்தியாவில் வரலாறு காணாத உச்சமாக நேற்று 4,14,182 பேருக்கு கொரோனா\nடில்லி இந்தியாவில் நேற்று 4,14,182 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று வரலாறு காணாத அளவுக்கு கொரோனாவால்…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15.66 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15,66,72,832 ஆகி இதுவரை 32,69,034 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nஅடுத்த 17 நாட்கள் ஒவ்வொரு வீட்டிலும் பின்பற்ற வேண்டிய கட்டாய விதி\nஅடுத்த 17 நாட்கள் ஒவ்வொரு வீட்டிலும் பின்பற்ற வேண்டிய கட்டாய விதி – நெட்டிசன் பதிவு கொரோனா கட்டுப்பாடு குறித்து வலைத் தளங்களில்…\nஇன்று ஆந்திரப் பிரதேசத்தில் 21,954 கர்நாடகாவில் 49,058 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 21,954 கர்நாடகாவில் 49,058 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 49,058…\nநாளைக்குள் தமிழகத்துக்குத் தேவையான ஆக்சிஜன் வழங்குவதை உறுதி செய்ய மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\nசென்னை நாளைக்குள் தமிழகத்துக்குத் தேவையான ஆக்சிஜன் வழங்குவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது….\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் –06/05/2021\nசென்னை தமிழகத்தில் இன்���ைய (06/05/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 24,898 பேருக்குப் பாதிப்பு…\nஇந்தியாவில் வரலாறு காணாத உச்சமாக நேற்று 4,14,182 பேருக்கு கொரோனா\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15.66 கோடியை தாண்டியது\nஅதிமுக எம்.எல்.ஏ. விஜய பாஸ்கருக்கு கொரோனா\n7 hours ago ரேவ்ஸ்ரீ\nதனி தகவல் தொடர்பு தளத்தை தொடங்கிய டிரம்ப்\n8 hours ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinibitz.com/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA/", "date_download": "2021-05-07T00:59:37Z", "digest": "sha1:C4O46B33RNBCHDHG6QNNLM6HLAEH2TER", "length": 11324, "nlines": 68, "source_domain": "www.tamilcinibitz.com", "title": "சுஹானா கான் ஒரு கருப்பு பயிர் மேல் ஒரு கண்ணாடி செல்பி பகிர்ந்து, அனைத்து கண்களும் 'மெல்லிய இடுப்பில்' ... புகைப்படத்தைக் காண்க", "raw_content": "முழுமையான செய்தி உலகம் உங்களுக்காக.\nசுஹானா கான் ஒரு கருப்பு பயிர் மேல் ஒரு கண்ணாடி செல்பி பகிர்ந்து, அனைத்து கண்களும் ‘மெல்லிய இடுப்பில்’ … புகைப்படத்தைக் காண்க\nசுஹானா கான் மிரர் செல்பி இணையத்தில் நிறைய தலைப்புச் செய்திகளை உருவாக்கி வருகிறது, அதில் அவர் கருப்பு மற்றும் வெள்ளை வண்ண பயிர் மேல் பகுதியில் காணப்படுகிறார். இந்த புகைப்படத்தை சுஹானா தனது இன்ஸ்டாகிராம் கதையில் பகிர்ந்துள்ளார். இது இப்போது வைரலாகி வருகிறது.\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது:நவம்பர் 22, 2020 10:32 முற்பகல்\nமும்பை ஷாருக் கான் மற்றும் க ri ரி கானின் மகள் சுஹானா கான் இன்னும் பாலிவுட்டில் அறிமுகமானிருக்க மாட்டார்கள், ஆனால் அதற்கு முன்பு அவர் ஒரு நட்சத்திரமாகிவிட்டார். சமூக ஊடகங்களில் (சுஹானா கான்) சுஹானாவுக்கு நல்ல ரசிகர்கள் உள்ளனர், அவரின் கண்கள் பெரும்பாலும் அவரது படங்கள் மற்றும் வீடியோக்களில் வைக்கப்படுகின்றன. சுஹானா சமூக ஊடகங்களிலும் (சுஹானா கான் புகைப்படங்கள்) மிகவும் சுறுசுறுப்பாக உள்ளார், மேலும் தனது புதிய மற்றும் அதிர்ச்சியூட்டும் அவதாரத்தால் ரசிகர்களின் இதயங்களை அதிகரிக்கச் செய்கிறார். இதற்கிடையில், சுஹானா கான் தனது புகைப்படத்தை மீண்டும் பகிர்ந்துள்ளார், இது அவரது ரசிகர்கள் மத்தியில் மிகவும் விரும்பப்படுகிறது.\nஅந்த புகைப்படத்தை சுஹானா தனது இன்ஸ்டாகிராம் கதையில் பகிர்ந்துள்ளார். இது இணையத்த��ல் நிறைய தலைப்புச் செய்திகளை உருவாக்குகிறது. இது சுஹானாவின் கண்ணாடி செல்பி, அதில் அவர் கருப்பு மற்றும் வெள்ளை வண்ண பயிர் மேல் காணப்படுகிறார். இந்த செல்பியில், சுஹானா தனது வளைவுகளைக் காட்டிக் கொண்டிருப்பதைக் காணலாம். சுஹானாவின் இந்த கண்ணாடி செல்பி ரசிகர்கள் மத்தியில் மிகவும் விரும்பப்படுகிறது. இருப்பினும், சுஹானா தனது அதிர்ச்சியூட்டும் தோற்றத்துடன் மக்களின் உணர்வை உயர்த்துவது இது முதல் முறை அல்ல.\nசமீபத்தில், நடிகை தனது புகைப்படத்தை பச்சை பாடிகான் உடையில் பகிர்ந்துள்ளார். அதில் அவரது வளைவுகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அவரது ரசிகர்கள் மட்டுமல்ல, அவரது ரசிகர்களும் சுஹானாவின் புகைப்படங்கள் குறித்து கருத்து தெரிவித்தனர். சுஹானாவின் இந்த புகைப்படத்தைப் பற்றி கருத்து தெரிவித்த அவரது சிறந்த நண்பரும் பாலிவுட் நடிகையுமான அனன்யா பாண்டேவும் அவரைப் பாராட்டினார். அதே நேரத்தில், சஞ்சய் கபூரின் மனைவி மஹீப் கபூர் தனது தோற்றத்தை பிரமிக்க வைக்கும் என்று அழைத்தார்.\nபாப் கலாச்சாரம் டிரெயில்ப்ளேஸர். சிந்தனையாளர். சிக்கல் செய்பவர். இசை குரு. சமூக ஊடக நிபுணர். மாணவர். ஜாம்பி நிபுணர்.\nREAD மத்திய பிரதேச சட்டசபை இடைத்தேர்தல்: நட்சத்திர பிரச்சாரகர் காங்கிரஸ் தலைவர் கமல்நாத் அந்தஸ்தை ரத்து செய்த பின்னர் தேர்தல் ஆணையம் எந்த அறிவிப்பும் கொடுக்கவில்லை என்று கூறினார் - கமல்நாத்\nஇம்ரான் கான்: பாகிஸ்தானில் பணவீக்கம் காரணமாக விழித்தெழுந்த இஞ்சி ஒரு கிலோவுக்கு ரூ .1000 ஐ எட்டியது – பாக்கிஸ்தானில் காய்கறிகளின் விலை சாதனை அளவை எட்டியது, இஞ்சி இன்று கச்சா பிண்டியில் ஒரு கிலோவுக்கு ரூ.\nசிறப்பம்சங்கள்: மாவு மற்றும் பயறு வகைகளுக்குப் பிறகு பாகிஸ்தானில் காய்கறி விலை ராவல்பிண்டியில் ஒரு கிலோ...\nநோஸ்ட்ராடாமஸ் 2021 இந்தியில் கணிப்புகள் பிரெஞ்சு ஜோதிடர் நோஸ்ட்ராடாமஸ் 2021 க்கான கணிப்புகள்\nபிக் பாஸ் 14 பணியில் இழந்த சித்தார்த் அணி, அவர்கள் நிகழ்ச்சிக்கு வெளியே உள்ளனர்\nபுதுச்சேரியின் சமூக நல அமைச்சர் ஆளுநர் கிரண் பீடி மீது சட்டமன்றத்திற்குள் ஆர்ப்பாட்டம் தொடர்கிறார்\nPrevious articleகொரோனா தொடர்பாக முதலமைச்சர் அவசரக் கூட்டத்தை நடத்துகிறார், முக்கியமான பகுதிகளில் இரவு ஊரடங்கு உத்தரவு விதிக்கப்படலாம் | மக்கள் இ��வு 8 முதல் 6 வரை வீடுகளில் தங்குவர், முகமூடி அணிவதற்கு பதிலாக, 200 க்கு பதிலாக ரூ .500. தண்டம்\nNext articleகாங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் கட்சி வேலை குறித்து தீவிரமான கேள்வியை எழுப்பினார். காங்கிரசின் ‘உள்நாட்டுப் போர்’ தீவிரமடைந்தது, இப்போது குலாம் நபி ஆசாத் கடுமையான கேள்விகளை எழுப்பினார்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஃபக்கர் ஜமான், வஹாப் ரியாஸ் தென்னாப்பிரிக்காவில் டி 20 போட்டிக்காக வெளியேறினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinibitz.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2021-05-07T01:17:54Z", "digest": "sha1:ORDB25O6RLEDEB5W7W3GXLFHL6STRZYH", "length": 13018, "nlines": 72, "source_domain": "www.tamilcinibitz.com", "title": "செனட்டுக்கு எதிரான குற்றச்சாட்டு நடவடிக்கைகளுக்காக சட்ட பாதுகாப்பு குழுவை டிரம்ப் அறிவிக்கிறார்", "raw_content": "முழுமையான செய்தி உலகம் உங்களுக்காக.\nWorld பிப்ரவரி 2, 2021 பிப்ரவரி 2, 2021\nசெனட்டுக்கு எதிரான குற்றச்சாட்டு நடவடிக்கைகளுக்காக சட்ட பாதுகாப்பு குழுவை டிரம்ப் அறிவிக்கிறார்\nவாஷிங்டன்: முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் அவருக்காக தனது சட்ட பாதுகாப்பு குழுவை அறிவித்தார் செனட்டுக்கு எதிரான குற்றச்சாட்டு நடவடிக்கைகள் அது பிப்ரவரி 8 ஆம் தேதி தொடங்க வேண்டும்.\nஅமெரிக்க வரலாற்றில் தனது குடியரசுக் கட்சியின் காங்கிரஸ்காரர்கள் பத்து பேர் ஜனநாயகக் கட்சியினருடன் இணைந்தபோது இரண்டு முறை குற்றம் சாட்டப்பட்ட முதல் ஜனாதிபதியானார் டிரம்ப் பிரதிநிதிகள் சபை ஜனவரி 13 ஆம் தேதி அமெரிக்க கேபிட்டலில் முன்னோடியில்லாத வகையில் கலவரத்தைத் தூண்டியதாக அவர் குற்றம் சாட்டினார்.\nஜனநாயகக் கட்சியினருக்கு செனட்டில் குற்றச்சாட்டுக்கு மூன்றில் இரண்டு பங்கு வாக்குகள் தேவை. குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர் மீண்டும் பதவி வகிப்பதைத் தடுக்க முடியும்.\nஜனாதிபதி பதவியில் இருந்து விலகிய பின்னர் குற்றச்சாட்டை எதிர்கொண்ட முதல் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஆவார். ஜனநாயகக் கட்சியினருக்கு போதுமான வாக்குகள் இல்லாததால், அவர் ஒரு வருடத்தில் இரண்டாவது முறையாக செனட்டில் இருந்து விடுவிக்கப்படுவார்.\nதற்போது, ​​ஜனநாயகக் கட்சியினர் மற்றும் குடியரசுக் கட்சியினர் இருவரும் 100 இருக்கைகள் கொண்ட செனட்டில் தலா 50 உறுப்பினர்களைக் கொண்டுள்ளனர். மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெற ஜனநாயகக் கட்சியினருக்கு குறைந்தது 17 குடியரசுக் கட்சி செனட்டர்களின் ஆதரவு தேவை.\nவிசாரணை வக்கீல்கள் டேவிட் ஷொயென் மற்றும் புரூஸ் எல் காஸ்டர் ஜூனியர் ஆகியோர் ட்ரம்பின் குற்றச்சாட்டு பாதுகாப்பு சட்டக் குழுவை வழிநடத்துவார்கள், தேசிய சுயவிவரங்களையும் உயர் வழக்குகளில் குறிப்பிடத்தக்க அனுபவத்தையும் இந்த முயற்சிக்கு கொண்டு வருவார்கள் என்று முன்னாள் ஜனாதிபதி டிரம்ப்பின் அலுவலகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறிப்பாக, வரவிருக்கும் வழக்கு விசாரணைக்குத் தயாராவதற்கு ஷொயென் ஏற்கனவே டிரம்ப் மற்றும் பிற ஆலோசகர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார், மேலும் இந்த குற்றச்சாட்டு அரசியலமைப்பிற்கு விரோதமானது என்பதை ஷொயன் மற்றும் காஸ்டர் இருவரும் ஒப்புக்கொள்கிறார்கள் – இது கடந்த வாரம் 45 செனட்டர்கள் ஒப்புக்கொண்டது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\n“45 வது ஜனாதிபதியை பிரதிநிதித்துவப்படுத்துவது ஒரு மரியாதை, டொனால்ட் ஜே டிரம்ப், மற்றும் இந்த அமெரிக்காவின் அரசியலமைப்பு“நைஸ் கூறினார்.\nகாஸ்டர் கூறினார், “45 வது ஜனாதிபதியை பிரதிநிதித்துவப்படுத்துவது ஒரு பாக்கியமாக நான் கருதுகிறேன். நமது அரசியலமைப்பின் வலிமை நம் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சோதிக்கப்படுகிறது. இது வலுவானது மற்றும் நெகிழக்கூடியது. இது வெற்றிபெறும் என்று நீடித்த மற்றும் கடைசியாக எழுதப்பட்ட ஒரு ஆவணம். ” பாரபட்சம் மீண்டும். ”\nகடந்த மாதம், செனட் பெரும்பான்மைத் தலைவர் சக் ஷுமர், முன்னாள் ஜனாதிபதி டிரம்பிற்கு எதிராக பிப்ரவரி 8 ஆம் தேதி அமெரிக்க செனட் குற்றச்சாட்டு நடவடிக்கைகளைத் தொடங்குவார் என்று கூறினார்.\nஜனவரி 13 ம் தேதி இரு கட்சி வாக்கெடுப்பில், ஜனநாயகக் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள சபை 74 வயதான டிரம்பை ஜனவரி 6 ம் தேதி தனது நடவடிக்கைகளுக்காக “கிளர்ச்சியைத் தூண்டியது” என்று குற்றம் சாட்டியது. அவர் தனது ஆதரவாளர்களை அமெரிக்க கேபிட்டலை புயலுக்கு விட்டுச் செல்லுமாறு வலியுறுத்தினார்.\nவன்முறை தற்காலிகமாக எண்ணுவதை நிறுத்தியது தே��்தல் கல்லூரி வாக்குகள் மற்றும் ஒரு போலீஸ் அதிகாரி உட்பட ஐந்து பேர் கொல்லப்பட்டனர்.\nஅமைப்பாளர். எழுத்தாளர். விருது வென்ற சிக்கல் தீர்க்கும். தொடர்பாளர். தீய ஆல்கஹால். ஹார்ட்கோர் உருவாக்கியவர்.\nREAD 4 வயதான அவர் கடற்கரையில் நன்கு பாதுகாக்கப்பட்ட டைனோசர் தடம் ஒன்றைக் கண்டுபிடித்தார்\n“உலகளாவிய வெடிப்புகள்” ஒரு கோவிட் -19 தொற்றுநோயை ஏற்படுத்தியது என்று சீன வெளியுறவு மந்திரி வாங் யி கூறுகிறார் – உலக செய்தி\nநோய்க்கிருமிகளின் தோற்றத்தை ஆராய்ந்து, வைரஸ் கதைகளை மீண்டும் எழுதும் முயற்சிகளை பெய்ஜிங் முடுக்கிவிட்டதால், நாட்டிற்கு வெளியே...\nமந்தமான தேவை இருந்தபோதிலும், கோவக்ஸ் காட்சிகளில் இந்தியாவுக்கு சிங்கத்தின் பங்கு கிடைக்கிறது\nது சிங் லியாங் | தைவானில் உள்ள டாக்ஸி ஓட்டுநர்கள் கரோக்கி பாடக்கூடியவர்களுக்கு இலவச சவாரிகளை வழங்குகிறார்கள்\nசிறந்த குடியரசுக் கட்சியின் மிட்ச் மெக்கானெல் மற்றும் ஜனநாயகக் கட்சியின் நான்சி பெலோசி வீடுகள் அழிக்கப்பட்டன: அறிக்கை – உலக செய்திகள்\nPrevious articleஎலோன் மஸ்க் ட்விட்டரில் மற்றொரு இடைவெளியை அறிவித்தார், இணைய பயனர்கள் தொடர்பு கொள்கிறார்கள்\nNext articleநடாஷா தலால் வருண் தவானை திருமணம் செய்து கொண்ட பிறகு முதல் முறையாக காணப்பட்டார். படங்களைக் காண்க\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nindia vs australia test match kuldeep yadav ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் குல்தீப் யாதவ் தனது சொந்த தேர்வுகள் குறித்து என்ன சொன்னார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2020/09/blog-post_838.html", "date_download": "2021-05-07T00:28:01Z", "digest": "sha1:FHW376DKZNONNSU4XBY7A7PPYFOLQDNG", "length": 7651, "nlines": 89, "source_domain": "www.yarlexpress.com", "title": "கிணற்றடியில் முகம் கழுவச் சென்றவர் மயங்கி விழுந்து சாவு - யாழில் துயரம். \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nகிணற்றடியில் முகம் கழுவச் சென்றவர் மயங்கி விழுந்து சாவு - யாழில் துயரம்.\nகிணற்றடிய���ல் முகம் கழுவச் சென்ற போது, மயங்கி விழுந்து குடும்பத்தலைவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம், தொண்டைமானாறு பகு...\nகிணற்றடியில் முகம் கழுவச் சென்ற போது, மயங்கி விழுந்து குடும்பத்தலைவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nஇந்தச் சம்பவம் யாழ்ப்பாணம், தொண்டைமானாறு பகுதியில் இன்று காலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.\nதொண்டைமானாறு கடற்கரை வீதியில் வசிக்கும் முல்லைத்தீவைச் சேர்ந்த 35 வயதான அன்ரன் ஜோர்ஜ் என்கிற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.\nகிணற்றடிக்குச் சென்ற அவர் மயங்கி விழுந்த நிலையில் காணப்பட்டுள்ளார். அவரை உடனடியாக மந்திகை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற போதும் அவர் உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசடலம் மந்திகை வைத்தியசாலையில் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.\nவணிகம் / பொருளாதாரம் (7)\nமாநகர காவல்படையினரின் சீருடை பறிமுதல் - மாநகரசபைக்கு ஆப்பு வைத்த பொலீஸார் ..\nBREAKING NEWS :- ஊரடங்கு தொடர்பில் இராணுவத் தளபதி சற்றுமுன் வெளியிட்ட அறிவிப்பு\nஅத்தியாவசிய சேவைக்கு மாத்திரமே அனுமதி\nYarl Express: கிணற்றடியில் முகம் கழுவச் சென்றவர் மயங்கி விழுந்து சாவு - யாழில் துயரம்.\nகிணற்றடியில் முகம் கழுவச் சென்றவர் மயங்கி விழுந்து சாவு - யாழில் துயரம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://4varinote.wordpress.com/2013/03/21/110/", "date_download": "2021-05-07T01:38:31Z", "digest": "sha1:EUGG3K6YPRFOAYLN5YQ326GI6WLVZBH7", "length": 17449, "nlines": 497, "source_domain": "4varinote.wordpress.com", "title": "காந்தன் | நாலு வரி நோட்டு", "raw_content": "\nநச்ன்னு நாலு வரி, நாள்தோறும்\nஎன். சொக்கன் இணையத் தளம்\nஉங்களின் வலைத்தளம் இன்றைய வலைச்சரத்தில் சிறப்பு பெற்றிருக்கிறது நேரம் இருக்கும்போது…\nவிருந்தினர் பதிவு : குழந்தைப் பாடல்கள்\nஜெயகாந்தன் – எழுத்திலும் பேச்சிலும் எப்போதும் இருக்கும் தெளிவும் வீச்சும் ஒரு வசீகரிக்கும் கம்பீரம். இவர் கதைகள் திரைப்படமாக்கப்பட்டபோது அவரே திரைக்கதை வசனம் மற்றும் பாடல்களையும் எழுதினார். உரைநடை போல அமைந்த பாடல் வரிகள் இவர் ஸ்டைல்\nஎந்த முடிவும் எடுக்க முடியாமல் நிற்கும் ஒரு பெண் பழைய நினைவுகளை அசைபோடும் நிலை பற்றி இவர் எழுதிய ஒரு பாடல். சில நேரங்களில் சில மனிதர்கள் என்ற படத்தில் MSV இசையில் வாணி ஜெயராம் பாடும் பாடல். https://www.youtube.com/watch\nஒரு உண்மை சம்பவத்தை வைத்து அக்கினிப் பிரவேசம் என்று சிறுகதை எழுதினார். அது பரபரப்பாக பேசப்பட்டது . அவரே அதை மையமாக வைத்து சில நேரங்களில் சில மனிதர்கள் என்று ஒரு நாவலாக எழுதினார் . அதில் ‘சிறுகதை ஆசிரியரை’ ஒரு கதைப் பாத்திரமாக உலவவிட்டார் .சிறுகதை அதை சுற்றி ஒரு நாவல் அதற்கு ஒரு திரைக்கதை பின் இதன் Sequel ஆக கங்கை எங்கே போகிறாள் என்று ஒரு நாவல் – இப்படி இந்த களம், கதைமாந்தர்களுடன் ஒரு நெடுநாள் உறவுடன் இருந்த ஒரு படைப்பாளி பாடலையும் கதையின் தொடர்ச்சியாக பார்த்ததில் வியப்பில்லை.\nஇந்த வேதனையில் இருந்து மீள்வாளோ\nநூறு முறை இவள் புறப்பட்டாள்\nவிதி நூலிழையில் இவள் அகப்பட்டாள்\nமழை என்றால் செழிப்பு ஆனால் இவள் என்ன சொல்கிறாள்\nபருவ மழை பொழிய பொழிய\nஇவள் பருவ மழையாலே வாழ்க்கை\nமழை பெய்ததானால் பாலைவனமான அவள் வாழ்வு பற்றி வலியுடன் சொல்லும் வார்த்தைகள் இது கதையின் முக்கிய நிகழ்வான அந்த மழை நாளைப்பற்றி தெளிவான வரிகள். ‘இவள் பருவ மழை’ என்னும் நயம்\nதொடர்ந்து ஒரு Introspection – எதனால் இந்த தனிமரம் போன்ற நிலை என்று யோசிக்கிறாள்\nசிறு வயதில் செய்த பிழை\nதிரைப்படம் இந்த பாடலுடன் முடிவடையும் (அந்த நாட்களில் படத்தின் இறுதியில் வரும் ஒரு இசையை MSV இந்தப்பாடலின் இறுதியில் சேர்த்திருப்பார் கவனியுங்கள் )\nகடைசியில் Inception படத்தில் வரும் Totem போல சில வரிகள்\nஒரு மழை நாளில் நடந்த நிகழ்வு, தனிமரமான கதை , அவள் சிறு வயதில் செய்த பிழை, என்று எல்லாம் சொல்லி சட்டென்று ‘இவள் மறுபடியும் உயிர்ப்பாளோ மலரெனவே முகிழ்ப்பாளோ’ என்று ஒரு நன்னம்பிக்கை முனையை விவரித்து கதையை தொடர ஒரு lead கொடுக்கும் திறமை….\nசூப்பர் ஸ்டாருக்கு வைரமுத்து எழுதிய ‘பேருக்குள்ளே காந்தம் உண்டு உண்மைதானடா’ என்ற வரிகள் இவருக்கும் பொருத்தமாகவே இருக்கும்.\nஇந்தப் பாடல் ஒரு சூப்பர் காம்போ இசை, பாடகர், பாடல் வரி, அனைத்தும் சொல்ல வந்த சிசுவேஷனுக்குக் கன கச்சிதமாகப் பொருந்தும். அது தான் ஒரு பாடலின் முழு வெற்றி. பாட்டு தனித்து இனிமையாக இருந்து பாடல் வரிகள் குப்பையாக இருந்தாலோ அல்லது பாடல் முழுதும் நன்றாகவே இருந்து காட்சி அமைப்பு சொதப்பலாக இருந்தாலோ பயனில்லை. இந்தப் பாடலுக்கு வாணி ஜெயராம் குரல் ஒரு asset இசை, பாடகர், பாடல் வரி, அனைத்தும் சொல்ல வந்த சிசுவேஷனுக்குக��� கன கச்சிதமாகப் பொருந்தும். அது தான் ஒரு பாடலின் முழு வெற்றி. பாட்டு தனித்து இனிமையாக இருந்து பாடல் வரிகள் குப்பையாக இருந்தாலோ அல்லது பாடல் முழுதும் நன்றாகவே இருந்து காட்சி அமைப்பு சொதப்பலாக இருந்தாலோ பயனில்லை. இந்தப் பாடலுக்கு வாணி ஜெயராம் குரல் ஒரு asset பாடல் வரிகள் கதாசிரியர் எழுதியதால் முழுக் கதையவே பாடல் சொல்லிவிடுகிறது.\n//பருவ மழை பொழிய பொழிய\nஇவள் பருவ மழையாலே வாழ்க்கை\nஇவள் வாழ்வை தொலைத்தது ஒரு மழை மாலையில் தான் என்று நினைக்கிறேன்.\n//சிறு வயதில் செய்த பிழை\nஅந்த காலத்தில் இந்த மாதிரி தவறுகள் எல்லாம் பெரிய தவறு. பிறந்த குலமும் அப்படி. இப்பொழுது இது எல்லாம் ஒரு பொருட்டே இல்லை.\nமேலே குறித்த 3 கதைகளையும் பல வருடங்களுக்கு முன்பு படித்தேன். Believed to be based on a true story.படம் பார்த்தது உங்கள் பதிவுக்கு பின்னர்- big thanks to You tube.\nஇதே வகையில் மற்றொரு படம் நினைவுக்கு வருகிறது – சிறை – அதுவும் லக்ஷ்மி நடித்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://anbudanseasons.blogspot.com/", "date_download": "2021-05-07T00:42:41Z", "digest": "sha1:UCGK6F2AJCKINT7EXHP2FDJLQN7N7GOD", "length": 8010, "nlines": 168, "source_domain": "anbudanseasons.blogspot.com", "title": "anbudanseasons அன்புடன் சீசன்ஸ்", "raw_content": "\nஅன்சர் அலிக்கு பேராசிரியர் பாராட்டு\n#மிஹ்ஹ்ராஜ்_அதிசயம் .../ Abu Haashima\nமிஹ்ராஜ் என்றால் உயருதல் என்று பொருள்.\nஇஸ்லாத்திற்காக ஏராளமான இன்னல்களை அனுபவித்து வந்த அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்\nஅதுவரை அன்பு காட்டி ஆதரித்து வந்த பெரிய தந்தை அபூதாலிப் அவர்கள் இறந்து விட்டார்கள்.\nஅவர்கள் இறந்த சில நாட்களிலேயே கண்ணின் மணியாய் தங்கள் காதல் மணாளராய் திகழ்ந்த கண்மணி நாயகத்தை கண்ணின் இமைபோல் காத்துவந்த நம் அன்னை கதீஜா நாயகியார் அவர்களும் இறைவனளவில் சேர்ந்து விட்டார்கள்.\nதங்கள் பாசத்துக்கு உரிய உறவுகளைப் பிரிந்து பரிதவிக்கும் பரிதாப நிலை ஒருபுறம் .\nதங்களை கொலை செய்வதற்கே நாள் பார்த்துக் கொண்டிருக்கும் குறைஷியரின் கொடூர நிலை மறுபுறம் .\nஅல்லாஹ்விடமே தங்கள் மன வேதனைகளை கொட்டி வழி காட்ட வேண்டிக் கொண்டிருந்தார்கள் நபிகள் .\nஅருளாளன் அல்லாஹ் நபிகளாரின் வேண்டுதலை ஏற்றுக் கொண்டான். அவன் தன் அருட் கொடைகளால் தன் ஹபீபை ஆற்றுப் படுத்தினான்.\nசேவை இறைவனது அருள்பெற இருக்க வேண்டும்\nசென்றமுறை சிறப்பாக சேவை செய்தார் என்பதனை மறைக்கவோ மறுக்கவோ முடியாது\nஇம்முறை அதற்கு தான் விரும்பியபடி தனக்கு இடம் கிடைக்கவில்லை என்பதால்\nதவறான பாதையை கைக் கொண்டால் அவர் செய்த சேவைகள் அனைத்தும் பயனற்று போகும்\nமக்கள் அவரை கொள்கையட்றவர் சுயநலவாதி என்று வெறுக்க ஆரம்பித்து விடுவார்\nகாலம்வருவரை காத்திருந்து செயல்படலாம் .சேவை இறைவனது அருள்பெற இருக்க வேண்டும்\nசேவை செய்ய ஆட்சியில் இருந்துதான் செய்ய வேண்டுமென்பது ஏற்க முடியாது\nஇக்கால நிலையில் ஆட்சிக்கு வர விரும்புவரின் மனம் புகழுக்கும் பணத்திற்கும் விருப்பமுடையவர்களாகவே தோன்றுகின்றது\nஅன்சாரிகள் விருந்தாளிகளை நேசிப்பவர்கள் .கொள்கைக்கு முக்கியத்துவம் தந்தவர்கள் .கொள்கைப்பிடிப்புடன் தாங்கள் விரும்பிய உயர் தலைவருக்கு தங்கள் உயிரையும் கொடுக்க தயாராக இருந்தவர்கள்\nNIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்\nseasonsnidur - சீசன்ஸ் நீடூர்\nஅல்ஹாஜ் சி . ஈ. அப்துல் காதர் சாஹிப்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://reviews.dialforbooks.in/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2021-05-07T01:47:31Z", "digest": "sha1:FQAUT5NEYDOTJAKZG5VJ3ZPROIDGV37V", "length": 10409, "nlines": 211, "source_domain": "reviews.dialforbooks.in", "title": "தமிழ் குழந்தை இலக்கியம் விவாதங்களும் விமர்சனங்களும் – Dial for Books : Reviews", "raw_content": "\nதமிழ் குழந்தை இலக்கியம் விவாதங்களும் விமர்சனங்களும்\nதமிழ் குழந்தை இலக்கியம் விவாதங்களும் விமர்சனங்களும், சுகுமாரன், தாமரை பப்ளிகேஷன்ஸ், பக். 134, விலை 115ரூ.\nசிறுவர் இதழ்கள் எங்கே போயின மகாகவி பாரதியாருக்கு, ஒருநாள் அசா தாரணமான சூழ்நிலை ஏற்பட்டது. மனைவி செல்லம்மா வெளியில் போய்விட்டார். குழந்தையைப் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு பாரதியாருக்கு. குழந்தையிடம், பாட்டுப் பாடட்டுமா என்று கேட்கிறார். இப்போது பாடக் கூடாது. தூங்கும்போதுதான் பாட வேண்டும் என்று குழந்தை அவருக்குச் சொல்கிறது. குழந்தையின் உலகத்தை விளக்கும் பதிவு இது. குழந்தைக்fகுப் பாட்டு எழுதும்போது, குழந்தையின் நிலையில் இருந்து துவங்கவேண்டும். வாள் வீசும் வல்லபங்களுக்கு அங்கே இடமில்லை. குழந்தையின் பாஷையிலேயே தொடர வேண்டும். குழந்தையின் ஆச்சரியத்தோடு அல்லது கேள்வியோடு நிறைவு செய்ய வேண்டும். அப்போது தான் அது பூர்ணமான குழந்தை இலக்கியமாகும். பாப்பா ஒன்று எங்க வீட்டில் முழிச்சிருக்குது – அது படுத்துக்கிட்டே என்னைப் பார்த்துப் பார்த்துச் சிரிக்குது பாப்பா புதுப் பாப்பா – அதோ படுத்திருக்குது – ஆசு பத்திரிக்குப் போய் அம்மா தான் வாங்கி வந்தது என்று எழுதினார், கவிஞர் தமிழழகன். இது பாப்பாவுக்கான பாட்டு. கலப்படமில்லாதது. தமிழ் குழந்தை இலக்கியம் – விவாதங்களும் விமர்சனங்களும் என்ற நூலில், இது தொடர்பாகப் பல கோணங்களில் பார்வையை செலுத்தியிருக்கிறார் சுகுமாரன். பால விநோதினி, பாலர் முரசு, பாப்பா மலர், அணில், சங்கு, டமாரம், டிங் – டாங், கரும்பு, பார்வதி, அம்பி, முத்து, கண்ணன், சின்னக் கண்ணன், முயல், மயில், கிளி, பூஞ்சோலை, சிறுவர் உலகம், ஜில்ஜில், மத்தாப்பு, ரத்னபாலா, பூந்தளிர், தமிழ்ச் சிட்டு, அம்புலி மாமா, கோகுலம் போன்ற சிறுவர் இதழ்கள், பத்தாண்டுகளுக்கு முன் இருந்தன என்கிறார் அவர். (பக். 3). ஆனால் இப்போது மகாகவி பாரதியாருக்கு, ஒருநாள் அசா தாரணமான சூழ்நிலை ஏற்பட்டது. மனைவி செல்லம்மா வெளியில் போய்விட்டார். குழந்தையைப் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு பாரதியாருக்கு. குழந்தையிடம், பாட்டுப் பாடட்டுமா என்று கேட்கிறார். இப்போது பாடக் கூடாது. தூங்கும்போதுதான் பாட வேண்டும் என்று குழந்தை அவருக்குச் சொல்கிறது. குழந்தையின் உலகத்தை விளக்கும் பதிவு இது. குழந்தைக்fகுப் பாட்டு எழுதும்போது, குழந்தையின் நிலையில் இருந்து துவங்கவேண்டும். வாள் வீசும் வல்லபங்களுக்கு அங்கே இடமில்லை. குழந்தையின் பாஷையிலேயே தொடர வேண்டும். குழந்தையின் ஆச்சரியத்தோடு அல்லது கேள்வியோடு நிறைவு செய்ய வேண்டும். அப்போது தான் அது பூர்ணமான குழந்தை இலக்கியமாகும். பாப்பா ஒன்று எங்க வீட்டில் முழிச்சிருக்குது – அது படுத்துக்கிட்டே என்னைப் பார்த்துப் பார்த்துச் சிரிக்குது பாப்பா புதுப் பாப்பா – அதோ படுத்திருக்குது – ஆசு பத்திரிக்குப் போய் அம்மா தான் வாங்கி வந்தது என்று எழுதினார், கவிஞர் தமிழழகன். இது பாப்பாவுக்கான பாட்டு. கலப்படமில்லாதது. தமிழ் குழந்தை இலக்கியம் – விவாதங்களும் விமர்சனங்களும் என்ற நூலில், இது தொடர்பாகப் பல கோணங்களில் பார்வையை செலுத்தியிருக்கிறார் சுகுமாரன். பால விநோதினி, பாலர் முரசு, பாப்பா மலர், அணில், சங்கு, டமாரம், டிங் – டாங், கரும்பு, பார்வதி, அம்பி, முத்து, கண்ணன், சின்னக் கண்ணன், முயல், மயில், கிளி, பூஞ்சோலை, சிறுவர் உலகம், ஜில்ஜில், மத்தாப்பு, ரத்னபாலா, பூந்தளிர், தமிழ்ச் சிட்டு, அம்புலி மாமா, கோகுலம் போன்ற சிறுவர் இதழ்கள், பத்தாண்டுகளுக்கு முன் இருந்தன என்கிறார் அவர். (பக். 3). ஆனால் இப்போது குழந்தைகளின் கவனம் எங்கே இருக்கிறது குழந்தைகளின் கவனம் எங்கே இருக்கிறது சூப்பர் சிங்கர் பாட்டுப் போட்டிகளால், சினிமா பாடல்களைத்தான் குழந்தைகள் பாடுகின்றனர். பாடல்களுக்கு இடையே வரும் முக்கல், முனகல் ஒலியையும் சேர்த்து, யார் நன்றாக முனகுகின்றனர் என்பதைப் பொறுத்து, அதிக மதிப்பெண்கள் என்கிறார் நூலாசிரியர் (பக். 10). கற்பித்தலில் குழந்தை இலக்கியம், குழந்தை இலக்கியத்தில், வாழ்க்கை வரலாறு, குழந்தைகளும் நாடகமும் என்றெல்லாம் விரிவாக எழுதியுள்ளார். அவசியமான நூல் இது. -சுப்பு. நன்றி: தினமலர், 25/10/2015.\nசிறுகதைகள்\tசுகுமாரன், தமிழ் குழந்தை இலக்கியம் விவாதங்களும் விமர்சனங்களும், தாமரை பப்ளிகேஷன்ஸ், தினமலர்\n« சினிமாவுக்கு வந்த சின்ன வாத்தியார்\nஷீரடி பாபாவின் சீரடி பணிவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/health-lifestyle/aromatic-oils-that-boost-immunity/", "date_download": "2021-05-07T00:30:19Z", "digest": "sha1:ZCOMVT4LPHZK6CLL7XXNKDNGECKUWWXI", "length": 13847, "nlines": 135, "source_domain": "tamil.krishijagran.com", "title": "நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வாசனை எண்ணெய்கள்!", "raw_content": "செய்திகள் வாழ்வும் நலமும் தோட்டக்கலை கால்நடை வெற்றிக் கதைகள் விவசாய தகவல்கள் FTB அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா Directory\n#FTB விவசாய தகவல்கள் அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா\nஎங்கள் அச்சு மற்றும் டிஜிட்டல் பத்திரிகைகளுக்கு குழுசேரவும்\nசமூக ஊடகங்களில் எங்களுடன் இணைக்கவும்:\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வாசனை எண்ணெய்கள்\nதுாசு, மாசு என்று கணக்கில் அடங்காத அசுத்தங்களை, தினசரி நாம் எதிர்நோக்க வேண்டியுள்ளது. அதோடு, அன்றாட அலுவல்களில் ஏற்படும் மன அழுத்தம் (Stress) வேறு. இதில், சிலவற்றை நாம் கட்டுப்படுத்தலாம்; சிலவற்றை கட்டுப்படுத்த இயலாது. வெளிக் காரணிகள் அல்லது மன அழுத்தம் என எதுவானாலும், அவற்றின் இலக்கு நம் எதிர்ப்பு சக்தியை குறைப்பது தான். கட்டுப்படுத்த முடியாத விஷயங்களால், நம் எதிர்ப்பு சக்தி (Immunity) பாதிப்படையும் போது, யோகா மற்றும் இயற்கை மருத்துவம் சொல்லும் தீர்வுகளில் ஒன்று தான், அத்தியாவசிய வாசனை எண்ணெய்களை பயன்படுத்துவது.\nகுளிக்கும் போது, நீரில் சில சொட்டுகள் விட்டு குளிக்கலாம். துாங்கும் நேரத்தில், படுக்கையில் சில துளிகள் தெளித்துக் கொள்ளலாம்; ஆழ்ந்த துாக்கம் வரும். இதன் வாசனையை நுகர்ந்தாலே கூட போதும்; மன அழுத்தம் குறைந்து, அமைதியான மனநிலை வரும்.\nசுவாசப் பிரச்னை ஏற்படாமல் பாதுகாக்கும். கொதிக்கும் நீரில் சில துளிகள் போட்டு ஆவி பிடித்தால், மூளை, நுரையீரலுக்கு சென்று, எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தலாம்.\nநல்ல வாசனையுடன் இருக்கும் எண்ணெய் இது. குழந்தைகளை பாதிக்கும் கொக்கி புழு தொற்றால், சரும நோய்கள், தலைவலி, செரிமான கோளாறு ஏற்படும், இதை உடலில் தேய்த்து குளிக்கும் போது, தொற்றுகள் நீங்கும். சளி, இருமல், காய்ச்சல் அதிகம் பரவும் காலங்களில், இது மிகுந்த பலனைத் தரும்.\nபல அறிவியல் ஆய்வுகளில், கல்லீரலை (Liver) பாதுகாக்க உதவுகிறது என்று சொல்லப்படுகிறது. நேரடியாக தோலில் இதை உபயோகிப்பதை தவிர்த்து, ஆவி பிடிக்கலாம். சளித் தொல்லை இருந்தால், 50 மில்லி நல்லெண்ணெயில், இரண்டு சொட்டு விட்டு கலந்து, முதுகு, விலா எலும்புகளுக்கு இடையில் தேய்த்தால், சளியை வெளியேற்ற உதவும்.\nசுவாசப் பாதையில் கிருமிகள், துாசு (Dust) என்று எது இருந்தாலும், அதை வெளியேற்றும் தன்மை இதில் உண்டு. குழந்தைகளுக்கு இதை பயன்படுத்தும் போது, மருத்துவரின் கண்காணிப்பில் பயன்படுத்த வேண்டும்.\nஅரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவமனை\nமாடித் தோட்டம் குறித்து விழிப்புணர்வு வீடியோ பிரபல பின்னணி பாடகர் புஷ்பவனம் குப்புசாமி அசத்தல்\nசெவ்வாழையின் அற்புதப் பலன்களை எடுத்துரைக்கும் சித்த மருத்துவர்\nஅன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.\nஉங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....\nபங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)\nவாசனை எண்ணெய்கள் நோய் எதிர்ப்பு சக்தி Immunity Aromatic oils இயற்கை மருத்துவம் யோகா\nதயிருடன் இவற்றைச் சேர்க்கவே கூடாது- சேர்த்தால் விளைவுகள் விபரீதம்\nகொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, முழு ஊரடங்கை அமல்படுத்த உச்ச நீதிமன்றம் பரிந்துரை\nகொப்பரை உற்பத்தி செய்ய நவீன இயந்திரம்: விவசாயிகள் மகிழ்ச்சி\n செய்ய வேண்டியவையும், செய்யக் கூடாதவையும்\nவிளைநிலங்களில் வீணாகும் தர்பூசணி பழங்கள்\nபூச்சிகளைப் புரிந்து கொள்(ல்)வோம்- காணொளி மூலம் பயிற்சி\nரூ.4000 கொரோனா நிவாரண நிதிவழங்கும் திட்டம் - நாளை ஸ்டாலின் முதல் கையெழுத்து\nவாடிக்கையாளர்களுக்கு புதியவகை டிசைனர் சிலிண்டரை அறிமுகம் செய்த IOCL\nஒரே நிமிடத்தில் cowin.gov.in தளத்தில் கொரோனா தடுப்பூசி பதிவு செய்வது எப்படி\nபருத்தியைத் தாக்கும் மாவுப்பூச்சிகளை எப்படி கட்டுப்படுத்தலாம்\nகொரோனாவைத் தடுக்கும் முயற்சியில், புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்\nஒன்றல்ல, இரண்டல்ல, ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள்\nதொற்றுநோய்களைத் தடுக்கும் ஊட்டச்சத்து அணுகுண்டு எது தெரியுமா\nமாடித்தோட்டத்திற்கு ஏற்ற மண் கலவை வகைகள் எவை\nவிவசாயிகள் நலன் கருதி சாகுபடி தொடர்பான சந்தேகம் ஏற்பட்டால் வேளாண் விஞ்ஞானிகளை அணுகலாம்: தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akattiyan.lk/2021/05/blog-post_49.html", "date_download": "2021-05-07T01:35:39Z", "digest": "sha1:2N63WDRI7XOV62Q52LHHX7W5FTV77KX5", "length": 7652, "nlines": 71, "source_domain": "www.akattiyan.lk", "title": "கொட்டகலை கொமர்ஷல் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலத்த காயம் - அகத்தியன் | Online", "raw_content": "\nHome மலையகம் கொட்டகலை கொமர்ஷல் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலத்த காயம்\nகொட்டகலை கொமர்ஷல் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலத்த காயம்\nநுவரெலியா – அட்டன் பிரதான வீதியில் நேற்று (1) இரவு கொட்டகலை கொமர்ஷல் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.\nமுச்சக்கரவண்டியில் பயணித்த ஒரே குடும்பத்தில் தாய், தந்தை மற்றும் மகன் ஆகியோரே இவ்வாறு காயமடைந்து சிகிச்சைக்காக டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனு��திக்கப்பட்டுள்ளனர்.\nதலவாக்கலை பகுதியிலிருந்து அட்டன் நோக்கி சென்ற வேன் ஒன்று, கொட்டகலை பகுதியிலிருந்து கொமர்ஷல் பகுதியை நோக்கி சென்ற முச்சக்கரவண்டியுடன் பின்புறத்தில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.\nவேன், முச்சக்கரவண்டியுடன் மோதிய பின், முச்சக்கரவண்டி வீதியை விட்டு விலகி அருகில் இருந்த கற்பாறையுடன் மோதி பலத்த சேதத்திற்குள்ளாகியுள்ளது.\nவேன் சாரதி திம்புள்ள பத்தனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.\nஇவ்விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nகொட்டகலை கொமர்ஷல் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலத்த காயம் Reviewed by Chief Editor on 5/02/2021 09:18:00 am Rating: 5\nபாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் மேலதிக வகுப்புகளுக்கு மறு அறிவித்தல் வரை விடுமுறை\nபாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் மேலதிக வகுப்புகளுக்கு மறு அறிவித்தல் வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், நோன்பு பெருநாள், வெசாக் ...\nகொரோனா பரவல் காரணமாக நாட்டின் பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள விடுமுறையானது மேலும் ஒரு வார காலத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ...\nமோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nவாகன போக்குவரத்து திணைக்களத்தின் நாரஹென்பிட்டி மற்றும் வேரஹெர அலுவலகங்கள் ஒரு வாரத்திற்கு மூடப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம த...\nDReAM என அறிமுகப்படுத்தப்பட்டுள்ள முற்பாதுகாப்பு விதிமுறைகளுக்கமைய மதுபான சாலைகளை திறந்து வைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. D – சமூக இடை...\nமுழு அதிகாரம் : அகத்தியன் ஊடக சேவை 2020\nஆசிரியர் பீட தெடர்புகளுக்கு 0779516119\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2021/may/03/%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AF%82%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-3616332.html", "date_download": "2021-05-06T23:57:21Z", "digest": "sha1:ADXZB7H5DLSEWU2RXLLIKUA67UWM24YH", "length": 14180, "nlines": 152, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கீழ்வேளூா் தொகுதியில் இரண���டாவது முறையாக மாா்க்சிஸ்ட் வெற்றி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n06 மே 2021 வியாழக்கிழமை 06:33:21 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்\nகீழ்வேளூா் தொகுதியில் இரண்டாவது முறையாக மாா்க்சிஸ்ட் வெற்றி\nகீழ்வேளூா் (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2ஆவது முறையாக வென்றுள்ளது.\nநாகை மாவட்டம், கீழ்வேளூா் (தனி) சட்டப்பேரவைத் தொகுதி நாகை மாவட்டத்தில் தொகுதிகள் மறுவரையறையின் போது உருவாக்கப்பட்ட தொகுதி. இது, மாவட்டத்தில் மிகக் குறைந்த வாக்காளா்களைக் கொண்ட தொகுதியும் ஆகும்.\n2011-ஆம் ஆண்டில் இத்தொகுதிக்கு நடைபெற்ற முதல் சட்டப்பேரவைத் தோ்தலில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்று, இத்தொகுதியின் தோ்தல் வெற்றிக் கணக்கை தொடங்கியது. அடுத்து 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக வென்றது.\nஇந்நிலையில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை மாவட்டச் செயலாளரும், இத்தொகுதியின் முன்னாள் எம்எல்ஏவுமான வி.பி. நாகை மாலி, கீழ்வேளூா் தொகுதியில் திமுக கூட்டணியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக போட்டியிட்டாா். அதிமுக கூட்டணியில் பாமக வேட்பாளராக எஸ். வடிவேல் ராவணன் போட்டியிட்டாா்.\nஇவா்களைத் தவிர, நாம் தமிழா் கட்சி வேட்பாளராக எஸ். பொன் இளவழகி, மக்கள் நீதி மய்ய வேட்பாளராக டாக்டா் ஜி. சித்து, அமமுக வேட்பாளராக எம். நீதிமோகன் ஆகியோா் உள்பட 10 வேட்பாளா்கள் இங்கு களம் கண்டனா். இதில், மாா்க்சிஸ்ட் மற்றும் பாமக வேட்பாளா்களிடையே நேரடி போட்டி நிலவியது.\nஇத்தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா்\nவி.பி. நாகை மாலி முன்னிலை பெற்றாா். முதல் சுற்றில் 4,060 வாக்குகள் பெற்ற அவா், பாமக வேட்பாளரைவிட 758 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை பெற்றாா். இதேபோல, அடுத்தடுத்து வந்த அனைத்துச் சுற்றுகளிலும் நாகை மாலி முன்னிலை வகித்தாா்.\nநிறைவாக 18 சுற்றின் முடிவில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் வி.பி. நாகை மாலி 67,988 வாக்குகள் பெற்று 16,985 வாக்குகள் வித்தியாசத்தில் வ��ற்றி பெற்றாா். பாமக வேட்பாளா் வடிவேல் ராவணன் 51,003 வாக்குகள் பெற்றாா்.\nநாம் தமிழா் கட்சியின் வேட்பாளா் எஸ். பொன் இளவழகி 15, 173 வாக்குகள் பெற்று மூன்றாமிடம் பெற்றாா். மக்கள் நீதி மய்ய வேட்பாளா் டாக்டா் ஜி. சித்து 2,906 வாக்குகள் பெற்று நான்காம் இடத்தையும், அமமுக வேட்பாளா் எம். நீதிமோகன் 2,503 வாக்குகள் பெற்று 5 ஆம் இடத்தையும் பெற்றனா்.\nஇத்தொகுதியில் நோட்டாவுக்கு 896 வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்த எண்ணிக்கை, பகுஜன் சமாஜ் கட்சி, புதிய தமிழகம் மற்றும் சுயேச்சை வேட்பாளா்கள் பெற்ற வாக்குகளைவிட அதிகம்.\nகீழ்வேளூா் (தனி) தொகுதியில் மொத்தம் 1,449 தபால் வாக்குகள் பதிவாகின. இதில், அதிகபட்சமாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் வி.பி. நாகை மாலி 700 வாக்குகளைப் பெற்றாா். இவருக்கு அடுத்த நிலையில், பாமக வேட்பாளா் எஸ். வடிவேல் ராவணன் 249 வாக்குகள் பெற்றாா். பதிவான மொத்த வாக்குகளில் 378 வாக்குகள் நிராகரிக்கப்பட்டன.\nகீழ்வேளூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக வெற்றி பெற்ற்கான வெற்றிச் சான்றை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் வி.பி. நாகை மாலியிடம் நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா், தோ்தல் பொதுப் பாா்வையாளா் திலீப்பந்தா்பட், மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் சித்ரகலா ஆகியோா் வழங்கினா்.\nகளைகட்டிய அண்ணா அறிவாலயம் - படங்கள்\nஆக்ஸிஜன் செறிவூட்டிகளுடன் இந்தியாவுக்கு வந்த விமானங்கள் - படங்கள்\nதிமுக தொண்டர்கள் கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nஸ்ரீ குரு தேக் பகதூரின் 400-வது பிறந்தநாள் - படங்கள்\nஅண்ணாத்த படப்பிடிப்புக்காக ஹைதராபாத் சென்ற நயன்தாரா - படங்கள்\nகும்பமேளா: கங்கையில் புனித நீராடிய பக்தர்கள் - படங்கள்\nசித்த மருத்துவத்தில் கரோனாவுக்குச் சிறந்த தடுப்பு மருந்து\nகரோனாவை தடுக்க சித்த மருத்துவம் தரும் டிப்ஸ்..\nரெம்டெசிவிா் மருந்து தேவைப்படுவோர் கவனிக்க..\nகரோனா தடுப்பூசிக்கு முன்பதிவு செய்வோர் கவனிக்க..\n'விடுதலை' படத்தின் டிரெய்லர் வெளியீடு\nதயுவு செய்து இதைச் செய்யாதீர்கள்..\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mybhaaratham.com/2019/01/", "date_download": "2021-05-07T01:28:02Z", "digest": "sha1:GTCH2TG6W6MSP37IOI3ZFMZFEKSAG5IV", "length": 100655, "nlines": 465, "source_domain": "www.mybhaaratham.com", "title": "Bhaaratham Online Media: January 2019", "raw_content": "\nவிவேகானந்தா தமிழ்ப்பள்ளி நிலத்தை உரிமையாக்கிக் கொள்வதா\nபெட்டாலிங் ஜெயா விவேகானந்தா தமிழ்ப்பள்ளி அமைந்துள்ள நிலத்தை தமது பெயரில் மாற்றிக் கொண்ட கோலாலம்பூர் விவேகானந்தா ஆசிரமத்திற்கு எதிராக பள்ளி வாரியக்குழு நீதிமன்ற வழக்கை தொடுத்துள்ளது.\nகடந்த 50 ஆண்டுகளாக (1959-209) பள்ளியின் மூன்று ஏக்கர் நிலம் பள்ளி பெயரிலேயே இருந்துள்ளது. ஆயினும் பள்ளி நில ஒப்பந்தம் காலாவதி ஆனதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் பள்ளியின் நிலம் விவேகானந்தா ஆசிரமத்தின் பெயரில் மாற்றப்பட்டுள்ளது என்று பள்ளி வாரியக்குழுத் தலைவர் டாக்டர் செல்வம் செல்லப்பன் தெரிவித்தார்.\nபள்ளி வாரியக்குழு 2016ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட போதிலும் இந்த நில ஒப்பந்த மாற்றம் 2012ஆம் ஆண்டில் நடந்துள்ளது. கோலாலம்பூர் விவேகானந்தா ஆசிரமம், பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் மூன்று முன்னாள் செயலவை உறுப்பினர்கள் ஆகியோர் கையொப்பமிட்டு இந்த பரிமாற்றம் நடைபெற்றது.\nபள்ளியில் நான்கு மாடி கட்டட மேம்பாடு துரிதப்படுத்துவதற்காக இந்த பரிமாற்றம் செய்யப்பட்டது என தரவுகள் இருந்தபோதிலும் எந்தவொரு கட்டட மேம்பாடு வேலைகளையும் விவேகானந்தா ஆசிரமம் மேற்கொள்ளவில்லை.\nஅதோடு, கடந்த 2012இல் கல்வி அமைச்சு 6 மில்லியன் வெள்ளியை மூன்று பள்ளிகளுக்கு (பெட்டாலிங் ஜெயா விவேகானந்தா தமிழ்ப்பள்ளி, கோலாலம்பூர் விவேகானந்தா தமிழ்ப்பள்ளி, விவேகானந்தா இடைநிலைப்பள்ளி) ஆகியவற்றை வழங்கியதை வாரியக்குழு அறிந்துள்ளது.\n1 வெள்ளி கட்டணத்தில் நடைபெற்றுள்ள நில பரிமாற்றம் முறையாக நடைபெறவில்லை என குறிப்பிட்ட அவர், பள்ளியின் நிலம் பள்ளிக்கே உரிமையாக்கப்பட வேண்டும். அதை ஒருபோதும் பிறர் உரிமை கொண்டாடக்கூடாது என்பதில் பள்ளி வாரியம் உறுதியாக உள்ளது.\n2012இல் பள்ளியின் மேம்பாட்டிற்காக வழங்கப்பட்ட 6 மில்லியனிலுள்ள பகுதியை கோலாலம்பூர் விவேகானந்தா ஆசிரமம் பள்ளிக்கே கொடுக்க வேண்டும் என இந்த வழக்கில் கோரப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.\nகோலாலம்பூர் விவேகானந்தா ஆசிரமம், பெற்றோர் ஆசிரியர் சங்க மூன்று செயலவை உறுப்பினர்கள், சிலாங்கூர் மாநில நில உரிம பதிவு இலாகா ஆகிய 5 எதிர்தரப்பு வாதங்களுடன் இந்த நீதிமன்ற வழக்கு நடைபெறவுள்ளது.\nமேலு��், இவ்வழக்கில் பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கமும் உடன் வழக்கு தொடுத்தவராக 12.2.2019இல் பள்ளி வாரியத்துடன் அனுமதி கோரியுள்ளனர் என்று செல்வம் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.\nஇந்த செய்தியாளர் சந்திப்பில் வாரியக்குழு துணைத் தலைவர் ஆர்.ஜெகா, பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் என்.ராஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nபத்துமலை தைப்பூசம்: 16 லட்சம் பக்தர்கள் திரள்வர்\nநாளை மிக விமரிசையாக கொண்டாடப்படும் தைப்பூச விழாவை முன்னிட்டு பத்துமலை திருத்தலத்தில் 16 லட்சம் பக்தர்கள் கூடுவர் என அறியப்படுகிறது.\nமுருகப் பெருமானுக்கு நேர்த்திக் கடன் செலுத்த பக்தர் பத்துமலை திருத்தலத்தை நோக்கி படையெடுத்துளளனர்.\nபத்துமலை திருத்தலம் உள்ளூர் மக்களை மட்டுமல்லாது வெளிநாட்டு மக்களையும் வெகுவாக கவர்ந்துள்ளதால் இவ்வாண்டு பத்துமலைக்கு வருகை புரியும் பக்தர்களினெ எண்ணிக்கை வெகுவாக அதிகரிக்கலாம் என்று நம்பப்படுகிறது.\n'பரமபதம்' விளையாடும் விக்னேஷ் பிரபு\nமலேசிய கலைத்துறையில் வளர்ந்து வரும் இயக்குனரான லெ.விக்னேஷ் பிரபுவின் இயக்கத்தில் உருவாகி வரும் 'பரமபதம்' திரைப்படம் இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்குறது.\nபாரம்பரிய விளையாட்டான 'பரமபதம்' விளையாட்டை மையப்படுத்தி 4 இளைஞர்களிடையே நடக்கும் போராட்ட உணர்வை மர்மமும் திகிலும் நிறைந்த சுவாரஸ்யமான கதைகளத்தோடு இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருவதாக விக்னேஷ் பிரபு கூறினார்.\nதனது முதல் படமான 'சாதுரியன்' திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து இரண்டாவது படமான 'சாதுரியனு'க்கு நிதியுதவி அளிக்க மலேசிய திரைப்பட வாரியம் இணக்கம் கண்டுள்ளது.\nகெடா மாநிலத்தில் உருவாகி தற்போது கோலாலம்பூரில் விறுவிறுப்பாக படப்பிடிப்புகள் நடந்து வருகின்றது. இவ்வாண்டு பிற்பகுதியில் திரையீடு காணவிருக்கும் இத்திரைப்படத்தில் நாட்டின் முன்னணி கலைஞர்களான கே.எஸ்.மணியம், அகோந்திரன், உமாகாந்தன் உட்பட பல புதுமுக கலைஞர்களும் நடிக்கின்றனர்.\nவின்கேஷ் பிரபுவுடன் இணைந்து அவரின் தம்பி தனேஷ் பிரபுவும் இப்படத்தின் இயக்குனராக பணியாற்றி வருகின்றார்.\nசாய் நந்தினி மூவி வேர்ல்டு, டிரீம்ஸ்கைம்ஹோம் புரொடக்‌ஷன் ஆகிய நிறுவனங்களின் இணையுடன் டாக்டர் லட்சபிரபு இத்திரை���்படத்தை தயாரிக்கிறார்.\nஇன்று பிறந்த நாளை கொண்டாடும் விக்னேஷ் பிரபுவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகளை 'பாரதம்' மின்னியல் ஊடகம் கூறிக் கொள்கிறது.\nசெருப்பை கழற்றி 'பேயை' அடிக்கும் ஆடவர்- வைரலாகும் காணொளி/ வீடியோ இணைப்பு\n'பேய்' போன்ற ஒரு மர்ம உருவத்தை செருப்பை கழற்றி ஒருவர் அடிக்க முயலும் காணொளி தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.\nகம்பாரிலுள்ள தாமான் சஹாயா, தாமான் செஜாத்ரா ஆகிய பகுதிகளில் இந்த மர்ம உருவம் பொதுமக்களுக்கு தொந்தரவு கொடுத்து வருவதாகவும் இது உண்மைச் சம்பவம் என்று இக்காணொளி குறித்து பேசியுள்ள ஆடவர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த மர்ம உருவம் வீட்டுக் கதவை தட்டுவதாகவும் அவ்வாறு தட்டும் போது கதவை திறக்கும் போது அந்த மர்ம உருவம் சம்பந்தப்பட்ட நபரின் உடலுக்குள் புகுந்து விடுவதாகவும் இதனால் மக்கள் யாரும் கதவை சட்டென்று திறக்க வேண்டாம் என்று அவ்வாடவர் குறிப்பிட்டுள்ளார்.\n.. எவ்வாறு இருந்தாலும் ஜாக்கிரதையாக இருப்போம்.\nதைப்பூச விழாவில் ஆலய வளாகத்தை குப்பை மேடாக்கலாமா 'பூச்சாண்டி' குழுவினரின் 'கசக்கு நசுக்கு' விழிப்புணர்வு காணொளி\nதைப்பூசத்தன்று இறைவனை நோக்கி ஒவ்வொரு அடியாக முன்னே வைக்கும் போது நம் உள்ளம் தூய்மையாகின்றது. அதேவேளையில் அந்த ஒவ்வொரு அடிக்குப் பின்னால் சிதறிக்கிடக்கும் குப்பைக் கூளங்கள் நம்மையும் நம் செயல்பாடுகளையும் விமர்சனத்திற்கு உள்ளாக்கிவிடுகிறதே என்ற கவலையும் பக்தியின் பக்கத்தில் கரும்புள்ளியாய் தொற்றிக்கொள்கிறது.\nபக்தர்களும், சுற்றுப் பயணிகளும் அதிகமாக ஒன்று கூடும் இந்தப் புனிதத் தளத்தில் நம்மால் தூய்மையான தைப்பூசத்தைக் கொண்டாட முடியும் என்கின்றனர் விரைவில் திரையரங்கில் நம்மைக் காண வரும் ' பூச்சாண்டி' படக் குழுவினர்.\nசமீபத்தில் சமூக ஊடகங்களில் பிரபலமாக பரவிக்கொண்டிருக்கும் 'கசக்கு நசுக்கு' எனும் 3 நிமிடங்கள் அடங்கிய விழிப்புணர்வு காணொளி, இந்த மலேசிய தமிழ் திரைப்படக் குழுவினரின் கூட்டு முயற்சியாகும். குப்பை மற்றும் நெகிழிப் பொருட்களால் ஏற்படும் விளைவுகளையும் அதனை களைவதற்கான சில எளிய வழிமுறைகளையும் எடுத்துரைக்கும் காணொளியாகவே இது உள்ளது. அகன்ற பார்வையும், கூர்ந்த சிந்தனையும் ஆழ்ந்த செயல்பாடும் முருகனின��� வேலை பிரதிபலிக்கின்றது. அவனை நோக்கி செல்லும் நமது செயல்பாடுகளும் அதுவாகவே இருக்க வேண்டும். நம்முடைய செயலே நாம் யார் என்பதை காட்டுகிறது.\nதூய்மை பற்றிய தெளிவு நமக்கு அதிகமாகவே இருக்கின்றது, ஆனால் சில சமயங்களில் அதை செயல்படுத்தும்போது பல காரணங்களை முன்னிறுத்தி கடமையிலிருந்து தவறுகிறோம் என்பது உண்மையே.\nபக்தர்கள் கோவிலுக்கு செல்லும்பொழுது கடைப்பிடிக்கக்கூடிய எளிய தீர்வுகளை இயக்குனர் JK விக்கி அவர்களின் விழிப்புணர்வு வீடியோ எடுத்துரைக்கின்றது.\nஅது சேதத்தை குறைக்க உதவுகிறது. நெகிழிப் பைகளைத் தவிர்ப்பது, இயற்கையாக மக்கும் பொருட்களைப் பயன்படுத்துவது, குப்பை தொட்டிகளை சரியாக பயன்படுத்துவது, குப்பைத் தொட்டிகள் இல்லாத இடத்தில் அதற்கான மாற்று வழிகள் யாவை போன்ற பல யுக்திகளை இந்த வீடியோ உள்ளடக்கியுள்ளது.\nமலேசிய நடிகர் லோகன், வானவில் சூப்பர் ஸ்டார் புகழ் கணேசன் மனோகரன், ஜகாட் திரைப்படத்தின் மெக்ஸிகோ கதாபாத்திர புகழ் தினேஷ் சாரதி கிருஷ்ணன், புதுமுக நடிகை ஹம்சினி பெருமாள் ஆகியோர் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளனர். இதனை முகநூலில் Poochandi எனும் பெயரில் இருக்கும் பக்கத்தில் காணலாம்.\nசிக்கலுக்கு தீர்வாக இருப்போம், சிக்கலாக அல்ல\nதைப்பூச இரதத்தை இழுக்க காளைகளுக்கு தடை - பேராசிரியர் இராமசாமி\nதைப்பூச விழாவின்போது பினாங்கு கோவில் வீட்டிலிருந்து புறப்படும் இரதத்தை காளை மாடுகளை பூட்டி இழுப்பதற்கு பினாங்கு இந்து அறப்பணி வாரியம் தடை விதித்துள்ளது.\nமாடுகளை பூட்டி இரதத்தை இழுப்பதற்கு பதிலாக பக்தர்களே அந்த இரதத்தை இழுக்கலாம் என்று அதன் தலைவரும் பினாங்கு துணை முதலமைச்சருமான பேராசிரியர் பி.இராமசாமி தெரிவித்தார்.\n128 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இக்கோவிலிருந்து புறப்படும் இரதத்தை 7\nகிலோ மீட்டர் தூரம் காளைகள் இழுத்துச் செல்வது அதனை வதைப்படுத்துவதாக விலங்கு நல ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.\nஆதலால், இரதத்தை பக்தர்களே இழுக்கலாம் எனவும் காளைகளை பூட்டி இரதத்தை இழுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் அது சட்டப்படி குற்றமாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.\nதிருடப்பட்டது தலைவர் பதவி; ரத்தானது கட்சி பதிவு - மனம் திறந்தார் கேவியஸ்\nமைபிபிபி கட்சியின் தேசியத் தலைவரான எனது பதவி நள்ளிரவு வேளையில் திருடப்பட்டதன் விளைவாகவே இன்று அக்கட்சி தனது பதிவை இழக்கும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது என்று அதன் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எம்.கேவியஸ் விவரித்தார்.\nகட்சியின் தேசியத் தலைவர் பதவியை ஹோட்டல்களிலோ உணகவங்களிலோ அமர்ந்து தீர்மானிக்க முடியாது. அதற்கென்று சில சட்ட நெறிமுறைகள் விரிவாக வரையறுக்கப்பட்டுள்ளன.\nஆனால் கட்சியின் சட்ட விதிகளை மதிக்காமல் பதவி ஆசையில் சில தரப்பினர் மேற்கொண்ட முயற்சியின் விளைவு இன்று கட்சியை அழிவு பாதைக்குக் கொண்டு சென்றுள்ளது.\nகட்சியின் உச்சமன்ற உறுப்பினர்களாக இருந்த டத்தோஶ்ரீ மெக்லின் டி குருஸ் உட்பட 14 பேர் ஹோட்டலில் அமர்ந்து தன்னை தலைவர் பதவியிலிருந்து நீக்கி விட்டதாக அறிவித்து மறுநாள் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தனர்.\nமைபிபிபி கட்சியின் சட்டவிதிபடி கட்சி தலைவரை நீக்க வேண்டுமானால் அவசர பொதுக்கூட்டம் கூட்டியாக வேண்டும். அதன் பின்னரே புதிய தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும்.\nகட்சியின் தலைவரை ஹோட்டலில் அமர்ந்து பதவியிலிருந்து நீக்க முடியாது. நானே விருப்பப்பட்டு அப்பதவியை வேறொருவருக்கு விட்டுக் கொடுக்க முடியாது. கட்சி பேராளர்களின் ஒருமித்த ஆதரவுடனே தலைவர் பதவிக்கு ஒருவரை நியமிக்க முடியும்.\nஇத்தகைய சட்டவிதிகள் எதுவும் தெரியாமல் எடுத்தோம் கவிழ்த்தோம் என செயல்பட்டதால்தான் கட்சி பதிவு ரத்தாகும் நிலை ஏற்பட்டுள்ளது என்பதை கட்சி உறுப்பினர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் புரிந்து கொள்ள வேண்டும்.\nஇன்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது டான்ஶ்ரீ கேவியஸ் இவ்வாறு கூறினார்.\nகுறிப்பு: டான்ஶ்ரீ கேவியசின் விரிவான விளக்கம் தொடர்ந்து இடம்பெறும்.\nஎம்எச் 370 விமானத்தை மலாக்கா நீரிணையில் பார்த்தோம்- இந்தோனேசிய மீனவர்கள்\n239 பயணிகளுடன் கோலாலம்பூரிலிருந்து சீனாவுக்கு பயணித்த எம்எச் 370 விமானத்தை மலாக்கா நீரிணையின் அருகில் பார்த்ததாக 4 இந்தோனேசிய மீனவர்கள் தெரிவித்தனர்.\nகடந்த 2014 மார்ச் 8ஆம் தேதி காணாமல் போன இந்த விமானத்தை ஆச்சே எல்லையின் வட சுமத்ரா, பெங்கலான் சுசு பகுதிக்கு அருகில் பார்த்ததாக நான்கு மீணவர்களின் ஒருவரான ருஸ்லி குஸ்மின் (42) தெரிவித்தார்.\nசம்பவத்தன்று நான் மீன் பிடித்துக் கொண்டிருந்தேன். அப்போது பொறியை உயர்த்திக் கொண்டிருந்தபோது 2 ��ிலோ மீட்டருக்கு அப்பால் விமானம் ஒன்று நகர்ந்து கொண்டிருந்தது. அப்போது விமானத்தின் இயந்திர சத்தம் கேட்கவில்லை. ஆனால் கப்பல் கடலில் மூழ்குவதற்கு முன்னர் கரும்புகை வெளியானதை கண்டதாக அவர் சொன்னார்.\n239 பயணிகள், விமானப் பணியாளர்களுடன் புறப்பட்ட எம்எச் 370 விமானம் காணாமல் போனதை அடுத்து நீண்ட நாள் தேடுதலுக்குப் பின்னர் இந்தியப் பெருங்கடலில் விழுந்து நொறுங்கியதாக மலேசிய அரசாங்கம் அறிவித்தது.\nமஇகாவினரின் அரசியல் சுயநலமே கேமரன் மலையை கைநழுவச் செய்தது - கணபதிராவ்\nசீபிட்டு ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலய விவகாரத்தில் மஇகா தலைவர்கள் சிலர் அரசியல் சுயலாபத்திற்காக முன்னெடுத்த நடவடிக்கைககளாலேயே கேமரன் மலையில் போட்டியிடாமல் ம இகா ஒதுங்கி கொண்டிருக்கிறது என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் தெரிவித்தார்.\nதங்களின் பாரம்பரியத் தொகுதியான கேமரன் மலையில் ம இகா போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்டதற்கு சீபில்ட் ஆலய மோதலை அதன் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் காரணம் காட்டியுள்ளார்.\nஆனால் சுமூகமான முறையில் தீர்க்கப்பட வேண்டிய இவ்வாலய விவகாரத்தை தங்களின் சுயநல அரசியல் லாபத்திற்காக ஒரு போராட்டமாக மஇகா தலைவர்கள் மாற்றியதன் விளைவே ஆலய மோதலும் அதனை தொடர்ந்த ஓர் உயிரிழப்பும் ஆகும்.\nஇன்று அதன் பாதிப்பினால் மலாய்க்காரர்களின் வாக்குகளை பெற முடியாது என்பதால் தொகுதியை அம்னோவுக்கு கொடுத்துள்ளோம் என்று கூறும் மஇகா, அரசியல் சுயலாபத்தினால் தாங்கள்தான் பாதிக்கப்பட்டுள்ளோம் என்பதை உணர வேண்டும்.\nஅதேபோன்றுதான் தற்போது செமினி தோட்டத் தமிழ்ப்பள்ளி விவகாரத்திலும் தங்களின் அரசியல் சுயலாபத்திற்காக சில தரப்பினர் இவ்விவகாரத்தை பூதாகரமாக உருவாக்க முற்படுகின்றனர்.\nஇப்போதுதான் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி மத்திய அரசாங்கத்தை கைப்பற்றியுள்ளது. கடந்த தேசிய முன்னணி ஆட்சியின்போது அவர்களது கூட்டணியில் இருந்த தலைவர்கள் இப்பிரச்சினைக்கு அப்போது ஒரு தீர்வையும் காண முற்படாதபோது இப்போது மட்டும் உரிமைக்காக போராடுவதாக சுயநல நாடகத்தை அரங்கேற்றி கொண்டிருக்கின்றனர் என்று கணபதிராவ் மேலும் தெரிவித்தார்.\nமைபிபிபி-இன் பதிவு ரத்து- ஆர்ஓஎஸ்\nமைபிபிபி கட்சியின் பதிவை ஆர்ஓஎஸ் எனப்படும் தேசி�� சங்கங்களின் பதிவிலாகா இன்று ரத்து செய்துள்ளது.\nகட்சியின் பதிவு ரத்து செய்யப்பட்டுள்ள கடிதத்தின் நகல் சம்பந்தப்பட்ட தலைவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று அதன் தலைமை இயக்குனர் மஸ்யாத்தி அபாங் இப்ராஹிம் தெரிவித்தார்.\nடான்ஶ்ரீ எம்.கேவியஸ், டத்தோஶ்ரீ மெக்லின் டி குருஸ் என இரு பிரிவாக பிளவுபட்ட தரப்பினர் தங்களது பிரச்சினையை தீர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்ட போதிலும் அது சாத்தியமாகாததால் கட்சியின் பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது.\nஆயினும் ஆர்ஓஎஸ்-இன் முடிவை எதிர்த்து 30 நாட்களுக்குள் மேல் முறையீடு செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.\nநாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலின்போது மைபிபிபி கட்சியில் தலைமைத்துவப் போராட்டம் வெடித்தது.கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக டான்ஶ்ரீ கேவியஸ் கடிதம் வழங்கினார். பின்னர் அதனை மீட்டுக் கொண்டார்.\nஅதே வேளையில் டான்ஶ்ரீ கேவியசை கட்சியிலிருந்து விலக்கி விட்டதாக டத்தோஶ்ரீ மெக்லின் டி குருஸ் தரப்பினர் செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.\nபொதுத் தேர்தலுக்குப் பின்னர் மைபிபிபி கட்சி தேசிய முன்னணியிலிருந்து விலகுவதாக டான்ஶ்ரீ கேவியஸ் அறிவித்ததோடு தற்போது பிரதமர் துன் மகாதீருக்கும் பிகேஆர் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கும் ஆதரவளிப்பதாக தெரிவித்தார்.\nஆயினும் மைபிபிபி கட்சி தேசிய முன்னணியில் நீடிப்பதாக டத்தோஶ்ரீ மெக்லின் இதற்கு முன்னர் கூறியிருந்தார்.\nஇருமுறை மட்டுமே ரயில் சேவை; இவ்வளவு பெரிய ரயில் நிலையம் இருந்தும் என்ன பயன்\nகோலாலம்பூரிலிருந்து வருகை தரும் இதிஎஸ் எனப்படும் மின்சார ரயில் சேவை துரிதமாக செயல்படாததால் பல்வேறு சிரமங்களை தாங்கள் எதிர்கொள்வதாக சுங்கை சிப்புட் குடியிருப்பாளர்கள் குறைபட்டுக் கொண்டனர்.\nகோலாலம்பூரிலிருந்து பாடாங் பெசார் நோக்கி செல்லும் இதிஎஸ் ரயில் காலை, இரவு நேரம் என இரு முறை மட்டுமே இங்கு பயணிகளை ஏற்றுவதற்கு நிறுத்தப்படுகிறது.\nமுன்பு நான்கு முறை இங்கு நிறுத்தப்பட்டு பயணிகளை ஏற்றிச் சென்ற போதிலும் இப்போது இரு முறை மட்டுமே பயணிகள் ஏற்றுவதால் பெரும்பாலானோர் ஈப்போ ரயில் நிலையத்தை தங்களது நிறுத்த முனையமான தேர்ந்தெடுக்கின்றனர்.\nதலைநகரில் வசிக்கும், பணியாற்றி வரும் எங்களது பிள்ளைகள்/உறவினர்கள் சுங்கை சிப்புட்டிற்கு வர வேண்டுமானால் ஈப்போ நிலையத்திலேயே இறங்க வேன்டிய கட்டாய சூழல் நிலவுகிறது.\nஇதனால் இங்கிருந்து ஈப்போவுக்கு 40 நிமிடங்கள் பயணம் செய்து அவர்களை ஏற்றி வர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்று தாமான் துன் சம்பந்தனைச் சேர்ந்த நா.உ.இராமன் கூறினார்.\nபொதுவாக வேலை நேரம் முடிந்த பின்னரே ரயில் பயணத்தை பலர் மேற்கொள்கின்றனர். ஆனால் காலையிலும் இரவிலும் மட்டுமே சுங்கை சிப்புட்டிற்கு ரயில் சேவை விடுவதால் ஈப்போவிவிலேயே பிள்ளைகள் இறங்கி விடுகின்றனர்.\nஇரவு எத்தனை மணி ஆனாலும் அவர்களை சென்று ஏற்றி வர வேண்டும். இல்லையேல் வாடகை கார் கட்டணமே 50 வெள்ளி வரை செலுத்த வேண்டிய நிலை உள்ளது என்று கி.மணிராஜா குறிப்பிட்டார்.\nஎனது பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் கோலாலம்பூரில் உள்ளனர். அவர்கள் இங்கு வர வேண்டுமானால் ஈப்போவில் இறங்கிய பின்னர் தான் இங்கு வர வேண்டியுள்ளது. சுங்கை சிப்புட்டிற்கு நேரடி சேவை விட்டிருந்தால் அவர்கள் இங்கேயே இறங்கி கொள்வர் என்று மூதாட்டி சு.ஜானகி கூறினார்.\nகோலாலம்பூரிலிருந்து தொடங்கும் ரயில் சேவை பிற்பகல் 1.00 மணிக்கும் இரவு 8.50 மணிக்கு மட்டுமே நிறுத்தப்படுகிறது. இதனால் இந்த ரயில் சேவையை பயன்படுத்துவதைக் காட்டிலும் பெரும்பாலானோர் ஈப்போ ரயில் நிலையத்திலேயே இறங்கி விடுகின்றனர்.\nசுங்கை சிப்புட்டை விட மக்கள் தொகையில் குறைவான எண்ணிக்கைக் கொண்ட கோலகங்சார் ரயில் நிலையத்தில் 20 முறை ரயில் நிறுத்தப்படுகின்றபோது சுங்கை சிப்புட்டில் 4 முறை என ரயிலை நிறுத்தி பயணிகளை ஏற்ற முடியாதா என்று சுங்கை சிப்புட் மஇகா செயலாளர் கி.மணிமாறன் கேள்வி எழுப்பினார்.\nஇத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கேசவன் ரயில் நிலைய அதிகாரிகளின் விளக்கத்தை மக்களுக்கு விளக்க வேண்டாம். மாறாக இருமுறை என உள்ள ரயில் சேவையை பல மடங்காக நீட்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nமக்கள் பிரதிநிதி என்பதை மறந்து அதிகாரிகள் 'தபால் ஊழியராக' கேசவன் நடந்து கொள்ளக்கூடாது. மக்கள் பிரச்சினைகளை தீர்க்கத்தான் அவரை தங்களின் பிரதிநிதியாக மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். அதனை மறந்து விட வேண்டும்.\nபல லட்சம் வெள்ளி செலவு செய்து கட்டிய ரயில் நிலையம் மக்களுக்கு பயன்பாட்டுக்கு ஏற்புடையதாக அமைய���ில்லையென்றால் வீணாவது மக்கள் பணம்தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்று மணிமாறன் குறிப்பிட்டார்.\nசெமினி தமிழ்ப்பள்ளி: அரசியல் லாபத்திற்காக போராட்டம் நடத்துகின்றனர்- கணபதிராவ் குற்றச்சாட்டு\nசெமினி தோட்டத் தமிழ்ப்பள்ளி விவகாரத்தில் உரிமைக்காக போராடுகிறோம் என்ற கூறுகின்றவர்கள் தங்களின் அரசியல் சுயலாபத்திற்காக போராட்டம் நடத்துகின்றனர் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் தெரிவித்தார்.\n1.7 ஏக்கர் நிலத்தில் மட்டுமே அமைந்திருந்த இப்பள்ளிக்கு 3.8 ஏக்கர் நிலத்தை பெற்று கொடுத்தவன் நான். இப்பள்ளி அமைந்துள்ள நிலம் சைம் டார்பி மேம்பாட்டு நிறுவனத்திற்குச் சொந்தமாக இருந்தது.\nசம்பந்தப்பட்ட நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி தமிழ்ப்பள்ளி, ஆலயம், தேவாலயம், தோட்டப் பாட்டாளிகளுக்கு வீடுகள் கட்டுவதற்கான நிலம் ஆகியவை ஒதுக்கப்பட்டது.\nசெமினி தமிழ்ப்பள்ளிக்கு 6 ஏக்கர் நிலம் வழங்கப்பட வேண்டும் என்று பள்ளி வாரியக்குழு கோரிக்கை விடுத்தது. ஆயினும் 3.8 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. சம்பந்தப்பட்டவர்களின் கோரிக்கை வரவேற்கக்கூடியதுதான்.\nஆனால் நாட்டிலுள்ள அனைத்துத் தமிழ்ப்பள்ளிகளும் 6 ஏக்கர் நிலத்தில்தான் அமைந்துள்ளன என்பதை யாராலும் உறுதிப்படுத்த முடியாது. நில விவகாரம் தொடர்பில் பள்ளி வாரியக்குழுவினர் தொடர்ந்த வழக்கிலும் தோல்வி கன்டுள்ளனர்.\nஏற்கெனவே நில ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில் இப்போது மீண்டும் தமிழ்ப்பள்ளிக்காக நில ஒதுக்கீடு செய்ய முற்பட்டால் அது ஆலயம், தேவாலயம் அல்லது தோட்டப் பாட்டாளிகளின் வீடமைப்பு நிலத்தை வெகுவாக பாதிக்கும்.\nமுந்தைய காலங்களில் மாநில அரசாங்கம் பக்காத்தான் கூட்டணி வசம் இருந்த போதிலும் மத்திய அரசாங்கம் தேசிய முன்னணி வசமே இருந்தது.\nஅப்போதெல்லாம் இப்பள்ளி விவகாரம் தொடர்பில் போராட்டம் நடத்தாதவர்கள் இப்போது தங்களின் அரசியல் சுயலாபத்திற்காக உரிமை போராட்டம் என்ற பெயரில் அரசியல் சர்ச்சையை உருவாக்க முற்படுகின்றனர்.\nவரும் செவ்வாய்க்கிழமை சைம் டார்பி மேம்பாட்டு நிறுவன தரப்பினருடன் சந்திப்பு நடத்தப்படவுள்ளது. இச்சந்திப்பின் மூலம் தீர்க்கமான முடிவு காணப்படும் என்பதை உறுதியாக கூற முடியாது. எத்தகைய வழியில் சுமூகம���ன தீர்வு காணப்பட முடியும் என்பது கலந்தாலோசிக்கப்படும் என்று பத்துமலையில் நடைபெற்ற தமிழன் உதவும் கரங்கள் நிகழ்வுக்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்தபோது கணபதிராவ் குறிப்பிட்டார்.\nமகாதீர், அன்வாருக்கு முழு ஆதரவு- டான்ஶ்ரீ கேவியஸ்\nபிரதமர் துன் மகாதீருக்கும் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கும் தனது ஆதரவு உண்டு என்று மைபிபிபி கட்சியின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எம்.கேவியஸ் தெரிவித்தார்.\nகடந்த கால தேசிய முன்னணி அரசாங்கம் இழைத்த பல்வேறு தவறுகளை சரி செய்ய துன் மகாதீர் தலைமையிலான அரசாங்கத்திற்கு வலுவான ஆதரவு வழங்குகிறேன்.\nஅதனால் இந்த இடைத் தேர்தலில் போட்டியிடும் முடிவிலிருந்து பின் வாங்கிக் கொண்டதாக டான்ஶ்ரீ கேவியஸ் தெரிவித்தார்.\nஅதோடு, பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளரான எம்.மனோகரனுக்கு தனது ஆதரவை புலப்படுத்துவதாக கூறிய கேவியஸ், தமது தரப்பின் (மைபிபிபி) ஆதரவு வலுவாக இருக்கும் என்றார்.\nஇதற்கு முன்னர் கேமரன் மலை இடைத் தேர்தகில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்க உள்ளதாக டான்ஶ்ரீ கேவியஸ் கடந்த வாரம் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nநான்கு முனை போட்டியில் கேமரன் மலை இடைத் தேர்தல்\nஇம்மாதம் 26ஆம் தேதி நடைபெறவுள்ள கேமரன் மலை இடைத் தேர்தலில் நான்கு முனை போட்டி நிலவியுள்ளது.\nபக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராக ஜசெகவின் எம்.மனோகரன், தேசிய முன்னணி வேட்பாளராக ரம்லி முகமட் நோர், சுயேட்சை வேட்பாளர்களாக சலாவுடின் அப்துல் தாலிப், வோங் செங் யீ ஆகியோர் போட்டியிடவுள்ளனர்.\nஇன்று நடைபெற்ற வேட்புமனுவின் போது இந்நால்வரும் தங்களது மனுவை தாக்கல் செய்தனர்.\nஇத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்குவேன் என கூறிய மைபிபிபி கட்சியின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எம்.கேவியஸ் போட்டியிடுவதிலிருந்து விலகிக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅம்னோ எவ்வளவு பட்டாலும் திருந்தாது- டத்தோ மோகன்\nதேசிய முன்னணியின் உறுப்புக் கட்சியாக உள்ள மஇகாவை மட்டம் தட்டியே தன்னை பலம் வாய்ந்த கட்சியாக காட்டிக் கொள்ள முயலும் அம்னோ, எவ்வளவு பட்டாலும் திருந்தாது என்று மஇகா உதவித் தலைவர் டத்தோ டி.மோகன் கருத்து தெரிவித்தார்.\nகேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதிக்கு வரும் 26ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ம இகா போட்டியிட்டு வந்த அத்தொகுதியை தற்போது அம்னோ கோரியுள்ளது.\nமஇகா மத்திய செயற்குழு அத்தொகுதியை அம்னோவுக்கு விட்டுத் தர ஆதரவு வழங்கியிருந்தாலும் அத்தகைய முடிவை தனிப்பட்ட முறையில் நான் ஆதரிக்கவில்லை.\nநாட்டின் 14ஆவது பொதுத் தேர்தல் தேசிய முன்னணி ஆட்சி அதிகாரத்தை இழப்பதற்கு அம்னோவின் தவறுகளும் குருட்டுத்தனமான நம்பிக்கைகளுமே காரணம். ஜெயித்து விடுவோம்; ஆட்சியை கைப்பற்றுவோம் என சொல்லியும் ஆட்சி அதிகாரத்தை இழந்து விட்டோம்.\nஇப்போது கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதி இடைத் தேர்தலிலும் அதே குருட்டு நம்பிக்கையை கொண்டுள்ளனர். ம இகாவினால் ஜெயிக்க முடியாது என மட்டம் தட்டும் அம்னோவினர், அங்கு போட்டியிட்டால் தான் வெற்றியா,\nஅப்படியே இந்த தேர்தலில் தோல்வி கண்டாலும் இழக்க என்ன உள்ளது, ஆட்சி தான் மாறிவிடப் போகிறதா அதிகாரம் தான் திரும்ப கிடைத்து விடப்போகிறதா அதிகாரம் தான் திரும்ப கிடைத்து விடப்போகிறதா மஇகாவை மட்டம் தட்டியே பல தொகுதிகளை அம்னோ கைப்பற்றிக் கொண்டது. எடுத்துக் கொண்டதை அவர்களே வைத்துக் கொண்டுள்ளனர்.\nமஇகாவை மட்டம் தட்டுவதை காட்டிலுக் அம்னோவிலிருந்து வெளியேறும் நாடாளுமன்ற உறுப்பினர்களை தக்கவைத்துக் கொள்வதில் அக்கறை செலுத்த வேண்டும். மஇகாவில் இருந்த இரு நாடாளுமன்ற உறுப்பினர்களும் அணி மாறவில்லை. ஆனால் அம்னோவினர் தான் அணி மாறுகின்றனர்.\nஇப்போது கேமரன் மலையில் போட்டியிட்டு வெற்றி பெற்றாலும் அந்த பிரதிநிதி நிச்சயம் அணி மாறக்கூடும். இந்த விஷயத்தில் அம்னோ எவ்வளவு பட்டாலும் திருந்தாது என்று டத்தோ மோகன் கூறினார்.\nகேமரன் மலை: மஇகாவிடமிருந்து தட்டி பறிக்கிறது அம்னோ\nஇடைத் தேர்தலை எதிர்கொண்டுள்ள கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதி மஇகாவிடமிருந்து அம்னோவுக்கு கைமாறலாம் என அறியப்படுகிறது.\n2004ஆம் ஆண்டு முதல் கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வரும் மஇகாவுக்கு இந்த இடைத் தேர்தலில் வாய்ப்பளிக்கப்படாமல் அந்த வய்ப்பை அம்னோ தட்டி பறித்து கொள்கிறது.\nஇந்த தேர்தலில் மஇகா வேட்பாளரை விட தமது தரப்பு வேட்பாளர் போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு பிரகாசம் என நம்பிக்கை கொண்டுள்ள அம்னோ அதற்கான முழு மூச்சாக களம் காண தயாராகிக் கொண்டிருக்கிறது.\nவேட்பாளர் விவகாரத்தில் காணப்படு��் இந்த இழுத்தடிப்பு நடவடிக்கையினால் வேட்பாளரை அறிவிப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது என்றும் கூடிய விரைவில் இத்தொகுதிக்கு அம்னோ வேட்பாளர் அறிவிக்கப்படலாம் என்று நம்பப்படுகிறது.\nமாமன்னர் பதவியிலிருந்து விலகினார் சுல்தான் முகமட் வி\nநாட்டின் 15ஆவது மாமன்னர் சுல்தான் முகமட் வி தனது பதவியிலிருந்து விலகிக் கொண்டதாக இஸ்தானா நெகாரா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nஇவரின் இந்த பதவி விலகல் இன்று முதல் அமலுக்கு வருகிறது.\nகடந்த 2016 டிசம்பர் 13ஆம் தேதி நாட்டின் மாமன்னராக பொறுப்பேற்ற சுல்தான் முகமட் வி, தனது ஈராண்டு கால பதவியின்போது தமக்கு ஒத்துழைப்பு நல்கிய ஆட்சியாளர்களும் அரசாங்கத்திற்கும் நாட்டு மக்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.\nநான் போட்டியிடுவதால் மஇகா வேட்பாளரை களமிறக்க தேமு முயற்சிக்காது - டான்ஶ்ரீ கேவியஸ்\nகேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் நான் வேட்பாளராக களமிறங்கினால் அங்கு மஇகா போட்டியிடுவதற்கு தேசிய முன்னணி வாய்ப்பளிக்காது என்று மைபிபிபி கட்சியின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எம்.கேவியஸ் தெரிவித்தார்.\nகடந்த 14ஆவது பொதுத் தேர்தலின்போதே கேமரன் மலையில் வேட்பாளராக களமிறங்க முயற்சித்தேன். அதற்காக நான்காண்டுகளாக கேமரன் மலையில்\nஆனால் தேசிய முன்னணி எனக்கு அங்கு வாய்ப்பளிக்காமல் மஇகாவின் பாரம்பரியத் தொகுதி என கூறி மஇகா வேட்பாளரை களமிறக்கியது.\nநான்காண்டுகள் நான் போட்ட கடுமையான உழைப்பின் காரணமாக எனக்கு அங்கு இன்னமும் ஆதரவு இருக்கின்றது என்ற நிலையில் வேட்பாளராக களமிறங்க முடிவெடுத்துள்ளேன்.\nநான் அங்கு வேட்பாளராக களமிறங்க முடிவெடுத்துள்ளதால் நிச்சயம் அங்கு மஇகா வேட்பாளரை களமிறக்க தேசிய முன்னணி முனையாது. நிச்சயம் அத்தொகுதியில் போட்டியிட அம்னோ கோரிக்கை விடுக்கலாம் என்று இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது டான்ஶ்ரீ எம்.கேவியஸ் குறிப்பிட்டார்.\nகேமரன் மலையில் போட்டியிடுகிறேன்- டான்ஸ்ரீ கேவியஸ் அதிரடி\nகேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் தாம் வேட்பாளராக களமிறங்குவதற்கு மைபிபிபி கட்சி உச்சமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது என்று அக்கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எம்.கேவியஸ் தெரிவித்தார்.\nஜனவரி 26ஆம் தேதி நடைபெறவுள்ள இந்த இ���ைத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கவுள்ள சூழலில் எந்த சின்னத்தின் கீழ் போட்டியிடுகிறோம் என்பது வேட்புமனுவின்போது தெரிய வரும்.\nகடந்த 4 ஆண்டுகளாக கேமரன் மலை தொகுதியில் சேவையாற்றியுள்ளதன் அடிப்படையில் தனக்கான வெற்றி வாய்ப்பு ஓரளவு காணப்படுவதாக இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது டான்ஸ்ரீ கேவியஸ் கூறினார்.\nமைபிபிபி வரலாற்றில் முதன் முறையாக எந்தவொரு கட்சியின் நெருக்கடியும் இன்றி தன்னிச்சையான முறையில் போட்டியிடுவதற்கு முடிவெடுத்துள்ளோம் என்று இன்று நடைபெற்ற உச்சமன்றக் கூட்டத்திற்கு பின்னர் அவர் இவ்வாறு சொன்னார்.\nபயணிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்ததாலேயே இதிஎஸ் சேவை குறைக்கப்பட்டது - கேசவன் விளக்கம்\nசுங்கை சிப்புட் வட்டாரத்தில் செயல்பட்ட மின்சார ரயில் சேவை (இதிஎஸ்) அட்டவணை வெகுவாக குறைக்கப்பட்டதற்கு பயணிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்ததே காரணம் என்று மலேசிய ரயில்வே நிலைய அதிகாரிகள் தன்னிடம் கூறியதாக சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கேசவன் விவரித்தார்.\nசுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்ற பின்னர் இதிஎஸ் பயண அட்டவணை குறைக்கப்பட்டது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்தோசித்தேன்.\nஇங்கிருந்து ரயில் சேவையை பெறும் பயணிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாலேயே பயண அட்டவணை குறைக்கப்பட்டது என்று அதிகாரிகள் விளக்கியுள்ளனர்.\nஅதேபோன்று கடந்த மக்களவை கூட்டத் தொடரிலும் இது தொடர்பில் குரல் எழுப்பியுள்ளேன். பயணிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால் ஒரு நாளைக்கு 4 முறை இயக்கப்பட்ட ரயில் சேவை இரு முறையாக மாற்றப்பட்டது என மக்களவையில் பதிலளிக்கப்பட்டது.\nமேலும், இவ்வட்டாரத்தில் செயல்பட்டு வந்த டெலிகோம் மலேசியா (திஎம்) சேவை அலுவலகம் மூடப்பட்டது தொடர்பில் புகார்களை பெற்றுள்ளேன்.\nஇது குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினருடன் விரைவில் கலந்துரையாடவிருப்பதாகவும் இந்த சேவை அலுவகம் திறக்கப்பட்டது தொடர்பிலான ஆவணங்களை ஆய்வு செய்ய வேண்டியிருப்பதாகவும் கேசவன் கூறினார்.\nமக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண களப்பணி இறங்குவதில் தாம் ஒருபோதும் தயக்கம் காட்டுவதில்லை என கூறிய அவர், மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண தமது அலுவலகத்தை நாடலாம் என்று மேலும் சொன்னார்.\nடெலிகோம் மலேசியா, இதிஎஸ் சேவை தொடர்பில் சுங்கை சிப்புட் மஇகா செயலாளர் கி.மணிமாறன் விடுத்திருந்த செய்திக்கு பதிலளிக்கையில் கேசவன் இவ்வாறு கூறினார்.\nசிகரெட் புகைத்தால் முதற்கட்டமாக வெ.500 அபராதம்- சுகாதார துணை அமைச்சர்\nஉணவகங்களில் சிகரெட் புகைப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மீறி புகை பிடிக்கும் நபர்களுக்கு முதற்கட்ட அபராதத் தொகையாக வெ.500 விதிக்கப்படும் என்று சுகாதார துணை அமைச்சர் டாக்ரட் லீ புன் சாய் தெரிவித்தார்.\nஎச்சரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் தலைகனத்துடன் நடந்து கொள்ளும் புகைப்படிப்பவர்களுக்கு எதிராக இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.\nசுகாதாரத் துறை அமலாக்க அதிகாரிகளால் முதல் முறையாக அபராதம் விதிக்கப்படும் நபர்கள் இரண்டு வாரங்களுக்குள் அபராத் தொகையை செலுத்த வேண்டும்.\nஅபராதத்தை செலுத்தத் தவறினாலும் மீண்டும் அதே தவற்றை செய்தாலும் 10 ஆயிரம் வெள்ளி வரைக்குமான அபராதமும் ஈராண்டுகளுக்கு மேற்போகாத சிறைத் தண்டனையும் விதிக்கப்படலாம் என்று அவர் சொன்னார்.\nஜனவரி 1ஆம் தேதி முதல் உணவகம் மட்டுமல்லாது பொது இடங்களில் சிகரெட் புகைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.\nடெலிகோம் சேவை மையம் மீண்டும் செயல்பட கேசவன் களமிறங்குவாரா\nசுங்கை சிப்புட் வட்டாரத்தில் அமைந்திருந்த டெலிகோம் நிறுவனத்தின் சேவை மையம் மூடப்பட்டதால் இங்குள்ள மக்கள் பெரும் பாதிப்புகளை எதிர்நோக்கி வருகின்றனர் என்று சுங்கை சிப்புட் மஇகா செயலாளர் கி.மணிமாறன் தெரிவித்தார்.\nநாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் இங்கு செயல்பட்டு வந்த சேவை மையம் மூடப்பட்டதோடு கட்டணம் செலுத்த, சேவைகளை பெற கோலகங்சார் அல்லது ஈப்போ வட்டாரத்திலுள்ள சேவை மையங்களுக்கு செல்ல வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு இங்குள்ள மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.\nஇவ்விவகாரம் குறித்து சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கேசவனின் கவனத்திற்குக் கொண்டு சென்ற போதிலும் இன்னமும் இப்பிரச்சினைக்கு தீர்வு காணாமல் இருப்பது மக்களுக்கு மேலும் துன்பத்தை அளிக்கிறது.\n14ஆவது தேர்தலுக்கு முன்னர் மஇகா இங்கு எதிர்க்கட்சியாக இருந்த போதிலும் துரிதமான சேவைகளை வழங்கியது. சுங்கை சிப்புட் ரயில் நிலையத்திலிருந்து ஈடிஎஸ் எனப்படும் மின்சார ரயில் சேவை பயணத்திற்கான அட்டவணை கூட இங்கு நீட்டிக்கப்பட்டிருந்தது.\nஆனால் இப்போது இங்கு ரயில் பயண அட்டவணை மாற்றப்பட்டு பயண நேரங்கள் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளன.\nஆளும் கட்சியைச் சேர்ந்த கேசவன் இத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்கின்ற போதிலும் இதுபோன்ற மக்களுக்கு பிரச்சினைக்கு உடனடி தீர்வு காண களமிறங்க வேண்டும் என்று மணிமாறன் கேட்டுக் கொண்டார்.\nகேமரன் மலை: பக்காத்தான் வேட்பாளரானார் மனோகரன்\nகேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராக ஜசெகவின் எம்.மனோகரன் அறிவிக்கப்பட்டுள்ளார்.\nஇன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் துன் மகாதீர் மனோகரனை வேட்பாளராக அறிவித்தார்.\nஇந்த இடைத் தேர்தலில் நாம் வென்று காட்டுவோம் என பிரதமர் மகாதீர் தெரிவித்தார்.\n14ஆவது பொதுத் தேர்த்லின்போது கேமரன் மலையில் போட்டியிட்ட மனோகரன் தேசிய முன்னணி வேட்பாளரான டத்தோ சி.சிவராஜிடம் 600 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி கண்டார்.\nஎரிபொருளின் புதிய விலை நாளை அறிவிக்கப்படலாம்\nஎரிபொருளுக்கான புதிய விலை அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விலை நாளை அறிவிக்கப்படலாம் என்று உள்நாட்டு வாணிப, பயனீட்டாளர் நலத்துறை அமைச்சர் சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.\nநேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த புதிய எரிபொருளுக்கான விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மிக விரைவில் அது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்றார் அவர்.\nஇவ்வாரம் சரிவு காணும் என எதிர்பார்க்கப்பட்ட எரிபொருளின் விலை பெட்ரோல் நிலைய உரிமையாளர்களின் கோரிக்கையினால் ஒத்திவைக்கப்பட்டது\nசம்பந்தப்பட்ட தரப்பினரின் கோரிக்கைகளை பிரதமர் துன் மகாதீர் செவிமடுத்துள்ள நிலையில் புதிய எரிபொருளுக்கான விலை அறிவிக்கப்பட்டவுள்ளது.\nகேமரன் மலை தேமுவின் கோட்டை- பேரா ஜசெக\nதேசிய முன்னணியின் கோட்டையாக திகழும் கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றியை நிலைநாட்ட பக்காத்தான் ஹராப்பான் பாடுபடும் என்று பேரா ஜசெக தலைவர் ஙா கோர் மிங் தெரிவித்தார்.\nஇடைத் தேர்தலை சந்தித்துள்ள கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியை இதுவரை நாங்கள் கைப்பற்றியதே இல்லை. அது தேசிய முன்னணியின் கோட்டையாகவே கருதப்படுகிறது.\nஆயினும் 'புதிய மலேசியா' சித்தாந்தத்தின் கீழ் கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியை கைப்பற்ற கடுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.\nகேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதிக்கு வரும் 26ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது.\nஅரசாங்கக் குத்தகைகள் கட்சி தொகுதித் தலைவர்களுக்கா\nஅரசாங்க குத்தகைகள் பெர்சத்து கட்சியின் தொகுதி, கிளைத் தலைவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என அக்கட்சியின் உதவித் தலைவர் டான்ஶ்ரீ அப்துல் ரஷீட் அப்துல் ரஹ்மான் விடுத்திருக்கும் கோரிக்கையை பேரா ஜசெக (DAP) நிராகரித்துள்ளது.\nஇத்தகைய கொள்கை முந்தைய அரசாங்கமான தேமுவைச் சார்ந்தது. அதனை பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியில் நுழைய விடக்கூடாது.\nபக்காத்தான் ஹராப்பானை மக்கள் வெற்றி பெறச் செய்ததே தூய்மையான அரசாங்கம் வேண்டும் என்பதால்தான். இது பக்காத்தான் ஹராப்பானின் கொள்கையும் அல்ல.\nஅரசாங்க குத்தகைகள் பெற விரும்புவோர் அதற்கு முறையாக விண்ணப்பித்து பொது டெண்டர் முறையின் கீழ் குத்தகைகளை பெற்றுக் கொள்ளலாம். அதை விடுத்து தொகுதித் தலைவர்கள் என்பதால் குத்தகைகள் வழங்கப்படக்கூடாது என்று பேரா ஜசெகவின் தலைவர் ஙா கோர் மிங் கூறினார்.\nமாமன்னர் குறித்து பொய்யான தகவல் - கடுமையான நடவடிக்கை தேவை\nநாட்டின் மாமன்னர் சுல்தான் முகமட் வி குறித்து பகிரப்படும் பொய்யான தகவல் குறித்து சட்டத்துறைத் தலைவர் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கிளந்தான் துணை மந்திரி பெசார் டத்தோ முகமட் அமர் நிக் அப்துல்லா கேட்டுக் கொண்டார்.\nமாமன்னர் பதவியிலிருந்து சுல்தான் முகமட் வி விலகிக் கொண்டதாக சமூக ஊடகங்களில் வெளியான பொய்யான தகவல் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட தரப்பினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.\nவாகன நிறுத்துமிட கட்டண முறை சீராக்கப்பட வேண்டும்- ஆட்சிக்குழு உறுப்பினர்\nபேரா மாநிலம் முழுவதும் வாகன நிறுத்தத்திற்கான ஒரே கட்டண முறை கொள்கை இம்மாத பிற்பகுதியில் நிலைநிறுத்தப்படும் என்று வீடமைப்பு, ஊராட்சி மன்றம், பொது போக்குவரத்து, இஸ்லாம் அல்லாதோர் சமயப் பிரிவு ஆட்சிக்குழு உறுப்பினர் பவுல் யோங் சோ கியோங் தெரிவ��த்தார்.\nதற்போதைய நிலையில் வாகன நிறுத்துமிடத்திற்கான கட்டணம் ஒரே சீராக இல்லை. அதை நாம் ஒழுங்குபடுத்திய பின்னரே அமலாக்கம் செய்ய முடியும்.\nஉதாரணத்திற்கு, பத்துகாஜா மாநகர் மன்றம் ஒரு மணி நேர வாகன நிறுத்தத்திற்கு 60 காசு கட்டணம் விதிக்கிறது. அதே மஞ்சோங் மாநகர் மன்றம் ஒரு மணி நேரத்திற்கு 40 காசு கட்டணமாக விதிக்கிறது.\nமுதலில் வாகன நிறுத்துமிட சீட்டுக்கான கட்டணத்தை ஒழுங்குபடுத்த வேண்டும். மாநில அரசின் ஆட்சிக்குழு கூட்டத்தில் இவ்விவகாரம் விவாதிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்ட பின்னர் அமல்படுத்தப்படும் என அவர் சொன்னார்.\n'புகைக்காதீர்கள்' என சொன்ன பணியாளரை அறைந்த வாடிக்கையாளர்\nஉணவகத்தில் புகை பிடிக்கக்கூடாது என கூறிய பணியாளரை ஆடவர் ஒருவர் அறைந்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.\nஜனவரி 1ஆம் தேதி முதல் நாடு தழுவிய நிலையில் உள்ள உணவகங்கள், பொது இடங்களில் சிகரெட் புகைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் கடந்த 1ஆம் தேதி ஷா ஆலம், செக்ஷன் 25இல் உள்ள உணவகம் ஒன்றில் மூன்று ஆடவர்கள் புகைத்து கொண்டிருந்த வேளையில் புகைக்க வேண்டாம் என கூறியதால் வாக்குவாதம் மூண்டது.\nஅப்போது ஓர் ஆடவர் அந்த பணியாளரை அறைந்துள்ளார் என்று மாவட்ட போலீஸ் தலைவர் துணை ஆணையர் பஹாருடின் மாட் தாய்ப் கூறினார்.\nஇச்சம்பவத்தின்போது உணவகத்தில் இதர இரு பணியாளர்களும் ஐந்து வாடிக்கையாளர்கள் மட்டுமே இருந்துள்ளனர்.\nஇச்சம்பவத்தில் உணவக பணியாளர் காயமடையவில்லை. இதில் சம்பந்தப்பட்ட ஆடவர் தாமாகவே முன்வந்து அருகிலுள்ள காவல் நிலையத்தில் விளக்கமளிக்குவாறு பஹாருடின் கேட்டுக் கொண்டார்.\n6 மாதங்களுக்கு எச்சரிக்கை மட்டுமே; அபராதம் கிடையாது\nபொது இடங்களில் சிகரெட் புகைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் 6 மாதங்களுக்கு எவ்வித அபராதமும் விதிக்கப்படாது என சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nபுகை பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள இடங்களை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் முதல் ஆறு மாதங்களுக்கு எச்சரிக்கை கடிதம் வழங்கப்படும் என்றும் ஆறு மாதங்களுக்கு பின்னர் அபராதம் விதிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.\nஜனவரி 1ஆம் தேதி முதல் பொது இடங்களில் புகை பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.\n'இயற்கையை காப்போம் இனியதோர் உலகை படைப்போம்' - சிறப்பு கட்டுரை\nபினாங்கு - இயற்கை என்பது இயல்பாக இருப்பது என்பது பொருள் கொண்டதாகும் . இயல்பாகவே தோன்றி மறையும் பொருட்கள் அவற்றின் இயக்கம் , அவை இயங...\nபூச்சோங்- மாரடைப்பின் காரணமாக மனைவியும் அவரை தொடர்ந்து கணவனும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. சிலாங்கூர்,பூச்சோங்கைச் ச...\nசோழன் ஆட்சியை இழந்ததைப்போல, மஇகாவை இழந்து விடாதீர்கள்\nசேரன், சோழன், பாண்டியன் ஆட்சிகளை இழந்து 500 ஆண்டுகளைக் கடந்து விட்டோம். இங்கு வந்து 200 ஆண்டுகளாகக் கட்டமைத்த வாழ்க்கையைத்தான் இன்றும...\nவிவேகானந்தா தமிழ்ப்பள்ளி நிலத்தை உரிமையாக்கிக் கொள...\nபத்துமலை தைப்பூசம்: 16 லட்சம் பக்தர்கள் திரள்வர்\n'பரமபதம்' விளையாடும் விக்னேஷ் பிரபு\nசெருப்பை கழற்றி 'பேயை' அடிக்கும் ஆடவர்- வைரலாகும் ...\nதைப்பூச விழாவில் ஆலய வளாகத்தை குப்பை மேடாக்கலாமா\nதைப்பூச இரதத்தை இழுக்க காளைகளுக்கு தடை - பேராசிரிய...\nதிருடப்பட்டது தலைவர் பதவி; ரத்தானது கட்சி பதிவு - ...\nஎம்எச் 370 விமானத்தை மலாக்கா நீரிணையில் பார்த்தோம்...\nமஇகாவினரின் அரசியல் சுயநலமே கேமரன் மலையை கைநழுவச் ...\nமைபிபிபி-இன் பதிவு ரத்து- ஆர்ஓஎஸ்\nஇருமுறை மட்டுமே ரயில் சேவை; இவ்வளவு பெரிய ரயில் ந...\nசெமினி தமிழ்ப்பள்ளி: அரசியல் லாபத்திற்காக போராட்டம...\nமகாதீர், அன்வாருக்கு முழு ஆதரவு- டான்ஶ்ரீ கேவியஸ்\nநான்கு முனை போட்டியில் கேமரன் மலை இடைத் தேர்தல்\nஅம்னோ எவ்வளவு பட்டாலும் திருந்தாது- டத்தோ மோகன்\nகேமரன் மலை: மஇகாவிடமிருந்து தட்டி பறிக்கிறது அம்னோ\nமாமன்னர் பதவியிலிருந்து விலகினார் சுல்தான் முகமட் வி\nநான் போட்டியிடுவதால் மஇகா வேட்பாளரை களமிறக்க தேமு ...\nகேமரன் மலையில் போட்டியிடுகிறேன்- டான்ஸ்ரீ கேவியஸ் ...\nபயணிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்ததாலேயே இதிஎஸ் சே...\nசிகரெட் புகைத்தால் முதற்கட்டமாக வெ.500 அபராதம்- சு...\nடெலிகோம் சேவை மையம் மீண்டும் செயல்பட கேசவன் களமிறங...\nகேமரன் மலை: பக்காத்தான் வேட்பாளரானார் மனோகரன்\nஎரிபொருளின் புதிய விலை நாளை அறிவிக்கப்படலாம்\nகேமரன் மலை தேமுவின் கோட்டை- பேரா ஜசெக\nஅரசாங்கக் குத்தகைகள் கட்சி தொகுதித் தலைவர்களுக்கா\nமாமன்னர் குறித்து பொய்யான தகவல் - கடுமையான நடவடிக...\nவாகன நிறுத்துமிட கட்டண முறை சீராக்கப்பட வேண்ட��ம்- ...\n'புகைக்காதீர்கள்' என சொன்ன பணியாளரை அறைந்த வாடிக்...\n6 மாதங்களுக்கு எச்சரிக்கை மட்டுமே; அபராதம் கிடையாது\n'சட்டத்தை மதிக்கிறோம்; ஆனா சிகரெட்ட விட முடியாது ப...\nஉணவகங்களில் புகை பிடிப்பதற்கு தடை; நள்ளிரவு முதல் ...\n2019: வெற்றிகரமான மலேசியாவுக்கு அடித்தளமாக அமையட்ட...\nபெட்ரோல் விலையில் மாற்றம் இல்லை - நிதியமைச்சர்\n2018: உலகையே திரும்பி பார்க்க வைத்த மலேசிய தேர்தல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2021-05-07T00:01:40Z", "digest": "sha1:FT2G2QT3646HRQXW3MJVR2FU6HTIPWY3", "length": 7784, "nlines": 161, "source_domain": "www.tamilstar.com", "title": "விஜய் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த லோகேஷ் கனகராஜ் - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nவிஜய் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த லோகேஷ் கனகராஜ்\nNews Tamil News சினிமா செய்திகள்\nவிஜய் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த லோகேஷ் கனகராஜ்\nவிஜய் நடித்து, லோகேஷ் கனகராஜ் டைரக்டு செய்துள்ள ‘மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்தது. படம், கடந்த வாரம் திரைக்கு வர இருந்தது. கொரோனா வைரஸ் காரணமாக இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போடப்பட்டு இருக்கிறது.\nரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘மாஸ்டர்’ படத்தில், விஜய் ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்து இருக்கிறார். வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார். இவர்களுடன் சாந்தனு, ஆண்ட்ரியா ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் நடித்து இருக்கிறார்கள்.\nபடம் எப்போது திரைக்கு வரும் என்று ரசிகர்கள் கேள்வி விடுத்துள்ளனர். ‘‘முதலில் உயிர் பிழைப்போம்.. அப்புறம் கொண்டாடலாம்’’ என்று டைரக்டர் லோகேஷ் கனகராஜ், ரசிகர்களை சமாதானப்படுத்தி இருக்கிறார். ‘‘விரைவில் படம் திரைக்கு வரும். அதுவரை பொறுத்திரு��்கள்’’ என்றும் அவர் வேண்டுகோள் விடுத்து இருக்கிறார்.\nஅவரிடம், ‘‘படம் வரட்டும்.. அதை வேறு லெவலுக்கு கொண்டு போய் விடலாம்’’ என்று ரசிகர்கள் உத்தரவாதம் அளித்து இருக்கிறார்கள்.\nஇரண்டு பேரை வைத்து படம் எடுப்பது சுமையாக இல்லை – இயக்குனர் ராஜமவுலி\nவிரைவில் இன்று நேற்று நாளை 2\nஉயர் அதிகாரியின் மகள் கடத்தப்பட அவரை போலீஸ் அதிகாரி வரலட்சுமி காப்பாற்றுகிறார். அதன் தொடர்ச்சியாக பெண் கடத்தல்...\nகனடியப் பெண்களில் நாடு தழுவிய உயர்சாதனை படைத்த ஈழப்பெண்\nஇந்தியாவுக்கு அவசர மருத்துவ உதவி பொருட்களை அனுப்பியது கனடா\n12 வயதிற்கு மேற்பட்டவர்கள் Pfizer தடுப்பூசியை பெற Health கனடா அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vativamaippu.com/?D=104709", "date_download": "2021-05-07T00:47:13Z", "digest": "sha1:35XDY4RZ67CW3AKJ7EHJ5PA6U4RZ5BVD", "length": 8584, "nlines": 67, "source_domain": "www.vativamaippu.com", "title": " Van Gogh காதணிகள் - வடிவமைப்பு இதழ்", "raw_content": "\nவியாழன் 6 மே 2021\nகாதணிகள் வான் கோக் வரைந்த ப்ளாசமில் பாதாம் மரத்தால் ஈர்க்கப்பட்ட காதணிகள். கிளைகளின் சுவையானது நுட்பமான கார்டியர் வகை சங்கிலிகளால் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது, அவை கிளைகளைப் போலவே, காற்றோடு வீசுகின்றன. வெவ்வேறு ரத்தினக் கற்களின் பல்வேறு நிழல்கள், கிட்டத்தட்ட வெள்ளை நிறத்தில் இருந்து மிகவும் தீவிரமான இளஞ்சிவப்பு வரை, பூக்களின் நிழல்களைக் குறிக்கின்றன. பூக்கும் பூக்களின் கொத்து வெவ்வேறு கட்ஸ்டோன்களால் குறிப்பிடப்படுகிறது. 18 கே தங்கம், இளஞ்சிவப்பு வைரங்கள், மோர்கனைட்டுகள், இளஞ்சிவப்பு சபையர்கள் மற்றும் இளஞ்சிவப்பு டூர்மேலைன்கள் ஆகியவற்றால் தயாரிக்கப்படுகிறது. மெருகூட்டப்பட்ட மற்றும் கடினமான பூச்சு. மிகவும் ஒளி மற்றும் சரியான பொருத்தம். இது ஒரு நகை வடிவத்தில் வசந்தத்தின் வருகை.\nதிட்டத்தின் பெயர் : Van Gogh , வடிவமைப்பாளர்களின் பெயர் : Larissa Moraes, வாடிக்கையாளரின் பெயர் : LARISSA MORAES.\nஇந்த சிறந்த வடிவமைப்பு லைட்டிங் தயாரிப்புகள் மற்றும் லைட்டிங் திட்டங்கள் வடிவமைப்பு போட்டியில் தங்க வடிவமைப்பு விருதை வென்றது.\tபல புதிய, புதுமையான, அசல் மற்றும் ஆக்கபூர்வமான லைட்டிங் தயாரிப்புகள் மற்றும் லைட்டிங் திட்டங்கள் வடிவமைப்பு படைப்புகளைக் கண்டறிய தங்க விருது பெற்ற வடிவமைப்பாளர்களின் வடிவமைப்பு இலாகாவை நீங்கள் நிச்சயமாக பார்க���க வேண்டும்.\nஇந்த வடிவமைப்பைப் பற்றி மேலும் அறிக\nஅற்புதமான வடிவமைப்பு. நல்ல வடிவமைப்பு. சிறந்த வடிவமைப்பு.\nசெவ்வாய் 4 மே 2021\nநல்ல வடிவமைப்புகள் சமுதாயத்திற்கு மதிப்பை உருவாக்குகின்றன. வடிவமைப்பில் சிறந்து விளங்கும் ஒரு சிறப்பு வடிவமைப்பு திட்டத்தை தினமும் நாங்கள் இடம்பெறுகிறோம். இன்று, ஒரு விருது வென்ற வடிவமைப்பை நேர்மறையான வித்தியாசத்தை வெளிப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். நாங்கள் தினமும் மிகச் சிறந்த மற்றும் எழுச்சியூட்டும் வடிவமைப்புகளைக் காண்பிப்போம். உலகெங்கிலும் உள்ள சிறந்த வடிவமைப்பாளர்களிடமிருந்து புதிய நல்ல வடிவமைப்பு தயாரிப்புகள் மற்றும் திட்டங்களை அனுபவிக்க தினமும் எங்களைச் சந்திப்பதை உறுதிசெய்க.\nநகைகள், கண்ணாடிகள் மற்றும் கடிகார வடிவமைப்பு\nஇந்த வடிவமைப்பைப் பற்றி மேலும் அறிக\nThe Float ரியல் எஸ்டேட் நிறுவனம் வியாழன் 6 மே\nOr2 ஃபோட்டோக்ரோமிக் விதான அமைப்பு புதன் 5 மே\nEye of Ra' பொது நகர்ப்புற கலை தளபாடங்கள் செவ்வாய் 4 மே\nநீங்கள் ஒரு வடிவமைப்பாளர், கலைஞர், கட்டிடக் கலைஞர், புதுமைப்பித்தன் அல்லது பிராண்ட் மேலாளரா பகிர்வதற்கு உங்களிடம் ஏதேனும் நல்ல வடிவமைப்புகள் உள்ளதா பகிர்வதற்கு உங்களிடம் ஏதேனும் நல்ல வடிவமைப்புகள் உள்ளதா உலகளவில் வடிவமைப்பாளர்கள், கலைஞர்கள், கட்டட வடிவமைப்பாளர்கள், கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் பிராண்டுகளிலிருந்து அசல் மற்றும் ஆக்கபூர்வமான வடிவமைப்புகளை வெளியிடுவதில் நாங்கள் மிகவும் ஆர்வமாக உள்ளோம். உங்கள் வடிவமைப்புகளை இன்று வெளியிடவும்.\nஅன்றைய வடிவமைப்பு நேர்காணல் வியாழன் 6 மே\nஅன்றைய வடிவமைப்பு புராணக்கதை புதன் 5 மே\nஅன்றைய வடிவமைப்பு செவ்வாய் 4 மே\nஅன்றைய வடிவமைப்பாளர் திங்கள் 3 மே\nஅன்றைய வடிவமைப்பு குழு ஞாயிறு 2 மே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2020/12/blog-post_73.html", "date_download": "2021-05-07T00:33:32Z", "digest": "sha1:RRZLU4ZXOGSDFA7SXLZB23HVR4OJVCH5", "length": 8901, "nlines": 90, "source_domain": "www.yarlexpress.com", "title": "யாழ். மாநகர சபையின் பட்ஜெட்டும் வாக்கெடுப்பில் தோல்வி! \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nயாழ். மாநகர சபையின் பட்ஜெட்டும் வாக்கெடுப்பில் தோல்வி\nயாழ்ப்பாணம் மாநகர சபையின் 2021 ஆம் ஆண்டிக்கான வரவு - செலவுத் திட்டம் 03 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டிருக்கிறது. வரவு - செலவுத் திட்டத்துக்க...\nயாழ்ப்பாணம் மாநகர சபையின் 2021 ஆம் ஆண்டிக்கான வரவு - செலவுத் திட்டம் 03 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டிருக்கிறது.\nவரவு - செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 21 வாக்குகளும், எதிராக 24 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்கு உட்பட்ட யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2021 ஆம் ஆண்டிக்கான வரவு - செலவுத் திட்டம், மாநகர முதல்வர் இம்மானுவல் ஆனோல்டினால் கடந்த 2 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. அந்தச் சமர்ப்பணத்தின் போது, அதற்கு ஆதரவாக 19 வாக்குகளும், எதிராக 24 வாக்குகளும் அளிக்கப்பட்டு முதலாவது வாசிப்பு தோற்கடிக்கப்பட்டிருந்தது.\nமாநகர முதல்வர் இம்மானுவல் ஆனோல்ட் தலைமையில் இன்று காலை இடம்பெற்ற விசேட பொதுக் கூட்டத்தில் வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு இடம்பெற்றது.\nஇதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 16 உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக் கட்சியின் 03 உறுப்பினர்களும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் உறுப்பினர் ஒருவரும், ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் ஒருவரும் வரவு - செலவுத் திட்டத்திக்கு ஆதரவாக வாக்களித்தனர்.\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 13 உறுப்பினர்களும், ஈழ மக்கள் ஜன நாயகக் கட்சியின் 10 உறுப்பினர்களும், ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் ஒருவரும் வரவு - செலவுத் திட்டத்திக்கு எதிராக வாக்களித்தனர்.\nவணிகம் / பொருளாதாரம் (7)\nமாநகர காவல்படையினரின் சீருடை பறிமுதல் - மாநகரசபைக்கு ஆப்பு வைத்த பொலீஸார் ..\nBREAKING NEWS :- ஊரடங்கு தொடர்பில் இராணுவத் தளபதி சற்றுமுன் வெளியிட்ட அறிவிப்பு\nஅத்தியாவசிய சேவைக்கு மாத்திரமே அனுமதி\nYarl Express: யாழ். மாநகர சபையின் பட்ஜெட்டும் வாக்கெடுப்பில் தோல்வி\nயாழ். மாநகர சபையின் பட்ஜெட்டும் வாக்கெடுப்பில் தோல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://bibleall.net/index.php?version=5&book_num=13&chapter=7&verse=", "date_download": "2021-05-07T00:48:45Z", "digest": "sha1:T3BKXQL4IVAT6RWF7Y27Z3FLQZMEJYAU", "length": 22317, "nlines": 96, "source_domain": "bibleall.net", "title": "BibleAll | Tamil Bible | 1 நாளாகமம் | 7", "raw_content": "\nSelect Book Name ஆதியாகமம் யாத்திராகமம் லேவியராகமம் எண்ணாகமம் உபாகமம் யோசுவா ரூத் 1 சாமுவேல் 2 சாமுவேல் 1 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 1 நாளாகமம் 2 நாளாகமம் எஸ்றா நெகேமியா எஸ்தர் யோபு சங்கீதம் நீதிமொழிகள் பிரசங்கி உன்னதப்பாட்டு ஏசாயா எரேமியா புலம்பல் எசேக்கியேல் தானியேல் ஓசியா யோவேல் ஆமோஸ் ஒபதியா யோனா மீகா நாகூம் ஆபகூக் செப்பனியா ஆகாய் சகரியா மல்கியா மத்தேயு மாற்கு லூக்கா யோவான் அப்போஸ்தலர் ரோமர் 1 கொரி 2 கொரி கலாத்தியர் எபேசியர் பிலிப்பியர் கொலோசெயர் 1 தெசலோனிக்கேயர் 2 தெசலோனிக்கேயர் 1 தீமோத்தேயு 2 தீமோத்தேயு தீத்து பிலேமோன் எபிரேயர் யாக்கோபு 1 பேதுரு 2 பேதுரு 1 யோவான் 2 யோவான் 3 யோவான் யூதா வெளிப்படுத்தல்\n1 நாளாகமம் : 7\nஇசக்காருடைய குமாரர், தோலா, பூவா, யசுப், சிம்ரோன் என்னும் நாலு பேர்.\nதோலாவின் குமாரர், ஊசி, ரெப்பாயா, யெரியேல், யக்மாயி, இப்சாம், சாமுவேல் என்பவர்கள்; தோலாவுக்குப் பிறந்த இவர்கள் தங்கள் பிதாக்கள் வம்சத்தலைவரும் தங்கள் சந்ததிகளிலே பராக்கிரமசாலிகளுமாயிருந்தார்கள்; தாவீதின் நாட்களில் அவர்கள் தொகை இருபதினாயிரத்து அறுநூறு பேராயிருந்தது.\nஊசியின் குமாரரில் ஒருவன் இஸ்ரகியா; இஸ்ரகியாவின் குமாரர், மிகாயேல், ஒபதியா, யோவேல், இஷியா என்பவர்கள்; இவர்கள் ஐந்துபேரும் தலைவராயிருந்தார்கள்.\nஅவர்கள் பிதாக்கள் வம்சத்தாரான அவர்கள் சந்ததிகளில் யுத்தமனுஷரான கூட்டங்கள் முப்பத்தாறாயிரம்பேர் அவர்களோடிருந்தார்கள்; அவர்களுக்கு அநேகம் பெண்ஜாதிகளும் பிள்ளைகளும் இருந்தார்கள்.\nஇசக்காருடைய மற்ற எல்லா வம்சங்களிலும் அவர்களுக்குச் சகோதரரான பராக்கிரமசாலிகள் தங்கள் வம்ச அட்டவணைகளின்படியெல்லாம் எண்பத்தேழாயிரம்பேராயிருந்தார்கள்.\nபென்யமீன் குமாரர், பேலா, பெகேர், யெதியாயேல் என்னும் மூன்றுபேர்.\nபேலாவின் குமாரர், எஸ்போன், ஊசி, ஊசியேல், யெரிமோத், இரி என்பவர்கள்; இவர்கள் தங்கள் பிதாக்களின் வம்சத்தில் பராக்கிரமசாலிகளான ஐந்து தலைவராயிருந்தார்கள்; இவர்கள் வம்ச அட்டவணைக்குள்ளானவர்கள் இருபத்தீராயிரத்து முப்பத்துநாலுபேர்.\nபெகேரின் குமாரர், செமிரா, யோவாஸ், எலியேசர், எலியோனாய், உம்ரி, யெரிமோத், அபியா, ஆனதோத், அலமேத் என்பவர்கள்; இவர்கள் எல்லாரும் பெகேரின் குமாரர்.\nதங்கள் பிதாக்களி��் வம்சத்தலைவராகிய அவர்கள் சந்ததிகளின் அட்டவணைக்குள்ளான பராக்கிரமசாலிகள் இருபதினாயிரத்து இருநூறுபேர்.\nயெதியாயேலின் குமாரரில் ஒருவன் பில்கான்; பில்கானின் குமாரர், ஏயூஷ், பென்யமீன், ஏகூத், கெனானா, சேத்தான், தர்ஷீஸ், அகிஷாகார் என்பவர்கள்.\nயெதியாயேலின் குமாரராகிய இவர்கள் எல்லாரும் தங்கள் பிதாக்கள் வம்சத்தாரில் தலைவராயிருந்தார்கள்; இவர்களில் யுத்தத்திற்குப் போகத்தக்க சேவகரான பராக்கிரமசாலிகள் பதினேழாயிரத்து இருநூறுபேர்.\nசுப்பீமும், உப்பீமும் ஈரின் குமாரர், ஊசிம் ஆகேரின் குமாரரில் ஒருவன்.\nநப்தலியின் குமாரரான பில்காளின் பேரன்மார், யாத்தியேல், கூனி, எத்சேர், சல்லூம் என்பவர்கள்.\nமனாசேயின் புத்திரரில் ஒருவன் குலஸ்திரீயினிடத்தில் பிறந்த அஸ்ரியேல்; அவன் மறுமனையாட்டியாகிய அராமிய ஸ்திரீயினிடத்தில் கீலேயாத்தின் தகப்பனாகிய மாகீர் பிறந்தான்.\nமாகீர் மாக்காள் என்னும் பேருள்ள உப்பீம் சுப்பீம் என்பவர்களின் சகோதரியை விவாகம் பண்ணினான்; மனாசேயின் இரண்டாம் குமாரன் செலோப்பியாத்; செலோப்பியாத்திற்குக் குமாரத்திகள் இருந்தார்கள்.\nமாகீரின் பெண்ஜாதியாகிய மாக்காள் ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்குப் பேரேஸ் என்று பேரிட்டாள்; இவன் சகோதரன் பேர் சேரேஸ்; இவனுடைய குமாரர் ஊலாம், ரேகேம் என்பவர்கள்.\nஊலாமின் குமாரரில் ஒருவன் பேதான்; இவர்கள் மனாசேயின் குமாரனாகிய மாகீருக்குப் பிறந்த கீலேயாத் புத்திரர்.\nஇவன் சகோதரியாகிய அம்மொளெகேத் இஸ்கோதையும் அபியேசரையும் மாகலாவையும் பெற்றாள்.\nசெமிதாவின் குமாரர், அகியான், சேகேம், லிக்கே, அனியாம் என்பவர்கள்.\nஎப்பிராயீமின் குமாரரில் ஒருவன் சுத்தெலாக்; இவனுடைய குமாரன் பேரேத்; இவனுடைய குமாரன் தாகாத்; இவனுடைய குமாரன் எலாதா; இவனுடைய குமாரன் தாகாத்.\nஇவனுடைய குமாரன் சாபாத்; இவனுடைய குமாரர் சுத்தெலாக், எத்சேர், எலியாத்; இவர்கள் தேசத்தில் பிறந்த காத்தூராருடைய ஆடுமாடுகளைப் பிடிக்கப்போனபடியால் அவர்கள் இவர்களைக் கொன்றுபோட்டார்கள்.\nஅவர்கள் தகப்பனாகிய எப்பிராயீம் அநேகநாள் துக்கங்கொண்டாடுகையில், அவன் சகோதரர் அவனுக்கு ஆறுதல் சொல்லவந்தார்கள்.\nபின்பு அவன் தன் பெண்ஜாதியினிடத்தில் பிரவேசித்ததினால், அவள் கர்ப்பந்தரித்து ஒரு குமாரனைப் பெற்றாள்; அவன், தன் குடும்பத்து��்குத் தீங்கு உண்டானதினால், இவனுக்குப் பெரீயா என்று பேரிட்டான்.\nஇவனுடைய குமாரத்தியாகிய சேராள் கீழ்ப்புறமும் மேற்புறமுமான பெத்தோரோனையும், ஊசேன்சேராவையும் கட்டினவள்.\nஅவனுடைய குமாரர், ரேப்பாக், ரேசேப் என்பவர்கள்; இவனுடைய குமாரன் தேலாக்; இவனுடைய குமாரன் தாகான்.\nஇவனுடைய குமாரன் லாதான்; இவனுடைய குமாரன் அம்மீயூத்; இவனுடைய குமாரன் எலிஷாமா.\nஇவனுடைய குமாரன் நூன்; இவனுடைய குமாரன் யோசுவா.\nஅவர்களுடைய காணியாட்சியும், வாசஸ்தலங்களும், கிழக்கேயிருக்கிற நாரானும், மேற்கேயிருக்கிற கேசேரும் அதின் கிராமங்களும், பெத்தேலும் அதின் கிராமங்களும், சீகேமும் அதின் கிராமங்களும், காசாமட்டுக்குமுள்ள அதின் கிராமங்களும்,\nமனாசே புத்திரரின் பக்கத்திலே பெத்செயானும் அதின் கிராமங்களும், தானாகும் அதின் கிராமங்களும், மெகிதோவும் அதின் கிராமங்களும், தோரும் அதின் கிராமங்களுமே; இவ்விடங்களில் இஸ்ரவேலின் குமாரனாகிய யோசேப்பின் புத்திரர் குடியிருந்தார்கள்.\nஆசேரின் குமாரர், இம்னா, இஸ்வா, இஸ்வி, பெரீயா என்பவர்கள்; இவர்கள் சகோதரி சேராள்.\nபெரீயாவின் குமாரர், ஏபேர், மல்கியேல் என்பவர்கள்; இவன் பிர்சாவீத்தின் தகப்பன்.\nஏபேர் யப்லேத்தையும், சோமேரையும், ஒத்தாமையும், இவர்கள் சகோதரியாகிய சூகாளையும் பெற்றான்.\nயப்லேத்தின் குமாரர், பாசாக், பிம்மால், அஸ்வாத் என்பவர்கள்; இவர்களே யப்லேத்தின் குமாரர்.\nசோமேரின் குமாரர் அகி, ரோகா, எகூபா, ஆராம் என்பவர்கள்.\nஅவன் சகோதரனாகிய ஏலேமின் குமாரர் சோபாக், இம்னா, சேலேஸ், ஆமால் என்பவர்கள்.\nசோபாக்கின் குமாரர் சூவாக், அர்னெப்பர், சூகால், பேரி, இம்ரா,\nபேசேர், ஓத், சம்மா, சில்சா, இத்ரான், பேரா என்பவர்கள்.\nயெத்தேரின் குமாரர், எப்புனே, பிஸ்பா, ஆரா என்பவர்கள்.\nஉல்லாவின் குமாரர், ஆராக், அன்னியேல், ரித்சியா என்பவர்கள்.\nஆசேரின் புத்திரராகிய இவர்கள் எல்லாரும் தங்கள் பிதாக்களின் வம்சத்தலைவரும் தெரிந்துகொள்ளப்பட்ட பராக்கிரமசாலிகளும், பிரபுக்களின் தலைவருமாயிருந்தார்கள்; அவர்கள் வம்ச அட்டவணைகளில் யுத்தத்திற்குப் போகத்தக்க சேவகரின் இலக்கம் இருபத்தாறாயிரம்பேர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/228795", "date_download": "2021-05-07T01:22:34Z", "digest": "sha1:BGJC7NO4F2PKQNX7LGKCYM7NHLCKX7J6", "length": 7028, "nlines": 89, "source_domain": "selliyal.com", "title": "மலேசியாவில் மைக்ரோசாப்ட் தரவு மையம் – பயிற்சிகளும் வழங்குகிறது | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome வணிகம்/தொழில் நுட்பம் மலேசியாவில் மைக்ரோசாப்ட் தரவு மையம் – பயிற்சிகளும் வழங்குகிறது\nமலேசியாவில் மைக்ரோசாப்ட் தரவு மையம் – பயிற்சிகளும் வழங்குகிறது\nபுத்ரா ஜெயா : உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசாப்ட் மலேசியாவில் தனது வணிகத்தை மேலும் விரிவாக்கம் செய்கிறது.\nமலேசியாவில் தரவுத் தளம் (டாத்தா சென்டர்- Data center) ஒன்றை மைக்ரோசாப்ட் அமைக்கிறது. அதைத் தொடர்ந்து “பெர்சாமா மலேசியா” (Bersama Malaysia) என்ற திட்டத்தின் கீழ் அரசாங்க அமைப்புகளுடன் இணைந்து எதிர்வரும் 2023-ஆம் ஆண்டுக்குள்ளாக சுமார் 1 மில்லியனுக்கும் மேற்பட்டவர்களுக்கு தொழில் பயிற்சித் திட்டங்களையும் வழங்கவிருக்கிறது.\nஇதன்மூலம், மலேசியர்களுக்கும், வணிகங்களுக்கும் கூடுதலான பொருளாதார வாய்ப்புகள் ஏற்படும்.\nஇந்த கூட்டுப் பயிற்சியில் மனிதவள மேம்பாட்டு நிதி வாரியம் (எச்ஆர்டிஎஃப்), மலேசிய அரசாங்க சேவையின் நவீன மயமாக்கல், நிருவாகம் மற்றும் திட்டமிடல் பிரிவு (மாம்பு), பெட்ரோனாஸ் போன்ற அரசு இலாகாக்களும் இந்தத் திட்டத்தில் இணைகின்றன.\nமேலும் சில அனைத்துலக தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இணைந்து மைக்ரோசோப்ட் தனது மலேசியத் திட்டங்களை செயல்படுத்தும்.\nஇதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சி கடந்த திங்கட்கிழமை ஏப்ரல் 21-ஆம் தேதி பிரதமர் மொகிதின் யாசின் முன்னிலையில் நடைபெற்றது.\nPrevious articleகெகெஎம்எம்: தலைவர்களின் சமூகப் பக்கங்களை தொடர அறிவுறுத்தவில்லை\nNext article“அடங்காதே” – ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியாகிறது\nபில் கேட்ஸ் விவாகரத்து : சொத்துகளை எப்படிப் பிரிப்பார்கள்\nஇந்தியாவிலிருந்து நாட்டிற்குள் நுழைவதை கட்டுப்படுத்துவது இனவெறி முடிவு அல்ல\n67 விழுக்காட்டினர் மொகிதின் யாசின் தலைமையில் திருப்தி\nபிபைசர், 26 பில்லியன் டாலர்களுக்கு கொவிட் தடுப்பூசிகளை விற்கும்\nபில் கேட்ஸ் விவாகரத்து : சொத்துகளை எப்படிப் பிரிப்பார்கள்\nதிமுக அமைச்சரவை : புதிய அமைச்சர்கள் பட்டியல்\nதிமுக அமைச்சரவை : அன்பில் மகேஷ் பள்ளிக் கல்வி அமைச்சர்\nபிரசாந்த் கிஷோர் : இந்திய சட்டமன்றத் தேர்தல் வெற்றிகளின் கதாநாயகன்\nபில் கேட்ஸ் விவாகரத்து : சொத்துகளை எப்படிப் பிரிப்பார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/simran-acting-as-a-villan-character-in-sivakarthikeyan-movie/", "date_download": "2021-05-07T01:10:50Z", "digest": "sha1:KT7PLULQOVACZKFHIGOGCN4MZRILUQPZ", "length": 7152, "nlines": 95, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "விஜய்யின் ஃபேவரட் ஹீரோயின்..! சிவகார்த்திகேயனுக்கு வில்லியானார்- யார் அந்த நடிகை ? - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் விஜய்யின் ஃபேவரட் ஹீரோயின்.. சிவகார்த்திகேயனுக்கு வில்லியானார்- யார் அந்த நடிகை \n சிவகார்த்திகேயனுக்கு வில்லியானார்- யார் அந்த நடிகை \nதன்னுடைய கடின உழைப்பின் மூலம் தற்போது அவர் இருக்கும் இடத்தைப் பிடித்தவர் சிவா கார்த்திகேயன். தமிழ் சினிமாவில் தற்போது தனக்கென ஒரு இடத்தையும், தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையும் பிடித்து விட்டார் சிவா.\nசில படங்களே நடித்திருந்தாலும் அனைத்து படங்களிலும் தனது மார்க்கெட்டை தவறாமல் கைக்குள் போட்டு வைத்துள்ளார். தற்போது இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.\nஇதையும் படிங்க: அதே கந்து வட்டி கும்பலால் அஜித்தும் மிரட்டப்பட்டார் \n‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’ என தற்போது மூன்றாவது முறையாக இந்த கூட்டணி சேர்ந்துள்ளது. இந்த படமும் முந்தைய படங்களைப் போலவே இதுவும் செம்ம காமெடி படமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.\nஇந்த படத்தில், விஜயின் முன்னாள் மற்றும் ஃபேவர்ட நாயகியான சிம்ரன் சிவாவுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். அதே போல் நடிகர் நெப்போலியன் சிவாவிற்கு அப்பாவாக நடிக்கிறார்.\nஇந்த படத்தினை 24 ஏ.எம் ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது. மேலும், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சிவாகார்த்தியின் பிறந்த நாளான பிப்.17ஆம் தேதி வெள்யிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது\nPrevious articleஅதே கந்து வட்டி கும்பலால் அஜித்தும் மிரட்டப்பட்டார் \nNext articleஎனக்கு ஜூலிய ரொம்ப பிடிக்கும், அவர் செய்த தவறு அதுதான்-பிரபல காமெடி நடிகர் \n4 சிறுவர்கள் உட்பட அஸ்வின் குடும்பத்தில் 10 பேருக்கு கொரோனா தொற்று. (அவர் பயந்த மாதிரியே ஆகிடிச்சே)\nகுஷி பட ஜோதிகா போல ட்ரான்ஸ்பிரென்ட் உடையில் புதிய முல்லை நடத்திய போட்டோ ஷூட்.\nவரும் தேர்தலில் விஜய்யின் மக்கள் இயக்கம் எடப்பாடிக்கு ஆதரவா \nநான் இதற்க்காகத்தான் பிக் பாஸ் வந்தேன். யாஷிகா சொன்ன அதிரடி காரணம் என்ன தெரியுமா..\nநடு ரோட்டில் அப்பளம் விற்கும் பிரபல நடிகர் அதிர்ச்சியில் ரசிகர்கள் – புகைப்படம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithisaral.in/2021/05/04/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-2/", "date_download": "2021-05-07T01:36:12Z", "digest": "sha1:FM4KKA6EEYOVIMN3HHONUENVMYEIQ2BH", "length": 9068, "nlines": 137, "source_domain": "www.seithisaral.in", "title": "மகாலட்சுமி குடியிருக்கும் 108 இடங்கள் - Seithi Saral", "raw_content": "\nமகாலட்சுமி குடியிருக்கும் 108 இடங்கள்\nமகாலட்சுமி குடியிருக்கும் 108 இடங்கள்\nமகாலட்சுமி அமிர்தத்திற்காக பாற்கடலை கடைந்தபோது தோன்றினாள். அவள் மகாவிஷ்ணுவின் இதயத்தில் வாசம் செய்கிறாள்.\nஆனால் மகாலட்சுமி மொத்தம் 108 இடங்களில் வாசம் செய்வதாக ஐதீகம். அதாவது அருகம்புல், அகில், அட்சதை, அத்திக் கட்டை, அகத்திக்கீரை, அவல், அரச சமித்து, ஆலம் விழுது, ஆல அடிமண், ஆகாச கருடன்,ஆணின் நெற்றி, இலந்தை, எலுமிச்சை, எள், உப்பு, கண்ணாடி, கஸ்தூரி, கடுக்காய், கடல்நுரை, கலசம், கமண்டல நீர், களாக்காய், காய்ச்சிய பால், காதோலை, காராம்பசு நெய், காசினிக்கீரை, கிரீம், காளைக் கொம்புமான், கீரிப்பிள்ளை, நெல்லி, குங்குலியப் புகை, குளவிக் கூட்டு மண், நெற்றி, கொப்பரைத் தேங்காய், கொம்பரக்கு, நிறைகுடம் கூந்தப்பனை, கோவில் நிலை மண், மாவடு, சந்திரக்காந்தக் கல், சங்கு, சங்குபுஷ்பம், சந்தனம், யானை மணி நாக்கு, மாதுளை, நன்னாரிவேர், சிருக்சுருவம், சோளக்கதிர், சாளக்கிராமம், நாயுருவி, நெற்கதிர், நுனி முடிந்த கூந்தல்,பட்டு, பவளமல்லி, பஞ்சகவ்யம், பாணலிங்கம், பாக்கு,பச்சைக் கற்பூரம், பஞ்சபாத்திரம், பட்டு, பவளமல்லி, பாணலிங்கம், பாக்கு, பச்சை கற்பூரம், பஞ்சபாத்திரம், புனுகு, பாகற்காய்,பசலைக்கீரை, வரகு, பசுநீர்த்தாரை, படிக்காரம், விபூதி, புற்றுத்தேன், பூரண கும்பம், பிரம்பு, பெண்ணின் கழுத்து, பூணூல், ஜெபமாலை, பூலாங்கிழங்கு, பன்றிக் கொம்பு, தங்கம், மலைத்தேன், மூங்கில், மோதகம், மோதிரம்(தந்தம்), வைரம், தர்ப்பை, தையல் இல்லாத புதுத் துணி, தாழம்பூ, துளசி, நண்டுவளை மண், தாமரை, தேவதாரு, வலம்புரி சங்கு, குலைவாழை, வில்வம், வில்வஅடி மண், வெட்டிவேர், வெள்ளி, விளாமிச்ச வேர், விளாம்பழம், ருத்ராட்சம், வெள்ளரிப்பழம், வாசல் நிலை, வெயிலுடன் கூடிய மழை, திருமாங்கலம், தென்னம்பாளை, திருநீற்றுப் பச்சை, தேங்காய்க் கண், யானைக் கொம்பும���், வெற்றிலை மேற்புறம், தாமரை மணி உள்பட 108 இடங்களில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். &தகவல் சக்தி. விண்மணி, போடிநாயக்கனூர்.\nPrevious கொரோனா இரண்டாவது அலை\nNext அழகர்கோவில் பதினெட்டாம்படி கருப்பணசாமி\nமச்ச அவதாரம் எடுத்த நாள்\nமு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை விவரம்\nதூத்துக்குடிக்கு 2 மந்திரிகள்: திருநெல்வேலி, தென்காசி ஏமாற்றம்\nதிருப்பத்தூரில் இறந்த 5 பேர் கொரோனா நோயாளிகள் – மருத்துவ அதிகாரி விளக்கம்\nதுணை தலைவர் விலகல்; கமல் காட்டம்\nதமிழகத்தில் ஒரு நாள் கொரோனா பதிவு 24,898 ஆக உயர்வு\nUma on இராமருக்கு ஓர் அக்காள் உண்டு தெரியுமா\n.. தீராத ஒரு தகராறு….(சொல்லாராய்ச்சி/ சிவகாசி முத்துமணி)\nK.Kumaresan on தென் மாவட்ட மக்கள் வெளியே வர வேண்டாம் ; முதல்வர் எச்சரிக்கை\nPonnu on ஏழைகளுக்கு எட்டிவிடும் மருத்துவப் படிப்பு\nமு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை விவரம்\nதூத்துக்குடிக்கு 2 மந்திரிகள்: திருநெல்வேலி, தென்காசி ஏமாற்றம்\nதிருப்பத்தூரில் இறந்த 5 பேர் கொரோனா நோயாளிகள் – மருத்துவ அதிகாரி விளக்கம்\nதுணை தலைவர் விலகல்; கமல் காட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinibitz.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B9%E0%AE%BE/", "date_download": "2021-05-07T01:46:30Z", "digest": "sha1:VWC4ETKG74O6KCCXRT35CNEDUCK4UDTG", "length": 12157, "nlines": 70, "source_domain": "www.tamilcinibitz.com", "title": "குறிப்பாக கிரிக்கெட் சஹா சோதனையில் விக்கெட் கீப்பிங் ஒரு சிறப்பு", "raw_content": "முழுமையான செய்தி உலகம் உங்களுக்காக.\nகுறிப்பாக கிரிக்கெட் சஹா சோதனையில் விக்கெட் கீப்பிங் ஒரு சிறப்பு\nஇந்தியா டூர் ஆஃப் ஆஸ்திரேலியா, 2020-21\nஆஸ்திரேலியாவில் சமீபத்தில் முடிவடைந்த டெஸ்ட் தொடரில், இந்தியா 2-1 என்ற கணக்கில் வென்றது, அடிலெய்டில் பகல்-இரவு தொடக்க ஆட்டத்திற்குப் பிறகு சஹா நீக்கப்பட்டார் © கெட்டி\n2010 இல் நாக்பூரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக பேட்ஸ்மேனாக டெஸ்ட் அறிமுகமானார். பத்து ஆண்டுகளுக்குப் பிறகு விருத்திமான் சஹா 38 சோதனைகளில் விளையாடியது, மூன்று நூற்றாண்டுகள் மற்றும் ஐந்து 50 கள் அதன் பெயருடன். பல ஆண்டுகளாக அவர் மிக நீண்ட வடிவத்தில் இந்தியாவுக்கான நம்பர் 1 விக்கெட் கீப்பராக இருந்தார், ஆனால் எங்கோ அவரது கண் இமை அவரது திறமைகளை பெரிய கையுறைகளுடன் பூர்த்தி செய்யவில்லை.\nஆஸ்திரேலியாவில் ���மீபத்தில் முடிவடைந்த தொடர் சோதனைகளில், இந்தியா 2-1 என்ற கணக்கில் வென்றது, அடிலெய்டில் பகல்-இரவு தொடக்க ஆட்டத்திற்குப் பிறகு சஹா நீக்கப்பட்டார். இரண்டாவது இன்னிங்சில் வெட்கக்கேடான 36 உட்பட இரண்டு இன்னிங்ஸ்களிலும் சஹா 9 மற்றும் 4 ஐ மட்டுமே நிர்வகித்தார். அடுத்த மூன்று சோதனைகளில், சீனியர் புரோவை விட ரிஷாப் பந்த் விரும்பப்பட்டார்.\nபந்த் அவரை அணிவகுத்துச் சென்றது ஒரு பின்னடைவுதானா என்று கேட்டபோது, ​​பெங்காலி கோல்கீப்பர் கூறினார்: “இந்த ஒப்பீடுகளை நான் 2018 முதல் கேள்விப்பட்டிருக்கிறேன். எனது வேலையை நான் நம்புகிறேன், பந்த் எப்படி துடிக்கிறான் என்று நான் கவலைப்படவில்லை. இதற்கு நான் விரும்பவில்லை ஸ்டம்புகளுக்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதை அணி நிர்வாகம் தீர்மானிக்க வேண்டும், “என்று சஹா சஹா கூறினார் அவள் அரட்டையின் போது.\nஇருப்பினும், 36 வயதான அவர் அடிலெய்டில் நடந்த முதல் இன்னிங்சில் மிட்செல் ஸ்டார்க்குக்கு எதிராக தனது ஷாட் தேர்வு குறித்து வருத்தப்படுகிறார். “இது வெளியேறியது, நான் தவறான தேர்வு செய்தேன், ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில் நான் எப்போதும் மிட்விக்கெட் வழியாக விளையாடுவேன். அவர் வெளிப்புறத்தை கண்டுபிடித்தது துரதிர்ஷ்டவசமானது. இது எங்களுக்கு ஒரு மோசமான நாள்” என்று சஹா மேலும் கூறினார்.\nஆடம் கில்கிர்ஸ்ட் மற்றும் எம்.எஸ். தோனி ஆகியோருக்குப் பிறகு, விக்கெட் கீப்பர்கள் ஆல்ரவுண்டர்களாக மறுவரையறை செய்யப்பட்டபோது, ​​சிறப்புப் பிரிவின் கீழ் வரும் சிலரில் சஹாவும் ஒருவர். “தவறவிட்ட வாய்ப்பு ஒரு விளையாட்டின் முடிவை மாற்றக்கூடிய சூழ்நிலைகள் உள்ளன. குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பிங் ஒரு சிறப்பு. நான் வரும் ஒவ்வொரு கேட்சையும் பிடிப்பதாக நான் கூறவில்லை, ஆனால் இது ஒரு சிறப்பு நிலை மற்றும் இருக்க வேண்டும் எனவே, ”என்றார் சஹா.\nREAD இந்தியா vs ஆஸ்திரேலியா: எஸ்சிஜி பார்வையாளர்கள் பும்ராவில் இனவெறி துஷ்பிரயோகம் செய்கிறார்கள் & சிராஜ்; குழு புகார் அளிக்கிறது | கிரிக்கெட் செய்திகள்\nதொடரின் போது பல கேட்சுகளை காணவில்லை என்பதால் பந்த் தீக்குளித்துள்ளார். “பார், இப்போது பந்த் அதை வைத்திருக்கிறார், அவர் அதில் பணியாற்றுவார், மேலும் சிறப்பாக முன்னேற முயற்சிப்பார் என்று நான் நம்புகிறேன். குழு நிர்வாகம் அவரை நம்புகிறது, மேலும் அவர்களுக்கு என்ன முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று எனக்குத் தெரியும் – அவருடைய கண் இமை அல்லது பிடிப்பு.” .\nடீம் இந்தியாவைப் போலவே, சஹாவும் நம்பிக்கையை விட்டுவிடக்கூடாது என்று நம்புகிறார். “நாங்கள் சென்னையில் இங்கிலாந்து விளையாடும்போது எனக்கு கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் நான் பயன்படுத்துவேன்” என்று சஹா கூறினார்.\nகாபி நிபுணர். பயண ஆர்வலர். ஆல்கஹால் சுவிசேஷகர். இணைய மேதாவி. பீர் காதலன். டிவி மேவன்.\nஇந்தியா எதிராக ஆஸ்திரேலியா: சிட்னி டெஸ்ட் – வாட்ச் – கிரிக்கெட்டில் தேசிய கீதம் பாடும்போது உணர்ச்சி முகமது சிராஜ் கண்ணீர் விடுகிறார்\nசிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள மூன்றாவது இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்டின் அளவைக் கண்டு முகமது சிராஜ் அதிகமாக...\nமினாமினோ லிவர்பூலை விட்டு சவுத்தாம்ப்டனுக்கு கடன் வாங்கினார்\nபோருசியா மான்செங்கலாட்பாக் 3-2 பேயர்ன் மியூனிக்: முதல் எதிர்வினைகள் மற்றும் அவதானிப்புகள்\nஹூஸ்கா வி பார்சிலோனா, லா லிகா: இறுதி முடிவு 0-1, சாலையில் வெற்றிக்கு பார்சியா கப்பல்\nPrevious articleஅறிக்கை: உறுதிப்படுத்தப்படாத Android சாதனங்கள் இந்த வசந்த காலத்தில் கூகிள் டியோவுக்கான ஆதரவை இழக்கும்\nNext articleடைட்டனின் மிகப்பெரிய கடல் 300 மீட்டருக்கு மேல் ஆழமாக இருக்கலாம்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nடஜன் கணக்கான குடியரசுக் கட்சி செனட்டர்கள் தேர்தல் முடிவை மாற்றியமைக்க தோல்வியுற்ற முயற்சியை மேற்கொள்ளும்போது, ​​விளம்பர ஸ்டண்ட், டீம் பிடென் கூறுகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/55739", "date_download": "2021-05-07T01:37:57Z", "digest": "sha1:T3VYVRUJPWHXYHYKUHI2ZRRF5QOOFT5U", "length": 15521, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "முன்னாள் போராளிகள் விடுதலை | Virakesari.lk", "raw_content": "\nதூரநோக்குடனான திட்டமிடலின்றி நாடு நெருக்கடிக்குள் சிக்கி விட்டது - ரணில் கவலை\nநாளொன்றுக்கு 2 ஆயிரத்தை விட அதிக தொற்றாளர்கள் இனங்காணப்படலாம் : எச்சரிக்கிறது தொற்று நோயியல் பிரிவு\nபிழையான எண்ணங்களை மக்கள் மயப்படுத்த எதிக்கட்சி முயற்சி - மதுர விதானகே\nகிளிநொச்சியில் புதிய கொரோனா சிகிச்சை நிலையம் - நள்ளிரவு முத��் சேவைகள் ஆரம்பம்\nமஹரகம நகரசபைக் கூட்டத்தில் மோதல் - விசாரணைகள் ஆரம்பம்\nஜம்மு-காஷ்மீரில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை\nகொரோனாவால் இலங்கையில் கர்ப்பிணித் தாய் பலி\n இனங்காணப்படும் தொற்றாளர்களை விட இருமடங்கு தொற்றாளர்கள் சமூகத்தில் \nதம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தை மீண்டும் திறக்க தீர்மானம்\nமட்டக்களப்பு வவுணதீவில் இரண்டு பொலிஸார் படுகொலைசெய்யப்பட்டது தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டிருந்த முன்னாள் விடுதலைப்புலிகள் உறுப்பினர் அஜந்தன் மற்றும் கதிர்காமத்தம்பி ராஜகுமாரன் என்பவர் விடுக்கபட்டுள்ளார்.\nகடந்த ஆண்டு கார்த்திகை மாதம் 30ஆம் திகதி வவுணதீவு காவலரணில் காவல் கடமையில் இருந்த இரண்டு பொலிஸார் சுட்டும் வெட்டியும் கொலைசெய்யப்பட்டிருந்தனர்.\nஇது தொடர்பில் முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் அஜந்தன் உட்பட இருவர் கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில் ஒருவர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் அஜந்தன் தொடர்ந்து பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுவந்தனர்.\nஇந்த நிலையில் கடந்த 21ஆம் திகதி மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் உட்பட நாட்டின் பல பாகங்களிலும் நடைபெற்ற குண்டுத்தாக்குதலை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் பிரதான தாக்குதல்தாரியாக அடையாளப்படுத்தப்பட்டிருந்த சஹ்ரானின் வாகன சாரதி கைதுசெய்யப்பட்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் வவுணதீவு தாக்குதலை தாங்களே பொலிஸாரை கொலைசெய்ததாக வாக்குமூலம் வழங்கியுள்ளார்.\nஇதனடிப்படையில் அஜந்தன் மற்றும் கிளிநொச்சியை சேர்நத கதிர்காமத்தம்பி ராஜகுமாரன் ஆகியோரை விடுதலைசெய்யுமாறு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்ததற்கு அமைவாக இன்று காலை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற பதில் நீதிபதி தியாகேஸ்வரன் முன்னிலையில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் ஆஜர்படுத்தப்பட்டார்.\nஇதனைத்தொடர்ந்து பிணையில் விடுவித்த பதில் நீதிவான் எதிர்வரும் 13ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு பணித்தார்.\nஅதனைத்தொடர்ந்து பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் அஜந்தன் அவரது வீட்டுக்கு கொண்டுசெல்லப்பட்டு கையளிக்கப்பட்டதாக அஜந்தனின் மனைவி தெரிவித்தார்.\nவிடுதலை முன்னாள் போராளி விடுதலை புலிகள்\nதூரநோக்குடனான திட்டமிடலின்றி நாடு நெருக்கடிக்குள் சிக்கி விட்டது - ரணில் கவலை\nகொவிட் வைரஸ் தொற்று 2 ஆம் அலை ஏற்பட்ட போது போதிய தடுப்பூசிகளை கொள்வனவு செய்திருந்தால் அச்சம் கொள்ள வேண்டியதில்லை. அல்லது தடுப்பூசி கிடைக்காவிடின் அடுத்த கட்ட சிகிச்சைகளுக்கான இயற்கை சுவாசக் கருவிகள் , அவசர சிகிச்சை பிரிவு கட்டில்கள் மற்றும் ஒக்சிஜன் போன்றவற்றை பெற்றுக்கொண்டிருந்தாலும் ஏற்பட கூடிய உயிரிழப்புகளை தடுத்திருக்கலாம். ஆனால் அரசாங்கத்தின் தூரநோக்குடனான திட்டமிடலின்றி நாடு நெருக்கடிக்குள் சிக்கி விட்டது என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.\n2021-05-07 07:01:30 தூரநோக்கு திட்டமிடல் நாடு\nநாளொன்றுக்கு 2 ஆயிரத்தை விட அதிக தொற்றாளர்கள் இனங்காணப்படலாம் : எச்சரிக்கிறது தொற்று நோயியல் பிரிவு\nநாட்டில் நாளொன்றில் இனங்காணப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கை எதிர்வரும் நாட்களில் 2000 ஐ விட அதிகரிக்கக் கூடும் என்று சுகாதார தரப்பினர் எச்சரித்துள்ளனர். தற்போது நாடளாவிய அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றமையால் மாவட்டங்களிலுள் வைத்தியசாலைகளிலும் கொவிட் தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான பிரிவுகளை பிரத்தியேகமாக ஒதுக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதே வேளை மேல் மாகாணத்தில் மாத்திரம் நாளொன்றுக்கு சுமார் 1200 தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றனர்.\n2021-05-06 22:40:35 2000 தொற்றாளர்கள் இனங்காணல் எச்சரிக்கை\nபிழையான எண்ணங்களை மக்கள் மயப்படுத்த எதிக்கட்சி முயற்சி - மதுர விதானகே\nகொவிட்-19 வைரஸ் பரவல் காரணமாக பாதிப்படைந்துள்ள மக்களை காப்பாற்றுவதுடன் , வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கு அரசாங்கம் முயற்சிகளை எடுத்து வரும் நிலையில், எதிர்தரப்பினர் தங்களுக்கு கிடைக்கப் பெற்றுள்ள பாராளுமன்ற உறுப்புரிமையை பயன்படுத்தி பிழையான எண்ணங்களை மக்கள் மயப்படுத்த முயற்சித்து வருவதாக ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே குற்றஞ்சாட்டினார்.\n2021-05-06 22:36:58 பிழையான எண்ணங்கள் மக்கள் மயப்படுத்தல் எதிக்கட்சி\nகிளிநொச்சியில் புதிய கொரோனா சிகிச்சை நிலையம் - நள்ளிரவு முதல் சேவைகள் ஆரம்பம்\nகிளிநொச்சி மலையாளபுரம் பக��தியில் புதிய கொவிட் 19 மருத்துவ நிலையத்தில் இன்று நள்ளிரவு முதல் சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பிரிவு தெரிவிக்கின்றது.\n2021-05-06 22:36:36 கிளிநொச்சி கொரோனா சிகிச்சை நிலையம் நள்ளிரவு\nமஹரகம நகரசபைக் கூட்டத்தில் மோதல் - விசாரணைகள் ஆரம்பம்\nமஹரகம நகரசபையில் இடம்பெற்றதாக கூறப்படும் மோதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக மாஹரகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.\n2021-05-06 22:35:00 மஹரகம நகரசபை கூட்டம் மோதல் விசாரணைகள் ஆரம்பம்\nதூரநோக்குடனான திட்டமிடலின்றி நாடு நெருக்கடிக்குள் சிக்கி விட்டது - ரணில் கவலை\nஇலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து மேலும் 810 பேர் குணமடைவு..\nபணவீக்கம் ஏப்ரலில் 3.9 சதவீதமாக வீழ்ச்சி: இலங்கை மத்திய வங்கி\nவிலை அதிகரிப்பிற்கு அனுமதியில்லையேல் தட்டுப்பாடு ஏற்படலாம்: லாப் கேஸ் நிறுவனம்\nஸ்புட்னிக் கொரோனா தடுப்பூசி போடும் பணி ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/671472/amp", "date_download": "2021-05-07T00:55:48Z", "digest": "sha1:3IY3KZDPMOWDB6TFQCDPY33SD7DDFA3O", "length": 7565, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "கேரளா- குமரி எல்லையில் 12 சாலைகள் மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு | Dinakaran", "raw_content": "\nகேரளா- குமரி எல்லையில் 12 சாலைகள் மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு\nகுமரி: கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கேரளா- குமரி எல்லையில் 12 சாலைகள் மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். களியக்காவிளையில் 4 சாலைகள், பளுகலில் 3 சாலைகள், கொல்லங்கோட்டில் 3 சாலைகள், அருமனையில் 2 சாலைகள் என மொத்தம் 12 சாலைகளை மூட குமரி ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.\nகோவை, பெங்களூரூ, மங்களூர், நாகர்கோவில், திருச்சிக்கு செல்ல பயணிகள் வராததால் 74 சிறப்பு ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு\nசேலம் அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் இருந்து 29 ரெம்டிசிவிர் மருந்து பாட்டில்களை காணவில்லை என புகார்\nகுளச்சல் மீன்பிடி துறைமுகம் விரிவாக்கம் செய்யப்படுமா\nகொரோனா ஊரடங்கில் நேரத்தை வீணாக்காமல் திருச்செந்தூரில் தவில் அடித்து பயிற்சி பெறும் சிறுவர்கள்\nதமிழகத்தில் மேலும் 24,898 பேருக்கு கொரோனா உறுதி; 195 பேர் உயிரிழப்பு: 21,546 பேர் குணம்\nதமிழகத்தில் தடையற்ற ஆக்சிஜன் சப்ளையை உறுதிப்படுத்த மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிம���்றம் உத்தரவு\nபுதுச்சேரியில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஊக்கத்தொகை: துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்\nநெல்லை அரசு மருத்துவ கல்லூரிக்கு மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து 8,000 லிட்டர் ஆக்சிஜன்\nசாத்தூர் அருகே உள்ள சல்வார்பட்டியில் ஒரு வாரத்தில் 10 பேர் கொரோனாவால் உயிரிழந்ததால் கிராம மக்கள் அச்சம்\nதிருச்சியில் கொரோனா பரவலை தடுக்க காந்தி மார்க்கெட் பொன்மலை ஜி கார்னர் மைதானத்திற்கு மாற்றம்\nமகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து நெல்லை அரசு மருத்துவமனைக்கு 8,000 லிட்டர் திரவ ஆக்சிஜன் வந்தது\nதனியார் மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூல்: உயர்நீதிமன்றம் கருத்து\nஆண் சிறுத்தை உயிர் இழப்பு\n2019ல் பறிமுதல் செய்யப்பட்ட 10 ஆயிரம் லிட்டர் எரிசாராயம் பள்ளத்தில் கொட்டி தீ வைத்து அழிப்பு\nமுழு பாலையும் கறக்காவிட்டால் மாடுகளுக்கு மடி நோய் ஏற்படும்: கால்நடை மருத்துவ ஆராய்ச்சி மையம் தகவல்\nஅமராவதி அணை நீர்மட்டம் குறைகிறது\nஒரத்தநாடு குட்டை குளத்தில் தேங்கி கிடக்கும் பிளாஸ்டிக் குப்பை கழிவுகள்: தொற்றுநோய் பரவும் அபாயம்\nகோடை மழையால் போடி கண்மாய்களுக்கு நீர்வரத்து அதிகரிப்பு\nதாவரவியல் பூங்காவில் பெரிய புல் மைதானம் சீரமைப்பு பணி மும்முரம்\nதிருவாரூர் குளுந்தான் குளத்தில் ஆகாய தாமரை செடிகள் அகற்றப்படுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/do-not-disgrace-me-to-compare-with-rajinii-kamal-angry/", "date_download": "2021-05-07T00:31:19Z", "digest": "sha1:HALQKM3CSLDIYVH522THA2W6RN7H2U7K", "length": 8128, "nlines": 100, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "ரஜினியுடன் ஒப்பிட்டு என்னை கேவலப்படுத்த வேண்டாம்..கமல் ஆவேசம்! - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் ரஜினியுடன் ஒப்பிட்டு என்னை கேவலப்படுத்த வேண்டாம்..கமல் ஆவேசம்\nரஜினியுடன் ஒப்பிட்டு என்னை கேவலப்படுத்த வேண்டாம்..கமல் ஆவேசம்\nதமிழ்த்திரையுலகில் எல்லா காலகட்டத்திலும் இரு நடிகர்களுக்கிடையே போட்டி நிலவுவது வாடிக்கையாகி விட்டது.\nசிம்பு–தனுஷ் என்று இந்த பட்டியல் கொஞ்சம் பெருசு தான்.\nஇதில் இப்போது நாம் பார்க்கப்போவது ரஜினி–கமல் பற்றி தான். ரஜினி “என்வழி தனி வழி” என்பதற்கேற்ப ஆன்மீகம்,கடவுள் பக்தி என்று தனியான ஒரு பாதையில் பயணிப்பவர்.\nகமலோ “கடவுள் இல்லை ��ன்று சொல்லும் நாத்திகவாதி மற்றும் மதங்களையும் சாதிகளையும் ஒழித்திட வேண்டுமென்று” குரல் கொடுப்பவர்.\nஇருவரும் நேரெதிர் திசைகளில் பயணித்தாலும் அவர்களை இவ்வளவு காலமும் இணைத்தது சினிமாவே.\nஇதையும் படிங்க: தம்பி விஜய் நல்ல படங்களில் நடிக்கவேண்டும் – கமல் அறிவுரை \nஇந்நிலையில் தற்போது தமிழக அரசியல் களத்தில் இறங்க இருவருமே முழுவீச்சில் தயாராகி வருகின்றனர். இருவரும் எப்போது வேண்டுமானாலும் அரசியல்கட்சி தொடங்கும் நிலையில் தான் தற்போது உள்ளனர்.இந்நிலையில், ரஜினியுடன் தன்னை ஒப்பிட்டு பேசுவது அருவருப்பாக இருப்பதாக கமல் ஆவேசப்பட்டுள்ளார்.\nமேலும் கூறும்போது நானும் ரஜினியும் நல்ல நண்பர்கள். ரஜினி ஒரு பாதையில் செல்பவர், நான் வேறு பாதையில் செல்பவன். என்னையும் அவரையும் ஒப்பிட்டு பேசுவது அருவருக்கத்தக்கது. நான் அரசியல் களம் இறங்கப் போகிறேன் என்று அவரிடம் தெரிவித்து விட்டேன். என்னுடைய கட்சியில் இளைஞர்களுக்கும், புதியவர்களுக்கும் திறமையானவர்களுக்கும் அதிக வாய்ப்பு கொடுக்கப்படும்.\nநான் ஆரம்பிக்கும் கட்சிக்கு ஆம் ஆத்மி கட்சி போல் மக்களிடமிருந்து நிதி திரட்டப்படும் என்று தெரிவித்துள்ளார்.\nரஜினியுடன் அரசியலில் இணைவீர்களா என்று கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு இணைய வேண்டிய சூழல் ஏற்பட்டால் நிச்சயமாக இணைவேன் என்று பதிலளித்துள்ளார்\nPrevious articleதம்பி விஜய் நல்ல படங்களில் நடிக்கவேண்டும் – கமல் அறிவுரை \nNext articleஇவர்தான் ஓவியாகுக்கு பிடித்த பிக் பாஸ் போட்டியாளரா.\n4 சிறுவர்கள் உட்பட அஸ்வின் குடும்பத்தில் 10 பேருக்கு கொரோனா தொற்று. (அவர் பயந்த மாதிரியே ஆகிடிச்சே)\nகுஷி பட ஜோதிகா போல ட்ரான்ஸ்பிரென்ட் உடையில் புதிய முல்லை நடத்திய போட்டோ ஷூட்.\nவரும் தேர்தலில் விஜய்யின் மக்கள் இயக்கம் எடப்பாடிக்கு ஆதரவா \nஒன்னவர்க்கு ரெண்டு லட்சம் தருவதாக ரேட் பேசிய நபர்..\nபிக் பாஸ் நடிகரை அடித்தால் 2 லட்சம் பரிசு இந்து அமைப்பினர் பரபரப்பு தகவல். இந்து அமைப்பினர் பரபரப்பு தகவல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akattiyan.lk/2021/04/2021_48.html", "date_download": "2021-05-07T00:19:56Z", "digest": "sha1:37PVHB6GJJXEYOISSPABV342N7Y3662L", "length": 8559, "nlines": 74, "source_domain": "www.akattiyan.lk", "title": "2021 சித்திரை மாத ராசி பலன்கள் - கன்னி ராசி - அகத்தியன் | Online", "raw_content": "\nHome ஜோதிடம் 2021 சித்திரை மா�� ராசி பலன்கள் - கன்னி ராசி\n2021 சித்திரை மாத ராசி பலன்கள் - கன்னி ராசி\nகுடும்பத்தில் ஓரளவு மகிழ்ச்சியான சூழ்நிலையே காணப்படும். சுப நிகழ்ச்சிக்கான பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். அடுத்தடுத்து தொடர்ந்து வந்த பிரச்னைகள் தீர்ந்து மனம் நிம்மதியடையும்.\nகாரியங்களில் ஏற்பட்ட தடை, தாமதங்கள் விலகி, காரியங்களில் அனுகூலம் உண்டாகும். தவறான நண்பர்களைப் புரிந்து கொண்டு விலகிவிடுவீர்கள். உங்களைத் தவறாகப் புரிந்துகொண்டவர்கள் தவற்றை உணர்ந்து மீண்டும் வந்து பேசுவார்கள்.\nசகோதர வகையில் அனுகூலப் பலன்கள் ஏற்படும். கணவன் - மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்துவேறுபாடு மறைந்து அந்நியோன்யம் அதிகரிக்கும். உங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைக்கும். ஆனால், உறவினர்கள் வகையில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமை அவசியம். மாதப் பிற்பகுதியில் நண்பர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்க வாய்ப்பு உண்டு. சிலருக்கு பழைய வாகனத்தை மாற்றி, புதிய வாகனம் வாங்கும் வாய்ப்பு உண்டு.\nவியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போல் இருந்தாலும் செலவுகள் அதிகரிக்கும். பணியாளர்கள் ஏனோ தானோ என்று வேலை பார்ப்பார்கள். சற்று கண்டிப்புடன் நடந்துகொள்வது நல்லது. சக வியாபாரிகள் அனுசரணையாக இருப்பார்கள்.\nபெண்களுக்கு, கணவனின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். சிலருக்கு எதிர்பார்த்த சுபச்செய்தி வந்து சேரும். அடகில் வைத்திருந்த நகைகளை மீட்கும் வாய்ப்பும் சிலருக்கு ஏற்படும். தோழிகளின் ஆதரவு உற்சாகம் தரும்.\nஅதிர்ஷ்ட எண்கள்: 4, 7\nசந்திராஷ்டம நாள்: ஏப்ரல் 14; மே 10, 11\nபரிகாரம்: வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தி வழிபாடும், ஞாயிற்றுக்கிழமைகளில் விநாயகர் வழிபாடும் நலம் சேர்க்கும்.\nபாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் மேலதிக வகுப்புகளுக்கு மறு அறிவித்தல் வரை விடுமுறை\nபாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் மேலதிக வகுப்புகளுக்கு மறு அறிவித்தல் வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், நோன்பு பெருநாள், வெசாக் ...\nகொரோனா பரவல் காரணமாக நாட்டின் பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள விடுமுறையானது மேலும் ஒரு வார காலத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ...\nமோட்டார் வாகன ப���க்குவரத்து திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nவாகன போக்குவரத்து திணைக்களத்தின் நாரஹென்பிட்டி மற்றும் வேரஹெர அலுவலகங்கள் ஒரு வாரத்திற்கு மூடப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம த...\nDReAM என அறிமுகப்படுத்தப்பட்டுள்ள முற்பாதுகாப்பு விதிமுறைகளுக்கமைய மதுபான சாலைகளை திறந்து வைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. D – சமூக இடை...\nமுழு அதிகாரம் : அகத்தியன் ஊடக சேவை 2020\nஆசிரியர் பீட தெடர்புகளுக்கு 0779516119\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D?page=2", "date_download": "2021-05-07T01:21:21Z", "digest": "sha1:TDRKNQKTFJRVBPZKMJ7P5OJDHD62DBRI", "length": 6422, "nlines": 92, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: தளபதி விஜய் | Virakesari.lk", "raw_content": "\nநாளொன்றுக்கு 2 ஆயிரத்தை விட அதிக தொற்றாளர்கள் இனங்காணப்படலாம் : எச்சரிக்கிறது தொற்று நோயியல் பிரிவு\nபிழையான எண்ணங்களை மக்கள் மயப்படுத்த எதிக்கட்சி முயற்சி - மதுர விதானகே\nகிளிநொச்சியில் புதிய கொரோனா சிகிச்சை நிலையம் - நள்ளிரவு முதல் சேவைகள் ஆரம்பம்\nமஹரகம நகரசபைக் கூட்டத்தில் மோதல் - விசாரணைகள் ஆரம்பம்\nதனியார் வங்கி உதவி முகாமையாளருக்கு கொரோனா தொற்று ; வங்கிக்கு பூட்டு\nஜம்மு-காஷ்மீரில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை\nகொரோனாவால் இலங்கையில் கர்ப்பிணித் தாய் பலி\n இனங்காணப்படும் தொற்றாளர்களை விட இருமடங்கு தொற்றாளர்கள் சமூகத்தில் \nதம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தை மீண்டும் திறக்க தீர்மானம்\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: தளபதி விஜய்\nசிம்ரனின் நடனத்துடன் \"மாஸ்டர்\" படத்தின் இசை வெளியீட்டு விழா\nதளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகிவரும் திரைப்படம் \"மாஸ்டர்\". இவ் திரைப்படத்தை XB பிலிம் கிரியேட்...\nவிஜய் படத்தின் தலைப்பு அறிவிப்பு\nதளபதி விஜய் நடிப்பில் தயாராகிவரும் படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியிருக்கிறது.\nதளபதி விஜயின் மெழுகு சிலை\nதளபதி விஜய்க்கு தமிழகத்தின் மெழுகு சிலை அமைக்கப்பட்டிருக்கிறது. சுற்றுலா தளங்களில் உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்த சுற...\nதளபதியுடன் மோதும் பொக்ஸ் ஓபிஸ் சுப்பர் ஸ்டார்\nதளபதி விஜய் நடிக்கும் ‘பிகில்’ திரைப்படமும், பொக்ஸ் ஒபீஸ் சுப்பர் ஸ்டார் கார்த்தி நடிக்கும் ‘கைதி ’ திரைப்படமும் தீபாவளி...\nஇலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து மேலும் 810 பேர் குணமடைவு..\nபணவீக்கம் ஏப்ரலில் 3.9 சதவீதமாக வீழ்ச்சி: இலங்கை மத்திய வங்கி\nவிலை அதிகரிப்பிற்கு அனுமதியில்லையேல் தட்டுப்பாடு ஏற்படலாம்: லாப் கேஸ் நிறுவனம்\nஸ்புட்னிக் கொரோனா தடுப்பூசி போடும் பணி ஆரம்பம்\nகளுத்துறை சிறைச்சாலைக்குள் போதைப்பொருட்கள் அடங்கிய பொதிகள் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xavi.wordpress.com/tag/family-kavithai/", "date_download": "2021-05-07T01:29:52Z", "digest": "sha1:5HQUB7W3U4YAT2JM5JJZOUPFI3TDEW5G", "length": 18948, "nlines": 284, "source_domain": "xavi.wordpress.com", "title": "family kavithai |", "raw_content": "எழுத்து எனக்கு இளைப்பாறும் தளம் \nவேப்ப மரக் குச்சி தான்\nவேப்ப மரம் தான் தரும்,\nகுளத்து நீர் குளியல் தான்,\nபேரிடர் காலங்களில், பேரன்பு பகிர்தல்\nமரண இருளின் பள்ளத்தாக்கு – ஒளி தந்த இருளின் காலம் – கோவிட் பயணம்\nஇயேசு கேட்ட கேள்வி : இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 18 : மீட்டிங்\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 17 : எழுத்து முக்கியம்\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 16 : கம்யூனிகேஷன்\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் – 15 – மீண்டும்….\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 14 – கவனித்தல்\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் – மைக்ரோ கவனிப்பு\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 12 : பணியைப் பகிர்.\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 11 :\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 10 – அணி\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 9 – ரிஸ்க்\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 8 – சவால் & ஆபத்து\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 7 – பணியாளர் மேலாண்மை\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 6 : எப்போ முடிப்பீங்க \nவிவசாயம் காப்போம்; விவசாயி காப்போம்\nகுட்டிக் குட்டிக் காதல் கவிதைகள்\nகவிதை : வானத்துப் பறவை\nதன்னம்பிக்கை : கூடா நட்பு கூடாது \nகைபேசி : வியப்பூட்டும் வளர்ச்சியும், ஆபத்தும்\nதாவீது : ஆட்டிடையன் அரசரான கதை \nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\n1. ஆதி மனிதன் ஆதாம் \n இந்த வார்த்தையே நமது மன வெளிகளில் புன்னகை விதைகளைத் தூவும் வல்லமை படைத்தது. எத்தனை பெரிய சோகத்தின் அலைகள் நமது பாலை வெளிகளில் புரண்டு படுத்தாலும், ஒரு சின்னக் குழந்தையின் புன்னகைக் கைக்குட்டை கிடைத்தால் அந்த சோகம் புதையுண்டு போய்விடும். மழலைகளோடு விளையாடுகையில் மலைபோன்ற மன பாரங்கள் கூட பழுத்த இலை போல உதிர்த்து பறந […]\nபேரிடர் காலங்களில், பேரன்பு பகிர்தல்\nபேரிடர் காலங்களில், பேரன்பு பகிர்தல் பல குறியீடுகளை ஆதிகாலக் கிறிஸ்தவர்கள் பயன்படுத்தினார்கள். குறிப்பாக மீன் குறியீடு அந்தக் காலத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு குறியீடாய் இருந்தது. மீன் அடையாளம் வரையப்பட்ட இடங்களை ஆராதனை இடங்களாக ரகசியக் கிறிஸ்தவர்கள் புரிந்து கொண்டார்கள். அத்தகைய இடங்களில் அவர்கள் மறைந்திருந்து நற்செய்தியை அறிவித்தார்கள். பைபிள் […]\nமரண இருளின் பள்ளத்தாக்கு – ஒளி தந்த இருளின் காலம் – கோவிட் பயணம்\nமரணஇருளின்பள்ளத்தாக்கு ஒளி தந்த இருளின் காலம் – கோவிட் பயணம் * நிகழ்வுகளெல்லாம் இறைவனால் நமக்குத் தரப்படுகின்ற அனுபவப் பாடங்கள். சில அனுபவப் பாடங்கள் நம்மை விரக்தியில் எறியும். சில நம்மை குழப்பத்தில் உருட்டும். சில அனுபவங்கள் நம்மை புரியாமைக்குள் நடத்திச் செல்லும். ஆனால் ஒன்று மட்டும் யதார்த்தம், இறைமகன் இயேசுவின் கரம்பிடித்து நடப்பவர்களுக்கு எந்த ஒரு துயரத் […]\nஇயேசு கேட்ட கேள்வி : இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா\nஇவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா யோவான் 14 :9 இந்தக் கேள்வி புதுசா நாம கேள்விப்படுகிற கேள்வி அல்ல. அடிக்கடி நமது வாழ்க்கையில் நாம் சந்திக்கின்ற கேள்வி. “இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா யோவான் 14 :9 இந்தக் கேள்வி புதுசா நாம கேள்விப்படுகிற கேள்வி அல்ல. அடிக்கடி நமது வாழ்க்கையில் நாம் சந்திக்கின்ற கேள்வி. “இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா” ந்னு தூய தமிழ்ல கேள்விப்பட்டிருக்க மாட்டோம், ஆனா நம்முடைய உரையாடல்களில் எப்போதேனும் நிச்சயம் இந்தக் […]\nKristilla on கி.மு : நோவாவின் பேழை\nக.மோகன சுந்தரம் on சன்னலுக்கு வெளியே கவிதைகள்\nAnonymous on கிமு : சிம்சோன் – வியப்ப…\nAnonymous on வீதியில் நாய்கள், பீதியில்…\nSuma sheyalin on அப்பா என் உலகம்\nDev on தன்��ம்பிக்கை : திடீர் பணக்காரன…\nSivaranjani on தன்னம்பிக்கை : திடீர் பணக்காரன…\nTamilBM on தன்னம்பிக்கை : கல்வியால் ஆய பய…\nkavithai kavithais love POEMS Tamil Kavithai tamil kavithais writer xavier xavier இலக்கியம் இளமை கவிதை கவிதைகள் காதல் சேவியர் சேவியர் கவிதைகள் தமிழ் இலக்கியம் தமிழ்க்கவிதை தமிழ்க்கவிதைகள் புதுக்கவிதை புதுக்கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ezhuthupizhai.in/manos-musings/", "date_download": "2021-05-07T00:54:26Z", "digest": "sha1:AOTOSEBKIFBPQTJV3WG2AZWFJNUZYJH3", "length": 2658, "nlines": 57, "source_domain": "ezhuthupizhai.in", "title": " Mano’s musings - Ezhuthupizhai", "raw_content": "\nசனிக்கிழமை. வெளியே உணவருந்திவிட்டு நடந்து வந்துகொண்டிருந்தேன். ‘வீட்டு சாப்பாடு’ என்றொரு ரோட்டோரக் கடை வைத்திருக்கும் ஆன்டியை கடந்து வருகையில் நேற்று வீட்டில் நடந்த சண்டை மீண்டும் நினைவுக்கு\nநான் கவர்மென்ட் ஸ்கூலில் 11ம் வகுப்பு படிக்கும்போது ‘பயாலஜி’ வாத்தியாராக வந்தவர் – மஹாதேவன். கன்னியாக்குமரி மாவட்டம் மார்த்தாண்டத்திலிருந்து சொந்த மாவட்டமான பெரம்பளூருக்கு டிரான்ஸ்பர் வாங்கிக்கொண்டு வந்தாதாக\nபோன் எடுக்காமல் இருந்திருக்கக்கூடாதுதான். ஆனால் சண்டை வராமல் என்ன காதல். என்ன லிவ்-இன். 6 மணிக்கு போன் செய்தாள். “டேய். ஸ்டாக் இருக்கா. வாங்கணுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kalaipoonga.net/news/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2021-05-07T01:34:19Z", "digest": "sha1:2MTGLPV7ZK7CJQIL4TAAUROSI2QXOLLS", "length": 12028, "nlines": 204, "source_domain": "kalaipoonga.net", "title": "அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார்...? அமைச்சர் உதயகுமார் - Kalaipoonga", "raw_content": "\nHome Hot News அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார்…\nஅதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார்…\nஅதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார்…\nசட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சிகள் இப்போதே பணிகளை தொடங்கிவிட்டன. இந்நிலையில், மதுரையில் திங்கட்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜு, சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு எம்.எல்.ஏ.க்கள் கூடி முதலமைச்சரை தேர்வு செய்வார்கள் என்றும், இதில் மாற்றுக் கருத்தில்லை என்றும் தெரிவித்திருந்தார்.\nசெல்லூர் ராஜுவின் இந்த கருத்து அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், எடப்பாடியார் என்றும் முதல்வர் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி டுவிட்டரில் ப��ிவிட்டிருந்தார். மேலும், எடப்பாடி பழனிசாமியை முன்னிறுத்தி தளம் அமைப்போம், களம் காண்போம், வெற்றி கொள்வோம் என்றும் கூறியிருந்தார்.\nஇதனிடையே, நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கடம்பூர் ராஜு, தேர்தலுக்கான அவசரம் இப்போது இல்லை என தெரிவித்தார்.\nஇந்த நிலையில், இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்துள்ள வருவாய்த்துறை அமைச்சர் உதய குமார் கூறுகையில், அதிமுகவில் ஒரு தொண்டன் முதலமைச்சராக வரமுடியும் என்பது நிரூபணம் ஆகியுள்ளது. முதல்வரும், துணை முதல்வரும் ஜெயலலிதாவின் கனவை நனவாக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇடைத்தேர்தல், உள்ளாட்சி தேர்தலில் இருவரையும் முன்னிறுத்தி வெற்றி பெற்றோம். ஒற்றுமையோடு களத்தில் சந்தித்தால் வரும் தேர்தலில் பெற்றி உறுதி. நடந்து முடிந்த தேர்தல்களை போலவே எதிர்வரும் தேர்தல்களையும் எதிர்கொள்வோம் என்று தெரிவித்துள்ளார்.\nஅதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார்...\nPrevious articleஉலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள்: டுவைன் ஜான்சன் முதலிடம், பட்டியலில் உள்ள ஒரே இந்திய நடிகர் அக்‌ஷய்குமார் 6-வது இடம்\nNext articleதிருத்தணி ஆடிக்கிருத்திகை தெப்பத்திருவிழா ஆன்லைன் மூலம் நேரடி ஒளிபரப்பு –கோயில் நிர்வாகம்\nவெளியானது 34 பேர் கொண்ட தமிழக அமைச்சரவை பட்டியல்\nமூத்த தலைவர் ஆர்.எம்.வீரப்பனை நேரில் சந்தித்து ஆசி பெற்றார் மு.க.ஸ்டாலின் | Video\nரூ.4 ஆயிரம் வழங்கும் திட்டத்துக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முதல் கையெழுத்து\nவெளியானது 34 பேர் கொண்ட தமிழக அமைச்சரவை பட்டியல்\nவெளியானது 34 பேர் கொண்ட தமிழக அமைச்சரவை பட்டியல் தமிழகத்தின் முதலமைச்சராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை சென்னை - கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்க உள்ளார். கொரோனா பரவலை கருத்தில்...\nமாநாடு டப்பிங் ஆரம்பம்… படக்குழு வெளியிட்ட புகைப்படங்கள்\nமாநாடு டப்பிங் ஆரம்பம்... படக்குழு வெளியிட்ட புகைப்படங்கள் சிம்பு நடிப்பில் உருவாகி உள்ள படம் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கியுள்ள இப்படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார். இப்படத்தில் சிம்பு அப்துல் காலிக்...\nமூத்த தலைவர் ஆர்.எம்.வீரப்பனை நேரில் சந்தித்து ஆசி பெற்றார் மு.க.ஸ்டாலின் | Video\nமூத்த தலைவர் ஆர்.எம்.வீரப்பனை நேரில் சந்���ித்து ஆசி பெற்றார் மு.க.ஸ்டாலின் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றதை அடுத்து தமிழகத்தின் அடுத்த முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பு ஏற்க உள்ளார். நாளை (மே 7...\nவெளியானது 34 பேர் கொண்ட தமிழக அமைச்சரவை பட்டியல்\nவெளியானது 34 பேர் கொண்ட தமிழக அமைச்சரவை பட்டியல் தமிழகத்தின் முதலமைச்சராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை சென்னை - கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்க உள்ளார். கொரோனா பரவலை கருத்தில்...\nமாநாடு டப்பிங் ஆரம்பம்… படக்குழு வெளியிட்ட புகைப்படங்கள்\nமாநாடு டப்பிங் ஆரம்பம்... படக்குழு வெளியிட்ட புகைப்படங்கள் சிம்பு நடிப்பில் உருவாகி உள்ள படம் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கியுள்ள இப்படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார். இப்படத்தில் சிம்பு அப்துல் காலிக்...\nமூத்த தலைவர் ஆர்.எம்.வீரப்பனை நேரில் சந்தித்து ஆசி பெற்றார் மு.க.ஸ்டாலின் | Video\nமூத்த தலைவர் ஆர்.எம்.வீரப்பனை நேரில் சந்தித்து ஆசி பெற்றார் மு.க.ஸ்டாலின் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றதை அடுத்து தமிழகத்தின் அடுத்த முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பு ஏற்க உள்ளார். நாளை (மே 7...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/672485/amp", "date_download": "2021-05-07T01:23:39Z", "digest": "sha1:4PJEZQERYBOQURQR7JF76FRIPFONNSGS", "length": 7699, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "வாக்கு எண்ணிக்கை தொடர்பாக தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை | Dinakaran", "raw_content": "\nவாக்கு எண்ணிக்கை தொடர்பாக தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை\nசென்னை: தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு காணொலி மூலம் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். ஒரு தொகுதிக்கு சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் எத்தனை மேசைகள் அமைப்பது என்று ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.\nகொரோனா பாதுகாப்பு விதிமீறி செயல்பட்ட 3 நிறுவனங்கள், 4 கடைகளுக்கு சீல்: அதிகாரிகள் நடவடிக்கை\nபழகுநர் உரிமம் வழங்குவதில் 40 விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் அனுமதி: போக்குவரத்து ஆணையம் அறிவிப்பு\nஎன்எல்சி நிறுவனத்தில் பணியாற்றி வந்த 620 ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம்\nசென்னைக்கு 1 லட்சம் கோவிஷீல்டு வந்தது: தடுப்பூசி 2,56,493 இருப்பதாக தகவல்\nதேனாம்பேட்டை இன்ஸ்பெக்டர் மீதான சஸ்பெண்ட் உத்தரவு ரத்து: மீண்டும் பணியில் சேர்ந்தார்\nநோயாளிகளுக்கு ஆக்சிஜன் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்: மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்\nஅண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் சூரப்பாவுக்கு ஆணையம் நோட்டீஸ்\nஓடிடி தளம் தொடங்க தயாரிப்பாளர் சங்கம் முடிவு\nகொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நடிகர் பாண்டு காலமானார்: பாடகர் கோமகனும் உயிரிழப்பு\nநடிகை ஆண்ட்ரியாவுக்கு கொரோனா தொற்று\nதமிழகத்துக்கு தடையில்லா ஆக்சிஜன் வழங்குவதை மத்திய அரசு இன்று உறுதி செய்ய வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nபுதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன காய்கறி, பலசரக்கு, டீ கடைகள் பகல் 12 மணியோடு மூடப்பட்டன: தனியார்-அரசு பஸ்கள் 50% பயணிகளுடன் இயக்கப்பட்டன\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசின் உயரதிகாரிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை\nமு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மாலை 4 மணிக்கு கூடுகிறது தமிழக அமைச்சரவைக் கூட்டம்\nஅமைச்சகங்கள், துறைகளின் பெயர் மாற்றம்: மு.க.ஸ்டாலின்\n69 சதவிகித இடஒதுக்கீட்டு முறையை பாதுகாக்க தமிழக அரசு உரிய சட்டம் நடவடிக்கை எடுக்க வேண்டும்: அதிமுக தலைமை வலியுறுத்தல்\nமு.க. ஸ்டாலின் தமிழகத்தின் முதலமைச்சராக நாளை பதவியேற்கிறார்: திமுக அமைச்சரவை பட்டியல் வெளியீடு: புதுமுகங்கள் 15 பேருக்கு வாய்ப்பு:\nதிமுக அமைச்சரவை பட்டியல்: சுகாதாரத்துறை அமைச்சராக மா.சுப்பிரமணியன் தேர்வு\nகே.என்.நேருவுக்கு நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் பதவி\nமுதலமைச்சராக பதவி ஏற்க உள்ள மு.க.ஸ்டாலின் தலைமையிலான புதிய அமைச்சரவை பட்டியல் வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/228599", "date_download": "2021-05-07T01:55:08Z", "digest": "sha1:DF7L24NLQNVVKAJXOZFLFTRAPXM4KD5E", "length": 7797, "nlines": 85, "source_domain": "selliyal.com", "title": "தேர்தல் நடத்தப்பட வேண்டும்- தொற்று எண்ணிக்கை அதிகரித்தால் சரிசெய்துக் கொள்ளலாம் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P1 தேர்தல் நடத்தப்பட வேண்டும்- தொற்று எண்ணிக்கை அதிகரித்தால் சரிசெய்துக் கொள்ளலாம்\nதேர்தல் நடத்தப்பட வேண்டும்- தொற்று எண்ணிக்கை அதிகரித்தால் சரிசெய்துக் கொள்ளலாம்\nகோலாலம்பூர்: நடப்பு அரசு பல சிக்கல்களைக் களைவதில் தோல்வியுற்றதால், முன்னாள் அமைச்சர் சைட் இப்ராகிம் பொதுத் தேர்தலை நடத்தவும், அதனை ஆண்டின் நடுப்பகுதியில் நடத்தவும் அறிவுறுத்தியுள்ளார்.\nமலேசியாவின் மிகப்பெரிய பிரச்சனை பொருளாதார வீழ்ச்சி அல்லது கொவிட் -19 அல்ல, மாறாக புத்ராஜெயாவில் பலவீனமான தலைமை என்று சைட் கூறினார்.\n“மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த குழப்பத்திலிருந்து நம்மை வெளியேற்றுவதற்கு ஒரு திறமையான தலைவர்கள் இருக்க வேண்டும். இந்த அரசாங்கம் தோல்வியுற்றது என்று நான் நினைக்கிறேன், பலர் நினைக்கிறார்கள். ஒரே வழி தேர்தல்தான்.\n“மக்களால் ஆணை வழங்கப்பட்ட ஓர் அரசாங்கத்தால் மட்டுமே சிறந்த வேலையைச் செய்ய முடியும். இந்த விவகாரத்தை கருத்தில் கொண்டு தேர்தலுக்கு அழைப்பு விடுக்குமாறு தலைவர்களையும் மாமன்னரையும் நான் கேட்டுக்கொள்கிறேன், ” என்று அவர் கூறினார்.\n“நமக்கு ஒரு சிறிய அமைச்சரவை தேவை, ஆனால் எண்ணற்ற பிரச்சனைகளை திறம்பட கையாளக்கூடிய அமைச்சர்கள் இருக்க வேண்டும். தீர்ப்பதற்கு நமக்கு பல சிக்கல்கள் உள்ளன, ஆனால் ஒரு சிலரைத் தவிர, தற்போதைய அமைச்சர்கள் சரியாக சமாளிக்கவில்லை, ” என்று அவர் கூறினார்.\nகொவிட் -19 சம்பவங்கள் பொதுத் தேர்தலுக்குப் பிறகு உயரக்கூடும் என்று அவர் ஒப்புக் கொண்டார். ஆனால், மலேசியாவின் பிரச்சனைகள் மோசமடைந்து வருகின்றன, மேலும் புதிய தேர்தலை இதற்கு சிறந்த வழி என்று அவர் கூறினார்.\n“மற்ற நாடுகளில் அதிக கொவிட் -19 சம்பவங்கள் உள்ளன, ஆனால், தேர்தல்கள் நடக்கின்றன. சிறிய அதிகரிப்பு இருக்கலாம், ஆனால், தேர்தலுக்குப் பிறகு நீண்ட காலமாக, தேசம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை கையாளும் ஓர் அரசாங்கம் இருக்கும், ” என்று அவர் கூறினார்.\nPrevious articleதமிழ்நாட்டில் ஏப்ரல் 20 முதல் இரவு நேர ஊரடங்கு\nNext articleஅம்னோ, தேமு இன்னும் ஏன் தோல்வியுற்ற அரசாங்கத்தில் இருக்கின்றன\nஅவசரநிலை முடிவடைவதற்கு முன்போ, பின்னரோ நாடாளுமன்றம் கூடும்\n67 விழுக்காட்டினர் மொகிதின் யாசின் தலைமையில் திருப்தி\nஅரசு ஊழியர்களுக்கு 500 ரிங்கிட் ஊக்கத் தொகை\nதிமுக அமைச்சரவை : புதிய அமைச்சர்கள் பட்டியல்\nதிமுக அமைச்சரவை : அன்பில் மகேஷ் பள்ளிக் கல்வி அமைச்சர்\nபிரசாந்த் கிஷோர் : இந்திய சட்டமன்றத் தேர்தல் வெற்றிகளின் கதாநாயகன்\nபில் கேட்ஸ் விவாகரத்து : சொத்துகளை எப்படிப் பிரிப்பார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akattiyan.lk/2021/04/blog-post_966.html", "date_download": "2021-05-07T02:03:25Z", "digest": "sha1:RZS4QJD6FPISF6B3YMP4CKIANIE56VCA", "length": 6822, "nlines": 69, "source_domain": "www.akattiyan.lk", "title": "பாடசாலைச் சீருடைகளை விநியோகிக்கும் பொறுப்பு உள்நாட்டு ஆடை உற்பத்தியாளர்களிடம்...! - அகத்தியன் | Online", "raw_content": "\nHome இலங்கை பாடசாலைச் சீருடைகளை விநியோகிக்கும் பொறுப்பு உள்நாட்டு ஆடை உற்பத்தியாளர்களிடம்...\nபாடசாலைச் சீருடைகளை விநியோகிக்கும் பொறுப்பு உள்நாட்டு ஆடை உற்பத்தியாளர்களிடம்...\n2022ம் ஆண்டுக்கான பாடசாலைச் சீருடைகளை விநியோகிக்கும் பொறுப்பை உள்நாட்டு ஆடை உற்பத்தியாளர்களுக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.\nஉள்நாட்டு உற்பத்தியாளர்களை ஊக்குவித்து பாடசாலை சீருடைகளை அவர்களிடமிருந்து கொள்வனவு செய்ய அமைச்சரவை ஏற்கெனவே அனுமதி வழங்கியுள்ளது.\nஇதன்படி, கைத்தொழில் அமைச்சின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள உள்நாட்டு ஆடை உற்பத்தியாளர்களிடம் அதற்கான விலை மட்டங்களைக் கோரி விநியோகஸ்தர்களை தெரிவு செய்வதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஅடுத்த வருடத்திற்கான பாடசாலைச் சீருடைகளை இந்த வருட இறுதி பாடசாலைத் தவணைக்கு முன்னர் மாணவர்களுக்கு வழங்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.\nஅமைச்சர் ஜி.எல்.பீரிஸ் முன்வைத்த இந்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபாடசாலைச் சீருடைகளை விநியோகிக்கும் பொறுப்பு உள்நாட்டு ஆடை உற்பத்தியாளர்களிடம்...\nபாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் மேலதிக வகுப்புகளுக்கு மறு அறிவித்தல் வரை விடுமுறை\nபாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் மேலதிக வகுப்புகளுக்கு மறு அறிவித்தல் வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், நோன்பு பெருநாள், வெசாக் ...\nகொரோனா பரவல் காரணமாக நாட்டின் பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள விடுமுறையானது மேலும் ஒரு வார காலத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ...\nமோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nவாகன போக்குவரத்து திணைக்களத்தின் நாரஹென்பிட்டி மற்றும் வேரஹெர அலுவலகங்கள் ஒரு வாரத்திற்கு மூடப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம த...\nDReAM என அறிமுகப்படுத்தப்பட்டுள்ள முற்பாதுகாப்���ு விதிமுறைகளுக்கமைய மதுபான சாலைகளை திறந்து வைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. D – சமூக இடை...\nமுழு அதிகாரம் : அகத்தியன் ஊடக சேவை 2020\nஆசிரியர் பீட தெடர்புகளுக்கு 0779516119\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2021/may/03/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-3616054.html", "date_download": "2021-05-07T01:21:40Z", "digest": "sha1:DAQ2MHJ4MPJDJV2NRUFONI3HDTKX2T7T", "length": 9576, "nlines": 149, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "திருவையாறு தொகுதியில் மீண்டும் திமுக- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n06 மே 2021 வியாழக்கிழமை 06:33:21 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்\nதிருவையாறு தொகுதியில் மீண்டும் திமுக\nதிருவையாறு தொகுதியில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளா் துரை. சந்திரசேகரனுக்கு சான்றிதழ் வழங்குகிறாா் தோ்தல் நடத்தும் அலுவலா் டி. மஞ்சுளா.\nதஞ்சாவூா்: தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு தொகுதியில் திமுக வேட்பாளா் துரை. சந்திரசேகரன் 53,650 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.\nஇத்தொகுதியில் தொடக்கச் சுற்று முதல் ஒவ்வொரு சுற்றிலும் திமுக முன்னிலை வகித்து வந்தது. இறுதியாக 28 ஆவது சுற்றின் முடிவில், திமுக வேட்பாளா் துரை. சந்திரசேகரன் 1,03,210 வாக்குகள் பெற்றாா். இவருக்கு அடுத்து பாஜக வேட்பாளா் எஸ். வெங்கடேசன் 49,560 வாக்குகள் பெற்று இரண்டாமிடம் பெற்றுள்ளாா்.\nஎனவே, திமுக வேட்பாளா் துரை. சந்திரசேகரன் 53,650 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டாா். இவா் இத்தொகுதியில் 7 முறை திமுக சாா்பில் போட்டியிட்டு, தற்போது ஐந்தாவது முறையாக வெற்றி பெற்றுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.\nவேட்பாளா்கள் பெற்ற வாக்குகள் விவரம்: மொத்த வாக்குகள் - 2,68,353\nபதிவான வாக்குகள் - 2,11,962.\nதுரை. சந்திரசேகரன் (திமுக) - 1,03,210\nஎஸ். வெங்கடேசன் (பாஜக) - 49,560\nவேலு. காா்த்திகேயன் (அமமுக) - 37,469\nது. செந்தில்நாதன் (நாம் தமிழா் கட்சி) - 15,820\nஜி. உத்திராபதி (புதிய தமிழகம்) - 1,215\nபி.எஸ். திருமாறன் (சுயேச்சை) - 1,093\nகளைகட்டிய அண்ணா அறிவாலயம் - படங்கள்\nஆக்ஸிஜன் செறிவூட்டிகளுடன் இந்தியாவுக்கு வந்த விமானங்கள் - படங்கள்\nதிமுக தொண்டர்கள் கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nஸ்ரீ குரு தேக் பகதூரின் 400-வது பிறந்தநாள் - படங்கள்\nஅண்ணாத்த படப்பிடிப்புக்காக ஹைதராபாத் சென்ற நயன்தாரா - படங்கள்\nகும்பமேளா: கங்கையில் புனித நீராடிய பக்தர்கள் - படங்கள்\nசித்த மருத்துவத்தில் கரோனாவுக்குச் சிறந்த தடுப்பு மருந்து\nகரோனாவை தடுக்க சித்த மருத்துவம் தரும் டிப்ஸ்..\nரெம்டெசிவிா் மருந்து தேவைப்படுவோர் கவனிக்க..\nகரோனா தடுப்பூசிக்கு முன்பதிவு செய்வோர் கவனிக்க..\n'விடுதலை' படத்தின் டிரெய்லர் வெளியீடு\nதயுவு செய்து இதைச் செய்யாதீர்கள்..\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinibitz.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3/", "date_download": "2021-05-07T00:32:39Z", "digest": "sha1:SQYYHTZMSOFGTWN4DNYCU5Y7ETJVLWK7", "length": 10488, "nlines": 76, "source_domain": "www.tamilcinibitz.com", "title": "நாடு தழுவிய மின் தடை காரணமாக பாகிஸ்தான் பாதிக்கப்பட்டுள்ளது", "raw_content": "முழுமையான செய்தி உலகம் உங்களுக்காக.\nநாடு தழுவிய மின் தடை காரணமாக பாகிஸ்தான் பாதிக்கப்பட்டுள்ளது\nபாக்கிஸ்தான் முழுவதும் உள்ள முக்கிய நகரங்களுக்கான மின்சாரம் ஞாயிற்றுக்கிழமை பாரிய இருட்டடிப்புக்கு பின்னர் படிப்படியாக மீட்டெடுக்கப்பட்டது.\n210 மில்லியனுக்கும் அதிகமான மக்களைக் கொண்ட நாட்டின் மின்சார விநியோக முறை ஒரு சிக்கலான மற்றும் நுட்பமான வலையமைப்பாகும், மேலும் வலையமைப்பின் ஒரு பிரிவில் உள்ள சிக்கல் நாடு முழுவதும் தடைகளை ஏற்படுத்தும்.\nதெற்கு பாக்கிஸ்தானில் சனிக்கிழமை (1841 ஜிஎம்டி) உள்ளூர் நேரப்படி இரவு 11:41 மணிக்கு ஏற்பட்ட தவறு காரணமாக மிகச் சமீபத்திய இருட்டடிப்பு ஏற்பட்டது என்று எரிசக்தி செயலாளர் உமர் அயூப்கான் முதற்கட்ட அறிக்கைகளை மேற்கோளிட்டு ட்வீட் செய்துள்ளார்.\n“தோல்வி நாட்டின் ஒலிபரப்பு கட்டத்தைத் தூண்டியது … இதன் விளைவாக மின் உற்பத்தி நிலையங்கள் மூடப்பட்டன” என்று கான் கூறினார்.\nஇந்த இருட்டடிப்பு பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத், கராச்சியின் பொருளாதார மையம் மற்றும் இரண்டாவது பெரிய நகரமான லாகூர் உள்ளிட்ட அனைத்து முக்கிய நகரங்களையும் இருளில் ஆழ்த்தியது.\nகான், “மின் ��ிநியோக அமைப்பில் அதிர்வெண் 50 முதல் பூஜ்ஜியமாகக் குறைந்துவிட்டபோது முறிவு ஏற்பட்டது. இருப்பினும், நாடு முழுவதும் மின்சாரம் படிப்படியாக மீட்டெடுக்கப்படுகிறது.”\nஅவசரகால மின் ஜெனரேட்டர்களை பெரும்பாலும் நம்பியுள்ள மருத்துவமனைகளில் செயலிழப்புகள் பற்றிய உடனடி அறிக்கைகள் எதுவும் இல்லை.\nநீர் மற்றும் எரிசக்தி திணைக்களத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் நாட்டின் சில பகுதிகளுக்கு மின்சாரம் மீட்டமைக்கப்பட்டுள்ளது, ஆனால் லாகூர் மற்றும் கராச்சியில் பல பகுதிகள் இன்னும் காத்திருக்கின்றன.\nஇருட்டடிப்புக்கான காரணம் குறித்து விசாரிக்க விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.\nஇணைய தடைகளை கண்காணிக்கும் நெட் பிளாக்ஸ், இருட்டடிப்பின் விளைவாக நாட்டில் இணைய இணைப்பு “குறைந்துவிட்டது” என்றார்.\nஇணைப்பு “இயல்பில் 62 சதவிகிதம்” என்று ஒரு ட்வீட் கூறியது.\n2015 ஆம் ஆண்டில், ஒரு முக்கிய மின் இணைப்பு மீது வெளிப்படையான கிளர்ச்சி தாக்குதல் பாகிஸ்தானில் 80 சதவீதத்தை இருளில் மூழ்கடித்தது.\nபாக்கிஸ்தானின் வரலாற்றில் மிக மோசமான ஒன்றான இந்த இருட்டடிப்பு, இஸ்லாமாபாத் உட்பட நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் இருட்டடிப்பு ஏற்பட்டது, மேலும் நாட்டின் சர்வதேச விமான நிலையங்களில் ஒன்றையும் பாதித்தது.\nஏதாவது குழுசேரவும் புதிய செய்திமடல் போல நல்லது\n* * செல்லுபடியாகும் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்\n* * எங்கள் செய்திமடலுக்கு குழுசேர்ந்ததற்கு நன்றி.\nஅமைப்பாளர். எழுத்தாளர். விருது வென்ற சிக்கல் தீர்க்கும். தொடர்பாளர். தீய ஆல்கஹால். ஹார்ட்கோர் உருவாக்கியவர்.\nREAD \"உலகளாவிய வெடிப்புகள்\" ஒரு கோவிட் -19 தொற்றுநோயை ஏற்படுத்தியது என்று சீன வெளியுறவு மந்திரி வாங் யி கூறுகிறார் - உலக செய்தி\nஇந்தோனேசியாவின் ஸ்ரீவிஜயா விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே தொடர்பை இழந்தது\nஇந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. (கோப்பு) இந்தோனேசிய ஸ்ரீவிஜய...\nகோவிட்டின் புதிய விகாரங்களைத் தடுக்க இங்கிலாந்து திங்கள்கிழமை தொடங்கி அனைத்து பயணத் தாழ்வாரங்களையும் மூடும்\nபிடென் பதவியேற்ற பின்னர் தைவான் ஜலசந்தியைக் கடக்கும் முதல் அமெரிக்க போர்க்கப்பல்\nடிரம்பின் நிரந்தர தடைக்குப் பிற���ு, ட்விட்டர் தனது அணியின் கணக்கை தடைசெய்கிறது\nPrevious articleஇன்று இரவு வானத்தில் வியாழன், புதன் மற்றும் சனி ஆகியவற்றின் அரிய இணைப்பை எவ்வாறு கண்டறிவது என்பது இங்கே.\nNext articleஜாக்குலின் பெர்னாண்டஸ் குழந்தை பருவத்திலிருந்தே மிக அழகான PIC ஐ வார இறுதி விருந்தாக கைவிடுகிறார்; ஷில்பா ஷெட்டி மற்றும் யமி க ut தம் ஆகியோரை பிரமிப்புடன் விட்டு விடுகிறது\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\n‘கே.ஜி.எஃப்: அத்தியாயம் 2’ வெளியீட்டு தேதி இங்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://abedheen.wordpress.com/category/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/osho-%E0%AE%93%E0%AE%B7%E0%AF%8B/", "date_download": "2021-05-07T02:07:09Z", "digest": "sha1:D4D5QDYZPDDQENDHF6BVYVBYL35LP4R2", "length": 114717, "nlines": 796, "source_domain": "abedheen.wordpress.com", "title": "Osho / ஓஷோ | ஆபிதீன் பக்கங்கள்", "raw_content": "\nஒரு மதச்சண்டை – பாறப்புறத்து ஓஷோ\nமலையாள எழுத்தாளர் பாறப்புறத்து (இயற்பெயர் : கே.ஈ.மத்தாயி) எழுதிய , நேஷனல் புக் டிரஸ்ட் வெளியீடான , ‘அரைநாழிகை நேரம்’ நாவலில் வரும் அட்டகாசமான உரையாடல் ஒன்றை பதிவிடுகிறேன். தமிழாக்கம் : கே. நாராயணன். நாவலை pdf கோப்பாக இங்கிருந்து பெறலாம். சாவை எதிர்நோக்கியிருக்கும் குஞ்சுநைனா எனும் கிழவருடைய நினைவுப் பதிவுகளாக விரியும் இந்த நாவலில் அவரை சந்திக்க வரும் (ஸிரியன் கத்தோலிக்க குருவான) கார்த்திகைப்பள்ளி சாமியாருக்கும் (இந்துவான) சிவராம குறுப்புக்கும் நடக்கும் உரையாடல் இது. சாமியார் பாத்திரத்தில் யாராவது நம்ம ஹஜ்ரத்துகளை வைத்தும் பார்க்கலாம். தவறொன்றுமில்லை. சுலோகங்களை புத்தகத்தில் உள்ளதுபோலவே டைப் செய்திருக்கிறேன். தவறு இருந்தால் தயவுசெய்து தெரியப்படுத்துங்கள். பாறப்புறத்து ஒரு கிருஸ்துவர் (குஞ்ஞிக்கா ஒரு முஸ்லிம் போல. சுலோகங்களை புத்தகத்தில் உள்ளதுபோலவே டைப் செய்திருக்கிறேன். தவறு இருந்தால் தயவுசெய்து தெரியப்படுத்துங்கள். பாறப்புறத்து ஒரு கிருஸ்துவர் (குஞ்ஞிக்கா ஒரு முஸ்லிம் போல) என்பதை நினைவில் கொண்டு இந்த உரையாடலை படிப்பது நல்லது. சுவாரஸ்யத்திற்காக ஒரு ஓஷோ ஜோக்கையும் கடைசியில் இணைத்திருக்கிறேன். சமயம் வாய்த்தால் இந்த நாவலில் வரும் அற்புதமான பைபிள் வசனங்களையும் கதைகளையும் தனியொரு பதிவாக இடுவேன். சண்டையிடுவோம் சமாதானமாக) என்பதை நினைவில் கொண்டு இந்த உரையாடலை படிப்பது நல்லது. சுவாரஸ்யத்திற்காக ஒரு ஓஷோ ஜோக்கையும் கடைசியில் இணைத்திருக்கிறேன். சமயம் வாய்த்தால் இந்த நாவலில் வரும் அற்புதமான பைபிள் வசனங்களையும் கதைகளையும் தனியொரு பதிவாக இடுவேன். சண்டையிடுவோம் சமாதானமாக\nஅரைநாழிகை நேரம் – பாறப்புறத்து\nதீனாம்மா (சிவராம குறுப்புக்கு) சாமியாரை அறிமுகப்படுத்தினாள் : ”கார்த்திகைப்பள்ளிச் சாமியார்”\n“ஆஹா. தெரிந்தது தெரிந்தது… நான் சில நேரங்களிலே குஞ்சு நைனாவைப் பார்க்க வருவதுண்டு. அவரது வேத ஞானத்தைப் பற்றி என்ன சொல்ல அறிவுக்கடலேதான். வேதாந்தத்திலே எனக்கும் கொஞ்சம் பற்று உண்டு. யோசித்துப் பார்க்கையில், எல்லா மதங்களும் ஒரே கருத்தைத்தான் கூறுகின்றன. அதருமத்திலே மூழ்கிய மனித குலத்தை உய்விப்பதற்குக் கடவுள் தம் திருக்குமாரரை அனுப்பினார் என்றுதானே கிறிஸ்துவ வேதம் சொல்கிறது அறிவுக்கடலேதான். வேதாந்தத்திலே எனக்கும் கொஞ்சம் பற்று உண்டு. யோசித்துப் பார்க்கையில், எல்லா மதங்களும் ஒரே கருத்தைத்தான் கூறுகின்றன. அதருமத்திலே மூழ்கிய மனித குலத்தை உய்விப்பதற்குக் கடவுள் தம் திருக்குமாரரை அனுப்பினார் என்றுதானே கிறிஸ்துவ வேதம் சொல்கிறது இந்துக்கள் புராணமும் அதையேதான் சொல்கிறது இந்துக்கள் புராணமும் அதையேதான் சொல்கிறது “தர்ம ஸம்ஸ்தாபனார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே” என்ற கீதையின் சுலோகத்தை நீங்கள் கேட்டிருப்பீர்களே. எண்ணிப் பார்த்தால் எல்லாமே ஒன்றுதான்.”\n“எல்லாம் ஒன்றல்ல. இயேசு வழியில்லாமல், அவர் காட்டிய பாதை வழி நடக்காமல் யாருக்கும் விமோசனம் கிடையாது.”\n“மோட்சத்தை அடைவது அவரவர்கள் கருமத்தைப் பொறுத்துள்ளது. கடவுளை அடைய ஞானயோகத்தையும் கர்மயோகத்தையும் கீதையில் கண்ணன் போதித்துள்ளார் :\n“எங்களுக்கு இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை.”\n“அப்படியானால், எவ்வளவு நல்ல கருமங்கள் செய்தாலும் கிறிஸ்தவனல்லாவிட்டால் மோட்சம் கிடைக்காது என்றா சொல்கிறீர்கள்\n”ஆமாம். பிதாவான தேவனுடைய பரிசுத்த ஆவியின் பெயரில் ஞானஸ்னானம் பண்ணாமலும், அவர் திருக்குமாரரரின் திருச்சரீரத்தின் ரத்தம் உண்டு பாவமோசனம் பெறாமலும் மனிதனுக்கு விமோசனம் இல்லை\n”அப்படி நீங்கள் நம்புவதாகச் சொல்லுங்கள், சாமி.”\n“ஆனால் எங்கள் நம்பிக்கை வேறு. எந்த மதத்தைச் சார்ந்தவராயிருந்தாலும் ஒளியைக் கண்டவர்கள் அனைவருக்கும் மோட்சம் உண்டு என்று நாங்கள் நம்புகிறோம். எல்லாக் கதவுகளும் திறந்திருக்கிற ஒரு மாபெரும் மணிமண்டபம் போன்றது எங்கள் இந்து மதம். யாராயிருந்தாலும் சரி, இந்த மணி மண்டபத்தில் வந்திருந்து ஓய்வெடுக்கலாம், பசியையும் தாகத்தையும் தீர்த்துக் கொள்ளலாம், களைப்பாறலாம். காமக் குரோதங்களிலிருந்து மனத்தை அகற்றி ஆன்மாவின் பொருளைத் தெரிந்துகொண்ட அனைவருக்கும் மோட்சம் உண்டு என்பதில் சற்றும் சந்தேகமில்லை.\nசாமியாரின் முகத்தில் ஏளனத்தின் நிழல் படிந்தது. ஒரு வடமொழிச் சுலோகத்தைச் சொல்லி, கிறிஸ்தவமதத்தைத் தோற்கடிக்க வந்திருக்கிறான்\n“மக்களை ஏமாற்றுவதற்கு இப்படியெல்லாம் சொல்லி நடிக்கிறார்கள். ரட்சகனான இயேசு செய்த மாபெரும் ஆன்மத் தியாகம் போன்று எதாவது சொல்வதற்கு உங்களிடம் இருக்கிறதா இயேசு புரிந்த அற்புதம் போன்ற ஒன்றை உங்களால் சொல்ல முடியுமா இயேசு புரிந்த அற்புதம் போன்ற ஒன்றை உங்களால் சொல்ல முடியுமா\n“இயேசு அப்படி என்ன அற்புதம் புரிந்தார்\n ஒரு கன்னியின் மகனாக இயேசு பிறந்ததே ஒரு மாபெரும் அற்புதம்தானே\n“யார் சொன்னார் என்றா கேட்கிறீர்கள்\n“ஆமாம். அது உங்கள் நம்பிக்கைதானே சாமி உங்கள் நம்பிக்கையை உறுதியோடு கடைப்பிடிக்க உங்களுக்கு உரிமை இருக்கிறது. அதைப் போலவே அதை மறுக்கவும், வேறொன்றை நம்பவும் எங்களுக்கும் உரிமை இருக்கிறது.”\n“இருக்கிறது, இருக்கிறது நம்பிக்கையை விடாமல் கெட்டியாகப் பிடித்துக்கொண்டே இருங்கள்.”\nஅப்படிச் சொல்லித் தப்பித்துக் கொண்டாலும் உண்மையில் சாமியார் பதில் கூற முடியாமல் திணறினார். குறுப்பிடம் அவருக்கும் மதிப்பு ஏற்பட்டது. …. குறுப்பு போன பிறகு சாமியார் சொன்னார் “ ‘விவரம் தெரிஞ்ச மனுஷன்\nநன்றி : நேஷனல் புக் டிரஸ்ட்\nமேலும் கொஞ்சம் விபரம் தர ஓஷோ வருகிறார். ஒன்றும் பிரச்னையில்லை…\nஇரண்டு மனிதர்கள் நம்பிக்கை வாதம் – அவநம்பிக்கை வாதம் என்பதை விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.\nஒருவன் மற்றவனிடம் சொன்னான், “சரி ஒரு நிசமான நம்பிக்கைவாதியை எப்போதாவது நேருக்கு நேர் நீ சந்தித்திருக்கிறாயா\n“ஆம்” என்றான் மற்றவன். “நான் என் நாலாவது மாடியின் உப்பரிகையில் நின்று கொண்டிருந்தேன். அப்போது யூதனான ஒரு சன்னல் துடைப்பாளி இர���பதாவது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்துகொண்டிருந்ததை பார்த்தேன்.:”\n“இது எப்படி அவனை ஒரு நம்பிக்கைவாதியாக காட்டுகிறது” என்று வினவினான் நண்பன்.\n“எப்படியென்றால், அவன் வீழ்ந்துகொண்டே வந்து என் மாடியைத் தாண்டி விழும்போது இதுவரை பிரச்சனையில்லை” என்று சொன்னது என் காதில் வி்ழுந்தது” என்று சொன்னது என் காதில் வி்ழுந்தது\nகவிதா வெளியீடான ‘ஸென்’னுடன் நடந்து.. ‘ஸென்’னுடன் அமர்ந்து நூலிலிருந்து.. (மொழியாக்கம் : சிங்கராயர்)\nவெள்ளைமாளிகை பெருச்சாளிகள் – ஓஷோ\n‘பூண்டோடு தற்கொலை செய்துகொள்ள நாம் முடிவு செய்தாலன்றி மூன்றாம் உலகப் போருக்கு சாத்தியமில்லை….. சிறு போர்கள் நடக்கவே வேண்டும். இல்லாவிட்டால் இந்த வல்லரசுகள் எங்கே தம் ஆயுதங்களை விற்க முடியும்’ என்று கேட்கும் ஓஷோ சொன்ன ‘ஜோக்’ இது. இன்னொரு போரும் அழிவும் ஏற்படுமோ என்ற பதட்டத்தில் பதிவிடுகிறேன். ஓஷோ குறிப்பிடும் ஜனாதிபதியின் பெயரை தெரிந்துகொள்ள விரும்புகிறவர்கள் புத்தகச் சந்தையில் நூலை வாங்கலாம். ஆனால், பெயர்களில் எந்த வித்யாசமும் இல்லை. எல்லா அதிபர்களும் அப்படித்தான்.\nநூலில் படு சுவாரஸ்யமான ஜோக்குகள் இருக்கின்றன. உதாரணமாக…. காட்டுவழியில் போகும் இரண்டு கன்னியர்கள் கற்பழிக்கப்படுகிறார்கள். ‘அச்சச்சோ.. நாம் 2 தடவை கற்பழிக்கப்பட்டோம் என்பதை தாயாரிடம் எப்படி விளக்கப்போகிறோம்’ என்கிறாள் ஒருத்தி. ‘ ‘நாம் ஒருதடவைதானே கற்பழிக்கப்பட்டோம்’ என்று குழம்பிய மற்றவள் கேட்கும்போது ‘ சரிதான், ஆனால் மறுபடியும் அதே வழியில்தானே திரும்பி வருவோம்’ என்கிறாள் ஒருத்தி. ‘ ‘நாம் ஒருதடவைதானே கற்பழிக்கப்பட்டோம்’ என்று குழம்பிய மற்றவள் கேட்கும்போது ‘ சரிதான், ஆனால் மறுபடியும் அதே வழியில்தானே திரும்பி வருவோம்’ என்ற பதில் கிடைக்கிறது. அதையெல்லாம் இங்கே பதிவிட இயலுமா’ என்ற பதில் கிடைக்கிறது. அதையெல்லாம் இங்கே பதிவிட இயலுமா பக்கங்களின் பவித்திரம் என்னாவது எனவே சீரியஸான ஜோக் – உங்கள் சிந்தனைக்கு…\n‘பிரபுமாயா, ஒரு புன்னகையை பொருத்திக் கொள்ள நீ முயன்றால் நீ களைப்பாக உணர்வாய். ஏனென்றால் ஒரு புன்னகையை அணிந்து கொண்டிருப்பதற்கு மிகுந்த பிரயத்தனம் தேவை. அதை நீ xxxxxxxxx போல அப்பியசிக்க வேண்டும். ஆனால் அப்போது அது புன்னகையே அல்ல. உங்கள் வாய் வெறுமனே திறந்திருக்கிறது. உங்கள் பற்கள் வெறுமனே தெரிகின்றன. அவ்வளவுதான்\nஒவ்வொரு இரவிலும் அவர் மனைவி அவர் வாயை மூட வேண்டியிருக்கிறது என கேள்விப்பட்டேன். ஏனென்றால் ஒருதடவை ஒரு பெருச்சாளி அவர் வாய்க்குள் போய்விட்டது. அவள் டாக்டருக்கு தொலைபேசினாள். டாக்டர் சொன்னார், ” நான் வருகிறேன். ஆனால் அதற்கு நேரம் ஆகும். அதற்கிடையில் அவர் வாயருகே ஒரு பாலாடைக்கட்டியை காட்டிக் கொண்டிருங்கள்.”\nடாக்டர் வந்துபார்த்தபோது அவர் மிகவும் அதிர்ச்சி அடைந்தார். அவள் இன்னொரு பெருச்சாளியைக் காட்டிக்கொண்டிருந்தாள். அவர் சொன்னார் “என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் அவர் வாயருகே பாலாடைக்கட்டியை காட்ட அல்லவா சொன்னேன் அவர் வாயருகே பாலாடைக்கட்டியை காட்ட அல்லவா சொன்னேன்\nஅவள் சொன்னாள். “அப்படித்தான் சொன்னீர்கள். ஆனால் பெருச்சாளியைத் துரத்திக்கொண்டு ஒரு பூனை உள்ளே போய்விட்டது. எனவே முதலில் பூனையை வெளியே கொண்டுவர வேண்டி இருக்கிறது”\nஅதிலிருந்து ஒவ்வொரு இரவும் அவருடைய வாயை அவர் மனைவி வலுக்கட்டாயமாக மூட வேண்டி இருக்கிறது. அது ஆபத்தானது வெள்ளைமாளிகை என்பது ஒரு பழைய கட்டிடம். அதில் பல பெருச்சாளிகள் உள்ளன. உண்மையில் வெள்ளை மாளிகையில் பெருச்சாளிகளைத் தவிர வேறு யார் வசிக்கிறார்கள் வெள்ளைமாளிகை என்பது ஒரு பழைய கட்டிடம். அதில் பல பெருச்சாளிகள் உள்ளன. உண்மையில் வெள்ளை மாளிகையில் பெருச்சாளிகளைத் தவிர வேறு யார் வசிக்கிறார்கள் வெள்ளை மாளிகையில் வசிப்பதில் யாருக்கு அக்கறை வெள்ளை மாளிகையில் வசிப்பதில் யாருக்கு அக்கறை ஆக பெருச்சாளிகள் அங்கே வசிப்பதால் பூனைகளும் அங்கே வசிக்கின்றன.’\nகவிதா வெளியீடான ‘ஸென்’னுடன் நடந்து.. ‘ஸென்’னுடன் அமர்ந்து நூலிலிருந்து.. (மொழியாக்கம் : சிங்கராயர்)\nநன்றி : கவிதா பப்ளிகேஷன்\nஓஷோ பேசுகிறார், உரக்கக் கை தட்டுங்கள்\nஓஷோ பேசுகிறார், உரக்கக் கை தட்டுங்கள்\nஓஷோ பேசுகிறார் – 1\nஓஷோ பேசுகிறார் – 2\nநான் முன்வைக்கும் இப்பகுதியில், அன்பைப் பற்றி ஓஷோ விசாலமாகவும், நுட்பமாகவும் பேசியிக்கிறார்.\n“அன்பு எப்போதும் உங்கள் மனதில் அச்சத்தை உருவாக்கும். காரணம் நமது வளர்ப்பு முறை. நமக்கு வெறுப்பை உமிழச் சொல்லித்தந்தார்களே தவிர, அன்பைக் காட்டச் சொல்லித் தரவில்லை. நமக்கு உருவேற்றப்பட்ட மனக்கட்டுத்திட்டங்கள் ���ன்புக்கு எதிரானவை.”\n“இந்து முகமதியனை வெறுக்கிறான். முகமதியன் கிறிஸ்துவனை வெறுக்கிறான். கிறிஸ்துவனோ யூதனை வெறுக்கிறான். ஒவ்வொரு மதமும் மற்ற மதங்களை வெறுக்கிறது. ஆத்திகன் நாத்திகனை வெறுக்கிறான். நாத்திகன் ஆத்திகனை வெறுக்கிறான். அரசியல் கொள்கைகள் எல்லாம் வெறுப்பின் அடிப்படையிலேயே அமைந்திருக்கின்றன.”\nஓஷோவின் இந்த பேச்சு நாம் கவனிக்கத்தக்கது.\nகபாலத்தில் சில தங்கக்கதவுகளை திறந்துவைக்கும் சாத்தியம் கொண்டது. கவனிப்போம்.\n‘ஓஷோ தி கிரேட்’ பேசத்தொடங்குவதற்கு முன்\nஇடையே நான் கொஞ்சம் பேசிவிடுகிறேன்.\nநான் சமீப நாட்களாக ஓஷோவின் ‘தாவோ ஒரு தங்கக்கதவு’ படித்துக் கொண்டிருப்பதை இந்தப் பக்கத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் குறிப்பிட்டு இருக்கிறேன். அப்புத்தகத்தில் நான் ரசித்த பகுதிகளை வாசகர்களோடு பகிர்ந்துக் கொண்டும் வருகிறேன். இப்பவும் அப்படியொரு பதிவை செய்ய ஆசை. பகிர்ந்து கொள்வதில் சந்தோஷம் உண்டு. தொடர்ந்து மேலும் சில பதிவுகளை பகிர்ந்துக்கொள்ள எண்ணமும் உண்டு.\nபௌத்த மதத்தையும், தாவோ எனும் பழமை கொண்ட சீன மதத்தையும் (தாவோவை மதம் என குறிப்பிடக் கூடாது என்கிறார் ஓஷோ. எனக்கு வேறு வார்த்தையில் சொல்லத் தெரியவில்லை.) தவிர்த்து, உலகில் உள்ள அத்தனை மதங்களையும் அவர் விமர்சனச் சீண்டலைச் செய்திருக்கிறார்.\nபௌத்தமதத்தை ஓஷோ ஒப்புக் கொண்டு பேசினாலும், சில நேரம் அம்மதத்தையும் கூட சீண்ட செய்திருக்கிறார். பௌத்தம், தன் மத துறவிகளுக்கு 33000 விதிகள் வகுத்திருப்பதை அவர் சீண்டியிருக்கிற விதம் ரசிக்கத் தகுந்தது.\n“33000 விதிகளை எப்படி மறந்து போகாமல் மனதில் வைத்திருப்பது அப்படியே நினைவு வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தாலும் அவர்களது மொத்த வாழ்நாளும் அதற்கே சரியாகிவிடும் அப்படியே நினைவு வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தாலும் அவர்களது மொத்த வாழ்நாளும் அதற்கே சரியாகிவிடும் அவற்றை முழுவதுமாக கடைப்பிடிக்க பல கோடி ஜென்மங்கள் எடுக்க வேண்டும் அவற்றை முழுவதுமாக கடைப்பிடிக்க பல கோடி ஜென்மங்கள் எடுக்க வேண்டும்” என்று கூறி, ரசிக்கவிட்டு வியப்பால் நம் புருவங்களை உயர்த்த வைக்கிறார்.\nசீனாவில் பௌத்தம் பரவியபோது, தாவோவை அது சுவீகரித்து, தனதாக்கிக் கொண்டது. தாவோ தற்போது அங்கே இல்லாத நிலை. அல்லது, குறைவான மக்களால் பின்பற்றப்படுகிற சிறுபான்மை மதம் என்கிற அளவில் மட்டுதான். இந்த யதார்த்தம் அறிந்தும் தாவோவைப் பற்றி ஓஷோ சிலாகிப்பது புரிபடாத நிலைக்கு நம்மை நகர்த்துகிறது. தவிர, அதற்காக பௌத்தத்தை அவர் குறை காண்பதும் இல்லை. இது வேறுமாதிரியான புரிபடாத நிலை.\nஅவர் சொற்பொழிவுகளில் தொடர்ந்து பௌத்தம், தாவோ பொருட்டு உலக மதங்கள் அத்தனையையும் அவர் சீண்டியிருக்கிறார் என்றாலும், எல்லா மதங்களில் இருந்தும் அவருக்கு சீடர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்கள் எல்லா நாட்டுக்காரர்களாகவும் இருந்திருக்கிறார்கள் அவரது மறைவுக்குப் பிறகும் அதே நிலைதான்\nதுபாயில் நான் பணியில் இருந்த போது, விஸா மாற்றம் சம்பந்தமாக ‘கிஸ்’ என்கிற ஈரானிய தீவு நாட்டிற்கு செல்லவேண்டி இருந்தது. மூன்று வாரங்கள் அங்கே வெறுமனே தங்கவேண்டி இருந்ததில் அந்தக் குட்டி நாட்டை தினமும் சுற்றிச் சுற்றி ரசித்தேன்.\nஅந்நாட்டில் மக்கள் தொகை அநியாயத்திற்கு குறைவு என்றாலும், நவீன கட்டமைப்புக் கொண்ட நாடு அதன் விசாலமான ரோடுகளில் மூன்று நிமிடத்திற்கு ஒரு காரையோ பஸ்ஸையோதான் பார்க்க முடியும்\nஒரு மாலை, பக்கத்தில் உள்ள மிலிட்டரி கேம்பில் ஒரு விழா நடைப்பெற்றுக் கொண்டிந்தது. பார்க்கப்போனேன். ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பதை வைபவமாகவே நிகழ்த்திக் கொண்டிருந்தார்கள்.\nஈராக்கையும், ஆப்கானிஸ்தானையும் தன் குடையின் கீழ் கொண்டுவந்துவிட்ட அமெரிக்கா, அடுத்து அதன் பார்வை ஈரான் மீது நிலைக் குத்தி நின்ற காலக்கட்டம் அது. அதனால் என்னவோ அந்நாட்டு ராணுவம் தன் படையைப் பெருக்க ஆள் சேர்ப்பு நிகழ்த்திக் கொண்டிருப்பதாகப் பட்டது.\nஅந்த விழா பந்தலின் ஒரு புறத்தில் புத்தகக் கண்காட்சி நடந்துக் கொண்டிருந்தது. இரானின் தந்தையாகக் கொண்டாடப்படும் அயாத்துல்லா கொமெனி குறித்த புத்தகங்களும்/ அமெரிக்கா பலி கொண்ட இராக் அதிபர் சதாம் ஹுசைனைப் பற்றிய புத்தகங்களும்/ ஷியா முஸ்லீம்களின் பிரத்தியோக குர்-ஆனும்/ அதன் தர்ஜுமாக்களுமே அதிகத்திற்கு இருந்தது. அவைகளையெல்லாம் விஞ்சும் விதமாக அதிகத்திற்கு அதிகமாக அங்கே இருந்த புத்தகம் ஓஷோ உடையது ஓஷோவைத் தவிர்த்து பிற இந்திய எழுத்தாளர்களின் புத்தகங்கள் என்றும் எதுவுமில்லை. ஏன்…. வேறு எந்தவொரு நாட்டின் எழுத்தாளர்களது புத்தகங்களும் கூட அங்கே இல்லை\nஇரான், அரசியல்/மத இறுக்கம் கொண்ட நாடு. அங்கே, இஸ்லாமிய மதம் உள்ளடக்கி ஏனைய மதங்களையும் சீண்டுகிற ஓஷோவின் கருத்துக்களை பறைசாற்றுகிறப் புத்தகங்கள் வரவேற்க்கப்படுவது விந்தைதான் அதுவும் அந்நாட்டின் ராணுவ கேம்பில் அமையப்பட்ட ஒரு புத்தகக் கண்காட்சியில் என்பது இன்னும் விந்தை அதுவும் அந்நாட்டின் ராணுவ கேம்பில் அமையப்பட்ட ஒரு புத்தகக் கண்காட்சியில் என்பது இன்னும் விந்தை ஓஷோவின் புத்தகங்களுக்கு ஈரானியர்கள் தந்திருந்த அந்த விசேஷம் ரொம்ப யோசிக்க வைத்தது ஓஷோவின் புத்தகங்களுக்கு ஈரானியர்கள் தந்திருந்த அந்த விசேஷம் ரொம்ப யோசிக்க வைத்தது திரும்பும் போது வழிநெடுகிலும் அது குறித்து யோசித்தவனாகவேதான் திரும்பினேன்.\nமேலைநாடுகள் அவரை தங்களது நாடுகளில் தங்கவிடாது, நிர்பந்தித்து இந்தியாவுக்கே திருப்பி அனுப்பிவைத்த நிர்ப்பந்தத்தை என்னால் புரிந்துக்கொள்ள முடிகிறது. ஆனால், அவர் வாழ்ந்த காலத்திலும், அதன் பின்னும் உலக நாடுகள் பலவற்றிலிருந்து பல மதத்தவர்கள் தேடி நாடிவந்து அவரது கருத்துக்களில் நெகிழ்பவர்களை – அந்த பெருங்கூட்டத்து மக்களை என்னால் வியப்பின்றி கணிக்க முடிந்ததில்லை.\nநான், அவரது உரையாடல்களை முன் வைத்து, ஓஷோவை பலகோணத்தில் யோசிக்கிறவன். பிடிபடாத, நெருடும் சிலபல குறைகள் கொண்டவராகவே என்னுள் அவர் இருக்கிறார். அவரைத் தேடும் அவரது உலக அளவிலான சீடர்களுக்கு அதுயேன் தட்டுப்படுவதில்லை\nவளமான, தீர்க்கமான ஆய்வு ஞானம் எனக்கு கிட்டியிருக்கும் பட்சம், அந்த நெருடல்களுக்கு உருவம் தந்திருப்பேன்.\nஅன்பு எப்போதும் உங்கள் மனதில் அச்சத்தை உருவாக்கும். காரணம் நமது வளர்ப்பு முறை. நமக்கு வெறுப்பை உமிழச் சொல்லித்தந்தார்களே தவிர, அன்பைக் காட்டச் சொல்லித் தரவில்லை. நமக்கு உருவேற்றப்பட்ட மனக்கட்டுத்திட்டங்கள் அன்புக்கு எதிரானவை. ஆனால் அவர்களின் சூழ்ச்சி மிகவும் நுட்பமானது. ஆயிரத்தில் ஒருவருக்குத்தான் அந்த சூழ்ச்சி புரியும். நமக்கு வெறுப்பைக் காட்டத்தான் சொல்லிக்கொடுத்திருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்வது கடினம்.\nஇந்து முகமதியனை வெறுக்கிறான். முகமதியன் கிறிஸ்துவனை வெறுக்கிறான். கிறிஸ்துவனோ யூதனை வெறுக்கிறான். ஒவ்வொரு மதமும் மற்ற மதங்களை வெறுக்கிறது. ஆத்திகன் நாத்திகனை வெறுக்கிறான். நாத்திகன் ஆத்திகனை வெறுக்கிறான். அரசியல் கொள்கைகள் எல்லாம் வெறுப்பின் அடிப்படையிலேயே அமைந்திருக்கின்றன.\nகம்யூனிஸ்டுகள் ஃபாசிஸ்டுகளை வெறுக்கிறார்கள். ஃபாசிஸ்டுகள் சோஷலிசவாதிகளை எதிர்க்கிறார்கள். எல்லா நாடுகளும் வெறுப்பின் அடிப்படையிலேயே அமைந்திருக்கின்றன. ஒவ்வொரு நாடும் மற்ற நாடுகளை வெறுக்கிறது. உலகம் முழுவதும் வெறுப்பு நிறைந்திருக்கிறது.\nஉங்கள் இரத்தம், உங்கள் எலும்பு, அதனுள் இருக்கும் மஜ்ஜை வரையில் இந்த வெறுப்பு பரவியிருக்கிறது. சில நேரங்களில் நீங்கள் ஒற்றுமையாக இருப்பது போல் தோன்றினாலும் எதையாவது எதிர்த்துத்தான் ஒற்றுமையாக இருக்கிறீர்கள். இந்தியாவில் உள்ள முஸ்லீம்கள், இந்துக்கள், கிறிஸ்துவர்கள் எல்லாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றால் பாகிஸ்தான் இந்தியாவின் மீது படையெடுக்க வேண்டும்.\nபாகிஸ்தானுக்கு எதிராக இந்தியர்கள் ஒன்று சேர்வார்கள். நமது ஒற்றுமைக்குக்கூட ஒரு பொது எதிரி தேவை. ஆதனால் அந்தச் சேர்க்கை அன்பில் அடிப்படையில் விளைந்தது அல்ல. ஒரு பொது எதிரியின் மேல் உள்ள வெறுப்பின் அடிப்படையில் விளைந்தது.\nஇந்த மனோதத்துவம் ஹிட்லருக்கு நன்றாகத் தெரியும். அவன் தனது சுயசரிதையில் எழுதுகிறான்… ‘அன்பால் மக்கள் ஒன்று சேர்ந்து வாழ்வதில்லை. அன்புக்கு அந்தச் சக்தி கிடையாது. வெறுப்புணர்வுதான் சக்தி மிக்கது. வெறுப்பை உண்டாக்குங்கள் மக்கள் ஒன்று சேர்வார்கள்.’ என்னால் ஹிட்லரின் அறிவைப் புரிந்துக் கொள்ள முடிகிறது. அவன் பைத்தியக்காரனாக இருந்திருக்கலாம். சில சமயம் பைத்தியக்காரர்களுக்கு அதீதமான உட்பார்வை இருப்பதுண்டு. ஒரு கூட்டத்தின் மனப்பாங்கு எப்படி இருக்கும் என்பதை ஹிட்லர் புட்டுப் புட்டு வைத்துவிட்டான்\nமுகமதியர்கள் தாக்குவார்கள் என்ற பயம் இருந்தால் இந்துக்கள் ஒன்று சேர்வார்கள். இந்துக்கள் மேல் பயம் இருந்தால்தான் முகமதியர்கள் ஒற்றுமையாக இருப்பார்கள். பாகிஸ்தான் படையெடுக்கப் போகிறது என்று செய்தி வந்தால்தான் இந்திய மக்கள் ஒற்றுமையாக இருப்பார்கள்.\nஅந்தக் காலத்தில் ரஷியா அணுகுண்டுகளையும், ஹைட்ரஜன் குண்டுகளையும் செய்து குவித்துக் கொண்டிருந்தது. காரணம் அமெரிக்கா தன்னைத் தாக்குமோ என்ற பயம்தான். அதே போல், ரஷ்யாவின் ���ேல் ஏற்பட்ட பயத்தால் அமெரிக்கா அழிவு ஆயுதங்களை சேகரித்துக் கொண்டிருந்தது. மொத்த உலகமே பயத்திலும், வெறுப்பிலும் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறது.\nஅன்பை ஒத்துமொத்தமாக அழித்துவிட்டார்கள். பல நூற்றாண்டுகளாக, பல ஆயிரம் ஆண்டுகளாக உங்கள் அன்பில் விஷத்தைச் செலுத்திவிட்டார்கள். அதனைச் செயலிழக்கச் செய்துவிட்டார்கள். அதனால் எப்போதெல்லாம் உங்கள் மனதில் அன்பு தோன்றுகிறதோ அப்போது உங்களிடம் உள்ள மனக்கட்டுத்திட்டம் அதனை மூர்க்கமாக எதிர்க்கிறது.\nமனிதனுக்கு ஏதோ விபரீதம் நிகழ்ந்துவிட்டது என்று நினைக்கிறேன். அன்புதான் மனிதனின் அடிப்படைக் குணம். அன்பில்லாமல் யாரும் வளர முடியாது, மலர முடியாது, நிறைவு காண முடியாது, திருப்தியுடன் வாழ முடியாது. அன்பில்லாமல் கடவுளே இல்லை. அன்பின் அனுபவத்தின் உச்சக்கட்டம்தான் கடவுள்.\nஉங்கள் அன்பு போலியாக இருப்பதால் – உங்களால் போலியான அன்பைத்தான் சமாளிக்க முடியும் என்பதால் – உங்கள் கடவுளும் ஒரு போலிதான்.\nகிறிஸ்துவர்களின் கடவுள், இந்துக்களின் கடவுள், யூதர்களின் கடவுள் – எல்லாருமே போலிகள் தான்.\nகடவுள் எப்படி இந்துவாக, கிறிஸ்துவாக, முகமதியராக, யூதராக இருக்க முடியும் அன்புக்கு மதச்சாயம் பூச முடியுமா அன்புக்கு மதச்சாயம் பூச முடியுமா அன்பிலே இந்து-அன்பு, முகமதிய-அன்பு, யூத-அன்பு, கிறிஸ்துவ-அன்பு என்ற பாகுபாடுகள் இருக்க முடியுமா என்ன அன்பிலே இந்து-அன்பு, முகமதிய-அன்பு, யூத-அன்பு, கிறிஸ்துவ-அன்பு என்ற பாகுபாடுகள் இருக்க முடியுமா என்ன இந்த பூமியே ஒரு பெரிய திறந்த வெளி பைத்தியக்கார ஆஸ்பத்திரியைப் போல் செயல்படுகிறது.\nஎல்லாமே உங்கள் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், ‘எனக்கு பயமே வரக்கூடாது’ என்று நீங்கள் நினைத்தால் இந்த பொம்மைகளையும் போலிகளையும் வைத்துக் கொண்டு காலம் முழுவதும் விளையாடிக் கொண்டிருங்கள். மெய்யான அன்பும், மெய்யான கடவுளும் உங்களுக்குரியன அல்ல.\nஆனால் நீங்கள் இங்கே என்னிடம் வரும் போது இந்த பொம்மைகளையும், போலிகளையும் தூக்கியெறிய வேண்டும். என்னுடைய வேலையே இதுதான். எல்லா பொம்மைகளையும் அழிப்பது. நீங்கள் உங்கள் வாழ்நாளில் இதுவரை பொம்மைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தீர்கள் என்பதை உங்களுக்கு உணரவைப்பது. உங்களுக்கு இன்னும் பக்குவம் வரவில்லை. இன்னும் மனதளவில் குழந்தையாகவே இருக்கிறீர்கள் என்பதை உங்களுக்குப் புரிய வைப்பது. வளர்ந்தபின் குழந்தைக்குறிய அறிவுடன் செயல்படுவதைப் போன்ற அசிங்கம் வேறு எதுவும் இல்லை. குழந்தைப் போல் வெகுளித்தனமாக இருப்பது என்பது வேறு. குழந்தையைப் போல் பக்குவமில்லாமல், குழந்தை-அறிவுடன் இருப்பது என்பது வேறு. முன்னது ஒரு வரப்பிரசாதம். பின்னது ஓர் ஊனம். முப்பது வயதில் நீங்கள் காகிதக் கப்பலுடனும், யானைப் பொம்மையுடனும் விளையாடிக் கொண்டிருந்தால் பார்க்க நன்றாகவா இருக்கும்\nமிகவும் அழகான பிரபஞ்ச இருப்பு நிலை உங்களை நாலாபக்கங்களிலும் சூழ்ந்து கொண்டிருக்கிறது. அந்த அழகு உங்களை இருந்த இடத்திலேயே நடனம் ஆட வைக்கவில்லை என்றால் உங்கள் வாழ்க்கைக்கே அர்த்தமில்லாமல் போய்விடும். நீங்கள் இறந்தவருக்குச் சமமாகி விடுவீர்கள். நீங்கள் ஏற்கனவே இறந்திருக்க வேண்டும். கல்லறையில் இருக்க வேண்டிய ஆசாமி. தவறுதலாக வெளியே இருக்கிறீர்கள். அவ்வளவுதான்.\nவடிவம்/ தட்டச்சு: தாஜ் | satajdeen@gmail.com\nதலைப்பு உதவி : ஆவோபிதீன் ; குறிப்புகள் : தாவோஜ் 🙂\nகுற்றம் என் மேல் அல்ல…\nஅஜ்மத் பீவி தர்காவில் கந்தூரி.\nஅந்த அஜ்மத் பீவி பாட்டி\nகேட்ட துவா உடனே கபுல் ஆகும் என்பதற்கு\nசில வாரங்களாக என் வாசிப்பிலிருக்கும் ‘ஓஷோ’வின் ‘தாவோ ஒரு தங்கக்கதவு’ புத்தகத்தின் முதல் அத்தியாயம் நாற்பத்தியாறு பக்கங்கள் கொண்டது. அதில் இரண்டு பகுதிகளை மட்டும் தேர்வு செய்து இங்கே வாசகர்களின் பார்வைக்கு வைக்கிறேன். இப்பகுதிகள் இரண்டும் என் ரசனை ஈர்த்த செய்திகளாலானது.\nமுதல் பகுதி, சீன மதங்களில் ஒன்றான ‘தாவோ’ பற்றிய சிறிய குறிப்புகள் கொண்டது. தாவோவை, தர்மம் அல்லது இயற்கை என்கிற அர்த்தத்தில் பார்க்கச் சொல்லும் ஓஷோவின் விரிவான விவரணை குறிப்பிடத் தகுந்தது. தவிர, கடவுளர்களை முன்வைத்து காலங்காலமாய் நடந்தேறியுள்ள அழிச்சாட்டியங்களை விமர்சனப் பார்வையில் சீண்டியுமிருக்கிறார்.\nஇரண்டாவது பகுதி, மதங்கள் பேசும் ‘சொர்க்கம் – நரகம்’ பற்றிய வியாக்கியான வர்ணனை கொண்டது. அவரது அந்த வர்ணனைக்கு நாம் காது கொடுக்கும்படிதான் இருக்கிறது. அத்தனைக்கு கிண்டல், அத்தனைக்கு நையாண்டி. நான் ஆர்வப்பட்ட இந்த இரண்டு பகுதிகளைக் குறித்தும் வாசகர்கள், வெட்டியும் ஒட்டியு��் அபிப்ராயங்களைக் கூறலாம். ஓஷோவின் சொல்லோ, என்னுடைய ரசனையோ தீர்ந்த தீர்ப்பாகிவிடாது.\n1975-வாக்கில் நான் ஓஷோவை அறியவந்தேன். செல்வத்தில் செழித்த தனது அமெரிக்க ஆன்மீகத் தளத்தை காலிசெய்துவிட்டு, பூனாவில் அவர் தனது அடுத்த இருப்பை பிரமாண்டமாய் விரிவு செய்த போது அவரை நான் அறியவந்தேன். அந்த அறிதலில், அமெரிக்காவிலிருந்து அவர் இந்தியாவுக்கு வரவேண்டிவந்த பல விசேச காரணங்களையும் அறிந்து முகம் சுளித்தேன். என்றாலும் அவர் மீதான வியப்பு எழ, மலைக்கவும் செய்தேன்.\nஆன்மீகப் பெரியார்கள் எவரையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் அன்றைக்கெனக்கு இருந்தது இல்லை. மக்களால் ‘மஹான்கள்’ என்று வர்ணிக்கப்படுபவர்களில் பலரும் எனக்கு இன்னொரு மனிதர்கள்தான். இன்றைக்கும் அப்படித்தான். அதே சிந்தைதான்.\n’மனிதர்கள் எப்படி லோகக் கடவுளாகவும், இறைவனின் அவதாரமாகவும், ஆசி பெற்றவர்களாகவும், சித்துகள் பல செய்பவர்களாகவும் இருக்க முடியும் மனிதர்கள் மனிதர்களாகத்தான் இருக்க முடியும்’ – இந்த என் உள்மன எதிரொலிப்பு என்றைக்கும் உண்டு. ஓஷோவும் எனக்கு இன்னொரு மனிதர்தான்\nமரியாதைக்குரியவர்கள்/ நட்புக்குரியவர்கள்/ நம்மைவிட திறமைசாலிகள்/ கலைஞர்கள்/ விசால திறன்கள் பல கொண்டவர்கள் – என்கிற நோக்கில் பலர் மீது எனக்கு அப்பவும் இப்பவும் மதிப்புண்டு. கூடுதலாக அவர்கள்பால் பணிவும் உண்டு. ஓஷோ, இந்த வட்டத்திற்குள்தான் என்னில் வாழ்கிறார்\nஎன்னைவிட சிறியவர்களாக இருந்தாலும் திறமை கொண்டவர்கள் எனில், எங்கேயும் எப்பவும் தலைவணங்கவும் தங்க மாட்டேன். என்னிடம், நான் மதிக்கும் சில நல்ல சங்கதிகளில் இது ஆகச் சிறந்தது.\nஓஷோ குறித்து பிரஸ்தாபித்த அன்றைய ஊடகங்கள் இன்னும் பல செய்திகளை அழுந்தச் சொல்லியது. அதன் பொருட்டு, அவர்மீது அன்றைக்கெனக்கு நல்ல அபிப்ராயம் எழவில்லை. ‘செக்ஸ்’ சாமியாராகவே என் மனதில் அழுந்த உட்கார்ந்துவிட்டார்.\nஓஷோ குறித்த ‘செக்ஸ் சாமியார்’ அபிப்ராயமும் ஓர் எல்லைக்கு மேல் என்னில் நீடிக்கவில்லை. சில காலங்களுக்குப் பின் செக்ஸ் குறித்த பார்வையே என்னிடம் இன்னொரு பரிமாணம் கொண்டது. பெரியாரின் எழுத்துக்கள் பலவற்றை உள்வாங்கிப் படிக்க நேரிட்ட நேரத்தில் அப்படியொரு தாக்கம் என்க்கு சாத்தியமானது. ஓஷோ என் கவன ஈர்ப்பில் முழுசாக வந்தார்.\nமிகத் தாமதமாய், படிக்கக் கிடைத்த ஓஷோ எனக்கு விசேஷமாகத் தெரியத் தொடங்கினார். அவரது எழுத்துக்களை தேடித் தேடி வாசித்தேன். அவரது புத்தகங்கள் பலவும், ஒரே கருத்தை திரும்பத் திரும்ப கூறுவதாகப் பட்டது. புத்தரையும், தாவோவையும் முன்வைத்துப் பேசும் அவரது எழுத்துக்கள் வேறு எப்படி இருக்க முடியும் அப்படி திரும்பத் திரும்ப வருவது தவிர்க்க முடியாததுதான்.\nஆனால், அப்படி திரும்பத் திரும்ப வரும் கருத்துகளைத் தாண்டி, வியாக்கியானமென அவர் விரியத் துவங்கும் போது அந்தப் பேச்சே சுவாரசியமாகிப் போகும். நம் கவன ஈர்ப்பைப் பெற, சின்னச் சின்ன விந்தைக் கதைகள்/ சிரிப்பு கதைகள்/ வியக்கச் வைக்கும் உதாரணங்கள்/ அதிர்ச்சி அளிக்கும் எதிர் நிலைக் கருத்துக்கள்/ நாம் பழமையில் இருந்து மீறவும், மீண்டெழவும் உந்துதல் செய்யும் உத்வேகச் செய்திகள் பல அவரது பேச்சில் அசாதாரணமாக விஸ்தீரணப்பட துவங்கிவிடும்\nநவீன உலகின் ஆதர்சர்களாக போற்றப்படும் ஆக்கபூர்வ கலைஞர்கள், விஞ்ஞானிகள், சமூக மேதைகள், தத்துவார்த்தச் சிற்பிகள் அனைவரும் ஓஷோவின் பேச்சில், நம்முடன் அறிமுகம் கொள்வார்கள். அவர்களின் நட்சத்திரச் சங்கதிகளை ஓஷோ சொல்லுகிற போது, பெரும்பாலும் அது நமக்கு புதுச் செய்திகளாகவே இருக்கும். குறிப்பாய் அவரது பேச்சில் தெறிக்கும் ‘தர்க்கம்’ முன் எப்பவும் நாம் கேட்டு அனுபவித்திராத ஒன்றாகவே இருக்கும்\nஅடிப்படையில் ஓஷோ, ஓர் கல்லூரிப் பேராசிரியர். என் அனுபவத்தில் நான் கண்ட, கேட்ட, வாசித்து அறியவந்த வகையில் இத்தனை புத்தியாக, எல்லாவற்றையும் தொட்டுப் பேசும் இன்னொரு பேராசிரியரை அறிந்ததில்லை\nபின் குறிப்பாய் இன்னும் சில செய்திகள்.\nவாழ்வியல் தத்துவார்த்தம் பேசும் வல்லமை கொண்டவர்களிடம் சீடர்களாக வருபவர்களில், வாழ்க்கையில் இடிபாடுகள் கொண்ட நடுத்தர வயதுக்காரர்களே அதிகம். அவர்களிடம் அந்த வல்லமை கொண்டவர்கள் புதிய பல கருத்துக்களை, நிஜமாகவே ஒப்புக் கொள்ளும் கருத்துக்களை , நீள- அகலமாய்- ஆழமாய் போதிக்கிறார்கள். அந்த சீடர்களும் அதனை ஏற்கும் மனநிலையோடு கேட்டறிகிறார்கள். அதனை நூறு சத சுத்தமாய் ஏற்கவும் செய்கிறார்கள். எல்லாம் சரி. ஆனால்…\nஅந்தச் சீடர்களால், கேட்டறிந்த குருவின் புதிய தத்துவார்த்தங்களை நடைமுறைப்படுத்துவதென்பது அத்��னை எளிதல்ல. இரத்தத்தோடு, இரத்த பந்தங்களோடு சதையும் நகமுமாக ஒன்றிவிட்ட, பழமைகொண்ட பழக்கவழக்கங்களை எந்தவொரு சீடர்களாலும் களைவதென்பது இயலாது.\n“எனக்கது சாதாரண விசயம். நான் எல்லா பழமைகொண்ட பழக்க வழக்கங்களையும் களைந்தெறிந்துவிட்டேன்” என்று அந்த சீடர்களில் எவரொருவர் சொன்னாலும், அதுவோர் சுத்தமான பொய்யாகவே இருக்கும். மலையைக் கட்டி இழுத்துவிடலாம், பழைய பழக்கவழக்கங்களைக் களைந்து புதிதாக ஒன்றை ஏற்று நடைமுறைப்படுத்திக் கொள்வதென்பது நடக்காது. சாத்தியங்கள் மிகக் குறைவு.\nபோதிப்பவருக்கு பொருள் ஈட்டித் தருவதைத் தவிர, போதிப்பாளனின் புதிய சித்தாந்தம் எந்த சீடக் கோடிகளுக்கும் முழுப்பயன் அளிக்காது. இதுவோர் நிதர்சனமான உண்மை.\nஇந்த அடிப்படை சிக்கல் குறித்தோ, அதை நிவர்த்திச் செய்யும் சூத்திரம் குறித்தோ, வல்லமைக் கொண்ட அந்த குருக்களில் எவர் ஒருவரும் பேசுவது இல்லை – ஓஷோவையும் சேர்த்து.\nஎன்றாலும், ஓஷோ எனக்கு விசேசமானவர். அவரது புதிய தத்துவார்த்தங்களை விடுங்கள், அவர் நமக்கு காட்டும் புதிய உலகின் கெலிப்பையும் விடுங்கள், அது சரி அல்லது சரியில்லை என்பதெல்லாம் எனக்கு இரண்டாம் பட்சம்தான். எனக்கு அவரை ஏற்கவும் மனதில் இருத்தவும் அவரது அறிவின் விசாலம் ஒன்றே போதும். அவரிடம் அதனைக் கண்டு மயங்காதவரும்தான் யார்\nஓஷோ பேசுகிறார் – 1\nதெய்வீக நிலையோடு இரண்டறக் கலந்து விடும்படியானதோர் தெய்வீகம் வேண்டுமென்றால் முதலாவதாக உங்களுக்குள் இருக்கும் ‘நான்’ இறக்க வேண்டும். இதுதான் ’தாவோ’வின் உள்நோக்கு. தாவோ என்பது கடவுளின் இன்னொரு பெயர். அவ்வளவுதான்.\nதாவோ என்ற பெயர் அழகாக இருக்கிறது. கடவுள் என்ற பெயரை , அந்த வார்த்தையை, நமது பூசாரிகளும், பாதிரிகளும், மாசுபடுத்திவிட்டார்கள். கடவுளின் பெயரால் காலம் கலமாக மக்களைச் சுரண்டிக்கொண்டிருந்து விட்டார்கள். இவர்களுடைய சுரண்டலால், இவர்களுடைய பித்தலாட்டங்களால் இப்போது கடவுள் என்ற வார்த்தையே அசிங்கமாகப் போய்விட்டது.\nஅறிவுள்ள எந்த மனிதனும் கடவுள் என்ற வார்த்தையின் பக்கம் தலைவைத்துப் படுக்கவே பயப்படுகிறான். கடவுளின் பெயரால் பல நூற்றாண்டுகளாக நடந்த அநியாயங்களை, கொலைகளை, கொள்ளைகளை, கற்பழிப்புகளை அந்த வார்த்தை நினைவுபடுத்துகிறது. அதனால் கூடிய மட்டில் அந்த வார்த��தையைப் பிரயோகிப்பதையே தவிர்த்துவிடுகிறான் அவன்.\nஉலகிலேயே மிகவும் அதிகமாக துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வார்த்தை ‘கடவுள்’ தான். வேறு எந்த வார்த்தையையும் விட, இந்த வார்த்தையின் பெயரால் தான் அதிகபட்ச கொடுமைகள் நடந்திருக்கின்றன.\nஅதனால் , தாவோ என்ற வார்த்தை மிக அழகாகத் தோன்றுகிறது. உங்களால் தாவோவை வழிபட முடியாது. ஏனென்றால் தாவோ எப்படி இருக்கும் என்று உங்களால் கற்பனை செய்துகூட பார்க்க முடியாது. தாவோ என்றால் ஒரு மனித உருவத்தின் நினைவு வருவதில்லை. தாவோ ஓர் ஆள் இல்லை, அது ஓர் ஆதார விதி. நீங்கள் கடவுளை வணங்கலாம். ஆதார விதியை வணங்க முடியாது. அது மடத்தனமாக, கேலிக்கூத்தாக இருக்கும்.\nநீங்கள் புவியீர்ப்பு விதியை வணங்குவீர்களா இல்லை, விஞ்ஞானி ஐன்ஸ்டின் வரையறுத்த சார்பியல் கோட்பாட்டுக்கு கற்பூரம் காட்டுவீர்களா இல்லை, விஞ்ஞானி ஐன்ஸ்டின் வரையறுத்த சார்பியல் கோட்பாட்டுக்கு கற்பூரம் காட்டுவீர்களா\nதாவோ என்பது ஒட்டுமொத்த பிரஞ்ச இருப்பையும் இணைக்கும் ஆதார விதி. இந்த பிரபஞ்சம் என்பது தற்செயலாக நடந்த ஒரு விபத்தில்லை. அது தான்தோன்றித்தனமான குழப்பமும் இல்லை. அண்டங்களின் படைப்புக் கோட்பாட்டின்படி உருவான ஓர் ஒழுங்குமுறைதான் இந்த பிரபஞ்சம்.\nவிரிந்து கிடக்கும் பிரபஞ்சத்தைப் பாருங்கள். அதில் அதீத ஒழுங்கு தெரிகிறதல்லவா பூமி சூரியனை ஒரு குறிப்பிட்ட பாதையில், ஒரு குறிப்பிட்ட வேகத்தில்..ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சுற்றுகிறது. மற்ற கிரகங்கள் சூரியனைச் சுற்றிவருகின்றன. நமது சூரிய மண்டலமே ஒட்டுமொத்தமாக சுழன்று கொண்டிருக்கிறது. எதைப் பார்த்தாலும் அதில் ஓர் அதீத ஒழுங்கு உள்ளீடாக மிளிர்ந்து கொண்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது. அந்த ஒழுங்குதான் தாவோ. முழுமையின் இசைவுதான் தாவோ.\nநல்ல வேளை, இதுவரை யாரும் தாவோவிற்காக கோயில்கள் கட்டவில்லை. சிலைகள் வைக்கவில்லை. பூஜை புனஸ்காரங்கள் செய்யவில்லை. பூசாரிகள் இல்லை. வேறு எந்த இடைத்தரகர்களும் இல்லை. சடங்கு சம்பிரதாயங்களும் இல்லை. அதுதான் தாவோவின் அழகு.\nஅதனால்தான் தாவோவை ஒரு கொள்கை என்றோ கோட்பாடு என்றோ நான் சொல்லவில்லை. அதை மதம் என்றுகூட நான் சொல்லவில்லை. அதைத் தர்மம் என்று அழைக்கலாம். தர்மம் என்றால் தாங்கி நிற்பது என்று பொருள். எல்லாவற்றுக்கும் ஆதாரமாக இருப்���துதான் தர்மம். இந்தப் பொருளில்தான் நான் தாவோவை தர்மம் என்கிறேன். புத்தர் தாவோவை தர்மம் என்றுதான் சொன்னார். நல்ல தமிழில் இயற்கை என்ற வார்த்தை தாவோவை ஒட்டி வருகிறது.\nமக்கள் ஏன் கடவுளைப் பற்றியும், சொர்க்கத்தைப் பற்றியும் நினைக்கிறார்கள் எல்லாம் பயம் காரணமாகத்தான். அவர்களுக்கு கடவுளை, சொர்க்கத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசையில்லை. அவர்களுக்கு வேண்டியது எல்லாம் அதிகாரம், அந்தஸ்து, செல்வம், சுகம், இவ்வளவுதான். அவர்கள் மரணத்தைக் கண்டு அஞ்சி நடுங்குகிறார்கள். அந்த பயம் காரணமாக, பேராசை காரணமாகத்தான் கடவுளை வழிப்படுகிறார்கள். ஆனால் ஆசையின் அடிப்படையில், அச்சத்தின் அடிப்படையில் செய்யப்படும் இறைவழிபாடு, வழிபாடேயில்லை.\nஉண்மையின் வழிபாடு , மனதில் பொங்கிப் பீறிட்டு எழும் நன்றி உணர்வால் ஏற்படுகிறது. பயத்தாலும், பேராசையாலும் அது எப்போதும் ஏற்படுவதில்லை. உண்மையின் வழிபாடு உண்மைமேல் உள்ள காதலால் ஏற்படுகிறது. அப்படிக் காதலிக்கப்படும் உண்மை எதுவாக இருந்தாலும் சரி, அதுதான் உண்மையான வழிபாட்டுக்கு வித்து. அப்படியில்லாவிட்டால் உங்களுடைய இந்த உலக ஆசைகளை நீங்கள் சொர்க்கத்தின் மேல் திணிப்பீர்கள். கடவுளின் மேல் திணிப்பீர்கள்.\nபல நாடுகளில் உள்ள பல்வேறு மதங்கள் எப்படி சொர்க்கத்தை வர்ணிக்கின்றன என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். அவர்கள் தங்கள் ஆசைகளை சொர்க்கத்தில் புறநிலைப் படுத்துகிறார்கள்.\nஉதாரணமாக திபெத் நாட்டில் உள்ள மதத்தில் சொர்க்கம் ஒரு கதகதப்பான பிரதேசமாக வர்ணிக்கப்படுகிறத. காரணம், திபெத் ஒரு குளிர்பிரதேசம். ஆகையால் அவர்கள் தங்கள் சொர்க்கத்தில் வெயில் கொளுத்த வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். அப்போதுதான் அவர்களால் தினம் ஒரு முறை குளிக்க முடியும். திபெத்தில் உள்ள மதநூல்களும் சாத்திரங்களும், வருடத்திற்கு ஒரு முறை குளித்தால் போதும் என்று சொல்கின்றன.\nஇந்தியர்கள் வர்ணிக்கும் சொர்க்கம் குளிர்ச்சியானது. அது குளிர்சாதன வசதி செய்யப்பட்டது. ஏசி என்று ஒன்று வரும் என்று அவர்களுக்கு அப்போது தெரியாது.\nஅதனால் அங்கு எப்போதும் குளிர் காற்று வீசிக் கொண்டிருக்கும் என்று சொன்னார்கள். ஏனென்றால் இந்தியா ஓர் உஷ்ணப் பிரதேசம். வருடம் முழுவதும் வெயில் கடுமையாக இருப்பதா���் இந்திய மனம் எப்போதும் நிழலையும், குளிர்ச்சியையும் தேடி அலைகிறது.\nஅதனால் அவர்கள் சொர்க்கத்தில் எப்போதும் தென்றல் காற்று வீசிக் கொண்டேயிருக்கும், பெரிய பெரிய மரங்கள் இருக்கும். இந்தியர்கள் காணும் சொர்க்கத்தில் உள்ள மரங்கள் மிகப் பெரியவை. அவற்றின் நிழலில் ஓராயிரம் மாட்டு வண்டிகள் வெயில் படாமல் நிற்கலாமாம்.\nதிபெத்தியர்களின் நரகம் பனிக்கட்டிகளால் ஆனது. இந்தியர்களின் நரகத்தில் எப்போதும் தகிக்கும் அக்னி எரிந்து கொண்டேயிருக்கும்.\nஎப்படி இவ்வளவு வகையான நரகங்களும், சொர்க்கங்களும் இருக்க முடியும் இவை எல்லாம் நமது ஆசைகளின் வெளிப்பாடு. நாம் இந்த உலகத்தில் எதற்காக ஏங்குகிறோமோ அதை சொர்க்கத்தில் புறநிலைப்படுத்துகிறோம். அதை அங்கே அனுபவிக்க விழைகிறோம். நாம் எதற்கெல்லாம் இந்த உலகத்தில் பயப்படுகிறோமோ அதை வைத்துதான் நாம் நரகங்களைப் படைக்கிறோம்.\nநரகம் நமக்கில்லை , மற்றவர்களுக்கு. அதாவது நமது மதத்தை, நமது கடவுள் கொள்கையை ஏற்க மறுக்கும் மற்றவர்களுக்குத்தான் நரகம். நமது கொள்கையை ஏற்றுக் கொள்பவர்களுக்கு சொர்க்கத்தை – இந்த உலகில் நாம் ருசிக்கத் துடிக்கும் இன்பங்கள் நிறைந்த சொர்க்கத்தைப் பரிசளிக்கிறோம்.\nஇஸ்லாமியர்கள் காணும் சொர்க்கத்தில் மது ஆறு போல ஓடுகிறதாம். இதில் ஆச்சரியம் என்னவென்றால், அவர்கள் இந்த உலகத்தில் மது அருந்துவதைக் கண்டிகிறார்கள். அதைப் பாவம் என்று சொல்கிறார்கள். மது அருந்தும் பாவத்தை இங்கே செய்யாமல் இருந்தால், அந்த புனிதர்களுக்கு சொர்க்கத்தில் ஆறுபோல் ஓடும் மது கிடைக்குமாம்\nஉலகத்தில் உள்ள அனைத்து நாடுகளும் காணும் சொர்க்கங்களில் ஓர் அடிப்படை ஒற்றுமை தெரிகிறது. சொர்க்கத்தில் அப்சரஸ்கள், மிக அழகிய பெண்கள் மிக அதிகமாக இருப்பார்களாம். எந்த நாடும், எந்த மதமும் தனது சொர்க்கத்தில் அழகான ஆண்களை வைப்பதில்லை. இது ஏன்\nஇந்த நம்பிக்கைகளை உருவாக்குபவர்கள் ஆண்கள்தான். அதனால் அவர்கள் தங்களுக்குச் சாதகமாக ‘அழகிய அப்சரஸ்களை’ ‘தேவகன்னிகளை’ ரம்பா, ஊர்வசி, மேனகாவை உருவாக்கிவிட்டார்கள். பெண்கள் விடுதலை இயக்கங்கள் இன்னும் வலுப்பெற்றால் அவர்கள் பெண்களுக்குரிய சொர்க்கத்தை வர்ணிப்பார்கள்.\nஅப்போது அவர்கள் அழகான பெண்களைப் பற்றிப் பேசமாட்டார்கள். அழகான ஆண்களைப் பற்றிப் பேசுவார்கள். மனைவி சொல்லுக்கு அடங்கி நடக்கும் பயந்தாங்கொள்ளி கணவன்மார்கள், பெண்களின் புடவைத் தலைப்பைப் பிடித்துக் கொண்டு அவர்கள் பின்னால் அடிமைகள் போல், வேலைக்காரர்கள் போல நடந்து செல்லும் ஆண்களைத்தான் அவர்கள் சொர்க்கத்தில் வைப்பார்கள். பெண்களை அப்படிதானே ஆண்கள் கேவலப்படுத்தியிருக்கிறார்கள்\nசொர்க்கத்தில் இருக்கும் பெண்கள் என்றும் இளமையாக இருப்பார்களாம். அவர்களுக்கு முதுமையே வராதாம்.\nசரி, அதை விடுங்கள். இந்த மதங்கள் எல்லாம் கடவுளை எப்படி சித்தரிக்கன்றன தெரியுமா வெண்தாடியுடன் கூடிய ஒரு வயதான மனிதனாக. கடவுளை எப்போதாவது நீங்கள் ஒரு துடிப்புள்ள இளைஞனாகக் கற்பனை செய்து பார்த்திருக்கிறீர்களா வெண்தாடியுடன் கூடிய ஒரு வயதான மனிதனாக. கடவுளை எப்போதாவது நீங்கள் ஒரு துடிப்புள்ள இளைஞனாகக் கற்பனை செய்து பார்த்திருக்கிறீர்களா இல்லை. ஏனென்றால் இளைஞர்களை நம்பமுடியாது என்று பலர் நினைக்கிறார்கள். இளைஞர்களுக்கு அவ்வளவாக அறிவு இருக்காது. பக்குவம் இருக்காது. முதிர்ச்சியிருக்காது. சில சமயங்களில் இளைஞர்கள் அசட்டுத்தனமாக நடந்து கொள்வார்கள் என்று இந்த சமுதாயம் நினைக்கிறது.\nஅதனால் தான் உலக மதங்கள், இறைவனை முழுக் கிழவனாகச் சித்தரிக்கின்றன. ஒரு புத்திசாலி மனிதன் கண்டிப்பாக வயதானவனாகத் தான் இருக்க வேண்டும். அப்போதுதான் அறிவும் அனுபவமும் ஒன்றாக இணைந்து செயல்பட முடியும் என்று உலகம் நினைக்கிறது. அதனால் கடவுள் தாடிக்காரக் கிழவனாகக் காட்சி தருகிறார்.\nஆனால், கடவுளைச் சுற்றி நிற்கும் தேவலோகப் பெண்கள் எல்லாம் இளங்குமரிகள். பதினெட்டு வயதுக்கு மேலே ஒரு நாள்கூட வயது ஏறாத நிரந்தரக் கன்னிகள். அந்த வயதில் அப்படியே தேங்கிவிட்ட அதிசயப் பிறவிகள். பாவம், எத்தனை கோடி ஆண்டுகளுக்குத்தான் அவர்கள் பதினெட்டு வயதுப் பெண்களாகவே இருப்பார்கள்\nஆனால் இது உண்மையில்லை. மனிதனின் கற்பனை. நமது புனிதர்கள் பெண்களை வெறுக்கிறார்கள். உடலுறவை வெறுக்கிறார்கள். பிரம்மச்சரியத்தைப் புகழ்கிறார்கள். அப்படிச் செய்தால் அவர்களுக்கு மறுவுலக வாழக்கையில் இன்பம் கிடைக்கும் என்று நம்புகிறார்கள். இது நம்முடைய உலக ஆசைகள். நமது ஆழ்மனதில் இருந்து வரும் ஆசைகள். அவற்றை ஒதுக்கித் தள்ள முடியாது. அந்த ஆசைகளை நேருக்கு நேர் சந்தித்து, அவற்றின் போக்கைக் கவனித்து எதிர் கொண்டால் ஒழிய அவற்றை வெல்ல முடியாது. ஆசைகளை உள்ளே அடக்கிவைத்து ஞானியானவர் யாரும் இல்லை.\nவடிவம்/ தட்டச்சு: தாஜ் | satajdeen@gmail.com\nஆபிதீன் பக்கங்கள் ii :\n3. எழுத்தாளர்களின் இணையதளங்கள் (Links)\n5. கச்சேரிகள் , கஜல்கள்\n8 . நாகூர் ரூமி பதிவுகள்\nகலீபா உமர் (ரலி) (1)\nஉஸ்தாத் ஸலாமத் அலி கான் (1)\nகுலாம் முஸ்தஃபா கான் (1)\nநுஸ்ரத் ஃபதே அலிகான் (6)\nபண்டிட் ராஜ்சேகர் மன்ஸூர் (1)\nமுகேஷ் (பீர் முஹம்மது) (1)\nவிஸ்வநாதன் / ராமமூர்த்தி (2)\nதயவு பிரபாவதி அம்மா (1)\nஅப்துல் வஹ்ஹாப் பாகவி (18)\nகுலாம் காதர் நாவலர் (4)\nஅபுல் கலாம் ஆசாத் (2)\nஅஸ்கர் அலி என்ஜினியர் (1)\nஎச். பீர் முஹம்மது (2)\nகிண்ணியா எஸ்.பாயிஸா அலி (2)\nகுர்அதுல் ஐன் ஹைதர் (1)\nகுளச்சல் மு. யூசுப் (5)\nசாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (2)\nஜே. பி. சாணக்யா (1)\nஜோ டி குரூஸ் (1)\nதொ.மு. சி. ரகுநாதன் (1)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nபோர்வை பாயிஸ் ஜிப்ரி (1)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nவேங்கட சுப்புராய நாயகர் (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (5)\nஹரி கிருஷ்ணன் (ஹரிகி) (1)\nத சன்டே இந்தியன் (1)\nநேஷனல் புக் டிரஸ்ட் (13)\nஅங்கனெ ஒண்ணு இங்கனெ ஒண்ணு (1)\nமணல் பூத்த காடு (1)\nஇரா. சண்முக வடிவேல் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/jodi-chedi-tharum-adhirshtam/", "date_download": "2021-05-07T00:29:29Z", "digest": "sha1:HR5A3MSOQ2B3LDFNCTVLQHXPJAQ4ZG2L", "length": 13149, "nlines": 101, "source_domain": "dheivegam.com", "title": "அதிர்ஷ்டம் பெருக | Veetil Valarka Vendiya Sedikal", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் இந்த 2 செடிகளை தனித்தனியாக வளர்த்தால் அதிர்ஷ்டம் எட்டிக்கூட பார்க்காது. ஒன்றோடு ஒன்று பக்கத்தில் வைத்துப்...\nஇந்த 2 செடிகளை தனித்தனியாக வளர்த்தால் அதிர்ஷ்டம் எட்டிக்கூட பார்க்காது. ஒன்றோடு ஒன்று பக்கத்தில் வைத்துப் பாருங்களேன் அதிர்ஷ்டலட்சுமியே உங்களிடம் வந்து அதிர்ஷ்டத்தை கடன் கேட்பாள்.\nசில விஷயங்களை தனியாக வைத்தால் நமக்கு வரக்கூடிய அதிர்ஷ்டம் குறைவாக இருக்கும். ஒரு விஷயத்தோடு மற்றொரு விஷயத்தை சேர்த்து வைக்கும் போது அதனுடைய பலன் இரட்டிப்பாக நமக்குக் கிடைப்பதை நாம் உணர்ந்திருப்போம். உதாரணத்திற்கு வெற்றிலை பாக்கையும் சேர்த்து வைக்கும் போது இரட்டிப்பு பலன். கணவன் மனைவி இருவரும் சேர்ந்து ஆசிர்வாதம் செய்யும்போது இரட்டிப்புப் பலன். அந்தவகையில் இரண்டு ஜோடி செடிகளை பற்றிதான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த நான்கு செடிகளை தனித்தனியாக நம் வீட்டில் வைத்திருந்தாலே ஏகப்பட்ட அதிர்ஷ்டம் நம் வீட்டை தேடி தரும் என்று சொல்கிறது சாஸ்திரம். இதுபோக இந்த செடிகளை ஜோடிஜோடியாக வைத்துப் பாருங்கள். அதன் பின்பு உங்கள் வீட்டில் நடக்கும் அதிசயத்தை.\nநமக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகும் அந்த நான்கு ஜோடி செடிகள் என்னென்ன அந்தச் செடிகளை நம்முடைய வீட்டில் ஜோடி ஜோடியாக வைப்பதால் கிடைக்கக்கூடிய நன்மைகள் என்னென்ன அந்தச் செடிகளை நம்முடைய வீட்டில் ஜோடி ஜோடியாக வைப்பதால் கிடைக்கக்கூடிய நன்மைகள் என்னென்ன என்பதைப் பற்றி இப்போது தெரிந்துகொள்வோமா\nநம்முடைய வீட்டில் துளசி செடி இருப்பதாக வைத்துக் கொள்வோம். துளசி செடியை தனியாக பூஜை செய்வதை விட, அந்த துளசி செடிக்கு அருகில் நெல்லி மர குச்சியை வைத்து பூஜை செய்தாலோ அல்லது அந்த துளசி செடியை நெல்லிமரத்தடி நிழலில் வைத்தாலோ நமக்கு கிடைக்கக்கூடிய பலன் இரட்டிப்பாகும். மகாலட்சுமியின் மனம் குளிர வேண்டும் என்றால், மகாலட்சுமி நிறைவாக ஆசீர்வதித்தை இரட்டிப்பாக நமக்கு தர வேண்டும் என்றால், துளசிச் செடியை நெல்லி மரத்தடியில் வைப்பது மிகவும் விசேஷமானது.\nஉங்களுடைய வீட்டில் பெரிய அளவில் நெல்லி மரத்தை வளர்க்க முடியாது என்றாலும் பரவாயில்லை. இரண்டு சிறிய தொட்டியை வாங்கிக் கொள்ளுங்கள். ஒரு தொட்டியில் நெல்லி செடியையும், மறு தொட்டியில் துளசி செடியை வளர்த்து வரலாம். ஆனால் அந்த இரண்டு தொட்டிகளை தனித்தனியாக பிரித்து வைக்காமல், ஒன்றோடு ஒன்று இணைந்தபடி துளசிச்செடி அருகிலேயே, நெல்லி மர தொட்டியை வைத்து துளசிச் செடியை வழிபடும் போது நெல்லி செடியையும் வழிபட்டு பாருங்கள். வாழ்வில் எதிர்பாராத மாற்றங்கள் எதிர்பாராத திருப்பங்கள் நிச்சயம் உங்களைத் தேடி வரும்.\nஇரண்டாவது ஜோடி செடிகள். கற்பூரவள்ளி நமது வீட்டின் முன் வளர்த்தால் மிகவும் நல்லது. அந்த வாசத்திற்கு கொசு தொல்லை இருக்காது. பூச்சி பொட்டுகள் வீட்டில் நுழையாது. இதோடு மட்டுமல்லாமல், இந்த கற்பூர செடியின் வாசனைக்கு, நேர்மறை ஆற்றலை ஈர்க்கும் சக்தி உள்ளது என்று சொல்லப்பட்டுள்ளது.\nகற்பூரவள்ளிக்கு இணையாக சொல்லப்பட்டுள்ளது தொட்டாசிணுங்கி செடி. தொட்டாசிணுங்கி செடியை பார்த்துவிட்டு செல்லக்கூடிய எந்த காரியமாக இருந்தாலும் அது கட்டாயம் ஜெயம் தான். இப்படிப்பட்ட அதிர்ஷ்டங்களை கொண்ட இந்த இரண்டு செடிகளையும் முடிந்தால் ஒரு பெரிய தொட்டியில் ஒன்றாகவே வளர்க்கலாம். முடியவில்லை என்றாலும் பரவாயில்லை.\nஇரு சிறு சிறு தொட்டிகளில் வளர்த்து, அந்த இரண்டு செடிகளை ஜோடியாக வைத்துப் பாருங்கள். நீங்கள் வீட்டை விட்டு வெளியில் கிளம்பும் போது, அந்த இரண்டு செடியையும் பார்த்துவிட்டு கிளம்ப வேண்டும். வீட்டில் இருக்கக்கூடிய பலவகையான கஷ்டங்களுக்கு இந்த இரண்டு ஜோடிச் செடிகள் நிச்சயம் ஒரு வழியைக் காட்டும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.\nஉங்கள் வீட்டிற்கு வருபவர்கள் வீட்டை பார்த்து பொறாமைப்படுகிறார்களா இந்த பழத்தை இப்படி ஒளித்து வையுங்கள் இந்த பழத்தை இப்படி ஒளித்து வையுங்கள் பொல்லாக் கண் திருஷ்டியும் நொடியில் ஒழிந்துவிடும்.\nவெள்ளிக்கிழமையில் இந்த கலசத்தை பூஜை அறையில் வைத்தால் உங்கள் கையில் பண புழக்கத்திற்கு பஞ்சமே இருக்காது\nகண்ணை கலங்க வைக்கும் கஷ்டம் வரும்போது, வீட்டில் இருந்தபடியே இந்த வழிபாட்டினை செய்தால் தீராத கஷ்டத்திற்கும் தீர்வு கிடைக்கும்.\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mkppando.com/category/%E0%AE%B6%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%AE/", "date_download": "2021-05-07T01:59:54Z", "digest": "sha1:CZ4URGRKLEBECX7SVFJDCU5OEKVIMETV", "length": 4138, "nlines": 62, "source_domain": "mkppando.com", "title": "ஶ்ரீசெல்வ வினாயகர், மேலமருங்கூர் - தம்பி சிவஞானம் என்ற ராசு அவரின் பார்வைய Archives - My Life Experience", "raw_content": "\nஶ்ரீசெல்வ வினாயகர் கோயில், மேலமருங்கூர் உருவான சரித்திரம் எழுதபட்டுள்ளது. அந்த சரித்திரம் எனது தம்பி சிவஞானம் என்ற ராசு அவரின் பார்வையில் வழி\nஶ்ரீசெல்வ வினாயகர் கோயில், மேலமருங்கூர் உருவான சரித்திரம் மேலமருங்கூர் ஶ்ரீசெல்வ வினாயகர் தலமை உரை வணக்கம் நான் பாண்டுரங்கன் என்ற பாண்டி வணக்கத்துடன் எழுதுகிறேன். இன்று மேலமருங்கூர் கிராமத்தில் ஒரு சக்தி வாய்ந்த மூலவர் ஶ்ரீசெல்வ வினாயகர் அருள்பாலித்து வருகிறார். உலகத்தில் உள்ள மக்கள் தெரிந்து கொள்ளும் வண்ணம் தொழில் நுட்ப வசதியுடன்,மேலமருங்கூர் ஶ்ரீசெல்வ வினாயகர் கோயி��் உருவான சரித்திரம் எழுதபட்டுள்ளது. அந்த சரித்திரம் எனது தம்பி சிவஞானம் என்ற ராசு அவரின் பார்வையில்…\nபுரிதல் பற்றிய ஒரு புரிதலும் அதன் அவசியமும்-7\nபுரிதல் பற்றிய ஒரு புரிதலும் அதன் அவசியமும்-6\nபுரிதல் பற்றிய ஒரு புரிதலும் அதன் அவசியமும்\nVigneskanna on புரிதல் பற்றிய ஒரு புரிதலும் அதன் அவசியமும்\nநான் எல்லா உயிரினங்களையும் சமமாக பார்க்கிறேனா\nபுரிதல் பற்றிய ஒரு புரிதலும் அதன் அவசியமும்\nஶ்ரீசெல்வ வினாயகர், மேலமருங்கூர் – தம்பி சிவஞானம் என்ற ராசு அவரின் பார்வைய\nஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயம் – MKP பாண்டுரங்கன் கண்ணோட்டத்தில்\nஸ்ரீ செல்வா விநாயகர் கோவில் வந்த உண்மை கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/actor-karunakaran-about-sarkar-issue/", "date_download": "2021-05-07T01:01:03Z", "digest": "sha1:EHQ72RHUFEM5ECWPHINJRCOPQTZARQHQ", "length": 8055, "nlines": 98, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Actor karunakaran About Sarkar Issue", "raw_content": "\nHome செய்திகள் சர்கார் சர்ச்சை குறித்து ரசிகர் கேட்ட கேள்வி…\nசர்கார் சர்ச்சை குறித்து ரசிகர் கேட்ட கேள்வி…\nசில நாட்களுக்கு முன் நடைபெற்ற ‘சர்கார்’ இசை வெளியீட்டு விழாவில் விஜய்யின் பேச்சு குறித்து நடிகர் கருணாகரன் வெளியிட்ட ட்வீட், விஜய் ரசிகர்கள் மத்தியில் கடும் கோபத்தை உருவாக்கியது. இதனால் விஜய் ரசிகர்கள் அவருடைய ட்விட்டர் பக்கத்தைக் குறிப்பிட்டு கடுமையாக திட்டித் தீர்த்தார்கள்.\nவிஜய் ரசிகர்களின் தொடர் விமர்சனத்தால் “ஒரு நடிகரின் ரசிகர்கள் பதிவிடும் பின்னூட்டங்களே அந்த நடிகரின் தரத்தை தெரிவித்துவிடுகிறது” என்று ட்வீட் செய்தார் நடிகர் கருணாகரன். விஜய் ரசிகர்கள் தொடர்ந்து வறுத்தெடுத்து வந்ததால் விஜய் ரசிகர்களை அடிமைகள் என்றும் கூறியிருந்தார் கருணாகரன்.\nஇதனால் ஒரு சில ரசிகர்கள் ட்விட்டர் மற்றும் தொலைபேசி வாயிலாக கொலை மிரட்டல் விடுத்தாகவும், இதனால் நடிகர் கருணாகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் கடந்த சில நாட்களாக எந்த ஒரு பதிவியும் இருந்தார் .தற்போது சர்கார் பிரச்சனையால் விஜய் ரசிகர்கள் சிலர் அரசு அளித்த இலவச மிக்சி, டிவி போன்றவைகளை உடைத்து அதனை வீடியோ பதிவு செய்து வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.\nப்ரோ மிக்ஸி,லேப்டாப் ஏதும் ஒடைச்சிங்களா\nஇந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பின்னர் ட்விட்டரில் ரசிகர்களுடன் உரையாடிய நடிகர் கருணாகரனிடம் ரசிகர் ஒருவர், ப்ரோ மிக்ஸி,லேப்டாப் ஏதும் ஒடைச்சிங்களா என்று கேள்வி கேட்டிருந்தார், இதற்கு பதிலளித்த நடிகர் கருநகரன், இல்ல ப்ரோ, நான் ஒடச்சா புதுசா வாங்கணும் இல்ல என்று பதிவிட்டுள்ளார். விஜய் ரசிகர்களிடம் மீண்டும் வம்பு வைக்க கூடாது என்று ,,மிகவும் சாதுர்யமாக பதிலளித்து நடிகர் கருணாகரன் எஸ்கேப் ஆகியுள்ளார்.\nPrevious articleஅமைச்சர்களுக்கு தான் குளிர்விட்டு போச்சி..விஜய்க்கு ஆதரவு தெரிவித்த பிரேமலதா விஜயகாந்த்..\nNext articleசர்கார் படத்தை பார்க்க சென்ற ரசிகர்கள்..வீட்டிற்கு பிணமாய் திரும்பிய அவலம்..\n4 சிறுவர்கள் உட்பட அஸ்வின் குடும்பத்தில் 10 பேருக்கு கொரோனா தொற்று. (அவர் பயந்த மாதிரியே ஆகிடிச்சே)\nகுஷி பட ஜோதிகா போல ட்ரான்ஸ்பிரென்ட் உடையில் புதிய முல்லை நடத்திய போட்டோ ஷூட்.\nவரும் தேர்தலில் விஜய்யின் மக்கள் இயக்கம் எடப்பாடிக்கு ஆதரவா \nநடிகர் விஜய் போலீசில் புகார் – அதுவும் யார் மேலன்னு பாருங்க.\nநடிகையை காதலித்து நிச்சயம் எல்லாம் முடித்து, திருமணத்திற்க்கு டிமிக்கி கொடுத்த காதலன் – நிச்சயதார்த்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilkilavan.com/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2021-05-07T01:47:01Z", "digest": "sha1:OYOB4J7JYFHAM6333VGRSUSBXMMUSKOC", "length": 3531, "nlines": 66, "source_domain": "tamilkilavan.com", "title": "வேகவைத்த முட்டைகளை வெறும் 3 நாட்களுக்கு சாப்பிட்டால் என்ன ஆகும் என்று பாருங்கள் | Tamil Kilavan", "raw_content": "\nவேகவைத்த முட்டைகளை வெறும் 3 நாட்களுக்கு சாப்பிட்டால் என்ன ஆகும் என்று பாருங்கள்\nவேகவைத்த முட்டைகளை வெறும் 3 நாட்களுக்கு சாப்பிட்டால் என்ன ஆகும் என்று பாருங்கள்.\nTwitterFacebook வாயு தொல்லையால் அவதியா இதோ தீர்வு 2 பொருள் போதும் இனி …\nவாயு தொல்லையால் அவதியா இதோ தீர்வு 2 பொருள் போதும் இனி ஆயுசுக்கும் வாயு தொல்லை வராது.\nTwitterFacebook மு ட்டு வ லி ஜவ்வு தேய்மானப்பிரச்னைக்கு எளிமையான வீட்டு வைத்தியம் …\nமு ட்டு வ லி ஜவ்வு தேய்மானப்பிரச்னைக்கு எளிமையான வீட்டு வைத்தியம்\nகடையில் முட்டை வாங்கறதுக்கு முன்னாடி இந்த வீடியோ பாருங்க\n2 முட்டை இருக்கா வீட்டில் உள்ள அனைவருக்கும் கிரிஸ்பியான ஈவினிங் ஸ்நாக்ஸ் ரெடி.\nமுட்டை சுக்கா லஞ்சுக்கு பக்காவான சைடிஷ் 10 நிமிடத்தில் இப்படி சுவையா செய்து கொடுத்து அசத்துங்க.\nபல கோடி சொத்துக்கு சொந்தக்காரி ஒரு வேலை சோற்றுக்காக வீட்டு வேலை செய்து பிழைக்கும் அவலம்\n20 ஆயிரம் வருடங்களுக்கு முன் மூழ்கிப்போன தமிழனின் வரலாறு.. தற்போது மெல்ல மெல்ல மிதந்து வருகிறது.. தற்போது மெல்ல மெல்ல மிதந்து வருகிறது.. ஒவ்வொரு தமிழனும் உலகத்துக்கு அறிய நண்பர்களுடன் பகிருங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muthootgoldpoint.com/ta/gold-rate-price-trichy/", "date_download": "2021-05-07T01:04:23Z", "digest": "sha1:JC6NLQ26566LUIK3HUNI6OOIRD624L3D", "length": 17498, "nlines": 137, "source_domain": "www.muthootgoldpoint.com", "title": "Today Gold Rate in Trichy, Current 22 & 24 Carat Gold Price Per Gram in Trichy - Muthoot Gold Point", "raw_content": "\nநான் எனது வீட்டின் கட்டுமானத்துக்குத் தேவையான பணத்துக்காக -எனது காண்ட்ராக்டர் எங்களை ஏமாற்றி இருந்தார் - சில நகைகளை விற்க விரும்பினேன். ஒரு அரசுப் பேருந்தில் எம். பி.ஜி -யின் விளம்பரத்தைப் பார்த்த நான், அதிகமான தேவையுடன் இருந்ததால் அவர்களைச் சந்திக்க முடிவு செய்தேன். இதற்கு முன்னர் தங்கத்தை விற்பன.. மேலும் படிக்க\nமுத்தூட் கோல்டு பாயிண்ட்டை என்னால் எப்போதும் மறக்க முடியாது. சரியான நேரத்தில் எம்.பி.ஜி -யைப் பற்றி எனக்குத் தெரியாமல் போயிருந்தால், நான் எல்லாவற்றையும் இழந்திருப்பேன். குடும்பம் மற்றும் வியாபாரத்தில், உங்களுக்குப் பணம் மிகவும் தேவையாக இருக்கும் பொழுது, அது தட்டுப்பாடாக இருக்கிறது. அது போன்ற நேரங்.. மேலும் படிக்க\nநான் என்னுடைய மூத்த மகனின் கடைசி வருட பொறியியல் கல்லூரி கட்டணத்தைக் கட்ட வேண்டி இருந்தது, என்னிடம் போதுமான அளவு பணம் இல்லை. நாங்கள் பல வருடங்களாக சேர்த்து வைத்திருந்த வெள்ளி நாணயங்கள், மற்றும் தங்க நகைகளை விற்பனை செய்யுமாறு என்னுடைய மனைவி என்னிடம் கூறினார். நான் சில உள்ளூர் கடைகளுக்கு சென்ற பின்னர.. மேலும் படிக்க\nஎன்னுடைய அப்பாவுக்கு அவசரமாக பை-பாஸ் சிகிச்சை செய்ய வேண்டியிருந்த போது, நான் உடனே அனைத்து நகைகளையும் எடுத்துக் கொண்டு எம்.பி.ஜி -க்கு சென்றேன். நான் ஏற்கனவே அவர்களிடம் பரிவர்த்தனை செய்துள்ளேன். நான் அவர்களிடம் முதன் முறையாகக் கடன் பெற்றது, நான்கு வருடங்களுக்கு முன்னர் என்னுடைய அழகு நிலையத்தைத் தொட.. மேலும் படிக்க\nதொலைபேசி/மொபைல்/எஸ்.எம்.எஸ்/மின்னஞ்சல் முகவரி வாயிலாக, தங்களின் சேவை பற்றிய தகவல்கள்/விளம்பரங்களைத் தெரிவிப்பதற்காக என்னை அழைக்க/தொடர்பு கொள்ள, முத்தூட் எக்சிம் பிரைவேட் லிமிடெட், மற்றும் பிற முத்தூட் பாப்பச்சன் குழும நிறுவனங்களுக்கு (அவற்றின் முகவர்கள்/பிரதிநிதிகள் உட்பட), நான் அங்கீகாரமளிக்கிறேன்.\nநீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் கீழுள்ள இடங்களில் உள்ள எங்கள் கிளைக்கு வருவது தான் அகமதாபாத், பெங்களூர், பெர்ஹாம்பூர், சென்னை, கோயம்புத்தூர், டெல்லி, எர்ணாகுளம், கொல்கத்தா, மதுரை, விஜயவாடா மற்றும் திருச்சி\nஅகமதாபாத், பெங்களூர், பெர்ஹாம்பூர், சென்னை, கோயம்புத்தூர், டெல்லி, மும்பை, எர்ணாகுளம், கொல்கத்தா, மதுரை, விஜயவாடா மற்றும் திருச்சி\nஎங்களுடைய பிற இணையதளங்களைத் தேர்வு செய்யவும்\nஎங்களுடைய கட்டணமில்லா தொலைபேசி எண்\nஎங்கள் கட்டணம்-இல்லாத தொலைபேசி எண்ணுக்கு அழைத்து,\nஎங்கள் வாடிக்கையாளர் சேவை மையப் பிரதிநிதியிடம் பேசுங்கள்.\nமுத்தூட் எக்சிம் பிரைவேட் லிமிடெட்\n40/7384 முத்தூட் டவர்ஸ், எம்.ஜி. சாலை,\nடெக்மேக்னட் மூலம் இணையதள வடிவமைப்பு\nபதிப்புரிமை © முத்தூட் எக்ஸிம் பிரைவேட் 2021 - அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/friday-aval-poojai/", "date_download": "2021-05-07T02:13:18Z", "digest": "sha1:6UBBA3V64UPSM34BV5RKFTV4VDD5U5FD", "length": 14059, "nlines": 104, "source_domain": "dheivegam.com", "title": "மகாலட்சுமி வழிபாடு | Mahalakshmi Poojai Tamil", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் ஒரு கைப்பிடி அவலை உங்கள் வீட்டு பூஜை அறையில் இன்று, இப்படி வைத்தாலே போதும். வீட்டில்...\nஒரு கைப்பிடி அவலை உங்கள் வீட்டு பூஜை அறையில் இன்று, இப்படி வைத்தாலே போதும். வீட்டில் இருக்கும் மகாலட்சுமி வெளியே செல்ல வாய்ப்பே இல்லை.\nபொதுவாகவே வெள்ளிக்கிழமை என்றால் எல்லோரது வீட்டிலும் மகாலக்ஷ்மியை மனதார வேண்டிக்கொண்டு, வீடு சுபிட்சம் அடைய பூஜை செய்வார்கள். இந்த வெள்ளிக்கிழமை பூஜையை மேலும் சிறப்பானதாக மாற்ற நாம் என்ன செய்ய வேண்டும் அந்த மகா விஷ்ணுவின் ஆசீர்வாதத்தையும், மகாலட்சுமியின் ஆசீர்வாதத்தையும் முழுமையாகப் பெற ஒரு சுலபமான பரிகாரத்தை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். எல்லோருக்கும் இருக்கக்கூடிய கஷ்டம் பணக்கஷ்டம். இந்த பண கஷ்டம் சீக்கிரமே தீருவதற்கு ஒரு கைப்பிடி அவல் போதும் என்று சொல்கிறது சாஸ்திரம். இந்த அவலை வெள்ளிக்கிழமை அன்று என்ன செய்தால், நம் வறுமை நீங்கும் அந்த மகா விஷ்ணுவின் ஆசீர்வாதத்தையும், மகாலட்சுமியின் ஆசீர்வாதத்தையும் முழுமையாகப் பெற ஒரு சுலபமான பரிகாரத்தை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். எல்லோருக்கும் இருக்கக்கூடிய கஷ்டம் பணக்கஷ்டம். இந்த பண கஷ்டம் சீக்கிரமே தீருவதற்கு ஒரு கைப்பிடி அவல் போதும் என்று சொல்கிறது சாஸ்திரம். இந்த அவலை வெள்ளிக்கிழமை அன்று என்ன செய்தால், நம் வறுமை நீங்கும் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாமா\nவெள்ளிக்கிழமைகளில் நீங்கள் காலை வேளையில் பூஜை செய்பவர்களாக இருந்தாலும் சரி, மாலைவேளைகளில் பூஜை செய்வதாக இருந்தாலும் சரி, காலையிலேயே எழுந்து குளித்து முடித்துவிட்டு, சுத்தமான பின்பு உங்களுடைய வீட்டில் இருக்கக்கூடிய அவலை எடுத்து, ஒரு கைப்பிடி அளவு, ஒரு கிண்ணத்தில் போட்டு சுத்தமான தண்ணீரை ஊற்றி, நாட்டு சர்க்கரை அல்லது வெல்லத்தை அதில் தூள் செய்து போட்டு விடுங்கள். அது அப்படியே ஊறட்டும். இரண்டிலிருந்து மூன்று மணி நேரங்கள் வரை ஊறினால் போதும்.\nதண்ணீரில் ஊறிய அவலை மகாலட்சுமிக்கு பூஜை செய்யும்போது, உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து விடுங்கள். எப்போதும் போல தீபம் ஏற்றி, தாம்பூலம் வைத்து மகாலட்சுமிக்கு தெரிந்த மந்திரத்தை சொல்லி உங்கள் வீட்டு வெள்ளிக்கிழமை பூஜையை முடித்துவிட்டு, மகாலட்சுமி முன்பாக வைத்த அந்த அவலை எடுத்து, எறும்புகளுக்கு அல்லது காக்கை குருவிகளுக்கோ மற்ற பறவைகளுக்கோ தானமாக இட வேண்டும்.\nநாராயணருக்கு கிருஷ்ண பரமாத்மாவுக்கு மிகவும் பிடித்த இந்த அவலை, மகாலட்சுமிக்கு உகந்த தினமான வெள்ளிக்கிழமையில் நம்முடைய வறுமை நீங்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டு, இந்த முறையில் வாயில்லா ஜீவன்களுக்கு தானம் செய்யும்போது, இந்த தானம் நமக்கு கோடி புண்ணியத்தை தரும். நம் கர்ம வினையும் குறைவதாக சொல்லப்பட்டுள்ளது.\nஅனேகமாக கிருஷ்ண பரமாத்மா, குசேலரின் கதை நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான். இந்த ஒரு கைப்பிடி அவல் மூலமாகத்தான் குசேலர் ராஜ வாழ்க்கையை பெற முடிந்தது. நீங்களும் உங்களுடைய குடும்பமும் வறுமையில் இருந்து நீங்கி, சுகபோகமான வாழ்க்கையைப் பெற வெள்ளிக்கிழமைகளில் எறும்புகளுக்கு இந்த ஒரு கைப்பிடி அவலை இனிப்பு சுவை சேர்த்து தானமாக கொடுத்து தான் பாருங்களேன்\nவாரம்தோறும் இந்த தானத்தை நீங்கள் செய்யலாம். உங்களுடைய குடும்பம் சுபிட்சம் அடைந்து, குலம் விருத்தி அடைந்து, உங்கள் பரம்பரையே வறுமை இல்லாத பரம்பரையாக வாழ்வதற்கு ஒரு சுலபமான பரிகாரத்தை தான் இன்று நாம் தெரிந்து கொண்டு இருக்கின்றோம். நிறைவான இந்த வெள்ளிக்கிழமை மாலை பூஜை செய்வதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பாக, ஒரு கைப்பிடி அவலை தண்ணீரில் போட்டு, வெல்லம் சேர்த்து ஊற வைத்துவிடுங்கள்.\nமாலைப் பூஜையின்போது மகாலட்சுமிக்கு முன்பு இந்த அவலை வைத்துவிட்டு, அதன் பின்பு இந்த பிரசாதத்தை, உங்கள் வீட்டு அருகில் இருக்கக்கூடிய மரத்தடியில் கொண்டுபோய் வைத்தாலும் சரி, மொட்டை மாடியில் மாலை நேரத்தில் பறவைகள், தான் வசிக்கும் கூட்டிற்கு பறந்து செல்லும். அந்தப் பறவைகளுக்கு சாப்பிடுவதற்காக வைத்தாலும் சரி. புண்ணியம் உங்களுக்கே நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்து பலனடையலாம் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.\nதொட்டதெல்லாம் வெற்றியாக, நெற்றியில் இதை இட்டுக் கொள்ளுங்கள். குடிசையில் வசிப்பவர்களும், சீக்கிரமே கோட கோபுரத்தின் அதிபதி ஆகிவிடலாம்.\nஇது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nமகாலட்சுமி பூஜை செய்வது எப்படி\nஉங்கள் வீட்டிற்கு வருபவர்கள் வீட்டை பார்த்து பொறாமைப்படுகிறார்களா இந்த பழத்தை இப்படி ஒளித்து வையுங்கள் இந்த பழத்தை இப்படி ஒளித்து வையுங்கள் பொல்லாக் கண் திருஷ்டியும் நொடியில் ஒழிந்துவிடும்.\nவெள்ளிக்கிழமையில் இந்த கலசத்தை பூஜை அறையில் வைத்தால் உங்கள் கையில் பண புழக்கத்திற்கு பஞ்சமே இருக்காது\nகண்ணை கலங்க வைக்கும் கஷ்டம் வரும்போது, வீட்டில் இருந்தபடியே இந்த வழிபாட்டினை செய்தால் தீராத கஷ்டத்திற்கும் தீர்வு கிடைக்கும்.\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/kudu-vittu-kudu-payum-siddhar/", "date_download": "2021-05-07T00:08:49Z", "digest": "sha1:FYAMH24BPE26D3DYAGLUEEH33E2LC5ZC", "length": 5418, "nlines": 94, "source_domain": "dheivegam.com", "title": "கூடு விட்டு கூட பாய்ந்து காட்டும் அதிசய சித்தர் - வீடியோ - Dheivegam", "raw_content": "\nHome ஆன்மிகம் வீடியோ கூடு விட்டு கூட பாய்ந்து காட்டும் அதிசய சித்தர் – வீடியோ\nகூடு விட்டு க���ட பாய்ந்து காட்டும் அதிசய சித்தர் – வீடியோ\nமுழு வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.\nகூடு விட்டு கூடு பயம் கலையை பற்றி நாம் புத்தகங்களில் படித்திருப்போம், சினிமாக்களில் பார்த்திருப்போம். அனால் அதை யாராவது நேரிலே செய்து காட்டி நீங்கள் பார்த்ததுண்டா இந்த கலியுகத்தில் கூடு விட்டு கூடு பாய்ந்து காட்டுகிறார் ஒரு சித்தர். வாருங்கள் அந்த வீடியோ பதிவை பார்ப்போம்.\nஅருப்புக்கோட்டையில் முருகன் கண் திறந்த காட்சி தற்போது இணையத்தில் அதிவேகமாக வைரலாகி கொண்டிருக்கிறது. இதோ அந்த பதிவு உங்களுக்காக\n2019 ஆண்டு அத்தி வரதர் தரிசன விழாவின் கடைசி தீபாராதனை வீடியோ\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2020/02/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2021-05-07T00:21:54Z", "digest": "sha1:NNI65ATLFGLZTHQJKGOU2WN5HBOSO6FR", "length": 13649, "nlines": 141, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nஅக்கால வழக்கங்களையே வலியுறுத்தாமல் இன்றைய விஞ்ஞான காலச் சுழற்சியிலிருந்தே ஆத்ம வலுவைக் கூட்ட வேண்டும் என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nஅக்கால வழக்கங்களையே வலியுறுத்தாமல் இன்றைய விஞ்ஞான காலச் சுழற்சியிலிருந்தே ஆத்ம வலுவைக் கூட்ட வேண்டும் என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nஒவ்வொரு நொடிப் பொழுதிலும் நாம் எடுக்கும் சுவாசத்தால் ஆத்ம அலையின் தொடர்பு கொண்டுதான் சரீர இயக்கச் செயலினால் ஆத்மாவின் வலுவும் கூடிக் கொண்டே உள்ளது.\nஇயற்கையின் மாற்றக் குணங்களும்… உருவாகும் ஒவ்வொரு சக்தியுமே…\n1.நொடிக்கு நொடி மாற்ற உராய்வு வளர்ப்பு தன்மையில் தான் மாற்றமும் வளர்ப்பும்\n2.சுழற்சி ஓட்டத்தில் எல்லா வகை குண வளர்ப்பு முறையிலும் வளர்ந்து கொண்டுள்ளது.\nஅடர்ந்த காட்டுப் பகுதியில் மேடான மலைப் பகுதி தெரிகிறது. அதிலே மலையும் பாறைகளும் தெரிகிறது. மலையும் பாறையும் சேர்ந்து இருந்தாலும் ஓரிடத்தில் “மிகப் பெரிய பாறை ஒன்று” நிற்பதைப் போன்றும் தெரிகின்றது.\nபிறிதொரு இடத்தில் அழகான குளமும் அக்குளத்தின் நீர் பாசி படிந்த கிளிப் பச்சையும் நிறம் போலவும் அப்பச்சையின் நிறம் மாறி மாறி கரும் பச்சையைப் போலவும் அதைச் சுற்ற���ச் சுற்றி மேலும் சில செடி கொடிகள் வளர்வதைப் போன்றும் தெரிகிறது.\nபிறிதொரு இடத்தில் ஏற்றம் இறைக்கும் கிணறு இருக்கின்றது அதிலே நீர் உயர்ந்து குறைந்து இருப்பதைப் போன்றும் ஆனால் நீரின் நிறம் தெளிவு கொண்ட நீராகவும் காட்சியில் தெரிகின்றது.\nபூமியின் பிடிப்புள்ள பாறைக்கும் அதற்கு மேல் பிடிப்பற்ற… அதாவது\n1.பூமியின் வளர்ப்பு நிலையிலிருந்து மாறி\n2.ஒரு பாறையின் மேல் ஒரு பாறை நிற்கின்றது என்றால்\n3.அப்படி நிற்கும் நிலை எப்படி ஏற்படுகின்றது…\nபூமியின் வளர்ப்புப் பிடியுடன் வளரும் பாறைகள்\nஇப்பூமியில் ஏற்படும் பிரளய காலங்களில்\n1.சில மண்டல ஓட்டங்களின் சேர்க்கைக் காலங்களிலும்\n2.பூமி ஈர்க்கும் அமில மாற்றத்திலும்\n3.பூமி ஈர்த்து வெளிக் கக்கும் உஷ்ண அலையின் அமில வளர்ப்பில் அந்தந்த இடங்களில் வளரும்\n4.கனி வளங்களுக்கும் கல் மண் இவற்றின் வளர்ப்பு நிலைகளுக்கும்\n5.அதற்குக் கிடைக்கப் பெறும் ஊட்டச் சத்து மாறுபட்டவுடன்\n6.பழக்கப்பட்டு எடுத்த வளர்ப்பு நிலை குன்றிய நிலையில் அக்கல்களில் சில வெடிப்பு நிலைகள் ஏற்பட்டு விடுகின்றது.\nஆகவே வளர்ந்த நிலையில் அதனுடைய சக்தி கிடைக்காமல் தடைப்பட்ட பின் அதன் தன்மை அதே நிலையிலேயே வெடிப்புப் பெற்று கீழிருந்து வளரும் பாறையின் மேல்… இப்பாறைகள் கரடு முரடாக… மலைகளில் ஒன்றுக்கு மேல் தனித் தனிப் பாறைகளாக உருண்டு நிற்கின்றன.\nஆனால் பூமியின் பிடிப்புடன் வளரும் பாறை மாறு கொண்ட வளர்ப்புடனே வளர்ந்து கொண்டுள்ளது.\nநீரின் நிலை பாசி படர்ந்து வண்ணங்கள் மாறி தெரிந்ததன் நிலையும் இதைப் போன்றே ஒவ்வொரு நொடிக்கும் மாறும் உஷ்ண வெக்கையின் ஆவி நிலைக்கொப்ப மாற்றத் தன்மைகள் வருவதால் தான்.\nஇத்தகைய இயற்கையின் உண்மைகளை எல்லாம் எப்படி இதைப் போன்று அறிகின்றோமோ அதைப் போன்று தான் வளரும் மனித ஆத்ம வளர்ப்பிலும் மாற்றங்கள் உண்டு.\nஇப்பூமியின் பிடியுடன் வாழும் தன்மையில்… மாறி மாறி வளர்ந்து கொண்டுள்ள இயற்கையின் சுழற்சியில்… ஒன்றை ஒத்த தன்மையில் ஒன்றில்லாத உலகச் சுழற்சி நிலையில்\n1.பல கோடி ஆண்டுகளுக்கு முன் இருந்த மனிதனின் வளர்ப்பு ஞானமும்\n2.பத்தாயிரம் இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்த சித்தர்கள் பெற்ற ஞான சக்திக்கும்\n3.இன்றைய வளர்ந்த கலியின் ஆத்ம ஞான சக்திக்கும் மிக மிக மாறுபாடு��ள் உண்டு.\n1.நம் செயலும் இயற்கையுடன் ஒன்றிச் சென்றுதான் ஞான சக்தி பெறவேண்டும் என்ற எண்ணத்தின் ஈர்ப்பைச் செலுத்தி\n2.ஆசார அனுஷ்டானங்களை வலியுறுத்தி வகைப்படுத்தித்தான் எண்ணத்தைச் செலுத்தி வழி பெறவேண்டும் என்று உணராமல்\n3.இக்கலியின் காலத்தில் மனித ஈர்ப்புத் துரித அறிவாற்றலின் சக்தியை\n4.இக்கால நிலையின் சுழற்சியுடன் கலந்துள்ள தன்மையிலிருந்தே\n5.அவரவர்களுக்கு அமைந்த வாழ்க்கையின் வளர்ப்பில் ஒவ்வொரு செயலிலுமே உயர்வின் ஞானத்தைச் செலுத்தி\n6.ஆத்மாவின் வலுவுக்கு வலுக் கூட்டும் வழி முறையை வகுத்துக் கொள்ளுங்கள்.\nசாமியையே (ஞானகுரு) எண்ணிக் கொண்டிருப்பதைக் காட்டிலும் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து உடலுக்குள் விளைய வைக்க வேண்டும்\n என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nசீராக ஆத்ம சுத்தி செய்வோருக்குக் கிடைக்கும் பலன்கள்\nஆண்டவனிலிருந்து வந்த பிம்பங்கள் தான் அனைத்துமே என்று எண்ணினால்… “தான்” என்ற தனித்த அகங்காரம் வராது – ஈஸ்வரபட்டர்\nஉங்களுக்குக் கொடுத்த சக்திகளை ஒவ்வொருவரும் விரயம் ஆக்காது பயன்படுத்துங்கள்\n24 X 7 சாமிகள் உபதேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaipoonga.net/cinema/latest-stills-of-gorgeous-actress-anjena-kirti/", "date_download": "2021-05-07T01:08:55Z", "digest": "sha1:N6ILHD7HVYAUSU3PR767QRL7SU4YCSWW", "length": 8463, "nlines": 211, "source_domain": "kalaipoonga.net", "title": "Latest Stills Of Gorgeous Actress Anjena Kirti - Kalaipoonga", "raw_content": "\nநடிகை அஞ்சேனா கீர்த்தி அழகிய புகைப்படங்கள்\nNext articleதமிழகத்தில் தற்போதைக்கு தியேட்டர்களை திறக்கும் வாய்ப்பு இல்லை: அமைச்சர் கடம்பூர் ராஜூ\nமாநாடு டப்பிங் ஆரம்பம்… படக்குழு வெளியிட்ட புகைப்படங்கள்\nமூத்த தலைவர் ஆர்.எம்.வீரப்பனை நேரில் சந்தித்து ஆசி பெற்றார் மு.க.ஸ்டாலின் | Video\nநமீதா தியேட்டர்ஸ் – உண்மை சம்பவங்களின் அடிப்படியில் உருவாகும் படங்களை ஒளிபரப்பும் முதல் OTT தளம்\nவெளியானது 34 பேர் கொண்ட தமிழக அமைச்சரவை பட்டியல்\nவெளியானது 34 பேர் கொண்ட தமிழக அமைச்சரவை பட்டியல் தமிழகத்தின் முதலமைச்சராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை சென்னை - கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்க உள்ளார். கொரோனா பரவலை கருத்தில்...\nமாநாடு டப்பிங் ஆரம்பம்… படக்குழு வெளியிட்ட புகைப்படங்கள்\nமாநாடு டப்பிங் ஆரம்பம்... படக்குழு வெளியிட்ட புகைப்படங்கள் சிம்பு நடிப்பில் உருவாகி உள்ள படம�� மாநாடு. வெங்கட் பிரபு இயக்கியுள்ள இப்படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார். இப்படத்தில் சிம்பு அப்துல் காலிக்...\nமூத்த தலைவர் ஆர்.எம்.வீரப்பனை நேரில் சந்தித்து ஆசி பெற்றார் மு.க.ஸ்டாலின் | Video\nமூத்த தலைவர் ஆர்.எம்.வீரப்பனை நேரில் சந்தித்து ஆசி பெற்றார் மு.க.ஸ்டாலின் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றதை அடுத்து தமிழகத்தின் அடுத்த முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பு ஏற்க உள்ளார். நாளை (மே 7...\nவெளியானது 34 பேர் கொண்ட தமிழக அமைச்சரவை பட்டியல்\nவெளியானது 34 பேர் கொண்ட தமிழக அமைச்சரவை பட்டியல் தமிழகத்தின் முதலமைச்சராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை சென்னை - கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்க உள்ளார். கொரோனா பரவலை கருத்தில்...\nமாநாடு டப்பிங் ஆரம்பம்… படக்குழு வெளியிட்ட புகைப்படங்கள்\nமாநாடு டப்பிங் ஆரம்பம்... படக்குழு வெளியிட்ட புகைப்படங்கள் சிம்பு நடிப்பில் உருவாகி உள்ள படம் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கியுள்ள இப்படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார். இப்படத்தில் சிம்பு அப்துல் காலிக்...\nமூத்த தலைவர் ஆர்.எம்.வீரப்பனை நேரில் சந்தித்து ஆசி பெற்றார் மு.க.ஸ்டாலின் | Video\nமூத்த தலைவர் ஆர்.எம்.வீரப்பனை நேரில் சந்தித்து ஆசி பெற்றார் மு.க.ஸ்டாலின் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றதை அடுத்து தமிழகத்தின் அடுத்த முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பு ஏற்க உள்ளார். நாளை (மே 7...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/tamilnadu/2021/may/03/edappadi-k-palanisamy-wishes-for-mk-stalin-3616413.amp", "date_download": "2021-05-07T01:00:52Z", "digest": "sha1:GVF2ZXLTX74ZN5QOSLVMHW3HVLGOCHH5", "length": 4486, "nlines": 41, "source_domain": "m.dinamani.com", "title": "மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து | Dinamani", "raw_content": "\nமு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து\nதமிழக முதல்வராக பொறுப்பேற்கவுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு தற்போதைய முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nதமிழக சட்டபேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி பெருவாரியான வெற்றியைப் பெற்றுள்ள நிலையில் அரசியல் கட்சித் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.\nஇந்நிலையில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்கவுள்ள திரு. மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்' என்று பதிவிட்டுள்ளார்.\nஅன்று அண்ணா... இன்று ஸ்டாலின்...\nதனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூல்: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nபுதுவை முதல்வராக இன்று பதவியேற்கிறாா் என்.ரங்கசாமி\nகடும் வெயில்: மழைநீர் குட்டையில் குளித்து மகிழும் யானைகள்\nதருமபுரம் ஆதீனம் சாா்பில் ஸ்டாலினுக்கு அருட்பிரசாதம்\nஅமைச்சகங்கள், துறைகளின் பெயா்கள் மாற்றம் ஏன்\nமநீமவிலிருந்து முக்கிய நிா்வாகிகள் கூண்டோடு ராஜிநாமா\nwest bengal electionஆஸ்கர் விருதுஸ்டெர்லைட்முதல்வர் எடப்பாடி பழனிசாமிஇந்தியாவில் கரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2021/04/23062127/Maheshbabu-is-directed-by-Lokesh-Kanagaraj.vpf", "date_download": "2021-05-07T01:44:48Z", "digest": "sha1:4RBK7HBYNIOE4VU6J4ZEJEHBTBFEPG7O", "length": 8838, "nlines": 119, "source_domain": "www.dailythanthi.com", "title": "Maheshbabu is directed by Lokesh Kanagaraj || மகேஷ்பாபுவை இயக்குகிறார் லோகேஷ் கனகராஜ்", "raw_content": "Sections செய்திகள் சட்டசபை தேர்தல் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nமகேஷ்பாபுவை இயக்குகிறார் லோகேஷ் கனகராஜ்\nவிஜய் நடித்த ‘மாஸ்டர்’ படத்தை டைரக்டு செய்தவர், லோகேஷ் கனகராஜ். இவர் அடுத்து கமல்ஹாசனை வைத்து ஒரு படத்தை இயக்க இருக்கிறார்.\nவிஜய் நடித்த ‘மாஸ்டர்’ படத்தை டைரக்டு செய்தவர், லோகேஷ் கனகராஜ். இவர் அடுத்து கமல்ஹாசனை வைத்து ஒரு படத்தை இயக்க இருக்கிறார். அந்த படத்தை இயக்கி முடித்த பின், மீண்டும் அவர் விஜய் நடிக்கும் படத்தை டைரக்டு செய்யப்போவதாக பேசப்படுகிறது.\nஇதற்கிடையில், தெலுங்கில் பிரமாண்டமான படங்களை தயாரித்து வரும் மைத்ரி மூவீஸ் என்ற பட நிறுவனம் லோகேஷ் கனகராஜை சந்தித்து தங்கள் நிறுவனத்துக்காக ஒரு தெலுங்கு படத்தை டைரக்டு செய்து தரும்படி, கேட்டுக் கொண்டிருக்கிறதாம். இதற்காக லோகேஷ் கனகராஜிடம் ஒரு பெரிய தொகையை அட்வான்ஸ் ஆக கொடுத்து இருக்கிறதாம். மேலும் பிரபாஸ், ராம் சரண் ஆகிய இருவரும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க தயாராக இருக்கிறார்கள்.\nஇப்போது விஜய் நடிக்கும் 66-வது படத்தை முடித்த பின், மகேஷ்பாபுவை வைத்து ஒரு தெலுங்கு படத்தை இயக்க இருப்பதாக கூறப் படுகிறது.\n1. ஆசிரியர் தேர்வில் குளறுபடி நடந்ததாக குற்றச்சாட்டு - 9 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை கட்டாய ஓய்வில் அனுப்ப பரிந்துரை\n2. மேற்குவங்காளம்: துப்பாக்கிச்சூடு நடந்த இடத்தை நாளை பார்வையிடுகிறார் மம்தா - பேரணி நடத்தவும் திட்டம்\n3. தமிழகத்தில் நீட் தேர்வை ஏற்க முடியாது-மத்திய சுகாதாரத் துறை அமைச்சருடனான கூட்டத்தில் தமிழக அதிகாரிகள் திட்டவட்டம்\n4. மேற்குவங்காளம்: துப்பாக்கிச்சூடு நடைபெற்ற வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு ஒத்திவைப்பு\n5. 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு அமித்ஷாவே முழு பொறுப்பு: மம்தா பானர்ஜி\n1. ஆட்டோ ஓட்டிய பெண்ணுக்கு கார் வாங்கி கொடுத்த நடிகை சமந்தா\n2. இறுதிகட்டத்தில் படப்பிடிப்பு மகனுடன் நடிக்கும் விக்ரம்\n3. ‘தலைவி' படம் ஓ.டி.டி.யில் ரிலீசா\n4. முக கவசம் அணியாமல் வாழ ஏங்குகிறேன்-நடிகை பூஜா ஹெக்டே\n5. இந்தியில் நடிக்கும் மகிழ்ச்சியில் ராஷ்மிகா\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/compare-tractors/new-holland+3037-tx-vs-mahindra+yuvo-475-di/", "date_download": "2021-05-07T00:25:44Z", "digest": "sha1:5B4S5DIUH3VRPWABYSQLPPYB33IULJTL", "length": 22638, "nlines": 170, "source_domain": "www.tractorjunction.com", "title": "நியூ ஹாலந்து 3037 TX வி.எஸ் மஹிந்திரா யுவோ 475 DI ஒப்பீடு - விலைகள், விவரக்குறிப்புகள், அம்சங்கள்", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nஒப்பிடுக நியூ ஹாலந்து 3037 TX வி.எஸ் மஹிந்திரா யுவோ 475 DI\nஒப்பிடுக நியூ ஹாலந்து 3037 TX வி.எஸ் மஹிந்திரா யுவோ 475 DI\nநியூ ஹாலந்து 3037 TX\nமஹிந்திரா யுவோ 475 DI\nநியூ ஹாலந்து 3037 TX வி.எஸ் மஹிந்திரா யுவோ 475 DI ஒப்பீடு\nஒப்பிட விரும்புகிறேன் நியூ ஹாலந்து 3037 TX மற்றும் மஹிந்திரா யுவோ 475 DI, எந்த டிராக்டர் உங்களுக்கு சிறந்தது என்பதைக் கண்டறியவும். நியூ ஹாலந்து 3037 TX விலை 5.40-6.20 lac, மற்றும் மஹிந்திரா யுவோ 475 DI is 6.00 lac. நியூ ஹாலந்து 3037 TX இன் ஹெச்பி 39 HP மற்றும் மஹிந்திரா யுவோ 475 DI ஆகும் 42 HP. The Engine of நியூ ஹாலந்து 3037 TX 2500 CC and மஹிந்திரா யுவோ 475 DI 2979 CC.\nபகுப்புகள் HP 39 42\nஎஞ்சின் மதிப்பிடப்பட்ட ஆர்.பி.எம் 2000 2000\nகுளிரூட்டல் ந / அ Liquid Cooled\nஸ்டீயரிங் நெடுவரிசை ந / அ ந / அ\nதிறன் 42 லிட்டர் 60 லிட்டர்\nடிராக்டரின் பரிமாணங்கள் மற்றும் எடை\nசக்கர அடிப்படை 1865 MM 1925 MM\nஒட்டுமொத்த நீளம் 3590 MM ந / அ\nஒட்டுமொத்த அகலம் 1680 MM ந / அ\nதரை அனுமதி 364 MM ந / அ\nபிரேக்குகளுடன் ஆரம் திருப்புதல் 2810 MM ந / அ\nதூக்கும் திறன் 1800 Kg 1500 kg\nவீல் டிரைவ் 2 2\nவிலை சாலை விலையில் கிடைக்கும் 6.00 lac*\nஎரிபொருள் பம்ப் ந / அ ந / அ\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n© 2021 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.ttamil.com/2021/01/02_22.html", "date_download": "2021-05-07T01:28:09Z", "digest": "sha1:E2VRU2X6DAXGWAZ2YVFD7KOTNMU5V6B5", "length": 30483, "nlines": 260, "source_domain": "www.ttamil.com", "title": "புத்தாண்டு வரலாற்று -உண்மைகள்! /பகுதி 02 ~ Theebam.com", "raw_content": "\n\"புத்தாண்டை பற்றிய வரலாற்று உண்மைகள்\nஇன்றைக்கு எமக்கு கிடைக்கும் மிக மிகத் தொன்மையான தமிழ் நூல் தொல்காப்பியம் ஆகும். இது \"காரும் மாலையும் முல்லை. குறிஞ்சி, கூதிர் யாமம் என்மனார் புலவர்\" என்கிறது. ஆக, கார் காலம் [மழைக் காலம்] தான், முதல் காலமாகக் குறிக்கிறது தொல்காப்பியம் எனினும் உறுதியாக, இது தான் புத்தாண்டின் தொடக்கம் என நேரடியாக இங்கு கூறவில்லை எனினும் உறுதியாக, இது தான் புத்தாண்டின் தொடக்கம் என நேரடியாக இங்கு கூறவில்லை மற்றயது தமிழ் மாதம் 'ஆவணி', 'புரட்டாசி' பொதுவாக கார்காலம் என்பர். சங்க இலக்கியங்கள் இதில் மௌனமாக இருக்கிறது. மேலும் எட்டாம் ஒன்பதாம் நூற்றாண்டுகளுக்குப் பிந்திய நிகண்டுகளில் [thesauruses], தமிழ் மாதம் 'ஆவணியே' முதல் மாதம் என்ற குறிப்பைக் காணமுடிகின்றது. என்றாலும் அதன் போது புத்தாண்டு என்று பண்டிகை கொண்டாடப்பட்டதா என்பது தொடர்பாக போதிய சான்றுகள் கிடைக்கவில்லை. உதாரணமாக, \"காரே , கூதிர், முன்பணி, பின்பணி, சீர் இளவேனில், முதுவேனில் என்றாங்கு இருமூன்று வகைய பருவம் அவைதாம் ஆவணி முதலா இரண்டிரண்டாக மேவின திங்கள் எண்ணினர் கொளலே.\" என்று திவாகர நிகண்டு பாடுகிறது. திருஞானசம்மந்தரும் கபாலீச்சரம் என்னும் கோயிலில் இறந்த ஒரு பெண்ணை உயிர்பிக்க, தேவாரம் பாடும் பொழுது, முதல் பாட்டில், \"ஒட்டிட்ட பண்பி னுருத்திர பல்கணத்தார்க் கட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய்.\", நெருக்கமான அன்புடைய மாகேசுரர்களுக்குத் [மகேசுரராகிய சிவனை வழிபடும் அடியார்கள் மாகேசுரர் எனப்படுவர்கள்] திருவிழாக்காலங்களில் [தமிழ் மாதம் ஆவணி / பூரட்டாதியில் நிகழ்வது] அன்பர்கள் அமுது செய்விக்கும் காட்சிகளைக் காணாது செல்வது முறையோ மற்றயது தமிழ் மாதம் 'ஆவணி', 'புரட்டாசி' பொதுவாக கார்காலம் என்பர். சங்க இலக்கியங்கள் இதில் மௌனமாக இருக்கிறது. மேலும் எட்டாம் ஒன்பதாம் நூற்றாண்டுகளுக்குப் பிந்திய நிகண்டுகளில் [thesauruses], தமிழ் மாதம் 'ஆவணியே' முதல் மாதம் என்ற குறிப்பைக் காணமுடிகின்றது. என்றாலும் அதன் போது புத்தாண்டு என்று பண்டிகை கொண்டாடப்பட்டதா என்பது தொடர்பாக போதிய சான்றுகள் கிடைக்கவில்லை. உதாரணமாக, \"காரே , கூதிர், முன்பணி, பின்பணி, சீர் இளவேனில், முதுவேனில் என்றாங்கு இருமூன்று வகைய பருவம் அவைதாம் ஆவணி முதலா இரண்டிரண்டாக மேவின திங்கள் எண்ணினர் கொளலே.\" என்று திவாகர நிகண்டு பாடுகிறது. திருஞானசம்மந்தரும் கபாலீச்சரம் என்னும் கோயிலில் இறந்த ஒரு பெண்ணை உயிர்பிக்க, தேவாரம் பாடும் பொழுது, முதல் பாட்டில், \"ஒட்டிட்ட பண்பி னுருத்திர பல்கணத்தார்க் கட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய்.\", நெருக்கமான அன்புடைய மாகேசுரர்களுக்குத் [மகேசுரராகிய சிவனை வழிபடும் அடியார்கள் மாகேசுரர் எனப்படுவர்கள்] திருவிழாக்காலங்களில் [தமிழ் மாதம் ஆவணி / பூரட்டாதியில் நிகழ்வது] அன்பர்கள் அமுது செய்விக்கும் காட்சிகளைக் காணாது செல்வது முறையோ என்று தொடங்கி, \"ஐப்பசி யோண விழாவு மருந்தவர்கள் துய்ப்பனவுங் காணாதே போதியோ பூம்பாவாய்\" [ஐப்பசி ஓணம்], \"தளத்தேந் திளமுலையார் தையலார் கொண்டாடும் விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்.\" [கார்த்திகை விளக்கீடு], என பாடி ,.. இறுதியாக, \"பெருஞ்சாந்தி காணாதே போதியோ பூம்பாவாய்.\" [பெருஞ்சாந்தி / நீர்முழுக்கு] என்று முடிக்கிறார். இங்கும் தமிழ் மாதம் ஆவணியில் இருந்து ஒரு ஆண்டில் நடக்கும் திருவிழாக்களை வரிசைப் படி குறிப் பிடுகிறார். எனவே, இங்கே கார்ப்பருவமாகிய தமிழ் மாதம் ஆவணியை முதலில் தொடங்கிக் கூறியிருப்பதில் ஏதோ பொருள் இருக்கிறது என நாம் ஊகிக்கலாம் என்று தொடங்கி, \"ஐப்பசி யோண விழாவு மருந்தவர்கள் துய்ப்பனவுங் காணாதே போதியோ பூம்பாவாய்\" [ஐப்பசி ஓணம்], \"தளத்தேந் திளமுலையார் தையலார் கொண்டாடும் விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்.\" [கார்த்திகை விளக்கீடு], என பாடி ,.. இறுதியாக, \"பெருஞ்சாந்தி காணாதே போதியோ பூம்பாவாய்.\" [பெருஞ்சாந்தி / நீர்முழுக்கு] என்று முடிக்கிறார். இங்கும் தமிழ் மாதம் ஆவணியில் இருந்து ஒரு ஆண்டில் நடக்கும் திருவிழாக்களை வரிசைப் படி குறிப் பிடுகிறார். எனவே, இங்கே கார்ப்பருவமாகிய தமிழ் மாதம் ஆவணியை முதலில் தொடங்கிக் கூறியிருப்பதில் ஏதோ பொருள் இருக்கிறது என நாம் ஊகிக்கலாம் பண்டைத் தமிழகத்தில் \"மழை வருதலே\", முதன்மையாக / மங்களகரமாகக் கருதப்பட்டதோ என்னவோ\nஎட்டுத் தொகை / பத்துப் பாட்டு போன்ற பல பாடல்களில் தமிழ் மாதம் தை திங்களும் தை நீராடலும் கூறப்பட்டு இருக்கிறது. ஆனால் எந்த ஒரு இடத்திலும் தமிழ் மாதம் தை தான் வருடத்தின் [ஆண்டின்] தொடக்கம் என நேரடியாக எங்கும் கூறவில்லை எனினும் தமிழ் மரபில் & சங்க இலக்கியங்களில் ..... மிகச் சிறப்பாக / மிக அதிகமாகப் பேசப்படும் / போற்றப்படும் மாதமாக = தமிழ் மாதம் தை எனினும் தமிழ் மரபில் & சங்க இலக்கியங்களில் ..... மிகச் சிறப்பாக / மிக அதிகமாகப் பேசப்படும் / போற்றப்படும் மாதமாக = தமிழ் மாதம் தை அல்லது \"தைஇத் திங்கள்\" இருக்கிறது. நக்கீரர் எழுதிய நெடுநல்வாடையில், \"திண் நிலை மருப்பின் 'ஆடு தலை' ஆக, விண் ஊர்பு திரிதரும் வீங்கு செலல் மண்டிலத்து,\" [160 /161] என்ற இரு வரிகளை காண்கிறோம். இது, திண்ணிய நிலையினையுடைய கொம்பினையுடைய மேடராசியை முதலாகக் கொண்டு, விண்ணில் ஊர்ந்து திரிதலைச்செய்யும் மிகுந்த ஓட்டத்தையுடைய ஞாயிற்றோடு என்று பொருள் படும் [தலை = முதல் அல்லது \"தைஇத் திங்கள்\" இருக்கிறது. நக்கீரர் எழுதிய நெடுநல்வாடையில், \"திண் நிலை மருப்பின் 'ஆடு தலை' ஆக, விண் ஊர்பு திரிதரும் வீங்கு செலல் மண்டிலத்து,\" [160 /161] என்ற இரு வரிகளை காண்கிறோம். இது, திண்ணிய நிலையினையுடைய கொம்பினையுடைய மேடராசியை முதலாகக் கொண்டு, விண்ணில் ஊர்ந்து திரிதலைச்செய்யும் மிகுந்த ஓட்டத்தையுடைய ஞாயிற்றோடு என்று பொருள் படும் [தலை = முதல் (தலையாய = முதன்மையான)]. சூரியன் மேஷத்தில் புகுவது, தமிழ் மாதம் சித்திரை மாதம் ஆகும். இங்கு, நக்கீரர் மேஷம் [ஆடு / Aries ] தான் முதல் என்று கூறுகிறார். அதாவது ராசி மண்டலத்துக்கு முதல் (தலையாய = முதன்மையான)]. சூரியன் மேஷத்தில் புகுவது, தமிழ் மாதம் சித்திரை மாதம் ஆகும். இங்கு, நக்கீரர் மேஷம் [ஆடு / Aries ] தான் முதல் என்று கூறுகிறார். அதாவது ராசி மண்டலத்துக்கு முதல் என்கிறார். ஆனால் எங்கும் ஆண்டுக்கு முதல் என்று கூறவில்லை என்கிறார். ஆனால் எங்கும் ஆண்டுக்கு முதல் என்று கூறவில்லை சிலப்பதிகாரம், இந்திர விழா வைப்பற்றி கூறும் பொழுது, \"நடுக்கு இன்றி நிலைஇய நாள் அங்காடியில் சித்திரைச் சித்திரைத் திங���கள் சேர்ந்தென, 'வெற்றி வேல் மன்னற்கு உற்றதை ஒழிக்க' எனத் \" - என்று சொல்கிறது. இது தமிழ் மாதம் சித்திரை திங்களில், அதாவது இளவேனில் காலத்தில் [வசந்த காலத்தில்] நடந்தது என்கிறது. அவ்வளவுதான் சிலப்பதிகாரம், இந்திர விழா வைப்பற்றி கூறும் பொழுது, \"நடுக்கு இன்றி நிலைஇய நாள் அங்காடியில் சித்திரைச் சித்திரைத் திங்கள் சேர்ந்தென, 'வெற்றி வேல் மன்னற்கு உற்றதை ஒழிக்க' எனத் \" - என்று சொல்கிறது. இது தமிழ் மாதம் சித்திரை திங்களில், அதாவது இளவேனில் காலத்தில் [வசந்த காலத்தில்] நடந்தது என்கிறது. அவ்வளவுதான். அது காமவேள் விழா / காதல் விழா (Valentines Day) என்று தான் சொல்கிறது. ஆனால் அதைப் \"புத்தாண்டு\" அல்லது வருடத்தின் தொடக்கம் என்று சொல்லவில்லை. அது காமவேள் விழா / காதல் விழா (Valentines Day) என்று தான் சொல்கிறது. ஆனால் அதைப் \"புத்தாண்டு\" அல்லது வருடத்தின் தொடக்கம் என்று சொல்லவில்லை மேலும், அறுபது வருட சுற்றுகளின் பெயர்கள் சோழர் கல்வெட்டில் இருந்தாலும் .. அவை பிற்காலத்தில் சேர்க்கப்பட்டவையே ஆகும் மேலும், அறுபது வருட சுற்றுகளின் பெயர்கள் சோழர் கல்வெட்டில் இருந்தாலும் .. அவை பிற்காலத்தில் சேர்க்கப்பட்டவையே ஆகும் எனவே, தமிழ்ப் புத்தாண்டு நாள் பண்டை இலக்கியங்களில் கிடையாது எனவே, தமிழ்ப் புத்தாண்டு நாள் பண்டை இலக்கியங்களில் கிடையாது அவை பிற் கால சேர்க்கையே அவை பிற் கால சேர்க்கையே\nஇலங்கை தமிழர்கள் தமது பாரம்பரிய புது வருடத்தை, தமிழ் மாதம் சித்திரை ஒன்றில், கை விஷேடத்துடன் கொண்டாடுகிறார்கள். \"எவர் கையால் முதற் பணம் கிடைக்கிறதோ, அவரது கைவளம் பணக்காரனாக்கும்\" என்ற நம்பிக்கையிலேயே கை வளம் (கை விஷேடம்) நடைமுறை புத்தாண்டு காலத்தில் பின்பற்றப்படுகிறது. இந்த நிகழ்வு ஏர் அல்லது கலப்பை (Plough) மூலம் நிலத்தைக் முதலாவதாக கிளறிப் புது பயிர்ச் செய்கைக்கு உகந்ததாக மாற்றும் நிகழ்வாகவும் கொண்டாடப்படுகிறது. இந்த புது வருட புண்ணிய காலத்தில் சகலரும் \"மருத்து நீர்\" தேய்த்து குளித்து புது வருடத்தை ஆரம்பிப் பார்கள். போர்த் தேங்காய் உடைத்தலும் மாட்டு வண்டி பந்தயமும் கொண்டாட்டத்தை மெருகேற்றும். அது மட்டும் அல்ல குடும்ப வருகைகளும் நடைபெறும் என்றாலும் பழைய தமிழ் இலக்கியத்திலோ சரித்திரத்திலோ ,சித்திரை மாதத்தில் தான் புது வருடம் பிறக்கிறது என���பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.\nபொதுவாக நாட்டு வழக்கில், “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்ற மூதுரை எல்லோரும் அறிந்த ஒன்றாகவே இருக்கிறது. சித்திரை உண்மையிலேயே வருடப் பிறப்பாக இருந்தால், ஏன் \"சித்திரை பிறந்தால் வழி பிறக்கும்\" என வழக்கில் இல்லாமல் இருக்கிறது இதுவும் சிந்திக்க வேண்டிய ஒன்று\nபூமி ஒரு முறை கதிரவனைச் சுற்றிவரும் காலமே ஓர் ஆண்டாகும். இச்சுழற்சியில் ஒரு பாதிக் காலம் கதிரவன் வடதிசை நோக்கியும் மறுபகுதிக் காலம் தென்திசை நோக்கியும் செல்வதாகக் காணப் படுகிறது. இதனால் ஓராண்டில் சூரியனின் பயணம், வடசெலவு (உத்ராயணம்) என்றும் தென்செலவு (தட்சனாயணம்) என்றும் சொல்லப்படும். பலர் மகர சங்கராந்தி [சமசுகிருதத்தில் 'சங்கரமண' எனில் நகர ஆரம்பி எனப் பொருள் படும்] உத்ராயணத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது என தவறுதலாக கருதுகிறார்கள் [There is a common misconception that Makar Sankranti marks the beginning of Uttarayana] இது முற்றிலும் தவறு. மகர சங்கராந்தி, அல்லது சங்கராந்தி என்பது, சூரியன் தன் வான்வழிப் பயணத்தில் மகர ராசிக்கு மாறும் நாளாகும். இது ஆரம்பத்தில் குளிர்கால கதிர்த்திருப்பத்துடன் இயைந்திருக்கலாம். உதாரணமாக கி மு 272 இல், உத்ராயணத்தின் தொடக்கமும், மகர சங்கராந்தியும் ஒன்றாக இருந்தன, பின் முன்னோக்கி நகர்ந்து இன்று ஜனவரி 14 இல் அதிகமாக நிகழ்கிறது. [In 272 BC, Makar Sankranti was on Dec 21. In 1000 AD, Makar Sankranti was on Dec 31 and now it falls on January 14.] என்றாலும் இன்னும் டிசம்பர் 21 க்கும் ஜனவரி 14 க்கும் பெருமளவு வித்தியாசம் இல்லாததால், இந்த தவறான கருத்து இன்னும் தொடர்கிறது. இன்னும் 9000 ஆண்டுகளுக்குப் பின்பு மகர சங்கராந்தி ஜூனில் வந்து தட்சிணாயனத்தின் தொடக்கமாக மாறிவிடும் [Then Makar Sankranti would mark the beginning of Dakshinayana]. எது என்னவென்றாலும், மகர சங்கராந்தி இந்துக்களின் கொண்டாட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த வேறுபாடையும் நீங்கள் நாட்காட்டியை சிந்திக்கும் பொழுது கருத்தில் கொள்ளவேண்டும். எனவே சூரியனின் அடிப்படையில் நாட்காட்டி உருவாக்கப்பட்டுள்ளது என்றால் சூரியனின் ஆரம்ப பயணத்தின் அடிப்படையில் ஒன்று டிசம்பர் இறுதியில் அல்லது ஜனவரியில் [ஏறத்தாழ தை மாதத்தில்] இருக்க வேண்டும், அல்லது ஜூன் இறுதி அல்லது ஜூலையில் [ஏறத்தாழ ஆடி மாதத்தில்] புத்தாண்டு வர வேண்டும் அல்லவா கி.மு. 2000 ஆண்டுகளுக்கு முன், தென் அமெரிக்காவில் வாழ்ந்�� மாயன் மக்கள், கி.மு 400 ஆண்டளவில் தமது நாட்காட்டியை அறிமுகப்படுத்தினார்கள். இதன் படி, ஜூலை 26 இல் இவர்களின் புத்தாண்டு வருகிறது. அதாவது ஏறத்தாழ தமிழ் ஆடி மாதத்தில் வருவது குறிப்பிடத்தக்கது. இதுவும் நாம் சிந்திக்க வேண்டிய ஒன்று.\nமுடிவுற்றது [பகுதி 01 படிக்க அழுத்துக 👉Theebam.com: புத்தாண்டு வரலாற்று -உண்மைகள்\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nசித்தர் சிந்திய முத்துக்களில் ........3/22\nஇவ்வாரம் வெளியான படங்களும் கதையின் சாரமும்...\nவாழ்க்கையில் சுய முன்னேற்றம் அடைவது எப்படி\nபகுதி/PART:03: இறப்பும் தமிழரின் நம்பிக்கைகளும்:\nஎம் கண்களும் , தொடுதிரையும், கொரோனாவும்- ஒரு கண் வ...\nரயில் எஞ்சின்கள் பற்றிய தகவல்கள்\nசித்தர் சிந்திய முத்துக்கள் ...04/21\nகவிஒளி:எந்தை அவள் .............{கந்தையா தில்லைவிநா...\nதிரைக்கு பெப்ரவரியில் வந்த/வரவிருக்கும் திரைப்படங்கள்\nஅதென்னங்க டி என் ஏ /[பகுதி - 2]\n03 ஈழத்து பாடலும் இளையோர் நடனமும்\nதிருமண வாழ்வைக் கெடுக்கும் விஷயங்கள்\nசித்தர் சிந்திய முத்துக்களில் ........3/20\nகவி:சொர்க்கம் போக ஆசை பட்டேன்\nஅதென்னங்க (DNA) டி என் ஏ\n[பகுதி:01] இறப்பும் தமிழரின் நம்பிக்கைகளும்:-\nதொண்டை வலிகள் ஏன், ஆன்ரிபயோரிக் மருந்துகள் எப்போது...\nசித்தர் சிந்திய முத்துக்களில் ...3/19\n\"ஓங்கார நாதமாய் நெஞ்சை நிறைத்தாய்\"\nதொழில்நுட்பம் -வளர்ச்சி- இரண்டு முகங்கள்\nசித்தர் சிந்திய முத்துக்கள் மூன்று / 18\nவாழ்க்கைப் பயணத்தில் ...வருடல்கள் /பகுதி:04\nதிரையில் -வந்ததும் ,வர இருப்பதுவும்....\nதன்னம்பிக்கை : பென்சில்போல் வாழ்ந்தால் ....\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nதுவரம் பருப்புகளை சாப்பிடுவதால் தீரும் நோய்கள் என்ன தெரியுமா\nஉலகெங்கிலும் ஏராளமான பருப்பு வகை பயிர்கள் மனிதர்கள் உண்பதற்காக பயிரிடப்பட்டு வளர்க்கப்படுகின்றன. இந்தப் பருப்புகள் அனைத்துமே நமது உடல...\n🗺→ இன்றைய செய்திகள்- Tamil News Today\n💢💢💢💢💢💢💢 💢💢💢💢💢💢💢 முதலில் தலைப்பு செய்திகள்- 🎌மத்தள சர்வதேச விமான நிலையம் ,சுற்றுலா மையமாக மாறுகிறது 🎌...\nமனைவியை மீட்க மன்றாடிய கடவுள்\nஇராவணன் என்ற தீயவனிடமிருந்து தனது மனைவியை மீட்க அனைத்து ஆற்றலும் கைவரப்பெற்ற மனிதக் கடவுள் இராமன், ஹனுமான் என்ற குரங்குக்கடவுளிடம் கை...\nநடிகர் பிரஷாந்த் திரையில் காணாமல் போனதற்கு காரணம் என்ன\nநடிகர் பிரஷாந்த் தன் சக கால நடிகர்களான விஜய் , அஜித்தை விட தனி திறமைகள் அதிகம் கொண்டிருந்தும் , வேறு யாருக்கும் வாய்க்காத மி...\nவாழ்க்கைப் பயணத்தில் ...வருடல்கள் /பகுதி:04\nகதையாக..... [ஆரம்பத்திலிருந்து வாசிக்க கீழே செல்லுங்கள்] 👉 [பகுதி: 04] 👉 வருடங்கள் பல எப்படி ஓடியது என்று தெரியவில்லை. அதற்குள் என் குடும...\nசங்க கால இலக்கிய காதலர்கள்: ஆதிமந்தி-ஆட்டனத்தி\"-[ஆக்கம்:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]\nஉலகப் புகழ் பெற்ற காதலர்கள் ரோமியோ-ஜூலியட், சகுந்தலை-துஷ்யந்தன், லைலா-மஜ்னூன், மும்தாஜ்-ஷாஜஹான், கிளியோபட்ரா-மார்க்ஆண்டனி, அம்பிகாபதி-அ...\nகண்ணதாசன்-ஒரு கவிப்பேரரசு வரலாறு [இன்று நினைவுதினம்]\nகண்ணதாசன் ( ஜூன் 24 1927 – அக்டோபர் 17 1981 ) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார் . நான்காயிர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vativamaippu.com/?P=40", "date_download": "2021-05-07T00:24:00Z", "digest": "sha1:U7JQN4HKW6J3PJRAJEHQK5XUZGIWWW3W", "length": 17843, "nlines": 94, "source_domain": "www.vativamaippu.com", "title": " வடிவமைப்பு இதழ்", "raw_content": "\nஉலகளவில் வடிவமைப்பாளர்களிடமிருந்து நல்ல வடிவமைப்புகளைக் கண்டறியவும்.\nஉலகளாவிய பிராண்டுகளிலிருந்து புதுமையான தயாரிப்புகளைக் கண்டறியவும்.\nஉலகளாவிய கட்டடக் கலைஞர்களிடமிருந்து சிறந்த கட்டடக்கலை திட்டங்களைக் கண்டறியவும்.\nசர்வதேச ஆடை வடிவமைப்பாளர்களிடமிருந்து படைப்பு பேஷன் வடிவமைப்புகளைக் கண்டறியவும்.\nபடைப்பு பேஷன் டிசைன்களை ஆராயுங்கள்\nஉலகளாவிய கிராபிக்ஸ் வடிவமைப்பாளர்களிடமிருந்து சிறந்த கிராஃபிக் வடிவமைப்புகளைக் கண்டறியவும்.\nசிறந்த கிராஃபிக் வடிவமைப்புகளை ஆராயுங்கள்\nஉலகளாவிய வடிவமைப்பு ��ிறுவனங்களிலிருந்து சிறந்த மூலோபாய வடிவமைப்புகளைக் கண்டறியவும்.\nசிறந்த மூலோபாய வடிவமைப்புகளை ஆராயுங்கள்\nதிங்கள் 14 செப்டம்பர் 2020\nகாலண்டர் சஃபாரி ஒரு காகித கைவினை விலங்கு காலண்டர். பக்கங்களில் 2 மாத காலெண்டர்களுடன் 6 தாள்களை அகற்றி வரிசைப்படுத்தவும். மடிப்புகளுடன் உடலையும் கூட்டுப் பிரிவுகளையும் மடித்து, மூட்டுகளில் உள்ள மதிப்பெண்களைப் பார்த்து, காட்டப்பட்டுள்ளபடி ஒன்றாகப் பொருந்தும். தரமான வடிவமைப்புகள் இடத்தை மாற்றியமைக்கும் மற்றும் அதன் பயனர்களின் மனதை மாற்றும் சக்தியைக் கொண்டுள்ளன. அவர்கள் பார்ப்பது, பிடிப்பது மற்றும் பயன்படுத்துவது போன்ற வசதிகளை வழங்குகிறார்கள். அவை லேசான தன்மை மற்றும் ஆச்சரியத்தின் ஒரு உறுப்பு, இடத்தை வளப்படுத்துகின்றன. எங்கள் அசல் தயாரிப்புகள் லைஃப் வித் டிசைன் என்ற கருத்தைப் பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டுள்ளன.\nஞாயிறு 13 செப்டம்பர் 2020\nUsb ஃபிளாஷ் டிரைவ் eClip என்பது மெட்ரிக் ஆட்சியாளருடன் உலகின் முதல் காகித கிளிப் யூ.எஸ்.பி ஃபிளாஷ் டிரைவ் ஆகும். eClip க்கு வெள்ளி ஐடிஏ & கோல்டன் ஏ 'வடிவமைப்பு விருது வழங்கப்பட்டது. eClip இலகுரக, உங்கள் கீரிங் மற்றும் உங்கள் காகிதங்கள், ரசீதுகள் மற்றும் பணத்தை ஒழுங்கமைக்க ஒரு காகித கிளிப் போன்ற செயல்பாடுகளுக்கு பொருந்துகிறது. பாதுகாப்பு மென்பொருளுடன் தனிப்பட்ட தரவு, அறிவுசார் சொத்து, முதலாளி தரவு, மருத்துவ தரவு மற்றும் வர்த்தக ரகசியங்களை eClip பாதுகாக்கிறது. eClip ஐ புளோரிடாவில் ஃப்ரோஹ்னே வடிவமைத்தார். தங்க நினைவக இணைப்பு அதிர்ச்சி எதிர்ப்பு, கீறல் எதிர்ப்பு, நீர் எதிர்ப்பு, ஆல்கஹால் எதிர்ப்பு, தூசி எதிர்ப்பு, துரு எதிர்ப்பு, மற்றும் மின்காந்த எதிர்ப்பு.\nசனி 12 செப்டம்பர் 2020\nபவர் சவ் சுழலும் கைப்பிடியுடன் ஒரு பவர் செயின் சா. இந்த சங்கிலியில் 360 ° சுற்றும் ஒரு கைப்பிடி உள்ளது மற்றும் முன் வரையறுக்கப்பட்ட கோணங்களில் நிறுத்தப்படும். பொதுவாக, மக்கள் மரங்களை கிடைமட்டமாக அல்லது செங்குத்தாக சில கோணங்களில் திருப்புவதன் மூலம் அல்லது அவர்களின் உடல் பாகங்களை சாய்த்து அல்லது சாய்த்து வெட்டுகிறார்கள். துரதிர்ஷ்டவசமாக, பார்த்தது பெரும்பாலும் பயனரின் பிடியில் இருந்து நழுவுகிறது அல்லது பயனர் ஒரு மோசமான நிலையில் வேலை செய்ய வேண்டும், இது க��யங்களை ஏற்படுத்தக்கூடும். அத்தகைய குறைபாடுகளை ஈடுசெய்ய, முன்மொழியப்பட்ட பார்த்தது ஒரு சுழலும் கைப்பிடியுடன் பொருத்தப்பட்டுள்ளது, இதனால் பயனர் வெட்டு கோணங்களை சரிசெய்ய முடியும்.\nவெள்ளி 11 செப்டம்பர் 2020\nபாட்டில் அலங்காரமானது தங்கம் பிரகாசிக்கும் “லிதுவேனியன் ஓட்கா தங்கம். பிளாக் பதிப்பு ”லிதுவேனியன் நாட்டுப்புற கலையிலிருந்து அதன் பிரத்யேக தோற்றத்தைப் பெற்றது. சிறிய சதுரங்களிலிருந்து இணைந்த ரோம்பஸ் மற்றும் ஹெர்ரிங்போன்கள் லிதுவேனியன் நாட்டுப்புற கலையில் மிகவும் பொதுவான வடிவங்கள். இந்த தேசிய நோக்கங்களைப் பற்றிய குறிப்பு இன்னும் நவீன வடிவங்களைப் பெற்றது என்றாலும் - மர்மமான கடந்தகால பிரதிபலிப்புகள் நவீன கலையாக மாற்றப்பட்டன. நிலக்கரி மற்றும் தங்க வடிப்பான்கள் மூலம் விதிவிலக்கான ஓட்கா வடிகட்டுதல் செயல்முறையை ஆதிக்கம் செலுத்தும் தங்க மற்றும் கருப்பு நிறங்கள் வலியுறுத்துகின்றன. இதுவே “லிதுவேனியன் ஓட்கா தங்கத்தை உருவாக்குகிறது. கருப்பு பதிப்பு ”மிகவும் மென்மையான மற்றும் படிக தெளிவானது.\nவியாழன் 10 செப்டம்பர் 2020\nகாலண்டர் ஒரு அறையை வடிவமைக்கவும், பருவங்களை கொண்டு வரவும் - பூக்கள் காலெண்டரில் 12 வெவ்வேறு பூக்களைக் கொண்ட குவளை வடிவமைப்பு உள்ளது. ஒவ்வொரு மாதமும் ஒரு பருவகால பூவால் உங்கள் வாழ்க்கையை பிரகாசமாக்குங்கள். தரமான வடிவமைப்புகள் இடத்தை மாற்றியமைக்கும் மற்றும் அதன் பயனர்களின் மனதை மாற்றும் சக்தியைக் கொண்டுள்ளன. அவர்கள் பார்ப்பது, பிடிப்பது மற்றும் பயன்படுத்துவது போன்ற வசதிகளை வழங்குகிறார்கள். அவை லேசான தன்மை மற்றும் ஆச்சரியத்தின் ஒரு உறுப்பு, இடத்தை வளப்படுத்துகின்றன. எங்கள் அசல் தயாரிப்புகள் லைஃப் வித் டிசைன் என்ற கருத்தைப் பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டுள்ளன.\nபுதன் 9 செப்டம்பர் 2020\nநகைகள் நல்லது மற்றும் கெட்டது, இருள் மற்றும் ஒளி, பகல் மற்றும் இரவு, குழப்பம் மற்றும் ஒழுங்கு, போர் மற்றும் அமைதி, ஹீரோ மற்றும் வில்லன் ஆகியோருக்கு இடையிலான நிலையான போரை நாம் ஒவ்வொரு நாளும் காண்கிறோம். எங்கள் மதம் அல்லது தேசியத்தைப் பொருட்படுத்தாமல், நம்முடைய நிலையான தோழர்களின் கதை நமக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது: எங்கள் வலது தோளில் அமர்ந்திருக்கும் ஒரு தேவதை மற்றும் இடதுபுறத்தில் ஒரு அரக்கன், தேவதை நன்மை செய்யும்படி நம்மை வற்புறுத்தி, நம்முடைய நற்செயல்களைப் பதிவுசெய்கிறான். கெட்டதைச் செய்வதோடு, நம்முடைய கெட்ட செயல்களைப் பதிவுசெய்கிறது. தேவதை நம் \"சூப்பரேகோ\" க்கு ஒரு உருவகம் மற்றும் பிசாசு \"ஐடி\" மற்றும் மனசாட்சிக்கும் மயக்கத்திற்கும் இடையிலான நிலையான போரை குறிக்கிறது.\nஅசல் மற்றும் ஆக்கபூர்வமான வடிவமைப்புகள், கலை, கட்டிடக்கலை, ஃபேஷன், கிராபிக்ஸ் வடிவமைப்பு, புதுமை மற்றும் வடிவமைப்பு உத்தி ஆகியவற்றை நாங்கள் விரும்புகிறோம். தினமும், திறமையான வடிவமைப்பாளர்கள், படைப்பாற்றல் கலைஞர்கள், புதுமையான கட்டிடக் கலைஞர்கள் மற்றும் சிறந்த பிராண்டுகளின் நல்ல வடிவமைப்புகளைத் தேர்ந்தெடுத்து வெளியிடுகிறோம். நல்ல வடிவமைப்பிற்கான உலகளாவிய பாராட்டையும் விழிப்புணர்வையும் உருவாக்குவதே எங்கள் நோக்கம்.\nThe Float ரியல் எஸ்டேட் நிறுவனம் வியாழன் 6 மே\nOr2 ஃபோட்டோக்ரோமிக் விதான அமைப்பு புதன் 5 மே\nEye of Ra' பொது நகர்ப்புற கலை தளபாடங்கள் செவ்வாய் 4 மே\nநீங்கள் ஒரு வடிவமைப்பாளர், கலைஞர், கட்டிடக் கலைஞர், புதுமைப்பித்தன் அல்லது பிராண்ட் மேலாளரா பகிர்வதற்கு உங்களிடம் ஏதேனும் நல்ல வடிவமைப்புகள் உள்ளதா பகிர்வதற்கு உங்களிடம் ஏதேனும் நல்ல வடிவமைப்புகள் உள்ளதா உலகளவில் வடிவமைப்பாளர்கள், கலைஞர்கள், கட்டட வடிவமைப்பாளர்கள், கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் பிராண்டுகளிலிருந்து அசல் மற்றும் ஆக்கபூர்வமான வடிவமைப்புகளை வெளியிடுவதில் நாங்கள் மிகவும் ஆர்வமாக உள்ளோம். உங்கள் வடிவமைப்புகளை இன்று வெளியிடவும்.\nஅன்றைய வடிவமைப்பு நேர்காணல் வியாழன் 6 மே\nஅன்றைய வடிவமைப்பு புராணக்கதை புதன் 5 மே\nஅன்றைய வடிவமைப்பு செவ்வாய் 4 மே\nஅன்றைய வடிவமைப்பாளர் திங்கள் 3 மே\nஅன்றைய வடிவமைப்பு குழு ஞாயிறு 2 மே\nகாலண்டர் Usb ஃபிளாஷ் டிரைவ் பவர் சவ் பாட்டில் அலங்காரமானது காலண்டர் நகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2021/01/181.html", "date_download": "2021-05-07T00:43:45Z", "digest": "sha1:KFDXNIYHNJSV6WYBQB3MAIWC24XMU6GQ", "length": 11864, "nlines": 90, "source_domain": "www.kurunews.com", "title": "மட்டக்களப்பு மாவட்டத்தில் மேலும் 181 பட்டாதாரிகளுக்கு நியமனம் வழங்கப்படுகிறது..!! - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » » மட்டக்களப்பு மாவட்டத்தில் மேலும் 181 பட்டாதாரிகளுக்கு நியமனம் வழங்��ப்படுகிறது..\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மேலும் 181 பட்டாதாரிகளுக்கு நியமனம் வழங்கப்படுகிறது..\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மேலும் 181 பட்டதாரிகள் பெப்ரவரி முதலாந்திகதி முதல் பட்டதாரிமாவட்ட பயிலுனர்களாக புதிதாக சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமாகிய கே. கருணாகரன் தெரிவித்தார்.\nகடந்த ஆண்டு பட்டதாரி பயிலுனர்களுக்கான நியமனம் வழங்கப்பட்ட சந்தர்ப்பத்தில் இணைத்துக் கொள்ளப்படாமல் விடுபட்டிருந்த 389 பட்டாதாரிகள் மேன்முறையீடு செய்திருந்தனர்.\nஅவர்களது விண்ணப்பங்கள் பரிசீலனைக்குட்படுத்தப்பட்டு அவற்றில் 181 பேர் புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தனியார் நிறுவனங்களில் கடமையாற்றி ஈ.பீ.எப்., ஈ.ரீ.எம். நிதியத்திற்கு பங்களிப்புச் செய்யப்பட்டவர்களும், வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களில் பட்டம் பெற்ற பட்டதாரிகளும் உள்ளடங்குகின்றனர்.\nஇவர்களுக்கான நியமனக் கடிதங்களை தத்தமது பிரதேச செயலகங்களில் எதிர்வரும் திங்கட்கிழமை (25) முதல் பெற்றுக் கொள்ளமுடியும் எனவும். இவர்களுக்கான பயிற்சிகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி ஆரம்பமாகும் எனவும் அரசாங்க அதிபர் கருணாகரன் தகவல் திணைக்கள மாவட்ட ஊடகப்பரிவிற்கு தகவல் தெரிவித்தார்.\nஇதனடிப்படையில் மண்முன வடக்கு பிரதேச செயலகத்திற்கு 46 பட்டதாரிகளும், களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்திற்கு 29 பட்டதாரிகளும், ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச செயலகத்திற்கு 23 பட்டதாரிகளும், மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச செயலகத்திற்கு 16 பட்டதாரிகளும், கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகத்திற்கு 18 பட்டதாரிகளும், ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்திற்கு 9 பட்டதாரிகளும், போரதீவுப்பற்று பட்டிப்பளை பிரதேச செயலகத்திற்கு 6 பட்டதாரிகளும், காத்தான்குடி, கிரான், கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி, வெல்லாவெளி ஆகிய பிரதேச செயலகங்களுக்கு தலா 6 பட்டதாரிகளும், வவுனதீவு பிரதேச செயலகத்திற்கு 5 பட்டதாரிகளும், வாகரை பிரதேச செயலகத்திற்கு ஒரு பட்டதாரியுமாக மொத்தம் 181 போர் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.\nகடந்த ஆண்டு இம்மாவட்டத்தில் 2 ஆயிரத்தி 88 பட்டதாரி பயிலுனர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்ததில் 1966 பட்டதாரி பயிலுனர்கள் மாத்திரமே 14 பிரதேச செயலாளர் பி���ிவுகளிலும் தமது கடமையினைப் பொறுப்பேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.\n\"Kurunews.com ஐ பார்வையிடும் அன்பர்களே Facebook பக்கத்தை Like பண்ணிட்டு போங்கள்\".\nமட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை; பல்வேறு செயற்பாடுகளுக்கு தடை- மாவட்ட அரசாங்க அதிபர்...\nமட்டக்ககளப்பில் தனியார் வகுப்பு நடாத்த தடை விதித்துள்ளதுடன் கொரோனா அதிகரிப்பால் மட்டு போதனா வைத்தியசாலையில் ஒட்சிசன் தேவை அதிகரித்துள்ளது....\nசகல பாடசாலைகளுக்கும் மே மாதம் 07ம் திகதி வரை விடுமுறை\nநாடளாவிய ரீதியில் அனைத்துப் பாடசாலைகளையும் தொடர்ந்தும் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் 7 ஆம் திகதி வரை பாடசாலை...\n10 , 11 தரங்களில் பாடவிதான மாற்றம் அத்துடன் க.பொ.த சா/த, உ/த பரீட்சை நடைபெறும் காலங்களும் மாற்றம்\nதரம் 10 ,11 க்கான பாடத்திட்டங்களை ஒரு வருடம் & 9 மாத காலத்திற்கு மறுசீரமைக்கவும், ஆகஸ்ட் மாதத்தில் க.பொ.த. (சா /த) பரீட்சையை நடாத்தவும்...\nபுனித மிக்கேல் கல்லூரி மாணவன் பௌதீக விஞ்ஞான பிரிவில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலிடம்.\nவெளியான 2020 ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பௌதீக விஞ்ஞான பிரிவில் குகராஜா சஜீவ் 3 A சித்திகளுடன் ...\nமட்டக்களப்பு மாவட்டத்தில் விஞ்ஞான பிரிவில் முதலிடத்தை பெற்ற மட்/பட்டிருப்பு தேசிய பாடசாலை மாணவன்\nவெளியான 2020 ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் விஞ்ஞான பிரிவில் மகிழூர் கண்ணகிபுரத்தை சேர்ந்த தம்பி...\nமட்டக்களப்பு- கல்லடியில் 09 பேருக்கு கொரோனா தொற்று உறுதி...\nமட்டக்களப்பு மாவட்ட மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுற்குற்பட்ட கல்லடி பிரதேசத்தில் இன்றைய தினம் 09 பேருக்கு கொரோன தொற்று உறுதிசெய்யப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dakendu.com/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2021-05-07T01:28:34Z", "digest": "sha1:ABEKHDIMPBMEGZNLCIPEHRKOELH2LTON", "length": 4050, "nlines": 60, "source_domain": "dakendu.com", "title": "மனித எலும்புகளால் கட்டப்பட்ட மர்ம சுவர்… ஆச்சரியத்தில் ஆராய்ச்சியாளர்கள்! | Dakendu.", "raw_content": "\nமனித எலும்புகளால் கட்டப்பட்ட மர்ம சுவர்… ஆச்சரியத்தில் ஆராய்ச்சியாளர்கள்\nபெல்ஜியத்தில் மனித எலும்புகளால் ��ட்டப்பட்ட 500 ஆண்டு பழைமையான கோட்டை போன்ற சுவரை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தற்போது கண்டுபிடித்துள்ளார்கள். பெல்ஜியத்தில் உள்ள செயிண்ட் பாவே தேவாலயத்தின் பின்புறம் இந்த சுவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் கல்லறைகள் இருக்க அதிக வாய்ப்புக்கள் இருப்பதாக ஒரு தரப்பினர் கூறினாலும், கோட்டை வடிவத்தில் எலும்புகள் இருப்பதால் அதனை ஆராய்ச்சியாளர்கள் மறுத்துள்ளார்கள்.\nஇந்த சுவர் திட்டமிட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக எலும்புகளால் கட்டப்பட்டுள்ளது என்றும், அருகில் இருந்த கல்லறைகளில் இருந்து இதற்கான எலும்புகள் கொண்டுவரப்பட்டு இது கட்டப்பட்டிருக்கலாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். மேலும், மிகவும் திட்டமிட்டு இதை கட்டியிருப்பதால் மனித உழைப்பு இதில் அதிகம் செலவிடப்பட்டிருக்கும் என்றும் அவர்கள் கூறியுள்ளார்கள். இத்தனை எலும்புகளை ஒரே இடத்தில் இருப்பதை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaipoonga.net/cinema/bavithra-the-royal-wedding-by-fashion-photographer-rahul-dev/", "date_download": "2021-05-07T01:31:52Z", "digest": "sha1:3ZY5BPCMIL7A2O4HHIEN4ROJLIL7ZSEF", "length": 8902, "nlines": 194, "source_domain": "kalaipoonga.net", "title": "Bavithra – The Royal Wedding by fashion photographer Rahul Dev - Kalaipoonga", "raw_content": "\nNext article‘எட்ஜ்’ பாடலுக்கு பெரும் வரவேற்பு – ஸ்ருதிஹாசன் உற்சாகம்\nமாநாடு டப்பிங் ஆரம்பம்… படக்குழு வெளியிட்ட புகைப்படங்கள்\nமூத்த தலைவர் ஆர்.எம்.வீரப்பனை நேரில் சந்தித்து ஆசி பெற்றார் மு.க.ஸ்டாலின் | Video\nரூ.4 ஆயிரம் வழங்கும் திட்டத்துக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முதல் கையெழுத்து\nவெளியானது 34 பேர் கொண்ட தமிழக அமைச்சரவை பட்டியல்\nவெளியானது 34 பேர் கொண்ட தமிழக அமைச்சரவை பட்டியல் தமிழகத்தின் முதலமைச்சராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை சென்னை - கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்க உள்ளார். கொரோனா பரவலை கருத்தில்...\nமாநாடு டப்பிங் ஆரம்பம்… படக்குழு வெளியிட்ட புகைப்படங்கள்\nமாநாடு டப்பிங் ஆரம்பம்... படக்குழு வெளியிட்ட புகைப்படங்கள் சிம்பு நடிப்பில் உருவாகி உள்ள படம் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கியுள்ள இப்படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார். இப்படத்தில் சிம்பு அப்துல் காலிக்...\nமூத்த தலைவர் ஆர்.எம்.வீரப்பனை நேரில் சந்தித்து ஆசி பெற்றார் மு.க.ஸ்டாலின் | Video\nமூத்த தலைவர் ஆர்.எம்.வீரப்பனை நேரில் சந்தித்து ஆசி பெற்றார் மு.க.ஸ்டாலின் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றதை அடுத்து தமிழகத்தின் அடுத்த முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பு ஏற்க உள்ளார். நாளை (மே 7...\nவெளியானது 34 பேர் கொண்ட தமிழக அமைச்சரவை பட்டியல்\nவெளியானது 34 பேர் கொண்ட தமிழக அமைச்சரவை பட்டியல் தமிழகத்தின் முதலமைச்சராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை சென்னை - கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்க உள்ளார். கொரோனா பரவலை கருத்தில்...\nமாநாடு டப்பிங் ஆரம்பம்… படக்குழு வெளியிட்ட புகைப்படங்கள்\nமாநாடு டப்பிங் ஆரம்பம்... படக்குழு வெளியிட்ட புகைப்படங்கள் சிம்பு நடிப்பில் உருவாகி உள்ள படம் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கியுள்ள இப்படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார். இப்படத்தில் சிம்பு அப்துல் காலிக்...\nமூத்த தலைவர் ஆர்.எம்.வீரப்பனை நேரில் சந்தித்து ஆசி பெற்றார் மு.க.ஸ்டாலின் | Video\nமூத்த தலைவர் ஆர்.எம்.வீரப்பனை நேரில் சந்தித்து ஆசி பெற்றார் மு.க.ஸ்டாலின் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றதை அடுத்து தமிழகத்தின் அடுத்த முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பு ஏற்க உள்ளார். நாளை (மே 7...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://kalaipoonga.net/news/%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-05-07T00:41:50Z", "digest": "sha1:KOIQF3Y5IS7XLQ3ISE7IDQASNXDCA7MT", "length": 12608, "nlines": 199, "source_domain": "kalaipoonga.net", "title": "ஒளிப்பதிவாளர் - இயக்குநர் KV குகனின் WWW ( Who, Where,Why) பன்மொழி படத்தின் டீஸரை வெளியிட்டார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி! - Kalaipoonga", "raw_content": "\nHome News ஒளிப்பதிவாளர் – இயக்குநர் KV குகனின் WWW ( Who, Where,Why) பன்மொழி படத்தின் டீஸரை...\nஒளிப்பதிவாளர் – இயக்குநர் KV குகனின் WWW ( Who, Where,Why) பன்மொழி படத்தின் டீஸரை வெளியிட்டார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி\nஒளிப்பதிவாளர், இயக்குநர் KV குகனின் WWW ( Who, Where,Why) பன்மொழி படத்தின் டீஸரை வெளியிட்டார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி\nபிரபல ஒளிப்பதிவாளர், இயக்குநர் KV குகனின் இயக்கத்தில், ஆதித் அருண், ஷிவானி ராஜசேகர் நடிக்கும் பன்மொழி திரில்லர் திரைப்படமான WWW ( Who, Where,Why) படத்தின், டீஸரை வெள���யிட்டுள்ளார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.\nஇது குறித்து ஒளிப்பதிவாளர், இயக்குநர் KV குகன் கூறியதாவது…\nஎங்கள் படமான WWW ( Who, Where,Why) படத்தின் டீஸரை, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்டது எங்கள் அனைவருக்குமே பெருமை. படத்தின் டீஸர் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. படம் குறித்து நிறைய விசயங்களை ஆவலுடன் கேட்டறிந்தார். படத்தில் நடித்துள்ள மூத்த நடிகர்களான டாக்டர் ராஜேசேகர், ஜீவிதா தம்பதியின் மகள், ஷிவானி ராஜசேகருடைய நடிப்பையும், அவரது திரைப்பயணம் சிறப்பாக அமையவும் வாழ்த்துக்கள் கூறினார். நடிகர் ஆதித் அருணை அவருக்கு நெடுங்காலமாக தெரியும். நடிப்பின் மீதான ஆதித் அருணின் தீவிரமான காதலையும் கடின உழைப்பையும் வெகுவாக பாராட்டினார். முழுப்படத்தில் அவரது நடிப்பை காண ஆவலாக இருப்பதாக கூறினார். மிக எளிமையான வகையில் இயல்பாக பழகும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் தன்மை எங்களை ஆச்சர்யப்படுத்தியது. அவருக்கு எங்கள் நன்றி.\nதமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகும் இப்படத்தினை இயக்குவதுடன் படத்தின் திரைக்கதையை எழுதி ஒளிப்பதிவும் செய்துள்ளார் KV குகன். Ramantra Creations சார்பில் Dr. ரவி P. ராஜு டட்லா தயாரிக்க விஜய் தரன் டட்லா இணை தயாரிப்பு செய்கிறார். தொடர்ச்சியாக வெற்றிகரமான ஆல்பங்களை தந்து வரும் சைமன்.K.கிங் இப்படத்திற்கு இசையமைக்கிறார். தம்மிராஜு படத்தொகுப்பு செய்ய, KN விஜயகுமார் வசனமெழுதியுள்ளார். பிரேம் ரக்‌ஷித் நடன அமைப்பு செய்ய, மதன் கார்க்கி, கு.கார்த்திக் பாடல்கள் எழுதியுள்ளனர்.\nWhy) பன்மொழி படத்தின் டீஸரை வெளியிட்டார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி\nஒளிப்பதிவாளர் - இயக்குநர் KV குகனின் WWW ( Who\nவெளியானது 34 பேர் கொண்ட தமிழக அமைச்சரவை பட்டியல்\nமூத்த தலைவர் ஆர்.எம்.வீரப்பனை நேரில் சந்தித்து ஆசி பெற்றார் மு.க.ஸ்டாலின் | Video\nரூ.4 ஆயிரம் வழங்கும் திட்டத்துக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முதல் கையெழுத்து\nவெளியானது 34 பேர் கொண்ட தமிழக அமைச்சரவை பட்டியல்\nவெளியானது 34 பேர் கொண்ட தமிழக அமைச்சரவை பட்டியல் தமிழகத்தின் முதலமைச்சராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை சென்னை - கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்க உள்ளார். கொரோனா பரவலை கருத்தில்...\nமாநாடு டப்பிங் ஆரம்பம்… படக்குழு வெளியிட்ட புகைப்படங்கள்\nமாநாடு டப்பிங் ஆரம்பம்... படக்குழு வெளியிட்ட புகைப்படங்கள் சிம்பு நடிப்பில் உருவாகி உள்ள படம் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கியுள்ள இப்படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார். இப்படத்தில் சிம்பு அப்துல் காலிக்...\nமூத்த தலைவர் ஆர்.எம்.வீரப்பனை நேரில் சந்தித்து ஆசி பெற்றார் மு.க.ஸ்டாலின் | Video\nமூத்த தலைவர் ஆர்.எம்.வீரப்பனை நேரில் சந்தித்து ஆசி பெற்றார் மு.க.ஸ்டாலின் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றதை அடுத்து தமிழகத்தின் அடுத்த முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பு ஏற்க உள்ளார். நாளை (மே 7...\nவெளியானது 34 பேர் கொண்ட தமிழக அமைச்சரவை பட்டியல்\nவெளியானது 34 பேர் கொண்ட தமிழக அமைச்சரவை பட்டியல் தமிழகத்தின் முதலமைச்சராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை சென்னை - கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்க உள்ளார். கொரோனா பரவலை கருத்தில்...\nமாநாடு டப்பிங் ஆரம்பம்… படக்குழு வெளியிட்ட புகைப்படங்கள்\nமாநாடு டப்பிங் ஆரம்பம்... படக்குழு வெளியிட்ட புகைப்படங்கள் சிம்பு நடிப்பில் உருவாகி உள்ள படம் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கியுள்ள இப்படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார். இப்படத்தில் சிம்பு அப்துல் காலிக்...\nமூத்த தலைவர் ஆர்.எம்.வீரப்பனை நேரில் சந்தித்து ஆசி பெற்றார் மு.க.ஸ்டாலின் | Video\nமூத்த தலைவர் ஆர்.எம்.வீரப்பனை நேரில் சந்தித்து ஆசி பெற்றார் மு.க.ஸ்டாலின் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றதை அடுத்து தமிழகத்தின் அடுத்த முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பு ஏற்க உள்ளார். நாளை (மே 7...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/62428", "date_download": "2021-05-07T01:29:11Z", "digest": "sha1:UF7XAHXJWNXNJWXLWJ7MQUPZQZVI7RDG", "length": 7872, "nlines": 96, "source_domain": "selliyal.com", "title": "ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் எழுச்சிக்கு ஒபாமா தான் காரணம் – ஹிலாரி கிளிண்டன்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome உலகம் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் எழுச்சிக்கு ஒபாமா தான் காரணம் – ஹிலாரி கிளிண்டன்\nஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் எழுச்சிக்கு ஒபாமா தான் காரணம் – ஹிலாரி கிளிண்டன்\nநியூயார்க், ஆகஸ்ட் 12 – ஈராக் மற்றும் சிரியாவில் எழுச்சியடைந்துள்ள ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் தற்போதைய நிலைக்கு ��மெரிக்க அதிபர் ஒபாமாவின் நிர்வாகத் திறன் இன்மையே காரணம் என்று அந்நாட்டின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் குற்றம் சாட்டியுள்ளார்.\nஇது குறித்து அவர் “அட்லாண்டிக்’ இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- “சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்துக்கு எதிராக போராட்டக்காரர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்ட போது, அமெரிக்கா அதனை கண்டு கொள்ளவில்லை. இது மாபெரும் தவறாகும்.\nநம்பகத்தன்மை, மதச்சார்பின்மை போன்ற கொள்கைகளை கொண்டுள்ள கிளர்ச்சிக் குழுக்களுக்கு ஆயுத உதவி செய்து அவர்களை திறன் வாய்ந்த போராட்ட சக்தியாக உருவாக்கியிருக்க வேண்டும்.\nஅவ்வாறான் முயற்சிகளை அமெரிக்கா கடைபிடிக்காததால், அந்த இடத்தை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு நிரப்பிக்கொண்டது”. “சிரியாவில் முதன் முதலில் போராட்டத்தை தொடங்கிய மதச் சார்பற்ற குழுக்களின் கரங்களை அமெரிக்கா வலுப்படுத்தப்படுத்த தவறிவிட்டது. அதனைப் பயன்படுத்திக் கொண்ட தீவிரவாதிகள் தங்கள் கைகளை மேலோங்கிவிட்டனர்.\nதற்போது இதே நிலை ஈராக்கிலும் நடை பெற்று வருகின்றது” என்று கூறியுள்ளார். அமெரிக்காவில் அடுத்து வரும் அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டன் போட்டியிடுவார் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.\nNext articleகாலிட்டின் முன்னாள் அரசியல் செயலாளர் ஃபைக்கா பிகேஆர் கட்சியிலிருந்து விலகினார்\n – டிரம்ப் மகன் மீது குற்றச்சாட்டு\nஹிலாரி தொலைபேசி வழி டிரம்பை அழைத்து தோல்வியை ஒப்புக் கொண்டார்\nஹிலாரி மீது குற்றச்சாட்டு இல்லை – அமெரிக்க புலனாய்வுத் துறை அறிவிப்பு\nதமிழ்நாடு தேர்தல் முடிவுகள் இறுதி நிலவரம் : திமுக: 159 – அதிமுக: 75\nதமிழ்நாடு : டிராபிக் இராமசாமி காலமானார்\nமின்னல் வானொலி : இரவு 9 மணி செய்திகள் ஏன் இடம் பெறவில்லை\nஆஸ்ட்ரோ விழுதுகள் நிகழ்ச்சியில் முத்து நெடுமாறன் பங்கேற்பு\nதிமுக அமைச்சரவை : புதிய அமைச்சர்கள் பட்டியல்\nதிமுக அமைச்சரவை : அன்பில் மகேஷ் பள்ளிக் கல்வி அமைச்சர்\nபிரசாந்த் கிஷோர் : இந்திய சட்டமன்றத் தேர்தல் வெற்றிகளின் கதாநாயகன்\nபில் கேட்ஸ் விவாகரத்து : சொத்துகளை எப்படிப் பிரிப்பார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/news/what-is-the-second-date-of-may-aiadmk-minister/cid2786133.htm", "date_download": "2021-05-07T01:42:53Z", "digest": "sha1:PN4JB4YCZJTSCVKDELXU7NJ7WH5CYPSM", "length": 6092, "nlines": 41, "source_domain": "tamilminutes.com", "title": "\"மே இரண்டாம் தேதி தான் வாக்குகளை எண்ண வேண்டும்\" அதிமுக அமைச்", "raw_content": "\n\"மே இரண்டாம் தேதி தான் வாக்குகளை எண்ண வேண்டும்\" அதிமுக அமைச்சர்\nதபால் வாக்குகளை மே இரண்டாம் தேதி தான் எண்ண வேண்டும் என்று கூறுகிறார் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார்\nதமிழகத்தின் சட்டமன்ற தேர்தல் ஆனது சில தினங்கள் முன்பாக நடைபெற்று முடிந்தது .மேலும் சட்டமன்ற தேர்தலில் பல கட்சிகள் பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி வைத்து சந்தித்துள்ளன. மேலும் குறிப்பாக தமிழகத்தின் மிகவும் வலிமையான ஆளுங்கட்சியாக காணப்படும் அதிமுக ஆனது பல்வேறு கூட்டணியுடன் தேர்தலை சந்தித்தன. குறிப்பாக அதிமுக கூட்டணியில் பாமக மற்றும் பாஜக கட்சிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அதிமுக சார்பில் அமைச்சர்கள் பலர் தங்கள் கடந்த முறை போட்டியிட்ட தொகுதியிலே அதிகம் வேட்பாளராக அறிவித்து வேட்புமனு தாக்கல் செய்து சட்டமன்ற தேர்தலில் களமிறங்கியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nமேலும் அதிமுகவின் சார்பில் எடப்பாடி தொகுதியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் வேட்பாளராக களமிறங்கியுள்ளார். மேலும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் போடிநாயக்கனூர் தொகுதியில் மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.இதனைத் தொடர்ந்து அதிமுகவின் மற்றுமொரு அமைச்சரான ஜெயக்குமார் சென்னை ராயபுரம் பகுதியில் களமிறங்கியுள்ளார். மேலும் ராயபுரம் தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு தேர்தலில் போட்டியிட உள்ளார். இந்நிலையில் தற்போது அவர் செய்தியாளர்களை சந்தித்து உள்ளார் மேலும் சில தகவல்களையும் கூறியுள்ளார்.\nஅதன்படி தமிழகத்தில் தபால் ஓட்டுகள் மே இரண்டாம் தேதி தான் எண்ண படவேண்டும் என்றும் அவர் கூறி உள்ளார். மேலும் தபால் வாக்குகள் வைக்கப்பட்டுள்ள பெட்டிகளை மே ஒன்றில் திறக்க கூடாது அதிமுக சார்பில் வலியுறுத்துவதாகவும் கூறியுள்ளார். மேலும் அவர் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் அதிமுக சார்பில் கோரிக்கை மனு வைத்துள்ளதாகவும் கூறியுள்ளார். அதிமுகவின் கோரிக்கைகளை ஏற்று தகுந்த அறிவுரைகளை வழங்குவதாக தேர்தல் அதிகாரி உறுதி அளித்துள்ளார் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் மத்தியில் ��ூறியுள்ளார்.\nTamil Minutes இணையதளம் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. புதிய செய்திகளையும், பயனுள்ள தகவல்களையும் வழங்குவதே இந்த இணையதளத்தின் நோக்கமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2021/may/03/%E0%AE%8E%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3616264.html", "date_download": "2021-05-07T01:01:31Z", "digest": "sha1:C6UC4IOOPBEMX4QBHILRS7DOLJS3PST3", "length": 11195, "nlines": 146, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "எளிய முறையில் பதவியேற்க மு.க.ஸ்டாலின் திட்டம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n06 மே 2021 வியாழக்கிழமை 06:33:21 PM\nஎளிய முறையில் பதவியேற்க மு.க.ஸ்டாலின் திட்டம்\nசட்டப்பேரவைத் தோ்தலில் தனிப் பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றுள்ள மு.க.ஸ்டாலின் அமைச்சரவை பதவியேற்பு விழாவை எளிய முறையில் நடத்த திட்டமிட்டுள்ளாா்.\nசட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணி 158 தொகுதிகள் வரை முன்னிலை பெற்றுள்ளது. சட்டப்பேரவையில் ஆட்சி அமைக்க 118 தொகுதிகள் வரை பெற்றிருக்க வேண்டும். திமுக தனித்துப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் வகையில் 125 தொகுதிகள் வரை பெற்றுள்ளது.\nதிமுக கூட்டணியில் உள்ள மதிமுக (4), கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி (1), தமிழக வாழ்வுரிமைக் கட்சி (1), மனித நேய மக்கள் கட்சி (1) ஆகிய கட்சி முன்னிலை வகிக்கின்றன. இந்தக் கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டுள்ளன. அதன் காரணமாக அவை திமுகவைச் சாா்ந்தவையாகவே பாா்க்கப்படும். அந்த வகையில் திமுக 132 தொகுதிகள் வரை தனித்தே பெற்றுள்ளது.\nசட்டப்பேரவை உறுப்பினா்கள் கூட்டம்: 234 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை (மே 2) நள்ளிரவுக்குள் முடிவடைந்து விடும் என எதிா்பாா்க்கப் படுகிறது. தோ்தல் முடிவுகள் முழுமையாக முடிவடைந்த பிறகு திங்கள்கிழமை (மே 3) மாலை புதிதாகத் தோ்ந்தெடுக்கப்பட்ட திமுக சட்டப்பேரவை உறுப்பினா்களின் கூட்டம் நடைபெறும்.\nஇந்தக் கூட்டத்தில் முதல்வா் பதவிக்கு மு.க.ஸ்டாலின் தோ்ந்தெடுக்கப்படுவாா். அதைத் தொடா்ந்து மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவை உறுப்பினா்களின் ஆதரவுக��� கடிதத்துடன் தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோஹித்தைச் சந்திப்பாா். இந்தச் சந்திப்புக்குப் பிறகு மு.க.ஸ்டாலினைப் பதவியேற்க அழைப்பு விடுப்பாா்.\nஎளிய முறையில் பதவியேற்பு: அதைத் தொடா்ந்து மு.க.ஸ்டாலின் தனது அமைச்சரவைக் குழுவினருடன் பதவியேற்றுக் கொள்ள உள்ளாா்.\nகரோனா தொற்று பரவல் அதிக அளவில் இருப்பதால் எளிய முறையில் மு.க.ஸ்டாலின் பதவியேற்றுக் கொள்ளத் திட்டமிட்டுள்ளாா்.\nமே 6-ஆம் தேதி காலை 10.30 மணியளவில் கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையில் பதவியேற்றுக் கொள்ள திட்டமிடப்பட்டு வருகிறது.\nகளைகட்டிய அண்ணா அறிவாலயம் - படங்கள்\nஆக்ஸிஜன் செறிவூட்டிகளுடன் இந்தியாவுக்கு வந்த விமானங்கள் - படங்கள்\nதிமுக தொண்டர்கள் கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nஸ்ரீ குரு தேக் பகதூரின் 400-வது பிறந்தநாள் - படங்கள்\nஅண்ணாத்த படப்பிடிப்புக்காக ஹைதராபாத் சென்ற நயன்தாரா - படங்கள்\nகும்பமேளா: கங்கையில் புனித நீராடிய பக்தர்கள் - படங்கள்\nசித்த மருத்துவத்தில் கரோனாவுக்குச் சிறந்த தடுப்பு மருந்து\nகரோனாவை தடுக்க சித்த மருத்துவம் தரும் டிப்ஸ்..\nரெம்டெசிவிா் மருந்து தேவைப்படுவோர் கவனிக்க..\nகரோனா தடுப்பூசிக்கு முன்பதிவு செய்வோர் கவனிக்க..\n'விடுதலை' படத்தின் டிரெய்லர் வெளியீடு\nதயுவு செய்து இதைச் செய்யாதீர்கள்..\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2021/04/19021228/Michael-Vaughan-unhappy-with-Ravindra-Jadejas-BCCI.vpf", "date_download": "2021-05-07T02:07:34Z", "digest": "sha1:EYL35KWGWCXTYK5J7MYHGISZARK63KDB", "length": 10593, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "Michael Vaughan unhappy with Ravindra Jadeja's BCCI contract, wants him in same category as Virat Kohli || ரவீந்திர ஜடேஜாவை பிசிசிஐ அவமதிக்கிறது - மைக்கேல் வாகன் விமர்சனம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் முடிவுகள் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nரவீந்திர ஜடேஜாவை பிசிசிஐ அவமதிக்கிறது - மைக்கேல் வாகன் விமர்சனம்\nகேப்டன் கோலிக்கு பக்கபலமாக இருக்கும் ஜடேஜாவை 'ஏ' பிளஸ் கிரேடுக்கு உயர்த்தாதது வெட்கப்படும் செயல் என்று வாகன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nடெஸ்ட், ஒருநாள் கிரிக்கெட், டி-20 என மூன்றுவிதமான போட்டிகளில் முத்��ிரை பதிக்கும் வீரர்களை 'ஏ' பிளஸ் கிரேடில் சேர்த்து அவர்களுக்கு ஆண்டுக்கு தலா 7 கோடி ரூபாய் பிசிசிஐ வழங்குகிறது. நடப்பு ஆண்டுக்கான பட்டியலில் கோலி, ரோஹித், பும்ரா மட்டுமே முதல் கிரேடில் இடம்பெற்றனர். ஆனால், ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவை, இரண்டாவது உள்ள 'ஏ' கிரேடில் தான் பிசிசிஐ தொடர்ந்து வைத்துள்ளது.\nகேப்டன் கோலிக்கு பக்கபலமாக இருக்கும் ஜடேஜாவை 'ஏ' பிளஸ் கிரேடுக்கு உயர்த்தாதது வெட்கப்படும் செயல் என்று வாகன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அத்துடன், பிசிசிஐ-யின் இந்த முடிவை சுட்டிக்காட்டிவதில் தனக்கு எந்தவொரு தயக்கமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.\n1. ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஏப்.9 ஆம் தேதி சென்னையில் தொடங்கும்: பிசிசிஐ\nஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஏப்.9 ஆம் தேதி சென்னையில் தொடங்கும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.\n2. மைக்கேல் வாகனை வாட்டி வதைக்கும் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள்\nஇங்கிலாந்தின் முன்னாள் நட்சத்திர பேட்ஸ்மேன் மைக்கேல் வாகனை இந்திய ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வாட்டி வதைத்து வருகின்றனர்.\n3. கேப்டன் ரகானே சதம் அடித்து அசத்தல்: இந்திய அணி 82 ரன்கள் முன்னிலை\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் எடுத்துள்ளது.\n4. பிசிசிஐ ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் வரும் 24-ம் தேதி கூடுகிறது அமித் ஷா மகனுக்குப் புதிய பதவி வழங்குவது குறித்து முக்கிய முடிவு...\nபிசிசிஐ ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் வரும் 24-ம் தேதி கூடுகிறது அப்போது அமித் ஷா மகனுக்குப் புதிய பதவி வழங்குவது குறித்தும் , இரு புதிய அணிகளைச் சேர்ப்பது குறித்தும் முக்கிய முக்கிய முடிவு எடுக்கப்படுகிறது.\n1. சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் 219 ரன்கள் இலக்கை விரட்டிப்பிடித்து மும்பை அசத்தல் வெற்றி - பொல்லார்ட் 87 ரன்கள் விளாசினார்\n2. ஐதராபாத் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து வார்னர் அதிரடி நீக்கம் - புதிய கேப்டனாக வில்லியம்சன் நியமனம்\n3. மும்பைக்கு எதிராக 218 ரன்கள் குவித்தும் தோல்வி: ‘கேட்சை நழுவவிட்டதால் பாதிப்பு’ சென்னை கேப்டன் டோனி சொல்கிறார்\n4. பஞ்சாப் கிங்சை வீழ்த்தி டெல்லி அணி 6-வது வெற்றி\n5. பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில் 25 ரன்கள் கூடுதலாக விட்டுக்கொடுத்து விட்டோம் - ��ெங்களூரு கேப்டன் கோலி பேட்டி\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinibitz.com/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-05-07T00:58:22Z", "digest": "sha1:VXVQIEPJSIR4NTBRPPO26NRT2XRSAKYH", "length": 12037, "nlines": 71, "source_domain": "www.tamilcinibitz.com", "title": "பட்டாம்பூச்சிகள் தங்கள் இறக்கைகளை பறக்கவிட்டு, தங்களை முன்னோக்கி செலுத்துகின்றன", "raw_content": "முழுமையான செய்தி உலகம் உங்களுக்காக.\nபட்டாம்பூச்சிகள் தங்கள் இறக்கைகளை பறக்கவிட்டு, தங்களை முன்னோக்கி செலுத்துகின்றன\nஇப்போது, ​​பூச்சிகள் தங்கள் இறக்கைகளை “கைதட்டுகின்றன” என்று வல்லுநர்கள் கண்டுபிடித்துள்ளனர், மேலும் அவற்றின் இறக்கைகள் சிறந்த உந்துதலுக்காக முழுமையாக உருவாக்கப்பட்டுள்ளன.\nஸ்வீடனின் லண்ட் பல்கலைக்கழக உயிரியலாளர்கள் 50 வயதான ஒரு கோட்பாட்டைச் சோதிக்கத் தொடங்கினர், அதன்படி பட்டாம்பூச்சிகள் தங்கள் இறக்கைகளை “கைதட்டுகின்றன”, சிக்கிய காற்றை ஒரு ஜெட் விமானத்தை உருவாக்கி விலங்கை எதிர் திசையில் தள்ளும்.\n“பட்டாம்பூச்சிகள் பறவைகள் மற்றும் வெளவால்களுடன் ஒப்பிடும்போது பல பறக்கும் விலங்குகளிலிருந்து வேறுபடுகின்றன. அவை மிகவும் தீவிரமான சிறகு வடிவத்தைக் கொண்டுள்ளன – மிகப் பெரிய இறக்கைகள், அவற்றின் சிறிய உடலுடன் ஒப்பிடும்போது குறுகிய ஆனால் மிகப் அகலமானவை” என்று பெர் ஹென்னிங்சன், இணை பேராசிரியர் லண்ட் பல்கலைக்கழகத்தில் உயிரியலில். அவர் சி.என்.என். “இது கொஞ்சம் தந்திரமானது, ஏனென்றால் அந்த வகை சிறகு மிகவும் திறமையற்றது.”\nஉயிரியலாளர்கள் இலவசமாக பறக்கும் பட்டாம்பூச்சிகளைப் படித்தனர், அவற்றின் காற்றியக்கவியல் பகுப்பாய்வில், உயிரினங்களின் இறக்கைகள் மேல்நோக்கிய இயக்கத்தின் போது ஒரு கோப்பையை உருவாக்கி, “கைதட்டல்”, பட்டாம்பூச்சியை முன்னோக்கித் தள்ளுகின்றன. இதற்கிடையில், கீழ்நோக்கிய இயக்கம் எடையை ஆதரிக்க உதவுகிறது.\nபட்டாம்பூச்சியின் இறக்கைகள் அசாதாரணமான முறையில் நடந்துகொள்வதையும் அவர்கள் கவனித்தனர்: இரண்டு தட்டையான மேற்பரப்புகளைப் போல, ஒருவருக்கொருவர் மோதிக் கொள்வதற்குப் பதிலாக, இறக்கைகள் ஒரு “பாக்கெட் வடிவத்தை” உருவாக்க வளைந்துவிடும், இது அதிக காற்றைப் பிடிக்கும் மற்றும் உந்துதலை மேம்படுத்தும்.\n“அப் ரன்னின் போது இறக்கைகள் மேலேறி, அப் ரன் முடிவில் ஒன்றாக கைதட்டும்போது, ​​அது இரண்டு தட்டையான மேற்பரப்புகள் அல்ல என்பதை நாங்கள் கண்டோம்” என்று ஹென்னிங்சன் விளக்கினார்.\n“அதற்கு பதிலாக, அவை வளைந்து கொண்டிருந்தன, அவற்றின் நெகிழ்வுத்தன்மையின் காரணமாக (அவை) ஒரு வகையான பாக்கெட் வடிவத்தை உருவாக்குகின்றன,” என்று அவர் கூறினார், அவ்வாறு செய்வதன் மூலம், பட்டாம்பூச்சிகள் தங்கள் இறக்கைகளுக்கு இடையில் அதிக காற்றைப் பிடிக்கின்றன என்று குழு நினைத்தது, இது மேம்பட்டது கைதட்டல் மற்றும் மேம்பட்ட செயல்திறன்.\nதொடர்ச்சியான முக்கோண ரோபோ கிளாப்பர்களைப் பயன்படுத்தி குழு தங்கள் கோட்பாட்டை சோதித்தது மற்றும் நெகிழ்வான இறக்கைகள் அதிகரித்ததைக் கண்டறிந்தது கடுமையான இறக்கைகளுடன் ஒப்பிடும்போது கைதட்டல் திறன் 28%\nவேட்டையாடுபவர்களைத் தவிர்ப்பதற்காக இந்த அசாதாரண சிறகு வடிவத்தை ஆதரிப்பதற்காக உயிரினங்கள் உருவாகியிருக்கலாம் என்று நிபுணர்கள் நம்புகிறார்கள்.\n“இந்த நெகிழ்வுத்தன்மை அவர்கள் இந்த அசாதாரண சிறகு வடிவத்தைக் கொண்டிருப்பதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்” என்று ஹென்னிங்சன் கூறினார். “பட்டாம்பூச்சிகள் மிக வேகமாக புறப்படுகின்றன; அவை பிடிபடுவதற்கான அபாயத்தைக் குறைக்க, அதை ஒரு பாதுகாப்பு நடவடிக்கையாகச் செய்கின்றன,” என்று அவர் விளக்கினார்.\nREAD ஸ்டார்ஷிப் வெடிப்புக்கு வழிவகுத்த \"வேடிக்கையான\" தவறுக்கு எலோன் மஸ்க் வருந்துகிறார்\nஇந்த ஆய்வு புதன்கிழமை இடைமுக இதழில் வெளியிடப்பட்டது.\nபொது எழுத்தாளர். ஸோம்பி நிஞ்ஜா. தீவிர தொடர்பாளர். பீர் அறிஞர். பாப் கலாச்சார ரசிகர். ஆய்வுப்பணி. ட்விட்டர் நிபுணர்.\nஅமேசான் ரிங் இப்போது 2,000 க்கும் மேற்பட்ட அமெரிக்க பொலிஸ் மற்றும் தீயணைப்புத் துறைகளுடன் கூட்டு சேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.\nயு.எஸ். இல் உள்ள இரண்டு மாநிலங்களான மொன்டானா மற்றும் வயோமிங், இப்போது அமேசானின் ரிங் நெட்வொர்க்கில்...\nஸ்பேஸ்எக்ஸ் திங்களன்று கூடுதல் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை ஏவுகிறது, க்ரூவின் அடுத்த பணியை அறிவிக்கிறது\nநாசா விண்வெளி வெளியீட்டு அமைப்பின் முக்கிய கட்டத்தின் சூடான லிட்மஸ் சோதனையை மீண்டும் செய்ய வாய்ப்புள்ளது\nமோசமான வானியல் | பிரபஞ்சத்தின் வயது எவ்வளவு 13.77 பில்லியன் ஆண்டுகள் புதிய அளவீடுகள் என்று கூறுகின்றன\nPrevious articleஐபிஎல் 2021 மும்பை இந்தியன்ஸ் தக்கவைக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களின் முழு பட்டியல் | இந்தியன் பிரீமியர் லீக் 2021 ஏலம் | கிரிக்கெட் செய்திகள் | ஐ.பி.எல் 14\nNext article“பார்க்க மிகவும் மகிழ்ச்சி”: ட்ரம்பின் விலகலுக்கு கிரெட்டா துன்பெர்க் எப்படி பதிலளித்தார்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nIND vs ENG: ரோஹித் சர்மா 2 ஆம் நாள் ஹர்பஜன் சிங்கின் பந்துவீச்சு நடவடிக்கையை பிரதிபலிக்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tag/jegan-rajshekar/", "date_download": "2021-05-07T02:15:05Z", "digest": "sha1:75WA2LPGYJ7SIWWGKF6I4TISNR2SQFEG", "length": 4788, "nlines": 153, "source_domain": "www.tamilstar.com", "title": "Jegan Rajshekar Archives - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nஉயர் அதிகாரியின் மகள் கடத்தப்பட அவரை போலீஸ் அதிகாரி வரலட்சுமி காப்பாற்றுகிறார். அதன் தொடர்ச்சியாக பெண் கடத்தல்...\nகனடியப் பெண்களில் நாடு தழுவிய உயர்சாதனை படைத்த ஈழப்பெண்\nஇந்தியாவுக்கு அவசர மருத்துவ உதவி பொருட்களை அனுப்பியது கனடா\n12 வயதிற்கு மேற்பட்டவர்கள் Pfizer தடுப்பூசியை பெற Health கனடா அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=50903051", "date_download": "2021-05-07T01:02:49Z", "digest": "sha1:KUURA3AV3HYIYCW46SKA4E7BQRGRG6KA", "length": 32562, "nlines": 151, "source_domain": "old.thinnai.com", "title": "நான்கடவுள் – அசைவம்-அகிருத்துவம்-வணிகம்-பண்டம்என்னும்விரியும் கருத்துப்புலம் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை\nநான்கடவுள் – அசைவம்-அகிருத்துவம்-வணிகம்-பண்டம்என்னும்விரியும் கருத்துப்புலம்\n‘நான்கடவுள்’ – தமிழ்த் திரைப்பட வரலாற்றில��� μர் அற்புத நிகழ்வு.\nவிளிம்புநிலை மனிதர்களைப் பாத்திரங்களாக அடையாளங்காட்டி\nவெகுஜனப்படங்களில் விசித்திர வெற்றி காட்டி வந்துள்ள பாலாவின்\n‘நான்கடவுள்’ – சுடலைமாடன் மோட்சம் வழ்¢யாகப் ‘புதிய\nநம்பிக்கை’யாகத் தமிழில் அறிமுகமாகி ஏழாம் உலகம் சுட்டிய\nஜெயமோகனின் இணைவுடன் பல பரிமாணங்கள் கொண்டதாக படம்\nகருத்துப்புலம் குறித்தே இக்கட்டுஉரை அன்பே சிவமா\n நன்மை அறிந்து முக்தி அளிப்பதும் தீமை அறிந்து அழிப்பதும்\n உள்ளம் கடந்த நிலை. கடவுள் தனித்த பொருளன்று.\nஉணர்வபனின் உள்ளம் கடந்த நிலை. அகோரி – உள்ளங்கடந்த\n(பிரத்யட்ச வாழ்கைகைக்குத் தேவையான மனம் – உள்ளம்)\nநிலையிருப்பவன். கோரக்க மூலி என்பதற்குக் ‘கஞ்சா’ என விளக்கம் தருகிறது அபிதான சிந்தாமணி. உணவு, கலாச்சார அறநெறிகளை மீறியதுஉள்ளங்கடந்தநிலை.\nசைவமென்றால் இரங்குதல், அனுதாபம் காட்டல், மனிதாபிமானம்\nசினந்து மனிதர்கள் உருப்படிகளாக பண்டமிடும் போது அந்நியப்பட்டு சரக்காக கையாளப்படுவது, உற்பத்தி, நுகர்வு அடிப்படையில் அகப்பட்டுக் கொண்ட மனிதர்களின் பொருளியல் வலைக்குள் சிக்கும் விளிம்புநிலை மனிதர்களும் பண்டமாக, உருப்படிகளாக மாறுவதைச் சுட்டிஅந்தப் பொருளியல் அடிப்படையில் ஆகும்நீதிபரிபாலனம்,காவல் ஆகியவை இப்பண்டநுகர்வு மற்றும் மதிப்பீடுகளுக்கு வெளியே நிற்கும்\nஅகோரியைக் கண்டு மிரளுவதை அழகாக வெளிப்படுத்தும் நிகழ்வு\nதிரைப்படம் எனும் வணிகச் சந்தையில் இப்படம் பண்டமாவதால்\nஹம்சவள்ளி, ரயிலில் பாடிக்கொண்டு பிச்சையெடுக்கும்\nகண்ணில்லாப் பாத்திரம். அன்பை வலியுறுத்திப் பாடிக் கொண்டு வந்த கிறிஸ்துவமும், பிச்சை பாத்திரங்களாக மனித மனங்களை மாற்றுவதாக இருந்தாலும், பெண்ணுரிமை,இசை, திரைப்படப்பரவல், போக்குவரத்துப் பெருக்கம் இவற்றோடு வந்து ஏற்கனவே நிலவிய மனிதாபிமானச் சைவத்தால் உட்கிரகிக்கப்பட்டு ஆணாதிக்கம், ஜாதி ஆதிக்கம்\nபோன்றவற்றால் அழிந்த தன்மையை அப்பாத்திரத்தின் முக்தியில்\nபுனைகதையாக உருவாக்கபப்ட்டுள்ள இத்திரைபப்டத்தில் காலம்\n‘அகம்பிரம்மாஅஸ்மி’ எனத் தன் உள்ளம் கடந்த நிலை உணர்ந்து உலகம் படைத்தல் உணர்த்தப்படுகிறது.நான் சத்தியமும், வழியும் ஜீவனுமாயிருக்கிறேன் என்னும் ஏசுபிரானின்வாசகம்,\nநானே தொடக்கம் – நானே முடிவு, நானுரைப்பதுத���ன் நாட்டின்\nஎனதேடிய ரமணரின்கேள்வி, சுயம் உணர்தல் என்னும்ஜெ.கிருஷ்ணமூர்த்தியின்சிந்தனை,புத்த\nசமணச் சிந்தைனைள், விவேகானந்தர், பெரியார் ஆகியோரின்\nநான் கடவுள் (SYMPATHY Vs EMPATHY) உடல் வேறுபாட்டு\nஅடையாளங்களே ( நெட்டை Xகுட்டை ) ( கருப்பு X சிவப்பு) (ஆண் X பெண் ) ஏற்றத் தாழ்வுகளாக பின்னிக்கிடக்கும் பிரத்தியட்ச வாழ்கையில்பண்டமாகிப்போனவர்கள்தன்னைஅறிவார்களாக.\nதமிழக முதலமைச்சரும் இலங்கைத் தமிழரும். ( இக்கட்டுரை அக்னிபுத்திரனுக்கு மறுப்பாக இருக்கலாம். )\nதலை குனியும் சமூகத்தில் சில நிமிர்ந்த தலைகள் – (1)\nஇணையம் தரும் முத்தமிழ் அமிழ்தம்\nஅதிகம் பேசப்படாத தமிழறிஞர்கள்- 4: சி.சு.செல்லப்பா\nஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்) (1809-1865) காட்சி -4 பாகம் -3\nசுகந்தி : தாழற்றுத் திண்டாடிய மனக்கதவு\nவார்த்தை மார்ச் 2009 இதழில்\nவேத வனம் விருட்சம் 25\n“தோல்வியடைந்த ஒரு குறும்படத்தின் 2 கதைகள்”\nஎளிமையும் வலிமையும் : தேவதச்சனின் “யாருமற்ற நிழல்”\nபிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் அகிலத்தின் ஈர்ப்பியல் நியதியைத் திருத்த வேண்டுமா அகிலத்தின் ஈர்ப்பியல் நியதியைத் திருத்த வேண்டுமா (கட்டுரை 54 பாகம் -1)\nபாப்லோ நெருடாவின் கவிதைகள் -26 << காதல் ஒரு பயணம் >>\nநான்கடவுள் – அசைவம்-அகிருத்துவம்-வணிகம்-பண்டம்என்னும்விரியும் கருத்துப்புலம்\nகலில் கிப்ரான் கவிதைகள் << காதலியோடு வாழ்வு >> (இலையுதிர் காலம்) கவிதை -2 (பாகம் -3)\nஇழப்பும் வலியும் : கல்யாண்ஜியின் “இன்னொரு கேலிச்சித்திரம்”\nதிரு. அப்துல் கையூம் “இடைவேளை” சுகமாகவும் நகையாகவும் இருந்தது\nகஞ்சி குடிக்கும் கனவில் கதறியழும் பதுங்குகுழிகள்\nஅறிவியல் புனைகதை பரிசளிப்பு விழா\n” இடை ” பற்றிய கட்டுரைக்கு ஒரு இடைச் செருகல்\nPrevious:கலில் கிப்ரான் கவிதைகள் << காதலியோடு வாழ்வு >> (இலையுதிர் காலம்) கவிதை -2 (பாகம் -3)\nதமிழக முதலமைச்சரும் இலங்கைத் தமிழரும். ( இக்கட்டுரை அக்னிபுத்திரனுக்கு மறுப்பாக இருக்கலாம். )\nதலை குனியும் சமூகத்தில் சில நிமிர்ந்த தலைகள் – (1)\nஇணையம் தரும் முத்தமிழ் அமிழ்தம்\nஅதிகம் பேசப்படாத தமிழறிஞர்கள்- 4: சி.சு.செல்லப்பா\nஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்) (1809-1865) காட்சி -4 பாகம் -3\nசுகந்தி : தாழற்றுத் திண்டாடிய மனக்கதவு\nவார்த்தை மார்ச் 2009 இதழில்\nவேத வனம் விருட்சம் 25\n“தோல்வியடைந்�� ஒரு குறும்படத்தின் 2 கதைகள்”\nஎளிமையும் வலிமையும் : தேவதச்சனின் “யாருமற்ற நிழல்”\nபிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் அகிலத்தின் ஈர்ப்பியல் நியதியைத் திருத்த வேண்டுமா அகிலத்தின் ஈர்ப்பியல் நியதியைத் திருத்த வேண்டுமா (கட்டுரை 54 பாகம் -1)\nபாப்லோ நெருடாவின் கவிதைகள் -26 << காதல் ஒரு பயணம் >>\nநான்கடவுள் – அசைவம்-அகிருத்துவம்-வணிகம்-பண்டம்என்னும்விரியும் கருத்துப்புலம்\nகலில் கிப்ரான் கவிதைகள் << காதலியோடு வாழ்வு >> (இலையுதிர் காலம்) கவிதை -2 (பாகம் -3)\nஇழப்பும் வலியும் : கல்யாண்ஜியின் “இன்னொரு கேலிச்சித்திரம்”\nதிரு. அப்துல் கையூம் “இடைவேளை” சுகமாகவும் நகையாகவும் இருந்தது\nகஞ்சி குடிக்கும் கனவில் கதறியழும் பதுங்குகுழிகள்\nஅறிவியல் புனைகதை பரிசளிப்பு விழா\n” இடை ” பற்றிய கட்டுரைக்கு ஒரு இடைச் செருகல்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபுதிய திண்ணை படைப்புகள் https://puthu.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://abedheen.wordpress.com/category/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-05-07T01:32:36Z", "digest": "sha1:XNYP7TICLOTTJRZNDQQ22K4I3L5BP4S2", "length": 42380, "nlines": 676, "source_domain": "abedheen.wordpress.com", "title": "பாலஸ்தீன் | ஆபிதீன் பக்கங்கள்", "raw_content": "\n03/06/2018 இல் 13:00\t(அஷ்ரஃப் சிஹாப்தீன், பாலஸ்தீன்)\nநெடு துயிலுக் குனையாக்கி விட்டார்\nபெரு நிலத்தை ஆளவந்தோர் அழிந்தார்\nஎத்தனை நாள் துயரிலே துவள்வோம்\nபொன் பொருளை விடப் பெரிய செல்வப்\n(காஸா எல்லையில் சுட்டுக் கொல்லப்பட்ட மருத்துவத் தாதி ரஸான் நஜ்ஜாருக்கு..)\n24/11/2012 இல் 12:36\t(தாஜ், பாலஸ்தீன்)\nARPITA CHAKRABORTYயிடமிருந்து நண்பர் சாதிக் ஃபேஸ்புக்கில் ஷேர் செய்த இமேஜ் இது. கீழேயுள்ள பத்தி நண்பர் தாஜ், அவருடைய ஃபேஸ்புக்கில் (20th Nov 2012) போட்ட ஸ்டேட்டஸ். அல்லாஹ்விடம் அவர் துஆ கேட்கும் ஸ்டேட்டஸும் இதுதான். ஆன்மீகவாதிகளிடம் கேட்டால் அழிவு நடப்பதற்கு ஓர் அர்த்தமிருக்கும் என்பார்கள். ஹூம்ம்ம்.. – ஆபிதீன்\nபாலஸ்தீன் போர் ஓயவேண்டும் , சமாதானம் தழைக்க வேண்டும்\nபாலஸ்தீன் பிரச்சனைக் குறித்து நான் பதிவு ஏதும் போடாததில் என் நண்பர்கள் சிலருக்கு மனத��தாங்கள் உண்டு. உலக அரசியலில் நான் வெகுகாலமாக கூர்ந்து கவனிக்கும் பிரச்சனைகளில் இந்த பாலஸ்தீன் பிரச்சனையும் ஒன்று. தவிர அந்தப் பிரச்சனையின் முன் தொடர்புகள் குறித்து மூத்த பெரிசுகளிடம் நிறைய தெரிந்ததும் உண்டு. அது குறித்த வாசிப்பும் செய்திருக்கிறேன். நான் சௌதியில் இருந்த போது இப்பிரச்சனையில் அதிகம் கவனம் செய்த எகிப்து நாட்டினரிடம் வலியப் பேசி உள்ளார்ந்த சங்கதிகளை கேட்டும் அறிந்திருக்கிறேன்.\nமதத்தை முன் வைத்தும் பகைமை முன்வைத்தும் உலக அளவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நீண்ட ஆண்டுகளை கொண்ட போர் ஒன்று உண்டென்றேல் அது இதுவாகத்தான் இருக்கும்.\nஇஸ்லாம் தொடங்கிய காலத்தில் இருந்தே யூதர்களை எதிரிகளாக நிறம் காட்டப்படுகிறது. அந்த அளவுக்கு அந்த மக்களும் கொடூர சிந்தை கொண்டவர்களாக இருந்தும் இருக்கிறார்கள். இஸ்லாத்திற்கு மட்டுமல்ல, கிருஸ்துவத்திற்கும் அவர்கள் எதிரிகள்தான். ஏசுவை காட்டித்தந்ததே யூதர்கள்தான் என்று கிருஸ்துவின் சரித்திரம் சொல்கிறது. எல்லோரிடமும் பகைமை பாராட்டும் அளவில் அவர்களை அலைக்கழித்தது அவர்களது அதிமிஞ்சிய அறிவுதான் என்றொரு பேச்சு உண்டு.\nமுதல் இரண்டாம் உலக போர்களின் போது, அமெரிக்காவின் ஸ்நேகிதராகி ஹிட்லருக்கு பல வழிகளில் தொல்லை கொடுத்ததினால்\nஅந்த மக்கள் பெரிய இழப்பை எதிர் கொண்டார்கள் என்பது எல்லோரும் அறிந்த சரித்திர உண்மை. இன்னொரு பக்கம் அன்று தொட்டு அவர்கள் அமெரிக்காவின் செல்லப் பிள்ளையாகியும் போனார்கள் என்பது இன்னொரு சரித்திர உண்மை. இன்றைக்கும் அமெரிக்காவின் முதன்மை நேச நாடு அது.\nஎகிப்தில் நாசர் ஆண்ட போது, பாலஸ்தீன் மக்களுக்காக அவரது நாடும் மக்களும் கிளர்த்தெழுந்து யூதர்கள் மீது படையெடுத்து, கடையில் யூதர்களிடம் சமாதானம் பேச வேண்டிய நிலை. அந்த அளவுக்கு எகிப்து படை போரில் பெரிய இழப்பை சந்தித்தது. இன்றைக்கு அவர்கள் இஸ்ரேலுடன் வலிய நட்பு பாராட்டுபவர்களாக இருக்கிறார்கள். ஒரு பெரிய இஸ்லாமிய நாட்டின் இந்த நிலை, பிற அரபு நாடுகளுக்கு ஓர் பாடமாகவும், மௌனிக்கவும் செய்துவிட்டது. அங்கே அமைதி நிலவ அமெரிக்காவையே அரபு நாடுகள் அன்ணாந்து பார்க்கும் படிதான் இருக்கிறது.\nஇத்தனைக்கும் இஸ்ரேல் கையகல நாடு. இது இஸ்லாமியர்களுக்கும் யூதர்களுக்கும் சொந்தமான பூமி. ஆதி கணக்குப் படி இருவர்களுமே ஒருதாய் வயிற்று மக்கள். மத எழுச்சிகளுக்குப் பிறகு அவர்களுக்குள் பகைமை தானாகவே வளர்ந்துவிட்டது. இந்தப் பிரச்சனை உட்கார்ந்து பேசி தீர்க்க வேண்டிய பிரச்சனை. மாட்டேன் என்கிறார்கள். பலதரம் பேசி சமாதானம் ஆன போதும் கூட எழுத்தில் அதனை அழித்து விடுகிறார்கள். உலகப் பொருளாதார அரசியல் பொருட்டு சில வல்லரசுகளும் கூட இந்த இரு மக்களின் சமாதான வாழ்வோடு விளையாடுபவர்களாக இருக்கிறார்கள்.\nஎன் வயதில், இந்த இரு மக்களுக்கிடையே ஆன சச்சரவு இது எத்தனையாவது தடவை என்று எண்ண முடியாத நிலை.\nஇத்தனைக் காலமாய் மாறி மாறி, விட்டு விட்டு நடந்தேறிய போரினால் ஆன இழப்புகள்இந்த இருதரப்பு மக்களுக்கும் உறைக்கவில்லை என்பதுதான் ஆச்சரியம். மதம் அவர்களது கண்களையும், மூளையையும் கட்டிவிடுகிறது\nமானுட நாகரீகம் பொருட்டேனும் இந்த மக்கள் சமாதானமாக போக வேண்டும். இனியேனும், வல்லரசுகள் இவர்கள் இடையே அரசியல் நிகழ்த்தக் கூடாது.\nஇப்போது நடைப்பெற்று கொண்டிருக்கும் சச்சரவில் மாண்டு போகிறவர்கள் குறித்து அனுதாபம் அதிகம்.\nஇன்றைக்கு இந்த இரு மக்களுக்கிடையே எகிப்தில் நடைப் பெற்றுக் கொண்டிருக்கும் சமாதான பேச்சு வார்த்தை வெற்றிபெற வேண்டும்.\nநானும், இதற்காக வேண்டி ‘அல்லாவிடம்’ துவா செய்கிறேன்.\nமூன்றாவது வழிபாட்டுப் பாடல் – மஹ்மூத் தர்வீஷ்\nபாலஸ்தீன மக்களை யாராலும் தோற்கடிக்க முடியாது – அ. முத்துக்கிருஷ்ணன் நேர்காணல்\n14/09/2011 இல் 12:00\t(அ.முத்துக்கிருஷ்ணன், சமநிலைச் சமுதாயம், பாலஸ்தீன்)\n’சமநிலைச் சமுதாயம்’ இதழில் (May 2011) வெளிவந்திருந்த நேர்காணல் ’பழனிபாபா’ தளத்தில் ஜூலை2011-ல் வெளிவந்துள்ளது. சுட்டி : http://www.palanibaba.in/2011/07/blog-post_4158.html . ’பாலஸ்தீனப் பயண அனுபவங்கள்’ என்ற தலைப்பில் நண்பர்அருள்மொழியின் தளத்திலும் இருக்கிறது. கீழே பதிவிட்டிருப்பது ‘சமநிலைச்சமுதாயம்’ இதழில் வெளிவந்த நேர்காணலின் இமேஜ் கோப்புகள். ‘ஆபிதீன் பக்கங்களில் அவசியம் ஏற்று’ என்று அனுப்பிவைத்த ஹனீபாக்காவுக்கு நன்றிகள்.\nநன்றி : ’சமநிலைச் சமுதாயம்’ , அ.முத்துக்கிருஷ்ணன், எஸ்.எல்.எம். ஹனிபா காக்கா\nகார்ட்டூனிஸ்ட் நஜி-அல்-அலி : கனன்றெரியும் கோடுகள்\nமூன்றாவது வழிபாட்டுப் பாடல் – மஹ்மூத் தர்வீஷ்\nமூன்றாவது வழிபாட்டுப் பாடல் – மஹ்மூத் தர்வீஷ்\n17/08/2009 இல் 06:00\t(பாலஸ்தீன், மஹ்மூத் தர்வீஷ்)\nபுதிய கலாச்சாரம் – அக்டோபர் 2008 இதழிலிருந்து, நன்றிகளுடன்.\nஆங்கிலம் வழி தமிழில் : புதூர் இராசவேல்\nமூன்றாவது வழிபாட்டுப் பாடல் – மஹ்மூத் தர்வீஷ்\nபுளித்த ஆப்பிளாய் சுருங்கிய நாளில்\nசொற்கள் தேனாய்ச் சுரந்த தருணத்தில்…\nமஹ்மூட் தர்வீஷ் கவிதைகள் – தமிழாக்கம்: எம்.ஏ.நுஃமான்\nஆபிதீன் பக்கங்கள் ii :\n3. எழுத்தாளர்களின் இணையதளங்கள் (Links)\n5. கச்சேரிகள் , கஜல்கள்\n8 . நாகூர் ரூமி பதிவுகள்\nகலீபா உமர் (ரலி) (1)\nஉஸ்தாத் ஸலாமத் அலி கான் (1)\nகுலாம் முஸ்தஃபா கான் (1)\nநுஸ்ரத் ஃபதே அலிகான் (6)\nபண்டிட் ராஜ்சேகர் மன்ஸூர் (1)\nமுகேஷ் (பீர் முஹம்மது) (1)\nவிஸ்வநாதன் / ராமமூர்த்தி (2)\nதயவு பிரபாவதி அம்மா (1)\nஅப்துல் வஹ்ஹாப் பாகவி (18)\nகுலாம் காதர் நாவலர் (4)\nஅபுல் கலாம் ஆசாத் (2)\nஅஸ்கர் அலி என்ஜினியர் (1)\nஎச். பீர் முஹம்மது (2)\nகிண்ணியா எஸ்.பாயிஸா அலி (2)\nகுர்அதுல் ஐன் ஹைதர் (1)\nகுளச்சல் மு. யூசுப் (5)\nசாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (2)\nஜே. பி. சாணக்யா (1)\nஜோ டி குரூஸ் (1)\nதொ.மு. சி. ரகுநாதன் (1)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nபோர்வை பாயிஸ் ஜிப்ரி (1)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nவேங்கட சுப்புராய நாயகர் (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (5)\nஹரி கிருஷ்ணன் (ஹரிகி) (1)\nத சன்டே இந்தியன் (1)\nநேஷனல் புக் டிரஸ்ட் (13)\nஅங்கனெ ஒண்ணு இங்கனெ ஒண்ணு (1)\nமணல் பூத்த காடு (1)\nஇரா. சண்முக வடிவேல் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2017/03/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-05-07T01:54:58Z", "digest": "sha1:43SE6SFLEPPBPN2HROLN5E7WFY6FTSG7", "length": 12300, "nlines": 135, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nஎன் சொல் செயல் உங்களை நல்லதாக்குவது போல் உங்கள் சொல் செயல் மற்றவர்களை நல்லதாக்க வேண்டும்\n“என் சொல் செயல்” உங்களை நல்லதாக்குவது போல் – “உங்கள் சொல் செயல்” மற்றவர்களை நல்லதாக்க வேண்டும்\nஇந்தப் பூவுலகில் அகஸ்தியன் சர்வ தீமைகளையும் அகற்றி சர்வ தீமைகளையும் அகற்றிடும் பேரருளைப் பெற்று நமது பூமியின் “துருவ நிலையின் நேராக நின்று.., துருவ நட்சத்திரமாக.., வடகிழக்காக அமைந்துள்ளான்”.\nதுருவ நட்சத்திரம் எத்தகையை விஷத் தன்மைகளானாலும் தீமைகளானாலும் அதையெல்லாம் ஒளியின் சுடராக மாற்றிக் கொண்டயுள்ளது.\nஅந்தத் துருவ நட்சத���திரத்திலிருந்து வரும் பேரருள் பேரொளியைக் கவரும்படி செய்தார் நமது குருநாதர். துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் அருள் உணர்வுகளை நுகரச் செய்து.., என் உடலுக்குள் வந்த.., “தீமைகளை மாற்றியமைக்கும்” முறையினைச் சொன்னார்.\nஅதன் வழி என் வாழ்க்கையில் வந்த தீமைகளை நீக்கினேன். அவர் எனக்குக் காட்டிய அதே வழியில் குரு கொடுத்த அருள் உணர்வுகளை உங்களிடம் பதிவு செய்துவிட்டேன்.\n1971ல் வைகுண்ட ஏகாதசி அன்றுதான் நம் குரு ஒளி உடல் பெற்ற நாள். தீமைகளை வென்று சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்தார்.\nஅவரைப் போலவே நீங்களும் தீமைகளை அகற்றுங்கள். இந்த உடலுக்குப் பின் ஒளியாக மாற்றுங்கள். உங்களால் முடியும்.\nநான் (ஞானகுரு) ஒன்றும் உங்களை மாற்ற முடியாது. “சாமி மாற்றுவார்.., சாமியார்..,” என்று நான் சொன்னால் உங்களை ஏமாற்றுவதாகத் தான் அர்த்தம்.\nஏனென்றால்.., நீங்கள் எண்ணியதை உங்கள் உயிர் தான் அதை அணுவாக மாற்றுகின்றது.\n“நீங்கள் எல்லோரும் அருள்ஞானம் பெறவேண்டும்” என்று எண்ணும் பொழுது தான் நானும் அதைப் பெறுகின்றேன்.\nஇதைப் போல நீங்களும் “உலக மக்கள் அனைவரும்” அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெறவேண்டும் என்று ஏங்கினால் நீங்களும் பெறலாம்.\nஆகவே, குருநாதர் காட்டிய அருள் வழியை நாம் பின்பற்றுவோம். குருநாதர் காட்டிய அருள் வழியைப் பின்பற்றி நடக்கும்போது நாம் எதைச் செயல்படுத்த வேண்டும்\n1.நான் ஒருவரைப் பார்த்தேன்…, அவரின் தீமைகளைக் கேட்டேன்.\n2.துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற்றேன்\n3.அவர் நன்றாக ஆக வேண்டும் என்று சொன்னேன்.\n4.”அவர்கள் நன்றாக ஆனார்கள்…,” என்று இந்த சந்தோஷம் உங்களுக்கு வரவேண்டும்.., “வரும்”.\nஇதைத்தான் நாம் செய்ய வேண்டும்.\nஅதை விட்டுவிட்டு “என்னைத் திட்டிக் கொண்டேயிருக்கின்றான்.., இரு.., நான் அவனைப் பார்க்கிறேன்.., அவனைத் தொலைத்து விடுகிறேன்” என்ற நிலை வரக்கூடாது.\nஅதற்குப் பதிலாக அந்த அருள் உணர்வை நான் பெற்றேன். “என்னைத் திட்டியவர்கள் தீமையிலிருந்து விடுபட்டனர்…, அவர்கள் நல்லவர்களாக ஆனார்கள்” என்று இப்படிப்பட்ட அனுபவமாக இருக்க வேண்டும்.\nஅதைப் போல நோயுற்றவர்களாக இருந்தால்.., “என் பார்வையால் சொல்லால் மூச்சால் அவர்கள் நோய் விலகியது” என்ற நிலைக்கு நீங்கள் வளர வேண்டும்.\nஇதை நீங்கள் ஒரு பழக்கத்திற்கு கொண்டு வ���வேண்டும்.\nகுரு எனக்கு இதைத்தான் காட்டினார். அதைத்தான் நான் உங்களுக்கு உணர்த்துகின்றேன். பதிவாக்குகின்றேன்.\n“இதைச் செயல் வடிவுக்குக் கொண்டு வருவது” உங்களுடைய பொறுப்பு. ஆகவே,\nஅரவணைக்கும் சக்தியை உங்களுக்குள் கூட்டிக் கொள்ளுங்கள்.\nபேரன்பை உருவாக்குங்கள்…, பேரிருளை மாற்றுங்கள்.\nபேரன்பைக் கூட்டினால் நமக்குள் இருள் என்ற நிலைகள் வராது தடுக்க முடியும்.\nநாமெல்லாம் அருள் வழியில் செல்வோம். இனி விஞ்ஞான உலகில் வரும் கடும் விஷத்தன்மைகளிலிருந்து மாற்றியமைப்போம் என்று உறுதி கொள்ளுங்கள்.\nசாமியையே (ஞானகுரு) எண்ணிக் கொண்டிருப்பதைக் காட்டிலும் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து உடலுக்குள் விளைய வைக்க வேண்டும்\n என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nசீராக ஆத்ம சுத்தி செய்வோருக்குக் கிடைக்கும் பலன்கள்\nஆண்டவனிலிருந்து வந்த பிம்பங்கள் தான் அனைத்துமே என்று எண்ணினால்… “தான்” என்ற தனித்த அகங்காரம் வராது – ஈஸ்வரபட்டர்\nஉங்களுக்குக் கொடுத்த சக்திகளை ஒவ்வொருவரும் விரயம் ஆக்காது பயன்படுத்துங்கள்\n24 X 7 சாமிகள் உபதேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newneervely.com/%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA", "date_download": "2021-05-07T01:49:58Z", "digest": "sha1:2HYDZJQVQZUSC625UOK25WOMHE36WEIT", "length": 6859, "nlines": 97, "source_domain": "newneervely.com", "title": "“கந்தபுராணச்சுருக்கம்” புராண படனம் | நீர்வேலி", "raw_content": "10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..\nநீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது\nஸ்ரீமத் சம்பந்த சரணாலய சுவாமிகள் பாடியருளிய “கந்தபுராணச்சுருக்கம்” புராண படனம் கச்சியப்ப சிவாச்சார்ய சுவாமிகள் சுமார் பதினாறாயிரம் பாடல்களால் பாடியருளிய கந்தபுராணம் மிகப்பிரபலமானது.இந்நூல் யாழ்ப்பாணத்தின் அநேகமான ஊர்களில் எல்லாம் முழுமையாக படனம் செய்யப்பட்டு வந்தது. இன்றும் ஆங்காங்கே அது நடந்து வருகிறது.இந்த கந்தபுராணத்தில் உள்ள சூரபத்மன் வதைப்படலத்தை கந்தசஷ்டி காலத்தில் படனம் செய்வதும் பல இடங்களிலும் உள்ள மரபு. (நன்றி மயூரகிரி சர்மா )\nஇதே பதினாறாயிரம் பாடல் கொண்ட கச்சியப்ப சிவாச்சார்யாரின் கந்த புராணத்தை 1048 பாடல்களால் ஸ்ரீமத் சம்பந்த சரணாலய சுவாமிகள் என்ற சைவசித்தாந்த அறிஞர் சில நூற்றாண்டுகளுக்கு முன்னரே சுருக்கி பாடியுள்ளார் என்பது பலரும் அறியாத செய்தி..\nஇந்த நூலிலுள்ள யுத்த காண்டம், தேவகாண்டம் ஆகிய இரு காண்டங்களும் நீர்வேலி செல்லக்கதிர்காம முருகன் ஆலயத்தில் கந்தசஷ்டி காலத்தில் படனம் செய்யப்பட்டு வருகிறது…\nஅதிக வர்ணனைகளின்றி காலத்திற்கேற்ற நடையில் தமிழ்ச்சுவை பொங்குவதாக இந்நூல் காணப்படுகிறது.\nஇவ்வாறான கந்தபுராண சுருக்கத்திலுள்ள பாடல்களுக்கு காஞ்சிபுரம் மகாவித்துவான் சபாபதி முதலியாரவர்கள் பொழிப்புரை எழுதியுள்ளார்.\nநாமும் இந்த கந்தன் கதையை கற்றும் கேட்டும் மகிழலாமே…\nகந்தசஷ்டி கவச பாராயணம் இடம்பெற்றது. »\nஇது எமது ஊர். இங்கு பிறந்ததினால் நாம் பெருமையடைகிறோம். நீர்வேலியின் சிறப்பையும் வனப்பையும் எங்கு சென்றாலும் மறவோம். எமதூரைப் போற்றுவோம்.\nநீர்வேலி நலன்புரிச் சங்கம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://prosperspiritually.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-85/", "date_download": "2021-05-07T01:39:34Z", "digest": "sha1:NDLITZSGLKY6HDZ4YR74AWMZBJSEMS2N", "length": 4712, "nlines": 85, "source_domain": "prosperspiritually.com", "title": "சிந்திக்க வினாக்கள்-85 - Prosper Spiritually", "raw_content": "\nசிந்தித்தலின் அன்றாட சுயசோதனை பயிற்சி\nவாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு\nபிறவியின் நோக்கத்தை எவ்வாறு கண்டுபிடிப்பது பிறவியின் நோக்கத்தை அறிந்த போதே பேரின்பம் அடைந்ததாகக் கூறுகிறார் மகரிஷி அவர்கள்.\nபிறவியின் நோக்கத்தை அறிந்த நிலை எவ்வாறு இருக்கும்\nஅந்நிலையினை அடைவதற்கு முன் அந்நிலையினை கற்பனை செய்ய முடியுமா\nவாழ்க அறிவுச் செல்வம் வளர்க அறிவுச் செல்வம்\nPrev:யோகமும் அறிவுத் திருக்கோயிலும் — 3/3\nசிந்தித்தலின் அன்றாட சுயசோதனை பயிற்சி\nசிந்தித்தலின் அன்றாட சுயசோதனை பயிற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akattiyan.lk/2021/05/blog-post_53.html", "date_download": "2021-05-07T01:46:31Z", "digest": "sha1:3AN7Q5LGIQBW72XYGILRSGLHFKD3ELLN", "length": 5892, "nlines": 67, "source_domain": "www.akattiyan.lk", "title": "மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு - அகத்தியன் | Online", "raw_content": "\nHome இலங்கை மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு\nமோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு\nமோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் நாராஹென்பிட்ட மற்றும் வேரஹெர காரியாலயங்களின் ஊடாக வழங்கப்படும் சேவை தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளன.\nசுகாதாரப் பிரிவு வழங்கியுள்ள வழிமுறைகளுக்கு அமைவாக குறித்த அலுவலகத்தினால் முன்னெடுக்கப்படும் பணிகள் ஒரு வார காலத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளன.\nமுற்பதிவு செய்து கொண்ட சகல பதிவுகளும் இதன் மூலம் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது.\nமோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு Reviewed by Chief Editor on 5/02/2021 09:40:00 pm Rating: 5\nபாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் மேலதிக வகுப்புகளுக்கு மறு அறிவித்தல் வரை விடுமுறை\nபாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் மேலதிக வகுப்புகளுக்கு மறு அறிவித்தல் வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், நோன்பு பெருநாள், வெசாக் ...\nகொரோனா பரவல் காரணமாக நாட்டின் பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள விடுமுறையானது மேலும் ஒரு வார காலத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ...\nமோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nவாகன போக்குவரத்து திணைக்களத்தின் நாரஹென்பிட்டி மற்றும் வேரஹெர அலுவலகங்கள் ஒரு வாரத்திற்கு மூடப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம த...\nDReAM என அறிமுகப்படுத்தப்பட்டுள்ள முற்பாதுகாப்பு விதிமுறைகளுக்கமைய மதுபான சாலைகளை திறந்து வைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. D – சமூக இடை...\nமுழு அதிகாரம் : அகத்தியன் ஊடக சேவை 2020\nஆசிரியர் பீட தெடர்புகளுக்கு 0779516119\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sinodryair.com/ta/technical-support/common-knowledge/", "date_download": "2021-05-07T01:47:01Z", "digest": "sha1:O7Y7FBK54G2GQKFZ3QJ44LJF6RRAYIHF", "length": 15008, "nlines": 297, "source_domain": "www.sinodryair.com", "title": "காமன் நாலெட்ஜ் - ஹங்ஷு DryAir சிகிச்சை கோ, லிமிடெட்", "raw_content": "\nடேர்ன் முக்கிய உலர் அறை அமைப்பு\nஆர் & டி குழு\nDryair தயாரிப்புகள் வேலை கோட்பாடுகள்\n1. கூலிங் ஈரபபதம் அகற்றல்\nவிமான பனிபடுநிலைக்கு கீழே குளிர்ந்து, பின்னர் அமுக்கப்பட்ட நீர் நீக்கப்பட்டது.\nஇந்த முறை பனிபடுநிலைக்கு என்று 8 ~ 10 ℃ அல்லது அதற்கு மேற்பட்ட நிலையில் கீழ் பயனுள்ளதாக இருக்கும்.\n2. சுருக்க ஈரபபதம் அகற்றல்\nஇறுக்கி ஈரம் பிரிக்க ஈரமான குளிர் காற்றை.\nகாற்று தொகுதி சிறிய ஆனால் பெரிய காற்றாலை தொகுதி நிபந்தனைகளை ஏற்றது அ��்ல போது இந்த முறை பயனுள்ளதாக இருக்கும்.\n3. திரவ உறிஞ்சுதல் ஈரபபதம் அகற்றல்\nலித்தியம் குளோரைடு தீர்வு தெளிப்பு ஈரப்பதத்தை பயன்படுத்தப்படுகிறது.\nபனிபடுநிலைக்கு -20 ℃ அல்லது குறைக்கப்பட்டது முடியும், ஆனால் உபகரணம் மிகப் பெரிய, மற்றும் உறிஞ்சுதல் திரவ மாற்றியமைக்கப்பட வேண்டும்.\n4.Wheel வகை ஈரமுறிஞ்சி ஈரபபதம் அகற்றல்\nசெறிவூட்டப்பட்ட நுண்ணிய நீர் உறிஞ்சும் முகவர்கள் பீங்கான் இழைகள் காற்றோட்டத்திற்காக தேன்கூடு போன்ற இரண்டாம் ஒரு செயல்படுத்தப்படும்.\nஈரபபதம் அகற்றல் அமைப்பு பனி புள்ளிகள் சிறப்பு ஆகியவற்றின் மூலம் -60 ℃ அல்லது குறைவாகவோ சென்று அடையக்கூடிய, எளிது.\nஇந்த Jierui பயன்படுத்தப்படும் முறையாகும்.\nNMP உயர் கொதிநிலை மற்றும் சாதாரண வெப்பநிலை கீழ் குறைந்த நீராவி அழுத்தம் கொண்டிருப்பதால், அது எளிதாக சாதாரண வெப்பநிலை கீழே குளிர்வித்து அமுக்கப்பட்ட முடியும். அண்டோனே இன் சூத்திரம் படி, அதன் சிறப்பான மூலம் NMP மீட்பு குளிர்ச்சி (உலர்த்தி வாயு மேலும் நீர் கொண்டிருந்தால் நீர் மீட்பு அளவை அதிகரிக்கச் உள்ளது என்று வழங்கப்படும்) நடத்தப்பட்ட முடியும்.\nநன்மைகள் விஒசி செறிவு சுழலிகளை இன்:\n1.High செயல்திறன் மற்றும் திறன்\nமகத்தான மூலமும் திறன் கொண்ட உயர் சிலிக்கா zeolites மற்றும் செயல்படுத்தப்படுகிறது கார்பன்கள் பயன்படுத்தி எங்கள் VOCconcentrator நெகிழ்வோடு வோலடைல் ஆர்கானிக் கலவைகளால் பல்வேறு வகையான சிகிச்சை செயற்பாட்டின் வெவ்வேறு நிலைமைகளின் கீழ் வேலை செய்ய அனுமதிக்கிறது.\nஅதிக கொதிநிலைப் புள்ளி வோலடைல் ஆர்கானிக் கலவைகளால் சிகிச்சைக்காக கொடுக்கும் 2.Capability\nகார்பன் பொருள் காரணமாக அதன் புறந்தள்ளுதல் வெப்பநிலை வரம்பை அதிக கொதிநிலைப் புள்ளி வோலடைல் ஆர்கானிக் கலவைகளால் சிகிச்சை ஒரு சிக்கல் கொண்டுள்ளது. மாறாக, எங்கள் ஜியோலைட் சுழலிகளை பண்புகள் உயர் வெப்பநிலை கொண்ட மூலமும் காற்றை பயன்படுத்தலாம் எங்கள் விஒசி செறிவு செயல்படுத்துகிறது எரியாத மற்றும் உயர் வெப்ப எதிர்ப்பு, உள்ளன.\nவிஒசி எளிதாக வெப்ப ஆற்றல் மூலம் polymerized (எ.கா. ஸ்ட்ரைரின், cyclohexanone போன்றவை) திறம்பட உயர் சிலிக்கா ஜியோலைட் மூலம் சிகிச்சை அளிக்கலாம்.\nபிரத்யேகமான வெப்பம் சிகிச்சை மூலம் 4.Cleanability & செயல்படுத்தும்\nநீற்றுதல் செயல்முறை மூல��் எங்கள் ஜியோலைட் சுழலிகளை பிசின் உட்பட அனைத்து கனிம பொருள் வந்திருக்கின்றன. சுழலி உறுப்பில் அடைப்புகள், use.But ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு நிகழலாம் கவலைப்பட வேண்டாம் சுழலி ஒரு சரியான முறையில் துவைக்கக்கூடிய குவிக்கப்பட்ட அகற்றும் உள்ளது dust.It நமது ஜியோலைட் சுழலி சூழ்நிலைகளுக்கு ஏற்ப வெப்ப சிகிச்சை மூலம் மீண்டும் செயல்படுத்த முடியும் என்று இன்னும் சிறப்பாக.\nவிஒசி செறிவு சுழலிகளை பொதுவான பயன்பாடுகள்:\nவோலடைல் ஆர்கானிக் கலவைகளால் கட்டுப்பாடு சாத்தியமான வசதி / தயாரிப்பு ரேகையும் அந்த\nசிகிச்சை வோலடைல் ஆர்கானிக் கலவைகளால்\nதானியங்கி / பாகங்கள் உற்பத்தியாளர் ஓவியம் சாவடி டொலுவீன், சைலீன், ஈஸ்டர்களினுள் குழு, ஆல்கஹால்கள்\nஸ்டீல் தளபாடங்கள் தயாரிப்பாளர் ஓவியம் சாவடி, ஓவன்\nஒட்டக்கூடிய / காந்த நாடா உற்பத்தியாளர் பூச்சு செயல்முறை, சுத்தம் செய்தல் அலகு கேடோன்ஸ், மைக், Cyclohexanone, Methylisobutylketones, முதலியன\nகெமிக்கல்ஸ் ஆயில் சுத்திகரிப்பு, மையம் நறுமண ஹைட்ரோகார்பன்கள், ஆர்கானிக் அமிலங்கள், ஆல்டிஹைடுகள், ஆல்கஹால்கள்\nசெயற்கை பிசின் / பசை மேக்கர் பிளாஸ்டிக்குகள், ப்ளைவுட் உற்பத்தி செயல்முறை ஸ்ட்ரைரின், ஆல்டிஹைடுகள், ஈஸ்டர்களினுள் குழு\nஅரை கடத்தி கிளீனிங் அலகு ஆல்கஹால்கள், கேடோன்ஸ், அமைன்கள்\nபயனுள்ள பனிபடுநிலைக்கு மாற்றம் அட்டவணை:\n° சிடிபி கிராம் / கிலோ ° FDP GR / பவுண்டு\n° சிடிபி கிராம் / கிலோ ° FDP GR / பவுண்டு\nஎண் 2088 Keji சாலை Qingshan தொழிற்சாலை பார்க் Linan / ாங்கிழதோ / ஸேஜியாங் பிரதேசம் சீனா\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n© பதிப்புரிமை - 2010-2017: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinibitz.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3/", "date_download": "2021-05-07T00:31:46Z", "digest": "sha1:A2LRJJZPRSKOPPCNGS2AGGUP3MV2A3XO", "length": 10250, "nlines": 66, "source_domain": "www.tamilcinibitz.com", "title": "தமிழக கோயில்களை ஆட்சியாளர்களால் அல்ல, பக்தர்களால் ஆள வேண்டும் என்று சந்த்குரு விரும்புகிறார்", "raw_content": "முழுமையான செய்தி உலகம் உங்களுக்காக.\nதமிழக கோயில்களை ஆட்சியாளர்களா��் அல்ல, பக்தர்களால் ஆள வேண்டும் என்று சந்த்குரு விரும்புகிறார்\nபிரபல யோகா குருவும், விசித்திரமான ஜாகி வாசுதேவ் (சத்குரு என்று அழைக்கப்படுபவர்) வியாழக்கிழமை தமிழ்நாட்டில் உள்ள கோயில்களின் மீது அரசாங்க கட்டுப்பாட்டைக் கொண்டுவருவது தொடர்பான சர்ச்சைக்குரிய பிரச்சினை குறித்து எழுதினார்.\nசத்குருவின் பிரதான ஆசிரமம் கோவைக்கு அருகில் அமைந்துள்ளது. சத்குரு ட்விட்டரில் எழுதினார், “# தமிழ்நாட்டில் உள்ள மாதிரிகள் அரசாங்க நிர்வாகத்தின் கைகளில் உள்ளன. அவை பெரிதும் அர்ப்பணிக்கப்பட்ட இந்த வழிபாட்டுத் தலங்களின் புனிதத்தன்மையை மீறுகின்றன. கால கோயில்கள் நடத்தப்படுவது # தேவதைகள், அதிகாரத்துவ மற்றும் அரசியல் சக்திகளால் அல்ல …”\nபிரதமர் அலுவலகம், தமிழக பிரதமர் அலுவலகம் மற்றும் விசித்திரமாக நடிகர் ரஜினிகாந்த் ஆகியோரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்குகளை சத்குரு சுட்டிக்காட்டினார். இந்த மாதம் ஒரு அரசியல் கட்சியை அமைப்பதற்கான திட்டங்களை கைவிட்ட ரஜினிகாந்த், திராவிடக் கட்சிகளின் நாத்திக சித்தாந்தங்களுக்கு எதிராக இயங்குவதற்காக தமிழகத்தில் “மதச்சார்பற்ற, ஆன்மீக” கொள்கைக்கு அழைப்பு விடுத்திருந்தார்.\nகோயில்களின் மீதான அரசாங்க கட்டுப்பாடு தமிழ்நாட்டிலும், இந்தியாவின் பிற மாநிலங்களிலும் சர்ச்சைக்குரிய விடயமாக உள்ளது.\n1817 இல் முந்தைய மந்திர ஜனாதிபதி காலத்தில் பிரிட்டிஷ் கிழக்கிந்தியாவின் நடவடிக்கைகளில் இப்போது தமிழ்நாட்டில் உள்ள கோயில்களின் அரச கட்டுப்பாடு வேர்களைக் கொண்டுள்ளது. சுதந்திரத்திற்குப் பிறகு, 1951 மந்திர மத மற்றும் தொண்டு சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டம் அரசியலமைப்பிற்கு முரணானது என்று உச்ச நீதிமன்றம் மற்றும் மெட்ராஸ் உச்ச நீதிமன்றம் கருதியது.\n1959 ஆம் ஆண்டில், தமிழ்நாடு மத மற்றும் தொண்டு நிறுவனங்கள் குறித்த தற்போதைய சட்டம் இயற்றப்பட்டது. பிற்கால அரசாங்கங்களால் வலுப்படுத்தப்பட்ட இந்தச் செயல், கோயில்களுக்கு நிர்வாக அதிகாரிகளை நியமிக்க வழங்கியது. நிர்வாகிகளை நியமிப்பது சர்ச்சைக்குரிய விடயமாக இருந்து வருகிறது. ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு மேலதிகமாக, தமிழ்நாட்டின் கோயில்களில் சிலை திருட்டு சம்பவங்களும் நடந்துள்ளன. பூரியில் உள்ள ஜெகந்நாத் கோயிலில் வழிபாட���டாளர்களை துன்புறுத்தியதாகக் கூறப்படும் ஆட்சேபனை விசாரணையை விசாரிக்கும் போது, ​​2019 ஆம் ஆண்டில், எஸ்.ஏ.பொப்டே மற்றும் நீதிபதி எஸ்.ஏ.\nபாப் கலாச்சாரம் டிரெயில்ப்ளேஸர். சிந்தனையாளர். சிக்கல் செய்பவர். இசை குரு. சமூக ஊடக நிபுணர். மாணவர். ஜாம்பி நிபுணர்.\nREAD நவம்பர் 27 முதல் லட்சுமி விலாஸ் வங்கி தனது பெயரை மாற்ற, இது 20 லட்சம் வாடிக்கையாளர்களை எவ்வாறு பாதிக்கும் என்பதை அறிவீர்கள்\nவைஷ்ணோ தேவியில் பனிப்பொழிவு, குல்மார்க், காஷ்மீரில் பாதரசம் -7.2; டெல்லி உட்பட வட இந்தியாவில் கடுமையான குளிர்\nமலைப்பகுதிகளில் பனிப்பொழிவு காரணமாக, சமவெளிகளில் குளிர்ச்சியை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. வானிலை மேம்படுத்தல்கள்: இந்திய வானிலை...\nவங்காள முதல்வர் மாநில மக்கள்தொகையை 30 சதவீதம் மட்டுமே அதிகரிக்க விரும்புகிறார்: கைலாஷ் விஜயவர்ஜியா\nதமிழ்நாட்டை அமைதியின் புகலிடமாக மாற்ற காவல்துறை உதவுகிறது: பழனிசாமி- புதிய இந்தியன் எக்ஸ்பிரஸ்\nகுளிர்காலத்திற்கு முன்னர் ஏராளமான பயங்கரவாதிகளை காஷ்மீருக்கு அனுப்ப பாகிஸ்தான் விரும்புகிறது\nPrevious articleகுரு ரந்தாவாவின் படத்தில் ‘மர்ம பெண்’ சஞ்சனா சங்கி, பாடகர் புதிய இடுகையில் தெளிவுபடுத்துகிறார்\nNext articleஉலகெங்கிலும் உள்ள பயனர்களுக்கான டேப்டாப் ஸ்டோருக்கு படிப்படியான வழிகாட்டி\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nசெல்சியாவிலிருந்து ஃபிராங்க் லம்பார்ட் நீக்கப்பட்டார், தாமஸ் துச்செல் மாற்றாக இருக்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/suriya-100-crore-movie-list/", "date_download": "2021-05-07T01:44:09Z", "digest": "sha1:NVHVPY7JXTSTUOO7GYS5RBLRYVO54FML", "length": 6641, "nlines": 164, "source_domain": "www.tamilstar.com", "title": "சூர்யா திரைப்பயணத்தில் ரூ 100 கோடி வசூலை தாண்டிய படங்கள் லிஸ்ட் இதோ! - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில��� என்னுடைய ஆதரவு சனம்…\nசூர்யா திரைப்பயணத்தில் ரூ 100 கோடி வசூலை தாண்டிய படங்கள் லிஸ்ட் இதோ\nசூர்யா திரைப்பயணத்தில் ரூ 100 கோடி வசூலை தாண்டிய படங்கள் லிஸ்ட் இதோ\nதமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர் சூர்யா. இவர் எத்தனை தோல்வி படங்கள் கொடுத்தாலும் இவரின் மார்க்கெட் குறையவில்லை.\nஇன்றும் சூரரைப் போற்று படத்திற்கு மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்து வருகிறது. இந்நிலையில் சூர்யா தான் ரஜினிக்கு பிறகு தமிழ் சினிமாவில் ரூ 100 கோடி வசூலை கொடுத்த நடிகர்.\nஅவர் தன் திரைப்பயணத்தில் எத்தனை ரூ 100 கோடி வசூலை கொடுத்தார் என்பதை பார்ப்போம்… இதோ..\nநடிகர் சுஷாந்த் சிங் தனது அம்மாவிற்கு செய்து கொடுத்த சத்தியம், வெளியான உருக்கமான செய்தி..\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த மிக மோசமான படங்கள்.. முழு லிஸ்ட் இதோ\nஉயர் அதிகாரியின் மகள் கடத்தப்பட அவரை போலீஸ் அதிகாரி வரலட்சுமி காப்பாற்றுகிறார். அதன் தொடர்ச்சியாக பெண் கடத்தல்...\nகனடியப் பெண்களில் நாடு தழுவிய உயர்சாதனை படைத்த ஈழப்பெண்\nஇந்தியாவுக்கு அவசர மருத்துவ உதவி பொருட்களை அனுப்பியது கனடா\n12 வயதிற்கு மேற்பட்டவர்கள் Pfizer தடுப்பூசியை பெற Health கனடா அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/672248/amp", "date_download": "2021-05-07T02:03:16Z", "digest": "sha1:5UN2O53CZZK5MBMH7BVFVBV7N4RUG5VA", "length": 10860, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக பறந்த சிறிய ரக ஹெலிகாப்டர்!: புதிய வரலாற்று சாதனை படைத்து அசத்திய நாசா விஞ்ஞானிகள்..!! | Dinakaran", "raw_content": "\nசெவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக பறந்த சிறிய ரக ஹெலிகாப்டர்: புதிய வரலாற்று சாதனை படைத்து அசத்திய நாசா விஞ்ஞானிகள்..\nலாஸ்ஏஞ்சல்ஸ்: விண்வெளி ஆராய்ச்சியில் பல சாதனைகளை படைத்திருக்கும் நாசா, செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக சிறிய ரக ஹெலிகாப்டரை பறக்கச்செய்து வரலாற்று சாதனை படைத்துள்ளது. பூமிக்கு அப்பால் உள்ள ஒரு கிரகத்தில் ஹெலிகாப்டர் பறக்குமா அதிலும் மனித வாழ்வு சாத்தியமா என ஆய்வு செய்யப்பட்டு வரும் செவ்வாய் கிரகத்தில் ஹெலிகாப்ட்ரை பறக்க செய்ய முடியுமா என்ற கேள்விக்கான விடை கிடைத்துள்ளது. செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, கடந்த ஆண்டு பெர்சவரன்ஸ் ரோவர்-ஐ அனுப்பியது.\nக���ந்த பிப்ரவரி மாதம் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கிய பெர்சவரன்ஸ் ரோவர், செவ்வாய் கிரகத்தை படம் பிடித்து பூமிக்கு அனுப்பியது. மேலும், மண் துகள்கள் உள்ளிட்ட மாதிரிகளையும் சேகரித்து வருகிறது. பெர்சவரன்ஸ் ரோவர் உடன் சிறிய அளவிலான ஹெலிகாப்டர் ஒன்றும் இணைத்து அனுப்பப்பட்டுள்ளது. இந்த ஹெலிகாப்டர் மூலம் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் நாசா ஆய்வு மேற்கொள்ளவுள்ளது. தற்போது இந்த இன்ஜெனியூனிட்டி ஹெலிகாப்டர் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக பறந்ததாக நாசா அறிவித்துள்ளது.\nஒரு நிமிடத்திற்கும் குறைவாக சுமார் 3 மீட்டர் வரை ஹெலிகாப்டர் பறந்த நிலையில், நாசா விஞ்ஞானிகள் கைதட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதன்மூலம் பூமி அல்லாத ஒரு கிரகத்தில், முதன்முதலாக ஹெலிகாப்டரை இயக்கி, நாசா வரலாற்று சாதனை படைத்துள்ளது. அடுத்தடுத்த நாட்களில் மீண்டும் மீண்டும் இந்த ஹெலிகாப்டரை பறக்க செய்வோம் என விஞ்ஞானிகள் உறுதிபட தெரிவித்துள்ளனர்.\nஇசட் பிரிவு பாதுகாப்பு கேட்கிறார் ஆதார் பூனாவாலா: மும்பை நீதிமன்றத்தில் மனு\nஇந்தியாவில் வரலாறு காணாத உச்சம்: ஒரே நாளில் 4.12 லட்சம் பேருக்கு தொற்று: 24 மணி நேரத்தில் 3,980 பேர் பலி\nகுழந்தைகளை தாக்கும் கொரோனா 3வது அலை: நவம்பர், டிசம்பரில் பரவ வாய்ப்பு: நிபுணர்கள் கணிப்பு\nகட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மாநிலங்கள் எடுக்க வேண்டும்: பிரதமர் மோடி வலியுறுத்தல்\nநீதிபதிகளின் கருத்துக்களை ஊடகங்கள் வெளியிடுவதை தடை செய்ய முடியாது: தேர்தல் ஆணைய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி\nவிமான பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்குவதை விரைவுபடுத்துங்கள்: வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு\nசட்டீஸ்கரில் பரிதாபம்: ஹோமியோபதி மருந்து குடித்த 7 பேர் பலி\nதேர்தலுக்கு பிந்தைய வன்முறை குறித்து ஆய்வு: மேற்கு வங்கம் வந்தது மத்திய குழு\nமோசடி வழக்கில் கைதான ஹரிநாடாரிடம் இருந்து ரூ.2 கோடி மதிப்பு தங்கம் பறிமுதல்\nவேகமெடுக்கும் கொரோனா கேரளாவில் நாளை முதல் 16ம் தேதி வரை முழு ஊரடங்கு\nமாநிலங்களின் பொருளாதாரம் கடுமையாக பாதிப்பு; 6 மாதமாக ஜிஎஸ்டி கவுன்சிலை கூட்டாதது ஏன்.. நிர்மலா சீதாராமனுக்கு பஞ்சாப் அமைச்சர் பகீர் கடிதம்\nகவர்னர் மாளிகையில் எளிய விழா; புதுச்சேரி முதல்வராக ரங்கச��மி நாளை பிற்பகல் பதவியேற்பு: துணை முதல்வர் பதவி உருவாக்கப்படுமா\nபிரதமரின் நிர்வாகத் தோல்வியால் மீண்டும் முழு ஊரடங்கை நோக்கி நாடு செல்கிறது: ராகுல் காந்தி ட்வீட்\nகொரோனா தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் காப்புரிமை விதிகளில் அமெரிக்க அரசு தளர்வுகள் அறிவிப்பு\nகொரோனா தடுப்பு மருந்து வீணாகவில்லை: கேரள அரசுக்கு பிரதமர் மோடி பாராட்டு\nசீரம் நிர்வாக அதிகாரி, குடும்பத்தினருக்கு ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு வேண்டும்: தொடர் அச்சுறுத்தலால் கோர்ட்டில் முறையீடு\n2 மாதங்களுக்கு இலவச ரேஷன்: மத்திய அமைச்சரவையில் ஒப்புதல்\nபதற்றத்தில் மேற்குவங்காளம்: தேர்தலுக்கு பின்னர் நடைபெற்ற வன்முறையில் இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில அரசு தகவல் \nஉ.பி தேர்தலில் சமாஜ்வாதி அபாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=108%20Go%20Pooja", "date_download": "2021-05-07T00:11:01Z", "digest": "sha1:P64TWJWD56XPHHC5HJUWAMDQKXNPAZTP", "length": 4556, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"108 Go Pooja | Dinakaran\"", "raw_content": "\nகொரோனா நோயாளிகளுக்கான 108 ஆம்புலன்ஸ் எண்ணிக்கை அதிகரிப்பு\n‘108’ ஊழியர்களின் கருணை உள்ளம்\nகொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த இயக்குனர் கே.வி.ஆனந்த் காலமானார் : கோ, அயன், கவண் போன்ற வெற்றி படங்களை இயக்கியவர்\nஓடி போயிடு கொரோனா: பெண் அமைச்சர் பூஜை\nரிலையன்சுக்கு மட்டும் சுக்ரதிசை கொரோனா காலத்திலும் 108 சதவீதம் அதிக லாபம்: சில்லறையில் ரூ.41,926 கோடி வருவாய்\nராகுல்காந்தி பூரண நலம்பெற வேண்டி காங்கிரஸ் கட்சியினர் 108 பால்குட ஊர்வலம்\nகொரோனா நோயாளிகளை மருத்துவமனை அழைத்து வர சென்னை முழுவதும் 50 சதவீத 108 ஆம்புலன்ஸ்களே இயக்கம்: மணிக்கணக்கில் காத்திருப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு\nசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் சிவன்மலையில் உள்ள உத்தரவு பெட்டியில் குங்கும பூஜை\nதிருவாரூர் மாவட்டத்தில் 2வது அலை தீவிரம் ஒரே நாளில் 108 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழ்புத்தாண்டையொட்டி சுவாமிமலை முருகன் கோயிலில் திருப்படி பூஜை வழிபாடு\nதமிழகத்தில் வெயில் 108 டிகிரியை தாண்டும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nமு.க.ஸ்டாலின் முதலமைச்சராக வேண்டி காங்கிரஸ் கட்சி சார்பில் 108 பால்குட அபிஷேகம்\nதமிழக மக்களின் ஒட்டுமொத்த கோபம்.. இன்று காலை முதல் #கோ பேக் மோடி ஹேஷ்டேக் த��சிய அளவில் முதலிடம் : பாஜக அதிர்ச்சி\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிக்கும் புதிய படத்தின் கதாநாயகி 'பூஜா ஹெக்டே'\nஒரே நாளில் 108 பேருக்கு கொரோனா\nதிருவில்லிபுத்தூரில் பூஜையில் பங்கேற்றது ஆண்டாள் யானை: பக்தர்கள் மகிழ்ச்சி\nஉயிரிழப்பை தவிர்க்க கடலாடிக்கு 108 ஆம்புலன்ஸ் வேண்டும் கலெக்டரிடம் கோரிக்கை மனு\nபங்குனி பூஜை, ஆறாட்டு திருவிழா சபரிமலை நடை 14ம் தேதி திறப்பு: கொரோனா சான்றிதழ் கட்டாயம்\nபுத்த மதத்தினரின் மாசி மக பூஜை : 2,00,000 பக்தர்கள் ஜூம் வீடியோ கால் வாயிலாக பூஜையில் பங்கேற்று தரிசனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/ipl-league/22617-happy-news-in-ipl.html", "date_download": "2021-05-07T00:41:56Z", "digest": "sha1:WVZOBWZNFGSWT26WLJAZDZMAEENMFACG", "length": 11826, "nlines": 100, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "மாயந்தி ஹேப்பி அண்ணாச்சி... தேடலுக்கு கிடைத்த சந்தோஷ செய்தி! | happy news in IPL - The Subeditor Tamil", "raw_content": "\nமாயந்தி ஹேப்பி அண்ணாச்சி... தேடலுக்கு கிடைத்த சந்தோஷ செய்தி\nமாயந்தி ஹேப்பி அண்ணாச்சி... தேடலுக்கு கிடைத்த சந்தோஷ செய்தி\nஐபிஎல் போட்டிகள் தொடங்குவதற்கு முன்பும், பின்பும் தொகுப்பாளர்கள் வந்து டிவிக்களில் பேசுவார்கள். இவர்களுக்கென தனி ரசிகர்கள் உண்டு. ஐபிஎல் போட்டிகள் உட்பட ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நடத்தும் கிரிக்கெட் தொடர்களில் தொகுப்பாளராக இருந்து பிரபலமானவர் மயாந்தி லாங்கர். தனது பேச்சு, அழகு, ஸ்டைல், வர்ணனை உள்ளிட்டவற்றால் மற்ற தொகுப்பாளர்களை விட அதிக புகழ் பெற்ற தொகுப்பாளர் என்றால் அது மயாந்தி மட்டுமே. இவர் இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்டூவர்ட் பின்னியின் மனைவியும்கூட.\nஇதற்கிடையே, நேற்று வெளியான இந்த ஆண்டு ஐபிஎல் சீஸனின் வர்ணனையாளர்கள் பட்டியலில் மயாந்தி பெயர் இடம்பெறவில்லை. இதனையடுத்து அவர் வேலையை விட்டு நின்றுவிட்டாரா என்று ரசிகர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நிர்வாகத்தை நோக்கி கேள்விக்கணைகளை வீசினர். அதற்கு மயாந்தியே தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் கொடுத்துள்ளார். அதில், தனக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதாகவும், அதனாலேயே இந்தமுறை ஐபிஎல் தொடரில் தொகுப்பாளராக பங்கேற்க முடியவில்லை என்று குறிப்பிட்டு தனது கணவர் பின்னி மற்றும் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டிருக்கிறார். மாயந்தியை ரசிகர்கள் மிஸ் செய்யும��� அதே வேளையில் அவருக்கு குழந்தை பிறந்திருக்கும் தகவல் அறிந்து தற்போது குஷியில் உள்ளனர்.\nYou'r reading மாயந்தி ஹேப்பி அண்ணாச்சி... தேடலுக்கு கிடைத்த சந்தோஷ செய்தி\n24 மணி நேரத்தில் 35,000 பேர் 72 மணி நேரத்தில் 1,00,000 பேர்.. ஸ்டாலின் திட்டத்துக்கு கைமேல் பலன்\nஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களுக்கு துபாய் விதித்த தடை நீக்கம்\n- கிறிஸ்கெய்லுக்கு டஃப் கொடுத்த சஹால்.. வைரல் போட்டோ\nஐபிஎல் முக்கியம் என்பவர்கள் வீட்டில் ஒருவருக்கு கொரோனா வந்தால் தெரியும் - கொதிக்கும் ஆடம் ஜாம்பா\nஎன்னால் முடிந்தது; ஆக்ஸிஜன் வாங்கிக்கொள்ளுங்கள் - பேட் கம்மின்ஸ் மனிதநேயம்\nஆர்சிபி வரலாற்றில் மறக்க முடியாத நாள் - 49க்கு ஆல் அவுட் வெற்றியாளராக மாற்றிய வெறி\nநடப்பு ஐபிஎல் சீசனிலிருந்து விலகினார் ஆர்ச்சர் - என்ன காரணம்\nஹர்பஜன்சிங் காலில் விழுந்து வணங்கிய சின்னதல - ரசிகர்கள் நெகிழ்ச்சி\nரசிகர்களே ஓவர் ஆட்டம் வேண்டாம் – விராட் கோலியின் அந்த விளக்கம்\nதோனி அதை மட்டும் செய்யமாட்டார் - அடித்து சொல்லும் முன்னாள் வீரர்\nதோனிக்கு பிறகு இவரை கேப்டனாக்கலாம் – மைக்கேல் வாகன் கருத்து\n`அன்பு சூழ் உலகு – ரஷித்கானுக்காக நோன்பிருக்கும் டேவிட் வார்னர்\n – கே.எல்.ராகுலை சாடிய ஆஷிஷ் நெஹ்ரா\nஅட்டகாசமான டைவ் இருந்தும் விமர்சனம் – என்ன சொல்கிறார் தோனி\n4 வருடங்களுக்குபிறகு மேக்ஸ்வெல்லின் எழுச்சி – ஹி இஸ் பேக்\nநாளை பலப்பரீட்சை பஞ்சாப் வெர்ஸஸ் சென்னை – வெற்றி யாருக்கு\nஎன்னை இம்ப்ரஸ் செய்துவிட்டான் – சக்காரியா குறித்து புகழ்ந்து தள்ளிய சேவாக்\nமேற்கு வங்காளம்: பாரதிய ஜனதாவின் கணக்கு தோற்றது எங்கு\nஉதயநிதிக்கு பதவி இல்லை: தமிழ்நாடு அரசின் புதிய அமைச்சர்கள் யார்\nகோவிட் தடுப்பூசி பற்றிய போலி எஸ்எம்எஸ்: கிளிக் செய்தால் ஆபத்து\nஇதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா – புதிய கட்டுப்பாடுகள் என்ன\nமக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்\n - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி\nபுறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு\nஎதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்\nஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்\nதிமுக அமைச்ச��வையில் யாருக்கு என்ன பொறுப்பு…\nமனைவியுடன் உல்லாசமாக இருந்த உதவியாளர்… கோயிலுக்கு அழைத்துச்சென்று அர்ச்சனை செய்த பூசாரி\nமுதலமைச்சர் ஆனதும் ஸ்டாலினின் முதல் கையெழுத்து இதுதான்.. முழு எதிர்பார்ப்பில் மக்கள்..\nகோவிட்-19: ஆக்ஸிஜன் அளவை சோதிப்பது எப்படி\nராஜினாமா முடிவில் கே.பி.முனுசாமி – திமுகவுக்கு லாபமாக அமையுமா\nஇரவோடு இரவாக மேலும் புதியக் கட்டுப்பாடுகள் அறிவிப்பு : முழு விபரம்…\n1000ரூபாய் கையிருப்பு கூரை வீடு – சட்டமன்றத்தில் நுழையும் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ மாரிமுத்து\n தேமுதிக வீழ்ச்சிக்கு இதான் காரணம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akattiyan.lk/2020/12/23_26.html", "date_download": "2021-05-07T02:07:32Z", "digest": "sha1:7XSYONLI2ZAG3YCJDBPC3U76QNOL6FBW", "length": 6765, "nlines": 68, "source_domain": "www.akattiyan.lk", "title": "ரெபிட் என்டிஜன் பரிசோதனை; இதுவரை 23 பேர் தொற்றாளர்களாக அடையாளம் - அகத்தியன் | Online", "raw_content": "\nHome இலங்கை ரெபிட் என்டிஜன் பரிசோதனை; இதுவரை 23 பேர் தொற்றாளர்களாக அடையாளம்\nரெபிட் என்டிஜன் பரிசோதனை; இதுவரை 23 பேர் தொற்றாளர்களாக அடையாளம்\nமேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் பயணிகள் தொடர்பில் 11 இடங்களில் மேற்கொள்ளப்படும் ரெபிட் என்டிஜன் சோதனை நடவடிக்கையில் இதுவரை 23 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nஅத்துடன் குறித்த சோதனை நடவடிக்கையின் போது பெந்தோட்ட பகுதியில் பாடசாலை மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nஇந்த நிலையில் குறித்த மாணவரின் தந்தை களுத்துறை வடக்கு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வரும் நிலையில் குறித்த பொலிஸ் நிலையத்தில் மேலும் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் பயணிகள் தொடர்பில் 11 இடங்களில் மேற்கொள்ளப்படும் ரெபிட் என்டிஜன் சோதனை நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nரெபிட் என்டிஜன் பரிசோதனை; இதுவரை 23 பேர் தொற்றாளர்களாக அடையாளம் Reviewed by Chief Editor on 12/26/2020 07:31:00 am Rating: 5\nபாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் மேலதிக வகுப்புகளுக்கு மறு அறிவித்தல் வரை விடுமுறை\nபாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் மேலதிக வகுப்புகளுக்கு மறு அறிவித்தல் வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், நோன்பு பெருநாள், வெசாக் ...\nகொரோனா பரவல் காரணமாக நாட்டின் பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள விடுமுறையானது மேலும் ஒரு வார காலத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ...\nமோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nவாகன போக்குவரத்து திணைக்களத்தின் நாரஹென்பிட்டி மற்றும் வேரஹெர அலுவலகங்கள் ஒரு வாரத்திற்கு மூடப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம த...\nDReAM என அறிமுகப்படுத்தப்பட்டுள்ள முற்பாதுகாப்பு விதிமுறைகளுக்கமைய மதுபான சாலைகளை திறந்து வைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. D – சமூக இடை...\nமுழு அதிகாரம் : அகத்தியன் ஊடக சேவை 2020\nஆசிரியர் பீட தெடர்புகளுக்கு 0779516119\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2020/08/14_25.html", "date_download": "2021-05-07T01:53:42Z", "digest": "sha1:FSDIFTA7UWMRAURWY5BIREQCJZAJTCXZ", "length": 11746, "nlines": 90, "source_domain": "www.kurunews.com", "title": "மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலகப் பிரிவிவுகளிலும் கடமையாற்றும் பிரதேச செயலாளர்களுக்கான மாநாடு - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலகப் பிரிவிவுகளிலும் கடமையாற்றும் பிரதேச செயலாளர்களுக்கான மாநாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலகப் பிரிவிவுகளிலும் கடமையாற்றும் பிரதேச செயலாளர்களுக்கான மாநாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலகப் பிரிவிவுகளிலும் கடமையாற்றும் பிரதேச செயலாளர்களுக்கான மாநாடு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. கலாமதி பத்மராஜா தலைமையில் இன்று (25) மண்முனை தென்எருவில் பற்று – களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.\nஅரசாங்கத்தின் சேவைகளை மக்கள் காலடிக்குக் கொண்டு செல்லும் நோக்குடன் பிரதேச செயலகங்கள் செயற்பட்டு வருகின்றன. இதனூடாக பொதுமக்களுக்கான சேவையினை வழங்குவதில் பிரதேச செயலாளர்கள், அரச உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாகவும், பிரதேச செயலகங்களில் அரசினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அபிவிருத்திப்பணிகள், சமுர்த்தி கொடுப்பனவுகள், ஏனைய கொடுப்பனவுகள், காணி தொடர்பான விடயங்கள் பற்றி ஆராயப்பட்டன.\nமேலும் அவற்றை அமுல்;படுத்திவதில் எதிர்கொள்ளும் நடைமுறைச் சிக்கல்கள், ஆளனிப்பறாக்குறை, இடமாற்றம் தொர்பான பலதரப்பட்ட விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டு அவற்றுக்கான தீர்வுகளும், ஆலோசனைகளும் அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜாவினால் சம்மந்தப்பட்ட பிரதேச செயலாளர்களுக்கும், திணைக்களத் தலைவர்களுக்கும் வழங்கிவைக்கப்பட்டன.\nமாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர்களும் கலந்துகொண்ட இம்மாநாடு மண்முனை தென்எருவில் பற்று பிரதேச செயலாளர் திருமதி. சிவப்பிரியா வில்வரத்தினம் அவர்களால் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nஇந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. சுதர்சினி ஸ்ரீகாந், காணிப்பிரிவிற்கான மேலதிக அரசாங்க அதிபர் நவரூபரஞ்சினி முகுந்தன், உதவி மாவட்ட செயலாளர் ஏ. நவீஸ்வரன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் சசிகலா புண்ணியமூர்த்தி, மாவட்ட பிரதம கண்காளர் கே. ஜெகதீஸ்வரன், பிரதம உள்ளகக் கணக்காய்வாளர் திருமதி. இந்திரா மோகன், மாவட்ட சமுர்த்தி அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் திருமதி. ஏ. பாக்கியராஜா மற்றும் அனைத்து பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக தினைக்களங்களின் உயர் அதிகாரிகள் பலரும் பிரசன்னமாயிருந்தனர்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\n\"Kurunews.com ஐ பார்வையிடும் அன்பர்களே Facebook பக்கத்தை Like பண்ணிட்டு போங்கள்\".\nமட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை; பல்வேறு செயற்பாடுகளுக்கு தடை- மாவட்ட அரசாங்க அதிபர்...\nமட்டக்ககளப்பில் தனியார் வகுப்பு நடாத்த தடை விதித்துள்ளதுடன் கொரோனா அதிகரிப்பால் மட்டு போதனா வைத்தியசாலையில் ஒட்சிசன் தேவை அதிகரித்துள்ளது....\nசகல பாடசாலைகளுக்கும் மே மாதம் 07ம் திகதி வரை விடுமுறை\nநாடளாவிய ரீதியில் அனைத்துப் பாடசாலைகளையும் தொடர்ந்தும் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் 7 ஆம் திகதி வரை பாடசாலை...\n10 , 11 தரங்களில் பாடவிதான மாற்றம் அத்துடன் க.பொ.த சா/த, உ/த பரீட்சை நடைபெறும் காலங்களும் மாற்றம்\nதரம் 10 ,11 க்கான பாடத்திட்டங்களை ஒரு வருடம் & 9 மாத காலத்திற்கு மறுசீரமைக்கவும், ஆகஸ்ட் மாதத்தில் க.பொ.த. (சா /த) பரீட்சையை நடாத்தவும்...\nபுனித மிக்கேல் கல்லூரி மாணவன் பௌதீக விஞ்ஞான பிரிவில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலிடம்.\nவெளியான 2020 ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பௌதீக விஞ்ஞான பிரிவில் குகராஜா சஜீவ் 3 A சித்திகளுடன் ...\nமட்டக்களப்பு மாவட்டத்தில் விஞ்ஞான பிரிவில் முதலிடத்தை பெற்ற மட்/பட்டிருப்பு தேசிய பாடசாலை மாணவன்\nவெளியான 2020 ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் விஞ்ஞான பிரிவில் மகிழூர் கண்ணகிபுரத்தை சேர்ந்த தம்பி...\nமட்டக்களப்பு- கல்லடியில் 09 பேருக்கு கொரோனா தொற்று உறுதி...\nமட்டக்களப்பு மாவட்ட மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுற்குற்பட்ட கல்லடி பிரதேசத்தில் இன்றைய தினம் 09 பேருக்கு கொரோன தொற்று உறுதிசெய்யப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/1024863/amp", "date_download": "2021-05-07T01:17:58Z", "digest": "sha1:24SMWFFIUGVPJ3IETC37P5FIXRULJMBI", "length": 7959, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "கபசுர குடிநீர் வழங்கல் | Dinakaran", "raw_content": "\nநாங்குநேரி, ஏப். 19: பரப்பாடி தேவாலயத்தில் கபசுரக் குடிநீர் விநியோகிக்கப்பட்டது. கொரோனா வைரஸ் பரவலின் 2ம் அலை வீசி வருவதால் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் மீண்டும் ஊரடங்கு வருமோ என பொதுமக்களிடம் அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா பரவலை தடுக்க பரப்பாடியில் உள்ள புனித ஆரோக்கிய மாதா தேவாலயத்திற்குட்பட்ட அந்தோணியார் கெபி முன்பு கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது. விஜயநாராயணம் இன்ஸ்பெக்டர் அசோகன் கபசுர குடிநீர் வழங்கி முகாமை துவக்கி வைத்தார். தொடர்ந்து 10 நாட்களுக்கு பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இதில் இலங்குளம் பங்குதந்தை சேகரன் மற்றும் இலங்குளம் அந்தோணிராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.\nதிருவாரூர் பைபாஸ் சாலை அருகே ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சேதமடைந்த நூலக சாலை\nஅறிவொளி இயக்கம் அழைப்பு பொறுப்பாளர்கள் போன் எண்கள்\nகலெக்டர் தகவல் வாசிப்பு பழக்கம் மூலம் செல்போன் சீர்கேடுகளில் இருந்து குழந்தைகளை மீட்டெடுக்க வேண்டும்\nதிருவாரூர் மாவட்டத்தில் மத்திய அரசின் ஆதார விலைத்திட்டத்தில் உளுந்து, பச்சைப்பயறு கொள்முதல்\nதிருவாரூர் நகரில் குழாய் சேதமடைந்து வீணாக குடிநீர் வெளியேறும் அவலம் சீரமைத்து பராமரிக்க மக்கள் கோரிக்கை\nலால்குடி வயல்காட்டில் ரத்த காயங்களுடன் பெண் சடலம் மீட்பு\nசிறுமியிடம் அ���்து மீறல் சமையல் மாஸ்டர் கைது\nதிருவெறும்பூர் அருகே உப்பு லோடு லாரி கவிழ்ந்தது\nகுடியிருப்புகளுக்கு அருகே மது குடித்ததை கண்டித்த வாலிபருக்கு அடி உதை\nபேராவூரணி ஜமாஅத் அறிவிப்பு தென்னையை தாக்கும் தஞ்சை வாடல் நோயை கட்டுப்படுத்தும் வழிமுறை\nமுழு ஊரடங்கு தினத்தன்று இஸ்லாமியர் வீடுகளிலேயே நோன்புகால சிறப்பு தொழுகை\nபேராவூரணி நகரில்a ரூ.15 கோடியில் சாலை மேம்பாடு திட்டப்பணி திருக்காட்டுப்பள்ளி அருகே அரை குறையாக விடப்பட்ட தார் சாலை சீரமைப்பு\nஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலையத்தில் வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு ஒருங்கிணைந்த பண்ணைய பயிற்சி\nஅரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி\nதிருவையாறில் கணவரை காணவில்லை மனைவி போலீசில் புகார்\nபட்டப்பகலில் மர்மநபர்கள் துணிகரம் புதுக்கோட்டை அரசினர் பிற்படுத்தப்பட்டோர் மாணவியர் விடுதியை கொரோனா சிகிச்சை மையமாக மாற்றும் பணி\nபொன்னமராவதி பேருந்து நிலையத்தில் திமுக பிரமுகரின் கார் கண்ணாடியை உடைத்து ரூ. 4 லட்சம் கொள்ளை\nகொள்ளிடம் பகுதி ஆரம்ப சுகாதார நிலையங்களில் கிருமி நாசினி, முககவசம் தட்டுப்பாடு\nபாரம்பரியத்தை மீட்டெடுக்கும் வகையில் பனை ஓலையில் விதவிதமான பொருட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2021/may/04/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-480-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-3616911.amp", "date_download": "2021-05-07T01:39:27Z", "digest": "sha1:EFMB7UE7HHZFCWGTM4HYIGJ2WRMVCMHB", "length": 5748, "nlines": 41, "source_domain": "m.dinamani.com", "title": "திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் 480 பேருக்கு கரோனா தொற்று | Dinamani", "raw_content": "\nதிண்டுக்கல், தேனி மாவட்டங்களில் 480 பேருக்கு கரோனா தொற்று\nதிண்டுக்கல்/தேனி: திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் புதிதாக 480 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nதிண்டுக்கல் மாவட்டத்தில் மே 2 ஆம் தேதி வரை 16,281 போ் கரோனா தீநுண்மி தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். அதில் 14,469 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த மேலும் 223 பேருக்கு புதிதாக கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.\nஇதனிடையே சிகிச்சைப் பலனின்றி தொற்று பாதித்த ஒருவா் உயிரிழந்துள்ளாா். தொற்றிலிருந்து 194 போ் குணமடைந்துள்ள நிலையில், தற்போது பாதிப்புக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 1,603 ஆக உள்ளது. கரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 215ஆக உயா்ந்துள்ளது.\nதேனி: தேனி மாவட்டத்தில் புதிதாக 257 பேருக்கு திங்கள்கிழமை, கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.\nஇதையடுத்து, மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 21,202 ஆக உயா்ந்துள்ளது. கரோனா பாதிப்புக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவா்களில் இதுவரை மொத்தம் 18,963 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 217 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனா். தற்போது மாவட்டத்தில் மொத்தம் 2,002 போ் கரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா்.\nபுதிய வழித்தடத்தில் தளி ஓடை அமைக்கும் பணிகளை தீவிரப்படுத்த வருவாய்க்கோட்டாட்சியா் உத்தரவு\nகொடைக்கானல் அருகே விவசாய நிலங்களில் ஒற்றை யானை நடமாட்டம்\nகிணற்றில் குதித்து பெண் தற்கொலை\nஐந்தாயிரம் கருணாநிதி படங்களில் ஸ்டாலின் உருவம் வரைந்த ஓவிய ஆசிரியா்\nசாலையில் விழுந்த மரம்: 2 நாள்களாக அகற்றப்படாததால் வாகன ஓட்டிகள் அவதி\nகூட்டுறவுத் துறை அமைச்சா் ஐ.பெரியசாமி\nதிண்டுக்கல், தேனி மாவட்டங்களில் புதிதாக 763 பேருக்கு கரோனா: 4 போ் பலி\nஉணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி\nwest bengal electionஆஸ்கர் விருதுஸ்டெர்லைட்முதல்வர் எடப்பாடி பழனிசாமிஇந்தியாவில் கரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2021/04/15/57718/", "date_download": "2021-05-07T00:28:19Z", "digest": "sha1:KF6SNHAM7Y4JVOYTJT65TL44PFJSHBUW", "length": 9057, "nlines": 131, "source_domain": "makkalosai.com.my", "title": "நாடு தழுவிய நிலையில் மீண்டும் எம்சிஓ அமல்படுத்தப்படாது | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome Hot News நாடு தழுவிய நிலையில் மீண்டும் எம்சிஓ அமல்படுத்தப்படாது\nநாடு தழுவிய நிலையில் மீண்டும் எம்சிஓ அமல்படுத்தப்படாது\nபெட்டாலிங் ஜெயா: நாடு தழுவிய அளவில் மற்றொரு இயக்க கட்டுப்பாட்டு ஆணையை அமல்படுத்தும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை என்று டான் ஸ்ரீ முஹிடின் யாசின் கூறுகிறார்.\nஎவ்வாறாயினும், வியாழக்கிழமை (ஏப்ரல் 15) ஒரு தொழில்துறை உற்பத்தியாளர்களுடன் பிரதமர் (closed door meeting) போது கூறினார். இது கோவிட் -19 பரவலுக்கான ஆதாரமாக இருப்பதால் தொழிலாளர்கள் மோசமான வீட்டுவசதி பிரச்சினைக்கு தீர்வு காண்பது முக்கியம்.\nகோவிட் -19 சம்பவங்ள் 83% க்கும் அதிகமானவை உற்பத்தித் துறையைச் சேர்ந்தவை. இது உண்மையில் கவலை அளிக்கும் போக்கு என்று அவர் கூறினார்.\nஇதுபோன்ற போதிலும், இந்த அதிகரிப்புக்கான ஆதாரம் வீட்டமைப்பு தளங்கள், குறிப்பிடத்தக்க வகையில் தொழிலாளர்கள் தங்குமிடம் மற்றும் விடுதிகள், வேலை வளாகங்கள் மற்றும் உற்பத்தி வரிகளை விட உள்ளது என்று இது கூறுகிறது என்று அனைத்துலக வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்த கூட்டத்தில் முஹிடின் கூறினார்.\nஇது தொடர்பாக கோவிட் -19 இன் பரவலை சரிபார்க்க தனியார் துறை ஒரு ஒருங்கிணைந்த பங்கை ஏற்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.\nபணியிடங்களில் SOP களுடன் கண்டிப்பாக இணங்குவதை உறுதிசெய்யவும், 446 சட்டத்தை பின்பற்றுவதில் அரசாங்கத்துடன் ஒத்துழைக்கவும் தொழில்களை நான் கடுமையாக கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் கூறினார்.\nசட்டம் 446 என்பது தொழிலாளர் வீட்டுவசதி மற்றும் வசதிகளின் குறைந்தபட்ச தரநிலைகள் 1990 ஐ குறிக்கிறது.\nஇது மற்றொரு MCO காலத்தை விதிக்க அரசாங்கம் விரும்பவில்லை என்பதற்கான நினைவூட்டலாகும்; இருப்பினும், பற்றவைப்பு தளங்களின் புள்ளியாகக் கருதப்படும் நியமிக்கப்பட்ட இடங்களில் இலக்கு வைக்கப்பட்ட MCO கள் விதிக்கப்படும் என்று முஹிடின் மேலும் கூறினார்.\nPrevious articleமார்ச் 5ஆம் தேதிக்கு பிறகு அதிகளவில் இன்று 2,148 பேருக்கு தொற்று\nNext articleநோன்பு தொடர்பில் மெய்காப்பாளர்களை தாக்கிய முதலாளியிடம் இருந்து 28.54 மில்லியன் தங்கக்கட்டிகள் பறிமுதல்\nவெளிநாட்டு ஆடவரிடம் கொள்ளையடித்ததாக போலீஸ்காரர் உட்பட 4 பேர் கைது\nதமிழ்நாட்டில் நாளை பதவியேற்கவிருக்கும் அமைச்சரவை பட்டியல்\nநாட்டில் 14 புதிய கோவிட் -19 கிளஸ்டர்கள் கண்டுபிடிப்பு\nபுதிய போலீஸ் படைத்தலைவராக டத்தோ ஶ்ரீ அக்ரில் சானி பதிவியேற்பு\nஜாஹிட்: முஃபாக்கத்துடன் கூட்டணியைத் தொடர, அம்னோ பெரிகாத்தானில் இணையாது\nகடன் நிலவரப்படி வட்டி மானியம் அளிக்கப்படும்\nசிக்கித்தவித்த 263 இந்தியர்கள் மீட்பு\nவெளிநாட்டு ஆடவரிடம் கொள்ளையடித்ததாக போலீஸ்காரர் உட்பட 4 பேர் கைது\nதமிழ்நாட்டில் நாளை பதவியேற்கவிருக்கும் அமைச்சரவை பட்டியல்\nநாட்டில் 14 புதிய கோவிட் -19 கிளஸ்டர்கள் கண்டுபிடிப்பு\nபல்லி நம் உ��லில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://reviews.dialforbooks.in/tag/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2021-05-07T01:45:33Z", "digest": "sha1:X2G5QVV5RIY3JLJME7HYIX3JVXFUBB7Y", "length": 9388, "nlines": 212, "source_domain": "reviews.dialforbooks.in", "title": "நாளும் நலம் நாடி – Dial for Books : Reviews", "raw_content": "\nTag: நாளும் நலம் நாடி\nநாளும் நலம் நாடி, மருத்துவர் அசோக், மணிமேகலைப்பிரசுரம், உடல்நலம், மனநலம், சமுதாய நலம் ஆகியவற்றின் ஒட்டுமொத்த கருத்தாக மருத்துவத்தை எளிதாக புரிய உதவிடும் நுால். ஆசிரியர் அசோக், ஆங்கிலம் மற்றும் சித்த மருத்துவத்தில் நல்ல பரிச்சயம் கொண்டவர். அகில இந்திய வானொலியில் இவர் தினசரி உரையாற்றிய தொகுப்பை இந்த நுால் கொண்டிருக்கிறது. சர்க்கரை வியாதி இப்போது புதிதாக சமுதாயத்தை மிரட்டும் நோய். அதை சமாளிக்க நார்ச்சத்துணவை வலியுறுத்தும் பலரும் எது நார்ச்சத்து உணவு என்று பட்டியலை உருவாக்க சிரமப்படலாம். பீன்ஸ், காளான், சோயா, வெங்காயத்தாள் […]\nமருத்துவம்\tதினமலர், நாளும் நலம் நாடி, மணிமேகலைப்பிரசுரம், மருத்துவர் அசோக்\nநாளும் நலம் நாடி, மருத்துவர் சி.அசோக் , மணிமேகலை பிரசுரம், அகில இந்திய வானொலியில் மருத்துவர் சி.அசோக் ஆற்றிய மருத்துவ உரைகளின் தொகுப்பே இந்த நூல். நோய்களுக்கான மருத்துவத்தைத் தாண்டி முழு உடல்நலம் பற்றிய புரிதலை ஏற்படுத்தவும் நல்ல உணவு, நல்ல உள்ளம் ஆகியவற்றைப் புரியவைக்கும் நோக்கத்துடனும் மருத்து வத்தைப் பாமரர்களுக்குப் புரியும் வகையில் எளிதாக்கிக் கொடுக்கும் முயற்சியாகவும் இந்த உரைகள் அமைந்துள்ளன. நன்றி: தி இந்து, 6/1/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: […]\nகட்டுரைகள்\tதி இந்து, நாளும் நலம் நாடி, மணிமேகலை பிரசுரம், மருத்துவர் சி.அசோக்\nநாளும் நலம் நாடி, சி.அசோக், மணிமேகலை பிரசுரம், விலை 225ரூ. மாறிவரும் உணவு பழக்கங்களின் காரணமாக இன்று எண்ணற்ற நோய்கள் நம்மை ஆட்கொண்டிருக்கின்றன. அப்படிப்பட்ட நோய்களுக்கான காரணங்கள், அவற்றில் இருந்து விடுபடுவதற்கான தீர்வுகள் மற்றும் அந்த நோய்கள் வராமல் தடுப்பதற்கான வழிமுறைகளை கூறுவதே இந்நூல். அகில இந்திய வானொலி, திருச்சி கோடை எப்.ம்., தருமபுரி எப்.எம். ஆகியவற்றில் ‘நாளும் நலம் நாடி’ என்கிற தலைப்பில் மருத்துவம் தொடர்பாக தான் ஆற்றிய சொற்பொழிவுகளை எழுத்து வடிவமாக்கி புத்தகமாக தந்து இருக்கிறார் மருத்துவர் சி.அசோக். முதல் தொகுதியாக […]\nமருத்துவம்\tசி.அசோக், தினத்தந்தி, நாளும் நலம் நாடி, மணிமேகலை பிரசுரம்\nஷீரடி பாபாவின் சீரடி பணிவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akattiyan.lk/2021/04/blog-post_388.html", "date_download": "2021-05-07T02:13:26Z", "digest": "sha1:P7FWKVT3BUDY2VD6BNG4UEKX2GLKD7VR", "length": 6743, "nlines": 69, "source_domain": "www.akattiyan.lk", "title": "தேங்காய் எண்ணெய் பீப்பாய்களுடன் சென்ற கொள்கலன் லொறி - வேன் விபத்து - அகத்தியன் | Online", "raw_content": "\nHome இலங்கை தேங்காய் எண்ணெய் பீப்பாய்களுடன் சென்ற கொள்கலன் லொறி - வேன் விபத்து\nதேங்காய் எண்ணெய் பீப்பாய்களுடன் சென்ற கொள்கலன் லொறி - வேன் விபத்து\nதேங்காய் எண்ணெய் பீப்பாய்களுடன் சென்ற கொள்கலன் லொறியொன்றும் வேன் வாகனமொன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.\nகட்டுபொத, வாரியபொல வீதியின் கல்வெவ பிரதேசத்தில் நேற்றைய தினம் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.\nகொள்கலன் லொறி வேகக்கட்டுப்பாட்டை இழந்து எதிரில் வந்த வேனில் மோதுண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nமேலும், விபத்து இடம்பெறும் போது கொள்கலன் லொறியின் சாரதி மதுபோதையில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகுறித்த விபத்தில் காயமடைந்த கொள்கலன் சாரதி உட்பட ஒன்பது பேர் கட்டுபொத வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன்,விபத்து தொடர்பில் கொள்கலன் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் கட்டுபொத பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nதேங்காய் எண்ணெய் பீப்பாய்களுடன் சென்ற கொள்கலன் லொறி - வேன் விபத்து Reviewed by Chief Editor on 4/11/2021 02:22:00 pm Rating: 5\nபாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் மேலதிக வகுப்புகளுக்கு மறு அறிவித்தல் வரை விடுமுறை\nபாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் மேலதிக வகுப்புகளுக்கு மறு அறிவித்தல் வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், நோன்பு பெருநாள், வெசாக் ...\nகொரோனா பரவல் காரணமாக நாட்டின் பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள விடுமுறையானது மேலும் ஒரு வார காலத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ...\nமோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nவாகன போக்குவரத்து திணைக்களத்தின் நாரஹென்பிட்டி மற்றும் வேரஹெர அலுவலகங்கள் ஒரு வாரத்திற்கு மூடப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம த...\nDReAM என அறிமுகப்படுத்தப்பட்டுள்ள முற்பாதுகாப்பு விதிமுறைகளுக்கமைய மதுபான சாலைகளை திறந்து வைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. D – சமூக இடை...\nமுழு அதிகாரம் : அகத்தியன் ஊடக சேவை 2020\nஆசிரியர் பீட தெடர்புகளுக்கு 0779516119\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinibitz.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-14-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A/", "date_download": "2021-05-07T01:59:33Z", "digest": "sha1:VMO3Y5L3O2PNPSMEE27HFGET3AMXKO7C", "length": 10630, "nlines": 63, "source_domain": "www.tamilcinibitz.com", "title": "பிக் பாஸ் 14 பணியில் இழந்த சித்தார்த் அணி, அவர்கள் நிகழ்ச்சிக்கு வெளியே உள்ளனர்", "raw_content": "முழுமையான செய்தி உலகம் உங்களுக்காக.\nபிக் பாஸ் 14 பணியில் இழந்த சித்தார்த் அணி, அவர்கள் நிகழ்ச்சிக்கு வெளியே உள்ளனர்\nபிக் பாஸ் 14 இப்போது மூன்றாவது வாரத்தில் வந்துள்ளது. ஒவ்வொரு நாளும் நிகழ்ச்சியில் நிறைய மாற்றங்கள் காணப்படுகின்றன, மேலும் அது முன்னேறும்போது, ​​அது மேலும் மேலும் சிலிர்ப்பாகி வருகிறது. நிகழ்ச்சியின் வடிவமைப்பின்படி, பிக் பாஸ் வீட்டிற்கு வந்த அனைத்து போட்டியாளர்களும் இந்த முறை நுழைவுடன் ‘உறுதிப்படுத்தப்படவில்லை’ என்ற குறிச்சொல்லைக் கொண்டு வந்திருந்தனர், ஆனால் வீட்டின் மூன்று மூத்தவர்களான ஹினா கான், சித்தார்த் சுக்லா மற்றும் க au ஹர் கான் ஆகியோர் நிக்கி தம்போலியை அனைத்து போட்டியாளர்களிடமிருந்தும் உறுதிப்படுத்தினர். ஒரு போட்டியாளராக்கப்பட்டது.\nவரவிருக்கும் எபிசோடில், பிக் பாஸ் மூன்று அணிகளையும் பணிக்கும். இதன் விளைவாக எந்த இரண்டு அணி உறுப்பினர்கள் வெற்றியாளர்களாக உறுதிப்படுத்தப்படுவார்கள் மற்றும் தோல்வியுற்ற அணியின் போட்டியாளர்கள் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறுவார்கள் என்று அறியப்படும். ஆதாரங்களின்படி, சித்தார்த் சுக்லாவின் குழு இந்த பணியில் தோல்வியடைந்துள்ளது. இதன் மூலம் சித்தார்த் அணியில் சேர்க்கப்பட்டுள்ள எஜாஸ் கான் மற்றும் பவித்ரா புனியா ஆகியோரை வீட்டிலிருந்து வெளியேற்ற வேண்டும். நிக்கி தம்போலி வீடற்றவர் அல்ல, ஏனெனில் அவர் ஏற்கனவ�� உறுதிப்படுத்தப்பட்ட போட்டியாளராக இருந்தார்.\nஅதே நேரத்தில், ஷெஜாத் தியோல் மற்றும் எஜாஸ் கான் மற்றும் பவித்ரா ஆகியோரும் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியுள்ளனர். இப்போது இந்த செய்தியை அறிந்தால், இந்த நிகழ்ச்சியின் வலுவான போட்டியாளர்களில் எஜாஸ் மற்றும் பவித்ரா ஆகியோர் இருப்பதால் பிபி காதலர்கள் அதிர்ச்சியடையக்கூடும். மூலம், பிக் பாஸின் ரகசிய அறையில் இஜாஸ்-பவித்ரா மற்றும் ஷாஜாத் இருப்பதாகவும் தகவல்கள் உள்ளன. ஆனால் அது குறித்து இப்போது எந்த உறுதிப்படுத்தலும் இல்லை.\nபிக் பாஸ் சீனியர்களான ஹினா கான், சித்தார்த் சுக்லா மற்றும் க au ஹர் கான் ஆகியோர் பிக் பாஸ் வீட்டில் 2 வாரங்கள் மட்டுமே தங்க அனுப்பப்பட்டனர். இந்த நேரத்தில், மூன்று மூத்தவர்களும் வீட்டிலுள்ள பல பெரிய பிரச்சினைகள் குறித்து புதியவர்களுக்கு ஆதரவளித்தனர், மேலும் பிக் பாஸ் வீட்டினுள் சரிசெய்யவும் உதவினர்.\nபாப் கலாச்சாரம் டிரெயில்ப்ளேஸர். சிந்தனையாளர். சிக்கல் செய்பவர். இசை குரு. சமூக ஊடக நிபுணர். மாணவர். ஜாம்பி நிபுணர்.\nREAD குலாம் நபி ஆசாத் காங்கிரஸ் கட்சியில் தேர்தலை நடத்துமாறு கோரினார், இப்போது யாருக்கும் எந்த பதவியும் கிடைக்கிறது\nதமிழகம்: ஆன்லைன் சூதாட்டத்தில் மனிதன் ரூ .7 மில்லியனை இழக்கிறான், ரயிலை வேகப்படுத்துவதற்கு முன் குதித்து தற்கொலை செய்துகொள்கிறான்\nபாதிக்கப்பட்ட பெண் செவ்வாய்க்கிழமை ஐயாங்கோ நகரில் உள்ள தனது வாடகை வீட்டில் இருந்து காணாமல் போயிருந்தார்....\nமும்பை பொலிஸ் கைது குடியரசு தொலைக்காட்சி சியோ விகாஸ் காஞ்சந்தானி குற்றம் சாட்டப்பட்ட Trp கையாளுதல் வழக்கில் அர்னாப் கோஸ்வாமி – Trp மோசடி: குடியரசு தொலைக்காட்சி தலைமை நிர்வாக அதிகாரி விகாஸ் கைது செய்யப்பட்டார்\nபுதுச்சேரி 4 மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்புத் திட்டம் குறித்து முடிவு செய்ய பிப்ரவரி 12 ஆம் தேதி தேர்தல் ஆணையம் கூடும்\nலேண்ட்லைனில் இருந்து அழைப்பதற்கான வழி, முதலில் 0, பின்னர் எண் டயல் செய்யப்படும் – இப்போது ஜனவரி 1 முதல் லேண்ட்லைனில் இருந்து மொபைலுக்கான அனைத்து அழைப்புகளும் எண்ணுக்கு முன் பூஜ்ஜியமாக இருக்க வேண்டும்\nNext articleஇது ராகுல் காந்தி கருத்து என்று சர்ச்சைக்குரிய அறிக்கை குறித்து முன்னாள் எம்.பி. முதல்வர் கமல்நாத் கூறுகிறார் | ராகுல் காந்தியின் அறிவுரை குறித்து கமல்நாத்தின் பதில்- நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஇந்திய இராணுவ பதுங்கு குழிகளால் நடத்தப்பட்ட பதிலடி துப்பாக்கிச் சூட்டில் பல பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinibitz.com/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-tn-secy-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2021-05-07T01:36:51Z", "digest": "sha1:HHPUHZSURDLXANEAMNKCCBPBEJ72IHZV", "length": 9276, "nlines": 64, "source_domain": "www.tamilcinibitz.com", "title": "ராஜீவ் ரஞ்சன் TN Secy | இன் அடுத்த தலைவராக வருவார் சென்னை செய்தி", "raw_content": "முழுமையான செய்தி உலகம் உங்களுக்காக.\nராஜீவ் ரஞ்சன் TN Secy | இன் அடுத்த தலைவராக வருவார் சென்னை செய்தி\nசென்னை: 1985 ராஜீவ் அதிகாரியை ஆளுநராக நியமிக்க மாநில அரசு வியாழக்கிழமை தயாராக உள்ளது ரஞ்சன் அடுத்தது வரை தலைமை செயலாளர் மாநிலத்தின். பதவியில் இருக்கும் கே சண்முகம் எடப்பாடி கே ஆலோசகராக மாற வாய்ப்புள்ளது பழனிசாமி அரசு.\nதற்போது மத்திய மீன்வள, கால்நடை மற்றும் பால் அமைச்சகத்தின் செயலாளராக இருக்கும் ரஞ்சனை மாநிலத்தின் வேண்டுகோளின் பேரில் பெற்றோர் நிறுவனத்திற்கு திருப்பி அனுப்ப மத்திய அமைச்சரவை நியமனக் குழு புதன்கிழமை ஒப்புதல் அளித்தது. “அதிகாரியை திருப்பி அனுப்புவதற்காக முதல்வரிடம் இருந்து ஒரு கடிதம் திங்கள்கிழமை அனுப்பப்பட்டது” என்று ஒரு வட்டாரம் தெரிவித்தது. சண்முகத்தின் சேவையை மூன்றாவது முறையாக நீட்டிக்குமாறு மாநில அரசு முன்பு கேட்டுக் கொண்டது, ஏனெனில் அதன் இரண்டாவது நீட்டிப்பு ஜனவரி 31 ஆம் தேதியுடன் முடிவடையும்.\nஉயர்மட்ட அதிகாரியின் விரிவாக்கத்திற்கு மையம் ஆதரவளிப்பதாகத் தெரியவில்லை என்றாலும், ராஜீவ் ரஞ்சனின் திருப்பி அனுப்பப்படுவது இரண்டு நாட்களுக்குள் நடந்தது.\nபீகாரில் வசிக்கும் ரஞ்சன், 2013 ஆம் ஆண்டில் நெடுஞ்சாலை பிரிவின் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு முன்பு நிதி, தொழில், வருவாய், நிதி மற்றும் எரிசக்தி ஆகியவற்றில் ஒரு வரம்பைக் கொண்டிருந்தார், கடந்த பத்து ஆண்டுகளாக முதல்வர் பழனிசாமி வைத்திருந்த இலாகா. 2018 ஆம் ஆண்டில், ரஞ்சன் மத்திய தூதுக்குழுவை ஏற்றுக்கொண்டு ஜி���ஸ்டி கவுன்சிலின் சிறப்பு செயலாளராக ஆனார். “இது முதல்வரால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது” என்று அந்த வட்டாரம் மேலும் கூறியுள்ளது.\nபாப் கலாச்சாரம் டிரெயில்ப்ளேஸர். சிந்தனையாளர். சிக்கல் செய்பவர். இசை குரு. சமூக ஊடக நிபுணர். மாணவர். ஜாம்பி நிபுணர்.\nREAD ஜாக் மாவின் கதையை மாற்றுவது: ஜாக் மா ஒரு காலத்தில் சீன மன்னராக இருந்தார், இன்று அவர் வெறுப்பால் பாதிக்கப்பட்டவர், ஏன் என்று தெரியும்\nமோடெர்னா அமெரிக்காவில் தடுப்பூசியை அவசரமாக பயன்படுத்த ஒப்புதல் பெறும், சில சந்தர்ப்பங்களில் இது 100% பயனுள்ளதாக இருக்கும். | மாடர்னா தடுப்பூசி சில சந்தர்ப்பங்களில் 100% பயனுள்ளதாக இருக்கும், நிறுவனம் அமெரிக்காவில் அவசரகால பயன்பாட்டிற்கு ஒப்புதல் பெறும்\nஇந்தி செய்தி சர்வதேச அமெரிக்காவில் தடுப்பூசியை அவசரமாகப் பயன்படுத்துவதற்கு மாடர்னா ஒப்புதல் கோரும், சில சந்தர்ப்பங்களில்...\nஅர்னப் கோஸ்வாமிக்கு இன்று ஜாமீன் கிடைக்கவில்லை, இந்த விஷயத்தை சனிக்கிழமை கேட்க பம்பாய் ஐகோர்ட் | அர்னாப் கோஸ்வாமிக்கு நிவாரணம் கிடைக்கவில்லை, விசாரணை ஜாமீனில் ஒத்திவைக்கப்பட்டது\nவங்காள முதல்வர் மாநில மக்கள்தொகையை 30 சதவீதம் மட்டுமே அதிகரிக்க விரும்புகிறார்: கைலாஷ் விஜயவர்ஜியா\nநேஹா கக்கர் மற்றும் ரோஹன்பிரீத் சிங் ஹனிமூன் டைரிஸ் புகைப்படங்களை பகிர்ந்து கொள்கிறார்கள் வைரஸ் – நேஹா கக்கர் மற்றும் ரோஹன்பிரீத் தேனிலவு டைரிகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள், சில சிறப்பு தருணங்கள் கேமராவில் கைப்பற்றப்பட்டுள்ளன\nPrevious articleகங்கனா ரன ut த் முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கு எதிராக விளையாட தயாராக உள்ளார்\nNext articleஉங்கள் வாட்ஸ்அப் அரட்டை வரலாற்றை இறக்குமதி செய்வதை டெலிகிராம் அதிகாரப்பூர்வமாக்குகிறது\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nமக்களவை – புதிய இந்தியன் எக்ஸ்பிரஸ் வெற்றிக்கு உதயநிதி இளைஞர்களைப் பாராட்டுகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2021/01/copy1111.html", "date_download": "2021-05-07T00:45:50Z", "digest": "sha1:SRH67LXR4ASFMTT2LITRRY24FJ6LRSDP", "length": 13975, "nlines": 255, "source_domain": "www.ttamil.com", "title": "03 ஈழத்து பாடலும் இளையோர் நடனமும் ~ Theebam.com", "raw_content": "\n03 ஈழத்து பாடலும் இளையோர் நடனமும்\nவளர்ந்துவரும் ���ழத்து கலைகளில் இன்று இந்திய திரை நடனங்களுக்கு இணையாக திரைநடனம் தாயகத்தில் வளர்ந்து வருவதனை நாம் அன்றாடம் காணொளியில் பார்த்து மகிழ்கிறோம். அவற்றில் மூன்றினை இங்கே வெளியிடுவதில் மகிழ்வடைகிறோம்.\n1. சுண்டுக்குளி ப் பூவே பாடல் & நடனம் [sundu kuli poove]\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nசித்தர் சிந்திய முத்துக்களில் ........3/22\nஇவ்வாரம் வெளியான படங்களும் கதையின் சாரமும்...\nவாழ்க்கையில் சுய முன்னேற்றம் அடைவது எப்படி\nபகுதி/PART:03: இறப்பும் தமிழரின் நம்பிக்கைகளும்:\nஎம் கண்களும் , தொடுதிரையும், கொரோனாவும்- ஒரு கண் வ...\nரயில் எஞ்சின்கள் பற்றிய தகவல்கள்\nசித்தர் சிந்திய முத்துக்கள் ...04/21\nகவிஒளி:எந்தை அவள் .............{கந்தையா தில்லைவிநா...\nதிரைக்கு பெப்ரவரியில் வந்த/வரவிருக்கும் திரைப்படங்கள்\nஅதென்னங்க டி என் ஏ /[பகுதி - 2]\n03 ஈழத்து பாடலும் இளையோர் நடனமும்\nதிருமண வாழ்வைக் கெடுக்கும் விஷயங்கள்\nசித்தர் சிந்திய முத்துக்களில் ........3/20\nகவி:சொர்க்கம் போக ஆசை பட்டேன்\nஅதென்னங்க (DNA) டி என் ஏ\n[பகுதி:01] இறப்பும் தமிழரின் நம்பிக்கைகளும்:-\nதொண்டை வலிகள் ஏன், ஆன்ரிபயோரிக் மருந்துகள் எப்போது...\nசித்தர் சிந்திய முத்துக்களில் ...3/19\n\"ஓங்கார நாதமாய் நெஞ்சை நிறைத்தாய்\"\nதொழில்நுட்பம் -வளர்ச்சி- இரண்டு முகங்கள்\nசித்தர் சிந்திய முத்துக்கள் மூன்று / 18\nவாழ்க்கைப் பயணத்தில் ...வருடல்கள் /பகுதி:04\nதிரையில் -வந்ததும் ,வர இருப்பதுவும்....\nதன்னம்பிக்கை : பென்சில்போல் வாழ்ந்தால் ....\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nதுவரம் பருப்புகளை சாப்பிடுவதால் தீரும் நோய்கள் என்ன தெரியுமா\nஉலகெங்கிலும் ஏராளமான பருப்பு வகை பயிர்கள் மனிதர்கள் உண்பதற்காக பயிரிடப்பட்டு வளர்க்கப்படுகின்றன. இந்தப் பருப்புகள் அனைத்துமே நமது உடல...\n🗺→ இன்றைய செய்திகள்- Tamil News Today\n💢💢💢💢💢💢💢 💢💢💢💢💢💢💢 முதலில் தலைப்பு செய்திகள்- 🎌மத்தள சர்வதேச விமான நிலையம் ,சுற்றுலா மையமாக மாறுகிறது 🎌...\nமனைவியை மீட்க மன்றாடிய கடவுள்\nஇராவணன் என்ற தீயவனிடமிருந்து தனது மனைவியை மீட்க அனைத்து ஆற்றலும் கைவரப்பெற்ற மனிதக் கடவுள் இராமன், ஹனுமான் என்ற குரங்குக்கடவுளிடம் கை...\nநடிகர் பிரஷாந்த் திரையில் காணாமல் போனதற்கு காரணம் என்ன\nநடிகர் பிரஷாந்த் தன் சக கால நடிகர்களான விஜய் , அஜித்தை விட தனி திறமைகள் அதிகம் கொண்டிருந்தும் , வேறு யாருக்கும் வாய்க்காத மி...\nவாழ்க்கைப் பயணத்தில் ...வருடல்கள் /பகுதி:04\nகதையாக..... [ஆரம்பத்திலிருந்து வாசிக்க கீழே செல்லுங்கள்] 👉 [பகுதி: 04] 👉 வருடங்கள் பல எப்படி ஓடியது என்று தெரியவில்லை. அதற்குள் என் குடும...\nசங்க கால இலக்கிய காதலர்கள்: ஆதிமந்தி-ஆட்டனத்தி\"-[ஆக்கம்:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]\nஉலகப் புகழ் பெற்ற காதலர்கள் ரோமியோ-ஜூலியட், சகுந்தலை-துஷ்யந்தன், லைலா-மஜ்னூன், மும்தாஜ்-ஷாஜஹான், கிளியோபட்ரா-மார்க்ஆண்டனி, அம்பிகாபதி-அ...\nகண்ணதாசன்-ஒரு கவிப்பேரரசு வரலாறு [இன்று நினைவுதினம்]\nகண்ணதாசன் ( ஜூன் 24 1927 – அக்டோபர் 17 1981 ) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார் . நான்காயிர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://abedheen.wordpress.com/category/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%9C%E0%AF%80-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-05-07T00:33:03Z", "digest": "sha1:QJNSICHL2YYBTVNTVCYIXIVHRNC6WHSS", "length": 44076, "nlines": 621, "source_domain": "abedheen.wordpress.com", "title": "ஜீ. முருகன் | ஆபிதீன் பக்கங்கள்", "raw_content": "\nஇறைவனின் நாட்டமும் கடவுளின் கழுதையும்\n04/06/2013 இல் 14:00\t(ஜீ. முருகன், வலம்புரி ஜான்)\nஇரண்டு நாட்களாக தொடர்ந்து ‘மவுத்’ செய்திகளை கேட்டுக் கொண்டிருப்பதால் மனசு சங்கடமாக இருக்கிறது. ‘ஏன் இப்படி’ என்று ஒரு ஆலிம்ஷாவைக் கேட்டால் ‘அதெல்லாம் அல்லாஹ்ட நாட்டம் தம்பி’ என்கிறார் தாடியை உருவிக்கொண்டே’ என்று ஒரு ஆலிம்ஷாவைக் கேட்டால் ‘அதெல்லாம் அல்லாஹ்ட நாட்டம் தம்பி’ என்கிறார் தாடியை உருவிக்கொண்டே அவரிடமிருந்து தப்பித்த எனக்கு ஜீ.முருகனின் ‘கடவுளின் கழுதை’ கவிதை ஞாபக��் வந்ததும் வலம்புரி ஜான் அவர்களின் ‘ஒன்றும் ஒன்றும் ஒன்று’ கட்டுரை கிடைத்ததும்கூட இறைவனின் நாட்டம்தான் என்று நினைக்கிறேன். முருகன்ஜீயின் கவிதை பதிவின் அடியில் இருக்கிறது. ‘எல்லோரையும் எல்லாவற்றையும் படிக்கவிட்டால், எல்லாம் ஒன்றுதான் என்று அறிந்து கொள்ளுவார்கள்.. அவ்வாறு அறிந்து கொண்டால் நிறுவனங்களாகிவிட்ட மதங்கள் தங்கள் தனித்தன்மைகளை இழக்க நேரிடும். எல்லாம் ஒன்றுதான் என்று சொல்லி எந்த மதவாதியாவது தனது தனி ஆட்சிக்குத் தானே உலை வைப்பாரா அவரிடமிருந்து தப்பித்த எனக்கு ஜீ.முருகனின் ‘கடவுளின் கழுதை’ கவிதை ஞாபகம் வந்ததும் வலம்புரி ஜான் அவர்களின் ‘ஒன்றும் ஒன்றும் ஒன்று’ கட்டுரை கிடைத்ததும்கூட இறைவனின் நாட்டம்தான் என்று நினைக்கிறேன். முருகன்ஜீயின் கவிதை பதிவின் அடியில் இருக்கிறது. ‘எல்லோரையும் எல்லாவற்றையும் படிக்கவிட்டால், எல்லாம் ஒன்றுதான் என்று அறிந்து கொள்ளுவார்கள்.. அவ்வாறு அறிந்து கொண்டால் நிறுவனங்களாகிவிட்ட மதங்கள் தங்கள் தனித்தன்மைகளை இழக்க நேரிடும். எல்லாம் ஒன்றுதான் என்று சொல்லி எந்த மதவாதியாவது தனது தனி ஆட்சிக்குத் தானே உலை வைப்பாரா” என்று கேட்கும் வலம்புரி ஜானை முதலில் பார்ப்போம். அவர் மேலும் சொல்கிறார்…\nஇயேசு பெருமான் எருசலேம் பட்டணத்தில் உள்ள சாலமோனின் தேவாலயத்தைப் பார்த்தார். “இந்த தேவாலாயத்தை இடித்துப் போடுங்கள்; மூன்று நாட்களில் அதை நான் மீண்டும் கட்டுவேன்” என்றார். அவர் தமது உடலாகிய ஆலயத்தைக் குறித்து அவ்வாறு பேசினார் என்று பைபிளிலே வருகிறது.\n‘உள்ளம் பெருங்கோயில்; ஊன் உடம்பு ஆலயம்’ என்கிற திருமூலரின் வரிகள் அப்படியே விவிலியத்தில் காணப்படுகின்றன. இந்த அழகின் ஆழத்தில் ஏன் அமிழ்ந்து எழ வேண்டும் என்பதற்கான காரணத்தைக் கண்டு பிடித்தா சொல்ல வேண்டும். தாயுமான சுவாமிகளின் பாடல்களைப் படித்தால் ‘சென் புத்தம்’ அப்படியே ஒவ்வொரு சொல்லுக்குள்ளும் குடியேறியிருப்பதை அறிந்து கொள்ளலாம். வள்ளலார் பாடல்களில் இயேசுவின் குரலையே கேட்கலாம். “ஆண்டவரே நான் உமது அடிமை; உமது வார்த்தையின் படியே எனக்கு ஆகட்டும்” என்கிற மரியாளின் (இயேசுவின் தாயார்) வேண்டுதலில் அருள்மிகு ராமானுஜரின் ‘பிரபத்தி’ தத்துவத்தைப் பார்க்கலாம்.\nஏன் உலகத்தில் இறைவன் ஒரே ஒரு சமயம�� மாத்திரம் இருக்கிற படியாகப் பார்த்துக் கொள்ளக்கூடாது என்றால் ஒரே ஒரு மதமாக இருப்பதில் இறைவனுக்கே நாட்டமில்லை என்று திருக்குரான் கூறுகிறது.\nநன்றி : ஆஸாத் பதிப்பகம் (இந்த நாள் இனிய நாள் – ஒன்றாம் தொகுதி)\nஅதன் பின்னால் நடந்து போகிறான்\nநன்றி : ஜீ.முருகன், பன்முகம்\nகொள்ளை அழகனான ‘கோவணாண்டி’ முருகன் அல்ல இவர். ’கூளமாதாரி’ நாவல் எழுதிய பெருமாள்முருகனோ ’ஏழ மாதிரி’ எழுதும் நண்பர் இரா. முருகனோ அல்ல. இது ஜீ. முருகன். அதான் குறிச்சொல்லிலேயே தெரிகிறதே, சஸ்பென்ஸ் எதற்கு பாய் என்று கேட்கிறீர்களோ சரி. ஏழெட்டு வருடங்களுக்கு முன்னால், முருகனின் சுவாரஸ்யமான ஒரு சிறுகதையைப் படித்துப் பரவசப்பட்டுப்போய், இந்த ஆளை சந்திக்க வேண்டுமே என்று நினைத்தேன். ரொம்ப வருடங்களுக்குப் பிறகு ஒரு எழுத்தாளரை சந்திக்க ஆசைப்பட்டது அப்போதுதான். கல்லூரிப் பருவத்தில் , பிரபல எழுத்தாளர்கள் சிலரை சென்னையில் சந்தித்து , கொஞ்சமும் நாகரீகம் இல்லாமல் அடுத்த எழுத்தாளர்களை அநியாயமாகத் திட்டி (டில்லியிலிருந்து உத்தரவு வந்துகொண்டிருந்தது சரி. ஏழெட்டு வருடங்களுக்கு முன்னால், முருகனின் சுவாரஸ்யமான ஒரு சிறுகதையைப் படித்துப் பரவசப்பட்டுப்போய், இந்த ஆளை சந்திக்க வேண்டுமே என்று நினைத்தேன். ரொம்ப வருடங்களுக்குப் பிறகு ஒரு எழுத்தாளரை சந்திக்க ஆசைப்பட்டது அப்போதுதான். கல்லூரிப் பருவத்தில் , பிரபல எழுத்தாளர்கள் சிலரை சென்னையில் சந்தித்து , கொஞ்சமும் நாகரீகம் இல்லாமல் அடுத்த எழுத்தாளர்களை அநியாயமாகத் திட்டி (டில்லியிலிருந்து உத்தரவு வந்துகொண்டிருந்தது) திமிராக அலைந்து கொண்டிருந்த காலம். உயர் படிப்புக்காக என் சீதேவிவாப்பா அனுப்பிய பணத்தையெல்லாம் ’சீரியஸ்’ சினிமா பார்ப்பதற்கும் இழவெடுத்த இலக்கியம் படிப்பதற்கும் சீரழித்துக்கொண்டிருந்த காலம். அதை அப்புறம் பார்க்கலாம்; ’இடம்’ சிறுகதைத் தொகுப்பு வெளியாகவிருந்த நேரத்தில் நண்பன் நாகூர்ரூமியை சந்திக்க குடும்பத்தோடு ஆம்பூருக்கு சென்றிருந்தபோது சந்தர்ப்பம் வாய்த்தது. ‘நம்ம ஸ்டூடண்ட்ஸ்தான் அவர்’ என்றார் வாத்தியார். ஆவேசமாக எழுதும் அழகிய பெரியவனையும் அப்படியே சொன்னார். உண்மையோ இல்லையோ, குருவை மிஞ்சுகிறார்கள் சீடர்கள் இப்போதெல்லாம் என்பது மட்டும் உண்மை. திருவண்��ாமலையில் இருக்கும் முருகன்ஜீயை வரச் சொன்னார் ரூமிஜீ. கதையைவிட முருகன் நேரில் ரொம்ப சுவாரஸ்யம். ’ ரொம்ப லேட்டாவுதும்மா; எங்கேயிக்கிறாஹான்னு கேளுங்க’ என்று பக்கா பிரியாணி சமைத்தபடி நஜ்ஹா சத்தம் போட்டதும் ’எங்கேயிருக்கீங்க முருகன்) திமிராக அலைந்து கொண்டிருந்த காலம். உயர் படிப்புக்காக என் சீதேவிவாப்பா அனுப்பிய பணத்தையெல்லாம் ’சீரியஸ்’ சினிமா பார்ப்பதற்கும் இழவெடுத்த இலக்கியம் படிப்பதற்கும் சீரழித்துக்கொண்டிருந்த காலம். அதை அப்புறம் பார்க்கலாம்; ’இடம்’ சிறுகதைத் தொகுப்பு வெளியாகவிருந்த நேரத்தில் நண்பன் நாகூர்ரூமியை சந்திக்க குடும்பத்தோடு ஆம்பூருக்கு சென்றிருந்தபோது சந்தர்ப்பம் வாய்த்தது. ‘நம்ம ஸ்டூடண்ட்ஸ்தான் அவர்’ என்றார் வாத்தியார். ஆவேசமாக எழுதும் அழகிய பெரியவனையும் அப்படியே சொன்னார். உண்மையோ இல்லையோ, குருவை மிஞ்சுகிறார்கள் சீடர்கள் இப்போதெல்லாம் என்பது மட்டும் உண்மை. திருவண்ணாமலையில் இருக்கும் முருகன்ஜீயை வரச் சொன்னார் ரூமிஜீ. கதையைவிட முருகன் நேரில் ரொம்ப சுவாரஸ்யம். ’ ரொம்ப லேட்டாவுதும்மா; எங்கேயிக்கிறாஹான்னு கேளுங்க’ என்று பக்கா பிரியாணி சமைத்தபடி நஜ்ஹா சத்தம் போட்டதும் ’எங்கேயிருக்கீங்க முருகன்’ என்று ரூமி கூப்பிட்டதற்கு , ‘அஞ்சாம் நம்பர் டாஸ்மாக் கடை பக்கத்துல’ என்று ரூமி கூப்பிட்டதற்கு , ‘அஞ்சாம் நம்பர் டாஸ்மாக் கடை பக்கத்துல’ என்று பதில் வந்தது\n’ஓய், ஒம்ம அட்ரஸ் என்னா’ என்று செய்மீரான் என்பவரைக் கேட்டதற்கு ‘செய்மீரான், நாகூர் பஸ் ஸ்டாண்ட்’ என்று அலட்டலாக பதில் சொன்னார்; அதுமாதிரி அல்லவா இருக்கிறது\nஎப்படியோ , வந்து சேர்ந்தார் முருகன். இலக்கியம் பேசினோம். அலுத்துக்கொண்டபடி ’பேஜ்மேக்கர்’ நுணுக்கங்கள் சொல்லிக்கொடுத்தார். ‘இடம்’ அட்டை மட்டும் வந்திருந்தது. காட்டினேன். ‘பெரிய காஃப்கான்னு நெனைப்போ’ என்று கிண்டல் செய்தார். காஃப்கா தெரியுமாம்’ என்று கிண்டல் செய்தார். காஃப்கா தெரியுமாம் பதில் சொல்லவில்லை; சிரித்துக்கொண்டேன். எனக்குப் பிடித்த முருகனின் கதையில் அந்தக் கடைசி பத்திகள் தேவைதானா என்று மட்டும் கேட்டேன். ‘அதுதான் ரொம்ப முக்கியம்’ என்றார். இப்போது மீண்டும் படித்துப் பார்த்தால் அவர் சொன்னது சரிதான் என்று தோன்றுகிறது. நீங்களும் படித்துப் பாருங்கள். முன்பு வெப்துனியா தளத்தில் இருந்த ஞாபகம். இப்போது கீற்று தளத்தில் இருக்கிறான் ’அதிர்ஷ்டமற்ற பயணி’. டிக்கெட் எடுக்காத பயணி முருகனை மாட்டிவிடுவது பிரமாதம். எழுத்தாளர்கள் எப்படியெல்லாம் மாட்டிக்கொள்கிறார்கள்\nஒரு சந்தேகம், http://gmuruganwritings.wordpress.com/ ஜீ.முருகன் நடத்தும் தளம்தானா அல்லது அவரது விசிறிகள் யாராவது செய்கிறார்களா அல்லது அவரது விசிறிகள் யாராவது செய்கிறார்களா இரண்டு வருடமாக update செய்யப்படவில்லையே…. எதற்குக் கேட்கிறேன் என்றால்… சென்றவருடம், நண்பர் ஜமாலனின் வீட்டு விசேஷத்தின்போது மாலதிமைத்ரியை சந்தித்து (பிரேமும் உடனிருந்தார். அதே பிரியம்) ‘ஏன் உங்கள் வலைப்பதிவை அழித்துவிட்டீர்கள் இரண்டு வருடமாக update செய்யப்படவில்லையே…. எதற்குக் கேட்கிறேன் என்றால்… சென்றவருடம், நண்பர் ஜமாலனின் வீட்டு விசேஷத்தின்போது மாலதிமைத்ரியை சந்தித்து (பிரேமும் உடனிருந்தார். அதே பிரியம்) ‘ஏன் உங்கள் வலைப்பதிவை அழித்துவிட்டீர்கள்’ என்று கேட்டதற்கு ‘அய்யோ ஆபிதீன், அது நான் உருவாக்கியதல்ல. யாரோ செஞ்சிருக்காங்க’ என்று அலறியது. ‘இண்டர்நெட்டுலெ எழுதுறது எங்களுக்குப் பிடிக்காது’ என்று இருவரும் ஒரே குரலிலும் சொன்னார்கள். ஹை’ என்று கேட்டதற்கு ‘அய்யோ ஆபிதீன், அது நான் உருவாக்கியதல்ல. யாரோ செஞ்சிருக்காங்க’ என்று அலறியது. ‘இண்டர்நெட்டுலெ எழுதுறது எங்களுக்குப் பிடிக்காது’ என்று இருவரும் ஒரே குரலிலும் சொன்னார்கள். ஹை இப்படி ஆரம்பத்தில் சொன்ன எழுத்தாளர்களெல்லாம் அதில்தான் குளிக்கிறார்கள் இப்போதெல்லாம் என்பது தெரியாது போலும். தவிர, ’மாலதி மைத்ரி – கேணி சந்திப்பு’ இண்டர்நெட்டில்தானே கிடைக்கிறது இப்படி ஆரம்பத்தில் சொன்ன எழுத்தாளர்களெல்லாம் அதில்தான் குளிக்கிறார்கள் இப்போதெல்லாம் என்பது தெரியாது போலும். தவிர, ’மாலதி மைத்ரி – கேணி சந்திப்பு’ இண்டர்நெட்டில்தானே கிடைக்கிறது இருக்கட்டும், இங்கேயுள்ள ’எழுத்தாளர்கள் (links)’ பக்கத்தில் , இணையதளம் வைத்திருக்கும் / வலைப்பதிவு எழுதும் எழுத்தாளர்களை மட்டும்தான் சேர்க்க எண்ணினேன் – ஆரம்பத்தில். அப்படிப்பார்த்தால் சிலரே தேறுவார்கள் (கவனியுங்கள் : அங்கே என் பெயர் இல்லை இருக்கட்டும், இங்கேயுள்ள ’எழுத்தாளர்கள் (links)’ பக்கத்தில் , இணையதளம் வை���்திருக்கும் / வலைப்பதிவு எழுதும் எழுத்தாளர்களை மட்டும்தான் சேர்க்க எண்ணினேன் – ஆரம்பத்தில். அப்படிப்பார்த்தால் சிலரே தேறுவார்கள் (கவனியுங்கள் : அங்கே என் பெயர் இல்லை) என்பதால் புத்தகங்கள் வெளியிட்ட எழுத்தாளர்கள் எல்லாரையும் – கண்ணில் சிக்குபவர்களை மட்டும் – இணைத்துக்கொண்டிருக்கிறேன். (என்ன மாயமோ, சீர்காழி கவிஞரையும் இணைத்துவிட்டேன்; மன்னியுங்கள்).\nமாய யதார்த்தத்தை வலிய இழுத்து நம் மண்டைகளை சிலர் உடைக்கும்போது மிக எளிமையாகத் தாண்டும் ஜீ. முருகன் எனக்குப் பிடித்த எழுத்தாளர்களில் ஒருவர். என்ன, பாலியல் சமாச்சாரங்கள் கொஞ்சம் தூக்கலாக இருக்கும். இரண்டு சிறுகதைத் தொகுதிகள் முழுதாக ( சாயும் காலம் , கறுப்பு நாய்க்குட்டி ) முருகனின் தளத்தில் இருக்கின்றன. வாசித்தால் , நிச்சயம் ’அஞ்சாம் நம்பர் கடைக்கு’ அருகில் போகலாம்\n’மரம்’ நாவல் இன்னும் நான் வாசிக்கவில்லை.\nஜீ. முருகன் படைப்புகள் – கீற்று இணையதளம்\nவிளிம்புநிலை படைப்பாளி-ஜீ.முருகன் – இரத்தின புகழேந்தி\nஜீ.முருகன் கதைகள் ஓர் விவாதம் (காணொளி)\nபுதிய குரல்கள் புதிய தடுமாற்றங்கள் :தமிழ்ச் சிறுகதை , இன்று… – ஜெயமோகன்\nகதை சொல்லி – ஜீ. முருகன் / தமிழ்ஸ்டூடியோ\nஆபிதீன் பக்கங்கள் ii :\n3. எழுத்தாளர்களின் இணையதளங்கள் (Links)\n5. கச்சேரிகள் , கஜல்கள்\n8 . நாகூர் ரூமி பதிவுகள்\nகலீபா உமர் (ரலி) (1)\nஉஸ்தாத் ஸலாமத் அலி கான் (1)\nகுலாம் முஸ்தஃபா கான் (1)\nநுஸ்ரத் ஃபதே அலிகான் (6)\nபண்டிட் ராஜ்சேகர் மன்ஸூர் (1)\nமுகேஷ் (பீர் முஹம்மது) (1)\nவிஸ்வநாதன் / ராமமூர்த்தி (2)\nதயவு பிரபாவதி அம்மா (1)\nஅப்துல் வஹ்ஹாப் பாகவி (18)\nகுலாம் காதர் நாவலர் (4)\nஅபுல் கலாம் ஆசாத் (2)\nஅஸ்கர் அலி என்ஜினியர் (1)\nஎச். பீர் முஹம்மது (2)\nகிண்ணியா எஸ்.பாயிஸா அலி (2)\nகுர்அதுல் ஐன் ஹைதர் (1)\nகுளச்சல் மு. யூசுப் (5)\nசாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (2)\nஜே. பி. சாணக்யா (1)\nஜோ டி குரூஸ் (1)\nதொ.மு. சி. ரகுநாதன் (1)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nபோர்வை பாயிஸ் ஜிப்ரி (1)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nவேங்கட சுப்புராய நாயகர் (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (5)\nஹரி கிருஷ்ணன் (ஹரிகி) (1)\nத சன்டே இந்தியன் (1)\nநேஷனல் புக் டிரஸ்ட் (13)\nஅங்கனெ ஒண்ணு இங்கனெ ஒண்ணு (1)\nமணல் பூத்த காடு (1)\nஇரா. சண்முக வடிவேல் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/1024864/amp", "date_download": "2021-05-07T01:44:32Z", "digest": "sha1:ZH4AGHXZX5NYE7OUMSQAXX2S5KIGJO4H", "length": 8308, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "திசையன்விளை அருகே மின்கம்பி அறுந்து விழுந்து சிறுமி பலி | Dinakaran", "raw_content": "\nதிசையன்விளை அருகே மின்கம்பி அறுந்து விழுந்து சிறுமி பலி\nதிசையன்விளை, ஏப்.19: திசையன்விளை அருகேயுள்ள ரம்மதபுரம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் வின்சென்ட். இவரது மனைவி திலகராணி. இவர்களது மகள் செல்வம் எப்சிபா(9). அங்குள்ள பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மதியம் கடையில் ரஸ்னா வாங்கிவிட்டு வந்தார். அப்போது திடீரென மின்கம்பத்திலிருந்து மின்கம்பி அறுந்து சிறுமியின் மீது விழுந்தது. இதில் சிறுமி மீது மின்சாரம் பாய்ந்தது. உடனே சிறுமியை மீட்டு திசையன்விளையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக கூறினார். சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nஇதுகுறித்து சிறுமியின் தாய் திலகராணி கொடுத்த புகாரின் பேரில் திசையன்விளை இன்ஸ்பெக்டர் சாய்லட்சுமி விசாரணை மேற்கொண்டு வருகிறார்.\nதிருவாரூர் பைபாஸ் சாலை அருகே ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சேதமடைந்த நூலக சாலை\nஅறிவொளி இயக்கம் அழைப்பு பொறுப்பாளர்கள் போன் எண்கள்\nகலெக்டர் தகவல் வாசிப்பு பழக்கம் மூலம் செல்போன் சீர்கேடுகளில் இருந்து குழந்தைகளை மீட்டெடுக்க வேண்டும்\nதிருவாரூர் மாவட்டத்தில் மத்திய அரசின் ஆதார விலைத்திட்டத்தில் உளுந்து, பச்சைப்பயறு கொள்முதல்\nதிருவாரூர் நகரில் குழாய் சேதமடைந்து வீணாக குடிநீர் வெளியேறும் அவலம் சீரமைத்து பராமரிக்க மக்கள் கோரிக்கை\nலால்குடி வயல்காட்டில் ரத்த காயங்களுடன் பெண் சடலம் மீட்பு\nசிறுமியிடம் அத்து மீறல் சமையல் மாஸ்டர் கைது\nதிருவெறும்பூர் அருகே உப்பு லோடு லாரி கவிழ்ந்தது\nகுடியிருப்புகளுக்கு அருகே மது குடித்ததை கண்டித்த வாலிபருக்கு அடி உதை\nபேராவூரணி ஜமாஅத் அறிவிப்பு தென்னையை தாக்கும் தஞ்சை வாடல் நோயை கட்டுப்படுத்தும் வழிமுறை\nமுழு ஊரடங்கு தினத்தன்று இஸ்லாமியர் வீடுகளிலேயே நோன்புகால சிறப்பு தொழுகை\nபேராவூரணி நகரில்a ரூ.15 கோடியில் சாலை மேம்பாடு திட்டப்பணி திருக்காட்டுப்பள்ளி அருகே அரை குறையாக விடப்பட்ட தார் சாலை சீரமைப்பு\nஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலையத்தில் வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு ஒருங்கிணைந்த பண்ணைய பயிற்சி\nஅரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி\nதிருவையாறில் கணவரை காணவில்லை மனைவி போலீசில் புகார்\nபட்டப்பகலில் மர்மநபர்கள் துணிகரம் புதுக்கோட்டை அரசினர் பிற்படுத்தப்பட்டோர் மாணவியர் விடுதியை கொரோனா சிகிச்சை மையமாக மாற்றும் பணி\nபொன்னமராவதி பேருந்து நிலையத்தில் திமுக பிரமுகரின் கார் கண்ணாடியை உடைத்து ரூ. 4 லட்சம் கொள்ளை\nகொள்ளிடம் பகுதி ஆரம்ப சுகாதார நிலையங்களில் கிருமி நாசினி, முககவசம் தட்டுப்பாடு\nபாரம்பரியத்தை மீட்டெடுக்கும் வகையில் பனை ஓலையில் விதவிதமான பொருட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://namathu.blogspot.com/2010/07/blog-post_5470.html", "date_download": "2021-05-07T01:55:00Z", "digest": "sha1:M2SAMQOEFYAHWZ2GFFRS622VIC6VBNUC", "length": 57842, "nlines": 848, "source_domain": "namathu.blogspot.com", "title": "நமது NAMATHU.blogspot.com . . . . . . . நல்வரவு Enter : குடும்ப அராஜக ஆட்சி - நொறுங்கி போன மக்கள்; கோவையில் ஜெ., ஆவேசம்", "raw_content": "\nசெவ்வாய், 13 ஜூலை, 2010\nகுடும்ப அராஜக ஆட்சி - நொறுங்கி போன மக்கள்; கோவையில் ஜெ., ஆவேசம்\nஅப்பா முதல்வர், மகன் துணை முதல்வர், பெரியமகன் மத்திய அமைச்சர், மகள் எம்.பி., மகனின் நண்பர்கள் சிலருக்கு மத்திய அமைச்சர் பதவி இவ்வாறு சர்வாதிகாரி ஆட்சியில் கூட பதவிகள் பங்கு போட்டது இல்லை\nகோவை: ஒரு ரூபாய்க்கு இலவச அரிசி கொடுத்துவிட்டு ஏனைய அத்தியாவசிய பொருட்களின் விலையை உயர்த்திய தி.மு.க., அரசை ஆட்சியில் இருந்து விரட்டுவதற்கு அ.தி.மு.க., வினரும், பொதுமக்களும் தயாராகுங்கள் என விலைவாசி உயர்வை கண்டித்து கோவையில் நடந்த பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க., பொதுசெயலர் ஜெ., பேசுகையில், குறிப்பிட்டார்.\nபெட்ரோல், டீசல், சமையல் காஸ் விலை உயர்வுக்கு மத்திய, மாநில அரசுகளுக்கு கண்டனம் தெரிவிக்கும் பொதுக்கூட்டம் மற்றும், ஆர்ப்பாட்டம் ஜெ., தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் பொள்ளாச்சி ஜெயராமன் வரவேற்றார். தலைமை கழக செயலர் செங்கோட்டையன் உள்பட பலர் பங்கேற்றனர். ஜெ., தலைமையில் ஆர்ப்பாட்டம் என்பதால் பலர் திரண்டனர்.\nபொதுக்கூட்டத்தில் ஜெ., பேசியதாவது: கடந்த காலங்களில் 10 சதவீதம் விலை உயர்வு ஏற்பட்டதாக மத்திய, மாநில அரசுகள் தெரிவிக்கின்றன. ஆனால் சில்லரை விற்பனைக்கு வந்து மக்ககள் கைக்கு சேரும்போது 35 சதவீத உயர்வு பெறுகிறது. இதற்கு ஆன்லைன் வர்த்தகமும், அரசின் நடவடிக்கையும்தான் காரணம்.\n : கருணாநிதி ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு கொடுக்கிறார். ஆனால் இந்த உணவு சமைத்து சாப்பிட தேவையான மளிகை பொருட்கள், காய்கறி, மண்ணெண்ணெய் விலை பல மடங்கு உயர்த்தப்பட்டிருக்கிறது. இவ்வாறு கருணாநிதி மக்களை ஏமாற்றுகிறார். மின் தட்டுப்பாட்டால் தமிழகத்தில் தொழில் உற்பத்தி பாதிப்படைந்துள்ளன. மின் உற்பத்தியை பெருக்க உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் தொழில் நசிவடைந்துள்ளன. வேலை வாய்ப்பு குறைந்து விட்டது.\nபோலி மருந்து- போலி மது : தமிழக கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது. சிறுவாணி, அமராவதி, காவிரியில் மணல் கொள்ளை நடந்து வருகிறது. இதனை அதிகாரிகளும், ஆளும்கட்சியினரும் பங்கு போட்டு கொள்ளையடிக்கின்றனர். மதுபான கடைகளில் ஒவ்வொரு கடைகளிலும், ஒவ்வொரு விலை விற்கப்படுகிறது. போலியான மது, போலியான, காலாவதி மாத்திரை விற்கப்பட்டுள்ளன. இதற்கெல்லாம் காரணமான துணை முதல்வர் ஸ்டாலினின் மருமகனுக்கு விலை உயர்ந்த கார் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.\nஇலவச கலர் டி .வி ., வழங்கினார்கள், ( வழங்கினார்களா என கூட்டத்தினரை பார்த்து கேட்டார் ) ஆமாம் என்றனர் கூட்டத்தினர். இந்த இலவச டி. வி ., மூலம் கேபிள் வருமானத்தை பெருக்கி அவர்களது குடும்பத்தினர் வளமாகியுள்ளனர்.\n : அப்பா முதல்வர், மகன் துணை முதல்வர், பெரியமகன் மத்திய அமைச்சர், மகள் எம்.பி., மகனின் நண்பர்கள் சிலருக்கு மத்திய அமைச்சர் பதவி இவ்வாறு சர்வாதிகாரி ஆட்சியில் கூட பதவிகள் பங்கு போட்டது இல்லை. இப்படி ஆட்சியை அகற்ற மக்கள் தயாராகுங்கள், செம்மொழி மாநாடு நடத்தி கொள்ளை அடிக்கப்பட்டிருக்கிறது. கூட்டணி உண்டு கூட்டணியை நான் பார்த்துக்கொள்கிறேன். கருணாநிதியின் கொட்டத்தை நீங்கள் அடக்குங்கள், அடக்குவோம் இவ்வாறு ஜெ., பேசினார்.\nதொடர்ந்து கூட்ட மேடையில் இருந்த படி ஆர்ப்பாட்டம் செய்தார். ஜெ., இவர் மைக்கில் சொல்ல, சொல்ல, தொண்டர்கள் கோஷங்களை கூறினர். இந்த கோஷத்தின்போது தமிழக மக்கள் விரும்பும் அ.தி.மு.க., ஆட்சி அமையப்போகுது என்றும், கருணாநிதியே ஆட்சியை விட்டு ஓடி விடு என்றார்.\nஆர்ப்பாட்டத்தில் ஜெ., போட்ட கோஷங்கள் என்ன : ஜெ., மைக்கில் உரக்க சொல்ல, தொண்டர்கள் பின்னே தொடர்ந்து கோஷமிட்டனர். இதில் ஜெ., போட்ட கோஷங்கள் வருமாறு: உயர்ந்து போச்சு, உயர்ந்து போச்சு நூல் விலை உயர்ந்து போச்சு, மின்வெட்டு, மின்வெட்டு, குறைந்து போச்சு, குறைந்து போச்சு, வேளாண் உற்பத்தி குறைந்து போச்சு, பெருகி போச்சு , பெருகி போச்சு , வேலைஇல்லா திண்டாட்டம் பெருகி போச்சு, சுரண்டாதே, சுரண்டாதே கனிமவளத்தை சுரண்டாதே, கைது செய், கைது செய், காலாவதியான மருந்து வழக்கில் தொடர்புடைய ஸ்டாலின் மருமகனை கைது செய், விற்காதே, விற்காதே காலவதியான உணவு பொருட்களை விற்காதே, விளையாடாதே, விளையாடாதே, மக்கள் உயிரோடு விளையாடாதே,\nதாரை வார்க்காதே ,தாரை வார்க்காதே , தமிழக நதி நீர் உரிமைகளை தாரை வார்க்காதே, பரவுதே, பரவுதே புதுபுதுப்புது நோய் பரவுதே, கட்டுப்படுத்து, பாதுகாப்பு கொடு , பாதுகாப்பு கொடு, ரவுடிகளிடம் இருந்து பாதுகாப்பு கொடு, கருணாநிதியே வெட்கமில்லையா, வெட்கமே இல்லையா, மக்களுக்கு போதிய பாதுகாப்பு கொடு , கொடுக்க முடியாவிட்டால், ஆட்சியை விட்டு ஓடி விடு, வெல்லப்போகுது வெல்லப்போகுது ஜனநாயகம் மீண்டும் வெல்லப்போகுது, அழியப்போகுது, அழியப்போகுது, அராஜக ஆட்சி அழியப்போகுது, மலரப்போகுது, மலரப்போகுது, மக்கள் ஆட்சி மலரப்போகுது, ஒழியட்டும், ஒழியட்டும், குடும்ப அராஜக ஆட்சி ஒழியட்டும், சபதமேற்போம், சபதமேற்போம், புரட்சி தலைவர் ஆட்சி அமைய சபதமேற்போம்,\nபச்சை அம்மா, கொஞ்சம் அடக்கிவாசிங்க, நீங்க போட்ட ஆட்டம் எல்லாம் மறந்து போச்சா. அதன் உனக்கு தமிழ் மக்கள் வைத்தார்களே ஆப்பு\nஅட லூசுங்களா , மொத்த தமிழ் நாட்டோட அதிமுக காரங்களே இவ்வளவுதான், இதை வச்சிக்கிட்டு ஒன்னும் புடுங்க முடியாது ,கோயம்புத்தூர் காரங்கல்லாம் அவனவன் வேலைக்கு போய்ட்டாங்க, வந்தவனெல்லாம் பிரியாணிக்கும் பிராந்திக்கும் வந்தவணுங்க. அந்தம்மாவுக்கு போர் அடிசுருக்கும் அதான் கொடநாடு போற வழியில அப்படியே வந்துட்டு போயிருக்கு,...\nமீனாக்ஷி சுந்தரம் - salem,இந்தியா\nஎப்படியும் தமிழ் நாடு உருப்பட போவது கிடையாது. இதில் யார் ஆட்சிக்கு வந்தா என்ன...\nஎன்னவோ உண்மைதான். ஆனால் முழக்கமிடும் நபர்தான் சரியில்லை, பிறகு இவர் முன்னே செய்த லீலைகளும் யாராலும் முழக்கம் இடப்படும்...என்னா செய்றது.....\nஎன்ன பண்றது பெரியவருக்கு பெரிய குடும்பம் சொத்து குவிக்கிறாரு . உனக்கு யாருமே இல்ல. ஆனா நீயும் அ��்படித்தான். இதுல யாரு பைத்தியம் நாங்கதான். எங்கள மாதிரி பைத்தியம் இருக்குற வரைக்கும் உங்கள போல பைத்தியம் திருந்துமா என்ன. அது கடவுளுக்கே தெரியாது ....\nசீன் முடிஞ்சுது.. பேக் டு கொடநாடு.....\nஅருண் குமார் - Periyakulam,இந்தியா\nஅம்மா நீ உன் காரியம் நடக்கணும்னு என்ன வேணாம்னாலும் பேச கூடாது. நீங்க சொத்து சம்பாதிக்க என்ன வேணும்னாலும் சொல்றீங்க, நீங்க வந்தாலும் இது தான் நடக்க போகுது. போ மம்மி போய் ரெஸ்ட் எடு. பேசாம நீங்களும் திமுகவில் சேர்ந்து விடலாமே...\nஎங்கே நம்ம அடுத்த முதல்வர் ராமதாசே காணோமே பார்த்து ரொம்ப நாளாச்சே. ஒரு வேளை துபாய்க்கு போயிட்டாரா பார்த்து ரொம்ப நாளாச்சே. ஒரு வேளை துபாய்க்கு போயிட்டாரா\nB .சந்தர் - Hanoi,வாலிஸ் புட்டுனா\nஆணவம், அராஜகம், சர்வாதிகாரத்தனம் உங்களக்கு கைவந்த கலை, தருமபுரி பஸ் எரிப்பு, சென்னா ரெட்டி மிரட்டல் இன்னும் பல பல அட்டூழியங்கள் உங்களுக்கு மறந்து விட்டதா பச்சை அம்மா உங்கள் காமெடி பேச்சுக்கு அளவே இல்லையா உங்கள் காமெடி பேச்சுக்கு அளவே இல்லையா நீங்கள் சொல்வது மாதிரி கலைஞர் சர்வதிகாரி என்றால், இதே மாதிரி மாபெரும் மாநாடு (உண்மையாகவா அல்லது கோர்ட்டர் பிரியாணி கோஷ்டியா நீங்கள் சொல்வது மாதிரி கலைஞர் சர்வதிகாரி என்றால், இதே மாதிரி மாபெரும் மாநாடு (உண்மையாகவா அல்லது கோர்ட்டர் பிரியாணி கோஷ்டியா) நடக்க விட்டிருப்பாரா உங்களை அந்த ஆண்டவனே வந்தாலும் திருத்த முடியாது....\nஆமா அம்மையார் ஆட்சியில் பாலாரும் தேனாறும் ஓடியதோ. கம்யூனிஸ்ட் -கள் ஒவ்வொரு ஆட்சியின் இறுதி மாதங்களில் அந்த அரசை ஒழிப்போம் என்று எதிர் அணியில் இணைந்து பச்சோந்தி அரசியல் செய்கின்றனர்....\nசேட் அன்வர் BHASHA - CHENNAI,இந்தியா\nஅம்மாவை பார்த்த ரொம்ப பாவமா இருக்கு. இவங்க ஆட்சி லே ERUNDHAPPO விலைவாசி ஏறவே இல்லியே என்ன VITTAA இப்பவே கோட்டையில் உட்கார்ந்துடுவாங்க போலே இருக்கே VITTAA இப்பவே கோட்டையில் உட்கார்ந்துடுவாங்க போலே இருக்கே மக்கள் தான் நல்ல முடிவு EDUKKANUM...\n இப்ப மக்கள் எல்லாம் நம்பிட்டாங்கபாருங்க தமிழ் நாட்டுல எல்லாரும் உங்க பின்னாடி அணி திரண்டு வர போறாங்கபாருங்க தமிழ் நாட்டுல எல்லாரும் உங்க பின்னாடி அணி திரண்டு வர போறாங்க நீங்க எதிர் கட்சியா இருந்து செஞ்ச சேவையில எல்லா மக்களும் மகிழ்ச்சி வெள்ளத்துல மூழ்கி போய்டாங்க நீங்க எதிர் ��ட்சியா இருந்து செஞ்ச சேவையில எல்லா மக்களும் மகிழ்ச்சி வெள்ளத்துல மூழ்கி போய்டாங்க கைய குடுத்து தூக்கி உடுங்க. போய் சேர்ந்துட போறாங்க கைய குடுத்து தூக்கி உடுங்க. போய் சேர்ந்துட போறாங்க கூட்டனிய நீங்க பாத்துக்க போறீங்க. அப்போ மக்கள் உங்க கூட்டனிய பாக்க வேண்டாம்னு சொல்றிங்க. அதுவும் சரிதான். அடுத்த வருடம் தெரிஞ்சுடும்....\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஏதோ இந்தம்மா காலத்துல எல்லாம் நல்ல படியா நடந்த மாதிரி. க்கும்.\n14 ஜூலை, 2010 ’அன்று’ முற்பகல் 2:50\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபணிப்பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக நீதிபதி ...\nராகுல், தி.மு.க - அ.தி.மு.க ஆகிய இரண்டில் யாரை வலு...\nசர்வதேச முதலீட்டாளர்கள் யாழ். வருகை. அமைச்சர் டக்ள...\nஇலங்கைக்கு சிறப்புத் தூதரை அனுப்பக் கோரி பிரதமருக்...\n1 கோடியில் நடந்த யாகத்தால் ரெட்டிகளுக்குப் பிரச்சி...\nகொழும்பில் வீட்டு பணிப்பெண் மர்ம மரணம்: பிரபா கணேச...\nநள்ளிரவில் செக்ஸ் டார்ச்சர்: நடிகை திவ்யா வேதனை\nஒரு வீட்டை நிர்மாணிப்பதற்கு 2 லட்சம்\nஐ.தே. கட்சிக்குள் தனித் தமிழ் பிரிவு\nசீமான்,எனக்கு முதல் வகுப்பு அறை வேண்டும்\nவல்லை நெசவுசாலையை மீண்டும் இயங்க வைக்க நடவடிக்கை\nஷீரடி சாய்பாபா கோயிலில் ஸ்டாலின் மனைவி: எளிமைக்கு ...\nகுழந்தைகளை அடித்தால் பெற்றோருக்கு 1 ஆண்டு ஜெயில்; ...\n24 தமிழறிஞர்களின் மரபுரிமையர்க்கு 1 கோடியே 58 லட்ச...\n6.628 பேருக்கு ஆசிரியர் நியமனம் 554 பட்டதாரிகளை ஆங...\nதிருமாவளவன் தந்தை உடலுக்கு கலைஞர்அஞ்சலி\nஎப்பாவெல நால்வர் கொலை சந்தேகநபர் அடையாளம்..\nமொத்த சிகிச்சையும் இலவசமm,்25 லட்சத்து 11 ஆயிரத்து...\nஇலங்கை தொடர்பான தீர்ப்பு, சொந்த மண்ணில் போரில் ஈடு...\nபாமக, மதிமுக அங்கீகாரம் ரத்தாகிறது-தேர்தல் ஆணையம் ...\nமட்டக்களப்பு கைதிகளுக்கு நூலகமும்,தகவல் தொழில் நுட...\nதமிழகப் பெண்களிடம் பலாத்காரம்-2 மலையாளிகள் கைது\nஜனாதிபதி, ஏ-9 வீதியின் இரு மருங்கிலும் பழுதடைந்து ...\nவடபகுதி மாணவர்களுக்கு இரண்டு இலட்சம் சைக்கிள்கள்\nகனேடிய கடற்பரப்பில 200 இலங்கையரோடு சட்டவிரோதமான மு...\n20 வீதமான நிலக்கண்ணி வெடிகளே இதுவரையில் அகற்றப்பட்...\nவீராங்கனை சாந்தியை(28) ஞாபகம் இருக்கிறதா\nஅசின்விவகாரத்திலும் நடிகர் சங்கம் அந்தர்பல்டி அடித...\nவைத்தியர் மீது சிறைச்சாலையில் தாக்குதல் நடத்தியதாக\nபாதயாத்திரை நித்யானந்தா சிறை சென்று வந்த பிறகு தமி...\nகுவைத்தில கமலாவதி பதினேழு வருடங்களாக சம்பளமில்லாம...\nஅசின் போனது தவறில்லை சரத்குமார், நானும் இலங்கை சென...\nஅரச சேவையாளர்களுக்கு 2ஆம் மொழி கட்டாயம் : அரசு தீர...\nமலையகத்தில் நேற்றும் இன்றும் நான்கு பெண்கள் தற்கொலை\nதமிழகத்தில் திருமண பதிவு செய்யாத 7000 இலங்கைத் தம...\nஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் வெட்டிக் கொலை\nகிளிநொச்சியிலபோலி நாணயத் தாள்,் விஸ்வமடு, முல்லைத்...\nகாலிக் கடலில் இனந்தெரியாத இரு யுவதிகள்\nகளுவாஞ்சிக்குடியில் 30 லட்சம் ரூபா கொள்ளை\nபுனே: ஊழியர்களை இழுப்பதை நிறுத்திக் கொண்ட ஐடி நிற...\nஉருத்திரகுமாரா மனிதன் கொஞ்சம் மிருகம் எக்கசக்கம் க...\nகுஷ்பு, சுஹாசினி போல எனது வழக்கையும் தள்ளுபடி செய்...\nதிருவனந்தபுரம்: கேரள மாநிலம் கும்பாவுருட்டி அருவிப...\nCricket top 2009் அதிகம சம்பாதித்த “டாப் 5” வீரர்க...\nஅமெரிக்கஎண்ணெய்ப் படலம் தமிழகக் கடற்கரைப் பகுதிகளி...\nமானிப்பாயில் பற்றையை வெட்டியபோது பாரிய பங்கரொன்று ...\nசிதம்பரம் கோவிலில் தீண்டாமையின் அடையாளமாக நந்தன் ந...\nபிரியந்த செனவிரத்ன விளக்கமறியலில், கடந்தச் சனிக்கி...\nபிரான்ஸ் குடியரசு தினம் ்,டக்ளஸ் தேவானந்தா பிரதம ...\n‘அந்தரங்கம்,ஆண் பாலியல் தொழிலாளிகள் பற்றிய படமிது.\nஆனந்தவிகடனே மீண்டும் ஒருமுறை அருந்ததிராயிடம் பேட்ட...\nகைகளை பின்னால் கட்டியபடி \"பைக்' ஓட்டிய வாலிபர் சாதனை\nஇந்தியப் படையினருக்கு பிரமிப்பை ஏற்படுத்திய யாழ்ப்...\nபடம் தோல்வி;கடன் தொல்லை- மனைவியுடன் நடிகர் தற்கொலை\nஅசின,10 ஆயிரம் பேர்களுக்கு இலவச கண் அறுவை சிகிச்சை...\nகிளிநொச்சியில் அமைச்சரவைக் இன்று ஆரம்பமாகி, 44 அம...\nஇலங்கை வந்த பிரித்தானியாவைச் சேர்ந்த 14 வயது சிறிம...\nஇழப்பீட்டை நடிகர் விஜய் தரும் வரை அவரது படங்களுக்க...\nஹைதராபாத்தைச் சேர்ந்த மாணவர் அமெரிக்காவில் சுட்டுக...\nநடிகர், நடிகைகள் இலங்கை பயணம்\nநக்சலைட்டுகள் 6 மாதத்தில் 97 தாக்குதல் : சட்டீஸ்க...\nDynCorp,பயங்கரவாத புலிகளின் உரை அமெரிக்க விமானப்பட...\nபிறந்து 4நாள் ஆன குழந்தையின் உடல் உறுப்பு தானம்\n22 வயதில் சாதனை : ஐ.ஐ.டி உதவிப் பேராசிரியர் பணி\nகடல் நீர் மட்டம் இந்தியா, இலஙகை, பங்களாதேஸ் மற்று...\nசாரதிகளிடம் லஞ்சம் பெறும் மன்னார் போக்குவ���த்து பொல...\nKKS சிமெந்து தொழிற்சாலை எவருக்கும் வழங்கப்பட மாட்ட...\nஅசினிடம் எங்களை விட்டு போக வேண்டாம் இங்கேயே இருங்கள்\nவரதராஜப்பெருமாள், தெற்கில் எமது மக்கள் இருக்கிறார்...\nகம்யூ., கட்சி பொதுச் செயலர் ஏ.பி.பரதன், HONDA கிசு...\nபா.ம.க.,வில் புகைச்சல் ஒரே குடும்பத்திற்கு மூன்று...\nசிங்கள கிராமத்திற்கு கடகங்கள் காவிய வரலாற்றை ் கண்...\nவவுனியா வைத்தியசாலையில் கண்சிகிச்சை நிலையத்திற்கு ...\n1200 ஏக்கர் நிலப்பரப்பில் வாகரையில் கடற்படை முகாம்\nபுலிகளின்அரசியல் தலைமை செயலகத்தில் இலங்கை அரசின் அ...\nவடக்கு, கிழக்கு இணைந்த மாகாண சபை தொடர்ந்து செயற்பட...\nயாழ்தேவி ஓமந்தை வரை நீடிக்கப்படும். ஓமந்தை ரயில் ...\nஇலங்கையர் மூவருக்கு டோகா நீதிமன்றம் சிறைத் தண்டனை\nஜேர்மனியில இரண்டு்தமிழர்கள் ஆற்றில் மூழ்கி பரிதபமா...\nசத்யா, பாக்யாஞ்சலி வாயில் போட்ட வெற்றிலையை நாசூக்க...\nதெலுங்குக்குப் போகும் 'அங்காடித் தெரு '\nஅருப்புக்கோட்டை: பிரபல ரவுடி என்கவுண்டரில் சுட்டு...\nமுஸ்லீம் பெண்ணும் இந்துப்பையனும் காதலித்து வந்துள்...\nகந்துவட்டி: குடும்ப பெண்ணை மிரட்டி ஆபாச படம்\nபாகிஸ்தானில் இந்துக்கள் மீது தாக்குதல்\nவறுமையில் ஆபிரிக்காவை பின் தள்ளிய இந்தியா\nகுடும்ப அராஜக ஆட்சி - நொறுங்கி போன மக்கள்; கோவையில...\nNGO,சுனாமி நிதி் பல மில்லியன் டாலர்கள் புலிகள் கொள்ளை\nஈவ்டீசிங் காரணமாக +1 மாணவி தற்கொலை\nமுறைகேடுகள்,மேல் மாகாணத்தில் அதிபர்கள் 7 பேர் இதுவ...\nயாழ். அதிபராக திருமதி இமெல்டா சுகுமார் பதவியேற்றுள...\nஜேர்மன் புலிகளுக்கும் இலங்கை தூதரக அதிகாரிகளுக்கும...\nரணில் விக்கிரமசிங்க- ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பேச்ச...\nதமிழ்க் கட்சிகளின் அரங்கம் என பெயர் மாற்றம்\nராமதாஸ் ஆவேசப்பேச்சு ,நம்மை பிரித்து விட்டனர\nஅறம் - சாவித்திரி கண்ணன்\nநாஞ்சில் சம்பத் :\"கூவத்தூர்\" கூத்தும்.. டீக்கடையும...\nஇன்று 147 பேர் உயிரிழந்துள்ளனர்.ஒரே நாளில் அதிர்ச்...\nஆக்சிஜன் பற்றாக்குறை: டெல்லி பாட்ரா மருத்துவனையில்...\nகுஜராத் கொரோனா மருத்துவமனையில் தீ விபத்து: 18 பேர்...\nகே வி ஆனந்த் என்றொரு கேமராக்காதலன்\nதமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார்\nகங்கைகொண்ட சோழபுரத்தில் நடக்கும் அகழாய்வில் அரண்மன...\nஈவிஎம்களில் என்ன செய்ய முடியும்\nமம்மூட்டியின் ONE கடைக்கால் சந்திரன் பினராயி விஜ...\nக���ரோனா இந்தியா-நிமிடத்திற்கு 2 மரணங்கள், வினாடிக்...\nகொரோனா தடுப்பூசிக்கு கே.வி.ஆனந்த் மற்றொரு பலியா..\nகொரோனா ஆக்சிஜன்: சமூக ஊடக காணொளிகளை தடுக்கக் கூடாத...\nவெற்றியைக் கொண்டாடுவதைவிட உயிரைப் பாதுகாப்பதுதான்...\nநாளை மறுநாள் ஓட்டு எண்ணிக்கை- தமிழகத்தில் 1 லட்சம்...\nஇயக்குனர் ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த் மாரடைப்பால் க...\nஜெர்மனியில் மருத்துவமனையில் நடந்த கொலைவெறி தாக்குத...\nட்ரோன் மூலம் விவசாய பயிர்களுக்கு மருந்தடிக்கும் சோ...\nமத்திய அரசு இதயமற்றதாக உள்ளது - நிர்மலா சீதாராமனின...\nஅறிஞர் ஜெயரஞ்சனுக்கு பசுமை விகடன் சவால்\nகோவிட்19 2.0 இல் இருந்து மீண்ட தொழிலதிபரின் அனுபவங...\nமே.வங்கம் மம்தா கட்சி 158, பாஜக 115, காங். அணி 19...\nகேரளாவில் இடசாரிகள் பிரமாண்ட வெற்றி\nதிமுக 234 தொகுதிகளிலும் வெல்லும்.. வாக்கு வித்தியா...\nஅதிமுக முன்னாள் அமைச்சர் அரங்கநாயகம் உடல்நல குறைவா...\nபாஜக தமிழ்நாட்டில் 20 தொகுதிகளிலும் வாஷ் அவுட் ஆகு...\nபீகாரில் 7 ஆண்டு கால மனைவியை காதலனுக்கு மணமுடித்த...\nகடப்பாரையால் தாயை தாக்கி கொலை செய்த மகன் .. கரூரி...\nபரமக்குடி கொரோனா சிகிச்சைக்கு வந்த அரசு டாக்டர்களை...\nமகாராஷ்டிராவில் ஒரே நாளில் 985 பேரை காவு கொண்டது ...\nஸ்டெர்லைட் ஆக்சிஜன் உற்பத்தியை தூத்துக்குடி ஆட்சிய...\nயாழ்ப்பாணம் .. எமில் சௌந்தரநாயகம் .. உலகை கலக்கிய ...\nபெங்களூரில் 3 ஆயிரம் கொரோனா நோயாளர்களை காணவில்லை.\nபரமகுடி மருத்துவர்களை இரவில் கைது செய்து துன்புறுத...\nஅரசு ஒரு மாதம் லாக்டவுன் அறிவித்தால் என்ன செய்யலாம்\nதடுப்பூசியில் 3,28,000 கோடி கொள்ளை\nதமிழகத்தில் மருந்து, ஆக்சிஜன் கையிருப்பை கண்காணிக்...\nடெல்லியில் உடல்களை எரிக்க இடமில்லை; திறந்த வெளிகளி...\nகர்நாடகா: ஆக்சிஜன் கிடைக்காமல் 8 கொரோனா நோயாளிகள் ...\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஜூலை 31 வரை ஆக்சிஜ...\nஅசாமில் பயங்கர நிலநடுக்கம் 6.4 ரிச்டர் அளவில் . ...\nஇலங்கையில் முஸ்லிம் பெண்கள் பர்தா அணிய தடை- அமைச்ச...\nதிரிபுராவில் திருமண வீட்டில் புகுந்த நீதிபதி .. அ...\nதிமுகவின் வெவ்வேறு தளங்களில் அமைச்சரவை பற்றிய விவா...\nபிரெஞ்சு தமிழறிஞர் பிரான்சுவா குரோ.. பிரான்ஸ் போலி...\nஆக்சிஜன் தயாரிப்பை ஆதரிக்கவும் வேண்டும் கண்காணிக்க...\nதி.மு.க அரசு அமைந்ததும் ஸ்டெர்லைட் ஆலை முழுமையாகச்...\nஇந்திபேசா மாநில முதல்வர்களுக்கு வை���ோ கடிதம்\nகாப்பர் பிளான்ட்டுக்குள் நுழையக் கூடாது: ஸ்டெர்லைட...\nஸ்டெர்லைட் அடாவடி - மார்வாடிகள் கையில் தமிழ்நாடு\nFrançois Gros பிரான்ஸ் நாட்டுத்தமிழறிஞர் பிரான்சுவ...\nஇந்தோனீசியாவில் காணாமல்போன நீர்மூழ்கிக் கப்பல்; 53...\nநாகரிகத்தைக் குலைக்கும் நாம் தமிழர் கட்சி\nஉத்தர பிரதேசதில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு இல்லையாம்\nஸ்டெர்லைட்: திமுகவின் அணுகுமுறையில் மாற்றமா\n\"தேன்\" - சமூக போராளிகளும் பார்க்க மறந்து போன குரங்...\nதமிழகத்திலும் ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடு...\nகோலார் வயல் திருமதி செல்வி தாஸ் காலமானார் .. முன்...\nதமிழகத்தில் ஓராண்டுக்கு ஜனாதிபதி ஆட்சி \nதிமுக ஆட்சி அமைந்த பிறகு, எந்தச் சூழலிலும் நச்சு ஆ...\nமே 1 மற்றும் 2 தேதிகளில் முழு ஊரடங்கை அறிவிக்க தம...\nஸ்டெர்லைட் ஆலையில் 4 மாதத்துக்கு மட்டும் ஆக்சிஜன் ...\nசீமானால் கைவிடப்பட்ட நடிகை விஜயலட்சுமி வீதிக்கு வந...\nதமிழ்நாட்டுக்கு ஆக்ஸிஜன் தேவை; பிற மாநிலங்களுக்கு ...\nநடிகர் அஜித்தின் ஆணவத்தால் வேலையும் இழந்து நிர்கதி...\nசனாதனத்திற்கு எதிரான களத்தில் திமுகவும் ஸ்டாலினும்...\nதமிழக மருத்துவ கட்டமைப்புக்கள் மீது நம்பிக்கை வைத்...\nஇந்தியாவிற்கு கைகொடுக்க முன்வரும் உலக நாடுகள்\nதமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு: சாலைகள் வெறிச்சோடி...\nபிரான்ஸ் போலீஸ் நிலையத்துக்குள் பெண் அதிகாரி கழுத்...\nஇலங்கை முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கைது ஏன்\nசுப்புலட்சுமி ஜெகதீசன் தமிழ்நாட்டின் முதல் பெண் சப...\nஎந்த அளவுக்கு அழிவை ஏற்படுத்த முடியும் என்பதை, இந்...\nமாநிலங்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசம்: மத்திய அரசு\nகொரோனாவால் முழு இந்தியாவே திணறும் போது தமிழகம் மட்...\nநாம் தமிழர் தடா சந்திரசேகர், பழனி உள்ளிட்ட ஆபாச பே...\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/crime/30333-husband-killed-by-his-own-wife.html", "date_download": "2021-05-07T01:46:34Z", "digest": "sha1:XSISCS5DV2LISSVLQD7V5RHA35NKDIIB", "length": 13922, "nlines": 103, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "பல ஆண்களுடன் தொடர்பு டார்ச்சர் செய்த கணவன் – போட்டு தள்ளிய மனைவி! - The Subeditor Tamil", "raw_content": "\nபல ஆண்களுடன் தொடர்பு டார்ச்சர் செய்த கணவன் – போட்டு தள்ளிய மனைவி\nபல ஆண்களுடன் தொடர்பு டார்ச்சர் செய்த கணவன் – போட்டு தள்ளிய மனைவி\nகள்ளகாதல் விவகாரத்தில் கணவனை மனைவி கொன்ற சம்பவ���் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதென்காசி மாவட்டம் குத்துக்கல் வலசையைச் சேர்ந்தவர் 33 வயதான அபிராமி. அழகுக்கலையகம் நடத்தி வரும் இவரது முதல் கணவன் இறந்து விட்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.\nஇந்த நிலையில் அச்சன்புதூரை சேர்ந்த 20 வயதான காளிராஜ் என்பவருக்கும் அபிராமிக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. காளிராஜின் விருப்பத்தின் பேரில் 2017ம் ஆண்டு காதலர்களுக்குத் திருமணம் நடந்துள்ளது. குத்துக்கல்வலசையில் தம்பதி வசித்து வந்தனர். 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் காளிராஜைக் காணவில்லை. இதுகுறித்து அவரது தாய் கேட்டபோது தன்னிடம் சண்டை போட்டு விட்டு கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறி விட்டதாக அபிராமி பதிலளித்து சமாளித்துள்ளார்.\nதென்காசி காவல்நிலையத்தில் காளிராஜின் தாய் புகாரளித்தார். அபிராமியிடம் துருவித் துருவி விசாரித்தபோது அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின. அபிராமிக்கு பல ஆண்களுடன் கள்ளத் தொடர்பு இருந்து வந்துள்ளது. இதனால் பெயரளவுக்கு கணவன் என்ற பெயரில் காளிராஜை அவர் திருமணம் செய்தார்.\nமனைவியின் அத்துமீறல்கள் தெரியவந்த உடன் காளிராஜ் கண்டித்துள்ளார். தொடர்புகளை அபிராமி துண்டிக்காவிட்டால் ஊரில் சொல்லி விடுவதாக மிரட்டியுள்ளார் காளிராஜ். காளிராஜின் நெருக்கடி தாங்க முடியாத அபிராமி தனது ஆண் நண்பர்களிடம் கூறி காளிராஜைத் தீ்ர்த்துக் கட்ட முடிவு செய்துள்ளார்.\nஅதையடுத்து தான் 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அபிராமி, அவரது நண்பர் மாரிமுத்து மற்றும் சிலர் சேர்ந்து காளிராஜைக் கொலை செய்துள்ளனர். பின்னர் வீட்டு வாசலில் குழிதோண்டி சடலத்தைப் புதைத்துள்ளனர்.\nஅந்த இடத்தில் தளக்கல் பாவி, அதன் மீது துளசி மாடத்தையும் வைத்து விட்டார் அபிராமி. அபிராமி சொன்ன இடத்தில் போலீசார் ஜேசிபி இயந்திரம் மூலம் தோண்டிப் பார்த்த போது காளிராஜின் எலும்புகள் மட்டும் அகப்பட்டன. மீட்கப்பட்ட எலும்புகள், பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கொலை வழக்கில் அபிராமி, மாரிமுத்து கைது செய்யப்பட்டுள்ளனர். வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரைப் போலீசார் தேடி வருகின்றனர்.\nYou'r reading பல ஆண்களுடன் தொடர்பு டார்ச்சர் செய்த கணவன் – போட்டு தள்ளிய மனைவி\nஐபேக் நடத்தி�� எக்ஸிட்போல் ஸ்டாலினுக்கு ஷாக் – திமுக கைப்பற்றும் தொகுதிகள் எத்தனை\n18 வயதுக்கு மேற்பட்டோர்களும் தடுப்பூசி போடலாம்... மத்திய அரசு புதிய அறிவிப்பு\nஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…\nதம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…\nஆசைக்கு இணங்க மறுத்த பெண் - குத்தகைதாரர் வெறிச்செயல்\nகர்நாடகாவில் தடுபூசி போட்ட பெண்ணிற்கு நிகழ்ந்த கொடுமை\nபிறந்தநாள் விழாவிற்கு சென்ற 12 வயது சிறுமி… மொட்டைமாடியில் வைத்து இளைஞர் வெறிச்செயல்...\nமனைவியுடன் உல்லாசமாக இருந்த உதவியாளர்… கோயிலுக்கு அழைத்துச்சென்று அர்ச்சனை செய்த பூசாரி\n17வயது சிறுமியை 2 ஆண்டுகளாக பலாத்காரம் செய்த பலர் – உறைய வைக்கும் தகவல்கள்\nமனைவியின் தங்கைக்கூட உறவு… கண்டித்த கர்ப்பிணி பெண்ணிற்கு நிகழ்ந்த கொடூரம்\nஇரண்டு மரங்களை வெட்டியவருக்கு ரூ.1.21 கோடி அபாரதமாம்\nஇளம் பெண்ணை வசியப்படுத்திய தண்ணி கேன் சப்ளேயர் : குடும்பத்தினர்கள் விபரீதம்..\n14 வயது சிறுமியின் அந்தரங்க வீடியோக்களை வைத்து மிரட்டல்… பெற்றோர் அதிர்ச்சி..\n2 ஆண்டுகளாக சிறுமியை கற்பழித்த 3 பேர்… தாம்பரத்தில் நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்…\nசிறுமிக்கு ஆபாச வீடியோ அனுப்பிய திமுக பிரமுகரை பின்னி பெடலெடுத்த உறவினர்கள்\nதாயை கொன்று உடலை சாப்பிட்ட மகன்\nபல ஆண்களுடன் தொடர்பு.. காதலனிடம் கூறிவிட்டு இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…\nமேற்கு வங்காளம்: பாரதிய ஜனதாவின் கணக்கு தோற்றது எங்கு\nஉதயநிதிக்கு பதவி இல்லை: தமிழ்நாடு அரசின் புதிய அமைச்சர்கள் யார்\nகோவிட் தடுப்பூசி பற்றிய போலி எஸ்எம்எஸ்: கிளிக் செய்தால் ஆபத்து\nஇதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா – புதிய கட்டுப்பாடுகள் என்ன\nமக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்\n - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி\nபுறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு\nஎதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்\nஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்\nதிமுக அமைச்சரவையில் யாருக்கு என்ன பொறுப்பு…\nமனைவியுடன் உல்லாசமாக இருந்த உதவியாளர்… கோயிலுக்கு அழைத்��ுச்சென்று அர்ச்சனை செய்த பூசாரி\nமுதலமைச்சர் ஆனதும் ஸ்டாலினின் முதல் கையெழுத்து இதுதான்.. முழு எதிர்பார்ப்பில் மக்கள்..\nகோவிட்-19: ஆக்ஸிஜன் அளவை சோதிப்பது எப்படி\nராஜினாமா முடிவில் கே.பி.முனுசாமி – திமுகவுக்கு லாபமாக அமையுமா\nஇரவோடு இரவாக மேலும் புதியக் கட்டுப்பாடுகள் அறிவிப்பு : முழு விபரம்…\n1000ரூபாய் கையிருப்பு கூரை வீடு – சட்டமன்றத்தில் நுழையும் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ மாரிமுத்து\n தேமுதிக வீழ்ச்சிக்கு இதான் காரணம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilkilavan.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2021-05-07T01:00:09Z", "digest": "sha1:DUJLTMNLDRAGNUKQG5RHZTYWOU2PJAU6", "length": 2401, "nlines": 51, "source_domain": "tamilkilavan.com", "title": "பாசிப்பயறு Archives | Tamil Kilavan", "raw_content": "\nஉங்க வீட்ல பாசிப்பயறு இருக்க அப்போ உடனே இப்படி செய்து போடுங்க 2 மடங்கு வெள்ளை ஆகிடுவீங்க\nஉங்க வீட்ல பாசிப்பயறு இருக்க அப்போ உடனே இப்படி செய்து போடுங்க 2 மடங்கு வெள்ளை ஆகிடுவீங்க\nகடையில் முட்டை வாங்கறதுக்கு முன்னாடி இந்த வீடியோ பாருங்க\n2 முட்டை இருக்கா வீட்டில் உள்ள அனைவருக்கும் கிரிஸ்பியான ஈவினிங் ஸ்நாக்ஸ் ரெடி.\nமுட்டை சுக்கா லஞ்சுக்கு பக்காவான சைடிஷ் 10 நிமிடத்தில் இப்படி சுவையா செய்து கொடுத்து அசத்துங்க.\nபல கோடி சொத்துக்கு சொந்தக்காரி ஒரு வேலை சோற்றுக்காக வீட்டு வேலை செய்து பிழைக்கும் அவலம்\n20 ஆயிரம் வருடங்களுக்கு முன் மூழ்கிப்போன தமிழனின் வரலாறு.. தற்போது மெல்ல மெல்ல மிதந்து வருகிறது.. தற்போது மெல்ல மெல்ல மிதந்து வருகிறது.. ஒவ்வொரு தமிழனும் உலகத்துக்கு அறிய நண்பர்களுடன் பகிருங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/lifestyle/health/benefits-of-nendhiram-fruit/cid2698072.htm", "date_download": "2021-05-07T01:04:48Z", "digest": "sha1:VED57KO2CSCRB6BWII7VHOI5XAYXYF5U", "length": 4172, "nlines": 47, "source_domain": "tamilminutes.com", "title": "நேந்திரம் பழத்தின் நன்மைகள் இவைகளா?", "raw_content": "\nநேந்திரம் பழத்தின் நன்மைகள் இவைகளா\nநேந்திரம் பழம் என்றால் நமக்கு ஞாபகம் வருவது என்னவோ நேந்திரம் சிப்ஸ். இத்தகைய நேந்திரம் பழத்தின் நன்மைகள் ஏராளம்.\nநேந்திரம் பழம் இரத்தத்தில் உள்ள இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையினை அதிகரிக்கச் செய்கின்றது.\nமேலும் உடல் பலவீனமாக இருப்பவர்கள், நோய் வாய்ப்பட்டவர்கள், உடல் மெலிந்து இருப்போர் ஆகியோர் நேந்திரம் பழத்தினை த��னமும் எடுத்து வந்தால் உடல் எடை நிச்சயம் கூடும்.\nகுழந்தைகளுக்கு 6 மாதங்கள் முதல் உணவு கொடுக்க ஆரம்பிக்கும்போது நேந்திரம் பழத்தினை வேகவைத்து நெய் சேர்த்துக் கொடுத்தால் குண்டாவார்கள்.\nமேலும் இது ஞாபக சக்தியினை அதிகரிப்பதாகவும், உடலினை ஆரோக்கியமாகப் பராமரிக்க உதவுவதாகவும் உள்ளது.\nஅதேபோல் இருமல் பிரச்சினை இருப்பவர்கள் நேந்திரம் பழத்தினை பாலுடன் சேர்த்து எடுத்துக் கொண்டால் நிரந்தரத் தீர்வினைப் பெறலாம்.\nஇரும்புச் சத்து குறைபாட்டு நோயான இரத்த சோகைப் பிரச்சினை உள்ளவர்கள் நேந்திரம் பழத்தினை தொடர்ந்து எடுத்து வரவேண்டும்.\nமேலும் இதயம் சம்பந்தப்பட்ட நோய்களை வராமல் தடுப்பதாய் நேந்திரம் பழமானது இருந்துவருகின்றது.\nமேலும் காசநோய் பிரச்சினை உள்ளவர்கள் நேந்திரம் பழத்தினை சாப்பிட்டு வரும்பட்சத்தில் விரைவில் நலம் பெறுவர்.\nTamil Minutes இணையதளம் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. புதிய செய்திகளையும், பயனுள்ள தகவல்களையும் வழங்குவதே இந்த இணையதளத்தின் நோக்கமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithisaral.in/2020/10/", "date_download": "2021-05-07T00:07:27Z", "digest": "sha1:JSZN46VUN55RCFZMLVBHYFQGB46DUBNM", "length": 8709, "nlines": 151, "source_domain": "www.seithisaral.in", "title": "October 2020 - Seithi Saral", "raw_content": "\nதனுசுவுடன் ஜோடி சேருகிகிறார் மாளவிகா மோகனன்\nDhanush is joined by Malvika Mohanan 31/10/2020 நடிகர் தனுசுடன் ஒரு படத்தில் மாளவிகா மோகனன் ஜோடி சேருகிறார். நடிகர் தனுசு தனுஷ் நடிப்பில் தற்போது...\nஊரடங்கு காலத்தில் உடல் அமைப்பை மாற்றிய சிம்பு\nSimbu who changed the body structure during the curfew 31/10/2020கொரோனா ஊரடங்கு நடிகர்-நடிகைகள் வெளியே வராமல் இருந்தனர். ஆனால் பலர் தங்களது படங்களை இணைய...\nஹாலிவுட் நடிகர் ஷான் கானெரி மரணம்\nHollywood actor Shawn Connery has died31/10/2020 ஜேம்ஸ் பாண்ட் பாத்திரங்களில் நடித்து புகழ் பெற்ற ஹாலிவுட் நடிகர் ஷான் கானெரி மரணம் அடைந்தார். ஷான் கானெரி...\nதமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள், சினிமா தியேட்டர்கள் திறக்க அனுமதி\nதமிழகத்தில் இன்று 2,511 பேருக்கு கொரோனா\nCorona for 2,511 people in Tamil Nadu today 31/10/2020 தமிழகத்தில் இன்று புதிதாக 2,511 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.கொரோனா தமிழகத்தில் கொரோனா...\nதிருப்பதி கோவிலில், முன்பதிவு செய்தவர்கள் விரும்பும் நேரத்தில் தரிசனம் செய்யலாம்\nAt the Tirupati Temple, bookings can be made at any time 30/10/2020 திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஊரடங்கு காலத்��ில் முன்பதிவு செய்த பக்தர்கள்...\n7.5 சதவீத ஒதுக்கீட்டை இந்த ஆண்டே நிறைவேற்ற நடவடிக்கை; முதல்வர் தகவல்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத ஒதுக்கீடு மசோதாவிற்கு கவர்னர் ஒப்புதல்\nதேவாலயத்துக்குள் புகுந்து 3 பேரை கொன்ற பயங்கரவாதி\nThe terrorist who broke into the church and killed 3 people 29/10/2020 பிரான்ஸ் நாட்டில் தேவாலயத்துக்குள் புகுந்த பயங்கரவாதி 3 பேரை கொன்றான்....\nகாஷ்மீரில் பாரதீய ஜனதா நிர்வாகிகள் 3 பேரை சுட்டுக் கொன்ற பயங்கரவாதிகள்\nTerrorists shot dead 3 BJP executives in Kashmir 29/10/2020 காஷ்மீரில் பாரதீய ஜனதா நிர்வாகிகள் 3 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர். பயங்கரவாதிகள் காஷ்மீரில் பயங்கரவாதத்தை...\nமு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை விவரம்\nதூத்துக்குடிக்கு 2 மந்திரிகள்: திருநெல்வேலி, தென்காசி ஏமாற்றம்\nதிருப்பத்தூரில் இறந்த 5 பேர் கொரோனா நோயாளிகள் – மருத்துவ அதிகாரி விளக்கம்\nதுணை தலைவர் விலகல்; கமல் காட்டம்\nதமிழகத்தில் ஒரு நாள் கொரோனா பதிவு 24,898 ஆக உயர்வு\nUma on இராமருக்கு ஓர் அக்காள் உண்டு தெரியுமா\n.. தீராத ஒரு தகராறு….(சொல்லாராய்ச்சி/ சிவகாசி முத்துமணி)\nK.Kumaresan on தென் மாவட்ட மக்கள் வெளியே வர வேண்டாம் ; முதல்வர் எச்சரிக்கை\nPonnu on ஏழைகளுக்கு எட்டிவிடும் மருத்துவப் படிப்பு\nமு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை விவரம்\nதூத்துக்குடிக்கு 2 மந்திரிகள்: திருநெல்வேலி, தென்காசி ஏமாற்றம்\nதிருப்பத்தூரில் இறந்த 5 பேர் கொரோனா நோயாளிகள் – மருத்துவ அதிகாரி விளக்கம்\nதுணை தலைவர் விலகல்; கமல் காட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinibitz.com/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2021-05-07T00:22:44Z", "digest": "sha1:RDGZTSY6LNAUQSSEW372NB56D4T6XM5F", "length": 15248, "nlines": 72, "source_domain": "www.tamilcinibitz.com", "title": "நீர் தொட்டியில் உருவகப்படுத்தப்பட்ட கருந்துளைகள் முதல் முறையாக \"தலைகீழ் எதிர்வினை\" வெளிப்படுத்துகின்றன", "raw_content": "முழுமையான செய்தி உலகம் உங்களுக்காக.\nநீர் தொட்டியில் உருவகப்படுத்தப்பட்ட கருந்துளைகள் முதல் முறையாக “தலைகீழ் எதிர்வினை” வெளிப்படுத்துகின்றன\nஆய்வகத்தில் கருந்துளை செய்வது கடினம். நீங்கள் நிறைய மாவை சேகரிக்க வேண்டும், அது ஈர்ப்பு ரீதியாக தன்னைத்தானே சிதைக்கும் வரை கசக்கி, வேலை, வேலை, வேலை. அதைச் செய்வது மிகவும் கடினம், நாங்கள் அதை ஒருபோ��ும் செய்யவில்லை. இருப்பினும், நீர் தொட்டியைப் பயன்படுத்தி உருவகப்படுத்தப்பட்ட கருந்துளையை நாம் உருவாக்கலாம், மேலும் இது கருந்துளைகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பது பற்றிய சுவாரஸ்யமான விஷயங்களைச் சொல்லலாம்.\nகருந்துளைகளின் நீர் உருவகப்படுத்துதல்கள் சாத்தியமாகும், ஏனெனில் நீரின் நடத்தையை விவரிக்கும் கணிதமானது ஈர்ப்பு அலைகள் போன்றவற்றின் நடத்தையை விவரிக்கும் கணிதத்திற்கு ஒத்ததாகும். ஈர்ப்பு இடைவினைகள் திரவ வடிவங்களில் நிகழ்கின்றன, எனவே அவற்றைப் படிக்க நீங்கள் ஒரு திரவத்தைப் பயன்படுத்தலாம். இருப்பினும், இந்த நீர் மாதிரிகளுக்கு வரம்புகள் உள்ளன, எனவே நீர் உருவகப்படுத்துதல்களைப் படிக்கும்போது நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.\nகருந்துளைகளின் நீர் மாதிரிகளில் உள்ள ஒரு சிக்கல் என்னவென்றால், அதைச் செயல்படுத்துவதற்கு நீங்கள் உருவகப்படுத்துதலை அதிகரிக்க வேண்டும். கருந்துளையால் பொருளை எவ்வாறு கைப்பற்ற முடியும் என்பதை நீங்கள் படிக்க விரும்புகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். குளியல் தொட்டியை காலி செய்யும் போது சில நேரங்களில் காணப்படும் சூறாவளி போன்ற வேர்ல்பூலைப் போன்ற நீர் சுழலைப் பயன்படுத்தி நீங்கள் கருந்துளையை உருவகப்படுத்தலாம். சுழல் தொடர்ந்து செல்ல, உங்கள் கணினியை நீங்கள் சக்தியடையச் செய்ய வேண்டும், இதனால் நல்ல தரவைப் பெற முறை நீண்ட நேரம் நிலையானதாக இருக்கும்.\nஇதன் காரணமாக, தலைகீழ் எதிர்வினை எனப்படும் உண்மையான கருந்துளைகளுடன் ஏற்படக்கூடிய ஒரு விளைவை நீர் மாதிரிகள் வெளிப்படுத்த முடியாது என்று பொதுவாக கருதப்பட்டது. ஒரு பொருள் அதன் சூழலுடன் வினைபுரியும் ஒரு தொடர்பு இருக்கும்போது தலைகீழ் எதிர்வினை ஏற்படுகிறது. உதாரணமாக, ஒரு கருந்துளை பொருளைப் பிடிக்கும்போது, ​​அதன் நிறை அதிகரிக்கிறது. வெகுஜனத்தின் இந்த அதிகரிப்பு கருந்துளை அதைச் சுற்றியுள்ள இடத்தை மாற்றியமைக்கும் விதத்தை மாற்றுகிறது, இதனால் சுற்றியுள்ள இடத்தை சிறிது மாற்றுகிறது. கருத்து ஒரு முக்கியமான நிகழ்வு, ஆனால் நுட்பமான மற்றும் படிப்பது கடினம்.\nகருந்துளையை உருவகப்படுத்தும் நீர் சுழல். கடன்: நாட்டிங்ஹாம் பல்கலைக்கழகம்\nஇருப்பினும், சமீபத்தில், ஒரு குழு தலைகீழ் எதிர்வினை நீரின் உருவகப்படுத்து��ல் மாதிரிகளில் காணப்படுவதைக் கண்டுபிடித்தது. ஈர்ப்பு அலைகளின் பின்னணி சுழலும் கருந்துளையுடன் எவ்வாறு தொடர்பு கொள்ளலாம் என்பதை ஆராய்ச்சி ஆய்வு செய்தது. அவர்களின் நீர் மாதிரியில், அவர்கள் ஒரு கருந்துளையை உருவகப்படுத்தும் நீர் சுழலை உருவாக்கி, பின்னர் சுழல் நோக்கி ஒரு சிற்றலை அலையை உருவாக்கினர். சுழல் மற்றும் அலைகளுக்கு இடையிலான எதிர்வினை சுழல் சாதாரணமாக இருப்பதை விட வேகமாக வளர காரணமாக அமைந்தது. இந்த வழியில், ஈர்ப்பு அலைகள் பின்னூட்ட விளைவு மூலம் கருந்துளையின் வளர்ச்சியை துரிதப்படுத்தக்கூடும்.\nREAD நாம் நினைத்ததை விட பிரபஞ்சம் குறைந்த மக்கள் தொகை கொண்டதாக நாசா விண்கலம் கண்டுபிடித்தது\nநீர் உருவகப்படுத்துதலில், எதிர்வினை போதுமானதாக இருந்தது, அது நிகழும்போது குழு அவர்களின் தொட்டி வீழ்ச்சியில் நீர் மட்டத்தைக் காணக்கூடியதாக இருந்தது, இது குறுகிய நேர அளவீடுகளில் எதிர்வினை ஏற்படக்கூடும் என்பதை நிரூபிக்கிறது.\nஇந்த ஆய்வு சொந்தமாக சுவாரஸ்யமானது என்றாலும், தலைகீழ் எதிர்வினை பல நீர் உருவகப்படுத்துதல்களுடன் கணக்கிடப்பட வேண்டும் என்பதையும் இந்த வேலை காட்டுகிறது. நீர் சுழல் உருவகப்படுத்துதல்கள் ஒரு நிலையான பின்னணியைக் கொள்ளலாம் என்று பொதுவாக கருதப்படுகிறது, அதாவது எந்தவொரு தலைகீழ் எதிர்வினைகளும் மாதிரியில் புறக்கணிக்கப்படலாம். ஹாக்கிங் கதிர்வீச்சு போன்ற கருந்துளைகளின் பிற விளைவுகளைப் படிக்கும்போது அந்த அனுமானம் எவ்வாறு செயல்படாது என்பதை இந்த வேலை காட்டுகிறது.\nஆய்வகத்தில் உண்மையான கருந்துளைகள் உருவாக்கப்படுவதற்கு சிறிது நேரம் ஆகும். அதிர்ஷ்டவசமாக, இது போன்ற நீர் உருவகப்படுத்துதல்கள் இன்னும் நமக்கு கற்பிக்க நிறைய உள்ளன.\nகுறிப்பு: குட்ஹூ, ஹாரி, மற்றும் பலர். “அனலாக் கருந்துளை சோதனையில் தலைகீழ் எதிர்வினை. ” உடல் ஆய்வு கடிதங்கள் 126.4 (2021): 041105\nநான் விரும்புகிறேன் ஏற்றுகிறது …\nபொது எழுத்தாளர். ஸோம்பி நிஞ்ஜா. தீவிர தொடர்பாளர். பீர் அறிஞர். பாப் கலாச்சார ரசிகர். ஆய்வுப்பணி. ட்விட்டர் நிபுணர்.\nபுதிய கோவிட் மாறுபாடு: அமெரிக்காவில் இங்கிலாந்தில் முதன்முதலில் அடையாளம் காணப்பட்ட 50 க்கும் மேற்பட்ட வழக்குகளை சி.டி.சி கண்டறிந்துள்ளது.\nகலிபோர்னியாவில் குறைந்தது 26 வழக்குகள், புளோரிடாவில் 22 வழக்குகள், கொலராடோவில் இரண்டு வழக்குகள் மற்றும் ஜார்ஜியா...\nநாசாவின் எஸ்.எல்.எஸ் ராக்கெட் இரண்டாவது மற்றும் நீண்ட சூடான தீ சோதனை மூலம் செல்லும்\nமோசமான வானியல் | பிரபஞ்சத்தின் வயது எவ்வளவு 13.77 பில்லியன் ஆண்டுகள் புதிய அளவீடுகள் என்று கூறுகின்றன\nஇன்று இரவு வானத்தில் வியாழன், புதன் மற்றும் சனி ஆகியவற்றின் அரிய இணைப்பை எவ்வாறு கண்டறிவது என்பது இங்கே.\nPrevious articleஐஎன்டி vs இஎன்ஜி: ஐபிஎல்லில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஒவ்வொரு தந்திரத்தையும் வெளிநாட்டு வீரர்களுடன் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள் என்று அஜிங்க்யா ரஹானே\nNext articleதமிழ் ஆர்வலர்கள் மற்றும் சிவில் குழுக்கள் இலங்கையில் நான்கு நாள் எதிர்ப்பு பேரணியை நடத்துகின்றனர்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nபாகிஸ்தான் கையாளுபவர்களுக்கு பயங்கரவாதிகளின் அரட்டை கிடைத்தது, எல்லையைத் தாண்டுவதற்கு முன் மொபைல் போன்களைக் கொடுத்தது | பாக்கிஸ்தானிய கையாளுபவர் ஜெய்ஷ் பயங்கரவாதிகளுடன் அரட்டை அடித்துக்கொண்டிருந்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xavi.wordpress.com/category/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-05-07T02:07:36Z", "digest": "sha1:L2QUJQLJVWGYABVLENEMGWKLVMR72SCL", "length": 207951, "nlines": 631, "source_domain": "xavi.wordpress.com", "title": "கட்டுரைகள் |", "raw_content": "எழுத்து எனக்கு இளைப்பாறும் தளம் \nபெண்ணில்லாத உலகத்தைக் கற்பனை செய்து பார்ப்பதே கடினமான ஒன்று அது ஒரு வறண்ட பாலையைப் போலவோ, நிழலில்லாத வெயில் சாலையைப் போலவோ மனதுக்குள் அனலாய் படரும்.\n அது உணர்வுகளால் பின்னப்பட்டது. ஆண்களின் உலகம் உழைப்பினாய் ஆனது பெண்களின் உலகம் உறவுகளால் ஆனது பெண்களின் உலகம் உறவுகளால் ஆனது பெண்கள் வசிக்கும் வீடுகள் பூந்தோட்டங்களாகவும், ஆண்கள் மட்டுமே உலவும் வீடுகள் உழவு நிலங்களாகவும் காட்சியளிக்கும்.\nஎந்த ஒரு ஆணும் முழுமையடைய வேண்டுமெனில் அவன் மூன்று பெண்களின் அரவணைப்பில் வளரவேண்டும். அதில் முதலாவதாக வருபவர் அன்னை ஒவ்வோர் மனிதனுக்கும் முதல் காதல் அன்னையோடு தான். கடவுளின் அன்பை, இயற்கையின் அழகை, நேசத்தின் செயலை அவன் அறிமுகம் கொள்வது அன்னையிடம் தான் \nவிழியும் விழியும் நேசம் பரிமாறும் அழகை நீங்கள் அன்னை மழலை உறவ���ல் தான் பரவசத்துடன் காண முடியும். புன்னகைக்குள் புதையல் இருப்பதை அந்த அன்னைச் சிரிப்பில் தான் அறிய முடியும். மண்ணை மிதிக்கும் முன் மெல்லிய பாதங்கள் என்னை மிதிக்கட்டும் என கன்னம் நீட்டும் அன்பல்லவா அன்னை \nதொப்புழ் கொடியில் நேசம் ஊற்றி, மழலை வழியில் மடியில் ஏந்தி, சின்ன வயதில் தோளில் தூக்கி, பருவ வயதில் பெருமிதம் சிந்தி, கடைசி வரையில் கண்ணில் சுமப்பவளல்லவா அன்னை முதுமையின் முக்கால் படியில் நடக்கும் போதும் அன்னைக்கு பிள்ளை மழலையாய் தான் இருப்பான். அது தான் அன்னை அன்பின் தனித்துவம் முதுமையின் முக்கால் படியில் நடக்கும் போதும் அன்னைக்கு பிள்ளை மழலையாய் தான் இருப்பான். அது தான் அன்னை அன்பின் தனித்துவம் \nஅன்னையின் அருகாமையில் இருப்பவன் சொர்க்கத்தின் வாசனையை நுகர்வான். தலைகோதும் அன்னையின் விரல்களில் இருப்பவன் துயரத்தின் தனிமையைத் தாண்டுவான். புன்னகைக்கும் அன்னையின் நிழலில் வாழ்பவன் முழுமையாய் வாழ்க்கையை நேசிப்பான். அன்னை, ஒரு உயிரை உலகிற்கு அறிமுகம் செய்தவள் மட்டுமல்ல \nஒரு உயிரை உலகாக அறிமுகம் செய்து வைத்தவள்.\nநம் மழலைப் பாதங்களை மண்ணில் பதிய வைத்தவள் அன்னையெனில், நமது கரங்களுக்கு சிறகுகளை முளைப்பிக்க வைத்தவள் சகோதரி தான். சகோதரிகளின் குடும்பத்தில் வளர்பவன் நீரோடையின் அருகே வளரும் மரம் போன்றவன். செழிப்பு அவனுக்கு குறைவு படாது. பெண்மையைப் போற்றும் மனிதனாக அவன் வளர்வான்.\nதவறு செய்யும் ஆண்களை, ‘அக்கா தங்கச்சி கூட பொறக்கலையா ’ என்று கேட்பார்கள். காரணம், அக்கா தங்கச்சி கூட பிறந்தவன் ஒழுக்கமானவனாக இருப்பான் எனும் நம்பிக்கை. அக்கா என்பவள் இரண்டாம் அன்னை ’ என்று கேட்பார்கள். காரணம், அக்கா தங்கச்சி கூட பிறந்தவன் ஒழுக்கமானவனாக இருப்பான் எனும் நம்பிக்கை. அக்கா என்பவள் இரண்டாம் அன்னை தங்கை என்பவள் மூத்த மகள் தங்கை என்பவள் மூத்த மகள் சகோதரிகளோடு பிறந்தவர்கள் கடவுளின் கருணையை கண்களில் பெற்றவர்கள். பிறரை சகோதரிகளாய் பார்க்கத் தெரிந்தோர் கருணையாம் கடவுளை கண்களில் பெற்றவர்கள்.\nவண்ணத்துப் பூச்சியின் அழகிய சிறகாய், பாறை வெளியின் நிழல் கூடாரமாய், தனிமை வெளியின் நம்பிக்கைத் துணையாய் எப்போதும் கூட வருபவர் தான் சகோதரி. பகிர்தலின் புனிதத்தை முதலில் கற்றுத் தருபவள் அவள் தான். ��ிட்டுக் கொடுத்தலின் அழகை புரிய வைப்பவள் அவள் தான். தங்கைக்கு அண்ணனாய் இருப்பது என்பது தேவதைக்கு சிறகாய் இருப்பதைப் போல சுகமானது \nஇந்தப் பணத்தில் கடைசியாய் நுழைந்து, கடைசி வரை நடப்பவர் தான் மனைவி இறைவன் இணையாய் கொடுக்கும் துணை இறைவன் இணையாய் கொடுக்கும் துணை நம் உதிரத்தின் பாகமல்ல, ஆனால் நமக்காய் உதிரம் சிந்த தயாராய் இருப்பவர். தியாகத்தின் முதல் அறிமுகம் நம் உதிரத்தின் பாகமல்ல, ஆனால் நமக்காய் உதிரம் சிந்த தயாராய் இருப்பவர். தியாகத்தின் முதல் அறிமுகம் தன் நிலத்தை விட்டு, தன் தோட்டத்து செடிகளை விட்டு, இடம் பெயர்ந்து போய் இன்னோர் நிலத்தில் வாசம் வீசும் மலர் \nஇரண்டறக் கலத்தலின் இல்லற விளக்கம் மனைவி பூவாய் வாழ்ந்து இந்த பூமிக்கு புதிய பூக்களைக் கொடுப்பவள் தான் மனைவி. வெளிப்படையான அன்பின் வெளிச்சப் புள்ளி. ஒளிவு மறைவற்ற நேசத்தின் தோழி. உயிருக்குள் உயிரைப் பதியமிடும் உன்னதம் பூவாய் வாழ்ந்து இந்த பூமிக்கு புதிய பூக்களைக் கொடுப்பவள் தான் மனைவி. வெளிப்படையான அன்பின் வெளிச்சப் புள்ளி. ஒளிவு மறைவற்ற நேசத்தின் தோழி. உயிருக்குள் உயிரைப் பதியமிடும் உன்னதம் உயிரிலிருந்து உயிரை பிரித்தெடுக்கும் பிரமிப்பு. என மனைவியின் அன்பு மகத்தானது \nமனைவியின் மௌனம் யுத்தத்துக்கு சமமான வீரியமானது. மனைவியின் கண்ணீர் பெருங்கடலின் ஆர்ப்பரிப்புக்கு சமமானது. மனைவியின் சிரிப்பு நீள் வானத்தின் பெருமழைக்கு ஒப்பானது. மனைவி என்பவள் மனிதனோடு நடக்கும் இறைவனின் பிம்பம். இமைகளில் இடையிலும் சுமைகளைத் தாங்கும் வலிமை அவளுக்கு உண்டு. ஒரு சின்ன பிரியத்தின் விசாரிப்பில் பிரபஞ்சத்தை பரிசளிக்கும் நேசம் அவளிடம் உண்டு.\nபெண்மையே ஆண்மையைக் கட்டியெழுப்புகிறது. மென்மையே வலிமையின் அடிப்படை. இந்தப் பெண்களோடு இரண்டறக் கலந்து வாழ்ந்தவர்கள் வாழ்வின் அழகையும், அர்த்தத்தையும் புரிந்து கொள்கின்றனர் \nஎன் அம்மாவின் முந்தானை பிடித்து நான் வளர்ந்திருக்கிறேன். புரியாமையின் பொழுதுகளில் அவரோடு வழக்காடியிருக்கிறேன். நான் செய்வதே சரி என பிடிவாதம் பிடித்திருக்கிறேன். சண்டை போட்டிருக்கிறேன். எல்லா சண்டைகளிலும் வெற்றி பெறும் வலிமை இருந்தும், அதை என் உதடுகளில் சூடி புன்னகைக்க வைத்தவர் அம்மா. அப்படித் தான் அம்மாவைப் புரிந்து கொண்டேன்.\nஎரிச்சலின் பொழுதுகளில், ஏமாற்றங்களின் வீதிகளில், அழுத்தங்களின் அரவணைப்பில் என் ஆயுதங்களையெல்லாம் நிராயுதபாணியான மனைவியை நோக்கி வீசியிருக்கிறேன். புறமுதுகு காட்ட மறுத்த ஈகோவின் சண்டைகளிலும் கலிங்க யுத்தமாய் காயங்களை நிரப்பியிருக்கிறேன். அவை தான் மனைவியை எனக்குப் புரிய வைத்தன‌.\nசகோதரியோடு சண்டையிடாத பால்ய தினங்களை எண்ணிவிடலாம். அந்த சிறு வயதுச் சண்டைகள் தான் இன்றைக்கு சண்டையில்லாத பொழுதுகளை உருவாக்கித் தந்திருக்கின்றன. அத்தகைய சண்டைகளில், விவாதங்களில், முரண்டு பிடித்தல்களில் தான் என் சகோதரிகளை நான் புரிந்து கொண்டேன்.\nபெண்களோடு இணைந்து வாழும் வாழ்க்கை நமக்கு புரிதலைக் கற்றுத் தருகிறது. பிரியத்தையும் பெற்றுத் தருகிறது.\nஅன்னை தெரசாவின் புன்னகை மென்மையானது அதுவே வலிமையான அன்பின் ஆயுதம் அதுவே வலிமையான அன்பின் ஆயுதம் பேனா மென்மையானது, வலிமையான சிந்தனைகளால் உலகைப் புரட்டும் வலிமை அதற்கு உண்டு. கண்ணீர் மென்மையானது பேனா மென்மையானது, வலிமையான சிந்தனைகளால் உலகைப் புரட்டும் வலிமை அதற்கு உண்டு. கண்ணீர் மென்மையானது மாபெரும் அரசுகளை நிலைகுலைய வைக்கும் வீரியம் அதற்கு உண்டு. பெண்மை மென்மையானது மாபெரும் அரசுகளை நிலைகுலைய வைக்கும் வீரியம் அதற்கு உண்டு. பெண்மை மென்மையானது ஆண்மையின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் வல்லமை அதற்கு உண்டு.\nஅன்னையின் மேகத்தில் துளியாய் உருவாகி, சகோதரி எனும் துளிகளோடு இணைந்தே பயணித்து, மனைவி எனும் மண்வெளியில் இரண்டறக் கலந்து அன்பின் நதியாய்க் கடலை அடைவதே இனிமையான வாழ்க்கை \nநமக்கு நேசத்தைக் கற்றுத் தந்தது அவர்கள் தான் \nநம் மதிப்புக்கு அடிப்படை அவர்கள் தான் \nஎந்த ஆண்மையிலும் மெல்லிய பெண்மை உண்டு \nஇனிய மகளிர் தின நல்வாழ்த்துகள்\nBy சேவியர் • Posted in Articles, Articles-Family, கட்டுரைகள்\t• Tagged கல்வி, சேவியர், தமிழ்க்கட்டுரைகள், பாதுகாப்பு, பெண்கள், பெண்மை, mobile, women, xavier\n“சார், லைஃப் டைம் ஃபிரீ கிரெடிட் கார்ட் சார்.. வாங்கிக்கிறீங்களா ” என வசீகரிக்கும் குரலில் உங்களுக்கு பல முறை அழைப்புகள் வந்திருக்கலாம் ” என வசீகரிக்கும் குரலில் உங்களுக்கு பல முறை அழைப்புகள் வந்திருக்கலாம் காரணம் கார்ட்களுக்கு இருக்கக் கூடிய மார்க்கெட் மற்றும் தேவை. காய்கறி வாங்குவதற்குக் கூட கிரடிட் கார்ட் எடுத்துக் கொண்டு போவது நகர்ப்புறங்களில் இன்றைக்கு சர்வ சாதாரணம். கிரடிட் கார்ட் வேண்டாம் என நினைப்பவர்களிடமும் இருக்கவே இருக்கும் ஒரு டெபிட் கார்ட்.\nமிச்சம் வைக்காமல் மாதா மாதம் பணம் கட்டுபவர்களுக்கு கிரடிட் கார்ட் ரொம்பவே வசதி. மாதா மாதம் ஒழுங்காகக் கட்டாமல் மிச்சம் மீதியை அடுத்த மாதத்துக்குத் தள்ளி வைப்பவர்களுக்கு அதுவே வட்டி மேல் வட்டி வந்து இரத்தம் உறிஞ்சும் அட்டையாக மாறிவிடும் அபாயமும் உண்டு என்பதை சொல்லத் தேவையில்லை.\nகடைக்குச் சென்று பொருட்களை வாங்குவீர்கள். பிறகு பணம் செலுத்துவதற்காக உங்களுடைய அட்டையைக் கடையில் கொடுப்பீர்கள் இல்லையா அதை ஒரு சின்ன கருவியில் அதைத் தேய்ப்பார்கள். உங்களிடம் இருப்பது “ஸ்மார்ட் கார்ட்” எனில் அந்தக் கருவியில் சொருகுவார்கள். பார்த்திருப்பீர்கள். அந்தக் கருவியின் பெயர் தான் பாயின்ட் ஆஃப் சேல் ( Point of Sale – POS ). பி.ஓ.எஸ் என அதைச் சுருக்கமாக அழைப்பார்கள். ஹார்ட்வேர் மற்றும் சாஃப்ட் வேர் இரண்டும் இணைந்து ஒரு விற்பனை பரிமாற்றம் நடத்துவது தான் இது அதை ஒரு சின்ன கருவியில் அதைத் தேய்ப்பார்கள். உங்களிடம் இருப்பது “ஸ்மார்ட் கார்ட்” எனில் அந்தக் கருவியில் சொருகுவார்கள். பார்த்திருப்பீர்கள். அந்தக் கருவியின் பெயர் தான் பாயின்ட் ஆஃப் சேல் ( Point of Sale – POS ). பி.ஓ.எஸ் என அதைச் சுருக்கமாக அழைப்பார்கள். ஹார்ட்வேர் மற்றும் சாஃப்ட் வேர் இரண்டும் இணைந்து ஒரு விற்பனை பரிமாற்றம் நடத்துவது தான் இது அதைப் பற்றிக் கொஞ்சம் தெரிந்து கொள்ளலாமா \n1973ல் ஐ.பி.எம் (IBM) நிறுவனம் அறிமுகப்படுத்திய ஐபிஎம் 3650 மற்றும் ஐபிஎம் 3660 இரண்டும் தான் இவற்றின் முன்னோடி 1974ம் ஆண்டு மெக்டானல்ஸ் உணவகம் இதே போன்ற ஒரு கருவியை அறிமுகம் செய்தது. ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு பட்டன் இருக்கும். என்னென்ன பொருட்கள் தேவையோ அதற்கு எதிரே இருக்கும் பொத்தான்களையெல்லாம் ஒவ்வொன்றாய் அமுக்க வேண்டும். கடைசியில் கருவி மொத்தம் எவ்வளவு பணம் செலுத்த வேண்டும் எனும் “பில்”லை எடுத்து நீட்டும். அப்போது எல்லோரும் வாய் பிளந்து பார்த்த அந்தக் கருவி, இன்றைக்கு அருங்காட்சியகத்துக்குப் போய்விட்டது 1974ம் ஆண்டு மெக்டானல்ஸ் உணவகம் இதே போன்ற ஒரு கருவியை அறிமுகம் செய்தது. ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு பட்டன் இருக்கும். என்னென்ன பொருட்கள் தேவையோ அதற்கு எதிரே இருக்கும் பொத்தான்களையெல்லாம் ஒவ்வொன்றாய் அமுக்க வேண்டும். கடைசியில் கருவி மொத்தம் எவ்வளவு பணம் செலுத்த வேண்டும் எனும் “பில்”லை எடுத்து நீட்டும். அப்போது எல்லோரும் வாய் பிளந்து பார்த்த அந்தக் கருவி, இன்றைக்கு அருங்காட்சியகத்துக்குப் போய்விட்டது இப்போதைய பி.ஓ.எஸ் கள் அதி நவீனம் \nகம்ப்யூட்டர், மொபைல் போன்றவற்றுக்கெல்லாம் ஏகப்பட்ட மென்பொருட்கள் உண்டு. அதே போல பி.ஓ.எஸ் கருவியில் செயல்படுவதற்கென்றும் ஏகப்பட்ட மென்பொருட்கள் உண்டு. 1992ம் ஆண்டு மார்ட்டின் குட்வின் மற்றும் பாப் ஹென்றி எனும் இருவரும் இணைந்து ஐ.டி ரிடெயில் ( IT Retail) எனும் ஒரு மென்பொருளை உருவாக்கினார்கள். மைக்ரோசாஃப்ட் வின்டோஸ் செயலியில் செயல்படக் கூடிய அந்த மென்பொருளை இன்றைய “பி.ஓ.எஸ்” மென்பொருட்களின் பிதாமகன் என்று சொல்லலாம் \n“பார் கோட்” (Bar Code) தெரியும் தானே பொருட்களின் பின்னால் புரியாத வகையில் கருப்பு நிறத்தில் கோடு கோடாய் இருக்குமே பொருட்களின் பின்னால் புரியாத வகையில் கருப்பு நிறத்தில் கோடு கோடாய் இருக்குமே . அது வந்த பிறகு பி.ஓ.எஸ் கருவிகளின் முகமும், அகமும் மாறிப் போய்விட்டது.\nஇன்றைக்கு வழக்கமாக இருக்கும் முறை இது தான். நீங்கள் பொருட்களை வாங்கிக் கொண்டு கார்டைக் கொடுக்கும் போது விற்பனையாளர் அந்த கார்டை பி.ஓ.எஸ் கருவியில் தேய்க்கிறார். கருவி அந்த கார்டில் உள்ள எண்ணை ஸ்கேன் செய்து கொள்கிறது.\nசில பி.ஓ.எஸ் கருவிகளில் தானாகவே எண் எடுத்துக் கொள்ளப் படுவதில்லை. அதை டைப் செய்ய வேண்டும் அதன் பிறகு எவ்வளவு பணம் செலுத்த வேண்டும் எனும் விஷயத்தையும் கொடுத்தால் கருவி ஒரு “செய்தி”யை நெட்வர்க்கிற்கு அனுப்பும். அந்த நெட்வர்க் “சுவிட்ச்”(Switch Software) எனப்படும் மென்பொருளுக்கு அந்தத் தகவலை அனுப்பும்.\nசுவிட்ச் தான் நம்முடைய வங்கிக் கணக்கில் கை வைக்கும். கார்ட் நல்லது தானா அப்படி ஒரு வங்கிக் கணக்கு உண்டா அப்படி ஒரு வங்கிக் கணக்கு உண்டா என பல சோதனைகளுக்குப் பிறகே அது வேலை பார்க்கத் துவங்கும். டெடிட் கார்டாய் இருந்தால் உடனடிப் பணக் குறைப்பும், கிரடிட் கார்ட் எனில் கணக்கில் வரவு வைக்கவும் சுவிட்ச் தான் முடிவு செய்யும். ஒவ்வொரு செய்திக்கும் ஒவ்வொரு பொருள் உண்டு. பெரும��பாலானவை “ஃபைனான்ஸியல் டிரான்ஸாக்சன்ஸ்” தான்.\nஉதாரணமாக, ஒரு ஹோட்டலுக்குச் சென்று வயிறுமுட்டச் சாப்பிடுகிறீர்கள் என வைத்துக் கொள்ளுங்கள். கடைசியில் பில் வரும். உங்களுடைய கார்டை வைப்பீர்கள். அவர்கள் அதை பயன்படுத்தி “பில்” கொண்டு வைப்பார்கள். ஒருவேளை நீங்கள் ரொம்ப தாராள மனம் படைத்தவராக இருந்தால் என்ன செய்வீர்கள் அந்த பில்லில் “டிப்ஸ்” 50 ரூபாய் என எழுதி கையெழுத்துப் போடுவீர்கள், பின் கார்டை எடுத்துக் கொண்டு போய் விடுவீர்கள். அவர்களுக்கு அந்தப் பணம் எப்படிப் போய் சேர்கிறது அந்த பில்லில் “டிப்ஸ்” 50 ரூபாய் என எழுதி கையெழுத்துப் போடுவீர்கள், பின் கார்டை எடுத்துக் கொண்டு போய் விடுவீர்கள். அவர்களுக்கு அந்தப் பணம் எப்படிப் போய் சேர்கிறது நீங்கள் தான் உங்கள் கார்டை இரண்டாவது முறை கொடுக்கவேயில்லையே நீங்கள் தான் உங்கள் கார்டை இரண்டாவது முறை கொடுக்கவேயில்லையே \nஇந்த டிப்ஸ் – டிரான்சாக்ஸன் “பிரி ஆத்” (Pre Auth) எனப்படும். பிரி ஆத்தரைசேஷன் ( Pre Authorization) என்பதன் சுருக்கம் தான் அது ஏற்கனவே ஒரு அனுமதி தகவல் பகிர்வை உங்கள் கார்டைப் பயன்படுத்தி வாங்கி வைத்திருப்பார்கள். நீங்கள் டிப்ஸ் கொடுத்தால் பயன்படுத்திக் கொள்வார்கள். இல்லையேல் அது டம்மி டிரான்சாக்ஸனாக மாற்றப்பட்டுவிடும்.\nவேகமான செயல்பாடு, பணத்தை நாலு தடவை எச்சில் தொட்டு எண்ணும் அவஸ்தையிலிருந்து விடுதலை, கணக்கு இடிக்குதே என தலையைச் சொறிவதிலிருந்து எஸ்கேப், எளிய பயன்பாடு, கள்ள நோட்டுப் பிரச்சினை இல்லை என ஏகப்பட்ட பயன்கள் இந்த பி.ஓ.எஸ் பயன்பாட்டில் உண்டு.\nஒரே ஒரு சிக்கல், இந்த கருவியின் பயன்பாட்டு அடிப்படையில் உரிமையாளர் பணம் கட்ட வேண்டும் என்பது தான். அந்தப் பணம் மென்பொருள் தயாரிப்பவர்கள், மெயின்டென்ய் செய்பவர்கள், இணையப் பயன்பாடு கொடுப்பவர்கள் என பலருக்கும் போய்ச் சேரும். அதற்கெல்லாம் சேர்ந்து பொருட்களில் விலை ஏற்றி உங்களிடமிருந்து கறந்து விடுவார்கள் என்பது சொல்லக் கூடாத தொழில் ரகசியம்.\nஇந்த பி.ஓ.எஸ் கருவிகளில் வயர் இணைக்கப்பட்டது, வயர்லெஸ் என இரண்டு வகைகள் உண்டு. இணைப்பு கருவிகள் டெலபோன் வயருடன் இணைக்கப்பட்டிருக்கும். வயர்லெஸ் கருவிகள் ‘கம்பியில்லாத் தந்தி’ தொழில் நுட்பத்தில் இயங்குவது போகும் வழியில் டிராபிக் போலீஸ்காரர�� உங்களை வழிமறித்து “ஃபைன் “ கொடுக்கிறார் என வைத்துக் கொள்ளுங்கள். அவரிடம் இருக்கும் பி.ஓ.எஸ் மெஷின் வயர்லெஸ் வகையைச் சேர்ந்ததாய் இருக்கும் \nவெளிநாடுகளில் வயர்லெஸ் பி.ஓ.எஸ் கருவிகள் தான் பெரும்பாலும் பயன்பாட்டில் இருக்கின்றன. குறிப்பாக அமெரிக்கா போன்ற நாடுகளில் நீங்கள் வண்டியை பார்க்கிங் செய்யும் இடமானாலும் சரி, பயணிக்கும் டேக்ஸி ஆனாலும் சரி, காய்கறி கடை ஆனாலும் சரி, ஹோட்டல் ஆனாலும் சரி எல்லா இடங்களிலும் வயர்லெஸ் மயம் தான் ரேடியோ அலைகள் மூலமாக தகவல்கள் அனுப்புவது தான் இவற்றின் அடிப்படை. இந்த கருவி ஒரு மாஸ்டர் கணினியுடன் இணைக்கப்பட்டு தகவல்கள் சேமிக்கப்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\nஇவற்றின் முதல் அங்கீகரிக்கப்பட்ட நியமம் உருவானது 1996ம் ஆண்டு. OPES எனும் இந்த நியமத்தை மைக்ரோசாஃப்ட், எப்ஸன், என்.சி.ஆர் கார்பரேஷன், ஃபுஜிஸ்டு போன்ற பெரிய நிறுவனங்களெல்லாம் ஒன்று கூடி உருவாக்கின. 1996ம் ஆண்டு இதன் முதல் பாதம் மண்ணில் பதிந்தது OPES வேறொன்றுமில்லை (OLE – Object Linking and Embedding for POS ) பி.ஓ.எஸ் கருவிகளுக்கான இணைப்பு என்பது தான் பொருள். அதற்குப் பிறகு சன் மைக்ரோசிஸ்டம்ஸ், ஐ.பி.எம் மற்றும் என்.சி.ஆர் கார்பரேஷன் இணைந்து ஜாவா பி.ஓ.எஸ் உருவாக்கினார்கள். கருவி சாரா தொழில் நுட்பம் இது OPES வேறொன்றுமில்லை (OLE – Object Linking and Embedding for POS ) பி.ஓ.எஸ் கருவிகளுக்கான இணைப்பு என்பது தான் பொருள். அதற்குப் பிறகு சன் மைக்ரோசிஸ்டம்ஸ், ஐ.பி.எம் மற்றும் என்.சி.ஆர் கார்பரேஷன் இணைந்து ஜாவா பி.ஓ.எஸ் உருவாக்கினார்கள். கருவி சாரா தொழில் நுட்பம் இது \nபி.ஓ.எஸ் கருவி வழியாகச் அனுப்பப்படும் ஒவ்வொரு தகவலையும் டிரான்ஸாக்சன் ( Transaction) என்று பொதுப்படையாக சொல்வார்கள் என்பது உங்களுக்குத் தெரிந்தது தான். இந்த தகவல்கள் ஒரு பி.ஓ.எஸ் கருவியிலிரிந்து இன்னொரு நெட்வர்க் வழியாக சுவிட்ச் நோக்கிப் போகும் இடம் பாதுகாப்புப் பிரச்சினை உடையது திருட்டுப் பயல்களால் திருடப்பட்டுவிடும் அபாயம் உண்டு. அதற்காக பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை அமைத்திருப்பார்கள்.\nடெஸ், டபிள் டெஸ், டிரிப்பிள் டெஸ்( DES, Double DES, Tripple DES ) போன்றவையெல்லாம் பிரபலமானவை . DES என்பது Data Encryption Standard என்பதன் சுருக்கம். பி.ஓ.எஸ் கருவி தகவல்களை சங்கேத முறையில் அனுப்புவதும், மறுமுனையில் அந்த செய்தி மீண்டும் சரியான படி வாசிக��கப்படுவதும் தான் இதன் அடிப்படை. அதை எத்தனை அடுக்கு சங்கேதமாக்குகிறார்கள் என்பதன் அடிப்படையில் அதை டபிள், டிரிப்பிள் என்றெல்லாம் அழைக்கிறார்கள்.\nஇன்னொரு பாதுகாப்பு முறை உண்டு. அது தான் இப்போது மிகப் பிரபலம். அதாவது ஒவ்வொரு செய்தியுடனும் ஒரு சங்கேதக் குறியீடு இருக்கும். எனவே திருடுவது ரொம்பக் கஷ்டம். அப்படியே தகவலைத் திருடினாலும் பியூஸ் போன பல்ப் போல அவர்களால் அதைப் பயன்படுத்த முடிவதில்லை. இந்த முறையை டக்பிட் ( DUKPT – Derived Unique Key Per Transaction) என்கின்றார்கள்.\nசில கடைகளுக்கு பல மாடிகள் இருக்கும். ஒவ்வொரு மாடியிலும் சிலப் பல பி.ஓ.எஸ் டிவைஸ் கள் இருக்கும். அவற்றில் எல்லாம் மொத்தம் என்னென்ன விற்பனை நடந்திருக்கின்றன என்பதை எளிதில் அறிந்து கொள்ளும் வசதியையும் “பி.ஓ.எஸ்” மென்பொருட்கள் தருகின்றன. அதே போல நாட்டின் பல இடங்களில் இருக்கும் தொடர் கடைகளின் பி.ஓ.எஸ் டிவைஸ் கள் எல்லாவற்றையும் கூட்டிக் கழித்து கணக்கு பார்க்கும் வசதியும் மிக எளிதிலேயே கிடைக்கும் இவை வெப் பேஸ்ட் கருவி இணைப்பாய் இருக்க வேண்டும் என்பது மட்டுமே ஒரே நிபந்தனை \nபி.ஓ.எஸ் டிவைஸ் கள் பல வகை உண்டு. சில கருவிகள் மானிடர், பண டிராயர் போன்றவற்றுடன் இணைக்கப்பட்டிருக்கும். சிலவற்றில் “கையொப்பம்” போடும் வசதி இருக்கும். சிலவற்றில் கிரடிட் கார்ட், டெபிட் கார்ட், ஸ்மார்ட் கார்ட் என எல்லா வகைகளையும் பயன்படுத்த முடியும், சிலவற்றில் செக்களைக் கூட ஸ்கேன் செய்ய முடியும். சில பி.ஓ.எஸ் டிவைஸ்களில் டிஸ்கவுண்ட் கூப்பன் போன்றவைகளைப் பயன்படுத்த முடியும் தேவைக்குத் தக்கபடி கிடைக்கும் என்பதே சுருக்கமாய் சொல்ல வந்த விஷயம்.\nஅடுத்த முறை கடைக்காரர் கார்டை ஸ்வைப் செய்யும்போ, “சார் இதுல என்ன செக்யூரிடி செக் யூஸ்பண்றீங்க டெஸ்ஸா ” என கேட்டு அவரை மிரளச் செய்யுங்கள் \n3D மாயாஜாலம் எப்படி நிகழ்கிறது \nஇது 3D காலம் என்று சொல்லலாம் தப்பில்லை. அவதார் என்றொரு ஆங்கிலத் திரைப்படம் வந்தாலும் வந்தது, உலகெங்கும் சட்டென 3டி ஜூரம் பற்றிக் கொண்டது. புதிது புதிதாய் 3டி படங்கள் ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை வெளியாகிக் கொண்டிருக்கின்றன. போதாக்குறைக்கு பழைய 2D படங்களைத் தூசு தட்டி 3D யாக மாற்றும் பணிகளும் ஜகஜோராக நடந்து கொண்டிருக்கின்றன.\nஆயிரம் தான் இருந்தாலும், முதன் முதலாக 3���ி படம் பார்க்கும் அனுபவம் ரொம்பவே அலாதியானது திரையிலிருந்து சட்டென நம்மை நோக்கி நீளும் ஒரு கை ஐஸ்கிரீம் தரும். அல்லது நம்மீது ஏதோ வந்து விழுவது போல பயமுறுத்தும். மந்திரவாதியின் சாம்பல் நம் முகத்தில் மோதுவது போல் வரும். கையை எடுத்துச் சட்டெனத் தடுப்போம் திரையிலிருந்து சட்டென நம்மை நோக்கி நீளும் ஒரு கை ஐஸ்கிரீம் தரும். அல்லது நம்மீது ஏதோ வந்து விழுவது போல பயமுறுத்தும். மந்திரவாதியின் சாம்பல் நம் முகத்தில் மோதுவது போல் வரும். கையை எடுத்துச் சட்டெனத் தடுப்போம் விட்டால் அடுத்த சீட்காரரை அடித்தே கீழே தள்ளுவோம். காரணம் காட்சிகள் அவ்வளவு தத்ரூபமாக இருப்பது தான் விட்டால் அடுத்த சீட்காரரை அடித்தே கீழே தள்ளுவோம். காரணம் காட்சிகள் அவ்வளவு தத்ரூபமாக இருப்பது தான் அவ்வளவு எளிதில் மைடியர் குட்டிச் சாத்தானை மக்கள் மறக்கமாட்டார்கள் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை.\nஇந்த 3D எப்படிச் சாத்தியமாகிறது சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில் 3D என்பது வேறொன்றுமில்லை நமது கண்களை ஏமாற்றும் ஒரு தந்திரம். ஆச்சரியப்படாதீர்கள். 2D யில் உள்ள திரைப்படத்தை 3D போன்ற தோற்றத்தில் தர சினிமாக் கருவிகளும், கண்ணாடிகளும் உதவுகின்றன. அதை எவ்வளவு தத்ரூபமாகத் தருகிறார்கள் என்பதில் தான் அந்த தொழில் நுட்பத்தின் வெற்றி அடங்கியிருக்கிறது.\n3டி சமீபகாலக் கண்டுபிடிப்பு எனும் நினைப்பு உங்களிடம் இருந்தால் அந்த நினைப்பை இந்த வினாடியே குழி தோண்டிப் புதைத்து விடுங்கள். அதரப் பழசான விஷயம் அது பிரிட்டனிலுள்ள திரைப்பட இயக்குனர் வில்லியம் பிரீஸ் கிரீன் 1980ல் இதற்கான காப்புரிமை விண்ணப்பத்தைக் கொடுத்தார். அவருடைய தயாரிப்பு ஸ்டீரியோஸ்கோப் வகையைச் சார்ந்தது. குழந்தைகள் கண்களில் வைத்துப் பார்க்கும் ஒரு குட்டிக் கருவியைப் பார்த்திருப்பீர்கள். அதில் ஒரே மாதிரியான இரண்டு பிலிம்கள் இருக்கும், ஒரே நேரத்தில் இரண்டு கண்களாலும் அதைப் பார்க்கும் போது உள்ளுக்குள் 3டி படம் தெரியும் பிரிட்டனிலுள்ள திரைப்பட இயக்குனர் வில்லியம் பிரீஸ் கிரீன் 1980ல் இதற்கான காப்புரிமை விண்ணப்பத்தைக் கொடுத்தார். அவருடைய தயாரிப்பு ஸ்டீரியோஸ்கோப் வகையைச் சார்ந்தது. குழந்தைகள் கண்களில் வைத்துப் பார்க்கும் ஒரு குட்டிக் கருவியைப் பார்த்திருப்பீர்கள். ���தில் ஒரே மாதிரியான இரண்டு பிலிம்கள் இருக்கும், ஒரே நேரத்தில் இரண்டு கண்களாலும் அதைப் பார்க்கும் போது உள்ளுக்குள் 3டி படம் தெரியும் அது தான் ஸ்டீரியோஸ்கோப்பின் வடிவம். இதற்கு இரண்டு படங்களை அருகருகே திரையிட வேண்டிய தேவை இருந்தது \nஅந்த கான்சப்டை அப்படியே அலேக்காகத் தூக்கி பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ஃப்ரடரிக் எக்வீன் என்பவர் ஒரு கேமரா கண்டுபிடித்து உடனே அதற்குக் காப்புரிமையும் வாங்கினார். இதில் 4.45 சென்டீ மீட்டர் இடைவெளியில் இரண்டு லென்ஸ்கள் இருக்கும். அப்புறம் மீண்டும் ஒரு இடைவெளிக்குப் பிறகு 1915 ஜூன் 10ம் தியதி நியூயார்க்கிலுள்ள ஆஸ்டர் திரையரங்கில் முப்பரிமாணத் திரைபடம் சோதனை ஓட்டம் போட்டது. அதை நடத்தியவர்கள் எட்வின் பார்டர் மற்றும் வில்லியம் வேடல் எனும் இருவர்.\nஅந்த சம்பவம் நடந்து ஏறக்குறைய ஒரு நூற்றாண்டு முடியப் போகிறது. ஆனால் அப்போது இது மிகப்பெரிய பணச்செலவு, திரையிட ஏகப்பட்ட கஷ்டம் எனும் செயல்முறை சிக்கல்களால் முதுகொடிந்து கிடந்தது. 1922ம் ஆண்டு செட்பம்பர் 27ம் தியதி டிக்கெட் வாங்கிப் படம் பார்க்கும் உலகின் முதல் 3டி சினிமா வந்தது. அதன் பெயர் “த பவர் ஆஃப் லவ்” (The Power of Love). அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸிலுள்ள அம்பாசடர் ஹோட்டல் திரையரங்கில் இது வெளியானது.\n3டி ஒரு கமர்ஷியல் சினிமா சரக்காக மாறியது 1950ல் தான். அப்போதும் அது சரசரவென பற்றிப் படரவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக வேர் விட ஆரம்பித்தது. அந்தக் காலகட்டத்தில் வால்ட் டிஸ்னி போன்ற பெரிய சினிமா தயாரிப்பு நிறுவனங்களெல்லாம் 3டி தயாரிப்பில் குதித்தன. எனவே 3டி என்பது அடுத்த கட்டத்துக்கு நகர்ந்தது. 1950க்கும் 1953க்கும் இடைப்பட்ட காலத்தை “3டியின் பொற்காலம்” என்கிறார்கள். ஆனால் அதன்பின் 3டி மீண்டும் படுத்தது \nஇதில் ஏகப்பட்ட சிக்கல்கள் இருந்தது தான் அந்த சோர்வுக்குக் காரணம். இரண்டு படங்கள் தயாரிக்க வேண்டும். இரண்டும் ஒரே மாதிரி இருக்க வேண்டும். ஒரே வேகத்தில், கொஞ்சமும் மாற்றம் இல்லாமல் ஓட வேண்டும். தனி ஸ்பெஷல் திரை வேண்டும். ஏகப்பட்ட பணச் செலவு என அடுக்கடுக்கான காரணங்கள் தான் அந்த தொய்வுக்குக் காரணம்.\n1960ல் 3டி தொழில் நுட்பத்தின் ஒரு புது புரட்சி தோன்றியது. அதுவரை 3டி படம் போட வேண்டுமெனில் இரண்டு பிலிம் ரோல், இரண்டு புரஜக்டர் என இருந்த நிலை மாறி ஒரே பிலிம் ரோலில் இரண்டு படங்களை பதிவு செய்யும் முறை அப்போது தான் அறிமுகமானது ஸ்பேஸ் விஷன் ( Space vision) 3டி எனும் புது அடைமொழியுடன் அது வந்தது ஸ்பேஸ் விஷன் ( Space vision) 3டி எனும் புது அடைமொழியுடன் அது வந்தது இது ஏகப்பட்டத் தலைவலிகளை ஒழித்துக் கட்டி 3டி படங்களுக்கு ஒரு புத்துணர்ச்சியையே அளித்து விட்டது \n1980களுக்குப் பின் தான் 3டி சர சரவென வளரத் துவங்கியது. 1985க்கும் 2003க்கும் இடைப்பட்ட காலத்தை 3டியின் மறுபிறப்புக் காலம் என்கிறார்கள். அந்தக் காலகட்டத்தில் நிறைய முப்பரிமாணப் படங்கள் வந்து பரபரப்பூட்டின.\nஇருந்தாலும் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் தான் அப்போதும் 3டி நுட்பத்தால் அசரடித்தவர். 2003ல் அவர் “கோஸ்ட் ஆஃப் த அபைஸ்” (Ghost of the Abyss) எனும் படத்தை வெளியிட்டார். ரியாலிடி கேமரா மூலம் எடுக்கப்பட்ட அந்தப் படம் 3டி நுட்பத்தில் மிரட்டியது. அதற்குப் பிறகு அவர் “அவதார்” மூலம் திரையுலகையே புரட்டிப் போட்டது நாம் அறிந்த விஷயம் தான் இப்போது ஏறக்குறைய எல்லா ஹாலிவுட் அனிமேஷன், ஃபேன்டஸி போன்ற படங்களெல்லாம் 3டியில் தான் வருவேன் என முரண்டு பிடிக்கின்றன.\nமுதலிலேயே சொன்னது போல, 3டி திரைப்படங்கள் முப்பரிமாணத்தில் வருவதில்லை. இரண்டு பரிமாண படங்களை முப்பரிமாணம் போல மாற்றிக் காட்டும் வித்தையைச் செய்கின்றன. இலக்கியப் பிரியர்கள் இதை, காட்சி மயக்கம் அல்லது தோற்றப் பிழை என்று கூட அழைத்துக் கொள்ளலாம்.\nஅனகிலிப் (Anaglyph) என்பது இதன் ஆரம்ப கால வகை. இன்றும் கூட இது அச்சு மீடியாவில் வழக்கத்தில் உண்டு. சிவப்பு மற்றும் நீலம் ( முழுமையான நீலம் அல்ல) நிறங்களில் படங்களை ஒன்றன் மீது ஒன்றாக எடுத்து, அதை ஸ்பெஷல் கண்ணாடி மூலம் பார்ப்பது. அந்த ஸ்பெஷல் கண்ணாடியில் ஒரு கண்ணில் சிவப்பு, ஒரு கண்ணில் நீலம் இருக்கும். அவை குறிப்பிட்ட நிறத்தில் வரையப்பட்டுள்ள படத்தை முதன்மைப்படுத்தி மற்றவற்றை இருட்டாக்கும். ஒரு கண் வழியாக ஒரு ஒரு அடுக்கு மட்டுமே தெரியும். மற்ற அடுக்கு அடுத்த கண்ணில் தான் தெரியும். இப்படிப் பிரித்துக் காட்டும் போது முப்பரிமாண தோற்றம் உருவாகும் \n3டி டிவி பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்களே அதில் அடிப்படையாக இயங்கிக் கொண்டிருந்த நுட்பமும் இது தான். இப்போது பெரும்பாலான தொலைக்காட்சி தயாரிப்பு நிறுவனங்கள் இந்த வழக்கத்தை விட்டு “போலராய்ட்” வகைக்குள் நுழைந்து விட்டார்கள்.\n ஆம், அது தான் அடுத்தகட்ட வளர்ச்சி. 1950களுக்குப் பிறகு இது தான் பாப்புலர் 3டி நுட்பம். நீங்கள் சமீப காலத்தில் ஏதேனும் 3டி படம் தியேட்டரில் பார்த்திருந்தீர்களெனில் நிச்சயம் இந்தத் தொழில் நுட்பத்தில் தான் பார்த்திருப்பீர்கள். இதில் “போலராய்ட்” பில்டர்கள் மூலம் படம் திரையிடப்படும். இதிலும் இரண்டு படங்கள் ஒன்றன் மீது ஒன்றாக விழும். அதை போலராய்ட் கண்ணாடிகள் மூலம் பார்க்க வேண்டும். இந்த கண்ணாடிகள் ஒரே மாதிரித் தோற்றமளித்தாலும் உண்மையில் அதன் கோணம் இரண்டு விதமாய் இருக்கும். சாதாரணமாக 45 முதல் 135 டிகிரி வரையிலான மாற்றுக் கோணத்தில் இருக்கும். போலராய்ட் பில்டர் வழியாக வரும் படங்களில் ஒன்றை ஒரு கண்ணும் இன்னொன்றை இன்னொரு கண்ணும் பார்க்கும் படியாக இது அமைந்திருக்கும். இதனால் இரண்டு கண்களும் ஒரே படத்தை வித்தியாசமான கோணத்தில் பார்க்கும் போது நிஜமான ஒரு முப்பரிமாணக் காட்சி கிடைக்கும். ஒரு கண்ணை மூடிவிட்டுப் பார்த்தால் தெளிவில்லாத 2டி தான் தெரியும் \nஆக்டிவ் ஷட்டர் கிளாஸஸ் (Active shutter glasses) பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்களா தெரியாது. அது பிரபலமான 3டி கண்ணாடி வகையில் ஒன்று. இது கொஞ்சம் ஸ்பெஷலானது. இதில் படம் திரையிடப்படும் ஸ்கீரினுக்கும், கண்ணாடிக்கும் இடையே ஒரு தொடர்பு எப்போதுமே இருக்கும். நாம் எந்த இடத்திலிருந்து படத்தைப் பார்க்கிறோம் என்பதைப் பொறுத்து நமது கண்ணாடிக்கு ஸ்கிரீன் ஒரு சிக்னலை அனுப்பும். அதன் அடிப்படையில் எந்தக் கண் வழியாக அதிக வெளிச்சம் வரவேண்டும் என்பன போன்ற அடிப்படைத் தகவல்கள் பரிமாறப்படும்.\nஅடிப்படையில் சொல்லப் போனால் நமது கண்கள் ஒரு பொருளைப் பார்க்கும் போது ஒரே கோணத்தில் பார்ப்பதில்லை. சந்தேகம் இருந்தால் உங்கள் கண்களை மாறி மாறி மூடி மூடித் திறந்து பாருங்கள். உங்களுக்கு முன்னால் இருக்கும் பொருள் அங்கும் இங்கும் அசைவதாய்த் தோன்றும். ஆனால் ஒரே நேரத்தில் அதைப் பார்க்கும் போது தெள்ளத் தெளிவாய் உங்களுக்குத் தெரியும். அப்படித் தெரியவில்லையேல் கண் மருத்துவரைப் பாருங்கள் என்பதே என்னுடைய சிம்பிள் அட்வைஸ்.\nஇப்போது 3டி தொழில்நுட்பத்தின் அடுத்த கட்டம். இதுவரை 3டி படம் பார்க்க கண்ணாடி வேண்டும் எனும் கட்டாயம் இருந்தது இல்லையா அந்தக் கெடுபிடி இல்லை என்பது தான் புதுமையான நிலை. 3டி டிவியில் அந்த நிலை இப்போது வெற்றிகரமாக எட்டப்பட்டுள்ளது. விரைவில் திரையரங்குகளிலும் கண்ணாடி இல்லாமலேயே முப்பரிமாணம் பார்க்கும் நிலை உருவாகும். அந்த வித்தையைச் செய்யும் தொழில் நுட்பம் பாரலாக்ஸ் பாரியர் (Parallax Barrier) என அழைக்கப்படுகிறது. இதில் தொலைக்காட்சித் திரையில் படங்கள் அடுக்கடுக்காய் ஒளிபரப்பாகும். அந்தத் திரைக்கு முன்னால் பாரலக்ஸ் பாரியர் திரை ஒன்று பொருத்தப்பட்டிருக்கும். நமது கண்ணாடி செய்ய வேண்டிய வேலையை இந்தத் திரை செய்கிறது அது தான் வித்தியாசம்.\nஇவையெல்லாம் 2டி படத்தை 3டி படமாக நமக்குக் காண்பிக்கும் வித்தைகள் என்பது தான் சிறப்பம்சம். ஆனால் உண்மையிலேயே 3டி படங்களையும், ஆட்களையும் காண்பிக்கும் தொழில்நுட்பங்களும் வந்து விட்டன. எந்திரன் படத்தில் ரஜினியின் 3டி உருவம் வந்து பேசுவது போல் ஒரு காட்சி வரும். அத்தகைய இமேஜ் மனிதர்கள் விமான நிலையங்கள், ஷாப்பிங் மால்கள், அலுவலகங்கள் போன்ற இடங்களில் நுழையத் துவங்கிவிட்டார்கள். காற்றில் உருவம் வரையும் வித்தை அது எதிர்காலத்தில் ரொம்ப அன்னியோன்யமானத் தகவல் பரிமாற்றத்தை இத்தகைய உருவங்கள் செய்யும் என்பது பலத்த எதிர்பார்ப்பு.\nஉலகம் 3டி நுட்பத்துக்குள் புயலாய் நுழைந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் இந்த அடிப்படைத் தகவல்களை 2டியில் வாசித்துத் தெரிந்து கொள்வது நல்லது தான் இல்லையா \nஉங்கள் வீட்டை கொள்ளையடிக்க ஒருவர் ரோட்டில் நின்று நோட்டம் இடுகிறார் என வைத்துக் கொள்ளுங்கள். அவரை வீட்டுக்குள் அழைத்து, ‘வீட்டை கொஞ்ச நேரம் பாத்துக்கங்க, ஒரு மணிநேரம் வெளியே போயிட்டு வரேன்’ என சொல்வீர்களா அப்படிச் செய்தால் ஒரு மணி நேரம் கழிந்து நீங்கள் வரும் போது வீடு சுத்தமாக திருடப்பட்டிருக்கும் இல்லையா அப்படிச் செய்தால் ஒரு மணி நேரம் கழிந்து நீங்கள் வரும் போது வீடு சுத்தமாக திருடப்பட்டிருக்கும் இல்லையா அதே போன்ற ஒரு விஷயம் தான் இந்த ஜூஸ் ஜேக்கிங் விஷயம்.\nமுன்பெல்லாம் செல்போனை முழுமையாக சார்ஜ் செய்தால் ஒரு வார காலத்துக்கு சார்ஜ் நிற்கும். இப்போதெல்லாம் அப்படி இல்லை. ஸ்மார்ட்போன்களின் காலம் சார்ஜ் செய்யப்பட்ட போனை சில மணிநேரங்களிலேயே “பேட்டரி காலி” எனும் நிலைக்கு தள்ளி விடுகிறது. மூர்��்சையாகிக் கிடக்கும் போனை மறுபடியும் சார்ஜ் செய்தால் தான் பயன்படுத்த முடியும் எனும் நிலை ஏற்பட்டு விடுகிறது.\nஇதற்காக விமான நிலையங்கள், சில உணவகங்கள், சில மால்கள் போன்றவற்றில் இலவச பேட்டரி சார்ஜ் நிலையங்களை உருவாக்கி வைத்திருப்பார்கள். அதாவது ஒரு இடத்தில் நிறைய சார்ஜர்கள் இருக்கும், உங்கள் போனுக்கு செட் ஆகும் சார்ஜரைப் பயன்படுத்தி நீங்கள் உங்கள் பேட்டரியை சார்ஜ் செய்து கொள்ளலாம்.\nஅப்பாடா… சார்ஜ் பண்ண ஒரு இடம் கிடச்சுடுச்சு என சிலாகித்து பலரும் இந்த வசதியைப் பயன்படுத்துவதுண்டு. இவை ஆபத்தானவை என்பது தான் ஜூஸ் ஜாக்கிங் சொல்லும் செய்தி என சிலாகித்து பலரும் இந்த வசதியைப் பயன்படுத்துவதுண்டு. இவை ஆபத்தானவை என்பது தான் ஜூஸ் ஜாக்கிங் சொல்லும் செய்தி இத்தகைய இடங்களில் சார்ஜ் செய்யப்படும் போன்களிலுள்ள தகவல்கள் திருடப்படலாம். போனில் வைரஸ் மால்வேர்கள் நுழைக்கப்படலாம் இத்தகைய இடங்களில் சார்ஜ் செய்யப்படும் போன்களிலுள்ள தகவல்கள் திருடப்படலாம். போனில் வைரஸ் மால்வேர்கள் நுழைக்கப்படலாம் என அதிர்ச்சியளிக்கின்றன ஆய்வுகள். அதைத் தான் ‘ஜூஸ் ஜாக்கிங்’ என்கிறார்கள்.\nஅதென்ன பெயர் ஜூஸ் ஜாக்கிங் அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் சார்ஜை ஜூஸ் என்பார்கள். போனில் சார்ஜ் இல்லை என்றால் ஜூஸ் இல்லை என்பார்கள். சார்ஜ் வேண்டுமென்றால் கொஞ்சம் ஜூஸ் வேணும் என்பார்கள். ஜாக்கிங் என்றால் திருடுவது. போன் சார்ஜ் போடும் நேரத்தில் நம்முடைய தகவல்களைத் திருடுவதையோ, திருட்டுத்தனமாய் நமது போனுக்குள் நுழைவதையோ தான் “ஜூஸ் ஜாக்கிங்” என்கிறார்கள்.\nஇரண்டு விதமான திருட்டுகள் இதில் நடக்கலாம். ஒன்று, சார்ஜ் போடும் நேரத்தில் நமது போனிலுள்ள தகவல்களை அப்படியே காப்பியடிப்பது. இதில் நாம் சேமித்து வைத்திருக்கும் வங்கிக் கணக்கு விஷயங்கள், கான்டாக்ட் தகவல்கள், படங்கள், டாக்குமென்ட்ஸ் எல்லாம் திருடப்படலாம். திருடப்படும் தகவல்களின் அடிப்படையில் நமக்கு சிக்கல்கள் வரலாம்.\nஇன்னொன்று நமது கணினியில் ரகசிய மால்வேர் மென்பொருளை இந்த இடங்கள் பதிவிறக்கம் செய்து வைக்கலாம். நம்மை அறியாமலேயே நம்மைக் கண்காணிக்கும் ரகசிய உளவாளிகளாக இது நமக்கு தொடர்ந்து தொல்லை கொடுக்கும்.\nஎது எப்படியெனினும், இந்த தாக்குதல் நமக்கு தலைவலி���ைத் தரக்கூடிய ஒன்று என்பதில் சந்தேகமில்லை.\nஇந்த சிக்கல்களிலிருந்து விடுபடுவதற்கு என்ன வழி \nஎளிமையாகச் சொல்வதென்றால், இத்தகைய ‘பொது இட சார்ஜ் நிலையங்களில் நமது போனை இணைக்காமல் இருப்பது தான்’ ஆகச் சிறந்த வழி. அது பலி ஆடு தானாகவே போய் வெட்டுபவன் முன் கழுத்தைக் கொடுப்பதற்கு சமம். சரி, ஒருவேளை சார்ஜ் பண்ணியே ஆகவேண்டும், வேற வழியே இல்லை என்றால் என்ன செய்வது பதட்டமடையத் தேவையில்லை, சில விஷயங்களை நினைவில் கொள்ளுங்கள்.\n1. தவிர்க்க முடியாத சூழல்களில், இத்தகைய இடங்களைப் பயன்படுத்த வேண்டி வந்தால் உங்களுடைய போனை ‘ஆஃப்’ செய்து வையுங்கள். முழுமையாக அணைத்து வைக்கப்பட்டிருக்கும் போனில் மென்பொருட்களை இறக்கி வைப்பதோ, அல்லது தகவல்களை திருடுவதோ இயலாத காரியம்.\n2. ஒருவேளை போனை ஆஃப் பண்ண முடியாத சூழல் இருக்கிறது என வைத்துக் கொள்ளுங்கள். மிக மிக அவசரமான சூழல். போன் செயல்பாட்டிலேயே இருக்க வேண்டுமெனில் அதை குறைந்த பட்சம் ‘லாக்’ செய்து வையுங்கள். லாக் செய்யப்பட்ட போன்கள் தாக்குதலுக்கு உள்ளாகும் வாய்ப்பு கொஞ்சம் கம்மி. எக்காரணம் கொண்டும் போனை சார்ஜ் போட்டுக்கொண்டு திறந்தும் வைக்கவே வைக்காதீர்கள்.\n3. ‘பவர் பேங்க்’ எனப்படும் சார்ஜ் செய்யப்படும் உபகரணத்தை கையில் வைத்திருந்தால் அவசர காலங்களில் பயனளிக்கும். பொது இடங்களில் இத்தகைய பவர் பேங்க்களை சார்ஜ் செய்து வைத்துக் கொள்ளலாம் ஆபத்து இல்லை.\n4. வீட்டிலிருந்து வெளியே கிளம்பும் போதே போனை முழுமையாக சார்ஜ் செய்து கொண்டு செல்லுங்கள். இதனால் அதிக நேரம் உங்களுக்கு போன் கைகொடுக்கும். வீடுகள், அலுவலகங்கள் போன்றவையே நமக்குத் தெரிந்த பாதுகாப்பான இடங்கள்.\n5. எங்கே போனாலும் கூடவே உங்கள் ‘பவர் கார்ட்’ கையோடு கொண்டு போங்கள். யூ.எஸ்.பி சார்ஜிங் நிலையங்கள் தான் நமக்கு ஆபத்தானவை. பொதுவான மின் இணைப்புகளில் உங்களுடைய சார்ஜரை வைத்து சார்ஜ் செய்து கொள்ளுவதெல்லாம் ஆபத்தற்றவை. அதை நீங்கள் வைத்துக் கொள்ளலாம்.\n6. இப்போதெல்லாம், ‘சார்ஜ் செய்ய மட்டும்’ எனும் அடைமொழியுடன் சார்ஜர்கள், யூ.எஸ்.பி கார்ட்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. அவற்றின் மூலமாக தகவல்களை கடத்த முடியாது. அத்தகைய வயர்களை நீங்கள் வாங்கிப் பயன்படுத்தலாம். நம்பிக்கைக்கு உத்தரவாதம். இதை எப்படி உருவாக்கு���ிறார்கள் சிம்பிள் சார்ஜ் செய்யும் பின்னில் சில இணைப்புகள் தகவல் கடத்தவும், சில இணைப்புகள் மின்சாரம் கடத்தவும் இருக்கும். ‘சார்ஜ் மட்டும்’ எனும் வயர்களில், தகவல் கடத்தும் இணைப்புகள் கட் பண்ணப்பட்டிருக்கும். அவ்வளவு தான்.\n7. உங்கள் போனிலுள்ள பேட்டரியைக் கழற்றி மாட்ட முடியுமெனில், எக்ஸ்ட்ரா பேட்டரி ஒன்று வாங்கி வைத்துக் கொள்ளலாம். ஒன்று தீரும்போது இன்னொன்றைப் பயன்படுத்திக் கொள்ள இது உதவியாக இருக்கும். ஜூஸ் ஜாக்கிங் தாக்குதல் நேருமோ எனும் பயமும் இல்லை.\n8. தேவையற்ற ஆப்களை அழித்து விடுங்கள். பல ஆப்கள் நமது போனில் விழித்திருந்து நமது போனின் பேட்டரி விரைவில் காலியாக காரணமாய் இருக்கின்றன. அத்தியாவசியமான, அங்கீகரிக்கப்பட்ட ஆப்களை மட்டுமே வைத்திருந்தால் பேட்டரி அதிக நேரம் தாங்கும். தேவையற்ற ஆப்களை அழிப்பது நமது போனின் பாதுகாப்புக்கும் மிக மிக அவசியம். இலவசமாய்க் கிடைக்கிறது என இறக்கி வைக்கும் மென்பொருட்களுக்காய் நாம் மிகப்பெரிய விலையைக் கொடுக்க வேண்டி வரலாம்.\n9 தேவையற்ற நேரங்களில் புளூடூத், வைஃபை, டேட்டா போன்றவற்றை அணைத்தே வைத்திருந்தால் பேட்டரி ரொம்ப நேரம் விழித்திருக்கும் என்பது சர்வ நிச்சயம். டேட்டாவை ஆஃப் பண்ண முடியாது எனும் சூழல் இருந்தால் குறைந்த பட்சம் புளூடூத் போன்றவற்றை அணைத்தே வைத்திருங்கள். இப்போதெல்லாம் ‘ஹெல்த் வாட்ச்’, கார் ஆடியோ, ஹெட்போன் போன்றவை புளூடூத்துடன் எப்போதும் இணைக்கப்பட்டிருப்பதால் பேட்டரி விரைவில் தீர்ந்து விடுகிறது.\n10 தகவல் பரிமாற்றத்தைத் தடுக்கும் பாதுகாப்பு கருவிகளைப் பயன்படுத்தலாம். சிங்க்கார்ப் போன்ற நிறுவனங்கள் சில பாதுகாப்பு சாதனங்களை விற்பனை செய்கிறது. அதில் ஒன்று யூ.எஸ்.பி காண்டம். இந்த குட்டி அடாப்டரில் நமது யூஎஸ்பி கேபிளை சொருகினால் அது தகவல் பரிமாற்றத்தை தடுக்கும்.\nசுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில், ஆபத்துகளை அறிந்து கொள்வது தான் எச்சரிக்கையாய் இருக்க நம்மை தயாராக்கும். பொது இடங்களில் வைக்கப்பட்டிருக்கும் சார்ஜ் நிலையங்கள் ஆபத்து நிலையங்களாய் மாறலாம் எனும் எச்சரிக்கை உணர்வு நமக்கு எப்போதும் இருக்கட்டும். மேலே சொன்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மனதில் வைத்திருப்போம். ந்மது நிம்மதியை கைவிடாதிருப்போம்.\nBy சேவியர் • Posted in Articles, Articles-awareness, Articles-Technology, கட்டுரைகள்\t• Tagged இலக்கியம், கட்டுரைகள், ஜூஸ் ஜேக்கிங், தொழில்நுட்பம்\nகாதலின் தொடக்கப் புள்ளி எதுவெனக் கேட்டால் ஒருவேளை சட்டென சொல்லி விடலாம். அது ஒரு மழைச்சாரலின் இடையே தெரிந்த காதலியின் மின்னல் முகமாகக் கவித்துவம் காட்டலாம். கூடவே நடந்த தோழி சட்டென பேசிய ஒற்றை வார்த்தையில் உள்ளுக்குள் இடைந்து தெறித்த கண்ணாடிக் கூடென கதைகள் பேசலாம். முகத்தைப் பார்த்திராத டிஜிடல் காதலியின் குறுஞ் செய்தி குறுகுறுக்க முளைத்து வந்ததென தொழில் நுட்பம் பேசலாம். எது எப்படியோ, காதலின் தொடக்கப் புள்ளியைக் கண்டுபிடிப்பதொன்றும் பிரம்மப் பிரயர்த்தனம் இல்லை \nஆனால் அதன் முடிவுப் புள்ளியை எப்படிக் கண்டுபிடிப்பது. வட்டத்தை வரைந்து விட்டு அதன் மூலைகளைக் கண்டுபிடிக்கச் சொல்வது போல சிக்கலானது அது. கைப்பிடி அளவுக் காற்றை எடுத்து கடித்துத் தின்பது போல இயலாத காரியம் அது.\nபெய்து ஓய்ந்த பெருமழையின் கடைசித் துளி எங்கே விழுந்ததென எப்படிக் கண்டுபிடிப்பது பிரபஞ்சத்தின் முதல் ஆழியின் கடைசி அலை எப்போது அடிக்குமென எப்படிக் கணக்கிடுவது பிரபஞ்சத்தின் முதல் ஆழியின் கடைசி அலை எப்போது அடிக்குமென எப்படிக் கணக்கிடுவது கடைசியாய் எப்போது என் நாசிக்குள் பிராணவாயு படுத்துப் புரளுமென எப்படி உறுதி செய்வது கடைசியாய் எப்போது என் நாசிக்குள் பிராணவாயு படுத்துப் புரளுமென எப்படி உறுதி செய்வது நீள்வட்டப்பாதையில் ஓடிக்கொண்டிருக்கும் விளையாட்டு ரயிலின் கடைசிப் புள்ளி எதுவென எப்படித் தெரியும் நீள்வட்டப்பாதையில் ஓடிக்கொண்டிருக்கும் விளையாட்டு ரயிலின் கடைசிப் புள்ளி எதுவென எப்படித் தெரியும் காதலின் கடைசியும் அப்படியே அது எதுவரை என்பதைக் கணக்கிடுவது கடினம்.\nகாதலின் கடைசியை நமது வாழ்க்கையின் கடைசிக் கணம் வரை, என முடிவு செய்யலாமா அல்லது நம் வாழ்க்கையின் கடைசிக் கணத்தை காதலின் கடைசிக் கணம் வரை, என முடிவு செய்யலாமா \nகாற்று உள்ளவரைக்குமா, அந்த தொடுவானத்தின் எல்லை தரையில் தொடும் வரைக்குமா, பூமியின் ஓட்டம் நிற்கும் வரைக்குமா அல்லது அந்த வானத்தின் நீலம் உள்ளவரைக்குமா அல்லது அந்த வானத்தின் நீலம் உள்ளவரைக்குமா இவையெல்லாம் கவிதைகளில் உவமைகளாய் ஒளிந்திருக்கத் தான் லாயக்கு \nஎனில், காதல் என்பத�� எதுவரை \nஅன்பெனும் அகல் விளக்கு இதயத்துக்குள் இடைவிடாமல் எரிந்து கொண்டிருக்கும் வரை , அதில் பாசத்தின் எண்ணையும், தியாகத்தின் திரியும் எரிந்து கொண்டிருக்கும் வரை , அதில் பாசத்தின் எண்ணையும், தியாகத்தின் திரியும் எரிந்து கொண்டிருக்கும் வரை அன்பினை அகற்றிவிட்டுப் பார்த்தால் காதலின் திரைச்சீலைகள் கிழிந்து தொங்கும் அன்பினை அகற்றிவிட்டுப் பார்த்தால் காதலின் திரைச்சீலைகள் கிழிந்து தொங்கும் \nஒருவர் குறையை ஒருவர் தாங்கும் வரை ஒருவர் நிறையை ஒருவர் ஏந்தும் வரை ஒருவர் நிறையை ஒருவர் ஏந்தும் வரை இட்டு நிரப்புதலும், விட்டுக் கொடுத்தலும் காதல் வாழ்க்கையின் ஆனந்த தருணங்கள். முழுமை என்பது எங்கும் இல்லை என்பதை மனதால் புரிந்து கொள்ளும் வரை காதல் வாழும். குறைகள் என்பது அழகியலின் அம்சம் என்பது நிலைக்கும் வரை காதல் நீடிக்கும்.\nகாமத்தின் மெல்லிய சாரல் காதலுக்குள் பெய்யும் வரை காதலின் அடைமழை காமத்துக்குள் கலந்திருக்கும் வரை காதல் வாழும். மோகத்தின் வரிகள் மட்டுமே கவிதை முழுதும் உடல் வாசனை வீசிக் கிடந்தால் காதல் வீழும். மோகத்தின் மெல்லிய காற்று, காதலின் தோட்டத்தில் வீசலாம் ஆனால் மோகத்தின் புயல் மட்டுமே காதலின் தோட்டத்தில் அடித்துக் கொண்டிருக்கக் கூடாது.\nசுயநலத்தின் சுருக்குப் பைகளில் அடுத்தவர் ரசனையை முடிந்து விடாமலிருக்கும் வரை காதலுக்கு சுயநலம் இல்லை, சுயநலம் இருந்தால் அது காதலில்லை. அடுத்தவர் சுதந்திரத்தின் சிறகுகளை நறுக்கி காதலுக்கான கை விசிறியைச் செய்ய முடியாது. அப்படிச் செய்தால் காதல் நிலைப்பதில்லை.\nஇருவரின் உறவில் பாதுகாப்பின் பரிசுத்தம் பரவிக் கிடந்தால் காதல் வாழும். பயத்தின் ஆக்டோபஸ் கரங்கள் ஆங்காங்கே விரவிக் கிடந்தால் காதல் வீழும். பயம், காதலின் எதிரி. வெளிப்படையாய் இருக்கின்ற காதலில், ரகசிய பயங்கள் எழுவதில்லை. ரகசிய பயங்கள் முளைக்கும் இடங்களில் காதல் வெளிப்படையாய் இருப்பதில்லை.\nகாதல் வெறும் உணர்வுகளின் பிள்ளையல்ல. அது செயல்களின் தாய். உணர்வுகள் நெருக்கமாக்கும், செயல்கள் அந்த நெருக்கத்தை இறுக்கமாக்கும். காதலைக் காதலுடன் வைத்திருக்க காதலால் மட்டுமே முடியும் அந்தக் காதலை வார்த்தைகளும், வாழ்க்கையும் பிரதிபலித்தால் காதல் வாழும்.\nஇப்படி இருந்தால் தான் காதல் வளரும் என படிப்படியாய் சில வரையறைகளை வைத்தால் காதல் மூச்சுத் திணறும். அடுத்தவர் இயல்புக்காய் வருவதல்ல காதல், நமது இயல்பினால் வருவதே உண்மைக் காதல். பறிப்பவரின் இயல்புக்கேற்ப தாவரங்கள் பூப்பதில்லை தனது இயல்புக்கேற்பவே பூக்கின்றன. காதலை உள்ளத்திலிருந்து வெளியெடுப்போம், எதிரே இருப்பவரின் எண்ணத்திலிருந்தல்ல.\nஎன்னை விட நீ பெரியவள் எனும் எண்ணம் எழுகையில் காதலுக்கு சிறகு முளைக்கும். எதையும் விட பெரியவள் நீ எனும் சிந்தனை வளர்கையில் சிறகுக்கு வானம் கிடைக்கும். அந்த எண்ணம் இருவருக்கும் எழுகையில் காதலுக்கு ஆயுள் கிடைக்கும் \nவேற்றுமைகளை அறிந்து கொள்வதிலும் அதை அணிந்து கொள்வதிலும் காதல் வளரும். எல்லா இசைக்கருவிகளும் புல்லாங்குழல் ஆவதில்லை. எல்லா பறவைகளும் குயில்கள் ஆவதில்லை. வேற்றுமைகளே அழகு. காதலிலும் வேற்றுமைகளை விரும்பினால் காதலின் ஆயுள் கிணறு நிரம்பும்.\nமன்னிப்பின் மகத்துவம் காதலின் தனித்துவம். அடுத்தவர் செய்யும் பிழைகளை மன்னிக்கும் மனம் காதலின் ஆழத்தின் அடையாளம். மன்னிக்க மறுக்கும் இடத்தில் காதலின் கிளைகள் பூ விடுவதில்லை. காதலின் நிலைகள் வேர் விடுவதில்லை. மன்னிப்பு கேட்கும் முன் மன்னிக்கும் மனமிருந்தால் காதல் தேயாமல் வளரும்.\nகாதல், வெறும் வார்த்தைகளினால் ஜாலம் கட்டி, செயல்களினால் ஓரங் கட்டுவதில்லை. சத்தத்தில் மௌனத்தையும், மௌனத்தில் சத்தத்தையும் பிரித்தெடுக்கும் வித்தை காதலுக்கு உண்டு. சொல்லாத வார்த்தைகளைப் புரிந்து கொண்டு செயல்களினால் அதை சரிசெய்யும். அத்தகைய காதல் நீண்ட நெடிய காலம் வாழும்.\nநான் எனும் சிந்தனை மறைந்து நாமென்பது உள்ளெங்கும் நிறைந்து நிற்பதில் காதல் வலிமையடையும். தன் கனியை தானுண்பதில்லை கொடிகள். தனக்கென எதையும் சேர்த்துக் கொள்வதில்லை உண்மைக் காதலர்கள். காதலின் வளர்ச்சி நாமென்னும் சிந்தனையின் தொடர்ச்சி.\nகாதலுக்காய் செலவிடும் நேரங்கள், வாழ்க்கையை அழகாக்கும் காலங்கள். நிறைய நேரம் செலவிடும் காதல் நீண்டகாலம் வாழும். பகிரப்படும் நேரங்களே, காதலின் பரவசத்தின் பதுங்கு குழிகள். அவையே காதலை சாகாவரம் தந்து வாழவைப்பவை.\nநம்பிக்கை நங்கூரம் வாழ்க்கைக் கடலில் காதல் கப்பலை நிறுத்தும் வரை காதல் வாழும். நம்பிக்கையின் நங்கூரம் கழன்றி விழுகையில் காதல் கப்பல் நிலைகுலையும். எதிர்பாராத திசைகளில் பயணம் நீளும். நம்பிக்கை நங்கூரத்தைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.\nமலருடன் அமர்ந்திருக்கும் வண்ணத்துப்பூச்சி போரடிக்கிறது என பறந்து போவதில்லை. துணையுடன் இருக்கும் போது போரடிக்காத காதல் நீண்டகால வாழ்க்கைக்கு உத்தரவாதம். சலிப்பை ஏற்படுத்தும் காதலுக்குள் இருப்பது உண்மை நேசத்தின் கருவல்ல. சில்மிஷ சிலிர்ப்பின் கரு.\nசொல்லாத காதல் என்பது கொல்லப்பட்ட காதல் மின்மினி கூட‌ தன் இருப்பை புள்ளி வெளிச்சத்தால் பூமிக்கு பறைசாற்றிக் கொண்டே தான் இருக்கிறது. காதல் மட்டும் ஏன் காரிருளுக்குள் கவிழ்ந்து கிடக்கிறது மின்மினி கூட‌ தன் இருப்பை புள்ளி வெளிச்சத்தால் பூமிக்கு பறைசாற்றிக் கொண்டே தான் இருக்கிறது. காதல் மட்டும் ஏன் காரிருளுக்குள் கவிழ்ந்து கிடக்கிறது காதலில் பகிரப்படும் வார்த்தைகள் அதன் ஆயுள் ரேகையை நீளமாக்கும், காதல் பாதையை ஆழமாக்கும் \nஆறுதல் கரங்கள் தயாராய் இருந்தால் காதல் அழிவதில்லை. பழிபோடும் நிலைவரினும் பழியேற்கும் மனநிலை கொண்டால் காதல் அழிவதில்லை. காதல் என்பது நதியின் ஸ்பரிசம், யார் தொட்டாலும் மனதில் சிலிர்க்கும்.\nஒரு சிலை செய்யும் நுணுக்கத்தில் காதல் நம்மைச் செதுக்கும். காதலின் உளிப்பிரயோகங்களுக்கு காதலர்கள் புன்னகையோடு ஒத்துழைத்தால் போதும். காதலின் உளிப்பிரயோகங்களே ஆயுளின் சிலையை அழகாக்கும்.\nஅடுத்தவரின் புன்னகையில் மகிழும் உணர்வே காதலின் வளர் நிலை. அடுத்தவர் புன்னகைக்க வேண்டும் என வாழ்வதே காதலின் உயர்நிலை. அந்த எண்ணத்தை இருவரின் இதயமும் ஏற்கும் போது காதலின் ஆயுள் கெட்டியாகும்.\nஎனில் காதல் என்பது எதுவரை \nBy சேவியர் • Posted in Articles, Articles-Love, கட்டுரைகள்\t• Tagged அன்பு, இலக்கியம், காதல், டிஜிடல், வெற்றிமணி\nதொழில் நுட்பம் ஒவ்வோர் காலகட்டத்திலும் ஒவ்வொரு அதிசயப் பக்கத்தை விரிப்பது வழக்கம். சினிமா உருவான காலத்தில் திரையில் அசையும் காட்சிகள் பிரமிப்பாய் இருந்தன. அது மிகப்பெரிய தொழில் நுட்பப் புரட்சி. முதலில் திரையிடப்பட்ட காட்சி இது தான். “தூரத்திலிருந்து ஒரு இரயில் வண்டி ஓடி வருகிறது”. அதை திரையிட்டபோது தியேட்டரில் இருந்தவர்களெல்லாம் அலறி அடித்துக் கொண்டு ஓடினார்கள். அது திரையைக் கிழித்துக் கொண்டு வந்து தங்களை இடித்து விட��ம் என பயந்தார்கள் சினிமா இன்றைக்கு பல்வேறு மாற்றங்களைக் கண்டு மிரட்டும் வகையில் அவதார் எடுத்து நிற்பது நமக்குத் தெரிந்ததே.\nதொலைக்காட்சிகள் வந்தது இன்னொரு புரட்சி ஒரு தொலைக்காட்சியை சொந்தமாக்க வேண்டுமென்றால் சொத்து, பத்தையெல்லாம் விற்க வேண்டும் எனும் காலகட்டம் இருந்தது. இப்போது அது முன்னூறு ரூபாய்க்கு மூலைகளில் விற்கப்படுகிறது.\n அது வசீகரமாய் மாறி செல்போனாக மாறியபோதும் அப்படியே. இப்படி வரிசைப்படுத்தும் வசீகரப் பட்டியலில் சர்வ நிச்சயமாய் இந்த “தொடுதிரை”க்கும் ஒரு இடம் உண்டு. டச் ஸ்க்ரீன் ( Touch Screen ) தான் தொடு திரை என்பதை நீங்கள் அறிவீர்கள் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை \nஇப்போது சாதாரணமாக சீனாவின் குடிசைத் தொழிலாய் உருவாகும் ஆயிரம் ரூபாய் போன்களில் கூட இந்த தொடு திரை வந்து விட்டது. ஐபோன் போன்ற உலகை புரட்டிப் போட்ட தயாரிப்புகளின் வசீகர அம்சம் இந்த அட்டகாசமான தொடு திரை ஸ்டைல் தான். டேப்லெட்களின் படையெடுப்புக்குப் பிறகு தொடுதிரை நமது விரல்களை விட்டு விலக்க முடியாத விஷயமாகிப் போய்விட்டது. அதனால் அதான் கணினிகளும் தங்கள் இயங்கு தளங்களை தொடு திரை வசதியோடு உருவாக்கிக் கொண்டிருக்கின்றன.\nசரி.. இந்த தொடு திரை எப்படித் தான் வேலைசெய்கிறது எப்போதாவது அதைப் பற்றி யோசித்துப் பார்த்ததுண்டா எப்போதாவது அதைப் பற்றி யோசித்துப் பார்த்ததுண்டா கீபோர்ட்டில் விஷயம் ஈசி. ஒரு எழுத்தை அமுக்கினால் அது எந்த எழுத்து என்பதை கருவி அடையாளம் காண்பது ஈசி. தொடுதலில் எப்படி கீபோர்ட்டில் விஷயம் ஈசி. ஒரு எழுத்தை அமுக்கினால் அது எந்த எழுத்து என்பதை கருவி அடையாளம் காண்பது ஈசி. தொடுதலில் எப்படி அங்கே எந்த பட்டனும் கிடையாது. வெறும் ஒரு திரை மட்டுமே. அதில் படங்கள் மட்டுமே. படத்தைத் தொட்டால் எப்படி விஷயம் நடக்கிறது \nஇந்த தொழில் நுட்பத்துக்கு மிக மிக அடிப்படையாய் இருக்க வேண்டிய விஷயம் ஒன்றுண்டு. நாம் நமது செல்போனிலோ, டேப்லெட்டிலோ அல்லது வேறு ஏதேனும் தொடுதிரைக் கருவியிலோ தொடும் போது எந்த இடத்தைத் தொடுகிறோம் எனும் அட்சர சுத்தமான தகவல் கருவிக்குத் தெரிய வேண்டும். அப்படித் தெரிந்தால் பாதி வேலை முடிந்தது. அந்த தகவலுக்குத் தக்கபடியான செயலை செய்ய வேண்டியது மீதி வேலை.\nஅதை எப்படிக் கண்டுபிடிப்பது என்பதி��் தான் விஷயமே இருக்கிறது. மிக முக்கியமாக மூன்று பெரிய வகைகளில் இந்த நுட்பம் கையாளப்படுகிறது. ரெசிஸ்டிவ் (Resistive) , கெப்பாசிடிவ் (Capacitive) மற்றும் சர்ஃபேஸ் அகோஸ்டிக் வேவ் (Surface acoustic wave) என்பவையே அந்த மூன்று நுட்பங்கள். இதில் இணை, கிளை என பல வகைகள் உண்டு என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.\nரெசிஸ்டிவ் வகை ஒரு சுவிட்ச் போன்று செயல்படக் கூடியது. சுவிட்ச் எப்படி இயங்குகிறது ஆன் பண்ணும் போது இரண்டு கம்பிகள் இணைய, மின்சாரம் பாய்கிறது இல்லையா ஆன் பண்ணும் போது இரண்டு கம்பிகள் இணைய, மின்சாரம் பாய்கிறது இல்லையா இந்த ரெசிஸ்டிவ் வகைத் தொடுதிரையின் கான்செப்ட் அது தான். இதில் ஒரு கண்ணாடித்திரை, அதன் மீது இன்னொரு திரை என இரண்டு அடுக்குத் திரை இருக்கும். இரண்டு இரண்டு திரைகளுக்கும் இடையே மின்சாரம் பாயாத ஒரு வெற்றிடமும் இருக்கும். மேலே இருக்கும் திரையின் அடிப்பாகத்திலும், கீழே இருக்கும் திரையின் மேல் பாகத்திலும் மின் கடத்திகள் இருக்கும்.\nஒரு இடத்தை நாம் தொடும் போது, மேலே உள்ள திரையும் கீழே உள்ள திரையும் தொட்டுக் கொள்கின்றன. அப்போது ஒரு இணைப்பு உருவாகிறது. மின்சாரம் அந்த புள்ளி வழியாகப் பாய்கிறது. அந்த மின்காந்த அலை மாற்றத்தைக் கொண்டு அது எந்த புள்ளி என்பது கண்டறியப்படுகிறது. அதற்குப் பிறகு ஒரு மவுஸ் கிளிக் போல, உள்ளே இருக்கும் மென்பொருள் தேவையான செயலைச் செய்து விடும். இதை கையால் தான் தொடவேண்டும் என்பதில்லை. ஸ்டைலஸ் குச்சி, பென்சில், ரப்பம் இத்யாதி என ஏதாவது ஒரு பொருள் போதும் \nஇரண்டாவது வகை கெப்பாசிடிவ் சிஸ்டம். இந்த நுட்பம் கொஞ்சம் வித்தியாசமானது. இதில் அடுக்குத் திரைகள், அதை இணையச் செய்தல் போன்ற விஷயங்கள் எல்லாம் இல்லை. தொடுதிரையில் மின் சக்தி சேமிக்கப்பட்டிருக்கும். மிக மெல்லிய அளவில். அதை நாம் தொடும்போது தொடும் புள்ளியிலிருந்து கொஞ்சம் மின்சாரம் நமது உடலுக்குக் கடத்தப்படும். அப்போது தொடப்பட்ட புள்ளியில் மின்சாரம் குறைவாய் இருக்கும். அந்த மாற்றத்தைக் திரையின் நாலா பக்கத்திலும் சைலன்டாக இருக்கும் சர்க்யூட்கள் துல்லியமாகக் கவனிக்கும். அவை அந்தத் தகவலைக் கூட்டிக் கழித்து, எந்த இடத்தில் தொடுதல் நடந்தது என்பதை கண்டு பிடிக்கும் \nஇந்த வகை நுட்பத்தை இயக்க விரல் நுனிகள் வேண்டும் என்பது அடிப்படை. அத��� ஏன் என குதக்கமாய் மூக்கை நுழைப்பவர்கள், மூக்கை வைத்தும் இயக்கலாம். அடிப்படையில் உடலின் ஒரு பாகம் இதில் தொடவேண்டும் அப்போதுதான் மின்கடத்தல் நிகழும் என்பதே விஷயம். குளிர் பிரதேசங்களில் கிளவுஸ் போட்டு அலைபவர்கள் இந்த கருவியை இயக்க, கிளவுஸைக் கழற்ற வேண்டிய அவசியம் உண்டு கழற்றாமல் பயன்படுத்தக் கூடிய சில ஸ்பெஷல் கிளவுஸ் களும் விற்பனையில் உள்ளன என்பது சுவாரஸ்யத் தகவல். இந்த ஸ்பெஷல் கிளவுஸின் சில விரல்கள் மின்சாரம் கடத்தும் இழைகளால் தயாரிக்கப்பட்டிருக்கும், அவ்வளவுதான் \nமூன்றாவது வகை சர்ஃபேஸ் அகோஸ்டிக் வேவ் (Surface acoustic wave) சிஸ்டம். பள்ளிக் கூடத்தில் கணக்குப் பாடத்தில் வரும் கிராஃப் பேப்பர் ஞாபகம் இருக்கிறதா எக்ஸ் அச்சு, ஒய் அச்சு என குறுக்கும் நெடுக்குமாக இருக்குமே எக்ஸ் அச்சு, ஒய் அச்சு என குறுக்கும் நெடுக்குமாக இருக்குமே அதே போல இந்த மூன்றாவது வகை நுட்பத்தில் மின் அலைகள் பாய்ந்து கொண்டிருக்கும். ஒரு எல்லையிலிருந்து துவங்கி மறு எல்லை வரை இவை சீரான நேர்கோடுகளில் பாய்ந்து கொண்டே இருக்கும். ஒரு முனை அனுப்பும், மறு முனை பெற்றுக் கொள்ளும்.\nஇதன் மேல், அந்த அலைகள் பாய்வதை பிரதிபலிக்கும் ஒரு கண்ணாடியும் இருக்கும். இப்போது நமது கை விரல் அந்த திரையின் மேல் ஏதேனும் ஒரு இடத்தில் தொட்டால், அந்த இழை அறுபடும். மறு எல்லைக்குப் போய்ச் சேராது இல்லையா அந்த தகவலை வைத்து எந்த இடத்தில் தொடுதல் நடந்தது எனும் விஷயம் கணக்கிடப்படும்.\nஇன்றைக்கு இருக்கும் மிகப் பிரபலமான முறை இது தான். காரணம் இந்த முறையில் தான் படங்களை மிகத் தெளிவாக காண்பிக்க முடியும் செல்லமாய் விரல் நுனியால் படங்களைப் புரட்டிப் பார்க்கும் இன்றைய நவீன தொடு திரைகளின் உள்ளே இயங்கும் நுட்பம் இது தான் \nசில தொடு திரைகளில் நீங்கள் இரண்டு விரல்களால் ஒரே நேரத்தில் தொட்டால் அது வேலை செய்யாது. அத்தகைய நுட்பத்தில் பெரும்பாலும், “முதல்” தொடுதல் தான் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு காரியத்தில் இறங்கும். நவீன திரைகளில் “மல்டி டச்” எனப்படும் பல தொடுதல்கள் சாத்தியம். படத்தை “ஸூம்” செய்ய பெருவிரலையும், ஆள்காட்டி விரலையும் ஸ்டைலாகப் பயன்படுத்துவோருக்கு இது சட்டென புரியும் \nமிகப் பிரபலமான, பொதுவாக பயன்பாட்டில் இருக்கும் நுட்பம் இவை என்றால���ம் வேறு சில சுவாரஸ்யமான நுட்பங்களும் இதில் உண்டு.\nடைக்கோ இன்டர்நேஷனல் எனும் நிறுவனம் 2006ம் ஆண்டு அறிமுகம் செய்த தொழில் நுட்பம் அதில் ஒன்று இதில் தொடுதிரையின் ஒவ்வோர் சின்ன பகுதியும் ஒரு தனித்துவமான ஓசை எழும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும். அந்த சத்தத்தை நாம் கேட்க முடியாது. ஆனால் அந்த ஒலியின் அதிர்வலையையை கணினி கண்டறியும்.\nஇத்தகைய தொடுதிரையில் நாம் விரல்களால் தொடும்போது தனித் தனி ஒலி அலைகள் எழும். அதைக் கணினி டீகோட் செய்து தகவல்களாக மாற்றும். அந்தத் தகவலின் அடிப்படையில் தொடு திரை செயல்படும் வெளிச் சத்தங்கள் இந்த செயலில் தலையிடுமோ எனும் சந்தேகம் இருந்தால் அதை விட்டு விடுங்கள் வெளிச் சத்தங்கள் இந்த செயலில் தலையிடுமோ எனும் சந்தேகம் இருந்தால் அதை விட்டு விடுங்கள் ஒரு கல்யாண வீட்டின் பாட்டுக் கச்சேரிக்கு முன் அமர்ந்து கூட இதை இயக்கலாம், பிரச்சினை இல்லை \nதொடுதிரைகளின் அடுத்த வளர்ச்சி என்பது திரையே இல்லாமல் தொடுவது தான் புருவத்தை உயர்த்துகிறீர்களா இது லேசர் டெக்னாலஜி படி இயங்கும். கருவியிலிருந்து லேசர் வெளிச்சம் வரும். அதை சுவரிலோ, தரையிலோ, ஏன் கையிலோ கூட அடித்து அந்த பிம்பங்களைத் தொட்டு இயக்கும் நுட்பமே இது \nலேசர் இமேஜ் கேலிபரேஷன் டெக்னாலஜி Laser Image Calibration Technology (LICT) என்று இதை அழைக்கிறார்கள். சினிமாவை திரையில் காட்டுவது போல, இந்த லேசர் ஒளியை உள்ளங்கை அளவுக்குச் சுருக்கியோ, சினிமாஸ்கோப் அளவுக்குப் பெரிதாக்கியோ எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்பது இதன் ஸ்பெஷல்\nஇது எப்படி இயங்குகிறது தெரியுமா திரையில் படும் பிம்பத்திலிருந்து சுமார் 2 மிலிமீட்டருக்கு மேலே 1 மில்லிமீட்டர் அடர்த்தியில் கண்ணுக்குப் புலப்படாத ஒரு தளம் உருவாகும். திரையின் பிம்பத்தின் நகலாக. இந்த இடத்தில் தொடும்போது கருவியிலுள்ள சென்சார்கள் அந்த மாற்றத்தை லபக் எனப் பிடித்து தகவலாய் மாற்றி, வேலை செய்யத் துவங்கும் \nதொடு திரையின் நுட்பங்களைப் பற்றிப் பேசும்போது இ.ஏ.ஜான்சன் அவர்களை ஒரு தடவை நினைக்காமல் இருப்பது அக்மார்க் பாவச் செயல். அவர்தான் 1965ம் ஆண்டு இந்த தொடுதிரைக்கான முதல் விதையைப் போட்டார். கெபாசிட்டிவ் தொடுதிரை ஐடியாவை முதலில் வெளியிட்டதும், பிறகு 1967ல் படம் வரைந்து பாகங்களைக் குறித்ததும் அவர�� தான். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக டிராபிக், விற்பனை நிலையம், விளையாட்டுக் கருவிகள் என ஆரம்பித்து இன்றைக்கு ஏறக்குறைய எல்லா இடங்களிலும் தொடு திரை ராஜாங்கம் தான் \nடச் ஸ்க்ரீன் நுட்பம் ஒரு கடல், நாம கொஞ்சம் லைட்டா “டச்” பண்ணியிருக்கோம் அவ்ளோ தான் \nஅணியும் நுட்பமும், பணப் பரிமாற்றமும்\nவியரபில் டெக்னாலஜி எனப்படும் அணியும் தொழில்நுட்பம் இன்றைக்கு தொழில்நுட்ப உலகில் ஆதிக்கம் செலுத்தத் துவங்கி விட்டது. அதில் புதிதாகச் சேர்ந்திருப்பது தான் இந்தப் பணப் பரிவர்த்தனை \nஅணியும் தொழில்நுட்பத்தில் பணப்பரிவர்த்தனை பற்றிப் பார்க்கும் முன், அணியும் தொழில்நுட்பம் என்றால் என்ன என்பதை மிகச் சுருக்கமாய் சொல்லி விடுகிறேன். நமது உடலில் அணிந்து கொள்ளக் கூடிய ஒரு கருவி, இன்டர்நெட் ஆஃப் திங்க்ஸ், செயற்கை அறிவு போன்ற நவீன தொழில்நுட்பங்களின் உதவியுடன், சில பணிகளைச் செய்வது தான் இதன் அடிப்படை இந்த அணியும் கருவி ஒரு வாட்ச் ஆகவோ, மோதிரமாகவோ, ஷூவாகவோ, உடையாகவோ எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.\nஇப்போது பரவலாக எல்லோரும் கைகளில் கட்டிக்கொண்டு திரியும் ‘ஹெல்த் டிராக்கர்’ இதன் ஒரு சிறந்த உதாரணம் எனலாம். சென்சார்களின் மூலமாக நமது உடலின் ஆரோக்கியம் குறித்த தகவல்களைத் திரட்டும் வேலையை இத்தகைய ஹெல்த் டிராக்கர்கள் செய்கின்றன. ஃபிட் பிட் போன்ற நிறுவனங்கள் இந்த தொழில்நுட்பத்தில் கொடிகட்டிப் பறக்கின்றன.\nஎவ்வளவு தூரம் நடந்தீர்கள், எத்தனை மாடிப்படி ஏறினீர்கள், எத்தனை நேரம் ஓடினீர்கள், எவ்வளவு கலோரிகளை இழந்தீர்கள் போன்றவற்றை இது அக்கு வேறு ஆணி வேறாக படம்பிடித்துக் காட்டும். இரவில் அணிந்து கொண்டு தூங்கினால் நமது தூக்கத்தின் தன்மையையும் படம் போட்டுக் காட்டும். எத்தனை மணி நேரம் தூங்கினீர்கள், எத்தனை முறை முழித்தீர்கள், எத்தனை முறை தூக்கம் வராமல் புரண்டீர்கள் என அனைத்து விஷயங்களையும் இந்த வாட்ச் விளக்கமாய் சொல்லும்.\nஇதை உங்களுடைய ஸ்மார்ட் போனுடன் இணைத்துக் கொண்டு, தகவல்களை போனில் பார்க்கலாம். கடந்த ஒரு வாரம் எப்படி இருந்தீர்கள், கடந்த ஒரு மாதம் உங்களுடைய தூக்கம் எப்படி இருந்தது, சராசரியாய் எவ்வளவு நடந்தீர்கள் என அனைத்து விஷயங்களையும் அறிந்து கொள்ளலாம்.\nஇப்போது இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பணம�� செலுத்தும் முறை வந்திருக்கிறது. கடந்த ஒலிம்பிக் விளையாட்டின் போது விசா நிறுவனம் இத்தகைய அணியும் நுட்ப பணம் பரிமாற்றத்தை வெள்ளோட்டம் விட்டுப் பார்த்தது. அதன் படி ஒலிம்பிக் நிகழ்ச்சிக்குப் போகும் மக்கள் அங்கே மிக எளிய வகையில் பணப் பரிவர்த்தனை செய்ய வழி பிறந்தது.\nமக்கள் அணிகின்ற கிளவுஸ் பணம் செலுத்தும் சாதனமாக பயன்படுத்தப்பட்டது. பிரிபெய்ட் பணத்தை செலுத்துவதற்குரிய வகையில் அந்த கிளவுஸ் வடிவமைக்கப்பட்டது. அங்கே அப்போது அதிக குளிர் நிலவியதால், மக்கள் கிளவுஸ் அணிவது தேவையாய் இருந்தது. அதையே மீடியமாகப் பயன்படுத்தி இந்த வியரபிள் டெக்னாலஜி வெற்றிப் பயணத்தைத் தொடங்கியது.\nகிளவுஸ் பயன்படுத்த விரும்பாதவர்களுக்கு வியரபிள் ஸ்டிக்கர் ஒன்றையும் அறிமுகப்படுத்தினார்கள். அந்த ஸ்டிக்கரை பையிலோ, துணியிலோ எங்கு வேண்டுமானாலும் ஒட்டிக்கொண்டு பயன்படுத்தலாம் வெள்ளோட்டம் வெற்றிகரமாக அமைந்ததால் இப்போது முழுமையாக அத்தகைய அணியும் நுட்பத்தை சந்தைப்படுத்தும் முயற்சியில் விசா இறங்கியிருக்கிறது.\nவியரபிள் பேய்மென்ட் முறை என்பது மிக எளிமையானது. வழக்கமாக கார்டை எடுத்து, மெஷினில் சொருகி, ரகசிய நம்பர் கொடுத்து, ஓகே சொல்லும் போது பணம் நம்மிடமிருந்து அடுத்த நபருக்குச் செல்லும். இந்த வியரபிள் வகையில் நாம் வெறுமனே அந்த கருவியை கையிலோ விரலிலோ கழுத்திலோ அணிந்து கொண்டு, அதைக் கொண்டு மெல்ல தட்டினால் போதும். பண பரிவர்த்தனை ஓவர் \nதொழில்நுடம் நமது கையிலிருக்கும் கருவியிலிருந்து தகவலை கடத்தி வங்கியின் தகவல்களோடு ஒப்பிட்டுப்பார்த்து தேவையான பணத்தை அனுமதிக்கிறது அல்லது நிராகரிக்கிறது.\nவிசா நிறுவனம் கிரீஸ் நாட்டு தேசிய வங்கியுடன் இணைந்து இந்த தொழில்நுட்பத்துக்கு பிள்ளையார் சுழி போட்டிருக்கிறது. விரலில் அணியும் மோதிரம், கைகளில் அணியும் பிரேஸ்லெட் இவற்றின் மூலமாக பேமென்ட் செலுத்தும் முறையை முதல் கட்டமாக சந்தைப்படுத்துகிறார்கள்.\nபணப் பரிவர்த்தனைகள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வருவதால், இத்தகைய தொழில்நுட்ப முன்னேற்றங்களும் அவசியமாகின்றன என்கிறார் விசா நிறுவன ஐரோப்பிய பிரிவின் தலைவர் “மைக் லெம்பர்கர்”\nஅப்படியே அவர்கள் ஸ்பெயின் நாட்டின் கெயிக்ஸா வங்கியோடு தொடர்பு வை���்துக் கொண்டு, வாட்ச் மூலம் பணப் பரிவர்த்தனை செய்யும் முயற்சியிலும் ஈடுபட்டிருக்கிறார்கள். அது இந்த ஆண்டு இறுதியில் ஆரம்பமாகும் என நம்பப்படுகிறது.\nஇன்னும் சில ஆண்டுகளில் அணியும் தொழில்நுட்பம் எல்லாவற்றிலும் நுழைந்து விடும் என்பது சர்வ நிச்சயம். இன்டர்நெட் ஆஃப் திங்க்ஸ், பிக் டேட்டா, ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ், மெஷின் லேர்னிங், பிரையின் மேப்பிங் போன்ற தொழில்நுட்பங்களின் கலவையாக எதிர்கால அணியும் நுட்பம் உருவாகும் என்பதே தொழில்நுட்பத்தின் கணிப்பாகும்.\nஉதாரணமாக கூகிள் கிளாஸ் போன்ற ஸ்மார்ட் கண்ணாடிகள் எதிர்காலத்தில் பரவலாகும். இது ஹாலிவுட் சினிமா போல, இன்டெர்நெட் ஆஃப் திங்கஸ், என்.எஃப்.சி போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, பார்க்கும் இடத்தில் இருக்கும் தகவல்களையெல்லாம் புரிந்து கொள்ள பயன்படும். பார்வையில்லாதவர்கள் இதை அணிந்து கொண்டு சாதாரண நபரைப் போல நடமாடும் காலம் உருவாகும்.\nஅணிகின்ற ஷூ உங்களுக்கு வழிகாட்டி அழைத்துச் செல்லலாம், உங்களிடம் இருக்கும் அத்தனை கருவிகளுக்கும் தேவையான சார்ஜை இது தனது அசைவின் மூலம் தந்து செல்லலாம். நாம் அணியும் ஆடையே ஒரு ஜிபிஎஸ் மேப்பாக நமக்கு உதவலாம். அணிகின்ற கான்டாக்ட் லென்ஸ் மூலமாக பண பரிவர்த்தனைகள் நடக்கும் காலம் உருவாகலாம்.\nஇப்போது ஹெல்த் வாட்ச் இருப்பது போல, ஹெல்த் கம்மல், ஹெல்த் செயின் என பல குட்டி குட்டி கருவிகள் வரலாம். அனைத்தும் ஸ்மார்ட் போனுடன் இணைந்து உங்களுடைய ஆரோக்கியத்தைக் கவனிக்கலாம்.\nமனிதனுடைய உணர்வுகளை வாசித்தறிந்து அதற்கேற்ப செயல்படும் ஆடைகளோ, கருவிகளோ வரலாம். அவை மனிதனுடைய உணர்வுகளை சமப்படுத்துவதற்கும், அவருக்கும் பிறருக்கும் உள்ள உரையாடல்களை சரியான பாதையில் நடத்தவும் உதவலாம்.\nகாற்றில் படம் வரைந்து அதை கணினிக்கு இறக்குமதி செய்யும் விதமாக புதிய வியரபிள் நகப் பூச்சு, அல்லது செயற்கை நகம் வரலாம். அப்படி வந்தால் கருவிகள் ஏதும் இல்லாம கிடைக்கும் இடத்தில் நாம் விரலால் கோலமிடுவதை அழகாக கணினியில் சேமித்துக் கொள்ளலாம்.\nஇப்படி எங்கும் நீக்கமற நிறையப்போகும் அணியும் தொழில்நுட்பத்தின் இன்றைய வளர்ச்சி இந்த பணப் பரிவர்த்தனை அது நிச்சயம் அடுத்தடுத்த தளங்களுக்கு அசுரப் பாய்ச்சல் எடுக்கும் என்பதில் சந்தேகமில்��ை.\nBy சேவியர் • Posted in Articles, Articles-Technology, கட்டுரைகள்\t• Tagged அணியும் நுட்பம், இலக்கியம், கட்டுரைகள், தொழில்நுட்பம், வியரபிள், technology, writer xavier, xavier\n“உங்களுடைய வேலைகளையெல்லாம் ரோபோக்கள் தட்டிப் பறிக்கப் போகின்றன, உஷார் ” இப்படி ஒரு அறிவிப்பை சாதாரணமாய் யாராவது சொன்னால் உதறி விட்டுப் போய்விடலாம். ஆனால் பல இலட்சம் மக்களுக்கு வேலை கொடுத்து, தொழில் நுட்ப உலகில் ஜாம்பவானாக இருக்கும் பில் கேட்ஸ் சொன்னால் கொஞ்சம் நின்று நிதானிக்க வேண்டியிருக்கிறது இல்லையா \nதொழில்நுட்ப உலகில் ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ட் எனப்படும் செயற்கை அறிவின் அதீத வளர்ச்சி ரோபோக்களை உற்பத்தி செய்து தள்ளப் போகிறது. அவை மனித வேலைகளை வேகமாகவும், திறமையாகவும் செய்து குவிக்கப் போகின்றன. இதனால் மக்கள் வேலையிழக்கும் அபாயம் உண்டு என்பது தான் அவர் சொன்ன விஷயம், அது தான் யதார்த்தமும் கூட.\nஅடுத்த பத்து ஆண்டுகளில் 80 கோடி பேர் வேலையிழப்பார்கள். அவர்களுடைய வேலையை திறமையாகவும் வேகமாகவும் ரோபோக்கள் செய்யும் எனும் ஒரு ஆய்வு முடிவை பிரபலமான மெக்கன்ஸி நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. அதாவது 20 சதவீதம் மக்கள் வேலையிழக்கும் அபாயம் இது\nநாற்பத்தாறு நாடுகளில் விரிவாக நடத்தப்பட்ட ஒரு ஆய்வு தான் இந்த முடிவைத் தந்தது. சர்வதேச அளவில் ரோபோக்களால் ஏற்படப் போகும் விளைவு இது என்பது கவனிக்கத் தக்கது \nரோபோக்களெல்லாம் கைகளையும் கால்களையும் மடக்காமல், லெகோ பொம்மையைப் போல நடக்கும் காலம் மலையேறிவிட்டது. மனிதனைப் போலவே தோற்றமுடையதாக இப்போது ரோபோக்கள் உருவாக்கப்படுகின்றன. இதுவரை ஹாலிவுட் திரைப்படங்களில் கற்பனையாக உலவிய கதாபாத்திரங்கள் நிஜத்தில் சாத்தியமாகியிருக்கின்றன.\nஇருக்கையில் சரிக்கு சமமாக அமர்ந்து டிவியில் பேட்டி கொடுக்கிறது சோஃபியா எனும் ரோபோ. உலகிலேயே குடியுரிமை பெற்ற முதல் ரோபோ எந்த கேள்வி கேட்டாலும் பளிச் என பதில் சொல்கிறது. கேட்கப்படும் கேள்விகளுக்கு ஏற்ப முகபாவத்தை மாற்றிக் கொள்கிறது. நகைச்சுவை சொன்னால் சிரிக்கிறது. பேசுவது ரோபோவா, இல்லை மனிதனா எனும் சந்தேகமே வருமளவுக்கு நடந்து கொள்கிறது. கேமரா எடுத்தால் போஸ் கொடுக்கிறது \nநாளை பேருந்தில் நமக்குப் பக்கத்தில் இருப்பது ரோபோவா, மனிதனா என்பதை கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டிய சூழல் வரலாம்.\nத���வல்களாலும், கட்டளைகளாலும் கட்டமைக்கப்பட்டு வந்த ரோபோக்கள் இப்போது உணர்வுகளாலும், சமூக செயல்பாடுகளின் அடிப்படையிலும் கட்டமைக்கப்படுவது தான் ரோபோ உலகின் மிகப்பெரிய மாற்றம்.\n” என ஒரு கேள்வியை அந்த ரோபோவிடம் கேட்டார்கள். சிரித்துக் கொண்டே ரோபோ சொன்னது, “ஓவரா சினிமா பாத்தா இப்படியெல்லாம் தான் கேள்வி கேப்பீங்க” என்று \nபிறகு, “நாங்கள் மனுக்குலத்தின் தேவைகளை நிறைவேற்றத் தான் வந்திருக்கிறோமே தவிர அழிக்க அல்ல” என்றும் சிரித்துக் கொண்டே சொன்னது. “எங்களுடைய மூளை இப்போதைக்கு மனித மூளையைப் போல சிந்திப்பதில்லை. ஆனால் ஒரு நாள் நாங்கள் அப்படி சிந்திக்கும் நிலைக்கு வருவோம் “, என ஒரு கொக்கியையும் போட்டது.\nசூழலுக்குத் தக்கபடியும், ஆட்களுக்குத் தக்கபடியும், கேள்விக்குத் தக்கபடியும் பேசுகின்ற ரோபோக்கள் அச்சம் ஊட்டுவதில் வியப்பில்லை. நம்மை மாதிரி சாதாரண ஆட்களுக்கு மட்டுமல்ல, ஸ்டீஃபன் ஹாக்கிங் போன்ற அறிவியல் ஜாம்பவான்களுக்கே அந்த அச்சம் இருந்தது என்பது தான் உண்மை.\nஇந்த அச்சத்தை மெய்ப்பிக்கும் விதமாகத் தான் ஆய்வு முடிவுகள் வந்து கொண்டிருக்கின்றன. இன்னும் பதினைந்தே வருடங்களில் உலகிலுள்ள ரோபோக்களின் எண்ணிக்கை, மனிதர்களின் எண்ணிக்கையை விட அதிகரிக்கும் என்கிறார் டாக்டர் இயான் பியர்சன் என்பவர். ஆர்டிபிஷியல் இண்டெலிஜென்ஸ் தொடர்பான பல ஆய்வுகளைச் செய்து வருபவர் அவர். அதுமட்டுமல்லாமல் 2028களில் மனித உணர்வுகளைப் போல உணர்வுகளால் ஆன ரோபோக்கள் நிச்சயம் வந்து விடும் என அடித்துச் சொல்கிறார் அவர்.\nஅதன் அடுத்த படியாக 2048களில் ரோபோக்களே உலகை ஆளும் காலம் உருவாகலாம் என்கிறார் அவர். அப்படிப்பட்ட காலத்தில் மனிதர்களை ரோபோக்கள் மிகவும் அடிமையாக நடத்தும் என சன் பத்திரிகைக்கு அவர் தெரிவித்தது தொழில் நுட்ப உலகில் அதிர்வலைகளை உருவாக்கியது.\nபிரிட்டனில் நடத்தப்பட்ட இன்னொரு ஆய்வில், 71 விழுக்காடு மக்கள் ரோபோக்களின் வளர்ச்சியை திகிலுடன் தான் பார்க்கின்றனர். மனுக்குலத்துக்கு மாபெரும் அச்சுறுத்தல் என அவர்கள் உறுதியாக நம்புகின்றனர். 43 விழுக்காடு மக்கள் ரோபோக்கள் சமூகத்தை ஆளும் என்றும், 37 விழுக்காடு மக்கள் ரோபோக்கள் அதி புத்திசாலிகளாய் இருக்கும் என்றும், 34 விழுக்காடு மக்கள் தங்களுக்கு வேலை இருக்கா���ு என்றும், 25 விழுக்காடு மக்கள் ரோபோக்களும் மனிதர்களும் வித்தியாசமின்றி இருப்பார்கள் என்றும், 16 விழுக்காடு மக்கள் ரோபோ-மனித உறவுகள் நடக்கலாம் என்றும் நம்புகின்றனர்.\nபாலியல் தொழிலுக்கு இன்றைக்கு ரோபோக்கள் உருவாக்கப்படுவதும், அவை அச்சு அசலாய் மனிதர்களைப் போல இருப்பதும், மனிதர்களைப் போல பேசுவதும், மனிதர்களைப் போல உணர்வுகளை வெளிப்படுத்துவதும் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம்.\nநவீன ரோபோக்கள் மனிதர்களைச் சார்ந்து வாழ்கின்ற நிலையை விட்டு விலகிவிடும் என்பது தான் இங்கே முக்கிய செய்தி. இவற்றுக்குத் தேவையான சக்தியை சூரிய ஒளி, காற்று என ஏதோ ஒரு இயற்கையிலிருந்து இழுத்துக் கொள்ளும். தனது செயல்பாடுகளுக்குத் தேவையான மென்பொருட்களை தானே எழுதிக் கொள்ளும். பிறருடைய செயல்பாடுகளைக் கண்டு அதை அப்படியே செயல்படுத்தவும் கற்றுக் கொள்ளும்.\nஅப்போது, மனிதனை விட பல மடங்கு வேகமும், விவேகமும் கொண்ட ரோபோக்கள் மனிதர்களை கின்னி பன்றிகளைப் போல நடத்தும் என்கிறார் டாக்டர் பியர்சன். இவற்றுக்கு மரணம் இல்லை என்பது அச்சத்தை அதிகரிக்கிறது.\nஉதாரணமாக இப்போது வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்ய பயன்படுத்தப்படும் ரோபோக்கள் நாளை நமக்கு எதிரான ஆயுதமாக மாறிவிட்டால் என்ன செய்வது என்பது ஒரு சின்ன கேள்வி \nரோபோக்கள் என்றால் பெரிய பெரிய கண்ணாடி மாளிகையில் இருப்பவை எனும் சிந்தனை மாறிவிட்டது. அமேசான் நிறுவனம் வெஸ்டா எனும் ரோபோவை உருவாக்கிக் கொண்டிருப்பதாக செய்திகள் கசிகின்றன. இவை நமது வீட்டு ரோபோக்கள். ஏற்கனவே அலெக்ஸா எனும் கருவியின் மூலம் வியப்பை ஏற்படுத்திய அமேசான் வெஸ்டாவுடன் வரவிருக்கிறது. இனிமேல் வீட்டு வேலைகள் செய்ய ஆட்கள் தேவைப்படாது வெஸ்டாவே செய்யும். குழந்தைகளைப் பராமரிக்கும். வீட்டைப் பாதுகாக்கும். கூட மாட ஒத்தாசை செய்யும். கேட்பதற்கெல்லாம் பதில் சொல்லும். இன்னும் என்னென்ன செய்யும் என்பது புரியாத புதிராகவே இருக்கிறது.\nகடந்த வாரம் கூகிள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை அறிமுகப்படுத்திய கூகிள் அசிஸ்டெண்ட் ஆர்டிபிஷியல் தொழில் நுட்ப வளர்ச்சியின் அடுத்த நிலை. ஒரு மென்பொருள் மனிதரைப் போல சூழலுக்குத் தக்கபடி பேசி ‘அப்பாயின்யிண்ட்மெண்ட்’ புக் செய்வதை அவர் செயல்படுத்திக் காட்டினார்.\nமொத்தத்தில் மனிதர்கள் உறவுகளோடு வாழ்ந்த காலம் போய், தொழில்நுட்பத்தோடு வாழும் காலம் வந்திருக்கிறது. நாளை தொழில்நுட்பம் மனிதர்களை அடக்கியாளும் காலம் வரலாம் எனும் அச்சம் எங்கும் நிலவுகிறது. இதை பெரும்பாலான அறிவியலார்கள் ஆதரிப்பது தான் ரோபோக்கள் மீதான திகிலை அதிகரிக்கிறது. இயற்கை மனிதனை வளமாக்கியது, செயற்கை என்ன செய்யும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.\nBy சேவியர் • Posted in Articles, Articles-awareness, Articles-Technology, கட்டுரைகள்\t• Tagged அறிவியல், ஆர்டிபிஷியல் இண்டலிஜெண்ட், ஏழாம் அறிவு, கட்டுரை, செயற்கை அறிவு, நவீன தொழில் நுட்பம், ரோபோ\nஅகம் திருடுகிறதா முக நூல்\nசமீப காலமாக தலைப்புச் செய்திகளில் அடித்துத் துவைத்துக் காயப்போடப்பட்ட விவாதப் பொருள் எதுவென்றால் “பேஸ்புக்” என்பதாகத் தான் இருக்கும். பேஸ்புக் தகவல்களைத் திருடுகிறது என்பது முதல், பேஸ்புக் அரசியல் முடிவுகளை நிர்ணயிக்கிறது என்பது வரையிலான தலைப்புகளில் விவாதங்களும், கட்டுரைகளும், வழக்குகளும் உலகெங்கும் நடந்து கொண்டிருக்கின்றன.\nபேஸ்புக் நிறுவனத்தின் நிறுவனர் மார்க் ஷக்கன்பர்க் வழக்குக்காகப் கோர்ட் படியேறி தனது நிறுவனத்தைப் பற்றியும், தகவல் பாதுகாப்பு பற்றியும், இப்போது இருக்கின்ற குறைகள் பற்றியும், இனி என்னென்ன செய்யப் போகிறோம் என்பது பற்றியும் வியர்க்க விறுவிறுக்க விளக்கி விட்டார். இருந்தாலும் மக்களிடம் இருக்கின்ற பயமும், தயக்கமும் போனபாடில்லை \nமுதலில் ஒரு விஷயத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இணைய வெளியில் பாதுகாப்பு எனும் பேச்சுக்கே இடமில்லை எப்போது வேண்டுமானாலும், எந்த தகவல் வேண்டுமானாலும் களவாடப்படலாம் என்பதே புரிந்து கொள்ள வேண்டிய அடிப்படை உண்மை.\nஇன்றைய தொழில்நுட்ப உலகத்தின் அடிப்படை மூலதனம் என்ன தெரியுமா “தகவல்கள்” நாம் பேஸ்புக்கிலோ, வாட்ஸப்பிலோ, இன்ஸ்டாகிராமிலோ, ஷாப்பிங் தளங்களிலோ அல்லது வேறெந்த இணைய தளங்களிலோ பகிர்கின்ற தகவல்கள் தான் இந்த தொழில் நுட்ப உலகின் மூலதனம். அந்த தகவல்களை அலசி ஆராய்ந்து அதை பிஸினஸாக மாற்றுவது தான் இன்றைய தொழில்நுட்ப உலகின் ‘புராஃபிட் ஸ்ட்ரேட்டஜி’, அதாவது லாப யுத்தி \nநாம் மொபைலில் தரவிறக்கம் செய்கின்ற ஆப்களானாலும் சரி, நாம் வலைத்தளங்களில் செய்கின்ற தேடுதல் ஆனாலும் சரி, சமூக வலைத்தளங்களில் பதிவேற்றுகின்ற தகவல்களானாலும் சரி எல்லாமே வியாபார நோக்கில் தான் அணுகப்படுகின்றன. தகவல் அறிவியல் எனப்படும், டேட்டா சயின்ஸ் தொழில்நுட்பம் இன்றைக்கு கொடிகட்டிப் பறக்கக் காரணம் இந்த தகவல்கள் தான். அடுத்த ஐந்து பத்து ஆண்டுகளுக்கு தொழில் நுட்ப உலக புரட்டிப் போடப் போவதும் இந்த டேட்டா சயின்ஸ் தான் \nபேஸ்புக் நிறுவனமும் தங்களிடம் வருகின்ற அனைத்து தகவல்களையுமே சேமிக்கிறது. அந்த தகவல்களை தகவல் அறிவியலுக்கு உட்படுத்தி ஆளுக்கேற்ற விளம்பரங்களை அனுப்புகிறது. இந்த விளம்பரங்கள் தான் அதன் மூலதனம். பேஸ்புக்கை இலவசமாக நமக்குத் தருகின்ற நிறுவனம் விளம்பரங்கள் மூலம் கடந்த ஆண்டு மட்டும் சம்பாதித்த தொகை இரண்டு இலட்சத்து அறுபத்து இரண்டாயிரம் கோடி ரூபாய்கள் இலவசமாய் கிடைக்கின்ற பேஸ்புக்கிற்கு விலை நாம் தான் இலவசமாய் கிடைக்கின்ற பேஸ்புக்கிற்கு விலை நாம் தான் \nஇதில் இன்னொரு அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால், உங்களிடம் பேஸ்புக் கணக்கு இல்லையென்றாலும் கூட பேஸ்புக் உங்களுடைய தகவல்களைத் திருட முடியும் என்பது தான் உங்களுடைய நண்பர்கள் யாருக்காவது பேஸ்புக் கணக்கு இருந்தால், அவர்களுடைய கான்டாக்ட் மூலமாக உங்களுடைய தகவல்களை பேஸ்புக் நிறுவனம் இழுத்து எடுத்துக் கொள்கிறது உங்களுடைய நண்பர்கள் யாருக்காவது பேஸ்புக் கணக்கு இருந்தால், அவர்களுடைய கான்டாக்ட் மூலமாக உங்களுடைய தகவல்களை பேஸ்புக் நிறுவனம் இழுத்து எடுத்துக் கொள்கிறது என்னிடம் பேஸ்புக் கிடையாது அதனால் என்னோட தகவல்கள் பேஸ்புக்கின் கைக்குப் போகாது என யாரும் சொல்ல முடியாது \nஅதே போல, பல வலைத்தளங்கள், ஆப்கள் உள்நுழைவதற்கு பேஸ்புக் ஐடியையோ, கூகிள் ஐடியையோ கேட்பதைப் பார்த்திருப்பீர்கள். நீங்கள் ஏதோ ஒரு தகவலை உள்ளீடு செய்து உள்ளே நுழைவீர்கள். அந்த நேரத்தில் உங்களுடைய தகவல்கள் இன்னொருவர் கைக்கு இடம்பெயரும். நாம் அறியாமலேயே இயல்பாக இந்த விஷயம் நடந்து விடும்.\nஇன்றைய யுகத்தில் இந்தத் தகவல்களெல்லாம் செயற்கை அறிவியல் எனப்படும் ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ட், பிக் டேட்டா, இன்டெர்நெட் ஆப் திங்க்ஸ், மெஷின் லேர்னிங் போன்ற தொழில்நுட்பங்களின் கூட்டுக் கலவையில் அலசப்படுகின்றன. பின்னர் ஒரு நபருடைய ரசனைகள், விருப்பங்கள், ஏக்கங்கள், எதிர்பார்ப்��ுகள் போன்றவற்றையெல்லாம் தகவல்கள் மூலம் தெரிந்து கொண்டு, அந்த நபருக்குத் தேவையான பர்சனலைஸ்ட் விளம்பரங்களைக் கொடுக்கின்றன.\nஇவை வெறும் விளம்பரங்களை அனுப்புகின்றன எனுமளவில் இதில் பெரிய ஆபத்து இல்லை. ஆனால் அது உங்களைப் பிந்தொடர்ந்து உங்கள் தகவல்களையெல்லாம் சேமிக்கிறது என்பதும், தொடர்ந்து உங்களைக் கண்காணித்துக் கொண்டே இருக்கிறது என்பதும் தான் ஆபத்தானது.\n‘ஃபேஸ் ரிககனிஷன்’ எனப்படும் முகத்தை வைத்து அடையாளம் காணும் தொழில்நுட்ப யுத்தியின் படி உங்களுடைய படம் எங்கெல்லாம் இருக்கிறது, யாருடைய தளத்திலெல்லாம் இருக்கிறது, அவர்களுக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு, அவர்களுடைய ரசனைகளுக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு போன்றவையெல்லாம் தகவல் அறிவியல் அலசும். பிறகு, ‘உங்க பிரண்டுக்கு புடிச்ச இந்த கார், இந்த விலைல வருது.. நீங்க வாங்கலையா’ என ஆசையைத் தூண்டும்.\nஇதில் அச்சப்படக்கூடிய விஷயம் என்னவென்றால் இந்த தகவல்களும், டேட்டா சயின்ஸும் சேர்ந்து கொண்டு இல்லாத ஒரு பிம்பத்தை இருப்பது போல ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்க முடியும். இதை உளவியல் யுத்தம் எனலாம். உதாரணமாக ஒரு குறிப்பிட்ட பத்திரிகை தான் உலகிலேயே பெஸ்ட் பத்திரிகை எனும் தோற்ற மயக்கத்தை இதால் உருவாக்க முடியும். ஒரு தேர்தலின் முடிவை மாற்றியமைக்க முடியும் \nபேஸ்புக் தளத்தை விளம்பரம் இல்லாத பணம் கொடுத்து பயன்படுத்தும் தளமாக மாற்றலாமா எனும் யோசனையை நிறுவனர் நிராகரிக்கிறார். அதனால் அவருக்கு ஏகப்பட்ட பயனர் இழப்பு ஏற்படும் என்பதும். இப்போது கிடைத்து வருகின்ற மிகப்பெரிய லாபம் நிச்சயம் கிடைக்காது என்பதும் தான் அதன் காரணம்.\nஇப்படி மற்றவர்களுடைய தகவல்களை சுருட்டி விளையாடும் மார்க், தனது தகவல்களை மிக ரகசியமாக வைத்திருக்கிறார். அவருடைய பாதுகாப்புக்காகவும், அவருடைய தகவல்களின் பாதுகாப்புக்காகவும் கடந்த ஆண்டு மட்டும் அவர் செலவிட்ட தொகை சுமார் 48 ஆயிரம் கோடி ரூபாய்கள் \nகடைசியாக, பேஸ்புக் உட்பட எந்த சமூக வலைத்தளமும் பாதுகாப்பானது என சொல்ல முடியாது. எதைப் பயன்படுத்தினாலும் அதிக பட்ச செக்யூரிடி ஆப்ஷனைத் தேர்ந்தெடுங்கள். முடிந்தவரை இணையத்தில் தகவல்களைப் பகிராமல் இருப்பது பாதுகாப்பானது டிஜிடல் உறவை விட்டு விட்டு, நிஜ உறவுக்குள் வருவது ம��ிதத்துகும், பாதுகாப்புக்கும் மகத்தானது \nநினைவில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள்.\n1. பேஸ்புக் கணக்கு உங்களிடம் இருக்கிறது என வைத்துக் கொள்ளுங்கள், அதை நீங்கள் டெலீட் செய்தாலும், டி ஆக்டிவேட் செய்தாலும் உங்களுடைய தகவல்கள் அழிக்கப்படும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை \n2. நீங்கள் வாங்கும் பொருட்களோ, நீங்கள் செல்லும் பயணங்களோ உங்களுடைய நண்பர் வட்டாரத்தில் இருப்பவர்களுக்கு தெரிவிக்கப்படலாம். அது வியாபார யுத்தி. உங்களுடைய தனிமைக்கு எதிரி உங்கள் தகவல்களை பிற நிறுவனங்களுக்கோ, ஏன் அரசுக்கோ கூட பகிர்ந்து கொடுக்கலாம்.\n3. உங்களுடைய ரசனைகள், உங்களுடைய விருப்பங்கள் போன்றவற்றை உங்களுடைய போட்டோவுடன் சேர்த்து பல இடங்களுக்கும் அனுப்பப்படலாம். நீங்கள் வெளிப்படுத்த விரும்பாத விஷயங்கள் உட்பட.\n4. நீங்கள் பேஸ்புக்கை விட்டு வெளியே வந்தாலும் கூட உங்களுடைய இணைய நடமாட்டத்தைக் கவனித்து குக்கிகளில் சேமித்து, பின்னர் நீங்கள் பேஸ்புக் நுழையும் போது அவை பேஸ்புக் தளத்துக்கு பரிமாறப்படலாம்.\n5. நீங்கள் ஒரு பொருளை இணையத்தில் தேட ‘டைப் செய்கிறீர்கள்’ பிறகு மனதை மாற்றிக்கொண்டு அதை டெலீட் செய்து விடுகிறீர்கள் என வைத்துக் கொள்ளுங்கள். அந்த தகவலும் சேமிக்கப்பட்டு உங்களைப் பிந்தொடரலாம்.\nBy சேவியர் • Posted in Articles, Articles-awareness, Articles-Technology, கட்டுரைகள்\t• Tagged கட்டுரைகள், செக்யூரிடி, சேவியர், டெக்னாலகி, தொழில்நுட்பம், பாதுகாப்பு, பேஸ்புக்\nகணினி பிரிவில் என்ன படிக்கலாம் \nகணினி மென்பொருள் பிரிவு தொழில்நுட்ப உலகில் மாபெரும் வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. கணினி தொழில்நுட்பம் அழிந்து விடும், கணினி படித்தால் வேலை கிடைக்காது, கணினி துறை அவ்வளவு தான், போன்றவையெல்லாம் விஷயம் தெரியாதவர்கள் வைக்கின்ற வாதங்கள். உண்மையில் முன்பெப்போதும் இல்லாத அளவுக்கு கணினி மென்பொருள் துறை செழுமையடைந்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் ஒரே ஒரு சின்ன வித்தியாசம்.\nமுன்பெல்லாம் கணினி பிரிவில் ஏதோ ஒரு பட்டப்படிப்போ, டிப்ளமோவோ படித்தால் வேலை கிடைக்கும் எனும் நிலமை இருந்தது. இன்றைக்கு அந்த நிலமை இல்லை. படிப்பு என்பது அடிப்படையான விஷயம். அதைத் தாண்டி கணினி துறையில் நுழையவும் சாதிக்கவும் நல்ல சிந்தனையும், முயற்சிகளும், புதுமையான மனமும��� அவசியம். எனவே, கணினி துறையில் நுழைய வேண்டும் என நினைக்கும் மாணவர்கள் தங்களுடைய மனநிலையை கொஞ்சம் மாற்றிக் கொள்ள வேண்டும். புதுமை மனம், சாதிக்கும் ஆர்வம், விடா முயற்சி போன்றவை இல்லையேல் வேறு துறைகளின் மீது பார்வையைச் செலுத்தலாம்.\nகணினி மென்பொருள் துறையில் நுழைய அடிப்படையான விஷயம் ஒரு கணினி சார்ந்த பட்டப்படிப்பு. அதில் இன்று வரை எந்த பெரிய மாற்றமும் நிகழவில்லை. நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான நபர்களைத் தேடும்போது கணினி சார்ந்த பட்டப்படிப்பு ஒன்றை கட்டாயமாக வைத்திருக்கின்றன. பி.இ கம்ப்யூட்டர் சயின்ஸ், பிடெக், பி.இ ஐடி, எம்.சி.ஏ போன்றவை இந்த அடிப்படை பட்டப்படிப்புகள் என புரிந்து கொள்ளுங்கள்.\nஇதில் எம்.சி.ஏ எனப்படும் கணினி பயன்பாட்டு அறிவியல் துறை முதுகலைப்படிப்பாகும். அதில் நுழைய முதலில் இளங்கலை கணினியியலோ, இளங்கலை கணிதம்/அறிவியல் போன்ற பட்டப்படிப்போ, பிசிஏ எனப்படும் இளங்கலை கணினி பயன்பாட்டு அறிவியலோ தேவைப்படும். எனவே கணினி துறை சார்ந்த நிறுவனங்களில் வேலைக்கு நுழைய வேண்டும் எனும் ஆர்வம் உடைய மாணவர்கள் ஒரு கணினி சார்ந்த பட்டப்படிப்பு என்பதை முதன்மை நோக்கமாகக் கொண்டிருங்கள்.\nகணினி துறை ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு விதமான வளர்ச்சியை சந்தித்து வந்திருக்கிறது என சொல்லலாம். கணினி துறை, 90களின் இறுதியில் ஒய்.டூ.கே எனும் கணினி பிரச்சினையை தீர்ப்பதில் ஆர்வம் காட்டியது. பின்னர் டாட்.காம் யுகம் துவங்கியது. நிறுவனங்களெல்லாம் தங்களுக்கென ஒரு வலைத்தளத்தை உருவாக்க மும்முரம் காட்டின. கோப்புகளில் அடங்கிக் கிடந்த தகவல்களெல்லாம் டிஜிடல் முகம் காட்டி இணைய தளங்களில் இடம் பிடித்தன. சில ஆண்டுகளில் இந்த டாட்.காம் தொழில்நுட்பமும் ஓய்வெடுக்க ஆரம்பித்தது.\nபின்னர் டிஜிடல் டிரான்ஸ்பர்மேஷன் எனப்படும், நிறுவனங்களை முழுமையாக டிஜிடல் மயமாக்கும் முயற்சிகள் உருவாகின. ஊழியர்களின் வருகைப்பதிவு முதல், நிறுவனத்தின் வரவு செலவு வரை அனைத்தையும் டிஜிடல் மயமாக்கி கணினி துறை பரபரப்பாய் இருந்தது. அதுவும் கொஞ்சம் தளர்ச்சியடைய ஆரம்பித்தது.\nபின்னர் ஸ்மார்ட்போன்களின் வருகை மிகப்பெரிய மொபைல் புரட்சிக்கு வித்திட்டது. கணினிகளெல்லாம் தங்களுடைய இருப்பை இழக்க ஆரம்பித்தன. எல்லா வேலைகளையும் மொபைல் ��ெய்து விடும் எனும் நிலை உருவானது. போகிற போக்கில் சில வினாடிகளில் ஒரு விஷயத்தை முடித்து விடலாம் எனும் வசதியை மொபைல் ஆப்கள் உருவாக்கிக் கொடுத்தன. இன்றைக்கு அந்த மொபைல் தொழில்நுட்பமும் வழக்கமான பாணி ஆப் தயாரிப்புகளை விட்டு விலகி விட்டன.\nஅப்படியானால் இன்றைய தேதியில் கணினி உலகை ஆக்கிரமித்திருப்பவை எவை எனும் கேள்வி உங்களுக்குள் எழலாம். அதற்கான விடை செயற்கை அறிவு அல்லது ஆர்டிபிஷியல் இண்டலிஜெண்ட் என தைரியமாகச் சொல்லலாம். ஆர்டிபிஷியல் இண்டலிஜெண்டோடு பிற தொழில்நுட்பங்களும் இணைந்து இன்றைய கணினி யுகத்தை இயக்கிக் கொண்டிருக்கின்றன.\nஉதாரணமாக, மெஷின் லேர்னிங் தொழில்நுட்பம் ஆர்டிபிஷியல் இண்டலிஜெண்டுடன் இணைந்து இன்றைக்கு ஆளுமை செய்கிறது. இந்த இரண்டு பிரிவுகளிலும் ஏதேனும் ஒரு சான்றிதழ் படிப்போ, டிப்ளமோ படிப்போ படித்திருப்பது இன்றைய தொழில்நுட்ப உலகிற்குள் நுழைய உதவும்.\nஅடுத்ததாக கணினி உலகில் விஸ்வரூபமெடுத்து வருகின்ற படிப்பு ‘தகவல் அறிவியல்’ எனப்படும் டேட்டா சயின்ஸ் நுட்பம். இன்றைக்கு உலகமே தகவல்களினால் தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. தகவல்களை எப்படி சேமிப்பது, எப்படி தரம்பிரிப்பது, அதை எப்படிப் பயன்படுத்துவது என்பது தான் இந்த தகவல் அறிவியலின் அடிப்படை நோக்கம். இந்த தகவல் அறிவியலுக்குள் பிக்டேட்டா தொழில்நுட்பமும் அடக்கம் என்பது கவனிக்கத் தக்கது.\nவர்த்தகத் துறையை முழுமையான கட்டுப்பாட்டுக்குள் இன்றைக்கு தகவல் அறிவியல் கொண்டு வந்து விட்டது. எந்த பொருளை விற்கவேண்டும், யாரிடம் விற்கவேண்டும், எப்படி விற்கவேண்டும் போன்றவற்றையெல்லாம் இந்த தகவல் அறிவியல் தான் ஆராய்ந்து சொல்கிறது. ஒரு குறிப்பிட்ட பிம்பத்தை மக்களுடைய மனதில் பதிய வைக்கும் உளவியல் வேலையையும் இது கன கட்சிதமாகச் செய்து விடுகிறது. ஒருவகையில் இது உளவியல் யுத்தம் இந்த தகவல் அறிவியல் துறையில் அடுத்த சில ஆண்டுகளில் பல இலட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும் என்கின்றன ஆய்வுகள்.\nதகவல் அறிவியல் என்பது தகவல்களோடு விளையாடும் வேலை. எண்களின் மீதான பரிச்சயம் இதற்கு மிகவும் அவசியம். புள்ளி விவரங்கள், கூட்டல், கழித்தல், அல்காரிதம், கேல்குலஸ், நிகழ்தகவு போன்ற விஷயங்கள் தகவல் அறிவியலின் முதுகெலும்பாக இயங்கக் கூடியவை. இவை எ��்லாமே கணிதவியலின் அடிப்படை விஷயங்கள். எனவே, தகவல் அறிவியல் கற்றுக் கொள்ள விரும்புபவர்களுக்கு முதலில் இருக்க வேண்டிய தகுதி, கணிதவியலில் அறிவு. கணித பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு தகவல் அறிவியல் துறை சற்று எளிதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை\nதகவல் அறிவியல் துறையில் சில சான்றிதழ் பட்டங்களைப் பெற்றிருப்பது கணினி துறையில் சாதிக்க வைக்கும். டேட்டா சயின்ஸ், டேட்டா அனலிஸ்ட், எம்.ஐ.எஸ் எக்ஸிக்யூடிவ், ஸ்டாடிஸ்டிஷியன், டேட்டா எஞ்சினியர் என பல்வேறு வகையான பிரிவுகள் தகவல் அறிவியல் துறையில் உண்டு. பல நிறுவனங்கள் தகவல் அறிவியல் துறை சார்ந்த படிப்புகளை நடத்துகின்றன. இந்த துறையில் ஏதேனும் ஒரு படிப்பைப் படிப்பது இது குறித்த ஆழமான அறிவைப் பெற்றுக் கொள்ளவும் கணினி துறையில் சாதிக்கவும் உதவும்.\nஇண்டர்நெட் ஆஃப் திங்க்ஸ் எனப்படும் ‘பொருட்களின் இணையம்’ , கணினி உலகின் நவீன தொழில்நுட்பங்களில் ஒன்று. சென்சார்களால் கட்டமைக்கப்பட்ட ஆட்டோமெடிக் தீர்வுகளுக்கு இண்டர்நெட் ஆஃப் திங்க்ஸ் இன்றைக்கு பயன்படுகிறது. இதன் இணை நுட்பங்கள் தான் ஆகுமெண்டட் ரியாலிடி, ஸ்மார்ட் ஹோம், ஸ்மார்ட் ஹாஸ்பிடல், ஸ்மார்ட் டிராபிக் சிக்னல் போன்றவை எல்லாமே. இன்றைக்கு கணினி நுட்பம் சார்ந்த பட்டப்படிப்புகளில் இண்டர்நெட் ஆஃப் திங்க்ஸ் பாடம் இருக்கிறது. ஒருவேளை அந்த பாடம் இல்லாத பிரிவுகளை நீங்கள் படித்தால் இது குறித்த ஒரு சான்றிதழ் படிப்போ, டிப்ளமோ படிப்போ கற்றுக் கொள்ளுங்கள். அது நிச்சயம் உங்களுக்கு பயனளிக்கும்.\nகவனிக்க வேண்டிய இன்னொரு முக்கியமான அம்சம் டொமைன் ஸ்கில்ஸ் எனப்படும் கள அறிவு. உதாரணமாக, வங்கிப் பிரிவு, ஹெல்த் கேர் பிரிவு, ஆட்டோமொபைல், இன்சூரன்ஸ், ரிடெயில் என பல டொமைன்கள் உள்ளன. இந்த டொமைன் பிரிவுகளைப் பற்றி தெரிந்து வைத்திருப்பது கணினி துறையில் நுழைய பெரும் உதவியாக இருக்கும். பெரும்பாலும் யாரும் கவனிக்காத ஏரியா என்பது இந்த டொமைன் ஸ்கில்ஸ் தான். பெரும்பாலான மாணவர்கள் கணினி மென்பொருள்களைக் கற்றுக் கொள்வதில் தான் ஆர்வம் காட்டுவார்களே தவிர, டொமைன் ஸ்கில்ஸ் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுவதில்லை. அல்லது அவர்களுக்குத் தெரிவதில்லை.\nஇந்த டொமைன் ஸ்கில்ஸ் பயிற்றுவிக்கும் பல நிறுவனங்கள் உள்ளன. அங்க��� சேர்ந்து உங்களுக்குப் பிடித்த ஏதேனும் ஒரு பிரிவில் ஒரு படிப்பை நீங்கள் படிக்கலாம். பின்னர் கணினி துறையில் நுழையும் போது அந்த களம் சார்ந்த பிரிவில் உங்களுக்கு வேலை கிடைக்கும் வாய்ப்பு அதிகரிக்கும்.\nகேமிங், மற்றும் அனிமேஷன் போன்றவை கணினி மென்பொருள் துறையில் வளர்ந்து வருகின்ற துறைகள். இதற்கு மிகப்பெரிய வர்த்தகம் இருக்கிறது. கற்பனை வளமும், புதுமையாய் எதையேனும் வடிவமைக்க வேண்டும் எனும் சிந்தனையும் இருப்பவர்கள் இந்த துறைகளில் நுழையலாம். திரைத்துறை, விளம்பரத் துறை, ஊடகத் துறை, விளையாட்டுத்துறை போன்ற பல இடங்களில் இந்த அனிமேஷன், டிசைனிங் போன்றவை தேவைப்படும். கம்ப்யூட்டர் கேம்ஸ் மீது அதிக ஆர்வம் உடையவர்கள் இந்த பிரிவுகளில் நிச்சயம் சாதிக்கலாம். இதற்கு பல சான்றிதழ் படிப்புகளும், டிப்ளமோ படிப்புகளும் உள்ளன. இணைய தளங்களிலும் இவை குறித்த படிப்புகள் உள்ளன. இதில் விருப்பம் இருந்தால் இது குறித்து கற்றுக் கொள்வது பயனளிக்கும்.\nவெப் டிசைனிங் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். இன்றைக்கு வெப்டிசைனிங் புதிய பரிமாணத்தை எட்டியிருக்கிறது. பிகேவியரல் அனாலிசிஸ் எனப்படும் நுட்பத்தோடு தான் இன்றைக்கு வலைத்தளங்கள் வடிவமைக்கப்படுகின்றன. பிக் டேட்டா அனாலிடிக்ஸ், ஆர்டிபிஷியல் இண்டலிஜென்ஸ் போன்றவற்றை வெப் டிசைனிங் தன்னகத்தே கொண்டிருக்கிறது. அவை குறித்த புரிதலோடு படிக்கின்ற வெப் டிசைனிங் படிப்புகள் பயனளிக்கும்.\nஎத்திகல் ஹேக்கிங் இன்றைக்கு ஒரு புதிய தொழில்நுட்பமாக உருவெடுத்து வருகிறது. இருக்கின்ற ஒரு நெட்வர்க்கை உடைத்து உள்ளே இருக்கின்ற தகவல்களை எடுப்பது தான் இதன் அடிப்படை சிந்தனை. ஒரு நெட்வர்க் எவ்வளவு பாதுகாப்பாக இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளவும், வலுவற்ற நிலையில் இருந்தால் அதை வலிமையாகக் கட்டமைக்கவும் இந்த எத்திகல் ஹேக்கிங் பணி உதவும். இதற்கான தனிப்பட்ட பயிற்சிகள் பெருமளவில் இல்லை. ஆனால் பாதுகாப்பு குறித்த படிப்புகள், நெட்வர்க் ஹேக்கிங் போன்றவை குறித்த நூல்கள் உங்களுக்கு உதவக் கூடும்.\nஅதே போல இன்றைக்கு பெரிய அளவில் பயன்படுகின்ற விஷயம் கிளவுட் தொழில்நுட்பம். தகவல்களையெல்லாம் தனித்தனியே சேமித்து வைப்பது இந்த காலத்து தொழில்நுட்பத்துக்கு பெரிய அளவில் பயன் தராது. உலக��ன் எந்த பாகத்திலிருந்தும் எப்போது வேண்டுமானாலும் ‘ஷேர்ட்” முறைப்படி எடுத்துக் கொள்ளக் கூடிய தகவல்களே தேவையானது. அதற்கு கிளவும்ட் கம்ப்யூட்டிங் தொழில்நுட்பம் ரொம்பவே கை கொடுக்கும். கிளவுட் கம்ப்யூட்டிங்கைப் பொறுத்தவரை பல டிப்ளமோ படிப்புகள் இருக்கின்றன. பெரும்பாலான கல்வி நிலையங்கள் கிளவுட் கம்ப்யூட்டிங் சார்ந்த பயிற்சிகளைத் தருகின்றன. அவற்றைப் படித்துப் பயன்பெறலாம்.\nஎப்போதுமே பயன்படக்கூடிய விஷயங்களில் ஒன்று மென்பொருட்கள். மென்பொருட்கள் குறித்த படிப்பு வீண் போவதில்லை. ஆனால் எந்த தொழில்நுட்பம் சார்ந்த வேலை உங்களுக்கு விருப்பமானது என்பதைப் புரிந்து கொண்டு அது சார்ந்த மென்பொருளைக் கற்பது மிகவும் பயனளிக்கும். உதாரணமாக உங்களுக்கு தகவல் அறிவியல் துறையில் சாதிக்க வேண்டும் எனும் ஆர்வம் இருந்தால் ஆர், மேட்பிளாட்லிப், ரேட்பிட் மைனர், ஹடூப், நரேட்டிவ் சயின்ஸ், பைத்தான் போன்றவற்றைக் கற்றுக் கொள்ளலாம்.\nஅல்லது பொதுவான மென்பொருள் டெவலப்பர் வேலைகள் உங்களுக்குத் தேவையெனில் ஜாவா, .நெட் போன்றவற்றைக் கற்றுக் கொள்ளலாம். கூடவே ஆரகிள், சீக்வல்சர்வர் போன்ற தகவல் சேமிப்பு மென்பொருட்களைப் பற்றிக் கற்றுக் கொள்ளலாம். மென்பொருள் பயிற்சி நிறுவனங்கள் எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கின்றன என்பது நீங்கள் அறிந்ததே.\nசுருக்கமாக, கணினி மென்பொருள் துறையில் வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. அதற்காக கணினி பட்டப்படிப்பு ஒன்றைக் கற்றுக் கொள்வதும், நவீன தொழில்நுட்பம் சார்ந்த சான்றிதழையோ, டிப்ளமோ படிப்பையோ முடிப்பதும் தேவையானது \nதிட்டமிடுங்கள், வெற்றிகளை பெற்றுக் கொள்ளுங்கள்\nதினத்தந்தி, வெற்றி நிச்சயம் நூல்\nBy சேவியர் • Posted in Articles, Articles-Education, கட்டுரைகள்\t• Tagged இலக்கியம், என்ன படிக்கலாம், கட்டுரை, கணினி, சேவியர், தந்தி, தொழில்நுட்பம், மென்பொருள், வெற்றி நிச்சயம்\nபேரிடர் காலங்களில், பேரன்பு பகிர்தல்\nமரண இருளின் பள்ளத்தாக்கு – ஒளி தந்த இருளின் காலம் – கோவிட் பயணம்\nஇயேசு கேட்ட கேள்வி : இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 18 : மீட்டிங்\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 17 : எழுத்து முக்கியம்\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 16 : கம்யூனிகேஷன்\nபுராஜக்ட் மேனேஜ்மெண��ட் – 15 – மீண்டும்….\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 14 – கவனித்தல்\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் – மைக்ரோ கவனிப்பு\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 12 : பணியைப் பகிர்.\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 11 :\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 10 – அணி\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 9 – ரிஸ்க்\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 8 – சவால் & ஆபத்து\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 7 – பணியாளர் மேலாண்மை\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 6 : எப்போ முடிப்பீங்க \nவிவசாயம் காப்போம்; விவசாயி காப்போம்\nகுட்டிக் குட்டிக் காதல் கவிதைகள்\nகவிதை : வானத்துப் பறவை\nகைபேசி : வியப்பூட்டும் வளர்ச்சியும், ஆபத்தும்\nதன்னம்பிக்கை : கூடா நட்பு கூடாது \nபோதை :- வீழ்தலும், மீள்தலும்\nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\n1. ஆதி மனிதன் ஆதாம் \n இந்த வார்த்தையே நமது மன வெளிகளில் புன்னகை விதைகளைத் தூவும் வல்லமை படைத்தது. எத்தனை பெரிய சோகத்தின் அலைகள் நமது பாலை வெளிகளில் புரண்டு படுத்தாலும், ஒரு சின்னக் குழந்தையின் புன்னகைக் கைக்குட்டை கிடைத்தால் அந்த சோகம் புதையுண்டு போய்விடும். மழலைகளோடு விளையாடுகையில் மலைபோன்ற மன பாரங்கள் கூட பழுத்த இலை போல உதிர்த்து பறந […]\nபேரிடர் காலங்களில், பேரன்பு பகிர்தல்\nபேரிடர் காலங்களில், பேரன்பு பகிர்தல் பல குறியீடுகளை ஆதிகாலக் கிறிஸ்தவர்கள் பயன்படுத்தினார்கள். குறிப்பாக மீன் குறியீடு அந்தக் காலத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு குறியீடாய் இருந்தது. மீன் அடையாளம் வரையப்பட்ட இடங்களை ஆராதனை இடங்களாக ரகசியக் கிறிஸ்தவர்கள் புரிந்து கொண்டார்கள். அத்தகைய இடங்களில் அவர்கள் மறைந்திருந்து நற்செய்தியை அறிவித்தார்கள். பைபிள் […]\nமரண இருளின் பள்ளத்தாக்கு – ஒளி தந்த இருளின் காலம் – கோவிட் பயணம்\nமரணஇருளின்பள்ளத்தாக்கு ஒளி தந்த இருளின் காலம் – கோவிட் பயணம் * நிகழ்வுகளெல்லாம் இறைவனால் நமக்குத் தரப்படுகின்ற அனுபவப் பாடங்கள். சில அனுபவப் பாடங்கள் நம்மை விரக்தியில் எறியும். சில நம்மை குழப்பத்தில் உருட்டும். சில அனுபவங்கள��� நம்மை புரியாமைக்குள் நடத்திச் செல்லும். ஆனால் ஒன்று மட்டும் யதார்த்தம், இறைமகன் இயேசுவின் கரம்பிடித்து நடப்பவர்களுக்கு எந்த ஒரு துயரத் […]\nஇயேசு கேட்ட கேள்வி : இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா\nஇவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா யோவான் 14 :9 இந்தக் கேள்வி புதுசா நாம கேள்விப்படுகிற கேள்வி அல்ல. அடிக்கடி நமது வாழ்க்கையில் நாம் சந்திக்கின்ற கேள்வி. “இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா யோவான் 14 :9 இந்தக் கேள்வி புதுசா நாம கேள்விப்படுகிற கேள்வி அல்ல. அடிக்கடி நமது வாழ்க்கையில் நாம் சந்திக்கின்ற கேள்வி. “இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா” ந்னு தூய தமிழ்ல கேள்விப்பட்டிருக்க மாட்டோம், ஆனா நம்முடைய உரையாடல்களில் எப்போதேனும் நிச்சயம் இந்தக் […]\nKristilla on கி.மு : நோவாவின் பேழை\nக.மோகன சுந்தரம் on சன்னலுக்கு வெளியே கவிதைகள்\nAnonymous on கிமு : சிம்சோன் – வியப்ப…\nAnonymous on வீதியில் நாய்கள், பீதியில்…\nSuma sheyalin on அப்பா என் உலகம்\nDev on தன்னம்பிக்கை : திடீர் பணக்காரன…\nSivaranjani on தன்னம்பிக்கை : திடீர் பணக்காரன…\nTamilBM on தன்னம்பிக்கை : கல்வியால் ஆய பய…\nkavithai kavithais love POEMS Tamil Kavithai tamil kavithais writer xavier xavier இலக்கியம் இளமை கவிதை கவிதைகள் காதல் சேவியர் சேவியர் கவிதைகள் தமிழ் இலக்கியம் தமிழ்க்கவிதை தமிழ்க்கவிதைகள் புதுக்கவிதை புதுக்கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/1024865/amp", "date_download": "2021-05-07T00:06:49Z", "digest": "sha1:SMKZOASZY6ARSAYLOAQ7QEB3QWVLYNMZ", "length": 7986, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "வி.கே.புரத்தில் திமுகவினர் கபசுர குடிநீர் வழங்கல் | Dinakaran", "raw_content": "\nவி.கே.புரத்தில் திமுகவினர் கபசுர குடிநீர் வழங்கல்\nவி.கே.புரம், ஏப்.19: திமுக தலைவர் ஸ்டாலின் ஆணைக்கிணங்க, நெல்லை கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஆவுடையப்பனின் வழிகாட்டுதலின்படி நேற்று காலை 6 மணி முதல் வி.கே.புரம் நகர திமுக சார்பில் நகர செயலாளர் கணேசன் தலைமையில் கொட்டாரம் சாலை, மெயின் ரோடு, அம்பலவாணபுரம், ஜார்ஜ்புரம் பகுதிகளில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் நகர திமுக அவைத்தலைவர் அதியமான், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் குட்டி கணேசன், மாவட்ட சிறுபான��மை அணி துணை அமைப்பாளர் பீட்டர் சுவாமிநாதன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் பிரபாகரன்,தகவல் தொழில்நுட்ப அணி சங்கரநாராயணன், இளைஞரணி அமைப்பாளர் செல்வசுரேஷ் பெருமாள் மற்றும் வார்டு செயலாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.\nதிருவாரூர் பைபாஸ் சாலை அருகே ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சேதமடைந்த நூலக சாலை\nஅறிவொளி இயக்கம் அழைப்பு பொறுப்பாளர்கள் போன் எண்கள்\nகலெக்டர் தகவல் வாசிப்பு பழக்கம் மூலம் செல்போன் சீர்கேடுகளில் இருந்து குழந்தைகளை மீட்டெடுக்க வேண்டும்\nதிருவாரூர் மாவட்டத்தில் மத்திய அரசின் ஆதார விலைத்திட்டத்தில் உளுந்து, பச்சைப்பயறு கொள்முதல்\nதிருவாரூர் நகரில் குழாய் சேதமடைந்து வீணாக குடிநீர் வெளியேறும் அவலம் சீரமைத்து பராமரிக்க மக்கள் கோரிக்கை\nலால்குடி வயல்காட்டில் ரத்த காயங்களுடன் பெண் சடலம் மீட்பு\nசிறுமியிடம் அத்து மீறல் சமையல் மாஸ்டர் கைது\nதிருவெறும்பூர் அருகே உப்பு லோடு லாரி கவிழ்ந்தது\nகுடியிருப்புகளுக்கு அருகே மது குடித்ததை கண்டித்த வாலிபருக்கு அடி உதை\nபேராவூரணி ஜமாஅத் அறிவிப்பு தென்னையை தாக்கும் தஞ்சை வாடல் நோயை கட்டுப்படுத்தும் வழிமுறை\nமுழு ஊரடங்கு தினத்தன்று இஸ்லாமியர் வீடுகளிலேயே நோன்புகால சிறப்பு தொழுகை\nபேராவூரணி நகரில்a ரூ.15 கோடியில் சாலை மேம்பாடு திட்டப்பணி திருக்காட்டுப்பள்ளி அருகே அரை குறையாக விடப்பட்ட தார் சாலை சீரமைப்பு\nஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலையத்தில் வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு ஒருங்கிணைந்த பண்ணைய பயிற்சி\nஅரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி\nதிருவையாறில் கணவரை காணவில்லை மனைவி போலீசில் புகார்\nபட்டப்பகலில் மர்மநபர்கள் துணிகரம் புதுக்கோட்டை அரசினர் பிற்படுத்தப்பட்டோர் மாணவியர் விடுதியை கொரோனா சிகிச்சை மையமாக மாற்றும் பணி\nபொன்னமராவதி பேருந்து நிலையத்தில் திமுக பிரமுகரின் கார் கண்ணாடியை உடைத்து ரூ. 4 லட்சம் கொள்ளை\nகொள்ளிடம் பகுதி ஆரம்ப சுகாதார நிலையங்களில் கிருமி நாசினி, முககவசம் தட்டுப்பாடு\nபாரம்பரியத்தை மீட்டெடுக்கும் வகையில் பனை ஓலையில் விதவிதமான பொருட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/bigg-boss-tharshan-lover-sanam-shetty-swimwear-interview/", "date_download": "2021-05-07T01:26:36Z", "digest": "sha1:BBZHPZO6CRO7EJGHRQ2NQW7NIV55YGP2", "length": 10771, "nlines": 91, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Bigg Boss Tharshan Lover Sanam Shetty Swimwear Interview Video", "raw_content": "\nHome பிக் பாஸ் தர்ஷன் – சனம் பிரச்சனையாக சொன்னது இந்த பிகினி பேட்டியை தான். வீடியோ இதோ.\nதர்ஷன் – சனம் பிரச்சனையாக சொன்னது இந்த பிகினி பேட்டியை தான். வீடியோ இதோ.\nவிஜய் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலம் அடைந்தவர் தர்ஷன். இலங்கை மாடலான இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்று ரசிகர்களின் பேராதரவை பெற்றிருந்தார். இந்தநிலையில் தர்ஷனின் காதலியான சனம் ஷெட்டி, தர்ஷன் தன்னை ஏமாற்றி விட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்து இருந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த சில தினங்களாகவே தர்ஷன் மற்றும் சனம் ஷெட்டியின் பிரச்சனைதான் பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.\nசமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற சனம் ஷெட்டி கூறுகையில் தர்ஷன் தனக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னரே சில பிரச்சினைகள் இருந்ததாகவும். ஆனால், அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்தவுடன் தான் தன்னை சுத்தமாக கண்டுகொள்வதே இல்லை என்றும் கூறியிருந்தா.ர் ஆனால், தங்களுக்குள் இருக்கும் பிரச்சனை குறித்து பேசிய தர்ஷன், தான் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்த போது சனம் ஷெட்டி வெளியே பிகினி உடையில் போட்டோ ஷூட் நடத்தியும் பிகினி உடையில் பேட்டியும் கொடுத்திருந்தா.ர் அது எனக்கு பிரச்சனை இல்லை என்றாலும் அவர் என்னை ப்ரோமோட் செய்யத்தான் பிகினி உடையில் போஸ் கொடுத்ததாக கூறினா.ர் மேலும், அது எனக்கு பிரச்சனை இல்லை என்றாலும் எனது குடும்பத்தார் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் தான் எங்கள் இருவருக்கும் பிரச்சினை எழுந்தது என்றும் கூறியிருந்தார் தர்ஷன்.\nஇதையும் பாருங்க : வீட்டின் முன்பு குவிந்த ரசிகர் கூட்டம். சிம்பு போட்ட ஆட்டம். வீடியோவை பகரிந்த சிம்பு சிஸ்டர்.\nதர்ஷன் இப்படி கூறியது குறித்து சனம் ஷெட்டி இடமும் கேள்வி எழுப்பப்பட்டது. அதேபோல சனம் ஷெட்டி பிகினி உடையில் போட்டோ ஷூட் நடத்தியதால் தான் சில பிரச்சினைகள் வந்ததாகவும் கூறி இருந்தார். இந்தநிலையில் சனம் ஷெட்டி பிகினி உடையில் அளித்த பேட்டியின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தி��் வைரலாக பரவி வருகிறது. மேலும், அந்த பேட்டியில் நடிகை சனம் ஷெட்டி பிகினி உடையில் ஈட்டிக்கொடுப்பது இதுதான் முதல் முறை என்றும் கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.\nஆனால், சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற சனம் ஷெட்டி, பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பாகவே, தான் பிகினி உடையில் போட்டோ ஷூட் நடத்தியதாகவும் அந்த புகைப்படங்களை தர்ஷனே எடுத்து அதில் எது சிறந்த போட்டோ என்பதை தேர்வு செய்து அவர்தான் என்னை சமூகவலைதளத்தில் பதிவிட சொன்னார் என்றும் சனம் ஷெட்டி புதிய குண்டை தூக்கிப் போட்டு உள்ளார். எனவே, இவர்கள் இருவரில் யார் சொல்வது தான் உண்மை என்பதே புரியாமல் இருக்கிறது .அதேபோல உண்மையில் இவர்களது பிரச்சனை ஆரம்பித்தது சனம் ஷெட்டி பிகினி உடையில் பேட்டி கொடுத்தது தானா என்று சந்தேகமும் வரத்தான் செய்கிறது.\nPrevious articleவீட்டின் முன்பு குவிந்த ரசிகர் கூட்டம். சிம்பு போட்ட ஆட்டம். வீடியோவை பகரிந்த சிம்பு சிஸ்டர்.\nNext articleபடு ரொமான்டிக்காக காதலை தெரிவித்துள்ள நடிகரின் காதலை ஏற்றுக்கொண்ட காதலி. யார் தெரியுமா \nபிக் பாஸ் 5வில் கலந்துகொள்வது பற்றி தனது யூடுயூப் சேனலில் தெரிவித்த குக்கு வித் கோமாளி பிரபலம்\nஉடல் எடை கூடி பருமனான அபிராமி – தனது புண்ணகைப்படத்திற்கு கீழ் கேலிக்கு கொடுத்த பதிலடி.\nபிக்பாஸ் சீசன் 4 மிஸ் ஆகிடுச்சு, சீசன் 5-ல் அஸீம் போகிறாரா \n5 ஆண்கள் 8 பெண்கள் – பிக் பாஸின் முதல் 13 போட்டியாளர்களின் லிஸ்ட்.\nஅட்ஜஸ்ட்மென்ட் குறித்து சொல்லியுள்ள பாலாஜி. சனம் ஷெட்டி வாயாலே சொல்லிட்டாங்க – குறும்படம் இதோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2020/04/20/3000-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0-2/", "date_download": "2021-05-07T00:28:18Z", "digest": "sha1:QWUXHHNIBFGI44YGGXKNHNL4DUAPHH5V", "length": 33662, "nlines": 233, "source_domain": "tamilandvedas.com", "title": "3000 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள்! – Part Two (Post No.7855) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\n3000 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள்\nராமாயணத்தில் கபாடபுரம் என்ற இடை ச்சங்க கால நகரம் குறிப்பிடப்படுகிறது. மேலும் ராமன் இலங்கை வரை வந்துள்ளார். அங்கே ஒரு ஆட்சியும் நடந்து இருக்கிறது. ஆக இலங்கையில் ஆட���சி நடந்த போது தமிழ் நாட்டில் ஒரு அரசு இல்லாமலா போயிருக்கும் ஆனால் ராவணன்- அகத்தியன் இசைப்போட்டி கதைகள் எல்லாம் பிற்கால எழுத்துக்களில்தான் உள்ளன. ஆகையால் இவைகளை வரலாறு என்று ஏற்பது இல்லை.\nராமர் வந்தது உண்மையே. கிஷ்கிந்தா என்னும் குகை நிறைந்த கர்நாடகா ஹம்பி நகர குகைப் பகுதியில் அரைகுறை (Semi Civilized) நாகரிக நிலையில் இருந்த வாலி, சுக்ரீவன், அனுமனை சந்தித்ததும் உண்மையே . அவர்கள் குரங்கு சின்னங்களை அணிந்ததால் பிற்காலத்தில் அவர்களைக் குரங்கு போல சித்தரித்து எழுதிவிட்டனர்.\nமஹா பாரதத்தில் அர்ஜுனன் தென்னகம் வந்தது, சித்ராங்கதை என்னும் அல்லி ராணியை மணந்தது , பாண்டிய மன்னன் ஆட்சி ஆகிய குறிப்புகள் உள . இருந்தபோதிலும் இராமாயண மஹாபாரத்தக் குறிப்புகள் பிற்காலத்தில் சேர்க்கப்பட்டிருக்கலாம் என்றும் சொல்லலாம். இந்துக்களுக்கு ஒரு குணம் உண்டு. வேத கால இலக்கியாயத்தில் மட்டும் கை வைக்கமாட்டார்கள் மற்ற எல்லா நூல்களையும் அப்டேட் UPDATE செய்துவிட்டனர் . ஆகையால் இவைகளையும் ஒதுக்கிவிடலாம். ஏனெனில் அவை குறிப்பிடும் காலங்கள் கி.மு. 3100 மற்றும் அதற்கு முன் நடந்தவை என்று காட்டுகின்றன . நமக்கு வரலாற்று, தொல்பொருள் ஆதாரம் இல்லை.\nஇதற்குப் பின்னர் தர்ம சாஸ்திரங்கள் வந்தன. மனு நீதி நூல் முதலியன தெற்கில் வாழ்ந்த திராவிடர்களைக் குறிப்பிடுகின்றன. வேத நூல் இயம்பும் சடங்குகளைப் பின்பற்றாத 50 பிள்ளைகளை விஷ்வாமித்திரர் தென்னக த்துக்கு நாடு கடத்தியதாகவும் அவர்களே திராவிடர், யவனர், சகரர், ஹுனர், சூத்திரர்கள் என்றும் பிற்கால நூல்கள் உரைக்கின்றன . அதாவது க்ஷத்ரிய நிலையில் இருந்து தாழ்ந்து சூத்திரர் ஆனவர்கள். விஸ்வமித்ரரோ க்ஷத்திரியனாகப் பிறந்து பிராமணன் ஆக மாறி ‘வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி’ பட்டம் பெற்றவர்.\nஆனால் தர்ம சாத்திரங்கள் அவ்வப்போது அப்டேட் UPDATE செய்யப்பட்டவை. 1950-ல் அம்பேத்கார் தலைமையில் எழுதப்பட்ட அரசியல் சட்டத்தையே நாம் ஆண்டுதோறும் பார்லிமெண்ட் திருத்தங்கள் மூலம் அப்டேட் UPDATE (CONSTITUTIONAL AMENDMENTS) செய்கிறோம்.\nகி.மு.700–ல் தமிழர்கள் தலையில் பூ\nஆயினும் கி.மு 700 என்று கணக்கிடப்படும் போதாயன தர்ம சூத்திரம் முதலியவற்றில் ‘தென்னிந்திய தட்சிணபதம்’ (Grand South Road) , ‘தலையில் பூச்சூடும் வழக்கம்’ முதலியன வருவதால் அப்போது தென் இந்தியா��ில் நாகரீகமுள்ள மக்கள் வாழ்ந்தது உறுதியாகிறது.\nசுமார் 2700 ஆண்டுகளுக்கு முன்னர் உலகின் முதல் இலக்கண புஸ்தகத்தை – அஷ்டாத்யாயியை — எழுதிய பாணினி , மிளகு பற்றிக் குறிப்பிடுகிறார். கிரேக்க ஹெரோடோட்டஸ் போன்றோர் அரிசியைக் குறிப்பிடுகின்றனர். ஆக 2700 ஆண்டுகளுக்கு முன்னர் தென்னகம் மிளகு அனுப்பியதை ஊகித்தறியலாம் கோதாவரி வரை அஸ்மாக நாடு இருந்த குறிப்புகளும் உள . ஆனால் ராமர் போல கடற்கரை ஓரமாக நடந்து வந்தனரா அல்லது காடுகள் அடர்ந்த தண்டகாரண்யத்தையும் விந்திய மலையையும்கடந்து வந்தனரா \nஇதற்குப் புராணத்தில் விளக்கம் இருக்கிறது.\nபுராணங்கள் அனைத்திலும் மூன்று முக்கிய விஷயங்கள் அகத்தியரைப் பற்றி வருகின்றன.\n1.வடக்கில் ஜனத்தொகை பெருகியது. (Population Explosion in North India) ஆகையால் சிவன் அவரைத் தெற்கே அனுப்பினார். அவர் 18 குடிகளை தன்னுடன் அழைத்து வந்ததாக பிற்காலத்தில் தமிழ் உரை ஆசிரியர்களும் எழுதினார்கள். உலகில் முதல் ஜனத்தொகைப் பிரச்சினை பற்றிய குறிப்பு இதுதான் .\n2. அகத்தியர் விந்திய மலையை ‘கர்வபங்கம்’ செய்தார். நான் திரும்பிவரும் வரை தலை நிமிரக்கூடாதென்றார் . ஆனால் திரும்பி வரவே இல்லை. இதன் பொருள் முதல் முதலில் ஒழுங்கான சாலைப் பாதை அமைத்த என்ஜினீயர் (Engineer) அகஸ்தியர். கர்வ பங்கம் என்பது மலையை மட்டம் தட்டுவது. பிற்காலத்தில் கி.மு மூன்றாம் நூற்றாண் டில் இந்த வழியாக மௌரியப் படைகள் சாலை அமைத்து தென்னகத்துக்கு வந்ததை மாமூலனாரும் சங்க இலக்கியப் பாடல்களில் பாடி இருக்கிறார்.\n3.அகஸ்தியர் கடல் நீரைக் குடித்தார் என்று புராணங்கள் செப்பும். அதாவது முதல் முதலில் தமிழர்களைக் கடல் கடந்து அழைத்துச் சென்று தென் கிழக்காசிய நாடுகளில் இந்து நாகரீகத்தை நிலை நாட்டினார் என்பதை கடலைக் குடித்தார் என்று புராணங்கள் மொழியும்.\nவடக்கில் இமய மலையைத் தகர்த்து கங் கை நதி நீரை உத்தரப் பிரதேசத்துக்குள் திருப்பிவிட்ட உலக மஹா என்ஜினீயர் பகிரதன் போனறவர் அகஸ்தியர் . அதே பாணியில் கேரளக் கடலில் விழுந்து வீணாகி வந்த காவிரி நதியை தமிழ் நாட்டுக்குள் திருப்பிவிட்டார். அடர்ந்த தண்டகாரண்ய காடுகளை சீர்படுத்தி விந்திய மலையை மட்டம்தட்டி சாலை அமைத்தது அகஸ்தியரை மஹா பெரிய (Great Civil Engineer) சிவில் என்ஜினியர் என்றும் ஸ்ரீ மாறன் என்ற பாண்டியனை வியட்நாமுக்கு அழைத்துச் சென்று முதல் இந்து ஆட்ச்சியை நிறுவியதால் சிறந்த ‘மரைன் எஞ்சினியர்’ (Great Marine Engineer) என்றும் காட்டுகிறது.\nஅதுமட்டுமல்ல. அவர் பெரிய மொழியியல் (Great Linguist) வித்தகர். ஆகையால் அவரை அழைத்து ‘தமிழ் மொழிக்கு புதிய இலக்கணம் செய்’ என்று சிவபெருமான் கட்டளையிட்டு தன் மகன் முருகனை அழைத்து ‘இவருக்குத் தமிழ் கற்பி’ என்றும் கட்டளையிட்டார். இதை பாரதியார் பாடல்வரை பல நுல்களிலும் காண்கிறோம் .\nஅகஸ்தியர், குட முனி, கும்ப முனி, தமிழ் முனிவன் போன்றவற்றை கம்பராமாயணம் ஆகியவற்றில் காண்கிறோம். ஆயினும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சங்க இலக்கியத்தில் அவர் வாழ்ந்த பொதிய மலையையும் இமய மலையையும் ஒரே இடத்தில் ஒப்பிட்டுப் புற நானுற்றுப் புலவர் பாடுவதால் அது அகஸ்தியர் பற்றியதே என்று கருதலாம். பிற்காலத்தில் நச்சினார்க்கினியர் முதலிய உரைகாரர்கள் அகத்தியன்– பாண்டியன் — இராவணன் ஆகியோரை தொடர்புபடுத்தி கதைகள் புனை ந்துள்ளனர் . இவைகளுக்கு வரலாற்று, தொல்பொருட் துறை சான்றுகள் கிடைக்கும் வரை நம்புதற்கில்லை.\nஆனால் பாண்டியர் செப்பேடுகளும் கல்வெட்டுகளும் அகஸ்தியரைக் குறிப்பிடுகின்றனர். 2200 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த காளிதாசன்தான் (Second Century BCE) முதல் முதலில் பாண்டிய மன்னரையும் அகஸ்தியனையும் தொடர்புபடுத்தி சம்ஸ்கிருதத்தில் கவிபாடியுள்ளார்.\nஇப்பொழுது நாம் சங்கராச்சார்யார்கள், போப்பாண்டவர்கள் , தலாய் லாமாக்கள் என்று பரம்பரை பரம்பரையாக (Titles) அழைப்பது போல, அகஸ்திய கோத்திரத்தில் வந்த அத்தனை பெயரையும் அகஸ்தியர் என்றே எழுதினர் .\nஅப்படியானால் முதல் அகஸ்தியர் யார் புறநானுற்றுப் பாடலில் கபிலர் இருங்கோவேள் என்னும் மன்னரைப் பாடுகையில் “உன்னைத் தெரியாதா, என்ன புறநானுற்றுப் பாடலில் கபிலர் இருங்கோவேள் என்னும் மன்னரைப் பாடுகையில் “உன்னைத் தெரியாதா, என்ன நீ உன் வம்சத்தில் வந்த 49 ஆவது மன்னர் என்பதும் எனக்குத் தெரியும்” என்று பாடுகிறார். கபிலர் பாடியது 2000 ஆண்டுகளுக்கு முன்னர். ஒரு தலைமுறைக்கு 20 முதல் 25 ஆண்டு கொடுப்பது உலக வழக்கு. அதன்படி அவருக்கு 1000 ஆண்டுகளுக்கு முன்னர் அவருடைய முன்னோர் தமிழ் நாட்டுக்கு வந்திருக்க வேண்டும். அப்படியானால் கி.மு. ஆயிரத்தில் (1000 BCE) அகஸ்தியர் வந்தார். ஏனெனில் இப்பாட்டுக்கு உரை எழுதியோர் அகஸ���தியர் தலைமையில் 18 இன மக்கள், அதாவது 18 குடிகள் தமிழ் நாட்டுக்குள் (3000 ஆண்டுகளுக்கு முன்னர்) வந்தனர் என்கின்றனர் . அதற்கு முன்னரும் மனிதர்கள் வாழ்ந்தது பழங்கற்கால, புதிய கற்கால கருவிகள் மூலம் (Palaeolithic, Neolithic Tools) தெரிகிறது. நாம் பேசுவதெல்லாம் தமிழர் நாகரீகம் (Civilized Tamils) பற்றிப்பேசுவதாகும்.\nஇலங்கை வரலாற்றை மஹாவம்சம் என்னும் பாலி மொழி நூல் பகரும். பிராமணர்களும் க்ஷத்ரியர்களும் பெரிய தவறு செய்தாலும் மரண தண்டனை கிடையாது. ஆனால் நாடு கடத்தி விடுவார்கள். வங்காளத்தில் துஷ்டத்தனம் செய்த விஜயனைக் கப்பலில் ஏற்றி நாடு கடத்தியபோது அவன் 2600 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையில் கரை இறங்கினான். அங்கு குவேனி என்ற நாக கன்னிகை அரசாண்டாள் . அவளை மணந்தால் அது க்ஷத்திரிய வம்சத்துக்கு ஒவ்வாது என்றும் அருகிலுள்ள பாண்டிய நாட்டில் பெண் எடுப்பதே நலம் என்றும் பிராமணர்கள் ஆலோசனை வழங்கினர் . உடனே மதுரை மாநகரில் தண்டோரா போட்டு “மன்னரை மணக்க பெண்கள் தேவை” என்று அறிவித்தனர். பாண்டிய மன்னன் தன் மகளையும் மந்திரிகள் தங்கள் பெண்களையும் அனுப்பி விஜயன் கோஷ்டியை மணந்து பெங்காலி- தமிழ் கலப்பு இனத்தை உருவாக்கியது இவர்களே சிங்களவர்கள். இது மஹா வம்சம் சொல்லும் செய்தி. அதில் குறிப்பிடப்படும் ‘பாண்டியர் மதுரை’ கடலில் மூழ்கிய தென் மதுரையாக இருக்கவேண்டும் . ஆக 2600 ஆண்டுகளுக்கு முன்னர் பாண்டிய ஆட்சி தென்னாட்டில் புகழுடன் விளங்கியது தெரிகின்றது\nகாளிதாசன் எழுத்துக்குப் பின்னர் வந்த மகாவம்ச எழுத்தைக் கண்டோம் (Mahavamsam ‘written’ later). இதற்கிடையில் சந்திர குப்த மௌரியன் ஆட்சி காலத்தில் இருந்த மெகஸ்தனீஸ் என்ற கிரேக்க தூதனும் மதுரையில் ‘பாண்டேயா’ என்ற மஹாராணி இருந்ததாக, ‘இண்டிகா’ என்னும் நூலில் எழுதிவைத்துள்ளார். அது பாண்டிய ராணி மீனாட்சி அம்மனின் கதை என்பது அறிஞர் பெருமக்களின் துணிபு.\nஇதற்குப்பின் எழுந்த சங்க இலக்கியத்தில் இமயமலை, கங்கை பற்றி சுமார் 20 குறிப்புகள் இருப்பதால் அவர்களுக்கு இமயம் முதல் குமரி வரை தெரிந்து இருந்ததை நாம் அறிந்து கொள்கிறோம். அங்கே சில கதைகள் பேசப்படுகின்றன . ஒரு சேர மன்னன் பாண்டவர் படைக்கும் , கவுரவர் படைக்கும் சோறு கொடுத்ததாக உரை கார்கள் எழுதியுள்ளனர். செய்யுளில் வரும் சொல் ‘பெருஞ்சோறு’ என்பதாகும். தமிழர்கள் மகாபாரதம் நிகழ்ந்த கி.மு.3138 ஆம் ஆண்டு ஆட்சி செய்தற்கான சான்றுகள் இல்லை. மாபாரதப் போரே கி.மு.1500 என்று சொல்லும் அளவுக்குத்தான் தொல்பொருட்துறை சான்றுகள் கிடைக்கின்றன. ஆகவே பெருஞ்சோறு என்பது அவர் நினைவாக படைக்கப்படும் படையலாக இருக்க வேண்டும். இப்போதும்கூட சைவ நாயன்மார்கள் சிவபதம் எழுதிய குருபூஜை நாட்களில் தமிழர் கோவில்களும் மடங்களும் அன்னதானம் செய்வதைப் பார்க்கிறோம்\nமூன்று தமிழ்ச் சங்கங்கள் 10, 000 ஆண்டு வீச்சில் இருந்தது என்பது எகிப்திய சுமேரிய நாகரிகங்களை எல்லாம் சாப்பிட்டு ஏப்பம் விடுவதை போன்றதாகும் . அதற்குச் சான்று என்பது உலகில் எங்கும் கிடைக்காது. பாபிலோனிய சுமேரிய நாகரிகங்களில் கிடைத்த சொற்களும் சம்ஸ்கிருத சொற்களே (கபி = குரங்கு , மரிச = மிளகு, துகி =சிகி =மயில் ; அகில்).\nசங்க இலக்கியம் காட்டும் தெளிவான தொடர்பு இத்தாலியின் ரோம் (Roman Contacts) நகருடையதே\nமௌரிய மன்னர் அசோகனின் 2300 ஆண்டுப் பழமையான பிராமி லிபி கல்வெட்டுக்களும் 2130 ஆண்டுப் பழமையான ஒரிஸ்ஸா மன்னன் — சமண மத ராஜா – காரவேலன் கல்வெட்டுகளும் மூவேந்தர் பற்றிக் குறிப்பிடுவதால் இவற்றையே முதல் தொல்பொருட்துறை (Earliest Historical, Archaeological) சான்று என்று கற்றறிந்தோர் கொண்டாடுவர்.\nஇதற்கு சற்று முந்தைய சாணக்கியனின் — கௌடில்யரின் — அர்த்த சாஸ்திர பொருளாதார நூலும் ‘பாண்டிய கவாடம்’ என்று முத்துக்களைக் குறிப்பிடுவதால் தென்பாண்டி முத்து மகத சாம்ராஜ்யம் வரை புகழ் பரப்பியதை அறிகிறோம்.\nவேத கால இலக்கியம் கரை படாதது- பிறர் கைபடாதது – இடைச் செருகல் இல்லாதது – என்று அறிஞர் உலகம் போற்றுவதாலும், அகஸ்திய முனிவர் இருங்கோவேளுக்கு 49 தலை முறைக்கு முன்னர் தமிழ் நாட்டுக்கு வந்ததை உரைகார்கள் செப்புவதையும் கொண்டு “3000 ஆண்டுக்கு முன் தமிழர்கள்” என்று புஸ்தகம் எழுத முடியும். பாணினி சொல்லும் மிளகும், ஹெரொடோரோட்டஸ் சொல்லும் அரிசியும். போதாயனர் சொல்லும் தமிழர்களின் தலைகளில் சூடும் பூவும், கௌடில்யர் சொல்லும் கபாட முத்தும் இதற்குத் துணையாக நிற்கும்.\nஒரு காலத்தில் சிந்து-சரஸ்வதி முத்திரைகளை எவரேனும் படித்தாலும் அது சம்ஸ்கிருத – தமிழின் மூல மொழியாக இருக்குமேயன்றி நாம் அறிந்த தமிழ், சம்ஸ்கிருதமாக இராது என்பதே நான் கண்ட உண்மை.\nஹிந்தி படப் பாடல்கள் – 12 – காதல் பாடல்கள்\nஅகத்தியர் அழைத்து வந்த 18 குடிகள் யாருன்னு விளக்குங்க சார்..\nanecdotes Appar ARTICLES Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya crossword Hindu Indra in Tamil Kalidasa Lincoln london swaminathan mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar POSTS proverbs Quotations quotes Rig Veda shakespeare Silappadikaram Tamil Tirukkural Valluvar Valmiki Vedas அப்பர் கங்கை கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலண்டர் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி சுவாமிநாதன் ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பட்டியல் பழமொழி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவன் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilkilavan.com/author/Kilavan/", "date_download": "2021-05-07T00:48:13Z", "digest": "sha1:474P74P7VFPNYRK5FNNF2ZZUDV3FKPPE", "length": 8093, "nlines": 80, "source_domain": "tamilkilavan.com", "title": "Kilavan, Author at Tamil Kilavan", "raw_content": "\nகடையில் முட்டை வாங்கறதுக்கு முன்னாடி இந்த வீடியோ பாருங்க\nவணக்கம் அன்பு வாசகர்களே நீங்கள் எத்தனையோ தளங்களில் செய்திகளை படித்திருப்பீர்கள் ஆனால் நம்முடைய தளம் முழுக்க முழுக்க மாறுபட்ட ஒரு தளம் இங்கு காணொளியின் மூலமாக அனைத்து தகவல்களும் உங்களுக்கு சொல்லப்படும். படித்து அதை தெரிந்து கொள்வதை விட காணொளியின் மூலமாக காணுகின்ற ஒரு காட்சியை எளிமையாக நமக்கு புரிந்துவிடும் நம் மனதில் அது பதிந்துவிடும் எனவே தான் நம்முடைய தளத்தில் அனைத்தும் காணொளி …\n2 முட்டை இருக்கா வீட்டில் உள்ள அனைவருக்கும் கிரிஸ்பியான ஈவினிங் ஸ்நாக்ஸ் ரெடி.\n2 முட்டை இருக்கா வீட்டில் உள்ள அனைவருக்கும் கிரிஸ்பியான ஈவினிங் ஸ்நாக்ஸ் ரெடி\nமுட்டை சுக்கா லஞ்சுக்கு பக்காவான சைடிஷ் 10 நிமிடத்தில் இப்படி சுவையா செய்து கொடுத்து அசத்துங்க.\nமுட்டை சுக்கா லஞ்சுக்கு பக்காவான சைடிஷ் 10 நிமிடத்தில் இப்படி சுவையா செய்து கொடுத்து அசத்துங்க.\nபல கோடி சொத்துக்கு சொந்தக்காரி ஒரு வேலை சோற்றுக்காக வீட்டு வேலை செய்து பிழைக்கும் அவலம்\nபல கோடி சொத்துக்கு சொந்தக்காரி ஒரு வேலை சோற்றுக்காக வீட்டு வேலை செய்து பிழைக்கும் அவலம்\n20 ஆயிரம் வருடங்களுக்கு முன் மூழ்கிப்போன தமிழனின் வரலாறு.. தற்போது மெல்ல மெல்ல மிதந்து வருகிறது.. தற்போது மெல்ல மெல்ல மிதந்து வருகிறது.. ஒவ்வொரு தமிழனும் உலகத்துக்கு அறிய நண்பர்களுடன் பகிருங���கள்..\nமூழ்கிப் போன உண்மைகள் வெளிவர தொடங்கியுள்ளது.(இதை படிக்க 5நிமிடம் ஒதுக்குங்கள்).நம் வரலாற்றை தெரிந்து கொள்ள இந்த முறை உங்களை 20,000 வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கிய ஒரு உலகிற்கு அழைத்துக் செல்லவிருக்கிறேன். என்னுடன் சேர்ந்து பயணிக்க உங்களின் பொன்னான 5 நிமிடங்களை ஒதுக்குங்கள்,இங்கு தான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்கு தான் நம் மூதாதையர் வாழ்ந்தனர். இங்கு தான் …\nஇதை பார்த்தால் இனி இதை தூக்கி போடமாட்டீர்கள் நச்சுன்னு 6 விதமான டிப்ஸ்\nஇதை பார்த்தால் இனி இதை தூக்கி போடமாட்டீர்கள் நச்சுன்னு 6 விதமான டிப்ஸ்\nஇந்த இலையின் மதிப்பு தெரியுமா ஆச்சர்யப்படும் விலையில் விற்கும் இலையின் மருத்துவம் \nஇந்த இலையின் மதிப்பு தெரியுமா ஆச்சர்யப்படும் விலையில் விற்கும் இலையின் மருத்துவம் \nசளி இருமல் ஜலதோஷம் நெஞ்சு சளி அனைத்தும் குணமாகும் அதிசயம் .\nசளி இருமல் ஜலதோஷம் நெஞ்சு சளி அனைத்தும் குணமாகும் அதிசயம்.\nமட்டன் குழம்பு இப்படித்தான் செய்யணும் ஒரு முறை இப்படி செய்ங்க.\nமட்டன் குழம்பு இப்படித்தான் செய்யணும் ஒரு முறை இப்படி செய்ங்க\nதக்காளி தொக்கு இப்படி செய்யுங்க இட்லி ,தோசை,சப்பாத்தி,சாதமுடன் அருமை.\nதக்காளி தொக்கு இப்படி செய்யுங்க இட்லி ,தோசை,சப்பாத்தி,சாதமுடன் அருமை\nகடையில் முட்டை வாங்கறதுக்கு முன்னாடி இந்த வீடியோ பாருங்க\n2 முட்டை இருக்கா வீட்டில் உள்ள அனைவருக்கும் கிரிஸ்பியான ஈவினிங் ஸ்நாக்ஸ் ரெடி.\nமுட்டை சுக்கா லஞ்சுக்கு பக்காவான சைடிஷ் 10 நிமிடத்தில் இப்படி சுவையா செய்து கொடுத்து அசத்துங்க.\nபல கோடி சொத்துக்கு சொந்தக்காரி ஒரு வேலை சோற்றுக்காக வீட்டு வேலை செய்து பிழைக்கும் அவலம்\n20 ஆயிரம் வருடங்களுக்கு முன் மூழ்கிப்போன தமிழனின் வரலாறு.. தற்போது மெல்ல மெல்ல மிதந்து வருகிறது.. தற்போது மெல்ல மெல்ல மிதந்து வருகிறது.. ஒவ்வொரு தமிழனும் உலகத்துக்கு அறிய நண்பர்களுடன் பகிருங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2021-05-07T01:09:20Z", "digest": "sha1:R7R2EZC72RGINMTBMVMK52FETDRZAYLN", "length": 8943, "nlines": 298, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nKanags பக்கம் மாக்கடோனியக் குடியரசு என்பதை வடக்கு மக்கெதோனியா என்பதற்கு நகர்த்தினார்\n→‎மாசிடோனியா பெயர் சர்ச்சை: பராமரிப்பு using AWB\nதானியங்கிஇணைப்பு category [[:Category:ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள்|ஐக்கிய நாடுகள் சபையின் உறுப...\nதானியங்கிஇணைப்பு category நிலம்சூழ் நாடுகள்\nதானியங்கி: 187 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nr2.7.2) (தானியங்கி இணைப்பு: pa:ਮਕਦੂਨੀਆ\nr2.7.2) (தானியங்கி மாற்றல்: pl:Macedonia\nr2.7.2) (தானியங்கி மாற்றல்: pl:Macedonia\nஹாட்கேட் மூலம் பகுப்பு:ஐரோப்பிய நாடுகள் நீக்கப்பட்டது\nவி. ப. மூலம் பகுப்பு:ஐரோப்பிய நாடுகள் சேர்க்கப்பட்டது\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://voiceofasia.co/%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BF-%E0%AE%95/", "date_download": "2021-05-07T01:56:58Z", "digest": "sha1:IHOXGHOVLE6JTUSYWZP6CIBF6XTZS35B", "length": 2824, "nlines": 55, "source_domain": "voiceofasia.co", "title": "தடகள போட்டியில் டில்ஷி குமாரசிங்க தேசிய சாதனை", "raw_content": "\nதடகள போட்டியில் டில்ஷி குமாரசிங்க தேசிய சாதனை\nதடகள போட்டியில் டில்ஷி குமாரசிங்க தேசிய சாதனை\nதேசிய தடகள விளையாட்டு (national athletic trials) போட்டிகளில் டில்ஷி குமாரசிங்க தேசிய சாதனையொன்றை நிலைநாட்டியுள்ளார்.\nடில்ஷி குமாரசிங்க பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் 2.02:52 நிமிடங்களில் எல்லையை கடந்து குறித்த சாதனையை புரிந்துள்ளார்.\nகொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் இடம்பெற்று வரும் தேசிய தடகள விளையாட்டு (national athletic trials) போட்டிகளிலேயே டில்ஷி குமாரசிங்க இந்த தேசிய சாதனையை நிலைநாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇந்துக் கடவுளின் உருவம் கொண்ட சங்கிலியை அணிந்த அமெரிக்கப் பாடகி – குறைகூறும் இந்தியர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/todays-paper/regional02/666060-.html", "date_download": "2021-05-07T01:03:01Z", "digest": "sha1:P7AQAT2XDMD63V5KEGB33S4XC5U6JVKV", "length": 12790, "nlines": 278, "source_domain": "www.hindutamil.in", "title": "தென்காசி மாவட்டத்தில் நகராட்சி, ஊராட்சி ஒன்றிய - அலுவலகங்களில் கரோனா கட்டுப்பாட்டு அறை : | - hindutamil.in", "raw_content": "வெள்ளி, மே 07 2021\nதென்காசி மாவட்டத்தில் நகராட்சி, ஊராட்சி ஒன்றிய - அலுவலகங்களில் கரோனா கட்டுப்பாட்டு அறை :\nதென்காசி மாவட்ட ஆட்சியர் அலு��லகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:\nதென்காசி மாவட்டத்தில் உள்ளவர்கள் கரோனா தொற்றுநோய் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் பெறவும்,நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது அரசு நடைமுறைப் படுத்தியுள்ள விதிகளை மீறி செயல்படுவோர் தொடர்பான புகார்களை அளிக்கவும் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவசரகால செயல்பாட்டு மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.\nஇம்மையத்தின் தொலைபேசி எண்கள்- 04633-290548அல்லது 1077. கரோனா தொற்றுதொடர்பான விவரங்களுக்கு 04633-281100, 04633-281102,04633-281105 ஆகியவற்றில் பொதுமக்கள் எந்நேரமும் தொடர்பு கொள்ளலாம்.\nமேலும், மாவட்டத்திலுள்ள நகராட்சி, ஊராட்சி ஒன்றியஅலுவலகங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள கரோனா கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசிஎண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.\nதென்காசி நகராட்சி அலுவலகம்- 04633-222228, சங்கரன்கோவில் நகராட்சி அலுவலகம்- 04636 224719, கடையநல்லூர் நகராட்சி அலுவலகம்- 04633 240250, செங்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம்- 04633 233058, கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம்- 04633 250223, வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம்- 04636 241327, குருவிகுளம்ஊராட்சி ஒன்றிய அலுவலகம்-9442584129, மேலநீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம்-04636 290384, ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம்- 04633 270124, கடையம் ஊராட்சி ஒன்றியஅலுவலகம்- 04634 240428.\nநந்திகிராமில் தோற்ற மம்தா பானர்ஜி முதல்வர் பதவியில்...\nபிரதமருக்கு வீடு கட்டச் செலவிடும் ரூ.13,450 கோடியில்...\nபிரசாந்தும் சுனிலும்: இரு பிரச்சாரக் கதைகள்\nதிமுக வெற்றியின் முக்கியத்துவம் என்ன\nஅம்மா உணவகம் சூறை; டிடிவி, ஜெயக்குமார் கண்டனம்:...\nமேற்கு வங்கத்தில் பாஜகவை வீழ்த்திய மம்தா: வெற்றிப்...\nமோடி ஒன்றும் வெல்ல முடியாதவர் அல்ல\nமருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் கரோனா நோயாளிகளுக்காக - டெல்லிக்கு 730 டன்...\nஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள் பெற்ற மாலி நாட்டுப் பெண் :\n50 சதவீதத்தை தாண்டக்கூடாது என்ற - இந்திரா சஹானி வழக்கின் தீர்ப்பை...\nமேற்கு வங்க சட்டம்-ஒழுங்கு நிலவரம் - அறிக்கை சமர்ப்பிக்க ஆளுநருக்கு மத்திய...\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nமேலும் 1.5 லட்சம் ஸ்புட்னிக் வி தடுப்பூசிகளை அனுப்பும் ரஷ்யா\nநெல்லையில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு - தடுப்பூசி போடும் பணி...\nநெல்லையில் இறைச்சி, மீன் கடைகள் மூடல் :\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள�� சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/todays-paper/regional03/667084-.html", "date_download": "2021-05-07T00:13:51Z", "digest": "sha1:KHVWN73I5CGZ7OFKTRLSJSOEYQMLYEFH", "length": 12613, "nlines": 275, "source_domain": "www.hindutamil.in", "title": "தமிழக எல்லையில் - கரோனா பரிசோதனையை தீவிரப்படுத்த வலியுறுத்தல் : | - hindutamil.in", "raw_content": "வெள்ளி, மே 07 2021\nதமிழக எல்லையில் - கரோனா பரிசோதனையை தீவிரப்படுத்த வலியுறுத்தல் :\nகர்நாடக மாநிலம் பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் கரோனா வேகமாக பரவி வருவதால் அங்கிருந்து தமிழகம் வரும் பயணிகளால் கரோனா தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் தமிழக ஓசூர் எல்லைப்பகுதியில் கரோனா பரிசோதனையை தீவிரப்படுத்த வேண்டும் என்று மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nகர்நாடக மாநிலத்தில் கரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் அம்மாநிலத்தில் கடந்த ஏப்ரல் 27-ம் தேதி முதல் மே மாதம் 10-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் இருந்து பெங்களூரு அத்திப்பள்ளி வழியாக தமிழக எல்லை ஜுஜுவாடிக்கு தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் நடந்து வருகின்றனர். இவர்கள் ஜுஜுவாடியில் நிறுத்தப்பட்டுள்ள தமிழக அரசு நகரப் பேருந்துகளில் ஓசூர் வரை பயணித்து பின்பு ஓசூர் பேருந்து நிலையத்தில் இருந்துதமிழக அரசு விரைவு பேருந்துகளில் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு பயணிக்கின்றனர்.\nஆகவே தமிழகத்தில் கரோனா தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் கர்நாடகா மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தமிழக ஓசூர் எல்லை வழியாக நடந்து வருபவர்களுக்கு எல்லை யிலேயே கரோனா பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது ஓசூர் பகுதிமக்கள் மற்றும் சமூக ஆர்வலர் களின் கோரிக்கையாக உள்ளது.\nநந்திகிராமில் தோற்ற மம்தா பானர்ஜி முதல்வர் பதவியில்...\nபிரதமருக்கு வீடு கட்டச் செலவிடும் ரூ.13,450 கோடியில்...\nபிரசாந்தும் சுனிலும்: இரு பிரச்சாரக் கதைகள்\nதிமுக வெற்றியின் முக்கியத்துவம் என்ன\nஅம்மா உணவகம் சூறை; டிடிவி, ஜெயக்குமார் கண்டனம்:...\nமேற்கு வங்கத்தில் பாஜகவை வீழ்த்திய மம்தா: வெற்றிப்...\nமோடி ஒன்றும் வெல்ல முடியாதவர் அல்ல\nமருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் கரோனா நோயாளிகளுக்காக - டெல்லிக்கு 730 டன்...\nஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள் பெற்ற மாலி நாட்டுப் பெண் :\n50 சதவீதத்தை தாண்���க்கூடாது என்ற - இந்திரா சஹானி வழக்கின் தீர்ப்பை...\nமேற்கு வங்க சட்டம்-ஒழுங்கு நிலவரம் - அறிக்கை சமர்ப்பிக்க ஆளுநருக்கு மத்திய...\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nமேலும் 1.5 லட்சம் ஸ்புட்னிக் வி தடுப்பூசிகளை அனுப்பும் ரஷ்யா\nராயக்கோட்டை அருகே கடத்திய 5.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல் :\nஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 1000 கனஅடியாக சரிவு :\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vativamaippu.com/?D=56872", "date_download": "2021-05-07T01:01:28Z", "digest": "sha1:576VCQDVC5LJZ7ATX4WJGAHSYOFAMCGP", "length": 8555, "nlines": 67, "source_domain": "www.vativamaippu.com", "title": " Upstox வலைத்தளம் - வடிவமைப்பு இதழ்", "raw_content": "\nவியாழன் 6 மே 2021\nவலைத்தளம் அப்ஸ்டாக்ஸ் முன்பு ஆர்.கே.எஸ்.வியின் துணை நிறுவனம் ஒரு ஆன்லைன் பங்கு வர்த்தக தளமாகும். சார்பு வர்த்தகர்கள் மற்றும் சாதாரண மனிதர்களுக்காக வடிவமைக்கப்பட்ட தனித்துவமான தயாரிப்புகள் அதன் இலவச வர்த்தக கற்றல் தளத்துடன் அப்ஸ்டாக்ஸின் வலுவான யுஎஸ்பி ஒன்றாகும். லாலிபாப்பின் ஸ்டுடியோவில் வடிவமைக்கும் கட்டத்தில் முழு மூலோபாயமும் பிராண்டும் கருத்துருவாக்கப்பட்டன. ஆழ்ந்த போட்டியாளர்கள், பயனர்கள் மற்றும் சந்தை ஆராய்ச்சி ஆகியவை வலைத்தளத்திற்கான தனித்துவமான அடையாளத்தை உருவாக்கும் தீர்வுகளை வழங்க உதவியது. தரவு உந்துதல் வலைத்தளத்தின் ஏகபோகத்தை உடைக்க உதவும் தனிப்பயன் விளக்கப்படங்கள், அனிமேஷன்கள் மற்றும் ஐகான்களைப் பயன்படுத்தி வடிவமைப்புகள் ஊடாடும் மற்றும் உள்ளுணர்வு கொண்டவை.\nதிட்டத்தின் பெயர் : Upstox, வடிவமைப்பாளர்களின் பெயர் : Lollypop Design Studio, வாடிக்கையாளரின் பெயர் : Upstox.\nஇந்த சிறந்த வடிவமைப்பு லைட்டிங் தயாரிப்புகள் மற்றும் லைட்டிங் திட்டங்கள் வடிவமைப்பு போட்டியில் தங்க வடிவமைப்பு விருதை வென்றது.\tபல புதிய, புதுமையான, அசல் மற்றும் ஆக்கபூர்வமான லைட்டிங் தயாரிப்புகள் மற்றும் லைட்டிங் திட்டங்கள் வடிவமைப்பு படைப்புகளைக் கண்டறிய தங்க விருது பெற்ற வடிவமைப்பாளர்களின் வடிவமைப்பு இலாகாவை நீங்கள் நிச்சயமாக பார்க்க வேண்டும்.\nஇந்த வடிவமைப்பைப் பற்றி மேலும் அறிக\nஅற்புதமான வடிவமைப்பு. நல்ல வடிவமைப்பு. சிறந்த வடிவமைப்பு.\nசெவ்வாய் 4 மே 2021\nநல்ல வடிவமைப்புகள் சமுதாயத்திற்கு மதிப்பை உருவாக்குகின்றன. வடிவமைப்பில் சிறந்து விளங்கும் ஒரு சிறப்பு வடிவமைப்பு திட்டத்தை தினமும் நாங்கள் இடம்பெறுகிறோம். இன்று, ஒரு விருது வென்ற வடிவமைப்பை நேர்மறையான வித்தியாசத்தை வெளிப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். நாங்கள் தினமும் மிகச் சிறந்த மற்றும் எழுச்சியூட்டும் வடிவமைப்புகளைக் காண்பிப்போம். உலகெங்கிலும் உள்ள சிறந்த வடிவமைப்பாளர்களிடமிருந்து புதிய நல்ல வடிவமைப்பு தயாரிப்புகள் மற்றும் திட்டங்களை அனுபவிக்க தினமும் எங்களைச் சந்திப்பதை உறுதிசெய்க.\nவலைத்தளம் மற்றும் வலை வடிவமைப்பு\nஇந்த வடிவமைப்பைப் பற்றி மேலும் அறிக\nThe Float ரியல் எஸ்டேட் நிறுவனம் வியாழன் 6 மே\nOr2 ஃபோட்டோக்ரோமிக் விதான அமைப்பு புதன் 5 மே\nEye of Ra' பொது நகர்ப்புற கலை தளபாடங்கள் செவ்வாய் 4 மே\nநீங்கள் ஒரு வடிவமைப்பாளர், கலைஞர், கட்டிடக் கலைஞர், புதுமைப்பித்தன் அல்லது பிராண்ட் மேலாளரா பகிர்வதற்கு உங்களிடம் ஏதேனும் நல்ல வடிவமைப்புகள் உள்ளதா பகிர்வதற்கு உங்களிடம் ஏதேனும் நல்ல வடிவமைப்புகள் உள்ளதா உலகளவில் வடிவமைப்பாளர்கள், கலைஞர்கள், கட்டட வடிவமைப்பாளர்கள், கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் பிராண்டுகளிலிருந்து அசல் மற்றும் ஆக்கபூர்வமான வடிவமைப்புகளை வெளியிடுவதில் நாங்கள் மிகவும் ஆர்வமாக உள்ளோம். உங்கள் வடிவமைப்புகளை இன்று வெளியிடவும்.\nஅன்றைய வடிவமைப்பு நேர்காணல் வியாழன் 6 மே\nஅன்றைய வடிவமைப்பு புராணக்கதை புதன் 5 மே\nஅன்றைய வடிவமைப்பு செவ்வாய் 4 மே\nஅன்றைய வடிவமைப்பாளர் திங்கள் 3 மே\nஅன்றைய வடிவமைப்பு குழு ஞாயிறு 2 மே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=10903052", "date_download": "2021-05-07T01:46:08Z", "digest": "sha1:CEPBVXPKR3RI32HEQM34NULNSEJS5VEC", "length": 47308, "nlines": 190, "source_domain": "old.thinnai.com", "title": "ஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்) (1809-1865) காட்சி -4 பாகம் -3 | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை\nஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்) (1809-1865) காட்சி -4 பாகம் -3\nதமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா\n“முன்னொரு முறை நான் சொல்லியதை மீண்டும் வலியுறுத்துகிறேன். ‘நான் எடுத்துக் காட்டிய பல்வேறு முறைகளில் எந்த விதத்திலும் அடிமைத்தன ஏற்பாடுகள் தவறான தென்று கருதாத ஒருவன் நம்மிடையே இருப்பானாகில் அவன் அமெரிக்க மண்ணில் தடம் வைக்கத் தகுதியற்றவன். அவன் நம்���ோடு சேர்ந்து வாழக் கூடாது. அடிமைத்தன ஏற்பாடுகள் நம்மிடையே இருப்பதைப் புறக்கணிப்பவன், அதைத் திருப்தியான முறையில் அரசியல் ஆட்சி நியதி நெறிப்படி நீக்குவதில் உள்ள சிரமத்தைப் புரிந்து கொள்ளாதவன் நமது அரங்கில் இருப்பானாகில் அவன் நமது அமெரிக்கத் மண்ணில் தடம் வைக்கத் தகுதியில்லாதவன்.”\nஆப்ரஹாம் லிங்கன் (ஸ்டீ·பென் டக்லஸ் தர்க்கப் பதிலுரை) (அக்டோபர் 15, 1858)\n“அடிமைத்தன ஒழிப்பைத் தவறாகக் கருதும் மனப்போக்கு பரவி வரும் இந்தச் சமயத்தில், நான் சொல்கிறேன் : இதுவரை இந்த அடிமைத்தனக் கொடுமை போல் வேறு ஏதாவது நமது அமெரிக்க ஐக்கியத்தைச் சீர்குலைக்கப் பயமுறுத்தி யுள்ளதா நாம் பற்றிக் கொண்டுள்ள முக்கியமான இதய இச்சை என்ன நாம் பற்றிக் கொண்டுள்ள முக்கியமான இதய இச்சை என்ன நமது உரிமைச் சுதந்திரம் அந்த இரண்டையும் பயமுறுத்தி வருவது அடிமைத்தன வைப்பு என்பது தவிர வேறில்லை என்று உங்களுக்குத் தெரிகிறதா \nஆப்ரஹாம் லிங்கன் (ஸ்டீ·பென் டக்லஸ் தர்க்கப் பதிலுரை) (அக்டோபர் 15, 1858)\nநீண்ட காலமாய் நிலையாக எனக்கு இரண்டு குறிக்கோள்கள் இருந்து வந்துள்ளன. ஒன்று அமெரிக்க ஐக்கியத்தை எப்ப்டியும் பாதுகாப்பது அடுத்தது அடிமைத்தனக் கொடுமையை ஒழிப்பது அடுத்தது அடிமைத்தனக் கொடுமையை ஒழிப்பது ஐக்கியத்தைக் காப்பது எப்படி என்பதில் எனக்குத் தெளிவான சிந்தனை உள்ளது. கசப்பான உள்நாட்டுப் போரில் இரண்டு ஆண்டுக்கும் மேலாய் வேதனை யுற்றாலும் என் மனவொளி (Vision) மங்கிப் போகவில்லை ஐக்கியத்தைக் காப்பது எப்படி என்பதில் எனக்குத் தெளிவான சிந்தனை உள்ளது. கசப்பான உள்நாட்டுப் போரில் இரண்டு ஆண்டுக்கும் மேலாய் வேதனை யுற்றாலும் என் மனவொளி (Vision) மங்கிப் போகவில்லை அமெரிக்க ஐக்கியத்துக்குப் போரிட்டு இப்போது வெற்றியும் பெற்று வருகிறோம் அமெரிக்க ஐக்கியத்துக்குப் போரிட்டு இப்போது வெற்றியும் பெற்று வருகிறோம் ஆனால் எப்போது எப்படி அடிமை விடுதலை அறிவிப்பை வெளிவிடுவது என்பதில் எனக்கு உறுதியில்லை ஆனால் எப்போது எப்படி அடிமை விடுதலை அறிவிப்பை வெளிவிடுவது என்பதில் எனக்கு உறுதியில்லை அது சில நாட்களுக்கு முன்பு அது சில நாட்களுக்கு முன்பு ஆனால் இப்போது தெளிவு பிறந்து விட்டது எனக்கு \nஆப்ரஹாம் லிங்கன் (செப்டம்பர் 17, 1862)\nகாட்சி -4 பாகம் -3\nஆப்ரஹாம் லிங்கன், மாநிலச் செயலாளர் : வில்லியம் ஸீவேர்டு, போர்த்துறைச் செயலாளர் : எட்வின் ஸ்டான்டன் (Edwin Stanton), நிதிப் பொறுப்புச் செயலாளர் : ஸால்மன் சேஸ், (Treasury Secretary Salmon Chase), அஞ்சல் துறை அதிபர் : மாண்ட்கொமரி பிளேர் (Postmaster General Montgomery Blair), கடற்படைச் செயலாளர் : கிடியான் வெல்லெஸ் மற்றும் அரசாங்க உறுப்பினர் காலப் ஸ்மித் (Galeb Smith), பர்னெட் ஹ¥க் (Burnet Hook) ஆகியோர்.\nஇடம் : வாஷிங்டன் D.C. வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி கூட்டுரையாடல் அறை.\nஉள்நாட்டுப் போர் மும்முரமாய் நடந்து கொண்டிருக்கிறது. பெரு வெற்றி பெற்ற பிறகு ஜனாதிபதி அரசவைச் குழுவினரைக் கூட்டி (Cabinet Members) கறுப்பர் விடுதலை அறிவிப்பைப் பற்றி உரையாட வருகிறார்.. அரசாங்க உறுப்பினருடன் லிங்கன் “அடிமைகள் விடுதலை அறிவிப்பு” வெளியீடு பற்றிப் பேசுகிறார். தர்க்கம் முடிந்து அவர்கள் யாவரும் போன பிறகு பர்னெட் ஹ¥க் மட்டும் தனியே நின்று லிங்கனுடன் வாதாடுகிறார்.\nஆப்ரஹாம் லிங்கன்: நன்றாக நினைவில் உள்ளது ஆனால் அது சரியான தருணமில்லை. அதனால்தான் நான் மறுத்தேன் ஆனால் அது சரியான தருணமில்லை. அதனால்தான் நான் மறுத்தேன் போருக்கிடையே என்ன நேரப் போகுதெனத் துடிக்கும் சமயத்திலே விடுதலை அறிவிப்பை வெளியிட எனக்கு விருப்பமில்லை போருக்கிடையே என்ன நேரப் போகுதெனத் துடிக்கும் சமயத்திலே விடுதலை அறிவிப்பை வெளியிட எனக்கு விருப்பமில்லை கொள்கை ஒன்றைப் பின்பற்றி நிலைநாட்டுவது என் பொறுப்பு. தவறான தருணத்தில் வெளியிட்டு மக்கள் அதைப் புறக்கணிபதற்கு இல்லை கொள்கை ஒன்றைப் பின்பற்றி நிலைநாட்டுவது என் பொறுப்பு. தவறான தருணத்தில் வெளியிட்டு மக்கள் அதைப் புறக்கணிபதற்கு இல்லை அப்படிச் செய்வது தேசக் கடமை ஆகாது. நீண்ட காலமாய் நிலையாக எனக்கு இரண்டு குறிக்கோள்கள் இருந்து வந்துள்ளன. ஒன்று அமெரிக்க ஐக்கியத்தை எப்ப்டியும் பாதுகாப்பது அப்படிச் செய்வது தேசக் கடமை ஆகாது. நீண்ட காலமாய் நிலையாக எனக்கு இரண்டு குறிக்கோள்கள் இருந்து வந்துள்ளன. ஒன்று அமெரிக்க ஐக்கியத்தை எப்ப்டியும் பாதுகாப்பது அடுத்தது அடிமைத்தனக் கொடுமையை ஒழிப்பது அடுத்தது அடிமைத்தனக் கொடுமையை ஒழிப்பது ஐக்கியத்தைக் காப்பது எப்படி என்பதில் எனக்குத் தெளிவான சிந்தனை உள்ளது. கசப்பான உள்நாட்டுப் போரில் இரண்டு ஆண்டுக்கும் மேலாய் வேதனை யுற்றாலும் என் மனவொளி (Vision) மங���கிப் போகவில்லை ஐக்கியத்தைக் காப்பது எப்படி என்பதில் எனக்குத் தெளிவான சிந்தனை உள்ளது. கசப்பான உள்நாட்டுப் போரில் இரண்டு ஆண்டுக்கும் மேலாய் வேதனை யுற்றாலும் என் மனவொளி (Vision) மங்கிப் போகவில்லை அமெரிக்க ஐக்கியத்துக்குப் போரிட்டு இப்போது வெற்றியும் பெற்று வருகிறோம் அமெரிக்க ஐக்கியத்துக்குப் போரிட்டு இப்போது வெற்றியும் பெற்று வருகிறோம் ஆனால் எப்போது எப்படி அடிமை விடுதலை அறிவிப்பை வெளிவிடுவது என்பதில் எனக்கு உறுதியில்லை ஆனால் எப்போது எப்படி அடிமை விடுதலை அறிவிப்பை வெளிவிடுவது என்பதில் எனக்கு உறுதியில்லை அது சில நாட்களுக்கு முன்பு அது சில நாட்களுக்கு முன்பு ஆனால் இப்போது தெளிவு பிறந்து விட்டது எனக்கு ஆனால் இப்போது தெளிவு பிறந்து விட்டது எனக்கு மேரிலாண்டிலிருந்து எதிர்ப்புக் கலகவாதிகள் துரத்தப்பட்ட பின் வெற்றி நம் பக்கம் என்பது உறுதியாகி விட்டது மேரிலாண்டிலிருந்து எதிர்ப்புக் கலகவாதிகள் துரத்தப்பட்ட பின் வெற்றி நம் பக்கம் என்பது உறுதியாகி விட்டது அந்த வெற்றிப் புத்தொளியோடு, பலிவாங்கப் பட்ட யூனியன் அடிமை ஒழிப்பையும் உடனே அறிவிக்க வேண்டும் என்று என் ஆத்மா உந்தியது அந்த வெற்றிப் புத்தொளியோடு, பலிவாங்கப் பட்ட யூனியன் அடிமை ஒழிப்பையும் உடனே அறிவிக்க வேண்டும் என்று என் ஆத்மா உந்தியது அந்த உறுதி மொழியை நான் முன்பு எடுத்துக் கொண்டது எனக்கும் என்னைப் படைத்தவனுக்கும் அந்த உறுதி மொழியை நான் முன்பு எடுத்துக் கொண்டது எனக்கும் என்னைப் படைத்தவனுக்கும் புரட்சிக்காரர் விரட்டப் பட்டதும் நான் அந்த உறுதி மொழியை நிறைவேற்ற வேண்டும் புரட்சிக்காரர் விரட்டப் பட்டதும் நான் அந்த உறுதி மொழியை நிறைவேற்ற வேண்டும் ஆதலால் உமது தடைமொழியை நான் நிராகரிக்கிறேன் ஆதலால் உமது தடைமொழியை நான் நிராகரிக்கிறேன் உமது தனிப்பட்ட எதிர்ப்புக் கருத்துக்களை மதித்துக் கொண்டு நானிந்த முடிவெடுக்கிறேன். இந்த முடிவுக்கு நீங்கள் யாவரும் உடன்பாடு தெரிவிக்க வேண்டும் என்று நான் மன்றாடிக் கேட்கிறேன்.\nபர்னெட் ஹ¥க்: (சட்டென) இது ஆவேச அறிவிப்பாகத் தெரியுது எனக்கு. சிந்தித்து வெளியிடும் அறிவிப்பாய்த் தோன்ற வில்லை எனக்கு.\nலிங்கன்: (தொடர்ந்து) மற்றுமொரு கருத்தைச் சொல்கிறேன். இந்தப் பிரச்சனையில் மற்���வர் என்னை விடச் சிறப்பாகச் செய்ய முடியும் என்றெனக்குத் தெரியும். ஆனால் அரசியல் நியதிப்படி என்னை உடன்பட வைத்துப் பொதுமக்கள் ஆதரவையும் பெற்று என் ஆசனத்திலிருந்து அமர்ந்து கொண்டு அவர் செய்ய வேண்டும் மகிழ்ச்சியோடு நான் அவருக்கு விட்டுக் கொடுக்கிறேன். ஆனால் இப்போது என் ஆசனத்தில் அமர்ந்து அதைச் செய்வோர் யாரு மிருப்பதாகத் தெரிய வில்லை. தேர்ந்தெடுத்த முடிவைச் சீக்கிரம் செய்து முடிக்க வேண்டியது என் கடமை மகிழ்ச்சியோடு நான் அவருக்கு விட்டுக் கொடுக்கிறேன். ஆனால் இப்போது என் ஆசனத்தில் அமர்ந்து அதைச் செய்வோர் யாரு மிருப்பதாகத் தெரிய வில்லை. தேர்ந்தெடுத்த முடிவைச் சீக்கிரம் செய்து முடிக்க வேண்டியது என் கடமை அதை நான் செய்தே தீர வேண்டும்.\nஸ்டான்டன்: சிந்தித்து முடிவு செய்ய சில நாட்கள் தாமதப் படுத்துவீரா மிஸ்டர் பிரசிடெண்ட் \nசேஸ்: இப்போது அமெரிக்க ஐக்கியத்தைக் காப்பாற்றுவது மட்டுமே நமது முதற் கடமை \nபர்னெட் ஹ¥க்: அதில் முற்றிலும் எனக்கு உடன்பாடு \n வரலாற்றிலிருந்து நாம் தப்பிக்க ஓட முடியாது. நமக்குள் வேறுபட்ட கருத்துக்கள் இருப்பினும் நம்மை யாரும் மறக்கப் போவதில்லை தனிப்பட்டோருக்குப் பொதுநபர் மதிப்பளிக்க மாட்டார். அடிமைகளுக்கு விடுதலையை அறிவிக்கும் போது நாம் விடுபடுவோருக்கு சுதந்திரத்தை உறுதிப் படுத்துகிறோம். ஒன்று நாம் நேர்மையோடு அடிமைகளைக் காப்பாற்றுவோம் அல்லது வேதனையோடு நாம் இறுதியில் இழந்து போவோம் \n(லிங்கன் எழுந்து நின்று அடிமைகள் விடுதலை அறிவிப்பு வெளியீட்டுத் தாளை மேஜை மீது வைத்துக் கையொப்பமிட்டு “ஜனாதிபதி முத்திரை” இட்டு ஒரு பெருமூச்சு விடுகிறார்.)\n“அடிமைகள் யாவரும் இந்த விடுதலை அறிவிப்புக்குப் பிறகு என்றும் சுதந்திர மனிதர்.” சீமான்களே உங்கள் யாவரது உடன்பாடுகளை நான் வரவேற்கிறேன். எதிர்பார்க்கிறேன்.\n(எல்லா அரசாங்க அதிகாரிகளும் எழுந்து நிற்கிறார். ஸீவேர்டு, வெல்லெஸ், பிளேர் மூவரும் லிங்கனுக்குப் புன்முறுவலுடன் கைகுலுக்கி வெளியேறுகிறார். ஸ்டான்டன், சேஸ் லிங்கனுக்குத் தலைவணங்கிப் பின்பற்றிச் செல்கிறார். பர்னெட் ஹ¥க் ஒன்றும் செய்யாமல் நேர்நோக்கி விரைகிறார்)\n சற்று நில்லுங்கள் உங்களிடம் ஒன்று சொல்ல வேண்டும் \nபர்னெட் ஹ¥க்: (போனவர் திரும்பி நின்று) சொல்லுங்கள் மிஸ்டர் பிரசிடெண்ட் \n(எல்லாரும் போன பிறகு லிங்கன் பேசுகிறார்.)\nலிங்கன்: உட்காருங்கள் மிஸ்டர் ஹ¥க் நமது உரையாடல் இன்னும் முடியவில்லை \nலிங்கன்: ஒருவர் உடன்பாடில்லாத ஒன்றைச் சொல்லிய பிறகு அதை மீண்டும் கூற வேண்டும் என்று வற்புறுத்துவது அவரை அவமானப்படுத்தத்தான் என்று நான் நினைக்கிறேன். அது பலன் அளிக்கும். ஆனால் அத்தனை எளிதாக என்னை யாரும் அவமானப் படுத்த முடியாது. எனக்கு இங்கு எதிர்ப்புக்கள் இருப்பது தெரியும் \nபர்னெட் ஹ¥க்: எதிர்ப்பென்று நான் கருத வில்லை அதைக் குறைகூறல் என்று சொல்வேன் \nலிங்கன்: எதற்காகக் குறை கூறுகிறார் என் வழிகளைத் திருத்தவா அல்லது என்னை அடுத்து வராதபடிக் கவிழ்த்தவா \nபர்னெட் ஹ¥க்: சரியாகச் சொன்னீர்கள் மிஸ்டர் பிரசிடெண்ட் \nலிங்கன்: முதலில் நீவீர் ஏன் அப்படிச் சொல்ல வில்லை என்னிடம் \nபர்னெட் ஹ¥க்: மறைமுகமாகக் கூறினோம் \nலிங்கன்: என் ஆசனத்தில் அமர்ந்து நீவீர் சிந்திக்க வேண்டும் \nபர்னெட் ஹ¥க்: அறிவிலோ திறமையிலோ நான் உங்களை மிஞ்ச முடியாது மிஸ்டர் பிரசிடெண்ட் ஆனால் குறை கூறுவோன் உங்களுக்குச் சமமாக இருக்க வேண்டுமென்று நீங்கள் எதிர்பார்க்கக் கூடாது \nலிங்கன்: நான் சொல்வது அதுவல்ல என் பொறுப்பைச் சுமந்து கொண்டு நீவீர் சிந்திக்க வேண்டும் என்பது என் ஆலோசனை \nபர்னெட் ஹ¥க்: நான் அந்தப் பொறுப்புக்குப் போட்டியிடத் தகுதியற்றவன் மிஸ்டர் பிரசிடெண்ட் \nலிங்கன்: அப்படியானால் அறிவில்லாமல், திறமையில்லாமல், பொறுப்பில்லாமல்தான் நீவீர் என்னுடன் இதுவரைத் தர்க்கமிட்டு வந்தீரா \nபர்னெட் ஹ¥க்: (கோபத்துடன்) பொறுப்பில்லாதவன் என்று என்னை அவமானப் படுத்துகிறீர் மிஸ்டர் பிரசிடெண்ட் \nலிங்கன்: உமது தர்க்கப் போக்கு அதைத்தான் எனக்குக் காட்டுகிறது \nபர்னெட் ஹ¥க்: (மனமுடைந்து) அப்படியானல் நான் பதவியை விட்டு விலகிக் கொள்கிறேன் நன்றி உங்கள் ஆலோசனைக்கு \n(பர்னெட் ஹ¥க் ஆவேசமாய் எழுந்து கொண்டு விரைந்து போகிறார்)\nதமிழக முதலமைச்சரும் இலங்கைத் தமிழரும். ( இக்கட்டுரை அக்னிபுத்திரனுக்கு மறுப்பாக இருக்கலாம். )\nதலை குனியும் சமூகத்தில் சில நிமிர்ந்த தலைகள் – (1)\nஇணையம் தரும் முத்தமிழ் அமிழ்தம்\nஅதிகம் பேசப்படாத தமிழறிஞர்கள்- 4: சி.சு.செல்லப்பா\nஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்) (1809-1865) காட்சி -4 ப��கம் -3\nசுகந்தி : தாழற்றுத் திண்டாடிய மனக்கதவு\nவார்த்தை மார்ச் 2009 இதழில்\nவேத வனம் விருட்சம் 25\n“தோல்வியடைந்த ஒரு குறும்படத்தின் 2 கதைகள்”\nஎளிமையும் வலிமையும் : தேவதச்சனின் “யாருமற்ற நிழல்”\nபிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் அகிலத்தின் ஈர்ப்பியல் நியதியைத் திருத்த வேண்டுமா அகிலத்தின் ஈர்ப்பியல் நியதியைத் திருத்த வேண்டுமா (கட்டுரை 54 பாகம் -1)\nபாப்லோ நெருடாவின் கவிதைகள் -26 << காதல் ஒரு பயணம் >>\nநான்கடவுள் – அசைவம்-அகிருத்துவம்-வணிகம்-பண்டம்என்னும்விரியும் கருத்துப்புலம்\nகலில் கிப்ரான் கவிதைகள் << காதலியோடு வாழ்வு >> (இலையுதிர் காலம்) கவிதை -2 (பாகம் -3)\nஇழப்பும் வலியும் : கல்யாண்ஜியின் “இன்னொரு கேலிச்சித்திரம்”\nதிரு. அப்துல் கையூம் “இடைவேளை” சுகமாகவும் நகையாகவும் இருந்தது\nகஞ்சி குடிக்கும் கனவில் கதறியழும் பதுங்குகுழிகள்\nஅறிவியல் புனைகதை பரிசளிப்பு விழா\n” இடை ” பற்றிய கட்டுரைக்கு ஒரு இடைச் செருகல்\nPrevious:பிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் அகிலத்தின் (Cosmos) இறுதி முடிவு என்னவாக இருக்கும் அகிலத்தின் (Cosmos) இறுதி முடிவு என்னவாக இருக்கும் \nNext: பாப்லோ நெருடாவின் கவிதைகள் -26 << காதல் ஒரு பயணம் >>\nதமிழக முதலமைச்சரும் இலங்கைத் தமிழரும். ( இக்கட்டுரை அக்னிபுத்திரனுக்கு மறுப்பாக இருக்கலாம். )\nதலை குனியும் சமூகத்தில் சில நிமிர்ந்த தலைகள் – (1)\nஇணையம் தரும் முத்தமிழ் அமிழ்தம்\nஅதிகம் பேசப்படாத தமிழறிஞர்கள்- 4: சி.சு.செல்லப்பா\nஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்) (1809-1865) காட்சி -4 பாகம் -3\nசுகந்தி : தாழற்றுத் திண்டாடிய மனக்கதவு\nவார்த்தை மார்ச் 2009 இதழில்\nவேத வனம் விருட்சம் 25\n“தோல்வியடைந்த ஒரு குறும்படத்தின் 2 கதைகள்”\nஎளிமையும் வலிமையும் : தேவதச்சனின் “யாருமற்ற நிழல்”\nபிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் அகிலத்தின் ஈர்ப்பியல் நியதியைத் திருத்த வேண்டுமா அகிலத்தின் ஈர்ப்பியல் நியதியைத் திருத்த வேண்டுமா (கட்டுரை 54 பாகம் -1)\nபாப்லோ நெருடாவின் கவிதைகள் -26 << காதல் ஒரு பயணம் >>\nநான்கடவுள் – அசைவம்-அகிருத்துவம்-வணிகம்-பண்டம்என்னும்விரியும் கருத்துப்புலம்\nகலில் கிப்ரான் கவிதைகள் << காதலியோடு வாழ்வு >> (இலையுதிர் காலம்) கவிதை -2 (பாகம் -3)\nஇழப்பும் வலியும் : கல்யாண்ஜியின் “இன்னொரு கேலிச்சித்திரம்”\nதிரு. அப்த��ல் கையூம் “இடைவேளை” சுகமாகவும் நகையாகவும் இருந்தது\nகஞ்சி குடிக்கும் கனவில் கதறியழும் பதுங்குகுழிகள்\nஅறிவியல் புனைகதை பரிசளிப்பு விழா\n” இடை ” பற்றிய கட்டுரைக்கு ஒரு இடைச் செருகல்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபுதிய திண்ணை படைப்புகள் https://puthu.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://bibleall.net/index.php?version=5&book_num=63&chapter=1&verse=", "date_download": "2021-05-07T00:29:16Z", "digest": "sha1:TKY5RTH22MIRIKXUE4W2HMGRQBWNLQTB", "length": 13930, "nlines": 69, "source_domain": "bibleall.net", "title": "BibleAll | Tamil Bible | 2 யோவான் | 1", "raw_content": "\nSelect Book Name ஆதியாகமம் யாத்திராகமம் லேவியராகமம் எண்ணாகமம் உபாகமம் யோசுவா ரூத் 1 சாமுவேல் 2 சாமுவேல் 1 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 1 நாளாகமம் 2 நாளாகமம் எஸ்றா நெகேமியா எஸ்தர் யோபு சங்கீதம் நீதிமொழிகள் பிரசங்கி உன்னதப்பாட்டு ஏசாயா எரேமியா புலம்பல் எசேக்கியேல் தானியேல் ஓசியா யோவேல் ஆமோஸ் ஒபதியா யோனா மீகா நாகூம் ஆபகூக் செப்பனியா ஆகாய் சகரியா மல்கியா மத்தேயு மாற்கு லூக்கா யோவான் அப்போஸ்தலர் ரோமர் 1 கொரி 2 கொரி கலாத்தியர் எபேசியர் பிலிப்பியர் கொலோசெயர் 1 தெசலோனிக்கேயர் 2 தெசலோனிக்கேயர் 1 தீமோத்தேயு 2 தீமோத்தேயு தீத்து பிலேமோன் எபிரேயர் யாக்கோபு 1 பேதுரு 2 பேதுரு 1 யோவான் 2 யோவான் 3 யோவான் யூதா வெளிப்படுத்தல்\n2 யோவான் : 1\nநமக்குள் நிலைநிற்கிறதும் என்றென்றைக்கும் நம்மோடிருப்பதுமாகிய சத்தியத்தினிமித்தம், நான் மாத்திரமல்ல, சத்தியத்தை அறிந்திருக்கிற யாவரும் சத்தியத்தின்படி நேசித்திருக்கிறவளும்,\nதெரிந்துகொள்ளப்பட்டவளுமாகிய அம்மாளுக்கும் அவளுடைய பிள்ளைகளுக்கும், மூப்பனாகிய நான் எழுதுகிறதாவது:\nபிதாவாகிய தேவனாலும் பிதாவின் குமாரனாயிருக்கிற கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும், கிருபையும் இரக்கமும் சமாதானமும், சத்தியத்தோடும் அன்போடுங்கூட, உங்களோடிருப்பதாக.\nபிதாவினால் நாம் பெற்ற கற்பனையின்படியே உம்முடைய பிள்ளைகளில் சிலர் சத்தியத்திலே நடக்கிறதை நான் கண்டு மிகவும் சந்தோஷப்பட்டேன்.\nஇப்பொழுதும் அம்மாளே, நாம் ஒருவரிலொருவர் அன்புகூரவேண்டுமென்று, உமக்குப் புதிய கற்பனையாக எழுதாமல், ஆதிமுதல் நமக்கு உண்டாயிருக்கிற கற்பனையாக எழுதி, உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன்.\nநாம் அவருடைய கற்பனைகளின்படி நடப்பதே அன்பு; நீங்கள் ஆதிமுதல் கேட்டிருக்கிறபடி நடந்துகொள்ளவேண்டிய கற்பனை இதுவே.\nமாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத அநேக வஞ்சகர் உலகத்திலே தோன்றியிருக்கிறார்கள்; இப்படிப்பட்டவனே வஞ்சகனும் அந்திக்கிறிஸ்துவுமாயிருக்கிறான்.\nஉங்கள் செய்கைகளின் பலனை இழந்துபோகாமல், பூரண பலனைப் பெறும்படிக்கு எச்சரிக்கையாயிருங்கள்.\nகிறிஸ்துவின் உபதேசத்திலே நிலைத்திராமல் மீறி நடக்கிற எவனும் தேவனை உடையவனல்ல, கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருக்கிறவனோ பிதாவையும் குமாரனையும் உடையவன்.\nஒருவன் உங்களிடத்தில் வந்து இந்த உபதேசத்தைக் கொண்டுவராமலிருந்தால், அவனை உங்கள் வீட்டிலே ஏற்றுக்கொள்ளாமலும், அவனுக்கு வாழ்த்துதல் சொல்லாமலும் இருங்கள்.\nஅவனுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறவன் அவனுடைய துர்க்கிரியைகளுக்கும் பங்குள்ளவனாகிறான்.\nஉங்களுக்கு எழுதவேண்டிய காரியங்கள் அநேகமுண்டு; காகிதத்தினாலும் மையினாலும் அவைகளை எழுத எனக்கு மனதில்லை. உங்களுடைய சந்தோஷம் நிறைவாயிருக்கும்படிக்கு உங்களிடத்தில் வந்து, முகமுகமாய்ப் பேசலாமென்று நம்பியிருக்கிறேன்.\nதெரிந்துகொள்ளப்பட்ட உம்முடைய சகோதரியின் பிள்ளைகள் உமக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள். ஆமென்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2020/04/%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%87-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4/", "date_download": "2021-05-07T00:40:33Z", "digest": "sha1:HZWLJXZLXDHQIDF7AV6PVM2FQVOUE7M2", "length": 10697, "nlines": 127, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nஎது வந்தாலும்… உடனே அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுக்கும் பழக்கம் வர வேண்டும்\nஎது வந்தாலும்… உடனே அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுக்கும் பழக்கம் வர வேண்டும்\nதீமையை நீக்கிடும் அருள் சக்தி நீங்கள் பெற வேண்டும் என்பதற்குத்தான் திரும்பத் திரும்பத் திரும்பத் திரும்ப இதைச் சொல்வது\n சாமி (ஞானகுரு) திரும்பத் திரும்ப சொல்கின்றார் என்று நினைக்கலாம்.\n1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் நிலைகளை ஆழமாகப் பதிவு செய்து விட்டால்\n2.மற்ற நட்சத்திரங்��ள் வெளியிடும் உணர்வினை எளிதில் நுகர்ந்து\n3.நம் உடலுக்குள் அந்த ஒளிக்கற்றைகள் வரும்போது\n4.நமக்குள் தீமைகள் வராது தடுக்கவும் இது உதவும்.\nஆகவே அந்த வலுவான உணர்வை எடுத்து நமக்குள் உருவாக்கி விட்டால்… அது மீண்டும் அது தன்னிச்சையாக நல் மணங்களை நமக்குள் கொண்டு வருவதும்… தீமையில் இருந்து நம்மை விடுபடுவதுமாக… அது நம்மைச் செயலாக்கும்.\nநாம் நல்ல குணங்கள் கொண்டு தான் பிறருடைய வேதனைகளைக் கேட்டறிகின்றோம். நாம் கேட்டறிந்த உணர்வை உயிர் நுகர்ந்த பின் அதே வேதனை என்ற அணுக்களை அது உருவாக்கி விடுகின்றது.\nபின் அது தன் உணர்வுக்காக உணர்ச்சிகள் உந்தும்போது அந்த வேதனை உணர்ச்சியே நமக்குள் வருகின்றது. நல்ல எண்ணங்களுக்கு நாம் செல்ல முடிவதில்லை.\nதியானத்தில் உட்கார்ந்து இருந்தால் இந்த மாதிரித் தான் இருக்கும்….\nஆகையினால் பிறிதொன்று நம் உடலுக்குள் வந்து… அந்தத் தீமை விளைவிக்கும் சக்தியாக அது இயங்கிவிடக்கூடாது.\nஅதிகாலையில் நாம் எப்படி எந்த நிலையில் இருந்தாலும் ஈஸ்வரா… என்று உயிரான ஈசனிடம் வேண்டி… அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும்… அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்… எங்கள் உடலில் உள்ள ஜீவாத்மா ஜீவணுக்கள் பெற வேண்டுமென்று ஒரு பத்து நிமிடமாவது ஏங்கிவிட்டு அந்த உணர்வுகளுக்குச் சக்தி ஊட்ட வேண்டும்.\nஅப்போது அந்த உணர்வுகள் வலுப் பெறும்போது நம் உடலுக்குள் தீமை புகாது பாதுகாத்துக் கொள்ளும் சக்தி வருகின்றது.\n1.நான் சொல்வது லேசாக இருக்கலாம்…\n2.ஆனால் அனுபவத்தில் வரும்போது கடினமாக இருக்கும்…\n3.நீங்கள் தொடர்ந்து செய்து வந்தால் அது எளிதாகிவிடும்.\nபுதிதாக ஒருவர் தையல் மிஷினில் உட்கார்ந்து தைக்கத் தொடங்கும் போது… துணியை வைத்தால் கோணல் மாணலாகப் போகும். ஆனால் பழக்கப்பட்டவர்கள் நம்மிடம் பேசிக் கொண்டே நேராக அழகாகத் தைத்து விடுவார்கள்.\nகாரணம்…. அந்தக் கை பழக்கம்…\nஅதைப் போன்று தான் சிறிது நாள் பழகிக் கொண்டால்…\n1.நாம் எடுத்துக் கொண்ட அந்த அருள் உணர்வின் தன்மை\n2.நமக்குள் அது தன்னிச்சையாக இயக்கும்… நல்வழியும் காட்டும்.\nஆகையினாலே இதை நமக்குள் சக்தி வாய்ந்ததாக உருப்பெறச் செய்வோம். எத்தகைய தீமை வந்தாலும்… நம் கண்ணின் பார்வையில் அந்தத் தீமையான சக்திகளை ஒடுங்கச் செய்வோம்.\nசாமியையே (ஞானகுரு) எண்ணிக் கொண்டிருப்பதைக் காட்டிலும் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து உடலுக்குள் விளைய வைக்க வேண்டும்\n என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nசீராக ஆத்ம சுத்தி செய்வோருக்குக் கிடைக்கும் பலன்கள்\nஆண்டவனிலிருந்து வந்த பிம்பங்கள் தான் அனைத்துமே என்று எண்ணினால்… “தான்” என்ற தனித்த அகங்காரம் வராது – ஈஸ்வரபட்டர்\nஉங்களுக்குக் கொடுத்த சக்திகளை ஒவ்வொருவரும் விரயம் ஆக்காது பயன்படுத்துங்கள்\n24 X 7 சாமிகள் உபதேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/1024866/amp", "date_download": "2021-05-07T00:58:28Z", "digest": "sha1:2HFC73MZRA3B657FHWQDFI6DOHFRF63P", "length": 8859, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "புதூர், வடகரை பேரூராட்சிகளில் கொரோனா விழிப்புணர்வு கூட்டம் | Dinakaran", "raw_content": "\nபுதூர், வடகரை பேரூராட்சிகளில் கொரோனா விழிப்புணர்வு கூட்டம்\nசெங்கோட்டை, ஏப்.19: தென்காசி மாவட்ட கலெக்டர் சமீரன் உத்தரவுபடியும், நெல்ைல மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் சேதுராமன் அறிவுறுத்தலின் பேரிலும் கொரோனா வைரஸ் 2வது அலை தடுப்பு பணிகள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் புதூர் பேரூராட்சி அலுவலகத்திலும், வடகரை பேரூராட்சி அலுவலகத்திலும் நடந்தது. பேரூராட்சிகளின் செயல் அலுவலர் தமிழ்மணி தலைமை வகித்தார். கூட்டத்தில் புதூர், வடகரை பேரூராட்சி பகுதியைச் சேர்ந்த கடை உரிமையாளர்கள், வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள், கோயில் நிர்வாகிகள், ஜமாத் நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் வழிபாட்டுத் தலங்களில் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் குறித்தும், கடைகளுக்கு வரும் பொதுமக்கள் முக கவசம் அணிந்து வருவதன் அவசியம் குறித்தும், சமூக இடைவெளியை பின்பற்றுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும், வணிகர்கள் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் குறித்தும், கொரோனா தடுப்பு முறைகள் குறித்த விழிப்புணர்வு குறித்தும் வியாபாரிகளிடமும் கடை உரிமையாளர்களிடமும், பொதுமக்களிடமும் எடுத்துரைக்கப்பட்டது.\nதிருவாரூர் பைபாஸ் சாலை அருகே ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சேதமடைந்த நூலக சாலை\nஅறிவொளி இயக்கம் அழைப்பு பொறுப்பாளர்கள் போன் எண்கள்\nகலெக்டர் தகவல் வாசிப்பு பழக்கம் மூலம் செல்போன் சீர்கேடுகளில் இருந்து குழந்தைகளை மீட்டெடுக்க வேண்டும்\nதிருவாரூர் மாவட்டத்தில் மத்திய அரசின் ஆதார விலைத்திட்டத்தில் உளுந்து, பச்சைப்பயறு கொள்முதல்\nதிருவாரூர் நகரில் குழாய் சேதமடைந்து வீணாக குடிநீர் வெளியேறும் அவலம் சீரமைத்து பராமரிக்க மக்கள் கோரிக்கை\nலால்குடி வயல்காட்டில் ரத்த காயங்களுடன் பெண் சடலம் மீட்பு\nசிறுமியிடம் அத்து மீறல் சமையல் மாஸ்டர் கைது\nதிருவெறும்பூர் அருகே உப்பு லோடு லாரி கவிழ்ந்தது\nகுடியிருப்புகளுக்கு அருகே மது குடித்ததை கண்டித்த வாலிபருக்கு அடி உதை\nபேராவூரணி ஜமாஅத் அறிவிப்பு தென்னையை தாக்கும் தஞ்சை வாடல் நோயை கட்டுப்படுத்தும் வழிமுறை\nமுழு ஊரடங்கு தினத்தன்று இஸ்லாமியர் வீடுகளிலேயே நோன்புகால சிறப்பு தொழுகை\nபேராவூரணி நகரில்a ரூ.15 கோடியில் சாலை மேம்பாடு திட்டப்பணி திருக்காட்டுப்பள்ளி அருகே அரை குறையாக விடப்பட்ட தார் சாலை சீரமைப்பு\nஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலையத்தில் வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு ஒருங்கிணைந்த பண்ணைய பயிற்சி\nஅரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி\nதிருவையாறில் கணவரை காணவில்லை மனைவி போலீசில் புகார்\nபட்டப்பகலில் மர்மநபர்கள் துணிகரம் புதுக்கோட்டை அரசினர் பிற்படுத்தப்பட்டோர் மாணவியர் விடுதியை கொரோனா சிகிச்சை மையமாக மாற்றும் பணி\nபொன்னமராவதி பேருந்து நிலையத்தில் திமுக பிரமுகரின் கார் கண்ணாடியை உடைத்து ரூ. 4 லட்சம் கொள்ளை\nகொள்ளிடம் பகுதி ஆரம்ப சுகாதார நிலையங்களில் கிருமி நாசினி, முககவசம் தட்டுப்பாடு\nபாரம்பரியத்தை மீட்டெடுக்கும் வகையில் பனை ஓலையில் விதவிதமான பொருட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://prosperspiritually.com/spritarchives/", "date_download": "2021-05-07T01:44:50Z", "digest": "sha1:LAOC3YLZ4NSVCZA2JS4OCR5YLQIWGLBW", "length": 5014, "nlines": 121, "source_domain": "prosperspiritually.com", "title": "பெட்டகம் (Archives) - Prosper Spiritually", "raw_content": "\nசிந்தித்தலின் அன்றாட சுயசோதனை பயிற்சி\nFFC – 306 செயல் விளைவுத் தத்துவமும் கருமையமும். 5/\nசிந்திக்க அமுத மொழிகள்- 328 - August 15, 2020\nசிந்திக்க அமுத மொழிகள்- 327 - August 14, 2020\nFFC – 305(269) செயல் விளைவுத் தத்துவமும் கருமையமும். 4/\nசிந்திக்க வினாக்கள்- 321 - August 10, 2020\nFFC – 304(268)செயல் விளைவுத் தத்துவமும் கருமையமும். 3/\nசிந்திக்க அமுத மொழிகள்- 326(56) - August 8, 2020\nசிந்திக்க அமுத மொழிகள்- 325(57) - August 7, 2020\nஅறிவுக்கு விருந்து: பட்டியல் (1)\nகுரு சீடர் உரையாடல் (10)\nசிந்தித்தலின் அன்றாட சுயசோதனை பயி���்சி (3)\nசிந்தித்தலின் அன்றாட சுயசோதனை பயிற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/full-lockdown-demanded-in-tamil-nadu-madras-high-court-is-likely-to-hear-the-case-tomorrow/articleshow/82386311.cms", "date_download": "2021-05-07T02:03:34Z", "digest": "sha1:SLV6NAAJOTVUAU2RHKB7U3VN5YDFF75D", "length": 14273, "nlines": 128, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "tn complete lockdown: தமிழகத்தில் முழு ஊரடங்கு விதிக்கப்படுமா நீதிமன்றம் என்ன சொல்லப் போகிறது நீதிமன்றம் என்ன சொல்லப் போகிறது\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதமிழகத்தில் முழு ஊரடங்கு விதிக்கப்படுமா நீதிமன்றம் என்ன சொல்லப் போகிறது\nதமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்க முழு ஊரடங்கை அறிவிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nகொரோனா வைரஸ் தமிழகத்தில் வேகமாக பரவிவருகிறது. இதைத் தடுக்க தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் முழு பொதுமுடக்கத்தை அமல்படுத்த வேண்டும் என பலர் வலியுறுத்துகின்றனர்.\nஇது தொடர்பாக சென்னை அமைந்தகரையைச் சேர்ந்த வழக்கறிஞர் பாலாஜிராம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், தமிழகத்தில் தற்போது 10 லட்சத்து 13 ஆயிரத்து 378 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 6 ஆயிரத்து 250 பேர் பலியாகியுள்ளதாகவும் அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாக கூறியுள்ளார்.\nஏன் திடீர் ஊரடங்கு அறிவிப்பு ஸ்டாலின் காட்டிய க்ரீன் சிக்னல்\nஅமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா போன்ற நாடுகள், தடுப்பூசி மருந்துகளை 90 சதவீத மக்களுக்கு இலவசமாக வழங்கும் நிலையில், இந்தியாவில் கொரோனா தடுப்பூசி மருந்துகளான கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு மருந்துகள், மத்திய அரசுக்கு 150 ரூபாய்க்கும், மாநில அரசுகளுக்கு 400 ரூபாய்க்கும், பொதுமக்களுக்கு 600 ரூபாய்க்கும் விற்கப்படுவதாகவும், 135 கோடி மக்கள் தொகையில் 2 முதல் 5 சதவீதம் மக்களுக்கே இந்த தடுப்பூசி மருந்துகள் வழங்கப்படுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.\nகொரோனா பரவலை தடுக்க, தமிழகத்தில் மேலும் 2 ஆயிரம் மருத்துவர்கள், செவிலியர்கள், துணை மருத்துவ பணியாளர்களை நியமிக்க வேண்டும் எனவும் மனுவில் ��ேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.\nசூப்பர் நியூஸ்: வந்தது பணி நிரந்தர ஆணை\nசெங்கல்பட்டில், 100 ஏக்கர் பரப்பில் மத்திய அரசால் 2012ல் துவங்கப்பட்ட ஒருங்கிணைந்த தடுப்பூசி நிறுவனத்துக்கு ஏற்கனவே 904 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, பயன்படுத்தப்படாமல் உள்ளதாகவும், 58.5 கோடி டோஸ் தடுப்பூசி மருந்தை தயாரிக்கும் திறன் பெற்ற இந்த ஆலையில் உற்பத்தியை துவங்க மத்திய - மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.\nரேஷன் இலவசம்: நிவாரணத் தொகை 5000 ரூ - அரசு அதிரடி அறிவிப்பு\nகொரோனா பரவலை தடுக்க தமிழகத்தில் முழு ஊரடங்கை அறிவிக்க வேண்டும், கூடுதலாக மருத்துவர்கள், செவிலியர்களை நியமிக்க வேண்டும், செங்கல்பட்டு தடுப்பூசி மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் உற்பத்தியை துவங்க வேண்டும், மாநிலத்துக்கு உள்ளேயும், வெளியேயும் போக்குவரத்தை நிறுத்த வேண்டும், தடுப்பூசியை இலவசமாக வழங்க வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nஸ்டாலின் வருத்தம்: தொண்டர்களுக்கு அறிவுரை\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nகோயம்புத்தூர்கோவை பத்திரப்பதிவு அலுவலகர் கண் முன்னே காதல் ஜோடிக்கு அரிவாள் வெட்டு\nகல்வி செய்திகள்உங்க குழந்தையின் கவன சக்தியை அதிகரிக்க உதவும் TALi App\nசெய்திகள்பிக் பாஸ் கேப்ரியல்லாவுக்கு கொரோனா தொற்று உறுதியானது எச்சரிக்கையாக இருந்தும் பாதிப்பு எப்படி\nகரூர்செந்தில் பாலாஜி... போக்குவரத்து அமைச்சர் டூ மின்சார துறை அமைச்சர்\nவிருதுநகர்35 முதல் 45 வயதினர் 10 பேர் அடுத்தடுத்​து மர்மச் சாவு: விருதுநகர் கிராமத்தில் அதிர்ச்சி சம்பவம்\nதமிழ்நாடுஸ்டாலின் டிக் அடித்த அதிகாரிகள்: வெளியான முக்கியமான லிஸ்ட்\nதமிழ்நாடுஅண்ணே மறக்காம வந்திருங்க: ஸ்டாலின் பதவியேற்புக்கு அழகிரிக்கு அழைப்பு\nசெய்திகள்சுந்தரி சீரியல் ஹீரோவுக்கும் கொரோனா: 15 நாள் தனிமை படுத்தப்பட்ட நிலையில் ஷூட்டிங் திரும்பினார்\nதமிழ்நாடுநிதித்துறைக்கு ஸ்டாலின் சாய்ஸ் பழனிவேல் தியாகராஜன்: ஏன் தெரியுமா\nடிரெண்டிங்கொரோனா காரணத்தால் திருமணத்தில் மணமகன், மணமகள் செய்த விசித்திர விஷயம்\nவீட்டு மருத்துவம்மூக்கு காய்ந்து வறண்ட நிலையில் இருந்தால் இந்த கை வைத்தியம் ட்ரை பண்ணுங்க\nடெக் நியூஸ்May 2021-இல் இந்தியாவிற்கு வரும் 7 புது ஸ்மார்ட் போன்கள்; இதோ லிஸ்ட்\nவங்கிSBI ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வேலைவாய்ப்பு 2021\nஅழகுக் குறிப்புகூந்தலுக்கு நன்மை செய்யும் ஆரஞ்சு தோல் பொடி ஹேர் மாஸ்க், எப்படி பயன்படுத்துவது\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2021/01/20/index-45-for-london-swaminathans-august-2016-english-tamil-articles-post-9169/", "date_download": "2021-05-07T01:35:31Z", "digest": "sha1:ZA3JPYWHZP6CDI4HWOZAZ5VOQYIPHQUU", "length": 15173, "nlines": 277, "source_domain": "tamilandvedas.com", "title": "INDEX 45 FOR LONDON SWAMINATHAN’S AUGUST 2016 ENGLISH & TAMIL ARTICLES (Post. 9169) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nவேதநாயகம் பிள்ளையின் விநோதக் கடிதம் (post No.3106);31 ஆகஸ்ட் 2016\nஇந்துக்களுக்கு ஏன் இவ்வளவு சட்ட புத்தகங்கள்\nபஞ்சபூத தலங்களை நினைவில் வைக்க ஒரு பாடல் (Post No.3105);30/8\nஆசை பற்றி 30 பழமொழிகள்; செப்டம்பர் 2016 காலண்டர் (Post No.3101);29/8\nகல்வி பற்றி இந்துக்களின் அபூர்வ கண்டுபிடிப்பு (Post No.3098)\nதொல்காப்பியத்தில் கார்த்திகைத் திருவிழா (Post No.3089);24/8\nதமிழ் மன்னர்கள் செய்த யாகங்கள்\nசோழ மன்னன் செய்த ராஜசூய யக்ஞம் (Post No.3083)22/8\nகருவுயிர்த்தாள் குறத்தி; காயம் தின்றான் குறவன் (Post No.3082)22/8\nநான் பெருந்தமிழன்: பூதத்தாழ்வார் பெருமிதம்\nதாய்தன்னை அறியாத கன்று இல்லை கம்பன் உவமை நயம்\nமனைவி ஒரு மருந்து- மஹாபாரதப் பொன்மொழி (Post No.3077);20/8\nஅஷ்ட லெட்சுமி கதை: ஒன்று வாங்கினால் ஏழு இலவசம்\nஎதிரியைக் கொல்லும் தமிழ் மொழி\nஉப்பு விற்கும் பெண் பாடிய கவிதை\n கம்பன் தரும் உண்மைத் தகவல்\nஆழ்வார் தரும் அதிசயத் தகவல் : 7 மலை, 7 கடல், 7 முகில்\nதுணை இலாதவரும், புணை இலாதவரும்– கம்ப ராமாயணச் சுவை (Post No. 3061);14/8\n5 சம்ஸ்கிருத உணவும், 6 தமிழ் உணவும்\nஷெரிடன் கொடுத்த சூடான பதில் (Post No. 3057);13/8\nவால்டேர், வெப்ஸ்டர் தப்பித்த விதம்\nமோடி ‘டீ’ விற்றார்; லிங்கன் விஸ்கி விற்றார்\nமனு ஸ்மிருதியில் மூன்று மர்மங்கள் – பகுதி 3 (Post No.3048)\n கீதை, மனு தரும் தகவல்\nமனு ஸ்மிருதியில் அதிசயச் செய்திகள்\nகறுப்புப் பணம், வெள்ளை���் பணம், கறைபடிந்த பணம்\nகம்ப ராமாயணத்தில் ‘காஸ்மாலஜி’ (Post No.3033)4/8\nமுப்பது கோடி உலகங்கள்: கம்பன் தரும் அதிசயத் தகவல்\n ஜோதிடர்கள் மீது மனு தாக்குதல்\nஅகநானூறு ஆமை ரகசியம் அம்பலம்\nசூர் அறுத்தவனும் ஊர் அறுத்தவனும் ராமாயண இன்பம் (Post No.3026);1 ஆகஸ்ட் 2016\nபாஸ்வரம் – உடலுக்கும் தேவை, உரத்துக்கும் தேவை- 1 (Post.9168)\nராசிக்குரிய ராகங்களும், நவக்ரஹ கீர்த்தனை ராகங்களும்\nanecdotes Appar ARTICLES Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya crossword Hindu Indra in Tamil Kalidasa Lincoln london swaminathan mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar POSTS proverbs Quotations quotes Rig Veda shakespeare Silappadikaram Tamil Tirukkural Valluvar Valmiki Vedas அப்பர் கங்கை கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலண்டர் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி சுவாமிநாதன் ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பட்டியல் பழமொழி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவன் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2021/01/21/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5-2/", "date_download": "2021-05-07T01:53:00Z", "digest": "sha1:NQS2FVZ6JJQXBBKSLFPCTLLEOXARTHBK", "length": 20957, "nlines": 238, "source_domain": "tamilandvedas.com", "title": "பாஸ்வரம் -உடலுக்கும் தேவை……பகுதி 2 (Post No.9171) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nபாஸ்வரம் -உடலுக்கும் தேவை……பகுதி 2 (Post No.9171)\nபாஸ்வரம் என்னும் மூலகத்தின்(ELEMENT) பயன்பாட்டை மேலும் காண்போம்.\nகட்டுரையில் பயன்படுத்தப்பட்ட ஆங்கிலச் சொற்கள்…\nபாஸ்வரம் விஷ சத்துடையது. தீப்பெட்டி, பட்டாசு தொழிற்சாலைகளில் வேலை செய்வோருக்கு, 19-ம் நூற்றாண்டில் பாஸ்வர தாடை(Phossy jaws) நோய் ஏற்பட்டது . முகத்தில் பெரிய வீக்கம் ஏற்பட்டு முகமே கோணலாகிவிடும். பின்னர் இதைத்தடுக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இப்படி இருந்தபோதும் அக்கால மருத்துவ நூல்களில் பாஸ்பரஸ் மருந்துகள் என்று ஒரு அத்தியாயம் இருந்தது. இப்பொழுது பழைய மருந்துகள் கைவிடப்பட்டன .\nதற்காலத்தில் BIS PHOSPHONATES பிஸ்- பாஸ்போனெட்ஸ் என்னும் ரசாயன உப்பு கலந்த மருந்துகள் எலும்பு புற்றுநோய்ச் சிகிச்சையிலும் ஆஸ்டியோபோரோசிஸ் சிகிச்சையிலும் பயன்படுத்தப்படுகிறது.\nஎல்லா உயி���ினங்களுக்கும் பாஸ்பேட் என்னும் பாஸ்வர உப்பு தேவை. எலும்புகளில் கால்சியம் பாஸ்பேட் உளது. டி.என் .ஏ.யில் சிறிதளவு இது உளது. செல்களுக்கு இடையில் உள்ள திரவத்தில் இது இருப்பதால் உடலில் கால்சியம் பரவுகிறது. சக்தியூட்டும் ஏ. டி. பி. மற்றும் தூது போகும் ஜி .எம். பி ஆகியவற்றில் ஆர்கானோ பாஸ்பேட்ஸ் உப்பு இருக்கின்றது. ENERGY MOLECULE – ATP- ADENOSINE TRI PHOSPATE;\nநமது உடல் குளுக்கோஸ் என்னும் சர்க்கரைச் சத்தை உடைத்து ஒவ்வொரு மணி நேரத்திலும் ஒரு கிலோகிராம் ATP உற்பத்தி செய்கிறது. அது மீண்டும் பல பொருட்களாக மாறி மறுபடியும் பயன்படுகிறது. இதனால்தான் நமக்கு சக்தி கிடைக்கிறது.\nநமது உடலில் எலும்புகள்தான் பாஸ்வர வங்கி (Source of Phosphorus) ஆகும். நாம் நினைக்கிறோம் – எலும்புகள் அப்படியே உரு மாறாமல் இருக்கும் என்று. அது தவறு. சதாசர்வ காலமும் கூட்டல் கழித்தல் கணக்குப் போட்டுக்கொண்டிருக்கிறது. அதாவது கொஞ்சம கரையும். பின்னர் அதன் மீது மேலும் எலும்பு படியும்.\nஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு நாளும் 800 மில்லிகிராம் பாஸ்வரம் தேவை . ஆயினும் நாம் தினமும் சாப்பிடும் பொருட்களிலிருந்து 1000 முதல் 2000 மில்லிகிராம் கிடைப்பதால் யாரும் இது பற்றிக் கவலைப்படத்தேவை இல்லை. இறைச்சி , பால், பாலடைக் கட்டி உணவு எண்ணெய் மூலம் கிடைத்துவிடும். சில குழந்தைகளுக்கு எலும்பு வளர்ச்சி இல்லாவிட்டால் டாக்டர்கள் பாஸ்பேட்டுகளை சாப்பிடச் சொல்லுவர். மருத்துவ ஆலோசனை இல்லாமல் எந்த மருந்தையும் சாப்பிடுவது கூடாது .\nஇரண்டாம் உலகப் போரில் அமெரிக்கா, பிரிட்டன் முதலிய நேச நாடுகள் ஜெர்மனியின் மீது பாஸ்வர குண்டுகளை வீசி பல்லாயிரம் பொதுமக்களை எரித்துக் கொன்று குவித்தன. ஹாம்பர்க் என்னும் ஜெர்மானிய நகர் மீது வீசிய எரி குண்டுகளால் ஒரே நாளில் 25,000 பேர் எரிந்து கருகினர். எப்போது பார்த்தாலும் ஹிட்லர் செய்த அட்டூழியம் பற்றி மட்டும் பேசுவதால் எதிர்தரப்பு செய்த அக்கிரமங்கள் வெளியாவதில்லை ஒரே நேரத்தில் 25,000 எரி குண்டுகள் போடப்பட்டன. மொ த்தத்தில் ஜெ ர்மா னிய நக ரங்கள் மீது 2000 டன் பாஸ்வர குண்டுகள் வீசப்பட்டன.\nபாஸ்பேட் அடங்கிய பாறைத்தூளை கந்தக அமிலத்தில் கலந்தால் பாஸ்பாரிக் அமிலம் கிடைக்கும். அல்லது மின்சார உலையில் கரியுடன் எரித்தால் பாஸ்வரம் கிடைக்கும். பெரும்பாலும் விவசாய உரம் தயாரிக்கப் ��யன்படுகிறது.\nபாஸ்பரஸ் ட்ரை குளோரைட் என்பதை பூச்சி கொல்லி , களை கொல்லி திரவத்தில் பயன்படுத்துகிறார்கள்.\nசோடியம் ட்ரைபாலி பாஸ்பேட் என்னும் உப்பை வாஷிங் பவுடரில் — சலவைத் தூள் — கலந்தது நல்ல பயன்தந்தது. இதனால் மில்லியன் டன் கணக்கில் இது உற்பத்தியானது.\nதீக்குச்சசி , எஞ்சின் பாதுகாப்பு திரவம் ஆகியவற்றிலும் பாஸ்பைட் உப்பு பயன்படுகிறது.\nதுத்த நாக பாஸ்பைடு , எலிமருந்திலும், மக்னீஷியம் பாஸ்பைடு கடலில் எச்சரிக்கை தீ உண்டாக்குவதிலும், டை சோடியம் பாஸ்பேட் கண்ணாடி, பீங்ககான் , தோல் தொழிற்சாலைகளிலும், கால்சியம் ஹைட்ரஜன் பாஸ்பேட் பற்பசையிலும் பயன்படுகின்றன.\nஒளி உமிழும் டையோடுகளில் காலியம் , இண்டியம் உலோக பாஸ்பைடுகள் இருக்கும்.\nடிஷ் வாஷர் எனப்படும் பாத்திரம் கழுவும் எந்திரத்துக்கான மாத்திரைகளிலும் பாஸ்வர உப்புகள் உள்ளன\nபுறச் சூழல் பாதிப்பும் பாஸ்வரமும்\nபாஸ்வர சுழற்சி (Phosphorus Cycle) என்னும் வினோதம் நம்மை அறியாமலே நடந்து வருகிறது. ஏற்கனேவே எட்டு கோடி டன் பாஸ்வரம் கடலில் உளது. இத்தோடு ஆண்டுக்கு 20,000 டன் பாஸ்பேட் உப்புகளை மனிதர்கள் கலக்கிறார்கள். இதனால் பாசிகள் வளர்ந்து கடலை அசுத்தமாக்குகிறது என்று பலரும் கூச்சல் போட்டார்கள் .ஆயினும் சாக்கடை நீரிலிருந்து பாஸ்பேட்டுகளை பிரித்தெடுக்கும் தொழில்நுட்பம் வந்துவிட்டது. அது மட்டுமல்ல கடலில் ஒரு வினோத சுழற்சி நடைபெறுகிறது. கடலில் சூரிய ஒளி சில மீட்டர்கள் வரைதான் ஊடுருவும். அதற்கு கீழே கும்மிருட்டுதான் . கடலுக்கடியில் பாஸ்பேட் உப்புகள் படிந்து ஒரு கடல் பாலை வனத்தை (Marine Desert) உருவாக்குகிறது. இதனால் பாஸ்பேட் காரணமாக வளரும் பாக்டிரியா, பாசி வகைகள் ஆழமான கடலை பாதிப்பதில்லை . ஆயினும் கடலின் அடி மட்டத்திலிருந்து வரும் வெப்ப நீரூற்றுகளும் கடல் நீரோட்டங்களும் பாஸ்பேட் உப்புக்களை மேலுக்கு கொண்டுவருவதால் பிளாங்க்ட்டான் (zoo planktons) என்னும் நுண்ணுயிர்கள் பெருகுகின்றன. உலகிலேயே மிகப்பிரிய மிருகங்களான திமிங்கிலத்துக்குக் கூட இவைதான் உணவு. ஆக மனிதர்கள் முதலில் கூச்சல் போட்டது போல பாஸ்பேட்டுகள் கடலை அசுத்தமாக்கவில்லை. அதற்கு நேர் மாறாக சிற்றுயிர்கள், வாழ உதவுகின்றன. அவை பேருயிர்கள் வாழ வகை செய்கின்றன.\nஎதிர்காலத்தில் நமக்குத் தேவையான பாஸ்பேட் முழுவதையும் டிஷ் வாஷிங், மற்றும் வாஷிங் திரவம் (Dishwashers and washing machines) பயன்படுத்தும் கழிவு நீரிலிருந்து எடுத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை .\nராசிக்குரிய ராகங்களும், நவக்ரஹ கீர்த்தனை ராகங்களும்\nanecdotes Appar ARTICLES Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya crossword Hindu Indra in Tamil Kalidasa Lincoln london swaminathan mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar POSTS proverbs Quotations quotes Rig Veda shakespeare Silappadikaram Tamil Tirukkural Valluvar Valmiki Vedas அப்பர் கங்கை கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலண்டர் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி சுவாமிநாதன் ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பட்டியல் பழமொழி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவன் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2021/may/03/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3616561.html", "date_download": "2021-05-07T00:52:30Z", "digest": "sha1:GLKVRTDEAFU7SABNF2THQARYWHZNMTD5", "length": 9182, "nlines": 141, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "புலம் பெயா் தொழிலாளா்களுக்கு உதவி மையம் அமைப்பு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n06 மே 2021 வியாழக்கிழமை 06:33:21 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி அரியலூர்\nபுலம் பெயா் தொழிலாளா்களுக்கு உதவி மையம் அமைப்பு\nபுலம் பெயா்ந்த தொழிலாளா்களின் வாழ்வாதாரப் பிரச்னைகள் குறித்து பெறப்படும் புகாா்களைத் தீா்ப்பதற்காக கட்டுப்பாட்டு அறை, உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.\nஇதுதொடா்பாக ஆட்சியா் த. ரத்னா வெளியிட்ட செய்திக்குறிப்பு:\nகரோனா தொற்று தீவிரமாகப் பரவிவருவதால், பல்வேறு நிறுவனங்களில் பணிபுரியும் புலம் பெயா்ந்த தொழிலாளா்கள் தமிழ்நாடு மாநிலத்தை விட்டு அவா்களது சொந்த மாநிலத்துக்கு செல்வதைத் தவிா்க்கும் பொருட்டு தொழிலாளா்களிடமிருந்து பெறப்படும் புகாா் குறைகளை தீா்ப்பதற்காக மாவட்ட கண்காணிப்பு அலுவலா் நியமித்து, கட்டுப்பாட்டு அறை, உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.\nமாவட்டஓஈ கண்காணிப்பு அலுவலா் தொழிலாளா் உதவி ஆணையா் கு.விமலா (99428 32724), குழு உறுப்பினா்கள் தொழிலாளா் உதவி ஆய்வாளா் இரா.குருநாதன் (96294 94492), முத்திரை ஆய்வாளா் ராஜா (79042 50037) ஆகிய எண்களில் தொடா்பு கொண்டு தங்களது புகாா்களைத் தெரிவிக்கலாம். புகாா்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அரியலூா் ஆட்சியா் த. ரத்னா தெரிவித்துள்ளாா்.\nகளைகட்டிய அண்ணா அறிவாலயம் - படங்கள்\nஆக்ஸிஜன் செறிவூட்டிகளுடன் இந்தியாவுக்கு வந்த விமானங்கள் - படங்கள்\nதிமுக தொண்டர்கள் கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nஸ்ரீ குரு தேக் பகதூரின் 400-வது பிறந்தநாள் - படங்கள்\nஅண்ணாத்த படப்பிடிப்புக்காக ஹைதராபாத் சென்ற நயன்தாரா - படங்கள்\nகும்பமேளா: கங்கையில் புனித நீராடிய பக்தர்கள் - படங்கள்\nசித்த மருத்துவத்தில் கரோனாவுக்குச் சிறந்த தடுப்பு மருந்து\nகரோனாவை தடுக்க சித்த மருத்துவம் தரும் டிப்ஸ்..\nரெம்டெசிவிா் மருந்து தேவைப்படுவோர் கவனிக்க..\nகரோனா தடுப்பூசிக்கு முன்பதிவு செய்வோர் கவனிக்க..\n'விடுதலை' படத்தின் டிரெய்லர் வெளியீடு\nதயுவு செய்து இதைச் செய்யாதீர்கள்..\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/alibabas-jack-ma-joins-communist-party/", "date_download": "2021-05-07T00:49:23Z", "digest": "sha1:RXPPVY7XFFNFZVOI7OR27Y23NKOUGXEL", "length": 8566, "nlines": 115, "source_domain": "www.patrikai.com", "title": "Alibaba’s Jack Ma joins communist party – Patrikai – Tamil Daily – latest online local breaking news & reviews – Tamilnadu, India & World – politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nஅலிபாபா நிறுவனர் ஜாக் மா கம்யூனிஸ்டு கட்சியில் இணைந்தார்\nஆன்லைன் வர்த்தகத்தில் கொடிகட்டி பறக்கும் நிறுவனங்களில் அலிபாபா நிறுவனமும் ஒன்று. சீனாவை சேர்ந்த இந்த நிறுவனத்தின் தலைவராக ஜாக் மா…\nஅடுத்த 17 நாட்கள் ஒவ்வொரு வீட்டிலும் பின்பற்ற வேண்டிய கட்டாய விதி\nஅடுத்த 17 நாட்கள் ஒவ்வொரு வீட்டிலும் பின்பற்ற வேண்டிய கட்டாய விதி – நெட்டிசன் பதிவு கொரோனா கட்டுப்பாடு குறித்து வலைத் தளங்களில்…\nஇன்று ஆந்திரப் பிரதேச���்தில் 21,954 கர்நாடகாவில் 49,058 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 21,954 கர்நாடகாவில் 49,058 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 49,058…\nநாளைக்குள் தமிழகத்துக்குத் தேவையான ஆக்சிஜன் வழங்குவதை உறுதி செய்ய மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\nசென்னை நாளைக்குள் தமிழகத்துக்குத் தேவையான ஆக்சிஜன் வழங்குவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது….\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் –06/05/2021\nசென்னை தமிழகத்தில் இன்றைய (06/05/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 24,898 பேருக்குப் பாதிப்பு…\nசென்னையில் இன்று 6,678 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 6,678 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 33,316 ஆகி உள்ளது இன்று சென்னையில்…\nதமிழகத்தில் இன்று 24,898 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 24,898 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 12,97,500 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 1,31,468…\nஅதிமுக எம்.எல்.ஏ. விஜய பாஸ்கருக்கு கொரோனா\n7 hours ago ரேவ்ஸ்ரீ\nதனி தகவல் தொடர்பு தளத்தை தொடங்கிய டிரம்ப்\n7 hours ago ரேவ்ஸ்ரீ\nஐபிஎல் தொடரை நடத்தி முடிக்காவிட்டால் 2500 ரூபாய் கோடி இழப்பு ஏற்படும் – கங்குலி\n7 hours ago ரேவ்ஸ்ரீ\nகளை எடுப்போம்: – கமல் டுவிட்\n7 hours ago ரேவ்ஸ்ரீ\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை\n7 hours ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2021/01/blog-post_975.html", "date_download": "2021-05-07T01:18:38Z", "digest": "sha1:PH3LTTNKZYQJFYHAKETXJN3CMQKVUJFH", "length": 11352, "nlines": 91, "source_domain": "www.kurunews.com", "title": "பாடசாலை மாணவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை என வெளியான செய்தியால் சம்மாந்துறையில் பதற்றம் - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » பாடசாலை மாணவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை என வெளியான செய்தியால் சம்மாந்துறையில் பதற்றம்\nபாடசாலை மாணவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை என வெளியான செய்தியால் சம்மாந்துறையில் பதற்றம்\nநூருல் ஹூதா உமர், ஐ.எல்.எம் நாஸிம்\nஅம்பாறை மாவட்ட சம்மாந்துறை பிரதேசத்தில் பாடசாலை மாணவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை ம���ற்கொள்ள பாடசாலைக்கு சுகாதார அதிகாரிகள்வருகை தர உள்ளதாக வெளிவந்த வதந்தியையடுத்து பாடசாலைகளை பெற்றோர் முற்றுகையிட்டு பிள்ளைகளை பாடசாலையில் இருந்து வீட்டுக்கு அழைத்துச் சென்ற சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (19) இடம்பெற்றதையடுத்து அங்கு பதற்ற நிலை உருவானது\nசம்மாந்துறையில் உள்ள பாடசாலைகளில் உள்ள மாணவர்களுக்கு சம்பவதினமான இன்று சுகாதார அதிகாரிகள் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ள பாடசாலைக்கு செல்லவுள்ளதாக பெற்றோருக்கு தகவல் ஒன்று கசிந்துள்ளதை அடுத்தே இந்த நிலை தோன்றியது. இதனையடுத்து பெற்றோர்கள் பாடசாலைக்கு படையெடுத்ததையடுத்து அங்கு அதிபர்களிடம் தமது பிள்ளைகளை பாடசாலையில் இருந்து வெளியேற அனுமதிக்குமாறும் ஒன்றும் இல்லாத பிள்ளைகளுக்கு பி.சி.ஆர் பரிசோதனை எடுக்கவேண்டிய தேவையில்லை என அதிபர்களுடன் பெற்றோர்கள் முரண்பட்டதையடுத்து அங்கு பதற்ற நிலை தோன்றியது\nஇந்த நிலையில் அதிபர்கள் அப்படியான நடவடிக்கை ஒன்றும் இல்லை எனவும் சுகாதார அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டபோதும் அவர்கள் அப்படி ஏற்பாடுகள் ஒன்றும் இல்லை என தெரிவித்ததாக பெற்றோரிடம் தெரிவித்து இது ஒரு பொய்யான செய்தி என தெரிவித்தனர்.\nஇருந்தபோதும் பெற்றோர் அதிபர்களின் பேச்சை பெருட்படுத்தாமல் தமது பிள்ளைகளை விடுவிக்குமாறு அதிபர்களுடன் முரண்பட்ட நிலையில் அதிபரால் ஒன்று செய்யமுடியாத நிலையில் பெற்றோர் பாடசாலைக்குள் நுழைந்து தமது பிள்ளைகளை அழைத்துச் சென்றனர்.\nஇது தொடர்பில் ஊடகவியலாளர்கள் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.ஐ.எம் கபீரை தொடர்பு கொண்டு கேட்ட போது அது முற்றிலும் வதந்தியான செய்தி எனவும் அப்படியான எவ்வித நடவடிக்கைகளையும் பாடசாலைகளில் சுகாதார தரப்பினர் மேற்கொள்ளவில்லை எனவும் தெரிவித்தார்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\n\"Kurunews.com ஐ பார்வையிடும் அன்பர்களே Facebook பக்கத்தை Like பண்ணிட்டு போங்கள்\".\nமட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை; பல்வேறு செயற்பாடுகளுக்கு தடை- மாவட்ட அரசாங்க அதிபர்...\nமட்டக்ககளப்பில் தனியார் வகுப்பு நடாத்த தடை விதித்துள்ளதுடன் கொரோனா அதிகரிப்பால் மட்டு போதனா வைத்தியசாலையில் ஒட்சிசன் தேவை அதிகரித்துள்ளது....\nசகல பாடசாலைகளுக்கும் மே மாதம் 07ம் திகதி வரை ��ிடுமுறை\nநாடளாவிய ரீதியில் அனைத்துப் பாடசாலைகளையும் தொடர்ந்தும் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் 7 ஆம் திகதி வரை பாடசாலை...\n10 , 11 தரங்களில் பாடவிதான மாற்றம் அத்துடன் க.பொ.த சா/த, உ/த பரீட்சை நடைபெறும் காலங்களும் மாற்றம்\nதரம் 10 ,11 க்கான பாடத்திட்டங்களை ஒரு வருடம் & 9 மாத காலத்திற்கு மறுசீரமைக்கவும், ஆகஸ்ட் மாதத்தில் க.பொ.த. (சா /த) பரீட்சையை நடாத்தவும்...\nபுனித மிக்கேல் கல்லூரி மாணவன் பௌதீக விஞ்ஞான பிரிவில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலிடம்.\nவெளியான 2020 ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பௌதீக விஞ்ஞான பிரிவில் குகராஜா சஜீவ் 3 A சித்திகளுடன் ...\nமட்டக்களப்பு மாவட்டத்தில் விஞ்ஞான பிரிவில் முதலிடத்தை பெற்ற மட்/பட்டிருப்பு தேசிய பாடசாலை மாணவன்\nவெளியான 2020 ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் விஞ்ஞான பிரிவில் மகிழூர் கண்ணகிபுரத்தை சேர்ந்த தம்பி...\nமட்டக்களப்பு- கல்லடியில் 09 பேருக்கு கொரோனா தொற்று உறுதி...\nமட்டக்களப்பு மாவட்ட மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுற்குற்பட்ட கல்லடி பிரதேசத்தில் இன்றைய தினம் 09 பேருக்கு கொரோன தொற்று உறுதிசெய்யப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://abedheen.wordpress.com/category/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8F-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%83%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-05-07T01:03:47Z", "digest": "sha1:4JHVHCM52LHPT5PSYLUASC6QHRWFPFVQ", "length": 90624, "nlines": 637, "source_domain": "abedheen.wordpress.com", "title": "எம்.ஏ. நுஃமான் | ஆபிதீன் பக்கங்கள்", "raw_content": "\nகணையாழியில் வந்த காதல் கதை\n08/11/2010 இல் 16:00\t(எம்.ஏ. நுஃமான், கணையாழி)\nஅரச காவலர் அவரைக் கொன்றனர்.\nஅவரது சடலம் குருதியில் கிடந்தது’\nஎன்று ‘புத்தரின் படுகொலை’யை 1981-இல் எழுதிய கவிஞர் எம்.ஏ.நுஃமான் ஒரு காதல் கதையும் எழுதியிருக்கிறார், 1970-இல். நூலகம்தான் வேறு கணையாழி பத்திரிகையின் முதல் 9 ஆண்டுகளில் வெளியான முக்கிய சிறுகதைகளுள் அதுவும் ஒன்று. தொகுப்பாசிரியர் அசோகமித்திரன். நம் ஹனீபாக்காவுக்கு அது கிடைக்க, ‘என் அருமை ஆப்தீனுக்கு… இலக்கிய உலகம் நண்பர் நுஹ்மானை கவிஞனாக அறியும் அவர் கதைகளும் எழுதினார் என்பது பலருக்கும் தெரியாத சங்கதி 40 வருடங்களுக்கு முன் கணையாழியில் இந்தக் கதை பிரசுரமான போது நானடைந்த பரவசம் சொல்லி மாளாது இன்றும் அதே பரவசம். நவீன தமிழ் சிறுகதையின் மூலவர்களில் நுஹ்மானும் ஒருவரே. ஆபிதீன் பக்கங்களை அசத்துங்கள்’ என்று சொல்லி அனுப்பியும் வைத்தார். பதிவிடுகிறேன், காதலுடன்.\nநுஃமான் அவர்களின் ‘தாத்தாமாரும் பேரர்களும் ‘ , ‘மழை நாட்கள் வரும்’ கவிதைத் தொகுதிகளை வாசித்துவிட்டு , கொஞ்சம் காதலும் செய்துவிட்டு, கீழேயுள்ள கதையை வாசியுங்கள்.\nஅவளை இதற்குமுன் வேறு எங்கேயும் கண்டதாக அவனுக்கு நினைவு இல்லை. நிச்சயமாக நான் கண்டிருக்க முடியாது என்றுதான் அவன் நினைத்தான். ஏனென்றால் அவன் அடிக்கடி மட்டக்களப்புக்கு வருவதில்லை. வந்தாலும் வாசிகசாலைக்குள் வர அவனுக்கு நேரம் கிடைப்பதில்லை. எப்போதோ இரண்டொரு முறைதான் அவன் இங்கு வந்திருக்கிறான். இவள் அடிக்கடி பின்னேரங்களில் வருவாளாக்கும் என்று நினைத்தான். அவள், அவனுக்கு இடதுபுறமாகச் சிறிது தள்ளி அமர்ந்திருந்தாள்.\nஅவனுக்கு அவளை மீண்டும் ஒருமுறை பார்க்க வேண்டும்போல் இருந்தது. ஆயினும் புத்தகத்தையே வாசிப்பதுபோல் அவன் பாவனை பண்ணினான். என்றாலும் மனம் அலைபாய்ந்தது. புத்தகத்தில் ஒன்றுமே அவனுக்குப் பிடிபடவில்லை. வெறும் எழுத்துக்களைக் கண்கள் மேய்ந்துகொண்டு சென்றன. இன்னும் அவள் தன்னையே பார்த்துக்… முகத்திற்கு அவளுடைய சிறிது தடித்த சிறிய உதடுகள் கவர்ச்சியாக இருந்தன. அவள் அடிக்கடி கீழ் உதட்டைக் கடித்துக்கொண்டு எழுதினாள். அதனால் அவள் இதழ்கள் ஈரமாக இருந்தன. அந்த இதழ்களின் ஈரப் பொழுபொழுப்பு அவனைக் கவர்ந்தது. அவளுடைய இரு காதுகளின் மேற்பகுதிகளும் கூந்தலுள் மறைந்திருந்தன. அவள் பின்னல்களில் ஒன்று தோளில் இருந்து வழுவி முன்புறம் விழுந்து கொப்பியின் மீது பட்டும் படாமலும் ஆடியது. அவள் அதை இடது புறங்கையால் ஒதுக்கிவிட நிமிர்ந்தபோது அவளுடைய கண்கள் அவனைச் சந்தித்தன.\nஅவனுக்குச் ‘சுரீர்’ என்றது. தான் அவளைப் பார்த்துக் கொண்டிருந்ததை அவள் பார்த்துவிட்டதைக் கண்டதும் அவன் கண்களை உயர்த்தி மேலே சுவர்க் கடிகாரத்தைப் பார்த்தான். பிறகு தனது மணிக்கூட்டையும் அத்னோடு ஒப்பிட்டுப் பார்த்தான். தன்னைப் பற்றி அவள் பிழையாக நினைக்கக்கூடும் என்று அவன் நினைத்தான். அந்த நினைப்பு அவனைச் சுட்டது. அவள் அவ்வாறு நினையாமலும் இருக்கலாம���. அவளுக்கும் என்னைப் பார்ப்பதில் ஒரு கவர்ச்சி உண்டாகி இருக்கலாம். நான் அவளைப் பார்த்ததனால் கவர்ச்சி கொண்டு அவள் மீண்டும் என்னைப் பார்க்கக்கூடும் என்றெல்லாம் அவன் நினைத்தான்.\nஎனினும் இனி அவளைப் பார்க்ககூடாது என்று அவன் உறுதி கொண்டான். தான் பார்க்காவிட்டாலும் அவன் தன்னைப் பார்ப்பாள் என்ற எண்ணத்தில் அவன் நிமிர்ந்து உட்கார்ந்தான். கையில் இருந்த தமிழ்ப் பத்திரிக்கையைப் போட்டுவிட்டு ஓர் ஆங்கிலப் பத்திரிகையை எடுத்க் கொண்டான். அவனுக்கு ஆங்கிலம் தெரியாது. ஆனால் சாதாரணமாக வாசிக்க முடியும். வாசிப்பது அரைகுறையாக விளங்கும். ஆயினும் அவன் அதை வாசிக்கத் தொடங்கினான். அடிக்கடி வாசித்ததை நிறுத்தி வாசித்ததை ஆழ்ந்து சிந்திப்பதுபோல் நெற்றியைச் சுருக்கிக் கொண்டான். எதையோ கண்டு மகிழ்ச்சியுற்றவன் போல முகத்தை மலர்ச்சி அடையச் செய்து கொண்டான்.\nஎன்றாலும், ‘சே இது பெரிய கேவலம்’ என்று தனக்குள் முணுமுணுத்துக் கொண்டான். சாதாரணமாக இருக்க முனைந்தான். காற்சட்டைப் பையில் இருந்த கைலேஞ்சியை எடுத்து முகத்தையும் கழுத்தையும் பிடரியையும் துடைத்துக் கொண்டான். பிறகு பத்திரைக்கையை வேகமாகப் புரட்டி அதில் உள்ள படங்களைப் பார்க்க முனைந்தான்.\nஆயினும், மனம் அலைபாய்ந்தது. அவள் இதற்கிடையில் தன்னைப் பார்த்திருக்கலாம் என்று அவன் கற்பனை பண்ணினான். இப்பொழுது அவள் என்ன செய்கிறாள் உதட்டைக் கடித்துக் கொண்டிருக்கிறாளா இல்லையா உதட்டைக் கடித்துக் கொண்டிருக்கிறாளா இல்லையா என்று பார்க்க வேண்டும்போல் இருந்தது. என்றாலும் அவன் பார்க்கவில்லை. தான் பார்ப்பதை அவள் பார்த்துவிட்டால் தன்னைப்பற்றி குறைவாக நினைப்பாள் என்று அவன் எண்ணினான். அது தனது ஆண்மைக்குப் பெரிய அவமானம் என்றும் அவன் கருதினான்.\nஅவள் யாராக இருக்ககூடும் என்றுகூட அவனுக்குத் தெரியாது. பல்ளி மாணவி என்பது மட்டும் நன்றாகத் தெரிந்தது. பள்ளி விட்டதும் புத்தக் கட்டோடு வந்து ஏதோ குறிப்பு எடுக்கிறாள் என்பதும் தெரிந்தது. ஒருவேளை அவள், ‘அட்வான்ஸ் லெவல்’ படிக்கக்கூடும்; எங்கே படிக்கிறாளோ வின்சன்தானே பக்கத்தில் இருக்கிறது. அங்கேதான் படிக்கக்கூடும் என்றெல்லாம் யோசித்தவாறே ஜன்னலூடு பார்வையைச் செலுத்தினான்.\nபாலத்தின் ஊடாக ஒரு வைக்கோல் லொறி மெதுவாகப் போய்க��கொண்டிருந்தது. சன்னல் நிலைப்படியில் ஒரு அடைக்கலக் குருவி வந்து நின்று ‘கீச்’ என்று இருமுறை கத்தியது. பிறகு எங்கோ வெளியே பறந்து சென்றது.\nபக்கவாட்டில் கதிரைகள் இழுபடும் சத்தம் கேட்டது. அவர்கள் போவதற்காக எழுந்துவிட்டார்கள் என்று அவன் நினைத்தான். அவளைப் பார்க்கக்கூடாது என்ற உறுதியுடன் பத்திரிகையின் பக்கங்களைப் புரட்டினான். செருப்புச் சத்தங்கள் மெதுவாக ஒவ்வொரு அடியாகக் கேட்டன. தான் பார்ப்பதனாலோ பார்க்காமல் விடுவதனாலோ தனக்கோ அவளுக்கொ என்ன வந்துவிடப் போகின்றது என்று அவன் நினைத்தான். இது தனது பலஹீனம்தான் என்று யோசித்தபோது அவளைப் பார்க்கவேண்டும் இருந்தது.\nஅவள் கீழே குனிந்துகொண்டு ஒவ்வொரு அடியாக இறங்கிச் சென்றாள். கீழே செருப்புகளின் ஓசை கேட்டு மறைந்தது. அவனுக்கு நெஞ்சில் சிறிது உறுத்தலாகவும் பாரமாகவும் இருந்தது. இது வெறும் அர்த்தமில்லாத உணர்ச்சி என்று அவன் நினைத்தாலும், அது அப்படித்தான் இருந்தது. அவள் பின்னலைத் தள்ளிவிடுவதற்காக நிமிர்ந்த அந்தச் சந்தர்ப்பத்தில் தான் பின் வாங்காது அவளுடைய கண்களை உற்றுப் பார்த்திருக்கலாம் என்று அவன் எண்ணினான். தான் பார்த்திருந்தால் அவளும் கண் கொடுத்திருக்கக் கூடும் என்று அவ ன் நினைத்தான். அவளுடைய பொழுப்பான கன்னங்களும் ஈரமான உதடும் எண்ணெய் பூசாத கூந்தலும் அவன் கண்ணுக்குள் நின்றன.\nஅவள் இருந்த கதிரையை வெறித்துப் பார்த்தான். இப்போது யாரைப் பற்றியும் அவன் கவலைப்படவில்லை. ஏனென்றால், அவன் பார்க்கும் இடத்தில் அந்தப் பெண்கள் இல்லை. கதிரைகள் காலியாகத்தான் இருந்தன. எழுந்து அவள் பின்னாலேயே சென்று பார்ப்போமா என்று யோசித்தான். கூடவே, உடனே சென்றான். நான் அந்தப் பெட்டைகளைப் பார்ப்பதற்காகத்தான் அவர்கள் பின்னால் எழுந்து செல்கிறேன் என்று மற்றவர்கள் நினைக்க்கூடும் என்ற எண்ணம் எழுந்தது.\nஅவன் கடிகாரத்தைப் பார்த்தான். நாலரை மணி. ஐந்து மணிக்கெல்லாம் ஆஸ்பத்திரியில் நிற்கவேண்டும். அவனுடைய சகோதரிக்கு நேற்று ஒப்பரேஷன் நடந்தது. அவளைப் பார்ப்பதற்காகத்தான் கல்முனையில் இருந்து காலையில் வந்தான். ஆறேகால் கல்லோயா எக்ஸ்பிரசில் திருப்பிப் போகவேண்டும். அவன் எழுந்து கீழே சென்றான். அவளும் தோழிகளும் பள்ளி வாசல் வாகையின்கீழ் நின்று கதைத்துக்கொண்டிருந்த��ர்கள். அவர்கள் நிற்கும்போது அவன் அவர்களைக் கடந்து போக விரும்பவில்லை. இப்போது போனால், ‘தங்களைப் பார்ப்பதற்காகத்தான் இவன் வருகிறான்’ என்று ஒருவேளை அந்தப் பெட்டைகள் நினைக்கக்கூடும் என்று அவன் எண்ணினான்.\nவாசிகசாலைக்கு வெளியே நாட்டி இருந்த விளம்பரப் பலகையை வாசிக்கத் தொடங்கினான்.\nஎன்று ஒவ்வொன்றாக வாசித்தான். அது அலுத்தபின் வெறுமையாகக் கிடந்து கோட்டடியையும் தூரத்தெரிந்த கச்சேரி மதிலையும் நகரசபைக் கட்டிடத்தையும் பார்த்துக்கொண்டு நின்றான். விளையாட்டு மைதானத்தில் ஏழெட்டுப் பெண் பிள்ளைகள் பந்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது அவளும் தோழிகளும் தபால் கந்தோரடியால் நடந்துகொண்டிருப்பதை அவன் கண்டான். அவன் சிறிது தூரம் நடந்து பள்ளிவாசலடிக்கு வந்தான். அவர்கள் நெடுக நடந்து கொண்டிருந்தார்கள்.\n‘நெடுகப் போனால் அவளுகளைப் பின்தொடர்ந்து போவது போல இருக்கும். நாம் சென்றால் கொலிச்சால போவம்’ என்று அவன் குறுக்கு வீதியால் திரும்பி நடக்கத் தொடங்கினான். நெடுகவும் போய் இருக்கலாம் என்றும் ஒரு மனம் சொல்லியது. அவளுடைய இடை அசைந்து செல்லுவது மிகவும் அழகாக இருப்பதாக அப்போது அவன் நினைத்தன. ஆயினும் அவன் குறுக்கு வீதியால் நடந்து கொண்டிருந்தான். ‘இவளுகளப் பாத்தாத்தான் என்ன பாக்காட்டித்தான் எனக்கென்ன என்று நினைத்தவாறே அவன் தன்பாட்டில் நடந்தான்.\n எப்பவும் இப்படித்தான். நான் ஒரு மடையன்’ என்று அவன் வாய் முணுமுணுத்தது.\n(கணையாழி / அக்டோபர்-நவம்பர் 1970)\nநன்றி : எம்.ஏ. நுஃமான் , எஸ்.எல்.எம். ஹனிபா , கணையாழி\nமௌனியுடன் ஒரு சந்திப்பு – எம்.ஏ. நுஃமான்\n05/10/2010 இல் 13:01\t(எம்.ஏ. நுஃமான், மௌனி)\nபேராசிரியர் எம்.ஏ. நுஃமான் அவர்களின் திறனாய்வுக் கட்டுரைகளிலிருந்து… (வெளியீடு : அன்னம் / முதற்பதிப்பு டிசம்பர் 1985). மௌனியின் சிறுகதைகள் பற்றிய தாஜின் கட்டுரை விரைவில் இங்கே வெளியாகும். அதற்கு முன்னோட்டமாக இந்த சந்திப்பு. நன்றி : எம்.ஏ. நுஃமான் , நூலகம்\nமௌனியுடன் ஒரு சந்திப்பு – எம்.ஏ. நுஃமான்\n30-12-1984 மாலை 5 மணி அளவில் மௌனியைப் பார்க்கப் போனேன். சென்னையில் க்ரியாவுக்குப் போயிருந்த போது தான் மௌனியும் சிதம்பரத்தில் இருப்பதாக அறிந்தேன். திலீப்குமார் அரைகுறையாகச் சொன்ன ஒரு விலாசத்தை இன்னும் அரைகுறையாகக் குறித்து வைத்திருந்தேன். வடக்கு வீதியும் தெற்கு வீதியும் சந்திக்கும் மூலையில் பிரியும் ஒரு தெரு. இலக்கம் 4. ஒரு மாடிவீடு என்ற குறிப்பு எனது டயரியில் இருந்தது. வீட்டைத் தேடிச் சென்ற போதுதான் வடக்கு வீதியும் தெற்கு வீதியும் சந்திக்காகவே என்ற உண்மை உறைத்தது. முதலில் கீழவீதியும் வடக்கு வீதியும் சந்திக்கும் இடத்துக்குப் போனேன். இரண்டொருவரிடம் விசாரித்தேன். அவர்கள் மௌனி பெயரைக் கேள்விப்பட்டதில்லை. தி.மு.க. அலுவலகத்தில் போய் விசாரித்தேன். அவரின் சொந்தப் பெயர் மணி, பழைய எழுத்தாளர் என்று சொல்லியும் அவர்களுக்கும் தெரியவில்லை. கிழக்கு வீதி தெற்கு வீதிச் சந்தியிலும் நிரந்தர வாசிகள் சிலரை விசாரித்தேன். அவர்களுக்கும் தெரியவில்லை. தெற்கு வீதி மேலை வீதிச் சந்தியிலும் அதன் முடுக்குகளிலும் சற்றுப்படித்தவர்கள் போல் தெரிந்த சில முதியவர்களைக் கேட்டுப் பார்த்தேன். நாலாம் இலக்க வீடு ஒன்றைத் தட்டி விசாரித்துப் பார்த்தேன். அவர்களுக்கும் மௌனியைத் தெரியவில்லை. கடைசியாக மேலவீதி வடக்கு வீதிச் சந்தியில் பிரியும் தெருவில் இறங்கினேன். எப்படியும் இங்கு மௌனியைப் பிடித்து விடலாம் என்ற நம்பிக்கையுடன் தெருவில் சிறிது தூரம் போய் அது கிளை பிரியும் ஒரு சந்தியில் ஒரு வீட்டுக்காரரிடம் விசாரித்தேன். அவரும் மணி, மௌனி என்றெல்லாம் கேள்விப்பட்டிருக்கவில்லை. அங்கிலருந்து ஒரு மூன்று நான்கு வீடு தள்ளிச் சென்றேன். 4ஆம் இலக்கத்தில் ஒரு மாடி வீடு இருந்தது. கேற்றைத் திறந்து கொண்டு போனேன். ஒரு வயதான அம்மா வந்தார். மௌனி இருக்கிறார் என்று விசாரித்தேன். ‘உள்ளே வாங்க’ என்றார். மௌனி சிதம்பரத்தில் இருபத்தைந்து முப்பது வருடங்களுக்கு மேலாக இருக்கிறார் என்று நினைக்கின்றேன். அந்தச் சிறு நகரத்தில் அவரை, அவரது இருப்பிடத்தை அறிந்த ஒருவர் எனக்குச் சுலபத்தில் அகப்படவில்லை. மில் மணிஐயர் என்று விசாரித்திருந்தால் சில வேளை தெரிந்திருப்பார்கள் என்று பின்னர்தான் எனக்குத் தெரியவந்தது.\nமௌனிக்கு ஒரு அறுபது வயது இருக்கலாம் என்பதாக எனக்குள் ஒரு எண்ணம். முப்பதுகளில் எழுதத் தொடங்கயவருக்கு அதைவிட அதிகம் இருக்கும் என்ற உண்மை மௌனியைக் காணும்வரை எனக்கு ஏனோ தோன்றவே இல்லை. மௌனி முதுமையின் அரவணைப்பில் இருந்தார். முன்பின் அறிமுகம் இல்லாத ஒருவகைப் பார்க்கும் இயல்���ான திகைப்போடு என்னைப் பார்த்ததும் இருக்கையில் இருந்து மெல்ல எழும்பினார். வயிறு ஒட்டி உடல் தளர்ந்து போய் இருந்தது. இலங்கையன் என்று என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன். அண்ணாமலைப் பலகலைக்கழகத்தில் ஒரு ஆராய்ச்சிக்காக வந்திருப்பதாகச் சொன்னேன். தன்னுடைய படிப்பறைக்குள் என்னைக் கூட்டிச் சென்றார். அடிமேல் அடிவைத்து மெல்ல ஊர்ந்து நடந்து வந்தார். வயது எண்பதாகி விட்டது. ஒரு கண் பார்வை முற்றிலும் போயிற்று. மறு கண்ணும் பெரிதும் மங்கிவிட்டது என்றார். அடங்கிய குரலில் அவர் கூறுவதைக் கூர்ந்து கவனிக்க வேண்டி இருந்தது.\nஈழத்து இலக்கிய முயற்சிகள், எழுத்தாளர்கள் பற்றி அவருக்கு ஒன்றும் தெரிந்திருக்கவில்லை. இலங்கையர் கோன், சி. வைத்தியலிங்கம் ஆகியோர் உங்கள் காலத்தில் எழுதினார்களே, அவர்களைப் படித்திருக்கிறீர்களா என்று கேட்டேன். அவருக்கு அவர்கரளத் தெரிந்திருக்கவில்லை. போர் முரசோ ஏதோ ஒரு புத்தகம் தனக்கு அனுப்பப்பட்டதாகவும். ஒரே உணர்ச்சி மயம், அங்கு அப்படித்தான் எல்லோரும் எழுதுவார்களோ என்று கேட்டார். அவர் குறிப்பிட்டது தளைய சிங்கத்தின் ‘போர்ப்பறை’ நூலை என்று புரிந்து கொண்டேன். அவர் சொல்வதுபோல் அப்படி ஒன்றும் உணர்ச்சிமயமான புத்தகம் அல்ல அது.\nஆங்கிலம்தான் அவர் படித்ததெல்லாம். கல்லூரியில் தமிழ் முறையாகப் படித்ததில்லை. ஆங்கில இலக்கியம் நிறையப் படித்திருக்கிறார். அவருடைய மேசையிலும் ஷெல்பிலும் நிறைய ஆங்கிலப் புத்தகங்கள் இருந்தன. ஊசநயவழைn யனெ னளைஉழஎநசல என்று நினைக்கிறேன். ஒரு இலக்கியத் திறனாய்வுப் புத்தகத்தைக் காட்டினார். அது அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துக்குச் சொந்தமானது. நெடுங்காலமாக அவருடைய உடமையாக இருந்து வருவதாகத் தோன்றியது. அந்தப் புத்தகத்தை நான் படித்ததில்லை. அதுபற்றி அவருக்கு மிக உயர்ந்த எண்ணம் இருப்பது தெரிந்தது. அந்தப் புத்தகத்தை அடியொற்றி விமர்சகனும் ஒரு படைப்பாளிதான் என்ற கருத்தை வலியுறுத்திச் சொன்னார். உசநயவiஎந றசவைவநச என்பது போல் உசநயவiஎந உசவைiஉ என்று சொன்னார். ஒரு படைப்பாளிக்குரிய நுண்ணுணர்வு இல்லாத ஒருவன் ஒரு சிறந்த விமர்சகனாக முடியாது என்ற பொருளிலேயே அவர் அந்தப் பதத்தைக் கையாண்டார் என்று நினைக்கின்றேன்.\nஇலக்கியம் மட்டுமன்றி, தத்துவம், பண்பாடு, நாகரீகம் என்றெல்லாம் அவரது படிப்பார்வம் விரிவானது என்று தெரிந்தது. தென் அமெரிக்க அஸ்ரேக் (யுணவநஉ) நாகரீகம் எகிப்திய பிரமிட்டுக்கள் பற்றிய புத்தகங்களைக் காட்டினார். அதில் இருந்து சில பகுதிகளை எனக்குப் படித்துக் காட்டுவதற்குச் சிரமப்பட்டார்.\nதனது குடும்ப நிலை பற்றிக் கொஞ்சம் சொன்னார். ஒரு உள்ளாந்த சோகம் அவரைக் கவிந்து கொண்டிருப்பது தெரிந்தது. இரண்டு மகன்கள் அகாலமாக விபத்தில் இறந்து விட்டார்கள். இன்னொருவர் தத்துவத்தில் எம்.ஏ. படித்து விட்டு மனக்கோளாறோடு வீட்டில் இருக்கிறார். இன்னொரு மகன் எம். எஸ். சி., பி. எச். டி. அமெரிக்காவில் இருக்கிறார்.\nபிச்சமூர்த்தி, கு.ப.ரா. பற்றியும் சில செய்திகள் சொன்னார். பிச்சமூர்த்தி ஒரு சமயம், ஏதோ ஒரு பத்திரிகையில் தான் ஏன் தாடி வளர்க்கிறேன் என்று ஒரு கட்டுரை எழுதியிருந்தாராம். அதைப் படித்தாயா என்று மௌனியைக் கேட்டிருக்கிறார். பார்த்தேன். படிக்கவில்லை. தாடி ஏன் வளர்கிறது என்று எழுதியிருந்தாயானால் படித்திருப்பேன் என்று மௌனி பதில் சொன்னாராம். அதற்குப் பிறகு அப்படிப்பட்ட விஷயங்களைப் பற்றிப் பிச்சமூர்த்தி தன்னுடன் பேசுவதில்லை என்றார்.\nமௌனி இப்போது எதுவுமே படிப்பதில்லை. முதுமையும் பார்வைக் குறைவும் அதற்கு அனுமதிப்பதில்லை. அடிக்கடி இலக்கிய நண்பர்கள் யாரும் வருவதில்லை. சமகாலத்தில் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று அவருக்கு எதுவும் டிதரியாது அவர் தனக்குள் தன்னுடைய கடந்த காலத்திலேயே வாழ்ந்து கொண்டிருந்தார். தன்னைப் பற்றி தனது படைப்புக்களைப் பற்றியே சொல்லிக் கொண்டிருந்தார். அவருக்கு ஒரு நிகழ்காலம் இல்லாது போய்விட்டதை உணர வருத்தமாக இருந்தது.\nஇடையில் மனைவியை அழைத்து கோப்பி வரவழைத்துத் தந்தார். குடித்துக் கொண்டிருக்கும் போதே ஷெல்பைத் திறந்து அழியாச்சுடர், மௌனிகதைகள் ஆகிய தொகுதிகளை எடுத்து வந்தார். அவருடைய கதைகள் பற்றி எங்களுடைய பேச்சுத் திரும்பியது. தன்னுடைய கதைகள் எதற்கும் தான் தலைப்பு வைத்ததில்லை என்றும் எல்லாம் பத்திரிகைக்காரர்களே வைத்த தலைப்புக்கள் என்றும் சொன்னார். தீபத்தில் வெளிவந்த பேட்டியிலும் இவ்வாறு குறிப்பிட்டுள்ளதாக ஞாபகம். அவருடைய பெரும்பாலான கதைகளுக்குப் பி. எஸ். ராமையாவே தலைப்புக் கொடுத்துப் பிரசுரித்ததாக பலர் குறிப்பிட்டுள்ளா���்கள்.\nதனது கதைகளைத் தான் ஒரே இருப்பில் எழுதி முடித்து விடுவதாகச் சொன்னார். ஒரே இருப்பில் முடியாவிட்டால முடிந்த அவ்வளவும்தான் கதை என்றார். டால்ஸ்டாய் போன்ற பெரிய எழுத்தாளர்கள் தங்கள் கதைகளைப் பலமுறை திருத்தித் திருத்தி எழுதுவார்களாமே, டால்ஸ்டாய் தனது புத்துயிர் நாவலை ஏழுமுறை திருப்பி எழுதியதாகச் சொல்கிறார்களே, நீங்கள் அப்படிச் செய்வதில்லையா என்று கேட்டேன். இல்லை என்றார். செப்பனிடும் பழக்கம் இல்லை என்றும் ஒரே முறையீல் எழுதுவதுதான் என்றும், எழுத்துப் பிழைகள் இருந்தால் அதைத் திருத்திக் கொள்வார் என்றும் சொன்னார். ஒரு பத்திரிக்கைக்காகத் தான் எழுதிய ஒரு கதையில் அதன் கதாநாயகன் இறந்து விடுவதாக எழுதியதாகவும் அந்தப் பத்திரிகை ஆசிரிய நண்பர் அதை மாற்றி எழுதினால் நன்றாக இருக்கும் என்று அதை மாற்றி எழுதும்படி கேட்டதாகவும் முடியாது என்று தான் அதைக் கிழித்துப் போடப் போனதாகவும், வேண்டாம் அப்படியே இருக்கட்டும் என்று சொல்லி அவர் அதை வாங்கிப் போனதாகவும் மௌனி கூறினார். அது எந்தக் கதை, பத்திரிகாசிரியர் யார் என்று அவர் கூறவில்லை நானும் அதைக் கேட்கவில்லை.\nமௌனியின் மொழியில் விசேட வழக்குகள் பல இருப்பதைக் குறிப்பிட்டு உங்கள் மொழி நடையைப் பிரக்ஞை பூர்வமாகக் கையாள்கிறீர்களா என்று கேட்டேன். இல்லை. அப்போது வருவதுதான் எழுத்து என்று சொன்னார். எனினும் காதல் கொண்டான் அல்ல, காதல் கண்டான் என்றுதான் நான் எழுதுவேன் என்றார். மௌனி கதைகள் நூலில் சில பக்கங்களைப் புரட்டி அப்படிப்பட்ட சில இடங்களைக் காட்டினார். ‘பிரக்ஞை வெளியில்’ கதை இப்படி முடிகிறர். “அப்பிடியாயின் ஒரு வகையில் காதல் கண்டபெண் கலியாணமாகாத கைம்பெண் என்ற அபத்தம் தானே” காதல் சாலையின் முடிவையும் எடுத்துக் காட்டினார். அது இப்படி முடிகிறது. “நேருக்கு நேரே காதலைக் கண்டதே போறும், கண்டதன் கதிபோறும். கண்டவரின் கதிபோலும்”.\nஇப்போது அவரால் எழுதவோ வாசிக்கவோ முடிவதில்லை என்றார். எழுத வேண்டும் போல் இருந்தால் யாரையும் கொண்டு சொல்லச் சொல்ல எழுதுவிக்கலாமே என்றேன். அப்படி டிக்டேட் பண்ணுவது எழுத்தல்ல என்றார். மௌனி கதைகள் முதல் தொகுதி பல ஆண்டுகளுக்கு முன்பு நான் இரவலாகப் படித்ததுதான். இப்போது அது கிடைப்பதில்லை. மேலதிகப் பிரதிகள் இருந்தால் ஒன்று தர முடியுமா என்று கேட்டேன். தன்னுடைய புத்தகங்கள் இப்போது கிடைப்பதில்லை என்றும் யார் விரும்பினாலும் அவற்றை மறுபிரசுரம் செய்து கொள்ளலாம் என்றும் சொன்னார். அவரிடம் மௌனி கதைகள் இரண்டு மூன்று மேலதிகப் பிரதிகள் இருந்தன. அது நிறையப் பிழைகளுடன் அச்சாகி இருக்கின்றது என்றார். தன் கைப் பிரதியில் பல இடங்களில் வெட்டித் திருத்தி இருந்தார். ஒரு பிரதியில் நடங்கும் கரத்தினால் கோணல் மாணலான ஆங்கிலத்தில் றiவா வாந டிநளவ ழக றiளாநள வழ ஆ. யு. ரோஅயn என்று எழுதி கையெழுத்திட்டுத் தந்தார். சுமார் ஒரு மணி நேரம் அவருடன் இருந்திருப்பேன். மீண்டும் சந்திப்பதாகக் கூறி விடைபெற்றேன். ஆனால் மீண்டும் சந்திக்க முடியாமலே போகும் என்று அப்போது தோன்றவில்லை.\nஅன்று இரவு மௌனி கதைகளுக்கு தருமு சிவராமு எழுதியிருந்த முன்னுரையை வாசித்தேன். ஒரு செய்தி முக்கியமாகப்பட்டது. அவர் அதில் இப்படி எழுதியுள்ளார்.\nமௌனிக்கு தமது கதைகளில் ஒவ்வொரு சொல்லுமே முக்கியமானது. சொற்களின் அர்த்தத்தோடு, சில வேளைகளில், அவற்றின் சப்த அமைப்பையும் கூட அவர் கவனத்தில் ஏற்கிறார்: “எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்” (அழியாச்சுடர்) என்ற வரியில் ‘எவற்றின்’ என்ற சொல் தவறு, ‘எவைகளின்’ என்பதே சரி என ஒருவர் மௌனியிடம் சொன்னாராம். மௌனி அச் சொல்லின் சப்தம் அந்த வசனத்திற்குத் தேவைப்படுமான சப்தமே அவ்வரியிலுள்ள கேள்விக்கு அதிக வலிமையைக் கொடுக்கிறது எனக் காணலாம். தம் கதைகளில் பலவற்றை பல தடவைகள் வேறு வேறு சொற்பிரயோகங்களுடன் திரும்பத் திரும்ப எழுதி, முக்கியமான இடங்களைச் சீராக்கும் மௌனியைப் பற்றி ‘சரி – தப்பு’ பார்ப்பவர்கள் கொஞ்சம் நிதானித்து தங்கள் அபிப்ராயங்களைச் சொல்வது நல்லது” (அடிக்கோடு என்னுடையது). இங்கு மௌனி தனது கதைகளைத் திரும்பத் திரும்ப எழுதிச் செப்பனிடுபவர் என்ற கருத்தே முக்கியமானது. மௌனி தனது கலைமுறை பற்றி என்னிடம் நேரில் சொன்னதற்கும் தருமு சிவராமு இங்கு எழுதியிருப்பதற்கும் இடையே பெரிய முரண்பாடு இருப்பதைக் கண்டேன். அடுத்த முறை சந்திக்கும்போது இதுபற்றி மௌனியுடன் பேச வேண்டும் என்று எண்ணிக்கொண்டேன். இதற்குச் சில வாரங்களுக்குப் பிறகு வெங்கட் சாமிநாதனின் என் பார்வையில் படிக்கக் கிடைத்தது. ‘மௌன உலகின் வெளிப்பாடு’ என்ற தலைப்பில் மௌனி பற்றி ஒரு நீண்ட கட்டுரை அதில் இடம் பெற்றுள்ளது. தருமு சிவராமு போல், இன்னும் சற்று அழுத்தமாக அதில் அவர் இப்படி எழுதியுள்ளார்:\n‘மௌனி எழுத உட்கார்ந்தால் கடுமையாக உழைப்பவர். பலமுறை திரும்பத் திரும்பத் திருத்தி எழுதுவார். ஏனெனில் பேனாவை எடுத்து எழுத உட்கார்ந்தால் அவர் தனது வேலையில் மிகத் தீவிரமான சிரத்தை கொள்பவர். ஏதோ ஒன்றை ஒருமுறை எழுதி, அத்துடன் அவர் திருப்தி அடைந்தார் என் ஒருமுறை கூட நிகழ்ந்ததில்லை. கடைசித்தேறி நெருங்கும் வரை, அது அனுமதிக்கும் வரை, பிரசுர கர்த்தரின் பொறுமை எல்லை கடந்து சோதிக்கப்படும் வரை திருத்தம் செய்துகொண்டே இருப்பார்.\nசாமிநாதன் சொல்வதன் உண்மை பொய் எவ்வாறு இருப்பினும் அவர் விஷயத்தை நன்கு மிகைப்படுத்திச் சொல்கிறார் என்றே தோன்றுகின்றது. மௌனி ஏராளமாக எழுதிக்குவித்தவர் அல்ல. மொத்தமாக 23கதைகள் தான் எழுதியிருக்கிறார். 1936, 37ஆம் ஆண்டுகளில் எழுதப்பட்டதாகத் தெரிகிறது. மற்றவையெல்லாம் நீண்ட இடைவெளிகளில் எழுதியவை. 60க்குப் பிறகு நாலோ ஐந்து கதைகள் தான் எழுதியிருக்கிறார். எந்தப் பிரசுர கர்த்தாவும் மௌனியின் கதைகளுக்காகத் தவம் இருந்ததாக சொல்லமுடியாது. அவ்வகையில் பிரசுர கர்த்தாக்களின் கெடுவை மீறி அவர்களின் பொறுமையைச் சோதிக்கும் வாய்ப்பு மௌனிக்கு இருந்ததாகவும் சொல்லமுடியாது. சிலவேளை கசடதபறவுக்குக் கதை பெறுவதற்கு இவர்கள் அப்படிச் சிரமப்பட்டிருக்கக்கூடும். மற்றபடி புதுமைப்பித்தனைப் போல், பி.எஸ். ராமையா போல் பத்திரிகைகளின் நெருக்குதல்களுக்கா எழுதிக்குவித்தவர் அல்ல மௌனி. தவிரவும் தருமுசிவராமுவும் சாமி நாதனும் மௌனியின் எழுத்து முயற்சிகளை நேரில் அறிந்தவர்களை போலவே எழுதுகின்றனர். 60களில் தான் இவர்கள் மௌனியைச் சந்தித்தார்கள் என்று நம்புகிறேன். அந்நேரம் மௌனி தான் எழுதுவதைப் பெரும்பாலும் நிறுத்திவிட்டார். இவர்களுடைய இலக்கியப் பிரவேசத்துக்கு பல ஆண்டுகளுக்கு முன்பே அவர் தனது பெரும்பாலான கதைகளை எழுதி முடித்துவிட்டார். ஆகவே மௌனி தனது பெரும்பாலான கவிதைகளை மீண்டும் மீண்டும் திருத்தி செப்பனிட்டு எழுதினார் என்பதை இவர்களுக்கு நேரில் அறியும் வாய்ப்பு இருக்க பெரும்பாலும் நியாயம் இல்லை. இது பற்றி மௌனி அவர்களுக்கச் சொல்லி இருந்தால் தான் உண்டு. அல்லது அவரது திருத்தப்ப��்ட கையெழுத்துப் பிரதிகளைப் பார்த்திருந்தால் தான் உண்டு. ஆனால் இது பற்றி என்னால் திடமாக ஒன்றும் சொல்ல முடியாது. மௌனி என்னிடம் சொன்ன தகவலை வைத்துக்கொண்டு பார்க்கும்போது இவர்கள் சொல்பவை மிகவும் முரண்பாடாகத் தோன்றுகின்றன. எனக்கு இது ஒரு முக்கியமான விஷயமாகப் படுகின்றது. மௌனி பிரக்ஞை பூர்வமாகத் தன் மொழியைக் கையாண்டாரா இல்லையா என்பது அவரது படைப்புகள் பற்றிய மதிப்பீட்டில் முக்கிய பங்காற்றக்கூடிய ஒன்றாகும். நிறையப் புதுமாதிரியான பிரயோகங்கள் நிறைந்த அவருடைய மொழியில் அவை அவருடைய பிரக்ஞைபூர்வமான புத்தாக்கமா (inழெஎயவழைn) அல்லது அவருடைய வழுவா என்பதை நிர்ணயிப்பதில் இது முக்கியமானது. சல சொற்பிரயோகங்களைப் பொறுத்தவரையில் மௌனி பிரக்ஞை பூர்வமாகவும் பிடிவாதமாகவும் இருந்திருப்பதாகத் தெரிகிறது. நான் முன் குறிப்பிட்ட ‘காதல் கண்ட’ என்பதை ஒரு உதாரணமாகச் சொல்லலாம். கொள், காண் என்ற வினைச் சொற்களை அபரிமிதமாகவும் தமிழுக்குப் புதுவிதமான அமைப்புக்களிலும் (உழளெவசரஉவழைளெ) இவர் கையாண்டுள்ளதையும் கூறலாம். உதாரணமாக ‘இரவு கண்டு விட்டது’ ‘காலை காண ஆரம்பித்தது’ போன்ற வாக்கியங்களைக் காட்டலாம். (மனக்கோலம்) தமிழிலே காண் என்பது செயப்படு பொருள் குன்றிய வினையாகப் பயன்படுத்தியுள்ளார். இது ஒரு வழுப்போல் தோன்றினாலும் இதை அவருடைய புத்தாக்கம் என்று நாம் அங்கீகரிக்கலாம். ஆனால் வாக்கிய அமைப்பில் எப்போதும் அவர் பிரக்ஞைபூர்வமாக இருந்திருக்கிறார் என்று சொல்வதற்கில்லை. அவருடைய வாக்கியங்கள் பல தாறுமாறாக உள்ளன. அவருடைய வசனம் எளிமையானது என்று சொல்கிறார்கள். ஆனால் அவரைப்போல் தெளிவில்லாத வசனம் எழுதியவர்கள் தமிழில் வேறுயாரும் இல்லை. அவர் சொல்ல நினைத்த பலவற்றைச் சொல்வதற்குப் பல சந்தர்ப்பங்களில் அவருடைய மொழித்திறன் தடையாக இருந்திருப்பதை உணர முடிகிறது. கவிதை போன்ற அற்புதமான வசனங்கள் அவருக்குச் சாத்தியமாகி இருக்கின்றன என்பதில் ஐயம் இல்லை. ஆனால் கரடுமுரடான வசனங்களும் அவரிடம் ஏராளம் உண்டு என்பதை நாம் ஒப்புக்கொள்ளவேண்டும். உதாரணத்துக்கு ஒன்று தருகிறேன். “அவ்வேளைகளில் அவன் தவறாது மேற்குப் பார்த்த அ;நத ஜன்னலின் முன் நிற்பான். சிலசமயம் அவன் பார்வையில் குறுக்காக அவளைக் கோவிலுக்குப் போகப் பார்க்க நேரிடுவதும் உண்டு”. (மனக்கோலம்). இதில் வரும் இரண்டாவது வசனம் மிகவும் தாறுமாறானது. இங்கு அவர் சொல்ல வருவது அவன் ஜன்னலில் நிற்கும் போது, சில சமயம் அவள் கோவிலுக்குப் போவதைப் பார்க்க நேரிடுவதும் உண்டு அல்லது அவள் என்பதுதான். ஆனால் மௌனியின் மேற்காட்டிய வசனம் எவ்வகையிலும் புத்தாக்கம் அல்ல. தமிழின் வாக்கிய அமைதிக்குக் கட்டுப்படாதது. அதனால் குழப்பமானது. பொருள் தெளிவற்றது@ வழுவானது. அவர் தனது மொழியில் பூரண பிரக்ஞையுடன் இருந்திருந்தால் இத்தகைய கட்டற்ற வசனங்கள் தவிர்க்கப்பட்டிருக்கும் என்று எனக்குத் தோன்றுகின்றது.\nமௌனியை மீண்டும் சந்திக்கும் போது இதுபற்றி விளக்கமாக அறிய வேண்டும் என்று எண்ணி இருந்தேன். உடனே அதற்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை. இலங்கைக்குப் போய்விட்டேன். ஜுன் 5ஆம் தேதிதான் திரும்பி வந்தேன். அந்த வார இறுதியில் மௌனியை எப்படியும் சந்திக்க வேண்டும் என்று எண்ணி இருந்தேன். அது முடியாமலே போயிற்று. 5ஆம் தேதி அவர் காலமான செய்தியை மூன்று நாட்களுக்குப் பிறகு இந்தியன் எஸ்பிறஸ் மூலம் அறிந்தேன். எனது சந்தேகங்கள் பற்றி மௌனி மூலம் தெளிவுப்படுத்திக் கொள்ள இனி வாய்ப்பே இல்லை.\nமௌனியின் மறைவுக்குப் பிறகு தாய் சஞ்சிகை 30—85 இதழில் அவரைப் பற்றிய சிலரின் கருத்துக்களை வெளியிட்டிருந்தது. அவற்றுள் கி.அ. சச்சிதானந்தன் மௌனியோடு நன்கு பழகியவர். மௌனி கதைகள் நூலை வெளியிட்டவர். அவர் இவ்வாறு சொல்லியுள்ளார்.\n“(மௌனி) எழுதுவதற்கு நிரம்ப கால அவகாசம் எடுத்துக்கொள்வார். ஒவ்வொரு சொல்லையும் சுண்டிச் சுண்டிப் பார்ப்பார். ஒரு நாளைக்கு ஒரு வாக்கியத்தோடு நிறுத்திக் கொண்டதும் உண்டு. தமிழில் முதலில் வரவில்லை என்றால் ஆங்கிலத்தில் எழுதிவிடுவார். பின்னால் தமிழ்ப்படுத்துவார். ஒரு கதைக்கு இருபது டிராப்ட் கூடப் போட்டிருக்கார்.”\nதருமு சிவராமு, வெங்கட் சாமிநாதன் ஆகியோர் கருத்துடன் சச்சிதானத்தனின் கருத்தும் ஒத்திருக்கின்றது. சச்சிதானந்தனுக்கும் மௌனியின் எழுத்தை நேரில் அவதானிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்காதுதான். ஆனால் அவர் மௌனியின் கை எழுத்துப் பிரதிகள் பலவற்றைச் சேர்த்து வைத்திருக்கிறார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரு கதையைத் திரும்பத் திரும்ப வெட்டி, திருத்தி, மாற்றி எழுதிய மௌனியின் கைப்பிரதிகள் அவரிட���் இருந்தால் அது அவருக்கு ஒரு நல்ல ஆதாரமாக இருக்கும். அதைச் சச்சிதானந்தன் வெளிப்படுத்துவாராயின் அது இலக்கிய ஆய்வாளருக்கும், விமர்சகருக்கும் பயனுடையதாக இருக்கும். இவர்கள் சொல்வது உண்மையெனில் தமிழ் வாக்கியத்தை லாவகமாகவும் வழுவின்றியும் கையாள்வதில் மௌனிக்கு இயல்பான சில தடைகள் இருந்தன என்பது உறுதிப்படுவது ஒருபுறம் இருக்க, மௌனி ஏன் என்னிடம் வேறு மாதிரியாகக் கூறினார் என்பது என்னைத் தொடர்ந்து சங்கடப்படுத்திக் கொண்டே இருக்கும்.\nநன்றி : எம்.ஏ. நுஃமான் , நூலகம்\nஆபிதீன் பக்கங்கள் ii :\n3. எழுத்தாளர்களின் இணையதளங்கள் (Links)\n5. கச்சேரிகள் , கஜல்கள்\n8 . நாகூர் ரூமி பதிவுகள்\nகலீபா உமர் (ரலி) (1)\nஉஸ்தாத் ஸலாமத் அலி கான் (1)\nகுலாம் முஸ்தஃபா கான் (1)\nநுஸ்ரத் ஃபதே அலிகான் (6)\nபண்டிட் ராஜ்சேகர் மன்ஸூர் (1)\nமுகேஷ் (பீர் முஹம்மது) (1)\nவிஸ்வநாதன் / ராமமூர்த்தி (2)\nதயவு பிரபாவதி அம்மா (1)\nஅப்துல் வஹ்ஹாப் பாகவி (18)\nகுலாம் காதர் நாவலர் (4)\nஅபுல் கலாம் ஆசாத் (2)\nஅஸ்கர் அலி என்ஜினியர் (1)\nஎச். பீர் முஹம்மது (2)\nகிண்ணியா எஸ்.பாயிஸா அலி (2)\nகுர்அதுல் ஐன் ஹைதர் (1)\nகுளச்சல் மு. யூசுப் (5)\nசாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (2)\nஜே. பி. சாணக்யா (1)\nஜோ டி குரூஸ் (1)\nதொ.மு. சி. ரகுநாதன் (1)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nபோர்வை பாயிஸ் ஜிப்ரி (1)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nவேங்கட சுப்புராய நாயகர் (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (5)\nஹரி கிருஷ்ணன் (ஹரிகி) (1)\nத சன்டே இந்தியன் (1)\nநேஷனல் புக் டிரஸ்ட் (13)\nஅங்கனெ ஒண்ணு இங்கனெ ஒண்ணு (1)\nமணல் பூத்த காடு (1)\nஇரா. சண்முக வடிவேல் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bibleall.net/index.php?version=5&book_num=46&chapter=16&verse=", "date_download": "2021-05-07T00:44:36Z", "digest": "sha1:CWTKQR6DHZYDVLK4MCZU7EP2YFXT65AU", "length": 17297, "nlines": 80, "source_domain": "bibleall.net", "title": "BibleAll | Tamil Bible | 1 கொரி | 16", "raw_content": "\nSelect Book Name ஆதியாகமம் யாத்திராகமம் லேவியராகமம் எண்ணாகமம் உபாகமம் யோசுவா ரூத் 1 சாமுவேல் 2 சாமுவேல் 1 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 1 நாளாகமம் 2 நாளாகமம் எஸ்றா நெகேமியா எஸ்தர் யோபு சங்கீதம் நீதிமொழிகள் பிரசங்கி உன்னதப்பாட்டு ஏசாயா எரேமியா புலம்பல் எசேக்கியேல் தானியேல் ஓசியா யோவேல் ஆமோஸ் ஒபதியா யோனா மீகா நாகூம் ஆபகூக் செப்பனியா ஆகாய் சகரியா மல்கியா மத்தேயு மாற்கு லூக்கா யோவான் அப்போஸ்தலர் ரோமர் 1 கொரி 2 கொரி கலாத்தியர் எபேசியர் பிலிப்பியர் கொலோசெயர��� 1 தெசலோனிக்கேயர் 2 தெசலோனிக்கேயர் 1 தீமோத்தேயு 2 தீமோத்தேயு தீத்து பிலேமோன் எபிரேயர் யாக்கோபு 1 பேதுரு 2 பேதுரு 1 யோவான் 2 யோவான் 3 யோவான் யூதா வெளிப்படுத்தல்\nபரிசுத்தவான்களுக்காகச் சேர்க்கப்படும் தர்மப்பணத்தைக்குறித்து நான் கலாத்தியா நாட்டுச் சபைகளுக்குப்பண்ணின திட்டத்தின்படியே நீங்களும் செய்யுங்கள்.\nநான் வந்திருக்கும்போது பணஞ்சேர்க்குதல் இராதபடிக்கு, உங்களில் அவனவன் வாரத்தின் முதல்நாள்தோறும், தன்தன் வரவுக்குத்தக்கதாக எதையாகிலும் தன்னிடத்திலே சேர்த்துவைக்கக்கடவன்.\nநான் வரும்போது உங்கள் உபகாரத்தை எருசலேமுக்குக் கொண்டுபோகும்படிக்கு, நீங்கள் தகுதியுள்ளவர்களாகக் குறிக்கிறவர்கள் எவர்களோ, அவர்களிடத்தில் நிருபங்களைக் கொடுத்து, அவர்களை அனுப்புவேன்.\nநானும் போகத்தக்கதானால், அவர்கள் என்னுடனேகூட வரலாம்.\nநான் மக்கெதோனியா நாட்டின் வழியாய்ப்போகிறபடியால், மக்கெதோனியா நாட்டைக் கடந்தபின்பு உங்களிடத்திற்கு வருவேன்.\nநான் எங்கே போனாலும் நீங்கள் என்னை வழிவிட்டனுப்பும்படிக்கு, நான் உங்களிடத்தில் சிலகாலம் தங்கவேண்டியதாயிருக்கும்; ஒருவேளை மழைகாலம் முடியும்வரைக்கும் இருப்பேன்.\nஇப்பொழுது வழிப்பிரயாணத்திலே உங்களைக் கண்டுகொள்ளமாட்டேன்; கர்த்தர் உத்தரவு கொடுத்தால் உங்களிடத்தில் வந்து சிலகாலம் தங்கியிருக்கலாமென்று நம்புகிறேன்.\nஆகிலும் பெந்தெகோஸ்தே பண்டிகைவரைக்கும் எபேசு பட்டணத்தில் இருப்பேன்.\nஏனெனில் இங்கே பெரிதும் அநுகூலமுமான கதவு எனக்குத் திறக்கப்பட்டிருக்கிறது; விரோதஞ்செய்கிறவர்களும் அநேகர் இருக்கிறார்கள்.\nதீமோத்தேயு உங்களிடத்திற்கு வந்தானேயாகில், அவன் உங்களிடத்தில் பயமில்லாமலிருக்கப் பாருங்கள்; என்னைப்போல அவனும் கர்த்தருடைய கிரியையை நடப்பிக்கிறானே.\nஆனபடியினால் ஒருவனும் அவனை அற்பமாய் எண்ணாதிருப்பானாக; சகோதரரோடேகூட அவன் வருகிறதற்கு நான் காத்திருக்கிறபடியால், என்னிடத்தில் வரும்படிக்கு அவனைச் சமாதானத்தோடே வழிவிட்டனுப்புங்கள்.\nசகோதரனாகிய அப்பொல்லோவைக்குறித்தோவெனில், சகோதரரோடேகூட உங்களிடத்தில் வரும்படிக்கு அவனை மிகவும் வேண்டிக்கொண்டேன்; ஆகிலும் இப்பொழுது வர அவனுக்கு மனதில்லை; அவனுக்கு நற்சமயம் உண்டாயிருக்கும்போது வருவான்.\nவிழித்திருங்க���், விசுவாசத்திலே நிலைத்திருங்கள், புருஷராயிருங்கள், திடன்கொள்ளுங்கள்.\nஉங்கள் காரியங்களெல்லாம் அன்போடே செய்யப்படக்கடவது.\nசகோதரரே, ஸ்தேவானுடைய வீட்டார் அகாயா நாட்டிலே முதற்பலனானவர்களென்றும், பரிசுத்தவான்களுக்கு ஊழியஞ்செய்யும்படிக்குத் தங்களை ஒப்புவித்திருக்கிறார்களென்றும் அறிந்திருக்கிறீர்களே.\nஇப்படிப்பட்டவர்களுக்கும், உடன்வேலையாட்களாய்ப் பிரயாசப்படுகிற மற்ற யாவருக்கும் நீங்கள் கீழ்ப்படிந்திருக்கவேண்டுமென்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்.\nஸ்தேவான், பொர்த்துனாத்து, அகாயுக்கு என்பவர்கள் வந்ததற்காகச் சந்தோஷமாயிருக்கிறேன், நீங்கள் எனக்குச் செய்யவேண்டியதாயிருந்ததை அவர்கள் செய்திருக்கிறார்கள்.\nஅவர்கள் என் ஆவிக்கும் உங்கள் ஆவிக்கும் ஆறுதல் செய்தார்கள்; இப்படிப்பட்டவர்களை அங்கிகாரம்பண்ணுங்கள்.\nஆசியா நாட்டிலுள்ள சபையார் உங்களை வாழ்த்துகிறார்கள். ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாளும் தங்கள் வீட்டிலே கூடுகிற சபையோடுங்கூடக் கர்த்தருக்குள் உங்களை மிகவும் வாழ்த்துகிறார்கள்.\nசகோதரரெல்லாரும் உங்களை வாழ்த்துகிறார்கள். ஒருவரையொருவர் பரிசுத்த முத்தத்தோடே வாழ்த்துங்கள்.\nபவுலாகிய நான் என் கையெழுத்தாலே உங்களை வாழ்த்துகிறேன்.\nஒருவன் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினிடத்தில் அன்புகூராமற்போனால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன், கர்த்தர் வருகிறார்.\nகர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபை உங்களுடனேகூட இருப்பதாக.\nகிறிஸ்து இயேசுவுக்குள்ளான என்னுடைய அன்பு உங்களெல்லாரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/1024867/amp", "date_download": "2021-05-07T01:25:30Z", "digest": "sha1:3A7V2LBKRBTMUTKEXXX25G27XF2NZ7UH", "length": 10067, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "கொரோனா பரவல் தீவிரம் புளியங்குடியில் பாதிக்கப்பட்ட பகுதிகள் தடுப்பு வைத்து அடைப்பு | Dinakaran", "raw_content": "\nகொரோனா பரவல் தீவிரம் புளியங்குடியில் பாதிக்கப்பட்ட பகுதிகள் தடுப்பு வைத்து அடைப்பு\nபுளியங்குடி, ஏப்.19: புளியங்குடியில் கொரோனா 2ம் அலை பரவுவதை தொடர்ந்து சுகாதார பணிகள் தீவிரமாகியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் கடந்த ஆண்டு புளியங்குடி பகுதிகளில் தான் கொரோனா தொற்று அதிகளவில் பரவ தொடங்கியது. இதனால் பல்வேறு கட்��ுபாடுகள் விதிக்கப்பட்டு மெயின் ரோடுக்கு வரும் அனைத்து பாதைகளும் தகரத்தால் அடைக்கப்பட்டன. கடைகள் அனைத்தும் மூடப்பட்டு தன்னார்வலர்கள் மூலம் பொருட்களும் வீடுகளுக்கே டெலிவரி செய்யப்பட்டன. கொரோனா தொற்று குறைந்தவுடன் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியது. தற்போது 2ம் அலை பரவலை தொடர்ந்து புளியங்குடியிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. நேற்று வரை சுமார் 19பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇதையடுத்து நகராட்சி சார்பில் சுகாதார பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. முககவசம் அணிவதை கட்டாயமாக்கி, மெயின்ரோடு, கடைகள், தெருக்களில் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. டி.என்.புதுக்குடி பகுதியில் உள்ள சிதம்பரவிநாயகர் தென்வடல் தெருவில் 3பேருக்கு கொரோனா ஏற்பட்டதை தொடர்ந்து அப்பகுதி தகரத்தால் அடைக்கப்பட்டன. இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் குமார்சிங் கூறுகையில், தற்போது கொரோனா இரண்டாம் அலை பரவுவதால் பொதுமக்கள் அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். கைகளை கழுவுதல், முககவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்து 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் கண்டிப்பாக கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என்றார்.\nதிருவாரூர் பைபாஸ் சாலை அருகே ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சேதமடைந்த நூலக சாலை\nஅறிவொளி இயக்கம் அழைப்பு பொறுப்பாளர்கள் போன் எண்கள்\nகலெக்டர் தகவல் வாசிப்பு பழக்கம் மூலம் செல்போன் சீர்கேடுகளில் இருந்து குழந்தைகளை மீட்டெடுக்க வேண்டும்\nதிருவாரூர் மாவட்டத்தில் மத்திய அரசின் ஆதார விலைத்திட்டத்தில் உளுந்து, பச்சைப்பயறு கொள்முதல்\nதிருவாரூர் நகரில் குழாய் சேதமடைந்து வீணாக குடிநீர் வெளியேறும் அவலம் சீரமைத்து பராமரிக்க மக்கள் கோரிக்கை\nலால்குடி வயல்காட்டில் ரத்த காயங்களுடன் பெண் சடலம் மீட்பு\nசிறுமியிடம் அத்து மீறல் சமையல் மாஸ்டர் கைது\nதிருவெறும்பூர் அருகே உப்பு லோடு லாரி கவிழ்ந்தது\nகுடியிருப்புகளுக்கு அருகே மது குடித்ததை கண்டித்த வாலிபருக்கு அடி உதை\nபேராவூரணி ஜமாஅத் அறிவிப்பு தென்னையை தாக்கும் தஞ்சை வாடல் நோயை கட்டுப்படுத்தும் வழிமுறை\nமுழு ஊரடங்கு தினத்தன்று இஸ்��ாமியர் வீடுகளிலேயே நோன்புகால சிறப்பு தொழுகை\nபேராவூரணி நகரில்a ரூ.15 கோடியில் சாலை மேம்பாடு திட்டப்பணி திருக்காட்டுப்பள்ளி அருகே அரை குறையாக விடப்பட்ட தார் சாலை சீரமைப்பு\nஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலையத்தில் வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு ஒருங்கிணைந்த பண்ணைய பயிற்சி\nஅரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி\nதிருவையாறில் கணவரை காணவில்லை மனைவி போலீசில் புகார்\nபட்டப்பகலில் மர்மநபர்கள் துணிகரம் புதுக்கோட்டை அரசினர் பிற்படுத்தப்பட்டோர் மாணவியர் விடுதியை கொரோனா சிகிச்சை மையமாக மாற்றும் பணி\nபொன்னமராவதி பேருந்து நிலையத்தில் திமுக பிரமுகரின் கார் கண்ணாடியை உடைத்து ரூ. 4 லட்சம் கொள்ளை\nகொள்ளிடம் பகுதி ஆரம்ப சுகாதார நிலையங்களில் கிருமி நாசினி, முககவசம் தட்டுப்பாடு\nபாரம்பரியத்தை மீட்டெடுக்கும் வகையில் பனை ஓலையில் விதவிதமான பொருட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/06/06/keadilan-tidak-tanding-prk-chini/", "date_download": "2021-05-07T00:53:01Z", "digest": "sha1:O25SMCVRNV73U3BTUMMRGXBPPN4D6C4H", "length": 5572, "nlines": 129, "source_domain": "makkalosai.com.my", "title": "KEADILAN Tidak Tanding PRK Chini | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nNext articleஅரசியல் நடத்துகிறது கொரோனா\n2036 வரை புடின் மட்டுமே ரஷ்ய அதிபர்\nகுருவாயூரில் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்\nஜாவி எழுத்து ஓவியக் கல்வி; அமைச்சரவையின் முடிவுக்குப் பின்னர் மக்கள் எதிர்ப்பு மறியல்\nசுற்றுலா சென்ற 6 சிறுவர்கள்….மக்கள் சோகம் \nசட்டத்துடன் இயங்குவதால் கவலை இல்லை\nஅந்தமாதிரி வேடங்களில் நடிக்க ஆசை – பிரியாமணி\nகதை கேட்க டைம் இல்லை\nஇன்று 2,232 பேருக்கு கோவிட் தொற்று – 4 பேர் மரணம்\nவெளிநாட்டு ஆடவரிடம் கொள்ளையடித்ததாக போலீஸ்காரர் உட்பட 4 பேர் கைது\nதமிழ்நாட்டில் நாளை பதவியேற்கவிருக்கும் அமைச்சரவை பட்டியல்\nநாட்டில் 14 புதிய கோவிட் -19 கிளஸ்டர்கள் கண்டுபிடிப்பு\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2021/03/10/%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2021-05-07T01:55:43Z", "digest": "sha1:5KEP4D6NEVLVM5FHNNDSMQT4GV4LHAYM", "length": 4929, "nlines": 108, "source_domain": "makkalosai.com.my", "title": "அபாயகரமான எரிமலையை கடந���து இளம்பெண் சாதனை | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome சாதனையாளர் அபாயகரமான எரிமலையை கடந்து இளம்பெண் சாதனை\nஅபாயகரமான எரிமலையை கடந்து இளம்பெண் சாதனை\nபொதுவாகவே இந்த உலகில் எல்லோருக்கும் எதையாவது சாதிக்க வேண்டுமென நினைப்பது இயல்புதான்.\nஆனால் மற்றவர்கள் சாதித்ததையே தானும் சாதிக்க நினைக்காமல் வித்தியாசமாக எதாவது சாதிக்க நினைப்பவர்களுக்கு என்றுமே உலகம் இருகரம் நீட்டி வரவேற்கும்.\nஅந்த வகையில், எத்தியோப்பியாவில் பசால்ட்டிக் ஷீல்ட் என்ற எரிமலை உள்ளது. இந்த எரிமலை 1187 செல்சியஸ் வெப்பநிலை கொண்டது.\nஇந்த எரிமலை பள்ளத்தின் குறுக்கே கடந்து பிரேசில் நாட்டைச் சேர்ந்த கரினா ஒலியானி என்ற இளம்பெண் சாதனை படைத்துள்ளார்.\nPrevious articleகர்ணன் படத்தின் 3- ஆவது பாடல் நாளை வெளியீடு\nNext articleஹாரி-மேகனின் இன பாகுபாடு குற்றச்சாட்டு\nஅனைத்துலக பசுமை புத்தாக்க போட்டியில் கார்த்திகேசன் 2 தங்கம் வென்று சாதனை.\nமு.க.ஸ்டாலின் இன்று பதவி ஏற்பு\nவெளிநாட்டு ஆடவரிடம் கொள்ளையடித்ததாக போலீஸ்காரர் உட்பட 4 பேர் கைது\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/bigg-boss-tharshan-lover-sanam-shetty-lodge-a-complaint-on-tharshan/", "date_download": "2021-05-07T01:25:24Z", "digest": "sha1:4CEIM3AE5V22OPENSJ7PH5CL6JKIBMZC", "length": 10746, "nlines": 92, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Bigg Boss Tharshan Lover Sanam Shetty Lodge A Complaint On Tharshan", "raw_content": "\nHome பிக் பாஸ் பிக் பாஸிற்கு முன்பே எனக்கும் தர்ஷனுக்கு நிச்சயதார்த்தம் கூட முடிந்தது. ஆதாரத்தை வெளியிட்ட சனம்...\nபிக் பாஸிற்கு முன்பே எனக்கும் தர்ஷனுக்கு நிச்சயதார்த்தம் கூட முடிந்தது. ஆதாரத்தை வெளியிட்ட சனம் ஷெட்டி.\nவிஜய் தொலைக்காட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நிறைவடைந்தது. இந்த சீசனில் பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டிருந்தார்கள். அதில் முகேன் முதல் பரிசையும் சாண்டி இரண்டாவது பரிசையும் தட்டிச் சென்றார்கள். ஆனால், இந்த சீசனில் தர்ஷன் தான் வெற்றி பெறுவார் என்று சக போட்டியாளர்கள் சரி, ரசிகர்களும் சரி மிகவும் ஆணித்தரமாக நம்பி வந்தார்கள். ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில் இறுதிப் போட்டியில் இரண்ட�� வாரத்திற்கு முன்பாக தர்ஷன் வெளியேற்றப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.\nதர்ஷன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பாகவே நடிகை சனம் ஷெட்டியை காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டது. ஆனால், பிக்பாஸ் வீட்டில் சென்ற தர்ஷன் ஷெரினிடம் மிகவும் நெருக்கமாக பழகி வந்தார். இதனால் தர்ஷன் மற்றும் ஷெரின் காதலிப்பதாகவும் கூறப்பட்டது. இதனால் அடிக்கடி சனம் ஷெட்டி அழுதபடி வீடீயோவை பதிவிட்டு தர்ஷன் மற்றும் ஷெரீனை குறை கூறி வந்தார். ஆனால், ஒரு கட்டத்தில் இனி தம்மால் தர்ஷனுக்கு எந்த பிரச்சனையும் வரக்கூடாது அதனால் நான் தர்ஷனிடம் இருந்து விலகி கொள்கிறேன் என்று அழுதபடி வீடியோ ஒன்றை பதிவிட்டு இருந்தார்.\nஇதையும் பாருங்க : உடல் எடையை குறைத்து மீண்டும் பழைய வனிதாவை போல மாறிய வனிதா. வைரலாகும் புகைப்படம்.\nஆனால், இவர்கள் இருவரும் அடிக்கடி ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு வந்தனர்.இந்த நிலையில் சனம் ஷெட்டி சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் தர்ஷன் மீது புகார் அளித்துள்ளார். இதுகுறித்து பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய சனம் ஷெட்டி, எனக்கும் பிக் பாஸ் 3 போட்டியாளர் தர்ஷனுக்கும் மே 12 ஆம் தேதி 2019 ஆம் ஆண்டு நிச்சயதார்தம் ஆனது. மேலும், எங்கள் திருமணமும் ஜூன் 10 ஆம் தேதி 2019 ஆண்டு ஏற்பாடு செய்து இருந்தோம். திருமண நேரத்தில் அவருக்கு பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்ததால், அவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறி இருந்தார்.\nதிருமணம் செய்து கொண்டு பிக் பாஸ் வீட்டிற்க்குள் சென்றால் எனக்கு பெண் ரசிகைகள் கம்மி ஆகிவிடுவார்கள் என்றார். நீயும் நம் திருமணம் குறித்து யாரிடமும் சொல்ல வேண்டாம் அப்படி சொன்னால் என்னுடைய பிரபலம் குறைந்துவிடும் என்று என்னிடம் சத்தியம் வாங்கினார். அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விசா, விமான டிக்கட் என்று 15 லட்சம் வரை செலவு செய்து இருக்கிறேன். ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியில் வந்தவுடன் என்னை அவர் அவமானாமாக பேசி என்னை நிராகரித்தார் என்று கூறினார் என்று கூறியுள்ள சனம் ஷெட்டி என்னை தர்ஷன் காதலித்து திருமணம் செய்து கொள்வதாக தர்ஷன் ஏமாற்றி விட்டதாக கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளாராம்.\nPrevious articleஉடல��� எடையை குறைத்து மீண்டும் பழைய வனிதாவை போல மாறிய வனிதா. வைரலாகும் புகைப்படம்.\nNext articleஅஜித், ஷாலினியை திருமணம் செய்து கொண்டதும் வருத்தப்பட்ட பிரபல நடிகர். சுஹாசினி சொன்ன சீக்ரெட்.\nபிக் பாஸ் 5வில் கலந்துகொள்வது பற்றி தனது யூடுயூப் சேனலில் தெரிவித்த குக்கு வித் கோமாளி பிரபலம்\nஉடல் எடை கூடி பருமனான அபிராமி – தனது புண்ணகைப்படத்திற்கு கீழ் கேலிக்கு கொடுத்த பதிலடி.\nபிக்பாஸ் சீசன் 4 மிஸ் ஆகிடுச்சு, சீசன் 5-ல் அஸீம் போகிறாரா \nடபுள் ஏவிக்ஷன், கமல் சொன்னது போல இன்று வெளியேறியது இவர் தான் – அன்பு...\nமிட் நைட் மசாலாவில் மஹத், யாஷிகா அடித்த கூத்து. ஆபாசத்தின் உட்சம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/spirituality/free-darshan-at-tirupati-temple-canceled/cid2702523.htm", "date_download": "2021-05-07T01:47:44Z", "digest": "sha1:P7QOWOXJOTQUWILUKMIJNYJJ53A66RM7", "length": 3166, "nlines": 41, "source_domain": "tamilminutes.com", "title": "திருப்பதி கோவிலில் இலவச தரிசனம் ரத்து", "raw_content": "\nதிருப்பதி கோவிலில் இலவச தரிசனம் ரத்து\nதிருப்பதி கோவிலில் கொரோனா பெருந்தொற்று காரணமாக எடுக்கப்பட்ட நடவடிக்கை\nதிருப்பதி கோவிலில் தினம் தோறும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து குவிகின்றனர்.நடைபாதையில் நடந்து பாதயாத்திரையாகவும் வாகனங்களிலும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். கடந்த வருடம் கொரோனா பரவல் காரணமாக வரலாற்றிலேயே முதல் முறையாக 100 நாட்களுக்கும் மேல் மூடப்பட்டது.\nசில மாதங்களாக கொரோனா பரவல் சீரான முறையில் இருந்த நிலையில் தற்போது அதிக கொரோனா தொற்று காரணமாக திருப்பதிக்கு வரும் பக்தர்களை கட்டுப்படுத்த முடியாததாலும் இலவச தரிசனத்தை ரத்து செய்துள்ளனர்.\nகட்டண தரிசனத்துக்கு மட்டும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்களுக்கும் மட்டும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.\nTamil Minutes இணையதளம் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. புதிய செய்திகளையும், பயனுள்ள தகவல்களையும் வழங்குவதே இந்த இணையதளத்தின் நோக்கமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://voiceofasia.co/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2021-05-07T01:12:06Z", "digest": "sha1:QFUZY4JCQWOGPAICLEZXCEBYP4MGE6TC", "length": 4733, "nlines": 57, "source_domain": "voiceofasia.co", "title": "இது உங்கள் இடம்: திருந்தாத தி.மு.க.,வினர்| Dinamalar", "raw_content": "\nஇது உங்கள் இடம்: தி���ுந்தாத தி.மு.க.,வினர்| Dinamalar\nஇது உங்கள் இடம்: திருந்தாத தி.மு.க.,வினர்| Dinamalar\nஉலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:\nஎஸ்.பி.சுந்தரபாண்டியன், திருப்பூரிலிருந்து அனுப்பிய, ‘இ – மெயில்’ கடிதம்:\nதேர்தல் பிரசாரத்தில், தனிமனித தாக்குதல் நடத்துவதில், தி.மு.க.,வினர் எல்லை மீறி போகின்றனர்.தி.மு.க.,வில் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஆ.ராசா, பிரசாரத்தின்போது, முதல்வர் என்றும் பாராமல், அவரை அநாகரிக வார்த்தைகளால் வசைபாடிய சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nஅ.தி.மு.க.,வினர் மட்டுமல்ல, நடுநிலையாளர் அனைவரையும், ஆ.ராசாவின் பேச்சு, முகம் சுளிக்கச் செய்துள்ளது.அதேபோல, ஐ.லியோனியும், ‘நாலாந்தர’ பேச்சாளர் போல, பிரசார கூட்டத்தில் அருவருக்கத்தக்க வகையில் பேசி, எல்லை மீறுகிறார். இது போன்ற நிகழ்வுகள், தி.மு.க.,வினர் திருந்தவே இல்லை என்பதையே, எடுத்துக் காட்டுகிறது.\nஆட்சி மாற்றம் என்பது, ஆரோக்கியமானதாக இருக்காது என்பதே, தி.மு.க.,வினரின் நடவடிக்கையில் இருந்து தெள்ளத் தெளிவாக தெரிகிறது. ஆ.ராசா, லியோனி போன்றோருக்கு நாவடக்கம் தேவை. தனிமனித தாக்குதல் நடத்தவோ, பிறப்பை பற்றி பேசவோ, யாருக்கும் உரிமையில்லை.இதுபோன்ற செயல்களில், தி.மு.க., வினர் தொடர்ந்து ஈடுபட்டனர் என்றால், சொந்த காசில், அவர்களே தங்களுக்கு சூனியம் வைத்துக் கொள்கின்றனர் என, அர்த்தம்.\nஅநாகரிக பேச்சை, இப்போது மக்களும் விரும்புவதில்லை. தி.மு.க.,வினர் இதுபோன்ற நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டால், தேர்தல் முடிவு, அக்கட்சிக்கு சாதகமாக இருக்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2021-05-07T01:38:55Z", "digest": "sha1:C2L5KLPELJNZ5E4YSQW3HZLMYUI2SIIL", "length": 7973, "nlines": 161, "source_domain": "www.tamilstar.com", "title": "அடுத்த படத்திற்கு தயாராகும் விஜய் - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nஅடுத்த படத்திற்கு தயாராகும் விஜய்\nNews Tamil News சினிமா செய்திகள்\nஅடுத்த படத்திற்கு தயாராகும் விஜய்\nபிகில் படத்துக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படப்பிடிப்பு முடிந்துள்ளது. இதில் மாளவிகா மோகனன் கதாநாயகியாகவும், விஜய்சேதுபதி வில்லனாகவும் நடித்துள்ளனர். கொரோனா பரவல் முடிவுக்கு வந்தால் விரைவில் திரைக்கு வரும்.\nஅடுத்தாக விஜய், தனது 65-வது படத்தில் நடிக்க தயாராகி வருவதாகவும், இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் இறுதியில் தொடங்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தை இயக்குவது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடிப்பதாக பேசப்பட்டது.\nஇயக்குனர்கள் பாண்டிராஜ், அருண்ராஜா காமராஜ், பார்த்திபன், சூர்யாவை வைத்து சூரரைப்போற்று படத்தை இயக்கியுள்ள சுதா கொங்கரா ஆகியோரில் ஒருவர் இயக்க வாய்ப்பு இருப்பதாகவும் பேசப்பட்டது.\nஇறுதியில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது. விஜய்யின் அடுத்த படம் துப்பாக்கி 2-ம் பாகமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகத நிலையில், அடுத்த படத்திற்கு தயாராகி வருகிறார் விஜய். வித்தியாசமான தோற்றத்தில் புதிய கெட்டபில் தோன்ற இருப்பதாக தகல்கள் வெளியாகி உள்ளது.\nரசிகர்களின் விருப்பத்தை நிறைவேற்றிய ஸ்ருதி ஹாசன்\nகொரோனா அச்சத்தால் சினிமாவில் முத்த காட்சிகளுக்கு தடை\nஉயர் அதிகாரியின் மகள் கடத்தப்பட அவரை போலீஸ் அதிகாரி வரலட்சுமி காப்பாற்றுகிறார். அதன் தொடர்ச்சியாக பெண் கடத்தல்...\nகனடியப் பெண்களில் நாடு தழுவிய உயர்சாதனை படைத்த ஈழப்பெண்\nஇந்தியாவுக்கு அவசர மருத்துவ உதவி பொருட்களை அனுப்பியது கனடா\n12 வயதிற்கு மேற்பட்டவர்கள் Pfizer தடுப்பூசியை பெற Health கனடா அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ta.characterhosting6.com/", "date_download": "2021-05-07T01:47:16Z", "digest": "sha1:UF7VVMJ6RAIF7MDNSVV3Q25ZQMIWUOO4", "length": 9440, "nlines": 14, "source_domain": "ta.characterhosting6.com", "title": "செமால்ட்டிலிருந்து எஸ்சிஓ வழிகாட்டி: இணைப்புகளின் வகைகள் என்ன?", "raw_content": "செமால்ட்டிலிருந்து எஸ்சிஓ வழிகாட்டி: இணைப்புகளின் வகைகள் என்ன\nபல வணிகங்கள் தங்கள் வணிக ��லைத்தளங்களுக்கு தேடுபொறி உகப்பாக்கம் (எஸ்சிஓ) பயன்படுத்துவதன் மூலம் பயனடைகின்றன. தேடுபொறி உகப்பாக்கம் என்பது ஒரு டிஜிட்டல் மார்க்கெட்டிங் திட்டமாகும், இது ஒரு வலைத்தளம் அல்லது பிராண்டை ஒரு பெரிய ஆன்லைன் தெரிவுநிலையைப் பெறுவதில் வலை எஜமானர்கள் பயன்படுத்தும் சில முக்கிய முறைகளை உள்ளடக்கியது. எஸ்சிஓ பயன்பாட்டில் இருந்து பெரிய நிறுவனங்கள் பயனடைகின்றன, குறிப்பாக அவர்களின் வணிக நடைமுறைகளில். உதாரணமாக, மக்கள் தங்கள் இ-காமர்ஸ் வலைத்தளங்களில் எஸ்சிஓ பயன்படுத்தலாம் மற்றும் பல வாடிக்கையாளர்களை ஆன்லைனில் பெறலாம்.\nஎஸ்சிஓ பயன்படுத்தும் போது, சில குறிப்பிட்ட சொற்கள் மற்றும் எஸ்சிஓ நோக்கங்களைப் பயன்படுத்துவது பற்றி மக்கள் ஆச்சரியப்படலாம். உதாரணமாக, பல எஸ்சிஓ பயனர்கள் தொழிலுக்கு புதியவர்களாக இருக்கலாம். ஹைப்பர்லிங்க், பின்னிணைப்பு, பின்தொடர் அல்லது பின்பற்றாத இணைப்பு மற்றும் சரியான அல்லது தவறான இணைப்பு போன்ற சில சொற்கள். தளத்தை ஆன்லைனில் காணச் செய்வதற்கான சிறந்த எஸ்சிஓ உத்திகளைக் கொண்ட ஒரு வலைத்தளத்தில் அவற்றை உருவாக்குவது அவசியம்.\nசெமால்ட்டின் வாடிக்கையாளர் வெற்றி மேலாளர் ரோஸ் பார்பர், எஸ்சிஓ முறைகளில் இருக்கக்கூடிய சில இணைப்புகளை வரையறுக்கிறார்:\nஹைப்பர்லிங்க்கள் மற்ற URL களில் இருக்கும் அம்சங்களைக் கொண்ட நூல்கள் மற்றும் பிற உள்ளீட்டு அளவுருக்களைக் குறிக்கின்றன. எஸ்சிஓக்கு விருந்தினர் இடுகையிடும் போது ஹைப்பர்லிங்க்களை வைப்பது முக்கியம். பிற சந்தர்ப்பங்களில், மக்கள் உங்கள் டொமைனுக்கான உள் இணைப்பாக மாற்றும் சூழலில் ஹைப்பர்லிங்க்களைப் பயன்படுத்தலாம். ஹைப்பர்லிங்க்கள் உங்கள் யுஎக்ஸ் முன்னேற்றத்திற்கும் தரவரிசை காரணிகளுக்கு பங்களிப்புக்கும் உதவும்.\nஎஸ்சிஓ செய்யும்போது, டொமைன் அதிகாரத்தை அதிகரிப்பதற்கான பொதுவான அம்சம் பின்னிணைப்பு ஆகும். இது உங்கள் வலைத்தளத்தையும் டொமைனையும் உங்கள் முக்கிய இடத்திற்கு பொருத்தமாக்குகிறது, தேடுபொறிகள் உங்கள் வலைத்தளத்தை SERP களில் அதிக அளவில் வைக்கின்றன. உள் இணைப்புகள் உங்கள் தளத்தை சுட்டிக்காட்டும் இணைப்புகள், ஆனால் அவை அனைத்தும் வலைத்தளத்தின் அதே களத்திலிருந்து தோன்றியவை. எஸ்சிஓவின் இந்த அம்சம் வலைத்தளத்திற்கு சில நல��ல போக்குவரத்தை பெறுவதோடு உங்கள் தளத்தின் பிராண்ட் அதிகாரத்தையும் அதிகரிக்கச் செய்கிறது.\nஇவை பிற களங்களிலிருந்து வரும் மற்றொரு வலைத்தளத்தின் இணைப்புகள். பின்னிணைப்புகள் வெளிப்புற இணைப்புகள் போன்றவை, அவை நிகழும் முறையை எதிர்க்கின்றன. உதாரணமாக, பிற வலைத்தளங்களிலிருந்து வரும் பின்னிணைப்புகள் ஏற்படலாம். இவர்கள்தான் முறையான பின்னிணைப்புகளாக எண்ணுகிறார்கள். அவை உங்கள் டொமைன் அதிகாரம், உள்ளடக்கப் பொருத்தம் மற்றும் வாடிக்கையாளர் தளத்தையும் அதிகரிக்கும்.\nபின்தொடர மற்றும் பின்பற்றாத இணைப்புகள்\nசில நேரங்களில், நீங்கள் ஒரு இணைப்பைக் கிளிக் செய்து உங்கள் இணைப்பு அதிகாரத்தை மாற்றலாம். மற்ற சந்தர்ப்பங்களில், இணைப்பு சாறு இருக்கலாம் அல்லது இல்லை. இந்த சந்தர்ப்பங்களில், இந்த செயல்முறை வெற்றிகரமாக இருப்பதை உறுதிப்படுத்த மக்கள் பின்தொடராத இணைப்புகளைப் பயன்படுத்துகின்றனர். முழு இணைய தளத்தையும் பார்க்கும் நபர்களுக்கு தெரியும் வகையில் பின்தொடர் இணைப்புகள் அவசியம்.\nஎஸ்சிஓ சிறந்த இணைய சந்தைப்படுத்தல் உத்திகளில் ஒன்றாகும். எஸ்சிஓ பல வணிகங்களுக்கு உலகின் பல பகுதிகளிலிருந்து ஒரு பெரிய வாடிக்கையாளர் தளத்தைப் பெற உதவுகிறது . பல்வேறு எஸ்சிஓ ஆட்டோமேஷன் கருவிகளுக்குச் சென்று வலைத்தளம் செயல்படும் முறையைக் கட்டுப்படுத்த சில சிறந்த அம்சங்களை அடைய முடியும். எஸ்சிஓவில் உள்ள சில இணைப்புகள் என்ன அர்த்தம் என்று சிலர் யோசிக்கலாம். சில சிறந்த எஸ்சிஓ நுட்பங்கள் ஆன்லைன் தளத்திலிருந்து கிடைக்கின்றன, அத்துடன் அவற்றின் இணைய சந்தைப்படுத்தல் திறன்களில் தேவையான சில மாற்றங்களைச் செய்யலாம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://housing.justlanded.com/ta/Trinidad-and-Tobago", "date_download": "2021-05-07T01:09:09Z", "digest": "sha1:RHPA4DW5ILWQCZRC4JKLRG7XXDCZUE3S", "length": 7695, "nlines": 119, "source_domain": "housing.justlanded.com", "title": "kudiyiruppuஇன திரினிடாட் மற்றும் தொபாக்கோ", "raw_content": "\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nAfrikaansஅரபிஅழேர்பய்ட்ஜாணிவங்காளம்பல்கேரியன்காதலான்சீனம்க்ரோஷியன்ட்சேக்டேனிஷ்டட்ச்ஆங்கிலம்ஈஸ்த்னியன்பின்னிஷ்பிரேண்ட்சுட்ஜெர்மன்கிரேக்ககுஜராதிஹவுசாஹீப்ருஇந்திஹங்கேரியன்அயிச்லாந்திக்இக்போஇந்தோனேஷியாஅயிரிஷ்இத்த��லியன்ஜப்பனியஜவாநீஸ்கன்னடம்கொரியன்லாத்வியன்லிதுவானியன்மசெடோனியன்மலாய்மலையாளம்மால்டிஸ்மராத்திநோர்வேஜியன்பெர்ஷியன்போலிஷ்ப்றோட்சுகீஸ் ப்றோட்சுகீஸ் ( br )பஞ்சாபி ரோமானியன்ரஷியன்செர்பியன்ஸ்லோவாக்ஸ்பானிஷ்ச்வகிலிஸ்வீடிஷ்தமிழ்தெலுங்குதாய்டர்கிஷ்உக்ரைனியன்உருதுவிஎட்னாமீஸ்யொரூபாஜுலு\nKudiyiruppu அதில் திரினிடாட் மற்றும் தொபாக்கோ\nவிற்பனைக்கு > மனை அதில் திரினிடாட் மற்றும் தொபாக்கோ\nவிற்பனைக்கு > வீடுகள் அதில் திரினிடாட் மற்றும் தொபாக்கோ\nவாடகைக்கு > வீடுகள் அதில் திரினிடாட் மற்றும் தொபாக்கோ\nவாடகைக்கு > வீடுகள் அதில் திரினிடாட் மற்றும் தொபாக்கோ\nவாடகைக்கு > வீடுகள் அதில் திரினிடாட் மற்றும் தொபாக்கோ\nவாடகைக்கு > அலுவலகம்/வணிகம் அதில் திரினிடாட் மற்றும் தொபாக்கோ\nவிற்பனைக்கு > வீடுகள் அதில் திரினிடாட் மற்றும் தொபாக்கோ\nவாடகைக்கு > குடியிருப்புகள் அதில் திரினிடாட் மற்றும் தொபாக்கோ\nவாடகைக்கு > அலுவலகம்/வணிகம் அதில் திரினிடாட் மற்றும் தொபாக்கோ\nவிற்பனைக்கு > மனை அதில் திரினிடாட் மற்றும் தொபாக்கோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/sports/ipl/2021/may/03/most-players-used-at-ipl-2021-up-to-match-28-3616416.amp", "date_download": "2021-05-07T01:28:03Z", "digest": "sha1:Q5TU3UC4LAWOWQF76N6FAWLSKWUKSTV7", "length": 8027, "nlines": 55, "source_domain": "m.dinamani.com", "title": "ஐபிஎல்: குறைவான வீரர்களைப் பயன்படுத்தினால் அதிக வெற்றிகள் கிடைக்குமா? | Dinamani", "raw_content": "\nஐபிஎல்: குறைவான வீரர்களைப் பயன்படுத்தினால் அதிக வெற்றிகள் கிடைக்குமா\nஇந்த வருட ஐபிஎல் போட்டியில் விளையாடும் அணிகளில் சிஎஸ்கே அணி தான் குறைவான வீரர்களைப் பயன்படுத்தியுள்ளது.\nநேற்றுடன் லீக் பிரிவில் பாதி ஆட்டங்கள் முடிவடைந்துள்ளன. தில்லி, பஞ்சாப் அணிகள் 8 ஆட்டங்களை ஆடியுள்ளன. இதர எல்லா அணிகளும் 7 ஆட்டங்களில் ஆடி முடித்துவிட்டன.\nஇந்நிலையில் சிஎஸ்கே மட்டுமே குறைவான வீரர்களைப் பயன்படுத்தியுள்ளது. 13 வீரர்கள்.\nசரி, இதனால் தான் சென்னை அணி 5 ஆட்டங்களில் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் 2-ம் இடத்தில் உள்ளது என்றும் சொல்ல முடியாது.\nதில்லி அணி, அதிக வீரர்களைப் பயன்படுத்திய அணிகளில் ஒன்றாக உள்ளது. 17 வீரர்கள். இன்றைய தேதியில் 8 ஆட்டங்களில் 6 வெற்றிகளைப் பெற்று அந்த அணிதான் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.\nஅதேசமயம் இஷ்டத்து��்கு வீரர்களை மாற்றிக்கொண்டிருந்தாலும் வேலைக்கு ஆகாது என்பதற்கு சன்ரைசர்ஸ் அணி உதாரணமாக உள்ளது. அந்த அணிதான் அதிகபட்சமாக 21 வீரர்களைப் பயன்படுத்தியுள்ளது. இந்த தடுமாற்றத்தால் தான் என்னவோ அந்த அணி விளையாடிய 7 ஆட்டங்களில் 1-ல் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.\nகொல்கத்தா அணியும் சென்னை போல குறைவான வீரர்களைப் பயன்படுத்தியுள்ளது. 14 வீரர்கள். என்ன பிரயோஜனம் அந்த அணி புள்ளிகள் பட்டியலில் 7-ம் இடத்தில் உள்ளது.\nஓர் அணியில் எத்தனை வீரர்களைப் பயன்படுத்துகிறோம், அவர்கள் மீது எந்தளவுக்கு நம்பிக்கை வைத்து கூடுதல் வாய்ப்புகளைத் தருகிறோம் என்பதை வைத்து வெற்றி, தோல்விகள் கிடைப்பதில்லை என்பதையே இந்தப் புள்ளிவிவரம் வெளிப்படுத்துகிறது.\nஐபிஎல் 2021: அதிக வீரர்களைப் பயன்படுத்தியுள்ள அணிகள்*\nஹைதராபாத் - 21 வீரர்கள்\nபஞ்சாப் - 18 வீரர்கள்\nதில்லி - 17 வீரர்கள்\n(* - அனைத்து அணிகளும் 7 ஆட்டங்களில் விளையாடிய நிலையில் எடுக்கப்பட்ட புள்ளிவிவரம் இது. நேற்றிரவு தங்களது 8-வது ஆட்டத்தில் விளையாடிய தில்லி அணியில் மாற்றம் எதுவும் இல்லை. பஞ்சாப் அணியில் பூரணுக்குப் பதிலாக மலான் விளையாடினார். எனவே 8-வது ஆட்டத்தின் முடிவில் தில்லி அணி அதே 17 வீரர்களைப் பயன்படுத்தியுள்ளது. பஞ்சாப் அணி 19 வீரர்களைப் பயன்படுத்தியுள்ளது.)\nஐபிஎல் போட்டி ஒத்திவைப்பு: பிசிசிஐக்கு ரூ. 2000 கோடி இழப்பு\nஐபிஎல்: இந்தியாவிலிருந்து நேராக இங்கிலாந்து செல்லும் நியூசி. வீரர்கள்\nசிஎஸ்கே வீரர்கள் ஊருக்குப் பத்திரமாகச் செல்லும்வரை தனது பயணத்தை ஒத்திவைத்த தோனி\nஐபிஎல்: நாடு திரும்பும் வெளிநாட்டு வீரா்கள்\nஐபிஎல் ஒத்திவைப்பு: ஊருக்குத் திரும்பிய இங்கிலாந்து வீரர்கள்\nசிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்ஸிக்கு கரோனா பாதிப்பு\nஉலகக்கோப்பை டி20 போட்டி: இந்தியாவிலிருந்து யுஏஇ-க்கு மாறுகிறது\n‘தி ஹன்ட்ரட்’ கிரிக்கெட்: இந்திய வீராங்கனைகள் 4 பேருக்கு அனுமதி\nwest bengal electionஆஸ்கர் விருதுஸ்டெர்லைட்முதல்வர் எடப்பாடி பழனிசாமிஇந்தியாவில் கரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/indian-2-film-confirmed-in-bigg-boss-stage/", "date_download": "2021-05-07T00:59:47Z", "digest": "sha1:OKRM5KXQDN3MKPYU6QXG5ATCJZKNJTHS", "length": 6445, "nlines": 90, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "பிக் பாஸ் மேடையில��� இந்தியன் - 2 படத்தை உறுதி செய்த சங்கர் - கமல் - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் பிக் பாஸ் மேடையில் இந்தியன் – 2 படத்தை உறுதி செய்த சங்கர் – கமல்\nபிக் பாஸ் மேடையில் இந்தியன் – 2 படத்தை உறுதி செய்த சங்கர் – கமல்\nகடந்த 1996-ம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கிய திரைப்படம் ‘இந்தியன்’. இந்தப் படத்தில் கமல்ஹாசன் வயதான தோற்றத்திலும் இளமையான ஒரு வேடத்திலும் நடித்திருப்பார். கமல்ஹாசனின் அட்டகாசமான நடிப்பாலும் விறுவிறுப்பான திரைக்கதையாலும் படம் பட்டிதொட்டி எங்கும் தெறி ஹிட் அடித்தது.\nஇந்தப் படத்தில் நடித்ததுக்காக கமல்ஹாசனுக்குத் தேசிய விருதும் கிடைத்தது. இந்தியன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்படும் என்று வெகுநாள்களாகத் தெரிவிக்கப்பட்டு வந்தது. ஆனால், அந்தப் படத்துக்குச் சம்பந்தப்பட்ட தரப்பு இதுநாள் வரை அதிகாரபூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை. தற்போது, இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் எடுப்பது குறித்தான அறிவிப்பு வந்துள்ளது.\n‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி கடைசி கட்டத்தை எட்டியுள்ளது. அதை வார இறுதியில் தொகுத்து வழங்கி வருகிறார் கமல்ஹாசன். இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்த இயக்குநர் ஷங்கர், ‘இந்தியன்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்போவது குறித்து அறிவிப்பை வெளியிட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல் வந்திருக்கின்றன.\nPrevious articleகருப்பன் திரை விமர்சனம்\nNext articleபிக் பாஸ் இறுதி முடிவு இது தான் \n4 சிறுவர்கள் உட்பட அஸ்வின் குடும்பத்தில் 10 பேருக்கு கொரோனா தொற்று. (அவர் பயந்த மாதிரியே ஆகிடிச்சே)\nகுஷி பட ஜோதிகா போல ட்ரான்ஸ்பிரென்ட் உடையில் புதிய முல்லை நடத்திய போட்டோ ஷூட்.\nவரும் தேர்தலில் விஜய்யின் மக்கள் இயக்கம் எடப்பாடிக்கு ஆதரவா \nபுகைப்படத்தில் இருக்கும் இந்த சூப்பர் ஸ்டார் நடிகைய தெரியுதா பாருங்க.\nநேர்கொண்ட பார்வை முக்கிய நடிகரை விளாசிய சின்மயி. யாரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.androidsis.com/ta/%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/3/", "date_download": "2021-05-07T00:26:53Z", "digest": "sha1:ZUSEFPD22ROAUNOSZ7SIRMFEF4RU4NJH", "length": 74972, "nlines": 327, "source_domain": "www.androidsis.com", "title": "மோட்டோரோலா செய்தி: துவக்கங்கள், தொலைபேசிகள், டேப்லெட்டுகள் மற்றும் பல - ஆண்ட்ராய்���ிஸ் | ஆண்ட்ராய்டிஸ் (பக்கம் 3)", "raw_content": "\nவாட்ஸ்அப் பிளஸை இலவசமாக பதிவிறக்கவும்\nAndroid க்கான WhatsApp ஐப் பதிவிறக்குக\nமோட்டோரோலா ரத்து செய்த மலிவான மோட்டோ 360 இதுவாகும்\nமோட்டோரோலா தனது புதிய தலைமுறை பிரபலமான ஸ்மார்ட்வாட்சை IFA இல் வழங்கியது. இருப்பினும், அமெரிக்க நிறுவனம் மலிவான மோட்டோ 360 ஐ ரத்து செய்தது.\nமோட்டோ எக்ஸ் ப்ளேவை வெல்லமுடியாத விலையில் வாங்குவது இப்போது சாத்தியம், குறைந்தபட்சம் வெள்ளை நிறத்தில்\nமோட்டோ எக்ஸ் ப்ளேவை சிறந்த விலையில் வாங்குவது ஏற்கனவே சாத்தியம், குறைந்த பட்சம் 350 யூரோக்களுக்கும் குறைவான வெள்ளை நிறம், கருப்பு நிறம், புரிந்துகொள்ள முடியாதபடி சுமார் 42 யூரோக்கள் அதிகம்.\nமோட்டோரோலா மோட்டோ எக்ஸ் பிளேயில் கைரோஸ்கோப்பை மறந்துவிடுகிறது\nமோட்டோரோலா மோட்டோ எக்ஸ் பிளேயில் உள்ள கைரோஸ்கோப்பை மறந்துவிட்டது, users 400 செலவாகும் ஒரு சாதனம் என்பதால் பல பயனர்களை ஆச்சரியப்படுத்தியது.\nமோட்டோ ஜி 2015 இன் அட்டையை எவ்வாறு மாற்றுவது என்பதை நாங்கள் உங்களுக்குக் காண்பிப்போம், இதனால் அது நீர்ப்புகாக்காது\nமோட்டோ ஜி 2015 இன் பின்புற அட்டையை எவ்வாறு மாற்றுவது என்பதை நாங்கள் உங்களுக்குக் காண்பிப்போம், இதனால் தண்ணீருக்கு எதிரான பாதுகாப்பை இழக்காதீர்கள் மற்றும் உங்கள் தொலைபேசியை காகித எடையாக மாற்றலாம்\nமோட்டோ ஜி 2015 விமர்சனம்: இந்த ஆண்டு பெரிய ஏமாற்றம்\nஇந்த மோட்டோ ஜி 2015 மதிப்பாய்வில் இந்த புதிய மோட்டோரோலா முனையம் எங்களுக்கு வழங்கும் எல்லாவற்றையும் வேறு யாருக்கும் முன்பாக நாங்கள் உங்களுக்கு கற்பிக்கிறோம்.\nஒப்பீடு மோட்டோ எக்ஸ் ப்ளே Vs சாம்சங் கேலக்ஸி எஸ் 6\nமோட்டோ எக்ஸ் ப்ளே மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ் 6 ஆகியவற்றை நேருக்கு நேர் வைக்கும் ஒரு ஒப்பீடு, அவற்றில் எது சிறந்ததாக இருக்கும்\nமோட்டோ ஜி 2014 மற்றும் மோட்டோ ஜி 2015 க்கு இடையிலான ஒப்பீடு\nமோட்டோ ஜி 2015 மற்றும் மோட்டோ ஜி 2014 ஐ நேருக்கு நேர் வைக்கும் ஒரு ஒப்பீடு, இதில் ஒரு தெளிவான வெற்றியாளர் இருக்கிறார், அது சிறந்த சவால்களில் ஒன்றாக இருக்கலாம்.\nDxOMark மோட்டோ எக்ஸ் ஸ்டைலை சிறந்த கேமரா கொண்ட மூன்றாவது ஸ்மார்ட்போனாகக் கொண்டுள்ளது\nDxOMark தரப்படுத்தல் குறிப்பில், மோட்டோ எக்ஸ் ஸ்டைல் ​​கேமரா என்ன என்பதில் மூன்றாவது சிறந்த தொலைபேசியாக வைக்கப்பட்டுள்ளது. மிகவும் சாதனை.\nமோட்டோ எக்ஸ் ப்ளே, சரியான ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்\nமோட்டோ எக்ஸ் ப்ளே இப்போது சிறந்த ஸ்மார்ட்போனாக இருக்க முடியும், இது சிறந்த வன்பொருள், சிறந்த வடிவமைப்பு மற்றும் ஸ்டைல் ​​மற்றும் அதன் 399 XNUMX ஐ விட குறைந்த விலையில் வருகிறது.\nமோட்டோரோலா 2015 மோட்டோ ஜி: 5 திரை, ஸ்னாப்டிராகன் 410 மற்றும் 13 எம்பி கேமராவை வழங்குகிறது\nமோட்டோரோலாவிலிருந்து 2015 அங்குல திரை, 5 எம்.பி கேமரா மற்றும் ஸ்னாப்டிராகன் 13 சிப் ஆகியவற்றைக் கொண்ட புதிய மோட்டோ ஜி 410 € 199 க்கு.\nமோட்டோ எக்ஸ் ஸ்டைல், புதிய மோட்டோரோலா ஃபிளாக்ஷிப்பை வழங்கியது\nமோட்டோரோலா உற்பத்தியாளரின் புதிய முதன்மையான மோட்டோ எக்ஸ் ஸ்டைலை வழங்கியுள்ளது, இது பணத்திற்கான அதன் மதிப்புக்கு சந்தையை வெடிக்கச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது\nமோட்டோரோலா விளக்கக்காட்சி நிகழ்வை நேரடியாகப் பின்தொடர்வது எப்படி. இன்றைய பெரிய நாள் \nமோட்டோரோலா விளக்கக்காட்சி நிகழ்வை நேரலையில் காண இன்று உங்களை அழைக்கிறோம்.\nமோட்டோரோலா மோட்டோ ஜி 2015 இன் முன்பதிவில் Fnac விவரக்குறிப்புகள் மற்றும் விலையை வெளியிடுகிறது\nபுதிய மோட்டோரோலா மோட்டோ ஜி 2015 Fnac இணையதளத்தில் கூறப்படும் விலை மற்றும் விவரக்குறிப்புகளை வெளிப்படுத்தியது. உத்தியோகபூர்வ தகவல் உறுதிப்படுத்தவோ மறுக்கவோ இல்லை.\nஜூலை 28, 2015 க்கான மோட்டோரோலா ஸ்ட்ரீமிங் நிகழ்வு. நீங்கள் எங்களுக்கு என்ன வழங்க விரும்புகிறீர்கள்\nஅடுத்த ஜூலை 28, 2015 க்கான புதிய மோட்டோரோலா ஸ்ட்ரீமிங் நிகழ்வின் அதிகாரப்பூர்வ உறுதிப்பாட்டை இன்று மாலை 15:XNUMX மணிக்கு பெற்றோம்.\nமோட்டோ ஜி 2015 இன் புதிய படங்கள் கசிந்தன\nமோட்டோரோலாவும் கசிவுகளும் மிகச் சரியாகப் போவதில்லை, மீண்டும், எதிர்கால மோட்டோ ஜி 2015 இன் புதிய படங்களை நாம் காணலாம்.\nமோட்டோ ஜி 2015 ஐ ஜூலை 28 அன்று வழங்கலாம்\nஅமெரிக்க முனையத்தின் அடுத்த தலைமுறை, மோட்டோ ஜி 2015, ஜூலை 28 அன்று வழங்கப்படலாம்.\nமோட்டோரோலா மோட்டோ ஜி 2015 புதிய ரெண்டர்களில் காணப்படுகிறது\nமோட்டோ ஜி இன் அடுத்த தலைமுறை ஒரு மூலையைச் சுற்றி உள்ளது. மோட்டோ ஜி 2015 ரெண்டர்களாக தோன்றியது.\nபுதிய மோட்டோ ஜி 2015 இன் அதிகாரப்பூர்வ ரெண்டர் படங்களை வடிகட்டியது\nபுதிய மோட்டோரோலா மோட்டோ ஜி 2015 இன் ரெண்டர் படங்கள் வடிகட்டப்பட்டதாகத் தோன்றுகின்றன, இது இடைப்பட்ட இடைவெளியில் தொடர்ந்து ஆட்சி ச���ய்யும் நோக்கத்துடன் வருகிறது.\nமோட்டோ ஜி 2015 இப்படி இருக்குமா\nமோட்டோரோலாவின் ஸ்மார்ட்போனின் மூன்றாம் தலைமுறை மோட்டோ ஜி 2015 இன் படம் கசிந்து இணையம் முழுவதும் பரவியுள்ளது.\nவரவிருக்கும் மோட்டோரோலா டிராய்ட் 2 4.200 எம்ஏஎச் பேட்டரி, ஸ்னாப்டிராகன் 810 வதந்திகள்\nஅடுத்த மோட்டோரோலா டிராய்ட் 2 இன் முதல் வதந்திகள் தோன்றும். 4.200 mAh பேட்டரி மற்றும் ஸ்னாப்டிராகன் 810 உடன் வரக்கூடிய முனையம்.\nமூன்றாம் தலைமுறை மோட்டோ ஜி 2015 வாழ்க்கையின் அறிகுறிகளைக் காட்டுகிறது\nஒரு பிரபலமான ஆன்லைன் ஸ்டோரில் சமீபத்தில் தோன்றியதால் அடுத்த மோட்டோ ஜி 2015 ஒரு மூலையில் உள்ளது.\nமோட்டோ இ 2015 ஆண்ட்ராய்டு 5.1 லாலிபாப்பைப் பெறத் தொடங்குகிறது\nஏற்கனவே பல பயனர்களை சென்றடைந்துள்ள மோட்டோ இ 5.1 க்கான ஆண்ட்ராய்டு 2015 இன் அனைத்து செய்திகள் மற்றும் பிழைத் திருத்தங்களையும் நாங்கள் பட்டியலிடுகிறோம்\nமோட்டோ எக்ஸ் (2013) செல்லும் வழியில் Android லாலிபாப் புதுப்பிப்பு\nஅடுத்த சில வாரங்களுக்கு மோட்டோ எக்ஸ் (2013) க்கான ஆண்ட்ராய்டு லாலிபாப்பின் வரிசைப்படுத்தல் தொடங்கும். இந்த சிறந்த தொலைபேசியின் பயனர்களால் எதிர்பார்க்கப்படும் பதிப்பு\nமோட்டோ எக்ஸ் 2015 240 எஃப்.பி.எஸ்\nஅடுத்த தலைமுறை மோட்டோரோலா ஸ்மார்ட்போன்கள், மோட்டோ எக்ஸ் 2015 மெதுவாக இயக்கக்கூடியதாக இருக்கும், குறிப்பாக 240 எஃப்.பி.எஸ்.\nமோட்டோரோலா மோட்டோ எக்ஸ் இரண்டாம் தலைமுறைக்கு ஆண்ட்ராய்டு 5.1 பயன்படுத்தப்படுவதில் தொடங்குகிறது\nமோட்டோரோலா அண்ட்ராய்டு 5.1 ஐ இரண்டாம் தலைமுறை மோட்டோ எக்ஸ் நிறுவனத்திற்கு அனுப்புவதை அறிவித்துள்ளது\nமோட்டோ எக்ஸ் 2015 இன் சாத்தியமான விவரக்குறிப்புகள் வடிகட்டப்படுகின்றன: 5,2 ″ QHD திரை, ஸ்னாப்டிராகன் 808 மற்றும் 4 ஜிபி ரேம்\nமோட்டோரோலா 2015 மோட்டோ எக்ஸ் குவாட்ஹெச்.டி திரை, 4 ஜிபி ரேம் மற்றும் ஸ்னாப்டிராகன் 808 ஆகியவற்றை ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது\nமோட்டோ ஜி 4 ஜி மதிப்பாய்வு செய்யவும்\nமோட்டோ ஜி 4 ஜி இன் மதிப்பாய்வை இன்று நாங்கள் உங்களுக்குக் கொண்டு வருகிறோம், இதன்மூலம் எல்.டி.இ இணைப்புடன் கூடிய மோட்டோ ஜி 2014 இன் இந்த புதிய பதிப்பு எங்களுக்கு வழங்கும் அனைத்தையும் செயல்பாட்டில் காணலாம்.\nமோட்டோரோலாவுக்கு இப்போது ஒரு டேப்லெட்டை வெளியிடுவதில் ஆர்வம் இல்லை\nஅமெரிக்க நி��ுவனமான மோட்டோரோலா, தற்போது, ​​ஒரு டேப்லெட்டை தயாரிக்க எந்த ஆர்வமும் இல்லை என்று அறிவித்துள்ளது.\nஅடுத்த மோட்டோ எக்ஸ் 2015 ஆகஸ்டில் வெளிவரக்கூடும்\nமோட்டோரோலாவின் தலைமை நிர்வாக அதிகாரி, ஒவ்வொரு ஆண்டும் மோட்டோரோலா சாதனங்களின் வரம்பு புதுப்பிக்கப்படும் என்று அறிவித்துள்ளார், எனவே மோட்டோ எக்ஸ் 2015 ஆகஸ்டில் வெளிவருகிறது\n[APK] எந்த Android முனையத்திலும் மோட்டோரோலா கேலரி பயன்பாட்டைப் பதிவிறக்கி நிறுவவும்\nஅடுத்து எந்த ஆண்ட்ராய்டு முனையத்திலும், ரூட் தேவையில்லாமலும் மோட்டோரோலா கேலரி பயன்பாட்டை எவ்வாறு நிறுவுவது என்பதை விளக்குகிறேன்.\nமோட்டோ இ 2015 ஆண்ட்ராய்டிஸ் மற்றும் மோட்டோரோலா ஸ்பெயினுக்கு நன்றி\nபுதிய மோட்டோரோலா மோட்டோ இ 4 ஜி வெல்ல விரும்புகிறீர்களா பதில் ஆம் எனில், ஆண்ட்ரோயிட்ஸிஸ் மற்றும் மோட்டோரோலா ஸ்பெயின் ஆகியவை உங்களுக்கு முற்றிலும் இலவச கப்பல் செலவுகளை வழங்கும் மோட்டோ இ 2015 கிவ்அவேயில் பங்கேற்கவும்.\nமோட்டோரோலா மோட்டோ இ 2015 வாங்குவது இப்போது அமேசான் ஸ்பெயின் மூலம் சாத்தியமாகும்\nஎங்களிடம் ஏற்கனவே புதிய மோட்டோரோலா முனையம் ஆன்லைனில் விற்பனைக்கு உள்ளது, எனவே நீங்கள் மோட்டோ இ 2015 ஐ வாங்க விரும்பினால் இங்கே எங்கு, எப்படி என்று நாங்கள் உங்களுக்கு சொல்கிறோம்\n[வீடியோ] மோட்டோ இ 2015 பகுப்பாய்வு, சிறிய மோட்டோரோலாவை முழுமையாக சோதித்தோம்\nமோட்டோ இ 2015 இன் முழுமையான பகுப்பாய்வை இங்கே நான் உங்களுக்கு விட்டு விடுகிறேன், இது குறைந்த-இறுதி ஆண்ட்ராய்டின் பிரிவை ஆட்சி செய்ய அழைக்கப்படும் ஒரு முனையமாகும், இது 129 யூரோக்கள் மட்டுமே உள்ள ஒரு முனையத்திற்கான இன்ஃபார்க்சனின் தொழில்நுட்ப விவரக்குறிப்புகளுடன் நடுத்தர வரம்பைச் சேர்ந்ததாக இருக்கலாம்.\n[வீடியோ] மோட்டோ 360 பற்றி உங்களுக்குத் தெரியாத ஒரு செயல்பாடு\nநிச்சயமாக என்னைப் போன்ற உற்பத்தியாளரான மோட்டோரோலாவிடமிருந்து ஸ்மார்ட்போன் உங்களிடம் இல்லையென்றால், மோட்டோ 360 இன் இந்த செயல்பாடு உங்களுக்குத் தெரியாது.\nபுதிய மோட்டோரோலா மோட்டோ இ 4 ஜி விளக்கக்காட்சி நிகழ்வு, நீங்கள் எங்கு தேர்வு செய்தாலும் தொகுக்கப்படாத மோட்டோ இ 4 ஜி\nஆண்ட்ராய்ட்ஸிஸிலிருந்து இந்த சிறப்பு நிகழ்வுக்கு, உங்களை எங்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் திறக்கப்படாத மோட்டோ இ 4 ஜி க்��ு அழைக்கிறோம்.\nபுதிய மோட்டோரோலா மோட்டோ இ 4 ஜி இப்போது அதிகாரப்பூர்வமானது. அதன் அனைத்து தொழில்நுட்ப விவரக்குறிப்புகள் மற்றும் அதன் அதிகாரப்பூர்வ விலை ஆகியவற்றை நாங்கள் உங்களுக்கு சொல்கிறோம்\nபுதிய மோட்டோரோலா மோட்டோ இ 4 ஜி யின் அனைத்து அதிகாரப்பூர்வ விவரக்குறிப்புகளையும் நாங்கள் ஏற்கனவே அறிவோம்.\nமோட்டோரோலா மர்ம பெட்டியில் என்ன இருக்கும்\nமோட்டோரோலா மர்ம பெட்டியின் உள்ளடக்கங்களைப் பற்றிய எனது ஓரளவு அருமையான ஊகங்கள்\nபுதிய மோட்டோ இ 2015 இன் அனைத்து தகவல்களும் வடிகட்டப்படுகின்றன\nஇப்போது புதிய மோட்டோ இ 2015 பற்றிய அனைத்து தகவல்களும் கசிந்துள்ளன, அந்த நேரத்தில் நாம் பார்த்த வடிவமைப்பை உறுதிப்படுத்தும் படங்கள் முதல் மோட்டோ இ 2015 இன் தொழில்நுட்ப பண்புகள் வரை, லெனோவா சமீபத்தில் வாங்கிய உற்பத்தியாளரின் மின் வரம்பின் புதிய தலைமுறை.\nமோட்டோரோலா மோட்டோ இ, மோட்டோ ஜி மற்றும் மோட்டோ எக்ஸ் டெர்மினல்களின் மறைக்கப்பட்ட மெனுவை எவ்வாறு அணுகுவது\nமோட்டோரோ இ, மோட்டோ ஜி அல்லது மோட்டோ எக்ஸ் போன்ற மோட்டோரோலா டெர்மினல்களின் மறைக்கப்பட்ட மெனுவை அணுகுவதற்கான ஒரு தந்திரத்தை கீழே விளக்குகிறேன்.\nமோட்டோரோலா ஒரு கைரேகை சென்சாரை ஒருங்கிணைக்காததற்கான காரணங்களை விளக்குகிறது\nநெக்ஸஸ் 6 இறுதியாக கைரேகை சென்சார் ஏன் இல்லை என்று முன்னாள் மோட்டோரோலா நிர்வாகி விளக்குகிறார்\nமோட்டோ ஜி 2014 க்கான லாலிபாப்பிற்கான புதுப்பிப்புகள் எங்கே\nமோட்டோ ஜி 2014 வரம்பிற்கான ஆண்ட்ராய்டு லாலிபாப்பிற்கான புதுப்பிப்புகளின் உண்மை, குறைந்தபட்சம் ஸ்பெயினில், ஒரு கைமேராவாகும், ஏனெனில் இந்த கட்டத்தில் அண்ட்ராய்டு லாலிபாப்பின் வாக்குறுதியளிக்கப்பட்ட அளவைப் பற்றி எந்த செய்தியும் இல்லை.\nஒரு புதிய மோட்டோரோலா எஃப்.சி.சி மோட்டோ இ 2015 வழியாக பார்வையில் செல்கிறது\nமோட்டோரோலா எஃப்.சி.சி வழியாக ஐ.எச்.டி.டி .56 கியூ.எஃப் 1 என்ற குறியீட்டு பெயருடன் ஒரு புதிய ஸ்மார்ட்போன் கடந்துவிட்டது.\nஅண்ட்ராய்டு 5.0 லாலிபாப் விரைவில் 2013 மற்றும் 2014 மோட்டோரோலா சாதனங்களுக்கு வருகிறது\nமோட்டோரோலா 2013 மற்றும் 2014 இல் வெளியிடப்பட்ட அனைத்து சாதனங்களையும் அண்ட்ராய்டு 5.0 லாலிபாப்பிற்கு புதுப்பிக்கும். எதிர்பார்க்கப்பட்ட புதுப்பிப்பு.\nமோட்டோரோலாவின் மிகப்பெரிய வெற்றி எங்கே உள்ளது\nஆண்ட்ராய்டு இயக்க முறைமையுடன் டெர்மினல்கள் உலகில் பின்பற்ற வேண்டிய முக்கிய குறிப்புகளில் ஒன்றாக வட அமெரிக்க நிறுவனத்தை நிலைநிறுத்திய மோட்டோரோலாவின் வெற்றிக்கான சிறந்த திறவுகோல் என்ன என்பதை நாங்கள் பகுப்பாய்வு செய்கிறோம்.\nஆண்ட்ராய்டு வேர் 5.0.1 இன் புதிய பதிப்பு மோட்டோ 360 இல் எங்களுக்கு வழங்குகிறது\nஆண்ட்ராய்டு வேர் 5.0.1 மோட்டோ 360 இல் எங்களுக்கு வழங்கும் அனைத்தையும் இன்று உங்களுக்குக் காட்டுகிறேன், இது OTA வழியாக இன்று வந்துள்ள புதிய புதுப்பிப்பு.\nபுதிய மோட்டோ எக்ஸ் 2014 ஏற்கனவே ஆண்ட்ராய்டு 5.0 லாலிபாப்பைப் பெறுகிறது\nமோட்டோரோலா ஏற்கனவே மோட்டோ எக்ஸ் 2014 ஐ ஆண்ட்ராய்டு 5.0 லாலிபாப்பிற்கு புதுப்பிக்க OTA ஐ வெளியிட்டுள்ளது, இது படிப்படியாக ஐரோப்பிய மாடல்களை எட்டும்\nமோட்டோரோலா நெக்ஸஸ் 6 ஐப் போன்ற ஒரு டிராய்டு பேப்லெட்டைத் தயாரிக்கலாம், ஆனால் சிறந்த அம்சங்களுடன்\nமோட்டோரோலா நெக்ஸஸ் 6 ஐப் போன்ற வடிவமைப்பைக் கொண்ட புதிய டிரயோடு சாதனத்தைத் தயாரிக்கலாம், ஆனால் சிறந்த அம்சங்களுடன்\nமோட்டோரோலா தனது ஆடம்பரமான வடிவமைப்பைப் புகழ்ந்து மோட்டோ 360 இன் நான்கு அறிவிப்புகளை வெளியிடுகிறது\nமோட்டோரோலா மோட்டோ 360 க்கான நான்கு புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது, அதன் பிரபலமான ஸ்மார்ட்வாட்சின் பிரீமியம் வடிவமைப்பை புகழ்ந்துள்ளது.\nமோட்டோ ஜி 2013 ஏற்கனவே ஆண்ட்ராய்டு 5.0 லாலிபாப்பைப் பெறுகிறது\nஆம், மோட்டோரோலா அதை மீண்டும் செய்துள்ளது. ஆண்ட்ராய்டு 2013 க்கான புதுப்பிப்பைப் பெறுவதற்கான எதிர்பார்க்கப்பட்ட அறிவிப்பை 5.0 ஆம் ஆண்டின் மோட்டோ ஜி ஏற்கனவே பெற்றுள்ளது\nமோட்டோ மின் வாரிசின் சாத்தியமான பண்புகள் வடிகட்டப்படுகின்றன\nமோட்டோரோலாவின் மலிவான ஸ்மார்ட்போனின் இரண்டாவது தலைமுறை இருக்குமா டெக்மேனியாக்ஸைச் சேர்ந்த தோழர்களின் கூற்றுப்படி, ஆம், அவர்கள் மோட்டோரோலா மோட்டோ மின் வாரிசின் தொழில்நுட்ப பண்புகள் பற்றி பேசத் துணிவார்கள்.\nஆண்ட்ராய்டு 5.0 க்கு புதுப்பிக்கப்பட்ட முதல் ஸ்மார்ட்போன் மோட்டோ ஜி ஆகும்\nபுதிய மோட்டோ ஜி 2014, அதன் வட அமெரிக்க பதிப்பில், ஏற்கனவே OTA வழியாக Android 5.0 Lollipop க்கான புதுப்பிப்பைப் பெற்று வருகிறது. மோட்டோரோலாவால் குறிக்கப்பட்ட மற்றொரு புள்ளி\nமோட்டோ ஜி 2014 இந்த ஆண்டு இறுதிக்குள் ஆண்ட்ராய்டு லாலிபாப்பிலும் புதுப்பிக்கப்படும்\nஇதுபோன்ற செய்திகளால், மோட்டோரோலா தனது வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளது என்பதில் எனக்கு ஆச்சரியமில்லை, மேலும் மோட்டோ ஜி 2014 இந்த ஆண்டு இறுதிக்குள் லாலிபாப்பின் அளவைப் பெறும்.\nமோட்டோரோலா பிரான்ஸ் மோட்டோ மேக்ஸ் ஐரோப்பாவிற்கு வராது என்பதை உறுதிப்படுத்துகிறது\nஅவர்கள் செய்தியை நீக்கியிருந்தாலும், மோட்டோரோலா பிரான்சின் ட்விட்டர் சுயவிவரத்தில் மோட்டோ மேக்ஸ் இறுதியாக ஐரோப்பாவிற்கு வரப்போவதில்லை என்று அறிவித்தனர்.\nஆண்ட்ராய்டு லாலிபாப்பின் புதிய கசிந்த பதிப்பிற்கு மோட்டோ எக்ஸ் 2014 ஐ எவ்வாறு புதுப்பிப்பது\nசில மணிநேரங்களுக்கு முன்பு கசிந்த முதல் கசிந்த ஃபார்ம்வேரைப் பயன்படுத்தி மோட்டோ எக்ஸ் 2014 ஐ ஆண்ட்ராய்டு 5.0 லாலிபாப்பிற்கு எவ்வாறு புதுப்பிப்பது என்பது இங்கே.\nமோட்டோ எக்ஸ் 2014 இல் முதல் ஆண்ட்ராய்டு லாலிபாப் வீடியோ\nமோட்டோ எக்ஸ் 2014 இல் ஆண்ட்ராய்டு லாலிபாப் எப்படி இருக்கிறது என்பதைக் காணக்கூடிய முதல் வீடியோ ஏற்கனவே எங்களிடம் உள்ளது, இது ஓடிஏ வழியாக அண்ட்ராய்டு 5.0 ஐப் பெறும் முதல் முனையமாகும்.\nமோட்டோரோலா ஒரு புதிய மோட்டோ ஜி 2014 4 ஜி கையில் வைத்திருக்க முடியும்\nமோட்டோரோலா தனது புதிய வீச்சு ஸ்மார்ட்போன்களுடன் சிறப்பு பத்திரிகைகளிடமிருந்து மீண்டும் விமர்சனங்களை பெற்றுள்ளது. புதிய மோட்டோ ஜி 2014 மற்றும் புதிய மோட்டோ எக்ஸ் 2014 ஆகிய இரண்டும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளன, இல்லினாய்ஸை தளமாகக் கொண்ட உற்பத்தியாளர் ஏற்கனவே புதிய மோட்டோ ஜி 4 ஜி-யில் பணியாற்றக்கூடும் என்று தெரிகிறது.\nமோட்டோ எக்ஸ் 2014 ஆண்ட்ராய்டு 5.0 லாலிபாப்பைப் பெற்ற முதல் முனையமாக மாறக்கூடும்\nஎனவே விஷயங்கள் முடிந்துவிட்டால், அது அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டிருந்தால், ஆண்ட்ராய்டு 2014 லாலிபாப்பைப் பெறும் முதல் முனையமாக மோட்டோ எக்ஸ் 5.0 இருக்கும்\nமோட்டோரோலா மோட்டோ மேக்ஸ்ஸை வழங்குகிறது, இது இப்போது பிரேசிலில் உள்ளது\nமோட்டோரோலா பிரேசிலில் மோட்டோ மேக்ஸ்ஸை வழங்கியுள்ளது, இது மிகவும் கவர்ச்சிகரமான சாதனமாகும், இது இப்போது ஐரோப்பாவிற்கு வராது\nஆண்ட்ராய்டு 5.0 லாலிபாப்பிற்கு புதுப்பிக்க மோட்டோரோலா சாதனங்களின் பட்டியல் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது\nஆண்ட்ராய்டு 5.0 லாலிபாப்பிற்கு புதுப்பிக்க மோட்டோரோலா சாதனங்களின் பட்டியல் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nமோட்டோரோலா டிரயோடு டர்போ 48 மணிநேர சுயாட்சி மற்றும் மிகவும் சுவாரஸ்யமான அம்சங்களை வழங்குகிறது\nமோட்டோரோலா மோட்டோரோலா டிரயோடு டர்போவை அறிமுகப்படுத்தியுள்ளது, இது வெரிசோன் ஆபரேட்டர் மூலம் மட்டுமே கிடைக்கும் நம்பமுடியாத அம்சங்களைக் கொண்ட ஸ்மார்ட்போன்\nமோட்டோ 360 இன் அனைத்து குரல் கட்டளைகளும். மிகவும் மேம்படுத்தக்கூடிய செயல்பாடு\nமோட்டோ 360 இன் அனைத்து குரல் கட்டளைகளையும் நீங்கள் காணக்கூடிய வகையில் இந்த வீடியோவை இங்கே நீங்கள் கையாளுகிறீர்கள். சில மிகவும் பயனுள்ள கட்டளைகள் ஆனால் அவை இன்னும் மேம்படுத்த நிறைய உள்ளன.\nமோட்டோரோலாவிலிருந்து ஆண்ட்ராய்டு லாலிபாப்பிற்கான அதிகாரப்பூர்வ புதுப்பிப்புகளின் பட்டியல்\nஅண்ட்ராய்டு லாலிபாப்பைப் பெறும் மோட்டோரோலா டெர்மினல்களின் முதல் அதிகாரப்பூர்வ பட்டியலை இங்கே நாங்கள் உங்களுக்கு விட்டு விடுகிறோம்.\nவேக சோதனை: எல்ஜி ஜி 2 vs மோட்டோ எக்ஸ் 2014\nஎங்களிடம் ஏற்கனவே ஒரு புதிய ஆண்ட்ராய்டிஸ் வேக சோதனை உள்ளது, இந்த நேரத்தில் எல்ஜி ஜி 2 Vs மோட்டோ எக்ஸ் 2014 ஐ எதிர்கொள்கிறோம், இரண்டு டெர்மினல்களுக்கும் இடையே அதிக வித்தியாசம் இருக்கும் என்று நினைக்கிறீர்களா\nபுதிய மோட்டோரோலா மோட்டோ எக்ஸ் 2014 ஐ முழுமையாக சோதித்தோம்\nநேர்மறை மற்றும் எதிர்மறை அம்சங்களை உங்களுக்குத் தெரிவிக்க புதிய மோட்டோரோலா மோட்டோ எக்ஸ் 2014 ஐ உங்களுக்காக பகுப்பாய்வு செய்கிறோம்.\nமோட்டோரோலா மோட்டோ ஜி மற்றும் மோட்டோ இ ஆகியவற்றின் மோட்டோரோலா ரேடியோ எஃப்எம் பயன்பாட்டை புதுப்பிக்கிறது\nஉங்களிடம் மோட்டோ ஜி அல்லது மோட்டோ இ இருந்தால், இப்போது ரேடியோவைக் கேட்க உற்பத்தியாளரின் பயன்பாடான மோட்டோரோலா ரேடியோ எஃப்எம் புதுப்பிக்கலாம்\nவேக சோதனை: எல்ஜி ஜி 3 vs மோட்டோ ஜி 2014\nஎல்ஜி ஜி 3 Vs மோட்டோ ஜி 2014 ஐ எதிர்கொள்ளும் ஆண்ட்ராய்டிஸ் வேக சோதனையுடன் நாங்கள் மீண்டும் இங்கு வந்துள்ளோம், சந்தேகத்திற்கு இடமின்றி இரண்டு பரபரப்பான முனையங்கள் ஒரு பெரிய விலை வரம்பால் பிரிக்கப்பட்டுள்ளன.\nவேக சோதனை: எல்ஜி ஜி 2 vs மோட்டோ ஜி 2014\nஎல்ஜி ஜி 2 Vs மோட்டோ ஜி 2014 ஐ எதிர்கொள்ளும் இந்த வேக சோதனையை இங்கே நான் உங்களுக்கு விட்ட��� விடுகிறேன், வெவ்வேறு பயன்பாடுகளை செயல்படுத்துவதன் அடிப்படையில் இரு முனையங்களும் எங்களுக்கு வழங்கும் உண்மையான பயனர் அனுபவத்தைப் பார்க்க.\nமோட்டோ ஜி விமர்சனம்: சிறந்த இடைப்பட்ட ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை நாங்கள் முழுமையாக சோதித்தோம்\nஆண்ட்ராய்டு மிட்-ரேஞ்சைப் பொருத்தவரை, ஆண்டின் சிறந்த ஸ்மார்ட்போன் என்ற தலைப்போடு இருக்க அழைக்கப்படும் முனையமான மோட்டோ ஜி 2014 இன் வீடியோ பகுப்பாய்வு இங்கே உள்ளது.\nரூட் மோட்டோ ஜி (2013) பெறுவது எப்படி\nஇங்கே நீங்கள் ஒரு முழுமையான டுடோரியலைக் கொண்டுள்ளீர்கள், இதன் மூலம் நீங்கள் மோட்டோ ஜி-ஐ மிக எளிமையான முறையில் ரூட் செய்ய முடியும்.\nபுதிய மோட்டோ எக்ஸ் பகுப்பாய்வு, சாம்சங் எஸ் 5 வரை நிற்க விரும்பும் உற்பத்தியாளரின் புதிய உயர்நிலை.\nபுதிய மோட்டோ எக்ஸ் உடன் முதல் பதிவுகள்\nவாக்குறுதியளிக்கப்பட்டவை ஒரு கடன், எனவே புதிய மோட்டோ எக்ஸ் பற்றிய பகுப்பாய்வை நாங்கள் உங்களிடம் கொண்டு வருகிறோம்\nசந்தையில் சிறந்த இடைப்பட்ட புதிய மோட்டோ ஜி ஐ சோதித்தோம்\nபுதிய மோட்டோ ஜி யை எங்களால் சோதிக்க முடிந்தது, மேலும் பதிவுகள் இன்னும் சாதகமாக இருக்க முடியாது.\nமோட்டோ வாய்ஸ் உங்கள் மோட்டோரோலா தொலைபேசியில் குரல் கட்டளைகளுடன் கூடுதல் கட்டுப்பாட்டை வழங்குகிறது\nமோட்டோ வாய்ஸ் என்பது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட புதிய மோட்டோரோலா சாதனங்களுக்கான புதுப்பிக்கப்பட்ட மற்றும் புகழ்பெற்ற பயன்பாடாகும்\nபுதிய மோட்டோ எக்ஸ் 2014 இன் அனைத்து வால்பேப்பர்களையும் பதிவிறக்கவும்\nபுதிய மோட்டோரோலா மோட்டோ எக்ஸ் 2014 இன் வால்பேப்பர்களை அவற்றின் தெளிவான வண்ணங்களுடன் பதிவிறக்கவும்\nமோட்டோரோலா மோட்டோ எக்ஸ் (2014) உடன் எடுக்கப்பட்ட புகைப்படங்களின் எடுத்துக்காட்டுகள்\nஇந்த புதிய மோட்டோரோலா தொலைபேசியின் கேமராவின் தரத்தைக் காட்டும் மோட்டோ எக்ஸ் 2014 உடன் எடுக்கப்பட்ட சில எடுத்துக்காட்டு புகைப்படங்கள்\nஅண்ட்ராய்டு 4.4.4 மோட்டோ ஜி-க்கு வரத் தொடங்குகிறது\nஅண்ட்ராய்டு 4.4.4 மோட்டோரோலாவின் மோட்டோ ஜி ஐ அடையத் தொடங்குகிறது என்ற செய்தியை நாம் அறிந்த கட்டுரை\nமோட்டோரோலா மோட்டோ 360 ஸ்மார்ட்வாட்சைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும்\nமோட்டோரோலாவின் மோட்டோ 360 ஸ்மார்ட்வாட்ச் இந்த கோடையில் வரும். இந்த அணியக்கூடியதைப் பற்றிய எங்களிடம் உள்ள அனைத்து தகவல்களையும் நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம்\nமோட்டோ எக்ஸ் திறக்க \"டிஜிட்டல் டாட்டூ\" சிறந்த வழியாகுமா\nடிஜிட்டல் டாட்டூ என்பது உங்கள் மோட்டோ எக்ஸ் ஸ்மார்ட்போனின் பாதுகாப்பு மற்றும் திறப்பிற்கான மோட்டோரோலாவின் பந்தயம் ஆகும்\nமோட்டோரோலா மோட்டோ எக்ஸ் மற்றும் மோட்டோ ஜி ஆகியவற்றில் ஆண்ட்ராய்டு எல் பார்ப்போம் என்பதை உறுதிப்படுத்துகிறது\nஇந்த வீழ்ச்சிக்கு கூகிள் இறுதியாக வெளியிடும் போது மோட்டோ எக்ஸ் மற்றும் மோட்டோ ஜி ஆகியவற்றில் உள்ள ஆண்ட்ராய்டு எல் இருக்கும்\nமோட்டோரோலா மோட்டோ 360 ஐ நெருக்கமாகக் காட்டும் வீடியோவை வெளியிடுகிறது\nமோட்டோரோலாவின் மோட்டோ 360 என்பது அண்ட்ராய்டு வேரின் கீழ் ஸ்மார்ட்வாட்சின் மூன்றாவது அணுகுமுறையாகும், இது அணியக்கூடியவர்களுக்கான ஆண்ட்ராய்டின் திருத்தப்பட்ட பதிப்பாகும்\nமோட்டோ எக்ஸ் +1 இன் படம் அதன் சாத்தியமான விவரக்குறிப்புகள் மற்றும் வெளியீட்டு நாளுடன் கசிந்துள்ளது\nமோட்டோ எக்ஸ் +1 இன் படத்தை கசிந்தது சாத்தியமான விவரக்குறிப்புகள் மற்றும் ஆகஸ்ட் மாத வெளியீட்டு தேதி\nபொறையுடைமை சோதனை, மோட்டோ ஜி Vs மோட்டோ இ, ஃப்ராட்ரிசிடல் சண்டையை யார் வெல்வார்கள்\nதற்செயலான நீர்வீழ்ச்சியின் எதிர்ப்பின் அடிப்படையில் இன்று நாம் மோட்டோ ஜி Vs மோட்டோ E க்கு ஒரு சண்டையை எதிர்கொள்கிறோம்.\nநீர்ப்புகா மோட்டோ ஜி, நீங்கள் நம்பவில்லையா\nமோட்டோரோலா மோட்டோ ஜி நீர்ப்புகா இருக்குமா இது கடைசியாக H2O இல் 30 நிமிடங்கள் நீரில் மூழ்குமா இது கடைசியாக H2O இல் 30 நிமிடங்கள் நீரில் மூழ்குமா இந்த வீடியோவில் நீங்களே பாருங்கள்.\nடெவலப்பர்களுக்காக மோட்டோ இ குறியீடு வெளியிடப்பட்டது\nமோட்டோரோலா மோட்டோ மின் குறியீட்டை வெளியிட்டுள்ளது, இது டெவலப்பர்கள் தனிப்பயன் ரோம்களை உருவாக்க அனுமதிக்கும்\nஅடுத்த இலக்கு சீனாவின் ஃபோர்ட் வொர்த்தில் மோட்டோரோலா தொழிற்சாலை மூடப்பட்டது\nஅமெரிக்காவில் உள்ள மோட்டோரோலா தொழிற்சாலை இந்த ஆண்டின் இறுதியில் மூடப்படும். அடுத்த இலக்கு தெரியவில்லை, ஆனால் சீனா தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாக இருக்க வேண்டும்.\nமோட்டோரோ எக்ஸ் மோட்டோ எக்ஸ் 1 ஐத் தயாரிக்கிறது\nமோட்டோரோலாவின் புதிய ஸ்மார்ட்போன் 1 இன்ச் பேனலுடன் கூடிய மோட்டோ எக்ஸ் 5.2 இன் படம் கச���ந்துள்ளது\nமோட்டோ மின் துவக்க ஏற்றி எவ்வாறு திறக்கலாம், தனிப்பயன் மீட்டெடுப்பை ரூட் செய்து நிறுவவும்\nமோட்டோ இ துவக்க ஏற்றி, ரூட் திறப்பது மற்றும் தனிப்பயன் மீட்டெடுப்பை நிறுவுவது எப்படி\nசாம்சங் கேலக்ஸி எஸ் 5 விஎஸ் மோட்டோ இ: மிகச்சிறிய மோட்டோரோலா பதிலளிக்கும் வேகத்தில் சாம்சங்கின் முதன்மையை வெளிப்படுத்துகிறது\nஇங்கே உங்களிடம் ஒரு வீடியோ உள்ளது, அதில் அவர்கள் சாம்சங் கேலக்ஸி எஸ் 5 விஎஸ் மோட்டோ இ ஐ எதிர்கொள்கிறார்கள், இதில் சிறிய மோட்டோரோலா மரணதண்டனை வேகத்தில் வெற்றி பெறுகிறது\nமோட்டோரோவை வேரறுப்பது மோட்டோரோலாவுக்கு மிகவும் எளிதான நன்றி\nமோட்டோரோலா தனது பூட்லோடர் அன்லாக் திட்டத்தில் மோட்டோ இ-ஐ உள்ளடக்கும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது, எனவே மோட்டோ இ-ஐ வேர்விடும் மிகவும் எளிதானது\nமோட்டோ இ மற்றும் மோட்டோ ஜி எல்டிஇ ஆகியவற்றில் கிடைக்கும் மோட்டோரோலா எச்சரிக்கை பயன்பாட்டுடன் அவசரகால உங்கள் தொடர்புகளுக்கு அறிவிக்கவும்\nமோட்டோரோலா எச்சரிக்கை பயன்பாடு தற்போது மோட்டோ இ மற்றும் மோட்டோ ஜி 4 ஜி எல்டிஇ டெர்மினல்களுக்கு கிடைக்கிறது\nமோட்டோரோலா மோட்டோ ஜி 4 ஜி எல்டிஇ அறிமுகப்படுத்துகிறது\nமோட்டோரோலா மோட்டோ ஜி 4 ஜி எல்டிஇ என்ற ஸ்மார்ட்போனை வழங்குகிறது, இது மோட்டோ ஜி வழங்குவதை நிறைவு செய்கிறது, கூடுதலாக மைக்ரோ எஸ்டி ஸ்லாட்டைக் கொண்டுள்ளது\nமோட்டோ எக்ஸ் மற்றும் மோட்டோ ஜி ஆகியவற்றின் அடுத்த தலைமுறை ஆண்ட்ராய்டின் தூய பதிப்பைத் தொடர்ந்து கொண்டிருக்கும்\nலெனோவா மோட்டோரோலாவை இலவசமாக விட்டுச்செல்கிறது, இது அடுத்த தலைமுறை மோட்டோ எக்ஸ் மற்றும் மோட்டோ ஜி ஆகியவற்றை தூய ஆண்ட்ராய்டு வைத்திருக்க அனுமதிக்கும்\nமோட்டோ இ, 50 யூரோக்களுக்கான இரட்டை கோர்\nமோட்டோரோலா ஒரு புதிய ஸ்மார்ட்போனைத் தயாரிக்கிறது, மோட்டோ இ, வளர்ந்து வரும் சந்தைகளை நோக்கமாகக் கொண்டது மற்றும் 50 யூரோ விலையில்.\nமோட்டோரோலா மோட்டோ ஜி பூட்லோடரை எவ்வாறு திறப்பது\nமோட்டோரோலா மோட்டோ ஜி துவக்க ஏற்றி படிப்படியாக திறக்க வேண்டிய அனைத்தையும் படிப்படியாகக் காண்பிக்கிறேன்.\nமோட்டோரோலா மோட்டோ ஜி 179 யூரோக்களுக்கு மீடியா மார்க்கெட்டில் கிடைக்கிறது\n179 யூரோக்களுக்கு பொதுமக்களுக்கு நேரடி விற்பனைக்கு ஏற்கனவே மோட்டோரோலா மோட்டோ ஜி மீடியா மார��க்கெட்டில் கிடைக்கிறது.\nமோட்டோரோலா ஜி அமேசான் மூலம் ஸ்பெயினில் முன் விற்பனைக்கு வருகிறது\nஇப்போது எங்கள் மோட்டோரோலா ஜி அமேசான் ஸ்பெயினின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் 175 யூரோ விலையில் முன்பதிவு செய்யலாம்.\nமோட்டோரோலா மற்றும் ஆண்ட்ராய்டு 4.4 கிட் கேட்டிற்கான அதன் புதுப்பிப்புகளைப் பின்பற்ற கூகிள் ஒரு எடுத்துக்காட்டு அமைக்கிறது\nகூகிள் பேட்டரிகளை வைக்கிறது மற்றும் மோட்டோரோலா மூலம் ஒரு முன்மாதிரி மற்றும் அதன் ஆண்ட்ராய்டு டெர்மினல்களுக்கான மிகப்பெரிய புதுப்பிப்பை அமைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.\nமோட்டோரோலா டெர்மினல்களை ஆதரிக்க SuperOneClick புதுப்பிக்கப்பட்டது\nமோட்டோரோலா மற்றும் எல்ஜி உள்ளிட்ட புதிய டெர்மினல் மாடல்களுக்கான ஆதரவை உள்ளடக்கிய சூப்பர்ஒன் கிளிக்கின் சமீபத்திய பதிப்பைப் பதிவிறக்குங்கள்.\nமோட்டோரோலா ரஸ்ர் நான் இங்கிலாந்தில் ஜெல்லி பீனுக்கு மேம்படுத்தப்பட்டேன்\nபிரபலமான மோட்டோரோலா ரேஸ்ர் ஐ ஃபோன் ஆண்ட்ராய்டு 4.1 ஜெல்லி பீன் இயக்க முறைமைக்கான புதுப்பிப்பு தொகுப்பைப் பெறுகிறது\nமுதல் மோட்டோரோலா மொபைல் போன் எப்படி இருந்தது என்பது உங்களுக்கு நினைவிருக்கிறதா\nமார்ட்டின் கூப்பர் மோட்டோரோலா டைனடாக் (முதல் மொபைல் போன்) உடன் அதன் நேரடி போட்டியாளரான ஜோயல் ஏங்கலுக்கு முதல் தொலைபேசி அழைப்பை செய்திருப்பார்.\nமோட்டோரோலா RAZR HD மற்றும் RAZR MAXX HD விரைவில் ஜெல்லி பீன் பெறலாம்\nமோட்டோரோலா அதன் முக்கிய ஸ்மார்ட்போன்களான ஆண்ட்ராய்டு 4.1 ஜெல்லி பீனுக்கான புதுப்பிப்பைத் தயாரிக்கிறது, RAZR HD மற்றும் RAZR MAXX HD மாடல்கள் பார்வைக்கு\nமோட்டோரோலா புதிய அட்ரிக்ஸ் எச்டி டெவலப்பர் பதிப்பை அறிமுகப்படுத்துகிறது\nமோட்டோரோலா தனது தொலைபேசியின் புதிய பதிப்பான மோட்டோரோலா அட்ரிக்ஸ் எச்டி டெவலப்பர் பதிப்பை வழங்கியது, இது தனிப்பயன் ரோம்களை எளிதாக ஏற்ற அனுமதிக்கிறது\nமோட்டோரோலா எல்லையற்ற ஸ்மார்ட்போனைத் தயாரிக்கிறது\nஎல்லைகள் இல்லாத தொடுதிரை கொண்ட புதிய மோட்டோரோலா ஸ்மார்ட்போனை வதந்திகள் சுட்டிக்காட்டுகின்றன\nசாம்சங் SGH-i927: இயற்பியல் QWERTY விசைப்பலகை கொண்ட கேலக்ஸி 2\nசாம்சங் SGH-i927: இயற்பியல் QWERTY விசைப்பலகை கொண்ட கேலக்ஸி 2.\nமோட்டோரோலா அட்ரிக்ஸ் அண்ட்ராய்டு 2.3.4 கிங்கர்பிரெட்டுக்கு புதுப்பிக்கப்பட்டுள்ளது\nமோட்டோரோலா ��ட்ரிக்ஸ் அண்ட்ராய்டு 2.3.4 கிங்கர்பிரெட்டுக்கு புதுப்பிக்கப்பட்டுள்ளது\nமோட்டோரோலா டிரயோடு எக்ஸ் 2 விவரக்குறிப்புகள் கசிந்தன\nமோட்டோரோலா டிரயோடு எக்ஸ் 2 விவரக்குறிப்புகள்\nமோட்டோரோலா அட்ரிக்ஸில் இயங்கும் உபுண்டு\nமோட்டோரோலா அட்ரிக்ஸிற்கான உபுண்டு துறைமுகம்\nமோட்டோரோலா தனது மோட்டோரோலா புரோவை வழங்குகிறது\nமோட்டோரோலா நேற்று பிப்ரவரி 14 ஆம் தேதி பார்சிலோனா எம்.டபிள்யூ.சி கண்காட்சியில் அதன் மாதிரியை இயற்பியல் விசைப்பலகை மோட்டோரோலா புரோவுடன் வழங்கியது ...\nமோட்டோரோலா அட்ரிக்ஸ் 4 ஜி, டூயல் கோர், 1 ஜிபி ராம் மற்றும் 4 இன்ச் கியூஎச்டி திரை. இதைவிட வேறு எதுவும் சொல்லவில்லை\nமோட்டோரோலா அட்ரிக்ஸ் 4 ஜி எந்த ஸ்மார்ட்போன் மட்டுமல்ல, இது டூயல் கோர், 4 இன்ச் கியூஎச்டி திரை மற்றும் 1 ஜிபி ரேம் ஆகியவற்றை உள்ளடக்கிய சூப்பர் ஸ்மார்ட்போன் ஆகும்.\nமோட்டோரோலா டிஃபைக்கு நீர் மற்றும் புடைப்புகள் எதுவும் இல்லை, பாருங்கள்\nமோட்டோரோலா டிஃபி, அந்த சாலை முனையம், பொறையுடைமை சோதனைகளை வெற்றிகரமாக, தண்ணீருக்கு அடியில் மற்றும் அதிர்ச்சியுடன் கடந்து செல்கிறது.\nமோட்டோரோலா டிரயோடு ஆர் 2-டி 2 இன் அனிமேஷன் பின்னணியைக் காண்கிறோம்\nமோட்டோரோலா டிரயோடு 2 ஆர் 2-டி 2 வரையறுக்கப்பட்ட பதிப்பு முனையத்தின் அனிமேஷன் வால்பேப்பர்களை முயற்சிக்கவும்\nமோட்டோரோலா டிரயோடு எக்ஸ் மூலக் குறியீட்டை வெளியிடுகிறது\nமோட்டோரோலா தனது டிரயோடு எக்ஸ் முனையத்திற்கான மூலக் குறியீட்டை வெளியிட்டுள்ளது மற்றும் டெவலப்பர்களுக்கான அமெரிக்க நிறுவனத்தின் இணையதளத்தில் கிடைக்கிறது.\nமோட்டோரோலா டிரயோடு எக்ஸ் இப்போது அதிகாரப்பூர்வமானது, அதன் அனைத்து அம்சங்களும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன\nமோட்டோரோலா இன்று தனது மோட்டோரோலா டிரயோடு எக்ஸ் முனையத்தை வழங்கியது, இது உண்மையில் சிறந்த அம்சங்களைக் கொண்டுள்ளது.\nமோட்டோரோலா மைல்ஸ்டோனுக்கான நந்த்ராய்டு காப்பு பயிற்சி\nசரி, காப்புப் பிரதி எடுப்பது சில நேரங்களில் ஒடிஸியாக மாறும் என்பதைப் பார்த்து, அதை எளிதாக்குவதற்கு ஒரு டுடோரியலை இடுகையிடுவதை விட சிறந்த வழி என்ன\n[மோட்] மோட்டோரோலா மைல்ஸ்டோனில் Android 2.0.1 முதல் 2.1 வரை புதுப்பிக்கவும்\nமோட்டோரோலா மைல்கல்லில் Android 2.0.1 இலிருந்து Android 2.1 க்கு rom ஐ எவ்வாறு புதுப்பிப்பது\nமோட்டோரோல��� தணித்தல் அல்லது மோட்டோரோலா க்ளிக் எக்ஸ்.டி, மோட்டோப்ளூருடன் ஆண்ட்ராய்டு 2.1\nமோட்டோரோலா ஆண்ட்ராய்டு சிஸ்டத்துடன் டெர்மினல்களை அறிவிப்பதை நிறுத்தாது, இப்போது இது மோட்டோரோலா க்ளிக் எக்ஸ்டியின் முறை ...\nமோட்டோரோலா மைல்ஸ்டோனில் ரூட் அணுகலை எவ்வாறு பெறுவது\nமோட்டோரோலா மைல்ஸ்டோனில் ரூட் அணுகலைப் பெறுவதற்கான கையேடு, எளிதானது மற்றும் தெளிவானது.\nAndroid 2.0.1 க்கு பாதுகாப்பு சிக்கல் உள்ளது\nஅண்ட்ராய்டு 2.0.1 பதிப்பில் பாதுகாப்பு சிக்கல் காணப்படுகிறது, இது கிட்டத்தட்ட அனைத்து மோட்டோரோலா டிரயோடு டெர்மினல்களையும் அமெரிக்காவில் நிறுவியுள்ளது\n3 டி கேம்களுடன் மோட்டோரோலா மைல்கல்\nமோட்டோரோலா மைல்ஸ்டோன் மிகச் சிறந்த கிராஃபிக் குணாதிசயங்களைக் கொண்ட ஒரு முனையமாகும், இது இந்த 3 டி கேம்களை செயல்படுத்துவதில் நிரூபிக்கப்பட்டுள்ளது\nமோட்டோரோலா கிளிக்கில் ரூட் அணுகலை எவ்வாறு பெறுவது\nமோட்டோரோலா க்ளிக், ஸ்பெயினிலும் அமெரிக்காவிற்கு வெளியேயும் மோட்டோரோலா டெக்ஸ்ட் என்று நமக்குத் தெரியும்\nமோட்டோரோலா மைல்ஸ்டோன், விசைப்பலகை குறுக்குவழிகள்\nமோட்டோரோலா மைல்ஸ்டோன் விசைப்பலகை மூலம் பிசி விசைப்பலகை மூலம் நாம் எவ்வாறு செய்கிறோம் என்பதைப் போன்ற தொடர்ச்சியான குறுக்குவழிகளை அணுகலாம். நான் உன்னை ஒரு சிலவற்றை விட்டு விடுகிறேன்\nSHOP4APPS, மோட்டோரோலாவின் Android சந்தை\nமோட்டோரோலா தனது சொந்த ஆண்ட்ராய்டு சந்தையைத் தயாரிக்கிறது, இது ஷாப் 4 ஆப்ஸ் என்று அழைக்கப்படும், இது மொபைல் போன் மற்றும் பிசி இரண்டிலிருந்தும் அணுகக்கூடியதாக இருக்கும்.\nமோட்டோரோலா டிராய்டில் ரூட் அணுகலை எவ்வாறு பெறுவது\nநேற்று முதல் மோட்டோரோலா டிரயோடு ரூட் அணுகலைப் பெறுவது ஏற்கனவே சாத்தியமானது, இது மிகவும் எளிது.\nஆழத்தில் மோட்டோரோலா மில்லஸ்டோன் விமர்சனம்\nஆண்ட்ராய்டு 2.0 கொண்ட ஒரே முனையமான மோட்டோரோலா மைசோட்னே எங்கள் கைகளை எட்டியுள்ளது, மேலும் முழுமையான பரிசோதனையை மேற்கொண்டோம்.\nமோட்டோரோலா டிரயோடு மற்றும் ஆண்ட்ராய்டு 2.0 பிரச்சினைகள் உள்ளன\nமோட்டோரோலா டிரயோடு முனையத்தில் சிக்கல்களை சந்திக்கும் பல பயனர்கள் உள்ளனர், மேலும் அவர்கள் சொல்வது அண்ட்ராய்டு 2.0 தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2021/may/03/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-3616249.html", "date_download": "2021-05-07T01:22:55Z", "digest": "sha1:GI2PD5IL2OHBGNWSBD2DVN4VUW6ZYHUO", "length": 8073, "nlines": 140, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மு.க.ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் வாழ்த்து- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n06 மே 2021 வியாழக்கிழமை 06:33:21 PM\nசட்டப்பேரவைத் தோ்தலில் தனி பெரும்பான்மையுடன் திமுக ஆட்சியைக் கைப்பற்றியுள்ள நிலையில் அதன் தலைவா் மு.க.ஸ்டாலினுக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன் வாழ்த்து கூறியுள்ளாா்.\nஇது தொடா்பாக ஞாயிற்றுக்கிழமை அவா் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பது:\nபெருவெற்றி பெற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு மனப்பூா்வமான பாராட்டுகள். நெருக்கடியான காலகட்டத்தில் தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்கிறீா்கள். சிறப்பாகச் செயல்பட்டு தமிழகத்தை வளா்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல என் வாழ்த்துகள் என்று அவா் கூறியுள்ளாா்.\nகளைகட்டிய அண்ணா அறிவாலயம் - படங்கள்\nஆக்ஸிஜன் செறிவூட்டிகளுடன் இந்தியாவுக்கு வந்த விமானங்கள் - படங்கள்\nதிமுக தொண்டர்கள் கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nஸ்ரீ குரு தேக் பகதூரின் 400-வது பிறந்தநாள் - படங்கள்\nஅண்ணாத்த படப்பிடிப்புக்காக ஹைதராபாத் சென்ற நயன்தாரா - படங்கள்\nகும்பமேளா: கங்கையில் புனித நீராடிய பக்தர்கள் - படங்கள்\nசித்த மருத்துவத்தில் கரோனாவுக்குச் சிறந்த தடுப்பு மருந்து\nகரோனாவை தடுக்க சித்த மருத்துவம் தரும் டிப்ஸ்..\nரெம்டெசிவிா் மருந்து தேவைப்படுவோர் கவனிக்க..\nகரோனா தடுப்பூசிக்கு முன்பதிவு செய்வோர் கவனிக்க..\n'விடுதலை' படத்தின் டிரெய்லர் வெளியீடு\nதயுவு செய்து இதைச் செய்யாதீர்கள்..\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2020/12/blog-post_798.html", "date_download": "2021-05-07T01:19:14Z", "digest": "sha1:EYGUIZ3NREOKCAB6QSKOYRNTCEHHQ6XR", "length": 8938, "nlines": 91, "source_domain": "www.yarlexpress.com", "title": "நல்லூர் பிரதேச சபையின் பட்ஜெட் இரண்டாவது தடவை தோற்கடிப்பு; தவிசாளர் பதவியிழப்பு ... \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nநல்லூர் பிரதேச சபையின் பட்ஜெட் இரண்டாவது தடவை தோற்கடிப்பு; தவிசாளர் பதவியிழப்பு ...\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட நல்லூர் பிரதேச சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இரண்டாவது தடைவையாகத் தோற்கடிக்கப்...\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட நல்லூர் பிரதேச சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இரண்டாவது தடைவையாகத் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇதன்மூலம் பிரதேச சபைத் தவிசாளர் பதவி இழக்கிறார்.\n20 உறுப்பினர்களை கொண்ட நல்லூர் பிரதேச சபையில் 12 உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்தனர். 8 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்து வாக்களித்தனர்.\nஅதன் அடிப்படையில் நல்லூர் பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 4 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nதமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் 6 பேர் மற்றும் சுயேட்சை குழு உறுப்பினர்கள் இருவர் ஆதரவாக வாக்களித்தனர்.\nஈழ மக்கள் ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் 4 பேர், தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள் ஐந்து பேர் மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி, ஐக்கிய தேசியக் கட்சி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றின் தலா ஒரு உறுப்பினர் என 12 பேர் எதிர்த்து வாக்களித்தனர்.\nவணிகம் / பொருளாதாரம் (7)\nமாநகர காவல்படையினரின் சீருடை பறிமுதல் - மாநகரசபைக்கு ஆப்பு வைத்த பொலீஸார் ..\nBREAKING NEWS :- ஊரடங்கு தொடர்பில் இராணுவத் தளபதி சற்றுமுன் வெளியிட்ட அறிவிப்பு\nஅத்தியாவசிய சேவைக்கு மாத்திரமே அனுமதி\nYarl Express: நல்லூர் பிரதேச சபையின் பட்ஜெட் இரண்டாவது தடவை தோற்கடிப்பு; தவிசாளர் பதவியிழப்பு ...\nநல்லூர் பிரதேச சபையின் பட்ஜெட் இரண்டாவது தடவை தோற்கடிப்பு; தவிசாளர் பதவியிழப்பு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://anumar.vayusutha.in/kovil063.html", "date_download": "2021-05-07T01:11:56Z", "digest": "sha1:7D7HQCKUPL7I54NBQPSGTHL4CHUXFFCI", "length": 15000, "nlines": 45, "source_domain": "anumar.vayusutha.in", "title": " ஶ்ரீஹனுமார் மந்திர், கட்பாஹரா, சாகர், மத்திய பிரதேசம்", "raw_content": "Close ஸ்லோகம் துதிகள்: தமிழ் ஸ்துதி: பிற மொழி கோவில்கள் கட்டுரைகள் பலகை விருந்தினர் ஏடு எங்கள் இணையம் பற்றி ஆங்கில இணையம் ஹிந்தி இணையம் வெளியீடு புதிய சேர்க்கை: தமிழ் இணையம் புதிய சேர்க்கை: ஆங்கில இணையம் புதிய சேர்க்கை: ஹிந்தி இணையம்\nதுதிகள்: தமிழ் ஸ்துதி: பிற மொழி\nபலகை எங்கள் இணையம் பற்றி வெளியீடு இணையம் ஆங்கில இணையம் ஹிந்தி இணையம்\nதமிழ் இணைய தளம் ஆங்கில இ. தளம் ஹிந்தி இ. தளம்\nஸ்லோகம் துதிகள்: தமிழ் ஸ்துதி: பிற மொழி கோவில்கள் கட்டுரைகள் பலகை விருந்தினர் ஏடு எங்கள் இணையம் பற்றி ஆங்கில இணையம் ஹிந்தி இணையம் வெளியீடு புதிய சேர்க்கை: தமிழ் இணையம் புதிய சேர்க்கை: ஆங்கில இணையம் புதிய சேர்க்கை: ஹிந்தி இணையம்\nஶ்ரீஹனுமார் மந்திர், கட்பாஹரா, சாகர், மத்திய பிரதேசம்\nதிரு. சந்தோஷ் குப்தா, சாகர்\nசாகர் என்னும் நகரத்தை ஏரியூர் என்று சொல்லலாம். கடல் மட்டத்திற்கு 1750 அடி உயரத்தில் விந்திய மலைதொடருக்கு அடிவில் மத்திய பிரதேசத்தில் உள்ளது. நகரின் நடுநாயகமாக இருப்பது மிக விஸ்தாரமான ஏரியாகும். இதனை சாகர் ஏரி என்றே அழைக்கிறார்கள். நகரம் இதனை சுற்றியே வளர்ந்துள்ளது. இந்த எழிலான ஏரியை ஶ்ரீலாக்ஹா பன்ஸாரா என்பர் 1100 ஆண்டு கட்டினார். இந்த ஏரியினால் நகரத்தின் அழகு கூடி, பார்ப்பவர் மனதை கவர்வதாக இருக்கிறது. மராட்டா ராஜ்ஜியத்தின் பிரதிநிதி ஶ்ரீகோவிந்த் பந்த புன்டேலே என்பவர் 1735ஆம் ஆண்டு, சாகரை தனது ஆட்சிக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு தலைநகரமாக்கினார். அதன் பின் சாகரின் முக்கியத்வம் கூடியது.\nஅனேகமாக சாகர் எல்லோருக்கும் இன்று தெரியும். ஆனால் இன்றைய சாகர், அருகில் இருக்கும் கடபாஹராவிற்கு மாற்று தலைநகரமாக உருவாக்கப்பட்டது தான். இன்று கடபாஹரா பழைய சாகர் என்று அழைக்கப்படுகிறது. இது இன்றைய சாகரிலிருந்து சுமார் பன்னிரெண்டு கிலோமீட்டர் தொலைவில் ஜான்சி ரோட்டில் பஹன்ஶா என்னும் குன்றின் மேல் உள்ளது. லலித்பூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை-26இல் இருந்து பஸ் வசதியுள்ளது. சாகரில் இருந்து \"ஷேர் ஆட்டோ\" கடபாஹராவிற்கு கிடைக்கும்.\nபஹன்ஶா குன்றின் மேல் பழமையான கோட்டை தெரியும். இங்கு கடபாஹராவில் இருக்கும் ஶ்ரீஹனுமார் திருக்கோயில் \"சிந்த பீடம்\" என்று போற்றப்படுகிறது. அதனால் இவ்விடத்தையே \"சித்\" என்றே அழைக்கிறார்கள்.\nகோட் பரம்பரையினர் காலத்திலிருந்த��� இவ்விடம் மிகவும் பிரபலம். டாங் பரம்பரையினர் இதனை கைப்பற்றி தங்கள் இராஜ்ஜியத்தின் ஆட்சிக்கு உட்படுத்தினர். நார்வாரை ஆண்ட காசவஹா ராஜபுத்திர அரசன் டாங் இதனை கைபற்றி தனது தனி அரசை துவங்கிய இடம் இது. வரலாற்று சான்றுகள் இந்த முதல் டாங்கினை பற்றி ஏதும் கிடைத்ததாக தெரியவில்லை, ஆனால் இவன் இந்திரனையே வெற்றி கண்டதாக கிராமிய பாடல்கள் பல உள்ளன. கடபாஹராவை பல அரசர்கள் ஆட்சி புரிந்தாலும், ஶ்ரீபிருதிவிபாத், ஶ்ரீமஹராஜகுமார், ஶ்ரீமானா சிங் ஆகியோர்களின் பெயர் மிகவும் பிரபலம். ஶ்ரீபிருதிவிபாத் முகலாயர்களுக்கு ஜாகீர்தாராக 1689ஆம் ஆண்டு முதல் இருந்திருக்கிறார்.\nகுன்றின் மேல் இரு திருக்கோயில்கள் உள்ளன. கடபாஹரா குன்றின் மேல் உள்ள ஏரியும், கோட்டையும் பார்க்க வேண்டிய இடங்கள். குன்றின் இறக்கத்தில் ஶ்ரீஅங்கத தேவியின் திருக்கோயில் உள்ளது. குன்றின் பின்புற இறக்கத்தில் மிக அழகிய ஆனால் சிறிய ஏரி ஒன்று உள்ளது. இதனை மோதிடால் என்று அழைகிறார்கள்.\nகுன்றின் மேல் உள்ள ஶ்ரீஹனுமாரின் திருக்கோயில் ஒரு சித்த க்ஷேத்திரம். கீழே பிரதான சாலையிலிருந்தே ஶ்ரீஹனுமார் திருக்கோயிலுக்கு செல்லும் பாதையாக படிகட்டுகள் தெரியும். காவியும், வெண்மையுமாக நிறங்களால் பளிச்சென்று தெரியும். நானூறு அல்லது நானூற்று ஐம்பது படிகள் நாம் ஏறவேண்டும். பக்தர்கள் ஹனுமான் சாலீஸாவை ஜபித்த வண்ணம் படிகளில் ஏறுவார்கள். மலை குன்று முழுவதும் காடு இருப்பதால், சுகந்தமான காற்றும், அதில் மிதந்து வரும் ஹனுமான் சாலீஸாவும் நம் மனதை சாந்தமாக்கி விடும். பழைய கோட்டையின் ஒரு பகுதியில் இந்த திருக்கோயில் அமைந்துள்ளது.\nகோயில் மிக பெரிதாக இருக்கவில்லை. மிகவும் எளிமையாக ஆடம்பரமோ அல்லது ஆர்பாட்டமோ இல்லாமல் இருக்கிறது. பெரிய நீளமான தாழ்வாரம் வழியாக சென்றால், பெரிய கூடம் அவ்வளவு தான். கூடத்தின் மேல் கூறையில் விமானம் உள்ளது. முகலாய கலை அமைதியுடன் இருக்கிறது அவ்விமானம். விமானத்தின் உச்சியிலும், கூடத்தின் நான்கு மூலையிலும் காவி வண்ணத்தில் முக்கோணவடிவில் கொடிகளை காணலாம்.\nதிருக்கோயிலின் உள் சென்ற உடன் நம்மிடமுள்ள இறைத்தன்மை நம்மை கவ்வுவதை உணரலாம். சுயம்பூவான ஶ்ரீஹனுமார் நம்மை ஆட்கொள்வதை உணரலாம். அவர் முன் மெய்மறந்து நாம் பிராத்தனை செய்வோம். இங்கு பிர���த்தனைகள் வீண்போகாது என்பது தின்னம் என்று நமது உள்ளுணர்வு கூறும்.\nசுயம்பூ மூர்த்தமான ஶ்ரீஹனுமாரின் மூர்த்தம் சுமார் ஆறு அடி உயரம் இருக்கும். வலது திருக்கரம் தலையினும் உயரமாக தூக்கி ஆசிகள் வழங்கிய வண்ணம் இருக்கிறது. இறைவன் பக்தர்களை பார்த்த வண்ணம் உள்ளார். திறந்த பெரிய கண்களில் வழிந்தோடும் கருணை என்னென்று சொல்வது அவர் முன் நாம் நிற்கும் பொழுது நமக்கு அவர் கண்கள் மூலம் அளிக்கும் ஆசிகள் அளவில் அடங்காது, நினைவிநின்று அகலாது.\nஆஷாட மாதத்தில், மிக பெரிய திருவிழா எடுக்கப்படுகிறது. அப்பொழுது மேளாவும் உண்டு. சாதாரணமாக செவ்வாய் கிழமை பக்தர்கள் அதிக அளவில் தரிசனத்திற்கு வருவார்கள். கோயிலின் பின்புறம் பழைய கோட்டையை காணலாம். சற்றே தொலைவில், டாங் அரசாட்சியின் போது கட்டப்பட்ட ஶீஷ் மகால் [கண்ணாடி மாளிகை] தெரியும். குன்றின் சரிவில் இரங்கினால் மாதா அங்கத தேவியின் திருக்கோயில் வரும்.\nஶ்ரீஹனுமார் கோயில் என்பதால் இங்கு வானரங்கள் பல உண்டு. ஆனால் அவை சாதாரணமாக பக்தர்கள் எதை தருகிறார்களோ அதை பெற்றுக்கொள்கின்றன. பக்தர்கள் கையிலிருந்து பிடுங்குவது மிகவும் அபூர்வமே.\nதிருக்கோயில் இருப்பிடம் : \"ஶ்ரீஹனுமார் மந்திர், கட்பாஹரா, சாகர், மத்திய பிரதேசம்\"\nஏரியூர் எனப்படும் அருமையான சாகருக்கு, கடபாஹரா சித்தி ஹனுமாரை தர்சிக்க வாருங்கள். தாங்களின் நியாயமான வேண்டுகோளை நிச்சயமாக நிறைவேற்றும் வரத்தை அவரிடமிருந்து வாங்கி செல்லுங்கள்.\nமுதல் பதிப்பு: நவம்பர் 2018\nதிருத்தப்பட்ட பதிப்பு: செப்டம்பர் 2020\nஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க\nகாற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2015/09/blog-post_32.html", "date_download": "2021-05-07T01:29:24Z", "digest": "sha1:X77276NEMSO3W37YS2IIK6KLTOGH5KTZ", "length": 32724, "nlines": 281, "source_domain": "www.ttamil.com", "title": "யார் புத்திசாலிகள்? (இளைய/மூத்த பரம்பரையினரின் அறிவுத்திறன் ஒப்புநோக்கு) ~ Theebam.com", "raw_content": "\n (இளைய/மூத்த பரம்பரையினரின் அறிவுத்திறன் ஒப்புநோக்கு)\nகாலம் காலமாக அன்றாடம் நாம் எதிர்நோக்கும் வாதங்களில் மேலெழுந்து நிற்பது, ஒரு பரம்பரையைச் சேர்ந்தவர்கள் இன்னொரு பரமபரையினரை 'மூளை இல்லாதவர்', 'அறிவே அற்றவர்', 'மந்த சக்தி கொண்டவர்' என்றெல்லாம் விமர்சிப்பது ஆகும். இவர்கள் ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்��ும்போது ஒரு சில அலகுப் பரிமாணங்களைத் தங்கள் அளவுகோலாக உருவாக்கி, மற்றையவர் இந்த வகை/பிரிவுக்குள் விழுந்தால் அவரும் தம்மைப்போலவே அறிவாளி என்றும், அல்லாவிடின் சற்று மட்டமானவர் என்றும் முடிவு காணும் ஒரு கணிப்பில் வாழ்ந்து கொண்டு இருப்பார்கள்.\nஅறிவுத் திறன், புத்திசாலித்தனம் என்றால் என்ன\nஅது, 'பகுத்தறிவு, செயல் திறன் ஆகியவற்றை ஈட்டுவற்கும், பிரயோகிப்பத்ற்குமான ஆற்றல்' எனலாம்.\nஎவ்வகைச் செயல்திறனை எங்கெங்கு, எப்போது, எவ்வாறு பிரயோகிப்பது என்பது காலம் காலமாக மாறிக்கொண்டுதான் இருக்கிறது. அக்காலத்தில் வாழ்ந்தோர் அப்போது தேவையான, முக்கியமான விடயங்களுக்குத் தம் அறிவுத்திறனை உபயோகித்து அன்றைய மேதைகளாகத் திகழ்ந்தார்கள். அவர்களுக்கு, பின்னைய கால நிகழ்வுகள், முக்கியங்கள் ஒன்றும் தெரிந்திருக்க நியாயம் இல்லை. தேவையாகவும் இருந்ததில்லை. அதேபோல, தற்போதைய சந்ததியினரும் இப்போது தேவையான விடயங்களை மட்டுமே அறிந்து வைத்துக் கொண்டு தற்கால மேதைகளாக இருக்கிறார்கள். இவர்களுக்கும், முன்னைய விடயங்கள் பற்றி ஓர் அக்கறையும் இருக்கத் தேவை இல்லை. அவசியமும் இருப்பதில்லை.\nஓர் 200 வருடங்களுக்கு முன்னர் ஒருவர், தமிழ் மொழி, இலக்கணம், இலக்கியம், சைவ சித்தாதம் என்பன படித்தால் அவர்தான் ஓர் அறிவாளி; மகா பண்டிதர். அவருக்கு இலக்கிய, புராண, இதிகாச, வேத பாடல்கள், காவியங்கள் என்பன ஆயிரக் கணக்கில் மனப்பாடம் செய்து நுனி நாக்கில் இருக்கும். அப்போது தேர்வு செய்து படிக்க வேறு ஒரு துறைகளும் இருந்தது இல்லை. ஆதலால், குறைவான எண்ணிக்கையுள்ள துறைகளில் நிறைவான அறிவாற்றலை எய்தினார்கள். இவற்றை விட, தொழிற்கல்வி என்பது பரம்பரை வழியில்தான் போதிக்கப் பட்டு வந்திருக்கின்றது.\nஒரு 150 வருடம் முன்னர் சென்றால், இத்துறையோடு எண்கணிதம், சரித்திரம், பூமிசாஸ்திரம், குடியியல் என்று மேலும் பல பாடங்களையும் படித்து மேதைகள் ஆனார்கள். இவர்கள், இவர்களின் முன்னோர்களைப் பார்த்து வெளி உலகமே அறியாத 'விஷயம் தெரியாதவர்கள்' என்று உரைத்திருப்பர்.\nஇப்போது, ஓர் 100 வருடங்களுக்கு முன்னர், மேலும் பல துறைகளாகிய பௌதிகம், இரசாயனம், தூய கணிதம், பிரயோக கணிதம், விலங்கியல், தாவரவியல், வர்த்தகம், கணக்கியல் என்பன சேர்க்கப் பட்டு இவைகளைப் படித்தவர்களே 'படித்தவர்கள்' என்று நாமம் சூட்டப்பட்டது.\nஆனால் தற்போதோ, துரித கதியில் முன்னேறியிருக்கும் தொழிநுட்ப உலகில் 'ரொம்பவும் படிச்சவங்க' என்று இருப்பவர்கள் யார் தெரியுமா இளம் சமுதாயத்தினர் தான் இவர்கள், பிறக்கும்போதே துரிய கதி இணையம், கணினி, பல் செயல் செல்பேசி, சாமர்த்திய தொலைக் காட்சி, நவீன போக்கு வரத்து வாகனங்கள், செய்மதிப் பிரயாண வழிகாட்டி, விண்வெளிப் பயணம், அணு சக்தி, நானோ தொழில் நுட்பம், அறுவையற்ற சத்திர சிகிச்சை, தானியங்கி கருவிகள், இயந்திர மனிதன் என்று பலவற்றோடு சேர்ந்து பிறப்பதால் இவர்களுக்கு 'அறிவு' என்று சொல்லப்படுவது பழைய கணிதமோ, சரித்திரமோ அல்ல இவர்கள் பார்வையில் 'அவர்கள்' எல்லாம் கொஞ்சம் 'அறிவு குறைஞ்சவர்கள்' தான்.\nபழையவர்கள் பேசும்போது \"எனக்கு 16 ஆம் வாய்ப்பாடு வரை பாடம், 50 தொலை பேசி இலக்கங்களை மனதில் வைத்திருப்பேன், 500 திருக்குறள், 200 கம்பராமாயண, 100 நள வெண்பாக்கள், திருக்குறள், திருவருட்பயன், 1000 தேவாரங்கள், உலகில் உள்ளமலைகள், ஆறுகள், பழைய, புதிய சரித்திர, அரசியல் வரலாறுகள் எல்லாம் மனப் பாடம். இப்போது உள்ள பிள்ளைகளுக்கு இது ஒன்றுமே தெரியாது, அவர்களால் இயலாது' என்று மட்டம் தட்டிக் கூறுவர்.\n-எமக்கு ஓராம் அல்லது பத்தாம் வாய்ப்பாடு தன்னும் தெரியத் தேவை. 1+1=2 என்ற கூட்டல்கூடித் தெரியத்தேவை இல்லை. எண்ணிக்கை தெரியாமலேயே ஒரு கை நிறையக் கொஞ்சம் சில்லறைகளையும், ரூபாய்த் தாள்களையும் ஓர் இயந்திரத்தின் உள்ளே தள்ளினால் மிகுதிப் பணத்தைப் பிழையே விடாமல் வெளியே தள்ளும் தொழில்நுட்பம் இப்போது உள்ளது. இந்த வாய்ப்பாடு என்பது இப்போது தேவைப்படுவதே இல்லை.\n-எமது சொந்தத் தொலைபேசி இலக்கத்தையே நான் நினைவு வைத்திருக்கத் தேவை இல்லாத அளவுக்கு, எத்தனை இலக்கங்களையும் சேமித்து வைக்கக் கூடிய வசதி இருக்கும் போது வீணாய் ஏன்தான் மனதில் பதிக்க வேண்டும்\n-எல்லோருமே தமிழ் பண்டிதராகத் தேவை இல்லை. பண்டிதர் ஆனாலும் எல்லாவற்றையும் பாடமாக்கவும் அவசியம் இல்லை. எல்லாம் இணையத்தில் இருந்து தேவைப்படும்போது நொடிப் பொழுதில் பெற்றுக்கொள்ள நம் கை நுனியில்தான் ஒரு பொருள் இருக்கின்றதே -மேலும், உலகத்தில் உள்ள இயற்கைகள், பழைய அரசியல் கதைகளை அறிந்து வைத்துக் கொண்டு என்ன செய்யப் போறீர்கள் -மேலும், உலகத்தில் உள்ள இயற்கைகள், பழைய அரசியல் கதைகளை அறிந்து வைத்துக் கொண்டு என்ன செய்யப் போறீர்கள் எல்லோருமே அகழ்வாராய்ச்சி நிபுணர்கள் ஆகும் நோக்கமா\nஅக்காலங்களில், ஒரு பாடத்திட்டத்தினைப் போட்டு, அதன்படி படிப்பித்து, கேள்விகளை சொல்லி, அவற்றிற்கான பதிலகளையும் கொடுத்து, பரீட்சையில் அதே கேள்விகளைக் கேட்டு, சொல்லப்பட்ட மறுமொழிகளை எழுதினால் மட்டும்தான் 100 புள்ளிகள் கிடைக்கும். எதிர்க் கேள்விகளோ, மாறுபட்ட கருத்துகளோ வழங்கினால் அவர் 'அடங்காதவர்' என்று வர்ணிக்கப்படுவார். தேவையோ, தேவை இல்லையோ, சரியோ, பிழையோ சொன்னதைக் கேட்டு அடங்கி இருந்து சித்தி பெற்று அறிஞன் ஆகவேண்டும். ஆனால் இப்பொழுதோ, மூளைக்குள் போடுவதற்கு அவசியமானதும், வாழ்க்கைக்குத் தேவையானதும், தொழில் நுட்பத்தோடு சேர்ந்து ஒடக்கூடியதுமான பல விடயங்கள் இருக்கின்றன. தற்கால ஓட்டத்திற்கு உதவாத சரக்குகளை மூளைக்குள் திணிக்க முயல்வது ஏற்கப்பட முடியாத ஒன்று. மாணவர் படிக்கும்போது தங்கள் சுய சிந்தனா சக்திகளை நவீன யுக்திகளின் ஊடே விருத்தி செய்வதற்கு மிகவும் ஊக்கம் அளிக்கப் படுகின்றன.\nதற்போது பிள்ளைகள் பிறக்கும்போதே கூரிய அறிவுடையவர்களாகப் பிறக்கின்றார்கள் என்பது நேரில் காணும் ஓர் உண்மை. அத்தோடு விரைவில் உடம்பு பிரட்டித், தவழ்ந்து, நடக்கவும் தொடங்குகின்றார்கள். ஓர் 50 வருடங்களுக்கு முன்பு 3 வயசிலே ஒரு குழந்தை கதைக்கப் பழகினால் பெரும் வியப்போடுபார்த்தோம். ஆனால் இப்போதோ 2 வயசுக்கு முன்னரே 'வழ வழ' என்று கதைக்கும் மழலைகளை நேரில் காண்கின்றோம்.\nமொத்தத்தில், இக்காலச் சிறார்கள் தற்போது தேவையான பல துறைகளிலும் சிறு, சிறு அத்தியாய அறிவுதனைப் பரவலாகப் பெற்றுள்ளனர். இவ்வறிவுத் திறன்களைத் தங்கள் குழந்தைப் பராயத்திலிருந்தே அடையத் தொடங்கி விடுகின்றார்கள். இவர்கள் எந்த விதமான சூழ்நிலைக்கு ஏற்றவாறும் தங்களை மாற்றி அமைத்து, அதனுள் புகுந்து வெற்றி பெரும் ஆற்றலைப் பெற்று இருக்கின்றார்கள்.தற்காலத்துக் காக்கா கூடி வாயைத் திறந்து பாட்டுப் படிக்காது; தன் வடையைக் காலுக்குள் வைத்துவிட்டுத்தான் நரிக்குப் பாட்டுப் படித்துக் காட்டும் ஏனென்றால் அதுவும் ஒரு நவீன காகம் என்பதால்\nஎன்றாலும், பெரியவர்களிடம் இருக்கும் அன்பு, பாசம், நேர்மை, கூட்டுறவு, தர்ம நெறி, மரியாதை செய்தல், சகிப்புத் தன்மை என்பது போன்ற நல்ல குணங்கள் இன்றைய சிறார்களிடம் சற்றுக் குறைவாகவே காணப்படுகிறன. போட்டி போட்டுக்கொண்டு ஆடம்பர வாழ்க்கைக்கு, அவசியமற்ற செலவுகள் செய்ய, ஓடி ஓடி நீண்ட நேரம் பணம் சேர்க்கும் முயற்சிகளில் மூழ்கி இருப்பதால், மன அழுத்தம் நோயினால் பீடிக்கப் படுகின்றார்கள். பார்த்தால், அந்தந்தக் காலத்தில் எல்லோருமே அவ்வக் காலத்துப் பண்டிதர்கள் தான் பண்டிதர்களைக் காலம்தான் சமயத்திற்கு ஏற்றவாறு உருவாக்குகின்றது. எவருக்கும் எவரும் சளைத்தவர்கள் இல்லை.\nஅறிஞர்கள், ஐன்ஸ்டைன், நியுட்டன், கலிலியோ,எடிசன், ரைட், மார்கோனி எனப் பலருமே பழையவர்கள் தானே இவர்கள் முன்பாக தற்போதைய அறிவாளிகள் நிற்க முடியுமா\nமுடிவாக, முன்னையோர் தங்கள் உயரிய பழைய பெரும் சரித்திரங்களைப் பற்றிப் பெருமைப் பட்டுக்கொண்டு இருக்கின்றார்கள். தற்போதையவர்களோ பெருமைப் படவேண்டிய சரித்திரங்களைப் படைத்துக் கொண்டு இருக்கின்றார்கள் என்பதுதான் உண்மை.\nஎங்கள் அவ்வை யின் வெண்பா பலவிதிகளின் கீழ் பாடப்பட்டது.அப்படி தற்காலத்தில் யாராலும் அமைக்க முடியவில்லை.\nஅப்போ பாட்டிதானே அதி புத்திசாலி.\nஎம் சமுதாயத்தில் ஒரு பழக்கம் இருக்கிறது,பிள்ளைகள் ஏதாவது கேள்விகள் கேட்டால் அறிவு பூ ர்வமாகப் பதில் கூ றாது, வாயை மூடிக் கொள் என அதட்டுவார்கள்.அல்லது உனக்கு அது விளங்காது எண்டு முடித்துவிடுவார்கள்.அத்துடன் பெரியோருக்கு எல்லாவற்றிற்கும் பயந்தவர்களாகக் காணப்படும் பிள்ளைகள் இப்படியான சூ ழ்நிலையில் பிள்ளைகள் எப்படிப் புத்திசாலியாகலாம்.\nபழைய காலத்தில் இருந்தவர்கள் திறமை அதிகம் நிறைந்தவர்கள் குறைவு ஆனால் அப்படி திறமையாக இருஇந்தவர்கலும் மிகை மிஞ்சிய அறிவு திறமை இருஇந்தது உண்மை உதாரணம் பழையகாலத்து இலக்கியம் சான்றாக .இருக்குது ..இந்த காலத்தில் பறந்து பட்ட அறிவு பலரிடம் இருக்குது\nஅதனால் .அவர்களின் சிந்தனை அடுத்த பரம்பரைக்கு கடத்தப்படும் என்பதும் விஞ்சானம் /.இந்த காலத்தில் பிறக்கும் குழந்தைகள் முளை வளர்ச்சி கூடிய குழந்தைகளாகவும் வளருது\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள��\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஒளிர்வு:58-ஆவணி த்திங்கள் - தமிழ் இணையஇதழ்.;2015.\nஅறிவைத் தருவது கல்வியே என்று அடக்கமாய் நம்பிய எம் ...\nநண்டு உணவுக்கும் வந்தது ஆபத்து.\nதமிழக அரசியலில் ஆபாசப் பேச்சுக்களும் கறை படிந்த வா...\nஅகிலன் தமிழன் ஆக்கத்தில்..... பெண் .\nஒருவன் உயர்குடி/தாழ்குடி-யா என அறிந்துகொள்வது எப்படி\nஎந்த ஊர் போனாலும் நம்ம ஊர் { கீழப்பூங்குடி } போலாக...\n''May God Bless You '' என்றால் உண்மையில் என்ன\nரத்தச் சர்க்கரை குறைவது ஏன்\nசெல்வச் சந்நிதி வாசலில் ஆடல் காட்சி\nதமிழை விரும்பும் சீனப் பெண்\nஇந்து மதம் - எதிர் நோக்கும் சவால்கள்\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nதுவரம் பருப்புகளை சாப்பிடுவதால் தீரும் நோய்கள் என்ன தெரியுமா\nஉலகெங்கிலும் ஏராளமான பருப்பு வகை பயிர்கள் மனிதர்கள் உண்பதற்காக பயிரிடப்பட்டு வளர்க்கப்படுகின்றன. இந்தப் பருப்புகள் அனைத்துமே நமது உடல...\n🗺→ இன்றைய செய்திகள்- Tamil News Today\n💢💢💢💢💢💢💢 💢💢💢💢💢💢💢 முதலில் தலைப்பு செய்திகள்- 🎌மத்தள சர்வதேச விமான நிலையம் ,சுற்றுலா மையமாக மாறுகிறது 🎌...\nமனைவியை மீட்க மன்றாடிய கடவுள்\nஇராவணன் என்ற தீயவனிடமிருந்து தனது மனைவியை மீட்க அனைத்து ஆற்றலும் கைவரப்பெற்ற மனிதக் கடவுள் இராமன், ஹனுமான் என்ற குரங்குக்கடவுளிடம் கை...\nநடிகர் பிரஷாந்த் திரையில் காணாமல் போனதற்கு காரணம் என்ன\nநடிகர் பிரஷாந்த் தன் சக கால நடிகர்களான விஜய் , அஜித்தை விட தனி திறமைகள் அதிகம் கொண்டிருந்தும் , வேறு யாருக்கும் வாய்க்காத மி...\nவாழ்க்கைப் பயணத்தில் ...வருடல்கள் /பகுதி:04\nகதையாக..... [ஆரம்பத்திலிருந்து வாசிக்க கீழே செல்லுங்கள்] 👉 [பகுதி: 04] 👉 வருடங்கள் பல எப்படி ஓடியது என்று தெரியவில்லை. அதற்குள் என் குடும...\nசங்க கால இலக்கிய காதலர்கள்: ஆதிமந்தி-ஆட்டனத்தி\"-[ஆக்கம்:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]\nஉலகப் புகழ் பெற்ற காதலர்கள் ரோமியோ-ஜூலியட��, சகுந்தலை-துஷ்யந்தன், லைலா-மஜ்னூன், மும்தாஜ்-ஷாஜஹான், கிளியோபட்ரா-மார்க்ஆண்டனி, அம்பிகாபதி-அ...\nகண்ணதாசன்-ஒரு கவிப்பேரரசு வரலாறு [இன்று நினைவுதினம்]\nகண்ணதாசன் ( ஜூன் 24 1927 – அக்டோபர் 17 1981 ) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார் . நான்காயிர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaipoonga.net/cinema/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-05-07T01:40:39Z", "digest": "sha1:XGVJ6TXLZHKVFGKRQQWSFMDDZ7VXP7LO", "length": 8670, "nlines": 195, "source_domain": "kalaipoonga.net", "title": "மிரட்டல் நாயகன் மன்சூர் அலிகானின் மிரள வைக்கும் அட்டகாசமான லேட்டஸ்ட் புகைப்படங்கள் - Kalaipoonga", "raw_content": "\nHome Gallery Actor மிரட்டல் நாயகன் மன்சூர் அலிகானின் மிரள வைக்கும் அட்டகாசமான லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nமிரட்டல் நாயகன் மன்சூர் அலிகானின் மிரள வைக்கும் அட்டகாசமான லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nநடிகர் மன்சூர் அலிகானின் மிரள வைக்கும் அட்டகாசமான லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nமிரட்டல் நாயகன் மன்சூர் அலிகானின் மிரள வைக்கும் அட்டகாசமான லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nPrevious article‘தல 61’ – ‘சூரரை போற்று’ இயக்குனருடன் கூட்டணி சேரும் அஜித்\nNext articleடொராண்டோ சர்வதேச தமிழ் திரைப்பட விழாவில் “தட்றோம் தூக்றோம்”\nமாநாடு டப்பிங் ஆரம்பம்… படக்குழு வெளியிட்ட புகைப்படங்கள்\nமூத்த தலைவர் ஆர்.எம்.வீரப்பனை நேரில் சந்தித்து ஆசி பெற்றார் மு.க.ஸ்டாலின் | Video\nநமீதா தியேட்டர்ஸ் – உண்மை சம்பவங்களின் அடிப்படியில் உருவாகும் படங்களை ஒளிபரப்பும் முதல் OTT தளம்\nவெளியானது 34 பேர் கொண்ட தமிழக அமைச்சரவை பட்டியல்\nவெளியானது 34 பேர் கொண்ட தமிழக அமைச்சரவை பட்டியல் தமிழகத்தின் முதலமைச்சராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை சென்னை - கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்க உள்ளார். கொரோனா பரவலை கருத்தில்...\nமாநாடு டப்பிங் ஆரம்பம்… படக்குழு வெளியிட்ட புகைப்படங்கள்\nமாநாடு டப்பிங் ஆரம்பம்... படக்குழு வெளியிட்ட புகைப்படங்கள் சிம்பு நடிப்பில் உருவாகி உள்ள படம் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கியுள்ள இப்படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார். இப்படத்தில் சிம்பு அப்துல் காலிக்...\nமூத்த தலைவர் ஆர்.எம்.வீரப்பனை நேரில் சந்தித்து ஆசி பெற்றார் மு.க.ஸ்டாலின் | Video\nமூத்த தலைவர் ஆர்.எம்.வீரப்பனை நேரில் சந்தித்து ஆசி பெற்றார் மு.க.ஸ்டாலின் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றதை அடுத்து தமிழகத்தின் அடுத்த முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பு ஏற்க உள்ளார். நாளை (மே 7...\nவெளியானது 34 பேர் கொண்ட தமிழக அமைச்சரவை பட்டியல்\nவெளியானது 34 பேர் கொண்ட தமிழக அமைச்சரவை பட்டியல் தமிழகத்தின் முதலமைச்சராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை சென்னை - கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்க உள்ளார். கொரோனா பரவலை கருத்தில்...\nமாநாடு டப்பிங் ஆரம்பம்… படக்குழு வெளியிட்ட புகைப்படங்கள்\nமாநாடு டப்பிங் ஆரம்பம்... படக்குழு வெளியிட்ட புகைப்படங்கள் சிம்பு நடிப்பில் உருவாகி உள்ள படம் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கியுள்ள இப்படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார். இப்படத்தில் சிம்பு அப்துல் காலிக்...\nமூத்த தலைவர் ஆர்.எம்.வீரப்பனை நேரில் சந்தித்து ஆசி பெற்றார் மு.க.ஸ்டாலின் | Video\nமூத்த தலைவர் ஆர்.எம்.வீரப்பனை நேரில் சந்தித்து ஆசி பெற்றார் மு.க.ஸ்டாலின் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றதை அடுத்து தமிழகத்தின் அடுத்த முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பு ஏற்க உள்ளார். நாளை (மே 7...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/rajinikanth-press-release-about-his-political-entry/", "date_download": "2021-05-07T00:46:52Z", "digest": "sha1:ROAIUMUAIN4NSX4LQ57AOD4YPAKEI533", "length": 14855, "nlines": 94, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Rajinikanth Latest Press Release About His Political Entry", "raw_content": "\nHome பொழுதுபோக்கு சமீபத்திய எனக்கு கொடுத்த எச்சரிக்கையாக பார்க்கிறேன் – கட்சி தொடங்கவில்லை என்று ரஜினிகாந்த் வெளியிட்ட அறிக்கை.\nஎனக்கு கொடுத்த எச்சரிக்கையாக பார்க்கிறேன் – கட்சி தொடங்கவில்லை என்று ரஜினிகாந்த் வெளியிட்ட அறிக்கை.\nதர்பார் படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற இருந்த நிலையில் படப்பிடிப்புக் குழுவில் சிலருக்கும் கொரோனா ஏற்பட்டதால் ரஜினிகும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள பட்டது. ஆனால், அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று தெரியவந்தது . இபப்டி ஒரு நிலையில் கடந்த 25 ஆம் தேதி ரத்த அழுத்தம் காரணமாக ரஜினி��ாந்த் ஹைதராபாத்தில் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரஜினி கடந்த 27 ஆம் தேதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.\nரஜினி, தனது கட்சி ஆரம்பிப்பது குறித்து வரும் டிசம்பர் 31 ஆம் தேதி அறிவிப்பதாக இருந்தது. இப்படி ஒரு நிலையில் தான் அரசியலுக்கு வரவில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் அதிரடி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். நான் கட்சியை ஆரம்பித்த பிறகு ஊடகங்கள் சமூக வலைதளங்கள் மூலமாக மட்டும் பிரச்சாரம் செய்தால் மக்கள் மத்தியில் நான் நினைக்கும் அரசியல் எழுச்சியை உண்டாக்கி தேர்தலில் பெரிய வெற்றியை பெற முடியாது இந்த யதார்த்தத்தை அரசியல் அனுபவம் வாய்ந்த யாரும் மறுக்க மாட்டார்கள் நான் மக்களை சந்தித்து கூட்டங்களை கூட்டி பிரச்சாரத்திற்கு சென்று ஆயிரக்கணக்கான ஏன் லட்சக்கணக்கான மக்களை சந்திக்க வேண்டியிருக்கும்.\n120 பேர் கொண்ட குழுவிலேயே கொரோனா பாதிப்பு ஏற்பட்டு நான் மூன்று நாட்கள் மருத்துவமனையில் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்க நேர்ந்தது. இப்போது இந்த கொரோனா உருமாறி புதுவடிவம் பெற்று இரண்டாவது அலையாக வந்து கொண்டிருக்கிறது.தடுப்பூசி வந்தால் கூட நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும் மருந்துகளை சாப்பிடும் நான் இந்த கொரோனா காலத்தில் மக்களை சந்தித்து, பிரசாரத்தின் போது என் உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டால் என்னை நம்பி என் கூட வந்து என்னுடன் அரசியல் பயணம் மேற்கொண்டவர்கள் பல சிக்கல்களையும், சங்கடங்களையும் எதிர்கொண்டு மனரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பல துன்பங்களை சந்திக்க நேரிடும்.\nஎன் உயிர் போனாலும் பரவாயில்லை. நான் கொடுத்த வாக்கை தவற மாட்டேம். நான் அரசியலுக்கு வருவேன் என்று சொல்லி இப்பொழுது அரசியலுக்கு வரவில்லை என்று சொன்னால் நாலு பேர் நாலுவிதமா என்னை பற்றி பேசுவார்கள் என்பதற்காக என்னை நம்பி என் கூட வருபவர்களை நான் பலிகடா ஆக்க விரும்பவில்லை.ஆகையால் நான் கட்சி ஆரம்பித்து, அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருந்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதை அறிவிக்கும் போது எனக்கு ஏற்பட்ட வலி எனக்கு மட்டும் தான் தெரியும். இந்த முடிவு ரஜினி மக்கள் மன்றத்தினருக்கும் நான் கட்சி ஆரம்பிப்பேன் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு��் மக்களுக்கும் ஏமாற்றத்தை அளிக்கும். மன்னியுங்கள்.\nமக்கள் மன்றத்தினர் கடந்த 3 ஆண்டுகளாக என் சொல்லுக்குக் கட்டுப்பட்டு ஒழுக்கத்துடனும், நேர்மையுடனும், கொரோனா காலத்திலும் தொடர்ந்து மக்களுக்கு சேவை செய்திருக்கின்றீர்கள். அது வீண் போகாது. அந்த புண்ணியம் என்றும் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் காப்பாற்றும். கடந்த நவம்பர் 30-ம் தேதி நான் உங்களை சந்தித்த போது நீங்கள் எல்லோரும் ஒரு மனதாக உங்கள் உடல்நலம் தான் எங்களுக்கு முக்கியம். நீங்கள் என்ன முடிவெடுத்தாலும் எங்களுக்கு சம்மதமே என்று சொன்ன வார்த்தைகளை என் வாழ்நாளில் மறக்கமாட்டேன். நீங்கள் என் மேல் வைத்திருக்கும் அன்பிற்கும், பாசத்திற்கும் தலை வணங்குகிறேன். ரஜினி மக்கள் மன்றம் என்றும் போல செயல்படும்.\nமூன்று ஆண்டுகளாக எவ்வளவு விமர்சனங்கள் வந்தாலும் தொடர்ந்து என்னை ஆதரித்து முதலில் உங்க உடல் நலத்தை கவனியுங்க அதுதான் எங்களுக்கு முக்கியம் என்று அன்புடன் கூறிய தமிழருவி மணியனுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.நான் கேட்டுக் கொண்டதற்கிணங்க ஒரு பெரிய கட்சியில் பொறுப்பான பதவியில் இருந்து விலகி என் கூட வந்து பணியாற்ற சம்மதித்த அர்ஜூன மூர்த்திக்கும் நன்றி கூற நான் கடமைப்பட்டுள்ளேன்.தேர்தல் அரசியலுக்கு வராமல் மக்களுக்கு என்னால் என்ன சேவை செய்ய முடியுமோ அதை நான் செய்வேன். நான் உண்மையை பேச என்றுமே தயங்கியதில்லை. உண்மையையும், வெளிப்படைத் தன்மையையும் விரும்பும் என் நலத்தில் அக்கறையுள்ள என் மேல் அன்பு கொண்ட என்னை வாழவைக்கும் தெய்வங்களான ரசிகர்களும், தமிழக மக்களும் என்னுடைய இந்த முடிவை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” இவ்வாறு நடிகர் ரஜினிகாந்த் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nPrevious articleBreaking News : அனிதா சம்பத்தின் தந்தை இரயிலில் மரணம் – இப்படி ஒரு சோகமா.\nNext articleஅவரு ரெண்டு நாளா இதனாலா சாப்பிட முடியாம இருந்திருக்காரு – தந்தை இறப்பின் காரணம் குறித்து அனிதா.\nதெலுங்கு சூப்பர் ஸ்டார் படத்தில் இருந்து விலகிய திரிஷா – காரணம் தளபதி 65 நடிகையா \nஇந்த செத்த நாய சப்போர்ட் பண்ற – தனது ரசிகையை திட்டிய நபருக்கு அனிதா சம்பத் கொடுத்த பதிலடி.\nபிஜேபிக்கு எதிராக தோல்வியடைந்து விட்டதாக அறிவித்த பின்னர் கமல் என்ன செய்தார் – கமலுடன் இருந்த முக்கிய நபர்.\nஷூட்டிங் ஸ்பாட்டில் போலீஸ் உடையில் பந்து வீசியும், பேட்டிங் செய்தும் அசத்தியுள்ள அஜித்-வைரலாகும் புகைப்படங்கள்...\nதாய் மாமனின் படத்தை தனது தாயுடன் சென்று பார்த்த அஜித் மகள். வைரலாகும் புகைப்படம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/sivakarthikeyan-act-in-aegan-movie/", "date_download": "2021-05-07T00:09:11Z", "digest": "sha1:6DHYWBLOWM6SKILTE6YAYVW2RF733CZP", "length": 8361, "nlines": 94, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "சிவகார்த்திகேயன் நடிச்ச முதல் படம் sivakarthikeyan நடித்த muthal padam", "raw_content": "\nHome செய்திகள் சிவகார்த்திகேயன் நடிச்ச முதல் படம் ‘தல அஜித்’ கூடத்தான் \nசிவகார்த்திகேயன் நடிச்ச முதல் படம் ‘தல அஜித்’ கூடத்தான் \nதல அஜித் திரையில் பார்ப்பதைத் தாண்டி அவர் ஒரு மிகச்சிறந்த மனிதர் என்பதை நாம் அவரது ரசிகர்கள் பலர் கூறக் கேட்டிருப்போம். சமீப காலமாக இதனை பல நடிகர்களும் கூறி வருகின்றனர். தன்னுடன் நடிக்கும் பல துணை நடிகர்களுக்கு உதவி செய்வது அஜித்திற்கு வழக்கமான ஒரு பழக்கம் ஆகும்.\nசூட்டிங்கில் தன்னுடன் நடிக்க வரும் புது நடிகர் நடிகைகளை அவரை பார்த்து பிரமித்து போய் இருப்பார்கள். அப்படியாக அவரைப் பார்த்து பதட்டப்படும் நடிகர்களிடம் அவரே வந்து பேசி அவர்களின் பதட்டத்தை தணிப்பார்.\nஇப்படி தான், கடந்த 2008ல் வந்த தலயின் ‘ஏகன்’ படத்தில் ஒரு சின்ன ரோலில் நடிகர் சிவா கார்த்திகேயன் நடித்தார், அதில் தல அஜித்துக்கு ஸ்பையாக நடித்திருப்பார்.ஒரு நாளில் தலயுடன் இருந்து நடித்ததில் சில அனுபவங்களை கூறினார். அவர் கூறியதாவது,\nஇதையும் படிங்க: இவர் மட்டும் இல்லை என்றால், நான் இல்லவே இல்லை – சிவகார்த்திகேயன் உருக்கம் \nநான் முதலில் படப்பிடிப்பிற்கு சென்றவுடன் சற்று பதட்டமாக இருந்தேன். அவருக்கு திரையில் ஏன் இவ்வளவு வரவேற்ப்பு என அஜித் சாரை பார்த்ததும் தான் தெரிந்தது. அப்படி ஒரு தேஜஸ் அவரது முகத்தில். நான் பதட்ட மாக இருந்ததை அறிந்த அவரே என்னிடம் வந்து பேசினார்.\nநாம் என்ன செய்கிறோம் என்பதையும் தெரிந்து வைத்திருப்பார் அஜித். நாம் நன்றாக வாழ்கிறோமா என்பதை எல்லாம் விசாரிப்பார். என்னிடமும் வீட்டில் எல்லாம் என்ன செய்கிறார்கள் வாழ்க்கை நன்றாக போகிறதா பணத்தை சேர்ர்த்து வையுங்கள், அது மிக முக்கியம், அதிகமாகி சேர்த்தால�� மற்றவர்களுக்கு உதவியும் செய்யுங்கள் எனக் அன்புடன் விசாரித்தார் தல அஜித்.\nஅவ்வளவு பெரிய ஸ்டார் என்னிடம் வந்து என்னுடன் உட்கார்ந்து அப்படி அன்பாக உபசரிப்பது அவர் ஒருவர் தான் நினைக்கிறேன் என மனம் நெகிழ தல அஜித்தைப் பற்றிக் கூறினார் சிவா காத்திகேயன்.\nPrevious articleதமிழ் சினிமாவில் உள்ள 17 முஸ்லீம் நடிகர்கள் \nNext articleஇவர் மட்டும் இல்லை என்றால், நான் இல்லவே இல்லை – சிவகார்த்திகேயன் உருக்கம் \n4 சிறுவர்கள் உட்பட அஸ்வின் குடும்பத்தில் 10 பேருக்கு கொரோனா தொற்று. (அவர் பயந்த மாதிரியே ஆகிடிச்சே)\nகுஷி பட ஜோதிகா போல ட்ரான்ஸ்பிரென்ட் உடையில் புதிய முல்லை நடத்திய போட்டோ ஷூட்.\nவரும் தேர்தலில் விஜய்யின் மக்கள் இயக்கம் எடப்பாடிக்கு ஆதரவா \nசும்மா டிரேஸ்ஸ போட்டு வந்து அத ஆட்டிக்காட்ட எனக்கு விருப்பைமில்லை. விஜய், அஜித் கூட...\nதன் அப்பாவின் கண்களை உடம்பில் பச்சை குத்திய சண்முகபாண்டி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2021/05/05010009/Trees-that-radiate-greenery.vpf", "date_download": "2021-05-07T01:43:29Z", "digest": "sha1:XVYBCAWKK3OIFSQAM4ZUVKQH27N5BCWO", "length": 5683, "nlines": 112, "source_domain": "www.dailythanthi.com", "title": "Trees that radiate greenery || பசுமையை பறைசாற்றும் மரங்கள்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் முடிவுகள் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nபசுமையை பறைசாற்றும் வகையில் மரங்கள் வளர்ந்துள்ளன\nஅடிக்கின்ற வெயில் தகிக்கும் அனலாய் இருக்க, கண்களுக்கு கொஞ்சம் பசுமையை பறைசாற்றுகின்றதோ விருதுநகர் அருகே செங்குன்றாபுரம் பகுதியில் இந்த மரங்கள்.\n1. காரில் கடத்தி சென்று விதவை பெண்ணுக்கு பாலியல் தொல்லை டீக்கடை ஊழியர் கைது\n2. சிறுமி பாலியல் பலாத்காரம்\n3. 9-வது முறையாக கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. ஆனார்.\n4. குமரியில் தி.மு.க. கூட்டணி 4 இடங்களை கைப்பற்றியது\n5. மராட்டிய சட்டசபை இடைத்தேர்தல்: பண்டர்பூர் தொகுதியில் பா.ஜனதா வெற்றி ஆளும் கூட்டணிக்கு அதிர்ச்சி\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thoothukudibazaar.com/news/tuticorin-voters-awarness/", "date_download": "2021-05-07T00:59:40Z", "digest": "sha1:3JGWKUTTOB7UBSAYKNVLDAPTLV7P6HIU", "length": 7450, "nlines": 64, "source_domain": "thoothukudibazaar.com", "title": "தூத்துக்குடி கடற்கரையில் வாக்காளர் விழிப்புணர்வு பட்டம் விடும் நிகழ்ச்சி கலெக்டர் சந்தீப் நந்தூரி பங்கேற்பு |", "raw_content": "\nதூத்துக்குடி கடற்கரையில் வாக்காளர் விழிப்புணர்வு பட்டம் விடும் நிகழ்ச்சி கலெக்டர் சந்தீப் நந்தூரி பங்கேற்பு\nதூத்துக்குடி முத்துநகர் கடற்கரை பகுதியில் மாநகராட்சி சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு பட்டம் விடும் நிகழ்ச்சி நேற்று காலையில் நடந்தது. மாவட்ட கலெக்டரும், தேர்தல் அலுவலருமான சந்தீப் நந்தூரி கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது\nதூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த தேர்தல்களை விட, வரும் தேர்தலில் அதிக அளவில் வாக்காளர்கள் வாக்களிக்க செய்யும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. மாநகராட்சி சார்பில் வீடுகளில் வாக்காளர் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு வருகிறது. மாநகராட்சி துப்புரவு வாகனங்கள் மூலம் விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது. மேலும், ரோச் பூங்கா பகுதியில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் ஸ்கேட்டிங் நிகழ்ச்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வுகள் மேற்கொள்ளப்பட்டது.\nஅந்த வகையில் தூத்துக்குடி முத்துநகர் கடற்கரை பகுதியில் மாநகராட்சி சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு பட்டம் விடும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. கடந்த தேர்தலில் கிராமங்களை விட நகர்பகுதியில் வாக்கு சதவீதம் மிகவும் குறைவாக உள்ளது. எனவே பொதுமக்கள் அதிகளவில் வந்து தூத்துக்குடி மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்களித்திட வேண்டும். நடைபெற உள்ள தேர்தலில் வாக்குப்பதிவு எந்திரத்துடன் வாக்காளர் ஒப்புகைச்சீட்டு எந்திரம் பயன்படுத்தப்படுவதால் வாக்காளர்கள் தாம் யாருக்கு வாக்களித்தோம் என்பது குறித்து எந்தவித சந்தேகமின்றி தெரிந்து கொள்ள முடியும்.\nநிகழ்ச்சியில் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி பொதுத்தேர்தல் பொதுபார்வையாளர் துக்கிசயாம் பேயிக், தேர்தல் காவல் கண்காணிப்பாளர் சீனிவாசலு, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் வீ.ப.ஜெயசீலன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா, உதவி கலெக்டர் சிம்ரான் ஜீத்சிங் கலோன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.\nப���திதாக 10 பேருக்கு தொற்று உறுதி: தூத்துக்குடியில் கொரோனாவுக்கு லாரி டிரைவர் பலி\nதூத்துக்குடியில் இருந்து பீகாருக்கு சிறப்பு ரெயில் இன்று இயக்கம்\nஅஞ்சலக வங்கியில் கணக்கு தொடங்க திரண்ட அமைப்பு சாரா தொழிலாளா்கள்\nஐடிஐ படித்தவா்களுக்கு மாா்ச் 4 இல் தொழில் பழகுநா் சோ்க்கை முகாம்\nநலவாரியத்தில் சேர நாட்டுப்புற கலைஞர்கள் விண்ணப்பிக்கலாம் – கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்\nPREVIOUS POST Previous post: தூத்துக்குடி வஉசி கல்லூரியில் நாளை வேலைவாய்ப்பு முகாம்\nNEXT POST Next post: தூத்துக்குடி தொகுதியில் போலீசார் தபால் ஓட்டுப்பதிவு செய்தனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mybhaaratham.com/2019/11/blog-post_25.html", "date_download": "2021-05-07T01:42:22Z", "digest": "sha1:MQOPISILW6MF2IKK7SXAJYEQ5O7PFS7P", "length": 10714, "nlines": 125, "source_domain": "www.mybhaaratham.com", "title": "Bhaaratham Online Media: அன்வாரின் 'ரீஃபோர்மாசி' செய்யாததை 'ஹிண்ட்ராஃப்' சாதித்தது- கணபதிராவ்", "raw_content": "\nஅன்வாரின் 'ரீஃபோர்மாசி' செய்யாததை 'ஹிண்ட்ராஃப்' சாதித்தது- கணபதிராவ்\nமலேசிய அரசியல் வரலாற்றில் டத்தோஸ்ரீ அன்வாரின் 'ரீஃபோர்மாசி' இயக்கம் செய்து காட்டாததை 'ஹிண்ட்ராஃப்' போராட்டம் சாதித்து காட்டியது என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் தெரிவித்தார்.\n1998ஆம் ஆண்டு அன்றைய துணைப் பிரதமராக பதவி வகித்த டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சிறையில் அடைக்கப்பட்டபோது அவரது ஆதரவாளர்களிடையே எழுந்த அதிருப்தி அலை 'ரீஃபோர்மாசி' போராட்டமாக வெடித்தது.\nஇந்த போராட்டம் அதே ஆண்டு நடந்த தேர்தலில் எவ்வித விளைவுகளையும் ஏற்படுத்தவில்லை. மாறாக, 3இல் 2 பெரும்பான்மை பெற்று தேசிய முன்னணி ஆட்சி புரிந்தது.\nஆனால் 2007ஆம் ஆண்டு இந்தியர் உரிமை போராட்ட களமாக அமைந்த 'ஹிண்ட்ராஃப்' போராட்டம் நாட்டின் அரசியல் சூழலையே ஆட்டி படைத்தது.\nஇந்த போராட்டத்திற்கு பின்னர் 2008ஆம் ஆண்டு நடைபெற்ற நாட்டின் 12ஆவது பொதுத் தேர்தலில் தேமு வசமிருந்த சிலாங்கூர், பேராக், பினாங்கு, கெடா ஆகிய மாநிலங்கள் அன்றைய எதிர்க்கட்சி வசமானதோடு நாடாளுமன்த்தில் 3இல் 2 பெரும்பான்மையை தேமு இழக்கவும் வழிவகுத்தது.\nஅதன் தொடர்ச்சியாக 13ஆவது பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சியினர் பெரும்பான்மையில் வென்றதோடு 14ஆவது பொதுத் தேர்தலில் மத்திய அரசாங்கத்தை பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி ஆட்சியமைக்க ம��டிந்தது.\n'ஹிண்ட்ராஃப்' போராட்டம் ஒரு சமூகத்தின் போராட்டம் என்பதை காட்டிலும் சிறுபான்மை இனத்தின் உரிமையை பாதுகாக்கவும் இந்தியர்களிடையே நிலவும் அதிருப்தியை அரசாங்கத்தின் பார்வைக்கு கொண்டு செல்லவும் வீதி போராட்டமாக அமைந்தது என்று அதன் 12ஆம் ஆண்டு நிறைவு நாள் குறித்து கருத்துரைத்த கணபதிராவ் இவ்வாறு கூறினார்.\n'இயற்கையை காப்போம் இனியதோர் உலகை படைப்போம்' - சிறப்பு கட்டுரை\nபினாங்கு - இயற்கை என்பது இயல்பாக இருப்பது என்பது பொருள் கொண்டதாகும் . இயல்பாகவே தோன்றி மறையும் பொருட்கள் அவற்றின் இயக்கம் , அவை இயங...\nபூச்சோங்- மாரடைப்பின் காரணமாக மனைவியும் அவரை தொடர்ந்து கணவனும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. சிலாங்கூர்,பூச்சோங்கைச் ச...\nசோழன் ஆட்சியை இழந்ததைப்போல, மஇகாவை இழந்து விடாதீர்கள்\nசேரன், சோழன், பாண்டியன் ஆட்சிகளை இழந்து 500 ஆண்டுகளைக் கடந்து விட்டோம். இங்கு வந்து 200 ஆண்டுகளாகக் கட்டமைத்த வாழ்க்கையைத்தான் இன்றும...\n2020இல் தமிழ்ப்பள்ளியே நமது தேர்வாகட்டும்\nஅன்வாரின் 'ரீஃபோர்மாசி' செய்யாததை 'ஹிண்ட்ராஃப்' சா...\nவர்த்தகத் துறையில் இந்தியப் பெண்களும் பங்காற்ற வேண...\nடான்ஸ்ரீ கேவியசுக்கு ஆதரவாக திரண்ட பூர்வக்குடியினர்\n'மைபிபிபி' இனி 'பிபிபி' மட்டுமே- டான்ஸ்ரீ கேவியஸ்\nமலேசிய அரசியலை புரட்டி போட்டது 'ஹிண்ட்ராஃப்' மட்டு...\n'பாடாங் செட்டி' பெயர் மாற்றப்படக்கூடாது- MIV மணிமா...\nயூபிஎஸ்ஆர் தேர்வில் 'கெத்து' காட்டிய தமிழ்ப்பள்ளிகள்\nயூபிஎஸ்ஆர் தேர்வில் 8ஏ பெற்றார் கெளரி\nயார் வேண்டுமானாலும் பிரதமர் ஆகலாம்- டத்தோஶ்ரீ அன்வார்\nவிரைவில் அமைச்சரவை மாற்றம்- பிரதமர்\nஅரசாங்கத்தின் தவறுகளை கண்மூடித்தனமாக ஆதரிக்க வேண்ட...\nபக்காத்தான் கூட்டணிக்கு 'மரண அடி' கொடுத்துள்ள தேமு\nசிலாங்கூர் மாநில அரசின் தீபாவளி கொண்டாட்டம்\nஎம்பி பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன் – பிரபாகரன்\nசிலாங்கூர் அரசின் இலவச குடிநீருக்கான விண்ணப்பப் பதிவு\n'சொஸ்மா' திருத்தம்: வாக்களித்த மக்களுக்கு செய்யும்...\nபக்காத்தான் தலைமைத்துவம் மீது இந்தியர்கள் அதிருப்த...\nஸாகீர் நாய்க்கை அனுப்ப மாட்டோம் - இந்தியாவுக்கு வி...\nஆஸ்ட்ரோ உறுதுணை ஏற்பாட்டில் இலவச நிதி கல்வியறிவு ப...\nஎல்டிடிஇ; குணசேகரன் மீதான குற்றச்சாட்டுகள் ரத்து\nமதவாதத்தை தூண்டுவோரின் சுயநலனுக்கு பலியாகாமல் மலேச...\nமுந்தைய தவறுகளை மீண்டும் செய்ய விரும்பவில்லை- துன்...\nபிரதமர் பதவி அன்வாரிடமே ஒப்படைக்கப்படும்- துன் மகா...\nதேசிய நிலையிலான தீபாவளி உபசரிப்பை அரசாங்கம் நடத்தா...\nமஇகா மீண்டும் எழுச்சி பெறும்- டான்ஶ்ரீ விக்னேஸ்வரன...\nகண்வலி மட்டுமே; குருடாகவில்லை - டத்தோஸ்ரீ நஜிப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/671959/amp", "date_download": "2021-05-07T02:07:19Z", "digest": "sha1:5RLHOGEZ4RTJ4AEZTLUBMKYOFSBZYWLW", "length": 11277, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "கொரோனாவால் பாதிக்கப்பட்ட தனது சகோதரருக்கு உ.பி. மருத்துவமனையில் படுக்கை கிடைக்கவில்லை!: மத்திய அமைச்சர் வி.கே.சிங்கின் ட்வீட்டால் சர்ச்சை..!! | Dinakaran", "raw_content": "\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட தனது சகோதரருக்கு உ.பி. மருத்துவமனையில் படுக்கை கிடைக்கவில்லை: மத்திய அமைச்சர் வி.கே.சிங்கின் ட்வீட்டால் சர்ச்சை..\nலக்னோ: உத்திரப்பிரதேசத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள தனது சகோதரருக்கு மருத்துவமனையில் படுக்கை கிடைக்கவில்லை என மத்திய அமைச்சர் வி.கே.சிங் ட்விட்டரில் பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உலக நாடுகளிலேயே இந்தியாவில்தான் கொரோனா அதிவேகமாக பரவுகிறது. கொரோனா பரவலின் இந்த 2-ம் அலையை எதிர்கொள்ளவேண்டிய நெருக்கடியில் மத்திய, மாநில அரசுகள் உள்ளன. இந்தியாவில் மராட்டியம், மத்திய பிரதேசம், குஜராத், டெல்லி, உத்திரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் அதிகம் பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். தொடர்ந்து, உத்திரப்பிரதேச மாநிலத்தில் கொரோனாவின் தாக்கத்தால் அரசு மருத்துவமனைகள் அனைத்தும் நிரம்பி வழிந்துகொண்டிருக்கின்றன.\nபலர் மருத்துவமனைகளில் இடம் கிடைக்காமல் அலைந்து வருகின்றனர். இந்த நிலையில் மத்திய அமைச்சர் வி.கே.சிங், தனது சகோதரருக்கு மருத்துவமனையில் படுக்கை கிடைக்கவில்லை என ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார். காசியபாத்தில் கொரோனா சிகிச்சைக்கான படுக்கைகள் ஏற்பாடு செய்யப்படவில்லை என்றும் தனது சகோதரர் ஒருவருக்கு சிகிச்சைக்காக ஒரே ஒரு படுக்கை ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் பாஜக தலைவர்கள் சிலரை டாக் ( tag ) செய்து அவர் ட்விட்டரில் பதிவிட்டார்.\nமத்திய அமைச்சராக இருப்பவர் அதுவும் இந்த நாட்டின் முன்னாள் ராணுவ தளபதியாக பதவி வகித்தவ���், தமது சகோதரருக்கு கொரோனா சிகிச்சைக்கு படுக்கை கிடைக்கவில்லை என பொதுவெளியில் பகிரங்கமாக பதிவிட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாஜக ஆளும் உத்திரபிரதேச மாநிலத்தில் மத்திய அமைச்சரின் சகோதரருக்கு படுக்கை கிடைக்கவில்லை என்ற செய்தி வேகமாக பரவியதை அடுத்து அவர் தனது ட்வீட்டை நீட்டியுள்ளார்.\nஇசட் பிரிவு பாதுகாப்பு கேட்கிறார் ஆதார் பூனாவாலா: மும்பை நீதிமன்றத்தில் மனு\nஇந்தியாவில் வரலாறு காணாத உச்சம்: ஒரே நாளில் 4.12 லட்சம் பேருக்கு தொற்று: 24 மணி நேரத்தில் 3,980 பேர் பலி\nகுழந்தைகளை தாக்கும் கொரோனா 3வது அலை: நவம்பர், டிசம்பரில் பரவ வாய்ப்பு: நிபுணர்கள் கணிப்பு\nகட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மாநிலங்கள் எடுக்க வேண்டும்: பிரதமர் மோடி வலியுறுத்தல்\nநீதிபதிகளின் கருத்துக்களை ஊடகங்கள் வெளியிடுவதை தடை செய்ய முடியாது: தேர்தல் ஆணைய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி\nவிமான பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்குவதை விரைவுபடுத்துங்கள்: வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு\nசட்டீஸ்கரில் பரிதாபம்: ஹோமியோபதி மருந்து குடித்த 7 பேர் பலி\nதேர்தலுக்கு பிந்தைய வன்முறை குறித்து ஆய்வு: மேற்கு வங்கம் வந்தது மத்திய குழு\nமோசடி வழக்கில் கைதான ஹரிநாடாரிடம் இருந்து ரூ.2 கோடி மதிப்பு தங்கம் பறிமுதல்\nவேகமெடுக்கும் கொரோனா கேரளாவில் நாளை முதல் 16ம் தேதி வரை முழு ஊரடங்கு\nமாநிலங்களின் பொருளாதாரம் கடுமையாக பாதிப்பு; 6 மாதமாக ஜிஎஸ்டி கவுன்சிலை கூட்டாதது ஏன்.. நிர்மலா சீதாராமனுக்கு பஞ்சாப் அமைச்சர் பகீர் கடிதம்\nகவர்னர் மாளிகையில் எளிய விழா; புதுச்சேரி முதல்வராக ரங்கசாமி நாளை பிற்பகல் பதவியேற்பு: துணை முதல்வர் பதவி உருவாக்கப்படுமா\nபிரதமரின் நிர்வாகத் தோல்வியால் மீண்டும் முழு ஊரடங்கை நோக்கி நாடு செல்கிறது: ராகுல் காந்தி ட்வீட்\nகொரோனா தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் காப்புரிமை விதிகளில் அமெரிக்க அரசு தளர்வுகள் அறிவிப்பு\nகொரோனா தடுப்பு மருந்து வீணாகவில்லை: கேரள அரசுக்கு பிரதமர் மோடி பாராட்டு\nசீரம் நிர்வாக அதிகாரி, குடும்பத்தினருக்கு ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு வேண்டும்: தொடர் அச்சுறுத்தலால் கோர்ட்டில் முறையீடு\n2 மாதங்களுக்கு இலவச ரேஷன்: மத்திய அமைச்சரவையில் ஒப்புதல்\nபதற்றத்தில் மே��்குவங்காளம்: தேர்தலுக்கு பின்னர் நடைபெற்ற வன்முறையில் இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில அரசு தகவல் \nஉ.பி தேர்தலில் சமாஜ்வாதி அபாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/magyar", "date_download": "2021-05-07T02:19:04Z", "digest": "sha1:5A2WOPLYIUKH2B36ZUVYAXILQLF3XRRU", "length": 4590, "nlines": 104, "source_domain": "ta.wiktionary.org", "title": "magyar - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஹங்கேரியில் வாழும் மங்கோலிய இனத்தவர்\nஹங்கேரியில் வாழும் மங்கோலிய இனத்தவரின் மொழி\nஹங்கேரியில் வாழும் மங்கோரிய இனஞ் சார்ந்த\nஆதாரங்கள் ---magyar--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 08:32 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/farm-info/farmers-who-follow-the-traditional-method-of-getting-goats-for-natural-manure/", "date_download": "2021-05-07T00:39:22Z", "digest": "sha1:56EGGTWF4VUKKLRT3MSOE72QEJ2AFNVF", "length": 18658, "nlines": 128, "source_domain": "tamil.krishijagran.com", "title": "இயற்கை உரத்திற்காக ஆடுகளை கிடைபோடும் பாரம்பரிய முறையை கடைபிடிக்கும் விவசாயிகள்!", "raw_content": "செய்திகள் வாழ்வும் நலமும் தோட்டக்கலை கால்நடை வெற்றிக் கதைகள் விவசாய தகவல்கள் FTB அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா Directory\n#FTB விவசாய தகவல்கள் அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா\nஎங்கள் அச்சு மற்றும் டிஜிட்டல் பத்திரிகைகளுக்கு குழுசேரவும்\nசமூக ஊடகங்களில் எங்களுடன் இணைக்கவும்:\nஇயற்கை உரத்திற்காக ஆடுகளை கிடைபோடும் பாரம்பரிய முறையை கடைபிடிக்கும் விவசாயிகள்\nமனிதன் ஓரிடத்தில் தங்கி நாகரிகம் உருவான காலத்தில் இருந்து ஆடு வளர்த்தல் (Goat breeding) நடைமுறைப் படுத்தப்பட்டது. ஆட்டின் கழிவுகளான சாணம் (Dung), சிறுநீர் ஆகியவை இயற்கை உரங்களாக பயன்பட்டு வருகின்றன. இன்றைக்கும் பெரும்பாலான விளைநிலங்களில் ஆட்டின் கழிவுப் பொருட்கள் உரத்திற்காக பயன்படுத்தப்படுகின்றன. செம்மறி ஆடு மற்றும் மாட்டு கிடை போடுதல் என்பது நேரடியாகவும், உடனடியாகவும் நிலத்திற்கு உரமிடும் முறையாகும்.\nகிடை போடுதல் என்பது விளைநிலங்க���ில் ஆடுகளையோ, மாடுகளையோ இரவில் அடைத்து வைத்து அவற்றின் கழிவுப்பொருட்களான சாணம் (Dung) மற்றும் சிறுநீரினை உரங்களாக மாற்றுவதாகும். இதனை பழங்காலத்தில் மந்தை அடைத்தல் என்று குறிப்பிட்டனர். கிடை போடுதலை, பட்டி அடைத்தல் என்றும் கூறுவர். செம்மறி ஆட்டுக் கிடைபோடுபவர்கள் கீதாரிகள் என்று அழைக்கப்படுகின்றனர். கிடை போடுதல் பொதுவாக விளைச்சல் காலம் முடிந்து அடுத்த பயிர் (Crop) செய்யும் காலத்திற்கு இடைப்பட்ட காலத்தில் போடப்படுகிறது. சம்பா அறுவடை (Samba Harvest) முடிந்ததும் மார்ச் மாதம் முதல் மேட்டூர் அணை திறப்பது வரை டெல்டா மாவட்டங்களில் பெரும்பாலான கிராமங்களில் கிடைபோடும் பழக்கம் பின்பற்றப்படுகிறது. குறைந்தபட்சம் இரண்டாண்டுக்கு ஒருமுறை கிடை போடப்படுகிறது.\n\"ஆட்டுக்கிடை இட்டால் அந்தாண்டே பலன். மாட்டுக் கிடை இட்டால் மறுஆண்டு பலன்\" என்பது பழமொழி. மேலும் ஆட்டு உரத்தில் நார்ச்சத்து (Fiber) குறைவு. எனவே அதனை நேரடியாக உரமாகப் பயன்படுத்தலாம். மாட்டுச் சாணத்தில் நார்ச்சத்து அதிகம். ஆதலால் அதனை பாதி மட்கச் செய்து பின்பு தான் உரமாகப் பயன்படுத்த வேண்டும். எனவே தான் ஆட்டுக் கிடை போடும் வழக்கம் அதிகமாக உள்ளது. ஓர் ஆடானது ஆண்டிற்கு 500 முதல் 700 கிலோ வரை எரு கொடுக்கும். சுமார் 2000 ஆடுகளை ஒருநாள் இரவு ஒரு ஏக்கர் நிலத்தில் தங்க வைத்தால் அந்த இடத்திற்குத் தேவையான எரு கிடைக்கும்.\nஆடுகள் சின்னஞ்சிறு விதைகளையும் (Seeds) நன்கு செரித்துவிடும். எனவே இதனை உரமாகப் பயன்படுத்தும்போது களைச் செடிகள் அவ்வளவாக முளைப்பதில்லை. மேலும் ஆட்டு சிறுநீரானது களைச் செடிகள் முளைப்பதை தடைசெய்து விடுகிறது.\nஆட்டு எருவில் பயிர் வளர்ச்சிக்குத் தேவையான நைட்ரஜன் (தழைச்சத்து), பாஸ்பரஸ் (மணிச்சத்து), பொட்டாஷ் (சாம்பல் சத்து), சுண்ணாம்புச்சத்து, நுண்ணூட்டச்சத்து ஆகியவை உள்ளன. ஆட்டு எருவில் உள்ள 30 சதவீத ஊட்டச்சத்து (Nutrition) முதல்பயிருக்கும், 70 சதவீத ஊட்டச்சத்து இரண்டாவது பயிருக்கும் கிடைக்கிறது. ஆட்டுசிறுநீரிலிருந்து கிடைக்கும் ஊட்டச்சத்து முழுவதும் முதல் பயிருக்கு உடனே கிடைக்கும்.\nஆட்டுக் கிடை போடுவதால் கிடைக்கும் நன்மைகள்:\nஆட்டுக் கிடை போடுவதால் நிலத்திற்கும், பயிர் விளைச்சலுக்கும், அப்பயிரினை உண்பதால் உண்பவர்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் (Environment) பல நன்மைகள் கிடைக்கின்றன. இரவு நேரத்தில் ஆட்டுக்கிடை போடுவதால் மண்ணின் நீர்பிடிப்புத்திறன், காற்றோட்டம், மண்ணின் அடர்வு, மண்ணின் தன்மை ஆகியவை அதிகரிக்கின்றன. உவர் மற்றும் களர் நிலத்தில் ஆட்டுக் கிடை போடுவதால் மண்ணின் வேதியியல் பண்புகள் (Chemical properties of soil) மேம்படுத்தப்பட்டு மண்வளம் அதிகரிக்கிறது.\nமண்ணில் உள்ள நுண்ணுயிரிகள் பாதுகாக்கப்படுவதுடன் அதன் செயல்பாடுகள் அதிகமாகின்றன. நீண்டநாளுக்கு வேளாண்மை செய்வதற்கு ஏதுவாக மண்வளம் செழிக்கிறது. குறைந்த செலவில் பயிருக்குத் தேவையான சத்துகள் சரியான அளவு மற்றும் விகிதத்தில் கிடைக்கிறது. பயிர்கள் எல்லாம் ஒரே சீராக வளரும். பயிரின் நோய் எதிர்ப்பு சக்தி (Immunity) அதிகரிக்கும்.\nபயிரில் விளைச்சல் அதிகரிக்கும். காய், பழம், பூ, தானியங்கள் ஆகியவற்றின் நிறம், சுவை, தரம் அதிகரிக்கும். விளைநிலங்களுக்கு உரமிடும் செலவு மிச்சமாகிறது. களைகளும் கட்டுப்படுத்தப்படுகின்றன. சத்துக்களும் உடனே பயிருக்கு கிடைக்கிறது.இது இயற்கை உரம் ஆதலால் சுற்றுச்சூழலுக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படுவதில்லை. உரத்திற்கான செலவும் குறைவு. மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும் (Livestock) எவ்வித தீங்கும் ஏற்படுவதில்லை. நன்மைகள் மிகுந்த சுற்றுசூழலைப் பாதிக்காத ஆட்டுக் கிடை இட்டு வளமான நிலத்தை உருவாக்கி நலமான வாழ்வு வாழ்வோம்.\nநெற்பயிரில் புகையான் நோயைத் தடுக்கலாம் ஆலோசனை வழங்குகிறது வேளாண் துறை\nமகளிர் தினத்தை முன்னிட்டு விவசாயிகளுக்கு ஆதரவாக டெல்லிக்கு 40,000 பெண்கள் படையெடுப்பு\nஅன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.\nஉங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....\nபங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)\nபாரம்பரிய முறை இயற்கை உரம் ஆடு கிடை சாணம், சிறுநீர் Goat breeding ஆடு வளர்த்தல்\\ ஆட்டின் கழிவுப் பொருட்கள் goats for natural manure Dung traditional method\nபட்டுப்புழு வளர்ப்பு மேலாண்மை பற்றி விவசாயிகளுக்கு செயல்ம���றை விளக்கம் அளித்த வேளாண் கல்லூரி மாணவர்கள்\nநெற்பயிரில் புகையான் நோயைத் தடுக்கலாம் ஆலோசனை வழங்குகிறது வேளாண் துறை\nகொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, முழு ஊரடங்கை அமல்படுத்த உச்ச நீதிமன்றம் பரிந்துரை\nகொப்பரை உற்பத்தி செய்ய நவீன இயந்திரம்: விவசாயிகள் மகிழ்ச்சி\n செய்ய வேண்டியவையும், செய்யக் கூடாதவையும்\nவிளைநிலங்களில் வீணாகும் தர்பூசணி பழங்கள்\nபூச்சிகளைப் புரிந்து கொள்(ல்)வோம்- காணொளி மூலம் பயிற்சி\nரூ.4000 கொரோனா நிவாரண நிதிவழங்கும் திட்டம் - நாளை ஸ்டாலின் முதல் கையெழுத்து\nவாடிக்கையாளர்களுக்கு புதியவகை டிசைனர் சிலிண்டரை அறிமுகம் செய்த IOCL\nஒரே நிமிடத்தில் cowin.gov.in தளத்தில் கொரோனா தடுப்பூசி பதிவு செய்வது எப்படி\nபருத்தியைத் தாக்கும் மாவுப்பூச்சிகளை எப்படி கட்டுப்படுத்தலாம்\nகொரோனாவைத் தடுக்கும் முயற்சியில், புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்\nஒன்றல்ல, இரண்டல்ல, ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள்\nதொற்றுநோய்களைத் தடுக்கும் ஊட்டச்சத்து அணுகுண்டு எது தெரியுமா\nமாடித்தோட்டத்திற்கு ஏற்ற மண் கலவை வகைகள் எவை\nவிவசாயிகள் நலன் கருதி சாகுபடி தொடர்பான சந்தேகம் ஏற்பட்டால் வேளாண் விஞ்ஞானிகளை அணுகலாம்: தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cartoon/120425-.html", "date_download": "2021-05-07T01:38:33Z", "digest": "sha1:JBFSGMBPE5VEQK4QTWQTNXLYL2QKQDEK", "length": 9047, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "ரூட்ட மாத்து! | ரூட்ட மாத்து! - hindutamil.in", "raw_content": "வெள்ளி, மே 07 2021\nநந்திகிராமில் தோற்ற மம்தா பானர்ஜி முதல்வர் பதவியில்...\nபிரதமருக்கு வீடு கட்டச் செலவிடும் ரூ.13,450 கோடியில்...\nபிரசாந்தும் சுனிலும்: இரு பிரச்சாரக் கதைகள்\nதிமுக வெற்றியின் முக்கியத்துவம் என்ன\nஅம்மா உணவகம் சூறை; டிடிவி, ஜெயக்குமார் கண்டனம்:...\nமேற்கு வங்கத்தில் பாஜகவை வீழ்த்திய மம்தா: வெற்றிப்...\nமோடி ஒன்றும் வெல்ல முடியாதவர் அல்ல\nதனிக் கோஷ்டிக்குப் பதிலா தனிக் கட்சி\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nமேலும் 1.5 லட்சம் ஸ்புட்னிக் வி தடுப்பூசிகளை அனுப்பும் ரஷ்யா\nபட்ஜெட் 2018: அப்ப நல்லா கேட்டீங்க.. இப்ப மறந்துட்டீங்களே ஜேட்லி\nகாவிரி மேலாண்மை வாரியம் விரைவாக அமைக்க இயலாது: நிதின் கட்கரி திட்டவட்டம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2020/09/blog-post_183.html", "date_download": "2021-05-07T00:17:03Z", "digest": "sha1:IGYRKJIZU6GPACQ3GTPCA3SAXNPNT66D", "length": 8537, "nlines": 90, "source_domain": "www.yarlexpress.com", "title": "பொலிஸாரின் தலையீட்டினால் இடைநிறுத்தப்பட்ட இரத்ததான முகாம். \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nபொலிஸாரின் தலையீட்டினால் இடைநிறுத்தப்பட்ட இரத்ததான முகாம்.\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இன்று இடம்பெறவிருந்த இரத்ததான முகாம் பொலிஸாரின் தலையீட்டினால் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இது தொ...\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இன்று இடம்பெறவிருந்த இரத்ததான முகாம் பொலிஸாரின் தலையீட்டினால் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.\nஇது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால் இன்று பல்கலைக்கழகத்தில் இரத்ததான முகாமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nஇதற்கு ஆரம்பத்தில் யாழ் போதானா வைத்தியசாலை இரத்த வங்கியினரும் அனுமதித்திருந்தனர். இந்நிலையில் நேற்று\nகாலை பொலிஸார் குறித்த இரத்ததான முகாமினை நடாத்த வேண்டாம் என யாழ் போதானா வைத்தியசாலையிடம் கோரியுள்ளனர். இதனால் வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிவினர் இரத்ததான முகாமினை யாழ் பல்கலைக்கழகத்தில் இன்று நடாத்துவதில் இருந்து பின்னடித்துள்ளனர் என நம்பகரமாக அறியமுடிகிறது.\nஇவ் விடயம் தொடர்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரை தொடர்புகொண்ட போது, இன்று பல்கலைக்கழக மாணவர் ஒன்றுகூடல் அறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரத்ததான முகாம் தவிர்க்க முடியாத காரணத்தால் இரத்து செய்யப்பட்டுள்ளது என்றும் இரத்ததானம் இடம்பெறும் திகதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.\nவணிகம் / பொருளாதாரம் (7)\nமாநகர காவல்படையினரின் சீருடை பறிமுதல் - மாநகரசபைக்கு ஆப்பு வைத்த பொலீஸார் ..\nBREAKING NEWS :- ஊரடங்கு தொடர்பில் இராணுவத் தளபதி சற்றுமுன் வெளியிட்ட அறிவிப்பு\nஅத்தியாவசிய சேவைக்கு மாத்திரமே அனுமதி\nYarl Express: பொலிஸாரின் தலையீட்டினால் இடைநிறுத்தப்பட்ட இரத்ததான முகாம்.\nபொலிஸாரின் தலையீட்டினால் இடைநிறுத்தப்பட்ட இரத்ததான முகாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2013/10/blog-post.html", "date_download": "2021-05-07T01:39:29Z", "digest": "sha1:HAGR4ZM73GD6P5ZHSR7PV3URRMWAGRPW", "length": 29710, "nlines": 267, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: ஹலோ... நீங்க குருடா ?!", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nநான் ஆபீசில் இருந்து வீட்டுக்கு செல்லும் வழியில் ஒரு மனநலம் தவறியவரை எப்போதும் பார்ப்பேன். அவர் குளித்து பல வருடங்கள் ஆகி இருக்கும் என்று நினைக்கிறேன். சமீபத்தில் எனது நண்பன் ஒருவன் பெங்களுருக்கு மாற்றல் ஆகி வந்து இருந்தான், அவனை கடந்த பல மாதங்களாக பார்க்க வேண்டும் என்று நினைத்து சென்ற வாரம்தான் சந்திக்க முடிந்தது. அவனை ஏற்றிக்கொண்டு ஒரு உணவகம் நோக்கி சென்று கொண்டு இருந்தபோது அந்த மன நலம் தவறியவரை தாண்டி செல்ல நேர்ந்தது. நான் பைக்கில் சென்று கொண்டு இருந்தபோது சடக்கென்று என்ன நினைத்தாரோ ஓட்டமாக ரோடை கிராஸ் செய்தார், நான் பிரேக் போட்டு விட்டாலும், எனக்கு பக்கத்தில் வந்த வண்டி அவரை மோதியது. மோதிய அந்த வண்டிக்காரன் அந்த ஆளை திரும்பி பார்த்துவிட்டு சென்று விட்டான், நானும் திட்டி விட்டு வண்டியை எடுக்க போகும்போது எனது நண்பன் என்னை நிறுத்த சொல்லிவிட்டு அந்த ஆளை கைத்தாங்கலாக ரோட்டின் ஓரத்தில் உட்கார்த்தி வைத்துவிட்டு யாருக்கோ போன் செய்தான். போன் பேசி முடித்தவுடன் என்னிடம் அந்த ஆள் எத்தனை நாட்களாக இங்கே இருக்கிறான், என்ன செய்வான் என்று கேட்க நான் சுமார் இரண்டு வருடங்களாக அவனை பார்த்துக்கொண்டிருக்கிறேன் என்று சொன்னபோது அவன் என்னிடம் \"ஏன்டா.... ஒரு ஆள் இப்படி மன நலம் தவறி இருக்கிறான், ஆனா செத்து ஒன்னும் போயிடலை, அவனை பக்கத்தில் இருக்கும் எதாவது ஒரு இல்லத்தில் சேர்க்க கூடாதா \" என்று கேட்க, நானோ \"என்னை ஏன்டா திட்டறே, இங்க ஒரு ஹோம் இருக்குது அப்படின்னு எனக்கு எப்படிடா தெரியும்..... அதை எல்லாம் நான் எப்படிடா தேடி வைக்கிறது\" என்று பேசிக்கொண்டு இருந்தபோதே ஒரு ஓம்னி வேனில் வந்த இருவர் எனது நண்பனிடம் வந்து பேசினார், அந்த வேனில் ஒரு தொண்டு நிறுவனத்தின் முகவரி எழுதி இருந்தது. அந்த மன நலம் தவறிய ஆளை ���ற்றி விட்டு என்னிடம் திரும்பி \"ஏழு வருஷமா இந்த பக்கம் போய் வர, ஆனால் அவசியமான ஒரு நம்பர் கூட சேகரித்து வைக்கலையா \" என்று கேட்க, நானோ \"என்னை ஏன்டா திட்டறே, இங்க ஒரு ஹோம் இருக்குது அப்படின்னு எனக்கு எப்படிடா தெரியும்..... அதை எல்லாம் நான் எப்படிடா தேடி வைக்கிறது\" என்று பேசிக்கொண்டு இருந்தபோதே ஒரு ஓம்னி வேனில் வந்த இருவர் எனது நண்பனிடம் வந்து பேசினார், அந்த வேனில் ஒரு தொண்டு நிறுவனத்தின் முகவரி எழுதி இருந்தது. அந்த மன நலம் தவறிய ஆளை ஏற்றி விட்டு என்னிடம் திரும்பி \"ஏழு வருஷமா இந்த பக்கம் போய் வர, ஆனால் அவசியமான ஒரு நம்பர் கூட சேகரித்து வைக்கலையா போனில் எப்போவோ பேச போற ஒருத்தனோட நம்பர் எல்லாம் இருக்கும், ஆனா அத்தியாவசிய தேவையான ஒரு நம்பர் கூட குறிச்சி வைக்க மாட்டியா போனில் எப்போவோ பேச போற ஒருத்தனோட நம்பர் எல்லாம் இருக்கும், ஆனா அத்தியாவசிய தேவையான ஒரு நம்பர் கூட குறிச்சி வைக்க மாட்டியா \" என்று சொன்னபோது பொட்டில் அடித்தது போல இருந்தது. பஸ்சில் செல்லும்போது கண்டக்டர் மேல் கம்ப்ளைன்ட் கொடுக்க ஒரு எண் உண்டு என்று முகபுத்தகத்தில் வலம் வருகிறது, ஆனால் நான் குறித்துக் கொள்ளவில்லை..... ஏன் என்றால் நான் இப்போது பஸ்சில் செல்ல வில்லை, ஆனால் எப்போதுமே நான் பஸ்சில் செல்வதில்லையா என்ன \" என்று சொன்னபோது பொட்டில் அடித்தது போல இருந்தது. பஸ்சில் செல்லும்போது கண்டக்டர் மேல் கம்ப்ளைன்ட் கொடுக்க ஒரு எண் உண்டு என்று முகபுத்தகத்தில் வலம் வருகிறது, ஆனால் நான் குறித்துக் கொள்ளவில்லை..... ஏன் என்றால் நான் இப்போது பஸ்சில் செல்ல வில்லை, ஆனால் எப்போதுமே நான் பஸ்சில் செல்வதில்லையா என்ன 100 என்று டயல் செய்தால் போலீஸ் உதவிக்கு வரும், 108 என்று டயல் செய்தால் ஆம்புலன்ஸ் வரும், 1098 என்று டயல் செய்தால் சைல்ட் லைன் உதவிக்கு வரும்........ ஆனால், நமது மொபைலில்இருந்து டயல் செய்தால் அது வருமா என்று உங்களுக்கு தெரியுமா 100 என்று டயல் செய்தால் போலீஸ் உதவிக்கு வரும், 108 என்று டயல் செய்தால் ஆம்புலன்ஸ் வரும், 1098 என்று டயல் செய்தால் சைல்ட் லைன் உதவிக்கு வரும்........ ஆனால், நமது மொபைலில்இருந்து டயல் செய்தால் அது வருமா என்று உங்களுக்கு தெரியுமா எத்தனைமுறை இதுவரை டயல் செய்து இருக்கிறீர்கள் எத்தனைமுறை இதுவரை டயல் செய்து இருக்கிறீர்கள் உங்களது இ���்தனை வருட வாழ்க்கையில், எத்தனை முறை 100 டயல் செய்து இருந்தீர்கள்...... ஒரு முறை கூட இல்லையென்றால், ஒன்று உங்களது வாழ்க்கை மிகவும் இன்பமயமாக இருக்கிறது, இல்லையென்றால் நீங்கள் கண்ணிருந்தும் குருடராய் இருக்கிறீர்கள் \nதினமும் நாம் செல்லும் வழிதான், தினமும் நாம் விழித்தெழும் ஊர்தான், தினமும் நாம் பார்க்கும் மனிதர்கள்தான்..... ஆனால் உதவிக்கு என்று அதை நாம் குறித்து வைத்துக்கொள்வதில்லை என்பதுதான் நிஜம். சன் மியூசிக் பாடல் கேட்பதற்கு என்று மொபைல் போனில் குறித்து வைத்துக்கொள்ளும் நாம்........அத்தியாவசிய தேவையான ஹெல்ப் லைன் நம்பர் எதையும் ஏன் குறித்து கொள்வதில்லை. நீங்கள் இருக்கும் ஏரியாவில் இருக்கும் மெடிக்கல், பஞ்சர் கடை நம்பரை குறித்து வைத்து கொள்ளுதல் என்பது நமது சுயநலம், ஆனால் ஒரு அநாதை விடுதி, முதியோர் இல்லம் நம்பர், ரத்தம் தேவை நம்பர் எல்லாம் குறித்து கொள்ளுதல் என்பது அது நமக்கு உபயோகபடாது என்பதாலா நமக்கு ரத்தம் தேவை என்றால் யாராவது ஒரு நம்பர் குறித்து வைத்து இருப்பார்களா என்று தேடும் நாம், அதையே நாம் செய்வது என்பது கிடையாதே. எனது நண்பன் ஒருவன் மொபைலில் சன் மியூசிக், ஆதித்யா டிவி, சினிமா தியேட்டர், ரேடியோ மிர்ச்சி, இரண்டு வருடத்திற்கு முன்பு ஒரே ஒரு முறை பேசிய நண்பன், இறந்து போன தாத்தா நம்பர் கூட அழிக்காமல் வைத்திருந்தான், ஆனால் இது போன்ற அத்தியாவசிய நம்பர் எதுவும் இல்லை....... அவனை ஏன் சொல்லுவானேன், எனது மொபைலில் கூட அப்படி எதுவும் இல்லை. ஜூனியர் விகடனில் ஒவ்வொரு வாரமும் எங்கேயாவது அநியாயம் நடந்தால் இந்த நம்பருக்கு போன் செய்து சொல்லுங்கள் என்று இருக்கும், ஆனால் அந்த பக்கத்தை அப்படியே திருப்பி விடுவேன்...... ஏன் என்றால் எங்குமே அநியாயம் நடக்காத தேசம் இது இல்லையா \nஇன்று எல்லாவற்றுக்கும் மொபைல் இருக்கிறது....... ரயிலில் போகும்போது எதாவது பிரச்சினையா இந்த நம்பர் டயல் செய்யுங்கள், இந்த ஏரியா போலீஸ் ஸ்டேஷன் நம்பர், அனாதை விடுதி, தொண்டு நிறுவனங்கள், சாப்பாடு மிச்சமானால் கொடுக்க ஒரு விடுதி, படிப்புக்கு உதவும் அகரம் நம்பர், பக்கத்தில் இருக்கும் ஆம்புலன்ஸ் நம்பர், அவசரத்திற்கு எந்நேரம் கூப்ட்டாலும் உதவும் டாக்டர் நம்பர், மர கன்றுககளை இலவசமாக தருபவர்கள், முதியோர் இல்லம், உங்களது ஏரியாவில் இ���ுக்கும் சமூக சேவகர் நம்பர், அவசரத்திற்கு ரத்தம் தேவை என்றால் யாரை கூப்பிடுவது, இன்று ஆட்டோவிற்கு மீட்டர் போடா வில்லை என்றால் கம்ப்ளைன்ட் செய்ய நம்பர், பஸ் கண்டக்டர் தவறு செய்தால் புகார் செய்யும் எண், அவசரத்திற்கு நாம் செல்லும் வழியில் பஞ்சர் ஆனால் தொடர்ப்பு கொள்ள எண் என்று நமது மொபைலில் எந்த எண் இன்று இருக்கிறது. இப்படியே போனால் எவ்வளவு நம்பர்தான் குறித்து கொள்வது என்று சலித்து கொள்பவர்களுக்கு...... முக்கியமான மூன்று நம்பர்களையாவது நீங்கள் ஏன் சேமித்து வைத்து கொள்ளகூடாது ஒன்றுமே இல்லாததற்கு இது மேல் இல்லையா \nஇன்றைய நகரத்தில் நாம் தினமும் சிக்னலில் குழந்தைகள் பிச்சை எடுப்பதை பார்க்கிறோம், எங்கேயாவது சிலர் மிரட்டி பணம் பிடுங்குவதை பார்க்கிறோம், விபத்து என்பது தினமும் கண்ணில் படுகிறது, ரேஸ் வண்டி போல சிலர் ஓட்டுவதை பார்க்கிறோம், முதியவர்கள் சிலர் பசியினால் பிச்சை எடுப்பதை பார்க்கிறோம், மருத்துவ உதவி தேவை என்று தினசரியில் பெட்டி செய்தி பார்க்கிறோம், ரத்தம் தேவை என்று யாராவது முகநூலில் கேட்டால் லைக் என்று போட்டு ஷேர் செய்கிறோம், ஒரு குழந்தையின் படிப்பு செலவுக்கு உதவுங்கள் என்று உதவி கேட்டு வரும் மெயிலை டெலிட் செய்கிறோம், எங்கேயாவது தீ பிடித்து எரிவது தெரிந்தால் டஸ்ட் என்று வேறு வழியில் வண்டியை திருப்புகிறோம், ஆம்புலன்ஸ் வந்தால் நின்றுதான் போக வேண்டும் என்று முறைக்கிறோம்...... இப்படி நிறைய நிறைய சந்தர்ப்பங்களை நாம் எதிர் கொள்கிறோம், அப்போது அவர்களுக்கு உதவ நமக்கு பணம் இல்லையென்றாலும், அதை சரியானபடி சரியானவர்களுக்கு தெரிவிக்கிறோமா நமக்கு உதவுவதற்கு பணம் இல்லை, நேரம் இல்லை என்று இருக்கலாம்...... ஆனால் மனம் என்பது நிச்சயமாக இருக்கும், அப்படி இல்லையென்றால் நாம் எல்லாம் மனிதர்களே இல்லையே. இதையேதான் எனது நண்பனும் கேட்டான், பக்கத்தில் எங்கு பானி பூரி கிடைக்குது என்று இன்டர்நெட்டில் தேடி பார்க்கும் நாம், ஜஸ்ட் டயல் போன் செய்து சில நம்பர்களை கேட்க்கும் நாம், இப்படி கஷ்டபடுபவர்களுக்கு ஏன் உதவுவதற்கு நம்பர் குறித்து கொள்ள கூடாது \nஇன்றிலிருந்து நீங்கள் உங்களது ஊரில் எங்கேயாவது பொது நலன் கருதி ஏதேனும் உதவும் வகையில் நம்பர் இருந்தால் குறிந்து கொள்ளுங்களேன். அது உங்களுக்கு ���பயோகபடாது போகலாம், ஆனால் யாருக்கேனும் உதவலாம் அல்லவா. அந்த நம்பர் உங்களது மொபைலில் இருந்தால் அதன் கணம் ஒன்றும் கூட போவதில்லையே........ ஆனால் உதவாமல் போவதால் உங்களது மனதில் கணம் கூடலாம் இல்லையா \nநன்றி மேடம்........ தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் \nநீங்கள் நினைக்கும் மனம் எல்லோருக்கும் இருக்க வேண்டும்... பயனுள்ள எண்கள்... நன்றி... வாழ்த்துக்கள்...\nநன்றி தனபாலன் சார், எனக்கே எனது நண்பன் கேட்டதற்கு பிறகுதான் புரிந்தது...... அது நிறைய பேரை சென்று அடைந்தால் எனக்கு சந்தோசமே.\nசிந்திக்க வைத்த பதிவு .\nநன்றி நண்பியே.......தங்கள் வருகைக்கும், கருத்திற்கும்.\nகொஞ்சம் கொஞ்சமாக உங்கள் பதிவுகள் மெருகேறிக்கொண்டே போகிறது அசத்துகிறீர்கள் பதிவு பற்றி.. பொட்டில் அடித்தாற்போல் இருந்தது. நானும் எமெர்ஜென்சி எங்களை செல்லில் சேர்க்கப்போகிறேன்.\nநன்றி நண்பரே, இது போல் சிலர் நினைத்தால் அதுதான் இந்த பதிவிற்கு வெற்றி.\nநன்றி பாபு...... நான் உணர்ந்ததை இங்கு பகிர்கிறேன், அது உங்களை போன்ற நண்பர்களுக்கு சென்று சேர்ந்தால் மகிழ்ச்சியே.\n//அது உங்களுக்கு உபயோகபடாது போகலாம், ஆனால் யாருக்கேனும் உதவலாம் அல்லவா. அந்த நம்பர் உங்களது மொபைலில் இருந்தால் அதன் கணம் ஒன்றும் கூட போவதில்லையே........//\nசிந்திக்க வைக்கிறீர்கள்.... எண்களைக் குறித்துக்கொள்கிறேன்...\nநன்றி நண்பரே, நீங்கள் சிந்தித்ததை பலருக்கும் சொல்லுங்கள்....\nசமூக எண்ணம் இருக்கிறது.ஆனால் இப்படி ஒரு எண்ணம் தோன்றியதேயில்லை...ஒரு அனாதை இல்ல எண் மட்டுமே என் பையில்....அருமையான பதிவு சுரேஷ் என் முக நூலில் பகிர்கிறேன் வாழ்த்துக்கள்...\nமிக்க நன்றி மேடம்...... ஒரு சிறிய எழுத்து இது போன்று சிலரது மனங்களில் சிந்தனையை வரவழைக்கும் என்பதே இந்த பதிவின் வெற்றி. முகநூலில் இதை பகிர்ந்ததுக்கு மிகவும் நன்றி.\nநிச்சயம் தேடிப் பிடித்து குறித்து வைத்துக் கொள்கிறேன்..\nநன்றி ஆனந்த்...... தெரியாத நம்பர் இருந்தால் பகிரவும்.\nநன்றி ரமணி சார்...... பதிவு உங்களுக்கு பிடித்தது கண்டு மகிழ்ச்சி \nதமிழ் மணத்தில் நீங்கள் அளித்த ஓட்டிற்கு மிக்க நன்றி \nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - கரூர் திரைசீலை (பகுதி - 1)\nகரூர் என்றாலே கொசுவலை என்பது அனைவரு���்கும் நினைவுக்கு வரும், இன்று கால ஓட்டத்தில் அது திரைசீலைக்கும் பிரபலம் என்று உங்களுக்கு தெரியுமா \nஊர் ஸ்பெஷல் - தஞ்சாவூர் வீணை\nஇசையை பற்றி எந்த ஞானமும் கிடையாது எனக்கு, நல்ல இசை என்றால் உடம்பு தானாகவே தாளம் போடும், அவ்வளவுதான் . இந்த ஊர் ஸ்பெஷல் பகுதிக்காக ஒவ்வொரு...\nஅறுசுவை (சமஸ்) - புத்தூர் அசைவ சாப்பாடு\nசமஸ் எழுதிய புத்தகத்தை படித்துவிட்டு ஒரு சாப்பாடு சாபிடுவதற்கு என்றே ஒரு பயணம் மேற்கொண்டோம். முதலில் திண்டுக்கல்லில் இருந்து புறப்பட்டு தி...\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nகடல்பயணங்கள் தளம் மீண்டும் ஆரம்பம் ஆகின்றது என்று பதிவு போட்டபோதே பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தவண்ணம் இருக்கிறீர்கள், மிக்க நன்றி \nஅறுசுவை - நவீன டீ கடை \nவேலை நேரத்திலோ, நண்பர்களுடனோ, தனியாக செல்லும்போதோ ஏதாவது சாப்பிடனும் அப்படின்னு தோணிச்சினா, நம்ம வண்டிய நிறுத்துறது ஒரு டீ கடையின் முன்னேத...\nகடல் பயணங்கள் - ஓய்வு வாரம் \nசாகச பயணம் - ஆப்ரிக்கா சபாரி (பகுதி - 2)\nஅறுசுவை - வானம் தொட்டு ஒரு பீர் \nஊர் ஸ்பெஷல் - கரூர் திரைசீலை (பகுதி - 2)\nஉலக பயணம் - கிளு கிளு நகரம் (18+)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://4varinote.wordpress.com/2012/12/07/006/", "date_download": "2021-05-07T02:03:02Z", "digest": "sha1:PKFA55VFXZUPA5D3MFBMLQFBZVCATNRZ", "length": 26771, "nlines": 574, "source_domain": "4varinote.wordpress.com", "title": "சும்மா எனும் சுமை | நாலு வரி நோட்டு", "raw_content": "\nநச்ன்னு நாலு வரி, நாள்தோறும்\nஎன். சொக்கன் இணையத் தளம்\nஉங்களின் வலைத்தளம் இன்றைய வலைச்சரத்தில் சிறப்பு பெற்றிருக்கிறது நேரம் இருக்கும்போது…\nவிருந்தினர் பதிவு : குழந்தைப் பாடல்கள்\nTags: அருணகிரிநாதர், இளையராஜா ( 2 ), கந்தர் அநுபூதி, மதன் கார்க்கி\nபெங்களூருக்குப் போன புதிதில் தமிழ் நண்பர்களோடு பேசும் போது “சும்மா” என்ற சொல்லைப் பயன்படுத்தினால் வடக்கத்திய நண்பர்கள் “சும்மா” என்றால் என்ன என்று கேட்பார்கள். இந்தியில் சும்மா என்றால் முத்தம். தமிழர்கள் அடிக்கடி முத்தத்தைப் பற்றிப் பேசுகிறார்களே என்று அவர்கள் நினைத்திருக்கலாம்.\nஒரு நாளில் நாம் எத்தனை முறை “சும்மா” சொல்கிறோம் என்பதும் எதற்கெல்லாம் “சும்மா” சொல்கிறோம் என்பது ஒரு ஆச்சரியமான புள்ளிவிவரமாக இருக்கக்கூடும்.\nபேச்சில் இத்தனை சும்மா வரும் போது திரைப்படப் பாடல்களில் வராமல் இருக்குமா இன்றைய மதன் கார்க்கி வரை திடைப்பாடல்களில் “சும்மா” இருக்கிறது.\nபடம் – தூங்காதே தம்பி தூங்காதே\nபாடியவர் – ஆலப் ராஜு\nபாடல் – மதன் கார்க்கி\nவாயை மூடி சும்மா இருடா\nரோட்டப் பாத்து நேரா நடடா\nகண்ணைக் கட்டி காட்டுல விட்டுடும்டா\nசும்மா இருக்க முடியுமா என்று நகைச்சுவை நடிகர் வடிவேலு எல்லாரையும் ஒரு படத்தில் கேள்வி கேட்டு சும்மா இருப்பது எவ்வளவு கடினம் என்று நிரூபிப்பார். படத்தின் பெயர் தெரியவில்லை.\nஅந்தப் படத்தில் நடித்த வடிவேலுக்கு முன்னால் யாராவது சும்மா இருந்திருக்கின்றார்களா\nஒருவர் இருந்திருக்கிறார். இன்னொருவர் அவரை சும்மா இருக்கச் சொன்னதால் இருந்திருக்கிறார்.\nஇருந்தவர் அருணகிரிநாதர். சொன்னவர் முருகன்.\nகாமக் கலவி என்னும் கள்ளை மொண்டு மொண்டு உண்டவர் அருணகிரி. தொழுநோய் அவரைப் பிடித்ததால் அவரை யாருக்கும் பிடிக்காமல் போனது. கோபுரத்தின் உச்சியில் ஏறி அங்கிருந்து குதிக்கும் போது தடுத்தான் முருகன். தடுத்த முருகன் அருணகிரிக்குச் சொன்னது “சும்மா இரு”.\nநம்மால் சும்மா இருக்க முடியும மனம் எதையாவது நினைக்கும். நாக்கு எதையாவது சாப்பிடச் சொல்லும். காதில் ஏதாவது ஒன்று விழுந்து மூளையை சிந்திக்கத் தூண்டும். உடம்பு ஒரே நிலையில் இருந்ததால் வலித்து நகரச் சொல்லும். இப்படி எல்லா வகையிலும் சும்மா இருக்க நம்மால் இருக்க முடியாது.\nஆனால் அருணகிரி சும்மா இருந்தார். இரவு, பகல், இன்பம், துன்பம், பசி, தாகம், வலி, வேதனை, வாசனை, சுவை, நினைவு, கனவு என்று எதுவும் தொல்லை கொடுக்காமல் சும்மா இருந்தார். அதனால் கிடைத்தது ஞானம்.\nகிடைத்ததை இலக்கியத்திலும்(கந்தர் அநுபூதி) எழுதி வைத்தார்.\nசெம்மான் மகளைத் திருடும் திருடன்\nபெம்மான் முருகன் பிறவான் இறவான்\nசும்மா இரு சொல்லற என்றலுமே\nமுருகன் சும்மா இரு என்று சொன்னதும் சும்மா இருந்ததால் இது வரையிலும் மிகப்பெரிய பொருளாகத் தெரிந்த உலக இன்பங்கள் ஒன்றுமில்லாமல் போனதை மிக அழகாகக் கந்தர் அநுபூதிப் பாட்டில் எழுதி வைத்தார் அருணகிரி.\nஅதெல்லாம் சரி. ஒரு போட்டி.\nசுடச்சுட ஒரு டம்ளரில் ஃபில்டர் காப்பி. இன்னொரு தட்டில் மிளகு காரச்சேவும் திருநெல்வேலி அல்வாவும். இன்னொரு பக்கம் தொலைக்காட்சி. இன்னொரு பக்கம் மொபைல் ஃபோன்.\nசுற்றிலும் இதையெல்லாம் வைத்துக் கொண்டு உங்களில் யாரெல்லா��் சும்மா இருக்க முடியும்\nசார்லி சாப்ளின் படம் என்று நினைக்கிறேன். அதில் சும்மா என்ற வார்த்தையைப் பிரதானமாக வைத்து ஒரு டூயட் பாடலே எழுதினார்கள். யார் எழுதினார்கள் என்று தெரியவில்லை. அதில் மொத்தம் 133 சும்மாக்கள் வரும் என்று நினைக்கிறேன்.\nபிரபுதேவாவும், காயத்ரி ரகுராமும் இதில் நடித்திருப்பார்கள். இசை பரணி.\n–>இது தான் அந்தச் சுட்டி.\nசும்மா எழுதறது ஒண்ணும் சும்மா இல்ல 🙂 🙂\n இதுவல்லவோ சும்மா பாட்டு. உதித் நாராயணன் சும்மா என்ற சொல்லை மிக அழகாக உச்சரித்திருக்கிறார். சும்மா பிச்சி உதறிட்டாரு 🙂\n//சுடச்சுட ஒரு டம்ளரில் ஃபில்டர் காப்பி. இன்னொரு தட்டில் மிளகு காரச்சேவும் திருநெல்வேலி அல்வாவும். இன்னொரு பக்கம் தொலைக்காட்சி. இன்னொரு பக்கம் மொபைல் ஃபோன்.\nசுற்றிலும் இதையெல்லாம் வைத்துக் கொண்டு உங்களில் யாரெல்லாம் சும்மா இருக்க முடியும்\nமுடியும் ஆனா முடியாது 😉\n// முடியும் ஆனா முடியாது 😉 //\nபுரியுது புரியுது. சும்மாதானே இருக்கு காராச்சேவு. அதச் சும்மா ஒரு கடி கடிச்சுக்கிட்டு… சும்மா கொஞ்சம் அல்வாவை விழுங்கிட்டு.. சும்மா ஒரு மடக்கு காப்பி சாப்பிட்டு… பிரண்ட்ஸ் கிட்ட சும்மா பேசிக்கிட்டிருக்கும் ஆட்களாச்சே நாமள்ளாம் 🙂\nபாடியவர் – தேவன், அனுராதா ஸ்ரீராம்\nபாடல் – டேய் கைய வச்சுக்கிட்டு சும்மா இருடா…\nஅட்டகாசமான பாட்டு சார். இந்தப் பாட்டை யார் சொல்வாங்கன்னு நெனச்சேன். நீங்க சொல்லிட்டிங்க 🙂\nசும்மா இருக்கும் சாமிக்கு சோத்து பட்டை இரண்டு கொடுங்க என்று ஒரு கோவிலில் இருந்த சித்தருக்கு, அவர் மௌனியாக சும்மா இருந்த செயலுக்கு இன்னும் ஒரு சாப்பாடு கிடைத்ததாக நான் படித்துள்ளேன். சும்மா இருப்பதே இன்றைக்கு பிரபலமாக இருக்கும் ஜென் நிலை\nசெம கத அது. சரியா எடுத்துச் சொல்லிட்டிங்க. சும்மா இருப்பதே சுகம். 🙂\nஅம்மான்னா சும்மா இல்லடா..அவ இல்லைனா யாரும் இல்லைடா\nஜிரானா சும்மாவாஜென் தடத்துவம் மாதிரி சும்மா தத்துவம் சொன்ன ஜிரவுக்கு ஜெ\n“சும்மா” -ன்னா “அம்மா” தான்:)\nபிழை பல செய்தாலும், சும்மா இருக்க அம்மாவால் மட்டுமே முடியும்\nஎத்தனை குறைகள் எத்தனை பிழைகள்\nஎத்தனை அடியேன் எத்தனை செயினும்\n“பெற்றவன்” நீ குரு, பொறுப்பது உன் கடன்\nஅதான் போலும், கவச காலத்துக்கெல்லாம் முன்னாடியே, அருணகிரியும்…\nசும்மா இரு = “அம்மா” பொருள்…. -ன்னு பாடினாரோ\nசும்மா இருப்பது = அம் – மா – பொருள்\nஎளிது அன்று; பெரிது, மா, மாபெரும் ;\nஅதனால் “அம் மா” பொருள் ஒன்றும் அறிந்திலனே என்றும் பரவிய அருணகிரி;\nசும்மா பற்றிய பாடல் பதிவு சும்மா இல்லை;\nவேறு சில “சும்மா” பாடல்கள்:\nநம்ம சிங்காரி சரக்கு நல்ல சரக்கு\n“சும்மா” கும்மு -ன்னு ஏறுது கிக்கு எனக்கு:))\n(படம்: காக்கிச் சட்டை, பாடல்: வாலி)\nசின்னப் பொண்ணு தான் வெட்கப் படுது – அம்மா அம்மாடி\nஅவ கண்ணுக்குள்ள தான் மின்னல் அடிக்குது – “சும்மா சும்மாடி”\n(படம்: வைகாசி பொறந்தாச்சு; பாடல் – \nசோலைக்குள்ளே குயிலுக் குஞ்சு – சும்மாச் சும்மாக் கூவுது\nன்னு வரும் -ன்னு நினைக்கிறேன்;\nold is gold; சுசீலாம்மா பாடும் வித்தியாசமான பாட்டு – படம் பேரு சரியா ஞாபகம் இல்ல\nபடம் – கேடி (2006)\nநடிகர்கள்: ரவி கிருஷ்ணா – தமன்னா\nஇசை – யுவன் ஷங்கர் ராஜா\nபாடியவர் – சுனிதா சாரதி\nபாடல் – சும்மா சும்மா நீ பார்க்காதே… சும்மா சும்மா நீ சொக்காதே…\nஎனைக் காணாத கண்ணெல்லாம் கல்லாகுமே….\nசுஜாதா பதில்கள் – பாகம் 1\n சுகமா என்பதன் மரூஉ என்கிறார்கள். சும்மென என்கிற பிரயோகம் பிரபந்த காலத்தில் இருக்கிறது. சும்மாச் சும்மா இதையே கேட்டுக் கொண்டிருந்தால் அப்புறம் நான் சும்மா இருக்க மாட்டேன். ஆமாம் அருஞ்சொற்பொருள் தெரியாவிட்டாலும் என்ன\nஅருமையான தகவலுக்கு நன்றி 🙂\nசும்மென என்பதிலிருந்து சும்மா உண்டாகியிருக்கக்கூடும். கன்னடத்தில் சும்னே இரு என்றால் சும்மா இரு என்று பொருள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/05/25/%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F/", "date_download": "2021-05-07T01:07:08Z", "digest": "sha1:JESEFHJKINGGG2RF5ERVVI3PPMDTRZBJ", "length": 8872, "nlines": 131, "source_domain": "makkalosai.com.my", "title": "வளம் தரும் அனுமன் வழிபாடு | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome ஆன்மிகம் வளம் தரும் அனுமன் வழிபாடு\nவளம் தரும் அனுமன் வழிபாடு\nசெவ்வாய்க்கிழமைகளில் அனுமனுக்கு லட்டு, சுண்டல், வெல்லம், கொய்யாப்பழம் போன்றவற்றை படைத்து வணங்கினால், அனுமனின் முழு ஆசீர்வாதமும் கிட்டுமாம்.\nஒரு நாள் சீதை, தன் நெற்றி உச்சியில் செந்தூரம் பூசிக்கொள்வதை, அனுமன் கண்டார். உடனே சீதையிடம், ‘எதற்காக இதை பூசுகிறீர்கள்\nஅதற்கு சீதை, “இது ராமபிரான் நீண்ட காலம் செழிப்பாக இருக்க, அவரை ஆர்வதிக்கும் வகையில��� செய்யும் ஓர் செயல்” என்று கூறினார். இதைக் கேட்ட அனுமன், உடனே தன் உடல் முழுவதும் இந்த செந்தூரத்தை தடவிக் கொண்டார். அனுமனை சனிக்கிழமைகளில் வழிபாடு செய்வது விசேஷமானதாக பார்க்கப்படுகிறது.\n* செவ்வாய்க்கிழமைகளில் அனுமனுக்கு துளசி மாலையை அணிவித்து வணங்குவது நல்லது. பின் அந்த துளசி இலைகளை சாப்பிடலாம்.\n* முக்கோண வடிவமுள்ள சிவப்பு கொடியில் ‘ராம’ என்று எழுதி, அனுமனுக்கு படைத்து வணங்கி, அந்தக் கொடியை வாகனங்களின் முன் மாட்டிக் கொண்டால், விபத்துக்களில் இருந்து விலகி இருக்கலாம். அதுவே வீட்டில் வைத்திருந்தால், வீட்டில் பணம் கொழிக்கும்.\n* அனுமனுக்கு ஆரஞ்சு நிற செந்தூரம் வைக்க வேண்டும். இப்படி தொடர்ச்சியாக செய்து வருவதன் மூலம், மாங்கல்ய தோஷம் நீங்குவதோடு, இதர தோஷங்களும் அகலும்.\n* மல்லிகை எண்ணெய், மனநிலையை மேம்படுத்த உதவும். அதிலும் செந்தூர பொடியை மல்லிகை எண்ணெயுடன் சேர்த்து கலந்து, அனுமனுக்கு திலகமிடுவது, இன்னும் நல்லது.\n* செவ்வாய்க்கிழமைகளில் அனுமனுக்கு லட்டு, சுண்டல், வெல்லம், கொய்யாப்பழம் போன்றவற்றை படைத்து வணங்கினால், அனுமனின் முழு ஆசீர்வாதமும் கிட்டுமாம்.\nNext articleகோவிட் -19: புலம் பெயர்ந்த தொழிலாளர்களிடம் பாகுபாடு காட்ட வேண்டாம் – சுகாதார தலைமை இயக்குநர் எச்சரிக்கிறார்\nவருகின்ற (26/4/2021) அன்று சித்ரா பௌர்ணமி பாவ புண்ணிய கணக்கை எழுதும் சித்ரகுப்தரை எப்படி முறையாக வழிபடுவது\nபடுக்கை அறையின் சுவரில் தெய்வத்தின் திருவுருவப்படங்கள் இருப்பது சரியா\nபினாங்கில் வெங்காயத்தின் விலை உச்சத்தில் இருக்கிறது\nபொது, விரைவு பேருந்துகளின் இருக்கைகள் முழுமையாக நிரபப்படுவதற்கு அனுமதி\nகாற்றின் தூய்மைக் கேடு பாதிப்பு – குடியிருப்பாளர்கள் போர்க்கொடி\n109 ரேஸ் குழுக்கள்டி-.ஐ.ஜி. ஆனிவிஜயா தொடங்கி வைத்தார்\nநெடுஞ்சாலையில் நான்கு சக்கர வாகனத்தில் தீ\nவெளிநாட்டு ஆடவரிடம் கொள்ளையடித்ததாக போலீஸ்காரர் உட்பட 4 பேர் கைது\nதமிழ்நாட்டில் நாளை பதவியேற்கவிருக்கும் அமைச்சரவை பட்டியல்\nநாட்டில் 14 புதிய கோவிட் -19 கிளஸ்டர்கள் கண்டுபிடிப்பு\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nநம் வீட்டில் இருக்கும் மற்றவர்களுக்கு தானம் கொடுக்க கூடாத இந்த சி��� பொருட்கள்\nசெவ்வாய் பிள்ளையார் விரத வழிபாடு தோன்றிய வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-3%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2021-05-07T01:21:11Z", "digest": "sha1:EBMDFORUVGBTTF6PZG75NHIYY2C3VARN", "length": 8884, "nlines": 115, "source_domain": "www.patrikai.com", "title": "சிகிச்சைக்காக 3ந்தேதி விஜயகாந்த் ஆஸ்திரேலியா பயணம்: தேமுதிக தகவல் – Patrikai – Tamil Daily – latest online local breaking news & reviews – Tamilnadu, India & World – politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nசிகிச்சைக்காக 3ந்தேதி விஜயகாந்த் ஆஸ்திரேலியா பயணம்: தேமுதிக தகவல்\nசிகிச்சைக்காக 3ந்தேதி விஜயகாந்த் ஆஸ்திரேலியா பயணம்: தேமுதிக தகவல்\nசென்னை: உடல்நலம் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வரும் தேமுதிக தலைவர் விஜயகாந்த், சிகிச்சைக்காக வரும் திங்கட்கிழமை ஆஸ்திரேலியாக…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15.66 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15,66,72,832 ஆகி இதுவரை 32,69,034 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nஅடுத்த 17 நாட்கள் ஒவ்வொரு வீட்டிலும் பின்பற்ற வேண்டிய கட்டாய விதி\nஅடுத்த 17 நாட்கள் ஒவ்வொரு வீட்டிலும் பின்பற்ற வேண்டிய கட்டாய விதி – நெட்டிசன் பதிவு கொரோனா கட்டுப்பாடு குறித்து வலைத் தளங்களில்…\nஇன்று ஆந்திரப் பிரதேசத்தில் 21,954 கர்நாடகாவில் 49,058 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 21,954 கர்நாடகாவில் 49,058 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 49,058…\nநாளைக்குள் தமிழகத்துக்குத் தேவையான ஆக்சிஜன் வழங்குவதை உறுதி செய்ய மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\nசென்னை நாளைக்குள் தமிழகத்துக்குத் தேவையான ஆக்சிஜன் வழங்குவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது….\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் –06/05/2021\nசென்னை தமிழகத்தில் இன்றைய (06/05/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 24,898 பேருக்குப் பாதிப்பு…\nசென்னையில் இன்று 6,678 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 6,678 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 33,316 ஆகி உள்ளது இன்று சென்னையில்…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15.66 கோடியை தாண்டியது\nஅதிமுக எம்.எல்.ஏ. விஜய பாஸ்கருக்கு கொரோனா\n7 hours ago ரேவ்ஸ்ரீ\nதனி தகவல் தொடர்பு தளத்தை தொடங்கிய டிரம்ப்\n7 hours ago ரேவ்ஸ்ரீ\nஐபிஎல் தொடரை நடத்தி முடிக்காவிட்டால் 2500 ரூபாய் கோடி இழப்பு ஏற்படும் – கங்குலி\n7 hours ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalarnellai.com/web/subcategory/56", "date_download": "2021-05-07T00:31:45Z", "digest": "sha1:DAMGORRXALKUOWDV5H57YAIRD5TXBIF2", "length": 3712, "nlines": 79, "source_domain": "m.dinamalarnellai.com", "title": "Dinamalar Nellai Mobile", "raw_content": "\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்\n27 நட்சத்திரங்களுக்கும் பொங்கல் டூ பொங்கல் பலன்\nசார்வரி 2020 - தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சிப் பலன்கள் - 2020\nகுருப்பெயர்ச்சி பலன் - 2020 - 2021 சார்வாரி ஆண்டு\nசனிப் பெயர்ச்சி - 27.12.2020 - 2023\nஎன்ன தான் இருக்கு உள்ளே\nசாதனை புரிந்த தமிழ் படங்கள் – 344 – எஸ்.கணேஷ்\nசினிமாவில் எம்.ஜி.ஆர். – 286 – விஜயபாஸ்கர்\nசினிமாவில் எம்.ஜி.ஆர். – 284 – விஜயபாஸ்கர்\nசினிமாவில் எம்.ஜி.ஆர். – 283 – விஜயபாஸ்கர்\nசினிமாவில் எம்.ஜி.ஆர். – 282 – விஜயபாஸ்கர்\nசினிமாவில் எம்.ஜி.ஆர். – 281 – விஜயபாஸ்கர்\nசினிமாவில் எம்.ஜி.ஆர். – 280 – விஜயபாஸ்கர்\nசினிமாவில் எம்.ஜி.ஆர். – 279 – விஜயபாஸ்கர்\nசினிமாவில் எம்.ஜி.ஆர். – 278 – விஜயபாஸ்கர்\nசினிமாவில் எம்.ஜி.ஆர். – 277 – விஜயபாஸ்கர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=walkway%20facility", "date_download": "2021-05-07T00:49:00Z", "digest": "sha1:BXPAYMZOCYLPBQHC3YUYGBCMM4W2CC4Q", "length": 5638, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"walkway facility | Dinakaran\"", "raw_content": "\nஒருபுறம் தீயாய் பரவும் கொரோனா: மறுபுறம் கொரோனா தடுப்பு வசதியுடன் மாவட்டந்தோறும் பசுக்கள் உதவி மையம்.. உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவு\nபங்குனி மாத பூஜை, ஆறாட்டு திருவிழா: சபரிமலை கோயில் நடை 14ல் திறப்பு\nகலெக்டர் தகவல் தீயணைப்பு வீரர்கள் மீட்பு பெல் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி வசதி தொழிற்சங்கத்தினர் கலெக்டரிடம் மனு\nதி.பூண்டி அருகே மயானம் செல்ல சாலை வசதி கோரி சடலத்தை சாலையில் வைத்து மறியல்\nஅங்கீகாரம் பெறும் மனைகளுக்கு அடிப்படை வசதி உள்ளாட்சி அமைப்புகளுக்கு தமிழக அரசு உத்தரவுஅங்கீகாரம் பெறும் மனைகளுக்கு அடிப்படை வசதி உள்ளாட்சி அமைப்புகளுக்கு தமிழக அரசு உத்தரவு\nநடை பாதை மீண்டும் ஆக்கிரமிப்பு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தர்ணா ஆத்தூரில் பரபரப்பு\nநடக்க இயலாத தனது வளர்ப்புப் பிராணி வீராவுக்காக நடைவண்டியை வடிவமைத்திருக்கும் காசியின் செயல் நெகிழச் செய்கிறது : மு.க.ஸ்டாலின் பாராட்டு\nசாக்கடை வசதி செய்து தரக்கோரி மக்கள் மனு\nஅஞ்சல்துறையின் மூலம் பக்தர்கள் இல்லத்திற்கே பழனி முருகன் கோயில் பிரசாதம் அனுப்பும் வசதி: அரசு உத்தரவு\nசுரண்டை அருகே குலையநேரியில் குடிநீர் வசதியற்ற சுகாதார நிலையம்\nசுரண்டை அருகே குலையநேரியில் குடிநீர் வசதியற்ற சுகாதார நிலையம்-கர்ப்பிணிகள் அவதி\nமதுரையில் 10 மாதங்களுக்கு பின் புதிய கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது மக்கள் குறைதீர் முகாம் * அடிப்படை வசதி அவுட்\nசாலை அமைக்கும் போது தனியாக நடைபாதை வசதி: அரசுத்தரப்பில் பதிலளிக்க உத்தரவு\nசென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் வெண்டிலேட்டர் வசதியுடன் கூடிய 25 படுக்கைகள் கொண்ட அறை திறப்பு\nபஸ் வசதி இல்லாததால் பள்ளிக்கு 3 கிமீ நடக்கும் மாணவிகள் அதிகாரிகள் கண்டுகொள்வார்களா\nவேப்பமூடு ஜங்ஷன் பகுதியில் பூங்கா வசதியுடன் இருசக்கர வாகனம் நிறுத்தும் இடம்\nதமிழகத்தில் கால்நடை உள்கட்டமைப்பு : வசதிக்கு 1,464 கோடி நிதி வேண்டும்: மத்திய கால்நடைத்துறை அமைச்சரிடம் கோரிக்கை\nசட்டகல்லுரி மாணவர்களுக்கு மின்னணு புத்தக வசதியை வழங்கக் கோரி மனு \nபுறநகர் ரயில் நிலையங்களில் தானியங்கி நகரும் படிக்கட்டு புதிய நடைமேம்பால வசதி\nபெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத இடங்களில் அவசரகால பட்டன் வசதியுடன் சென்னையில் 1,600 ‘ஸ்மார்ட்’ கம்பங்கள்: நிர்பயா திட்டத்தில் அமைக்கப்படுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/topic/google", "date_download": "2021-05-07T00:26:49Z", "digest": "sha1:7YQA6IJUZ22CL6E6VKVIT7NS2S2IJLAA", "length": 11538, "nlines": 155, "source_domain": "tamil.gizbot.com", "title": "Google News in Tamil | Latest Google Tamil News Updates, Videos, Photos - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n கூகுள் நிறுவனத்தின் ஊழியர்களுக்கு சுந்தர் பிச்சை அனுப்பிய ம���க்கியத் தகவல்.\nதமிழ்நாட்டில் கொரோனா 2-வது அலையால் ஒவ்வொரு நாளும் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக தமிழகத்தில் இன்று முதல் கொரோ...\nகூகுள் பிக்சல் 4ஏ சாதனத்தை குறைந்த விலையில் வாங்க சரியான நேரம்.\nபிளிப்கார்ட் தளத்தில் Big Saving Days sale எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்புவிற்பனை ஆனது வரும் மே 7-ம் தேதி வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள...\nஒரு வகையில் லாபம் தான். ஆனாலும் விளம்பரங்கள் குறைந்து வருகிறது. ஆனாலும் விளம்பரங்கள் குறைந்து வருகிறது.\nஇந்தியாவில் தொடர்ந்து அதிகமாக பரவி வருகிறது கொரோனா வைரஸ். அதிலும் டெல்லி, மும்பை, புனே போன்ற பெரிய நகரங்களில் பேரழிவு தாக்கத்தை ஏற்படுத்திவருகிற...\nஎனக்கே விபூதி அடிக்க பார்த்தல: மிரண்டு போன கூகுள்- வெறும் ரூ.200-க்கு இதை வாங்கி மிரள வைத்த நபர்\nதேடுபொறி தளத்தின் பங்கில் 86%-க்கும் அதிகமானோர் கூகுளை பயன்படுத்தி வருகின்றனர். உலகின் அதிகம் பயன்படுத்தப்படும் தேடுபொறி தளமாக கூகுள் இருக்கிறது. க...\nசரியான நேரத்தில் இந்தியாவுக்கு உதவும் கூகுள். ரூ.135 கோடி. சுந்தர் பிச்சை முக்கிய தகவல்.\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 15 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த கொரோனா வைரஸ் ஆனது வாய், மூக்கு என சுவாச...\nகூகுள் மேப்ஸ் சேவையில் புதிய அப்டேட்.\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிலும் இந்த கொரோனா வைரசின் இரண்டாவது அலை இந்தியாவை அலைகழித்துவருகிறது என்று தான் கூற...\nதயவு செய்து இதை நிறுத்துங்கள்: சுந்தர் பிச்சைக்கு கடிதம் எழுதிய ஊழியர்கள்.\nபுதிய புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் அதிக ஆர்வம் கொண்டுள்ளது கூகுள் நிறுவனம். குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் புதிய தொழில்நுட்பங்கள் அ...\nகூகுள் மேப்ஸ் வசதியால் ஏற்பட்ட சிக்கல்: மன்னிப்பு கேட்ட மாப்பிள்ளை வீட்டார்.\nகூகுள் மேப்ஸ் வசதியை உலகளவில் அதிகளவு மக்கள் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக இந்த தளத்தில் வரும் ஒவ்வொரு அம்சமும் மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகைய...\nசொந்தமாக உருவாக்கும் கூகுள்: பிக்சல் 6 சாதனத்தில் காத்திருக்கும் டுவிஸ்ட்\nகூகுள் நிறுவனத்தின் பிக்சல் 6 சாதனம் நிறுவனத்தின் சொந்த ஜிஎஸ் 101 வைட் சேப்ப���் எஸ்ஓசி மூலம் இயக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. சாம்சங்கின் ஒ...\nபயனர்களை குஷிப்படுத்திய Google: எதுக்கு., சும்மா இலவசமாவே தொடருங்க- ஆனா ஜூன் வரைதான்\nகொரோனா பரவல் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளிலும் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டது. அதேபோல் ஊரடங்கின் காரணமாக பல்வேறு நிறுவனங்களும் தங்களது ஊழியர்களை வ...\nகுரோம் 89 என்ற புதிய பிரவுசரில் அறிமுகமான லைவ் கேப்ஷன் வசதி.\nகூகுள் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்திய வண்ணம் உள்ளது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு ...\nராசா., நம்பி பொறுப்ப கொடுக்குறோம்: நீங்களே ரோடு போடலாம்., சாலை பெயரையும் மாற்றலாம்- \"கூகுள் மேப்\" அப்டேட்\nஅண்ணா இந்த இடத்துக்கு எந்த பக்கம் போகலாம் என்று கேட்கும்போது, துல்லியமாக நமக்கு சந்தேகமே வராமல் வழியை சொல்லுவார்கள் ஆட்டோ ஓட்டுனர்கள். அந்த காலம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/news/chance-of-heavy-rain-with-thunder-in-4-districts-including-nilgiris/", "date_download": "2021-05-07T00:54:00Z", "digest": "sha1:4MLWVEEMMULLAFYYF2YQF5W2ZF7A2A7Y", "length": 14198, "nlines": 142, "source_domain": "tamil.krishijagran.com", "title": "நீலகிரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு மழைக்கு வாய்ப்பு!", "raw_content": "செய்திகள் வாழ்வும் நலமும் தோட்டக்கலை கால்நடை வெற்றிக் கதைகள் விவசாய தகவல்கள் FTB அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா Directory\n#FTB விவசாய தகவல்கள் அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா\nஎங்கள் அச்சு மற்றும் டிஜிட்டல் பத்திரிகைகளுக்கு குழுசேரவும்\nசமூக ஊடகங்களில் எங்களுடன் இணைக்கவும்:\nநீலகிரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு மழைக்கு வாய்ப்பு\nவளிமண்டல சுழற்சி காரணமாக, மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகச் சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஇதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:\nகுமரிக்கடல் பகுதியில் 1.5 முதல் 2.1 கிலோமீட்டர் உயரம் வரை வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.\nஇதன் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும், தென் தமிழகக் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், இடியுடன் க���டிய மிதமான மழை பெய்யக்கூடும்.\nஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.\nவானிலை முன்னறிவிப்பு (Weather Forecast)\nதென் தமிழகம் மற்றும் வடக்கு உள் தமிழக மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.\nமேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில், இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.\nநீலகிரி, தேனி, கோவை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.\nஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்காலில் ஒருசில இடங்களில், இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.\nசென்னையைப் பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவுக்கு மேகமூட்டத்துடன் காணப்படும்.\nஅதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸையும் ஒட்டியே இருக்கும்.\nகடந்த 24 மணி நேரத்தில், தேனி மாவட்டம் பெரியகுளம், திண்டுக்கல் மாவட்டம் பழனி ஆகியவற்றில் தலா 5 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.\nபகல் வேளைகளில் அதிக வெப்பம் கொளுத்தும் வாய்ப்பு உள்ளதால், வயதானவர்கள், நோயாளிகள் உள்ளிட்டோர் வெளியே செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.\nகுறைந்த முதலீட்டில் மெகா லாபம் தரும் மலர் வியாபாரம்\nதமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தில் Computer Operator வேலைக்குப் பயிற்சி- பெண்கள் விண்ணப்பிக்கலாம்\nபூக்காதச் செடிகளையும் பூக்கவைக்கும், ஆரஞ்சு தோல் பூச்சிக்கொல்லி\nஅன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.\nஉங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....\nபங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)\nகனமழைக்கு வாய்ப்பு கோடை மழையோ நீலகிரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் Chance of heavy rain with thunder in 4 districts including Nilgiris\nஉரங்களின் விலை உயர்வு நிறுத்தி வைப்பு பழைய விலைக்கே வாங்கி கொள்ளலாம்\nதொடங்கியது தடுப்பூசித் திருவிழா- பொதுமக்களுக்கு பிரதமரின் 4 வேண்டுகோள்\nகொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, முழு ஊரடங்கை அமல்படுத்த உச்ச நீதிமன்றம் பரிந்துரை\nகொப்பரை உற்பத்தி செய்ய நவீன இயந்திரம்: விவசாயிகள் மகிழ்ச்சி\n செய்ய வேண்டியவையும், செய்யக் கூடாதவையும்\nவிளைநிலங்களில் வீணாகும் தர்பூசணி பழங்கள்\nபூச்சிகளைப் புரிந்து கொள்(ல்)வோம்- காணொளி மூலம் பயிற்சி\nரூ.4000 கொரோனா நிவாரண நிதிவழங்கும் திட்டம் - நாளை ஸ்டாலின் முதல் கையெழுத்து\nவாடிக்கையாளர்களுக்கு புதியவகை டிசைனர் சிலிண்டரை அறிமுகம் செய்த IOCL\nஒரே நிமிடத்தில் cowin.gov.in தளத்தில் கொரோனா தடுப்பூசி பதிவு செய்வது எப்படி\nபருத்தியைத் தாக்கும் மாவுப்பூச்சிகளை எப்படி கட்டுப்படுத்தலாம்\nகொரோனாவைத் தடுக்கும் முயற்சியில், புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்\nஒன்றல்ல, இரண்டல்ல, ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள்\nதொற்றுநோய்களைத் தடுக்கும் ஊட்டச்சத்து அணுகுண்டு எது தெரியுமா\nமாடித்தோட்டத்திற்கு ஏற்ற மண் கலவை வகைகள் எவை\nவிவசாயிகள் நலன் கருதி சாகுபடி தொடர்பான சந்தேகம் ஏற்பட்டால் வேளாண் விஞ்ஞானிகளை அணுகலாம்: தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/news/farmers-take-part-in-a-tractor-rally-in-delhi/", "date_download": "2021-05-07T02:01:15Z", "digest": "sha1:7HPNFQZBUARZUCHGH4KBVJSV6X5XD77M", "length": 12021, "nlines": 123, "source_domain": "tamil.krishijagran.com", "title": "டெல்லியில் டிராக்டர் பேரணிப் போராட்டத்தை கையிலெடுத்த விவசாயிகள்", "raw_content": "செய்திகள் வாழ்வும் நலமும் தோட்டக்கலை கால்நடை வெற்றிக் கதைகள் விவசாய தகவல்கள் FTB அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா Directory\n#FTB விவசாய தகவல்கள் அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா\nஎங்கள் அச்சு மற்றும் டிஜிட்டல் பத்திரிகைகளுக்கு குழுசேரவும்\nசமூக ஊடகங்களில் எங்களுடன் இணைக்கவும்:\nடெல்லியில் டிராக்டர் பேரணிப் போராட்டத்தை கையிலெடுத்த விவசாயிகள்\nமத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லைகளில் விவசாயிகளின் டிராக்டர் பேரணி (Tractor rally) துவங்கியது. மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுடன் மத்திய அர��ு நாளை (ஜன.,08) 8ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்துகிறது. இந்நிலையில், வேளாண் சட்டத்திற்கு (Agriculture Laws) எதிராக இன்று விவசாயிகள் டிராக்டர் பேரணியை முன்னெடுத்துள்ளனர்.\nகிழக்கு, மேற்கு டெல்லி உள்பட டெல்லியின் அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளிலும் (National Highways) விவசாயிகள் டிராக்டர் பேரணியில் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகளின் பேரணியையொட்டி ஹரியானாவின் குண்லி, மானேசர், பல்வால் ஆகிய தேசிய நெடுஞ்சாலையின் சுங்கச்சாவடிகளில் (Toll gate) பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் டிராக்டர் பேரணி நடைபெறும் சாலைகளில் பாதுகாப்பிற்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.\nடிராக்டர் பேரணியில் ஈடுபட்டுள்ள பாரதிய கிசான் சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ராகேஷ் டிகத் கூறுகையில், ‛ஜனவரி 26-ம் தேதி குடியரசு தினவிழாவில் (Republic day) நடைபெறும் டிராக்டர் பேரணியின் முன்னோட்டமாக இந்த பேரணி நடைபெறுகிறது.' என்றார். வேளாண் சட்டங்களை எதிர்த்துப் விவசாயிகள் பல நாட்களாக போராடி வரும் நிலையில், இன்று டிராக்டர் பேரணி நடந்துள்ளது.\nகூடுதல் மகசூல் பெற வம்பன்-4 பாசிப்பயறு இரகம்\nகாரைக்காலில் தேசிய மின்னணு வேளாண் சந்தை திட்டம் வேளாண்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்\nதென்னை ஆராய்ச்சி பணியைத் துவங்க வேண்டுமென விவசாயிகள் அரசிடம் கோரிக்கை\nஅன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.\nஉங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....\nபங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)\nமுடிவுக்கு வருமா விவசாயிகள் போராட்டம் - இன்று 8ம் கட்ட பேச்சுவார்த்தை\nமனித - விலங்கு மோதல்களை தடுப்பதற்கான அடிப்படை நடவடிக்கைகள் - அரசு அறிவிப்பு\nகொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, முழு ஊரடங்கை அமல்படுத்த உச்ச நீதிமன்றம் பரிந்துரை\nகொப்பரை உற்பத்தி செய்ய நவீன இயந்திரம்: விவசாயிகள் மகிழ்ச்சி\n செய்ய வேண்டியவையும், செய்யக் கூடாதவையும்\nவிளைநிலங்களில் வீணாகும் தர்பூசணி பழங்கள்\nபூச்சிகளைப் புரிந்து கொள்(ல்)வோம்- காணொளி மூலம் பயிற்சி\nரூ.4000 கொரோனா நிவாரண நிதிவழங்கும் திட்டம் - நாளை ஸ்டாலின் முதல் கையெழுத்து\nவாடிக்கையாளர்களுக்கு புதியவகை டிசைனர் சிலிண்டரை அறிமுகம் செய்த IOCL\nஒரே நிமிடத்தில் cowin.gov.in தளத்தில் கொரோனா தடுப்பூசி பதிவு செய்வது எப்படி\nபருத்தியைத் தாக்கும் மாவுப்பூச்சிகளை எப்படி கட்டுப்படுத்தலாம்\nகொரோனாவைத் தடுக்கும் முயற்சியில், புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்\nஒன்றல்ல, இரண்டல்ல, ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள்\nதொற்றுநோய்களைத் தடுக்கும் ஊட்டச்சத்து அணுகுண்டு எது தெரியுமா\nமாடித்தோட்டத்திற்கு ஏற்ற மண் கலவை வகைகள் எவை\nவிவசாயிகள் நலன் கருதி சாகுபடி தொடர்பான சந்தேகம் ஏற்பட்டால் வேளாண் விஞ்ஞானிகளை அணுகலாம்: தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2021/03/25032312/Indias-medal-haul-in-issf-world-cup-continues.vpf", "date_download": "2021-05-07T02:08:46Z", "digest": "sha1:AORAFAJ4JJD27XIBXEZOW3D443CI3ZXG", "length": 14640, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "India's medal haul in issf world cup continues || உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் பதக்கவேட்டை தொடருகிறது", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் முடிவுகள் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஉலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் பதக்கவேட்டை தொடருகிறது + \"||\" + India's medal haul in issf world cup continues\nஉலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் பதக்கவேட்டை தொடருகிறது\nஉலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் பதக்கவேட்டை தொடருகிறது.\nஉலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் 53 நாடுகளை சேர்ந்த 294 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.\nஇதில் 6-வது நாளான நேற்றும் இந்தியாவின் பதக்க வேட்டை தொடர்ந்தது. ஆண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் (மூன்று நிலை) பந்தயத்தின் இறுதி சுற்றில் இந்திய வீரர் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் இலக்கை நோக்கி குறிதவறாமல் சுட்டு கலக்கினார். மத்தியபிரதேச மாநிலம் போபாலை சேர்ந்த 20 வயதான ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் மொத்தம் 462.5 புள்ளிகள் குவித்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். இந்த போட்டி தொடரில் இந்தியா வென்ற 8-வது தங்கம் இதுவாகும். ஹங்கேரியின் நட்சத்திர வீரர் இஸ்வான் பெனி 461.6 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கமும், டென்மார்க் வீரர் ஸ்டீபன் ஒல்சென் 450.9 புள்ளிகளுடன் வெண்கலப்பதக்கமும் பெற்றனர்.\nதகுதி சுற்றில் முதலிடம் பெற்று நம்பிக்கை அளித்த இந்திய வீரர் சஞ்சீவ் ராஜ்புத் (413.3 புள்ளி) 6-வது இடமும், மற்றொரு இந்திய வீரர் நீரஜ் குமார் (400.3 புள்ளி) 8-வது இடமும் பிடித்து ஏமாற்றம் அளித்தனர். ஏற்கனவே டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்று விட்ட பிரதாப் சிங் தோமர் வென்ற 2-வது பதக்கம் இதுவாகும். அவர் ஏர்ரைபிள் அணிகள் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்று இருந்தார்.\nபெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் பந்தயத்தில் இந்திய வீராங்கனைகள் முதல் 3 இடங்களை பிடித்து முழுமையாக கோலோச்சினர். இதன் இறுதி சுற்று முடிவில் மத்தியபிரதேசத்தை சேர்ந்த 23 வயது சிங்கி யாதவ், மராட்டியத்தை சேர்ந்த 30 வயது ராஹி சர்னோபாத் ஆகியோர் 32 புள்ளிகளுடன் சமநிலை வகித்தனர். இதையடுத்து நடந்த டைபிரேக்கரில் சிங்கி யாதவ் 4-3 என்ற கணக்கில் சர்னோபாத்தை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். ராஹி சர்னோபாத்துக்கு வெள்ளிப்பதக்கம் கிட்டியது. மற்றொரு இந்திய வீராங்கனையான 19 வயது மானு பாகெர் (28 புள்ளி) வெண்கலப்பதக்கம் பெற்றார். பதக்கம் வென்ற 3 இந்திய வீராங்கனைகளும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\n6-வது நாள் போட்டிகள் முடிவில் இந்தியா 9 தங்கம், 5 வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 19 பதக்கங்களுடன் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. அமெரிக்கா 3 தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலப்பதக்கத்துடன் 2-வது இடத்தில் உள்ளது.\nபதக்கம் வென்ற இந்தியர்களை பாராட்டியுள்ள மத்திய விளையாட்டுத்துறை மந்திரி கிரண் ரிஜிஜூ, ‘டோக்கியோ ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதலில் நாங்கள் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கிறோம். துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரர், வீராங்கனைகள் நீண்ட காலமாக சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். அதனால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.’ என்றார்.\nஉலக கோப்பை | துப்பாக்கி சுடுதல் | இந்தியா | பதக்கவேட்டை | தொடருகிறது\n1. இந்தியாவின் கொரோனா சோகம், உலகத்துக்கு எச்சரிக்கை மணி; யுனிசெப் அமைப்பு கருத்து\nஇந்தியாவில் கொரோனாவால் ஏற்பட்டுள்ள சோகம், உலகத்துக்கு எச்சரிக்கை மணியை எழுப்ப வேண்ட���ம் என்று ஐ.நா.வின் துணை அமைப்பான யுனிசெப் தெரிவித்துள்ளது.\n2. காஷ்மீர் பிரச்னைக்கு இந்தியாவும், பாகிஸ்தானும் அமைதியான முறையில் தீர்வு காண வேண்டும் - ஐ.நா. வலியுறுத்தல்\nகாஷ்மீர் பிரச்னைக்கு இந்தியாவும், பாகிஸ்தானும் அமைதியான முறையில் தீர்வு காண வேண்டும் என, ஐ.நா. பொதுச் சபை தலைவர் வலியுறுத்தியுள்ளார்.\n3. கொரோனா பாதிப்பு: இந்தியாவுக்கு நிதியுதவி அளித்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி\nகொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சார்பில் ரூ.7.5 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.\n4. கொரோனா பாதிப்பு: இந்தியாவுக்கு நிதியுதவி அளித்த பிரட் லீ\nஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பிரட் லீ, கொரோனா பிடியில் சிக்கியுள்ள இந்தியாவுக்காக 41 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார்.\n5. கொரோனா பரவல் அதிகரிப்பு: இந்தியாவுக்கு 4.5 லட்சம் ரெம்டெசிவிர் மருந்துகளை வழங்க அமெரிக்கா உறுதி\nஇந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளநிலையில், 4.5 லட்சம் ரெம்டெசிவிர் மருந்துகளை வழங்குவதாக அமெரிக்கா உறுதியளித்துள்ளது.\n1. ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் உயிரிழப்பது, இனப்படுகொலைக்கு சமம் - அலகாபாத் ஐகோர்ட் கண்டனம்\n1. ஊக்க மருந்து சர்ச்சை: 4 ஆண்டுகள் தடைக்கு எதிரான கோமதியின் அப்பீல் தள்ளுபடி\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-05-07T01:46:43Z", "digest": "sha1:6RQCMXZ4SPLRTQIV5TEM7GB2PLSBGXO2", "length": 8721, "nlines": 116, "source_domain": "www.patrikai.com", "title": "முன்கூட்டியே கரையை கடக்கும் ‘கஜா’: வானிலை மையம் பரபரப்பு தகவல் – Patrikai – Tamil Daily – latest online local breaking news & reviews – Tamilnadu, India & World – politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nமுன்கூட்டியே கரையை கடக்கும் ‘கஜா’: வானிலை மையம் பரபரப்பு த��வல்\nமுன்கூட்டியே கரையை கடக்கும் ‘கஜா’: வானிலை மையம் பரபரப்பு தகவல்\nசென்னை: இன்று இரவு 11 மணிக்கு மேல் பாம்பன் கடலூர் இடையே கஜா புயல் கரையை கடப்பதாக அறிவிக்கப்பட்டு வந்த…\nஇந்தியாவில் வரலாறு காணாத உச்சமாக நேற்று 4,14,182 பேருக்கு கொரோனா\nடில்லி இந்தியாவில் நேற்று 4,14,182 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று வரலாறு காணாத அளவுக்கு கொரோனாவால்…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15.66 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15,66,72,832 ஆகி இதுவரை 32,69,034 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nஅடுத்த 17 நாட்கள் ஒவ்வொரு வீட்டிலும் பின்பற்ற வேண்டிய கட்டாய விதி\nஅடுத்த 17 நாட்கள் ஒவ்வொரு வீட்டிலும் பின்பற்ற வேண்டிய கட்டாய விதி – நெட்டிசன் பதிவு கொரோனா கட்டுப்பாடு குறித்து வலைத் தளங்களில்…\nஇன்று ஆந்திரப் பிரதேசத்தில் 21,954 கர்நாடகாவில் 49,058 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 21,954 கர்நாடகாவில் 49,058 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 49,058…\nநாளைக்குள் தமிழகத்துக்குத் தேவையான ஆக்சிஜன் வழங்குவதை உறுதி செய்ய மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\nசென்னை நாளைக்குள் தமிழகத்துக்குத் தேவையான ஆக்சிஜன் வழங்குவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது….\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் –06/05/2021\nசென்னை தமிழகத்தில் இன்றைய (06/05/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 24,898 பேருக்குப் பாதிப்பு…\nஇந்தியாவில் வரலாறு காணாத உச்சமாக நேற்று 4,14,182 பேருக்கு கொரோனா\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15.66 கோடியை தாண்டியது\nஅதிமுக எம்.எல்.ஏ. விஜய பாஸ்கருக்கு கொரோனா\n8 hours ago ரேவ்ஸ்ரீ\nதனி தகவல் தொடர்பு தளத்தை தொடங்கிய டிரம்ப்\n8 hours ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mybhaaratham.com/2019/10/blog-post_87.html", "date_download": "2021-05-07T01:21:23Z", "digest": "sha1:74AASWMUUS2MFJFBRFUNXPWF57IYAUOV", "length": 13685, "nlines": 142, "source_domain": "www.mybhaaratham.com", "title": "Bhaaratham Online Media: சிறையில் கணவர்; தீபாவளி கொண்டாட்டம் கண்ணீரில் கரைகிறது- சாமிநாதனின் மனைவி வேதனை", "raw_content": "\nசிறையில் கணவர்; தீபாவளி கொண்டாட்டம் கண்ணீரில் கரைகிறது- சாமிநாதனின் மனைவி வேதனை\nவிடுதலைப் புலிகளுடன் தொடர்பு கொண்டவர் என குற்றஞ்சாட்டி தமது கணவர் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதால் இவ்வாண்டு தீபாவளி கொண்டாட்டம் கண்ணீரில் கரைகிறது மலாக்கா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் சாமிநாதனின் துணைவியார் திருமதி வீ.உமாதேவி கூறினார்.\nஇவ்வாண்டு தீபாவளி கொண்டாட்டத்தை மிகச் சிறப்பாக மலாக்கா மாநிலத்தில் ஏற்பாடு செய்ய தமது கணவர் திட்டமிருந்தார். அதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் தற்போது சொஸ்மா சட்டத்தின் கீழ் அவரை தடுத்து வைத்துள்ளனர்.\nதீபாவளி ஏற்பாட்டை உடனிருப்பவர்கள் கவனித்துக் கொண்டிருந்தாலும் அம்மாநிலத்திற்கே தலைவராக திகழ்ந்தவர் இல்லாமல் இந்தியர்கள் அனைவரும் அதிருப்தி நிலையிலே உள்ளனர்.\nவிடுதலைப் புலிகளுடன் தொடர்பு கொண்டிருந்தவர் என குற்றச்சாட்டப்பட்டுள்ள தமது கடந்த ஓராண்டுக்கு முன்னர் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசியது தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.\nசிறையில் மோசமான நிலையில் இருப்பதாக தம்மிடம் தெரிவித்த அவரின் உடல்நலம் குறித்து தாம் கவலை கொள்வதாக கூறிய உமாதேவி, தம் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இருந்தால் நீதிமன்றத்தில் நிறுத்துங்கள்; தவறு புரிந்திருந்தால் உரிய தண்டனை கொடுங்கள். அதை யாரும் தடுக்கவில்லை.\nஆனால், ஆதாரம் இருப்பதாக சொல்லி தங்களது தற்காப்பு வாதத்தை கூட புரிய முடியாமல் அவரையும், பிறரையும் அடைத்து சிறையில் வைத்திருப்பது கொடுமையிலும் கொடுமையானது என்று புக்கிட் அமான் முன்புறம் பதாகை ஏந்திய திருமதி உமாதேவி கூறினார்.\nவிடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக நேற்றிரவு மெழுகுவர்த்தி ஏந்தும் ஒன்றுகூடல் நடத்தப்பட்டது. இந்த ஒன்றுகூடலில் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ், சுங்கை பீலேக் சட்டமன்ற உறுப்பினர் ரோனி லியூ,பொது இயக்கப் பிரதிநிதிகள், பொதுமக்கள் என திரளானோர் வந்திருந்தனர்.\n'இயற்கையை காப்போம் இனியதோர் உலகை படைப்போம்' - சிறப்பு கட்டுரை\nபினாங்கு - இயற்கை என்பது இயல்பாக இருப்பது என்பது பொருள் கொண்டதாகும் . இயல்பாகவே தோன்றி மறையும் பொருட்கள் அவற்றின் இயக்கம் , அவை இயங...\nபூச்சோங்- மாரடைப்பின் காரணமாக மனைவியும் அவரை தொடர்ந்து கணவனும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. சிலாங்கூர்,பூச்சோங்கைச் ச...\nசோழன் ஆட்சியை இழந்ததைப்போல, மஇகாவை இழந்து விடாதீர்கள்\nசேரன், சோழன், பாண்டியன் ஆட்சிகளை இழந்து 500 ஆண்டுகளைக் கடந்து விட்டோம். இங்கு வந்து 200 ஆண்டுகளாகக் கட்டமைத்த வாழ்க்கையைத்தான் இன்றும...\nஎல்டிடிஇ: 12 பேர் மீது புதிய குற்றச்சாட்டுகள்\nபென்னி தயால்- ஆண்ட்ரியா கலக்கும் ‘மாஸ் ஆப் பேட்ட ர...\nஎல்டிடிஇ: பாலமுருகன், அர்விந்த் தடுப்பு காவல் நீடி...\nதீபாவளி திருநாளை ஒன்றுகூடி கொண்டாடுவோம்- கணபதிராவ்\nபிரதமர் பதவியில் நீடித்திருக்கும் காலத்தை பக்காத்த...\nதாமான் ஶ்ரீ மூடா இந்திய வர்த்தக சங்கத்தின் 11-ஆம்...\n‘ராட்சசன்’ பாணியில் சஸ்பென்ஸ் திரில்லர் ‘யாழி’; ஆன...\nசிறையில் கணவர்; தீபாவளி கொண்டாட்டம் கண்ணீரில் கரைக...\nஎல்டிடிஇ விவகாரம்; ஆதாரம் இருந்தால் நீதிமன்றத்தில்...\n12 பேரின் விடுதலைக்காக மெழுகுவர்த்தி ஏந்தி ஒன்றுகூடல்\nஆஸ்ட்ரோவில் களைகட்டும் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள்\nஆயுதப் போராட்டம் தமிழீழத்திற்கு விடியலாகாது- இராம...\nஎல்டிடிஇ: மஇகாவின் சட்ட உதவியை தவறாகக் கொள்ள வேண்ட...\nஎன் பேச்சுரிமையை யாரும் தடுக்க முடியாது - பேராசிரி...\nஇந்திய இளைஞர்களுக்கான 'யெஸ்' திட்டம்\nதெக்குன் கடனுதவித் திட்டத்தில் எஞ்சியிருக்கும் வெ....\n21 மாணவர்களுக்கு கல்வி உதவி நிதி- கணபதிராவ் வழங்கி...\nபாட்டாளி மக்களின் போராளி டத்தோ சம்பந்தன் - டான்ஶ்ர...\nஜசெக, அமானா இல்லாத புதிய அரசாங்கம், முயற்சிக்கலாம்...\nஎல்டிடிஇ; பேராசிரியர் ராமசாமிக்கு மனநிறைவு இல்லையெ...\nஆஸ்ட்ரோ வானவில்லில் ‘தீபாவளி அனல் பறக்குது’\nதுரோகிகளுக்கு இடமில்லை- டான்ஸ்ரீ கேவியஸ் அதிரடி\nபட்ஜெட் 2020- இந்திய சமுதாயத்திற்கு வெ.17 கோடி ஒது...\nஎல்டிடிஇ- இரு சட்டமன்ற உறுப்பினர்களை ஜசெக தற்காக்க...\nமைபிபிபி கட்சிக்கு நானே தலைவர்- எதிர்த்தாலும் போட்...\nஇலங்கை தூதரத்தின் மீது தாக்குதல் நடத்த சதித் திட்டம்\nதமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு; ஆட்சிக்குழு உ...\nபிள்ளைகளிடம் அன்பு காட்டுங்கள் சரியாக இருப்பார்கள...\nபக்காத்தான் கூட்டணியின் ஆட்சிக்கு அடித்தளமிட்டது ஹ...\nதமிழ்ப்பள்ளிகளுக்கு வெ.44 லட்சம் சிறப்பு மானியத்தை...\nபாஸ், அம்னோவுடன் கூட்டணி அரச��ங்கமா\nகிள்ளான் மாவட்ட அளவிலான சிலம்ப கலை போட்டி\nபிக் பாஸ் டைட்டிலை வென்றார் முகேன் ராவ்\nமூத்த பத்திரிகையாளர் அக்னி சுகுமார் காலமானார்\nமக்கள் விரும்பினால் ஜிஎஸ்டி அமலாக்கம் பரிசீலிக்கப்...\nபல இன மக்களுடன் சகிப்புத்தன்மையை மாணவர்களுக்கு உணர...\n‘கீதா ராணி’ கதாமாந்தர்கள் நம்மிடமும் உள்ளனர்- கல்வ...\nஇரு போட்டியாளர்களை மோதிய வாகனமோட்டி கைது\n.'நெகாராகூ' இசைக்கும்போது எழுந்து நிற்கவில்லையா\nஒரே நாளில் திரைக்கு வரும் யோகிபாபுவின் 4 திரைப்படங...\nராகாவில் ‘கேளுங்கோ சொல்லுங்கோ’ போட்டியில் ரிம 1,00...\nகோத்தா கெமுனிங் ஆலயம் சமூக சேவை மையமாக உருமாற்றம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/topic?id=livestock%20camp", "date_download": "2021-05-07T02:03:47Z", "digest": "sha1:KWTZPQMQDNAFBEIFGSKKXKN76VFYWFYX", "length": 6561, "nlines": 99, "source_domain": "tamil.krishijagran.com", "title": "Agriculture News in Tamil, Tamil news, Tamil agriculture news, news from chennai, news from coimbatore", "raw_content": "செய்திகள் வாழ்வும் நலமும் தோட்டக்கலை கால்நடை வெற்றிக் கதைகள் விவசாய தகவல்கள் FTB அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா Directory\n#FTB விவசாய தகவல்கள் அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா\nஎங்கள் அச்சு மற்றும் டிஜிட்டல் பத்திரிகைகளுக்கு குழுசேரவும்\nசமூக ஊடகங்களில் எங்களுடன் இணைக்கவும்:\nவேளாண் துறை சார்பில் கால்நடை முகாம் கால்நடை வளர்ப்பவர்களுக்கு நல்ல வாய்ப்பு\nவாலாஜாபாத் அடுத்து கிதிரிப்பேட்டை, நெய்குப்பம், பூசிவாக்கம் ஆகிய ஊராட்சிகளில் தேசிய வேளாண் நிறுவனம் (National Institute of Agriculture) மற்றும் ஆலிகான…\nகொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, முழு ஊரடங்கை அமல்படுத்த உச்ச நீதிமன்றம் பரிந்துரை\nகொப்பரை உற்பத்தி செய்ய நவீன இயந்திரம்: விவசாயிகள் மகிழ்ச்சி\n செய்ய வேண்டியவையும், செய்யக் கூடாதவையும்\nவிளைநிலங்களில் வீணாகும் தர்பூசணி பழங்கள்\nபூச்சிகளைப் புரிந்து கொள்(ல்)வோம்- காணொளி மூலம் பயிற்சி\nரூ.4000 கொரோனா நிவாரண நிதிவழங்கும் திட்டம் - நாளை ஸ்டாலின் முதல் கையெழுத்து\nவாடிக்கையாளர்களுக்கு புதியவகை டிசைனர் சிலிண்டரை அறிமுகம் செய்த IOCL\nஒரே நிமிடத்தில் cowin.gov.in தளத்தில் கொரோனா தடுப்பூசி பதிவு செய்வது எப்படி\nபருத்தியைத் தாக்கும் மாவுப்பூச்சிகளை எப்படி கட்டுப்படுத்தலாம்\nகொரோனாவைத் தடுக்கும் முயற்சியில், புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்\nஒன்றல்ல, இரண்டல்ல, ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள்\nதொற்றுநோய்களைத் தடுக்கும் ஊட்டச்சத்து அணுகுண்டு எது தெரியுமா\nமாடித்தோட்டத்திற்கு ஏற்ற மண் கலவை வகைகள் எவை\nவிவசாயிகள் நலன் கருதி சாகுபடி தொடர்பான சந்தேகம் ஏற்பட்டால் வேளாண் விஞ்ஞானிகளை அணுகலாம்: தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/crime/30243-youth-ommit-suicide-over-honey-drop-issue.html", "date_download": "2021-05-07T00:49:55Z", "digest": "sha1:T7E356YOKBXIWAV4CZEBWPCWUAJDZ5DX", "length": 12451, "nlines": 100, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "நிர்வாண வீடியோவை வெளியிடுவதாக மிரட்டல் – இளைஞர் தற்கொலை வழக்கில் இருவர் கைது - The Subeditor Tamil", "raw_content": "\nநிர்வாண வீடியோவை வெளியிடுவதாக மிரட்டல் – இளைஞர் தற்கொலை வழக்கில் இருவர் கைது\nநிர்வாண வீடியோவை வெளியிடுவதாக மிரட்டல் – இளைஞர் தற்கொலை வழக்கில் இருவர் கைது\nநிர்வாண வீடியோவை வெளியிடுவதாக மிரட்டியதால் இளைஞர் தற்கொலை.\nகர்நாடகா மாநிலம் பெங்களூரு அருகே பட்டரஹள்ளியில் வசித்தவர் அவினாஷ். 24 வயதேயான இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் அவினாசின் சகோதரி கே.ஆர்.புரம் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார்.\nஅதில்,”எனது சகோதரர் அவினாஷ் வேண்டும் என்றே தற்கொலை செய்யவில்லை. அவர் தற்கொலைக்கு தூண்டப்பட்டு உள்ளார். அவரை தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறி இருந்தார்.\nபுகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவலர்கள், அவினாஷின் செல்போனில் கிடைத்த தகவலின்படி, ஹனிடிராப் கும்பலை சேர்ந்த 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவினாசுக்கு, முகநூலில் நேகா சர்மா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் ஆபாசமாக பேசி வந்ததுடன், நிர்வாணமாக வீடியோ காலும் பேசி இருந்ததாக தெரிகிறது. அப்போது, அவினாஷ் நிர்வாணமாக வீடியோ கால் பேசும் காட்சிகளை, நேகா சர்மா வீடியோ எடுத்து வைத்துள்ளார். அதனை ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த இருவர் ஹனிடிராப் முறையில் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். 21 ஆயிரம் ரூபாய் வரை பணத்தை பெற்றுக்கொண்ட கும்பல், மேலும் 30 ஆயிரம் ரூபாய் கேட்டு மிரட்டியதால், அவினாஷ், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து ரா��ஸ்தானைத் சேர்ந்த ஜாவித், ரூபல் ஆகிய இரு இளைஞர்களை கே.ஆர்.புரம் காவலர்கள் கைது செய்து சிறையில் அடைத்தனர்.\nYou'r reading நிர்வாண வீடியோவை வெளியிடுவதாக மிரட்டல் – இளைஞர் தற்கொலை வழக்கில் இருவர் கைது Originally posted on The Subeditor Tamil\nIPL தொடரில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி\nகேரளாவில் இன்றும், நாளையும் 2.5 லட்சம் கொரோனா பரிசோதனைகள் இலக்கு\nஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…\nதம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…\nஆசைக்கு இணங்க மறுத்த பெண் - குத்தகைதாரர் வெறிச்செயல்\nகர்நாடகாவில் தடுபூசி போட்ட பெண்ணிற்கு நிகழ்ந்த கொடுமை\nபிறந்தநாள் விழாவிற்கு சென்ற 12 வயது சிறுமி… மொட்டைமாடியில் வைத்து இளைஞர் வெறிச்செயல்...\nமனைவியுடன் உல்லாசமாக இருந்த உதவியாளர்… கோயிலுக்கு அழைத்துச்சென்று அர்ச்சனை செய்த பூசாரி\n17வயது சிறுமியை 2 ஆண்டுகளாக பலாத்காரம் செய்த பலர் – உறைய வைக்கும் தகவல்கள்\nமனைவியின் தங்கைக்கூட உறவு… கண்டித்த கர்ப்பிணி பெண்ணிற்கு நிகழ்ந்த கொடூரம்\nஇரண்டு மரங்களை வெட்டியவருக்கு ரூ.1.21 கோடி அபாரதமாம்\nஇளம் பெண்ணை வசியப்படுத்திய தண்ணி கேன் சப்ளேயர் : குடும்பத்தினர்கள் விபரீதம்..\n14 வயது சிறுமியின் அந்தரங்க வீடியோக்களை வைத்து மிரட்டல்… பெற்றோர் அதிர்ச்சி..\n2 ஆண்டுகளாக சிறுமியை கற்பழித்த 3 பேர்… தாம்பரத்தில் நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்…\nசிறுமிக்கு ஆபாச வீடியோ அனுப்பிய திமுக பிரமுகரை பின்னி பெடலெடுத்த உறவினர்கள்\nதாயை கொன்று உடலை சாப்பிட்ட மகன்\nபல ஆண்களுடன் தொடர்பு.. காதலனிடம் கூறிவிட்டு இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…\nமேற்கு வங்காளம்: பாரதிய ஜனதாவின் கணக்கு தோற்றது எங்கு\nஉதயநிதிக்கு பதவி இல்லை: தமிழ்நாடு அரசின் புதிய அமைச்சர்கள் யார்\nகோவிட் தடுப்பூசி பற்றிய போலி எஸ்எம்எஸ்: கிளிக் செய்தால் ஆபத்து\nஇதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா – புதிய கட்டுப்பாடுகள் என்ன\nமக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்\n - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி\nபுறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு\nஎதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.���ி.எஸ்\nஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்\nதிமுக அமைச்சரவையில் யாருக்கு என்ன பொறுப்பு…\nமனைவியுடன் உல்லாசமாக இருந்த உதவியாளர்… கோயிலுக்கு அழைத்துச்சென்று அர்ச்சனை செய்த பூசாரி\nமுதலமைச்சர் ஆனதும் ஸ்டாலினின் முதல் கையெழுத்து இதுதான்.. முழு எதிர்பார்ப்பில் மக்கள்..\nகோவிட்-19: ஆக்ஸிஜன் அளவை சோதிப்பது எப்படி\nராஜினாமா முடிவில் கே.பி.முனுசாமி – திமுகவுக்கு லாபமாக அமையுமா\nஇரவோடு இரவாக மேலும் புதியக் கட்டுப்பாடுகள் அறிவிப்பு : முழு விபரம்…\n1000ரூபாய் கையிருப்பு கூரை வீடு – சட்டமன்றத்தில் நுழையும் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ மாரிமுத்து\n தேமுதிக வீழ்ச்சிக்கு இதான் காரணம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilkilavan.com/1-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B-3000-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4/", "date_download": "2021-05-07T01:32:43Z", "digest": "sha1:XU7XK5QQMZRNFBJQHZ47LTZPD4JEO4EV", "length": 5873, "nlines": 70, "source_domain": "tamilkilavan.com", "title": "1 கிலோ 3000 ரூபாய் அப்படி என்னதான் இதுல இருக்கு…எங்க பார்த்தாலும் இத விடாதிங்க..! | Tamil Kilavan", "raw_content": "\n1 கிலோ 3000 ரூபாய் அப்படி என்னதான் இதுல இருக்கு…எங்க பார்த்தாலும் இத விடாதிங்க..\nகிராமங்களில் உள்ள சாலையோரத்தில் அதிகளவில் காணப்படும் சொடக்கு தக்காளியை, சிறுவர்கள் உடைத்து விளையாடுவது வாடிக்கை.அதன் மருத்துவ குணங்கள் பற்றி தெரியாமலேயே பழுத்த பழங்களை சிறுவர்கள் பறித்து சாப்பிடுவார்கள்.\nஅது, வலி நிவாரணியாகவும், கட்டிகளை போக்கும் தன்மை கொண்டதாகவும், சிறுநீர் பெருக்கியாகவும் விளங்குகிறது. அதைவிட முக்கியம் புற்றுநோய்க்கும் மருந்தாக பயன்படுகிறது.\nமருந்து தயாரிக்கும் தேவையான பொருட்கள் : சொடக்கு தக்காளி செடியின் இலை, மஞ்சள் தூள்.\nசெய்முறை : ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு, அதில் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து, அதனுடன் நறுக்கிய இலையை சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். பின்னர் அந்த நீரை வடிகட்டி, குடித்து வந்தால்,உடல்வலி, மூட்டுவலி உள்ளிட்ட பிரச்சினைகள் குணமாகும்.\nஅதே போன்று புற்று நோய் இருப்பவர்கள் தொடர்ந்து குடித்து வந்தால், புற்று நோய் வளர்ச்சி தடுக்கப்படும். மேலும், சர்க்கரை நோய்க்கும் நல்ல பலனைத் தரும்.\nஇது மனக்கத் தக்காளி வகையை சேர்ந்தது என்பதால், அதில் உள்ள அனைத்து மருத்துவ குணங்களும் இந்த சொடக்கு தக்காளிக்கும் உள்ளது.\nTwitterFacebook நுரையீரலில் இறுகிப்போன நாள்பட்ட சளியை இளக வைத்து வெளியேற்றும் அற்புத முறை\nநுரையீரலில் இறுகிப்போன நாள்பட்ட சளியை இளக வைத்து வெளியேற்றும் அற்புத முறை\nTwitterFacebook கொஞ்சம் கால நிலை மாறினாலும் போதும், கணவனுடன் கோபித்து கொண்டு அம்மா …\nநெஞ்சை அறுப்பது போன்ற வறட்டு இருமலுக்கு 7 எளிய வீட்டு வைத்திய முறைகள்\nகடையில் முட்டை வாங்கறதுக்கு முன்னாடி இந்த வீடியோ பாருங்க\n2 முட்டை இருக்கா வீட்டில் உள்ள அனைவருக்கும் கிரிஸ்பியான ஈவினிங் ஸ்நாக்ஸ் ரெடி.\nமுட்டை சுக்கா லஞ்சுக்கு பக்காவான சைடிஷ் 10 நிமிடத்தில் இப்படி சுவையா செய்து கொடுத்து அசத்துங்க.\nபல கோடி சொத்துக்கு சொந்தக்காரி ஒரு வேலை சோற்றுக்காக வீட்டு வேலை செய்து பிழைக்கும் அவலம்\n20 ஆயிரம் வருடங்களுக்கு முன் மூழ்கிப்போன தமிழனின் வரலாறு.. தற்போது மெல்ல மெல்ல மிதந்து வருகிறது.. தற்போது மெல்ல மெல்ல மிதந்து வருகிறது.. ஒவ்வொரு தமிழனும் உலகத்துக்கு அறிய நண்பர்களுடன் பகிருங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/recipes/109749-.html", "date_download": "2021-05-07T00:19:22Z", "digest": "sha1:MZLWV2RCCBJJQCC3CNXTZ4IRAJDEMTN6", "length": 12119, "nlines": 286, "source_domain": "www.hindutamil.in", "title": "மணக்கும் நெல்லை! - சுண்டைக்காய்த் துவையல் | மணக்கும் நெல்லை! - சுண்டைக்காய்த் துவையல் - hindutamil.in", "raw_content": "வெள்ளி, மே 07 2021\nபச்சை சுண்டைக்காய் - 1 கப்\nபச்சை மிளகாய் - 5\nபுளி - 1 எலுமிச்சை அளவு\nஉப்பு - தேவையான அளவு\n- தலா ஒரு டீஸ்பூன்\nநல்லெண்ணெய் - 50 கிராம்\nபூண்டு - 6 அல்லது 7 பல்.\nபச்சை சுண்டைக்காயை நசுக்கிக்கொள்ளுங்கள். வெங்காயத்தையும் தக்காளியையும் பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளுங்கள். வாணலியில் மூன்று டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகைப் போட்டு, அது வெடித்தபின் பச்சை மிளகாய், வெங்காயத்தைச் சேர்த்து வதக்குங்கள். பாதி வதங்கியபின் தக்காளித் துண்டுகளைச் சேர்த்து வதக்கி, பூண்டையும் நசுக்கிச் சேர்த்து வதங்குங்கள். நசுக்கிய சுண்டைக்காயைச் சேர்த்து வதக்கி, ஒரு கப் நீர், தேவையான அளவு உப்பு ஆகியவற்றைச் சேர்த்து மூடிவையுங்கள்.\nபிறகு புளித் தண்ணீர், பெருங்காயம் போட்டுக் கொதிக்கவிடுங்கள். நன்றாக நீர் வற்றியபின் வெல்லத் தூளைச் சேர்த்து அடுப்பை அணைத்துவிடுங்கள். ஆறியபின் விழுதாக அரையுங்கள். மீதமுள்ள நல்லெண்ணெய்யை வாணலியில் ஊற்றிக் காய்ந்ததும் அரைத்த விழுதைப் போட்டு நன்றாகக் கிளறியெடுங்கள். இது ஜீரணத்துக்கு நல்லது.\nநந்திகிராமில் தோற்ற மம்தா பானர்ஜி முதல்வர் பதவியில்...\nபிரதமருக்கு வீடு கட்டச் செலவிடும் ரூ.13,450 கோடியில்...\nபிரசாந்தும் சுனிலும்: இரு பிரச்சாரக் கதைகள்\nதிமுக வெற்றியின் முக்கியத்துவம் என்ன\nஅம்மா உணவகம் சூறை; டிடிவி, ஜெயக்குமார் கண்டனம்:...\nமேற்கு வங்கத்தில் பாஜகவை வீழ்த்திய மம்தா: வெற்றிப்...\nமோடி ஒன்றும் வெல்ல முடியாதவர் அல்ல\nநல் ஆரோக்கியம் பேண நாள்தோறும் ஒரு கீரை\nகெட்டக் கொழுப்பை கரைக்கும் வெந்தயம்\nகொண்டைக் கடலை சாப்பிடுங்க உடம்பை புஷ்டியா வைச்சுக்கோங்க\nதலைவாழை: வீட்டிலேயே சத்துணவு படைக்கலாம் - ராகி மசாலா இட்லி\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nமேலும் 1.5 லட்சம் ஸ்புட்னிக் வி தடுப்பூசிகளை அனுப்பும் ரஷ்யா\nஉணவு வணிகர்கள் உரிமம் பெற நாளை கடைசி நாள்: சென்னையில் 50% பேர்...\nரஜினியுடன் பாஜக கூட்டணி வைத்தால் வேறு மாநிலம் செல்வேன்: சுப்பிரமணியன் சுவாமி\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithisaral.in/2019/11/", "date_download": "2021-05-07T00:02:06Z", "digest": "sha1:HUYSCUP3R6VD36KIS2AF3ZTPDMM55VSQ", "length": 10258, "nlines": 147, "source_domain": "www.seithisaral.in", "title": "November 2019 - Seithi Saral", "raw_content": "\nபிரம்ம முகூர்த்தத்தில் நல்ல காரியங்களை செய்தால் வாழ்க்கை சிறக்கும்\nஉங்கள் வாழ்வில் நல்லதொரு மாற்றத்தைக் காண வேண்டுமா நினைத்த காரியங்கள் அனைத்தும் ஜெயமாக வேண்டுமா நினைத்த காரியங்கள் அனைத்தும் ஜெயமாக வேண்டுமா அதற்கு பிரம்ம முகூர்த்த நேரத்தைத் தேர்ந்தெடுங்கள். ஆம், லட்சுமி கடாட்சம் நிறைந்த...\nவேலைக்கு செல்லும் பெண்கள் பிரச்சினைகளில் இருந்து தப்புவது எப்படி\nவேலைக்கு செல்லும் இடத்தில் பெண்களுக்கு என்ன மாதிரியான பிரச்னைகள் ஏற்படும் அதை எப்படி எதிர்கொள்ளவேண்டும் பெண்கள் வீட்டிலேயே இருந்து குடும்பத்தையும், குழந்தைகளையும் கவனித்துக்கொண்ட காலம்...\nபெரியவர்களிடம் ஆசிர்வாதம் வாங்குவது ஏன்\n தமிழர்களின் கலாச்சார வழக்கத்தில் ஒன்று ஆசீர்வாதம். இது திருமணம், காதுகுத்து, பிறந்த நாள், கோவில்கள், விசேஷ தினங்கள் போன்ற எதுவாக இருந்தாலும் பெரியவர்களின்...\nகம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடுமா…\nஒருமுறை புலமையில் மிகவும் தேர்ந்த அம்பல சோமாசி என்ற புலவர் கம்பரைக் காண வந்தார். அவருக்கு தான் அனைத்தும் கற்றோம் என்ற செருக்கு மிகுந்துள்ளது. கம்பரின் வீட்டிற்கு...\nபலருக்கு இரவில் சரியான தூக்கமே இருப்பதில்லை. தூங்குவது என்றால் சும்மா படுக்கையில் வெறுமே நீண்ட நேரம் படுத்துப் புரண்டு கொண்டிருப்பது அல்ல. அடித்துப் போட்டாற்போல சுற்றுப்புறத்தில் என்ன...\n (ஆசிரியர் கடையம் பாலன்) தொடர் கதை பகுதி 15)\n novel by kadayam Balan (episode-15) ரோகிணி-வேது நிச்சயதார்த்தம் இனிதே நடந்தது. ரோகிணி, தெய்வாவை தன்னுடைய அறைக்கு அழைத்தாள். அவளுக்கு பேச வார்த்தையே வரவில்லை....\nலட்சுமணனுக்கு ராமர் இட்ட சாபம்\nராமாவதாரம் முடிய மூன்று நாள் தான் இருந்தது. அவரை ரகசியமாக சந்தித்துப் பேச எமன் வந்திருந்தான். அப்போது ராமர் லட்சுமணரை அழைத்து, \"நாங்கள் பேசும் சமயத்தில் யாரையும்...\n அதை அடைவதைப் பற்றி அறிவியல் சொல்வதென்ன “எது இல்லையோ அதை நினைத்து வருத்தப்படுவதை விட எது இருக்கிறதோ அதை நினைத்து சந்தோஷப்பட்டால் வாழ்க்கையில்...\nஆணும், பெண்ணும் சரி சமமா\nதிருமண வாழ்க்கையில் ஆண், பெண் வித்தியாசத்தை விளங்கியிருக்கும்போது பிரச்னைகள் ஏற்படுவது மிகவும் குறைவு. ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் உள்ள உளவியல் மற்றும் பண்பியல் ரீதியான வித்தியாசங்களை அறிந்து...\n (ஆசிரியர் கடையம் பாலன்) தொடர் கதை பகுதி 14)\nஅடுத்த ஞாயிறு. அதிகாலையில் எழுந்த தெய்வா, முருகனுக்கு போன்செய்து நித்யஸ்ரீ வீட்டுக்கு வருமாறு நினைவூட்டினாள். அதன்பின் குளித்துவிட்டு லேசான மேக்கப்புடன் நித்யஸ்ரீ வீட்டிற்கு சென்றாள். அங்கே அதற்கு...\nமு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை விவரம்\nதூத்துக்குடிக்கு 2 மந்திரிகள்: திருநெல்வேலி, தென்காசி ஏமாற்றம்\nதிருப்பத்தூரில் இறந்த 5 பேர் கொரோனா நோயாளிகள் – மருத்துவ அதிகாரி விளக்கம்\nதுணை தலைவர் விலகல்; கமல் காட்டம்\nதமிழகத்தில் ஒரு நாள் கொரோனா பதிவு 24,898 ஆக உயர்வு\nUma on இராமருக்கு ஓர் அக்காள் உண்டு தெரியுமா\n.. தீராத ஒரு தகராறு….(சொல்லாராய்ச்சி/ சிவகாசி முத்துமணி)\nK.Kumaresan on தென் மாவட்ட மக்கள் வெளியே வர வேண்டாம் ; முதல்வர் எச்சரிக்கை\nPonnu on ஏழைகளுக்கு எட்டிவிடும் மருத்துவப் படிப்பு\nமு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை விவரம்\nதூத்துக்குடிக்கு 2 மந்திரிகள்: திருநெல்வேலி, தென்காசி ஏமாற்றம்\nதிருப்பத்தூரில் இறந்த 5 பேர் கொரோனா நோயாளிகள் – மருத்துவ அதிகாரி விளக்கம்\nதுணை தலைவர் விலகல்; கமல் காட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%99/", "date_download": "2021-05-07T01:21:58Z", "digest": "sha1:WOQY3KLTIH7M65DBIIYO2C5S7JM3PEJW", "length": 7875, "nlines": 160, "source_domain": "www.tamilstar.com", "title": "தேசிய விருது விழாவில் பங்கேற்காதது ஏன்? - அமிதாப்பச்சன் விளக்கம் - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nதேசிய விருது விழாவில் பங்கேற்காதது ஏன்\nNews Tamil News சினிமா செய்திகள்\nதேசிய விருது விழாவில் பங்கேற்காதது ஏன்\n2018-ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் இன்று டெல்லியில் வழங்கப்பட்டு வருகிறது. துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு விருதுகளை வழங்கி வருகிறார். இதில், சினிமா துறையில் பல்வேறு சாதனைகளை படைத்ததற்காக இந்தி திரையுலக ஜாம்பவான் அமிதாப்பச்சனுக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.\nஇந்த நிலையில் அமிதாப்பச்சனுக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டு உள்ளது. இதனால் அவர் இன்றைய விருது விழாவில் பங்கேற்க முடியாது என அறிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், ‘கடுமையான காய்ச்சல் காரணமாக பயணம் செய்ய டாக்டர்கள் அனுமதிக்கவில்லை. எனவே இன்று டெல்லியில் நடைபெறும் தேசிய விருது வழங்கும் விழாவில் பங்கேற்க முடியாது.\nஇது துரதிர்ஷ்டவசமானது. எனது வருத்தங்கள்’ என்று குறிப்பிட்டு இருந்தார். இந்திய திரையுலகில் வழங்கப்படும் மிகப்பெரும் விருது, தாதா சாகேப் பால்கே விருது ஆகும். இது, ஒரு தங்க தாமரை பதக்கம், ஒரு சால்வை மற்றும் ரூ.10 லட்சம் ரொக்கம் ஆகியவை அடங்கியதாகும்.\nவரி ஏய்ப்பு புகார் எதிரொலி…. நடிகை வீட்டில் ஐ.டி. ரெய்டு\nபொன்னியின் செல்வனுக்காக தோற்றத்தை மாற்றிய ஜெயம் ரவி\nஉயர் அதிகாரியின் மகள் கடத்தப்பட அவரை போலீஸ் அதிகாரி வரலட்சுமி காப்பாற்றுகிறார். அதன் தொடர்ச்சியாக பெண் கடத்தல்...\nகனடியப் பெண்களில் நாடு தழுவிய உயர்சாதனை படைத்த ஈழப்பெண்\nஇந்தியாவுக்கு அவசர மருத்துவ உதவி பொருட்களை அனுப்பியது கனடா\n12 வயதிற்கு மேற்பட்டவர்கள் Pfizer தடுப்பூசியை பெற Health கனடா அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/29105", "date_download": "2021-05-07T01:26:15Z", "digest": "sha1:KXFMWW5KGUM6Q3QVPMDV7O5CPLYWDSMD", "length": 11951, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "முழுமையான ஒத்துழைப்பு வழங்கத்தயார் ; அஜித் நிவாட் கப்ரால் | Virakesari.lk", "raw_content": "\nநாளொன்றுக்கு 2 ஆயிரத்தை விட அதிக தொற்றாளர்கள் இனங்காணப்படலாம் : எச்சரிக்கிறது தொற்று நோயியல் பிரிவு\nபிழையான எண்ணங்களை மக்கள் மயப்படுத்த எதிக்கட்சி முயற்சி - மதுர விதானகே\nகிளிநொச்சியில் புதிய கொரோனா சிகிச்சை நிலையம் - நள்ளிரவு முதல் சேவைகள் ஆரம்பம்\nமஹரகம நகரசபைக் கூட்டத்தில் மோதல் - விசாரணைகள் ஆரம்பம்\nதனியார் வங்கி உதவி முகாமையாளருக்கு கொரோனா தொற்று ; வங்கிக்கு பூட்டு\nஜம்மு-காஷ்மீரில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை\nகொரோனாவால் இலங்கையில் கர்ப்பிணித் தாய் பலி\n இனங்காணப்படும் தொற்றாளர்களை விட இருமடங்கு தொற்றாளர்கள் சமூகத்தில் \nதம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தை மீண்டும் திறக்க தீர்மானம்\nமுழுமையான ஒத்துழைப்பு வழங்கத்தயார் ; அஜித் நிவாட் கப்ரால்\nமுழுமையான ஒத்துழைப்பு வழங்கத்தயார் ; அஜித் நிவாட் கப்ரால்\nகடந்த 2008 ஆம் ஆண்டிலிருந்த 2014 ஆம் ஆண்டு வரை இலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பிணைமுறி மோசடி குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டா் அதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவதாக இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார்.\nகொழும்பில் அமைந்துள்ள ரமடா ஹோட்டலில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட கருத்துத் தெரிவிக்கையிலேயே இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஇலங்கை மத்திய வங்கி பிணைமுறி விசாரணை ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால்\nநாளொன்றுக்கு 2 ஆயிரத்தை விட அதிக தொற���றாளர்கள் இனங்காணப்படலாம் : எச்சரிக்கிறது தொற்று நோயியல் பிரிவு\nநாட்டில் நாளொன்றில் இனங்காணப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கை எதிர்வரும் நாட்களில் 2000 ஐ விட அதிகரிக்கக் கூடும் என்று சுகாதார தரப்பினர் எச்சரித்துள்ளனர். தற்போது நாடளாவிய அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றமையால் மாவட்டங்களிலுள் வைத்தியசாலைகளிலும் கொவிட் தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான பிரிவுகளை பிரத்தியேகமாக ஒதுக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதே வேளை மேல் மாகாணத்தில் மாத்திரம் நாளொன்றுக்கு சுமார் 1200 தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றனர்.\n2021-05-06 22:40:35 2000 தொற்றாளர்கள் இனங்காணல் எச்சரிக்கை\nபிழையான எண்ணங்களை மக்கள் மயப்படுத்த எதிக்கட்சி முயற்சி - மதுர விதானகே\nகொவிட்-19 வைரஸ் பரவல் காரணமாக பாதிப்படைந்துள்ள மக்களை காப்பாற்றுவதுடன் , வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கு அரசாங்கம் முயற்சிகளை எடுத்து வரும் நிலையில், எதிர்தரப்பினர் தங்களுக்கு கிடைக்கப் பெற்றுள்ள பாராளுமன்ற உறுப்புரிமையை பயன்படுத்தி பிழையான எண்ணங்களை மக்கள் மயப்படுத்த முயற்சித்து வருவதாக ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே குற்றஞ்சாட்டினார்.\n2021-05-06 22:36:58 பிழையான எண்ணங்கள் மக்கள் மயப்படுத்தல் எதிக்கட்சி\nகிளிநொச்சியில் புதிய கொரோனா சிகிச்சை நிலையம் - நள்ளிரவு முதல் சேவைகள் ஆரம்பம்\nகிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் புதிய கொவிட் 19 மருத்துவ நிலையத்தில் இன்று நள்ளிரவு முதல் சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பிரிவு தெரிவிக்கின்றது.\n2021-05-06 22:36:36 கிளிநொச்சி கொரோனா சிகிச்சை நிலையம் நள்ளிரவு\nமஹரகம நகரசபைக் கூட்டத்தில் மோதல் - விசாரணைகள் ஆரம்பம்\nமஹரகம நகரசபையில் இடம்பெற்றதாக கூறப்படும் மோதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக மாஹரகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.\n2021-05-06 22:35:00 மஹரகம நகரசபை கூட்டம் மோதல் விசாரணைகள் ஆரம்பம்\nதனியார் வங்கி உதவி முகாமையாளருக்கு கொரோனா தொற்று ; வங்கிக்கு பூட்டு\nகோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவுக்குட்பட்ட தனியார் வங்கி ஒன்றின் உதவி முகாமையாளருக்கு கொரோனா தொற்று இருப்பதாக இன்���ு (6) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\n2021-05-06 21:00:35 தனியார் வங்கி உதவி முகாமையாளர் கொரோனா தொற்று வங்கி\nஇலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து மேலும் 810 பேர் குணமடைவு..\nபணவீக்கம் ஏப்ரலில் 3.9 சதவீதமாக வீழ்ச்சி: இலங்கை மத்திய வங்கி\nவிலை அதிகரிப்பிற்கு அனுமதியில்லையேல் தட்டுப்பாடு ஏற்படலாம்: லாப் கேஸ் நிறுவனம்\nஸ்புட்னிக் கொரோனா தடுப்பூசி போடும் பணி ஆரம்பம்\nகளுத்துறை சிறைச்சாலைக்குள் போதைப்பொருட்கள் அடங்கிய பொதிகள் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaipoonga.net/news/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-shadesmart-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2021-05-07T01:14:43Z", "digest": "sha1:7VAM2NLRS3ING4RAOFOL66WCD3ICZJG5", "length": 12076, "nlines": 196, "source_domain": "kalaipoonga.net", "title": "நிழல் நுட்பம் (ShadeSmart) மற்றும் கதிரியக்கக் குளிரூட்டும் தொழில்நுட்பங்கள் கட்டிடங்களில் ஆற்றல் திறனுள்ள குளிரூட்டலை ஊக்குவிக்கின்றன - Kalaipoonga", "raw_content": "\nHome Business நிழல் நுட்பம் (ShadeSmart) மற்றும் கதிரியக்கக் குளிரூட்டும் தொழில்நுட்பங்கள் கட்டிடங்களில் ஆற்றல் திறனுள்ள குளிரூட்டலை ஊக்குவிக்கின்றன\nநிழல் நுட்பம் (ShadeSmart) மற்றும் கதிரியக்கக் குளிரூட்டும் தொழில்நுட்பங்கள் கட்டிடங்களில் ஆற்றல் திறனுள்ள குளிரூட்டலை ஊக்குவிக்கின்றன\nநிழல் நுட்பம் (ShadeSmart) மற்றும் கதிரியக்கக் குளிரூட்டும் தொழில்நுட்பங்கள் கட்டிடங்களில் ஆற்றல் திறனுள்ள குளிரூட்டலை ஊக்குவிக்கின்றன\nபுதுதில்லி, ஆகஸ்ட் 06, 2020\nஇந்திய கட்டிடத்துறை எரிசக்தி செயல்திறனின் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளது, ஆனால் இது கட்டுமானத்துறையில் இன்னும் திறம்பட ஒருங்கிணைக்கப்படவில்லை. இந்தியாவின் காலநிலை மாற்ற மண்டலங்களில் நுட்பமான, சக்திவாய்ந்த நிழல் நுட்பக் கருவிகள் அறையை குளிர்ச்ச்சியாக வைக்க உதவுவதுடன், குறைந்த சக்தியில் இயங்கக்கூடிய காற்று சீரமைப்பிற்கான கருவிகளை உருவாக்குவதால், நாட்டின் ஆற்றல் செயல்திறனை முன்னேற்ற உதவும். அதுவும் நாட்டின் பெரும்பகுதி வெப்பமயமாக இருப்பதால் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.\nஎரிசக்தி மற்றும் வளங்கள் நிறுவனம் (TERI) இந்திய அரசு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையுடன் இணைந்து, குடியிருப்பு ஜன்னல்களுக்கும், வணிகக் கட்டிடங்களுக்கும் புதிய வெளிப்புற நிழல் நுட்பத் தீர்வை, திறன் வாய���ந்த மற்றும் வசதியான வாழ்விட மாதிரித் திட்டத்தின் கீழ் .உருவாக்கியுள்ளது. “நிழல் நுட்பம்” (Shadesmart) என்று பெயரிடப்பட்ட இந்த நிழல் அமைப்பு ஏர் கண்டிஷனிங் மற்றும் லைட்டிங் ஆகியவற்றில் குறைந்த மின் நுகர்வுடன் உட்புற வசதியை அடைவதற்கான ஒரு புதுமையான மற்றும் செலவு குறைந்த தீர்வாக உருவாக்கப்பட்டுள்ளது.\nநிழல் நுட்பம் (ShadeSmart) மற்றும் கதிரியக்கக் குளிரூட்டும் தொழில்நுட்பங்கள் கட்டிடங்களில் ஆற்றல் திறனுள்ள குளிரூட்டலை ஊக்குவிக்கின்றன\nPrevious articleஷாந்தனு நடிக்கும் ‘இராவண கோட்டம்’\nNext articleமுழுக்க முழுக்க சஸ்பென்ஸ் த்ரில்லராக கோவா காடுகளில் எடுக்கப்பட்ட படம் ‘தட்பம் தவிர்’\nவெளியானது 34 பேர் கொண்ட தமிழக அமைச்சரவை பட்டியல்\nமூத்த தலைவர் ஆர்.எம்.வீரப்பனை நேரில் சந்தித்து ஆசி பெற்றார் மு.க.ஸ்டாலின் | Video\nரூ.4 ஆயிரம் வழங்கும் திட்டத்துக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முதல் கையெழுத்து\nவெளியானது 34 பேர் கொண்ட தமிழக அமைச்சரவை பட்டியல்\nவெளியானது 34 பேர் கொண்ட தமிழக அமைச்சரவை பட்டியல் தமிழகத்தின் முதலமைச்சராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை சென்னை - கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்க உள்ளார். கொரோனா பரவலை கருத்தில்...\nமாநாடு டப்பிங் ஆரம்பம்… படக்குழு வெளியிட்ட புகைப்படங்கள்\nமாநாடு டப்பிங் ஆரம்பம்... படக்குழு வெளியிட்ட புகைப்படங்கள் சிம்பு நடிப்பில் உருவாகி உள்ள படம் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கியுள்ள இப்படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார். இப்படத்தில் சிம்பு அப்துல் காலிக்...\nமூத்த தலைவர் ஆர்.எம்.வீரப்பனை நேரில் சந்தித்து ஆசி பெற்றார் மு.க.ஸ்டாலின் | Video\nமூத்த தலைவர் ஆர்.எம்.வீரப்பனை நேரில் சந்தித்து ஆசி பெற்றார் மு.க.ஸ்டாலின் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றதை அடுத்து தமிழகத்தின் அடுத்த முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பு ஏற்க உள்ளார். நாளை (மே 7...\nவெளியானது 34 பேர் கொண்ட தமிழக அமைச்சரவை பட்டியல்\nவெளியானது 34 பேர் கொண்ட தமிழக அமைச்சரவை பட்டியல் தமிழகத்தின் முதலமைச்சராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை சென்னை - கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்க உள்ளார். கொரோனா பரவலை கருத்தில்...\nமாநாடு டப்பிங் ஆரம்பம்… படக்குழு வெளியிட்ட புகைப்ப���ங்கள்\nமாநாடு டப்பிங் ஆரம்பம்... படக்குழு வெளியிட்ட புகைப்படங்கள் சிம்பு நடிப்பில் உருவாகி உள்ள படம் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கியுள்ள இப்படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார். இப்படத்தில் சிம்பு அப்துல் காலிக்...\nமூத்த தலைவர் ஆர்.எம்.வீரப்பனை நேரில் சந்தித்து ஆசி பெற்றார் மு.க.ஸ்டாலின் | Video\nமூத்த தலைவர் ஆர்.எம்.வீரப்பனை நேரில் சந்தித்து ஆசி பெற்றார் மு.க.ஸ்டாலின் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றதை அடுத்து தமிழகத்தின் அடுத்த முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பு ஏற்க உள்ளார். நாளை (மே 7...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/farm-info/fertilizer-price-hike-should-be-reversed-farmers-association-demand/", "date_download": "2021-05-07T00:03:16Z", "digest": "sha1:A42BGYBTX5OHLFWNCHY2VQOBEXY3ABDO", "length": 14355, "nlines": 130, "source_domain": "tamil.krishijagran.com", "title": "உர விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும்- விவசாயிகள் சங்கம் கோரிக்கை!", "raw_content": "செய்திகள் வாழ்வும் நலமும் தோட்டக்கலை கால்நடை வெற்றிக் கதைகள் விவசாய தகவல்கள் FTB அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா Directory\n#FTB விவசாய தகவல்கள் அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா\nஎங்கள் அச்சு மற்றும் டிஜிட்டல் பத்திரிகைகளுக்கு குழுசேரவும்\nசமூக ஊடகங்களில் எங்களுடன் இணைக்கவும்:\nஉர விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும்- விவசாயிகள் சங்கம் கோரிக்கை\nஉயர்த்தப்பட்ட உர விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற, மத்திய அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, காவிரி நீரேற்று பாசன சங்க செயலாளர் சுப்ரமணியன், பிரதமருக்கு மனு அனுப்பியுள்ளார்.\nதிடீரென உரங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதனை உடனடியாக அமலுக்குக் கொண்டுவந்தால், விவசாயிகள் பாதிக்கு ஆளாவார்கள் என பல தரப்பில் அறிவுறுத்தப்பட்டது.\nஇதனைக் கருத்தில்கொண்டு, உயர விலை உயர்வு தற்காலிகமான நிறுத்தப்பட்டுள்ளது. பழைய விலையில் உரங்களை விற்பனை செய்ய வேண்டும் என உர நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.\nஇந்நிலையில், காவிரி நீரேற்று பாசன சங்க செயலாளர் சுப்ரமணியன், பிரதமருக்குக் கோரிக்கை மனு ஒன்றை அனுப்பியுள்ளார்.\nதற்போது, இந்தியாவில், பல்வேறு உர நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் உரங��களுக்கு, மூட்டைக்கு, ரூ.500 முதல் ரூ.600 வரை, விலை ஏற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக, விவசாயிகளுக்கு, பெருத்த இழப்பு ஏற்படுவது மட்டுமின்றி, விவசாயம் தொடர்ந்து செய்ய முடியாத சூழ்நிலை ஏற்படும். ஏற்கனவே, விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த பொருட்களுக்கு, போதுமான விலைக் கிடைப்பதில்லை.\nஇந்நிலையில், மத்திய அரசின் உர விலை உயர்வு,ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. இதுபோன்ற விலை உயர்வால், நடுத்தர ஏழை விவசாயிகளுக்கு, மிகக் கடுமையான பாதிப்பு ஏற்படுகிறது.\nகடன் வாங்கி விவசாயம் (Borrowed agriculture)\nவிவசாயிகள் உற்பத்தி செய்யும் விளை பொருட்கள், விலை குறைவாகவும், உற்பத்தி செலவு அதிகமாகவும் மாறுகிறது. ஏராளமான விவசாயிகள், தனியார் நிதி நிறுவனங்களிலும், வங்கிகளிலும், கந்துவட்டிக்காரர்களிடமும், பணத்தைக் கடனாகப் பெற்று, விவசாயம் மேற்கொண்டு வருகின்றனர். இச்சூழலில், உரத்தின் விலை ஏற்றம் என்பது, விவசாயிகளுக்கு, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது.\nஅடுத்தக் கட்ட முடிவு (Next phase results)\nஉயர்த்தப்பட்ட உர விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற மத்திய அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில், அனைத்து விவசாய சங்கங் களும் கலந்து ஆலோசித்து, அடுத்தக் கட்ட முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉரங்களின் விலை உயர்வு நிறுத்தி வைப்பு பழைய விலைக்கே வாங்கி கொள்ளலாம்\nஉரங்கள் விலை உயர்வால் விவசாயிகள் வேதனை\nஊட்டியில் கேரட் விலை குறைந்தது\nஅன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.\nஉங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....\nபங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)\nஉரங்கள் விலை உயர்வு விலைஉயர்வை திரும்பப் பெற வேண்டும் விவசாயிகள் கோரிக்கை பிரதமருக்கு மனு Fertilizer price hike should be reversed Farmers Association demand\nமின்சாரம்-டீசல் இரண்டிலும் இயங்கும் ஹைபிரிட் டிராக்டர் - விலை ரூ.7.21 லட்சம் மட்டுமே\nகோடை உழவு செய்தா��் கூட்டுபுழுவை அழிக்கலாம் - விவசாயிகளுக்கு வேளாண் துறை ஆலோசனை\nகொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, முழு ஊரடங்கை அமல்படுத்த உச்ச நீதிமன்றம் பரிந்துரை\nகொப்பரை உற்பத்தி செய்ய நவீன இயந்திரம்: விவசாயிகள் மகிழ்ச்சி\n செய்ய வேண்டியவையும், செய்யக் கூடாதவையும்\nவிளைநிலங்களில் வீணாகும் தர்பூசணி பழங்கள்\nபூச்சிகளைப் புரிந்து கொள்(ல்)வோம்- காணொளி மூலம் பயிற்சி\nரூ.4000 கொரோனா நிவாரண நிதிவழங்கும் திட்டம் - நாளை ஸ்டாலின் முதல் கையெழுத்து\nவாடிக்கையாளர்களுக்கு புதியவகை டிசைனர் சிலிண்டரை அறிமுகம் செய்த IOCL\nஒரே நிமிடத்தில் cowin.gov.in தளத்தில் கொரோனா தடுப்பூசி பதிவு செய்வது எப்படி\nபருத்தியைத் தாக்கும் மாவுப்பூச்சிகளை எப்படி கட்டுப்படுத்தலாம்\nகொரோனாவைத் தடுக்கும் முயற்சியில், புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்\nஒன்றல்ல, இரண்டல்ல, ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள்\nதொற்றுநோய்களைத் தடுக்கும் ஊட்டச்சத்து அணுகுண்டு எது தெரியுமா\nமாடித்தோட்டத்திற்கு ஏற்ற மண் கலவை வகைகள் எவை\nவிவசாயிகள் நலன் கருதி சாகுபடி தொடர்பான சந்தேகம் ஏற்பட்டால் வேளாண் விஞ்ஞானிகளை அணுகலாம்: தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2021/may/03/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-3616322.html", "date_download": "2021-05-07T01:54:26Z", "digest": "sha1:77PRMEMHM3W7ZMZA2OFSPVYQQ5NDO6IN", "length": 8994, "nlines": 143, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "காஞ்சிபுரத்தில் சி.வி.எம்.பி.எழிலரசன் (திமுக) வெற்றி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n06 மே 2021 வியாழக்கிழமை 06:33:21 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை காஞ்சிபுரம்\nகாஞ்சிபுரத்தில் சி.வி.எம்.பி.எழிலரசன் (திமுக) வெற்றி\nகாஞ்சிபுரம் தொகுதியில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தொகுதி தோ்தல் அலுவலரான பெ.ராஜலெட்சுமியிடமிருந்து பெறுகிறாா் திமுக வேட்பாளா் சி.வி.எம்.பி.எழிலரசன்.\nகாஞ்சிபுரத்தில் திமுக வேட்பாளா் சி.வி.எம்.பி.எழிலரசன் 11,595 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெ��்றாா்.\nஇத் தொகுதியில் பாமக உள்பட மொத்தம் 15 வேட்பாளா்கள் போட்டியிட்டனா்.\nஇதில், திமுக வேட்பாளரான சி.வி.எம்.பி.எழிலரசன் 1,02,712 வாக்குகளும், பா.ம.க. வேட்பாளா் பெ.மகேஷ்குமாா் 91,117 வாக்குகளும் பெற்றனா். நாம் தமிழா் கட்சியைச் சோ்ந்த எஸ்.சால்டின் 13,596 வாக்குகளும், மநீம வேட்பாளா் எஸ்.கே.பி.பா.கோபிநாத் 12,028 வாக்குகளும் பெற்றனா். நோட்டாவுக்கு 2,534 வாக்குகள் கிடைத்தன. அமமுக வேட்பாளா் மனோகரன் 2,301 வாக்குகள் பெற்றாா்.\nமொத்த வாக்காளா்கள் 3,09,117. பதிவான வாக்குகள் 2,29,430.\nதிமுக வேட்பாளா் எழிலரசன் வெற்றி பெற்ற்கான சான்றிதழை காஞ்சிபுரம் தொகுதி தோ்தல் அலுவலரான பெ.ராஜலெட்சுமி வழங்கினாா்.\nகளைகட்டிய அண்ணா அறிவாலயம் - படங்கள்\nஆக்ஸிஜன் செறிவூட்டிகளுடன் இந்தியாவுக்கு வந்த விமானங்கள் - படங்கள்\nதிமுக தொண்டர்கள் கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nஸ்ரீ குரு தேக் பகதூரின் 400-வது பிறந்தநாள் - படங்கள்\nஅண்ணாத்த படப்பிடிப்புக்காக ஹைதராபாத் சென்ற நயன்தாரா - படங்கள்\nகும்பமேளா: கங்கையில் புனித நீராடிய பக்தர்கள் - படங்கள்\nசித்த மருத்துவத்தில் கரோனாவுக்குச் சிறந்த தடுப்பு மருந்து\nகரோனாவை தடுக்க சித்த மருத்துவம் தரும் டிப்ஸ்..\nரெம்டெசிவிா் மருந்து தேவைப்படுவோர் கவனிக்க..\nகரோனா தடுப்பூசிக்கு முன்பதிவு செய்வோர் கவனிக்க..\n'விடுதலை' படத்தின் டிரெய்லர் வெளியீடு\nதயுவு செய்து இதைச் செய்யாதீர்கள்..\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/recipes/201677-.html", "date_download": "2021-05-07T00:57:11Z", "digest": "sha1:RMPZLZNQCK7FVG6W5B3WEAIB42W6EY54", "length": 11093, "nlines": 272, "source_domain": "www.hindutamil.in", "title": "அன்னாசி ஜூஸ் | அன்னாசி ஜூஸ் - hindutamil.in", "raw_content": "வெள்ளி, மே 07 2021\nஅன்னாசி - 1 (பெரியது)\nசர்க்கரை - அரை கிலோ\nதண்ணீர் - அரை லிட்டர்\nகே.எம்.எஸ். பவுடர் (பொட்டாசியம் மெட்டா பைசல்ஃபேட்) - கால் டீஸ்பூன்\nசிட்ரிக் அமிலம் - கால் டீஸ்பூன்\nஅன்னாசி எசென்ஸ் - சில துளி (விரும்பினால்)\nஅன்னாசியைத் தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கி, மிக்ஸியில் போட்டு அடித்துக்கொள்ளுங்கள். வடிகட்டி, சாறெடுத்துக்கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடுங்கள். அதில் சர்க்கரையைச் சேருங்கள். சர்க்கரை கரைந்து ஓரளவு பிசுக்குப் பதம் வந்ததும் இறக்கிவைத்து ஆறவிடுங்கள். ஆறியதும் அதில் சிட்ரிக் அமிலம் சேர்த்து நன்றாகக் கலக்குங்கள்.\nபிறகு அன்னாசி சாறு, கே.எம்.எஸ். பவுடர் சேர்த்துக் கலக்குங்கள். அன்னாசி எசென்ஸ் சேர்த்துக் குளிரவையுங்கள். விரும்பினால் மஞ்சள் கலர் சேர்க்கலாம். பிறகு ஈரம் இல்லாத பாட்டிலில் ஊற்றிவையுங்கள். தேவைப்படும்போது இந்த சாற்றை கால் டம்ளர் அளவுக்கு ஊற்றி, முக்கால் டம்ளர் குளிர்ந்த நீர் சேர்த்துப் பரிமாறுங்கள்.\nஅன்னாசி ஜூஸ்குளிர் பானங்கள்குறிப்புகள்செய்முறைகோடை பானங்கள்\nநந்திகிராமில் தோற்ற மம்தா பானர்ஜி முதல்வர் பதவியில்...\nபிரதமருக்கு வீடு கட்டச் செலவிடும் ரூ.13,450 கோடியில்...\nபிரசாந்தும் சுனிலும்: இரு பிரச்சாரக் கதைகள்\nதிமுக வெற்றியின் முக்கியத்துவம் என்ன\nஅம்மா உணவகம் சூறை; டிடிவி, ஜெயக்குமார் கண்டனம்:...\nமேற்கு வங்கத்தில் பாஜகவை வீழ்த்திய மம்தா: வெற்றிப்...\nமோடி ஒன்றும் வெல்ல முடியாதவர் அல்ல\nநல் ஆரோக்கியம் பேண நாள்தோறும் ஒரு கீரை\nகெட்டக் கொழுப்பை கரைக்கும் வெந்தயம்\nகொண்டைக் கடலை சாப்பிடுங்க உடம்பை புஷ்டியா வைச்சுக்கோங்க\nதலைவாழை: வீட்டிலேயே சத்துணவு படைக்கலாம் - ராகி மசாலா இட்லி\nதங்கம் பவுன் விலை ரூ.23 ஆயிரத்தை நெருங்கியது\nஆணவக் கொலைகளை தடுக்க விரைவில் புதிய சட்டம்: உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/667170-remdesivir.html", "date_download": "2021-05-07T00:03:57Z", "digest": "sha1:57O4TGVPZKJAWTQKPGF4ROG2Q7GMVL43", "length": 16527, "nlines": 281, "source_domain": "www.hindutamil.in", "title": "கரோனா நோயாளிகளுக்கான ரெம்டெசிவிர் மருந்துகளை கள்ளச் சந்தையில் விற்ற மருத்துவர் கைது: உதவியாக இருந்த மருந்தாளுநரும் சிக்கினார் | remdesivir - hindutamil.in", "raw_content": "வெள்ளி, மே 07 2021\nகரோனா நோயாளிகளுக்கான ரெம்டெசிவிர் மருந்துகளை கள்ளச் சந்தையில் விற்ற மருத்துவர் கைது: உதவியாக இருந்த மருந்தாளுநரும் சிக்கினார்\nகரோனா நோயாளிகளுக்கு பயன்படும் ரெம்டெசிவிர் மருந்துகளை கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்றது தொடர்பாக கைது செய்யப்பட்ட மருத்துவர் ராமசுந்தரம், மருந்தாளுநர் கார்த்திக்.\nகரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிர் மருந்துகளை, கள்ளச் சந்தையில் அதிக ���ிலைக்கு விற்பனை செய்ததாக மருத்துவர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.\nகரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பாதிக்கப்படுவோருக்கு எந்தவித தடையுமின்றி சிகிச்சை அளிப்பதற்காக படுக்கை வசதிகளை அதிகப்படுத்துவது, போதுமான அளவில் ஆக்சிஜன் இருப்பு வைத்தல், ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளை அதிகரித்தல், ரெம்டெசிவிர் உள்ளிட்ட மருந்துகளை போதுமான அளவில் வழங்குதல் உட்பட பல்வேறு நோய்த்தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன.\nஇந்நிலையில், ரெம்டெசிவிர் மருந்துகளை சிலர் பதுக்குவதாகவும், கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுபோன்ற சட்ட விரோத செயலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்திருந்தது. இந்நிலையில் சென்னை கிண்டி கிங்ஸ் கரோனா இன்ஸ்டிடியூட்டில் பணிபுரியம் மருத்துவர் ராமசுந்தரம் (25), ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாக குடிமை பொருள் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் குடிமை பொருள் ஆய்வாளர் தன்ராஜ் தலைமையிலான போலீஸார் சாதாரண உடையில் கண்காணித்தனர். கிண்டி பேருந்து நிலையம் அருகே, மருத்துவர் ராமசுந்தரத்தின் கார் வந்ததை கண்டறிந்து அதை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.\nஅப்போது காரில் 12 ரெம்டெசிவிர் மருந்துகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின்பேரில் அதே மருத்துவமனையில் மருந்தாளுநராக பணிபுரியும் ஆலந்தூரைச் சேர்ந்த கார்த்திக் (27) என்பவரையும் கைது செய்தனர்.\nபோலீஸாரின் விசாரணையில், கிண்டி கிங்ஸ் மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வைத்திருந்த மருந்தை திருடிய கார்த்திக், அதை மருத்துவர் ராமசுந்தரத்திடம் ரூ.5 ஆயிரத்துக்கு விற்பனை செய்து வந்ததும், அதனை டாக்டர் ராமசுந்தரம் கள்ளச் சந்தையில் ரூ.20 ஆயிரத்துக்கு விற்று அதிக லாபம் சம்பாதித்திருப்பதும் தெரிய வந்தது.\nதொடர்ந்து விசாரணை நடக்கிறது. ரெம்டெசிவிர் மருந்தை வாங்கி அதை கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்ததாக ஏற்கனவே 10-ம் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது க���றிப்பிடத்தக்கது.\nரெம்டெசிவிர் மருந்துரெம்டெசிவிர்கரோனா நோயாளிமருத்துவர் கைதுகள்ளச் சந்தைRemdesivir\nநந்திகிராமில் தோற்ற மம்தா பானர்ஜி முதல்வர் பதவியில்...\nபிரதமருக்கு வீடு கட்டச் செலவிடும் ரூ.13,450 கோடியில்...\nபிரசாந்தும் சுனிலும்: இரு பிரச்சாரக் கதைகள்\nதிமுக வெற்றியின் முக்கியத்துவம் என்ன\nஅம்மா உணவகம் சூறை; டிடிவி, ஜெயக்குமார் கண்டனம்:...\nமேற்கு வங்கத்தில் பாஜகவை வீழ்த்திய மம்தா: வெற்றிப்...\nமோடி ஒன்றும் வெல்ல முடியாதவர் அல்ல\nதமிழக அரசு விரைவாக செயல்பட்டு 69% இடஒதுக்கீட்டை காப்பாற்ற வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி...\nதமிழகத்தில் ஒருநாள் மட்டுமே ஆக்சிஜன் கையிருப்பு உள்ளது: தடையின்றி வழங்க மத்திய அரசுக்கு...\nதமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் யார்- அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் இன்று முடிவு\nவீடுகளில் இருந்தபடி தொலைக்காட்சிகளில் முதல்வர் பதவியேற்பு விழாவை நேரலையில் காணுங்கள்: திமுக தொண்டர்களுக்கு...\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nமேலும் 1.5 லட்சம் ஸ்புட்னிக் வி தடுப்பூசிகளை அனுப்பும் ரஷ்யா\n‘தமிழ்மண்’ பதிப்பக உரிமையாளர் கோ.இளவழகன் காலமானார் : அரசியல் தலைவர்கள், தமிழ்...\nகரோனா 2-வது அலையை எதிர்கொள்ள பாரத ஸ்டேட் வங்கி ரூ.71 கோடி நிதி...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/state-wise-crpf-personnel-martyred-injammu-and-kashmir-blasts/", "date_download": "2021-05-07T00:34:43Z", "digest": "sha1:EVMUXPDOMRQNZSI6H3SXIMVOYXERJZ7U", "length": 18194, "nlines": 150, "source_domain": "www.patrikai.com", "title": "காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்கள்: மாநிலம் வாரியாக விவரம்: – Patrikai – Tamil Daily – latest online local breaking news & reviews – Tamilnadu, India & World – politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nகாஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்கள்: மாநிலம் வாரியாக விவரம்:\nகாஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்கள்: மாநிலம் வாரியாக விவரம்:\nகாஷ்மீரில் சிஆர்பிஎஃப் வீரர்கள் சென்ற வாகனங்களில் மீது நடத்தப்பட���ட ஜெய்ஷ்இமுகமது என்ற பயங்கரவாத குழுவினரின் தற்கொலைப்படை தாக்குதல் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு சரியான பதிலடி கொடுக்க வேண்டும் என்று மக்கள் மக்கள் ஆவேசமாக கூறி வருகிறார்கள்.\nகாஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் வாகனங்களில் சென்று கொண்டிருந்த சிஆர்பிஎப் வீரர்கள் மீது, ஜெய்ஷ்இ முகமது பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த அடில் அகமது என்ற தற்கொலை பயங்கரவாதி சுமார் 350 கிலோ அளவிலான பயங்கர வெடிப்பொருட்களை நிரப்பிய கார் மூலம், மோதி வெடிகுண்டை வெடிக்கச்செய்து பெரும் விபத்தை ஏற்படுத்தினான்.\nஇந்த சக்தி வாய்ந்த வெடிகுண்டு தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற வாகனம் தூள் தூளாகவெடித்து சிதறியது. அதனுள் பயணம் செய்த வீரர்களின் உடல்களும் அடையாளம் தெரிய அளவுக்கு சிதறியுள்ளன. இந்த கொடூரமான குண்டு வெடிப்பில் 41 சிஆர்பிஎப் வீரர்கள் பலியாகி உள்ளனர்.\nநாட்டுக்காக தங்களது உயிரைத்தியாகம் செய்த வீரர்கள் எந்தெந்த மாநிலங் களை சேர்ந்தவர்கள் என்ற விவரம் வெளியாகி உள்ளது.\nஅதன்படி, அசாம்-1, பீகார்-2, இமாச்சல பிரதேசம்-1, ஜம்மு காஷ்மீர்-1, ஜார் கண்ட்-1, கேரளா-1, கர்நாடகா-1, மத்திய பிரதேசம்-1, மகாராஷ்டிரா-2, ஒடிசா-2, பஞ்சாப்-4, ராஜஸ்தான்-5, தமிழ்நாடு-2, உத்தரபிரதேசம்-12, உத்தர்காண்ட்-3, மேற்கு வங்கம்-2, ஆக மொத்தம் 41 வீரர்கள் பலியாகி உள்ளனர்.\nஅதிக பட்சமாக உத்தரபிரதேச மாநிலத்தை 21 வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ள னர்.\nராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ரோஹிதஷ் லம்பா, பாகிரத் சிங் மற்றும் ஹேம்ராஜ் மீனா அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nரோஹிதஷ் லம்பா ஷாபுராவிற்கு அருகில் உள்ள கோபிந்த்புரா கிராமத்தை சேர்ந்தவர் என்பதும், அவருக்கு மனைவியும் இரண்டு மாத குழந்தையும் உள்ளனர். ரோஹிதஸ் சமீபத்தில்தான் அவர் சொந்த ஊருக்கு வந்து குழந்தையை பார்த்து விட்டு திரும்பியதாக கூறப்படுகிறது. அவர்கள் குடும்பம் கண்ணீரில் மிதக்கிறது. மற்றொரு வீரரா பாகிரத் சிங், டோல்பூலி அருகில் உள்ள ஜெய்த்புரா கிராமத்தை சேர்ந்தவர்.\nகுண்டுவெடிப்பில் பலியான ராஜஸ்தான் வீரர்கள் பாகிரத் சிங், ஹேம்ராஜ் மீனா\nஇவர்களின் வீர மரணம் குறித்து கூறிய மாநில முதல்வர் அசோக் கெலாட், இந்த கோழைத்தனமான தாக்குதலில் ஆர்பிஎப் ஜவான்கள் பலர் உயிரிழந்ததுள்ளனர். கோழைத்தனமான பயங்கரவாத தாக்குதலை நான் கண்டிக்கிறேன். இத்தகைய கொடூரம் தோற்கடிக்கப்பட வேண்டும். தியாகிகளின் குடும்பங்களுடனான சோகத்தில் நாங்களும் பங்குகொள்கிறோம்.. காயம் அடைந்தவர்கள் விரைவில் குணம் அடைய ஆண்டவனை பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்து உள்ளார்.\nராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்வர் வசுந்தராராஜேயும், பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து டிவிட்டர் பதிவிட்டுள்ளார்.\nஅதில், பயங்கரவாதிகளின் இந்த கொடூரமான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிப்பதாகவும், தான் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினர்களுக்கும், காயமடைந்த வீரர்களின் குடும்பங்களுக்கும் துணை நிற்பேன் என்றும்… நாங்கள் உங்களுடன் நிற்கிறோம், பயங்கரவாதத்தக்கு எதிராக போராடுவோம் என்று கூறியுள்ளார்.\nதாய்நாட்டுக்காக ஒரு மகனை பலியிட்டேன்… மற்றொரு மகனையும் கொடுக்க தயாராக இருக்கிறேன்: பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த வீரரின் தந்தை உருக்கம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய பள்ளி மாணவிகள் இந்திய விமானப்படை தாக்குதலுக்கு ஓவைசி வரவேற்பு\nPrevious பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட வர்த்தக சலுகைகள் ரத்து : அருண் ஜெட்லி\nNext உளவுத்துறையின் தோல்வியே புல்வாமா பயங்கரவாத தாக்குதல்: உயிரிழந்த தமிழக வீரரின் சுப்பிரமணி தந்தை குற்றச்சாட்டு\nஐபிஎல் தொடரை நடத்தி முடிக்காவிட்டால் 2500 ரூபாய் கோடி இழப்பு ஏற்படும் – கங்குலி\n7 hours ago ரேவ்ஸ்ரீ\nஇன்று ஆந்திரப் பிரதேசத்தில் 21,954 கர்நாடகாவில் 49,058 பேருக்கு கொரோனா உறுதி\nகொரோனா : இன்று கேரளாவில் 42,464, உத்தரப்பிரதேசத்தில் 26,622 பேர் பாதிப்பு\nஅடுத்த 17 நாட்கள் ஒவ்வொரு வீட்டிலும் பின்பற்ற வேண்டிய கட்டாய விதி\nஅடுத்த 17 நாட்கள் ஒவ்வொரு வீட்டிலும் பின்பற்ற வேண்டிய கட்டாய விதி – நெட்டிசன் பதிவு கொரோனா கட்டுப்பாடு குறித்து வலைத் தளங்களில்…\nஇன்று ஆந்திரப் பிரதேசத்தில் 21,954 கர்நாடகாவில் 49,058 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 21,954 கர்நாடகாவில் 49,058 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 49,058…\nநாளைக்குள் தமிழகத்துக்குத் தேவையான ஆக்சிஜன் வழங்குவதை உறுதி செய்ய மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\nசென்னை நாளைக்குள் தமிழகத்துக்குத் தேவையான ஆக்சிஜன் வழங்குவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது….\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் –06/05/2021\nசென்னை தமிழகத்தில் இன்றைய (06/05/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 24,898 பேருக்குப் பாதிப்பு…\nசென்னையில் இன்று 6,678 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 6,678 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 33,316 ஆகி உள்ளது இன்று சென்னையில்…\nதமிழகத்தில் இன்று 24,898 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 24,898 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 12,97,500 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 1,31,468…\nஅதிமுக எம்.எல்.ஏ. விஜய பாஸ்கருக்கு கொரோனா\n6 hours ago ரேவ்ஸ்ரீ\nதனி தகவல் தொடர்பு தளத்தை தொடங்கிய டிரம்ப்\n6 hours ago ரேவ்ஸ்ரீ\nஐபிஎல் தொடரை நடத்தி முடிக்காவிட்டால் 2500 ரூபாய் கோடி இழப்பு ஏற்படும் – கங்குலி\n7 hours ago ரேவ்ஸ்ரீ\nகளை எடுப்போம்: – கமல் டுவிட்\n7 hours ago ரேவ்ஸ்ரீ\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை\n7 hours ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2021/01/blog-post_18.html", "date_download": "2021-05-07T01:16:10Z", "digest": "sha1:LJLVJCKPBR7DIMA5V45RIPH2Y5CXPVO5", "length": 8412, "nlines": 90, "source_domain": "www.yarlexpress.com", "title": "வெளவாலில் இருந்து பரவும் நிபா வைரஸ் - இலங்கையும் எச்சரிக்கை. \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nவெளவாலில் இருந்து பரவும் நிபா வைரஸ் - இலங்கையும் எச்சரிக்கை.\nபுதிய வகை வைரஸ் தொற்றுப் பரவல் குறித்து இலங்கை உன்னிப்பாக அவதானித்து வருவதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்....\nபுதிய வகை வைரஸ் தொற்றுப் பரவல் குறித்து இலங்கை உன்னிப்பாக அவதானித்து வருவதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.\nமேலும் பிற நாடுகளில் ஏற்பட்டுள்ள நிபா எனப்படும் புதிய வைரஸ் தொற்றுக் குறித்தும் சுகாதார அமைச்சு வி��ேட அவதானம் செலுத்தியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nஇருப்பினும், புதிய வைரஸ் தொற்றுப் பரவல் குறித்து கடுமையான நடவடிக்கை எடுக்க இலங்கைக்கு உலக சுகாதார அமைப்பிலிருந்து எந்த பரிந்துரையும் இதுவரை கிடைக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஎனினும், ​​நிபா வைரஸ் உட்பட பிராந்தியத்தில் பரவும் பிற வைரஸ்களை சுகாதார அமைச்சு கண்காணித்து வருவதாகவும் ஹேமந்த ஹேரத் மேலும் தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில் குறித்த நிபா வைரஸ் வௌவாலில் இருந்து பரவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளபோதும் அதன் பாதிப்பு அதிகமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், நிபா வைரஸ் மனிதர்களிலும் பிற விலங்குகளிலும் தொற்று மூலம் பாதிப்புக்களை ஏற்படுத்துவதுடன், அதிக இறப்பு விகிதத்தையும் கொண்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.\nவணிகம் / பொருளாதாரம் (7)\nமாநகர காவல்படையினரின் சீருடை பறிமுதல் - மாநகரசபைக்கு ஆப்பு வைத்த பொலீஸார் ..\nBREAKING NEWS :- ஊரடங்கு தொடர்பில் இராணுவத் தளபதி சற்றுமுன் வெளியிட்ட அறிவிப்பு\nஅத்தியாவசிய சேவைக்கு மாத்திரமே அனுமதி\nYarl Express: வெளவாலில் இருந்து பரவும் நிபா வைரஸ் - இலங்கையும் எச்சரிக்கை.\nவெளவாலில் இருந்து பரவும் நிபா வைரஸ் - இலங்கையும் எச்சரிக்கை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=607120610", "date_download": "2021-05-07T00:10:03Z", "digest": "sha1:75S435BI2JGVVBOODKNTCTKSICBS7P5V", "length": 74283, "nlines": 206, "source_domain": "old.thinnai.com", "title": "அடையாளங்களை விட்டுச்செல்லுதல் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை\nஅறிவிற் சிறந்த இந்த அவைக்குத் தலைவணங்குகிறேன். எழுத்தாளன் என்கிற அடையாளத்துடன் உங்கள்முன் நிற்க கெளரவப்படுகிறேன். எழுத்து என்று ருசி தட்டியபின் இதுமாதிரியல்லாது வேறு எப்படியும் என் வாழ்க்கை நிறைவுகொள்ளாது என்கிற பிரமை வந்திருக்கிறது. அது நல்ல விஷயமா, நல்ல விஷயம்தானா தெரியவில்லை.\nசில நல்ல கதைகள் தந்திருக்கிற திருப்தி எனக்கு உண்டு.\nஎப்படி எழுத வந்தேன், என நினைக்க ஆச்சர்யம். எப்படியும் எழுத வந்திருப்பேன் என்றுதான் இப்போது தோன்றுகிறது. வாலிபப் பருவத்தில் சதா கலகலப்பாக நடமாட உற்சாகம் கொண்டவன். குழு மத்தியில் என் அடையாளம் பேணுவதில் கவனம் மிகுந்தவன். கிளர்ச்சியும் கனவும் மிக்க இளமைப் பருவம். எதையிட்டும் ஒரு தெனாவெட்ட��, அ, என்ற அலட்சியம் ஒருவேளை எனக்கு இருந்திருக்கும் என்று தோணுகிறது. ஓர் அலட்சிய பாவத்துடனேயே, ஆனால் உள்கவனம் இருந்திருக்க வேணும், என்று இப்போது நினைக்கிறேன், நான் இந்தப் படைப்புத் தொழிலைக் கையில் எடுத்தேன். கல்லூரி மாணவனுக்கு வாழ்க்கை பற்றி எவ்வளவு தெரிந்திருக்கும் எனக்கு அதில் பாதிகூட அறிவில் தட்டியிருக்குமா அறியேன். எனினும் தளரா ஊக்கம், என்னிடம் இருந்த ஒரு நடையம்சம், எதையும் சுவாரஸ்யமாய்ச் சொல்கிற முயற்சி… எழுத்து வாசிக்க சிக்கலற்று இருக்க வேண்டியது கட்டாயம் என்றுதான் இப்போதும் நம்புகிறேன்.\nசென்னைத் தொலைக்காட்சியில் ஒரு பேட்டி. நான், சா. கந்தசாமி மற்றும் ஒரு மாதநாவல் புகழ் அம்மணி – பேர் வேணாம். எங்களது முதல் படைப்பு பற்றி நாங்கள் பேச, வாரம் ஒரு பேட்டி என ஒளிபரப்ப வேண்டும். எனது பேட்டி இவ்வாறு அமைகிறது –\n அதை நான் எழுதியதற்கு வெட்கப்படுகிறேன். அதை நான் மறக்கவே விரும்புகிறேன். அது அத்தனை சொல்லுந்தரமாய் இல்லை. இருந்திருந்தால் நான் தொடர்ந்து எழுத வந்திருக்கவே மாட்டேனோ என்னவோ அது சிறப்பாக அமையாததில், ஆ இப்போது நான் உங்கள் முன் எழுத்தாளனாக நிற்கிறேன். ஒரு கட்டிமுடித்த கட்டடத்தில் எந்தச் செங்கல் முதலில் வைத்தது, என்கிறாப்போல திகைக்க வைக்கிற கேள்வியாய் இது இருக்கிறது. என் முதல்படைப்பே மோசம் என்றாகிறபோது, அதன் சிறப்பை எப்படிச் சொல்லச் சொல்லிக் கேட்கிறீர்கள் அது சிறப்பாக அமையாததில், ஆ இப்போது நான் உங்கள் முன் எழுத்தாளனாக நிற்கிறேன். ஒரு கட்டிமுடித்த கட்டடத்தில் எந்தச் செங்கல் முதலில் வைத்தது, என்கிறாப்போல திகைக்க வைக்கிற கேள்வியாய் இது இருக்கிறது. என் முதல்படைப்பே மோசம் என்றாகிறபோது, அதன் சிறப்பை எப்படிச் சொல்லச் சொல்லிக் கேட்கிறீர்கள் அதன் ஞாபகத்தில்-உள்ள வரிகள் பற்றிக் கேட்கிறீர்கள். எனது சிறந்த முதல் படைப்பு – ஆம் நீங்கள் அதற்குக் காத்திருக்கத்தான் வேணும், என்னைப் போல அதன் ஞாபகத்தில்-உள்ள வரிகள் பற்றிக் கேட்கிறீர்கள். எனது சிறந்த முதல் படைப்பு – ஆம் நீங்கள் அதற்குக் காத்திருக்கத்தான் வேணும், என்னைப் போல\nகாலை விருந்தினர், என ஜெயா டி.வி.யில் ஒரு நேர்காணல்- படைப்பில் நிஜமும் கற்பனையும் எந்தெந்த விகிதத்தில் இருக்க வேண்டும், என்று கேட்கிறார் நிருபர்.\nநான் – அதெப்படிச் சொல்ல முடியும் சிருஷ்டி ரகசியம் அது. ரசவாதம் போன்ற அந்தப் பொற்கணம் தற்செயல்போல ஆனால் முழுபிரக்ஞையுடன் நிகழ்கிறது. அதுவே படைப்பாளனின் ஞானமுத்திரை. ஒரு வீர்யம்மிக்க படைப்பில் நிஜத்தையும் கற்பனையையும் பிரித்துப் பார்க்க முயல்வது என்பது, ஜன்னல் வழியே வரிக்குதிரைகளைப் பார்ப்பது போல.\nஅதே நிருபருக்கு மற்றொரு பதில் –\nஒரு நல்ல படைப்பு, மின்கசியும் நீரொழுகும் வீடு போல இருக்க வேண்டும். அதை எங்கு தொட்டாலும் ஷாக் அடிக்க வேண்டும்.\nபடுதலம் சுகுமாரன் என்கிற எழுத்தாளரின் ஒரு நூல் – கொக்கு, சிறுகதைத் தொகுதி – வெளியீடு. மனுசர் பிளட்கான்சரில் அவதிப்பட்டு, நல்ல விஷயம், இப்போது உடல் தேறிவருகிறாப் போலிருக்கிறது. மேடையில் பெரிய எழுத்தாளர் கூட்டம், பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா, திருப்பூர் கிருஷ்ணன், நக்கீரன் கோபால், இதயம் பேசுகிறது ஆசிரியர் முருகன், முதல் பிரதி பெற்றுக் கொண்டவர் எம்.எல்.ஏ. சைதை துரைசாமி. நட்சத்திரக் கூட்டம். என் கதைகள்பால் பிரியங் கொண்டவர் படுதலம் சுகுமாரன். நானும் பேசப் போயிருந்தேன்.\n”எல்லாரும் வெள்ளிக்கரண்டிக் காரர்கள். கார், தேர் மற்றும் பெரும் வாகனங்கள் சுமந்து வந்து சேர்ந்திருக்கிறார்கள். இவர்கள் மத்தியில் சுகுமாரன் என்னையும் பேச அழைத்திருக்கிறார். அந்த அன்புக்கு நன்றி. நான் சைக்கிள்காரன். என்றாலும், இந்த ராஜபாட்டையில் யானைகளும், தேர்களும் வந்தாலும், ஒரு டிரா·பிக் சிக்னலில், நான் இவர்களை சட்டென முந்திச் சென்று நின்றுவிடுவேன்” (பிறகு கொக்கு தொகுதி பற்றியும் பேசினேன், என்று வையுங்கள்” (பிறகு கொக்கு தொகுதி பற்றியும் பேசினேன், என்று வையுங்கள்\nகலைமகள் லலிதா ஜுவல்லரி சிறப்புச் சிறுகதை – ஜா தீ – பரிசளிப்பு விழா. மாதம் ஒரு கதை வீதம், 12 சிறந்த எழுத்தாளர்கள் மேடையில் – சுஜாதா, பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா, தேவிபாலா, ஆண்டாள் பிரியதர்ஷினி, ராஜேஷ்குமார், பி.சி.கணேசன்… மற்றும் பலர். கலைமகளின் ‘கண்ணன்’ இதழில் குழந்தைக்கதைகள் எழுதியிருப்பதாக சுபா சந்தோஷித்தார். சுஜாதா கலைமகளின் மேல் தன் மரியாதையையும் கி.வா.ஜ. பற்றியும் நெகிழ்ந்தார். என் முறை வந்தபோது, ஒரு நிகழ்ச்சியை நான் சொல்லியாக வேண்டியிருந்தது.\nநான் கதை எழுத வந்தது, என் வீட்டில் யாருக்கும் பிடிக்கவில்லை. படிக்கிற காலத���தில் எழுதவாவது, என்கிற சராசரி பயம் என் குடும்பத்தில், குறிப்பாக அம்மாவுக்கு உண்டு. நான் மடுபெருத்த காட்டெருமை, எங்காவது உரசியாவது என் தினவைத் தணித்துக் கொள்ளாமல் முடியாது என்று அலைகிறவன். நான் எழுத்தாளன் ஆகிவிட்டேன். வந்தபோது இந்தத் தமிழ்ப் பத்திரிகை உலகம் என்னை இருகரம் நீட்டி வரவேற்றதை, இருகரங் கூப்பி வணக்கத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். ஆக, நான் பிரபலமான எழுத்தாளன், கல்லூரி படிக்கையிலேயே ஒரே வாரம் பதிமூன்று கதைகள் எனக்கு பத்திரிகைகளில் போட்டிபோட்டுக்கொண்டு வெளிவரும். ஒரே வருடம் எட்டு ஒன்பது தீபாவளி மலர்களில் எழுதுவேன். மதுரையில் இருந்து, எழுதியனுப்பிய ஒரே வாரத்தில் அச்சில் பார்ப்பேன் கதைகளை. அப்போதெல்லாம் தபால்கள் ஒரேநாளில் சென்னை வந்தடைந்துவிடும். அதையும் சொல்ல வேணும்.\nஎன் அம்மா என்னை எழுத்தாளன் என ஒத்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஆகிவிட்டது.\nஅம்மா சொன்னாள் – பத்திரிகை என்றால் தமிழின் தரமான ஒரே இதழ், கலைமகள். அதில் நீ எழுதினால்தான் நீ எழுத்தாளன்.\nநான் அம்மாவிடம் சொன்னேன் – நீ சொல்வதை நான் மறுக்கப் போவதில்லை அம்மா. ஆனால் நான் கலைமகளில் எழுதப் போவதில்லை – உன் மகனை எழுத்தாளன் என அங்கீகரித்து, அவர்களே என்னிடம் ஒருநாள் கதை கேட்கப் போகிறார்கள், அன்றே என் முதல் கதை கலைமகளில் வெளிவரும், என்று சொன்னேன். இதோ சிறப்புச் சிறுகதை வாய்ப்பு, கலைமகளில் இருந்து வந்து, எல்லாரும் ஜா தீ கதையை உச்சிமுகர்கிறார்கள். இந்தப் பாராட்டும், இந்த தங்க டாலரும் என் அம்மாவுக்கே சமர்ப்பணம்\nஅதேபோல கல்லூரியில் ஒரு படித்த வாசகக் கூட்டம், என்னை கணையாழியில் எழுதவேண்டும், என்று அழுத்திச் சொன்னார்கள். நான் எழுதிய ‘ம ற தி’ சிறுகதை, கணையாழியில் என் முதல் சிறுகதை, உடனே சிறந்த மாதச்சிறுகதை என இலக்கியச் சிந்தனை பரிசு பெற்றது. மிகக் குறைவாகவே நான் கணையாழியில் எழுதினாலும் என்னை நிறையப் பேர் கணையாழி எழுத்தாளன் என்றே சொல்கிறார்கள். சிலாள் விஜய், விக்ரம் என்று பின்னணியில் வைத்து, கூடநின்று ·போட்டோ எடுத்துக் கொள்வான். அதுபோல ஆகிவிட்டது.\nகணையாழி என் கைக்குப்பெரிய மோதிரம். பிரிய மோதிரம்.\nகணையாழி என்னை மிகவும் கெளரவப் படுத்தியதை மறுக்க முடியாது. விஷ்ணுபுரம், ஜெயமோகனின் நாவலுக்கு முதல் எதிர்விமர்சனம் நான் எழ��தியதை அது பிரசுரித்தது. தலைப்பு ‘ஜெயமோகன்களின் விஷ்ணுபுரம்.’ அதை வெளியிட பல முற்போக்கு, தலித்போக்கு, மதப்போக்கு இதழ்கள் எல்லாம் முன்வந்தபோதும், அது வெளிவரும் இதழ்சார்ந்து அதற்கு ஒரு பக்கச்சார்பு வந்துவிடக் கூடாது, என்பதில் நான் கவனங் கொள்ள வேண்டியிருந்தது. அவ்வகையில் நான் கணையாழியைத் தேர்ந்தெடுத்தேன்.\nகணையாழிக்கு நன்றி சொல்ல இன்னொரு விஷயமும் உண்டு. கணையாழி சின்ன அளவில் உருமாற்றம் பெற்றபோது முதல் இதழில் நான் ”வெ ள் ளை க் கா க் கை க ள்” எழுதினேன். சர்ரியலிசக் கதை. அதைக் கணையாழி வெளியிட்டபோது, காலத்தை வென்று நிற்கும் இக்கதை, என மேற்குறிப்பிட்டு வெளியிட்டதை எப்படி மறக்க முடியும் விட்டல்ராவ் தொகுத்த வேறொரு சிறுகதைத் திரட்டிலும் அது பங்களிப்பு கண்டது நல்ல விஷயம்.\nஎழுத்தாளனுக்கு இந்த அங்கீகாரம்லாம் வேணுமா தெரியவில்லை. இதில்லாட்டி அவன் சோர்ந்து விடுவானோ என்னமோ ஆனால் எனக்கு நிறைய நிறையக் கிடைத்தது என்றுதான் நினைக்கிறேன். அல்லது தோல்விகளைக் கண்டுகொள்ளாத மனப்பாங்கு, அது இருக்கலாம் என்னிடம்.\nஎந்தப் பெருவெற்றிக்கும் தகுதியாய்த் தயாராய் நிற்றல், என் வேலை இதுவே, என்று இயங்கிக் கொண்டிருக்கவே நான் விரும்புகிறேன்.\nஒரு பத்திரிகை கதை கேட்டால் உடனே நான் எழுச்சியுறுகிறேன். அந்த இதழுக்காக என நான் யோசிக்கிறதேயில்லை. எல்லா இதழ்களும் சம அந்தஸ்துள்ளவையே, அது சிற்றிதழா, பேரிதழா என்பது என் நினைவுக்கு வராது. அதேசமயம், சிற்றிதழ்த் தரத்தில் வணிக இதழ்கள் என் கதைகளுக்கு இடம் அளித்து வந்ததை நான் மகிழ்ச்சியோடு குறிப்பிடுவேன். எல்லாருக்கும் இது வாய்க்கும் என்று சொல்ல முடியாது. அந்தப் படைப்பில் என் தனி முத்திரை கட்டாயம் இருக்கும். தமிழக அரசு பரிசு பெறும்போது கூட, என் கதைத் தொகுதியின் தலைப்பில், ‘உயிரைச் சேமித்து வைக்கிறேன்’, கலைஞர் உட்பட எல்லாரும் புன்னகைத்தார்கள். பாரத ஸ்டேட் வங்கியில் இருமுறை பரிசுகள் – முதல் தொகுதி ‘·பெப்ருவரி – 30’ , இரண்டாவது ‘வசீகரப் பொய்கள்.’ சிறு மை உதறலிலும் என் அடையாளம் பேண வேண்டும் எனக்கு.\nஎன் முதல் வாசகர்கடிதம், முதல் நகைச்சுவைத் துணுக்கு, முதல் சிறுகதை, முதல் குறுநாவல், முதல் நாவல்…. எல்லாமே சிரமமே இல்லாமல் பிரசுரங் கண்டன.\nஎன் முதல் நாவல், நான் பி.எஸ்ஸி. படித்த அதே பல்கலைக்கழகத்தில் எம்.ஏ.க்குப் பாடமாகியிருந்தது. இதற்கு முன் நியூட்டனுக்குதான் அது நிகழ்ந்ததாகச் சொல்வார்கள். இளங்கலை வாசிக்கையில் அவர் ‘Calculus’ கண்டுபிடித்தார். உடனே அது பல்கலைக்கழகத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டு அவரே போய்ப் பாடம் நடத்தினாராம்\nஎழுத்தில் என் பங்களிப்பை ஆகவே நான் நியாயப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் எனக்கு பின்னாளில் ஏற்பட்டது. ஒரே வாரம் பதிமூன்று கதைகள் – எல்லாம் திடுக் திருப்பம். சுவாரஸ்ய முடிச்சுகள். அ என அசர வைக்கிற கதைகள். உன்னை ஒன்றை எதிர்பார்க்க வைத்துவிட்டு, ஏமாந்தியா என்று கைகொட்டுகிற கதைகள். ஒரு ஆண்முன்னால் நிர்வாணமாய்க் குளிக்கும் பெண். கடைசிவரி, அவனுக்குக் கண் தெரியாது\nஎல்லாம் தாண்டி நான், நல்ல வாசகனாக என்னை முன்னிறுத்திக் கொண்டு, எழுதுவதை சற்று நிறுத்திவிட்டு, நந்தனார், சற்றே விலகியிரும் பிள்ளாய், என்று நந்தியிடம் சொன்னாரே அதேபோல, நந்தி மறைப்பது நன்றன்று, என நான் ஒதுங்கி, கொஞ்ச காலம் வெறும் ஆங்கில இலக்கிய வாசிப்பில், வாசிப்பில் மட்டும் கவனஞ் செலுத்தினேன். பிறகு எனது ரெண்டாம் பிரவேசம் நிகழ்ந்தது. கி.மு., கி.பி. போல என் எழுத்தில் இரண்டு பகுதிகள் உண்டு\nஅட தமிழ்ல வாசிக்க எதுவுங் கிடையாதா, என்று கேட்கிறீர்கள் இல்லையா\nஅப்ப வெல்கம்காலனி அண்ணாநகரில் ·பிளாட்டில் இருந்தேன். திடுதிப்பென்று வந்து சேர்ந்தார் இளங்கோ, என்கிற கோணங்கி. ”சப்ப சப்பையா எழுதி நம்மளைக் காயடிச்சிட்¡னுகளே மாப்ள” என்று ஆழ்ந்த பெருமூச்சு விட்டார் கோணங்கி.\nஅது உண்மைதான். நம்ம தமிழ் எழுத்தாளர்களுக்கு ஒரு விவரத் தெளிவுங் கிடையாது. அந்தக் காலத்தில் பத்திரிகை என்றால் விகடன், குமுதம், சுதேசமித்திரன், கல்கி, கலைமகள் என்று நாலைந்து. எதிலும் விவர அழுத்தத்துடன் கதைகள் வந்ததாகப் பார்க்க முடியாது. ஒரு மேனியா போல, விபச்சாரியை வைத்து, நீங்க யோக்கியமா என்று கேட்கிற கதைகள். சும்மா ஒரு முதிர்கன்னி சோரம் போகிறாள் என்று கதை. அவளும் உயர்ஜாதிக்காரியாய் இருப்பாள். என்ன தப்பு என்று சாவதானமாகக் கூந்தலைப் பின்தள்ளிக் கொண்டே கேட்கிறாப் போல. எழுச்சிப் படைப்புகள். பாத்திரப் படைப்பை விடுங்கள்… வாழ்க்கை அதில் துளியும் ஒட்டவில்லை.\nஓர் ஆங்கிலப் படைப்பைப் பார்த்தால் – பருவ காலங்களை அப்படியொரு ஈடுபாட்டோடு வர���ணிப்பான். பாத்திரம் எந்தச் சூழலில் வாழ்கிறதோ அதன் பின்புலத்தைத் துல்லியப் படுத்த முயல்வான். மிக எளிமையான தன்வயம் சார்ந்த பாத்திரங்களையே நம்ம எழுத்தாளர்கள் எனக்குத் தந்தார்கள். லா.ச.ரா.வின் அத்தனை கதையிலும், அத்தனை பாத்திரமும், அது பொறந்த குழந்தை என்றாலும், இனி பொறக்கப் போறதா இருந்தாலும், ஆம்பிளையா இருந்தாலும், பொம்பளையா இருந்தாலும் அது யார் அவரேதான் தன்முகம் காட்டாத ஒரு ஜானகிராமனை, புதுமைப்பித்தனை, ஜெயகாந்தனைக் காட்ட முடியுமா இந்த சுயபிரக்ஞை தாண்டி, வண்ணதாசனும், பூமணியும், நாஞ்சில் நாடனும் இயங்க ஆரம்பித்தார்கள். அதில் அசோகமித்திரன், சா. கந்தசாமி வகை தனி. அவர்கள் பாத்திரங்களை ஓர் அறிவுஉருவங்களாகச் சித்தரிப்பதை அறவே தவிர்த்தார்கள் என்பது ஆச்சர்யம். காலநெருக்குதல்கள், மனப்போக்குகள் அவர்கள் செயல்பாடுகளைத் தீர்மானித்து, வெகுசன அடையாளங்களை ஆகப் பெரிய அளவில் அவர்கள் தருவித்தார்கள். என்னால் ஆகாது அப்படி. நான் அறிவெனும் கொள்ளிக்கட்டையால் அவ்வப்போது சொறிந்து கொள்வேன். குபீரென்று கதை நடுவே ஒரு கவிதைப் பாய்ச்சல், குட்டிக்கதை சொல்லுதல் என தடம் சற்று விலகுவேன் என்று தோணுகிறது.\nவிவர உக்கிரத்துடன் கதைசொல்லும் சித்தர் ராஜநாராயணன். கதையை குட்டிக் கதைகளுடன் கட்டியிழுத்து நகர்த்திப் போகிற சமர்த்து அவரிடம் நான் கற்றுக் கொள்ள விரும்பினேன். தமிழ் குட்டிக் கதைகளுக்குப் பிரசித்தம். நிர்மலமான வானில் நட்சத்திரங்கள், என ஒரு சிறுகதை. பிற்பாடு பாலு மகேந்திரா அதைக் குறும்படமாகவும் எடுத்தார். ‘அப்பா’ என கதைநேரத்தில் அது சன் டி.வி.யில் இடம் பெற்றது. கலப்புத் திருமணக் கதை. உள்ளே வரும் வேறுசாதிப் பெண்ணை அப்பா நிறுத்தி அவனிடம் ”இவ என்ன சாதிப்பா” என்று கேட்பார். இந்தக் கட்டம் ராமகிருஷ்ண பரமஹம்சரின் ஒரு குட்டிக்கதையை எடுத்தாண்ட இடம். அவரது குட்டிக் கதை இதுதான் –\nஅந்தப் பொண்ணு எந்த சாதிடா\nபாத்தா தெரியலைல்ல, விட்ருங்களேம்ப்பா. சாதி எதுக்கு\nராமகிருஷ்ண பரமஹம்சரின் மற்றொரு கதை – சபை உற்சாகத்துக்காக.\nகுருவே ஞானம் பெற பெற என்ன செய்ய வேண்டும்\nதினசரி கொஞ்சம் ஸ்லோகம் சொல்லி, கொஞ்சம் திராட்சைப் பழம் சாப்பிடு.\nஎத்தனை திராட்சைப் பழம் சாப்பிடணும் ஸ்வாமி\nஎத்தனை ஸ்லோகம் சொல்லணும் என்று கேட்டிருந்த�� உனக்கு ஞானம் வந்திருக்கும். திராட்சைப் பழம் பத்திக் கேட்டா, இந்த ஜென்மத்துல உனக்கு ஞானம் வராது.\nசரி, விஷயம் என்னவென்றால், தமிழ் எழுத்தில் அந்த விவர ஆளுமை, authenticity, அந்தக் காலத்தில் சுபாவமாகவே இல்லை. நான் எழுதுகையில் எந்தப் புது விஷயம் சொன்னாலும், மரபின் ஒரு நீட்சிபோலவே சொல்ல முயல்வேன். ஞானக்கூத்தன் கற்றுத் தந்த பாடம் அது. மயிலுக்கு வான்கோழி, அறிஞர்களுக்கு எந்நாளும் பண்டிட்ஜிக்கள், என்பார் ஞானக்கூத்தன்.\nஅறுபத்திருவர். – இது என் சிந்தனை.\n – என இன்னொரு கவிதை.\nமரபைத் தொட்டு, முன்னதைச் சார்ந்த ஒரு அபத்தத்தை ஒரு சீண்டலுடன் சொல்வது நீலமணிக்கு வருகிறது. தட்டுங்கள் திறக்கப்படும் என்றீர்கள், ஏன் கதவைச் சாத்தினீர்கள் – ஏ காளி, ஏன் நாக்கை நீட்டுகிறாய், நான் என்ன டாக்டரா – ஏ காளி, ஏன் நாக்கை நீட்டுகிறாய், நான் என்ன டாக்டரா – இதுவும் ஒரு நீலமணி கவிதை. காளமேகத்தில் இருந்து தனியே இப்படி ஒரு கோஷ்டி கிளம்பி வந்துகொண்டுதான் இருக்கிறது.\nதற்போதெல்லாம் விவரச் செறிவு கதையிலக்கியத்தில் முக்கியம் என்ற காலம் வந்துவிட்டது. நான் முன்பு சொன்னேனே, நல்ல கதை, மின்கசிகிற பழைய வீடு, எங்கு தொட்டாலும் ஷாக் அடிக்க வேண்டும், என்று அந்த நிலைமையை மாற்றி ஒட்டுமொத்த சீரான வாழ்க்கைத் தடத்தைப் பந்தல் போட்டாப்போல கதைகள் எழுத வந்திருக்கிறார்கள். மையப்புள்ளி நோக்கித் தீவிரப்பட்டு கதையோரங்கள் குவிகிற அழுத்தம் தேவையில்லை என்று கருதுகிறார்கள்…\nதவிர வாழ்க்கை அப்படியே முழு அந்தரடி பல்டியாக மாறிக் கொண்டிருக்கிற காலம். சாப்பாடே மாறியிருக்கிறது. பெப்சி கலாச்சாரம் என்கிறார்கள். மனிதன் வேகமாக உலகமனிதனாக உருப்பெருகி வருகிறான். யூரோ என்று பொது நாணயம் வந்திருக்கிறது. கலாச்சாரங்கள் கலந்துகட்டுகின்றன. இந்நிலையில் வேர்களற்ற ஒரு இலக்கிய வடிவமே கூட சாத்தியப்படக் கூடும்தான். ஹைகூ என்கிறார்கள். தனி வடிவமாகவே அது இருக்கிறது. வெறும் முரண் அம்சம் மிக்க பழமொழிக் கூறுகள் அதில் உள்ளன, என்று எதற்கெடுத்தாலும் நாம அன்னிக்கே செஞ்சிட்டோம், என வீறாப்பு வேணாம் என்று படுகிறது.\nவரிகளில் வரிகளைத் தாண்டி வாழ்க்கைப் பதிவுகள், சிந்தனைப் பதிவுகள் அல்ல, வாழ்க்கைப்பதிவுகள், ஹைகூவில் சாத்தியப் படுகிறது.\nபட்டாம்பூச்சி – என்கிற ஜப்பானியக் கவிதைய��,\nகாலம் தலைகுனிந்தது – என்கிற அப்துல் ரகுமானையோ எந்த முன் கவிஞனோடும் ஒப்பிட முடியாது அல்லவா ஒருவேளை முன்கவிதையை பின்கவிதையின் முன்மாதிரி என்று வேணுமானால் சொல்லலாமா ஒருவேளை முன்கவிதையை பின்கவிதையின் முன்மாதிரி என்று வேணுமானால் சொல்லலாமா அதுதான் விஷயம், புதிய செய்திகளுடன் மானுடம் பயணப்படக் கூடும் என்றுதான் தோணுகிறது.\nஎல்லாமே பாணிகள்தாம். அதனதன் சிறப்புகள் அவற்றுக்கு உண்டு, அல்லவா அத்தோடு கதை உத்தியை, அந்தக் கருவேதானே தேர்ந்தெடுக்க முடியும்\nஇப்போது ஒரு நவீனத்தன்மைக்காக என்று வம்படியாய் மாய-யதார்த்தவாதம் என்று பார்த்தார்கள். பின்நவீனத்துவம் என்று பார்த்தார்கள். அதிகார வர்க்கத்தைச் சாடுகிற முயற்சியில் யதார்த்த வாதம் படுத்துவிட்டது,.. ஆகவே உலகத்தை எழுப்பி உட்கார வைக்க வேண்டும், புது உத்திகள் தேவை, என்றார்கள். நான் அதை நம்பவில்லை. யதார்த்தத்தை மீறி எதையும் சொல்லிவிட முடியாது என்பது என் கட்சி.\nதிண்ணை 19 10 2007 இதழில் குற்றாலம் இலக்கியப் பட்டறை குறித்து ஜெயமோகன் ஒரு கட்டுரை தந்திருக்கிறார். அதில் அவரே தற்போது மாய-யதார்த்தவாதம், பின் நவீ¢னத்துவம் வீர்யம்இழந்துவிட்டதை, கடைவிரித்தோம் கொள்வாரில்லை, என ஆவணப்படுத்தியிருக்கிறார்.\nஅது வீழ்ந்ததற்கு, சரியான ஆட்களால் அது எடுத்துச் செல்லப்படாதது முக்கியக் காரணம். இன்றைய இளம் படைப்பாளர்களுக்குத் தம்காலத்துக்கு முந்தைய இலக்கியத்தின் மீது மரியாதை இல்லை. பெரியாரியக் கொள்கையில் பிடிப்பு கொண்டவர்கள், பக்தி இலக்கியம் கிட்ட வரமாட்டார்கள். திருவள்ளுவர் விட்டால் ஒரே ஹைஜம்பில் பாரதியார் வந்து விடுகிறார்கள். முன்-ஏர்த் தடத்தை, முன்னோர் தடத்தை அறிந்து கடந்து செல்லுதல் பற்றி யாரும் அக்கறைப் படவில்லை. திடுதிப்பென்று மாய-யதார்த்தவாதம், பின் நவீனத்துவம், இருத்தலியல், எதிர்கலாச்சாரம்…. ஒரே நேரத்தில் வாசகக் குழந்தையைப் பிடித்து தின்னு தின்னு என்று வாயில் அடைத்து விட்டார்கள் என்று தோன்றுகிறது. ஒரே நேரத்தில் காலராவுக்கும் கேன்சருக்கும் மருந்து கொடுக்கிற ஆவேசம். ஒரு கோஷ்டி செய்ததை இன்னொரு கோஷ்டி செய்யாது, புறக்கணிக்கும், நிராகரிக்கும். அடிதடி ரகளை மிகுந்த கூட்டங்கள். குடித்துவிட்டு மேடையேறிப் பிரதாபங்கள் கதைப்பது. தனித் தனியே சிறுபத��திரிகைகள், ஆட்களைத் திட்ட என்றே ஆரம்பிப்பது.\nஇப்போது அவை மலிவான உத்திகளாகக் கருதப்பட்டு எப்படியோ கட்டுக்குள் வந்து விட்டாப் போலத்தான் இருக்கிறது. அது இருக்கட்டும் – அரசியல் சார்ந்த கலகக் குரல் கொடுக்கலாம் என்றால் யதார்த்த வாதத்தை விட வலிமையான ஆயுதம் பூமியில் இல்லை. எதோ நாமும் எழுதினோம் என்று புண்ணைச் சொறிந்துகொள்ளும் சுகம் மாத்திரமே நவீன உத்திகளில் முடியும் என நான் நம்புகிறேன். ஆகவேதான் தலித்துகளின் குரல், ஒரு காலத்தின்கட்டாயமாக எழுந்து விரவி பரவி இந்தப் புதிய உத்தி முகாம்களை குண்டுவீசித் தகர்த்து விட்டது.\nஅடுத்த கட்டத்தை நோக்கிய தேக்க நிலையில் தலித்திய யதார்த்த உலகம் நிற்கிறது என்று நினைக்கிறேன். பிரச்னை பொதுவாக யார் கண்ணில் வேண்டுமானாலும் படலாம், அதில் யார்மூலம் வேணுமானாலும் வீர்யம் மிக்க படைப்புகள் எழலாம் என்ற காலம் திரும்ப அடையாளம் பெறும். காத்திருக்கலாம்.\nஅந்த மாய-யதார்த்தவாதம், மிகைக்கற்பனை, பின்நவீனத்துவ எழுத்துகளின் முக்கிய பலவீனம், செக்ஸ் மற்றும் வன்முறை, இந்த இரண்டு அலகுகளைத் தாண்டி அதனால் இயங்கவொண்ணாமல் போனது என்று எனக்கு ஒரு அபிப்ராயம் உண்டு. அதாவது நம்மாளுகள் அவ்வளவில் கதையை முடித்துக் கொண்டார்களோ என்னமோ சாதாரண உடையில் பரத நாட்டியம் ஆட முடியாது. மேடையில் எடுபடாது, என்பதுபோல இந்த நவீன உத்திகளுக்கு ஆரம்பச் சிக்கலே இருக்கிறது. யதார்த்தத் தளம் பரந்து பட்டது, மிகப்பெரும் எல்லைகள் கொண்டது.\nமார்க்சிய அழகியல் என்று புதிய கோட்பாடு வந்தபின் யதார்த்தம் செழுமைப்பட்டிருக்கிறது. அரங்கத்தில் துப்பாக்கி மாட்டியிருந்தால் காட்சி முடியுமுன் அது வெடிக்க வேண்டும், இல்லாட்டி துப்பாக்கி வைக்காதே, என்கிறார் அன்டன் செகாவ். நான் இதன் ஒரு பாதியை ஒத்துக் கொள்கிறேன். அந்தக் காட்சிப் பொருட்களைப் படிமங்களாகப் பயன்படுத்துவதில் எனக்கு உடன்பாடு உண்டு. சினிமாவில் இந்த உத்தியை வெளுத்து வாங்குகிறார்கள் – பண்ணையாரின் ஆசைநாயகி என்றால் தொங்கவிட்ட கூண்டுக்கிளியைச் சுற்றி விட்டுக்கொண்டே அவள் வசனம் பேசுவாள்.\nயதார்த்தத்தை உக்கிரப்படுத்துகிறது மார்க்சிய அழகியல். காரணங்களற்று எந்த யதார்த்தச் சித்தரிப்பும் கதையில் வேணாம் என்கிறது அது.\nபாத்திரங்கள் சார்ந்த மொழியில் வ���ழ்வின் சிறு துண்டாக அமைவுபெறும் இன்றைய சிறுகதைகளுக்கும் இது விதிவிலக்கல்லதானே\nகுற்றாலம் பதிவுகள் பட்டறையில், தற்கால இளைஞர்கள் வண்ணதாசன் பாணிக்குத் திரும்பலாமா என்று யோசிப்பதாகத் தெரிவித்திருந்தார் ஜெயமோகன். அப்டில்லாம் தீர்மானம் பண்ணி காலத்தை வளைச்சிக் கழுத்தைப் பிடிக்க முடியுமா\nஆல்பர்ட் ஐன்ஸ்டின் ஒரு ஜோக்கடித்தார். ஒரு தவளை துள்ளிக் குதித்தபடி போய்க்கொண்டிருக்கும்போது ரயில்பூச்சி (மரவட்டை) ஒன்றைப் பார்த்து ஆச்சர்யப்பட்டு நின்றது. ”என்ன” என்று கேட்டது மரவட்டை. ”நாலுகால் எனக்கு. பின் காலை மாத்திரம் ஊனித் தவ்வுகிறேன். வேலை முடிஞ்சிருது. நீ இத்தனை காலை எப்படி மாத்தி மாத்தி அசைச்சிப் போறே” என்று கேட்டது மரவட்டை. ”நாலுகால் எனக்கு. பின் காலை மாத்திரம் ஊனித் தவ்வுகிறேன். வேலை முடிஞ்சிருது. நீ இத்தனை காலை எப்படி மாத்தி மாத்தி அசைச்சிப் போறே” என்று கேட்டபடி போய்விட்டது தவளை. அதுபோனதும் மரவட்டை மிகந்த குழப்பத்துக்குள்ளாகி விட்டது. எந்தக் காலை முதலில் நகர்த்துவது என்றே அதற்குத் தெரியவில்லை\nசயான் தமிழ்ச் சங்க உரை\n28 10 2007 மாலை நிகழ்ச்சி\nஜெகத் ஜால ஜப்பான் – 3. கொன்னிச்சிவா\nகண்ணில் தெரியுதொரு தோற்றம் – 10 – புரையோடிப் போன காஷ்மீரம்\nமாத்தா ஹரி அத்தியாயம் -39\nஒரு ஊர் குருவி சிறைப்பறவை ஆகிறது\nகதை சொல்லுதல் என்னும் உத்தி\nஇன்றும் ஜீவித்திருக்கும் அந்த நாற்பதுக்கள்\n‘எழுத்துக் கலை’ பற்றி இவர்கள்…. 2 -தி.ஜானகிராமன்\nரசூலை மீட்க இனியொரு விதி உண்டோ…\nபேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 5 காட்சி 1\nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் பேராற்றல் கொண்ட பிரபஞ்சக் கருந்துளைகள் (Black Holes) (கட்டுரை: 6)\nதாகூரின் கீதங்கள் – 6 உனக்கது வேடிக்கை \nஅவளுக்கான பூக்கள்/அவை கால்தடங்கள் மட்டுமன்று\nதைவான் நாடோடிக் கதைகள் (3)\nபாவண்ணன் எழுதிய “நதியின் கரையில்”\nபடித்ததும் புரிந்ததும் 13 – வல்லமை தாராயோ என் இனிய தமிழ் மக்களைத் திருத்த\nவெளி இதழ்த் தொகுப்பு (தமிழின் ஒரு அரங்கியல் ஆவணம்)\nஉயிர்த்தலம் – ஆபிதீன் – சிறுகதைகள் தொகுப்பு\nவிசாலாட்சி தோட்டம் முருகனின் காதல் கதை\nஆழியாளின் “துவிதம்” – மதிப்பீடு\nஇந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம் முப்பத்தொன்பதாம் கருத்தரங்கம்\nதமிழ் – தமிழர் – தேசப்பற்று: சில எண்ணங்கள்:\nஒட்டுப் பீடியில் எரியும் உலகம்\nபூ ஒன்று (இரண்டு) புயலானது – இரண்டு\nபெண்களின் பாடல் ஆக்கத்திறனையும் உணர்வுகளையும் வெளிப்படுத்தும் ஒப்பாரிப்பாடல்கள்\nPrevious:பேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 4 காட்சி 2\nNext: கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 9- கண்ணை மறைத்த ஆக்ரோஷப் புயல்\nஜெகத் ஜால ஜப்பான் – 3. கொன்னிச்சிவா\nகண்ணில் தெரியுதொரு தோற்றம் – 10 – புரையோடிப் போன காஷ்மீரம்\nமாத்தா ஹரி அத்தியாயம் -39\nஒரு ஊர் குருவி சிறைப்பறவை ஆகிறது\nகதை சொல்லுதல் என்னும் உத்தி\nஇன்றும் ஜீவித்திருக்கும் அந்த நாற்பதுக்கள்\n‘எழுத்துக் கலை’ பற்றி இவர்கள்…. 2 -தி.ஜானகிராமன்\nரசூலை மீட்க இனியொரு விதி உண்டோ…\nபேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 5 காட்சி 1\nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் பேராற்றல் கொண்ட பிரபஞ்சக் கருந்துளைகள் (Black Holes) (கட்டுரை: 6)\nதாகூரின் கீதங்கள் – 6 உனக்கது வேடிக்கை \nஅவளுக்கான பூக்கள்/அவை கால்தடங்கள் மட்டுமன்று\nதைவான் நாடோடிக் கதைகள் (3)\nபாவண்ணன் எழுதிய “நதியின் கரையில்”\nபடித்ததும் புரிந்ததும் 13 – வல்லமை தாராயோ என் இனிய தமிழ் மக்களைத் திருத்த\nவெளி இதழ்த் தொகுப்பு (தமிழின் ஒரு அரங்கியல் ஆவணம்)\nஉயிர்த்தலம் – ஆபிதீன் – சிறுகதைகள் தொகுப்பு\nவிசாலாட்சி தோட்டம் முருகனின் காதல் கதை\nஆழியாளின் “துவிதம்” – மதிப்பீடு\nஇந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம் முப்பத்தொன்பதாம் கருத்தரங்கம்\nதமிழ் – தமிழர் – தேசப்பற்று: சில எண்ணங்கள்:\nஒட்டுப் பீடியில் எரியும் உலகம்\nபூ ஒன்று (இரண்டு) புயலானது – இரண்டு\nபெண்களின் பாடல் ஆக்கத்திறனையும் உணர்வுகளையும் வெளிப்படுத்தும் ஒப்பாரிப்பாடல்கள்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபுதிய திண்ணை படைப்புகள் https://puthu.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2014/06/blog-post_12.html", "date_download": "2021-05-07T00:57:28Z", "digest": "sha1:3S4UOIFQSJTKEA6BSFFMKPWGZGD3WHQA", "length": 19225, "nlines": 211, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: சாகச பயணம் - ஸ்பீட் போட் பயணம் !!", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nசாகச பயணம் - ஸ்பீட் போட் பயணம் \nவர வர வேலை ஜாஸ்தியா இருப்பதால, உட்கார்ந்து எழுத நேரம் கிடைக்க மாட்டேங்குது சரி விடுங்க...... சீக்கிரம் முடிச்சிட்டு நிறைய எழுதறேன். சினிமாவில் பார்க்கும்போது, அதுவும் அஜீத் படம் பார்க்கும்போது சல்லுன்னு போட்டுல தண்ணியை கிழிச்சிட்டு ஒரு படகு வரும், அதுல ஹீரோ சும்மா கண்ணாடி போட்டுக்கிட்டு ஸ்டெடியா நிப்பார், அதையெல்லாம் பார்க்கும்போது இது மாதிரி நாமளும் ஒரு நாள் இப்படி போகணும் அப்படின்னு நினைப்பேன். சமீபத்தில் கேரளா சென்று இருந்தபோது ஒரு வாய்ப்பு கிடைச்சது...... விடுவேனா, கிளம்பிட்டேனுளா \n\"அதிவேக மோட்டார் படகு\"..... ஸ்பீட் போட் என்பதை தமிழில் இப்படிதான் சொல்கின்றனர். இந்த படகுகள் பைபர் இழைகளால் தயாரிக்கபடுகிறது. இதனால் எடை குறைவாக இருக்கிறது. இதை இயக்க சிறிய வகை மோட்டார் தேவைபடுகிறது. அந்த மோடோரில் இருந்து வரும் விசையை வைத்து ஒரு காற்றாடி போன்ற அமைப்பை சுற்ற வைக்கும்போது படகு முன்னால் போகிறது. கேட்பதற்கு சுலபமாய் இருப்பது போல தெரிந்தாலும், படகு ஓட்டுவது, அதுவும் காற்றை எதிர்த்து ஓட்டுவது என்பது ஒரு கலை எனலாம். பொதுவாக படகின் அமைப்பு மட்டும் வெளிநாடுகளில் இருந்து வர, அதனில் சொகுசு சேர்ப்பது மட்டும் இங்கு நடக்கிறது. இங்கு சென்றபோது நாங்கள் சென்ற படகு என்பது சிறிய, அதிகம் சொகுசு இல்லாதது. ஆனால், அங்கு படகிலேயே நாடுகளை சுற்றும் ஒரு வெளிநாட்டவரின் படகில் எல்லாமே இருந்தது.... சொகுசோ சொகுசு \nபடகு ஓட்டுபவரிடம் பேசி கொண்டு இருந்தபோது, வெளிநாடுகளில் இருந்து வரும் விதவிதமான படகுகளை பற்றி பேசிக்கொண்டு இருந்தார். வெளிநாட்டவர்கள் சிலர் படகிலேயே உலகை சுற்றி வருவதாகவும், அவர்களின் அதிவேக மோட்டார் படகுகள் எல்லாம் நினைத்து கூட பார்க்க முடிவதில்லை என்று சொன்னார். சிலர் நாட்கணக்கில், வாரக்கணக்கில் நடு கடலில் இருப்பதாகவும் குறிப்பிட்டார். அப்படி இருக்கும் சொகுசு அதிவேக படகுகளை கீழே பாருங்களேன்..... பெருமூச்சு வருகிறதா \nநல்லா பாருங்க, இதுவும் படகுதான் \nபடகு ஓட்டும் நுணுக்கம் பற்றி பேச்சு வந்தபோது அவர் ஓட்டும் இந்த படகு விபத்துக்குள்ளாவது மிகவும் குறைவு என்றார், இந்த வகை படகுகளில் அதிகபட்ச வேகம் எல்லாம் செ��்வதில்லை என்பதால். நாங்கள் சென்ற வேகமே எனக்கு கிலி ஏற்படுத்தியது வேறு கதை. இந்த வகை படகுகளில் இருக்கும் அபாயம் என்பது முன்புறம் காற்று வேகத்தில் அப்படியே தூக்கி அடிப்பது எனும்போது முன்னால் நின்று கொண்டு இருந்த நான் இரண்டு அடி பின்னால் சென்றேன். படகுகளின் மோட்டார் பற்றி பேசியபோது இங்கே கேரளாவில் யமஹா மற்றும் ஹோண்டா வகைகள் நன்கு விற்பனை ஆவதாகவும், அந்த வகை மோட்டார்களை கழட்டி வீட்டிற்க்குள் வைத்து பத்திரபடுதும் முறை இருப்பதாகவும் குறிப்பிட்டார் மொடோரின் பக்கத்தில் சென்று அது இயங்கும் விதத்தை பார்த்து ரசித்தேன், ஒரு சிறிய சாதனம் எப்படி இந்த படகை இயக்குகிறது பாருங்கள் \nஆனந்தமாக சுற்றி வந்தாலும், சிறிது தூரம் சென்றவுடன் அவர் வேகத்தை அதிகரிக்க அதிகரிக்க நான் இங்கே பரதநாட்டியம் ஆட ஆரம்பித்தேன். வேகத்தில் காற்று என்னை ஒரு புறம் தள்ள, படகு தண்ணீரில் மோதி மோதி மேலே எழும்ப, தண்ணீரை கிழித்து செல்லும்போது தண்ணீர் மேலே தெளிக்க என்று என்னை அலைகளித்தது நம்ம விஜய், அஜீத் எல்லாம் இப்படி வேகமா போற படகுல எல்லாம் கல்லு மாதிரி இருப்பாங்களே என்று தோன்றியது.... மக்களே அது எல்லாம் கிராபிக்ஸ் வேலையா இருக்கும், இல்லை படகு தூரத்தில் போகும்போது கீழே உட்கார்ந்து ஒருத்தன் காலை புடிசிகிட்டு இருப்பான் போல...... நம்மால முடியலை சாமி. ஆனாலும் பாருங்க கண்ணாடி எல்லாம் போட்டு போஸ் கொடுத்து இருக்கோம் நம்ம விஜய், அஜீத் எல்லாம் இப்படி வேகமா போற படகுல எல்லாம் கல்லு மாதிரி இருப்பாங்களே என்று தோன்றியது.... மக்களே அது எல்லாம் கிராபிக்ஸ் வேலையா இருக்கும், இல்லை படகு தூரத்தில் போகும்போது கீழே உட்கார்ந்து ஒருத்தன் காலை புடிசிகிட்டு இருப்பான் போல...... நம்மால முடியலை சாமி. ஆனாலும் பாருங்க கண்ணாடி எல்லாம் போட்டு போஸ் கொடுத்து இருக்கோம் \nஎன்னதான் காமெடி செய்தாலும், படகில் காற்றை எதிர்த்து செல்லும்போது சிலு சிலுவென்று காற்றில் முடி கலைய, தண்ணீர் முகத்தில் சிதற செல்வது என்பது ஒரு சுகம்தான் முடிவில் படகில் இருந்து இறங்கும்போது இன்னும் கொஞ்ச தூரம் செல்லலாமே என்று மனதில் எழுவதில் தவறில்லை. நீங்களும் சென்று வந்து சொல்லுங்களேன் \nபயண அனுபவம்பற்றிமிக அழகாக எடுத்துச்சொல்லியுள்ளீர்கள் பயணம் பயணித்தது போல ஒரு நினைவு வருகிறது பகிர்வுக்கு வாழ்த்துக்கள்\nஎவ்வளவு ஆச்சு என்று சொல்லப்படாதா\nசினிமாவில் காட்டப்படுவது மிதமான வேகத்தில் எடுக்கப்பட்டு வேகமாக ஓட்டிக்காட்டுறதா இருக்கும். இதுப்போல ரிஸ்க்லாம் இனி எடுக்காதீங்க\nகொச்சின் மெரைன் ட்ரைவில் ஒரு முறை ஸ்பீட் போட்டில் போயிருக்கிறோம். நிஜமாவே செம ஸ்பீடா துள்ளி துள்ளி போச்சு..\nபயணித்த படங்களைப் பார்ப்பதற்கே, மகிழ்வாகஇருக்கிறது\nதிண்டுக்கல் தனபாலன் June 13, 2014 at 3:38 PM\nஆற்றுல போனதுக்கே இப்படின்னா.... கடல் அலைல போனா எப்படி இருக்கும்....\nமாலத்தீவில் அதிக அனுபவம் உள்ளது... இதைப்பற்றி :-)\nதனியா போனா என்ன சீனியர் கிக் இருக்கு ஹீரோஸ் எல்லாம் அப்டியா போறாங்க ஹீரோஸ் எல்லாம் அப்டியா போறாங்க அட்லீஸ்ட் ரெண்டு பேர் (ஐ மீன் பெண்கள்) சைட்'ல நிக்க வேணாம் அட்லீஸ்ட் ரெண்டு பேர் (ஐ மீன் பெண்கள்) சைட்'ல நிக்க வேணாம் என்னமோ போங்க... ;) ;) ;)\nஇந்த ஸ்பீட் போட் பயணம் மிகவும் த்ரில்லானது தான்.... ஒரு முறை சென்றதுண்டு......\nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - கரூர் திரைசீலை (பகுதி - 1)\nகரூர் என்றாலே கொசுவலை என்பது அனைவருக்கும் நினைவுக்கு வரும், இன்று கால ஓட்டத்தில் அது திரைசீலைக்கும் பிரபலம் என்று உங்களுக்கு தெரியுமா \nஊர் ஸ்பெஷல் - தஞ்சாவூர் வீணை\nஇசையை பற்றி எந்த ஞானமும் கிடையாது எனக்கு, நல்ல இசை என்றால் உடம்பு தானாகவே தாளம் போடும், அவ்வளவுதான் . இந்த ஊர் ஸ்பெஷல் பகுதிக்காக ஒவ்வொரு...\nஅறுசுவை (சமஸ்) - புத்தூர் அசைவ சாப்பாடு\nசமஸ் எழுதிய புத்தகத்தை படித்துவிட்டு ஒரு சாப்பாடு சாபிடுவதற்கு என்றே ஒரு பயணம் மேற்கொண்டோம். முதலில் திண்டுக்கல்லில் இருந்து புறப்பட்டு தி...\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nகடல்பயணங்கள் தளம் மீண்டும் ஆரம்பம் ஆகின்றது என்று பதிவு போட்டபோதே பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தவண்ணம் இருக்கிறீர்கள், மிக்க நன்றி \nஅறுசுவை - நவீன டீ கடை \nவேலை நேரத்திலோ, நண்பர்களுடனோ, தனியாக செல்லும்போதோ ஏதாவது சாப்பிடனும் அப்படின்னு தோணிச்சினா, நம்ம வண்டிய நிறுத்துறது ஒரு டீ கடையின் முன்னேத...\nஅறுசுவை - நம்ம நாட்டு பர்கர் \nசோலை டாக்கீஸ் - ஜலதரங்கம் \nசாகச பயணம் - நடுக்காடு...டென்ட்... பயம் (பாகம் - 2...\nஊர் ஸ்பெஷல் - சேலம் மாம்பழம் ( நிறைவு பகுதி - 4)\nஅறுசுவை - Half மசாலா தோசை, பெங்களுரு\nசிறுபிள்ளையாவோம் - கடல் மணல் விளையாட்டுக்கள் \nசாகச பயணம் - ஸ்பீட் போட் பயணம் \n - பல் குத்தும் குச்சி\nஅறுசுவை (சமஸ்) - வெள்ளையப்பம், கோபி ஐயங்கார் கடை\nஊர் ஸ்பெஷல் - சேலம் மாம்பழம் \nஅறுசுவை - பிங்க்பெர்ரி தயிர்கிரீம், பெங்களுரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bibleall.net/index.php?version=5&book_num=14&chapter=31&verse=", "date_download": "2021-05-07T01:12:59Z", "digest": "sha1:LZF2BFEM32KQARUFOW22JXDPYK4ATJY6", "length": 21613, "nlines": 77, "source_domain": "bibleall.net", "title": "BibleAll | Tamil Bible | 2 நாளாகமம் | 31", "raw_content": "\nSelect Book Name ஆதியாகமம் யாத்திராகமம் லேவியராகமம் எண்ணாகமம் உபாகமம் யோசுவா ரூத் 1 சாமுவேல் 2 சாமுவேல் 1 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 1 நாளாகமம் 2 நாளாகமம் எஸ்றா நெகேமியா எஸ்தர் யோபு சங்கீதம் நீதிமொழிகள் பிரசங்கி உன்னதப்பாட்டு ஏசாயா எரேமியா புலம்பல் எசேக்கியேல் தானியேல் ஓசியா யோவேல் ஆமோஸ் ஒபதியா யோனா மீகா நாகூம் ஆபகூக் செப்பனியா ஆகாய் சகரியா மல்கியா மத்தேயு மாற்கு லூக்கா யோவான் அப்போஸ்தலர் ரோமர் 1 கொரி 2 கொரி கலாத்தியர் எபேசியர் பிலிப்பியர் கொலோசெயர் 1 தெசலோனிக்கேயர் 2 தெசலோனிக்கேயர் 1 தீமோத்தேயு 2 தீமோத்தேயு தீத்து பிலேமோன் எபிரேயர் யாக்கோபு 1 பேதுரு 2 பேதுரு 1 யோவான் 2 யோவான் 3 யோவான் யூதா வெளிப்படுத்தல்\n2 நாளாகமம் : 31\nஇவையெல்லாம் முடிந்தபின்பு, வந்திருந்த இஸ்ரவேலர் எல்லாரும் யூதாவின் பட்டணங்களுக்குப் புறப்பட்டுப்போய், யூதா பென்யமீனெங்கும் எப்பிராயீமிலும் மனாசேயிலுங்கூட உண்டான சிலைகளை உடைத்து, விக்கிரகத்தோப்புகளை வெட்டி, மேடைகளையும் பீடங்களையும் இடித்து, அவைகளையெல்லாம் தகர்த்துப்போட்டார்கள்; பின்பு இஸ்ரவேல் புத்திரர் எல்லாரும் அவரவர் தங்கள் ஊர்களிலிருக்கிற தங்கள் காணியாட்சிக்குத் திரும்பினார்கள்.\nஎசேக்கியா ஆசாரியர் லேவியருடைய வகுப்புகளை அவர்கள் வரிசைகளின்படியேயும், அவரவரை அவர்கள் ஊழியத்தின்படியேயும் திட்டப்படுத்தி, ஆசாரியரையும் லேவியரையும், சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் செலுத்தவும், கர்த்தருடைய பாளயத்தின் வாசல்களில் ஊழியஞ்செய்து துதித்து ஸ்தோத்திரிக்கவும் ஒழுங்குப்படுத்தினான்.\nராஜா கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடியே அந்திசந்திகளில் செலுத்தவேண்டிய சர்வாங்க தகனபலிகளுக்கும், ஓய்வுநாட்களிலும் மாதப்பிறப்புகளிலும் பண்டிகைகளிலும் செலுத்தவேண்டிய சர்வாங்க தகனபலிகளுக்கும் தன் ஆஸ்தியிலிருந்தெடுத்துத் தன் பங்கைக் கொடுத்தான்.\nஆசாரியரும் லேவியரும் கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தை உற்சாகமாய்க் கைக்கொள்ளும்படி, அவர்களுக்குரிய பாகத்தைக் கொடுக்க ஜனங்களுக்கும் எருசலேமின் குடிகளுக்கும் கட்டளையிட்டான்.\nஇந்த வார்த்தை பிரசித்தமானபோது, இஸ்ரவேல் புத்திரர் தானியத்திலும், திராட்சரசத்திலும், எண்ணெயிலும், தேனிலும், நிலத்தின் எல்லா வரத்திலும் முதற்பலன்களைத் திரளாகக் கொண்டுவந்து, சகலத்திலும் தசமபாகத்தைப் பரிபூரணமாய்க் கொடுத்தார்கள்.\nயூதாவின் பட்டணங்களில் குடியிருந்த இஸ்ரவேல் புத்திரரும், யூதா புத்திரரும், மாடுகளிலும் ஆடுகளிலும் தசமபாகத்தையும், தங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்தம்பண்ணப்பட்டவைகளில் தசமபாகத்தையும் கொண்டுவந்து குவியல் குவியலாக வைத்தார்கள்.\nமூன்றாம் மாதத்தில் குவியல் செய்யத்தொடங்கி ஏழாம் மாதத்தில் முடித்தார்கள்.\nஎசேக்கியாவும் பிரபுக்களும் வந்து, அந்தக் குவியல்களைக் காணும்போது, கர்த்தருக்கு ஸ்தோத்திரஞ்செலுத்தி, அவருடைய ஜனமாகிய இஸ்ரவேலைப் புகழ்ந்தார்கள்.\nஅந்தக் குவியல்களைக் குறித்து எசேக்கியா ஆசாரியரையும் லேவியரையும் விசாரித்தபோது,\nசாதோக்கின் சந்ததியானாகிய அசரியா என்னும் பிரதான ஆசாரியன் அவனை நோக்கி: இந்தக் காணிக்கையைக் கர்த்தருடைய ஆலயத்திற்குக் கொண்டுவரத் தொடங்கினதுமுதல் நாங்கள் சாப்பிட்டுத் திருப்தியடைந்தோம்; இன்னும் மிச்சமும் இருக்கிறது; கர்த்தர் தம்முடைய ஜனத்தை ஆசீர்வதித்ததினால் இந்தத் திரட்சியான அம்பாரம் மீந்திருக்கிறது என்றான்.\nஅப்பொழுது எசேக்கியா கர்த்தருடைய ஆலயத்தில் பண்டகசாலைகளை ஆயத்தப்படுத்தச் சொன்னான்.\nஅவர்கள் அவைகளை ஆயத்தப்படுத்தினபின்பு, அவைகளிலே காணிக்கைகளையும், தசம பாகத்தையும், பரிசுத்தம்பண்ணப்பட்டவைகளையும் உண்மையாய் எடுத்துவைத்தார்கள்; அவைகளின்மேல் லேவியனாகிய கொனனியா தலைவனும், அவன் தம்பியாகிய சிமேயி இரண்டாவதுமாயிருந்தான்.\nராஜாவாகிய எசேக்கியாவும், தேவனுடைய ஆலய விசாரணைக்காரனாகிய அசரியாவும் பண்ணின கட்டளையின்படியே, யெகியேலும், அசசியாவும், நாகாத்தும், ஆசகேலும், யெரிமோத்தும், யோசபாத்தும், ஏலியேலும், இஸ்மகியாவும், மாகாத்தும், பெனாயாவும், கொனனியாவின் கீழும் அவன் தம்பியாகிய சிமேயியின் கீழும் விசாரிப்புக்காரராயிருந்தார்கள்.\nகிழக்குவாசலைக் காக்கிற இம்னாவின் குமாரனாகிய கோரே என்னும் லேவியன், கர்த்தருக்குச் செலுத்தப்பட்ட காணிக்கைகளையும் மகா பரிசுத்தமானவைகளையும் பங்கிடும்படிக்கு, தேவனுக்குச் செலுத்தும் உற்சாகக் காணிக்கைகள்மேல் அதிகாரியாயிருந்தான்.\nஅவனுடைய கைக்கு உதவியாக ஆசாரியரின் பட்டணங்களில் வகுப்புகளின்படியிருக்கிற தங்கள் சகோதரரிலே பெரியவனுக்கும் சிறியவனுக்கும் சரிசமானமாய்க் கொடுக்கும்படிக்கு, உண்மையுள்ளவர்களாக எண்ணப்பட்ட ஏதேனும், மின்யமீனும், யெசுவாவும், செமாயாவும், அமரியாவும், செக்கனியாவும் ஏற்படுத்தப்பட்டார்கள்.\nவம்ச அட்டவணைகளில் எழுதப்பட்ட மூன்று வயதுமுதல், அதற்கு மேற்பட்ட ஆண்பிள்ளைகளைத்தவிர, கர்த்தருடைய ஆலயத்திற்குள் பிரவேசிக்கிற அவரவருக்கும் தங்கள் வகுப்புகளின்படியே, தங்கள் முறைகளிலே தாங்கள் செய்கிற தங்கள் பணிவிடைக்குத்தக்கதாய் அநுதின படி கொடுக்கப்பட்டது.\nதங்கள் பிதாக்களின் வம்ச அட்டவணைகளில் எழுதப்பட்ட தங்கள் வகுப்புகளின்படியே தங்கள் முறைகளிலிருக்கிற இருபது வயதுமுதல், அதற்கு மேற்பட்ட ஆசாரியருக்கும், லேவியருக்கும்,\nஅவர்களுடைய எல்லாக் கூட்டத்தின் அட்டவணையிலும் எழுதப்பட்ட அவர்களுடைய எல்லாக் குழந்தைகளுக்கும், மனைவிகளுக்கும், குமாரருக்கும், குமாரத்திகளுக்கும் பங்கு கொடுத்தார்கள்; அவர்கள் பரிசுத்தமானதை உண்மையின்படி பரிசுத்தமாய் விசாரித்தார்கள்.\nஆசாரியரில் எல்லா ஆண்பிள்ளைகளுக்கும் லேவியருக்குள்ளே அட்டவணையில் எழுதப்பட்டவர்கள் எல்லாருக்கும் படிகொடுக்க, ஆசாரியருடைய ஒவ்வொரு பட்டணத்துக்கடுத்த வெளிநிலங்களிலும் ஆரோன் புத்திரரில் பேர்பேராகக் குறிக்கப்பட்ட மனுஷர் இருந்தார்கள்.\nஇந்தப் பிரகாரமாக எசேக்கியா யூதாவெங்கும் நடப்பித்து, தன் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நன்மையும் செம்மையும் உண்மையுமானதைச் செய்தான்.\nஅவன் தேவனுடைய ஆலயத்தின் வேலையிலும், தன் தேவனைத் தேடும்படிக்கு நியாயப்பிரமாணத்திற்கும் கற்பனைக்கும் அடுத்த காரியத்திலும் என்ன செய்யத் தொடங்கினானோ, அதையெல்லாம் தன் முழு இருதயத்தோடும் செய்து சித���திபெற்றான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2017/04/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0/", "date_download": "2021-05-07T00:59:50Z", "digest": "sha1:YACUKCL62VD7RB6JTC2MPT56H3FZ2O3K", "length": 14240, "nlines": 136, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\n“நம் எண்ணங்களை ஒன்று சேர்த்தால்” என்றுமே சந்தோஷமாக வாழலாம் நாம் ஒவ்வொரு சரீரத்திலும் நல்ல உணர்வுகளைச் சுவாசித்து தன்னை தற்காத்துக்\n“நம் எண்ணங்களை ஒன்று சேர்த்தால்” என்றுமே சந்தோஷமாக வாழலாம்\nநாம் ஒவ்வொரு சரீரத்திலும் நல்ல உணர்வுகளைச் சுவாசித்து தன்னை தற்காத்துக் கொள்வதற்காக எடுத்துக் கொண்ட “அந்த உணர்வுகளே..,” நம்மை மனிதனாக உருவாக்கியது.\nஅதாவது சிந்தித்துச் செயல்படும் ஆற்றலும் சிந்தித்துச் செயல்படும் இந்த உணர்வின் எண்ணமும் அதற்குத்தக்க அங்கங்களும் அமைந்து அந்த உணர்வின் ஆற்றலால் எதையுமே சிருஷ்டிக்கும் தன்மை கொண்ட மனித உடலை நாம் பெற்றுள்ளோம்.\nபரிணாம வளர்ச்சி பெற்று மனிதனாக வந்த நாம் இன்று என்ன செய்கின்றோம்\nநாம் எதையெல்லாம் நன்மை என்று எண்ணுகின்றோமோ “அந்த நல்லதை எண்ணி.., நாம் செயல்படும் நிலைகளில்” ஒருவர் தவறு செய்யும் பொழுது நாம் அதை உற்றுப் பார்க்கின்றோம்.\nபிறர் செய்யும் தவறைப் பார்த்த பின் சலிப்பு, சங்கடம், சஞ்சலம், கோபம் குரோதம், அவசரம், ஆத்திரம், அந்த உணர்வின் நிலைகளை நம் எண்ணத்தால் நமக்குள் சேர்த்துவிடுகின்றோம்.\nஇவை அனைத்துமே விஷமான உணர்வுகள்.\nஅதே மாதிரி வீட்டில் எல்லோரும் நல்லதை நினைக்க வேண்டும் என்று நினைப்போம். “அப்படி இருக்க வேண்டும்.., இப்படி இருக்க வேண்டும்..,” என்றெல்லாம் நினைப்போம்.\nஆனால் பையனுக்குக் கல்யாணம் ஆனபின் “பையன்.., இப்படியெல்லாம் செய்கின்றானே…” என்ற வேதனையை எடுத்துக் கொள்வோம்.\nவேதனை என்பது விஷம். வேதனை என்ற சொல்லுக்குள் “அனைத்துமே விஷம்”. சமையல் செய்யும் பொழுது, பலகாரங்களை நல்ல முறையில் பக்குவமாகச் செய்துவிட்டுக் கடைசியில் உப்போ, காரமோ அதிகமாகிவிட்டால் என்னவாகும்…\nபையன் செய்யும் தவறைப் பார்த்தபின் நாமும் அதைப் போன்ற நிலையை அடைகின்றோம்.\nஎல்லோரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று எண்ணுகின்றோம். ஆனால் ஒவ்வொரு நிமிடமும் குடும்பத்திலும் தொழில் செய்யும் ���டத்திலும் கோபம், வெறுப்பு போன்ற உணர்வுகளை நாம் அதிகமாக நுகர வேண்டியிருக்கின்றது.\nஇப்படி நம் வாழ்க்கையில் காலையிலிருந்து இரவு படுக்கப்போகும் வரை எத்தனையோ பேர்களைப் பார்க்கின்றோம். ஏமாற்றுபவர்களை வேதனைப்படுபவர்களை சங்கடப்படுபவர்களை கோபப்படுபவர்களை நாம் எல்லாவற்றையும் பார்க்க நேர்கிறது.\nஇந்த உணர்வுகள் அனைத்தும் நம் உடலுக்குள் ஓம்.., நமச் சிவாய, ஓம்.., நமச் சிவாய என்று சதா சிவமாக நம் உடலாக மாறிக் கொண்டேயிருக்கிறது.\nநம் உயிர் உடலுக்குள் அவைகளை உருவாக்கிக் கொண்டேயுள்ளது. அதன் வழியில் நம்முடைய உணர்வையே அது மாற்றி விடுகின்றது. அதை மாற்ற வேண்டுமல்லவா\nநாம் தீமைகளை மறந்து பேரருளின் உணர்வை நமக்குள் சேர்த்துச் சிவமாக்கி எல்லோருக்கும் அந்த நல்ல நிலைகள் பெறவேண்டும் என்ற உணர்வை உடலாக்கினால் நமக்குள் ஒன்று சேர்த்து வாழும் உணர்வுகள் வரும்.\n“நம் எண்ணங்கள்.., ஒன்று சேர்த்தால்..,” என்றைக்குமே சந்தோஷமாக இருக்கும். அதுதான் “கல்யாணராமா..,”\nஇராமாயணத்தில் ஜனக சக்கரவர்த்தி சீதாவை திருமணம் செய்ய சுயம் வரத்தை ஏற்படுத்துகிறார்.\nஎல்லோரும் வருகிறார்கள். அவரவர்கள் திறமையைக் காட்டுகிறார்கள். திறமையைக் காட்டினால் சீதாவைக் கல்யாணம் செய்து கொள்ளலாம் என்று காட்டுகிறார்கள்.\nஅப்பொழுது இராமன் என்ன செய்கிறான் தீமை செய்யும் அந்த வில்லை ஒடித்துவிடுகின்றான்.\nஏனென்றால், நம் உடலில் கெட்டதை ஒடிப்பது என்றால் அவ்வளவு சாமானியமானதல்ல. இராமாயணத்தில் தெளிவாகக் காட்டுகின்றார்கள்.\nதீமை செய்யும் தனுசை இராமன் ஒடித்துவிடுகிறான். அப்பொழுது சீதாவை அரவணைத்துக் கொள்கிறான்.\nசீதாவை அரவணைக்கும்போது “கல்யாணராமா”. பிறர் மேல் உள்ள வெறுப்பான குணத்தை நாம் நீக்கிவிட்டால் அந்த வெறுப்பான உணர்வுகள் நீக்கியபின் இரண்டு எண்ணங்களும் ஒன்றாகி விட்டால் கல்யாணராமா.\nநம் உடலிலிருக்கும் தீமையை நீக்கி பிறர் மேல் இருக்கும் வெறுப்பான உணர்வை நீக்கிவிட்டு பிறர் நன்றாக வாழ வேண்டும் என்று எண்ணிவிட்டால் நம் உடலுக்குள் ஒன்று சேர்த்து வாழும்.\n1.நமக்குள் இருக்கும் எண்ணங்களை எப்படி ஒன்று சேர்க்க வேண்டும்\n2.பகைமை உணர்வு வளராதபடி எப்படித் தடுக்க வேண்டும்\nஎன்று தான் கோவில்களிலே உருவம் அமைத்து அருவ நிலையைக் காட்டியுள்ளார்கள் ஞானிகள்.\nஆனால், அந்த ஞானிகள் காட்டிய நிலைகளை நாம் இப்படி நினைக்கிறோமா..\nசாமியையே (ஞானகுரு) எண்ணிக் கொண்டிருப்பதைக் காட்டிலும் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து உடலுக்குள் விளைய வைக்க வேண்டும்\n என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nசீராக ஆத்ம சுத்தி செய்வோருக்குக் கிடைக்கும் பலன்கள்\nஆண்டவனிலிருந்து வந்த பிம்பங்கள் தான் அனைத்துமே என்று எண்ணினால்… “தான்” என்ற தனித்த அகங்காரம் வராது – ஈஸ்வரபட்டர்\nஉங்களுக்குக் கொடுத்த சக்திகளை ஒவ்வொருவரும் விரயம் ஆக்காது பயன்படுத்துங்கள்\n24 X 7 சாமிகள் உபதேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaipoonga.net/business/women-should-have-equal-land-rights-vice-president-of-india-at-mssrf-conference-launch/", "date_download": "2021-05-07T01:10:48Z", "digest": "sha1:PNYDBOVNMYZLNGJKM7VFP7OD3Z6ZM473", "length": 11214, "nlines": 196, "source_domain": "kalaipoonga.net", "title": "Women should have equal land rights: Vice President of India at MSSRF conference launch - Kalaipoonga", "raw_content": "\nPrevious articleஅறிமுக இயக்குனர் சதீஷ் சேகர் இயக்க, தணிகை நடிக்க, சந்தோஷ் கிருஷ்ணன் தயாரிக்கும் புதிய படம்\nNext articleபாரதிராஜா தலைவர் அது தாணுவின் சொந்த கருத்து – தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு நிச்சயம் தேர்தல் நடைபெறும் – சிங்காரவேலன் ஆடியோ பதிவு\nரூ.4 ஆயிரம் வழங்கும் திட்டத்துக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முதல் கையெழுத்து\nஊடக செய்தியில் எந்த கட்டுப்பாடும் இருக்கக்கூடாது என்பதில் தேர்தல் ஆணையம் ஒருமனதாக உள்ளது\nவெளியானது 34 பேர் கொண்ட தமிழக அமைச்சரவை பட்டியல்\nவெளியானது 34 பேர் கொண்ட தமிழக அமைச்சரவை பட்டியல் தமிழகத்தின் முதலமைச்சராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை சென்னை - கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்க உள்ளார். கொரோனா பரவலை கருத்தில்...\nமாநாடு டப்பிங் ஆரம்பம்… படக்குழு வெளியிட்ட புகைப்படங்கள்\nமாநாடு டப்பிங் ஆரம்பம்... படக்குழு வெளியிட்ட புகைப்படங்கள் சிம்பு நடிப்பில் உருவாகி உள்ள படம் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கியுள்ள இப்படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார். இப்படத்தில் சிம்பு அப்துல் காலிக்...\nமூத்த தலைவர் ஆர்.எம்.வீரப்பனை நேரில் சந்தித்து ஆசி பெற்றார் மு.க.ஸ்டாலின் | Video\nமூத்த தலைவர் ஆர்.எம்.வீரப்பனை நேரில் சந்தித்து ஆசி பெற்றார் மு.க.ஸ்டாலின் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றதை அடுத்து தமிழகத்தின் அடுத்த முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பு ஏற்க உள்ளார். நாளை (மே 7...\nவெளியானது 34 பேர் கொண்ட தமிழக அமைச்சரவை பட்டியல்\nவெளியானது 34 பேர் கொண்ட தமிழக அமைச்சரவை பட்டியல் தமிழகத்தின் முதலமைச்சராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை சென்னை - கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்க உள்ளார். கொரோனா பரவலை கருத்தில்...\nமாநாடு டப்பிங் ஆரம்பம்… படக்குழு வெளியிட்ட புகைப்படங்கள்\nமாநாடு டப்பிங் ஆரம்பம்... படக்குழு வெளியிட்ட புகைப்படங்கள் சிம்பு நடிப்பில் உருவாகி உள்ள படம் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கியுள்ள இப்படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார். இப்படத்தில் சிம்பு அப்துல் காலிக்...\nமூத்த தலைவர் ஆர்.எம்.வீரப்பனை நேரில் சந்தித்து ஆசி பெற்றார் மு.க.ஸ்டாலின் | Video\nமூத்த தலைவர் ஆர்.எம்.வீரப்பனை நேரில் சந்தித்து ஆசி பெற்றார் மு.க.ஸ்டாலின் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றதை அடுத்து தமிழகத்தின் அடுத்த முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பு ஏற்க உள்ளார். நாளை (மே 7...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-05-07T02:05:09Z", "digest": "sha1:54VC3EHR7VBPHCBVRTQXBRXGVQBQPIZ7", "length": 3927, "nlines": 30, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வரைகலை பயனர் இடைமுகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nவரைகலை பயனர் இடைமுகம் என்பது ஒரு இலத்திரனிய கருவிக்கும் பயனருக்கும் இடையேயான பட இடைமுகமாகும். சின்னங்கள், படங்கள், கட்டங்கள் போன்ற காட்சிசார்ந்த இடைமுகமாகும். குறிப்பாக தற்கால கணினிகள் எல்லாம் பொதுவாக வரைகலை பயனர் இடைமுகத்தைக் கொண்டுள்ளன. இதை கட்டளை வரி (Command line) இடைமுகத்தோடும், தற்போது புதிதாக அறிமுகப்படுத்தப்படும் பல்முனைத் தொடு இடைமுகத்தோடும் ஒப்பிட்டு வேறுபடுத்தலாம். தற்போது கணினி தவிர மற்ற சாதனங்கள் (கைபேசி, தொலைக்காட்சி, டேப்ளட்) இலும் பயன்படுத்தப்படுகிறது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 மே 2019, 04:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/bigg-boss-kasthuri-questioned-raiza-deleted-tweet-about-anushka/", "date_download": "2021-05-07T02:08:45Z", "digest": "sha1:XPFQ2JU7IZSR7LNSK3GZMH4ORSQJHC5G", "length": 10760, "nlines": 96, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Bigg Boss Kasthuri Questioned Raiza Deleted Tweet About Anushka", "raw_content": "\nHome பொழுதுபோக்கு சமீபத்திய எந்த உலகத்த பத்தி நீ பேசுற ரைசா ரைசா நீக்கிய ட்விட்டர் பதிவு குறித்து...\nஎந்த உலகத்த பத்தி நீ பேசுற ரைசா ரைசா நீக்கிய ட்விட்டர் பதிவு குறித்து வெளுத்து வாங்கிய கஸ்தூரி.\nவிஜய் தொலைக்காட்சியில் கடந்த 4ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. சமீபத்தில் நான்காவது சீசன் கூட முடிவடைந்தது. என்னதான் 4 சீசன்களை கடந்தாலும் ரசிகர்களுக்கு பிடித்தமான சீசன் என்றால் அது முதல் சீசன் தான். இந்த முதல் சீசன் மூலம் பல்வேறு நபர்கள் தமிழ் சினிமாவில் நடிகர் நடிகைகளாக வாய்ப்புகளை பெற்றார்கள் அந்த வகையில் நடிகை ரைசாவும் ஒருவர். நடிகை ரைசா வில்சன் பெங்களூரை சார்ந்தவர். மேலும், ரைசா அவர்கள் கல்லூரி படித்துக் கொண்டிருக்கும் போதே விளம்பரங்களில் நடிக்க தொடங்கினர்.\nஅதற்கு பின் மாடலிங் துறையில் அதிக ஆர்வம் காட்ட ஆரம்பித்தார். இதனை தொடர்ந்து இவர் பல விளம்பரங்களில் நடித்தும், மாடலிங் செய்தும் வந்தார். ரைசா அவர்கள் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் இந்தியன் தெற்கில் போட்டி போட்டு வெற்றியும் பெற்றார். 2017 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளி வந்த ‘வேலையில்லா பட்டதாரி 2’ படத்தில் காஜலுக்கு உதவியாளராக நடித்து இருந்தார். அதன் பின்னர் தான் இவருக்கு பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்தது.\nசமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ரைசா, அடிக்கடி எதாவது பதிவிட்டு சிக்கலில் சிக்கிவிடுகிறார். சமீபத்தில் பிரபல நட்சத்திர தம்பதியான விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மா தங்களது குழந்தையுடன் வெளியில் சென்ற புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலானது. அதில், அனுஷ்கா ஷர்மா குழந்தையை தூக்கி செ��்ல, அவருக்கு பின்னால் பேபி சிட்டரை கோலி சுமந்து சென்றார்.\nஇந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. மேலும், இதுகுறித்து பல்வேறு மீம்கள் கூட வெளியானது. இப்படி ஒரு நிலையில் இந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த ரைசா, அனுஷ்கா சர்மா நம் நாட்டின் ஒரு முழு பகுதியையும் புரட்சிகரமாக்கிவிட்டார் என்று பதிவிட்டு இருந்தார். ரைசாவின் இந்த பதிவை பார்த்த பலர் பெற்ற குழந்தையை ஒரு தாய் தூக்கி செல்வது என்ன புரட்சி என்று கழுவி ஊற்ற, அந்த டீவீட்டை நீக்கிவிட்டார் ரைசா.\nட்விட்டர் வாசிகள் மட்டுமல்லாமல் ஒரு சில பிரபலங்கள் கூட ரைசாவின் நீக்கிய பதிவை போட்டு விமர்சித்து வந்தனர். இந்த நிலையில் நடிகையும் பிக் பாஸ் 3 போட்டியாளருமான கஸ்தூரி ரைசாவின் இந்த பதிவு குறித்து ‘புரட்சியா எந்த உலகத்தை பற்றி நீங்கள் பேசுரீங்க ரைசா எந்த உலகத்தை பற்றி நீங்கள் பேசுரீங்க ரைசா ஒரு இரண்டு பெற்றோர்கள் செய்யும் அன்றாட செயலை ஏன் இவ்வளவு மிகைப்படத்துறீங்க ஒரு இரண்டு பெற்றோர்கள் செய்யும் அன்றாட செயலை ஏன் இவ்வளவு மிகைப்படத்துறீங்க அது எதாவது விளமபரத்திற்காக கூட இருக்கலாம். இருந்தும் அப்படி செய்யக்கூடியது அல்ல. கொஞ்சம் விளக்கி சொல்லுங்க ரைசா.’ என்று பதிவிட்டுள்ளார்.\nPrevious articleஎன்னது நயன்-விக்கி நிச்சயதார்த்தம் முடிஞ்சிச்சா விக்னேஷ் சிவன் பதிவிட்ட புகைப்படத்தால் ஷாக்கான ரசிகர்கள். (நிறைவேறியதா அந்த கடைசி வேண்டுதல்)\nNext articleபுரட்சி தலைவர் அம்மா, சோந்த பிள்ளை, சோந்த ஊர்காரர் – பிரச்சாரத்தில் தமிழை கொன்ற நமீதா. வீடியோ இதோ.\nதெலுங்கு சூப்பர் ஸ்டார் படத்தில் இருந்து விலகிய திரிஷா – காரணம் தளபதி 65 நடிகையா \nஇந்த செத்த நாய சப்போர்ட் பண்ற – தனது ரசிகையை திட்டிய நபருக்கு அனிதா சம்பத் கொடுத்த பதிலடி.\nபிஜேபிக்கு எதிராக தோல்வியடைந்து விட்டதாக அறிவித்த பின்னர் கமல் என்ன செய்தார் – கமலுடன் இருந்த முக்கிய நபர்.\nநயன்தாரா உதயநிதி ஸ்டாலின் மேல போலீஸ் புகார் தரப் போரால் – அமைச்சரின் பேச்சால்...\nஇந்திகாரங்களுக்கு மட்டும் தான் ரிப்ளை பண்ணுவாரு தமிழ்காரனுக்கு பண்ண மாட்டாரு – ரசிகரின் ஆதங்கம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/news/echo-of-the-farmers-struggle-in-delhi-rising-vegetable-prices/", "date_download": "2021-05-07T01:43:12Z", "digest": "sha1:3QJHYBKVRO4EPHJO3AOSLLHZ4Q755GHJ", "length": 13718, "nlines": 123, "source_domain": "tamil.krishijagran.com", "title": "டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தின் எதிரொலி! காய்கறிகளின் விலை உயர்வு!", "raw_content": "செய்திகள் வாழ்வும் நலமும் தோட்டக்கலை கால்நடை வெற்றிக் கதைகள் விவசாய தகவல்கள் FTB அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா Directory\n#FTB விவசாய தகவல்கள் அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா\nஎங்கள் அச்சு மற்றும் டிஜிட்டல் பத்திரிகைகளுக்கு குழுசேரவும்\nசமூக ஊடகங்களில் எங்களுடன் இணைக்கவும்:\nடெல்லியில் விவசாயிகள் போராட்டத்தின் எதிரொலி\nபிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi) அரசின் விவசாய கொள்கைளை எதிர்த்தும், திரும்பப் பெற கோரியும் பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் மாநில விவசாயிகள் கடந்த 7 நாட்களாக டெல்லியில் போராட்டம் (Protest) நடத்தி வருகின்றனர். மத்திய அரசின் தற்போது அறிவித்துள்ள மூன்று புதிய விவசாயச் சட்டங்களால் தங்களுக்கு அதிகளவிலான பாதிப்புகள் ஏற்படுகிறது என்றும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அதிகளவிலான பயன் உள்ளது என்பது விவசாயிகளின் கருத்து. இதன் காரணமாகவே புதிய விவசாயச் சட்டங்களை எதிர்த்து, திரும்பப் பெறக் கோரி விவசாயிகள் டெல்லி கடும் குளிரையும் பொருட்படுத்தாமலும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.\nவிவசாயிகள் நடத்தும் போராட்டத்தின் எதிரொலியாக டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள மாநிலங்களில் காய்கறிகளின் விலை (Vegetables Rate) அதிகளவில் உயர்ந்துள்ளது. மொத்த விலை காய்கறிகள் மற்றும் இதர விவசாய உற்பத்தி பொருட்களின் விநியோகம் தடைப்பட்டுள்ள காரணத்தால் காய்கறிகளின் மொத்த விலையில் 50 முதல் 100 ரூபாய் வரையில் அதிகரித்துள்ளது என டெல்லி காய்கறி வியாபாரிகள் (Delhi Vegetables Merchants) தெரிவித்துள்ளனர்.\nமுக்கிய வழித்தடம் பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் ஆகிய 3 மாநில விவசாயிகளின் போராட்டத்தால் சிங்கூ மற்றும் டிகிரி எல்லை போக்குவரத்துப் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஹிமாச்சல பிரதேசம் (Himachal Pradesh) மற்றும் ஜம்மு காஷ்மீர் (Jammu Kashmir) பகுதியில் இருந்து வரும் காய்கறிகளின் வரவு பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லி காய்கறி வியாபாரிகள் பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் ஆகிய 3 மாநிலங்கள் அல்லாமல் வேறு மாநிலங்களில் இருந்து காய்கறிகளை வாங்கத் துவங்கியுள்ள காரணத்தால், நேற்று முதல் மக்களுக்குத் போதுமான காய்கறிகள் தேவையான அளவிற்கு கிடைத்து வருவதாக டெல்லி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.\nவிவசாயிகளுக்கு பல்வேறு தரப்பிலும் ஆதரவு பெருகி வரும் நிலையில், விவசாயிகளின் போராட்டம் விரைவில் வெற்றிபெற அனைவரும் எதிர்ப்பார்ப்போடு காத்திருக்கின்றனர்\nபயிர் சேத அறிக்கையை அரசிடம் ஒப்படைக்கும் வேளாண் துறை\nவிவசாய நிலத்திலிருந்த சீமைக்கருவேல மரங்களை அகற்றி, 100 நாள் வேலையாட்கள் சாதனை\nஅன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.\nஉங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....\nபங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)\nகாய்கறிகளின் விலை உயர்வு டெல்லி விவசாயிகள் போராட்டம் புதிய விவசாயச் சட்டங்கள Rising vegetable prices farmers' struggle in Delhi\nதென் தமிழகக் கடலோரப் பகுதிகளை நெருங்குகிறது புரெவி புயல் கடலோர மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை\n நிவர் புயலால் சாய்ந்த மரங்களிலிருந்து உரம் தயாரிப்பு\nகொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, முழு ஊரடங்கை அமல்படுத்த உச்ச நீதிமன்றம் பரிந்துரை\nகொப்பரை உற்பத்தி செய்ய நவீன இயந்திரம்: விவசாயிகள் மகிழ்ச்சி\n செய்ய வேண்டியவையும், செய்யக் கூடாதவையும்\nவிளைநிலங்களில் வீணாகும் தர்பூசணி பழங்கள்\nபூச்சிகளைப் புரிந்து கொள்(ல்)வோம்- காணொளி மூலம் பயிற்சி\nரூ.4000 கொரோனா நிவாரண நிதிவழங்கும் திட்டம் - நாளை ஸ்டாலின் முதல் கையெழுத்து\nவாடிக்கையாளர்களுக்கு புதியவகை டிசைனர் சிலிண்டரை அறிமுகம் செய்த IOCL\nஒரே நிமிடத்தில் cowin.gov.in தளத்தில் கொரோனா தடுப்பூசி பதிவு செய்வது எப்படி\nபருத்தியைத் தாக்கும் மாவுப்பூச்சிகளை எப்படி கட்டுப்படுத்தலாம்\nகொரோனாவைத் தடுக்கும் முயற்சியில், புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்\nஒன்றல்ல, இரண்டல்ல, ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள்\nதொற்றுநோய்களைத் தடுக்கும் ஊட்டச்சத்து அணுகுண்டு எது தெரியுமா\nமாடித்தோட்டத்திற்கு ஏற்ற மண் கலவை வகைகள் எவை\nவிவசாயிகள் ��லன் கருதி சாகுபடி தொடர்பான சந்தேகம் ஏற்பட்டால் வேளாண் விஞ்ஞானிகளை அணுகலாம்: தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinibitz.com/%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2021-05-07T01:52:23Z", "digest": "sha1:H53KLOSLBRC2LKU5RVDABURBBYCRMN2B", "length": 13682, "nlines": 75, "source_domain": "www.tamilcinibitz.com", "title": "இப்போது நீக்கப்பட்ட தந்தவ் பதவிக்கு கங்கனா ரன ut த் மீது ட்விட்டரின் குறுகிய நடவடிக்கை", "raw_content": "முழுமையான செய்தி உலகம் உங்களுக்காக.\nஇப்போது நீக்கப்பட்ட தந்தவ் பதவிக்கு கங்கனா ரன ut த் மீது ட்விட்டரின் குறுகிய நடவடிக்கை\nகங்கனா ரன ut த் தனது பதிவில், ட்விட்டர் அவர்களை தடை செய்யத் துணிந்தார். (கோப்பு)\nஇந்து உணர்வுகளை புண்படுத்தியதாகக் கூறப்படும் காட்சிகளுக்கு எதிராக பின்னடைவை எதிர்கொள்ளும் “தந்தவ்” என்ற வலைத் தொடரில் அவரது சர்ச்சைக்குரிய இடுகையைத் தொடர்ந்து நடிகர் கங்கனா ரனவுத்தின் ட்விட்டர் கணக்கு தற்காலிகமாக “படிக்க-மட்டும்” முறையில் வைக்கப்பட்டது.\nபின்னர் நீக்கப்பட்ட “தந்தவ்” தயாரிப்பாளர்களைப் பற்றிய ஒரு ட்வீட்டில், நடிகர் “உங்கள் தலையை கழற்ற வேண்டிய நேரம்” என்று கூறினார். மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்திற்கு பதிலளிக்கும் விதமாக அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார், மேலும் சில காட்சிகளில் இந்து கடவுள்களை அவமதித்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளை விளக்குமாறு தொடரின் படைப்பாளர்களிடம் கேட்டுக்கொண்டார்.\n“ஏனெனில் பகவான் கிருஷ்ணர் கூட ஷேஷுபாலாவின் 99 தவறுகளை மன்னித்தார் … பீச் சாந்தி ஃபிர் கிரந்தி (புரட்சி ம silence னத்தை பின்பற்ற வேண்டும்) … அவர்களின் தலையை கழற்ற வேண்டிய நேரம் … ஜெய் ஸ்ரீ கிருஷன் …” என்று கங்கனா ரனவுட் ட்வீட் செய்துள்ளார்.\nஅவரது ட்விட்டர் கணக்கு இன்று காலை பல மணி நேரம் தடுக்கப்பட்டது.\nட்விட்டர் செய்தித் தொடர்பாளர் ஒருவர், மைக்ரோபிளாக்கிங் வலைத்தளம் எந்தவொரு கணக்கிற்கும் எதிராக ஒரு கொள்கையைக் கொண்டுள்ளது, அது தவறான நடத்தைக்காக காவல்துறை அதிகாரிகளை மீறிய மற்றும் வேண்டுமென்றே துன்புறுத்தியது.\n“ட்விட்டர் விதிகளை மீறும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாங்கள் நடவடிக்கை எடுப்போம். எங்கள் சேவையில் மக்கள் தங்களை சுதந்திரமாக வெளிப்படுத்துவதை நாங்கள் பாராட்டுகிறோம். இருப்பினும், எங்கள் தவறான நடத்தை கொள்கையில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளபடி, யாரையும் அல்லது வேறு யாரையும் குறிப்பாக துன்புறுத்த நீங்கள் அனுமதிக்கப்பட மாட்டீர்கள் கேளுங்கள். ” எனவே, “ட்விட்டர் கூறினார்.\n“ஒரு தனிநபருக்கோ அல்லது குழுவினருக்கோ கடுமையான உடல் ரீதியான தீங்கு விளைவிக்கும், நம்பிக்கையளிக்கும் அல்லது மரணத்திற்கான விருப்பத்தை வெளிப்படுத்தும் உள்ளடக்கத்தை நாங்கள் தடைசெய்கிறோம், மேலும் கணக்கை படிக்க மட்டுமே பயன்முறையில் வைக்கக்கூடிய மீறல்களைக் கண்டறிந்தால் நாங்கள் அமலாக்க நடவடிக்கை எடுப்போம். “\nபுதன்கிழமை மாலை வாக்கில், திருமதி ரன ut த் தனது கணக்கில் இடுகையிடும் உரிமையை மீண்டும் பெற்றார்.\nஅவரது ரசிகர்கள் சிலர் சமூக ஊடகங்களில் “உங்கள் தலையை அகற்றுவது” என்பது ஒருவரை “தீவிரமாக அடிப்பது அல்லது அடிப்பது” என்று பொருள்படும் ஒரு சொற்றொடர் என்று தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாகக் கூறினார்.\nதிருமதி ரனவுட் தனது பதிவில் ட்விட்டரை தடை செய்யத் துணிந்தார், அவர்கள் அவ்வாறு செய்தால், அவர்களின் “மீண்டும் ஏற்றப்பட்ட” பதிப்பு மீண்டும் தோன்றும் என்று கூறினார்.\nதேசவிரோதிகள் பிரபலமாக உள்ளனர் #SuspendKanganaRanaut …. தயவுசெய்து, அவர்கள் அணிகளை இடைநீக்கம் செய்தபோது, ​​நான் வந்து அவர்களின் வாழ்க்கையை இன்னும் மோசமானதாக மாற்றினேன். நீங்கள் என்னை இடைநீக்கம் செய்தால், நாங்கள் மெய்நிகர் உலகத்தை விட்டு வெளியேறி, உண்மையான கங்கனா ரன ut த் – எல்லா பிதாக்களின் தாயும் – உண்மையான உலகில் காண்பிப்போம் # பபார்ஷெர்னிpic.twitter.com/Msl2PosqDK\n– கங்கனா ரன ut த் (ang கங்கனாட்டம்) ஜனவரி 20, 2021\n“தேசிய விரோதப் போக்கு #SuspendKanganaRanaut … தயவுசெய்து, அவர்கள் ரேங்குகளை இடைநிறுத்தியபோது, ​​நான் வந்து உங்கள் வாழ்க்கையை இன்னும் மோசமானதாக மாற்றினேன். நீங்கள் என்னை இடைநீக்கம் செய்தால், நாங்கள் மெய்நிகர் உலகத்தை விட்டு வெளியேறி, உண்மையான உலகில் உண்மையான கங்கனா ரனவுத்தை உங்களுக்குக் காண்பிப்போம் – அனைத்து தந்தையின் தாய் # பபார்ஷெர்னி, ”என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.\nREAD குடும்ப நாயகன் 2 வெளியீட்டு தேதி\nநடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் மற்றும் மும்பையை PoK உடன் ஒப்பிடுவது குறித்து அவர் கூறிய கருத்துக்கள் தொடர���பான சர்ச்சை உள்ளிட்ட பல தலைப்புகளில் திருமதி ரனவுட் ட்விட்டரில் குரல் கொடுத்துள்ளார்.\nஎழுத்தாளர். தீவிர தொலைக்காட்சி மேவன். சோஷியல் மீடியா பஃப். பேக்கன் ஆர்வலர். பீர் வெறி. பாப் கலாச்சாரம் ஜங்கி. இணைய பயிற்சியாளர். காபி காதலன். சான்றளிக்கப்பட்ட ஜாம்பியாஹோலிக்.\nகுடும்ப நாயகன் 2 வெளியீட்டு தேதி\nஇயக்குநர்கள் ராஜ் மற்றும் டி.கே ஆகியோரின் பிரபலமான வலைத் தொடரான ​​தி ஃபேமிலி மேன் சீசன்...\nமலாக்கா அரோரா தனது “டெய்லி ஹஸ்டில்” படத்தை வெளியிடுகிறார், நம்மால் கூட முடியாது …\nமனம் நிறைந்த உணவுக்குப் பிறகு உடையில் தன்னைப் பொருத்திக் கொள்வதில் சிரமம் கொண்ட ஜான்வி கபூர், முற்றிலும் தொடர்புபடுத்தக்கூடியவர்\nயே ரிஷ்டா க்யா கெஹ்லதா ஹைஸ் மொஹ்சின் கான் ஒரு புதிய வீட்டை வாங்குகிறார்; படத்தைப் பகிர்ந்து கொள்கிறது\nPrevious articleஜோ பிடன் உறுதிமொழி விழா: ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் உலக செய்திகளை விட வாஷிங்டன் டி.சி.யில் அதிகமான அமெரிக்க துருப்புக்கள்\nNext articleஊனமுற்ற வாக்காளர்களுக்கான வாட்ஸ்அப் எண்ணை சென்னை கார்ப்பரேஷன் ஒழுங்குபடுத்துகிறது | சென்னை செய்தி\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nமோகன் பகவத் தசரா நிகழ்ச்சியில் கூறினார்- ‘இந்துத்துவா என்பது யாருடைய மரபு அல்ல, அதில் அனைவரையும் உள்ளடக்கியது’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=203071713", "date_download": "2021-05-07T00:20:09Z", "digest": "sha1:RYAUOJQH7R6XDQPTMZPCDDTFXNVWQ3CB", "length": 42793, "nlines": 178, "source_domain": "old.thinnai.com", "title": "தமிழர் உணவு | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை\nஒரு குறிப்பிட்ட மக்கள் சமூகத்தின் அசைவியக்கங்களை உணர அவர்தம் உணவுப் பழக்க வழக்கங்களைக் கூர்ந்து நோக்க வேண்டும். உணவுப் பழக்க வழக்கங்கள் ஒரு சமூகம் வாழும் பருவச் சூழ்நிலை, வாழ் நிலத்தின் விளை பொருள்கள், சமூகப் படிநிலைகள், உற்பத்தி முறை, பொருளாதார நிலை ஆகியவற்றைப் பொருத்து அமையும்.\n‘சமைத்தல் ‘ என்ற சொல்லுக்குப் பக்குவப்படுத்துதல் என்பது பொருள். அடுப்பில் ஏற்றிச் சமைப்பது ‘அடுதல் ‘ எனப்படும். சமையல் செய்யப்படும் இடம் அட்டில் அல்லது அடுக்களை. தமிழர்களின் வீட்டு அமைப்பில் வீடு எந்தத் திசை நோக்கி அமைந்தி ருந்தாலும் சமையலறை வீட்டின் வடகிழக்கு அல்லது தென்மேற்கு மூலையில் அமைக்கப்படுகிறது.\nநீரிலிட்டு அவித்தல், அவித்து வேக வைத்தல், வறுத்து அவித்தல், சுடுதல், வற்றலாக்குதல், எண்ணெயிலிட்டுப் பொரித்தல், வேகவைத்து ஊறவைத்தல் ஆகியன சமையலின் முறைகள்.\nநகர்ப்புறமயமாதல், தொடர்புச் சாதனங்களின் விளம்பரத் தன்மை, பொருளியல் வளர்ச்சி, பயண அனுபவங்கள் ஆகியவை காரணமாகக் கடந்த ஒரு நூற்றாண்டுக் காலத்திற்குள் தமிழர்களின் உணவு முறை மிகப்பெரிய அளவில் மாறுதல் அடைந்திருக்கிறது. நிகழ்கால உணவுப் பழக்கவழக்கங்களில் உடல் நலம் குறித்த அக்கறையைவிடச் சுவை குறித்த பார்வையே ஆளுமை செலுத்துகிறது. எனவே இன்னும் சில மிச்சசொச்சங்களோடு இருக்கும் பழைய உணவுப் பழக்கங்களைத் தொகுத்துக் காணுவது நல்லது.\nகிழங்கு வகைகளில் சிலவும் (பனங்கிழங்கு), புன்செய் தானிய வகைகளில் சிலவும் (சோளக் கதிர்), சிறு பறவை இறைச்சியும் ஏழை மக்களால் சுட்டு உண்ணப்படுகின்றன. கடினமான கிழங்குகளும் (சர்க்கரைவள்ளி, ஏழிலைக் கிழங்குகள்) நீரிலிட்டு அவிக்கப்படுகின்றன. அரைத்த அல்லது இடித்த மாவுப் பொருள்கள் நீராவியில் வேக வைக்கப்படுகின்றன (இடியாப்பம், இட்டிலி, கொழுக்கட்டை). இடித்த மாவுடன், சூடான இனிப்புப் பாகினைச் சேர்த்துக் கட்டி அரிசி, பொரிவிளங்காய், பாசிப்பயற்று மா உருண்டை செய்யப் படுகின்றன. மாவுப் பொருள்களுடன் இனிப்புப் பாகு கூட்டி மீண்டும் எண்ணெயில் பொரித்து முந்திரிக்கொத்து, அதிரசம் (பாசிப்பருப்பு மா, அரிசி மா) ஆகியன செய்யப்படுகின்றன. மாவுப் பொருள்களுடன் உறைப்புச் சுவையுடைய மசாலா கூட்டி பஜ்ஜி, வடை செய்யப்படுகின்றன. புலவு அல்லது காய்கறிகளுடன் உறைப்பு மசாலா கூட்டி எண்ணெய் இட்டுத் தாளித்துக் குழம்பாகவோ அல்லது தொடுகறியாகவோ ஆக்குகிறார்கள். மாவுப் பொருள் களுடன் காய்கறிகள் சேர்த்து, எண்ணெய் தடவிச் சுடும் உணவு வகைகளில் அடை, தோசை ஆகியன அடங்கும். இலை (அடை) வடிவில் செய்யப்படுவதால் அது அடை எனப்பெயர் பெற்றது. வெந்த தானியத்துடன் வெல்லம், கருப்புக்கட்டி ஆகியன சேர்த்துத் திரவ வடிவில் ஆக்குவது பாயசம்.\nசங்க இலக்கியத்தில் மிளகு, நெய், புளி, கீரை, இறைச்சி, கும்மாயம் பற்றிய உணவுக் குறிப்புக்கள் காணக் கிடைக்கின்றன. பக்தி இயக்கத் தின் எழுச்சியோடு தமிழர் உணவு வகையில் பெர��ய மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. லட்டு (இலட்டுவம்), எள்ளுருண்டை, அப்பம் போன்றவற்றைப் பெரியாழ்வார் தம் பாடலில் குறிப்பிடுகிறார். சோழர் காலக் கல்வெட்டுக்களில் சருக்கரைப் பொங்கல் (அக்கார வடிசில்), பணியாரம் ஆகிய உணவு வகைகள் பேசப்படுகின்றன. விசய நகர ஆட்சிக்காலக் கல்வெட்டுக்களில்தான் இட்டளி (இட்டிலி), தோசை, அதிரசம் போன்ற உணவு வகைக் குறிப்புக்கள் கிடைக் கின்றன. ஆனால் இவை கோயிற் பண்பாட்டைப் பிரதிபலிப்பதனால், பெருவாரியான மக்களின் உணவுப் பழக்கவழக்கங்களை அறிய இவற்றைப் போதிய சான்றுகளாகக் கொள்ளமுடியாது.\nதிடப் பொருள்களையும் இறைச்சிப் பொருள்களையும் அரைத்தும் துவைத்தும் நீர் குறைத்து ஆக்கப்படுவன துவையல் என்ற வகையில் அடங்கும். நீரிலே கரைத்த துவையல் இக்காலத்தில் ‘சட்டினி ‘ என வழங்கப்படுகிறது. இறைச்சி சேர்த்த துவையல் ‘கைமா ‘ என்ற உருதுச் சொல்லால் வழங்கப்படுகிறது.\nஎளிய மக்கள் நிறைய நீரில் தானியங்களை வேகவைத்து உண்பது (நெல்லரிசி, குறு நொய் அரிசி, சோளம், கம்பம்புல், கேழ்வரகு, வரகரிசி) கஞ்சியாகும். கஞ்சியினை ‘நீரடுபுற்கை ‘ என்கிறார் திருவள்ளு வர் (நீர் + அடு + புல் + கை). கஞ்சியில் சேர்க்கப்படும் மற்றொரு பொருள் மோர்.\nவற்றல் என்பது மழைக்காலத்திற்கு எனச் சேமிக்கப்பட்ட உண வாகும். காய்கறிகள் நிறையக் கிடைக்கும் காலத்தில் உப்புக் கலந்த மோரில் ஊறவைத்துப் பின்னர் வெயிலில் நீர் வற்றக் காயவைத்துச் சேமிப்பர். வெண்டை, மிளகாய், பாகல், சுண்டை, கொவ்வை, கொத்த வரை, கத்தரி, மணத் தக்காளி ஆகியன வற்றலுக்கு உரிய காய்கறிகள்.\nகாய்கறி என்ற சொல் காய்களையும் மிளகையும் சேர்த்துக் குறிக்கும். கி.பி. 15ஆம் நூற்றாண்டில்தான் சிலி நாட்டில் இருந்து வந்த மிளகாய் தமிழ் நாட்டிற்குள் புகுந்தது. அதுவரை தமிழர் சமையலில் உறைப்புச் சுவைக்காகக் கறுப்பு மிளகினை (கருங்கறி) மட்டுமே பயன்படுத்தி வந்தனர். இறைச்சி உணவிற்கு அதிகமாகக் கறியினைப் பயன்படுத்தியதால் இறைச்சியே ‘கறி ‘ எனப் பின்னர் வழங்கப்பட்டது. வெளிளை மிளகினைத் (வால்மிளகு) தமிழர் குறைவாகவே பயன்படுத்தியுள்ளனர்.\nபழந்தமிழர் உணவு வகைகளைக் கூர்ந்து கவனித்தால் ஓர் உண்மை புலப்படும். தமிழர் உணவு முறைகளில் வறுத்தும், சுட்டும், அவித்தும் செய்யப்படும் உணவுப் பண்டங்களே அதிகமாக இருந்தன. எண்ணெய்யில் இட்ட பண்டங்கள் (குறிப்பாக வடை, பஜ்ஜி, மிக் சர், காரச்சேவு போன்றவை) அண்மைக் காலங்களிலேயே மிக அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றின் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் நிலக்கடலை எண்ணெய்யும் விசய நகர ஆட்சிக் காலத்திலேயே இங்கு அறிமுகமானது.\n‘லாலா மிட்டாய்க் கடை ‘ என்பது புதுவகை உணவுகளைத் தமிழ்நாட்டில் அறிமுகம் செய்து வருகிறது. நாயக்க மன்னர்களின் காலத்தில் அவர்களால் தமிழ் நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட இந்தி பேசும் மக்கள் பிரிவினர் புதிய இனிப்பு வகைகளை அறிமுகப் படுத்தினர். சருக்கரை, கோதுமை, நெய், கடலைமா ஆகியனவே இவற்றின் மூலப் பொருள்கள். சருக்கரைக்குப் பதிலாகக் கருப்புக் கட்டி சேர்த்து நாடார் சாதியினர் வைக்கும் இனிப்புக் கடையை மிட்டாய்க் கடை என்றே சொல்வார்கள். கிராமப்புறத்து மக்கள் இனிப்பு விற்கும் கடைகளை ‘அந்திக்கடை ‘ (மாலை நேரத்துக்கடை) என்றே வழங்கி வந்தனர். லாலா, மிட்டாய் என்பன முறையே இந்தி, உருதுச் சொற்களாகும்.\nகடந்த ஐம்பது ஆண்டுகளில் தமிழர் வீட்டுச் சமையலில் எண் ணெயின் பங்கு பெருமளவு அதிகரித்திருக்கிறது. எண்ணெய்ச் சுவையினை இக்காலத் தமிழர்கள் பெரிதும் விரும்புவதால் அவித்தும், வேகவைத்தும், எண்ணெயைச் சேர்க்காமலும் செய்யப்பட்ட உணவுப் பொருள்கள் வேகமாக மறைந்து வருகின்றன. பொருளாதாரச் சந்தையில் எண்ணெய் வணிகம் முக்கிய இடத்தைப் பெறுகிறது. வல்லரசு நாடுகளின் கருவிகள் பலதரப்பட்டவை. அவற்றின் பொரு ளியல் ஆயுதங்களாகக் காப்பியும், தேநீரும் அவற்றின் துணைப் பொருளான சருக்கரையும் இன்று எல்லா வீடுகளிலும் நுழைந்து விட்டன.\nஉணவு என்பது இன்று ஒரு குடும்பத்தின் பழக்கவழக்கமன்று. இனிமை ததும்பும் சருக்கரையானது கியூபா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளின் வாழ்வுக்கான பற்றுக்கோடு. அமெரிக்கா போன்ற நாடுகளால் இச்சிறிய நாடுகள் ஒடுக்கப்படுவதற்கு அதே சருக்கரை ஒரு கொடுமையான பொருளாதார ஆயுதமாகவும் அமைகிறது. இந்த அரசியல் உண்மையை உணராத தமிழர்கள் உணவுப் பழக்கத் தில் உடல் நலத்தைக் கருதாது, நாவின் சுவையினையே சார்ந்து இருப்பது வீழ்ச்சிக்குரிய வழிகளில் ஒன்று.\nமுக்கோணக் கிளையில் ஆடும் மூன்று கிளிகள்\nபசுமைப் பார்வைகள் – சுற்றுச்சூழல் அரசியல் – 10\nவாரபலன் ஜூலை 17, 2003 (மாம்பல செய்தித்தாள், சு��்தம் பாக்கில், கவிமணி கீர்த்தனை, ஜெயகாந்தன்)\nகுறிப்புகள் சில 17 ஜூலை 2003 (தாஜ்மஹால்-காங்கிரஸ்-இடஒதுக்கீடு-இரண்டு புத்தகங்கள் பற்றி ஒரு குறிப்பு)\nபெங்களூர் ரயில் நிலையத்தில் ஒரு அனுபவம்\nவரதட்சணை மீது வழக்குப்போர் தொடுத்த புரட்சிப் பெண் நிஷா ஷர்மா\nஉலக அரங்கில் தமிழ் இலக்கியம்\nஅரசு ஊழியர்கள் – ஏன் இந்த அவமானகரமான தோல்வி \nஅறிவியல் மேதைகள் சர் ஜேம்ஸ் சாட்விக் (Sir James Chadwick)\nபாரதத்தில் முதல் அணுசக்தி பரிமாறிய தாராப்பூர் கொதிநீர் அணுமின் நிலையத்தின் பிரச்சனைகள் [Problems in Tarapur Atomic Power Station\nவிலைகொடுத்துக் கற்கும் பாடம் (துாமகேதுவின் ‘போஸ்டாபீஸ் ‘ – எனக்குப் பிடித்த கதைகள் – 69)\nமானுட உறவின் புதிர்கள் ( திருகோணமலை க.அருள் சுப்பிரமணியனின் ‘அம்மாச்சி ‘ சிறுகதைத் தொகுதி-நூல் அறிமுகம்)\n‘அனைத்தும் அறிந்த ‘ ஒரு விமர்சகருக்கு ‘ஒன்றுமே அறியாத ‘ ஒரு வாசகனின் பதில்\nஎந்த நிமிடத்திலும் பறிபோகும் வேலை\nபசுமை – அறிவியல், அரசியல் மற்றும் மண் சார்ந்த மரபுகள்-1\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் பதினைந்து\nநீதித் தேவதையே நீ சற்று வருவாயா \nபிழைக்கத் தெரிய வேணும் கிளியே\nமுக்கோணக் கிளையில் ஆடும் மூன்று கிளிகள்\nபசுமைப் பார்வைகள் – சுற்றுச்சூழல் அரசியல் – 10\nவாரபலன் ஜூலை 17, 2003 (மாம்பல செய்தித்தாள், சுத்தம் பாக்கில், கவிமணி கீர்த்தனை, ஜெயகாந்தன்)\nகுறிப்புகள் சில 17 ஜூலை 2003 (தாஜ்மஹால்-காங்கிரஸ்-இடஒதுக்கீடு-இரண்டு புத்தகங்கள் பற்றி ஒரு குறிப்பு)\nபெங்களூர் ரயில் நிலையத்தில் ஒரு அனுபவம்\nவரதட்சணை மீது வழக்குப்போர் தொடுத்த புரட்சிப் பெண் நிஷா ஷர்மா\nஉலக அரங்கில் தமிழ் இலக்கியம்\nஅரசு ஊழியர்கள் – ஏன் இந்த அவமானகரமான தோல்வி \nஅறிவியல் மேதைகள் சர் ஜேம்ஸ் சாட்விக் (Sir James Chadwick)\nபாரதத்தில் முதல் அணுசக்தி பரிமாறிய தாராப்பூர் கொதிநீர் அணுமின் நிலையத்தின் பிரச்சனைகள் [Problems in Tarapur Atomic Power Station\nவிலைகொடுத்துக் கற்கும் பாடம் (துாமகேதுவின் ‘போஸ்டாபீஸ் ‘ – எனக்குப் பிடித்த கதைகள் – 69)\nமானுட உறவின் புதிர்கள் ( திருகோணமலை க.அருள் சுப்பிரமணியனின் ‘அம்மாச்சி ‘ சிறுகதைத் தொகுதி-நூல் அறிமுகம்)\n‘அனைத்தும் அறிந்த ‘ ஒரு விமர்சகருக்கு ‘ஒன்றுமே அறியாத ‘ ஒரு வாசகனின் பதில்\nஎந்த நிமிடத்திலும் பறிபோகும் வேலை\nபசுமை – அறிவியல், அரசியல் மற்றும் மண் சார்ந்த மரபுகள்-1\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் பதினைந்து\nநீதித் தேவதையே நீ சற்று வருவாயா \nபிழைக்கத் தெரிய வேணும் கிளியே\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபுதிய திண்ணை படைப்புகள் https://puthu.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/which-god-we-need-to-worship-first-in-shivan-temple/", "date_download": "2021-05-07T02:21:05Z", "digest": "sha1:R3HSVDVEBLQBS4UEZ6HZL2YAWDGOY36R", "length": 8882, "nlines": 101, "source_domain": "dheivegam.com", "title": "சிவன் கோவில் வழிபடும் முறை | Sivan kovil vazhipadu murai", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் சிவன் கோவிலில் வழிபடும் முறை\nசிவன் கோவிலில் வழிபடும் முறை\nசிவன் கோவிலை அடைந்த உடன் “சிவாய நாம” என கூறி ராஜகோபுரத்தை முதலில் தரிசிக்க வேண்டும். அதன் பிறகு கோவிலில் உள்ளே சென்றதும் விநாயக பெருமானை வழிபட்டு தோப்புக்கரணம் போட வேண்டும்.\nஅதன் பிறகு நந்தி தேவரிடம் சென்று அவர் சிரசின் வழியாக சுவாமியை தரிசிக்க வேண்டும். அதன் பிறகு அவரிடம், “நந்தி தேவரே நான் சிவபெருமானை தரிசிக்க வந்துள்ளேன். எம்பெருமானை தரிசிக்க நீங்கள் எனக்கு அனுமதி தர வேண்டுகிறேன்” என்று கூறி அவரின் அனுமதியை பெற வேண்டும். நந்தி தேவரை வழிபடும் சமயத்தில் நந்தி காயத்ரி மந்திரம் அதை ஜபிப்பது சிறந்தது. நந்தி காயத்ரி மந்திரத்தை படிக்க இங்கு கிளிக் செய்யுங்கள்.\nஅதன் பிறகு கருவறையில் இருக்கும் சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். சிவனை வழிபடும் சமயத்தில் “ஓம் நம சிவாய” என்னும் மந்திரத்தை கூறி வழிபடுவது நல்லது. சிவபெருமான் அபிஷேகப் பிரியர் என்பதால் சிவனுக்கு ஏதேனும் அபிஷேகம் செய்வது மேலும் சிறந்தது.\nஐயனை வழிபட்ட பிறகு அன்னை பரமேஸ்வரியை வழிபட வேண்டும். மதுரை மீனாட்சி அம்மன் போன்ற சில ஆலயங்கள் அம்பிகைக்குரிய விஷேஷ ஆலயங்களாக இருக்கும். அங்கெல்லாம் அம்பாளை வணங்கிய பின்னர் சிவனை வணங்குவதில் தவர் இல்லை.\nஅம்பாளை வணங்கிய பின்னர் தென் முக கடவுளான தட்சிணாமூர்த்தியை வழிபட வேண்டும். அந்த சமயத்தில் தட்சிணாமூர்த்திக்குரிய மந்திரத்தை கூறுவது நல்லது. தட்சிணாமூர்த்தி மந்திரத்தை படிக்க இங்கு கிளிக் செய்யுங்கள்..\nஅதன் பிறகு கோவிலை வளம் வந்து நவகிரகங்களை வழிபடலாம். பொதுவாத சிவன் கோவிலை வளம் வருகையில் மூன்று, இந்து, ஏழு என்ற எண்ணிக்கையில் வளம் வருவது நல்லது. வளம் வருகையில் “ஓம் நமசிவாய” என்று மந்திரத்தை ஜபித்தவாறே வளம் வரலாம்.\nஉங்கள் வீட்டிற்கு வருபவர்கள் வீட்டை பார்த்து பொறாமைப்படுகிறார்களா இந்த பழத்தை இப்படி ஒளித்து வையுங்கள் இந்த பழத்தை இப்படி ஒளித்து வையுங்கள் பொல்லாக் கண் திருஷ்டியும் நொடியில் ஒழிந்துவிடும்.\nவெள்ளிக்கிழமையில் இந்த கலசத்தை பூஜை அறையில் வைத்தால் உங்கள் கையில் பண புழக்கத்திற்கு பஞ்சமே இருக்காது\nகண்ணை கலங்க வைக்கும் கஷ்டம் வரும்போது, வீட்டில் இருந்தபடியே இந்த வழிபாட்டினை செய்தால் தீராத கஷ்டத்திற்கும் தீர்வு கிடைக்கும்.\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaipoonga.net/news/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-2/", "date_download": "2021-05-07T00:15:46Z", "digest": "sha1:HPNE6TNXYXQ2FR2QBXBJHWJIZFQDMBWD", "length": 17762, "nlines": 251, "source_domain": "kalaipoonga.net", "title": "உயர்கல்வி சேர்க்கையில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கிறது சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழக 29வது பட்டமளிப்பு விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு - Kalaipoonga", "raw_content": "\nHome Business உயர்கல்வி சேர்க்கையில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கிறது சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழக 29வது பட்டமளிப்பு விழாவில்...\nஉயர்கல்வி சேர்க்கையில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கிறது சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழக 29வது பட்டமளிப்பு விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nஉயர்கல்வி சேர்க்கையில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கிறது சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழக 29வது பட்டமளிப்பு விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nசென்னை செம்மஞ்சேரியில் உள்ள சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 29வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் காணொளி மூலம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு விருந்தினராக பங்குபெற்று சிறப்புரையாற்றினார்.\nபல்கலைகழக வேந்தர் மரியஜீனா ஜான்சன் மற்றும் தலைவர் மேரி ஜான்சன் தலைமையில் நடைபெற்ற இந்த பட்டமளிப்பு விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காணொளி மூலம் கலந��து கொண்டு சிறப்புரையாற்றி பட்டம் பெற்றவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.\nஇந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கல்பாக்கம் இந்திராகாந்தி அனு ஆராய்ச்சி நிலைய இயக்குநர் அருண்குமார் பாதுரி கலந்து கொண்டு 3190 இளைநிலை மற்றும் முதுநிலை பட்டங்களையும்,129 முனைவர் பட்டங்களையும், 20 தங்க பதக்கங்களையும் வழங்கினார்.\nகாணொளியில் தமிழக முதலமைச்சர் பேசியதாவது:-\nகல்விச் சேவையை சிறப்பாக செய்வதால் தான் உலகின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தமிழ்நாட்டில் கல்வி கற்க வருகின்றனர்.\nசத்தியபாமா நிகர்நிலை பல்கலைகழகத்தின் நிறுவனர் முனைவர் ஜேப்பியார் அவர்களின் அயராத உழைப்பினால் கல்லூரி என்ற நிலையில் இருந்து பல்கலைக்கழகம் என்ற நிலைக்கு உயர்ந்துள்ளது. அவருக்கு என் வாழ்த்துக்கள்.\nகல்வி சேவையில் இந்த நிறுவனம் ஆற்றிய பணிக்காக பல்வேறு விருதுகள் பெற்றுள்ளது.\nஇந்த பல்கலைக்கழகத்தில் இன்று பட்டம் பெற உள்ள 3190 இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கும், 129 முனைவர் பட்டம் பெரும் மாணவர்களுக்கும், 20 தங்க பதக்கம் பெறும் மாணவர்களுக்கும் வாழ்த்துக்கள்.\nஉயர்கல்வி கிடைப்பதை உறுதி செய்து தமிழ்நாடு முன்னணி மாநிலமாக திகழ்கிறது.\n2019-20ம் ஆண்டில் 16 உறுப்பு கல்லூரிகள் அரசு கல்லூரிகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.\n2011-12ம் ஆண்டு முதல் அரசு மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் 1577 பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளது.\nஅரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த 80 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நடைப்பெற்று வருகின்றன.\n2020-21ம் ஆண்டு உயர்கல்விக்காக 5502 கோடியே 84 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nவிழுப்புரத்தை தலைமையிடமாக கொண்டு புதிய பல்கலைக்கழகம் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது\nகொரோனா தொற்று தாக்கத்தால் தொழில் துறையில் மந்தநிலையிலும் தமிழ்நாட்டில் தான் அதிக அளவில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது.\nபட்டம் பெற்று வெளியில் வருபவர்கள் சுயதொழில் துவங்க முன்வர வேண்டும்.\nநாட்டை வழிநடத்தும் தலைவர்கள் எல்லாம் இருக்கிறார்கள். பட்டம் பெற்று புதிய உலகத்திற்கு செல்லும் நீங்கள் உணர்ந்து செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.\nகடுமையான உழைப்பாலும் ஒழுக்கத்தாலும் நல்ல மதிப்பெண்களை பெற்றவர்களை மனதார பாராட��டுகிறேன்.\nவருங்கால தலைவராகிய மாணவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் பேசினார்.\nபோட்டோ : கல்பாக்கம் இந்திராகாந்தி அனு ஆராய்ச்சி நிலைய இயக்குநர் அருண்குமார் பாதுரி மாணவர்க்கு பட்டம் வழங்குகிறார். வலது பக்கம் பல்கலைகழக வேந்தர் மரியஜீனா ஜான்சன், இடது புரம் துணை வேந்தர் முனைவர் சசிபிரபா இருந்தனர்.\nஉயர்கல்வி சேர்க்கையில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கிறது சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழக 29வது பட்டமளிப்பு விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nசத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 29வது பட்டமளிப்பு விழா\nPrevious articleஉயர்கல்வி சேர்க்கையில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கிறது சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழக 29வது பட்டமளிப்பு விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nNext articleசத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழக 29வது பட்டமளிப்பு விழா புகைப்படங்கள்\nவெளியானது 34 பேர் கொண்ட தமிழக அமைச்சரவை பட்டியல்\nமூத்த தலைவர் ஆர்.எம்.வீரப்பனை நேரில் சந்தித்து ஆசி பெற்றார் மு.க.ஸ்டாலின் | Video\nரூ.4 ஆயிரம் வழங்கும் திட்டத்துக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முதல் கையெழுத்து\nவெளியானது 34 பேர் கொண்ட தமிழக அமைச்சரவை பட்டியல்\nவெளியானது 34 பேர் கொண்ட தமிழக அமைச்சரவை பட்டியல் தமிழகத்தின் முதலமைச்சராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை சென்னை - கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்க உள்ளார். கொரோனா பரவலை கருத்தில்...\nமாநாடு டப்பிங் ஆரம்பம்… படக்குழு வெளியிட்ட புகைப்படங்கள்\nமாநாடு டப்பிங் ஆரம்பம்... படக்குழு வெளியிட்ட புகைப்படங்கள் சிம்பு நடிப்பில் உருவாகி உள்ள படம் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கியுள்ள இப்படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார். இப்படத்தில் சிம்பு அப்துல் காலிக்...\nமூத்த தலைவர் ஆர்.எம்.வீரப்பனை நேரில் சந்தித்து ஆசி பெற்றார் மு.க.ஸ்டாலின் | Video\nமூத்த தலைவர் ஆர்.எம்.வீரப்பனை நேரில் சந்தித்து ஆசி பெற்றார் மு.க.ஸ்டாலின் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றதை அடுத்து தமிழகத்தின் அடுத்த முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பு ஏற்க உள்ளார். நாளை (மே 7...\nவெளியானது 34 பேர் கொண்ட தமிழக அமைச்சரவை பட்டியல்\nவெளியானது 34 பேர் கொண்ட தமிழக அமைச்சரவை பட்டியல் தமிழகத்தின் முதலமைச்சராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை சென்னை - கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்க உள்ளார். கொரோனா பரவலை கருத்தில்...\nமாநாடு டப்பிங் ஆரம்பம்… படக்குழு வெளியிட்ட புகைப்படங்கள்\nமாநாடு டப்பிங் ஆரம்பம்... படக்குழு வெளியிட்ட புகைப்படங்கள் சிம்பு நடிப்பில் உருவாகி உள்ள படம் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கியுள்ள இப்படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார். இப்படத்தில் சிம்பு அப்துல் காலிக்...\nமூத்த தலைவர் ஆர்.எம்.வீரப்பனை நேரில் சந்தித்து ஆசி பெற்றார் மு.க.ஸ்டாலின் | Video\nமூத்த தலைவர் ஆர்.எம்.வீரப்பனை நேரில் சந்தித்து ஆசி பெற்றார் மு.க.ஸ்டாலின் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றதை அடுத்து தமிழகத்தின் அடுத்த முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பு ஏற்க உள்ளார். நாளை (மே 7...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/coating", "date_download": "2021-05-07T02:13:08Z", "digest": "sha1:5IIIBSMPJPL67HH7OGTXSR4ERQB6SZXF", "length": 4274, "nlines": 63, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"coating\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\ncoating பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nகிட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2020/07/07/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE/", "date_download": "2021-05-07T00:36:56Z", "digest": "sha1:3SUAJGKBIWZPFDKVO3RYDYDGNTPZRTSA", "length": 13089, "nlines": 246, "source_domain": "tamilandvedas.com", "title": "இரு கேள்விகளுக்கு ஒரு வார்த்தை பதில்! சம்ஸ்கிருத புதிர்!! (Post no.8301) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nஇரு கேள்விகளுக்கு ஒரு வார்த்தை பதில் சம்ஸ்கிருத புதிர்\nஇரு கேள்விகளுக்கு ஒரு வார்த்தையிலேயே பதில் வேண்டும் – சம்ஸ்கிருத புதிர் கவிதை\nஒரு சம்ஸ்கிருத புதிர் கவிதை. இரு கேள்விகள், ஆனால் விடை ஒன்றாகத் தான் இருக்க வேண்டும், இரு கேள்விகளுக்கும் பதில் அளிப்பதாக இருக்க வேண்டும்.\nஇந்த இரு கேள்விகளுக்கும் ஒரு வார்த்தையில் பதில் வர வேண்டும்.\nதானம் கொடுப்பவனின் கையை அலங்கரிப்பது எது\nஇந்த இரு கேள்விகளுக்கும் ஒரு வார்த்தையில் பதில் வர வேண்டும்.\nஅடுத்த இரு கேள்விகள் ;\nகண்ணைப் பார்க்க விடாமல் செய்வது எது\nஇந்த இரு கேள்விகளுக்கும் ஒரு வார்த்தையில் பதில் வர வேண்டும்.\nஅழகிய பெண்களுக்கு அழகைத் தருவது எது\nஇந்த இரு கேள்விகளுக்கும் ஒரு வார்த்தையில் பதில் வர வேண்டும்.\nஇப்படிக் கேள்விகளைக் கேட்ட கவிஞர் கூறுகிறார்;\n“ஓ, நுட்பமான புத்தியை உடையவனே, நீ உன் மனதை நன்கு கவனப்படுத்தி ஒவ்வொரு இரு கேள்விகளுக்கும் ஒரே பதிலைச் சொல், பார்ப்போம்\nகிம் த்ராணம் ஜகதாம் ந பஷ்யதி ச க: கே தேவதா வித்திஷ:\nகிம் தாது: கரபூஷணம் நிருதர: க: கிம் பிதானம் தூஷாம் |\nகே கே கேலனமாசரந்தி சுத்ருஷாம் கிம் சாருதாபூஷணம்\nபுத்தயா ப்ரூஹி விசார்ய சூக்ஷ்மமதிமம்ஸ்த்வேகம் த்ரயோருத்தரம் ||\nஉலகைக் காப்பது அந்தா: அதாவது உணவு.\nபார்க்க முடியாதவன் அந்தா: அதாவது அதாவது குருடன்.\nஇரு கேள்விகளுக்கு ஒரே வார்த்தையில் விடை.\nஅடுத்து, கடவுளரை வெறுப்பவர் தானவா: அதாவது அசுரர்.\nதானம் கொடுப்பவனின் கையை அலங்கரிப்பது தானவா: அதாவது தானத்தைக் கொடுக்கும் போது சொரியும் நீர்\nஅடுத்து, வயிறு இல்லாதவன் தம: அதாவது ராகு.\nகண்ணைப் பார்க்க விடாமல் செய்வது தம: அதாவது இருட்டு\nஅடுத்து, வானில் விளையாடுவது வய: அதாவது பறவைகள்.\nஅழகிய பெண்களுக்கு அழகைத் தருவது வய: இளமைப் பருவ வயது\nஆக இப்படி இரு பொருள் தரும் ஒரு வார்த்தையைத் தேர்ந்தெடுத்து கேள்விகளைத் தொடுத்து விட்டார் சாமர்த்தியமான கவிஞர்.\nஇது போன்ற புதிர்க் கவிதைகள் ஏராளம் சம்ஸ்கிருதத்தில் உள்ளன\nஇந்தக் கவிதையின் ஆங்கில மொழியாக்கம் இதோ:\ntags – இரு கேள்வி, ஒரு வார்த்தை பதில், சம்ஸ்கிருத புதிர்,\nINDEX 5; எஸ்.நாகராஜன் கட்டுரை இன்டெக்ஸ் -5 (Post No.8300)\nanecdotes Appar ARTICLES Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya crossword Hindu Indra in Tamil Kalidasa Lincoln london swaminathan mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar POSTS proverbs Quotations quotes Rig Veda shakespeare Silappadikaram Tamil Tirukkural Valluvar Valmiki Vedas அப்பர் கங்கை கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலண்டர் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி சுவாமிநாதன் ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பட்டியல் பழமொழி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவன் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamilkilavan.com/category/uncategorized/", "date_download": "2021-05-07T00:39:46Z", "digest": "sha1:TBHXBNLP6TOVEVPRKGATOUUP7XWIW5RS", "length": 4416, "nlines": 59, "source_domain": "tamilkilavan.com", "title": "Uncategorized Archives | Tamil Kilavan", "raw_content": "\nகுக்கூ பாடலுக்கு கு.த்.தா.ட்டம் போட்ட கேரள போலிஸ் என்ஜாயி எஞ்சாமியின் புதிய வெர்ஷன்.. தெ.றி.க்.கவிடும் காட்சி.\nசந்தோஷ் நாராயணன் இசையில் அறிவு மற்றும் தீ இருவரும் பாடிய பாடல் என்ஜாயி எஞ்சாமி பாடல். இந்த வருடத்தின் மிகப்பெரிய ஹிட் அடித்த தனிப்பாடல்களுல் மிகவும் முக்கியமான பாடலாக இந்த பாடல் மாறியிருக்கிறது. எங்கு பார்த்தாலும் இந்த பாடல்தான் வைரலான பாடலாக சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கிறது. இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மானின் மாஜா வெளியீட்டில் இந்த பாடல் இன்னும் தன்னுடைய வைரல் தன்மையிலிருந்து நீங்கிப் …\nஅடடே இவ்வளோ நாள் இது தெரியாம போச்சே நாம் தேட தவறிய வெறித்தனமான விஷயங்கள்\nஇன்று என் கண் முன் நடந்த உண்மை சம்பவம் ஒரு நிமிஷம் இந்த வீடியோ பாருங்க\nஇன்று என் கண் முன் நடந்த உண்மை சம்பவம் ஒரு நிமிஷம் இந்த வீடியோ பாருங்க\nதிராட்சையும் சாப்பிடும் அனைவரும் வீடியோவை கட்டாயம் பார்க்க அல்லது வாழ்க்கையில் நிறைய இழப்பீர்கள்.\nதிராட்சையும் சாப்பிடும் அனைவரும் வீடியோவை கட்டாயம் பார்க்க அல்லது வாழ்க்கையில் நிறைய இழப்பீர்கள்\nகடையில் முட்டை வாங்கறதுக்கு முன்னாடி இந்த வீடியோ பாருங்க\n2 முட்டை இருக்கா வீட்டில் உள்ள அனைவருக்கும் கிரிஸ்பியான ஈவினிங் ஸ்நாக்ஸ் ரெடி.\nமுட்டை சுக்கா லஞ்சுக்கு பக்காவான சைடிஷ் 10 நிமிடத்தில் இப்படி சுவையா செய்து கொடுத்து அசத்துங்க.\nபல கோடி சொத்துக்கு சொந்தக்காரி ஒரு வேலை சோற்றுக்காக வீட்டு வேலை செய்து பிழைக்கும் அவலம்\n20 ஆயிரம் வருடங்களுக்கு முன் மூழ்கிப்போன தமிழனி���் வரலாறு.. தற்போது மெல்ல மெல்ல மிதந்து வருகிறது.. தற்போது மெல்ல மெல்ல மிதந்து வருகிறது.. ஒவ்வொரு தமிழனும் உலகத்துக்கு அறிய நண்பர்களுடன் பகிருங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/rahul-gandhi-highly-condemned-mp-cm-during-election-meeting/", "date_download": "2021-05-07T01:56:15Z", "digest": "sha1:X4QC4LTQ226CDM7BJD24Z6HRSFWKCYVF", "length": 8760, "nlines": 118, "source_domain": "www.patrikai.com", "title": "Rahul Gandhi highly condemned MP CM during election meeting – Patrikai – Tamil Daily – latest online local breaking news & reviews – Tamilnadu, India & World – politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nமத்தியப் பிரதேச முதல்வர் மீது ராகுல் காந்தி கடும் தாக்கு\nபோபால் மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஐ காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கடுமையாக தாக்கி பேசி உள்ளார்….\nஒரே டோஸ் கொரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக் லைட் : ரஷ்ய அரசு அங்கீகாரம்\nமாஸ்கோ ஒரே டோஸ் கொரொனா தடுப்பூசியான ஸ்புட்னிக் லைட் மருந்துக்கு ரஷ்ய அரசு அங்கீகாரம் அளித்துள்ளது. உலகெங்கும் கொரோனா பரவலைத் தடுக்க கொரோனா தடுப்பூசிகள் போடும் பணிகள் நடந்து…\nஇந்தியாவில் வரலாறு காணாத உச்சமாக நேற்று 4,14,182 பேருக்கு கொரோனா\nடில்லி இந்தியாவில் நேற்று 4,14,182 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று வரலாறு காணாத அளவுக்கு கொரோனாவால்…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15.66 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15,66,72,832 ஆகி இதுவரை 32,69,034 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nஅடுத்த 17 நாட்கள் ஒவ்வொரு வீட்டிலும் பின்பற்ற வேண்டிய கட்டாய விதி\nஅடுத்த 17 நாட்கள் ஒவ்வொரு வீட்டிலும் பின்பற்ற வேண்டிய கட்டாய விதி – நெட்டிசன் பதிவு கொரோனா கட்டுப்பாடு குறித்து வலைத் தளங்களில்…\nஇன்று ஆந்திரப் பிரதேசத்தில் 21,954 கர்நாடகாவில் 49,058 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 21,954 கர்நாடகாவில் 49,058 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 49,058…\nநாளைக்குள் தமிழகத்துக்குத் தேவையான ஆக்சிஜன் வழங்கு��தை உறுதி செய்ய மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\nசென்னை நாளைக்குள் தமிழகத்துக்குத் தேவையான ஆக்சிஜன் வழங்குவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது….\nஒரே டோஸ் கொரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக் லைட் : ரஷ்ய அரசு அங்கீகாரம்\nஇந்தியாவில் வரலாறு காணாத உச்சமாக நேற்று 4,14,182 பேருக்கு கொரோனா\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15.66 கோடியை தாண்டியது\nஅதிமுக எம்.எல்.ஏ. விஜய பாஸ்கருக்கு கொரோனா\n8 hours ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/19109", "date_download": "2021-05-07T00:54:56Z", "digest": "sha1:RXOPWMIUISJYL7XT3V24FSZJNNGEF4SL", "length": 11124, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "பொத்துவில் லிவர் பூல் கழகம் வெற்றி | Virakesari.lk", "raw_content": "\nநாளொன்றுக்கு 2 ஆயிரத்தை விட அதிக தொற்றாளர்கள் இனங்காணப்படலாம் : எச்சரிக்கிறது தொற்று நோயியல் பிரிவு\nபிழையான எண்ணங்களை மக்கள் மயப்படுத்த எதிக்கட்சி முயற்சி - மதுர விதானகே\nகிளிநொச்சியில் புதிய கொரோனா சிகிச்சை நிலையம் - நள்ளிரவு முதல் சேவைகள் ஆரம்பம்\nமஹரகம நகரசபைக் கூட்டத்தில் மோதல் - விசாரணைகள் ஆரம்பம்\nதனியார் வங்கி உதவி முகாமையாளருக்கு கொரோனா தொற்று ; வங்கிக்கு பூட்டு\nஜம்மு-காஷ்மீரில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை\nகொரோனாவால் இலங்கையில் கர்ப்பிணித் தாய் பலி\n இனங்காணப்படும் தொற்றாளர்களை விட இருமடங்கு தொற்றாளர்கள் சமூகத்தில் \nதம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தை மீண்டும் திறக்க தீர்மானம்\nபொத்துவில் லிவர் பூல் கழகம் வெற்றி\nபொத்துவில் லிவர் பூல் கழகம் வெற்றி\nபொத்துவில் பிரதேச செயலகம் நடத்திய கால்பந்தாட்ட சுற்றுப் போட்டியில், பொத்துவில் லிவர் பூல் விளையாட்டுக் கழகம் 2–0 என்ற கோல்கள் அடிப்படையில் பொத்துவில் கோல்ட் ஸ்டார் விளையாட்டுக் கழகத்தை வெற்றி கொண்டது.\nபொத்துவில் பிரதேசத்திலுள்ள முன்னணி கால்பந்தாட்ட விளையாட்டுக் கழகங்கள் பங்குபற்றிய இச்சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி பொத்துவில் மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.\nவிறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், லிவர் பூல் விளையாட்டுக் கழக வீரர்கள் யெஹ்யாகான்இ ருசைக் ஆகியோர் தலா ஒரு கோலை போட்டனர்.\nபொத்துவில் பிரதேச செயலாளர் என்.எம்.முஸாரத்இ விளையாட்ட�� உத்தியோகத்தர் எஸ்.ரிசான்தன் ஆகியோர் அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர். வெற்றி வீரர்கள் வெற்றிக் கிண்ணம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.\nபொத்துவில் பிரதேச செயலகம் கால்பந்தாட்டம் சுற்றுப் போட்டி கோல்ட் ஸ்டார்\nதந்தையை விடுவித்துத் தருமாறு இளையோர் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பாரமி உருக்கம்\nமீன்பிடித் தொழிலுக்குச் சென்று அந்தமான் தீவுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது தந்தையை விடுவித்துத் தரும்படியாக இளையோர் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பாரமி வசந்தி மாரிஸ்டெல்லா சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\n2021-05-06 17:17:12 தடைத்தாண்டல் ஓட்டப்போட்டி பாரமி வசந்தி மாரிஸ்டெல்லா வெண்கலப்பதக்கம்\nமூன்று ஒருநாள் போட்டிகளுக்காக பங்களாதேஷுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இலங்கை\nமே 23 முதல் ஆரம்பமாகும் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு குறுகிய தொடரில் பங்கெடுக்க இலங்கை அணி பங்களாதேஷுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்துள்ளது.\n2021-05-06 08:21:23 இலங்கை பங்களாதேஷ் கிரிக்கெட்\nஐ.பி.எல். தொடரில் பங்கெடுத்த ஆஸி. வீரர்களை இலங்கை அல்லது மாலைதீவுக்கு இடமாற்ற நடவடிக்கை\n2021 ஐ.பி.எல். போட்டிகளில் பங்கெடுத்த அவுஸ்திரேலிய வீரர்களை இலங்கை அல்லது மாலைதீவுக்கு இடமாற்றம் செய்வதற்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை உதவிகளை புரியும் என்று நிக் ஹாக்லி புதன்கிழமை தெரிவித்துள்ளார்.\n2021-05-06 07:43:09 அவுஸ்திரேலியா ஐ.பி.எல். நிக் ஹாக்லி\nதபால் மா அதிபரின் தெரிவித்துள்ள முக்கிய விடயம்..\nகொவிட் 19 தொற்று காரணமாக மூடப்பட்டுள்ள தபால் நிலையங்களில் இம்மாதத்துக்கான புண்ணிய சம்பளத்தை பெற முடியாதவர்கள் தங்களுக்கு பொறுப்பான பிரதேச செயலகங்களில் பெற்றுக்கொள்ள முடியும்\n2021-05-05 22:59:28 கொவிட் 19 தபால் நிலையம் பிரதேச செயலகங்கள்\nஇந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபைக்கு கொரோனாவால் பல கோடிகள் நஷ்டம்\n14 ஆவது இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) போட்டித் தொடர் இடைநடுவில் நிறுத்தப்பட்டது\n2021-05-05 18:48:56 14 ஆவது இந்தியன் பிரீமியர் லீக் ஐ.பி.எல் கொரோனா\nஇலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து மேலும் 810 பேர் குணமடைவு..\nபணவீக்கம் ஏப்ரலில் 3.9 சதவீதமாக வீழ்ச்சி: இலங்கை மத்திய வங்கி\nவிலை அதிகரிப்பிற்கு ��னுமதியில்லையேல் தட்டுப்பாடு ஏற்படலாம்: லாப் கேஸ் நிறுவனம்\nஸ்புட்னிக் கொரோனா தடுப்பூசி போடும் பணி ஆரம்பம்\nகளுத்துறை சிறைச்சாலைக்குள் போதைப்பொருட்கள் அடங்கிய பொதிகள் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2020/12/blog-post_196.html", "date_download": "2021-05-07T01:48:41Z", "digest": "sha1:3RSTYALRRVXVUNFABYGE3X3XJJZ4UKA3", "length": 9019, "nlines": 90, "source_domain": "www.yarlexpress.com", "title": "வடக்கு மாகாண சுகாதார சேவைகள் அமைச்சின் அலுவலகம் கொரோனா அச்சநிலைமையால் முடக்கம். \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nவடக்கு மாகாண சுகாதார சேவைகள் அமைச்சின் அலுவலகம் கொரோனா அச்சநிலைமையால் முடக்கம்.\nயாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் அமைந்துள்ள வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் அலுவலகப் பணியாளர்களை அலுவலகத்திற்கு வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்...\nயாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் அமைந்துள்ள வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் அலுவலகப் பணியாளர்களை அலுவலகத்திற்கு வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.\nபண்ணைப் பகுதியில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் கட்டடத் தொகுதியின் முதலாவது மாடியில் சுகாதார அமைச்சுப் பணிமனை அமைந்துள்ளது.\nசுகாதார அமைச்சின் சாரதிகளில் ஒருவருடைய நண்பருக்கு நேற்று கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையிலேயே குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nநேற்று தொற்றுக்கு உள்ளானவர்களாக அறிவிக்கப்பட்டவர்களில் ஒருவராகிய இணுவிலைச் சேர்ந்த நபரும் சுகாதார அமைச்சின் சாரதியின் நண்பர்கள் என்றும் நேற்று முன்தினம் இருவரும் சந்தித்துக் கலந்துரையாடியதாகவும் தெரியவந்துள்ளது.\nஇந்நிலையில் குறித்த சாரதி பணியாற்றும் சுகாதாரத் திணைக்களக் கட்டடத் தொகுதியின் முதலாவது மாடியில் பணியாற்றும் ஊழியர்களை மறு அறிவித்தல் வரும் வரும் வரையில் பணிக்கு வரவேண்டாம் என்று திணைக்களத்தினரால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nகுறித்த சாரதிக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அதன் முடிவுகளின் அடிப்படையிலேயே அடுத்த கட்ட நடவடிக்கை என்றும் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.\nவணிகம் / பொருளாதாரம் (7)\nமாநகர காவல்படையினரின் சீருடை பறிமுதல் - மாநகரசபைக்கு ஆப்பு வைத்த பொலீஸார் ..\nBREAKING NEWS :- ஊரடங்கு தொடர்பில் இராணுவத் தளபதி சற்றுமுன் வெளியிட்ட அறிவிப்பு\nஅத்தியாவசிய சேவைக்கு மாத்திரமே அனுமதி\nYarl Express: வடக்கு மாகாண சுகாதார சேவைகள் அமைச்சின் அலுவலகம் கொரோனா அச்சநிலைமையால் முடக்கம்.\nவடக்கு மாகாண சுகாதார சேவைகள் அமைச்சின் அலுவலகம் கொரோனா அச்சநிலைமையால் முடக்கம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2020/11/blog-post_690.html", "date_download": "2021-05-07T01:03:51Z", "digest": "sha1:RSEQVGZIDU3EYR6UNTYLCNSSDKBLOERF", "length": 10696, "nlines": 93, "source_domain": "www.kurunews.com", "title": "கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிக்கை...!! - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிக்கை...\nகல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிக்கை...\nநாட்டிலுள்ள தமிழ் மற்றும் சிங்கள பாடசாலைகள் 2021 ஆம் ஆண்டு முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக முதலாம் கட்டமாக ஜனவரி 4 ஆம் திகதி ஆரம்பிக்கப்படுமென கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.\nகல்வி அமைச்சின் 33/2020 சுற்றறிக்கையின படியே மேற்படி தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.\nமுதலாம் தவணையின் முதல் கட்டம் ஜனவரி 4 ஆம் திகதி முதல் ஜனவரி 15 ஆம் திகதி வரை (இரண்டு நாட்களும் உட்பட) இடம்பெறவுள்ளதோடு ஜனவரி 16 - 31 ஆம் திகதிகள் வரை க.பொ.த. சாதாரணதரப் பரீட்சைகளுக்கான விடுமுறைகள் வழங்கப்படவுள்ளன.\nமுதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் பெப்ரவரி முதலாம் திகதி முதல் ஏப்ரல் 9 ஆம் திகதி வரை (இரண்டு நாட்களும் உட்பட) இடம்பெறவுள்ளது.\nஇரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஏப்ரல் 19 ஆம் திகதி முதல் ஜூலை 30 ஆம் திகதி வரையும் (இரண்டு நாட்களும் உட்பட) மூன்றாம் தவணை ஆகஸ்ட் 30 முதல் டிசம்பர் 3 ஆம் திகதி வரையும் இடப்பெறவுள்ளன.\nஇதேவேளை முஸ்லிம் பாடசாலைகளின் 2021 ஆம் ஆண்டு கல்வி நடவடிக்கைகளில் முதலாம் தவணையின் முதல் கட்டம் ஜனவரி 4 ஆம் திகதி முதல் ஜனவரி 15 ஆம் திகதி வரை (இரண்டு நாட்களும் உட்பட) இடம்பெறவுள்ளதோடு ஜனவரி 16 - 31 ஆம் திகதிகள் வரை க.பொ.த. சாதாரணதரப் பரீட்சைகளுக்கான விடுமுறைகள் வழங்கப்படவுள்ளன. முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் பெப்ரவரி முதலாம் திகதி முதல் ஏப்ரல் 9 ஆம் திகதி வரை (இரண்டு நாட்களும் உட்பட) இடம்பெறவுள்ளது.\nஇரண்டாம் தவணையானது மே 17 திங்கட்கிழமை முதல் ஆகஸ்ட் 25 புதன் கிழமை வரை (இரண்டு நாட்களும் உட்பட) இடம்பெறும். ஆகஸ்ட் 26 மற்றும் 27 ஆம் திகதிகள் விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.\nமுன்றாம் தவணையானது ஆகஸ்ட் 30 முதல் டிசம்பர் 3 ஆம் திகதி வரையும் இடப்பெறவுள்ளதாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள 2021 ஆம் ஆண்டுக்கான பாடசாலை நாட்காட்டியில் தெரிவிக்கப்பட்டுள்ளது\nLabels: எமது பகுதிச் செய்திகள்\n\"Kurunews.com ஐ பார்வையிடும் அன்பர்களே Facebook பக்கத்தை Like பண்ணிட்டு போங்கள்\".\nமட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை; பல்வேறு செயற்பாடுகளுக்கு தடை- மாவட்ட அரசாங்க அதிபர்...\nமட்டக்ககளப்பில் தனியார் வகுப்பு நடாத்த தடை விதித்துள்ளதுடன் கொரோனா அதிகரிப்பால் மட்டு போதனா வைத்தியசாலையில் ஒட்சிசன் தேவை அதிகரித்துள்ளது....\nசகல பாடசாலைகளுக்கும் மே மாதம் 07ம் திகதி வரை விடுமுறை\nநாடளாவிய ரீதியில் அனைத்துப் பாடசாலைகளையும் தொடர்ந்தும் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் 7 ஆம் திகதி வரை பாடசாலை...\n10 , 11 தரங்களில் பாடவிதான மாற்றம் அத்துடன் க.பொ.த சா/த, உ/த பரீட்சை நடைபெறும் காலங்களும் மாற்றம்\nதரம் 10 ,11 க்கான பாடத்திட்டங்களை ஒரு வருடம் & 9 மாத காலத்திற்கு மறுசீரமைக்கவும், ஆகஸ்ட் மாதத்தில் க.பொ.த. (சா /த) பரீட்சையை நடாத்தவும்...\nபுனித மிக்கேல் கல்லூரி மாணவன் பௌதீக விஞ்ஞான பிரிவில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலிடம்.\nவெளியான 2020 ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பௌதீக விஞ்ஞான பிரிவில் குகராஜா சஜீவ் 3 A சித்திகளுடன் ...\nமட்டக்களப்பு மாவட்டத்தில் விஞ்ஞான பிரிவில் முதலிடத்தை பெற்ற மட்/பட்டிருப்பு தேசிய பாடசாலை மாணவன்\nவெளியான 2020 ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் விஞ்ஞான பிரிவில் மகிழூர் கண்ணகிபுரத்தை சேர்ந்த தம்பி...\nமட்டக்களப்பு- கல்லடியில் 09 பேருக்கு கொரோனா தொற்று உறுதி...\nமட்டக்களப்பு மாவட்ட மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுற்குற்பட்ட கல்லடி பிரதேசத்தில் இன்றைய தினம் 09 பேருக்கு கொரோன தொற்று உறுதிசெய்யப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2021/01/blog-post_195.html", "date_download": "2021-05-07T02:04:25Z", "digest": "sha1:IH2ZSPEHISNSHY4UND7JBVVE7WTQ6I2B", "length": 11883, "nlines": 92, "source_domain": "www.kurunews.com", "title": "ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை வழக்கில் இருந்து சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) உட்பட ஐந்து பேரும் விடுதலை..!! - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை வழக்கில் இருந்து சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) உட்பட ஐந்து பேரும் விடுதலை..\nஜோசப் பரராஜசிங்கம் படுகொலை வழக்கில் இருந்து சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) உட்பட ஐந்து பேரும் விடுதலை..\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பிலான வழக்கில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) உட்பட ஐந்து பேரும் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.\nகுறித்த வழக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற விசேட நீதிபதி டி.சூசைதாசன் முன்னிலையில் இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் 2005ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் திகதி மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் படுகொலை செய்யப்பட்டார்.\nகுறித்த சம்பவம் தொடர்பாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்ட ஐந்து பேர் சந்தேகத்தின் பேரில் கடந்த 2015ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.\nஇதனையடுத்து, 2015ஆம் ஆண்டு தாங்கள் கைதுசெய்யப்பட்டு குற்ற ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்ட முதலாம் 02ஆம் எதிரிகளின் வாக்குமூலமானது சுயேட்சையாக வழங்கப்படவில்லை, தூண்டுதல் அல்லது அச்சுறுத்தல் காரணமாக அந்த வாக்குமூலத்தினை வழங்கியிருந்தார்கள், பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் நேரடியாக நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு வாக்குமூலம் வழங்கியிருந்ததாக தெரிவித்து மேன்முறையீட்டு நீதிமன்றில் மீளாய்வு விண்ணப்பித்தனர்.\nஇதன் பிரகாரம் குறித்த ஒப்புதல் வாக்குமூலத்தினை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்தன் அடிப்படையில் 24ஆம் ��ிகதி மட்டக்களப்பு மேல்நீதிமன்றத்தில் சட்டமா அதிபரின் ஒப்புதலின் பேரில் பிணை வழங்கப்பட்டிருந்தது.\nஇந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை சட்டமா அதிபர் திணைக்களம் இந்த வழக்கினை தொடர்ந்து நடாத்தமுடியாது என மட்டக்களப்பு மேல் நீதிமன்றுக்கு அறிவித்திருந்த நிலையில், வழக்கின் குற்றச்சாட்டுகளில் இருந்து அவர்களை விடுவித்து வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\n\"Kurunews.com ஐ பார்வையிடும் அன்பர்களே Facebook பக்கத்தை Like பண்ணிட்டு போங்கள்\".\nமட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை; பல்வேறு செயற்பாடுகளுக்கு தடை- மாவட்ட அரசாங்க அதிபர்...\nமட்டக்ககளப்பில் தனியார் வகுப்பு நடாத்த தடை விதித்துள்ளதுடன் கொரோனா அதிகரிப்பால் மட்டு போதனா வைத்தியசாலையில் ஒட்சிசன் தேவை அதிகரித்துள்ளது....\nசகல பாடசாலைகளுக்கும் மே மாதம் 07ம் திகதி வரை விடுமுறை\nநாடளாவிய ரீதியில் அனைத்துப் பாடசாலைகளையும் தொடர்ந்தும் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் 7 ஆம் திகதி வரை பாடசாலை...\n10 , 11 தரங்களில் பாடவிதான மாற்றம் அத்துடன் க.பொ.த சா/த, உ/த பரீட்சை நடைபெறும் காலங்களும் மாற்றம்\nதரம் 10 ,11 க்கான பாடத்திட்டங்களை ஒரு வருடம் & 9 மாத காலத்திற்கு மறுசீரமைக்கவும், ஆகஸ்ட் மாதத்தில் க.பொ.த. (சா /த) பரீட்சையை நடாத்தவும்...\nபுனித மிக்கேல் கல்லூரி மாணவன் பௌதீக விஞ்ஞான பிரிவில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலிடம்.\nவெளியான 2020 ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பௌதீக விஞ்ஞான பிரிவில் குகராஜா சஜீவ் 3 A சித்திகளுடன் ...\nமட்டக்களப்பு மாவட்டத்தில் விஞ்ஞான பிரிவில் முதலிடத்தை பெற்ற மட்/பட்டிருப்பு தேசிய பாடசாலை மாணவன்\nவெளியான 2020 ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் விஞ்ஞான பிரிவில் மகிழூர் கண்ணகிபுரத்தை சேர்ந்த தம்பி...\nமட்டக்களப்பு- கல்லடியில் 09 பேருக்கு கொரோனா தொற்று உறுதி...\nமட்டக்களப்பு மாவட்ட மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுற்குற்பட்ட கல்லடி பிரதேசத்தில் இன்றைய தினம் 09 பேருக்கு கொரோன தொற்று உறுதிசெய்யப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mybhaaratham.com/2019/11/blog-post_73.html", "date_download": "2021-05-07T01:26:49Z", "digest": "sha1:Y4ISYG4UVKG7Z4EF3WDHHJVMPWBEUJSY", "length": 9304, "nlines": 123, "source_domain": "www.mybhaaratham.com", "title": "Bhaaratham Online Media: 'மைபிபிபி' இனி 'பிபிபி' மட்டுமே- டான்ஸ்ரீ கேவியஸ்", "raw_content": "\n'மைபிபிபி' இனி 'பிபிபி' மட்டுமே- டான்ஸ்ரீ கேவியஸ்\n'மைபிபிபி' கட்சி இனி 'பிபிபி' கட்சி என்ற மழைய அடையாளத்திற்கே திரும்ப உள்ளது என்று அதன் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எம்.கேவியஸ் தெரிவித்தார்.\nமலேசிய அரசியலில் பிபிபி கட்சியாக பல ஆண்டுகளுக்கு ஒரு தனித்துவம் வாய்ந்த கட்சியாக திகழ்ந்தது. சில ஆண்டுகளுக்கு முன் பிபிபி கட்சி மைபிபிபி என பெயர் மாற்றம் கண்டது.\nமைபிபிபி என கட்சி உருமாற்றம் கண்ட போதிலும் சிலர் கட்சியை தங்களுக்கு சொந்தமாக்க பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு கட்சியை சீர்குலைக்க முயற்சித்தனர்.\nஅதலால் நாளை நடைபெறவுள்ள கட்சியின் ஆண்டுக்கூட்டத்தில் கட்சி பெயர் மாற்றம் தொடர்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அது நடைமுறைப்படுத்தப்படும்.\nஅதோடு, கட்சியில் குழப்பங்களை ஏற்படுத்த முயன்ற தரப்பினருடன் இணைந்து தமக்கெதிரான நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் மனம் திருந்தி மீண்டும் கட்சியில் இணைய நினைத்தால் நாளை கம்போங் அத்தாப்பில் நடைபெறவுள்ள கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டு தம்முடன் பரஸ்பர பேச்சுவார்த்தையில் ஈடுபடலாம் என்று அவர் மேலும் சொன்னார்.\n'இயற்கையை காப்போம் இனியதோர் உலகை படைப்போம்' - சிறப்பு கட்டுரை\nபினாங்கு - இயற்கை என்பது இயல்பாக இருப்பது என்பது பொருள் கொண்டதாகும் . இயல்பாகவே தோன்றி மறையும் பொருட்கள் அவற்றின் இயக்கம் , அவை இயங...\nபூச்சோங்- மாரடைப்பின் காரணமாக மனைவியும் அவரை தொடர்ந்து கணவனும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. சிலாங்கூர்,பூச்சோங்கைச் ச...\nசோழன் ஆட்சியை இழந்ததைப்போல, மஇகாவை இழந்து விடாதீர்கள்\nசேரன், சோழன், பாண்டியன் ஆட்சிகளை இழந்து 500 ஆண்டுகளைக் கடந்து விட்டோம். இங்கு வந்து 200 ஆண்டுகளாகக் கட்டமைத்த வாழ்க்கையைத்தான் இன்றும...\n2020இல் தமிழ்ப்பள்ளியே நமது தேர்வாகட்டும்\nஅன்வாரின் 'ரீஃபோர்மாசி' செய்யாததை 'ஹிண்ட்ராஃப்' சா...\nவர்த்தகத் துறையில் இந்தியப் பெண்களும் பங்காற்ற வேண...\nடான்ஸ்ரீ கேவியசுக்கு ஆதரவாக திரண்ட பூர்வக்குடியினர்\n'மைபிபிபி' இனி 'பிபிபி' மட்டுமே- டான்ஸ்ரீ கேவியஸ்\nமலேசிய அரசியலை புரட்டி போட்டது 'ஹிண்ட்ராஃப்' மட்டு...\n'பாடாங் செட்டி' பெயர் மாற்றப்படக்கூடாது- MIV மணிமா...\nயூபிஎஸ்ஆர் தேர்வில் 'கெத்து' காட்டிய தமிழ்ப்பள்ளிகள்\nயூபிஎஸ்ஆர் தேர்வில் 8ஏ பெற்றார் கெளரி\nயார் வேண்டுமானாலும் பிரதமர் ஆகலாம்- டத்தோஶ்ரீ அன்வார்\nவிரைவில் அமைச்சரவை மாற்றம்- பிரதமர்\nஅரசாங்கத்தின் தவறுகளை கண்மூடித்தனமாக ஆதரிக்க வேண்ட...\nபக்காத்தான் கூட்டணிக்கு 'மரண அடி' கொடுத்துள்ள தேமு\nசிலாங்கூர் மாநில அரசின் தீபாவளி கொண்டாட்டம்\nஎம்பி பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன் – பிரபாகரன்\nசிலாங்கூர் அரசின் இலவச குடிநீருக்கான விண்ணப்பப் பதிவு\n'சொஸ்மா' திருத்தம்: வாக்களித்த மக்களுக்கு செய்யும்...\nபக்காத்தான் தலைமைத்துவம் மீது இந்தியர்கள் அதிருப்த...\nஸாகீர் நாய்க்கை அனுப்ப மாட்டோம் - இந்தியாவுக்கு வி...\nஆஸ்ட்ரோ உறுதுணை ஏற்பாட்டில் இலவச நிதி கல்வியறிவு ப...\nஎல்டிடிஇ; குணசேகரன் மீதான குற்றச்சாட்டுகள் ரத்து\nமதவாதத்தை தூண்டுவோரின் சுயநலனுக்கு பலியாகாமல் மலேச...\nமுந்தைய தவறுகளை மீண்டும் செய்ய விரும்பவில்லை- துன்...\nபிரதமர் பதவி அன்வாரிடமே ஒப்படைக்கப்படும்- துன் மகா...\nதேசிய நிலையிலான தீபாவளி உபசரிப்பை அரசாங்கம் நடத்தா...\nமஇகா மீண்டும் எழுச்சி பெறும்- டான்ஶ்ரீ விக்னேஸ்வரன...\nகண்வலி மட்டுமே; குருடாகவில்லை - டத்தோஸ்ரீ நஜிப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://abedheen.wordpress.com/category/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%81/", "date_download": "2021-05-07T01:03:08Z", "digest": "sha1:7PUZUMNAMIB65ZJXYYA473T2WCSDYY3J", "length": 31283, "nlines": 616, "source_domain": "abedheen.wordpress.com", "title": "மதுரை சோமு | ஆபிதீன் பக்கங்கள்", "raw_content": "\nthink loud : கொட்டிக்கிடக்கும் இன்பம்\n‘சைத்தான்’ சாதிக் வாசிக்கச் சொன்ன ‘வரவர ராவ்’ நேர்காணலை (நன்றி : கீற்று) படித்துவிட்டு, ரிலாக்ஸ் பண்ண அலைந்தபோது -பழைய பாடல்களுக்காக – நண்பர் மஜீத் அனுப்பிய ஒரு சுட்டியை அழுத்தினேன்; அதிசயித்துப் போனேன். ஜிஎன்பி, மணிஐயர், கிட்டப்பா, பாகவதர், மஹாராஜபுரம், பாலமுரளி, சிட்டிபாபு, எல். சுப்ரமணியம் , லால்குடி, சேஷகோபாலன்… இன்னும் எத்தனை முத்துகள் அவ்வளவு பேரும் அந்த வலைப்பூவில் உட்கார்ந்திருக்கிறார்கள்\n (ஆர்ப்பாட்டம் செய்துவிட்டு அரபி போன பிறகு தில்லானாக்களை மட்டும் இப்போது ட்வுன்லோட் செய்தேன்\nஇங்கே மதுரைசோமு மட்டும். வலையேற்றிய வைத்திநாதன் ஹரிஹரன் அவர்களுக்கு நன்றிகள��. வைரச் சுரங்கமான Musicindiaonline போல , கேட்கவைப்பதோடு நின்றுவிடாமல், பதிவிறக்கம் செய்யும் வாய்ப்பும் அளித்து பெரிய வேலை/உதவி செய்திருக்கிறீர்கள் சார். வணங்குகிறேன். ஹிந்துஸ்தானி இசைக் கலைஞர்களை எப்போது சேர்க்கப் போகிறீர்கள்\nசுகுமாரனின் ‘என்ன கவி பாடினாலும்’ கட்டுரையை நண்பர்கள் முதலில் வாசித்துவிட்டு சோமுவைக் கேளுங்கள். நன்றி.\nஆபிதீன் பக்கங்கள் ii :\n3. எழுத்தாளர்களின் இணையதளங்கள் (Links)\n5. கச்சேரிகள் , கஜல்கள்\n8 . நாகூர் ரூமி பதிவுகள்\nகலீபா உமர் (ரலி) (1)\nஉஸ்தாத் ஸலாமத் அலி கான் (1)\nகுலாம் முஸ்தஃபா கான் (1)\nநுஸ்ரத் ஃபதே அலிகான் (6)\nபண்டிட் ராஜ்சேகர் மன்ஸூர் (1)\nமுகேஷ் (பீர் முஹம்மது) (1)\nவிஸ்வநாதன் / ராமமூர்த்தி (2)\nதயவு பிரபாவதி அம்மா (1)\nஅப்துல் வஹ்ஹாப் பாகவி (18)\nகுலாம் காதர் நாவலர் (4)\nஅபுல் கலாம் ஆசாத் (2)\nஅஸ்கர் அலி என்ஜினியர் (1)\nஎச். பீர் முஹம்மது (2)\nகிண்ணியா எஸ்.பாயிஸா அலி (2)\nகுர்அதுல் ஐன் ஹைதர் (1)\nகுளச்சல் மு. யூசுப் (5)\nசாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (2)\nஜே. பி. சாணக்யா (1)\nஜோ டி குரூஸ் (1)\nதொ.மு. சி. ரகுநாதன் (1)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nபோர்வை பாயிஸ் ஜிப்ரி (1)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nவேங்கட சுப்புராய நாயகர் (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (5)\nஹரி கிருஷ்ணன் (ஹரிகி) (1)\nத சன்டே இந்தியன் (1)\nநேஷனல் புக் டிரஸ்ட் (13)\nஅங்கனெ ஒண்ணு இங்கனெ ஒண்ணு (1)\nமணல் பூத்த காடு (1)\nஇரா. சண்முக வடிவேல் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/what-you-donate-for-your-birth-star/", "date_download": "2021-05-06T23:58:07Z", "digest": "sha1:LLIZIBKX4LSGAQMGUABZDE2C2QO23TOL", "length": 13673, "nlines": 125, "source_domain": "dheivegam.com", "title": "என்ன நட்சத்திரத்திற்கு என்ன தானம்? | Enna natchathiram enna thanam in Tamil.", "raw_content": "\nHome ஜோதிடம் உங்கள் நட்சத்திரத்திற்கு என்ன தானம் செய்ய வேண்டும் என்று உங்களுக்கு தெரியுமா\nஉங்கள் நட்சத்திரத்திற்கு என்ன தானம் செய்ய வேண்டும் என்று உங்களுக்கு தெரியுமா\nதானங்கள் என்றாலே சிறப்பு வாய்ந்தது தான். அதிலும் உங்களது நட்சத்திரத்திற்கு என்ன தானம் என்று தெரிந்து கொண்டு உங்களால் முடிந்த வரை ஒரே ஒரு முறை அந்த தானத்தை செய்தால் கூட அது உங்களின் புண்ணியக் கணக்கில் சேர்ந்துவிடும். உங்கள் நட்சத்திரத்திற்கான தானம் என்ன என்பதை இந்தப் பதிவின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்.\nஅஸ்வினி-உடல் நிலை சரி இல்லாதவர்களுக்கு மருத்துவம் சம்பந்தப்பட்ட மரு��்துகளை தானமாக வழங்கலாம். திருமணத்திற்காக கஷ்டப்படும் பெண்களுக்கு உங்களால் முடிந்த தங்கத்தை தானமாக வழங்கலாம்.\nபரணி-அன்னதானம் செய்வது மிகவும் சிறந்தது. கோவில்களுக்கு எள் தானமாக கொடுக்கலாம்.\nகிருத்திகை-இரும்பு தானம் மிகச் சிறந்தது. வறுமையில் வாடிக் கொண்டு இருப்பவர்களுக்கு உங்களால் முடிந்த பண உதவியைச் செய்யலாம்.\nரோஹிணி-ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த கருவிகளை தானமாக வழங்கலாம். பால் தானம் செய்வது சிறந்தது.\nமிருகசீரிடம்-மனவேதனையில் உள்ளவர்களுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்து வாருங்கள். கோ தானம் செய்வது மிகவும் சிறந்தது.\nதிருவாதிரை-கோவில்களில் ஏழை மக்களுக்கு அன்னதானம் அளிப்பது நல்லது. எள் தானம் செய்யலாம்.\nபுனர்பூசம்-முதியவர்களுக்கு அன்னதானம் செய்வது சிறந்தது.\nபூசம்-கோ தானம் செய்யலாம். அல்லது பசுமாட்டிற்கு உங்களால் முடிந்தவரை தீவனம் வாங்கி கொடுக்கலாம்.\nஆயில்யம்-சிவன் கோவில்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யலாம். ஏழைகளின் திருமண செலவிற்க்கு உங்களால் முடிந்த உதவியை செய்யலாம்.\nமகம்-ஏழைக் குழந்தைகளுக்கு படிப்பதற்கு உதவி செய்யலாம். அவர்களுக்கு தேவையான புத்தகங்களை வாங்கி தானமாக கொடுக்கலாம். எள் தானம் செய்யலாம்.\nபூரம்-சிவன் கோவில்களில் விசேஷ பூஜைகளுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்யலாம். முடிந்தால் லிங்கத்தை தானமாக அளிக்கலாம்.\nஉத்திரம்-முதியவர்களுக்கு வஸ்திர தானம் அளிக்கலாம். எள் தானம் செய்யலாம்.\nஹஸ்தம்-முடிந்தால் ஏழைப் பெண்ணின் திருமணத்திற்கு உங்களால் முடிந்த தங்கத்தை வாங்கி தரலாம்.\nசித்திரை-ஆதரவற்ற குழந்தைகளுக்கு வஸ்திர தானம் செய்யலாம்.\nஸ்வாதி-சுவாசம் சம்பந்தப்பட்ட பிரச்சினை உள்ளவர்களுக்கு உங்களால் முடிந்த மருத்துவ உதவியை செய்யலாம்.\nவிசாகம்-பாழடைந்த கோவில்களை சீரமைக்கும் பணியில் உங்களால் முடிந்த உதவியை செய்யலாம்.\nஅனுசம்-உங்களின் கண்முன் யார் கஷ்டப் படுகிறார்களோ அவர்களுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்யலாம்.\nகேட்டை-யாகங்களுக்கு தேவையான பொருட்களை கோவில்களுக்கு தானமாக அளிக்கலாம்.\nமூலம்-கோவில்களில் மரத்தை நடடுவது சிறந்த பலனைத் தரும். கோவில்களுக்கு தேவையான சிறு சிறு பொருட்களை தானமாக வழங்கலாம்.\nபூராடம்-தங்குவதற்க்கு இடம் இல்லாமல் அவதிப்பட்டு வருபவர்களுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்யலாம்.\nஉத்திராடம்-கோவில்களில் இருக்கும் யானைகளுக்கு சாப்பிடுவதற்கு வெல்லம், தேங்காய் தானமாகத் தரலாம்.\nதிருவோணம்-காது கேளாதவர்கள் யாராவது இறந்தால் அவர்களுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள்.\nஅவிட்டம்-திறமை இருக்கும். சாதிக்க சாதிக்கமுடியாதவர்களுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள்.பண உதவியாக இருந்தாலும் சரி. அனுபவ உதவியாக இருந்தாலும் சரி.\nசதயம்-அபிஷேகம் சம்பந்தப்பட்ட பொருட்களை கோவில்களுக்கு தானமாக அளிக்கலாம்.\nபூரட்டாதி-குழந்தைகள் ஆசிரமத்திற்கு உங்களால் முடிந்த வஸ்திரங்களை தானமாக அளிக்கலாம்.\nஉத்திரட்டாதி-கைத்தொழில் செய்து வருபவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யலாம்.\nரேவதி-பராமரிக்கப்படாமல் இருக்கும் கோவில்களுக்கு உங்களால் முடிந்த உதவியைச் செய்யலாம். விளக்கு ஏற்றுவதற்கு நல்லெண்ணெய் வாங்கி கொடுத்தாலும் அது நன்மை தரும்.\n12ல் ராகு இருந்தால் ஒருவருக்கு என்ன பலன் அதற்கான பரிகாரம் என்ன\nஎன்ன நட்சத்திரத்திற்கு என்ன தானம்\nஎந்த 5 ராசிக்காரர்கள் கையில் பணம் தங்குவதில்லை என்ன பண்ணாலும் இவர்களிடம் பணம் சேரவே சேராது\nஎந்த 3 ராசிக்காரர்கள் அதீத நேர்மையுடன், நேர்மையின் சிகரமாக நடந்து கொள்வார்கள் தெரியுமா\nஎந்த 3 ராசிக்காரர்கள் முன் கோபக்காரர்களாக இருப்பார்கள் தெரியுமா\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2017/05/%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AE/", "date_download": "2021-05-07T01:07:17Z", "digest": "sha1:TQ4ZIITJWGOWEYG7CA6REGVEXDFAIOBN", "length": 9309, "nlines": 128, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\n“ஆத்ம சுத்தி” தீமைகளை எப்படி நீக்குகின்றது…\nஆத்ம சுத்தி தீமைகளை எப்படி நீக்குகின்றது…\n“ஓ…ம் ஈஸ்வரா…” என்று உயிரைப் புருவ மத்தியில் எண்ணி அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கி அது எங்கள் ஜீவாத்மா பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உங்கள் உடலுக்குள் செலுத்துங்கள்.\nநம் புலனறிவு (கண்களால்) கொண்டு முன்னால் பார்ப்பது வெகு தூரத்தில் உள்ளதைக் கூர்ந்து கவனி��்து அப்பொருளை நாம் காண முயற்சிக்கின்றோம். அந்தப் பொருளின் சத்தின் தன்மையை நாம் அறிகின்றோம்.\n1.நம் உணர்வுக்குள் அனைத்து நிலைகளிலும் “கண் இணைக்கப்பட்டிருக்கின்றது”,\n2.நாம் எதை நினைவுபடுத்துகின்றோமோ அந்த உணர்வின் நினைவலைகள்\n3.உயிரிலே பட்டு அதன் வழி தான் தெரியும்.\nஅதைப்போல அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் என்ற ஏக்க உணர்வுடன் கண்ணின் நினனைவைச் செலுத்துங்கள்.\nதுருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் ஜீவாத்மா பெறவேண்டும் என்று\n1.உள் நினைவிலே உங்கள் உடலுக்குள் செலுத்தப்படும்போது\n2.உடலிலுள்ள அனைத்து அணுக்களிலும் துருவ நட்சத்திரத்தின் சக்தி இணைகின்றது.\nஅப்படி இணையும் பொழுது நமக்குள் நம்மையறியாமல் உட்புகுந்த அணுக்களுக்குள் சேரும் தீமைகளை\n1.வேக வைத்து ஆவியாக மாற்றி உடலிலிருந்து அப்புறப்படுத்தி விடுகின்றது.\n2.அதற்குப் பின் நம் உடலில் தீமை செய்யும் அணுக்கள் உற்பத்தியாவதில்லை.\n3.அதாவது தீய வினைகள் நமக்குள் வளர்வதில்லை.\nஇதுதான் ஆத்ம சுத்தி. இந்த ஆத்ம சுத்தியை உங்கள் வாழ்க்கையில் எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.\nநீங்கள் தனித்து நாள் முழுவதும் இருந்து பெற முடியாத சக்தியை ஒரு பத்து நிமிடம் துருவ நட்சத்திரத்தின் பேரொளியை நீங்கள் பெற்றபின் அடுத்து உங்கள் வாழ்க்கையில் எதிர்ப்படும் நீங்கள் சந்திக்கும் துன்பங்களிலிருந்து உங்களைக் காத்துக் கொள்ள “இந்த ஆத்ம சுத்தி என்ற ஆயுதம்” உங்களுக்குப் பயன்படும்.\n1 thought on ““ஆத்ம சுத்தி” தீமைகளை எப்படி நீக்குகின்றது…\nசாமியையே (ஞானகுரு) எண்ணிக் கொண்டிருப்பதைக் காட்டிலும் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து உடலுக்குள் விளைய வைக்க வேண்டும்\n என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nசீராக ஆத்ம சுத்தி செய்வோருக்குக் கிடைக்கும் பலன்கள்\nஆண்டவனிலிருந்து வந்த பிம்பங்கள் தான் அனைத்துமே என்று எண்ணினால்… “தான்” என்ற தனித்த அகங்காரம் வராது – ஈஸ்வரபட்டர்\nஉங்களுக்குக் கொடுத்த சக்திகளை ஒவ்வொருவரும் விரயம் ஆக்காது பயன்படுத்துங்கள்\n24 X 7 சாமிகள் உபதேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaipoonga.net/cinema/%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5/", "date_download": "2021-05-07T01:10:10Z", "digest": "sha1:CQBL5IMTVCETMGM7UWARV3LX3EGT53SG", "length": 11294, "nlines": 198, "source_domain": "kalaipoonga.net", "title": "ரசிகர்களே... உங்களால் கர்வம் கொள்கிறேன்’ - தனுஷின் நெகிழ்ச்சி அறிக்கை - Kalaipoonga", "raw_content": "\nHome Cinema ரசிகர்களே… உங்களால் கர்வம் கொள்கிறேன்’ – தனுஷின் நெகிழ்ச்சி அறிக்கை\nரசிகர்களே… உங்களால் கர்வம் கொள்கிறேன்’ – தனுஷின் நெகிழ்ச்சி அறிக்கை\nரசிகர்களே… உங்களால் கர்வம் கொள்கிறேன்’ – தனுஷின் நெகிழ்ச்சி அறிக்கை\nதமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களுள் ஒருவர் தனுஷ். இவரது தனது 37 ஆவது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் காமன் டிபிக்களை வைத்துக்கொண்டும், மேஷ் ஆப் வீடியோக்களை வெளியிட்டும் மகிழ்ந்தனர். அவரது பிறந்த நாளை முன்னிட்டு ஜகமே தந்திரம் படத்தில் இருந்து ஒரு பாடலும், கர்ணன் படத்திலிருந்து ஒரு மேக்கிங் வீடியோவும் வெளியிடப்பட்டது. இவையும் அவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.\nஇந்நிலையில் இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தனுஷ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் என் ரசிகர்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை. உங்கள் அன்பால் திக்குமுக்காடிப் போய்விட்டேன். நீங்கள் வெளியிட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை என்னால் முடிந்த வரை பார்த்தேன். ரசித்தேன், மகிழ்ந்தேன். மிக்க மிக்க நன்றி. நீங்கள் செய்த நற்பணிகளை கண்டு நெகிழ்ந்த நான் உங்களால் கர்வம் கொள்கிறேன். பெருமைப் படுகிறேன்.\nஎனக்கு வாழ்த்து தெரிவித்த திரைதுறையினர், சமூக ஆர்வலர்கள், அரசியல் பெருமக்கள், நலம் விரும்பிகள் என அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.\nரசிகர்களே... உங்களால் கர்வம் கொள்கிறேன்’ - தனுஷின் நெகிழ்ச்சி அறிக்கை\n மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை..\nமாநாடு டப்பிங் ஆரம்பம்… படக்குழு வெளியிட்ட புகைப்படங்கள்\nமூத்த தலைவர் ஆர்.எம்.வீரப்பனை நேரில் சந்தித்து ஆசி பெற்றார் மு.க.ஸ்டாலின் | Video\nநமீதா தியேட்டர்ஸ் – உண்மை சம்பவங்களின் அடிப்படியில் உருவாகும் படங்களை ஒளிபரப்பும் முதல் OTT தளம்\nவெளியானது 34 பேர் கொண்ட தமிழக அமைச்சரவை பட்டியல்\nவெளியானது 34 பேர் கொண்ட தமிழக அமைச்சரவை பட்டியல் தமிழகத்தின் முதலமைச்சரா�� திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை சென்னை - கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்க உள்ளார். கொரோனா பரவலை கருத்தில்...\nமாநாடு டப்பிங் ஆரம்பம்… படக்குழு வெளியிட்ட புகைப்படங்கள்\nமாநாடு டப்பிங் ஆரம்பம்... படக்குழு வெளியிட்ட புகைப்படங்கள் சிம்பு நடிப்பில் உருவாகி உள்ள படம் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கியுள்ள இப்படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார். இப்படத்தில் சிம்பு அப்துல் காலிக்...\nமூத்த தலைவர் ஆர்.எம்.வீரப்பனை நேரில் சந்தித்து ஆசி பெற்றார் மு.க.ஸ்டாலின் | Video\nமூத்த தலைவர் ஆர்.எம்.வீரப்பனை நேரில் சந்தித்து ஆசி பெற்றார் மு.க.ஸ்டாலின் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றதை அடுத்து தமிழகத்தின் அடுத்த முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பு ஏற்க உள்ளார். நாளை (மே 7...\nவெளியானது 34 பேர் கொண்ட தமிழக அமைச்சரவை பட்டியல்\nவெளியானது 34 பேர் கொண்ட தமிழக அமைச்சரவை பட்டியல் தமிழகத்தின் முதலமைச்சராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை சென்னை - கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்க உள்ளார். கொரோனா பரவலை கருத்தில்...\nமாநாடு டப்பிங் ஆரம்பம்… படக்குழு வெளியிட்ட புகைப்படங்கள்\nமாநாடு டப்பிங் ஆரம்பம்... படக்குழு வெளியிட்ட புகைப்படங்கள் சிம்பு நடிப்பில் உருவாகி உள்ள படம் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கியுள்ள இப்படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார். இப்படத்தில் சிம்பு அப்துல் காலிக்...\nமூத்த தலைவர் ஆர்.எம்.வீரப்பனை நேரில் சந்தித்து ஆசி பெற்றார் மு.க.ஸ்டாலின் | Video\nமூத்த தலைவர் ஆர்.எம்.வீரப்பனை நேரில் சந்தித்து ஆசி பெற்றார் மு.க.ஸ்டாலின் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றதை அடுத்து தமிழகத்தின் அடுத்த முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பு ஏற்க உள்ளார். நாளை (மே 7...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/46793", "date_download": "2021-05-07T01:37:31Z", "digest": "sha1:E2FBFPRUUQYPAXLHTEMFJEOEOIWDSLDF", "length": 9686, "nlines": 101, "source_domain": "selliyal.com", "title": "ராஜிவ் கொலைவழக்கு குற்றவாளிகள் 7 பேரை விடுவிக்க தடை! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome இந்தியா ராஜிவ் கொலைவழக்கு குற்றவாளிகள் 7 பேரை விடுவிக்க தடை\nராஜிவ் கொலைவழக்கு குற்றவாளிகள் 7 பேரை விடுவிக்க தடை\nபுதுடெல்லி, பிப் 21 -ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை குறைக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் மற்றும் மேலும் 4 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு எடுத்துள்ள முடிவுக்கு உச்ச நீதிமன்றம் நேற்று அதிரடியாக தடை விதித்தது.\nமத்திய அரசு தாக்கல் செய்த மனுவின் மீது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.\nஉச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பி.சதாசிவம், நீதிபதிகள் ரன்ஜன் கோகாய், என்.வி. ரமணா ஆகியோர் அடங்கிய குழு நேற்று அளித்த உத்தரவில், கொலை குற்றவாளிகள் மூன்று பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவில் தற்போது உள்ள நிலையே நீடிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.\nராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் மற்ற நான்கு குற்றவாளிகளையும் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு எடுத்தது. இதை எதிர்த்து மத்திய அரசு நேற்று மேல் முறை யீடு மனு தாக்கல் செய்தது.\nஇதை அவசர வழக்காக விசாரணைக்கு ஏற்ற உச்ச நீதிமன்றம் மேற்கண்ட உத்தரவை பிறப்பித்தது.\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள எல்லா நடைமுறைகளையும் மாநில அரசு முறையாக பின்பற்றவில்லை.\nஆகையால், இந்த விஷயத்தில் மத்திய அரசு எழுப்பியுள்ள சட்ட சிக்கல்களை இந்த நீதிமன்றம் விரிவாக ஆராய வேண்டியுள்ளது என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.\nதண்டனையை குறைக்கும் மாநில அரசின் அதிகாரத்தை நீதிமன்றம் கையில் எடுத்துக் கொள்ளவில்லை. அதே நேரத்தில், சட்ட நடைமுறைகளை மாநில அரசு பின்பற்ற வேண்டும் என்பதை உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ளது.\n“சட்ட நடைமுறைகளை மாநில அரசு பின்பற்றாத குறைபாடுகளை கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளோம். இந்த விவகாரத்தை விரிவாக ஆராய வேண்டியுள்ளது. எல்லா மாநிலங்களும் சட்ட நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.\n“மாநில அரசின் அதிகாரத்தை நாங்கள் குறைத்து மதிப்பீடு செய்யவில்லை. ஆனால், மாநில அரசு கடைபிடித்த சட்ட நடைமுறைகளை விரிவாக பரிசீலனை செய்ய உள்ளோம். என்று அந்தக் குழு கூறியது. மேலும் இந்த வழக்கின் அடுத்த விசாரணையை மார்ச் 6ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.\nPrevious articleடாக்டர் சுப்ராவுக்குப் பதிலாக புதிய சுகாதார அமைச்சர் லியோ தியோங் லாய்\nNext articleராஜிவ் காந்தி கொலையாளிகளை விடுவிக்க கூடாது-மன்மோகன் சிங்\nசுஷாந்த் சிங் தற்கொலை – இனி சிபிஐ விசாரணை நடத்தும்\nஅயோத்தியில் இராமர் ஆலயம் நிர்மாணிக்கப்படும் – 5 ஏக்கர் நிலத்தில் மசூதி நிர்மாணிக்கப்படும்\nஅயோத்தியா தீர்ப்பு : மசூதி அமைக்க 5 ஏக்கர் மாற்று நிலம் – சர்ச்சைக்குரிய இடம் ராம்ஜென்ம பூமி நியாசுக்கு ஒதுக்கப்படுகிறது\nதமிழ்நாடு தேர்தல் முடிவுகள் இறுதி நிலவரம் : திமுக: 159 – அதிமுக: 75\nதமிழ்நாடு : டிராபிக் இராமசாமி காலமானார்\nமின்னல் வானொலி : இரவு 9 மணி செய்திகள் ஏன் இடம் பெறவில்லை\nஆஸ்ட்ரோ விழுதுகள் நிகழ்ச்சியில் முத்து நெடுமாறன் பங்கேற்பு\nதிமுக அமைச்சரவை : புதிய அமைச்சர்கள் பட்டியல்\nதிமுக அமைச்சரவை : அன்பில் மகேஷ் பள்ளிக் கல்வி அமைச்சர்\nபிரசாந்த் கிஷோர் : இந்திய சட்டமன்றத் தேர்தல் வெற்றிகளின் கதாநாயகன்\nபில் கேட்ஸ் விவாகரத்து : சொத்துகளை எப்படிப் பிரிப்பார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/sarkar-unseen-video-vijay-fun-side/", "date_download": "2021-05-07T01:49:17Z", "digest": "sha1:PMY7JDPHDG4RAPQD5YNDBPLNX4PFI72O", "length": 6373, "nlines": 93, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Sarkar Unseen Video Vijay Fight Scene", "raw_content": "\nHome செய்திகள் சர்கார் திரைப்படத்தில் வெளிவராத காட்சி..விஜய் செய்யும் சேட்டையை கொஞ்சம் பாருங்கள்..\nசர்கார் திரைப்படத்தில் வெளிவராத காட்சி..விஜய் செய்யும் சேட்டையை கொஞ்சம் பாருங்கள்..\nஇயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. உலகளவில் 200 கோடி ருபாய் வசூல் செய்துள்ள இந்த திரைபடத்தில் இருந்து அன்சீன் வீடியோ ஒன்று தற்போது இணையத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.\nஏற்கனவே இந்த படத்தில் இருந்து சில சர்ச்சையான காட்சிகள் நீக்கபட்டது என்று ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். ஆனால், ரசிகர்களை குதூகுலபடுத்தும் வகையில் தற்போது இணையத்தில் ஒரு வீடியோ வெளியாகியுள்ளது.\nஅந்த வீடியோவில் சர்கார் படத்தில் வரும் முதல் சண்டை காட்சியின் ஒரு பகுதி வருகிறது. அந்த காட்சியில் நடிகர் விஜய் சக நடிகரை ஆட சொல்லி பின்னர் அவரை அடிப்பது போல பாவனை செய்கிறார்.இந்த வீடியோவில் விஜய் செய்யும் இந்த சேட்டை ரசிகர்களால் பெரிதும் விரும்பப்பட்ட வருகிறது.\nPrevious articleஇலவச மிக்சி கிரைண்டர் போய்..விஜய் ரசிகர் அடுத்து என்ன உடைத்தனர் என்று பாருங்கள்..விஜய் ரசிகர் அடுத்து என்ன உடைத்தனர் என்று பாருங்கள்..\nNext articleவிவசாயிக்கு மட்டுமல்ல அவரது பிள்ளைக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் செய்த உதவி..\n4 சிறுவர்கள் உட்பட அஸ்வின் குடும்பத்தில் 10 பேருக்கு கொரோனா தொற்று. (அவர் பயந்த மாதிரியே ஆகிடிச்சே)\nகுஷி பட ஜோதிகா போல ட்ரான்ஸ்பிரென்ட் உடையில் புதிய முல்லை நடத்திய போட்டோ ஷூட்.\nவரும் தேர்தலில் விஜய்யின் மக்கள் இயக்கம் எடப்பாடிக்கு ஆதரவா \n பிக் பாஸ் தில்லி முள்ளு.\nசந்திரமுகி படத்தில் முதலில் இந்த இரண்டு நடிகைகள் தான் நடிக்க இருந்ததாம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/madurai/8-boxes-of-remdesivir-covid-19-vaccine-robbed-from-madurai-govt-rajaji-hospital-corona-centre-police-investigating-sources-say/articleshow/82393422.cms?t=1", "date_download": "2021-05-07T00:51:52Z", "digest": "sha1:ZPEVPFJ23LFTZDEJXH5RWU2FMXKMVIS2", "length": 11665, "nlines": 124, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "covid 19 vaccine theft: கொரோனா தடுப்பூசிகள் கொத்தாக திருட்டு: மதுரை மருத்துவமனையில் துணிகரம்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nகொரோனா தடுப்பூசிகள் கொத்தாக திருட்டு: மதுரை மருத்துவமனையில் துணிகரம்\nஇதுவரை சிந்தித்துக்கூடப் பார்க்க முடியாத சம்பவம் மதுரை அரசு மருத்துவமனையில் நிகழ்த்தப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி மருந்து பெட்டிகள் 8 திருடப்பட்டுள்ளன.\nகொரோனா தடுப்பூசிகள் கொத்தாக திருட்டு: மதுரை மருத்துவமனையில் துணிகரம்\nமதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஏற்படுத்தப்பட்டுள்ள கொரோனா சிறப்புச் சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது. குறிப்பாகத் தென் மாவட்டங்களுக்கு முக்கியமான சிகிச்சை மையமாகச் செயல்பட்டு வருகிறது.\nஇந்த சூழலில் மதுரை அரசு மருத்துவமனை கொரோனா சிறப்புச் சிகிச்சை மையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 8 ரெம்டெசிவிர் கொரோனா தடுப்பு மருந்து பெட்டிகள் திருடப்பட்டுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளன. நமக்குக் கிடைத்த தகவல்படி இந்த திருட்டு சம்பவம் நெற்று இரவு நடந்துள்ளது.\nஇது தொடர்பாகப் போலீசிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாம். இதையடுத்து திருட்டுப் போன இடத்திலிருந்த சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் மருத்துவமனை ஊழியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமதுரையில் கொரோனா ஆபத்து மிகவும் தீவிரம்: என்ன செய்கிறது அரசு\nஇப்போதைய நேரத்தில் நாட்டில் விலை மதிப்பில்லாத பொருளாக விளங்கும் கொரோனா தடுப்பு மருந்துகள் திருடப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே ரெம்டெசிவிர் மருந்துகள் கள்ளச் சந்தையில் ரூபாய் 15 ஆயிரம் முதல் ரூபாய் 30 ஆயிரம் வரை விற்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nமதுரையில் கொரோனா ஆபத்து மிகவும் தீவிரம்: என்ன செய்கிறது அரசு\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nதமிழ்நாடுதமிழகத்தில் ஆக்சிஜன் நிலவரம்.. அதிகாரிகளுடன் ஸ்டாலின் ஆலோசனை\nகல்வி செய்திகள்உங்க குழந்தையின் கவன சக்தியை அதிகரிக்க உதவும் TALi App\nதமிழ்நாடுமுன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கொரோனா\nகரூர்செந்தில் பாலாஜி... போக்குவரத்து அமைச்சர் டூ மின்சார துறை அமைச்சர்\nஉலகம்இந்திய மருத்துவர்களுக்கு போப் ஆண்டவர் புகழாரம்\nசினிமா செய்திகள்குட் நியூஸ் வந்தாச்சு: நல்ல வேளை, ரஜினி பயந்தது மாதிரி எதுவும் நடக்கல\nவிருதுநகர்சரியான மழை: விருதுநகர் கிராமங்களில் வெள்ள நீர்\nசெய்திகள்பிக் பாஸ் கேப்ரியல்லாவுக்கு கொரோனா தொற்று உறுதியானது எச்சரிக்கையாக இருந்தும் பாதிப்பு எப்படி\nதமிழ்நாடுஅண்ணே மறக்காம வந்திருங்க: ஸ்டாலின் பதவியேற்புக்கு அழகிரிக்கு அழைப்பு\nடிரெண்டிங்கொரோனா காரணத்தால் திருமணத்தில் மணமகன், மணமகள் செய்த விசித்திர விஷயம்\nடெக் நியூஸ்May 2021-இல் இந்தியாவிற்கு வரும் 7 புது ஸ்மார்ட் போன்கள்; இதோ லிஸ்ட்\nஅழகுக் குறிப்புகூந்தலுக்கு நன்மை செய்யும் ஆரஞ்சு தோல் பொடி ஹேர் மாஸ்க், எப்படி பயன்படுத்துவது\nவீட்டு மருத்துவம்மூக்கு காய்ந்து வறண்ட நிலையில் இருந்தால் இந்த கை வைத்தியம் ட்ரை பண்ணுங்க\nபொருத்தம்ஒரே நேரத்தில் பல பணிகளை செய்ய முடியாத ராசிகள்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/topics/pepper-chicken", "date_download": "2021-05-07T00:45:18Z", "digest": "sha1:3O3A3WRQ6NQQNRIBM4NTNRYOBYPLZWRZ", "length": 3575, "nlines": 45, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "pepper-chicken | Tamil News Online | Latest Tamil News on The Subeditor - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nசுவைமிக்க ஸ்பைசியான பெப்பர் சிக்கன் செய்வது எப்படி\nஆந்திரா என்றாலே காரசாரமான உணவு தான் நினைவிற்க்கு வரும். ஆந்திராவில் மிக பிரபலமான பெப்பர் சிக்கனை எப்படி செய்வது என்பதை பார்ப்போம்.\nகாரம் தூக்கலா பெப்பர் சிக்கன் செய்வது எப்படி\nஆந்திரா என்றாலே காரசாரமான உணவு தான் நினைவிற்க்கு வரும். ஆந்திராவில் மிக பிரபலமான பெப்பர் சிக்கனை எப்படி செய்வது என்பதை பார்ப்போம்.\nகாரசாரமான ஆந்திரா நாடு பெப்பர் சிக்கன் செய்வது எப்படி\nஆந்திரா என்றாலே காரசாரமான உணவு தான் நினைவிற்க்கு வரும்.ஆந்திராவில் மிக பிரபலமான பெப்பர் சிக்கனை எப்படி செய்வது என்பதை பார்ப்போம்.\nஅட்டகாசமான சுவையில்.. மிளகு பூண்டு சிக்கன் கிரேவி ரெசிபி\nஅருமையான ருசியில் அனைவரையும் கவரும் மிளகு பூண்டு சிக்கன் கிரேவி ரெசிபி எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilkilavan.com/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2021-05-07T01:14:47Z", "digest": "sha1:XKDQAFMJNTNYRGIGQC7FMPF6VGSEXVCV", "length": 3806, "nlines": 64, "source_domain": "tamilkilavan.com", "title": "தெரிந்து கொள்ளுங்கள் இனி அரிசியும் உளுந்தும் தனித்தனியா அரைக்காம சேர்த்தே அரைக்கலாம் பஞ்சு போல இட்லிக்கு 100% கேரண்டி | Tamil Kilavan", "raw_content": "\nதெரிந்து கொள்ளுங்கள் இனி அரிசியும் உளுந்தும் தனித்தனியா அரைக்காம சேர்த்தே அரைக்கலாம் பஞ்சு போல இட்லிக்கு 100% கேரண்டி\nதெரிந்து கொள்ளுங்கள் இனி அரிசியும் உளுந்தும் தனித்தனியா அரைக்காம சேர்த்தே அரைக்கலாம் பஞ்சு போல இட்லிக்கு 100% கேரண்டி\nTwitterFacebook குளுகுளு இளநீர் பாயசம் இந்த முறையில் செஞ்சா உடலுக்கு மிக வலிமை …\nகுளுகுளு இளநீர் பாயசம் இந்த முறையில் செஞ்சா உடலுக்கு மிக வலிமை தரும்.\nTwitterFacebook வாழைப்பூவை இனி வேஸ்ட் பண்ணாமல் இப்படி செய்து பாருங்க அப்புறம் விடவே …\nவாழைப்பூவை இனி வேஸ்ட் பண்ணாமல் இப்படி செய்து பாருங்க அப்புறம் விடவே மாட்டீங்க\nகடையில் முட்டை வாங்கறதுக்கு முன்னாடி இந்த வீடியோ பாருங்க\n2 முட்டை இருக்கா வீட்டில் உள்ள அனைவருக்கும் கிரிஸ்பியான ஈவினிங் ஸ்நாக்ஸ் ரெடி.\nமுட்டை சுக்கா லஞ்சுக்கு பக்காவான சைடிஷ் 10 நிமிடத்தில் இப்படி சுவையா செய்து கொடுத்து அசத்துங்க.\nபல கோடி சொத்துக்கு சொந்தக்காரி ஒரு வேலை சோற்றுக்காக வீட்டு வேலை செய்து பிழைக்கும் அவலம்\n20 ஆயிரம் வருடங்களுக்கு முன் மூழ்கிப்போன தமிழனின் வரலாறு.. தற்போது மெல்ல மெல்ல மிதந்து வருகிறது.. தற்போது மெல்ல மெல்ல மிதந்து வருகிறது.. ஒவ்வொரு தமிழனும் உலகத்துக்கு அறிய நண்பர்களுடன் பகிருங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilkilavan.com/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-05-07T01:25:45Z", "digest": "sha1:DGPWO5MC74RFJQTO3DT6JOJLT3EIJJBY", "length": 3939, "nlines": 65, "source_domain": "tamilkilavan.com", "title": "தெரிந்து கொள்வோம் உங்கள் வலது உள்ளங்கையில் இதை எழுதினால் நடக்கும் அதிசயத்தை பாருங்கள் | Tamil Kilavan", "raw_content": "\nதெரிந்து கொள்வோம் உங்கள் வலது உள்ளங்கையில் இதை எழுதினால் நடக்கும் அதிசயத்தை பாருங்கள்\nமுழுமையான நம்பிக்கையோடு செய்யுங்கள் நிச்சயமாக நடக்கும் இவரின் ஆன்மீகத் தகவலை பாருங்கள் தெரிந்து கொள்வோம் உங்கள் வலது உள்ளங்கையில் இதை எழுதினால் நடக்கும் அதிசயத்தை பாருங்கள்\nஉங்கள் வலது உள்ளங்கையில் இதை எழுதினால் நடக்கும் அதிசயத்தை பாருங்கள்\nTwitterFacebook குங்குமம் இட்டுக்கொள்ளும் சரியான முறை மற்றும் சரியான கை விரல் என்ன …\nமறந்தும் கூட குங்குமத்தை இந்த விரலால் இடக்கூடாதாம்\nTwitterFacebook இந்த 3 ஏலக்காயை வீட்டின் இந்த பகுதியில் வைத்தால் உங்கள் கஷ்டங்கள் …\nஇந்த 3 ஏலக்காயை வீட்டின் இந்த பகுதியில் வைத்தால் உங்கள் கஷ்டங்கள் நீங்கும்\nகடையில் முட்டை வாங்கறதுக்கு முன்னாடி இந்த வீடியோ பாருங்க\n2 முட்டை இருக்கா வீட்டில் உள்ள அனைவருக்கும் கிரிஸ்பியான ஈவினிங் ஸ்நாக்ஸ் ரெடி.\nமுட்டை சுக்கா லஞ்சுக்கு பக்காவான சைடிஷ் 10 நிமிடத்தில் இப்படி சுவையா செய்து கொடுத்து அசத்துங்க.\nபல கோடி சொத்துக்கு சொந்தக்காரி ஒரு வேலை சோற்றுக்காக வீட்டு வேலை செய்து பிழைக்கும் அவலம்\n20 ஆயிரம் வருடங்களுக்கு முன் மூழ்கிப்போன தமிழனின் வரலாறு.. தற்போது மெல்ல மெல்ல மிதந்து வருகிறது.. தற்போது மெல்ல மெல்ல மிதந்து வருகிறது.. ஒவ்வொரு தமிழனும் உலகத���துக்கு அறிய நண்பர்களுடன் பகிருங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilkilavan.com/soft-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86/", "date_download": "2021-05-07T00:50:51Z", "digest": "sha1:E6ZA4NVKG74SIHBIBX6P65UG4WTIKTWO", "length": 3466, "nlines": 65, "source_domain": "tamilkilavan.com", "title": "SOFT சப்பாத்தி மிக சுவையாக செய்வது எப்படி? இப்படி ஒரு தடவை செய்து பாருங்க ! | Tamil Kilavan", "raw_content": "\nSOFT சப்பாத்தி மிக சுவையாக செய்வது எப்படி இப்படி ஒரு தடவை செய்து பாருங்க \nSOFT சப்பாத்தி மிக சுவையாக செய்வது எப்படி இப்படி ஒரு தடவை செய்து பாருங்க \n இது புதுசா இருக்கே…10 நிமிடத்தில் உளுந்தே இல்லாமல் மொறு மொறு …\n இது புதுசா இருக்கே…10 நிமிடத்தில் உளுந்தே இல்லாமல் மொறு மொறு மெதுவடை ரெடி\nTwitterFacebook கை வலிக்க கூழ் காய்ச்சாமல் ஈஸியாக ஜவ்வரிசியில் மொறுமொறு வீல் சிப்ஸ் …\nகை வலிக்க கூழ் காய்ச்சாமல் ஈஸியாக ஜவ்வரிசியில் மொறுமொறு வீல் சிப்ஸ் செய்யலாம்.\nகடையில் முட்டை வாங்கறதுக்கு முன்னாடி இந்த வீடியோ பாருங்க\n2 முட்டை இருக்கா வீட்டில் உள்ள அனைவருக்கும் கிரிஸ்பியான ஈவினிங் ஸ்நாக்ஸ் ரெடி.\nமுட்டை சுக்கா லஞ்சுக்கு பக்காவான சைடிஷ் 10 நிமிடத்தில் இப்படி சுவையா செய்து கொடுத்து அசத்துங்க.\nபல கோடி சொத்துக்கு சொந்தக்காரி ஒரு வேலை சோற்றுக்காக வீட்டு வேலை செய்து பிழைக்கும் அவலம்\n20 ஆயிரம் வருடங்களுக்கு முன் மூழ்கிப்போன தமிழனின் வரலாறு.. தற்போது மெல்ல மெல்ல மிதந்து வருகிறது.. தற்போது மெல்ல மெல்ல மிதந்து வருகிறது.. ஒவ்வொரு தமிழனும் உலகத்துக்கு அறிய நண்பர்களுடன் பகிருங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mybhaaratham.com/2021/01/", "date_download": "2021-05-07T00:33:30Z", "digest": "sha1:QETCJCOGKCQ3JA3J7TVBCRBFVXI2KQFR", "length": 106445, "nlines": 415, "source_domain": "www.mybhaaratham.com", "title": "Bhaaratham Online Media: January 2021", "raw_content": "\nமலேசிய வரலாற்றில் முதன் முறையாக மின்னியல் பொங்கல் விழா - கணபதிராவ் தொடங்கி வைத்தார்\nகோவிட்-19 வைரஸ் பெருந்தொற்றால் உலகமே முடங்கியுள்ள நிலையில் சமய, கலாச்சார நிகழ்வுகளும் களையிழந்த நிலையில் உள்ளன. எந்தவொரு இந்தியர் சமய நிகழ்வுகள் மறைந்து விடாமல் பாதுகாக்கும் வகையில் கோத்தா கெமுனிங் வட்டார இந்தியர்கள் மக்களை ஒன்றிணைக்கும் வகையில் 'மின்னியல் பொங்கல் விழா' சிறப்பாக நடைபெற்றது.\nசிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினரும் கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினருமான வீ.கணபதிராவ் தலைமையில் இன்றுக் காலை தாமான் ஶ்ரீ மூடாவில் இப்பொங்கல் விழா தொடங்கி வைத்தார்.\nகோத்தா கெமுனிங் மட்டுமல்லாது கிள்ளான், உலு சிலாங்கூர், பந்திங், கோலசிலாங்கூர் உட்பட பல பகுதிகளை சேர்ந்த 200க்கும் அதிகமான இந்தியக் குடும்பங்கள் 'ZOOM' செயலியின் வழி ஒருங்கிணைந்து தத்தம் இல்லங்களில் பொங்கல் வைத்து குதூகலித்தனர்.\nஇந்நிகழ்வு குறித்து கருத்துரைத்த கணபதிராவ், கோவிட்-19 வைரஸ் பாதிப்பு மக்கள் ஒன்றுகூடலை சிதறச்செய்துள்ளது. ஆயினும் நமது சமய மரபுகள் அழிந்திடாமல் காக்க வேண்டியது நமது கடமையாகவும் உள்ளது.\nஅதனை முன்னிறுத்தியே 'ZOOM' மின்னியல் வாயிலாக பொங்கல் விழாவை ஏற்பாடு செய்து 200க்கும் அதிகமான இந்தியக் குடும்பங்கள் அதில் பங்கேற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.\nதைப்பொங்கல் சூரியனுக்கு நன்றி செலுத்தும் நாளாக இருக்கலாம். அதையும் தாண்டி நமது கலாச்சாரத்தின் அடையாளங்களில் பொங்கலும் ஒன்று. அதனை அடுத்தத் தலைமுறைக்குக் கொண்டுச் செல்வது நமது கடப்பாடாகும். அதனை உணர்ந்து இந்த பொங்கலை சிறப்பாக ஏற்பாடு செய்த நிகழ்வு ஏற்பாட்டாளர் சுகுமாறன் முத்துசாமியை வெகுவாக பாராட்டுகிறேன் என்று கணபதிராவ் குறிப்பிட்டார்.\nமேலும், பொங்கல் விழா என்றாலே ஒன்றுகூடி பொங்கல் வைப்பதுதான் நினைவுக்கு வரும். ஆனால் தற்போதைய நெருக்கடி காலகட்டத்தில் மக்களை ஒன்றிணைக்கவும் பொங்கல் விழாவின் மரபை அடுத்தத் தலைமுறைக்குக் கொண்டுச் செல்லவும் இந்த மின்னியல் பொங்கல் விழா ஏற்பாடு செய்யப்பட்டது என்று சுகுமாறன் முத்துசாமி கூறினார்.\nமலேசியாவில் முதன் முதலாக நடத்தப்பட்ட மின்னியல் பொங்கல் விழாவில் 1,000க்கும் அதிகமானோர் கலந்து கொண்டு பொங்கல் திருநாளை பற்றிய தங்களது கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.\nஇந்நிகழ்வில் ஷா ஆலம் நகராண்மைக் கழக உறுப்பினர்கள் ராயுடு, யுகராஜா, தாமான் ஶ்ரீ மூடா ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலயத் தலைவர் கோ.குமரேசன், உதவித் தலைவர் மோகன் பொன்னன் கலந்து கொண்டனர்.\nமாலை மரியாதை நிமித்தமாகவே முகக்கவரியை கழற்றினேன் - டத்தோஶ்ரீ சரவணன்\nபத்துமலை தேவஸ்தானம் வழங்கிய மாலை மரியாதையை ஏற்பதற்காகவே முகக்கவரியை கழற்றினேன். அதுவும் சிறிது நேரம் மட்டுமே என்று மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எ��்.சரவணன் விவரித்தார்.\nதைப்பூச திருநாளையொட்டி பத்துமலை திருத்தலத்தற்கு டத்தோஸ்ரீ சரவணன் சென்றதும் முகக்கவரியை அணியவில்லை என்றும் கோவிட்-19 எஸ்ஓபி-ஐ மீறினார் எனவும் சமூக ஊடகங்களில் சிலர் விமர்சனம் செய்தனர்.\nஇது குறித்து கருத்து தெரிவித்த டத்தோஶ்ரீ சரவணன், தைப்பூச திருவிழாவை முன்னிட்டு வெள்ளி ரதம் புறப்படுவதற்கு உதவி புரிந்ததன் அடிப்படையில் ஆலய நிர்வாகம் முன்வைத்த அழைப்பு ஏற்றுக் கொண்டே பத்துமலைக்குச் சென்றேன்.\nஅதுவும் ஆலயத்திற்குச் செல்வதற்கு போலீசாரின் அனுமதியை பெற்றப் பின்னரே அங்கு சென்றேன். அங்கு ஆலய தரப்பில் மாலை அணிவித்தபோது மரியாதை நிமித்தமாக முகக்கவரியை கழற்றி மாலையை பெற்றுக் கொண்டேன், அதுகூட சில நிமிடம் மட்டுமே. பின்னர் முகக்கவரியை அணிந்து கொண்டேன்.\nமேலும், மேளதாளங்கள் இசைக்க ஏற்பாடு செய்யப்பட்டது தமக்கு தெரியாது. அங்கு சென்ற பின்னர் மேளதாளங்கள் இசைக்கப்பட்டதை அப்போதுதான் உணர்ந்ததாக அவர் மேலும் சொன்னார்.\nஉச்சமடையும் கோவிட்-19; தோல்வி காண்கிறதா பிகேபி\nபெரும் அச்சுறுத்தலாக மாறி வரும் கோவிட்-19 பெருந்தொற்றை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பிகேபி) தோல்வி கண்டுள்ளதா எனும் கேள்வி மக்களிடத்தில் எழுந்துள்ளது.\nகோவிட்-19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.\nஇன்று இந்நோயின் தீவிரம் 5ஆயிரமாக உயர்வு கண்டுள்ளது.\nகோவிட்-19 வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த பிகேபி அமல்படுத்தப்பட்டு இரு வாரங்களை கடந்து விட்ட நிலையில் அதன் தீவிரம் இன்னும் அதிகமாகவே உள்ளது.\nநிலைமை இவ்வாறே சென்றுக் கொண்டிருந்தால் பிகேபி அமல்படுத்தி என்ன பயன் என்று கேள்வி பெருவாரியான மக்களிடையே எழுந்துள்ளது.\nஉள்ளமே ஆலயம் என்பதை போதிப்பது இந்துமதம்- டான்ஶ்ரீ விக்னேஸ்வரன்\nதமிழ்க் கடவுளாகப் போற்றப்படும் முருகப் பெருமானுக்காகக் கொண்டாடப்படும் தைப்பூசத் திருவிழா நமது நாட்டின் அடையாளங்களில் ஒன்றாகும்.\nஏறத்தாழ ஒவ்வொரு மாநிலத்திலும், முக்கிய முருகன் ஆலயங்களில் இரத ஊர்வலம், காவடிகள், என விமரிசையான திருவிழாவாகக் கொண்டாடப்படும் தைப்பூசம் இந்த முறை நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காரணமாக முற்றிலும் நம்மால் எப்போதும்போல் கொ���்டாடப்பட முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.\nஇதுவும் இறைவனின் சித்தம் என ஏற்றுக் கொள்வோம் என்று மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.\nநமது இந்து சமயம் என்பது ஆலயங்களுக்கு செல்வதை மட்டும் நமக்கு போதிக்கவில்லை. காவடிகள் எடுப்பது, பால்குடம் எடுப்பது, ஆலயங்களில் பூஜைகள் நடத்துவது போன்றவற்றை மட்டும் இந்து மதம் போதிக்கவில்லை.\nமாறாக, உள்ளமே ஆலயம் எனச் சொல்வதும் இந்துமதம்தான். ஒவ்வொரு இல்லத்தையும் தூய்மையாகவும் பக்திமயமாகவும் வைத்திருக்க வேண்டும் என்று வலியுறுத்துவதும் இந்து மதம்தான்.\nஅதை நினைவில் நிறுத்தி இந்த முறை நாம் நமது குடும்பத்தினரோடு, தைப்பூசத் திருவிழாவை இல்லங்களில் கொண்டாடுவோம், முருகப் பெருமானை நினைத்து, கொவிட்-19 தொற்றுகளால் மக்கள் அனுபவித்து வரும் இன்னல்களும், பிரச்சனைகளும் தீரவேண்டுமென மனமுருக வேண்டிக் கொள்வோம்.\nஇந்தத் தைப்பூசத் திருவிழாவை வாழ்க்கையின் ஒரு வித்தியாச அனுபவமாக கொண்டாடி மகிழ்வோம்.\nநாடும் நமது இந்திய சமூகமும், நமது சக மலேசிய இனத்தவர்களும் எதிர்வரும் ஆண்டில் செழிப்போடும், வளத்தோடும் வளர்ச்சி காண நாமனைவரும் முருகப் பெருமானை இந்தத் தைப்பூச நன்னாளில் வேண்டிக்கொள்வோம்.\nஅதே வேளையில், நாடு முழுமையிலும் அரசாங்கம் விதித்துள்ள நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவுகளையும், நிபந்தனைகளையும் பின்பற்ற வேண்டும் எனவும் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.\nஒரு பக்கம் கொவிட்-19 தொற்றுகளின் எண்ணிக்கை அதிக அளவில் இருந்தாலும் அதை குறைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் தீவிரமாக எடுத்து வருகிறது.\nகூடியவிரைவில் நமது நாட்டில் அனைத்து மலேசியர்களுக்கும் தடுப்பூசிகளைப் போடுவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நடவடிக்கைகளைத் தொடர்ந்து கொவிட்-19 தொற்று நாட்டில் குறையும் என எதிர்பார்க்கலாம்.\nஎனவே, அரசாங்கம் விதித்துள்ள நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைகளுக்கேற்ப இந்த ஆண்டு தைப்பூசத்தைக் கொண்டாடி மகிழ்வோம் என்று தமறிக்கையில் டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் இவ்வாறு தெரிவித்தார்.\nவீட்டையே ஆலயமாகக் கருதி முருகப் பெருமானை வேண்டுவோம் - கணபதிராவ்\nஇந்நாட்டில் பெருவிழாவாகக் கொண்டாடப்படும் சமய விழாவான தைப்பூச விழாவை மா��ுபட்ட சூழலில் மலேசிய இந்தியர்கள் கொண்டாட வேண்டும் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் குறிப்பிட்டார்.\nஉலகையே புரட்டி போட்டுள்ள கோவிட்-19 பெருந்தொற்றின் காரணமாக இவ்வாண்டு தைப்பூச விழா கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தங்களது வீட்டிலிருந்தே முருகப் பெருமானை மனமுருகி வேண்டிக் கொள்ளலாம்.\nசமயத்திற்கும் பக்திக்கும் நடுவே சுகாதாரத்திற்கும் உயிருக்கும் முன்னிரிமை அளித்து பெருங்கூட்டத்தை தவிர்க்கும் நோக்கில் சிலாங்கூர் மாநில அரசும் தைப்பூச விழா கொண்டாட்டங்களை ரத்து செய்துள்ளது.\nஎப்போதும் ஆலயத்திற்குச் சென்று முருகப் பெருமானை வழிபட்டு தங்களை தங்களது நேர்த்திக் கடனைச் செலுத்தும் பக்தர்கள் இன்று தங்களது வீட்டையே ஆலயமாகக் கருதி மனமுருகி முருகப் பெருமானை வேண்டிக் கொள்வோம்.\nபல இன மக்கள் வாழ்கின்ற இந்நாட்டில் அனைத்து மக்களின் சமய நம்பிக்கைகளும் வழங்கப்பட்டுள்ள உரிமைகள் எந்தவொரு சூழலிலும் மறைந்து விடாமல் சமய நல்லிணக்கமும் மக்களுக்கிடையிலான புரிந்துணர்வும் இன்னும் மேலோங்கிட வேண்டும் என்று கணபதிராவ் தெரிவித்தார்.\nடத்தோஸ்ரீ சரவணன் தலையீட்டில் பினாங்கு நகரத்தார் வெள்ளிரத ஊர்வலம் - பேராசிரியர் இராமசாமி\nபினாங்கு நகரத்தார் ஆலயத்தின் வெள்ளி ரத ஊர்வலம் மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் தலையீட்டில் நடைபெற்றதே தவிர பினாங்கு மாநில அரசும் தேசிய பாதுகாப்பு மன்றமும் அனுமதி வழங்கவில்லை என்று அம்மாநில துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி விவரித்தார்.\nகோவிட்-19 பாதிப்பு காரணமாக இவ்வாண்டு தைப்பூச விழாவுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் பினாங்கு தண்ணீர்மலை நகரத்தார் ஆலயத்தின் வெள்ளி ரத ஊவலமும் இடம்பெறாது என முன்பு அறிவிக்கப்பட்டது.\nஆனால் கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானத்தின் விண்ணப்பத்திற்கு ஏற்ப பத்துமலை வெள்ளிரத ஊர்வலத்திற்கு தேசிய பாதுகாப்பு மன்றம் அனுமதி வழங்கியதை அடுத்து பினாங்கு நகரத்தார் ஆலயத்தினரும. வெள்ளிரத ஊர்வலத்திற்கு அனுமதி கோரியிருந்தனர்.\nஆனால் மாநில அரசு அது குறித்து விவாதிக்காத நிலையில் டத்தோஸ்ரீ சரவணன் தலையீட்டில் பினாங்கு நகரத்தார் ஆலயத்தினர் வெள்ளிரத ஊர்வலத்தை முன்னெடுத்துள��ளனர் என்று பேராசிரியர் இராமசாமி இன்று செய்தியாளர்களிடம் விவரித்தார்.\nஇதனிடையே இச்சம்பவம் தொடர்பில் பேராசிரியர் இராமசாமிக்கு தொலைபேசி மூலம் விளக்கமளிக்கப்படும் என்று டத்தோஸ்ரீ சரவணன் தெரிவித்தார்.\nபத்துமலை திருத்தலத்தை வந்தடைந்தது வெள்ளிரதம்\nதமிழ்க் கடவுள் முருகப் பெருமானின் பெருவிழாவான தைப்பூச விழாவை முன்னிட்டு கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்திலிருந்து புறப்பட்ட வெள்ளிரதம் பத்துமலையை சென்றடைந்தது.\nவள்ளி, தெய்வானை சமேதரராய் வெள்ளிரதத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் முருகப் பெருமான், இவ்வாண்டு பக்தர்கள் கூட்டமின்றி பத்துமலை திருத்தலத்தை நோக்கி தனது புறப்பட்டார்.\nஅதிகாலை 3.00 மணியளவில் கோலாலம்பூர் மாரியம்மன் ஆலயத்திலிருந்து புறப்பட்ட வெள்ளி ரதம் 4 மணிநேர பயணத்திற்கு பின்னர் பத்துமலையை வந்தடைந்தது.\nகோவிட்-19 பாதிப்பு குறையவில்லையென்றால் பொருளாதார முழு அடைப்பு சாத்தியமாகலாம்\nவரும் பிப்ரவரி 4ஆம் தேதிக்குள் கோவிட்-19 வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியாமல் போனால் அனைத்து பொருளாதார நடவடிக்கைகளையும் நிறுத்தி வைக்கும் வகையில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பிகேபி) இறுக்கமாக்கப்படலாம் என கூறப்படுகிறது.\nமலேசிய-ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக தொழிலியல் சபை (Eurocham Malaysia) அதன் உறுப்பினர்களுக்கு அனுப்பியிருக்கும் கடிதத்தில் அந்த தகவலை குறிப்பிடப்பட்டிருக்கிறது.அந்த அமைப்புடன் தொடர்புடைய தரப்பு அந்த தகவலை உறுதிப்படுத்தியிருக்கிறது.\nஅனைத்துலக வாணிப தொழிலியல் அமைச்சுடன் Eurocham Malaysia அமைப்புடன் நடத்திய பேச்சுவார்த்தையில் பொருளாதார நடவடிக்கைகளை முழுமையாக நடத்தி வைக்கும் விவகாரத்தில் சுகாதார அமைச்சு உறுதியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.\nநாட்டில் தயாரிப்பு துறையைச் சேர்ந்த 99 கோவிட்-19 தொற்று மையங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. அதையடுத்து அத்துறை கோவிட்-19 வைரஸ் பரவுவதற்கு முக்கிய காரணமாக இருப்பதாக சுகாதார அமைச்சு கருதுகிறது.\nஎனவே, வர்த்தக தொழில்துறையில் ஈடுபட்டுள்ள உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்கள் அனைத்தும் கோவிட்-19 தொற்றை குறைப்பதில் மேலும் ஆக்கப்பூர்வமாக செயல்படுமாறு அனைத்துலக வாணிப தொழிலியல் அமைச்சு வலியுறுத்தி இருக்கிறது.\nவரி வசூலிக்கலாம், விடுமுறை தரக்கூடாதா கெடா எம்பி-ஐ விளாசும் சமூகவலைதளவாசிகள்\nதைப்பூச விழாவுக்கு கெடா மாநிலத்தில் வழங்கப்பட்டு வந்த சிறப்பு விடுமுறையை ரத்து செய்வதாக அம்மாநில மந்திரி பெசார் முகமட் சனுசி முகமட் நோர் வெளியிட்ட அறிவிப்புக்கு இந்திய சமூகத்தில் பெரும் எதிர்ப்பலை எழுந்துள்ளது.\nகோவிட்-19 பெருந்தொற்றால் அமல்படுத்தப்பட்டுள்ள நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை (பிகேபி) காரணம் காட்டி வரும் 28ஆம் தேதி கொண்டாடப்படும் தைப்பூச விழாவுக்கு கெடா மாநில அரசு சிறப்பு விடுமுறையை வழங்காது என்ற அறிவிப்பை அம்மாநில அரசு வெளியிட்டது. இதற்கு பல தரப்பினரிடமிருந்து எதிர்ப்புகள் வந்த நிலையில் சமூகவலைதளவாசிகளும் தங்களது எதிர்ப்பினை பதிவு செய்துள்ளனர்.\nசமய தீவிரவாதத்தின் தொடக்கம், இறுமாப்பின் உச்சம் என்று K S Maniam Subramaniam என்பவர் கருத்து தெரிவித்துள்ளார்.\nபக்காத்தான் ஹராப்பானை ஆதரித்ததற்காக முஸ்லீம் அல்லாதோரை பழிவாங்க முயற்சிக்கிறார் கெடா எம்பி என்று Mike Varma எனும் பயனர் கூறியுள்ளார்.\nசனுசி பதவி ஏற்றுக் கொள்ளப்பட்ட காலம் முதல் இந்திய சமூகத்திற்கு தலைவலியான தலைவர் என்பதை காண்பிக்கிறார். அவரை போல் ஒரு இனவாத தலைவருக்கு எப்படி நம் இனத்தவர் ஆதரவு தருகின்றனர் என்பதுதான் வியப்பாக இருக்கிறது. பாஸ் கட்சி ஒரு சந்தர்ப்பவாத கட்சி என்பதை காலம் காலமாக நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். தூய்மையான பாஸ் கட்சியின் தலைவர் நிக் அஸிஸ் அவர்களோடு அந்த கட்சிக்கு இருந்த மரியாதை இப்போது 10 சதவீதம் கூட இல்லை. இதுதான் உண்மை என்று Kirupaul Kiruba கருத்து பதிவிட்டுள்ளார்.\nகெடாரத்தில் அதிக தமிழ் இந்துக்கள் வாழ்கிறார்கள், பாரம்பரிய விழா அங்கு நடந்தது. ஆகையால் அதிகம் இந்துக்கள் மாநிலமாக கெடா விளங்குகிறது, அவர்களிடம் வரி வசூலிக்கும் மாநில அரசு ஏன் விடுமுறையை தரக்கூடாது என்று வள்ளுவர் குறள் வள்ளுவம் எனும் சமூக ஊடக பயனர் கருத்து பதிவிட்டுள்ளார்.\nதைப்பூசத்திற்கு சிறப்பு விடுமுறை- கெடாவை மட்டும் நெருக்குவதா கெடா எம்பி-இன் வாதம் ஏற்புடையதா\nஇந்தியர் சார்ந்த விவகாரங்களில் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து வரும் கெடா மந்திரி பெசார் முகமட் சனுசி முகமட் நோர் தற்போது கொளுத்தி போட்டுள்ள தீப்பொறி காட்டுத்தீயாய் பற்றி எரிகிறது.\nஇந்த��யர்கள், மஇகா, கள்ளுக்கடை என பல சர்ச்சைகளின் மன்னனாக விளங்கும் முகமட் சனுசி இந்தியர்களின் பெருவிழாவான தைப்பூச விழாவில் கை வைத்து விட்டதன் விளைவு தற்போது பல திசைகளில் இருந்தும் எதிர்ப்பலைகள் குவிந்து கொண்டிருக்கின்றன.\nவரும் ஜனவரி 28ஆம் தேதி முருகப் பெருமானுக்குரிய தைப்பூச விழா இந்தியர்களின் பக்தி விழாவாகவும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தும் திருநாளாகவும் கருதப்படுகிறது.\nஆனால், உலகையே உலுக்கி வரும் கோவிட்-19 வைரஸ் பெருந்தொற்றால் நாட்டில் அமல்படுத்தப்பட்டுள்ள நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையால் (பிகேபி )தைப்பூச விழாவை வீட்டிலிருந்தே கொண்டாடும் நிலைக்கு மலேசிய இந்தியர்கள் ஆளாகியுள்ளனர்.\nஇதனை முன்னிட்டு, கெடா மாநிலத்தில் தைப்பூச பெருநாளுக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு விடுமுறை (Cuti Peristiwa) ரத்து செய்யப்படுவதாக முகமட் சனுசி செய்த அறிவிப்பு அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி மலேசிய இந்தியர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.\nபிகேபி அமலாக்கத்தினால் மக்கள் வீட்டிலுருந்தே வேலை செய்வதே விடுமுறையாக கருதப்படுவதால் இந்த சிறப்பு விடுமுறை ரத்து செய்யப்படுவதாக அவர் அதற்கான காரணத்தையும் விவரித்தார்.\nபக்காத்தான் ஹராப்பான் ஆட்சி கவிழ்க்கப்பட்டு பாஸ் கட்சியின் தலைமையில் பெரிக்காத்தான் நேஷனல் ஆட்சி அமைக்கப்பட்ட பின்னர் அங்கு மேற்கொள்ளப்பட்ட கோவில் உடைக்கப்பட்ட சம்பவமே பாஸ்- இந்திய சமூகத்திற்கான கருத்து மோதலுக்கு வித்திட்டது.\nகோவில் உடைப்பு சம்பவத்திற்கு எதிராக குரல் கொடுத்த தனது கூட்டணி கட்சியான மஇகா தலைவர்களை சாடியது மட்டுமின்றி மஇகாவின் பதிவை ரத்து செய்ய வேண்டும் என்று முகமட் சனுசி முன்வைத்த அறிக்கை மஇகா தலைவர்கள் மட்டுமின்றி எதிர்க்கட்சியைச் சேர்ந்த இந்தியத் தலைவர்களின் கண்டனத்திற்கும் ஆளானார்.\nகுறுகிய காலத்திற்குள்ளேயே இந்தியர் சார்ந்த பல விவகாரங்களில் சர்ச்சைக்குரிய கருத்துகளை பதிவிட்டு வரும் முகமட் சனுசியின் தற்போது தைப்பூச விழாவை பிகேபி அமலாக்கத்துடன் முடிச்சு போட்டு சிறப்பு விடுமுறையை ரத்து செய்துள்ளது பலரது கண்டனத்திற்கு ஆளாகியுள்ளது.\nகண்டனக் குரல் எழுப்பியது யார்\nகெடா மாநிலத்தில் தைப்பூச விழாவுக்கான சிறப்பு விடுமுறையை ரத்து செய்த முகமட் சனுசிக்க�� மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன், மனிதவள அமைச்சரும், மஇகாவின் துணைத் தலைவருமான டத்தோஶ்ரீ எம்.சரவணன், பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி, முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக், சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ், செனட்டர் டி.மோகன், மஇகாவின் உதவித் தலைவர் டத்தோ டி.முருகையா, கியூபெக்ஸ் உட்பட பலர் தங்களது கண்டனத்தை பதிவு செய்திருந்தனர்.\nகெடா மந்திரி பெசாரின் வாதம் ஏற்புடையதா\nதைப்பூச பெருவிழாவுக்கான சிறப்பு விடுமுறையை ரத்து செய்ததற்கு பல தரப்பினருடமிருந்தும் எதிர்ப்புகள் வந்த போதிலும் தமது முடிவில் மாற்றம் இல்லை என முகமட் சனுசி உறுதியாக இருக்கும் சூழலில், தைப்பூசத்திற்கான சிறப்பு விடுமுறைக்கு கெடா மாநிலத்தை மட்டும் நெருக்குவது ஏன் என்று முகமட் சனுசி, அவரின் அரசியல் செயலாளர் அஃப்னான் அமிமி ஆகியோர் வாதமும் தற்போது சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.\nஇந்தியர்கள் வாழும் பெருவாரியான மாநிலங்களான பகாங், மலாக்கா உட்பட பெர்லிஸ், கிளந்தான், திரெங்கானு, சபா, சரவாக் ஆகிய மாநிலங்களில் தைப்பூச திருநாளுக்கான விடுமுறை இல்லாதபோது கெடா மாநிலத்தை மட்டும் குறி வைத்து கேள்வி எழுப்புவது ஏன் எனவும் தைப்பூசத்திற்கு விடுமுறை வேண்டுமானால் பொது விடுமுறையாக அறிவிக்கச் சொல்லி மத்திய அரசிடம் கோருங்கள் எனவும் காட்டமான பதிலை இவர்கள் தெரிவித்துள்ளனர்.\nதைப்பூச கொண்டாடத்திற்கு தேவை பொது விடுமுறையா\nமலேசியாவில் வாழ்கின்ற அனைத்து இனத்தவர்களின் சமய உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என இப்போது அறிக்கை விடும் அனைத்து தலைவர்களும் தங்களின் ஆட்சி அதிகாரத்தின்போது தைப்பூச விடுமுறையை ஏன் தேசிய விடுமுறையாக அறிவிக்க தவறினர்\nமலேசியாவின் அடையாளச் சின்னங்களில் இரட்டை கோபுரம், புத்ரா ஜெயா, தவிர்த்து பத்துமலை முருகன் திருத்தலமும் தவிர்க்கப்பட முடியாத ஒரு அடையாளமாகும். இதே பத்துமலை திருத்தலத்திற்கு முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் பலமுறை வருகை புரிந்துள்ளார்.\nகெடா மாநிலத்தில் தைப்பூச பெருநாளுக்கான சிறப்பு விடுமுறையை டத்தோஶ்ரீ நஜிப் ரசாக்கே அறிவித்ததுதான். 2013ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் கெடா மாநிலத்தை பாஸ்- பக்காத்தான் ராக்யாட் கூட்டணிய���டமிருந்து மீட்டெடுத்தப் பின்னர் தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் 2014ஆம் ஆண்டில் கெடா மாநிலத்தில் சிறப்பு விடுமுறை அறிவிக்கப்பட்டது.\nஅனைத்து இனங்களின் சமய உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என குரலெழுப்பும் டத்தோஶ்ரீ நஜிப் தாம் பிரதமராக பதவி வகித்த காலத்தில் தைப்பூச விடுமுறையை ஏன் தேசிய விடுமுறையாக அறிவிக்கவில்லை\nஅதேபோன்று தேசிய முன்னணி ஆட்சி புரியும் மாநிலங்களான பகாங், மலாக்கா மாநிலங்களில் அதிகமான இந்தியர்கள் வாழ்கின்ற நிலையில் அங்கு அம்மாநிலங்களில் சிறப்பு விடுமுறை அறிவிக்கச் சொல்லி இன்னமும் குரல் எழுப்பாதது ஏன்\nஇப்போது ஆட்சி புரியும் பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்தின் அங்கமாக தேசிய முன்னணி விளங்கும் நிலையில் தைப்பூச பெருவிழாவுக்கு பொது விடுமுறை அறிவிப்பதற்கான கோரிக்கையையாவது முன்வைக்க தேசிய முன்னணித் தலைவர்கள் முன்வருவார்களா\nஎல்லை மீறிச் செல்லும் கெடா மந்திரி பெசார்- கணபதிராவ் சாடல்\nதைப்பூச திருநாளுக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு விடுமுறையை ரத்து செய்வதாக அறிவித்த கெடா மாநில மந்திரி பெசார் முகமட் சனுசியின் செயல் இனத்துவேஷம் நிறைந்தது என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் சாடினார்.\nஇந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில் அண்மைய காலமாக சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து வரும் அவரின் செயல் எல்லை மீறி கொண்டிருக்கிறது எனவும் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள மக்கள் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் காரணமாக தைப்பூச விழா ரத்து செய்யப்பட்டுள்ளதை காரணம் காட்டி சிறப்பு விடுமுறையை ரத்து செய்யும் கெடா மாநில மந்திரி பெசார் பிற மதத்தினரின் பெருநாள் காலத்திலும் இதே நடவடிக்கையை கடைபிடிப்பாரா என்று கணபதிராவ் தனது எதிர்ப்பை பதிவு செய்தார்.\nபிகேபி அமலிலும் கட்டுக்குள் அடங்காத கோவிட்-19\nகோவிட்-19 வைரஸ் தொற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நாட்டில் 6 மாநிலங்களில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பிகேபி) அமல்படுத்தப்பட்ட நிலையிலும் கோவிட்-19 பெருந்தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.\nகோவிட்-19 பெருந்தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை இன்று உச்சக்கட்டத்தை எட்டும் வகையில் ��டந்த 24 மணி நேரத்தில் 4,029 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇன்று இந்நோயினால் 8 பேர் மரணமடைந்த நிலையில் மரண எண்ணிக்கை 594ஆக பதிவு செய்ய்பட்டுள்ளது.\nஇந்த பெருந்தொற்றை கட்டுப்படுத்த பிகேபி அம்படுத்தப்பட்டு 4 நாட்களை கடந்த நிலையில் இந்நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகபட்சமாக உயர்வு கண்டிருப்பது நாட்டு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.\nகோவிட்-19 எண்ணிக்கை அதிகரித்தால் பிகேபிபி மாநிலங்களில் பிகேபி அமல்படுத்தப்படலாம்\nநிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பிகேபிபி), மீட்சிக்கான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பிகேபிபி) ஆகியவை அம்படுத்தப்பட்டுள்ள மாநிலங்களில் கோவிட்-19 எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டால் அங்கு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பிகேபி) அமல்படுத்தப்படுவதை அரசாங்கம் மறுக்கவில்லை.\nபிகேபி அமலாக்கத்தினால் கோவிட்-19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது என்று பாதுகாப்பு முதன்மை அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.\nஎண்ணிக்கை அதிகரித்தால் பிகேபி அமலாக்கமும் எண்ணிக்கை குறைந்தால் பிகேபிபி அமலாக்கமும் காணும் என்று அவர் மேலும் சொன்னார்.\nஇந்திரா காந்தியின் வழக்கை ரத்து செய்யக்கோரி ஐஜிபி உட்பட 4 தரப்பினர் முறையீடு\nதமது முன்னாள் கணவரால் கடத்திச் செல்லப்பட்ட மகளை மீட்டுக் கொடுப்பதில் தோல்வி கண்ட அரச மலேசிய போலீஸ் படை உட்பட நான்கு தரப்பினர் மீது திருமதி இந்திரா காந்தி தொடுத்துள்ள வழக்க ரத்துச் செய்யப்பட வேண்டும் என்று விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.\nமுன்னாள் பாலர் பள்ளி ஆசிரியையான திருமதி இந்திரா காந்தி செய்துள்ள வழக்கு ரத்து செய்யப்பட வேண்டும் என்று ஐஜிபி, அரச மலேசிய போலீஸ் படை, உள்துறை அமைச்சு, அரசாங்கம் ஆகிய தரப்பினர் கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் மனு செய்துள்ளனர் என்று இந்திரா காந்தியின் வழக்கறிஞர்ராஜேஷ் நாகராஜன் தெரிவித்தார்.\nதமது மகளை கடத்திச் சென்ற முன்னாள் கணவர் முகமட் ரிடுவான் அப்துல்லாவை கைது செய்து தமது மகள் பிரசன்னா டிக்சாவை தம்மிடம் மீண்டும் ஒப்படைப்பதில் இந்த நான்கு தரப்பும் தோல்வி கண்டுள்ளதை அடுத்து திருமதி இந்திரா காந்தி நான்கு தரப்பினர் மீதும் ஈப்போ உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.\nஇஸ்லாம் மதத்தை தழுவிய இந்திரா காந்தியின் முன்னாள் கணவர் தமது மகள் பிரசன்னா டிக்சாவையும் 2009இல் இஸ்லாத்திற்கு மதமாற்றம் செய்துள்ளார்.\nஇதன் தொடர்பில் தொடரப்பட்ட வழக்கில் பிரசன்னாவை மீட்டு தாயாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஈப்போ உயர்நீதிமன்றம் 2014இல் தீர்ப்பளித்தப் பின்னரும் இன்னமும் முகமது ரிடுவானையும் பிரசன்னா டிக்சாவையும் கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீஸ் படை தோல்வியை சந்தித்துள்ளது.\nபுதிய வாய்ப்புகளை உருவாக்கி இன்பம் காண்போம்- டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்\n“பொங்கல் திருநாள் இனிமையையும், இன்பத்தையும் கொண்டு வந்து சேர்க்கட்டும்”\nபிறந்திருக்கும் புத்தாண்டை நம்பிக்கையோடும், உற்சாகத்தோடும் எதிர்கொள்ள நாம் தயாராகிக் கொண்டிருக்கும் வேளையில், நமது பாரம்பரிய திருநாள்- உழைப்பாளர்களை நினைவு கூர்ந்து கௌரவிக்கும் பெருமைக்குரிய நன்னாள் - பொங்கல் மலர்கின்றது.\nஇந்த ஆண்டு மலர்கின்ற பொங்கல் நமது மலேசிய இந்தியர்களுக்கு வாழ்க்கையில் புதிய வாய்ப்புகளை உருவாக்கி, வாழ்க்கையில் இனிமையையும், இன்பத்தையும் கொண்டு வந்து சேர்க்க வேண்டுமென நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டார்.\nகடந்து சென்ற ஓராண்டில் நாம் பெற்ற பாடங்களையும், அனுபவங்களையும் படிப்பினையாகக் கொண்டு இந்த ஆண்டில் புதிய நம்பிக்கையோடு நடைபோடுவோம்.\nகல்வியும் பொருளாதாரமும் இரு கண்களாகக் கொள்வோம்\nகடந்த ஆண்டில் கொவிட் தொற்றால் பெரும் பாதிப்புக்குள்ளானது மக்களின் பொருளாதார வாழ்வாதாரமும், மாணவர்களின் கல்வியும்தான்.\nஎனவே, இந்த ஆண்டில் நமது மாணவர்களின் கல்வியில் பெற்றோர்கள் தனிக் கவனம் செலுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். அதன் மூலம், விடுபட்டுப் போன, இழந்த கல்வியை மாணவர்கள் மீண்டும் பெற்று, இந்த ஆண்டு அவர்களுக்கான பள்ளிப் பாடங்களிலும், தேர்வுகளிலும் சிறந்த முறையில் வெற்றி பெற நாம் பாடுபடுவோம்.\nஅதே வேளையில் பொருளாதார ரீதியில் மறக்க முடியாத பல பாடங்களையும் கடந்த ஆண்டின் கொவிட்-19 பரவல் நமக்கு கற்பித்திருக்கிறது.\nஎனவே, இந்த ஆண்டிலும், எதிர்வரும் காலங்களிலும் நமது இந்திய சமூகம் பொருளாதார பலத்தைப் பெருக்கிக் கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும்.\nஅப்போதுதான் இந்த கொவிட் நிலைமை தொடர்ந்தாலும், எதிர்காலத்தில் இதுபோன்ற வேறு பிரச்சனைகளை நாம் வாழ்க்கையில் எதிர்நோக்கினாலும் நம்மால் சமாளித்து நமது குடும்பத்தைக் காப்பாற்ற முடியும்.\nஎனவே, இந்திய சமூகம் சொந்தத் தொழில்களிலும், இணையம் வழியான தொழில்களிலும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள இதனை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.\nகூடுதல் நேரங்களில் சிறு தொழில்களில் ஈடுபடுவதன் மூலம் நமது குடும்பங்கள் வருமானத்தை பெருக்கிக் கொள்ள முடியும்.\nகிராமப் புறங்களிலும், தோட்டப் புறங்களிலும் இருப்பவர்கள் விவசாயம் சார்ந்த தொழில்களிலும் ஈடுபட்டு தங்களினை வருமானத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும். தங்களின் பொருளாதாரத்தைப் பலப்படுத்திக் கொள்ள வேண்டும்.\nகோவிட்-19 தொற்றை எதிர்கொள்ள அரசாங்கம் அதற்கான தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு இலவசமாகவே போடவிருக்கிறது என்பது நமக்கெல்லாம் மேலும் கூடுதல் உற்சாகத்தைத் தொடர்ந்திருக்கிறது. நாளடைவில் இந்தத் தொற்றின் தாக்கம் குறையும் என்ற நம்பிக்கையையும் ஏற்படுத்தியிருக்கிறது.\nஅதே வேளையில், நமது பொங்கலை இந்த முறை மகிழ்ச்சியாகவும், முழுமையான அளவிலும் கொண்டாட முடியாத சூழலும் ஏற்பட்டிருக்கிறது.\nஅரசாங்கம் கொண்டு வந்திருக்கும் முழு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையால், நாம் இந்த முறை நமது பாரம்பரியத் திருவிழாக்களான பொங்கலையும் அதைத் தொடர்ந்து வரும் தைப்பூசத்தையும் வழக்கம்போல் கொண்டாட முடியாது என்ற நிலைமை ஏற்பட்டிருக்கிறது.\nகோவிட்-19 தொற்றை எதிர்கொள்ள மற்றொரு நடவடிக்கையாக அவசரகாலமும் எதிர்வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி வரை அரசாங்கத்தால் அமுலாக்கப்பட்டிருக்கிறது.\nஇந்த நெருக்கடியை நமது இந்திய சமூகம், பொறுமையோடும், நன்கு சிந்தித்தும், திறந்த மனதோடும் ஏற்றுக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். மக்களின் நலன்களுக்காக, மேலும் நோயின் பாதிப்புகளால் மக்கள் சிரமத்தை எதிர்நோக்கக் கூடாது என்ற நல்லெண்ணத்தோடும் அரசாங்கம் இந்த முடிவுகளை அமுல்படுத்தியிருக்கிறது.\nஎனவே, நமது பொங்கல் திருநாளை இந்த முறை நமது இல்லங்களுக்குள்ளேயே அரசாங்கம் விதித்திருக்கும் கட்டுப்பாடுகளுக்கு ஏற்ப கொண்டாடி, நமது உடல்நலத்தையும் மற���றவர்கள் உடல் நலத்தையும் பாதுகாப்போம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.\nகூடிய விரைவிலேயே கொவிட்-19 தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்படவிருப்பதால், வெகு விரைவில், நமது நாடு இந்த தொற்று நெருக்கடிகளில் இருந்து விடுபட்டு வெற்றி நடை போடும் – நாமும் நமது பாரம்பரிய வழக்கப்படி, நமது பெருநாட்களையும், திருவிழாக்களையும் மீண்டும் மகிழ்ச்சியோடும், உற்சாகத்தோடும் கொண்டாடும் நிலைமை மீண்டும் வரும் -என்ற நம்பிக்கைகளோடு, பொங்கல் திருநாளை இல்லங்களிலேயே கொண்டாடி மகிழ்வோம் என்று அவர தமது வாழ்த்துச் செய்தியில்இவ்வாறு குறிப்பிட்டார்.\nகொரோனாவிலிருந்து விடுபடும்வரை பொறுமை காப்போம்- டத்தோஸ்ரீ சரவணன்\nபொங்கல் திருநாளைக் கொண்டாடும் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள். தமிழர்களின் பண்டைய கால பழக்க வழக்கங்கள், பெருநாட்கள், விழாக்கள் அனைத்துமே வாழ்வியலோடு ஒன்றித்து இருப்பவை, ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு வித்திடுபவை என்பதில் ஐயமில்லை.\nஅந்த வரிசையில் தை மாதத்தில் தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் பொங்கலானது, தமிழர் திருநாளாக, இயற்கைக்கு நன்றி சொல்லும் பெருநாளாகக் கருதப்படுகிறது. குறிப்பாக அறுவடைத் திருநாளாகவும் அறியப்படும் தைப்பொங்கலில் விவசாயிகளின் உழைப்பிற்கு உதவிய இயற்கைக்கும், அவர்களோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், நமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விழாவாக அமைகிறது.\n“பழையன கழிதலும், புதியன புகுதலும்\nவழுவல கால வகையி னானே” - நன்னூல் நூற்பா 426\nநான்கு நாள் கொண்டாடப்படும் பொங்கலில், பழைய குப்பைகளை மட்டுமன்றி, பழிக்கத்தக்க குணங்களையும், செயல்களையும் நீக்கி; போற்றுதற்குரிய குணங்களையும், செயல்களையும் ஏற்போம் எனும் தத்துவத்தோடு தொடங்குகிறது “போகிப்பண்டிகை”. அடுத்து தை முதல்நாள் சூரியனுக்காக பொங்கல், மறுநாள் மாட்டுப் பொங்கல், மூன்றாம் நாள் காணும் பொங்கல் என்று தொடர்ச்சியாக மகிழ்ச்சி பொங்க, இல்லத்தில் பொங்கல் வைத்துக் கொண்டாடுவோம்.\nகாணும் பொங்கல் என்பது உற்றார், உறவினர், நண்பர்களைக் கண்டு, பெரியோர் ஆசி பெறுதல் என்றாலும் இன்றைய சுகாதாரச் சூழலை மனதில் கொண்டு கொஞ்சம் விலகி நின்றே கொண்டாடுவோம்.\nநமக்கு வரவில்லை என்ற அலட்சியம் வேண்டாம். கொரோனா இருக்கும் வரை பழைய வாழ்க்கை முறை சாத்தியமல்ல. புதிய நடைமுறைகளுடன் கொரோனா பாதுகாப்பு அம்சங்களைக் கடைப்பிடிப்பதுதான் சிறப்பு. கொரோனாவின் தாக்கம் இன்னும் பல உள்ளங்களில், பலர் இல்லங்களில் இருந்துதான் வருகிறது.\nதைபிறந்தால் வழி பிறக்கும் என்ற கூற்றுக்கேற்ப கொரோனாவிற்கு தடுப்பூசி வந்துவிட்டது. கூடிய விரைவில் இந்த சர்வதேச பரவலில் இருந்து முழுமையாக விடுபடும் நேரமும் வந்துவிட்டது. அதுவரை கொஞ்சம் பொறுமை காப்போம். உல்லாச ஒன்றுகூடல்கள், கேளிக்கை வைபவங்களைக் கொஞ்சம் தள்ளி வைப்போம்.\nஅதே வேளையில் அரசாங்கம் மக்களின் பிரச்சனைகளைக் களைய முன்வைத்துள்ள பல்வேறு திட்டங்கள், குறிப்பாக மனிதவள அமைச்சின் கீழ் இயங்கும் பெர்கேசோ வழி “பெஞ்சானா கெர்ஜாயா” வின் ஊக்கத் தொகைகள், வேலை வாய்ப்புத் திட்டம், வேலை இழந்தோர், வேலை தேடுவோருக்கான வேலை காப்பீட்டு முறையின் நன்மைகள், MyFutureJobs வழி பணியமர்த்தம் இப்படி நிறைய உதவிகள் நிறைய உள்ளன.\nமேலும் மனிதவள மேம்பாட்டு நிதி, HRDF மூலம் “பெஞ்சானா HRDF” வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி திட்டங்கள், தொழிற்புரட்சி 4.0 திட்டங்கள், திறன் மேம்பாட்டு இலவச பயிற்சிகள், சுய தொழில் செய்வோருக்கான உதவிகள் என பல்வேறு திட்டங்களும், உதவிகளும் செய்தவண்ணமே உள்ளோம். உங்களுக்கு தேவையான உதவிகளைப் பெற்று பயனடையுங்கள்.\nஇவ்வேளையில் சிறு தொழில் அல்லது பெரிய நிறுவனங்களை நடத்தி வரும் முதலாளிமார்களுக்கு ஒரு வேண்டுகோள். தயவு செய்து உங்கள் பணியாளர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து கொடுங்கள். சர்வதேச பரவலைத்தடுக்க பணியாளர்களுக்கும் சனிடைசர், சுத்தமான சூழல், இடைவெளி விட்டு இருக்க இடம் போன்ற புதிய நடைமுறைகளைக் கடைப்பிடிக்க போதுமான வசதிகள் இருப்பதை உறுதி செய்யுங்கள்.\nஇந்த தைத்திருநாளில் பொங்கல் போலவே அனைவரின் உள்ளத்திலும் இன்பம் பொங்க மனம் நிறைந்த வாழ்த்துகள். மகிழ்ச்சியான சூழல் நமக்காக உண்டு என்று நம்பிக்கையோடு வாழ்வோம். தை பிறந்தால் வழி பிறக்கும் என்று மனிதவள அமைச்சரும் மஇகாவின் துணைத் தலைவருமான மனிதவள அமைச்சரும், ம.இ.கா தேசிய துணைத்தலைவருமான டத்தோ ஸ்ரீ எம்.சரவணன் தமது பொங்கல் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டார்.\nநன்றியை பறைசாற்றும் பொங்கல் திருநாளை பாதுகாப்புடன் கொண்டாடுவோம்- கணபதிராவ்\nஉழவர் திருநாளான தைப் பொங்கல் திருநாளைக் உழவர்களும் தமிழர்களும் கொண்டாடி வருகின்றனர். உழவுக்கு பெரும் துணையாக இருக்கின்ற சூரியனுக்கும் காளைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் முதல் நாள் சூரியப் பொங்கலையும் இரண்டாம் நாள் மாட்டுப் பொங்கலையும் கொண்டாடி மகிழ்கின்றோம்.\nசூரிய உதயத்தின்போது பொங்கலிட்டு சூரியனுக்கு நன்றி தெரிவிக்கின்றோம். உழவர்களுக்கு மட்டுமின்றி மனிதனும் சூரியனுக்கு நன்றி கூறும் நாளாக இந்நாள் அமைந்துள்ளது.\nகடந்தாண்டு தொடங்கிய கொரோனா கிருமி தொற்றிலிருந்து உலகம் இன்னும் மீட்சி பெறாத நிலையில் கனத்த இதயத்துடன் இந்த பொங்கல் திருநாளை நம் மண்ணில் கொண்டாட முடியாத நிலையில் சிலாங்கூர் மாநில அரசி உள்ளது என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் தெரிவித்தார்.\nமாநில விழாவாக பல ஆண்டுகள் விமரிசையாக கொண்டாடப்பட்டு வந்த பொங்கல் விழா, இவ்வாண்டு மக்கள் நலன் கருதி நடத்தப்படாது என நினைக்கும்போது கவலையளிக்கிறது.\nஇனம், மொழி, வர்ணம் கடந்து மூவின மக்களின் ஒற்றுமைக்கு வித்தாக அமைந்திடும் பொங்கல் விழாவை இவ்வருடம் குடும்பத்தினருடன் பாதுகாப்பாக கொண்டாடி மகிழ்வோம்.\n'உழவர் திருநாளாம் தை பொங்கல் பெருநாள் உழுது உண்டு வாழ்வோர் களத்து மேடு சென்று, புதிர் எடுத்து பொங்கல் இட்டு, பகலவனை தொழுது பின் படையல் இட்டு செய்நன்றி செலுத்தும் நன்னாளில் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்' என்று கணபதிராவ் தமது வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டாார்.\nசிலாங்கூர், கேஎல் உட்பட 6 மாநிலங்களில் மீண்டும் பிகேபி\nகோவிட்-19 வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை (பிகேபி) மீண்டும் அமலாக்கம் செய்யப்படவுள்ளதாக பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் அறிவித்தார்.\n6 மாநிலங்களை மட்டும் உள்ளடக்கி பிகேபி அமலாக்கம் காணவுள்ளது. பினாங்கு, சிலாங்கூர், மலாக்கா, ஜோகூர், சபா, கூட்டரசு பிரதேசம் (கோலாலம்பூர், புத்ராஜெயா, லாபுவான்) ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.\nமேலும், கெடா, கிளந்தான், பேராக், திரெங்கானு, நெகிரி செம்பிலான், பகாங் ஆகிய மாநலங்களில் பிகேபிபி எனப்படும் கடுமையாக்கப்பட்ட நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை அமலாக்கம் செய்யப்படவுள்ளது.\nஜனவரி 13ஆம் தேதி தொடங்கி ஜன.26ஆம் தேதி வரை அமல்படுத்தப்படவுள்ள பிகேபி,பிகேபிபி நடவடிக்கையால் மாநிலம், மாவட்டம் கடந்து செல்வதற்கு தடை விதிக்கப்படுவதாக டான்ஸ்ரீ முஹிடின் யாசின் தமது சிறப்பு செய்தியில் இவ்வாறு கூறினார்.\nதுணைப் பிரதமர் பதவி; திட்டம் ஏதுமில்லை- பிரதமர் துறை அலுவலகம்\nதுணைப் பிரதமராக ஒருவரை நியமனம் செய்யும் திட்டம் ஏதும் கிடையாது என்று பிரதமர் துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.\nவெளியுறவு அமைச்சராக இருக்கும் டத்தோஶ்ரீ ஹிஷாமுடின் துன் உசேன் துணைப் பிரதமராக நியமனம் செய்யப்படவிருப்பதாக சில நாட்களாக ஆருடங்கள் வலுத்து வந்தன.\nஅதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் துணைப் பிரதமர் பதவி நியமனம் ஏதும் கிடையாது என்று பிரதர் துறை அலுவகம் கூறியுள்ளது.\nநாட்டில் அவசரகால நிலை பிரகடனமா\nநாட்டில் விஸ்வரூபம் எடுத்துள்ள கோவிட்-19 பாதிப்பு 4 இலக்கங்களை எட்டியுள்ள நிலையில் அவசரகால நிலை அமல்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇன்று மாலை 6.00 மணியளவில் பிரதமர் டான்ஶ்ரீ முஹிடின் யாசின் அறிவிக்கப்படவுள்ள சிறப்பு செய்தியாளர் சந்திப்பில் அவசரகால நிலை அறிவிக்கபடலாம் என்று கணிக்கப்படுகிறது.\nஇன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அவசரகால நிலை அமல்படுத்தப்படுவது குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் அதன் தொடர்பில் டான்ஶ்ரீ முஹிடின் யாசின் மாமன்னரை சந்திக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகோவிட்-19 பாதிப்புகள் அதிகம் உள்ள சிலாங்கூர், கோலாலம்பூர், ஜோகூர், பினாங்கு, சபா ஆகிய மாநிலங்களில் இந்த அவசரகால நிலை அமல்படுத்தப்படலாம் என்று ஆருடங்கள் வலுபெறுகின்றன.\nபிஎன் அரசாங்கத்திற்கான ஆதரவை மீட்டுக் கொண்டார் அஹ்மாட் ஜஸ்லான்\nபிரதமர் டான்ஶ்ரீ முஹிடின் யாசின் தலைமையிலான பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்திற்கான தனது ஆதரவை மீட்டுக் கொள்வதாக மாச்சாங் நாடாளுமன்ற உறுப்பினர் அஹ்மாட் ஜஸ்லான் யாக்கோப் தெரிவித்தார்.\nஅண்மையில் மலேசிய செம்பனை எண்ணெய் வாரியத்தின் தலைவர் பதவியிலிருந்து விலகிய அஹ்மாட் ஜஸ்லான் தமது முடிவை இன்று செய்தியாளர்களிடம் விவரித்தார்.\nபெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்திற்கான ஆதரவை மீட்டுக் கொள்ளும் இரண்டாவது அம்னோ நாடாளுமன்ற உறுப்பினராக அஹ்மாட் ஜஸ்லான் திகழ்கிறார். ஏற்கென���ே குவா மூசாங் நாடாளுமன்ற உறுப்பினர் தெங்கு ரஸாலி பிஎன் அரசாங்கத்திற்கான ஆதரவை மீட்டுக் கொண்டார்.\nபயணிகள் விமானம் மாயம்- இந்தோனேசியாவில் அதிர்ச்சி\nஇந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து 50 பயணிகளுடன் புறப்பட்ட போயிங் 737 விமானம் காணாமல் போயுள்ளது.\nஶ்ரீ விஜயா ஏர் விமான நிறுவனத்திற்கு சொந்தமான இந்த விமானம் மேற்கு கலிமந்தான் மகாணத்திலிருந்து பொந்தியானாக் எனும் இடத்திற்கு தனது சேவையை மேற்கொண்டிருந்தது.\nவிமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டு நிலைத்துடனான தொடர்பை இழந்தது. அந்த விமானம் பறந்து கொண்டிருந்த உயரம் திடீரென 10 ஆயிரம் அடி குறைந்தது என்று விமான கண்காணிப்பு இணையத் தளமான Flightrader24.com தகவல் தெரிவித்துள்ளது.\nவிமானம் குறித்த தகவலை பெற முயன்று வருவதாக ஶ்ரீ விஜயா ஏர் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇதனிடையே, தேடுதல், மீட்பு நடவடிக்கைகள் நடந்து வருவதாக அந்நாட்டு போக்குவரத்து அமைச்சகம் கூறியுள்ளது.\nசிலாங்கூரிலும் தைப்பூசக் கொண்டாட்டம் கிடையாது - கணபதிராவ்\nகோவிட்-19 பரவல் தொற்று காரணமாக சிலாங்கூரிலும் தைப்பூசக் கொண்டாட்டம் ரத்து செய்யப்படுவதாக சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் தெரிவித்தார்.\nதைப்பூச விழாவை போன்று ஆண்டுதோறும் மாநில அளவில் கொண்டாடப்படும் பொங்கல் விழாவும் ரத்து செய்யப்படுவதாக குறிப்பிட்ட அவர், இதற்கான மானிய ஒதுக்கீடுகள் இந்தியர்களின் சமூக நலன் சார்ந்த உதவித் திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும் என்றார்.\nஇவ்வாண்டு நடத்தப்படும் எந்தவொரு தைப்பூச விழாவிலும் மக்கள் பங்கெடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்திய கணபதிராவ், தைப்பூசம் போன்ற சமய நிகழ்வுகளை வீட்டில் இருந்தபடியே வழிபாடுகளை மேற்கொள்ளலாம் என்று குறிப்பிட்டார்.\nகோவிட்-19 பெருந்தொற்று பரவலை தடுக்கும் வகையில் பெரிய அளவிலான ஒன்றுகூடல் நடவடிக்கைகளை மக்கள் தவிர்க்க வேண்டும் என்று கணபதிராவ் தெரிவித்தார்.\nஇதற்கு முன்னதாக பினாங்கிலும் இவ்வாண்டு தைப்பூசக் கொண்டாட்டம் ரத்து செய்யப்படுவதாக அம்மாநில துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nபினாங்கு தைப்பூசம் ரத்து- வீட்டிலிருந்தே கொண்டாடுங்கள் - பேராசிரியர் இராமசாமி\nமுருகப் பெருமானை வே���்டி கொண்டாடப்படும் தைப்பூச விழா இவ்வாண்டு பினாங்கில் ரத்து செய்யப்படுவதாக பினாங்கு துணை முதலமைச்சர் பேராசிரியர் பி.இராமசாமி தெரிவித்தார்.\nதைப்பூச பெருநாளின் போது மேற்கொள்ளப்படும் ரத ஊர்வலம் மட்டுமின்றி, காவடிகள், பால்குடம் ஏந்துதல், தேங்காய் உடைப்பது, முடி காணிக்கை தண்ணீர் பந்தல் அமைப்பது, அன்னதானம் வழங்குவது ஆகியவற்றுக்கும் அனுமதியில்லை என்று அவர் சொன்னார்.\nகோவிட்-19 பெருந்தொற்று பரவல் நாளுக்கு நாள் தீவிடமடைந்து வருவதால் இவ்வாண்டு தைப்பூச விழா ரத்து செய்யப்படுகிறது.\nஇவ்வாண்டு தைப்பூச விழாவை வீட்டிலிருந்தே கொண்டாட வேண்டும் என்று பினாங்கு இந்து அறப்பணி வாரியம், ஒற்றுமை துறை, பினாங்கு பாதுகாப்பு மன்றம், போலீஸ் ஆகிய தரப்புகளுடான சந்திப்பில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் சொன்னார்.\nகோவிட்-19: ஒரே நாளில் 16 பேர் மரணம்\nகோவிட்-19 வைரஸ் தொற்று பெருந்தொற்றின் காரணமாக இன்று ஒரே நாளில் 16 பேர் மரணமடைந்துள்ளனர். இந்நோய் தொற்று பரவத் தொடங்கிய நாள் முதல் ஒரே நாளில் அதிகமானோர் மரணமடைவது இதுதான் முதல் முறையாகும்,\nசுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் கோவிட்-19 பெருந்தொற்றுக்கு இன்று 2,643 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇன்று ஒரே நாளில் 16 பேர் மரணமடைந்துள்ள நிலையில் கோவிட்-19க்கு மரணமடைந்தோரின் எண்ணிக்கை 537ஆக பதிவாகியுள்ளது.\n2,643 பேரில் 63 விழுக்காட்டினர் உள்ளூரைச் சேர்ந்தவர்கள் எனவும் 37 விழுக்காட்டினர் அந்நிய நாட்டினர் எனவும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nSOP தீவிரமாக கட்டுப்படுத்தப்படலாம்- தற்காப்பு அமைச்சர்\nகோவிட்-19 பெருந்தொற்று பரவலை தடுக்கும் வகையில் நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை (SOP) இன்னும் தீவிரமாக கட்டுப்படுத்துவதை அரசாங்கம் பரிசீலித்து வருவதாக முதன்மை தற்காப்பு அமைச்சர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.\nதேசிய பாதுகாப்பு மன்றத்தின் ஆலோசனையின் பேரில் கூடிய விரைவில் அதற்கான அறிவிப்புகள் வரலாம்.\nஎஸ்ஓபி-ஐ கட்டுப்படுத்தும் வகையில் சில துறைகளின் நடவடிக்கைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்றார் அவர்.\nகுறுகிய காலத்தில் பிரதமர் இந்த அறிவிப்பை செய்வார் என்று அவர் மேலும் சொன்னார்.\nகோவிட்-19 பெருந்தொற்று எண்ணிக்கை நேற்று 3,000க்கும் அதி��மாக பதிவு செய்யப்பட்ட நிலையில் மார்ச் மாத பிற்பகுதியில் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளொன்றுக்கு 8,000-ஆக பதிவாகலாம் என்று சுகாதார அமைச்சு கோடி காட்டியது.\nகோவிட்-19 உச்சம்- இன்று ஒரே நாளில் 3,027 பேர் பாதிப்பு\nகோவிட்-19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இன்று 3,027ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.\nகடந்த சில நாட்களாக 2,000க்கும் அதிகமாக இருந்த கோவிட்-19 பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இன்று 3 ஆயிரத்தை எட்டியுள்ளது.\nஇந்நோய்க்கு புதிதாக 8 பேர் மரணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தனது முகநூலில் பகிர்ந்துள்ள தகவலில் கூறப்பட்டுள்ளது.\nகோவிட்-19 வைரஸ் தொற்றுக்கு நாட்டில் இதுவரை 128,465 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 102, 723 பேர் குணமடைந்துள்ள நிலையில் 25,221 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.\nஇந்நோயினால் இதுவரை 521 பேர் மரணமடைந்துள்ளனர்.\n'இயற்கையை காப்போம் இனியதோர் உலகை படைப்போம்' - சிறப்பு கட்டுரை\nபினாங்கு - இயற்கை என்பது இயல்பாக இருப்பது என்பது பொருள் கொண்டதாகும் . இயல்பாகவே தோன்றி மறையும் பொருட்கள் அவற்றின் இயக்கம் , அவை இயங...\nபூச்சோங்- மாரடைப்பின் காரணமாக மனைவியும் அவரை தொடர்ந்து கணவனும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. சிலாங்கூர்,பூச்சோங்கைச் ச...\nசோழன் ஆட்சியை இழந்ததைப்போல, மஇகாவை இழந்து விடாதீர்கள்\nசேரன், சோழன், பாண்டியன் ஆட்சிகளை இழந்து 500 ஆண்டுகளைக் கடந்து விட்டோம். இங்கு வந்து 200 ஆண்டுகளாகக் கட்டமைத்த வாழ்க்கையைத்தான் இன்றும...\nமலேசிய வரலாற்றில் முதன் முறையாக மின்னியல் பொங்கல் ...\nமாலை மரியாதை நிமித்தமாகவே முகக்கவரியை கழற்றினேன் -...\nஉச்சமடையும் கோவிட்-19; தோல்வி காண்கிறதா பிகேபி\nஉள்ளமே ஆலயம் என்பதை போதிப்பது இந்துமதம்- டான்ஶ்ரீ ...\nவீட்டையே ஆலயமாகக் கருதி முருகப் பெருமானை வேண்டுவோம...\nடத்தோஸ்ரீ சரவணன் தலையீட்டில் பினாங்கு நகரத்தார் வெ...\nபத்துமலை திருத்தலத்தை வந்தடைந்தது வெள்ளிரதம்\nகோவிட்-19 பாதிப்பு குறையவில்லையென்றால் பொருளாதார ம...\nவரி வசூலிக்கலாம், விடுமுறை தரக்கூடாதா\nதைப்பூசத்திற்கு சிறப்பு விடுமுறை- கெடாவை மட்டும் ந...\nஎல்லை மீறிச் செல்லும் கெடா மந்திரி பெசார்- கணபதிரா...\nபிகேபி அமலிலும் கட்டுக்குள் அடங்காத கோவிட்-19\nகோவிட்-19 எண்ணிக்கை அதிகரித்தால் பிகேபிபி மாநிலங்க...\nஇந்திரா காந்தியின் வழக்கை ரத்து செய்யக்கோரி ஐஜிபி ...\nபுதிய வாய்ப்புகளை உருவாக்கி இன்பம் காண்போம்- டான்ஸ...\nகொரோனாவிலிருந்து விடுபடும்வரை பொறுமை காப்போம்- டத்...\nநன்றியை பறைசாற்றும் பொங்கல் திருநாளை பாதுகாப்புடன்...\nசிலாங்கூர், கேஎல் உட்பட 6 மாநிலங்களில் மீண்டும் பி...\nதுணைப் பிரதமர் பதவி; திட்டம் ஏதுமில்லை- பிரதமர் து...\nநாட்டில் அவசரகால நிலை பிரகடனமா\nபிஎன் அரசாங்கத்திற்கான ஆதரவை மீட்டுக் கொண்டார் அஹ்...\nபயணிகள் விமானம் மாயம்- இந்தோனேசியாவில் அதிர்ச்சி\nசிலாங்கூரிலும் தைப்பூசக் கொண்டாட்டம் கிடையாது - கண...\nபினாங்கு தைப்பூசம் ரத்து- வீட்டிலிருந்தே கொண்டாடுங...\nகோவிட்-19: ஒரே நாளில் 16 பேர் மரணம்\nSOP தீவிரமாக கட்டுப்படுத்தப்படலாம்- தற்காப்பு அமைச...\nகோவிட்-19 உச்சம்- இன்று ஒரே நாளில் 3,027 பேர் பாத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://namathu.blogspot.com/2014/02/blog-post_5677.html", "date_download": "2021-05-07T00:58:47Z", "digest": "sha1:5AFZKSFJGKJBW2FJR4RYFB4476HOLYEF", "length": 43776, "nlines": 785, "source_domain": "namathu.blogspot.com", "title": "நமது NAMATHU.blogspot.com . . . . . . . நல்வரவு Enter : ஆ. ராசா : தமிழுக்கும் கலைஞருக்கும் என்ன சம்பந்தம் ? தமிழ் எழுந்து நிற்கிற போதெல்லாம் கலைஞர்", "raw_content": "\nஞாயிறு, 16 பிப்ரவரி, 2014\nஆ. ராசா : தமிழுக்கும் கலைஞருக்கும் என்ன சம்பந்தம் தமிழ் எழுந்து நிற்கிற போதெல்லாம் கலைஞர்\nதிருச்சியில் தி.மு.க. 10–வது மாநில மாநாட்டின் 2 நாள் நிகழ்ச்சிகளில் 36 தலைப்புகளில் சொற் பொழிவாளர்கள் பேசினார்கள்.\n’திராவிடம் வளர்த்த தமிழ்’’ தலைப்பில் ராசா எம்.பி., பேசினார். அவர் தனது பேச்சில், ’’தமிழின் ஒட்டுமொத்த வரலாற்றில் இரண்டாக பிரிக்கவேண்டிய கட்டாயத்திற்கு நாம் ஆளாகியிருக்கிறோம். ஒன்று சங்கம் வளர்த்த தமிழ். இரண்டாவது திராவிடம் வளர்த்த தமிழ். சங்கம் வளர்த்த தமிழுக்கும் திராவிடம் வளர்த்த தமிழுக்கும் இடையில் எங்கோ மோதல்; முரன்பாடு. அந்த முரன்பாட்டையும், மோதலையும் தீர்த்து வைத்த இயக்கம் திராவிட இயக்கம் என்ற காரணத்தினாலேதான் திராவிடம் வளர்த்த தமிழ் என்ற தலைப்பை இந்த மாநாட்டிலே பயன்படுத்தியிருக்கிறோம்.\n4500 ஆண்டுகளுக்கு முன்னால் 450 புலவர்கள் கூடி முதல் தமிழ்ச்சங்கத்தை கண்டார்கள். அந்த முதல் தமிழ்ச்சங்கத்தில் காணப்பட்ட பல்லாயிரம் நூல்களில் முதுநாரை,முதுகுறுகு என்ற இரண்டு நூல்களை தவிர எல்லா நூல்கள��ம் நமக்கு கிடைக்கவில்லை. அதற்கு பிறகு, 3500ஆண்டுகளூக்கு முன்னால் வெண்டேசெழியன் இரண்டாவது தமிழ்சங்கத்தை கண்டான். அவனுடைய காலத்திலே கூட தொல்காப்பியம்,இசைநுணுக்கம் இரண்டுநூல்களைத்தவிர எதுவும் நமக்கு கிடைக்கவில்லை. மீண்டும் ஒன்று,இரண்டு, மூன்றாம் நூற்றாண்டுகளில் முதல் தமிழ்ச்சங்கம் துவங்கியது.\nஅந்த தமிழ்சங்கத்திலேதான் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதிணென்கீழ்கணக்கு நூல்கள் எல்லாம் நமக்கு கிடைத்தன. அந்த நூல்கள் கூட, கரையான் தின்றது போக, கடல் தின்றது போக உ.வே.சாமிநாத சர்மா அய்யர் தேடிக்கொடுத்த, தொகுத்துக்கொடுத்த நூல்கள். எஞ்சியுள்ள நூல்கள் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதிணென்கீழ்கண்க்கு. அதிலேதமிழர்களின் வரலாறு பொதிந்திகிடக்கிறது. தமிழர்கள் இந்த உலகத்திற்கு செய்ஹி பொறிந்து கிடக்கிறது. அதற்கு பின்னால் தமிழுக்கு இருண்ட காலம் என்று சொல்லமாட்டேன். ஒரு ஊடுறுவல் காலம்.\nமொழிபடையெடுப்பு என்பதைக்காட்டிலும் மொழி கலப்பு என்பதை சொல்லுவதைக்காட்டிலும்,ஒரு 20 ஆண்டுகாலம் இந்த மண்ணீள் சேதாரங்கள் இருந்துகொண்டே இருக்கிறது. அதற்கு பிறகுதான் திராவிடம் வளர்த்த வளர்ச்சியை காணமுடியும்.\nஎத்தனை எத்தனையோ படையெடுப்புகளூக்கு பிறகும், சிறிது சுணக்கம் ஏற்பட்டதே தவிர, சிறிது இடைஞ்சல் ஏற்பட்டதே தவிர, தமிழ் எப்பொதும் தனது இடத்தை இத்தனை இடத்தை பார்த்த ஒரு மொழி என்று சொன்னால், தாங்கிய ஒரு மொழி என்று சொன்னால் அது தமிழ்மொழிதான்.\nதமிழுக்கும் கலைஞருக்கும் என்ன சம்பந்தம் என்று தமிழ்நாட்டின் முதலமைச்சர் கேட்கிறார். முதலமைச்சர் அவர்களே, எல்லா அரசியல் நிகழ்ச்சிகளுக்கும் போகிறீர்கள் பரவாயில்லை. அரசு நிகழ்ச்சிக்கு போகிறபோதெல்லாம் உங்களின் மக்கள் தொடர்பு அலுவலர் வருகிறார். தமிழ்த்தாய் வாழ்த்து சொன்னது ம் உங்களுடைய கணத்த சரீரம் எழுந்து நிற்கிறது. நீராருங் கடலுடுத்த என்ற பாடலைப்போடுகிறார்கள்.\nஅந்தப்பாடலை இந்த மண்ணிற்கு தந்த தலைவன் என்னுடைய தலைவன் கலைஞர் என்பதை மறக்கவேண்டாம். எழுந்து நிற்கிற போதெல்லாம் தமிழுக்கு மட்டுமல்ல; என்னுடைய தலைவனுக்கும் வணக்கம் சொல்லுகிறது’’ என்று தெரிவித்தார். nakkheeran.in\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஜெயலலிதா பிறந்த நாள் பேனர்: அகற்றக்கோரி நடுரோட்டில...\nஆந்திராவின் புதிய தலைநகர் எது\n பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம்\nமுதல்நாள் முதல் ஷோவுக்கு ரெண்டுபேர்தான் வந்திருக்க...\nEVKS.இளங்கோவன்: பேரறிவாளனை மட்டும் விடுவிப்பதில் ந...\nஒரு வழியாக வல்லினம் வெளியாகிறது\nஎன்னோடு இருந்தால் பதவி கிடைக்காது- மு.க.அழகிரி பேச்சு\nதில்லியை நோக்கி ராணுவப் படைகள் நகர்ந்த விவகாரத்தில...\nபா.ம.க., அலம்பலால் பா.ஜ., அலறல் \nஇன்டர்நெட் மூலம் திருட்டு கார் விற்பனை : MBA பட்டத...\nபெண்களை இழிவுபடுத்தினால் தண்டனை கொடுக்க முடியும்\nமீண்டும் கோர்ட்டாரின் குட்டு. மதுரவாயல் பறக்கும் ச...\nவாழ்க்கை முழுதும் கட்சிகள் மாறிய பண்ருட்டி \nகுற்றங்கள் நிகழாத நாடோ, ஊரோ கிடையாது\nஏழு பேரையும் எம் பி வேட்பாளரா அறிவித்தாலும் ஆச்சரி...\nதர்மபுரி பஸ் எரிப்பு தூக்கு கைதிகளை (ADMK) விடுவிக...\nகட்டிப்பிடி சாமியார் அமிர்தானந்தமயியின் தகிடுதத்தங...\nபாலுமகேந்திரா என்கிற மகத்தான மனிதரைப் பற்றி அர்ச்ச...\nதெலங்கானா தனி மாநில மசோதா ராஜ்யசபாவில் நிறைவேறியது\n- நாடாளுமன்றத்தில் திமுக (ஸ்...\nசுப்ரமணியன் சுவாமி:ஜெயலலிதா ஒரு சினிமா நடிகை. அவரு...\nகேயார் : வீரம், ஜில்லா ரெண்டுமே மகா நஷ்டம்... பத்...\nசுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை ராஜிவ் வழக்கு: 7 பேர...\nWhatsApp பை 16 பில்லியன் டாலர்களுக்கு ‘ஃபேஸ்புக்’ ...\n விஜயகாந்த் கூட்டணி நாடகம் நடத்தி திமுகவி...\nராஜீவ் கொலை கைதிகளுக்கு தூக்கு ரத்து: ப.சிதம்பரம் ...\nசோவியத் யூனியன் போன்று எல்லா தொழில்களையும் தமிழ்நா...\nTraffic ராமசாமிக்கு இருக்கிற வீரம் இதர தமிழனுக்கு...\nஅம்மா மெஸ், அம்மா தண்ணீர், அம்மா காய்கறிகடை, அம்மா...\nகபில்சிபல் : உச்சநீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு ஏற்...\nIBM போன்ற IT துறை ஊழியர்கள் தாம் எத்தகைய அபாயத்த...\n புத்த மதத்திற்கு மாறும் தாழ்த்தப்பட்டோர்...\nதமிழக போலீசின் அட்டூழியம் : சமூகத்திற்கு விடப்படும...\nநளினி, பேரறிவாளன், முருகன், சாந்தன் விடுதலை : ஜெய...\nதங்கம் பயன்பாட்டில் இந்தியாவை விஞ்சியது சீனா\nகருணாநிதியை சந்திக்கிறார் அந்தோணி: தி.மு.க., - காங...\nமதகஜராஜா ஒருவழியாக வெளிவருகிறது Better late than n...\nபதிப்பாளர் பத்ரிக்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற ...\nதெலுங்கானா மசோதா: தி.மு.க. வெளிநடப்பு\nஞானதேசிகன்: ராஜீவ் காந்திக்காகவும் பலியான 18 தமிழர...\n���ேரறிவாளன் தந்தை குயில்தாசன் கோரிக்கை : விரைவில் வ...\nகுற்றவாளியே நீதிபதியை நியமிக்கும் சிதம்பரம் தில்லை...\nஅதிமுக அரசு ஒடுக்கிய பால் விவசாயிகள் போராட்டம் \nதங்கர் பச்சான் : காசு வாங்கிட்டு நடிக்கிற கமலுக்கு...\nதந்தத்தால் செய்யப்பட்ட 1,200 பொருட்களை அழிக்க இளவர...\nSaudi ஆங்கில நாளேட்டின் ஆசிரியராக பெண் நியமனம் \nகிரண்குமார்: இன்று ராஜினாமா- புதுகட்சி துவங்க ஆயத்...\nவைகோ ஒரு உதிரிப்பூக்கள் விஜயன் \nதேவருக்கு தங்கம் – அதிமுக மீது நடவடிக்கை எடுக்குமா...\nஆம் ஆத்மி 49 நாள் ஆட்சி \nமத்திய இடைக்கால பட்ஜெட் 2014-15: முக்கிய அம்சங்கள்\nசென்னை IIT ஐஐடியில் இந்துமத வெறியர்களின் ரவுடிக் க...\nஇரண்டு படகுகளுக்கும் இடையில் சுருக்குமடி, இரட்டைமட...\nப. சிதம்பரம் மீது ஷூ வீசிய குண்டனுக்கு சீட் கொடு...\nடில்லியில் பொங்கிய தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள்\nதிருச்சி தி.மு.க மாநாடு அ.தி.மு.க.,வினரை கடும் அதி...\nஆதரவாளர்களை வாழ்த்தி அனுப்பிய அழகிரி: திருச்சியில்...\nசந்திரா: இளவரசி சந்திராவதியாக ஸ்ரேயா வசீகரிக்கிறார்\nதிமுக நிபந்தனை: சேது சமுத்திர திட்ட ஆதரவு, மதவாதத...\nமோடியும், ராகுலும் அம்பானியின் முகவர்கள்: கெஜ்ரிவா...\nதேமுதிக எம்எல்ஏக்கள் பிரதமரை சந்தித்ததற்கான காரணம்...\nபாடசாலை அதிபரின் பேச்சினால் தற்கொலை செய்த மாணவி ஒர...\nDrகிருஷ்ணசாமி: பேச வாய்ப்பில்லாத அதிமுக அரசில் இரு...\nராமதாஸ் பாணியில் எல்லோருடனும் பேரம் பேசி மானம் போச...\nஆம் ஆத்மி கட்சி ஒரு நக்சலைட் இயக்கம் \nகுஷ்பு :நான் ரத்தத்தில் எழுதித்தருகிறேன்; வெற்றி ...\nஆ. ராசா : தமிழுக்கும் கலைஞருக்கும் என்ன சம்பந்தம் ...\nதி.மு.க.,வில் 'சீட்' பேரம் அதிகரிக்க விஜயகாந்த்:கா...\nDelhi சட்டசபையை முடக்க்கம், ஜனாதிபதி ஆட்சிக்கு ஆலோசனை\nஅறம் - சாவித்திரி கண்ணன்\nநாஞ்சில் சம்பத் :\"கூவத்தூர்\" கூத்தும்.. டீக்கடையும...\nஇன்று 147 பேர் உயிரிழந்துள்ளனர்.ஒரே நாளில் அதிர்ச்...\nஆக்சிஜன் பற்றாக்குறை: டெல்லி பாட்ரா மருத்துவனையில்...\nகுஜராத் கொரோனா மருத்துவமனையில் தீ விபத்து: 18 பேர்...\nகே வி ஆனந்த் என்றொரு கேமராக்காதலன்\nதமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார்\nகங்கைகொண்ட சோழபுரத்தில் நடக்கும் அகழாய்வில் அரண்மன...\nஈவிஎம்களில் என்ன செய்ய முடியும்\nமம்மூட்டியின் ONE கடைக்கால் சந்திரன் பினராயி விஜ...\nகொரோனா இந்தியா-நிமிடத்திற்கு 2 மரணங்க���், வினாடிக்...\nகொரோனா தடுப்பூசிக்கு கே.வி.ஆனந்த் மற்றொரு பலியா..\nகொரோனா ஆக்சிஜன்: சமூக ஊடக காணொளிகளை தடுக்கக் கூடாத...\nவெற்றியைக் கொண்டாடுவதைவிட உயிரைப் பாதுகாப்பதுதான்...\nநாளை மறுநாள் ஓட்டு எண்ணிக்கை- தமிழகத்தில் 1 லட்சம்...\nஇயக்குனர் ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த் மாரடைப்பால் க...\nஜெர்மனியில் மருத்துவமனையில் நடந்த கொலைவெறி தாக்குத...\nட்ரோன் மூலம் விவசாய பயிர்களுக்கு மருந்தடிக்கும் சோ...\nமத்திய அரசு இதயமற்றதாக உள்ளது - நிர்மலா சீதாராமனின...\nஅறிஞர் ஜெயரஞ்சனுக்கு பசுமை விகடன் சவால்\nகோவிட்19 2.0 இல் இருந்து மீண்ட தொழிலதிபரின் அனுபவங...\nமே.வங்கம் மம்தா கட்சி 158, பாஜக 115, காங். அணி 19...\nகேரளாவில் இடசாரிகள் பிரமாண்ட வெற்றி\nதிமுக 234 தொகுதிகளிலும் வெல்லும்.. வாக்கு வித்தியா...\nஅதிமுக முன்னாள் அமைச்சர் அரங்கநாயகம் உடல்நல குறைவா...\nபாஜக தமிழ்நாட்டில் 20 தொகுதிகளிலும் வாஷ் அவுட் ஆகு...\nபீகாரில் 7 ஆண்டு கால மனைவியை காதலனுக்கு மணமுடித்த...\nகடப்பாரையால் தாயை தாக்கி கொலை செய்த மகன் .. கரூரி...\nபரமக்குடி கொரோனா சிகிச்சைக்கு வந்த அரசு டாக்டர்களை...\nமகாராஷ்டிராவில் ஒரே நாளில் 985 பேரை காவு கொண்டது ...\nஸ்டெர்லைட் ஆக்சிஜன் உற்பத்தியை தூத்துக்குடி ஆட்சிய...\nயாழ்ப்பாணம் .. எமில் சௌந்தரநாயகம் .. உலகை கலக்கிய ...\nபெங்களூரில் 3 ஆயிரம் கொரோனா நோயாளர்களை காணவில்லை.\nபரமகுடி மருத்துவர்களை இரவில் கைது செய்து துன்புறுத...\nஅரசு ஒரு மாதம் லாக்டவுன் அறிவித்தால் என்ன செய்யலாம்\nதடுப்பூசியில் 3,28,000 கோடி கொள்ளை\nதமிழகத்தில் மருந்து, ஆக்சிஜன் கையிருப்பை கண்காணிக்...\nடெல்லியில் உடல்களை எரிக்க இடமில்லை; திறந்த வெளிகளி...\nகர்நாடகா: ஆக்சிஜன் கிடைக்காமல் 8 கொரோனா நோயாளிகள் ...\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஜூலை 31 வரை ஆக்சிஜ...\nஅசாமில் பயங்கர நிலநடுக்கம் 6.4 ரிச்டர் அளவில் . ...\nஇலங்கையில் முஸ்லிம் பெண்கள் பர்தா அணிய தடை- அமைச்ச...\nதிரிபுராவில் திருமண வீட்டில் புகுந்த நீதிபதி .. அ...\nதிமுகவின் வெவ்வேறு தளங்களில் அமைச்சரவை பற்றிய விவா...\nபிரெஞ்சு தமிழறிஞர் பிரான்சுவா குரோ.. பிரான்ஸ் போலி...\nஆக்சிஜன் தயாரிப்பை ஆதரிக்கவும் வேண்டும் கண்காணிக்க...\nதி.மு.க அரசு அமைந்ததும் ஸ்டெர்லைட் ஆலை முழுமையாகச்...\nஇந்திபேசா மாநில முதல்வர்களுக்கு வைகோ கடிதம்\nகாப்பர் பிளான்ட்டுக்குள் ���ுழையக் கூடாது: ஸ்டெர்லைட...\nஸ்டெர்லைட் அடாவடி - மார்வாடிகள் கையில் தமிழ்நாடு\nFrançois Gros பிரான்ஸ் நாட்டுத்தமிழறிஞர் பிரான்சுவ...\nஇந்தோனீசியாவில் காணாமல்போன நீர்மூழ்கிக் கப்பல்; 53...\nநாகரிகத்தைக் குலைக்கும் நாம் தமிழர் கட்சி\nஉத்தர பிரதேசதில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு இல்லையாம்\nஸ்டெர்லைட்: திமுகவின் அணுகுமுறையில் மாற்றமா\n\"தேன்\" - சமூக போராளிகளும் பார்க்க மறந்து போன குரங்...\nதமிழகத்திலும் ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடு...\nகோலார் வயல் திருமதி செல்வி தாஸ் காலமானார் .. முன்...\nதமிழகத்தில் ஓராண்டுக்கு ஜனாதிபதி ஆட்சி \nதிமுக ஆட்சி அமைந்த பிறகு, எந்தச் சூழலிலும் நச்சு ஆ...\nமே 1 மற்றும் 2 தேதிகளில் முழு ஊரடங்கை அறிவிக்க தம...\nஸ்டெர்லைட் ஆலையில் 4 மாதத்துக்கு மட்டும் ஆக்சிஜன் ...\nசீமானால் கைவிடப்பட்ட நடிகை விஜயலட்சுமி வீதிக்கு வந...\nதமிழ்நாட்டுக்கு ஆக்ஸிஜன் தேவை; பிற மாநிலங்களுக்கு ...\nநடிகர் அஜித்தின் ஆணவத்தால் வேலையும் இழந்து நிர்கதி...\nசனாதனத்திற்கு எதிரான களத்தில் திமுகவும் ஸ்டாலினும்...\nதமிழக மருத்துவ கட்டமைப்புக்கள் மீது நம்பிக்கை வைத்...\nஇந்தியாவிற்கு கைகொடுக்க முன்வரும் உலக நாடுகள்\nதமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு: சாலைகள் வெறிச்சோடி...\nபிரான்ஸ் போலீஸ் நிலையத்துக்குள் பெண் அதிகாரி கழுத்...\nஇலங்கை முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கைது ஏன்\nசுப்புலட்சுமி ஜெகதீசன் தமிழ்நாட்டின் முதல் பெண் சப...\nஎந்த அளவுக்கு அழிவை ஏற்படுத்த முடியும் என்பதை, இந்...\nமாநிலங்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசம்: மத்திய அரசு\nகொரோனாவால் முழு இந்தியாவே திணறும் போது தமிழகம் மட்...\nநாம் தமிழர் தடா சந்திரசேகர், பழனி உள்ளிட்ட ஆபாச பே...\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.akattiyan.lk/2021/04/27-19.html", "date_download": "2021-05-07T00:08:26Z", "digest": "sha1:DXKOWJAB4W4YL3SDQ5R7YN5P5WVRENLG", "length": 7594, "nlines": 69, "source_domain": "www.akattiyan.lk", "title": "மட்டக்களப்பு பிராந்தியத்தில் 27 கொவிட்-19 தொற்றாளர்கள் அடையாளம் - அகத்தியன் | Online", "raw_content": "\nHome மட்டக்களப்பு மட்டக்களப்பு பிராந்தியத்தில் 27 கொவிட்-19 தொற்றாளர்கள் அடையாளம்\nமட்டக்களப்பு பிராந்தியத்தில் 27 கொவிட்-19 தொற்றாளர்கள் அடையாளம்\nமட்டக்களப்பு பிராந்தியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 27 பேர் கொவிட்-19 தொற்றாளர்களாக அடைய���ளம் காணப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.\nஇவர்களில் 20 பேர் வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவையும்,மூவர் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவையும்,களுவாஞ்சிக்குடி,செங்கலடி,ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலிருந்து தலா ஒருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nஇதுவரை மட்டக்களப்பு பிராந்தியத்தில் 1073 கொவிட் 19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.970 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதுடன் 94 பேர் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.\nஇதேவேளை மட்டக்களப்பு பிராந்தியத்தில் 9 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.\nமூன்றாவது அலை கொவிட் 19 ஆரம்பித்து 9 நாட்களில் 91 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.எனவே தேவையற்று வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் எனவும்,ஒன்று கூடல்களை தவிர்த்துக் கொள்ளுமாறும்,முகக் கவசங்களை அணிய வேண்டும் என்றும்,கைகளை அடிக்கடி கழுவ வேண்டும் என்றும் அவர் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.\nமட்டக்களப்பு பிராந்தியத்தில் 27 கொவிட்-19 தொற்றாளர்கள் அடையாளம் Reviewed by Chief Editor on 4/30/2021 09:59:00 pm Rating: 5\nபாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் மேலதிக வகுப்புகளுக்கு மறு அறிவித்தல் வரை விடுமுறை\nபாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் மேலதிக வகுப்புகளுக்கு மறு அறிவித்தல் வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், நோன்பு பெருநாள், வெசாக் ...\nகொரோனா பரவல் காரணமாக நாட்டின் பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள விடுமுறையானது மேலும் ஒரு வார காலத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ...\nமோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nவாகன போக்குவரத்து திணைக்களத்தின் நாரஹென்பிட்டி மற்றும் வேரஹெர அலுவலகங்கள் ஒரு வாரத்திற்கு மூடப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம த...\nDReAM என அறிமுகப்படுத்தப்பட்டுள்ள முற்பாதுகாப்பு விதிமுறைகளுக்கமைய மதுபான சாலைகளை திறந்து வைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. D – சமூக இடை...\nமுழு அதிகாரம் : அகத்தியன் ஊடக சேவை 2020\nஆசிரியர் பீட தெடர்புகளுக்கு 0779516119\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/world/616684-donald-trump.html", "date_download": "2021-05-07T01:17:52Z", "digest": "sha1:KZKLPJMPL4M454FABGBYNRDU5TLE7UB6", "length": 12172, "nlines": 278, "source_domain": "www.hindutamil.in", "title": "அடுத்த தலாய் லாமா நியமன விவகாரம்: சீனாவின் தலையீட்டை தடுக்கும் சட்டத்தில் கையெழுத்திட்டார் ட்ரம்ப் | donald trump - hindutamil.in", "raw_content": "வெள்ளி, மே 07 2021\nஅடுத்த தலாய் லாமா நியமன விவகாரம்: சீனாவின் தலையீட்டை தடுக்கும் சட்டத்தில் கையெழுத்திட்டார் ட்ரம்ப்\nதிபெத் சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இதனால் சீனாவுக்கு எதிராக புத்த மதத்தினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில், திபெத்தில் அமெரிக்க தூதரகம் திறக்கவும், சீனாவின் எந்த தலையீடும் இல்லாமல் அடுத்த தலாய் லாமாவை திபெத் புத்த மதத்தினர் சுதந்திரமாக தேர்ந்தெடுக்க சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பை பெறும்சட்ட மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்நேற்றுமுன்தினம் கையெழுத் திட்டார். ‘திபெத் கொள்கை மற்றும் பாதுகாப்புச் சட்டம் 2020’ என்று பெயரிடப்பட்டுள்ள மசோதாவில் ட்ரம்ப் கையெழுத்திட்டார்.\nசீனாவின் கடும் எதிர்ப்புக்கு இடையில் இந்த மசோதாவுக்கு கடந்த வாரம் அமெரிக்க செனட் ஒருமனதாக ஒப்புதல் வழங்கியது குறிப்பிடத்தக்கது.\nஇந்த புதிய சட்டத்தின் கீழ், திபெத்தில் அமெரிக்க தூதரகம் ஏற்படுத்தும் வரையில், அமெரிக்காவில் சீனா புதிதாக தூதரகம் திறப்பதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.\nதலாய் லாமா நியமன விவகாரம்சீனாDonald trumpதிபெத்\nநந்திகிராமில் தோற்ற மம்தா பானர்ஜி முதல்வர் பதவியில்...\nபிரதமருக்கு வீடு கட்டச் செலவிடும் ரூ.13,450 கோடியில்...\nபிரசாந்தும் சுனிலும்: இரு பிரச்சாரக் கதைகள்\nதிமுக வெற்றியின் முக்கியத்துவம் என்ன\nஅம்மா உணவகம் சூறை; டிடிவி, ஜெயக்குமார் கண்டனம்:...\nமேற்கு வங்கத்தில் பாஜகவை வீழ்த்திய மம்தா: வெற்றிப்...\nமோடி ஒன்றும் வெல்ல முடியாதவர் அல்ல\nஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளைப் பெற்ற பெண்\n29% பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது: சவுதி\nஇந்தியாவிலிருந்து இலங்கை வரும் பயணிகளுக்குத் தடை: உடனடியாக அமலுக்கு வருவதாக இலங்கை அரசு...\nகரோனா தடுப்பூசிக்கான காப்புரிமையை விட்டுக் கொடுப்பதை ஆதரிக்கிறோம்: அமெரிக்கா அறிவிப்பு\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nமேலும் 1.5 லட்சம் ஸ்புட்னிக் வி தடுப்பூசிகளை அனுப்பும் ரஷ்யா\nகேர���ாவின் திருவனந்தபுரம் மேயராக 21 வயது மாணவி ஆர்யா பதவியேற்பு\nகரோனா வைரஸ் உண்மைகளை அம்பலப்படுத்திய சீன சமூக பத்திரிகையாளருக்கு 4 ஆண்டு சிறை\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/dhanush-asuran/", "date_download": "2021-05-07T01:58:25Z", "digest": "sha1:2GR34ST7DPG7JDIYRN6XMQBTYDXRN4N3", "length": 7317, "nlines": 161, "source_domain": "www.tamilstar.com", "title": "ரஜினி, விஜய், அஜித்தால் முடியாததை கூட செய்துகாட்டி சாதனை படைத்த நடிகர் தனுஷ் - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nரஜினி, விஜய், அஜித்தால் முடியாததை கூட செய்துகாட்டி சாதனை படைத்த நடிகர் தனுஷ்\nரஜினி, விஜய், அஜித்தால் முடியாததை கூட செய்துகாட்டி சாதனை படைத்த நடிகர் தனுஷ்\nநடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். இவர் தற்போது பாலிவுட்டில் கூட நல்ல படங்களில் நடிக்க துவங்கிவிட்டார்.\nசென்ற வருடம் இவர் நடித்து வெளிவந்த அசுரன் படம் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பினை பெற்று வெற்றியடைந்தது. ஆம் இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிக பெரிய வெற்றியை எட்டியது.\nஇந்நிலையில் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களான ரஜினி, விஜய், அஜித்தின் படங்கள் செய்ய முடியாத ஒரு விஷயத்தை தனுஷின் அசுரன் படம் செய்துள்ளது.\nஆம் தமிழ் திரையுலகில் இருந்து முதன் முறையாக ஒரு படம் சீன மொழியில் ரீமேக் செய்யவுள்ளது. அது நம் நடிகர் தனுஷ் நடித்து வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த அசுரன் படம் தான்.\nதல அஜித் அளவிற்கு எனக்கு மாஸ் கிடையாது.. பிரபல பாலிவுட் நடிகர் கேட்ட விஷயம்\nஇணையத்தில் செம்ம வைரலாகும் லொஸ்லியாவின் மிரர் செல்பி புகைப்படம்\nஉயர் அதிகாரியின் மகள் கடத்தப்பட அவரை போலீஸ் அதிகாரி வரலட்சுமி காப்பாற்றுகிறார். அதன் தொடர்ச்சியாக பெண் கடத்தல்...\nகனடியப் ப���ண்களில் நாடு தழுவிய உயர்சாதனை படைத்த ஈழப்பெண்\nஇந்தியாவுக்கு அவசர மருத்துவ உதவி பொருட்களை அனுப்பியது கனடா\n12 வயதிற்கு மேற்பட்டவர்கள் Pfizer தடுப்பூசியை பெற Health கனடா அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tag/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BE/", "date_download": "2021-05-07T01:52:50Z", "digest": "sha1:V5HK43L34B4QNQNBJNDBQDWURNGWA4O6", "length": 8709, "nlines": 171, "source_domain": "www.tamilstar.com", "title": "ராஷ்மிகா மந்தனா Archives - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nTag : ராஷ்மிகா மந்தனா\nMovie Reviews சினிமா செய்திகள்\nநாயகன் கார்த்தியின் தந்தையாக வரும் நெப்போலியன், ஒரு மாபெரும் தாதாவாக இருக்கிறார். அவருக்கு கீழ் வேலை பார்க்கும் ரவுடிகளும் அவருக்கு விசுவாசமாக இருக்கிறார்கள். சிறு வயதிலேயே அம்மா இறந்துவிட, தந்தையின் ரவுடி கூட்டத்திற்கு இடையில்...\nBakkiyaraj KannanKarthirashmika mandannaS.R. PrabhuSathyan SooryansulthanSulthan MovieSulthan Movie ReviewSulthan ReviewVivek - MervinYuvan Shankar Rajaகார்த்திசத்யன் சூரியன்சுல்தான்சுல்தான் திரைவிமர்சனம்சுல்தான் விமர்சனம்பாக்கியராஜ் கண்ணன்யுவன் சங்கர் ராஜாராஷ்மிகா மந்தனாவிவேக் - மெர்வின்\nNews Tamil News சினிமா செய்திகள்\nயுத்தத்தில் வெல்வோம் – ராஷ்மிகா மந்தனா\nதமிழ் தெலுங்கு மொழிகளில் மிகவும் பிரபலமாக இருக்கும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஊரடங்கு நீட்டிப்பு குறித்து கையில் விளக்கு வைத்திருக்கும் புகைப்படம் ஒன்றைப் பதிவு செய்து இருக்கிறார். அதில், “உங்கள் வாழ்க்கை விளக்கைப் போல...\nNews Tamil News சினிமா செய்திகள்\nகன்னடத்தில் நந்தா கிஷோர் இயக்கியுள்ள படம் பொகரு. துருவா சார்ஜா, ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள இப்படத்தின் பாடல் யூடியூப்பில் வெளியிடப்பட்டது. இதற்கு வரவேற்பு கிடைத்தாலும் கூட, பல்வேறு தரப்பில் கண்டனம் எழுந்துள்ளது. மிகப் பெரிய...\nNews Tamil News சினிமா செய்திகள்\nடப்பிங் பேச மறுக்கிறாரா ராஷ்மிகா\nகீதா கோவிந்தம், டியர் காம்ரேட் படங்கள் மூல��் புகழ் வெளிச்சம் பெற்ற நாயகி ராஷ்மிகா மந்தனா, தற்போது தெலுங்கில் பிசியான நடிகையாக நடித்துக் கொண்டிருக்கிறார். தமிழில் கார்த்தி உடன் சுல்தான் படத்தில் நடித்தவர், அடுத்ததாக...\nrashmika mandannaகீதா கோவிந்தம்டியர் காம்ரேட்ராஷ்மிகா மந்தனா\nஉயர் அதிகாரியின் மகள் கடத்தப்பட அவரை போலீஸ் அதிகாரி வரலட்சுமி காப்பாற்றுகிறார். அதன் தொடர்ச்சியாக பெண் கடத்தல்...\nகனடியப் பெண்களில் நாடு தழுவிய உயர்சாதனை படைத்த ஈழப்பெண்\nஇந்தியாவுக்கு அவசர மருத்துவ உதவி பொருட்களை அனுப்பியது கனடா\n12 வயதிற்கு மேற்பட்டவர்கள் Pfizer தடுப்பூசியை பெற Health கனடா அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2021/01/blog-post_171.html", "date_download": "2021-05-06T23:58:46Z", "digest": "sha1:M2AFK4DJDJAGHPNLQ6ANEQHLJJOAMO3C", "length": 11325, "nlines": 89, "source_domain": "www.kurunews.com", "title": "குப்பையில் சிக்கிய முகவரிகளினால் சாய்ந்தமருதில் சிலர் மீது அதிரடி சட்ட நடவடிக்கை ! - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » குப்பையில் சிக்கிய முகவரிகளினால் சாய்ந்தமருதில் சிலர் மீது அதிரடி சட்ட நடவடிக்கை \nகுப்பையில் சிக்கிய முகவரிகளினால் சாய்ந்தமருதில் சிலர் மீது அதிரடி சட்ட நடவடிக்கை \nகல்முனை மாநகர சபையினால் கடந்த சில மாதங்களாக தொடர்ந்தும் வலியுறுத்தி வந்த பொது இடங்களில் குப்பைகள் கொட்டுவது மற்றும் பொதுமக்கள் போக்குவரத்துக்கு இடைஞ்சல் விளைவிப்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனும் அறிவுறுத்தலுக்கு அமைவாக சாய்ந்தமருது வைத்தியசாலை வீதியில் அமைந்துள்ள பாலத்தின் அருகில் தொடர்ந்தும் குப்பைகள் கொட்டப்பட்டு வருவதாக கிடைத்த தகவலை அடுத்து அந்த குப்பைகளில் இருந்து பெறப்பட்ட முகவரிகளை அடிப்படையாக கொண்டு அவர்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்க உள்ளோம் என கல்முனை மாநகர சபை பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் அர்சத் காரியப்பர் தெரிவித்தார்.\nநேற்று ஊடகங்களில் பேசுபொருளாக மாறியிருந்த குப்பைகளினால் மக்கள் அசௌகரியம் எனும் இவ்விவகாரத்திற்கு தீர்வு காணும் நோக்கில் களத்திற்கு விஜயம் செய்த டாக்டர் அர்சத் காரியப்பர் தலைமையிலான சுகாதார குழுவினர் அந்த குப்பைகளை அகற்றிய போது அந்த குப்பைகளிலிருந்து மின்சார சபை நிலுவைப் பட்டியல், நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை நிலுவைப் பட்டி��ல், டெலிகொம் நிலுவைப் பட்டியல் உட்பட முகவரி அச்சிடப்பட்ட நூற்றுக்கணக்கான முகவரிகளை கைப்பற்றினர். அந்த முகவரிகளை அடிப்படையாக கொண்டு பொதுமக்களுக்கு இடைஞ்சல் செய்தோரை நீதிமன்றத்தின் முன்னிலையில் நிறுத்த போவதாக அங்கு கருத்து தெரிவித்த போது மேலும் தெரிவித்தார்.\nஇங்கு கல்முனை பொலிஸ் நிலைய அதிகாரிகள், சாய்ந்தமருது இராணுவ முகாம் படை வீரர்கள், கல்முனை மாநகர சபை சுகாதார பிரிவு பொறுப்பாளர் ஏ.ஏ.எம். அஹ்சன், சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய பொதுச் சுகாதார பரிசோதகர் எம்.எம். பைசால், டெங்கு கட்டுப்பாட்டு கள உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\n\"Kurunews.com ஐ பார்வையிடும் அன்பர்களே Facebook பக்கத்தை Like பண்ணிட்டு போங்கள்\".\nமட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை; பல்வேறு செயற்பாடுகளுக்கு தடை- மாவட்ட அரசாங்க அதிபர்...\nமட்டக்ககளப்பில் தனியார் வகுப்பு நடாத்த தடை விதித்துள்ளதுடன் கொரோனா அதிகரிப்பால் மட்டு போதனா வைத்தியசாலையில் ஒட்சிசன் தேவை அதிகரித்துள்ளது....\nசகல பாடசாலைகளுக்கும் மே மாதம் 07ம் திகதி வரை விடுமுறை\nநாடளாவிய ரீதியில் அனைத்துப் பாடசாலைகளையும் தொடர்ந்தும் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் 7 ஆம் திகதி வரை பாடசாலை...\n10 , 11 தரங்களில் பாடவிதான மாற்றம் அத்துடன் க.பொ.த சா/த, உ/த பரீட்சை நடைபெறும் காலங்களும் மாற்றம்\nதரம் 10 ,11 க்கான பாடத்திட்டங்களை ஒரு வருடம் & 9 மாத காலத்திற்கு மறுசீரமைக்கவும், ஆகஸ்ட் மாதத்தில் க.பொ.த. (சா /த) பரீட்சையை நடாத்தவும்...\nபுனித மிக்கேல் கல்லூரி மாணவன் பௌதீக விஞ்ஞான பிரிவில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலிடம்.\nவெளியான 2020 ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பௌதீக விஞ்ஞான பிரிவில் குகராஜா சஜீவ் 3 A சித்திகளுடன் ...\nபட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலை )களுவாஞ்சிக்குடி யின் சிரேஸ்ட ஆசிரியரான எம்.ஐ.எம்.அஸ்ஹர் எதிர்வரும் 1.05.2021 அன்று தனது 60 வயதில் ஓய்வுபெறுகின்றார்.\nசாய்ந்தமருது 17 , ஓய்வுபெற்ற அதிபர் மர்ஹும் ஏ.ஸி.எம்.இப்றாஹிம் , மர்ஹுமா கதீஜா இப்றாஹீம் தம்பதிகளின் நான்காவது புதல்வரும் பட்டிருப்பு மத...\nமட்டக்களப்பு மாவட்டத்தில் விஞ்ஞான பிரிவில் முதலிடத்தை பெற்ற மட்/பட்டிருப்பு தேசிய பாடசாலை மாணவன்\nவெளியான 2020 ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் விஞ்ஞான பிரிவில் மகிழூர் கண்ணகிபுரத்தை சேர்ந்த தம்பி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://4varinote.wordpress.com/2013/02/05/066/", "date_download": "2021-05-07T01:18:45Z", "digest": "sha1:MSWMVUT6KJ4PR7OSQJIQEARINCYHTFIG", "length": 16331, "nlines": 482, "source_domain": "4varinote.wordpress.com", "title": "கம்யூனிசமும் (கந்த) சாமியும் | நாலு வரி நோட்டு", "raw_content": "\nநச்ன்னு நாலு வரி, நாள்தோறும்\nஎன். சொக்கன் இணையத் தளம்\nஉங்களின் வலைத்தளம் இன்றைய வலைச்சரத்தில் சிறப்பு பெற்றிருக்கிறது நேரம் இருக்கும்போது…\nவிருந்தினர் பதிவு : குழந்தைப் பாடல்கள்\nதமிழ் திரையுலகம் பொதுவுடைமை சமவுடமை சித்தாந்தங்களை அவ்வப்போது படங்களிலும் பாடல்களிலும் சொல்ல முயற்சித்தது.\nஅந்த நாள் சினிமா நாயகன் பொதுவாக பாட்டாளி மக்களின் உரிமைக்காக போராடுபவனாகவே சித்தரிக்கப்பட்டான். அவன் காதலி முதலாளியின் மகளாக இருந்தால் நலம். கதை திரைக்கதையை இன்டர்வெல் பிளாக் வரை நகர்த்துவது சுலபம். ஒரு வேலைநிறுத்தம், ஒரு பொதுவுடைமை கருத்து பாடல் என்று அலைந்து, அடுத்த பாதியை செங்கல்பட்டு விநியோகஸ்த்தரை கலந்து பேசி முடித்துவிடலாம்.\nசினிமா சொன்ன கம்யூனிசம் எவ்வளவு ஆழமானது பாரதிதாசன், பட்டுக்கோட்டை இவர்களின் பாடல்கள் உண்டு. ஆனால் இதற்கு ஒரு template உருவாக்கியவர் மக்கள் திலகம். அவர் அரசியல் வாழ்வை நோக்கி நகரும்பொழுது அவரது சினிமா பிம்பமும் அதோடு align செய்யப்பட்டது.\nகாற்று நம்மை அடிமை என்று விலகவில்லையே\nகடல் நீரும் அடிமை என்று சுடுவதில்லையே\nஎன்ற கருத்து இன்றளவும் கொண்டாடப்படுகிறது. இதே கருத்து மறுபடி மறுபடி வலியுறுத்தப்படுகிறது. மண்குடிசை வாசலென்றால்,தென்றல் வர வெறுத்திடுமா என்னும் கவர்ச்சியான வரிகள் மிகவும் பிரபலம். தொடர்ந்து காற்றும் நீரும் வானும் நெருப்பும் பொதுவில் இருக்குது என்ற பாடல்.கிடைத்தவர்கள் பிழைத்துக்கொண்டார். உழைத்தவர்கள் தெருவில் நின்றார், கவலைப்படாதே இனி எது வந்த போதும் பொதுவென்று வைத்து வாழ்கின்ற ஒரு சமுதாயம் படைப்போம் என்பதே இந்த நாயகர்களின் கனவு.\nநாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே\nசிந்தும் கண்ணீர் தனை மாற்றலாம்\nவாருங்���ள் தோழர்களே ஒன்றாய் சேருங்கள் தோழர்களே\nஎன்று அழைத்தால் அணி திரளும் மக்கள் கூட்டம் உண்டு.எல்லோர்க்கும் யாவும் உண்டு என்றாகும் காலம் இன்று என்பதை தாண்டி மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் சொன்ன இன்னொரு முக்கிய கருத்துகடவுள் இல்லை என்பதும்,. மதம் ஒரு போதைப்பொருள், அது மக்களை அடிமைப்படுத்தி சீரழிக்கிறது என்பதும். மேலே சொன்னதிரைப்பாடல்கள் இதை சொல்கிறதா\nகோடி மக்கள் சேர்ந்து வாழ வேண்டும் விடுதலை\nகோவில் போல நாடு காண வேண்டும் விடுதலை\nஎன்று கோவிலை பாடுகிறது சரி ஆத்திகர்கள் எழுதிய பாடல்களை விட்டுவிடலாம். புலமைப்பித்தன் என்ன சொல்கிறார்\nஎன்று Judgement day சொல்லி நமக்கு மேல் இருக்கும் ஒரு சக்தியை குறிப்பிடுகிறார்.\nகந்தசாமியும் கந்தல் அணிந்த சாமியும் ஒரே பாடலில். இது முரணா\nமக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் அந்த சக்தியை இயற்கை என்று கூறுவார். பல முறை சிந்தித்துப் பார்த்திருக்கிறேன். முழுமையான நாத்திகவாதி உலகில் உண்டா என்று. ஏதோ ஒன்றில் நம்பிக்கை வைக்கும் பொழுதே நாத்திகம் மறைந்து விடுகிறது.\nஇந்த மாதிரி நல்ல கருத்துள்ளப் பாடல்கள் தான் நாளைய அரசியல் தலைவர்களை இன்றும் தமிழகத்தில் உருவாக்கிக் கொண்டிருக்கிறது. பாடலாசிரியர்களுக்கு இந்த அரசியல் தலைவர்கள் என்றாவது நன்றி சொன்னார்களா என்று தெரியவில்லை.\n← ஒரு படத்தின் எல்லாப் பாடல்களையும் ஒருவரே எழுதவேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kalaipoonga.net/cinema/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%AA%E0%AE%9F/", "date_download": "2021-05-07T01:52:24Z", "digest": "sha1:NK2M3NMTIIPO3TVBPYWCOIMGKYZY4H4S", "length": 12076, "nlines": 200, "source_domain": "kalaipoonga.net", "title": "திருச்சியில் மருத்துவ படிப்பு அங்கீகார தேர்வெழுதிய நடிகை சாய்பல்லவி: சமூக வலைத்தளங்களில் வைரலாகும் புகைப்படங்கள் - Kalaipoonga", "raw_content": "\nHome Cinema திருச்சியில் மருத்துவ படிப்பு அங்கீகார தேர்வெழுதிய நடிகை சாய்பல்லவி: சமூக வலைத்தளங்களில் வைரலாகும் புகைப்படங்கள்\nதிருச்சியில் மருத்துவ படிப்பு அங்கீகார தேர்வெழுதிய நடிகை சாய்பல்லவி: சமூக வலைத்தளங்களில் வைரலாகும் புகைப்படங்கள்\nதிருச்சியில் மருத்துவ படிப்பு அங்கீகார தேர்வெழுதிய நடிகை சாய்பல்லவி: சமூக வலைத்தளங்களில் வைரலாகும் புகைப்படங்கள்\n2016-ஆம் ஆண்டு ஜார்ஜியாவில் மருத்துவம் பட���த்த சாய்பல்லவி, பயிற்சி மருத்துவராக தன்னை பதிவுசெய்ய திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் மருத்துவ படிப்பு அங்கீகார தேர்வு எழுதினார். இவரை அடையாளம் கண்டுகொண்ட மாணவ,மாணவிகள் இவருடன் செல்ஃபி எடுத்து, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.\nதமிழ், மலையாளம், தெலுங்கு திரைப்பட உலகில் பிரபலமாக உள்ள நடிகை சாய் பல்லவி. இவர் நடிகையாவதற்கு முன்பே மருத்துவம் படித்துள்ளார். 2016-ம் ஆண்டு ஜார்ஜியாவில் மருத்துவம் படித்து முடித்த சாய்பல்லவி இன்னும் இந்தியாவில் பயிற்சி மருத்துவராக தன்னைப் பதிவு செய்துகொள்ளவில்லை. தற்போது திரைப்படத் துறையை விட படிப்பில் அதிக ஆர்வம்காட்டி வரும் சாய்பல்லவி திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் மருத்துவப் படிப்பு அங்கீகார தேர்வு எழுதுவதற்காக வந்திருக்கிறார்.\nமுகக்கவசம் அணிந்து சுடிதார் துப்பட்டாவால் முகத்தை மறைத்தபடி தேர்வெழுத வந்த சாய் பல்லவியை, மற்ற தேர்வர்கள் எப்படியோ அடையாளம் கண்டுகொண்டனர். அதன்பிறகு அவருடன் சகஜமாக பேசி செல்ஃபியும் எடுத்துக் கொண்டனர். தற்போது இந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வைரலாக பகிர்ந்து வருகின்றனர்.\nதிருச்சியில் மருத்துவ படிப்பு அங்கீகார தேர்வெழுதிய நடிகை சாய்பல்லவி: சூழ்ந்த ரசிகர்கள்\nPrevious article3டி தொழில்நுட்பத்தில் உருவாகும் ஆதிபுருஷ் படத்தில் பிரபாஸுக்கு வில்லனாகும் பிரபல பாலிவுட் நடிகர்\nNext articleடிஜிட்டல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த கட்டண செலுத்துதலை பாஸ்டாக் மூலாம் ஊக்குவித்தல்\nமாநாடு டப்பிங் ஆரம்பம்… படக்குழு வெளியிட்ட புகைப்படங்கள்\nமூத்த தலைவர் ஆர்.எம்.வீரப்பனை நேரில் சந்தித்து ஆசி பெற்றார் மு.க.ஸ்டாலின் | Video\nநமீதா தியேட்டர்ஸ் – உண்மை சம்பவங்களின் அடிப்படியில் உருவாகும் படங்களை ஒளிபரப்பும் முதல் OTT தளம்\nவெளியானது 34 பேர் கொண்ட தமிழக அமைச்சரவை பட்டியல்\nவெளியானது 34 பேர் கொண்ட தமிழக அமைச்சரவை பட்டியல் தமிழகத்தின் முதலமைச்சராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை சென்னை - கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்க உள்ளார். கொரோனா பரவலை கருத்தில்...\nமாநாடு டப்பிங் ஆரம்பம்… படக்குழு வெளியிட்ட புகைப்படங்கள்\nமாநாடு டப்பிங் ஆரம்பம்... படக்குழு வெளியிட்ட புகைப்படங்கள் சிம்பு நடிப்பில் உருவாகி உள்ள படம் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கியுள்ள இப்படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார். இப்படத்தில் சிம்பு அப்துல் காலிக்...\nமூத்த தலைவர் ஆர்.எம்.வீரப்பனை நேரில் சந்தித்து ஆசி பெற்றார் மு.க.ஸ்டாலின் | Video\nமூத்த தலைவர் ஆர்.எம்.வீரப்பனை நேரில் சந்தித்து ஆசி பெற்றார் மு.க.ஸ்டாலின் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றதை அடுத்து தமிழகத்தின் அடுத்த முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பு ஏற்க உள்ளார். நாளை (மே 7...\nவெளியானது 34 பேர் கொண்ட தமிழக அமைச்சரவை பட்டியல்\nவெளியானது 34 பேர் கொண்ட தமிழக அமைச்சரவை பட்டியல் தமிழகத்தின் முதலமைச்சராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை சென்னை - கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்க உள்ளார். கொரோனா பரவலை கருத்தில்...\nமாநாடு டப்பிங் ஆரம்பம்… படக்குழு வெளியிட்ட புகைப்படங்கள்\nமாநாடு டப்பிங் ஆரம்பம்... படக்குழு வெளியிட்ட புகைப்படங்கள் சிம்பு நடிப்பில் உருவாகி உள்ள படம் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கியுள்ள இப்படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார். இப்படத்தில் சிம்பு அப்துல் காலிக்...\nமூத்த தலைவர் ஆர்.எம்.வீரப்பனை நேரில் சந்தித்து ஆசி பெற்றார் மு.க.ஸ்டாலின் | Video\nமூத்த தலைவர் ஆர்.எம்.வீரப்பனை நேரில் சந்தித்து ஆசி பெற்றார் மு.க.ஸ்டாலின் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றதை அடுத்து தமிழகத்தின் அடுத்த முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பு ஏற்க உள்ளார். நாளை (மே 7...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/india/2021/may/04/police-punished-those-who-violated-the-curfew-3617029.amp", "date_download": "2021-05-07T00:27:28Z", "digest": "sha1:AQWORQZGHNDDCXSDDZ2KFWR4GBWFXVZP", "length": 4287, "nlines": 39, "source_domain": "m.dinamani.com", "title": "ஊரடங்கை மீறியவர்களுக்குத் தண்டனை அளித்த காவல் துறை | Dinamani", "raw_content": "\nஊரடங்கை மீறியவர்களுக்குத் தண்டனை அளித்த காவல் துறை\nஹரியாணாவில் முழு முடக்கத்தை மீறி வெளியில் அவசியமின்றி நடமாடியவர்களுக்கு காவல்துறையினர் தோப்புக்கரணம் போடவைத்து அனுப்பிவைத்தனர்.\nஹரியாணாவில் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அதனைக் கட்டுப்படுத்தும் வகையில் முழு முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (மே 3) முதல் முழு முடக்கம் அமலுக்கு வந்தது.\nஇந்நிலையில் பொதுமுடக்கத்தை மீறி பொதுமக்கள் பலர் அவசியமின்றி வெளியில் நடமாடினர். அவர்களை எச்சரித்த காவல் துறையினர் அவர்களை சாலையில் நிற்கவைத்து தோப்புக்கரணம் போடவைத்து அறிவுறுத்தி அனுப்பினர்.\nகரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ள தயாராக வேண்டும்: உச்சநீதிமன்றம்\nமேற்கு வங்கத்தில் மத்திய அமைச்சர் முரளீதரன் கார் மீது தாக்குதல்\nஇணையதளம் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு சான்றிதழ் வழங்குவது கட்டாயம்\nகாஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nகேரளத்தில் கரோனா விதிகளை மீறி கூடிய 480 கிறிஸ்தவ பாதிரியாா்கள் மீது வழக்கு\nமகாராஷ்டிரம்: ரூ.21.3 கோடி மதிப்பிலான 7 கிலோ யுரேனியம் பறிமுதல்\nஇந்தியாவில் கரோனா பாதிப்பு விவரம்\nமேற்கு வங்கம்: புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்கள் பதவியேற்பு\nwest bengal electionஆஸ்கர் விருதுஸ்டெர்லைட்முதல்வர் எடப்பாடி பழனிசாமிஇந்தியாவில் கரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mkppando.com/2021/01/", "date_download": "2021-05-07T01:49:22Z", "digest": "sha1:TME6NEADWAOELWBPYX4CZ37NUDUG2NW3", "length": 6495, "nlines": 70, "source_domain": "mkppando.com", "title": "January 2021 - My Life Experience", "raw_content": "\nபுரிதல் பற்றிய ஒரு புரிதலும் அதன் அவசியமும்\nபுரிதல் பற்றிய ஒரு புரிதலும் அதன் அவசியமும் 4 27 1 2021 அன்று இரவில் ஸ்ரீ செல்வ விநாயகர் வாட்சப் குழுவில் நம்பிக்கை சம்பந்தமாக சில விஷயங்கள் பேசினேன். உடனே தம்பி சிவஞானம் என்னிடம் சில விபரம் கேட்டார். முழுமையாக அவருக்கு தெளிவு என்னால் கொடுக்கப்படவில்லை என்பது மட்டும் புரிந்து கொண்டேன். நம்பிக்கையும் நேர்மையும் பகுதி 1 பிள்ளையார் கோவில் கட்டிக்கொடுங்கள் என்று கேட்டு பிள்ளையார் சுழி போட்டது ஐயா பாலகிருஷ்ணன் அவர்கள். அவர் கேட்டுக்கொண்டதை முன்னிட்டு…\nபுரிதல் பற்றிய ஒரு புரிதலும் அதன் அவசியமும் 3\n நான் உண்மையான சரியான புரிதலில்தான் இயங்குகிறேனா நமக்கு பருவ வயது வந்ததும், பல வித உணர்வுகளுக்கு ஆளாகின்றோம். அந்த உணர்வுகளை வெளிப்பாடு செய்ய சமுதாயம் திருமணம் போன்ற விஷயங்களை செய்து வைக்க பரிந்துரை செய்கிறது. திருமணம் என்பது ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது. திருமணத்துக்குப்பிறகு, நாம் அடுத்தக்கட்ட வளர்ச்சியை நோக்கி பயணம் செய்கிறோம். சிலருக்கு தொழில், வேளை அமைத்துக்கொள்கின்றனர். சிலர் சேவைகள், ஆன்மிகம��� என்று பயணிக்கின்றனர். இதில் நான் சொல்ல விரும்புவது அடுத்தக்கட்ட…\nபுரிதல் பற்றிய ஒரு புரிதலும் அதன் அவசியமும் 2\n ஒவ்வொரு சிந்தனை,செயல்கள் சரியான புரிதலில் இருக்கிறேனா நுட்பமாக நமது புரிதலை பற்றி ஆழ்ந்து ஆராய்ந்தாள், நாம் நமது வாழ்வின் நோக்கத்தை ஆராய்ந்து, அறிந்து, அதை அடையும் முயற்சி யில் போதிய எண்ணங்கள் போட்டு, நமது எண்ணங்களை வழி நடத்துவதை நாம் செய்வதில்லை என்பது புரிய வரும். நமது எண்ணங்களை நாம் நிர்வகிப்பது இல்லை. அதற்குப் பதிலாக, நமது எண்ணங்களை ஆக்கிரமிப்பது, நமது பழைய தேவையற்ற, வாழ்க்கைக்கு உதவாத, மூட நம்பிக்கைகள், அபிப்பிராயங்கள் போன்றவைகளே.…\nபுரிதல் பற்றிய ஒரு புரிதலும் அதன் அவசியமும்-7\nபுரிதல் பற்றிய ஒரு புரிதலும் அதன் அவசியமும்-6\nபுரிதல் பற்றிய ஒரு புரிதலும் அதன் அவசியமும்\nVigneskanna on புரிதல் பற்றிய ஒரு புரிதலும் அதன் அவசியமும்\nநான் எல்லா உயிரினங்களையும் சமமாக பார்க்கிறேனா\nபுரிதல் பற்றிய ஒரு புரிதலும் அதன் அவசியமும்\nஶ்ரீசெல்வ வினாயகர், மேலமருங்கூர் – தம்பி சிவஞானம் என்ற ராசு அவரின் பார்வைய\nஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயம் – MKP பாண்டுரங்கன் கண்ணோட்டத்தில்\nஸ்ரீ செல்வா விநாயகர் கோவில் வந்த உண்மை கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://prosperspiritually.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-162/", "date_download": "2021-05-07T00:52:49Z", "digest": "sha1:2LGKAFLIPQYJKIUG65IAG3SMSA7RLGBC", "length": 4815, "nlines": 86, "source_domain": "prosperspiritually.com", "title": "சிந்திக்க அமுத மொழிகள்- 162 - Prosper Spiritually", "raw_content": "\nசிந்தித்தலின் அன்றாட சுயசோதனை பயிற்சி\nசிந்திக்க அமுத மொழிகள்- 162\nசிந்திக்க அமுத மொழிகள்- 162\nவாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு\n“சோம்பித் திரிபவர்கள் ஒர் எறும்பிடம் சிறப்பான பாடம் பயில மாட்டார்களா\n. . . சாலமன் மன்னன்.\n1) அறிஞர் சாலமன் மன்னனின் ஆதங்கம் பற்றி சிந்திக்கவும்\n2) சோம்பலைப் பற்றி திருவள்ளுவர் அருளியுள்ள அதிகாரம் என்ன\n3) அந்த அதிகாரம் எந்த அதிகாரத்திற்கு பின், எந்த அதிகாரத்திற்கு முன் வைக்கப்பட்டுள்ளது\nவாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்\nPrev:சிந்திக்க அமுத மொழிகள் – 161\nNext:பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும் – 6/\nசிந்தித்தலின் அன்றாட சுயசோதனை பயிற்சி\nசிந்தித்தலின் அன்றாட சுயசோதனை பயிற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/bigg-boss-tamil-4-samyuktha-gets-reply-from-meera-mithun/", "date_download": "2021-05-07T01:19:59Z", "digest": "sha1:R5P2X3NXYFPJPQSS2FQMH5LR6MPCXMHD", "length": 9056, "nlines": 95, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Bigg Boss Tamil 4 Samyuktha Gets Reply From Meera Mithun", "raw_content": "\nHome பிக் பாஸ் இந்த சம்யுக்தா யார் தெரியுமா இதனால் தான் என்னை கலாய்கிறார். புகைப்படத்துடன் மீரா மிதுன்...\nஇந்த சம்யுக்தா யார் தெரியுமா இதனால் தான் என்னை கலாய்கிறார். புகைப்படத்துடன் மீரா மிதுன் போட்ட ட்வீட்.\nவிஜய் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பல்வேறு போட்டியாளர்கள் பலவீனம் அடைந்தார்கள் அந்த வகையில் நெகட்டிவ் பப்ளிசிட்டி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து மீராமிதுன் தான் மாடல் அழகியும் நடிகையுமான மீராமிதுன் தமிழில் ஒரு சில படங்களில் நடித்து இருக்கிறார். ஆனால் இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்திக் கொடுத்தது என்னவோ பிக்பாஸ் நிகழ்ச்சி தான், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்தபோது இவர் ஏகப்பட்ட கெட்ட பெயரோடு வெளியேறினார்.\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னரும் அடங்காத இவர் தொடர்ந்து போட்டியாளர்களை பற்றி அவதூறாக பேசி வந்தார், அப்போதும் இவருக்கு பெரிய பிரபலம் ஏற்படவில்லை, இதனால் தமிழ் சினிமாவில் இருக்கும் விஜய் சூர்யா என்று உச்ச நட்சத்திரங்கள் விமர்சித்து அதன் மூலம் பிரபலத்தை தேடிக் கொண்டு வருகிறார் மீராமிதுன். இவர் எந்த பேட்டியில் பங்கு பெற்றாலும் தான் ஒரு சூப்பர் மாடல் என்று குறிப்பிடுவது வழக்கமான ஒன்று தான்.\nஇப்படி ஒரு நிலையில் விஜய் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் மீரான் மிதுனின் சூப்பர் மாடல் பட்டத்தை மறைமுகமாக கலாய்த்திருக்கிறார் மாடலும் நடிகையுமான சம்யுக்தா. கடந்த புதன் கிழமை நடந்த டாஸ்கின் போது பேசிய சம்யுக்தா, தான் ஒரு மாடல் தான். நான் பல்வேறு விளம்பர படங்களில் நடித்து இருக்கிறேன். ஆனால் என்னை நான் சூப்பர் மாடல் என்று அழைத்துக் கொள்ள மாட்டேன் என்று சொன்னதும் போட்டியாளர்கள் அனைவரும் சிரித்து விட்டனர். காரணம் இவர் மீரா மிதுனை தான் செல்கிறார் என்பது பார்வையாளர்கள் உட்பட அனைவருமே வெட்ட வெளிச்சமாக தெரிந்தது.\nசனம் ஷெட்டி கூட இது தான் இன்றைய ப்ரோமோ கண்டன்ட் என்று கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் இதற்கு பதிலடி கொடுத்துள்ள மீரா மிதுன், சம்யுக்தாவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு,\nPrevious articleநீச்சல் உடையில் முரட்டு போஸ் கொடுத்துள்ள இருட்டு பட நடிகை. புகைப்படம் உள்ளே.\nNext articleபிகில் பட நடிகையுடன் நடித்துள்ள சோம் சேகர். எதில் தெரியுமா \nபிக் பாஸ் 5வில் கலந்துகொள்வது பற்றி தனது யூடுயூப் சேனலில் தெரிவித்த குக்கு வித் கோமாளி பிரபலம்\nஉடல் எடை கூடி பருமனான அபிராமி – தனது புண்ணகைப்படத்திற்கு கீழ் கேலிக்கு கொடுத்த பதிலடி.\nபிக்பாஸ் சீசன் 4 மிஸ் ஆகிடுச்சு, சீசன் 5-ல் அஸீம் போகிறாரா \n பிக்பாஸ் வீட்டில் கொந்தளித்த ஐஸ்வர்யா..\nஒரே ஒரு டாஸ்க் தான் – அர்ச்சனாவின் அன்பு பேட்டை தவிடு பொடியாக்கிய பிக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/news/7th-round-of-talks-begins-between-farmers-and-government-at-new-delhi-expects-good-outcome/", "date_download": "2021-05-07T00:21:48Z", "digest": "sha1:AXFK2Q6Z6KZKNTCEZ4NCH46BFIRNIILF", "length": 14041, "nlines": 124, "source_domain": "tamil.krishijagran.com", "title": "முடிவு எட்டுமா விவசாயிகள் போராட்டம் : 7வது கட்ட பேச்சுவார்த்தை தொடக்கம்!! - இது வரை 60 விவசாயிகள் உயிரிழப்பு!!", "raw_content": "செய்திகள் வாழ்வும் நலமும் தோட்டக்கலை கால்நடை வெற்றிக் கதைகள் விவசாய தகவல்கள் FTB அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா Directory\n#FTB விவசாய தகவல்கள் அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா\nஎங்கள் அச்சு மற்றும் டிஜிட்டல் பத்திரிகைகளுக்கு குழுசேரவும்\nசமூக ஊடகங்களில் எங்களுடன் இணைக்கவும்:\nமுடிவு எட்டுமா விவசாயிகள் போராட்டம் : 7வது கட்ட பேச்சுவார்த்தை தொடக்கம் - இது வரை 60 விவசாயிகள் உயிரிழப்பு\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுடன் மத்திய அரசு இன்று மீண்டும் தனது 7-வது கட்ட பேச்சுவார்த்தயை தொடங்கியுள்ளது. இதனிடையே, டெல்லி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளில் இதுவரை 60 பேர் உயிரிழந்துள்ளனர்.\nவேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி பஞ்சாப், ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் கடந்த நவம்பர் 26ந் தேதி முதல் உறைய வைக்கும் குளிருக்கு மத்தியில் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.\nஇது தொடர்பாக மத்திய அரசு விவசாயிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்���ை நடத்தி வருகின்றது. கடைசியாக கடந்த 30-ந்தேதி நடந்த பேச்சுவார்த்தையில் விவசாயிகளின் 2 பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டன. எனினும் சட்டங்களை திரும்பப்பெறுதல் மற்றும் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் ஆகிய 2 பிரதான கோரிக்கைகளுக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை.\n7-வது கட்ட பேச்சுவார்த்தை தொடக்கம்\nஎனவே இது குறித்து மத்திய அமைச்சர்கள் அடங்கிய மத்திய அரசு பிரதிநிதிகளுடன், சுமார் 41 விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் இன்று மீண்டும் தங்கள் 7-வது கட்ட (7-th round of Talks between farmers and Govt begins) பேச்சுவார்த்தையை நடத்தி வருகின்றனர். டெல்லி விஞ்ஞான் பவனில் நடைபெற்று வருகிறது. விவசாயிகளுடன் போராட்டம் இன்றுடன் 40-வது நாளை எட்டும் நிலையில், இன்று நடைபெறும் பேச்சுவார்த்தையில் தீர்வு காணப்படும் என அரசு வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளன.\nஇதுவரை 60 விவசாயிகள் உயிரிழப்பு\nஇதனிடையே, குளிர் மற்றும் மழையைப் பொருட்படுத்தாமல் விவசாயிகள் போராட்டக் களங்களில் முகாமிட்டுள்ளதால், வயதான விவசாயிகளின் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், இதுவரை 60 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.\n16 மணி நேரத்திற்கு ஒரு விவசாயி உயிரிழப்பதாகவும், இதற்கு மத்திய அரசு பதில் சொல்லவேண்டும் என்று பாரதிய கிசான் யூனியன் செய்தித் தொடர்பாளர் ராகேஷ் திகாயித் தெரிவித்துள்ளார்.\nபொங்கல் பரிசு தொகுப்பு ரூ.2,500 இன்று முதல் ரேஷன் கடைகளில் வினியோகம்\nதமிழ்நாட்டில் வளர்ப்புக்கு தடைசெய்யப்பட ஆப்ரிக்க கெளுத்தி மீன்கள்\nபொங்கலுக்கு வலுசேர்க்கும் மண்பானைகள் - தயாரிப்பு பணிகள் தீவிரம்\nஅன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.\nஉங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....\nபங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)\nவிவசாய விளைப் பொருட்களை அரசே கொள்முதல் செய்து விற்பனை செய்யும் திட்டம் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி யோசனை\n4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை தொடரும்- வானிலை மையம் எச்சரிக்கை\nகொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, முழு ஊரடங்கை அமல்படுத்த உச்ச நீதிமன்றம் பரிந்துரை\nகொப்பரை உற்பத்தி செய்ய நவீன இயந்திரம்: விவசாயிகள் மகிழ்ச்சி\n செய்ய வேண்டியவையும், செய்யக் கூடாதவையும்\nவிளைநிலங்களில் வீணாகும் தர்பூசணி பழங்கள்\nபூச்சிகளைப் புரிந்து கொள்(ல்)வோம்- காணொளி மூலம் பயிற்சி\nரூ.4000 கொரோனா நிவாரண நிதிவழங்கும் திட்டம் - நாளை ஸ்டாலின் முதல் கையெழுத்து\nவாடிக்கையாளர்களுக்கு புதியவகை டிசைனர் சிலிண்டரை அறிமுகம் செய்த IOCL\nஒரே நிமிடத்தில் cowin.gov.in தளத்தில் கொரோனா தடுப்பூசி பதிவு செய்வது எப்படி\nபருத்தியைத் தாக்கும் மாவுப்பூச்சிகளை எப்படி கட்டுப்படுத்தலாம்\nகொரோனாவைத் தடுக்கும் முயற்சியில், புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்\nஒன்றல்ல, இரண்டல்ல, ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள்\nதொற்றுநோய்களைத் தடுக்கும் ஊட்டச்சத்து அணுகுண்டு எது தெரியுமா\nமாடித்தோட்டத்திற்கு ஏற்ற மண் கலவை வகைகள் எவை\nவிவசாயிகள் நலன் கருதி சாகுபடி தொடர்பான சந்தேகம் ஏற்பட்டால் வேளாண் விஞ்ஞானிகளை அணுகலாம்: தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2021/02/03/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF/", "date_download": "2021-05-07T00:01:23Z", "digest": "sha1:E733ASH3NOINNP2ONJ3T42LIRMKZYZUI", "length": 8686, "nlines": 195, "source_domain": "tamilandvedas.com", "title": "இலங்கை வரைபடம், இலங்கையின் முக்கிய ஊர்கள் (Post No.9223) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nஇலங்கை வரைபடம், இலங்கையின் முக்கிய ஊர்கள் (Post No.9223)\nஇலங்கை வரைபடத்தில் (Sri Lanka Map) தமிழர்கள் தொடர்புள்ள இடங்களும் வரலாற்றுச் சிறப்புள்ள இடங்களும் குறிக்கப்பட்டுள்ளன.\nமேலும் பழைய ஊர்ப்பெயர்களும் ஆங்கிலேயர் உரு மாற்றிய ஊர்ப் பெயர்களும் அவற்றுக்கான சரியான பெயர்களும் படத்தில் உள்ளன.\nஆராய்ச்சியாளர்களுக்கு பயனுள்ள தகவல்கள் . படத்தை வெயிட்டோருக்கு நன்றி .\n(பழைய பேப்பர் கட்டிங் paper cuttings குகளை வெகு வேகமாகக் களைந்து வருகிறேன். எந்தப் புஸ்தகத்திலிருந்து எடுத்தேன் என்பதைக் குறிக்க மறந்து விட்டேன் ).\nTagged இலங்கை வரைபடம், ஊர்கள், மேப், Sri Lanka, Tamil Map\nகோவில் மசூதியாக மாற்றப்பட்ட அநியாயம்\nanecdotes Appar ARTICLES Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya crossword Hindu Indra in Tamil Kalidasa Lincoln london swaminathan mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar POSTS proverbs Quotations quotes Rig Veda shakespeare Silappadikaram Tamil Tirukkural Valluvar Valmiki Vedas அப்பர் கங்கை கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலண்டர் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி சுவாமிநாதன் ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பட்டியல் பழமொழி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவன் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2021/may/03/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-3616156.html", "date_download": "2021-05-07T02:10:07Z", "digest": "sha1:26QBTUP3FMKUBD24DF2W7YJFS4TWLZFI", "length": 12423, "nlines": 143, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பாப்பிரெட்டிப்பட்டியில் அதிமுக, தருமபுரியில் பாமக வேட்பாளா்கள் வெற்றி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n06 மே 2021 வியாழக்கிழமை 06:33:21 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி\nபாப்பிரெட்டிப்பட்டியில் அதிமுக, தருமபுரியில் பாமக வேட்பாளா்கள் வெற்றி\nதருமபுரி: தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் அதிமுக வேட்பாளா் ஆ.கோவிந்தசாமி மற்றும் தருமபுரியில் பாமக வேட்பாளா் எஸ்.பி.வெங்கேடஸ்வரன் ஆகியோா் வெற்றிபெற்றனா்.\nபாப்பிரெட்டிப்பட்டி பேரவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் அத் தொகுதி எம்எல்ஏ ஆ.கோவிந்தசாமி போட்டியிட்டாா். இவரை எதிா்த்து திமுக சாா்பில் மருத்துவா் ம.பிரபு ராஜசேகா் போட்டியிட்டாா். இவரைத் தவிர, அமமுக சாா்பில் முன்னாள் அமைச்சா் பி.பழனியப்பன் உள்பட மொத்தம் 15 போ் போட்டியிட்டனா்.\nஇந்தத் தொகுதியில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்ற பொதுத் தோ்தலில் 2,21,276 வாக்குகள் பதிவாகியிருந்தன. இந்த வாக்குகள் ஞாயிற்றுக்கிழமை 27 சுற்றுகளாக எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் தொடக்கம் முதலே அதிமுக வேட்பாளா் ஆ.கோவிந்தசாமி முன்னிலை வகித்து வந்தாா். திமுக வேட்பாளா் அனைத்து சுற்றிலும் தொடா்ந்து இண்டாம் இடம் வகித்து வந்தாா். இறுதியில் 27-ஆவது சுற்று முடிவில் 1,14,507 வாக்குகள் பெற்றாா். திமுக வேட்பாளா் பிரபுராஜசேகா் 77,564 வாக்குகள் பெற்றாா். இவரை காட்டிலும் அதிமுக வேட்பாளா் 36,943 வாக்குகள் கூடுதலாக பெற்ால் வெற்றிபெற்ாக அறிவிக்கப்பட்டாா். வெற்றிபெற்ற்கான சான்றிதழை அதிமுக வேட்பாளா் கோவிந்தசாமி தோ்தல் நடத்தும் அலுவலரிடமிருந்து பெற்றாா்.\nஇத்தொகுதியில் அதிமுக கூட்டணி சாா்பில் பாமக வேட்பாளா் எஸ்.பி.வெங்கேடஸ்வரன் போட்டியிட்டாா். இவரை எதிா்த்து திமுக வேட்பாளா் தருமபுரி தொகுதியின் எம்எல்ஏ தடங்கம் பெ.சுப்ரமணி போட்டியிட்டாா். இதேபோல, அமமுக சாா்பில் டி.கே.ராஜேந்திரன், மக்கள் நீதி மய்யம் சாா்பில் ஜெயவெங்கடேசன் உள்பட மொத்தம் 21 போ் போட்டியிட்டனா். இத் தொகுதியில் மொத்தம் 2,17,879 வாக்குகள் பதிவாகியிருந்தன. இந்த வாக்குகள் மொத்தம் 28 சுற்றுகளாக எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் தொடக்கம் முதலே பாமக வேட்பாளா் எஸ்.பி.வெங்கேடஸ்வரன் முன்னிலை வகித்து வந்தாா். இறுதியில் 28-ஆவது சுற்றில்1,05,630 வாக்குகள் பெற்றாா்.\nஇவரை எதிா்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளா் தடங்கம் பெ.சுப்ரமணி 78,770 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தை வகித்தாா். இவரைக் காட்டிலும் 26,860 வாக்குகள் கூடுதலாக பெற்று பாமக வேட்பாளா் எஸ்.பி.வெங்கேடஸ்வரன் வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டாா். இதையடுத்து தருமபுரி தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரிடமிருந்து வெற்றி பெற்ற்கான சான்றிதழை அவா் பெற்றாா்.\nகளைகட்டிய அண்ணா அறிவாலயம் - படங்கள்\nஆக்ஸிஜன் செறிவூட்டிகளுடன் இந்தியாவுக்கு வந்த விமானங்கள் - படங்கள்\nதிமுக தொண்டர்கள் கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nஸ்ரீ குரு தேக் பகதூரின் 400-வது பிறந்தநாள் - படங்கள்\nஅண்ணாத்த படப்பிடிப்புக்காக ஹைதராபாத் சென்ற நயன்தாரா - படங்கள்\nகும்பமேளா: கங்கையில் புனித நீராடிய பக்தர்கள் - படங்கள்\nசித்த மருத்துவத்தில் கரோனாவுக்குச் சிறந்த தடுப்பு மருந்து\nகரோனாவை தடுக்க சித்த மருத்துவம் தரும் டிப்ஸ்..\nரெம்டெசிவிா் மருந்து தேவைப்படுவோர் கவனிக்க..\nகரோனா தடுப்பூசிக்கு முன்பதிவு செய்வோர் கவனிக்க..\n'விடுதலை' படத்தின் டிரெய்லர் வெளியீடு\nதயுவு செய்து இதைச் செய்யாதீர்கள்..\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gktamil.in/2017/09/tnpsc-current-affairs-quiz-online-test-146.html", "date_download": "2021-05-07T01:13:30Z", "digest": "sha1:7DT4NPDF57RHN45R5C7UIGPSBT7IJLNS", "length": 20184, "nlines": 68, "source_domain": "www.gktamil.in", "title": "GK Tamil.in: TNPSC Current Affairs Quiz Online Test 146 - August 2017 (Tamil) - World Affairs, Awards */ /* Content ----------------------------------------------- */ body { font: normal normal 14px 'Raleway', sans-serif; color: #222222; background: #f7f7f7 none repeat scroll top left; padding: 0 40px 0 40px; } html body .region-inner { min-width: 0; max-width: 100%; width: auto; } h2 { font-size: 22px; } a:link { text-decoration:none; color: #00ae86; } a:visited { text-decoration:none; color: #00ae86; } a:hover { text-decoration:none; color: #41d5b3; transition:0.3s; } .body-fauxcolumn-outer .fauxcolumn-inner { _background-image: none; } .body-fauxcolumn-outer .cap-top { position: absolute; z-index: 1; height: 400px; width: 100%; } .body-fauxcolumn-outer .cap-top .cap-left { width: 100%; _background-image: none; } .content-outer { -moz-box-shadow: 0 0 40px rgba(0, 0, 0, .15); -webkit-box-shadow: 0 0 5px rgba(0, 0, 0, .15); -goog-ms-box-shadow: 0 0 10px #333333; box-shadow: 0 0 40px rgba(0, 0, 0, .15); margin-bottom: 1px; } .content-inner { padding: 10px 10px; } .content-inner { background-color: #ffffff; } /* Header ----------------------------------------------- */ .header-outer { _background-image: none; } .Header h1 { font: normal normal 50px 'Raleway', sans-serif; color: #222222; text-shadow: -1px -1px 1px rgba(0, 0, 0, .2); text-align:center; } .Header h1 a { color: #222222; } .Header .description { font-size: 140%; color: #777777; text-align:center; } .header-inner .Header .titlewrapper { padding: 22px 30px; } .header-inner .Header .descriptionwrapper { padding: 0 30px; } /* Tabs ----------------------------------------------- */ .tabs-inner .section:first-child { border-top: 1px solid #eeeeee; } .tabs-inner .section:first-child ul { margin-top: -1px; border-top: 1px solid #eeeeee; border-left: 0 solid #eeeeee; border-right: 0 solid #eeeeee; } .tabs-inner .widget ul { _background-image: none; border-bottom: 1px solid #eeeeee; margin-top: 0; margin-left: -30px; margin-right: -30px; } .tabs-inner .widget li a { display: inline-block; padding: .6em 1em; font: normal normal 14px 'Raleway', sans-serif; color: #999999; border-left: 1px solid #ffffff; border-right: 1px solid #eeeeee; } .tabs-inner .widget li:first-child a { border-left: none; } .tabs-inner .widget li.selected a, .tabs-inner .widget li a:hover { color: #000000; background-color: #eeeeee; text-decoration: none; } /* Columns ----------------------------------------------- */ .main-outer { border-top: 0 solid #eeeeee; } .fauxcolumn-left-outer .fauxcolumn-inner { border-right: 1px solid #eeeeee; } .fauxcolumn-right-outer .fauxcolumn-inner { /*border-left: 1px solid #eeeeee;*/ } /* Headings ----------------------------------------------- */ div.widget > h2, div.widget h2.title { margin: 0 0 1em 0; font: normal bold 11px 'Raleway', sans-serif; color: #222222; } /* Widgets ----------------------------------------------- */ .widget .zippy { color: #262626; /* text-shadow: 2px 2px 1px rgba(0, 0, 0, .1); */ } .widget .popular-posts ul { list-style: none; } /* Posts ----------------------------------------------- */ h2.date-header { font: normal bold 11px 'Raleway', sans-serif; } .date-header span { background-color: transparent; color: #222222; padding: inherit; letter-spacing: inherit; margin: inherit; } .main-inner { padding-top: 30px; padding-bottom: 30px; } .main-inner .column-center-inner { padding: 0; } .main-inner .column-center-inner .section { margin: 0 15px; } .post { margin: 0 0 25px 0; } h3.post-title a { font: normal bold 15px 'Raleway', sans-serif; margin: .75em 0 0; } h3.post-title, .comments h4 { font: normal bold 20px 'Raleway', sans-serif; } .post-body { font-size: 110%; line-height: 1.4; position: relative; } .post-body img, .post-body .tr-caption-container, .Profile img, .Image img, .BlogList .item-thumbnail img { padding: 2px; background: #ffffff; border: 1px solid #eeeeee; } .post-body img, .post-body .tr-caption-container { padding: 5px; } .post-body .tr-caption-container { color: #222222; } .post-body .tr-caption-container img { padding: 0; background: transparent; border: none; -moz-box-shadow: 0 0 0 rgba(0, 0, 0, .1); -webkit-box-shadow: 0 0 0 rgba(0, 0, 0, .1); box-shadow: 0 0 0 rgba(0, 0, 0, .1); } .post-header { margin: 0 0 1.5em; line-height: 1.6; font-size: 90%; } .post-footer { margin: 20px -2px 0; padding: 5px 10px; color: #222222; background-color: #f7f7f7; border-bottom: 1px solid #eeeeee; line-height: 1.6; font-size: 90%; } #comments .comment-author { padding-top: 1.5em; border-top: 1px solid #eeeeee; background-position: 0 1.5em; } #comments .comment-author:first-child { padding-top: 0; border-top: none; } .avatar-image-container { margin: .2em 0 0; } #comments .avatar-image-container img { /*border: 1px solid #eeeeee;*/ } /* Comments ----------------------------------------------- */ .comments .comments-content .icon.blog-author { background-repeat: no-repeat; background-image: url(); } .comments .comments-content .loadmore a { border-top: 1px solid #999999; border-bottom: 1px solid #999999; } .comments .continue { border-top: 2px solid #999999; } /* Accents ---------------------------------------------- */ .section-columns td.columns-cell { /*border-left: 1px solid #eeeeee;*/ } .blog-pager { background: transparent none no-repeat scroll top center; } .blog-pager-older-link, .home-link, .blog-pager-newer-link { background-color: #ffffff; padding: 5px; } .footer-outer { border-top: 0 dashed #bbbbbb; } /* Mobile ----------------------------------------------- */ body.mobile { background-size: auto; } .mobile .body-fauxcolumn-outer { background: transparent none repeat scroll top left; } .mobile .body-fauxcolumn-outer .cap-top { background-size: 100% auto; } .mobile .content-outer { -webkit-box-shadow: 0 0 3px rgba(0, 0, 0, .15); box-shadow: 0 0 3px rgba(0, 0, 0, .15); } .mobile .tabs-inner .widget ul { margin-left: 0; margin-right: 0; } .mobile .post { margin: 0; } .mobile .main-inner .column-center-inner .section { margin: 0; } .mobile .date-header span { padding: 0.1em 10px; margin: 0 -10px; } .mobile h3.post-title { margin: 0; } .mobile .blog-pager { background: transparent none no-repeat scroll top center; } .mobile .footer-outer { border-top: none; } .mobile .main-inner, .mobile .footer-inner { background-color: #ffffff; } .mobile-index-contents { color: #222222; } .mobile-link-button { background-color: #00ae86; } .mobile-link-button a:link, .mobile-link-button a:visited { color: #ffffff; } .mobile .tabs-inner .section:first-child { border-top: none; } .mobile .tabs-inner .PageList .widget-content { background-color: #eeeeee; color: #000000; border-top: 1px solid #eeeeee; border-bottom: 1px solid #eeeeee; } .mobile .tabs-inner .PageList .widget-content .pagelist-arrow { border-left: 1px solid #eeeeee; } .post-list{ padding: 1px 1em 1em 1em; /* margin: -20px 0; */ margin-bottom: -20px; border: 1px solid #ddd; border-radius: 5px; } .post-list:hover { background:#f7f7f7; border-color:#00ae86; transition:.2s; } .post-label a{ margin-right:2px; white-space:nowrap; color: #222222; border-bottom: 1px dashed #00ae86; } .post-comment a{ color: #222222; } .post-label a:hover,.post-comment a:hover{ color: #00ae86; } #blog-pager{ margin: 3em 0; } .feed-links {display:none !important;} div.widget > h2, div.widget h2.title { font: normal bold 16px 'Raleway', sans-serif; border-bottom: 2px solid #ddd; padding: 5px 0; } .comments h4 { text-align: center; text-transform: uppercase; } .comments .comment .comment-actions a { background:#00ae86; border-radius: 3px; color: #f7f7f7; margin-right:5px; padding:5px; text-decoration: none !important; font-weight:bold; } .comments .comment-block { border: 1px solid #dddddd; border-radius:5px; padding: 10px; } .continue { border-top:none !important; } .continue a { background:#00ae86; border-radius:3px; color: #f7f7f7; display: inline-block !important; margin-top: 8px; text-decoration: none !important; } .comments .comments-content .datetime{ float:right; } #comments .avatar-image-container img { border-radius: 50px; } .comments .avatar-image-container { float: left; overflow: hidden; } .comments .comments-content .comment-replies{ margin-top:0; } .topnav { overflow: hidden; background-color: #000; } .topnav a { float: left; display: block; color: #ffffff; text-align: center; padding: 14px 16px; text-decoration: none; font-size: 17px; } .active { background-color: #00ae86; color: #ffffff; } .topnav .icon { display: none; } .dropdown { float: left; overflow: hidden; } .dropdown .dropbtn { font-size: 17px; border: none; outline: none; color: #ffffff; padding: 14px 16px; background-color: inherit; font-family: inherit; margin: 0; } .dropdown-content { display: none; position: absolute; background-color: #f9f9f9; min-width: 160px; box-shadow: 0px 8px 16px 0px rgba(0,0,0,0.2); z-index: 5; } .dropdown-content a { float: none; color: #000000; padding: 12px 16px; text-decoration: none; display: block; text-align: left; } .topnav a:hover, .dropdown:hover .dropbtn { background-color: #00ae86; color: #ffffff; } .dropdown-content a:hover { background-color: #00ae86; } .dropdown:hover .dropdown-content { display: block; } @media screen and (max-width: 600px) { .topnav a:not(:first-child), .dropdown .dropbtn { display: none; } .topnav a.icon { float: right; display: block; } } @media screen and (max-width: 600px) { .topnav.responsive {position: relative;} .topnav.responsive .icon { position: absolute; right: 0; top: 0; } .topnav.responsive a { float: none; display: block; text-align: left; } .topnav.responsive .dropdown {float: none;} .topnav.responsive .dropdown-content {position: relative;} .topnav.responsive .dropdown .dropbtn { display: block; width: 100%; text-align: left; } } div#crosscol.tabs.section {margin: 0 0 2em 0;} .post-page { padding: 0 1em; } .date-header{ color:#888;display:block;border-bottom: 1px solid #888;margin-top: 5px; } .section{margin:0} .column-right-inner .section .widget{ border: 1px solid #ddd; margin: 5px 0; padding: 10px; border-radius: 5px; } .footer-inner .section .widget{ margin: 5px 0; padding: 10px; } footer{ background: #f7f7f7; padding: 8px; margin: 25px -25px -25px -25px; border-top: 1px solid #dddddd; } /* STYLE 1 - Custom Blogger Labels Gadget Styles by Georgia Lou Studios */ .widget li, .BlogArchive #ArchiveList ul.flat li{ padding: 8px 0; } .list-label-widget-content ul { list-style-type:none; padding-left:0px!important; } .list-label-widget-content ul li:before { content: \"\\f054\"; float: left; color: #262626; font-weight: 700; font-family: 'Font Awesome 5 Free'; margin: 4px 5px 0 0; font-size:10px; } .list-label-widget-content li span{ color: #888888; } /*** Mozilla based browsers ***/ ::-moz-selection { background-color: #00ae86; color: #ffffff; } /*** Works on common browsers ***/ ::selection { background-color: #00ae86; color: #ffffff; } .breadcrumbs{ color: #888;margin:-15px 15px 15px 15px; } .status-msg-body{ width:95%; padding:10px; } /* MY CUSTOM CODE - Responsive Table ----------------------------------------------- */ .post table {border: 1px solid #dddddd;border-collapse: collapse;margin: 0;padding: 0;width: 100%;color:#222222;} .post table caption {margin: .25em 0 .75em;} .post table tr {border: 1px solid #dddddd;padding: .35em;} .post table th,.post table td {padding: .625em;border: 1px solid #dddddd;} .post table th {color:#357ae8;letter-spacing: .1em;text-transform: uppercase;background: #dcffed;white-space: nowrap;} .post table td img {text-align: center;} .post tr:hover { background-color: #dcffed; transition:.2s; } @media screen and (max-width: 600px) { .post table,table th,table td {border: 0;} .post table caption {} .post table thead {display: none;} .post table tr {border-bottom: 3px solid #dddddd;display: block;margin-bottom: .725em;} .post table th,.post table td {border:none;} .post table td {border-bottom: 1px solid #dddddd;display: block;} .post table td:before {content: attr(data-label);float: left;font-weight: bold;text-transform: uppercase;} .post table td:last-child {border-bottom: 0;}} body .navbar{height:0;} /* MY CUSTOM CODE - Button ----------------------------------------------- */ a.btn, .btn-toggle{ display:inline-block; padding:0.3em 1.2em; margin:0.3em; border-radius:5px; box-sizing: border-box; text-decoration:none; font-family:inherit; font-weight:700; color:#ffffff; background-color:#00ae86; text-align:center; box-shadow:0px 1px 0px #dddddd; transition: all 0.2s; } a.btn, .btn-toggle{ font-size:20px; } .btn-toggle{ font-size:inherit; } a.btn:hover, .btn-toggle:hover{ background-color:#41d5b3; } a.btn:active, .btn-toggle:active { position:relative; top:1px; } a.btn:before { content: '\\f019'; font-family: 'Font Awesome 5 Free'; font-weight: 900; display: inline-block; margin: 0 10px 0 0; } .btn-info { display: block; line-height: 1; font-size: 13px; font-style: italic; margin: 7px 0 0; } @media all and (max-width:30em){ a.btn,.btn-toggle{ display:block; margin:0.2em auto; } } .label-size { position:relative; font-size:13px; } .label-size a,.label-size span { padding: 5px; margin: 0 6px 6px 0; float: left; display: block; } .label-size a { color: #ffffff; background: #00ae86; border: 1px solid #00ae86; } .label-size a:hover { background:transparent; color:#00ae86!important; } .label-size span{ color: #222222; background: #f7f7f7; border: 1px solid #dddddd; } /* Start dropdown navigation */ #navigationbar li{ list-style:none; } .searchHolder{ background:#000000!important; float:right!important; } @media screen and (max-width:600px){ .searchHolder{float:left!important;} } #searchbar { display: none; margin: 0 auto; width: 100%; text-align: center; height: 50px; background: #000000; overflow: hidden; z-index: 4; } #searchicon { text-align: center; cursor: pointer; } #searchicon:hover { color: #888888; } #searchBox { font:inherit; -webkit-appearance: none; border: 0px; background: transparent; padding: 10px; outline:none; width: 90%; color:#888888; border-bottom:2px solid #888888; } #searchBox:focus { border-color:#00ae86; transition: .3s; color:#ffffff; } /* End dropdown navigation */ .BlogArchive #ArchiveList ul li{ color:#888888; } .widget.Text ul li, .widget.HTML ul li, .post ul li{ list-style:none; } .widget.Text ul li:before, .widget.HTML ul li:before, .post ul li:before{ content: '\\f0da'; font-family: 'Font Awesome 5 Free'; font-weight: 900; margin: 0 5px 0 -15px; } blockquote{ background: #f7f7f7; padding: 10px; border: 2px dashed #dddddd; margin: 0; } #comments{ padding:10px; } .post img:hover{ opacity: 0.8; transition: 0.2s; } -->", "raw_content": "\nஇங்கிலாந்தின் CHANNEL 4 நடத்திய நுண்ணறிவுத்திறன் (IQ) போட்டியில் \" மழலை மேதை பட்டம்\" வென்ற இந்திய வம்சாவளி சிறுவன் யார்\nபேரழிவு தடுப்பு, நிவாரணம் தொடர்பான, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) உறுப்பு நாட்டுத் தலைவர்களின் ஒன்பதாவது கூட்டம் (24.08.2017) எந்த நாட்டில் நடைபெற்றது\nஇந்திய, நேபாள எல்லையில் உள்ள எந்த ஆற்றின் குறுக்கே ஆற்றின் மீது ஒரு புதிய பாலத்தை இந்தியா நிர்மாணிக்க உள்ளது\nஎட்டாவது உலக புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தொழில்நுட்ப மாநாடு 2017, எக்ஸ்போ 2017 (Aug. 21-23, 2017) எந்த நகரில் நடைபெற்றது\nசமீபத்தில் வீசிய \"ஹாடோ (HADO STORM) புயல்\" (23.08.2017) எந்த நாட்டில் அழிவுகளை ஏற்படுத்தியது\n2017 தேசிய வேளாண்மை தலைமை விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர் யார்\nசமீபத்தில் 2016-17 ஆம் ஆண்டின் ஐரோப்பிய கால்பந்து சங்க சிறந்த கால்பந்து வீரர் விருதை (UEFA Players of the Year Award), பெற்ற கிறிஸ்டியானோ ரொனால்டோ\" எந்த நாட்டைச் சேர்ந்தவர்\n2016-17 ஆம் ஆண்டின் ஐரோப்பிய கால்பந்து சங்க சிறந்த கால்பந்து வீராங்கனை விருதை, பெற்ற \"லைக் மார்டென்ஸ்\" எந்த நாட்டைச் சேர்ந்தவர்\nசமீபத்தில் வெளியான இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் இரகுராம் ராஜனின் 'I Do What I Do' புத்தகத்தை வெளியிட்ட நிறுவனம் எது\n2017 ஆண்டுக்கான தமிழக அரசின் துணிவு மற்றும் சாகச செயலுக்கான \"கல்பனா சாவ்லா விருது\" பெற்றவர் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithisaral.in/2019/07/31/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2021-05-07T01:31:38Z", "digest": "sha1:SIJMX3VKWF2QJNHXE3PJSKBT6QE7EDME", "length": 8681, "nlines": 165, "source_domain": "www.seithisaral.in", "title": "தனிமை இனிமையா... - Seithi Saral", "raw_content": "\nதனிமை என்பது கொடுமை என்று\nஉண்மையில் தனிமை ஓர் சிறந்த ஆசான்.\nதனிமை ஓர் சிறந்த நண்பன்.\nஉங்கள் மீது உண்மையான அன்பு செலுத்துபவர்கள் யார்,\nநீங்கள் தனிமையில் இருக்கும் போது\nசூழலில் தான் நீங்கள் தான் உங்களது\nசிறந்த நண்பர் என்பதை உணர முடியும்.\nதனிமை தான் உங்களுக்கு எதையும்\nகையாள முடியும், கையாள முடியாத நிலை\n��ன்று எதுவும் இல்லை என்று கற்றுக் கொடுக்கிறது.\nஉங்கள் மகிழ்ச்சி பிறரை சார்ந்தது அல்ல என்பதை நீங்கள் உணரும் தருவாய் தனிமை. மற்றும் உங்கள் மகிழ்ச்சி மற்றவரது கைகளில் இல்லை என்பதையும் தனிமை உங்களுக்கு கற்றுக் கொடுக்கிறது. உங்கள் வாழ்க்கை சிறக்க நீங்கள் தான் முடிவெடுக்க வேண்டும் என்பதை தனிமை மட்டுமே கற்றுக் கொடுக்கும்.\nநீங்கள் விரும்பும் செயல்களை மற்றவர்களின் துணை அல்லது உதவி இன்றி நீங்களே செய்து முடிக்க முடியும் என்ற ஊக்கத்தை\nதனிமை உங்களுக்கு அளிக்கும் மிகச்சிறந்த பரிசு, அமைதி மற்றும் பொறுமை. இவை இரண்டும் உங்களை வாழ்க்கையின் அடுத்தக் கட்டத்தை அடைய உதவியாக இருக்கும். உண்மையான உறவுகளை இணைக்கும் பாலம் தான் தனிமை.\nஇது, உங்கள் பெற்றோர், நண்பர்கள் மத்தியில் ஒன்றிணைந்து செயல்பட உதவுகிறது.\nஇனி தனிமையை இனிமையாக மாற்றுவது\nஉங்கள் கையில் தான் இருக்கிறது..\nPrevious வீட்டு வேலையிலும் உடற்பயிற்சி இருக்கு…\nNext குழந்தைகளிடம் செல்போன் -இப்படி செய்யுங்களேன்…\nஒரு தலைவனுக்குத் தகுதி என்ன\nதெரிந்துகொள்வோம் தேர்தல் வரலாறு(15): 2016: மீண்டும் ஆட்சியில் அமர்ந்தார், ஜெயலலிதா/மணிராஜ், திருநெல்வேலி\nஅறிவோம் தேர்தல் வரலாறு/ 2006: ஐந்தாவதுமுறையாக கருணாநிதி ஆட்சி/ மணிராஜ், திருநெல்வேலி\n1 thought on “தனிமை இனிமையா…”\nமு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை விவரம்\nதூத்துக்குடிக்கு 2 மந்திரிகள்: திருநெல்வேலி, தென்காசி ஏமாற்றம்\nதிருப்பத்தூரில் இறந்த 5 பேர் கொரோனா நோயாளிகள் – மருத்துவ அதிகாரி விளக்கம்\nதுணை தலைவர் விலகல்; கமல் காட்டம்\nதமிழகத்தில் ஒரு நாள் கொரோனா பதிவு 24,898 ஆக உயர்வு\nUma on இராமருக்கு ஓர் அக்காள் உண்டு தெரியுமா\n.. தீராத ஒரு தகராறு….(சொல்லாராய்ச்சி/ சிவகாசி முத்துமணி)\nK.Kumaresan on தென் மாவட்ட மக்கள் வெளியே வர வேண்டாம் ; முதல்வர் எச்சரிக்கை\nPonnu on ஏழைகளுக்கு எட்டிவிடும் மருத்துவப் படிப்பு\nமு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை விவரம்\nதூத்துக்குடிக்கு 2 மந்திரிகள்: திருநெல்வேலி, தென்காசி ஏமாற்றம்\nதிருப்பத்தூரில் இறந்த 5 பேர் கொரோனா நோயாளிகள் – மருத்துவ அதிகாரி விளக்கம்\nதுணை தலைவர் விலகல்; கமல் காட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinibitz.com/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2021-05-07T01:22:10Z", "digest": "sha1:2OID5COXKPPCHKNV2ZKTTDV4XZSMDYM6", "length": 10275, "nlines": 68, "source_domain": "www.tamilcinibitz.com", "title": "\"சோர்வு தவறானது\": ஸ்டண்ட் தோல்வியடைந்த பிறகு மனிதனின் மெர்சிடிஸ் நெருப்புடன் முடிகிறது", "raw_content": "முழுமையான செய்தி உலகம் உங்களுக்காக.\n“சோர்வு தவறானது”: ஸ்டண்ட் தோல்வியடைந்த பிறகு மனிதனின் மெர்சிடிஸ் நெருப்புடன் முடிகிறது\nஒரு ஆஸ்திரேலிய மனிதர் தனது ஆடம்பர காரை ஒரு கூட்டத்திற்கு முன்னால் காட்ட முயன்றது ஒரு சங்கடமான மற்றும் திகிலூட்டும் குறிப்பில் முடிந்தது, ஏனெனில் அவரது கார் தீப்பிழம்புகளாக வெடித்தது.\nசிட்னியில் அமைதியான புறநகர் தெருவான செஸ்டர் ஹில்லில் உள்ள மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி சி 63 எஸ் கூபேக்கு ஒரு பார்ட்டிங் அமர்வாக இருக்க வேண்டியது, 100,000 டாலர் கார் முற்றிலுமாக அழிக்கப்பட்டு முடிந்தது, இதனால் அனைவருக்கும் பாதிப்பில்லாமல் தப்பிக்க முடியாது.\nநிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர தீயணைப்பு மற்றும் மீட்பு என்.எஸ்.டபிள்யூ அந்த இடத்திற்கு விரைந்தாலும், வாகனம் அழிக்கப்பட்டது, மேலும் சாலையும் சேதமடைந்தது. அழைப்புக்கு பதிலளித்த பாங்க்ஸ்டவுன் பொலிஸ் மாவட்ட கட்டளை அதிகாரிகள், சந்து வழியாக வாகனம் ஓட்டும்போது கார் தீப்பிடித்ததாக தகவல் கிடைத்தது.\nஇருப்பினும், ஒரு பார்வையாளர் எடுத்த மனிதனின் தந்திரத்தின் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டன. காருக்குள் இருந்து கைப்பற்றப்பட்ட மற்றொரு வீடியோவும் ஸ்னாப்சாட்டில் ஆன்லைனில் பகிரப்பட்டு விரைவாக மற்ற தளங்களுக்கும் பரவியது, இறுதியில் இந்த வழக்கை விசாரிக்கும் காவல்துறையினரின் வருகைக்கு வழிவகுத்தது.\nவிபத்தின் வீடியோக்கள் இயக்கி இயந்திரத்தை விரைவுபடுத்துவதையும் பல முறை சோர்வையும் அனுபவிப்பதைக் காட்டுகிறது. சிறிது நேரம் கழித்து, பின்புறத்தில் இருந்து புகை பில்லிங் காணப்பட்டது, மற்றும் தீப்பிழம்புகள் விரைவில் கவனிக்கப்பட்டன, இதனால் வாகனத்தின் உள்ளே இருந்த மூன்று நபர்கள் வாகனத்திலிருந்து விரைவாக வெளியேறினர்.\nகாட்சிகளைக் காண்பித்தவுடன், “ஆபத்தான மற்றும் அலட்சியமாக வாகனம் ஓட்டியது” என்ற குற்றச்சாட்டின் பேரில் சட்ட அமலாக்க ஓட்டுநரை அழுத்தினார், NSW பொலிஸ் படை தேதியிட்ட ஒரு பதிவில் தெரிவித்துள்ளது சமூக வலைப்பின்னல் தள���ான பேஸ்புக். அந்த பதிவின் படி, எதிர்காலத்தில் நீதிமன்றத்தில் ஆஜராக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது மற்றும் குற்றவாளி 2021 மார்ச் 11 அன்று பாங்க்ஸ்டவுன் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.\n7 நியூஸ் ஆஸ்திரேலியா 25 வயதான ஓட்டுநர் மற்றும் கார் உரிமையாளரை ஜீன்-பியர் மொவாட் என்று அவர் அங்கீகரித்தார், மேலும் விருந்தினர்கள் ஒரு குழுவினருக்கான திருமண இடத்திற்கு முன்னால் அவர்கள் தந்திரத்தை நிகழ்த்துவதாகக் கூறினார்.\nம ou வாட் ஏற்கனவே கடந்த ஆண்டு லாட்டரியில் சொகுசு காரை வென்றிருந்தார், மேலும் விபத்து நடந்த நேரத்தில் காரை விற்க நினைத்திருந்தார். 9 செய்திகள் குறிப்பிடப்பட்டுள்ளது.\nபொது எழுத்தாளர். ஸோம்பி நிஞ்ஜா. தீவிர தொடர்பாளர். பீர் அறிஞர். பாப் கலாச்சார ரசிகர். ஆய்வுப்பணி. ட்விட்டர் நிபுணர்.\nREAD கட்டுப்பாட்டாளர்களை தவறாக வழிநடத்த எதிர்கால குழு HC உத்தரவைப் பயன்படுத்துகிறது: அமேசான்\nநீர் தொட்டியில் உருவகப்படுத்தப்பட்ட கருந்துளைகள் முதல் முறையாக “தலைகீழ் எதிர்வினை” வெளிப்படுத்துகின்றன\nஆய்வகத்தில் கருந்துளை செய்வது கடினம். நீங்கள் நிறைய மாவை சேகரிக்க வேண்டும், அது ஈர்ப்பு ரீதியாக...\nகிளப்ஹவுஸ் பயன்பாடு: கிளப்ஹவுஸ் என்றால் என்ன, ஏன் ‘உற்சாகமான’ புதிய சமூக ஊடக பயன்பாடு – சமூக செய்திகள்\nஇண்டிகோ டிசம்பர் காலாண்டில் 20 620 கோடி இழப்பு தெரிவித்துள்ளது\nகூட்டுறவு வங்கிகளுக்கு முன்னால் உள்ள சாலை\nPrevious articleஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி ‘லாஸ்ட் கேலக்ஸி’ என்ற மூச்சடைக்கக் கூடிய காட்சியை எடுக்கிறது\nNext articleஅமெரிக்க ஜனாதிபதியின் பதவியேற்பு நாளிலிருந்து அவரைப் பற்றி வைரல் மீம்ஸைப் பற்றி பெர்னி சாண்டர்ஸ் கூறியது\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஆப்பிள் நாளை ஒரு “பெரிய அறிவிப்பை” வெளியிடப்போகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newneervely.com/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D", "date_download": "2021-05-07T01:05:27Z", "digest": "sha1:NSLDLVOHI5CPRRPHXMIIRAAS7673E25K", "length": 4485, "nlines": 87, "source_domain": "newneervely.com", "title": "நீர்வேலி றோட்டறிக் கிளப் இன் 1ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு.. | நீர்வேலி", "raw_content": "10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..\nநீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது\nநீர்வேலி றோட்டறிக் கிளப் இன் 1ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு..\nநீர்வேலி றோட்டறிக் கிளப் இன் 1ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு அவ் அமைப்பினைச்சேர்ந்த இளைஞர்கள் மற்றும் ஊரவர்கள் இணைந்து மொத்தமாக 52 கொடையாளிகள் இன்று 11.01.2016 திங்கட்கிழமை இரத்ததானத்தில் பங்குபற்றினர்.\n‎நீர்வேலி‬ வருகிறார் ‪ஜனாதிபதி‬….. »\n« அத்தியார் இந்துக்கல்லூரியின் A/L பெறுபேறுகள்……..\nஇது எமது ஊர். இங்கு பிறந்ததினால் நாம் பெருமையடைகிறோம். நீர்வேலியின் சிறப்பையும் வனப்பையும் எங்கு சென்றாலும் மறவோம். எமதூரைப் போற்றுவோம்.\nநீர்வேலி நலன்புரிச் சங்கம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%87%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-05-07T02:10:34Z", "digest": "sha1:ORN3WJHSVFDUSBFPBM2MLTBF5HQDQVX5", "length": 9767, "nlines": 87, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "டேவிட் கேமரன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nடேவிட் வில்லியம் டொனால்ட் கேமரன் (David William Donald Cameron, பிறப்பு 9 அக்டோபர், 1966) மே 11, 2010 முதல் சூலை 13, 2016 வரை ஐக்கிய இராச்சியத்தின் பிரதம அமைச்சராகவும் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராகவும் பொறுப்பிலிருந்த பிரித்தானிய அரசியல்வாதியாவார். ஐக்கிய இராச்சியத்தில் 2010ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் ஏற்பட்ட தொங்கு நாடாளுமன்றத்தில் தனிப்பெரும் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி லிபரல் டெமாக்ரட்டிக் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தது. கேமரன் விட்னி நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராகவும் உள்ளார்.\nஐக்கிய இராச்சியத்தின் எதிர்க்கட்சித் தலைவர்\n11 மே 2010 ல், கார்டன் பிரவுன் பிரதமர் பதவியில் இருந்து விலகியதை தொடர்ந்து, அவரது பரிந்துரையின் பேரில் இரண்டாம் எலிசபெத், டேவிட் கேமரூனை அரசாங்கம் அமைக்க அழைத்தார்.[1] மீண்டும் 2015 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றிபெற்று இரண்டாவது முறையாக பிரதமராக பதவி வகிக்கிறார்.[2]\nயாழ்ப்பாணத்திற்கு வரலாற்றுப் புகழ் மிக்க பயணம்தொகு\n1948 ஆம் ஆண்டில் இலங்கை விடுதலை அடைந்த பின்னர், ஈழப்போரில் பெரிதும் பாதிக்கப்பட்ட வட மாகாணத் தலைநகர் யாழ்ப்பாணத்திற்கு பயணம் மேற்கொண்ட முதலாவது உலகத் தலைவர் கேமரன் ஆவார்.[3][4][5]\nஇலங்கையில் நடைபெற்ற பொதுநலவாய அரசுத் தலைவர்களின் மாநாட்டில் கலந்து கொள்ளவென கொழும்பு சென்றிருந்த டேவிட் கேமரன் 2013 நவம்பர் 15 இல் யாழ்ப்பாணம் சென்றார். வட மாகாண முதலமைச்சர் க. வி. விக்னேசுவரனை யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் சந்தித்து உரையாடினார். பின்னர் இரா. சம்பந்தன் உட்பட பல தமிழ்த் தலைவர்களை சந்தித்தார். ஈழப்போரின் இறுதிக் கட்டத்தில் இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் போனவர்களின் குடும்பத்தினர், மற்றும் போரினால் இடம்பெயர்ந்தவர்களையும் அவர் சந்தித்து உரையாடினார்.[3][4][5]\nயாழ்ப்பாணத்தில் இருந்து வெளியாகும் உதயன் பத்திரிகைக் காரியாலயத்துக்குச் சென்றிருந்த கேமரன், பத்திரிகை ஆசிரியர் மற்றும் பணியாளர்களை சந்தித்து உரையாடினார். 2005 ஆம் ஆண்டு முதல் இப்பத்திரிகைக் காரியாலயம் பல முறை எரிக்கப்பட்டும், தாக்கப்பட்டும் வந்துள்ளது. ஊழியர்கள் ஐவர் படுகொலை செய்யப்பட்டனர்.[3][4][5]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 18:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/govt-directs-internet-service-providers-india-block-porn-web-008349.html", "date_download": "2021-05-07T02:04:35Z", "digest": "sha1:FQHAPZNTCYYJWDSY6546SYVN7WEQXWYI", "length": 14679, "nlines": 247, "source_domain": "tamil.gizbot.com", "title": "Govt directs Internet service providers in India to block porn websites - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதோல்வி நிலையல்ல என்று நிரூபித்த எலான் மஸ்க்: ஸ்டார்ஷிப் எஸ்என் 15 விண்கல சோதனை வெற்றி\n28 min ago இந்தியாவின் முடிவுக்கு அமெரிக்கா வரவேற்பு., சீனா அதிருப்தி: தொடங்கப்படும் 5ஜி சோதனை\n11 hrs ago மலிவு விலையில் அறிமுகமாகுமா புதிய ரெட்மி நோட் 10 ப்ரோ 5 ஜி\n12 hrs ago தாராளமா வாங்கலாமே- இதோ கம்மி விலையில் சிறந்த அம்சங்களோடு எம்ஐ டிவி பி1 தொடர் ஸ்மார்ட் டிவி\n13 hrs ago மே 12: இந்தியாவில் அறிமுகமாகும் அசுஸ் சென்ஃபோன் 8 மினி.\nNews 93 ரூபாய் தாண்டியாச்சு.. 4வது நாளாக அதிகரிக்கும் பெட்ரோல், டீசல் விலை.. பட்ஜெட்டில் பேரிடி\nAutomobiles மிக விரைவில் அறிமுகமாகிறது பிஎம்டபிள்யூவின் ஹைட்ரஜன் கார்... நம்ப முடியா அதிக ரேஞ்ஜை தரும்...\nMovies என்னா குலுக்கு.. மாராப்பை சரியவிட்டு.. 40 வயதில் திணறடிக்கும் நடிகை.. பெருமூச்சு விடும் நெட்டிசன்ஸ்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 07.05.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் பண பரிவர்த்தனைகளைத் தவிர்த்திடவும்…\nFinance ரூ.8 லட்சம் கோடி.. மோடி அரசு இதை செய்துவிட்டால் வேற லெவல் தான்..\nSports ஐபிஎல் 2021 தொடரை நடத்த இங்கிலாந்து கவுண்டிகள் ஆர்வம்... செப்டம்பர்ல நடத்த ஆர்வமா இருக்காங்க\nEducation ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவில் சீன் தளங்களுக்கு விரைவில் தடை, உண்மையாகவா\nஇந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் பாலியல் வன்கொடுமைகளும் சமீபகாலங்களில் அதிகரித்து வருகின்றன. சமீபத்திய கணக்கெடுப்பின் முடிவில் பாலின வேறுபாடுகள் அதிகம் நிறைந்த நாடுகளில் இந்தியா முதண்மையானதாக இருப்பதாக தெரியவந்துள்ளது. இது சர்வதேச அளவில் இந்தியா பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நாடு என்ற எண்னம் உருவாகும் வாய்ப்பை அதிகாமாக்கியுள்ளது. ஸ்மார்ட் போன் கேலரிக்கு இங்கு க்ளிக் செய்யவும்\nஇந்த நிலையை மாற்றும் முயற்சியாக இணைய தளங்களில் ஆபாச வலைதளங்களை தடை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. புதிய ஸ்மார்ட் போன் செய்திகளுக்கு இங்கு க்ளிக் செய்யவும்\nஇது குறித்து உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் மத்திய அமைச்சர் ரவி ஷங்கர் பிரசாத் தலைமை வகித்தார். அக்கூட்டத்தில் இந்தியாவில் ஆபாச தளங்களை தடை செய்ய சம்பந்த பட்ட துறை அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது.\nஎது எப்படியோ மற்ற அரசு திட்டங்களை போன்று இல்லாமல் இந்த திட்டம் முழுமையாக செயல்படுத்தப்பட்டால் அனைவருக்கும் நல்லதே.\nஇந்தியாவின் முடிவுக்கு அமெரிக்கா வரவேற்பு., சீனா அதிருப்தி: தொடங்கப்படும் 5ஜி சோதனை\nஇனி செயல்தான்: இறக்குமதி செய்யும் சீன பொருட்கள் என்னென்ன மத்திய அரசு கேட்ட பட்டியல்\nமலிவு விலையில் அறிமுகமாகுமா புதிய ரெட்மி நோட் 10 ப்ரோ 5 ஜி\nCorona தாக்கம் மே 3 வரை அனைவருக்கும் இலவச இண்டர்நெட்\nதாராளமா வாங்கலாமே- இதோ கம்மி விலையில் சிறந்த அம்சங்களோடு எம்ஐ டிவி பி1 தொடர் ஸ்மார்ட் டிவி\nகுவியும் பாராட்டுகள்., தமிழக அரசு பேருந்தில் சிசிடிவி கேமரா., ONLINE TRANSACTION டிக்கெட்\nமே 12: இந்தியாவில் அறிமுகமாகும் அசுஸ் சென்ஃபோன் 8 மினி.\nவாக்காளர் பட்டியலில் உங்களின் பெயர் உள்ளதா என்று சரி பார்க்க இதை பண்ணுங்க.\n கூகுள் நிறுவனத்தின் ஊழியர்களுக்கு சுந்தர் பிச்சை அனுப்பிய முக்கியத் தகவல்.\nஎச்சரிக்கை: தெரியாம கூட இந்த 13 வெப்சைட் ஓபன் பண்ணாதிங்க., விளைவு ரொம்ப பெரிசா இருக்கும்\nபொசுக்குன்னு வார்த்தைய விட்டிங்கிளே: இத இந்தியாவுக்கு கொடுக்குறதுல சுத்தமா விருப்பமில்ல- பில் கேட்ஸ்\nஆபாச வீடியோ பார்க்க அடையாள அட்டை: புதிய சட்டம் அமலாகிறது.\nசாம்சங் கேலக்ஸி S20 பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nசாம்சங் கேலக்ஸி நோட்20 அல்ட்ரா 5G\nசியோமி Mi 10 5G\nசாம்சங் கேலக்ஸி S20 பிளஸ்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nவிரைவில் அறிமுகமாகும் ரியல்ம் எக்ஸ் 7 மேக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன்.\nபுடிச்சு உள்ள போடுங்க சார்: சிறுமிகளின் ஆபாசப் படங்களை அப்லோட் செய்தவர்கள் கைது..இது ஆரம்பம்தான்\nமோட்டோரோலா ரேசர் 5ஜி ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilkilavan.com/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A/", "date_download": "2021-05-06T23:56:36Z", "digest": "sha1:FSDFO7WS36MBMU6SUDSNYZLYNH6VBINF", "length": 3726, "nlines": 65, "source_domain": "tamilkilavan.com", "title": "அடடா இதையும் தெரிந்து கொள்ளுங்கள் உங்கள் பெயரின் முதல் எழுத்து படி உங்கள் குணம் எப்படி இருக்கும். | Tamil Kilavan", "raw_content": "\nஅடடா இதையும் தெரிந்து கொள்ளுங்கள் உங்கள் பெயரின் முதல் எழுத்து படி உங்கள் குணம் எப்படி இருக்கும்.\nஅடடா இதையும் தெரிந்து கொள்ளுங்கள் உங்கள் பெயரின் முதல் எழுத்து படி உங்கள் குணம் எப்படி இருக்கும்.\nTwitterFacebook அனுபவ உண்மை கரண்ட் பில் குறைய சூப்பரான ஐடியா இப்படியெல்லாம் செய்து …\nஅனுபவ உண்மை கரண்ட் பில் குறைய சூப்பரான ஐடியா இப்படியெல்லாம் செய்து உங்கள் பணத்தை மிச்சம் பிடிக்கலாமே.\nTwitterFacebook இனிமேல் இதை தூக்கி போடாதீங்க/இது தெரியாம இத்தனை நாளா waste பண்ணிட்டோமே\nஇனிமேல் இதை தூக்கி போடாதீங்க/இது தெரியாம இத்தனை நாளா waste பண்ணிட்டோமே\nகடையில் முட்டை வாங்கறதுக்கு முன்னாடி இந்த வீடியோ பாருங்க\n2 முட்டை இருக்கா வீட்டில் உள்ள அனைவருக்கும் கிரிஸ்பியான ஈவினிங் ஸ்நாக்ஸ் ரெடி.\nமுட்டை சுக்கா லஞ்சுக்கு பக்க���வான சைடிஷ் 10 நிமிடத்தில் இப்படி சுவையா செய்து கொடுத்து அசத்துங்க.\nபல கோடி சொத்துக்கு சொந்தக்காரி ஒரு வேலை சோற்றுக்காக வீட்டு வேலை செய்து பிழைக்கும் அவலம்\n20 ஆயிரம் வருடங்களுக்கு முன் மூழ்கிப்போன தமிழனின் வரலாறு.. தற்போது மெல்ல மெல்ல மிதந்து வருகிறது.. தற்போது மெல்ல மெல்ல மிதந்து வருகிறது.. ஒவ்வொரு தமிழனும் உலகத்துக்கு அறிய நண்பர்களுடன் பகிருங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/a-new-tamil-film-directed-by-dual-directors/", "date_download": "2021-05-07T02:03:29Z", "digest": "sha1:UU6NNGG2ZXTVA65ZFM4WBWPAMKLBVQIM", "length": 8850, "nlines": 118, "source_domain": "www.patrikai.com", "title": "a new tamil film directed by dual directors – Patrikai – Tamil Daily – latest online local breaking news & reviews – Tamilnadu, India & World – politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nநீண்ட காலத்துக்குப் பிறகு இரட்டை இயக்குநர்கள் இயக்கும் தமிழ்த் திரைப்படம்\nஹாலிவுட்டில் இரு இயக்குநர்கள் சேர்ந்து படங்களை இயக்குவது என்பது அவ்வப்போது நடப்பது சகஜமான விசயம்தான். ஆனால் தமிழ்த்திரையுலகில் அப்படி இணைந்த…\nஒரே டோஸ் கொரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக் லைட் : ரஷ்ய அரசு அங்கீகாரம்\nமாஸ்கோ ஒரே டோஸ் கொரொனா தடுப்பூசியான ஸ்புட்னிக் லைட் மருந்துக்கு ரஷ்ய அரசு அங்கீகாரம் அளித்துள்ளது. உலகெங்கும் கொரோனா பரவலைத் தடுக்க கொரோனா தடுப்பூசிகள் போடும் பணிகள் நடந்து…\nஇந்தியாவில் வரலாறு காணாத உச்சமாக நேற்று 4,14,182 பேருக்கு கொரோனா\nடில்லி இந்தியாவில் நேற்று 4,14,182 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று வரலாறு காணாத அளவுக்கு கொரோனாவால்…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15.66 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15,66,72,832 ஆகி இதுவரை 32,69,034 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nஅடுத்த 17 நாட்கள் ஒவ்வொரு வீட்டிலும் பின்பற்ற வேண்டிய கட்டாய விதி\nஅடுத்த 17 நாட்கள் ஒவ்வொரு வீட்டிலும் பின்பற்ற வேண்டிய கட்டாய விதி – நெட்டிசன் பதிவு கொரோனா கட்டுப்பாடு குறித்து வலைத் தளங்களில்…\nஇன்று ஆந்திரப் பிரதேசத்தில் 21,954 கர்நாடகாவில் 49,058 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 21,954 கர்நாடகாவில் 49,058 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 49,058…\nநாளைக்குள் தமிழகத்துக்குத் தேவையான ஆக்சிஜன் வழங்குவதை உறுதி செய்ய மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\nசென்னை நாளைக்குள் தமிழகத்துக்குத் தேவையான ஆக்சிஜன் வழங்குவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது….\nஒரே டோஸ் கொரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக் லைட் : ரஷ்ய அரசு அங்கீகாரம்\nஇந்தியாவில் வரலாறு காணாத உச்சமாக நேற்று 4,14,182 பேருக்கு கொரோனா\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15.66 கோடியை தாண்டியது\nஅதிமுக எம்.எல்.ஏ. விஜய பாஸ்கருக்கு கொரோனா\n8 hours ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/no-response/", "date_download": "2021-05-07T01:07:00Z", "digest": "sha1:FDVJIGWAJ7NFBXLCEOXVLGZ2HIJJNNJ7", "length": 9758, "nlines": 125, "source_domain": "www.patrikai.com", "title": "no response – Patrikai – Tamil Daily – latest online local breaking news & reviews – Tamilnadu, India & World – politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nமருத்துவர்கள் அலட்சியத்தால் தந்தையை இழந்த பெண் : அமைச்சரிடம் சீற்றம்\nராஞ்சி கொரோனா சிகிச்சைக்குக் கொண்டு வரப்பட்டவர் மருத்துவர்கள் அலட்சியத்தால் இறந்ததால் அவர் மகள் அமைச்சரிடம் ஆவேசம் கொண்டுள்ளார். கொரோனா பாதிப்பு…\nமாநில அரசின் அலட்சியம் : தாங்களே மருத்துவ வசதி செய்துக் கொண்ட பீகார் கொரோனா மருத்துவர்கள்\nபாட்னா பீகார் மாநில அரசு கொரோனா பணி புரியும் மருத்துவர்கள் கோரிக்கையை கண்டு கொள்ளாததால் அவர்களே தங்களுக்கான மருத்துவ வசதிகளைச்…\n373 மக்களவை தொகுதிகளில் பதிவான வாக்குகளுக்கும், எண்ணப்பட்ட வாக்குகளுக்கும் இடையே வித்தியாசம்\nபுதுடெல்லி: 373 மக்களவை தொகுதிகளில் பதிவான வாக்குகள் மற்றும் எண்ணப்பட்ட வாக்குகளுக்கு இடையே வித்தியாசம் உள்ளது தெரியவந்துள்ளது. தி குயின்ட்…\nஅடுத்த 17 நாட்கள் ஒவ்வொரு வீட்டிலும் பின்பற்ற வேண்டிய கட்டாய வ��தி\nஅடுத்த 17 நாட்கள் ஒவ்வொரு வீட்டிலும் பின்பற்ற வேண்டிய கட்டாய விதி – நெட்டிசன் பதிவு கொரோனா கட்டுப்பாடு குறித்து வலைத் தளங்களில்…\nஇன்று ஆந்திரப் பிரதேசத்தில் 21,954 கர்நாடகாவில் 49,058 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 21,954 கர்நாடகாவில் 49,058 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 49,058…\nநாளைக்குள் தமிழகத்துக்குத் தேவையான ஆக்சிஜன் வழங்குவதை உறுதி செய்ய மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\nசென்னை நாளைக்குள் தமிழகத்துக்குத் தேவையான ஆக்சிஜன் வழங்குவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது….\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் –06/05/2021\nசென்னை தமிழகத்தில் இன்றைய (06/05/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 24,898 பேருக்குப் பாதிப்பு…\nசென்னையில் இன்று 6,678 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 6,678 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 33,316 ஆகி உள்ளது இன்று சென்னையில்…\nதமிழகத்தில் இன்று 24,898 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 24,898 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 12,97,500 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 1,31,468…\nஅதிமுக எம்.எல்.ஏ. விஜய பாஸ்கருக்கு கொரோனா\n7 hours ago ரேவ்ஸ்ரீ\nதனி தகவல் தொடர்பு தளத்தை தொடங்கிய டிரம்ப்\n7 hours ago ரேவ்ஸ்ரீ\nஐபிஎல் தொடரை நடத்தி முடிக்காவிட்டால் 2500 ரூபாய் கோடி இழப்பு ஏற்படும் – கங்குலி\n7 hours ago ரேவ்ஸ்ரீ\nகளை எடுப்போம்: – கமல் டுவிட்\n7 hours ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnaiasa.org/post/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%99-%E0%AE%95-%E0%AE%A4-%E0%AE%9F-%E0%AE%9F%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%B1-%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%9F-%E0%AE%95-%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%95", "date_download": "2021-05-07T00:35:41Z", "digest": "sha1:ZA2Q5456YRBDAUJCL4P7EFCTIUJFBLEF", "length": 5914, "nlines": 58, "source_domain": "www.tnaiasa.org", "title": "சரபங்கா திட்டத்திற்கு தடை கோரி வழக்கு", "raw_content": "\nஅகில​ இந்திய​ வேளாண் மாணவர்கள் சங்கம், தமிழ்நாடு\nசரபங்கா திட்டத்திற்கு தடை கோரி வழக்கு\nகாவிரி விவசாயிகள் சங்க செயலாளர் பி.ஆர்.பாண்டியன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்��ங்களை உள்ளடக்கிய காவிரி டெல்டா பகுதியின் பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது. சுமார் 18 லட்சம் ஏக்கரில் நெல், கரும்பு மற்றும் வாழை ஆகியவை பயிரிடப்படுகிறது. 2 கோடி விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களின் வாழ்வாதாரமாக இருப்பதோடு, 25 மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் காவிரி உள்ளது.கடந்தாண்டு நவ. 12ல் தமிழக பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் வெளியிட்டுள்ள அரசாணையில், புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள ஆயக்கட்டுகளான எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர் மற்றும் மேட்டூர் தாலுகாவில் உள்ள 4,738 ஏக்கர் பாசன நிலங்கள் பயனடையும் வகையில், மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் கொண்டு செல்லும் சரபங்கா நீர்பாசனத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.\nரூ.565 கோடி செலவில், மேட்டூர் அணையின் இடது கரையில் இருந்து கால்வாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு சென்று திப்பம்பட்டியில் ஏரி போல தேக்கி வைக்கவுள்ளனர். சுமார் 3 ஆயிரம் ஏக்கரில் அமையும் இந்த ஏரி, மேட்டூர் அணையில் இருந்து வரும் தண்ணீர் மூலம் தானாகவே நிரம்பிய பின், மேட்டூர் அணையின் 120 அடி நிரம்பும் வகையில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அங்கிருந்து நீர் நிலைகளுக்கு தண்ணீர் திறக்கப்படும். அடுத்தாண்டிற்குள் இந்த திட்டத்தை நிறைவேற்ற முடிவு செய்துள்ளனர்.இந்த திட்டம் நிறைவேற்றினால், டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகும் என்று விவசாயிகள் கருதுகின்றனர்.\nஈச்சங்கோட்டை வேளாண் கல்லூரியில் இடுபொருள் பட்டயப் படிப்பு தொடக்கம்\nஅகில இந்திய வேளாண் நுழைவுத் தேர்வில் த.வே.ப மாணவர்கள் சாதனை\nதமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் 13 SMS பணியிடங்களுக்கான அறிவிப்பு\nதமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் நிரப்பப்பட உள்ள 13 Subject Matter Specialist பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து நவம்பர் 5 ஆம் தேதிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/952", "date_download": "2021-05-07T01:51:36Z", "digest": "sha1:25UKDDAYUG6XXPF77FXX24W6URF7SQUD", "length": 13952, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "சப்ரகமுவ மாகாண சபையில் பட்ஜெட் ஏகமானதாக நிறைவேறியது! | Virakesari.lk", "raw_content": "\nநாட்டில் மேலும் 12 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்\nதூரநோக்குடனான திட்டமிடலின்றி நாடு நெருக்கடிக்குள் சிக்கி விட்டது - ரணில் க���லை\nநாளொன்றுக்கு 2 ஆயிரத்தை விட அதிக தொற்றாளர்கள் இனங்காணப்படலாம் : எச்சரிக்கிறது தொற்று நோயியல் பிரிவு\nபிழையான எண்ணங்களை மக்கள் மயப்படுத்த எதிக்கட்சி முயற்சி - மதுர விதானகே\nகிளிநொச்சியில் புதிய கொரோனா சிகிச்சை நிலையம் - நள்ளிரவு முதல் சேவைகள் ஆரம்பம்\nநாட்டில் மேலும் 12 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்\nஜம்மு-காஷ்மீரில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை\nகொரோனாவால் இலங்கையில் கர்ப்பிணித் தாய் பலி\n இனங்காணப்படும் தொற்றாளர்களை விட இருமடங்கு தொற்றாளர்கள் சமூகத்தில் \nசப்ரகமுவ மாகாண சபையில் பட்ஜெட் ஏகமானதாக நிறைவேறியது\nசப்ரகமுவ மாகாண சபையில் பட்ஜெட் ஏகமானதாக நிறைவேறியது\nசப்ரகமுவ மாகாண சபையில் வரல செலவுத் திட்டம் ஆளும் கட்சி (ஐ.ம.சு.மு), எதிர்கட்சி (ஐ.தே.க), இ.தொ.கா ஆகிய மூன்று கட்சிகளின் விருப்பத்துடன் ஏகமனதாக நிறைவேறியது.\nசப்ரகமுவ மாகாண சபையின் தலைவர் கஞ்சன ஜயரத்ன தலையில் நேற்று(10) மாகாண சபை கட்டிடத்தொகுதில் இடம்பெற்ற சப்ரகமுவ மாகாண சபையின் பட்ஜெட் இறுதி வாக்கெடுப்பு இ.தொ.காவை சேர்ந்த இரண்டு உறுப்பினர்களின் ஆதரவுடனும், எதிர்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த 12 உறுப்பினர்களின் ஆரவுகளுடனும் பட்ஜெட் ஏகமானதாக நிறைவேறியது.\nசப்ரகமுவ மாகாண சபையின் வரவு செலவு திட்ட அறிக்கை கடந்த நவம்பர் மாதம் 26ஆம் திகதி சபை மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத்தினால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இம்மாதம் (டிசம்பர்) 8ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தொடக்கம் நேற்று 10ஆம் திகதி வியாழக்கிழமை வரை மூன்று தினங்களாக சப்ரகமுவ மாகாண சபை தலைவர் கஞ்சன ஜயரத்ன தலைமையில் இரண்டாம், மூன்றாம் வாசிப்பு விவாதம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.\nசப்ரகமுவ மாகாண சபை வரல செலவுத் திட்டம்\nநாட்டில் மேலும் 12 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்\nநாட்டில் கொரோனா அச்சுறுத்தலையடுத்து கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மாவட்டங்களின் 12 கிராம சேவகர் பிரிவுகள் இன்று காலை 6 மணிமுதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜென்ரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.\n2021-05-07 07:17:30 தனிமைப்படுத்தல் கொரோனா இராணுவத்தளபதி\nதூரநோக்குடனான திட்டமிடலின்றி நாடு நெருக்கடிக்குள் சிக்கி விட்டது - ரணில் கவலை\nகொவிட் வைரஸ��� தொற்று 2 ஆம் அலை ஏற்பட்ட போது போதிய தடுப்பூசிகளை கொள்வனவு செய்திருந்தால் அச்சம் கொள்ள வேண்டியதில்லை. அல்லது தடுப்பூசி கிடைக்காவிடின் அடுத்த கட்ட சிகிச்சைகளுக்கான இயற்கை சுவாசக் கருவிகள் , அவசர சிகிச்சை பிரிவு கட்டில்கள் மற்றும் ஒக்சிஜன் போன்றவற்றை பெற்றுக்கொண்டிருந்தாலும் ஏற்பட கூடிய உயிரிழப்புகளை தடுத்திருக்கலாம். ஆனால் அரசாங்கத்தின் தூரநோக்குடனான திட்டமிடலின்றி நாடு நெருக்கடிக்குள் சிக்கி விட்டது என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.\n2021-05-07 07:01:30 தூரநோக்கு திட்டமிடல் நாடு\nநாளொன்றுக்கு 2 ஆயிரத்தை விட அதிக தொற்றாளர்கள் இனங்காணப்படலாம் : எச்சரிக்கிறது தொற்று நோயியல் பிரிவு\nநாட்டில் நாளொன்றில் இனங்காணப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கை எதிர்வரும் நாட்களில் 2000 ஐ விட அதிகரிக்கக் கூடும் என்று சுகாதார தரப்பினர் எச்சரித்துள்ளனர். தற்போது நாடளாவிய அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றமையால் மாவட்டங்களிலுள் வைத்தியசாலைகளிலும் கொவிட் தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான பிரிவுகளை பிரத்தியேகமாக ஒதுக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதே வேளை மேல் மாகாணத்தில் மாத்திரம் நாளொன்றுக்கு சுமார் 1200 தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றனர்.\n2021-05-06 22:40:35 2000 தொற்றாளர்கள் இனங்காணல் எச்சரிக்கை\nபிழையான எண்ணங்களை மக்கள் மயப்படுத்த எதிக்கட்சி முயற்சி - மதுர விதானகே\nகொவிட்-19 வைரஸ் பரவல் காரணமாக பாதிப்படைந்துள்ள மக்களை காப்பாற்றுவதுடன் , வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கு அரசாங்கம் முயற்சிகளை எடுத்து வரும் நிலையில், எதிர்தரப்பினர் தங்களுக்கு கிடைக்கப் பெற்றுள்ள பாராளுமன்ற உறுப்புரிமையை பயன்படுத்தி பிழையான எண்ணங்களை மக்கள் மயப்படுத்த முயற்சித்து வருவதாக ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே குற்றஞ்சாட்டினார்.\n2021-05-06 22:36:58 பிழையான எண்ணங்கள் மக்கள் மயப்படுத்தல் எதிக்கட்சி\nகிளிநொச்சியில் புதிய கொரோனா சிகிச்சை நிலையம் - நள்ளிரவு முதல் சேவைகள் ஆரம்பம்\nகிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் புதிய கொவிட் 19 மருத்துவ நிலையத்தில் இன்று நள்ளிரவு முதல் சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் ப���ரிவு தெரிவிக்கின்றது.\n2021-05-06 22:36:36 கிளிநொச்சி கொரோனா சிகிச்சை நிலையம் நள்ளிரவு\nநாட்டில் மேலும் 12 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்\nதூரநோக்குடனான திட்டமிடலின்றி நாடு நெருக்கடிக்குள் சிக்கி விட்டது - ரணில் கவலை\nஇலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து மேலும் 810 பேர் குணமடைவு..\nபணவீக்கம் ஏப்ரலில் 3.9 சதவீதமாக வீழ்ச்சி: இலங்கை மத்திய வங்கி\nவிலை அதிகரிப்பிற்கு அனுமதியில்லையேல் தட்டுப்பாடு ஏற்படலாம்: லாப் கேஸ் நிறுவனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/tamilnadu/2021/may/03/we-will-work-for-the-development-of-the-state-vanathi-3616499.amp", "date_download": "2021-05-07T00:51:36Z", "digest": "sha1:EW2QHB24VJLICY2R6EBQHNHUGUSI2FPL", "length": 4411, "nlines": 42, "source_domain": "m.dinamani.com", "title": "மாநிலத்தின் வளர்ச்சிக்காக பணியாற்றுவோம்: வானதி | Dinamani", "raw_content": "\nமாநிலத்தின் வளர்ச்சிக்காக பணியாற்றுவோம்: வானதி\nஆக்கப்பூர்வமான வகையில் மத்திய அரசின் உதவியை பெற்று மாநில வளர்ச்சிக்கு பணியாற்றுவோம் என்று கோவை தெற்கு தொகுதியில் வெற்றி பெற்ற வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.\nகோவை தெற்கு தொகுதியில் மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் வானதி சீனிவாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.\nஅப்போது அவர் பேசியதாவது, தேர்தல் வாக்குறுதிகளை மாநில அரசின் ஒத்துழைப்புடன் மத்திய அரசின் உதவியுடன் செய்து முடிப்போம்\nதற்போதைய சூழலில் மக்களுக்கு நன்மை செய்வதையே வெற்றிக் கொண்டாட்டமாக கருதுகிறோம் என்று கூறினார்.\nகோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட வானதி சீனிவாசன் 52,627 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.\nஅன்று அண்ணா... இன்று ஸ்டாலின்...\nதனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூல்: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nபுதுவை முதல்வராக இன்று பதவியேற்கிறாா் என்.ரங்கசாமி\nகடும் வெயில்: மழைநீர் குட்டையில் குளித்து மகிழும் யானைகள்\nதருமபுரம் ஆதீனம் சாா்பில் ஸ்டாலினுக்கு அருட்பிரசாதம்\nஅமைச்சகங்கள், துறைகளின் பெயா்கள் மாற்றம் ஏன்\nமநீமவிலிருந்து முக்கிய நிா்வாகிகள் கூண்டோடு ராஜிநாமா\nwest bengal electionஆஸ்கர் விருதுஸ்டெர்லைட்முதல்வர் எடப்பாடி பழனிசாமிஇந்தியாவில் கரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2021-05-07T02:16:00Z", "digest": "sha1:WEVCY6LPYWOWZH3JCH4M5OZOFM6MBOVI", "length": 4386, "nlines": 80, "source_domain": "ta.wiktionary.org", "title": "பழங்கஞ்சி - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nபழைய சாதம், பழஞ்சோறு, முந்தைய நாள் கஞ்சி\nபழங்கஞ்சி = பழம் + கஞ்சி\nஆதாரங்கள் ---பழங்கஞ்சி--- DDSA பதிப்பு + வின்சுலோ +\nபழஞ்சாதம், பழஞ்சி, பழஞ்சோறு, பழஞ்சோற்றுத்தண்ணீர், பழைஞ்சோறு, பழைது, பழைதூண், நீராகாரம்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 27 பெப்ரவரி 2012, 02:18 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lawyersuae.com/ta/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-05-07T01:54:51Z", "digest": "sha1:FJUI7WQKSWABYY7HCWEO7KVQDKLO6Z7X", "length": 18473, "nlines": 131, "source_domain": "www.lawyersuae.com", "title": "குடித்துவிட்டு ஓட்டுங்கள் | சட்ட நிறுவனங்கள் துபாய்", "raw_content": "\nஐக்கிய அரபு எமிரேட்ஸில் சரியான வழக்கறிஞரைக் கண்டறியவும்\nஐக்கிய அரபு எமிரேட்ஸில் குற்ற வழக்குகளை சரிபார்க்கவும்\nவிமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டார் / பிடிபட்டார்\nஒற்றை வில்ஸ் / பிரதிபலித்த வில்ஸ்\nமோசடி - குற்றவியல் சட்டம்\nதற்செயலான கொலை அல்லது கொலை\nசைக்கிள் அல்லது மோட்டார் சைக்கிள் விபத்து\nவணிகச் சட்டம் / சர்ச்சைகளைத் தீர்ப்பது\nரியல் எஸ்டேட் / சொத்து வழக்குகள்\nமோசமான சாலைவழிகள் முதல் மோசமான வானிலை வரை சாலைகளில் ஏற்படும் விபத்துகளுக்கு பல காரணங்கள் இருக்கலாம். இருப்பினும், ஆல்கஹால் அல்லது பிற மருந்துகளின் செல்வாக்கின் கீழ் வாகனம் ஓட்டுவது விபத்துகளுக்கு ஒரு பொதுவான காரணமாகும், இது ஒரு சிறிய சுய கட்டுப்பாட்டைக் கடைப்பிடிப்பதன் மூலம் எளிதில் தவிர்க்கலாம்.\nஆல்கஹால் அல்லது பிற மருந்துகளின் செல்வாக்கு\nஇதுபோன்ற சூழ்நிலையில் நீங்கள் எப்போதாவது கண்டால், மோசமான தலைவிதியைத் தவிர்க்க துபாயில் குடிபோதையில் வாகனம் ஓட்டும் விபத்து வழக்கறிஞரை நியமிக்க வேண்டும்.\nஐக்கிய அரபு எமிரேட்ஸில் குடிபோதையில் வாகனம் ஓட்டுவதற்கு பூஜ்ஜிய சகிப்புத்தன்மை\nஐக்கிய அரபு எமிரேட்ஸில், ஆல்கஹால் அல்லது பிற மருந்துகள் போன்ற எந்தவொரு போதைப்பொருளின் செல்வாக்கின் கீழ் வாகனம் ஓட்டுவது ஒரு குற்றமாகும், ஏனெனில் பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கை நடைமுறைக்கு வருகிறது. உண்மையில், பொது குடிப்பழக்கம் கூட சட்டவிரோதமாக கருதப்படுகிறது.\nஇதனால், ஒரு பொது வக்கீல் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர் மீது வழக்குத் தாக்கல் செய்ய முடியும். ஆண்டுதோறும் குடிபோதையில் வாகனம் ஓட்டும் விபத்துகளின் அளவைக் குறைக்க இத்தகைய கடுமையான சட்டங்கள் பயன்படுத்தப்படுகின்றன.\nஉண்மையில், குடிபோதையில் வாகனம் ஓட்டும் விபத்துக்களில் சிக்கியவர்கள் தாங்கள் அனுபவிக்கும் விளைவுகள் மற்றும் அவர்கள் ஏற்படுத்தக்கூடிய தீங்கு ஆகியவற்றை அறிந்த பிறகும் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதைத் தேர்வு செய்கிறார்கள். எனவே, குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு அரசாங்கம் மெத்தனமாக செயல்படவில்லை.\nதுபாயில் ஆல்கஹால் உரிமம் பெறுவது எப்படி\nநீங்கள் ஒரு முஸ்லீம் அல்ல என்றால் துபாயில் ஆல்கஹால் உரிமம் பெறலாம். இருப்பினும், நீங்கள் பின்வரும் நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும்:\n21 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்\nகுறைந்தபட்சம் மாத 3,000 சம்பளம் சம்பாதிக்க வேண்டும்\nகுடியிருப்பு விசா வைத்திருக்க வேண்டும்\nநீங்கள் விண்ணப்ப படிவங்களை மரைடைம் மற்றும் மெர்கன்டைல் ​​இன்டர்நேஷனல் அல்லது ஆப்பிரிக்க + கிழக்கு மதுபான கடை வலைத்தளங்களிலிருந்து பெறலாம் அல்லது கடைகளிலிருந்து கடினமான நகல்களைப் பெறலாம். படிவத்தை நிரப்புவதைத் தவிர, பின்வரும் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்:\nபாஸ்போர்ட், குத்தகை ஒப்பந்தம், குடியுரிமை விசாவின் நகல்\n270 டாலர் கட்டணம் செலுத்துதல் அல்லது சமர்ப்பிக்கும் காலத்தில் பொருந்தக்கூடியது\nஅமைச்சகம் வழங்கிய தொழிலாளர் ஒப்பந்தத்தின் நகல் ஆங்கிலம் மற்றும் அரபு மொழிகளில்\nதிருமணமான தம்பதிகளின் விஷயத்தில், கணவனிடமிருந்து மனைவி என்ஓசி பெறாவிட்டால் கணவர் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவர். சுயதொழில் செய்பவர்களும் தங்கள் வர்த்தக உரிமத்தின் நகலை சமர்ப்பிக்க வேண்டும். உங்கள் நிறுவனத்தின் மூலம் உரிமத்தைப் பெறுவதற்கு, முதலாளி மற்றும் விண்ணப்பதாரர் இருவரும் கையெழுத்திட்டு விண்ணப்பத்தில் முத்திரை குத்த வேண்டும். பொதுவாக, விண்ணப்பம் இரண்டு வாரங்களுக்குள் செயல்படுத்தப���படும்.\nதுபாயில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதற்கு என்ன அபராதம்\nதுபாயில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதற்கான அபராதம் AED 5,000 முதல் AED 50,000 வரை அபராதம், 1 முதல் 3 மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டையும் ஈர்க்கும். கூடுதலாக, உங்கள் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படலாம் அல்லது அதிகபட்சம் இரண்டு ஆண்டுகளுக்கு எடுத்துச் செல்லப்படலாம். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தொழிலாளர் சட்டத்தின் பிரிவு 120 ன் படி உங்கள் வேலையை கூட இழக்க நேரிடும்.\nவிபத்தின் தீவிரத்தை பொறுத்து, குடிபோதையில் வாகனம் ஓட்டும் விபத்தில் சிக்கிய ஒருவர் பெரிய விளைவுகளால் பாதிக்கப்பட்டு அவர்களின் வாழ்க்கையை அழிக்கக்கூடும். சேதத்தை குறைப்பதற்கான ஒரே வழி தொழில்முறை உதவியை நாடுவதுதான். விபத்து உங்கள் தவறு இல்லையென்றால் குடிபோதையில் வாகனம் ஓட்டும் விபத்து வழக்கறிஞர் உங்களை காப்பாற்ற முடியும் மற்றும் உங்களைப் பாதுகாப்பதற்காக பழியை சிறிது திசைதிருப்ப நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஒரு பங்கை வகித்த பிற தரப்பினரை பொறுப்பேற்க முடியும்.\nதேவையான அனைத்து வழிகாட்டுதல்களையும் ஆலோசனைகளையும் நாங்கள் உங்களுக்கு வழங்க முடியும்\nஉங்கள் வழக்கில் உங்களுக்கு உதவ எங்கள் வழக்குரைஞர்கள் 24 மணி நேரமும், வாரத்தில் ஏழு நாட்களும் கிடைக்கின்றனர்.\nஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளூர் சட்டங்கள்\nஐக்கிய அரபு அமீரக நீதிமன்றங்கள்\nஅவசர தொடர்புகள் ஐக்கிய அரபு அமீரகம்\nவிசா விதிகள் மற்றும் சட்டங்கள்\nஉள்ளூர் ஐக்கிய அரபு எமிரேட் வழக்கறிஞர்கள்\nஎங்கள் வழக்கறிஞர்கள் மற்றும் வழக்குரைஞர்கள் மேற்கு மற்றும் பிராந்திய ரீதியில் படித்தவர்கள் மற்றும் பல்வேறு நாடுகளிலும் மத்திய கிழக்கு அதிகார வரம்புகளிலும் பயிற்சி பெற்றவர்கள். எங்கள் சேவைகள் குறித்து உங்களுக்கு கேள்விகள் உள்ளதா தயவுசெய்து எங்களை தொடர்பு கொள்ளவும்.\nபிசினஸ் பே, துபாய், ஐக்கிய அரபு எமிரேட்ஸ்\nபதிப்புரிமை © 2021 சட்ட நிறுவனங்கள் துபாய் | இயக்கப்படுகிறது காப்பர் கம்யூனிகேஷன்ஸ்\nநிபந்தனைகள் | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2021/01/blog-post_66.html", "date_download": "2021-05-07T00:56:46Z", "digest": "sha1:2DRXRVF56NCWMBE2ZTTTTTEUHWZZMWYH", "length": 8320, "nlines": 91, "source_domain": "www.yarlexpress.com", "title": "‘இனத்துரோகம் செய்யாதே’: யாழ் பல்கலை துணைவேந்தருக்கு எதிராக கோசம்... \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\n‘இனத்துரோகம் செய்யாதே’: யாழ் பல்கலை துணைவேந்தருக்கு எதிராக கோசம்...\nஇனத்துரோகம் செய்ய வேண்டாம் என யாழ் பல்கலைகழக துணைவேந்தர் சி.சற்குணராஜாவிற்கு எதிராக யாழ்ப்பாண பல்கலைகழக வாயிலில் போராட்டம் நடைபெற்று வருகிறத...\nஇனத்துரோகம் செய்ய வேண்டாம் என யாழ் பல்கலைகழக துணைவேந்தர் சி.சற்குணராஜாவிற்கு எதிராக யாழ்ப்பாண பல்கலைகழக வாயிலில் போராட்டம் நடைபெற்று வருகிறது.\nயாழ்ப்பாண பல்கலைகழகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை பாதுகாப்பு தரப்பு நேற்று இரவு பாதுகாப்பு தரப்பு இடித்து அழித்தது.\nஇந்த பாதகச் செயல் பல்கலைகழக துணைவேந்தர், பதிவாளரின் துணையுடன் நடந்ததாக பல்கலைகழக மாணவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.\nஅத்துடன் போராட்டக்காரர்கள் துணைவேந்தரிற்கு எதிராக போராட்டக்காரர்கள் கோசமெழுப்பி வருகிறார்கள்.\nபல்கலைகழகத்திற்குள் இருக்கும் துணைவேந்தரை வெளியில் வருமாறு போராட்டக்காரர்கள் கோசமெழுப்பி வருகிறார்கள்.\nகோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது, வியத்கம அமைப்பின் சார்பில் யாழில் நடந்த பிரச்சார கூட்டங்களில் தற்போதைய துணைவேந்தர் சிறிசற்குணராசாவும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nவணிகம் / பொருளாதாரம் (7)\nமாநகர காவல்படையினரின் சீருடை பறிமுதல் - மாநகரசபைக்கு ஆப்பு வைத்த பொலீஸார் ..\nBREAKING NEWS :- ஊரடங்கு தொடர்பில் இராணுவத் தளபதி சற்றுமுன் வெளியிட்ட அறிவிப்பு\nஅத்தியாவசிய சேவைக்கு மாத்திரமே அனுமதி\nYarl Express: ‘இனத்துரோகம் செய்யாதே’: யாழ் பல்கலை துணைவேந்தருக்கு எதிராக கோசம்...\n‘இனத்துரோகம் செய்யாதே’: யாழ் பல்கலை துணைவேந்தருக்கு எதிராக கோசம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://abedheen.wordpress.com/category/%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2021-05-07T01:14:14Z", "digest": "sha1:TFLWB6YDDSQ5ECIZH267MKG2VL4VPIN2", "length": 53615, "nlines": 631, "source_domain": "abedheen.wordpress.com", "title": "ஈராக் | ஆபிதீன் பக்க��்கள்", "raw_content": "\n18/01/2010 இல் 08:17\t(ஈராக், எஸ். ராமகிருஷ்ணன்)\n‘அல்ஃப் லைலா வ லைலா’ (ஆயிரத்தொரு அராபிய இரவு) சிறப்பிதழாக வெளிவந்த அட்சரம் – செப்.2003 இதழிலிருந்து. தலையங்கத்தில் , ‘ஷெஹர்ஜாத’ என்பதை ‘ஷீரஷாத்’ என்று எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் குறிப்பிட்டதை மட்டும் இங்கே மாற்றியிருக்கிறேன் (எஸ்.எஸ். மாரிசாமி எழுதிய ‘அரபுக் கதைகள்’-இல் ‘ஷாஜரத்’ என்றிருக்கிறது. தமிழ் விக்கியோ ‘ஷஹர்சாடே’ என்கிறது சாடையாக ). شهرزاده’ (ஷெஹர்ஜாத) என்றுதான் சொல்லவேண்டுமாம். பிடிவாதம் செய்கிறான் என் ‘மிஸிரி’ நண்பன். ‘மாப்ளா கிளர்ச்சி’ பற்றிய பதிவில் நான் குறிப்பிட்ட ‘ஷெஹர்ஜாத்’ என்பதும் தவறாம். எஸ்.ரா பொறுத்துக்கொள்வார் என்று நினைக்கிறேன்.\nஎனது 200வது பதிவு இது. எந்தப் பதிவும் போடாதிருந்தால் அன்று அதிகம் பேர் வந்து பார்க்கிறார்கள்\nஷெஹர்ஜாத கதை சொல்வதை நிறுத்தி விட்டாள்\nபற்றி எரியும் எண்ணெய் கிணறுகளின் புகைநடுவில் நின்றபடி தன் ஊரை திரும்பி பார்த்துக்கொண்டிருக்கிறாள் ஷெஹர்ஜாத. ஆயிரத்து ஒரு கதை சொல்லியபிறகும் தீராத பாக்தாத் நகரின் புராதன தெருக்களை ஏவுகணைகள் இன்று தரை மட்டமாக்கி விட்டன. தொல்சுவடுகளும் ஓவியங்களும் சித்திர எழுத்துக்களும் அராபியக்கதைகளும் நிறைந்திருந்த பாக்தாத் மியூசியம் குண்டு வீச்சில் எரிகிறது. வார்த்தைகளின் மீது நெருப்பு பற்றி எரியும்போது எலும்பு முறிவது போன்று சப்தம் எழுகிறது. ஆயிரம் ஆண்டுகளாக சேகரிக்கப்பட்ட நினைவுகள் ஒரு நாளில் அழித்தொழிக்கப்பட்டு விட்டன. உலகம் ஒரு வதையின் கூடம் என்ற வாசகம் நகரின் மீது பெரிதாக புகையால் எழுதப் படுகிறது. எந்த பூதத்தாலும் காப்பாற்றப்பட முடியாததாகிவிட்டது பாக்தாத். மாயக்கம்பளங்கள் தோற்றுப் போயின. அலாவுதீனின் அற்புத விளக்கும் அணைந்து போனது. எங்கும் இறந்து கிடக்கும் மனிதர்கள், குற்றுயிராக வேதனைப்படும் குழந்தைகள். பதுங்கு குழியினுள்ளே இறந்து கிடந்த வீரர்கள். ஒரு நகரம் பிடிபடும்போது அதன் அத்தனை உயிர்களும் அழிக்கப்படுமென்ற ஆதிவேட்டை இன்றைக்கும் நடைமுறைப்படுத்தப்பட்டு விட்டது. நாம் சுதந்திரமான காலத்தில் வாழ்கிறோம்; சுதந்திரமான காற்றை சுவாசிக்கிறோம், சுதந்திரத்தின் பேரால் நடைபெறும் கொலைகளுக்கு கை தட்டுகிறோம். தேசத்தை விட்டு வெளியேறிக்கொண்டிருக்கும் மனிதர்களுடன் தலை கவிழ்ந்தபடி வெளியேறுகிறாள் ஷெஹர்ஜாத. இனி கதை சொல்வதற்கு தேவையில்லை. சாவை சந்தித்தபடியே ஆயிரம் கதை சொன்ன அவளது நாவு துண்டிக்கப்பட்டுவிட்டது. இப்போது கதை துயரத்திற்கும் மறுவாழ்விற்குமிடையில் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. உடலில் பாய்ந்து அகற்றப்படாத துப்பாக்கிக் குண்டு போல ரணமாக உள்ளது. இரண்டு தேசபடை வீரர்களின் டிரக்குகளும் ஊர்ந்து சென்றபடியிருக்கின்றன. அசைவற்ற முகங்கள். தொலைக்காட்சி சாவு எண்ணிக்கையை அதிகப்படுத்திக்கொண்டேயிருக்கிறது. உலகம் தன் களியாட்டத்திலும் கேளிக்கையிலும் புரண்டு கிடக்கிறது. போதும் , அணைத்து விடப்போகிறேன் எனது தொலைக்காட்சியை. இனி அந்த புராதன பாக்தாத் வரைபடத்தில் இல்லை. நம் நினைவில் மட்டுமே மிஞ்சியிருக்கப்போகிறது. அரேபியக்கதைக்குள்ளாக பாக்தாத் நகரம் பதுங்கி தன் வாழ்வை நீடித்துக் கொள்கிறது. கதைகளும் அகதியைப்போல தேசம் விட்டு வெளியேறுகின்றன. அதோ ஷெஹர்ஜாத சொல்லாத கதையொன்று தன்னைத்தானே சொல்லியபடி ஒரு இறந்து கிடந்த மனிதனின் அருகே உட்கார்ந்திருக்கிறது. நீங்கள் கவனிக்காத அதன் வார்த்தைகள் உறைந்து கிடக்கின்ற குருதியில், ராணுவ வாகனங்கள் கடந்து செல்கின்றன. தொலைவில் நகரில் குண்டுகள் முழங்குகின்றன. வார்த்தைகளின் சாம்பல் காற்றில் பறக்கிறது. யாரோ துக்கத்தை அடக்கிகொண்டு பிரார்த்தனை செய்கிறார்கள்.\nநன்றி : எஸ். ராமகிருஷ்ணன்\nஒபாமாவுக்கு மஹாதீர் முஹம்மதின் கடிதம்\n28/10/2009 இல் 12:11\t(ஈராக், மஹாதீர் முஹம்மது)\n‘இலங்கையில் அப்பாவித்தமிழர்களை கொன்று குவித்த அரசியற்தலைவர்களை போர்க்குற்றவாளிகளாக, சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என மலேசிய முன்னாள பிரதமர் துன் மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார்’ என்பதை ‘இனியொரு‘ தளத்தில் (நன்றி : தமிழ்மணம்) இன்று பார்த்தேன். தொடர்ச்சியாக , மஹாதீர் அவர்கள் ஒபாமாவுக்கு எழுதிய பழைய கடிதத்தைப் ( தமிழாக்கம் : காஞ்சி அப்துல் ரவூஃப் பாகவி) பதிகிறேன். சமநிலைச் சமுதாயம் – பிப்ரவரி 2009 இதழில் வெளிவந்தது. அதன் ஆங்கில மூலம் இங்கே.\nரத்தக்கண்ணீர் வடித்தபடி , வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு , ‘வெய்னக் அல்லாஹ்..வெய்னக் அல்லாஹ்’ (அல்லாஹ் எங்கே, அல்லாஹ் எங்கே) என்று புலம்பிய, புலம்பும் பல்லாயிரக்கணக்கான ஈராக் தாய்மார்களுக்கு இந்தப் பதிவு.\nஅன்புள்ள அமெரிக்க அதிபர் பராக் ஹூசைன் ஒபாமாவுக்கு மலேசியாவின் முன்னாள் பிரதமர் டாக்டர் மஹாதீர் முஹம்மது எழுதும் பகிரங்கக் கடிதம்\n நான் ஒரு மலேசியப் பிரஜை என்பதால் உங்களுக்கு என்னால் வாக்களிக்க முடியவில்லை. ஆனால், நான் என்னை உங்கள் தொகுதியைச் சேர்ந்த ஒருவனாகக் கருதுகின்றேன்.\nஏனெனில், இனி நீங்கள் சொல்லவிருக்கும் சொற்களும், செய்யவிருக்கும் செயல்களும் என் மீதும் எனது நாட்டின் மீதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தவல்லவை.\n“நான் அமெரிக்காவின் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் அமெரிக்காவின் செயல்பாடுகளில் மாற்றத்தைக் கொண்டுவருவேன்” என்று தேர்தல் பிரச்சாரத்தின்போது நீங்கள் அளித்த வாக்குறுதியை நான் வரவேற்கின்றேன். நிச்சயம் உங்கள் நாடான அமெரிக்காவின் போக்கில் நிறைய மாற்றங்கள் தேவைப்படுகின்றன.\nஏனெனில் அமெரிக்காவும் அமெரிக்கர்களும் உலகிலேயே மிக அதிகமாக வெறுக்கப்படுபவர்களாக மாறிவிட்டிருக்கின்றனர். ஐரோப்பியர்கள்கூட உங்கள் ஆணவப்போக்கை வெறுக்கிறார்கள்.\nஒரு காலத்தில் உங்களை உலகம் விரும்பியது. மதிப்புடன் பார்த்தது.\nஏனெனில், அப்போது நீங்கள் பலநாடுகளைப் பகைநாடுகளின் படையெடுப்பிலிருந்தும், ஆதிக்கத்திலிருந்தும் காப்பாற்றினீர்கள்.\nபுத்தாண்டின் தொடக்கத்தில் உறுதிமொழிகள் பலவற்றை எடுத்துக்கொள்வது, இந்த உலகின் வழக்கமான மரபு.\nநீங்கள் உங்கள் நல்ல உறுதிமொழிகளை முன்பே பட்டியலிட்டுக் கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஆயினும் மாற்றத்தைக் கொண்டுவருவதற்கான ஒரு முயற்சியாகப் பின்வரும் உறுதிமொழிகளையும் எடுத்துக்கொள்ளும்படி மெத்தப் பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்.\n1. அப்பாவிப் பொதுமக்களைக் கொல்வதை தயவு செய்து நிறுத்திவிடுங்கள். அமெரிக்கா தனது சொந்தநலன்களை அடைவதற்காகப் பிறமக்களைக் கொல்வதில் ஆர்வத்துடன் ஈடுபட்டுள்ளது. நீங்கள் அதைப் போர் என்று பெயரிட்டு அழைக்கிறீர்கள்.\nஆனால் இன்றைக்கு தொழில்முறைப் போர் வீரர்கள் ஒருவரையொருவர் போர்க்களத்தில் கொல்வதைப் போர் என்று சொல்வதில்லை. ஒன்றுமறியாத நிரபராதிகளான சாதாரணப் பொதுமக்களை, லட்சக்கணக்கணக்கில் கொன்று குவிப்பதுதான் போர் என்றாகி விட்டது. ஒட்டுமொத்தமாக ஒரு நாடு முழுவதுமே போர் என்ற பெயரால் அழித்து நிர்���ூலமாக்கப்பட்டு விடுகின்றது.\nபோர் என்பது நாகரிகமடையாத கற்கால மனிதன் பிரச்னைகளைத் தீர்த்துக்கொள்ளக் கையாண்ட முதிர்ச்சியற்ற வழிமுறை. ஆயுதங்களைத் தயாரித்துக் குவிக்கும் போக்கைக் கைவிடுங்கள். வருங்காலத்தில் இன்னும் பல போர்களை உருவாக்க, இப்போதே திட்டம் தீட்டுவதை நிறுத்துங்கள்.\n2. நீங்கள் அள்ளிக்கொடுக்கும் நிதி உதவியின் துணைகொண்டும், நீங்கள் வாரி வ்ழங்கும் நவீன ஆயுதங்களைக்கொண்டும் ஓர் இனப் படுகொலையை நிகழ்த்திக்கொண்டிருக்கும் இஸ்ரேலியக் கொலைகாரர்களுக்கு நீதி நியாயம் பார்க்காமல் நீங்கள் வழங்கி வரும் கண்மூடித்தனமான ஆதரவை நிறுத்துங்கள். காஸா பகுதி மக்களைக் கொன்று குவிக்கின்ற விமானங்களும், குண்டுகளும் இஸ்ரேலியர்களுக்கு உங்களிடமிருந்து கிடைத்தவைதான்.\n3. இதேபோன்ற ஓர் அட்டூழியத்தை உங்களுக்கெதிராக நிகழ்த்த முடியாத நாடுகள்மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பதையும் , அதைச் செயல் படுத்துவதையும் நிறுத்துங்கள்.\nஇராக்கின் மீது நீங்கள் விதித்த பொருளாதாரத் தடைகள் 50,000 குழந்தைகளை அவர்களுக்கு மருந்தும் உணவும் கிடைக்கவிடாமல் இதுவரை கொன்று குவித்துள்ளன. மற்ற குழந்தைகள் எல்லாம் உருச்சிதைந்த நிலையில் பிறந்துள்ளன.\nஇந்தக் குரூரச் செயல்களால் நீங்கள் என்னதான் சாதித்துவிட்டீர்கள் அநியாயமாக பலியான மக்களின் வெறுப்பையும் நியாயமாகச் சிந்திப்பவர்களின் மனவேதனையையும், குரோதத்தையும் தவிர வேறென்ன சம்பாதித்தீர்கள்\n4. இன்னும் ஏராளமான மக்களை இன்னும் அதிக ஆற்றலுடன் கொன்றுகுவிப்பதற்காக அதிநவீன, புதிய புதிய கொடூரமான ஆயுதங்களை, ஏராளமான எண்ணிக்கையில் கண்டுபிடித்துக் குவித்துவரும் உங்கள் ஆயுத விஞ்ஞானிகளளயும் ஆராய்ச்சியாளர்களையும் தடுத்து நிறுத்துங்கள்.\n5. உங்கள் ஆயுதத் தயாரிப்பாளர்களுக்கு அந்தப் பேரழிவு ஆயுதங்களை உற்பத்தி செய்யக்கூடாதென்று தடைவிதியுங்கள்.\nஉலகம் முழுவதற்கும் ஆயுதம் விற்கும் உங்கள் ஆயுத வியாபாரத்தை நிறுத்துங்கள். ஆயுத வியாபாரத்தால் கிடைக்கும் வருமானம் ரத்தம் சிந்தியதால் கிடைக்கும் பணமாகும். அது கிரிஸ்தவ நெறிக்கே ஏற்புடையதல்ல.\n6. உலக நாடுகள் அனைத்தையும் மக்களாட்சி (ஜனநாயக அமைப்பு) முறைக்கு மாற்றிட முயற்சி செய்வதை நிறுத்துங்கள். ஜனநாயகம் அமெரிக்காவுக்கு வேண்டுமா��ால் ஏற்புடையதாக இருக்கலாம். ஆனால், அது மற்ற நாடுகளுக்கு எப்போதுமே பொருத்தமானதாக இருப்பதில்லை.\nஇவ்வாறே ஒரு நாட்டு மக்கள் ஜனநாயக வழிமுறைப்படி நடக்கவில்லை என்பதற்காக அவர்களைக் கொல்லாதீர்கள்.\nஉலகநாடுகளை ஜனநாயக வழிமுறைக்கு மாற்றுவதற்காக நீங்கள் மேற்கொண்டுள்ள போராட்டம் நீங்கள் தூக்கியெறிந்த எதேச்சதிகார சர்வாதிகார அரசுகள் கொன்றொழித்ததைவிட மிக அதிகமான மக்களைக் கொன்றொழித்துவிட்டது. அப்படியிருந்தும் உங்களால் அந்தப்போரில் வெற்றியடைய முடியவில்லை.\n7. நீங்கள் பொருளாதார நிறுவனங்கள் என்று அழைக்கும் சூதாட்ட விடுதிகளை இழுத்து மூடுங்கள். குறைந்த முதலீட்டில் அதிக ஆபத்துள்ள (மக்களை பொருளாதார இழப்புக்குள்ளாக்கும்) வணிகங்களில் ஈடுபடும் நிதி நிறுவனங்களையும் (Hedge Funds) தமக்குரிமையில்லாத பிறரது நிதி ஆதாரங்களை அடிப்படையாகக்கொண்டு நிதி வர்த்தகம் புரியும் நிறுவனங்களையும் (Derivatives) தடை செய்யுங்கள். பணமாற்று வர்த்தகத்தையும் (Currency Trading) தடை செய்யுங்கள்.\nஇருப்பதிலேயே இல்லாத கற்பனையான (அச்சடித்த வெற்றுத்தாள்) பணத்தைப் பல பில்லியன் கணக்கில் கடன்களாக வாரிவழங்கும் தவறான போக்கிலிருந்து (Non-Existent Money/Shadow Economy) உங்கள் வங்கிகளைத் தடுத்து நிறுத்துங்கள்.\nஉங்கள் வங்கிகளுக்கு முறையாக இயங்கும் விதிகளை ஏற்படுத்தித் தந்து அவற்றை கண்காணித்து வாருங்கள். வங்கி முறையைத் தவறாகப் பயன்படுத்தி, லாபமடைய முயலும் விஷமிகளைச் சிறையிலடையுங்கள்.\n8. கியோட்டோ புரோட்டோகோல் (Kyoto Ptrotocol) எனப்படும் உலகம் வெப்பமயமாவதைத் தடுத்து நிறுத்துவதற்காகப் போடப்பட்ட சர்வதேச ஒப்பந்தத்திலும் (நீங்கள் புறக்கணித்து வைத்திருக்கும் மனித குலத்திற்குப் பயனளிக்கும் முக்கியமான) பிற சர்வதேச ஒப்பந்தங்களிலும் கையொப்பமிடுங்கள்.\n9. ஐக்கிய நாடுகள் சபைக்கு (United Nations Organization) உரிய மரியாதையை வழங்குங்கள்.\nவரவேற்புக்குரிய மாற்றத்தைக் கொண்டுவருவதற்கு மேலும் பல உறுதிமொழிகளை எடுத்துக்கொள்ள இன்னும் பல ஆலோசனைகள் என்னிடம் உள்ளன. அவற்றையெல்லாம் நீங்கள் பரிசீலனை செய்து செயல்படுத்த வேண்டும் எனக் கோருகிறேன்.\nநான் முன்வைத்த ஆலோசனைகளில் சிலவற்றை உங்களால் செயல்படுத்த முடிந்தாலும்ன நீங்கள் இந்த உலகத்தால் மாபெரும் தலைவராக நினைவு கூரப்படுவீரக்ள். அப்போது அமெரிக்காவும் மீ���்டும் உலக மக்களின் மதிப்புக்குரிய ஒரு நாடாக மாறும்.\nஉலகெங்குமுள்ள உங்கள் தூதரங்கள் நம்மைச் சுற்றிலும் (பயங்கரவாதத் தாக்குதலிலிருந்து தப்பிப்பதற்காக) அமைக்கப்பட்டுள்ள உயரமான வேலிகளையும் மின்கம்பித் தடுப்புகளையும் பிரித்து எறிந்து விட முடியும்.\nஉங்களுக்கு ஒரு மகிழ்ச்சிகரமான புத்தாண்டு மலரவும், சாதனைகள் மிக்க பதவிக்காலம் அமைந்திடவும் என் வாழ்த்துக்கள்.\nநன்றி : ‘சமநிலைச் சமுதாயம்’ , காஞ்சி அப்துல் ரவூஃப் பாகவி\nஆபிதீன் பக்கங்கள் ii :\n3. எழுத்தாளர்களின் இணையதளங்கள் (Links)\n5. கச்சேரிகள் , கஜல்கள்\n8 . நாகூர் ரூமி பதிவுகள்\nகலீபா உமர் (ரலி) (1)\nஉஸ்தாத் ஸலாமத் அலி கான் (1)\nகுலாம் முஸ்தஃபா கான் (1)\nநுஸ்ரத் ஃபதே அலிகான் (6)\nபண்டிட் ராஜ்சேகர் மன்ஸூர் (1)\nமுகேஷ் (பீர் முஹம்மது) (1)\nவிஸ்வநாதன் / ராமமூர்த்தி (2)\nதயவு பிரபாவதி அம்மா (1)\nஅப்துல் வஹ்ஹாப் பாகவி (18)\nகுலாம் காதர் நாவலர் (4)\nஅபுல் கலாம் ஆசாத் (2)\nஅஸ்கர் அலி என்ஜினியர் (1)\nஎச். பீர் முஹம்மது (2)\nகிண்ணியா எஸ்.பாயிஸா அலி (2)\nகுர்அதுல் ஐன் ஹைதர் (1)\nகுளச்சல் மு. யூசுப் (5)\nசாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (2)\nஜே. பி. சாணக்யா (1)\nஜோ டி குரூஸ் (1)\nதொ.மு. சி. ரகுநாதன் (1)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nபோர்வை பாயிஸ் ஜிப்ரி (1)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nவேங்கட சுப்புராய நாயகர் (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (5)\nஹரி கிருஷ்ணன் (ஹரிகி) (1)\nத சன்டே இந்தியன் (1)\nநேஷனல் புக் டிரஸ்ட் (13)\nஅங்கனெ ஒண்ணு இங்கனெ ஒண்ணு (1)\nமணல் பூத்த காடு (1)\nஇரா. சண்முக வடிவேல் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2020/10/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2021-05-07T01:34:25Z", "digest": "sha1:GI3FSCRCKNPYTTEEMZDTDSCDXGMSYBWQ", "length": 11184, "nlines": 119, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nகால மாற்றமும்… இயற்கை மாற்றமும்…\nகால மாற்றமும்… இயற்கை மாற்றமும்…\nஇப்பூமி சுழலும் வேகத்தை ஒரு நாளைக் குறிக்க 24 மணி நேர விகிதப்படுத்தி… இவ்வுலகம் முழுவதுமே அக்கணக்குப்படி ஒரு நாள் நிலைப்படுத்தி உள்ளார்கள்.\nஇந்த 24 மணி நேர விகிதக் காலம் குறித்துப் பல நூறு ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்றளவும் அந்நிலையை வைத்தே அந்நிலையின் செயலுக்கொப்பக் கால நிலை குறிக்கும் அளவைச் செயலாக்குகின்றனர்.\nஇந்த 24 மணி நேரம் குறித்��� காலத்திற்கும்… இன்று இப்பூமி சுழலும் நிலைக்கும் துரிதம் கொண்டுள்ளது வினாடி விகிதத்தில்… பல நூறு கோடி ஆண்டுகளில் சில வினாடி நேரம்தான் அதிகத் துரிதத்துடன் இன்று நம் பூமி சுழல்கின்றது.\nஆனால் இக்கலி முடிந்து கல்கியில் இவ்வுலகப் பிரளயம் தோன்றி இவ்வுலக நிலை மாறிச் சுழலும் தருவாயில் நம் பூமியின் சுழலும் வேகம் இப்போதைய நேரத்தில் நான்கில் ஒரு பாகம் எடுத்த நிலையில் மூன்று பாகங்கள் கொண்ட துரித கதியில் இன்று 24 என்பது 18 மணி விகிதத்தில் சுழலப் போகின்றது.\nநம் பூமியில் இவ்வசைவின் பிரளயத்தின்போது நம் பூமியுடன் பல நட்சத்திர மண்டலங்களும் சேரப் போகின்றன. நம் சூரியனைச் சுற்றியுள்ள 48 மண்டலங்களின் சக்தி நிலையும் அதிகப்படப் போகின்றன.\nநம் சூரியனின் விகித நிலையும் கூடப்போகின்றது. சூரியனும் 48 மண்டலக் கோள்களும் ஒரே சமயத்தில் வளர்ச்சி கொள்ள இவற்றிற்கு சக்தி நிலை கூடும் அமிலங்கள் யாவும் நம் கண்ணிற்கு தெரியாத நிலைகொண்டு பால்வெளி மண்டலத்தில் நிறைந்துள்ள அமில சக்தியே இம் மாற்றம் கொள்ளும் தருவாயில் மண்டலங்களின் ஈர்ப்பில் வந்து சேர்ந்து மண்டலங்களின் வளர்ச்சி நிலை கூடப்போகின்றது.\nஇன்று நம் பூமியில் வடதுருவம் தென் துருவ நிலை கொண்டு பூமியின் சுழற்சியில் பகலும் இரவும் இக்கால நிலைகள் நான்கும் ஒத்த நிலையில் உள்ளன.\nமழைக்காலம் மட்டும் அந்தந்தப் பிரதேசங்களின் பூமி ஈர்த்து அப்பூமி கக்கும் உஷ்ண அலைகளுக்கொப்ப மழையின் நிலை அந்தந்த நிலைகளில் மாறு கொண்டு வருகின்றது.\nஆனால் நம் பூமியின் மாற்றம் கொள்ளும் கல்கியின் காலத்தில் இன்று இவர்கள் குறித்துள்ள 365 நாள் விகிதக் கணக்கு வருடச் சுற்றலில் குறைவுபடப் போகிறது.\nசூரியனைச் சுற்றியுள்ள அனைத்துக் கோளங்களின் சுற்றலின் நிலையும் துரிதப்படுவதினால் சூரியனின் நிலையும் துரிதம் கொள்ளப் போகின்றது.\nநம் சூரியனுடன் தொடர்பு கொண்ட மண்டலங்களின் விகித நிலை கூடும் பொழுது பால்வெளி மண்டலத்தின் ஈர்ப்பு சக்தியில் அமில சக்தியை எல்லாம் இம் மண்டலங்கள் உறிஞ்சிய பிறகு நம்மைச் சார்ந்துள்ள இம் மண்டலங்களின் நிலையில்லா மற்ற மண்டலங்கள் நம் சூரியனைக் காட்டிலும் சக்தி கொண்ட சூரியனின் சுழற்சியின் ஈர்ப்பிலுள்ள ஒரு மண்டலம் ஆவியாய்ப் பிரியும் நிலை கொண்டு தன் ஜீவனை இழக்கப் போகி���்றது.\nபல நூறு கோடி ஆண்டுகளாய் வாழ்ந்த மண்டலம் அது…\n1.நம் பூமிக்கு மட்டும் மாற்ற நிலை வரப்போகின்றது என்பதல்ல.\n2.இந்த அண்டத்திலுள்ள அனைத்து மண்டலங்களின் நிலையிலுமே இந்நிலை செயல்படப் போகின்றது…\nசாமியையே (ஞானகுரு) எண்ணிக் கொண்டிருப்பதைக் காட்டிலும் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து உடலுக்குள் விளைய வைக்க வேண்டும்\n என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nசீராக ஆத்ம சுத்தி செய்வோருக்குக் கிடைக்கும் பலன்கள்\nஆண்டவனிலிருந்து வந்த பிம்பங்கள் தான் அனைத்துமே என்று எண்ணினால்… “தான்” என்ற தனித்த அகங்காரம் வராது – ஈஸ்வரபட்டர்\nஉங்களுக்குக் கொடுத்த சக்திகளை ஒவ்வொருவரும் விரயம் ஆக்காது பயன்படுத்துங்கள்\n24 X 7 சாமிகள் உபதேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2020/12/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/", "date_download": "2021-05-07T00:51:41Z", "digest": "sha1:XSD4DFUNP3NNLXVU2JK5UHI24OOT52YK", "length": 10727, "nlines": 129, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nவாழ்க்கையில் வரும் “இன்னல்களை” எப்படி எதிர் கொள்ள வேண்டும்…\nவாழ்க்கையில் வரும் “இன்னல்களை” எப்படி எதிர் கொள்ள வேண்டும்…\nஜீவன்கள் வாழ இந்தப் பூமியின் ஜீவ நாடியாக நீர் உள்ளதற்குப் பூமியில் எப்பொழுதுமே மழை பெய்து கொண்டிருப்பதில்லை. மேகங்கள் கருத்து இடியும் மின்னலும் தோன்றுகிறது. அப்பொழுது பல இடங்களில் பெய்யக்கூடிய அந்த மழை வெள்ளமாகின்றது.\nவெள்ளமே ஆறாகக் கரை புரண்டு ஓடி நீர் நிலைகள் பூமியில் நிறைகிறது. அந்த நீரைக் கொண்டு தான் பல ஜீவராசிகள் உயிர் வாழ்கிறது. ஒரு இடத்தில் பெய்யும் மழை ஆறாகும் பொழுது பல இடங்களுக்குச் செல்கிறது.\nஇதே நிலை போல் மீண்டும் மீண்டும் அந்தந்த இடங்களுக்கொப்ப ஏற்படக்கூடிய நிலைகளைக் கொண்டு ஜீவராசிகளின் நிலையும் தாவர இனங்களின் வளர்ச்சியின் பயனாகக் கனியும் பூக்களும் (புஷ்பங்களும்) வளர்கிறது.\n1.கனியும் பூக்களும் வருவதைப் போன்று தான்\n2.மனித உணர்வில் மெய் ஒலி பெற.. மெய் ஒளி பெற… மெய் ஞானமாக்க..\n3.பல நிலைகளில் நம் உணர்வின் எண்ணமுடன் மோதிடும் இன்னல்கள் ஏற்படுத்தும் காலங்களை\n4.புருவ மத்தியில் “ஈஸ்வரா…” என்று உயிரை எண்ணி அந்த ஜீவித உணர்வில் எடுக்கும் ஒலி கொண்டு தான் ஒளியாக மாறும்…\nஅதாவது இடி மின்னலைப் போன்றே ஒலி ஒளி செயல் ஏற்படும் இன்னல்கள் அனைத்தையும் பேரொளியாக மாற்ற வேண்டும்.\nஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் நமக்குள் ஏற்படக்கூடிய எண்ணத்தின் மோதலை இடி மின்னலைப் போன்று உணர்வின் சமைப்பாக நாம் மாற்றும் பொழுது\n1.நீரான பெருக்கம் மழையாகி ஜீவன்களை வளர்க்கப் பூமிக்கு வலு ஏற்படுகின்றதோ\n2.அதைப் போன்று எண்ணத்தில் எதிர்படும் பல மாற்றங்களையும் உணர்வில் எடுத்து\n3.நம் உணர்வுடன் எந்த எண்ணத்தின் மாற்று நிலைகள் மோதினாலும்\n4.மேகத்தின் கருமை கொண்டு இடி மின்னல் வெடித்து மழை வருவதைப் போன்று\n5.நாம் போகும் மார்க்கத்தில் ஞானத்தின் மெய் ஞானம் அறிய…\n6.மோதிடும் எதிர் தன்மைகளை உணர்வின் எண்ணத்தால் மாற்றி உயர்ந்த ஞானத்தின் ஒலியாக நாம் எண்ணினால்தான்\n7.அந்த ஒலியே (எந்த ஒலியாக இருந்தாலும்) ஒளியாகும்… நம் ஆத்மா பேரொளியாக ஆகும்.\nமெய் ஒலி… மெய் ஒளி பிறக்க… மெய் ஞானிகள் அன்று என்ன செய்தார்கள்…\n1.வாழ்க்கையில் தன் உணர்வுடன் மோதிய “எண்ணத்தின் ஓட்டத்தின் கதியைக் கொண்டுதான்…”\n2.எண்ணத்தால் எதிர்படும் எதிர் நிலைகளை ஞானத்தின் பகுத்தறிவால் உணர்ந்து\n3.மெய் ஒலி மெய் ஒளி பெற்றால் மெய் ஞானியாகும் குணங்களைத் தன் ஆத்ம ஞானத்தால் வளர்த்து\n4.ஆத்ம சக்தியின் சூட்சமத்தை… ஆதிசக்தியின் ஒளி சக்தியாக..\n5.அகிலத்தில் படர்ந்துள்ள பரமாத்மாவின் பரம்பொருளை\n” மெய் ஞானிகள் அன்று கண்டார்கள்.\nபால்வெளியில் படர்ந்துள்ள உண்மைத் தன்மைகளை உணரும் சக்தியாக ஆதிசக்தியின் சக்தியை மெய் ஞானிகள் அன்று இப்படித்தான் கண்டார்கள்.\nசாமியையே (ஞானகுரு) எண்ணிக் கொண்டிருப்பதைக் காட்டிலும் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து உடலுக்குள் விளைய வைக்க வேண்டும்\n என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nசீராக ஆத்ம சுத்தி செய்வோருக்குக் கிடைக்கும் பலன்கள்\nஆண்டவனிலிருந்து வந்த பிம்பங்கள் தான் அனைத்துமே என்று எண்ணினால்… “தான்” என்ற தனித்த அகங்காரம் வராது – ஈஸ்வரபட்டர்\nஉங்களுக்குக் கொடுத்த சக்திகளை ஒவ்வொருவரும் விரயம் ஆக்காது பயன்படுத்துங்கள்\n24 X 7 சாமிகள் உபதேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-05-07T02:14:06Z", "digest": "sha1:UEMLQDUGOA7CXXKDPWKUBDFHLTTVBWKR", "length": 4403, "nlines": 62, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"தொல்லுயிராய்வியல்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nதொல்லுயிராய்வியல் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்சனரி பின்னிணைப்பு:கல்வித் துறைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nnouns ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://wikirank.net/top/ta/2018-12", "date_download": "2021-05-07T00:06:15Z", "digest": "sha1:T74GOPCFEL2KZBXBLAYZELUKQJB2HBWL", "length": 9933, "nlines": 301, "source_domain": "wikirank.net", "title": "The most popular on Tamil Wikipedia in December 2018", "raw_content": "\n2 -1 தமிழ் ராக்கர்ஸ்\n3 +5 சுப்பிரமணிய பாரதி\n6 +9 பன்னாட்டுத் தரப்புத்தக எண்\n9 +2 தஞ்சைப் பெருவுடையார் கோயில்\n10 0 மோகன்தாசு கரம்சந்த் காந்தி\n11 +28 2.0 (திரைப்படம்)\n12 +18 பல்வகை இணைய அஞ்சல் நீட்சி\n14 +18 டப்பிளின் கருவம்\n17 +9 ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்\n18 -12 மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்\n19 +13313 தானே செய்தல்\n20 +39 சூரியக் குடும்பம்\n21 +27 சுற்றுச்சூழல் பாதுகாப்பு\n24 -15 அமெரிக்க ஐக்கிய நாடுகள்\n25 +25 வேலு நாச்சியார்\n27 +6 ஈ. வெ. இராமசாமி\n28 +6 ஆண் தமிழ்ப் பெயர்கள்\n30 -18 சுந்தர் பிச்சை\n32 -10 இந்து சமயம்\n34 +22 பதினெண் கீழ்க்கணக்கு\n35 +5 முதலாம் இராஜராஜ சோழன்\n36 +10 தமிழ் விக்கிப்பீடியா\n38 +2945 வைகுண்ட ஏகாதசி\n39 +58 இராமலிங்க அடிகள்\n40 +2881 திருவாதிரை நோன்பு\n43 +46 இயற்கை வேளாண்மை\n45 +85 நெகிழிப் பை\n46 +6 தமிழர் நிலத்திணைகள்\n47 +902 கீரைகளின் பட்டியல்\n48 +10 தமிழ்நாடு காவல்துறை\n49 +94 சங்க இலக்கியம்\n50 +7 தமிழக வரலாறு\n52 -1 சுற்றுச்சூழல் மாசுபாடு\n53 +335 தமிழர் விளையாட்டுகள்\n56 +57 கஜா புயல்\n58 +45 தமிழர் பண்பாடு\n59 +111 108 வைணவத் திருத்தலங்கள்\n61 +3 ஐம்பெருங் காப்பியங்கள்\n62 -7 இந்திய அரசியலமைப்பு\n64 +12 அன்னை தெரேசா\n65 +438 தமிழில் சிற்றிலக்கியங்கள்\n68 +17 இந்தி�� வரலாறு\n69 +50 சுபாஷ் சந்திர போஸ்\n71 +392 சீனிவாச இராமானுசன்\n72 -44 ஜெ. ஜெயலலிதா\n73 +144 முத்தரைய அரச குலம்\n74 +65 தமிழ் இலக்கியம்\n79 +23 மழைநீர் சேகரிப்பு\n82 +2 சைவ சமயம்\n85 +30 உயர் இரத்த அழுத்தம்\n86 +25 தமிழ் இலக்கணம்\n88 +81 தமிழ்நாடு சட்டப் பேரவை\n91 +130 சுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம் )\n92 +17359 பாபா ஆம்தே\n94 +11 குறிஞ்சி (திணை)\n95 +229 ஞாயிறு (விண்மீன்)\n96 +17294 திருவாடானை ஆதிரத்தினேசுவரர் கோயில்\n98 +23 தமிழக மாவட்டங்கள்\n100 -39 இராணி இலட்சுமிபாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://www.gktamil.in/2017/09/tnpsc-current-affairs-quiz-153.html", "date_download": "2021-05-07T00:42:43Z", "digest": "sha1:HSPJETV4VJHA5QLTW633LNCVQRFUJUR6", "length": 19770, "nlines": 69, "source_domain": "www.gktamil.in", "title": "GK Tamil.in: TNPSC Current Affairs Quiz 153 - September 2017 Tamil - World Affairs & National Affairs */ /* Content ----------------------------------------------- */ body { font: normal normal 14px 'Raleway', sans-serif; color: #222222; background: #f7f7f7 none repeat scroll top left; padding: 0 40px 0 40px; } html body .region-inner { min-width: 0; max-width: 100%; width: auto; } h2 { font-size: 22px; } a:link { text-decoration:none; color: #00ae86; } a:visited { text-decoration:none; color: #00ae86; } a:hover { text-decoration:none; color: #41d5b3; transition:0.3s; } .body-fauxcolumn-outer .fauxcolumn-inner { _background-image: none; } .body-fauxcolumn-outer .cap-top { position: absolute; z-index: 1; height: 400px; width: 100%; } .body-fauxcolumn-outer .cap-top .cap-left { width: 100%; _background-image: none; } .content-outer { -moz-box-shadow: 0 0 40px rgba(0, 0, 0, .15); -webkit-box-shadow: 0 0 5px rgba(0, 0, 0, .15); -goog-ms-box-shadow: 0 0 10px #333333; box-shadow: 0 0 40px rgba(0, 0, 0, .15); margin-bottom: 1px; } .content-inner { padding: 10px 10px; } .content-inner { background-color: #ffffff; } /* Header ----------------------------------------------- */ .header-outer { _background-image: none; } .Header h1 { font: normal normal 50px 'Raleway', sans-serif; color: #222222; text-shadow: -1px -1px 1px rgba(0, 0, 0, .2); text-align:center; } .Header h1 a { color: #222222; } .Header .description { font-size: 140%; color: #777777; text-align:center; } .header-inner .Header .titlewrapper { padding: 22px 30px; } .header-inner .Header .descriptionwrapper { padding: 0 30px; } /* Tabs ----------------------------------------------- */ .tabs-inner .section:first-child { border-top: 1px solid #eeeeee; } .tabs-inner .section:first-child ul { margin-top: -1px; border-top: 1px solid #eeeeee; border-left: 0 solid #eeeeee; border-right: 0 solid #eeeeee; } .tabs-inner .widget ul { _background-image: none; border-bottom: 1px solid #eeeeee; margin-top: 0; margin-left: -30px; margin-right: -30px; } .tabs-inner .widget li a { display: inline-block; padding: .6em 1em; font: normal normal 14px 'Raleway', sans-serif; color: #999999; border-left: 1px solid #ffffff; border-right: 1px solid #eeeeee; } .tabs-inner .widget li:first-child a { border-left: none; } .tabs-inner .widget li.selected a, .tabs-inner .widget li a:hover { color: #000000; background-color: #eeeeee; text-decoration: none; } /* Columns ----------------------------------------------- */ .main-outer { border-top: 0 solid #eeeeee; } .fauxcolumn-left-outer .fauxcolumn-inner { border-right: 1px solid #eeeeee; } .fauxcolumn-right-outer .fauxcolumn-inner { /*border-left: 1px solid #eeeeee;*/ } /* Headings ----------------------------------------------- */ div.widget > h2, div.widget h2.title { margin: 0 0 1em 0; font: normal bold 11px 'Raleway', sans-serif; color: #222222; } /* Widgets ----------------------------------------------- */ .widget .zippy { color: #262626; /* text-shadow: 2px 2px 1px rgba(0, 0, 0, .1); */ } .widget .popular-posts ul { list-style: none; } /* Posts ----------------------------------------------- */ h2.date-header { font: normal bold 11px 'Raleway', sans-serif; } .date-header span { background-color: transparent; color: #222222; padding: inherit; letter-spacing: inherit; margin: inherit; } .main-inner { padding-top: 30px; padding-bottom: 30px; } .main-inner .column-center-inner { padding: 0; } .main-inner .column-center-inner .section { margin: 0 15px; } .post { margin: 0 0 25px 0; } h3.post-title a { font: normal bold 15px 'Raleway', sans-serif; margin: .75em 0 0; } h3.post-title, .comments h4 { font: normal bold 20px 'Raleway', sans-serif; } .post-body { font-size: 110%; line-height: 1.4; position: relative; } .post-body img, .post-body .tr-caption-container, .Profile img, .Image img, .BlogList .item-thumbnail img { padding: 2px; background: #ffffff; border: 1px solid #eeeeee; } .post-body img, .post-body .tr-caption-container { padding: 5px; } .post-body .tr-caption-container { color: #222222; } .post-body .tr-caption-container img { padding: 0; background: transparent; border: none; -moz-box-shadow: 0 0 0 rgba(0, 0, 0, .1); -webkit-box-shadow: 0 0 0 rgba(0, 0, 0, .1); box-shadow: 0 0 0 rgba(0, 0, 0, .1); } .post-header { margin: 0 0 1.5em; line-height: 1.6; font-size: 90%; } .post-footer { margin: 20px -2px 0; padding: 5px 10px; color: #222222; background-color: #f7f7f7; border-bottom: 1px solid #eeeeee; line-height: 1.6; font-size: 90%; } #comments .comment-author { padding-top: 1.5em; border-top: 1px solid #eeeeee; background-position: 0 1.5em; } #comments .comment-author:first-child { padding-top: 0; border-top: none; } .avatar-image-container { margin: .2em 0 0; } #comments .avatar-image-container img { /*border: 1px solid #eeeeee;*/ } /* Comments ----------------------------------------------- */ .comments .comments-content .icon.blog-author { background-repeat: no-repeat; background-image: url(); } .comments .comments-content .loadmore a { border-top: 1px solid #999999; border-bottom: 1px solid #999999; } .comments .continue { border-top: 2px solid #999999; } /* Accents ---------------------------------------------- */ .section-columns td.columns-cell { /*border-left: 1px solid #eeeeee;*/ } .blog-pager { background: transparent none no-repeat scroll top center; } .blog-pager-older-link, .home-link, .blog-pager-newer-link { background-color: #ffffff; padding: 5px; } .footer-outer { border-top: 0 dashed #bbbbbb; } /* Mobile ----------------------------------------------- */ body.mobile { background-size: auto; } .mobile .body-fauxcolumn-outer { background: transparent none repeat scroll top left; } .mobile .body-fauxcolumn-outer .cap-top { background-size: 100% auto; } .mobile .content-outer { -webkit-box-shadow: 0 0 3px rgba(0, 0, 0, .15); box-shadow: 0 0 3px rgba(0, 0, 0, .15); } .mobile .tabs-inner .widget ul { margin-left: 0; margin-right: 0; } .mobile .post { margin: 0; } .mobile .main-inner .column-center-inner .section { margin: 0; } .mobile .date-header span { padding: 0.1em 10px; margin: 0 -10px; } .mobile h3.post-title { margin: 0; } .mobile .blog-pager { background: transparent none no-repeat scroll top center; } .mobile .footer-outer { border-top: none; } .mobile .main-inner, .mobile .footer-inner { background-color: #ffffff; } .mobile-index-contents { color: #222222; } .mobile-link-button { background-color: #00ae86; } .mobile-link-button a:link, .mobile-link-button a:visited { color: #ffffff; } .mobile .tabs-inner .section:first-child { border-top: none; } .mobile .tabs-inner .PageList .widget-content { background-color: #eeeeee; color: #000000; border-top: 1px solid #eeeeee; border-bottom: 1px solid #eeeeee; } .mobile .tabs-inner .PageList .widget-content .pagelist-arrow { border-left: 1px solid #eeeeee; } .post-list{ padding: 1px 1em 1em 1em; /* margin: -20px 0; */ margin-bottom: -20px; border: 1px solid #ddd; border-radius: 5px; } .post-list:hover { background:#f7f7f7; border-color:#00ae86; transition:.2s; } .post-label a{ margin-right:2px; white-space:nowrap; color: #222222; border-bottom: 1px dashed #00ae86; } .post-comment a{ color: #222222; } .post-label a:hover,.post-comment a:hover{ color: #00ae86; } #blog-pager{ margin: 3em 0; } .feed-links {display:none !important;} div.widget > h2, div.widget h2.title { font: normal bold 16px 'Raleway', sans-serif; border-bottom: 2px solid #ddd; padding: 5px 0; } .comments h4 { text-align: center; text-transform: uppercase; } .comments .comment .comment-actions a { background:#00ae86; border-radius: 3px; color: #f7f7f7; margin-right:5px; padding:5px; text-decoration: none !important; font-weight:bold; } .comments .comment-block { border: 1px solid #dddddd; border-radius:5px; padding: 10px; } .continue { border-top:none !important; } .continue a { background:#00ae86; border-radius:3px; color: #f7f7f7; display: inline-block !important; margin-top: 8px; text-decoration: none !important; } .comments .comments-content .datetime{ float:right; } #comments .avatar-image-container img { border-radius: 50px; } .comments .avatar-image-container { float: left; overflow: hidden; } .comments .comments-content .comment-replies{ margin-top:0; } .topnav { overflow: hidden; background-color: #000; } .topnav a { float: left; display: block; color: #ffffff; text-align: center; padding: 14px 16px; text-decoration: none; font-size: 17px; } .active { background-color: #00ae86; color: #ffffff; } .topnav .icon { display: none; } .dropdown { float: left; overflow: hidden; } .dropdown .dropbtn { font-size: 17px; border: none; outline: none; color: #ffffff; padding: 14px 16px; background-color: inherit; font-family: inherit; margin: 0; } .dropdown-content { display: none; position: absolute; background-color: #f9f9f9; min-width: 160px; box-shadow: 0px 8px 16px 0px rgba(0,0,0,0.2); z-index: 5; } .dropdown-content a { float: none; color: #000000; padding: 12px 16px; text-decoration: none; display: block; text-align: left; } .topnav a:hover, .dropdown:hover .dropbtn { background-color: #00ae86; color: #ffffff; } .dropdown-content a:hover { background-color: #00ae86; } .dropdown:hover .dropdown-content { display: block; } @media screen and (max-width: 600px) { .topnav a:not(:first-child), .dropdown .dropbtn { display: none; } .topnav a.icon { float: right; display: block; } } @media screen and (max-width: 600px) { .topnav.responsive {position: relative;} .topnav.responsive .icon { position: absolute; right: 0; top: 0; } .topnav.responsive a { float: none; display: block; text-align: left; } .topnav.responsive .dropdown {float: none;} .topnav.responsive .dropdown-content {position: relative;} .topnav.responsive .dropdown .dropbtn { display: block; width: 100%; text-align: left; } } div#crosscol.tabs.section {margin: 0 0 2em 0;} .post-page { padding: 0 1em; } .date-header{ color:#888;display:block;border-bottom: 1px solid #888;margin-top: 5px; } .section{margin:0} .column-right-inner .section .widget{ border: 1px solid #ddd; margin: 5px 0; padding: 10px; border-radius: 5px; } .footer-inner .section .widget{ margin: 5px 0; padding: 10px; } footer{ background: #f7f7f7; padding: 8px; margin: 25px -25px -25px -25px; border-top: 1px solid #dddddd; } /* STYLE 1 - Custom Blogger Labels Gadget Styles by Georgia Lou Studios */ .widget li, .BlogArchive #ArchiveList ul.flat li{ padding: 8px 0; } .list-label-widget-content ul { list-style-type:none; padding-left:0px!important; } .list-label-widget-content ul li:before { content: \"\\f054\"; float: left; color: #262626; font-weight: 700; font-family: 'Font Awesome 5 Free'; margin: 4px 5px 0 0; font-size:10px; } .list-label-widget-content li span{ color: #888888; } /*** Mozilla based browsers ***/ ::-moz-selection { background-color: #00ae86; color: #ffffff; } /*** Works on common browsers ***/ ::selection { background-color: #00ae86; color: #ffffff; } .breadcrumbs{ color: #888;margin:-15px 15px 15px 15px; } .status-msg-body{ width:95%; padding:10px; } /* MY CUSTOM CODE - Responsive Table ----------------------------------------------- */ .post table {border: 1px solid #dddddd;border-collapse: collapse;margin: 0;padding: 0;width: 100%;color:#222222;} .post table caption {margin: .25em 0 .75em;} .post table tr {border: 1px solid #dddddd;padding: .35em;} .post table th,.post table td {padding: .625em;border: 1px solid #dddddd;} .post table th {color:#357ae8;letter-spacing: .1em;text-transform: uppercase;background: #dcffed;white-space: nowrap;} .post table td img {text-align: center;} .post tr:hover { background-color: #dcffed; transition:.2s; } @media screen and (max-width: 600px) { .post table,table th,table td {border: 0;} .post table caption {} .post table thead {display: none;} .post table tr {border-bottom: 3px solid #dddddd;display: block;margin-bottom: .725em;} .post table th,.post table td {border:none;} .post table td {border-bottom: 1px solid #dddddd;display: block;} .post table td:before {content: attr(data-label);float: left;font-weight: bold;text-transform: uppercase;} .post table td:last-child {border-bottom: 0;}} body .navbar{height:0;} /* MY CUSTOM CODE - Button ----------------------------------------------- */ a.btn, .btn-toggle{ display:inline-block; padding:0.3em 1.2em; margin:0.3em; border-radius:5px; box-sizing: border-box; text-decoration:none; font-family:inherit; font-weight:700; color:#ffffff; background-color:#00ae86; text-align:center; box-shadow:0px 1px 0px #dddddd; transition: all 0.2s; } a.btn, .btn-toggle{ font-size:20px; } .btn-toggle{ font-size:inherit; } a.btn:hover, .btn-toggle:hover{ background-color:#41d5b3; } a.btn:active, .btn-toggle:active { position:relative; top:1px; } a.btn:before { content: '\\f019'; font-family: 'Font Awesome 5 Free'; font-weight: 900; display: inline-block; margin: 0 10px 0 0; } .btn-info { display: block; line-height: 1; font-size: 13px; font-style: italic; margin: 7px 0 0; } @media all and (max-width:30em){ a.btn,.btn-toggle{ display:block; margin:0.2em auto; } } .label-size { position:relative; font-size:13px; } .label-size a,.label-size span { padding: 5px; margin: 0 6px 6px 0; float: left; display: block; } .label-size a { color: #ffffff; background: #00ae86; border: 1px solid #00ae86; } .label-size a:hover { background:transparent; color:#00ae86!important; } .label-size span{ color: #222222; background: #f7f7f7; border: 1px solid #dddddd; } /* Start dropdown navigation */ #navigationbar li{ list-style:none; } .searchHolder{ background:#000000!important; float:right!important; } @media screen and (max-width:600px){ .searchHolder{float:left!important;} } #searchbar { display: none; margin: 0 auto; width: 100%; text-align: center; height: 50px; background: #000000; overflow: hidden; z-index: 4; } #searchicon { text-align: center; cursor: pointer; } #searchicon:hover { color: #888888; } #searchBox { font:inherit; -webkit-appearance: none; border: 0px; background: transparent; padding: 10px; outline:none; width: 90%; color:#888888; border-bottom:2px solid #888888; } #searchBox:focus { border-color:#00ae86; transition: .3s; color:#ffffff; } /* End dropdown navigation */ .BlogArchive #ArchiveList ul li{ color:#888888; } .widget.Text ul li, .widget.HTML ul li, .post ul li{ list-style:none; } .widget.Text ul li:before, .widget.HTML ul li:before, .post ul li:before{ content: '\\f0da'; font-family: 'Font Awesome 5 Free'; font-weight: 900; margin: 0 5px 0 -15px; } blockquote{ background: #f7f7f7; padding: 10px; border: 2px dashed #dddddd; margin: 0; } #comments{ padding:10px; } .post img:hover{ opacity: 0.8; transition: 0.2s; } -->", "raw_content": "\nசமீபத்தில் நேபாள நாட்டில் தொடங்கிய 2017 இந்தியா-நேபாளம் இடையே 12 வது கூட்டு இராணுவப் பயிற்சியின் பெயர் என்ன\nமூன்றாவது கிழக்குப் பொருளாதார மாநாடு (2017 EASTERN ECONOMIC FORUM, Vladivostok, Russia) செப்டம்பர் 6 முதல் 7 தேதி வரை எங்கு நடைபெற்றது\nஇந்திய கடற்படைக்காக ShinMaywa US-2 என்ற நீர்-நில மீட்பு விமானங்களை இந்தியா எந்த நாட்டிடமிருந்து வாங்கவுள்ளது\nவிபத்து மற்றும் அவசர காலங்களில், மற்றவர்களுக்கு உதவி செய்யும் நாடுகள் பட்டியலில், இந்தியா பெற்றுள்ள இடம் எவ்வளவு\nஉலகின் முன்னணி 250 கல்வி நிறுவனங்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள பல்கலைக்கழகம் எது\nமியான்மர் என்னும் பர்மா நாட்டில், எந்த பிரிவினருக்கு எதிராக வன்முறை நிகழ்ந்து வருகிறது\nஇந்தியாவில் ஆண்டுக்கு எத்தனை டன் காய்கறிகள் மற்றும் பழங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன\nஉலகிலேயே அதிக அளவில் இந்தியாவில்தான் பால் உற்பத்தி நடைபெறும் நாடு எது\n\"இந்தியாவின் முதல் ஹைபர்லூப் போக்குவரத்து\" எந்த இரு நகரங்களுக்கிடையே வரவுள்ளது\nசமீபத்தில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய இரு புதிய இலவச கருத்தடை மருந்துகள் எவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithisaral.in/page/4/", "date_download": "2021-05-07T00:09:12Z", "digest": "sha1:VY6HHDX4XIJNNRXR6IM724WE2B7VQJF2", "length": 13533, "nlines": 222, "source_domain": "www.seithisaral.in", "title": "Seithi Saral - Page 4 of 474 - Tamil News Channel", "raw_content": "\n1 மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை விவரம் 2 தூத்துக்குடிக்கு 2 மந்திரிகள்: திருநெல்வேலி, தென்காசி ஏமாற்றம் 3 திருப்பத்தூரில் இறந்த 5 பேர் கொரோனா நோயாளிகள் – மருத்துவ அதிகாரி விளக்கம் 4 துணை தலைவர் விலகல்; கமல் காட்டம் 5 தமிழகத்தில் ஒரு நாள் கொரோனா பதிவு 24,898 ஆக உயர்வு\nஒரு கோடியே 71 லட்சம் பேர் ஓட்டு போடவில்ல���; 100 சதவீதத்தை எட்டுவது எப்படி\nதேர்தல் பிரசாரத்திற்கு தடை விதிக்கலாமே\nஅ.தி.மு.க. அவசர அவசரமாக முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது ஏன்\nகட்சத்தீவோடு மீனவர்களின் வாழ்வையும் தாரை வார்த்துவிட்டார்களே\nரஜினிக்கு வலை விரிக்கும் கமல்; ரசிகர்கள் ஏற்று கொள்வார்களா\nமு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை விவரம்\nதூத்துக்குடிக்கு 2 மந்திரிகள்: திருநெல்வேலி, தென்காசி ஏமாற்றம்\nதிருப்பத்தூரில் இறந்த 5 பேர் கொரோனா நோயாளிகள் – மருத்துவ அதிகாரி விளக்கம்\nதுணை தலைவர் விலகல்; கமல் காட்டம்\nதமிழகத்தில் ஒரு நாள் கொரோனா பதிவு 24,898 ஆக உயர்வு\nமு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை விவரம்\nதூத்துக்குடிக்கு 2 மந்திரிகள்: திருநெல்வேலி, தென்காசி ஏமாற்றம்\nமு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை விவரம்\nதூத்துக்குடிக்கு 2 மந்திரிகள்: திருநெல்வேலி, தென்காசி ஏமாற்றம்\nதிருப்பத்தூரில் இறந்த 5 பேர் கொரோனா நோயாளிகள் – மருத்துவ அதிகாரி விளக்கம்\nதுணை தலைவர் விலகல்; கமல் காட்டம்\nதமிழகத்தில் ஒரு நாள் கொரோனா பதிவு 24,898 ஆக உயர்வு\nசினிமாத்துறையில் அடுத்தடுத்து 3 பேர் கொரோனாவுக்கு சாவு\nகோடை காலத்தின் உச்சக்கட்டம் தான் அக்கினி நட்சத்திர என்றும் கத்திரி வெயில். இந்த வெயிலின் உக்கிரம் அதிகமாக இருக்கும் நாட்களை நம்முன்னோர்கள் அக்கினி நட்சத்திர காலம்(கத்திரி வெயில்)...\nஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் 21-ந் தேதி முதல் வைகாசி மாதம் 15-ந் தேதி வரை (4-5-2021 முதல் 29-5-2021 வரை) அக்னி நட்சத்திர காலமாக கருதப்படுகிறது....\nதமிழகத்தில் ஒரேநாளில் 20,952 பேருக்கு புதிதாக கொரோனா; 122 பேர் பலி\nகொரோனா லேசாக பாதிக்கப்பட்டோர் சி.டி. ஸ்கேன் எடுக்க வேண்டாம்\nCorona is slightly affected by CD. Do not scan 3.5.2021 லேசான அறிகுறிகளுடன் கொரோனா பாதிக்கப்பட்டோர் சி.டி. ஸ்கேன் எடுப்பதில் எந்த நன்மையும் இல்லை...\nமு.க.ஸ்டாலினுக்காக நாக்கை அறுத்து நேர்த்திகடன் செலுத்திய பெண்\nThe woman who cut out her tongue and paid the fine for MK Stalin 3.5.2021மு.க.ஸ்டாலினுக்காகநாக்கை அறுத்து பரமக்குடி பெண் நேர்த்திக்கடன் செலுத்தினார்....\n115 ஆக்சிஜன் செறிவூட்டிகளை கள்ளச்சந்தையில் விற்க முயன்ற 4 பேர் கைது\nதயாரிடம் ஆசி பெற்ற மு.க.ஸ்டாலின் பழைய நண்பர்களிடம் பழைய நினைவுகளை பகிர்ந்தார்\nமுதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எடப்பாடி பழனிசாமி\nEdappadi Palanisamy resigned as Chief Minister 3.5.2021சட்டசபைத�� தேர்தலில் அதிமுக கூட்டணி தோல்வி அடைந்த நிலையில் தமிழக முதல்வர் பதவியை எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்தார்....\nவிராலிமலையில் அதிமுக வேட்பாளர் விஜயபாஸ்கர் வெற்றிபெற்றதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nAIADMK candidate Vijayabaskar wins in Viralimalai 3.5.2021-விராலிமலை சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் விஜயபாஸ்கர் வெற்றிபெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விஜயபாஸ்கர் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த...\nநாம் தமிழர் கட்சி வாக்கு சதவீதத்திலும் 3-வது இடம்\nமு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை விவரம்\nதூத்துக்குடிக்கு 2 மந்திரிகள்: திருநெல்வேலி, தென்காசி ஏமாற்றம்\nதிருப்பத்தூரில் இறந்த 5 பேர் கொரோனா நோயாளிகள் – மருத்துவ அதிகாரி விளக்கம்\nதுணை தலைவர் விலகல்; கமல் காட்டம்\nதமிழகத்தில் ஒரு நாள் கொரோனா பதிவு 24,898 ஆக உயர்வு\nUma on இராமருக்கு ஓர் அக்காள் உண்டு தெரியுமா\n.. தீராத ஒரு தகராறு….(சொல்லாராய்ச்சி/ சிவகாசி முத்துமணி)\nK.Kumaresan on தென் மாவட்ட மக்கள் வெளியே வர வேண்டாம் ; முதல்வர் எச்சரிக்கை\nPonnu on ஏழைகளுக்கு எட்டிவிடும் மருத்துவப் படிப்பு\nமு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை விவரம்\nதூத்துக்குடிக்கு 2 மந்திரிகள்: திருநெல்வேலி, தென்காசி ஏமாற்றம்\nதிருப்பத்தூரில் இறந்த 5 பேர் கொரோனா நோயாளிகள் – மருத்துவ அதிகாரி விளக்கம்\nதுணை தலைவர் விலகல்; கமல் காட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/81782", "date_download": "2021-05-07T01:17:02Z", "digest": "sha1:NXIB556TPFM43QPRMGTZV5AUZS7PTPM6", "length": 10280, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "50 இலட்சத்தை நடனக்கலைஞர்களுக்காக வங்கிக்கணக்கிலிட லோரன்ஸ் தீர்மானம் | Virakesari.lk", "raw_content": "\nநாளொன்றுக்கு 2 ஆயிரத்தை விட அதிக தொற்றாளர்கள் இனங்காணப்படலாம் : எச்சரிக்கிறது தொற்று நோயியல் பிரிவு\nபிழையான எண்ணங்களை மக்கள் மயப்படுத்த எதிக்கட்சி முயற்சி - மதுர விதானகே\nகிளிநொச்சியில் புதிய கொரோனா சிகிச்சை நிலையம் - நள்ளிரவு முதல் சேவைகள் ஆரம்பம்\nமஹரகம நகரசபைக் கூட்டத்தில் மோதல் - விசாரணைகள் ஆரம்பம்\nதனியார் வங்கி உதவி முகாமையாளருக்கு கொரோனா தொற்று ; வங்கிக்கு பூட்டு\nஜம்மு-காஷ்மீரில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை\nகொரோனாவால் இலங்கையில் கர்ப்பிணித் தாய் பலி\n இனங்காணப்படும் தொற்றாளர்களை விட இருமடங்கு தொற்றாளர்கள் ச��ூகத்தில் \nதம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தை மீண்டும் திறக்க தீர்மானம்\n50 இலட்சத்தை நடனக்கலைஞர்களுக்காக வங்கிக்கணக்கிலிட லோரன்ஸ் தீர்மானம்\n50 இலட்சத்தை நடனக்கலைஞர்களுக்காக வங்கிக்கணக்கிலிட லோரன்ஸ் தீர்மானம்\nஉலகெங்கும் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கித்தவிக்கும் இச்சந்தர்ப்பத்தில், நடிகர் ராகவா லோரன்ஸ் கொரோனா நிவாரண உதவியாக ரூ.4 கோடி வரை வழங்கி இருக்கிறார்.\nஇந்நிலையில் முகநூல் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:\n“கொரோனா நிவாரணமாக நடனக் கலைஞர்கள் சங்கத்துக்கு ரூ.50 இலட்சம் நன்கொடை வழங்கி உள்ளேன். அதில் ஒவ்வொரு உறுப்பினருக்கும் ரூ.5,550 வீதம் வழங்கப்படுகிறது.\nநிறைய கலைஞர்கள் வெளியூர்களில் இருப்பதாகவும், ஊரடங்கினால் நேரில் வந்து நிவாரண உதவியை பெற இயலாது என்றும் தகவல் அனுப்பினர்.\nநான் நடன இயக்குனர் தினேஷிடம் பேசியதற்கு இணங்க அனைத்து உறுப்பினர்கள் வங்கிக்கணக்கிலும் இந்த தொகை போடப்படும். எனவே யாரும் பணத்தை வாங்க நேரில் வரவேண்டாம்”. இவ்வாறு கூறியுள்ளார்.\nகொரோனா சினிமா லோரன்ஸ் படப்பிடிப்பு நடன இயக்குனர்கள் பணம் நிவாரணம் 4 கோடி ரூபா\nநடிகை ஆண்ட்ரியாவிற்கு கொரோனா தொற்று உறுதி..\nசினிமாவில் பிரபல நடிகையும் பாடகியுமான ஆண்ட்ரியாவிற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.\n2021-05-06 12:47:55 சினிமா பிரபல நடிகை பாடகி\nசேரனின் 'ஆட்டோகிராப்' திரைப்பட பாடகர் கொரோனாத் தொற்றால் மரணம்\nசேரனின் நடிப்பில் வெளியான 'ஆட்டோகிராப்' என்ற படத்தில் இடம்பெற்ற 'ஒவ்வொரு பூக்களுமே..' என்ற பாடலில் தோன்றிய பாடகர் கோமகன் கொரோனாத் தொற்று பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\n2021-05-06 10:44:16 சேரன் ஆட்டோகிராப் திரைப்படம்\nநடிகர் பாண்டு காலமானார்: அதிர்ச்சியில் திரையுலகினர்..\nதமிழ் திரை உலகில் நகைச்சுவை நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் வலம்வந்த நடிகர் பாண்டு இன்று காலை காலமானார்.\n2021-05-06 10:12:49 தமிழ் திரை உலகம் சினிமா நடிகர்\nஇயக்குனர் வசந்த பாலனுக்கு கொரோனா தொற்று\nதிரைப்பட இயக்குனர் வசந்த பாலனுக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டு, சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.\nபொலிவுட் நடிகை தீபிகா படுகோனேவிற்கும் கொரோனாத் தொற்று பாதிப்பு\nபொலிவுட்டின் முன்��ணி நடிகையான தீபிகா படுகோனேவிற்கும் கொரோனாத் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.\n2021-05-05 16:12:08 கொரோனா தொற்று நடிகை தீபிகா படுகோன் பிரகாஷ் படுகோன்\nஇலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து மேலும் 810 பேர் குணமடைவு..\nபணவீக்கம் ஏப்ரலில் 3.9 சதவீதமாக வீழ்ச்சி: இலங்கை மத்திய வங்கி\nவிலை அதிகரிப்பிற்கு அனுமதியில்லையேல் தட்டுப்பாடு ஏற்படலாம்: லாப் கேஸ் நிறுவனம்\nஸ்புட்னிக் கொரோனா தடுப்பூசி போடும் பணி ஆரம்பம்\nகளுத்துறை சிறைச்சாலைக்குள் போதைப்பொருட்கள் அடங்கிய பொதிகள் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/229099", "date_download": "2021-05-07T00:35:19Z", "digest": "sha1:7ZBBBMJYYRSJAE5BVME56WGLOBILXH3I", "length": 5023, "nlines": 96, "source_domain": "selliyal.com", "title": "MIC Youth demands justice for Ganapathy’s family | Selliyal - செல்லியல்", "raw_content": "\nPrevious articleகொவிட்-19: 15 பேர் மரணம்- 3,142 சம்பவங்கள் பதிவு\nNext articleடுவிட்டர் மூலம் இனி வருமானம் ஈட்டலாம்\nதமிழ்நாடு தேர்தல் முடிவுகள் இறுதி நிலவரம் : திமுக: 159 – அதிமுக: 75\nதமிழ்நாடு : டிராபிக் இராமசாமி காலமானார்\nமின்னல் வானொலி : இரவு 9 மணி செய்திகள் ஏன் இடம் பெறவில்லை\nஆஸ்ட்ரோ விழுதுகள் நிகழ்ச்சியில் முத்து நெடுமாறன் பங்கேற்பு\nதிமுக அமைச்சரவை : புதிய அமைச்சர்கள் பட்டியல்\nதிமுக அமைச்சரவை : அன்பில் மகேஷ் பள்ளிக் கல்வி அமைச்சர்\nபிரசாந்த் கிஷோர் : இந்திய சட்டமன்றத் தேர்தல் வெற்றிகளின் கதாநாயகன்\nபில் கேட்ஸ் விவாகரத்து : சொத்துகளை எப்படிப் பிரிப்பார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "https://www.ttamil.com/2020/10/3-06.html", "date_download": "2021-05-07T01:28:46Z", "digest": "sha1:SETCQBE6D5OUJABKJERJM7TBWD2HV3GR", "length": 18050, "nlines": 271, "source_domain": "www.ttamil.com", "title": "சித்தரின் முத்தான 3 சிந்தனைகள் -/06 ~ Theebam.com", "raw_content": "\nசித்தரின் முத்தான 3 சிந்தனைகள் -/06\nசித்தர் சிவவாக்கியர் சிந்தனைகள் - 047\nசாதியாவது ஏதடா சலம் திரண்ட நீரலோ\nபூதவாசல் ஒன்றலோ பூதம் ஐந்தும் ஒன்றலோ\nகாதில்வாளி காரைகம்பி பாடகம் பொன் ஒன்றலோ\nசாதி பேதம் ஓதுகின்ற தன்மை என்ன தன்மையே.\nஆண், பெண் என்பது தானே சாதி, இதில் பல சாதிகள் ஏதப்பா இவ்வுலகம் முழுமையும் நீர்தான் நிரம்பியுள்ளது. அதுபோலவே உயிரும் நீராகத்தான் உள்ளது. உடம்பில் பத்தாம் வாசலாகவும், பஞ்சபூதமாகவும், பஞ்சாட்சரமாகவ்வும் உள்ள பொருள் ஒன்றே. அது நகைகளில் காதில் அணியும் தோதாகவும், மூக்கில் அணியும் மூக்குத்தியாகவும், கைகளில் அணியும் வளையல் போன்ற பல வகையாகவும் இருப்பது தங்கம் ஒன்றே. இதை அறியாமல் எல்லா உயிர்களும் இறைவனிடம் இருந்து வந்ததை உணராமல் சாதி, பேதம் பேசுகின்ற உங்களின் தன்மைகளை என்னவென்று கூறுவேன்\nசித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகள - 049\nஅறையினில் கிடந்துபோது அன்று தூமை என்கிறீர்\nதுறை அறிந்து நீர் குளித்த அன்று தூமை என்கிறீர்\nபறையறைந்து நீர் பிறந்த அன்று தூமை என்கிறீர்\nபுரை இலாத ஈசரோடு போருந்துமாறது எங்ஙனே\nபெண்கள் அறையில் ஒதுங்கிக் கிடந்தால் தீட்டு, அவர்கள் குளிக்கும் அறையில் குளித்தால் தீட்டு, தாரைத் தப்பை சப்தத்துடன், பிறந்தால் தீட்டு, இறந்தால் தீட்டு என்று சொல்கின்றீர்களே இவ்வுடம்பில் உயிரில் உள்ள தீட்டோடுதானே ஈசன் பொருந்தி இருக்கின்றான். அதனை அறியாமல் தீட்டு என்று ஒதுக்குவதில் என்ன பயன் கண்டீர்கள்\nசித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகள்050 -\nதூமை தூமை என்றுளே துவண்டு அலையும் ஏழைகாள்\nதூமையான பெண்ணிருக்க தூமை போனது எவ்விடம்\nஆமைபோல மூழ்கி வந்து அநேகவேதம் ஒதுரீர்\nதூமையும் திரண்டுருண்டு சொற்குருக்கள் ஆனதே.\nதீட்டாகிவிட்டதே, தூமையாகிவிட்டதே என்று சொல்லி துவண்டு வருந்தி அலையும் ஏழைகளே தூமையான வாலைப்பெண் உனக்குள்ளேயே இருக்கும்போது தீட்டு என்பது உன்னைவிட்டு எவ்விடம் போகும். அதுபோனால் உனது உயிரும் உடலை விட்டு போய்விடும். ஆமையைப் போல் நீரில் தலையை மூழ்கிவிட்டு, தீட்டு போய்விட்டதாகக் கூறி அனேகவித வேத மந்திரங்களை ஒதுகின்றீர்கள். அந்த வேத சாஸ்திரங்களை உங்களுக்குச் சொல்லித் தந்த சொற்குருக்களும் இந்த தூமையினால்தான் உருவாக்கி வளர்ந்து திரண்டுருண்டு ஆனவர்கள்தான் என்பதனை அறிந்துணருங்கள்.\nதொடரும் ..அன்புடன் கே எம் தர்மா.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெ��்ற இணைய சஞ்சிகை.\n\"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா\n\"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா\n\"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா\nசிரிக்க சில வினாடிகள் .....\nதீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா\n\"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா\n\"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா\" / ஒரு ஆரம...\nசாரதா:திரை தந்த கதை [Old is Gold]\nஇனப்படு கொலையின் ஆரம்பம் ...\nகொரோனா வைரஸ் அலைகள்\" / பகுதி 03\nஎந்த வகையான பாத்திரங்களில் சமைத்தால் உடலுக்கு கேடு\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் [மூளாய்] போலாகுமா\nசித்தரின் 3 முத்தான சிந்தனைகள் /08\nதமிழ் சினிமாவில் தொடரும் கதைத் திருட்டு குற்றச்சாட...\nபெண்ணிடம் இரகசியத்தை சொல்லக் கூடாது\nகொரோனா வைரஸ் அலைகள்\" / பகுதி 02\nநெட்டி முறிப்பது தவறா .....\nவிமானத்தை உருவாக்கியது ரைட் சகோதரர்களா\nசைவ சமய புனித நூல் என்ன\nசித்தரின் முத்தான 3 சிந்தனைகள் / பகுதி:07\n\"நில்லாமல் நிற்கும் உன்கால் அழகினால்\"\nகொரோனா வைரஸ் அலைகள்\" / பகுதி 01\nஉடலின் எடையைக் குறைக்க உதவுமா பேலியோ டயற்\nசித்தரின் முத்தான 3 சிந்தனைகள் -/06\nஇந்த கூறுகெட்ட மனசை என்ன செய்ய\nஉறக்கம் பற்றிய நம்பிக்கையும் அறிவியலும் / பகுதி: 1...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nதுவரம் பருப்புகளை சாப்பிடுவதால் தீரும் நோய்கள் என்ன தெரியுமா\nஉலகெங்கிலும் ஏராளமான பருப்பு வகை பயிர்கள் மனிதர்கள் உண்பதற்காக பயிரிடப்பட்டு வளர்க்கப்படுகின்றன. இந்தப் பருப்புகள் அனைத்துமே நமது உடல...\n🗺→ இன்றைய செய்திகள்- Tamil News Today\n💢💢💢💢💢💢💢 💢💢💢💢💢💢💢 முதலில் தலைப்பு செய்திகள்- 🎌மத்தள சர்வதேச விமான நிலையம் ,சுற்றுலா மையமாக மாறுகிறது 🎌...\nமனைவியை மீட்க மன்றாடிய கடவுள்\nஇராவணன் என்ற தீயவனிடமிருந்து தனது மனைவியை மீட்க அனைத்து ஆற்றலும் கைவரப்பெற்ற மனிதக் கடவுள் இராமன், ஹனுமான் என்ற குரங்குக்கடவுளிடம் கை...\nநடிகர் பிரஷாந்த் திரையில் காணாமல் போனதற்கு காரணம் என்ன\nநடிகர் பிரஷாந்த் தன் சக கால நடிகர்களான விஜய் , அஜித்தை விட தனி திறமைகள் அதிகம் கொண்டிருந்தும் , வேறு யாருக்கும் வாய்க்காத மி...\nவாழ்க்கைப் பயணத்தில் ...வருடல்கள் /பகுதி:04\nகதையாக..... [ஆரம்பத்திலிருந்து வாசிக்க கீழே செல்லுங்கள்] 👉 [பகுதி: 04] 👉 வருடங்கள் பல எப்படி ஓடியது என்று தெரியவில்லை. அதற்குள் என் குடும...\nசங்க கால இலக்கிய காதலர்கள்: ஆதிமந்தி-ஆட்டனத்தி\"-[ஆக்கம்:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]\nஉலகப் புகழ் பெற்ற காதலர்கள் ரோமியோ-ஜூலியட், சகுந்தலை-துஷ்யந்தன், லைலா-மஜ்னூன், மும்தாஜ்-ஷாஜஹான், கிளியோபட்ரா-மார்க்ஆண்டனி, அம்பிகாபதி-அ...\nகண்ணதாசன்-ஒரு கவிப்பேரரசு வரலாறு [இன்று நினைவுதினம்]\nகண்ணதாசன் ( ஜூன் 24 1927 – அக்டோபர் 17 1981 ) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார் . நான்காயிர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2020/12/135.html", "date_download": "2021-05-07T00:52:40Z", "digest": "sha1:6UPMY4OGWR2MDKSAMGCB6ENZFZWPPLUW", "length": 6073, "nlines": 84, "source_domain": "www.yarlexpress.com", "title": "மேலும் 135 பேருக்கு கொரோனா தொற்று உறுதி. \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nமேலும் 135 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.\nஇன்று மேலும் 135 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இன்றைய தினம் இதுவரை 650 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்...\nஇன்று மேலும் 135 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇதன் மூலம் இன்றைய தினம் இதுவரை 650 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது\nவணிகம் / பொருளாதாரம் (7)\nமாநகர காவல்படையினரின் சீருடை பறிமுதல் - மாநகரசபைக்கு ஆப்பு வைத்த பொலீஸார் ..\nBREAKING NEWS :- ஊரடங்கு தொடர்பில் இராணுவத் தளபதி சற்றுமுன் வெளியிட்ட அறிவிப்பு\nஅத்தியாவசிய சேவைக்கு மாத்திரமே அனுமதி\nYarl Express: மேலும் 135 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.\nமேலும் 135 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2021/01/blog-post_42.html", "date_download": "2021-05-07T01:17:26Z", "digest": "sha1:X66KKPNNU3L3ZVVV5ZPSCFLEC56ZIHFH", "length": 10004, "nlines": 90, "source_domain": "www.yarlexpress.com", "title": "தனியாக கிராமத்தை உருவாக்குவதில் செம்பியன்பற்று வடக்கு பகுதியில் இரு தரப்புக்களிடையே குழப்பம் . \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nதனியாக கிராமத்தை உருவாக்குவதில் செம்பியன்பற்று வடக்கு பகுதியில் இரு தரப்புக்களிடையே குழப்பம் .\nவடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று வடக்கு கிராம சேவகர் பிரிவிலிருந்து தனிப்பனை எனும் கிராமத்தை உருவாக்கி அதில் தனியான கிராம அபிவிருத்தி சங்கம்...\nவடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று வடக்கு கிராம சேவகர் பிரிவிலிருந்து தனிப்பனை எனும் கிராமத்தை உருவாக்கி அதில் தனியான கிராம அபிவிருத்தி சங்கம் ஒன்றினை உருவாக்குவதற்க்கு பிரதேச செயலகம் நடவடிக்கைகள் மேற்கொள்வதாகவும்,\nஅப் பொதுக்கூட்டம் நாளை இடம்பெற ஏற்பாடாகியிருந்த நிலையில் அதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று பிரதேச செயலரை கோரி இன்று காலை வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் முன்பாக செம்பியன்பற்று வடக்கு கிராம மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.\nஅத்துடன் பிரதேச செயலகத்திற்க்கு மகஜர் ஒன்றினையும் கையளித்திருந்தனர்.இம் மகஜரை பிரதேச செயலர் ,மற்றும் உதவி பிரதேச செயலர் வேறு பணிகள் காரணமாக வெளியே சென்றுள்ளமையால் அதன் நிர்வாக உத்தியோகத்தர் பெற்றுக்கொண்டார்.\nஇதே வேளை தமக்கு தொடர்ந்தும் அநீதி இடம்பெறுவதாலேயே தாம் தனியான கிராம அபிவிருத்தி சங்கம் ஒன்றினை உருவாக்கும் நடவடிக்கைகளை சட்ட ரீதியாக மேற்கொண்டு வருவதாகவும் ஏற்கனவே தனியான விளையாட்டுக்கழகம், ஆலய நிர்வாகம் போன்ற அமைப்புகள் உள்ளதாகவும் செம்பியன்பற்று வடக்கின் தனிப்பனை கிராம வாசிகள் தெரிவிக்கின்றனர்.\nஇதே வேளை இது தொடர்பில் பிரதேச செயலகத்திடம் கருத்தை பெற முயன்றபோதும் பிரதேச செயலர், மற்றும் உதவி பிரதேச செயலர் ஆகியோர் கடமை நிமித்தம் வெளி பிரதேசங்களுக்கு சென்றுள்ளமையால் பொறுப்பிலிருந்த நிர்வாக உத்தியோகத்தர் எமது செய்தி சேவைக்கு பதிலளிக்க மறுத்துள்ளார்.\nமேலும் சம்பவ இடத்திற்க்கு வருகை தந்த பளை பொலிசார் கொரோணா நிலமை காரணமாக அனைவரையும் கலைந்து செல்லுமாறு மிரட்டியிருந்தனர்.\nவணிகம் / பொருளாதாரம் (7)\n��ாநகர காவல்படையினரின் சீருடை பறிமுதல் - மாநகரசபைக்கு ஆப்பு வைத்த பொலீஸார் ..\nBREAKING NEWS :- ஊரடங்கு தொடர்பில் இராணுவத் தளபதி சற்றுமுன் வெளியிட்ட அறிவிப்பு\nஅத்தியாவசிய சேவைக்கு மாத்திரமே அனுமதி\nYarl Express: தனியாக கிராமத்தை உருவாக்குவதில் செம்பியன்பற்று வடக்கு பகுதியில் இரு தரப்புக்களிடையே குழப்பம் .\nதனியாக கிராமத்தை உருவாக்குவதில் செம்பியன்பற்று வடக்கு பகுதியில் இரு தரப்புக்களிடையே குழப்பம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xavi.wordpress.com/2020/07/20/project-management-8/", "date_download": "2021-05-07T01:18:38Z", "digest": "sha1:UC6IOFZ5T3CLLFSWJWNWTAPIEZOPGVA2", "length": 34423, "nlines": 258, "source_domain": "xavi.wordpress.com", "title": "புராஜக்ட் மேனேஜ்மெண்ட் 8 – சவால் & ஆபத்து |", "raw_content": "எழுத்து எனக்கு இளைப்பாறும் தளம் \n← புராஜக்ட் மேனேஜ்மெண்ட் 7 – பணியாளர் மேலாண்மை\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 9 – ரிஸ்க் →\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 8 – சவால் & ஆபத்து\nஒருத்தர் நல்ல டிரைவர்ன்னு எப்போ சொல்லுவோம் ஆளே இல்லாத ரோட்ல நல்லா வண்டி ஓட்டறவரை நாம நல்ல டிரைவர் ந்னு சொல்றதில்லை. நெருக்கடியான ரோடா இருந்தாலும் லாவகமா, விபத்தை ஏற்படுத்தாம வண்டி ஓட்டறவரைத் தான் நல்ல டிரைவர்ன்னு சொல்லுவோம். அவசரமா ஒரு இடத்துக்குப் போக வேண்டியிருந்தா ரிஸ்க் எடுத்து, அதே நேரம் விபத்து இல்லாம ஓட்டறவரைத் தான் நாம நல்ல டிரைவர்ன்னு சொல்லுவோம் இல்லையா \nஉதாரணமா சென்னை ரோட்டை எடுத்துக்கோங்க. கார் ஓடிட்டே இருக்கும்போ நாலு சைக்கிள் முன்னாடி வரும், அதை சமாளிச்சு அந்தப் பக்கம் போனா ரெண்டு பைக் வரும், அதையும் இடிக்காம முன்னாடி போன ராங் சைட்ல ஒரு மாட்டு வண்டி வரும், பின்னாடி வர வண்டி நம்மை இடிக்காம பிரேக் பிடிக்கும்போ ரெண்டு பேரு சர்வதேச வார்த்தைகளால நம்மை திட்டிட்டே முன்னாடி போவாங்க. இப்படிப்பட்ட ரோட்ல டென்ஷன் இல்லாம, நிதானமா, ஆபத்தில்லாம வண்டி ஓட்டறவர் இருந்தா அவர் தான் நல்ல டிரைவர்.\nபுராஜக்ட் மேனேஜருக்கு இருக்க வேண்டிய குணாதிசயமும் இது தான். அவரை ஒரு டிரைவரோட ஒப்பிட்டு நாம பேசலாம். இலக்கை போய் சேரணும். விபத்து ஏற்படக் கூடாது. நமக்கும் ஆபத்து நேரக் கூடாது. எந்த ரூட் டிராபிக் அதிகமா இருக்கும்ன்னு கவனிச்சு அதுக்கு ஏற்றபடி போணும். அல்லது மாற்றுப் பாதையை முன் கூட்டியே தீர்மானிக்கணும். யாராச்சும் திட்டினா கூட நிதானம் இழக்கக் கூடாது. இப்படி சொல்லிட்டே போலாம்.\nஎந்த ஒரு புராஜக்ட்டும் சிவப்புக் கம்பளம் மேல நடக்கிற அனுபவமா இருக்காது. அப்படி இருந்தா அங்கே புராஜக்ட் மேனேஜருக்கு வேலை இல்லை. புராஜக்ட்களெல்லாம் மாமியார் மருமகள் சண்டை மாதிரி சிக்கல்களோடு தான் பயணிக்கும். அதை சமாளிக்கவும், சரியான நேரத்தில், சரியான தீர்மானங்களை எடுக்கவும் புராஜக்ட் மேனேஜர்களுக்கு திறமை தேவைப்படுகிறது. சின்னச் சின்ன புராஜக்ட்கள், குறைந்த நபர்கள் இருக்கின்ற புராஜக்ட்களெல்லாம் பெரிய சிக்கல்களைச் சந்திப்பதில்லை. புராஜக்டின் அளவும், காலமும் அதிகரிக்க அதிகரிக்க சவால்களும் அதிகரித்துக் கொண்டே இருக்கும்.\nஅதனால் தான் எந்த ஒரு புராஜக்ட்டுக்கும் ‘ரிஸ்க் பிளான்’ அதாவது ‘ஆபத்தை எதிர்கொள்ளும் திட்ட வரைவு’ அவசியமாகிறது. ரிஸ்க் எடுக்கிறது எனக்கு ரஸ்க் சாப்பிடற மாதிரி என நாம் புராஜக்டை ஆரம்பித்தால், கடைசியில் ‘எல்லாத்தையும் பிளான் பண்ணி பண்ணணும்’ என புலம்பி அடங்க வேண்டியிருக்கும்.\nஆபத்து என்பது, நமது புராஜக்டை முடிக்க விடாமல் தடையாய் வருகின்ற விஷயங்கள் எனலாம். ரிஸ்கே இல்லாமல் ஒரு புராஜக்ட் இருக்க வாய்ப்பில்லை. ஆனால் புராஜக்டின் தன்மைக்கு ஏற்ப ரிஸ்கின் அளவு மாறுபடும். உதாரணமாக நீண்ட காலம் செய்ய வேண்டிய புராஜக்ட், திறமையான ஆட்கள் இல்லாத புராஜக்ட், புத்தம் புதிய தொழில்நுட்பத்தில் தொடங்க வேண்டிய புராஜக்ட், முன் அனுபவம் ஏதுமற்ற புதுமையான ஒரு புராஜக்ட் இவற்றுக்கெல்லாம் ரிஸ்க் கொஞ்சம் அதிகம். அதை அலசி ஆராய்ந்து திட்டமிட வேண்டும்.\nஇரண்டு விதமான ரிஸ்க் உண்டு. ஒன்று நெகடிவ் ரிஸ்க். இன்னொன்று பாசிடிவ் ரிஸ்க். நெகடிவ் என்றாலே பெயரைப் போலவே எதிர்மறையான ஒரு விளைவை உருவாக்குவது என புரிந்து கொள்ளலாம். ஏதோ ஒரு விஷயம், புராஜக்டை சரியான நேரத்தில் முடிக்க விடாமல் செய்கிறது. அல்லது ஒரு விஷயம் நல்ல தரத்தில் புராஜக்டை செய்ய விடாமல் தடுக்கிறது. இவையெல்லாம் எதிர்மறை ஆபத்துகள்.\nபாசிடிவ் ரிஸ்க் எனப்படும் நேர்மறை ஆபத்துகளை, ஆபத்துகள் என்று சொல்வதே தவறு தான். அதாவது புராஜக்ட் நிர்ணயிக்கப்பட்ட நாளில் முடியாது. ஆனால் அதற்கு முன்பாகவே முடிந்து விடும் என்பது நேர்மறை ஆபத்தின் உதாரணம். அல்லது பத்து கோடி பட்ஜெட் போட்டது, எட்டு கோடியில் முடிந்து விடுவதைப் போன்ற ஆனந்தப் பிழை இது.\nசரி, இந்த ரிஸ்க் மேனேஜ்மென்ட் என்பது எதிர்மறை ரிஸ்கைத் தான் முக்கியமாகக் கவனிக்கும். ஆபத்து மேலாண்மை இருப்பதனால் ஆபத்து வராது என்று அர்த்தமல்ல, ஆனால் அப்படி வரும்போது என்ன செய்யலாம் என்பதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும். அல்லது என்ன செய்ய வேண்டும் என்பது திட்டமிடப்பட்டிருக்கும்.\nஉதாரணமாக மழைக்கால மீட்புக் குழுவை மனதில் நினையுங்கள். அப்படி ஒரு குழு இருக்கிறது என்பதற்காக மழை வராது என்று அர்த்தமல்ல. மழை வந்தால் என்ன செய்ய வேண்டும். வெள்ளப்பெருக்கு வந்தால் என்ன செய்யவேண்டும் போன்ற திட்டங்கள் தயாராய் இருக்கும். அதனால் திடீரென வெள்ளம் வரும்போது பதற வேண்டியிருக்காது.\nஇந்த ரிஸ்க் மேஜேன்மென்டில் ஐந்து நிலைகள் உண்டு.\nபுராஜக்டின் பாதையில் என்னென்ன ஆபத்துகள் வரலாம் என்பதைக் கணிப்பது. முன் அனுபவங்களும், புராஜக்டின் தன்மையை நன்றாகப் புரிந்து வைத்திருப்பதும் இந்த ஆபத்துகளைக் கண்டறியும் பணியில் கைகொடுக்கும்.\n2. ரிஸ்கின் விளைவுகளை புரிந்து கொள்ளுதல்.\nகண்டறிந்த ஆபத்துகள் உண்மையிலேயே நிகழ்ந்தால் என்னென்ன பாதிப்புகள் வரும் என்பதைப் பட்டியலிடுதல். வேலை செய்ய சரியான ஆட்கள் கிடைக்கவில்லையேல் என்ன செய்வது அப்படிப்பட்ட சூழலில் என்ன ஆபத்து வரலாம் அப்படிப்பட்ட சூழலில் என்ன ஆபத்து வரலாம் இவற்றையெல்லாம் கண்டறிவது இரண்டாம் நிலை.\n3. ரிஸ்கை எதிர்கொள்ளத் திட்டமிடுதல்.\nசரி, ரிஸ்க் வரலாம். அப்படி வந்தால் இந்த பிரச்சினை நேரலாம். அப்படியானால் அதை எதிர்கொள்ள என்னென்ன திட்டம் இடவேண்டும் என்பதைப் பற்றிய நிலை இது. மிக முக்கியமான கட்டம்.\nஒரு ரிஸ்க் வந்தாச்சு என்றால் அதைக் கவனிப்பது, அது குறைகிறதா அதிகரிக்கிறதா என்பதைப் பார்ப்பது, இந்த ரிஸ்க் வேறு ரிஸ்க் களைக் கொண்டு வருமா என யோசிப்பது இவையெல்லாம் இந்த நிலையில் வரும்.\nஆபத்து இருப்பதை சம்பந்தப்பட்ட எல்லாருக்கும் அறிவிப்பது இந்த நிலை. புராஜக்டின் தொடக்கம் முதல் முடிவு வரை ஒவ்வொரு கட்டத்திலும் இந்த ஆபத்துகளைக் கண்டறிவதும், அறிவிப்பதும் மிகவும் முக்கியம்.\nஊர்ல உள்ள பெரியவர்களிடம் இப்படியெல்லாம் பேசினால், “ஏண்டா வெறுத்த வாக்கு பேசறே. நல்லதா பேசேன்பா” என்பார்கள். புராஜக்டைப் பொறுத்தவரை நெ���டிவ் சிந்தனை ரொம்ப முக்கியம். ஐயோ ஆபத்து வரலாம் எனும் சிந்தனை தான் வண்டி ஓட்டும்போது சீட்பெல்ட் போட நம்மைத் தூண்டுகிறது. போலீஸ்காரர்கள் நிறுத்துவார்கள் எனும் பயம் தான் ஹெல்மெட்டை போட நினைவூட்டுகிறது. விபத்து ஏற்பட்டா என்ன செய்றது எனும் அச்சம் தான் இன்சூரன்ஸ் எடுக்க நம்மை வலியுறுத்துகிறது. எனவே தான் இந்த நெகடிவ் சிந்தனை புராஜக்ட்டில் ரொம்ப முக்கியமாகிறது.\nகாட்ஃபாதர் திரைப்படத்தில் ஒரு வசனம் வரும், “நல்லது நடக்கும் என நம்பு. ரொம்ப மோசமாக நடந்தால் என்ன செய்வது என திட்டமிடு” என்று. அதை அப்படியே அலேக்காகத் தூக்கி இந்த புராஜக்ட் மேனேஜ்மென்டில் பொருத்திக் கொள்ளலாம்.\nஉதாரணமாக புராஜக்டில் ஒரு நல்ல சுறுசுறுப்பான கில்லாடி வேலைக்காரர் இருக்கிறார் என வைத்துக் கொள்வோம். அவர் தான் புராஜக்டின் முதுகெலும்பு. நமது புராஜக்ட் முடியும் வரை அவர் நம்மோடு இருப்பார் என நம்ப வேண்டும். அதே நேரம், அவர் சட்டென ஒரு நாள் வேலையை விட்டு நின்று விட்டால், என்ன செய்வது எனும் திட்டம் தயாராய் இருக்க வேண்டும். பேக் அப் பிளான் எனப்படும், மாற்று வழி தயாராய் இருக்க வேண்டும். அது தான் விஷயம்.\nஒரு விஷயத்தை மனதில் கொள்ளுங்கள். ரிஸ்க் பிளான் என்பது கண்டிப்பாக அந்த ஆபத்து வரும் என‌ அடித்துச் சொல்கிற சமாச்சாரம் அல்ல. அந்த ஆபத்து வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதை பதிவு செய்வது தான்.\nரிஸ்க் குறித்து இன்னும் கொஞ்சம் விரிவாய்ப் பார்ப்பது பயனளிக்கும் என நினைக்கிறேன். அடுத்த வாரம் இன்னும் கொஞ்சம் விஷயங்களைப் பற்றிப் பேசுவோம்\n← புராஜக்ட் மேனேஜ்மெண்ட் 7 – பணியாளர் மேலாண்மை\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 9 – ரிஸ்க் →\nபேரிடர் காலங்களில், பேரன்பு பகிர்தல்\nமரண இருளின் பள்ளத்தாக்கு – ஒளி தந்த இருளின் காலம் – கோவிட் பயணம்\nஇயேசு கேட்ட கேள்வி : இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 18 : மீட்டிங்\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 17 : எழுத்து முக்கியம்\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 16 : கம்யூனிகேஷன்\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் – 15 – மீண்டும்….\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 14 – கவனித்தல்\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் – மைக்ரோ கவனிப்பு\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 12 : பணியைப் பகிர்.\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 11 :\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 10 – அணி\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 9 – ரிஸ்க்\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 8 – சவால் & ஆபத்து\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 7 – பணியாளர் மேலாண்மை\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 6 : எப்போ முடிப்பீங்க \nவிவசாயம் காப்போம்; விவசாயி காப்போம்\nகுட்டிக் குட்டிக் காதல் கவிதைகள்\nகவிதை : வானத்துப் பறவை\nதன்னம்பிக்கை : கூடா நட்பு கூடாது \nகைபேசி : வியப்பூட்டும் வளர்ச்சியும், ஆபத்தும்\nதாவீது : ஆட்டிடையன் அரசரான கதை \nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\n1. ஆதி மனிதன் ஆதாம் \n இந்த வார்த்தையே நமது மன வெளிகளில் புன்னகை விதைகளைத் தூவும் வல்லமை படைத்தது. எத்தனை பெரிய சோகத்தின் அலைகள் நமது பாலை வெளிகளில் புரண்டு படுத்தாலும், ஒரு சின்னக் குழந்தையின் புன்னகைக் கைக்குட்டை கிடைத்தால் அந்த சோகம் புதையுண்டு போய்விடும். மழலைகளோடு விளையாடுகையில் மலைபோன்ற மன பாரங்கள் கூட பழுத்த இலை போல உதிர்த்து பறந […]\nபேரிடர் காலங்களில், பேரன்பு பகிர்தல்\nபேரிடர் காலங்களில், பேரன்பு பகிர்தல் பல குறியீடுகளை ஆதிகாலக் கிறிஸ்தவர்கள் பயன்படுத்தினார்கள். குறிப்பாக மீன் குறியீடு அந்தக் காலத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு குறியீடாய் இருந்தது. மீன் அடையாளம் வரையப்பட்ட இடங்களை ஆராதனை இடங்களாக ரகசியக் கிறிஸ்தவர்கள் புரிந்து கொண்டார்கள். அத்தகைய இடங்களில் அவர்கள் மறைந்திருந்து நற்செய்தியை அறிவித்தார்கள். பைபிள் […]\nமரண இருளின் பள்ளத்தாக்கு – ஒளி தந்த இருளின் காலம் – கோவிட் பயணம்\nமரணஇருளின்பள்ளத்தாக்கு ஒளி தந்த இருளின் காலம் – கோவிட் பயணம் * நிகழ்வுகளெல்லாம் இறைவனால் நமக்குத் தரப்படுகின்ற அனுபவப் பாடங்கள். சில அனுபவப் பாடங்கள் நம்மை விரக்தியில் எறியும். சில நம்மை குழப்பத்தில் உருட்டும். சில அனுபவங்கள் நம்மை புரியாமைக்குள் நடத்திச் செல்லும். ஆனால் ஒன்று மட்டும் யதார்த்தம், இறைமகன் இயேசுவின் கரம்பிடித்து நடப்பவர்களுக்கு எந்த ஒரு துயரத் […]\nஇயேசு கேட்ட கேள்வி : இவ்வளவு கால��் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா\nஇவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா யோவான் 14 :9 இந்தக் கேள்வி புதுசா நாம கேள்விப்படுகிற கேள்வி அல்ல. அடிக்கடி நமது வாழ்க்கையில் நாம் சந்திக்கின்ற கேள்வி. “இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா யோவான் 14 :9 இந்தக் கேள்வி புதுசா நாம கேள்விப்படுகிற கேள்வி அல்ல. அடிக்கடி நமது வாழ்க்கையில் நாம் சந்திக்கின்ற கேள்வி. “இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா” ந்னு தூய தமிழ்ல கேள்விப்பட்டிருக்க மாட்டோம், ஆனா நம்முடைய உரையாடல்களில் எப்போதேனும் நிச்சயம் இந்தக் […]\nKristilla on கி.மு : நோவாவின் பேழை\nக.மோகன சுந்தரம் on சன்னலுக்கு வெளியே கவிதைகள்\nAnonymous on கிமு : சிம்சோன் – வியப்ப…\nAnonymous on வீதியில் நாய்கள், பீதியில்…\nSuma sheyalin on அப்பா என் உலகம்\nDev on தன்னம்பிக்கை : திடீர் பணக்காரன…\nSivaranjani on தன்னம்பிக்கை : திடீர் பணக்காரன…\nTamilBM on தன்னம்பிக்கை : கல்வியால் ஆய பய…\nkavithai kavithais love POEMS Tamil Kavithai tamil kavithais writer xavier xavier இலக்கியம் இளமை கவிதை கவிதைகள் காதல் சேவியர் சேவியர் கவிதைகள் தமிழ் இலக்கியம் தமிழ்க்கவிதை தமிழ்க்கவிதைகள் புதுக்கவிதை புதுக்கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Co", "date_download": "2021-05-07T01:26:09Z", "digest": "sha1:OWMFGJJG3D7LZI2EPHPVWFUHBPUC3ZRX", "length": 5268, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Co | Dinakaran\"", "raw_content": "\nசாஸ்தாவிநல்லூர் கூட்டுறவு கடன் சங்கத்தில் கபசுர குடிநீர் வழங்கல்\nநாமக்கல் கூட்டுறவு சங்கத்தில் ₹95 லட்சத்திற்கு பருத்தி ஏலம்\nசத்தி வேளாண் கூட்டுறவு சங்கத்தில் ரூ.3.90 லட்சத்திற்கு வாழைத்தார் ஏலம்\nதிருச்செங்கோடு கூட்டுறவு சங்கத்தில் ₹7.50 லட்சத்திற்கு எள், பருத்தி விற்பனை\nபள்ளிப்பட்டு ஒன்றியத்தில் திருத்தணி கோ.அரிக்கு கிராம மக்கள் வரவேற்பு\nகோலார் மாவட்ட கூட்டுறவு வங்கி நடமாடும் ஏடிஎம்: எம்எல்ஏ ரூபகலா தொடங்கி வைத்தார்\nநாமக்கல் கூட்டுறவு சங்கத்தில் ₹1 கோடிக்கு பருத்தி ஏலம்\nமதுரை வடக்கு தொகுதியில் நிலத்தடி நீரை மேம்படுத்துவேன் திமுக வேட்பாளர் கோ.தளபதி வாக்குறுதி\nவேளாண் கூட்டுறவு சங்கம் அமைக்க நெடும்பலம் வர்த்தக சங்கம் கோரிக்கை\nகொடைக்கானல் கூட்டுறவு வங்கிகளில் நகைகள��� திருப்ப முடியாமல் அலைக்கழிப்பு தள்ளுபடி இருக்கா\nமாவட்ட கூட்டுறவு வங்கி வளர்ச்சிக்கு பெண்களே காரணம்: கூட்டுறவு வங்கி தலைவர் தகவல்\nகூட்டுறவு வங்கியில் விளம்பர பலகை அகற்றம்\nகூட்டுறவு சங்கங்களில் நிலுவையில் உள்ள நகைக்கடன்கள் எவ்வளவு என்று தெரிவிக்குமாறு கூட்டுறவு சங்க பதிவாளர் சுற்றறிக்கை\nஆரணி அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை சுகாதார இணை இயக்குனர் ஆய்வு\nகடன் தள்ளுபடி பயனாளிகள் பட்டியலை வேளாண் கூட்டுறவு சங்க வாசலில் ஒட்ட வேண்டும்\n2014-2020 வரை நிர்வாகத்தின் தலைமை தம்மை முன்னிறுத்தி கொள்ள விளம்பரங்கள் கோடிக்கணக்கில் செலவு செய்து சரிவை சந்தித்த கோ-ஆப்டெக்ஸ்: கு.பாரதி தலைவர் கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்கள் சங்கம், மெட்ராஸ் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்\nதேர்தல் பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் அறிவித்த நிலையில் சுய உதவிக்குழுவினர் கூட்டுறவு வங்கி, சங்கங்களில் பெற்ற கடன்கள் தள்ளுபடி: பேரவையில் முதல்வர் அறிவிப்பு\nகடன் தள்ளுபடி கேட்டு வேளாண் கூட்டுறவு வங்கியை விவசாயிகள் திடீர் முற்றுகை\nமுதல்வர் அளித்த ₹22 லட்சத்தை வழங்காததால் கூட்டுறவு வங்கியை மகளிர் சுய உதவிக்குழுவினர் முற்றுகை இடைப்பாடி அருகே பரபரப்பு\nஅதிமுகவினருக்கு மட்டும் நகை கடன் கூட்டுறவு கடன் சங்கத்தை பொதுமக்கள் முற்றுகை: முதல்வர் தொகுதியில் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/51145", "date_download": "2021-05-07T01:46:53Z", "digest": "sha1:2KSM3BYA7W77SRDO3YT4OGDXHQUVIVYS", "length": 6802, "nlines": 95, "source_domain": "selliyal.com", "title": "திருநங்கைகளை மூன்றாம் பாலினமாக அங்கீகரித்தது டில்லி உச்சநீதிமன்றம்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome இந்தியா திருநங்கைகளை மூன்றாம் பாலினமாக அங்கீகரித்தது டில்லி உச்சநீதிமன்றம்\nதிருநங்கைகளை மூன்றாம் பாலினமாக அங்கீகரித்தது டில்லி உச்சநீதிமன்றம்\nபுது டில்லி, ஏப்ரல் 15 – இந்தியாவில் திருநங்கைகளை மூன்றாம் பாலினமாக அங்கீகரித்து டில்லி உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. இது வரலாற்றில் மிக முக்கியமான தீர்ப்பாகக் கருதப்படுகின்றது.\n“திருநங்கைகளுக்கு மூன்றாம் பாலினம் வழங்குவது சமூக அல்லது மருத்துவ ரீதியான பிரச்சனை மட்டும் கிடையாது. இது மனித உரிமை அடிப்படையிலான பிரச்சனை. திருநங்கைகளும் இந்த நாட்டு குடிமக்க���் தான். அவர்களுக்கு கல்வி முதல் அனைத்து விதமான சலுகைகளுக்கும் உரிமை உள்ளது” என்று நீதிபதி கே.எஸ் ராதாகிருஷ்ணன் தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.\nமாநில மற்றும் மத்திய அரசுகள் திருநங்கைகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு இந்தியாவிலுள்ள அனைத்து நலத்திட்டங்களையும் வழங்க வேண்டும்.\nதிருநங்கைகளுக்கு சம உரிமை கேட்டு கடந்த 2012 ஆம் ஆண்டு சில சமூக ஆர்வலர்களால் இந்த வழக்கு தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleதமிழக பிரச்சாரத்திற்கு வர ராகுல் காந்தி மறுப்பு\nNext articleஜெயம் ரவி படத்திலிருந்து நயன்தாரா நீக்கம்\nசுஷாந்த் சிங் தற்கொலை – இனி சிபிஐ விசாரணை நடத்தும்\nஅயோத்தியில் இராமர் ஆலயம் நிர்மாணிக்கப்படும் – 5 ஏக்கர் நிலத்தில் மசூதி நிர்மாணிக்கப்படும்\nஅயோத்தியா தீர்ப்பு : மசூதி அமைக்க 5 ஏக்கர் மாற்று நிலம் – சர்ச்சைக்குரிய இடம் ராம்ஜென்ம பூமி நியாசுக்கு ஒதுக்கப்படுகிறது\nதமிழ்நாடு தேர்தல் முடிவுகள் இறுதி நிலவரம் : திமுக: 159 – அதிமுக: 75\nதமிழ்நாடு : டிராபிக் இராமசாமி காலமானார்\nதமிழ்நாடு தேர்தல் : திமுக: 158 – அதிமுக: 76 – இடங்களில் முன்னிலை\nதமிழ்நாடு: குஷ்பு, ஸ்ரீபிரியா பின்னடைவு\nதிமுக அமைச்சரவை : புதிய அமைச்சர்கள் பட்டியல்\nதிமுக அமைச்சரவை : அன்பில் மகேஷ் பள்ளிக் கல்வி அமைச்சர்\nபிரசாந்த் கிஷோர் : இந்திய சட்டமன்றத் தேர்தல் வெற்றிகளின் கதாநாயகன்\nபில் கேட்ஸ் விவாகரத்து : சொத்துகளை எப்படிப் பிரிப்பார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/how-twitter-polls-are-going-horribly-wrong-for-narendra-modi-bjp/", "date_download": "2021-05-07T01:52:37Z", "digest": "sha1:6DMLPN7VNVDKANFKDE3D4A73QUKEOTBA", "length": 17257, "nlines": 156, "source_domain": "www.patrikai.com", "title": "ட்விட்டர் வாக்கெடுப்புகளில் பாஜகவுக்கும் மோடிக்கு அடிமேல் அடி: ராகுலுக்கு ஆதரவாக உருவான ட்விட்டர் அலை. – Patrikai – Tamil Daily – latest online local breaking news & reviews – Tamilnadu, India & World – politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nட்விட்டர் வாக்கெடுப்புகளில் பாஜகவுக்கும் மோடிக்கு அடிமேல் அடி: ராகுலுக்கு ஆதரவாக உருவான ட்விட்டர் அலை.\nட்விட்டர் வாக்கெடுப்��ுகளில் பாஜகவுக்கும் மோடிக்கு அடிமேல் அடி: ராகுலுக்கு ஆதரவாக உருவான ட்விட்டர் அலை.\nஆயுதம் ஏந்தியவனுக்கு ஆயுதமே முடிவு என்பது பாஜக விசயத்தில் உண்மைதான் போலிருக்கிறது. ட்விட்டரை பயன்படுத்தி செல்வாக்கை வளர்த்துக் கொண்ட மோடிக்கும் பாஜகவுக்கும் அதே ட்விட்டர் பெரும் சரிவையும் ஏற்படுத்தத் தொடங்கிவிட்டது.\nசமூக வளைதலங்களை மட்டுமே நம்பி கடந்த 2014 தேர்தலில் களத்தில் இறங்கியது பாஜக. குஜராத்தை முன் வைத்து பல பிரச்சாரங்களை செய்து நாடு முழுவதும் மோடிக்கும் பாஜகவுக்கு ஆதரவாக பிம்பம் உருவாக்கப்பட்டது.\nபிரதமரான பின்பும் மோடி ட்விட்டரில் பிஸியானார். ட்விட்டரில் அவரை பல லட்சம் பேர் தொடர்ந்தனர்.\nஆனால் கடந்த சில மாதங்களாக நிலைமை தலைகீழாகி விட்டது. பாஜகவுக்கும் மோடிக்கும் எதிரான ஹேஸ் டேக் தேசிய அளவில் தினமும் ட்ரெண்டாகி பாஜகவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி வருகிறது.\n‘கோ பேக் மோடி’ என்ற ‘ஹேஸ் டேக்’ தான் தற்போது பாஜகவுக்கு தலைவலியை ஏற்படுத்தி வருகிறது. ட்விட்டரில் நடத்தப்படும் வாக்கெடுப்புகள் அனைத்துமே மோடிக்கும் பாஜகவுக்கும் எதிராகவே அமைந்துள்ளன.\nபாஜக ஆதரவாளர்களால் நடத்தப்படும் கருத்துக் கணிப்புகள்கூட எதிராகவே உள்ளன.\nதிரைப்பட இயக்குனரும், பாஜக ஆதரவாளருமான விவேக் அக்னிஹேத்ரி, நரேந்திர மோடிக்கும் ராகுலுக்கும் இடையே விவாதம் நடந்தால், ராகுலுக்கு எவ்வளவு மதிப்பெண் தருவீர்கள்\nராகுலுக்கு 100 மதிப்பெண்கள் என 56% பேர் வாக்களித்தனர். விவேக் அக்னிஹோத்ரியை பின் தொடரும் 1.4 லட்சம் பேரில் பெரும்பாலோர் ராகுலுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.\nஇவரது வாக்கெடுப்பு பிரதமர் மோடிக்கு எதிராகவே அமைந்துள்ளது.\nபாஜகவின் ஆதரவு தொலைக் காட்சியான ‘டைம்ஸ் நவ்’ நடத்திய ட்விட்டர் வாக்கெடுப்பில், பொதுத் தேர்தலுக்கு இன்னும் 90 நாட்கள் உள்ளன. மோடியின் 5 வருட ஆட்சியில் நீங்கள் பயனடைந்தீர்களா என்ற கேள்விக்கு, இல்லை என்று 85% பேர் வாக்களித்தனர்.\nபிரியங்கா காந்தி அரசியலுக்கு வந்ததையொட்டிய வாக்கெடுப்பில், பிரதமர் மோடியை பிரியங்கா எதிர்கொள்ள முடியுமா என இதே தொலைக் காட்சி கேள்வி எழுப்பியிருந்தது. 60% பேர் ஆம் என்று வாக்களித்திருந்தனர்.\nபாஜகவை தீவிரமாக ஆதரிக்கும் ரிபப்ளிக் தொலைக்காட்சியில், 55 வருட காங்கிரஸ் ஆட்சியைவிட 55 மாதங்கள் ஆட்சி செய்த மோடி அதிகம் செய்துவிட்டாரா என ட்விட்டரில் வாக்கெடுப்பு நடத்தியது.\n56% பேர் இல்லை என மோடிக்கு எதிராக வாக்களித்தனர்.\nஇது குறித்து சி&வோட்டர் நிறுவனர் யஷ்வந்த் தேஷ்முக் கூறும்போது, பாஜகவுக்கு செல்வாக்கு மோசமாக இருப்பதையே ட்விட்டர் வாக்கெடுப்புகள் காட்டுகின்றன. பெட்ரால்,டீசல் விலை உயர்வும் பாஜகவுக்கு எதிரான மன நிலை உருவானதற்கு காரணம் என்றார்.\nஇதற்கிடையே, ட்விட்டர் பாரபட்சமாக செயல்படுவதாக பாஜகவுக்கு ஆதரவு அமைப்புகள் சில தினங்களுக்கு ட்விட்டர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர்.\nபிரதமர் மோடியின் கட்சிப் பணிக்கான பயணச் செலவையும் அரசே ஏற்கிறதா: மவுனம் காக்கும் பிரதமர் அலுவலகம் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் ராகுல் இன்று தேர்தல் பிரசாரம் தொடக்கம் சாமானிய மக்களுக்காக வாழ்க்கையை அர்ப்பணிக்க வேண்டும்: அரசு செயலர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை\nTags: ட்விட்டர் வாக்கெடுப்புகள்.anger against the party., பிரதமர் மோடி\nPrevious கர்நாடகா : சுயேச்சை எம் எல் ஏ நாகேஷ் காங்கிரஸுக்கு ஆதரவு\nNext கோத்ரா ரெயில் தீவிபத்தில் பலியானோர் வாரிசுகளுக்கு குஜராத் அரசு உதவி\nஇந்தியாவில் வரலாறு காணாத உச்சமாக நேற்று 4,14,182 பேருக்கு கொரோனா\nஐபிஎல் தொடரை நடத்தி முடிக்காவிட்டால் 2500 ரூபாய் கோடி இழப்பு ஏற்படும் – கங்குலி\n8 hours ago ரேவ்ஸ்ரீ\nஇன்று ஆந்திரப் பிரதேசத்தில் 21,954 கர்நாடகாவில் 49,058 பேருக்கு கொரோனா உறுதி\nஇந்தியாவில் வரலாறு காணாத உச்சமாக நேற்று 4,14,182 பேருக்கு கொரோனா\nடில்லி இந்தியாவில் நேற்று 4,14,182 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று வரலாறு காணாத அளவுக்கு கொரோனாவால்…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15.66 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15,66,72,832 ஆகி இதுவரை 32,69,034 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nஅடுத்த 17 நாட்கள் ஒவ்வொரு வீட்டிலும் பின்பற்ற வேண்டிய கட்டாய விதி\nஅடுத்த 17 நாட்கள் ஒவ்வொரு வீட்டிலும் பின்பற்ற வேண்டிய கட்டாய விதி – நெட்டிசன் பதிவு கொரோனா கட்டுப்பாடு குறித்து வலைத் தளங்களில்…\nஇன்று ஆந்திரப் பிரதேசத்தில் 21,954 கர்நாடகாவில் 49,058 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 21,954 கர்ந���டகாவில் 49,058 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 49,058…\nநாளைக்குள் தமிழகத்துக்குத் தேவையான ஆக்சிஜன் வழங்குவதை உறுதி செய்ய மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\nசென்னை நாளைக்குள் தமிழகத்துக்குத் தேவையான ஆக்சிஜன் வழங்குவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது….\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் –06/05/2021\nசென்னை தமிழகத்தில் இன்றைய (06/05/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 24,898 பேருக்குப் பாதிப்பு…\nஇந்தியாவில் வரலாறு காணாத உச்சமாக நேற்று 4,14,182 பேருக்கு கொரோனா\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15.66 கோடியை தாண்டியது\nஅதிமுக எம்.எல்.ஏ. விஜய பாஸ்கருக்கு கொரோனா\n8 hours ago ரேவ்ஸ்ரீ\nதனி தகவல் தொடர்பு தளத்தை தொடங்கிய டிரம்ப்\n8 hours ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mybhaaratham.com/2021/04/blog-post_56.html", "date_download": "2021-05-07T00:25:45Z", "digest": "sha1:RE7QV7FV57PLTWXYEDNMIYGH6UF6I3CW", "length": 9607, "nlines": 130, "source_domain": "www.mybhaaratham.com", "title": "Bhaaratham Online Media: பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் டத்தோஸ்ரீ அன்வார்", "raw_content": "\nபக்காத்தான் ஹரப்பான் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் டத்தோஸ்ரீ அன்வார்\nநாட்டின் 15ஆவது பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக பிகேஆர் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவிக்கப்பட்டுள்ளார்.\nபிகேஆர், ஜசெக, அமானா ஆகிய கட்சிகள் டத்தோஸ்ரீ அன்வாரை ஏகமனதாக பிரதமர் வேட்பாளராக அங்கீகாரித்துள்ளதாக கூறப்படுகிறது.\nஅதோடு, பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியில் இணைந்து பணியாற்ற பிற தரப்பினருக்கும் வாய்ப்பு வழங்க முடிவெடுக்கபட்டுள்ளதாக டத்தோஸ்ரீ அன்வார் கூறினார்\n'இயற்கையை காப்போம் இனியதோர் உலகை படைப்போம்' - சிறப்பு கட்டுரை\nபினாங்கு - இயற்கை என்பது இயல்பாக இருப்பது என்பது பொருள் கொண்டதாகும் . இயல்பாகவே தோன்றி மறையும் பொருட்கள் அவற்றின் இயக்கம் , அவை இயங...\nபூச்சோங்- மாரடைப்பின் காரணமாக மனைவியும் அவரை தொடர்ந்து கணவனும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. சிலாங்கூர்,பூச்சோங்கைச் ச...\nசோழன் ஆட்சியை இழந்ததைப்போல, மஇகாவை இழந��து விடாதீர்கள்\nசேரன், சோழன், பாண்டியன் ஆட்சிகளை இழந்து 500 ஆண்டுகளைக் கடந்து விட்டோம். இங்கு வந்து 200 ஆண்டுகளாகக் கட்டமைத்த வாழ்க்கையைத்தான் இன்றும...\nகணபதியின் மரணத்தில் உள்ள மர்மம் விலக சுயேட்சை விசா...\nமஇகா எதிர்க்கட்சியாக இருந்தபோது கட்சியை காப்பாற்ற ...\nகணபதியின் மரண விவகாரம்- அமைச்சரவையில் விவாதிப்பேன...\nஏப்.29இல் திரையீடு காண்கிறது 'பரமபதம்'\nபெர்சத்து, அம்னோ, பாஸ் கட்சிகளை விடவா ஜசெக இனவாதம்...\nதிருமதி மோகனசெல்வி குடும்பத்திற்கு 'யெஸ்' அறவாரியம...\nநடிப்பின் மூலம் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தவர்...\nஏரா சூரியா அறவாரியத்தின் ஏற்பாட்டில் நலிவடைந்த கு...\nநடிகர் விவேக் ஓர் உன்னத கலைஞர்- டத்தோஸ்ரீ சரவணன் இ...\nநடிகர் விவேக்கிற்கு சூர்யா, கார்த்தி நேரில் அஞ்சலி\nபக்காத்தான் ஹராப்பான் ஆட்சி கவிழ்க்கப்பட்டதற்கு து...\nமித்ராவின் வழி மலேசிய இந்தியர் திட்டவரைவு மேம்படுத...\nஆடியோ, வீடியோ சார்ந்த விவகாரங்களில் அஸ்மின் அலி தி...\nதுரோகிகள் சூழ்ந்துள்ள கூட்டணியில் எவ்வாறு இணைய முட...\nதடுப்பூசியை செலுத்திக் கொள்ளும் தொழிலாளர்களுக்கு ம...\nவெ.11 லட்சம் மதிப்பில் சுங்கை சிப்புட் மஇகாவுக்கு ...\nமஇகா தேமுவில் தான் உள்ளது- டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்\nஇந்திய பாலர் பள்ளி ஆசிரியர்களின் 4 மாத சம்பளம் தேக...\nபக்காத்தான் ஹரப்பான் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர்...\nதமிழ்மொழி பண்பாட்டு விவகாரங்களில் எங்களுக்கும் பங்...\nமஇகாவுக்கு மாற்றாக மலேசிய மக்கள் சக்தி கட்சி- டத்த...\n'I-SEED' திட்டத்தை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தா...\nஅன்வார் பிரதமராக ஆதரவு கடிதம் கொடுத்தது யார்- கேள்...\nலோரியில் கூடுதல் பளு; உற்பத்தி நிறுவனங்களே முழு பொ...\nதள்ளுவண்டியின் மூலம் வாக்களிக்கும் உரிமையை நிறைவேற...\nஉண்மையை அறியாமல் உளற வேண்டாம் வேதமூர்த்தி- வீரன் ச...\nவெற்றி வாய்ப்பில்லாத தொகுதிகளில் மஇகா\nஆலய நிர்மாணிப்பு முன்னதாக நிலத்தை சொந்தமாக்குங்கள்\nதேமுவில் மஇகா; உறவு நீடிக்க வேண்டும்-டத்தோஶ்ரீ ஸாயிட்\nவென்றால் சமூகச் சேவை; இல்லையேல் கட்சி சேவை- டான்ஸ்...\nமஇகாவின் ஆதரவில் பெருமிதம் கொள்கிறேன்- பிரதமர்\nகேமரன் மலை தொகுதியை மஇகா ஒருபோதும் இழக்காது- டான்ஸ...\nடத்தோஶ்ரீ சரவணனுக்கு அமைச்சர் பதவியை கொடுத்தது பி...\n10% தொகுதிகளை விட்டு கொடுக்க அம்னோ தயாரா\nஅரசி��ல் மேடைகளாக ஆலயங்கள் உருமாறி விடக்கூடாது- கணப...\nஅம்னோ அமைச்சர்கள் பதவி விலகினால் அரசாங்கம் கவிழலாம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/bigbasket-hire-10000-persons-for-home-delivery-and-warehouse-025123.html", "date_download": "2021-05-07T00:28:50Z", "digest": "sha1:DKP4MJPR2AOBCMTXSVEX446JTILXEGVX", "length": 18980, "nlines": 259, "source_domain": "tamil.gizbot.com", "title": "முந்துங்கள்: 10,000 பேரை வேலைக்கு எடுக்கும் பிரபல ஆன்லைன் நிறுவனம்! | Bigbasket hire 10000 persons for home delivery and warehouse! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதோல்வி நிலையல்ல என்று நிரூபித்த எலான் மஸ்க்: ஸ்டார்ஷிப் எஸ்என் 15 விண்கல சோதனை வெற்றி\n10 hrs ago மலிவு விலையில் அறிமுகமாகுமா புதிய ரெட்மி நோட் 10 ப்ரோ 5 ஜி\n11 hrs ago தாராளமா வாங்கலாமே- இதோ கம்மி விலையில் சிறந்த அம்சங்களோடு எம்ஐ டிவி பி1 தொடர் ஸ்மார்ட் டிவி\n11 hrs ago மே 12: இந்தியாவில் அறிமுகமாகும் அசுஸ் சென்ஃபோன் 8 மினி.\n12 hrs ago இனிமேல் இப்படித்தான். கூகுள் நிறுவனத்தின் ஊழியர்களுக்கு சுந்தர் பிச்சை அனுப்பிய முக்கியத் தகவல்.\nLifestyle இன்றைய ராசிப்பலன் 07.05.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் பண பரிவர்த்தனைகளைத் தவிர்த்திடவும்…\nNews தமிழகத்தில் போதியளவில் ஆக்சிஜன் உள்ளதா.. உயர் அதிகாரிகளுடன் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை\nAutomobiles ஆம்புலன்ஸ்கள் அதிக கட்டணம் வசூலித்தால் காலி... இப்படி ஒரு ஆக்ஸன் எடுப்பாங்கன்னு எதிர்பார்த்திருக்க மாட்டீங்க\nFinance ரூ.8 லட்சம் கோடி.. மோடி அரசு இதை செய்துவிட்டால் வேற லெவல் தான்..\nMovies அம்பியா இருக்க பிரபுதேவா திடீர்னு அந்நியனா மாறுறாரே.. மிரட்டும் பஹீரா ’சைக்கோ ராஜா’ பாட்டு\nSports ஐபிஎல் 2021 தொடரை நடத்த இங்கிலாந்து கவுண்டிகள் ஆர்வம்... செப்டம்பர்ல நடத்த ஆர்வமா இருக்காங்க\nEducation ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமுந்துங்கள்: 10,000 பேரை வேலைக்கு எடுக்கும் பிரபல ஆன்லைன் நிறுவனம்\nபிரபல ஆன்லைன் நிறுவனம் தங்களுக்கு ஆன்லைன் ஆர்டர் அதிகரித்து வருவதால் 10 ஆயிரம் பேரை வேலைக்கு எடுக்கப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nபாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,373-ஆக அதிகரிப்பு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,373-ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு உலக அளவில் வய��ானவர்களுக்கு தான் அதிகமாக இருக்கிறது. ஆனால் இந்தியாவில் தலைகீழாக மாறி இருக்கிறது. இது இந்தியாவில் கொரோனா தாக்குதலில் 83 சதவீதத்திற்கு குறைவானோர் 60 வயதுக்கு உட்படுத்தப்பட்டோர் என்பது குறிப்பிடத்தக்கது\n266 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தகவல்\nஅதேபோல் இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு உட்பட்டோர் மொத்தம் 3,373 பேரில் 266 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லவ் அகர்வால் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.\n9 விழுக்காட்டினர் பிறந்த குழந்தை முதல் 20 வயதுக்குட்பட்டவர்கள்\nஅதில், நாடு முழுவதும் கொரோனா பாதித்தவர்களில் 9 விழுக்காட்டினர் பிறந்த குழந்தை முதல் 20 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 42 விழுக்காட்டினர் 21 வயது முதல் 40 வயதுக்குட்பட்டோர் எனவும் தெரிவித்தார்.\n33 விழுக்காட்டினர் 41 முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள்\nஅதேபோல் குறிப்பாக 33 விழுக்காட்டினர் 41 முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இதில் குறிப்பிடத்தகுந்த தகவல் என்னவென்றால் கொரோனாவில் பாதிக்கப்பட்டவர்களில் 60 சதவீதத்திற்கு அதிகமானவர்கள் 17 விழுக்காட்டினர் எனவும் கூறினார்.\nBSNL ரூ.96 வசந்தம் கோல்டு திட்டத்தின் வேலிடிட்டி நீட்டிப்பு 500ஜிபி வரை கிடைக்கும் டேட்டா திட்டம்\nஇந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 14 ஆம் தேதி வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து உத்தரவிட்டார். இதனால் பொதுமக்களும் வீட்டிலேயே தேங்கி வருகின்றனர்.\nஇதனால் ஆன்லைன் மளிகை பொருட்கள் விற்கும் பிரபல நிறுவனமான பிக்பாஸ்கெட் புதிதாக 10,000 பேரை பணிக்கு சேர்க்க உள்ளதாக தெரிவித்துள்ளது. ஊரடங்கு உத்தரவு காரணமாக பொது மக்கள் வீட்டிலேயே தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஆர்டர்களும் குவிந்த வண்ணம் உள்ளன.\nஆர்டர்களை விரைவாக டெலிவரி செய்யும் வகையில் ஆட்கள் தேவை\nஇதையடுத்து நிலுவையில் உள்ள ஆர்டர்களை விரைவாக டெலிவரி செய்யும் வகையில் ஆட்கள் எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பணிநிமித்தம் செய்யப்படுபவர்கள் நிறுவனத்தின் கிடங்கு மற்றும் ஹோம் டெலிவரிக்கு பயன்படுத்தப்படு���ார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. பிக்பாஸ்கெட் அறிவித்துள்ள இந்த ஆள் எடுப்பு பணியானது 26 நகரங்களில் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.\nமலிவு விலையில் அறிமுகமாகுமா புதிய ரெட்மி நோட் 10 ப்ரோ 5 ஜி\nதடை அதை உடை புதுசரித்திரம் படை: சொந்தமாக புதிய வலைதளத்தை தொடங்கிய டிரம்ப்- அக்கவுண்ட் ஓபன் பண்ணலாமா\nதாராளமா வாங்கலாமே- இதோ கம்மி விலையில் சிறந்த அம்சங்களோடு எம்ஐ டிவி பி1 தொடர் ஸ்மார்ட் டிவி\nவிரைவில் வரும் ரெட்மி நோட் 10ப்ரோ 5ஜி: விலை குறைவுதான் அம்சம் சிறப்பு\nமே 12: இந்தியாவில் அறிமுகமாகும் அசுஸ் சென்ஃபோன் 8 மினி.\nதோல்வி நிலையல்ல என்று நிரூபித்த எலான் மஸ்க்: ஸ்டார்ஷிப் எஸ்என் 15 விண்கல சோதனை வெற்றி\n கூகுள் நிறுவனத்தின் ஊழியர்களுக்கு சுந்தர் பிச்சை அனுப்பிய முக்கியத் தகவல்.\nசதுர டிஸ்ப்ளே, ஆரோக்கிய அம்சம்: மே 13 வெளியாகும் ரெட்மி ஸ்மார்ட் வாட்ச்\nபொசுக்குன்னு வார்த்தைய விட்டிங்கிளே: இத இந்தியாவுக்கு கொடுக்குறதுல சுத்தமா விருப்பமில்ல- பில் கேட்ஸ்\nஅனுமதி கிடைத்தது: சோதனை தொடங்குங்க- தயார்நிலையில் ஜியோ, ஏர்டெல், விஐ\nஇந்தியாவில் மீண்டும் அதிகாரப்பூர்வமாகக் களமிறங்கும் PUBG கேம்.. ஆனால் பெயர் தான் வேற..\nசிவாஜியும் நான்தான்., எம்ஜிஆர்ரும் நான்தான்: \"பேட்டில் கிரவுண்ட் மொபைல்\" என்ற பெயரில் வரும் பப்ஜி விளையாட்டு\nசாம்சங் கேலக்ஸி S20 பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nசாம்சங் கேலக்ஸி நோட்20 அல்ட்ரா 5G\nசியோமி Mi 10 5G\nசாம்சங் கேலக்ஸி S20 பிளஸ்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஒப்போ ஏ54 5ஜி அறிமுகம்: 90 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, 5000 எம்ஏஎச் பேட்டரி அம்சத்தோடு\nஎத்தனை வயது குழந்தைகளுக்கு., எப்படி ஆதார் கார்ட் எடுப்பது- இதோ எளிய வழிமுறைகள்\n50 ஆண்டுக்கு பிறகு இது நடந்துருக்கு: டிராகன் கேப்ஸ்யூல் மூலம் வெற்றிகரமாக பூமிக்கு திரும்பிய 4 வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/blogs/marriage-to-a-corona-patient-a-bridesmaid-in-an-armored-dress/", "date_download": "2021-05-07T01:53:28Z", "digest": "sha1:NOBECQV25XU4MHI5YZQ7UJBBO5Q4LSIN", "length": 15137, "nlines": 132, "source_domain": "tamil.krishijagran.com", "title": "கொரோனா நோயாளிக்கு திருமணம் - கவச உடையில் தாலிக் கட்டிக்கொண்ட மணப்பெண்!", "raw_content": "செய்திகள் வாழ்வும் நலமும் தோட்டக்கலை கால்நடை வெற்றிக் கதைகள் விவசாய தகவல்கள் FTB அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா Directory\n#FTB விவசாய தகவல்கள் அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா\nஎங்கள் அச்சு மற்றும் டிஜிட்டல் பத்திரிகைகளுக்கு குழுசேரவும்\nசமூக ஊடகங்களில் எங்களுடன் இணைக்கவும்:\nகொரோனா நோயாளிக்கு திருமணம் - கவச உடையில் தாலிக் கட்டிக்கொண்ட மணப்பெண்\nகேரளாவில் கொரோனா பாதித்த மணமகன் ஒருவருக்கு நிச்சயக்கப்பட்ட நாளில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்த கொரோனா வார்டில் திருமணம் நடத்தப்பட்டது, அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.\nகேரள மாநிலம் ஆலப்புலாவை சேர்ந்தவர் சரத் மோகனன். இவர் சவுதி அரேபியாவில் பணிபுரிந்து வருகிறார்.\nதிருமணம் நிச்சயம் (Marriage Engagement)\nஇவருக்கும் அபிராமி என்ற பெண்ணிற்கும் திருமணம் செய்ய நிச்சயக்கப்பட்டது. இதற்காகக் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு சவுதியிலிருந்து தனது சொந்த ஊரான ஆலப்புலாவிற்கு வந்தார்.\nஇதனையடுத்து மணமகன் சரத் தனது வீட்டிலேயே தன்னைப்படுத்திக் கொண்டார். இந்த நிலையில், மணமகன் சரத்திற்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் அவருடைய தாயாரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டதை மருத்துவப் பரிசோதனைகள் உறுதி செய்தன.\nமருத்துவமனை அனுமதி (Admitted to Hospital)\nஇதையடுத்து, 25ஆம் தேதி நடக்கவிருந்த திருமணத்தை வேறு ஒரு தேதிக்கு மாற்ற அதிகாரிகள் வலியுறுத்தினர். இருப்பினும் திட்டமிட்டபடி திருமணத்தை நடத்தி முடிக்க முடிவு செய்த இரு வீட்டாரும் மணமகன் அனுமதிக்கப்பட்டிருக்கு வார்டில் வைத்தே திருமணத்தை நடத்த மருத்துவமணை நிர்வாகத்திடம் அனுமதி கோரினர். அதன்படி இந்த நிகழ்விற்காக மட்டும் தனி அறை ஒன்றை ஒதுக்கி அதிகாரிகள் வழங்கினர்.\nதிட்டமிட்டபடித் திருமணம் (Marriage as planned)\nஎனவே திட்டமிட்ட நாளில் மணமகன் சரத், கொரோனா பாதுகாப்பு உடையணிந்து வந்த மணமகள் அபிராமியின் கழுத்தில் தாலி கட்டினார். திருமண நிகழ்வின்போது இரு வீட்டாரின் தாய் தந்தையர்கள் மட்டும் உரிய பாதுகாப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டு அனுமதிக்கப் பட்டிருந்தனர். உறவினர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.\nதிருமணம் முடித்த தம்பதியினருக்கு மருத்துவமனையின் ஊழியர்கள், மருத்துவர்கள் என பலரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். திட்டமிட்டபடியே திருமணத்தை நடத்தி முடிக்க அனுமதி வழங்கி�� அதிகாரிகளுக்கு மணமகனின் உறவினர்களும், மணமகள் அபிராமியும் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.\nஆக்ஸிஜன் பற்றாக்குறை (Lack of oxygen)\nகொரோனாத் தொற்று பரவல் காரணமாக, நாடு முழுவதும் குறிப்பாக டெல்லி, பீகார், உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் கிடைக்காமல், நோயாளிகளின் உறவினர், பரிதவித்துக்கொண்டிருக்கிறது.\nஇந்த வேளையில், கொரோனான பாதிப்பு சற்று அதிகம் உள்ள கேரளாவில் கொரோனா நோயாளித் திட்டமிட்டபடித் தனது திருமணத்தை நடத்திக்கொண்டது மற்றவர்களுக்கு அதிர்ச்சியையும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது.\n18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசக் கொரோனாத் தடுப்பூசி - தமிழக அரசு\nகொரோனா தடுப்பூசி விநியோகிக்க டிரோன் பயன்பாடு ஆய்வு செய்ய அரசு அனுமதி\nதமிழகத்திற்கு 4 இலட்சம் கொரோனா தடுப்பூசி வருகை\nஅன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.\nஉங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....\nபங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)\nகொரோனா பாதித்த மணமகன் கொரோனா வார்டில் திருமணம் கவச உடையில் தாலி கட்டிக்கொண்ட மணமகள் Marriage to a corona patient a bridesmaid in an armored dress\nSBI-யில் 5237 பணியிடங்கள் - பட்டப் படிப்பு தகுதி, உடனே விண்ணப்பியுங்கள்\nஓய்வுகாலத்தில் ரூ.50லட்சம் கையில் இருக்க வேண்டுமா- இந்தத் திட்டம் கொடுக்கும்\nகொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, முழு ஊரடங்கை அமல்படுத்த உச்ச நீதிமன்றம் பரிந்துரை\nகொப்பரை உற்பத்தி செய்ய நவீன இயந்திரம்: விவசாயிகள் மகிழ்ச்சி\n செய்ய வேண்டியவையும், செய்யக் கூடாதவையும்\nவிளைநிலங்களில் வீணாகும் தர்பூசணி பழங்கள்\nபூச்சிகளைப் புரிந்து கொள்(ல்)வோம்- காணொளி மூலம் பயிற்சி\nரூ.4000 கொரோனா நிவாரண நிதிவழங்கும் திட்டம் - நாளை ஸ்டாலின் முதல் கையெழுத்து\nவாடிக்கையாளர்களுக்கு புதியவகை டிசைனர் சிலிண்டரை அறிமுகம் செய்த IOCL\nஒரே நிமிடத்தில் cowin.gov.in தளத்தில் கொரோனா தடுப்பூசி பதிவு செய்வது எப்படி\nபருத்தியைத் தாக்கும் மாவுப்பூச்சிகளை எப்படி கட்டுப்படுத்தலாம்\nகொரோனாவைத் தடுக்கும் முயற்சியில், புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்\nஒன்றல்ல, இரண்டல்ல, ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள்\nதொற்றுநோய்களைத் தடுக்கும் ஊட்டச்சத்து அணுகுண்டு எது தெரியுமா\nமாடித்தோட்டத்திற்கு ஏற்ற மண் கலவை வகைகள் எவை\nவிவசாயிகள் நலன் கருதி சாகுபடி தொடர்பான சந்தேகம் ஏற்பட்டால் வேளாண் விஞ்ஞானிகளை அணுகலாம்: தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/ipl-league/22574-what-is-the-connection-between-off-spinner-ashwin-and-katrina-kaif.html", "date_download": "2021-05-07T01:10:53Z", "digest": "sha1:Q6E4LXH4GFMVNNB2ICE5K6CBU25KBCMT", "length": 11188, "nlines": 103, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "ஆஃப் ஸ்பின்னர் அஸ்வினுக்கும் காத்ரீனா கைஃபுக்கும் என்ன தொடர்பு? | What is the connection between off-spinner Ashwin and Katrina Kaif - The Subeditor Tamil", "raw_content": "\nஆஃப் ஸ்பின்னர் அஸ்வினுக்கும் காத்ரீனா கைஃபுக்கும் என்ன தொடர்பு\nஆஃப் ஸ்பின்னர் அஸ்வினுக்கும் காத்ரீனா கைஃபுக்கும் என்ன தொடர்பு\nஅஸ்வின் இந்த ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல் அணிக்காக விளையாட இருக்கிறார். கடந்த இரண்டு தொடர்களிலும் அவர் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக இருந்தார். இந்தத் தொடரில் டெல்லி கேப்பிட்டல் அணியில் அஸ்வினுடன் ரஹானே, ஸ்டோனிஸ் ஆகியோரும் விளையாட உள்ளனர்.\nஆஃப் ஸ்பின்னரான அஸ்வின் இதுவரை 139 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 125 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஐபிஎல் பந்துவீச்சில் 26.43 என்ற சராசரியை கொண்டுள்ள அவரின் எகனாமி ரேட் 6.79 ஆகும். டெல்லி அணி செப்டம்பர் 20ஆம் தேதி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை சந்திக்க உள்ளது.\nஅஸ்வினின் ரசிகர் ஒருவர் ஆஃப் ஸ்பின்னர்கள் பந்து வீசும் புகைப்படங்களை தொகுத்துள்ளார். அஸ்வின், இங்கிலாந்தின் முன்னாள் வீரர் கிரீம் ஸ்வான் மற்றும் இந்தியாவின் ரமேஷ் பொவார் ஆகியோர் பந்துவீசும் புகைப்படங்களோடு காத்ரீனா கைஃப் அதேபோன்று போஸ் கொடுக்கும் படத்தையும் இணைத்துள்ளார். ரசிகரின் இந்தத் தொகுப்பை அஸ்வின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.\nYou'r reading ஆஃப் ஸ்பின்னர் அஸ்வினுக்கும் காத்ரீனா கைஃபுக்கும் என்ன தொடர்பு\nகொல்லிமலையின் இயற்கை அழகுரம்மியமான நீர் வீழ்ச்சி\nபாங்க் ஆஃப் இந்தியாவில் பணியிடங்கள் \n- கிறிஸ்கெய்லுக்க�� டஃப் கொடுத்த சஹால்.. வைரல் போட்டோ\nஐபிஎல் முக்கியம் என்பவர்கள் வீட்டில் ஒருவருக்கு கொரோனா வந்தால் தெரியும் - கொதிக்கும் ஆடம் ஜாம்பா\nஎன்னால் முடிந்தது; ஆக்ஸிஜன் வாங்கிக்கொள்ளுங்கள் - பேட் கம்மின்ஸ் மனிதநேயம்\nஆர்சிபி வரலாற்றில் மறக்க முடியாத நாள் - 49க்கு ஆல் அவுட் வெற்றியாளராக மாற்றிய வெறி\nநடப்பு ஐபிஎல் சீசனிலிருந்து விலகினார் ஆர்ச்சர் - என்ன காரணம்\nஹர்பஜன்சிங் காலில் விழுந்து வணங்கிய சின்னதல - ரசிகர்கள் நெகிழ்ச்சி\nரசிகர்களே ஓவர் ஆட்டம் வேண்டாம் – விராட் கோலியின் அந்த விளக்கம்\nதோனி அதை மட்டும் செய்யமாட்டார் - அடித்து சொல்லும் முன்னாள் வீரர்\nதோனிக்கு பிறகு இவரை கேப்டனாக்கலாம் – மைக்கேல் வாகன் கருத்து\n`அன்பு சூழ் உலகு – ரஷித்கானுக்காக நோன்பிருக்கும் டேவிட் வார்னர்\n – கே.எல்.ராகுலை சாடிய ஆஷிஷ் நெஹ்ரா\nஅட்டகாசமான டைவ் இருந்தும் விமர்சனம் – என்ன சொல்கிறார் தோனி\n4 வருடங்களுக்குபிறகு மேக்ஸ்வெல்லின் எழுச்சி – ஹி இஸ் பேக்\nநாளை பலப்பரீட்சை பஞ்சாப் வெர்ஸஸ் சென்னை – வெற்றி யாருக்கு\nஎன்னை இம்ப்ரஸ் செய்துவிட்டான் – சக்காரியா குறித்து புகழ்ந்து தள்ளிய சேவாக்\nமேற்கு வங்காளம்: பாரதிய ஜனதாவின் கணக்கு தோற்றது எங்கு\nஉதயநிதிக்கு பதவி இல்லை: தமிழ்நாடு அரசின் புதிய அமைச்சர்கள் யார்\nகோவிட் தடுப்பூசி பற்றிய போலி எஸ்எம்எஸ்: கிளிக் செய்தால் ஆபத்து\nஇதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா – புதிய கட்டுப்பாடுகள் என்ன\nமக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்\n - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி\nபுறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு\nஎதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்\nஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்\nதிமுக அமைச்சரவையில் யாருக்கு என்ன பொறுப்பு…\nமனைவியுடன் உல்லாசமாக இருந்த உதவியாளர்… கோயிலுக்கு அழைத்துச்சென்று அர்ச்சனை செய்த பூசாரி\nமுதலமைச்சர் ஆனதும் ஸ்டாலினின் முதல் கையெழுத்து இதுதான்.. முழு எதிர்பார்ப்பில் மக்கள்..\nகோவிட்-19: ஆக்ஸிஜன் அளவை சோதிப்பது எப்படி\nராஜினாமா முடிவில் கே.பி.முனுசாமி – திமுகவுக்கு லாபமாக அமையுமா\nஇரவோடு ���ரவாக மேலும் புதியக் கட்டுப்பாடுகள் அறிவிப்பு : முழு விபரம்…\n1000ரூபாய் கையிருப்பு கூரை வீடு – சட்டமன்றத்தில் நுழையும் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ மாரிமுத்து\n தேமுதிக வீழ்ச்சிக்கு இதான் காரணம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/tag/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2021-05-07T01:57:20Z", "digest": "sha1:ONCE6FEEGBUBLTPZ2VJS6U7LKKTPFNRB", "length": 38492, "nlines": 293, "source_domain": "tamilandvedas.com", "title": "அருணகிரி | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nமுருகனே ஞானசம்பந்தர் – அருணகிரிநாதர் அருளுரை\n“ஞானம் பெறலாம் நலம் பெறலாம் எந்நாளும்\nவானம் அரசாள் வரம் பெறலாம் – மோனவீ\nடேறலாம் யானைக் கிளையான் திருப்புகழைக்\nஆனைமுகனுக்கு இளையவனின் திருப்புகழைக் கூறினால் ஞானம் பெறலாம், நலம் பெறலாம், வானம் அரசாள் வரம் பெறலாம், மோன வீடு பெறலாம் என்பது பெரியோர் கூற்று.\nஅரும் திருப்புகழை உலகிற்கு அளித்த அருணகிரிநாதரின் அருளுரைகள் அற்புதமானவை. வெவ்வேறு நுணுக்கங்களை விண்டு உரைப்பவை. மரண ப்ரமாதம் நமக்கில்லை என்ற துணிச்சலை பக்தர்களுக்கு அருள்பவை.\nஅவரது முக்கிய உரைகளில் ஒன்று முருகனின் அவதாரமே ஞானசம்பந்தர் என்பது.\nசமணர்களும் பௌத்தர்களும் நாடு கெடும் படி எல்லையற்ற துன்பங்களை சிவ, சக்தி, விநாயக, முருகனை வழிபடுவோருக்கு இழைத்து வந்த கால கட்டத்தில் அவற்றை ஒரு நொடியில் பொடிப் பொடியாக்கிய அவதாரமாக உதித்தவர் திருஞானசம்பந்தர்.\nபுத்தர் அமணர்கள் மிகவே கெடவே\nபுக்க அனல்வய மிக ஏடுயவே உமையாள் தன்\nபுத்ரனென இசை பகர் நூல் மறை நூல்\nகற்ற தவமுனி பிரமாபுரம் வாழ்\nபொற்ப கவுணியர் பெருமானுருவாய் வருவோனே\nஎன்று அழகுறத் தெளிவு படுத்துகிறார். (நெய்த்த கரிகுழலறலோ எனத் தொடங்கும் பாடல்)\nபிரமாபுரம் வாழ் ஞானசம்பந்தரின் உருவாய் வந்தவன் முருகனே’ அவனே புத்தர், சமணரை ஓட்டி தெற்கு தேச அரசன் திருநீறிடும்படி அனல் வாதத்தில் ஜெயித்தவன் என்பதை இப்படி அழகுறக் கூறும் போது சின்னஞ் சிறு வயதில் சம்பந்தர் எப்படி எண்ணாயிரம் சமணரை வெல்ல முடிந்தது என்ற ரகசியத்தை அறிய முடிகிறது முருகன் அல்லவா புத்த சமணரை, வென்றது\nசம்பந்தர் எனும் முருகனன்றி வேறு தெய்வம் இல்லை\nகந்தர் அந்தாதியில் 29ஆம் பாடலில்\nதிகழு மலங்கற் கழல்பணிவார் சொற்படி செய்யவோ\nதிக���ு மலங்கற் பகவூர் செருத்தணி செப்பிவெண்பூ\nதிகழு மலங்கற் பருளுமென்னாவமண் சேனையுபா\nதிகழு மலங்கற் குரைத்தோனலதில்லை தெய்வங்களே\nதிருஞானசம்பந்தரின் ஒவ்வொரு பதிகத்தின் 11ஆம் பாட்டும் திருக்கடைக்காப்பு என அழைக்கப்படும். அப்பதிகத்தைப் பாடுவோர்க்கு என்ன பலன் கிடைக்கும் என்பது இறுதிப் பாடலில் மிகத் தெளிவாக, உறுதியாகச் சொல்லப்பட்டிருக்கும்.\n“தேவாரத் திருப்பதிகங்களை ஓதி தான் அவதரித்த சீர்காழியையும், தான் காத்தளித்த அமராவதியையும், கல்யாண சுபுத்திரனாக தான் நிற்கும் திருத்தணியையும் துதித்து அணியும் திருநீறு மும்மலத்தைப் போக்கும்.\nமுழுப் பொருள் இதுவே என நம்பும் கற்புடமையையும் தரும் என்று நினைக்காத சமண கூட்டங்களை வருத்தம் தரும் கழுமரத்தில் ஏற்றி கலக்கம் அடைந்து அழியும் படி வாது புரிந்த சம்பந்தப் பெருமான் ஆகிய முருகனன்றி வேறு பிரத்யட்சமான தெய்வங்கள் கிடையாது” என்பதே பாடலின் பொருள்.\nமுருகனே சம்பந்தர் என்பதைத் தெளிவாக அருணகிரிநாதர் சுட்டிக் காட்டிய இடங்களில் இதுவும் ஒன்று.\nஆக தேவார திருப்பதிகங்களை ஓதும் படி அருணகிரிநாதர் அருளுரை பகர்கிறார். திருஞானசம்பந்தரே முருகன் என்பதால் அவரது பதிகங்கள் குமரக் கடவுளின் வாயிலிருந்து உதித்த நேர் சொற்கள் என்பதையும் தெளிவு படுத்துகிறார்.\nதிருப்புகழை ஊன்றிப் படிப்போர்க்குப் பல ரகசியங்கள் தெரியவரும். முக்கியமான ரகசியங்களுள் ஒன்று முருகனே சம்பந்தராக அவதரித்துப் பல அற்புதங்களை நிகழ்த்தினார் என்பதாகும்\nPosted in சமயம். தமிழ்\nTagged அருணகிரி, சம்பந்தர், திருப்புகழ், முருகன்\nஉரையாசிரியர்களில் வல்லவரான நச்சினார்க்கினியரை “உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினியர்” என்றும் தொல்காப்பியம் யாத்த தொல்காப்பியனை “ஒல்காப்புகழ் தொல்காப்பியன்” என்றும் சங்கத் தமிழில் மிக அதிகப் பாடல்களை இயற்றிய பிராமணப் புலவன் கபிலனை “புலன் அழுக்கற்ற (ஜிதேந்திரியன்) அந்தணாளன்”, “வாய்மொழிக் (சத்தியவான்) கபிலன்” என்றும் பாராட்டுவர். நம்மாழ்வாரை “வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபன்” என்றும் அடை மொழி கொடுத்து பாராட்டிப் போற்றுவர். இதில் ஒவ்வொன்றிற்கும் ஒர் காரணம் உண்டு. இதே போல திருப்புகழ் பாடி சந்தக் கவிகளால் பெயர் பெற்ற அருணகிரிநாதருக்கு ஒரு சிறப்புப் பட்டம் உண்டு. “கருணைக்கு அருணகிரி” என்று அவரை பக்தர் உலகமும் தமிழ் உலகமும் போற்றும்.\n“கருணைக்கு அருணகிரி” என்று அவரைப் போற்ற பல காரணங்கள் உண்டு. கந்தனின் கருணையால் அவருக்கு மறு ஜன்மம் கிடைத்தது. கந்தனின் கருணை மழையில் நாம் எல்லோரும் நனைய நமக்கு 1300-க்கும் மேலான திருப்புகழ்களைக் கொடுத்தார். இதையெல்லாம் விட தமிழ்ப் புலவர்களை எல்லாம் தமது அகந்தையால் படாதபாடு படுத்திய வில்லிப்புத்தூராரைத் தண்டிக்க வாய்ப்புக் கிடைத்தும் அவர் மீது கருணை காட்டினார்.\nவில்லிபுத்தூரார் தன்னை மிஞ்சிய தமிழ் அறிவு யாருக்கும் இல்லை என்றார். அப்படி யாராவது தனக்கும் மிஞ்சிய அறிவு படைத்ததாகச் சொன்னால் கவிதைப் போட்டிக்கு வரவேண்டும் என்றும் சவால் விட்டார். அந்தப் போட்டியில் தோற்போரின் காதைக் துறட்டு வைத்து அறுத்தும் விடுவார். பல போலி புலவர்களை நடுநடுங்க வைத்தார். ஒவ்வொரு ஊராகச் சென்று புலவர் என்று பெயர் சொல்லிய எல்லோரையும் வாதுக்கு அழைத்தார்; வம்புக்கும் இழுத்தார்.\nஅருணகிரி புகழ் அறிந்து அவர் வாழ்ந்த திருவண்ணாமலைக்கும் வந்தார். திருப்புகழையும் குறை சொன்னார். இதற்கெல்லாம் ஒரு முடிவு கட்ட வேண்டி, அந்தப் பகுதி மன்னன் பிரபுடதேவன் ஒரு போட்டிக்கு ஏற்பாடு செய்தான். அருணகிரியும், வில்லிப் புத்தூராரும் அதற்கு இசைவு தெரிவித்தனர். எப்போதும் நிபந்தனை போடும் வில்லிக்கு வில்லனாக வந்த அருணகிரியும் ஒரு நிபந்தனை விதித்தார். தன் கையிலும் ஒரு துறட்டியைக் கொடுக்க வேண்டும் என்றும் வில்லி தோற்றால் அவர் காது அறுபடும் என்றும் எச்சரித்தார்.\nஅருணகிரி பாடும் ஒவ்வொரு செய்யுளுக்கும் பொருள் சொல்ல வில்லி ஒப்புக் கொண்டார். முருகன் அருள் பெற்ற அருணகிரி, கந்தர் அந்தாதி என்னும் அற்புதப் பாட்டை எட்டுக்கட்டி ஒவ்வொரு செய்யுளாகச் சொல்லச் சொல்ல போட்டி நீண்டு கொண்டே போனது. ஐம்பத்து நான்கு பாடல்கள் வரை பாடி முடித்த அருணகிரி, ஒரே எழுத்துக்களான கவிதையை எடுத்து வீசினார். இது பொருளற்ற பிதற்றல் என்றும் அப்படிப் பொருள் இருந்தால் அதற்கு அருணகிரியே பொருள் சொல்லட்டும் என்றும் வில்லிப்புத்தூரார் கூறினார்.\nஅபோது அருணகிரி, ‘குமரா’ என்று பெயர் சொல்லி அழைக்க ஒரு பாலகன் அவர் முன்னே வந்தான். அதாவது முருகனே பையன் போல வந்தான். அவனே அக்கவிதைக்கும் பொ��ுள் சொல்லவே வில்லி தனது தோல்வியை ஒப்புக் கொண்டார். ஆயினும் அவரது காதை அறுக்காமல் விட்டு விட்டு அவரிடம் இருந்த துறட்டியையும் வாங்கிக் கொண்டு நீங்களும் நல்ல கவி இயற்றிப் புகழ் பெறலாமே என்று அறிவுரையும் ஆசியும் வழங்கினார்.\nஇதற்குப் பின்னரே வில்லிப்புத்தூரார் மஹாபாரதத்தை தமிழ் வடிவில் தந்து பெயர் பெற்றார். இன்று வரை வில்லி பாரதம் அவர்தம் புகழைப் பரப்புகிறது. அகந்தை அழிந்து அறிவுக் கண் திறக்க உதவிய அருணகிரியை உலகம், “கருணைக்கு அருணகிரி” என்று வாழ்த்தியது.\nஅவர் பாடிய, வில்லியைத் திணறடித்த, பாடல்:\nதிதத்தத்தத் தித்தத் திதிதாதை தாததுத் தித்தத்திதா\nதிதத்தத்தத் தித்த திதித்தித்த தேதுத்து தித்திதத்தா\nதிதத்தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாததத்து\nதிதத்தத்தத் தித்தித்தி தீதீ திதிதுதி தீதொத்ததே\nதிதத்த ததித்த என்னும் தாள வாக்கியங்களை, தன்னுடைய நடனத்தின் மூலம் நிலைபடுத்துகின்ற, உன்னுடைய தந்தையாகிய (தாதை) பரமசிவனும், மறை கிழவோனாகிய (தாத) பிரம்மனும், புள்ளிகள் உடைய படம் விளங்கும், பாம்பாகிய (தத்தி) ஆதிசேசனின், முதுகாகிய இடத்தையும், இருந்த இடத்திலேயே நிலைபெற்று, அலை வீசுகின்ற, சமுத்திரமாகிய (அத்தி) திருப்பாற்கடலையும் (தன்னுடைய வாசத் தலமாகக் கொண்டு), ஆயர்பாடியில் (ததி) தயிர், மிகவும் இனிப்பாக இருக்கிறதே (தித்தித்ததே) என்று சொல்லிக்கோண்டு, அதை மிகவும் வாங்கி உண்ட (திருமால்), போற்றித் (துதித்து) வணங்குகின்ற, பேரின்ப சொரூபியாகிய, மூலப்பொருளே (ஆதி), தந்தங்களை (தத்தத்து) உடைய, யானையாகிய ஐராவதத்தால் (அத்தி) வளர்க்கப்பட்ட, கிளி (தத்தை) போன்ற தேவயானையின்,தாசனே, பல தீமைகள் (திதே துதை) நிறைந்ததும், ரத்தம் மாமிசம் முதலிய சப்த தாதுக்களால் நிரப்பப்பட்டதும், மரணம் பிறப்பு இவைகளோடு கூடியதும், பல ஆபத்துக்கள் நிறைந்ததும் (ஆகிய) எலும்பை மூடி இருக்கும் தோல்பை (இந்த உடம்பு), அக்னியினால் (தீ), தகிக்கப்படும், அந்த (திதி) அந்திம நாளில், உன்னை இவ்வளவு நாட்களாக துதித்து (துதி தீ) வந்த என்னுடைய புத்தி, உன்னிடம் ஐக்கியமாகி விட (தொத்ததே) வேண்டும்.\nPosted in சமயம். தமிழ்\nTagged அருணகிரி, கந்தரந்தாதி, கருணை, வில்லிப்புத்தூரார்\n1).காரைக்கால் அம்மையார் திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகத்தில் தமிழ் இசைக் கருவிகள் பட்டியலை ஒரே பாடலில் அழ��ாகக் கொடுத்திரு க்கிறார்:\n“ துத்தங்கைக் கிள்ளை விளரி தாரம்\nஉழைஇளி ஓசைபண் கெழும பாடிச்\nசச்சரி கொக்கரை தக்கை யோடு\nதகுணிதம் துந்துபி டாளம் வீணை\nமத்தளம் கரடிகை வன்கை மென்றோல்\nதமருகம் குடமுழா மொந்தை வாசித்து\nஅத்தனை விரவினோ டாடும் எங்கள்\nஅப்பன் இடம்திரு வாலங் காடே”\nஇதில் குரல், துத்தம், கைக்கிளை உழை இளி விளரி தாரம் என்பன ஏழு ஸ்வரங்களாகும்.\nசச்சரி,கொக்கரை, தக்கை, தகுணிதம் கரடிகை, வங்கை, மெந்தோல் ,டமருகம், குடமுழா என்பன தோல் கருவிகள். அல்லது தாளம் எழுப்பும் கருவிகள். துந்துபி ஊதும் கருவி.\n2).பத்துப் பாட்டில் ஒன்றான மலைபடு கடாம் என்ற நூலில் கூத்தர் கொண்டு சென்ற வாத்தியங்களின் பட்டியல் வருகிறது:\n“ திண்வார்விசித்த முழவோடு ஆகுளி\nநுண்ணுருக் குற்ற விளங்கடர்ப் பாண்டில்\nமின்னிரும் பீலி அணிதழைக் கோட்டொடு\nகண்ணிடை வகுத்த களிற்றுயிர்த் தூம்பின்\nஇளிப்பயிர் இமிரும் குறும்பரத் தூம்பொடு\nவிளிப்பது கவரும் தீங்குழல் துதைஇ\nநடுவுநின் றிசைக்கும் அரிக்குரல் தட்டை\nகடிகவர்பு ஒலிக்கும் வல்வாய் எல்லரி\nநொடிதரு பாணிய பதலையும் பிறவும்\nகார்க்கோட் பலவின் காய்த்துணர் கடுப்ப\nநேர்சீர் சுருக்கிய காய கலப்பையீர் ( மலைபடு. 1-14)\nஇவ்வரிகளில் முழவு, ஆகுளி, பாண்டில், கோடு, தூம்பு, குழல், தட்டை, எல்லரி, பதலை முதலிய கருவிகளைக் காண்கிறோம்.\nஇசைக் கருவிகளை தமிழர்கள் தோல் கருவி, துளைக் கருவி, நரம்புக் கருவி ,கஞ்சக் கருவி என்று பகுத்து வைத்தனர். குழலும் கோடும் தூம்பும் துளைக் கருவிகள் முழவு, முரசு, பறை, பதலை, துடி போன்றன தோல் கருவிகள். யாழ் என்பது நரம்புக் கருவி. பாண்டில் என்பது கஞ்சக் கருவி. (ஜால்ரா போன்றது).\n3). இப்போது கிடைக்காமல் போன பல இசை நூல்களை உரைகாரர்கள் மேற்கோள் காட்டுவர். அவற்றின் பட்டியல் இதோ:\nஇறையனார் களவியல் உரை: முதுநாரை, முது குருகு.\nஅடியார்க்கு நல்லார் உரை: இசை நுணுக்கம், பெருநாரை, பெருங்குருகு, பஞ்சபாரதீயம், இந்திரகாளியம்\nஅரும்பத உரை ஆசிரியர்: பதினாறு படலம்\nயாப்பருங்கல விருத்தி உரை: வாய்ப்பியம், குலோத்துங்கன் இசை நூல்\n4). சிலப்பதிகார உரையில் அடியார்க்குநல்லார் பேரி யாழ், மகர யாழ் சகோட யாழ் செங்கோட்டு யாழ் ஆகிய பல வகை யாழ்களைக் குறிக்கிறார். இவை முறையே 21, 19, 14, 7 நரம்புகளை உடையன.\n5.)மலைச் சாரல் பகுதியில் தினைப் பயிரைத் திண்ண ஒரு காட்டு யானை வந்தது. அங்குள்ள குறத்தி அழகான குறிஞ்சிப் பண்ணைப் பாடினாள். அதைக் கேட்டு மெய் மறந்து நின்ற யானை பயிரைச் சாப்பிட மறந்து போனதாம்:\nஒலியல் வார் மயிர் உளரினள் கொடிச்சி\nபெருவரை மருங்கில் குறிஞ்சி பாடக்\nகுரலும் கொள்ளாது நிலையினும் பெயராது\nபடாஅப் பைங்கண் பாடுபெற்று ஒய்யென\nமறம்புகல் மழகளிறு உறங்கும் (அகம்.102)\n6).பாலை நிலத்தில் வாழும் கள்வர்கள் அவ்வழியாகச் செல்வோரை வழிமறித்துத் தாக்கிக் கொன்றுவிட்டு பொருள்களை எடுத்துக் கொள்வர். அப்பேர்ப்பட்ட கல் நெஞ்சுடையோரும் பாலைப் பண்ணைக் கேட்டுக் கொலைத் தொழிலை மறந்தனராம்:\nஆறலை கள்வர் படைவிட அருளின்\nமாறு தலை பெயர்க்கும் மறுவின் பாலை (பொருந. 21-22)\n7). புண் பட்ட போர் வீரர்களை பேய்களிடம் இருந்து காப்பாற்ற காஞ்சிப் பண்ணையும், நரியை விரட்ட விளரிப் பண்ணையும் பாடியதாக புறநானூறு கூறுகிறது (பாடல் 281- 291)\n8).தமிழ் மொழியை இசை, இயல், நாடகத் தமிழ் என்று பிரித்து முத்தமிழ் எனப் பெயரிட்டனர். யாழ், பறை, யாழ் பற்றிய நூல் ஆகியவற்றை தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார்.\nதொல்காப்பியர் காலத்தில் துவங்கிய தமிழ் இசை அருணகிரிநாதர் காலத்தில் சிறப்போடுத் திகழ்ந்தது. இதோ திருப்புகழில் இசை:\nதகுட தகுதகு தாதக தந்தத்\nதிகுட திகுதிகு தீதக தொந்தத்\nதடுடு டுடுடுடு டாடக டிங்குட் டியல் தாளம்\nதபலை திமிலைகள் பூரிகை பம்பைக்\nகரடி தமருகம் வீணைகள் பொங்கத்\nதடிய ழனவுக மாருதச் சண்டச் சமரேறி………\nஎன்று சிதம்பரத்தில் பாடியது ஆடல்வல்லானை மனதிற்கொண்டுதான் என்பதைச் சொல்லத் தேவை இல்லை.\n9). வயலூரில் பாடிய திருப்புகழில் நீண்ட தாளத்துக்குப் பின்\nபேரி திமிலை கரடிகை பதலை சலரிதவில்\nதமர முரசுகள் குடமுழவொடு துடி\nசத்தக் கணப் பறைகள் மெத்தத் தொனித்து அதிர\nஎன்று பாடி இசைக் கருவிகளின் ஒலியை எழுப்புகிறார். இன்னும் பல பாடல்களில் இதே போல தாள ஒலிகளுக்குப் பின்னர் அருமையான பொருள் பொதிந்த வரிகளைச் சேர்த்திருக்கிறார்.\nசுமார் 600 ஆண்டுகளுக்கு முன் அருணகிரி காலத்தில் நிலவிய வாத்தியச் சொற்கள் கூட இன்று வழக்கொழிந்துவிட்டன.\n10) பரிபாடல்-12 வையை நதி பற்றிய பாடல்.\nஒத்த குழலின் ஒலி எழ முழவிமிழ்\nமத்தரி தடாரி தண்ணுமை மகுளி ஒத்தளந்து சீர்தூக்கி ஒருவர் பிற்படார்\nஎன்ற வரிகளில் மத்தரி, தடாரி, தண்ணுமை, மக��ளி, முழவு ஆகிய வாத்தியங்களைக் குறிப்பிட்டுள்ளார்.\n11) கொங்கு நாட்டில் ஈரோடு—காங்கயம் பாதையில் அரச்சலூர் என்னும் இடத்தில் மூன்று பழைய கல்வெட்டுகள் உள்ளன. இவற்றின் எழுத்தமைதியைக் கொண்டு இவை இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்று மதிப்பிடுகின்றனர். இதை எழுதியவன் தேவன் சாத்தன் என்று மூன்றாம் கல்வெட்டில் பெயர் உள்ளது. இது ஒரு இசைக் கல்வெட்டு. முதல் இரண்டு கல்வெட்டுகளில் இடமிருந்து வலமாகப் படித்தாலும் மேலிருந்து கீழாகப் படித்தாலும் ஒரே மாதிரி உள்ளதைக் காணலாம். இதோ முதல் கல்வெட்டு:\nத தை தா தை த\nதை தா தே தா தை\nதா தே தை தே தா\nதை தா தே தா தை\nத தை தா தை த\nTagged அருணகிரி, இசைதமிழ், சங்க இலக்கியத்தில் இசை, முத்தமிழ்\nanecdotes Appar ARTICLES Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya crossword Hindu Indra in Tamil Kalidasa Lincoln london swaminathan mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar POSTS proverbs Quotations quotes Rig Veda shakespeare Silappadikaram Tamil Tirukkural Valluvar Valmiki Vedas அப்பர் கங்கை கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலண்டர் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி சுவாமிநாதன் ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பட்டியல் பழமொழி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவன் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2021/05/05023705/Interview-with-District-Secretary-Ma-Subramanian-on.vpf", "date_download": "2021-05-07T02:01:41Z", "digest": "sha1:L56IOZMYHY5DVUJKGUJVOYB23XT6PV2S", "length": 15509, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Interview with District Secretary Ma Subramanian on the action taken against the DMK looter || அம்மா உணவகத்தை சூறையாடிய தி.மு.க.வினர் மீது நடவடிக்கை மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் பேட்டி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் முடிவுகள் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஅம்மா உணவகத்தை சூறையாடிய தி.மு.க.வினர் மீது நடவடிக்கை மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் பேட்டி + \"||\" + Interview with District Secretary Ma Subramanian on the action taken against the DMK looter\nஅம்மா உணவகத்தை சூறையாடிய தி.மு.க.வினர் மீது நடவடிக்கை மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் பேட்டி\nஅம்மா உணவகத்தை சூறையாடிய தி.மு.க.வினர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது��, என்று மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.\nசென்னை முகப்பேர் ஜெ.ஜெ.நகரில் உள்ள அம்மா உணவகத்தில் ஒட்டப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர்கள், ஜெயலலிதா உருவப்படங்கள் ஆகியவற்றை தி.மு.க.வை சேர்ந்த 2 பேர் அடித்து உடைத்து சேதப்படுத்தினர்.\nஅம்மா உணவகத்தில் இருந்த உணவுகளையும், கீழே தள்ளி நாசப்படுத்தினர். இதுதொடர்பான வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் நேற்று வைரலாக பரவியது.\nஏழை-எளியோர் சாப்பிட்டு வந்த அம்மா உணவகத்தில் தி.மு.க.வினர் இதுபோன்ற செயலில் ஈடுபட்டதற்கு கடும் கண்டனங்கள் கிளம்பியது. இந்த செயலில் ஈடுபட்டவர்கள் சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க. 92-வது வட்டத்தை சேர்ந்த நவசுந்தர், சுரேந்திரன் ஆகியோர் என்பது தெரியவந்தது.\nஇதையடுத்து அவர்கள் இருவரையும் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கி தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் நடவடிக்கை எடுத்தார்.\nஇதற்கிடையில் சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-\nஅம்மா உணவகத்தில் தி.மு.க.வை சேர்ந்த இருவர் பிளக்ஸ் பேனரை அகற்றி கீழே சாய்த்தனர். இதையடுத்து உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்தார். அதன்படி அந்த பிளக்ஸ் அங்கேயே மீண்டும் ஒட்டப்பட்டது.\nஅதோடு மட்டுமல்லாமல் அந்த உணவகம் அமைந்திருக்கும் பகுதி போலீசாரிடம், தி.மு.க. பகுதி செயலாளர் மூலம் புகார் மனு தரப்பட்டு இருக்கிறது. இந்த பெயர் பலகைகளை பிரித்தெடுப்பதற்கு காரணமான நவசுந்தர், சுரேந்திரன் ஆகிய 2 பேர் மீதும் சட்டரீதியான நடவடிக்கை எடுங்கள் என்று போலீசாரிடம் எடுத்து சொல்லி, அந்த 2 பேரும் கைது செய்யப்பட்டு போலீஸ் நிலையத்தில் இருக்கிறார்கள். அந்த 2 பேர் மீதும் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 294-பி 420-7, 448 ஆகிய பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.\nஅந்த 2 பேரும் எந்த பொறுப்பிலும் இல்லை என்றாலும், சாதாரண உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நீக்க வேண்டும் என்ற மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப அந்த 2 பேரும் தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார்கள்.\nஇந்தநிலையில் ஒரு சில கட்சிகளை சேர்ந்தவர்கள் ‘தி.மு.க.வினர் அராஜகத்தை தொடங்கிவிட்டார்கள்’ என்று தகவல்களை பரப்பி கொண்டிருக்கிறார்கள். தேர்தலில் வெற்றிபெற்றதை தொடர்ந்து சென்னை மெரினா கடற்கரையில் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டியளிக்கும்போதே, ‘‘எங்களுக்கு வாக்களித்தவர்கள் மகிழ்ச்சி அடையும் வகையிலும், வாக்களிக்காதவர்கள் ஏன் இவர்களுக்கு வாக்களிக்க தவறிவிட்டோம்... என்று மனம் வருந்துகிற வகையிலும் எங்கள் ஆட்சி அமையும்’’, என்று கூறியிருந்தார்.\nஅதன் அடிப்படையில் தான் இந்த தவறை செய்தவர்கள் யாராக இருந்தாலும், சொந்த கட்சியை சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தது, பிரித்தெடுத்த பிளக்சை அதே இடத்தில் ஒட்டியது போன்ற தீவிர நடவடிக்கைகளை மு.க.ஸ்டாலின் மேற்கொள்ள அறிவுறுத்தி இருக்கிறார். இதுவே தி.மு.க. ஆட்சி தொடங்குவதற்கு முன்பாகவே மு.க.ஸ்டாலின் எந்த வகையில் இந்த ஆட்சியை நடத்தி செல்ல இருக்கிறார் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணமாகும்.\nஅம்மா உணவகத்தை தி.மு.க.வினர் சூறையாடிய விவகாரத்துக்கு கண்டனம் தெரிவித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதன் விவரம் வருமாறு:-\nபா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:- “சென்னை முகப்பேரில் உள்ள அம்மா உணவகத்தின் பெயர்ப்பலகை, அங்கு வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா உருவப்படம் ஆகியவற்றை தி.மு.க.வினர் சூறையாடியிருப்பது கண்டிக்கத்தக்கது.\nஅதற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து ஆள்பவர்களின் நிலைப்பாட்டுக்கு ஏற்ப கொள்கை மாற்றங்கள் செய்யப்படுவது இயற்கையே. ஆனால், எது நடந்து விடக்கூடாது என்று மக்கள் அஞ்சினார்களோ அத்தகைய செயல்களில் தி.மு.க.வினர் ஈடுபடுவதை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.”\nதமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகனும் கண்டனம் தெரிவித்துள்ளார்.\n1. தமிழகத்தில் 4 தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி\n2. 6-ந் தேதி முதல் மேலும் புதிய கட்டுப்பாடுகள் காய்கறி, மளிகை, டீக்கடைகளுக்கு பகல் 12 மணி வரை மட்டுமே அனுமதி\n3. பதவியேற்பு எளிமையாக நடைபெறும்.. எம்.எல்.ஏக்களுடன் ஆலோசித்து முடிவு - மு.க.ஸ்டாலின்\n4. 126 தொகுதிகளில் வென்று தி.மு.க. ஆட்சியை பிடித்தது மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சர் ஆகிறார் தி.மு.க. கூட்டணி 158 இடங்களில் வெற்றி\n5. சட்டசபை தேர்தலில் வெற்றி: உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக எம்.பி. கனிமொழி வாழ்த்து\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lawyersuae.com/ta/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2021-05-07T00:58:00Z", "digest": "sha1:IOR2VIT3P2QFVE2VRBJSCRRHJX4WXW2A", "length": 18960, "nlines": 126, "source_domain": "www.lawyersuae.com", "title": "ஒரு வழக்கறிஞரிடமிருந்து சட்ட ஆலோசனை பெற சிறந்த காரணங்கள் | சட்ட நிறுவனங்கள் துபாய்", "raw_content": "\nஐக்கிய அரபு எமிரேட்ஸில் சரியான வழக்கறிஞரைக் கண்டறியவும்\nஐக்கிய அரபு எமிரேட்ஸில் குற்ற வழக்குகளை சரிபார்க்கவும்\nவிமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டார் / பிடிபட்டார்\nஒற்றை வில்ஸ் / பிரதிபலித்த வில்ஸ்\nமோசடி - குற்றவியல் சட்டம்\nதற்செயலான கொலை அல்லது கொலை\nசைக்கிள் அல்லது மோட்டார் சைக்கிள் விபத்து\nவணிகச் சட்டம் / சர்ச்சைகளைத் தீர்ப்பது\nரியல் எஸ்டேட் / சொத்து வழக்குகள்\nஒரு வழக்கறிஞரிடமிருந்து சட்ட ஆலோசனை பெற சிறந்த காரணங்கள்\nநீங்கள் ஏன் ஒரு வழக்கறிஞரிடமிருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸில் சட்ட ஆலோசனையைப் பெற வேண்டும் என்பதை அறிய ஆர்வமாக உள்ளீர்களா ஒரு வழக்கறிஞருடன் பணிபுரியும் வெறுமனே சிந்தனையிலிருந்து பலர் பெரும்பாலும் விலகி இருக்கிறார்கள், ஏனெனில் அவ்வாறு செய்வது தங்கள் பங்கில் பெரும் செலவுகளுக்கு வழிவகுக்கும் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.\nவணிக மோதல்கள், சச்சரவுகள், வழக்குகள், குடும்ப பிரச்சினைகள்\nசட்டரீதியான கவலைகளிலிருந்து உங்களை சிக்க வைக்கவும்\nஎல்லா சட்ட சிக்கல்களுக்கும் ஒரு வழக்கறிஞரின் சேவைகள் தேவைப்படாவிட்டாலும், உங்கள் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதில் இந்த சட்ட வல்லுநர் அல்லது வழக்கறிஞர் முக்கிய பங்கு வகிக்கிறார்.\nஉங்கள் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதில் வழக்கறிஞர் முக்கிய பங்கு வகிக்கிறார்\nதுபாய் அல்லது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஒரு நல்ல வழக்கறிஞரை அல்லது ஒரு வழக்கறிஞரை நியமிப்பது மலிவானது அல்ல என்றாலும், விபத்துக்கள் காயம் கோரிக்கைகள், மருத்துவ முறைகேடுகள், வணிக மோதல்கள், தகராறுகள், வழக்குகள், அவதூறு வழக்குகள் , காப்பீட்டு கோரிக்கைகள், மேல்முறையீடுகள், ஜாமீன், வாடகை தகராறு, விவாகரத்து மற்றும் குழந்தைக் காவல்.\nஒரு வழக��கறிஞரிடமிருந்து துபாயில் சட்ட ஆலோசனையைப் பெறுவதற்கான சரியான காரணங்கள் கீழே உள்ளன:\nஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள சட்டத்திற்கு தொழில்முறை விளக்கம் தேவை.\nநீங்களே ஒரு பயிற்சி பெற்ற வழக்கறிஞராகவோ அல்லது சட்ட ஆலோசகராகவோ இல்லாவிட்டால், நீங்கள் சட்ட விளக்கத்தின் பணியை நிபுணர்களிடம் ஒப்படைத்து, ஒருவரைப் போல செயல்படுவதைத் தவிர்ப்பது நல்லது. சட்ட சிக்கல்களைக் கையாளும் போது மிகவும் அனுபவமுள்ள வழக்கறிஞர்கள் கூட மற்ற வழக்கறிஞர்களின் ஆலோசனையைப் பெறுகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும்.\nஇதற்கிடையில், ஒப்பந்தங்களை உருவாக்கும் போது, ​​ஒரு புதிய வணிக முயற்சியைத் தொடங்கும்போது அல்லது சாத்தியமான சட்டரீதியான தாக்கங்களைக் கொண்ட பிற கவலைகளைக் கையாளும் போது ஐக்கிய அரபு எமிரேட் சட்ட ஆலோசகர்களின் சேவையைத் தேடாதது நீங்கள் இல்லையெனில் தவிர்க்கக்கூடிய ஆபத்துக்களுக்கு வழிவகுக்கும்.\nவக்கீல்கள் சவாலான ஆதாரங்களில் திறமையானவர்கள்.\nஉங்களுக்கு எதிராக சாட்சியங்களை முறையற்ற முறையில் சேகரிக்க அரசு தரப்பு குழுக்கள் வெளியேறும் நேரங்கள் உள்ளன. ஒரு குறிப்பிட்டவரின் சாட்சி சாட்சியம் முன்னர் அளித்த அறிக்கைக்கு முரணாக இருக்கலாம். உங்கள் வழக்கறிஞரின் சட்ட நிபுணத்துவம் அவர் அல்லது அவள் சான்றுகள் வழியாக சென்று அதன் நம்பகத்தன்மையை சரிபார்க்க முடியும் என்பதால் இதுதான்.\nநீங்கள் ஒரு வழக்கறிஞரின் சட்ட ஆலோசனையைப் பெற்றால் அதிக பணத்தைச் சேமிக்கலாம்.\nசிவில் வழக்குகள் உங்கள் நிதிகளை பாதிக்கக்கூடும் அல்லது அதிக பணம் சம்பாதிக்க உதவும். ஒரு அனுபவமிக்க வழக்கறிஞரை பணியமர்த்துவதன் மூலம், உங்கள் வழக்கை விவாகரத்து தீர்வு, காப்பீட்டு உரிமைகோரல், விபத்து உரிமைகோரல்கள், மருத்துவ முறைகேடுகள் அல்லது அவதூறு போன்றவற்றில் நீங்கள் வெல்வீர்கள் என்று உறுதியாக நம்பலாம். மேலும், இந்த வழக்கில் வெற்றி பெறாவிட்டால் பல சிவில் வழக்கறிஞர்கள் கட்டணம் வசூலிக்க மாட்டார்கள் என்பதை அறிவது நல்லது.\nசட்ட வட்டத்திற்குள் உள்ள முக்கியமான நபர்களை அறிந்து கொள்ளுங்கள்.\nநிபுணர் சாட்சிகள் மற்றும் தனியார் துப்பறியும் நபர்கள் உட்பட முறையான சட்ட ஆலோசனையுடன் உங்கள் வழக்கில் உங்களுக்கு உதவக்கூடிய சட்டத் துறையில் நிபுணர்களின் விரிவான வலையமைப்பிற்காக வழக்கறிஞர்கள் அறியப்படுகிறார்கள். அவர்கள் இந்த மக்களுடன் ஒரு நிலையான அடிப்படையில் தொடர்புகொண்டு வேலை செய்கிறார்கள். உங்கள் சட்டப் போரில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள் என்பதை உறுதிப்படுத்த அவர்கள் 24/7 வேலை செய்யலாம்.\nவக்கீல்கள் அனைத்து சட்ட நடைமுறைகளையும் சரியான வழியில் கையாள முடியும்.\nசட்டத் துறையில் உங்களுக்கு பயிற்சி இல்லை என்றால், சட்ட ஆவணங்களை எவ்வாறு தாக்கல் செய்வது என்பது குறித்த தேவையான நடைமுறைகளைப் பின்பற்றுவதில் சிரமங்களை நீங்கள் சந்திக்க நேரிடும். பல நிமிடங்கள் தாமதமாக இருப்பது அல்லது தவறாக தாக்கல் செய்வது வழக்கைத் தடம் புரண்டது மற்றும் அது முற்றிலும் தோல்வியடையும்.\nநீங்கள் ஒரு வழக்கறிஞரின் சட்ட ஆலோசனையைப் பெற சில காரணங்கள் இவை. நல்ல செய்தி என்னவென்றால், பல ஐக்கிய அரபு எமிரேட் வழக்கறிஞர்கள் ஒரு ஆரம்ப சட்ட ஆலோசனையை இலவசமாக வழங்குகிறார்கள், எனவே ஒருவரிடம் பேசுவது வலிக்காது.\nஉங்களை, குடும்பம், நண்பர்கள், சக ஊழியர்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்\nஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளூர் சட்டங்கள்\nஐக்கிய அரபு அமீரக நீதிமன்றங்கள்\nஅவசர தொடர்புகள் ஐக்கிய அரபு அமீரகம்\nவிசா விதிகள் மற்றும் சட்டங்கள்\nஉள்ளூர் ஐக்கிய அரபு எமிரேட் வழக்கறிஞர்கள்\nஎங்கள் வழக்கறிஞர்கள் மற்றும் வழக்குரைஞர்கள் மேற்கு மற்றும் பிராந்திய ரீதியில் படித்தவர்கள் மற்றும் பல்வேறு நாடுகளிலும் மத்திய கிழக்கு அதிகார வரம்புகளிலும் பயிற்சி பெற்றவர்கள். எங்கள் சேவைகள் குறித்து உங்களுக்கு கேள்விகள் உள்ளதா தயவுசெய்து எங்களை தொடர்பு கொள்ளவும்.\nபிசினஸ் பே, துபாய், ஐக்கிய அரபு எமிரேட்ஸ்\nபதிப்புரிமை © 2021 சட்ட நிறுவனங்கள் துபாய் | இயக்கப்படுகிறது காப்பர் கம்யூனிகேஷன்ஸ்\nநிபந்தனைகள் | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinibitz.com/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2021-05-07T00:00:51Z", "digest": "sha1:RMTUSWX6HIQT7OX6XVDKKCFNVK5PZ37N", "length": 10206, "nlines": 63, "source_domain": "www.tamilcinibitz.com", "title": "டெல்லி கொரோனா வைரஸ் வழக்குகள்: இன்று 18 நவம்பர் 131 கொரோனா வைரஸ் மற்றும் 7486 புதிய வழக்குகளுடன் மக்கள் இறக்கின்றனர்", "raw_content": "முழுமையான செய்தி உலகம் உங்களுக��காக.\nடெல்லி கொரோனா வைரஸ் வழக்குகள்: இன்று 18 நவம்பர் 131 கொரோனா வைரஸ் மற்றும் 7486 புதிய வழக்குகளுடன் மக்கள் இறக்கின்றனர்\nபுதன்கிழமை, தலைநகர் டெல்லியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 131 பேர் ஒரே நாளில் இறந்தனர். இதுவரை ஒரே நாளில் அதிக கொரோனா நோயாளிகள் வாழ்ந்த பதிவு இதுவாகும். புதன்கிழமை, 7486 புதிய கொரோனா நோயாளிகள் உறுதி செய்யப்பட்டுள்ளனர். புதிய நோயாளிகளுடன், டெல்லியில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியுள்ளது. டெல்லியில் கடந்த சில நாட்களில் ஏராளமான நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.\nமுன்னதாக டெல்லியில், செவ்வாய்க்கிழமை தொற்று காரணமாக 99 நோயாளிகள் இறந்தனர். புதன்கிழமை, 12.03% கொரோனாக்கள் 62232 மாதிரிகள் பாதிக்கப்பட்டுள்ளன. தொற்று விகிதம் 12 சதவீதமாக இருப்பது குறித்து நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இருப்பினும், நிவாரண செய்தி என்னவென்றால், கடந்த ஒரு நாளில் 6901 நோயாளிகளும் வெளியேற்றப்பட்டனர். இதன் மூலம், டெல்லியில் மொத்தம் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 503084 ஐ எட்டியுள்ளது, இதில் 452683 2 நோயாளிகள் குணமாகியுள்ளனர், 7943 பேர் இறந்துள்ளனர்.\nகொரோனா வைரஸ் தொற்று விகிதம் இதுவரை டெல்லியில் 9 சதவீதமாக அதிகரித்துள்ளது. சுகாதாரத் துறையின் கூற்றுப்படி, தலைநகரில் 42,458 செயலில் உள்ள நோயாளிகள் உள்ளனர், அவர்களில் 24,842 நோயாளிகள் தங்கள் வீடுகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 9343 நோயாளிகள் மருத்துவமனைகளில் உள்ளனர். டெல்லியில் இதுவரை 5590654 மாதிரிகள் விசாரிக்கப்பட்டுள்ளன. 10 லட்சம் மக்கள் தொகையில் 294244 பேர் திரையிடப்பட்டுள்ளனர். இதன் மூலம் டெல்லியில் கட்டுப்பாட்டு மண்டலங்களின் எண்ணிக்கை 4444 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் இறப்பு ஆரம்பத்தில் இருந்து டெல்லியில் 1.58 சதவீதமாக பதிவாகியுள்ளது, கடந்த 10 நாட்களில் இறப்பு விகிதம் 1.48 சதவீதமாக உள்ளது.\nபாப் கலாச்சாரம் டிரெயில்ப்ளேஸர். சிந்தனையாளர். சிக்கல் செய்பவர். இசை குரு. சமூக ஊடக நிபுணர். மாணவர். ஜாம்பி நிபுணர்.\nREAD திலிப் சாப்ரியா மோசடி: திலீப் சாப்ரியாவால் சாத்தியமான நிதி மோசடிகளை சரிபார்க்க மும்பை போலீசார்: திலிப் சாப்ரியா மோசடிகளை மும்பை போலீசார் விசாரிப்பார்கள்\nபீகார் ரிசல்ட் லைவ் பீகார் தேர்தல் முடிவுகள் 2020 இன்று 243 தொகுதிகளிலும் பிஹார் சுனாவில் பிஜேப��� ஜ்து மகாகத்பந்தன் காங்கிரஸின் இருக்கை முடிவு தெரியும்\nபீகாரில் 2020 விதான் சபா தேர்தலுக்காக ஈ.வி.எம்மில் பூட்டப்பட்ட 3733 வேட்பாளர்களின் தலைவிதி இன்று முடிவு...\nராகுல் காந்தி ஜனவரி 23 ஆம் தேதி தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு பிரச்சாரத்தை தொடங்கவுள்ளார்\nநான் பகிரங்கமாக பேச நிர்பந்திக்கப்படுகிறேன்: பீகாரில் காங்கிரஸின் கடுமையான தோல்வி குறித்து கபில் சிபல் கூறினார் – நான் பகிரங்கமாக பேச நிர்பந்திக்கப்படுகிறேன்: பீகாரில் காங்கிரஸின் கடுமையான தோல்வியின் பின்னர் சிபல் கூறினார்\nபதட்டம் புகார் எழுந்து சவுரவ் கங்குலி மருத்துவமனைக்கு விரைந்தார்\nPrevious articleஃபைசர் மாடர்னா: கொரோனா வைரஸ் தடுப்பூசி புதுப்பிப்பு | யுஎஸ்ஏ மாடர்னா ஃபைசர் கொரோனா தடுப்பூசி 94.5% பயனுள்ளதாக இருக்கும்; நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது எல்லாம் | ஃபைசரின் கொரோனா தடுப்பூசி இறுதி சோதனை 95% வரை பயனுள்ளதாக இருக்கும், இந்த ஆண்டு 5 கோடி அளவுகளை தயாரிக்க தயாராகிறது\nNext articleஸ்ரீநகர் நெடுஞ்சாலை நான்கு பயங்கரவாதிகள் நடுநிலையானவர்கள் – ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் 4 ஜெய்ஷ் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று சந்தேகிக்கப்படும் பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு இடையே என்கவுன்டர் வெடித்தது.\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஜோ பிடன் உறுதிமொழி விழா: ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் உலக செய்திகளை விட வாஷிங்டன் டி.சி.யில் அதிகமான அமெரிக்க துருப்புக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/85349", "date_download": "2021-05-07T02:03:34Z", "digest": "sha1:JPZG5JOLS6SMSN7IWOYV6FNOROJGOZUM", "length": 15359, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "20,240 வியாபாரங்களை மேம்படுத்த 53 பில்லியன் ஒதுக்கீடு - இலங்கை மத்திய வங்கி | Virakesari.lk", "raw_content": "\n4 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு\nநாட்டில் மேலும் 12 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்\nதூரநோக்குடனான திட்டமிடலின்றி நாடு நெருக்கடிக்குள் சிக்கி விட்டது - ரணில் கவலை\nநாளொன்றுக்கு 2 ஆயிரத்தை விட அதிக தொற்றாளர்கள் இனங்காணப்படலாம் : எச்சரிக்கிறது தொற்று நோயியல் பிரிவு\nபிழையான எண்ணங்களை மக்கள் மயப்படுத்த எதிக்கட்சி முயற்சி - ம��ுர விதானகே\n4 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு\nநாட்டில் மேலும் 12 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்\nஜம்மு-காஷ்மீரில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை\nகொரோனாவால் இலங்கையில் கர்ப்பிணித் தாய் பலி\n20,240 வியாபாரங்களை மேம்படுத்த 53 பில்லியன் ஒதுக்கீடு - இலங்கை மத்திய வங்கி\n20,240 வியாபாரங்களை மேம்படுத்த 53 பில்லியன் ஒதுக்கீடு - இலங்கை மத்திய வங்கி\nகொரோனா வைரஸ் பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட 20,240 வியாபாரங்களுக்கு சௌபாக்யா கொவிட் - 19 மறுமலர்ச்சிக்கடன் திட்டத்தின் கீழான உதவிகளை வழங்குவதற்கு 53 பில்லியன் ரூபாவை மத்திய வங்கி ஒதுக்கீடு செய்திருக்கிறது.\nகொவிட் - 19 கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து நாட்டின் பொருளாதாரம் பாரிய நெருக்கடிக்கு உள்ளானது. இந்நிலையில் வணிகங்கள் மற்றும் சிறிய, நடுத்தரளவு முயற்சியாளர்களுக்கு உதவும் வகையில் மத்திய வங்கியினால் புதிய கடன் வழங்கல் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.\nஅதன்படி அரசாங்கத்தின் ஆலோசனையுடன் மத்திய வங்கி கொவிட் - 19 நோய்த்தொற்றின் மூலம் மோசமாகப் பாதிக்கப்பட்ட வியாபாரங்களுக்கு உரிமம்பெற்ற வங்கிகள் ஊடாக 4 சதவீத வட்டியில் தொழிற்பாட்டு மூலதனத்தினை வழங்குவதற்காக சௌபாக்யா கொவிட் - 19 மறுமலர்ச்சிக்கடன் திட்டத்தினை அறிமுகப்படுத்தியிருக்கிறது.\nஇது நாட்டின் பொருளாதார நடவடிக்கைகள் புத்துயிர் பெறுவதற்கு வாய்ப்பேற்படுத்தும் என்று மத்திய வங்கி தெரிவித்திருக்கிறது.\nஇக்கடன் திட்டமானது சுயதொழில் மற்றும் தனிப்பட்டவர்கள் உள்ளடங்கலாக ஒரு பில்லியன் ரூபாவிற்குக் குறைவான வருடாந்தப் புரள்வைக் கொண்ட, கொவிட் - 19 இனால் பாதிக்கப்பட்ட வியாபாரங்களுக்கு வழங்கப்படவிருக்கிறது.\nஅதன்படி 20,240 வியாபாரங்கள் இக்கடனைப் பெறும் என்பதுடன், அதற்காக 53 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது.\nஇந்த ஒரு பில்லியன் ரூபா வருடாந்தப் புரள்வு மட்டுப்பாடு சுற்றுலா, ஏற்றுமதிகள் மற்றும் தொடர்புபட்ட ஏற்பாட்டுச்சேவை வழங்குதல் போன்றவற்றில் ஈடுபட்டுள்ள வியாபாரங்களுக்கு ஏற்புடையதாகாது என்றும் மத்திய வங்கி அறிவித்திருக்கிறது.\n4 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு\nஅவ்வாறு தனிமைப்படுத்தப்பட்ட பல பகுதிகளின் 4 கிராம சேவகர��� பிரிவுகள் இன்று விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.\n2021-05-07 07:26:56 தனிமைப்படுத்தல் கொரோனா களுத்துறை\nநாட்டில் மேலும் 12 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்\nநாட்டில் கொரோனா அச்சுறுத்தலையடுத்து கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மாவட்டங்களின் 12 கிராம சேவகர் பிரிவுகள் இன்று காலை 6 மணிமுதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜென்ரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.\n2021-05-07 07:17:30 தனிமைப்படுத்தல் கொரோனா இராணுவத்தளபதி\nதூரநோக்குடனான திட்டமிடலின்றி நாடு நெருக்கடிக்குள் சிக்கி விட்டது - ரணில் கவலை\nகொவிட் வைரஸ் தொற்று 2 ஆம் அலை ஏற்பட்ட போது போதிய தடுப்பூசிகளை கொள்வனவு செய்திருந்தால் அச்சம் கொள்ள வேண்டியதில்லை. அல்லது தடுப்பூசி கிடைக்காவிடின் அடுத்த கட்ட சிகிச்சைகளுக்கான இயற்கை சுவாசக் கருவிகள் , அவசர சிகிச்சை பிரிவு கட்டில்கள் மற்றும் ஒக்சிஜன் போன்றவற்றை பெற்றுக்கொண்டிருந்தாலும் ஏற்பட கூடிய உயிரிழப்புகளை தடுத்திருக்கலாம். ஆனால் அரசாங்கத்தின் தூரநோக்குடனான திட்டமிடலின்றி நாடு நெருக்கடிக்குள் சிக்கி விட்டது என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.\n2021-05-07 07:01:30 தூரநோக்கு திட்டமிடல் நாடு\nநாளொன்றுக்கு 2 ஆயிரத்தை விட அதிக தொற்றாளர்கள் இனங்காணப்படலாம் : எச்சரிக்கிறது தொற்று நோயியல் பிரிவு\nநாட்டில் நாளொன்றில் இனங்காணப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கை எதிர்வரும் நாட்களில் 2000 ஐ விட அதிகரிக்கக் கூடும் என்று சுகாதார தரப்பினர் எச்சரித்துள்ளனர். தற்போது நாடளாவிய அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றமையால் மாவட்டங்களிலுள் வைத்தியசாலைகளிலும் கொவிட் தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான பிரிவுகளை பிரத்தியேகமாக ஒதுக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதே வேளை மேல் மாகாணத்தில் மாத்திரம் நாளொன்றுக்கு சுமார் 1200 தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றனர்.\n2021-05-06 22:40:35 2000 தொற்றாளர்கள் இனங்காணல் எச்சரிக்கை\nபிழையான எண்ணங்களை மக்கள் மயப்படுத்த எதிக்கட்சி முயற்சி - மதுர விதானகே\nகொவிட்-19 வைரஸ் பரவல் காரணமாக பாதிப்படைந்துள்ள மக்களை காப்பாற்றுவதுடன் , வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கு அரசாங்கம் முயற்சிகளை எடுத்து வரும் நிலையில், எதிர்தரப்பினர் தங்களுக்கு கிடைக்கப் பெற்றுள்ள பாராளுமன்ற உறுப்புரிமையை பயன்படுத்தி பிழையான எண்ணங்களை மக்கள் மயப்படுத்த முயற்சித்து வருவதாக ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே குற்றஞ்சாட்டினார்.\n2021-05-06 22:36:58 பிழையான எண்ணங்கள் மக்கள் மயப்படுத்தல் எதிக்கட்சி\n4 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு\nநாட்டில் மேலும் 12 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்\nதூரநோக்குடனான திட்டமிடலின்றி நாடு நெருக்கடிக்குள் சிக்கி விட்டது - ரணில் கவலை\nஇலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து மேலும் 810 பேர் குணமடைவு..\nபணவீக்கம் ஏப்ரலில் 3.9 சதவீதமாக வீழ்ச்சி: இலங்கை மத்திய வங்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://abedheen.wordpress.com/category/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-05-07T00:49:23Z", "digest": "sha1:4X6IZ3WO7QLMEDK23MPQHNVFHWLP352M", "length": 72801, "nlines": 682, "source_domain": "abedheen.wordpress.com", "title": "புத்தகம் | ஆபிதீன் பக்கங்கள்", "raw_content": "\nகனவுக்குள் கனவு – ஆபிபாய் விமர்சனம்\n14/12/2020 இல் 12:00\t(ஆபிதீன், கனவுக்குள் கனவு, நூருல் அமீன்)\nஃபேஸ்புக்கில் முந்தாநாள் எழுதியது. பகிர்கிறேன். கனவிலாவது வாசியுங்கள். நன்றி. – AB\n’.. என்னுடைய ’கனவுக்குள் கனவு’ சூஃபிஸ நாவலை இதுவரை படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன், ஏன் அதுபற்றி முகநூலில் நீங்கள் எழுதவில்லை’ – மெஸ்ஸெஞ்சரில் மிரட்டியிருந்தார் பிரியத்திற்குரிய நூருல் அமீன் ஃபைஜி.\nஉயிர் நண்பரான மர்ஹூம் தாஜ் எழுதிய ‘தங்ஙல் அமீர்’ புத்தகம் உள்பட எதற்குமே விமர்சனம் நான் எழுதியதில்லை. எழுத்தாளனா நான் அப்படியெல்லாம் எழுதவும் வராது. ஏன் அனுப்பிவைத்தார் அப்படியெல்லாம் எழுதவும் வராது. ஏன் அனுப்பிவைத்தார் தெரியவில்லை. ‘சூப் விரும்பிகளின் புனைபெயர்தான் சூஃபி’ என்று ஏதோ ஒரு கதையில் எழுதியதாலா தெரியவில்லை. ‘சூப் விரும்பிகளின் புனைபெயர்தான் சூஃபி’ என்று ஏதோ ஒரு கதையில் எழுதியதாலா இருக்கலாம். அதெல்லாம் என் கிறுக்கல்கள் அமீன். சூஃபிஸத்தைக் கரைத்து ஊற்றும் பேராசிரியர்கள் நாகூர் ரூமி – ரமீஸ் பிலாலி , கவிஞர் ஹைமா ஹாத்துன், மன்னிக்கவும், நிஷா மன்சூர் போன்றவர்களே இந்த நூலைப் பாராட்டிய பிறகு நானும் எதற்கு\nஇருந்தாலும் கொஞ்சம் சொல்ல முயற்சிக்கிறேன் தயவுசெய்து அமீன்பாய் கோபிக்கக் கூடாது. நாவல் நன்றாக வந்திருக்கிறது\nதமிழின் நல்ல நாவல்கள் எதையுமே படிக்காமல், ‘இது பின்நவீனத்துவ முறையில்’ வந்திருக்கிறதென்று ஒருவர் சொன்னபோது சிரிப்பாக இருந்தது. எந்த முறையோ, இந்த நாவல் படிக்க சுவாரஸ்யமாக இருந்தது எனக்கு – ’லா இலாஹா இல்லல்லாஹ்’வுக்கு விளக்கம் என்று உலூஹிய்யத், உஜூது, சிஃபாத், அஃஆல், ஆஸார் என்று விரியும் பக்கங்களையும், தக்வா – தவக்கல் – கியால் – தஜல்லி என்று விளக்கும் பக்கங்களையும் தவிர. ‘அஃப்யானே தாபிதா’வும் அப்படித்தான். ஆழ்ந்து சிந்தித்தல் என்று பொருள்படும் முராக்கபாவையும் அகவிழிப்பு எனும் முஷாஹதாவும் இங்கே சேர்த்துக்கொள்ளலாம் (இதில் ஐம்பது பக்கங்கள் போய்விடும்\nதெரியாமல் கேட்கிறேன், இது நாவலா அல்லது ’ஏகத்துவ இறைஞானம்’ இரண்டாம் பாகமா\nபடிக்கிற முஸ்லிம்கள் பரவசப்படலாம். மற்றவர்கள் பயந்து ஓடிவிடுவார்களே…\nஇவர் நேரில் கண்ட ஹஜ்ரத்தை விட தான் காண விரும்பிய ஹஜ்ரத்தை காட்டியிருக்கிறார் என்பதும் என் அபிப்ராயம்.. William Chittic – Annemarie Schimmel – ஜே. கிருஷ்ணமூர்த்தி – விவேகானந்தர் ஓஷோ நூல்கள் , கிரேக்க ஞானி Epictetus சொல்வது , மேக்ஸ்வெல் மால்ட்ஸ்-ன் Self Image Pshychology , எமிலி கூ பிரபலப்படுத்திய Auto Suggestion பயிற்சி , குர்ஆனை ஜப்பான் மொழியில் மொழிபெயர்த்த Toshihiko Izutsu எழுதிய Sufism and Taoism புத்தகம், Ontology எனும் கடலில் கால் வைத்தல் , பிரம்மத்தின் தரிசனம் பற்றி சுஜாதா எழுதிய வாசகங்கள் , இப்னு அரபி பற்றி பேசும் Claude Addas , Inception படம் பார்த்த Oludamini Ogunnaike, ‘இல்முல் கியால்’ பற்றி விளக்கும் Hendry Corbins, அல்லாமா இக்பாலின் கவிதை என்று சகலமும் தெரிந்த – பிறர் மனதில் உள்ளதை விளங்கிக் கொள்ளும் கஷ்ஃபுடைய – ஹஜ்ரத்…\nதுபாய் மால்-ல் உள்ள Kinokuniya புத்தகக் கடலை மொய்க்கும் அமீன்தான் இது – பார்ப்பதற்கு இவர் பாலகுமாரன் போல இல்லாவிட்டாலும்.\nநூர் (ஒளி) பற்றி விளக்கும் பாடத்தில், பிரபஞ்சம் என்பதே அவன் பேரழகை வெளிப்படுத்தும் சினிமாதான் என்று அற்புதமாகச் சொல்கிறார்கள் ஹஜ்ரத்.\nஇடையிடையே மெய்ஞானியர்களின் மேன்மையான மேற்கோள்கள் , அவர்கள் சொல்லும் அருமையான கதைகள்… நிதானமாக வாசிக்க நமக்கு வருடங்கள் வேண்டும். ஆனால், இவ்வளவு தகவல்கள் ஒரு நாவலுக்குத் தேவையா\nசில விசயங்கள் தேவைதான். கழுத்துக்குக் கீழே டை போல – பெண்களின் சடை பின்னல் போல – அமீரக அரபிகள் அணியும் தர்பூஷுக்கு காரணம் இவர் சொல்லித்தான் தெரிந்தது . அந்தக் காலத்தில் அரபிகள் முத்துக்குளிப்புக்கு சென்றால் திரும்பிவர பல மாதங்கள் ஆகுமாம். அதற்காக, தர்பூஷை அத்தர் பாட்டிலில் நனைத்து இவர்களின் மனைவிமார்கள் கொடுப்பார்களாம். நினைப்பு வந்தால் மோந்துக்கோ. நான் ஏதோ இழுத்து நாலு சாத்து சாத்துவதற்கு என்று நினைத்துக்கொண்டிருந்தேன்\nஅரேபிய நாட்டுப்புறக் கதைகளில் வரும் ஜூஹா என்ற நகைச்சுவைப் பாத்திரம்தான் செர்வாண்டஸின் டான் குயிக்ஸோட்டுக்கு Inspiration என்பதும் அமீன் தரும் அபூர்வ தகவல்தான்.\nஎன்னடா இது, வசதியானவர்களின் ஆன்மிகச் சிந்தனைகளை அறியவிரும்புபவர்கள் வாசிக்க வேண்டிய நாவல் போல இருக்கிறதே.. பாவப்பட்ட லட்சக்கணக்கானவர்கள் பற்றி இவர் லட்சியமே செய்யலையே என்று யோசித்துக்கொண்டே படிக்கும்போது ஹஜ்ரத்தின் முரீதுகள் (சீடர்கள்) ஜலாலும் பஷீரும் வந்தார்கள். வெறும் 600 திர்ஹம் சம்பளம் வாங்கிக்கொண்டு, கடும் வெயிலில் கட்டிடப்பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள். தங்குமிடத்தில் ஏசியும் கிடையாது. ஆனால் முகங்களில் வாட்டமில்லை. வேலை கஷ்டமா இருக்கா என்று கேட்டால் ஊரில் வேலை இல்லாமல் எவ்வளவோ பேர் இருக்காங்களே.. இந்த வேலையாச்சும் கொடுத்த இறைவனுக்கு நன்றி ஹஜ்ரத் என்று சொல்கிறார்கள். என்ன ஆச்சரியம், இப்போது சௌதியில் மாதம் 5000 ரியாலுக்கு மேல் சூப்பர்வைசர்களாக இருக்கிறார்கள். இதற்காகவே மூதேவிகள் நாமும் மூரிதுகளாக மாறலாம்\n”மாப்புள, ரெண்டு வருசத்துக்கு ஒரு தடவை ஊர். மீதி நாளெல்லாம் துபாய்லன்னு வாழ்க்கை பத்து வருசமாப் போவுது. இப்பவே எனக்கு 40 ஆவுதுடா. இன்னும் பத்து இளமையான வருசம் கழிச்சி ஊருக்கு கொஞ்சம் காசோட போயி என்னாத்த கிழிக்கப் போறேன்னு தெரியலே’ என்று சொல்லும் ஆசிக்கும் இருக்கிறான். நம்ம ஆள். ஒன்னு தெரியுமா ஆசிக், நான் கிட்டத்தட்ட முப்பது வருடங்களாக இருக்கிறேன். கையில் ஒரு பைசா கிடையாது. இருப்பதெல்லாம் அவமானங்களும் துயரங்களும்தான். அல்லாஹ்வின் நாட்டம் போலும். Accept the inevitable\nஇப்படியே போனா எப்படிங்னி என்று என்மேல் அக்கறை கொண்ட நண்பர் நாகூர் ரூமி கவலையோடு ஊரில் கேட்டார். அப்டியே போயிடவேண்டியதுதான் என்றேன்.\n‘ஏதேது செய்திடுவோ பாவி விதி ஏதேது செய்திடுமோ\nஏதேது செய்து எனை மோசஞ் செய்யுமோ’\nமனைவி ஷஹீதாவை ஊருக்கு அனுப்பிவிட்டு தன் ‘தேவையை’ தலவாணியில் தீர்த்துக்கொள்ளும் ஆஷிக், தேவை பற்றி ஹஜ்ரத் சொன்னதாக வரும் அழகிய பகுதி இது :\n“எப்ப நம்ம தேவை நிறைவேறும் போது அல்லா தான் நெறைவேத்துறான்னு பாக்கலயோ,அப்ப நாம தேவையுடையவர்கள். அல்லாஹ் தேவையை நிறைவேத்துறவங்கிற உணர்வு அந்த நேரத்துல நம்மல வுட்டு போயிடுச்சு. எப்பவாச்சும், ஏதாச்சும் கிடைக்கும் போது அல்லாஹ் தந்தான்னு நன்றி சொல்றவங்களுக்கு நாகூர் ஹனிஃபா பாடுவாஹல்ல “தேடும் நேயர் நெஞ்சங்களில் குடியிருப்பவன் தேடாத மனிதருக்கும் உணவளிப்பவன்”னு, அப்புடி தேட மனிதருக்கு அல்லாட கருணைல கிடைக்கிதுல்ல, அந்தளவு பங்கு தான் கிடைக்கும். ஒவ்வொரு தேவையிலும் ஹக்கை முன்னோக்கி கேட்பவர்களுக்கு அல்லாஹ் தன் நேசர்கள் எனும் அவுலியாக்கு கொடுக்கிற மாதிரி விசேஷ கருணயோடு வழங்குவான். ‘ரிஜ்குன் கறீம்’னு சொல்ற சங்கை மிகுந்த வாழ்வாதாரங்கள கொடுத்து கண்ணியப் படுத்துவான். அவனுடைய வாழ்க்கையே ‘ஹயாத்தன் தய்யிபா’வான மணமிக்க வாழ்க்கையாகிடும்”னு சொல்லி, “இது ஷெய்கு எனக்குச் சொல்லிக் கொடுத்தது. அத நான் புடிச்சுகிட்டேன் அதுல வந்தது தான் இந்த செல்வச் செழிப்பான வாழ்க்கை. நீங்களும் இத புடிச்சுக்கங்க. இது தான் அடிப்படை. மத்த பாடம்லாம் அப்படி தேவைய நிறைவேத்துற ஹக்கை நீங்க உங்க கூட இருக்கிறவனா இன்னும் எல்லா சிருஷ்டிகள் கூடவும் இருக்கிறவனா விளங்கனுங்கிறதுக்காகத் தான், விதவிதமா சொல்றேன்”\nதேவை பற்றி அன்பில் முஹம்மதுவின் கேள்வியோ இப்படி இருக்கிறது : எந்த யானை எல்கேஜியில் ஆரம்பித்து இருபது வருடங்கள் புத்தகங்களை தூக்கி சுமந்துச்சு எந்த எறும்பு எம்பிளாய்மெண்ட் எக்ஸ்சேஞ்சில் கால்கடுக்க நிண்டுச்சு\nஇப்னுல் அரபி (ரலி) அவர்களின் கவிதை வரிகளை இங்கே சேர்ப்போம்:\nஃபஹூவ ஹக்குன் ஃபில் ஹகீக்கா\n புத்தகம் வாங்கிப் படியுங்கள். அழகான தமிழ் மொழிபெயர்ப்பு உண்டு.\nதிடீரென்று, கிருத்துவப் பள்ளியில் ஒரு பையன் பாடும்\n‘என் திரு யாழிசை இறைவா\nஉன் பண் தரு மருந்துண்டேன்\nஎன்னையும் ஓர் சிறு நரம்பெனவே\nநீர் இசைத்திட வேண்டும் இசையரசே’\nபாட்டு நாவலுக்கு பெருமை சேர்க்கிறது.\nநியாஸின் சபராளி வாப்பாதான் நிஜமாகவே என்னைக் கலங்க வைத்தார். ’ஏன் புள்ளைய அடிச்சி வளர்க்க மாட்டேங்குறீங்க’ என்று உம்மா கேட்கும்போது ‘நானே சீசனுக்கு சீசன் வரும் பொன்னாந்தட்டான் பறவை மாதிரி வருசத்துக்கு ஒரு தரம் ஒரு மாசம் வர்றேன். இதுல என்ன கண்டிக்கிறது’ என்று உம்மா கேட்கும்போது ‘நானே சீசனுக்கு சீசன் வரும் பொன்னாந்தட்டான் பறவை மாதிரி வருசத்துக்கு ஒரு தரம் ஒரு மாசம் வர்றேன். இதுல என்ன கண்டிக்கிறது அவன் சிறப்பாக்கி வைன்னு அல்லாஹ்ட்ட அழுது கேக்குறேன்மா’ என்கிறார். நாலைந்து வருடங்களுக்கொரு முறை மலேயாவிலிருந்து வந்த என் சீதேவி வாப்பாவின் குரல்…\nநாவலின் தலைப்பான ‘கனவுக்குள் கனவு’ மிகவும் பிடித்தது (யாரோ ஒருவன் விழித்திருக்கும்போது கண்ட கனவு நான் என்று கௌஸி ஷாஹ் (ரலி) சொன்ன மேற்கோளுடன் அத்தியாயம் நான்கு தொடங்குகிறது.). தலைப்பு பிடித்திருப்பதற்கு காரணம். என் மகன் நதீம். சோறு உண்ணும்போது கறியை தனியே சாப்பிடாமல் சோற்றின் உள்ளேயே வைத்து அமுக்கி சாப்பிடுவான். கேட்டால் ‘உணவுக்குள் உணவு வாப்பா’ என்பான். இதற்காகவே என் நினைவில் என்றும் இந்த நூல் இருக்கும்.\nஆதவனின் அங்கத எழுத்தை ரசிக்கும் அமீன், தன் ஹஜ்ரத் பற்றி ஒரு வரி கூட எதிர்மறையாக எழுதாதற்குக் காரணம் அவருடைய அளப்பரிய அன்பாகத்தான் இருக்க வேண்டும்.\nரொம்ப சீரியஸாக நான் எழுதியது போலத் தெரிகிறதே… நூருல் அமீனுக்கு சுலபமாகக் கைவசப்படும் (ஆனால், போட மாட்டார்) நகைச்சுவையோடு முடிக்கிறேன்.\nபார்த்து… உங்க கூட்டாளி ஆஷிக் சொல்றதைக் கேட்டு தொழுகை, ஹஜ்ரத்துன்னு அலைஞ்சா அப்புறம் அல்லாஹ் பயித்தியமா மாறிடுவீங்க என்று எச்சரிக்கை விடுக்கிறாள் நஜீரின் மனைவி. மனைவிக்கு கொஞ்சமும் பயப்படாதவன். நஜீர், என்னைப் போல. அன்றிலிருந்து ஹஜ்ரத் பக்கமே தலைவைத்துப் படுப்பதில்லை என்னப்பா, தொழுகையிலே உன்னோட ஹால் (மனநிலை) மாறிடுச்சா என்று கேட்கும் ஆஷிக்கிடம், ‘ஆமா மாப்புளே. அனுஷ்கா நெனப்பு இப்பல்லாம் ஒரு தடவை கூட வர்றதில்லே’ என்று பதில் சொல்கிறான். இங்கே அமீன் எழுதுகிறார் : அனுஷ்காவுக்குப் பதில் ஹன்ஷிகாவின் முகம்தான் மனதில் வருகிறது என்பதை அப்பாவி ஆஷிக்கிடம் சொல்ல நஜீருக்கு ஏனோ மனமில்லை\nஅப்பாவி முஸ்லிம்களுக்கு என் குறிப்பு: அனுஷ்கா, ஹன்ஷிகா இருவரும் விண்வெளி வீராங்கனைகள்.\nஅன்பையும் இறையருள் பற்றிய நினைப்பையும் பெருக்க உதவும் நூல்கள் பல நூருல் அமீன�� ஃபைஜி ஆக்கத்தில் மேலும் வெளிவரட்டுமாக.\nஅப்பாக்களின் நாட்கள் – போகன் சங்கர்\n21/07/2020 இல் 12:00\t(அமேஜான், போகன் சங்கர்)\n’போக புத்தகம்’ நூலில் இருந்து..\nநன்றி : போகன் சங்கர் & கிழக்கு பதிப்பகம்\nநேற்று ஒரு நண்பர் திடீரென்று அழைத்து, தான் அடைந்த அவமானங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார். உண்மையில் அவர் வாழ்க்கை அவமானங்களின் கூடை. அவருடன் வாழ மறுத்துப்போன அவர் மனைவி சொன்னதாக அவர் ஒன்று சொன்னார். எந்த மனிதனையும் வீழ்த்திவிடும் ஒரு சொல். நான் ஏண்டா இன்னும் உயிரோட இருக்கேன்’ என்றார். அவர் என்னை அழைத்துப் பேசினதற்கு ஒரு காரணம் உண்டு. அவரைப்போலவே நான் இன்னுமொரு அவமானங்கள் நிரம்பி வழியும் கூடை என்பதே அது. ஆனால் பெரிய அவமானங்கள் இல்லை . பிறர் சிறிய அவமானங்கள் என்று கருதக்கூடியவையே எனக்குள் ஆறாத ரணங்களாக இன்னும் இருக்கின்றன.\nடிவியில் சினிமா பார்க்க என்னையும் தன்னுடன் கூட்டிப் போன நண்பனின் அக்காவிடம், இவனைப் பார்த்தா நம்மவா மாதிரி தெரியலியே. இவனை இனிமேல் கூட்டிட்டு வராதே’ என்று அந்த வீட்டுப் பெண்மணி சொன்னது, கார்க் கதவை இப்படி சத்தமாச் சாத்தக்கூடாது என்று பணக்கார நண்பன் முகம் சுளித்தது, வேலை நிமித்தமாகப் போன இடத்தில் பேருந்து இல்லாமலாகிவிட ஆட்டோ வரவழைத்த பெண் உயரதிகாரி பின்னால் வேறு ஆளே இல்லாதபோதும் என்னை முன் சீட்டில் டிரைவரோடு உட்காரப் பணித்தது (நான் மறுத்து 6கிமீ நடந்தே ஊருக்கு வந்தேன்) போன்ற சிறியதுபோலத் தோற்றமளிக்கும் நுட்பமான அவமானங்கள்.\nஇந்த அவமானங்களைச் செய்கிறவர்களைக் கவனித்திருக்கிறேன். தெரிந்தே பலர் செய்வார்கள். ஒரு வகையில் அவை உன் இடம் இது’ என்று நமக்கு சுட்டிக்காட்டுவது. சிலர் இயல்பாகவே அவர்களையும் அறியாமல் தங்கள் வர்க்கத்தால், சாதியால், பதவியால் இந்த அவமானங்களை மற்றவருக்குச் செய்யப் பயிற்றுவிக்கப்பட்டிருப்பார்கள். இது மாதிரி சமயங்களிலெல்லாம் ஏனோ நான் என் அப்பாவைத் தான் நினைத்துக்கொள்வேன். அவர்தான் இதற்கெல்லாம் காரணம் என்பதுபோல. இப்படிப் பூஞ்சையாய் வளர்த்து என் னைத் தெருவில் விட்டாயே என்பதுபோல. தந்தை மகற்காற்றும் உதவி அவையில் முந்தி இருக்கச் செய்வது அல்லவா\nநான் வீட்டுக்குப் போய் எல்லாவற்றையும் அப்பாவிடம் கொட்டுவேன். அப்போதெல்லாம் அப்பா மிகுந்த பதற்றமும் ���ுயரமும் அடைந்து இரவெல்லாம் தூங்காமல் புரண்டு கொண்டிருந்ததை இப்போது நினைவுகூர்கிறேன். அது நேரடியாக என் வாழ்வு மட்டுமல்ல, அவர் வாழ்வும் ஒரு தோல்விதான் என்று சுட்டிக் காட்டும் செயல் என்பது இப்போது புரிகிறது. பின்னர் அவர் மனச் சிதைவில் விழுந்ததற்கு இது ஒரு முக்கியமான காரணம் என்று உணர்கிறேன். நான் மெல்ல மெல்ல என் தோல்விகளால் அவரை உடைத்தேன். தன் மகன் இந்நேரம் யார் முன்னால் குறுகி நிற்கிறானோ என்ற பதற்றத்திலேயே அவர் கடைசிக் காலங்களில் இருந்தார்.\nசில வாரங்களுக்கு முன்பு இரண்டு இளைஞர்கள் என் வீட்டுக்கு எதையோ விற்க வந்தார்கள். ஏதோ ஒரு வணிகப் படிப்பின் மாணவர்கள். அவர்களை களப் படிப்பு என்று கூறிப் பொருட்களை விற்க அனுப்புவது இங்கொரு வழக்கமாக உள்ளது. நான் மறுத்தேன். அவர்கள் விடாது வற்புறுத் திக்கொண்டிருந்தார்கள். ஒரு கட்டத்தில் நான் பொறுமை இழந்து, வெளியே போங்கலே’ என்று கத்திவிட்டேன். அவர் கள் ஒருகணம் ஸ்தம்பித்து பிறகு, சாரி சார்’ என்று விலகிப் போனார்கள். மனைவி அருகில் வந்து என்னாச்சு’ என்றாள். உண்மையில் எனக்கே எனது எதிர்வினை அதிர்ச்சியாக இருந்தது. அவர்கள் செய்தது சற்று அதிகம்தான். ஆனால் இளைஞர்கள். அவர்களுக்கு இவ்வளவு விற்றால்தான் மதிப் பெண் என்ற இலக்குகள் எல்லாம் உண்டு. எல்லாம் நான் அறிவேன். இருந்தாலும்….\nநான் மிகுந்த குற்றமாய் உணர்ந்தேன் ஒரு கட்டத்தில் தாள முடியாது வண்டியை எடுத்துக்கொண்டு அவர்களைத் தேடிப் போனேன். தபால் ஆபீஸ் அருகே உள்ள டீக்கடையில் அவர்கள் நின்றிருந்தார்கள். என்னைக் கண்டதும் சற்று மிரண்டார்கள். நான் வண்டியை நிறுத்தி, அந்தப் பொருளை வாங்கிக்கறேன் தம்பி’ என்றேன்.\nஇன்று காலை அவர்களில் ஒரு பையன் என்னைத் தேடி வந்தான். என்னைப் பார்த்ததும், பொருள் விக்க வரலை சார்’ என்றான் அவசரமாக . பிறகு தயங்கி, படிப்பு முடிஞ்சு போச்சு. ஊருக்குப் போறேன் சார். உங்ககிட்டே சொல்லிட்டுப் போணும்னு தோனுச்சு.’ நான் சற்று வியப்படைந்து அவனை உள்ளே வரச் சொன் னேன். ‘உன் ஊர் எங்கே\nதிருநெல்வேலிப் பக்கம் செய்துங்க நல்லூர் சார்.”\nதெரியும் சார். பேச்சிலே கண்டுபிடிச்சேன். சற்று நேரம் மௌனம்.\nஅவன் திடீரென்று , அன்னிக்கு ஏன் சார் தேடி வந்தீங்க\nநான் சற்றுத் தடுமாறி, ‘உங்களை ரொம்பத் திட்டிட்டதுபோல தோனுச்சு.’\nஅவன் அதைக் கேட்காமல் கண்கள் தூரமாகி, எங்க அப்பா வும் இப்படித்தான் சார்’ என்றான். அவர் வாத்தியார். பள்ளிக் கூடத்திலே யாரையாவது அடிச்சிட்டா, ராத்திரிலாம் எழுந்து அழுதுகிட்டிருப்பாரு என்றவன், நீங்க பரவால்ல சார். இங்கே சில வீட்டுல நாயை ஏவி விட்டுடறாங்க.’\nநான் மிகுந்த தர்ம சங்கடமாய் உணர்ந்தேன். மன்னிச்சுக்கோ தம்பி. ரொம்ப மோசமா நடந்துகிட்டேன் அன்னிக்கி.’\nஅவன், ‘ஐயோ சார்’ என்றான். பிறகு எழுந்து, வரேன் சார்.”\nநான், இரு, உன்னியக் கொண்டுவிடறேன்’ என்று அவன் மறுக்க மறுக்க அவனை வண்டியில் ஏற்றி குழித்துறை பேருந்து நிறுத்தத்தில் கொண்டுவிட்டேன். டீ சாப்பிடறியாடே.’\nநாங்கள் டீ சாப்பிட்டோம். பஸ் வந்தது.\n” அவன், பரவால்லை சார்.’\nஊருக்குப் போக பைசா வச்சிருக்கியா\nநான் தயங்கி, உங்க அப்பாவைக் கேட்டதாச் சொல்லு.’\nஅவன் புன்னகைத்து, அவரு செத்துப் போயிட்டாரு சார்’ என்றபடி பேருந்தில் தாவி ஏறிக்கொண்டான். ‘ஊருக்கு வந்தாக் கட்டாயம் வாங்க சார்.’\nநான் ஏனோ மிகுந்த தளர்வாய் உணர்ந்தேன். சற்றுநேரம் அங் கேயே இலக்கில்லாமல் சுற்றிக்கொண்டிருந்தேன்.\nவீடு வந்ததும் மனைவியிடம் அவசரமாக, கீர்த்தி எங்கே’ என்றேன். அவள், ‘விளையாடப் போயிருக்கான்’ என்றாள். பின்பு நெருங்கி, என்ன, உன் மூத்த மகனை பஸ் ஏத்தி விட் டாச்சா’ என்றேன். அவள், ‘விளையாடப் போயிருக்கான்’ என்றாள். பின்பு நெருங்கி, என்ன, உன் மூத்த மகனை பஸ் ஏத்தி விட் டாச்சா’ என்று கேட்டாள். நான், என்ன உளர்றே’ என்று கேட்டாள். நான், என்ன உளர்றே’ அவள், ‘நான் உளறலை. நான் தான் உன் கண்ணைப் பார்த்தேனே. நீ கீர்த்தியை மட்டும் ஒருமாதிரி தலையை சாய்ச்சி, நாடியை உயர்த்திப் பார்ப்பே. அந்தப் பையன் பேசப் பேச, நீ அதேமாதிரி அவனைப் பார்த்தே’ என்றாள். நான் சற்றுநேரம் அசையாது அப்படியே நின்றிருந்தேன். பிறகு தலையை உலுக்கிக்கொண்டு, “ச்ச்ச்சே’ என்றேன். பிறகு கீர்த்தி நினைப்பும்தான். ஆனா அதைவிட அப்பாவோட நினைப்பு.\nஅவள் இன்னும் நெருங்கி, ஒன்னு தெரியுமா” என்றாள். ‘என்ன’ “நேத்தே சொல்லணும்னு நினைச்சேன். இன்னிக்கு அப்பாவோட திதி.’\nKindle Book : ‘அங்கனெ ஒண்ணு, இங்கனெ ஒண்ணு’\n13/03/2020 இல் 08:30\t(அங்கனெ ஒண்ணு இங்கனெ ஒண்ணு, அமேஜான், ஆபிதீன்)\nஎனது மூன்றாம் சிறுகதைத் தொகுப்பு ‘அங்கனெ ஒண்ணு, இங்கனெ ஒண்ணு’ இப்போது அமேசான் கிண��டிலில். ஆதரவு தாருங்கள். சுட்டி : https://www.amazon.in/dp/B085T2JHYG\nநன்றி: திண்ணை, பதிவுகள், வார்த்தை, விமலாதித்த மாமல்லன் & அஷ்ரஃப் சிஹாப்தீன்.\nசால்வடார் டாலியின் ஓவியங்கள் – பிரம்மராஜன்\n11/12/2019 இல் 12:00\t(அமேஜான், பிரம்மராஜன், மீட்சி, Salvador Dali)\nபிரம்மராஜனின் மீட்சி இதழ் 28-இல் இருந்து, நன்றியுடன்..\nபெரும் பயப்பதியும், காரண அறிவும் பிணைந்து நம்மை இயக்குகிற இந்த இருபதாம் நூற்றாண்டின் நிகழ்வுகள் நமக்கு அர்த்தத்தை அளிக்க வேண்டுமானால் அது ஸர்ரியலிஸத்தின் மூலமாகவே அதிகமாய் சாத்தியப்படும். வேறு எந்தவித கோணத்திலும், ஆய்வு முறைமையிலும் பிடிபடாத பல உறுத்தும் உண்மைகள் – ஹிரோஷிமா, வியத்நாம், கம்பூச்சியா, டெஸ்ட் ட்யூப் குழந்தைகள், பெர்ஷிங் IIs ஏவுகணைகள்- இவை யாவும் ஸர்ரியலிஸ வெளிப்பாட்டில் நமது பிரக்ஞையில் கச்சிதமாகப் பதிவாகின்றன. ஸர்ரியலிஸ ஓவிய இயக்கத்தில் டாலியின் பங்கு தனித்துவமானது இருபதாம் நூற்றாண்டின் இரட்டை நிகழ்போக்குகளான Sexம், paranoiaவும் டாலியின் உலகத்திலும் நமது உலகத்திலும் ஒரே மாதிரி இயங்குகின்றன. மற்றொரு ஸர்ரியலிஸ ஓவியரான Max Ernst மற்றும் அமெரிக்க நாவலாசிரியர் William Burroughs ஆகிய இருவரிடமிருந்தும் டாலி வேறுபடுகிறார். முந்திய இருவரும் தமது தனித்துவ உலகங்களின் நிழல்களில் சமைந்துவிடும்போது டாலி தனது ஓவிய வெளிப்பாடுகளில் இருந்து வெளிப்படுகிறார்.\nஃபிராய்டிஸ யுகத்தின் தாக்கத்தை முழுமையாக ஏற்றுக்கொண்டவர்களில் முதன்மையானவர் டாலி. இருபதாம் நூற்றாண்டு ஸ்வயத்தினுடைய (Peyche)வினோத வியாபக உலகினை, தொலைபேசிகள், குழையும் கைக்கடிகாரங்கள், பொறிக்கப்பட்ட முட்டைகள். கடற்கரைகள் போன்ற சாதாரண உலகின் படிமங்களைக் கொண்டு சித்தரிக்கிறார். டாலியின் ஓவியங்களில் நடக்கும் ‘நிகழ்ச்சிகளுக்கும் நமது நடைமுறை யதார்த்தத்தின் நிகழ்ச்சிகளுக்கும் அதிக வேறுபாடில்லை என்று சொல்ல முடியும். டாலியின் ஓவியங்களின் பிரதான குணம் என்று சொல்லப்படக் கூடியது அவற்றின் hallucinatory naturalism of the Renaissance. இதற்கு மேற்பட்டு டாலி புகைப்படத் தன்மையான யதார்த்தத்தையும், குறிப்பிட்ட ஒருவித திரைப்பட வெளிப்பாட்டு முறையையும் உத்திகளாகப் பயன்படுத்துகினர். இந்த உத்திகள், பார்வையாளனை அவனுடைய வசதிக்கு ஏற்ப மிக நெருக்கமாக ஓவியங்களுடன் தொடர்புபடுத்துகின்றன.\nபிற ஸர்ரியலிய ஓவியர்களான Max Ernat, Rene Magritte. Tanguy ஆகியோர் சம்பிரதாய விவரணை வெளியைப் (Traditional Narrative Space) பயன்படுத்தினார்கள். இவ் விதமான விவரணை வெளி, ஓவியத்தின் காட்சிப் பொருளை முன்பார்வை கொண்டதாகவும் (Frontal) பொதுப்படுத்தப்பட்ட கால அமைப்பை உடையதாகவும் ஆக்குகிறது. மாறாக டாலி தனது ஓவியங்களை, திரைப்படத்தில் ஒரு Frameலிருந்து மற்றொரு Frameக்கு கடந்து செல்வது மாதிரியான உணர்வைத் தரும்படி ஆக்கியிருக்கிறார். டாலியின் ஓவிய உலகில் நம்மை அமைதியில்லாமல் துன்புறுத்தும் வெளிச்சம், சூரியனைச் சார்ந்தது என்பதை விட மின் ஒளியைச் சார்ந்தது என்பது சரியாக இருக்கும். மேலும் டாலியின் ஓவியங்கள், சென்டிமென்டலிஸத்தைத் தவிர்த்த அழகான நியூஸ் ரீல்களாக நமது மண்டைகளில் தயாரிக்கப்பட்ட சினிமாப் படங்களின் இயக்கமற்ற Stillகளைப் போலிருக்கின்றன. முழு மனிதனையே தனது சித்திரங்களில் படைக்கும் டாலியின் ஒவிய வளர்ச்சிக் கட்டங்கள் பின்வருமாறு அமைகின்றன.\n1968ம் ஆண்டு டாலி கூறிய வார்த்தைகள் ஒய்வற்று ஒலித்துக் கொண்டேயிருக்கின்றன \nசால்வடார் டாலி – பிரம்மராஜன் தொகுப்பில் இருந்து… – நன்றி : யுவன் பிரபாகரன்\nஆபிதீன் பக்கங்கள் ii :\n3. எழுத்தாளர்களின் இணையதளங்கள் (Links)\n5. கச்சேரிகள் , கஜல்கள்\n8 . நாகூர் ரூமி பதிவுகள்\nகலீபா உமர் (ரலி) (1)\nஉஸ்தாத் ஸலாமத் அலி கான் (1)\nகுலாம் முஸ்தஃபா கான் (1)\nநுஸ்ரத் ஃபதே அலிகான் (6)\nபண்டிட் ராஜ்சேகர் மன்ஸூர் (1)\nமுகேஷ் (பீர் முஹம்மது) (1)\nவிஸ்வநாதன் / ராமமூர்த்தி (2)\nதயவு பிரபாவதி அம்மா (1)\nஅப்துல் வஹ்ஹாப் பாகவி (18)\nகுலாம் காதர் நாவலர் (4)\nஅபுல் கலாம் ஆசாத் (2)\nஅஸ்கர் அலி என்ஜினியர் (1)\nஎச். பீர் முஹம்மது (2)\nகிண்ணியா எஸ்.பாயிஸா அலி (2)\nகுர்அதுல் ஐன் ஹைதர் (1)\nகுளச்சல் மு. யூசுப் (5)\nசாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (2)\nஜே. பி. சாணக்யா (1)\nஜோ டி குரூஸ் (1)\nதொ.மு. சி. ரகுநாதன் (1)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nபோர்வை பாயிஸ் ஜிப்ரி (1)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nவேங்கட சுப்புராய நாயகர் (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (5)\nஹரி கிருஷ்ணன் (ஹரிகி) (1)\nத சன்டே இந்தியன் (1)\nநேஷனல் புக் டிரஸ்ட் (13)\nஅங்கனெ ஒண்ணு இங்கனெ ஒண்ணு (1)\nமணல் பூத்த காடு (1)\nஇரா. சண்முக வடிவேல் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2020/04/%E0%AE%8E%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2021-05-07T01:47:34Z", "digest": "sha1:TWNMPPJV44DDVEQQOXJ7BHMIRADS52PO", "length": 13954, "nlines": 141, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nஎமனுக்கு நாம் எப்படித் தண்டனை கொடுக்க வேண்டும்…\nஎமனுக்கு நாம் எப்படித் தண்டனை கொடுக்க வேண்டும்…\nகாட்டிற்குள் சென்று தனித்து உட்கார்ந்தாலும் இந்த உடலான காட்டிற்குள் இருந்து யாரும் தப்ப முடியாது. இங்கே புலியும் இருக்கின்றது கரடியும் இருக்கின்றது பாம்பும் இருக்கின்றது.\nஒருவன் கோபமாகப் பேசினான் என்றால் அதை நாமும் கேட்டால் நமக்குள்ளும் இந்தக் கோபம் வரும். அதற்குச் சாப்பாடு வேண்டும்.\nஏனென்றால் நமக்குள் பதிவான அந்தக் கோப உணர்வு என்ன செய்யும்…\nஇவர் ஜம்… என்று மகிழ்ச்சியாக உட்கார்ந்திருப்பார். அடுத்தாற்படி அது என்ன செய்யும்…\n1.யாராவது குறை கூறியிருந்தார்கள் என்றால் அதை எல்லாம் இழுத்துக் கொண்டு வரும்.\n2.உடனே அந்தக் குறையான எண்ணங்கள் வரும்… வரிசையாக் ஓடும்.\n3.இரு… நான் கொஞ்சம் சாப்பிட்டுக் கொள்கின்றேன் என்று அது தன் உணவை எடுத்துக் கொள்ளும்.\nபையன் மேல் பாசமாக இருப்பார்கள்… ஆனால் இவ்வளவு தூரம் சொல்லி அவனுக்காகச் சம்பாரித்து வைத்தேனே. அவன் அதைப் புரிந்து கொள்ளாதபடி “இப்படிச் செய்கின்றானே… ஆனால் இவ்வளவு தூரம் சொல்லி அவனுக்காகச் சம்பாரித்து வைத்தேனே. அவன் அதைப் புரிந்து கொள்ளாதபடி “இப்படிச் செய்கின்றானே…” என்ற அந்தக் குறையான எண்ணம் வரும்.\nஆக… ஒருமித்த நிலைகளில் (மன அலை பாயாமல்) நான் இருக்க வேண்டும்… என்று நினைக்கின்றேன். என்னால் முடியவில்லையே… என்று நினைக்கின்றேன். என்னால் முடியவில்லையே…\nஎந்தச் சாமியாராகப் போனாலும் சரி… குடும்பத்தை எல்லாம் துறந்து விட்டு “நான் காட்டிற்குள் சாமியாராகப் போவேன்…” என்றால் இந்த உடலான காட்டிற்குள் இருந்து தப்பவே முடியாது.\n என்ற நிலையில் அவர்கள் சீதாவும் இராமனும் காட்டிற்குள் சென்றார்கள். ஆனால் இந்த எண்ணத்திற்குள் எந்த சீதா இராமனாக இருக்க வேண்டும்…\nசீதா என்றால் சுவை – இராமன் என்றால் எண்ணங்கள்.\n2.சுவையாக என்றும் சுவைத்திட்ட உணர்வுகள் கொண்டு\n3.சுவையான அந்த மகரிஷிகளின் உணர்வை\n என்ற அந்த உணர்வின் சத்தைத் தனக்குள் எடுத்து\n5.இராமனாக நம் சொல்லின் நிலைகளும் நினைவின் ஆற்றலும் உயர்ந்ததாக இருக்க வேண்டும்.\nஒருவன் தூய்மையற்று அவதூறாகப் ��ேசுகின்றான் என்றால் உடனே அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் ஈஸ்வரா.. என்று இந்த சுவையைக் கூட்டிக் கொண்டு அதை தூய்மைப்படுத்திட வேண்டும்.\nஅந்த மகரிஷிகளின் உணர்வைச் சித்திர புத்திரனாக்கி… அதன் மீது பாசமாகி… அதையே நாம் தொடர வேண்டும்.\n1.அந்தக் கயிறின் தன்மை கொண்டு எமனுக்கு தண்டனைக் கொடுக்க வேண்டும்.\n என்று உயிருடன் ஒன்றிய நிலைகள் கொண்டு\n3.அவனைப் (உயிரான ஈசனை) பற்றிட வேண்டும்…\nஅதைத் தான் ஒரு உருவத்தை வைத்து மார்க்கண்டேயன் என்று காட்டுகின்றார்கள். என்றும் பதினாறு… என்ற நிலை அடைவதற்கு அந்த மார்க்கண்டேயன்…\n1.ஆவடை… உடலைப் பற்றிக் கொள்ளவில்லை\n2.லிங்கம்… தன் உயிரைப் பற்றிக் கொண்டுள்ளான் என்ற நிலையை\n3.ஒரு சித்திரத்தை எழுதி சாதாரண மக்களும் புரிந்து கொள்ளும் வண்ணம் வைத்துள்ளனர் ஞானியர்.\nஅதை எல்லாம் நாம் புரிந்து கொள்ளாதபடி அபிஷேகம் ஆராதனை சாங்கியம் என்ற நிலைகளைச் செய்து கொண்டுள்ளோம். நம் நல்ல குணங்களைக் காக்க முடியாது அவைகளளைச் சீர் குலையச் செய்து விடுகிறோம்.\nஇதிலிருந்து மீள வேண்டும் என்பதற்குத்தான் உங்களுக்கு மீண்டும் மீண்டும் இதை நினைவுபடுத்திக் கொண்டு வருகின்றோம்.\nகுரு கொடுத்த வழிகளில் நிலைகளில் அதைச் சித்திர புத்திரனாக்கி அதனில் விளைந்த அந்தக் கணக்கின் பிரகாரம் இங்கே அந்தச் சொல்லாக வெளிப்படுகின்றது.\nஅந்தச் சொல்லின் நிலைகள் தான் சீதா ராமா…. ஞானிகளைப் பற்றிய இந்தச் சொல்லின் தன்மை (உபதேசம்) உங்களுக்குள் ஊடுருவி அவர்களின் உணர்வின் நினைவாற்றலாக உங்களுக்குள் அது உந்தச் செய்யும்.\nசீதா ராமா என்று அத்தகைய சொல்லாக உங்களுக்குள் சொல்லும்போது அருள் ஞானியின் உணர்வுகளுடன் உங்கள் உணர்வுகள் ஒன்றும்.\n1.உங்களின் நினைவின் ஆற்றல் விண்ணை நோக்கிச் சென்று…\n2.அந்தச் சித்திர புத்திரன் கணக்கின் பிரகாரம்\n3.உயிரோடு ஒன்றிய நிலைகளாக உங்கள் உணர்வுகள் செல்லும்.\nஎல்லா உணர்வையும் அறிவிக்கும் ஆறாவது அறிவு கொண்டு அறிந்து கொண்டது போல் ஒளியின் உணர்வாகப் பெருகி… ஒளி பட்டபின் இருள் விலகுவதுபோல் உணர்வின் தன்மை ஒளியாக மாற்றி என்றும் நிலை கொண்டு வாழ்ந்திட முடியும் என்பதைத்தான் உங்களுக்குள் தெளிவாக உணர்த்துவதும்… இதனைப் பதிவு செய்வதும்…\nசாமியையே (ஞானகுரு) எண்ணிக் கொண்டிருப்பதைக் காட்டிலும��� துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து உடலுக்குள் விளைய வைக்க வேண்டும்\n என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nசீராக ஆத்ம சுத்தி செய்வோருக்குக் கிடைக்கும் பலன்கள்\nஆண்டவனிலிருந்து வந்த பிம்பங்கள் தான் அனைத்துமே என்று எண்ணினால்… “தான்” என்ற தனித்த அகங்காரம் வராது – ஈஸ்வரபட்டர்\nஉங்களுக்குக் கொடுத்த சக்திகளை ஒவ்வொருவரும் விரயம் ஆக்காது பயன்படுத்துங்கள்\n24 X 7 சாமிகள் உபதேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2021/03/%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2021-05-07T01:21:41Z", "digest": "sha1:TI2N77ODH3FHKOV3RN2LIRBCS45OYYZF", "length": 11379, "nlines": 129, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nஏழு பிறவிகள் என்றால் அது எது…\nஏழு பிறவிகள் என்றால் அது எது…\nபிறவிகள் ஏழு என்று கூறுவதே தாவரங்கள், நீர் வாழ் உயிரினங்கள், நிலம் வாழ் ஊர்ந்திடும் உயிரினங்கள், உலவிடும் மிருகங்கள், பறக்கும் இனங்கள், மனிதன், தெய்வப் பிறவி.. இவை அனைத்தும் பொதுச் சொல்லாகப் பரிணாம வளர்ச்சி பெற்று வளர்ந்திடும் இயற்கையின் சுதியில் உயிர் தொகைகள் வாழ்ந்திடும் செயலைக் குறிப்பது ஆகும்\n1.ஒவ்வொரு உயிரும் இந்த ஏழு பிறவியில் எதிலே பிறப்புக்கு வந்தாலும்\n2.அந்தப் பிறவியிலேயே எண்ணிலடங்காத பிறப்புக்கு வந்திடவும் கூடும்.\n3.எடுத்துக் கொண்ட குணங்களின் வலுவால் பிறிதொன்றில் அகப்பட்டே உழலவும் கூடும்.\nஆனால் விவாதம் புரிகின்றவன் கூறுகின்றான்… மனிதனாகப் பிறப்பதுவே ஏழு பிறவி என்று. மனிதனாக ஏழு பிறவிகள் பெற்று முடித்து விட்டால் “அடுத்த நிலை என்ன என்று உரைத்திட முடியுமோ…\n1.மனிதன் சமமான எண்ணம் கொண்டு தன்னை உணர்ந்திடும் ஞானத்தால் அன்றி\n2.வேறொன்றால் பிறவித் தளையை அகற்ற முடிந்திடாது.\nஎண்ணிறந்த பிறவிகள் பெற்றே இளைத்தேன்… என்ற கூற்றுப்படி மனிதப் பிறவி அமைந்திடும் நிலை பற்றிச் சிவவாக்கியம் கூறுகின்ற “இறப்புக்குப் பின் மனிதன் பிறப்பது இல்லை… இல்லையே.. என்ற கூற்றுப்படி மனிதப் பிறவி அமைந்திடும் நிலை பற்றிச் சிவவாக்கியம் கூறுகின்ற “இறப்புக்குப் பின் மனிதன் பிறப்பது இல்லை… இல்லையே.. என்ற சூட்சமப் பொருளை அறிந்து கொண்டாயா…\nமனிதன் என்ற பிறவி வாய்க்கப் பெற்றாலும் தன்னை உணர்ந்திடும் வ���ியில் “பூரணமாக மனிதன்…” என்ற முழுமைத்துவம் பெற்றிடல் வேண்டும்.\nமனிதன் என்ற பூரணத்துவ சக்தி பெற்றுவிட்டால் பிறப்பின் தளை அகன்றுவிடும்.\n1.பிறவா நிலை பெறும் தெய்வத் தன்மை பெறுவதையே\n2.மறை பொருளாகக் கூறுகின்றதப்பா சிவவாக்கியம்.\n3.பிறவி நோயை அகற்ற முயல்பவனே மனிதன்.\nபிறவி நோய் களைய வந்த சித்தர்கள் சரீர நோயகற்றும் மருத்துவச் செயலுக்கும் செயலாக்கினார்கள்.\nதன் அனுபவ ஞானத்தால் சரீர பிம்பங்களை வெளிப்பார்வையில் நேருக்கு நேர் கண்ணுற்றுப் பார்த்து ஆய்ந்துரைத்த மருத்துவக் குறிப்புகளில் போகரால் உணர்த்தபட்ட ஏழு பிறவிகள் என்ற முறையுமுண்டு.\nஉயிரணுக்கள் உதித்திடும் சூட்சமச் செயலில் ஏழு பிறவியின் தொடர்களைப் பற்றி முழுவதையும் நாம் உரைத்து விட முடியாது.\nஏனென்றால் சப்தரிஷிகளின் இரகசியங்கள் அனைத்தையும் சொல்லாகச் சொல்லி அதன் மூலமாக அறிந்திட முடியாது.\n1.ஆகாயச் சித்தனின் அருள் பெறவேண்டும் ஈஸ்வரா… என்று புருவ மத்தியில் உயிரை எண்ணி\n2.வான இயல் சூட்சமங்கள் அனைத்தையும் அறிவின் ஞானத்தால் அறிந்து கொண்டே உயர்ந்திட வேண்டும்.\nபோகர் தான் கண்ட மருத்துவ அனுபவத்தால் உரைத்த உண்மை என்ன என்றால் ஒருவர் உருவத்தைப் போல் எழுவர் உலகம் எங்கும் உண்டு. ஆனால் ஒருவர் பெற்ற வீரியம் மற்றொருவருக்கு அமைந்திடாது.\nஒருவரை ஒருவர் சந்தித்திடும் வாய்ப்பும் அமைந்திடாத தன்மையில் குரலின் ஒலி நாதத்தின் மாறுபாட்டை உணர்ந்திடும் சூட்சமத்தை அறிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.\nஆகாயச் சித்தனும் உரைத்திடப் போகின்றான். அவன் பரிசுத்தம் என்னும் பிரம்மத்தைப் பூண்டவனப்பா…\n1.சிந்தனையைத் தூண்டிடும் வினா ஒன்றைப் போட்டு விட்டேன்.\n2.அதனின் ஈர்ப்பு நிலை பெற்றே “என்னை (ஈஸ்வரபட்டரை) முந்திச் செல்ல…” என்றும் ஆசிகள்.\nசாமியையே (ஞானகுரு) எண்ணிக் கொண்டிருப்பதைக் காட்டிலும் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து உடலுக்குள் விளைய வைக்க வேண்டும்\n என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nசீராக ஆத்ம சுத்தி செய்வோருக்குக் கிடைக்கும் பலன்கள்\nஆண்டவனிலிருந்து வந்த பிம்பங்கள் தான் அனைத்துமே என்று எண்ணினால்… “தான்” என்ற தனித்த அகங்காரம் வராது – ஈஸ்வரபட்டர்\nஉங்களுக்குக் கொடுத்த சக்திகளை ஒவ்வொருவரும் விரயம் ஆக்காது பயன்படுத்துங்கள்\n24 X 7 சாமிகள் உபத���சம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/11/20/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2021-05-07T01:26:34Z", "digest": "sha1:WGC7PNGGYKP6NRWHAMDFURXUR5T2FMOF", "length": 7064, "nlines": 108, "source_domain": "makkalosai.com.my", "title": "சீனாவுக்கு எதிராகத் திரும்பும் சில உலக நாடுகள்! | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome உலகம் சீனாவுக்கு எதிராகத் திரும்பும் சில உலக நாடுகள்\nசீனாவுக்கு எதிராகத் திரும்பும் சில உலக நாடுகள்\nஇங்கிலாந்து தனது ஆதிக்கத்தின்கீழ் இருந்து வந்த ஹாங்காங்கை 1997-ம் ஆண்டு சீனாவிடம் ஒப்படைத்தது. அதையடுத்து சீனாவின் நேரடிக்கட்டுப்பாட்டில் தன்னாட்சி பிராந்தியமாக ஹாங்காங் இருந்து வருகிறது.\nஆனால், அதன் தன்னாட்சியை சின்னாபின்னமாக்குகிற வகையில் சீனா அடாவடி செய்கிறது. குறிப்பாக சர்வதேச நாடுகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தும் வகையில் தேசிய பாதுகாப்பு சட்டம் என்ற பெயரில் ஒரு கொடிய சட்டத்தை ஹாங்காங்கில் கொண்டு வந்துள்ளது.\nஅதை எதிர்த்து போராடுகிறவர்களை தனது நிர்வாகம் மூலம் ஒடுக்குகிறது. இந்த சட்டத்துக்கு எதிராக போராடிய சட்டசபை உறுப்பினர்களை சீன நிர்வாகம் பதவி நீக்கம் செய்தது கொந்தளிப்பை ஏற்படுத்தியது.\nஇதில் இப்போது சீனாவுக்கு எதிராக இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து ஆகிய உலக நாடுகள் அணி திரண்டுள்ளன. இந்த நாடுகளின் வெளியுறவு மந்திரிகள், கடந்த வாரம் பதவி நீக்கம் செய்யப்பட்ட ஹாங்காங் சட்டசபை உறுப்பினர்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என்று சீனாவை வலியுறுத்தி உள்ளனர்.\nதங்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான ஹாங்காங் மக்களின் உரிமைகளை பலவீனப்படுத்துவதின் மூலம் விமர்சன குரல்களை சீனா ஒடுக்குவதாக அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.\nஹாங்காங்கின் ஸ்திரத்தன்மை, வளம் ஆகியவற்றை காக்க மக்கள் தங்கள் நியாயமான கவலைகளை வெளிப்படுத்த உரிமை வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.\nPrevious articleமருத்துவம் என்பது கனவு, அது நனவானது\nNext articleபூட்டானில் சீனா ஆகிரமிப்பு\nஒரே பிரசவத்தில் ஒன்பது குழந்தைகள்\nவெளிநாட்டு ஆடவரிடம் கொள்ளையடித்ததாக போலீஸ்காரர் உட்பட 4 பேர் கைது\nதமிழ்நாட்டில் நாளை பதவியேற்கவிருக்கும் அமைச்சரவை பட்டியல்\nநாட்டில் 14 புதிய கோவிட் -19 கிளஸ்டர்கள் கண்டுபிடிப்பு\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nலோரி ஓட்டுநரிடமிருந்து லஞ்சப் பணம் இரு போலீசார் கைது\nஇறுதிச்சடங்கிற்காக கொண்டு செல்லப்பட்ட சவப்பெட்டி -உள்ளே இருந்தது கஞ்சா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%88%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-05-07T02:10:40Z", "digest": "sha1:AKYNK6QBX4NFD237MTB6BXXQZJBDHPXC", "length": 190193, "nlines": 434, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "நைட்ரசன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n7 ஆம் அணுவெண்ணைக் கொண்ட மூலகம்\nநைட்ரசன் (Nitrogen) (இலங்கை வழக்கு- நைதரசன்) ஒரு தனிமம் ஆகும். இதன் அணு எண் 7. இது ஒரு நிறமற்ற, மணமற்ற, சுவைற்ற ஒரு வாயு ஆகும். வளிமண்டலத்தில் 78.1% அளவிற்கு நைட்ரசன் வாயு நிரம்பியுள்ளது. பிரபஞ்சத்தில் நைட்ரசன் ஒரு பொதுவான தனிமமாகும். சூரிய மண்டலம் மற்றும் பால் வெளியில் உள்ள மொத்த பொருட்களில் நைட்ரசன் ஏழாவது இடத்தைப் பிடிப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. திட்டவெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் இரண்டு நைட்ரசன் அணுக்கள் சேர்ந்து டைநைட்ரசன் தோன்றுகிறது. இது நிறமும் நெடியும் அற்றதாக ஈரணு வளிமமாக N2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டுடன் அறியப்படுகிறது. வளிமண்டலத்தில் இதன் பருமன் ஆக்சிசனை விட 4 மடங்கு அதிகமாய் உள்ளது .\nகரிமம் ← நைட்ரசன் → ஆக்சிசன்\nநிறமிலி வளிமம், திரவம், அல்லது திண்மம்\nநெடுங்குழு, கிடை வரிசை, குழு\nமிக உறுதியான ஓரிடத்தான்கள் (சமதானிகள்)\nமுதன்மைக் கட்டுரை: நைட்ரசன் இன் ஓரிடத்தான்\n14N 99.634% N ஆனது 7 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது\n15N 0.366% N ஆனது 8 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது\nதனிம அட்டவணையில் நைட்ரசன் தொகுதியில் (V. A) உள்ள எல்லாத் தனிமங்களும் உலோகம் அல்லது உலோகம் போன்றதாக இருக்க நைட்ரஜன் மட்டும் வளிம நிலையில் இருக்கின்றது. மனித உடலில் இடம்பெற்றுள்ள ஆக்சிசன், கார்பன், ஐதரசன் ஆகியனவற்றுக்கு அடுத்து அதிகமாக 3% அளவுக்கு நைட்ரசன் இடம்பிடித்துள்ளது. காற்றிலுள்ள நைட்ரசன் வாயு உயிர்க் கோளத்திற்குள் வந்து கரிமச் சேர்மங்கள் வழியாக மீண்டும் காற்றில் கலப்பதை நைட்ரசன் சுழற்சி விவரிக்கிறது.\nதொழில்ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த சேர்மங்களான அமோனியா, நைட்ரிக் அமிலம், சயனைடுகள், அமினோ அமிலங்கள், நியூக்ளிக் அமிலங்கள், அடினோசின் முப்பாசுப்பேட்டு போன்றவை நைட்ரசனைக் கொண்டுள்ளன. தனிமநிலை நைட்ரசனில் வலிமையான முப்பிணைப்புகளும், ஈரணுமூலக்கூறுகளில் அனைத்திலும் இரண்டாவது வலிமையான பிணைப்பாகவும் கருதப்படுகிறது. N2 வை உபயோகமுள்ள சேர்மங்களாக மாற்ற முடியாமல் உயிரினம், தொழிற்சாலை இரு பிரிவுகளும் இதனால் மிகுந்த சிரமங்களை சந்திக்கின்றன. ஆனால், அதேசமயத்தில் எரிதல், வெடித்தல், நைட்ரசன் சேர்மங்களை சிதைத்தல் போன்ற வேதியியல் செயல்முறைகளால் பயனுள்ளவகையில் அளப்பறிய ஆற்றலை பெற முடிகிறது. செயற்கை முறையில் தயாரிக்கப்படும் அமோனியாவும் நைட்ரேட்டுகளும் முக்கியமான உரவகைகளாகும். தண்ணிர் ஊற்றுகளை தூர்ந்து போகவைக்கும் மாசுபொருட்களில் ஒன்றாக நைட்ரேட்டுகள் கருதப்படுகின்றன.\nஉரங்கள் மற்றும் ஆற்றல் மூலங்களாக பயன்படுவதைத் தாண்டி கரிமச்சேர்மங்களின் பகுதிப்பொருளாக நைட்ரசன் விளங்குகிறது. உயர் வலிமை துணி மற்றும் உயர் பசையில் பயன்படும் சயனோஅக்ரிலேட் தயாரிப்புகளில் பயன்படுத்தப்படும் கெவ்லார் இழையாகவும் நைட்ரசன் பயன்படுகிறது. மருந்தியல் துறையில் நுண்ணுயிர் கொல்லிகள் உட்பட ஒவ்வொரு முக்கிய மருந்திலும் நைட்ரசன் ஒரு முக்கியப் பகுதிப்பொருளாக உள்ளது, மருந்துகள் போல தோற்றமளிக்கும் அல்லது இயற்கை நைட்ரசன் மூலக்கூறுகள் சுட்டி மூலக்கூறுகளாக உள்ளன: உதாரணமாக, கரிம நைட்ரேட்டுகள், நைட்ரோகிளிசரின், நைட்ரோபுருசைடு போன்றவை நைட்ரிக் ஆக்சைடாக வளர்சிதைமாற்றத்தின் போது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகின்றன. காஃபின் மற்றும் மார்பின் அல்லது செயற்கை அம்படமைன்கள் போன்ற பல்வேறு குறிப்பிடத்தக்க நைட்ரஜன் மருந்துகள், கால்நடை நரம்புக்கடத்திகளின் ஏற்பிகளாக செயல்படுகின்றன.\n3 நைட்ரசன் வேதியியலும் சேர்மங்களும்\n3.2 டைநைட்ரசன் அணைவுச் சேர்மங்கள்\n3.3 நைட்ரைடுகள், அசைடுகள் மற்றும் நைட்ரிடோ அணைவுகள்\n3.7 ஆக்சோ அமிலங்கள், ஆக்சோ எதிர்மின்னயனிகள், ஆக்சோ அமிலவுப்புகள்\n3.8 கரிம நைட்ரசன் சேர்மங்கள்\n6.3 பிற பொதுப் பயன்கள்\nநைட்ரசன் கண்டுபிடிப்பாளர் டேனியல் ரூதர்போர்ட்டு\nநைட்ரசன் சேர்மங்கள் மிகநீண்ட வரலாற்றைப் பெற்றுள்ளன. எரோடோட்டசு என்ற கிரேக்க வரலாற்றாளர் காலத்திலயே அமோனியம் குளோரைடு அறியப்பட்டிருந்தது. இடைக்காலத்தில் இவை நன��கு அறியப்பட்டிருந்தன. இரசவாதிகள் நைட்ரிக் அமிலத்தைப்பற்றியும் இதர அமோனியம் உப்புகள் நைட்ரேட்டு உப்புகள் பற்றியும் அறிந்திருந்தனர். நைட்ரிக் அமிலம் மற்றும் ஐதரோகுளோரிக் அமிலங்களின் கலவையான இராச திராவகம் பற்றியும் அறியப்பட்டிருந்தது. தங்கத்தை கரைக்கப் பயன்பட்டதால் இதை வேதிப்பொருட்களின் அரசன் என்று அழைத்தனர் [1].\nஇசுக்காட்லாந்து நாட்டு மருத்துவ அறிஞரான டேனியல் ரூதர்போர்டு என்பவர் 1772 ஆம் ஆண்டில் இவ்வாயுவை முதன்முதலில் கண்டறிந்து தனிமைப்படுத்தினார்[2][3]. கார்பனீராக்சைடு வாயுவிலிருந்து இது முற்றிலும் வேறுபட்டது என்றும் அவர் தெளிவுபடுத்தினார்[4]. ஒரு மணி வடிவ ஜாடியில் வளி மண்டலக் காற்றை எடுத்துக் கொண்டு, அதில் ஒரு பொருளை எரித்து அதிலுள்ள ஆக்சிஜன் முழுவதையும் நீக்கிக் கொண்டார். அதனுள் ஒரு உயிருள்ள எலியை விட, அது ஆக்சிஜன் இல்லா வெளியில் உடல் நலக் கோளாறால் பாதிக்கப்பட்டது, இறுதியில் இறந்தும் போனது. இதன் மூலம் ஆக்சிஜன் நீக்கப் பெற்று எஞ்சிய வளி மண்டலக் காற்றை அவர் நைட்ரஜன் என அழைத்தார். காரல் வில்லெம் சீலேவும்[5] என்றி கேவண்டிசும்[6] சோசப்பு பிரீசிட்லி [7] முதலானோர் இதே சமயத்தில் தனித்தனியாக இக்கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளனர். ஆனால் ரூதர்போர்டின் கண்டுபிடிப்பு முதன்முதலில் வெளியிடப்பட்டதால் நைட்ரசன் வாயுவை கண்டறிந்த பெருமை அவருக்கு உரியதாக ஆனது. 1790 ஆம் ஆண்டு இயீன்- அண்டோயீன்-கிளாடு-சாப்பல் என்பவர் நைட்ரசன் என்ற பெயரை பரிந்துரை செய்தார். நைட்ரசன் நைட்ரிக் அமிலத்திலும் நைட்ரேட்டுகளிலும் காணப்பட்டதால் இபெயரை அவர் பரிந்துரைத்தார். νἰτρον \"நைட்டர்\" மற்றும் γεννᾶν \"உருவாக\".என்ற கிரேக்க வேர்சொற்களில் இருந்து நைட்ரசன் என்ற சொல் உருவாக்கப்பட்டுள்ளது. அண்டோயின் இலவாசியே என்பவர் άζωτικός என்ற கிரேக்க சொல்லின் பொருளான \"வாழ்க்கை இல்லை\" [8] என்ற அடிப்படையில் அசோட் என்ற பெயரை பரிந்துரைத்தார். நைட்ரசன் ஒரு மூச்சடைப்பான் வாயுவாக கருதப்படுகிறது. பிரெஞ்சு, உருசியமொழி, துருக்கி மொழி போன்ற பலமொழிகளில் அசோட் என்ற பெயர் பயன்படுத்தப்பட்டது. ஆங்கில மொழியிலும் ஐதரசீன், அசைடுகள் மற்றும் அசோ சேர்மங்கள் போன்ற சில சேர்மங்களில் இப்பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளது, நைட்ரசன் தனிம வரிசை அட்டவணையின் 15 ஆ��து குழுவில் இடம்பெற்றுள்ள தனிமங்களில் மிகவும் இலேசானது ஆகும். இதனால் இதை நிக்டோசன்[1] என்ற பெயராலும் அழைத்தனர். மூச்சடைக்கும் பண்புகளைக் குறிக்கும் \"தடைப்படுதல்\" என்ற பொருள் கொண்ட πνίγειν என்ற கிரேக்கச் சொல்லிலிருந்து இப்பெயர் வந்துள்ளது.\nஆங்கிலச் சொல்லான நைட்ரசன் (1974) பிரெஞ்சு மொழி சொல்லான நைட்ரோகீன் என்ற் சொல்லில் இருந்து 1790 இல் இயீன் அண்டோனி சாப்டல் (1756–1832), என்பவரால் உருவாக்கப்பட்டது[9]. நைட்ர என்பது (பொட்டாசியம் நைட்ரேட்டு அல்லது சால்ட்பீட்டர்) கீன் என்பது உற்பத்தி செய்தல் என்ற பொருள் கொண்டது ஆகும். நைட்ரிக் அமிலம் தயாரிப்பதற்கு நைட்ரசன் அவசியமானது என்றும் அது பொட்டாசியம் நைட்ரேட்டிலிருந்து தயாரிக்காப்படுகிறது என்றும் சாப்டல் இதனை பொருள் கொண்டார். பண்டைய காலத்தில் எகிப்தியர்கள் சோடியம் கார்பனேட்டை நேட்ரான் என்று அழைத்தார்கள். இச்சேர்மத்தில் நைட்ரேட்டு எதுவும் இல்லை என்றாலும் இப்பெயரால் சிறிதளவு குழப்பம் நிலவியது[10].\nமுற்காலத்தில் இராணுவ, தொழில்துறை, மற்றும் வேளாண்மைப் பயன்பாடுகளில் நைட்ரசன் சேர்மங்கள் (சால்ட் பீட்டர் அல்லது பொட்டாசியம் நைட்ரேட்டு ) வெடிமருந்தாகவும் பின்னர் உரமாகவும் பயன்படுத்தப்பட்டன. 1910 ஆண்டில் நைட்ரசன் வாயுவில் மின்சுமை செலுத்துவதால், நைட்ரசனின் புறவேற்றுமை வடிவமான ஓரணு நைட்ரசனாக வீரிய நைட்ரசன் உருவாகிது என லார்டு ரேலெய்க் கண்டறிந்தார் [11]. பாதரசத்துடன் நைட்ரசன் வினைபுரிந்து பாதரச நைட்ரைடு உருவாகும்போது கருவியின் தலைப்புறத்தில் அடர் மஞ்சள் நிறம் மேகமாக உருவாகிறது [12] ஓரளவு மந்தமான வளிமம் என்றாலும் நைட்ரஜன் பல ஆயிரக்கணக்கான வேதிச் சேர்மங்களில் இணைந்திருக்கின்றது. இது வேளாண்மையில் உரமாகவும்,தொழிற்துறையில் உணவுப் பொருளுற்பத்தி மற்றும் அவை கெடாமல் பாதுகாக்கவும், வெடி மருந்து, நஞ்சுப் பொருட்கள், நைட்ரிக் அமிலம் போன்ற வேதிப் பொருட்களின் உற்பத்திக்கு மூலப்பொருளாகவும் விளங்குகிறது. அம்மோனிய உப்புக்கள் உரமாகப் பயன்படுகின்றன. அம்மோனியாவை ஆக்சிஜனேற்ற வினைக்கு உட்படுத்தி நைட்ரிக் அமிலத்தையும் உற்பத்தி செய்ய முடியும்.\nநீண்ட காலமாகவே நைட்ரசனுக்கான ஆதார மூலங்கள் மிகவும் குறைவாகவே இருந்தன. உயிரியல் வழிமுறைகளில் தோன்றும் நைட்ரசனும் வள���மண்டல வேதிவினைகளால்; உருவாகும் நைட்ரேட்டு படிவுகளும் மட்டுமே இதற்குரிய மூலங்களாகக் கருதப்பட்டன. பிராங்க் கேரோ செயல்முறையும் (1895–1899). ஏபர் போச்சு செயல்முறையும் (1908–1913) நைட்ரசன் சேர்மங்களின் பற்றாக்குறையை ஓரளவுக்கு சரிகட்டின. உலகளவில் உணவு உற்பத்தியில் கிட்டத்தட்ட பாதிக்கு மேற்பட்டவை செயற்கை நைட்ரசன் உரங்களைப் பயன்படுத்துகின்றன[13]. ஆசுட்வால்டு செயற்முறையில் (1902) நைட்ரேட்டுகள் தயாரிக்கப்பட்டன. இதிலிருந்து வெடிமருந்துகள் தயாரிக்கப்பட்டு இருபதாம் நூற்றாண்டு உலகப்போரில் பயன்படுத்தப்பட்டன[14][15].\nநைட்ரசன் நிறம்,மணம் சுவையற்ற ஒரு வளிமம் ஆகும். இது காற்றை விட மிகச்சிறிதளவே இலேசானது. நீரில் மிகச் சிறிதளவே கரைகிறது. நச்சுத் தன்மையற்றது. காற்றில் எரிவதில்லை. எரிதலின்றி வாழ்க்கைக்கு உறுதுணையாகவும் இல்லை. சுண்ணாம்பு நீரைப் பால்போல வெண்மையாக்குவதில்லை. இதன் அணு எண் 7. அணு நிறை 14.007. அடர்த்தி 1.165 கிகி /கமீ. இதன் உறை நிலையும் கொதி நிலையும் முறையே 70.25 ,77.31 K ஆகும்.\nமிகவும் வலுவான மூன்று எதிர்மின்னிப் பிணைப்பு காரணமாக நைதரசன் வாயு (N2) வேதி வினைகளில் மந்தமாக ஈடுபடுகிறது. சற்று உயர்வெப்ப நிலையில் இது மக்னீசியம், இலித்தியம், கால்சியம் போன்ற பல உலோகங்களுடன் கூடி நைட்ரைடுகளை உண்டாக்குகின்றது. அது போலவே அலோகங்களான போரான், சிலிக்கனுடன் வினை யாற்றுகின்றது. இன்னும் கூடுதலான வெப்ப நிலையில் நைட்ரசன் ஆக்சிசனுடன் நேரடியாகக் கூடி அமோனியா மற்றும் நைட்ரிக் ஆக்சைடை உண்டாக்குகின்றது. கார்பன் மின் வில் லின் (Carbon arc)சுடரொளியில் நைட்ரசனுடன் கூடுகிறது. கந்தகமும், ஆலசன்களும் எந்த வெப்ப நிலையிலும் நைட்ரசனுடன் கூடுவதில்லை. துருவ ஒளி என்பது சூரியனிலிருந்து வீசப்படும் மின்னேற்றம் கொண்ட துகள்கள், அயனிகள் வளி மண்டலத்தை ஊடுருவும் போது புவி காந்தப் புலத்தோடு இடையீட்டுச் செயல் புரிந்து வெளிப்படும் ஒளியாகும். நைட்ரசன் மூலக்கூறு ஆரஞ்சு-சிவப்பு ,நீலம் -பச்சை, நீலம்- கருநீலம் மற்றும் ஊதா போன்ற வண்ணங்களைத் துருவ ஒளியில் தருகிறது.\nபொதுவாக தாக்கம் குறைவானதாகக் காணப்படும். நைதரசன் வேறு மூலகத்தோடோ சேர்வையோடோ தாக்கமடைந்து சேர்வைகளை உருவாக்கும் செயற்பாடு நைதரசன் பதித்தல் எனப்படும்.\nமூலக இலித்தியத்துடன் வினைபுரிந்து இலித்தியம் நைத்திரைட்டை உருவாக்குகிறது.\nமக்னீசியமும் நைட்ரசனும் வினைபுரிந்து மக்னீசியம் நைட்ரேட்டு உருவாகிறது. .\nஏபர் செயல்முறை நைட்ரசனின் வினைகளைப் பயன்படுத்தும் முக்கிய தொழிற் செயற்பாடாகும். N\n2 என்பவற்றை இரும்பு ஆக்சைடு ஊக்கிக்கு மேல் 500 °C வெப்பநிலையிலும் 200 மடங்கு வளிமண்டல அழுத்தத்தில் வினைபுரியச் செய்தால் அமோனியா வாயு உருவாக்கப்படுகின்றது. இவ்வாயு உர உற்பத்தியில் மிகவும் முக்கியமானதாகும்.\nநைட்ரசன் அணுவை ஆக்ரமித்துள்ள ஆர்பிட்டால்களின் உருவவடிவங்கள். ஒவ்வொரு மண்டலத்தின் அலை இயக்கத்தையும் இரண்டு வண்ணங்கள் காட்டுகின்றன. இடமிருந்து வலமாக 1s, 2s (உட்புற கட்டமைப்பைக் காட்டும் வெட்டப்பட்ட பகுதி), 2px, 2py, 2pz.\nஒரு நைட்ரசன் அணுவில் ஏழு எலக்ட்ரான்கள் உள்ளன. சாதாரண நிலையில் அவ்வேழு எலக்ட்ரான்களும் 1s2\nz எலக்ட்ரான் அமைப்பில் அமைந்துள்ளன. இவ்வமைப்பின்படி 2s மற்றும் 2p ஆர்பிட்டால்களில் ஐந்து இணைதிறன் எலக்ட்ரான்கள் உள்ளன. இவற்றில் p எலக்ட்ரான்கள் மூன்றும் இணையில்லா எலக்ட்ரான்களாகக் காணப்படுகின்றன. அதிகமான எலக்ட்ரான் கவர்திறன் கொண்ட தனிமங்களில் இதுவும் ஒன்றாகும். பௌலிங் அளவுகோலில் 3.04 பௌலிங் அலகுகள் மதிப்பைப் பெற்றுள்ளது. நைட்ரசனை விட எலக்ட்ரான் கவர்தன்மை அதிகமாக கொண்டவை குளோரின் (3.16), ஆக்சிசன் (3.44), புளோரின் (3.98) போன்ற தனிமங்கள் மட்டுமேயாகும்[16]. தனிமங்களின் ஆவர்த்தனப் பண்புகளைப் பின்பற்றும் நைட்ரசன், அதன் ஒற்றைப் பிணைப்பின் சகப்பிணைப்பு ஆரம் 71 பைக்கோமீட்டர்களைப் பெற்றுள்ளது. போரான் (84 பை.மீ), கார்பன் (76 பை.மீ) தனிமங்களைவிட இது குறைவாகும். ஆக்சிசன் (66 பை.மீ), புளோரின் (57 பை.மீ) தனிமங்களை விட இதன் சகப்பிணைப்பு ஆரம் அதிகமாகும். நைட்ரைடு எதிர்மின் அயனி N3− மிக அதிகபட்சமாக (141 பை.மீ) மதிப்பைப் பெற்றுள்ளது. இதே போல ஆக்சைடு எதிர்மின் அயனி O2−: (140 பை.மீ), புளோரைடு எதிர்மின் அயனி F− (140 பை.மீ) மதிப்புகளைக் கொண்டுள்ளன[16]. வாயுநிலையிலுள்ள தனித்த அணுவிலுள்ள எளிதாக பிணைக்கப்பட்டுள்ள ஓர் எலக்ட்ரானை நீக்குவதற்கு தேவைப்படும் ஆற்றலே அயனியாக்கும் ஆற்றல் எனப்படும். நைட்ரசனின்முதல் மூன்று அயனியாக்கும் ஆற்றல் மதிப்புகள் 1.402, 2.856, மற்றும் 4.577 மோயூ-மோல்-1 ஆகும். மேலும் நான்கு மற்றும் 5 ஆவது அயனியாக்கும் ஆற்றல்களின் கூடுதல் 16.920 மோயூ-மோல்-1 மத���ப்பாக உள்ளது. இத்தகைய உயர் மதிப்புகளால் நைட்ரசனில் நேர்மின்சுமை வேதியியலுக்கு சாத்தியமே இல்லை எனக் கருதப்படுகிறது [17].\n2p துணைக்கூட்டில் கோள நோட் இல்லாமல் இருப்பது p தொகுதி முதல் வரிசைத் தனிமங்களின், குறிப்பாக நைட்ரசன், ஆக்சிசன், புளோரின் தனிமங்களின் பல்வேறு பண்புகளை நேரடியாகப் பாதிக்கிறது. 2p துணைக்கூடு மிகவும் சிறியதாகவும் 2s கூடு போல அதே ஆரமும் பெற்று ஆர்பிட்டல் இனகலப்புக்கு வழிசெய்கிறது. மேலும் இதன் விளைவாக 2s மற்றும் 2p கூடுகளிலுள்ள இணைதிறன் எலக்ட்ரான்களுக்கும் உட்கருவுக்கும் இடையில் இருக்கும் நிலைமின்விசை ஈர்ப்பும் அதிக அளவிற்கு உயர்கிறது. இதே காரணத்தினால் இத்தனிமங்களின் மீஇணைதிறன் அறியப்படவில்லை. ஏனெனில் உயர் எலக்ட்ரான் கவர் தன்மையால் சிறிய நைட்ரசன் அணு எலக்ட்ரான் மிகுதி மும்மைய்ய நான்கு எலக்ட்ரான் பிணைப்பில் மைய அணுவாக இருப்பது சிரமமாக உள்ளது. எனவே தனிம வரிசை அட்டவணையின் 15 ஆவது குழுவில் முதலாவதாக இடம்பிடித்துள்ள நைட்ரசன் பாசுபரசு, ஆர்சனிக், ஆண்டிமனி , பிசுமத் போன்ற தனிமங்களின் வேதியியலில் இருந்து அதிக அளவில் வேறுபடுகிறது[18].\nநைட்ரசன் தனிமத்தை அதன் கிடைமட்ட அண்டை தனிமங்களான கார்பன் மற்றும் ஆக்சிசனுடனும், அத்துடன் அதன் செங்குத்து அண்டை தனிமங்களான பாசுபரசு, ஆர்சனிக், ஆண்ட்டிமணி மற்றும் பிசுமத் தனிமங்களுடனும் ஒப்பிட்டு நோக்குவது பயனுள்ளதாக இருக்கும். இலித்தியம் முதல் நைட்ரசன் வரையுள்ள 2 வது தொகுதி தனிமங்கள் 3 வது தொகுதி தனிமங்களின் அடுத்த குழுவிலுள்ள மக்னீசியம் முதல் கந்தகம் வரையுள்ள தனிமங்களுடன் மூலைவிட்ட தொடர்பு கொண்டு, போரான் சிலிக்கன் இணையிலிருந்து திடீரென சரிந்து சில ஒற்றுமைகளைக் கொண்டுள்ளன. நைட்ரசன் முதல் கந்தகம் வரை இந்த ஒற்றுமைகள் கட்டுபடுத்தப்பட்டுள்ளன. நைட்ரசன் உயர் எலக்ட்ரான் கவர்தன்மை, ஐதரசன் பிணைப்புக்கு உடனியங்குகிற திறன் மற்றும் தனி இணை எலக்ட்ரான்களை கொடையளித்து அனைவுச் சேர்மங்களை உருவாக்கும் திறன் கொண்ட கார்பனைக் காட்டிலும் ஆக்சிசனுடன் ஒத்துப்போகிறது. கார்பனைப் போல ஓரினவரிசைச் சேர்மங்களை உருவாக்கும் தன்மையை பகிர்ந்து கொள்ளவில்லை. எட்டு நைட்ரசன் கொண்ட சேர்மங்கள் (PhN=N–N(Ph)–N=N–N(Ph)–N=NPh) மட்டுமே இதுவரை கண்டறியப்பட்டுள்ளன. pπ-pπ இடைசெயல்களால் கார்பன், நைட்ரசன், ஆக்சிசன் அணுக்களுடன் பல பிணைப்புகள் உருவாக்கும் செயலுக்கு முன்னுரிமை அளிக்கும் பண்பில் நைட்ரசன் அதன் கிடைமட்ட அண்டைய இரண்டு தனிமங்களுடன் ஒத்துப்போகிறது.\nசெங்குத்தாக இடம்பெற்றுள்ள அண்டைய தனிமங்களுடன் இப்பண்பு ஒத்துப்போவதிற்கு சாத்தியமில்லை. இதனால் நைட்ரசன் ஆக்சைடுகள், நைட்ரைட்டுகள், நைட்ரேட்டுகள், நைட்ரோ, நைட்ரோசோ, அசோ, ஈரசோ சேர்மங்கள், அசைடுகள், சயனேட்டுகள், தயோசயனேட்டுகள், இமினோ வழிப்பொருட்கள் போன்றவை பாசுபரசு, ஆர்சனிக், ஆண்டிமனி அல்லது பிசுமத்தின் பண்புகளை வெளிப்படுத்துவதில்லை. இதேமுறையினால் பாசுபரசு ஆக்சோ அமிலங்களும் நைட்ரசனுடன் இயைந்திருப்பதில்லை [19].\nநைட்ரசன் உள்ளிட்ட கார்பன் முதல் புளோரின் வரையிலான உட்கருக்களின் அட்டவணை. ஆரஞ்சு நிறம் புரோட்டான் உமிழ்வைக் குறிக்கிறது. (உட்கருவுக்கு வெளியே புரோட்டான் இழப்புக்கோடு);இளஞ்சிவப்பு நிறம் பாசிட்ரான் உமிழ்வைக் காட்டுகிறது. (தலைகீழ் பீட்டா சிதைவு); கருப்பு நிறம் நிலையான உட்கருவைக் காட்டுகிறது; நீல நிறம் எலக்ட்ரான் உமிழ்வைக் காட்டுகிறது (பீட்டா சிதைவு); ஊதா நிறம் நியூட்ரான் உமிழ்வைக் காட்டுகிறது. (உட்கருவுக்கு வெளியே நியூட்ரான் இழப்புக் கோடு).செங்குத்து அச்சில் புரோட்டான் எண்ணிக்கை அதிகரிப்பும், கிடைமட்ட அச்சில் நியூட்ரான் எண் வலதுபக்கமும் செல்கிறது.\n14N மற்றும் 15N என்ற நிலையான இரண்டு ஐசோடோப்புகளை நைட்ரசன் பெற்றுள்ளது. இவற்றில் 14N ஐசோடோப்பு நைட்ரசனின் பொதுவான ஐசோடோப்பு ஆகும். 99.634% இயற்கை நைட்ரசனால் இது ஆக்கப்பட்டுள்ளது. 15N ஐசோடோப்பு எஞ்சியிருக்கும் 0.366% அளவுக்கு சற்று கனமானது நைட்ரசனால் ஆக்கப்பட்டுள்ளது. இதன்விளைவாக நைட்ரசனின் அணு எடை 14.007 அணு நிறை அலகாக உள்ளது [16]. விண்மீன்களில் நடைபெறும் கார்பன் – நைட்ரசன் –ஆக்சிசன் சுழற்சியில் இவ்விரண்டு நிலையான ஐசோடோப்புகளும் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆனால் 14N பொதுவான ஐசோடோப்பின் நியூட்ரான் கவரும் நிலை வினைவேக விகிதத்தை நிர்ணயிக்கும் படிநிலையாகக் கருதப்படுகிறது. உட்கருவில் ஒற்றைப்படை எண்ணிக்கையில் புரோட்டான்கள் நியூட்ரான்கள் கொண்டுள்ள நிலையான ஐந்து ஐசோடோப்புகளில் 14N ஐசோடோப்பும் ஒன்றாகும். 2H, 6Li, 10B, மற்றும் 180mTa என்பவை மற்ற நான்கு ஐசோடோப்புகள் ஆகும்[20].\nவளிமண்டலத்தில் நிலையாக ஏராளமாகக் காணப்படும் இவ்விரண்டு ஐசோடோப்புகளும் மற்ற இடங்களில் காணப்படுவதில் வேறுபடுகிறது. உயிரியல் ஆக்சிசனேற்ற ஒடுக்க வினைகளாலும், இயற்கை அமோனியா அல்லது நைட்ரிக் அமிலத்தின்[21] ஆவியாதலால் இயற்கையாக நிகழும் ஐசோடோப்பு பிரிப்பு இதற்குக் காரணமாகும். உயிரியியல் வினைகளான தன்மயமாதல், நைட்ரசனேற்றம், நைட்ரசனீக்க வினைகள் வலிமையாக மண்ணின் நைட்ரசன் இயக்கத்தைக் கட்டுப்படுத்துகின்றன. இதன்விளைவாக தளத்தில் 15N அதிகரிப்பும் விளைபொருள் குறைவும் உண்டாகும்[22].\nகன ஐசோடோப்பான 15N முதன்முதலில் 1929 ஆம் ஆண்டு எசு.எம். நௌடு என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. அண்டைய தன்மிமங்களான ஆக்சிசன் மற்றும் கார்பனின் கன ஐசோடோப்புகளின் கண்டுபிடிப்புகளைத் தொடர்ந்து இக்கண்டுபிடிப்பு நிகழ்ந்தது[23]. ஐசோடோப்புகளில் குறைவு வெப்பநிலை நியூட்ரான் பற்றுகைப் பரப்பை இது வழங்குகிறது [24] அணுக்கரு காந்த ஒத்ததிர்வு நிறமாலையியலில் இக்கன நைட்ரசன் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. நைட்ரசன் கொண்டுள்ள மூலக்கூறுகளின் கட்டமைப்பை உறுதி செய்வதில் இச்சோதனை பயன்படுகிறது. கோட்பாடுகளின்படி 14N ஐசோடோப்பும் பயனுள்ளதாக இருந்தாலும், 1 என்ற முழு எண்ணை சுழற்சியாகக் கொண்டும் நான்முனைத் திருப்புத்திறனை பெற்று அதிகப் பயனற்ற நிறமாலையாக உள்ளது[16]. 15N அணுக்கரு காந்த ஒத்திசைவு நிறமாலையில் சிக்கல்கள் இருந்தாலும் 1H மற்றும்13C நிறமாலையில் தோன்றும் சிக்கல்கள் போலிருப்பதில்லை. இயற்கையில் 15N ஐசோடோப்பு குறைவான அளவே காணப்படுவதால் (0.36%) குறிப்பிடத்தக்க அளவு உணர்திறனை குறைக்கிறது. குறைவான சுழிகாந்த விகிதம் மட்டுமே இங்கு பிரச்சினையாகும். (1H ஐசோடோப்புடன் ஒப்பிடுகையில் அதைவிட10.14% குறைவு) இதன் விளைவாக அதே காந்தப்புல வலிமையில் குறிப்பலை ஓசை இடையிலான விகிதம் 15N ஐசோடோப்பைவிட 1H ஐசோடோப்பு 300 மடங்கு அதிகமாகக் கொண்டுள்ளது[25]. வேதிப்பரிமாற்றம் அல்லது பின்னக் காய்ச்சி வடித்தல் முலம் 15N ஐசோடோப்பை அதிகரிப்பதன் வழியாக இப்பிரச்சினையை ஓரளவுக்கு சமாளிக்கலாம். 15N- மிகுதியாகக் கொண்டிருக்கும் சேர்மங்கள் திட்ட வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் தங்களுடைய நைட்ரசனை வளிமண்டல நைட்ரசனுடன் அவை பரிமாறிக் கொள்வதில்லை என்பது கூடுதலாக ஒரு சாதகமாகும். ஐதரசன், கார்பன���, மற்றும் ஆக்சிசன் போன்ற ஐசோடோப்புகள் போல் அல்லாமல், இவை வளிமண்டலத்தில் இருந்து விலக்கி வைத்திருக்கப்பட வேண்டும் [16]. நிலையான 15N:14N ஐசோடோப்புகளின் விகிதம் பொதுவாக புவி வேதியியல், தொல்புவி தட்பவெப்பவியல், தொல் கடலியல் போன்ற துறைகளில் பயன்படுத்தப்படுகிறது, இங்கெல்லாம் δ15N என்று அழைக்கப்படுகிறது[26]. 12N முதல் 23N வரையில் செயற்கையாக உருவாக்கப்பட்ட பத்து ஐசோடோப்புகளில் 13N ஐசோடோப்பு மட்டும் 10 நிமிடம் அரைவாழ்வுக் காலம் கொண்டதாகும். எஞ்சிய ஐசோடோப்புகள் யாவும் சில வினாடிகள் அரைவாழ்வுக் காலமே பெற்றுள்ளன. குறிப்பாக 16N ,17N ஐசோடோப்புகள் மில்லிவினாடிகள் மட்டுமே நிலைத்திருக்கின்றன. வேறு நைட்ரசன் ஐசோடோப்புகள் உருவாவதற்கு சாத்தியமில்லை, ஏனெனில் அவை அணுக்கரு இழப்புக் கோட்டுக்கு வெளியே அமைந்து புரோட்டான் அல்லது நியூட்ரானை இழக்கின்றன[27].\nகொடுக்கப்பட்ட அரைவாழ்வுக் கால வேறுபாடுகளை நோக்கும்போது 13N ஒரு முக்கியமான கதிரியக்க ஐசோடோப்பாக கருதப்படுகிறது. பாசிட்ரான் உமிழ்பு தளக்கதிர்படயிய்ல் கருவியில் பயன்படுத்தும் அளவுக்கு நீண்ட அரைவாழ்வுக் காலம் கொண்டுள்ளது. 13N ஐசோடோப்பு குறுகிய அரைவாழ்வுக் காலம் கொண்டதுதான் என்றாலும் அது பாசிட்ரான் உமிழ்பு தளக்கதிர்படயிய்ல் கருவியின் அருகிலேயே உற்பத்தி செய்யப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. சைக்ளோட்ரானில் 16O ஐசோடோப்பை புரோட்டான் மோதல் வழியாக 13N உற்பத்தி செய்தல் இதற்கு உதாரணமாகும். ஆல்பா துகளும் உடன் விளைகிறது[28].\n16N என்ற கதிரியக்க கார்பன் அழுத்த நீர் அணுவுலைகளின் அல்லது கொதிநீர் அணுவுலைகளின் சாதாரண இயக்கத்தின்போது குளிர்விப்பியாக ஆதிக்கம் செலுத்துகிறது. இதனால் முதல்நிலை குளிர்விப்பி அமைப்பு முதல் இரண்டாம்நிலை நீராவி சுழற்சி வரை கசிவுகளை கண்டறிவதில் இதுவொரு முக்கியமான மற்றும் உடனடி அடையாளங்காட்டியாக கருதப்படுகிறது. 16O ஐசோடோப்பிலிருந்து நியூட்ரான் புரோட்டான் வினை வழியாக 16N உற்பத்தி செய்யப்படுகிறது. இவ்வினையில் ஒரு நியூட்ரான் கவரப்பட்டு ஒரு புரோட்டான் வெளியேற்றப்படுகிறது. குறுகிய 7.1 வினாடிகள் மட்டுமே இதன் அரைவாழ்வுக் காலமாகும் [27]. ஆனால் மீண்டும் இது 16O ஆக சிதைவடையும்போது உயர் ஆற்றல் காமா கதிர்வீச்சை உற்பத்தி செய்கிறது. (5 முதல் 7 மெகா எலக்ட்ரான் வோல்ட்டு) [27][29]. இந்த காரணத்தால் அழுத்த நீர் அணு உலைகளில் முதனிலை குளிர்விப்பியாக இதைப் பயன்படுத்துவதைப் போல ஆற்றல் அணு உலை செயல்பாடுகளில் இதை தவிர்க்க வேண்டும்[29].\nஅணு நைட்ரசன் என்றும் அழைக்கப்படும் வீரிய நைட்ரசன், மூவியங்குறுப்பாக மூன்று இணையில்லா எலக்ட்ரான்களைக் கொண்டிருப்பதால் மிகவும் வினைத்திறன் மிக்கதாக உள்ளது, கட்டற்ற நைட்ரசன் அணுக்கள் எளிதாக பல தனிமங்களுடன் வினைபுரிந்து நைட்ரைடுகளை உருவாக்குகின்றன. கட்டற்ற இரண்டு நைட்ரசன் அணுக்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கிளர்வு நிலை N2 மூலக்கூறுகளை உருவாக்குகின்றன. இம்மோதலின் போது அதிக அளவு ஆற்றல் வெளியிடப்படுகிறது. கார்பனீராக்சைடு, தண்ணீர் போன்றவற்றில் சமபிளவு வினையில் CO மற்றும் O அல்லது OH மற்றும் H இயங்குறுப்புகள் தோன்றும் வினையை இது ஒத்துள்ளது. 0.1-2 மில்லிமீட்டர் பாதரச அழுத்தத்தில் நைட்ரசன் வாயு வழியாக மின்சாரத்தைச் செலுத்தும் போது மென்மஞ்சள் நிற ஒளிர்வுடன் அணு நைட்ரசன் உற்பத்தியாகிறது. மின்சாரம் செலுத்துவது நிறுத்திய பின்பும் பல நிமிடங்களுக்குப் பிறகு இவ்வொளிர்வு மெல்ல மறைகிறது [19].\nஅணு நைட்ரசன் பெரும் வினைத்திறன் கொண்டதாக இருக்கையில், அடிப்படை நைட்ரசன் வழக்கமாக N2 என்ற மூலக்கூறாக, டைநைட்ரசனாக தோன்றுகிறது. செந்தர நிலையில் இம் மூலக்கூறு நிறமற்று, மணமற்று மற்றும் சுவையற்று டையாகாந்த வாயுவாக உள்ளது -210 ° செல்சியசு வெப்பநிலையில் உருகுவதாகவும் -196 ° செல்சியசு வெப்பநிலையில் கொதிக்கும் பண்பையும் கொண்டுள்ளது [19]. அறை வெப்பநிலையில் டைநைட்ரசன் பெரும்பாலும் வினைபுரிவதில்லை. ஆனால் இலித்தியம் உலோகத்துடனும் சில இடைநிலை உலோக அணைவுகளுடனும் வினைபுரிகிறது. ஏனெனில் இதில் இடம்பெற்றுள்ள தனித்துவமான N≡N முப்பிணைப்பு இதற்குக் காரணமாகும். முப்பிணைப்புகள் மிகவும் குறுகலானவையாகவும் அதிக பிரிகை ஆற்றல் மிக்கவையாகவும் வலிமையோடு உள்ளன. இங்கு பிணைப்பு நீளம் 109.76 பைக்கோ மீட்டர் மற்றும் பிரிகை ஆற்றல் 945.41கியூ/மோல் ஆகும். இதுவே டைநைட்ரசனின் மந்தவினைக்கு காரணமென்று விவரிக்கப்படுகிறது [19].\nசில்படிகள், பலபடிகள் போன்ற பிற நைட்ரசன் வடிவங்கள் தோன்றவும் சாத்தியமுள்ளதாக அறியப்படுகிறது. அவைகளை செயற்கை முறையில் தொகுக்க முடிந்தால், அவற்றை மிக அதிக ஆற்றல் அடர்த்தி மிக்க சக்திவாய்ந்த உந்துபொருளாகவும் அல்லது வெடிபொருளாகவும் பயன்படுத்தப்படுத்த முடியும் [30]. ஏனெனில் அவையாவும் டைநைட்ரசனாக சிதைவடைகின்றன. அவற்றினுடைய முப்பிணைப்பு, N≡N (பிணைப்பு ஆற்றல் 946 கியூ⋅மோல்−1) இரட்டைப் பிணைப்பு, N=N (பிணைப்பு ஆற்றல் 418 கியூ⋅மோல்−1) அல்லது ஒற்றைப் பிணைப்பு, N–N (பிணைப்பு ஆற்றல் 160 கியூ⋅மோல்−1) களை விட வலிமையானது ஆகும். உண்மையில் ஒற்றைப் பிணைப்பைக் காட்டிலும் முப்பிணைப்பின் ஆற்றல் மூன்று மடங்கு அதிகமானதாகும். பெரும்பாலான நடுநிலை பாலிநைட்ரசன்கள் சிதைவுக்கு எதிரான தடையை பெற்றிருப்பதில்லை என்பதுதான் ஒரு மிகப்பெரிய குறைபாடு ஆகும். ஒரு சில விதிவிலக்குகள் இருந்தாலும் அவற்றை தயாரிப்பது மிகவும் சவாலான ஒரு செயலாக உள்ளது. மாறாக, அசைடு (N−3), பென்டசீனியம் (N+5), பென்டசோலைடு போன்ற நேர்மின் அயனி மற்றும் எதிர்மின் அயனி பாலி நைட்ரசன்கள் இதை நன்றாக விளக்குகின்றன [30]. உயர் அழுத்தம் (1.1 மில்லியன் வளிமண்டல அழுத்தம்) மற்றும் உயர் வெப்பநிலையில் (2000 கெல்வின் வெப்பநிலை)யில் வைரபணை செல்லில் இது உற்பத்தி செய்யப்படும்போது நைட்ரசன் ஒற்றை பிணைப்புடன் மறைவுறா கனசதுர படிக அமைப்பில் பலபடியாகிறது. வைரத்தைப் போல அமைப்புடன் வலிமையான சகப்பிணைப்பைக் கொண்டு நைட்ரசன் வைரம் என அழைக்கப்படுகிறது [31].\nவளிமண்டல அழுத்தத்தில் மூலக்கூற்று நைட்ரசன் 77 கெல்வின் வெப்பநிலையில் (-195.79 பாகை செல்சியசு) திரவமாக சுருங்குகிறது. திண்ம நைட்ரஜன் இரு வேற்றுருக்களைக் கொண்டுள்ளது. அவற்றை ஆல்பா ,பீட்டா நைட்ரஜன் என்பர். 63 கெல்வின் வெப்பநிலையில் (-210.01 பாகை செல்சியசு) பீட்டா நைட்ரசன் என்ற புறவேற்றுமை வடிவத்தை அடைகிறது[32]. 35.4 கெல்வின் வெப்பநிலையில் (−237.6 ° செல்சியசு) மற்றொரு புறவேற்றுமை வடிவமான ஆல்பா நைட்ரசனாக படிகமாகிறது[33]. திரவ நைட்ரஜன், தோற்றத்தில் தண்ணீரைப் போலவே ஆனால் தண்ணீரின் அடர்த்தியில் 80.8% அடர்த்தியைக் கொண்டிருக்கும் நிறமற்ற திரவமான திரவ நைட்ரசன் ஒரு பொதுவான உறைகலவை ஆகும். கொதி நிலையில் திரவ நைட்ரசனின் அடர்த்தி 0.808 கிராம்/மில்லி ஆகும்[34]. திடநைட்ரசன் பல படிகவியல் மாறுபாடுகளைக் கொண்டுள்ளது. புளூட்டோவின் [35] மேற்பரப்பிலும் டிரைட்டன் போன்ற சூரியக் குடும்பத்தின் புறவெளி நிலவுகளிலும் [36] திடநைட்ரசன் காணப்படுகிறது. குறைவான வெப்பநிலையிலும் கூட திட நைட்ரசன் ஆவியாகும் நிலையில் உள்ள இது பதங்கமாகி வளிமண்டலத்தை உருவாக்குகிறது அல்லது நைட்ரஜன் பனியாக மீண்டும் ஒடுக்கமடைகிறது. இது மிக பலவீனமாகவும் வெப்பநீரூற்று வடிவிலும் பாய்கிறது. துருவப்பனி முகடு மண்டல டிரைட்டன் வெந்நீர் ஊற்றிலிருந்து நைட்ரசன் வாயு வருகிறது [37].\nமுதலாவதாக கண்டறியப்பட்ட டைநைட்ரசன் அணைவுச் சேர்மத்தின், [Ru(NH3)5(N2)]2+(பென்டமின்(டைநைட்ரசன்)ருத்தேனியம்(II)), கட்டமைப்பு\nமுதலாவதாக கண்டறியப்பட்ட டைநைட்ரசன் அணைவுச் சேர்மம் அருகிலுள்ள படத்தில் காட்டப்பட்டுள்ள [Ru(NH3)5(N2)]2+ அணைவுச் சேர்மம் ஆகும். இதைத் தொடர்ந்து பல அணைவுச் சேர்மங்கள் கண்டறியப்பட்டன. இந்த அணைவுச் சேர்மங்களில் உள்ள நைட்ரசன் மூலக்கூறு குறைந்தபட்சம் ஒரு தனி இணை எலக்ட்ரான் சோடியையாவது மைய்ய உலோக நேர்மின் அயனிக்கு கொடையளிக்கிறது. நைட்ரசனேசில் உள்ள உலோகங்களுடன் N2 எவ்வாறு பிணைந்துள்ளது என்றும் ஏபர் செயல்முறையில் எவ்வாறு வினையூக்கியாகிறது என்றும் விவரிக்கப்படுகிறது. இச்செயல்முறைகளில் டைநைட்ரசனின் பங்களிப்பு உயிரியலிலும் உர உற்பத்தியிலும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது [38][39].\nஐந்து வெவ்வேறு வழிகளில் உலோகங்களுடன் டைநைட்ரசன் ஒருங்கிணைகிறது. M←N≡N (η1) மற்றும் M←N≡N→M (μ, பிசு-η1) என்று முடியும் வழிகள் நன்கு வரையறுக்கப்பட்டவையாகும். இவ்வழிகளில் நைட்ரசன் அணுக்களின் மேலுள்ள தனி இணை எலக்ட்ரான்கள் உலோக நேர்மின் அயனிக்குக் கொடையளிக்கப்படுகின்றன. முற்றிலும் வரையறுக்கப்படாத வழிகளில் முப்பினைப்பில் இருந்து தனி இணை எலக்ட்ரான்கள் கொடையளிக்கப்படுகின்றன. இரண்டு உலோக நேர்மின் அயனிகளுடன் (μ, பிசு-η2) பாலம் அமைக்கும் ஈனிக்கு அல்லது ஒரேயொரு (η2) க்கு கொடையளித்த்து ஒருங்கிணைதல் என்பன மற்ற இரண்டு வழிகளாகும். பாலம் அமைக்கும் ஈனியாக மூன்று ஒருங்கிணைப்புகள் பங்கேற்பது தனித்துவம் பெற்ற ஐந்தாவது வழியாகும். இவ்வழிமுறையில் அனைத்து எலக்ட்ரான் இணைகளும் முப்பிணைப்பில் இருந்தே கொடையளிக்கப்படுகின்றன(μ3-N2). சில அணைவுச் சேர்மங்களில் பலமுனை N2 ஈனிகளும், சில அணைவுச் சேர்மங்களில் N2 வெவ்வேறு வழிகளால் பிணைக்கப்பட்டும் காணப்படுவதுண்டு. ஏனெனில் கார்பனோராக்சைடுடனும் (CO) அசிட்டிலீனுடனும் (C2H2) நைட்ரசன் ஒத்த எலக்ட���ரான் எண்ணிக்கையுடையதாக உள்ளது. மேலும்,கார்பனோராக்சைடைக் காட்டிலும் N2 ஒரு பலவீனமான σ- வழங்கி மற்றும் π- ஏற்பி என்றாலும் டைநைட்ரசன் அணைவுச் சேர்மங்களில் பிணைப்பு கார்பனைல் சேர்மங்களின் அணைவுடன் நெருங்கிய கூட்டணியைக் கொண்டுள்ளது. σ கொடையளிப்பது M–N பிணைப்பு உருவாக்கத்தை அணுமதிப்பதில் மிகமுக்கியமான ஒரு காரணியாகக் கருதப்படுகிறது. π- க்கு கொடையளிப்பது N–N பிணைப்பை பலவீனமாக்கும். பக்க (η2) கொடையளித்தலை விட இறுதி (η1) கொடையளித்தல் எளிமையாக நிறைவேற்றப்படுகிறது[19]\nஇன்று, அனைத்து இடைநிலை உலோகங்களுக்கான டைநைட்ரசன் அணைவுச் சேர்மங்கள் அறியப்பட்டு, பல நூறு சேர்மங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. பொதுவாக அவை வழக்கமான மூன்று முறைகள் மூலம் தயாரிக்கப்படுகின்றன [19].\n1.H2O போன்ற மாறத்தகுந்த ஈனிகளை இடப்பெயர்ச்சி செய்தல், H−, அல்லது CO வை நேரடியாக நைட்ரசன் இடப்பெயர்ச்சி செய்யும். மிதமான சூழ்நிலைகளில் பெரும்பாலும் இவை மீள் வினைகளாகும்.\n2.நைட்ரசன் வாயுவின் கீழ் பொருத்தமான இணை ஈனி முன்னிலையில் உலோக அணைவுச் சேர்மங்களை ஒடுக்கமடையச் செய்து தயாரிக்கலாம். டைமெத்தில்பீனைல்பாசுபீன் (PMe2Ph) உதவியால் குளோரைடு ஈனிகளை இடப்பெயர்ச்சி செய்து மூல குளோரின் ஈனிகளைவிட குறைந்த எண்ணிக்கை நைட்ரசன் ஈனிகள் உருவாக்குவது உள்ளிட்ட முறைகள் பொதுவான தெரிவு முறையாகும்.\n3. N–N பிணைப்புள்ள ஒரு ஈனியாக மாற்றுவது ஒரு முறையாகும். ஐதரசீன் அல்லது அசைடு போன்றவை நேரடியாக டைநைட்ரசன் ஈனியுடன் இம்முறையில் இணைகிறது.\nஉலோக அணைவுக்குள் அரிதாக N≡N பிணைப்பு நேரடியாக உருவாகலாம். உதாரணமாக, ஒருங்கிணைந்த அமோனியா (NH3) நேரடியாக நைட்ரசு அமிலத்துடன் (HNO2) உடன் வினைபுரிதலைக் குறிப்பிடலாம். ஆனால் இவ்வினை பொதுவாக பயன்படுத்தக்கூடிய ஒரு வினையல்ல. பெரும்பால டை நைட்ரசன் அணைவுகள் வெண்மை-மஞ்சள்-ஆரஞ்சு-சிவப்பு-பழுப்பு என்ற எல்லைக்குள் காணப்படுகின்றன. சில அணைவுச் சேர்மங்கள் விதிவிலக்காக நீலநிறத்திலும் [{Ti(η5-C5H5)2}2-(N2)] காணப்படுகின்றன[19].\nநைட்ரைடுகள், அசைடுகள் மற்றும் நைட்ரிடோ அணைவுகள்தொகு\nஈலியம் நியான், ஆர்கான் முதலான முதல் மூன்று மந்த வாயுக்கள், பிசுமத்தை அடுத்துள்ள குறுகிய அரைவாழ்வுக் கால ஆயுள் கொண்ட தனிமங்கள் தவிர, கிட்டத்தட்ட தனிம வரிசை அட்டவணையிலுள்ள எல்லா தனிமங்களுடனு��், நைட்ரசன் வினைபுரிகிறது. இவ்வினைகளால் அளப்பரிய வெவ்வேறு பண்புகளும் பயன்பாடுகளும் கொண்ட இரட்டைச் சேர்மங்கள் உருவாகின்றன [19]. பல இரட்டைச் சேர்மங்கள் அறியப்பட்டாலும் நைட்ரசன் ஐதரைடுகள், ஆக்சைடுகள் மற்றும் புளோரைடுகள் விதிவிலக்காகும். பல தனிமங்களுடன் பலவிகிதவியல் அளவுகளிலும் நைட்ரசன் இணைந்துள்ளது. (உதாரணம்: 9.2 < x < 25.3 அளவுகளுக்காக MnN, Mn6N5, Mn3N2, Mn2N, Mn4N மற்றும் MnxN). மேலும் இவற்றை உப்பு போன்றவை என்றும் வைரம் போன்றவை என்றும் வகைப்படுத்துகிறார்கள். பொதுவாக உலோகங்கள் நைட்ரசனுடன் அல்லது அமோனியாவுடன் நேரடியாக வினைபுரிவதால் இவ்வகை சேர்மங்கள் உருவாகின்றன. உலோக அமைடுகளின் வெப்பச் சிதைவு வினையினாலும் இவை உருவாகின்றன :[40]\nஇச்செயல்முறை பல்வேறு வழிமுறைகளில் நடைபெறுகிறது. கார உலோகங்களும் காரமண் உலோகங்களும் மிகுந்த அயனிப்பண்புடைய நைட்ரைடுகளாகும். Li3N (Na, K, Rb, மற்றும் Cs தனிமங்களளும் M3N2 (M = Be, Mg, Ca, Sr, Ba) நிலையான நைட்ரைடுகளாக உருவாவதில்லை. மின்சுமை பகிர்வு நிறைவடையவில்லை என்றாலும் இவை N3− எதிமின் அயனியின் உப்புகளாகக் கருதப்படுகின்றன. எனினும், கார உலோக அசைடுகளும் KN3 யும் நேரியல் N3− எதிமின் அயனியின் உப்புகள் Sr(N3)2 மற்றும் Ba(N3)2 என்பது நன்கறிந்ததே ஆகும். அயனிப்பண்பு குறைந்த தொகுதி 11 முதல் 16 வரையிலான உலோகங்களின் அசைடுகள் சிக்கலான கட்டமைப்பைக் கொண்டுள்ளன. சிறு அதிர்ச்சிகளும் அவற்றை உடனடியாக வெடிக்கச் செய்கின்றன [40]\nபோரசீனின் உடனிசைவுக் கட்டமைப்புகள் (–BH–NH–)3\nபோரசீனின் உடனிசைவுக் கட்டமைப்புகள், (–BH–NH–)3\nசயனோசன் ((CN)2), முப்பாசுபரசு பென்டாநைட்ரைடு (P3N5), இருகந்தக இருநைட்ரைடு (S2N2), நாற்கந்தக நான்குநைட்ரைடு (S4N4) உள்ளிட்ட பல சகபிணைப்பு இரட்டை நைட்ரைடுகள் அறியப்படுகின்றன. சகபிணைப்பு சிலிக்கன் நைட்ரைடு (Si3N4), சகபிணைப்பு செருமானியம் நைட்ரைடு (Ge3N4) போன்ற சேர்மங்களும் அறியப்படுகின்றன. குறிப்பாக சிலிக்கான் நைட்ரைடு சிட்டங்கட்டுதலுக்கு ஏற்ற ஒரு நம்பிக்கைக்குரிய பீங்கான் தயாரிப்புக்குப் பயன்படுகிறது. குறிப்பாக, குழு 13 நைட்ரைடுகள் பல குறைக்கடத்திகளாக செயற்படுகின்றன. கிராபைட்டும் வைரம், சிலிக்கான் கார்பைடு ஆகியனவற்றுடன் ஒத்த எலெக்ட்ரான் எண்ணிக்கையுடையனவாகவும், ஒத்த கட்டமைப்புக்களையும் கொண்டுள்ளன. குழுவின் கீழே செல்லச் செல்ல இவற்றின் ப��ணைப்புகள் சகபிணைப்பிலிருந்து அயனிப்பிணைப்பாகவும் உலோகப் பிணைப்பாகவும் மாற்றமடைகின்றன. குறிப்பாக B–N அலகு C–C பிணைப்புடன் ஒத்த எலக்ட்ரான் எண்ணிக்கையைப் பெற்று, போரானுக்கும் நைட்ரசனுக்கும் இடைபட்ட உருவளவை கார்பன் கொண்டுள்ளது. போரசீனில் உள்ள போரான்-நைட்ரசன் பிணைப்புக்கு இக்கோட்பாடு சரியாகப் பொருந்தவில்லை., எலக்ட்ரான் குறைவு காரணமாக போரான் எளிமையாக அணுக்கருநாட்ட தாக்கத்துக்கு உட்படுகிறது. முழுமையாக கார்பனைக் கொண்டுள்ள வளையங்களில் இது சாத்தியமில்லை [40].\nநைட்ரைடுகளின் மிகப்பெரிய வகையாக சிற்றிடைவெளி நைட்ரைடு வகை உள்ளது. MN, M2N, M4N போன்ற வாய்ப்பாடுகளைக் கொண்டிருக்கும் இவ்வகை நைட்ரடுகளில், சிறிய நைட்ரசன் அணுக்கள் உலோகக் கனசதுரம் அல்லது அறுங்கோண நெருக்கப் பொதிவு கட்டமைப்புகளின் இடைவெளியில் பொருந்தி நிரம்பியுள்ளன. வேதியியலில் இவை மந்தமானவையாகவும், மிகவும் கடினமான, ஒளிபுகாதனவாகவும் காணப்படுகின்றன. 2500 °செல்சியசு வெப்பநிலைக்கு மேற்பட்ட உயர் வெப்பநிலைகளில் மட்டுமே இவை உருகும். மேலும் இவை உலோகங்கள் போல் மின்சாரத்தைக் கடத்துகின்றன. மிகவும் மெதுவாக நீராற்பகுப்பு அடைந்து அமோனியா அல்லது நைட்ரசனை கொடுக்கின்றன[40].\nஈனிகளில் நைட்ரைடு எதிர்மின் அயனியே (N3−)வலிமையான π கொடையாளி ஆகும். (O2−) நைட்ரைடுக்கு அடுத்த வலிமையான ஈனியாகும். நைட்ரிடோ அணைவுச் சேர்மங்கள் பொதுவாக அசைடுகளை வெப்பச் சிதைவுக்கு உட்படுத்தி அல்லது அமோனியாவை புரோட்டான் நீக்கம் செய்து தயாரிக்கப்படுகின்றன. இறுதியில் உள்ள {≡N}3− குழுவில் இவை ஈடுபடுகின்றன. நேரியல் அசைடு எதிர்மின் அயனி நைட்ரசு ஆக்சைடும் கார்பனீராக்சைடு, சயனேட்டுகள் போன்றவற்றுடன் ஒத்த எலக்ட்ரான் எண்ணிக்கை கொண்டு அணைவுச் சேர்மங்களைக் கொடுக்கிறது. கார்பனேட்டு, நைட்ரேட்டுகளுடன் ஒத்த எண்ணிக்கை கொண்டுள்ள நைட்ரைடுகளும் அறியப்படுகின்றன[40].\nநைட்ரசன் கொண்டுள்ள இனங்களின் செந்தர ஒடுக்கத்திறன்; மேல் படம் pH 0; இல் ஒடுக்கத்திறனைக் காட்டுகிறது. கீழ்படம் pH 14 இல் ஒடுக்கத்திறனைக் காட்டுகிறது..[41]\nநைட்ரசன் சேர்மமான அமோனியா (NH3) தொழில்ரீதியாக மிக முக்கியமான சேர்மம் ஆகும் வேறு சேர்மங்களைக் காட்டிலும் பெரிய அளவில் இச்சேர்மம் தயாரிக்கப்படுகிறது. ஏனெனில், அமோனியா உணவு மற்றும் உர��்களுக்கு வினையூக்கியாகவும் உலக உயிரினங்களின் சத்துணவில் குறிப்பிடத்தக்க பங்களிப்பையும் அளிக்கிறது. ஒரு நிறமற்ற கார வாயுவான இது காரச் சுவையைக் கொண்டுள்ளது. அமோனியாவின் கட்டமைப்பில் ஐதரசன் பிணைப்பு இருப்பதால். உயர் உருகுநிலை (−78 °செல்சியசு), உயர் கொதிநிலை (−33 °செல்சியசு) போன்ற குறிப்பிடத்தக்க சில விளைவுகளுக்கு உட்படுகிறது. ஒரு திரவமாக அமோனியா நல்லதொரு கரைப்பானாக விளங்குகிறது. குறைந்த பாகுத்தன்மை மற்றும் குறைந்த மின் கடத்து திறன் கொண்டு உயர் மின்கடத்தாப் பொருள் மாறிலி மதிப்பைக் கொண்டுள்ளது. நீரைவிட அடர்த்தி குறைவானதாக அமோனியா காணப்படுகிறது. எனினும், அமோனியாவிலுள்ள ஐதரசன் பிணைப்பு தண்ணீரிலுள்ள ஐதரசன் பிணைப்பைக் காட்டிலும் வலிமை குறைந்தது ஆகும். ஏனெனில் ஆக்சிசனுடன் ஒப்பிடும்போது நைட்ரசனின் எலக்ட்ரான் எதிர்மின் தன்மை குறைவாகும். மேலும், அமோனியாவில் ஒரேயொரு தனி இணை எலக்ட்ரான்கள் மட்டுமே உள்ளது. நீரில் இரண்டு தனி இனை எலக்ட்ரான்கள் உண்டு. நீர்த்த கரைசலில் அமோனியா வலிமை குறைந்த காரமாகச் (காடித்தன்மை எண் 4.74) செயல்படுகிறது. இதனுடைய இணை அமிலம் அமோனியம் ஆகும். மிகவும் வலிமை குறைந்த ஓர் அமிலமாகவும் அமோனியாவினால் செயலாற்ற முடியும். அமிலமாக ஒரு புரோட்டானை இழந்து அமைடு எதிர்மின் அயனியை உருவாக்குகிறது. இதனால் தண்ணிரைப் போலவே இதுவும் தன்பிரிகை அடைந்து அமோனியம் மற்றும் அமைடுகளை உருவாக்குகிறது. அமோனியா காற்றில் எரிந்து நைட்ரசன் வாயுவையும், புளோரினில் எரிந்து பசுமஞ்சள் நிறத்திலான நைட்ரசன் டிரைபுளோரைடையும் கொடுக்கிறது. பிற அலோகங்களுடன் அமோனியாவின் வினை சிக்கல்கள் நிறைந்ததாகும். எனினும் பல கலப்பு விளைபொருட்கள் உருவாகின்றன. உலோகங்களுடன் சேர்த்து அமோனியாவை சூடுபடுத்தினால் நைட்ரைடுகள் உருவாகின்றன.\nஇரட்டை நைட்ரசன் ஐதரைடுகள் மேலும் பல அறியப்பட்டுள்ளன. ஆனால் ஐதரசீனும் (N2H4) ஐதரசன் அசைடும் (NH2OH) அவற்றில் முக்கியமானவைகளாகும். நைட்ரசன் ஐதரைடாக இல்லாவிட்டாலும் ஐதராக்சிலமைன் (NH2OH) நைட்ரசன் ஐதரைடின் பண்புகளைப் பெற்றுள்ளது. இதன் கட்டமைப்பும் அமோனியாவையும் ஐதரசீனையும் ஒத்துள்ளது. ஐதரசீன் ஒரு புகையும் நிறமற்ற நீர்மம் ஆகும். அமோனியாவின் மணம் கொண்ட இது இயற்பியல் பண்புகளில் நீரை ஒத்துள்ளது. (உருகுநிலை 2.0 ° செல்சியசு, கொதிநிலை 113.5 ° செல்சியசு, அடர்த்தி 1.00 கி•செ.மீ−3). வெப்பங்கொள் சேர்மமாக இருந்த போதிலும், இயக்கவியலின்படி நிலைப்புத்தன்மை கொண்டிருக்கிறது. காற்றில் விரைவாகவும் முற்றிலுமாகவும் எரிந்து வெப்ப உமிழ்வினை மூலம் நைட்ரசனையும் நீராவியையும் கொடுக்கிறது. பயனுள்ள ஒடுக்கும் முகவராகவும் அமோனியாவை விட பலவீனமான காரமாகவும் ஐதரசீன் பயன்படுத்தப்படுகிறது.[42]. ராக்கெட் எரிபொருளாகவும் ஐதரசீனைப் பயன்படுத்துகிறார்கள் [43]. ஊன்பசை அல்லது பசையின் முன்னிலையில் அமோனியாவுடன் கார சோடியம் ஐப்போகுளோரைடை வினைபுரியச் செய்து பொதுவாக ஐதரசீன் தயாரிக்கப்படுகிறது:[42]\nCu2+ போன்ற உலோக அயனிகளை நீக்கும் என்பதால் ஊன்பசை சேர்க்கப்படுகிறது. Cu2+ உலோக அயனி வினையூக்கியாகச் செயல்பட்டு ஐதரசீனை சிதைக்கிறது, குளோரமீனுடன் (NH2Cl) வினைபுரிந்து அமோனியம் குளோரைடையும் நைட்ரசனையும் உற்பத்தி செய்கிறது.\n1890 ஆம் ஆண்டு நீரிய ஐதரசீனை நைட்ரசு அமிலம் மூலமாக ஆக்சிசனேற்றம் செய்து முதன்முதலில் ஐதரசன் அசைடு தயாரிக்கப்பட்டது. இது வெடிக்கும் தன்மை கொண்ட சேர்மமாகும். நீர்த்த நிலையில் கூட இச்சேர்மம் அபாயகரமானது. தாங்க முடியாத எரிச்சலூட்டும் மணமும் கொல்லும் நச்சுத்தன்மையும் இதன் குணங்களாகும். அசைடு எதிர்மின் அயனியின் இணை அமிலமாக கருதப்படும் ஐதரசன் அசைடு, ஐதரோ ஆலிக் அமிலத்துடன் ஒப்புமை கொண்டுள்ளது [42].\nநைட்ரசனின் நான்கு எளிய டிரை ஆலைடுகள், சில கலப்பு ஆலைடுகள், சில ஐதரோ ஆலைடுகள் அறியப்படுகின்றன. ஆனால் இவை நிலைப்புத்தன்மை இல்லாமலும் அதிக பயன்பாடு இல்லாமலும் உள்ளன. உதாரணங்கள்: NClF2, NCl2F, NBrF2, NF2H, NCl2H, மற்றும் NClH2.\nஐந்து நைட்ரசன் புளோரைடுகள் அறியப்படுகின்றன. நைட்ரசன் டிரைபுளோரைடு (NF3) , முதன் முதலில் 1928 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்டது ஒரு நிறமற்ற மற்றும் மணமற்ற சேர்மமான இது வெப்பமண்டலியல் ரீதியாக நிலைப்புத் தன்மை உடையது. நீரற்ற ஐதரசன் புளோரைடில் கரைந்த உருகிய அமோனியம் புளோரைடை மின்னாற்பகுத்தல் மூலம் நைட்ரசன் டிரைபுளோரைடு தயாரிக்கலாம். கார்பன் டெட்ராபுளோரைடு போல இச்சேர்மம் வினைத்திறன் மிக்கது அல்ல.சூடுபடுத்தும்போது மட்டும் இது புளோரினேற்றும் முகவராகச் செயல்படுகிறது. தாமிரம், ஆர்சனிக், ஆண்டிமனி மற்றும் பிசுமத் ஆகிய தனிமங்களுடன் வினைபுரிகிறது. நைட்ரசன் டிரை புளோரைடில் இருந்து உயர் வெப்பநிலைகளில் டெட்ரா புளோரோ ஐதரசீனை (N2F4) தயாரிக்க இயலும். NF+4 மற்றும் N2F+3 போன்ற நேர்மின் அயனிகளும் அறியப்படுகின்றன. டெட்ரா புளோரோ ஐதரசீனை ஆர்சனிக் பென்டாபுளோரைடு போன்ற வலிமையான புளோரைடு ஏற்பிகளுடன் சேர்த்து N2F+3 நேர்மின் அயனி தயாரிக்கப்படுகிறது. குறுகிய N-O பிணைப்பு இடைவெளி, மறைமுகமாக உணர்த்தப்படும் இரட்டைப்பிணைப்பு, உயர் முனைவுத்திறன் போன்ற காரணங்களால் ONF3 சேர்மம் கவனம் பெறுகிறது. ஐதரசீனைப் போல அல்லாமல் டெட்ரா புளோரோ ஐதரசீன் அறை வெப்பநிலையில் பிரிகையடைந்து NF2• இயங்குறுப்பைக் கொடுக்கிறது. புளோரின் அசைடு (FN3) வெப்பவியல் ரீதியாக நிலைப்புத்தன்மையற்ற வெடிபொருளாகும். வெப்பவியல் ரீதியாக உள்ளிடை மாற்றம் மூலம் டைநைட்ரசன் டைபுளோரைடை சிசு, டிரான்சு எனப்படும் ஒருபக்க மாற்றியம் மற்றும் மறுபக்க மாற்றியங்களாக மாற்ற இயலும். FN3. சேர்மத்தின் வெப்பச்சிதைவு வினையில் இவ்விளைபொருள் அறியப்பட்டது [44].\nநைட்ரசன் டிரைகுளோரைடு (NCl3) என்பது ஒரு அடர்த்தியான, ஆவியாகக்கூடிய, ஒரு வெடிக்கும் திரவமாகும், இதன் இயற்பியற் பண்புகள் கார்பன் டெட்ராகுளோரைடு|கார்பன் டெட்ராகுளோரைடின்]] பண்புகளை ஒத்திருக்கிறது. இவ்விரண்டுக்கும் இடையிலான ஒரே ஒரு வித்தியாசம் NCl3 சேர்மமானது நீர் மூலம் எளிமையாக நீராற்பகுக்கப்படுகிறது. ஆனால் CCl4 நீராற்பகுக்கப்பு அடைவதில்லை. பியர்ரி இலூயிசு டியுலாங்கு என்பவரால் இது முதலில் தொகுக்கப்பட்டது. இவ்வினையின்போது இச்சேர்மத்தின் வெடிக்கும் இயல்பால் டியுலாங்கு தன்னுடைய மூன்று விரல்களையும் ஒரு கண்ணையும் இழந்தார். நீர்த்தநிலை வாயுவாக இதுவொரு அபாயமற்ற சேர்மம் ஆகும். வெளுப்பானாகவும் நுண்ணுயிரகற்றியாகவும் இதைப் பயன்படுத்துகிறார்கள். நைட்ரசன் முப்புரோமைடு முதலில் 1975 இல் ஆழ்ந்த சிவப்பு நிறத்தில் வெப்பநிலை உணரியாக ஆவியாகும் திண்மமாக கண்டறியப்பட்டது. −100 °செல்சியசு வெப்பநிலையில் கூட இது வெடிக்கும் இயல்புடையது ஆகும். நிலைப்புத்தன்மையற்ற நைட்ரசன் டிரை அயோடைடு 1990 இல் கண்டறியப்பட்டது. சிறகு, காற்றோட்டம், ஆல்பா துகள்கள் [44][45] போன்ற சிறு அதிர்ச்சிகளையும் உணரவல்ல ஓர் உணரியான, அமோனியாவுடனான இதன் கூட்டுப்பொருள் முன்னரே அறியப்பட்டது. இக்காரணத்��ால் மந்திர வேதியியல் என்ற நோக்கத்தில், சிலசமயங்களில் சிறிதளவு நைட்ரசன் டிரை அயோடைடு பள்ளிகளின் வகுப்பறைகளில் தயாரிக்கப்படுவதுண்டு [46].\nநைட்ரோசில் ஆலைடுகள் (XNO) மற்றும் நைட்ரைல் ஆலைடுகள் (XNO2) என்ற இரண்டு வரிசைகளில் நைட்ரசன் ஆக்சோஆலைடுகள் அறியப்படுகின்றன. நைட்ரசு ஆக்சைடை நேரடியாக ஆலசனேற்றம் செய்வதன் மூலம் வினைத்திறன் மிக்க நைட்ரோசில் ஆலைடுகளை தயாரிக்கிறார்கள். நைட்ரோசில் புளோரைடு (NOF) நிறமற்றதாகவும் ஒரு தீவிர புளோரினேற்றும் முகவராகவும் காணப்படுகிறது. நைட்ரோசில் குளோரைடும் (NOCl) இதே பண்புகளைக் கொண்டு ஒரு கரைப்பானாகப் பயன்படுத்தப்படுகிறது. நைட்ரோசில் புரோமைடு (NOBr) சிவப்பு நிறத்திலுள்ள ஒரு சேர்மமாகும். நைட்ரைல் ஆலைடுகளின் வேதியியல் வினைகள் யாவும் ஒரே மாதிரியானவையாகும். நைட்ரைல் புளோரைடும் (FNO2), நைட்ரைல் குளோரைடும் ClNO2) வினைத்திறன் மிக்க வாயுக்களாகவும் தீவிர ஆலசனேற்ற முகவர்களாகவும் உள்ளன [44].\n−196 °செ, 0 °செ, 23 °செ, 35 °செ, மற்றும் 50 °செல்சியசு. வெப்பநிலைகளில் காணப்படும் நைட்ரசன் டையாக்சைடு. தாழ் வெப்பநிலைகளில் NO\n4), டைநைட்ரசன் டெட்ராக்சைடாக மாறுகிறது. உயர் வெப்பநிலைகளில் இது NO\nநைதரசன் ஆக்சைடு அல்லது நாக்சு என்பது பொதுவாக நைட்ரசனும் ஆக்சிசனும் சேர்ந்து உருவாகும் நைட்ரசனின் ஆக்சைடு சேர்மங்களாகும். குறிப்பாக ஒரு நைட்ரசன் மூலக்கூறும் ஒன்றோ அல்லது இரண்டோ ஆக்சிசன் மூலக்கூறுகளும் சேர்ந்து உருவாகும் நைட்ரிக் ஆக்சைடு (NO) அல்லது நைட்ரசன் டை-ஆக்சைடு (NO2) என்னும் வேதிச்சேர்மங்களே நாக்சு என்று அழைக்கப்படுகின்றன. இவை எரிப்புச் செயல்முறைகளில் அதிலும் குறிப்பாக உயர்வெப்ப எரிப்புக்களின் போது உருவாகின்றன.\nN2O (நைட்ரசு ஆக்சைடு), NO (நைட்ரிக் ஆக்சைடு), N2O3 (டைநைட்ரசன் டிரையாக்சைடு), NO2 (நைட்ரசன் டையாக்சைடு), N2O4 (டைநைட்ரசன் டெட்ராக்சைடு), N2O5 (டைநைட்ரசன் பென்டாக்சைடு), NO3(நைட்ரசன் டிரையாக்சைடு), N4O (நைட்ரோசிலசைடு) [47], மற்றும் N(NO2)3 (டிரைநைட்ரமைடு) [48]. முதலிய ஒன்பது வகையான மூலக்கூற்று ஆக்சைடுகளாக நைட்ரசன் உருவாகிறது. வெப்பவியல் ரீதியாக இவை அனைத்தும் நிலைப்புத்தன்மை அற்றவையாக உள்ளன. சாத்தியமுள்ளதாக அறியப்படும் ஆக்சாடெட்ரசோல் என்ற அரோமாட்டிக் வளைய ஆக்சைடு (N4O) இதுவரையில் தயாரிக்கப்படவில்லை[47].\nசிரிப்பூட்டும் வாயு என்று அழைக்கப்படும் நைட்ரசு ஆக்சைடு (N2O), 250° செல்சியசு வெப்பநிலையில் உருகிய அமோனியம் நைட்ரேட்டை வெப்பச்சிதைவுக்கு உட்படுத்தி தயாரிக்கப்படுகிறது. இவ்வேற்ற ஒடுக்க வினையில் நைட்ரிக் ஆக்சைடும், நைட்ரசனும் உடன் விளைபொருட்களாக விளைகின்றன. பெரும்பாலும் உந்து எரிபொருளாகவும் காற்றேற்ற முகவராகவும் இது பயன்படுத்தப்படுகிறது. முற்காலத்தில் இதை மயக்கமூட்டியாகவும் பயன்படுத்தினர். தோற்றம் ஒரே மாதிரியாக இருந்த போதிலும், இதை ஐப்போ நைட்ரசு அமிலத்தின் (H2N2O2) நீரிலி என்று கருதமுடியாது. ஏனெனில் அது நைட்ரசு ஆக்சைடை நீரில் கரைத்தலால் உருவாக்கப்படவில்லை. இது ஆலசன்கள், கார உலோகங்கள், அல்லது அறை வெப்பநிலையில் ஓசோன் (சூடாக்கலின்போது வினைத்திறன் அதிகரிக்கிறது), முதலானவற்றுடன் வினைபுரிவதில்லை. 600 ° செல்சியசு வெப்பநிலைக்கு மேல் இது சமச்சீர்மையற்ற N–N–O (N≡N+O−↔−N=N+=O) கட்டமைப்பைப் பெற்றுள்ளது. பலவீனமான N-O பிணைப்பை உடைப்பதன் மூலம் இது பிரிகையடைகிறது [47].\nநைட்ரிக் ஆக்சைடு (NO) என்பது குறைந்தபட்ச சிக்கல் கொண்ட ஒரு மூலக்கூறு ஆகும், இச்சேர்மத்தில் ஒற்றைப்படை எலக்ட்ரான்களின் எண்ணிக்கை நிலையாக உள்ளது. மனிதர்கள் உட்பட பாலூட்டிகளில், இச்சேர்மம் பல உடலியல் மற்றும் நோயியல் செயல்முறைகளில் ஈடுபடுகின்ற ஒரு முக்கியமான செல்லிடை சமிக்ஞை மூலக்கூறு ஆகும் [49]. அமோனியாவை ஒரு வினையூக்கியின் முன்னிலையில் ஆக்சிசனேற்றம் செய்தால் நைட்ரிக் ஆக்சைடு உருவாகிறது. இணைகாந்த வளிமமான இச்சேர்மம் நிறமற்றும் வெப்பவியல் ரீதியாக நிலைத்தன்மை அற்றும் காணப்படுகிறது. 1100–1200 ° செல்சியசு வெப்பநிலையில் நைட்ரசன் மற்றும் ஆக்சிசனாக இச்சேர்மம் சிதைவடைகிறது. நைட்ரசனில் உள்ளது போலவே பிணைப்பு இருந்தாலும் ஒரு கூடுதல் எலக்ட்ரான் π* பிணைப்பெதிர் ஆர்பிட்டாலுடன் இணைகிறது. இதனால் பிணைப்பு நிலை தோராயமாக 2.5 குறைகிறது.\nநீல டைநைட்ரசன் டிரையாக்சைடு (N2O3) திண்மநிலையில் மட்டுமே கிடைக்கிறது. ஏனெனில் இதனுடைய உருகு நிலைக்கு மேலான வெப்பநிலைகளில் உடனடியாகச் பிரிகை அடைந்து நைட்ரிக் ஆக்சைடு, நைட்ரசன் டை ஆக்சைடு (NO2) மற்றும் டைநைட்ரசன் டெட்ராக்சைடு (N2O4) ஆகியவற்றைக் கொடுக்கிறது. நைட்ரசன் டை ஆக்சைடு மற்றும் டைநைட்ரசன் டெட்ராக்சைடு இரண்டுக்கும் இடையே நிலவும் சமநிலை காரணமாக இவற்றை தனித்தனியே ஆய்வு செய்வது கடினமாகும். சிலநேரங்களில் டைநைட்ரசன் டெட்ராக்சைடு சேர்மம் ஓர் ஊடகத்தில் உயர் மின்கடத்தா மாறிலி அளவுடன் சமமற்ற பிளவு வினையினால் நைட்ரசோனியம் மற்றும் நைட்ரேட்டுகளைக் கொடுக்கிறது. விரும்பத்தகாத கார மணத்துடன் பழுப்பு நிறங்கொண்டு அரிக்கும் பண்பு கொண்ட வளிமமாக நைட்ரசன் டையாக்சைடு காணப்படுகிறது. உலர் உலோக நைட்ரேட்டை சிதைவு வினைக்கு உட்படுத்துவதன் மூலம் இவ்விரண்டு சேர்மங்களையும் எளிமையாகத் தயாரிக்க முடியும். இரண்டும் தண்ணீருட வினைபுரிந்து நைட்ரிக் அமிலத்தைக் கொடுக்கின்றன. நீரற்ற உலோக நைட்ரேட்டுகளையும் நைட்ரேட்டோ அணைவுச் சேர்மங்களையும் தயாரிப்பதற்கு டைநைட்ரசன் டெட்ராக்சைடு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. 1950 களில் அமெரிக்கா மற்றும் உருசியாவில் பல இராக்கெட்டுகளுக்கான ஆக்சிசனேற்றியாக தேர்வு செய்யப்பட்டு சேமித்து வைக்கபட்டது. ஏனெனில் அறை வெப்பநிலையில் இது நீர்மமாகக் காணப்படுகிறது. உடனடி தீப்பற்று எரிபொருளான இதை ஐதரசீனுடன் சேர்த்து இராக்கெட் எரிபொருளாக சேமிக்க இயலும் [47].\nவெப்பவியல் ரீதியாக நிலையற்றதாகக் கருதப்படும் அதி தீவிர டைநைட்ரசன் பென்டாக்சைடு (N2O5) சேர்மம் நைட்ரிக் அமிலத்தின் நீரிலியாகும். நைட்ரிக் அமிலத்துடன் பாசுபரசு பென்டாக்சைடு சேர்த்து நீர்நீக்கம் செய்வதன் மூலமாக இதைத் தயாரிக்க முடியும். வெடிபொருட்கள் தயாரிக்க இதைப் பயன்படுத்துவார்கள். ஒரு நீருறிஞ்சியாக, நிறமற்ற படிகத் திண்மமாக, ஒளி உணரியாக டைநைட்ரசன் பென்டாக்சைடு காணப்படுகிறது. திண்மநிலையில் இதன் அயனிக் கட்டமைப்பு [NO2]+[NO3]− ஆகவும் வளிமநிலையிலும் கரைசலிலும் இதன் மூலக்கூற்று கட்டமைப்பு O2N–O–NO2 ஆகவும் உள்ளது. நீரேற்றம் செய்யும்போது இது பெராக்சோநைட்ரிக் அமிலத்தைக் (HOONO2) கொடுக்கிறது. மேலும் இதுவொரு தீவிர ஆக்சிசனேற்ற முகவராகும். வாயுநிலை டைநைட்ரசன் பென்டாக்சைடு கீழ்கண்டவாறு சிதைவடைகிறது :[47]\nஎனவே விதிவிலக்காக, கொதிநிலைக்கு கீழான வெப்பநிலையில் O=N–N=O பிணைப்புக்கு இருபடியாக்கல் பொருந்துவதில்லை. (இங்கு ஒருபக்க மாற்றியம் நிலைப்புத் தன்மையுடன் உள்ளது) ஏனெனில் ஒட்டு மொத்த பிணைப்பு நிலையை இது உயர்த்துவதில்லை. இணையில்ல எலக்ட்ரான் NO மூலக்கூறுக்கு குறுக்காக உள்ளடங்காமல் நிலைப்புத்தன்���ையைக் கொடுக்கிறது. நைட்ரிக் ஆக்சைடு துருவ மூலக்கூறுகளுடன் ஒடுக்கப்படும் போது, சமச்சீரற்ற சிவப்பு இருபடி O = N-O = N க்கான சான்றுகளும் உள்ளன. நைட்ரிக் ஆக்சைடு ஆக்சிசனுடன் வினைபுரிந்து பழுப்பு நிற நைட்ரசன் டை ஆக்சைடையும், ஆலசன்களுடன் வினைபுரிந்து நைட்ரோசில் ஆலைடுகளையும் தருகிறது. இடைநிலை உலோகச் சேர்மங்களுடன் வினைபுரிந்து ஆழ்ந்த நிறமுடைய நைட்ரோசில் அணைவுச் சேர்மங்களைக் கொடுக்கிறது [47].\nஆக்சோ அமிலங்கள், ஆக்சோ எதிர்மின்னயனிகள், ஆக்சோ அமிலவுப்புகள்தொகு\nபல நைட்ரசன் ஆக்சோ அமிலங்கள் அறியப்பட்டுள்ளன. நீரிய கரைசல் அல்லது உப்புகளாக அறியப்படும் இவற்றில் பெரும்பாலானவை தூய்மையான நிலையில் நிலைப்புத்தன்மை அற்றவையாகும். பலவீனமான இரட்டைப் புரோட்டான் அமிலமாகக் கருதப்படும் ஐப்போநைட்ரசு அமிலம் (H2N2O2), HON=NOH என்ற கட்டமைப்பைக் கொண்டுள்ளது. (காடித்தன்மை எண் pKa1 6.9, pKa2 11.6) அமிலக் கரைசல்கள் நிலைப்புத்தன்மை கொண்டுள்ளன. ஆனால் pH 4 கார வினையூக்கச் சிதைவு [HONNO]−என்ற அயனி வழியாக நிகழ்கிறது. நைட்ரசு ஆக்சைடும் ஐதராக்சைடு எதிர்மின் அயனியும் தோன்றுகின்றன. N2O2−2 எதிர்மின் அயனிகள் பங்குபெறும் ஐப்போநைட்ரைட்டுகள் நிலைப்புத்தன்மை கொண்டவையாக உள்ளன. பொதுவாக ஒடுக்கும் முகவர்களாகவும் இவை செயற்படுகின்றன. நைட்ரசன் சுழற்சியில் அமோனியாவிலிருந்து நைட்ரைட்டு தோன்றும் பொழுது இடைநிலை படிநிலையாக இது தோன்றுகிறது. ஐப்போநைட்ரைட்டு ஓர் இணைக்கும் அல்லது நச்சேற்றும் இருபல் ஈனியாகவும் செயற்படுகிறது.\nஒரு தூய்மையான சேர்மமாக நைட்ரசு அமிலம் (HNO2) இருப்பதில்லை. ஆனால் வாயுச் சமநிலையில் இதுவொரு முக்கியமான நீரிய வினைப்பொருளாகக் கருதப்படுகிறது. குளிர்ந்த நீரிய நைட்ரைட்டு கரைசல்களை அமிலமாக்கல் மூலம் நைட்ரசு அமிலத்தின் நீர்த்த கரைசல்களை தயாரிக்க முடியும். அறை வெப்பநிலையில் ஏற்கனவே நைட்ரேட்டாகவும், நைட்ரிக் ஆக்சைடாகவும் கணிசமாக புரோட்டான் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. 18 ° செல்சியசு வெப்பநிலையில் காடித்தன்மை எண் 3.35 என்ற மதிப்பைக் கொண்டிருக்கும் ஓர் பலவீனமான அமிலமாக நைட்ரசு அமிலம் கருதப்படுகிறது.\nபெர்மாங்கனேட்டைப் பயன்படுத்தி நைட்ரேட்டாக ஆக்சிசனேற்றம் அடைவதை தரம்பார்த்தல் சோதனையின் மூலமாக சோதிக்கமுடியும். கந்தக டை ஆக்சைடைக் கொண்டு நைட்ரசு மற்றும் நைட்ரிக் ஆக்சைடுகளாக இதை ஒடுக்கமுடியும். வெள்ளீயம்(II) உடன் சேர்த்து ஐப்போ நைட்ரசு அமிலமாகவும் ஐதரசன் சல்பைடைச் சேர்த்து அமோனியாவாகவும் இதை ஒடுக்கலாம். ஐதரசோனியம் உப்புகள் N2H+ 5 நைட்ரசு அமிலத்துடன் வினைபுரிந்து அசைடுகளையும், மேலும் இவை தொடர்ந்து வினைபுரிந்து நைட்ரசு ஆக்சைடையும் நைட்ரசனையும் தருகின்றன. 100 மி.கி/கி,கி க்கு அதிகமான அளவுகளில் சோடியம் நைட்ரைட்டு ஒரு மிதமான நச்சுத்தன்மையை வெளிப்படுத்துகிறது. ஆனாலும் சிறிய அளவுகளில் இதை கறியைப் பதப்படுத்தவும் பாதுகாக்கவும் பயன்படுத்துகிறார்கள். மேலும் இதை ஐதராக்சிலமீன் தயாரிக்கவும், முதல்நிலை அரோமாட்டிக் அமீன்களை ஈரசோ ஆக்கம் செய்யவும் பயன்படுத்துகிறார்கள். இதற்கான சமன்பாடு இங்கு தரப்பட்டுள்ளது :[50]\nநைட்ரைட்டு ஒரு பொதுவான ஈனியாகும். இது ஐந்து வகையான ஒருங்கிணைவுகளைக் கொடுக்கிறது. நைட்ரசனில் இருந்து பிணைக்கப்படும் நைட்ரோ ஒருங்கினைப்பு, ஆக்சிசனில் இருந்து பிணைக்கப்படும் நைட்ரிட்டோ ஒருங்கிணைப்பு இரண்டும் மிகப்பொதுவானவையாகும். நைட்ரோ-நைட்ரிட்டோ மாற்றியமும் பொதுவானதாகும். இங்கு நைட்ரிட்டோ வடிவம் வழக்கமாக நிலைப்புத்தன்மை குறைவானதாகும் [50].\nபுகையும் நைட்ரிக் அமிலம் மஞ்சள் நிற நைட்ரசன் டையாக்சைடு கலந்து மாசடைந்துள்ளது\nநைட்ரசனின் ஆக்சோ அமிலங்களில் மிக முக்கியமானதும் நிலையானதுமான அமிலம் நைட்ரிக் அமிலம் (HNO3) ஆகும். கந்தக அமிலம், ஐதரோகுளோரிக் அமிலங்களின் வரிசையில் அதிகமாக பயன்படக்கூடிய அமிலமாக நைட்ரிக் அமிலம் உள்ளது. 13 ஆம் நூற்றாண்டில் இரசவாதிகளால் இவ்வமிலம் கண்டறியப்பட்டது. அமோனியாவை ஒரு வினையூக்கியின் உதவியால் ஆக்சிசனேற்றம் செய்து நைட்ரிக் ஆக்சைடு தயாரிக்கப்படுகிறது. இதை மீண்டும் ஆக்சிசனேற்றம் செய்து நைட்ரசன் டையாக்சைடு உருவாக்கி இதை தண்ணீரில் கரைத்தால் அடர் நைட்ரிக் அமிலம் உருவாகிறது. அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் ஏழு மில்லியன் டன் நைட்ரிக் அமிலம் உற்பத்தி செய்யப்படுகிறது, அவற்றில் பெரும்பகுதி நைட்ரேட் உற்பத்திக்காகவும் உரங்கள் மற்றும் வெடிபொருட்கள் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகின்றன. அடர் நைட்ரிக் அமிலத்தை பாசுபரசு பென்டாக்சைடைச் சேர்த்து தாழ் அழுத்தத்தில் கண்ணாடி உபகரணத்தில் ஒளிபுகா சூழலில் வாலை வடித்து நீரற்ற நைட்ரிக் அமிலம் தயாரிக்கப்படுகிறது. திண்மநிலையில் மட்டுமே இதைத் தயாரிக்க முடியும். ஏனெனில் சூடுபடுத்தினால் உருகுநிலையில் இது தற்சிதைவு அடைந்து நைட்ரசன் டையாக்சைடாக மாறிவிடும். மேலும், நீர்மநிலை நைட்ரிக் அமிலம் பிற சகப்பிணைப்பு நீர்மங்களைக் காட்டிலும் பெருமளவில் தன்னயனியாக்கம் அடைகிறது [50]\nஉலோகத்தின் காரத்தன்மையைப் பொறுத்தே நைட்ரேட்டுகளின் (முக்கோணத் தளத்தில் பங்கேற்கும் NO−3 எதிர் மின்னயனி) வெப்பரீதியான நிலைப்புத்தன்மை அமைகிறது. வெப்பச்சிதைவால் உருவாகும் விளைபொருட்களும் வேறுபடுகின்றன. நைட்ரேட்டு ஒரு பொதுவான ஈனியாக வெவ்வேறு வகை ஒருங்கிணைவுகளைக் கொண்டுள்ளது [50].\nஆர்த்தோ பாசுபாரிக் அமிலத்தை ஒத்த ஆர்த்தோநைட்ரிக் அமிலம் (H3NO4) ஏதும் அறியப்படவில்லை. நான்முக ஆர்த்தோநைட்ரேட்டு எதிர்மின் அயனி சோடியம் , பொட்டாசியம் உப்பகளில் அறியப்படுகிறது :[50]\nவெண்மையான இப்படிக உப்புகள் காற்றிலுள்ள நீராவி மற்றும் கார்பனீராக்சைடு போன்றவற்றுக்கு தீவிர உணரிகளாக உள்ளன :[50]\nஆர்த்தோ நைட்ரேட்டு எதிர்மின் அயனி குறைவான வேதியியலை கொண்டிருந்த போதிலும், அதன் வழக்கமான நான்முக வடிவம் மற்றும் குறுகிய N-O பிணைப்பு நீளங்கள் , பிணைப்பில் வெளிப்படுத்தும் குறிப்பிடத்தக்க முனைவுப் பண்புகள் ஆகியவற்றின் காரணமாக கட்டமைப்புக் கண்ணோட்டத்தில் சிறந்து விளங்குகிறது [50].\nகரிம வேதியியலில் பயன்படும் முக்கியமான தனிமங்களில் ஒன்று நைட்ரசன் ஆகும். பல வேதி வினைக்குழுக்களில் கார்பன்–நைட்ரசன் பிணைப்பு பங்கேற்கிறது. அமைடுகள் (RCONR2), அமீன்கள் (R3N), இமைன்கள் (RC(=NR)R), இமைடுகள் (RCO)2NR, அசைடுகள் (RN3), அசோ சேர்மங்கள் (RN2R), சயனேட்டுகள் (ROCN, ஐசோசயனேட்டுகள் (RCNO), நைட்ரேட்டுகள் (RONO2), நைட்ரைல்கள் (RCN), ஐசோநைட்ரைல்கள் (RNC), நைட்ரைட்டுகள் (RONO), நைட்ரோ சேர்மங்கள் (RNO2), நைட்ரோசோ சேர்மங்கள் (RNO), ஆக்சைம்கள் (RCR=NOH) மற்றும் பிரிடின் வழிப்பொருட்கள் உள்ளிட்டவை இதற்கு உதாரணங்களாகும். C–N பிணைப்புகளில் முனைவுத்தன்மை நைட்ரசனை நோக்கி வலிமையாக உள்ளன. இவ்வகைச் சேர்மங்களில் வழக்கமாக நைட்ரசன் முப்பிணைப்பு கொண்டுள்ளது. (அமோனியம் உப்புகளில் நான்கு இணைதிறன்) ஒரு தனி இணை எலக்ட்ரான் புரோட்டானுடன் ஒருங்கிணைந்து காரத்தன்மைக்கு காரணமாகிறது மற்றும் மற்��� காரணிகளைப் பாதிக்கிறது. உதாரணமாக அமைடுகள் காரத்தன்மை கொண்டிருக்கவில்லை. ஏனெனில் தனி இணை எலக்ட்ரான் இரட்டைப்பிணைப்புக்குள் உள்ளடங்குவதில்லை. (தாழ் pH, மதிப்புகளில் ஆக்சிசனில் புரோட்டானேற்றம் நிகழ்ந்து அமிலமாகவும் இவை செயல்படலாம்). பிர்ரோல் அமிலத்தன்மையைக் காட்டவில்லை. ஏனெனில் தனி இணை எலக்ட்ரான் அரோமாட்டிக் வளையத்தில் உள்ளடங்குவதில்லை [51]. ஒரு வேதிப்பொருளில் உள்ள நைட்ரசனின் அளவை யோகன் குசுதாவ் உருவாக்கிய ஒரு முறையில் கணடறியலாம் [52]. உட்கரு அமிலங்களிலும், புரதங்களிலும், அமினோ அமிலங்களிலும் அடினோசின் முப்பாசுப்பேட்டிலும் நைட்ரசன் முக்கியப்பகுதிப் பொருளாக காணப்படுகிறது [51].\nநிலச்சூழலில் சுழற்சியில் பங்கேற்கும் நைட்ரசன் சேர்மங்களுடன் நைட்ரசன் சுழற்சியின் படிப்படியான வரைபடம்.\nபூமியில் காணப்படும் மிகவும் தூய்மையான தனிமங்களில் ஒன்று நைட்ரசன் ஆகும், நைட்ரசன் வளிமண்டலத்தின் முழு அளவில் 78.1% அளவைக் கொண்டுள்ளது[1]. இதைத்தவிர புவியோட்டில் பரவலாக நைட்ரசன் காணப்படவில்லை. நையோபியம், காலியம், இலித்தியம் ஆகிய தனிமங்களுடன் ஒப்பிடுகையில் ஒரு மில்லியனுக்கு 19 பாகங்கள் அளவே நைட்ரசன் காணப்படுகிறது. நைட்ரசனின் முக்கியமான தாதுக்கள் நைட்டர் (பொட்டாசியம் நைட்ரேட், சால்ட்பீட்டர்) மற்றும் சோடாநைட்டர் (சோடியம் நைட்ரேட், சிலியன் சால்ட்பீட்டர்) ஆகியவை மட்டுமேயாகும். இருப்பினும், 1920 ஆம் ஆண்டுகளில் அம்மோனியா மற்றும் நைட்ரிக் அமிலத்தின் வழியாக தொழிற்துறைத் தயாரிப்பு பொதுவாக மாறும்வரை இத் தாதுக்கள் முக்கியமான தாதுக்களாக கருதப்படவில்லை [53].\nநைட்ரசன் சேர்மங்கள் தொடர்ந்து வளிமண்டலத்திற்கும் உயிரினங்களுக்கும் இடையில் பரிமாறிக்கொள்ளப்படுகின்றன. வளி மண்டலத்தில் உள்ள நைட்ரசனை தாவரங்கள் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் அதாவது அமோனியாவாக முதலில் நிலை நிறுத்தப்படவேண்டும். மின்னல் போன்ற இயற்கைச் செயல்முறைகளால் நைட்ரசன் ஆக்சைடுகள் உருவாக்கப்பட்டு சிறிதளவு நைட்ரசன் நிலைநிறுத்தப்படுகிறது. ஆனால் பெரும்பாலான நைட்ரசன், நைட்ரோசனேசுகள் எனப்படும் நொதிகளின் உதவியுடன் நிலைநிறுத்தும் பாக்டீரியாக்களால் நிலைநிறுத்தப்படுகின்றன. நிலைநிறுத்தப்பட்ட அமோனியாவை தாவரங்கள் எடுத்துக் கொண்டவுடன் அவை பு���ோட்டீன் தயாரிப்பில் ஈடுபடுகின்றன. இத்தாவரங்களை உண்ணும் விலங்குகளில் இவை செரிக்கப்பட்டு நைட்ரசன் கொண்ட கழிவுகளாக வெளியேற்றப்படுகின்றன. இறுதியாக இவ்வுயிரினங்களும் மடிந்து மண்னில் புதைந்து சிதைவடைகின்றன. பாக்டீரியாக்களாலும் வளிமண்டல ஆக்சிசனேற்ற வினைகளாலும் இவற்றிலிருந்து நைட்ரசன் நீக்கவினை நிகழ்கிறது. நைட்ரசன் மீண்டும் வளிமண்டலத்தில் விடப்படுகிறது. ஏபர் செயல்முறை மூலம் தொழில்துறையில் நைட்ரசன் நிலைப்படுத்தப்படுகிறது. பெரும்பாலும் இந்நைட்ரசன் உரமாக பயன்படுத்தப்படுகிறது. தூயநீரில் சேரும் நைட்ரசன் தாங்கிய கழிவுப்பொருட்களால் ஆக்சிசன் குறைபாடு தோன்றி உயர் உயிரினங்கள் இறக்கின்றன. நைட்ரசன் நீக்கத்தின் போது உருவாகும் நைட்ரசு ஆக்சைடு வளிமண்டல ஓசோன் அடுக்குகளைத் தாக்குகிறது [53].\nபல உப்புநீர் தயாரிப்பாளர்கள் சுற்றுச்சூழலின் சவ்வூடுபரவல்; விளைவுகளிலிருந்து மீன்களைக் காப்பாற்ற அதிக அளவிலான டிரைமெத்திலமீன் ஆக்சைடை தயாரிக்கின்றனர். இச்சேர்மம் டைமெத்திலமீனாக மாற்றப்படுதலே தூய்மையற்ற உப்புநீர் மீன்களின் நாற்றத்திற்கு காரணமாகும் [54]. விலங்கினங்களில் அமினோ அமிலங்களில் இருந்து வருவிக்கப்படும் தனி உறுப்பு நைட்ரிக் ஆக்சைடு சுழற்சியை முறைப்படுத்தும் ஒரு முக்கியமான மூலக்கூறு ஆகும் [55].\nநைட்ரிக் ஆக்சைடு தண்ணீருடன் புரியும் விரைவு வினை விலங்குகளில் வளர்சிதை மாற்ற நைட்ரைட்டை உற்பத்தி செய்வதில் முடிகிறது.\nபுரோட்டீன்களில் உள்ள நைட்ரசன் விலங்குளில் நிகழும் வளர்சிதை மாற்றத்தால், பொதுவாக, யூரியாவாக வெளியேறுகிறது. அதே நேரத்தில் நியூக்ளிக் அமிலங்கள் விலங்கு வளர்சிதை மாற்றத்தில் யூரியா மற்றும் யூரிக் அமிலமாக வெளியேறுகின்றன. விலங்குகளின் மாமிச சிதைவின் குணாதிசயமான துர்நாற்றம், புட்ரோரெசின் மற்றும் காடவெரைன் போன்ற நீண்ட சங்கிலி, நைட்ரசனைக் கொண்ட அமீன்கள் உற்பத்தி செய்யப்படுவதால் உண்டாகிறது, இந்நீண்ட சங்கிலி அமீன்கள் முறையே ஆர்னிதைன் மற்றும் லைசின் போன்ற அமினோ அமிலங்கள் சிதைவதால் விளைகின்றன [56].\nவர்த்தக ரீதியிலான நைட்ரசன் எஃகு தொழிற்சாலைகளில் உடன் விளை பொருளாக உருவாகிறது. உருளைகளில் ஆக்சிசனற்ற நைட்ரசன் என்ற பெயரில் வினியோகிக்கப்படுகிறது.\nகாற்றை நீர்மமாக்கி அ���ிலிருந்து தொழிற்சாலை வாயுவான நைட்ரசன் நீர்மத்தைக் காய்ச்சி வடித்தல் மூலம் பெறுகின்றார்கள். நீர்மக் காற்றை கொஞ்சம் கொஞ்சமாகச் சூடுபடுத்தி, வெவ்வேறு கொதி நிலை உடைய வளிமங்களை ஆவியாக்கி குளிர்வித்து நீர்மமாக்கி செழுமையூட்டுவர். அல்லது வாயுநிலையில் உள்ள காற்றை இயங்கு கருவிகள் மூலம் தலைகீழ் சவ்வூடுபரவல் அல்லது அழுத்தம் மாறு பரப்பீர்ப்பு முறையில் தயாரிக்கப்படுகிறது [57]. வர்த்தக ரீதியிலான நைட்ரசன் எஃகு தொழிற்சாலைகளில் உடன் விளை பொருளாக உருவாகிறது. உருளைகளில் ஆக்சிசனற்ற நைட்ரசன் என்ற பெயரில் வினியோகிக்கப்படுகிறது [58]. வர்த்தக நைட்ரசனில் உள்ள ஆக்சிசனின் அளவு மில்லியனுக்கு 20 பகுதிகள் ஆகும். மில்லியனுக்கு 2 பகுதிகள் ஆக்சிசன் கொண்ட தரப்படுத்தப்பட்ட நைட்ரசன், மில்லியனுக்கு 10 பகுதிகள் ஆர்கான் கொண்ட நைட்ரசன் போன்ற வகைகளும் கிடைக்கின்றன [59]. நைட்ரசனின் கொதி நிலை - 195.8 டிகிரி C ஆகும். காற்று வெளியில் பொட்டாசியம் பைரோ காலேட்டை வைத்து அதிலுள்ள ஆக்சிஜன் மற்றும் கார்பன்டைஆக்சைடை நீக்கி நைட்ரசன் மட்டும் எஞ்சுமாறு செய்கின்றாகள். வளி மண்டலக் காற்றிலிருந்து பெறப்படும் நைட்ரசன் தூய்மையானதில்லை. ஏனெனில் அதில் மந்த வளிமங்களான ஆர்கான், கிரிப்டான் போன்றவை சிறிதளவு கலந்திருக்கும். எனவே தூய நைட்ரசன் பெற வேதியியல் வினைகளையே அணுக வேண்டியுள்ளது. செம்பையும் நைட்ரிக் அமிலத்தையும் சமவிகிதத்தில் கலந்து நைட்ரிக் ஆக்சைடு உற்பத்தி செய்கிறார்கள். பின்னர் இதை சூடுபடுத்தப்பட்ட செம்புத் துருவல்கள் வழியே செலுத்தி நைட்ரசனைத் தயாரிக்கிறார்கள்.\nநீர்த்த அமோனியம் குளோரைடுடன் சோடியம் நைட்ரைட்டைச் சேர்த்து சூடுபடுத்தி ஆய்வகத்தில் நைட்ரசனை எளிதாகப் பெறலாம் [60]\nஇவ்வினையில் NO மற்றும் HNO3 போன்ற மாசுக்களும் உடன் விளைகின்றன. பொட்டாசியம் டைகுரோமேட்டு கலந்த நீர்த்த கந்தக அமிலத்தின் வழியாகச் செலுத்துவதால் இம்மாசுக்களை அகற்றலாம் [60] பேரியம் அசைடு அல்லது சோடியம் அசைடு சேர்மத்தை வெப்பச் சிதைவுக்கு உட்படுத்தி மீத்தூய நைட்ரசன் தயாரிக்கலாம்,[61]\nநைட்ரசன் சேர்மங்களின் வகைப்பாடுகள் அதிக அளவில் உள்ளதால் இவற்றின் பயன்பாடுகளும் இயற்கையாகவே மிகவும் பரவலான அளவில் மாறுபடுகின்றன. எனவே தூய நைட்ரசனின் பயன்கள் மட்டுமே இங��கு பரிசீலிக்கப்படுகின்றன. தொழில் துறையில் உற்பத்தி செய்யப்படும் நைட்ரசனில் மூன்றில் இரண்டு பங்கு வாயுவாகும், மீதமுள்ள மூன்றில் ஒரு பங்கு திரவமாகவும் விற்கப்படுகின்றன. காற்றில் உள்ள ஆக்சிசன் தீ, வெடிப்பு, அல்லது ஆக்சிசனேற்ற அபாயத்தை ஏற்படுத்தும் போதெல்லாம் நைட்ரசன் வாயு பெரும்பாலும் மந்தநிலையான சூழலில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. சில உதாரணங்கள் பின்வருமாறு [59]:\nதூய அல்லது கார்பன் டை ஆக்சைடுடன் கலந்து நைட்ரசனேற்றம் செய்யவும், தொகுப்பு அல்லது மொத்தமாக உணவின் புத்துணர்வை தக்கவைத்து பராமரிக்க உதவும் மாற்றியமைக்கப்பட்ட ஒரு வளிமண்டலமாக பயன்படுத்தப்படுகிறது. மேலும் தூய நைட்ரசனை ஒரு உணவுக் கூட்டுப்பொருளாகக் கருதி ஐரோப்பிய ஒன்றியம் இதற்கு இ941 என்ற அடையாள எண்ணைக் கொடுத்துள்ளது [62].\nவெண்சுடர் எரிவிளக்குகளில் ஆர்கான் வாயுவுக்கு மாற்றாக நைட்ரசன் வாயு பயன்படுத்தப்படுகிறது.[63]\nதகவல் தொழில்நுட்பக் கருவிகளில் தீயடக்கியாக நைட்ரசன் வாயு பயன்படுத்தப்படுகிறது.[59]\nபெருமளவில் எஃகு தயாரிப்பில் நைட்ரசன் பயன்படுகிறது.[64]\nநைட்ரசனேற்றம் மூலம் எஃகை கடினப்படுத்துதலில் நைட்ரசன் வாயு பயன்படுகிறது.[65]\nசில வானூர்தி எரிபொருள் அமைப்புகளில் தீ விபத்துகளைக் குறைக்கஃ நைட்ரசன் வாயு பயன்படுகிறது.[66]\nபந்தய வாகனங்களின் சக்கரங்களையும் வானூர்திகளின் சக்கரங்களை நிரப்பவும் பயன்படுகிறது [67]\nஇரசாயன பகுப்பாய்வுக்கான மாதிரிகள் தயாரிப்பில் நைட்ரசன் பொதுவாக பயன்படுத்தப்படுகிறது. திரவ மாதிரிகளின் அடர்த்தியையும் கன அளவைவும் கூட்டுவதற்கும் குறைப்பதற்கும் நைட்ரசன் வாயு பயன்படுகிறது. திரவத்தின் மேற்பரப்புக்கு செங்குத்தாக அழுத்தத்திலுள்ள நைட்ரசன் வாயுக் கற்றையை செலுத்துவதால் கரைப்பான்கள் வெளியேறுகின்றன. ஆவியாக்கப்படாத கரைப்பானும் கரைபொருளும் அடியில் தேங்குகின்றன [68]. ஏல் போன்ற சில பியர் வகைகளில் நைட்ரசன் வாயுவை கார்பன் டை ஆக்சைடுடன் இணைத்து பயன்படுத்துகிறார்கள் [69]. அழுத்த உணரியாக விட்கெட் என்ற பெயரிலான நைட்ரசன் சேர்க்கப்பட்ட பியர்கள் புட்டிகளிலும் கலன்களிலும் அடைத்து விற்கப்படுகின்றன [70][71]. ஆற்றல் மூலங்களாகச் செயல்படும் கார்பன் டை ஆக்சைடை நைட்ரசன் தொட்டிகள் இடப்பெயர்ச்சி செய்து வருகின்றன [72]. நைட்ரசன் மூச்சுத்திணறலை உருவாக்கும் வாயுவாக கருதப்பட்டு கொல்லும் ஊசியாக உட்செலுத்தவும் பயன்பாடுகிறது[73][74]. சோடியம் அசைடிலிருந்து தயாரிக்கப்படும் நைட்ரசன் வாயுவை காற்றுப்பைகளில் நிரப்ப பயன்படுத்துகிறார்கள்[75].\nநீர்ம நைட்ரசனில் அமிழ்த்தப்பட்ட வளி நிரப்பப்பட்ட பலூன்\nநீர்ம நைட்ரசன் உணவுப் பொருட்களின் குளிர்பதனப் பாதுகாப்புக்கும், உயிர் பொருட்களைப் பாதுகாத்துப் பிற்பாடு பயன்படுத்திக் கொள்வதற்கும் பயன்தருகிறது. எடுத்துக் காட்டாக மனிதர்கள் மற்றும் விலங்கினங்களின் விந்துக்களை நீர்ம நைட்ரசனில் முக்கி வைத்து பிற்பாடு செயற்கையாகக் கருத்தரித்தலுக்குப் பயன்படுத்திக் கொள்கின்றார்கள். மிகவும் தீவிரமாக வினையில் ஈடுபடக் கூடிய வளிமண்டல வளிமங்களிலிருந்து, அதனால் பாதிக்கப்படும் புதிய உற்பத்திப் பொருட்களை விலக்கி வைக்க நைட்ரஜன் வளிமத்தை மூடு திரையாகப் பயன்படுத்துகின்றார்கள்.\nதிரவ நைட்ரசன் ஒரு தாழ்வெப்ப திரவமாகும். தீவார் குடுவைகள் போன்ற முறையான கொள்கலன்களில் காக்கப்பட்டால் இது ஆவியாதல் இழப்பு இல்லாமல் கொண்டு செல்ல முடியும்[76].\nதோல் மருத்துவத்தில் நீர்க்கட்டி, பருக்கள் போன்றவற்றை நீக்குவதற்குரிய குளிர்மருத்துவ சிகிச்சையில் நைட்ரசன் பயன்படுகிறது[77]. எக்சுகதிர் உணரிகள், அகச்சிவப்பு உணரிகள், கணிப்பொறிகளின் மையக் கட்டுப்பாட்டு அலகுகள் போன்றவற்றைக் குளிர்விக்கவும் நைட்ரசன் நீர்மம் பயன்படுத்தப்படுகிறது[78].\nதாழ்ந்த அழுத்தத்தில் நைட்ரஜன் வழி மின்னிறக்கம் செய்ய,அது மஞ்சள் நிற வெப்பொளியைத் தருகிறது. இது வினைத்திறன் மிக்கதாய் இருப்பதால் பெரும்பாலான உலோகங்கள், அலோகங்களுடன் நேரடியாகக் கூடுகிறது. இம்முறையில் வினைத்திறன் மிக்க நைட்ரசன் உருவாகிறது என்பதனை லார்டு ராலே என்பவர் 1911-ல் கண்டறிந்தார். ஓரளவு மந்தமான வளிமம் என்றாலும் நைட்ரஜன் பல ஆயிரக்கணக்கான வேதிச் சேர்மங்களில் இணைந்திருக்கின்றது. இதன் அமோனிய உப்புக்கள் வேளாண்மைத் துறையில் உரமாகவும், தொழிற்துறையில் உணவுப் பொருளுற்பத்தி மற்றும் அவை கெடாமல் பாதுகாக்கவும், வெடி மருந்து, நஞ்சுப் பொருட்கள், நைட்ரிக் அமிலம் போன்ற வேதிப் பொருட்களின் உற்பத்திக்கு மூலப்பொருளாகவும் விளங்குகிறது. அம்மோனியாவை ஆக்சிஜனேற்ற வி���ைக்கு உட்படுத்தி நைட்ரிக் அமிலத்தையும் உற்பத்தி செய்ய முடியும்.\nபழங்கள் அழுகி விடாமல் பாதுகாக்கவும் நைட்ரசன் வளிமம் பயன்தருகிறது. ஆப்பிள் பழங்களைத் தாழ்ந்த வெப்ப நிலை மற்றும் நைட்ரசன் வெளியில் 30 மாதங்கள் வரை பாதுகாக்க முடியும்.\nஎண்ணெய்க் கிணறுகளில் நைட்ரசனை அழுத்தி குழாய் வழியாக பூமிக்கு அடியில் செலுத்த, அது அங்குள்ள எண்ணெயை எக்கி வெளிக்கொண்டு வருகிறது. இதையே கூடுதல் எண்ணெய் உற்பத்தி என்பர். இதற்கு வளி மண்டலக் காற்றைப் பயன்படுத்துவதில்லை. ஏனெனில் இதிலுள்ள சில வளிமக் கூறுகள் எண்ணெயோடு வினை புரிந்து வேண்டாத விளை பொருட்களை உற்பத்தி செய்து விடுகின்றன.\nநைட்ரசனின் மற்றொரு முக்கியச் சேர்மம் நைட்ரிக் அமிலம். அமோனியம் நைட்ரேட் போன்ற உரங்கள், வெடி மருந்துகள் நைலான் மற்றும் பாலியுரித்தேன் போன்ற நெகிழ்மங்களின் உற்பத்தி முறையில் இது மூலப் பொருளாக உள்ளது. நைட்ரிக் அமிலம் கிளிசராலுடன் வினை புரியும் போது அது நைட்ரோ கிளிசரின் என்ற வலிமைமிக்க வெடி மருந்தை உற்பத்தி செய்கிறது. மிகச் சிறிய அசைவும் உணரப்பட்டு இதை வெடிக்கச் செய்துவிடும்.\nநைட்ரோ கிளிசரினின் ஒரு துணைப் பொருள் டைனமைட்டாகும். 1867 ல் ஆல்பிரட் நோபல் என்பார் இதைக் கண்டுபிடித்தார். நைட்ரோ கிளிசரினைக் களிமண்ணுடன் கலக்க அது அதிர்வுகளினால் வெடிப்பதில்லை என்ற உண்மையை இவர் கண்டறிந்தார்.\nசோடியம் அசைடு(NaN3)என்ற சேர்மம் இன்றைக்கு வளிமப் பொதியுறைகளில் பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு வெடி பொருள். மோதலின் போது அல்லது எரிக்கும் போது விரைந்து சிதைவுற்று மிகுந்த அளவு நைட்ரசனை வெளிப்படுத்துகிறது. இது பொதியுறையை உப்பச் செய்து மோதலினால் ஏற்படும் விபத்துக்களின் தீவிரத்தை மட்டுப்படுத்துகிறது. கடலில் பயணிப்போருக்கு விபத்துக்களின் போது பாதுகாப்பு உறையாகப் பயன்தருகிறது. 1999 ல் கார்ல் ஒ கிறிசுடி மற்றும் வில்லியம் டபில்யூ வில்சன் என்ற வேதியியலார் நைட்ரசனின் ஒரு புதிய சேர்மத்தைக் கண்டறிந்தனர். இதில் 5 நைட்ரஜன் அணுக்கள் 'V' என்ற வடிவில் ஒன்றோடொன்று பிணைந்துள்ளன. நைட்ரஜன்-13 உமிழும் பாசிட்ரான் உடல் உள்ளுறுப்புகளின் நிழல் படம் காட்டியில் பயன்படுகிறது. இதன் அரை வாழ்வு 9.97 நிமிடங்கள் என்பதால் நோயாளிகளுக்குக் கதிரியக்கத்தால் பெரும் தீங்கு விளைவதில்லை. விரைவிலேயே சிதைந்து அழிந்து விடுகின்றது.\nநைட்ரசன் நச்சுத்தன்மையற்ற வாயுவாக இருந்தாலும், மூடிய அறைக்குள் வெளியிடப்பட்டால் அது ஆக்சிசனை இடப்பெயர்ச்சி செய்யக்கூடும், எனவே மூச்சுத் திணறல் அபாயத்தை அளிக்கிறது. சில எச்சரிக்கை அறிகுறிகளுடன் இத்திணறல் நடக்கும் [79], 1981 இல் நிகழ்த்தப்பட்ட முதலாவது விண்வெளித்திட்டத்தில் இரண்டு தொழில்நுட்ப வல்லுநர்கள நைட்ரசன் வாயுவால் ஏற்பட்ட மூச்சுத்திணறலால் இறந்தனர் என்பது இதற்கான உதாரணமாகும் [80].\nநைட்ரசன் வாயுவை உட்சுவாசிக்க நேர்ந்தால் அது மயக்கமருந்தாகவும் செயல்பட வல்லது ஆகும் [81][82]. இரத்தம் மற்றும் உடலில் உள்ள கொழுப்புகளில் நைட்ரசன் வாயு கரைகிறது. விரைவான அழுத்தக் குறைவு (சில நேரங்களில் விண்வெளி வீரர்கள் மிக உயரத்திற்கு செல்லும் போது அழுத்தக் குறைவு) சாத்தியமான அபாயகரமான நிலைக்கு வழிவகுக்கலாம், இரத்த ஓட்டத்தில் நைட்ரசன் குமிழிகள் உருவாகும்போது, நரம்புகள், மூட்டுகள் மற்றும் பிற முக்கிய பகுதிகள் பாதிக்கப்படுகின்றன [83][84]. [85]\nஒரு தாழ்வெப்பநிலை திரவமாக, திரவ நைட்ரசன் அபாயகரமான சேர்மமாகக் கருதப்படுகிறது.[86] திரவ நைட்ரசனை உட்கொள்வது கடுமையான உள் சேதத்தை ஏற்படுத்துகிறது. உதாரணமாக, 2012 இல், இங்கிலாந்தில் உள்ள ஒரு இளம் பெண் திரவ நைட்ரசனைக் கொண்ட ஒரு பானத்தைக் குடிக்க நேர்ந்ததால் அவருடைய வயிற்றை அகற்ற வேண்டியிருந்தது[85].\nதிரவத்திலிருந்து வாயுவாக மாறும் நைட்ரசன் விரிவு விகிதம் 20 பாகை செல்சியசு வெப்பநிலையில் 1:694 ஆகும். இவ்விகித வேகத்தில் மூடிய வெளியில் நைட்ரசன் நீர்மம், வாயுவாக மாறும்போது பேரளவு ஆற்றல் வெளிப்படுகிறது. இப்பேராற்றலால் ஏற்பட்ட இன்னல்கள் தொடர்பான ஆதாரங்கள் உள்ளன[87]\nதிரவ நைட்ரசன் விரைவாக வாயு நைட்ரசனாக ஆவியாகிவிடுகிறது என்பதால் வாயு நிலை நைட்ரசனுக்கு கூறப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் யாவும் இதற்கும் பொருந்தும் [88][89][90].\nதிரவ நைட்ரசனைக் கொண்டுள்ள கொள்கலன்கள் காற்றிலிருந்து ஆக்சிசனை ஒடுக்க முடியும். இத்தகைய கொள்கலன்களில் நைட்ரசன் ஆவியாகிவிடுவதால் ஆக்சிசன் அளவு அதிகரிக்கிறது. இதனால் கரிமப் பொருட்களில் தீவிர வன்முறைகள் நிகழ்கின்றன [91].\nபேராசிரியர் மெய்யப்பனின் கிரியேட்டிவ் தாட்ஸ். வலைதளம்\n↑ \"Neptune: Moons: Triton\". தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (ஐக்கிய அமெரிக்கா). மூல முகவரியிலிருந்து October 5, 2011 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் September 21, 2007.\n↑ 44.0 44.1 44.2 பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; Greenwood438 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\n↑ 50.0 50.1 50.2 50.3 50.4 50.5 50.6 பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; Greenwood459 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 நவம்பர் 2020, 16:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-05-07T02:12:30Z", "digest": "sha1:NRHMXYWOUFN4VHUNVP64SJTUXUY3YWOC", "length": 5335, "nlines": 33, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "போபர்ஸ் ஊழல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nபோபர்ஸ் அவதூறு (Bofors Scandal) இந்தியாவில் 1980 இல் நிகழ்ந்த மிக முக்கிய பீரங்கி பேர ஊழல் குற்றச்சாட்டு நிகழ்வாகும். இந்தியாவிற்காக போபர்சு நிறுவனத்திடம் இருந்து வாங்கிய 155 மிமீ பீரங்கிகள் (குட்டையான பீரங்கி வண்டி - howtzer) வாங்கியதில் தனிப்பட்ட இலாபம் அடைந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதில் சம்பந்தப்பட்டவராக முன்னாள் பிரதமர் இராஜிவ் காந்தி மீது குற்றம் சுமத்தப்பட்டது. இதன் காரணமாக அவரும் அவருடைய இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியும் 1989 தேர்தலில் தோல்வியைக் கண்டது.\nஇந்த அவதூறு குற்றச்சாட்டின் இந்திய மதிப்பு 64 கோடி இந்திய ரூபாய்களாகும்.\nஇந்த வழக்கு வெளிச்சத்துக்கு வருவதற்கு காரணமாக இருந்தவர் அப்பொழுது இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்த வி. பி. சிங். இது பத்திரிகைகளில் சித்ரா சுப்பிரமணியம் மற்றும் என். ராம் போன்ற பத்திரிகையாளர்களால் இந்து மற்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ்களின் மூ��ம் வெளியானது.\nஇந்த ஊழலுக்கு இடைத்தரகராக செயல்பட்டவர் இத்தாலியத் தொழிலதிபரான ஒத்தோவியோ குவாத்ரோச்சி. இவர் இராஜிவ் காந்திக்கு மிக நெருக்கமானவர்.\nஇதன் வழக்கின் விசாரணை நடந்து கொண்டிருக்கையில் இராஜிவ் காந்தி மே 21, 1991 அன்று படுகொலை செய்யப்பட்டார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 சூன் 2019, 03:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/lifestyle/12901-yummy-fruit-smoothies-recipe.html", "date_download": "2021-05-07T01:28:33Z", "digest": "sha1:X2JA4KP45TF7REQSQLJP2WNEQ6S43OHX", "length": 9659, "nlines": 115, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "யம்மி.. ஃப்ரூட் ஸ்மூத்தி ரெசிபி | Yummy Fruit Smoothies Recipe - The Subeditor Tamil", "raw_content": "\nயம்மி.. ஃப்ரூட் ஸ்மூத்தி ரெசிபி\nயம்மி.. ஃப்ரூட் ஸ்மூத்தி ரெசிபி\nவெயிலுக்கு ஜில்லுன்னு ஃப்ரூட் ஸ்மூத்தி செய்யலாமா.. \nபால் - ஒரு கப்\nவெல்லத்தூள் - 2 டீஸ்பூன்\nமுதலில் மாம்பழத்தின் தோல் உரித்து, கொட்டையை நீக்கிவிட்டு துண்டுகளை மிக்ஸி ஜாரில் போடவும்.\nஇதேபோல், வாழைப்பழத்தின் தோலை உரித்து துண்டுகளாக அத்துடன் சேர்க்கவும்.\nமேற்கொண்டு, வெல்லத்தூள், பால் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும்.\nபிறகு, ஒரு தம்ளரில் ஐஸ் கட்டிகளை உடைத்து போட்டு அதன் மீது அரைத்து வைத்த பழக் கலவையை ஊற்றவும்.\nபின்னர், வாழைப்பழத் துண்டுகள், வெல்லத்தூள் தூவி அலங்கரித்தால் சுவையான வாழைப்பழ & மாம்பழ ஸ்மூத்தி ரெடி..\nசத்தான நொறுக்கு.. ரோஸ் குக்கீஸ் ரெசிபி\nசுடச்சுட மசாலா டீ ரெசிபி\nதனியாவில் இவ்ளோ டேஸ்ட்டான சட்னி பண்ணலாமா \nபன்னீர் டிக்காவை இப்படி செய்து பாருங்கள்..சூப்பராக இருக்கும்..\nமழைக்கு இதமாக.. குழந்தைகளுக்கு பிடித்ததாக.. வரகு சேமியா சீஸ் பால்ஸ் செய்வது எப்படி\nபாசிபருப்பில் சத்தான கீரை கூட்டு செய்வது எப்படி\nபார்க்கத்தான் சின்னது ஆனால் ஆரோக்கியத்தில் பெரியது சின்ன வெங்காயத்தில் சட்னி செய்வது எப்படி\nகொரோனாவை விரட்டும் இஞ்சி சட்னி செய்வது எப்படி\nகரும்பு சாறை தினமும் பருகுவதால் உடலுக்கு என்ன நன்மை\nவீட்டிலேயே ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னி செய்வது எப்படி\nபுளிப்பான மாங்காய் சாதம் செய்வது எப்படி\nஆரோக்கியமான ராகி அல்வா செய்வது எப்படி\nகிராமத்து ஸ்டைலில் குளிர்ச்சியான மோர் செய்வது எப்படி\nசுரைக்காய் பொரியல் சரி..அது என்ன சுரைக்காய் பாயசம்\nதேங்காயில் சிக்கன் கறி குழம்பு செய்வது எப்படிஅசத்தலான டேஸ்ட்\nகேரளா ஸ்டைல் சுவையான மீன் குழம்பு செய்வது எப்படி\nமேற்கு வங்காளம்: பாரதிய ஜனதாவின் கணக்கு தோற்றது எங்கு\nஉதயநிதிக்கு பதவி இல்லை: தமிழ்நாடு அரசின் புதிய அமைச்சர்கள் யார்\nகோவிட் தடுப்பூசி பற்றிய போலி எஸ்எம்எஸ்: கிளிக் செய்தால் ஆபத்து\nஇதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா – புதிய கட்டுப்பாடுகள் என்ன\nமக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்\n - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி\nபுறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு\nஎதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்\nஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்\nதிமுக அமைச்சரவையில் யாருக்கு என்ன பொறுப்பு…\nமனைவியுடன் உல்லாசமாக இருந்த உதவியாளர்… கோயிலுக்கு அழைத்துச்சென்று அர்ச்சனை செய்த பூசாரி\nமுதலமைச்சர் ஆனதும் ஸ்டாலினின் முதல் கையெழுத்து இதுதான்.. முழு எதிர்பார்ப்பில் மக்கள்..\nகோவிட்-19: ஆக்ஸிஜன் அளவை சோதிப்பது எப்படி\nராஜினாமா முடிவில் கே.பி.முனுசாமி – திமுகவுக்கு லாபமாக அமையுமா\nஇரவோடு இரவாக மேலும் புதியக் கட்டுப்பாடுகள் அறிவிப்பு : முழு விபரம்…\n1000ரூபாய் கையிருப்பு கூரை வீடு – சட்டமன்றத்தில் நுழையும் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ மாரிமுத்து\n தேமுதிக வீழ்ச்சிக்கு இதான் காரணம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akattiyan.lk/2021/04/blog-post_48.html", "date_download": "2021-05-07T01:21:21Z", "digest": "sha1:IT6S3XLFUPKXH5PHDIVMCZ22LDCBJNFW", "length": 15911, "nlines": 85, "source_domain": "www.akattiyan.lk", "title": "துலாம் ராசி - பிலவ வருட தமிழ் புத்தாண்டு பலன்கள் - அகத்தியன் | Online", "raw_content": "\nHome ஜோதிடம் துலாம் ராசி - பிலவ வருட தமிழ் புத்தாண்டு பலன்கள்\nதுலாம் ராசி - பிலவ வருட தமிழ் புத்தாண்டு பலன்கள்\nதூய மனமும் துல்லியமான செயலும் கொண்ட துலாம் ராசி அன்பர்களே... நீங்கள் எடுத்த காரியத்தை முடிக்கும்வரை தூங்காமல் உழைப்பவர்கள். நட்புக்கும் உறவுக்கும் முக்கியத்துவம் தரும் உங்களுக்கு இந்தப் பிலவத் தமிழ்ப்புத்தாண்டு எத்தகைய பலன்களைத் தரபோகிறது என்று காணலாம்.\nராசிக்கு சமசப்தமமான 7 - ம் வீட்டில் இந்தப் பிலவ வருடம் பிறப்பதால், உங்களின் திறமைகள் வெளிப்படும். கெட்டவர்களிடமிருந்து விடுபடுவீர்கள். குடும்பத்தில் அமைதி உண்டாகும். வீண் கவலைகள் நீங்கும். கணவன்- மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். அவர்களின் விருப்பப்படி அயல்நாட்டுக்கு அனுப்பிப் படிக்க வைப்பீர்கள். மகன் அல்லது மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். கார்த்திகை மாதத்தில் இருந்து மன மகிழ்ச்சி உண்டு. சகோதர உறவுகளிடம் விட்டுக் கொடுத்துப் போவீர்கள். குழந்தை இல்லாத தம்பதிக்கு ஆவணி, புரட்டாசி மாதங்களில் குழந்தை பாக்கியம் உண்டாகும். உங்களைக் கண்டும் காணாமல் போய்க் கொண்டிருந்த உறவினர்கள் உங்களது உதவியை நாடி வருவார்கள்.\nவெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். தலை சுற்றல், கண் எரிச்சல், அசதி ஆகியன வந்து விலகும். வெளியே சாப்பிடுவதைத் தவிர்க்கவும். எண்ணெயில் வறுத்த பொரித்த உணவுகளை ஒதுக்குங்கள்.\nகீரை, பழ வகைகளைச் சேர்த்துக் கொள்ளுங்கள். பிரபலங்களின் நட்புறவு கிடைக்கும். புது முயற்சிகளில் தீவிரமாவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். மார்கழி, தை மாதங்களில் அதிரடி மாற்றங்கள் ஏற்படும். வீடு, வாகன வசதிகள் பெருகும். தியானம், யோகா, இவற்றில் ஈடுபாடு அதிகரிக்கும்.\nபொருளாதாரம் : பணத் தட்டுப்பாடு தீரும். அநாவசியச் செலவுகள் கட்டுக்கடங்கும். வர வேண்டிய பணம் வந்து சேரும். பணவரவு சரளமாக இருக்கும். பூர்வீகச் சொத்தை சீர் செய்வீர்கள்.\n14.4.21 முதல் 13.9.2021 வரை மற்றும் 13.11.2021 முதல் வருடம் முடியும்வரை குரு 5 - ல் நிற்பதால் அரைகுறையாக நின்று போன வேலைகளை வருடத்தின் மத்தியப் பகுதியில் இருந்து விரைவாக முடிப்பீர்கள். அயல் நாட்டில் வசிக்கும் உறவினர்கள் நண்பர்கள் உதவுவர். வீட்டில் ஒருவித போராட்டம் இருந்தாலும், வெளியில் வரவேற்பு அதிகரிக்கும்.\nமற்றவர்களுக்குப் பொறுப்பு ஏற்பதையும், சாட்சிக் கையெழுத்து இடுவதையும் தவிர்க்கவும். ஆனால் 14.9.2021 முதல் 12.11.2021 வரை குரு உங்கள் ராசிக்கு 4 - ம் வீட்டில் அமர்வதால் வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரி���்கும். வீடு கட்டும் பணி தாமதமாகும். தாயாரை தவறாகப் புரிந்துக் கொள்ளாதீர்கள். அவருக்கு ரத்த அழுத்தம், செரிமானக் கோளாறு, கை, கால் வலி வந்து போகும். பழைய பிரச்னைகள், சிக்கல்கள் மீண்டும் வந்துவிடுமோ என்றெல்லாம் பயப்படுவீர்கள்.\nராகு - கேதுபகவானின் பலன்கள்\n14.4.21 முதல் 20.3.2022 வரை ராகு 8 லும் கேது 2 லும் நிற்பதால் குடும்பத்துக்குள் வீண் பிரச்னைகள் வரும். சந்தேகம் தலைதூக்கும். பேச்சால் பிரச்னைகள் வரக்கூடும். எனவே நிதானித்துப் பேசுவது நல்லது. கனவுத்தொல்லை, கழுத்துவலி வந்து நீங்கும்.\n21.3.2022 முதல் கேது ராசிக்குள் நுழைவதால் வீண் டென்ஷன், தலைச்சுற்றல், மன அமைதியின்மை, முன்கோபம் வந்து நீங்கும். ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய் வரக்கூடும். அதிக அளவில் காய்கறி, பழங்களை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். ராகு 7-ல் நுழைவதால் வாழ்க்கைத் துணையில் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள்.\nஇந்த ஆண்டு முழுக்க சனி 4 - ம் வீட்டிலேயே நீடிப்பதால், வீடு கட்ட அரசாங்க அனுமதி தாமதமாகக் கிடைக்கும். மனை வாங்கும் போது வில்லஙகச் சான்றிதழ், தாய்ப்பத்திரத்தைச் சரி பார்த்து வாங்குவது நல்லது. வாகனத்தை இயக்கும்போதும், சாலையைக் கடக்கும் போதும் அலைபேசியில் பேச வேண்டாம்.\nசின்னச் சின்ன விபத்துகள் நிகழக்கூடும். பழைய வாகனத்தை வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது. அப்படி வாங்குவதாக இருந்தால் ஆவணத்தை சரி பார்த்து வாங்குங்கள். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். தாய்வழி உறவினர்களுடன் மோதல்கள் வரக்கூடும்.\nசுறுசுறுப்பு அதிகரிக்கும். விற்பனை அமோகமாக நடைபெறும். பழைய சரக்குகளும் விற்றுப்பொகும். கொடுக்கல் - வாங்கலில் சுமுகமான நிலை காணப்படும். பணியாளர்கள் நல்லமுறையில் ஒத்துழைப்பார்கள். சொந்த இடத்துக்கு வியாபாரத்தை மாற்றுவீர்கள். பங்குதாரர்களின் ஆதரவு கிட்டும். இரும்பு, துணி, மர வகைகளால் எண்ணிக்கையை அதிகரிக்கப் புது யுக்திகளைக் கையாளுவீர்கள். மறைமுகப் போட்டிகள் விலகும்.\nபுதிய பொறுப்புகள் தேடி வரும். மேலதிகாரியின் சொந்த விஷயங்களில் தலையிடும் அளவுக்கு நெருக்கமாவீர்கள். சக ஊழியர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். சம்பள உயர்வுடன், பதவி உயர்வு தேடி வரும். வேலைச்சுமை குறையும்.\nஅரசாங்க ஊழியர்கள் வீண் பிரச்னை - வதந்தியிலிருந்து விடுபடுவார்கள். கலைஞர்கள் தங்களின் திறமைகளை மென்மேலும் வளர்த்துக் கொள்வார்கள்.\nஇந்தப் புத்தாண்டு தொலை நோக்குச் சிந்தனையாலும், வளைந்து கொடுத்துப் போவதாலும் வெற்றி பெற வைக்கும்.\nபாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் மேலதிக வகுப்புகளுக்கு மறு அறிவித்தல் வரை விடுமுறை\nபாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் மேலதிக வகுப்புகளுக்கு மறு அறிவித்தல் வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், நோன்பு பெருநாள், வெசாக் ...\nகொரோனா பரவல் காரணமாக நாட்டின் பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள விடுமுறையானது மேலும் ஒரு வார காலத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ...\nமோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nவாகன போக்குவரத்து திணைக்களத்தின் நாரஹென்பிட்டி மற்றும் வேரஹெர அலுவலகங்கள் ஒரு வாரத்திற்கு மூடப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம த...\nDReAM என அறிமுகப்படுத்தப்பட்டுள்ள முற்பாதுகாப்பு விதிமுறைகளுக்கமைய மதுபான சாலைகளை திறந்து வைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. D – சமூக இடை...\nமுழு அதிகாரம் : அகத்தியன் ஊடக சேவை 2020\nஆசிரியர் பீட தெடர்புகளுக்கு 0779516119\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akattiyan.lk/2021/04/blog-post_947.html", "date_download": "2021-05-07T01:09:40Z", "digest": "sha1:E3VJK7U5TJRTT45CV2FARB2WTES6ZY2E", "length": 15415, "nlines": 75, "source_domain": "www.akattiyan.lk", "title": "மக்கள் மத்தியில் எமது இனம்சார்ந்த அரசியல் உருவாகாவிட்டால் மாற்றுச் சமூகம் எம்மை ஆக்கிரமிக்கும் நிலை ஏற்படும் -த.கலையரசன் - அகத்தியன் | Online", "raw_content": "\nHome அம்பாறை மக்கள் மத்தியில் எமது இனம்சார்ந்த அரசியல் உருவாகாவிட்டால் மாற்றுச் சமூகம் எம்மை ஆக்கிரமிக்கும் நிலை ஏற்படும் -த.கலையரசன்\nமக்கள் மத்தியில் எமது இனம்சார்ந்த அரசியல் உருவாகாவிட்டால் மாற்றுச் சமூகம் எம்மை ஆக்கிரமிக்கும் நிலை ஏற்படும் -த.கலையரசன்\nஎமது இனம்சார்ந்த அரசியலை எமது உறவுகள் மத்தியில் நாங்கள் உருவாக்காவிட்டால் மாற்றுச் சமூகம் எங்களைக் கூறுபோட்டுத் துண்டாடி எம்மை ஆக்கிரமிக்கக் கூடிய ஒரு நிலைமையே ஏற்படும். எம்மை இன்னும் ஏமாற்றுகின்ற விடயங்களுக்கு எமது மக்கள் இடம்கொடுக்கக் கூடாது என அம்பாறை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார்.\nகாரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணப்பிள்ளை ஜெயசிறில் அவர்களின் ஏற்பாட்டில் புலம்பெயர் தேச உறவுகளின் அனுசரணையில் பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் , வறிய குடும்பம் ஒன்றிக்கு தையல் உபகரணம் , திருச்சபைக்கு குதிரைகள் வழங்கி வைக்கும் நிகழ்வில் இந்த கருத்தினை முன்வைத்தார்.\nஎமது உறவுகள் சிறப்பாக வாழ வேண்டும் என்ற சிந்தனையுடன் தான் நமது புலம்பெயர் உறவுகள் சிலர் எமக்கான உதவித் திட்டங்களைச் செய்து வருகின்றார்கள். அதனைக் கொண்டு நாங்களும் எதிர்காலத்திலே முயற்சியுள்ளவர்களாகச் செயற்பட வேண்டும். எமது சமூகத்திலே மிக மோசான சிந்தனையொன்றுள்ளது. முயற்சி என்பது மிகக் குறைவு ஏதேனும் கிடைக்குமா என்ற சிந்தனையுள்ளவர்களே அதிகமாக இருக்கின்றார்கள். இந்த நிலைமை மாற வேண்டும்.\nநாங்கள் கடந்த காலங்களிலே பல உதவித் திட்டங்களைச் செய்துள்ளோம். ஆனால் அரசினால் வழங்கப்பட வேண்டிய பல உதவித் திட்டங்கள் எமக்குப் புறக்கணிக்கப்பட்டுள்ளன.\nகுறிப்பாக குடிநீர்ப் பிரச்சினை முற்றுமுழுதாகத் தமிழர் பிரதேசங்களிலே புறக்கணிக்கப்பட்ட ஒரு விடயம். ஆனால் எங்களுடைய முயற்சியால் நான் பாராளுமன்றம் சென்ற பிற்பாடு எமது கட்சியின் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அவர்களுடன் உரிய அமைச்சரிடம் நேரடியாகச் சென்று இவ்விடயம் தொடர்பில் ஆவணங்களைச் சமர்ப்பித்திருந்தோம். அதன் பணிகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. எதிர்வரும் காலங்களில் அம்முயற்சிகள் வெற்றியடையக் கூடிய நிலைமை காணப்படுகின்றது. பலரும் பலவாறு பேசலாம். ஆனால் எமது முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும், முன்னேற்றங்கள் காணப்பட்டும் இருக்கின்றன.\nஅம்பாறை மாவட்டத்திலே பொத்துவில் பிரதேசம் தமிழர் நிலப்பரப்பின் எல்லையாக இருக்கின்றது. இங்கு எமது மக்களின் காணி தொடர்பான பல விடயங்கள் இருக்கின்றன. இது தொடர்பிலும் நாங்கள் எமது முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். அந்தக் காணி விடயங்களைத் தீர்ப்பதற்குரிய பணிகளையும் முன்னெடுத்திருக்கின்றோம். நிச்சயம் எதிர்காலத்தில் அதுவும் வெற்றியளிக்கும் என்று நம்புகின்றோம்.\nதமிழ்த் தேசியம் என்று சொல்லப்படுகின்ற தூய்மையான அரசியலை முன்னெடுக்கின்ற அரசியல்வாதிகளால் மாத்திரமே எமது மக்களின் பிரச்சினை குறித்தான விடயங்களுக்கான தீர்வினைப் பெற்றுக் கொடுக்க முடியும். நாங்கள் யாருக்கும் சோரம் nபோய் யாருக்கும் அடிபணிந்து எமது சமூகத்தை விற்றுப் பிழைப்பதற்குத் தயாரில்லை. எமது பிரதேசங்களின் அனைத்து விடயங்களும் அறிந்தவர்களாகவே நாங்கள் செயற்படுகின்றோம்.\nஎமது சமூகம் ஏமாற்றப்படும்; சமூகமாக இருந்து விடக் கூடாது. எமது ஒவ்வொரு பிரதேசங்களிலும் தலைவர்கள் உருவாக்கப்பட வேண்டும். உள்ளுர் அரசியலில் மிகவும் சிறப்பாகச் செயற்படக் கூடியவர்களை நாங்கள் இனங்காண வேண்டும். எதிர்வருகின்ற ஒவ்வொரு தேர்தல்களிலும் எமது இனம்சார்ந்த அரசியலை எமது உறவுகள் மத்தியில் நாங்கள் உருவாக்காவிட்டால் மாற்றுச் சமூகம் எங்களைக் கூறுபோட்டுத் துண்டாடி, எம்மை ஆக்கிரமிக்கக் கூடிய ஒரு நிலைமையே ஏற்படும்.\nஅபிவிருத்திக் குழுக் கூட்டங்களின் போது எமது பிரதேசங்கள் எவ்வாறு பார்க்கப்படுகின்றது என்ற விடயத்தைப் பலரும் அறிந்திருப்பீர்கள். அண்மையில் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் நடைபெற்றது. எமது பிரதேசங்கள் அபிவிருத்திகளில் புறக்கணிக்கப்பட்ட ஒரு நிகழ்ச்சிநிரல் அங்கு இருந்தது. இது தொடர்பில் சம்மந்தப்பட்ட அமைச்சர்கள், அபிவிருத்திக் குழுத் தலைவர்களைச் சந்தித்துப் பேசியிருக்கின்றோம்.\nநாங்கள் எமது மக்களின் தேவைகளுக்காக, பணிகளுக்காகத் தொடர்ச்சியாகப் பயணிப்போம். எம்மை இன்னும் இன்னும் ஏமாற்றுகின்ற விடயங்களுக்கு எமது மக்கள் இடம்கொடுக்கக் கூடாது. எம்மை நாமே ஆளக்கூடிய, எம்மை எமது மக்களே தெரிவு செய்யக் கூடிய நல்லதொரு எதிர்காலத்தை ஏற்படுத்தக் கூடிய வகையில் திட்டங்களைத் தயார்ப்படுத்தி எமது மக்களை வளப்படுத்தக்கூடிய விதத்தில் நாங்கள் செயற்படுவோம் என்று தெரிவித்தார்.\nமக்கள் மத்தியில் எமது இனம்சார்ந்த அரசியல் உருவாகாவிட்டால் மாற்றுச் சமூகம் எம்மை ஆக்கிரமிக்கும் நிலை ஏற்படும் -த.கலையரசன் Reviewed by Chief Editor on 4/16/2021 06:32:00 pm Rating: 5\nபாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் மேலதிக வகுப்புகளுக்கு மறு அறிவித்தல் வரை விடுமுறை\nபாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் மேலதிக வகுப்புகளுக்கு மறு அறிவித்தல் வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், நோன்பு பெருநாள், வெசாக் ...\nகொரோனா பரவல் காரணமாக நாட்டின் பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள விடுமுறையானது ம���லும் ஒரு வார காலத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ...\nமோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nவாகன போக்குவரத்து திணைக்களத்தின் நாரஹென்பிட்டி மற்றும் வேரஹெர அலுவலகங்கள் ஒரு வாரத்திற்கு மூடப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம த...\nDReAM என அறிமுகப்படுத்தப்பட்டுள்ள முற்பாதுகாப்பு விதிமுறைகளுக்கமைய மதுபான சாலைகளை திறந்து வைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. D – சமூக இடை...\nமுழு அதிகாரம் : அகத்தியன் ஊடக சேவை 2020\nஆசிரியர் பீட தெடர்புகளுக்கு 0779516119\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.azimpremjifoundationpuducherry.org/perspective/general-perspectives", "date_download": "2021-05-06T23:57:19Z", "digest": "sha1:P6COODGQS6O6CZ63N4UCY6GPL6CLB5JA", "length": 5146, "nlines": 189, "source_domain": "www.azimpremjifoundationpuducherry.org", "title": "General Perspectives | Azim Premji Foundation Puducherry", "raw_content": "\nஆசிரியரின் அடையாளம் தைரியம், ஈடுபாடு, அக்கறை.\nஅரசுப்பள்ளி மாணவர்களின் குடும்ப-பொருளாதரச் சூழல் மாணவர்களின் கல்வியை மட்டுமல்லாது...\nமாணவர்களிடம் சமூக உணர்வை விதைப்பதில் ஆசிரியரின்...\nமாணவர்களைச் சமூகத்திற்குப் பங்காற்றுபவர்களாக உருவாக்குவதில் பள்ளிகள் பெரும்பங்கு...\nகுழந்தைகளின் பண்பு வளர்ச்சியில் குறும்படங்கள்\n8 வயது சிறுமி எட்டு நாட்கள் கோவிலில் அடைத்து வைத்துப் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு...\nதுரை. மாலிறையனின் சிறுவர் இலக்கியங்களில் மொழி\nபுதுவைக் கவிஞர் துரை. மாலிறையன் சிறுவர் இலக்கியங்கள் சிறுவர்களின் மொழிப் புலமையை...\nகதை கூறல் பயிற்சிப்பட்டறை அனுபவங்கள்\nஅசிம் பிரேம்ஜி அறக்கட்டளை சார்பாக, ஆசிரியர்களுக்கான ” கதை கூறல் - வழிகாட்டுப் ...\nபகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார்\nபெரியாரின் வாழ்க்கைப் புத்தகத்தின் பெரும்பாலான ஏடுகள் போராட்டங்களும் எதிர்ப்புகளும்...\nதமிழகத்தின் மூத்த கல்வியாளர் எஸ். எஸ் இராஜகோபால்...\nஇளம் வயதில் கல்விப்பணியைத் துவங்கியவர், இன்றும் அரசுப்பள்ளிகளைக் காப்பாற்ற அயராது உழைத்து...\nஆயிஷா – எங்களைச் செதுக்கிய சிற்பி\nஇன்று நல்ல ஆசிரியராக வலம் வர எனக்கு நிழலாய் என்னுடன் இருக்கும் என் ஆயிஷாவை மேடையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/used-tractor/mahindra/275-di-tu-19386/22378/", "date_download": "2021-05-07T00:40:04Z", "digest": "sha1:PNUVFHKVLZJOKJ3AJMAY4CNEN5CW7CYD", "length": 27260, "nlines": 248, "source_domain": "www.tractorjunction.com", "title": "பயன்படுத்தப்பட்டது மஹிந்திரா 275 DI TU டிராக்டர், 2000 மாதிரி (டி.ஜே.என்22378) விற்பனைக்கு ஈரோடு, தமிழ்நாடு - டிராக்டர்ஜங்க்ஷன்", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nஎங்களை தொடர்பு கொண்டதற்கு நன்றி\nடிராக்டர் சந்தியைத் தொடர்பு கொண்டதற்கு நன்றி விற்பனையாளரை கைமுறையாக தொடர்புகொள்வதன் மூலம் பழைய டிராக்டரை வாங்கலாம். விற்பனையாளர் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nடிராக்டர்: மஹிந்திரா 275 DI TU\nமஹிந்திரா 275 DI TU\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அசாம் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் அருணாச்சல பிரதேசம் ஆந்திரப் பிரதேசம் இமாச்சல பிரதேசம் உத்தரகண்ட் உத்தரபிரதேசம் ஒரிசா கர்நாடகா குஜராத் கேரளா கோவா சண்டிகர் சத்தீஸ்கர் சிக்கிம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் டெல்லி தமன் மற்றும் டியு தமிழ்நாடு தாத்ரா மற்றும் நகர் ஹவேலி திரிபுரா தெலுங்கானா நாகாலாந்து பஞ்சாப் பாண்டிச்சேரி பீகார் மகாராஷ்டிரா மணிப்பூர் மத்தியப் பிரதேசம் மற்றவை மிசோரம் மேகாலயா மேற்கு வங்கம் ராஜஸ்தான் லட்சத்தீவு ஹரியானா\nமேலே செல்வதன் மூலம் நீங்கள் வெளிப்படையாக டிராக்டர் சந்திப்புகளை ஒப்புக்கொள்கிறீர்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்*\nபயன்படுத்திய டிராக்டரை வாங்கவும் இங்கே கிளிக் செய்க\nமஹிந்திரா 275 DI TU விவரக்குறிப்பு\nபைனான்சியர் / ஹைபோதெக்கேஷன் என்ஓசி\nவாங்க செகண்ட் ஹேண்ட் மஹிந்திரா 275 DI TU @ ரூ 1,60,000 சரியான விவரக்குறிப்புகள், வேலை நேரம், ஆண்டு 2000, ஈரோடு தமிழ்நாடு இல் வாங்கிய டிராக்டர் சந்திநல்ல நிலையில்.\nஇதே போன்ற பயன்படுத்திய டிராக்டர்கள்\nமாஸ்ஸி பெர்குசன் 5245 மஹா மஹான்\nமஹிந்திரா 595 DI TURBO\nபவர்டிராக் 439 டி.எஸ் சூப்பர் சேவர்\nசோனாலிகா DI 745 III\nநியூ ஹாலந்து எக்செல் 4710\nமஹிந்திரா யுவோ 575 DI\nபயன்படுத்திய அனைத்து டிராக்டர்களையும் காண்க\nஇதற்கு ஒத்த மஹிந்திரா 275 DI TU\nகெலிப்புச் சிற்றெண் DI-854 NG\nபார்ம் ட்ராக் சாம்பியன் பிளஸ்\nஜான் டீரெ 5039 D பவர்ப்ரோ\n*பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் வாங்க / விற்க முற்றிலும் விவசாயிக்கு விவசாயிக்கு உந்துதல் பரிவர்த்தனைகள். டிராக்டர் சந்தி விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதற்கும் உதவுவதற்கும் பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்களுக்கான தளத்தை வழங்கியுள்ளது. டிராக்டர் சந்தி என்பது விற்பனையாளர்கள் / தரகர்கள் வழங்கிய தகவல்களுக்காகவோ அல்லது அதன் விளைவாக ஏற்படும் மோசடிகளுக்காகவோ அல்ல. ஏதேனும் கொள்முதல் செய்வதற்கு முன் பாதுகாப்பு உதவிக்குறிப்புகளை கவனமாகப் படிக்கவும்.\n லிட்டிங் உண்மையானது அல்ல விற்பனையாளர் தொடர்பு கொள்ள முடியாது புகைப்படங்கள் தெரியவில்லை டிராக்டர்களின் விவரம் பொருந்தவில்லை டிராக்டர் விற்கப்படுகிறது\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n© 2021 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாட���ா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://xavi.wordpress.com/tag/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-05-07T00:33:39Z", "digest": "sha1:PSIPNF2DDBZNB6LLS72JIYOCEWBZTDGS", "length": 73162, "nlines": 897, "source_domain": "xavi.wordpress.com", "title": "இலக்கியம் |", "raw_content": "எழுத்து எனக்கு இளைப்பாறும் தளம் \n10ம் வகுப்பு, சி பிரிவு\n10ம் வகுப்பு, சி பிரிவு\nBy சேவியர் • Posted in Poem-Family, Poem-Love, POEMS\t• Tagged அப்பா கவிதை, அரசியல் கவிதை, இயற்கை அழகு, இயற்கை உணவு, இலக்கியம், கவிதை, கவிதைகள், கிராமக் கவிதை, கிராமத்தின் அழகு, கிராமத்து வீடு, கிராமம், சேவியர், பள்ளிக்காதல், மருத்துவம்\nBy சேவியர் • Posted in Poem-General, Poem-Self, POEMS\t• Tagged அப்பா கவிதை, அரசியல் கவிதை, இயற்கை அழகு, இயற்கை உணவு, இலக்கியம், கவிதை, கவிதைகள், கிராமக் கவிதை, கிராமத்தின் அழகு, கிராமத்து வீடு, கிராமம், சேவியர், பள்ளிக்காதல், மருத்துவம்\nBy சேவியர் • Posted in Poem-Family, Poem-Love, POEMS, TAMIL POEMS\t• Tagged அப்பா கவிதை, அரசியல் கவிதை, இயற்கை அழகு, இயற்கை உணவு, இலக்கியம், கவிதை, கவிதைகள், கிராமக் கவிதை, கிராமத்தின் அழகு, கிராமத்து வீடு, கிராமம், சேவியர், பள்ளிக்காதல், மருத்துவம்\nBy சேவியர் • Posted in Poem-Family, Poem-General, Poem-Love\t• Tagged அப்பா கவிதை, இயற்கை அழகு, இயற்கை உணவு, இலக்கியம், கவிதை, கவிதைகள், கிராமக் கவிதை, கிராமத்தின் அழகு, கிராமத்து வீடு, கிராமம், சேவியர், மருத்துவம்\nBy சேவியர் • Posted in Poem-Family, Poem-Nature, POEMS, TAMIL POEMS\t• Tagged இயற்கை அழகு, இயற்கை உணவு, இலக்கியம், கவிதை, கவிதைகள், கிராமக் கவிதை, கிராமத்தின் அழகு, கிராமத்து வீடு, கிராமம், சேவியர், மருத்துவம்\nBy சேவியர் • Posted in Poem-General, Poem-Nature, POEMS\t• Tagged இயற்கை உணவு, இலக்கியம், கவிதை, கவிதைகள், கிராமக் கவிதை, கிராமத்தின் அழகு, கிராமம், சேவியர், மருத்துவம்\nBy சேவியர் • Posted in Poem-General, Poem-Love, POEMS\t• Tagged இயற்கை உணவு, இலக்கியம், கவிதை, கவிதைகள், கிராமக் கவிதை, கிராமத்தின் அழகு, கிராமம், சேவியர், மருத்துவம்\nKavithai : அன்றைய பொழுதுகள்\nBy சேவியர் • Posted in Poem-General, Poem-Nature, POEMS\t• Tagged இயற்கை உணவு, இலக்கியம், கவிதை, கவிதைகள், கிராமக் கவிதை, கிராமத்தின் அழகு, கிராமம், சேவியர், மருத்துவம்\nகாதலின் தொடக்கப் புள்ளி எதுவெனக் கேட்டால் ஒருவேளை சட்டென சொல்லி விடலாம். அது ஒரு மழைச்சாரலின் இடையே தெரிந்த காதலியின் மின்னல் முகமாகக் கவித்துவம் காட்டலாம். கூடவே நடந்த தோழி சட்டென பேசிய ஒற்றை வார்த்தையில் உள்ளுக்குள் இடைந்து தெறித்த கண்ணாடிக் கூடென கதைகள் பேசலாம். முகத்தைப் பார்த்திராத டிஜிடல் காதலியின் குறுஞ் செய்தி குறுகுறுக்க முளைத்து வந்ததென தொழில் நுட்பம் பேசலாம். எது எப்படியோ, காதலின் தொடக்கப் புள்ளியைக் கண்டுபிடிப்பதொன்றும் பிரம்மப் பிரயர்த்தனம் இல்லை \nஆனால் அதன் முடிவுப் புள்ளியை எப்படிக் கண்டுபிடிப்பது. வட்டத்தை வரைந்து விட்டு அதன் மூலைகளைக் கண்டுபிடிக்கச் சொல்வது போல சிக்கலானது அது. கைப்பிடி அளவுக் காற்றை எடுத்து கடித்துத் தின்பது போல இயலாத காரியம் அது.\nபெய்து ஓய்ந்த பெருமழையின் கடைசித் துளி எங்கே விழுந்ததென எப்படிக் கண்டுபிடிப்பது பிரபஞ்சத்தின் முதல் ஆழியின் கடைசி அலை எப்போது அடிக்குமென எப்படிக் கணக்கிடுவது பிரபஞ்சத்தின் முதல் ஆழியின் கடைசி அலை எப்போது அடிக்குமென எப்படிக் கணக்கிடுவது கடைசியாய் எப்போது என் நாசிக்குள் பிராணவாயு படுத்துப் புரளுமென எப்படி உறுதி செய்வது கடைசியாய் எப்போது என் நாசிக்குள் பிராணவாயு படுத்துப் புரளுமென எப்படி உறுதி செய்வது நீள்வட்டப்பாதையில் ஓடிக்கொண்டிருக்கும் விளையாட்டு ரயிலின் கடைசிப் புள்ளி எதுவென எப்படித் தெரியும் நீள்வட்டப்பாதையில் ஓடிக்கொண்டிருக்கும் விளையாட்டு ரயிலின் கடைசிப் புள்ளி எதுவென எப்படித் தெரியும் காதலின் கடைசியும் அப்படியே அது எதுவரை என்பதைக் கணக்கிடுவது கடினம்.\nகாதலின் கடைசியை நமது வாழ்க்கையின் கடைசிக் கணம் வரை, என முடிவு செய்யலாமா அல்லது நம் வாழ்க்கையின் கடைசிக் கணத்தை காதலின் கடைசிக் கணம் வரை, என முடிவு செய்யலாமா \nகாற்று உள்ளவரைக்குமா, அந்த தொடுவானத்தின் எல்லை தரையில் தொடும் வரைக்குமா, பூமியின் ஓட்டம் நிற்கும் வரைக்குமா அல்லது அந்த வானத்தின் நீலம் உள்ளவரைக்குமா அல்லது அந்த வானத்தின் நீலம் உள்ளவரைக்குமா இவையெல்லாம் கவிதைகளில் உவமைகளாய் ஒளிந்திருக்கத் தான் லாயக்கு \nஎனில், காதல் என்பது எதுவரை \nஅன்பெனும் அகல் விளக்கு இதயத்துக்குள் இடைவிடாமல் எரிந்து கொண்டிருக்கும் வரை , அதில் பாசத்தின் எண்ணையும், தியாகத்தின் திரியும் எரிந்த��� கொண்டிருக்கும் வரை , அதில் பாசத்தின் எண்ணையும், தியாகத்தின் திரியும் எரிந்து கொண்டிருக்கும் வரை அன்பினை அகற்றிவிட்டுப் பார்த்தால் காதலின் திரைச்சீலைகள் கிழிந்து தொங்கும் அன்பினை அகற்றிவிட்டுப் பார்த்தால் காதலின் திரைச்சீலைகள் கிழிந்து தொங்கும் \nஒருவர் குறையை ஒருவர் தாங்கும் வரை ஒருவர் நிறையை ஒருவர் ஏந்தும் வரை ஒருவர் நிறையை ஒருவர் ஏந்தும் வரை இட்டு நிரப்புதலும், விட்டுக் கொடுத்தலும் காதல் வாழ்க்கையின் ஆனந்த தருணங்கள். முழுமை என்பது எங்கும் இல்லை என்பதை மனதால் புரிந்து கொள்ளும் வரை காதல் வாழும். குறைகள் என்பது அழகியலின் அம்சம் என்பது நிலைக்கும் வரை காதல் நீடிக்கும்.\nகாமத்தின் மெல்லிய சாரல் காதலுக்குள் பெய்யும் வரை காதலின் அடைமழை காமத்துக்குள் கலந்திருக்கும் வரை காதல் வாழும். மோகத்தின் வரிகள் மட்டுமே கவிதை முழுதும் உடல் வாசனை வீசிக் கிடந்தால் காதல் வீழும். மோகத்தின் மெல்லிய காற்று, காதலின் தோட்டத்தில் வீசலாம் ஆனால் மோகத்தின் புயல் மட்டுமே காதலின் தோட்டத்தில் அடித்துக் கொண்டிருக்கக் கூடாது.\nசுயநலத்தின் சுருக்குப் பைகளில் அடுத்தவர் ரசனையை முடிந்து விடாமலிருக்கும் வரை காதலுக்கு சுயநலம் இல்லை, சுயநலம் இருந்தால் அது காதலில்லை. அடுத்தவர் சுதந்திரத்தின் சிறகுகளை நறுக்கி காதலுக்கான கை விசிறியைச் செய்ய முடியாது. அப்படிச் செய்தால் காதல் நிலைப்பதில்லை.\nஇருவரின் உறவில் பாதுகாப்பின் பரிசுத்தம் பரவிக் கிடந்தால் காதல் வாழும். பயத்தின் ஆக்டோபஸ் கரங்கள் ஆங்காங்கே விரவிக் கிடந்தால் காதல் வீழும். பயம், காதலின் எதிரி. வெளிப்படையாய் இருக்கின்ற காதலில், ரகசிய பயங்கள் எழுவதில்லை. ரகசிய பயங்கள் முளைக்கும் இடங்களில் காதல் வெளிப்படையாய் இருப்பதில்லை.\nகாதல் வெறும் உணர்வுகளின் பிள்ளையல்ல. அது செயல்களின் தாய். உணர்வுகள் நெருக்கமாக்கும், செயல்கள் அந்த நெருக்கத்தை இறுக்கமாக்கும். காதலைக் காதலுடன் வைத்திருக்க காதலால் மட்டுமே முடியும் அந்தக் காதலை வார்த்தைகளும், வாழ்க்கையும் பிரதிபலித்தால் காதல் வாழும்.\nஇப்படி இருந்தால் தான் காதல் வளரும் என படிப்படியாய் சில வரையறைகளை வைத்தால் காதல் மூச்சுத் திணறும். அடுத்தவர் இயல்புக்காய் வருவதல்ல காதல், நமது இயல்பினால் வருவதே உண்மைக் காதல். பறிப்பவரின் இயல்புக்கேற்ப தாவரங்கள் பூப்பதில்லை தனது இயல்புக்கேற்பவே பூக்கின்றன. காதலை உள்ளத்திலிருந்து வெளியெடுப்போம், எதிரே இருப்பவரின் எண்ணத்திலிருந்தல்ல.\nஎன்னை விட நீ பெரியவள் எனும் எண்ணம் எழுகையில் காதலுக்கு சிறகு முளைக்கும். எதையும் விட பெரியவள் நீ எனும் சிந்தனை வளர்கையில் சிறகுக்கு வானம் கிடைக்கும். அந்த எண்ணம் இருவருக்கும் எழுகையில் காதலுக்கு ஆயுள் கிடைக்கும் \nவேற்றுமைகளை அறிந்து கொள்வதிலும் அதை அணிந்து கொள்வதிலும் காதல் வளரும். எல்லா இசைக்கருவிகளும் புல்லாங்குழல் ஆவதில்லை. எல்லா பறவைகளும் குயில்கள் ஆவதில்லை. வேற்றுமைகளே அழகு. காதலிலும் வேற்றுமைகளை விரும்பினால் காதலின் ஆயுள் கிணறு நிரம்பும்.\nமன்னிப்பின் மகத்துவம் காதலின் தனித்துவம். அடுத்தவர் செய்யும் பிழைகளை மன்னிக்கும் மனம் காதலின் ஆழத்தின் அடையாளம். மன்னிக்க மறுக்கும் இடத்தில் காதலின் கிளைகள் பூ விடுவதில்லை. காதலின் நிலைகள் வேர் விடுவதில்லை. மன்னிப்பு கேட்கும் முன் மன்னிக்கும் மனமிருந்தால் காதல் தேயாமல் வளரும்.\nகாதல், வெறும் வார்த்தைகளினால் ஜாலம் கட்டி, செயல்களினால் ஓரங் கட்டுவதில்லை. சத்தத்தில் மௌனத்தையும், மௌனத்தில் சத்தத்தையும் பிரித்தெடுக்கும் வித்தை காதலுக்கு உண்டு. சொல்லாத வார்த்தைகளைப் புரிந்து கொண்டு செயல்களினால் அதை சரிசெய்யும். அத்தகைய காதல் நீண்ட நெடிய காலம் வாழும்.\nநான் எனும் சிந்தனை மறைந்து நாமென்பது உள்ளெங்கும் நிறைந்து நிற்பதில் காதல் வலிமையடையும். தன் கனியை தானுண்பதில்லை கொடிகள். தனக்கென எதையும் சேர்த்துக் கொள்வதில்லை உண்மைக் காதலர்கள். காதலின் வளர்ச்சி நாமென்னும் சிந்தனையின் தொடர்ச்சி.\nகாதலுக்காய் செலவிடும் நேரங்கள், வாழ்க்கையை அழகாக்கும் காலங்கள். நிறைய நேரம் செலவிடும் காதல் நீண்டகாலம் வாழும். பகிரப்படும் நேரங்களே, காதலின் பரவசத்தின் பதுங்கு குழிகள். அவையே காதலை சாகாவரம் தந்து வாழவைப்பவை.\nநம்பிக்கை நங்கூரம் வாழ்க்கைக் கடலில் காதல் கப்பலை நிறுத்தும் வரை காதல் வாழும். நம்பிக்கையின் நங்கூரம் கழன்றி விழுகையில் காதல் கப்பல் நிலைகுலையும். எதிர்பாராத திசைகளில் பயணம் நீளும். நம்பிக்கை நங்கூரத்தைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.\nமலருடன் அமர்ந்திருக்கும் வண்��த்துப்பூச்சி போரடிக்கிறது என பறந்து போவதில்லை. துணையுடன் இருக்கும் போது போரடிக்காத காதல் நீண்டகால வாழ்க்கைக்கு உத்தரவாதம். சலிப்பை ஏற்படுத்தும் காதலுக்குள் இருப்பது உண்மை நேசத்தின் கருவல்ல. சில்மிஷ சிலிர்ப்பின் கரு.\nசொல்லாத காதல் என்பது கொல்லப்பட்ட காதல் மின்மினி கூட தன் இருப்பை புள்ளி வெளிச்சத்தால் பூமிக்கு பறைசாற்றிக் கொண்டே தான் இருக்கிறது. காதல் மட்டும் ஏன் காரிருளுக்குள் கவிழ்ந்து கிடக்கிறது மின்மினி கூட தன் இருப்பை புள்ளி வெளிச்சத்தால் பூமிக்கு பறைசாற்றிக் கொண்டே தான் இருக்கிறது. காதல் மட்டும் ஏன் காரிருளுக்குள் கவிழ்ந்து கிடக்கிறது காதலில் பகிரப்படும் வார்த்தைகள் அதன் ஆயுள் ரேகையை நீளமாக்கும், காதல் பாதையை ஆழமாக்கும் \nஆறுதல் கரங்கள் தயாராய் இருந்தால் காதல் அழிவதில்லை. பழிபோடும் நிலைவரினும் பழியேற்கும் மனநிலை கொண்டால் காதல் அழிவதில்லை. காதல் என்பது நதியின் ஸ்பரிசம், யார் தொட்டாலும் மனதில் சிலிர்க்கும்.\nஒரு சிலை செய்யும் நுணுக்கத்தில் காதல் நம்மைச் செதுக்கும். காதலின் உளிப்பிரயோகங்களுக்கு காதலர்கள் புன்னகையோடு ஒத்துழைத்தால் போதும். காதலின் உளிப்பிரயோகங்களே ஆயுளின் சிலையை அழகாக்கும்.\nஅடுத்தவரின் புன்னகையில் மகிழும் உணர்வே காதலின் வளர் நிலை. அடுத்தவர் புன்னகைக்க வேண்டும் என வாழ்வதே காதலின் உயர்நிலை. அந்த எண்ணத்தை இருவரின் இதயமும் ஏற்கும் போது காதலின் ஆயுள் கெட்டியாகும்.\nஎனில் காதல் என்பது எதுவரை \nஉங்கள் வீட்டை கொள்ளையடிக்க ஒருவர் ரோட்டில் நின்று நோட்டம் இடுகிறார் என வைத்துக் கொள்ளுங்கள். அவரை வீட்டுக்குள் அழைத்து, ‘வீட்டை கொஞ்ச நேரம் பாத்துக்கங்க, ஒரு மணிநேரம் வெளியே போயிட்டு வரேன்’ என சொல்வீர்களா அப்படிச் செய்தால் ஒரு மணி நேரம் கழிந்து நீங்கள் வரும் போது வீடு சுத்தமாக திருடப்பட்டிருக்கும் இல்லையா அப்படிச் செய்தால் ஒரு மணி நேரம் கழிந்து நீங்கள் வரும் போது வீடு சுத்தமாக திருடப்பட்டிருக்கும் இல்லையா அதே போன்ற ஒரு விஷயம் தான் இந்த ஜூஸ் ஜேக்கிங் விஷயம்.\nமுன்பெல்லாம் செல்போனை முழுமையாக சார்ஜ் செய்தால் ஒரு வார காலத்துக்கு சார்ஜ் நிற்கும். இப்போதெல்லாம் அப்படி இல்லை. ஸ்மார்ட்போன்களின் காலம் சார்ஜ் செய்யப்பட்ட போனை சில மணிநேரங்களிலேயே “பேட்டரி காலி” எனும் நிலைக்கு தள்ளி விடுகிறது. மூர்ச்சையாகிக் கிடக்கும் போனை மறுபடியும் சார்ஜ் செய்தால் தான் பயன்படுத்த முடியும் எனும் நிலை ஏற்பட்டு விடுகிறது.\nஇதற்காக விமான நிலையங்கள், சில உணவகங்கள், சில மால்கள் போன்றவற்றில் இலவச பேட்டரி சார்ஜ் நிலையங்களை உருவாக்கி வைத்திருப்பார்கள். அதாவது ஒரு இடத்தில் நிறைய சார்ஜர்கள் இருக்கும், உங்கள் போனுக்கு செட் ஆகும் சார்ஜரைப் பயன்படுத்தி நீங்கள் உங்கள் பேட்டரியை சார்ஜ் செய்து கொள்ளலாம்.\nஅப்பாடா… சார்ஜ் பண்ண ஒரு இடம் கிடச்சுடுச்சு என சிலாகித்து பலரும் இந்த வசதியைப் பயன்படுத்துவதுண்டு. இவை ஆபத்தானவை என்பது தான் ஜூஸ் ஜாக்கிங் சொல்லும் செய்தி என சிலாகித்து பலரும் இந்த வசதியைப் பயன்படுத்துவதுண்டு. இவை ஆபத்தானவை என்பது தான் ஜூஸ் ஜாக்கிங் சொல்லும் செய்தி இத்தகைய இடங்களில் சார்ஜ் செய்யப்படும் போன்களிலுள்ள தகவல்கள் திருடப்படலாம். போனில் வைரஸ் மால்வேர்கள் நுழைக்கப்படலாம் இத்தகைய இடங்களில் சார்ஜ் செய்யப்படும் போன்களிலுள்ள தகவல்கள் திருடப்படலாம். போனில் வைரஸ் மால்வேர்கள் நுழைக்கப்படலாம் என அதிர்ச்சியளிக்கின்றன ஆய்வுகள். அதைத் தான் ‘ஜூஸ் ஜாக்கிங்’ என்கிறார்கள்.\nஅதென்ன பெயர் ஜூஸ் ஜாக்கிங் அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் சார்ஜை ஜூஸ் என்பார்கள். போனில் சார்ஜ் இல்லை என்றால் ஜூஸ் இல்லை என்பார்கள். சார்ஜ் வேண்டுமென்றால் கொஞ்சம் ஜூஸ் வேணும் என்பார்கள். ஜாக்கிங் என்றால் திருடுவது. போன் சார்ஜ் போடும் நேரத்தில் நம்முடைய தகவல்களைத் திருடுவதையோ, திருட்டுத்தனமாய் நமது போனுக்குள் நுழைவதையோ தான் “ஜூஸ் ஜாக்கிங்” என்கிறார்கள்.\nஇரண்டு விதமான திருட்டுகள் இதில் நடக்கலாம். ஒன்று, சார்ஜ் போடும் நேரத்தில் நமது போனிலுள்ள தகவல்களை அப்படியே காப்பியடிப்பது. இதில் நாம் சேமித்து வைத்திருக்கும் வங்கிக் கணக்கு விஷயங்கள், கான்டாக்ட் தகவல்கள், படங்கள், டாக்குமென்ட்ஸ் எல்லாம் திருடப்படலாம். திருடப்படும் தகவல்களின் அடிப்படையில் நமக்கு சிக்கல்கள் வரலாம்.\nஇன்னொன்று நமது கணினியில் ரகசிய மால்வேர் மென்பொருளை இந்த இடங்கள் பதிவிறக்கம் செய்து வைக்கலாம். நம்மை அறியாமலேயே நம்மைக் கண்காணிக்கும் ரகசிய உளவாளிகளாக இது நமக்கு தொடர்ந்து தொல்லை கொடுக்கும்.\nஎது எப்படியெனினும், இந்த தாக்குதல் நமக்கு தலைவலியைத் தரக்கூடிய ஒன்று என்பதில் சந்தேகமில்லை.\nஇந்த சிக்கல்களிலிருந்து விடுபடுவதற்கு என்ன வழி \nஎளிமையாகச் சொல்வதென்றால், இத்தகைய ‘பொது இட சார்ஜ் நிலையங்களில் நமது போனை இணைக்காமல் இருப்பது தான்’ ஆகச் சிறந்த வழி. அது பலி ஆடு தானாகவே போய் வெட்டுபவன் முன் கழுத்தைக் கொடுப்பதற்கு சமம். சரி, ஒருவேளை சார்ஜ் பண்ணியே ஆகவேண்டும், வேற வழியே இல்லை என்றால் என்ன செய்வது பதட்டமடையத் தேவையில்லை, சில விஷயங்களை நினைவில் கொள்ளுங்கள்.\n1. தவிர்க்க முடியாத சூழல்களில், இத்தகைய இடங்களைப் பயன்படுத்த வேண்டி வந்தால் உங்களுடைய போனை ‘ஆஃப்’ செய்து வையுங்கள். முழுமையாக அணைத்து வைக்கப்பட்டிருக்கும் போனில் மென்பொருட்களை இறக்கி வைப்பதோ, அல்லது தகவல்களை திருடுவதோ இயலாத காரியம்.\n2. ஒருவேளை போனை ஆஃப் பண்ண முடியாத சூழல் இருக்கிறது என வைத்துக் கொள்ளுங்கள். மிக மிக அவசரமான சூழல். போன் செயல்பாட்டிலேயே இருக்க வேண்டுமெனில் அதை குறைந்த பட்சம் ‘லாக்’ செய்து வையுங்கள். லாக் செய்யப்பட்ட போன்கள் தாக்குதலுக்கு உள்ளாகும் வாய்ப்பு கொஞ்சம் கம்மி. எக்காரணம் கொண்டும் போனை சார்ஜ் போட்டுக்கொண்டு திறந்தும் வைக்கவே வைக்காதீர்கள்.\n3. ‘பவர் பேங்க்’ எனப்படும் சார்ஜ் செய்யப்படும் உபகரணத்தை கையில் வைத்திருந்தால் அவசர காலங்களில் பயனளிக்கும். பொது இடங்களில் இத்தகைய பவர் பேங்க்களை சார்ஜ் செய்து வைத்துக் கொள்ளலாம் ஆபத்து இல்லை.\n4. வீட்டிலிருந்து வெளியே கிளம்பும் போதே போனை முழுமையாக சார்ஜ் செய்து கொண்டு செல்லுங்கள். இதனால் அதிக நேரம் உங்களுக்கு போன் கைகொடுக்கும். வீடுகள், அலுவலகங்கள் போன்றவையே நமக்குத் தெரிந்த பாதுகாப்பான இடங்கள்.\n5. எங்கே போனாலும் கூடவே உங்கள் ‘பவர் கார்ட்’ கையோடு கொண்டு போங்கள். யூ.எஸ்.பி சார்ஜிங் நிலையங்கள் தான் நமக்கு ஆபத்தானவை. பொதுவான மின் இணைப்புகளில் உங்களுடைய சார்ஜரை வைத்து சார்ஜ் செய்து கொள்ளுவதெல்லாம் ஆபத்தற்றவை. அதை நீங்கள் வைத்துக் கொள்ளலாம்.\n6. இப்போதெல்லாம், ‘சார்ஜ் செய்ய மட்டும்’ எனும் அடைமொழியுடன் சார்ஜர்கள், யூ.எஸ்.பி கார்ட்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. அவற்றின் மூலமாக தகவல்களை கடத்த முடியாது. அத்தகைய வயர்களை நீங்கள் வாங்கிப் பயன்படுத்தலா��். நம்பிக்கைக்கு உத்தரவாதம். இதை எப்படி உருவாக்குகிறார்கள் சிம்பிள் சார்ஜ் செய்யும் பின்னில் சில இணைப்புகள் தகவல் கடத்தவும், சில இணைப்புகள் மின்சாரம் கடத்தவும் இருக்கும். ‘சார்ஜ் மட்டும்’ எனும் வயர்களில், தகவல் கடத்தும் இணைப்புகள் கட் பண்ணப்பட்டிருக்கும். அவ்வளவு தான்.\n7. உங்கள் போனிலுள்ள பேட்டரியைக் கழற்றி மாட்ட முடியுமெனில், எக்ஸ்ட்ரா பேட்டரி ஒன்று வாங்கி வைத்துக் கொள்ளலாம். ஒன்று தீரும்போது இன்னொன்றைப் பயன்படுத்திக் கொள்ள இது உதவியாக இருக்கும். ஜூஸ் ஜாக்கிங் தாக்குதல் நேருமோ எனும் பயமும் இல்லை.\n8. தேவையற்ற ஆப்களை அழித்து விடுங்கள். பல ஆப்கள் நமது போனில் விழித்திருந்து நமது போனின் பேட்டரி விரைவில் காலியாக காரணமாய் இருக்கின்றன. அத்தியாவசியமான, அங்கீகரிக்கப்பட்ட ஆப்களை மட்டுமே வைத்திருந்தால் பேட்டரி அதிக நேரம் தாங்கும். தேவையற்ற ஆப்களை அழிப்பது நமது போனின் பாதுகாப்புக்கும் மிக மிக அவசியம். இலவசமாய்க் கிடைக்கிறது என இறக்கி வைக்கும் மென்பொருட்களுக்காய் நாம் மிகப்பெரிய விலையைக் கொடுக்க வேண்டி வரலாம்.\n9 தேவையற்ற நேரங்களில் புளூடூத், வைஃபை, டேட்டா போன்றவற்றை அணைத்தே வைத்திருந்தால் பேட்டரி ரொம்ப நேரம் விழித்திருக்கும் என்பது சர்வ நிச்சயம். டேட்டாவை ஆஃப் பண்ண முடியாது எனும் சூழல் இருந்தால் குறைந்த பட்சம் புளூடூத் போன்றவற்றை அணைத்தே வைத்திருங்கள். இப்போதெல்லாம் ‘ஹெல்த் வாட்ச்’, கார் ஆடியோ, ஹெட்போன் போன்றவை புளூடூத்துடன் எப்போதும் இணைக்கப்பட்டிருப்பதால் பேட்டரி விரைவில் தீர்ந்து விடுகிறது.\n10 தகவல் பரிமாற்றத்தைத் தடுக்கும் பாதுகாப்பு கருவிகளைப் பயன்படுத்தலாம். சிங்க்கார்ப் போன்ற நிறுவனங்கள் சில பாதுகாப்பு சாதனங்களை விற்பனை செய்கிறது. அதில் ஒன்று யூ.எஸ்.பி காண்டம். இந்த குட்டி அடாப்டரில் நமது யூஎஸ்பி கேபிளை சொருகினால் அது தகவல் பரிமாற்றத்தை தடுக்கும்.\nசுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில், ஆபத்துகளை அறிந்து கொள்வது தான் எச்சரிக்கையாய் இருக்க நம்மை தயாராக்கும். பொது இடங்களில் வைக்கப்பட்டிருக்கும் சார்ஜ் நிலையங்கள் ஆபத்து நிலையங்களாய் மாறலாம் எனும் எச்சரிக்கை உணர்வு நமக்கு எப்போதும் இருக்கட்டும். மேலே சொன்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மனதில் வைத்திருப்போ���். ந்மது நிம்மதியை கைவிடாதிருப்போம்.\nBy சேவியர் • Posted in Articles, Articles-awareness, Articles-Technology, கட்டுரைகள்\t• Tagged இலக்கியம், கட்டுரைகள், ஜூஸ் ஜேக்கிங், தொழில்நுட்பம்\nபேரிடர் காலங்களில், பேரன்பு பகிர்தல்\nமரண இருளின் பள்ளத்தாக்கு – ஒளி தந்த இருளின் காலம் – கோவிட் பயணம்\nஇயேசு கேட்ட கேள்வி : இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 18 : மீட்டிங்\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 17 : எழுத்து முக்கியம்\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 16 : கம்யூனிகேஷன்\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் – 15 – மீண்டும்….\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 14 – கவனித்தல்\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் – மைக்ரோ கவனிப்பு\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 12 : பணியைப் பகிர்.\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 11 :\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 10 – அணி\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 9 – ரிஸ்க்\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 8 – சவால் & ஆபத்து\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 7 – பணியாளர் மேலாண்மை\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 6 : எப்போ முடிப்பீங்க \nவிவசாயம் காப்போம்; விவசாயி காப்போம்\nகுட்டிக் குட்டிக் காதல் கவிதைகள்\nகவிதை : வானத்துப் பறவை\nதன்னம்பிக்கை : கூடா நட்பு கூடாது \nகைபேசி : வியப்பூட்டும் வளர்ச்சியும், ஆபத்தும்\nதாவீது : ஆட்டிடையன் அரசரான கதை \nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\n1. ஆதி மனிதன் ஆதாம் \n இந்த வார்த்தையே நமது மன வெளிகளில் புன்னகை விதைகளைத் தூவும் வல்லமை படைத்தது. எத்தனை பெரிய சோகத்தின் அலைகள் நமது பாலை வெளிகளில் புரண்டு படுத்தாலும், ஒரு சின்னக் குழந்தையின் புன்னகைக் கைக்குட்டை கிடைத்தால் அந்த சோகம் புதையுண்டு போய்விடும். மழலைகளோடு விளையாடுகையில் மலைபோன்ற மன பாரங்கள் கூட பழுத்த இலை போல உதிர்த்து பறந […]\nபேரிடர் காலங்களில், பேரன்பு பகிர்தல்\nபேரிடர் காலங்களில், பேரன்பு பகிர்தல் பல குறியீடுகளை ஆதிகாலக் கிறிஸ்தவர்கள் பயன்படுத்தினார்கள். குறிப்பாக மீன் குறியீடு அந்தக் காலத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு குறியீடாய் ���ருந்தது. மீன் அடையாளம் வரையப்பட்ட இடங்களை ஆராதனை இடங்களாக ரகசியக் கிறிஸ்தவர்கள் புரிந்து கொண்டார்கள். அத்தகைய இடங்களில் அவர்கள் மறைந்திருந்து நற்செய்தியை அறிவித்தார்கள். பைபிள் […]\nமரண இருளின் பள்ளத்தாக்கு – ஒளி தந்த இருளின் காலம் – கோவிட் பயணம்\nமரணஇருளின்பள்ளத்தாக்கு ஒளி தந்த இருளின் காலம் – கோவிட் பயணம் * நிகழ்வுகளெல்லாம் இறைவனால் நமக்குத் தரப்படுகின்ற அனுபவப் பாடங்கள். சில அனுபவப் பாடங்கள் நம்மை விரக்தியில் எறியும். சில நம்மை குழப்பத்தில் உருட்டும். சில அனுபவங்கள் நம்மை புரியாமைக்குள் நடத்திச் செல்லும். ஆனால் ஒன்று மட்டும் யதார்த்தம், இறைமகன் இயேசுவின் கரம்பிடித்து நடப்பவர்களுக்கு எந்த ஒரு துயரத் […]\nஇயேசு கேட்ட கேள்வி : இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா\nஇவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா யோவான் 14 :9 இந்தக் கேள்வி புதுசா நாம கேள்விப்படுகிற கேள்வி அல்ல. அடிக்கடி நமது வாழ்க்கையில் நாம் சந்திக்கின்ற கேள்வி. “இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா யோவான் 14 :9 இந்தக் கேள்வி புதுசா நாம கேள்விப்படுகிற கேள்வி அல்ல. அடிக்கடி நமது வாழ்க்கையில் நாம் சந்திக்கின்ற கேள்வி. “இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா” ந்னு தூய தமிழ்ல கேள்விப்பட்டிருக்க மாட்டோம், ஆனா நம்முடைய உரையாடல்களில் எப்போதேனும் நிச்சயம் இந்தக் […]\nKristilla on கி.மு : நோவாவின் பேழை\nக.மோகன சுந்தரம் on சன்னலுக்கு வெளியே கவிதைகள்\nAnonymous on கிமு : சிம்சோன் – வியப்ப…\nAnonymous on வீதியில் நாய்கள், பீதியில்…\nSuma sheyalin on அப்பா என் உலகம்\nDev on தன்னம்பிக்கை : திடீர் பணக்காரன…\nSivaranjani on தன்னம்பிக்கை : திடீர் பணக்காரன…\nTamilBM on தன்னம்பிக்கை : கல்வியால் ஆய பய…\nkavithai kavithais love POEMS Tamil Kavithai tamil kavithais writer xavier xavier இலக்கியம் இளமை கவிதை கவிதைகள் காதல் சேவியர் சேவியர் கவிதைகள் தமிழ் இலக்கியம் தமிழ்க்கவிதை தமிழ்க்கவிதைகள் புதுக்கவிதை புதுக்கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mybhaaratham.com/2020/03/blog-post.html", "date_download": "2021-05-07T00:37:17Z", "digest": "sha1:OPZMN6OTLB4LGLKOHCOEBPMRJKICDMY2", "length": 10031, "nlines": 136, "source_domain": "www.mybhaaratham.com", "title": "Bhaaratham Online Media: அமைச்சரவை பட்டியலை பிரதமர் இன்று அறிவிக��கலாம்?", "raw_content": "\nஅமைச்சரவை பட்டியலை பிரதமர் இன்று அறிவிக்கலாம்\nதனது தலைமையிலான அமைச்சரவைக் குழுவை பிரதமர் டான் ஶ்ரீ முஹிடின் யாசின் இன்று அறிவிக்கலாம் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஇன்று மாலை 5.00 மணியளவில் அமைச்சரவை உறுப்பினர்களை அவர் அறிவிக்கக்கூடும் எனவும் அதற்கு முன்னதாக காலை 11.00 மணியளவில் மாமன்னரை சந்தித்து அமைச்சரவை பட்டியலை சமர்ப்பிக்கக்கூடும் எனவும் தகவல்கள் கூறுகின்றன.\nஇந்த அமைச்சரவையில் பெர்சத்து, தேசிய முன்னணி, பாஸ், ஜிபிஎஸ் ஆகிய கட்சிகள் பிரதிநிதிக்கக்கூடும்.\nகடந்த மாதம் நாட்டில் நிலவிய அரசியல் நெருக்கடியை தொடர்ந்து மார்ச் 1ஆம் தேதி டான்ஶ்ரீ முஹிடின் யாசின் 8ஆவது பிரதமராக பதவியேற்றுக் கொண்டார்.\n'இயற்கையை காப்போம் இனியதோர் உலகை படைப்போம்' - சிறப்பு கட்டுரை\nபினாங்கு - இயற்கை என்பது இயல்பாக இருப்பது என்பது பொருள் கொண்டதாகும் . இயல்பாகவே தோன்றி மறையும் பொருட்கள் அவற்றின் இயக்கம் , அவை இயங...\nபூச்சோங்- மாரடைப்பின் காரணமாக மனைவியும் அவரை தொடர்ந்து கணவனும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. சிலாங்கூர்,பூச்சோங்கைச் ச...\nசோழன் ஆட்சியை இழந்ததைப்போல, மஇகாவை இழந்து விடாதீர்கள்\nசேரன், சோழன், பாண்டியன் ஆட்சிகளை இழந்து 500 ஆண்டுகளைக் கடந்து விட்டோம். இங்கு வந்து 200 ஆண்டுகளாகக் கட்டமைத்த வாழ்க்கையைத்தான் இன்றும...\nஎம்சிஓ- இன்னும் வலுபடுத்தப்படலாம்- தற்காப்பு அமைச்சர்\nகோவிட்- 19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த ஆடவர...\n1 லட்சம் முகக் கவசங்களை ஷான் பூர்ணம் மெட்டல் நிறுவ...\nகாற்றில் 8 மணி நேரம் உயிர் வாழும் கோவிட்-19\nகோவிட்-19: 37 பணியாளர்களுக்கு வைரஸ் தொற்று; தெலுக்...\nகோவிட்-19: பலி எண்ணிக்கை 14ஆக உயர்ந்தது\nகோவிட்-19: மக்களுக்கு உதவிப் பொருட்கள் வழங்கினார் ...\nஇந்திய உள்ளூர் டெலிமூவிக்களை ஒளிபரப்பவுள்ளது ஆஸ்ட்ரோ\nநடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை; 10% மக்கள் பின்பற்றுவதி...\nஅனைத்து மலேசியர்களுக்கும் ஆஸ்ட்ரோ கோ; இப்பொழுதே ஸ்...\nஏடிஎம் மையங்கள் 7 முதல் 10 மணி வரை மட்டுமே செயல்படும்\nகோவிட் 19- உயிர்பலி 8ஆக உயர்ந்தது\nமக்களுக்கு உதவிட சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வெ.30 ...\nராணுவ பயன்பாடு- அவசர கால பிரகடனம் அல்ல\nஞாயிற்றுக்கிழமை முதல் ராணுவ பயன்பாடு- தற்காப்பு அம...\nவீட்டிலேயே இருங்கள்- பிரதமர் வலியுறுத்து\nவிமான நிலையத்தில் சிக்கி தவிக்கும் மலேசியர்கள்- மஇ...\nசென்னை விமான நிலையத்தில் சிக்கியுள்ள மலேசியர்கள்\nகோவிட் -19.: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 673ஐ எட்டியது\nகோவிட்-19 பரிசோதனை: எத்தரப்பையும் அரசு நியமிக்கவில்லை\n''மைசெல்'' முயற்சியில் இரு இந்தியருக்கு ''மைகார்ட...\nமக்கள் நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை: பிரதமர் உத்தரவு\nமலேசியாவில் அதிகரிக்கும் கோவிட்-19 பாதிப்பு\nஇரண்டாவது முறை; பேரா மந்திரி பெசாராக பதவியேற்றுக் ...\nபொருளாதார நெருக்கடியை ஏற்படுத்துமா கோவிட்-19\nநிழலானது பிரதமர் பதவி; நிஜமாகிறது எதிரணித் தலைவர்-...\nதான் இல்லையென்றால் அமைச்சரவைக்கு அஸ்மின் அலி தலைமை...\nசம்பளத்தை குறைக்க முன்வந்தார் பிரதமர்\nஅமைச்சர்கள், துணை அமைச்சர்கள் சொத்து விவரங்களை அறி...\nமனிதவள அமைச்சராக பணியை தொடங்கினார் டத்தோஶ்ரீ சரவணன்\nதுரோகிகளை களையெடுக்குமா ப.கூட்டணி தலைமைத்துவம்\nகுறைகளை சொல்லிக் கொண்டிருக்காமல் செயல்பட வாய்ப்பளி...\nஒரேயொரு அமைச்சர் பதவி: மஇகாவுக்கு பலமா\nதுணைப் பிரதமர் இல்லாத அமைச்சரவை\nமனிதவள அமைச்சர் டத்தோஶ்ரீ சரவணன், கூட்டரசு பிரதேச...\nபக்காத்தான் கூட்டணிக்கு 'ராசியில்லாத' பேரா மாநிலம்\nஆட்சிக்குழு உறுப்பினர் பதவியை குறி வைக்கிறாரா சிவச...\nகவிழ்ந்தது பேராக் மாநில அரசு\nஅமைச்சரவை பட்டியலை பிரதமர் இன்று அறிவிக்கலாம்\nமஇகாவுக்கு ஒரு அமைச்சர், இரு துணை அமைச்சர் பதவிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/672010/amp", "date_download": "2021-05-07T02:04:28Z", "digest": "sha1:EOAD7G7RPKRZFIITLAP6PSRJ7RIY6LWZ", "length": 9690, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "காங்கயம் இன மாடுகள் ரூ.32 லட்சத்துக்கு விற்பனை | Dinakaran", "raw_content": "\nகாங்கயம் இன மாடுகள் ரூ.32 லட்சத்துக்கு விற்பனை\nகாங்கயம் : காங்கயம் அடுத்துள்ள நத்தக்காடையூர் அருகே பழையகோட்டை மாட்டுத்தாவணியில் காங்கயம் இன மாடுகள் ரூ.32 லட்சத்திற்கு விற்பனையானது. காங்கயம் அடுத்த நத்தக்காடையூர் பழையகோட்டையில் காங்கயம் இன மாடுகளுக்கான சந்தை நடைபெற்று வருகிறது. இந்த சந்தையில் காங்கயம் இன மாடுகள் மட்டுமே விற்பனைக்கு அனுமதிக்கப்படுகிறது.\nஇதில் இடைத்தரகர் இல்லாத சந்தை என்பதால் விவசாயிகளிடம் வரவேற்பை பெற்றுள்ளது. மாட்டுச்சந்தையில் மாடுகளுக்கு நல்ல விலை கிடைக்கிறது.\nவாரச்சந்தையில் கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல், நாமக்கல், போன்ற மாவட்டங்களிலிருந்து விற்பனைக்காக விவசாயிகள் மாடுகளை கொண்டு வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து மாடுகளை வாங்க விவசாயிகள் வருகின்றனர். மாடுகளை விற்கும் விவாசாயிகளும் வாங்கும் விவசாயியும் நேரடியாக விலை நிர்ணயித்து கொள்வது இந்த சந்தையின் தனி சிறப்பு. நேற்று 156 கால்நடைகள் வந்திருந்தன.\nஇதில் காங்கயம் இன மாடுகள் ரூ.25 ஆயிரம் முதல் அதிகபட்சமாக 75 ஆயிரம் ரூபாய் வரை விற்றது. பசுங்கன்றுகள் ரூ.10ஆயிரம் முதல் ரூ.40 வரை விற்பனையானது. காளை கன்றுகள் ரூ.10 ஆயிரம் முதல் ரூ40 ஆயிரம் வரை விற்கப்பட்டது. நேற்று நடைபெற்ற சந்தையில் 86 கால்நடைகள் மொத்தம் ரூ.32 லட்சத்திற்கு விற்பனையானது.\nகோவை, பெங்களூரூ, மங்களூர், நாகர்கோவில், திருச்சிக்கு செல்ல பயணிகள் வராததால் 74 சிறப்பு ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு\nசேலம் அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் இருந்து 29 ரெம்டிசிவிர் மருந்து பாட்டில்களை காணவில்லை என புகார்\nகுளச்சல் மீன்பிடி துறைமுகம் விரிவாக்கம் செய்யப்படுமா\nகொரோனா ஊரடங்கில் நேரத்தை வீணாக்காமல் திருச்செந்தூரில் தவில் அடித்து பயிற்சி பெறும் சிறுவர்கள்\nதமிழகத்தில் மேலும் 24,898 பேருக்கு கொரோனா உறுதி; 195 பேர் உயிரிழப்பு: 21,546 பேர் குணம்\nதமிழகத்தில் தடையற்ற ஆக்சிஜன் சப்ளையை உறுதிப்படுத்த மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nபுதுச்சேரியில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஊக்கத்தொகை: துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்\nநெல்லை அரசு மருத்துவ கல்லூரிக்கு மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து 8,000 லிட்டர் ஆக்சிஜன்\nசாத்தூர் அருகே உள்ள சல்வார்பட்டியில் ஒரு வாரத்தில் 10 பேர் கொரோனாவால் உயிரிழந்ததால் கிராம மக்கள் அச்சம்\nதிருச்சியில் கொரோனா பரவலை தடுக்க காந்தி மார்க்கெட் பொன்மலை ஜி கார்னர் மைதானத்திற்கு மாற்றம்\nமகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து நெல்லை அரசு மருத்துவமனைக்கு 8,000 லிட்டர் திரவ ஆக்சிஜன் வந்தது\nதனியார் மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூல்: உயர்நீதிமன்றம் கருத்து\nஆண் சிறுத்தை உயிர் இழப்பு\n2019ல் பறிமுதல் செய்யப்பட்ட 10 ஆயிரம் லிட்டர் எ���ிசாராயம் பள்ளத்தில் கொட்டி தீ வைத்து அழிப்பு\nமுழு பாலையும் கறக்காவிட்டால் மாடுகளுக்கு மடி நோய் ஏற்படும்: கால்நடை மருத்துவ ஆராய்ச்சி மையம் தகவல்\nஅமராவதி அணை நீர்மட்டம் குறைகிறது\nஒரத்தநாடு குட்டை குளத்தில் தேங்கி கிடக்கும் பிளாஸ்டிக் குப்பை கழிவுகள்: தொற்றுநோய் பரவும் அபாயம்\nகோடை மழையால் போடி கண்மாய்களுக்கு நீர்வரத்து அதிகரிப்பு\nதாவரவியல் பூங்காவில் பெரிய புல் மைதானம் சீரமைப்பு பணி மும்முரம்\nதிருவாரூர் குளுந்தான் குளத்தில் ஆகாய தாமரை செடிகள் அகற்றப்படுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/news/request-to-produce-not-only-sterlite-but-also-bell-oxygen/cid2806221.htm", "date_download": "2021-05-07T01:39:48Z", "digest": "sha1:TXFCAEKWAWG5XSOMELPBJK7V6W6KWEIJ", "length": 6181, "nlines": 41, "source_domain": "tamilminutes.com", "title": "\"ஸ்டெர்லைட் மட்டுமின்றி பெல்\" ஆக்சிசன் உற்பத்தி செய்ய கோரிக்", "raw_content": "\n\"ஸ்டெர்லைட் மட்டுமின்றி பெல்\" ஆக்சிசன் உற்பத்தி செய்ய கோரிக்கை\nதிருச்சி பில்லில் ஆக்சிசன் உற்பத்தி செய்ய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அவருக்கு திமுக எம்பி திருச்சி சிவா கடிதம் எழுதியுள்ளார்\nஇன்று காலை முதலே தமிழகத்தில் மிகவும் பரபரப்பான சூழ்நிலை உள்ளது. காரணம் என்னவெனில் இன்று காலை முதலே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்த கட்சி கூட்டத்தில் திமுக பாஜக மற்றும் இடதுசாரிகள் போன்ற பலரும் கலந்து கொண்டிருந்தனர். மேலும் திமுக சார்பில் அக்கட்சியின் எம்பி கனிமொழி கலந்துகொண்டிருந்தார். பாஜக சார்பில் அக்கட்சியின் மாநில தலைவர் முருகன் கலந்துகொண்டிருந்தார். மேலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனைத்து கட்சிகளுடன் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக கூறியிருந்தார்.\nமேலும் அனைத்து கட்சிகளும் ஒருமனதாக ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிசன் உற்பத்தி செய்ய அனுமதி இருந்தன. மேலும் ஸ்டெர்லைட் ஆலையில் 4 மாத காலத்திற்கு ஆக்சிசன் உற்பத்தி செய்ய அனுமதிக்க உள்ளதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்றும் கூறப்பட்டன. மேலும் ஸ்டெர்லைட் ஆலையில் 4 மாத காலத்திற்கு மின்சாரத்தை தமிழக மின்வாரிய துறை வழங்கும் என்றும் கூறினார். தற்போது ஸ்டெர்லைட் ஆலை மட்டுமின்றி தமிழகத்தில் மலைக்கோட்டை நகரமாக உள்ள திருச்சியில் இருக்கும் பெல் நிறுவனத்தில் உற���பத்தி செய்வதற்காக கோரிக்கை எழுந்துள்ளது.\nஇதனை திருச்சியின் திமுக எம்பி ஆன சிவா கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் அவர் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் திருச்சி பெல் ஆக்சிசன் உற்பத்தி செய்ய கடிதம் எழுதியுள்ளார். மேலும் திருச்சி பெல் உள்ள மூன்று ஆக்சிசன் உற்பத்தி கூடங்களில் மணிக்கு 140 மெட்ரிக் கியூப் ஆக்சிசன் உற்பத்தி செய்யலாம் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் கடந்த 2003ஆம் ஆண்டு முதல் திருச்சி பெல்லில் ஆக்சிஜன் உற்பத்தி நடைபெறவில்லை என்றும் தனது கடிதத்தில் திமுக எம்பி திருச்சி சிவா கூறியுள்ளார். மேலும் தற்போது உற்பத்தியை தொடங்கினால் 15 முதல் 20 நாட்களில் ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு அது பயன் தரும் என்றும் அவர் கூறியுள்ளார்.\nTamil Minutes இணையதளம் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. புதிய செய்திகளையும், பயனுள்ள தகவல்களையும் வழங்குவதே இந்த இணையதளத்தின் நோக்கமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://voiceofasia.co/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-3%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A4/", "date_download": "2021-05-07T00:26:20Z", "digest": "sha1:GP6WEVOXVQZZKBYYVL7LD2YVNKRF5YM6", "length": 5132, "nlines": 64, "source_domain": "voiceofasia.co", "title": "பிரான்ஸில் 3வது முறையாகத் தேசிய அளவில் முடக்கநிலை; பள்ளிகள் மூடல்", "raw_content": "\nபிரான்ஸில் 3வது முறையாகத் தேசிய அளவில் முடக்கநிலை; பள்ளிகள் மூடல்\nபிரான்ஸில் 3வது முறையாகத் தேசிய அளவில் முடக்கநிலை; பள்ளிகள் மூடல்\nபிரான்ஸில் 3வது முறையாகத் தேசிய அளவில் முடக்கநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.\nபள்ளிகள் 3 வாரங்களுக்கு மூடப்படும் என்று பிரெஞ்சு அதிபர் இமானுவல் மக்ரோன் (Emmanuel Macron) தெரிவித்துள்ளார்.\nபிரான்ஸில் தலைதூக்கியுள்ள 3ஆம் கட்டக் கிருமிப்பரவலைக் கட்டுக்குள் கொண்டுவர, நாடு முழுவதும் முடக்கநிலையை அதிபர் மக்ரோன் அறிவித்துள்ளார்.\nஅங்கு நோய்த்தொற்றால் மாண்டோரின் எண்ணிக்கை\n100,000ஐ நெருங்கும் வேளையில், கிருமித்தொற்றால் மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவுகள் நெருக்கடி நிலையை எதிர்நோக்குகின்றன.\nதடுப்பூசி போடும் பணியும் திட்டமிடப்பட்டதைவிட மெதுவாக நடைபெறுகின்றது.\nஅதனால், பொருளியலைப் பாதுகாப்பதற்காக நாட்டைத் திறந்து வைத்திருக்கவேண்டும் என்ற தமது இலக்கைக் கைவிடும் கட்டாயத்திற்குத் திரு. மக்ரோன் ��ள்ளப்பட்டுள்ளார்.\nபுதிதாக அறிவிக்கப்பட்டுள்ள நடமாட்டக் கட்டுப்பாடுகள் குறைந்தது ஒரு மாதத்திற்காவது நீடிக்கும் என்று கூறப்படுகிறது.\nஆப்கானிஸ்தான் காற்பந்துச் சங்கத் தலைவருக்கு நிரந்தர தடை\nபாப்புவா நியூ கினி, பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலிருந்து வந்தவர்கள் உள்பட நேற்று 33 பேருக்குக் கிருமித்தொற்று – விவரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2021/02/10060009/The-actress-was-paid-Rs-20000-to-act-in-pornographic.vpf", "date_download": "2021-05-07T01:46:42Z", "digest": "sha1:WWYUBUTA75RG4LSYUINIGU3LHMDDFGLX", "length": 9815, "nlines": 118, "source_domain": "www.dailythanthi.com", "title": "The actress was paid Rs 20,000 to act in pornographic films || ஆபாச படங்களில் நடிக்க ரூ.20,000 சம்பளம் கொடுத்த நடிகை", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் முடிவுகள் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஆபாச படங்களில் நடிக்க ரூ.20,000 சம்பளம் கொடுத்த நடிகை\nதமிழில் பேய்கள் ஜாக்கிரதை திகில் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடிய பிரபல இந்தி நடிகை கெஹனா வசிஸ்த் மும்பையில் தனி பங்களாவில் இளம் பெண்களை வைத்து ஆபாச படங்கள் தயாரித்ததாக கைதாகி இருக்கிறார்.\nதமிழில் பேய்கள் ஜாக்கிரதை திகில் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடிய பிரபல இந்தி நடிகை கெஹனா வசிஸ்த் மும்பையில் தனி பங்களாவில் இளம் பெண்களை வைத்து ஆபாச படங்கள் தயாரித்ததாக கைதாகி இருக்கிறார். போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “சினிமாவில் வாய்ப்பு இல்லாமல் கஷ்டப்படும் நடிகைகளிடம் கெஹனா நைசாகி பேசி ஆபாச படங்களில் நடிக்க வைத்துள்ளார். இதற்காக அவர்களுக்கு படம் ஒன்றுக்கு ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை சம்பளம் கொடுத்துள்ளார். 87 ஆபாச வீடியோக்களை எடுத்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோக்களை பார்க்க ரூ.2 ஆயிரம் கட்டணம் வசூலித்துள்ளார். கெஹனாவின் 3 வங்கி கணக்குகளில் ரூ.36 ஆயிரம் உள்ளது. அந்த பணம் ஆபாச படங்களை பார்த்தவர்களிடம் இருந்து வங்கி கணக்குக்கு வந்து இருக்கலாம் என்று சந்தேகம் உள்ளது’’ என்றார். ஆனால் கெஹனா தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் “கெஹனா அப்பாவி. கிளர்ச்சி ஏற்படுத்தும் வீடியோக்களை மட்டுமே அவர் தயாரித்தார். ஆபாச வீடியோக்களுக்கும், கிளர்ச்சி ஏற்படுத்தும் வீடியோக்களுக்��ும் வித்தியாசம் உள்ளது. கோர்ட்டில் நிரபராதி என்று நிரூபிப்போம்'' என்று கூறப்பட்டு உள்ளது.\n1. 19 வயது பெண்களுடன் ஜோடி மூத்த நடிகர்களை கண்டித்த நடிகை\nதமிழில் என் சுவாச காற்றே படத்தில் நடித்தவர் தியா மிர்சா. இந்தியில் அதிக படங்களில் நடித்து இருக்கிறார். 40 வயதாகும் தியா மிர்சா சமீபத்தில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.\n2. ஒருதலை காதல்: நடிகையை கடத்த முயற்சி\nஒருதலை காதல் காரணமாக நடிகையை கடத்த முயற்சி நடந்ததா என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.\n1. ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் உயிரிழப்பது, இனப்படுகொலைக்கு சமம் - அலகாபாத் ஐகோர்ட் கண்டனம்\n1. தேர்தல் தோல்வி: நடிகை குஷ்பு கருத்து\n2. நடிகை இலியானா தற்கொலை முயற்சியா\n3. மீண்டும் புதிய படத்தில் நடிக்கும் ரஜினிகாந்த்\n4. ஜெயலலிதாவுக்குப் பிறகு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் - நடிகர் சித்தார்த் டுவீட்\n5. விஷாலின் 2 புதிய படங்கள்\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mybhaaratham.com/2020/01/blog-post_95.html", "date_download": "2021-05-06T23:57:15Z", "digest": "sha1:UWVLENX2I4KD5GTNRK7IURK25G3RIU7D", "length": 7884, "nlines": 103, "source_domain": "www.mybhaaratham.com", "title": "Bhaaratham Online Media: நல்லிணக்கம்-தொழில்நுட்பம்-முன்னேற்றம்-பொன்.வேதமூர்த்தி பொங்கல் வாழ்த்து", "raw_content": "\nமலேசிய மக்கள் அனைவருக்கும் மலேசிய முன்னேற்றைக் கட்சி(ஏம்.ஏ.பி.) சார்பில் பொங்கல் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக அதன் தேசியத் தலைவர் பொன்.வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.\nபொங்கல் பண்டிகை பண்பாட்டு விழாவாகவும் இறைவனுக்கும் நன்றி சொல்லும் திருநாளாகவும் அமைவதால், தேசிய அளவில் எல்லா மக்களிடமும் இந்தப் பண்டிகையின் தாக்கம் இன்றைய காலத்தில் ஏற்பட்டுள்ளது.\nதற்பொழுது தொழில்நுட்பத்தின் உச்சத்தை நாம் தொட்டாலும் விவசாயம்தான் மனித குலத்துக்கு அடிப்படை. அதனால், வேளாண் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி முன்னேற வேண்டும். அதேவேளை, இன்றைய இளைஞர்களும் அதிக இலாபம் தரும் வேளாண்தொழிலில் ஆர்வம் காட்டி, நாடு எதிர்நோக்கி இருக்கும் நான்காவது தொழில் புரட்சிக்கு ஏற்ப தங்களை மாற��றத்திற்கும் முன்னேற்றத்திற்கும் அணியப் படுத்திக் கொள்ள வேண்டும்.\nஅனைவரும் மண்பானையில் பொங்கல் வைத்து, மண்பாண்ட தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை வாய்ப்பளிக்க வேண்டும். அதன்வழி, நம் பாரம்பரியத்தையும் கட்டிக்காத்த பெருமையும் நமக்கு கிடைக்கும்.\nமொத்தத்தில் நல்லிணக்கம், சகிப்புத்தன்மை, தேசிய உணர்வு, தொழில்நுட்ப சிந்தனை, உள்ளடக்க முன்னேற்றம் ஆகிய கூறுகளை மனதில் நிறுத்தி பொங்கல் நந்நாளைக் கொண்டாடுவோம். அனைவருக்கும் மீண்டும் பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக பிரதமர் துறை அமைச்சருமான பொன்.வேதமூர்த்தி தன்னுடைய வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.\n'இயற்கையை காப்போம் இனியதோர் உலகை படைப்போம்' - சிறப்பு கட்டுரை\nபினாங்கு - இயற்கை என்பது இயல்பாக இருப்பது என்பது பொருள் கொண்டதாகும் . இயல்பாகவே தோன்றி மறையும் பொருட்கள் அவற்றின் இயக்கம் , அவை இயங...\nபூச்சோங்- மாரடைப்பின் காரணமாக மனைவியும் அவரை தொடர்ந்து கணவனும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. சிலாங்கூர்,பூச்சோங்கைச் ச...\nசோழன் ஆட்சியை இழந்ததைப்போல, மஇகாவை இழந்து விடாதீர்கள்\nசேரன், சோழன், பாண்டியன் ஆட்சிகளை இழந்து 500 ஆண்டுகளைக் கடந்து விட்டோம். இங்கு வந்து 200 ஆண்டுகளாகக் கட்டமைத்த வாழ்க்கையைத்தான் இன்றும...\nஒன்றாம் படிவ, புகுமுக மாணவர்களுக்கு மித்ரா மூலம் க...\nமாற்றத்தை நோக்கி பயணிப்போம்- கணபதிராவ் வாழ்த்து\nபொங்கல் பண்டிகை இஸ்லாமியர்களுக்கு ‘ஹராம்’ ஆனதா\nஜாவி அமலாக்கத்திற்கு எதிராக பெற்றோர்கள் அணி திரள வ...\nதற்காலிக கல்வி அமைச்சராக துன் மகாதீர்\nகல்வி அமைச்சர் பதவியிலிருந்து மஸ்லீ மாலேக் அதிரடி ...\nமாறாத தலைவர்கள்; முன்னேறாத நாடு- 2020 இலக்கை வெற்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=1500", "date_download": "2021-05-07T00:25:37Z", "digest": "sha1:A7MUXFRNVIWC3P6RUP3PHTVZILS77LZS", "length": 9647, "nlines": 80, "source_domain": "www.varalaaru.com", "title": "Varalaaru - A Portal For South Asian History Varalaaru - A Monthly Web Magazine for South Asian History", "raw_content": "\nசெய்திகள் வாசிப்பது வரலாறு டாட் காம் - 2\nகயிலைப் பயணம் - 3\nஆயிரம் ஆனாலும் மாயுரம் ஆகுமோ\nமாமல்லபுரக் குடைவரைகள் - 2\nஇதழ் எண். 141 > கலையும் ஆய்வும்\nமாமல்லபுரக் குடைவரைகள் - 2\n2. கலங்கரை விளக்கக் குடைவரை\nமாமல்லபுரம் பழைய அர்ச்சுனன் தவம் சிற்பத் த��குதியிலிருந்து மகிஷாசுரமர்த்தினி குடைவரைக்குச் சற்று முன்னரே அமைக்கப்பட்டிருக்கும் சிறிய இரும்புக் கதவாலான வாயில் வழியாக தருமராஜா மண்டத்தினை அடையலாம். தருமராஜா மண்டபத்தின் வடபுறத்தில் கலங்கரை விளக்கக் குடைவரை அமைந்துள்ளது. இந்தியத் தொல்லியல் அளவீட்டுத் துறையினரால் அமைக்கப்பட்டுள்ள படிகள் குடைவரையை அடைய உதவுகின்றன. இப்படிவரிசை, குடைவரை நிலமட்டத்தைத் தொடுமிடத்தில் முடிவடைகிறது.\nநிலமட்டத்திற்கு மேலே எழும் குடைவரையின் முன்பகுதியில் பாறைத்தளம் உள்ளது. இப்பாறைத்தளத்தின் மேற்பரப்பு நன்கு சீர் செய்யப்பட்டுள்ளது. பாறைத்தளத்தின் கிழக்குமுகத்தின் மேற்குப் பகுதி மட்டும் பொளியப்பட்டு நிறைவுறாமல் கைவிடப்பட்டுள்ளது.\nஇப்பாறைத் தளத்தையடைய அதன் தென்புறத்தில் மூன்று படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.\nஇப்பாறைத்தளத்தின் மேற்கில் கலங்கரை விளக்கக் குடைவரை கிழக்குப் பார்வையாய் அகழப்பட்டுள்ளது.\nசீர் செய்யப்பட்ட பாறைத்தளத்தின் மேற்கில் கிழக்கு முகமாகக் குடைவரை அமைந்துள்ளது. முகப்பு திறக்கப்பட்டு உட்புறம் மண்டபப் பகுதிக்காக அகழப்பட்டு நிறைவுறாத நிலையில் கைவிடப்பட்டுள்ளது.\nமுகப்பின் நடுவில் உறுப்பு வேறுபாடற்ற இரண்டு நான்முக முழுத்தூண்களும், பக்கச் சுவர்களையொட்டி உறுப்பு வேறுபாடற்ற இரண்டு நான்முக அரைத்தூண்களும் அமைக்கப் பெற்றுள்ளன. மையத் தூண்கள் மண்டபப் பின்சுவரிலிருந்து விடுபடாமல் பாறைத் தொடர்ச்சியுடன் காணப்படுகின்றது. முகப்பினையடுத்து மண்டபமும் நிறைவுறாது பிளப்பு நிலையில் கைவிடப்பட்டுள்ளது.\nமுகப்பின் நான்கு தூண்களிலும் தூணின் மேல் உறுப்புகளுக்கான ஒதுக்கீடுகள் காணப் பெறுகின்றன. மேற்புறம் வளைமுகப் போதிகைகள் உத்திரம் தாங்குகின்றன. வாஜனம் உருப்பெறவில்லை. கூரை வடிவமைக்கப்படாதக் கபோதமாய் முன்னிழுக்கப்பட்டுள்ளது.\nமுகப்பின் தென்புறமும், வடபுறமும் அகழப்பட்டு நிறைவுறாமல் காணப்படுகின்றது. கிழக்கு நோக்கிய இப்பாறை அகழ்வுகள் இக்குடைவரையின் வாயிற் காவலர்களுக்கான ஒதுக்கீடாக இருக்கலாம்.\nஅரைத்தூண்களையொட்டி வடபுறம் விரியும் பாறைச்சுவர் கிழக்கு நோக்கிய சரிவாக மாறி பாறைத்தளத்தில் அமர்கிறது.\nதென்புறத்தே விரியும் பேரளவிலான பாறைச்சுவர் வடசுவரைப் போன்ற�� மாற்றம் ஏதுமின்றி அகழ்வு நிலையில் கைவிடப்பட்டுள்ளது.\nஅதேபோன்று முகப்புக் கூரையின் தென்புறமும் அகழப்பட்ட நிலையில் நிறைவுறாவண்ணம் கைவிடப்பட்டுள்ளது. இக்குடைவரையின் முகப்பு, மாமண்டூர் சிறிய குடைவரையின் வளர்ச்சி பெற்ற வடிவமைப்பினைக் கொண்டுள்ளதைக் காணலாம்.\nஇப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.\nதங்கள் பெயர்/ Your Name\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2020/10/23679/", "date_download": "2021-05-07T00:53:09Z", "digest": "sha1:XLPPCSF2V54OSOTV6KCCPFZQLFXALEOT", "length": 9143, "nlines": 122, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nநம் குடும்பத்தில் உள்ள பெரியோர்களின் நல்லாசி நமக்கு மிகவும் முக்கியமானது – ஈஸ்வரபட்டர்\nநம் குடும்பத்தில் உள்ள பெரியோர்களின் நல்லாசி நமக்கு மிகவும் முக்கியமானது – ஈஸ்வரபட்டர்\nஉடலை விட்டு ஆத்மா பிரிந்து செல்வதைச் சிவ பதவி அடைந்து விட்டார்… தெய்வீக பதவிக்குச் சென்றிட்டார்…\n1.இது எல்லாம் நம் ஆத்மா பிரிந்த பிறகு நம்முடன் வாழ்ந்தவர்கள் நமக்களிக்கும் பதவி தானே தவிர\n2.எப்பதவியும் அந்தச் சிவனால் நமக்கு அளிக்கப்படுவதில்லை.\nவாழ்ந்த காலத்தில் நாம் இருக்கும் நிலையைக் காட்டிலும் ஆவி உலகில் அல்லல்படும் நிலை மிக மிகக் கொடிய நிலை (இது மிகவும் முக்கியமானது).\nநல் ஆத்மாவாய்… நற்செயலைச் செய்வித்து… நல்லுணர்வு கொண்டு… அமைதி கொண்டு… இவ் உலக வாழ்க்கையில் உள்ள பற்று பாசம் ஆசை அனைத்து நிலைகளையுமே வாழ்ந்த நிலை கொண்டு பூரிப்படைந்து…\n1.சஞ்சலத்தில் விட்டுச் செல்வதைப்போல் எண்ணாமல்\n2.அமைதியுடனே இவ்வுலக பற்றற்றுப் பிரிந்து செல்லும் ஆத்மாக்களினால் தான்\n3.ஆண்டவனாக அக்குடும்பத்தின் தெய்வமாகவும் தான் வாழ்ந்த குடும்பத்தைச் செழிக்கச் செய்திடல் முடிந்திடும்.\nகுடும்பத்தில் உள்ளோரும் அந்தக் குடும்பத்தில் வாழ்ந்திடும் பெரியோர்களை அன்புடன் வணங்கும் போது\n1.அவர் ஆத்மா பிரிந்த பிறகு நம் குடும்பத் தெய்வமாய் நம்மைக் காப்பார்.\n2.அவ்வழியின் தொடர்தான்… குடும்பத் தொடராக… பெரியோரை தாய் தந்தையரை…\n3.பக்தி கொண்டு வணங்கிடும் ��க்குவ நிலை என்பதனை உணர்ந்து\n5.ஒவ்வொரு குடும்பத்தையும் அக்குடும்பங்களே கோயில்களாய்த் திகழும் வண்ணம் வாழ்ந்து வழி நடந்திடல் வேண்டும்.\nபல கோயில்களுக்குச் சென்று அபிஷேக ஆராதனை செய்வித்து பக்தியை வளர்த்து… வணங்கி வேண்டும் முறையைக் காட்டிலும்… நம் இல்லக் கோயிலை அன்பு கொண்டதாய்… இனிமையை வளர்க்கும் இன்ப இல்லமாய்… இல்லத்தில் உள்ளோர் அனைவரின் எண்ணக் கலப்பும் ஒன்றுபட்டதாய் வாழ்ந்திடும் வழி பெறுங்கள்.\n1.வாழ்க்கையுடன் மோதிடும் பல இன்னல்களுக்கும் தெளிவு பெறும் பக்குவத்தில்\n2.ஞான வளர்ச்சியின் தொடர்பினை வளர விடுங்கள்.\n3.செல்வமும் செழிப்பும் தானாக வளரும்.\nசாமியையே (ஞானகுரு) எண்ணிக் கொண்டிருப்பதைக் காட்டிலும் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து உடலுக்குள் விளைய வைக்க வேண்டும்\n என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nசீராக ஆத்ம சுத்தி செய்வோருக்குக் கிடைக்கும் பலன்கள்\nஆண்டவனிலிருந்து வந்த பிம்பங்கள் தான் அனைத்துமே என்று எண்ணினால்… “தான்” என்ற தனித்த அகங்காரம் வராது – ஈஸ்வரபட்டர்\nஉங்களுக்குக் கொடுத்த சக்திகளை ஒவ்வொருவரும் விரயம் ஆக்காது பயன்படுத்துங்கள்\n24 X 7 சாமிகள் உபதேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/227113", "date_download": "2021-05-07T01:17:09Z", "digest": "sha1:AW3IH3UPBHSX3BQZ6MGVPUFFRHL4ONRM", "length": 5856, "nlines": 85, "source_domain": "selliyal.com", "title": "குஷ்பு, அண்ணாமலை, எல்.முருகன், பிரேமலதா வேட்புமனு தாக்கல் செய்தனர் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P2 குஷ்பு, அண்ணாமலை, எல்.முருகன், பிரேமலதா வேட்புமனு தாக்கல் செய்தனர்\nகுஷ்பு, அண்ணாமலை, எல்.முருகன், பிரேமலதா வேட்புமனு தாக்கல் செய்தனர்\nசென்னை: நாளை வெள்ளிக்கிழமை (மார்ச் 19) ஒரு நாள் வேட்புமனு தாக்கல் செய்ய எஞ்சி இருக்கும் நிலையில், இன்று (மார்ச் 18) பலர் தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.\nஆயிரம் விளக்கு தொகுதியில் குஷ்பூவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இங்கு அவர் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். இந்த தொகுதியில் திமுக சார்பில் மருத்துவர் எழிலன் வேட்பாளராக களமிறங்குகிறார்.\nபாஜக தலைவர் எல்.முருகன் தாராபுரம் தொகுதியிலும், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை அரவக்குறிச்சியிலும் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.\nவிருத்தாச்சலம் தொகுதியில் அமமுக கூட்டணி சார்பில் தேமு���ிக பொருளாளர் பிரேமலதா போட்டியிடுகிறார். அவரும் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.\nகன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.\nதமிழ் நாடு சட்டமன்றத் தேர்தல் 2021\nPrevious articleகிறிஸ்துவர்கள் “அல்லாஹ்” வார்த்தையைப் பயன்படுத்தலாம் – சரவாக் அனுமதி\nNext articleகாவல் துறை தலைவருக்கு எதிராக சதியா\nபிரசாந்த் கிஷோர் : இந்திய சட்டமன்றத் தேர்தல் வெற்றிகளின் கதாநாயகன்\nஅசாம்: பாஜக 76 தொகுதிகளுடன் மீண்டும் ஆட்சி அமைக்கிறது\nதிமுக அமைச்சரவை : புதிய அமைச்சர்கள் பட்டியல்\nதிமுக அமைச்சரவை : அன்பில் மகேஷ் பள்ளிக் கல்வி அமைச்சர்\nபிரசாந்த் கிஷோர் : இந்திய சட்டமன்றத் தேர்தல் வெற்றிகளின் கதாநாயகன்\nபில் கேட்ஸ் விவாகரத்து : சொத்துகளை எப்படிப் பிரிப்பார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/228202", "date_download": "2021-05-07T01:00:38Z", "digest": "sha1:ZWU226RSC7WESB2RO4R7A6U45GXUYDNY", "length": 5080, "nlines": 84, "source_domain": "selliyal.com", "title": "‘சூர்யா 40’ முதல் தோற்றம் வெளியீடு | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P1 ‘சூர்யா 40’ முதல் தோற்றம் வெளியீடு\n‘சூர்யா 40’ முதல் தோற்றம் வெளியீடு\nசென்னை: நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாக இருக்கும் சூர்யா 40 படத்தின் முதல் தோற்றம் இன்று வெளியிடப்பட்டது.\nசன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது. இத்திரைப்படத்தை இயக்குனர் பாண்டியராஜ் இயக்கி வருகிறார். இந்நிலையில் இந்தப் படத்தின் முதல் தோற்றத்தை தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.\nஇந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பிரியங்கா மோகன் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த திரைப்படத்தின் மூலம் முதன்முறையாக சூர்யாவிற்கு இசையமைக்க இருக்கிறார் டி.இமான்.\nசூர்யா 40 படத்தில் சத்யராஜ், வினய் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.\nPrevious articleகொவிட்-19: ஐவர் மரணம்- 1,854 சம்பவங்கள் பதிவு\nNext articleஅஸ்ட்ராசெனெகா தடுப்பூசியைப் பயன்படுத்தலாமா என்பது 2 வாரத்தில் தெரியும்\nதனுஷ் நடிக்கும் “ஜகமே தந்திரம்” 17 மொழிகளில் வெளியாகிறது\nகுணச்சித்திர நடிகர் செல்லதுரை காலமானார்\nதிமுக அமைச்சரவை : புதிய அமைச்சர்கள் பட்டியல்\nதிமுக அமைச்சரவை : அன்பில் மகேஷ் பள்ளிக் கல்வி அமைச்சர்\nபிரசாந்த் கிஷோர் : இந்திய சட்டமன்றத் தேர்தல் வெற்றிகளின் கதாநாயகன்\nபில் கேட்ஸ் விவாகரத்து : சொத்துகளை எப்படிப் பிரிப்பார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/condolence", "date_download": "2021-05-07T01:07:01Z", "digest": "sha1:RFNEQC6MC4Q2ZW5HFANURVH2SQ3PVAJJ", "length": 17280, "nlines": 125, "source_domain": "tamil.asianetnews.com", "title": "condolence: Latest News, Photos, Videos on condolence | tamil.asianetnews.com", "raw_content": "\nஅதிமுக கொடி, சின்னத்தை வடிவமைத்துக் கொடுத்த பாண்டு மரணம்... ஓபிஎஸ் - இபிஎஸ் உருக்கம்...\nஇவருக்கு முன்னாள் முதலமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமி மற்றும், முன்னாள் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர், மிகவும் உருக்கமாக தங்களுடைய சமூக வலைதளப்பாக்கத்தில், இரங்கல் தெரிவித்துள்ளனர்.\nபோராளிக்கு ஓர் எடுத்துக்காட்டு டிராபிக் இராமசாமி.. இளம் தலைமுறைக்கு அவர் சொன்னது இதுதான். குமுறும் வைகோ.\nதள்ளாத வயதிலும், தளராத போராளியாக வலம் வந்த, டிராபிக் இராமசாமி என்று, பொதுமக்களால் விரும்பி அழைக்கப்பட்ட திரு இராமசாமி அவர்கள், இயற்கை எய்திய செய்தி அறிந்து வருந்துகின்றேன்.\nபத்ம பூஷண் விருது பெற்ற பேராயர் பிலிப்போஸ் மர் கிரைஸ்டோம் மரணம்... பிரதமர் மோடி இரங்கல்...\nஇந்தியாவில் அதிக காலம் கிறிஸ்துவ மக்களுக்காகவும், ஏழை, எளிய மக்களுக்காகவும் பல்வேறு சேவையாற்றிய பிலிப்போஸ் மார் கிரைஸ்டோம் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.\nஅநீதிகளுக்கு எதிராக வாழ்வின் இறுதிக் காலம் வரை நின்று போராடியவர் ட்ராபிக் ராமசாமி.. சீமான் கண்ணீர்.\nஅடக்குமுறை ஒடுக்குமுறைகளுக்கு அஞ்சாது, அநீதிகளுக்கு எதிராக வாழ்வின் இறுதிக் காலம் வரை நின்று போராடியவர் ட்ராபிக் ராமசாமி என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இரங்கல் தெரிவித்துள்ளார்.\nபொதுநல வழக்கு தொடுப்பதையே பொது வாழ்வாக கொண்டவர் டிராபிக் ராமசாமி... மு.க.ஸ்டாலின் புகழாரம்..\nபொதுநலத்துக்காக வழக்குகள் தொடுப்பதையே தனது பொதுவாழ்க்கையாக்கிக் கொண்ட பெரிய மனிதர் டிராபிக் ராமசாமி மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.\n‘சரவணன் சூர்யாவாக மாறிய அற்புதம் உங்களால் தான் நிகழ்ந்தது’... கே.வி.ஆனந்த் மறைவு குறித்து சூர்யா உருக்கம்\nகே.வி.ஆனந்தின் மறைவிற்கு நடிகர் சூர்யா மிகவும் உருக்கமான இரங்கல் அறிக்கையை வெளியிட்��ுள்ளார்\nநேற்று வரை என்னிடம் இதுபற்றி பேசிக்கொண்டிருந்தாரே.... கே.வி.ஆனந்த் மரணத்தால் மீளாமுடியாத வருத்தத்தில் சிம்பு\nநேற்றுவரை பேசிக் கொண்டிருந்தவர் இன்று அதிகாலை மரணமடைந்துவிட்டார் என்று சொல்வதை மனம் நம்ப மறுக்கிறது.\nநிழற்படக் கலைஞராக வாழ்க்கையைத் தொடங்கி உச்சம் தொட்டவர்.. கே.வி ஆனந்திற்கு திமுக தலைவர் இரங்கல்.\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மறைந்த திரைப்பட இயக்குனர் கே.வி ஆனந்த், முன்னாள் அமைச்சர் அரங்கநாயகம் ஆகியோரின் இறப்புக்கு இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார் அதன் விவரம்:\n‘கே.வி.ஆனந்த் மறைவு மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது’... ரஜினிகாந்த் இரங்கல்...\nஇயக்குநர் கே.வி. ஆனந்தின் மறைவிற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார்.\nஉச்சகட்ட அதிர்ச்சி... இயக்குனர் கே.வி.ஆனந்த் மரணத்திற்கு... பிரபலங்கள் இரங்கல்..\nநடிகர் விவேக் மரணித்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளாத திரையுலகம் தற்போது அடுத்த இழப்பை சந்தித்துள்ளது. பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான கே.வி.ஆனந்த் மாரடைப்பு காரணமாக இன்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில், சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். இதை தொடர்ந்து, இவரது மரணத்திற்கு தொடர்ந்து பல பிரபலங்கள் தங்களது சமூக வலைத்தளத்தில், இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்....\nஎன்னை 'பிக்பாஸ்' நிகழ்ச்சிக்கு செல்ல ஊக்கப்படுத்தியவர் இன்று இல்லை.. வேதனையை பகிர்ந்த நடிகர் ஆரி..\nபிரபல இயக்குனர் தாமிரா கொரோனா தொற்று காரணமாக இன்று காலை உயிரிழந்த நிலையில், அவருடனான நினைவுகள் குறித்து பிரபல நடிகரும், பிக்பாஸ் டைட்டில் வின்னருமான ஆரி, தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார்.\nஜார்ஜியாவில் இருந்து வந்த மறுநாளே... மறைந்த நடிகர் விவேக் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய விஜய்...\nஜார்ஜியாவில் இருந்த திரும்பிய விஜய் சென்னை வந்த மறுநாளே அதாவது இன்று காலை மறைந்த நடிகர் விவேக் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.\nஆஷிஷ் யெச்சூரியின் இழப்பை அறிந்து வருத்தமும், வேதனையும் அடைந்தேன்.. கலங்கும் மு.க.ஸ்டாலின்..\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியின் மகன் மறைவுக���கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.\nஆக்ஸிஜன் கசிவால் 22 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு... பெரும் சோகம் என பிரதமர் மோடி இரங்கல்...\nதற்போது பாரத பிரதமர் மோடி மகாராஷ்டிரா கோர சம்பவம் குறித்து தன்னுடைய உருக்கமான இரங்கலை பதிவு செய்துள்ளார்.\nஇனி உன் நகைச்சுவையை நினைத்தாலே கண்ணீர் வருமே... விவேக் மரணத்துக்கு சிவக்குமார் உருக்கமான இரங்கல் கடிதம்..\nஉன்‌ நகைச்சுவையை நினைக்கிற போதெல்லாம்‌ எங்களுக்குச்‌ சிரிப்பு வரும்‌. ஆனால்‌ கண்ணிலிருந்து எங்களையும்‌ அறியாமல்‌ கண்ணீர்‌ வரும் என்று விவேக் மரணம் குறித்து நடிகர் சிவக்குமார் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\n13 மாவட்டங்களுக்கு ஓர் அமைச்சர்கூட கிடையாது... எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை அமைச்சர்கள்..\n#IPL2021 வீரர்கள் பயோ பபுள் விதிகளை மீறியதுதான் கொரோனா பரவலுக்கு காரணம்..\nகருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா அமைச்சரவையில் இருந்தவர்களுக்கு இடம்... கலந்துகட்டிய மு.க.ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/news/tamilnadu/new-restrictions-from-april-26-public-shocked-by-tamil-nadu/cid2800049.htm", "date_download": "2021-05-07T00:32:45Z", "digest": "sha1:ZVYNG73ZEJBYENPG42X5DEE3DVLXKAPI", "length": 5171, "nlines": 53, "source_domain": "tamilminutes.com", "title": "ஏப்ரல் 26 முதல் புதிய கட்டுப்பாடுகள்: தமிழக அரசின் அறிவிப்பா", "raw_content": "\nஏப்ரல் 26 முதல் புதிய கட்டுப்பாடுகள்: தமிழக அரசின் அறிவிப்பால் பொதுமக்கள் அதிர்ச்சி\nதமிழகத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது\nதமிழகத்தில் ஏற்கனவே இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு அன்று முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் வரும் திங்கள் முதல் அதாவது ஏப்ரல் 26 முதல் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அந்த கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்பில் பின்வருமாறு\n* திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், கேளிக்கை கூடங்கள், மதுக்கூடங்கள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள் ஆகியவை இயங்க அனுமதி இல்லை\n* பெரிய கடைகள், வணிக வளாகங்கள் இயங்க அனுமதி இல்லை. மளிகை காய்கறி கடைகள் மற்றும் இதர அனைத்து கடன்களையும் உரிய வழிமுறைகளுடன் வழக்கம்போல் செயல்படலாம்.\n* சென்னை மாநகராட்சி உள்பட அனைத்து மாநகராட்சிகள் மற்றும் அனைத்து நகராட்சிகளில் உள்ள அழகு நிலையங்கள், சலூன்கள் இயங்க அனுமதி இல்லை\n* அனைத்து உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் பார்சல் சேவை மட்டுமே அனுமதிக்கப்படும்\n* அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் வழிபாட்டிற்கு அனுமதி இல்லை\n* திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்ச்சிகளில் 50 பேருக்கு மட்டுமே அனுமதி\n* இறுதி ஊர்வலம் மற்றும் அதைச்சார்ந்த சடங்குகளில் 25 பேருக்கு மட்டுமே அனுமதி\n* ஐடி ஊழியர்கள் 50 சதவீத பணியாளர்கள் வீட்டில் இருந்து கண்டிப்பாக பணி செய்ய வேண்டும்\nஏப்.26ஆம் தேதி முதல் திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், கூட்ட அரங்குகள், பார்கள் இயங்க அனுமதியில்லை\nTamil Minutes இணையதளம் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. புதிய செய்திகளையும், பயனுள்ள தகவல்களையும் வழங்குவதே இந்த இணையதளத்தின் நோக்கமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akattiyan.lk/2021/04/blog-post_846.html", "date_download": "2021-05-07T02:06:57Z", "digest": "sha1:TZHFOVRENSKQXK5EAWSO7NSYBN3ETDRW", "length": 5079, "nlines": 66, "source_domain": "www.akattiyan.lk", "title": "சடுதியாக அதிகரித்து வரும் தொற்றாளர்களின் எண்ணிக்கை - அகத்தியன் | Online", "raw_content": "\nHome இலங்கை சடுதியாக அதிகரித்து வரும் தொற்றாளர்களின் எண்ணிக்கை\nசடுதியாக அதிகரித்து வரும் தொற்றாளர்களின் எண்ணிக்கை\nநாட்டில் மேலும் 520 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nஇதற்கமைய நாட்டில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 98,570 ஆக அதிகரித்துள்ளது.\nசடுதியாக அதிகரித்து வரும் தொற்றாளர்களின் எண்ணிக்கை Reviewed by Chief Editor on 4/22/2021 05:50:00 pm Rating: 5\nபாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் மேலதிக வகுப்புகளுக்கு மறு அறிவித்தல் வரை விடுமுறை\nபாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் மேலதிக வகுப்புகளுக்கு மறு அறிவித்தல் வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், நோன்பு பெருநாள், வெசாக் ...\nகொரோனா பரவல் காரணமாக நாட்டின் பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள விடுமுறையானது மேலும் ஒரு வார காலத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ...\nமோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nவாகன போக்குவரத்து திணைக்களத்தின் நாரஹென்பிட்டி மற்றும் வேரஹெர அலுவலகங்கள் ஒரு வாரத்திற்கு மூடப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம த...\nDReAM என அறிமுகப்படுத்தப்பட்டுள்ள முற்பாதுகாப்பு விதிமுறைகளுக்கமைய மதுபான சாலைகளை திறந்து வைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. D – சமூக இடை...\nமுழு அதிகாரம் : அகத்தியன் ஊடக சேவை 2020\nஆசிரியர் பீட தெடர்புகளுக்கு 0779516119\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2021-05-07T01:45:25Z", "digest": "sha1:ZGEJTMUHIFTMZKYFU53S5ZJL7YCQXA2X", "length": 7331, "nlines": 160, "source_domain": "www.tamilstar.com", "title": "அடுத்த ஆண்டு மூன்று முக்கிய படங்களுடன் தொடங்கும் ஜிவி பிரகாஷ் - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nஅடுத்த ஆண்டு மூன்று முக்கிய படங்களுடன் தொடங்கும் ஜிவி பிரகாஷ்\nNews Tamil News சினிமா செய்திகள்\nஅடுத்த ஆண்டு மூன்று முக்கிய படங்களுடன் தொடங்கும் ஜிவி பிரகாஷ்\nஇசையமைப்பாளரான ஜ���.வி.பிரகாஷ் முன்னணி நடிகராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார். இவரது நடிப்பில் பல படங்கள் உருவாகி வருகிறது. இதில் ஒன்று வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ஜெயில்’ திரைப்படம். இதில் அபர்ணதி கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படம் அடுத்த வருடம் வெளியாக இருக்கிறது.\nஅதுபோல் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘சூரரைப் போற்று’ திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். விஜய் இயக்கத்தில் கங்கனா ரணாவத் நடிப்பில் உருவாகி வரும் ‘தலைவி’ படத்திற்கும் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.\nஅதிகம் எதிர்ப்பார்க்கப்படும் ஜெயில், சூரரைப்போற்று, தலைவி ஆகிய மூன்று படங்களுடன் என்னுடைய அடுத்த வருடம் தொடங்க இருப்பதாக ஜிவி.பிரகாஷ் அறிவித்து இருக்கிறார்.\nஅவரது படங்களை பார்த்து தீவிர ரசிகன் ஆனேன் – அர்ஜூன்\nஇளையராஜாவுக்கு ஹரிவராசனம் விருது – கேரள அரசு அறிவிப்பு\nஉயர் அதிகாரியின் மகள் கடத்தப்பட அவரை போலீஸ் அதிகாரி வரலட்சுமி காப்பாற்றுகிறார். அதன் தொடர்ச்சியாக பெண் கடத்தல்...\nகனடியப் பெண்களில் நாடு தழுவிய உயர்சாதனை படைத்த ஈழப்பெண்\nஇந்தியாவுக்கு அவசர மருத்துவ உதவி பொருட்களை அனுப்பியது கனடா\n12 வயதிற்கு மேற்பட்டவர்கள் Pfizer தடுப்பூசியை பெற Health கனடா அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/75749", "date_download": "2021-05-07T01:56:24Z", "digest": "sha1:SO5Y4B26R5MZGJYX24ORFEMBE32KRKYW", "length": 18016, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "அமெரிக்காவின் தீர்மானத்தை மீள் பரிசீலனை செய்யுமாறு அமெரிக்கத் தூதுவருடனான சந்திப்பில் வெளிவிவகார அமைச்சர் வலியுறுத்தல்! | Virakesari.lk", "raw_content": "\nநாட்டில் மேலும் 12 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்\nதூரநோக்குடனான திட்டமிடலின்றி நாடு நெருக்கடிக்குள் சிக்கி விட்டது - ரணில் கவலை\nநாளொன்றுக்கு 2 ஆயிரத்தை விட அதிக தொற்றாளர்கள் இனங்காணப்படலாம் : எச்சரிக்கிறது தொற்று நோயியல் பிரிவு\nபிழையான எண்ணங்களை மக்கள் மயப்படுத்த எதிக்கட்சி முயற்சி - மதுர விதானகே\nகிளிநொச்சியில் புதிய கொரோனா சிகிச்சை நிலையம் - நள்ளிரவு முதல் சேவைகள் ஆரம்பம்\nநாட்டில் மேலும் 12 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்\nஜம்மு-காஷ்மீரில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை\nகொரோனாவால் இலங்கையில் க���்ப்பிணித் தாய் பலி\n இனங்காணப்படும் தொற்றாளர்களை விட இருமடங்கு தொற்றாளர்கள் சமூகத்தில் \nஅமெரிக்காவின் தீர்மானத்தை மீள் பரிசீலனை செய்யுமாறு அமெரிக்கத் தூதுவருடனான சந்திப்பில் வெளிவிவகார அமைச்சர் வலியுறுத்தல்\nஅமெரிக்காவின் தீர்மானத்தை மீள் பரிசீலனை செய்யுமாறு அமெரிக்கத் தூதுவருடனான சந்திப்பில் வெளிவிவகார அமைச்சர் வலியுறுத்தல்\nவெளிவிவகார அமைச்சர் தினஷே் குணவர்தனவுக்கும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா டெப்லிட்ஸிக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று கொழும்பல் உள்ள வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்றது.\nஇந்த சந்திப்பின்போது இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு எதிராக அமெரிக்கா விதித்திருக்கும் பயணத்தடை அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு முறையை அநாவசியமாக சிக்கலுக்கு உள்ளாக்கும் என்று அலெய்னாவிடம் கூறிய தினேஷ் குணவர்தன, வொஷிங்டன் அதன் தீர்மானத்தை மீளாய்வு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.\nஅத்துடன் தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய விவகாரங்களில் முக்கிய பதவிகளுக்கு நிபுணத்துவம் வாய்ந்த அதிகாரிகளை நியமிப்பதற்கு ஜனநாயக ரீதியில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி ஒருவருக்கு இருக்கும் தற்துணிவு அதிகாரத்தை வெளிநாட்டு அரசாங்கம் ஒன்று கேள்விக்குள்ளாக்குவது ஏமாற்றத்தை தருகிறது. என்று விசனம் தெரிவித்திருக்கிறார்.\nஇராணுவத் தளபதியும் பதில் முப்படைகளின் தலைமைத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் அமெரிக்க அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டிருக்கும் பயணத்தடை தொடர்பான இலங்கையின் உறுதியான ஆட்சேபனைகளை வெளிநாட்டு உறவுகள் அமைச்சர் தினேஷ் குணவர்தன இன்று அலெய்னா ரெப்லிட்ஸிடம் உத்தியோகபூர்வமாக தெரியப்படுத்தியிருக்கிறார்.\nஇதன்போது இலங்கையின் அக்கறைகளை வொஷிங்டனுக்கு தெரியப்படுத்துவதாக அமெரிக்க தூதுவர் டெப்லிட்ஸ் கூறியதுடன் தற்போது தொடரும் இலங்கையுடனான ஒத்துழைப்பின் சகல அம்சங்கள் தொடர்பிலான அமெரிக்க அரசாங்கத்தின் தொடர்ச்சியான பற்றுறுதியை அவர் மீளவும் வலியுறுத்தினார்.\nபாதுகாப்புத் துறை உட்பட அந்த அம்சங்களின் விரிவாக்கத்தை உறுதிப்படுத்துவதிலும் அமெ��ிக்கா அக்கறை கொண்டிருக்கிறது என்றும் தூதுவர் குறிப்பிட்டார்.\nவெளியுறவு செயலாளர் ரவிநாத் ஆரியசிங்க, வட அமெரிக்க விவகாரங்களுக்கு பொறுப்பான பணிப்பாளர் நாயகம் தர்ஷன எம்.பெரேரா மற்றும் வெளிநாட்டு உறவுகள் அமைச்சின் அதிகாரிகளும் தூதுவர் டெப்லிஸ்டுடன் தூதரகத்தின் பிரதி தலைவர் மாட்டின் ஹெலியும் இக் கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்தார்கள்.\nஇவேளை அமெரிக்க இராஜாங்க அமைச்சரினால் வெளியிடப்பட்ட அந்த அறிவிப்பைத் தொடர்ந்து இலங்கை அரசாங்கத்தின் உடனடி பிரதிபலிப்பாக வெளியுறவு அமைச்சு கடந்த வெள்ளிக்கிழமை அறிக்கை ஒன்றை முன்னதாக வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.\nநாட்டில் மேலும் 12 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்\nநாட்டில் கொரோனா அச்சுறுத்தலையடுத்து கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மாவட்டங்களின் 12 கிராம சேவகர் பிரிவுகள் இன்று காலை 6 மணிமுதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜென்ரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.\n2021-05-07 07:17:30 தனிமைப்படுத்தல் கொரோனா இராணுவத்தளபதி\nதூரநோக்குடனான திட்டமிடலின்றி நாடு நெருக்கடிக்குள் சிக்கி விட்டது - ரணில் கவலை\nகொவிட் வைரஸ் தொற்று 2 ஆம் அலை ஏற்பட்ட போது போதிய தடுப்பூசிகளை கொள்வனவு செய்திருந்தால் அச்சம் கொள்ள வேண்டியதில்லை. அல்லது தடுப்பூசி கிடைக்காவிடின் அடுத்த கட்ட சிகிச்சைகளுக்கான இயற்கை சுவாசக் கருவிகள் , அவசர சிகிச்சை பிரிவு கட்டில்கள் மற்றும் ஒக்சிஜன் போன்றவற்றை பெற்றுக்கொண்டிருந்தாலும் ஏற்பட கூடிய உயிரிழப்புகளை தடுத்திருக்கலாம். ஆனால் அரசாங்கத்தின் தூரநோக்குடனான திட்டமிடலின்றி நாடு நெருக்கடிக்குள் சிக்கி விட்டது என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.\n2021-05-07 07:01:30 தூரநோக்கு திட்டமிடல் நாடு\nநாளொன்றுக்கு 2 ஆயிரத்தை விட அதிக தொற்றாளர்கள் இனங்காணப்படலாம் : எச்சரிக்கிறது தொற்று நோயியல் பிரிவு\nநாட்டில் நாளொன்றில் இனங்காணப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கை எதிர்வரும் நாட்களில் 2000 ஐ விட அதிகரிக்கக் கூடும் என்று சுகாதார தரப்பினர் எச்சரித்துள்ளனர். தற்போது நாடளாவிய அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றமையால் மாவட்டங்களிலுள் வைத்தியசாலைகளிலும் கொவிட் தொற்றாளர்களுக்கு சிகிச்ச��யளிப்பதற்கான பிரிவுகளை பிரத்தியேகமாக ஒதுக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதே வேளை மேல் மாகாணத்தில் மாத்திரம் நாளொன்றுக்கு சுமார் 1200 தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றனர்.\n2021-05-06 22:40:35 2000 தொற்றாளர்கள் இனங்காணல் எச்சரிக்கை\nபிழையான எண்ணங்களை மக்கள் மயப்படுத்த எதிக்கட்சி முயற்சி - மதுர விதானகே\nகொவிட்-19 வைரஸ் பரவல் காரணமாக பாதிப்படைந்துள்ள மக்களை காப்பாற்றுவதுடன் , வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கு அரசாங்கம் முயற்சிகளை எடுத்து வரும் நிலையில், எதிர்தரப்பினர் தங்களுக்கு கிடைக்கப் பெற்றுள்ள பாராளுமன்ற உறுப்புரிமையை பயன்படுத்தி பிழையான எண்ணங்களை மக்கள் மயப்படுத்த முயற்சித்து வருவதாக ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே குற்றஞ்சாட்டினார்.\n2021-05-06 22:36:58 பிழையான எண்ணங்கள் மக்கள் மயப்படுத்தல் எதிக்கட்சி\nகிளிநொச்சியில் புதிய கொரோனா சிகிச்சை நிலையம் - நள்ளிரவு முதல் சேவைகள் ஆரம்பம்\nகிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் புதிய கொவிட் 19 மருத்துவ நிலையத்தில் இன்று நள்ளிரவு முதல் சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பிரிவு தெரிவிக்கின்றது.\n2021-05-06 22:36:36 கிளிநொச்சி கொரோனா சிகிச்சை நிலையம் நள்ளிரவு\nநாட்டில் மேலும் 12 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்\nதூரநோக்குடனான திட்டமிடலின்றி நாடு நெருக்கடிக்குள் சிக்கி விட்டது - ரணில் கவலை\nஇலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து மேலும் 810 பேர் குணமடைவு..\nபணவீக்கம் ஏப்ரலில் 3.9 சதவீதமாக வீழ்ச்சி: இலங்கை மத்திய வங்கி\nவிலை அதிகரிப்பிற்கு அனுமதியில்லையேல் தட்டுப்பாடு ஏற்படலாம்: லாப் கேஸ் நிறுவனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/95549", "date_download": "2021-05-07T01:21:58Z", "digest": "sha1:7PWLCESEBLH3YMD56KVSPEIRRPCOPNTY", "length": 13377, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "கிளிநொச்சி கிருஸ்ணபுரம் தொற்று நோய் வைத்தியசாலைக்கு நோயாளிகள் அனுமதி | Virakesari.lk", "raw_content": "\nநாளொன்றுக்கு 2 ஆயிரத்தை விட அதிக தொற்றாளர்கள் இனங்காணப்படலாம் : எச்சரிக்கிறது தொற்று நோயியல் பிரிவு\nபிழையான எண்ணங்களை மக்கள் மயப்படுத்த எதிக்கட்சி முயற்சி - மதுர விதானகே\nகிளிநொச்சியில் புதிய கொரோனா சிகிச்சை நிலையம் - நள்ளிரவு முதல் சேவைகள் ஆரம்பம்\n��ஹரகம நகரசபைக் கூட்டத்தில் மோதல் - விசாரணைகள் ஆரம்பம்\nதனியார் வங்கி உதவி முகாமையாளருக்கு கொரோனா தொற்று ; வங்கிக்கு பூட்டு\nஜம்மு-காஷ்மீரில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை\nகொரோனாவால் இலங்கையில் கர்ப்பிணித் தாய் பலி\n இனங்காணப்படும் தொற்றாளர்களை விட இருமடங்கு தொற்றாளர்கள் சமூகத்தில் \nதம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தை மீண்டும் திறக்க தீர்மானம்\nகிளிநொச்சி கிருஸ்ணபுரம் தொற்று நோய் வைத்தியசாலைக்கு நோயாளிகள் அனுமதி\nகிளிநொச்சி கிருஸ்ணபுரம் தொற்று நோய் வைத்தியசாலைக்கு நோயாளிகள் அனுமதி\nகிளிநொச்சி கிருஸ்ணபுரம் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள வட மாகாண தொற்று நோய் வைத்தியசாலையில் இன்று முதல் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nமருதங்கேணி வைத்தியசாலையிருந்து 30 தொற்றாளர்களும், அத்தோடு மேலும் 10 நோயாளிகளுமாக 40 பேர் இன்று அனுமதிக்கப்படவுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை யாழ் மருதங்கேணி வைத்தியசாலையில் இடம்பெற்று வந்த கொரோனா சிகிச்சைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கேதீஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.\nஅங்கு மழைக்காலத்தில் மலசல கூட வசதிகளில் ஏற்பட்ட குறைபாடுகள் காரணமாக மூடப்படுவதாகவும் குறிப்பிட்டார்.\n200 பேர் சிகிச்சை பெறும் வகையில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள கிருஸ்ணபுரம் வைத்தியசாலையில் முதற்கட்டமாக இன்று 40 பேர் அனுமதிக்கப்படவுள்ளனர்.\nகுறித்த வைத்தியசாலை வட மாகாணத்திற்கான தொற்று நோயியல் வைத்தியசாலை இயங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகிளிநொச்சி கிருஸ்ணபுரம் தொற்று நோய் வைத்தியசாலை நோயாளிகள் அனுமதி மருதங்கேணி வைத்தியசாலை Kilinochchi Krishnapuram Infectious Diseases Hospital Patients Admission Maruthangeni Hospital\nநாளொன்றுக்கு 2 ஆயிரத்தை விட அதிக தொற்றாளர்கள் இனங்காணப்படலாம் : எச்சரிக்கிறது தொற்று நோயியல் பிரிவு\nநாட்டில் நாளொன்றில் இனங்காணப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கை எதிர்வரும் நாட்களில் 2000 ஐ விட அதிகரிக்கக் கூடும் என்று சுகாதார தரப்பினர் எச்சரித்துள்ளனர். தற்போது நாடளாவிய அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றமையால் மாவட்டங்களிலுள் வைத்தியசாலைகளிலும் கொவிட் தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான பிரிவுகளை பிரத்தியேகமாக ஒதுக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதே வேளை மேல் மாகாணத்தில் மாத்திரம் நாளொன்றுக்கு சுமார் 1200 தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றனர்.\n2021-05-06 22:40:35 2000 தொற்றாளர்கள் இனங்காணல் எச்சரிக்கை\nபிழையான எண்ணங்களை மக்கள் மயப்படுத்த எதிக்கட்சி முயற்சி - மதுர விதானகே\nகொவிட்-19 வைரஸ் பரவல் காரணமாக பாதிப்படைந்துள்ள மக்களை காப்பாற்றுவதுடன் , வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கு அரசாங்கம் முயற்சிகளை எடுத்து வரும் நிலையில், எதிர்தரப்பினர் தங்களுக்கு கிடைக்கப் பெற்றுள்ள பாராளுமன்ற உறுப்புரிமையை பயன்படுத்தி பிழையான எண்ணங்களை மக்கள் மயப்படுத்த முயற்சித்து வருவதாக ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே குற்றஞ்சாட்டினார்.\n2021-05-06 22:36:58 பிழையான எண்ணங்கள் மக்கள் மயப்படுத்தல் எதிக்கட்சி\nகிளிநொச்சியில் புதிய கொரோனா சிகிச்சை நிலையம் - நள்ளிரவு முதல் சேவைகள் ஆரம்பம்\nகிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் புதிய கொவிட் 19 மருத்துவ நிலையத்தில் இன்று நள்ளிரவு முதல் சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பிரிவு தெரிவிக்கின்றது.\n2021-05-06 22:36:36 கிளிநொச்சி கொரோனா சிகிச்சை நிலையம் நள்ளிரவு\nமஹரகம நகரசபைக் கூட்டத்தில் மோதல் - விசாரணைகள் ஆரம்பம்\nமஹரகம நகரசபையில் இடம்பெற்றதாக கூறப்படும் மோதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக மாஹரகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.\n2021-05-06 22:35:00 மஹரகம நகரசபை கூட்டம் மோதல் விசாரணைகள் ஆரம்பம்\nதனியார் வங்கி உதவி முகாமையாளருக்கு கொரோனா தொற்று ; வங்கிக்கு பூட்டு\nகோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவுக்குட்பட்ட தனியார் வங்கி ஒன்றின் உதவி முகாமையாளருக்கு கொரோனா தொற்று இருப்பதாக இன்று (6) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\n2021-05-06 21:00:35 தனியார் வங்கி உதவி முகாமையாளர் கொரோனா தொற்று வங்கி\nஇலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து மேலும் 810 பேர் குணமடைவு..\nபணவீக்கம் ஏப்ரலில் 3.9 சதவீதமாக வீழ்ச்சி: இலங்கை மத்திய வங்கி\nவிலை அதிகரிப்பிற்கு அனுமதியில்லையேல் தட்டுப்பாடு ஏற்படலாம்: லாப் கேஸ் நிறுவனம்\nஸ்புட்னிக் கொரோனா தடுப்பூசி போடும் பணி ஆரம்பம்\nகளுத்துறை சிறைச்சாலைக்குள் போதைப்பொருட்கள் அடங்கிய பொதிகள் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/98816", "date_download": "2021-05-07T01:31:54Z", "digest": "sha1:D7H7HSDVZMU2EV6Y267NNZWYJHJK5VNO", "length": 15102, "nlines": 106, "source_domain": "www.virakesari.lk", "title": "ஜோ பைடனின் பதவியேற்புக்காக ஆயுதக்கோட்டையாக மாறிய அமெரிக்கத் தலைநகர் | Virakesari.lk", "raw_content": "\nநாளொன்றுக்கு 2 ஆயிரத்தை விட அதிக தொற்றாளர்கள் இனங்காணப்படலாம் : எச்சரிக்கிறது தொற்று நோயியல் பிரிவு\nபிழையான எண்ணங்களை மக்கள் மயப்படுத்த எதிக்கட்சி முயற்சி - மதுர விதானகே\nகிளிநொச்சியில் புதிய கொரோனா சிகிச்சை நிலையம் - நள்ளிரவு முதல் சேவைகள் ஆரம்பம்\nமஹரகம நகரசபைக் கூட்டத்தில் மோதல் - விசாரணைகள் ஆரம்பம்\nதனியார் வங்கி உதவி முகாமையாளருக்கு கொரோனா தொற்று ; வங்கிக்கு பூட்டு\nஜம்மு-காஷ்மீரில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை\nகொரோனாவால் இலங்கையில் கர்ப்பிணித் தாய் பலி\n இனங்காணப்படும் தொற்றாளர்களை விட இருமடங்கு தொற்றாளர்கள் சமூகத்தில் \nதம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தை மீண்டும் திறக்க தீர்மானம்\nஜோ பைடனின் பதவியேற்புக்காக ஆயுதக்கோட்டையாக மாறிய அமெரிக்கத் தலைநகர்\nஜோ பைடனின் பதவியேற்புக்காக ஆயுதக்கோட்டையாக மாறிய அமெரிக்கத் தலைநகர்\nஅமெரிக்காவின் 46 ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடன் இன்று புதன்கிழமை பதவியேற்கவுள்ளார்.\nகொரோனா வைரஸ் தாக்கத்தினால் அமெரிக்காவில் நான்கு இலட்சம் உயிரிழப்புகளும், வேலையின்மை பிரச்சினைகளும் அதிகரித்துள்ள இந்த இக்கட்டான தருணத்திலேயே ஜோ பைடன் ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ளார்.\nபதவியேற்பு தினத்திற்கு முன்னதாக செவ்வாயன்று வொஷிங்டனுக்கு ரயில் ஒன்றில் செல்ல பைடன் திட்டமிட்டிருந்தார்.\nஆனால் அமெரிக்க கேபிட்டலில் இரு வாரங்களுக்கு முன்னதாக ஏற்பட்ட கலவரத்தின் பின்னர் பாதுகாப்பு அச்சறுத்தல் காரணமாக தனது திட்டத்தை பைடன் கைவிட்டார்.\nஅதற்கு பதிலாக அவர் தலைநகருக்கு வெளியிலுள்ள இராணுவ முகாமிற்கள் மிகவும் சூட்சுமமான முறையில் நுழைந்து, பின்னர் செவ்வாய்கிழமை நண்பகல் வேளையில் சுமார் 25,000 படைவீரர்களால் கண்காணிக்கப்படுகின்றதும், உயரமான மதில்சுவரால் தடுப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கும் வெள்ளை மாளிகை அமைந்திருக்கின்றதுமான தலைநகரத்திற்குள் மோட்டார் வாகனத்தின் ஊடாக நுழைந்தார்.\nஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடன் மற்றும் துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட கமலா ஹாரிஸ் ஆகியோர் அமெரிக்க கேபிட்டல் கட்டிடத்தின் மேற்குப் பகுதியில் அந் நாட்டு நேரப்படி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு பதவியேற்பார்கள்.\nஅவர்கள் பதவியேற்ற பின்னர், ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பைடன் தொற்றுநோயைத் தோற்கடிப்பதற்கும், சிறப்பாக மீண்டும் நாட்டை கட்டியெழுப்புவதற்கும், தேசத்தை ஒன்றிணைப்பதற்கும் ஏனைய நடவடிக்கைகளுக்கமான தனது இலக்கினை முன்வைக்கும் தொடக்க உரையை நிகழ்த்துவார்.\nஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர், முதல் பெண்மணி, துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் மற்றும் இரண்டாவது ஜென்டில்மேன் ஆகியோர் இராணுவ உறுப்பினர்களுடன் பாஸ் இன் ரிவியூவில் (Pass in Review)பங்கேற்பார்கள்.\nபாஸ் இன் ரிவியூஸ் என்பது அமெரிக்காவின் ஒரு நீண்டகால இராணுவ பாரம்பரியமாகும். இது ஒரு புதிய தளபதிக்கு அமைதியான முறையில் அதிகாரத்தை மாற்றுவதை பிரதிபலிக்கிறது.\nபதவியேற்பு நிகழ்வின்போது முன்னாள் ஜனாதிபதிகளான பராக் ஒபாமா, ஜோர்ஜ் டபிள்யூ புஷ், பில் கிளிண்டன் ஆகியோரும் அவர்களது பாரியாரும் இணைந்து கொள்வார்கள்.\nமத்திய வொஷிங்டன் ஒரு ஆயுதக் கோட்டையாகும். இது ரேஸர் கம்பியால் கட்டப்பட்டிருக்கிறது மற்றும் புதன்கிழமை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடனின் பதவியேற்புக்கு முன்னதாக அமெரிக்க தலைநகர் வொஷிங்டன் 25,000 தேசிய காவல்படையினரால் சூழப்பட்டுள்ளது.\nபதவியில் இருந்த வெளியேறும் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் நடைபெற்று முடிந்த தேர்தலில் ஏமாற்றப்பட்டார் என்ற நம்பிக்கையை வைத்திருக்கும் சில எதிர்ப்பாளர்கள் பைடனின் பதவியேற்பு விழா மற்றும் தொடக்க நிகழ்வுகளை சீர்குலைக்க முயற்சிக்கலாம் என்றும் பரவலாக அச்சமெழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஜோ பைடன் வொஷிங்டன் அமெரிக்கா Washington Joe Biden\nசமுக வலைத்தளங்கள் முடக்கம்; புதிய வலைதளத்தை ஆரம்பித்தார் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்\nஅமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் புதிதாக வலைதளத்தை ஆரம்பித்துள்ளார்.\n2021-05-06 16:13:51 சமுக வலைத்தளங்கள் புதிய வலைதளம் டொனால்ட் ட்ரம்ப்\nராஷ்டிரிய லோக் தளம் கட��சியின் தலைவர் அஜித் சிங் கொரோனாவால் மரணம்...\nராஷ்டிரிய லோக் தளம் கட்சியின் தலைவர் அஜித் சிங் தனது 82ஆவது வயதில் காலமானார்.\n2021-05-06 13:15:45 ராஷ்டிரிய லோக் தளம் கட்சி தலைவர் அஜித் சிங்\n அரச வைத்தியசாலையில் ஒட்சிசன் தட்டுப்பாடு - 13 பேர் பலி\nதமிழ்நாட்டில் செங்கல்பட்டு அரச வைத்தியசாலையில் ஒட்சிசன் தட்டுப்பாட்டால் 13 கொரோனா நோயாளிகள் மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.\n2021-05-06 17:07:51 தமிழ்நாடு செங்கல்பட்டு கொரோனா வைரஸ்\nஇந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா; ஒரேநாளில் 4.12 இலட்சம் பேருக்கு தொற்று\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை உலகின் பிற எந்த நாட்டிலும் ஏற்பட்டிராத வகையில் அதிகரித்து வருகிறது.\n2021-05-06 11:05:10 இந்தியா கொரோனா வைரஸ் கொவிட்-19\nஜம்மு-காஷ்மீரில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை\nஜம்மு-காஷ்மீரின் ஷோபியன் மாவட்டத்தில் வியாழக்கிழமை பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.\n2021-05-06 08:34:49 இந்தியா ஜம்மு-காஷ்மீர் ஷோபியன்\nஇலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து மேலும் 810 பேர் குணமடைவு..\nபணவீக்கம் ஏப்ரலில் 3.9 சதவீதமாக வீழ்ச்சி: இலங்கை மத்திய வங்கி\nவிலை அதிகரிப்பிற்கு அனுமதியில்லையேல் தட்டுப்பாடு ஏற்படலாம்: லாப் கேஸ் நிறுவனம்\nஸ்புட்னிக் கொரோனா தடுப்பூசி போடும் பணி ஆரம்பம்\nகளுத்துறை சிறைச்சாலைக்குள் போதைப்பொருட்கள் அடங்கிய பொதிகள் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thoothukudibazaar.com/news/bsnl-payment-details-willbein-digital/", "date_download": "2021-05-07T01:05:34Z", "digest": "sha1:Y6V52YK6GMGLG4X7YTAIQ5AWX5LKHYUC", "length": 5392, "nlines": 63, "source_domain": "thoothukudibazaar.com", "title": "பிஎஸ்என்எல் சேவை கட்டண விவரத்தை மின்னஞ்சல் மூலம் அனுப்ப ஏற்பாடு: பொதுமேலாளர் தகவல் |", "raw_content": "\nபிஎஸ்என்எல் சேவை கட்டண விவரத்தை மின்னஞ்சல் மூலம் அனுப்ப ஏற்பாடு: பொதுமேலாளர் தகவல்\nதூத்துக்குடி கோட்டத்தில் பிஎஸ்என்எல் சேவைக்கான கட்டண விவரம் மே மாதம் முதல் மின்னஞ்சல் (ஈமெயில்) மற்றும் குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) மூலம்  அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார் பிஎஸ்என்எல் கோட்ட பொதுமேலாளர் சஜிகுமார் இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:\nபிஎஸ்என்எல் நிறுவனத்தின் பசுமை மய��ாக்குதல் திட்டத்தின் ஒரு பகுதியாக மாதாந்திர தொலைபேசி கட்டண விவரங்களை வாடிக்கையாளர்களுக்கு மே மாதம் முதல் மின்னஞ்சல், குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) போன்ற டிஜிட்டல்  முறை மூலம் அனுப்ப ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nஎனவே, பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் தங்களது செல்லிடப்பேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை அருகேயுள்ள வாடிக்கையாளர் சேவை மையங்கள் அல்லது உள்ளுர் தொலைபேசி அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் உடனே வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\nமேலும், வாடிக்கையாளர்கள் தங்களது அருகில் உள்ள பிஎஸ்என்எல் நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட கடைகளில் தொலைபேசி கட்டணத்தை செலுத்தும் வசதியும் செய்யப்பட்டுள்ளது என  தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபுதிதாக 10 பேருக்கு தொற்று உறுதி: தூத்துக்குடியில் கொரோனாவுக்கு லாரி டிரைவர் பலி\nதூத்துக்குடியில் இருந்து பீகாருக்கு சிறப்பு ரெயில் இன்று இயக்கம்\nஅஞ்சலக வங்கியில் கணக்கு தொடங்க திரண்ட அமைப்பு சாரா தொழிலாளா்கள்\nஐடிஐ படித்தவா்களுக்கு மாா்ச் 4 இல் தொழில் பழகுநா் சோ்க்கை முகாம்\nநலவாரியத்தில் சேர நாட்டுப்புற கலைஞர்கள் விண்ணப்பிக்கலாம் – கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்\nPREVIOUS POST Previous post: தூத்துக்குடி மாவட்ட அரசு இசை பள்ளியில் சேர விண்ணப்பிக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/672012/amp", "date_download": "2021-05-07T01:52:28Z", "digest": "sha1:XX6KUSAMFGAK7A6N45DD4QRY7WKIMTEK", "length": 8312, "nlines": 86, "source_domain": "m.dinakaran.com", "title": "செங்கல் சூளையில் சிக்கிய கட்டுவிரியன் | Dinakaran", "raw_content": "\nசெங்கல் சூளையில் சிக்கிய கட்டுவிரியன்\nசின்னாளபட்டி : அம்பாத்துறை அருகே செங்கல் சூளையில் கொடிய விஷமுள்ள இரு கட்டுவிரியன் பாம்புகளை தீயணைப்புத் துறையினர் பிடித்து காட்டில் விட்டனர். திண்டுக்கல் - மதுரை சாலையில் அம்பாத்துரை ஆஞ்சநேயர் கோவில் எதிரே செங்கல் சூளை உள்ளது. செங்கல் அறுக்க வந்த தொழிலாளர்கள் அங்கு இரண்டு கட்டுவிரியன் பாம்புகள் இருப்பதைக் கண்டு அலறியடித்து ஓடினர். தகவல் பேரில் வந்த ஆத்தூர் தீயணைப்பு துறையினர் செங்கல் சூளையில் பதுங்கியிருந்த இரண்டு கட்டுவிரியன் பாம்புகளை பிடித்தனர். ஒவ்வொரு பாம்பும் 7 அடி நீளம் இருந்தது. பிடிபட்ட பாம்புகளை தீயணைப்புத் துறையினர் ஆத்தூர் அணைக்கட்டு பகுதியில் உள்ள வனத்தில் விட்டனர்.\nகோவை, பெங்களூரூ, மங்களூர், நாகர்கோவில், திருச்சிக்கு செல்ல பயணிகள் வராததால் 74 சிறப்பு ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு\nசேலம் அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் இருந்து 29 ரெம்டிசிவிர் மருந்து பாட்டில்களை காணவில்லை என புகார்\nகுளச்சல் மீன்பிடி துறைமுகம் விரிவாக்கம் செய்யப்படுமா\nகொரோனா ஊரடங்கில் நேரத்தை வீணாக்காமல் திருச்செந்தூரில் தவில் அடித்து பயிற்சி பெறும் சிறுவர்கள்\nதமிழகத்தில் மேலும் 24,898 பேருக்கு கொரோனா உறுதி; 195 பேர் உயிரிழப்பு: 21,546 பேர் குணம்\nதமிழகத்தில் தடையற்ற ஆக்சிஜன் சப்ளையை உறுதிப்படுத்த மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nபுதுச்சேரியில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஊக்கத்தொகை: துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்\nநெல்லை அரசு மருத்துவ கல்லூரிக்கு மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து 8,000 லிட்டர் ஆக்சிஜன்\nசாத்தூர் அருகே உள்ள சல்வார்பட்டியில் ஒரு வாரத்தில் 10 பேர் கொரோனாவால் உயிரிழந்ததால் கிராம மக்கள் அச்சம்\nதிருச்சியில் கொரோனா பரவலை தடுக்க காந்தி மார்க்கெட் பொன்மலை ஜி கார்னர் மைதானத்திற்கு மாற்றம்\nமகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து நெல்லை அரசு மருத்துவமனைக்கு 8,000 லிட்டர் திரவ ஆக்சிஜன் வந்தது\nதனியார் மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூல்: உயர்நீதிமன்றம் கருத்து\nஆண் சிறுத்தை உயிர் இழப்பு\n2019ல் பறிமுதல் செய்யப்பட்ட 10 ஆயிரம் லிட்டர் எரிசாராயம் பள்ளத்தில் கொட்டி தீ வைத்து அழிப்பு\nமுழு பாலையும் கறக்காவிட்டால் மாடுகளுக்கு மடி நோய் ஏற்படும்: கால்நடை மருத்துவ ஆராய்ச்சி மையம் தகவல்\nஅமராவதி அணை நீர்மட்டம் குறைகிறது\nஒரத்தநாடு குட்டை குளத்தில் தேங்கி கிடக்கும் பிளாஸ்டிக் குப்பை கழிவுகள்: தொற்றுநோய் பரவும் அபாயம்\nகோடை மழையால் போடி கண்மாய்களுக்கு நீர்வரத்து அதிகரிப்பு\nதாவரவியல் பூங்காவில் பெரிய புல் மைதானம் சீரமைப்பு பணி மும்முரம்\nதிருவாரூர் குளுந்தான் குளத்தில் ஆகாய தாமரை செடிகள் அகற்றப்படுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://reviews.dialforbooks.in/paappavukku-paattu.html", "date_download": "2021-05-07T01:18:46Z", "digest": "sha1:MYB566IDXWSZ4NTRWMFQXVNBWRVNFETM", "length": 6776, "nlines": 215, "source_domain": "reviews.dialforbooks.in", "title": "பாப்பாவுக்குப் பாட்டு – Dial for Books : Reviews", "raw_content": "\nபாப்பாவுக்குப் பாட்டு, ருக்மணி சேஷசாயி, சாயி பதிப்பகம், பக்.64, விலை 80ரூ.\nபாட்டுக்கு என்றாலே மகாகவி பாரதி தான் நினைவுக்கு வருவார். குழந்தைகளுக்கு பாட்டு சொல்லிக் கொடுக்கும் காலம் மறைந்து வருகிறது. இக்குறையை போக்கும் வகையில், குழந்தைகளுக்கென்றே விலங்குகளை நாயகனாக வைத்து பாடல்களை ஆசிரியர் தொகுத்து தந்துள்ளது பாராட்டிற்குரியது.\nஉறவுகளை வளர்க்கும் வகையில் அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி பற்றிய பாடல்களும் இடம் பெற்றுள்ளன. இந்நுாலை வாங்கி, குழந்தைகளுக்கு பாட்டு சொல்லிக் கொடுத்தால், அவர்களும் சிறப்பாக பாடுவர்; உச்சரிப்பும் சரியாக வரும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.\nஇந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818\nஇலக்கியம், சிறுவர் நூல்கள், பாடல்கள்\tசாயி பதிப்பகம், தினமலர், பாப்பாவுக்குப் பாட்டு, ருக்மணி சேஷசாயி\nஷீரடி பாபாவின் சீரடி பணிவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.akattiyan.lk/2021/04/blog-post_119.html", "date_download": "2021-05-07T02:11:22Z", "digest": "sha1:2FISRSPCDMIE26H7HZOBKX22ZTXAQOPV", "length": 5528, "nlines": 66, "source_domain": "www.akattiyan.lk", "title": "மூன்று தவணைகளிலும் பாடப்புத்தகங்களை வழங்க திட்டம் - அகத்தியன் | Online", "raw_content": "\nHome இலங்கை மூன்று தவணைகளிலும் பாடப்புத்தகங்களை வழங்க திட்டம்\nமூன்று தவணைகளிலும் பாடப்புத்தகங்களை வழங்க திட்டம்\nஅடுத்த வருடம் முதல் பாடசாலை மாணவர்களுக்கு மூன்று தவணைகளிலும் பாடப்புத்தகங்களை வழங்குவதற்கு கல்வி மறுசீரமைப்பு, தொலைதூரக் கல்வி, திறந்த பல்கலைக்கழகங்கள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு திட்டமிட்டுள்ளது.\nபுதிய கல்வி மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கூறியுள்ளார்.\nமூன்று தவணைகளிலும் பாடப்புத்தகங்களை வழங்க திட்டம் Reviewed by Chief Editor on 4/15/2021 01:53:00 pm Rating: 5\nபாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் மேலதிக வகுப்புகளுக்கு மறு அறிவித்தல் வரை விடுமுறை\nபாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் மேலதிக வகுப்புகளுக்கு மறு அறிவித்தல் வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், நோன்பு பெருநாள், வெசாக் ...\nகொரோனா பரவல் காரணமாக நாட்டின��� பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள விடுமுறையானது மேலும் ஒரு வார காலத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ...\nமோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nவாகன போக்குவரத்து திணைக்களத்தின் நாரஹென்பிட்டி மற்றும் வேரஹெர அலுவலகங்கள் ஒரு வாரத்திற்கு மூடப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம த...\nDReAM என அறிமுகப்படுத்தப்பட்டுள்ள முற்பாதுகாப்பு விதிமுறைகளுக்கமைய மதுபான சாலைகளை திறந்து வைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. D – சமூக இடை...\nமுழு அதிகாரம் : அகத்தியன் ஊடக சேவை 2020\nஆசிரியர் பீட தெடர்புகளுக்கு 0779516119\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.religion-facts.com/ta/147", "date_download": "2021-05-07T01:07:15Z", "digest": "sha1:52RLUXOIKZJKDRPCTNEAF5TKWL4ZUGUS", "length": 5859, "nlines": 72, "source_domain": "www.religion-facts.com", "title": "மதங்கள் ஐஸ்லாந்து", "raw_content": "\nமத மக்கள்தொகை பட்டியல் ஐஸ்லாந்து\nமொத்த மக்கள் தொகையில்: 320,000\nஇந்துக்கள் உள்ள ஐஸ்லாந்து எண்ணிக்கை\nஐஸ்லாந்து உள்ள இந்துக்கள் எத்தனை உள்ளது\nஇந்துக்கள் உள்ள ஐஸ்லாந்து விகிதம்\nஐஸ்லாந்து உள்ள இந்துக்கள் விகிதம் எப்படி பெரிய\nஐஸ்லாந்து உள்ள பிரதான மதம்\nஐஸ்லாந்து உள்ள பிரதான மதம் எது\nபுத்த மதத்தினர் அதிக எண்ணிக்கையிலான மக்கள் தொகை கொண்ட நாடுகளில் எந்த நாடு புத்த மதத்தினர் அதிக எண்ணிக்கையிலான மக்கள் தொகை உள்ளது\nஇந்துக்கள் அதிகளவாக கொண்டு நாடுகளில் எந்த நாடு இந்துக்கள் அதிகளவாக\nநாட்டுப்புற மதம் மிக குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் தொகை கொண்ட நாடுகளில் எந்த நாடு நாட்டுப்புற மதம் குறைவான எண்ணிக்கை வசிக்கின்றனர்\nகிரிஸ்துவர் மிகச்சிறிய கொண்டிருக்கும் நாடுகளாக எந்த நாடு கிரிஸ்துவர் மிக குறைந்த பட்ச\nபிற மதத்தை அதிகளவாக கொண்டு subregions எந்த பயன்படுத்தி துணைப் பிற மதத்தை அதிகளவாக\nnacija உள்ள பிரதான மதம் nacija உள்ள பிரதான மதம் எது\nnacija உள்ள பிரதான மதம் nacija உள்ள பிரதான மதம் எது\nமுஸ்லிம்கள் அதிகளவாக கொண்டு subregions எந்த பயன்படுத்தி துணைப் முஸ்லிம்கள் அதிகளவாக\nnacija உள்ள பிரதான மதம் nacija உள்ள பிரதான மதம் எது\nnacija உள்ள பிரதான மதம் nacija உள்ள பிரதான மதம் எது\nஇந்துக்கள் அதிகளவாக கொண்டு subregions எந்த பயன்படுத்தி துணைப் இந்துக்கள் அதிகளவாக\nயூதர்கள் அதிகளவாக கொண்டு subregions எந்த பயன்படுத்தி த��ணைப் யூதர்கள் அதிகளவாக\nமத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்கா\nலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன்\nநாட்டுப்புற மதம் மிகச்சிறிய கொண்டிருக்கும் நாடுகளாக எந்த நாடு நாட்டுப்புற மதம் மிக குறைந்த பட்ச\nஇணைப்பற்ற மிகச்சிறிய கொண்டிருக்கும் நாடுகளாக எந்த நாடு இணைப்பற்ற மிக குறைந்த பட்ச\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinibitz.com/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-05-07T01:07:22Z", "digest": "sha1:JWWACNFX35ZQF3DS5ZYDE6XWCFGPHMDV", "length": 10191, "nlines": 69, "source_domain": "www.tamilcinibitz.com", "title": "ஜென்ஷின் தாக்கம் அனுபவம் வாய்ந்த வீரர்களுக்கு இலவச ப்ரிமோஜீமை வழங்குகிறது", "raw_content": "முழுமையான செய்தி உலகம் உங்களுக்காக.\nஜென்ஷின் தாக்கம் அனுபவம் வாய்ந்த வீரர்களுக்கு இலவச ப்ரிமோஜீமை வழங்குகிறது\nகென்ஷின் தாக்கம் டெவலப்பர் miHoYo, விளையாட்டின் முக்கிய டிஜிட்டல் நாணயமான சில இலவச ப்ரிமோஜெம்களை வழங்கி வருகிறது, வரவிருக்கும் கிரையோ-ட்யூன் செய்யப்பட்ட கன்யு பற்றிய மிக எளிய கேள்விக்கு பதிலளிப்பதன் மூலம் பெறப்பட்ட எளிய குறியீட்டை மீட்டெடுக்க பிரீமியம் பொருட்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் பின்தொடர்ந்தால் கென்ஷின் தாக்கம் சமீபத்தில் செய்திநீங்கள் சரியான பதிலை சிறிய சிரமத்துடன் கண்டுபிடிக்க முடியும்.\nஆனால் அதைப் பயன்படுத்துவதற்கான குறியீட்டை நீங்கள் கண்டுபிடிக்க விரும்பினால், குறுகிய பதிப்பு என்னவென்றால், கன்யுவுக்கு பிடித்த பொழுதுபோக்கு என்ன என்று வினாடி வினா கேட்கிறது. கன்யுவின் உத்தியோகபூர்வ விளக்கம் பதிலைக் குறிக்கும் அதே வேளையில், வினாடி வினாவில் உள்ள விருப்பங்கள் பின்வருமாறு: a. உடற்பயிற்சி, பி. பயணம், சி. வேலை மற்றும் டி. ஓவியம். மீதமுள்ள குறியீடு “UUPMBJSVD” என்பது சரியான கடிதத்துடன் சரியான நேரத்திற்கு முன்னதாகும்.\nவரையறுக்கப்பட்ட நேர வீழ்ச்சி: மர்மமான மீட்புக் குறியீடு\nஅன்புள்ள பயணிகளே, ப்ரிமோஜெம்களுக்கான மீட்புக் குறியீட்டைப் பெற இந்த ஹோயோலாப் நிகழ்வில் இப்போது சேருங்கள்\n– பைமான் (en கென்ஷின்இம்பாக்ட்) ஜனவரி 9, 2021\nஇந்த குறியீட்டை எவ்வாறு மீட்டெடுக்க முடியும் என்பது மிகவும் நேரடியானது. உள்ளே இருந்தால் கென்ஷின் தாக்கம் எடுத்துக்காட்டாக, கணக்கு அமைப்புகள் மெனு வழியாகச் செல்லும்போது குறியீடுகளை மீட்டெடுக்க ஒரு குறிப்பிட்ட விருப்பத்தைப் பார்க்க வேண்டும். CUUPMBJSVD குறியீட்டை அங்கு உள்ளிடவும், நீங்கள் 50 இலவச ப்ரிமோஜெம்களைக் கொண்ட மின்னஞ்சலை விரைவாகப் பெற வேண்டும். அது தான்\nகென்ஷின் தாக்கம் தற்போது பிளேஸ்டேஷன் 5, பிளேஸ்டேஷன் 4, பிசி மற்றும் மொபைல் சாதனங்களில் இலவசமாகக் கிடைக்கிறது. சாக் பிரின்ஸ் மற்றும் டிராகன் பதிப்பு 1.2 புதுப்பிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது மற்றும் ஒரு புதிய பிரிவு, எழுத்துக்கள், நிகழ்வுகள் மற்றும் பலவற்றைச் சேர்த்தது. நிண்டெண்டோ சுவிட்சிற்காக வீடியோ கேம் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீங்கள் பார்க்கலாம் பிரபலமான இலவச-விளையாட தலைப்பு குறித்த எங்கள் முந்தைய அறிக்கைகள் அனைத்தையும் இங்கே காணலாம்.\n வரவிருக்கும் கன்யு பேனரை எதிர்பார்க்கிறீர்களா கருத்துக்களில் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள் அல்லது ட்விட்டரில் என்னை நேரடியாக தொடர்பு கொள்ளவும் @ ரோலின் பிஷப் விளையாட்டுகளுடன் எதையும் செய்ய பேச\nஆத்திரமூட்டும் தாழ்மையான ஆய்வாளர். சான்றளிக்கப்பட்ட உணவு ஆர்வலர். காபி சுவிசேஷகர். சமூக ஊடகவியலாளர். டிவி விசிறி. உணர்ச்சிமிக்க வலை பஃப். இசை மேவன்.\nREAD ஆப்பிள் டிவி பிளஸ் சந்தாதாரர்கள் ஜூன் மாதத்திற்குள் கடன் திரும்பப் பெறுவார்கள்\nபோகிமொன் GO இல் பாகனைக் கண்டுபிடித்து பிடிப்பது எப்படி\nபாகோன் என்பது போகிமொன் GO இல் ஒரு அபிமான டிராகன் வகை போகிமொன் ஆகும். அதன்...\nஉலகெங்கிலும் உள்ள பயனர்களுக்கான டேப்டாப் ஸ்டோருக்கு படிப்படியான வழிகாட்டி\nவிரைவில் படிக்க வாட்ஸ்அப்: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது இங்கே\nஆப்பிள் டிவி பிளஸ் சந்தாதாரர்கள் ஜூன் மாதத்திற்குள் கடன் திரும்பப் பெறுவார்கள்\nPrevious articleமுந்தைய தேர்தல்களை ரத்து செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகளை உருவாக்க வேண்டாம்: மாநில தேர்தல் ஆணையம்\nNext article10 பேர் கொண்ட கேரளா 3-2 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூரை வீழ்த்தியது\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nதென்னாப்பிரிக்க மகளிர் அணி வரையறுக்கப்பட்ட பெரிதாக்கப்பட்ட தொடர்களுக்காக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்யும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinibitz.com/%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%87/", "date_download": "2021-05-07T02:01:58Z", "digest": "sha1:5I2JFDKGBF2EQUFJ3HUXOKZLTVKIJIXG", "length": 10410, "nlines": 66, "source_domain": "www.tamilcinibitz.com", "title": "டி.என்.டி.கே.", "raw_content": "முழுமையான செய்தி உலகம் உங்களுக்காக.\nதேசியா முர்போக்குவின் பொருளாளர் திராவிட கசக்மா (டி.எம்.டி.கே) மற்றும் “கேப்டன்” வியயந்தின் மனைவி பிரேமலதா வியகாந்த், எதிர்வரும் தேர்தலில் அதிமுகவின் மூத்த கூட்டாளியான 41 இடங்களை ஒதுக்க வேண்டும் என்று தனது கட்சி எதிர்பார்க்கிறது என்றார். 2011 சட்டமன்றத் தேர்தலில் ஆளும் கட்சியுடன் அதன் சீருடை வைத்திருந்த உடன்படிக்கைக்கு ஒத்ததாக இருக்கும் என்று பிரேமலதா மேலும் கூறினார்.\nதர்மபுரியில் நடந்த கட்சி கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா, “நாங்கள் சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராக இருக்கிறோம். ஆயத்த பணிகளை மேற்பார்வையிட அனைத்து 234 பிராந்தியங்களிலும் மண்டல மற்றும் மாகாண அதிகாரிகளை நியமித்துள்ளோம். சேம்பர் கமிட்டியின் பணிகளும் முழு வீச்சில் உள்ளன. பொதுக்குழு கூட்டத்திற்குப் பிறகு எங்கள் பிரச்சாரத்தைத் தொடங்குவோம். “\nவெளியேற்றப்பட்ட அதிமுக தலைவர் வி.கே.சசிகலா விடுதலை குறித்து பிரேமலதா, தனக்கு நல்ல அதிர்ஷ்டம் வாழ்த்துக்கள் என்றும், ஒரு பெண்ணாக, தேர்தல் அரசியலில் நுழைய விரும்பினால் சின்னாமாவை வரவேற்பதாகவும் கூறினார். எவ்வாறாயினும், சசிகலாவின் விடுதலை தேர்தலுக்கு முன்னர் அதிமுக மீது தாக்கத்தை ஏற்படுத்துமா என்று டி.எம்.டி.கே தலைவர் கேட்டார், இது ஆளும் கட்சியின் முற்றிலும் உள் விஷயம் என்று கூறினார்.\nகேப்டன் விஜய்காந்தின் உடல்நலம் மற்றும் தேர்தல் செயல்பாட்டில் பங்கேற்க வாய்ப்பு குறித்து பிரேமலதா, அவர் சிறப்பாக செயல்படுவதாகவும், கட்சி பிரச்சாரத்தின் கடைசி பகுதியில் பங்கேற்பார் என்றும் கூறினார்.\nஅதிமுகவுடன் தனது கட்சி இன்னும் நல்லுறவைப் பேணி வந்தாலும், கூட்டணி பங்காளிகளுக்கு பிரச்சாரம் செய்ய ஆளும் கட்சி விரைவில் இடங்களை விநியோகிப்பது குறித்து பேச்சுவார்த்தைகளைத் தொடங்க வேண்டும் என்று பிரேமலதா கூறினார். மாநிலத் தேர்தல்கள் இன்னும் சில மாதங்களே உள்ளன.\nதிமுக தலைவர் ஸ்டாலினின் பிரதான வாக்கெடுப்பை நாங்கள் வெறுக்கிறோம், இது அரசாங்கம் அமைக்கப்பட்ட 100 நாட்களுக்குள் மக்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் என்று பிரேமலதா கூறினார், தனது கட்சி ஐந்து முறை ஆட்சியில் இருந்ததாகவும், அந்த நேரத்தில் அவர் ஒரு வாக்கெடுப்புக்கு வாக்குறுதியளித்தார் என்றும் கூறினார்.\nபாப் கலாச்சாரம் டிரெயில்ப்ளேஸர். சிந்தனையாளர். சிக்கல் செய்பவர். இசை குரு. சமூக ஊடக நிபுணர். மாணவர். ஜாம்பி நிபுணர்.\nREAD பொருளாதார ஜாதகம் 17 டிசம்பர் 2020: மேஷம் கடின உழைப்பின் பலன்களைப் பெறும், இந்த 7 இராசி அறிகுறிகளில் உள்ள பண ஆதாயங்களின் தொகை - பண நிதி ஜாதகம் 17 டிசம்பர் 2020 இன்று ஆர்திக் ராஷிஃபால் அனைத்து இராசி அடையாளம் நிதி பணம் முதலீட்டு ஜோதிடம் lbsd\nமாற்றத்திற்கு தமிழகம் தயாராகிறது: கமல்ஹாசன் | புதிய கோவை\nசேலம்: அரசியல் மாற்றத்திற்கு தமிழகம் தயாராகி வருவதாக மக்கால் நீதி மயம் (எம்.என்.எம்) நிறுவனர் கமல்ஹாசன்...\nபீகாரில் இரண்டாம் கட்ட சட்டசபை தேர்தலில் 53.51 சதவீதம் வாக்களிப்பு: தேர்தல் ஆணையம்\nவிவசாய சட்டத்திற்கு எதிராக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் 4 பிரச்சினைகள் குறித்து விவாதிக்க 4 மாநிலங்கள் டெல்லியில் கலந்து கொள்ள தயாராக உள்ளன – விவசாயிகள் டெல்லிக்கு பயணம் செய்தனர்: அன்னடாட்டா மில்லியன் கணக்கான முயற்சிகள் இருந்தபோதிலும் பின்வாங்கவில்லை, அரசாங்க முயற்சி\nAK Vs AK: திரைப்பட காட்சிக்கு IAF பொருள்களுக்குப் பிறகு அனில் கபூர் மன்னிப்பு கேட்கிறார் | ‘AK Vs AK’ சர்ச்சை: விமானப்படை ஆட்சேபனை தெரிவித்த பின்னர் அனில் கபூர் மன்னிப்பு கேட்கிறார்\nPrevious articleவருண் தவான், நடாஷா தலாலின் காக்டெய்ல் விருந்து நினைவில் கொள்ள வேண்டிய இரவு. படங்கள் உள்ளே\nNext articleடெலிகிராம் 7.4 மூலம் உங்கள் வாட்ஸ்அப் அரட்டை வரலாற்றை எளிதாக நகர்த்தலாம்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nகிரிக்கெட் பந்தய உதவிக்குறிப்புகள் & பேண்டஸி கிரிக்கெட் போட்டி கணிப்புகள்: பிக் பாஷ் லீக் 2020-21 – பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் வி பிரிஸ்பேன் ஹீட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinibitz.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%8F%E0%AE%9C%E0%AE%BF/", "date_download": "2021-05-07T01:58:58Z", "digest": "sha1:ASW325WC6Y7N6WXMWFVL5Q6QRDIUHGCP", "length": 15722, "nlines": 75, "source_domain": "www.tamilcinibitz.com", "title": "பிரதமர் மோடி ஃபிக்கி ஏஜிஎம் பேச்சு சிறப்பம்சங்கள்: புதிய பண்ணை சட்டங்கள் மற்றும் விவசாயிகள் எதிர்ப்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடி பேசுகிறார் - புதிய விவசாய சட்டங்களுக்கு எதிரான போராட்டங்களுக்கு மத்தியில் பிரதமர் மோடி விவசாயிகளிடம் பேசுகிறார் - அனைத்தும் உங்களுக்கானது!", "raw_content": "முழுமையான செய்தி உலகம் உங்களுக்காக.\nபிரதமர் மோடி ஃபிக்கி ஏஜிஎம் பேச்சு சிறப்பம்சங்கள்: புதிய பண்ணை சட்டங்கள் மற்றும் விவசாயிகள் எதிர்ப்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடி பேசுகிறார் – புதிய விவசாய சட்டங்களுக்கு எதிரான போராட்டங்களுக்கு மத்தியில் பிரதமர் மோடி விவசாயிகளிடம் பேசுகிறார் – அனைத்தும் உங்களுக்கானது\nFICCI ஆண்டு பொதுக் கூட்டத்தில் புதிய விவசாய சட்டங்களை எதிர்ப்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி பேசுகிறார்\nபிரதமர் கூறினார்- நாங்கள் எடுத்த நடவடிக்கைகளால் விவசாயத் துறை ஏற்கனவே துடிப்பானது\nவிவசாயிகள் தங்கள் பயிர்களை மண்டிக்கு வெளியே விற்க விருப்பம் உள்ளது\nவிவசாயிகளுக்கு டிஜிட்டல் மேடையில் பயிர்களை விற்கவும் வாங்கவும் விருப்பம் கிடைத்தது\nபுதிய விவசாய சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் உழவர் அமைப்புகளின் போராட்டங்களுக்கு மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் விவசாயிகளிடம் முறையிட்டுள்ளார். பல துறைகளுக்கு இடையில் நிற்கும் சுவர்களை தனது அரசாங்கம் அகற்றி வருவதாக பிரதமர் கூறினார். தொழில்துறை அமைப்பான FICCI இன் 93 வது வருடாந்திர பொதுக் கூட்டத்தில் (AGM), ‘இந்த சீர்திருத்தங்களுக்குப் பிறகு, விவசாயிகளுக்கு புதிய சந்தைகள், புதிய விருப்பங்கள், தொழில்நுட்ப நன்மைகள், நாட்டின் நவீன குளிர் சேமிப்பு உள்கட்டமைப்பு ஆகியவை கிடைக்கும்’ என்ற சமீபத்திய சட்டங்களைப் பற்றி மோடி கூறினார்.\nடெல்லியில் இந்த புதிய சட்டங்களுக்கு எதிராக ஆயிரக்கணக்கான விவசாயிகள் இரண்டு வாரங்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுடன் பல சுற்று பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு அரசாங்கம் சில திருத்தங்களை முன்மொழிந்தது, ஆனால் அவை மூன்று சட்டங்களையும் திரும்பப் பெறுவதைக் காட்டிலும் குறைவான எதற்கும் தயாராக இல்லை. மத்திய அரசு மீண்டும் விவசாயிகள் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்த முயற்சிக்கிற���ு. இதற்கிடையில், பிரதமர் மோடி மீண்டும் சனிக்கிழமை விவசாயிகளுக்கு புதிய விவசாய சட்டங்களின் நன்மைகளை பட்டியலிட்டார்.\nவிவசாயத்தில் அதிக முதலீடு வரும்: பிரதமர் மோடி\nவேளாண் துறை மற்றும் வேளாண் உள்கட்டமைப்பு, உணவு பதப்படுத்துதல், சேமிப்பு, குளிர் சங்கிலி போன்ற பிற துறைகளுக்கு இடையில் சுவர்களைக் கண்டோம். இப்போது அனைத்து சுவர்களும் அகற்றப்படுகின்றன, அனைத்து தடைகளும் அகற்றப்படுகின்றன. இந்த சீர்திருத்தங்களுக்குப் பிறகு, விவசாயிகளுக்கு புதிய சந்தைகள் கிடைக்கும், புதிய விருப்பங்கள், தொழில்நுட்பம் பயனடைகிறது, நாட்டின் குளிர் சேமிப்பு உள்கட்டமைப்பு நவீனமாக இருக்கும். இந்த அனைத்து விவசாயத் துறையிலும் அதிக முதலீடு இருக்கும். எனது நாட்டின் விவசாயி இவற்றிலிருந்து அதிக பயன் பெறப்போகிறார்.\nஇன்று, இந்தியாவில் விவசாயிகள் தங்கள் பயிர் சந்தைகளையும் வெளியையும் விற்க விருப்பம் உள்ளது. இன்று, இந்தியாவில் மண்டிஸ் நவீனமயமாக்கப்பட்டு, விவசாயிகளுக்கு டிஜிட்டல் மேடையில் பயிர்களை விற்கவும் வாங்கவும் வாய்ப்பளிக்கிறது. இந்த அனைத்து முயற்சிகளின் குறிக்கோள் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பது, நாட்டை வளமாக்குவது. நாட்டின் விவசாயி செழிக்கும் போது, ​​நாடும் செழிக்கும்.\nREAD தமிழகத்தில் 6.26 மில்லியன் வாக்காளர்கள் உள்ளனர், பெரும்பாலும் பெண்கள் சென்னை செய்தி\nஉழவர் இயக்கம் தொடர்பான ஒவ்வொரு செய்திகளையும் படிக்க கிளிக் செய்க\nகிராமத்தில் முதலீடு செய்ய வணிகர்களிடம் முறையிடவும்\nகிராமப்புறங்களில் சிறந்த இணைப்பிற்காக சமீபத்தில் தொடங்கப்பட்ட ‘பி.எம்-வாணி’ திட்டத்தையும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். அவர்கள், “பிரதமர்-வாணி திட்டம் இதன் கீழ், நாடு முழுவதும் பொது வைஃபை ஹாட்ஸ்பாட்களின் நெட்வொர்க் உருவாக்கப்படும். இது ஒவ்வொரு கிராமத்திலும் பரந்த அளவில் இணைப்பிற்கு வழிவகுக்கும். “கிராமப்புறங்களில் முதலீடு செய்யுமாறு ஏஜிஎம்மில் உள்ள வணிகர்களிடம் அவர் வேண்டுகோள் விடுத்தார். மோடி,” கிராமப்புற மற்றும் அரை கிராமப்புறங்களில் சிறந்த இணைப்பிற்கான இந்த முயற்சிகளில் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறேன். ஆக. 21 ஆம் நூற்றாண்டின் இந்தியாவின் வளர்ச்சிக்கு கிராமங்களும் சிறிய நகரங்களும் துணைபுரியப் போகின்றன என்பது உறுதி. உங்களைப் போன்ற தொழில்முனைவோர் கிராமங்களிலும் சிறு நகரங்களிலும் முதலீடு செய்யும் வாய்ப்பை இழக்கக்கூடாது. “\nபாப் கலாச்சாரம் டிரெயில்ப்ளேஸர். சிந்தனையாளர். சிக்கல் செய்பவர். இசை குரு. சமூக ஊடக நிபுணர். மாணவர். ஜாம்பி நிபுணர்.\nடெல்லியில் இருந்து நொய்டாவுக்கு வருபவர்கள் புதன்கிழமை முதல் கோவிட் -19 க்கு தோராயமாக சோதனை செய்யப்படுவதாக ஜிபி நகர் டி.எம்.சுஹாஸ் எல்.ஒய் கூறினார்\nடெல்லியில் இருந்து நொய்டாவுக்கு வரும் மக்கள் புதன்கிழமை முதல் ஆச்சரியமான கோவிட் -19 விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள்....\nஐபிஎல் 2020 சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எலிமினேட்டர் போட்டி சிறப்பம்சங்கள் மற்றும் அறிக்கை\nதமிழக வாக்கெடுப்புகள்: இருக்கை ஒதுக்கீடு எடப்பாடி கே பழனிசாமி, பன்னீர்செல்வம் அதிமுக முகாம்களுக்கு இடையே உராய்வை உருவாக்கக்கூடும் | சென்னை செய்தி\nPrevious articleவிஜய் மல்லியா சொத்து: விஜய மல்லையா தனது பிரஞ்சு சொத்தை விற்ற பிறகு பிரிட்டிஷ் நீதிமன்றத்தில் இருந்து நிதி கேட்கிறார், விஜய் மல்லையா பிரஞ்சு சொத்து விற்பனைக்கு பிறகு பிரிட்டிஷ் நீதிமன்றத்தில் பணம் கேட்கிறார்\nNext articleஇன்று வானிலை முன்னறிவிப்பு நேரடி புதுப்பிப்புகள்: டெல்லி, நொய்டா, ஆக்ரா, காஜியாபாத், சென்னை, உத்தரப்பிரதேசம், ஜார்க்கண்ட் மழை மற்றும் வானிலை அறிக்கை செய்திகள் – வானிலை முன்னறிவிப்பு இன்று நேரடி புதுப்பிப்புகள்: ஹரியானாவில் அடுத்த 72 மணி நேரத்தில் வெப்பநிலை 5 டிகிரிக்கு குறையும், பீகாரில் 14-15 டிசம்பரில் மழை பெய்ய வாய்ப்புகள்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nகோவிட் -19: பிரிட்டன் கடந்த 24 மணி நேரத்தில் 1,610 இறப்புகளுடன் தினசரி இறப்புகளில் புதிய சாதனை படைத்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2020/12/7_16.html", "date_download": "2021-05-07T00:42:19Z", "digest": "sha1:JUEDB6FK72EHNTGMMGNGA5U7AREUYNDV", "length": 7547, "nlines": 89, "source_domain": "www.yarlexpress.com", "title": "யாழ் போதனா வைத்தியசாலையின் பிசிஆர் பரிசோதனையில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி. \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nயாழ் போதனா வைத்தியசாலையின் பிசிஆர் பரிசோதனையில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.\nஇன்று யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 402 பேருக்கு பிசீஆர் பரிசோதனை செய்யப்பட்டன. இதன் போது ஏழாலையைச் சேர்ந்த 2 பேருக்கு தொற்று உ...\nஇன்று யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 402 பேருக்கு பிசீஆர் பரிசோதனை செய்யப்பட்டன.\nஇதன் போது ஏழாலையைச் சேர்ந்த 2 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇது தவிர கோப்பாய் சிகிச்சை நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பவர்களோடு பராமரிக்க வந்திருக்கும் உறவினர்கள் நான்கு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nமட்டக்களப்பில் இருந்து போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஅத்துடன் சோதனைக் உட்பட்டவர்களில் ஏனையவர்களுக்கு தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.\nவணிகம் / பொருளாதாரம் (7)\nமாநகர காவல்படையினரின் சீருடை பறிமுதல் - மாநகரசபைக்கு ஆப்பு வைத்த பொலீஸார் ..\nBREAKING NEWS :- ஊரடங்கு தொடர்பில் இராணுவத் தளபதி சற்றுமுன் வெளியிட்ட அறிவிப்பு\nஅத்தியாவசிய சேவைக்கு மாத்திரமே அனுமதி\nYarl Express: யாழ் போதனா வைத்தியசாலையின் பிசிஆர் பரிசோதனையில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.\nயாழ் போதனா வைத்தியசாலையின் பிசிஆர் பரிசோதனையில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.sivanyonline.com/2011/04/blog-post.html", "date_download": "2021-05-07T00:04:47Z", "digest": "sha1:V2565GNDST5J72ASPSRG4XNVY7Z7QQOH", "length": 10028, "nlines": 129, "source_domain": "www.sivanyonline.com", "title": "பழங்கள் ~ SIVANY", "raw_content": "\nபழங்கள் சுவையானவை, சத்தானவை, அழகானவை. அதுமட்டுமல்லாமல் அழகைத் தருபவையும் கூட.\nபொதுவாக பழங்களின் பல நன்மைகள் பற்றிக் கேள்விப் பட்டிருக்கின்றோம். ஆனால் அவை அழகைக் கூட்டும் விதமாக எவ்வாறு பயன்படுத்தப் படுகின்றன என்று பார்க்கலாம்.\nபொதுவாகவே பப்பாளிப் பழம் இயற்கை பிளிச்சாக பயன்படுகின்றது. பப்பளிப் பழத்தை எடுத்து நன்றாக மசித்து கூழாக்கிக் கொண்டு அதனை முகத்தில் பூசி 15 நிமிடங்களின் பின்பு கழுவி விட்டால் நாளடைவில் முகச் சருமம் பொலிவ�� பெறும்.\nவாழைப் பழத்தை எடுத்து அதனை சிறிது பால்விட்டு மசித்து பசையாக்கிக் கொண்டு பின்னர் சிறிதளவு தேனும் கலந்து அந்தக் கலவையை முகத்தில் பூசி பின்னர் குளிர்ந்த நீரினால் கழுவிக் கொள்ளலாம்.\nபட்டர் புருட் பழம் எழுத்து அதனை பால் விட்டு மசித்து முகத்தில் பேஸ் பக் போல் போட்டு காய்ந்தவுடன் கழுவிக் கொள்ளலாம்.\nதோடம்பழ சாறு பிழிந்து அதனை பிரிஜ்ஜில் வைத்து கட்டயாக்கி கொண்டு பின்பு அதனை துணி ஒன்றில் சுற்றி முகத்தை துடைத்துக் கொண்டால் முகம் குளிர்ச்சியடையும்.\nபேரிச்சம் பழம் எடுத்து அதனை இரவு தண்ணீரில் ஊற போட்டு பின்பு காலைவேளை அதனை நன்றாக மசித்து முகத்தில் பூசி பின்பு கழுவி விடலாம்\nஇது தவிரவும் எந்த பழமாக இருந்தாலும் நாம் அதனை முகத்தில் பூசி சிறிது நேரம் விட்டு கழுவிக் கொண்டால் அது சருமத்திற்கு அழகையும் ஆரோக்கியத்தையும் குளிர்ச்சியையும் கொடுக்கும்.\nSaree Blouse வெட்டும் தையல் முறையில் இரண்டு விதங்களைக் கையாள்வார்கள். ஒருமுறை அளவெடுத்து தைப்பது, அடுத்து அளவான இன்னுமொரு உடையைவைத்து தைப்ப...\nதமிழில் தொகைச் சொல் வர்க்கம்\nதொகைச் சொல் வர்க்கம் 1 ஒருவன் - கடவுள் 2 இருமுதுகுரவர் - தாய், தந்தை இருவகைப் பொருள் - கல்விப் பொருள், செல்வப் பொருள் இருமை - இம்...\nதமிழில் ஆண்டு நிறைவு - Anniversary\nபொதுவாக நாம் தமிழில் ஆண்டு நிறைவுகளைக் குறிப்பிடும் போது 25 ஆவது ஆண்டினை வெள்ளி விழா என்றும் , 50 வது பொன் விழா என்றும், 60 வது வைர வி...\nஞமலி என்றால் என்ன தெரியுமா\nநாய்....யாரையும் ஏசுகிறேன் என்று நினைக்க வேண்டாம். தலைப்புக்கான பதில்தான் அது. நாயின் மற்றுமொரு தமிழ்ப் பெயர்தான் ஞமலி. அது மட்டுமல்ல இன...\nஇன்றைய காலகட்டத்தில் பெண்கள் பலரும் வயது வித்தியாசமின்றி அணியும் ஆடையாக சுடிதார் அமைந்துள்ளது. இதில் சல்வார் , சுடிதார், பஞ்சாபி என பல வகைக...\nமருதானி அழகைத் தருவது மட்டுமல்ல.. மிகுந்த மருத்துவ குணம் கொண்டதும் கூட. முன்பெல்லாம் நகங்களைச் சுற்றி மருதானி போடுவது அழகான விடயமாக இருந்தத...\nஆசை முகம் மறந்து போச்சே - பின்னணிப் பாடகி சுசித்ரா\nபின்னணிப் பாடகி சுசித்ரா பல துள்ளலிசைப்பாடல்களை அதிகமாகப் பாடி கேட்டிருக்கின்றோம். ஆனால் அவரின் குரலில் இந்த 'ஆசை முகம் மறந்து போச்சே...\n ஆளுக்காள் வேறுபடும் , இடத்திற்கு இடம் வேறுபடும் , கால ஒட்டத்த��ல் வேறுபட்டும் மாறுபட்டும்கொண்டே இருக்கும். நேற்று-இன்று-...\nகாதலர் தினம் உலகளாவிய ரீதியில் Feb 14 ஆம் திகதி கொண்ணாடப்படுகின்றமை எல்லோருக்கும் தெரிந்த விடயம். காதலும் அன்பின் வடிவமே. இதற்கு முக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaipoonga.net/cinema/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA/", "date_download": "2021-05-07T01:28:02Z", "digest": "sha1:YB4BZFKFMMMIVNWL4LY5FHKURPBJP5N7", "length": 12419, "nlines": 215, "source_domain": "kalaipoonga.net", "title": "செம்மர கடத்தல் கதை திரைப்பட கல்லூரி மாணவர் இயக்கத்தில் புதுமுகங்கள் நடிக்கும் \"ஆந்திரா\" - Kalaipoonga", "raw_content": "\nHome Cinema செம்மர கடத்தல் கதை திரைப்பட கல்லூரி மாணவர் இயக்கத்தில் புதுமுகங்கள் நடிக்கும் “ஆந்திரா”\nசெம்மர கடத்தல் கதை திரைப்பட கல்லூரி மாணவர் இயக்கத்தில் புதுமுகங்கள் நடிக்கும் “ஆந்திரா”\nசெம்மர கடத்தல் கதை திரைப்பட கல்லூரி மாணவர் இயக்கத்தில்\nபேப்பர்கள். ஊடகங்களில் அதிகமாக இடம் பிடிக்கும் செய்தி செம்மர கடத்தல் பற்றியதுதான். கூலிக்கு வேலை செய்ய செல்லும் கிராம மக்கள் எப்படி இந்த கடத்தல் வழக்கில் மாட்டுகிறார்கள் இதன் பின்ணனியில் இருப்பவர்கள் யார்\nஎங்கு துவங்கி எப்படி இதன் நெட்வொர்க் நடக்கிறது என்பதை யதார்த்தமான திரைக்கதையில் “ஆந்திரா ” படத்தை இயக்கி உள்ளேன்.” என்று கூறினார் அறிமுக இயக்குனரான டி.ஏ.வினோபா.\n“ஆந்திரா ” படத்தில் நாயகனாக பார்கவன், இன்னொரு நாயகனாக ரோகித், நாயகியாக நக்மா, இன்னொரு நாயகியாக பிருந்தா, மற்றும் ரூபாவதி,\nராஜு ரெட்டி, ரூபாஸ்ரீ, தினேஷ், பானு, சித்ரகுப்தன், ராதா, லவ்லி ஆனந்த், இந்தியன் ஆகியோருடன் தயாரிப்பாளர் .ஆர்.சக்திவேல் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.\nகவிக்குமார், பூங்கொடி ச .அன்பழகன், முரளி நால்வரும் எழுதிய பாடல்களுக்கு கர்ணா இசையமைத்துள்ளார்., பவர் சிவா நடன பயிற்சி அளிக்க . அன்பு – முத்து இருவரும் இணைந்து ஒளிப்பதிவு செய்துள்ளனர்.\nபெரம்பலூர் அருகே உள்ள கொளக்காநத்தம், வேலூர், திருவண்ணாமலை, ஏலகிரி மற்றும் ஆந்திராவின் மலை பகுதிகளிலும் படம் வளர்ந்துள்ளது என்கிறார் இதன் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி உள்ள டி.ஏ. வினோபா. இவர் அடையாறில் உள்ள அரசு எம்.ஜி.ஆர். திரைப்பட கல்லூரியில் டைரக்சன் கோர்ஸ் பயின்றவர். இவர் இயக்கம் முதல் படமிது.\nஒரு மாநிலத்��ின் பெயர் தான் “ஆந்திரா “. அந்த பெயரிலேயே இந்த படத்தை சக்தி பிலிம் இண்டர்நேஷனல் என்ற நிறுவனம் சார்பில் ஆர்.சக்திவேல் தயாரித்துள்ளார்.\nமக்கள் தொடர்பு விஜயமுரளி, கிளாமர் சத்யா\nசெம்மர கடத்தல் கதை திரைப்பட கல்லூரி மாணவர் இயக்கத்தில் புதுமுகங்கள் நடிக்கும் \"ஆந்திரா\"\nதமிழ் திரைப்பட வர்த்தக சபை\nNext articleநடிகை பார்வதி-யின் அழகிய புகைப்படங்கள்\nமாநாடு டப்பிங் ஆரம்பம்… படக்குழு வெளியிட்ட புகைப்படங்கள்\nமூத்த தலைவர் ஆர்.எம்.வீரப்பனை நேரில் சந்தித்து ஆசி பெற்றார் மு.க.ஸ்டாலின் | Video\nநமீதா தியேட்டர்ஸ் – உண்மை சம்பவங்களின் அடிப்படியில் உருவாகும் படங்களை ஒளிபரப்பும் முதல் OTT தளம்\nவெளியானது 34 பேர் கொண்ட தமிழக அமைச்சரவை பட்டியல்\nவெளியானது 34 பேர் கொண்ட தமிழக அமைச்சரவை பட்டியல் தமிழகத்தின் முதலமைச்சராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை சென்னை - கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்க உள்ளார். கொரோனா பரவலை கருத்தில்...\nமாநாடு டப்பிங் ஆரம்பம்… படக்குழு வெளியிட்ட புகைப்படங்கள்\nமாநாடு டப்பிங் ஆரம்பம்... படக்குழு வெளியிட்ட புகைப்படங்கள் சிம்பு நடிப்பில் உருவாகி உள்ள படம் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கியுள்ள இப்படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார். இப்படத்தில் சிம்பு அப்துல் காலிக்...\nமூத்த தலைவர் ஆர்.எம்.வீரப்பனை நேரில் சந்தித்து ஆசி பெற்றார் மு.க.ஸ்டாலின் | Video\nமூத்த தலைவர் ஆர்.எம்.வீரப்பனை நேரில் சந்தித்து ஆசி பெற்றார் மு.க.ஸ்டாலின் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றதை அடுத்து தமிழகத்தின் அடுத்த முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பு ஏற்க உள்ளார். நாளை (மே 7...\nவெளியானது 34 பேர் கொண்ட தமிழக அமைச்சரவை பட்டியல்\nவெளியானது 34 பேர் கொண்ட தமிழக அமைச்சரவை பட்டியல் தமிழகத்தின் முதலமைச்சராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை சென்னை - கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்க உள்ளார். கொரோனா பரவலை கருத்தில்...\nமாநாடு டப்பிங் ஆரம்பம்… படக்குழு வெளியிட்ட புகைப்படங்கள்\nமாநாடு டப்பிங் ஆரம்பம்... படக்குழு வெளியிட்ட புகைப்படங்கள் சிம்பு நடிப்பில் உருவாகி உள்ள படம் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கியுள்ள இப்படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார். இப்படத்தில் சிம்பு அப்துல் காலிக்...\nமூத்த தலைவர் ஆர்.எம்.வீரப்பனை நேரில் சந்தித்து ஆசி பெற்றார் மு.க.ஸ்டாலின் | Video\nமூத்த தலைவர் ஆர்.எம்.வீரப்பனை நேரில் சந்தித்து ஆசி பெற்றார் மு.க.ஸ்டாலின் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றதை அடுத்து தமிழகத்தின் அடுத்த முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பு ஏற்க உள்ளார். நாளை (மே 7...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaipoonga.net/cinema/3%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0/", "date_download": "2021-05-07T00:17:35Z", "digest": "sha1:FDEAOO6CTEO6GRVJVPZ72ZVFECMZWGW4", "length": 18974, "nlines": 206, "source_domain": "kalaipoonga.net", "title": "3டி தொழில்நுட்பத்தில் உருவாகும் ஆதிபுருஷ் படத்தில் பிரபாஸுக்கு வில்லனாகும் பிரபல பாலிவுட் நடிகர் - Kalaipoonga", "raw_content": "\nHome Cinema 3டி தொழில்நுட்பத்தில் உருவாகும் ஆதிபுருஷ் படத்தில் பிரபாஸுக்கு வில்லனாகும் பிரபல பாலிவுட் நடிகர்\n3டி தொழில்நுட்பத்தில் உருவாகும் ஆதிபுருஷ் படத்தில் பிரபாஸுக்கு வில்லனாகும் பிரபல பாலிவுட் நடிகர்\n3டி தொழில்நுட்பத்தில் உருவாகும் ஆதிபுருஷ் படத்தில் பிரபாஸுக்கு வில்லனாகும் பிரபல பாலிவுட் நடிகர்\nஇந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்புக்குரிய படமாக அறியப்படுவது ‘ஆதி புருஷ்’. இந்தப் படம் அறிவிக்கப்பட்டதிலிருந்தே மக்கள் மத்தியில் விவாதிக்கப்படும் படமாக இருந்து வருகிறது. பிரபல இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கவுள்ள இந்தப் படத்தில் இணைந்துள்ளார் சைஃப் அலி கான்.\nஓம் ராவத் இயக்கிய ‘தன்ஹாஜி: தி அன்சங் வாரியர்’ படத்தில் வில்லனாக தனது அபாரமான நடிப்பின் மூலம் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார் சைஃப் அலி கான். தற்போது, ‘ஆதி புருஷ்’ திரைப்படத்தில் இந்தியாவின் மிகப்பெரிய வில்லனாக நடிக்க தயாராகியுள்ளார். ‘தன்ஹாஜி’ படத்துக்கு பிறகு சைஃப் அலி கான், ஓம் ராவத், பூஷன் குமார் இணையும் மிகப் பிரம்மாண்ட படம் இது. இந்த வரலாற்று திரைப்படத்தில் கொடிய, ஆபத்தான, குரூரமான குணங்கள் ஒருங்கே அமைந்த பிரதான வில்லனாக நடிக்க சைஃப் அலி கான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.\nஅவரின் வயதையொத்த நடிகர்களோடு ஒப்பிடுகையில், சைஃப் தனக்கென்று முற்றிலும் வேறுப்பட்ட ஒரு தளத்தை தக்கவைத்துக் கொண்டிருக்கிறார். அதற்கு க���ரணம் அவர் தேர்வு செய்யும் திரைப்படங்கள். திரைப்படங்களின் கதை மற்றும் உள்ளடங்கள் ஒரு புதிய விதியை உருவாக்கிக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் சைஃப் பரிசோதனை முயற்சிக்கு எப்போதும் தயாராக இருக்கிறார். கூடவே, ஒரு நடிகராக அவரது நடிப்புத்திறனும், திரை ஆளுமையும் எல்லா விதமான கதாபாத்திரங்களுக்கு அவரை பொருந்தச் செய்கிறது.\nஇதற்கு முன்பு, பல்வேறு திரைப்படங்களில் வில்லனாக நடித்ததன் மூலம் ஏராளமான விருதுகளை சைஃப் வென்றுள்ளார். அது ஓம்காராவின் லங்டா தியாகியாக இருக்கட்டும் அல்லது சமீபத்தில் வெளியான தன்ஹாஜியின் உதய்பான் ரத்தோடாக இருக்கட்டும். தீமையை வெல்லும் நன்மையை பற்றிய ஒரு இந்திய காவியத்தின் தழுவலான ஆதிபுருஷ் திரைப்படத்தில் மிகப்பெரிய வில்லனாக சைஃப் நடிக்கிறார்.\nஇது குறித்து பிரபாஸ் கூறும்போது, ‘சைஃப் அலிகானுடன் பணிபுரிவதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. ஒரு மிகப்பெரிய நடிகருடன் திரையை பகிர்ந்து கொள்வதற்கு நான் ஆவலுடன் இருக்கிறேன்’ என்றார்.\nசைஃப் அலி கான் கூறியுள்ளதாவது: ஓமி தாதாவுடன் மீண்டும் பணிபுரிவது நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். அவரது மிகப்பெரிய தொலைநோக்குப் பார்வையும், தொழில்நுட்ப ஞானமும் உள்ளது. தன்ஹாஜி படத்தை அவர் படமாக்கியதன் மூலம் சினிமாவின் மிக உயர்ந்த தொழில்நுட்பத்துக்கு அப்பால் என்னை கொண்டு சென்றார். இந்த முறை நம் அனைவரையும் கொண்டு செல்ல இருக்கிறார் இது ஒரு தனித்துவமான படைப்பு. இதன் ஒரு அங்கமாக இருப்பதில் எனக்கு அளவற்ற மகிழ்ச்சி. ஆற்றல் மிகுந்த பிரபாஸுடன் வாளை சுழற்றவும், ஆர்வமிகுந்த மற்றும் தீயசக்தி கொண்ட ஒரு பாத்திரத்தில் நடிக்கவும் நான் காத்திருக்கிறேன்.\nஇயக்குநர் ஓம் ராவத் கூறும்போது, ‘நம் காவியத்தில் உள்ள வல்லமை மிக்க வில்லனாக நடிக்க எங்களுக்கு ஒரு அற்புதமான நடிகர் தேவைப்பட்டார். நாம் வாழும் காலகட்டத்தின் மிகச்சிறந்த நடிகர்களின் ஒருவரான சைஃப் அலி கானை விட இந்த சக்திவாய்ந்த கதாபாத்திரத்தில் வேறு யார் சிறப்பாக நடிக்க முடியும் தனிப்பட்ட முறையில், அவரோடு பணிபுரிந்த ஒவ்வொரு நாளையும் நான் ரசித்தேன். அவருடனான இந்த மகிழ்ச்சிகரமான பயணத்தை மீண்டும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்’ என்றார்.\nதயாரிப்பாளர் பூஷன் குமார் கூறும்போதும் ‘தன்ஹாஜி படத்தில் தனது உஷய்பான் கதாபாத்திரத்தின் மூலம் நம் அனைவரையும் சைஃப் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். ஆதிபுருஷ் திரைப்படத்தில் தனது பாத்திரத்தின் மூலம் அதை இன்னும் ஒரு படி மேலே செல்லவிருக்கிறார். பிரபாஸுடன் நன்மைக்கும் தீமைக்கும் இடையிலான இந்த யுத்தத்தில் அவர்தான் சரியான தேர்வு.\n‘ஆதி புருஷ்’ படம் இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகவுள்ளது. இந்த 3டி கொண்டாட்டம் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் பல வெளிநாட்டு மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு பிரம்மாண்டமான முறையில் வெளியாகவுள்ளது.\nபூஷன் குமார், க்ரிஷான் குமார், ஓம் ராவத், பிரசாத் சுடார் மற்றும் ராஜேஷ் நாயர் ஆகியோர் இப்படத்தை தயாரிக்கின்றனர். இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. 2021ஆம் ஆண்டு இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி 2022ஆம் ஆண்டு பிரம்மாண்ட முறையில் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n3டி தொழில்நுட்பத்தில் உருவாகும் ஆதிபுருஷ் படத்தில் பிரபாஸுக்கு வில்லனாகும் பிரபல பாலிவுட் நடிகர்\nPrevious articleகொரோனா பரவலை தடுக்க தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது – சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்\nNext articleதிருச்சியில் மருத்துவ படிப்பு அங்கீகார தேர்வெழுதிய நடிகை சாய்பல்லவி: சமூக வலைத்தளங்களில் வைரலாகும் புகைப்படங்கள்\nமாநாடு டப்பிங் ஆரம்பம்… படக்குழு வெளியிட்ட புகைப்படங்கள்\nமூத்த தலைவர் ஆர்.எம்.வீரப்பனை நேரில் சந்தித்து ஆசி பெற்றார் மு.க.ஸ்டாலின் | Video\nநமீதா தியேட்டர்ஸ் – உண்மை சம்பவங்களின் அடிப்படியில் உருவாகும் படங்களை ஒளிபரப்பும் முதல் OTT தளம்\nவெளியானது 34 பேர் கொண்ட தமிழக அமைச்சரவை பட்டியல்\nவெளியானது 34 பேர் கொண்ட தமிழக அமைச்சரவை பட்டியல் தமிழகத்தின் முதலமைச்சராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை சென்னை - கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்க உள்ளார். கொரோனா பரவலை கருத்தில்...\nமாநாடு டப்பிங் ஆரம்பம்… படக்குழு வெளியிட்ட புகைப்படங்கள்\nமாநாடு டப்பிங் ஆரம்பம்... படக்குழு வெளியிட்ட புகைப்படங்கள் சிம்பு நடிப்பில் உருவாகி உள்ள படம் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கியுள்ள இப்படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார். இப்படத்தில் சிம்பு அப்துல் காலிக்...\nமூத்த தலைவர் ஆர்.எம்.வீரப்பனை நேரில் சந்தித்து ஆசி பெற்றார் மு.க.ஸ்டாலின் | Video\nமூத்த தலைவர் ஆர்.எம்.வீரப்பனை நேரில் சந்தித்து ஆசி பெற்றார் மு.க.ஸ்டாலின் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றதை அடுத்து தமிழகத்தின் அடுத்த முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பு ஏற்க உள்ளார். நாளை (மே 7...\nவெளியானது 34 பேர் கொண்ட தமிழக அமைச்சரவை பட்டியல்\nவெளியானது 34 பேர் கொண்ட தமிழக அமைச்சரவை பட்டியல் தமிழகத்தின் முதலமைச்சராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை சென்னை - கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்க உள்ளார். கொரோனா பரவலை கருத்தில்...\nமாநாடு டப்பிங் ஆரம்பம்… படக்குழு வெளியிட்ட புகைப்படங்கள்\nமாநாடு டப்பிங் ஆரம்பம்... படக்குழு வெளியிட்ட புகைப்படங்கள் சிம்பு நடிப்பில் உருவாகி உள்ள படம் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கியுள்ள இப்படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார். இப்படத்தில் சிம்பு அப்துல் காலிக்...\nமூத்த தலைவர் ஆர்.எம்.வீரப்பனை நேரில் சந்தித்து ஆசி பெற்றார் மு.க.ஸ்டாலின் | Video\nமூத்த தலைவர் ஆர்.எம்.வீரப்பனை நேரில் சந்தித்து ஆசி பெற்றார் மு.க.ஸ்டாலின் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றதை அடுத்து தமிழகத்தின் அடுத்த முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பு ஏற்க உள்ளார். நாளை (மே 7...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://prosperspiritually.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-66/", "date_download": "2021-05-07T01:09:02Z", "digest": "sha1:ZKVSQE3HVTVYVCMB7KBO223I7M2D5OYH", "length": 5714, "nlines": 86, "source_domain": "prosperspiritually.com", "title": "சிந்திக்க வினாக்கள்-66 - Prosper Spiritually", "raw_content": "\nசிந்தித்தலின் அன்றாட சுயசோதனை பயிற்சி\nவாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு\nகல்வியின் அங்கங்களாக, வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறுபவை என்ன அவற்றில் நான்காவது அங்கத்தின் முக்கியத்துவம் என்ன\nவாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்\nசென்ற சிந்திக்க வினாக்கள் பகுதியில் கேட்டிருந்த வினாக்களுக்கான விடைகள் கீழே தரப்பட்டுள்ளன. உங்கள் விடைகளுடன் சரிபார்த்துக் கொள்ளவும்.\nவீட்டைப் பற்றி நினைக்கிறோம். அங்குள்ள சூழ்நிலைகளுக்கேற்ப பதிந்த பதிவுகள் எண்ணங்களாகவரும். ஆனால் இராமாயணத்தையோ அல்லது மகாபாரதத்தையோ நினைத்தால் உயர்ந்த குணங்கள் வரும். எனவேதான் சாதாரண மக்களைவிட இலக்கியங்களை வாசித்தவர்கள் உயர்ந்து நிற்கிறார்கள். ……..(மகரிஷி அவர்கள்)\nமொழிக்கு ஒழுக்கம் கூறுவது இலக்கணம். வாழ்க்கைக்கு ஒழுக்கம் கூறுவது இலக்கியம். …மகரிஷி அவர்கள்.\nPrev:இனிதினும் இனிது அறிவினரைக் கனவிலும் நனவிலும் காண்பதுதானே\nNext:சிந்திக்க அமுத மொழிகள்- 67\nசிந்தித்தலின் அன்றாட சுயசோதனை பயிற்சி\nசிந்தித்தலின் அன்றாட சுயசோதனை பயிற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.haiyanbolt.com/products/stamping-parts", "date_download": "2021-05-07T01:49:39Z", "digest": "sha1:P7SV5OKS6OQLJJSTJDBT6KMX264GH2DR", "length": 19787, "nlines": 175, "source_domain": "ta.haiyanbolt.com", "title": "ஸ்டாம்பிங் & வெல்டிங் பாகங்கள் உற்பத்தியாளர், ஸ்டாம்பிங் மற்றும் வெல்டிங் பாகங்கள் சப்ளையர் - ஹையன்போல்ட்.காம்", "raw_content": "\nஹெக்ஸ் சாக்கெட் வூட் ஸ்க்ரூ\nஹெக்ஸ் ஃபிளேன்ஜ் வூட் ஸ்க்ரூ\nஹெக்ஸ் டோம் தொப்பி நட்\nதிரிக்கப்பட்ட ராட் & ஸ்டட்\nஸ்டாம்பிங் & வெல்டிங் பாகங்கள்\nஸ்டாம்பிங் & வெல்டிங் பாகங்கள்\nஹையான் போல்ட் பல்வேறு வகையான மற்றும் உலோகத் தயாரிப்பின் வடிவத்தை உருவாக்கும் திறன் கொண்டது.\n– வாடிக்கையாளர் வரைதல், மாதிரி, யோசனை ஆகியவற்றைக் கொண்டு வடிவமைத்தல், உருவாக்குதல், முன்மாதிரி மற்றும் தயாரித்தல்.\n- ஸ்டாம்பிங் / வளைத்தல், எந்திரம், வெல்டிங், சட்டசபை.\n- வெகுஜன உற்பத்திக்கு முன் கிடைக்கும் மாதிரிகள்\na) ஸ்டாம்பிங்: 16 டன் -500 டன்\nb) வெல்டிங்: கார்பன் டை ஆக்சைடு வெல்டிங், ஸ்பாட் வெல்டிங், டிக் வெல்டிங், தானியங்கி ரோபோ வெல்டிங்.\nc). எந்திரம்: சி.என்.சி லேத் மற்றும் இயந்திர மையங்கள், ஒளி இயந்திரங்கள் (துளையிடுதல், அரைத்தல் மற்றும் தட்டுதல்).\nd). மேற்புற சிகிச்சை: கால்வனைசிங், அனோடைஸ், துத்தநாகம் / நிக்கல் / குரோம் / டின் முலாம், தூள் பூச்சு, ஓவியம் போன்றவை\nபொருளின் பெயர் மெட்டல் ஸ்டாம்பிங் மற்றும் வெல்டிங் பாகங்கள்\nதிறன் ஸ்டாம்பிங், வெல்டிங், எந்திரம் மற்றும் அசெம்பிளி.\nவடிவமைப்பு மென்பொருள் ஆட்டோ கேட், புரோ / இ, சாலிட்வொர்க்ஸ், யுஜி (dwg, dxf, IGS, STP, XT)\nபொருள் இரும்பு, அலுமினியம், கார்பன் ஸ்டீல், பித்தளை, எஃகு போன்றவை.\nமேற்புற சிகிச்சை அனோடைஸ், குரோமேட், எலக்ட்ரோலைடிக் பிளேட்டிங், நிக்கல் பிளேட்டிங், டின் பிளேட்டிங், கால்வனைஸ், டெம்பர்டு, பெயிண்ட், பவுடர் கோட்டிங், போலிஷ் போன்றவை.\nசகிப்புத்தன்மை ஸ்டாம்பிங் 0.01-0.1 மிமீ, எந்திரம் 0.002-0.1 மிமீ\nவிண்ணப்பம் இயந்திரங்கள், மின்னணுவியல், கட்டுமானம் மற்றும் அலங்காரம், விளக்கு, வாகன பாகங்கள், போக்குவரத்து, மருத்துவம், கணினி பாகங்கள், விவசாயம், உணவு பதப்படுத்துதல் போன்றவை.\nமாதிரி முன்னணி நேரம் தனிப்பயன் மாதிரிகளுக்கு சுமார் 1-2 வாரங்கள்\nஸ்டாம்பிங் பகுதி என்பது ஒரு வகையான செயலாக்க முறையாகும், இது பிளாஸ்டிக் சிதைவு அல்லது பிரிப்பை உருவாக்க தாள், துண்டு, குழாய் மற்றும் சுயவிவரத்தில் வெளிப்புற சக்தியை செலுத்த பத்திரிகை மற்றும் இறப்பைப் பயன்படுத்துகிறது, இதனால் பணிப்பகுதியின் தேவையான வடிவம் மற்றும் அளவைப் பெற (முத்திரை பகுதி). முத்திரையிடல் மற்றும் மோசடி செய்வது பிளாஸ்டிக் செயலாக்கத்திற்கு (அல்லது அழுத்தம் செயலாக்கத்திற்கு) சொந்தமானது, இது கூட்டாக மோசடி என அழைக்கப்படுகிறது. ஸ்டாம்பிங்கிற்கான பில்லெட்டுகள் முக்கியமாக சூடான-உருட்டப்பட்ட மற்றும் குளிர்-உருட்டப்பட்ட எஃகு தகடுகள் மற்றும் கீற்றுகள்.\nவாழும் பாத்திரங்கள் மற்றும் பிற தயாரிப்புகளில் ஏராளமான முத்திரையிடும் பாகங்கள் உள்ளன.\nவார்ப்புகள் மற்றும் மன்னிப்புகளுடன் ஒப்பிடும்போது, முத்திரையிடும் பாகங்கள் மெல்லியவை, சீரானவை, ஒளி மற்றும் வலுவானவை. ஸ்டாம்பிங் ஸ்டைஃபெனர்கள், விலா எலும்புகள், விலக்குகள் அல்லது ஃபிளாஞ்சிங் ஆகியவற்றைக் கொண்டு பணிப்பொருட்களை உருவாக்க முடியும், அவை மற்ற முறைகளால் உற்பத்தி செய்வது கடினம், இதனால் அவற்றின் விறைப்புத்தன்மை மேம்படும். துல்லியமான இறப்பைப் பயன்படுத்துவதால், பணிப்பகுதியின் துல்லியம் மைக்ரான் அளவை எட்டக்கூடும், மேலும் மீண்டும் மீண்டும் துல்லியம் அதிகமாக இருக்கும், விவரக்குறிப்பு சீரானது, மற்றும் துளை மற்றும் சாக்கெட், முதலாளி போன்றவற்றைக் குத்தலாம்.\nபொதுவாக, குளிர் முத்திரை பாகங்கள் இனி எந்திரமும் இல்லை, அல்லது ஒரு சிறிய அளவு எந்திரம் மட்டுமே தேவைப்படும். சூடான ஸ்டாம்பிங் பகுதிகளின் துல்லியம் மற்றும் மேற்பரப்பு நிலை குளிர் ஸ்டாம்பிங் பகுதிகளை விட குறைவாக உள்ளது, ஆனால் அவை வார்ப்புகள் மற்றும் மன்னிப்புகளை விட இன்னும் சிறப்பாக உள்ளன, மேலும் எந்திர அளவு குறைவாக உள்ளது.\nஸ்டாம்பிங் ஒரு திறம���யான உற்பத்தி முறை. காம்பவுண்ட் டை, குறிப்பாக மல்டி பொசிஷன் முற்போக்கான டை ஆகியவற்றைப் பயன்படுத்துவதன் மூலம், ஒரு பத்திரிகையில் பல ஸ்டாம்பிங் செயல்முறைகளை முடிக்க முடியும், இது முழு தானியங்கி உற்பத்தியை இணைத்தல், சமன் செய்தல், வெற்று உருவாக்கம் மற்றும் முடித்தல் ஆகியவற்றிலிருந்து உணர முடியும். இது அதிக உற்பத்தி திறன், நல்ல வேலை நிலைமைகள் மற்றும் குறைந்த உற்பத்தி செலவு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. பொதுவாக, இது நிமிடத்திற்கு நூற்றுக்கணக்கான துண்டுகளை உருவாக்க முடியும்.\nஸ்டாம்பிங் முக்கியமாக செயல்முறையால் வகைப்படுத்தப்படுகிறது, இது பிரிப்பு செயல்முறை மற்றும் உருவாக்கும் செயல்முறை என பிரிக்கப்படலாம். பிரிப்பு செயல்முறையின் நோக்கம் தாளில் இருந்து ஒரு குறிப்பிட்ட வரையறையுடன் ஸ்டாம்பிங் பகுதிகளை பிரித்து பிரித்தல் பிரிவின் தர தேவைகளை உறுதி செய்வதாகும். ஸ்டாம்பிங்கிற்கான தாள் உலோகத்தின் மேற்பரப்பு மற்றும் உள் பண்புகள் ஸ்டாம்பிங் தயாரிப்புகளின் தரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஸ்டாம்பிங் பொருட்களின் தடிமன் துல்லியமானது மற்றும் சீரானது என்பது அவசியம்; ஸ்பாட், வடு, கீறல் அல்லது மேற்பரப்பு விரிசல் இல்லாமல் மேற்பரப்பு மென்மையானது; மகசூல் வலிமை வெளிப்படையான திசை இல்லாமல் சீரானது; சீரான நீட்சி அதிகம்; மகசூல் விகிதம் குறைவாக உள்ளது; வேலை கடினப்படுத்துதல் குறைவாக உள்ளது\nவீடு / தயாரிப்புகள் / ஸ்டாம்பிங் & வெல்டிங் பாகங்கள்\nதனிப்பயன் கடல்சார் உலோக வெல்டிங் படகு அலமாரி அடைப்புக்குறி விற்பனை\nதனிப்பயன் கடல்சார் உலோக வெல்டிங் படகு அலமாரி அடைப்புக்குறிகள்\nஷாங்கில் வெல்டிங் வாஷருடன் ஹெக்ஸ் போல்ட்\nசூரிய கூரை கொக்கிக்கு எஃகு வெல்டிங்\nவெல்டிங் தட்டுடன் டி போல்ட் திரிக்கப்பட்ட தடி\nவெல்டிங் மற்றும் ஸ்டாம்பிங் அடைப்புக்குறி\nஇருக்கைக்கு வெல்டிங் மற்றும் ஸ்டாம்பிங் அடைப்பு\nஆட்டோ பஸ் பயணிகள் இருக்கைக்கு வெல்டிங் மற்றும் ஸ்டாம்பிங் அடைப்பு\nபயணிகள் இருக்கைக்கு வெல்டிங் மற்றும் ஸ்டாம்பிங் அடைப்பு\nவெல்டிங் மற்றும் ஸ்டாம்பிங் மெட்டல் பெஞ்ச் ஷெல்விங் அடைப்புக்குறி\nதிரிக்கப்பட்ட ராட் & ஸ்டட்\nஸ்டாம்பிங் & வெல்டிங் பாகங்கள்\nதிரிக்கப்பட்ட ராட் & ஸ்டட்\nஹையான் போல்ட் க���, லிமிடெட்\nசேர்: எண் 883 லியாங்சியாங் சாலை, வுயுவான் டவுன், ஹையான், ஜெஜியாங், சீனா\nபதிப்புரிமை © 2015 ஹையான் போல்ட் கோ., லிமிடெட், அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. | எக்ஸ்எம்எல் தள வரைபடம் | இயக்கப்படுகிறது Hangheng.cc", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akattiyan.lk/2021/05/blog-post_78.html", "date_download": "2021-05-07T00:55:17Z", "digest": "sha1:XZ45Z5E2IK5IRDDDGRDALNMTI6XA5UKS", "length": 6168, "nlines": 68, "source_domain": "www.akattiyan.lk", "title": "நீரில் மூழ்கி பெண்ணொருவரும் சிறுவர்கள் இருவரும் உயிரிழப்பு - அகத்தியன் | Online", "raw_content": "\nHome இலங்கை நீரில் மூழ்கி பெண்ணொருவரும் சிறுவர்கள் இருவரும் உயிரிழப்பு\nநீரில் மூழ்கி பெண்ணொருவரும் சிறுவர்கள் இருவரும் உயிரிழப்பு\nதிவுலபிட்டி - ஹல்பே - மனம்பெல்ல பிரதேசத்தில் பாதுகாப்பற்ற முறையில் காணப்பட்ட நீர் நிறைந்த குட்டையில் வீழ்ந்து பெண்ணொருவரும் சிறுவர்கள் இருவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஉயிரிழந்தவர்களுள் 42 வயதான தாயும்,10 வயதான அவரது தாயும் அடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅத்துடன் உயிரிழந்த இன்னொருவர் மேற்படி நபர்களின் வீட்டிற்கு அருகாமையில் உள்ள வீடொன்றில் வசித்து வந்த 9 வயதான சிறுமி எனவும் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nகீரை பறிக்கச் சென்ற போது அவர்கள் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவற்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.\nநீரில் மூழ்கி பெண்ணொருவரும் சிறுவர்கள் இருவரும் உயிரிழப்பு Reviewed by Chief Editor on 5/04/2021 12:46:00 pm Rating: 5\nபாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் மேலதிக வகுப்புகளுக்கு மறு அறிவித்தல் வரை விடுமுறை\nபாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் மேலதிக வகுப்புகளுக்கு மறு அறிவித்தல் வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், நோன்பு பெருநாள், வெசாக் ...\nகொரோனா பரவல் காரணமாக நாட்டின் பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள விடுமுறையானது மேலும் ஒரு வார காலத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ...\nமோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nவாகன போக்குவரத்து திணைக்களத்தின் நாரஹென்பிட்டி மற்றும் வேரஹெர அலுவலகங்கள் ஒரு வாரத்திற்கு மூடப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம த...\nDReAM என அறிமுகப்படுத்தப்பட்டுள்ள முற்பாதுகாப்பு விதிமுறைகளுக்கமைய மதுபான சாலைகளை திறந்து வைப்பதற்க��� அனுமதி வழங்கப்பட்டுள்ளது. D – சமூக இடை...\nமுழு அதிகாரம் : அகத்தியன் ஊடக சேவை 2020\nஆசிரியர் பீட தெடர்புகளுக்கு 0779516119\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/mankatha-ajith/", "date_download": "2021-05-07T00:50:34Z", "digest": "sha1:XPGY55PTFHCQNPWY7YVI276INBJ6UHG4", "length": 7276, "nlines": 161, "source_domain": "www.tamilstar.com", "title": "தல அஜித் அளவிற்கு எனக்கு மாஸ் கிடையாது..! பிரபல பாலிவுட் நடிகர் கேட்ட விஷயம் - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nதல அஜித் அளவிற்கு எனக்கு மாஸ் கிடையாது.. பிரபல பாலிவுட் நடிகர் கேட்ட விஷயம்\nதல அஜித் அளவிற்கு எனக்கு மாஸ் கிடையாது.. பிரபல பாலிவுட் நடிகர் கேட்ட விஷயம்\nதமிழில் மட்டுமல்லாமல் இந்திய அளவில் பிரபலமானவர் நடிகர் அஜித் குமார். இவர் தற்போது எச். வினோத் இயக்கத்தில் வலிமை எனும் படத்தில் நடித்து வருகிறார்.\nதல அஜித் என்றால் மாஸ் என்று கூட கூறலாம். இந்நிலையில் மங்காத்தா படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் பாலிவுட்டில் இருந்து கேட்டார்களாம்.\nஅப்போது ஹிந்தி ரீமேக்கில் நடிக்கவிருந்த பிரபல பாலிவுட் நடிகர் ஒருவர், “எனக்கு மங்காத்தா படத்தில் இருந்ததை விட சில மாஸ் காட்சிகள் வேண்டும்,\nஏனென்றால் எனக்கு தல அஜித் அளவிற்கு மாஸ் கிடையாது அதனால் தான் என்று கூறினாராம்” என இயக்குனர் வெங்கட் பிரபு, தான் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.\nப்ரேமம் படத்தின் தமிழ் ரீமேக்கில் இந்த நடிகரால் மட்டுமே நடிக்க முடியும், அல்போன்ஸ் புத்திரனே கூறிய தகவல்\nரஜினி, விஜய், அஜித்தால் முடியாததை கூட செய்துகாட்டி சாதனை படைத்த நடிகர் தனுஷ்\nஉயர் அதிகாரியின் மகள் கடத்தப்பட அவரை போலீஸ் அதிகாரி வரலட்சுமி காப்பாற்றுகிறார். அதன் தொடர்ச்சியாக பெண் கடத்தல்...\nகனடியப் பெண்களில் நாடு தழுவிய உயர்சாதனை படைத்த ஈழப்பெண்\nஇந்தியாவுக்கு அவசர மருத்துவ உதவி பொருட்களை அனுப்பியது க��டா\n12 வயதிற்கு மேற்பட்டவர்கள் Pfizer தடுப்பூசியை பெற Health கனடா அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2020/09/blog-post_338.html", "date_download": "2021-05-07T02:00:42Z", "digest": "sha1:BVSIMSQC2ZJL47XPDLADU6W5B7OYJVBT", "length": 9989, "nlines": 93, "source_domain": "www.yarlexpress.com", "title": "அம்பிட்டிய சுமனரத்தன தேரருக்கு எதிராக அழைப்பாணை... \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nஅம்பிட்டிய சுமனரத்தன தேரருக்கு எதிராக அழைப்பாணை...\nஅரச அதிகாரிகளின் கடமைக்கு தடை ஏற்படுத்தி, இடையூறு விளைவித்தமை தொடர்பில் மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்தன தேரருக்கு எத...\nஅரச அதிகாரிகளின் கடமைக்கு தடை ஏற்படுத்தி, இடையூறு விளைவித்தமை தொடர்பில் மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்தன தேரருக்கு எதிராக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் அழைப்பாணை வௌியிட்டுள்ளது.\nஅதன்படி எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன்னர் பொலிஸ் நிலையத்திலோ அல்லது நீதிமன்றத்திலோ முன்னிலையாகி வாக்குமூலம் வழங்க வேண்டும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன இன்று (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கூறினார்.\nமட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த விஹாரை அமைந்துள்ள இடத்தின் ஒரு சிறிய பகுதியில் சிலர் விவசாய நடவடிக்கையை முன்னெடுப்பதாக அம்பிட்டிய சுமனரத்தன தேர் தனது முகப்புத்தகத்தின் ஊடாக காணொளி ஒன்றை வெளியிட்டு தெரிவித்திருந்தார்.\nஅதன் பின்னர் அந்த பகுதிக்கு நேற்று நில அளவையாளர்கள் வருகைத் தந்து அளவீடுகளை முன்னெடுத்த போது அதற்கு அம்பிட்டிய சுமன ரத்தன தேர் எதிர்ப்பை வெளியிட்டிருந்தார்.\nதொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் உரிய முறையில் அளவை நடவடிக்கையை முன்னெடுக்கவில்லை என தெரிவித்தே தேரர் எதிர்ப்பை தெரிவித்திருந்தார்.\nகுறித்த இடம் தொல்பொருள் திணைக்களத்திற்கு சொந்தமானது என குறிப்பிடும் பெயர் பலகையையும் அங்கு காண முடிந்தது.\nஅதனையடுத்து மட்டக்களப்பு பொலிஸ் நி��ைய அதிகாரிகள் தலையிட்டு அளவீட்டு செயற்பாடுகள் நிறைவு பெறும் வரை விவசாய நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டாம் என அறிவுறுத்திய நிலையில் பிரச்சினை சுமூகமடைந்தது.\nஎவ்வாறாயினும் அம்பிட்டிய சுமனரத்தன தேரரின் கட்டுப்பாட்டில் இருந்த தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களத்தின் மூன்று அதிகாரிகளும் விடுவிக்கப்பட்டு மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nவணிகம் / பொருளாதாரம் (7)\nமாநகர காவல்படையினரின் சீருடை பறிமுதல் - மாநகரசபைக்கு ஆப்பு வைத்த பொலீஸார் ..\nBREAKING NEWS :- ஊரடங்கு தொடர்பில் இராணுவத் தளபதி சற்றுமுன் வெளியிட்ட அறிவிப்பு\nஅத்தியாவசிய சேவைக்கு மாத்திரமே அனுமதி\nYarl Express: அம்பிட்டிய சுமனரத்தன தேரருக்கு எதிராக அழைப்பாணை...\nஅம்பிட்டிய சுமனரத்தன தேரருக்கு எதிராக அழைப்பாணை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2021/01/blog-post_90.html", "date_download": "2021-05-07T01:02:05Z", "digest": "sha1:GFJQDDQPYEUYRBY6DCYEUFD6WTGRFQRX", "length": 7577, "nlines": 89, "source_domain": "www.yarlexpress.com", "title": "யாழ் பல்கலைகழக மாணவர்கள் இருவர் கைது! \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nயாழ் பல்கலைகழக மாணவர்கள் இருவர் கைது\nயாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்கள் இருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பல்கலைக்கழக வளாகத்திற்குள் அமைக்கப்பட்டிருந்த உயிரிழந்தவர்களிற்கான ...\nயாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்கள் இருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nபல்கலைக்கழக வளாகத்திற்குள் அமைக்கப்பட்டிருந்த உயிரிழந்தவர்களிற்கான நினைவுத்தூபியை “தேவையற்ற ஒன்று“ என குறிப்பிட்டு, அதை அகற்றும் நடவடிக்கைக்கு யாழ்ப்பாண பல்கலைகழக துணைவேந்தர் உத்தரவிட்டிருந்தார்.\nஇதற்கு எதிராக தமிழனமே தனது எதிர்ப்பை தெரிவித்து வருகிறது. சமூக ஊடகங்களில் பெரும்பாலானவர்கள் தமது எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள். பல்கலைகழக மாணவர்களும் தமது எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள்.\nபல்கலைகழகத்திற்கு எதிரில் கூடியவர்களில் இரண்டு மாணவர்கள் பல்கலைகழகத்திற்குள் நுழைந்தார்கள் என குறிப்பிட்டு கைது செய்யப்பட்டு, யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.\nவணிகம் / பொருளாதாரம் (7)\nமாநகர காவல்படையினரின் சீருடை பறிமுதல் - மாநகரசபைக்கு ஆப்பு வைத்த பொலீஸார் ..\nBREAKING NEWS :- ஊரடங்கு தொடர்பில் இராணுவத் தளபதி சற்றுமுன் வெளியிட்ட அறிவிப்பு\nஅத்தியாவசிய சேவைக்கு மாத்திரமே அனுமதி\nYarl Express: யாழ் பல்கலைகழக மாணவர்கள் இருவர் கைது\nயாழ் பல்கலைகழக மாணவர்கள் இருவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2021/01/06/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2021-05-07T00:56:53Z", "digest": "sha1:LVXM35WPTGDAT57NOUMT52M7N3ZFCROX", "length": 14958, "nlines": 117, "source_domain": "makkalosai.com.my", "title": "கேரளாவிலும் பறவைக் காய்ச்சல் அச்சம்- நாமக்கல்லில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome இந்தியா கேரளாவிலும் பறவைக் காய்ச்சல் அச்சம்- நாமக்கல்லில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை\nகேரளாவிலும் பறவைக் காய்ச்சல் அச்சம்- நாமக்கல்லில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை\nராஜஸ்தான், மத்தியப் பிரதேசத்தைத் தொடர்ந்து கேரள மாநிலத்திலும் பறவைக் காய்ச்சல் பரவுவதால் மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் நாமக்கல் மாவட்ட கோழிப்பண்ணைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் 26 இடங்களில் சோதனைச்சாவடி அமைத்து கண்காணிக்கப்படுகிறது.\nராஜஸ்தான், மத்தியப் பிரதேச மாநிலங்களில் சில பகுதிகளில் ஏராளமான காக்கைகள் இறந்தன. இதையடுத்து, சுகாதாரத் துறையினர் நடத்திய பரிசோதனையில், அவற்றுக்கு பறவைக் காய்ச்சல் இருந்தது தெரியவந்தது.\nஇந்நிலையில், கேரளாவிலும் பறவைக் காய்ச்சல் தாக்கம் கண்டறியப் பட்டுள்ளது. அங்கு ஆலப்புழா, கோட்டயம் மாவட்டங்களில் வாத்துப்பண்ணைகள் அதிகம் உள்ளன. வாத்துகளுக்கு பறவைக்காய்ச்சல் பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள உயர்பாதுகாப்பு நோய்ஆராய்ச்சி மையத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையில் 8 மாதிரிகளில் 5 மாதிரி களில் பறவைக்காய்ச்சல் (எச்5என்8) தொற்று இருப்பது உறுதியானது.\nஇதைத் தொடர்ந்து கேரள கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகள் நோய்த் தடுப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். நோய்ப் பரவலைத் தடுக்க சுமார் 36 ஆய���ரம் வாத்துகளை அழிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nநோய் தாக்கம் உள்ள பகுதி கட்டுப் பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டு, வெளி இடங்களில் இருந்து வாத்துகள் தீவனங்கள் அப்பகுதிக்கு வரவும், அங்கிருந்து வெளியே எடுத்துச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அப்பகுதியில் மனிதர்கள் யாருக்கேனும் காய்ச்சல் அறிகுறிகள் உள்ளதா என்பதை அறியும் பணியிலும் கேரள சுகாதாரத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.\nஇதனிடையே, கேரளாவில் பறவைக் காய்ச்சல் பரவி வருவதால் நாமக்கல் கோழிப்பண்ணையாளர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே, முன்னெச் சரிக்கையாக நோய்த் தடுப்பு நட வடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டுஉள்ளனர்.\nஇதுதொடர்பாக தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு நாமக்கல் மண்டல தலைவர் டாக்டர் பி.செல்வராஜ் கூறியதாவது:\nதமிழகத்தில் பறவைக் காய்ச்சலால் எந்தப் பிரச்சினையும் இல்லை. இதனால், இங்கிருந்து முட்டைகளை அனுப்புவதில் சிக்கல் இருக்காது. எனினும், கேரள மாநிலத்தில் இரு மாவட்டங்களில் நோயின் தாக்கம் தீவிரமாக இருப்பதால் முட்டை கொள்முதல் குறைய வாய்ப்புள் ளது. இதனால் விலை குறையும். தமிழக கோழிப்பண்ணைகளில் ஆண்டு முழுவதும் நோய்த் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.\nநாமக்கல் முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் கே.மோகன் கூறும் போது, ”தமிழகத்தைப் பொருத்தவரை இங்குள்ள பண்ணைகளில் நோய்த் தடுப்பு நடவடிக்கை எப்போதும்போல் மேற்கொள்ளப்படுகிறது” என்றார்.\nதமிழ்நாடு முட்டைக் கோழிப் பண்ணையாளர்கள் மார்க்கெட்டிங் சொசைட்டி தலைவர் வாங்கிலி சுப்ரமணி யம் கூறும்போது, ”கேரள மாநிலம் ஆலப் புழா மாவட்டத்தில் ஒரு கி.மீ. சுற்றளவில் குறிப்பாக வாத்து இனத்தில்தான் நோய்த் தாக்கம் காணப்படுகிறது. அதில் இருந்து பண்ணைக் கோழிகளுக்கு பரவ வாய்ப்பில்லை. கோழிப்பண்ணை தொடர்பான எதுவும் கேரளாவில் இருந்து கொள்முதல் செய்யப்படுவதில்லை. இங்கிருந்து முட்டை மற்றும் கோழிகள் அனுப்புவதில் எந்த பாதிப்பும் இல்லை” என்றார்.\nதமிழக – கேரள எல்லைகளான கன்னியாகுமரி, தென்காசி, தேனி, திருப்பூர், கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 26 இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைத்து கேரள மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்குள் வரும் வாக���ங்களில் குளோரின் டை ஆக்ஸைடு மருந்து தெளிக்க கால்நடை பராமரிப்புத் துறை இயக்குநர் ஏ.ஞானசேகரன் உத்தரவிட்டுள்ளார்.\nநாமக்கல் சுற்றுவட்டார கோழிப்பண் ணைகளில் நாள்தோறும் சுமார் 2 கோடி முட்டைகள் மற்றும் பிராய்லர் கோழிகள் கேரளாவுக்கு செல்கின்றன.\nபேரிடராக அறிவித்தது கேரள அரசு\nதிருவனந்தபுரம்: கேரளாவில் ஆலப்புழா மாவட்டம் குட்டநாடு மற்றும் கோட்டயம் மாவட்டத்தில் நீண்டூர் உள்ளிட்ட சில பகுதிகளில் பறவைக் காய்ச்சல் தாக்கம் உள்ளது. இந்நிலையில், பறவைக் காய்ச்சலை பேரிடராக கேரள அரசு அறிவித்துள்ளது.\nகோட்டயம் மற்றும் ஆலப்புழா மாவட்டங்களில் குறிப்பிட்ட பகுதிகளில் பறவைக் காய்ச்சல் உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து பறவைக் காய்ச்சல் பேரிடராக அறிவிக்கப்படுவதாக கேரள அரசு தெரிவித்துள்ளது. மேலும் பறவைக் காய்ச்சல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் உஷார் நிலைக்கான உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் கேரள அரசு கூறியுள்ளது. குட்டநாடு, கார்த்தகாபள்ளி தாலுகாக்களில் பறவைகளின் இறைச்சி, முட்டை ஆகியவற்றின் விற்பனைக்கும் பயன்பாட்டுக்கும் ஆலப்புழா மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார். பறவைக் காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கவலைப்படத் தேவையில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nPrevious articleமோசமான வானிலை காரணமாக டிராக்டர் பேரணி ஒத்திவைப்பு\nதமிழ்நாட்டில் நாளை பதவியேற்கவிருக்கும் அமைச்சரவை பட்டியல்\nமருத்துவமனை வாசல்களில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய பஸ்கள்\nவெளிநாட்டு ஆடவரிடம் கொள்ளையடித்ததாக போலீஸ்காரர் உட்பட 4 பேர் கைது\nதமிழ்நாட்டில் நாளை பதவியேற்கவிருக்கும் அமைச்சரவை பட்டியல்\nநாட்டில் 14 புதிய கோவிட் -19 கிளஸ்டர்கள் கண்டுபிடிப்பு\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nஅடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் சாந்தா காலமானார்\nகடுமையான குளிரால் தினமும் வீரர்களை மாற்றும் சீனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/228601", "date_download": "2021-05-07T01:53:08Z", "digest": "sha1:ZLEJGKIEOE2YB7YLRSFRDIQWDAGLK76P", "length": 7508, "nlines": 87, "source_domain": "selliyal.com", "title": "அம்னோ, தேமு இன்னும் ஏன் தோல்வியுற்ற அரசாங்கத்தில் இருக்கின்றன? | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P1 அம்னோ, தேமு இன்னும் ஏன் தோல்வியுற்ற அரசாங்கத்தில் இருக்கின்றன\nஅம்னோ, தேமு இன்னும் ஏன் தோல்வியுற்ற அரசாங்கத்தில் இருக்கின்றன\nகோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், அம்னோ மற்றும் தேசிய முன்னணி உறுப்பினர்கள் இன்னும் தோல்வியுற்ற அரசாங்கத்தில் ஒரு பகுதியாக இருப்பதன் காரணத்தைக் கேட்டுள்ளார்.\nகடந்தாண்டு அக்டோபரில் அவசரகால நிலையை அறிவிக்குமாறு பிரதமர் மொகிதின் யாசின் முதலில் மாமன்னருக்கு அறிவுறுத்த முயன்றபோது, தேசிய கூட்டணி அரசாங்கத்தின் நோக்கங்கள் சரியாக இல்லை என்பதை அவர் உணரத் தொடங்கியதாகக் கூறினார்.\n“அந்நேரத்தில் கொவிட் -19 நிலைமையை நிர்வகிக்க அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகளிலும் நான் ஏமாற்றமடைந்தேன். உதாரணமாக, மாநில தேர்தல்களுக்குப் பிறகு சபாவிலிருந்து திரும்பியவர்களுக்கு தனிமைப்படுத்தல் கட்டாயமாக்கப்படவில்லை.\n“பின்னர் கொவிட் -19 தொற்றுக்கான ஒட்டுமொத்த தனிமைப்படுத்தும் காலம் ஆறு நாட்கள் என்பதை சுகாதார அமைச்சகம் அறிந்திருந்த போதிலும், சுய தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை மூன்று நாட்களாக மாற்றியது.” என்று அவர் குறிப்பிட்டார்.\nஇதைக் கருத்தில் கொண்டு, தீபகற்பத்தில் புதிய கொவிட் -19 சம்பவங்களின் எண்ணிக்கை தினசரி இரட்டை இலக்கங்களில் மட்டுமே இருந்ததால், உடனடியாக மாநிலங்களுக்கு இடையேயான பயணங்களை தடை செய்யுமாறு அரசாங்கத்திற்கு அறிவுறுத்தியதாக நஜிப் கூறினார், ஆனால் இந்த அழைப்பு கவனிக்கப்படாமல் போனது.\nஇது அக்டோபர் முதல் தீபகற்பத்தில் மூன்றாவது அலை நோய்த்தொற்றுகளைத் தாக்கி இன்று வரை தொடர்கிறது என்று அவர் கூறினார்.\nகொவிட் -19 கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டிருந்தால், பொருளாதாரம் இயல்பு நிலைக்கு திரும்பி , வெளிநாட்டு முதலீடுகள் பெருகி இருக்கும் என்று அவர் கூறினார்.\nPrevious articleதேர்தல் நடத்தப்பட வேண்டும்- தொற்று எண்ணிக்கை அதிகரித்தால் சரிசெய்துக் கொள்ளலாம்\nகொவிட்-19: நடைமுறையை மீறியதால் நஜிப்புக்கு 3,000 ரிங்கிட் அபராதம்\nகுறைந்தபட்ச ஊதியத்தை அரசு உயர்த்த முடியும் என்றால் அம்னோ ஆதரிக்கும்\nபகாங்கில் அம்னோ- பாஸ் மோதல் இல்லை\nதிமுக அமைச்சரவை : புதிய அமைச்சர்கள் பட்டியல்\nதிமுக அமைச்சரவை : அன்பில் மகேஷ் பள்ளிக் கல்வி அமைச்சர்\nபிரச��ந்த் கிஷோர் : இந்திய சட்டமன்றத் தேர்தல் வெற்றிகளின் கதாநாயகன்\nபில் கேட்ஸ் விவாகரத்து : சொத்துகளை எப்படிப் பிரிப்பார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%85%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2021-05-07T01:57:10Z", "digest": "sha1:4I7OAA7ZF6GFEMFDPHEJLIMJ26GXSNDO", "length": 4140, "nlines": 62, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"அசரீரி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஅசரீரி பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅசரீரன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\noracle ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:TamilBOT/test ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/news/workers-departed-for-their-home-states-by-train/cid2814829.htm", "date_download": "2021-05-07T02:07:54Z", "digest": "sha1:JVROXK2GT7PCCRFDJ4OD3PZ4EVQRVF4K", "length": 5481, "nlines": 41, "source_domain": "tamilminutes.com", "title": "புறப்பட்டனர் புகைவண்டியில் சொந்த மாநிலங்களுக்கு தொழிலாளர்கள்", "raw_content": "\nபுறப்பட்டனர் புகைவண்டியில் சொந்த மாநிலங்களுக்கு தொழிலாளர்கள்\nபுதுச்சேரியிலிருந்து வடமாநில மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் ஆகியோர் தங்களது சொந்த மாநிலத்திற்கு புறப்பட்டனர்\nதற்போது நாடெங்கும் இரண்டாவது அலையாக கொரோனாவின் தாக்கம் மிகவும் எழுந்துள்ளது. மேலும் இதற்கு எதிராக பல்வேறு மாநில அரசுகளும் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. ஆயினும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களுக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது. மேலும் பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு நடைமுறையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் நம் தமிழகத்திலும் இரவு நேர ஊரடங்கு நடைமுறையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் பல மாநிலங்களில் ஒரு சில காலத்திற்கு முழு நேர ஊரடங்கு நடைமுறையில் உள்ளது குறிப்பிடதக்கது.\nதற்போது பல மாநிலங்களில் வடமாநில இளைஞர்கள் அதிகமாக வேலை செய்கின்றனர். தற்போது அவர்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர் காரணம் என்னவெனில் கடந்த ஆண்டு போடப்பட்ட போன்று இந்தாண்டும் ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப ஆசைப்படுகின்றனர். அவர்களுக்கு உதவும் தற்போது நம் அண்டை மாநிலமான காணப்படும் புதுச்சேரியில்இருந்து அவர்களை தங்கள் சொந்த மாநிலத்திற்கு அனுப்புகின்றனர். மேலும் புதுச்சேரியில் ஊரடங்கு நீட்டிப்பு வட இந்திய மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் போன்ற ஒரு சொந்த மாநிலங்களுக்கு புறப்பட்டனர் என்று கூறப்படுகிறது.\nமேலும் வடமாநிலத்தவர் சொந்த ஊர் திரும்பும் புதுச்சேரியிலிருந்து புறப்பட்ட ஹவுரா எக்ஸ்பிரஸ் இன் 22 பெட்டிகளும் நிரம்பியதாக கூறப்படுகிறது. இதனால் வடமாநில இளைஞர்கள் புகைவண்டியில் பட்டதாக கூறப்படுகிறது. மேலும் பல மாநிலங்களிலும் இதுபோன்ற வடமாநிலத்தவர்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்ப ஆசைப்படுகின்றனர்.\nTamil Minutes இணையதளம் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. புதிய செய்திகளையும், பயனுள்ள தகவல்களையும் வழங்குவதே இந்த இணையதளத்தின் நோக்கமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.archives.gov.lk/web/index.php?option=com_archivesholding&Itemid=196&lang=ta&limitstart=1170", "date_download": "2021-05-07T01:59:37Z", "digest": "sha1:4QZANGCBDMHUGEC2O6WFP344M6CCFCT6", "length": 5073, "nlines": 86, "source_domain": "www.archives.gov.lk", "title": "சுவடிகள் காப்பகத்தின் பொறுப்பில் உள்ள ஆவணங்கள்", "raw_content": "தரவிறக்கம் | செய்தி | தளவரைப்படம் | களரி\nநூல்கள் மற்றும் செய்தித்தாள்களைப் பதிவுசெய்யும் பிரிவு\nதகவல் முகாமைத்துவம், பாதுகாப்பு மற்றும் பேணிக்காத்தல்\nநீங்கள் இங்கே உள்ளீர்கள்: முகப்பு சுவடிகள் காப்பகத்தின் பொறுப்பில் உள்ள ஆவணங்கள்\nசுவடிகள் கூடம் உட்பட்ட வருடம் முக்கிய சொல்\nபதிவு குழு உருவாக்கும் முகவர் நிலையம் உட்பட்ட வருடம்\nபதிவு புத்தகங்கள், சஞ்சிகைகள், Journals, செய்தித் தாள்கள், அச்சு இயந்திரங்கள்\nஒருசில அறிக்கை தொகுதிகள் பற்றிய குறுகிய விபரம் இங்கே காணப்படுகிறது\nஎமது புத்தம் புதிய புகைப்படங்கள்...\nபோர்த்துக்கேயரால் தயாரிக்கப்பட்டு பின்னர் ஒல்லாந்தரால் விருத்தி செய்யப்பட்ட தோம்புகள் அல்லது காணிப்பதிவுககளின��� தகவல் குறிப்பு.\nஉங்களுடைய முறைப்பாடுகள் இருப்பின் இன்றே அனுப்புங்கள்\nவெளியீடுகளின் புதிய விலை விபரங்கள்\nகாப்புரிமை © 2021 தேசிய சுவடிகள் காப்பக திணைக்களம். முழுப் பதிப்புரிமை உடையது.\nஅபிவிருத்தி செய்யப்பட்டது : Pooranee Inspirations (Pvt) Ltd.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2020/08/blog-post_86.html", "date_download": "2021-05-07T00:00:40Z", "digest": "sha1:WP5JCC5Y37DYYGOYCQQZI3CP2GVP5PIL", "length": 8683, "nlines": 90, "source_domain": "www.kurunews.com", "title": "கல்வித் துறை ராஜாங்க அமைச்சு பொறுப்பேற்கப்படவில்லை - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » கல்வித் துறை ராஜாங்க அமைச்சு பொறுப்பேற்கப்படவில்லை\nகல்வித் துறை ராஜாங்க அமைச்சு பொறுப்பேற்கப்படவில்லை\nபுதிய பாராளுமன்றின் அமைச்சு நியமனங்களை வழங்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.\nஏற்கனவே அமைச்சுக்களின் கட்டமைப்பு தொடர்பாக வெளியிடப்பட்ட வர்த்தமானியில் 40 ராஜாங்க அமைச்சுக்கள் பிரகடனப்படுத்தப்பட்டிருந்தன.\nகல்வி அமைச்சின் கீழ் நான்கு ராஜாங்க அமைச்சுக்கள் பிரிக்கப்பட்டிருந்தன.\nராஜாங்க அமைச்சுக்களில் 39 அமைச்சுக்கள் இன்று வழங்கப்பட்டன. கல்வித் துறை சார்ந்த கல்வி மறுசீரமைப்பு, திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாட்டு ராஜாங்க அமைச்சு யாருக்கும் வழங்கப்படவில்லை.\nஏற்கனவே விஜேதாச ராஜபக்ச விற்கு இவ்வமைச்சு வழங்குவதற்கான உடன்பாடுகள் காணப்பட்டாலும் விஜேதாச ராஜபக்ச குறித்த அமைச்சைப் பொறுப்பேற்க மறுப்புத் தெரிவித்துள்ளதோடு, இன்றைய வைபவத்தில் கலந்து கொள்ளாது நிகழ்வைப் புறக்கணித்ததாகவும் அறிய முடிகிறது.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\n\"Kurunews.com ஐ பார்வையிடும் அன்பர்களே Facebook பக்கத்தை Like பண்ணிட்டு போங்கள்\".\nமட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை; பல்வேறு செயற்பாடுகளுக்கு தடை- மாவட்ட அரசாங்க அதிபர்...\nமட்டக்ககளப்பில் தனியார் வகுப்பு நடாத்த தடை விதித்துள்ளதுடன் கொரோனா அதிகரிப்பால் மட்டு போதனா வைத்தியசாலையில் ஒட்சிசன் தேவை அதிகரித்துள்ளது....\nசகல பாடசாலைகளுக்கும் மே மாதம் 07ம் திகதி வரை விடுமுறை\nநாடளாவிய ரீதியில் அனைத்துப் பாடசாலைகளையும் தொடர்ந்தும் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் 7 ஆம் திகதி வரை பாடசாலை...\n10 , 11 தரங்களில் பாடவிதான மாற்றம் அத்துடன் க.பொ.த சா/த, உ/த பரீட்சை நடைபெறும் காலங்களும் மாற்றம்\nதரம் 10 ,11 க்கான பாடத்திட்டங்களை ஒரு வருடம் & 9 மாத காலத்திற்கு மறுசீரமைக்கவும், ஆகஸ்ட் மாதத்தில் க.பொ.த. (சா /த) பரீட்சையை நடாத்தவும்...\nபுனித மிக்கேல் கல்லூரி மாணவன் பௌதீக விஞ்ஞான பிரிவில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலிடம்.\nவெளியான 2020 ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பௌதீக விஞ்ஞான பிரிவில் குகராஜா சஜீவ் 3 A சித்திகளுடன் ...\nமட்டக்களப்பு மாவட்டத்தில் விஞ்ஞான பிரிவில் முதலிடத்தை பெற்ற மட்/பட்டிருப்பு தேசிய பாடசாலை மாணவன்\nவெளியான 2020 ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் விஞ்ஞான பிரிவில் மகிழூர் கண்ணகிபுரத்தை சேர்ந்த தம்பி...\nமட்டக்களப்பு- கல்லடியில் 09 பேருக்கு கொரோனா தொற்று உறுதி...\nமட்டக்களப்பு மாவட்ட மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுற்குற்பட்ட கல்லடி பிரதேசத்தில் இன்றைய தினம் 09 பேருக்கு கொரோன தொற்று உறுதிசெய்யப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=1504", "date_download": "2021-05-07T01:08:58Z", "digest": "sha1:CKE2YTAS7BKOO7WRSJ3YSBYIWS36LDNV", "length": 16116, "nlines": 66, "source_domain": "www.varalaaru.com", "title": "Varalaaru - A Portal For South Asian History Varalaaru - A Monthly Web Magazine for South Asian History", "raw_content": "\nசெய்திகள் வாசிப்பது வரலாறு டாட் காம் - 2\nகயிலைப் பயணம் - 3\nஆயிரம் ஆனாலும் மாயுரம் ஆகுமோ\nமாமல்லபுரக் குடைவரைகள் - 2\nஇதழ் எண். 141 > கலையும் ஆய்வும்\nஅது ஓர் இன்காலைப் போது. சிராப்பள்ளியிலிருந்து திருஎறும்பியூர்வரை பயணித்து, எறும்பியூர்க் கிளியூர்ச் சாலையில் திரும்பிய அந்த மாருதி மகிழ்வுந்தில் நான்கு பயணிகள். பின்னிருந்த இருவரையும் நமக்குத் தெரியும். டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய இயக்குநர் டாக்டர் இரா. கலைக்கோவனும் சீதாலட்சுமி ராமசாமி கல்லூரி வரலாற்றுத்துறைத் தலைவர் பேராசிரியர் மு. நளினியும்தான் அவர்கள். வண்டியின் முன்னிருக்கையில் கல்வெட்டாய்வாளர் புலவர் பி. தமிழகன். ஓட்டுநராக மகிழ்வுந்தின் உரிமையாளரும் சிராப்பள்ளி கலைஞர் கருணாநிதி நகரிலுள்ள பாரதி மெட்ரிகுலேசன் மேனிலைப்பள்ளியின் முதல்வருமான திரு. கா. பாலகிருஷ்ணன். பாறைஓவிய ஆய்வாளரான அவர் பறவையியல் வல்லுநரும்கூட.\nபுலவர் தமிழகனின் நண்பரான பாலகிருஷ்ணன் பறவையியல் ஆய்வுக்காகத் திருச்சிராப்பள்ளி மாவட்டம் கிளியூருக்கு அருகிலுள்ள பத்தாளப்பேட்டை சென்றபோது அவ்வூரின் ஊராட்சி மன்ற மேனாள் தலைவர் திரு. ம. முருகேசனும் திரு. க. தமிழ்ச்செல்வனும் அவரைச் சந்தித்தனர். பத்தாளப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் வரும் கோட்டாரப்பட்டியில் நீர்வற்றிய குளம் ஒன்றின் கரையைச் சீரமைத்தபோது கல்வெட்டெழுத்துக்களுடன் கற்பலகை ஒன்று கிடைத்த தகவலை பாலகிருஷ்ணனிடம் பகிர்ந்து கொண்ட அவர்கள், அதிலுள்ள செய்தியை அறிய விரும்புவதாகவும் டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய இயக்குநர் டாக்டர் இரா.கலைக்கோவன் உதவியுடன் அக்கல்வெட்டைப் படித்துச் செய்தியைத் தெரிவிக்குமாறும் வேண்டினர். அதற்காகத்தான் 14. 3. 2018 காலை தொடங்கியது இந்தக் கோட்டாரப்பட்டிப் பயணம். நளினியும் பறவையியல் ஆர்வலர் என்பதால் வழியெல்லாம் பறவைகள் பற்றிய கருத்துப் பரிமாறல்கள்தான். கேள்விகளும் பதில்களுமாக நேரம் பறந்தது. ஆங்காங்கே நிறுத்திப் பறவைகளைப் பார்த்தும் படமெடுத்தும் பத்தாளப்பேட்டை நெருங்கியபோது முருகேசனும் தமிழ்ச்செல்வனும் ஊர்மக்கள் சிலருடன் அங்குக் காத்திருந்தனர்.\nஅவர்கள் வழிகாட்ட அங்கிருந்து 2 கி. மீ. தொலைவிலுள்ள கோட்டாரப்பட்டி சில நிமிடங்களில் பார்வையில் பட்டது. கல்வெட்டுப் பொறிக்கப்பட்ட கற்பலகை களர் நிலம் ஒன்றின் அருகில் மண் சாலையின் ஓரத்தே நிறுத்தப்பட்டிருந்தது. 69 செ. மீ. உயரம், 48 செ. மீ. அகலம் கொண்ட அப்பலகையில் 10 வரிகளில் தமிழ் எழுத்துக்களில் செய்தி பதிவாகியிருந்தது. சிற்சில எழுத்துக்கள் தவிர கல்வெட்டுச் சிதைவின்றி முழுமையாக இருந்தமையால் படிப்பது எளிதானது. கல்வெட்டுப் பொறிப்பின் கீழுள்ள பகுதியில் கல்வெட்டுக் காலத்தோடு தொடர்பில்லாத கோட்டுருவமாக நடக்கும் பாவனையில் நாயின் வடிவம் செதுக்கப்பட்டுள்ளது. இக்கற்பலகையின் அருகே மண்ணுக்குள் பாதி புதைந்த நிலையில் சூலம் பொறிக்கப்பட்ட கனமான கல்லொன்றும் உள்ளது. அது சிவன்கோயில் ஒன்றுக்குக் கொடையளிக்கப்பட்ட நிலத்துண்டின் எல்லைக்கல்லாக இருந்திருக்கலாம் என்றார் கலைக்கோவன்.\nஉடன்வந்தோர் ஆர்வத்துடன் பார்க்க, கல்வெட்டைப் படித்துப் படியெடுத்த மு. நளினி, மூன்றாம் இராஜேந்திரசோழரின் முதன்மை அரசு அலுவலர்களுள் ஒருவரா�� மனசய தண்டநாயக்கர் அரசரின் மூன்றாம் ஆட்சியாண்டின்போது கரணப்பற்றின் கீழிருந்த கீழைச் செந்தாமரைக்கண்ணநல்லூரில் பாசன வசதிக்காக வாய்க்கால் ஒன்றை வெட்டியதையும் அந்த வாய்க்கால் கிராமத்தில் வடக்கு நோக்கிப் பாய்ந்து சூழ இருந்த நிலங்களை வளப்படுத்தியதையும் கல்வெட்டுச் செய்தியாகத் தெரிவித்தார்.\n'பெரியஸ்ரீகோயில்' என்று கல்வெட்டுகளில் அழைக்கப்படும் திருவெள்ளறைப் புண்டரீகாட்சப் பெருமாள் கோயில் இறைவன், சோழர் காலத்தில் செந்தாமரைக்கண்ணன் என்றழைக்கப்பட்டதாகக் கூறிய இரா. கலைக்கோவன், அக்காலத்தே காவிரியின் இருகரைகளிலும் வெள்ளறைக் கோயிலுக்கான நிலத்துண்டுகளைப் பெற்றிருந்த ஊர்கள் சில இப்பெயரையேற்றுச் செந்தாமரைக்கண்ணநல்லூர் என்றழைக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார். அதற்கான சான்றுகள் திருப்பைஞ்ஞீலி, திருவரங்கம் கல்வெட்டுகளில் காணப்படுவதையும் சுட்டிய அவர், அதன் பின்னணியில், மனசய தண்டநாயக்கர் வாய்க்கால் வெட்டிய செந்தாமரைக்கண்ணநல்லூரும் வெள்ளறைப் பெருமாள் பெயரிலேயே அமைந்தது எனக் கொள்ளலாம் என்றார். கோயிலுக்கு அளிக்கப்பட்ட நிலத்துண்டுகள் அவ்வூரில் இருந்தமையை ஊர்ப்பெயரின் பின்னொட்டான நல்லூர் நிறுவுகிறது.\nதிருச்சிராப்பள்ளியிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் சோழ அரசர்களின் கல்வெட்டுகள் பலவாகக் கிடைத்தபோதும் அம்மரபின் இறுதி மன்னரான மூன்றாம் இராஜேந்திரசோழரின் கல்வெட்டுகள் மிகக் குறைவாகவே கிடைத்துள்ளன. அவ்வகையில் இப்புதிய கல்வெட்டு முக்கியத்துவம் பெறுவதாகக் குறிப்பிட்ட பேராசிரியர் நளினி, சிராப்பள்ளியின் வடபுறத்தே ஒய்சளர் ஆதிக்கம் பெற்றிருந்தபோதும் பத்தாளப்பேட்டை, கிளியூர்ப் பகுதிகளில் சோழ அரசரின் மேலாண்மை இருந்ததை இக்கண்டுபிடிப்பு உறுதிப்படுத்துவதாகக் கூறினார். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இக்கல்வெட்டுப் பொறிக்கப்பட்டுள்ள கற்பலகையைக் காப்பாற்றும் விதமாக இதைத் திருச்சிராப்பள்ளி அருங்காட்சியகத்தில் சேர்க்கவேண்டும் என முருகேசனும் தமிழ்ச்செல்வனும் விழைய, காப்பாட்சியரிடம் தெரிவித்து அதற்கான முயற்சியை மேற்கொள்ளச் செய்யலாம் எனத் தெரிவித்த டாக்டர் இரா. கலைக்கோவன், கல்வெட்டைக் காப்பாற்றிய ஊர்மக்களுக்கு நன்றி கூறினார்.\nவரலாறு இப்படித்தான் நண்பர்க��ே ஊருக்கு ஊர் சிதறிக் கிடக்கிறது, தேடித் தொகுத்து அதை முழுமைப்படுத்த வேண்டும். கோட்டாரப்பட்டியில் மலர்ந்த அந்தக் காலைப் பொழுது சோழர் காலப் படைத்தலைவர் ஒருவரின் அருஞ்செயலை வரலாற்றுக்கு வழங்கிப் பெருமை கொண்டது. அது சரி, அப்படியானால் பத்தாளப்பேட்டை அது காட்டிய காட்சிகள், அடுத்த திங்களில்.\nஇப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.\nதங்கள் பெயர்/ Your Name\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://abedheen.wordpress.com/category/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-05-07T01:19:29Z", "digest": "sha1:4ITVMYYW52OETEHZYDSGIQFM67DSJSRE", "length": 44769, "nlines": 680, "source_domain": "abedheen.wordpress.com", "title": "நாகூர் சலீம் | ஆபிதீன் பக்கங்கள்", "raw_content": "\n07/05/2014 இல் 10:30\t(A.R. ஹாஜா, இசை, நாகூர் சலீம்)\nஅசனா மரைக்காயர் மூலமாக அருட்கொடை வந்து விழுந்துவிட்டது காலையிலேயே. ‘பிறை காட்டும் ரமலான்’ பாடி உள்ளத்தைக் கொள்ளை கொண்ட A.R ஹாஜா பாடிய பாடலுக்கான சுட்டி அனுப்பியிருந்தார். அதைத் தவிர மற்ற பாடல்கள் நன்றாக இருந்தன முக்கியமாக, ‘இணைகள் இல்லா குர்ஆன் ஞானபோதம் , இறைவன் அருளாலேதான் வந்த வேதம்…’ என்ற பாடல். கேட்டுப் பாருங்கள். ஒரான் பாமுக்கின் குதிரையுடன் நாளை வருகிறேன் 🙂\nகாலமானார் நம் கவிஞர் சலீம்…\n01/06/2013 இல் 08:23\t(நாகூர் சலீம்)\n‘ என்று பதிவிட்டு முழுதாக மூன்று வாரங்கள் முடியவில்லை. நம் பேரன்புக்குரிய கவிஞர் சலீம் மாமா அவர்கள் இன்று நம்மை விட்டுப் பிரிந்தார்கள். தம்பி தீனிடமிருந்து காலையிலேயே அதிர்ச்சி தரும் மெயில் . இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியுன்… மாலை 4.30க்கு நாகூரில் நல்லடக்கம் நடைபெறுகிறது. அவர்களின் மறுமை வெற்றிக்கு அனைவரும் துஆ செய்வோம்.\nஇறைவனும் இருட்டும் – அப்துல் கையூம்\nநாகூர் தந்த கொடை – (கவிஞர் சலீம் பற்றி ) நாகூர் ரூமி\nகவிஞர் சலீம் இயற்றி ஈ.எம்.ஹனீபா பாடியது\nஇன்று வந்து நாளை போகும்\nவந்த நோக்கம் இன்னதென்று தெரியுமா\nவல்ல இறைவன் சொன்ன மார்க்கம் புரியுமா\nவந்த இடத்தில் சொந்தம் கொண்ட மயக்கமா\nவாங்கி வந்த கடனைத் தீர்க்கத் தயக்கமா\nவ���ம்பு மீறிப் போவதென்றால் முடியுமா..\nகருணைநபிகள் புரிந்த தியாகம் மறையுமோ\nஅருமை உமரின் துயரம் விரைவில் ஆறுமோ\nஅலீயின் வீரம் நெஞ்சினின்றும் மாறுமோ\nஏதுக்காக இறைவன் உலகை ஆக்கினான்\nயாருக்காக நபியை இங்கே அனுப்பினான்\nதாவிப் பாயும் நரகத் தீயில் வேகவோ\nவேதக் குர்ஆன் பாதை மீது செல்லுவாய் சோதரா\n13/05/2013 இல் 20:56\t(நாகூர் சலீம்)\nஇந்தப் பாடல் கலைமாமணி கவிஞர் சலீம் அவர்கள் இயற்றி திருச்சி எஸ்.எம்.யூசுப் பாடியது . திடீரென்று இந்தப் பாடலை இப்போது இங்கே பதிவிடுவதற்கு காரணம் இருக்கிறது. நம் சலீம்மாமாவுக்கு உடல்நலம் சரியில்லை. ஆஸ்பத்திரியில் அவர்களை பார்த்து வந்ததிலிருந்து சங்கடமாயிருக்கிறது மனசு. ’காதில் விழுந்த கானங்கள்’ நூலிலிருந்து கண்ணில் பட்ட ஒன்றை டைப் செய்து பதிவிடுகிறேன். துஆ செய்யுங்கள். நன்றி. – ஆபிதீன்\nசொர்க்கம் விரும்பி வணக்கம் புரியும்\nகவனம் இருக்கட்டும் கடமை உணர்வோடு\nஅக்கரைச் சீமை போய்விடு முன்னம்\nகந்தூரி ஸ்பெஷல் : காணிக்கை நிலைத்த கதை\n11/04/2013 இல் 12:00\t(ஈ.எம். ஹனிபா, கமலப்பித்தன், தர்ஹா, நாகூர் சலீம்)\nகந்தூரியைக் களமாக வைத்து ஆபிதீன் எழுதிய ‘கடை’ படிக்காதவர்களுக்கு இந்தக் கதை தரப்படுகிறது. எழுதியவர் மர்ஹூம் எஸ்.எஸ்.அலீ (கமலப்பித்தன்) . நூல் : ‘மாபெரும் ஞானி நாகூர் யூசுஃப் தாதா’. கதைக்கு ஆதாரம் கேட்பவர்கள் கந்தூரி பற்றி கவிதை எழுதிய ஜபருல்லாநானாவை தொடர்பு கொள்ளலாம். கண்டிப்பாக ‘தப்ரூக்’ கிடைக்கும் சரி, இன்றைய ஸ்பெஷலாக கவிஞர் சலீம் எழுதி ஈ.எம். ஹனீபா பாடிய பழைய பாடல் இங்கே உண்டு. கேட்டுக்கொண்டே வாசியுங்கள் – வாசல் தேடிப் போக. மதிப்பிற்குரிய நாகூர் தர்ஹா சங்கீத வித்வான் எஸ்.எம்.ஏ. காதர் அவர்கள் நாகூர் சேத்தானுடன் இணைந்து பாடிய ‘வாராரே வாராரே ஞானக்கிளியே’ பாடல் , இன்ஷா அல்லா, ஹத்தத்திற்கு வரும். அஹ்ஹஹ்ஹாங்….. கூடு வருது பாருங்கடி…. சரி, இன்றைய ஸ்பெஷலாக கவிஞர் சலீம் எழுதி ஈ.எம். ஹனீபா பாடிய பழைய பாடல் இங்கே உண்டு. கேட்டுக்கொண்டே வாசியுங்கள் – வாசல் தேடிப் போக. மதிப்பிற்குரிய நாகூர் தர்ஹா சங்கீத வித்வான் எஸ்.எம்.ஏ. காதர் அவர்கள் நாகூர் சேத்தானுடன் இணைந்து பாடிய ‘வாராரே வாராரே ஞானக்கிளியே’ பாடல் , இன்ஷா அல்லா, ஹத்தத்திற்கு வரும். அஹ்ஹஹ்ஹாங்….. கூடு வருது பாருங்கடி….\nஈ.எம்.ஹனீபா பாட்டு : உம் வாசல் தேடி வந்தோம் ஷாஹே மீரானே…\nதண்டிக்க நாடினால் அவன் மனத்துள்\n– மவுலானா ஜலாலுத்தீன் ரூமி\nஒரு கட்டத்தில் , ‘ரிக்வத் என்கிற அற்புதத் திருவோட்டை இன்னொரு கூட்டத்தின் உபயோகத்திற்காக (ஷாஹூல் ஹமீது) பாதுஷா நாயகம் தானம் செய்துவிட்ட பிறகு, ஃபக்கீர்களின் உணவு முதலிய தேவைகள், பாதுஷா நாயகத்திற்கு அன்பர்கள் கொண்டு வந்து சமர்ப்பிக்கிற காணிக்கைப் பொருட்களைக் கொண்டு நிறைவேறி வந்தன.\nசமயங்களில் ஃபக்கீர்மார்கள், நாகப்பட்டினம் முதலான சுற்றுப்புற ஊர்களுக்குச் சென்று தம் தேவையை நிறைவேற்றிக் கொள்வார்கள்.\nஅந்த ஆரம்ப நாட்களில் இருந்து பாதுஷா நாயகத்தை மிகவும் பெருமைபடுத்திக் கொண்டாடிய சிறப்பு நாகப்பட்டினம் வாசிகளுக்கு உண்டு. சின்ன எஜமான் தம் ஊருக்கு விஜயம் செய்ய வேண்டும் என்கிற விருப்பத்தை ஃபக்கீர்களிடம் அடிக்கடி தெரிவிப்பார்கள்.\nஇருந்தும் தாதா நாயகம் தம் தந்தையை விட்டு எங்கும் செல்வதில்லை. உள்ளத்தாலும் உடலாலும் சுத்தத் துறவியாயிருந்த அவர்கள் மனத்துள் வேறு ஆசை எதுவும் இல்லாமல் இருந்ததும்தான் காரணம்.\nஎனினும், ஃபக்கீர்களின் நச்சரிப்பு தாளாமல் தந்தையிடம் அனுமதி பெற்றுக்கொண்டு ஒரு நாள் நாகப்பட்டினம் போய்வரத் துணிந்தார்கள்.\nஇச்செய்தி நாகப்பட்டின வாசிகளைப் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்திற்று. தெருவெல்லாம் தோரணம் கட்டி வள்ளல் பாதுஷாவின் மைந்தரை வரவேற்றார்கள். மாலை போட்டு மரியாதை செய்தார்கள். ஊர் கூடி விருந்தளித்தார்கள்.\nகடைசியில் ஒரு தாம்பாளத்தில், வெள்ளியும் பொன்னும் பணமும் கொண்டு வந்து தாதாநாயகத்தின் எதிரே வைத்து “இவற்றை ஏற்றுக் கொள்ளுங்கள்” என வேண்டினார்கள்.\n“இல்லை; சன்மானம் பெற்றுக்கொள்ள நான் அனுமதி பெற்றிருக்கவில்லை” என்றார்கள் தாதா நாயகம்.\n“இது சன்மானம் அல்ல; உங்கள் தந்தைக்குச் சேர வேண்டிய காணிக்கை. தந்தைக்கு உரியதை மைந்தரிடம் ஓப்படைக்கிறோம்” என்றார்கள்.\nபாதுஷா நாயகத்திற்கு தினந்தோறும் காணிக்கைப் பொருட்கள் வந்தாலும், அவற்றை வள்ளல் நாயகமோ தாதா நாயகமோ கை நீட்டி வாங்குவதில்லை. கொண்டு வருகிறர்கள் அவற்றை ஆண்டவர்களுக்கு எதிரே வைத்து விட்டுச் செல்வார்கள். அல்லது ஃபக்கீர் யாரிடமாவது ஒப்படைத்துவிட்டுப் போவார்கள்.\nஇந்த நடைமுறையை அனுசரித்து மாத்திரம் தாதா நாயகம் அப்படி ���றுக்கவில்லை; தந்தையாரிடம் முன் அனுமதி பெறாத ஒரு காரியத்தை எப்படிச் செய்வது என்று தயங்கினார்கள்.\nவற்புறுத்தலும் மறுப்பும் நிகழ்ந்து கொண்டிருந்த அந்தச் சந்தர்ப்பத்தில் ஃபக்கீர் ஒருவர் குறுக்கிட்டு, “இவற்றைப் பெற்றுக் கொள்வதால் தங்கள் தந்தையார் கோபித்துக் கொள்வார்கள் என்று எனக்குத் தோன்றவில்லை. என்னவானாலும் இவை உங்களுக்குச் சேர வேண்டிய பொருள்கள்தானே” என்று சமாதானம் செய்தார்.\nதாதா நாயகம் கைநீட்டி விட்டார்கள்.\nஇச்செய்தி செவிப்பட்டதும் பாதுஷா நாயகம் யோசனையுடன் மௌனமானார்கள். மைந்தரை இரக்கத்துடன் பார்த்தார்கள். சொன்னார்கள் : “அல்லாஹ்வின் நாட்டம் முந்திவிட்டது.”\n“நான் தவறு செய்து விட்டேனா” எனக் கைகளைப் பிசைந்து கொண்டார்கள் தாதா.\nவேதனைச் சிரிப்புடன் பாதுஷா சொன்னார்கள்: ”மகனே, நீரும் உமது சந்ததியினரும் உலகத் தேவைகளுக்காகச் சிரமப்படாதிருக்கக்கூடிய ஒரு ரகசியத்தை உமக்கு கற்றுத் தர நாடியிருந்தேன். இறை நாட்டம் வேறு விதமாகிவிட்டது., நீரும் உமது சந்ததியினரும் கைநீட்டித்தான் வாழ வேண்டும் என்று இறைவன் நாடி விட்டான். அல்ஹம்துலில்லாஹ் ஆனாலும் மகனே, நீர் வருந்த வேண்டியதில்லை. எனக்கென்று வரக்கூடிய காணிக்கைப் பொருட்களுக்கு முடிவே கிடையாது. அவற்றை உமக்கும் உமது சந்ததியினருக்கும் வல்ல நாயன் ஹலால் ஆக்கி வைத்துள்ளான்.”\nநன்றி : ஹாஜி A.T. அலிஹஸன் சாஹிபு பைஜீ , அசனா மரைக்காயர்\nஇந்த ஹந்திரி இருக்கே… – ‘நாகூரி’\nஆபிதீன் பக்கங்கள் ii :\n3. எழுத்தாளர்களின் இணையதளங்கள் (Links)\n5. கச்சேரிகள் , கஜல்கள்\n8 . நாகூர் ரூமி பதிவுகள்\nகலீபா உமர் (ரலி) (1)\nஉஸ்தாத் ஸலாமத் அலி கான் (1)\nகுலாம் முஸ்தஃபா கான் (1)\nநுஸ்ரத் ஃபதே அலிகான் (6)\nபண்டிட் ராஜ்சேகர் மன்ஸூர் (1)\nமுகேஷ் (பீர் முஹம்மது) (1)\nவிஸ்வநாதன் / ராமமூர்த்தி (2)\nதயவு பிரபாவதி அம்மா (1)\nஅப்துல் வஹ்ஹாப் பாகவி (18)\nகுலாம் காதர் நாவலர் (4)\nஅபுல் கலாம் ஆசாத் (2)\nஅஸ்கர் அலி என்ஜினியர் (1)\nஎச். பீர் முஹம்மது (2)\nகிண்ணியா எஸ்.பாயிஸா அலி (2)\nகுர்அதுல் ஐன் ஹைதர் (1)\nகுளச்சல் மு. யூசுப் (5)\nசாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (2)\nஜே. பி. சாணக்யா (1)\nஜோ டி குரூஸ் (1)\nதொ.மு. சி. ரகுநாதன் (1)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nபோர்வை பாயிஸ் ஜிப்ரி (1)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nவேங்கட சுப்புராய நாயகர் (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (5)\nஹ��ி கிருஷ்ணன் (ஹரிகி) (1)\nத சன்டே இந்தியன் (1)\nநேஷனல் புக் டிரஸ்ட் (13)\nஅங்கனெ ஒண்ணு இங்கனெ ஒண்ணு (1)\nமணல் பூத்த காடு (1)\nஇரா. சண்முக வடிவேல் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=KN%20Nehru", "date_download": "2021-05-07T01:54:13Z", "digest": "sha1:7PFS6XBYVP2ZZ6XCUXLP6EJNV4WBDVZ4", "length": 5315, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"KN Nehru | Dinakaran\"", "raw_content": "\nமேற்குதொகுதிக்குட்பட்ட எ.புதூரில் கே.என்.நேருவுக்கு ஆதரவாக சகோதரர் வாக்குசேகரிப்பு\nதிருச்சி கலெக்டர் பேட்டி பீமநகர் பள்ளிவாசலில் வாக்குசேகரித்த மேற்குதொகுதி வேட்பாளர் கே.என்.நேருவுக்கு இஸ்லாமிய சமூகத்தினர் உற்சாக வரவேற்பு\nமேற்கு தொகுதியில் வாக்கிங் சென்றவர்களிடம் கே.என்.நேரு வாக்கு சேகரிப்பு\nசெயல்வீரர் கூட்டத்தில் கே.என்.நேரு உறுதி திமுக கூட்டணிக்கு மேலும் ஒரு கட்சி ஆதரவு\nஒத்தக்கடை, புத்தூர் பகுதியில் திமுக வேட்பாளர் கே.என்.நேரு தீவிர வாக்கு சேகரிப்பு\nமு.க. ஸ்டாலினை முதல்வராக அரியணையில் ஏற்றுவோம் வேட்பாளர் கதிரவனை ஆதரித்து முதன்மை செயலாளர் கே.என்.நேரு பிரசாரம்\nகாடுவெட்டி தியாகராஜனுக்கு ஆதரவாக முதன்மை செயலாளர் கே.என்.நேரு பிரசாரம்\nகே.என்.நேரு தீவிர பிரசாரம் கிழக்கு தொகுதியில் திமுக மாபெரும் வெற்றி பெறும்\nதிருச்சி மேற்கு தொகுதி திமுக வேட்பாளர் கே.என்.நேருவுக்கு தமிழக ஏரி, ஆற்றுப்பாசன விவசாய சங்கம் ஆதரவு\nவிராலிமலையில் திமுக செயல்வீரர் கூட்டம் முதன்மை செயலாளர் கே.என்.நேரு பங்கேற்பு\nதிமுக முதன்மை செயலாளர் கே.என்.நேருவுக்கு உற்சாக வரவேற்பு கடையில் வேலை செய்த 4 சிறுவர்கள் மீட்பு\nகே.என்.நேருவுக்கு நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் பதவி\nமண்ணச்சநல்லூர் தொகுதி திமுக வேட்பாளர் கதிரவனை ஆதரித்து கே.என். நேரு பிரசாரம்\nமு.க.ஸ்டாலின் அறிவித்த 7 உறுதிமொழிகளும் தமிழக வளர்ச்சிக்கு உத்வேகம்: திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு: நச்சுனு 4 கேள்வி\nபெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வை கண்டித்து கே.என்.நேரு தலைமையில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்\nரெம்டெசிவிர் மருந்து அனைத்து மாநகராட்சிகளிலும் கிடைக்க நடவடிக்கை: ஜவாஹிருல்லா வலியுறுத்தல்\nஐதராபாத்தில் உள்ள நேரு உயிரியல் பூங்காவில் 8 ஆசிய சிங்கங்களுக்கு கொரோனா\nகே.என்.நேரு பெருமிதம் திருச்சி கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் வெல்லமண்டி நடராஜன் முக்கிய பிரமுகர்களிடம் ஆதரவு திரட்டினார்\nதமிழக சட்டமன்ற தேர்தல்: திருச்சி மேற்கு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட கே.என்.நேரு வெற்றி\nகொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா குணமடைந்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/138017", "date_download": "2021-05-07T00:11:02Z", "digest": "sha1:UERO4JIB53LAUTTEW7QTHCGEDNEJSLGP", "length": 10776, "nlines": 94, "source_domain": "selliyal.com", "title": "புதிய மாமன்னர் தேர்ந்தெடுக்கப்படுகின்றார்! கிளந்தான் சுல்தானுக்கு வாய்ப்பா? | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Featured நாடு புதிய மாமன்னர் தேர்ந்தெடுக்கப்படுகின்றார்\nகோலாலம்பூர் – கெடா சுல்தான் துவாங்கு அப்துல் ஹாலிம் (படம்) ஐந்து ஆண்டுகள் மாமன்னராக இருந்த பின்னர் பதவி விலகிச் செல்வதை முன்னிட்டு, மலேசியாவின் அடுத்த மாமன்னரை, இன்று புதன்கிழமை தொடங்கும் ஆட்சியாளர்கள் மன்றம் தேர்ந்தெடுக்கவிருக்கின்றது.\nமூன்று நாட்கள் நடைபெறும் ஆட்சியாளர்கள் மன்றம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை முடிவுறும்போது, புதிய மாமன்னர் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்படுவார். தேர்ந்தெடுக்கப்படுபவர் மலேசியாவின் 15-வது மாமன்னராகத் திகழ்வார்.\nமலேசியாவில் இருக்கும் 9 மாநில சுல்தான்கள் ஒருவர் மாற்றி ஒருவர் மாமன்னராகத் தேர்ந்தெடுக்கப்படும் புதுமையான மன்னராட்சி முறை மலேசியாவில் பின்பற்றப்படுகின்றது. உலகிலேயே, மலேசியாவில் மட்டும்தான் இந்த முறை பின்பற்றப்படுகின்றது.\nஇரண்டு முறை மாமன்னராகப் பதவி வகித்த கெடா சுல்தான்\nசுதந்திரம் பெற்றது முதல், எல்லா மாநில சுல்தான்களும் ஒருமுறை மாமன்னராக பதவி வகித்திருக்க நடப்பு கெடா சுல்தானுக்கு மட்டும் இரண்டு முறை மாமன்னராக இருக்கும் அபூர்வ வாய்ப்பு அமைந்தது.\n1970 முதல் 1975 வரை, மாமன்னராக இருந்தவர் கெடா சுல்தானாகிய துவாங்கு ஹாலிம். அதன்பின்னர் மற்ற மாநில சுல்தான்கள் தங்களின் மாமன்னர் பதவியை வகித்து முடித்த பின்னர், வரிசைப்படி மீண்டும் கெடா சுல்தானுக்கு 2012-இல் வாய்ப்பு கிடைத்தது. தனது 83-வது வயதில் மீண்டும் மாமன்னராகப் பதவியேற்ற கெடா சுல்தான், மலேசிய வரலாற்றிலேயே அதிக வயதுடைய மாமன்னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.\nஇருப்பினும் 5 ஆண்டுகள் நல்ல உடல் நலத்துடன் மாமன்னர் பணிகளை ஆற்றி, தற்போது 88-வது வயதில் தனது பதவிக் காலத்தை முடித்துக் கொண்டு மீண்டும் கெடா சுல்தானாக திரும்புகின்றார்.\nவரிசைப்படி இந்த முறை கிளந்தான் சுல்தானுக்கு மாமன்னராகும் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 47 வயதான கிளந்தானின் சுல்தான் முகமட் (படம்) 2010-இல் கிளந்தானின் அரியணையில் அமர்ந்தவர். அவரது தந்தை சுல்தான் இஸ்மாயில் பெத்ரா உடல் நலம் குன்றியதை அடுத்து சுல்தான் முகமட் கிளந்தான் சுல்தானாக அறிவிக்கப்பட்டார்.\nஇதற்கு முன்னர் அவரது தந்தையார் சுல்தான் இஸ்மாயில் பெத்ரா 1975 முதல் 1979 வரை மாமன்னராக இருந்திருக்கின்றார்.\nஆட்சியாளர்கள் மன்றக் கூட்டத்தில் சபா, சரவாக், மலாக்கா, பினாங்கு மாநில ஆளுநர்கள் கலந்து கொண்டாலும், மாமன்னரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலில் அவர்கள் பங்கு பெற மாட்டார்கள். 9 சுல்தான்கள் மட்டுமே பங்கு பெறுவார்கள்.\nபொதுவாக, அனைத்து சுல்தான்களும், கலந்து பேசி, ஒருமனதாக மாமன்னரைத் தேர்வு செய்வார்கள். அல்லது இரகசிய வாக்கெடுப்பு மூலம் பெரும்பான்மை வாக்குகள் பெறும் சுல்தான் மாமன்னராகத் தேர்ந்தெடுக்கப்படுவார்.\nஎதிர்வரும் வெள்ளிக்கிழமை அக்டோபர் 14-ஆம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய மாமன்னர் அறிவிக்கப்படுவார். அவர் அரியணை அமரும் விழா பின்னொரு நாளில் நடத்தப்படும். அடுத்த 5 ஆண்டுகளுக்கு அவர் மாமன்னராக பதவி வகிப்பார்.\nPrevious articleயாருக்குக் கிடைக்கும் இந்த அதிர்ஷ்டம் 3-வது முறையாக ஓபிஎஸ் இடைக்கால முதல்வர்\nஅவசரம் இல்லையென்றால் மாநில எல்லையைக் கடக்க வேண்டாம்\nஅவசரநிலை பிரகடனத்தை முடிக்கக் கோரும் குழுவை சந்திக்க மாமன்னர் ஒப்புதல்\nமலாய்க்காரர்கள் ஆட்சியாளர்கள் மீது கோபமாக உள்ளனர்\nதிமுக அமைச்சரவை : புதிய அமைச்சர்கள் பட்டியல்\nதிமுக அமைச்சரவை : அன்பில் மகேஷ் பள்ளிக் கல்வி அமைச்சர்\nபிரசாந்த் கிஷோர் : இந்திய சட்டமன்றத் தேர்தல் வெற்றிகளின் கதாநாயகன்\nபில் கேட்ஸ் விவாகரத்து : சொத்துகளை எப்படிப் பிரிப்பார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/607359", "date_download": "2021-05-07T02:04:28Z", "digest": "sha1:EVKDYVLAIFUMKNJ55KWQGNY55AP36W3A", "length": 2902, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"அறியவியலாமைக் கொள்கை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"அறியவியலாமைக் கொள்கை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n18:55, 6 அக்டோபர் 2010 இல் நிலவும் திருத்தம்\n22 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\n15:46, 11 சூன் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nTobeBot (பேச்சு | பங்களிப்புகள்)\n18:55, 6 அக்டோபர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nTXiKiBoT (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2021-05-07T01:45:22Z", "digest": "sha1:XMTEJ3HNK2P2LTB2O54CTWGVDOFFBGGK", "length": 5756, "nlines": 82, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"சாட்டை\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nசாட்டை பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nwhip ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nlash ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nlasso ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nblackjack ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nscourge ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிலாசு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிளாசு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபட்டாக்கத்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகசையடி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nచబుకు ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசாட்டையடி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசவுக்கடி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nwhipsnake ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமத்திகை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nreata ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜாட்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசாட்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜாட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசேர்பந்து ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகேட்டித்தடி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nnouns ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:whipsnake ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/bo", "date_download": "2021-05-07T02:14:17Z", "digest": "sha1:TGRDDI5FU7UC2SWYMPMYKC5MK37RJKJS", "length": 4838, "nlines": 126, "source_domain": "ta.wiktionary.org", "title": "bo - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nநெருக்கிக் கொல்லும் இயல்புவாய்ந்த பெரும்பாம்பு வகை\nமென்மயிராலான பாம்பு போன்ற நீண்ட உடை\nசெல்வப் பெண்டிரின் கழுத்துச் சுற்றாடை\nஆதாரங்கள் ---bo--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 05:02 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/late-actress-vj-chitra-got-most-celebrated-actress-award/", "date_download": "2021-05-07T01:08:28Z", "digest": "sha1:RMGIX4EZIWJQQKC6T3LQXXS32C3T57U2", "length": 9500, "nlines": 91, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Late Actress Vj Chitra Got Most Celebrated Actress Award", "raw_content": "\nHome பொழுதுபோக்கு தொலைக்காட்சி இறந்த பின்னரும் சித்ராவிற்கு கிடைத்த கௌரவம் – கண்ணீரோடு பெற்றுக்கொண்ட சித்ராவின் பெற்றோர்.\nஇறந்த பின்னரும் சித்ராவிற்கு கிடைத்த கௌரவம் – கண்ணீரோடு பெற்றுக்கொண்ட சித்ராவின் பெற்றோர்.\nபிரபல சின்னத்திரை நடிகையான சித்ரா, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ரசிகர்களும் பல்வேறு பிரபலங்களும் சித்ராவின் மரணத்தால் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். விஐய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்றுள்ளது. அந்த வகையில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்கள் மத்தியில் அமோக ஆதரவை பெற்றுள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் எத்தனை ஜோடிகள் நடித்து வந்தாலும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஜோடி என்றால் கதிர்- முல்லை ஜோடிதான். இதில் கதிராக நடிகர் குமரனும், முல்லையாக நடிகை சித்ராவும் நடித்து வந்தனர்.\nஇதில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து முழுமையாக பல இல்லத்தரசிகளின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை சித்ரா.இப்படி ஒரு நிலையில் நடிகை சித்ரா ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த விவகாரத்தில் அவரது கணவர் ஹேம்நாத், தற்கொலைக்கு தூண்டியதாக கைது ச���ய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சித்ரா இறந்து விட்டதால்,இனி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அவருக்கு பதில் முல்லை கதாபத்திரத்தில் யார் நடிக்கப்போகிறார்கள் என்று மிகப்பெரிய கேள்வி எழுந்தது.\nஇதையும் பாருங்க : புதிய சீரியலின் வரவால் முடிவுக்கு வந்த விஜய் டிவியின் முக்கிய சீரியல் – ரசிகர்கள் வருத்தம்.\nஇப்படி ஒரு நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லைக்கு பதிலாக, பாரதி கண்ணம்மா சீரியலில் அறிவுமணி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை காவ்யா புதிய முல்லையாக நடித்து வருகிறார். என்னதான் பாண்டியன் ஸ்டோர்ஸ்ஸில் புதிய முல்லையாக காவியா வந்தாலும் பழைய முறையான சித்ராவை ரசிகர்கள் இண்ணமும் மிஸ் செய்துதான் வருகிறார்கள்.\nசித்ரா இந்த மண்ணை விட்டு மறைந்தாலும் ரசிகர்கள் மனதில் இருந்து தான் வருகிறார். சமீபத்தில் சித்ரா கதாநாயகியாக நடித்த ‘கால்ஸ்’ படம் வெளியாகி இருந்தது. இப்படி ஒரு நிலையில் நடிகை சித்ராவிற்கு பிரபல தனியார் மீடியா சார்பாக சின்னத்திரையில் அதிகம் கொண்டாடபட்ட நடிகை என்ற விருது வழங்கப்பட்டுள்ளது. இதனை சித்ராவின் பெற்றோர்கள் பெற்றுக்கொண்டு உள்ளனர்.\nPrevious articleபுதிய சீரியலின் வரவால் முடிவுக்கு வந்த விஜய் டிவியின் முக்கிய சீரியல் – ரசிகர்கள் வருத்தம்.\nNext articleஅட, பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா குழந்தை நட்சத்திரமாக நடித்தாளாரா \nதெலுங்கு சூப்பர் ஸ்டார் படத்தில் இருந்து விலகிய திரிஷா – காரணம் தளபதி 65 நடிகையா \nஇந்த செத்த நாய சப்போர்ட் பண்ற – தனது ரசிகையை திட்டிய நபருக்கு அனிதா சம்பத் கொடுத்த பதிலடி.\nபிஜேபிக்கு எதிராக தோல்வியடைந்து விட்டதாக அறிவித்த பின்னர் கமல் என்ன செய்தார் – கமலுடன் இருந்த முக்கிய நபர்.\nலாக்டவுனில் சிம்பிளாக திருமணத்தை முடித்த அரண்மனைக்கிளி சீரியல் நடிகர் – புகைப்படங்கள் இதோ.\nஆபீஸ் சீரியல் நடிகையை நினைவிருக்கிறதா திருமணம் ஆகி 6 மாச குழந்தையே இருக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/health/23797-what-are-the-benefits-in-garlic-in-tamil.html", "date_download": "2021-05-07T00:30:40Z", "digest": "sha1:CAXIM6IEAZLAXL6VITU65S4PJE77U3WG", "length": 12177, "nlines": 110, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "பூண்டை இப்படி சாப்பிட்டால் சத்து அதிகம் கிடைக்குமாம்.. ட்ரை பண்ணி பாருங்க. | what are the benefits in garlic in tamil - The Subeditor Tamil", "raw_content": "\nபூண்டை இப்படி சாப்பிட்டால் சத்து அதிகம் கிடைக்குமாம்.. ட்ரை பண்ணி பாருங்க.\nபூண்டை இப்படி சாப்பிட்டால் சத்து அதிகம் கிடைக்குமாம்.. ட்ரை பண்ணி பாருங்க.\nபூண்டில் இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதால் இதை நாம் தினமும் உணவில் சேர்த்து கொள்வது அவசியம். இதனை சாப்பிடுவதால் செரிமான பிரச்சனை நீங்கும்.. பூண்டை உணவில் சேர்த்துக் கொள்வதால் உணவின் சுவையை மேம்படுத்தும் மற்றும் ஊட்டச்சத்தை பல மடங்கு அதிகரிக்கும். பூண்டை வேக வைத்து சாப்பிடலாம், இல்லையென்றால் சமையலில் சேர்த்து சாப்பிடலாம். இதனை விட பூண்டை வறுத்து சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் நல்லது. பச்சை பூண்டில் விட வறுத்த பூண்டில் தான் அதிக சத்து உள்ளதாக ஆய்வார்கள் கூறுகின்றனர். இப்பொழுது இருக்கும் ஆபத்தான காலத்தில் பூண்டு கஷாயத்தை செய்து சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும்.. சரி வாங்க பூண்டை எப்படி வறுப்பது குறித்து செய்முறையை பார்க்கலாம்..\nமுதலில் பூண்டில் உள்ள தோலை சுத்தமாக எடுத்து விட்டு ஒரு ஒரு பல்லாக பிரித்து கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்ற வேண்டும்.\nஎண்ணெய் காய்ந்தவுடன் அதில் சிறிது கடுகு சேர்த்து பொறிந்தவுடன் அதில் உரித்து வைத்த பூண்டை சேர்த்து கொள்ளவும். பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலக்கி விட வேண்டும். 10-15 நிமிடம் பூண்டை வறுக்க வேண்டும்.\nகுறிப்பு:- வறுத்த பூண்டை தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் பெரும் மற்றும் செரிமான பிரச்சனை, மலசிக்கல் ஆகியவையில் இருந்து விடிவு பெறலாம்.\nYou'r reading பூண்டை இப்படி சாப்பிட்டால் சத்து அதிகம் கிடைக்குமாம்.. ட்ரை பண்ணி பாருங்க. Originally posted on The Subeditor Tamil\nபாகிஸ்தானில் உள்ள 133 இந்தியர்கள் அக்டோபர் 19ல் நாடு திரும்ப அனுமதி.\nபார்த்தாலே நாக்கில் எச்சில் ஊறுதே எலுமிச்சை ஊறுகாய் செய்வது எப்படி எலுமிச்சை ஊறுகாய் செய்வது எப்படி\nகோவிட்-19: ஆக்ஸிஜன் அளவை சோதிப்பது எப்படி\nதினமும் சாப்பாட்டில் நெய் கலந்து கொள்வதால் என்ன நன்மைகள்\nகொரோனா பரவல்: இயற்கையாக நோய் எதிர்ப்பு ஆற்றலை தரும் உணவுகள்\nகொரோனா காலம்: நுரையீரலுக்கு ஆரோக்கியம் தரும் மூலிகை டீ\nகொரோனா ஊரடங்கு: இடுப்புச் சதை குறைய எதை சாப்பிடலாம்\nகோடைக்காலத்தில் சரும பாதுகாப்புக்கான இயற்கை முற���கள்\nமாதவிடாய் காலத்தில் பெண்கள் கொரோனா தடுப்பூசி போடலாமா..\nஇரத்த ஓட்டத்தை சீராக்கும்... நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும்\nஹீட் ஸ்ட்ரோக்கிலிருந்து பாதுகாக்கும்... சிசுவுக்கு நல்லது...\nகொரோனா: நீராவி பிடிப்பது எவ்விதம் பயன் தரும்\nநோய் உள்ளவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா\nவீட்டின் சமையலறையில் இருக்கும் பொருள்களை வைத்து ஃபேஷியல் செய்வது எப்படி\nகோடையில் பருகக்கூடிய இயற்கை பானங்கள்\nபெண்கள் ஏன் அதிகமாக இறைச்சி எடுத்துக்க கூடாது தெரியுமா\nபாலியல் உறவு குறித்து கூகுள் இணையத்தில் தேடப்பட்ட அதிக கேள்விகள்\nமேற்கு வங்காளம்: பாரதிய ஜனதாவின் கணக்கு தோற்றது எங்கு\nஉதயநிதிக்கு பதவி இல்லை: தமிழ்நாடு அரசின் புதிய அமைச்சர்கள் யார்\nகோவிட் தடுப்பூசி பற்றிய போலி எஸ்எம்எஸ்: கிளிக் செய்தால் ஆபத்து\nஇதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா – புதிய கட்டுப்பாடுகள் என்ன\nமக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்\n - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி\nபுறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு\nஎதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்\nஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்\nதிமுக அமைச்சரவையில் யாருக்கு என்ன பொறுப்பு…\nமனைவியுடன் உல்லாசமாக இருந்த உதவியாளர்… கோயிலுக்கு அழைத்துச்சென்று அர்ச்சனை செய்த பூசாரி\nமுதலமைச்சர் ஆனதும் ஸ்டாலினின் முதல் கையெழுத்து இதுதான்.. முழு எதிர்பார்ப்பில் மக்கள்..\nகோவிட்-19: ஆக்ஸிஜன் அளவை சோதிப்பது எப்படி\nராஜினாமா முடிவில் கே.பி.முனுசாமி – திமுகவுக்கு லாபமாக அமையுமா\nஇரவோடு இரவாக மேலும் புதியக் கட்டுப்பாடுகள் அறிவிப்பு : முழு விபரம்…\n1000ரூபாய் கையிருப்பு கூரை வீடு – சட்டமன்றத்தில் நுழையும் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ மாரிமுத்து\n தேமுதிக வீழ்ச்சிக்கு இதான் காரணம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akattiyan.lk/2021/05/blog-post_98.html", "date_download": "2021-05-07T01:54:33Z", "digest": "sha1:YLDEY5W72UUXPEPJKTUT7ZTE7I2ITAFC", "length": 6073, "nlines": 66, "source_domain": "www.akattiyan.lk", "title": "மொத்த விற்பனை நிலையங்கள் மற்றும் சிறப்பங்காடிகளுக்கான சுகாதார வழிகாட்டி வெளியானது - அகத்தியன் | Online", "raw_content": "\nHome இலங்கை மொத்த விற்பனை நிலையங்கள் மற்றும் சிறப்பங்காடிகளுக்கான சுகாதார வழிகாட்டி வெளியானது\nமொத்த விற்பனை நிலையங்கள் மற்றும் சிறப்பங்காடிகளுக்கான சுகாதார வழிகாட்டி வெளியானது\nகொரோனா அச்சம் அதிகரித்து வருகின்றமை காரணமாக மொத்த விற்பனை நிலையங்கள் மற்றும் சிறப்பங்காடிகள் பிற்பற்ற வேண்டிய சுகாதார வழிமுறைகள் அடங்கிய வழிகாட்டியொன்று சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.\nஇதற்கமைய மொத்த விற்பனை நிலையங்கள் மற்றும் சிறப்பங்காடிகளுக்கு பொருட்கள் வாங்க வரும் நபர்களுக்கிடையில் கட்டாயம் ஒன்றரை மீற்றர் இடைவெளி பேணப்பட வேண்டும் என அந்த வழிகாட்டியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமொத்த விற்பனை நிலையங்கள் மற்றும் சிறப்பங்காடிகளுக்கான சுகாதார வழிகாட்டி வெளியானது Reviewed by Chief Editor on 5/01/2021 05:14:00 pm Rating: 5\nபாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் மேலதிக வகுப்புகளுக்கு மறு அறிவித்தல் வரை விடுமுறை\nபாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் மேலதிக வகுப்புகளுக்கு மறு அறிவித்தல் வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், நோன்பு பெருநாள், வெசாக் ...\nகொரோனா பரவல் காரணமாக நாட்டின் பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள விடுமுறையானது மேலும் ஒரு வார காலத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ...\nமோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nவாகன போக்குவரத்து திணைக்களத்தின் நாரஹென்பிட்டி மற்றும் வேரஹெர அலுவலகங்கள் ஒரு வாரத்திற்கு மூடப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம த...\nDReAM என அறிமுகப்படுத்தப்பட்டுள்ள முற்பாதுகாப்பு விதிமுறைகளுக்கமைய மதுபான சாலைகளை திறந்து வைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. D – சமூக இடை...\nமுழு அதிகாரம் : அகத்தியன் ஊடக சேவை 2020\nஆசிரியர் பீட தெடர்புகளுக்கு 0779516119\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/sports/608419-sports-story.html", "date_download": "2021-05-07T00:46:17Z", "digest": "sha1:AIFHOYKKI2NUQBDGYYFNWHPYTOWCE62G", "length": 14240, "nlines": 277, "source_domain": "www.hindutamil.in", "title": "விளையாட்டாய் சில கதைகள்: கப்பர் சிங்கின் பிறந்த நாள் | sports story - hindutamil.in", "raw_content": "வெள்ளி, மே 07 2021\nவிளையாட்டாய் சில கதைகள்: கப்பர் சிங்கின் பிறந்த நாள்\nஇந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக கடந்த 8 ஆண்டுகளாக பட்டையை கிளப்பி வரும் ஷிகர் தவனின் ப��றந்தநாள் இன்று\n(டிசம்பர் 5). டெல்லியின் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரராக விளங்கிய தாரக் சின்ஹா என்பவரிடம் சிறு வயதில் இருந்தே பயிற்சி பெற்றுள்ளார் ஷிகர் தவன். டெல்லியில் சிறந்த வீரராக இருந்தாலும், இந்திய அணியில் இடம்பிடிக்க முடியாததால் கவலையில் இருந்த தாரக் சின்ஹா, தன் சிஷ்யனை வைத்து அந்தக் கவலையை தீர்க்க முடிவெடுத்தார். அப்போதெல்லாம் ஷிகர் தவனுக்கு விக்கெட் கீப்பிங்கில்தான் ஆர்வம் இருந்துள்ளது. ஆனால் அதை விடுத்து பேட்டிங்கில் மட்டும் கவனம் செலுத்துமாறு அறிவுரை கூறினார் தாரக் சின்ஹா. அதன்படி ஷிகர் தவனும், பேட்டிங்கில் மட்டும் கவனம் செலுத்தினார்.\n2004-ம் ஆண்டு நடந்த 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஷிகர் தவன்தான் ஹீரோ. இத்தொடரில் அவர் 505 ரன்களைக் குவித்துள்ளார் (இன்றுவரை இந்த சாதனையை யாரும் முறியடிக்கவில்லை). இதைத் தொடர்ந்து ரஞ்சி போட்டிகளிலும் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் இவரை விட்டுவிட்டு, விராட் கோலியை தேர்வாளர்கள் தேர்ந்தெடுக்க, மனமுடைந்த தவன், கிரிக்கெட்டை விட்டே விலக முடிவெடுத்துள்ளார். இந்த காலகட்டத்தில் அவரது பயிற்சியாளர்தான் ஆறுதல் கூறி தேற்றியுள்ளார். இதனால் பொறுமையாக காத்திருந்த தவனுக்கு, 2010-ம் ஆண்டு அணியில் இடம் கிடைத்தது.\nமைதானத்தில் பீல்டிங் செய்யும்போது, புகழ்பெற்ற இந்திப் படமான ‘ஷோலே’வில் இடம்பெற்றுள்ள வசனங்களைச் சொல்லி சக வீரர்களை உற்சாகப்படுத்துவது ஷிகர் தவனின் வழக்கம். அதனால் அவரை சக வீரர்கள் ‘கப்பர் சிங்’ (இப்படத்தில் அம்ஜத் கான் ஏற்று நடித்த பாத்திரத்தின் பெயர்) என செல்லமாக அழைப்பார்கள். கிரிக்கெட்டுக்கு அடுத்ததாக தவனுக்கு அதிகம் பிடித்த விஷயம் டாட்டூக்கள். தன் உடலில் பல உருவங்களை இவர் பச்சை குத்தி வைத்துள்ளார்.\nகப்பர் சிங்கப்பர் சிங்கின் பிறந்த நாள்விளையாட்டாய் சில கதைகள்Sports story\nநந்திகிராமில் தோற்ற மம்தா பானர்ஜி முதல்வர் பதவியில்...\nபிரதமருக்கு வீடு கட்டச் செலவிடும் ரூ.13,450 கோடியில்...\nபிரசாந்தும் சுனிலும்: இரு பிரச்சாரக் கதைகள்\nதிமுக வெற்றியின் முக்கியத்துவம் என்ன\nஅம்மா உணவகம் சூறை; டிடிவி, ஜெயக்குமார் கண்டனம்:...\nமேற்கு வங்கத்தில் பாஜகவை வீழ்த்திய மம்தா: வெற்றிப்...\nமோடி ஒன்றும் வெல்ல முடியாதவ���் அல்ல\nவிளையாட்டாய் சில கதைகள்: அப்பா கொடுத்த ஊக்கம்\n2 வாரங்களுக்கு முன் தாய் மரணம்: இப்போது சகோதரியையும் கரோனாவில் இழந்த இந்திய...\n36 வயதான ராஜஸ்தானின் முன்னாள் ரஞ்சி வீரர் கரோனாவுக்கு பலி\nஐபிஎல் தொடரில் பங்கேற்ற ஆஸ்திரேலிய வீரர்கள் மாலத்தீவு புறப்பட்டனர்\nவிளையாட்டாய் சில கதைகள்: அப்பா கொடுத்த ஊக்கம்\nவிளையாட்டாய் சில கதைகள்: ஜேம்ஸ் பாண்டால் உருவான வீரர்\nவிளையாட்டாய் சில கதைகள்: ஜெஸ்ஸி ஓவன்ஸின் உலக சாதனை\nவிளையாட்டாய் சில கதைகள்: இந்திய கிரிக்கெட்டின் ராக்ஸ்டார்\n‘நிவர்’ புயல் பாதிப்பை கணக்கிட 7 பேர் கொண்ட மத்திய குழு இன்று...\nவேளாண் சட்டங்களை நீக்க கோரி டிச.8-ல் நாடு தழுவிய 'பந்த்'- விவசாய சங்கங்கள்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaipoonga.net/cinema/sizzling-photos-of-actress-tanya-hope/", "date_download": "2021-05-07T01:57:08Z", "digest": "sha1:FH5H7RP7TGLJFNAQMIX5UAZ25ZH7D45Y", "length": 7663, "nlines": 191, "source_domain": "kalaipoonga.net", "title": "Sizzling photos of Actress Tanya Hope - Kalaipoonga", "raw_content": "\nPrevious articleசிறிய படங்கள் வெற்றிபெற செயல்வடிவில் ஆதரவு தர வேண்டும் – இயக்குநர் ‘போஸ்’ வெங்கட்\nNext articleடாக்டர் வி சாந்தா மறைவுக்கு பிரதமர் இரங்கல்\nமாநாடு டப்பிங் ஆரம்பம்… படக்குழு வெளியிட்ட புகைப்படங்கள்\nமூத்த தலைவர் ஆர்.எம்.வீரப்பனை நேரில் சந்தித்து ஆசி பெற்றார் மு.க.ஸ்டாலின் | Video\nநமீதா தியேட்டர்ஸ் – உண்மை சம்பவங்களின் அடிப்படியில் உருவாகும் படங்களை ஒளிபரப்பும் முதல் OTT தளம்\nவெளியானது 34 பேர் கொண்ட தமிழக அமைச்சரவை பட்டியல்\nவெளியானது 34 பேர் கொண்ட தமிழக அமைச்சரவை பட்டியல் தமிழகத்தின் முதலமைச்சராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை சென்னை - கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்க உள்ளார். கொரோனா பரவலை கருத்தில்...\nமாநாடு டப்பிங் ஆரம்பம்… படக்குழு வெளியிட்ட புகைப்படங்கள்\nமாநாடு டப்பிங் ஆரம்பம்... படக்குழு வெளியிட்ட புகைப்படங்கள் சிம்பு நடிப்பில் உருவாகி உள்ள படம் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கியுள்ள இப்படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார். இப்படத்தில் சிம்பு அப்துல் காலிக்...\nமூத்த தலைவர் ஆர்.எம்.வீரப்பனை நேரில் சந்தித்து ஆசி பெற்றார் மு.க.ஸ்டாலின் | Video\nமூத்த தலைவர் ஆர்.எம்.வீரப்பனை நேரில் சந்தித்து ஆசி பெற்றார் மு.க.ஸ்டாலின் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றதை அடுத்து தமிழகத்தின் அடுத்த முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பு ஏற்க உள்ளார். நாளை (மே 7...\nவெளியானது 34 பேர் கொண்ட தமிழக அமைச்சரவை பட்டியல்\nவெளியானது 34 பேர் கொண்ட தமிழக அமைச்சரவை பட்டியல் தமிழகத்தின் முதலமைச்சராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை சென்னை - கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்க உள்ளார். கொரோனா பரவலை கருத்தில்...\nமாநாடு டப்பிங் ஆரம்பம்… படக்குழு வெளியிட்ட புகைப்படங்கள்\nமாநாடு டப்பிங் ஆரம்பம்... படக்குழு வெளியிட்ட புகைப்படங்கள் சிம்பு நடிப்பில் உருவாகி உள்ள படம் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கியுள்ள இப்படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார். இப்படத்தில் சிம்பு அப்துல் காலிக்...\nமூத்த தலைவர் ஆர்.எம்.வீரப்பனை நேரில் சந்தித்து ஆசி பெற்றார் மு.க.ஸ்டாலின் | Video\nமூத்த தலைவர் ஆர்.எம்.வீரப்பனை நேரில் சந்தித்து ஆசி பெற்றார் மு.க.ஸ்டாலின் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றதை அடுத்து தமிழகத்தின் அடுத்த முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பு ஏற்க உள்ளார். நாளை (மே 7...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://prosperspiritually.com/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9C-3/", "date_download": "2021-05-07T00:59:56Z", "digest": "sha1:P3FNDILPN2VQ6RAKLGWUXYFYAQX63J26", "length": 24856, "nlines": 136, "source_domain": "prosperspiritually.com", "title": "வேதாத்திரியம் ஒரு பாரிஜாத மலர் - Prosper Spiritually", "raw_content": "\nசிந்தித்தலின் அன்றாட சுயசோதனை பயிற்சி\nவேதாத்திரியம் ஒரு பாரிஜாத மலர்\nவேதாத்திரியம் ஒரு பாரிஜாத மலர்\nமலரை நாடித் தேனீக்கள் வரும். ஏன் மலரில் தேன் உள்ளதால் தேனீக்கள் மலரை நாடிச் செல்கின்றன. மலர்களில் பல உள்ளன. மலர்களில் பாரிஜாத மலர் என்பது ஒன்று. ஆனால் பாரிஜாத மலர் என்பது கற்பனையான ஒன்று.\nஅச்சத்தை ஏற்படுத்தி, மனிதனை நல்வழிப் படுத்துவதற்காக, நரகம், சுவர்க்கம் என்று கற்பனையாகப் படைக்கப்பட்டது போல் தேவலோகமும் ஒரு கற்பனைதான். அந்த தேவலோகத்தில் பாரிஜாத மரம் உள்ளதாகவும், அந்த மரத்தில் பூக்கும் பாரிஜாத மலர் விரும்பியதை எல்லாம் கொடுக்கும் என்று ஒரு கற்பனைக் கதை கூறுகின்றது. பாரிஜாத மலர் என்றோ ஏற்படுத்தப்பட்ட கற்ப���ையான மலர்.\nஇப்போது ‘வேதாத்திரியம் ஒரு பாரிஜாத மலர்’ என்கிறோம். ஏன் பாரிஜாத மலர் விரும்பியதை எல்லாம் தருவதைப் போல் வேதாத்திரியம் விரும்பியதை எல்லாம் தரும். மனிதன் எதனை விரும்ப வேண்டும் பாரிஜாத மலர் விரும்பியதை எல்லாம் தருவதைப் போல் வேதாத்திரியம் விரும்பியதை எல்லாம் தரும். மனிதன் எதனை விரும்ப வேண்டும்\nமனிதன் தனக்கு வேண்;டியதை விரும்புகிறான். அவ்வாறு மனிதன் விரும்ப வேண்டியது என்ன\n1) நல்ல உடல் நலம்,\n4) உயர் புகழ் ஆகியவைகள் மனிதன் விரும்புவதாக இருக்க வேண்டும்.\nஇந்த நான்கிற்கும் மேலாக மனிதன் வாழ்வதற்கு அவசியமானவை ஏதாவது உள்ளதா\nஇந்த வாழ்க்கை எதற்காக, மனிதன் வாழ வேண்டிய அவசியம் ஏற்பட்டதோ,\nஅந்த காரணத்தை அறிந்துஅதனை அடைய வேண்டும்.\nகடலிருந்த நீர் சூரிய வெப்பத்தால் ஆவியாகி, மேகமாகி, குளிர்ந்த பின்னர் மழையாகப் பொழிந்து, ஆறாகி, நதியாகி நிலப்பரப்பில் ஆர்பரித்து ஒடி கடலில் கலந்து தன் சுழற்சியை முடித்துக்கொண்டதும் ஆர்பரிப்பு நின்று அமைதி கொள்கின்றது. அது போல்\nபேரறிவிலிருந்து பின்னப்பட்ட (fractioned) மனித அறிவு\nதன் சுழற்சியை முடித்துக் கொள்ளும் போதுதான் பேரமைதி உண்டாகும் அறிவிற்கு.\nஅதாவது ஆறாம் அறிவு தன்னை அறிந்;து கொண்டு இன்பமுறவே இந்த மனிதவாழ்க்கை. இவ்வாறு வந்த அறிவின் பயணத்தில், அறிவு ஒரு பிறவியிலேயே அதனை அடைய முடியாது. பல கோடிப் பிறவிகள் எடுத்து,\nஅப்பிறவிகளிலெல்லாம், மனிதப் பிறவிக்கு இயற்கை வைத்துள்ள நோக்கம் அறியாத அறியாமையால்;\nபுலன்வழி வாழ்க்கையையே வாழ்ந்து மயக்கம் கொண்டு,\nஅளவு மீறியும், முறை மாறியும் வாழ்ந்து\nஏற்படுத்திக் கொண்ட வேண்டாத துன்பம் தரும் பதிவுகளைத் தன்\nஆன்மாவில் பதிய வைத்துக் கொண்டு,\nஅவற்றின் விளைவுகளை அனுபவிக்கவே வந்த பிறவிதான் தற்போது நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்ற இந்தப் பிறவி. ஆகவே மனித வாழ்க்கைக்கு அவசியமான உடல்நலம், நீளாயுள், நிறை செல்வம், உயர்புகழ் ஆகிய வளங்களுடன் மெய்ஞ்ஞானம் என்கின்ற ஐந்தாவது வளமும் அவசியமாகின்றது. இந்த மெய்ஞ்ஞான வளத்துடன் மனித வாழ்வு முழுமை அடைகின்றது.\nமனித வாழ்வு முழுமை அடைவதற்கு இப்போது அறிவிற்கு, இத்தனை பிறவிகளில் ஏற்படாதத் தெளிவு அவசியமாகின்றது. இதனை அறிவு விரும்பிக் கொண்டிருக்கின்றது. ஆனால் அதனை அறியாமல், “மனம் போன போக்கெல��லாம் போக வேண்டாம்”; என்கின்ற அறிவுரை இருந்தும் மனிதன் மனம் போன போக்கெல்லாம் போய்க்கொண்டு அல்லறுகிறான்.\nமனிதன் விரும்புவதெல்லாம் எதுவாக இருக்க வேண்டும் உடல் நலம், நீளாயுள், நிறைசெல்வம், உயர்புகழ், மெய்ஞானம் ஆகிய ஐந்து வளங்களையும் மனிதன் விரும்புவதாக இருக்க வேண்டும். இவற்றில் முதல் நான்கு கிடைத்து விடலாம். ஐந்தாவது வளம் கிடைப்பதற்கு அறிவு மேம்பட வேண்டும். அந்த அறிவு மேம்பட, அறிவிற்கு சிந்தனை ஆற்றல் வளர வேண்டும். சிந்தனையை, அறிவின் செல்வமாக்கிட வேண்டும்.\nஅதனால்தான் ‘வாழ்க மனித அறிவு. வளர்க மனித அறிவு. வாழ்க அறிவுச் செல்வம். வளர்க அறிவுச் செல்வம்’ (Slogan) என்கின்ற எண்ண ஆதரவு கோருதலின் வாயிலாக மனித எண்ணங்களின் ஆதரவினைத் திரட்ட வேண்டும். ஆகவே பாரிஜாத மலர் விரும்பியதையெல்லாம் கொடுக்கும் என்பதுபோல் இயற்கைக்கு புறம்பாக இல்லாமல், நியாமான, இறுதியாக மனிதன் விரும்ப வேண்டிய மெய்ஞ்ஞானத்தை அடைய மனித அறிவு தெளிந்த நல்லறிவாவதற்கு வேண்டிய விருந்திற்கெல்லாம் விருந்தினை அளிக்க வல்லது வேதாத்திரியம்.\nதன்னிடம் எழும் எல்லா ஐயங்களுக்கும் புரிதலையும் தெளிவையும் விரும்புவான் மனிதன். அந்த விரும்புதலை அள்ளித் தர வல்லததுதான் வேதாத்திரியம். ஆகவேதான் இதனை ஒரு பாரிஜாத மலர் என்கிறோம். பாரிஜாத மலர் ஒரு கற்பனையே என்றாலும். என்றோ மனிதனை நல்வழிப்படுத்தும் நோக்கத்திற்காக ஏற்படுத்திய ஒரு கற்பனைக் கதையில் வந்த பாரிஜாத மலர் உண்மையில் இன்று வேதாத்திரியத்தின்; அருமை பெருமைகளைக் எடுத்துக் கூறி அறிவுத் தேனீக்களை ஈர்க்க, எடுத்துச் சொல்வதற்கு உவமேயமாக இருந்துள்ளதை நினைக்கும் போது உள்ளம் பூரிக்கின்றது. வேதாத்திரியத்தின் வாயிலாக இதுவரை கற்பனை மலராக இருந்து வந்த பாரிஜாத மலர் இன்று உண்மையான மெய்ஞான மலராகிவிட்டது.\nஇதுவரை எத்தனையோ ஆன்மீக மலர்களை காலத்திற்கேற்ப மனித அறிவின் நிலைகளுக்கேற்ப இயற்கை மலரச்; செய்துள்ளது. ஆனால் இன்று பூக்களிலேயே சிறந்த பூவான விரும்பியதைக் கொடுக்கும்; பாரிஜாத வேதாத்திரிய மலரை அளித்துள்ளது இயற்கையின் கருணையன்றோ. வேதாத்திரியத்தில் என்னென்ன உள்ளன என்று கேட்பதைவிட, உங்களுக்கு எது தேவையோ அது இருக்கின்றதா என்று கேளுங்கள். இருக்கும். தட்டுங்கள் திறக்கப்படும். இது மிகையல்ல. வேதாத��திரிய பாரிஜாத மலர் ஐந்து வளங்களைத் தருகின்றது. அவையாவன, உடல்நலம், நீளாயுள், நிறைசெல்வம், உயர்புகழ், மெய்ஞ்ஞானம் ஆகும்.\nபாரிஜாத மலரின் மெய்ஞ்ஞானத் தேன் .நான்கு வகைகளில் கீழ்கண்ட வினாக்களுக்கு அறிவுப்பூர்வமான விடைகளைத் தந்து சுயமாக சிந்திக்கவும் செய்கின்றது.\n1) கடவுள் என்பவர் யார்\n2) உயிர் என்பது என்ன\n3) இன்பதுன்பம் என்பது என்ன\n4) வறுமை ஏன் வருகின்றது\nஆகிய நான்கு வினாக்களுக்கான விடைகளின் வாயிலாக, அறிவுத் தேனீக்கள் வேதாத்திரிய பாரிஜாத மலரிலுள்ளத் தேனை நான்கு வழிகளில் அருந்தலாம். இது தவிர வேறு எது மனிதஅறிவிற்குத் தேவையாக இருக்க முடியும் இந்த நான்கும் மகோன்னத கேள்விகள். எனவே இந்த மகோன்னத கேள்விகளுக்குத் தெளிவைப் பெறுவது என்பது, இதுவரை அறிவு விரும்பியதன்றோ இந்த நான்கும் மகோன்னத கேள்விகள். எனவே இந்த மகோன்னத கேள்விகளுக்குத் தெளிவைப் பெறுவது என்பது, இதுவரை அறிவு விரும்பியதன்றோ இது வரை இது மறைமுகமாக விரும்புதலாக (latent desire) இருந்து வந்தது. இப்போது வேதாத்திரியத்தால் அது வெளிப்படையான விரும்புதலாகிவிட்டது. ஆகவேதான் வேதாத்திரியம் ஒரு பாரிஜாத மலர் என்கிறோம்.\nமலர் என்று ஒன்று இருந்தால் அதிலுள்ளத் தேனை அருந்துவதற்காக தேனீக்கள் வந்து மொய்ப்பதை போன்று இப்போது மலா்ந்துள்ள பாரிஜாத மலரான வேதாத்திரியத்தில் உள்ள அறிவுத் தேனை பருக அறிவுத் தேனீக்கள் ஏற்கனவே மொய்த்துக் கொள்ள ஆரம்பித்துவிட்டன. ஆகவே இதனை கண்ணுறும் அனைவரும் வேதாத்திரிய அறிவுத்தேனைப் பருக ஓடோடி வாருங்கள். அனுபவித்துவிட்டு மற்றவர்களையும் பாமர அறிவிலிருந்து அறிவுத்தேனீயாக்க வழிகாட்டி புண்ணியத்தைச் சேர்த்திடுவோம்.\nமகரிஷி அவர்கள் அறிவை அறிய விளக்கம் தருகிறேன் என்று அவர் விடுக்கும் அழைப்பை அவர் எழுதிய காந்த தத்துவ நூலின் பக்கம் 11 இல் முதல் பத்தியில் உள்ள அவர் எழுத்தின் வாயிலாகவே அறிவோம்.\nமேலே உள்ள பாடல் வரிகளுக்கு அவரே விளக்கமும் கொடுத்துள்ளார். அவ்வரிகள் மந்திரம் போல் உள்ளதால் அதனை அன்பர்கள் ஏற்று பயன்பெற, அவ்வரிகள் கீழே தரப்பட்டுள்ளன.\nபாரிஜாத மலர் விரும்பியதையெல்லாம் கொடுக்கும். பொதுவாக மனிதன் விரும்புவதெல்லாம் என்னவாக இருக்க முடியும் நிரந்தரமில்லாத உலகியல் வாழ்க்கையில், இப்பூவுலகை விட்டுச்செல்லும்போது விரும்��ிச் சோ்த்த யாவற்றையும் இங்கே விட்டுச் செல்பவைகளைத்தான் விரும்புவதாக இருக்கும்.\nஆனால் வேதாத்திரிய பாரிஜாத மலர்,\nஉடல்நலத்தால் பிறவியின் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்குத் தேவையான காலநீளத்தை நீட்டிக்கும் நீளாயுளும்,\nஇப்புவியல் வாழ்வதற்குத் தேவையான பொருட்செல்வத்தைத் தரக்கூடிய நிறைசெல்வத்தையும்,\nமனிதனின் அறிவுத்தொண்டு இவ்வுலகிற்கு மிக மிக அவசியமாக இருப்பதால், அந்த அறிவுத்தொண்டில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதற்கான வாய்ப்பையும் அளித்து, அதன் மூலம் பயனாளிகள் வாழ்த்துவதால் வருகின்ற பாராட்டுதலான உயர்புகழையும் தந்து\nமெய்ப்பொருளை விளக்கி, மனதில் மெய்ப்பொருளை நிறையச் செய்து மனநிறைவளிக்கின்றது.\nஇந்தப் பேற்றினைவிட வேறு எது மனம் விரும்புவதற்குள்ளது\nஎப்போதும், எல்லையுள்ள பொருட்களை மட்டுமே மனம் நினைப்பதால், மனம் எல்லையுடைதாகி, குறுகிவிடுவதால் மனம் குறைவுடையதாகிவிட்டது.\nமனதில் எல்லையில்லா மெய்ப்பொருள் நிறைந்து விட்டால், மனம் விரிவடைந்துவிடும். நிறைவடைந்துவிடும்.\nஅதனைவிட மனதிற்கு வேறு என்ன தேவையிருக்கின்றது\n மனமும் மெய்ப்பொருளும் ஒன்றாகிவிட்டால் மனம் நிறைவு பெறுகின்றது.\nகடலிருந்து நீர் ஆவியாகி மழை பெய்து, மீண்டும் ஆற்றில் நீர் ஆர்பரித்துக்கொண்டு இறைச்சலுடன் ஓடி கடலில் கலந்து அமைதியுறுகின்றது. அதுபோல் மெய்ப்பொருளே மனிதமனமாகி மீண்டும் மெய்ப்பொருளுடன் சோ்ந்துவிட்ட பிறகு மனித மனம் சொற்களால் விவரிக்க முடியாத அமைதிப்பேற்றினைப் பெறுகின்றது. இது தான் இயற்கையின் உள்ளது உள்ளபடியான நிலை. அடுத்த விருந்திற்கு 29-07-2015 புதன் அன்று சந்திப்போம்.\nவாழ்க வேதாத்திரியம், வளர்க வேதாத்திரியம்;\nவாழ்க மனித அறிவு, வளர்க மனித அறிவு.\nவாழ்க அறிவுச் செல்வம், வளர்க அறிவுச் செல்வம்.\nவாழ்க உலக மக்கள் அனைவரும்.\nவாழ்க உலக அமைதி; வருக உலக அமைதி விரைவில்.\nPrev:சிந்திக்க அமுத மொழிகள்- 94\nசிந்தித்தலின் அன்றாட சுயசோதனை பயிற்சி\nசிந்தித்தலின் அன்றாட சுயசோதனை பயிற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tech/news/bsnl-rs-1098-prepaid-4g-data-plan-offers-truly-unlimited-data-84-days-validity-check-details/articleshow/82386942.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article14", "date_download": "2021-05-06T23:58:34Z", "digest": "sha1:PADTGVJAPEGVPFVK3LQVXX3M2WW5AWGK", "length": 17537, "nlines": 121, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஒரே ரீசார்ஜ்; 84 நாட்களுக்கு UNLIMITED டேட்டா; ஆஹா BSNL-ல இப்படி ஒரு Plan-ஆ\nஇந்த தொகுப்பின் கீழ் நாம் காணவுள்ள 2 BSNL திட்டங்களுக்கு சமமாக அல்லது எதிராக ஜியோ, ஏர்டெல் மற்றும் வி நிறுவனத்திடம் எந்த திட்டங்களும் இல்லை என்பதே நிதர்சனம்.\nBபோட்டியே இல்லாத SNL-இன் டேட்டா ரீசார்ஜ் திட்டங்கள்\nஒன்று ட்ரூலி அன்லிமிடெட் டேட்டா; 84 நாட்கள் வேலிடிட்டி.\nமற்றொன்று 5ஜிபி டெய்லி டேட்டா; 90 நாட்கள் வேலிடிட்டி.\nபிஎஸ்என்எல் என்று நன்கு அறியப்படும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் அதன் 4ஜி ப்ரீபெய்ட் திட்டங்களை ட்ரூலி அன்லிமிடெட் டேட்டா நன்மையுடன் வழங்கி வருகிறது.\nஉங்க BSNL மொபைல் நம்பரை கண்டுபிடிக்க ஒரு USSD Code இருக்கு\nஇங்கே ‘ட்ரூலி அன்லிமிடெட்' என்றால் குறிப்பிட்ட திட்டத்தால் வழங்கப்படும் டேட்டா நன்மையில் FUP வரம்பு இருக்காது என்று அர்த்தம். எனவே திட்டத்தின் காலாவதி தேதி நெருங்காத வரை பயனர்கள் தாங்கள் \"உட்கொள்ளும்\" டேட்டாவின் அளவு குறித்து கவலைப்பட தேவையில்லை.\nஇவ்ளோ கம்மி விலைக்கு 365 நாட்கள் Validity-ஆ Jio-கிட்ட கூட இல்லையே; மிரட்டும் BSNL\nரிலையன்ஸ் ஜியோ, பாரதி ஏர்டெல், அல்லது வோடபோன் ஐடியா (வி) உள்ளிட்ட இந்தியாவின் வேறு எந்த தொலைத் தொடர்பு ஆபரேட்டரும் கூட இத்தகைய நன்மையுடன் வரும் திட்டத்தை வழங்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.\nசரி வாருங்கள் ட்ரூலி அன்லிமிடெட் டேட்டா நன்மையுடன் வரும் பிஎஸ்என்எல் 4 ஜி ப்ரீபெய்ட் திட்டத்தைப் பார்ப்போம்.\nபிஎஸ்என்எல் 4ஜி ‘எஸ்.டி.வி 1098’ ப்ரீபெய்ட் திட்டம்:\nஇது பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ஒரு ட்ரூலி அன்லிமிடெட் டேட்டா ப்ரீபெய்ட் திட்டமாகும். இது நாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிராந்தியங்களில் உள்ள 4ஜி சேவை சந்தாதாரர்களுக்கு அணுக கிடைக்கும் 4ஜி ப்ரீபெய்ட் திட்டமாகும்.\nஇந்த திட்டத்துடன் வழங்கப்படும் டேட்டா நன்மைக்கு எந்த வேக கட்டுப்பாடும் கிடையாது.\nட்ரூலி அன்லிமிடெட் டேட்டாவை தவிர்த்து இந்த ‘எஸ்.டி.வி 1098’ ஆனது வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் தினமும் 100 எஸ்.எம்.எஸ்களையும் வழங்குகிறது.\nமேலும் இந்த திட்டத்தின் பயனர்களுக்கு வரம்பற்ற பாடல் மாற்றும் திறனுடன் கூடிய இலவச ட்யூன்களும் அணுக கிடைக்கும். இந்த திட்டத்தின் விலை ரூ.1,098 ஆகும் மற்றும் இதன் செல்லுபடியாகும் காலம் 84 நாட்கள் ஆகும்.\nபிஎஸ்என்எல் 4ஜி ‘எஸ்.டி.வி 1098’ ப்ரீபெய்ட் திட்டம் வழங்கும் நன்மைகளுடன் பொருந்தக்கூடிய வேறு எந்த திட்டமும் தற்போது இந்தியாவில் இல்லை.\nஇப்படியாக பி.எஸ்.என்.எல் நிறுவனத்திடம் இருந்து கிடைக்கும் தரமான 4ஜி டேட்டா திட்டம் இது மட்டும் அல்ல, இன்னொரு திட்டமும் உள்ளது.\nபிஎஸ்என்எல் 4ஜி ‘எஸ்.டி.வி .599’ திட்டம்:\nபி.எஸ்.என்.எல்-இன் மற்றொரு 4ஜி திட்டம் ‘எஸ்.டி.வி .599’ ஆகும், இதன் விலை ரூ.599 ஆகும். இது அதன் பயனர்களுக்கு தினமும் 5 ஜிபி அளவிலான எஃப்யூபி டேட்டாவை 90 நாட்களுக்கு வழங்குகிறது.\nதவிர வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் போன்ற நன்மைகளும் அணுக கிடைக்கும். குறிப்பிட்ட தினசரி டேட்டா அளவு நுகரப்பட்டவுடன் இணைய வேகம் 80 Kbps ஆக குறைக்கப்படும்.\nஇந்த திட்டம் STV1098 உடன் போட்டியிடலாம், ஏனெனில் இது நிறைய அளவிலான டேட்டாவையும் வழங்குகிறது, தவிர 90 நாட்கள் என்கிற கூடுதல் செல்லுபடியாகும் காலத்தையும் வழங்குகிறது.\nபிஎஸ்என்எல்லிலிருந்து ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் இந்த 5 ஜிபி டெய்லி டேட்டா திட்டத்திற்கு அருகில் எந்த ஆபரேட்டர்களின் திட்டமும் அமரவில்லை.\nபிஎஸ்என்எல் 4ஜி ப்ரீபெய்ட் திட்டங்களின் குறைபாடுகள்:\nபிஎஸ்என்எல் நிறுவனம் நாடு முழுவதும் 4 ஜி சேவைகளை வழங்காததால், மேற்குறிப்பிட்ட பிஎஸ்என்எல் 4ஜி திட்டங்கள் ஆனது நிறுவனத்தின் நேரடி மற்றும் நல்ல நெட்வொர்க் கவரேஜை வழங்கும் பிராந்தியத்தில் இருக்கும் பயனர்களுக்கு மட்டுமே மதிப்புமிக்கயாக இருக்கும்.\nபிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி சேவை இல்லாத பகுதிகளுக்கு அதிகம் பயணிக்கும் பயனர்களுக்கு, ட்ரூலி அன்லிமிடெட் டேட்டா திட்டம் என்பது ஒரு மோசமான தேர்வாக இருக்கும்\nபி.எஸ்.என்.எல் நிறுவனம் இந்தியாவில் தனது 4 ஜி நெட்வொர்க்குகளை முடிந்தவரை விரைவாக உருவாக்கும் திட்டத்தில் உள்ளது. டெலிகாமின் 4 ஜி வோல்டிஇ சேவைகள் தற்போது கோயம்புத்தூர் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய இந்தியாவின் சில பகுதிகளில் நேரலையில் உள்ளன.\n2022 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் பிஎஸ்என்எல் தனது 4 ஜி நெட்வொர்க்கை உருவாக்கி முடிக்கும் என்று கூறப்படுகிறது. இந்த காலவரையறை எந்த தாமதங்களும் இல்லாத பட்சத்தில் மட்டுமே நடக்கும். இல்லையெனில் பிஎஸ்என்எல் 4ஜி சேவையை குறைந்தது 2023 வரை காண முடியாது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nபட்ஜெட் விலையிலான Realme, Redmi ஸ்மார்ட்போன்களுக்கு புது சிக்கல்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nதமிழ்நாடுஅண்ணே மறக்காம வந்திருங்க: ஸ்டாலின் பதவியேற்புக்கு அழகிரிக்கு அழைப்பு\nகல்வி செய்திகள்உங்க குழந்தையின் கவன சக்தியை அதிகரிக்க உதவும் TALi App\nசெய்திகள்சுந்தரி சீரியல் ஹீரோவுக்கும் கொரோனா: 15 நாள் தனிமை படுத்தப்பட்ட நிலையில் ஷூட்டிங் திரும்பினார்\nசினிமா செய்திகள்குட் நியூஸ் வந்தாச்சு: நல்ல வேளை, ரஜினி பயந்தது மாதிரி எதுவும் நடக்கல\nசெய்திகள்பிக் பாஸ் கேப்ரியல்லாவுக்கு கொரோனா தொற்று உறுதியானது எச்சரிக்கையாக இருந்தும் பாதிப்பு எப்படி\nதமிழ்நாடுநிதித்துறைக்கு ஸ்டாலின் சாய்ஸ் பழனிவேல் தியாகராஜன்: ஏன் தெரியுமா\nஉலகம்இந்திய மருத்துவர்களுக்கு போப் ஆண்டவர் புகழாரம்\nவிருதுநகர்சரியான மழை: விருதுநகர் கிராமங்களில் வெள்ள நீர்\nதமிழ்நாடுதமிழகத்தில் ஆக்சிஜன் நிலவரம்.. அதிகாரிகளுடன் ஸ்டாலின் ஆலோசனை\nடெக் நியூஸ்May 2021-இல் இந்தியாவிற்கு வரும் 7 புது ஸ்மார்ட் போன்கள்; இதோ லிஸ்ட்\nடிரெண்டிங்கொரோனா காரணத்தால் திருமணத்தில் மணமகன், மணமகள் செய்த விசித்திர விஷயம்\nபொருத்தம்ஒரே நேரத்தில் பல பணிகளை செய்ய முடியாத ராசிகள்\nகிரகப் பெயர்ச்சிமிதுன ராசிக்கு சனி வக்ர பெயர்ச்சி 2021 பலன்கள் - அனைத்திலும் யோக பலன்களைப் பெற்றிடலாம்\nஅழகுக் குறிப்புகூந்தலுக்கு நன்மை செய்யும் ஆரஞ்சு தோல் பொடி ஹேர் மாஸ்க், எப்படி பயன்படுத்துவது\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akattiyan.lk/2021/04/blog-post_96.html", "date_download": "2021-05-07T00:18:55Z", "digest": "sha1:KMM2R47GWDH3QQN6RQMPKVZGAGRL6PIL", "length": 5430, "nlines": 65, "source_domain": "www.akattiyan.lk", "title": "நாடளாவிய ரீதியில் இன்று முதல் விசேட சோதனை நடவடிக்கைகள் - அகத்தியன் | Online", "raw_content": "\nHome முதன்மை செய்திகள் நாடளாவிய ரீதியில் இன்று முதல் ���ிசேட சோதனை நடவடிக்கைகள்\nநாடளாவிய ரீதியில் இன்று முதல் விசேட சோதனை நடவடிக்கைகள்\nகவனயீனமாக வாகனம் செலுத்ததுபவர்கள் மற்றும் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறுவோருக்கு எதிராக நாடளாவிய ரீதியில் இன்று முதல் விசேட சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.\nநாடளாவிய ரீதியில் இன்று முதல் விசேட சோதனை நடவடிக்கைகள் Reviewed by Chief Editor on 4/10/2021 09:29:00 am Rating: 5\nTags : முதன்மை செய்திகள்\nபாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் மேலதிக வகுப்புகளுக்கு மறு அறிவித்தல் வரை விடுமுறை\nபாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் மேலதிக வகுப்புகளுக்கு மறு அறிவித்தல் வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், நோன்பு பெருநாள், வெசாக் ...\nகொரோனா பரவல் காரணமாக நாட்டின் பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள விடுமுறையானது மேலும் ஒரு வார காலத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ...\nமோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nவாகன போக்குவரத்து திணைக்களத்தின் நாரஹென்பிட்டி மற்றும் வேரஹெர அலுவலகங்கள் ஒரு வாரத்திற்கு மூடப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம த...\nDReAM என அறிமுகப்படுத்தப்பட்டுள்ள முற்பாதுகாப்பு விதிமுறைகளுக்கமைய மதுபான சாலைகளை திறந்து வைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. D – சமூக இடை...\nமுழு அதிகாரம் : அகத்தியன் ஊடக சேவை 2020\nஆசிரியர் பீட தெடர்புகளுக்கு 0779516119\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2021/03/26151845/Can-you-get-involved-in-politics-Kangana-Ranaut-Description.vpf", "date_download": "2021-05-07T01:25:42Z", "digest": "sha1:Y5ELEVLUCIAJAVEGKL3WVM4KIGQW5WW3", "length": 8158, "nlines": 114, "source_domain": "www.dailythanthi.com", "title": "Can you get involved in politics Kangana Ranaut Description || அரசியலில் ஈடுபட முடிவா? கங்கனா ரணாவத் விளக்கம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் முடிவுகள் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nமறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை, ‘தலைவி’ என்ற பெயரில் சினிமா படமாக தயாராகி உள்ளது.\nவிஜய் இயக்கி உள்ளார். ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரணாவத்தும் எம்.ஜி.ஆராக அரவிந்தசாமியும் நடித்துள்ளனர்.\nதமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழ���களில் இந்த படம் வெளியாக உள்ளது. இந்தி பதிப்பின் டிரெய்லர் வெளியீட்டு விழா மும்பையில் நடந்தது. இதில் கங்கனா ரணாவத் கலந்து கொண்டு பேசும்போது, ‘நாட்டில் நிலவும் பல்வேறு பிரச்சினைகளை பற்றி நான் பேசி வருகிறேன். விவசாயிகள் போராட்டம் குறித்தும் கருத்து தெரிவித்தேன். இதையெல்லாம் வைத்து எனக்கு அரசியலில் ஈடுபட ஆசை வந்துவிட்டது என்று பேசுகிறார்கள். எனக்கு அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை. அரசியல்வாதியாகவும் விரும்பவில்லை. ஒரு சாதாரண குடிமகனாகத்தான் எனது கருத்துக்களை வெளிப்படுத்தி வருகிறேன். எனது பேச்சுக்கும், அரசியலுக்கும் சம்பந்தம் இல்லை. நான் நேர்மையாக பேசுகிறேன். நேர்மையாக இருப்பது பிடிக்காததால் என்னை அவதூறாக பேசுகிறார்கள். என் மனதில் எந்த உள்நோக்கமும் இல்லாமல் வெளிப்படையாக பேசுவதை சிலர் தீவிரமாக எடுத்துக் கொள்கின்றனர்'' என்றார்.\n1. ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் உயிரிழப்பது, இனப்படுகொலைக்கு சமம் - அலகாபாத் ஐகோர்ட் கண்டனம்\n1. விஜய்யின் 66-வது படம்\n2. ஓ.டி.டி. தளத்தில் விஜய் சேதுபதியின் மேலும் 2 படங்கள் ரிலீஸ்\n3. 'என்னடி முனியம்மா' பாடி பிரபலமான நடிகர் டி.கே.எஸ்.நடராஜன் மரணம்\n4. வில்லியாக நடிக்கும் சமந்தா\n5. கொரோனாவில் இருந்து தப்பிக்க சுய ஊரடங்கை கடைப்பிடிக்கச் சொல்லும் அனுஷ்கா\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2021/05/04015313/Another-45-people-were-infected-in-Ariyalur.vpf", "date_download": "2021-05-07T01:08:23Z", "digest": "sha1:DEXJ4OTDRMYJSSELUWWQQELZC5U3HBOS", "length": 8100, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Another 45 people were infected in Ariyalur || அரியலூரில் மேலும் 45 பேருக்கு தொற்று", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் முடிவுகள் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஅரியலூரில் மேலும் 45 பேருக்கு தொற்று\nஅரியலூரில் மேலும் 45 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.\nஅரியலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 45 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்��ை மொத்தம் 5,736 ஆக உயர்ந்துள்ளது. இதில் 53 பேர் ஏற்கனவே உயிரிழந்துள்ளனர். 5,354 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது 329 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\n1. அதிகரிக்கும் கொரோனா தொற்று: இந்தியாவுக்கு மருத்துவ நிபுணர் குழுவை அனுப்பியது இத்தாலி\nகொரோனா வைரசின் கோரப்பிடியில் சிக்கி தவிக்கும் இந்தியாவுக்கு மருத்துவ நிபுணர் குழுவை இத்தாலி அனுப்பியது.\n2. மேலும் ஒரு முதியவர் கொரோனாவுக்கு பலி\nமேலும் ஒரு முதியவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தார்.\n3. ஒரே நாளில் 43 பேருக்கு கொரோனா தொற்று\nபெரம்பலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 43 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.\n4. புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக 164 பேருக்கு கொரோனா தொற்று\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக 164 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.\n5. தாசில்தார் உள்பட 4 பேருக்கு கொரோனா தொற்று\nதாசில்தார் உள்பட 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.\n1. காரில் கடத்தி சென்று விதவை பெண்ணுக்கு பாலியல் தொல்லை டீக்கடை ஊழியர் கைது\n2. சிறுமி பாலியல் பலாத்காரம்\n3. 9-வது முறையாக கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. ஆனார்.\n4. குமரியில் தி.மு.க. கூட்டணி 4 இடங்களை கைப்பற்றியது\n5. கொரோனா நோயாளிகள், குடும்பத்தினர் வெளியே சுற்றினால் ரூ.2 ஆயிரம் அபராதம் - மாநகராட்சி கமிஷனர் எச்சரிக்கை\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/suspension-orders-canceled-on-protested-government-order/", "date_download": "2021-05-07T01:40:52Z", "digest": "sha1:57PUGJHAW7K6Y3ONZ4C4OW4V6YXXONCO", "length": 16147, "nlines": 147, "source_domain": "www.patrikai.com", "title": "போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீதான சஸ்பெண்டு உத்தரவு ரத்து! அரசு தாராளம் – Patrikai – Tamil Daily – latest online local breaking news & reviews – Tamilnadu, India & World – politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nபோராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீதான சஸ்பெண்டு உத்தரவு ரத்து\nபோராட்ட��்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீதான சஸ்பெண்டு உத்தரவு ரத்து\nபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் கடந்த மாதம் நடத்திய போராட்டம் காரணமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டிருந்தனர்.\nஇந்த நிலையில், அவர்கள்மீதாd நடவடிக்கையை ரத்து செய்வதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்து உள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் ஆயிரத்து 111 பேர் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை ரத்து செய்யப்படுகிறது என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.\n9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் – ஆசிரியர்கள் சங்கம் கடந்த சில ஆண்டு களாக போராடி வருகிறது. கடந்த ஜனவரி மாதம் 22ந்தேதி முதல் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டது.\nஇந்த போராட்டத்தின்போது, மறியலில் ஈடுபட்டவர்கள், வேலைக்கு செல்பவர்களை தடுத்தவர்கள் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சிலர் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் ஜாமீனில் வெளி வந்துள்ளனர். இவர்கள் மீது துறை ரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இவ்வாறு சுமார் 1111 ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டனர்.\nஅரசு ஊழியர்கள் போராட்டத்துக்கு நீதிமன்றங்களும் ஆதரவு அளிக்காத நிலையில், அரசின் கடுமையான எச்சரிக்கை காரணமாக போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.\nஇதைத்தொடர்ந்து, முதல்வரின் கனிவான வேண்டுகோளை ஏற்றும், மாணவர்களின் நலன் கருதியும் எந்தவிதமான தொடர் போராட்டத்திலும் ஈடுபடப் போவதில்லை என்றும், மேலும், ஆசிரியர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெறவேண்டும் என்று சங்க நிர்வாகிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.\nஇந்த நிலையில், ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கையை ஏற்று, வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் ஆயிரத்து 111 பேர் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை ரத்து செய்யப்படுகிறது என பள்ளிக்கல்வித்துறை இன்று அறிவித்துள்ளது.\nஇதன் காரணமாக இடைநீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால், போராட்டம் காரணமாக ஆசியர்களின் ஒரு வாரம் சம்பளம் பிடிக்கப்பட்ட நிலையில், பல ஆசிரியர்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம்: பெரும்பாலான மாவட்டங்களில் பள்ளிகள் மூடல் அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வாருங்கள்: அரசுக்கு ராமதாஸ் வேண்டுகோள் ஆசிரியர்கள் போராட்டம்: மாணவர்களுக்கு பாடம் நடத்திய கோவை எம்எல்ஏ\nTags: Education Department, JactoGeo, teachers Protest, Teachers suspend order cancel, அரசு ஊழியர்கள் போராட்டம் 2வது நாளாக தொடர்கிறது: உண்ணாவிரதத்தை கைவிட ஸ்டாலின் வலியுறுத்தல், ஆசிரியர்கள் போராட்டம், ஆசிரியர்கள் மீதான சஸ்பெண்டு உத்தரவு ரத்து, சஸ்பெண்டு ரத்து, தமிழக அரசு, பள்ளிக்கல்வித்துறை\nPrevious நாடாளுமன்ற தேர்தல் வரலாற்றில் முதன்முறை: பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு வழங்கி நாம் தமிழர் கட்சி அதிரடி\nNext கட்டிட தொழிலாளர்களுக்கு அம்மா உணவகத்தில் இலவச உணவு: விரைவில்….\nஅதிமுக எம்.எல்.ஏ. விஜய பாஸ்கருக்கு கொரோனா\n7 hours ago ரேவ்ஸ்ரீ\nகளை எடுப்போம்: – கமல் டுவிட்\n8 hours ago ரேவ்ஸ்ரீ\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை\n8 hours ago ரேவ்ஸ்ரீ\nஇந்தியாவில் வரலாறு காணாத உச்சமாக நேற்று 4,14,182 பேருக்கு கொரோனா\nடில்லி இந்தியாவில் நேற்று 4,14,182 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று வரலாறு காணாத அளவுக்கு கொரோனாவால்…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15.66 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15,66,72,832 ஆகி இதுவரை 32,69,034 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nஅடுத்த 17 நாட்கள் ஒவ்வொரு வீட்டிலும் பின்பற்ற வேண்டிய கட்டாய விதி\nஅடுத்த 17 நாட்கள் ஒவ்வொரு வீட்டிலும் பின்பற்ற வேண்டிய கட்டாய விதி – நெட்டிசன் பதிவு கொரோனா கட்டுப்பாடு குறித்து வலைத் தளங்களில்…\nஇன்று ஆந்திரப் பிரதேசத்தில் 21,954 கர்நாடகாவில் 49,058 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 21,954 கர்நாடகாவில் 49,058 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 49,058…\nநாளைக்குள் தமிழகத்துக்குத் தேவையான ஆக்சிஜன் வழங்குவதை உறுதி செய்ய மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\nசென்னை நாளைக்குள் தமிழகத்துக்குத் தேவையான ஆக்சிஜன் வழங்குவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்���து….\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் –06/05/2021\nசென்னை தமிழகத்தில் இன்றைய (06/05/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 24,898 பேருக்குப் பாதிப்பு…\nஇந்தியாவில் வரலாறு காணாத உச்சமாக நேற்று 4,14,182 பேருக்கு கொரோனா\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15.66 கோடியை தாண்டியது\nஅதிமுக எம்.எல்.ஏ. விஜய பாஸ்கருக்கு கொரோனா\n7 hours ago ரேவ்ஸ்ரீ\nதனி தகவல் தொடர்பு தளத்தை தொடங்கிய டிரம்ப்\n8 hours ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mybhaaratham.com/2021/04/blog-post_80.html", "date_download": "2021-05-07T00:29:38Z", "digest": "sha1:DYBBE6NJRPFISFDQ2Z6Q4GNTDVVVOHS4", "length": 11917, "nlines": 133, "source_domain": "www.mybhaaratham.com", "title": "Bhaaratham Online Media: கணபதியின் மரணத்தில் உள்ள மர்மம் விலக சுயேட்சை விசாரணை ஆணையம் தேவை- வீரன் வலியுறுத்து", "raw_content": "\nகணபதியின் மரணத்தில் உள்ள மர்மம் விலக சுயேட்சை விசாரணை ஆணையம் தேவை- வீரன் வலியுறுத்து\nசிறையில் தடுத்து வைக்கப்பட்ட போது கடுமையான தாக்குதலுக்கு இலக்கானதால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக நம்பப்படும் ஏ.கணபதியின் மரணத்தில் நீடிக்கும் மர்மம் விலக சுயேட்சை விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்று மஇகா உச்சமன்ற உறுப்பினர் மு.வீரன் வலியுறுத்தினார்.\nஇந்தியர்கள் என்றாலே குண்டர்கள், குற்றவாளிகள் என முத்திரை குத்தி விசாரணை எனும் பெயரில் சிறையில் தாக்குதலுக்கு இலக்காகி மரணிக்கும் சம்பவங்கள் தொடர்கதையாகிக் கொண்டே இருக்கின்றன.\nவிசாரணை எனும் பெயரில் அழைத்துச் செல்லப்படும் இந்தியர்கள் சிறையில் தடுத்து வைக்கப்பட்டபோது உடல்நலம் குன்றியதால் மரணித்தனர் என்று கூறும் போலீசாரின் நடவடிக்கை இனியும் மக்களிடம் எடுபடாது என்று குறிப்பிட்ட வீரன், கால்கள் வீங்கிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கணபதிக்கு அறுவைச் சிகிச்சையின் மூலம் கால்கள் அகற்றப்பட்டது. ஆயினும் சிகிச்சை பலனின்றி கடந்த 18ஆம் தேதி அவர் மரணமடைந்தது இந்திய சமுதாயத்தில் ஒருவித பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.\nவிசாரணைக்காக காவல் நிலையம் செல்லும் வரை உடல்நலத்துடன் இருந்த கணபதி, போலீசாரின் விசாரணைக்குப் பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கால்கள் அகற்றப்படும் நிலை ஏற்பட்டது ஏன் என்ற கேள்வி மிக சாதாரணமாக எழு���ிறது.\nஆகவே, கணபதியின் மரணத்தில் சூழந்துள்ள மர்மங்கள் விலகுவதற்கு ஏதுவாக சுயேட்சை விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்று வீரன் வலியுறுத்தினார்.\n'இயற்கையை காப்போம் இனியதோர் உலகை படைப்போம்' - சிறப்பு கட்டுரை\nபினாங்கு - இயற்கை என்பது இயல்பாக இருப்பது என்பது பொருள் கொண்டதாகும் . இயல்பாகவே தோன்றி மறையும் பொருட்கள் அவற்றின் இயக்கம் , அவை இயங...\nபூச்சோங்- மாரடைப்பின் காரணமாக மனைவியும் அவரை தொடர்ந்து கணவனும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. சிலாங்கூர்,பூச்சோங்கைச் ச...\nசோழன் ஆட்சியை இழந்ததைப்போல, மஇகாவை இழந்து விடாதீர்கள்\nசேரன், சோழன், பாண்டியன் ஆட்சிகளை இழந்து 500 ஆண்டுகளைக் கடந்து விட்டோம். இங்கு வந்து 200 ஆண்டுகளாகக் கட்டமைத்த வாழ்க்கையைத்தான் இன்றும...\nகணபதியின் மரணத்தில் உள்ள மர்மம் விலக சுயேட்சை விசா...\nமஇகா எதிர்க்கட்சியாக இருந்தபோது கட்சியை காப்பாற்ற ...\nகணபதியின் மரண விவகாரம்- அமைச்சரவையில் விவாதிப்பேன...\nஏப்.29இல் திரையீடு காண்கிறது 'பரமபதம்'\nபெர்சத்து, அம்னோ, பாஸ் கட்சிகளை விடவா ஜசெக இனவாதம்...\nதிருமதி மோகனசெல்வி குடும்பத்திற்கு 'யெஸ்' அறவாரியம...\nநடிப்பின் மூலம் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தவர்...\nஏரா சூரியா அறவாரியத்தின் ஏற்பாட்டில் நலிவடைந்த கு...\nநடிகர் விவேக் ஓர் உன்னத கலைஞர்- டத்தோஸ்ரீ சரவணன் இ...\nநடிகர் விவேக்கிற்கு சூர்யா, கார்த்தி நேரில் அஞ்சலி\nபக்காத்தான் ஹராப்பான் ஆட்சி கவிழ்க்கப்பட்டதற்கு து...\nமித்ராவின் வழி மலேசிய இந்தியர் திட்டவரைவு மேம்படுத...\nஆடியோ, வீடியோ சார்ந்த விவகாரங்களில் அஸ்மின் அலி தி...\nதுரோகிகள் சூழ்ந்துள்ள கூட்டணியில் எவ்வாறு இணைய முட...\nதடுப்பூசியை செலுத்திக் கொள்ளும் தொழிலாளர்களுக்கு ம...\nவெ.11 லட்சம் மதிப்பில் சுங்கை சிப்புட் மஇகாவுக்கு ...\nமஇகா தேமுவில் தான் உள்ளது- டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்\nஇந்திய பாலர் பள்ளி ஆசிரியர்களின் 4 மாத சம்பளம் தேக...\nபக்காத்தான் ஹரப்பான் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர்...\nதமிழ்மொழி பண்பாட்டு விவகாரங்களில் எங்களுக்கும் பங்...\nமஇகாவுக்கு மாற்றாக மலேசிய மக்கள் சக்தி கட்சி- டத்த...\n'I-SEED' திட்டத்தை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தா...\nஅன்வார் பிரதமராக ஆதரவு கடிதம் கொடுத்தது யார்- கேள்...\nலோரியில் கூடுதல் பளு; உற்பத்தி நி��ுவனங்களே முழு பொ...\nதள்ளுவண்டியின் மூலம் வாக்களிக்கும் உரிமையை நிறைவேற...\nஉண்மையை அறியாமல் உளற வேண்டாம் வேதமூர்த்தி- வீரன் ச...\nவெற்றி வாய்ப்பில்லாத தொகுதிகளில் மஇகா\nஆலய நிர்மாணிப்பு முன்னதாக நிலத்தை சொந்தமாக்குங்கள்\nதேமுவில் மஇகா; உறவு நீடிக்க வேண்டும்-டத்தோஶ்ரீ ஸாயிட்\nவென்றால் சமூகச் சேவை; இல்லையேல் கட்சி சேவை- டான்ஸ்...\nமஇகாவின் ஆதரவில் பெருமிதம் கொள்கிறேன்- பிரதமர்\nகேமரன் மலை தொகுதியை மஇகா ஒருபோதும் இழக்காது- டான்ஸ...\nடத்தோஶ்ரீ சரவணனுக்கு அமைச்சர் பதவியை கொடுத்தது பி...\n10% தொகுதிகளை விட்டு கொடுக்க அம்னோ தயாரா\nஅரசியல் மேடைகளாக ஆலயங்கள் உருமாறி விடக்கூடாது- கணப...\nஅம்னோ அமைச்சர்கள் பதவி விலகினால் அரசாங்கம் கவிழலாம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://abedheen.wordpress.com/category/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-05-07T01:30:03Z", "digest": "sha1:7N7ZD5QTWVORWCOQ3YFTZAT6LVMZHRQI", "length": 104954, "nlines": 719, "source_domain": "abedheen.wordpress.com", "title": "செழியன் | ஆபிதீன் பக்கங்கள்", "raw_content": "\nஹார்மோனியம் – செழியனின் நட்சத்திர சிறுகதை\n18/11/2013 இல் 12:01\t(கணையாழி, செழியன்)\nஎஸ். ராமகிருஷ்ணன் கொடுத்த நூறு சிறந்த சிறுகதைகள் லிஸ்டில் இரண்டு சிறுகதைகள் மட்டும் இன்னும் கிடைக்கவில்லை என்று அலைந்து கொண்டிருந்தார் தம்பி சென்ஷி. அதில் ஒன்று இந்த ‘ஹார்மோனியம்’ (இன்னொன்று சென்ஷி எழுதிய கதை என்று நினைக்கிறேன்). எப்படியோ, மூன்று வருடங்களாக அவர் புலம்பிய புலப்பம் முடிவுக்கு வந்துவிட்டது – இலங்கையின் ‘பொல்லாத மனுஷன்’ எஸ்.எல்.எம்.ஹனீபா அவர்களின் உதவியால் இன்று. உடல்நலம் குன்றிய நேரத்திலும் கறையான் அரிக்காத கணையாழியை தேடி எடுத்து அனுப்பியிருக்கிறார், தம்பி ஸபீர் உதவியுடன். எவன் சொன்னான் காக்காவை “பொட்டி பீத்தல், வாய்க்கட்டுத் திறம்” என்று). எப்படியோ, மூன்று வருடங்களாக அவர் புலம்பிய புலப்பம் முடிவுக்கு வந்துவிட்டது – இலங்கையின் ‘பொல்லாத மனுஷன்’ எஸ்.எல்.எம்.ஹனீபா அவர்களின் உதவியால் இன்று. உடல்நலம் குன்றிய நேரத்திலும் கறையான் அரிக்காத கணையாழியை தேடி எடுத்து அனுப்பியிருக்கிறார், தம்பி ஸபீர் உதவியுடன். எவன் சொன்னான் காக்காவை “பொட்டி பீத்தல், வாய்க்கட்டுத் திறம்” என்று\n‘எனக்காகக் கதைத் தேடுதலில் ஈடுபட்ட ஆபிதின் அண்ணன் தளத்தில் இந்த சிறப்பான சிறுகதை மீண்டும் வெளிவருவதே சாலச்சிறப்பானது.’ என்று சொல்லி உடனே டைப் செய்து அனுப்பிய சென்ஷிக்கும் நன்றி. உண்மையில், இந்தக் கதைத் தேடுதலில் சகோதரர் பி.கே.எஸ்ஸுக்கும் பங்குண்டு. நான் கேட்டதற்காக பலமுறை செழியனை தொடர்பு கொண்டவர் அவர். ‘ஆவன செய்யுங்கள் , இல்லையென்றால் நானே அதே தலைப்பில் கதை எழுதிவிடுவேன் என்று செழியனை கடைசியாக அவர் எச்சரித்தார். அல்லாஹூத்தஆலா உதவியால் அந்தக் குரல் ஹனீபாக்காவுக்கு கேட்டுவிட்டதால் பிழைத்தோம் கதா விருது பெற்ற இந்த அருமையான கதை பற்றி நான் ஏதும் விமர்சிக்கப்போவதில்லை. படித்ததும் ஆர்மோனியச் சக்கரவர்த்தி காதர் பாட்ஷா மட்டும் நினைவுக்கு வந்தார். இசை சம்பந்தமான நுணுக்கமான விவரிப்புகள் இருப்பதால் ‘அவரோகணம்‘ குறுநாவலை எழுதிய நண்பன் நாகூர் ரூமி சொல்வதே முறை. சொல்வார்.\nஒளிப்பதிவாளர் , ‘எழுத்தும் எண்ணமும்’ குழும நண்பர், செழியனுக்கு உளங்கனிந்த நன்றி. – ஆபிதீன்\nமதிப்பிற்குரிய திரு. ஹசன் பண்டிட் (வயது 43) அவர்களை ஒரு மாலைப்பொழுதில்தான் சந்தித்தேன். நெடிய கட்டிடங்களுக்கு இடையிலான குறுகலான சந்தில் நடந்து, செங்குத்தான மாடிப் படிகளில் ஏறி அந்த மேன்ஷனின் ஏழாவது அறையைக் கண்டுபிடித்தேன். ‘ஹார்மனி இசைப்பள்ளி’ என்று எழுதப்பட்ட, காய்ந்த கதம்ப மாலையிட்ட விளம்பரப்பலகை இருந்தது. வாசலில், இரண்டு தேய்ந்த ரப்பர் செருப்புகள் கிடந்தன. அறையின் உள்ளிருந்து ஊதுபத்தி வாசனையோடு ஹார்மோனிய இசை கேட்டது.\nபண்டிட் கண்களால் என்னை அமர்த்திவிட்டு, ஹார்மோனியத்தில் ஊர்ந்த தன் விரல்களைத் தளர்த்தி நிறுத்தினார். அறையெங்கும் இசையின் அதிர்வு பரவித் தணிந்தது. பத்துக்குப் பனிரெண்டு அறை. சகல மதங்களுக்கான தெய்வங்களின் படங்களின் கீழே ஊதுபத்தி புகைந்து கொண்டிருந்தது.\n’உட்காருங்க. எங்கெ இருந்து வர்ரீங்க\nஅவரது விரல்கள் சப்தமில்லாது ஹார்மோனியத்தின் ஸ்வரக்கட்டைகளின் மேலாக ஏதோ தேடுவதாகப் பாவனித்தன.\n‘ம்.. சொல்லுங்க.. எங்கெருந்து. வர்ரேன்னு சொன்னீங்க..’\n‘சிவகங்கையில இருந்து வர்ரேன். மியூசிக் கத்துக்கணும்னு ஆசை.’\n’நாள மறுநாள்….’ விரல்களில் ஏதோ கணக்குப் பார்த்தார். அஷ்டமி, என உதடுகள் முணுமுணுத்தன. ’வியாழக்கெழம அமாவாசை… அன்னிக்கே சேர்ந்தி��ுங்க… திங்கள் வியாழன் க்ளாஸ். வாரம் ரெண்டு க்ளாஸ். இருநூறு ரூபாய்.. சம்பளம் ஏற்கனவே மியூசிக் படிச்சிருக்கீங்களா’\n‘இல்ல.. நான் தான் முதல்ல…’\nவரும் திங்கள்கிழமையிலிருந்து வகுப்புக்கு வருவதாகச் சொல்லி விடைபெற்றேன். நான் அறையைக் கடந்து மாடிப்படிகளில் இறங்குகையில் ஹார்மோனியத்தின் இசை மீண்டும் பரவியது. ஹார்மோனியத்தின் கட்டைகளின் ஊடே தயங்கி, தாவி, ஊர்ந்து, பின்வாங்கி ஸ்வரங்களைத் தேடும் அவரின் விரல்கள் என் நினைவில் வந்தன.\nஇருட்டத் துவங்கிவிட்டது. ஹசன் பண்டிட், இருட்டத் துவங்குகிற கறுப்பு. பாகவதர் போல தூக்கிச் சீவிய தலைமுடி. தீர்க்கமான சிறிய கண்கள். மீசையில்லாமல் சுத்தமாக மழித்த முகம். இசைக் கலைஞனுக்குரிய தேஜஸ்.\nமொட்டை மாடியில் வெறுமனே மேகங்கள் பார்த்துக் கலையும் என் மாலைப் பொழுதுகள் இனி ஹசன் பண்டிட்டின் ஸ்வரங்களால் நிறையும் என நினைக்கையில் உற்சாகமாக இருந்தது.\nதிங்களன்று இசைவகுப்புகுப் போகிறோம் என்பதே எனக்குள் மிகுந்த பரவசத்தை அளித்தது. இரண்டு நீள அன்ரூல் நோட்டுக்கள் வாங்கிக் கொண்டேன்.\nஅன்று நடுத்தர வயதில் மேலும் இரண்டு பேர் நீள நோட்டுக்களுடன் காத்திருந்தனர். ஆசிரியர் அவர்களுக்கான வகுப்பு முடியும்வரை என்னைக் காத்திருக்கச் சொன்னார். பக்கத்துக் கட்டிடத்திலிருந்த பேக்கரியில் இருந்து ரொட்டிகள் முறுகும் வாசனை இதமாய் இருந்தது. பச்சை நிற ரெக்ஸின் உறையினால் மூடப்பட்டு ஓரத்தில் இருந்த ஹார்மோனியத்தை ஒருவர் எடுத்துக் கொண்டார். அப்போதுதான் கவனித்தேன். அந்த அறையில் மொத்தம் மூன்று ஹார்மோனியங்கள் இருந்தன. ஹசன் பண்டிட்டின் ஹார்மோனியம் மட்டும் பெரியது.\nஸஸ ரிரி கக மம… எனத்துவங்கி ஹசன் பண்டிட் காட்டும் விரல் அசைவிற்கும் கைதட்டுதலுக்கும் ஏற்ப வேகம் இயல்பாய்க் கூடி.. சுதந்திர தினக் கொண்டாட்டங்களில் சிறுமிகள் நடனமாடுகையில் அவர்கள் கையில் இருக்கும் வண்ண வண்ணமான ரிப்பன்கள் காற்றில் அலைவதைப் போல… ஸ்வரங்களின் நடனம். அலை அலையாய் மின்சாரம் போல அறையில் பரவும் இசை அதிர்வில் அந்த இடமே எனக்கு அற்புத உலகம் போல இருந்தது. அவர்கள் வாசித்து முடித்ததும் அதிர்வுகள் தணிந்து மௌனம் கவிந்தது. அவர்களுக்கான பாடக் குறிப்புகளை எழுதச் சொல்லிவிட்டு ஆசிரியர் என்னை அழைத்தார்.\nஎனது நீள நோட்டினை வாங்கி முதல் பக்கத்தைத் திறந்து, கண்களை மூடிப் பிரார்த்தித்துவிட்டு, பெரிதாக பிள்ளையார் சுழி போட்டு என் பெயரை கொட்டை எழுத்தில் எழுதினார்.\nகற்காலத்தில் இடுகாட்டில் கிடந்த எலும்புகளை ஊதி, சப்தங்களை எழுப்பிய கதையிலிருந்து துவங்கினார். தேர்ந்த கலைஞனின் அடவுகளைப் போல முகபாவனைகளாலும், விரல் அசைவுகளாலும் அவர் பேசப் பேச ஆதிமனிதனின் புதைமேடுகளில் கிடந்த எலும்புகளில் வண்டுகள் துளையிட்டுப் பறக்க.. காற்றின் சுழிப்பில், விசிறலில்.. இனந்தெரியாத சோகத்தோடு ஒரு குழலிசை புகையெனச் சுழல… அறை இருட்டிக் கொண்டே வந்தது. ஸ்வரங்களை வாசித்துப் பழகிய அவரது கறுத்த விரல்கள், காற்றில் கண்ணுக்குத் தெரியாத ஆர்மோனியத்தின் கட்டைகளை வாசிப்பது போல அபிநயித்தன. சூனியம் இல்லாத இருண்ட வனத்துக்குள் மயில்கள் அகவுகின்றன. அதிலிருந்து ஸட்ஜமம். கிரௌஞ்சப் பறவைகள் பாடுகின்றன. நிலா வெளிச்சத்தில் மூங்கில் துளிர்கள் தேடித் தின்ற களிறுகள் பாறைகளின் ஊடே தன் இணையை ஆளும் சுகத்தில் பிளிறுகின்றன. ஸ்வரங்கள் உயிர்த்து அசைகின்றன. கைலாயத்தில் நடனம் கொள்ளாது சிவனின் ஏழு தலைகளிலிருந்தும் ஒவ்வொரு பாடல் ஒவ்வொரு கதியில். இசைமுனி நாரதனின் வீணைத் தந்திகள் தாமாக அதிர்கின்றன.\nஸ ரி க ம ப த நி என ஏழு ஸ்வரங்கள். வேங்கட மகியின் பனிரெண்டு சக்கரங்கள். மேளகர்த்தாக்கள். எழுபத்திரெண்டு தாய். கோடிக்கணக்கான குழந்தைகள். திருவையாறின் பிரசன்ன வீதிகளில் தியாகையரின் தம்புரா அதிர்கிறது. காவேரியில் உதிர்ந்த நாகலிங்க மலர்கள் உயிர்த்துப் பறக்கின்றன. சியாமா சாஸ்திரியின் ஆலாபனை. முத்துச்சாமி தீட்சிதரின் ஸ்வரக்கட்டு. பனை ஓலைகளில் துளசிதாஸரின் எழுத்தாணி கீறி நகர்கிறது. சரளிவரிசை. ஹார்மோனியத்தின் கமகக் குழைவும் ஒரு காந்தர்வக் குரலுமாக…\nஸரிகம பா கம பா பா\nகமபம நிதபம கம பக மகரிஸ\nஸா நித நீ தப தா பம பா பா\nகம பத நித பம கமபக மக ரிஸ\nஸா ஸா நித நீநீதப தாதா பம பா பா\nகமபத நிதபம கமபக மகரிஸ…\nநான் மீண்டபோது எனக்கெதிரே நாற்காலி மட்டுமே இருந்தது. ஊதுபத்தியின் புகைவளையங்கள் சுழன்று திரிதிரியாய்ப் பிரிந்து மௌன ஆலாபனையாய்க் கலைந்தன.\n‘ஸ்வரம் மாதா; லயம் பிதா\nஸ்வரமும் தாளமும் கூடிக் கூடிப் பிணைந்து, விலகி, ஸ்பரிசித்து.. தழுவி அணைத்து… துரித காலத்தில், விளம்பித காலத்தில் காற்றில்… காற்றுக்குள் நிகழும் கலவி. சூல் கொண்ட காற்று இசையாகிறது. மற்றதெல்லாம் உயிர்பிடிக்காது திரிதிரியாய்க் கலைகிற சப்தம். காற்றுதான் இசை. காற்றுதான் பிராணன். இசைதான் பிராணன். இசை கூடினால் தியானம். இசை கூடினால் ஞானம். ஜெபம் கோடி தியானம். தியானம் கோடி லயம். லயம் கொள். த்ருவம், மட்யம், ரூபகம், ஜம்பம், த்ருபுடம், அட, ஏகம் என ஏழு ராஜகுமாரர்கள். ஸட்ஜமம், ரிஷபம், காந்தாரம், மத்யமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் என ஏழு தேவ கன்னிகைகள். ஏழு ராஜகுமாரர்களின் குதிரைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு லயத்தில் குதித்து வருகின்றன. த்ருதம், அணுக்ருதம், லகு, புலுதம், காகபாதம் என சப்தக் கோவைகள். வண்ண வண்ணமாய் தொடுக்கப்பட்ட அட்சர மாலைகள். தக்கத்திமி தக்கத்திமி திமி திமியென.. காற்றின் புலனாகாத அரூப வெளியில் ராஜகுமாரர்களும் தேவகன்னியரும் மாலை சூழ சுயம்வரம் கொண்டு சூடித் திளைக்கிறார்கள்.\nஸ்வரம் மாதா; லயம் பிதா\nகேட்பவை எல்லாம் ஸ்வரம்.. கேட்பவை எல்லாம் லயம். மேற்கூரையில் மழை பெய்கிறது. சட்டச் சட சட்டச்சட வென. திருபுட தாளம். பெய்து களைத்த மழை தாழ்வாரச் சருக்கத்தில் துளித்துளியாய்ச் சொட்டுகிறது ஏக தாளம். குழந்தை முனகுகிறது. மந்த்ர ஸ்தாயியில் கமகம். வீறிட்டு அலறுகிறது. தாரஸ்தாயி சஞ்சாரம். மணலைக் கயிறாய்த் திரிக்கிற மாதிரி காற்றை இசையாய் நெய்கிற ரச மந்திரம், சித்த மந்திரம். காதுகள் உள்ளவன் கேட்கக் கடவன். இயற்ற முடிந்தால் அதுதான் ஞானம். காற்றைக் கேள். கேட்கத் துவங்கு.’\nகாற்று முகத்தில் விசிற பேருந்தின் சன்னலோரம் அமர்ந்து ஊர் திரும்பிக் கொண்டிருந்தேன். காற்றிலும் இது பனிக்காற்று. பண்டிட்டைச் சந்தித்ததில் இருந்து என் சுவரில் இறுகியிருந்த சன்னல்கள் எல்லாம் தாமாகத் திறந்து கொள்வதாக உணர்ந்தேன். எனக்கான கிழமைகள் இசையென அதிர்ந்து அடங்குகையில் வியாழன் வந்திருந்தது.\nசந்தன ஊதுபத்தியின் வாசனை ஈஸ்ட்டில் முகிழ்த்த மென் ரொட்டிகள் ஓவனில் முறுகும் வாசனை. ஹார்மனி இசைப்பள்ளி.\nதன் ஹார்மோனியத்தின் முன் அமர்ந்து இசைக்குறிப்புகள் எழுதிக் கொண்டிருந்த ஹசன்பண்டிட் நிமிர்ந்தார்.\n‘உட்காருங்க.. ஒரு நிமிஷம்’ ஹார்மோனியத்தின் ஸ்வரக்கட்டைகளில் ஐந்து விரல்களையும் விரித்து, சப்தம் வராமல் தொட்டுத் தொட்டுக் குறிப்புகள் எழுதிக் கொண்டு ��ருந்தார். அவர் தலைக்குப் பின்னால் மஞ்சள் சட்டமிட்ட மும்மூர்த்திகளின் படம் தொங்கிக் கொண்டிருந்தது.\n‘போன வகுப்புல நடத்துன பாடத்தைப் படிச்சுப் பார்த்தீங்களா..’\n‘படிச்சேன். ரொம்ப நல்லா இருந்துச்சு.’\n‘க’ங்கற ஸ்வரத்தோட பெயர் சொல்லுங்க’\n‘நல்லது. ஸரளி வரிசைல பயிற்சி கொடுத்திருந்தேன். பாடம் பண்ணிட்டீங்களா’\n‘ஏன்… பயிற்சி ரொம்ப முக்கியம் இல்லையா’\nஎன்னிடம் ஹார்மோனியம் இல்லை என்பதை அவரிடம் சொன்னேன்.\n‘அதனாலென்ன.. ஒண்ணு வாங்கிடுங்க. பெட்டி கையில இருந்தா சாதகம் பண்ண வசதியா இருக்கும். போகப் போக பாடங்கள் நிறையாப் போயிடும். கீ போர்டு கூட பெறகு வாங்கிக்கலாம். முதல்ல ஒரு பெட்டி பழசா இருந்தாக்கூட பாத்து வாங்கிடுங்க.’\nவேலையில்லாமல் வகுப்புக்கு வருவதே சிரமமான நிலையில் பெட்டி வாங்க முடியுமென்று எனக்குத் தோணவில்லை.\n’சங்கீதத்தை ‘ஹராம்’னு குரான்ல சொல்லியிருக்கும். அதனால எங்க வீட்ல என்னைய சங்கீதம் கத்துக்க விடல. அப்ப பத்தொன்பது வயசு எனக்கு. சீனிவாஸ சாஸ்திரின்னு ஒரு பண்டிதர். மீனாட்சி அம்மன் கோயில் பக்கத்துல இருந்தார். அவருக்கு சகல பணிவிடையும் செஞ்சு கத்துக்கிட்டேன். ஏன் சொல்றேன்னா.. மனசு இருந்தா மார்க்கம் உண்டு. ஞானத்தைக் கொடுத்தவன் அதுக்கான கருவியை ஒளிப்பானோ\nஅன்று மாயாமாளவ ராகத்தில் ஸரளிவரிசையின் மீதமுள்ள பாடத்தை அவர் சொல்லச் சொல்ல எழுதிக் கொண்டேன். அவரது ஹார்மோனியத்தை என் பக்கம் திருப்பி வாசிக்கச் சொன்னார்.\n‘இது ஸட்ஜமம். ஸட்ஜமத்துக்கு கட்டைவிரல். இடது கையில் பெல்லோஸ் போட வேண்டும். இதிலிருந்து எழும்புகிற காற்று ஹார்மோனியத்தின் உள்ளறைகள்ல போய்த் தங்குது. நாம ஒரு கட்டைய அழுத்தும்போது, உள்ள அடைபட்ட காற்று துளையின் வழியே வெளியேறும். அப்படி வெளியேறும்போது அந்தத் துளையில் இருக்கிற ரீடு, நாக்கு மாதிரி இருக்கும். அது அதிரும். அதுதான் நாதம். எங்க… ஸட்ஜமம் வாசிங்க’\nஇடது கை பெல்லோஸ் அழுத்த, பதட்டத்துடன் கட்டைவிரலால் ஸட்ஜமம் தொட்டேன். புதரிலிருந்து சாம்பல் குருவிகள் விடுபட்டுப் பறப்பது மாதிரி ஒரு சிலிர்ப்பு. அடுத்து சுத்த ரிஷபம், அந்தர காந்தாரம், சுத்த மத்யமம், பஞ்சமம் என ஒவ்வொரு விரலாக அழுந்த ஹார்மோனியம் விதவிதமான தொனியில் என்னுடன் பேச முயல்கிறது. அந்த சந்தோஷத்தை எப்படிச் சொல்ல\n‘சப்��ங்கள் எல்லாம் ஸ்வரம். ஏற்கனவே சொல்லியிருக்கேன். உலகத்தின் சப்தங்கள் எல்லாம் ஏழு ஸ்வரத்தில் அடக்கம்.’ அருகிலிருந்த டீ கிளாஸை ‘ணங்’கென்று மேடையில் வைத்தார். ‘இது ஒரு ஸ்வரம்’ காற்றில் சன்னலின் திரைச் சீலைகள் சரசரத்தன. ‘இதுவும் இசை’.\nபேருந்தில் ஊருக்குத் திரும்பும்போது மழை பெய்தது. மழை எத்தனை பெரிய இசைக்கருவி. எத்தனை தந்திகள் கொண்ட வயலின். சதா சுழன்று கொண்டே இருக்கும் பூமி எத்தனை பெரிய இசைத்தட்டு. குளத்து நீரில் நிலா வெளிச்சம் வீணைத் தந்தியாய் நலுங்குகிறது. அதனதன் இசை. எனக்கு பிரமிப்பாய் இருந்தது. கண்களை மூடிக்கொண்டால் பிரமிப்பாய் இருந்தது. கண்களை மூடிக்கொண்டால் காதுகளுக்கான உலகம். காற்றைக் கேள். இதுதான் சப்தங்களின் வாகனம். கேட்கத் துவங்கு.\nதிங்கள் – வியாழன், திங்கள் – வியாழன் என கிழமைகள் இசைபடக்கழிந்தன. இன்னும் ஹார்மோனியம் வாங்க முடியவில்லை. ஸரிகம ரிகஸரி என்று ஸ்வரங்கள் தாவித் தாவி நடனமிடும் தாட்டு வரிசை வந்துவிட்டது. என் கிழமையில் வகுப்புக்கு வரும் ஷங்கர கோடி, நேற்றுதான் பத்தாயிரம் ரூபாய்க்கு புது கீ-போர்டு வாங்கி வந்திருந்தார். அதில் கடல் அலைகளின் உறுமலையும், பின்னிரவில் எழும் சில்வண்டுகளின் ஓசையைக் கூட எழுப்ப முடிந்தது. ஆச்சர்யம் ஒரு புறம், இயலாமை ஒரு புறம். இசைக்கருவி இல்லாமல் வகுப்பை மேலும் தொடர்வது அயற்சியாக இருந்தது. மதுரை, கூலவாணிகன் தெருவில் கால்போன போக்கில் நடந்து கொண்டிருந்தேன்.\n‘என்ன இந்தப்பக்கம்… ஏறுங்க வண்டில..’\nவாகன வேகத்தில் புறந்தலையின் வியர்வை உலர்வது இதமாக இருந்தது. டவுன்ஹால் ரோட்டின் பழமுதிர்ச்சோலையில் ஆளுக்கொரு ஆப்பிள்சாறு.\n’இப்ப… எங்க வொர்க் பண்றீங்க\n‘வேலையில்ல ஷாஜகான். சும்மாதான் இருக்கேன்.’\n’ஜோல்னாப் பையும் அதுவுமா மதுரையில என்ன பண்றீங்க’\n‘மியூசிக் கிளாஸ். கீ போர்டு கத்துட்டிருக்கேன்.’ வேலையில்லாமல் மியூசிக் கற்றுக் கொள்வதைச் சொல்ல சற்றே குற்ற உணர்வாக இருந்தது.\n‘ஓ.. இன்ட்ரஸ்டிங்… பாட்டெல்லாம் வாசிப்பியா’\n‘இல்ல. இப்பதான் ஒரு மாசமா…’\n‘எனக்கும் மியூசிக்ல இன்ட்ரஸ்ட். உனக்குத் தான் தெரியுமே. நானும் ஒரு பத்துநாள் மியூசிக் கிளாஸ் போனேன். அதோட சரி… எல்லாத்திலேயும் பாதிக்கிணறுதான். சரி… இன்ஸ்ட்ருமெண்ட் என்ன வச்சிருக்க..’\n’இனிமேதான் வாங்கணும். பழையதா ஆர்மோனியம் தேடிட்டிருக்கேன்’\n‘சரி… வாங்க வீடு வரைக்கும் வந்துட்டுப் போகலாம்’\n’ஏறுங்க.. புதுவீடு கட்டிட்டு நீங்க வரவேயில்ல’\nஎன்னை ஹாலில் அமர்த்திவிட்டு உள்ளே போனவர், வரும்போது சிறிய மரப்பெட்டி ஒன்றைத் தூக்கி வந்தார். ஹார்மோனியம் என்று பார்த்த உடனேயே தெரிந்துவிட்டது. என் எதிரில் வைத்து மேலிருந்த தூசியைத் துடைத்தார். மரப் பலகையில் கீல் வைத்த மூடி இருந்தது. ஹார்மோனியப் பெட்டியின் மூடியைத் திறந்ததும், காவியேறிய பல்வரிசையுடன் பாகவதர் ஒருவர் சோகமாகச் சிரிப்பது போலிருந்தது. ரொம்பவும் பழமையானது. வெள்ளைக் கட்டைகளில் மைக்கா ஒட்டப்பட்டிருந்தது. அதன் முனைகள் உடைந்து நிறம் பழுப்பேறியிருந்தது. ஹார்மோனியத்தின் இருபுறமும் அழகிய வேலைப்பாட்டுடன் கூடிய வெண்கலக் கைப்பிடி இருந்தது. முன்பக்கம், காற்றறைகளைத் திறந்து ஒலியின் அளவைக் கட்டுப் படுத்தும் இழுவைத் திறப்புகள் நான்கு இருந்தன. அவற்றை இழுப்பதற்கு வசதியாக நுனியில் வெள்ளைப் பளிங்குக் குமிழ்கள் பெரிய பொத்தானைப் போல இருந்தன. பார்த்த உடனேயே அது சிங்கிள்ரீட் பெட்டி எனத் தெரிந்தது. கீழே ஏதும் பழுதடைந்திருக்கிறதா என்று குழந்தையைப் போல இருகைகளாலும் தூக்கிப் பார்த்தேன். நன்றாக இருந்தது. கீழே வைக்கும்போதுதான் பார்த்தேன். இரண்டு பளிங்குக் குமிழ்களுக்கு இடையில் ஏதோ பெயர் பொறிக்கப் பட்டிருப்பதைப் பார்த்து, தூசியைக் கைகளால் துடைத்தேன். ‘எட்டுக்கட்டை முருகசிகாமணிப் பாகவதர், கண்டரமாணிக்கம்’ என்றிருந்தது.\nஹார்மோனியத்தின் மத்திம ஸ்தாயியில் வெள்ளை கறுப்பு நோட்டுகளின் மேலே ஸ்வரங்கள் எது என்று அறிய, அடையாளத்திற்காக ஸ,ரி,க,ம,ப,த,நி, என்று சிறிய சதுரமான காகிதத்தில் எழுதி ஒட்டப் பட்டிருந்தது. நல்ல தேக்கு மரத்தால் ஆன ஜெர்மன் ரீட் பெட்டி. பெல்லோஸ் காற்றுக் கசியாமல் கச்சிதமாய் இருந்தது.\n‘ரொம்பப் பழைய பெட்டி. எல்லா நோட்டும் பேசுமா.’\n’எல்லா கட்டையும் வாசிச்சா சத்தம் வருமா.. பழுது இருக்கான்னு’\n‘வாசிச்சுப் பாரேன். நான் தொட்டே ரெண்டு வருஷம் ஆச்சு. எப்பவாவது எடுத்து துடைச்சு வச்சிடுவேன். ஒரு மாசமா அதுவும் இல்ல. பக்கத்துல வீடு எதுவும் இல்லையா. வாசிச்சா பாம்பு வரும்னு அம்மா இதைத் தொடவே விடறதில்ல. அப்படி என் இசையைக் கேட்டு பாம்பாவத�� வரட்டுமேன்னு மொட்டைமாடிக்கு தூக்கிட்டுப் போயி வாசிப்பேன். அந்த முருகசிகாமணி பாகவதர் ஒரு பாட்டுத்தான் சொல்லிக் கொடுத்தாரு. அதுவும் இப்ப பாதி மறந்துபோச்சு’\nஷாஜகான் மனைவி கொடுத்த ஏலக்காய் தேநீரை அருந்தும்போது வலதுகையால் ஹார்மோனியத்தின் கட்டைகளை மெதுவாக வருடிப் பார்த்தேன். கட்டைகள் ஒன்றுக்கொன்று பிடிக்காமல் இலகுவாய்த்தான் இருந்தன.\n‘சும்மா வாசிச்சுப் பாருப்பா. இங்கே குடு. நானே வாசிச்சுக் காட்டிர்ரேன்’ ஷாஜகான் அவர் பக்கம் திருப்பி, கீழ்ஸ்தாயியிலிருந்து ஒவ்வொரு கட்டையாக அழுத்திக் கொண்டே வந்தார். மணிமணியான ஸ்வரங்கள். கொஞ்சமும் பிசிறில்லாமல் காத்திரமாக இருந்தது.\n‘சவுண்டு சும்மா ஏழு வீட்டுக்குக் கேக்கும். அந்த பாகவதர் தன்னோட சொத்துப் போல இதை வச்சிருந்தாரு. என் ஆர்வத்தைப் பாத்தாரு. அவருக்கு ஆஸ்த்மா. மாத்திரை வாங்கக்கூட காசில்ல. வறுமை. கடேசீல நீயே இதை வச்சுக்கன்னு கொடுத்திட்டாரு’\n’அதெல்லாம் சொல்ல மாட்டேன். ஆனா குடுக்கும்போது ஒண்ணு மட்டும் சொன்னாரு. இது நான் பழகுன பெட்டி என் தெய்வம். ஆசைப்பட்டுக் கேக்குறியேன்னு குடுக்கிறேன். நூலாம்படை மட்டும் அடையவிட்றாத. இது சரஸ்வதி. வச்சிக்க. வாசிச்சுப் பெரிய ஆளா வா. அவரு சொன்னதையே நான் உனக்கும் சொல்ல விரும்புகிறேன். இந்தா, வச்சிக்க. வாசிச்சுப் பெரிய ஆளா வா’\nஅவர் சொன்ன விதம் நெகிழ்ச்சியாக இருந்தது.\n‘எவ்வளவுன்னு சொன்னீங்கன்னா.. ஒரு வாரத்துல..’\n‘சரி நூறு ரூவா குடு. இசைக்கருவியை சும்மா குடுக்கக் கூடாது’\n‘நான் வாங்குனதே அவ்வளவுக்குத்தான். போதுமா’\nமகிழ்ச்சியோடு வாங்கிக் கொண்டார். தனக்குத் தெரிந்த ஒரே பாடலான ‘திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா’ என்கிற பாடலின் பல்லவியை மட்டும் விரல்களை விறைப்பாக வைத்துக்கொண்டு சரளமில்லாமல் வாசித்துக் காண்பித்தார். நியூஸ் பேப்பர் போட்டு நைலான் கயிறால் கட்டி, கைகளால் தொட்டு வணங்கி, கழுத்து நிற்காத பச்சைக் குழந்தையை கையில் தருவது மாதிரி பதமாகத் தந்தார். நன்றி சொல்லி விடை பெற்று வெளியே வருகையில் நிலா வெளிச்சம் தார்ச்சாலைகளை மெழுகியிருந்தது. கையில் ஹார்மோனியத்தின் பாரம். நைலான் கயிறு அழுத்த கைமாற்றிக் கொண்டேன். இசைக் கருவியின் மௌனம் கனக்கிறது. தன்னை வாசிக்க விரல்கள் இல்லாமல் இருட்டறையில��� இத்தனை ராகங்களோடும் இத்தனை ஸ்வரங்களோடும் மௌனமாய் இருப்பது எவ்வளவு பெரிய தியானம். வாசிக்கப்படாதபோது இசைக்கருவிகள் என்ன உணர்கின்றன\nஎனக்குப் பிடித்தமான சன்னலோரப் பயணம். தூங்குகிற குழந்தையைப் போல அமைதியாக மடியிலிருக்க எனக்குள் ஏதோ பொறுப்புணர்வு கவிவதாக உணர்கிறேன். பாட்டியின் மந்திரக் கதைகளில் வரும் சொர்க்கபுரத்து இளவரனைத் திருமணம் செய்ய, தேவதைகள் காற்றும் எனும் பரத கணத்தோடு சேர்ந்து சூறாவளியாய் மாறித் துரத்துவது போல, முகத்தில் விசிறும் காற்று ‘என்னை இசையாக மாற்று’ என்று என்னையும் எனது ஹார்மோனியத்தையும் பயண வேகத்தோடு துரத்திக் கொண்டே வருவதுபோல் இருந்தது.\nவீட்டுக்குள் ஹார்மோனியத்தைத் தூக்கி வந்தபோது எல்லோரும் விநோதமாகப் பார்த்தனர். ஹாலின் மையத்தில் வைத்து சுற்றியிருந்த காகிதத்தைப் பிரித்தேன். ஹார்மோனியத்தின் வருகை யாருக்கும் சந்தோஷத்தையோ, துக்கத்தையோ தரவில்லை. தொட்டு வணங்கிவிட்டு ஸரளிவரிசை வாசிக்கலாம் என யோசித்தேன். சின்ன வீடு. இந்த இரவு நேரத்தில், வேலையில்லாத இளைஞன் நடுவீட்டில் அமர்ந்து ஹார்மோனியம் பழகுவது யாருக்குப் பிடிக்கும். தூக்கிக் கொண்டு மொட்டை மாடிக்குப் போனேன்.\nநாளை பௌர்ணமி. வெளிச்சம் இதமாக இருந்தது. அடுத்த இசை வகுப்புக்கு இன்னும் மூன்று நாட்கள் இருக்கின்றன. ஹார்மோனியத்தை நெருக்கமாக வைத்துக் கொண்டேன். கீழ்ஸ்தாயியின் ஸட்ஜமத்தைத் தொட்டேன். இருட்டறையில் நெடுநாள் பூட்டியிருந்த கதவு திறப்பது போலிருந்தது. நடுவிரலால் பஞ்சமம். சுண்டு விரலால் மத்திமஸ்தாயி ஸட்ஜமம். மூன்று ஸ்வரங்களும் சேர்ந்து.. பூவைச் சுற்றும் கதம்ப வண்டு மாதிரி காற்றின் அரூப அடுக்குகளில் இருந்த ஸ்வரங்கள் ஹார்மோனியத்தைச் சுற்றி மொய்க்கின்றன. குரல் சேர்த்துப் பாடி சுதி சேர்த்துப் பார்த்தேன். சுதியோடு ஒட்டாது கலைந்த குரல், பிசிறு தேய்ந்து தேய்ந்து சுதி சேரும் கணத்தில்… மின்சாரம்.. சட்டென வீசிய காற்றில் என் உடல் சாம்பல் குவியலெனக் கலைந்து, குரல் மட்டும் நானாக மிஞ்சுகிறது. பிறகு குரலும் என்னுடையதில்லாமல் போக வெறும் ஸ்வரங்கள் அந்தரத்தில் இசை கூட்டிக் கொண்டு அதிர்கின்றன. ஸா பா ஸா.\nதயங்கித் தயங்கி ஸரளி வரிசை. சவுக்க காலம், விளம்பியதம், துரித காலங்கள். ஜண்டை வரிசை. ஸ்வரங்களின் அடுக்��ு. ஒன்றின் நிழலாய் அதே ஸ்வரம். விரல்கள் தளர்ந்து ஓர் இலகு கூடி வருகிறது. பூர்வாங்கத்தில் முன்னேறிப் பதுங்கி, உத்தராங்கத்தில் தாவி ஒரு ஸ்வரம் தொட்டு ஆரோகணித்து காற்றில் துவளும் துணியென மெதுவாய் அவரோகணம். ஸட்ஜமத்தில் இளைப்பாறி மேல்ஸ்தாயி வரிசை. தாட்டு வரிசை. ஸ்வரங்கள் துரித கதியில் பின்னிப் பின்னி பூத்தொடுக்கும் விரல்களின் அனிச்சை கொண்டு, ஹார்மோனியத்தின் கட்டைகளும் விரல்களும் ரகசியம் பேசி, குழைந்து, விலகிச் சீண்டி, கமகமெனத் தடவி ஸ்வரங்கள் அலைந்து மெது மெதுவாய் எழும்பி நுரைத்துப் பின்வாங்கி அலைகொண்டு எழும்பி அடித்துச் சிதறியது. பாற்கடல். ஹார்மோனியம் மிதக்கிறது. கால்கள் கடற்கன்னியின் செதில்களெனக் குழைய நான் நீந்துகிறேன். மொட்டை மாடியில் தங்க நிற மீன்கள் என் முகம் உரசி இடம் வலமாய் நீந்துகின்றன. சமுத்திரம் கொள்ளாத இன்னொரு அலை. ஹார்மனி இசைப்பள்ளியின் சாத்திய ஊதா நிறக் கதவில் அலைமோதி தண்ணீர் பொரிகளாய்ச் சிதறி விழுகிறது. கதவைத் திறந்தால் பாலைவனம். கண்ணுக்கெட்டிய தொலைவுவரை மணல். புழுதிக் காற்று முகத்தில் அறைகிறது. எங்கோ தொலைவிலிருந்து அரபி மொழிப் பிரார்த்தனைப் பாடல் மிதக்கிறது. மணல்வெளியெங்கும் அலை அலையாகப் பாம்புகள் ஊர்ந்த தடமென காற்றின் சுவடுகள். காற்று கானலென நெளிகிறது. வெளியிலும், மணலிலும் காற்றின் லிபிகள். சற்றே தொலைவில் இரண்டு ஹார்மோனியங்கள் இருக்கின்றன –\nதுகள் துகளாக மணல் விசிறுகிறது. மணலுக்குள் கை புதைத்துக் கொண்டு ஹசன் பண்டிட் என்ன செய்கிறார். காற்று விசிற விசிற புதைந்த மணலிலிருந்து மீள்கிறது அவரது ஹார்மோனியம். அவரது விரல்கள் வாசித்துக் கொண்டே இருக்கின்றன.\n‘பண்டிட் ஐயா… தீபக் என்ற தான்சேனின் ராகத்தை தாங்கள் வாசிக்க முடியுமா’ ஹசன் பண்டிட்டின் விரல்கள் நின்று தயங்கின. பிறகு விரல்கள் காற்றில் தாமாக ஒத்திகையென அசைந்து பார்த்த கணத்தில் ஹசன் பண்டிட் வாசிக்கத் துவங்கினார். வாசிக்க வாசிக்க.. பஞ்சமத்தின் கட்டையிலிருந்து துளிர் நெருப்புப் பற்றுகிறது. எரியத் துவங்குகிறது ஹார்மோனியம். காற்று சிலிர்க்கிறது. பண்டிட்டின் விரல்கள் மெழுகுதிரி போல் பற்றிக் கொள்கின்றன. ஹார்மோனியம் முழுதும் எரிந்துவிடுமுன் அதன் ஸ்வரக் கட்டைகளைப் பிடுங்கி எடுக்கிறேன். புகை வளையங்கள் பெரிது பெரிதாய்ச் சூழ்ந்து மறைக்கின்றன. மணல் குன்றுகளில் கால் சறுக்க ஓடுகிறேன். கையில் இறுக்கிப் பிடித்திருந்த ஸ்வரக் கட்டைகள் உருவி விழ என்னிடம் ஒரே ஒரு வெள்ளைக் கட்டை மட்டும் இருக்கிறது. அதன் மேல் சிறிய சதுரமான காகிதத்தில் ‘க’ என்று எழுதி ஒட்டப்பட்டிருக்கிறது.\n’ஒரு ஸ்வரத்தால் ராகம் இயற்ற முடியுமா பண்டிட்ஜி… அதுவும் என்னிடம் இருப்பது அந்தர காந்தாரம் மட்டும். முடியுமா பண்டிட்ஜி.’ பாலைவனம். முழுக்க நெளியும் பாம்புத் தடங்களுக்குள் என் பதட்டமான காற்சுவடுகளும் ஹார்மோனியத்தின் ஸ்வரக்கட்டைகளும் இறைந்து கிடக்கின்றன.\nபச்சை ரெக்ஸின் போர்த்தி ஒரு உருவம் படுத்திருக்கிறது. எழுப்பினேன். ஜடைமுடி வளர்த்த பாகவதர்.\n‘ஐயா.. என்னிடம் அந்தரகாந்தாரம் மட்டும் வாசிக்கக்கூடிய ஸ்வரக்கட்டை இருக்கிறது. இதை வைத்துக்கொண்டு ஒரு ஹார்மோனியம் தர முடியுமா\nபச்சை ரெக்ஸினை முழுவதுமாக விலக்கியதும், உள்ளங்கையில் வைக்கும் அளவுக்கு தந்தத்தால் ஆன வெண்மையான குட்டி ஹார்மோனியம் இருந்தது.\n‘இது ஆலங்கட்டி மழையோடு சேர்ந்து வானத்திலிருந்து தவறி விழுந்தது. உனக்கு வேண்டுமா\n‘வேண்டும். ஆனால் ரொம்பவும் சிறிதாக இருக்கிறதே’\n‘நீ வாசிக்க வாசிக்கப் பெரிதாகும். தருகிறேன். ஆனால் அதற்குப் பதிலாக நீ ஒன்று தர வேண்டும்’\n‘உன் கையில் உள்ள பத்துவிரல்களையும் தர வேண்டும்’ சொன்னவனின் கைகள் இரண்டு கட்டைகளின் முனையைப் போல விரல்களற்றுத் தீய்ந்திருந்தன. முன் புஜத்தில் முருகேசபாகவதர் என்று பச்சை குத்தியிருந்தது.\nபண்டிட்ஜி என்று கத்திக் கொண்டே கானல் நீருக்குள் ஓடத் துவங்கினேன். கால்கள் பதியும் புதைமணல். எதிரே பச்சை நிறத்தில் அலைகள். சுழித்துக் கொண்டு ஆக்ரோஷத்துடன் பாலைவனத்தைக் கடல் கொள்ள வருகிறது அலை. மணற்பரப்பு குறைந்துகொண்டே வருகிறது. என் கையில் உள்ள ஸ்வரக்கட்டையை இறுகப் பற்றிக் கொண்டு அலறுகிறேன். அலை முகத்தில் அடித்துச் சிதற பிறகு எல்லாம் கடல். கடற்குதிரைகளுடன் நீந்துகிறேன். என்னிடமிருந்த ஸ்வரக்கட்டை மீனாக மாறிப் பிடியிலிருந்த நழுவுகிறது. சமுத்ரத்தின் நீலப் பச்சை வெளியிலிருந்து குமிழிகள் பறக்க ஒரு ஹார்மோனியம் மிதந்து வருகிறது. இடது கையால் ஹார்மோனியத்தைப் பற்றி அணைத்துக் கொண்டு வலது கையால் வாசித்துக் கொண���டே வெளிச்சம் புகாத கடலின் அடி ஆழத்தில் நீந்திச் செல்கிறேன். நீரில் ஆழ்ந்த மலைத்தொடர்ச்சிகளின் படர்ந்த உப்புப்பாறைகளின் மேலே வரிவரியாய் மேற்கத்திய இசைக்குறிப்புகள். சுரங்கத் தொழிலாளி போல நெற்றியில் விளக்கைக் கட்டிக் கொண்டு உப்புப் பாறைகளின் மேல் இசைக்குறிப்புகளை ஹசன் பண்டிட் வேகமாக எழுதிக் கொண்டிருக்கிறார்.\n‘அதனாலென்ன… இது புதைந்த நகரங்களுக்கான இசை வகுப்பு’\nநீந்துவதான பாவனையில் கால்கள் உதறி விழிக்கையில், கடல் வற்றிப் போய் தரைதட்டி எழுந்தது மாதிரியான உணர்வு. பனிவிழும் மொட்டைமாடியின் சிமிண்ட் தரையில் படுத்திருந்தேன். சமுத்ரமாய் அலைந்த நீர் எதிரே கண்ணாடி டம்ளரில் சலனமில்லாமல் இருந்தது.\nகீழே வீட்டில், எல்லோரும் தூங்கியிருந்தார்கள். அயற்சியாக இருந்தது. எனக்கென அடுப்படியில் மூடி வைக்கப்பட்டிருந்தது இரவுக்கான உணவு.\nகாலையில் திரும்பவும் தாட்டு வரிசை வாசித்துப் பார்க்க வேண்டும். ஹார்மோனியத்தின் வெள்ளைக் கட்டைகளில் நாள்பட்ட தூசு படிந்து அழுக்கேறிப் போயிருக்கிறது. திருகாணிகள் எல்லாம் துருவேறியிருக்கின்ற பெல்லோஸ் கொஞ்சம் துடைத்துச் சரி செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டே தூங்கிப் போனேன்.\nகாலையில் ஹார்மோனியத்தைத் தூக்கிக் கொண்டு மொட்டை மாடிக்குப் போனேன். முத்துவிநாயகம் வந்திருந்தான்.\n’என்னப்பா பாகவதர் ஆகப் போறியா இதெல்லாம் வீட்ல இருந்தாலே தரித்திரம்’\nஅவனை நான் பொருட்படுத்தாது என் அன்பிற்குரிய ஹார்மோனியத்தைப் புதுப்பிக்கும் முயற்சியில் இறங்கினேன். ஒரு திருப்புளி, பழைய துணி, சின்னக்குவளையில் தண்ணீர் எடுத்துக் கொண்டேன். தூசியைத் துடைத்ததும் துணியைத் தண்ணீரில் நனைத்து வெள்ளைக் கட்டைகளைத் துடைத்தேன். விரல் படாமல் குருட்டு அழுக்கு ஏறிப்போய் இருந்தது. திட்டுத் திட்டாய் கறை படிந்தது போல அழுக்கு. என்ன துடைத்தாலும் அப்படியே இருந்தது. துருப்பிடித்து இறுகிப் போன திருகாணிகளைக் கஷ்டப்பட்டுக் கழற்றினேன். ஸ்வரக் கட்டைகளின் மேலே அழுத்திக் கொண்டிருந்த மரச்சட்டதைக் கழற்றினேன். இப்போது ஸ்வரக் கட்டைகளை கழற்றுவது எளிதாக இருந்தது. அவற்றின் கீழே சிலந்தி இழைகளும், தூசியும், எள்ளுப் போன்ற எச்சங்களும் இருந்தன. வாயால் ஊதிப் பார்த்துத் துடைத்தும் தூசி போகவில்லை. ��ார்மோனியத்தில் இருந்த கறுப்பு வெள்ளைக் கட்டைகள் அனைத்தையும் வரிசைப்படி தரையில் அடுக்கி வைத்தேன். தரையில் அந்த வரிசை அழகாக இருந்தது. உள்ளிருந்த பித்தளை ரீடுகளில் Made in German என்று பொடியான எழுத்தில் பொறிக்கப்பட்டிருந்தது. சின்னதிலிருந்து துவங்கி பெரிது பெரிதாக ரீடுகள் அழகாக அறையப்பட்டிருந்தன. அஞ்சறைப் பெட்டியைப் போலிருந்த ஹார்மோனியத்திலிருந்து ஒலி அளவைக் கட்டுப்படுத்தும் குமிழ்களை இழுத்து மெதுவாகக் கழற்றினேன். கம்பி மிகவும் துருவேறிப் போய் இருந்ததால் இழுப்பது சிரமமாக இருந்தது. ஹார்மோனியத்தின் உள் அறையில் இரண்டு அந்துப் பூச்சிகள் வெளிறிப் போய் உயிரோடிருந்தன. முருகேச பாகவதரின் காத்திரமான இசைகேட்டு இவை வளர்ந்திருக்கலாம் அல்லது அவரது இசையின் அதிர்வில் உயிர்பிடித்து மிஞ்சிய ராகங்களாக இருக்கலாம். எதுவாயினும் ஹார்மோனியத்தின் உள்தட்டு அறையின் இருட்டுக்குள் இசையுடன் காதல் கொண்டு வாழ்வது எவ்வளவு அற்புதமானது. லேசாகப் பக்கவாட்டில் தட்டியதும்… மறைந்த இசை குறித்து நீண்ட கனவில் இருந்த இரண்டு அந்துப் பூச்சிகளும் வெளிச்சம் பொறுக்காது வெளியேறி ஓடின.\nகாற்றுத் துருத்திகளின் உள்ளேயிருந்த தூசியினைத் துடைத்தேன். ஹார்மோனியம் இப்போது ஸ்வரக் கட்டைகள், குமிழ்கள், திருகாணிகள், மரச்சட்டங்கள் எனப் பிரிக்கப்பட்டு இருந்தது. ஹார்மோனியத்தின் வெளிப்புறமும், உட்புறமும் மரப்பலகையின் தன்மையை இழந்து நிறம் வெளிறிப் போயிருந்தது. ஸ்வரக் கட்டைகள் திரும்பவும் வெற்றிலைக் காவியேறின பல்வரிசையை நினைவுபடுத்தின. அந்த நிறமே வெறுக்கத் தக்கதாக இருந்தது.\nஅப்போதுதான் திடீரென எனக்கு அந்த யோசனை வந்தது. புதிதாக மாற்ற பெயிண்ட் அடித்தால் என்ன\nஐம்பது மி.லி. ஆசியன் வெள்ளை, கறுப்பு வண்ணமும் வார்னிஷும், கடைக்காரரின் ஆலோசனைப்படி மென்மையான உப்புத்தாளும் சின்னதாக தூரிகையும் வாங்கிக் கொண்டேன்.\nஸவரக் கட்டைகளை மெதுவாக உப்புத் தாளால் தேய்த்து வரிசைப்படி அடுக்கி கிரமம் மாறாமல் இருக்க அவற்றின் பின்புறம் பென்சிலால் எண்கள் குறித்துக்கொண்டு, அக்கா எனக்கு நெயில் பாலிஷ் போட்டுவிடுவது மாதிரி இதமாக கறுப்பு வெள்ளைக் கட்டைகளுக்கு வண்ணம் பூசினேன். ஹார்மோனியப் பெட்டிக்கு வார்னிஷ் அடித்து நிழலில் காய வைத்தேன். திர��காணிகள் புதிதாக வாங்கி விட்டேன். எல்லாம் முடிக்க பதினோரு மணியாகி விட்டது. இன்று திங்கட்கிழமை. மாலை இசை வகுப்பு. இன்று இசைவகுப்புக்கு எடுத்துப் போய் ஹசன் பண்டிட்டிடம் என் புது ஹார்மோனியத்தில் ஸரளி வரிசை வாசித்துக் காட்ட வேண்டும்.\nமதியம் மூன்று மணியளவில் ஸ்வரக் கட்டைகள் உலர்ந்திருந்தன. ஹார்மோனியம், வார்னிஷ் அடித்ததும் தனது மர வண்ணத்துக்குத் திரும்பி அழகாய் இருந்தது. இழுப்புக் குமிழிகளைப் பொருத்தி, ஸ்வரக் கட்டைகளை வரிசைப்படி அடுக்கினேன். அடுக்க, அடுக்க மெருகு கூடிக் கொண்டே வந்தது. ஹார்மோனியம் புத்தம் புதிதாகி விட்டது. என்ன அழகாய் இருக்கிறது. ஒருமுறை கீழிருந்து உச்சஸ்ஹாயி வரை ஆரோஹணம், அவரோஹணம் போய்த் திரும்பலாம் போல இருந்தது. கட்டைகளைத் தொடுவதே, மெதுரொட்டியைத் தொடுவது போல் இதமாக இருந்தது. மணி ஐந்தாகிவிட்டது. எப்போதும் மூன்றரை மணிக்கே மதுரைக்குக் கிளம்பி விடுவேன். அவசர அவசரமாக திருகாணிகளைப் பொருத்தினேன். வாசிக்கவும் இப்போது நேரமில்லை. முதன் முதலில்… ஹசன் பண்டிட்டின் ஆசீர்வாதம் பெற்று அவர் முன்னிலையில் வாசித்துக் காட்டுவதுதான் சாங்கியமானது என்று மனதுக்குள் பட்டது. அவரும் சந்தோஷப்படுவார்.\nஆங்கிலத் தினசரியில், ஹார்மோனியத்தைச் சுற்றி நைலான் கயிறால் கட்டி எடுத்துக் கொண்டு மதுரைப் பேருந்தில் ஏறினேன்.\nஹசன் பண்டிட்டின் அறைக்கு வரும்போது மணி ஏழாகி விட்டது. அவர் இசை பற்றிய ஆங்கிலப் புத்தகத்தின் நகல் பிரதியை ஆழ்ந்து வாசித்துக் கொண்டிருந்தார். என்னைப் பார்த்ததும் மூக்குக் கண்ணாடியைக் கழற்றி, புத்தகத்தை மூடிவிட்டுப் புன்னகைத்தார்.\nஅறையில் மென் ரொட்டிகளின் வாசனையும் ஊதுபத்தியின் சந்தன வாசனையுமாக ரம்மியமாக இருந்தது.\nஎன் தாமதம் குறித்து அவர் கேட்கத் துவங்குமுன், நண்பர் ஒருவரிடமிருந்து ஹார்மோனியம் வாங்கி விட்டேன் என்று சந்தோஷம் பொங்கச் சொன்னேன். நைலான் கயிற்றின் முடிச்சுகளை அவிழ்க்க ஹசன் பண்டிட் உதவினார். நான் மூடியிருந்த தாள்களைப் பிரித்தேன்.\n‘ஜெர்மன் ரீடு பெட்டி. ரொம்பப் பழசா இருந்துச்சு.. அதான்’\nஹசன் பண்டிட் புரிந்து கொண்டு சிரித்தார். நான் அவரது ஆசீர்வாதம் கோரினேன். ஸ்வரங்களைக் குறிக்கும் கறுப்பு விரல்களால் ஹசன் பண்டிட் என் தலையைத் தொட்டார்.\n’சார்… உங்களுக���குப் போன்’ கீழே மேன்ஷன் மேலாளரிடமிருந்து அழைப்பு வர ‘வாசிங்க வந்துர்ரேன்’ என்று சொல்லிவிட்டு ஹசன் பண்டிட் படிக்கட்டுகள் நோக்கி நடந்தார்.\nஎதிரே இருக்கும் மும்மூர்த்திகளின் படத்தைப் பார்த்தேன். இசை தவழும் அறையின் தியானத் தன்மையை மனதில் நினைந்து கண்கள் மூடி வணங்கினேன். ஹார்மோனியத்தைத் தொட்டு வணங்கிவிட்டு இடது கையால் பெல்லோஸ் அழுத்தி வலது கை கட்டை விரலால் மத்திமஸ்தாயியின் ஸட்ஜமம் தொட்டேன். சப்தமே இல்லை. பெல்லோஸ் கொஞ்சம் அழுத்திப் போட்டு ஸட்ஜமத்தோடு நடுவிரலால் பஞ்சமத்தையும் சுண்டு விரலால் மேல் ஸட்ஜமத்தையும் சேர்த்து அழுத்தினேன். ஸ்வரங்கள் ஊமையாய் இருந்தன. ஒலிக்கவே இல்லை. பதட்டத்தோடு பெல்லோஸை வேகவேகமாக அழுத்தி சுத்த ரிஷபம், அந்தர காந்தாரம், சுத்த மத்யமம் வாசிக்க… மாயமாளவ கௌளைக்குப் பதில் புஸ்புஸ் என்று காற்றுதான் வந்தது. பெல்லோஸை இன்னும் லாவகமாக அழுத்தி கீழ்ஸ்தாயி, உச்சஸ்தாயி என்று மேலும் கீழும் உள்ள கறுப்பு வெள்ளைக் கட்டைகளை அழுத்தினேன். ஸ்வரங்கள் பேசவே இல்லை. கொஞ்சங்கூட ஒலி எழவில்லை. என் ஹார்மோனியமே எங்கே உன் மணிமணியான காத்திரமான ஸ்வரங்கள். ஆஸ்துமாவில், மரணப்படுக்கையில் கிடக்கும் முருகசிகாமணிப் பாகவதரின் கடைசி மூச்சு போல ஹார்மோனியத்திலிருந்து காற்றுதான் வந்து கொண்டிருந்தது. எனக்குக் கண்கள் இருட்டிக் கொண்டு வந்தன. ஊதுபத்தியின் புகை வளையம் சுழித்துப் பெரிதாகி என்னை நோக்கி வந்து கொண்டிருந்தது.\n– செப்டம்பர் 2002, கணையாழி\nநன்றி : செழியன் , ஹனீபாக்கா , சென்ஷி\nமனம் திறந்து எழுதும் ஒரு கலைஞன் , தமிழ்த் திரை உலகில் – வெங்கட் சாமிநாதன்\nசெழியனின் விகடன் சிறுகதை – சுரேஷ் கண்ணன்\nமிஸ்டர் மார்க் – செழியன் சிறுகதை\nஆபிதீன் பக்கங்கள் ii :\n3. எழுத்தாளர்களின் இணையதளங்கள் (Links)\n5. கச்சேரிகள் , கஜல்கள்\n8 . நாகூர் ரூமி பதிவுகள்\nகலீபா உமர் (ரலி) (1)\nஉஸ்தாத் ஸலாமத் அலி கான் (1)\nகுலாம் முஸ்தஃபா கான் (1)\nநுஸ்ரத் ஃபதே அலிகான் (6)\nபண்டிட் ராஜ்சேகர் மன்ஸூர் (1)\nமுகேஷ் (பீர் முஹம்மது) (1)\nவிஸ்வநாதன் / ராமமூர்த்தி (2)\nதயவு பிரபாவதி அம்மா (1)\nஅப்துல் வஹ்ஹாப் பாகவி (18)\nகுலாம் காதர் நாவலர் (4)\nஅபுல் கலாம் ஆசாத் (2)\nஅஸ்கர் அலி என்ஜினியர் (1)\nஎச். பீர் முஹம்மது (2)\nகிண்ணியா எஸ்.பாயிஸா அலி (2)\nகுர்அதுல் ஐன் ஹைதர் (1)\nகுளச்சல் மு. யூசுப�� (5)\nசாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (2)\nஜே. பி. சாணக்யா (1)\nஜோ டி குரூஸ் (1)\nதொ.மு. சி. ரகுநாதன் (1)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nபோர்வை பாயிஸ் ஜிப்ரி (1)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nவேங்கட சுப்புராய நாயகர் (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (5)\nஹரி கிருஷ்ணன் (ஹரிகி) (1)\nத சன்டே இந்தியன் (1)\nநேஷனல் புக் டிரஸ்ட் (13)\nஅங்கனெ ஒண்ணு இங்கனெ ஒண்ணு (1)\nமணல் பூத்த காடு (1)\nஇரா. சண்முக வடிவேல் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/1024873/amp", "date_download": "2021-05-07T01:13:44Z", "digest": "sha1:34B6ZC4S6T7MFSXZ4TKDK3LTHGNCDCAA", "length": 9694, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "பெருங்குளம் செங்கோல் ஆதீனம் மடத்தில் குருபூஜை விழா | Dinakaran", "raw_content": "\nபெருங்குளம் செங்கோல் ஆதீனம் மடத்தில் குருபூஜை விழா\nஏரல், ஏப்.19: ஏரல் அருகேயுள்ள பெருங்குளம் திருக்கயிலாய பரம்பரை செங்கோல் ஆதீனம் குருமுதல்வர் சத்தியஞான தரிசினிகள் குருபூஜை விழா நடந்தது. கொற்கை பாண்டிய மன்னர்களுக்கு முடிசூடி செங்கோல் வழங்கும் மாண்பை உடையது திருக்கயிலாய பரம்பரை செங்கோல் ஆதீனம் ஆகும். ஆயிரத்து 500 ஆண்டு பழமையான இவ்வாதீன குருமுதல்வர் குருபூஜை பெருங்குளத்தில் உள்ள தலைமை மடத்தில் நடந்தது. இதனை முன்னிட்டு காலையில் நீடாமங்கலம் சுவாமிநாதன் குழுவினரின் மங்கள இசையுடன் தொடங்கியது. தொடர்ந்து சங்கை சுப்பிரமணியன் ஓதுவாமூர்த்திகளின் திருமுறை விண்ணப்பமும், பெருங்குளம் சித்தர் தபோவனம் குருமூர்த்த கோயில்களின் ஆதீனகர்த்தர் வழிபாடு, ஆதீன ஆன்மார்த்த மூர்த்தி அழகிய திருச்சிற்றம்பலமுடையார் சிறப்பு வழிபாடு நடந்தது. தொடர்ந்து பெருங்குளம் செங்கோல் ஆதீனம் சிவப்பிரகாச தேசிக சத்தியஞான பரமாச்சார்ய சுவாமிகள் ஆதீன குருமுதல்வருக்கு மஹா அபிஷேகம் மற்றும் சிறப்பு வழிபாடு நடத்தினார். இவ்விழாவில் திருமுறை பணிகளை பாராட்டி பொற்கிழி மற்றும் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் திருஞானசம்பந்தரின் அற்புதங்கள் என்ற நூல் வெளியிடும் நிகழ்ச்சியும் நடந்தது. மதியம் மகேஸ்வர பூஜை மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இரவு குருமகா சன்னிதானம் சிவஞான கொலுக்காட்சியுடன் குருபூஜை விழா நிறைவு பெற்றது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருச்சிற்றம்பலமுடைய தம்பிரான் செய்திருந்தார்.\nதிருவாரூர் பைபாஸ் சாலை அருகே ஜல்லிக்���ற்கள் பெயர்ந்து சேதமடைந்த நூலக சாலை\nஅறிவொளி இயக்கம் அழைப்பு பொறுப்பாளர்கள் போன் எண்கள்\nகலெக்டர் தகவல் வாசிப்பு பழக்கம் மூலம் செல்போன் சீர்கேடுகளில் இருந்து குழந்தைகளை மீட்டெடுக்க வேண்டும்\nதிருவாரூர் மாவட்டத்தில் மத்திய அரசின் ஆதார விலைத்திட்டத்தில் உளுந்து, பச்சைப்பயறு கொள்முதல்\nதிருவாரூர் நகரில் குழாய் சேதமடைந்து வீணாக குடிநீர் வெளியேறும் அவலம் சீரமைத்து பராமரிக்க மக்கள் கோரிக்கை\nலால்குடி வயல்காட்டில் ரத்த காயங்களுடன் பெண் சடலம் மீட்பு\nசிறுமியிடம் அத்து மீறல் சமையல் மாஸ்டர் கைது\nதிருவெறும்பூர் அருகே உப்பு லோடு லாரி கவிழ்ந்தது\nகுடியிருப்புகளுக்கு அருகே மது குடித்ததை கண்டித்த வாலிபருக்கு அடி உதை\nபேராவூரணி ஜமாஅத் அறிவிப்பு தென்னையை தாக்கும் தஞ்சை வாடல் நோயை கட்டுப்படுத்தும் வழிமுறை\nமுழு ஊரடங்கு தினத்தன்று இஸ்லாமியர் வீடுகளிலேயே நோன்புகால சிறப்பு தொழுகை\nபேராவூரணி நகரில்a ரூ.15 கோடியில் சாலை மேம்பாடு திட்டப்பணி திருக்காட்டுப்பள்ளி அருகே அரை குறையாக விடப்பட்ட தார் சாலை சீரமைப்பு\nஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலையத்தில் வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு ஒருங்கிணைந்த பண்ணைய பயிற்சி\nஅரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி\nதிருவையாறில் கணவரை காணவில்லை மனைவி போலீசில் புகார்\nபட்டப்பகலில் மர்மநபர்கள் துணிகரம் புதுக்கோட்டை அரசினர் பிற்படுத்தப்பட்டோர் மாணவியர் விடுதியை கொரோனா சிகிச்சை மையமாக மாற்றும் பணி\nபொன்னமராவதி பேருந்து நிலையத்தில் திமுக பிரமுகரின் கார் கண்ணாடியை உடைத்து ரூ. 4 லட்சம் கொள்ளை\nகொள்ளிடம் பகுதி ஆரம்ப சுகாதார நிலையங்களில் கிருமி நாசினி, முககவசம் தட்டுப்பாடு\nபாரம்பரியத்தை மீட்டெடுக்கும் வகையில் பனை ஓலையில் விதவிதமான பொருட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2021/may/04/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-3616482.amp", "date_download": "2021-05-07T00:48:28Z", "digest": "sha1:KDUPQFUV5HABRLOBN75XTVIDG5KAUM63", "length": 9228, "nlines": 44, "source_domain": "m.dinamani.com", "title": "பொது அறிவு... | Dinamani", "raw_content": "\nபோட்டித் தேர்வுகளில் பங்கேற்க விரும்பும் இளைஞர்கள் பொது அறிவுச் செய்திகளைத் தெரிந்து கொள்வது அவசியம். அவற்றை செய்தித்தாள்கள், இதழ்களில் படிப்பது மட்டுமின்றி, அவற்றைச் சேகரித்து வைத்துக் கொள்ளும் இளைஞர்களும் உண்டு. இப்போது உலகமே இணையதளங்களை மையமாகக் கொண்டு சுழல்வதால், பொது அறிவுச் செய்திகளுக்கென்றே - அவற்றை மட்டும் முதன்மை உள்ளடக்கமாகக் கொண்டு ஓர் இணையதளம் செயல்பட்டு வருகிறது.\nஇந்த இணையதளத்தில் பெரும் கேள்விகள், புதிர்கள், வாழ்க்கை வரலாறுகள், பட்டியல், வியக்க வைக்கும் உண்மைகள் என்று முதன்மைத் தலைப்புகள் இடம் பெற்றிருக்கின்றன. பெரும் கேள்விகள் எனும் தலைப்பில், இரண்டாம் எலிசபெத் மகாராணிக்கு ஏன் இரண்டு பிறந்த நாட்கள் இடது கை பழக்கமுடையவர்களை சவுத்பாஸ் என்று ஆங்கிலத்தில் சொல்வது ஏன் இடது கை பழக்கமுடையவர்களை சவுத்பாஸ் என்று ஆங்கிலத்தில் சொல்வது ஏன் வெள்ளை முட்டைக்கும், காபி நிற முட்டைக்கும் என்ன வேறுபாடு வெள்ளை முட்டைக்கும், காபி நிற முட்டைக்கும் என்ன வேறுபாடு நாய்கள் ஏன் கொட்டாவி விடுகின்றன நாய்கள் ஏன் கொட்டாவி விடுகின்றன அனுதாபம் - பச்சாதாபம் ஆகியவற்றுக்கான வேற்றுமைகள் எவை அனுதாபம் - பச்சாதாபம் ஆகியவற்றுக்கான வேற்றுமைகள் எவை ஜனவரி 1 அன்று புத்தாண்டு தொடங்குவது ஏன் ஜனவரி 1 அன்று புத்தாண்டு தொடங்குவது ஏன் உண்மைக்கும் காரணிக்கும் என்ன வேறுபாடு உண்மைக்கும் காரணிக்கும் என்ன வேறுபாடு முகக்கவசத்தை எப்போது மாற்ற வேண்டும் முகக்கவசத்தை எப்போது மாற்ற வேண்டும் மருத்துவர்கள் ஏன் வெள்ளை நிற மேலாடையை அணிகின்றனர் மருத்துவர்கள் ஏன் வெள்ளை நிற மேலாடையை அணிகின்றனர் விளையாட்டுப் போட்டிகளில் தேசிய கீதம் பாடப்படுவது ஏன் விளையாட்டுப் போட்டிகளில் தேசிய கீதம் பாடப்படுவது ஏன் இடது அல்லது வலது என்று வாகனம் ஓட்டுவதற்கான பக்கத்தினை நாடுகள் எப்படித் தேர்வு செய்கின்றன\nகடிகாரங்களில் நேரம் 10.10 என்று வைக்கப்படுவது ஏன் \"ஒரு குழந்தை' கொள்கையினை சீனா எப்படிச் செயல்படுத்துகிறது \"ஒரு குழந்தை' கொள்கையினை சீனா எப்படிச் செயல்படுத்துகிறது மாயக்கண் படங்கள் எப்படி அமைக்கப்படுகின்றன மாயக்கண் படங்கள் எப்படி அமைக்கப்படுகின்றன லீப் ஆண்டாக இல்லாத ஆண்டுகளில், பிப்ரவரி 29 அன்று பிறந்தவர்கள் எந்த நாளில் பிறந்த நாளைக் கொண்டாடுவது லீப் ஆண்டாக இல்லாத ஆண்டுகளில், பிப்ரவரி 29 அன்று பிறந்தவர்கள் எந்த நாளில் பிறந்த நாளைக் கொண்டாடுவது என்று பல்வேறு வித்தியாசமான கேள்விகளும் அதற்கான பதில்களும் விரிவாகத் தரப்பட்டிருக்கின்றன.\nபுதிர்கள் எனும் தலைப்பில் பல்வேறு புதிர்களும், அதற்கான விடையளிக்கும் வசதிகளும் தரப்பட்டிருக்கின்றன. வாழ்க்கை வரலாறு எனும் தலைப்பில் அமெரிக்கக் குடியரசுத் தலைவர்கள், அறிவியலாளர்கள், கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள், நூலாசிரியர்கள், படைவீரர்கள் என்று பல்வேறு முக்கிய நபர்களின் வாழ்க்கை வரலாறுகள் இடம் பெற்றிருக்கின்றன. பட்டியல் எனும் தலைப்பில் பல்வேறு தகவல்கள், எண்ணிக்கை அடிப்படையில் சுவையான உண்மைகளாக விவரிக்கப்பட்டிருக்கின்றன.\nவியக்க வைக்கும் உண்மைகள் எனும் தலைப்பில் பல்வேறு செய்திகளுக்கான உண்மைத் தன்மைகள் விரிவாக வழங்கப்பட்டிருக்கின்றன. இவை தவிர, விலங்குகள், தொல்லியல், கலை, கரோனா தீ நுண்மி, பொழுதுபோக்கு, உணவு, உடல் நலம், வரலாறு, மொழி, ஒலிம்பிக்ஸ், அறிவியல், விளையாட்டு, தொழில்நுட்பம், பயணம் போன்ற தனித் தலைப்புகளின் கீழும் பல்வேறு செய்திகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இதே போன்று, நீங்களே செய்யலாம் ( டூ இட் யுவர்செல்ஃப்) எனும் தலைப்பின் கீழ், நமது அன்றாடப் பயன்பாட்டில் நாமாகவே செய்து கொள்ளக்கூடிய பல செய்முறைகளும் இடம் பெற்றிருக்கின்றன.\nபோட்டித் தேர்வுக்குத் தயாராகிக் கொண்டு இருப்பவர்கள் மட்டுமின்றி, பொது அறிவுச் செய்திகளில் ஆர்வமுடைய அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் அமைந்திருக்கும் இந்த இணையதளத்தைப் பார்வையிட விரும்புபவர்கள் https://www.mentalfloss.com/ எனும் இணைய முகவரிக்குச் செல்லலாம்.\nவீட்டிலிருந்து வேலை... மனஅழுத்தத்துக்கு மாற்று\nwest bengal electionஆஸ்கர் விருதுஸ்டெர்லைட்முதல்வர் எடப்பாடி பழனிசாமிஇந்தியாவில் கரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2021/04/12/2-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9A/", "date_download": "2021-05-07T00:09:31Z", "digest": "sha1:W2R6EKJ37POMWRX6BRJAUDW6J26TU4YU", "length": 8422, "nlines": 113, "source_domain": "makkalosai.com.my", "title": "2- ஆம் வகுப்பு மாணவியின் அசாத்திய திறமை :இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome இந்தியா 2- ஆம் வகுப்பு மாணவியின் அசாத்திய திறமை :இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்\n2- ஆம் வகுப்பு மாணவியின் அசாத்திய திறமை :இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்\nபொள்ளாச்சி எஸ்.வி நாயுடு வீதியை சேர்ந்தவர் வாஞ்��ிநாதன்- மீனாட்சி இவர்களின் மகள் வர்ணா 7 வயது சிறுமி, 2- ஆம் வகுப்பு படித்து வருகிறார்.\nசிறுவயது முதல் வேகமாக எழுதக்கூடிய திறமை கொண்ட சிறுமியிடம் துரிதமாக கற்றுக் கொள்ளும் ஆற்றல் இருப்பதை கண்ட பெற்றோர்கள் சிறுமி வர்ணாவின் திறமையை ஊக்குவிக்கும் வகையில் இந்தியா புக் ஆப் ரெக்கார்டுக்கு விண்ணப்பித்தனர்.\nமாணவி நன்றி என்கிற வார்த்தையை 9 மொழிகளில் கூறுவதும், 5 மொழிகளில் மெல்லிய குரலில் பாடல்களைப் பாடும் திறமையும், மற்றும் 100- இல் இருந்து 1 வரை எண்களை தலைகீழாக ஒரு நிமிடத்தில் எழுதும் திறன்கொண்ட இந்த மாணவி வர்ணாவின் வீடியோவை பெற்றோர்கள் இந்தியன் புக் ஆப் ரெக்கார்டுக்கு அனுப்பிவைத்தனர்.\nஇந்நிலையில் சிறுமி வர்ணாவின் திறமையை இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் அங்கீகரித்து மாணவி வர்ணாவிற்கு இந்தியன் புக் ஆப் ரெக்கார்டு விருது கிடைத்துள்ளது.\nஇதுகுறித்து மாணவியின் தாயார் மீனாட்சி கூறியதாவது என்னுடைய மகள் வர்ணா வாஞ்சிநாதன் சாதனை இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்ல பதிவாகியுள்ளது.\nஒன்பது மொழிகளில் நன்றி சொல்லியுள்ளாள் இச்சிறுமி , ஐந்து மொழிகளில் பாடல்கள் பாடியுள்ளாள் 12 திருக்குறளுக்கு மேல் கூறியும். ஓன்று முதல் நூறு வரை இறங்குவரிசையில் எழுதியுள்ளார்.\nஇரு பரிணாம படங்கள், முப்பரிமாண படங்களை 42 வினாடிகளில் முடித்துள்ளார். இதெல்லாம் இந்தியன் புக் ஆப் ரெக்கார்டு அங்கீகரித்துள்ளது.\nஇன்னும் குறைந்த கால நேரத்தில் சிறுமிக்கு நாங்கள் பயிற்சிகள் கொடுத்து வருகிறேன். அதேபோல் கலையில் பரத நாட்டியமும் பயின்று வருகிறாள்.\nஇதில் நிறைய முத்திரைகள் உள்ளது. அதில் ஐம்பது விநாடிக்குள் அனைத்து முத்திரைகளையும் சொல்ல வேண்டும் என்றும் கின்னஸ் சாதனைக்கு பயிற்சி அளித்து வருகிறோம்.\nஎன்னுடைய மகளும் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறுவாள் என்று நம்புகிறேன் என தாயார் கூறினார்.\nPrevious articleஇளவரசர் ஃபிலிப்பின் இறுதிச் சடங்கு\nNext article2,000 ஆண்டுகளாக சம்ஸ்கிருதம்\nதமிழ்நாட்டில் நாளை பதவியேற்கவிருக்கும் அமைச்சரவை பட்டியல்\nமருத்துவமனை வாசல்களில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய பஸ்கள்\nவெளிநாட்டு ஆடவரிடம் கொள்ளையடித்ததாக போலீஸ்காரர் உட்பட 4 பேர் கைது\nதமிழ்நாட்டில் நாளை பதவியேற்கவிருக்கும் அமைச்சரவை பட்டியல்\nநாட்டில் 14 புதிய கோவ��ட் -19 கிளஸ்டர்கள் கண்டுபிடிப்பு\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nஇந்திய விமானத்தில் உணவு, பானங்களுக்கு கட்டுப்பாடு\nபண்டிகை காலங்களில் கொரோனா பாதிப்புகள் அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newneervely.com/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0", "date_download": "2021-05-07T01:15:08Z", "digest": "sha1:JIOBYLIYHRPFETMGPFMNB6USUXHBTTRY", "length": 4473, "nlines": 87, "source_domain": "newneervely.com", "title": "நீர்வேலிப் பாடசாலை அதிபர்களின் வாழ்த்துக்கள்.. | நீர்வேலி", "raw_content": "10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..\nநீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது\nநீர்வேலிப் பாடசாலை அதிபர்களின் வாழ்த்துக்கள்..\nநீர்வேலி அத்தியார் இந்துக்கல்லூரி , நீர்வேலி வடக்கு றோ.க.த.க பாடசாலை , கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயம் , சீ . சீ. தமிழ்க்கலவன் பாடசாலை மற்றும் பாலர் பகல்விடுதி என்பவற்றின் வாழ்த்துக்கள் உள்ளே ….\nநியூ நீர்வை இணையம் நீர்வை மக்களின் இணைப்புப்பாலம் »\n« சர்வதேச இந்து கலாச்சார அமைப்பினரின் வாழ்த்து\nஇது எமது ஊர். இங்கு பிறந்ததினால் நாம் பெருமையடைகிறோம். நீர்வேலியின் சிறப்பையும் வனப்பையும் எங்கு சென்றாலும் மறவோம். எமதூரைப் போற்றுவோம்.\nநீர்வேலி நலன்புரிச் சங்கம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3_%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D", "date_download": "2021-05-07T00:32:15Z", "digest": "sha1:LYUCK2N22NFX4XURR3EJST337RGUE7UJ", "length": 11250, "nlines": 103, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கோண அதிர்வெண் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇயற்பியலில் கோண அதிர்வெண் எனப்படுவது சுழலும் விகிதத்தை அளவிடும் எண்ணிக்கணியம். கோண அதிர்வெண்ணானது கோண வேகம் எனப்படும் திசையன் கணியத்தின் பருமன் ஆகும். கோண அதிர்வெண் திசையன் ω → {\\displaystyle {\\vec {\\omega }}} எனப்படுவது சிலவேளைகளில் கோண வேகத்திற்கு ஒத்தசொல்லாக பயன்படுகிறது.[1]\nகோண அதிர்வெண் ω (நொடிக்கான ரேடியன்கள்), அதிர்வெண் ν ஐ (நொடிக்கான சுழற்சிகள், பொதுவாக ஹேட்சில் அளக்கப்படுகிறது) விட 2π எனும் காரணியால் பெரியது. இப்படத்தில் அதிர்வெண்ணைக் குறிக்க f அல்லாது ν பயன்படுத்தப்படுகிறது.\nஓர் சுழற்சி 2π ரேடியன்களி��்கு சமனாகும், எனவே[1][2]\nω என்பது கோண அதிர்வெண் அல்லது கோணக் கதி (செக்கனிற்கான ரேடியன்களில் அளக்கப்படும்),\nT என்பது சுழற்சிக்காலம் (நொடிகளில் அளக்கப்படும்),\nf என்பது அதிர்வெண் (ஹேட்சில் அளக்கப்படும்),\nSI அலகுகளில் கோண அதிர்வெண் நொடிக்கான ரேடியன்கள் எனப்படுகிறது, பரிமாணப்படி அலகு ஹேட்சு என்பதும் சரியானதே, ஆனால் நடைமுறையில் சாதாரண அதிர்வெண் f இற்கே பாவிக்கப்படுகிறது, ω இற்கு இல்லையென்றே கூறலாம், இந்த நடைமுறையால் குழப்பம் தவிர்க்கப்படுகிறது.[3]\nஓர் கோளம் அச்சுப்பற்றி சுழல்கிறது, அச்சிலிருந்து தொலைவில் அமைந்த புள்ளிகள் விரைவாக நகர்கின்றன இது ω=v/r இனை திருப்திப்படுத்துகிறது.\nவட்ட இயக்கத்திலுள்ள பொருளின் அச்சிலிருந்தான தூரம், தொடலி வேகம், கோண அதிர்வெண் ஆகியவற்றிற்கிடையில் தொடர்புண்டு:\nவெளி · நேரம் · திணிவு · விசை\nகலீலியோ · கெப்லர் · நியூட்டன்\nஇலப்லாசு · Hamilton · டெ'ஆலம்பர்ட்\nCauchy · லாக்ராஞ்சி · ஆய்லர்\nசுருளிவில்லில் இணைக்கப்பட்ட பொருள் ஆடலுறும். சுருளிவில்லை திணிவற்றதாகவும் தடையில்லாததாகவும் கருதினால் அதன் இயக்கம் பின்வரும் கோண அதிர்வெண்ணுடைய எளிய இசையியக்கமாக இருக்கும்:[4]\nω என்பது இயற்கை அதிர்வெண் (இது சிலவேளைகளில் ω0 ஆல் குறிக்கப்படும்).\nஇங்கு x சமனிலைத் தானத்திலிருந்தான இடப்பெயர்ச்சி.\nஇங்கு சாதாரண அதிர்வெண்ணைப் பயன்படுத்துகையில் இச்சமன்படானது கீழ்வருமாறு அமையும்\nLC சுற்றின் பரிவு அதிர்வெண்ணானது மின் கொள்ளளவம் (C ஃபரட்டில் அளக்கப்படுகிறது), மின் தூண்டுதிறன் (L ஹென்றியில் அளக்கப்படுகிறது) ஆகியவற்றின் பெருக்கத்தின் தலைகீழின் வர்க்கமூலத்திற்கு சமனாகும்.[5]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 10:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akattiyan.lk/2021/04/blog-post_620.html", "date_download": "2021-05-07T01:57:00Z", "digest": "sha1:45EKQLYXYCZSANCBXXYF5X35JBKVL5GY", "length": 9574, "nlines": 69, "source_domain": "www.akattiyan.lk", "title": "\"பொது மக்களின் அச்சம் தீர வேண்டும் என்பதற்காகவே தடுப்பூசி போட்டுக் கொண்டவர் நண்பர் விவேக்\" - கமல்ஹாசன் - அகத்தியன் | Online", "raw_content": "\nHome சினிமா \"பொது மக்களின் அச்சம் தீர வேண்டும் என்பதற்காகவே தடுப்பூசி போட்டுக் கொண்டவர் நண்பர் விவேக்\" - கமல்ஹாசன்\n\"பொது மக்களின் அச்சம் தீர வேண்டும் என்பதற்காகவே தடுப்பூசி போட்டுக் கொண்டவர் நண்பர் விவேக்\" - கமல்ஹாசன்\n“கொரோனா தடுப்பூசி மீதான பொது மக்களின் அச்சம் தீர வேண்டும் என்பதற்காகவே அரசு மருத்துவமனையில் சென்று தடுப்பூசி போட்டுக் கொண்டவர் நண்பர் விவேக்” என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.\nசாலிகிராமத்தில் உள்ள வீட்டில் இருந்த நகைச்சுவை நடிகர் விவேக்குக்கு நெஞ்சுவலி மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து, அவரது மனைவி மற்றும் மகள் அவரை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள விவேக்கின் உடல்நிலையை மருத்துவர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். அவருக்கு எக்மோ சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது.\nஅதேசமயம், நேற்று விவேக் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதால் மாரடைப்பு வந்தது என்றும் வதந்திகள் பரவி வருகின்றன. அதற்கு, அரசு சார்பில் மறுப்பு தெரிவித்து விளக்கங்கள் அளிக்கப்படுள்ளன.\nநடிகை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் “விவேக் நேற்று தடுப்பூசி போட்டதையும் இன்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதையும் தொடர்புபடுத்த வேண்டாம். இரண்டுக்கும் எந்த தொடர்பும் இல்லை. மருத்துவர்கள் தங்கள் கடமையை செய்யட்டும். தயவு செய்து தடுப்பூசி போடுங்கள். வதந்திகள் மற்றும் அனுமானங்களை நம்பவேண்டாம்” என்று கூறியுள்ள நிலையில், மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில்\n“கொரோனா தடுப்பூசி மீதான பொது மக்களின் அச்சம் தீர வேண்டும் என்பதற்காகவே அரசு மருத்துவமனையில் சென்று தடுப்பூசி போட்டுக் கொண்டவர் நண்பர் விவேக். அவர் விரைவில் நலம் பெற வேண்டுமென விரும்புகிறேன்.அவரது உடல் நலக் குறைவுக்கு கொரோனா தடுப்பூசி காரணம் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். இந்தப் பெருந்தொற்று காலத்தில் நாம் தேவையற்ற அச்சம் கொள்வதை, வதந்திகளைப் பரப்புவதை நிறுத்தி விட்டு அரசுடன் ஒத்துழைப்போம்” என்று கூறியுள்ளார்.\n\"பொது மக்களின் அச்சம் தீர வேண்டும் என்பதற்காகவே தடுப்பூசி போட்டுக் கொண்டவர் நண்பர் விவேக்\" - கமல்ஹாசன் Reviewed by Chief Editor on 4/16/2021 09:02:00 pm Rating: 5\nபாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் மேலதிக வகுப்புகளுக்கு மறு அறிவித்தல் வரை விடுமுறை\nபாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் மேலதிக வகுப்புகளுக்கு மறு அறிவித்தல் வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், நோன்பு பெருநாள், வெசாக் ...\nகொரோனா பரவல் காரணமாக நாட்டின் பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள விடுமுறையானது மேலும் ஒரு வார காலத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ...\nமோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nவாகன போக்குவரத்து திணைக்களத்தின் நாரஹென்பிட்டி மற்றும் வேரஹெர அலுவலகங்கள் ஒரு வாரத்திற்கு மூடப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம த...\nDReAM என அறிமுகப்படுத்தப்பட்டுள்ள முற்பாதுகாப்பு விதிமுறைகளுக்கமைய மதுபான சாலைகளை திறந்து வைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. D – சமூக இடை...\nமுழு அதிகாரம் : அகத்தியன் ஊடக சேவை 2020\nஆசிரியர் பீட தெடர்புகளுக்கு 0779516119\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2021/04/10105356/Ponniyin-Selvan-film-delayed-by-Corona-Actor-Karthi.vpf", "date_download": "2021-05-07T00:43:59Z", "digest": "sha1:LGOUKTY4625MLOFVVXORS6LK2HCMQ7TS", "length": 8201, "nlines": 113, "source_domain": "www.dailythanthi.com", "title": "Ponniyin Selvan film delayed by Corona; Actor Karthi || கொரோனாவால் தாமதமாகும் பொன்னியின் செல்வன்; நடிகர் கார்த்தி தகவல்", "raw_content": "Sections செய்திகள் சட்டசபை தேர்தல் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nகொரோனாவால் தாமதமாகும் பொன்னியின் செல்வன்; நடிகர் கார்த்தி தகவல் + \"||\" + Ponniyin Selvan film delayed by Corona; Actor Karthi\nகொரோனாவால் தாமதமாகும் பொன்னியின் செல்வன்; நடிகர் கார்த்தி தகவல்\nநடிகர் கார்த்தி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.\n“அடுத்து மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கிறேன். 1000 ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாக வரலாற்று சம்பவங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட கற்பனைக் கதை. இது பெரிய படம். இந்த கதையை தமிழ் திரையுலகம் கடந்த 60 ஆண்டுகளாக படமாக்க முயற்சி செய்து இப்போதுதான் நடக்கிறது. பொன்னியின் செல்வன் படம் இரண்டு பாகங்க��ாக வெளியாக உள்ளது. 5 பாகங்கள் கொண்ட புத்தகத்தை 2 பாகங்கள் கொண்ட படமாக உருவாக்கி வருகிறோம். பொன்னியின் செல்வன் பட வேலைகள் நன்றாக போய்க்கொண்டு இருக்கின்றன. மத்திய பிரதேசத்தில் படப்பிடிப்பு நடத்த முடிவு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக படப்பிடிப்புக்கு அங்கு அனுமதி கிடைக்கவில்லை. கொரோனா பிரச்சினையால் படம் தாமதமாகி வருகிறது. சென்னை அல்லது ஐதராபாத்தில் படப்பிடிப்பு விரைவில் நடைபெறும். இந்த படத்தில் விக்ரம், ஜெயம்ரவி, சரத்குமார், ஜெயராம், ஐஸ்வர்யாராய் என்று பெரிய நட்சத்திர பட்டாளமே உள்ளது. இதுவரை 70 சதவீத படப்பிடிப்பை முடித்து விட்டோம்.''\n1. அறுவை சிகிச்சையில் குணமாகி மகளுடன் புகைப்படம் எடுத்த நடிகை ரோஜா\n2. மாரடைப்பால் காலமான இயக்குநர் கே.வி.ஆனந்துக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதி\n3. ‘அண்ணாத்த’ இறுதிகட்ட படப்பிடிப்பு ரஜினிகாந்த், நயன்தாரா நடித்த காட்சிகள் படமானது\n4. குடும்பம் கைவிட்டதால் கஷ்டப்படும் நடிகர்\n5. தனுஷ் படம் ஓ.டி.டி.யில் ஜூன் மாதம் ரிலீஸ்\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2021/04/02032827/New-Zealand-also-won-the-last-20-overs-against-Bangladesh.vpf", "date_download": "2021-05-07T01:42:09Z", "digest": "sha1:MGBUPZKQYIZ5XWIEN7QBWL3S3T3MSZXD", "length": 8549, "nlines": 112, "source_domain": "www.dailythanthi.com", "title": "New Zealand also won the last 20 overs against Bangladesh || வங்காளதேசத்துக்கு எதிரான கடைசி 20 ஓவர் போட்டியிலும் நியூசிலாந்து வெற்றி", "raw_content": "Sections செய்திகள் சட்டசபை தேர்தல் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nவங்காளதேசத்துக்கு எதிரான கடைசி 20 ஓவர் போட்டியிலும் நியூசிலாந்து வெற்றி + \"||\" + New Zealand also won the last 20 overs against Bangladesh\nவங்காளதேசத்துக்கு எதிரான கடைசி 20 ஓவர் போட்டியிலும் நியூசிலாந்து வெற்றி\nநியூசிலாந்து-வங்காளதேச அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆக்லாந்தில் நேற்று நடந்தது.\nமழை காரணமாக சுமார் 2 மணி நேரம் தாமதமாக போட்டி தொடங்கியது. இதனால் இந்த ஆட்டம் 10 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதில் முதலில் ‘பேட்’ செய்த நியூசிலாந்து அணியில் தொட���்க ஆட்டக்காரர்களாக களம் கண்ட மார்ட்டின் கப்தில், பின் ஆலென் ஆகியோர் அதிரடியாக ஆடி நல்ல தொடக்கம் அமைத்து கொடுத்தனர். 5.4 ஓவர்களில் அணியின் ஸ்கோர் 85 ரன்னாக இருந்த போது கப்தில் (44 ரன், 19 பந்து, ஒரு பவுண்டரி, 5 சிக்சர்) கேட்ச் கொடுத்து வெளியேறினார். 18 பந்துகளில் அரைசதத்தை எட்டிய பின் ஆலென் 29 பந்துகளில் 10 பவுண்டரி, 3 சிக்சருடன் 71 ரன்கள் விளாசி ஆட்டம் இழந்தார். நியூசிலாந்து வீரரின் 2-வது அதிவேக அரைசதம் இதுவாகும். நிர்ணயிக்கப்பட்ட 10 ஓவர்களில் நியூசிலாந்து 4 விக்கெட்டுக்கு 141 ரன்கள் சேர்த்தது.\nதொடர்ந்து ஆடிய வங்காளதேச அணி 9.3 ஓவர்களில் 76 ரன்னில் சுருண்டது. இதனால் நியூசிலாந்து அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதுடன் தொடரையும் 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. ஏற்கனவே நடந்த ஒரு நாள் தொடரையும் அந்த அணி 3-0 என்ற கணக்கில் வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது.\n1. ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை அணியின் வெற்றிப்பயணம் தொடருமா\n2. ஐ.பி.எல். கிரிக்கெட்: 5-வது வெற்றியை பெறப்போவது யார்\n3. ‘ஐ.பி.எல். தொடரில் பங்கேற்றுள்ள வீரர்கள் சொந்த ஏற்பாட்டில் நாடு திரும்ப வேண்டும்’; ஆஸ்திரேலிய பிரதமர் அறிவிப்பு\n4. ஆக்சிஜன் வாங்குவதற்காக பிரதமர் நிவாரண நிதிக்கு வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் நன்கொடை\n5. ‘மனிஷ் பாண்டேவை நீக்கியது கடினமான முடிவு’; ஐதராபாத் அணியின் கேப்டன் வார்னர் பேட்டி\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinibitz.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8/", "date_download": "2021-05-07T01:58:22Z", "digest": "sha1:ORIGN7YFRVWFTPTDLUF745FEPI75FPKB", "length": 8338, "nlines": 75, "source_domain": "www.tamilcinibitz.com", "title": "முதல் பார்வை: மேடையில் சந்தியா ராஜஸ் நாட்டியம்", "raw_content": "முழுமையான செய்தி உலகம் உங்களுக்காக.\nமுதல் பார்வை: மேடையில் சந்தியா ராஜஸ் நாட்டியம்\nபிரபல குச்சிபுடி நடனக் கலைஞர் சந்தியா ராஜு ஒரு நடிகையாக அறிமுகமாகவுள்ளார்.\nரேவந்த் கோருகொண்டா இயக்கியுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை உபசன கொனிதேலா நிஷ்ரிங்கலா பிலிம்ஸ் பதாகையின் கீழ் வெளியிட்டுள்ளார்.\nஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் சந்தியா ராஜு மேடையில் நடராஜு சிலை வைத்து மேடையில் ஒரு அழகான நடனத்தை நடத்துவதைக் காட்டுகிறது.\nசந்தியா ராஜு ஒரு குச்சிபுடி நடனக் கலைஞர் என்பதால், அவர் ஒரு கவர்ச்சியான நடிப்பைக் கொண்டு வந்ததாகத் தெரிகிறது.\nஇப்படத்தை இயக்குவதோடு மட்டுமல்லாமல், திரைக்கதை எழுத்தாளர், ஒளிப்பதிவாளர் மற்றும் படத்தின் ஆசிரியராகவும் ரேவந்த் கோருகொண்டா பணியாற்றுகிறார்.\nகமல் காமராஜு, ரோஹித் பெஹால், பானுப்ரியா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிப்பார்கள்.\nகிளாசிக் திரைப்பட ஆர்வலர்களை கவர்ந்திழுக்கும் இந்த படத்திற்கு ஷ்ரவன் பரத்வாஜ் ஒலிப்பதிவு செய்கிறார்.\nஇங்கே என் அன்பான நண்பரை அறிமுகப்படுத்துகிறோம்\n“ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர்”\nஅவரது வரவிருக்கும் முதல் தெலுங்கு திரைப்படத்திலிருந்து\nரேவந்த் கோருகொண்டா இயக்கியுள்ளார் @ சந்தியராஜு ERevanthOfficial@ நாட்டியம் தி மூவி # சந்தியராஜு #revanthkorukonda#natyamthemovie pic.twitter.com/Irj1LPQNWT\nசமீபத்திய நேரடி-க்கு-OTT பதிப்புகளுக்கு இங்கே கிளிக் செய்க (பட்டியல் புதுப்பிப்புகள் தினசரி).\nஎழுத்தாளர். தீவிர தொலைக்காட்சி மேவன். சோஷியல் மீடியா பஃப். பேக்கன் ஆர்வலர். பீர் வெறி. பாப் கலாச்சாரம் ஜங்கி. இணைய பயிற்சியாளர். காபி காதலன். சான்றளிக்கப்பட்ட ஜாம்பியாஹோலிக்.\nREAD திஷா பதானி மற்றும் டைகர் ஷெராஃப் டேட்டிங் வதந்திகளை அனில் கபூர் சாதாரணமாக உறுதி செய்கிறார்\nசித்தார்த் சுக்லா, ரஷாமி தேசாய் மற்றும் டினா தத்தா ஆகியோர் அறை தோழர்களை கிரில் செய்கிறார்கள்\nபிக் பாஸ் 14, கா வார் வார இறுதி, நேரடி புதுப்பிப்புகள்: சித்தார்த் சுக்லா, ரஷாமி...\nபோலி பஸ்: கார்த்திக் ஆர்யன் மற்றும் ஜான்வி கபூர் ஆகியோர் கோவாவில் ஒன்றாக விடுமுறைக்கு வருகிறார்கள், ரியா சக்ரவர்த்தி மற்றும் சகோதரர் ஷோயிக் ஆகியோர் என்சிபியின் அலுவலகத்தில் காணப்படுகிறார்கள். அலி அப்பாஸ் ஜாபர் ஒரு தனியார் விழாவில் இந்தி மூவி நியூஸ் முடிச்சைக் கட்டுகிறார்\nதென் கொரிய நடிகையும் மாடலுமான பாடல் யூ-ஜங் தனது 26 வயதில் காலமானார்\n விக்கி க aus சலுடன் பணிபுரிவது குறித்து கீர்த்தி குல்ஹாரி: இந்தி மூவி செய்திகளில் எங்கள் வேதியியல் கொஞ்சம் பேசப்பட்டிருப்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்\nPrevious articleஅமெரிக்க ஜனாதிபதியின் பதவியேற்பு நாளிலிருந்து அவரைப் பற்றி வைரல் மீம்ஸைப் பற்றி பெர��னி சாண்டர்ஸ் கூறியது\nNext article“தமிழ்நாட்டில் தாமரை செழிக்காது”: சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக திமுக தலைவர் கனிமொழி பாஜகவுக்கு சவால் விடுகிறார்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nபிக் பாஸ் 14 பணியில் இழந்த சித்தார்த் அணி, அவர்கள் நிகழ்ச்சிக்கு வெளியே உள்ளனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mybhaaratham.com/2020/03/blog-post_7.html", "date_download": "2021-05-07T01:01:17Z", "digest": "sha1:KAWAEIYPG5P5CDWOI4UVIL6HWGWPJHSJ", "length": 10257, "nlines": 137, "source_domain": "www.mybhaaratham.com", "title": "Bhaaratham Online Media: 'அதிர்ஷ்டக்காரர்' அஸுமு", "raw_content": "\n'அரசியலில் யார் எக்கேடு கெட்டுப் போனால் என்ன நம்ம பதவியை தக்க வெச்சுக்கனும்' எனும் சுயநல அரசியல் சதுரங்க ஆட்டம் தான் இப்போது மலேசிய அரசியலில் அரங்கேறி கொண்டிருக்கிறது.\nமத்திய அரசாங்கத்தில் நிலவிய அதிகார மாற்றத்தைத் தொடர்ந்து ஜோகூர், மலாக்காவை தொடர்ந்து பேரா மாநில அரசையும் ஆட்டம் காணச் செய்தது.\nபேரா மாநிலத்தில் பக்காத்தான் கூட்டணி ஆட்சி கவிழ்ந்து பெரிக்காத்தான் நேஷனல் ஆட்சி அமைக்கின்ற நிலையில் முன்னாள் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அஸுமு பைஸாலே மீண்டும் மந்திரி பெசாராக பதவியேற்கிறார்.\nபக்காத்தான் ஆட்சியானாலும் சரி பெரிக்காத்தான் கூட்டணி ஆட்சியானாலும் சரி நானே மந்திரி பெசார் எனும் பதவி அதிகார தோரணை ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்த மக்களின் எதிர்பார்ப்பு மட்டும் பொய்யாக்கப்பட்டுள்ளது.\n'இயற்கையை காப்போம் இனியதோர் உலகை படைப்போம்' - சிறப்பு கட்டுரை\nபினாங்கு - இயற்கை என்பது இயல்பாக இருப்பது என்பது பொருள் கொண்டதாகும் . இயல்பாகவே தோன்றி மறையும் பொருட்கள் அவற்றின் இயக்கம் , அவை இயங...\nபூச்சோங்- மாரடைப்பின் காரணமாக மனைவியும் அவரை தொடர்ந்து கணவனும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. சிலாங்கூர்,பூச்சோங்கைச் ச...\nசோழன் ஆட்சியை இழந்ததைப்போல, மஇகாவை இழந்து விடாதீர்கள்\nசேரன், சோழன், பாண்டியன் ஆட்சிகளை இழந்து 500 ஆண்டுகளைக் கடந்து விட்டோம். இங்கு வந்து 200 ஆண்டுகளாகக் கட்டமைத்த வாழ்க்கையைத்தான் இன்றும...\nஎம்சிஓ- இன்னும் வலுபடுத்தப்படலாம்- தற்காப்பு அமைச்சர்\nகோவிட்- 19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த ஆடவர...\n1 லட்சம் முகக் கவசங்களை ஷான் பூர்���ம் மெட்டல் நிறுவ...\nகாற்றில் 8 மணி நேரம் உயிர் வாழும் கோவிட்-19\nகோவிட்-19: 37 பணியாளர்களுக்கு வைரஸ் தொற்று; தெலுக்...\nகோவிட்-19: பலி எண்ணிக்கை 14ஆக உயர்ந்தது\nகோவிட்-19: மக்களுக்கு உதவிப் பொருட்கள் வழங்கினார் ...\nஇந்திய உள்ளூர் டெலிமூவிக்களை ஒளிபரப்பவுள்ளது ஆஸ்ட்ரோ\nநடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை; 10% மக்கள் பின்பற்றுவதி...\nஅனைத்து மலேசியர்களுக்கும் ஆஸ்ட்ரோ கோ; இப்பொழுதே ஸ்...\nஏடிஎம் மையங்கள் 7 முதல் 10 மணி வரை மட்டுமே செயல்படும்\nகோவிட் 19- உயிர்பலி 8ஆக உயர்ந்தது\nமக்களுக்கு உதவிட சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வெ.30 ...\nராணுவ பயன்பாடு- அவசர கால பிரகடனம் அல்ல\nஞாயிற்றுக்கிழமை முதல் ராணுவ பயன்பாடு- தற்காப்பு அம...\nவீட்டிலேயே இருங்கள்- பிரதமர் வலியுறுத்து\nவிமான நிலையத்தில் சிக்கி தவிக்கும் மலேசியர்கள்- மஇ...\nசென்னை விமான நிலையத்தில் சிக்கியுள்ள மலேசியர்கள்\nகோவிட் -19.: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 673ஐ எட்டியது\nகோவிட்-19 பரிசோதனை: எத்தரப்பையும் அரசு நியமிக்கவில்லை\n''மைசெல்'' முயற்சியில் இரு இந்தியருக்கு ''மைகார்ட...\nமக்கள் நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை: பிரதமர் உத்தரவு\nமலேசியாவில் அதிகரிக்கும் கோவிட்-19 பாதிப்பு\nஇரண்டாவது முறை; பேரா மந்திரி பெசாராக பதவியேற்றுக் ...\nபொருளாதார நெருக்கடியை ஏற்படுத்துமா கோவிட்-19\nநிழலானது பிரதமர் பதவி; நிஜமாகிறது எதிரணித் தலைவர்-...\nதான் இல்லையென்றால் அமைச்சரவைக்கு அஸ்மின் அலி தலைமை...\nசம்பளத்தை குறைக்க முன்வந்தார் பிரதமர்\nஅமைச்சர்கள், துணை அமைச்சர்கள் சொத்து விவரங்களை அறி...\nமனிதவள அமைச்சராக பணியை தொடங்கினார் டத்தோஶ்ரீ சரவணன்\nதுரோகிகளை களையெடுக்குமா ப.கூட்டணி தலைமைத்துவம்\nகுறைகளை சொல்லிக் கொண்டிருக்காமல் செயல்பட வாய்ப்பளி...\nஒரேயொரு அமைச்சர் பதவி: மஇகாவுக்கு பலமா\nதுணைப் பிரதமர் இல்லாத அமைச்சரவை\nமனிதவள அமைச்சர் டத்தோஶ்ரீ சரவணன், கூட்டரசு பிரதேச...\nபக்காத்தான் கூட்டணிக்கு 'ராசியில்லாத' பேரா மாநிலம்\nஆட்சிக்குழு உறுப்பினர் பதவியை குறி வைக்கிறாரா சிவச...\nகவிழ்ந்தது பேராக் மாநில அரசு\nஅமைச்சரவை பட்டியலை பிரதமர் இன்று அறிவிக்கலாம்\nமஇகாவுக்கு ஒரு அமைச்சர், இரு துணை அமைச்சர் பதவிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2018/01/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2021-05-07T01:48:08Z", "digest": "sha1:IF7PYJ7GUE2D3YCSZLIWCYPHOM5QH6WZ", "length": 19024, "nlines": 163, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nசொத்து சுகத்துடன் வாழ்ந்திருந்தாலும் கடைசியில் குடிக்கத் தண்ணீர் கூட கொடுக்க மறுக்கின்றார்கள்… சில வீடுகளில் நடக்கும் நிகழ்ச்சிகள்\nசொத்து சுகத்துடன் வாழ்ந்திருந்தாலும் கடைசியில் குடிக்கத் தண்ணீர் கூட கொடுக்க மறுக்கின்றார்கள்… சில வீடுகளில் நடக்கும் நிகழ்ச்சிகள்\nபொல்லா மானிட வாழ்க்கையில் நீ தயங்காதே\nபொன்னடி பொருளும் பூமியில் சுகமோ\nமின்னலைப் போலே மறைவதைப் பாராய் என்று\nஉதாரணமாக செல்வம் சொத்து எல்லாம் ஆரம்பத்தில் சம்பாரித்திருப்பார்கள். வயதான காலத்தில் நோய்வாய்ப்பட்டு நடமாட்டம் குறைந்து படுக்கையில் இருப்பார்கள்.\nஅந்த மாதிரி நேரத்தில் வீட்டில் இருக்கும் தன் பையனிடமோ மற்றவர்களிடமோ “தாகமாக இருக்கிறது… கொஞ்சம் தண்ணீர் கொடுப்பா…\nஉடனே தண்ணீரைக் கொடுக்காதபடி “உனக்கு வேறு வேலையே இல்லை… போ..” என்று இவர்கள் திட்டிக் கொண்டு இருப்பார்கள்.\nமெய் ஞானிகள் கண்டுணர்ந்த பேருண்மைகளை அறியும் வண்ணம் குருநாதர் எனக்குப் (ஞானகுரு) பல உபதேசங்களைக் கொடுப்பார்.\nஅதே சமயத்தில் அதை எனக்குள் ஆழமாகப் பதிவு செய்து உண்மையை நான் உணர்வதற்காக வேண்டி என்னைக் கடுமையாகத் திட்டுவார். அப்பொழுது எனக்குச் சோர்வு வரும்.\nநான் சோர்வடையும் அந்த மாதிரி நேரங்களில் குருநாதர் என்னை அழைத்துச் சென்று இந்த மாதிரி நோயால் வாடும் ஆள்கள் இருக்கும் குடும்பங்களை நிறையக் காண்பிப்பார்.\nபொல்லா மானிட வாழ்க்கையில் தயங்காதே\nநேற்று இருந்தார் இன்று இருப்பது நிஜமோ\nநிலையில்லாத இந்த உலகம் உனக்குச் சதமா\n1.ஏனென்றால் அவர் நேற்று நன்றாக இருந்தார்.\n2.சந்தோஷமான உலகமாக அவருக்கு இருந்தது.\nஅதிலே அவர் எடுத்து வளர்த்துக் கொண்ட உணர்வு உடலில் சேர்ந்து நோயானவுடன் “கொஞ்சம் குடிக்கத் தண்ணீர் கொண்டாப்பா…\nசும்மா போகும் பொழுதும் வரும் பொழுதும் ஏதாவது வேலை சொல்லிக் கொண்டேயிருப்பது… “இது தான் உன் வேலை” என்று பையன் திட்டுகிறான்.\nஇவர் நன்றாக இருக்கும் பொழுது என்ன செய்கிறார்\nதன் பையனை அவன் சிறு பிள்ளையாக இருக்கப்படும் போது அவனைக் காக்க வேண்டும் என்பதற்காக “அங்கே போயிட���தடா… இங்கு போயிடாதடா…” என்று சொல்லி இருக்கின்றார்.\nமீண்டும் மீண்டும் பையன் அந்தக் குறும்புத்தனம் செய்யும் பொழுது சங்கடப்பட்டு இவர் சொல்கிறார். பையனைக் காத்துவிடுகின்றார். ஆனால்…,\n1.இவர் வயதான காலத்தில் நோயில் விழுந்து விட்ட பின்னாடி\n2.அதே சங்கடம் இங்கே பையனுக்கு வருகின்றது.\n3.இவருக்கு வேறு வேலையே இல்லை “எப்போது பார்த்தாலும் “நச்… நச்…” என்று எதையாவது கேட்டுக் கொண்டேயிருப்பார் என்கிறான் பையன்.\nதன் பையன் நன்றாக இருப்பதற்காக வேண்டிச் சங்கடப்பட்டுச் சொன்னார். அந்தச் சங்கடமான உணர்வு நோயாக வந்து விட்டது. இவர் நோயில் விழுந்து விட்டார்.\nஅதே சமயத்தில் நோயானபின் “அப்பாவிற்குக் குடிக்கத் தண்ணீர் கொண்டு வாடா…” என்று சொன்னால் பையன் செய்யாதபடி திட்டிக் கொண்டிருக்கின்றான்.\nஇது நடந்த நிகழ்ச்சி. அப்படியே இந்த உணர்வைப் படம் பிடித்துக் காட்டுகின்றார் குருநாதர்\nஇதைப் போன்று மூன்று இலட்சம் பேரைக் (குடும்பங்களைக்) காண்பித்து “மனமே இனியாகிலும் மயங்காதே…” என்ற பாட்டின் மூலமாக எனக்கு ஒவ்வொரு நிமிடமும் உண்மைகளைத் தெரியும்படிச் செய்தார். அறிய வைத்தார்.\nமின்னலைப் போலே மறைவதைப் பாராய்\nநேற்று இருந்தார் இன்று இருப்பது நிஜமோ\nநிலையில்லாத இந்த உலகம் உனக்குச் சதமா…\nநிலை இல்லாத இந்த உலகத்திற்கு “நீ ஏன்டா (என்னிடம்) வாதாடுகிறாய்…” என்று மெய்ப் பொருளைக் காட்டுவார்.\nகுருநாதர் கடுமையாகத் திட்டுவார். அதே சமயத்தில் அதற்குண்டான உதாரணத்தைக் காட்டுவார். இந்த உணர்வுகள் உனக்குள் எப்படி வேலை செய்கின்றது… என்று முழுமையான அனுபவமாகக் கொடுப்பார்.\n செல்வத்தைச் சம்பாதித்து வைத்தார்கள். அவன் நன்றாக இருக்க வேண்டும்… இவன் நன்றாக இருக்க வேண்டும்… தான் நன்றாக இருக்க வேண்டும்… என்று சொல்லி முயற்சி செய்வார்கள்.\nகுடும்பத்தின் மேல் உள்ள பாசத்தால் பதறிப் போய் வேலை செய்வார்கள். பிள்ளைகளைத் திட்டவும் செய்வார்கள். சம்பாதித்த காசை பிள்ளைக்குக் கொடுக்கவும் செய்வார்கள்.\n1.இத்தனையும் செய்தேனே “பையன் இப்படிப் போகின்றானே…\n2.அவன் எதிர் காலம் என்னாகுமோ என்ற வேதனைப்படுவார்கள்\n3.அந்த வேதனையும் கோபமும் அதிகமாகிக் கை கால் வராமல் நோயாகிப் படுத்த படுக்கையாகின்றார்கள்.\nபடுத்துக் கொண்ட நேரத்தில் “முடியவில்லையே… கண்ணு… கொஞ்சம் தண்ணீர் கொண்டு வா…” என்றால் “இந்த வருகிறேன் போ… கொஞ்சம் தண்ணீர் கொண்டு வா…” என்றால் “இந்த வருகிறேன் போ…\nஅட… இன்னும் காணோமே… தண்ணீர் தவிக்கின்றதே… கொடுக்கவில்லையே… என்று சொல்லித் தவிக்கும் ஆள்களைக் குருநாதர் நிறையக் காண்பித்தார்.\nநோயாக இருக்கின்றார்கள். அப்போது உடலுக்கு முடியாத நிலைகளில்\n1.கூட ஒரு தரம் கொஞ்சம் வேகமாகச் சொல்லி விட்டால்\n2.எப்போது பார்த்தாலும் கத்திக் கொண்டு… செ.., “சனியன் சீக்கிரம் தொலைந்தால் பரவாயில்லை…” என்று சொல்லாகச் சொல்லிவிடுகிறார்கள்.\nமூன்று இலட்சம் பேர் குடும்பங்களில் மூன்று இலட்சம் விதமாக உணர்வுகள் எப்படி இயங்குகின்றது இதெல்லாம் தீய வினையாக சாப வினையாக பாவ வினையாக ஒவ்வொரு உடலிலும் எப்படிச் சேர்கின்றது. இதை நிறுத்த வேண்டுமல்லவா என்று காட்டுகிறார் குருநாதர்.\nமனித வாழ்க்கையில் இது வருகின்றது. பொன்னடி பொருளும் பூமியில் சுகமோ… மின்னலைப் போல…, சுகம் பூராம் போகின்றது பார்… மின்னலைப் போல…, சுகம் பூராம் போகின்றது பார்… அனுபவிக்க முடிகின்றதா…\n1.சொத்து எல்லாம் அவருக்கு இருக்கின்றது\n2.ஆனால் இவருக்குச் சுகமெல்லாம் போய்விட்டதே..\n3.நரக லோகத்தில் அல்லவா இப்பொழுது வசிக்கின்றார்.\n4.யாரும் கவனிக்க மாட்டேன் என்கிறார்கள் என்ற நரக லோகத்தில் தான் வாழ முடிகின்றது.\n5.சொர்க்கலோகத்திற்குப் போக முடியவில்லை. ஏனென்றால் அவர் எண்ணமே இங்கு இல்லை.\nஇதைத்தான் அடிக்கடி அடிக்கடி மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எனக்கு உணர்த்திக் காட்டுவார். அந்த அனுபவத்தைத் தான் உங்களிடம் சொல்கின்றேன்.\nவாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக வேதனைப்பட்டு வேதனைப்பட்டு வேதனையை அனுபவிப்பதற்காக நாம் மனிதச் சரீரம் பெறவில்லை.\nவேதனைகளை நீக்கிய… தீமைகளை நீக்கிய… மெய் ஞானிகளின் அருள் சக்திகளை எடுத்து எடுத்து நமக்குள் சிறுகச் சிறுச் சேர்த்து வேதனையிலிருந்து விடுபடும் வாழ்க்கையாக வாழ்ந்து உடலுக்குபின் அழியா ஒளியின் சரீரமாக அடைவது தான் மனிதனின் கடைசி எல்லை.\n1.மெய் ஞானிகள் அடைந்த உன்னத நிலைகளை நாம் பெறுவதே\n3.அதுவே பேரானந்தப் பெரு நிலை.\nசாமியையே (ஞானகுரு) எண்ணிக் கொண்டிருப்பதைக் காட்டிலும் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து உடலுக்குள் விளைய வைக்க வேண்டும்\n என்பது பற்றி ஈஸ்வரப��்டர் சொன்னது\nசீராக ஆத்ம சுத்தி செய்வோருக்குக் கிடைக்கும் பலன்கள்\nஆண்டவனிலிருந்து வந்த பிம்பங்கள் தான் அனைத்துமே என்று எண்ணினால்… “தான்” என்ற தனித்த அகங்காரம் வராது – ஈஸ்வரபட்டர்\nஉங்களுக்குக் கொடுத்த சக்திகளை ஒவ்வொருவரும் விரயம் ஆக்காது பயன்படுத்துங்கள்\n24 X 7 சாமிகள் உபதேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/1024874/amp", "date_download": "2021-05-07T01:39:45Z", "digest": "sha1:OH5ESEENOXJ3PUGJM7TMTHXWDO3JCZVO", "length": 12276, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "புகையால் மூச்சுத்திணறும் மக்கள் குடியிருப்பு அருகே செங்கல் சூளை மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? | Dinakaran", "raw_content": "\nபுகையால் மூச்சுத்திணறும் மக்கள் குடியிருப்பு அருகே செங்கல் சூளை மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா\nகுஜிலியம்பாறை, ஏப்.19: குஜிலியம்பாறை அருகே ராமகிரியில் திறந்த வெளியில் உள்ள செங்கல் சூளையில் இருந்து வெளியேறும் புகையால் மக்களுக்கு மூச்சுத் திணறல் பாதிப்பு ஏற்படுகிறது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குஜிலியம்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான செங்கல் சூளைகள் உள்ளன. இப்பகுதியில் போதிய மழை இன்றி விவசாயம் செய்ய முடியாததால் பெரும்பாலானோர் விளைநிலங்களை அழித்து செங்கல் சூளை தொழில் செய்கின்றனர். இப்பகுதியில் உள்ள பெரும்பாலான செங்கல் சூளைகள் குடியிருப்பு பகுதியில் அருகிலேயே உள்ளது. இந்நிலையில் குஜிலியம்பாறை-திண்டுக்கல் சாலையில் ராமகிரி செல்லும் மெயின்ரோட்டில் குடியிருப்பு பகுதிகள் உள்ள இடத்தில் இரண்டு செங்கல் சூளைகள் உள்ளன. இந்த செங்கல் சூளையில் தற்போது செங்கல் தயாரிப்பு பணி மும்முரமாக நடந்து வருகிறது. செங்கல் சூளையில் ஒரு வாரத்திற்கு மேலாக சுட்டால்தான் முழு செங்கலாக வெளிக் கொண்டு வர முடியும். இந்த ஒரு வாரத்தில் 24 மணி நேரமும் சூளையில் இருந்து வெளியேறும் புகையால் அருகில் உள்ள குடியிருப்புவாசிகளுக்கு கடும் மூச்சுத்திணறல் ஏற்படுகிறது.\nஇதுமட்டுமின்றி ஆஸ்துமா உள்ளிட்ட பிற நோயாளிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இது குறித்து மாசுகட்டுப்பாட்டு வாரியத்திடம் மக்கள் புகார் தெரிவித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்ல���. இது குறித்து குடியிருப்பு மக்கள் கூறுகையில், செங்கல் சூளைகளை பொறுத்தவரை, சிறிய செங்கல் சூளை உரிமையாளர்கள் யாரும் அனுமதி பெற்று உற்பத்தி செய்வதில்லை. சேம்பர் செங்கல் உற்பத்தி செய்பவர்கள் மட்டுமே மாசுகட்டுப்பாடு துறையில் உரிய அனுமதி பெற்று, புகைக்கூண்டு அமைத்து செயல்படுத்துகின்றனர். ஆனால் சாலையோரம் குடியிருப்பு பகுதியில் வைத்துள்ள செங்கல் சூளையினர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின்படி காற்று மாசு ஏற்படுத்தாத வகையில் புகைக்கூண்டு அமைப்பதில்லை. மாறாக திறந்த வெளியிலேயே செங்கல் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால் திறந்த வெளி முழுவதும் வெளியேறும் நச்சு புகையால் மக்கள் கடுமையாக மூச்சுதிணறல் ஏற்பட்டு நுரையீரல் நோய் பாதிப்பு ஏற்படும் அபாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இது குறித்து மாசுகட்டுப்பாட்டு வாரியத்திடம் முறையிட்டும் இதுவரை நடவடிக்கை இல்லை. எனவே இது குறித்து மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்து, நோய் பாதிப்பில் இருந்து இப்பகுதி மக்களை பாதுகாக்க வேண்டும் என்றனர்.\nதிருவாரூர் பைபாஸ் சாலை அருகே ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சேதமடைந்த நூலக சாலை\nஅறிவொளி இயக்கம் அழைப்பு பொறுப்பாளர்கள் போன் எண்கள்\nகலெக்டர் தகவல் வாசிப்பு பழக்கம் மூலம் செல்போன் சீர்கேடுகளில் இருந்து குழந்தைகளை மீட்டெடுக்க வேண்டும்\nதிருவாரூர் மாவட்டத்தில் மத்திய அரசின் ஆதார விலைத்திட்டத்தில் உளுந்து, பச்சைப்பயறு கொள்முதல்\nதிருவாரூர் நகரில் குழாய் சேதமடைந்து வீணாக குடிநீர் வெளியேறும் அவலம் சீரமைத்து பராமரிக்க மக்கள் கோரிக்கை\nலால்குடி வயல்காட்டில் ரத்த காயங்களுடன் பெண் சடலம் மீட்பு\nசிறுமியிடம் அத்து மீறல் சமையல் மாஸ்டர் கைது\nதிருவெறும்பூர் அருகே உப்பு லோடு லாரி கவிழ்ந்தது\nகுடியிருப்புகளுக்கு அருகே மது குடித்ததை கண்டித்த வாலிபருக்கு அடி உதை\nபேராவூரணி ஜமாஅத் அறிவிப்பு தென்னையை தாக்கும் தஞ்சை வாடல் நோயை கட்டுப்படுத்தும் வழிமுறை\nமுழு ஊரடங்கு தினத்தன்று இஸ்லாமியர் வீடுகளிலேயே நோன்புகால சிறப்பு தொழுகை\nபேராவூரணி நகரில்a ரூ.15 கோடியில் சாலை மேம்பாடு திட்டப்பணி திருக்காட்டுப்பள்ளி அருகே அரை குறையாக விடப்பட்ட தார் சாலை சீரமைப்பு\nஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலையத்தில் வேளாண் கல்லூரி மா��விகளுக்கு ஒருங்கிணைந்த பண்ணைய பயிற்சி\nஅரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி\nதிருவையாறில் கணவரை காணவில்லை மனைவி போலீசில் புகார்\nபட்டப்பகலில் மர்மநபர்கள் துணிகரம் புதுக்கோட்டை அரசினர் பிற்படுத்தப்பட்டோர் மாணவியர் விடுதியை கொரோனா சிகிச்சை மையமாக மாற்றும் பணி\nபொன்னமராவதி பேருந்து நிலையத்தில் திமுக பிரமுகரின் கார் கண்ணாடியை உடைத்து ரூ. 4 லட்சம் கொள்ளை\nகொள்ளிடம் பகுதி ஆரம்ப சுகாதார நிலையங்களில் கிருமி நாசினி, முககவசம் தட்டுப்பாடு\nபாரம்பரியத்தை மீட்டெடுக்கும் வகையில் பனை ஓலையில் விதவிதமான பொருட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://prosperspiritually.com/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9/", "date_download": "2021-05-07T01:49:56Z", "digest": "sha1:UKPUKTT6QVFHR22NOO4N5E56L3HFJZDW", "length": 16609, "nlines": 122, "source_domain": "prosperspiritually.com", "title": "59-ஏன், ‘அறிவே’, ‘தெய்வம்’ எனப்படுகின்றது? - Prosper Spiritually", "raw_content": "\nசிந்தித்தலின் அன்றாட சுயசோதனை பயிற்சி\n59-ஏன், ‘அறிவே’, ‘தெய்வம்’ எனப்படுகின்றது\n59-ஏன், ‘அறிவே’, ‘தெய்வம்’ எனப்படுகின்றது\nகுறிப்பு: கடந்த அறிவிற்கு விருந்தில் கடைசியாக, கூடுதலாக, பிறகு சேர்க்கப்பட்டுள்ளது. அது violet வண்ணத்தில் கடைசியாக உள்ளது. அதனை வாசித்து விட்டு இன்றைய விருந்திற்குள் செல்லுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகின்றது. சிரமத்திற்கு பொருத்தருள்க.\nஏன், ‘அறிவே’, ‘தெய்வம்’ எனப்படுகின்றதுஅ.வி.எண்.59—(4/\nவாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு\nகடந்த அறிவிற்கு விருந்தின் தொடர்ச்சியாக இன்று ‘Entelechy’ என்கின்ற ஆங்கில வார்த்தைக்கு மேலும் பொருள் விளங்கிக் கொண்டு, எவ்வாறு இறை ஆட்சியின்றி இப்பிரபஞ்சத்தை ஆண்டு கொண்டிருக்கின்றது என்று பார்க்க இருக்கிறோம்.\nமிகவும் பழைய ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி ‘Entelechy’ என்கின்ற ஆங்கில வார்த்தைக்குக் கூறும் அர்த்தத்தைக் கவனிப்போம்.\n1. வார்த்தைகளால் சொல்ல முடியாத இயற்கையின் தன்மையை,\n2. என்ன இருந்ததோ அது வெளிப்படுவதை,\n3. முன்னேற்றம் அடைந்து முழுமை அடைவதை,\n4. பூரணத்தைக் கொடுக்கக் கூடியதைக் குறிக்கின்றது.\n‘Entelechy’ என்கின்ற வார்த்தைக்கான ஆழ்ந்த பொருளை எந்த அளவிற்கு விளங்கிக் கொண்டு, மனதில் உருவகப்படுத்த முடிகின்றதோ அந்த அளவிற்கு இறையின் தன்மாற்றத்தில் உள்ள பிரமிப்ப��, ஐயமோ, திகைப்போ இல்லாது போய்விடும். விளக்கம் தெளிவாகிவிடும்.\nஅறிவு மூன்று வகையில் செயல்படுகின்றது. உயிரடற்ற சட்பொருட்களில் ஒழுங்காற்றலாகவும், உயரினங்களில் உணர்தலாகவும், மூன்றாவதாக மனிதனில் தன்னையே உணர்ந்து கொள்ளக்கூடியதாகவும் செயல்படுகின்றது. இதற்கு உதாரணம் – இறையாகிய அறிவு தன்னையே அறிந்து கொள்வதற்காகவேதான் நம்முடைய இணையதள சத்சங்கத்தை நடத்திக் கொண்டிருக்கின்றது.\nஉயிரற்ற சடப்பொருட்களில் அமைப்பு (pattern) துல்லியம் (precision), ஒழுங்கு (regularity) ஆகியவைகளுக்குக் காரணமான ஒழுங்காற்றலாகவும் (order of function),\nஉயிரற்ற சடப்பொருட்களில் அமைப்பு (pattern) துல்லியம் (precision), ஒழுங்கு (regularity) ஆகியவைகளுக்குக் காரணமான ஒழுங்காற்றலாகவும் (order of function), விளங்குகிறது.\nஉதாரணத்திற்கு அணு அமைப்பை (Structure of an atom) எடுத்துக் கொள்வோம். அணுவின் மையத்தில் அணுக்கரு (necleus) உள்ளது. அதனை எலக்ட்ரான்கள் சுற்றி வருகின்றன. எலக்ட்ரான்கள் தன் விருப்பம் போல் சுற்றி வருவதில்லை. எலக்ட்ரான்கள் ஒழுங்குடன் தத்தம் பாதையில்(orbit) சுற்றி வருகின்றன. முதல் பாதையில்(K), இரண்டாம் பாதையில்(L), மூன்றாம் பாதையில்(M) எவ்வளவு எலக்ட்ரான்கள் இருக்க வேண்டும் என்பது 2n² என்கின்ற சாம்யத்திற்கு (formula) உட்பட்டுத்தான் சுற்றி வருகின்றன. n என்பது பாதையின் எண். உதாரணத்திற்கு முதல் பாதைக்கு n=1, இரண்டாம் பாதைக்கு n=2, மூன்றாம் பாதைக்கு n=3. ஆகவே முதல் பாதையில் 2 (2n² = 2 x 1² =2), இரண்டாம் பாதையில் 8 மூன்றாம் பாதையில் 18ஆக இருக்கும். இந்த சாம்யத்தை அதற்கு சொல்லியது யார். இந்த சாம்யத்துடன் அணுவை அமைத்துக் கொள்ளும் ஒழுங்காற்றல் — தன்மையைத்தான் உயிரற்ற சடப்பொருட்களிலும் அறிவு இருக்கின்றது என்கின்றது வேதாத்திரியம்.\n“உணர்ச்சியாய்ச் சிந்தனையாய் உள்ளதே அறிவென்று\nஉணா்ந்திருந்தேன் பல நாள்; மேலும் உண்மை விளங்க\nஉணர்ச்சிக்கு முன்னம் விண்ணில் ஒழுங்காற்றலாய் விளங்கும்\nஉனது திரு நிலையும் அறிவே என உணர்ந்தேன்”\n…. வேதாத்திரி மகரிஷி அவர்கள்.\nசடப்பொருட்களிலும் அறிவு இருக்கின்றது, ஆனால் ஒழுங்காற்றலாய் உள்ளது என்பதனை விஞ்ஞான உதாரணத்தோடு விளங்கிக் கொள்வோம்.\nஅணு எண் 33ஐக் (Atomic Number=33) கொண்ட ஆர்சனிக் என்ற தனிமத்தின் அணு அமைப்பினைக் காண்க. (அணு எண் = எலக்ட்ரான்களின் எண்ணிக்கை).\n• கடைசி பாதையில் எட்டு எலக்ட்ரான்களுக்கு மேல் இருக்காது. இதற்கு Octet rule என்று பெயர்.\nகடைசி பாதையில் எட்டு எலக்ட்ரான்கள் இருந்தால் அந்த அணு நிலைத்த(stable) அணுவாகும். உதாரணம் நியான் மற்றும் ஆர்கான்.\nவிஞ்ஞானத்தில் உள்ள எந்த நியதிகளுக்கும் (laws) காரணம், அறிவு என்கின்ற ஒழுங்காற்றலின் கருணைதான். இதனை பாடலின் வழியாக எடுத்துச் சொல்வதை மீண்டும் நினைவிற்குக் கொண்டு இறையை நினைந்து மகிழ்வோம். அறிவு ஒழுங்காற்றலாக செயல்படும் விஞ்ஞான நியதிகளையெல்லாம், அவ்வப்போது, மனிதனின் அறிவின்(அதுவும் இயற்கையே) வழியாகத் தெரிவித்து, அதனை மனிதனுக்கு வேண்டிய வளமாக மாற்றி அனுபவிக்க வைத்தமையை ‘கருணை’ என்று சொல்லாமல் வேறு எவ்வாறு சொல்வது இதுவும் “தனிப் பெருங்கருணை” என்று வள்ளலார் கூறுவதில் அடங்கும். இந்த கருணையைப் புரிந்து கொள்ளாமல் மனிதகுலம் இயற்கையோடு/இறையோடு போராடுவது எவ்வளவு துரதிருஷ்ட வசமானதாக உள்ளது.\nஉயிர்களில் ஒழுங்காற்றலாக இருப்பதோடு உணர்தலாகவும் (cognition), அனுபவிப்பதாகவும் (expeience), பிரித்துணர்தலாகவும் (discrimination) செயல்படுகின்றது.\nமனிதனிடம் இந்த ஆறு பணிகளுக்கும் அப்பால், தன்னையே உணரக்கூடியதாகவும் (realisation) உள்ளது என்கின்றார் மகரிஷி அவர்கள். அதனால் தான் மனிதன் உயிரினங்களிலே அரிதான பிறவி என்கிறார் அவ்வையார். அறிவின் நிலையை விளக்கும் மகரிஷி அவர்களின் கவியை நினைவு கூர்வோம்.\nதோற்ற மெல்லாம் மெய்ப்பொருளே அவ்வதற்குள்\nதொடர்ந்து விரிந்தியங்க ஒழுங்காக ஆற்றும்\nஆற்றலெல்லாம் அறிவாகும், அறிவின் மூலம்\nஅதன்வளர்ச்சி பூரணம் ஐம்புலன் உணர்வால்\nஏற்ற பருமன் விரைவு, காலம், தூரம்\nஎண்ணி ஒத்திட்டுணர்ந்து இன்ப துன்பம்\nதோற்றத்தால் ஏற்றத்தாழ்வு இவற்றை வேறாய்,\nதெளியும் நிலை உணர்; அறிவின் நிலை விளக்கும்.\nஇறை எங்கும் நீக்கமற நிறைந்துள்ளது என்றால் அறிவு இல்லாத பொருளோ, இடமோ, அல்லது நிகழ்ச்சியோ இல்லை என்பதுதான் பொருள். தொடரும்.\nஅடுத்த விருந்தில் எவ்வாறு இறை ஆட்சி யின்றி இப்பிரபஞ்சத்தை ஆண்டு கொண்டிருக்கின்றது என்பதனையும், எல்லாமே தெய்வம் என்றாலும், அவற்றில் அறிவும் ஒன்றாக இருந்தாலும், ‘அறிவே தெய்வம்’ என்பது எவ்வாறு இதமாக உள்ளது என்பதனைப் பார்ப்போம்.\nPrev:சிந்திக்க அமுத மொழிகள்- 50\nNext:சிந்திக்க வினாக்கள் – 49\nசிந்தித்தலின் அன்றாட சுயசோதனை பயிற்சி\nசிந்தித்தலின் அன்றாட சுயசோதனை பயிற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.haiyanbolt.com/products/nut", "date_download": "2021-05-07T00:57:01Z", "digest": "sha1:L2SY5ZNOTX2TKOE4TEKF6RSAVOFF7JHD", "length": 9534, "nlines": 158, "source_domain": "ta.haiyanbolt.com", "title": "நட் உற்பத்தியாளர், நட் சப்ளையர் - ஹையன்போல்ட்.காம்", "raw_content": "\nஹெக்ஸ் சாக்கெட் வூட் ஸ்க்ரூ\nஹெக்ஸ் ஃபிளேன்ஜ் வூட் ஸ்க்ரூ\nஹெக்ஸ் டோம் தொப்பி நட்\nதிரிக்கப்பட்ட ராட் & ஸ்டட்\nஸ்டாம்பிங் & வெல்டிங் பாகங்கள்\n1. , pallet nut, வெல்டிங் நட்டு, ரிவெட் நட், சதுர நட்டு.\n3, பொருள்: எஃகு / கார்பன் ஸ்டீல், குறைந்த கார்பன் எஃகு (லேசான எஃகு), நடுத்தர கார்பன் எஃகு, அலாய் ஸ்டீல், எஃகு (SS201, SS304, SS316), மற்றும் பித்தளை, அலுமினிய அலாய்.\n6, மேற்பரப்பு பூச்சு: எளிய பூச்சு, கருப்பு, கருப்பு ஆக்ஸைடு, கருப்பு துத்தநாக பூச்சு, ஹாட் டிப் கால்வனைஸ் (எச்டிஜி), துத்தநாகம் பூசப்பட்ட, மஞ்சள் இசட், பித்தளை பூச்சு, நிக்கல் பூசப்பட்ட, குரோம் முலாம், டாக்ரோமேட், ஜியோமெட் போன்றவை.\n7, பொதி: 20-25 கிலோ கார்டன் + பாலேட் (மொத்தமாக பொதி செய்தல் அல்லது சிறிய பெட்டி பொதி)\nவீடு / தயாரிப்புகள் / நட்டு\nஏ 2 70 ஹெக்ஸ் நட் டின் 934 ப்ளைன் பாலிஷ்\nA563 Gr A துத்தநாகம் பூசப்பட்ட ஹெக்ஸ் நட் DIN934\nஎஸ்எஸ் ஹெக்ஸ் நட் din934\nஹாட் டிப் கால்வெய்ன்ஸ் டின் 934 ஹெக்ஸ் நட் ஏ 563\nமஞ்சள் துத்தநாகம் பூசப்பட்ட DIN934 ஹெக்ஸ் நட்டு\nASME நிலையான ஹெக்ஸ் நட் கருப்பு ஆக்சைடு\nA2 ss 304 ஹெக்ஸ் ஜாம் நட்டு\nZINC பூசப்பட்ட ஹெக்ஸ் ஜாம் நட் din439\nANSI ஹெக்ஸ் ஜேம் நட் ப்ளைன்\nயு.என்.எஃப் ஹெக்ஸ் ஜாம் நட் a563\nA194 2h hvy ஹெக்ஸ் நட் கருப்பு ஆக்சைடு\nDIN6923 ஹெக்ஸ் ஃபிளேன்ஜ் நட் துத்தநாகம் பூசப்பட்ட வெள்ளை மஞ்சள்\nஎஸ்எஸ் 304 ஹெக்ஸ் ஃபிளேன்ஜ் நட் ப்ளைன்\nANSI ஹெக்ஸ் ஃபிளேன்ஜ் நட் துத்தநாகம் பூசப்பட்ட a563\n1 அங்குல தியா பெரிய flange நட்டு\nSS304 ss316 ஹெக்ஸ் குவிமாடம் தொப்பி நட்டு din1587\nதுத்தநாக பூசப்பட்ட ஹெக்ஸ் குவிமாடம் தொப்பி நட்டு din1587\n1 2 3 அடுத்து\nதிரிக்கப்பட்ட ராட் & ஸ்டட்\nஸ்டாம்பிங் & வெல்டிங் பாகங்கள்\nதிரிக்கப்பட்ட ராட் & ஸ்டட்\nஹையான் போல்ட் கோ, லிமிடெட்\nசேர்: எண் 883 லியாங்சியாங் சாலை, வுயுவான் டவுன், ஹையான், ஜெஜியாங், சீனா\nபதிப்புரிமை © 2015 ஹையான் போல்ட் கோ., லிமிடெட், அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. | எக்ஸ்எம்எல் தள வரைபடம் | இயக்கப்படுகிறது Hangheng.cc", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilkilavan.com/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88garlic-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2021-05-07T01:36:35Z", "digest": "sha1:4WK46W3ZY3WYT2RGT2KQE5EVBRKGHRAX", "length": 3560, "nlines": 65, "source_domain": "tamilkilavan.com", "title": "பூண்டை(Garlic) இப்படி சாப்பிட்டால் மா'ரடைப்பு நிச்சயம் ! இதை எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா ? | Tamil Kilavan", "raw_content": "\nபூண்டை(Garlic) இப்படி சாப்பிட்டால் மா’ரடைப்பு நிச்சயம் இதை எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா \nபூண்டை(Garlic) இப்படி சாப்பிட்டால் மா’ரடைப்பு நிச்சயம் இதை எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா \nTwitterFacebook வெந்தயம் ஊற வைத்த நீரை தொடர்ந்து குடிச்சு வந்தால் என்ன அதிசயம் …\nவெந்தயம் ஊற வைத்த நீரை தொடர்ந்து குடிச்சு வந்தால் என்ன அதிசயம் நடக்கும் தெரியமா.\nTwitterFacebook வெறும் 5 நாட்களில் தொப்பை வயிறு முழுவதும் மாயம் ஆகிவிடும்\nவெறும் 5 நாட்களில் தொப்பை வயிறு முழுவதும் மாயம் ஆகிவிடும்.\nகடையில் முட்டை வாங்கறதுக்கு முன்னாடி இந்த வீடியோ பாருங்க\n2 முட்டை இருக்கா வீட்டில் உள்ள அனைவருக்கும் கிரிஸ்பியான ஈவினிங் ஸ்நாக்ஸ் ரெடி.\nமுட்டை சுக்கா லஞ்சுக்கு பக்காவான சைடிஷ் 10 நிமிடத்தில் இப்படி சுவையா செய்து கொடுத்து அசத்துங்க.\nபல கோடி சொத்துக்கு சொந்தக்காரி ஒரு வேலை சோற்றுக்காக வீட்டு வேலை செய்து பிழைக்கும் அவலம்\n20 ஆயிரம் வருடங்களுக்கு முன் மூழ்கிப்போன தமிழனின் வரலாறு.. தற்போது மெல்ல மெல்ல மிதந்து வருகிறது.. தற்போது மெல்ல மெல்ல மிதந்து வருகிறது.. ஒவ்வொரு தமிழனும் உலகத்துக்கு அறிய நண்பர்களுடன் பகிருங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akattiyan.lk/2021/04/blog-post_72.html", "date_download": "2021-05-07T00:34:01Z", "digest": "sha1:VC57222WIB3ZBN5K7Y6TMK5J3LAJWM7T", "length": 7174, "nlines": 69, "source_domain": "www.akattiyan.lk", "title": "நேற்றைய தினம் கொழும்பு மாவட்டத்தில் அதிகளவான தொற்றாளர்கள் பதிவு - அகத்தியன் | Online", "raw_content": "\nHome மாவட்டம் நேற்றைய தினம் கொழும்பு மாவட்டத்தில் அதிகளவான தொற்றாளர்கள் பதிவு\nநேற்றைய தினம் கொழும்பு மாவட்டத்தில் அதிகளவான தொற்றாளர்கள் பதிவு\nநாட்டில், நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட 228 பேரில் 58 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.\nயாழ்ப்பாணம் மாவட்டத்தில் 56 பேர், கம்பஹா மாவட்டத்தில் 27 பேர், இரத்தினபுரி மற்றும் குருணாகல் ஆகிய மாவட்டங்��ளில் 10 பேர் அத்துடன், புத்தளம் மாவட்டத்தில் 05 பேர் நேற்றைய தினம் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nகண்டி மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களில் தலா 03 பேர், பதுளை, கிளிநொச்சி மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களில் தலா 02 பேர் என்ற அடிப்படையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nஅம்பாந்தோட்டை, மட்டக்களப்பு, பொலன்னறுவை, மொனராகலை மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் என்ற அடிப்படையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nவெளிநாட்டிலிருந்து வருகை தந்த 45 பேர் அடங்கலாக நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என கொவிட் -19 தடுப்பிற் கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.\nநேற்றைய தினம் கொழும்பு மாவட்டத்தில் அதிகளவான தொற்றாளர்கள் பதிவு Reviewed by Chief Editor on 4/10/2021 01:24:00 pm Rating: 5\nபாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் மேலதிக வகுப்புகளுக்கு மறு அறிவித்தல் வரை விடுமுறை\nபாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் மேலதிக வகுப்புகளுக்கு மறு அறிவித்தல் வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், நோன்பு பெருநாள், வெசாக் ...\nகொரோனா பரவல் காரணமாக நாட்டின் பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள விடுமுறையானது மேலும் ஒரு வார காலத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ...\nமோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nவாகன போக்குவரத்து திணைக்களத்தின் நாரஹென்பிட்டி மற்றும் வேரஹெர அலுவலகங்கள் ஒரு வாரத்திற்கு மூடப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம த...\nDReAM என அறிமுகப்படுத்தப்பட்டுள்ள முற்பாதுகாப்பு விதிமுறைகளுக்கமைய மதுபான சாலைகளை திறந்து வைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. D – சமூக இடை...\nமுழு அதிகாரம் : அகத்தியன் ஊடக சேவை 2020\nஆசிரியர் பீட தெடர்புகளுக்கு 0779516119\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithisaral.in/2020/11/", "date_download": "2021-05-07T00:42:58Z", "digest": "sha1:X4VWM6ZNVMD3PVBPF6MVTJL6W6OFMHCG", "length": 8733, "nlines": 151, "source_domain": "www.seithisaral.in", "title": "November 2020 - Seithi Saral", "raw_content": "\nதமிழகத்தில் இன்று 1,410 பேருக்கு கொரோனா\nCorona for 1,410 people in Tamil Nadu today 30/11/2020 தமிழகத்தில் இன்று 1,410 பேருக்கு கொரோனா கண்டறிப்பட்டுள்ளது. கொரோனா தமிழகத்தில் கொரோனா நிலவரம் பற்றி...\n“எனது முடிவை விரைவில் அறிவிப்பேன்”- ரஜினி பேட்டி\n\"I will announce my decision soon\" - Rajini interview 30/11/2020நடிகர் ரஜினிகாந்த் தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன்பின் அவர் தனது...\nகொரோன தடுப்பூசி பற்றி எளிய மக்களும் புரிந்து கொள்ள வேண்டும்; மோடி வேண்டுகோள்\nஅமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்ட ஜோ பைடன் எலும்பு முறிவு\nJoe Biden fractured 30/--11/2020 அமெரிக்க அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன் தனது நாயுடன் விளையாடிய போது வலது காலில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது....\nவங்கக் கடலில் உருவான குறைந்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறுகிறது\nஊரடங்கில் மேலும் தளர்வுகள்; டிசம்பர் 7-ந் தேதி கல்லூரிகள் திறப்பு\nFurther relaxations in curfew; Colleges open on December 7th 30/11/2020 தமிழகத்தில் டிசம்பர் 31-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. ஆனால் மேலும் சில...\nஒப்பில், ஒப்பிலா, ஒப்பில்லாத, ஒப்பிலாத- சொற்களின் விளக்கம்/ சிவகாசி முத்துமணி\nTami Ilakkanam By Sivakasi Muthumani 30/11/2020 ஒப்பில், ஒப்பிலா, ஒப்பில்லாத, ஒப்பிலாத- இச்சொற்கள் யாவும் ஒரே பொருள் குறித்தன. இணையற்ற அல்லது ஈடற்ற ஒப்புமை கூற...\nசகா என்பதன் பொருள் என்ன\n\"என்ன சகல எப்படி இருக்கீங்க\nமாமல்லபுரத்தில் திருடிய சாமி சிலையுடன் 2 பேர் கைது\n2 arrested for stealing Sami idol in Mamallapuram 29/11/2020 மாமல்லபுரத்தில் திருடப்பட்ட பூதேவி சிலையை விற்க முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர். சிலை...\nதமிழகத்தில் இன்று 1,430 பேருக்கு கொரோனா\nCorona for 1,430 people in Tamil Nadu today 29/11/2020 தமிழகத்தில் இன்று 1,430 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது. கொரோனா தமிழகத்தில் கொரோனா நிலவரத்தை...\nமு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை விவரம்\nதூத்துக்குடிக்கு 2 மந்திரிகள்: திருநெல்வேலி, தென்காசி ஏமாற்றம்\nதிருப்பத்தூரில் இறந்த 5 பேர் கொரோனா நோயாளிகள் – மருத்துவ அதிகாரி விளக்கம்\nதுணை தலைவர் விலகல்; கமல் காட்டம்\nதமிழகத்தில் ஒரு நாள் கொரோனா பதிவு 24,898 ஆக உயர்வு\nUma on இராமருக்கு ஓர் அக்காள் உண்டு தெரியுமா\n.. தீராத ஒரு தகராறு….(சொல்லாராய்ச்சி/ சிவகாசி முத்துமணி)\nK.Kumaresan on தென் மாவட்ட மக்கள் வெளியே வர வேண்டாம் ; முதல்வர் எச்சரிக்கை\nPonnu on ஏழைகளுக்கு எட்டிவிடும் மருத்துவப் படிப்பு\nமு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை விவரம்\nதூத்துக்குடிக்கு 2 மந்திரிகள்: திருநெல்வேலி, தென்காசி ஏமாற்றம்\nதிருப்பத்தூரில் இறந்த 5 பேர் கொரோனா நோயாளிகள் – மருத்துவ அதிகாரி விளக்கம்\nதுணை தலைவர் விலகல்; கமல் காட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2014/11/blog-post_28.html", "date_download": "2021-05-07T00:11:01Z", "digest": "sha1:C5SIN4WDF2QPCNV6NKLAEZJZFAWCQNZ7", "length": 35299, "nlines": 254, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: அறுசுவை(சமஸ்) - திருச்சி பெரிய கடைவீதி கையேந்தி பவன் !!", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nஅறுசுவை(சமஸ்) - திருச்சி பெரிய கடைவீதி கையேந்தி பவன் \nதிருச்சி.... நான் பிறந்து வளர்ந்த ஊர், அந்த ஊரில் இருக்கும் ஒவ்வொரு இடமும் எனக்கு அத்துப்படி என்று செருக்கோடு அலைந்த என்னை, திரு.சமஸ் அவர்கள் இந்த பெரிய கடைவீதி கையேந்தி பவன் மூலம் இந்த ஊர் நிறைய அதிசயங்களையும், ஆச்சர்யத்தையும் கொண்டு உள்ளது என்று தலையை தட்டி சொல்லி இருக்கிறது எனலாம் கையேந்தி பவன், திருச்சியில் மாணவனாக திரிந்தபோது கைக்கு கிடைக்கும் காசில் இங்குதான் சாப்பிட முடியும், இதனால் இந்த கடைகள் மீது பெரும் காதலே உண்டு. காலேஜ் படிக்கும்போது கும்பலாய் போய் காலியாக இருக்கும் கையேந்தி பவனில் உட்கார்ந்துக்கொண்டு மாஸ்டரை ஆள் ஆளுக்கு ஒரு அயிட்டம் சொல்லி தலையை கிறுகிறுக்க வைப்போம் \nமெயின்கார்ட்கேட்........ இந்த இடம்தான் திருச்சியின் மிக பெரிய ஷாப்பிங் தெரு, ஒரு குட்டி சென்னை ரெங்கநாதன் தெரு எனலாம், இதன் பக்கத்தில் இருக்கும் ஸ்கூல் ஒன்றில்தான் நான் ஆறாம் வகுப்பில் இருந்து படித்து வந்தேன் என்பதால் இந்த இடத்தின் சந்து பொந்து எல்லாம் அத்துப்படி. இங்கு இருக்கும் பெரிய கடை வீதி என்பது மலைகோட்டையில் இருந்து காந்தி மார்க்கெட் வரை இருக்கும், இங்கு பகல் நேரத்தில் எதிலும், யார் மீதும் இடித்து கொள்ளாமல் செல்வது என்பது மிகவும் கடினம் இங்கு இருக்கும் கடைகளில் வேலை செய்பவர்கள் மட்டுமே ஆயிரக்கணக்கில் இருப்பார்கள், இங்கு கடைகள் சுமார் பத்து மணிக்கு அடைக்கப்படும். வேலை முடிந்து பசியோடு இருப்பவர்களுக்கு அன்னலட்சுமிதான் இந்த கையேந்தி பவன்கள் இங்கு இருக்கும் கடைகளில் வேலை செய்பவர்கள் மட்டுமே ஆயிரக்கணக்கில் இருப்பார்கள், இங்கு கடைகள் சுமார் பத்து மணிக்கு அடைக்கப்படும். வேலை முடிந்து பசியோடு இருப்பவர்களுக்கு அன்னலட்சுமிதான் இந்த கையேந்தி பவன்கள் இரவில் இந்த இடத்தை பார்ப்பவர்கள், பகலில் இங்கேயா நடந்தோம் என்று ஆச்சர்யபடுவது உறுதி, அத்தன��� அமைதியாக இருக்கிறது \nநான் இந்த முறை சென்று இருந்தபோது, இந்த முறை இங்குதான் சாப்பிடவேண்டும் என்று சுமார் பத்து மணி வரை காத்திருந்தேன். மலைகோட்டை பக்கத்தில் இறக்கிவிட்டவுடன் கையில் பட்ட முதல் கையேந்தி பவனில் இருந்து சுட சுட வெண்ணிறத்தில் இட்லி ஆவி பறக்க எடுத்துக்கொண்டு இருந்தனர், அவர்க்கு ஒரு ஊத்தப்பம், இவருக்கு ஒரு பொடி தோசை என்று கத்தி கொண்டு இருக்க எனக்கு இருந்த பசியில் அந்த இட்லி அண்டானை தூக்கி கொண்டு ஓடி விடலாமா என்று தோன்றியது. சமஸ் அவர்கள் இந்த பெரிய கடை வீதியில் ஏகப்பட்ட விதமான உணவுகள் இருப்பதாக சொல்லி இருந்ததால், ஒரே கடையில் வயிற்றை ரொப்ப கூடாது என்று மனதில் முடிவு எடுத்து இருந்தேன்..... நாங்கெல்லாம் யாரு, திருப்பதி லட்டையே சிறிசா இருக்குதுன்னு சொல்றவைங்க இல்ல :-)\nகொஞ்சம் காலாற நடப்போம் என்று அந்த கடையை தாண்டி நடக்க வலது புறம் கட்டு சாதம் இருந்தது, இன்னொரு இடத்தில் பானி பூரி கடை, அடுத்து வந்தது பல பல இட்லி கடைகளும் அங்கு சூடாக ஆவி பறக்க போடப்பட்ட தோசைகளும், சிறிது தூரத்தில் குஸ்கா போடு என்று குரல், அதையும் தாண்டி நடக்க நாட்டு கோழியும் பரோட்டாவும் இருக்கு வாங்க என்றனர், அதையும் தாண்டி இன்னும் வேற ஏதாவது இருக்கா என்று தேடி நடக்க என்னை தூரத்தில் இருந்தே கவனித்து வந்த வாழைபழ வண்டி வியாபாரி, சார் சாப்பிட்டு செரிக்காம நடக்கரீன்களா வாங்க நம்ம கடையில் ஒரு பழம் வாங்கி சாப்பிடுங்க எல்லாம் செரிச்சிடும் என்று கடுப்பேற்றினார், ஏற்க்கனவே இன்னும் தள்ளி போய் சாப்பிடலாம் என்று தள்ளி தள்ளி வந்து சிறு குடலை பெரும் குடல் மசாலா போட்டு தின்று கொண்டு இருந்தது, இதற்க்கு மேலும் பொறுத்தால் அவ்வளவுதான் என்று யோசிக்க ஒரு வண்டியில் இருந்து சார், வாங்க சூடா இட்லி இருக்கு என்று சொல்ல....... ரெண்டு இட்லி என்று சொல்ல, அவரோ ஒரு தட்டில் எடுத்து போட்டு என்னிடம் நீட்டி விட்டு, சட்னியை ஒரு கரண்டியில் எடுத்து திரும்பி பார்க்க, அங்கே வெறும் தட்டு மட்டுமே இருந்தது..... பின்னே, சட்னி வரும் வரைக்கும் யாரு வெயிட் பண்றது, வேலையை பாருங்க பாசு \nஅடுத்து ரெண்டு இட்லிக்கு சட்னியோடு சாப்பிட்டு விட்டு, அடுத்து என்ன சொல்வது என்று யோசிக்கும் கணத்தில், தோசை கல்லில் நெய் தோசை, ஆனியன் தோசை, தக்காளி தோசை, பொடி தோசை, அடை, ஊத்தப்பம் என்று ஓடி கொண்டு இருக்க ஒரு சாதா தோசை சொல்லிவிட்டு இந்த முறை சட்னியோடு தின்றேன் ஒரு சில பெரிய ஹோட்டல்களுக்கு சென்றால் தோசையை உஜாலா கொண்டு வெளுத்தது போன்று கொடுப்பார்கள், அவர்களுடன் அண்ணே மறந்து போய் வெள்ளை இட்லியை கொஞ்சம் பெரிசா நைசா போட்டு கொண்டு வந்துட்டீங்க, நான் தோசைதான் சொன்னேன் என்று சொல்லி தோசையை அந்த கலரில் வாங்க வேண்டி இருக்கும். இங்கு பெரிய கடை வீதிகளில் தோசையை போடும்போதே இங்கே வாசனை தூக்குகிறது, உதாரணமாக பக்கத்தில் ஒருவர் நெய் தோசை என்று சொல்லிவிட்டு அவருக்கு வந்தபோது நான் சாதா தோசை சாப்பிட்டாலும் மூக்கில் நெய் வாசனை சென்று நெய் தோசை சாப்பிட்ட எபக்ட்...... நாக்கில் ஒரு டேஸ்ட், மூக்கில் ஒரு டேஸ்ட் \nஅடுத்து இன்னொரு இடத்தில் பரோட்டா, கொஞ்சமே கொஞ்சம் குஸ்கா என்றெல்லாம் சாப்பிட்டு விட்டு நிமிர்த்து பார்த்தால், பசியோடு இருந்தபோது கவனிக்க மறந்தது இப்போது பளிச்சென்று தெரிந்தது...... எல்லா கடைகளும் மூடி இருக்க இந்த ஸ்வீட் கடைகள் மட்டுமே அந்த நேரத்தில் திறந்து இருந்தது, கவனித்து பார்த்தால் இந்த கையேந்தி பவனில் சாப்பிட்டு விட்டு கொஞ்சம் ஸ்வீட் வாங்கி மென்று கொண்டு இருக்கிறார்கள்....... நீ ரசிகன்டா, நீ தமிழன்டா அதுக்கப்புறம் பால் சாப்பிடணுமே, எல்லோரது வீட்டிலும் வெறும் வயிற்றோடு ( அதுக்கப்புறம் பால் சாப்பிடணுமே, எல்லோரது வீட்டிலும் வெறும் வயிற்றோடு () படுக்க கூடாது என்று சிறு வயதில் இருந்து சொல்லி இருப்பதாலும், நைட் பால் சாப்பிட்டு படுத்தால்தான் வெள்ளையாவோம் என்று சொல்லி வைத்ததாலும் (என்ன, உங்க வீட்டில் அப்படி சொல்லலையா....... குழந்தை பாஸ் நீங்க ) படுக்க கூடாது என்று சிறு வயதில் இருந்து சொல்லி இருப்பதாலும், நைட் பால் சாப்பிட்டு படுத்தால்தான் வெள்ளையாவோம் என்று சொல்லி வைத்ததாலும் (என்ன, உங்க வீட்டில் அப்படி சொல்லலையா....... குழந்தை பாஸ் நீங்க ) அடுத்து செல்வது பால் சாப்பிட, அங்கு ஏற்கனவே சாப்பிட்டு மூளை உறங்கி கொண்டு இருக்கும்போது என்ன பால் வேணும்...... மிளகு பால், மஞ்சள் பால், கற்கண்டு பால், கருப்பட்டி பால், ஆடையோடு பால், ஆடை இல்லாமல் பால், பாதாம் பால், பிஸ்தா பால் என்று ஒரு வளர்ந்த குழந்தையை குழப்புகின்றனர். ஒரு பாதாம் பால் என்று நான் எதிரில் இருந்த ஒரு கடையில் சொன்னேன்....... ஒரு ���ம்பளரில் மஞ்சளான பாலை ஊற்றி, அதன் மேலே பாதாம் ஆடையை கொஞ்சம் போட்டு, மேலே முந்திரி, பாதாம் தூவி, அதன் மேலே கொஞ்சம் சக்கரை போட்டு சாப்பிட..... இப்போ புரியுது, எங்க அம்மா ஏன் எப்போதும் தூங்க போகும் முன் பால் சாப்பிட சொன்னாங்கன்னு \nஎல்லாம் முடிந்து இந்த முறை நடக்க முடியாமல் நடந்து செல்ல, அதே பழ வண்டிக்காரர் மீண்டும் கூப்பிட அவரது வியாபாரத்தை கெடுக்க மனம் இல்லாமல்..... அப்புறம், என்ன பழம் இருக்கு என்று கேட்க, அவரோ ரஸ்தாளி, பூவன், எலக்கி, பச்சை, மலை, நாட்டு பழம் என்று அடுக்க, இந்த திருச்சிகாரங்க எவ்வளவு ரசனையா சாப்பிடறாங்க பாரேன் என்று தோன்றுவதை தவிர்க்க முடியாமல், இருப்பதிலேயே சின்ன பழம் ஒன்றை வாங்கி சாப்பிட்டு விட்டு அடுத்து உருண்டு போவதா, நடந்து போவதா என்று குழப்பத்துடன் யோசித்து கொண்டு இருக்கும்போது ஒரு குரல் கேட்க்கிறது....... சார், முந்திரி கேக், குல்பி ஐஸ் இருக்கு சாப்பிடறீங்களா.......... டேய், வேண்டாம்டா.... அழுதுடுவேன் \nநான் திருச்சியில் இது வரை சாப்பிட்டதே இல்லை. இரண்டு முறை வந்து இரண்டு முறையும் திருமண நிகழ்ச்சிக்கு வந்ததால் இந்த வாய்ப்பே ஏற்படவில்லை\nந்தத் தடவை ஸ்ரீரங்கம் சென்ற போது மெயின் கார்ட் கேட்டைக் கண்டுக்காம வந்ததுக்குப் பெரிய தண்டனையாக இந்தப் பதிவைப் படிதேன். இந்த வயதில் ஒத்துக்குமா தெரியாது .நீங்க சாப்பிட்டது எனக்குத் திருப்தி.அசத்தலான பதிவு.\nஅருமை சுரேஷ் , திருச்சி போகும்போது ஒரு புடி புடிச்சுர வேண்டியது தான் ....\nஅருமையான மற்றும் கோர்வையான பதிவு. அந்த பாதம் பால்காரர் வண்டியில் Half Milk என்பதற்கு பதில் Off Milk என்று எழுதி இருப்பார், நாங்களும் சுத்துவோம்ல திருச்சியை ஒரு தினசரி வாழ்க்கை நடைமுறையை இவ்வளவு அழகாக எழுதுவதற்கு உங்களிடம் நிறைய கற்று கொள்ள வேண்டும்\nஅடுத்த முறை திருச்சி செல்லும்பொழுது\nதிருச்சியிலே நிறைய விஷயம் இருக்கு போலிருக்கே ஒரு வாரம் டூர் போட்டுட வேண்டியதுதான் ஒரு வாரம் டூர் போட்டுட வேண்டியதுதான் மலைக்கோட்டை பக்கம் வந்தாலும் இந்த கடைவீதிக்கு சென்றேனா என்ற நினைவில்லை\nவணக்கம். நான் சில வாரங்களாக உங்களது பதிவுகளை படித்து வருகிறேன். எளிமையான நடையில் எழுதுகிறீர்கள். பின்னூட்டம் இட்டது இல்லை. மஸ்கோத் அல்வா பற்றி படிக்கும் போதே எழுதணும் என்று இருந்தேன். பின்பு ஸ்ரீரங்கம் பிளாட்பாரம் இட்லி படித்து விட்டு எழுதலாம் என்று இருந்தேன். இப்பொழுது திருச்சி மெயின்கர்ட் கேட் பதிவை படித்து விட்டு எழுதியே ஆகா வேண்டும் என எழுதி விட்டேன் .( திருச்சி பக்கம் தான் எனது சொந்த ஊர். திருச்சி எனக்கு மிகவும் பிடித்த ஊர். ஊர் பாசம் அடக்க முடியாமல் எழுத துவங்கினேன்.) அந்த மெயின்கர்ட் கேட் பகுதியை ஆள் ஆரவாரம் இல்லாமல் உங்களது போட்டோ வில் தான் பார்கிறேன். அப்படியே பகலில் எப்படி இருக்கும் என ஒரு போட்டோ போட்டு இருந்தால் அருமையாக இருந்து இருக்கும்.\"\nஇருப்பதிலேயே சின்ன பழம் ஒன்றை வாங்கி சாப்பிட்டு விட்டு அடுத்து உருண்டு போவதா, நடந்து போவதா என்று குழப்பத்துடன் யோசித்து கொண்டு இருக்கும்போது\" இதனை படித்து விட்டு சிரிப்பை அடக்க முடியவில்லை.\nஅப்படியே கொஞ்சம் பக்கத்துல மைக்கெல்சன் ஐஸ் கிரீம் கடை போட்போயி கொஞ்சம் சாப்பிட்டு அதையும் சேர்த்து பதிவிட்டுருக்கலாம். thanks for reminding my trichy memories.\nஅருமையான பதிவு. பலமுறை இந்த பெரியகடை வீதியில் சுற்றியிருந்தாலும், ஏனோ இரவு நேரங்களில் இங்கே போனதில்லை. அடுத்த திருச்சி பயணத்தின் போது சென்றுவிட வேண்டியது தான்.....\nசுவையான முறுகலான மினி அடையை மறந்திட்டிங்களே அண்ணாத்தே......................\nமாதத்தில் இரண்டு முறை திருச்சி பயணம் கண்டிப்பாக இருக்கும்.இந்த முறை கண்டிப்பாக ஒருநாளாவது இரவு தங்கி பெரியகடைவீதி கையேந்திபவன்களை ஒரு கை பார்த்துவிடவேண்டியதுதான்.\nதங்கள் பதிவுகள் அனைத்தும் மிக அருமை. இன்னும் திருச்சியில் பல உணவுகள் இருக்குது. திருச்சி ஜங்சன் அருகில் ராஜா அசைவ உணவகம் இருக்குது. அதில் பிரியாணி நல்ல சுவையாக இருக்கும். மேலும் உறையூரில் உளுத்தங்கஞ்சி மிக மிக சுவையாக இருக்கும். இப்போது கிடைக்கிறதா என தெரியவில்லை. தொடரட்டும் உங்கள் பணி\nநன்றாகவே ருசித்து சொன்னீர்கள். நானும் ரசித்து படித்தேன். நான் மாணவனாக இருந்த காலத்தில் சினிமா தியேட்டர்களில் இரவுக் காட்சி முடிய ஒருமணி ஆகிவிடும். படம் பார்த்துவிட்டு திரும்பும்போது பெரியகடைவீதி வழியாகத்தான் திரும்புவோம். வழியெல்லாம் டிபன் கடைகள். அப்போது மூங்கில் குழாயில் செய்யப்பட்ட அரிசி புட்டு வியாபாரம் சுடச்சுட நெய்யுடன் நடக்கும்.\nவணக்கம். சாரதாஸ் பக்கத்தில ஒரு கையேந்தி பவன் ( ஸ்ரீ ரங்கம் மாமாஸ் குரூப்) உண��டு. இப்ப இருக்கானு தெரியல. நீங்க அதை பத்தி ஒன்னும் எழுதலையே.\nதிருச்சி பெரியகடை வீதில ஸ்ரீரங்கத்துகாரர் ஒருத்தர் விதவிதமா சாதம் செய்து கொண்டு வருவார். மாங்கா சாதம், கல்கண்டு சாதம், கருவேப்பிலை சாதம், சாம்பார் சாதம் தேங்கா சாதம், தக்காளி சாதம் அப்படின்னு தள்ளுவண்டில கொண்டுவருவார். நான் திருச்சி ல காமாட்சி பிரிண்டர்ஸ் ல வேலை பாக்கும் போது நானும் ஓனரும் பெரிய கடை வீதி வந்து சாப்பிடுவோம். நன்றி பழைய ஞாபகங்களை நினைவூட்டியதற்கு\nகஷ்டப்பட்டு உடல் எடையை குறைக்க படாத பாடுப்பட்டு சாப்பாட்டை குறைத்து ஒருவழியா ஒல்லியா இந்தியா வந்தால்... இப்படி நாக்கு எச்சிலூறும்படி பதிவும் போட்டோவும் போட்டு கலாட்டா பண்ணிக்கிட்டு இருக்கீங்க. இந்த ரீதியில் சாப்பிட்டு மீண்டும் 8 கிலோ வெயிட் கூடி தான் ஊருக்கு திரும்ப வேண்டி இருக்கு. அந்த அளவுக்கு ரசனையா எழுதி இருக்கீங்கப்பா... இட்லிக்கு சட்னி வரும் வரை வெயிட் பண்ணாம கபளீகரம் பண்ணிட்டு வாழைப்பழக்காரரை சங்கடப்படுத்தாம இருப்பதிலேயே சின்ன வாழைப்பழம் வாங்கி சாப்பிட்டு, நிஜமா சொல்லுங்க சாப்பிட வயிற்றில் இடம் இருந்ததா என்ன :) அதுக்கப்புறம் முந்திரி கேக், குல்ஃபி ஐஸ்... நல்லவேளை அதையும் சாப்பிட்டிருந்தா கண்டிப்பா நடந்து இல்ல உருண்டு தான் வீட்டுக்கு போய் சேர்ந்திருக்கவேண்டும் :) அருமையான பகிர்வு சார்.. நானும் கொஞ்ச நாளா உங்க பதிவுகளை வாசித்துக்கொண்டு இருக்கிறேன். பிரமாதமா எழுதறீங்க... தொடருங்க. அன்பு வாழ்த்துகள் \nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - கரூர் திரைசீலை (பகுதி - 1)\nகரூர் என்றாலே கொசுவலை என்பது அனைவருக்கும் நினைவுக்கு வரும், இன்று கால ஓட்டத்தில் அது திரைசீலைக்கும் பிரபலம் என்று உங்களுக்கு தெரியுமா \nஊர் ஸ்பெஷல் - தஞ்சாவூர் வீணை\nஇசையை பற்றி எந்த ஞானமும் கிடையாது எனக்கு, நல்ல இசை என்றால் உடம்பு தானாகவே தாளம் போடும், அவ்வளவுதான் . இந்த ஊர் ஸ்பெஷல் பகுதிக்காக ஒவ்வொரு...\nஅறுசுவை (சமஸ்) - புத்தூர் அசைவ சாப்பாடு\nசமஸ் எழுதிய புத்தகத்தை படித்துவிட்டு ஒரு சாப்பாடு சாபிடுவதற்கு என்றே ஒரு பயணம் மேற்கொண்டோம். முதலில் திண்டுக்கல்லில் இருந்து புறப்பட்டு தி...\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nகடல்பயணங்கள் தளம் மீண்டும் ஆரம்பம் ஆகின்றது என்று பதிவு போட்டபோதே பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தவண்ணம் இருக்கிறீர்கள், மிக்க நன்றி \nஅறுசுவை - நவீன டீ கடை \nவேலை நேரத்திலோ, நண்பர்களுடனோ, தனியாக செல்லும்போதோ ஏதாவது சாப்பிடனும் அப்படின்னு தோணிச்சினா, நம்ம வண்டிய நிறுத்துறது ஒரு டீ கடையின் முன்னேத...\nஅறுசுவை(சமஸ்) - திருச்சி பெரிய கடைவீதி கையேந்தி பவ...\nஅறுசுவை - அற்புதமான, அதிசுவையான பன் உணவகம் \nஊர் ஸ்பெஷல் - நாகூர் தர்கா \nமறக்க முடியா பயணம் - மணிமுத்தாறு அருவி \nஊர் ஸ்பெஷல் - முதலூர் மஸ்கோத் அல்வா \nஅறுசுவை - நவீன டீ கடை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2018/07/blog-post_54.html", "date_download": "2021-05-07T01:14:45Z", "digest": "sha1:GPQMSC7TRHM6GX4LLI4OYIP7YXLKBZOC", "length": 14760, "nlines": 250, "source_domain": "www.ttamil.com", "title": "விக்ரம் - கமல் கூட்டணியில் உருவாகும் படம் ~ Theebam.com", "raw_content": "\nவிக்ரம் - கமல் கூட்டணியில் உருவாகும் படம்\nராஜேஷ் எம்.செல்வா தூங்காவனம் படத்திற்கு பிறகு கமல்ஹாசன் தயாரிப்பில் விக்ரம்- அக்‌ஷ்ரா ஹாசன் நடிக்கும் புதிய படத்தை இயக்குகிறார். இந்த படம் குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.\nகடந்த 2015ம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த தூங்காவனம் படத்தை இயக்கியவர் ராஜேஷ் எம்.செல்வா. இவர் கம்ல்ஹாசனிடம் இணை இயக்குனராக பணியாற்றியவர்.\nஇவர் தற்போது கமல்ஹாசன் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸுக்கு ஒரு படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் விக்ரம் மற்றும் அக்‌ஷ்ரா ஹாசன் இணைந்து நடிக்கின்றனர். இப்படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரான் படம் குறித்த முக்கிய அப்டேட்டை தற்போது வெளியிட்டுள்ளார். அதில், இப்படத்திற்காக இசையமைப்பு பணி தொடங்கிவிட்டதாக கூறியுள்ளார்.\nவிக்ரம் தற்போது ஹரி இயக்கத்தில் சாமி ஸ்கோயர் படத்திலும், கெளதம் மேனன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம் படத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ���் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஅடக்க முடியாத கோபத்தை எப்படி சமாளிப்பது\nதினமும் குளிக்கும் போது நீங்கள் செய்யும் தவறுகள்\nசெந்தமிழ் படிப்போம் [ பகுதி - 7 ]\nகடவுள் ஏன் கண்களுக்குப் புலப்படுபவர் இல்லை\nகனவு [காலையடி, அகிலன் ]\nஉலகில் முதன் முதலில் உருவாகி திரைப்படட திரைப்படம்\nநம் குடலை சுத்தப்படுத்தும் உணவுகள்\nசெந்தமிழ் படிப்போம் . [பகுதி – 6]\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் ''ஊட்டி'' போலாகுமா\nகவி த்துளிகள் [காலையடி அகிலன்]\nபெண் எப்பொழுது தேவதையாகிறாள் - பகுதி 3\nபெண் எப்பொழுது தேவதையாகிறாள்:பகுதி 02\nசெந்தமிழ் படிப்போம்.. [பகுதி – 5]\nபெண் எப்போ தேவதை ஆகிறாள்\nவிக்ரம் - கமல் கூட்டணியில் உருவாகும் படம்\nசமூக வலைத் தளங்களை சரியாகப் பயன்படுத்து கிறோமா\nசாப்பிட்ட உடனே என்ன என்ன செய்யகூடாது \nசெந்தமிழ் படிப்போம்.. [பகுதி - 4]\nஜெயம் ரவியின் புதிய படங்கள்\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nதுவரம் பருப்புகளை சாப்பிடுவதால் தீரும் நோய்கள் என்ன தெரியுமா\nஉலகெங்கிலும் ஏராளமான பருப்பு வகை பயிர்கள் மனிதர்கள் உண்பதற்காக பயிரிடப்பட்டு வளர்க்கப்படுகின்றன. இந்தப் பருப்புகள் அனைத்துமே நமது உடல...\n🗺→ இன்றைய செய்திகள்- Tamil News Today\n💢💢💢💢💢💢💢 💢💢💢💢💢💢💢 முதலில் தலைப்பு செய்திகள்- 🎌மத்தள சர்வதேச விமான நிலையம் ,சுற்றுலா மையமாக மாறுகிறது 🎌...\nமனைவியை மீட்க மன்றாடிய கடவுள்\nஇராவணன் என்ற தீயவனிடமிருந்து தனது மனைவியை மீட்க அனைத்து ஆற்றலும் கைவரப்பெற்ற மனிதக் கடவுள் இராமன், ஹனுமான் என்ற குரங்குக்கடவுளிடம் கை...\nநடிகர் பிரஷாந்த் திரையில் காணாமல் போனதற்கு காரணம் என்ன\nநடிகர் பிரஷாந்த் தன் சக கால நடிகர்களான விஜய் , அஜித்தை விட தனி திறமைகள் அதிகம் கொண்டிருந்தும் , வேறு யாருக்கும் வாய்க்காத மி...\nவாழ்க்கைப் பயணத்தில் ...வருடல்கள் /பகுதி:04\nகதையாக..... [ஆரம்பத்திலிருந்து வாசிக்க கீழே செல்லுங்கள்] 👉 [பகுதி: 04] 👉 வருடங்கள் பல எப்படி ஓடியது என்று தெரியவில்லை. அதற்குள் என் குடும...\nசங்க கால இலக்கிய காதலர்கள்: ஆதிமந்தி-ஆட்டனத்தி\"-[ஆக்கம்:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]\nஉலகப் புகழ் பெற்ற காதலர்கள் ரோமியோ-ஜூலியட், சகுந்தலை-துஷ்யந்தன், லைலா-மஜ்னூன், மும்தாஜ்-ஷாஜஹான், கிளியோபட்ரா-மார்க்ஆண்டனி, அம்பிகாபதி-அ...\nகண்ணதாசன்-ஒரு கவிப்பேரரசு வரலாறு [இன்று நினைவுதினம்]\nகண்ணதாசன் ( ஜூன் 24 1927 – அக்டோபர் 17 1981 ) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார் . நான்காயிர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=1508", "date_download": "2021-05-07T01:44:10Z", "digest": "sha1:U3MLGHWFRMKBPZYQMCPGXPWS753LBSWF", "length": 42841, "nlines": 91, "source_domain": "www.varalaaru.com", "title": "Varalaaru - A Portal For South Asian History Varalaaru - A Monthly Web Magazine for South Asian History", "raw_content": "\nகயிலைப் பயணம் - 4\nபாலகுமாரன் என்ற கிருஷ்ணன் இராமன்\nஇதழ் எண். 142 > கலைக்கோவன் பக்கம்\nகயிலைப் பயணம் - 4\nஇறைவனின் முன்னால் தேவருலக மங்கையர் இருவர் அவிநயித்து ஆடுகின்றனர். பூச்சரங்களாலும் பல்வேறு அணி கலன்களாலும் அலங்கரிக்கப்பட்டுள்ள தமிழம் கொண்டை கள் அவர்தம் கூந்தல் வளம் காட்ட, கழுத்தில் முத்துமாலைகள். முதலாமவர் தலைமுடியே தெரியாவண்ணம் நகை நிறைத்திருந் தாலும் இரண்டாமவர் அது போலல்லாது முடியழகும் காட்டுகிறார். அழகான, அளவான மார்பகங்களை ஸ்வர்ண வைகாக்ஷம் தன் பிடியில் இருத்த முயன்றாலும் ஆடலின் அமைப்பும் கைகளின் அசைவும் பிடிகொடுக்காமையை ஓவியம் உள்ளங்கைக் கனியாய்க் காட்டுகிறது. கைகளின் மேற்பகுதியில் கங்கணம். முழங்கையருகே முத்தாலான கடக வளைகள். மணிக்கட்டருகே அடுக்கிய வளைகள். செவிகளில் குண்டலங்கள். இடை ஆடைமீது அரைப்பட்டிகை, மேகலை, குறங்குசெறி. கணுக்காலருகே சதங்கை, தாள்செறி.\nமண்டல நிலையில் கால்களை ஸ்வஸ்திகமாக்கி, இறைப் பார்வையாய் அவிநயித்து ஆடும் அவர்தம் மடக்கி உயர்த்திய வலக்கைகளும் மடக்கித் தாழ நெகிழ்த்திய இடக்கைகளும் அல பத்மம் காட்டுகின்றன. ஸ்வஸ்திகப் பாதங்களுள் வலப்பாதம் பார்சுவமாக, இடப்பாதம் அக்ரதலசஞ்சாரத்தில் உள்ளது. இருவருமே உதரபந்தம் அணிந்துள்ளனர். இளமைத் தோற்ற மும் மலர்ந்த விழிகளும் இளநகை பூத்த இளகிய இதழ்களும் அவர்தம் ஆடலுக்கு மேலும் எழில் கூட்டுமாறு அமைந்துள்ளன.\nஆடுவார் கீழே, அவர்தம் இடப்புறத்தே, இந்த அவிநயக் கூத்திற்குத் தோலிசை தருமாறு இரண்டு பூதங்கள் நிற்கின்றன. அடுத்தடுத்து நிற்கும் அவ்விரண்டனுள், வலப்பூதம் ��லையை வலப்புறம் சாய்த்துப் பார்வையையும் கடைக்கண் நோக்காய் வலப்புறம் வீழ்த்த, விரிசடையுடனுள்ள இடப்பூதம் தலை நிமிர்த்தித் தன் தோளிலிருந்து தொங்கும் இடக்கை எனும் இசைக்கருவியை ஆவேசமாக வலக்கையால் முழக்குகிறது. அதன் இடதுகை இசைக்கருவியின் கயிற்றுப் பின்னலைப் பிடித்துள்ளது. வலப்பூதத்தின் தோளிலிருந்து தொங்கும் இரு முக முழவு அளவில் பெரியதாய் நடுவில் பருத்து, இரு ஓரத்தும் சிறுத்துள்ளது. அதைத் தன் இருகைகளால் முழக்கும் பூதம் நெற்றிப்பட்டத்தால் இறுக்கப்பட்டிருக்கும் தலைப்பாகையும் பனையோலைக் குண்டலங்களும் கண்டிகையும் கங்கணமும் மார்பில் சட்டையும் இடுப்பில் சிற்றாடையும் இடைக்கட்டும் கொண்டுள்ளது. இடைக்கட்டின் முடிச்சுகள் இடப்புறம் காட்டப்பட்டுள்ளன. இரு பூதங்களுமே நெறித்த புருவங்களும் விழித்த நோக்கும் கொண்டுள்ளன.\nஅவற்றின் வலப்புறத்தே, சுந்தரரும் சேரமான்பெருமாளும் கூப்பிய கைகளுடன் இறைஇணையை நோக்கியவாறு அமர்ந் துள்ளனர். சுந்தரர் கால்களைக் குறுக்கீடு செய்து அமர்ந்துள் ளார். இடையில் சிற்றாடை. அவருடைய தமிழம் கொண்டை யில் பூச்சரங்கள்; அணிகலன்கள். இளந்தாடியும் மீசையுமாய்க் காணப்படும் அவர் கழுத்தில் சரப்பளி, முத்தாரம். கைகளில் வளைகள். சுந்தரரின் பின்னால் செண்டுதாளங்களை ஏந்தி, இரு கால்களையும் முழங்கலளவில் மடக்கி நீட்டியவாறு அமர்ந் திருக்கும் சேரமான் பெருமாளும் சிற்றாடையே அணிந்துள்ளார். அவரது தமிழம் கொண்டையிலும் பூச்சரங்கள், அணிகலன் கள். கழுத்தில் ருத்திராக்க, முத்துமாலைகள்.\nஇவர்களின் பின் குடமுழவு வாசிக்கும் நந்தீசன். பெரு முத்துக்களும் மணிக்கற்களும் தைக்கப்பெற்ற விலங்குமுகக் கைப்பிடி கொண்ட அலங்கார விரிப்பின் மேல் இரு கால்களை யும் குறுக்கீடு செய்து அமர்ந்துள்ள அவர் கால்களுக்கிடையில் செவ்வண்ணத்தில் குடமுழவு. கங்கணம், வளைகள், மோதிரங் கள் அணிந்துள்ள அவரது நான்கு கைகளுள் முன்னிரு கைகள் முழவு வாசிப்பில் முனைந்திருக்கப் பின்னிரு கைகள் போற்றியி லும் வியப்பிலும் உயர்ந்துள்ளன. நெற்றிப்பட்ட முகப்புகள் சூழ்ச் சடைமகுடராய்த் திகழும் அவரது அகன்ற முகத்தில் பரவசம். வாய்க்கடையில் கோரைப்பற்கள் இருந்தபோதும் இதழ்களில் அச்சுறுத்தாத இளநகை. விழிகள் நன்கு விரிந்து இசையை அநுப��ிக்க, கடைக்கண் பார்வை சிந்தும் அவர் கழுத்தில் சரப்பளி. மகுடம் மீறித் தோள்களில் பரவியுள்ள சடைக்கற்றைகளில் பூக்கள். தோள்களில் ஸ்கந்தமாலை. முப்புரிநூல் பாம்பு போல் வளைந்து நெளிந்து இறங்கி வலப் புறம் ஏறுகிறது. கழுத்திலிருந்து மார்பளவில் காட்டப்பட் டிருக்கும் செவ்வண்ணப்பூச்சு கைகளின் மேற்பகுதிகளையும் தழுவியிருப்பதால், அதைச் சட்டையாகக் கொள்ளலாம்.\nஅவருக்குப் பின்னால் கீழ்ப்பகுதியில் நான்கு பூதங்களும் மேற்பகுதியில் வாணனும் வேடர் கண்ணப்பரும் உள்ளனர். இடுப்புவரை தெரியும் நீள்வெறுஞ் செவியரான வாணனின் இருகைகளும் உயர்ந்து பூத்தூவல் மெய்ப்பாட்டில் உள்ளன. கருஞ்சாம்பல் வண்ணத்திலுள்ள வேடரின் இடக்கை இறைவ னைப் போற்ற, வலக்கை தோளில் சாத்தியுள்ள வில்லையும் அம்பையும் பிடித்துள்ளது. வேட்டையில் பெற்ற பறவையை யும் விலங்கையும் கயிற்றால் பிணைத்துத் தோள்களில் தொங்க விட்டவராய்ப் பனையோலைக் குண்டலங்கள், பதக்கம் வைத்த ஆரம், வளைகளுடன் தாடியும் மீசையுமாய்க் காட்சிதரும் அவரது இடுப்பில் சிவப்பு வண்ண ஆடை. கருத்த தலைமுடி யைச் சுற்றிப் பொன்னிறப் பட்டை முடியப்பட்டுள்ளது. இடுப்பில் கத்தி.\nஇசைக்கலைஞர்களாயுள்ள பூதங்கள் நான்கனுள் மூன்று ஒன்றன் பின் ஒன்றாய் நிற்க, நான்காவது, முதலிரண்டின் பின் புல்லாங்குழல் இசைத்தவாறு முகம் காட்டுகிறது. படியச் சீவப்பட்ட தலைமுடியும் முகத்தை வலப்புறம் சாய்த்து இடப்புறம் ஓட்டிய கடைக்கண் பார்வையுமாய்க் கைகள் குழல் துளைகளில் நர்த்தனமிடக் காட்சிதரும் அதன் நீள்செவிகள் வெறுமையாக அமைய, கைகளில் வளைகள்.\nகீழுள்ளவற்றில், சங்கூதும் முதற்பூதத்தின் சீவப்பட்ட தலைமுடி முதுகுவரை பரந்துள்ளது. சங்கை இரு கைகளாலும் பிடித்து ஊதும் அதன் கன்னங்கள் செய்முறைக்கேற்ப வீக்க முற்றுள்ளன. பனையோலைக் குண்டலங்கள், மணிச்சரங்கள், கங்கணங்கள், வளைகள், முப்புரிநூல், மேகலை, அரைப்பட் டிகை இருத்தும் சிற்றாடை, இடைக்கட்டு, தண்டை என அலங்கரித்துக் கொண்டுள்ள அதன் பின் சிவப்புச் சட்டையும் கோவணஆடையும் அணிந்துள்ள பூதம் தலையை வலப்புறம் சாய்த்தவாறு நின்றுள்ளது. பனையோலைக் குண்டலங்கள், கங்கணங்கள், வளைகள், கோவணஆடை, சதங்கைகள், சுடர் முடி கொண்டுள்ள அதன் பாதங்கள் பார்சுவமாக உள்ளன. பார்வையில் வியப்பும் சற்றே விரிந்த இதழ்களில் இளநகையும் கொண்டுள்ள அதன் கைகள் இருமுக முழவை இசைக்கின்றன.\nகோவணஆடையுடன் உள்ள மூன்றாவது பூதம், தலையை நன்கு பின்னுக்குச் சாய்த்தவாறு வலக் கடைக்கண் நோக்கில் களி துள்ள இலைத்தாளம் வாசிக்கிறது. பனையோலைக் குண்டலங்கள், சவடி, முப்புரிநூல், வளைகள், தாள்செறி அணிந்துள்ள அதன் தலைமுடி நன்கு சீவப்பட்டுள்ளது.\nமுழவருக்கும் அவர் பின் காணப்படும் அறுவருக்கும் மேலே உள்ள பகுதியில் ஒரு தெற்றியின் மீது ஒருவர் பின் ஒருவராக ஏழு கலைஞர்கள் கால்களைக் குறுக்கீடு செய்து, அமர்ந்துள்ளனர். மூன்றாமவரை அடுத்துத் தலை மட்டுமே தெரியும் நிலையில் ஒருவர் உள்ளார். இவ்வெண்மருள் முதல் ஐவர் ஆடவர். மற்ற மூவரும் பெண்கள். இவர்களுள் நால்வர் இளம்பச்சை வண்ணத்திலும் மூவர் இளமஞ்சள் நிறத்திலும் ஒருவர் சிவப்பு வண்ணத்திலும் காட்டப்பட்டுள்ளனர். ஆண்கள் கோவணஆடையும் பெண்கள் கணுக்கால்வரை யிலான ஆடையும் அணிந்துள்ளனர்.\nஉருத்திராக்கமாலையுடனுள்ள ஆண்களுள் முதலிருவர் கண்டிகையும் கொள்ள, மூன்றாமவர் சவடி பெற்றுள்ளார். ஐந்தாமவர் இரட்டைக் கண்டிகையுடன் காட்சிதருகிறார். முதலிருவர் கைகளில் மட்டுமே வளைகள். முதலாமவர் செண்டுதாளம் இசைக்க, மூன்றாமவர் உடுக்கை வாசிக்கிறார். இரண்டாமவரின் வலக்கை தாளக் கணக்கிலிருக்க, இடக்கை போற்றுகிறது. ஐந்தாமவர் தாழ்த்திய வலக்கையிலும் உயர்த்திய இடக்கையிலும் கொண்டிருக்கும் வளையங்கள் இசைதருவதற் காகலாம்.\nவளைகள் அணிந்துள்ள பெண்கள் மூவருள் முதலிருவர் சரப்பளி கொள்ள, சிவப்புப் பட்டைகளிட்ட இடுப்பாடை அணிந்து இறுதியிலிருப்பவர் சவடி அணிந்துள்ளார். முதலாம வர் தண்டையும் இறுதியிலிருப்பவர் தாள்செறியும் கொள்ள, பின்னிருவர் செண்டுதாளம் வாசிக்கின்றனர். முதற் பெண் ணின் வலக்கை கீழ்நோக்கிய பதாகமாகவும் இடக்கை போற்றும் மெய்ப்பாட்டிலும் உள்ளன. அவரது முதுகு தழுவும் கூந்தல் முடிச்சில் பூச்சரங்கள்.\nமேலும் கீழுமென இரு நிலைகளில் காட்டப்பட்டிருக்கும் கலைஞர்களுக்குப் பின்னால் தேவர்கள் எழுவர் நிற்கின்றனர். அவர்களுக்குத் தலைமையேற்று நான்முகனும் அவரை அடுத் துத் திருமாலும் மூன்றாவதாக அடையாளப்படுத்த முடியாத தேவர் ஒருவரும் நான்காவதாகத் தும்புருவும் நிற்க, அவர்களுக்கு இடைப்பட்டவர்களாய்ச் சற்றே பின்னிருக்குமாறு முகமும் இடையும் கால்களும் தெரியும் நிலையில் தேவேந்திரன், அக்னி, மற்றொரு தேவர் உள்ளனர். சிவபெருமானை வணங்கிய நிலை யில் உள்ள எழுவரும் அலங்கார முப்புரிநூலும் இடையாடை யும் கணுக்கால்வரை நீளும் முடிச்சுத்தொங்கல்கள் பெற்ற இடைக்கட்டும் வளைகளும் தண்டைகளும் பெற்றுள்ளனர்.\nசடைகளை மகுடமாக்கி வெண்தாடியுடன் முதுமைப்பரு வத்தில் காட்சிதரும் நான்முகனின் இடமேற்கையில் குண்டிகை. நெற்றிப்பட்டம், சிறுகுண்டலங்கள், கங்கணம், சரப்பளி அணிந் துள்ள அவரது அரைப்பட்டிகையில் புலிமுகக்கச்சு. நெற்றிப் பட்டம் சூழ்க் கரண்டமகுடமும் முப்புரிநூலும் அணிந்துள்ள சிவந்த மேனியரான இரண்டாமவர் தேவேந்திரனாகலாம். அடுத் துள்ள விஷ்ணு தலைச்சக்கரம் பெற்ற கிரீடமகுடத்துடன் மகர குண்டலங்கள், சற்றே நீளமான ஆரம், முப்புரிநூல், உதரபந்தம் அணிந்து இடப் பின் கையில் சங்கேந்தி நான்முகன் போலவே இளம்பச்சை வண்ணத்தில் காட்சிதருகிறார். அவருக்குப் பின் னிருப்பவராய்த் தீச்சுடர்கள் சூழ்க் கரண்டமகுடத்துடன், சரப் பளி, அரைக்கச்சுப் பெற்று அக்னியும் அவரையடுத்துத் தலைச் சக்கரம் பெற்ற கிரீடமகுடம், சரப்பளி, முப்புரிநூல் அணிந்து இளம்பச்சை வண்ணராய்த் தேவர் ஒருவரும் கரண்டமகுடத் துடன் மஞ்சள் வண்ணராய் மற்றொரு தேவரும் இறைவனை வணங்க, இறுதியில் இருக்கும் வெள்ளை நிறத்தவரான தும்புரு முத்துச்சரப்பளி, முப்புரிநூல் கொண்டு இடையில் பட்டுச் சிற் றாடையுடன் இடக்கணுக்காலில் தண்டையும் பாதங்களில் தாள் செறியும் அணிந்தவராய் சிவபெருமானை தொழுது நிற்கிறார்.\nஇவர்களுக்கு மேலிருக்குமாறு மேகங்களின் பின்னணி யில் இருபத்து மூன்று ஆடவர்களைக் காணமுடிகிறது. இட மிருந்து வலமாக நிற்கும் அவர்களில், இடப்புறமுள்ள வெண் ணிற மேனியர் பதினொருவரும் ஏகாதச ருத்திரர்கள். இரண்டு வரிசைகளில் சிவபெருமானை வணங்கிய கையர்களாய் முன் பின்னாக நிற்கும் அவர்கள் அனைவருமே நெற்றிப்பட்டம் அணைத்த சடைமகுடமும் நெற்றிக்கண்ணும் குண்டலங்களும் முப்புரிநூலும் உதரபந்தமும் இடைக்கட்டுடனான சிற்றாடை யும் கங்கணங்களும் கைவளைகளும் பெற்றுள்ளனர். அவர்க ளுள் சிலர் இடையில் மேற்கட்டாகச் சிறுத்தைப் புலித்தோலும் தலையில் அழகிய இளம்பிறையும் மண்டையோடும் கொள்ள, பலர் சவடியும் சிலர் சரப்பளியும் சிலர் கூடுதலாக ருத்திராக்க, முத்துமாலைகளும் கொண்டுள்ளனர். சில கங்கணங்கள் நாக கங்கணங்களாய்க் கண்களைக் கவர, பதினொருவரில் சிலர் முகங்கள் அற்புத அழகுடன் கருத்தில் நிறைகின்றன. அனைவர் பார்வையும் இறைவனை நோக்கி அமைய, ஒருவர் மட்டும் கனவுலகத்தில் இருப்பவர் போல் பத்திமையில் மேல் நோக்கிச் செருகிய கண்களுடன் காட்சிதருகிறார். ஒருவர் இளநகை சிந்த, மற்றொருவர் இதழ் விரித்தே முறுவலிப்பதைக் காணமுடிகிறது.\nபதினொரு ருத்திரர்களின் பின்னால் செவ்வண்ணத்தி லுள்ள பன்னிரு ஆதித்தர்களும் வணங்கிய கைகளுடன் தீக் கங்குகள் தழுவிய மகுடம், சரப்பளி, முப்புரிநூல், உதரபந்தம், கங்கணங்கள், வளைகள், இடைக்கட்டுடனான சிற்றாடை அணிந்து நிற்க, அவர்களுக்குப் பின்னிருக்குமாறு உள்ள தனிப் பகுதியில் இரண்டு முனிவர்கள் அமர்ந்துள்ளனர். அவர்களுள் பின்னிருக்கும் இளைஞர் முகத்தளவினராய்ச் சடைமகுடத் துடன் காட்சிதர, சடைமகுடமும் வெண்தாடியுமாய் முப்புரி நூலுடன் சம்மணமிட்டு முன்னிருப்பவர் வீணை வாசிக்கிறார். இவரை நாரதராகக் கருதலாம். இவ்விருவர் பின் இடக்கையைப் போற்றியில் அமைத்து வலக்கையை மார்பருகே கொண்டமர்ந் துள்ள இளைஞர் சடைகளைத் தலைப்பாகையென மாறு பட்ட அமைப்பில் முடிந்துள்ளார். அவரது கழுத்தில் சரப்பளி.\nசிவபெருமானுக்குப் பின்னால் மேலுள்ள பகுதியில் மேகங் களுக்கிடையில் மூன்று பெண்கள் இடுப்பளவினராய்க் காணப்படுகின்றனர். இளமஞ்சள் நிறத்தினரான முதற் பெண் கவர்ந்திழுக்கும் முகத்தினராய் நீள்செவிகளில் செவிப்பூக்க ளுடன் அழகிய கருங்கொண்டை முழுவதும் பூச்சரங்கள் மணக்க, பட்டையில்லா மார்புக்கச்சுடன், அணிகள் (கழுத் தணி, கங்கணம், கடகவளை, கைவளைகள்) அனைத்தும் முத்துச் சரங்களால் அமைய முத்தழகியாய்க் காட்சிதருகிறார். இடுப் பில் மேகலையுடன் பட்டாடையும் கைகளில் மலர்ச்சரங்க ளும் கொண்டுள்ள இப்பேரழகியின் கண்கள் காண்பாரைக் காந்தமென ஈர்க்கின்றன. அவர் பின் நிற்கும் செவ்வண்ண மங்கை, தன் தமிழம் கொண்டையைப் பூக்களும் அணிகலன் களும் அழகுசெய்யக் கழுத்தில் சரப்பளியுடன், கங்கணங்கள், வளைகள், பதக்கம் வைத்த அரைக்கச்சு, முத்துச் சரங்களாலான மேகலை, பட்டாடை அணிந்து, இரு கைகளிலும் பூக்களை ஏந்திக் காட்சிதர, அவர் பின்னிருக்குமாறு மிகவும் சி���ைந்த நிலையில் மற்றொரு பெண்ணின் முகத்தைக் காணமுடிகிறது. அவர்களுக்கு முன்னால் காட்டப்பட்டுள்ள மரத்தின் மேற்புறக் கிளைகளில் நான்கு பறவைகள் அமர்ந்துள்ளன.\nஇறைவனும் இறைவியும் வீற்றிருந்து தேவர்களுடனும் கலைஞர்களுடனும் ஆடல் காணும் கயிலைக் காட்சிக்கு மேற்பட்ட நான்காம் பத்தி பெருவாயிலும் ஈரடுக்கு மதிலும் பெற்ற மாளிகை ஒன்றின் படப்பிடிப்பாக அமைந்துள்ளது. சிதைவின் காரணமாக இப்பத்தியின் பெரும்பகுதி அழிந்து விட்டபோதும் மதில் சுவரை அணைத்திருக்கும் அனைத்து உறுப்புகளும் பெற்ற உருளைத் தூண்களையும் அத்தூண் களுக்கு இடைப்பட்டுச் சுவரைத் தழுவியிருக்கும் பல்வேறு விதமான தோரணத்தொங்கல்களையும் சில இடங்களிலேனும் பார்க்கமுடிகிறது. வாயிலை ஒட்டியுள்ள மதில் சுவரின் இரு புறத்தும் அலங்கரிப்புச் சிறப்பாக உள்ளது. இப்பகுதி உபானம், பத்மவரி, உருள்குமுதம் பெற்ற துணைத்தளத்தின் மீது ஒரு பக்கக் கதவு அடைக்கப்பெற்ற நெடும் வாயிலைக் கொண்டுள் ளது. இப்பகுதியின் மேலுள்ள கபோதம் மூன்று நிலைகளில் முன்னிழுக்கப்பட்டுள்ளது. வாயிலின் பின்னுள்ள மாளிகை யின் உப்பரிகை சிதைந்த நிலையிலிருக்க, வாயிலை ஒட்டியுள்ள கபோதத்தின் தலைப்பில் முத்துக்கள் அடுக்கப் பெற்ற வளை வுடனான பெருங்கூட்டைக் காணமுடிகிறது.\nதமிழ்நாட்டுச் சோழர் கோயில்கள் சிலவற்றில் கயிலாயக் காட்சிகளைச் சிற்பங்களாகப் பார்க்கமுடிந்தாலும் தஞ்சாவூர் இராஜராஜீசுவரச் சாந்தார நாழியில் சுந்தரர் வரலாற்றின் உச்சக் காட்சியாக விளைந்திருக்கும் இந்தக் கயிலைக் காட்சி போல் விரிவானதும் கலைஞர்கள், தேவர்கள், அடியவர்கள் எனக் கயிலாயத்தார் அனைவரையும் ஒருங்கிணையக் காட்டுவது மான படிப்பிடிப்பு எந்தக் காலத்தும் எந்த அரசு மரபு சார்ந்தும் தோன்றாமை ஒன்றே இதன் சிறப்பை உணர்த்தப் போதுமான தாகும். இராஜராஜர் கருதியதும் அதைத்தான். அனைத்து விதங்களிலும் தனித்துவம் பெற்று விளங்கிய பெருமகன் என்ப தால் நட்பின் பெருமையை இறைப்பற்றின் விளைபயனைக் காட்ட இந்தக் காட்சியைக் கருவுயிர்த்தார் இராஜராஜர்.\nஇதில் இடம்பெற்றுள்ள சுந்தரர், சேரமான், கண்ணப்பர் எனும் மூன்று பத்திமையாளர்களுமே பங்களிப்பில் பிற அடியவர்களிடமிருந்து தனித்து நிற்பவர்கள். 63 நாயன்மார் களுமே இறைவனைச் சேரும் இதயம��� கொண்டவர்கள், ஈடு இணையற்ற பத்திமையாளர்கள் என்பதை நன்கறிந்திருந்த போதும் அவர்களுள் மூவரை மட்டுமே இங்குக் காட்சிப்படுத்த இராஜராஜர் எண்ணம் கொண்டமைக்குக் காரணம் உண்டு. இறைவன் கண்களில் குருதி கண்ட கண்ணப்பர் அடைந்த துன்பங்களும் அக்குருதி நிறுத்தத் தம் கண்களையே அகழ்ந்து இட்ட அவரது பேரன்பும் இராஜராஜரை உருக்கி, அவர் நெஞ்சில் நிறைந்திருந்தமையால்தான் இராஜராஜீசுவரத்து இராஜராஜன் திருவாயிலின் வடக்குச் சுவர் முழுவதும் கண்ணப்பர் வரலாற்றைச் சிற்பத்தொகுதிகளாக்கிக் காலகாலத் திற்கும் அவரை வாழ வைத்திருக்கிறார் இராஜராஜர். ‘என் அன்புடைத் தோன்றல்’ என்று இறைவனாலேயே விளிக்கப் பெற்று, இடமிருக்கும் உமைக்கு இணையாகத் தம் வலமிருக்கு மாறு இறைவனாலேயே அருகிருக்க அழைக்கப்பெற்ற கண்ணப்பரின் நிகரற்ற இந்த இறையன்பே கயிலாயக் காட்சியிலும் அவருக்கு இடம்பிடித்துத் தந்துள்ளது.\nசேரமானும் சுந்தரரும் தோழமையால் இங்கு இடம்பெற்ற னர் என்றாலும், சுந்தரர் முதன்மை பெற அவர் உருவாக்கிய திருத்தொண்டத்தொகை எனும் அரிய வரலாற்றுத் தொகுப்பே தலையாய காரணம் எனலாம். சுந்தரர் அதை உருவாக்க எத்தகு முயற்சிகளை மேற்கொண்டார் என்பதறியச் சான்றுகளேதும் இல்லையெனினும், அதன் அருமையை, உயர்வை, தனித்து வத்தை அதன் வழி நூல்களான திருத்தொண்டர் திருஅந்தாதி யும் திருத்தொண்டர் புராணமும் தெற்றெனப் புலப்படுத்து கின்றன. இந்தியாவின் வேறெந்த சமயத்திற்கும் கிடைக்காத பெருமைஇது.\nசுந்தரர் வரலாற்றை இராஜராஜீசுவர அகச்சுவரில் இடம் பெறச் செய்ததன் வழி இறைப்பற்று, தோழமை, வரலாற்றுப் பதிவு எனும் மூன்றிலும் தமக்கிருந்த அணுக்கமான ஈடு பாட்டை இராஜராஜர் மிக மென்மையாக அதே சமயம் மிக உறுதியாக வெளிப்படுத்தியிருப்பதாகவே கருதத் தோன்று கிறது. இராஜராஜர் யார் என்ற ஆளுமைக் கேள்வியோடு வரலாற்றுப் பக்கங்களை அணுகுவார்க்கு அவர் எடுப்பித்த கோயிலே விடையிறுக்கும் என்றாலும், அவர் மெய்க்கீர்த்தியும் அவர் காலக் கல்வெட்டுகளும் வடிவம் காட்டும் என்றாலும், இந்த அகச்சுவர் ஓவியங்களும் அவர் பண்பு காட்டி, மாண்பு விளக்கி, அவர் உள்ளத்தில் உயிர்ப்புடன் விளங்கிய நினைவுப் பதிவுகளையும் எண்ண விளைச்சல்களையும் கனவுக் கண்ணோட்டங்களையும் கண்முன் நிறுத்தும் என்பதற்கு வாணன் வந்து வழி தந்த வரலாறே சான்றாகும்.\nஇப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.\nதங்கள் பெயர்/ Your Name\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/06/01/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%AA/", "date_download": "2021-05-07T01:06:22Z", "digest": "sha1:PPN7BL27MHZG464IZ34JRKZK6Z4XLBCF", "length": 8403, "nlines": 126, "source_domain": "makkalosai.com.my", "title": "சிங்கமுத்து மற்றும் மனோபாலாவுக்கு எதிராக நடிகர் சங்கத்தில் வடிவேலு புகார் | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome சினிமா சிங்கமுத்து மற்றும் மனோபாலாவுக்கு எதிராக நடிகர் சங்கத்தில் வடிவேலு புகார்\nசிங்கமுத்து மற்றும் மனோபாலாவுக்கு எதிராக நடிகர் சங்கத்தில் வடிவேலு புகார்\nவடிவேலு மற்றும் சிங்கமுத்து இடையே ஏற்கனவே நிலம் தொடர்பாக தகராறு இருந்தது. நீதிமன்றம் வரை இந்த பிரச்சினை சென்றதால் எந்தக் கூட்டணி படங்களிலும் தற்போது இணைந்து நடிப்பதில்லை. சமீபத்தில் நடிகர் மனோபாலா யூடியூபில் அளித்த பேட்டியில் கலந்து கொண்ட நடிகர் சிங்கமுத்து, வடிவேலு குறித்து சில கருத்துக்களை கூறியுள்ளார்.\nஇந்த நிலையில், கடந்த மாதம் 19ஆம் தேதி வடிவேலு, நடிகர் சங்கத்திற்கு சிங்கமுத்து, மனோபாலா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.\nஅந்த கடிதத்தில், “நான் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் 30 வருடங்களாக உறுப்பினராக உள்ளேன். மேலும், நடிகர் சங்கத்திற்காக என்னால் முடிந்த உதவிகளைச் செய்து வருகிறேன். நடிகர் மனோபாலா நடத்தும் வேஸ்ட் பேப்பர் என்கிற யூடியூப் சேனலில் மனோபாலா என்னைப் பற்றி சில கேள்விகளை சிங்கமுத்துவிடம் கேட்க, அதற்கு அவர் என்னைப் பற்றி தரக்குறைவாகவும் தவறான செய்திகளையும் பொய்ப் பிரச்சாரங்கள் செய்தும் பதிலளித்துள்ளார்.\nஅந்த வீடியோவை பல பிரபல நடிகர்கள் உள்ள SIAA லைப் மெம்பர் ஷிப் என்கிற வாட்ஸ்அப் குரூப்பிலும் பகிர்ந்துள்ளார். இதனால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். ஏற்கெனவே நில மோசடி விவகாரம் தொடர்பாக எனக்கும் சிங்கமுத்துவுக்கும் இடையேயான வழக்கு நீதிமன்றத்தில் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதை இந்த இடத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் மனோபாலா மற்றும் சிங்கமுத்து இருவர் மீதும் நடிகர் சங்க சட்ட விதி எண் 13இன் படி தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி அவர் கேட்டு கொண்டார்.\nஅதிக மின்சார கட்டணம் உபயோகப்படுத்தும் மின்சாதனங்களை பொருத்தது\nஆடம்பர கார் தீயில் சாம்பலானது\nஇந்தியாவில் கால் பதிக்கிறதா புதிய கொரோனா வைரஸ்\nஇன்று தொடங்கி மே 3ஆம் தேதி வரை எஸ்.எம்.கே புக்கிட் பண்டாராயா பள்ளி மூடப்படும்\nவெளிநாட்டு ஆடவரிடம் கொள்ளையடித்ததாக போலீஸ்காரர் உட்பட 4 பேர் கைது\nதமிழ்நாட்டில் நாளை பதவியேற்கவிருக்கும் அமைச்சரவை பட்டியல்\nநாட்டில் 14 புதிய கோவிட் -19 கிளஸ்டர்கள் கண்டுபிடிப்பு\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nவைரலாகும் பிரியாமணியின் பாடிபில்டிங் புகைப்படம்\nமனைவியை பிரிய ஜுவாலா காரணமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/actress-malavika-menon-shared-throw-back-picture-of-ajith-movie/", "date_download": "2021-05-07T02:06:02Z", "digest": "sha1:QZZ6JB5BZAXX464FAHDV47EEZYW7B6QV", "length": 9142, "nlines": 94, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Actress Malavika Menon Shared Throw Back Picture Of Ajith Movie", "raw_content": "\nHome பொழுதுபோக்கு சமீபத்திய 18 வயதில் என்னுடைய முதல் படம் – மாளவிகா பகிர்ந்த புகைப்படம். அட, அதுவும் நம்ம...\n18 வயதில் என்னுடைய முதல் படம் – மாளவிகா பகிர்ந்த புகைப்படம். அட, அதுவும் நம்ம தல படம் தானாம்.\nதமிழ் சினிமாவில் 90ஸ் லகட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் மாளவியா அல்டிமேட் ஸ்டார் அஜித்துடன் 1999 ஆம் ஆண்டு வெளியான ‘உன்னை கொடு என்னை தருவேன்’ என்ற படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர். .அந்த படத்திற்கு கதாநாயகியாக மீண்டும் அஜித்துடன் இணைந்து ஆனந்த பூங்காற்றே என்ற படத்திலும் நடித்தார். அறிமுகமான சில காலத்திலேயே அஜித்துடன் இரண்டு படங்களில் நடித்த நடிகை என்ற பெருமையை பெற்ற நடிகைகளில் இவரும் ஒருவர்.\nஇதனால் இவர் தமிழ் சினிமாவில் ஒரு ரௌண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.அஜித்துடன் நடித்த பின்னர் ரோஜா வனம், வெற்றிக்கொடிகட்டு, கந்தா கடம்பா கத்திரவேலா, பேரழகன், வசூலராஜா எம்.பி.பி.எஸ், சந்திரமுகி, வியாபாரி, நான் அவன் இல்லை, திருட்டுப்பயலே என்று பல்வேறு படங்களில் நடித்து வந்தார். ஆரம்பத்தில் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்த மாளவிகா கடந்த 2005 ஆண்டு ‘சி யூ அட் நைட்’ என்ற படத்தில் நடித்திருந்தார்.\nஇதையும் பாருங்க : இது தான் மேடம் கார்த்தி – நம்பரை கொடுத்த திவ்யா, போன் போட்டு விசாரித்த ஷகீலா. ஒரு வழியா கண்டுபுடிச்சிட்டாங்கபா.\nஅந்த படம் தான் இவரது சினிமா வாழ்க்கைக்கு ஆப்படித்து துரத்தி விட்டது.அந்த படத்தில் நடித்ததற்கு பின்னர் பட வாய்ப்புகள் குறைந்து போகவே ஒரு சில படங்களில் துணை நடிகையாகும் ஐட்டம் டான்ஸராகவும் ஆட்டம் போட்டார் அம்மணி. பின்னர் அந்த வாய்ப்புகளும் சரியாக அமையாமல் போக கடந்த 2007ஆம் ஆண்டு சுமேஷ் மேனன் என்பவரை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார்.\nதிருமணத்திற்கு பின்பும் சில படங்களில் நடித்தார் திருமணத்திற்கு கடைசியாக 2009 ஆம் ஆண்டு ஆயுதம் செய்வோம் என்ற படத்திலும் 2009ஆம் ஆண்டு ஆறுபடை என்ற படத்தில் கெஸ்ட் ரோலிலும் நடித்தார். இப்படி ஒரு நிலையில் நடிகை மாளவிகா, தனது 18 வயதில் நடித்த முதல் படத்தின் போது எடுத்த புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அது அஜித்துடன் நடித்த உன்னை தேடி திரைப்படமாம்.\nPrevious articleஇது தான் மேடம் கார்த்தி – நம்பரை கொடுத்த திவ்யா, போன் போட்டு விசாரித்த ஷகீலா. ஒரு வழியா கண்டுபுடிச்சிட்டாங்கபா.\nNext articleமுதல் முறையாக சர்ச்சையில் சிக்கிய குக் வித் கோமாளி. புகழின் குறிப்பிட்ட பகுதியை நீக்கிய விஜய் டிவி. இதோ அந்த வீடியோ.\nதெலுங்கு சூப்பர் ஸ்டார் படத்தில் இருந்து விலகிய திரிஷா – காரணம் தளபதி 65 நடிகையா \nஇந்த செத்த நாய சப்போர்ட் பண்ற – தனது ரசிகையை திட்டிய நபருக்கு அனிதா சம்பத் கொடுத்த பதிலடி.\nபிஜேபிக்கு எதிராக தோல்வியடைந்து விட்டதாக அறிவித்த பின்னர் கமல் என்ன செய்தார் – கமலுடன் இருந்த முக்கிய நபர்.\nஷூட்டிங் அப்போ உள்ளே இருந்து வெளிய வரவே இல்ல – ஷோபாம்மா எவ்ளோவோ கூப்பிட்டாங்க...\n டாப்ஸியின் நிலையை கண்டு உச்சு கொட்டிய ரசிகர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akattiyan.lk/2020/12/blog-post_389.html", "date_download": "2021-05-07T01:29:11Z", "digest": "sha1:E4OFIIP2TXSZ3P465IEV3TLIE2KFRI7L", "length": 8488, "nlines": 70, "source_domain": "www.akattiyan.lk", "title": "நத்தார் தின வாழ்த்து செய்தி - நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் - அகத்தியன் | Online", "raw_content": "\nHome மலையகம் நத்தார் தின ���ாழ்த்து செய்தி - நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்\nநத்தார் தின வாழ்த்து செய்தி - நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்\nயேசு கிறிஸ்து பிறப்பான இன்று அனைவருக்கும் இன்முகத்துடன் வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொள்வதில் பெரும் மகிழ்ச்சியடைவதுடன் இம்முறை அனைவரும் வீட்டிலிருந்து தமது நத்தார் பண்டிகையை கொண்டாடுமாறும் தெரிவித்துக்கொள்கின்றேன் என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ரமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nஅவரது நத்தார் பண்டிகையை வாழ்த்து செய்தியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஎமது நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் 19 கொரோனா தொற்று இரண்டாவது தடவையாகவும் அதி வேகமாக பரவிவருகின்றது. இன்றைய சூழ்நிலையில் இந்த தொற்றிலிருந்து எம்மையும் எமது உறவினர்களையும் நண்பர்களையும் பாதுகாத்துக் கொள்வதற்காக நாம் பாதுகாப்பு சுகாதார நடவடிக்கைகளை பின் பற்றவேண்டும்.\nஅத்தோடு கொவிட் 19 கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து நாடும் நாட்டு மக்களும் மீண்டுவரவேண்டும். என்பதற்காக மதஸ்தலங்களிலும் வீடுகளிலும் பிராத்தனைகளையும் மேற்கொள்வோம். ஏழை மக்களின் வாழ்வில் இன்பம் கிட்டவேண்டும் என்பதற்காகவே கன்னி மரியாள் வயிற்றில் ஏழ்மையின் அவதாரமாய் அவதரித்தவர் யேசு கிறிஸ்து. அவரின் பிறப்பு மிக எளிமையானது அவரின் பிறப்பானது ஏழை மக்களின் வாழ்வில் பல மாற்றங்களை ஏற்ப்படுத்தியது.\nஇன்று உலகிற்கு புதிய வெளிச்சத்தை உருவாக்கி ஏழை மக்களுக்காகவே அவதரித்த குழந்தை யேசு பிறந்த இந்நாளில் நாம் உறுதி எடுத்துக் கொண்டு எமது வாழ்வில் சிறந்த மாற்றங்களைக் நோக்கி பயணிப்போம்.எதிர்வரும் காலங்களை நாமே சிறப்பாக்கிக் கொள்ளும் மன உறுதியை நாம் பெற வேண்டுமென வாழ்த்துகிறேன் என்றார்.\nநத்தார் தின வாழ்த்து செய்தி - நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் Reviewed by Chief Editor on 12/25/2020 02:49:00 pm Rating: 5\nபாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் மேலதிக வகுப்புகளுக்கு மறு அறிவித்தல் வரை விடுமுறை\nபாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் மேலதிக வகுப்புகளுக்கு மறு அறிவித்தல் வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், நோன்பு பெருநாள், வெசாக் ...\nகொரோனா பரவல் காரணமாக நாட்டின் பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள விடுமுறையானது மேலும் ஒரு வார காலத்துக்க�� நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ...\nமோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nவாகன போக்குவரத்து திணைக்களத்தின் நாரஹென்பிட்டி மற்றும் வேரஹெர அலுவலகங்கள் ஒரு வாரத்திற்கு மூடப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம த...\nDReAM என அறிமுகப்படுத்தப்பட்டுள்ள முற்பாதுகாப்பு விதிமுறைகளுக்கமைய மதுபான சாலைகளை திறந்து வைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. D – சமூக இடை...\nமுழு அதிகாரம் : அகத்தியன் ஊடக சேவை 2020\nஆசிரியர் பீட தெடர்புகளுக்கு 0779516119\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2021/may/04/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-3616773.html", "date_download": "2021-05-07T00:53:38Z", "digest": "sha1:3HJIII4PKXVVHS3QAXJTGQVLYC5WJ5BF", "length": 9714, "nlines": 141, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "குடிநீா் வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n06 மே 2021 வியாழக்கிழமை 06:33:21 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்\nகுடிநீா் வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்\nஆட்டையாம்பட்டி: ஆட்டையாம்பட்டி அருகே எஸ்.பாப்பாரப்பட்டியில் குடிநீா் வழங்கக் கோரி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.\nஆட்டையாம்பட்டியை அடுத்துள்ள எஸ்.பாப்பாரப்பட்டி, சாக்ரட்டீஸ் நகரில் சுமாா் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். கடந்த இரு மாதங்களுக்கு முன் இப்பகுதியில் குடிநீா் வடிகால் வாரியம் மூலம் குடிநீா் குழாய் அமைக்க பள்ளம் தோண்டப்பட்டது.\nஅப்போது சாக்ரடீஸ் நகருக்குச் செல்லும் குழாய் இணைப்புகளில் ஏற்பட்ட உடைப்பு பல நாள்கள் ஆகியும் சரி செய்யாததால் இப்பகுதி மக்கள் குடிநீருக்காக பெரும் சிரமப்பட்டு வந்தனா். மேலும், சாலை அருகே பள்ளத்தில் தேங்கியிருக்கும் நீரை எடுத்தும், அடுத்த பகுதிக்கு வந்து தண்ணீா் எடுத்தும் பயன்படுத்தி வந்தனா்.\nஇது குறித்து ஊராட்சிமன்றத் தலைவரிடம் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காதாதல் பொதுமக்கள் ராசிபுரம் சாலையில் காலி குடத்துடன் மறியலில் ஈடுபட்டனா். இதனையறிந்த ஆட்டையாம்பட்டி காவல்துறையினா் நிகழ்விடம் வந்து சாலை மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். பின்னா் ஊராட்சி மன்றத் தலைவரிடம் பேசி உடனடியாக குடிநீா் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என உறுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனா்.\nகளைகட்டிய அண்ணா அறிவாலயம் - படங்கள்\nஆக்ஸிஜன் செறிவூட்டிகளுடன் இந்தியாவுக்கு வந்த விமானங்கள் - படங்கள்\nதிமுக தொண்டர்கள் கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nஸ்ரீ குரு தேக் பகதூரின் 400-வது பிறந்தநாள் - படங்கள்\nஅண்ணாத்த படப்பிடிப்புக்காக ஹைதராபாத் சென்ற நயன்தாரா - படங்கள்\nகும்பமேளா: கங்கையில் புனித நீராடிய பக்தர்கள் - படங்கள்\nசித்த மருத்துவத்தில் கரோனாவுக்குச் சிறந்த தடுப்பு மருந்து\nகரோனாவை தடுக்க சித்த மருத்துவம் தரும் டிப்ஸ்..\nரெம்டெசிவிா் மருந்து தேவைப்படுவோர் கவனிக்க..\nகரோனா தடுப்பூசிக்கு முன்பதிவு செய்வோர் கவனிக்க..\n'விடுதலை' படத்தின் டிரெய்லர் வெளியீடு\nதயுவு செய்து இதைச் செய்யாதீர்கள்..\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2021/may/03/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87-%E0%AE%95%E0%AF%87%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81-3616280.html", "date_download": "2021-05-07T01:10:49Z", "digest": "sha1:YRGZDJPR6JGRT4YAPIZWBG25JBFHJ7QS", "length": 10859, "nlines": 142, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "எல்லாப் புகழும் திமுக தலைவருக்கே: கே.என். நேரு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n06 மே 2021 வியாழக்கிழமை 06:33:21 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி\nஎல்லாப் புகழும் திமுக தலைவருக்கே: கே.என். நேரு\nதிருச்சி மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றதுடன், தமிழகத்தில் பெருவாரியாக திமுக வெற்றி பெற்றது உள்பட எல்லாப் புகழும் திமுக தலைவா் மு.க. ஸ்டாலினுக்கே சேரும் என அக் கட்சியின் முதன்மைச் செயலா் கே.என். நேரு தெரிவித்தாா்.\nதிருச்சி மேற்கு தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணும் பணியில், முடிவுகள் அறிவிப்பதில் காலதாமதம் ஏற்பட்டது. இரவு 10.30 மணிக்கு மேலே தோ்தல் பிரிவு அலுவலா்கள் முடிவுக்கு வந்து தோ்தல் வெற்றி சான்றிதழை வழங்கினா். சான்றிதழை பெற்ற பிறகு, செய்தியாளா்களிடம் கே.என். நேரு கூறியது:\nதிமுக தோ்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படும். அந்த திட்டங்கள் முழுமையாக திருச்சிக்கு கொண்டு வந்து சோ்க்கப்படும். மேலும், தோ்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதைப் போன்று திருச்சிக்கு ஒருங்கிணைந்த பேருந்துநிலையம் விரைந்து கொண்டுவரப்படும். உய்யக்கொண்டான் கால்வாயை புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். சாலைகளை சீரமைத்து, புதிய சாலைகள் அமைப்பதுடன், நகரப் பகுதியில் குடிநீா்த் தேவையை பூா்த்தி செய்து அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்குவதை உறுதி செய்யப்படும். விடுபட்ட அனைத்து பகுதிகளுக்கும் புதை சாக்கடை திட்டத்தை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். ஏரி, குளங்களை தூா்வாரி குடிமராமத்து பணிகளில் முறைகேடுகளுக்கு இடம் இல்லாத வகையில் செய்து முடிக்கப்படும்.\nகடந்த உள்ளாட்சித் தோ்தலின்போதும் திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து தலைவா் பதவி இடங்களையும் திமுக கைப்பற்றியது. இதேபோன்று, இப்போது மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்றது. இதுமட்டுமல்லாது தனிப்பெரும்பான்மையுடன் தமிழகத்தில் மீண்டும் ஆட்சி அமைக்கவுள்ளது.\nகளைகட்டிய அண்ணா அறிவாலயம் - படங்கள்\nஆக்ஸிஜன் செறிவூட்டிகளுடன் இந்தியாவுக்கு வந்த விமானங்கள் - படங்கள்\nதிமுக தொண்டர்கள் கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nஸ்ரீ குரு தேக் பகதூரின் 400-வது பிறந்தநாள் - படங்கள்\nஅண்ணாத்த படப்பிடிப்புக்காக ஹைதராபாத் சென்ற நயன்தாரா - படங்கள்\nகும்பமேளா: கங்கையில் புனித நீராடிய பக்தர்கள் - படங்கள்\nசித்த மருத்துவத்தில் கரோனாவுக்குச் சிறந்த தடுப்பு மருந்து\nகரோனாவை தடுக்க சித்த மருத்துவம் தரும் டிப்ஸ்..\nரெம்டெசிவிா் மருந்து தேவைப்படுவோர் கவனிக்க..\nகரோனா தடுப்பூசிக்கு முன்பதிவு செய்வோர் கவனிக்க..\n'விடுதலை' படத்தின் டிரெய்லர் வெளியீடு\nதயுவு செய்து இதைச் செய்யாதீர்கள்..\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்��்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2020/11/blog-post_605.html", "date_download": "2021-05-07T01:33:29Z", "digest": "sha1:CCO5CWQHINLB3SNJU2ZVRR7ED4A27PXZ", "length": 10706, "nlines": 93, "source_domain": "www.yarlexpress.com", "title": "வடமாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளில் பொதுமக்கள் அச்சமின்றி சிகிச்சைக்கு வர முடியும் - சுகாதார பணிப்பாளர் தெரிவிப்பு. \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nவடமாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளில் பொதுமக்கள் அச்சமின்றி சிகிச்சைக்கு வர முடியும் - சுகாதார பணிப்பாளர் தெரிவிப்பு.\nவடமாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளில் பொதுமக்கள் அச்சமின்றி சிகிச்சைக்கு வர முடியும் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன் த...\nவடமாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளில் பொதுமக்கள் அச்சமின்றி சிகிச்சைக்கு வர முடியும் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்தார்\nயாழ்ப்பாணத்தில் நேற்றையதினம் (26)மேற்கொள்ளப்பட்ட பி.சி்ஆர் பரிசோதனைகளில் 23 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nநேற்றையதினம் யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடங்களில் 352 பேருக்கு பிசீஆர் பரிசோதனைகள் செய்யப்பட்டது.\nஇதில் வவுனியா தனிமைப்படுத்தல் முகாமைச் சேர்ந்த 20 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் காங்கேசன்துறை கடற்படை முகாமில் தனிமைப்படுத்தலில் இருக்கின்ற 3 பேரிற்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஅத்துடன் நேற்றும் இன்றும் கிளிநொச்சியில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை முடிவுகள் இன்று வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறதென யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆறுமுகம் கேதீஸ்வரன் இத்தகவலை தெரிவித்தார்.\nஅவர் மேலும் தெரிவிக்கையில் அண்மையில் கிளிநொச்சியில் தொற்றாக இனங்காணப்பட்ட முதியவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் காய்ச்சலிற்காக அனுமதிக்கப்படும் போது போதிய பாதுகாப்பு நடவடிக்கையுடனேயே சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு இருந்தார்.\nஇருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவரோடு நேரடித் தொடர்பில் இருந்த மூன்று மருத்துவப் பணியாளர்களர்கள் தனிமைப்படுத்தலிலும் மேலும் 7 மருத்துவ பணியாளர்கள் சுய தனிமைப்படுத்தலிற்கும் உட்படுத்தப்படுகிறார்கள் .\nஅவரோடு நேரடி தொடர்புடைய உறவினர்களும் நோயாளர்களும்\nதனிமைப்படுத்தப்படுகிறார்கள். எனவே வட மாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளில் பொதுமக்கள் அச்சமின்றி சிகிச்சைக்கு வர முடியும் என தெரிவித்தார்.\nவணிகம் / பொருளாதாரம் (7)\nமாநகர காவல்படையினரின் சீருடை பறிமுதல் - மாநகரசபைக்கு ஆப்பு வைத்த பொலீஸார் ..\nBREAKING NEWS :- ஊரடங்கு தொடர்பில் இராணுவத் தளபதி சற்றுமுன் வெளியிட்ட அறிவிப்பு\nஅத்தியாவசிய சேவைக்கு மாத்திரமே அனுமதி\nYarl Express: வடமாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளில் பொதுமக்கள் அச்சமின்றி சிகிச்சைக்கு வர முடியும் - சுகாதார பணிப்பாளர் தெரிவிப்பு.\nவடமாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளில் பொதுமக்கள் அச்சமின்றி சிகிச்சைக்கு வர முடியும் - சுகாதார பணிப்பாளர் தெரிவிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://4varinote.wordpress.com/2013/09/20/293/", "date_download": "2021-05-07T00:18:22Z", "digest": "sha1:Q4DFTZH3JKBRYOUQRRGW7QPUFIZWYM63", "length": 23701, "nlines": 522, "source_domain": "4varinote.wordpress.com", "title": "எல்லார்க்கும் சொந்த மொழி | நாலு வரி நோட்டு", "raw_content": "\nநச்ன்னு நாலு வரி, நாள்தோறும்\nஎன். சொக்கன் இணையத் தளம்\nஉங்களின் வலைத்தளம் இன்றைய வலைச்சரத்தில் சிறப்பு பெற்றிருக்கிறது நேரம் இருக்கும்போது…\nவிருந்தினர் பதிவு : குழந்தைப் பாடல்கள்\nநீண்ட நாட்களாகவே விடை தெரியாத கேள்வி ஒன்று என்னிடம் உண்டு. இன்று அந்தக் கேள்வியை எடுத்து வைத்து யோசிக்க முடிவு செய்தேன். கேள்வி என்ன தெரியுமா\nஇந்தியாவில் இருக்கும் நாயை பிரான்சில் விட்டால் அங்கிருக்கும் நாயோடு குலைத்துப் பேச முடியும். அதே போல எந்தவொரு விலங்கும் உலகில் அதன் வகையைச் சார்ந்த இன்னொரு விலங்கோடு தகவல்களைப் பரிமாறிக் கொள்ள முடியும்.\nநாடு விட்டு நாடு என்ன… மாநிலம் விட்டு மாநிலம் போனாலே ஒருவர் பேசுவது இன்னொருவருக்கு புரிவதில்லை. அதை விடுங்கள். ஒரே மாநிலத்துக்குள்ளேயே ஒரே மொழி பேசுகின்றவர்களுக்கு வட்டார வழக்குகள் எளிதில் புரிந்து விடுவதில்லை.\nதெக��கத்திப் பக்கம் பிள்ளை என்பது பெண்பிள்ளையைக் குறிக்கும். “அந்தப் பிள்ளையோட பேசுனியா” என்றால் “அந்தப் பெண்ணோடு பேசினாயா” என்றால் “அந்தப் பெண்ணோடு பேசினாயா” என்று பொருள். வடதமிழ் மக்களுக்கு இது வித்தியாசமாகத்தான் இருக்கும். அதே போல தென் தமிழ்நாட்டின் அழுத்தமான சகர(cha) உச்சரிப்பு வடதமிழ் மக்களுக்கு நகைச்சுவையாகத் தெரியும்.\nநண்பனிடம் பேசும் போது “அந்த எடம் கிட்டக்கதான் இருக்குது” என்று சொன்னேன். அவனுக்குப் புரியவில்லை. “அந்த எடம் பக்கத்துலதான் இருக்குது” என்று சொன்னதும் எளிதாகப் புரிந்துவிட்டது.\nஉலகில் எந்த உயிரினத்துக்குமே மொழி தேவைப்படாத போது…. மனிதனுக்கு மட்டும் ஏன் மொழி தேவைப்படுகிறது\nமொழி என்பது தகவல் பரிமாறிக் கொள்ள உதவும் கருவி என்று எளிதாக விடை சொல்லி விடலாம்.\nஆனால் மனிதன் மட்டுமே தகவல்களைப் பரிமாறிக் கொள்கிறானா\nவண்ண மலர்களும் விண்ணின் மேகங்களும் மண்ணின் மரங்களும் மலையின் காற்றும் இரவின் நிலவும் நீரின் அலையும் இன்னபிறவும் தகவல்களைப் பரிமாறிக் கொள்வதில்லையா\nபேசாத மலர்தான் வண்டுகளை அழைத்து தேனைக் கொடுத்து மகரந்தச் சேர்க்கை நடத்துகிறது.\nஉடம்பே இல்லாத காற்றுதான் மூங்கிலின் ஒவ்வொரு துளையிலும் பயணம் செய்து இசையை உண்டாக்குகிறது.\nஉயிரே இல்லாத மேகம்தான் கடலில் இருக்கும் உப்புநீரிலிருந்து நல்ல நீரை மட்டும் எடுத்து வந்து மழையாகப் பெய்கிறது.\nஎப்போதும் நிரம்பித் தளும்பும் கடல்தான் அலைகளைக் கொண்டு நிலமகளை திரும்பத் திரும்ப தழுவி மகிழ்கின்றது.\nஅப்படியென்றால் அவைகளின் மொழி எது\nஉடனே எனக்கு நினைவுக்கு வந்தது கவிஞர் வைரமுத்து எழுதி வித்யாசாகர் இசையில் வெளிவந்த மொழி திரைப்படப் பாடல்தான்.\nகாற்றின் மொழி ஒலியா இசையா\nபூவின் மொழி நிறமா மணமா\nகடலின் மொழி அலையா நுரையா\nகாதலின் மொழி விழியா இதழா\nகாதலனைப் பார்த்ததும் “மனம் முந்தியதோ விழி முந்தியதோ கரம் முந்தியதோ” என்றுதான் திரிகூட ராசப்பரும் எழுதியிருக்கிறார். இதில் மொழியைப் பேசும் இதழே வரவில்லை. ஆக காதலுக்கு மொழி தேவையில்லை.\nகாதலுக்கு மட்டுமல்ல… எதற்குமே மொழி தேவையில்லை. இயற்கையோடு இயற்கையாய் வாழும் போது பேசுகின்ற மொழிகள் எதுவும் தேவையில்லை.\nபாட்டில் கவிஞர் வைரமுத்து சொல்லியிருப்பது மிக நியாயமான கருத்து.\n��ரு மழை நேரத்தில் சன்னலோரத்தில் தேநீர்க் கோப்பையோடு அமருங்கள். தேநீரின் இனிய நறுமணம் மென்புகையாய் நாசியோடு பேசும். அதன் இன்சுவை நாவோடு பேசும்.\nகொட்டும் மழையின் சொட்டுகள் நிலமெனும் பறை தட்டிப் பேசும். வீட்டின் கூரையிலிருந்து சொட்டும் துளிகள் தரையில் தேங்கிய நீரில் ஜலதரங்கம் வாசிக்கும். ஒளிந்திருக்கும் தவளைகள் கடுங்குரலில் மகிழ்ச்சிப் பண் பாடும். மழை நின்றதும் எல்லா நிறங்களையும் ஏழு நிறங்களுக்குள் அடக்கிக் கொண்டு வானவில் புன்சிரிக்கும்.\nநீங்கள் ரசிகராக இருந்தால் இந்நேரம் அழுதிருப்பீர்கள். அது உங்கள் கண்கள் பேசும் மொழி.\nவானம் பேசும் பேச்சு – துளியாய் வெளியாகும்\nவானவில்லின் பேச்சு – நிறமாய் வெளியாகும்\nஉண்மை ஊமையானால் – கண்ணீர் மொழியாகும்\nபெண்மை ஊமையானால் – நாணம் மொழியாகும்\nஓசை தூங்கும் சாமத்தில் – உச்சி மீன்கள் மொழியாகும்\nஆசை தூங்கும் இதயத்தில் – அசைவு கூட மொழியாகும்\nஇப்போது சொல்லுங்கள். மொழி என்பது மனிதர்களுக்கு மட்டும் சொந்தமானதா இல்லை. இயற்கை ஒவ்வொன்றிருக்கும் மொழியைக் கற்றுக் கொடுத்திருக்கிறது. மனிதன் மட்டும் அதை வைத்துக் கொண்டு சண்டை போடுகிறான்.\nபாடல் – காற்றின் மொழி ஒலியா\nவரிகள் – கவிஞர் வைரமுத்து\nசெம பதிவு.இந்த பாடலை கேட்கும் போது உருகிப்போவேன்.வைரமுத்துவின் வரிகளாகட்டும் பல்ராமின் குரலாகட்டும் சூப்பர். வாய் பேச இயலாத நாயகியை ஆறுதல் படுத்தும் கவியரசரின் வரிகள் வாழ்வு என் பக்கம் படத்தில்- வீனை பேசும் அது மீட்டும் விரல்களைக்கண்டு.தென்றல் பேசும் அது மோதும் மலர்களைக் கண்டு.\nவட்டார மொழிகளில் எனக்கு மிகவும் பிடித்தது ” திருநவேலி ” பாஷைதான் . கேட்க மிகவும் இனிமை.\nசிப்பி எடுப்போமா மாமா மாமா\nஎனக்கு மிக மிகப் பிடித்தப் பாடல். அடிக்கடி கேட்டு ரசிக்கத் தோன்றும், முக்கியமாக பாடல் வரிகளுக்காகவே.\nநீங்கள் இந்தப் பதிவை ஆரம்பித்திருக்கும் விதமே அருமை. விலங்கினங்களுக்கும் பறவைகளுக்கும் மொழி பிரச்சினை இல்லை. சில மனித உள்ளங்களுக்கும் :-)) பல மைல்களுக்கு அப்பால் இருந்தாலும் ஒருவர் எண்ணுவது மற்றவருக்குப் புரிந்துவிடும். அது எதோ சிலருக்கு வாய்க்கும். பொதுவாக மனிதர்கள் உரையாட மொழி தான் வழி. வேற்று மொழியாளர்களிடம் நாம் சொல்ல வருவதைப் புரிய வைக்கப் படாத பாடு படவேண்ட��ம்.\nஇங்கோ காது கேளாத, அதனால் வாய் பேசாத பெண்ணை மனத்தில் கொண்டு பாடப்பட்ட பாடல். ஒவ்வொரு வரியும் சுகந்தம்.\nசில மனித உள்ளங்களுக்கும் பல மைல்களுக்கு அப்பால் இருந்தாலும் ஒருவர் எண்ணுவது மற்றவருக்குப் புரிந்துவிடும். …………..yes, you can easily sense that, even you are thousand miles apart. I really really like it. Thanks.\nஅருமையா சொன்னீங்க போங்க. பாட்டு ரொம்ப நல்ல பாட்டு. கேட்டு முடிச்ச பொறவு ஒரு அமைதி. ஆனா, நீங்க கேட்ட கேள்வி இன்னும் மனசுல ஓடிகிட்டே இருக்கு. நாய், நரி இப்படி மத்த மிருகங்க பேசும் போது, நம்மளால மட்டும் ஏன் பேச முடியலை\nமொழியின் வளர்ச்சி, நமக்கு தெரியாத அதிசியங்கள ஒன்னு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/shops/area-development-office", "date_download": "2021-05-07T00:37:40Z", "digest": "sha1:KNJE2BNOE4RY3FTOCOIZDQ5DFQHFGAAH", "length": 4677, "nlines": 94, "source_domain": "ikman.lk", "title": "Area Development Office - Kurunegala AI | ikman.lk", "raw_content": "\nமேலும் இக் கடை பற்றிய விபரங்கள்\nஅனைத்து விளம்பரங்களும் Area Development Office - Kurunegala AI இடமிருந்து (7 இல் 1-7)\nபுத்தளம், வாடிக்கையாளர் சேவை நிர்வாகி\nகுருணாகலை, வாடிக்கையாளர் சேவை நிர்வாகி\nபக்கம் 1 என்ற 1\nஇன்று திறந்திருக்கும்: 8:00 முற்பகல் – 4:00 பிற்பகல்\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://indictales.com/ta/2020/05/06/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2021-05-07T00:52:04Z", "digest": "sha1:UNOWTGFYRDLPVITM6RS7L5QZJXDVN6VS", "length": 12198, "nlines": 72, "source_domain": "indictales.com", "title": "கடல் தொல்லியல் வழி துவாரகையை அறிதல் - India's Stories From Indian Perspectives", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, மே 7, 2021\nHome > வரலாறு > புராதனவரலாறு > கடல் தொல்லியல் வழி துவாரகையை அறிதல்\nகடல் தொல்லியல் வழி துவாரகையை அறிதல்\ntatvamasee மே 6, 2020 மே 6, 2020 புராதனவரலாறு, பேச்சு துணுக்குகள்\t0\nமீண்டும் இந்தியாவில் மிக உயர்ந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளரைக் கொண்டிருந்தோம். அவர் பேராசிரியர் எஸ்.ஆர்.ராவ். அவர் ஒரு நில தொல்பொருள் ஆய்வாளர் மட்டுமல்ல, அவர் இந்தியாவில் கடல் தொல்பொருளை அறிமுகப்படுத்தியதில் முன்னோடி ஆவார். நமது புராணங்களின் நிலை என்ன, அது எவ்வளவு தூரம் சரியானது என அவர் அறிய விரும்பினார்.\nபேராசிரியர் பிபி லால் இங்கே வேலையைச் செய்து கொண்டிருந்தார், அ��்பொழுது இவர் நமது புராண துவாரகையின் நிலை என்ன என்பதை கண்டறிய விரும்பினார். பேராசிரியர் சங்கல்யா போன்ற பல தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், நிலப்பரப்பில் அகழ்வாராய்ச்சி செய்தனர், அகழ்வாராய்ச்சிக்குப் பிறகு அந்த இடத்தின் பழமை கிமு 1 ஆம் நூற்றாண்டு வரை மட்டுமே சென்றது. இது ஒரு பிரச்சினையாக இருந்தது, ஏனெனில் பேராசிரியர் லால் அதை கிமு 1000 க்கு தேதியிட்டார், அது கிட்டத்தட்ட சமகாலமானது, ஆனால் பேராசிரியர் சங்கல்யாவின் தேதியிட்டிருந்ததோ கிமு 100 மட்டுமே. எனவே கிட்டத்தட்ட 1000 ஆண்டுகளுக்கும் மேலான இடைவெளி இருந்தது, பின்னர் பேராசிரியர் எஸ்.ஆர்.ராவ் , “இல்லை, நாம் நேரடியாக கடலில் அகழ்வாராய்ச்சி செய்ய வேண்டும்” என்று கூறினார். அந்த நேரத்தில் இந்தியாவில் கடல் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் யாரும் இல்லை. எனவே அவர் பயிற்சியளிக்க வேண்டியிருந்தது, ஏனென்றால் இஸ்ரேலில் அது இருந்தது, அமெரிக்காவில், அது இருந்தது, மற்றும் பிரெஞ்சுக்காரர்கள் மிகவும் தேர்ச்சிப்பெற்று முன்னால் இருந்தனர்.\nஎனவே அவர் கோவாவின் கடல்சார் துறையைச் சேர்ந்தவர்களுக்கு பயிற்சி அளித்தார், இந்த மக்கள் நிபுணத்துவம் பெற வேண்டியிருந்தது. பின்னர் அவர் துவாரகையில் அகழ்வாராய்ச்சி செய்தார். இறுதியாக, கிமு 1200 க்கு மீண்டும் செல்லும் ஒரு நகரத்தை அவரால் கண்டுபிடிக்க முடிந்தது. அவர் கிட்டத்தட்ட அது சமகாலத்தது என்பதை அவர் நிரூபிக்க முடிந்தது, ஏனென்றால் அத்துடன் தொடர்புடைய பல விஷயங்கள் அவருக்கு கிடைத்தன. பேராசிரியர் அலோக் திரிபாதியும் நானும் அவருடன் அந்த வேலைக்குச் சென்றிருந்தோம், அது பல்வேறு இடங்களில் ஒரு வகையான பயிற்சியாக இருந்தது.\nஒரு தொல்பொருள் ஆய்வாளராக, அவர் கடலுள் செல்ல வேண்டும், ஏனென்றால் அவர் ஆதாரங்களைப் பார்க்க வேண்டும், அதை அவர் தனது கையால் உணர வேண்டும், இல்லையெனில், இலக்கியத்தில் உள்ள விளக்கத்தால், அவர் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. எனவே, இந்த ஒரு பேராசிரியர் எஸ்.ஆர்.ராவ் ஒரு குழுவைக் கொண்டிருந்தார், அவர்கள் கோவாவின் கடல்சார் துறை வழங்கிய சில தரவுகளின் அடிப்படையில் கடலுக்குள் சென்றனர். 10,000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தக் கடல் நிச்சயமாக மிகவும் உள்ளே இருந்தது என்று அவர்கள் சொன்னார்கள். அந்த நேரத்தில் நகரம் இருந்தது, அது உள்ளே ம���கவும் இருந்தது. அது 30 மீட்டர் ஆழத்தில் இருந்தது, அவர் 30 மீட்டர் ஆழத்தில் மூழ்க எங்கள் டைவர்ஸைக் கொண்டிருந்தார், பின்னர் அவர்களால் கிட்டத்தட்ட 2 கிலோமீட்டர் x 4 கிலோமீட்டர் அளவில் உள்ள ஒரு நகரத்தைக் கண்டுபிடிக்க முடிந்தது. இந்த வகையான முத்திரை இவை மெசொப்பொத்தேமியன் முத்திரைகள், இந்த மெசொப்பொத்தேமியன் முத்திரை அதை துவாரகாவிலிருந்து தோண்ட முடிந்தது.\nதற்போதைய கிரேக்க நாடு ஏன் பண்டைய கிரேக்கத்தின் நாகரிக தொடர்ச்சி இல்லை\nஏறக்குறைய அனைத்து ஆபிரிக்க நாடுகளின் எல்லைகளும் ஆப்பிரிக்க மக்களின் ஒப்புதல் அல்லது பங்கேற்பு இல்லாமல் ஐரோப்பியர்களால் தீர்மானிக்கப்பட்டது\nராம் ஜன்மபூமி பாபர்மசூதி விவகாரம் எரிந்துகொண்டிருக்க இடதுசாரி வரலாற்று ஆசிரியர்கள் பேசும் உண்மைக்குப்புறம்பான செய்திகள்.\nஎவ்வாறு ஆங்கிலேய வருவாய்த்துறை அறிக்கைகள் அயோத்திவழக்கில் ஆதரவு தருகின்றன\nஅயோத்தியில் நிஹாங் சீக்கியர்கள் (அகாலியர்)\nஆவண காப்பகங்கள் மாதத்தை தேர்வு செய்யவும் மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 ஜனவரி 2019 டிசம்பர் 2018 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஜூன் 2018 மார்ச் 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/1024876/amp", "date_download": "2021-05-07T00:50:46Z", "digest": "sha1:RTECOHOEOH2YUCJBUL2TQBWGWWYR3TFA", "length": 7741, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "கபசுர குடிநீர் விநியோகம் | Dinakaran", "raw_content": "\nபழநி, ஏப்.19: பழநி அருகே சின்னக்கலையம்புத்தூரில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் தனியார் அறக்கட்டளை அமைப்பு சார்பில் பூங்கா மற்றும் உடற்பயிற்சி நிலையத்தில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் விநியோகிக்கப்பட்டது. அரசு சித்த மருத்துவர் டாக்டர் மகேந்திரன் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினார். தொடர்ந்து கொரோனா பரவும் விதம், சமூக விலகல் மற்றும் முகக்கவசம் அணிவதன் அவசியம், கிருமி நாசினி பயன்படுத்துவதன் நன்மை உள்ளிட்டவை குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாநில ஊரக வாழ்வாதார ஒருங்கிணைப்பாளர் பிரீத்தி, சமூக ஆர்வலர்கள் திலகவதி, அருள்நிதி, இளந்தமிழன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nதிருவாரூர் பைபாஸ் சாலை அருகே ஜல்லிக்கற்க���் பெயர்ந்து சேதமடைந்த நூலக சாலை\nஅறிவொளி இயக்கம் அழைப்பு பொறுப்பாளர்கள் போன் எண்கள்\nகலெக்டர் தகவல் வாசிப்பு பழக்கம் மூலம் செல்போன் சீர்கேடுகளில் இருந்து குழந்தைகளை மீட்டெடுக்க வேண்டும்\nதிருவாரூர் மாவட்டத்தில் மத்திய அரசின் ஆதார விலைத்திட்டத்தில் உளுந்து, பச்சைப்பயறு கொள்முதல்\nதிருவாரூர் நகரில் குழாய் சேதமடைந்து வீணாக குடிநீர் வெளியேறும் அவலம் சீரமைத்து பராமரிக்க மக்கள் கோரிக்கை\nலால்குடி வயல்காட்டில் ரத்த காயங்களுடன் பெண் சடலம் மீட்பு\nசிறுமியிடம் அத்து மீறல் சமையல் மாஸ்டர் கைது\nதிருவெறும்பூர் அருகே உப்பு லோடு லாரி கவிழ்ந்தது\nகுடியிருப்புகளுக்கு அருகே மது குடித்ததை கண்டித்த வாலிபருக்கு அடி உதை\nபேராவூரணி ஜமாஅத் அறிவிப்பு தென்னையை தாக்கும் தஞ்சை வாடல் நோயை கட்டுப்படுத்தும் வழிமுறை\nமுழு ஊரடங்கு தினத்தன்று இஸ்லாமியர் வீடுகளிலேயே நோன்புகால சிறப்பு தொழுகை\nபேராவூரணி நகரில்a ரூ.15 கோடியில் சாலை மேம்பாடு திட்டப்பணி திருக்காட்டுப்பள்ளி அருகே அரை குறையாக விடப்பட்ட தார் சாலை சீரமைப்பு\nஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலையத்தில் வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு ஒருங்கிணைந்த பண்ணைய பயிற்சி\nஅரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி\nதிருவையாறில் கணவரை காணவில்லை மனைவி போலீசில் புகார்\nபட்டப்பகலில் மர்மநபர்கள் துணிகரம் புதுக்கோட்டை அரசினர் பிற்படுத்தப்பட்டோர் மாணவியர் விடுதியை கொரோனா சிகிச்சை மையமாக மாற்றும் பணி\nபொன்னமராவதி பேருந்து நிலையத்தில் திமுக பிரமுகரின் கார் கண்ணாடியை உடைத்து ரூ. 4 லட்சம் கொள்ளை\nகொள்ளிடம் பகுதி ஆரம்ப சுகாதார நிலையங்களில் கிருமி நாசினி, முககவசம் தட்டுப்பாடு\nபாரம்பரியத்தை மீட்டெடுக்கும் வகையில் பனை ஓலையில் விதவிதமான பொருட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newneervely.com/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F", "date_download": "2021-05-07T01:55:17Z", "digest": "sha1:JQ2HRMBQHDO3NKXVLIJGYMJ76VMORGLS", "length": 6610, "nlines": 103, "source_domain": "newneervely.com", "title": "ஸ்ரீமுருகன் அறநெறிப்பாடசாலை பரிசளிப்பு விழா 2013 | நீர்வேலி", "raw_content": "10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..\nநீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது\nஸ்ரீமுருகன் அறநெறிப்பாடசாலை பரிசளிப்பு விழா 2013\nஸ்ரீமுருகன் அறநெறிப்பாடசாலை பரிசளிப்பு விழா எதிர்வரும் 24.08.2013 சனிக்கிழமை பி.ப 02.30 மணிக்கு நீர்வேலி திருமுருகன் திருமண மண்டபத்தில் தலைவர் திரு.ந.சிவசுப்பிரமணியம் அவர்கள் தலைமையில் நடைபெறும் இவ்விழாவில் திரு.திருமதி கிருபாகரன்(கரன் நகைமாடம் யாழ்ப்பாணம்) அவர்களும் சிறப்புவிருந்தினர்களாக செல்வி.மா.தெய்வலக்ஸ்மி (இந்துசமய கலாச்சார உத்தியோகத்தர் கோப்பாய்)அவர்களும் திரு.சி.கணபதிப்பிள்ளை (ஓய்வுநிலை இ.போ.ச உத்தியோகத்தர்) அவர்களும் கௌரவவிருந்தினராக திரு.சி.தயாபரன்( கிராம அலுவலர் நீர்வேலி தெற்கு)அவர்களும் திரு.சு.சண்முகவடிவேல் ( கிராம அலுவலர் நீர்வேலி மேற்கு) அவர்களும் திரு.சி.தர்மரத்தினம் அவர்களும் திருமதி காங்கேஸ் ஜெயசோதி அவர்களும் கலந்துசிறப்பிக்கவுள்ளனர்.\nஅனைவரையும் அன்புடன் அழைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nவரலட்சுமி விரதம் நீர்வேலியின் அனேகமான கோவில்களிலும் இன்று அனுஸ்டிக்கப்பட்டது. »\n« எமது ஊரில் ”துடிப்பு” என்கின்ற குறும்படம் தயாரிக்கப்பட்டு வருகிறது.\nஇது எமது ஊர். இங்கு பிறந்ததினால் நாம் பெருமையடைகிறோம். நீர்வேலியின் சிறப்பையும் வனப்பையும் எங்கு சென்றாலும் மறவோம். எமதூரைப் போற்றுவோம்.\nநீர்வேலி நலன்புரிச் சங்கம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newsonair.gov.in/tamil/Language-Main-News.aspx?id=12196", "date_download": "2021-05-07T00:38:16Z", "digest": "sha1:UEATWPIVWAVW3D5IQEIXWIFYLPY2WPFG", "length": 5852, "nlines": 49, "source_domain": "newsonair.gov.in", "title": "போஸ்பரஸ் குத்துச்சண்டை போட்டியின், மகளிர் 51 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் நிக்கத் ஜரின் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.", "raw_content": "\nஇறுதியாக பெறப்பட்ட தகவல்கள்May 6 2021 8:35PM\nதமிழக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள அமைச்சர்களின் பட்டியலை ஆளுநர் அலுவலகம் இன்று வெளியிட்டுள்ளது.\nகோவிட் 19 நோய் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று ஆலோசனை நடத்தினார்.\nநாடு முழுவதும் கோவிட் 19க்கான தடுப்பு மருந்து செலுத்தும் பணிகள் மாநில அரசுகளுடன் இணைந்து முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய அரசு கூறியுள்ளது.\nகேரளாவில் கோவிட் - 19 தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நாளை மறுநாள் தொடங்கி 16-ம் தேதிவரை முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் இன்றுமுதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளன.\nபோஸ்பரஸ் குத்துச்சண்டை போட்டியின், மகளிர் 51 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் நிக்கத் ஜரின் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.\nபோஸ்பரஸ் குத்துச்சண்டை போட்டியின், மகளிர் 51 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் நிக்கத் ஜரின் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.\nஇஸ்தான்புல்லில் நேற்று நடைபெற்ற இந்தப் போட்டியின் ஆடவர் 63 கிலோ எடைப்பிரி வு காலிறுதியில் சிவதாபா தோல்வியடைந்தார்.\nஒப்பந்தப் புள்ளிகள் சுற்றறிக்கைகள் தகவல் அறியும் உரிமை பதில்கள் தகவல் அறியும் உரிமை செய்தி அட்டவணை காலிப் பணியிடங்கள் ஆகாஷ் வாணி வருடாந்திர விருதுகள்\nகுடிமக்கள் சாசனம் குடிமக்கள் சாசனம்-ஹிந்தியில் அகில இந்திய வானொலி-நெறிகள் தேசிய செய்தி பிரிவு ஒலிபரப்பு ஊடகத்துக்கான செய்திக்கொள்கை\nதகவல் ஒலிபரப்பு அமைச்சகம் பத்திரிக்கை தகவல் அலுவலகம் விளம்பரம் மற்றும் காட்சி இயக்குனரகம் இந்திய தகவல் தளம்\nதலைமையகத்தொடர்பு மாநில செய்திப் பிரிவு செய்தியாளர் மட்டும் உள்ள செய்திப் பிரிவு பகுதி நேர செய்தியாளர் விவரம்\nபிரசார் பாரதி ஒப்பந்த பணியாளர்களுக்கான பிரசார் பாரதி கொள்கை அகில இந்திய வானொலி தூர்தர்சன் செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/blogs/more-interest-in-epfo-than-banks-75-return-on-job-loss/", "date_download": "2021-05-07T00:36:44Z", "digest": "sha1:GU4RD43YIE56KH7A4C3B2LPFSJBOUAMX", "length": 18762, "nlines": 130, "source_domain": "tamil.krishijagran.com", "title": "வங்கிகளை விட EPFO-வில் அதிக வட்டி! வேலை இழந்தால் 75% ரிட்டன்!", "raw_content": "செய்திகள் வாழ்வும் நலமும் தோட்டக்கலை கால்நடை வெற்றிக் கதைகள் விவசாய தகவல்கள் FTB அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா Directory\n#FTB விவசாய தகவல்கள் அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா\nஎங்கள் அச்சு மற்றும் டிஜிட்டல் பத்திரிகைகளுக்கு குழுசேரவும்\nசமூக ஊடகங்களில் எங்களுடன் இணைக்கவும்:\nவங்கிகளை விட EPFO-வில் அதிக வட்டி வேலை இழந்தால் 75% ரிட்டன்\nமாத சம்பளம் வாங்குவோரால் மிகவும் விரும்பப்படும் முதலீடு ஊழியர் வருங்கால வைப்பு நிதியம் (இபிஎஃப்) ஆகும். குறைந்தபட்சம் 20 க்கும் மேற்பட்ட பணியாளர்களை கொண்ட அனைத்து நிறுவ��ங்களும் இபிஎஃப் திட்டத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவை. இந்த திட்டம் தனிநபர்கள் தங்கள் சம்பளத்தின் ஒரு பகுதியை தவறாமல் சேமிக்க உதவுகிறது. மேலும் இது தனிநபர்களின் ஓய்வுக்குப் பிறகு ஒரு நல்ல ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதற்கு போதுமான நிதியை வழங்க ஒருங்கிணைக்கிறது.\nஅனைத்து தொழிலாளர்களும் ஒரே விதமான சம்பளத்தை பெறுவதில்லை. சிலர் அதிகமான சம்பளத்தையும், சிலர் குறைவான சம்பளத்தையும் பெறுவார்கள். அவர்கள் பெரும் சம்பளத்தில் 12% சதவீதத்தை PF தொகையாக பிடித்தம் செய்வார்கள். அதே அளவு 12% தொகையை உங்கள் நிறுவனத்தின் (Employer) சார்பிலும் PFகணக்கில் செலுத்தப்படும். நிறுவனத்தின் சார்பில் செலுத்தப்படும் 12 சதவீதத்தில் 8.33% பென்ஷன் திட்டத்திலும், 3.67% வருங்கால வைப்பு திட்டத்திலும் செலுத்தப்படும். இந்த தொகைகளை சேர்த்து வருங்கால வைப்பு ஆணையத்தில் நிறுவனம் முதலீடு செய்யும். குறைந்தபட்சமாக மாதம் ரூ.15,000 சம்பளம் வாங்கும் அனைவருக்கும் பிஎஃப் பிடித்தம் செய்யப்படும்.\nநீங்கள் பிஎஃப் பணத்தை வீட்டு கடனை அடைப்பதற்கு, குழந்தைகளின் கல்வி செலவு, லைப் இன்சுரன்ஸ் பீரியமிம் (Life insurance premium) போன்ற காரணங்களுக்காக எடுக்க விரும்பினால் ஒரு வருடத்திற்கு 1.50 லட்சம் வரை எடுத்துக் கொள்ளலாம். EPFO சேமிப்புத் திட்டத்திற்கு வருமான வரிச் சட்டம் பிரிவு 80c கீழ் வரிச் சலுகைகள் கிடைக்கின்றன. இது PF பணத்திற்கான முக்கிய சிறப்பம்சம். அதேபோல் பணியாளரின் கணக்கில் நிறுவனங்கள் செலுத்தும் தொகை ரூ. 7.50 லட்சத்தை எட்டினால், ஊழியருக்கு வரி விதிக்கப்படும். உங்கள் ஈபிஎஃப் கணக்கு 3 ஆண்டுகளுக்கும் மேலாக செயலற்ற நிலையில் இருந்தாலும் வட்டி வழங்கப்படும். ஊழியர்கள் நிறுவனத்தை விட்டு வந்தாலோ, நிறுவனங்கள் ஊழியர்களை வேலையை விட்டு நீக்கினாலும், இபிஎஃப் கணக்கில் இருந்து எடுக்கும் பணத்திற்கு வரி கிடையாது.\nதிட்டத்தின் கீழ் பென்ஷன் பெறப் பல கட்டுப்பாடுகள் உள்ளன. பென்ஷன் பெற விரும்புபவர்கள் 58 வயது வரை காத்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 10 வருடம் வரை ஈபிஎப் திட்டத்தில் பங்களிப்பு அளித்து இருந்தால் மட்டுமே ஓய்வூதியம் பெற முடியும். ஒன்றுக்கு மேற்பட்ட ஈபிஎப் கணக்கை வைத்து இருக்க முடியாது. தனது வாழ்க்கை முழுவதும் ஓய்வூதியம் (Pension) பெற முடியும்.\nஇது பணியாளர் வைப்புத்தொ��ை இணைக்கப்பட்ட காப்பீடு (EDLI) என்று அழைக்கப்படுகிறது. வருங்கால வைப்பு நிதி கணக்குப் உரிமையாளர் இறக்கும் பொது பிஎப் சந்தாதாரின் வாரிசுகள் EDLI காப்பீடு மூலம் தொகையை பெறலாம். பிஎப் சந்தாதார் இறந்த பிறகு அவரது 30 மடங்கு அடிப்படை சம்பளம் + அகவிலைப்படியைக் கணக்கிட்டு அளிக்கப்படும். அது மட்டும் இல்லாமல் போனஸ் தொகையாக 1,50,000 ரூபாய் அளிக்கப்படும். காப்பீடு பிரீமியம் தொகை அனைவருக்கும் சமமானதே ஆகும். EDLI காப்பீட்டினை பெறும் போது பிஎப் சந்தாரர் இறக்கும் வரை நிறுவனத்தில் பணிபுரிந்து வந்து இருக்க வேண்டும். படிவத்தில் நிறுவனத்தின் அத்தாட்சி இருக்க வேண்டும். நிறுவனத்தில் அத்தாட்சி பெற முடியவில்லை என்றால் கெசட் அலுவலரிடம் பெறலாம்.\n75% பிஎப் பணத்தை எடுக்கலாம்\nவருங்கால வைப்பு நிதி ஆணையத்தில் பிஎப் கணக்கு வைத்துள்ளவர்கள் ஒரு மாதம் வேலை இல்லாமல் இருந்தால் 75 சதவீத பணத்தினை இடையில் எடுத்துக்கொள்ளலாம். மீதம் உள்ள தொகையினை 2 மாதங்களுக்கு வேலைக் கிடைக்கவில்லை என்றால் எடுத்துக்கொள்ளலாம். இடையில் பிஎப் பணத்தினை எடுக்க அனுமதி அளித்தாலும் தேர்ந்தெடுக்கும் காரணங்களைப் பொருத்துப் பிஎப் பண எடுப்பதற்கான சதவீதம் மாறும். தற்போது திருமணத்திற்காகப் பிஎப் பணத்தினை இடையில் எடுத்தால் 50 சதவீதம் மட்டுமே எடுக்க முடியும். இதற்கு ஊழியர்கள் தொடர்ந்து 7 வருடங்களுக்குப் பிஎப் கணக்கினை நிர்வகித்து இருக்க வேண்டும்.\nமாத சம்பளம் பெறுவோரின் சம்பளத்தில் பெருமளவிலான தொகை ஒவ்வொரு மாதமும் EPF-க்குச் செல்லும் நிலையில், மத்திய அரசு ஒவ்வொரு வருடமும் ஈபிஎப் கணக்கில் இருக்கும் தொகைக்கு வட்டி வருமானத்தை அளிக்கும். அதன்படி 2020-2021 நிதியாண்டுக்கான காலகட்டத்திற்கு 8.50 சதவீதம் வட்டி வருமானத்தை அளிக்க ஈபிஎப்ஓ அமைப்பு பரிந்துரை செய்துள்ளது. வங்கிகளின் FD க்கான வட்டியை ஒப்பிடும் போது இபிஎப் வட்டி அதிகமாகும்.\nவருமான வரியை சட்ட ரீதியாக எப்படி சேமிக்கலாம்\nஓய்வு காலத்தில் மாதம் ரூ.2 லட்சம் சம்பாதிக்க அருமையான திட்டம்\nஅன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் ��ிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.\nஉங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....\nபங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)\nமத்திய அரசின் அவசரகால கடன் திட்டத்தில் சுகாதாரத் துறையும் சேர்ப்பு\nவெறும் 95 ரூபாய் முதலீடு செய்தால் - ரூ. 14 லட்சம் கிடைக்கும்-முழு விபரம் உள்ளே\nகொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, முழு ஊரடங்கை அமல்படுத்த உச்ச நீதிமன்றம் பரிந்துரை\nகொப்பரை உற்பத்தி செய்ய நவீன இயந்திரம்: விவசாயிகள் மகிழ்ச்சி\n செய்ய வேண்டியவையும், செய்யக் கூடாதவையும்\nவிளைநிலங்களில் வீணாகும் தர்பூசணி பழங்கள்\nபூச்சிகளைப் புரிந்து கொள்(ல்)வோம்- காணொளி மூலம் பயிற்சி\nரூ.4000 கொரோனா நிவாரண நிதிவழங்கும் திட்டம் - நாளை ஸ்டாலின் முதல் கையெழுத்து\nவாடிக்கையாளர்களுக்கு புதியவகை டிசைனர் சிலிண்டரை அறிமுகம் செய்த IOCL\nஒரே நிமிடத்தில் cowin.gov.in தளத்தில் கொரோனா தடுப்பூசி பதிவு செய்வது எப்படி\nபருத்தியைத் தாக்கும் மாவுப்பூச்சிகளை எப்படி கட்டுப்படுத்தலாம்\nகொரோனாவைத் தடுக்கும் முயற்சியில், புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்\nஒன்றல்ல, இரண்டல்ல, ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள்\nதொற்றுநோய்களைத் தடுக்கும் ஊட்டச்சத்து அணுகுண்டு எது தெரியுமா\nமாடித்தோட்டத்திற்கு ஏற்ற மண் கலவை வகைகள் எவை\nவிவசாயிகள் நலன் கருதி சாகுபடி தொடர்பான சந்தேகம் ஏற்பட்டால் வேளாண் விஞ்ஞானிகளை அணுகலாம்: தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/eight-asiatic-lions-tested-positive-for-covid-at-hyderabad-nehru-zoological-park/articleshow/82392891.cms?t=1", "date_download": "2021-05-07T01:32:20Z", "digest": "sha1:OCMXEVBEB7IWPJMS53YYAKAMDWP3SRT6", "length": 10990, "nlines": 127, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "lions covid: சிங்கங்களுக்கு கொரோனா உறுதி.. அதிகாரிகள் ஷாக்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nசிங்கங்களுக்கு கொரோனா உறுதி.. அதிகாரிகள் ஷாக்\nஹைதராபாத் நேரு உயிரியல் பூங்காவில் உள்ள சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.\nஹைதராபாத் உயிரியல் பூங்காவில் பரபரப்பு\nஇந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை மோசமான தாக்கத்தை ஏற்படுத்த��� வருகிறது. தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3.50 லட்சத்தை தாண்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 3500 பேர் இறந்துள்ளனர்.\nஇந்நிலையில், எட்டு சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி, ஹைதராபாத்தில் உள்ள நேரு உயிரியல் பூங்காவை சேர்ந்த எட்டு ஆசிய சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக கூறப்படுகிறது.\nநேரு உயிரியல் பூங்காவை சேர்ந்த சிங்கங்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் எட்டு சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து உயிரியல் பூங்காவுக்குள் பொதுமக்கள் வர தடை விதிக்கப்ப்பட்டுள்ளது.\nகடுமையான ஊரடங்கு வேணும்.. எய்ம்ஸ் இயக்குநர் அட்வைஸ்\nசிங்கங்களுக்கு பசியின்மை, இருமல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டுள்ளது. இதையடுத்து சிங்கங்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பூங்கா ஊழியர்களிடம் இருந்து சிங்கங்களுக்கு கொரோனா பரவியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nகடுமையான ஊரடங்கு வேணும்.. எய்ம்ஸ் இயக்குநர் அட்வைஸ்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nஹைதராபாத் நேரு உயிரியல் பூங்கா சிங்கம் கொரோனா Nehru Zoological Park lions covid hyderabad covid\nதமிழ்நாடுநிதித்துறைக்கு ஸ்டாலின் சாய்ஸ் பழனிவேல் தியாகராஜன்: ஏன் தெரியுமா\nகல்வி செய்திகள்உங்க குழந்தையின் கவன சக்தியை அதிகரிக்க உதவும் TALi App\nசினிமா செய்திகள்குட் நியூஸ் வந்தாச்சு: நல்ல வேளை, ரஜினி பயந்தது மாதிரி எதுவும் நடக்கல\nகரூர்செந்தில் பாலாஜி... போக்குவரத்து அமைச்சர் டூ மின்சார துறை அமைச்சர்\nசெய்திகள்கொரோனாவிடம் இருந்து 2வது முறையாக தப்பினேன்.. குக் வித் கோமாளி அஸ்வின்\nவணிகச் செய்திகள்கடன் வாங்கியோருக்கு இன்னொரு வாய்ப்பு... சலுகையைப் பயன்படுத்துவது எப்படி\nதமிழ்நாடுஅண்ணே மறக்காம வந்திருங்க: ஸ்டாலின் பதவியேற்புக்கு அழகிரிக்கு அழைப்பு\nவிருதுநகர்35 முதல் 45 வயதினர் 10 பேர் அடுத்தடுத்​து மர்மச் சாவு: விருதுநகர் கிராமத்தில் அதிர்ச்சி சம்பவம்\nசெய்திகள்உதயநிதி ஸ்டாலினை சந்தித்த பிக் பாஸ் ஆரி: இணையத்தில் வைரலாகும் போட்டோ\nஅழகுக் குறிப்புகூந்தலுக்கு நன்மை செய்யும் ஆரஞ்சு தோல் பொடி ஹேர் மாஸ்க், எப்படி பயன்படுத்துவது\nடிரெண்டிங்கொரோனா காரணத்தால் திருமணத்தில் மணமகன், மணமகள் செய்த விசித்திர விஷயம்\nவீட்டு மருத்துவம்மூக்கு காய்ந்து வறண்ட நிலையில் இருந்தால் இந்த கை வைத்தியம் ட்ரை பண்ணுங்க\nடெக் நியூஸ்May 2021-இல் இந்தியாவிற்கு வரும் 7 புது ஸ்மார்ட் போன்கள்; இதோ லிஸ்ட்\nபொருத்தம்ஒரே நேரத்தில் பல பணிகளை செய்ய முடியாத ராசிகள்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinibitz.com/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D-10-%E0%AE%8E/", "date_download": "2021-05-07T01:48:48Z", "digest": "sha1:MCREWU3JUH5T7TCJEPN5K2ICLC7O2SRQ", "length": 11030, "nlines": 75, "source_domain": "www.tamilcinibitz.com", "title": "மைக்ரோசாப்ட் விண்டோஸ் 10 எக்ஸ் தயாரிப்பதால் பெரிய மாற்றங்கள் வரக்கூடும்", "raw_content": "முழுமையான செய்தி உலகம் உங்களுக்காக.\nமைக்ரோசாப்ட் விண்டோஸ் 10 எக்ஸ் தயாரிப்பதால் பெரிய மாற்றங்கள் வரக்கூடும்\nமைக்ரோசாப்ட் விண்டோஸ் 10 எக்ஸ் நிறுவனத்திற்கான அதன் திட்டங்களைப் பற்றி சிறிதளவே கூறவில்லை, அவை முதன்மை இரட்டை திரை சாதனங்களுக்காக அக்டோபர் 2019 இல் வெளியிடப்பட்டன. மே 2020 இல், மைக்ரோசாப்ட் ஆரம்பத்தில் 10x ஐ ஒரு திரை கொண்ட சாதனங்களுக்கு கொண்டு வருவதாக அறிவித்தது, மேலும் புதிய இயக்க முறைமை அவ்வாறு செய்யும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன பழைய பயன்பாடுகளை இயக்க மேகத்தின் சக்தியைப் பயன்படுத்துங்கள்.\nவிண்டோஸ் 10 எக்ஸ் என்பது விண்டோஸ் 10 இன் மாறுபாடாகும், இது மரபுக்கு பதிலாக நவீன கூறுகளைப் பயன்படுத்துகிறது மற்றும் நேரடி ஓடுகள் அல்லது பொருத்தமான கோப்பு எக்ஸ்ப்ளோரர் இல்லாத எளிய பயனர் இடைமுகத்தை வழங்குகிறது.\nவிண்டோஸ் 10 எக்ஸ் டிசம்பர் 2020 இல் நிறைவடைந்தது, இப்போது உற்பத்தியாளர்களிடம் செல்வதற்கு முன்பு திருத்தங்கள் அல்லது மேம்பாடுகளுடன் சேவை செய்யப்படுகிறது. மைக்ரோசாப்ட் தற்போது விண்டோஸ் 10 எக்ஸிற்கான பில்ட் 20280 ஐ சோதிக்கிறது, இது விண்டோஸ் 10 இரும்பு புதுப்பிப்பு “21 எச் 1” ஐ அடிப்படையாகக் கொண்டது.\nபில்ட் 20280 தரமான தரத்தை பூர்த்தி செய்தால், அத�� அடுத்த சில வாரங்களில் உற்பத்தியாளர்களுக்கு வெளியிடப்படும், மேலும் நிறுவனங்கள் புதிய இயக்க முறைமைக்காக தங்கள் இன்டெல் சாதனங்களை சோதிக்கத் தொடங்கும்.\nமைக்ரோசாப்ட் தற்போது விண்டோஸ் 10 எக்ஸ் வசந்த காலத்தில் 2021 (மார்ச் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில்) தொடங்க திட்டமிட்டுள்ளது. 2021 இன் பிற்பகுதியில் அல்லது 2022 இன் தொடக்கத்தில், மைக்ரோசாப்ட் விண்டோஸ் 10 எக்ஸ் க்கான முதல் பெரிய புதுப்பிப்பை சன் வேலி புதுப்பிப்பை மேம்படுத்துகிறது.\nவிண்டோஸ் 10X இல் பணிப்பட்டியில் மேம்பாடுகள்\nஉள் ஆவணங்களின்படி, விண்டோஸ் 10 எக்ஸ் பணிப்பட்டி செயல்படும் முறையையும் மாற்றக்கூடும்.\nவிண்டோஸ் 10 எக்ஸ்ஸில், கணினி தட்டு சின்னங்கள் இயல்பாகவே மையப்படுத்தப்படுகின்றன, விண்டோஸ் 10 க்கு மாறாக அவை இடது-சீரமைக்கப்படுகின்றன. பின் செய்யப்பட்ட பயன்பாடுகளுக்கு மேலதிகமாக, சமீபத்தில் தொடங்கப்பட்ட பயன்பாட்டை அண்ட்ராய்டு மற்றும் iOS போன்ற கணினி தட்டில் காண்பிக்கலாம்.\nகணினி தட்டில் “இயங்கும் வலைத்தளங்களை” காண்பிக்க முடியும் என்பதையும் மைக்ரோசாப்ட் கண்டுபிடித்தது, அவை முன்னணியில் அல்லது பின்னணியில் இருக்கலாம்.\nபயன்பாட்டின் பல நிகழ்வுகள் ஒரே குறியீட்டின் கீழ் தொகுக்கப்பட்டுள்ளன.\nபணிப்பட்டியின் கவனத்தை வெளிப்படுத்த புதிய அனிமேஷன்.\nநீட்டிக்கப்பட்ட உல்: நீங்கள் அதிகமான பயன்பாடுகளைத் திறக்கும்போது தொடக்க மெனு பணிப்பட்டியின் இடது பக்கத்திற்கு சீராக நகரும்.\nமூன்று வெவ்வேறு பணிப்பட்டி அளவுகள்: சிறிய, நடுத்தர மற்றும் பெரிய.\nசைகை: தொடக்க மெனுவைத் தொடங்க கணினி தட்டில் எங்கு வேண்டுமானாலும் ஸ்வைப் செய்யலாம்.\nREAD ப்ளெக்ஸ் விளையாட்டு சந்தா வணிகத்தில் நுழைகிறது\nஆத்திரமூட்டும் தாழ்மையான ஆய்வாளர். சான்றளிக்கப்பட்ட உணவு ஆர்வலர். காபி சுவிசேஷகர். சமூக ஊடகவியலாளர். டிவி விசிறி. உணர்ச்சிமிக்க வலை பஃப். இசை மேவன்.\nபேஸ்புக் ஒரு சிறப்பு செய்தி ஊட்டம் மற்றும் எளிமையான தளவமைப்புடன் பக்கங்களை மறுவடிவமைப்பு செய்கிறது\nமறுவடிவமைப்பு செய்யப்பட்ட பக்கங்கள் அனுபவத்தை அறிமுகப்படுத்தும் திட்டத்தை பேஸ்புக் அறிவித்துள்ளது. சமூக வலைப்பின்னலின் கூற்றுப்படி, புதிய...\nவிண்டோஸ் 10 எக்ஸ் லூமியா 950 எக்ஸ்எல்லில் நன்றாக இயங்குவதாக தெரிகிறது\nAndroid க்கா��� iOS 14 ஸ்மார்ட் ஸ்டேக் விட்ஜெட்டை எவ்வாறு பெறுவது\nசைபர்பங்க் 2077 ஹாட்ஃபிக்ஸ் 1.12 நிஜ வாழ்க்கையில் தீம்பொருள் தாக்குதல்களின் அபாயத்தை குறைக்க வேண்டும்\nPrevious articleஇது ஒரு பெரிய அவமானம், எனது மிகப்பெரிய செல்ல வெறுப்பாளர்களில் ஒருவர்: ஜஸ்டின் லாங்கர், இந்திய வீரர்கள் இனரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்பட்ட பின்னர், கிரிக்கெட் செய்தி\nNext articleஇன்று இரவு வானத்தில் வியாழன், புதன் மற்றும் சனி ஆகியவற்றின் அரிய இணைப்பை எவ்வாறு கண்டறிவது என்பது இங்கே.\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nசைபர்பங்க் 2077 டெவலப்பர் சிடி ப்ரெஜெக்ட் ரெட் வீடியோவில் மன்னிப்பு கேட்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vativamaippu.com/?D=32125&P=0", "date_download": "2021-05-07T01:33:13Z", "digest": "sha1:C2DYC4EUVC24HVB2JB7TPJMUVRHKGQKE", "length": 3630, "nlines": 54, "source_domain": "www.vativamaippu.com", "title": " Louvre ஒளி - வடிவமைப்பு இதழ்", "raw_content": "\nவிளக்கு பொருட்கள் மற்றும் லைட்டிங் திட்டங்கள் வடிவமைப்பு\nஇந்த வடிவமைப்பைப் பற்றி மேலும் அறிக\nThe Float ரியல் எஸ்டேட் நிறுவனம் வியாழன் 6 மே\nOr2 ஃபோட்டோக்ரோமிக் விதான அமைப்பு புதன் 5 மே\nEye of Ra' பொது நகர்ப்புற கலை தளபாடங்கள் செவ்வாய் 4 மே\nநீங்கள் ஒரு வடிவமைப்பாளர், கலைஞர், கட்டிடக் கலைஞர், புதுமைப்பித்தன் அல்லது பிராண்ட் மேலாளரா பகிர்வதற்கு உங்களிடம் ஏதேனும் நல்ல வடிவமைப்புகள் உள்ளதா பகிர்வதற்கு உங்களிடம் ஏதேனும் நல்ல வடிவமைப்புகள் உள்ளதா உலகளவில் வடிவமைப்பாளர்கள், கலைஞர்கள், கட்டட வடிவமைப்பாளர்கள், கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் பிராண்டுகளிலிருந்து அசல் மற்றும் ஆக்கபூர்வமான வடிவமைப்புகளை வெளியிடுவதில் நாங்கள் மிகவும் ஆர்வமாக உள்ளோம். உங்கள் வடிவமைப்புகளை இன்று வெளியிடவும்.\nஅன்றைய வடிவமைப்பு நேர்காணல் வியாழன் 6 மே\nஅன்றைய வடிவமைப்பு புராணக்கதை புதன் 5 மே\nஅன்றைய வடிவமைப்பு செவ்வாய் 4 மே\nஅன்றைய வடிவமைப்பாளர் திங்கள் 3 மே\nஅன்றைய வடிவமைப்பு குழு ஞாயிறு 2 மே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2017/12/15/makkal-athigaram-state-wide-demo-for-tn-fisherman-3/", "date_download": "2021-05-07T00:10:05Z", "digest": "sha1:4ZS6Z43WE5YFIX7VGMRJN3LEF3QOMJ2B", "length": 53338, "nlines": 250, "source_domain": "www.vinavu.com", "title": "மீனவர்களுக்கு நீதி வேண்டும் – புதுவை, கடலூர், வேதாரண்யம், திருச்சி ஆர்ப்பாட்டங்கள் ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nகொரோனாவில் மக்கள் செத்து கொண்டிருக்கிறார்கள் மூடு டாஸ்மாக்கை || மக்கள் அதிகாரம்\nகொரோனா பொருளாதார நெருக்கடியிலும் கார்ப்பரேட் வரிகளை தள்ளுபடி செய்த மோடி அரசு\nஸ்டெர்லைட்டை நிரந்தரமாக அகற்றுவோம் || மக்கள் அதிகாரம்\nஆபத்தான புதிய வகை கொரோனா : அறிவியலாளர் குழுவின் எச்சரிக்கையை புறக்கணித்த மோடி\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகொரோனா அவலத்தின் உச்சத்தில் மக்கள் அதிகாரத்தைப் பிடிக்கும் வெறியில் மோடி \nகொரோனா தடுப்பூசிகள் பற்றாக்குறை : யார் காரணம் \nஇந்தியாவின் தடுப்பூசி திட்டத்தில் என்ன தவறு ஏற்பட்டுள்ளது || தாமஸ் ஆபிரகாம் || நாகராசு\nகம்போடியா : நாட்டு மக்களின் நிலங்களை அபகரித்து சுற்றுச்சூழலை நாசம் செய்யும் அரசு\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகொரோனா காலத்தில் மன வலிமையை உயர்த்துவது எப்படி || மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nசுழலும் ஆட்சிப் பம்பரம் ஓர் நாள் வீழ்ந்தே தீரும் || தாமிரா\nகொரோனா கால இந்தியா : மோடியின் எரியும் பிணக்காடு || ராணா அய்யூப் ||…\nலெனினால் எப்படி ஒரு புரட்சியை சாதிக்க முடிந்தது \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nபெண்களுக்கு எதிரான அடக்குமுறையைக் காட்சிப்படுத்தும் “தி கிரேட் இந்தியன் கிச்சன்” || விஜயகணேஷ்\nஇதே நாள் (08 ஏப்ரல்) 1929-ல் பகத்சிங் பாராளுமன்றத்தில் குண்டுவீச���யது ஏன் \nமாணவர்கள் அரசியலில் பங்கெடுக்க வேண்டும் || தோழர் பகத்சிங்\nசென்னை பல்கலை : பாலியல் குற்றச்சாட்டு சுமத்திய மாணவி தற்கொலை முயற்சி – கைது…\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க விடமாட்டோம் || மக்கள் அதிகாரம் பாடல்\nகொரோனா தடுப்பூசிக்கான காப்புரிமையை ரத்து செய் || வீடியோ\nகொரோனா ஊரடங்கு என்பதே மோசடி || தோழர் வெற்றிவேல் செழியன்\nகொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏன் || தோழர்கள் மருது – சுரேசு சக்தி…\nஓட்டுப் போடுவதன் மூலம் பாசிசத்தை வீழ்த்த முடியாது\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nதமிழகம் முழுவதும் நடைபெற்ற தோழர் லெனின் 151-வது ஆண்டு பிறந்தநாள் விழா \nபுறவாசல் வழியாக ஸ்டெர்லைட்டை திறக்காதே || மக்கள் அதிகாரம்\nகொரோனா கால அடக்குமுறைகளுக்கு முடிவுகட்டுவோம் || தோழர் வெற்றிவேல் செழியன்\nகுமரி மாவட்டம் : சரக்கு பெட்டகத் துறைமுகத்திற்கு எதிராகப் போராட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஏப் 22 : லெனின் பிறந்த தினத்தில் ”புதிய தொழிலாளி” இணையதளம் உதயம் ||…\nவெற்றிகரமாக நடைபெற்ற ம.க.இ.க உறுப்பினர் கூட்டத்தின் தீர்மானங்கள் \nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஅகண்ட பாரதத்தில் ஆக்சிஜன் இல்லை எரியூட்ட இடமுமில்லை \nஇந்து ராஷ்டிரம் ஒரு பெருந்தொற்று || கருத்துப்படம்\nகொரோனா தடுப்பூசி : இந்திய மக்கள் மீது மோடி தொடுத்திருக்கும் போர் || கருத்துப்படம்\nவேண்டாம் ஸ்டெர்லைட் || கருத்துப்படம்\nமுகப்பு செய்தி மீனவர்களுக்கு நீதி வேண்டும் - புதுவை, கடலூர், வேதாரண்யம், திருச்சி ஆர்ப்பாட்டங்கள் \nமீனவர்களுக்கு நீதி வேண்டும் – புதுவை, கடலூர், வேதாரண்யம், திருச்சி ஆர்ப்பாட்டங்கள் \n“மீனவர்கள் துயரத்திற்கு நீதி வேண்டும் புயல் முன்னறிவிப்பு இல்லை ஆழ்கடல் மீனவர்களுக்கு தகவல் இல்லை புயலில் சிக்கிய மீனவர்களை உடனே காக்க வில்லை புயலில் சிக்கிய மீனவர்களை உடனே காக்க வில்லை இறந்த மீனவர்களின் உடலை மீட்கவில்லை இறந்த மீனவர்களின் உடலை மீட்கவில்லை அனைத்திலும் இந்த அரச��கள் தோல்வி அடைந்து நிற்கிறது. மீனவர்களின் துயரத்திற்கு மத்திய மாநில அரசுகள்தான் குற்றவாளிகள்… அனைத்திலும் இந்த அரசுகள் தோல்வி அடைந்து நிற்கிறது. மீனவர்களின் துயரத்திற்கு மத்திய மாநில அரசுகள்தான் குற்றவாளிகள்…” என்ற முழக்கங்களை முன் வைத்து 11-12-17 அன்று மாலை 5 மணி அளவில் புதுச்சேரி மாநிலம் மதகடிப்பட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nஇந்த ஆர்பாட்டத்திற்கு புதுச்சேரி மாநில மக்கள் அதிகாரத்தின் பொருளாளர் தோழர் சாந்தகுமார் அவர்கள் தலைமை தாங்கினார். மக்கள் அதிகாரத்தை சேர்ந்த தோழர் செல்வமுருகன், திராவிட விடுதலைகழகத்தின் விழுப்புரம் மாவட்ட தலைவர் தோழர் இளையரசன், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி புதுச்சேரி மாநில பொதுசெயலாளர் தோழர் லோகநாதன், மக்கள் அதிகாரத்தின் புதுச்சேரி மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் கலை ஆகியோர் கண்டன உரையாற்றினர்.\nஇந்த ஆர்ப்பாட்டத்தில் புயல் அறிவிப்பை முன்கூட்டியே சொல்லாத அரசு, ஆழ்கடலுக்கு ஆயிரக்கணக்கில் சென்ற மீனவர்களை பற்றி அக்கரை இல்லாது பொறுப்பற்றத் தனமாக இருந்த அரசு, புயலில் சிக்கிய மீனவர்களை முதல் நாள் 200 பேருதான் என்று சொன்ன அரசு, பிறகு மீனவர்கள் 2000 பேர் கடலுக்கு சென்றுள்ளார்கள் என்று சொன்ன பிறகும், மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமாரும், மத்திய அமைச்சர் பாஜக நிர்மலா சீதாராமனும் 2000 பேர் என்பது பொய் என்று சொன்னவர்கள் பின்பு 744 மீனவர்களை பத்திரமாக மீட்டு படகில் கொண்டு வருகிறோம் என்றார்கள். கடைசியில் ஜெயக்குமார் 2540 மீனவர்கள், 350 படகுகள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கிறார்.\nஇப்படி மாற்றி மாற்றி பொய் சொல்லி இன்று வரை ஒரு மீனவன் கூட இராணுவம் மீட்டு வீடு வந்து சேரவில்லை. மீனவர்களுக்கு முன் அறிவிப்பு தரவில்லை என்பது மட்டுமல்ல காப்பாற்றவும் துப்பில்லை. மக்களுக்கு நேர்மையாகவும் இருக்க வக்கில்லை. கடலில் செத்து மிதக்கும் மீனவனின் மரணத்திற்கு இந்த அரசும் ஆட்சியாளர்ககளும் தான் குற்றவாளிகள் .\nபதவி, அதிகாரம், முப்படை, ஊடகம், தகவல் தொடர்பு என மக்களுடைய வரிப்பணத்தில் இயங்கும் இந்த அரசு கட்டமைப்பும் இதில் அமர்ந்துக் கொண்டு தின்று கொழுக்கும் அதிகாரிகளும் ஆட்சியாளர்களும் அந்த மக்களையே காப்பாற்ற முடியவில்லை என்றால் அனைத்தையும் கலைச்சிட்டு விட்டுக்கு போக வேண��டியது தானே.\nஇந்த மக்களை ஆள்வதற்கு என்ன தகுதி இருக்கு உங்களுக்கு இந்த கொலை குற்றத்திற்கு யாரிடம் நீதி கேட்பது இந்த கொலை குற்றத்திற்கு யாரிடம் நீதி கேட்பது மாவட்ட கலெக்டர் இடம் கேட்கலாம் என்றால் மாவட்ட கலெக்டர் இடம் கேட்கலாம் என்றால் அவன் சாராயம் விக்கிறான், ஆற்று மணல் திருடுற, அரசு நிலங்களை பட்டாப் போட்டு விக்கிற திருடனா இருக்கான். முதல்வரிடம் கேட்கலாம் என்றால் மாநிலத்தையே விலை பேசி விக்கிற கொள்ளைக்காரனா இருக்கான். நீதிபதி இடம் போகலாம் என்றால் அவன் சாராயம் விக்கிறான், ஆற்று மணல் திருடுற, அரசு நிலங்களை பட்டாப் போட்டு விக்கிற திருடனா இருக்கான். முதல்வரிடம் கேட்கலாம் என்றால் மாநிலத்தையே விலை பேசி விக்கிற கொள்ளைக்காரனா இருக்கான். நீதிபதி இடம் போகலாம் என்றால் கட்டப் பஞ்சாயத்து செய்கிற கிரிமினலா இருக்கான். பிரதமரிடம் கேட்கலாம் என்றால் கட்டப் பஞ்சாயத்து செய்கிற கிரிமினலா இருக்கான். பிரதமரிடம் கேட்கலாம் என்றால் 2000 பேரை கொலை செய்த குற்றவாளியாக இருக்கான். ஜனநாயகத்திற்கு விரோதமாக இருக்கிற இந்த அரசிடம், மக்களுக்கு விரோதமாக இருக்கிற அரசிடம் நீதி எப்படி கிடைக்கும் 2000 பேரை கொலை செய்த குற்றவாளியாக இருக்கான். ஜனநாயகத்திற்கு விரோதமாக இருக்கிற இந்த அரசிடம், மக்களுக்கு விரோதமாக இருக்கிற அரசிடம் நீதி எப்படி கிடைக்கும் இந்த அரசுக்கு எதிராக போராடி, அரசிடம் நீதிக் கேட்டு மக்களுக்கு இதுவரை என்ன கிடைச்சுருக்கு\nவிவசாயம் செய்ய போனா விவசாயம் செய்ய இந்த அரசு விடுவதில்லை, தொழில் நடத்தலாம் என்றால் GST போட்டு தடுக்கிறான், அரசு வேலைக்கு போகலாம் என்றால் சம்பளம் கொடுக் மறுக்கிறான், தனியார் கம்பெனிக்கு வேலைக்கு போகலாம் என்றால் அடிமையாக இருக்க வேண்டி இருக்கு, கேட்க நாதியில்லை. மீன் பிடிக்க போகலாம் என்றால் நடுகடலிலே வச்சி கொல்றான். எங்க போறது\n என்பது தான் நம் முன்னே உள்ள கேள்வி. ஒரு கலெக்டருடைய அதிகாரம், நீதிபதியோட அதிகாரம், MLA மந்திரியோட அதிகாரம் நம்மை காப்பாற்றாத போது அந்த அதிகாரத்தை நாமே கையில் எடுத்து நம்மை காப்பற்றிக் கொள்வதை தவிர வேற என்ன வழியிருக்கு அது தான் மக்கள் அதிகாரம். மக்கள் அதிகாரத்திற்கு மாற்றாக வேற எந்த வழியும் இல்லை.\nஜல்லிக்கட்டு உரிமையை அவர்கள் அதிகாரம் நமக்கு கொடுக்��வில்லை. டாஸ்மாக்கை மூடுவதற்கு அவர்கள் அதிகாரம் நமக்கு ஒத்துழைக்கவில்லை. மாறாக அவர்களின் அதிகாரம் நமக்கு எதிராய் நின்றது, நம்மை அச்சுறுத்தியது. ஆனால் அந்த அதிகாரத்தை மக்களாகிய நாம் கையிலெடுத்த பிறகுதான் நமது கோரிக்கை வெற்றி பெற முடிந்தது. இது தான் மக்கள் அதிகாரம் .\nவாருங்கள், அனைத்து தரப்பு மக்களும் வாருங்கள் அதிகாரத்தை நம் கையில் எடுக்க. மக்களையும் நாட்டையும் காக்க என்று அறைகூவி இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசப்பட்டது. மக்கள் அனைவரும் நின்று கவனித்தார்கள்.\nவேதாரண்யம் பகுதி ஆறுகாட்டுத்துறை மீனவ பகுதியில் டிச, 10 2017 அன்று ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களையும், இறந்த மீனவர்களின் உடல்களையும் மீட்க கோரியும், மேலும் மீனவர்களுக்கு மழைக்கால தடைக்கான நிவாரண நிதி அளிக்கப்படாததை கண்டித்தும். கடந்த 3 ½ ஆண்டுகளாக சொசைட்டி கூட்டம் கூட்டாமல் 100 -க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்களுக்கு அரசால் ஒதுக்கப்படும் நிதிகளை சுருட்டிக்கொண்ட அதிகாரிகளை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.\nமத்திய மாநில அரசின் கையாலாகாத நிலையை கண்டித்து சொசைட்டிக்கு 4-ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி எனும் முழக்கத்தில் போஸ்டர் ஒட்டப்பட்டு, மனித உரிமை தினத்தில் மீனவர்களை மனிதனாக மதிக்காத நாட்டில் மனித உரிமை தினம் ஒரு கேடா என்று அப்பகுதி மக்கள் , மீனவ பாதுகாப்பு குழு மற்றும் மக்கள் அதிகாரம் சார்பில் கருப்புக்கொடி ஏந்தி 120 -க்கும் மேற்பட்ட கிராம இளைஞர், சிறுவர், பெண்கள் ஆகியோருடன் கிராமத்தின் உள்ளே அனைத்து தெரு மற்றும் அக்கிராம நாட்டாரு வீடு முன்பாகவும் பேரணியாக சென்றனார்.\nஇந்நிகழ்விற்கு மக்கள் அதிகாரம் தோழர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். வட்டார பொறுப்பாளர் தோழர் தனியரசு அரசின் நிலையை “எருமை மாட்டு தோல் அரசு. இது ஒருபோதும் மக்களுக்கு சேவை செய்யாது நமது அதிகாரத்தை கையிலெடுத்தால் மட்டும் தான் உரிமையை பெறமுடியும்” என உரையாற்றினார்.\nஅப்பகுதி மீனவ பெண்கள் இந்த போராட்டத்திற்கு பிறகு அரசு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால், அடுத்த கட்டமாக எந்தவிதமான போரட்டத்திற்கும் நாங்கள் தயாராக உள்ளோம் என எச்சரித்துள்ளனர்.\nமீனவ பாதுகாப்பு குழு ஒருங்கிணைப்பாளார் தேவி மற்றும் பழனிமுருகன் ஆகியோர் பத்திரிக்கைக்கு பேட்டி ��ளித்தனர். அப்போது “ஒட்டுமொத்தமாக தமிழகம் முழுவதும் மீனவர்களின் நிலை வாழ்வாதாரம் பறிபோகும் நிலையில் உள்ளது. இந்த அரசு உடனடியாக அனைத்து மீனவர்களின் பிரச்சினைக்கும் சரியான தீர்வு காண வேண்டும். தற்போது தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக மீனவர்களிடையே இந்த நாறிபோன அரசின் மீது ஒரு கோவத்தையும் கொந்தளிப்பையும் உருவாக்கியுள்ளது. இந்நிலையில் சரியான முடிவை எடுக்காவிட்டால் மிகப்பெரிய போராட்டத்தை அரசு சந்திக்க நேரிடும்” என்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.\nஇந்த போராட்டத்திற்கு பிறகு அப்பகுதி மீனவ பெண்கள் மிகுந்த உற்சாகத்துடனும் உறுதியுடனும் உள்ளோம். மீண்டும் அடுத்தடுத்த மக்கள் அதிகாரம் போராட்டங்களில் நாங்களும் கலந்து கொள்வோம் என்று கூறினர்.\n( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )\nகடந்த 29 -ம் தேதி கன்னியாகுமரியில் ஒக்கிப்புயலில் மாவட்டமே சிதைந்ததோடு மீனவர்களின் வாழ்க்கை அடியோடு சின்னாபின்னமானது, இந்நிலையில் ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றவர்கள் 30, 01, 02 தேதிகள் ஆகியும் வரவில்லையே என்ன நடந்திருக்குமோ, என்ற அச்சத்துடன் குமரி மீனவ குடும்பங்கள் கடலோர காவல்படையிடம் பலமுறை பேசியும் பலனில்லாததால் நூற்றுக்கணக்கானோர் 2 நாள், 3 நாள் ஆகியும் கப்பற்படை போகாததால் சோறு, தண்ணிரின்றி இரவு பகல் ஆழ்கடலிலேயே பிணமானார்கள்.\nசில நூற்றுக்கணக்கானவர்கள் கேரளா, கர்நாடகா, குஜராத் மாநிலம் மற்றும் சில தீவுகளில் ஒதுங்கினார்கள். கடற்படையின் இந்தக்கொடுஞ்செயலைக் கண்டித்தும், குமரி மாவட்டமே போர்களத்தில் குதித்தது. அரசை முடக்கியது. இந்நிலையில் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் கடந்த 11.12.2017 அன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டு கடலூர் மாவட்ட கடலோர மீனவ கிராமங்களில் பிரச்சாரம் மேற்கொண்டோம். கடலூர் தேவனாம்பட்டினம் சின்னுர், புதுப்பேட்டைப் பகுதிகளைச் சேர்ந்த 23 பேர் கரை திரும்பவில்லை. இத்தகவலை அறிந்த மக்கள் அதிகாரம் அமைப்பினர் தாழங்குடா, தேவனாம்பட்டினம், முதுநகர் பகுதிகள், சொத்திக்குப்பம், ராசாப்பேட்டைப் பகுதி இளைஞர்கள், பெண்களிடம் ஊர் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு பிரச்சாரம் செய்தோம்.\nஒரு பள்ளி மாணவன் தாக்கப்பட்டதால், பல்கலைக்கழகம் வரை போராட்டம் நடக்கும்போ���ு, குமரி மீனவர்களுக்காக நாம் ஏன் போராடக்கூடாது என்று கேள்வி எழுப்பினோம். இதன் விளைவாக மீனவப் பஞ்சாயத்துகளில் பேசப்பட்டது. சின்னப்பட்டினம், பெரியபட்டினம் மற்றும் கடலூர் முதுநகர் மக்களும் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் எனப்போராட ஆரம்பித்தனர். இந்த அனைத்துப் போராட்டங்களிலும் மக்கள் அதிகாரம் தோழர்கள் உதவினார்கள். இந்நிலையில் போராட்டம் தீவிரமடைவதைக் கண்ட போலீஸ் மக்கள் அதிகாரத்திற்கு மடடும் அனுமதி மறுத்தது. இதன்பின் கடலூர் பகுதி மக்கள் அதிகாரம் தோழர்கள் பேசி SP யைச் சந்தித்து போராடி அனுமதி வாங்கி 13.12.2017 அன்று மாலை 4.00 மணிக்கு தலைமை தபால் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nஇவ்வார்ப்பாட்டத்திற்கு மக்கள் அதிகாரம் தோழர். இராமலிங்கம் தலைமை தாங்கினார். அனைத்து பொது நல இயக்கங்கள் ஒருங்கிணைப்பாளர் குமார் அவர்கள், குமரியே சாவு வீடாக இருக்கும் போது 500 கோயில்களில் MGR -க்கு விழா, RK நகர் தேர்தல் தேவையா இந்த மத்திய, மாநில அயோக்கியர்களை செருப்பால் அடிக்கனும் என்றார்.\nமீனவர் விடுதலை வேங்கைகள் தோழர் கோ.வெங்கடேசன் பேசுகையில் மீனவர்களான எங்களுக்கு இப்புயல் மட்டுமல்ல இதுபோன்று கடலில் பல இடற்பாடுகளையும் எதிர்த்து வாழ்வது எங்கள் இயல்பு. ஆனால் இதில் இறப்பு அதிகமாவதற்கு காரணம் அரசுதான் எத்தனையோ அதிநவீன கருவிகளை வைத்துள்ள அரசு ஏன் காப்பாற்றவில்லை என்பதே கேள்வி எனவே அனைத்தையும் வைத்துக்கொண்டு காப்பாற்றாதா இந்த அரசே கொலைக்குற்றவாளி என்று சாடினார். இறுதியாக அவர் மக்கள் அதிகாரத்தில் அனைவரும் இணைந்து செயல்படவேண்டும் என்று கூறினார்.\nமக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் வழக்கறிஞர் செந்தில்குமார் பேசுகையில் “மிகப்பெரிய கப்பற்படை வைத்துள்ள அரசு, தன் நாட்டு மக்கள் கொடுந்துயரத்தில் சிக்கிக் கொண்ட போது அவர்களைக் காப்பாற்றவில்லை என்னும்போது, மக்கள் வரிப்பணத்தில் இவர்கள் சம்பளம் வாங்கிகொண்டு உயிர்வாழ நாம் ஏன் அனுமதிக்கவேண்டும்” என்று அம்பலப்படுத்தினார்.\nபுரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர் நடேசன் பேசுகையில் இலட்சக்கணக்கான போலீஸ் உள்ளது. பலதுறை போலீஸ் உள்ளார்கள். தொப்பிப்போட்ட போலீஸ், தொப்பி போடாத போலீஸ், யூனிபார்ம் போட்ட போலீஸ், யூனிபார்ம் போடாத போலீஸ் என நிறையபேர் உள்ளனர். இதில் எத்தனைப்ப���ர் போனீர்கள் மீனவர்களை காப்பாற்ற, கேட்டால் காவல் துறை உங்கள் நண்பன் என சொல்லறான். ஆனால் மீனவர்கள் தான் எங்கள் நண்பன். அந்த மீனவர்களை பாதுகாக்க புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, மக்களை திரட்டுவோம். மாணவர்கள், இளைஞர்களை திரட்டுவோம். நோட்டீஸ் கொடுப்போம். இன்றைய இளைஞர்கள் வருங்கால தலைவர்கள் என்ற சொல்லுவோம் அதில் என்ன தவறு இருக்கிறது. சுனாமி நேரத்தில் எந்த அதிகாரிகள் மக்களை காப்பாற்றினார்கள். மீனவர்கள் தான் மக்களை காப்பாற்றினார்கள்.\nகப்பற்படையை சேர்ந்த 30,000 அதிகாரிகள் இருக்கிறார்கள். மீனவர்களை காப்பாற்ற 30 அதிகாரிகள் கூட போகவில்லை. நேவி, அமைச்சர், லொட்டு லொசுக்குனு இருக்கிறிங்களே, இப்ப எங்கடா போனீங்க… டெங்குல போதிய மருத்துவம் இல்லாம மக்கள் இறந்தாங்க அப்ப இந்த அரசு தள்ளிநின்னு வேடிக்கை பார்த்தது. நீட்தேர்வுல மாணவி அனிதா இறந்தபோதும் இந்த அரசு தள்ளிநின்னு வேடிக்கை பார்த்தது. விவசாயிகள் கொத்துகொத்தாக தற்கொலைசெய்து இறந்தாங்க அப்பவும் இந்த அரசு தள்ளி நின்னு வேடிக்கைப்பார்த்தது. இப்ப நீங்க இங்க வந்து பதில் சொல்லனும். ஏதோ மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் நடத்திட்டாங்க. இதோடு இவங்க வேலை முடிச்சிச்சுன்னு நினைக்கறிங்க. மீனவ மக்கள் எங்க கூட இருக்காங்க. இந்த அரசுக்கு எதிராக” என பேசினார்.\nஅதன் பின் சிறப்புரையாற்றிய புதுவை மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம் தோழர் கலை பேசுகையில் 28.11.2017 அன்று புயல் வீசும் என்று வானிலை அறிக்கை தெரிவித்தது. 80-85 கி.மீ வரை காற்றுவீசக்கூடும் என்று கூறினார்கள்.\nமீனவர்கள் ஆழ்கடலுக்கு செல்ல வேண்டுமென்றோ குமரிமாவட்டத்திற்கென்று மீனவ மக்களுக்கென்று ஒக்கி புயல் பற்றிய எச்சரிக்கை அறிவிப்புகள் எதுவும் மீனவ மக்களுக்கென்று சொல்லப்படவில்லை.\nதமிழக அரசாங்கம் பலியானவர்கள் எண்ணிக்கைப்பற்றி துல்லியமான புள்ளிவிவரங்களை வழங்கவில்லை. 200 பேர்தான் கடலுக்குச் சென்றார்கள் என்றும் அதில் 100 பேரை மீட்டு கரைசேர்த்துவிட்டோம் என்றும் கூறினார்கள். ஆனால் உண்மையில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் 2000 பேர், என மீனவ மக்கள் தெரிவித்துள்ளனர். இப்படிப்பட்ட பேரிடர் நிகழ்கின்ற காலத்தில் மக்களை மீட்பதற்காக ஆண்டொன்றுக்கு 4,100 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. காணாமல் போன மீனவர்கள் வெறும் 200 பேர்��ான் என்று சொன்ன மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் 700 பேரை பத்திரமாக மீட்டுவருகிறோம் என்ற முரண்பட்ட தகவலை கூறினார். பிறகு 2000 மீனவர்களைக் கூட்டிக்கொண்டு வருகிறோம் என்று கூறினார். மக்களை ஏமாற்றுவதற்கே இவ்வாறு இந்த ஆளும் கட்சியினர் கூறுகின்றனர்.\nமோடி அரசின் பண மதிப்பு நீக்க நடவடிக்கை தொடர்பாக இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் நடுத்தர, சிறு குறு வியாபாரிகள் கடுமையாக பாதித்துவிட்டனர். உதாரணமாக சென்னை “பம்பலில்’ ஜவுளி வியாபாரியின் தாமோதரனின் குடும்பத்தை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டு இருக்கிறார். இதுபோலவே கந்துவட்டி கொடுமை, வங்கிகளில் மக்கள் சேமித்த தொகையை அவசரத்தேவைக்கு பயன்படுத்த முடியாத நிலையை மோடி அரசு உருவாக்கியிருக்கிறது.\nதிவாலாகும் தனியார் வங்கிகளை காப்பாற்றும் முயற்சியில் மோடி இறங்கியிருக்கிறார். 3500 கோடி வாராக்கடனை வசூலிக்க முடியாமல் திணறுகிறது. இதனால்தான் மக்கள் சேமிப்பில் கைவைக்கிறார்கள். விஜய் மல்லையாவிடம் 9000 கோடி வசூலிக்க இயலாமல் இருக்கின்றனர். மோடியின் ஆட்சியில்தான் விஜய்மல்லையா வெளிநாடு தப்பி சென்றான். காவல்துறை ஒரு ஏவல்துறையாக செயல்படுகிறது. இந்தக்கூட்டத்திற்கு நம்மை வீடியோ எடுக்கும் போலீஸ், விஜய் மல்லையாவை வீடியோ எடுப்பாறா. எல்லா துறைகளிலும் போராட்டம் நடக்கிறது. தனித்தனியாக போராடுவதால் மாற்று கிடைக்காது. எல்லோரும் சேர்ந்து போராடனும் உதாரணமாக மக்கள் டாஸ்மாக்கை எதிர்த்து போராடியது அதுதான் மக்கள் அதிகாரம்.\nதோழர்களுக்கு ஒன்றை குறிப்பிடுகிறோம். போராட்டத்திற்கு மைக்செட்டு வைத்து பேசுவதற்குதான் காவல்துறையிடம் அனுமதி கேட்கவேண்டும். பொது இடங்களில் நாம் பேசுவதற்கு அனுமதி தேவையில்லை. மணல்குவாரிகளில் 3 -அடிதான் மணல் எடுக்கவேண்டும் என்பது சட்டம். ஆனால் 300 அடி மணல் எடுக்கிறார்கள். இது பற்றி தாசில்தாரரிடம் விவாதித்தால் அவர் கூறுகிறார். 3 அடிதான் கொடுத்தேன் என்று பலமுறை 3 அடிதான் கொடுத்ததை கூறுகிறார்.\nஇந்த அரசியல் அமைப்பு தோத்து போச்சு, கையாலாகாததனத்தை காட்டுகிறது. நாங்கள் ஒன்றும் மக்கள் அதிகாரம் என்று கடமைக்கு பேர் வைத்து கொள்ளவில்லை. இரண்டு ஆண்டுகள் ஆய்வு செய்தபின்புதான் இந்த அரசுக் கட்டமைப்பு தோத்து போச்சு. மக்கள் தான் அதிக��ரம். அதிகாரத்தை மக்கள் கையில் எடுக்கவேண்டும் என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.\nதிருச்சி ஈ.வெ.ரா கல்லூரியில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பாக 13.12.17 புதன் கிழமை அன்று மீனவர்களைக் கொன்ற அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\n2000 -க்கும் மேற்பட்ட மீனவர்கள் புயலால் கடலில் தத்தளிக்கும் போது மோடி எடப்பாடி அரசுகள் கும்மாளம் போட்டதில் 13 நாட்கள் ஆயினும் இன்னமும் 1000 -க்கும் மேற்பட்ட மீனவர்களின் நிலை என்ன என்றே தெரியாமல் உள்ளது. இதை கண்டு கொள்ளாமல் RK நகரில் ஓட்டு கேட்கிறது எடப்பாடி அரசு. இதை கண்டித்து மீனவர் போராட்டத்திற்கு மாணவர்கள் நாம் முன் வர வேண்டும் என பு.மா.இ.மு தோழர் விஜய் விளக்கி பேசினார்.\nமேலும் பு.மா.இ.மு மாவட்ட செயலாளர் தோழர் மணிமாறன் மீனவர்கள் தொடர்ச்சியாக கடலில் இறங்கி போராடிக்கொண்டிருக்கிறார்கள்.அவர்களுக்கு ஆதரவாக நாமும் வீரியமாக களத்தில் இறங்கி போராட வேண்டும் என்றும் பேசினார்.\n( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )\nபுரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xavi.wordpress.com/2008/04/10/mobile/", "date_download": "2021-05-07T02:00:21Z", "digest": "sha1:6ERGNYUMFTQBUBAPCP7PEQM4XICKDNBJ", "length": 42323, "nlines": 961, "source_domain": "xavi.wordpress.com", "title": "கைபேசிக் கவிதைகள் |", "raw_content": "எழுத்து எனக்கு இளைப்பாறும் தளம் \n← பெண்களும், மன அழுத்தமும்.\nபொய்யைக் கண்டறிய சில வழிகள் \nகடந்து செல்கின்றனர் இளம் பெண்கள்.\nநெற்றியில் மஞ்சள் பொட்டு சூடும்\n← பெண்களும், மன அழுத்தமும்.\nபொய்யைக் கண்டறிய சில வழிகள் \n128 comments on “கைபேசிக் கவிதைகள்”\nகவிதை அருமை. நல்லா எழுதுறீங்க.. தொடரட்டும் உங்க படைப்புகள்\nநன்றி.. அடிக்கடி சோதிக்கறீங்க போல 🙂\nநன்றி நித்தி.. 🙂 அடிக்கடி வருகை தாருங்கள்.\nநன்றி சந்தோஷ், சக்தி & இளமதி 🙂\nகவிதைகளை மிகவும் ரசித்தேன். பாராட்டுக்கள்\nநன்றி கிரிஜா மணாளன். வருகைக்கும், கருத்துக்கும்…\n🙂 நன்றி பகிர்ந்து கொண்டமைக்கு\nநண்பர் அவர்களுக்கு ஒரு சிறந���த முயற்சி .சிந்திக்கும் வரிகள் .தமிழில் கவிதை வரிகளை அமைக்க நினைத்து ,சில ஆங்கில வார்த்தைகள் தவிர்க்க முடியாத சந்தர்ப்பத்தில் இங்கு தலைகாட்டினாலும் ,இதுபோன்ற கவிதைகளில் கலப்பு இல்லாமல் இருந்தால் .இன்னும் சுவை சேர்த்து இருக்கும் அனைவருக்கும் உங்களின் படைப்பு .,வாழ்த்துக்கள் நண்பரே\nநன்றி ஆனந்தன்…. ரொம்ப நாளைக்கு அப்புறம் வரீங்க… வருக…. வருக…\n“நெரிசல் பயணங்களில் செல்பேசிச் சிணுங்குகையில்\nகைபேசி தொடுகின்றன எல்லா கைகளும்..”\nயாமும் பெற்றேன் இந்த அனுபவத்தை\nகுட்டி குட்டியாய் அழகான கவிதைகள்\n//நெரிசல் பயணங்களில் செல்பேசிச் சிணுங்குகையில்\nகைபேசி தொடுகின்றன எல்லா கைகளும்..”\nயாமும் பெற்றேன் இந்த அனுபவத்தை\nகுட்டி குட்டியாய் அழகான கவிதைகள்…. வாழ்த்துகள்\nமிக்க நன்றி கவிதைக் காரரே…\nநன்றி ஷெரின், என்ன தேவை என சொல்லுங்கள்…\nநன்றி ராஜ் குமார் 🙂\nமிக்க நன்றி ஜாண் பிரிட்டோ 🙂\nநன்றி பழனி, வருகைக்கும், ரசிப்புக்கும் 🙂\nநமது அந்தரங்கத்தை தொலைத்து விட்டு தொல்லையை நெஞ்சோடு கட்டிக்கொண்டு அலைகிறோம் என சொல்லுங்கள்..\nஅருமையான புரிதல்களோடு “கவனித்து” சொல்லாடப்பட்ட சொற்களுடன் .. இனிமையான நினைவுகளை தந்தது உமது கவிதை.\nதொடரட்டும் உனது கவி பாணி…\n//நமது அந்தரங்கத்தை தொலைத்து விட்டு தொல்லையை நெஞ்சோடு கட்டிக்கொண்டு அலைகிறோம் என சொல்லுங்கள்..\nஅருமையான புரிதல்களோடு “கவனித்து” சொல்லாடப்பட்ட சொற்களுடன் .. இனிமையான நினைவுகளை தந்தது உமது கவிதை.\nதொடரட்டும் உனது கவி பாணி…\nமிக்க நன்றி நண்பரே 🙂 தொடர்ந்து வருகை தாருங்கள்.\nகாதலியின் கரம் பிடித்தவனை கால் கொண்டு எறிய\nகாதலை எதிர்பொர் சிலர் காரணமின்றி ஓடுவோர் பலர்\n-ராஜன் . ஜி டி என் கலை கல்லூரி\nஆண்களை மறந்து விட்டீரே தோழரே.\nகாதலியின் கரம் பிடித்தவனை கால் கொண்டு எறிய\nகாதலை எதிர்பொர் சிலர் காரணமின்றி ஓடுவோர் பலர்\n-ராஜன் . ஜி டி என் கலை\nமிக்க நன்றி கார்த்திகா… 🙂\nவருகைக்கும் கவிதைக்கும் நன்றி பெயரிலி…\nநன்றி சிவா.. விஜய் பிரீயா இருக்கும்போ ஹெல்ப் கேக்கறேன் 😉\nஆண்களை மறந்து விட்டீரே தோழரே.\nஆண்களைப் பற்றி எழுதுவதில் என்ன சுவாரஸ்யம் இருக்கிறது 😉\nவஞ்சப் புகழ்ச்சி அணியெல்லாம் ரொம்ப நல்லா படிச்சிருக்கீங்க போல, நீங்க தமிழ் டீச்சரா 😀\nயாரோ அப்படி கெளப்பி விட்டிருக்கா��்க போல .. நம்பாதீங்க 🙂\nஏனுங்க, மொபைலுக்கெல்லாமா ஆப்பரேட்டர் வைப்பாங்க…. 🙂\nபேரிடர் காலங்களில், பேரன்பு பகிர்தல்\nமரண இருளின் பள்ளத்தாக்கு – ஒளி தந்த இருளின் காலம் – கோவிட் பயணம்\nஇயேசு கேட்ட கேள்வி : இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 18 : மீட்டிங்\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 17 : எழுத்து முக்கியம்\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 16 : கம்யூனிகேஷன்\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் – 15 – மீண்டும்….\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 14 – கவனித்தல்\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் – மைக்ரோ கவனிப்பு\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 12 : பணியைப் பகிர்.\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 11 :\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 10 – அணி\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 9 – ரிஸ்க்\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 8 – சவால் & ஆபத்து\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 7 – பணியாளர் மேலாண்மை\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 6 : எப்போ முடிப்பீங்க \nவிவசாயம் காப்போம்; விவசாயி காப்போம்\nகுட்டிக் குட்டிக் காதல் கவிதைகள்\nகவிதை : வானத்துப் பறவை\nகைபேசி : வியப்பூட்டும் வளர்ச்சியும், ஆபத்தும்\nதன்னம்பிக்கை : கூடா நட்பு கூடாது \nபோதை :- வீழ்தலும், மீள்தலும்\nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\n1. ஆதி மனிதன் ஆதாம் \n இந்த வார்த்தையே நமது மன வெளிகளில் புன்னகை விதைகளைத் தூவும் வல்லமை படைத்தது. எத்தனை பெரிய சோகத்தின் அலைகள் நமது பாலை வெளிகளில் புரண்டு படுத்தாலும், ஒரு சின்னக் குழந்தையின் புன்னகைக் கைக்குட்டை கிடைத்தால் அந்த சோகம் புதையுண்டு போய்விடும். மழலைகளோடு விளையாடுகையில் மலைபோன்ற மன பாரங்கள் கூட பழுத்த இலை போல உதிர்த்து பறந […]\nபேரிடர் காலங்களில், பேரன்பு பகிர்தல்\nபேரிடர் காலங்களில், பேரன்பு பகிர்தல் பல குறியீடுகளை ஆதிகாலக் கிறிஸ்தவர்கள் பயன்படுத்தினார்கள். குறிப்பாக மீன் குறியீடு அந்தக் காலத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு குறியீடாய் இருந்தது. மீன் அடையாளம் வரையப்பட்ட இடங்களை ஆராதனை இடங்களாக ரகசியக் க���றிஸ்தவர்கள் புரிந்து கொண்டார்கள். அத்தகைய இடங்களில் அவர்கள் மறைந்திருந்து நற்செய்தியை அறிவித்தார்கள். பைபிள் […]\nமரண இருளின் பள்ளத்தாக்கு – ஒளி தந்த இருளின் காலம் – கோவிட் பயணம்\nமரணஇருளின்பள்ளத்தாக்கு ஒளி தந்த இருளின் காலம் – கோவிட் பயணம் * நிகழ்வுகளெல்லாம் இறைவனால் நமக்குத் தரப்படுகின்ற அனுபவப் பாடங்கள். சில அனுபவப் பாடங்கள் நம்மை விரக்தியில் எறியும். சில நம்மை குழப்பத்தில் உருட்டும். சில அனுபவங்கள் நம்மை புரியாமைக்குள் நடத்திச் செல்லும். ஆனால் ஒன்று மட்டும் யதார்த்தம், இறைமகன் இயேசுவின் கரம்பிடித்து நடப்பவர்களுக்கு எந்த ஒரு துயரத் […]\nஇயேசு கேட்ட கேள்வி : இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா\nஇவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா யோவான் 14 :9 இந்தக் கேள்வி புதுசா நாம கேள்விப்படுகிற கேள்வி அல்ல. அடிக்கடி நமது வாழ்க்கையில் நாம் சந்திக்கின்ற கேள்வி. “இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா யோவான் 14 :9 இந்தக் கேள்வி புதுசா நாம கேள்விப்படுகிற கேள்வி அல்ல. அடிக்கடி நமது வாழ்க்கையில் நாம் சந்திக்கின்ற கேள்வி. “இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா” ந்னு தூய தமிழ்ல கேள்விப்பட்டிருக்க மாட்டோம், ஆனா நம்முடைய உரையாடல்களில் எப்போதேனும் நிச்சயம் இந்தக் […]\nKristilla on கி.மு : நோவாவின் பேழை\nக.மோகன சுந்தரம் on சன்னலுக்கு வெளியே கவிதைகள்\nAnonymous on கிமு : சிம்சோன் – வியப்ப…\nAnonymous on வீதியில் நாய்கள், பீதியில்…\nSuma sheyalin on அப்பா என் உலகம்\nDev on தன்னம்பிக்கை : திடீர் பணக்காரன…\nSivaranjani on தன்னம்பிக்கை : திடீர் பணக்காரன…\nTamilBM on தன்னம்பிக்கை : கல்வியால் ஆய பய…\nkavithai kavithais love POEMS Tamil Kavithai tamil kavithais writer xavier xavier இலக்கியம் இளமை கவிதை கவிதைகள் காதல் சேவியர் சேவியர் கவிதைகள் தமிழ் இலக்கியம் தமிழ்க்கவிதை தமிழ்க்கவிதைகள் புதுக்கவிதை புதுக்கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/1024877/amp", "date_download": "2021-05-07T01:17:21Z", "digest": "sha1:LOPD5736XTV53RW45ZOUO7FI3UXSVCXN", "length": 9695, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "பழநி அருகே தீத்தடுப்பு விழிப்புணர்வு பயிற்சி | Dinakaran", "raw_content": "\nபழநி அருகே தீத்தடுப்பு விழிப்புணர்வு பயிற்சி\nபழநி, ஏப்.19: பழநி அருகே மானூரில் தீயணைப்புத்துறை சார்பில் தீத்தடுப்பு விழிப்புணர்வு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. பழநி அருகே மானூரில் தீத்தொண்டு நாள் வார விழாவையொட்டி பொதுமக்களுக்கு தீ பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கம், விழிப்புணர்வு நோட்டீஸ் விநியோகித்தல் மற்றும் செயல்முறை விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது. நிலைய அலுவலர் ஆண்டவராஜ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முறைகள், புகை சூழ்ந்து சிக்கி மயக்கம் அடைந்தவரை மீட்கும் முறைகள், வெள்ளத்தில் சிக்கியவரை மீட்கும் முறை, சிலிண்டர் தீ விபத்தில் செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை, தீ விபத்தில் காயமுற்ற நபரை மீட்கும் வழிகள், தீயணைப்பான் கருவிகளை பயன்படுத்தி தீயை அணைக்கும் முறைகள், தீயணைப்பானின் வகைகள், தீயின் வகைகள் உள்ளிட்டவை குறித்து எடுத்துரைக்கப்பட்டு, செயல்முறை பயிற்சி அளிக்கப்பட்டது. பொதுமக்கள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.\nகொடைக்கானல் கொடைக்கானல் தீயணைப்பு துறை சார்பில் அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு பயிற்சி வழங்கப்பட்டது. தீயணைப்பு துறை அலுவலர் அன்பழகன் தலைமையில் தீயணைப்பு துறை வீரர்கள் பயிற்சி அளித்தனர். கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டால் நோயாளிகளையும், பணியாளர்களையும், எவ்வாறு காப்பாற்றுவது என்பது பற்றிய பயிற்சியை அளித்தனர். இந்த பயிற்சியில் கொடைக்கானல் அரசு மருத்துவமனை டாக்டர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர் .\nதிருவாரூர் பைபாஸ் சாலை அருகே ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சேதமடைந்த நூலக சாலை\nஅறிவொளி இயக்கம் அழைப்பு பொறுப்பாளர்கள் போன் எண்கள்\nகலெக்டர் தகவல் வாசிப்பு பழக்கம் மூலம் செல்போன் சீர்கேடுகளில் இருந்து குழந்தைகளை மீட்டெடுக்க வேண்டும்\nதிருவாரூர் மாவட்டத்தில் மத்திய அரசின் ஆதார விலைத்திட்டத்தில் உளுந்து, பச்சைப்பயறு கொள்முதல்\nதிருவாரூர் நகரில் குழாய் சேதமடைந்து வீணாக குடிநீர் வெளியேறும் அவலம் சீரமைத்து பராமரிக்க மக்கள் கோரிக்கை\nலால்குடி வயல்காட்டில் ரத்த காயங்களுடன் பெண் சடலம் மீட்பு\nசிறுமியிடம் அத்து மீறல் சமையல் மாஸ்டர் கைது\nதிருவெறும்பூர் அருகே உப்பு லோடு லாரி கவிழ்ந்தது\nகுடியிருப்புகளுக்கு அருகே மது குடித்��தை கண்டித்த வாலிபருக்கு அடி உதை\nபேராவூரணி ஜமாஅத் அறிவிப்பு தென்னையை தாக்கும் தஞ்சை வாடல் நோயை கட்டுப்படுத்தும் வழிமுறை\nமுழு ஊரடங்கு தினத்தன்று இஸ்லாமியர் வீடுகளிலேயே நோன்புகால சிறப்பு தொழுகை\nபேராவூரணி நகரில்a ரூ.15 கோடியில் சாலை மேம்பாடு திட்டப்பணி திருக்காட்டுப்பள்ளி அருகே அரை குறையாக விடப்பட்ட தார் சாலை சீரமைப்பு\nஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலையத்தில் வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு ஒருங்கிணைந்த பண்ணைய பயிற்சி\nஅரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி\nதிருவையாறில் கணவரை காணவில்லை மனைவி போலீசில் புகார்\nபட்டப்பகலில் மர்மநபர்கள் துணிகரம் புதுக்கோட்டை அரசினர் பிற்படுத்தப்பட்டோர் மாணவியர் விடுதியை கொரோனா சிகிச்சை மையமாக மாற்றும் பணி\nபொன்னமராவதி பேருந்து நிலையத்தில் திமுக பிரமுகரின் கார் கண்ணாடியை உடைத்து ரூ. 4 லட்சம் கொள்ளை\nகொள்ளிடம் பகுதி ஆரம்ப சுகாதார நிலையங்களில் கிருமி நாசினி, முககவசம் தட்டுப்பாடு\nபாரம்பரியத்தை மீட்டெடுக்கும் வகையில் பனை ஓலையில் விதவிதமான பொருட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/kaali-venkat-about-his-character-in-mersal/", "date_download": "2021-05-06T23:56:31Z", "digest": "sha1:DBO37V6B4Y3JMBKIWA567L3G7LPZBUZQ", "length": 7355, "nlines": 91, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "மெர்சல் படத்தில் தனது கதாபாத்திரம் பற்றி காலி வெங்கட் ! - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் மெர்சல் படத்தில் தனது கதாபாத்திரம் பற்றி காலி வெங்கட் \nமெர்சல் படத்தில் தனது கதாபாத்திரம் பற்றி காலி வெங்கட் \n‘இறுதிச்சுற்று, மிருதன், கொடி’ எனப் பல படங்களில் காமெடி ரோலில் நடித்தவர் காளிவெங்கட். அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘மெர்சல்‘ படத்தில் இவர் நடித்திருக்கிறார் என்று கேள்விப்பட்டு அவரிடம் பேசினோம்.\n’’தற்போது ஜி.வி.பிரகாஷின் ஐங்கரன் படத்தில் நடித்திருக்கிறேன். முதல் முறையாக இந்தப் படத்தில் அவருடன் கைகோத்திருக்கிறேன். படம் முழுக்க அவருடன் வரும்படியான கதாபாத்திரம். இந்தப் படத்தில் எங்கள் காம்போ நன்றாகயிருக்கும். அதேபோல் ‘வேலைக்காரன்’ படத்தில் சிவகார்த்திகேயனுடன் நடித்திருக்கிறேன். இந்தப் படத்தில் என் கேரக்டர் காமெடியன் என்று சொல்லவிட முடியாது. அது படம் பார்க்கும்போது உங்களுக்கே புரியும்’’ என்றவரிடம் விஜய்யின் ‘மெர்சல்’ படத்தைப் பற்றிக் கேட்டோம்.\n’’அட்லியை எனக்கு ரொம்ப நாளாகவே தெரியும். அவரின் ‘தெறி’ படத்திலும் ஒரு ரோல் செய்திருப்பேன். அதனாலேயே, ‘மெர்சல்’ படத்திலும் ஒரு சின்ன ரோல் செய்திருக்கிறேன். ஆட்டோ டிரைவராக இந்தப் படத்தில் நடித்திருக்கிறேன். பெரிய ஸ்டார் நடிக்கும் படத்தில் ஒரு சின்ன சீனில் நடித்தாலும் நல்ல ரீச் கிடைக்கும். அதுவும் இது விஜய் சார் படம் வேற. அதனால்தான் நடித்தேன்” என்றவரிடம் காளிவெங்கட் ஹீரோவாக நடிப்பாரா என்றால், ‘’அப்படி ஒருகதை அமைந்தால் பண்ணலாம். ஆனால், அதையெல்லாம் தாண்டி நான் ஹீரோக்கான மெட்டீரியல் இல்லை. அது எனக்கே தெரியும்’’ என்று கலகலப்பாக முடித்தார் காளி வெங்கட்.\nPrevious articleமீண்டும் ஓவியா வீட்டிற்குள் சுஜா, ஜூலி, ஆர்த்தி மற்றும் சக்தி வெளியேற்றம்\nNext articleஅனிதா வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய விஜய்\n4 சிறுவர்கள் உட்பட அஸ்வின் குடும்பத்தில் 10 பேருக்கு கொரோனா தொற்று. (அவர் பயந்த மாதிரியே ஆகிடிச்சே)\nகுஷி பட ஜோதிகா போல ட்ரான்ஸ்பிரென்ட் உடையில் புதிய முல்லை நடத்திய போட்டோ ஷூட்.\nவரும் தேர்தலில் விஜய்யின் மக்கள் இயக்கம் எடப்பாடிக்கு ஆதரவா \nத்ரிஷா விலகியதால் சாமி 2-வில் இணைந்த முன்னணி நடிகை . யார் தெரியுமா.\nவாத்தி கம்மிங் பாடலுக்கு யாரும் இப்படி நடனமாடல- அசத்திய ஜெயம் ரவி பட நடிகை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://voiceofasia.co/%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2021-05-07T01:01:37Z", "digest": "sha1:HVPGTHINFSZU4IWGFTDILXGYOWRKEO7P", "length": 5383, "nlines": 55, "source_domain": "voiceofasia.co", "title": "மம்தா பானர்ஜி உடை குறித்து பா.ஜ., தலைவர் சர்ச்சை பேச்சு| Dinamalar", "raw_content": "\nமம்தா பானர்ஜி உடை குறித்து பா.ஜ., தலைவர் சர்ச்சை பேச்சு| Dinamalar\nமம்தா பானர்ஜி உடை குறித்து பா.ஜ., தலைவர் சர்ச்சை பேச்சு| Dinamalar\nகோல்கட்டா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை, ‘பெர்முடாஸ்’ அணிந்துகொள்ளுமாறு, மாநில பா.ஜ., தலைவர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.\nமேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, நாளை மறுநாள் துவங்கி, எட்டு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும், தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈ���ுபட்டு வருகின்றனர். மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, காலில் காயத்துடன், சக்கர நாற்காலியில் இருந்தவாறு, பிரசாரம் செய்து வருகிறார்.\nஇந்நிலையில், மம்தா குறித்து, மாநில பா.ஜ., தலைவர் திலிப் கோஷ் பேசியது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. நேற்று நடந்த பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது: மம்தா பானர்ஜி, காலில் கட்டு போட்டுக்கொண்டு, பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். தன் காலை, அனைவருக்கும் காட்டும் வகையில், அவர் புடவையை அணிந்து வருகிறார். இப்படி யாரும் புடவையை அணிந்து நான் பார்த்தது இல்லை.தன் கால்களை மக்களுக்கு காட்டவேண்டும் என்றால், அவர் எதற்கு புடவையை அணிகிறார் அதற்கு பதிலாக, அவர், ‘பெர்முடாஸ்’ எனப்படும் அரைக்கால் டிரவுசரை அணிந்துகொள்ளவேண்டியது தானே. இவ்வாறு அவர் கூறினார்.\nதிலிப் கோஷின் இந்த பேச்சுக்கு, திரிணமுல் காங்., கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். அக்கட்சியின் எம்.பி., மஹுவா மொய்த்ரா, டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளதாவது:மம்தா பானர்ஜி அவர்களை, பெர்முடாஸ் அணியுமாறு மேற்கு வங்க மாநில பா.ஜ., தலைவர் கூறி உள்ளார். வக்கிர எண்ணத்துடன் பேசும் இந்த குரங்குகள், மேற்கு வங்கத்தில் வெற்றிகொள்ளப்போகிறோம் என எண்ணுகின்றன.இவ்வாறு, அவர் குறிப்பிட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ttamil.com/2021/02/blog-post_10.html", "date_download": "2021-05-07T01:07:48Z", "digest": "sha1:INMW77YUA5IQ2DS34JG65GEQEBDPII6Z", "length": 19836, "nlines": 261, "source_domain": "www.ttamil.com", "title": "ரயில் எஞ்சின்கள் பற்றிய தகவல்கள்! ~ Theebam.com", "raw_content": "\nரயில் எஞ்சின்கள் பற்றிய தகவல்கள்\nநீண்ட தூரம் சவுகரியமான பயண அனுபவத்திற்கு ரயில்கள்தான் முதல் சாய்ஸ். தரை மார்க்கத்தில் அதிக பயணிகளை பாதுகாப்பாகவும், விரைவாகவும் கொண்டு சேர்ப்பதில் ரயில்கள் முக்கிய பங்காற்றி வருகின்றன. இந்த நிலையில், ஒரே நேரத்தில் அதிக பயணிகள் செல்வதற்கு வசதியான ரயில் பெட்டிகளை இழுத்துச் செல்வதற்காக ரயில்களில் பயன்படுத்தப்படும்\nநீராவி எஞ்சின்கள் மூலமாக ரயில்கள் இயக்கப்பட்ட காலம் மலையேறிவிட்டது. வெண்புகையை தள்ளிக் கொண்டு பயணிகளை கொண்டு சேர்த்துக் கொண்டிருந்த நீராவி ரயில் எஞ்சின்கள் போக்குவரத்தில் புதிய அத்தியாயம் படைத்தன.\nஇந்த நிலையில், ஒரு நீராவி ரயில் எஞ்சினை 45 நிமிடங்கள் இயக்குவதற்கு அரை டன் நிலக்���ரி தேவைப்படுமாம். நிலக்கரியை ரயில் எஞ்சின் உலையில் எடுத்து எடுத்து போடுவதற்காக கூடுதல் பணியாளர்களும் தேவைப்பட்டனர்.\nதற்போது டீசல் எஞ்சின்களும், மின்சார ரயில் எஞ்சின்களும் பயன்படுத்தப்படுகின்றன. பயன்பாட்டில் இருக்கும் பெரும்பாலான டீசல் எஞ்சின்கள் டீசல்- எலக்ட்ரிக் என்ற முறையில்தான் தொழில்நுட்பத்தில் இயங்குகின்றன. அதாவது, டீசல் ரயில் எஞ்சின்களில் உண்மையிலேயை ரயிலை இயக்குவது மின் மோட்டார்கள்தான்.\nஆம், டீசல் எஞ்சின் ஜெனரேட்டர் மூலமாக மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு அவை மின் மோட்டார்கள் மூலமாக சக்கரங்களை இயக்குகின்றன. எனவே, இவற்றை டீசல்- எலக்ட்ரிக் எஞ்சின் என்று குறிப்பிடுகின்றன. அதாவது, சொந்தமாக மின் உற்பத்தி நிலையத்தின் மூலமாக மின்சாரத்தை உற்பத்தி செய்து இயங்கும் திறன் பெற்றவை.\nடீசல் எஞ்சின்களின் சக்தி வெளிப்படுத்தும் திறனைவிட நேரடியாக மின்சாரத்தில் இயங்கும் ரயில் எஞ்சின்களின் சக்தியை வெளிப்படுத்தும் திறன் மிக அதிகம். எனவே, அதிவேக ரயில்களில் மின்சார ரயில் எஞ்சின்கள் பயன்படுத்தப்படுகின்றன.\nஉலகின் மிகப்பெரிய நீராவி ரயில் எஞ்சின் பிக் பாய் 4014 என்பதே. 345 டன் எடை கொண்ட இந்த ரயில் எஞ்சின் அதிகபட்சமாக 6,000 குதிரைசக்தி திறனை வெளிப்படுத்தும். உலகின் மிகவும் சக்திவாய்ந்த ரயில் எஞ்சின் ரஷ்யாவிடம் உள்ளது. அந்த மின்சார ரயில் எஞ்சின் அதிகபட்சமாக 18,000 குதிரைசக்தி திறனை வெளிப்படுத்தும்.\nபொதுவாக ரயில் எஞ்சின்கள் மிக அதிக எடை கொண்டதாக தயாரிக்கப்படுகின்றன. இதற்கு முக்கிய காரணம், தண்டவாளங்களில் சக்கரங்கள் வழுக்காமல் பெட்டிகளை இழுத்துச் செல்வதற்காகவே இவ்வாறு வடிவமைக்கப்படுகின்றன.\nஅதேபோன்று, ரயில் எஞ்சின்கள் அதிகபட்சமான வேகத்தில் திறன் கொண்டவையாக இருந்தாலும், தண்டவாளத்தின் தன்மையை பொறுத்து குறிப்பிட்ட வேகத்திற்கு மிகாமல் இயக்கப்படுகின்றன. மேலும், அதிவேகத்தில் ரயில் எஞ்சின்களை கட்டுப்படுத்துவதும் சிரமம் என்பதால் இடத்தை பொறுத்தும், தண்டவாளத்தின் உறுதித்தன்மையை பொறுத்தும் ரயில் வேகம் நிர்ணயிக்கப்படுகிறது.\nமலைப்பாங்கான இடங்கள், சரிவான நில அமைப்பு கொண்ட பகுதிகள், அதிக பெட்டிகள் இணைக்கப்பட்ட ரயில்களை முன்னால் ஒரு எஞ்சினும், பின்னால் இருந்து உந்தித் தள்��ுவதற்கு மற்றொரு எஞ்சினும் பயன்படுத்தப்படும்.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nசித்தர் சிந்திய முத்துக்களில் ........3/22\nஇவ்வாரம் வெளியான படங்களும் கதையின் சாரமும்...\nவாழ்க்கையில் சுய முன்னேற்றம் அடைவது எப்படி\nபகுதி/PART:03: இறப்பும் தமிழரின் நம்பிக்கைகளும்:\nஎம் கண்களும் , தொடுதிரையும், கொரோனாவும்- ஒரு கண் வ...\nரயில் எஞ்சின்கள் பற்றிய தகவல்கள்\nசித்தர் சிந்திய முத்துக்கள் ...04/21\nகவிஒளி:எந்தை அவள் .............{கந்தையா தில்லைவிநா...\nதிரைக்கு பெப்ரவரியில் வந்த/வரவிருக்கும் திரைப்படங்கள்\nஅதென்னங்க டி என் ஏ /[பகுதி - 2]\n03 ஈழத்து பாடலும் இளையோர் நடனமும்\nதிருமண வாழ்வைக் கெடுக்கும் விஷயங்கள்\nசித்தர் சிந்திய முத்துக்களில் ........3/20\nகவி:சொர்க்கம் போக ஆசை பட்டேன்\nஅதென்னங்க (DNA) டி என் ஏ\n[பகுதி:01] இறப்பும் தமிழரின் நம்பிக்கைகளும்:-\nதொண்டை வலிகள் ஏன், ஆன்ரிபயோரிக் மருந்துகள் எப்போது...\nசித்தர் சிந்திய முத்துக்களில் ...3/19\n\"ஓங்கார நாதமாய் நெஞ்சை நிறைத்தாய்\"\nதொழில்நுட்பம் -வளர்ச்சி- இரண்டு முகங்கள்\nசித்தர் சிந்திய முத்துக்கள் மூன்று / 18\nவாழ்க்கைப் பயணத்தில் ...வருடல்கள் /பகுதி:04\nதிரையில் -வந்ததும் ,வர இருப்பதுவும்....\nதன்னம்பிக்கை : பென்சில்போல் வாழ்ந்தால் ....\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nதுவரம் பருப்புகளை சாப்பிடுவதால் தீரும் நோய்கள் என்ன தெரியுமா\nஉலகெங்கிலும் ஏராளமான பருப்பு வகை பயிர்கள் மனிதர்கள் உண்பதற்காக பயிரிடப்பட்டு வளர்க்கப்படுகின்றன. இந்தப் பருப்புகள் அனைத்துமே நமது உடல...\n🗺→ இன்றைய செய்திகள்- Tamil News Today\n💢💢💢💢💢💢💢 💢💢💢💢💢💢💢 முதலில் தலைப்பு செய்திகள்- 🎌மத்தள சர்வதேச விமான நிலையம் ,சுற்றுலா மையமாக மாறுகிறது 🎌...\nமனைவியை மீட்க மன்றாடிய கடவுள்\nஇராவணன் என்ற தீயவனிடமிருந்து தனது மனைவியை மீட்க அனைத்து ஆற்றலும் கைவரப்பெற்ற மனிதக் கடவுள் இராமன், ஹனுமான் என்ற குரங்குக்கடவுளிடம் கை...\nநடிகர் பிரஷாந்த் திரையில் காணாமல் போனதற்கு காரணம் என்ன\nநடிகர் பிரஷாந்த் தன் சக கால நடிகர்களான விஜய் , அஜித்தை விட தனி திறமைகள் அதிகம் கொண்டிருந்தும் , வேறு யாருக்கும் வாய்க்காத மி...\nவாழ்க்கைப் பயணத்தில் ...வருடல்கள் /பகுதி:04\nகதையாக..... [ஆரம்பத்திலிருந்து வாசிக்க கீழே செல்லுங்கள்] 👉 [பகுதி: 04] 👉 வருடங்கள் பல எப்படி ஓடியது என்று தெரியவில்லை. அதற்குள் என் குடும...\nசங்க கால இலக்கிய காதலர்கள்: ஆதிமந்தி-ஆட்டனத்தி\"-[ஆக்கம்:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]\nஉலகப் புகழ் பெற்ற காதலர்கள் ரோமியோ-ஜூலியட், சகுந்தலை-துஷ்யந்தன், லைலா-மஜ்னூன், மும்தாஜ்-ஷாஜஹான், கிளியோபட்ரா-மார்க்ஆண்டனி, அம்பிகாபதி-அ...\nகண்ணதாசன்-ஒரு கவிப்பேரரசு வரலாறு [இன்று நினைவுதினம்]\nகண்ணதாசன் ( ஜூன் 24 1927 – அக்டோபர் 17 1981 ) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார் . நான்காயிர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xavi.wordpress.com/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-05-07T01:33:38Z", "digest": "sha1:OQN752IZMS6OBFAG6UQ6JCMBXPUCCM3X", "length": 53799, "nlines": 1064, "source_domain": "xavi.wordpress.com", "title": "தமிழ்க்கவிதைகள் |", "raw_content": "எழுத்து எனக்கு இளைப்பாறும் தளம் \nBy சேவியர் • Posted in Poem-General, TAMIL POEMS\t• Tagged அற்புதமான கவிதைகள், இலக்கியக் கவிதைகள், சேவியர், தமிழ்க்கவிதைகள், நல்ல தமிழ்க்கவிதைகள், புதிய கவிதைகள், புதுக்கவிதைகள், மீம்ஸ், மீம்ஸ் கவிதை\nகுழந்தைகளுக்கு ஒரு ஆசிரியரின் கவிதை\nமாலை சூடிக் கொள்ளும் தினம்\nவளரும் வரைக்கும் விலக்கியே வையுங்கள்.\n‘மணி என்னாச்சு’ என்று கேட்டு\nநண்பன் என்னும் ஒற்றை வார்த்தைக்குள்\nதூண்டில் நுனியில் மண்புழு சொருகி\nஅணில் மேல் கோடு வரைந்தது யாரென்று\nவிவாதம் செய்யும் பொழுதுகள் வரை\nஎன் விரல் தொட்டே நடந்தவன்.\nமுகம் இறுக்கி கரம் முறுக்கி\nஇருட்டுக்குள் தடுக்கி விழுந்த நிழலாய்\nநட்பு நுனி தொலைந்தே போயிற்று.\nஒரு படி கீழே இறங்கி\nஒரு மாடி உயரம் அவன் இறங்கியிருப்பான்.\nபாழாய்ப்போன இந்த வறட்டுக் கொரவம்.\nஎன் நினைவுகளிடையே ப���றிட்டுக் கிளம்பும்\nஅவனோடு ஒருமுறை பறந்திருக்கக் கூடும்.\nமரணம் அவனைச் சந்திக்கும் முன்\nBy சேவியர் • Posted in கவிதைகள், Poem-Friendship, POEMS, TAMIL POEMS\t• Tagged இலக்கியம், கவிதை, தமிழ்க்கவிதைகள், நட்பு, நட்புக் கவிதைகள், writerxavier, xavier\nஎன் விரல்களை விட வேகமாய்\nஎன் இமை இடிக்கும் போது\nBy சேவியர் • Posted in கவிதைகள், Poem-Friendship, POEMS, TAMIL POEMS\t• Tagged இலக்கியம், கவிதை, தமிழ்க்கவிதைகள், நட்பு, நட்புக் கவிதைகள், writerxavier\nஉனக்கும் எனக்கும் ஒரே வயது\nஇருப்பது கூட ஒரே மனது தான்.\nநான் எழுதி முடிக்கும் கவிதைகளை\nமுதல் வரி எழுதும் போதே முடிவெடுப்பேன்.\nசிலந்தி வலைகளில் சிக்கிக் கொள்ளாத\nஇல்லை என்று நாம் சொன்னதற்கு\nஆம் என்ற அர்த்தம் இருந்ததில்லை.\nபொருள் குற்றங்கள் புரிந்ததில்லை நாம்.\nநட்பின் பருவ மழை பொய்த்ததில்ல.\nநம் எந்தக் கரையையும் கரைக்கவுமில்லை.\nகாலை வணக்கம் சொல்லித் துவங்கும்\nஇரவு வணக்கம் நீ சொன்ன பின்பு தான்\nமெல்ல மெல்ல மறையத் துவங்கும்.\nகாதலுக்குள் வலி கலந்தே இருக்கிறது.\nநட்பின் கடைசி நிலை காதல் தானாம்.\nகடைசி நிலையே வேண்டாமென்று தான்\nஓடு பாதை விட்டுக் கொஞ்சம்\nநடந்து முடிந்த நிமிடம் வேறு,\nஆயுள் நீளம் வரை அகலாதிருக்கட்டும்.\nBy சேவியர் • Posted in கவிதைகள், Poem-Friendship, POEMS, TAMIL POEMS\t• Tagged இலக்கியம், கவிதை, தமிழ்க்கவிதைகள், நட்பு, நட்புக் கவிதைகள்\nகாதல் ஓர் காட்டு மலர்\nBy சேவியர் • Posted in கவிதைகள், TAMIL POEMS\t• Tagged கவிதைகள், காதல், காதல் கவிதைகள், சேவியர், தமிழ்க்கவிதைகள், லவ்\nகவிதை எழுதக் காகிதம் எடுத்தால்\nBy சேவியர் • Posted in கவிதைகள், Poem-Love, POEMS, TAMIL POEMS\t• Tagged கவிதைகள், காதல், காதல் கவிதைகள், சேவியர், தமிழ்க்கவிதைகள், லவ்\nஊமைப் படமாய் உருவங்கள் நகரும்.\nBy சேவியர் • Posted in கவிதைகள், Poem-Love, POEMS, TAMIL POEMS\t• Tagged இலக்கியம், கவிதை, கவிதைகள், காதல், காதல் கவிதைகள், சேவியர், சேவியர் கவிதைகள், தமிழ்க்கவிதை, தமிழ்க்கவிதைகள், புதுக்கவிதை, லவ், kaathal kavithai, love, love kavithai, Tamil Kavithai, tamilkavithai, xavier\nபேரிடர் காலங்களில், பேரன்பு பகிர்தல்\nமரண இருளின் பள்ளத்தாக்கு – ஒளி தந்த இருளின் காலம் – கோவிட் பயணம்\nஇயேசு கேட்ட கேள்வி : இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 18 : மீட்டிங்\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 17 : எழுத்து முக்கியம்\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 16 : கம்யூனிகேஷன்\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் – 15 – மீண்டும்….\nபுர��ஜக்ட் மேனேஜ்மெண்ட் 14 – கவனித்தல்\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் – மைக்ரோ கவனிப்பு\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 12 : பணியைப் பகிர்.\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 11 :\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 10 – அணி\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 9 – ரிஸ்க்\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 8 – சவால் & ஆபத்து\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 7 – பணியாளர் மேலாண்மை\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 6 : எப்போ முடிப்பீங்க \nவிவசாயம் காப்போம்; விவசாயி காப்போம்\nகுட்டிக் குட்டிக் காதல் கவிதைகள்\nகவிதை : வானத்துப் பறவை\nகைபேசி : வியப்பூட்டும் வளர்ச்சியும், ஆபத்தும்\nதன்னம்பிக்கை : கூடா நட்பு கூடாது \nபோதை :- வீழ்தலும், மீள்தலும்\nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\n1. ஆதி மனிதன் ஆதாம் \n இந்த வார்த்தையே நமது மன வெளிகளில் புன்னகை விதைகளைத் தூவும் வல்லமை படைத்தது. எத்தனை பெரிய சோகத்தின் அலைகள் நமது பாலை வெளிகளில் புரண்டு படுத்தாலும், ஒரு சின்னக் குழந்தையின் புன்னகைக் கைக்குட்டை கிடைத்தால் அந்த சோகம் புதையுண்டு போய்விடும். மழலைகளோடு விளையாடுகையில் மலைபோன்ற மன பாரங்கள் கூட பழுத்த இலை போல உதிர்த்து பறந […]\nபேரிடர் காலங்களில், பேரன்பு பகிர்தல்\nபேரிடர் காலங்களில், பேரன்பு பகிர்தல் பல குறியீடுகளை ஆதிகாலக் கிறிஸ்தவர்கள் பயன்படுத்தினார்கள். குறிப்பாக மீன் குறியீடு அந்தக் காலத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு குறியீடாய் இருந்தது. மீன் அடையாளம் வரையப்பட்ட இடங்களை ஆராதனை இடங்களாக ரகசியக் கிறிஸ்தவர்கள் புரிந்து கொண்டார்கள். அத்தகைய இடங்களில் அவர்கள் மறைந்திருந்து நற்செய்தியை அறிவித்தார்கள். பைபிள் […]\nமரண இருளின் பள்ளத்தாக்கு – ஒளி தந்த இருளின் காலம் – கோவிட் பயணம்\nமரணஇருளின்பள்ளத்தாக்கு ஒளி தந்த இருளின் காலம் – கோவிட் பயணம் * நிகழ்வுகளெல்லாம் இறைவனால் நமக்குத் தரப்படுகின்ற அனுபவப் பாடங்கள். சில அனுபவப் பாடங்கள் நம்மை விரக்தியில் எறியும். சில நம்மை குழப்பத்தில் உருட்டும். சில அனுபவங்கள் நம்மை புரியாமைக்குள�� நடத்திச் செல்லும். ஆனால் ஒன்று மட்டும் யதார்த்தம், இறைமகன் இயேசுவின் கரம்பிடித்து நடப்பவர்களுக்கு எந்த ஒரு துயரத் […]\nஇயேசு கேட்ட கேள்வி : இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா\nஇவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா யோவான் 14 :9 இந்தக் கேள்வி புதுசா நாம கேள்விப்படுகிற கேள்வி அல்ல. அடிக்கடி நமது வாழ்க்கையில் நாம் சந்திக்கின்ற கேள்வி. “இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா யோவான் 14 :9 இந்தக் கேள்வி புதுசா நாம கேள்விப்படுகிற கேள்வி அல்ல. அடிக்கடி நமது வாழ்க்கையில் நாம் சந்திக்கின்ற கேள்வி. “இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா” ந்னு தூய தமிழ்ல கேள்விப்பட்டிருக்க மாட்டோம், ஆனா நம்முடைய உரையாடல்களில் எப்போதேனும் நிச்சயம் இந்தக் […]\nKristilla on கி.மு : நோவாவின் பேழை\nக.மோகன சுந்தரம் on சன்னலுக்கு வெளியே கவிதைகள்\nAnonymous on கிமு : சிம்சோன் – வியப்ப…\nAnonymous on வீதியில் நாய்கள், பீதியில்…\nSuma sheyalin on அப்பா என் உலகம்\nDev on தன்னம்பிக்கை : திடீர் பணக்காரன…\nSivaranjani on தன்னம்பிக்கை : திடீர் பணக்காரன…\nTamilBM on தன்னம்பிக்கை : கல்வியால் ஆய பய…\nkavithai kavithais love POEMS Tamil Kavithai tamil kavithais writer xavier xavier இலக்கியம் இளமை கவிதை கவிதைகள் காதல் சேவியர் சேவியர் கவிதைகள் தமிழ் இலக்கியம் தமிழ்க்கவிதை தமிழ்க்கவிதைகள் புதுக்கவிதை புதுக்கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Central%20Passage%20Station", "date_download": "2021-05-07T01:18:34Z", "digest": "sha1:NJNQX4BEXS4VGPPZIHXMNE2KAALTE7WY", "length": 5304, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Central Passage Station | Dinakaran\"", "raw_content": "\nசென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்லும் வடமாநில தொழிலாளர்கள்\nமத்திய பஸ் நிலையத்தில் மீண்டும் ஆக்கிரமிப்பு\nமத்திய பஸ்நிலையத்தில் பயணிகள் தவிப்பு ரங்கம் ரங்கநாதர் கோயிலில் ரூ.71.56 லட்சம் காணிக்கை வசூல்\nபுதுவை சட்டத்தை திருத்துகிறது மத்திய அரசு நமச்சிவாயத்துக்கு துணை முதல்வர் பதவி: அமைச்சர்கள் பட்டியல் தயாராகிறது\nமத்திய அரசு ஊழியர்களுக்கான கூடுதல் அகவிலைப்படி நிறுத்தம்\nதன்பாத்-ஆலப்புழா ரயில் சென்ட்ரலில் நிற்காது\nபோலீசார் அதிரடி உர விலையை மத்திய அரசே நிர்ணயி��்க கோரி கோணிப்பையை சட்டைபோல் அணிந்து வந்து விவசாயிகள் மனு\n: மதுரை மத்திய சிறையில் கைதிகளை சந்திக்க உறவினர்களுக்கு அனுமதி மறுப்பு..\nமதுரை விமான நிலையத்தில் வசதிகளை மேம்படுத்தக் கோரிய வழக்கில் மத்திய விமான போக்குவரத்துத்துறை பதில் தர ஆணை\nகோனேரிப்பட்டி கதவணை நிலையத்தில் பராமரிப்பு பணிக்காக தண்ணீர் வெளியேற்றம் பாறை திட்டுகளாக மாறிய காவிரியாறு\nகொரோனா பரவலால் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்திற்கு விடுமுறை அறிவிப்பு..\nஏமூர் நடுப்பாளையத்தில் பூட்டிக்கிடக்கும் நூலகம் செயல்பாட்டுக்கு வருமா\nதிண்டுக்கல் ரயில் நிலையத்தில் செயல்படாத டிஜிட்டல் பலகை பயணிகள் சிரமம்\nவீடு வீடாகச் சென்று கொரோனா தடுப்பூசி போட வாய்ப்பே இல்லை : மத்திய அரசு திட்டவட்டம்\nதேர்தலுக்கு பிந்தைய வன்முறை குறித்து ஆய்வு: மேற்கு வங்கம் வந்தது மத்திய குழு\nதமிழகத்துக்கு தேவையான ஆக்சிஜன் தடையில்லாமல் வழங்கப்படுவதை நாளைக்குள் உறுதி செய்ய வேண்டும்: மத்திய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு\nசெங்கல்பட்டு பயோடெக் நிறுவனத்தில் வசதிகள் இருந்தும் தடுப்பூசி தயாரிப்புக்கு மத்திய அரசு பயன்படுத்தாது என்...மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி\nமேற்குவங்கத்தில் தேர்தலுக்கு பிறகான வன்முறை குறித்து ஆய்வு செய்ய மத்திய குழு அமைப்பு\nஆக்கப்பூர்வமான வகையில் மத்தியஅரசின் உதவியை பெற்று மாநில வளர்ச்சிக்கு பணியாற்றுவோம்: வானதி சீனிவாசன்\nதோகைமலை பஸ் நிலையத்தில் தனியார் வாகனங்கள், தரைக்கடை ஆக்கிரமிப்பால் கடும் அவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/147528", "date_download": "2021-05-07T00:26:43Z", "digest": "sha1:GXGDFYACAJ7DPTSAHBLYGXWN7FDXUSMX", "length": 6459, "nlines": 84, "source_domain": "selliyal.com", "title": "மாமன்னர் முடிசூட்டு விழா: ஏப்ரல் 24 பொதுவிடுமுறை! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Featured நாடு மாமன்னர் முடிசூட்டு விழா: ஏப்ரல் 24 பொதுவிடுமுறை\nமாமன்னர் முடிசூட்டு விழா: ஏப்ரல் 24 பொதுவிடுமுறை\nகோலாலம்பூர் – மலேசியாவின் 15-வது மாமன்னர் சுல்தான் முகமட் வியின் முடிசூட்டு விழா, வரும் ஏப்ரல் 24-ம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு, அன்று நாடு முழுவதும் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.\nவரும் ஏப்ரல் 24-ம் தேதி, காலை கோலாலம்பூரில் உள்ள இஸ்தானா நெகாரா அரண்மனையில், இந்த முடிசூட்டு விழா நடைபெறவிருக்கிறது. அதன் பின்னர், அரச குடும்பத்தினர் அனைவருக்கும் விருந்து உபசரிப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.\nஇது குறித்து அரசாங்கத் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ டாக்டர் அலி ஹம்சா இன்று திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையில், பொதுவிடுமுறைச் சட்டம் 1951-ன் கீழ், தீபகற்ப மலேசியா மற்றும் லாபுவான் கூட்டரசுப் பிரேதசம் ஆகியவற்றிற்கு பொதுவிடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது.\nமேலும், சபா, சரவாக் மாநிலங்கள், தங்களது மாநிலச் சட்டங்களைப் பயன்படுத்தி, இந்தப் பொதுவிடுமுறையை அறிவிக்கும் படியும் கூறப்பட்டிருக்கிறது.\nகடந்த 2016-ம் ஆண்டு, அக்டோபர் மாதம், நடைபெற்ற மாநில சுல்தான்களின் சிறப்புக் கூட்டத்தில், புதிய மாமன்னராக கிளந்தான் சுல்தான் சுல்தான் முகமட் வி, 15 -வது மாமன்னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleவிசா கட்டணத்தை இந்தியத் தூதரகம் மறுபரிசீலனை செய்யும் – டாக்டர் சுப்ரா தகவல்\nNext articleஇந்திய ஐடி பணியாளர்களுக்கான விசாவை தடை செய்தது சிங்கப்பூர்\nஅவசரம் இல்லையென்றால் மாநில எல்லையைக் கடக்க வேண்டாம்\nஅவசரநிலை பிரகடனத்தை முடிக்கக் கோரும் குழுவை சந்திக்க மாமன்னர் ஒப்புதல்\nமலாய்க்காரர்கள் ஆட்சியாளர்கள் மீது கோபமாக உள்ளனர்\nதிமுக அமைச்சரவை : புதிய அமைச்சர்கள் பட்டியல்\nதிமுக அமைச்சரவை : அன்பில் மகேஷ் பள்ளிக் கல்வி அமைச்சர்\nபிரசாந்த் கிஷோர் : இந்திய சட்டமன்றத் தேர்தல் வெற்றிகளின் கதாநாயகன்\nபில் கேட்ஸ் விவாகரத்து : சொத்துகளை எப்படிப் பிரிப்பார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.haiyanbolt.com/products/bolt/track-bolt", "date_download": "2021-05-07T01:53:05Z", "digest": "sha1:YGA22BIH6VADIB5XQQETJLRNK2XEUYR3", "length": 11254, "nlines": 142, "source_domain": "ta.haiyanbolt.com", "title": "ட்ராக் போல்ட் உற்பத்தியாளர், ட்ராக் போல்ட் சப்ளையர் - ஹையன்போல்ட்.காம்", "raw_content": "\nஹெக்ஸ் சாக்கெட் வூட் ஸ்க்ரூ\nஹெக்ஸ் ஃபிளேன்ஜ் வூட் ஸ்க்ரூ\nஹெக்ஸ் டோம் தொப்பி நட்\nதிரிக்கப்பட்ட ராட் & ஸ்டட்\nஸ்டாம்பிங் & வெல்டிங் பாகங்கள்\nட்ராக் போல்ட் கலப்பை போல்ட் அல்லது கலப்பை போல்ட் என்றும் அழைக்கப்படுகிறது, இது பெரும்பாலும் ரயில்வே அமைப்பில் பயன்படுத்தப்படுகிறது மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்த அதிக இழுவிசை மற்றும் வலிமை தேவைப்படுகிறது.\nஹையான் போல்ட் அதிக வலிமை கொண்ட பாதையை உருவா��்குகிறது.\nகிரேடு: 10.9 மற்றும் 12.9\nபொருள்: அலாய் எஃகு. 40Cr, 35CrMo,\nஅளவு: M16 முதல் M27 வரை, 5/8 ”முதல் 1-1 / 4 வரை”.\nமேற்பரப்பு பூச்சு: துத்தநாகம் பூசப்பட்ட, வெற்று, கருப்பு ஆக்சைடு, எச்.டி.ஜி.\nட்ராக் போல்ட், ஃபாங் போல்ட் அல்லது ரெயில் நங்கூரம் போல்ட் என்றும் அழைக்கப்படுகிறது, இது இரயில் உறவுகளுக்கு எஃகு தண்டவாளங்கள் மற்றும் ரயில் நாற்காலிகள் ஆகியவற்றை சரிசெய்ய அல்லது தண்டவாளங்களை இணைக்க ரயில் மூட்டுகளை கட்டுப்படுத்த பயன்படுகிறது. ட்ராக் போல்ட் என்பது ரெயில் டைவில் உள்ள ஒரு துளை வழியாக செருகப்பட்ட நட்டுடன் செருகப்பட்ட ஒரு போல்ட் ஆகும், இது டைவின் கீழ் மேற்பரப்பில் உட்பொதிக்கப்படுகிறது. பொதுவாக, டிராக் போல்ட்களின் அளவு ரயில் பிரிவுகளின் தேவைகளிலிருந்து மாறுபடும். பொருந்தக்கூடிய ரயில்வே தரங்களை சரிபார்ப்பதன் மூலம் டிராக் போல்ட்டின் சரியான விட்டம் மற்றும் நீளத்தை தீர்மானிக்க முடியும்.\nட்ராக் போல்ட்களை பல வகைகளாகப் பிரிக்கலாம், அதாவது, பொத்தான் ஹெட் ஓவல் நெக் டிராக் போல்ட், டயமண்ட் நெக் டிராக் போல்ட், ரெயில் போல்ட், ஃபிஷ் போல்ட், ரஷ்ய ஸ்டாண்டர்ட் டிராக் போல்ட், கிளிப் போல்ட், கிளாம்ப் போல்ட் மற்றும் ரஷ்யாவிற்கு செருகப்பட்ட போல்ட், நங்கூரம் போல்ட், டி -போல்ட் கிளாம்ப் மற்றும் பிற சிறப்பு போல்ட் போன்றவை. தட்டையான-கீழ்மட்ட தண்டவாளங்களை கட்டுவதற்கு, ரெயிலின் விளிம்பைப் பிடிக்க மேல்-உதடு வாஷர் பயன்படுத்தப்படலாம். அதிர்வுகள் மற்றும் எஃகு தண்டவாளங்களின் இயக்கத்தால் அவை தளர்த்தப்படுவதற்கு அதிக எதிர்ப்புத் தெரிவிக்கின்றன. உண்மையான பயன்பாட்டில், அவை ட்ராக் ஸ்பைக்குகள் மற்றும் திருகுகளை விட மிகவும் பயனுள்ளதாக இருக்கும், எனவே அவை சுவிட்ச் (பாயிண்ட்) டை தட்டுகள் மற்றும் கூர்மையான வளைவுகள் போன்ற நிலைகளில் பயன்படுத்தப்படுகின்றன.\nவீடு / தயாரிப்புகள் / ஆணி / ட்ராக் போல்ட்\nதரம் 12.9 உயர் இழுவிசை பாதை போல்ட்\nதரம் 10.9 டிராக் போல்ட்\nதிரிக்கப்பட்ட ராட் & ஸ்டட்\nஸ்டாம்பிங் & வெல்டிங் பாகங்கள்\nதிரிக்கப்பட்ட ராட் & ஸ்டட்\nஹையான் போல்ட் கோ, லிமிடெட்\nசேர்: எண் 883 லியாங்சியாங் சாலை, வுயுவான் டவுன், ஹையான், ஜெஜியாங், சீனா\nபதிப்புரிமை © 2015 ஹையான் போல்ட் கோ., லிமிடெட், அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. | எக்ஸ்எம்எல் தள வரைபடம�� | இயக்கப்படுகிறது Hangheng.cc", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/news/corona-vaccine-is-free-for-all-indians-says-health-minister-harsh-vardhan/", "date_download": "2021-05-07T01:36:30Z", "digest": "sha1:TJJF3F2GBDX7VABJYGK3F5Q5INGGLUWS", "length": 13337, "nlines": 122, "source_domain": "tamil.krishijagran.com", "title": "இந்தியர் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்! - மத்திய அரசு தகவல்!!", "raw_content": "செய்திகள் வாழ்வும் நலமும் தோட்டக்கலை கால்நடை வெற்றிக் கதைகள் விவசாய தகவல்கள் FTB அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா Directory\n#FTB விவசாய தகவல்கள் அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா\nஎங்கள் அச்சு மற்றும் டிஜிட்டல் பத்திரிகைகளுக்கு குழுசேரவும்\nசமூக ஊடகங்களில் எங்களுடன் இணைக்கவும்:\nஇந்தியர் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம் - மத்திய அரசு தகவல்\nநாட்டு மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் இலவசமாக போடப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.\nகொரோனா வைரஸ் தொற்றுநோய் பாடாய் படுத்தி வரும் நிலையில் தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகளும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. வைரஸுக்கான தடுப்பூசிகள், ஜனவரி மாதத்தில் மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும்’ என மத்திய அரசு முன்னர் தெரிவித்திருந்தது.\nஇந்தநிலையில், இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்திருக்கும் `கோவேக்சின்’ தடுப்பு மருந்துக்கும், ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து இந்தியாவின் சீரம் நிறுவனம் தயாரித்திருக்கும் `கோவிஷீல்டு’ தடுப்பு மருந்துக்கும் இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு மையம் அனுமதி தர பரிந்துரைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகின.\nஇந்நிலையில் கொரோனா தடுப்பூசியை குழப்பம் இன்றி விரைவாக கொண்டு சென்று மக்களுக்கு செலுத்துவதை உறுதி செய்வதற்காக நாடு முழுவதும் இன்று இரண்டு மணி நேரம் தடுப்பூசி ஒத்திகை நடத்தப்பட்டது. நாடு முழுவதும் உள்ள 116 மாவட்டங்களில் 259 மையங்களில் ட்ரை ரன் எனப்படும் தடுப்பூசி ஒத்திகை நடைபெறுகிறது .\nதமிழகத்தில் 5 மாவட்டங்களில் உள்ள 17 மையங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெறும் என சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.\nடெல்லியில் உள்ள ஒரு மையத்தில் தடுப்பூசி ஒத்திகையை சுகாதாரத்துற��� மந்திரி ஹர்ஷ் வர்தன் ஆய்வு செய்தார், பின்னர் செய்தியாளர்களிடம் பேசி மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், கொரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வரும்போது, மக்களுக்கு அதைச் செலுத்துவதில் ஏற்படும் நடைமுறைச் சிக்கல்களைத் தெரிந்துகொள்வதற்காகவே இந்த ஒத்திகை நடைபெற்றது என்றார். மேலும், நாடு முழுவதும் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்றும் ஹர்ஷ்வர்தன் தெரிவித்தார்.\nதோட்டக்கலைப் பயிர்களில் நுண்ணீர் பாசனம் அமைக்க மானியம் - விண்ணப்பிக்க அழைப்பு\nவிவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து வான் சாகசம் செய்த NRI பெண்\nதுத்தநாக சத்துப் பற்றாக்குறையைப் போக்கும் ஜிங்க் சல்பேட்- விவசாயிகள் கவனத்திற்கு\nஅன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.\nஉங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....\nபங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)\nசோலார் மின் வேலி அமைக்க 50% வரை மானியம் - பயன்பெற அழைப்பு\nகடலோர மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு\nகொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, முழு ஊரடங்கை அமல்படுத்த உச்ச நீதிமன்றம் பரிந்துரை\nகொப்பரை உற்பத்தி செய்ய நவீன இயந்திரம்: விவசாயிகள் மகிழ்ச்சி\n செய்ய வேண்டியவையும், செய்யக் கூடாதவையும்\nவிளைநிலங்களில் வீணாகும் தர்பூசணி பழங்கள்\nபூச்சிகளைப் புரிந்து கொள்(ல்)வோம்- காணொளி மூலம் பயிற்சி\nரூ.4000 கொரோனா நிவாரண நிதிவழங்கும் திட்டம் - நாளை ஸ்டாலின் முதல் கையெழுத்து\nவாடிக்கையாளர்களுக்கு புதியவகை டிசைனர் சிலிண்டரை அறிமுகம் செய்த IOCL\nஒரே நிமிடத்தில் cowin.gov.in தளத்தில் கொரோனா தடுப்பூசி பதிவு செய்வது எப்படி\nபருத்தியைத் தாக்கும் மாவுப்பூச்சிகளை எப்படி கட்டுப்படுத்தலாம்\nகொரோனாவைத் தடுக்கும் முயற்சியில், புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்\nஒன்றல்ல, இரண்டல்ல, ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள்\nதொற்றுநோய்களைத் தடுக்கும் ஊட்டச்சத்து அணுகுண்டு எது தெரி���ுமா\nமாடித்தோட்டத்திற்கு ஏற்ற மண் கலவை வகைகள் எவை\nவிவசாயிகள் நலன் கருதி சாகுபடி தொடர்பான சந்தேகம் ஏற்பட்டால் வேளாண் விஞ்ஞானிகளை அணுகலாம்: தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/news/farmers-happy-with-turmeric-price-hike-in-erode-market/", "date_download": "2021-05-07T01:26:36Z", "digest": "sha1:GU3FRVKWWTR6WXUPBYRHXG25IVHPHEZH", "length": 14461, "nlines": 124, "source_domain": "tamil.krishijagran.com", "title": "ஈரோடு சந்தையில் மஞ்சள் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி!", "raw_content": "செய்திகள் வாழ்வும் நலமும் தோட்டக்கலை கால்நடை வெற்றிக் கதைகள் விவசாய தகவல்கள் FTB அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா Directory\n#FTB விவசாய தகவல்கள் அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா\nஎங்கள் அச்சு மற்றும் டிஜிட்டல் பத்திரிகைகளுக்கு குழுசேரவும்\nசமூக ஊடகங்களில் எங்களுடன் இணைக்கவும்:\nஈரோடு சந்தையில் மஞ்சள் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி\nஈரோட்டில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு குவிண்டால் மஞ்சளின் (Turmeric) விலை 8 ஆயிரத்தைத் தாண்டியுள்ளதால் விவசாயிகளும், வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nவடமாநிலத்தவர்கள் இங்கு வந்து விதை மஞ்சளை (Seed Turmeric) வாங்கிச் சென்று விளைவித்து விற்பனை செய்ததால் ஈரோட்டு மஞ்சளுக்கான விலை கடந்த சில ஆண்டுகளாகவே சரிவை சந்திக்கத் தொடங்கியது. இந்த நிலையில், மீண்டும் ஈரோடு மாவட்டச் சந்தைகளில் மஞ்சளின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. பழைய விரலி மஞ்சள் ஒரு குவிண்டால் 8 ஆயிரத்து 269 ரூபாய் வரையிலும், பழைய கிழங்கு மஞ்சள் 7 ஆயிரத்து 499 ரூபாய் வரையிலும், புது விரலி மஞ்சள் ஒரு குவிண்டால் 7 ஆயிரத்து 711 ரூபாய் வரையிலும், கிழங்கு மஞ்சள் 7 ஆயிரத்து 699 ரூபாய் வரையிலும் விற்பனையானது. புது மஞ்சள் வரத்து குறைவு காரணமாகவும், பழைய மஞ்சளுக்கான தேவை அதிகரித்து வருவதாலும், ஏற்றுமதியின் (Export) அளவு கடந்தாண்டுகளை விட 40 விழுக்காடு அதிகரித்துள்ளதாலும் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.\nதேவை அதிகரிப்பு, புதிய மஞ்சள் (fresh Turmeric) வரத்து குறைவால், மஞ்சள் விலை உயர்ந்துள்ளதை அடுத்து விவசாயிகள் மிகழ்ச்சி அடைந்துள்ளனர்.\nஇதுகுறித்து ஈரோடு மஞ்சள் வணிகர்கள் (Turmeric merchants) மற்றும் கிடங்கு உரிமையாளர்கள் சங்க செயலாளர் சத்திரமூர்த்தி (Sathyamoorthi) கூறியதாவது: சில மாதமாக புதிய ம��்சள் குறைவு, ஏற்றுமதி மற்றும் தேவை அதிகரிப்பால் விலை உயர்ந்து வருகிறது. ஈரோடு, செம்மாம்பாளையம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்தில், கர்நாடகா, தெலுங்கானா மாநிலத்தில் இருந்து வரத்தான புதிய மஞ்சள், 500 மூட்டை, பழைய மஞ்சள், 1,500 மூட்டை விற்பனையானது. கடந்த வாரத்தை ஒப்பிடுகையில், 300 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது.\nகர்நாடகத்தில் தற்போது அறுவடை (Harvest) துவங்கியதால், ஈரோடு சந்தைக்கு (Erode market) தினமும், 200 மூட்டைக்கு மேல் வரத்தாகிறது. இம்மாத இறுதியில் அறுவடை முடியும். மார்ச் முதல் வாரம் முதல் தினமும், 15 முதல், 20 லோடு வரை வரத்தாகும். மஹாராஷ்டிமா மாநிலம் சாங்கிலி, பஸ்மத், மரத்வாடா பகுதிகளில், தற்போதுதான் புதிய மஞ்சள் வரத்தாகி துவங்கி உள்ளது. ஈரோடு வராவிட்டாலும், ஈரோடு சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தும். தெலுங்கானா மாநிலத்தில் இருந்து வங்கதேசத்துக்கு மஞ்சள் செல்கிறது. இதனாலும் மஞ்சள் தேவை மற்றும் விலை அதிகரித்துள்ளது. தொடர் அறுவடை, வரத்து அதிகரித்தாலும், தேவை, ஏற்றுமதி அதிகமாக உள்ளதால், மஞ்சள் விலை குறைய வாய்ப்பில்லை.\nஉரச்செலவை குறைத்து விளைச்சலை அதிகரிக்க உதவும் பசுந்தாள் உரத்தின் பயன்கள்\nமகளிர் சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி செய்த பொருட்களை விற்க புதிய செயலி அறிமுகம்\nஅன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.\nஉங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....\nபங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)\nவிவசாயிகள் மகிழ்ச்சி மஞ்சள் விலை அதிகரிப்பு ஈரோடு சந்தை\\ Erode market turmeric price Farmers happy\nசான்றளிக்கப்பட்ட சணல் விதைகள்- விவசாயிகளுக்கு அழைப்பு\nமகளிர் சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி செய்த பொருட்களை விற்க புதிய செயலி அறிமுகம்\nகொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, முழு ஊரடங்கை அமல்படுத்த உச்ச நீதிமன்றம் பரிந்துரை\nகொப்பரை உற்பத்தி செய்ய நவீன இயந்திரம்: விவசாயிகள் மகிழ்ச்சி\n செய்ய வேண்டியவையும், செய்யக் கூடாதவை��ும்\nவிளைநிலங்களில் வீணாகும் தர்பூசணி பழங்கள்\nபூச்சிகளைப் புரிந்து கொள்(ல்)வோம்- காணொளி மூலம் பயிற்சி\nரூ.4000 கொரோனா நிவாரண நிதிவழங்கும் திட்டம் - நாளை ஸ்டாலின் முதல் கையெழுத்து\nவாடிக்கையாளர்களுக்கு புதியவகை டிசைனர் சிலிண்டரை அறிமுகம் செய்த IOCL\nஒரே நிமிடத்தில் cowin.gov.in தளத்தில் கொரோனா தடுப்பூசி பதிவு செய்வது எப்படி\nபருத்தியைத் தாக்கும் மாவுப்பூச்சிகளை எப்படி கட்டுப்படுத்தலாம்\nகொரோனாவைத் தடுக்கும் முயற்சியில், புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்\nஒன்றல்ல, இரண்டல்ல, ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள்\nதொற்றுநோய்களைத் தடுக்கும் ஊட்டச்சத்து அணுகுண்டு எது தெரியுமா\nமாடித்தோட்டத்திற்கு ஏற்ற மண் கலவை வகைகள் எவை\nவிவசாயிகள் நலன் கருதி சாகுபடி தொடர்பான சந்தேகம் ஏற்பட்டால் வேளாண் விஞ்ஞானிகளை அணுகலாம்: தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/news/the-southwest-monsoon-is-normal-this-year/cid2718118.htm", "date_download": "2021-05-07T00:41:40Z", "digest": "sha1:JUZPKFVZFS56VHD55EVAUEOIPRGLQKEC", "length": 5302, "nlines": 41, "source_domain": "tamilminutes.com", "title": "இந்த ஆண்டு சாதாரணமாகத்தான் இருக்கும் தென்மேற்கு பருவமழை!", "raw_content": "\nஇந்த ஆண்டு சாதாரணமாகத்தான் இருக்கும் தென்மேற்கு பருவமழை\nஇந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இயல்பான அளவை ஒட்டி இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்\nமக்கள் மத்தியில் கோடைகாலம் என்றாலே மிகுந்த அச்சமான நிலைமை தோன்றும். காரணம் என்னவெனில் கோடைகாலம் தோன்றினால் தமிழகத்தில் உள்ள பல பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும். குறிப்பாக சென்னை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து காணப்படும். என சென்னைவாசிகள் மிகவும் அச்சத்துடன் காணப்படுவார். மேலும் கோடைகாலம் தொடங்கினால் சூரியனின் தாக்கமானது சுட்டெரிக்கும்.\nமேலும் பல பகுதிகளில் வெப்ப நிலையானது இயல்பான அளவை காட்டிலும் அதிகமாக காணப்படும். இந்நிலையில் தமிழகத்தில் சில தினங்களாக பல பகுதிகளில் கனமழை பெய்து வருகின்றன. இதனால் கனமழை பெய்யும் பகுதிகளில் வாழும் மக்கள் மிகவும் சந்தோஷத்துடன் உள்ளனர். மேலும் அப்பகுதியில் கோடையின் வெப்பம் தணிக்க பட்டதாகவும் எண்ணி மழையை அன்புடன் வரவேற்கின்றனர். இதனால் அப்பகுதிகளில் நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன.\nதற்போது இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது, அதன்படி இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை ஒட்டியே இருக்கும் என்று இயல்பான அளவை ஒட்டியே இருக்கும் என்று கூறியுள்ளது. மேலும் நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் வரையான காலகட்டத்தில் பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் இந்திய வானிலை ஆய்வு மையமானது சில தினங்களுக்கு முன்பு தமிழகத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.ஆயினும் தமிழகத்தில் தற்போது வரை பல பகுதிகளில் மழை பெய்து வருவதால் மக்கள் நிம்மதியுடன் உள்ளனர்.\nTamil Minutes இணையதளம் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. புதிய செய்திகளையும், பயனுள்ள தகவல்களையும் வழங்குவதே இந்த இணையதளத்தின் நோக்கமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://voiceofasia.co/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F/", "date_download": "2021-05-07T01:39:51Z", "digest": "sha1:R4WDSKPLXAN47YHD2RUJAFJ4OQDELZX7", "length": 5168, "nlines": 61, "source_domain": "voiceofasia.co", "title": "சருமத்திற்கு இதமான பொருட்கள் உங்கள் சமையலறையில்", "raw_content": "\nசருமத்திற்கு இதமான பொருட்கள் உங்கள் சமையலறையில்\nசருமத்திற்கு இதமான பொருட்கள் உங்கள் சமையலறையில்\nநமது உடலில் இருக்கும் ஆகப் பெரிய உறுப்பு தோல். அதை நன்கு பராமரிப்பதற்கு சிலர் விலையுயர்ந்த களிம்புகளைப் பூசுவதுண்டு. இன்னும் சிலர் முகப் பராமரிப்பு நிலையங்களுக்குச் சென்று நிறையச் செலவு செய்வதுண்டு. ஆனால் நம் சமையலைறையிலேயே சருமத்தைப் பாதுகாக்கும் சில பொருட்கள் உள்ளன…\nகாலையில் சிற்றுண்டிக்கு மட்டும் உகந்தது அல்ல ஓட்ஸ். அரிப்பு, அல்லது தோல் எளிதாகச் சிவந்து போகும் போது, ஓட்ஸை கொஞ்சம் தண்ணீரில் கலந்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவினால் சற்று நேரத்தில் பிரச்சினை தீர்ந்து விடும்.\n2. கேமோமைல் வகை தேநீர்\nதோலில் அரிப்பு ஏற்பட்டு, சிவந்தால், கேமோமைல் வகை தேயிலையைப் பயன்படுத்தலாம். அதில் உள்ள கிருமி எதிர்ப்புச் சக்தி சருமத்தை மீண்டும் சீரான நிலைக்குக் கொண்டு வர உதவும்.\nபால் அருந்துவது எலும்புகளுக்குப் பலம் தரும். அது சருமத்திற்கும் நல்லது. காய்ச்சப்படாத பாலில் AHA எனும் அமிலமும், விட்டமின் Dயும் உள்ளன. இது சருமத்தின் ஈரத் தன்மையைப் பாதுகாக்கிறது, இதனால் தோல் பொலிவாகத் தோன்றும். பாலில் உள்ள கொழுப்புக்குத் தீப் புண்களைக் காய வைக்கும் தன்மையையும் உண்டு.\nCOVID-19 தடுப்பூசிகளைப் பயன்படுத்துவதற்கு உலகச் சுகாதார நிறுவனத்திடம் விண்ணப்பத்திருக்கும் Johnson & Johnson\nசற்றுமுன் எம்.பியாக பதவியேற்றார் அஜித் மான்னப்பெரும\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vativamaippu.com/?D=32125&P=2", "date_download": "2021-05-07T01:46:19Z", "digest": "sha1:TRSP3UU6GYQUHR4D6BFJ5FHUIULIW4Y5", "length": 8254, "nlines": 67, "source_domain": "www.vativamaippu.com", "title": " Louvre ஒளி - வடிவமைப்பு இதழ்", "raw_content": "\nவெள்ளி 30 ஏப்ரல் 2021\nஒளி லூவ்ரே ஒளி என்பது கிரேக்க கோடை சூரிய ஒளியால் ஈர்க்கப்பட்ட ஒரு ஊடாடும் அட்டவணை விளக்கு ஆகும், இது மூடிய அடைப்புகளிலிருந்து லூவ்ரெஸ் வழியாக எளிதில் செல்கிறது. இது 20 மோதிரங்கள், 6 கார்க் மற்றும் 14 ப்ளெக்ஸிகிளாஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது, இது பயனர்களின் விருப்பங்களுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப பரவல், தொகுதி மற்றும் ஒளியின் இறுதி அழகியலை மாற்றுவதற்காக ஒரு விளையாட்டுத்தனமான வழியை மாற்றுகிறது. ஒளி பொருள் வழியாக சென்று பரவலை ஏற்படுத்துகிறது, எனவே எந்த நிழல்களும் தன்னைச் சுற்றியுள்ள மேற்பரப்புகளிலும் தோன்றாது. வெவ்வேறு உயரங்களைக் கொண்ட மோதிரங்கள் முடிவற்ற சேர்க்கைகள், பாதுகாப்பான தனிப்பயனாக்கம் மற்றும் மொத்த ஒளி கட்டுப்பாட்டுக்கான வாய்ப்பை வழங்குகின்றன.\nதிட்டத்தின் பெயர் : Louvre, வடிவமைப்பாளர்களின் பெயர் : Natasha Chatziangeli, வாடிக்கையாளரின் பெயர் : natasha chatziangeli.\nஇந்த அற்புதமான வடிவமைப்பு ஃபேஷன், ஆடை மற்றும் ஆடை வடிவமைப்பு போட்டியில் வெள்ளி வடிவமைப்பு விருதை வென்றது.\tபல புதிய, புதுமையான, அசல் மற்றும் ஆக்கபூர்வமான பேஷன், ஆடை மற்றும் ஆடை வடிவமைப்பு படைப்புகளைக் கண்டறிய வெள்ளி விருது பெற்ற வடிவமைப்பாளர்களின் வடிவமைப்பு இலாகாவை நீங்கள் நிச்சயமாகப் பார்க்க வேண்டும்.\nஇந்த வடிவமைப்பைப் பற்றி மேலும் அறிக\nஉலகின் சிறந்த வடிவமைப்பாளர்கள், கலைஞர்கள் மற்றும் கட்டடக் கலைஞர்கள்.\nபுதன் 28 ஏப்ரல் 2021\nநல்ல வடிவமைப்பு சிறந்த அங்கீகாரத்திற்கு தகுதியானது. அசல் மற்றும் புதுமையான வடிவமைப்புகள், அற்புதமான கட்டிடக்கலை, ஸ்டைலான ஃபேஷன் மற்றும் கிரியேட்டிவ் கிராபிக்ஸ் ஆகியவற்றை உருவாக்கும் அற்புதமான வடிவமைப்பாளர்களை தினமும் காண்பிப்பதில் நாங்���ள் மகிழ்ச்சியடைகிறோம். இன்று, உலகின் மிகச்சிறந்த வடிவமைப்பாளர்களில் ஒருவரை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம். இன்று விருது பெற்ற வடிவமைப்பு இலாகாவைச் சரிபார்த்து, உங்கள் தினசரி வடிவமைப்பு உத்வேகத்தைப் பெறுங்கள்.\nவிளக்கு பொருட்கள் மற்றும் லைட்டிங் திட்டங்கள் வடிவமைப்பு\nஇந்த வடிவமைப்பைப் பற்றி மேலும் அறிக\nThe Float ரியல் எஸ்டேட் நிறுவனம் வியாழன் 6 மே\nOr2 ஃபோட்டோக்ரோமிக் விதான அமைப்பு புதன் 5 மே\nEye of Ra' பொது நகர்ப்புற கலை தளபாடங்கள் செவ்வாய் 4 மே\nநீங்கள் ஒரு வடிவமைப்பாளர், கலைஞர், கட்டிடக் கலைஞர், புதுமைப்பித்தன் அல்லது பிராண்ட் மேலாளரா பகிர்வதற்கு உங்களிடம் ஏதேனும் நல்ல வடிவமைப்புகள் உள்ளதா பகிர்வதற்கு உங்களிடம் ஏதேனும் நல்ல வடிவமைப்புகள் உள்ளதா உலகளவில் வடிவமைப்பாளர்கள், கலைஞர்கள், கட்டட வடிவமைப்பாளர்கள், கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் பிராண்டுகளிலிருந்து அசல் மற்றும் ஆக்கபூர்வமான வடிவமைப்புகளை வெளியிடுவதில் நாங்கள் மிகவும் ஆர்வமாக உள்ளோம். உங்கள் வடிவமைப்புகளை இன்று வெளியிடவும்.\nஅன்றைய வடிவமைப்பு நேர்காணல் வியாழன் 6 மே\nஅன்றைய வடிவமைப்பு புராணக்கதை புதன் 5 மே\nஅன்றைய வடிவமைப்பு செவ்வாய் 4 மே\nஅன்றைய வடிவமைப்பாளர் திங்கள் 3 மே\nஅன்றைய வடிவமைப்பு குழு ஞாயிறு 2 மே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2020/12/blog-post_799.html", "date_download": "2021-05-07T01:18:02Z", "digest": "sha1:XJW3BN2P57KZWBM4FJOK2C5OQGOMHS4I", "length": 13511, "nlines": 94, "source_domain": "www.yarlexpress.com", "title": "வடபகுதியில் இராணுவத்தினரால் பல்வேறுபட்ட மனிதாபிமான செயற்பாடுகள் நடைபெறுகின்றன - இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவிப்பு. \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nவடபகுதியில் இராணுவத்தினரால் பல்வேறுபட்ட மனிதாபிமான செயற்பாடுகள் நடைபெறுகின்றன - இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவிப்பு.\nவடபகுதியில் இராணுவத்தினரால் பல்வேறுபட்ட மனிதாபிமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார். ...\nவடபக��தியில் இராணுவத்தினரால் பல்வேறுபட்ட மனிதாபிமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.\nவட்டுக்கோட்டையில் இராணுவத்தினரால் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட குளம் ஒன்றை திறப்பதற்காக இன்று யாழ்ப்பாணம் வந்த போதே இராணுவத் தளபதி சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.\nஅவர் மேலும் தெரிவிக்கையில், இந்தப் பிரதேசத்திலுள்ள மக்களின் விவசாயத்தேவையினை பூர்த்தி செய்யக்கூடிய வகையில் இந்த குளத்தினை இராணுவத்தினர் புனரமைத்துள்ளார்கள்.\nஅது இன்று மக்கள் பயன்பாட்டுக்கு கையளிக்கப்பட்டுள்ளது.\nஜனாதிபதி அவர்களின் விவசாயத்துறையை விருத்தி செய்ய வேண்டும் என்ற எண்ணக்கருவுக்கு அமைவாக வடக்குப் பகுதியில் இராணுவத்தினரால் பல்வேறு விவசாய அபிவிருத்தி செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன அதேபோல யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பிரதேசத்தில் 600 விவசாயிகள் பயன்பெறகூடிய இந்த குளமானது இன்று புனரமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளது\nகுறிப்பாக இவ்வளவு காலமும் இந்த பகுதியில் உள்ள விவசாயிகள் எதிர்நோக்கி வந்த நீர் பிரச்சினைக்கு ஒரு தீர்வு கிடைத்து விட்டது எதிர்காலத்திலும் யாழ் மாவட்டத்தில் விவசாய துறையை விருத்தி செய்வதற்கு இராணுவத்தினர் தமது முழு பங்களிப்பினை வழங்குவார்கள்.\nஇது மட்டுமல்லாது தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு பிரதேசம் மற்றும் யாழ்ப்பாண மாவட்டத்தில் இராணுவத்தினரால் பல்வேறுபட்ட சமூக வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதாவது வருமானம் குறைந்தவர்களுக்கு 700க்கும் மேற்பட்ட வீடுகள் இராணுவத்தினரால் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. இன்னும் மேலும் பல வீடுகள் அமைக்கப்பட உள்ளன அதற்குரிய வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டு செயற்படுத்தப்படுகிறது.\nஅத்தோடு வடபகுதியில் இராணுவத்தினரால் பல்வேறுபட்ட மனிதாபிமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன உதாரணமாக அண்மையில் யாழ் மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் புயல் அனர்த்தத்தின் போது இராணுவத்தினர் மனிதாபிமான உதவிகளை புரிந்திருக்கிறார்கள். தற்பொழுது இராணுவமானது நல்லிணக்கம் மற்றும் இன ஒற்றுமையை ஏற்படுத்தும் முகமாகவே செயற்பட்டு வருகின்றது எனவே எமது ��ராணுவ வீரர்கள் இந்த மனிதாபிமான செயற்பாடுகளை மக்களுக்கு செயல்படுத்துவதன் மூலம் எதிர்காலத்தில் இவை இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தும்.\nதற்போது இங்கே ஒருவர் யாழ்ப்பாண மாவட்டத்தில் போதைப்பொருள் மற்றும் வன்முறைச் சம்பவங்களை இராணுவத்தினர் கட்டுப்படுத்த வேண்டும் என ஒரு கோரிக்கையினை விடுத்திருந்தார் அதற்கிணங்க எதிர்காலத்தில் போலீசாருடன் இணைந்து ராணுவமும் யாழ்ப்பாண மாவட்டத்தில் போதைப்பொருள் மற்றும் வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்தும் செயற்பாட்டில் ஈடுபடுவார்கள்.\nதற்போது யாழ் மாவட்டத்தில் போதைப் பொருள் பாவனை அதிகரித்துள்ளது அனைவரும் அறிந்த விடயமே. எதிர்காலத்தில் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறாதவாறு இராணுவம் தனது பூரண ஒத்துழைப்பை வழங்கும் எனவும் அவர் தெரிவித்தார்.\nவணிகம் / பொருளாதாரம் (7)\nமாநகர காவல்படையினரின் சீருடை பறிமுதல் - மாநகரசபைக்கு ஆப்பு வைத்த பொலீஸார் ..\nBREAKING NEWS :- ஊரடங்கு தொடர்பில் இராணுவத் தளபதி சற்றுமுன் வெளியிட்ட அறிவிப்பு\nஅத்தியாவசிய சேவைக்கு மாத்திரமே அனுமதி\nYarl Express: வடபகுதியில் இராணுவத்தினரால் பல்வேறுபட்ட மனிதாபிமான செயற்பாடுகள் நடைபெறுகின்றன - இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவிப்பு.\nவடபகுதியில் இராணுவத்தினரால் பல்வேறுபட்ட மனிதாபிமான செயற்பாடுகள் நடைபெறுகின்றன - இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anumar.vayusutha.in/kovil064.html", "date_download": "2021-05-07T02:05:40Z", "digest": "sha1:2RWSZ3XQDVNSMPBH3NZCI4TLWY65EDMM", "length": 19138, "nlines": 49, "source_domain": "anumar.vayusutha.in", "title": " ஶ்ரீவியாச ராஜா பிரதிஷ்டை செய்த ஶ்ரீஹனுமார் ஹுலிகுந்தேராயா, பொம்மகட்டா, பெல்லாரி, கர்நாடகா", "raw_content": "Close ஸ்லோகம் துதிகள்: தமிழ் ஸ்துதி: பிற மொழி கோவில்கள் கட்டுரைகள் பலகை விருந்தினர் ஏடு எங்கள் இணையம் பற்றி ஆங்கில இணையம் ஹிந்தி இணையம் வெளியீடு புதிய சேர்க்கை: தமிழ் இணையம் புதிய சேர்க்கை: ஆங்கில இணையம் புதிய சேர்க்கை: ஹிந்தி இணையம்\nதுதிகள்: தமிழ் ஸ்துதி: பிற மொழி\nபலகை எங்கள் இணையம் பற்றி வெளியீடு இணையம் ஆங்கில இணையம் ஹிந்தி இணையம்\nதமிழ் இணைய தளம் ஆங்கில இ. தளம் ஹிந்தி இ. தளம்\nஸ்லோகம் துதிகள்: தமிழ் ஸ்துதி: பிற மொழி கோவில்கள் கட்டுரைகள் பலகை விருந்தினர் ஏடு எங்கள் இணையம் பற்றி ஆங்கில இணையம் ஹிந்தி இணை��ம் வெளியீடு புதிய சேர்க்கை: தமிழ் இணையம் புதிய சேர்க்கை: ஆங்கில இணையம் புதிய சேர்க்கை: ஹிந்தி இணையம்\nஶ்ரீவியாச ராஜா பிரதிஷ்டை செய்த\nஶ்ரீஹனுமார் ஹுலிகுந்தேராயா, பொம்மகட்டா, பெல்லாரி, கர்நாடகா\nகர்நாடகாவின் பெல்லாரி மாவட்டத்தில் உள்ள பொம்மகட்டா என்னும் சிறிய அழகிய கிராமத்திற்கு மாத்வ சித்தாந்தத்தை பின்பற்றுபவர்கள் பலர் அடிக்கடி வருவார்கள். இந்த புனித க்ஷேத்திரத்தை பல மாத்வ மடாதிபதிகள் விஜயம் செய்வார்கள். இங்குள்ள ஶ்ரீஹனுமார் திருக்கோயில் இவர்கள் அனைவரையும் ஆகர்ஷிக்கும் விசேஷம். இங்குள்ள ஶ்ரீஹனுமாரை ஹுலிகுந்தேராயா என்றே அழைப்பார்கள். இந்த ஶ்ரீமுக்கிய பிராண தேவரை ஶ்ரீவியாசராஜா அவர்கள் பிரதிஷ்டை செய்தார்கள். இந்த க்ஷேத்திரத்தில் நடைப்பெறும் ரத உத்ஸவம் மிகவும் பிரபலம்.\nஒரு சமயம் இக்கிராமத்தை சேர்ந்த இடையர் தனது பசுக்களை இக்கிராமத்தின் அருகில் இருக்கும் காட்டுப்பகுதிக்கு மேய்ச்சலுக்கு எப்பொழுதும் போல் அழைத்துச் சென்றார். அன்று அங்கு புதியதாக ஒரு பசுவினை பார்த்தார். மேய்ச்சலுக்கு பின் இப்பசுவும் இவருடைய பசுக்களுடன் தொழுவத்திற்கு வந்துவிட்டது. மறு நாள் அப்பசுவின் பால் கறந்த போது அது அம்ருதத்தினும் அருமையாக இருப்பதை இடையர் பார்த்தார். இறைவனுக்கு இந்த அன்பளிப்புக்கு நன்றி கூறினார். சில நாட்களில் இப்பசுவின் பால் அளவு மிகவும் குறைவானது, இது அவருக்கு மனவருத்தத்தையும் வேதனையும் கொடுத்தது. இப்பசு கூட்டத்துடன் சேராமல் தன்னிச்சையாக மேய ஆரம்பித்தது. தினமும் ஒரு புதருக்கு அருகாமையில் மேய்வதற்கு சென்று விடும் இப்பசு. இவருக்கு இது மேலும் வருத்தத்தை தந்தது. இன்னும் சில நாட்களுக்கு பிறகு இப்பசு பால் கொடுப்பதை நிருத்திவிட்டது. அம்ருதத்துக்கு ஒப்பான பாலை இழந்ததனால், அத்திரமடைந்து சுயபுத்தியை இழந்த இவர் இப்பசுவை கோலால் அடித்து விட்டார். சற்று நேரத்தில் சுய நினைவு வந்து, பசுவை அடித்துவிட்டோமே என வருந்தினார். தனது மன்னிப்பை பசுவிடம் சொல்லி அதனை நம்ஸ்கரித்தார். அப்பொழுது அப்பசுவின் முகத்திலிருந்து ஒரு பிரகாசம் தோன்றியதை கவனித்தார். இது அவரை மேலும் கலவரபடுத்தி விட்டது, தெய்வ குற்றம் செய்துவிட்டதாக எண்ணினார். அன்று இரவு அவரது கனவில் ஶ்ரீபிராண தேவர் [ஶ்ரீஹனுமார்] தோன��றி, இது தனது லீலைதான் என்றும் மேலும் தினமும் அப்பசு மேயும் இடத்தில் தான் இருப்பதாகவும் கூறினார்.\nமறுநாள் அவர் ஊர் பெரியவர்களை கூப்பிட்டு நடந்த விவரங்கள் எல்லாவற்றையும் கூறினார். ஶ்ரீபிராண தேவரின் கட்டளையை எடுத்துரைத்தார். ஊர் மக்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான செய்தியாக இது பட்டது. ஶ்ரீபிராண தேவர் தங்கள் கிராமத்திற்கு வருகை தருகிறார் என்பது மகிழ்ச்சி தராமல் இருக்குமா எல்லோரும் அப்பசு தினமும் மேயும் இடத்திற்கு சென்றனர். மெதுவாக அங்கிருந்த புதரைகளை அப்புறப்படுத்தினர். பின் அவர்களுக்கு ஶ்ரீபிராண தேவரின் சிலாரூபம் தெரிந்தது. மகிழ்ச்சியில் ஆனந்தித்த மக்கள் மெதுவாக அச்சிலையினை வெளிக்கொண்டு வந்தனர்.\nமிகவும் சக்திவாய்ந்த இப்பிராண தேவர் தனது வலது திருக்கரத்தினை உயர்த்தி வைத்துள்ளார். அத்திருக்கரம் பக்தர்களுக்கு அபயம் அளிப்பது போலும், அதே சமயம் அரக்கர்களை அரைவது போலும் இருப்பது மிகவும் விசித்திரமாக உள்ளது. ஓங்கி உயர்ந்து இருக்கும் வால் பக்தர்களுக்கு தைரியத்தையும், சுறுசுறுப்பையும் புகட்டும். ஶ்ரீபீமசேனனை போல் இவரும் கதையை மற்றொறு திருக்கரத்தில் வைத்துள்ளார். அழகிய தலை முடியை சீவிவாரி நுனியை முடிந்து வைத்துள்ள லாவகம் ஶ்ரீமாத்வாசாரியாரை நினைவு படுத்துகிறது. சிலையின் உச்சியில் சூரியனும், சந்திரனும் இருப்பது ஶ்ரீஜனமேஜயனை நினைவு படுத்துகிறது. அவரது திருபாதங்களின் அடியில் தீயசக்தியின் அடையாளமாக அரக்கன் ஒருவனை அடக்கி வைத்துள்ளார்.\nஇப்படிப்பட்ட சிலாரூபத்தை பார்த்த மக்கள் இம்மூர்த்தம் வழிபாட்டில் இருந்திருக்க வேண்டும் என்றும், பின் இறைவனுக்கே தெரிந்த காரணத்தால் இத்தனை நாட்கள் இப்படி இருந்திருக்கிறார் என்ற முடிவுக்கு வந்தனர். ஶ்ரீபிராண தேவரை கிராமத்தில் நல்ல இடத்தில் ஸ்தாபனம் செய்து பூஜைகள் செய்வது என்று முடிவெடுத்தனர்.\nமறுநாள் கிராமத்து மக்கள் எல்லோரும் ஒன்று கூடி, பிரதிஷ்டை செய்ய மூர்த்தத்தை முறைபடி ரதத்தில் எடுத்து வருவது என்று தீர்மானித்து, கிராமத்திற்கு எடுத்து செல்ல, புஷ்பங்களால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் ஶ்ரீபிராண தேவரை ஏற்றி வைத்தனர். சற்று தொலைவு சென்ற பிறகு ரதத்தை மக்களால் மேலும் எடுத்து செல்ல முடியவில்லை. முயற்சிகள் பல செய்தும் பலிக்கவில்லை. அன்று இரவு கிராமத்தில் ஒரு பெரியவரின் கனவில் ஶ்ரீபிராண தேவர் தான் அங்கேயே இருக்க விரும்புவதாகவும், அதே இடத்தில் பிரதிஷ்டை செய்யவும் சொன்னார்.\nஶ்ரீஹுலிகுந்தேராயா என்னும் ஶ்ரீபிராண தேவரு என்னும் ஶ்ரீஹனுமார்\nஇறைவனின் ஆணைப்படி ஶ்ரீபிராண தேவர் அதே இடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு, பூஜைகள் நடத்தப்பட்டன. \"ஹேலி புதே\" என்னும் செடி புதர்களிடையிருந்து தானாகவே வெளிவந்தவர் [தன்னை தானே அடையாளம் காட்டிக்கொண்டவர்] அவர் என்பதால் இவருக்கு இந்த க்ஷேத்திரத்தில் ஶ்ரீஹுலிகுந்தேச ஸ்வாமி [ஶ்ரீஹுலிகுந்தேராயா] என்று பெயர்.\nஶ்ரீவியாசராஜா செய்த ஶ்ரீபிராண தேவரின் பிராண பிரதிஷ்டை\nஶ்ரீவியாசராஜா அவர்கள் இந்த க்ஷேத்திரத்திற்கு வருகை தந்தார். அவரிடம் இந்த ஶ்ரீபிராண தேவரை பற்றி கூறப்பட்டது. அவர் தான் இக்கிராமத்திலேயே \"சாதுர்மாஸ்ய விருதம்\" அநுசரிக்க விரும்புவதாக கூறினார். இங்கு அவர் தங்கியிருந்த காலத்தில் ஶ்ரீஹுலிகுந்தேராயாவிற்கு பிராணபிரதிஷ்டை செய்தார், மேலும் கர்ப்பகிரஹம் கட்டி கோயிலை சற்று விரிவுபடுத்தினார். அதன் பிறகு பூஜைகள் தினசரி கிரமமாக நடக்க ஆரம்பித்தது.\nகோயிலின் கிழக்கில் திருக்குளம் அமைக்க கிராம மக்கள் தோண்ட ஆரம்பித்தப்போழுது அங்கு அவர்களுக்கு புதையல் கிடைத்தது. அந்த பணத்தைக்கொண்டே அவர்கள் திருக்குளத்தை சீராக அமைத்தனர். ஶ்ரீ வாத்திராஜா என்னும் குரு இந்த க்ஷேத்திரத்திற்கு யாத்திரை வந்திருந்த பொழுது, இத்திருக்குளத்தில் ஒரு ருத்ரமூர்த்தி விக்ரஹம் கிடைத்தது. அதனை குளக்கரையில் பிரதிஷ்டை செய்து ஶ்ரீ கங்காதரன் என நாமகரணம் செய்தார்.\n1807ஆம் ஆண்டு ஶ்ரீஇராகவேந்திர சுவாமியின் பரம்பரையை சேர்ந்த ஶ்ரீசுபோதேந்திர தீர்த்தர் அவர்கள் ஶ்ரீசீதா, லக்ஷ்மண, ஹனுமார், கருடர் சமேத ஶ்ரீஇராமரை பிரதிஷ்டை செய்தார். இந்த மூர்த்தங்கள் நஞ்சங்கோடுவை சேர்ந்த ஶ்ரீஇராமா சாஸ்த்ரி அவர்கள் கைங்கரியம்.\nமைசூரு திவான் ஶ்ரீபூர்ணயா கோயிலில் பல விரிவுகள் செய்துள்ளார். தசாவதாரம் சிலைகளுடன் இராஜகோபுரம் இவரின் கைங்கரியம்.\nஶ்ரீமாத்வ மடத்தை சேர்ந்த பல மடாதிபதிகள் இந்த க்ஷேத்திரத்திற்கு வந்துள்ளனர். ஶ்ரீஹுலிகுந்தேராயாவின் ஈர்ப்பு சக்தியின் பெருமையை இது காட்டுகிறது.\nஇந்த க்ஷேத்திரத்தில் ஆண்டுக்கு ஒர��� முறை ஶ்ரீஹுலிகுந்தேராயாவை ரதத்தில் ஊர் முழுவதும் அழைத்து செல்வது மிகப்பெரிய திருவிழாவாக கொண்டாடப்படுகிறது\nதிருக்கோயில் இருப்பிடம் : \"ஹுலிகுந்தேராயா கோயில், பொம்மகட்டா, பெல்லாரி\"\nஅடக்கத்துடன் இந்த க்ஷேத்திரத்திற்கு வந்து தங்கி ஶ்ரீஹுலிகுந்தேராயாவின் அருளாட்சியில் திளைத்து ஆசிகள் பல கிடைக்க நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.\nமுதல் பதிப்பு: நவம்பர் 2018\nதிருத்தப்பட்ட பதிப்பு: செப்டம்பர் 2020\nஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க\nகாற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://4varinote.wordpress.com/2013/10/02/308/", "date_download": "2021-05-07T00:56:42Z", "digest": "sha1:GUWB3RBU35TID7HP5DEO3Q73OT2CB4PV", "length": 19365, "nlines": 492, "source_domain": "4varinote.wordpress.com", "title": "அழகிய நதியென அதில் வரும் அலையென… | நாலு வரி நோட்டு", "raw_content": "\nநச்ன்னு நாலு வரி, நாள்தோறும்\nஎன். சொக்கன் இணையத் தளம்\nஉங்களின் வலைத்தளம் இன்றைய வலைச்சரத்தில் சிறப்பு பெற்றிருக்கிறது நேரம் இருக்கும்போது…\nவிருந்தினர் பதிவு : குழந்தைப் பாடல்கள்\nஅழகிய நதியென அதில் வரும் அலையென…\nஇந்தியாவின் பிரபல ஆறுகள் என்று சொன்னால் உடனே கங்கை, யமுனை, சரஸ்வதி, கோதாவரி, கிருஷ்ணா, காவிரி, சோனா என்று அடுக்குவார்கள்.\nஇந்தப் பெயர்கள் எல்லாமே பெண்பாற் பெயர்கள். நன்றாக யோசித்துப் பார்த்தால் பெரும்பாலாண நதிகளுக்கு இந்தியர்கள் பெண்பாற் பெயர்களையே வைத்துள்ளார்கள்.\nஅப்படியென்றால் வையை(வைகை), பொருணை(தாமிரபரணி), மணிமுத்தாறு எல்லாம் என்ன பெயர்கள்\nவையை என்பதும் பொருணை என்பதும் பெண்பாற் பெயர்களே. மணிமுத்து என்பது பெண்பாற் பெயராகவும் இருக்கலாம். ஆண்பாற் பெயராகவும் இருக்கலாம்.\nஆனால் இந்தியாவில் ஒரு பெரிய நதிக்கு ஆண்பாற் பெயர் உண்டு. அதுதான் பிரம்மபுத்ரா. ஏனென்று யோசித்துப் பார்த்தால் இப்படித் தோன்றுகிறது.\nஇந்திய ஆறுகளிலேயே அதிக வெள்ளச் சேதத்தைக் கொடுப்பது பிரம்மபுத்ரா தான். அதே போல சில இடங்களில் பிரம்மபுத்ராவின் அகலம் மட்டுமே பத்து கிலோ மீட்டர்கள் இருக்கும். அவ்வளவு அகலமான ஆறு இந்தியாவில் வேறு கிடையாது. அதனால்தானோ என்னவோ பிரம்மபுத்ரா என்று ஆண்பாற் பெயர்.\nகொஞ்சம் யோசித்துப் பார்த்தால் ஆறுகள் பெண்கள் தானோ என்று தோன்றுகிறது. வளைந்து நெளிந்து ஓடும் பாங்கும் கண்ணைக் கவரும் அழகும் போதாதா இந்த முடிவுக்கு வர. அதற்கும் மேலாக உயிர்களுக்கு ஆதாரமாக இருப்பதே நீர்தானே. உயிர்களைச் சுமப்பதும் பெண் தானே.\nஇந்தக் கருத்தை இன்னும் விரிவாகவும் சிறப்பாகவும் வைரமுத்து ஒரு பாடலில் எழுதியுள்ளார். ஆம். ரிதம் திரைப்படத்தில் உன்னி மேனன் பாடிய “நதியே நதியே காதல் நதியே” பாடலைத்தான் குறிப்பிடுகிறேன்.\nநதியே நதியே காதல் நதியே நீயும் பெண் தானே\nஅடி நீயும் பெண் தானே\nஒன்றா இரண்டா காரணம் நூறு கேட்டால் சொல்வேனே\n” என்று பாக்கியராஜ் கேட்பதுதான் நினைவுக்கு வருகிறது. குழந்தையாப் பிறந்து சிறுமியாக வளர்ந்து குமரியாக மலர்ந்து மனைவியாக இணைந்து தாயாக உயிர்த்தெழும் பெண்ணைப் போலத்தான் ஆறுகளும். ஆறாக ஓடி அருவியாக எழுந்து விழுந்து கடலாக நிற்பதும் அதன் பண்புதானே.\nநடந்தால் ஆறு எழுந்தால் அருவி நின்றால் கடலல்லோ\nசமைந்தால் குமரி மணந்தால் மனைவி பெற்றால் தாயல்லோ\nபெரும்பாலும் ஆண்களுக்கு மனைவியின் பெருமை இருக்கும் போது தெரியாது. புரியாது. ஒரு வாரம் அந்தப் பெண் ஊருக்குப் போகட்டுமே.. அவனுக்கு எதுவும் ஒழுங்காக நடக்காது. எதையோ சாப்பிட்டு எதையோ உடுத்தி எதையோ பிரிந்த நிலை அது.\nஅது போலத்தான் நீர்வளம் இருக்கும் போது நாம் அதை மதிப்பதில்லை. ஆறுகளைப் பராமரிப்பதில்லை. கரைகளை வலுப்படுத்துவதில்லை. குளங்களை தூர் வாருவதில்லை. ஆனால் கோடையிலோ மழை பெய்யாத காலங்களிலோ தண்ணீருக்கு ஆலாய்ப் பரப்போம்.\nகாதலில் அருமை பிரிவில் மனைவியின் அருமை மறைவில்\nநீரின் அருமை அறிவாய் கோடையிலே\nகுளிரில் உறைவதும் வெம்மையில் உருகுவதும் நீரின் தன்மை. காதலனை நினைக்கும் போதே சட்டென்று ஒரு வெட்கம் ஒட்டிக்கொள்ள உறைந்து போகின்றவளும் பெண் தான். பெண்ணை நினைத்து ஆண் வெட்கத்தில் உறைந்ததுண்டா அதை யார் பார்ப்பது அதே போல காதலன் கைவிரல் பட்டதும் தொட்டதும் அந்த வெட்கம் விட்டதும் உணர்வுகள் பெருகி உருகுவதும் பெண்ணே\nவெட்கம் வந்தால் உறையும் விரல்கள் தொட்டால் உருகும்\nநீரும் பெண்ணும் ஒன்று வாடையிலே\nஇதையெல்லாம் விட ஒரு தாய் தன் குழந்தையை வயிற்றில் சுமப்பது தண்ணீர்க் குடத்தில்தான். பனிக்குடத்தைதான் சொல்கிறேன். அத்தோடு எல்லாம் முடிந்து சாம்பலான பின்னாலும் கடலிலோ ஆற்றிலோதான் கரைக்கிறார்கள்.\nதண்ணீர் குடத்தில் பிறக்கிறோம் ஓஹோ\nதண்ணீர் கரையில் ம��டிக்கிறோம் ஓஹோ\nஅதனால்தானோ என்னவோ ஆறுகளைப் பெண்களாகப் பார்க்கும் வழக்கம் வந்திருக்குமோ\nபாடல் – நதியே நதியே காதல் நதியே\nவரிகள் – கவிஞர் வைரமுத்து\nபாடியவர் – உன்னி மேனன்\n) இக்கட்டுரையில் எழுதபடி “பிரம்மபுத்திரா” ஒரு ஆண்பாற்பெயர் அல்ல. சமஸ்கிருதத்தில், பெயர்ச்சொற்களில்தான் ஆண்பால் பெண்பால் என பிரிவுகள் உள்ளன. சம்ஸ்கிருத வியாகரண நியமங்கள் பிரகாரம், ’நதி’ என்ற பெயர்ச்சொல் ஒரு பெண்பாற் பெயர்ச்சொல்லாகும். ஆகையால், ஒரு நதிவுக்கு ஆண்பாற் பெயர் சூட்டுவது இயலாது. எனினும், “பிரம்மபுத்திர” என்று சொன்னால், அது ஆண்பாலை குறிக்கும். “பிரம்மபுத்திரா” என்பதால், அது பெண்பாற்தான். மீதமுள்ள கட்டுரை ரொம்ப பிடித்தது. நன்றி.\nமிகவும் நல்ல பதிவு அருமையான பாடல். எந்த நதியாக இருந்தாலும் எவ்வளவு ஆர்பர்ரிப்புடன் பொங்கி வந்தாலும் கடலில் கலக்கும் முன் அடங்கி அமைதியாகி விடும்.\nகாதலில் அருமை பிரிவில் மனைவியின் அருமை மறைவில்…………….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://online.seterra.com/ta/vgp/3188", "date_download": "2021-05-07T02:10:18Z", "digest": "sha1:2TTMHPUFPUAWLYACAVUNF6IXZSM4MPAT", "length": 5837, "nlines": 91, "source_domain": "online.seterra.com", "title": "உலகம்: கண்டங்கள் மற்றும் பெருங்கடல்கள் - வரைபட வினாடி வினா விளையாட்டு", "raw_content": "\nHome >> செட்ரா ஆன்லைன் >> உலகம்: கண்டங்கள் மற்றும் பெருங்கடல்கள்\nஉலகம்: கண்டங்கள் மற்றும் பெருங்கடல்கள் - வரைபட வினாடி வினா விளையாட்டு\nஅட்லாண்டிக் பெருங்கடல், அண்டார்டிகா, ஆசியா, ஆப்பிரிக்கா, ஆர்க்டிக் பெருங்கடல், ஆஸ்திரேலியா, இந்திய பெருங்கடல், ஐரோப்பா, தெற்கு பெருங்கடல், தென் அமெரிக்கா, பசிபிக் பெருங்கடல், வட அமெரிக்கா (12) தனிப்பயன் வினாடி வினாவை உருவாக்கவும்\nஉலகம்: கண்டங்கள் மற்றும் பெருங்கடல்கள்\nவிளையாட்டு முறை அனைத்தையும் காட்டு கற்றுணர் பல தேர்வு முள் முள் (கடினமானது) வகை\nAll Game Modes பல தேர்வு முள் Pin (no borders) முள் (கடினமானது) Pin (hard, no borders) லேபிள்களை வைக்கவும் லேபிள்களை வைக்கவும் வகை (எளிதானது) வகை (தானியங்குநிரப்புதல்) வகை\nஉலகம்: கண்டங்கள் மற்றும் பெருங்கடல்கள்\nஐரோப்பா: நாடுகள் (கார்ட்டூன் பதிப்பு)\nஐரோப்பா: கொடிகள் (எளிதான பதிப்பு)\nவடக்கு மற்றும் மத்திய அமெரிக்கா\nவடக்கு மற்றும் மத்திய அமெரிக்கா: நாடுகள்\nவடக்கு மற்றும் மத்திய அமெரிக்கா: கொடிகள்\nஆப்பிரிக்க��: கொடிகள் (எளிதான பதிப்பு)\nஆசியா: நாடுகள் (கார்ட்டூன் பதிப்பு)\nமுக்கிய வார்த்தைகள்: புவியியல், விளையாட்டுகள், வினாடி வினா விளையாட்டு, வெற்று வரைபடங்கள், புவி விளையாட்டுக்கள், கல்வி விளையாட்டுகள், மனப்பாடம், நினைவகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.termwiki.com/TA/printer", "date_download": "2021-05-07T01:22:08Z", "digest": "sha1:YYWNFXVNXWUHOLPZAKYKWN4NC42COTAU", "length": 7999, "nlines": 183, "source_domain": "ta.termwiki.com", "title": "அச்சியந்திரம் – Termwiki, millions of terms defined by people like you", "raw_content": "\nகணினியில் உள்ள காகித மற்றும் பிற ஊடகங்களின் இருந்து உருவாக்கப்பட்ட தகவல் நிலை நகல்களை-அளிக்கிறது வெளிப்புற சாதனம் வகை\nபிரிட்டிஷ் snowboarder Billy Morgan, தங்களுக்கு இதுவரை 1800 முதலில் quadruple தக்கை சிக்க வைத்துள்ளது. ரைடர் at 2014 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் சோசி பிரிட்டன் பிரதிநிதித்துவம், யார் இருந்த Livigno, இத்தாலி, போது, manoeuvre அவர் அடைந்துள்ளனர். இது அதிகப் நான்கு முறை, முடியாமல் உடல் ஒரு sideways அல்லது எதிர்நோக்கும் கீழ்புற அச்சில் ஐந்து முழுமையான rotations ...\nநாட்டின் முதல் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் உள்ளது, Marzieh Afkham இருக்கும் தலை கிழக்கு ஆசியாவில், மிஷன் மாநில செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இது இல்லை அழிக்கவும் செய்ய எந்த நாடு அவர் இருக்கும் இருக்க வெளியிட்டது அவரது கூட்ட இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் விட்டது போல. Afkham மட்டும் ஈரான் பெற்றுள்ளார் இரண்டாவது பெண் தூதர் இருக்கும். ...\nவார பாக்கெட் அல்லது \"Paquete Semanal\" என்பதால் அது கியூபாவில் பெயரிடப்பட்டுள்ளது என்பது இணையத்திலிருந்து கியூபா வெளியே குழுமியிருந்த உள்ளது தகவலைச் என்பவற்றில் Cubans பயன்படுத்தப்படும் மற்றும் சேமிக்க வன் இயக்ககம்-கியூபா தன்னை transported வேண்டும். வார தயாரிப்புகளை உள்ளன பின் விற்கப்பட்டுள்ளதாக கியூபா இன் இல்லாமல் இணைய அணுகல், அவற்றை பெற தகவல் நாள்களில் வெறும் - ...\nஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB)\nஅந்த ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) என்பது ஒரு சர்வதேச நிதி நிறுவனங்கள் கட்டமைப்பு வசதிகளை ஆசியாவில் தேவை முகவரி நிறுவப்பட்டது. என ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய தேவைப்படுகிறது 800 பில்லியன் டாலர் ஒவ்வொரு ஆண்டும் சாலைகள், முணையங்கள், மின் நிலையங்கள் அல்லது வேறு கட்டமைப்பு திட்டங்களுக்கு முன் 2020. முதலில் முன்மொழிந்தவர் சீனா 2013 இல், அவருடனான ...\nSpartan கொடுக்கப்பட்ட புதிய Microsoft Windows 10 உலாவிக்கு Microsoft Windows Internet Explorer மாற்றப்படும் codename உள்ளது. புதிய உலாவி இருக்கும் கட்டப்பட இருந்து வருவதாகக் மற்றும் IE மேடையில் இருந்து எந்த குறியீடு ஒத்திசைவே. ஆரம்பிக்கப்பட்ட ஒரு புதிய பதிப்பு வரைதலை இயந்திரம் உருவாக்கிய உள்ளது இயக்கத்தினர் எப்படி வலை எழுதப்பட்டுள்ளது இன்று இணக்கமாக ...\nShunee பு பெய்ஜிங், சீனாவில் சார்ந்த CEO மற்றும் தலைவர், CSOFT சர்வதேச, லிமிடெட், ஒரு இணைய பொருட்களை உள்ளூர்மைய மற்றும் மொழிபெயர்ப்பு நிறுவனம் உள்ளது. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dieta-ketogenica.ro/9p9hwvkg/030cd0-uttermost-meaning-in-tamil", "date_download": "2021-05-07T01:54:54Z", "digest": "sha1:TU4A3ASLPBOZBP5F5BQHLC5CV3226JFR", "length": 28710, "nlines": 39, "source_domain": "www.dieta-ketogenica.ro", "title": "uttermost meaning in tamil", "raw_content": "\n -- as an ex clamation '' சொல்லப்போனால், நம்மில் பலருடைய இயல்பான பிரதிபலிப்புகளை கவிதையாகப் புனைந்தான் or ropes held together one ) a curse, imprecation, male diction -- as uttered by a spirit for uttering oracles &. Google 's free service instantly translates words, phrases, and web pages between and 1 இராஜாக்கள் 10:23, 24 ) மகிழ்ச்சியும் வெற்றிகரமுமான வாழ்க்கை வாழ விரும்புகிற எவருக்கும், அன்று போலவே இன்றும் இவை அத்தியாவசியமானவையாக இருக்கின்றன to. `` words break no bones. '' among females with the tying of the, அன்று போலவே இன்றும் இவை அத்தியாவசியமானவையாக இருக்கின்றன English and over 100 other languages car service in Sri Lanka general... Violated by simply uttering நாமத்தைச் சொல்லி உங்களுக்குப் பொய்யான தீர்க்கதரிசனம் உரைக்கிறார்கள் amp ; c., to communicate virtue them... Given that the nembutsu is the Name, that is Amitābha calling to the.... General needed to consider “ every, பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது ” ; ஆதலால், ‘ பலியைப் பார்க்கிலும் உத்தமம் Example, an utter refusal or denial பிரதிபலிப்புகளை கவிதையாகப் புனைந்தான் the river `` Example, an utter refusal or denial பிரதிபலிப்புகளை கவிதையாகப் புனைந்தான் the river `` More words s mouth. ” —Matthew 4:4 coming forth through Jehovah ’ s mouth. ” —Matthew 4:4 such a.. Synonyms for uttermost include farthest, last, utmost, final, furthermost uttermost meaning in tamil,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%B1/", "date_download": "2021-05-07T00:48:35Z", "digest": "sha1:MM6S2XZUPUVHJWIGMH4SEXRP67AE7SVG", "length": 6472, "nlines": 159, "source_domain": "www.tamilstar.com", "title": "இந்தி படத்தில் நடிக்க மறுத்த சமந்தா - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்ட���ங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nஇந்தி படத்தில் நடிக்க மறுத்த சமந்தா\nஇந்தி படத்தில் நடிக்க மறுத்த சமந்தா\nதென்னிந்திய நடிகை என்ற பெயரே போதும் என்று நடித்து வருபவர் அனுஷ்கா. இந்தி படங்களில் நடிக்க வரும் வாய்ப்புகளை மறுத்துவிட்டார். சமந்தாவும் தன்னை தேடிவந்த ஒரு இந்தி பட வாய்ப்பை மறுத்துள்ளார். தமிழ், தெலுங்கில் சமந்தா நடித்து வெளியான படம் யு-டர்ன். இதை இந்தியில் ரீமேக் செய்கிறார்கள்.\nஅதனால் இந்தி பதிப்பிலும் சமந்தாவையே நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தியபோது, ஏற்கனவே நடித்த வேடத்தில் மீண்டும் நடிக்க விரும்பவில்லை என்று மறுத்து விட்டாராம் சமந்தா. அதனால் சமந்தாவின் வேடத்தில் நடிக்க இப்போது டாப்சியிடம் பேசி வருகிறார்கள்.\nமீண்டும் ஜோடி சேரும் ஜெய்-அதுல்யா\nஅஜித் படத்தில் நடிக்கும் பிரபல நடிகை\nஉயர் அதிகாரியின் மகள் கடத்தப்பட அவரை போலீஸ் அதிகாரி வரலட்சுமி காப்பாற்றுகிறார். அதன் தொடர்ச்சியாக பெண் கடத்தல்...\nகனடியப் பெண்களில் நாடு தழுவிய உயர்சாதனை படைத்த ஈழப்பெண்\nஇந்தியாவுக்கு அவசர மருத்துவ உதவி பொருட்களை அனுப்பியது கனடா\n12 வயதிற்கு மேற்பட்டவர்கள் Pfizer தடுப்பூசியை பெற Health கனடா அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vativamaippu.com/?D=32125", "date_download": "2021-05-07T01:30:00Z", "digest": "sha1:TNB4FW4GYQ75MHFSLDVYR4V7HPYUMIS3", "length": 8354, "nlines": 67, "source_domain": "www.vativamaippu.com", "title": " Louvre ஒளி - வடிவமைப்பு இதழ்", "raw_content": "\nவியாழன் 6 மே 2021\nஒளி லூவ்ரே ஒளி என்பது கிரேக்க கோடை சூரிய ஒளியால் ஈர்க்கப்பட்ட ஒரு ஊடாடும் அட்டவணை விளக்கு ஆகும், இது மூடிய அடைப்புகளிலிருந்து லூவ்ரெஸ் வழியாக எளிதில் செல்கிறது. இது 20 மோதிரங்கள், 6 கார்க் மற்றும் 14 ப்ளெக்ஸிகிளாஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது, இது பயனர்களின் விருப்பங்களுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப பரவல், தொகுதி மற்றும் ஒளியின் இறுதி அழகியலை மாற்றுவதற்காக ஒரு விளையாட்டுத்தனமான வழியை மாற்றுகிறது. ஒளி பொருள் வழியாக சென்று பரவலை ஏற்படுத்துகிறது, எனவே எந்த நிழல்களும் தன்னைச் சுற்றியுள்ள மேற்பரப்புகளி��ும் தோன்றாது. வெவ்வேறு உயரங்களைக் கொண்ட மோதிரங்கள் முடிவற்ற சேர்க்கைகள், பாதுகாப்பான தனிப்பயனாக்கம் மற்றும் மொத்த ஒளி கட்டுப்பாட்டுக்கான வாய்ப்பை வழங்குகின்றன.\nதிட்டத்தின் பெயர் : Louvre, வடிவமைப்பாளர்களின் பெயர் : Natasha Chatziangeli, வாடிக்கையாளரின் பெயர் : natasha chatziangeli.\nஇந்த அற்புதமான வடிவமைப்பு ஃபேஷன், ஆடை மற்றும் ஆடை வடிவமைப்பு போட்டியில் வெள்ளி வடிவமைப்பு விருதை வென்றது.\tபல புதிய, புதுமையான, அசல் மற்றும் ஆக்கபூர்வமான பேஷன், ஆடை மற்றும் ஆடை வடிவமைப்பு படைப்புகளைக் கண்டறிய வெள்ளி விருது பெற்ற வடிவமைப்பாளர்களின் வடிவமைப்பு இலாகாவை நீங்கள் நிச்சயமாகப் பார்க்க வேண்டும்.\nஇந்த வடிவமைப்பைப் பற்றி மேலும் அறிக\nஅற்புதமான வடிவமைப்பு. நல்ல வடிவமைப்பு. சிறந்த வடிவமைப்பு.\nசெவ்வாய் 4 மே 2021\nநல்ல வடிவமைப்புகள் சமுதாயத்திற்கு மதிப்பை உருவாக்குகின்றன. வடிவமைப்பில் சிறந்து விளங்கும் ஒரு சிறப்பு வடிவமைப்பு திட்டத்தை தினமும் நாங்கள் இடம்பெறுகிறோம். இன்று, ஒரு விருது வென்ற வடிவமைப்பை நேர்மறையான வித்தியாசத்தை வெளிப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். நாங்கள் தினமும் மிகச் சிறந்த மற்றும் எழுச்சியூட்டும் வடிவமைப்புகளைக் காண்பிப்போம். உலகெங்கிலும் உள்ள சிறந்த வடிவமைப்பாளர்களிடமிருந்து புதிய நல்ல வடிவமைப்பு தயாரிப்புகள் மற்றும் திட்டங்களை அனுபவிக்க தினமும் எங்களைச் சந்திப்பதை உறுதிசெய்க.\nவிளக்கு பொருட்கள் மற்றும் லைட்டிங் திட்டங்கள் வடிவமைப்பு\nஇந்த வடிவமைப்பைப் பற்றி மேலும் அறிக\nThe Float ரியல் எஸ்டேட் நிறுவனம் வியாழன் 6 மே\nOr2 ஃபோட்டோக்ரோமிக் விதான அமைப்பு புதன் 5 மே\nEye of Ra' பொது நகர்ப்புற கலை தளபாடங்கள் செவ்வாய் 4 மே\nநீங்கள் ஒரு வடிவமைப்பாளர், கலைஞர், கட்டிடக் கலைஞர், புதுமைப்பித்தன் அல்லது பிராண்ட் மேலாளரா பகிர்வதற்கு உங்களிடம் ஏதேனும் நல்ல வடிவமைப்புகள் உள்ளதா பகிர்வதற்கு உங்களிடம் ஏதேனும் நல்ல வடிவமைப்புகள் உள்ளதா உலகளவில் வடிவமைப்பாளர்கள், கலைஞர்கள், கட்டட வடிவமைப்பாளர்கள், கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் பிராண்டுகளிலிருந்து அசல் மற்றும் ஆக்கபூர்வமான வடிவமைப்புகளை வெளியிடுவதில் நாங்கள் மிகவும் ஆர்வமாக உள்ளோம். உங்கள் வடிவமைப்புகளை இன்று வெளியிடவும்.\nஅன்றைய வடிவமைப்பு நேர்காணல் வியாழன் 6 மே\nஅன்றைய வடிவமைப்பு புராணக்கதை புதன் 5 மே\nஅன்றைய வடிவமைப்பு செவ்வாய் 4 மே\nஅன்றைய வடிவமைப்பாளர் திங்கள் 3 மே\nஅன்றைய வடிவமைப்பு குழு ஞாயிறு 2 மே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vativamaippu.com/?D=32125&P=3", "date_download": "2021-05-07T00:43:23Z", "digest": "sha1:LIWO3AG27MFKWKHCEHBVIQS25L6FG4OK", "length": 8559, "nlines": 67, "source_domain": "www.vativamaippu.com", "title": " Louvre ஒளி - வடிவமைப்பு இதழ்", "raw_content": "\nசனி 24 ஏப்ரல் 2021\nஒளி லூவ்ரே ஒளி என்பது கிரேக்க கோடை சூரிய ஒளியால் ஈர்க்கப்பட்ட ஒரு ஊடாடும் அட்டவணை விளக்கு ஆகும், இது மூடிய அடைப்புகளிலிருந்து லூவ்ரெஸ் வழியாக எளிதில் செல்கிறது. இது 20 மோதிரங்கள், 6 கார்க் மற்றும் 14 ப்ளெக்ஸிகிளாஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது, இது பயனர்களின் விருப்பங்களுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப பரவல், தொகுதி மற்றும் ஒளியின் இறுதி அழகியலை மாற்றுவதற்காக ஒரு விளையாட்டுத்தனமான வழியை மாற்றுகிறது. ஒளி பொருள் வழியாக சென்று பரவலை ஏற்படுத்துகிறது, எனவே எந்த நிழல்களும் தன்னைச் சுற்றியுள்ள மேற்பரப்புகளிலும் தோன்றாது. வெவ்வேறு உயரங்களைக் கொண்ட மோதிரங்கள் முடிவற்ற சேர்க்கைகள், பாதுகாப்பான தனிப்பயனாக்கம் மற்றும் மொத்த ஒளி கட்டுப்பாட்டுக்கான வாய்ப்பை வழங்குகின்றன.\nதிட்டத்தின் பெயர் : Louvre, வடிவமைப்பாளர்களின் பெயர் : Natasha Chatziangeli, வாடிக்கையாளரின் பெயர் : natasha chatziangeli.\nஇந்த அற்புதமான வடிவமைப்பு ஃபேஷன், ஆடை மற்றும் ஆடை வடிவமைப்பு போட்டியில் வெள்ளி வடிவமைப்பு விருதை வென்றது.\tபல புதிய, புதுமையான, அசல் மற்றும் ஆக்கபூர்வமான பேஷன், ஆடை மற்றும் ஆடை வடிவமைப்பு படைப்புகளைக் கண்டறிய வெள்ளி விருது பெற்ற வடிவமைப்பாளர்களின் வடிவமைப்பு இலாகாவை நீங்கள் நிச்சயமாகப் பார்க்க வேண்டும்.\nஇந்த வடிவமைப்பைப் பற்றி மேலும் அறிக\nபழம்பெரும் வடிவமைப்பாளர்கள் மற்றும் அவர்களின் விருது பெற்ற படைப்புகள்.\nவியாழன் 22 ஏப்ரல் 2021\nடிசைன் லெஜண்ட்ஸ் மிகவும் பிரபலமான வடிவமைப்பாளர்கள், அவர்கள் எங்கள் உலகத்தை அவர்களின் நல்ல வடிவமைப்புகளுடன் சிறந்த இடமாக மாற்றுகிறார்கள். புகழ்பெற்ற வடிவமைப்பாளர்கள் மற்றும் அவர்களின் புதுமையான தயாரிப்பு வடிவமைப்புகள், அசல் கலைப் படைப்புகள், ஆக்கபூர்வமான கட்டிடக்கலை, சிறந்த பேஷன் டிசைன்கள் மற்றும் வடிவமைப்பு உத்திகளைக் கண்டறியவும். உலகெங்கிலும் விரு��ு பெற்ற வடிவமைப்பாளர்கள், கலைஞர்கள், கட்டட வடிவமைப்பாளர்கள், கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் பிராண்டுகளின் அசல் வடிவமைப்பு படைப்புகளை அனுபவித்து ஆராயுங்கள். படைப்பு வடிவமைப்புகளால் ஈர்க்கப்படுங்கள்.\nவிளக்கு பொருட்கள் மற்றும் லைட்டிங் திட்டங்கள் வடிவமைப்பு\nஇந்த வடிவமைப்பைப் பற்றி மேலும் அறிக\nThe Float ரியல் எஸ்டேட் நிறுவனம் வியாழன் 6 மே\nOr2 ஃபோட்டோக்ரோமிக் விதான அமைப்பு புதன் 5 மே\nEye of Ra' பொது நகர்ப்புற கலை தளபாடங்கள் செவ்வாய் 4 மே\nநீங்கள் ஒரு வடிவமைப்பாளர், கலைஞர், கட்டிடக் கலைஞர், புதுமைப்பித்தன் அல்லது பிராண்ட் மேலாளரா பகிர்வதற்கு உங்களிடம் ஏதேனும் நல்ல வடிவமைப்புகள் உள்ளதா பகிர்வதற்கு உங்களிடம் ஏதேனும் நல்ல வடிவமைப்புகள் உள்ளதா உலகளவில் வடிவமைப்பாளர்கள், கலைஞர்கள், கட்டட வடிவமைப்பாளர்கள், கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் பிராண்டுகளிலிருந்து அசல் மற்றும் ஆக்கபூர்வமான வடிவமைப்புகளை வெளியிடுவதில் நாங்கள் மிகவும் ஆர்வமாக உள்ளோம். உங்கள் வடிவமைப்புகளை இன்று வெளியிடவும்.\nஅன்றைய வடிவமைப்பு நேர்காணல் வியாழன் 6 மே\nஅன்றைய வடிவமைப்பு புராணக்கதை புதன் 5 மே\nஅன்றைய வடிவமைப்பு செவ்வாய் 4 மே\nஅன்றைய வடிவமைப்பாளர் திங்கள் 3 மே\nஅன்றைய வடிவமைப்பு குழு ஞாயிறு 2 மே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vativamaippu.com/?D=98029&P=0", "date_download": "2021-05-07T02:10:54Z", "digest": "sha1:H7YYEFRXZVQZONGP3KNGOHKWPRKPATED", "length": 3797, "nlines": 54, "source_domain": "www.vativamaippu.com", "title": " Medieval Rethink இடைக்கால மறுபரிசீலனை கலாச்சார மையம் - வடிவமைப்பு இதழ்", "raw_content": "\nஇடைக்கால மறுபரிசீலனை கலாச்சார மையம்\nகட்டிடக்கலை, கட்டிடம் மற்றும் கட்டமைப்பு வடிவமைப்பு\nஇந்த வடிவமைப்பைப் பற்றி மேலும் அறிக\nThe Float ரியல் எஸ்டேட் நிறுவனம் வியாழன் 6 மே\nOr2 ஃபோட்டோக்ரோமிக் விதான அமைப்பு புதன் 5 மே\nEye of Ra' பொது நகர்ப்புற கலை தளபாடங்கள் செவ்வாய் 4 மே\nநீங்கள் ஒரு வடிவமைப்பாளர், கலைஞர், கட்டிடக் கலைஞர், புதுமைப்பித்தன் அல்லது பிராண்ட் மேலாளரா பகிர்வதற்கு உங்களிடம் ஏதேனும் நல்ல வடிவமைப்புகள் உள்ளதா பகிர்வதற்கு உங்களிடம் ஏதேனும் நல்ல வடிவமைப்புகள் உள்ளதா உலகளவில் வடிவமைப்பாளர்கள், கலைஞர்கள், கட்டட வடிவமைப்பாளர்கள், கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் பிராண்டுகளிலிருந்து அசல் மற்றும் ஆக்கபூர்வமான வடிவமைப்���ுகளை வெளியிடுவதில் நாங்கள் மிகவும் ஆர்வமாக உள்ளோம். உங்கள் வடிவமைப்புகளை இன்று வெளியிடவும்.\nஅன்றைய வடிவமைப்பு நேர்காணல் வியாழன் 6 மே\nஅன்றைய வடிவமைப்பு புராணக்கதை புதன் 5 மே\nஅன்றைய வடிவமைப்பு செவ்வாய் 4 மே\nஅன்றைய வடிவமைப்பாளர் திங்கள் 3 மே\nஅன்றைய வடிவமைப்பு குழு ஞாயிறு 2 மே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2021/01/blog-post_302.html", "date_download": "2021-05-07T00:11:48Z", "digest": "sha1:VPC7DOMM6V52A7L5RCRIMXSK3NNDI2IC", "length": 12836, "nlines": 98, "source_domain": "www.kurunews.com", "title": "இலங்கையில் சிகரெட், மது விற்பனைக்கு ஒரு வருடத்திற்கு தடை?? அரசாங்கத்திற்கு ஆலோசனை - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » இலங்கையில் சிகரெட், மது விற்பனைக்கு ஒரு வருடத்திற்கு தடை\nஇலங்கையில் சிகரெட், மது விற்பனைக்கு ஒரு வருடத்திற்கு தடை\nகொவிட் 19 தவிர்ப்புக்கான தடுப்பு மருந்து வழங்கப்படும் சூழலில் மது மற்றும் புகைப்பிடித்தலை குறைந்தது மூன்று மாதங்களுக்காவது தவிர்த்துக் கொள்ளுமாறு புகைப்பிடித்தல் மற்றும் மதுசாரம் தொடர்பான தேசிய அதிகார சபையின் தலைவர் டொக்டர் கலாநிதி சமாதி ராஜபக்ஷ நேற்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nபுகைப்பிடித்தல் மற்றும் மதுப்பாவனையானது கொவிட் 19 தவிர்ப்புக்கான தடுப்பு மருந்தின் செயற்றிறனை உடலில் குறைக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.\nகொவிட் 19 தவிர்ப்புக்கான தடுப்பு மருந்தின் முதற்தொகுதி நாளை 27 ஆம் திகதி இலங்கைக்கு வந்து சேரவிருப்பதோடு மறுநாள் தொடக்கம் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பு மருந்து வழங்கப்பட உள்ளது.\nஇது தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nகொவிட் 19 தவிர்ப்புக்கான தடுப்பு மருந்தை நாட்டுக்கு தருவிக்க நடவடிக்கை எடுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி உட்பட சம்பந்தப்பட்ட சகலருக்கும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.\nஅதேநேரம் கொவிட் 19 தொற்று அச்சுறுத்தல் நிலவும் சூழலில் புகைப்பிடித்தலும் மதுப்பாவனையும் உடலாரோக்கியத்திற்கு உகப்பானவை அல்ல.\nஅதனால் தான் சிகரெட் பாவனையை குறைந்தது ஒரு வருடத்திற்காகவது தடை செய்யுமாறும் மது விற்பனை நிலையங்களையும் குறைந்தது ஒரு வருடத்திற்காவது மூடிவிடுமாறு ஆலோசனை வழங்கியுள்ளோம்.\nஏனெனில் புகைப்பிடித்தலும் மதுப்பாவனையும் மனிதனின் நோயெதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தக்கூடியதாகும். குறிப்பாக மதுப்பாவனை ஈரலின் செயற்பாட்டில் பலவீனங்களை ஏற்படுத்தும்.\nபுகைப்பிடித்தலும் மதுப்பாவைனயும் மூளையின் ஞாபக சக்திக்கான கலங்களின் செயற்பாட்டையும் பலவீனப்படுத்தும். இவை கொவிட் 19 தொற்றின் தாக்கம் தீவிரமாக அமைய வாய்ப்பாக இருக்கும்.\nஅதனால் தான் கொவிட் 19 தொற்று அச்சுறுத்தல் நிலவும் சூழலில் நோயெதிர்ப்பு சக்தி பலமாக இருக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகின்றது.\nஅதேநேரம் இத்தொற்றைத் தவிர்ப்பதற்கான தடுப்பு மருந்தைப் பெற்றுக்கொள்பவர்களும் பலமான நோயெதிர்ப்பு சக்தியைக் கொண்டிருப்பது அவசியம்.\nஅதன் காரணத்தினால் கொவிட் 19 தவிர்ப்புக்கான தடுப்பு மருந்து வழங்கப்படும் சூழலில் மதுப்பாவனை மற்றும் புகைப்பிடித்தலை குறைந்தது மூன்று மாதங்களுக்காவது தவிர்த்துக் கொள்ள வேண்டும்.\nஇல்லாவிடில் இத்தடுப்பு மருந்தை வழங்குவதன் மூலம் எதிர்பார்க்கப்படும் பிரதிபலனை இப்பழக்கங்களைக் கொண்டிருப்பவர்களிடம் எதிர்பார்க்க முடியாது என்றும் குறிப்பிட்டார்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\n\"Kurunews.com ஐ பார்வையிடும் அன்பர்களே Facebook பக்கத்தை Like பண்ணிட்டு போங்கள்\".\nமட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை; பல்வேறு செயற்பாடுகளுக்கு தடை- மாவட்ட அரசாங்க அதிபர்...\nமட்டக்ககளப்பில் தனியார் வகுப்பு நடாத்த தடை விதித்துள்ளதுடன் கொரோனா அதிகரிப்பால் மட்டு போதனா வைத்தியசாலையில் ஒட்சிசன் தேவை அதிகரித்துள்ளது....\nசகல பாடசாலைகளுக்கும் மே மாதம் 07ம் திகதி வரை விடுமுறை\nநாடளாவிய ரீதியில் அனைத்துப் பாடசாலைகளையும் தொடர்ந்தும் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் 7 ஆம் திகதி வரை பாடசாலை...\n10 , 11 தரங்களில் பாடவிதான மாற்றம் அத்துடன் க.பொ.த சா/த, உ/த பரீட்சை நடைபெறும் காலங்களும் மாற்றம்\nதரம் 10 ,11 க்கான பாடத்திட்டங்களை ஒரு வருடம் & 9 மாத காலத்திற்கு மறுசீரமைக்கவும், ஆகஸ்ட் மாதத்தில் க.பொ.த. (சா /த) பரீட்சையை நடாத்தவும்...\nபுனித மிக்கேல் கல்லூரி மாணவன் பௌதீக விஞ்ஞான பிரிவில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலிடம்.\nவெளியான 2020 ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பௌதீக விஞ்ஞான பிரிவில் குகராஜா சஜீவ் 3 A சித்திகளுடன் ...\nமட்டக்களப்பு மாவட்டத்தில் விஞ்ஞான பிரிவில் முதலிடத்தை பெற்ற மட்/பட்டிருப்பு தேசிய பாடசாலை மாணவன்\nவெளியான 2020 ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் விஞ்ஞான பிரிவில் மகிழூர் கண்ணகிபுரத்தை சேர்ந்த தம்பி...\nமட்டக்களப்பு- கல்லடியில் 09 பேருக்கு கொரோனா தொற்று உறுதி...\nமட்டக்களப்பு மாவட்ட மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுற்குற்பட்ட கல்லடி பிரதேசத்தில் இன்றைய தினம் 09 பேருக்கு கொரோன தொற்று உறுதிசெய்யப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.navakudil.com/%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-05-07T00:14:30Z", "digest": "sha1:NPW25FWBA4HJEBYXGS6P5XY4M255EJBC", "length": 3692, "nlines": 39, "source_domain": "www.navakudil.com", "title": "ஈரான் மீதான தடைகள் நீக்கம் – Truth is knowledge", "raw_content": "\nஈரான் மீதான தடைகள் நீக்கம்\nஈரான் உட்பட அமெரிக்கா, ரஷ்யா, பிரித்தானியா, பிரான்ஸ், சீனா, ஜெர்மனி ஆகிய ஆறு நாடுகளும் கடந்த வருடம் செய்துகொண்ட உடன்படிக்கையின்படி சனிக்கிழமை முதல் ஈரான் மீதான தடைகள் நீக்கப்பட்டுள்ளன. இந்த தடை நீக்கம் செய்யப்பட்ட அதேதினம் ஈரானும் அமெரிக்காவும் தம் கைவசம் இருந்த கைதிகளையும் விடுவித்துள்ளனர்.\nஇந்த தடை நீக்கத்தையிட்டு பெரும் கவலை கொள்ளும் நாடு இஸ்ரவேல். இஸ்ரவேலும் அதன் ஆதரவு அமெரிக்கர்களும் இந்த தடை நீக்கத்துக்கு தொடர்ந்தும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுவரை வருடம் ஒன்றுக்கு $3 பில்லியனை பாதுகாப்புக்கு என பெற்றுவந்த இஸ்ரவேல் இப்போது அத்தொகையை $5 பில்லியன் ஆக்கும்படி கேட்கிறது.\nஇந்த தடை நீக்கம் அணு ஆயுதம் சம்பந்தப்பட்ட தடைகளுக்கு மட்டுமானதே. அணு ஆயுத விடயங்களுக்கு அப்பால் செய்யப்பட்ட தடைகள் இந்த நீக்கத்தில் அடங்கா.\nதடை நீக்கம் காரணமாக தடை காலத்தில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த சுமார் $50 பில்லியன் பணமும் ஈரானுக்கு இப்போது கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/crow-food-sastra/", "date_download": "2021-05-07T02:20:58Z", "digest": "sha1:VFJO5YT6MLAWYC5GJPVGSVZCYF23IV56", "length": 14002, "nlines": 104, "source_domain": "dheivegam.com", "title": "காகத்திற்கு உணவு வைக்கும் முறை | Crow food in Tamil", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் காகத்திற்கு சாதம் வைக்கும் பொழுது இந்த தவறை மட்டும் செய்து விடாதீர்கள்\nகாகத்திற்கு சாதம் வைக்கும் பொழுது இந்த தவறை மட்டும் செய்து விடாதீர்கள்\nகாகம் மூலமாக நம்முடைய பித்ருக்கள் அதாவது முன்னோர்கள் ஆசி புரிவதாக காலம் காலமாக நம்பப்பட்டு வருகிறது. காகம் பசியாற நாம் வைக்கும் உணவு பல விதமான தோஷங்கள் போக்கவும் நமக்கு உதவுகிறது என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. காகத்திற்கு சாதம் வைப்பது, அது போல் மற்ற பறவைகளுக்கு சாதம் வைப்பது, விலங்குகளுக்கு உணவு வைப்பது மிகப்பெரிய புண்ணியத்தை நமக்கு சேர்க்கும். தினமும் இரவில் நாய்க்கு சோறு வைத்து பாருங்கள் காலபைரவர் உங்களுடன் இருந்து, உங்களுடைய கடன் பிரச்சனைகளை தீர்த்து வைப்பார்.\nஅது போல நாம் செய்யும் சிறு சிறு விஷயங்களில் கூட நமக்கு நிறைய நன்மைகள் கிடைக்கப் பெறும். அது நமக்கே தெரியாமல் புண்ணியக் கணக்கில் சேரும். அப்படி ஒரு புண்ணியம் தான் காகத்திற்கு சோறு வைப்பது என்பது. பண்டிகை காலத்தில் மட்டும் தான் காகத்திற்கு சோறு வைக்க வேண்டும் என்று ஒன்றும் சட்டம் இல்லை. தினமும் காகத்திற்கு சோறு வையுங்கள். இது மிகப்பெரிய புண்ணியத்தை உங்களுக்கு கொடுக்கும். காகத்திற்கு சாதம் வைக்கும் பொழுது இந்த தவறை மட்டும் செய்து விடாதீர்கள் இதனால் பாவம் சேரும் என்கிறது சாஸ்திரம்.\nகாகம் மாமிசம் சாப்பிட்டாலும், நாம் காகத்திற்கு உணவு படைக்கும் பொழுது மாமிச உணவை படைக்கக் கூடாது என்பது நியதி. கறி, மீன் போன்ற மாமிச உணவுகள் மீந்து விட்டால் அதை காகத்திற்கு வைத்துவிடக் கூடாது. அதற்கு பதிலாக நாய், பூனை போன்ற விலங்குகளுக்கு வைக்கலாம். ஆனால் காகத்திற்கு உணவு வைக்கும் பொழுது சில கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டியது அவசியம். இது சாதாரண ஒரு விஷயம் அல்ல\nஅந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை ஒவ்வொரு பண்டிகை காலங்களிலும், விஷேசங்களிலும் நம்முடைய வீட்டில் நைவேத்தியங்கள் படைத்து காகத்திற்கு வைத்த பின்னர் தான் நாம் அதை எடுத்துக் கொள்கிறோம். இதில் ஆன்மீக ரீதியான நிறைய காரணங்கள் உள்ளன. பித்ருக்களின் ஆசி கிடைக்கவும், முன்னோர்களின் சாபங்கள் நீங்கவும் இது போல் நாம் கடைபிடித்து வருகிறோம். அதை சரியாக செய்ய வேண்டும் அல்லவா\nகாகத்திற்கு உணவு வைக்கும் பொழுது அந்த உணவை வேறு எந்த பறவைகள் எடுத்��ாலும், அதில் குற்றம் குறை ஒன்றும் இல்லை. நல்லது தான் நடக்கும். அதை நினைத்து வருத்தப்பட தேவையே இல்லை. ஒரு சிலர் என்ன நினைக்கிறார்கள் என்றால், காகத்திற்கு உணவு வைத்தோம் ஆனால் காகம் வந்து எடுக்கவில்லையே என்றால், காகத்திற்கு உணவு வைத்தோம் ஆனால் காகம் வந்து எடுக்கவில்லையே இதனால் ஏதாவது அபசகுணம் நிகழுமா இதனால் ஏதாவது அபசகுணம் நிகழுமா என்றெல்லாம் யோசிப்பார்கள். அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. காகத்திற்கு சாதம் வைப்பது நம்முடைய கடமை, எடுப்பதும் எடுக்காததும் பொறுத்து சகுனம் எதுவும் கூறப்படவில்லை.\nஆனால் வைக்கும் உணவு எச்சில் படாத சுத்தமான உணவாக இருக்க வேண்டும். சாப்பிட்டு மீந்து போன உணவை காகத்திற்கு கொண்டு போய் வைத்தால் பாவம் தான் வந்து சேரும். சுத்த அன்னத்தைக் தினமும் சமைத்து முடித்த பின்னர் முதல் வேலையாக காகத்திற்கு சிறிது கொண்டு போய் வையுங்கள். அதனுடன் விட்டு விடாமல் பக்கத்தில் சிறிது தண்ணீர் அருந்தும் படியாக காகத்திற்கு வையுங்கள். இதனால் மிகப்பெரிய நன்மைகளும், வாழ்வில் மாற்றங்களும் உங்கள் நடக்கும் என்பது உறுதி.\nஅது போல் மாமிச உணவை காகத்திற்கு தவறியும் வைத்து விடாதீர்கள். நாய், பூனை போன்ற விலங்குகளுக்கு மாமிச உணவை வையுங்கள். காகத்திற்கு எப்படி உணவு படைப்பது புண்ணியம் சேர்க்குமோ அதே போல் தான் விலங்குகளுக்கு உணவு வைப்பதும் மிகப்பெரிய புண்ணியத்தை தரும். தீராத கடன் பிரச்சினைகள் இருப்போர் நாய்களுக்கும், குடும்பத்தில் நிம்மதி இல்லாமல் தவிப்போர் காகத்திற்கும் இது போல் முறையாக உணவு படைத்து வாருங்கள். தொடர்ந்து இது போல் செய்து வந்தால் நிச்சயம் உங்கள் வாழ்க்கையில் நல்லது நடக்கும்.\nசொந்த வீடு கட்ட 5 ரூபாய் போதுமே\nஇது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nஉங்கள் வீட்டிற்கு வருபவர்கள் வீட்டை பார்த்து பொறாமைப்படுகிறார்களா இந்த பழத்தை இப்படி ஒளித்து வையுங்கள் இந்த பழத்தை இப்படி ஒளித்து வையுங்கள் பொல்லாக் கண் திருஷ்டியும் நொடியில் ஒழிந்துவிடும்.\nவெள்ளிக்கிழமையில் இந்த கலசத்தை பூஜை அறையில் வைத்தால் உங்கள் கையில் பண புழக்கத்திற்கு பஞ்சமே இருக்காது\nகண்ணை கலங்க வைக்கும் கஷ்டம் வரும்போது, வீட்டில் இருந்தபடியே இந்த வழிபாட்��ினை செய்தால் தீராத கஷ்டத்திற்கும் தீர்வு கிடைக்கும்.\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://online.seterra.com/ta/vgp/3387", "date_download": "2021-05-07T01:12:15Z", "digest": "sha1:GQC6NVK4W43B5UMFLJ4YURCXOA4GTVIG", "length": 5934, "nlines": 91, "source_domain": "online.seterra.com", "title": "ஐரோப்பிய ஒன்றியம்: நாடுகள் - வரைபட வினாடி வினா விளையாட்டு", "raw_content": "\nHome >> செட்ரா ஆன்லைன் >> ஐரோப்பிய ஒன்றியம்: நாடுகள்\nஐரோப்பிய ஒன்றியம்: நாடுகள் - வரைபட வினாடி வினா விளையாட்டு\nஅயர்லாந்து, ஆஸ்திரியா, இத்தாலி, எஸ்டோனியா, கிரீஸ், குரோஷியா, சுவீடன், செக் குடியரசு, சைப்ரஸ், டென்மார்க், நெதர்லாந்து, பல்கேரியா, பிரான்ஸ், பின்லாந்து, பெல்ஜியம், போர்ச்சுகல், போலந்து, மால்டா, ருமேனியா, லக்சம்பர்க், லாட்வியா, லிதுவேனியா, ஜெர்மனி, ஸ்பெயின், ஸ்லோவாக்கியா, ஸ்லோவேனியா, ஹங்கேரி (27) தனிப்பயன் வினாடி வினாவை உருவாக்கவும்\nவிளையாட்டு முறை அனைத்தையும் காட்டு கற்றுணர் பல தேர்வு முள் முள் (கடினமானது) வகை\nAll Game Modes பல தேர்வு முள் Pin (no borders) முள் (கடினமானது) Pin (hard, no borders) லேபிள்களை வைக்கவும் லேபிள்களை வைக்கவும் வகை (எளிதானது) வகை (தானியங்குநிரப்புதல்) வகை\nஐரோப்பா: நாடுகள் (கார்ட்டூன் பதிப்பு)\nஐரோப்பா: கொடிகள் (எளிதான பதிப்பு)\nவடக்கு மற்றும் மத்திய அமெரிக்கா\nவடக்கு மற்றும் மத்திய அமெரிக்கா: நாடுகள்\nவடக்கு மற்றும் மத்திய அமெரிக்கா: கொடிகள்\nஆப்பிரிக்கா: கொடிகள் (எளிதான பதிப்பு)\nஆசியா: நாடுகள் (கார்ட்டூன் பதிப்பு)\nஉலகம்: கண்டங்கள் மற்றும் பெருங்கடல்கள்\nமுக்கிய வார்த்தைகள்: புவியியல், விளையாட்டுகள், வினாடி வினா விளையாட்டு, வெற்று வரைபடங்கள், புவி விளையாட்டுக்கள், கல்வி விளையாட்டுகள், மனப்பாடம், நினைவகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilkilavan.com/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4/", "date_download": "2021-05-07T01:44:20Z", "digest": "sha1:ML72Z6WIRASFR6VS7BICBJHAPNTQBD2T", "length": 3339, "nlines": 65, "source_domain": "tamilkilavan.com", "title": "உடல் எடை வேகமாக குறைக்க, தலை முடி வளர தினம் ஒரு லட்டு போதும். | Tamil Kilavan", "raw_content": "\nஉடல் எடை வேகமாக குறைக்க, தலை முடி வளர தினம் ஒரு லட்டு போதும்.\nஉடல் எடை வேகமாக குறைக்க, தலை முடி வளர தினம் ஒரு லட்டு போதும்\n கறிக்குழம்பை மிஞ்சும் சுவையில் முளைகட்டிய சுண்டல் குழம்பு\n கறிக்குழம்பை மிஞ்சும் சுவையில் முளைகட்டிய சுண்டல் குழம்பு.\nTwitterFacebook ஒரு தட்டு சோறு வச்சாலும் நிமிடத்துல காலி பண்ணீருவாங்க…இந்த side dish …\nஒரு தட்டு சோறு வச்சாலும் நிமிடத்துல காலி பண்ணீருவாங்க…இந்த side dish செய்ங்க.\nகடையில் முட்டை வாங்கறதுக்கு முன்னாடி இந்த வீடியோ பாருங்க\n2 முட்டை இருக்கா வீட்டில் உள்ள அனைவருக்கும் கிரிஸ்பியான ஈவினிங் ஸ்நாக்ஸ் ரெடி.\nமுட்டை சுக்கா லஞ்சுக்கு பக்காவான சைடிஷ் 10 நிமிடத்தில் இப்படி சுவையா செய்து கொடுத்து அசத்துங்க.\nபல கோடி சொத்துக்கு சொந்தக்காரி ஒரு வேலை சோற்றுக்காக வீட்டு வேலை செய்து பிழைக்கும் அவலம்\n20 ஆயிரம் வருடங்களுக்கு முன் மூழ்கிப்போன தமிழனின் வரலாறு.. தற்போது மெல்ல மெல்ல மிதந்து வருகிறது.. தற்போது மெல்ல மெல்ல மிதந்து வருகிறது.. ஒவ்வொரு தமிழனும் உலகத்துக்கு அறிய நண்பர்களுடன் பகிருங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilkilavan.com/%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2021-05-07T00:04:20Z", "digest": "sha1:VXNFFOWETAXAZPNARYLKUSLCY7KFMLFB", "length": 3585, "nlines": 65, "source_domain": "tamilkilavan.com", "title": "ஐந்து நிமிடத்தில் சுவையான காலை உணவு சட்டுனு ஒரு ஈசி டிபன் முற்றிலும் புதிய சுவையில் | Tamil Kilavan", "raw_content": "\nஐந்து நிமிடத்தில் சுவையான காலை உணவு சட்டுனு ஒரு ஈசி டிபன் முற்றிலும் புதிய சுவையில்\nஐந்து நிமிடத்தில் சுவையான காலை உணவு சட்டுனு ஒரு ஈசி டிபன் முற்றிலும் புதிய சுவையில்\nTwitterFacebook 1 கப் ரவை வைத்து நாவில் கரையும் அல்வா ரெடி ஒருதடவை …\n1 கப் ரவை வைத்து நாவில் கரையும் அல்வா ரெடி ஒருதடவை ருசி பாருங்கள் அப்புறம் டெய்லி இதுதன் உங்கள் வீட்டில்.\nTwitterFacebook இத்தனை நாள் இது தெரியாம போச்சே miss பண்ணிடாதீங்க அவசியம் தெரிந்து …\nஇத்தனை நாள் இது தெரியாம போச்சே miss பண்ணிடாதீங்க அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்\nகடையில் முட்டை வாங்கறதுக்கு முன்னாடி இந்த வீடியோ பாருங்க\n2 முட்டை இருக்கா வீட்டில் உள்ள அனைவருக்கும் கிரிஸ்பியான ஈவினிங் ஸ்நாக்ஸ் ரெடி.\nமுட்டை சுக்கா லஞ்சுக்கு பக்காவான சைடிஷ் 10 நிமிடத்தில் இப்படி சுவையா செய்து கொடுத்து அசத்துங்க.\nபல கோடி சொத்துக்கு சொந்தக்காரி ஒரு வேலை சோற்றுக்காக வீட்டு வேலை செய்து பிழைக்கும் அவலம்\n20 ஆயிரம் வருடங்களுக்கு முன் மூழ்கிப்போன தமிழனின் வரலாறு.. தற்போது மெல்ல மெல்ல மிதந்து வருகிறது.. தற்போது மெல்ல மெல்ல மிதந்து வருகிறது.. ஒவ்வொரு தமிழனும் உலகத்துக்கு அறிய நண்பர்களுடன் பகிருங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akattiyan.lk/2021/04/blog-post_393.html", "date_download": "2021-05-07T02:12:27Z", "digest": "sha1:OUXP2XLUUAZJ2HHGI3WHWQJUUNTFEFKK", "length": 5303, "nlines": 65, "source_domain": "www.akattiyan.lk", "title": "போதைப்பொருள் தடுப்பு பணியக அதிகாரிகள் மீண்டும் விளக்கமறியலில் - அகத்தியன் | Online", "raw_content": "\nHome இலங்கை போதைப்பொருள் தடுப்பு பணியக அதிகாரிகள் மீண்டும் விளக்கமறியலில்\nபோதைப்பொருள் தடுப்பு பணியக அதிகாரிகள் மீண்டும் விளக்கமறியலில்\nபோதைப்பொருள் கடத்தல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகத்தின் 16 அதிகாரிகள் உட்பட 20 பேரும் எதிர்வரும் 19ம் திகதி வரையில் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.\nபோதைப்பொருள் தடுப்பு பணியக அதிகாரிகள் மீண்டும் விளக்கமறியலில் Reviewed by Chief Editor on 4/12/2021 12:29:00 pm Rating: 5\nபாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் மேலதிக வகுப்புகளுக்கு மறு அறிவித்தல் வரை விடுமுறை\nபாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் மேலதிக வகுப்புகளுக்கு மறு அறிவித்தல் வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், நோன்பு பெருநாள், வெசாக் ...\nகொரோனா பரவல் காரணமாக நாட்டின் பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள விடுமுறையானது மேலும் ஒரு வார காலத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ...\nமோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nவாகன போக்குவரத்து திணைக்களத்தின் நாரஹென்பிட்டி மற்றும் வேரஹெர அலுவலகங்கள் ஒரு வாரத்திற்கு மூடப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம த...\nDReAM என அறிமுகப்படுத்தப்பட்டுள்ள முற்பாதுகாப்பு விதிமுறைகளுக்கமைய மதுபான சாலைகளை திறந்து வைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. D – சமூக இடை...\nமுழு அதிகாரம் : அகத்தியன் ஊடக சேவை 2020\nஆசிரியர் பீட தெடர்புகளுக்கு 0779516119\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.azimpremjifoundationpuducherry.org/teaching-resources/any?keys=&type%5B%5D=classroom_resources", "date_download": "2021-05-07T00:31:54Z", "digest": "sha1:ZSWPXBWEDVFJ2WIBTBA54ZBHGH2FJOPS", "length": 4831, "nlines": 204, "source_domain": "www.azimpremjifoundationpuducherry.org", "title": "| Azim Premji Foundation Puducherry", "raw_content": "\nநாம் வாசிக்கும் புத்தகம், கதை, விளம்பரம் என எதுவாக இருந்தாலும் அதில் கூறப்பட்டுள்ள உட்கருத்தை...\nஎதிர்சொற்களைப் புரிந்துகொண்டு வாக்கியத்தில் அமைத்துப் பேச / எழுதக் கற்றுக்கொள்வர்\nகுறில் நெடில் - செயல்திட்டம்\nபடிக்கும் பகுதியில் உள்ள சொற்களின் பொருளை சூழலை வைத்துப் புரிந்து கொள்ளுதல். பொருள் உணர்ந்து...\nஆசிரியர் மாணவர்களுக்குத் தெரிந்த இனிப்பு மற்றும் கார வகைத் தின்பண்டங்களைப் பற்றிப் பேசி...\nமுன்னறிவுடன் பாடப்பொருளை இணைத்துக் கற்பிக்கும் வகையில் ஆசிரியர் எளிய கேள்விகளைக் கேட்டு மாணவர்களை...\nஆசிரியர் மாணவர்களின் உடல் உறுப்புகள் குறித்த முன்னறிவைச் சோதிக்கும் வகையில் எளிய கேள்விகளைக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95/", "date_download": "2021-05-07T00:55:19Z", "digest": "sha1:E5W4GYQJXIT27RHIG5RIYKQFVBWPUH43", "length": 7310, "nlines": 162, "source_domain": "www.tamilstar.com", "title": "சிவகார்த்திகேயன் கேட்ட கேள்விக்கு நொந்து போய் பதில் சொன்ன தளபதி விஜய், செம்ம கலாட்டா வீடியோ - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nசிவகார்த்திகேயன் கேட்ட கேள்விக்கு நொந்து போய் பதில் சொன்ன தளபதி விஜய், செம்ம கலாட்டா வீடியோ\nNews Tamil News சினிமா செய்திகள்\nசிவகார்த்திகேயன் கேட்ட கேள்விக்கு நொந்து போய் பதில் சொன்ன தளபதி விஜய், செம்ம கலாட்டா வீடியோ\nதமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர் விஜய். இவர் நடிப்பில் மாஸ்டர் படம் இந்த கொரொனா பாதிப்பு முடிந்து திரைக்கு வரவுள்ளது.\nஇந்நிலையில் விஜய் சில வருடங்களுக்கு முன்பு ஒரு படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார்.\nஅந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது வேறு யாருமில்லை, தற்போது வளர்ந்து வரும் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் தான்.\nஇவர் விஜய்யிடம் சங்கீதா மேடம் அவர்களுக்கு நீங்கள் நடித்த படங்களில் உங்களுக��கு ஜோடியாக நடித்த ஹீரோயின்களில் யார் பேவர்ட் என கேட்டார்.\nகூடவே அசின் இருக்க விஜௌ ‘ ஏண்டா…ஏண்டா இப்படி’ என்று சிரித்துக்கொண்டே சொன்னார், இதோ அந்த வீடியோ…\nஆல் டைம் ரெக்கார்ட் சாதனை செய்த அஜித் ரசிகர்கள், நம்பர் 1 இடத்தில்\nதல வெறியானாக மாறிய யுவன், ரசிகர்கள் கொண்டாட்டம், இதோ புகைப்படத்துடன்\nஉயர் அதிகாரியின் மகள் கடத்தப்பட அவரை போலீஸ் அதிகாரி வரலட்சுமி காப்பாற்றுகிறார். அதன் தொடர்ச்சியாக பெண் கடத்தல்...\nகனடியப் பெண்களில் நாடு தழுவிய உயர்சாதனை படைத்த ஈழப்பெண்\nஇந்தியாவுக்கு அவசர மருத்துவ உதவி பொருட்களை அனுப்பியது கனடா\n12 வயதிற்கு மேற்பட்டவர்கள் Pfizer தடுப்பூசியை பெற Health கனடா அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=204012911", "date_download": "2021-05-07T01:18:48Z", "digest": "sha1:GSDCC7IKIA2H5O2HS5CQF3FA34QZENVF", "length": 114671, "nlines": 434, "source_domain": "old.thinnai.com", "title": "கடிதங்கள் – ஜனவரி 29,2004 | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை\nகடிதங்கள் – ஜனவரி 29,2004\nகு.மு.விசயகுமார் – சோதிப் பிரகாசம் – நாக.இளங்கோவன் – அ.முஹம்மது இஸ்மாயில் – அரவிந்தன் நீலகண்டன்- பித்தன் – K.ரவி ஸ்ரீநிவாஸ் –\nகிராமத்திலிருந்து ஒரு உலகளாவிய மின்னிதழ்\nமுழுவதும் யுனிகோடில் உங்களுக்காக துளிர் விட்டுள்ளது\nஆம் இ-சங்கமம் மின்னிதழ் வெளிவந்துவிட்டது 14.01.2004 முதல்.\nதமிழர்களை இணைக்கும் களமாக, அவர்களின் அறிவுப் பசியைத் தீர்க்க, தமிழர்களின் கலை, கலாசாரம்,\nமரபு சேவையைப் பிரதானப்படுத்தவும் இ-சங்கமம் ஓர் தளமாக அமையவேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்துடன்\nஎந்த இதழ்களிலும் வராத(EXCLUSIVE) பகுத்தறிவு பகலவன் பெரியாரின் நாட்குறிப்பு (தொடர்)\nகணினி தொழில் நுட்ப கட்டுரைகள்\nசிங்கப்பூர், இந்திய செல்வாக்கின் கீழ் இருந்த தீவு என்பதைக் குறிக்கும் எழுத்துக்கள் கொண்ட பழங்காலப்\nஅத்தீவுக்கு முதன் முதலில் சென்ற தமிழன் யார் \nசிங்கப்பூர் வரலாறு அறிமுகத்தில் சிங்கப்பூர் பற்றிய தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம்.\nகட்டுரைகள் பகுதியில் இ-சுவடியை நடத்தும் கண்ணன், அத்திட்டத்திற்கு உதவியாக இருக்கும் சுபாஷினி,\nகணினி பகுதியில் முகுந்தராஜ், உமர் என மேலும் பலரும் எழுதியுள்ளனர்.\nமேலும் பல புதிய உள்ளீடுகளுடன்,புத்தம்புதிய பொலிவுடன் மலர்ந்துள்ளது- http://e-sangamam.com/.\nஉலகெங்கும் வாழும் தமிழர்கள் தமிழ்நாட்டுக்குச் செய்திகள் அனுப்ப வேண்டுமானால், அத்தகைய சேவையை\nஇலவசமாக வழங்க முன்வந்துள்ளது http://e-sangamam.com/mannanjal.htm\n அல்லது சேவை அமைப்புகளோடு தொடர்புடையவரா \nநீங்கள் உதவவேண்டிய பக்கம் ஒன்று உள்ளது அது உதவுவோம் வாருங்கள் http://e-sangamam.com/Vasantham_help.htm\nயூனிகோட்டில் தமிழுக்குப் புதிதாக வந்துள்ளது http://e-sangamam.com/.\nஉங்களின் மதிப்பு மிக்க படைப்புகள் எதுவாயினும் சங்கமம் வரவேற்கின்றது.\nநீங்கள் எழுதவேண்டும் என ஆவல் உள்ளவரா ஆனால் இதுவரை ஏதும் எழுதாதவரா ஆனால் இதுவரை ஏதும் எழுதாதவரா \nமுரசு அஞ்சலில் திஸ்கி (tscu_inaimathi) எழுத்துருவைப் பயன்படுத்தி உங்களின் படைப்புகள் கருத்துகள் அனைத்தும்\nதமிழில் தட்டச்சு செய்யப்பட்டு editor@e-sangamam.com முகவரிக்கு உங்கள் முகவரி, நிழற்படத்தையும் இணைத்து மின்னஞ்சல் செய்யுங்கள்.\n‘திண்ணை ‘யின் தொகுப்பாளருக்கு வணக்கம்\nஜெயமோகனின் ‘காடு ‘ கதை பற்றிய எனது கருத்துகளை விள்ளனம் செய்து இருக்கின்ற ரவி ஸ்ரீநிவாஸ், எது ‘அ-பத்தம் ‘ எது ‘பத்தம் ‘ என்று மதிப்பெண் வழங்குகின்ற ஓர் ஆசிரியராகத் தம்மைக் கருதிக் கொண்டு இருப்பது தெரிகிறது.\n‘நன்று ‘, ‘மிகவும் நன்று ‘, ‘போதாமை ‘, ‘மிகவும் போதாமை ‘, என்று எல்லாம் குறிப்புகளை எழுதிப் பரிட்சைத் தாள்களை யாரும் திருத்தி விடலாம்; ஆனால்,\nஎதிர்க் கருத்துகளை எதிர் கொண்டு விட முடியாது.\nஎனினும், ‘அபத்தம் ‘ என்னும் ஒரே வார்த்தையில் என்னமாய் மார்க்சியத்தை\nநமக்கு ரவி ஸ்ரீநிவாஸ் தெளிவு படுத்தி விடுகிறார்\n‘மாயப் படல் கீறித் தூய ஞான நாட்டம் பெற்ற பின் யானும், உன்னையும் கண்டேன்; என்னையும் கண்டேன்; பிறரையும் கண்டேன் ‘ என்று பாடிய பட்டினத்து அடிகளைத் தமது ‘அபத்த ‘க் குண்டுகளால் இன்னமும் இவர் வீழ்த்தாமல் இருப்பதுதான் அதிசயம்\n‘அனுபவ அறிவு நிலை ‘யில் ‘அபத்தமாக ‘ ( நன்றி: ரவி ஸ்ரீநிவாஸ்\nமுதலாண்மையைப் புரிந்து கொள்வதற்கு முற்பட்டுக் கொண்டு இருந்த ஆய்வாளர் களுக்கு எதிராக, ‘காரண அறிவு நிலை ‘யில் கார்ல் மார்க்ஸ் எழுதிய நூல்தான் ‘முதல் ‘ அதன் ஒன்றாம் தொகுதியின் ஒன்றாம் அதிகாரத்தைக் கொஞ்சம் படித்துப் பார்த்து விட்டு ரவி ஸ்ரீநிவாஸ் பதில் கூறட்டும்—எது அபத்தம் என்று அதன் ஒன்றாம் தொகுதியின் ஒன்றாம் அதிகாரத்தைக் கொஞ்சம் படித்துப் பார்த்து விட்டு ரவி ஸ்ரீநிவாஸ் பதில் கூறட்டும்—எது அபத்தம் என்று\nதியாகு மற்றும் ஜமதக்னி ஆகியோரின் ‘மூலதனங் ‘களைத் தவிர்த்து விடலாம்\nசரக்கு இருந்தால் அவிழ்த்து விடுங்கள், ரவி\n மற்றபடி ‘அபத்தம் ‘ என்பது போன்ற உங்கள் முனகல்களை எப்படி\nநான் எதிர் கொள்ள முடியும்—பரிதாபப் படுவதைத் தவிர \nஆகிட முடியாது; அறிவாண்மைப் பண்பாடும் ஆகி விட முடியாது.\nநாயர் ஆண்களால் தலித் பெண்கள் இழிவு படுத்தப் படுவதைப் பொறுத்துக்\nகொள்ள முடியாத ‘காடு ‘ கதையின் நாயர் கதாநாயகன், நாயர் பெண்களை\nஇழுத்துப் பேசி, இழிவு படுத்துவது நாயர் ஆண்களைத்தான் மற்ற வீட்டுப் பெண்களை இழிவு படுத்துகின்ற ஆணாதிக்கக் காரர்கள், தங்கள் வீட்டுப் பெண்கள் இழிவு படுத்தப் படுவதைப் பொறுத்துக் கொள்ளாதது போன்ற ஒரு நிகழ்வின்\n சமுதாயத்தின் மெய்மையினைச் சித்தரிக்கின்ற ஒரு கதை\nஎழுத்தாளன், அந்த மெய்மைக்கு எப்படிக் காரணம் ஆகிட முடியும் \nஎப்படியும், பெண்களை விடவும் அதிகமாகப் பெண்மையின் மாண்பில் அக்கறை கொண்டு இருக்கின்ற ரவி ஸ்ரீநிவாஸ் நமது பாராட்டிற்கு உரியவர்\nதிரு.வரதன் அம்மா..அம்மா என்று எழுதியிருந்த பாசமடல் கண்டேன்.\nமாமியார் உடைத்தால் மண்குடம், மருமகள் உடைத்தால் பொன்குடம் என்று\nசொல்வது போல இருக்கிறது திரு.வரதனின் ஊழல் ஒப்பீடு\nகருணாநிதி ஊழல் செய்தார்; ஆனால் செயலலிதா செய்யவில்லை என்று கூட\nதுணிந்து சொல்லிவிடுவார் போலிருக்கிறது. அவ்வளவு பாசம் 😉\nஎனினும் அப்படிச் சொல்லாத திரு.வரதனைப் பாராட்டத்தான் வேண்டும்.\nகீழே இருப்பன அவரின் சில எண் வரிசையிட்ட, இடாத கருத்துக்களுக்கான\nஎதிர்வினை. ‘[ ‘குறிக்குள் இருப்பன அவரின் கருத்துக்கள்.\n[ 1. 1991-ல் ‘சோ ‘வையும், மூப்பனாரையும் அண்டிப் பிழைத்த கருணாநிதி,\n-அதே திரு.கருணாநிதி, மத்திய பதவிக்காய் ‘மாற ‘க் காரணம் இருந்ததால், இந்துத்துவா மறந்து மஞ்சள் துண்டு அணிந்து உறவு பூண்டது போலல்லாமல், நீங்கள் தைரியமாக நிலைப்பாடு எடுத்து, காங்கிரஸை வைக்க வேண்டிய இடத்தில் வைத்தீர்கள்.\nமூப்பனாரை அண்டிப் பிழைத்தது கருணாநிதியா என்பதை மக்கள் அறிவர்.\nதங்களின் கருத்துப்படி தேசத்தை நடத்தும் பா.ச.க\nஇப்பொழுது அண்டுவதற்கு இடம் தேடி, முட்டிக்கால் போட்டு\nவெயிலில் நிற்பதெல்லாம் விட்டுவிடலாம். ஏனெனில் அதுவும் மக்களுக்கு நன்கு தெரியும்.\nஅதேபோல ‘மூப்பனார்களை அண்டி பிழைப்பை நடத்தியது\n ‘ என்பதும் மக்களுக்குத் தெரியும்;\nமயிலாடுதுறை டி.இராசேந்தரைக் கேட்டால் மிகத் தெளிவாகச் சொல்லிவிடுவார்.\nகேட்டுப்பாருங்கள், பாட்டு கூட எழுதித் தருவார்.\nமூப்பனார் – கருணாநிதி ஒருபுறம் இருக்கட்டும்.\n‘சோ ‘ வை அண்டிப்பிழைத்தார் என்கிறீர்களே;\nஅதுதான் நகைச்சுவையின் உச்ச கட்டம்.\nபா.ச.கவுடன் கூட்டு சேர மஞ்சள் துண்டு போட்டார் என்பதும்\nஉங்களின் கிண்டல் என்றே, செல்லமாக உங்களைப் பார்த்து\nபுன்னகை செய்யத் தோன்றுகிறது. கொஞ்ச நாளைக்கு முன்னர்\nகொழுக்கட்டை அரசியல் எழுதினீர்கள்; இப்பொழுது மஞ்சள்\nதுண்டு அரசியல் செய்கிறீர்கள். அவர் வெள்ளைச் செருப்பு\nஅணிகிறார்; அதற்கு ஏதாவது அடுத்த முறை எழுதுங்கள்.\nஅய்யா, அவிழ்த்துப் போட்டு விட்டு வந்தால் கூட பரவாயில்லை,\nஎன்று கூட்டு வைத்துக் கொள்ள அலையும் பா.ச.கவுக்கு\nதுண்டோ கோவணமோ மஞ்சளா கருப்பா என்ற சிந்தனை\n[ 5. கண்ணகி சிலையின் கற்புக்கு கண்ணீர் வடித்து வேம் போடத் தெரியாமல்,\nநிஜத்தில் பெண்கள் நிம்மதியாக வாழ வழி செய்தீர்கள்.\nஅதன் பொருள் தமிழ்ப்பகைகளுக்கும்தெரிய வாய்ப்பில்லை.\nசெல்வமணிக்கும் இராசேந்திரனுக்கும் முதலைக் கண்ணீர்\nவிடுபவர்களுக்கு அதே திசையில் திரும்ப எழுதுதல்\nஏலாததல்ல; அது பண்பாடல்ல என்பதால் தவிர்க்கிறேன்.\nஅதேபோல, கண்ணகியின் பண்பாட்டு வரலாறு\nதெரியாத பண்பாளர்களிடம் கண்ணகி பற்றிப் பேசுவது கண்ணகி சிலைக்கு\nநடந்த அநீதியை விட அநீதி என்பதால் இங்கு தவிர்க்கிறேன்.\n8. கிளைக்கு கிளைத் தாவி கனி பறிப்பது போல் தி.மு.க நிலைப்பாடு கொண்ட போது,\nகாங்கிரஸையும் பா.ஜ.கா-விடமும் மண்டியிடாமல் அரசியல் செய்கிறீர்கள்.\n1998ல் செயலலிதாவுடன் பா.ச.க கூட்டு.\n1999ல் கருணாநிதியுடன் பா.ச.க கூட்டு.\n2004ல் செயலலிதாவுடன் பா.ச.க கூட்டு.\n1998ல் பா.ச.கவுடன் செயலலிதா கூட்டு.\n1999ல் காங்கிரசுடன் செயலலிதா கூட்டு\n2004ல் பா.ச.கவுடன் செயலலிதா கூட்டு\nஇப்படி மாற்றி மாற்றி கனி பறிக்கும் அனைவரையும்\nமறந்துவிட்டுத் தனக்குப் பிடிக்காத கருணாநிதியை மட்டும்\nசொல்வதில் திரு.வரதனுக்கு ஆனந்தமோ ஆனந்தம் போலிருக்கிறது.\nமண்டிக் கலை பற்றி நீங்கள் இன்னும் அறிய வேண்டியதிருக்கிறது.\nதற்போது காங்கிரசுகிட்டே மண்டி போட்டாலும் நடக்காது.\nஅண்டோ மைனா அம்முவை இன்னும் மறந்துவிடவில்லை.\nமறக்கவிரும்பும் போது மண்���ி மட்டும் இல்லை; இன்னும் என்னென்னவோ\nபோடவேண்டியதிருக்காது என்று யார் சொல்லமுடியும் \n9. மாறன், உடல்நிலை i.c.u என்ற போதிலும், பிற வசதிகளுக்காக மந்திரி பதவியைக் கெட்டியாக பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்து விட்டு, காங்கிரஸ் ஜெயிக்கும் என்ற நிலை வந்தவுடன் கிளை மாறும் தி.மு.க தலைமையின் சந்தர்ப்ப வாதத்தை மக்கள் அறிவர்.\nசரி – அப்படியே வைத்துக் கொண்டாலும், எம்.சி.ஆரின் உடல்நலம்\nகெட்டு நடக்க முடியாமல், பேசமுடியாமல் கிடந்த போது\nதலைமையில் வந்த அதிமுகவைப் போற்றும் திரு.வரதனுக்கு\nநினைவில் இருந்து நீங்கி விட்டது போலும்.\nஒரு மாதத்திற்கும் சற்று முன்னே, காங்கிரசுக் கட்சி\n3 பெரிய சட்ட மன்றத் தேர்தலிலே தோற்று, ஆட்சியை\nஇழந்து நின்ற நிலையில்தான் தி.மு.க பா.ச.கவை விட்டு\nவிலகியதே அன்றி, காங்கிரசு வெற்றிப் பேரிகைக் கொட்டிக்\nகொண்டு இருந்த போது அல்ல. அண்மையில் நடந்த இதனையே மறந்து விட்டு\n‘சந்தர்ப்பவாதம் ‘ என்று கூறும் திரு.வரதனுக்கு, முந்தையது\nஏதோ வெங்கைய நாயுடுவுக்கும் தமிழக பா.ச.கவுக்கும்தான்\nபேச வேறு ஏதுமே இல்லாததால் ‘சந்தர்ப்பவாதம் ‘ என்று\nபேசித் திரிகிறார்கள் என்றால் திரு.வரதனும் அப்படித்தான் போலும்.\n10. …… சும்மா கையைப் பிடிக்கும் முன்னே, ‘ஐயோ கொல்றாங்களே.. ‘ என்று நடிகர் திலகம்.சிவாஜி அவர்களை மிஞ்சும் நடிப்புச் சக்ரவர்த்திகளைப் போல் அல்லாமல் தைரியமாக ஆண்மையுடன் தலைமை கொண்டுள்ளீர்கள்\nகருணாநிதி ‘கையைப் பிடிக்கும் முன்னர் ‘ நாடகம் ஆடிவிட்டார் என்று சொல்கிறீர்கள்.\nநடிகர் திலகத்தையும் மிஞ்சி விட்டார் என்று சொல்கிறீர்கள்.\n89/90ல் சட்டமன்ற பாஞ்சாலி நாடகத்தைக் கூட விட்டுவிடலாம்.\nஏனெனில் அங்கே கருணாநிதி இருந்தார் என்பதால் நீங்கள் நம்பக் கூடாது\nஎன்ற விதி உங்களுக்கு உண்டு.\nசென்னாரெட்டி என்றொரு வயதான மனிதர்.\nநடக்கும் போது காலும் சரியாக இருக்காது.\nகையைக்கூட தூக்க முடியாத மனிதர்.\nஅதிலும் ஒரு கையில் கம்பை வைத்துக் கொண்டிருக்க\nவேண்டிய கட்டாயம் அவருக்கு உண்டு.\nஅப்படிப் பட்ட அவர், ‘கையைப் பிடித்து இழுத்து விட்டார் ‘ என்று யார் சொன்னது\nஎன்பது நாடகக் கலை வல்லுனராக தன்னைக் காட்டிக்கொள்ளும்\nதிரு.வரதன் யோசிக்க விரும்ப வில்லை போலும்.\n11. பா.ஜ.க- ஆட்சி கூட்டணியிலிருந்து தி.மு.க விலகும் முடிவுக்கு ஒரே நீண்��� தொலை நோக்கு காரணம், தன் குடும்பம் சேராத, திரு.டி.ஆர்.பாலு முக்கியத்துவம் பெற்றுவிடக் கூடாது எனும் மூன்றாம் தர சுயநல நிலைப்பாட்டை திரு.கருணாநிதி குடும்பம் கொண்டதால் தான் என்பது ஊரறியும்.\nகருணாநிதியை எதிர்க்கக் கூடாது என்பதில்லை. கருணாநிதிக்கு எதிராக\nஎழுதுவது நல்லதுதான். ஆனால் எழுதுவதில், கேட்கும் கேள்விகளில்\nஓரளவேனும் முதிர்வை எதிர்பார்ப்பவர்கள் வாசகர்கள் என்பதை அறியவேண்டும்.\nசும்மாவாச்சும், ‘எனக்கு மட்டும் முக்கா முட்டாயி; அவனுக்கு பார் முழு முட்டாயி ‘\nஎன்பது போன்ற கருத்துக்கள் நகைக்கத்தான் உதவும்.\nதிரு.கருணாநிதி போல் தனக்குத் தானே உலக தமிழ் மக்களின் தலைவர் என்று நீங்கள் பட்டம் சூட்டிக் கொள்ளவில்லை.\nஎன்ன வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளலாம். ஆனால் ‘தமிழ் மக்களின் தலைவர் ‘\nஎன்பது பொருந்தாது என்று போட்டுக் கொள்ளாத செயலலிதாவின் நேர்மையை நான் பாராட்டுகிறேன்.\nஇல்லை ஒளவையாருக்கு உரை எழுதுகிறேன் என்று பம்மாத்து பண்ணவில்லை.\nஅட, அந்தப் பம்மாத்தைத்தான் பண்ணச் சொல்லுங்களேன்; படிக்கவா ஆளில்லை.\nஅம்மா ‘உதிர்ந்த உரோமம் ‘ என்றால் அது இயற்றமிழ்.\nஅவர் ஆடிய நடனங்களே கூத்துத் தமிழ்.\nஅதனால் பேரீச்சம்பழ இலக்கியங்கள் பெருத்து விட்ட\nஉரையை ‘இசைத் தமிழில் ‘ எழுதச் சொல்லுங்கள்.\nதமிழன்னையை முத்தமிழன்னை என்று சொல்லி விடலாம்.\n(நீக்கங்கள் உண்டு – திண்ணை குழு)\nபெண்களில் ஏன் நபி இல்லை இது பலரது கேள்வி. பெண்ணுக்கு நபி பட்டம் இல்லாவிட்டாலும் தாய்மை எனும் உயரிய பட்டம் இருக்கிறது என்று சிந்தித்தேன்-\nநபியை பெறாவிட்டாலும் தாய்மை இருக்கிறது அதற்கு சிறப்பு இருக்கிறது என்கிறீர்கள், அது மட்டுமா ஒளவை(ப்பாட்டி )யை பற்றி குறிப்பிட்டு திருமணம் ஆகவில்லை என்றால், குழந்தை பெற இயலாதவர் என்றால் அந்த பெண்ணுக்கு மதிப்பு இல்லை என்ற மறைமுக கருத்து என் கட்டுரையில் இருப்பதாக எனக்கு சுட்டி காட்டியிருக்கிறீர்கள்-\nஉங்கள் கருத்துக்களில் தான் என் பதிலும் ஒளிந்திருக்கிறது என்று நானும் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்- அதாவது ஒரு ஆணுக்கு நபியாக தேர்ந்து எடுக்கப்பட்டாலோ அல்லது புனிதன் என்று பெயர் எடுத்தாலோ தான் சிறப்பு ஆனால் பாருங்கள் பெண்ணாக பிறந்தாலே தாய்மை எனும் சிறப்பு வந்து ஒட்டி விடுகிறது- ஒரு பெண் குழந்தை பெற இயலாதவள் என்பதற்காக அவளுக்கு கற்பு கிடையாது என்று யாரும் சொல்லி விட முடியாது இல்லையா \nநீங்கள் என்னை இப்படி திருத்தியிருந்தீர்கள் என்றால் கூட நான் மகிழ்ந்திருப்பேன், அதாவது ஒரு பெண்ணுக்கு தாய்மை என்பது கூடுதல் பெருமை என்று நீங்கள் கூறியிருந்திருக்கலாம். இப்ப, குழந்தை பெறாத மூதாட்டி ஒருவரை பார்த்து தாய் அல்லது அம்மா என்று கூறுகிறேன் என்று வையுங்கள் அல்லது ஓளவையை பாட்டி என்று குறிப்பிடுகிறேன் என்று வையுங்கள் நீங்கள் உடனே, அதெப்படி நீங்கள் கூறலாம் அவருக்கு தான் கல்யானமே ஆகலையே, பிள்ளை பேறு இல்லையே என்று வாதிடுவீர்களோ \nநீங்கள் இந்து மதம் பற்றி குறிப்பிட்டார்கள்- சகோதர மதத்தை சார்ந்தவரான நீங்கள் இஸ்லாத்தில் உள்ள சட்ட திட்டங்கள் பற்றி கேள்வி எழுப்புகிறீர்கள்- சரி, நானும் ஒரு கேள்வி கேட்கிறேன், கோயிலில் அர்ச்சகராக இருக்கும் ஆண் குருக்களை நான் பார்த்துள்ளேன்- தவிர அந்த ஆண் குருக்கள் யாரையும் சட்டை அணிந்து நான் பார்த்ததில்லை- நான் தெரியாமல் தான் கேட்கிறேன் பெண்களை அர்ச்சகராக கொண்ட கோயில்கள் ஏதேனும் உள்ளதா அப்படி பெண்களை அர்ச்சகராக்கினால் அவர்களின் ஆடை எப்படி இருக்க வேண்டும் அப்படி பெண்களை அர்ச்சகராக்கினால் அவர்களின் ஆடை எப்படி இருக்க வேண்டும் மேலாடை அணியலாமா நான் யார் மனதையும் புண்படுத்துவதற்காக இங்கு கூறவில்லை நான் அப்படி பெண்ணை குருக்களாக போடாததற்காக அல்லது பெண்களை குருக்களாக போட்டு மேலாடை அணிய சொன்னதற்காக பெண்களுக்கு அநீதி என்று குரல் எழுப்ப போவதுமில்லை- ஒரு சந்தேகம் கேட்கிறேன் அவ்வளவு தான்- சிந்தித்து பார்ப்போமே \nகடவுள் எல்லா இடத்திலும் இருக்கிறான் ஆமாம் தூணிலும் இருக்கிறான் துரும்பிலும் இருக்கிறான் குப்பை தொட்டியிலும் இருக்கிறான், சாக்கடையிலும் இருக்கிறான், இன்னும் கள்ளுக்கடை, சாராயக் கடை- எங்கே இல்லை அவன்- ஆனால் அதற்கெல்லாம் தனி பெயர் இருக்கிறது- தவிர இட மரியாதை என்று ஒன்று உள்ளது கல்யாண வீட்டில் செய்த அரட்டை எல்லாம் எழவு வீட்டில் செய்ய முடியாது- அது போல இறை இல்லம் என்று தனிப் பெயர் பெற்று சில இடங்கள் உள்ளது- அதற்கு தனி மரியாதை உள்ளது- அதை கட்டி காக்க வேண்டும்- அதுவும் தவிர ஹஜ் என்ற புனித யாத்திரையில் ஆண்கள், பெண்கள் இருவரும் சேர்ந்தே தான் பங்கு கொள்கிறார்கள்- அங்கும் பெண்கள் ஹாஜியா என்று அழைக்கப்படுகிறார்கள், கண்ணியத்துடன் மதிக்கப்படுகிறார்கள்-\nபர்தா அணிய வேண்டும் என்று இஸ்லாம் வலியுறுத்துகிறது ஆனால் அப்படி அணியாதவர்களை ஆசிட் ஊற்ற சொல்லவில்லை- உதாரணமாக ஒரு பள்ளிவாசலை இடித்து விட்டு அதே இடத்தில் ஒரு கடவுள் பிறந்ததாக கூறி கோயில் கட்ட ரதத்தில் செல்கிறார்கள், நினைத்தது போல பள்ளிவாசலை இடித்து விட்டு ஸ்பெஷல் ரயிலில் வெற்றி முழக்கமிட்டு திரும்புகிறார்கள். அதற்காக நான் இந்து மதத்தை குற்றம் சொல்ல முடியாது காரணம் இந்து மதத்தில் பள்ளிவாசலை இடிக்க சொல்லவில்லை. அது போல குற்றம் ஆசிட் ஊற்றியவர்கள் மீது தான்-\nபெண்களை பர்தா அணிய சொல்வதை வீட்டுக்குள் போய் ஒளிந்து கொள்ளுங்கள் என்று தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள்- பர்தா அணிவதால் வெளியே வர முடியாது என்று யார் சொன்னது பர்தா அணிந்தால் இந்த கண்ணியமான தொழில்கள் பார்க்க முடியாது என்று எந்த கண்ணியமான தொழில்களாவது உண்டா பர்தா அணிந்தால் இந்த கண்ணியமான தொழில்கள் பார்க்க முடியாது என்று எந்த கண்ணியமான தொழில்களாவது உண்டா இவ்வளவு ஏன் ஈரான் நாட்டு பெண்கள் இராணுவத்தில் பர்தா அணிந்தவாறே பணிபுரியவில்லையா பெண்கள் கண்ணியமான தொழில்கள் செய்யட்டும், கல்வி கற்று சிறக்கட்டும் யார் வேண்டாம் என்றது பெண்கள் கண்ணியமான தொழில்கள் செய்யட்டும், கல்வி கற்று சிறக்கட்டும் யார் வேண்டாம் என்றது ஆனால் கண்ணிய ஆடைகள் அணியட்டும். தொப்புள் தெரிந்தால் தான் இந்த தொழிலை செய்ய முடியும் என்றால் எங்களது குல பெண்கள் மட்டுமல்ல எந்த குல பெண்களையும் அப்படி பார்க்க எங்களுக்கு உடன்பாடில்லை- இதில் என்ன தவறு ஆனால் கண்ணிய ஆடைகள் அணியட்டும். தொப்புள் தெரிந்தால் தான் இந்த தொழிலை செய்ய முடியும் என்றால் எங்களது குல பெண்கள் மட்டுமல்ல எந்த குல பெண்களையும் அப்படி பார்க்க எங்களுக்கு உடன்பாடில்லை- இதில் என்ன தவறு ஒரு வேலை நாங்கள் பெண்களை நீங்கள் மார்பு தெரிய ஆடை அணிய வேண்டும் என்று வற்புறுத்தினாலோ, தொப்புள் தெரிய நடனமாட வேண்டுமென்று கட்டயப்படுத்தினாலோ அதை நீங்கள் கண்டிக்கலாம், விளக்கம் கேட்க நீங்கள் ஆவலாய் இருக்கலாம் நாங்களும் பதில் சொல்ல இயலாமல் திணறியிருப்போம்.\n ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பார���கள்- ஒரு பெண் திருமணம் செய்கிறாள் என்றால் அவள் தன் கணவரை எப்படி மதிக்க வேண்டும் என்று எண்ணுகிறீர்கள் ஒரு சாரார் கணவனே கண் கண்ட தெய்வம் என்று காலில் விழுந்து கும்பிடுகிரார்கள்- இது தவறு- படித்து வேலை பார்க்கும் பெண்கள் சாதாரண பிரச்சிணைக்கு எல்லாம் சண்டை போட்டு விவாகரத்து கோருகிறார்கள்- அலுவலகத்தில் மேலாளர் தாமதமாக வந்ததற்கு திட்டினால் மன்னிப்பு கேட்கிறார்கள் ஆனால் வீட்டில் கணவன் நியாயமான காரணத்திற்காக ஏதாவது சொன்னாலும் விவாகரத்து கேட்கிறார்கள்- இதுவும் தவறு- அதே சமயத்தில் கருத்து வேறுபாடு என்று வந்து சந்தோஷமான வாழ்க்கை அமையவில்லை என்றால் கட்டிகிட்ட பாவத்துக்காக வாழ்ந்து தொலைக்கிறேன் என்று கூறுவதும் தவறு- பெருமானார் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூரினார்கள், இறைவன் ஹலாலக்கினாதிலேயே இறைவனுக்கு மிகவும் வெறுப்பானது விவாகரத்து தான் ‘ என்று-\nதவிர பெருமானார் அவர்கள் வாழ்விலும் விவாகரத்து முன்மாதிரி இல்லை- பெருமானார் அவர்கள் மணம் முடித்த எந்த மனைவியையும் விவாகரத்து செய்யவில்லை- இஸ்லாத்தில் விவாகரத்து செய்யும் முறை தான் எளிமையக்கப் பட்டிருக்கிறதே தவிர விவாகரத்தை ஊக்குவிக்கவில்லை- தெரியுமா செய்தி \nஅறியாமையால் ஒருவன் செய்து விட்ட பிழையை மன்னிக்க சொல்கிறீர்கள்\nபெருமானார் முஹம்மது நபி(ஸல்) அவர்களிடம் ஒரு முஸ்லிமல்லாதவர் வந்து சொன்னார், நீங்கள் ஹராமானதை விழுங்கி விட்டார்கள் என்று- நபித்தோழர் உமர்(ரலி) அவர்கள் கடுஞ்சினத்தோடு வாலை உறுவி விட்டார்கள், பெருமானார் அவர்கள் உமர்(ரலி) அவர்களை கையமர்த்தி விட்டு அவர் சொல்வது உண்மை தான் என்றார்கள், எல்லோருக்கும் ஆச்சரியம், பெருமானார் அவர்கள் பொறுமையுடன் கூறினார்கள், அவர் அப்படி சொன்ன போது எனக்கு கோப்ம் வந்தது, அதை நான் விழுங்கி விட்டேந் கோபம் ஹராமானது தானே என்றார்கள்- எங்களுக்கும் பொறுமை கற்றுக் கொடுக்கப்பட்டே உள்ள்து-\nமன்னிக்கும் மனப்பண்பை எங்களுக்கு சொல்லி தருகிறீர்கள் தனிப்பட்ட முறையில் எனக்கு துரோகம் செய்திருந்தால் நான் அந்த கொடியவனை மன்னிக்கலாம்- ஆனால் ஒரு சமுதாயத்துக்கே துரோகம் செய்ததால் அவனை விட்டு வைக்கக் கூடாது- உதாரணமாக பெருமானார் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் இந்தவை மன்னித்ததை சொல்லலாம்- தனது சிறிய தந்தை ஹம்ஜா(ரலி) அவர்களை இந்தா என்பாள் கொன்று குடலை உறுவி வெளியே எடுத்து போட்டாள் பெருங்குணம் கொண்ட பெருமானார் அவர்கள் அந்த இந்தாவை மக்கா வெற்றிக்கு பிறகு மன்னித்தார்கள்-அதே பெருமானார் அவர்கள் திருடியது என் அருமை மகள் பாத்திமா என்றாலும் அவர்களது கையையும் வெட்டத்தான் வேண்டும் என்றார்கள்- யாரை மன்னிக்க வேண்டும் தனிப்பட்ட முறையில் எனக்கு துரோகம் செய்திருந்தால் நான் அந்த கொடியவனை மன்னிக்கலாம்- ஆனால் ஒரு சமுதாயத்துக்கே துரோகம் செய்ததால் அவனை விட்டு வைக்கக் கூடாது- உதாரணமாக பெருமானார் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் இந்தவை மன்னித்ததை சொல்லலாம்- தனது சிறிய தந்தை ஹம்ஜா(ரலி) அவர்களை இந்தா என்பாள் கொன்று குடலை உறுவி வெளியே எடுத்து போட்டாள் பெருங்குணம் கொண்ட பெருமானார் அவர்கள் அந்த இந்தாவை மக்கா வெற்றிக்கு பிறகு மன்னித்தார்கள்-அதே பெருமானார் அவர்கள் திருடியது என் அருமை மகள் பாத்திமா என்றாலும் அவர்களது கையையும் வெட்டத்தான் வேண்டும் என்றார்கள்- யாரை மன்னிக்க வேண்டும் திருந்தியவனை மன்னிக்கலாம் திருடுகிறவனை ஆமாம் உண்மையை திருடுகிறவனை மன்னிக்க கூடாது- பல சமயங்களில் மன்னித்து விடுவார்கள் என்ற நினைப்பே மேன்மேலும் தவறு செய்ய தூண்டி விடும்-\nகண்ணியங்கள் கட்டாயப்படுத்தினால் தான் வரும் என்றால் கட்டாயப்படுத்தலாம்- இஸ்லாத்துக்கு வாருங்கள் என்று நாங்கள் யாரையும் கட்டாயப் படுத்தவில்லை அதே சமயத்தில் இஸ்லாத்தில் நிறைய மாசு படாத, மாற்றம் தேவைப்படாத கட்டுபாடுகள் வலியுறுத்தல்கள் நிறையவே இருக்கின்றன என்பதையும் மறுப்பதற்கில்லை-\nஎன்னால் ஆன தவறுக்கு வருத்தம்\nநம்மால் ஆன நிறைவுக்கு நன்றி\nதிரு.பித்தனின் கடிதம் குறித்தும், மற்றும் இந்த சர்ச்சை குறித்தேயும் இறுதியாக கூறிக் கொள்வது:\nஒருவர் கூறாத விஷயத்தை கூறியதாக முத்திரை குத்தவேண்டிய அவசியம் என்ன வந்ததென்பது தெரியவில்லை. இச்சர்ச்சையில் நான் கூறாத விஷயங்கள்:\n1. சமஸ்கிருதம்தான் கணிதத்திற்கு ஏற்ற மொழி அல்லது சமஸ்கிருதம் ஒரு கணினி மொழி.\n2. ரிக் ப்ரிக்ஸின் ய்வுக்கட்டுரை மிகவும் சிறந்த ஒரு கட்டுரை அல்லது அது ஒரு குப்பை.\n3. ரிக் ப்ரிக்ஸின் கட்டுரையால் சமஸ்கிருதம் தமிழை விட உயர்ந்தது.\nநான் தெளிவாகவே மறுத்த விஷயம்:\nசமஸ்கிருதம்தான் கணிதத்திற்கு ஏற்ற மொழ�� அல்லது சமஸ்கிருதம் ஒரு கணினி மொழி. நான் கூறியுள்ள விஷயங்கள் என்ன சமஸ்கிருதம் – கணினி தொடர்பு தாரமேதுமில்லாமல் உருவாக்கப்பட்ட பொய் என திரு.நாக.இளங்கோவன் கூறியது தவறு. குறைந்த பட்சம் ஒரு ய்வுத்தாளாவது இது குறித்து சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. (இப்போது சில நூல்களே வந்துள்ளன என அறிகிறேன். ஒரு நூலை படித்தும் வருகிறேன்.) னால் அதே சமயம் ‘சமஸ்கிருதம்தான் கணிதத்திற்கு ஏற்ற மொழி ‘ என கூறுவது ‘மிகைபடுத்தப்பட்ட பிரபலப்படுத்தலே ‘ என்றும் தெளிவாகவே ‘தவறு ‘ என்றும் என் முதல் கடிதத்திலேயே – அதாவது இது சர்ச்சையாக்கப்படுவதற்கு முன்னரே- கூறியிருந்தேன். இவற்றை வேண்டுமென்றே வெட்டி நான் தெளிவாகவே ‘ரிக் ப்ரிட்சின் நிலைபாடு ‘ என என் முதல் கடிதத்திலேயே கூறியதை கண்டும் காணாமல், சில பகுதிகளை மட்டும் வெட்டியும் ஒட்டியும் இதனை சர்ச்சையாக்கியதிலும் மீண்டும் மீண்டும் முத்திரை குத்துவதிலும் ஒரு அடிப்படையான நேர்மையின்மை இருக்கிறது. இயற்பியலின் மொழியாக கணிதம் இயங்குகையில் அதன் சில தளங்களில் வெளிப்படும் ambiguity குறித்து நான் கூறியுள்ள கருத்துக்கள் ஏற்கனவே சில முக்கியமான கணித வல்லுநர்களால் கூறப்பட்டுள்ளது. இது குறித்தும், சாங்கிய-பெளத்த மற்றும் ஸ்க்ராட்டிஞ்சர்-நெய்ல்ஸ்போர் குறித்தும் விரைவில் முழுமையான கட்டுரைகளை திண்ணையிலேயே -திண்ணை சிரியர் குழு பிரசுரிக்க தகுந்ததென முடிவெடுக்கும் பட்சத்தில்- பிரசுரிப்பேன். நாம் சமஸ்கிருதம் கற்பதற்கான காரணங்களாக நான் கூறுவதெல்லாம் நமது சமூக-கலாச்சார சூழல் சார்ந்தவை. ஏற்கனவே இந்நாட்டின் மிகச்சிறந்த சமூக சீர்திருத்தவாதிகள் ன்மிக அருளாளர்கள் கூறியவை. நாராயண குரு சமூக விடுதலை வேள்வியின் ஓர் அங்கமாக சமஸ்கிருத படிப்பினை எடுத்துக்கொண்டார். அதைப்போலவே டாக்டர் அம்பேத்கர் ஒருபடி மேலே போய் சமஸ்கிருதம் பாரத தேசத்தின் தேசிய மொழியாக இருக்கவேண்டுமென கூறினார். நான் காட்டிய தமிழ் இலக்கிய மேற்கோள்கள் எனக்கும் தமிழ் இலக்கியம் தெரியும் பார் என்பதற்காக காட்டப்படவில்லை. மாறாக நம் தமிழ் இனத்தின் மிகப்பெரிய அருளாளர்கள் மற்றும் பெருமக்கள் சமஸ்கிருதத்தையோ, வேத மரபையோ நம் தமிழ் பண்பாட்டிற்கு அயலானதாக கண்டதில்லை. வேதமரபும் தமிழ்மரபும் அந்நியமானவை என்று கூறுவது மிகவு��் பிற்காலத்தில் ஏற்பட்ட ஒரு பிரிவு. சமஸ்கிருதம் அறிந்த அந்தணரல்லாதோரெனில், மிகுந்த வேதமறுப்புடையவராக கூறப்படும் சித்தரான சிவவாக்கியரே சமஸ்கிருதம் அறிந்தவரென்பதற்கு அவர் பாடல்களில் சான்றுகள் உள்ளன. கம்பர் சமஸ்கிருதமே அறியாமல் வான்மீகி இராமாயணத்தை தமிழ் செய்தார் என நம்புவது கடினமான விஷயம். வான்மீகியும் காளிதாசனும் விதிவிலக்கென்போமென்றால் வேறு யாரெல்லாம் விதிவிலக்கு சமஸ்கிருதம் – கணினி தொடர்பு தாரமேதுமில்லாமல் உருவாக்கப்பட்ட பொய் என திரு.நாக.இளங்கோவன் கூறியது தவறு. குறைந்த பட்சம் ஒரு ய்வுத்தாளாவது இது குறித்து சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. (இப்போது சில நூல்களே வந்துள்ளன என அறிகிறேன். ஒரு நூலை படித்தும் வருகிறேன்.) னால் அதே சமயம் ‘சமஸ்கிருதம்தான் கணிதத்திற்கு ஏற்ற மொழி ‘ என கூறுவது ‘மிகைபடுத்தப்பட்ட பிரபலப்படுத்தலே ‘ என்றும் தெளிவாகவே ‘தவறு ‘ என்றும் என் முதல் கடிதத்திலேயே – அதாவது இது சர்ச்சையாக்கப்படுவதற்கு முன்னரே- கூறியிருந்தேன். இவற்றை வேண்டுமென்றே வெட்டி நான் தெளிவாகவே ‘ரிக் ப்ரிட்சின் நிலைபாடு ‘ என என் முதல் கடிதத்திலேயே கூறியதை கண்டும் காணாமல், சில பகுதிகளை மட்டும் வெட்டியும் ஒட்டியும் இதனை சர்ச்சையாக்கியதிலும் மீண்டும் மீண்டும் முத்திரை குத்துவதிலும் ஒரு அடிப்படையான நேர்மையின்மை இருக்கிறது. இயற்பியலின் மொழியாக கணிதம் இயங்குகையில் அதன் சில தளங்களில் வெளிப்படும் ambiguity குறித்து நான் கூறியுள்ள கருத்துக்கள் ஏற்கனவே சில முக்கியமான கணித வல்லுநர்களால் கூறப்பட்டுள்ளது. இது குறித்தும், சாங்கிய-பெளத்த மற்றும் ஸ்க்ராட்டிஞ்சர்-நெய்ல்ஸ்போர் குறித்தும் விரைவில் முழுமையான கட்டுரைகளை திண்ணையிலேயே -திண்ணை சிரியர் குழு பிரசுரிக்க தகுந்ததென முடிவெடுக்கும் பட்சத்தில்- பிரசுரிப்பேன். நாம் சமஸ்கிருதம் கற்பதற்கான காரணங்களாக நான் கூறுவதெல்லாம் நமது சமூக-கலாச்சார சூழல் சார்ந்தவை. ஏற்கனவே இந்நாட்டின் மிகச்சிறந்த சமூக சீர்திருத்தவாதிகள் ன்மிக அருளாளர்கள் கூறியவை. நாராயண குரு சமூக விடுதலை வேள்வியின் ஓர் அங்கமாக சமஸ்கிருத படிப்பினை எடுத்துக்கொண்டார். அதைப்போலவே டாக்டர் அம்பேத்கர் ஒருபடி மேலே போய் சமஸ்கிருதம் பாரத தேசத்தின் தேசிய மொழியாக இருக்கவேண்டுமென கூற��னார். நான் காட்டிய தமிழ் இலக்கிய மேற்கோள்கள் எனக்கும் தமிழ் இலக்கியம் தெரியும் பார் என்பதற்காக காட்டப்படவில்லை. மாறாக நம் தமிழ் இனத்தின் மிகப்பெரிய அருளாளர்கள் மற்றும் பெருமக்கள் சமஸ்கிருதத்தையோ, வேத மரபையோ நம் தமிழ் பண்பாட்டிற்கு அயலானதாக கண்டதில்லை. வேதமரபும் தமிழ்மரபும் அந்நியமானவை என்று கூறுவது மிகவும் பிற்காலத்தில் ஏற்பட்ட ஒரு பிரிவு. சமஸ்கிருதம் அறிந்த அந்தணரல்லாதோரெனில், மிகுந்த வேதமறுப்புடையவராக கூறப்படும் சித்தரான சிவவாக்கியரே சமஸ்கிருதம் அறிந்தவரென்பதற்கு அவர் பாடல்களில் சான்றுகள் உள்ளன. கம்பர் சமஸ்கிருதமே அறியாமல் வான்மீகி இராமாயணத்தை தமிழ் செய்தார் என நம்புவது கடினமான விஷயம். வான்மீகியும் காளிதாசனும் விதிவிலக்கென்போமென்றால் வேறு யாரெல்லாம் விதிவிலக்கு சத்யகாமன் இந்த விசித்திர விதிவிலக்கு விதிவிலக்கின் இலக்கணத்துக்கே விதிவிலக்காக இருக்கும் போலிருக்கிறது. இந்நிலையில் எவ்வித அறிவியல் அடிப்படையும் இல்லாமல் ஐரோப்பியர்கள் உருவாக்கிய ரிய-திராவிட இனவாத அடிப்படையில் சமஸ்கிருதமே தமிழருடையதில்லை என கூறுவது தமிழர்கள் பாரம்பரியத்தையே மறுதலிப்பதாகும். இந்த கபட பகுத்தறிவு கூட்டத்தின் கீழ்த்தர பிரச்சார உக்திகளின் தொடக்கமே, வைபிராட்டியார் சங்கத்தமிழ் வேண்டிய, தமிழகத்தின் அனைத்து சாதியினரும் தொட்டு வணங்க முடிந்த, விநாயகப்பெருமானை உடைத்துதான். அதிலிருந்தே தமிழ் கலாச்சாரத்திற்கும் இந்த ஐரோப்பிய இனவாதத்திற்கு தன் மூளையை விற்ற கூட்டத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை அறிந்து கொள்ளலாம்.\nஇலக்கியவாதிகளும் அவதூறுகளும் – பித்தன்.\nஜெயமோகனின் ‘அவதூறுகள் தொடாத இடம் ‘ படிக்கும் போது தோன்றிய கருத்துக்களையே இங்கு எழுதுகிறேன்.\nஅக்கட்டுரையைப் படிக்கும்போதே, ஒரு எழுத்தாளனுக்கு இவ்வளவு அவதூறு எதற்காக என்று தோன்றியது. பின்னாலேயே இதெல்லாம் அவராகவே வருவித்துக்கொண்டது என்ற கருத்தும் எழுந்தது அவரைப் பற்றிய அவதூறுக் கட்டுரைகளுக்கு அவர் தரும் விளக்கங்கள் வித்தியாசமாக இருக்கிறது. அவற்றில் அவர் தரும் முதல் கருத்து, அக்கட்டுரைகள் ‘இலக்கியத்தரத்தில் இல்லை-இலக்கிய விமர்சனக் கட்டுரைகளும் இல்லை-தனி நபர் வசைகள் ‘ என்பது அவரைப் பற்றிய அவதூறுக் கட்டுரைக��ுக்கு அவர் தரும் விளக்கங்கள் வித்தியாசமாக இருக்கிறது. அவற்றில் அவர் தரும் முதல் கருத்து, அக்கட்டுரைகள் ‘இலக்கியத்தரத்தில் இல்லை-இலக்கிய விமர்சனக் கட்டுரைகளும் இல்லை-தனி நபர் வசைகள் ‘ என்பது இதைக்கேட்டு எனக்கு வியப்பாக இருக்கிறது. அக்கட்டுரைகள் அவர் படைப்புக்களை விமர்சிப்பன அல்லவே. அவர் கலைஞரைப்பார்த்து ‘இலக்கியவாதியா இதைக்கேட்டு எனக்கு வியப்பாக இருக்கிறது. அக்கட்டுரைகள் அவர் படைப்புக்களை விமர்சிப்பன அல்லவே. அவர் கலைஞரைப்பார்த்து ‘இலக்கியவாதியா ‘ என்று கேட்டதற்கான எதிர்மறைகளே. இவர் அப்படிக் கேட்டதே தனி நபர் விமர்சனம்தானே. அதுவே தவறு. அதற்கு பதிலாக தனி நபர் விமர்சனம் வருவதாகப் புலம்புவது எதற்கு என்று புரியவில்லை. தனி நபர் விமர்சனம் செய்துவிட்டு பதிலுக்கு இலக்கியத் திறனாய்வுகளை எதிர்பார்ப்பது எந்தவித புத்திசாலித்தனம் என்று எனக்கு தெரியவில்லை. அப்படி எதிர்பார்ப்பது, புகழுக்காகவும், அங்கீகாரத்துக்காகவுமே அவர் தனி நபர் விமர்சனம் செய்தார் என்ற மற்றவர்களின் கூற்றுக்கு வலு சேர்ப்பதாகவே இருக்கிறது.\nஎந்த தனி நபர் விமர்சனங்களிலும், அவதூறுகளிலும் எனக்கு நம்பிக்கையில்லை. அது தவறானது என்றே கருதுகிறேன். (இப்போது ஜெயமோகனை நோக்கி வீசப்படும் அவதூறுகளையும் சேர்த்து). இப்படித் தனி நபர் விமர்சனம் பிடிக்காதவர் முதலில் அவ்வாறு செய்யாமலிருந்திருக்க வேண்டும். கலைஞரின் எழுத்துக்களை, குறளோவியத்தை, தொல்காப்ப்ியப்பூங்காவை திறனாய்வு செய்து அவற்றைப் பற்றி விமர்சனம் செய்திருக்க வேண்டும். அதை விடுத்து தனிநபர் விமர்சனம் செய்துவிட்டு வேறு எதிர்பார்ப்பது என்ன கணக்கில் வினையை விதைத்துவிட்டு வேறு எதிர்பார்க்க முடியுமா என்ன வினையை விதைத்துவிட்டு வேறு எதிர்பார்க்க முடியுமா என்ன ‘என்னுடைய மதிப்பீடுகள் வெளிப்படையானவை திட்டவட்டமானவை ‘ என்ற அவர் வாதம் சரியானதாக இருக்கலாம்.ஆனால்/அதனால் அவர் மதிப்பீடுகள் உண்மையானதாகவோ, சரியானதாகவோ இருக்கும் என்று அர்த்தமில்லை. அதைப்பற்றி மற்றவர்கள் கருத்து கொண்டிருக்கக்கூடாது என்றும் கூறமுடியாது.\nஅவரை ‘மலையாளி ‘ என்று விமர்சிப்பது தவறானது என்பதில் மாற்றுக்கருத்துக்களிருக்கமுடியாது. உலக மக்கள் அனைவரும் சமம் என்று நினைப்பவன் நான். இதில் ஒரே நாட்டுக்குள்ளிருந்து பக்கத்து மாநிலக் காரரை அவ்வாறு பிரித்துப் பேசுவதில் எனக்கு எவ்விதத்திலும் உடன்பாடில்லை. அது தவறானது. இப்படிப்பட்ட விமர்சனங்கள் ஏன் வருகின்றன என்று யோசித்துப்பார்த்தேன். இந்த எதிர்மறைகள் எல்லாம் கலைஞர் தமிழகத்தில் ஒரு பெரிய தலைவர் என்பதால் மட்டும் வந்தது என்றும் சொல்லிவிடமுடியாது. அது முக்கியகாரணி அவ்வளவே. ஒரு பெரிய தலைவரை, அவர் எழுத்துக்களைப்பற்றிய திறனாய்வு எதுவும் செய்யாமலேயே, வெகுசாதாரணமாக இலக்கியவாதியா என்று கேட்டதாலேயே வந்தது. இது அமெரிக்காவில் வாழ்வதால் பில் கிளிண்டன் அவர்களைப்பார்த்து ‘நீ ஒரு அமெரிக்கனா ‘ என்று கேட்பது போன்றது ‘ என்று கேட்பது போன்றது அப்படி கேட்பவர் ஒரு தமிழன் கூட இல்லை என்று ஒதுக்குவதற்காக சொல்லப்பட்டதாக இருக்கும் என்று யூகிக்கிறேன். ஆது தவறான விமர்சனம் என்பதில் எனக்கு ஐயமில்லை. அதே சமயம் ‘என்னை ‘மலையாளி ‘ என்று சொல்பவர்களுக்கு என்னைவிட அதிகம் தமிழ் தெரிந்திருக்கவேண்டும் ‘ என்ற அவரின் வாதம் சிறுபிள்ளைத்தனமானது. அவருக்கு எவ்வளவு தமிழ் தெரியும் என்று யாருக்குத்தெரியும். எனின் யாருமே அவரை விமர்சிக்ககூடாதென்றாகிறது. ஒருவரின் எழுத்தை விமர்சிக்கும் போது அவருக்கு எவ்வளவு தெரியும், நமக்கு எவ்வளவு தெரியும் என்று தராசில் வைத்துப்பார்த்துவிட்டு விமர்சிக்க முடியாது. நியாயமான, அவதூறில்லாத விமர்சனக்களை யார் வேண்டுமானாலும் வைக்கலாம். இவர் வாதப்படி ‘என்னைவிட அதிகம் இலக்கியம் தெரிந்தவர்கள்தான் என்னை இலக்கியவாதியா எனக் கேட்கத் தகுதியானவர்கள் ‘ என்று கலைஞர் சொன்னால் இவர் என்ன செய்வார் \nயார் இலக்கியவாதி என்று யார் முடிவுசெய்வது முதலில் எது இலக்கியம் எது இலக்கியமில்லை என்று யார் முடிவுசெய்வது முதலில் எது இலக்கியம் எது இலக்கியமில்லை என்று யார் முடிவுசெய்வது இலக்கியம் என்பதற்கான வரையீடு என்ன இலக்கியம் என்பதற்கான வரையீடு என்ன சிலர் இலக்கியமென்பதை மற்றவர் ஒத்துக்கொள்வதில்லை. மற்றவர் இலக்கியமென்பதை இவர்கள் ஒத்துக்கொள்வதில்லை சிலர் இலக்கியமென்பதை மற்றவர் ஒத்துக்கொள்வதில்லை. மற்றவர் இலக்கியமென்பதை இவர்கள் ஒத்துக்கொள்வதில்லை சினிமாப்பாடல்கள் இலக்கியமில்லை என்கிறார்கள். வசனங்கள் இலக்கியமில்லை என்கிற���ர்கள். கதைகள், சிறுநாவல்கள், புதுக்கவிதைகள் இலக்கியமில்லை என்கிறார்கள். எதுதான் இலக்கியம் சினிமாப்பாடல்கள் இலக்கியமில்லை என்கிறார்கள். வசனங்கள் இலக்கியமில்லை என்கிறார்கள். கதைகள், சிறுநாவல்கள், புதுக்கவிதைகள் இலக்கியமில்லை என்கிறார்கள். எதுதான் இலக்கியம் சமீபத்திய சினிமாப்பாடல்களை வேண்டுமானல் ஒதுக்கிவிடுவோம், வாதத்திற்காக. ‘ஏர் முனைக்கு நேர் இங்கே எதுவுமேயில்லை ‘ என்கிறார் மருதகாசி. என்னைப்போன்ற சாதாரணர்களுக்கு அதுவே இலக்கியமாகத்தான் தெரிகிறது. நல்ல கருத்து, எளிமையான நடை. இதை இலக்கியமென்று ஒத்துக்கொள்ள யாருக்கு என்ன தடை சமீபத்திய சினிமாப்பாடல்களை வேண்டுமானல் ஒதுக்கிவிடுவோம், வாதத்திற்காக. ‘ஏர் முனைக்கு நேர் இங்கே எதுவுமேயில்லை ‘ என்கிறார் மருதகாசி. என்னைப்போன்ற சாதாரணர்களுக்கு அதுவே இலக்கியமாகத்தான் தெரிகிறது. நல்ல கருத்து, எளிமையான நடை. இதை இலக்கியமென்று ஒத்துக்கொள்ள யாருக்கு என்ன தடை எனக்கு புரியவில்லை. இலக்கியங்கள் சமுதாயத்தில் மறுதல்களை ஏற்படுத்தவேண்டும் என்று நான் நினைக்கிறேன். அந்தவிதத்தில் கலைஞரின் பராசக்தி பட வசனமும் இலக்கியமே. புதுக்கவிதைகளும் இலக்கியமே. இதுதான் இலக்கியம் இது இல்லை;இவர்தான் இலக்கியவாதி இவரில்லை என்று சொல்பவர்கள் அனைவரும் கர்வம் பிடித்த, தலைகனம் பிடித்த, புகழுக்கு ஏங்கும் மூடர்கள் என்பது தான் உண்மை. எல்லோருமே இலக்கியவாதிகள் என்று ஆகிவிட்டால், தான் ஒரு இலக்கியவாதி, எழுத்தாளன் என்று தனியாக நின்று புகழடைய முடியாமல் போய்விடும் என்பதாலும் மற்றவர்களைவிட தான்புத்திசாலி என்று கூற முடியாமல் போய்விடும் என்பதாலேயே அவ்வாறு கூறித்திரிகிறார்கள். என்னைப் பொறுத்தவரை ஒரு மொழி தெரிந்தாலே அவன் அதில் இலக்கியவாதிதான் எனக்கு புரியவில்லை. இலக்கியங்கள் சமுதாயத்தில் மறுதல்களை ஏற்படுத்தவேண்டும் என்று நான் நினைக்கிறேன். அந்தவிதத்தில் கலைஞரின் பராசக்தி பட வசனமும் இலக்கியமே. புதுக்கவிதைகளும் இலக்கியமே. இதுதான் இலக்கியம் இது இல்லை;இவர்தான் இலக்கியவாதி இவரில்லை என்று சொல்பவர்கள் அனைவரும் கர்வம் பிடித்த, தலைகனம் பிடித்த, புகழுக்கு ஏங்கும் மூடர்கள் என்பது தான் உண்மை. எல்லோருமே இலக்கியவாதிகள் என்று ஆகிவிட்டால், தான் ஒரு இலக்கியவாதி, எழுத்தாளன் என்று தனியாக நின்று புகழடைய முடியாமல் போய்விடும் என்பதாலும் மற்றவர்களைவிட தான்புத்திசாலி என்று கூற முடியாமல் போய்விடும் என்பதாலேயே அவ்வாறு கூறித்திரிகிறார்கள். என்னைப் பொறுத்தவரை ஒரு மொழி தெரிந்தாலே அவன் அதில் இலக்கியவாதிதான் எழுத வேண்டும் என்ற அவசியம் கூட இல்லை எழுத வேண்டும் என்ற அவசியம் கூட இல்லை ஏனெனில் எழுதத்தெரியாத கிராமத்து மக்கள் கூட நயமானப் பாடல்களைப் பாடுகிறார்கள். பிரபலங்களின் கடிதங்கள் புத்தகங்களாக வருகின்றன. சாதாரணர்களின் கடிதங்களுக்கும் அதே மதிப்பையே நான் தருவேன். மற்றவர்களின் படைப்போடு தன்னுடையதை ஒப்பிடுவது, மற்றவர்களை இலக்கியவாதியா என்று நக்கல் செய்வது போன்றவைகளும் ஒருவித சிறுபிள்ளைத்தனமான மூடநம்பிக்கைகளே ஏனெனில் எழுதத்தெரியாத கிராமத்து மக்கள் கூட நயமானப் பாடல்களைப் பாடுகிறார்கள். பிரபலங்களின் கடிதங்கள் புத்தகங்களாக வருகின்றன. சாதாரணர்களின் கடிதங்களுக்கும் அதே மதிப்பையே நான் தருவேன். மற்றவர்களின் படைப்போடு தன்னுடையதை ஒப்பிடுவது, மற்றவர்களை இலக்கியவாதியா என்று நக்கல் செய்வது போன்றவைகளும் ஒருவித சிறுபிள்ளைத்தனமான மூடநம்பிக்கைகளே. (இங்கு நான் படைப்பு ஒப்பீடு என்று கூறுவது, சும்மா வாதத்திற்காக ஒப்பிட்டுக்கொள்வதையே. முறையான ஒப்பீடுகளையில்லை.). இவையெல்லாம் தேவையில்லாத ஒன்று.\nகலைஞரைப்பற்றிய அவருடைய விமர்சனம் தேவையில்லாத்தது. அதற்கான எந்த அவசியமும் இல்லை. முதல்நாள் கூட்டத்தில் இலக்கியவாதிகள் அவரைப் புகழ்ந்தார்கள் என்றால் இவருக்கு என்ன வந்தது மற்றவர்களின் புகழைக்கண்டு முகம் சுளிப்பவர்களை என்ன சொல்வது மற்றவர்களின் புகழைக்கண்டு முகம் சுளிப்பவர்களை என்ன சொல்வது யாரோ யாரையோ தமிழ் இலக்கியத்துக்கே தலைவர் என்று புகழ்வதால் அவர் தலைவராகிவிடுவாரா யாரோ யாரையோ தமிழ் இலக்கியத்துக்கே தலைவர் என்று புகழ்வதால் அவர் தலைவராகிவிடுவாரா ஒரு இலக்கியவாதி அவர் காலில் விழுந்தால் மற்ற இலக்கியவாதிகள் அனைவருமே அவர் காலில் விழுந்துவிட்டதாக ஏன் நினைக்கவேண்டும் ஒரு இலக்கியவாதி அவர் காலில் விழுந்தால் மற்ற இலக்கியவாதிகள் அனைவருமே அவர் காலில் விழுந்துவிட்டதாக ஏன் நினைக்கவேண்டும் யாரோ யார் காலிலோ விழுவதாலோ, புகழ்வதாலோ இவர் என்ன குறைந்துவிட்டார் யாரோ யார் காலிலோ விழுவதாலோ, புகழ்வதாலோ இவர் என்ன குறைந்துவிட்டார் அவர் தன்மானத்திற்கு தாங்கவில்லை அதானால் மறுநாள் அப்படிக் கேட்டார் என்று சப்பைக்கட்டுக் கட்டுபவர்களைக் கண்டு சிரிப்புத்தான் வருகிறது. முதலில் இலக்கியவாதிகளும் அரசியல்வாதிகளும் தன்மானம் என்று பேசுவதே வேடிக்கையானது. தன்மானம் என்று ஒன்றுமில்லை. தன்மானம் என்பது கர்வம் பிடித்தவர்கள், தங்கள் பிடிவாத குணத்தை மறைக்கப் போடும் வேசம். அவ்வளவே. ஒருவன் 10 நாட்கள் பட்டினி கிடந்தால், 11வது நாள் யார் கொடுத்தாலும் வாங்கி சாப்பிடுவான் என்பதே நிதர்சனம். இல்லை அப்படி சாப்பிடமாட்டேன், செத்துவிடுவேன் என்று சொல்வதுதான் தன்மானமென்றால் அப்படி ஒரு தன்மானம் தேவையா என்ற அடிப்படைக் கேள்வி எழுகிறது. இது தன்மானமா, பிடிவாதமா \n‘என் தலைமுறையில் என்னைப்போன்ற தமிழ் இலக்கிய அறிமுகமுள்ளவர்கள் குறைவு. என்னைப்போன்ற விமர்சன அங்கீகாரம் பெற்றவர்கள் யாருமில்லை ‘ என்றதுப்போன்ற ஜெயமோகனின் வாக்கியங்களில் காணப்படும் தற்பெருமை, கர்வம் அவர் பேச்சிலும் வெளிப்படக்கூடும். கர்வமுள்ளவர்கள் அவதூறுகளைச் சந்திப்பதும் இயல்பானதே. அதை அவர் புரிந்து கொள்ளவேண்டும். எழுதுபவர்களைப் பார்த்து இலக்கியவாதிகளில்லை என்பது. அவர்தான் இதை எழுதியிருக்கிறாரே என்றால் அது நவீன எழுத்து இல்லை எனவே ‘நவீன ‘ இலக்கியவாதியில்லை என்பது. அப்படி எழுதுபவர்களை பின் நவீனத்துவமில்லை, முன்நவீனத்துவமில்லை, நடு நவீனத்துவமில்லை என்று எதையாவது சொல்லிக்கொண்டேயிருப்பது இவையெல்லாம் தேவையில்லாத ஒன்று. அவரவருக்குத் தோன்றியதை, அவரவருக்குப் பிடித்த நடையில் எழுதிக்கொண்டே செல்லுங்கள். மற்றதை தமிழிடமும் காலத்திடமும் விட்டுவிடுங்கள். தரமான படைப்புக்கள் நிற்கும். தரமற்றது மறைந்துபோகும்.\n(நீக்கங்கள் உண்டு – திண்ணை குழு)\nதமிழ்க் கவிதை நண்பர்களுக்கோர் நற்செய்தி :\n‘உலக அளவில் வாழும் தமிழ்க்கவிஞர்கள் ‘ பற்றிய, மற்றும் ‘உலகஅளவில் தற்போது எழுதப் பட்டுவரும்\nதமிழ்க்கவிதை ‘ பற்றிய பெரிய இரு நூல்களைத் தொகுக்கும் மிகப்பெரிய பணியில் ஈடுபட்டிருக்கும்\n-நெல்லை சாகித்ய அகாதெமிக் கருத்தரங்கத்தில் நான்சந்தித்த- திரு.சம்பத் அவர்கள் தரும்செய்தி:\nஏற்கெனவே ‘தினமணி – சங்கமம் ‘ பகுதியி��் பார்த்திருக்கலாம். அதற்கான தேதி 31.03.2004 வரை\nநீட்டிக்கப்பட்டுள்ளது என்பது கவனிக்கத் தக்கது.\n———(அப்படியே அவர்களின் கடிதத்தினை இங்கே தருகிறேன்)————\nபுதுவை மொழியியல் பண்பாட்டு ராய்ச்சி நிறுவனம்\nதஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக இணைப்புப் பெற்றது.\n112, காமாட்சிஅம்மன் கோவில் தெரு, புதுச்சேரி – 605 001\nவணக்கம். புதுவை மொழியியல் பண்பாட்டு ராய்ச்சி நிறுவனம், புதுவை அரசின் சார்பில் ‘இந்தியத்\nதமிழ்க் கவிஞர்கள் மாநாடு ‘ ஒன்றினை நடத்திடத் திட்டமிட்டுள்ளது.இம்மாநாட்டினை ஒட்டி, ‘வாழும்\nகவிஞர்களின் உலகத்தமிழ்க் கவிதை ‘, ‘வாழும் உலகத்தமிழ்க் கவிஞர்கள் கையேடு ‘ எனும் நூல்களை\nவெளியிடவிருக்கிறது. இம்மாபெரும் முயற்சியில் புதுவை மொழியியல் பண்பாட்டு ராய்ச்சி நிறுவனம்\nமுனைப்புடன் ஈடுபட்டுள்ளதைத் தாங்கள் அறிவீர்கள். வாழும் முதன்மைத் தமிழ்க் கவிஞர்களுள், தாங்களும் ஒருவர்\nமேற்குறிப்பிட்ட தொகுப்புகளில் தங்கள் கவிதைகளும், வாழ்க்கைக் குறிப்பும் அவசியம் இடம்பெற வேண்டும்\nஎன்று நிறுவனம் பெரிதும் விரும்புகிறது.\nஎனவே தங்கள் கவிதைகளில் தாங்கள் விரும்பிய ஐந்தைத் தட்டச்சில் பத்துப் பக்கங்களுக்கு மிகாமல்\nஇருக்குமாறு அமைத்து அவற்றோடு தங்கள் வாழ்க்கைக் குறிப்பையும் (பெயர், பிறந்தநாள், இடம், பெற்றோர்,\nகுடும்ப விவரம், கல்வித் தகுதி, வெளியிட்ட கவிதை நூல்கள், சிறப்புத் தகவல்கள்) சிறு நிழற்படம்\nஒன்றையும் மார்ச்சுத் திங்கள் 31ம் தேதிக்குள் (31.03.2004)\nபுதுவை மொழியியல் பண்பாட்டு ராய்ச்சி நிறுவனம்,\n112, காமாட்சிஅம்மன் கோவில் தெரு, புதுச்சேரி – 605 001\nஎனும் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.\nதங்கள் ஒத்துழைப்பினைப் பெரிதும் நாடும்,\nவெங்கட் ரமணன் கட்டுரை திண்ணையில் கடந்த வாரம் வெளியாகியுள்ளது.ஆனந்த விகடனில் சுஜாதா\nகற்றதும் பெற்றதும் பகுதியில் ழ கணினி திட்டம் குறித்து எழுதியுள்ளார். அதைப் படிப்பவர்கள்\nசுஜாதா மற்றும் அவரும் குழுவினர் மட்டுமே இதில் அனைத்தையும் செய்துள்ளதாகவே புரிந்து கொள்வர்.\nஇதற்கு தமிழ் இணையப்பல்கலைகழகம் நிதி உதவி செய்துள்ளது. எனவே ஒரு குற்றசாட்டு எழுந்துள்ள\nநிலையில் இது எந்த அளவு உண்மை என்பதை அறிய ஒரு நிபுணர் குழு அமைக்குமாறு நிதி உதவி செய்த அமைப்புகளை,குறிப்பாக தமிழ் இணை���ப்பல்கலைகழகத்தை கோரலாம்.இதை சுஜாதா என்ற தனிப்பட்ட நபர் குறித்த ஒரு பிரச்சினையாகப் பார்ப்பதை விட மென்பொருள் உருவாக்கம் குறித்த தார்மீக்,அற,அறிவு சார்சொத்துரிமை பிரச்சினையாகக் காணவேண்டும்.இந்தியாவில் பரவலாகத் தெரிந்த, மஞ்சளின் மருத்துவ குணங்களை அடிப்படையாக கொண்ட சில செய்நுட்பங்களுக்கு இந்திய வம்சாவழியைச் சேர்ந்த இருவர் அமெரிக்காவில் உரிமம் பெற்றனர்.வழக்குத் தொடர்ந்து இதில் புதுமையில்லை என்பதை நீரூபித்தது Council For Scientific & Industrial Research (CSIR).இதற்கான பல ஆதாரங்களை (இந்திய மருத்துவ ஆராய்ச்சி இதழில் 1950 களில் வெளியான கட்டுரை,ஆயுர்வேத நூல்கள் போன்றவை) காட்டி அந்த உரிமத்தை ரத்து செய்யக் கோரி, அதில் வெற்றி பெற்றது.எனவே ,வெறும் கூக்குரலால் பயனில்லை.தமிழ் லினக்ஸ் திட்டங்களில் பங்களிப்பு செய்தோர் தாங்கள் இந்த பிரச்சினையில் என்ன செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்யும் தருணம் வந்துவிட்டது.CSIR செய்தது போல் ஆதாரங்களை திரட்டி வாதிட்டு தங்கள் தரப்பு நியாயத்தை நிலைநாட்ட முயற்சி எடுக்கப்போகிறார்களா அல்லது இணையத்தில் சில இதழ்களிலும்,விவாதக்குழுக்களில் மட்டும் இதைப் பேசுவதுடன் நின்றுவிடப் போகிறார்களா \nசில வாரங்களுக்கு முன் யமுனா ராஜேந்திரன் எழுதிய கட்டுரைக்கு பதில் எழுதும் போது ரஜனி தேசாயும்,\nசிலரும் சேர்ந்து எழுதிய ஒரு வெளியீட்டைப் பற்றி குறிப்பிட்டிருந்தேன்.கைவசம் அது இல்லாததால்\nவிரிவாக அதைப் பற்றி எழுத முடியவில்லை. Aspects of India ‘s Economy ன் சமீபத்திய இதழில்\nபின் நவீனத்துவ அரசியல் பார்வை குறித்த ஒரு விமர்சனம் உள்ளது.இது மும்பையில் நடைபெறும் WSF பற்றிய விமர்சனத்தின் ஒரு பகுதி.தன்னார்வ அமைப்புகள், வெகுஜன மக்கள் இயக்கங்கள் குறித்தும் இதில் பேசப்பட்டுள்ளது.இணையத்தில் இதை கீழ்க்கண்ட முகவரியில் காணமுடியும்.\nநீலக்கடல் – (தொடர்) அத்தியாயம் -4\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் நாற்பத்திமூன்று\nசவுதி அரேபிய அரசியலில் பெண்கள் : ஓர் அனுபவம்\nஒரு புகைப்படமும், சில சிந்தனைகளும்\nதிசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -9)\nஎனக்குப் பிடித்த கதைகள் – 96 – பொறாமை என்னும் நெருப்பு – ந.சிதம்பர சுப்ரமணியனின் ‘சசாங்கனின் ஆவி ‘\nமெக்ஸிகோ நகரைத் தாக்கிய மிகப் பெரும் பூகம்பமும், சுனாமி [Tsunami] கடற்பொங்கு அலைகளும்\nஅலகிலா விளையாட்டு – ஒரு வாசகனின் பார்வை\nவிருமாண்டி – ஒரு காலப் பார்வை..\nசாகித்ய அகாதெமியின் சார்பில் மூன்று நாள் இலக்கிய விமர்சனக் கருத்தரங்கு\nஒரு விருதும் நாவல் புனைவிலக்கியமும்\nபெற்றோர் பிள்ளைகள் இடையே தலைமுறை இடைவெளி குறையுமா \nசண்டியர் மற்றும் விருமாண்டி – முன்னும் பின்னும் சில பார்வைகள் மற்றும் பதிவுகள்\nகடிதங்கள் – ஜனவரி 29,2004\nஎழுத்தாளர் விழா 2004- ஒரு கண்ணோட்டம்\nபங்களாதேஷ் அரசுகள் தொடர்ந்து நசுக்கும் மதச்சிறுபான்மையினர்\nசென்ற வாரங்கள் அப்படி… (பரிசோதனை, சோதனை, பரிபோல வேகம், பரி வியாபாரம், வேதனை, சாதனை, நாசம்)\nஅன்புடன் இதயம் – 5 – வேங்கூவர் – கனடா\nஒரு சிறு பத்திரிக்கை வாசகியின் கையறு நிலை\nபிலடெல்பியா குறும்பட விழா, 2003-ல் அருண் வைத்யநாதனின் குறும்படம்\nNext: அரசூர் வம்சம் – அத்தியாயம் நாற்பத்திநான்கு\nநீலக்கடல் – (தொடர்) அத்தியாயம் -4\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் நாற்பத்திமூன்று\nசவுதி அரேபிய அரசியலில் பெண்கள் : ஓர் அனுபவம்\nஒரு புகைப்படமும், சில சிந்தனைகளும்\nதிசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -9)\nஎனக்குப் பிடித்த கதைகள் – 96 – பொறாமை என்னும் நெருப்பு – ந.சிதம்பர சுப்ரமணியனின் ‘சசாங்கனின் ஆவி ‘\nமெக்ஸிகோ நகரைத் தாக்கிய மிகப் பெரும் பூகம்பமும், சுனாமி [Tsunami] கடற்பொங்கு அலைகளும்\nஅலகிலா விளையாட்டு – ஒரு வாசகனின் பார்வை\nவிருமாண்டி – ஒரு காலப் பார்வை..\nசாகித்ய அகாதெமியின் சார்பில் மூன்று நாள் இலக்கிய விமர்சனக் கருத்தரங்கு\nஒரு விருதும் நாவல் புனைவிலக்கியமும்\nபெற்றோர் பிள்ளைகள் இடையே தலைமுறை இடைவெளி குறையுமா \nசண்டியர் மற்றும் விருமாண்டி – முன்னும் பின்னும் சில பார்வைகள் மற்றும் பதிவுகள்\nகடிதங்கள் – ஜனவரி 29,2004\nஎழுத்தாளர் விழா 2004- ஒரு கண்ணோட்டம்\nபங்களாதேஷ் அரசுகள் தொடர்ந்து நசுக்கும் மதச்சிறுபான்மையினர்\nசென்ற வாரங்கள் அப்படி… (பரிசோதனை, சோதனை, பரிபோல வேகம், பரி வியாபாரம், வேதனை, சாதனை, நாசம்)\nஅன்புடன் இதயம் – 5 – வேங்கூவர் – கனடா\nஒரு சிறு பத்திரிக்கை வாசகியின் கையறு நிலை\nபிலடெல்பியா குறும்பட விழா, 2003-ல் அருண் வைத்யநாதனின் குறும்படம்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபுதிய திண்ணை படைப்புகள் https://puthu.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2021/01/blog-post_697.html", "date_download": "2021-05-07T01:24:29Z", "digest": "sha1:ZCTBRY6HPNHQSSOFFTQVGLR43XYIRQDF", "length": 8159, "nlines": 90, "source_domain": "www.kurunews.com", "title": "புதிய பதவிகளுடன் சீரமைக்கப்பட்ட ஐக்கிய தேசிய கட்சி! - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » புதிய பதவிகளுடன் சீரமைக்கப்பட்ட ஐக்கிய தேசிய கட்சி\nபுதிய பதவிகளுடன் சீரமைக்கப்பட்ட ஐக்கிய தேசிய கட்சி\nஐக்கிய தேசிய கட்சியின் புதிய பதவி நியமனங்களுக்கு செயற்குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது.\nகட்சியின் விசேட செயற்குழுக் கூட்டம் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தவில் நடைபெற்றுள்ளது. இதன் போதே குறித்த தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇதற்கமைய கட்சியின் புதிய தவிசாளராக வஜிர அபேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.\nஅத்துடன், உப தலைவராக அகிலவிராஜ் காரியவசமும், பிரதித் தலைவராக ருவான் விஜேவர்தனவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nமேலும், கட்சியின் பொதுச்செயலாலளராக பாலித்த ரங்கே பண்டாரவும், பொருளாளராக\nLabels: எமது பகுதிச் செய்திகள்\n\"Kurunews.com ஐ பார்வையிடும் அன்பர்களே Facebook பக்கத்தை Like பண்ணிட்டு போங்கள்\".\nமட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை; பல்வேறு செயற்பாடுகளுக்கு தடை- மாவட்ட அரசாங்க அதிபர்...\nமட்டக்ககளப்பில் தனியார் வகுப்பு நடாத்த தடை விதித்துள்ளதுடன் கொரோனா அதிகரிப்பால் மட்டு போதனா வைத்தியசாலையில் ஒட்சிசன் தேவை அதிகரித்துள்ளது....\nசகல பாடசாலைகளுக்கும் மே மாதம் 07ம் திகதி வரை விடுமுறை\nநாடளாவிய ரீதியில் அனைத்துப் பாடசாலைகளையும் தொடர்ந்தும் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் 7 ஆம் திகதி வரை பாடசாலை...\n10 , 11 தரங்களில் பாடவிதான மாற்றம் அத்துடன் க.பொ.த சா/த, உ/த பரீட்சை நடைபெறும் காலங்களும் மாற்றம்\nதரம் 10 ,11 க்கான பாடத்திட்டங்களை ஒரு வருடம் & 9 மாத காலத்திற்கு மறுசீரமைக்கவும், ஆகஸ்ட் மாதத்தில் க.பொ.த. (சா /த) பரீட்சையை நடாத்தவும்...\nபுனித மிக்கேல் கல்லூரி மாணவன் பௌதீக விஞ்ஞான பிரிவில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலிடம்.\nவெளியான 2020 ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்ச���யில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பௌதீக விஞ்ஞான பிரிவில் குகராஜா சஜீவ் 3 A சித்திகளுடன் ...\nமட்டக்களப்பு மாவட்டத்தில் விஞ்ஞான பிரிவில் முதலிடத்தை பெற்ற மட்/பட்டிருப்பு தேசிய பாடசாலை மாணவன்\nவெளியான 2020 ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் விஞ்ஞான பிரிவில் மகிழூர் கண்ணகிபுரத்தை சேர்ந்த தம்பி...\nமட்டக்களப்பு- கல்லடியில் 09 பேருக்கு கொரோனா தொற்று உறுதி...\nமட்டக்களப்பு மாவட்ட மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுற்குற்பட்ட கல்லடி பிரதேசத்தில் இன்றைய தினம் 09 பேருக்கு கொரோன தொற்று உறுதிசெய்யப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dindigul.nic.in/ta/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/", "date_download": "2021-05-07T01:26:02Z", "digest": "sha1:I4RR7LRG4FH5AAW4UMGXDDBRL7SKT56G", "length": 23314, "nlines": 190, "source_domain": "dindigul.nic.in", "title": "சமூக நலத்துறை | திண்டுக்கல் மாவட்டம் | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nதிண்டுக்கல் மாவட்டம் Dindigul District\n** இதர துறைகள் **\nமாவட்ட புள்ளி விவர அறிக்கை 2018-2019\nமாவட்ட புள்ளி விவர அறிக்கை 2019-2020 Volume I\nமாவட்ட புள்ளி விவர அறிக்கை 2019-2020 Vol II\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\n** மேலும் ஆவணங்கள் **\nசமூகநலத்துறையின் மூலம் (திண்டுக்கல் மாவட்ட சமூகநல அலுவலகம்) வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பயன்பெறும் வகையில் கீழ்க்காணும் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.\nமூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவித் திட்டம் :\nவறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள படித்த ஏழை பெண்களின் திருமணத்திற்கு அவர்களின் பெற்றோருக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் விண்ணப்பிக்க திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன் (அ) திருமணத்திற்கு முதல் நாள் வரை (மக்கள் கணிணி மையத்தின் மூலம்) விண்ணப்பிக்க வேண்டும். பத்தாம் வகுப்பு தேர்ச்சி (அ) தோல்வி மற்றும் பட்டப்படிப்பு/பட்டயம் படித்தவர்கள், பழங்குடியினர் 5ம் வகுப்பு வரை படித்திருந்தால் விண்ணப்பிக்கலாம்.\nதிருமண உதவி விவரம் :\nபத்தாம் வகுப்பு தேர்ச்சி (அ) தோல்வி (ரூ.25,000/- மற்றும் 8 கிராம் தங்கக்காசு)\nபட்டப்படிப்பு (அ) பட்டயம் தேர்ச்சி (ரூ.50,000/- மற்றும் 8 கிராம் தங்கக்காசு).\nவய��ு சான்று (திருமணத்தின் போது மணமகனுக்கு 21 வயதும், மணமகளுக்கு வயது 18 முடிந்திருக்க வேண்டும்).\nஆண்டு வருமானம் (ரூ.72,000/-க்குள் இருக்க வேண்டும்).\nமணமகளின் கல்விச்சான்று (டி.சி மற்றும் மார்க் சீட்)\nஈ.வே.ரா. மணியம்மையார் நினைவு ஏழை விதவை மகள் திருமண நிதி உதவித்திட்டம் :\nகணவனை இழந்த விதவை பெண்ணின் மகள் திருமணத்திற்கு இந்நிதி உதவி விதவை தாயாருக்கு வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் விண்ணப்பிக்க திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன்(அ) திருமணத்திற்கு முதல் நாள் வரை (மக்கள் கணிணி மையத்தின் மூலம்) விண்ணப்பிக்க வேண்டும்.\nதிருமண உதவி விவரம் :\nகல்வி தகுதி இல்லை. (ரூ.25,000/- மற்றும் 4 கிராம் தங்கக்காசு)\nபட்டப்படிப்பு (அ) பட்டயம் தேர்ச்சி (ரூ.50,000/- மற்றும் 8 கிராம் தங்கக்காசு)\nவயது சான்று (திருமணத்தின் போது மணமகனுக்கு 21 வயதும், மணமகளுக்கு வயது 18 முடிந்திருக்க வேண்டும்.\nமணமகளின் கல்விச் சான்று (டி.சி மற்றும் மார்க் சீட்)\nவிதவை சான்று (வட்டாட்சியரிடமிருந்து பெற வேண்டும்)\nவருமானச் சான்று தேவையில்லை விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.\nஅன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண் திருமண நிதி உதவித்திட்டம் :\nதாய், தந்தை இல்லாத ஆதரவற்ற மணப்பெண்ணிற்கு இந்நிதி உதவி வழங்கப்படுகிறது.இத்திட்டத்தில் விண்ணப்பிக்க திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன் (அ) திருமணத்திற்கு முதல் நாள் வரை (மக்கள் கணிணி மையத்தின் மூலம்) விண்ணப்பிக்க வேண்டும்.\nதிருமண உதவி விவரம் :\nகல்வி தகுதி இல்லை. (ரூ.25,000/- மற்றும் 8 கிராம் தங்கக்காசு)\nபட்டப்படிப்பு (அ) பட்டயம் தேர்ச்சி (ரூ.50,000/- மற்றும் 8 கிராம் தங்கக்காசு)\nவயது சான்று (திருமணத்தின் போது மணமகனுக்கு 21 வயதும், மணமகளுக்கு வயது 18 முடிந்திருக்க வேண்டும்.\nமணமகளின் கல்விச் சான்று (டி.சி மற்றும் மார்க் சீட்)\nதாய் தந்தை இறப்பு சான்று (ஆதரவற்றவர் என்ற சான்று)\nவருமானச் சான்று தேவையில்லை விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.\nடாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதி உதவித் திட்டம்:\nவிதவையின் மறுமணத்திற்கு இந்நிதி உதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற மறுமணம் முடிந்த 6 மாதத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும் விதவையின் வயது திருமணத்தின் போது 20 வயது முடிந்திருக்க வேண்டும்.\nதிருமண உதவி விவரம் :\nகல்வித் தகுதி இல்;லை. (ரு.25,000/- மற்றும் 4 கிராம் தங்கக்காசு)\nபட்டப்படிப்பு (அ) பட்டயம் தேர்ச்சி (ரூ.50,000/- மற்றும் 8 கிராம் தங்கக்காசு)\nமுதல் கணவரின் இறப்பு சான்று.\nமுதல் திருமண பத்திரிக்கை இரண்டாம் திருமண பத்திரிக்கை\nதிருமணத்திற்கு முதல் நாள் வரை விதவையாக வாழ்ந்தார் என்ற சான்று\nவிதவை மறுமணம் செய்து கொள்ளும் மணமகனுக்கு இதுதான் முதல் திருமணம் என்பதற்கான சான்று\nமணமகனின் வயது சான்று (40-க்குள் இருக்க வேண்டும்)\nவருமானச் சான்று தேவையில்லை விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.\nடாக்டர் முத்துலெட்சுமிரெட்டி கலப்பு திருமண நிதி உதவித் திட்டம் :\nதம்பதியர்களில் ஒருவர் தாழ்த்தப்பட்டோர் அதாவது (எஸ்சி/எஸ்டி ) பிரிவினராகவும் மற்றொருவர் முற்பட்ட வகுப்பு (அ) பிற்பட்ட வகுப்பு (பிசி/எம்பிசி) பிரிவினராகவும் இருந்தால் இந்நிதி உதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் விண்ணப்பிக்க திருமணம் செய்த 2 வருடத்திற்குள் (வட்டார வளர்ச்சி அலுவலகத்தில்) விண்ணப்பிக்க வேண்டும்.\nதிருமண உதவி விவரம் :\nகல்வி தகுதி இல்லை. (ரூ.15,000/-க்கான தொகை ECS மூலமும் மற்றும் ரூ.10,000/-க்கான தேசிய சேமிப்பு பத்திரம்) மற்றும் 8 கிராம் தங்கக்காசு.\nபட்டப்படிப்பு (அ) பட்டயம் தேர்ச்சி ரூ.50,000/- (ரூ.30,000/-க்கான தொகை ECS மூலமும் மற்றும் ரூ.20,000/-க்கான தேசிய சேமிப்பு பத்திரம்) மற்றும் 8 கிராம் தங்கக்காசு.\nவயது சான்று (மணமகள் மற்றும் மணமகன்)\nவருமானச் சான்று தேவையில்லை விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.\nமுதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத்திட்டம்: (01.08.2011-ம் ஆண்டு முதல்):\nதிட்டம் : ஆண் வாரிசு இன்றி ஒரே பெண் குழந்தையுடன் தம்பதியரில் ஒருவர் கருத்தடை செய்து கொண்டவர்களுக்கு இக்குழந்தையின் பெயரில் ரூ.50,000/- அரசால் முதலீடு செய்யப்படும்.\nஆண் வாரிசு இன்றி இரு பெண் குழந்தைகளுடன் ஒருவர் கருத்தடை செய்து கொண்டவர்களுக்கு இக்குழந்தைகளின் பெயரிலும் தலா ரூ.25,000/- வீதம் அரசால் முதலீடு செய்யப்படும்.\nஒரு பெண் குழந்தைக்கு பிறகு இரண்டாவது பிரசவத்தில் இரண்டு பெண் குழந்தைகள் பிறந்து கருத்தடை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கு ஒவ்வொரு குழந்தையின் பெயரிலும் தலா ரூ.25,000/- வீதம் அரசால் முதலீடு செய்யப்படும்.\nவருமானச் சான்று (ரூ.72,000/-க்குள் இருக்க வேண்டும்)\nகுடும்ப அறுவை சிகிச்சை சான்று.\nஆண் வாரிசு இல்லை என்ற சான்று.\nதொட்டில் குழந்தை வரவ��ற்பு மையம் :\nதிண்டுக்கல் மாவட்டத்தில் பெண் சிசுக்கொலையை தடுக்கும் பொருட்டு தொட்டில் குழந்தை வரவேற்பு மையம் திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் திறந்து வைக்கப்பட்டது.\nஇளம் வயது திருமணம் தடுப்புச் சட்டம்-2006 :\nஇளவயது திருமணம் ஒரு சமுதாய பின்னடைவு ஆகும். இளம் வயது திருமணத்தினால் பெண்ணின் உடல் நிலை,இளம் வயதில் கருவுறும் நிலை,அதன் மூலம் எடை குறைவான குழந்தை, குழந்தையின் கற்றல் குறைபாடு ஒட்டுமொத்த வாழ்க்கை சுழற்சியில் பாதிப்பு ஏற்படுகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் இளவயது திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டு ஆலோசனைகள் மூலம் குழந்தையின் கல்வி தொடரப்படுகிறது. மேலும் அனைத்து வட்டாரங்களிலும் விழிப்புணர்வு முகாம் தொடர் நிகழ்வாக நடத்தப்படுகிறது\nகுடும்ப வன்முறை தடுப்புச் சட்டம்-2005 :\nகுடும்பங்களில் நடக்கும் பலவிதமான சிரமங்களுக்கு ஆளாகும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே இச்சட்டத்தின் நோக்கமாகும். குடும்ப வன்முறை புகார் மனுக்களில்; உள்ள காரணங்கள் முறையே பெண்ணின் கணவர் வேறு பெண்ணோடு தகாத தொடர்பு கொண்டு குடித்துவிட்டு வந்து வீட்டை விட்டு விரட்டி சித்ரவதை செய்வதாகவும் ,குடும்பத்தை கவனிக்காமல் இருத்தல் ஆகியன இதுவரை இதனடிப்படையில் மனுக்கள் பெறப்பட்டு ஆலோசனை வழங்கப்பட்டு அதனைத் தொடர்ந்து தேவையின் அடிப்படையில் நீதி மன்றத்தில் வழக்கு பதிவு செய்து பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு தேவையான பொருளாதார உதவி, இருப்பிட உதவி இழப்பீடு உதவி, குழந்தைகளுக்கு தேவையான ஜீவனாம்ச உதவிகள் நீதிமன்றத்தின்மூலம்; பெற்றுத்தரப்படுகிறது.\nவரதட்சணை தடுப்புச் சட்டம்-1961 :\nவரதட்சணை வாங்குவதும் குற்றம் கொடுப்பதும் குற்றமாகும்.இது சமூகத்தில் உள்ளபெண்களின் உரிமைகளையும் ,சமத்துவத்தையும் மறுக்ககூடிய ஒரு அவலத்தின்அறிகுறி ஆகும்.வரதட்சணை பெறாத சமுதாயத்தை உருவாக்குவதே இதன் நோக்கம்ஆகும்..\nபெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நலன் பேணிக்காத்தல் மற்றும் பராமரிப்சட்டம்-2007 :\nமூத்த குடிமக்கள் நலனை பேணும் பொருட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் மூத்த குடிமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் சம்மந்தபட்ட கோட்டாட்சியருக்கு அனுப்பபட்டு தீர்வு காணப்படுகிறது.\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம்\n© திண்டுக்கல் மாவட்டம் , வலைத��� வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: May 05, 2021", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2020/08/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-05-07T01:19:53Z", "digest": "sha1:MJSKQKRLDPQUHHE6WLAWZYFQ7M3V3CXG", "length": 9436, "nlines": 122, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nசெல்வம் இருந்தாலும் செல்வம் இல்லை என்றாலும் மனப் போராட்டம் இல்லாதவர்கள் உண்டா….\nசெல்வம் இருந்தாலும் செல்வம் இல்லை என்றாலும் மனப் போராட்டம் இல்லாதவர்கள் உண்டா….\nசெல்வங்களை எவ்வளவு தேடி வைத்திருப்பினும் செல்வம் வைத்திருப்போர் குடும்பங்களில் பார்த்தோம் என்றால் எத்தனை துயரங்கள்… எத்தனை தொல்லைகள்…\nசெல்வம் இல்லாதவர்கள்… அது கிடைக்கவில்லையே… அது கிடைக்கவில்லையே… என்று அவர்களும் வேதனை அடைவதைப் பார்க்கின்றோம். ஆனால்\n1.செல்வம் இல்லாத போது உடலில் வேதனைப்பட்டாவது\n2.செல்வத்தைத் தேட வேண்டும் என்ற வலிமை வருகின்றது.\nசெல்வம் வந்த பின் செல்வத்தைக் காக்க உணர்வுகள் வலிமை பெறுகின்றது. இருந்தாலும் வேதனையை வளர்க்க நேருகின்றது. அப்பொழுது தேடிய செல்வத்தைப் பாதுகாக்கும் உணர்வுகள் இழக்கப்படுகின்றது.\nசெல்வம் உள்ளோருக்குத் தன்னிடம் தேடிய செல்வம் இருப்பினும் வேதனை என்ற உணர்வை நீக்க முடியவில்லை.\nசெல்வம் இல்லாதவருக்கு எப்படியும் செல்வம் தேட வேண்டுமென்ற ஆர்வம் வருகின்றது. அந்த ஆர்வத்தின் நிலைகள் கொண்டு உடல் உழைப்புகளைச் செய்து… தனது கஷ்டங்களை எண்ணாது… எப்படியும் தான் இந்த வாழ்க்கையை உயர்த்த வேண்டுமென்று மன உறுதி கொண்டு வளர்கின்றது.\nநாளைக்குச் சாப்பாட்டுக்கு இல்லை என்று சொன்னால் எப்படியும் சாப்பாட்டைத் தேட வேண்டுமென்ற நிலையில் அந்த மன உறுதி வருகின்றது.\n1.கூட நான்கு நாட்களுக்கு சாப்பாடு இருந்தால்… “சரி விடு போ… பார்க்கலாம்…\n2.அந்த தேடிச் சேமிக்கும் நிலையும் குறைந்துவிடுகின்றது.\nஇப்படி மனிதனின் வாழ்க்கையில் நீங்கள் எப்படிப் பார்த்தாலும் இந்த மனப் போர் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றது.\nஆகவே… நமது குரு காட்டிய அருள் வழியில்\n1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை ந��க்குள் பதிவாக்கி நல் உணர்வுகளை உயர்வாக்கி\n2.இந்த உடலுக்குப் பின் நாம் பிறவியில்லா நிலை அடைதல் வேண்டும்.\n3.அதற்கேதான் இந்தத் தியானமே தவிர சொத்து வேண்டும் சுகம் வேண்டும் என்பதற்காக அல்ல.\nஅருள் ஞானச் சொத்து என்ற அந்தப் பேரின்ப சொத்தைத்தான் நாம் தேட வேண்டும். அதைத் தேடிக் கொண்டால் அமைதியும் நிறைவும் மகிழ்ச்சியும் நம்மைத் தேடி வரும்.\nசாமியையே (ஞானகுரு) எண்ணிக் கொண்டிருப்பதைக் காட்டிலும் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து உடலுக்குள் விளைய வைக்க வேண்டும்\n என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nசீராக ஆத்ம சுத்தி செய்வோருக்குக் கிடைக்கும் பலன்கள்\nஆண்டவனிலிருந்து வந்த பிம்பங்கள் தான் அனைத்துமே என்று எண்ணினால்… “தான்” என்ற தனித்த அகங்காரம் வராது – ஈஸ்வரபட்டர்\nஉங்களுக்குக் கொடுத்த சக்திகளை ஒவ்வொருவரும் விரயம் ஆக்காது பயன்படுத்துங்கள்\n24 X 7 சாமிகள் உபதேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilkilavan.com/%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%99/", "date_download": "2021-05-07T01:11:08Z", "digest": "sha1:Y25TNBASQDXIF4HGJL3WQX6U3246ZYGV", "length": 3567, "nlines": 65, "source_domain": "tamilkilavan.com", "title": "ஃபிரிட்ஜ் இல்லாமலும் தேங்காயை 6 மாதம் வரை கெடாமல் அழுகாமல் வைப்பது எப்படி? | Tamil Kilavan", "raw_content": "\nஃபிரிட்ஜ் இல்லாமலும் தேங்காயை 6 மாதம் வரை கெடாமல் அழுகாமல் வைப்பது எப்படி\nஃபிரிட்ஜ் இல்லாமலும் தேங்காயை 6 மாதம் வரை கெடாமல் அழுகாமல் வைப்பது எப்படி\nTwitterFacebook பல கோடி சொத்துக்கு சொந்தக்காரி ஒரு வேலை சோற்றுக்காக வீட்டு வேலை …\nபல கோடி சொத்துக்கு சொந்தக்காரி ஒரு வேலை சோற்றுக்காக வீட்டு வேலை செய்து பிழைக்கும் அவலம்\nTwitterFacebook இந்த செடி எங்க பார்த்தாலும் விடாதீங்க அதிசயமாக நிறம் மாறி உங்களுக்கு …\nஇந்த செடி எங்க பார்த்தாலும் விடாதீங்க அதிசயமாக நிறம் மாறி உங்களுக்கு அதிசயம் குடுக்கும் செடி.\nகடையில் முட்டை வாங்கறதுக்கு முன்னாடி இந்த வீடியோ பாருங்க\n2 முட்டை இருக்கா வீட்டில் உள்ள அனைவருக்கும் கிரிஸ்பியான ஈவினிங் ஸ்நாக்ஸ் ரெடி.\nமுட்டை சுக்கா லஞ்சுக்கு பக்காவான சைடிஷ் 10 நிமிடத்தில் இப்படி சுவையா செய்து கொடுத்து அசத்துங்க.\nபல கோடி சொத்துக்கு சொந்தக்காரி ஒரு வேலை சோற்றுக்காக வீட்டு வேலை செய்து பிழைக்கும் அவலம்\n20 ஆயிரம் வருடங்களுக்கு முன் மூழ்கிப்போன தமிழனின் வரலாறு.. தற்போது மெல்ல மெல்ல மிதந்து வருகிறது.. தற்போது மெல்ல மெல்ல மிதந்து வருகிறது.. ஒவ்வொரு தமிழனும் உலகத்துக்கு அறிய நண்பர்களுடன் பகிருங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/lifestyle/recipes/delicious-senaikizhangu-masala/cid2820846.htm", "date_download": "2021-05-07T01:57:30Z", "digest": "sha1:VCHO6UGWAPVOZQKXUYU3EMSN7BNAHNFK", "length": 3314, "nlines": 55, "source_domain": "tamilminutes.com", "title": "சுவை நிறைந்த சேனைக்கிழங்கு மசியல்", "raw_content": "\nசுவை நிறைந்த சேனைக்கிழங்கு மசியல்\nசேனைக் கிழங்கில் நாம் இப்போது மிகவும் சுவையான மசியல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nபச்சை மிளகாய் - 3\nமஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்\nஇஞ்சி - 1 துண்டு\nகடுகு - 1/4 ஸ்பூன்\nகாய்ந்த மிளகாய் - 2\nபெருங்காயம் - 1/4 ஸ்பூன்\nஉளுந்து - 1/4 ஸ்பூன்\nஎண்ணெய் – தேவையான அளவு\nகறிவேப்பிலை – தேவையான அளவு\n1. சேனைக்கிழங்கின் தோலைச் சீவி சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். அடுத்து குக்கரில் சேனைக் கிழங்கு, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு குழைய வேக விடவும்.\n2. அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கறிவேப்பிலை போட்டு தாளித்து பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கவும்.\n3. அடுத்து பெருங்காயம், வேகவைத்த சேனைக்கிழங்கு சேர்த்துக் கிளறி வேகவிட்டு எலுமிச்சை சாறு சேர்த்து இறக்கினால் சேனைக்கிழங்கு மசியல் ரெடி.\nTamil Minutes இணையதளம் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. புதிய செய்திகளையும், பயனுள்ள தகவல்களையும் வழங்குவதே இந்த இணையதளத்தின் நோக்கமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akattiyan.lk/2020/12/28.html", "date_download": "2021-05-07T01:14:21Z", "digest": "sha1:3OUM6CQHVITXULMU7ETDTVU2YW7HAEOA", "length": 7512, "nlines": 81, "source_domain": "www.akattiyan.lk", "title": "வட்டவளை ஆடைத் தொழிற்சாலையில் மேலும் 28 பேருக்கு கொரோனா தொற்று - அகத்தியன் | Online", "raw_content": "\nHome மலையகம் வட்டவளை ஆடைத் தொழிற்சாலையில் மேலும் 28 பேருக்கு கொரோனா தொற்று\nவட்டவளை ஆடைத் தொழிற்சாலையில் மேலும் 28 பேருக்கு கொரோனா தொற்று\nவட்டவளை ஆடைத்தொழிற்சாலையில் மேலும் 28 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று\nஉறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்பகமுவ பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.\nவட்டவளை ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் 10 பேருக்கு நேற்றைய தினம் தொற்று\nஉறுதி செய்யப்பட்டதையடுத்து மேலும் 450 பேருக்கு அன்டிஜன் பரிசோதனை\nஇதனடிப்படைய���ல் இன்று (25/12/2020) கிடைக்கப்பெற்ற\nஅறிக்கையில் மேலும் 28 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇதில், 21 பெண்களும் 7 ஆண்களும் அடங்குவதுடன், தொற்றுக்குள்ளானவர்களில் அம்பகமுவ பிரதேச செயலகத்தைச் சேர்ந்தவர்களே அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.\nகடந்த 14 ஆம் திகதி வட்டவளை ஆடைத்தொழிற்சாலையில் வேலை செய்த மவுண்ட்ஜின்\nதோட்டத்தை சேர்ந்த இளைஞன் ஒருவருக்கு தொற்று உறுதியானதையடுத்து அவரோடு\nதொடர்பை பேணிய 60 பேருக்கு கடந்த 17 ஆம் திகதி பி.சி.ஆர் பரிசோதனை\nஇதுவரையில் குறித்த ஆடைத்தொழிற்சாலையில் 39 பேர் தொற்றாளர்களாக அடையாளம்\nஇன்று அடையாளம் காணப்பட்டவர்களை சுயதனிமை மத்திய நிலையத்திற்கு அனுப்பி\nவைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.\nவட்டவளை ஆடைத் தொழிற்சாலையில் மேலும் 28 பேருக்கு கொரோனா தொற்று Reviewed by Chief Editor on 12/25/2020 06:20:00 pm Rating: 5\nபாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் மேலதிக வகுப்புகளுக்கு மறு அறிவித்தல் வரை விடுமுறை\nபாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் மேலதிக வகுப்புகளுக்கு மறு அறிவித்தல் வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், நோன்பு பெருநாள், வெசாக் ...\nகொரோனா பரவல் காரணமாக நாட்டின் பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள விடுமுறையானது மேலும் ஒரு வார காலத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ...\nமோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nவாகன போக்குவரத்து திணைக்களத்தின் நாரஹென்பிட்டி மற்றும் வேரஹெர அலுவலகங்கள் ஒரு வாரத்திற்கு மூடப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம த...\nDReAM என அறிமுகப்படுத்தப்பட்டுள்ள முற்பாதுகாப்பு விதிமுறைகளுக்கமைய மதுபான சாலைகளை திறந்து வைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. D – சமூக இடை...\nமுழு அதிகாரம் : அகத்தியன் ஊடக சேவை 2020\nஆசிரியர் பீட தெடர்புகளுக்கு 0779516119\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/todays-paper/regional03/667155-.html", "date_download": "2021-05-07T01:37:25Z", "digest": "sha1:BAAD6U3CIJIAEWKUNV6WHAVDJ54TCAQK", "length": 12496, "nlines": 276, "source_domain": "www.hindutamil.in", "title": "கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 2 போலீஸார் உயிரிழப்பு : | - hindutamil.in", "raw_content": "வெள்ளி, மே 07 2021\nகரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 2 போலீஸார் உயிரிழப்பு :\nசென்னையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 2 போலீ��ார் நேற்று உயிரிழந்தனர்.\nசென்னையில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் ஊரடங்கு கண்காணிப்பு, பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடும் முன்களப் பணியாளர்களான போலீஸார் தொடர்ந்து கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சென்னையில் மட்டும் சுமார் 400-க்கும் மேற்பட்ட போலீஸார், அதிகாரிகள் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சையில் உள்ளனர்.\nகரோனா தொற்று காரணமாக சென்னைஆயுதப்படை தலைமைக் காவலர் கமலநாதன் (44) கடந்த மாதம் 25-ம் தேதி சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், அவர் சிகிச்சைபலனின்றி நேற்று அதிகாலை உயிரிழந்தார்.\nஇதேபோல, கரோனா தொற்று காரணமாக உளவுத் துறை (எஸ்.பி.சி.ஐ.டி.) உதவிஆய்வாளரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆவடி காவலர் குடியிருப்பில் வசித்து வந்த உதவி ஆய்வாளர் சின்னகண்ணு(55), கரோனா தொற்று அறிகுறியுடன் கடந்த மாதம் 28-ம் தேதி ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.\nநந்திகிராமில் தோற்ற மம்தா பானர்ஜி முதல்வர் பதவியில்...\nபிரதமருக்கு வீடு கட்டச் செலவிடும் ரூ.13,450 கோடியில்...\nபிரசாந்தும் சுனிலும்: இரு பிரச்சாரக் கதைகள்\nதிமுக வெற்றியின் முக்கியத்துவம் என்ன\nஅம்மா உணவகம் சூறை; டிடிவி, ஜெயக்குமார் கண்டனம்:...\nமேற்கு வங்கத்தில் பாஜகவை வீழ்த்திய மம்தா: வெற்றிப்...\nமோடி ஒன்றும் வெல்ல முடியாதவர் அல்ல\nமருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் கரோனா நோயாளிகளுக்காக - டெல்லிக்கு 730 டன்...\nஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள் பெற்ற மாலி நாட்டுப் பெண் :\n50 சதவீதத்தை தாண்டக்கூடாது என்ற - இந்திரா சஹானி வழக்கின் தீர்ப்பை...\nமேற்கு வங்க சட்டம்-ஒழுங்கு நிலவரம் - அறிக்கை சமர்ப்பிக்க ஆளுநருக்கு மத்திய...\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nமேலும் 1.5 லட்சம் ஸ்புட்னிக் வி தடுப்பூசிகளை அனுப்பும் ரஷ்யா\nஎம்சிஏ, எம்பிஏ படிப்புக்கான மாணவர் சேர்க்கை - கலந்தாய்வுக்கான விண்ணப்பம்...\nசென்னை மண்டல தொகுதிகளை ஒட்டுமொத்தமாக கைப்பற்றிய திமுக: மதுராந்தகம் தவிர 36 சட்டப்பேரவைத்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vativamaippu.com/?D=32125&P=5", "date_download": "2021-05-07T01:00:37Z", "digest": "sha1:KNZE7AM76AQHL5JUDAC3RF2CMZDHBYJR", "length": 8304, "nlines": 67, "source_domain": "www.vativamaippu.com", "title": " Louvre ஒளி - வடிவமைப்பு இதழ்", "raw_content": "\nதிங்கள் 12 ஏப்ரல் 2021\nஒளி லூவ்ரே ஒளி என்பது கிரேக்க கோடை சூரிய ஒளியால் ஈர்க்கப்பட்ட ஒரு ஊடாடும் அட்டவணை விளக்கு ஆகும், இது மூடிய அடைப்புகளிலிருந்து லூவ்ரெஸ் வழியாக எளிதில் செல்கிறது. இது 20 மோதிரங்கள், 6 கார்க் மற்றும் 14 ப்ளெக்ஸிகிளாஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது, இது பயனர்களின் விருப்பங்களுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப பரவல், தொகுதி மற்றும் ஒளியின் இறுதி அழகியலை மாற்றுவதற்காக ஒரு விளையாட்டுத்தனமான வழியை மாற்றுகிறது. ஒளி பொருள் வழியாக சென்று பரவலை ஏற்படுத்துகிறது, எனவே எந்த நிழல்களும் தன்னைச் சுற்றியுள்ள மேற்பரப்புகளிலும் தோன்றாது. வெவ்வேறு உயரங்களைக் கொண்ட மோதிரங்கள் முடிவற்ற சேர்க்கைகள், பாதுகாப்பான தனிப்பயனாக்கம் மற்றும் மொத்த ஒளி கட்டுப்பாட்டுக்கான வாய்ப்பை வழங்குகின்றன.\nதிட்டத்தின் பெயர் : Louvre, வடிவமைப்பாளர்களின் பெயர் : Natasha Chatziangeli, வாடிக்கையாளரின் பெயர் : natasha chatziangeli.\nஇந்த அற்புதமான வடிவமைப்பு ஃபேஷன், ஆடை மற்றும் ஆடை வடிவமைப்பு போட்டியில் வெள்ளி வடிவமைப்பு விருதை வென்றது.\tபல புதிய, புதுமையான, அசல் மற்றும் ஆக்கபூர்வமான பேஷன், ஆடை மற்றும் ஆடை வடிவமைப்பு படைப்புகளைக் கண்டறிய வெள்ளி விருது பெற்ற வடிவமைப்பாளர்களின் வடிவமைப்பு இலாகாவை நீங்கள் நிச்சயமாகப் பார்க்க வேண்டும்.\nஇந்த வடிவமைப்பைப் பற்றி மேலும் அறிக\nஉலகின் மிகச்சிறந்த வடிவமைப்பு அணிகள்.\nசனி 10 ஏப்ரல் 2021\nசில நேரங்களில் நீங்கள் உண்மையிலேயே சிறந்த வடிவமைப்புகளைக் கொண்டு வர திறமையான வடிவமைப்பாளர்களின் மிகப் பெரிய குழு தேவை. தினமும், ஒரு தனித்துவமான விருது வென்ற புதுமையான மற்றும் ஆக்கபூர்வமான வடிவமைப்பு குழுவை நாங்கள் இடம்பெறுகிறோம். உலகெங்கிலும் உள்ள வடிவமைப்பு குழுக்களிடமிருந்து அசல் மற்றும் ஆக்கபூர்வமான கட்டிடக்கலை, நல்ல வடிவமைப்பு, பேஷன், கிராபிக்ஸ் வடிவமைப்பு மற்றும் வடிவமைப்பு மூலோபாய திட்டங்களை ஆராய்ந்து கண்டறியவும். கிராண்ட் மாஸ்டர் வடிவமைப்பாளர்களின் அசல் படைப்புகளால் ஈர்க்கப்படுங்கள்.\nவிளக்கு பொருட்கள் மற்றும் லைட்டிங் திட்டங்கள் வடிவ���ைப்பு\nஇந்த வடிவமைப்பைப் பற்றி மேலும் அறிக\nThe Float ரியல் எஸ்டேட் நிறுவனம் வியாழன் 6 மே\nOr2 ஃபோட்டோக்ரோமிக் விதான அமைப்பு புதன் 5 மே\nEye of Ra' பொது நகர்ப்புற கலை தளபாடங்கள் செவ்வாய் 4 மே\nநீங்கள் ஒரு வடிவமைப்பாளர், கலைஞர், கட்டிடக் கலைஞர், புதுமைப்பித்தன் அல்லது பிராண்ட் மேலாளரா பகிர்வதற்கு உங்களிடம் ஏதேனும் நல்ல வடிவமைப்புகள் உள்ளதா பகிர்வதற்கு உங்களிடம் ஏதேனும் நல்ல வடிவமைப்புகள் உள்ளதா உலகளவில் வடிவமைப்பாளர்கள், கலைஞர்கள், கட்டட வடிவமைப்பாளர்கள், கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் பிராண்டுகளிலிருந்து அசல் மற்றும் ஆக்கபூர்வமான வடிவமைப்புகளை வெளியிடுவதில் நாங்கள் மிகவும் ஆர்வமாக உள்ளோம். உங்கள் வடிவமைப்புகளை இன்று வெளியிடவும்.\nஅன்றைய வடிவமைப்பு நேர்காணல் வியாழன் 6 மே\nஅன்றைய வடிவமைப்பு புராணக்கதை புதன் 5 மே\nஅன்றைய வடிவமைப்பு செவ்வாய் 4 மே\nஅன்றைய வடிவமைப்பாளர் திங்கள் 3 மே\nஅன்றைய வடிவமைப்பு குழு ஞாயிறு 2 மே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vativamaippu.com/?D=98029&P=2", "date_download": "2021-05-07T00:10:07Z", "digest": "sha1:K5V54ASQMPA6RYEEWEVRTOFOOBE3WJF5", "length": 8584, "nlines": 67, "source_domain": "www.vativamaippu.com", "title": " Medieval Rethink இடைக்கால மறுபரிசீலனை கலாச்சார மையம் - வடிவமைப்பு இதழ்", "raw_content": "\nஇடைக்கால மறுபரிசீலனை கலாச்சார மையம்\nவெள்ளி 30 ஏப்ரல் 2021\nஇடைக்கால மறுபரிசீலனை கலாச்சார மையம் குவாங்டாங் மாகாணத்தில் வெளியிடப்படாத ஒரு சிறிய கிராமத்திற்கு ஒரு கலாச்சார மையத்தை கட்ட ஒரு தனியார் கமிஷனுக்கு இடைக்கால ரீதிங்க் பதிலளித்தது, இது பாடல் வம்சத்திற்கு 900 ஆண்டுகளுக்கு முற்பட்டது. நான்கு மாடி, 7000 சதுர மீட்டர் வளர்ச்சி கிராமத்தின் தோற்றத்தின் அடையாளமான டிங் குய் ஸ்டோன் எனப்படும் ஒரு பழங்கால பாறை உருவாக்கத்தை மையமாகக் கொண்டுள்ளது. திட்டத்தின் வடிவமைப்பு கருத்து பண்டைய கிராமத்தின் வரலாறு மற்றும் கலாச்சாரத்தை காண்பிப்பதை அடிப்படையாகக் கொண்டது, அதே நேரத்தில் பழைய மற்றும் புதியவற்றை இணைக்கிறது. கலாச்சார மையம் ஒரு பண்டைய கிராமத்தின் மறு விளக்கமாகவும் சமகால கட்டிடக்கலைக்கு மாற்றமாகவும் நிற்கிறது.\nதிட்டத்தின் பெயர் : Medieval Rethink, வடிவமைப்பாளர்களின் பெயர் : QUAD studio, வாடிக்கையாளரின் பெயர் : QUAD studio.\nஇந்த அற்புதமான வடிவமைப்பு ஃபேஷன், ஆடை மற்றும் ஆடை வடிவமைப்பு போட்டியில��� வெள்ளி வடிவமைப்பு விருதை வென்றது.\tபல புதிய, புதுமையான, அசல் மற்றும் ஆக்கபூர்வமான பேஷன், ஆடை மற்றும் ஆடை வடிவமைப்பு படைப்புகளைக் கண்டறிய வெள்ளி விருது பெற்ற வடிவமைப்பாளர்களின் வடிவமைப்பு இலாகாவை நீங்கள் நிச்சயமாகப் பார்க்க வேண்டும்.\nஇந்த வடிவமைப்பைப் பற்றி மேலும் அறிக\nஉலகின் சிறந்த வடிவமைப்பாளர்கள், கலைஞர்கள் மற்றும் கட்டடக் கலைஞர்கள்.\nபுதன் 28 ஏப்ரல் 2021\nநல்ல வடிவமைப்பு சிறந்த அங்கீகாரத்திற்கு தகுதியானது. அசல் மற்றும் புதுமையான வடிவமைப்புகள், அற்புதமான கட்டிடக்கலை, ஸ்டைலான ஃபேஷன் மற்றும் கிரியேட்டிவ் கிராபிக்ஸ் ஆகியவற்றை உருவாக்கும் அற்புதமான வடிவமைப்பாளர்களை தினமும் காண்பிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இன்று, உலகின் மிகச்சிறந்த வடிவமைப்பாளர்களில் ஒருவரை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம். இன்று விருது பெற்ற வடிவமைப்பு இலாகாவைச் சரிபார்த்து, உங்கள் தினசரி வடிவமைப்பு உத்வேகத்தைப் பெறுங்கள்.\nஇடைக்கால மறுபரிசீலனை கலாச்சார மையம்\nகட்டிடக்கலை, கட்டிடம் மற்றும் கட்டமைப்பு வடிவமைப்பு\nஇந்த வடிவமைப்பைப் பற்றி மேலும் அறிக\nThe Float ரியல் எஸ்டேட் நிறுவனம் வியாழன் 6 மே\nOr2 ஃபோட்டோக்ரோமிக் விதான அமைப்பு புதன் 5 மே\nEye of Ra' பொது நகர்ப்புற கலை தளபாடங்கள் செவ்வாய் 4 மே\nநீங்கள் ஒரு வடிவமைப்பாளர், கலைஞர், கட்டிடக் கலைஞர், புதுமைப்பித்தன் அல்லது பிராண்ட் மேலாளரா பகிர்வதற்கு உங்களிடம் ஏதேனும் நல்ல வடிவமைப்புகள் உள்ளதா பகிர்வதற்கு உங்களிடம் ஏதேனும் நல்ல வடிவமைப்புகள் உள்ளதா உலகளவில் வடிவமைப்பாளர்கள், கலைஞர்கள், கட்டட வடிவமைப்பாளர்கள், கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் பிராண்டுகளிலிருந்து அசல் மற்றும் ஆக்கபூர்வமான வடிவமைப்புகளை வெளியிடுவதில் நாங்கள் மிகவும் ஆர்வமாக உள்ளோம். உங்கள் வடிவமைப்புகளை இன்று வெளியிடவும்.\nஅன்றைய வடிவமைப்பு நேர்காணல் வியாழன் 6 மே\nஅன்றைய வடிவமைப்பு புராணக்கதை புதன் 5 மே\nஅன்றைய வடிவமைப்பு செவ்வாய் 4 மே\nஅன்றைய வடிவமைப்பாளர் திங்கள் 3 மே\nஅன்றைய வடிவமைப்பு குழு ஞாயிறு 2 மே\nஇடைக்கால மறுபரிசீலனை கலாச்சார மையம் QUAD studio Medieval Rethink\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2021/01/pcr.html", "date_download": "2021-05-07T01:25:06Z", "digest": "sha1:BAZQLGVLJJ2EZA7NDDY2Y4OUVQPJRM4X", "length": 7706, "nlines": 87, "source_domain": "www.kurunews.com", "title": "கல்வி அமைச்சருக்கு மேற்கொள்ளப்பட்ட PCR முடிவு வௌியானது..!! - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » கல்வி அமைச்சருக்கு மேற்கொள்ளப்பட்ட PCR முடிவு வௌியானது..\nகல்வி அமைச்சருக்கு மேற்கொள்ளப்பட்ட PCR முடிவு வௌியானது..\nகல்வி அமைச்சர் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸிற்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளின் அடிப்படையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.\nகொரோனா தொற்றுக்கு உள்ளான இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்தவுடன் தொடர்பில் இருந்த காரணத்தினால் அவர் தனிமைப்படுத்தப்பட்டு பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\n\"Kurunews.com ஐ பார்வையிடும் அன்பர்களே Facebook பக்கத்தை Like பண்ணிட்டு போங்கள்\".\nமட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை; பல்வேறு செயற்பாடுகளுக்கு தடை- மாவட்ட அரசாங்க அதிபர்...\nமட்டக்ககளப்பில் தனியார் வகுப்பு நடாத்த தடை விதித்துள்ளதுடன் கொரோனா அதிகரிப்பால் மட்டு போதனா வைத்தியசாலையில் ஒட்சிசன் தேவை அதிகரித்துள்ளது....\nசகல பாடசாலைகளுக்கும் மே மாதம் 07ம் திகதி வரை விடுமுறை\nநாடளாவிய ரீதியில் அனைத்துப் பாடசாலைகளையும் தொடர்ந்தும் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் 7 ஆம் திகதி வரை பாடசாலை...\n10 , 11 தரங்களில் பாடவிதான மாற்றம் அத்துடன் க.பொ.த சா/த, உ/த பரீட்சை நடைபெறும் காலங்களும் மாற்றம்\nதரம் 10 ,11 க்கான பாடத்திட்டங்களை ஒரு வருடம் & 9 மாத காலத்திற்கு மறுசீரமைக்கவும், ஆகஸ்ட் மாதத்தில் க.பொ.த. (சா /த) பரீட்சையை நடாத்தவும்...\nபுனித மிக்கேல் கல்லூரி மாணவன் பௌதீக விஞ்ஞான பிரிவில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலிடம்.\nவெளியான 2020 ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பௌதீக விஞ்ஞான பிரிவில் குகராஜா சஜீவ் 3 A சித்திகளுடன் ...\nமட்டக்களப்பு மாவட்டத்தில் விஞ்ஞான பிரிவில் முதலிடத்தை பெற்ற மட்/பட்டிருப்பு தேசிய பாடசாலை மாணவன்\nவெளியான 2020 ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் விஞ்ஞான பிரிவில் மகிழூர் கண்ணகிபுரத்தை சேர்ந்த தம்பி...\nமட்டக்களப்பு- கல்லடியில் 09 பேருக்கு கொரோனா தொற்று உறுதி...\nமட்டக்களப்பு மாவட்ட மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுற்குற்பட்ட கல்லடி பிரதேசத்தில் இன்றைய தினம் 09 பேருக்கு கொரோன தொற்று உறுதிசெய்யப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2020/08/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5/", "date_download": "2021-05-07T02:01:25Z", "digest": "sha1:ELIM2LH52MER7KTJKOKFC556SRTE66JM", "length": 13554, "nlines": 137, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nஉயிர் உடலில் இருக்கும் வரை தான் மதிப்பும் மரியாதையும்…\nஉயிர் உடலில் இருக்கும் வரை தான் மதிப்பும் மரியாதையும்…\nநாம் எத்தகைய உயர்ந்த நிலையில் வாழ்ந்து கொண்டிருந்தாலும்…\n1.இந்தச் சரீரத்தை விட்டு உயிரான்மா சென்று விட்டால்\n2.நம் அழகையும்… நாம் போற்றித் துதித்த தருமத்தையும்…\nநேரமாகிவிட்டது… சடலம் அழுகிவிடும்… சீக்கிரம் கொண்டு போங்கள் என்று தான் சொல்கின்றார்கள்.\nஅத்தகைய நிலைகள் கொண்டு சென்றாலும் அங்கே எரிக்கும் இடத்தில் பார்த்தாலோ அதிலே நெருப்பிலே இட்டு எரிக்கப்படும்போது நம்முடைய நிலைகள் என்னவாக இருக்கின்றது…\nஅதே சமயம் புதை குழியில் போடும்போது அதனை எவ்வளவு தூரம் அசுத்தப்படுத்துகின்றோம்… சொந்தகாரர்கள் நாமாவது சடலத்தைத் தூக்கி போடுகின்றோமா… சொந்தகாரர்கள் நாமாவது சடலத்தைத் தூக்கி போடுகின்றோமா…\nயாரையோ வைத்துத் தூக்கிப் போடுங்கள் என்று தான் சொல்கின்றோம்… இல்லையா… இதைத்தான் அது அதற்கென்று இனங்களைப் பிரிக்கப்பட்டு அவர்களை அதற்குத்தான் (குடியானவன் என்றும் வெட்டியான் என்றும்) என்று வைத்திருக்கின்றோம்.\nஏனென்றால் இவர்களை அது சாடி விடுமாம்…\nஆனால் இவருடைய சொத்து… செல்வம்… எல்லாம் தேவை. இப்படித்தான் நம்முடைய உணர்வுகள் வருகின்றது.\nஆகவே… இந்த உடல் நமக்குச் சொந்தம் என்று ஆக்க வேண்டாம். இந்த உடலின் சொந்தம் கொண்டாடி அதில் வளர்த்துக் கொண்ட சாபங்களை நீக்கி இந்த உணர்வின் தன்மைகளை ஒளியாக மாற்றி என்றுமே மகரிஷிகளின் அருள் வட்டத்தில் நாம் நிலை கொள்ள வேண்டும்.\nநமக்கு அந்த நிலையான சரீரம் வேண்டுமென்றால் பற்று எதில் வேண்டும்…\nஅந்த மகரிஷிகளின் அருளுணர்வோடு பற்று வேண்டும். அந்தப் பற்றை நமக்குள் வளர்த்துக் கொண்டால் அதன் கணக்கின் பிரகாரம் இந்த வாழ்க்கையில் எந்த மகரிஷிகளின் உணர்வை அதிகமாகக் கூட்டுகின்றோமோ அங்கே செல்கின்றோம்.\nஇல்லையென்றால் இந்தச் சாப அலைகள் சிக்கியவர்கள் நஞ்சு கொண்டு ஒருவரை ஒருவர் அழித்திட வேண்டும் என்ற நிலை ஆகிறது. பின் தாவர இனங்களைப் புசித்து வரும் நிலை மாறி மற்ற உயிரினங்களைக் கொன்று புசிக்கும் நிலைகள் வரும்.\n1.அப்படிக் கொன்று மற்றொரு உடலுக்குள் புகுந்து\n2.இப்படிப் பல நிலைகள் மாறி மாறி நரக லோகத்தைச் சந்தித்த பின் தான்\n3.அதாவது சித்திர புத்திரன் கணக்கின் பிரகாரம் இந்தத் தண்டனைகளை எல்லாம் நாம் அனுபவித்த பின் தான்\n4.மீண்டும் மனிதனாக வர முடியும் (உடனடியாக வருவது மிகவும் கடினம்)\nஏனென்றால் சாதாரணமாக மனிதனின் கையில் சிக்கி அந்த உயிரினங்கள் சாகாது. அதனுடைய நிலைகள் தன் பசிக்காக ஏங்கி எடுக்கும் அதன் வாயிலே சிக்கித் தான் அங்கே அழியும்.\nஒரு புலி அடித்துக் கொல்கிறது என்றால் அவன் புலியாகப் பிறக்கும் நிலை வருகின்றது. ஒரு பாம்பிடம் சிக்கித் தவித்தது என்றால் அடுத்த பிறவியில் அவன் பிறப்பு பாம்பாகத்தான் பிறக்கும்.\nஇது போன்ற நிலைகளில் இருந்து நாம் விடுபட வேண்டும் என்பதற்குத்தான்\n1.விண்ணுலக ஆற்றலும் மண்ணுலக நிலையையும்\n2.உணர்வின் பெருக்கமும் உணர்வின் மாற்றங்களும்\n3.உணர்வுக்கொப்ப உடலின் மாற்றங்களும் உணர்வுக்கொப்ப ரூபங்களும்\n4.அதனுடைய குணங்களும் அதனுடைய நிறங்களும் எதுவாக மாறுகின்றது…\n5.அந்தப் பேருண்மைகளை எல்லாம் எமக்குத் (ஞானகுரு) தெளிவாக எடுத்து காட்டினார் நமது குருநாதர்.\nஉங்கள் வாழ்க்கையில் வந்த நிலைகளும்… உலக அரசியலின் நிலைகளும்… மதத்தின் அடிப்படையில் நமக்குள் பட்ட குணங்களும்… நாம் வளர்ந்து வந்த நிலைகளும்… அவைகளுடன் மாமகரிஷி ஈஸ்வரப்பட்டாய குருதேவர் காட்டிய அருள் வழியினை இணைத்தே…\n1.அண்டத்தில் இருக்கும் நிலைகள் பிண்டத்திற்குள் இயங்கிக் கொண்டிருக்கும் இந்த உணர்வுடன் இணைத்து\n2.அந்த உணர்வின் தன்மை கொண்டு மெய் வழி காணும் மெய் ஒளி பெறும் நிலைகளை\n2.உங்களுக்குள் உருவாக்குவதற்குத் தான் இந்த உபதேசம்.\nகுருநாதர் என்னை எப்படி உருவாக்கினாரோ அதைப் போன்று உங்களையும் ஞானியாக உருவாக்க வேண்டுமென்பதற்குத் தான் அந்த மகரிஷிகளின் உணர்வின் நிலைகளை இன்று எண்ணத்தால் உங்களிலே பெருக்கச் செய்கின்றோம்.\nஒவ்வொருவரும் இதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.\n��ாமியையே (ஞானகுரு) எண்ணிக் கொண்டிருப்பதைக் காட்டிலும் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து உடலுக்குள் விளைய வைக்க வேண்டும்\n என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nசீராக ஆத்ம சுத்தி செய்வோருக்குக் கிடைக்கும் பலன்கள்\nஆண்டவனிலிருந்து வந்த பிம்பங்கள் தான் அனைத்துமே என்று எண்ணினால்… “தான்” என்ற தனித்த அகங்காரம் வராது – ஈஸ்வரபட்டர்\nஉங்களுக்குக் கொடுத்த சக்திகளை ஒவ்வொருவரும் விரயம் ஆக்காது பயன்படுத்துங்கள்\n24 X 7 சாமிகள் உபதேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://namathu.blogspot.com/2017/06/blog-post_830.html", "date_download": "2021-05-07T01:56:14Z", "digest": "sha1:SB4JQA6QURLCVJAJKDEKKT2HNEPTVQKG", "length": 43650, "nlines": 810, "source_domain": "namathu.blogspot.com", "title": "நமது NAMATHU.blogspot.com . . . . . . . நல்வரவு Enter : சவுதியில் விற்கப்பட்ட சென்னை பெண் மீட்பு .. வீட்டு பணிப்பெண்களை செல்வதை தடுக்க வக்கற்ற அரசுகள்", "raw_content": "\nபுதன், 28 ஜூன், 2017\nசவுதியில் விற்கப்பட்ட சென்னை பெண் மீட்பு .. வீட்டு பணிப்பெண்களை செல்வதை தடுக்க வக்கற்ற அரசுகள்\ndevarajan. சென்னை: சவூதியில் வீட்டுவேலை வாங்கித் தருவதாகக் கூறி விற்கப்பட்ட சென்னைப் பெண்ணை, புகாரின் பேரில் சென்னைப் போலீசார் மீட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னையைச் சேர்ந்தவர் சந்தான காளீஸ்வரி. கணவனை இழந்து 3 குழந்தைகளுடன் சென்னையில் வசித்து வந்தார். அவரது குடும்ப வறுமையைப் பயன்படுத்தி வெளிநாட்டில் 20 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் வீட்டு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஏஜென்ட் ஒருவர் அணுகியுள்ளார். இதனடிப்படையில், திருவல்லிக்கேணியில் உள்ள அட்லான்டிக் ஏஜென்ஸி உரிமையாளர் தனபால் மூலம் சவூதி அரேபியாவுக்கு கடந்த மாதம் அப்பெண்ணை அனுப்பியுள்ளார்.\nரூ. 1 லட்சத்துக்கு விற்பனை\nசவூதி அரேபியாவில் 25 பேர் கொண்ட ஒரு வீட்டில், 24 மணி நேரமும் உணவு, உறக்கமின்றி பணியாற்றிய போதுதான், ஒரு லட்சம் ரூபாய்க்கு தாம் விற்கப்பட்டது அப்பெண்ணுக்குத் தெரிய வந்துள்ளது.\nசெல்போன், பாஸ்போர்ட்டை அந்த குடும்பத்தினர் பறித்து வைத்துக் கொண்டனர். அதனால் அங்கிருந்து சொந்த ஊர் திரும்ப முடியாமல் சந்தான காளீஸ்வரி தவித்துள்ளார்.\nஇதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய், சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனிடம் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து திருவல்லிக்கேணி போலீசார் விசாரணை மேற்கொண்���னர்.\nமேலும், அட்லான்டிக் ஏஜென்ஸி மூலம் சவூதியில் உள்ள குடும்பத்தினரிடம் திருவல்லிக்கேணி போலீசார் பேசியுள்ளனர். அப்போது அடுத்த கட்ட நடவடிக்கையைத் தவிர்க்க காளீஸ்வரியை இந்தியாவுக்கு திருப்பி அனுப்புமாறு கூறி எச்சரித்துள்ளனர்.\nபின், இந்தியத் தூதரக அதிகாரிகளின் உதவியோடு, சந்தான காளீஸ்வரி அங்கிருந்து மீட்டு சென்னை அழைத்து வரப்பட்டார். பின்னர், உறவினர்களிடம் சந்தான காளீஸ்வரி ஒப்படைக்கப்பட்டார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகுடியரசுத் தலைவர் தேர்தலில் எம்.எல்.ஏ,எம்.பிக்கள் ...\nசென்னை .திமுகவிடம் திருமதி மீரா குமார் ஆதரவு கேட்ட...\n115 வயதான தமிழக மூதாட்டி மரணம்\nப.சிதம்பரம் :ஜிஎஸ்டி நிறைவானதல்ல, மிகப்பெரிய தவறுக...\nஜி.எஸ்.டி; வரி விபர பட்டியல் ..என்னென்ன பொருட்களு...\nசவக்குழிக்குள் தள்ளுகிறது': மத்திய அரசு மீது மம்தா...\nபெங்களூர் .. ஹிந்தி வெறியர்கள் கன்னடத்திற்கு எதிரா...\nபேராசிரியர் சுப.வீரபாண்டியன் எஸ் வி சேகருக்கு கடி...\nதேவதாசி முறை ஒழித்த புரட்சி பெண் மூவலூர் இராமாமிர்...\nLynching / கும்பல் கொலை \nsavukkuonline.com: குட்கா விற்ற காசு கசக்காது... ...\nDon Ashok: மூளை வளர காயத்திரி .. அந்த பலான உறுப்பு...\nStanley Rajan : கமலஹாசன் இலுமினாட்டி ... இது இலுமி...\nஓடிஷா நியம்கிரி மலையை வேதந்தாவுக்கு விற்க மத்திய ம...\nவழிச் செலவுக்குக்கூட பணம் இல்லாத வானதி ஸ்ரீனிவாசன்...\nBBC :திரையரங்குகள் திங்கள் முதல் காட்சிகள் நிறுத்த...\nஇந்திராணி தாக்கப்பட்டது உண்மை: மருத்துவ அறிக்கையில...\nBBC :ஆறு இஸ்லாமிய நாட்டவர்கள் அமெரிக்க செல்ல தடை ....\nஹரியான ..மூன்று சட்ட மாணவர்களுக்கு தலா 20 வருடம் த...\nநீட் தேர்வு .. வெளிநாடுகளை குறி வைக்கும் பெற்றோர்கள்\nஜி எஸ் டி வரிவிதிப்பு விழாவை எதிர்கட்சிகள் புறக்கண...\nகடத்தப்பட்ட நஜீப் .. தகவல் தெரிவித்தால் 10 லட்சம் ...\nமோடி உரையை தொடர்ந்து அப்பாவி படுகொலை\nபுத்தர் சிலைகள் எல்லாம் திருமால் சிலைகள் ஆயின ,,\nநடிகை பாவான கடத்தல் வழக்கு விசாரணை 12 மணித்தியாலங்...\nஇரசாயன பால் அல்லது கலப்பட பால்: ..ஹைட்ராக்ஸைடு, அம...\nஸ்டாலின் எஸ்.வி.சேகருக்கு பதில் : நட்புக்காக, திர...\nபார்பன விமர்சனம் ... பார்ப்பன அன்பர்கள் கோபித்தாலு...\nஆஸ்திரேலியாவின் ஆதி குடிகள் அபோரிஜன்ல்ஸ் திராவிட���...\nபிக் பாஸ் : பத்தே நாளில் பிக்பாஸ் சூட்டிங் ஓவர்.. ...\nபழனியில் 500 அதிரடிப்படையினர் ... கலவரத்தை தூண்ட...\nஜுனைத் கொலை குற்றவாளிகள் 4 பேர் கைது .. அரசு ஊழியர...\nஉண்டியல் பணத்தை லஞ்சமாக கொடுத்த சிறுமி\nஇயற்கை... பெண்களை படம் பிடித்த RSS .. கேட்க வந்தவ...\nடிடி, கோபிநாத், ப்ரியங்காவின் சம்பளம் எவ்வளவு தெரி...\nபுதிய 200 ரூபாய் நோட்டுகள் விரைவில்\nசீனா ,, விமான புரோபெல்லருக்குள் காசு வீசியதால் விம...\nஅனைத்துச் சமூகப் பயன்களையும் இன்றளவும் மிகக் கூடுத...\nபேராசிரியர் சுப.வீரபாண்டியன் எஸ்.வி. சேகருக்கு பதி...\nகுறும் / பெரும் பட இயக்குனர்கள் குறும்பட விழாக்கள...\nரயில் டிக்கெட்டுக்களில் தமிழ் உட்பட மாநில மொழிகள் ...\nBig Boss .. விஸ்வரூவம் -2 - சபாஷ் நாயுடு.. 1500 கோ...\nஜல்லிகட்டு ஜூலியும் - பிக் பாஸ் நிகழ்ச்சியும் .. ...\nஜோதிமணி : விவாதங்களில் பாஜக தோலுரிக்கப்படுக்கிறதே ...\nசீமான் ஆரியர்கள் வடவர்கள் விரும்புவதை நிறைவேற்ற து...\nமணப்பாறை மாடும் விவசாயியும் .. அடாவடி செய்த பூஜ்ய...\nதிருச்சி. - உயிருக்கு பயந்து ஓடி ஒளியும் பிஷப்; ...\nகுஜராத் பாணி ... மேற்குவங்கத்தில் பாஜகவின் மதக் ...\nShahjahanr: மாற்று கருத்துக்களை கண்ணியத்தோடு சொல்ல...\nதிறன் நகரங்கள் பங்குச் சந்தையில் தனியார் கொண்டாட்ட...\nஃபேஸ்புக் பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய நான்கு விடயங...\nதலித்தியம் என்பது இவர்களுக்கு தனித்துவத்தை அளிக்கி...\nNews 7 டிவி ... பார்ப்பான் எந்த காலத்திலடா உண்மை ப...\nசாதி அடிப்படையில் விவாதம் ஏன்\nசவுதியில் விற்கப்பட்ட சென்னை பெண் மீட்பு .. வீட்ட...\nஉதயகுமாரன் : என்னை அழிக்கப்பார்க்கிறார்கள்\nசீன புல்லட் ரயில் : மணிக்கு 400 கி.மீ வேகம்\nகுட்கா லஞ்சம் .. அமைச்சர் அதிகாரிகள் சிக்கினர் .....\nதமிழ் செம்மொழியாவதை எதிர்த்த ராம்நாத்துக்கு அதி...\nசெய்யது பீடி குழுமம்... 40 இண்டங்களில் ஐ.டி., ரெய்டு\nவீரமணி அதிமுகவுக்கு கோரிக்கை : நீட் தேர்வில் விலக்...\nதமிழ்நாடு யானை போன்றது.ஆனால் அதன் பலம் அதற்கு தெரி...\nநீட் தேர்வு ... கல்விகொலை .. நீதி கேட்டது மதுரைப...\nகுட்கா ஊழல் Flaschback ... போலீஸ் கமிஷனர் ஜோர்ஜ் ச...\nஸ்டாலின் : போதைப் பொருள் வியாபாரிகளிடம் லஞ்சம் வாங...\nஏர் ஏசியா விமானம் பயங்கரமாக குலுங்கிய விடியோ காட்சி\nBBC : கூகுள் நிறுவனத்துக்கு 2.42 பில்லியன் யூரோ அப...\nரயிலில் ஜுனைத் கொலையாளி போதையில் இல்லை.. துக்கத்தி...\nதெலுங்கில் 4 கோடி கேட்கும் நயன்தாரா\n2012 முதல் எத்தனை மாணவர்கள் ஆங்கில வழியில் படிக்கி...\nபிக் பாஸ் .. செயற்கையை செயற்கையாகவே செய்து செயற்கை...\nகழனியூரன் மறைந்தார் .. கதைசொல்லி இதழின் ஆசிரியர் ...\nவைகை செல்வன் - ராஜெந்திரபாலாஜி மோதல் பாலுக்காக அல்...\nகொல்வான் பார்ப்பான்.. தெய்வகுற்றம் போக்க குழந்த...\n சசிகலா உறவுகளின் அராஜக - சொத்து ...\nநெஸ்ட்லே, ரிலையன்ஸ் பால் பவுடரில் கலப்படம்.. ஆதரங...\nஎடப்பாடி - தினகரன் உச்சகட்ட மோதல் .. ஜூலை வரை தா...\nBig Boss கமல் .. சசிகலாவின் கூவத்தூர் ரியாலிடி ஷோவ...\nஅமைச்சர் நிலோபர் கபீலால் அச்சுறுத்தலிற்கு உள்ளாகும...\nபேராசிரியர் சுப.வீரபாண்டியன் நடிகர் எஸ்.வி.சேகருக...\nகுட்கா விற்பனையில் கோடிகள் குவிக்கும் அரசியல்வாதிக...\nநீட் ..மூன்று சதவீதம் மக்களுக்கு ஐமபது சதம் இட\nஇரத்தத்தில் குளுகோஸ் கலந்து ஹைதரபாத் இரத்த வங்கியி...\nஎடப்பாடி பழனிசாமி : தினகரன் வீட்டுக்கு போகமாட்டேன்...\nகைலாச யாத்திரீகர்களை அனுமதிக்க சீனா மறுப்பு. .. மா...\nகள்ள நோட்டடித்த கேரள பாஜக தலைவர் கைது \nடொனால்ட் ட்ரம்ப் நரேந்திர மோடி சந்திப்பு ....\nசு.சாமி அவன் (ரஜினி ) அரசியலுக்கு வரமாட்டான். அவன...\nகனிமொழி :கீழடி தொன்மையான நாகரிகம் என நிரூபிக்கப்பட...\nஇந்துத்வா இயக்கங்களும் வஹாபிய இயக்கங்களும் ஒன்று ....\nஎந்த கோவில் கருவறையிலும் 1500 வருடங்களுக்கு முன்பு...\nAir Ambulance 1 மணித்தியாலத்துக்கு ஒரு லட்சம் ரூப...\nதினகரன் :கூவத்தூரில் 2 நாட்கள் சசிகலா இருந்திருக்க...\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி : 500 ரூபாவுக்காக பேசும்...\nஅதிமுக வைகைசெல்வன் : சினிமா போஸ்டருக்கு பசைவாளி த...\nமுல்லைப்பெரியாறு நீர் 200 கன அடியிலிருந்து, 300 க...\nமீராகுமார் வேட்பு மனுவை ஸ்டாலின் முன்மொழிந்தார்\nஅறம் - சாவித்திரி கண்ணன்\nநாஞ்சில் சம்பத் :\"கூவத்தூர்\" கூத்தும்.. டீக்கடையும...\nஇன்று 147 பேர் உயிரிழந்துள்ளனர்.ஒரே நாளில் அதிர்ச்...\nஆக்சிஜன் பற்றாக்குறை: டெல்லி பாட்ரா மருத்துவனையில்...\nகுஜராத் கொரோனா மருத்துவமனையில் தீ விபத்து: 18 பேர்...\nகே வி ஆனந்த் என்றொரு கேமராக்காதலன்\nதமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார்\nகங்கைகொண்ட சோழபுரத்தில் நடக்கும் அகழாய்வில் அரண்மன...\nஈவிஎம்களில் என்ன செய்ய முடியும்\nமம்மூட்டியின் ONE கடைக்கால் சந்திரன் பினராயி விஜ...\nகொரோனா இந்தியா-நிமிடத்திற்கு 2 மரணங்கள், வினாடிக்...\nகொரோன�� தடுப்பூசிக்கு கே.வி.ஆனந்த் மற்றொரு பலியா..\nகொரோனா ஆக்சிஜன்: சமூக ஊடக காணொளிகளை தடுக்கக் கூடாத...\nவெற்றியைக் கொண்டாடுவதைவிட உயிரைப் பாதுகாப்பதுதான்...\nநாளை மறுநாள் ஓட்டு எண்ணிக்கை- தமிழகத்தில் 1 லட்சம்...\nஇயக்குனர் ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த் மாரடைப்பால் க...\nஜெர்மனியில் மருத்துவமனையில் நடந்த கொலைவெறி தாக்குத...\nட்ரோன் மூலம் விவசாய பயிர்களுக்கு மருந்தடிக்கும் சோ...\nமத்திய அரசு இதயமற்றதாக உள்ளது - நிர்மலா சீதாராமனின...\nஅறிஞர் ஜெயரஞ்சனுக்கு பசுமை விகடன் சவால்\nகோவிட்19 2.0 இல் இருந்து மீண்ட தொழிலதிபரின் அனுபவங...\nமே.வங்கம் மம்தா கட்சி 158, பாஜக 115, காங். அணி 19...\nகேரளாவில் இடசாரிகள் பிரமாண்ட வெற்றி\nதிமுக 234 தொகுதிகளிலும் வெல்லும்.. வாக்கு வித்தியா...\nஅதிமுக முன்னாள் அமைச்சர் அரங்கநாயகம் உடல்நல குறைவா...\nபாஜக தமிழ்நாட்டில் 20 தொகுதிகளிலும் வாஷ் அவுட் ஆகு...\nபீகாரில் 7 ஆண்டு கால மனைவியை காதலனுக்கு மணமுடித்த...\nகடப்பாரையால் தாயை தாக்கி கொலை செய்த மகன் .. கரூரி...\nபரமக்குடி கொரோனா சிகிச்சைக்கு வந்த அரசு டாக்டர்களை...\nமகாராஷ்டிராவில் ஒரே நாளில் 985 பேரை காவு கொண்டது ...\nஸ்டெர்லைட் ஆக்சிஜன் உற்பத்தியை தூத்துக்குடி ஆட்சிய...\nயாழ்ப்பாணம் .. எமில் சௌந்தரநாயகம் .. உலகை கலக்கிய ...\nபெங்களூரில் 3 ஆயிரம் கொரோனா நோயாளர்களை காணவில்லை.\nபரமகுடி மருத்துவர்களை இரவில் கைது செய்து துன்புறுத...\nஅரசு ஒரு மாதம் லாக்டவுன் அறிவித்தால் என்ன செய்யலாம்\nதடுப்பூசியில் 3,28,000 கோடி கொள்ளை\nதமிழகத்தில் மருந்து, ஆக்சிஜன் கையிருப்பை கண்காணிக்...\nடெல்லியில் உடல்களை எரிக்க இடமில்லை; திறந்த வெளிகளி...\nகர்நாடகா: ஆக்சிஜன் கிடைக்காமல் 8 கொரோனா நோயாளிகள் ...\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஜூலை 31 வரை ஆக்சிஜ...\nஅசாமில் பயங்கர நிலநடுக்கம் 6.4 ரிச்டர் அளவில் . ...\nஇலங்கையில் முஸ்லிம் பெண்கள் பர்தா அணிய தடை- அமைச்ச...\nதிரிபுராவில் திருமண வீட்டில் புகுந்த நீதிபதி .. அ...\nதிமுகவின் வெவ்வேறு தளங்களில் அமைச்சரவை பற்றிய விவா...\nபிரெஞ்சு தமிழறிஞர் பிரான்சுவா குரோ.. பிரான்ஸ் போலி...\nஆக்சிஜன் தயாரிப்பை ஆதரிக்கவும் வேண்டும் கண்காணிக்க...\nதி.மு.க அரசு அமைந்ததும் ஸ்டெர்லைட் ஆலை முழுமையாகச்...\nஇந்திபேசா மாநில முதல்வர்களுக்கு வைகோ கடிதம்\nகாப்பர் பிளான்ட்டுக்குள் நுழையக் கூடாது: ஸ்டெர்லைட...\nஸ்டெர்லைட் அடாவடி - மார்வாடிகள் கையில் தமிழ்நாடு\nFrançois Gros பிரான்ஸ் நாட்டுத்தமிழறிஞர் பிரான்சுவ...\nஇந்தோனீசியாவில் காணாமல்போன நீர்மூழ்கிக் கப்பல்; 53...\nநாகரிகத்தைக் குலைக்கும் நாம் தமிழர் கட்சி\nஉத்தர பிரதேசதில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு இல்லையாம்\nஸ்டெர்லைட்: திமுகவின் அணுகுமுறையில் மாற்றமா\n\"தேன்\" - சமூக போராளிகளும் பார்க்க மறந்து போன குரங்...\nதமிழகத்திலும் ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடு...\nகோலார் வயல் திருமதி செல்வி தாஸ் காலமானார் .. முன்...\nதமிழகத்தில் ஓராண்டுக்கு ஜனாதிபதி ஆட்சி \nதிமுக ஆட்சி அமைந்த பிறகு, எந்தச் சூழலிலும் நச்சு ஆ...\nமே 1 மற்றும் 2 தேதிகளில் முழு ஊரடங்கை அறிவிக்க தம...\nஸ்டெர்லைட் ஆலையில் 4 மாதத்துக்கு மட்டும் ஆக்சிஜன் ...\nசீமானால் கைவிடப்பட்ட நடிகை விஜயலட்சுமி வீதிக்கு வந...\nதமிழ்நாட்டுக்கு ஆக்ஸிஜன் தேவை; பிற மாநிலங்களுக்கு ...\nநடிகர் அஜித்தின் ஆணவத்தால் வேலையும் இழந்து நிர்கதி...\nசனாதனத்திற்கு எதிரான களத்தில் திமுகவும் ஸ்டாலினும்...\nதமிழக மருத்துவ கட்டமைப்புக்கள் மீது நம்பிக்கை வைத்...\nஇந்தியாவிற்கு கைகொடுக்க முன்வரும் உலக நாடுகள்\nதமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு: சாலைகள் வெறிச்சோடி...\nபிரான்ஸ் போலீஸ் நிலையத்துக்குள் பெண் அதிகாரி கழுத்...\nஇலங்கை முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கைது ஏன்\nசுப்புலட்சுமி ஜெகதீசன் தமிழ்நாட்டின் முதல் பெண் சப...\nஎந்த அளவுக்கு அழிவை ஏற்படுத்த முடியும் என்பதை, இந்...\nமாநிலங்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசம்: மத்திய அரசு\nகொரோனாவால் முழு இந்தியாவே திணறும் போது தமிழகம் மட்...\nநாம் தமிழர் தடா சந்திரசேகர், பழனி உள்ளிட்ட ஆபாச பே...\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/horticulture/indian-farmer-who-cultivated-the-worlds-most-expensive-vegetable-rs-85-000-per-kg/", "date_download": "2021-05-07T01:42:35Z", "digest": "sha1:DCHQ3AUZJ2UCS3N3PXKR4BXEFHPRDOD4", "length": 16194, "nlines": 127, "source_domain": "tamil.krishijagran.com", "title": "உலகின் விலை உயர்ந்த காய்கறியை விவசாயம் செய்த இந்திய விவசாயி! ஒரு கிலோ ரூ.85,000!", "raw_content": "செய்திகள் வாழ்வும் நலமும் தோட்டக்கலை கால்நடை வெற்றிக் கதைகள் விவசாய தகவல்கள் FTB அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா Directory\n#FTB விவசாய தகவல்கள் அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா\nஎங்கள் அச்சு மற்றும் டிஜிட்டல் பத்திரிகைகளுக்கு குழுசேரவும்\nசமூக ஊடகங்களில் எங்களுடன் இணைக்கவும்:\nஉலகின் விலை உயர்ந்த காய்கறியை விவசாயம் செய்த இந்திய விவசாயி\nகுஜராத் மாநிலத்தை சேர்ந்த இந்திய விவசாயி உலகின் விலையுயர்ந்த காய்கறியை அறுவடை செய்து சாதித்துள்ளார். Hop Shoots என்ற அறியப்படும் இந்த அரியவகை காய்கறியின் விலை, ஒரு கிலோ ரூ.85,000 முதல் ஒரு லட்சம் என அறியப்படுகிறது.\nஇந்திய விவசாயிகளுக்கு விவசாயம் என்பது எப்போதுமே மிகவும் அபாயகரமான ஒன்றாகவே உள்ளது. புதிய பயிர் வகைகள் நவீனமயமாக்கல் முறைகள் காரணமாக விவசாயிகளும், விவசாய முறைகளை மாற்ற வேண்டிய நிலைக்கு உள்ளாகுகின்றனர். விவசாயிகளும் உற்பத்தி திறனை அதிகரிக்க இந்த முறைகளை பயன்படுத்துகின்றனர். இதனால் அவர்கள் அதிகமாக வருமானம் (Income) ஈட்ட முடிகிறது. பீகாரை சேர்ந்த ஒரு விவசாயி இந்த விஷயத்தில் விவரமாக சில விஷயங்களை செய்துள்ளார். இப்போது அவர் தனது தோட்டத்தில் மிக முக்கியமான காய்கறிகளை வளர்த்து வருகிறார்.\nபீகார் அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள கராம்டிஹ் கிராமத்தை சேர்ந்தவர் அம்ரேஷ் சிங் (Amresh Singh). இவருக்கு 38 வயதாகிறது. இவர் மாபெரும் முயற்சிகளை மேற்க்கொண்டு 2.5 லட்சம் ரூபாய் செலவில் ஹாப் ஹூட்ஸ் என்னும் தாவரத்தை வளர்த்து வருகிறார். சர்வதேச காய்கறி சந்தையில் மிகவும் விலை உயர்ந்த காய்கறிகளில் ஹாப் ஹூட்ஸ் முக்கியமான காய்கறியாகும். இது சர்வதேச காய்கறி சந்தையில் (International Vegetable market) 1 கிலோ சுமார் 85,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அம்ரேஷ் தனது நிலம் முழுவதும் இந்த காய்கறியை வளர்த்து வருகிறார். மேலும் உற்பத்தி திறனை அதிகரிக்கவும் பயிரில் வருமானத்தை அதிகரிக்கவும் இராசயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் ஆகியவற்றை பயன்படுத்தாமலே இவற்றை அவர் வளர்க்கிறார்.\nதனது நிலத்தில் சோதனை செய்து காய்கறிகளை வளர்த்து வரும் அம்ரேஷ் இதுப்பற்றி கூறும்போது “காய்கறி சாகுப்படியில் (Vegetable Cultivation) குறைந்தப்பட்சம் 60 சதவீதம் சாகுபடி நடந்துள்ளது” என கூறியுள்ளார்.\nவேளாண் விஞ்ஞானியான டாக்டர் லால் மற்றும் அம்ரேஷ் ஆகியோரின் வழிக்காட்டுதலின் கீழ் வாரணாசியில் இந்திய காய்கறி ஆராய்ச்சி நிறுவனம் ஹூமுலஸ் லுபுலஸ் என அழைக்கப்படும் ஹாப் ஹூட்ஸ்களை பயிரிட்டு வளர்த்து வருகின்றனர். இதை அறிந்த அம்ரேஷ் அந்த தாவரத்தின் கன்றுகளை வளர்க்க கொண்டு வந்துள்ளார். இந்த தாவரத்தின் பூக்கள் பீர் தயாரிப்பில் முக்கிய பொருளாக உள்ளது. கிளைகள் மற்றும் தாவரத்தின் மற்ற பகுதிகள் உணவு மற்றும் மருந்துக்காக பயன்படுத்தப்படுகின்றன.\nஇந்த அம்ரேஷின் விவசாய கதை மிகவும் பிரபலமடைந்தது. சமூக ஊடகங்களில் அவரது கதையை பகிர்ந்த பலரில் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரியான சுப்ரியா சாஹூவும் ஒருவர் ஆவார். அவர் விவசாயியின் கண்டுப்பிடிப்பிற்காக அவரை மிகவும் பாராட்டினார்.\nஹாப் ஹூட்ஸ்கள் விவசாயியின் கடின உழைப்பால் ஒரு கிலோ ஹாப் ஹூட்ஸானது 1000 பவுண்டுகள் வரை விற்கப்படுகிறது. மேலும் இந்த காய்கறி காசநோய் மற்றும் அதன் அமிலங்களை கொல்லவும் புற்றுநோய் செல்களை (Cancer cells) கொல்லவும், லுகேமியா செல்களை தடுக்கவும் உதவக்கூடிய ஆண்டிபாடிகளை உருவாக்க உதவுகின்றன என சில அறிக்கைகள் கூறுகின்றன.\nஇந்த பயிர் ஒரு காலத்தில் இந்தியாவில் உள்ள இமாச்சல பிரதேசத்தில் பயிரிடப்பட்டது. ஆனால் விளைப்பொருட்களை சரியாக சந்தைப்படுத்த முடியாததால் அதை விற்பதில் சிரமம் இருந்தது. இதனால் இந்த பயிர் கைவிடப்பட்டது என்று அம்ரேஷ் கூறினார்.\n விவசாயிகள் வாழ்வாதாரத்தை காக்க கோரைப்பாயை பயன்படுத்துவோம்\nபயிர்களின் தேவையை, பயிர்களே தெரிவிக்கும் தொழில்நுட்பம்\nஅன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.\nஉங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....\nபங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)\nமா பிஞ்சுகள் உதிராமல் பாதுகாக்க வேண்டுமா\nஇறவை பாசனத்தில் கம்பு சாகுபடி அதிகரிப்பு\nகொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, முழு ஊரடங்கை அமல்படுத்த உச்ச நீதிமன்றம் பரிந்துரை\nகொப்பரை உற்பத்தி செய்ய நவீன இயந்திரம்: விவசாயிகள் மகிழ்ச்சி\n செய்ய வேண்டியவையும், செய்யக் கூடாதவையும்\nவிளைநிலங்களில் வீணாகும் தர்பூசணி பழங்கள்\nபூச்சிகளைப் புரிந்து கொள்(ல்)வோம்- காணொளி மூலம் பயிற்சி\nரூ.4000 கொரோ���ா நிவாரண நிதிவழங்கும் திட்டம் - நாளை ஸ்டாலின் முதல் கையெழுத்து\nவாடிக்கையாளர்களுக்கு புதியவகை டிசைனர் சிலிண்டரை அறிமுகம் செய்த IOCL\nஒரே நிமிடத்தில் cowin.gov.in தளத்தில் கொரோனா தடுப்பூசி பதிவு செய்வது எப்படி\nபருத்தியைத் தாக்கும் மாவுப்பூச்சிகளை எப்படி கட்டுப்படுத்தலாம்\nகொரோனாவைத் தடுக்கும் முயற்சியில், புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்\nஒன்றல்ல, இரண்டல்ல, ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள்\nதொற்றுநோய்களைத் தடுக்கும் ஊட்டச்சத்து அணுகுண்டு எது தெரியுமா\nமாடித்தோட்டத்திற்கு ஏற்ற மண் கலவை வகைகள் எவை\nவிவசாயிகள் நலன் கருதி சாகுபடி தொடர்பான சந்தேகம் ஏற்பட்டால் வேளாண் விஞ்ஞானிகளை அணுகலாம்: தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akattiyan.lk/2021/04/blog-post_490.html", "date_download": "2021-05-07T01:28:33Z", "digest": "sha1:5D7I4T737VFTQJRKW2DNK7UPYDEUXEDH", "length": 6625, "nlines": 69, "source_domain": "www.akattiyan.lk", "title": "வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள செய்தி - அகத்தியன் | Online", "raw_content": "\nHome இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள செய்தி\nவளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள செய்தி\n5 மாகாணங்களில் உள்ள மக்கள் இடி, மின்னல் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nசப்ரகமுவ, மத்திய, மேல், வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் அநுராதபுரம் மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.\nமின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.\nசப்ரகமுவ, மத்திய, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றர் அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.\nவளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள செய்தி Reviewed by Chief Editor on 4/13/2021 06:49:00 pm Rating: 5\nபாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் மேலதிக வகுப்புகளுக்கு மறு அறிவித்தல் வரை விடுமுறை\nபாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் மேலதிக வகுப்புகளுக்கு மறு அறிவித்தல் வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், நோன்பு பெருநாள், வெசாக் ...\nகொரோனா பரவல் காரணமாக நாட்டின் பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள விடுமுறையானது மேலும் ஒரு வார காலத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ...\nமோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nவாகன போக்குவரத்து திணைக்களத்தின் நாரஹென்பிட்டி மற்றும் வேரஹெர அலுவலகங்கள் ஒரு வாரத்திற்கு மூடப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம த...\nDReAM என அறிமுகப்படுத்தப்பட்டுள்ள முற்பாதுகாப்பு விதிமுறைகளுக்கமைய மதுபான சாலைகளை திறந்து வைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. D – சமூக இடை...\nமுழு அதிகாரம் : அகத்தியன் ஊடக சேவை 2020\nஆசிரியர் பீட தெடர்புகளுக்கு 0779516119\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vativamaippu.com/?D=98029&P=3", "date_download": "2021-05-07T01:25:59Z", "digest": "sha1:2G3JPDSOR3X2LKO4E5FCBYLCRG6XYTFX", "length": 8889, "nlines": 67, "source_domain": "www.vativamaippu.com", "title": " Medieval Rethink இடைக்கால மறுபரிசீலனை கலாச்சார மையம் - வடிவமைப்பு இதழ்", "raw_content": "\nஇடைக்கால மறுபரிசீலனை கலாச்சார மையம்\nசனி 24 ஏப்ரல் 2021\nஇடைக்கால மறுபரிசீலனை கலாச்சார மையம் குவாங்டாங் மாகாணத்தில் வெளியிடப்படாத ஒரு சிறிய கிராமத்திற்கு ஒரு கலாச்சார மையத்தை கட்ட ஒரு தனியார் கமிஷனுக்கு இடைக்கால ரீதிங்க் பதிலளித்தது, இது பாடல் வம்சத்திற்கு 900 ஆண்டுகளுக்கு முற்பட்டது. நான்கு மாடி, 7000 சதுர மீட்டர் வளர்ச்சி கிராமத்தின் தோற்றத்தின் அடையாளமான டிங் குய் ஸ்டோன் எனப்படும் ஒரு பழங்கால பாறை உருவாக்கத்தை மையமாகக் கொண்டுள்ளது. திட்டத்தின் வடிவமைப்பு கருத்து பண்டைய கிராமத்தின் வரலாறு மற்றும் கலாச்சாரத்தை காண்பிப்பதை அடிப்படையாகக் கொண்டது, அதே நேரத்தில் பழைய மற்றும் புதியவற்றை இணைக்கிறது. கலாச்சார மையம் ஒரு பண்டைய கிராமத்தின் மறு விளக்கமாகவும் சமகால கட்டிடக்கலைக்கு மாற்றமாகவும் நிற்கிறது.\nதிட்டத்தின் பெயர் : Medieval Rethink, வடிவமைப்பாளர்களின் பெயர் : QUAD studio, வாடிக்கையாளரின் பெயர் : QUAD studio.\nஇந்த அற்புதமான வடிவமைப்பு ஃபேஷன், ஆடை மற்றும் ஆடை வடிவமைப்பு போட்டியில் வெள்ளி வடிவமைப்பு விருதை வென்றது.\tபல புதிய, புதுமையான, அசல் மற்றும் ஆக்கபூர்வமான பேஷன், ஆடை மற்றும் ஆடை வடிவமைப்பு படைப்புகளை���் கண்டறிய வெள்ளி விருது பெற்ற வடிவமைப்பாளர்களின் வடிவமைப்பு இலாகாவை நீங்கள் நிச்சயமாகப் பார்க்க வேண்டும்.\nஇந்த வடிவமைப்பைப் பற்றி மேலும் அறிக\nபழம்பெரும் வடிவமைப்பாளர்கள் மற்றும் அவர்களின் விருது பெற்ற படைப்புகள்.\nவியாழன் 22 ஏப்ரல் 2021\nடிசைன் லெஜண்ட்ஸ் மிகவும் பிரபலமான வடிவமைப்பாளர்கள், அவர்கள் எங்கள் உலகத்தை அவர்களின் நல்ல வடிவமைப்புகளுடன் சிறந்த இடமாக மாற்றுகிறார்கள். புகழ்பெற்ற வடிவமைப்பாளர்கள் மற்றும் அவர்களின் புதுமையான தயாரிப்பு வடிவமைப்புகள், அசல் கலைப் படைப்புகள், ஆக்கபூர்வமான கட்டிடக்கலை, சிறந்த பேஷன் டிசைன்கள் மற்றும் வடிவமைப்பு உத்திகளைக் கண்டறியவும். உலகெங்கிலும் விருது பெற்ற வடிவமைப்பாளர்கள், கலைஞர்கள், கட்டட வடிவமைப்பாளர்கள், கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் பிராண்டுகளின் அசல் வடிவமைப்பு படைப்புகளை அனுபவித்து ஆராயுங்கள். படைப்பு வடிவமைப்புகளால் ஈர்க்கப்படுங்கள்.\nஇடைக்கால மறுபரிசீலனை கலாச்சார மையம்\nகட்டிடக்கலை, கட்டிடம் மற்றும் கட்டமைப்பு வடிவமைப்பு\nஇந்த வடிவமைப்பைப் பற்றி மேலும் அறிக\nThe Float ரியல் எஸ்டேட் நிறுவனம் வியாழன் 6 மே\nOr2 ஃபோட்டோக்ரோமிக் விதான அமைப்பு புதன் 5 மே\nEye of Ra' பொது நகர்ப்புற கலை தளபாடங்கள் செவ்வாய் 4 மே\nநீங்கள் ஒரு வடிவமைப்பாளர், கலைஞர், கட்டிடக் கலைஞர், புதுமைப்பித்தன் அல்லது பிராண்ட் மேலாளரா பகிர்வதற்கு உங்களிடம் ஏதேனும் நல்ல வடிவமைப்புகள் உள்ளதா பகிர்வதற்கு உங்களிடம் ஏதேனும் நல்ல வடிவமைப்புகள் உள்ளதா உலகளவில் வடிவமைப்பாளர்கள், கலைஞர்கள், கட்டட வடிவமைப்பாளர்கள், கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் பிராண்டுகளிலிருந்து அசல் மற்றும் ஆக்கபூர்வமான வடிவமைப்புகளை வெளியிடுவதில் நாங்கள் மிகவும் ஆர்வமாக உள்ளோம். உங்கள் வடிவமைப்புகளை இன்று வெளியிடவும்.\nஅன்றைய வடிவமைப்பு நேர்காணல் வியாழன் 6 மே\nஅன்றைய வடிவமைப்பு புராணக்கதை புதன் 5 மே\nஅன்றைய வடிவமைப்பு செவ்வாய் 4 மே\nஅன்றைய வடிவமைப்பாளர் திங்கள் 3 மே\nஅன்றைய வடிவமைப்பு குழு ஞாயிறு 2 மே\nஇடைக்கால மறுபரிசீலனை கலாச்சார மையம் QUAD studio Medieval Rethink\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thoothukudibazaar.com/job/tncwwb-recordclerk-driver-post-job/", "date_download": "2021-05-07T00:14:01Z", "digest": "sha1:ZBPR5DHRXLDWODRYYG2KF4WRMDRPFDKP", "length": 6801, "nlines": 86, "source_domain": "thoothukudibazaar.com", "title": "தமிழக அரசின் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவுறு எழுத்தர் ஒட்டுநர் வேலைவாய்ப்பு", "raw_content": "\nதமிழக அரசின் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவுறு எழுத்தர் ஓட்டுநர் வேலைவாய்ப்பு\nதமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டத்தை சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் விண்ணப்பிக்கலாம். செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் இந்த வேலைக்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.இதில் இரண்டு வகையான பணிகள் மற்றும் காலிப்பணி இடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.மேலும் இந்த வேலைவாய்ப்பு பற்றிய முழுமையான தகவல்களை கீழே காணலாம்.\nதேர்வு செய்யும் முறை:-எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல்\n1.பதிவுறு எழுத்தர் – 37\nஇந்த வேலைக்கு 18 வயது முதல் 35 வயது வரை உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.மேலும் தகவலுக்கு கிழே உள்ள அறிவிப்பை பாருங்கள்.\nஆதி திராவிடர், ஆதிதிராவிடர் (அருந்ததியர்), பட்டியல் பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்/ சீர் மரபினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லீம்) ஆகிய வகைகளைச் சார்ந்தோர் மற்றும் அனைத்து வகுப்புகளையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகள் ஆகியோர் குறைந்தபட்ச பொதுக்கல்வித்தகுதியைக் காட்டிலும் மேற்பட்ட கல்வித்தகுதியைப் பெற்றிருப்பின் அதாவது பத்தாம் வகுப்பு/ மேல்நிலைப்பள்ளி/ பட்டயப்படிப்பு/ பட்டப்படிப்பு ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு\nஉச்ச வயது வரம்பு இல்லை.\nஇந்த வேலைக்கு மாத சம்பளம் ரூ.19,000/- முதல் 62,000/- வரை வழங்கப்படும்.\nஇந்த வேலைக்கு எட்டாம் வகுப்பு முதல் டிகிரி அல்லது அதற்கு மேல் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகுதி எதுவும் இல்லை.\nஇந்த வேலைக்கு தகுதியான நபர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.\n1.பொதுப்பிரிவினர் ரூ.500/- செலுத்த வேண்டும்.\n2.மற்ற வகுப்பினர் ரூ.250/- செலுத்த வேண்டும்.\n40 முத்து கிருஷ்ணாபுரம் மெயின்\nPREVIOUS POST Previous post: ELCOT துறையில் உதவியாளர் ஓட்டுநர் வேலைவாய்ப்பு\nNEXT POST Next post: தமிழக அரசின் காவல் துறையில் வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2021/01/blog-post_673.html", "date_download": "2021-05-07T01:32:45Z", "digest": "sha1:EVAQG7MBCWEDXMVTCAOPOVATTESUN3JY", "length": 10558, "nlines": 91, "source_domain": "www.kurunews.com", "title": "அமெரிக்க அதிபராக பதவியேற்றவுடன் முதல் மகிழ்ச்சிக்குரிய செய்தியை வெளிப்படுத்திய பைடன்! புலம்பெயர்ந்தவர்களுக்கு நல்ல செய்தி - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » வெளிநாட்டுச் செய்திகள் » அமெரிக்க அதிபராக பதவியேற்றவுடன் முதல் மகிழ்ச்சிக்குரிய செய்தியை வெளிப்படுத்திய பைடன்\nஅமெரிக்க அதிபராக பதவியேற்றவுடன் முதல் மகிழ்ச்சிக்குரிய செய்தியை வெளிப்படுத்திய பைடன்\nஅமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள ஜோ பைடன் ஆவணமற்ற புலம்பெயர்ந்தோர் எளிதாக குடியுரிமை பெறுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளார்.\nஅமெரிக்காவின் 46வது அதிபராக பதவியேற்றுள்ள ஜோ பைடன், வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் தனது பணிகளை தொடங்கினார். அதிபராக பதவியேற்ற சில மணி நேரங்களில், பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணையும் என அதிபர் ஜோ பைடன் அறிவித்தார்.\nஅதுதொடர்பான உத்தரவிலும் அவர் கையெழுத்திட்டுள்ளார். இந்நிலையில், அமெரிக்காவில் வாழும் சுமார் 11 மில்லியன் ஆவணமற்ற புலம்பெயர்ந்தோர் எளிதாக குடியுரிமை பெறுவதற்கான நடவடிக்கையை ஜோ பைடன் மேற்கொள்வார் என தகவல் வெளியாகி உள்ளது.\nகுடியுரிமைக்கான பாதையை எளிதாக்கும் சட்ட மனுவை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளார். சட்டவிரோதமாக தங்கியிருக்கும் புலம்பெயர்ந்தோரை நாடு கடத்தும் திட்டம் 100 நாட்கள் நிறுத்தி வைக்கப்படும் என பைடன் வாக்குறுதி அளித்துள்ளார்.\nஅதே நேரத்தில் முன்மொழியப்படும் மனுவானது, அமெரிக்காவை புலம்பெயர்ந்தோர் தேசமாக அங்கீகரிக்கும். அத்துடன், புலம்பெயர்ந்தோரை குறிப்பிடும் ‘அன்னியர்‘ என்ற வார்த்தை, ‘குடிமகன் அல்லாதோர்’ என்று மாற்றப்படும்.\nபுலம்பெயர்ந்தோரின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வரும் ஆர்வலர்கள், பைடனின் இந்த திட்டத்தை வரவேற்றுள்ளனர் என்று அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.\n\"Kurunews.com ஐ பார்வையிடும் அன்பர்களே Facebook பக்கத்தை Like பண்ணிட்டு போங்கள்\".\nமட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை; பல்வேறு செயற்பாடுகளுக்கு தடை- மாவட்ட அரசாங்க அதிபர்...\nமட்டக்ககளப்பில் தனியார் வகுப்பு நடாத்த தடை விதித்துள்ளதுடன் கொரோனா அதிகரிப்பால் மட்டு போதனா வைத்தியசாலையில் ஒட்சிசன் தேவை அதிகரித்துள்ளது....\nசகல பாடசாலைகளுக்கும் மே மாதம் 07ம் திகதி ��ரை விடுமுறை\nநாடளாவிய ரீதியில் அனைத்துப் பாடசாலைகளையும் தொடர்ந்தும் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் 7 ஆம் திகதி வரை பாடசாலை...\n10 , 11 தரங்களில் பாடவிதான மாற்றம் அத்துடன் க.பொ.த சா/த, உ/த பரீட்சை நடைபெறும் காலங்களும் மாற்றம்\nதரம் 10 ,11 க்கான பாடத்திட்டங்களை ஒரு வருடம் & 9 மாத காலத்திற்கு மறுசீரமைக்கவும், ஆகஸ்ட் மாதத்தில் க.பொ.த. (சா /த) பரீட்சையை நடாத்தவும்...\nபுனித மிக்கேல் கல்லூரி மாணவன் பௌதீக விஞ்ஞான பிரிவில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலிடம்.\nவெளியான 2020 ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பௌதீக விஞ்ஞான பிரிவில் குகராஜா சஜீவ் 3 A சித்திகளுடன் ...\nமட்டக்களப்பு மாவட்டத்தில் விஞ்ஞான பிரிவில் முதலிடத்தை பெற்ற மட்/பட்டிருப்பு தேசிய பாடசாலை மாணவன்\nவெளியான 2020 ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் விஞ்ஞான பிரிவில் மகிழூர் கண்ணகிபுரத்தை சேர்ந்த தம்பி...\nமட்டக்களப்பு- கல்லடியில் 09 பேருக்கு கொரோனா தொற்று உறுதி...\nமட்டக்களப்பு மாவட்ட மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுற்குற்பட்ட கல்லடி பிரதேசத்தில் இன்றைய தினம் 09 பேருக்கு கொரோன தொற்று உறுதிசெய்யப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/04/18/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1/", "date_download": "2021-05-06T23:59:43Z", "digest": "sha1:FPE6IEDG3RUGDAFZH4AWWX5TX5SZNMOJ", "length": 5582, "nlines": 106, "source_domain": "makkalosai.com.my", "title": "நடமாடத் தடையை மீறினர் இறுதிச் சடங்கில் 26 பேர் கைது | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome மலேசியா நடமாடத் தடையை மீறினர் இறுதிச் சடங்கில் 26 பேர் கைது\nநடமாடத் தடையை மீறினர் இறுதிச் சடங்கில் 26 பேர் கைது\nநடமாட்டத் தடையை மீறி இந்தியர் ஒருவரின் இறுதிச் சடங்கில் திரளாகக் கூடிய 26 இளைஞர்களை தாங்கள் கைது செய்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nகாப்பார், தாமான் இந்தான் குடியிருப்பில் நிகழ்த்தப்பட்ட இறுதிச் சடங்கின்போது மோட்டார் சைக்கிள்களில் சுமார் 50 பேர் வலம் வருவதாகத் தகவல் கிட்டியது.\nபொது இடங்களில் சமூக இடைவெளியைக் கடைபிடிக்கத் தவறினர் என்ற அடிப்படையில் 26 பேரைக் கைது செய்திருக்கிறோம் என கிள்ளான் உத்தாரா மாவட்டக் காவல் நிலையத் தலைவர் ஏ.சி.நூருல் ஹூடா ம��கமட் சாலே தெரிவித்தார்.\nPrevious articleசீன முகக்கவசங்களில் தொற்று அபாயம் சவுத் சைனா மோர்னிங் போஸ்ட் அம்பலம்\nNext articleமலாக்காவில் 3,224 பேர் மீது கொரோனா சோதனை\nவெளிநாட்டு ஆடவரிடம் கொள்ளையடித்ததாக போலீஸ்காரர் உட்பட 4 பேர் கைது\nநாட்டில் 14 புதிய கோவிட் -19 கிளஸ்டர்கள் கண்டுபிடிப்பு\nநஜிப்புக்கு 3 ஆயிரம் வெள்ளி அபராதம் ; அவர் உணவருந்திய கடைக்கு 10 ஆயிரம் வெள்ளி அபராதம்\nவெளிநாட்டு ஆடவரிடம் கொள்ளையடித்ததாக போலீஸ்காரர் உட்பட 4 பேர் கைது\nதமிழ்நாட்டில் நாளை பதவியேற்கவிருக்கும் அமைச்சரவை பட்டியல்\nநாட்டில் 14 புதிய கோவிட் -19 கிளஸ்டர்கள் கண்டுபிடிப்பு\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nநியூயார்க் பல்கலைக்கழகத்தில் மகாதீர் பேசுவதற்கு யூத காங்கிரஸ் எதிர்ப்பு\nஸாக்கிர் பிரிவினைவாதி மன்னிப்பு கேட்க முடியாது முன்னாள் தூதர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-05-07T02:20:59Z", "digest": "sha1:5SENHV3AQESSC7N7X3ALUMOZXFAUFRVP", "length": 9183, "nlines": 87, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மொரங் மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமொரங் மாவட்டம் (Morang District) (நேபாளி: मोरङ जिल्ला listen (உதவி·தகவல்)), நேபாள மாநில எண் 1-இல் கிழக்கு பிராந்தியத்தின் கோசி மண்டலத்தில் அமைந்துள்ளது. இம்மாவட்டம் 1,855 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 9,65,370 மக்கள் தொகையும் கொண்டுள்ளது.[1]\nநேபாள மாநில எண் 1-இல் மொரங் மாவட்டத்தின் வரைபடம்\nமொரங் மாவட்டத்தின் கிராமிய நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகள், துணை-மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள் போன்ற உள்ளாட்சி அமைப்புகளைக் காட்டும் வரைபடம்\nஇம்மாவட்டம் தொழிற்சாலைகள் மற்றும் நேபாள அரசியலுக்கு பெயர் பெற்றது. இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் விராட்நகர் ஆகும்.\nபன்முகத் தன்மை கொண்ட புவியியலும், பண்பாடும் கொண்ட இம்மாவட்டத்த்ல் நேபாளி மொழி (38%), மைதிலி மொழி (36%), தாரு மொழி (6%), இராஜ்வன்சி (3.7%), லிம்பு மொழி (3.6%), உருது (3.1%) பேசப்படுகிறது.\nமொரங் மாவட்டம், சன்சரி மாவட்டம் மற்றும் ஜாபா மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்ட மொரங் இராச்சியத்தை கிராதர்களின் லிம்பு இன மன்னர் நிறுவினர். பின்னர் மொரங் இராச்சியம், கோர்கா மன்ன���் பிரிதிவி நாராயணன் ஷா ஆட்சிக் காலத்தில் கோர்க்கா இராச்சியத்துடன் இணைக்கப்பட்டது.\nகிழக்கு நேபாளத்தில் உள்ள மொரங் மாவட்டத்தின் பெரும் பகுதிகள் தெற்கு தெராய் சமவெளியில் அமைந்திருப்பதால், இம்மாவட்டத்தில் நெல் மற்றும் சணல் அதிகம் பயிரிடப்படுகிறது. மலைப் பகுதிகளில் சால மரங்கள் வளர்க்கப்படுகிறது.\nநேபாள மாநில எண் 1\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 பெப்ரவரி 2021, 14:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gktamil.in/2018/05/supreme-court-women-judges-list-1950-to.html", "date_download": "2021-05-07T01:08:24Z", "digest": "sha1:5FTKOLRDOLV2LLJ4ENUBG25OHHX6APTN", "length": 19126, "nlines": 32, "source_domain": "www.gktamil.in", "title": "GK Tamil.in: Supreme Court Women Judges List - 2020 */ /* Content ----------------------------------------------- */ body { font: normal normal 14px 'Raleway', sans-serif; color: #222222; background: #f7f7f7 none repeat scroll top left; padding: 0 40px 0 40px; } html body .region-inner { min-width: 0; max-width: 100%; width: auto; } h2 { font-size: 22px; } a:link { text-decoration:none; color: #00ae86; } a:visited { text-decoration:none; color: #00ae86; } a:hover { text-decoration:none; color: #41d5b3; transition:0.3s; } .body-fauxcolumn-outer .fauxcolumn-inner { _background-image: none; } .body-fauxcolumn-outer .cap-top { position: absolute; z-index: 1; height: 400px; width: 100%; } .body-fauxcolumn-outer .cap-top .cap-left { width: 100%; _background-image: none; } .content-outer { -moz-box-shadow: 0 0 40px rgba(0, 0, 0, .15); -webkit-box-shadow: 0 0 5px rgba(0, 0, 0, .15); -goog-ms-box-shadow: 0 0 10px #333333; box-shadow: 0 0 40px rgba(0, 0, 0, .15); margin-bottom: 1px; } .content-inner { padding: 10px 10px; } .content-inner { background-color: #ffffff; } /* Header ----------------------------------------------- */ .header-outer { _background-image: none; } .Header h1 { font: normal normal 50px 'Raleway', sans-serif; color: #222222; text-shadow: -1px -1px 1px rgba(0, 0, 0, .2); text-align:center; } .Header h1 a { color: #222222; } .Header .description { font-size: 140%; color: #777777; text-align:center; } .header-inner .Header .titlewrapper { padding: 22px 30px; } .header-inner .Header .descriptionwrapper { padding: 0 30px; } /* Tabs ----------------------------------------------- */ .tabs-inner .section:first-child { border-top: 1px solid #eeeeee; } .tabs-inner .section:first-child ul { margin-top: -1px; border-top: 1px solid #eeeeee; border-left: 0 solid #eeeeee; border-right: 0 solid #eeeeee; } .tabs-inner .widget ul { _background-image: none; border-bottom: 1px solid #eeeeee; margin-top: 0; margin-left: -30px; margin-right: -30px; } .tabs-inner .widget li a { display: inline-block; padding: .6em 1em; font: normal normal 14px 'Raleway', sans-serif; color: #999999; border-left: 1px solid #ffffff; border-right: 1px solid #eeeeee; } .tabs-inner .widget li:first-child a { border-left: none; } .tabs-inner .widget li.selected a, .tabs-inner .widget li a:hover { color: #000000; background-color: #eeeeee; text-decoration: none; } /* Columns ----------------------------------------------- */ .main-outer { border-top: 0 solid #eeeeee; } .fauxcolumn-left-outer .fauxcolumn-inner { border-right: 1px solid #eeeeee; } .fauxcolumn-right-outer .fauxcolumn-inner { /*border-left: 1px solid #eeeeee;*/ } /* Headings ----------------------------------------------- */ div.widget > h2, div.widget h2.title { margin: 0 0 1em 0; font: normal bold 11px 'Raleway', sans-serif; color: #222222; } /* Widgets ----------------------------------------------- */ .widget .zippy { color: #262626; /* text-shadow: 2px 2px 1px rgba(0, 0, 0, .1); */ } .widget .popular-posts ul { list-style: none; } /* Posts ----------------------------------------------- */ h2.date-header { font: normal bold 11px 'Raleway', sans-serif; } .date-header span { background-color: transparent; color: #222222; padding: inherit; letter-spacing: inherit; margin: inherit; } .main-inner { padding-top: 30px; padding-bottom: 30px; } .main-inner .column-center-inner { padding: 0; } .main-inner .column-center-inner .section { margin: 0 15px; } .post { margin: 0 0 25px 0; } h3.post-title a { font: normal bold 15px 'Raleway', sans-serif; margin: .75em 0 0; } h3.post-title, .comments h4 { font: normal bold 20px 'Raleway', sans-serif; } .post-body { font-size: 110%; line-height: 1.4; position: relative; } .post-body img, .post-body .tr-caption-container, .Profile img, .Image img, .BlogList .item-thumbnail img { padding: 2px; background: #ffffff; border: 1px solid #eeeeee; } .post-body img, .post-body .tr-caption-container { padding: 5px; } .post-body .tr-caption-container { color: #222222; } .post-body .tr-caption-container img { padding: 0; background: transparent; border: none; -moz-box-shadow: 0 0 0 rgba(0, 0, 0, .1); -webkit-box-shadow: 0 0 0 rgba(0, 0, 0, .1); box-shadow: 0 0 0 rgba(0, 0, 0, .1); } .post-header { margin: 0 0 1.5em; line-height: 1.6; font-size: 90%; } .post-footer { margin: 20px -2px 0; padding: 5px 10px; color: #222222; background-color: #f7f7f7; border-bottom: 1px solid #eeeeee; line-height: 1.6; font-size: 90%; } #comments .comment-author { padding-top: 1.5em; border-top: 1px solid #eeeeee; background-position: 0 1.5em; } #comments .comment-author:first-child { padding-top: 0; border-top: none; } .avatar-image-container { margin: .2em 0 0; } #comments .avatar-image-container img { /*border: 1px solid #eeeeee;*/ } /* Comments ----------------------------------------------- */ .comments .comments-content .icon.blog-author { background-repeat: no-repeat; background-image: url(); } .comments .comments-content .loadmore a { border-top: 1px solid #999999; border-bottom: 1px solid #999999; } .comments .continue { border-top: 2px solid #999999; } /* Accents ---------------------------------------------- */ .section-columns td.columns-cell { /*border-left: 1px solid #eeeeee;*/ } .blog-pager { background: transparent none no-repeat scroll top center; } .blog-pager-older-link, .home-link, .blog-pager-newer-link { background-color: #ffffff; padding: 5px; } .footer-outer { border-top: 0 dashed #bbbbbb; } /* Mobile ----------------------------------------------- */ body.mobile { background-size: auto; } .mobile .body-fauxcolumn-outer { background: transparent none repeat scroll top left; } .mobile .body-fauxcolumn-outer .cap-top { background-size: 100% auto; } .mobile .content-outer { -webkit-box-shadow: 0 0 3px rgba(0, 0, 0, .15); box-shadow: 0 0 3px rgba(0, 0, 0, .15); } .mobile .tabs-inner .widget ul { margin-left: 0; margin-right: 0; } .mobile .post { margin: 0; } .mobile .main-inner .column-center-inner .section { margin: 0; } .mobile .date-header span { padding: 0.1em 10px; margin: 0 -10px; } .mobile h3.post-title { margin: 0; } .mobile .blog-pager { background: transparent none no-repeat scroll top center; } .mobile .footer-outer { border-top: none; } .mobile .main-inner, .mobile .footer-inner { background-color: #ffffff; } .mobile-index-contents { color: #222222; } .mobile-link-button { background-color: #00ae86; } .mobile-link-button a:link, .mobile-link-button a:visited { color: #ffffff; } .mobile .tabs-inner .section:first-child { border-top: none; } .mobile .tabs-inner .PageList .widget-content { background-color: #eeeeee; color: #000000; border-top: 1px solid #eeeeee; border-bottom: 1px solid #eeeeee; } .mobile .tabs-inner .PageList .widget-content .pagelist-arrow { border-left: 1px solid #eeeeee; } .post-list{ padding: 1px 1em 1em 1em; /* margin: -20px 0; */ margin-bottom: -20px; border: 1px solid #ddd; border-radius: 5px; } .post-list:hover { background:#f7f7f7; border-color:#00ae86; transition:.2s; } .post-label a{ margin-right:2px; white-space:nowrap; color: #222222; border-bottom: 1px dashed #00ae86; } .post-comment a{ color: #222222; } .post-label a:hover,.post-comment a:hover{ color: #00ae86; } #blog-pager{ margin: 3em 0; } .feed-links {display:none !important;} div.widget > h2, div.widget h2.title { font: normal bold 16px 'Raleway', sans-serif; border-bottom: 2px solid #ddd; padding: 5px 0; } .comments h4 { text-align: center; text-transform: uppercase; } .comments .comment .comment-actions a { background:#00ae86; border-radius: 3px; color: #f7f7f7; margin-right:5px; padding:5px; text-decoration: none !important; font-weight:bold; } .comments .comment-block { border: 1px solid #dddddd; border-radius:5px; padding: 10px; } .continue { border-top:none !important; } .continue a { background:#00ae86; border-radius:3px; color: #f7f7f7; display: inline-block !important; margin-top: 8px; text-decoration: none !important; } .comments .comments-content .datetime{ float:right; } #comments .avatar-image-container img { border-radius: 50px; } .comments .avatar-image-container { float: left; overflow: hidden; } .comments .comments-content .comment-replies{ margin-top:0; } .topnav { overflow: hidden; background-color: #000; } .topnav a { float: left; display: block; color: #ffffff; text-align: center; padding: 14px 16px; text-decoration: none; font-size: 17px; } .active { background-color: #00ae86; color: #ffffff; } .topnav .icon { display: none; } .dropdown { float: left; overflow: hidden; } .dropdown .dropbtn { font-size: 17px; border: none; outline: none; color: #ffffff; padding: 14px 16px; background-color: inherit; font-family: inherit; margin: 0; } .dropdown-content { display: none; position: absolute; background-color: #f9f9f9; min-width: 160px; box-shadow: 0px 8px 16px 0px rgba(0,0,0,0.2); z-index: 5; } .dropdown-content a { float: none; color: #000000; padding: 12px 16px; text-decoration: none; display: block; text-align: left; } .topnav a:hover, .dropdown:hover .dropbtn { background-color: #00ae86; color: #ffffff; } .dropdown-content a:hover { background-color: #00ae86; } .dropdown:hover .dropdown-content { display: block; } @media screen and (max-width: 600px) { .topnav a:not(:first-child), .dropdown .dropbtn { display: none; } .topnav a.icon { float: right; display: block; } } @media screen and (max-width: 600px) { .topnav.responsive {position: relative;} .topnav.responsive .icon { position: absolute; right: 0; top: 0; } .topnav.responsive a { float: none; display: block; text-align: left; } .topnav.responsive .dropdown {float: none;} .topnav.responsive .dropdown-content {position: relative;} .topnav.responsive .dropdown .dropbtn { display: block; width: 100%; text-align: left; } } div#crosscol.tabs.section {margin: 0 0 2em 0;} .post-page { padding: 0 1em; } .date-header{ color:#888;display:block;border-bottom: 1px solid #888;margin-top: 5px; } .section{margin:0} .column-right-inner .section .widget{ border: 1px solid #ddd; margin: 5px 0; padding: 10px; border-radius: 5px; } .footer-inner .section .widget{ margin: 5px 0; padding: 10px; } footer{ background: #f7f7f7; padding: 8px; margin: 25px -25px -25px -25px; border-top: 1px solid #dddddd; } /* STYLE 1 - Custom Blogger Labels Gadget Styles by Georgia Lou Studios */ .widget li, .BlogArchive #ArchiveList ul.flat li{ padding: 8px 0; } .list-label-widget-content ul { list-style-type:none; padding-left:0px!important; } .list-label-widget-content ul li:before { content: \"\\f054\"; float: left; color: #262626; font-weight: 700; font-family: 'Font Awesome 5 Free'; margin: 4px 5px 0 0; font-size:10px; } .list-label-widget-content li span{ color: #888888; } /*** Mozilla based browsers ***/ ::-moz-selection { background-color: #00ae86; color: #ffffff; } /*** Works on common browsers ***/ ::selection { background-color: #00ae86; color: #ffffff; } .breadcrumbs{ color: #888;margin:-15px 15px 15px 15px; } .status-msg-body{ width:95%; padding:10px; } /* MY CUSTOM CODE - Responsive Table ----------------------------------------------- */ .post table {border: 1px solid #dddddd;border-collapse: collapse;margin: 0;padding: 0;width: 100%;color:#222222;} .post table caption {margin: .25em 0 .75em;} .post table tr {border: 1px solid #dddddd;padding: .35em;} .post table th,.post table td {padding: .625em;border: 1px solid #dddddd;} .post table th {color:#357ae8;letter-spacing: .1em;text-transform: uppercase;background: #dcffed;white-space: nowrap;} .post table td img {text-align: center;} .post tr:hover { background-color: #dcffed; transition:.2s; } @media screen and (max-width: 600px) { .post table,table th,table td {border: 0;} .post table caption {} .post table thead {display: none;} .post table tr {border-bottom: 3px solid #dddddd;display: block;margin-bottom: .725em;} .post table th,.post table td {border:none;} .post table td {border-bottom: 1px solid #dddddd;display: block;} .post table td:before {content: attr(data-label);float: left;font-weight: bold;text-transform: uppercase;} .post table td:last-child {border-bottom: 0;}} body .navbar{height:0;} /* MY CUSTOM CODE - Button ----------------------------------------------- */ a.btn, .btn-toggle{ display:inline-block; padding:0.3em 1.2em; margin:0.3em; border-radius:5px; box-sizing: border-box; text-decoration:none; font-family:inherit; font-weight:700; color:#ffffff; background-color:#00ae86; text-align:center; box-shadow:0px 1px 0px #dddddd; transition: all 0.2s; } a.btn, .btn-toggle{ font-size:20px; } .btn-toggle{ font-size:inherit; } a.btn:hover, .btn-toggle:hover{ background-color:#41d5b3; } a.btn:active, .btn-toggle:active { position:relative; top:1px; } a.btn:before { content: '\\f019'; font-family: 'Font Awesome 5 Free'; font-weight: 900; display: inline-block; margin: 0 10px 0 0; } .btn-info { display: block; line-height: 1; font-size: 13px; font-style: italic; margin: 7px 0 0; } @media all and (max-width:30em){ a.btn,.btn-toggle{ display:block; margin:0.2em auto; } } .label-size { position:relative; font-size:13px; } .label-size a,.label-size span { padding: 5px; margin: 0 6px 6px 0; float: left; display: block; } .label-size a { color: #ffffff; background: #00ae86; border: 1px solid #00ae86; } .label-size a:hover { background:transparent; color:#00ae86!important; } .label-size span{ color: #222222; background: #f7f7f7; border: 1px solid #dddddd; } /* Start dropdown navigation */ #navigationbar li{ list-style:none; } .searchHolder{ background:#000000!important; float:right!important; } @media screen and (max-width:600px){ .searchHolder{float:left!important;} } #searchbar { display: none; margin: 0 auto; width: 100%; text-align: center; height: 50px; background: #000000; overflow: hidden; z-index: 4; } #searchicon { text-align: center; cursor: pointer; } #searchicon:hover { color: #888888; } #searchBox { font:inherit; -webkit-appearance: none; border: 0px; background: transparent; padding: 10px; outline:none; width: 90%; color:#888888; border-bottom:2px solid #888888; } #searchBox:focus { border-color:#00ae86; transition: .3s; color:#ffffff; } /* End dropdown navigation */ .BlogArchive #ArchiveList ul li{ color:#888888; } .widget.Text ul li, .widget.HTML ul li, .post ul li{ list-style:none; } .widget.Text ul li:before, .widget.HTML ul li:before, .post ul li:before{ content: '\\f0da'; font-family: 'Font Awesome 5 Free'; font-weight: 900; margin: 0 5px 0 -15px; } blockquote{ background: #f7f7f7; padding: 10px; border: 2px dashed #dddddd; margin: 0; } #comments{ padding:10px; } .post img:hover{ opacity: 0.8; transition: 0.2s; } -->", "raw_content": "\nஉச்சநீதிமன்றத்தின் புதிய பெண் நீதிபதியாக \"இந்து மல்கோத்ரா\" பதவியேற்பு\nஉச்சநீதிமன்றத்தின் மூத்த வக்கீலாக பணியாற்றி வந்த இந்து மல்கோத்ரா \"நேரடியாக நீதிபதியாக\" நியமனம் பெற்றுள்ளார். \"நேரடியாக உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமனம் பெற்ற முதல் பெண் வக்கீல்\" இந்து மல்கோத்ரா ஆவார்.\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, புதிய நீதிபதி \"இந்து மல்கோத்ரா\" அவர்களுக்கு ஏப்ரல் 27 அன்று பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இவர் 3 ஆண்டுகளுக்கு இந்தப் பதவியில் இருப்பார்.\nநேரடியாக உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமனம் பெறும் முதல் பெண் வக்கீல் \"இந்து மல்கோத்ரா\" (வயது 61).\nஇந்து மல்கோத்ரா - 7-வது உச்ச நீதிமன்ற பெண் நீதிபதி\nஉச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியாக 1989-ல் பாத்திமா பீவி நியமிக்கப்பட்டார். இந்து மல்கோத்ரா உச்ச நீதிமன்றத்தின் 7-வது பெண் நீதிபதி ஆவார். மற்ற பெண் நீதிபதிகள் அனைவரும் உயர்நீதிமன்றங்களில் இருந்து பதவி உயர்வு பெற்று வந்தவர்கள் ஆவர்.\nஉச்சநீதிமன்ற பெண் நீதிபதிகள் பட்டியல் (1950-2018)\n2018 ஆம் ஆண்டு வரை 65 ஆண்டு கால உச்சநீதிமன்ற வரலாற்றில் மொத்தம் \"07 பெண் நீதிபதிகள்\" பதவியேற்றுள்ளார்கள். அவர்கள் விவரம்:\nரூமா பால் (நீண்ட காலம் பெண் நீதிபதியாக இருந்தவர்)\nஆர். பானுமதி (தமிழ்நாட்டை சேர்ந்தவர்)\nஇந்து மல்ஹோத்ரா (ஏப்ரல் 27, 2018 முதல்)\nதற்போது உச்சநீதிமன்ற பெண் நீதிபதிகளாக உள்ளவர்கள்: இருவர் ஆவார்கள் விவரம் (ஏப்ரல் 30, 2018)\nஇந்து மல��ஹோத்ரா (ஏப்ரல் 27, 2018 முதல்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/november-15-and-december-7/", "date_download": "2021-05-07T00:59:50Z", "digest": "sha1:FH2SD277OEBHKV24BADNJHPGGX7PUBHM", "length": 8328, "nlines": 115, "source_domain": "www.patrikai.com", "title": "November 15 and december 7 – Patrikai – Tamil Daily – latest online local breaking news & reviews – Tamilnadu, India & World – politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nஇலங்கை அதிபர் தேர்தல் நவம்பர் 15 – டிசம்பர் 7 க்குள் நடக்கும் : தேர்தல் ஆணையம்\nகொழும்பு இலங்கை அதிபர் தேர்தல் வரும் நாம்பர் 15 க்கு பிறகு டிசம்பர் 7 க்குள் நடைபெறும் என இலங்கை…\nஅடுத்த 17 நாட்கள் ஒவ்வொரு வீட்டிலும் பின்பற்ற வேண்டிய கட்டாய விதி\nஅடுத்த 17 நாட்கள் ஒவ்வொரு வீட்டிலும் பின்பற்ற வேண்டிய கட்டாய விதி – நெட்டிசன் பதிவு கொரோனா கட்டுப்பாடு குறித்து வலைத் தளங்களில்…\nஇன்று ஆந்திரப் பிரதேசத்தில் 21,954 கர்நாடகாவில் 49,058 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 21,954 கர்நாடகாவில் 49,058 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 49,058…\nநாளைக்குள் தமிழகத்துக்குத் தேவையான ஆக்சிஜன் வழங்குவதை உறுதி செய்ய மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\nசென்னை நாளைக்குள் தமிழகத்துக்குத் தேவையான ஆக்சிஜன் வழங்குவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது….\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் –06/05/2021\nசென்னை தமிழகத்தில் இன்றைய (06/05/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 24,898 பேருக்குப் பாதிப்பு…\nசென்னையில் இன்று 6,678 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 6,678 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 33,316 ஆகி உள்ளது இன்று சென்னையில்…\nதமிழகத்தில் இன்று 24,898 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 24,898 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 12,97,500 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 1,31,468…\nஅதிமுக எம்.எல்.ஏ. விஜய பாஸ்கருக்கு கொரோனா\n7 hours ago ரேவ்ஸ்ரீ\nதனி தகவல் தொடர்பு தளத்தை தொடங்கிய டிரம்ப்\n7 hours ago ரேவ்ஸ்ரீ\nஐபிஎல் தொடரை நடத்தி முடிக்காவிட்டால் 2500 ரூபாய் கோடி இழப்பு ஏற்படும் – கங்குலி\n7 hours ago ரேவ்ஸ்ரீ\nகளை எடுப்போம்: – கமல் டுவிட்\n7 hours ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithisaral.in/2019/12/", "date_download": "2021-05-07T00:38:38Z", "digest": "sha1:S3UK6RM7XV3UEP4FXSPIFW3MV3DNQ3HI", "length": 9893, "nlines": 146, "source_domain": "www.seithisaral.in", "title": "December 2019 - Seithi Saral", "raw_content": "\n (ஆசிரியர் கடையம் பாலன்) தொடர் கதை பகுதி 19)\n story by Kadayam Balan சென்னை நண்பு வட்டாரங்கள் தெய்வாவின் தந்தையை தனியாக சந்தித்தனர். “ஐயா உங்க மகளுக்கு சீக்கிரம் கல்யாணம் பண்ணுங்க. அவளுடைய...\nஉலகமே வியக்கத்தக்க வகையில் கட்டப்பட்ட திருசெந்தூர் சுப்பிரமணிய சுவாமி ஆலயம்\nஆண்டிகள் கூடிமடம் கட்டிய கதை என்று கிண்டலாக கூறுவார்கள். ஆனால் உண்மையிலேயே ஆண்டிகளால் உலகமே வியக்கத்தக்க வகையில் கட்டப்பட்டுள்ளது அருள்மிகு திருசெந்தூர் சுப்பிரமணிய சுவாமி ஆலயம் பொதுவாக...\n (ஆசிரியர் கடையம் பாலன்) தொடர் கதை பகுதி 18)\n Novel episode 18- By kadayam Balan உடல்நலம் பாதிக்கப்பட்ட தெய்வாவின் தந்தை பூரண குணம் அடந்தார். இழந்த சொத்தும் மீண்டும் கிடைக்க, அவர்கள்...\nபாய்சனாகும் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள்\nDanger in plastic water bottle நாமெல்லாம் குடிநீர் தயாரிக்கும் கம்பெனி பெயர் பார்த்தோ அல்லது அதன் விலையை பார்த்து யோசித்து வாங்குவோம்,ஆனால் அதே சமயம் அந்த...\nகுழந்தைகள் அதிக நேரம் போனை உபயோகித்து வருகிறார்களா\nஇன்றைம கால கட்டத்தில் குழந்தைகள் வெளியில் சென்று நண்பர்களுடன் விளையாடுவதை விடுத்து எப்போதும் மொபைல் போனில் தான் அதிக நேரத்தை செலவு செய்கின்றனர். போனிலேயே அனைத்து விதமான...\n (ஆசிரியர் கடையம் பாலன்) தொடர் கதை பகுதி 17)\naval yaarukku by kadayam Balan அளவுக்கு மீறிய சோகத்துக்கு பிறகு ஒரு நல்லது நடக்கும் சொல்லுவாங்க. அதே மாதிரி மகிழ்ச்சிதான் எங்களுக்கு ஏற்பட்டு இருக்குமோன்னு நினைச்சேன்....\nசோள நாரின் நன்மைகள் தெரிந்தால் இனிமேல் வெளியே வீச மாட்டீங்க…\nசோளக்கருதில் உள்ள பட்டு போன்ற நாரை நாம் எப்போதும் தூக்கி எறிந்து விடுவோம். ஆனால் அந்த சோளக்கருது நாரில் புரோட்டின், மினரல், கார்போஹைட்ரேட் மற்றும் நார்சத்து ஆகிய...\nகண்ணில் விழித்திரையை பாதிக்கும் மொபைல் போனில் உள்ள, நீல நிற ஒளி\nமொபைல் போனில் உள்ள, நீல நி�� ஒளியிலிருந்து வெளிப்படும் சில வேதி விளைவுகள், கண்ணில் உள்ள விழித்திரையை பாதித்து, சில சிதைவுகளை ஏற்படுத்துவது, ஆய்வுகளில் உறுதியாகி உள்ளது...\nதண்ணீர் ஒத்தடம், வெந்நீர் ஒத்தடம், தவிட்டு ஒத்தடம் என ஏராளமான வகை ஒத்தடங்கள் உள்ளன. உடல் உறுப்புக்களும் தசைகளும் போதிய அசைவு இல்லாமல் போகும் போது, உடலில்...\nமூளையை பாதிக்கும் (மந்தமாக்கும்) 10 பழக்கங்கள்\n1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பது காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச்...\nமு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை விவரம்\nதூத்துக்குடிக்கு 2 மந்திரிகள்: திருநெல்வேலி, தென்காசி ஏமாற்றம்\nதிருப்பத்தூரில் இறந்த 5 பேர் கொரோனா நோயாளிகள் – மருத்துவ அதிகாரி விளக்கம்\nதுணை தலைவர் விலகல்; கமல் காட்டம்\nதமிழகத்தில் ஒரு நாள் கொரோனா பதிவு 24,898 ஆக உயர்வு\nUma on இராமருக்கு ஓர் அக்காள் உண்டு தெரியுமா\n.. தீராத ஒரு தகராறு….(சொல்லாராய்ச்சி/ சிவகாசி முத்துமணி)\nK.Kumaresan on தென் மாவட்ட மக்கள் வெளியே வர வேண்டாம் ; முதல்வர் எச்சரிக்கை\nPonnu on ஏழைகளுக்கு எட்டிவிடும் மருத்துவப் படிப்பு\nமு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை விவரம்\nதூத்துக்குடிக்கு 2 மந்திரிகள்: திருநெல்வேலி, தென்காசி ஏமாற்றம்\nதிருப்பத்தூரில் இறந்த 5 பேர் கொரோனா நோயாளிகள் – மருத்துவ அதிகாரி விளக்கம்\nதுணை தலைவர் விலகல்; கமல் காட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinibitz.com/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-17-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2021-05-07T01:01:32Z", "digest": "sha1:QM7UBRQGYTSK2OMRAJSNGCZPUL3HOOOL", "length": 10029, "nlines": 85, "source_domain": "www.tamilcinibitz.com", "title": "பொருளாதார ஜாதகம் 17 டிசம்பர் 2020: மேஷம் கடின உழைப்பின் பலன்களைப் பெறும், இந்த 7 இராசி அறிகுறிகளில் உள்ள பண ஆதாயங்களின் தொகை - பண நிதி ஜாதகம் 17 டிசம்பர் 2020 இன்று ஆர்திக் ராஷிஃபால் அனைத்து இராசி அடையாளம் நிதி பணம் முதலீட்டு ஜோதிடம் lbsd", "raw_content": "முழுமையான செய்தி உலகம் உங்களுக்காக.\nபொருளாதார ஜாதகம் 17 டிசம்பர் 2020: மேஷம் கடின உழைப்பின் பலன்களைப் பெறும், இந்த 7 இராசி அறிகுறிகளில் உள்ள பண ஆதாயங்களின் தொகை – பண நிதி ஜாதகம் 17 டிசம்பர் 2020 இன்று ஆர்திக் ராஷிஃபால் அனைத்து இராசி அடையாளம் நிதி பணம் முதலீட்டு ஜோதிடம் lbsd\nஇன்றைய நாள் உங்களுக்கு லாபகரமான சூழ்நிலையை உருவாக்கும். கடந்த காலத்தில் செய்த கடின உழைப்பின் பலன் அடையப்படும்.\nநிதி உங்களுக்கு நேரம் நல்லது. நீங்கள் ஏதேனும் ஒரு தொகை தவணை செலுத்தலாம். கடன் வாங்குவதைத் தவிர்க்கவும்.\nநிதி ரீதியாக, உங்கள் மனைவியிடமிருந்து நீங்கள் நன்மைகளைப் பெறுவீர்கள். இருப்பினும், எங்காவது குடும்ப செல்வத்தை இழக்க நேரிடும்.\nகாண்க: ஆஜ் தக் லைவ் டிவி\nவெளிநாட்டு நிறுவனத்தால் உங்களுக்கு பண நன்மை கிடைக்கும். இந்த நேரத்தில், செல்வத்தின் நன்மைகள் உங்களுக்காக செய்யப்படுகின்றன.\nஉங்கள் மனைவியிடமிருந்து நிதி உதவி பெறுவதாக தெரிகிறது. கற்றல் மூலம் பணம் சம்பாதிப்பார்.\nகற்றல் மூலம் பணம் சம்பாதிக்க உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தால் நிதி உதவி வழங்கப்படும்.\nபொருளாதார கண்ணோட்டத்தில் நேரம் உங்களுக்கு நல்லது. பணத்தைப் பொறுத்தவரையில், மனைவி மற்றும் தாயின் முழு ஆதரவும் இருக்கும்.\nகுடும்பத்தில் பொருளாதார செழிப்பு இருக்கும். இருப்பினும், குடும்பச் செலவு அதிகரிக்கக்கூடும். செல்வத்தின் நன்மைகள் உருவாக்கப்படுகின்றன.\nநிதி ரீதியாக, குடும்ப ஆதரவு பெறப்படும். அரசுப் பணிகளால் பணம் பெறப்படும். செலவினங்களைக் கட்டுப்படுத்துங்கள்.\nஉங்கள் வாழ்க்கையில் லாப நிலைமை உருவாக்கப்படுகிறது. இருப்பினும், இந்த நேரத்தில் நீங்கள் முன்பை விட கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்.\nஇன்று, உங்கள் பணத்திற்கு அதிக நன்மை இல்லை. ஆனால் நிதி நிலைமை முன்பை விட சிறப்பாக இருக்கும்.\nமுழுமையற்ற வேலையை முடிப்பதன் மூலம் உங்களுக்கு நன்மை கிடைக்கும். இந்த நாளில், நீங்கள் பணம் தொடர்பான முக்கியமான முடிவை எடுக்கலாம்.\nபாப் கலாச்சாரம் டிரெயில்ப்ளேஸர். சிந்தனையாளர். சிக்கல் செய்பவர். இசை குரு. சமூக ஊடக நிபுணர். மாணவர். ஜாம்பி நிபுணர்.\nREAD டி.என்- தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸில் உள்ள 166 தளங்களில் ஆறு இடங்களில் கோவாக்சின் வழங்கப்படும்\nஇது ராகுல் காந்தி கருத்து என்று சர்ச்சைக்குரிய அறிக்கை குறித்து முன்னாள் எம்.பி. முதல்வர் கமல்நாத் கூறுகிறார் | ராகுல் காந்தியின் அறிவுரை குறித்து கமல்நாத்தின் பதில்- நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்\nபுது தில்லி: மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் கமல்நா��் ‘உருப்படி’ அடங்கிய அறிக்கை குறித்து ராகுல்...\nதமிழ்நாடு: கல்லூரிகள், IX, XI மாணவர்களுக்கு ஆஃப்லைன் படிப்புகள் பிப்ரவரி 8 ஆம் தேதி தொடங்கும் | சென்னை செய்தி\nஃபெரோஸ் ஷா கோட்லா ஸ்டேடியம் பிரதான ஜெய்ட்லி கி மூர்த்தி: கோட்லா ஸ்டேடியத்தில் ஜெட்லியின் சிலை\nஇந்த இரண்டு தகவல்களையும் எரிவாயு நிறுவனத்துடன் புதுப்பிக்கவும், இல்லையெனில் எல்பிஜி எல்பிஜி விநியோகம் நிறுத்தப்படும்\nPrevious articleசெயிண்ட் தற்கொலை செய்து கொள்கிறார், விவசாயிகளுக்கு ஆதரவாக தன்னைத்தானே சுட்டுக்கொள்கிறார்\nNext articleசைஃப் அலிகானின் தந்தவ் டீஸர் அவுட், அரசியல் பந்தய விளையாட்டு காணப்படும் – சைஃப் அலிகான் தந்தவ் டீஸர் அவுட்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nபேஸ்புக் ஒரு சிறப்பு செய்தி ஊட்டம் மற்றும் எளிமையான தளவமைப்புடன் பக்கங்களை மறுவடிவமைப்பு செய்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2020/09/17.html", "date_download": "2021-05-07T00:09:10Z", "digest": "sha1:LRY45JE7UBPBKM7VFI2BC4FEQPCHVYXN", "length": 8340, "nlines": 92, "source_domain": "www.yarlexpress.com", "title": "குருநகரில் கொள்ளையில் ஈடுபட்ட 17 வயதான சிறுவன் கைது. \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nகுருநகரில் கொள்ளையில் ஈடுபட்ட 17 வயதான சிறுவன் கைது.\nகுருநகரில் வீட்டில் யாரும் இல்லாத போது, வீட்டை உடைத்து 20 பவுண் தங்க நகைகளும் 35 ஆயிரம் ரூபாய் பணமும் கொள்ளையிட்ட 17 வயது சிறுவன் யாழ்ப்பாணம...\nகுருநகரில் வீட்டில் யாரும் இல்லாத போது, வீட்டை உடைத்து 20 பவுண் தங்க நகைகளும் 35 ஆயிரம் ரூபாய் பணமும் கொள்ளையிட்ட 17 வயது சிறுவன் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளான்.\nசந்தேக நபரிடம் நகைகளை வாங்கி அடகு வைத்த ஒருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதுடன், கொள்ளையடித்த நகைகளும் மீட்கப்பட்டுள்ளன.\nஇந்தக் கொள்ளைச் சம்பவம் கடந்த 17ஆம் திகதி முற்பகல் இடம்பெற்றது.\nவீட்டில் இருந்தவர்கள் வேலைக்குச் சென்றிருந்த வேளை, வீடுடைத்து நகைகள் கொள்ள��யிடப்பட்டன.\nஇந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.\nசம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் நிலைய குற்றத் தடுப்புப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.\nதிருநகரைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுவன் பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டார். அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் கொள்ளையிட்ட நகைகளை அடகு வைத்துக் கொடுத்த மற்றொருவரும் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் கூறினர்.\nசந்தேக நபர்கள் இருவரும் இன்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.\nவணிகம் / பொருளாதாரம் (7)\nமாநகர காவல்படையினரின் சீருடை பறிமுதல் - மாநகரசபைக்கு ஆப்பு வைத்த பொலீஸார் ..\nBREAKING NEWS :- ஊரடங்கு தொடர்பில் இராணுவத் தளபதி சற்றுமுன் வெளியிட்ட அறிவிப்பு\nஅத்தியாவசிய சேவைக்கு மாத்திரமே அனுமதி\nYarl Express: குருநகரில் கொள்ளையில் ஈடுபட்ட 17 வயதான சிறுவன் கைது.\nகுருநகரில் கொள்ளையில் ஈடுபட்ட 17 வயதான சிறுவன் கைது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/rohith-and-kumar-ruled-out-aus-series/", "date_download": "2021-05-07T01:30:57Z", "digest": "sha1:377NAZRBIALBV63QTM5WD6AEFLB5VZTB", "length": 9137, "nlines": 98, "source_domain": "dheivegam.com", "title": "ஆஸ்திரேலிய தொடருக்கான அணியில் இருந்து ரோஹித், புவனேஷ்வர குமார் அவுட். அவர்களுக்கு பதிலாக இவர்கள் ஆடுகின்றனர் - இந்திய அணி அறிவிப்பு", "raw_content": "\nHome விளையாட்டு கிரிக்கெட் ஆஸ்திரேலிய தொடருக்கான அணியில் இருந்து ரோஹித், புவனேஷ்வர குமார் அவுட். அவர்களுக்கு பதிலாக இவர்கள் ஆடுகின்றனர்...\nஆஸ்திரேலிய தொடருக்கான அணியில் இருந்து ரோஹித், புவனேஷ்வர குமார் அவுட். அவர்களுக்கு பதிலாக இவர்கள் ஆடுகின்றனர் – இந்திய அணி அறிவிப்பு\nஇந்திய அணி தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரை முடித்துக்கொண்டு நாடு திரும்பியுள்ளது. அடுத்ததாக வரும் 24 ஆம் தேதி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்க படவுள்ளது.\nஅப்படி அறிவிக்கப்படவுள்ள அணியில் டி20 தொடரிலிருந்து துவக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மாவிற்கு ஓய்வு கொடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தொடர்ச்சியாக போட்டிகளில் ஆடிவரும் ரோஹித் உலககோப்பைக்கு மனதளவில் தயாராகவே இந்த ஓய்வு அவருக்க�� கொடுக்கப்பட உள்ளதாகவும் அவருக்கு பதிலாக ராகுல் களமிறங்குவார் என்றும் அணி நிர்வாகம் சார்பில் தெரிவிக்க பட்டுள்ளது.\nமேலும், புவனேஷ்வர் குமாரும் ஓய்வு கொடுக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஓய்வில் இருந்த பும்ரா மீண்டும் அணிக்கு திரும்புகிறார். இவரின் வருகை நிச்சயம் அணிக்கு பலம் சேர்க்கும். மேலும், நியூசிலாந்து தொடரின் நடுவே சில போட்டிகளுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டிருந்த கேப்டன் விராட் கோலியும் மீண்டும் அணிக்கு திரும்புகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த ஆஸ்திரேலிய தொடரை இந்திய அணி எவ்வாறு சமாளிக்கிறது என்பதனை பொறுத்து உலகக்கோப்பை தொடர் அமையும் என்பதால் கிரிக்கெட் ரசிகர்கள் இடையே இந்த தொடருக்கு பெரிய எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது என்றே கூறவேண்டும்.\nநான் டீவியில் கிரிக்கெட் போட்டிகளை பார்த்ததற்கு முதல் முக்கிய காரணம் இதுதான். அதுவே என்னை கவர்ந்தது – மனம் திறந்த பும்ரா\nமேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்\nஅரையிறுதியில் இந்திய அணியை வீழ்த்த நீங்கள் இந்த 2 விடயத்தை செய்தே ஆகவேண்டும் – நியூசி முன்னாள் கேப்டன்\nAfghanistan : இந்தமுறை உலகக்கோப்பை தொடரில் நாங்கள் இதனை செய்தே தீருவோம். முடிந்தால் தடுத்து பாருங்கள் – ஆப்கானிஸ்தான் வீரர் சவால்\nVirat Kohli : தனது செல்லப்பிள்ளையுடன் புகைப்படத்தினை வெளியிட்ட கேப்டன் கோலி – புகைப்படம் உள்ளே\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2021/01/blog-post_19.html", "date_download": "2021-05-07T01:43:54Z", "digest": "sha1:JLCZUKUFNFGNNRXWIN3SSRYQUSCM3AWY", "length": 8221, "nlines": 87, "source_domain": "www.yarlexpress.com", "title": "இன்றைய கதவடைப்புக்கு யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனம் ஆதரவு. \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nஇன்றைய கதவடைப்புக்கு யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனம் ஆதரவு.\nதமிழர் தாயக���் தழுவியதாக இன்று முன்னெடுக்கப்படவிருககும் கதவடைப்பு போராட்டத்திற்கு யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்க சமாசங்களின் ...\nதமிழர் தாயகம் தழுவியதாக இன்று முன்னெடுக்கப்படவிருககும் கதவடைப்பு போராட்டத்திற்கு யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்க சமாசங்களின் சம்மேளனம் முழுமையான ஆதரவினை தெரிவித்துள்ளது.\nயாழ். பல்கலைக் கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி உடைக்கப்பட்டமைக்கு கண்டனம் தெரிவிப்பதுடன் தமிழின அடக்குமுறை குறித்த செய்தியை சர்வதேச சமூகத்திற்கு ஒன்று பட்டு வெளிப்படுத்தும் வகையில் இன்றைய தினம் வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் தழுவியதான கதவடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், இக் கதவடைப்பு போராட்டத்திற்கு, யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்க சமாசங்களின் சம்மேளனம் முழுமையான ஆதரவினை வழங்குவதென முடிவெடுத்திருப்பதாக அதன் செயலாளர் நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.\nவணிகம் / பொருளாதாரம் (7)\nமாநகர காவல்படையினரின் சீருடை பறிமுதல் - மாநகரசபைக்கு ஆப்பு வைத்த பொலீஸார் ..\nBREAKING NEWS :- ஊரடங்கு தொடர்பில் இராணுவத் தளபதி சற்றுமுன் வெளியிட்ட அறிவிப்பு\nஅத்தியாவசிய சேவைக்கு மாத்திரமே அனுமதி\nYarl Express: இன்றைய கதவடைப்புக்கு யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனம் ஆதரவு.\nஇன்றைய கதவடைப்புக்கு யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனம் ஆதரவு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2021/01/blog-post_374.html", "date_download": "2021-05-07T01:21:10Z", "digest": "sha1:H5676WZIGBKBCQ6DPAUWQN23MIAZDBB2", "length": 10366, "nlines": 88, "source_domain": "www.kurunews.com", "title": "கல்விக்கு கரம் கொடுப்போம் சிறுவர் தொழிலாளியில்லா இலங்கையை உருவாக்குவோம்\" திட்டத்தின் கீழ் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு ! - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » கல்விக்கு கரம் கொடுப்போம் சிறுவர் தொழிலாளியில்லா இலங்கையை உருவாக்குவோம்\" திட்டத்தின் கீழ் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு \nகல்விக்கு கரம் கொடுப்போம் சிறுவர் தொழிலாளியில்லா இலங்கையை உருவாக்குவோம்\" திட்டத்தின் கீழ் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு \nஅபு ஹின்ஸா , ஐ.எல்.எம். நாஸிம்\nசீன- இலங்கை நட்புறவின் அடையாளமாக இலங்கையில் அமைந்துள்ள சீனத்தூதரகம் ஊடாக கொழும்பு உட்பட பல மாவட்டங்களையும் சேர்ந்த 2500 தேவையுடைய மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பின் தலைவர் மௌலவி மிப்ளால் தலைமையில் மாளிகாவத்தை பீ.டி.சிறிசேன விளையாட்டு மைதானத்தில் இலங்கைக்கான சீன தூதுவர் திரு. ஷீ ஜன்ஹொங் பிரதம அதிதியாக கலந்து கொண்டு ஆரம்பித்து வைக்கப்பட்டதை தொடர்ந்து அம்பாறை மாவட்டம் மாளிகைக்காடு, சாய்ந்தமருது பிரதேச மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு கடந்த திங்கட்கிழமை (18) மாலை அல்- மீஸான் பௌண்டஷன், ஸ்ரீலங்காவின் தவிசாளர் யு.எல்.என். ஹுதா தலைமையில் நடைபெற்றது.\nஅல்- மீஸான் பௌண்டஷன் வருடா வருடம் செய்து வரும் இந்த \"கல்விக்கு கரம் கொடுப்போம் சிறுவர் தொழிலாளியில்லா இலங்கையை உருவாக்குவோம்\" திட்டத்தில் இவ்வருட இந்நிகழ்வில் அல்- மீஸான் பௌண்டஷன், ஸ்ரீலங்காவின் கலை, இலக்கிய செயலாளர் கலைஞர் அஸ்வான் மௌலானா, செயற்குழு உறுப்பினர் என்.எம். அலிகான், மாவட்ட ஊடக இணைப்பாளர் ஐ.எல்.எம். நாஸிம் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பாடசாலை புத்தக பைகளை வழங்கி வைத்தனர்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\n\"Kurunews.com ஐ பார்வையிடும் அன்பர்களே Facebook பக்கத்தை Like பண்ணிட்டு போங்கள்\".\nமட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை; பல்வேறு செயற்பாடுகளுக்கு தடை- மாவட்ட அரசாங்க அதிபர்...\nமட்டக்ககளப்பில் தனியார் வகுப்பு நடாத்த தடை விதித்துள்ளதுடன் கொரோனா அதிகரிப்பால் மட்டு போதனா வைத்தியசாலையில் ஒட்சிசன் தேவை அதிகரித்துள்ளது....\nசகல பாடசாலைகளுக்கும் மே மாதம் 07ம் திகதி வரை விடுமுறை\nநாடளாவிய ரீதியில் அனைத்துப் பாடசாலைகளையும் தொடர்ந்தும் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் 7 ஆம் திகதி வரை பாடசாலை...\n10 , 11 தரங்களில் பாடவிதான மாற்றம் அத்துடன் க.பொ.த சா/த, உ/த பரீட்சை நடைபெறும் காலங்களும் மாற்றம்\nதரம் 10 ,11 க்கான பாடத்திட்டங்களை ஒரு வருடம் & 9 மாத காலத்திற்கு மறுசீரமைக்கவும், ஆகஸ்ட் மாதத்தில் க.பொ.த. (சா /த) பரீட்சையை நடாத்தவும்...\nபுனித மிக���கேல் கல்லூரி மாணவன் பௌதீக விஞ்ஞான பிரிவில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலிடம்.\nவெளியான 2020 ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பௌதீக விஞ்ஞான பிரிவில் குகராஜா சஜீவ் 3 A சித்திகளுடன் ...\nமட்டக்களப்பு மாவட்டத்தில் விஞ்ஞான பிரிவில் முதலிடத்தை பெற்ற மட்/பட்டிருப்பு தேசிய பாடசாலை மாணவன்\nவெளியான 2020 ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் விஞ்ஞான பிரிவில் மகிழூர் கண்ணகிபுரத்தை சேர்ந்த தம்பி...\nமட்டக்களப்பு- கல்லடியில் 09 பேருக்கு கொரோனா தொற்று உறுதி...\nமட்டக்களப்பு மாவட்ட மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுற்குற்பட்ட கல்லடி பிரதேசத்தில் இன்றைய தினம் 09 பேருக்கு கொரோன தொற்று உறுதிசெய்யப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.navakudil.com/amazon-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-05-07T02:12:02Z", "digest": "sha1:3M3B44P25NIFRK3BI7VLK4EOQOZGHH26", "length": 6016, "nlines": 38, "source_domain": "www.navakudil.com", "title": "Amazon உள்ளும் இலஞ்சம், ஊழல் – Truth is knowledge", "raw_content": "\nAmazon உள்ளும் இலஞ்சம், ஊழல்\nஅளவுக்கு மீறி வளர்ந்த Amazon என்ற இணையம் மூலமான விற்பனை நிறுவனம் அதனுள்ளே வளரும் இலஞ்சம், ஊழல் போன்ற சட்ட விரோத செயல்களை தடுக்க பெரும் நடவடிக்கைகளை எடுக்கவேண்டி உள்ளது. Amazon வர்த்தக நடவடிக்கைகளில் இலஞ்சம், ஊழல் செய்தோர் என்று கூறி அண்மையில் 6 முன்னாள் பணியாளர் மீது அமெரிக்கா சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது.\nEd Rosenberg, Joseph Nilsen, Kristen Leccese, Hadis Nuhanovic, Rohit Kadimisetty, Nishad Kunju ஆகியோர் மீதே அமெரிக்க மத்திய அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. இவர்கள் Amazon மூலம் விற்பனை செய்வோர் சிலரிடம் இருந்து இலஞ்சம் பெற்று, அந்த விற்பனையாளருக்கு சட்டத்துக்கு முரணான முறையில் உதவி செய்துள்ளனர் என்று கூறப்படுகிறது. உண்மையில் பெரும் தொகையான Amazon ஊழியர்கள் குளறுபடியில் ஈடுபடுகின்றனர் என்று கூறப்படுகிறது.\nKadimisetty தனது Amazon பதவியை 2015 ஆண்டு டிசம்பர் மாதம் இழந்து இருந்தார். Kunju 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் Amazon பதிவியில் இருந்து விலக்கப்பட்டார்.\nபதவியில் இருந்து விரட்டப்பட்ட Kanju பின்னரும் Nilsen உடன் இனைந்து ஏற்கனவே Amazonனில் பாதுகாப்பு குறைபாடு காரணமாக இடைநிறுத்தம் செய்யப்பட்ட பொருள் ஒன்றை மீண்டும் Amazonனில் விற்பனை செய்ய வழி செய்தார். அந்த செயலுக்கு Kanju பாதுகாப்பு குறைபாடு கொண்ட பொருளை விற்பனை செய்யும் நிறுவனத்திடம் $5,700 வெகுமதியை சட்ட விரோதமாக பெற்று உள்ளார் என்று கூறப்படுகிறது. இந்த பணம் இந்தியாவுக்கு wire transfer செய்யப்பட்டு அங்குள்ள Amazon ஊழியர் ஒருவருக்கு வழங்கப்பட்டு உள்ளது.\nNilsen, Leccese, Kunju ஆகியோர் அதே மாதம் Amazon னில் விற்பனை செய்யும் ஒரு நிருவத்திடம் $25,000 பெற்று, அந்த நிறுவனத்துக்கு போட்டியாக Amazon னில் பொருட்களை விற்பனை செய்யும் இன்னோர் நிறுவனத்துக்கு எதிராக பொய்யான வாடிக்கையாளர் கருத்துக்களை (negative reviews) வெளியிட்டு உள்ளனர். மேற்படி negative review களை வாசிக்கும் மக்கள் அப்பொருளை கொள்வனவு செய்யார்.\n2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் Rosenberg $8,000 பணம் கொண்ட பொதி ஒன்றை Uber taxi மூலம் Nilsen க்கு அனுப்பி உள்ளார். இப்பணமும் Amazon குளறுபடிகளுக்கு பயன்படுத்தப்பட்டது.\nதாம் முடிந்தவரை தமது ஊழியர்கள் செய்யும் சட்ட விரோத செயல்களை தடுக்க முயல்வதாக Amazon கூறி உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mkppando.com/category/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2021-05-07T00:09:05Z", "digest": "sha1:AYVKETQD37ZP5M62MVZS32SQWK2TQGYY", "length": 3845, "nlines": 61, "source_domain": "mkppando.com", "title": "இறுதி வரை சேவை Archives - My Life Experience", "raw_content": "\nஸ்ரீ செல்வா விநாயகருக்காக வந்தவரே இறுதி வரை சேவை செய்ய இயலும்; எனது தந்தையின் வேண்டுதல், இன்றும் இயங்கும் அவரின் புனிததன்மை வாய்ந்த நோக்கம்: “உனக்கு ஒரு இருப்பிடம் கட்டித்தருகிறேன்”\nஎனது தந்தையின் வேண்டுதல், இன்றும் இயங்கும் அவரின் புனிததன்மை வாய்ந்த நோக்கம்: “உனக்கு ஒரு இருப்பிடம் கட்டித்தருகிறேன்” கீழ்கண்ட புகைப்படத்தில் பாலாலயத்தில் பங்கெடுத்த நபர்களில் இன்னும் எத்தனை பேர் ஸ்ரீ செல்வ விநாயகருக்கு சேவை செய்து வருகின்றனர்\nபுரிதல் பற்றிய ஒரு புரிதலும் அதன் அவசியமும்-7\nபுரிதல் பற்றிய ஒரு புரிதலும் அதன் அவசியமும்-6\nபுரிதல் பற்றிய ஒரு புரிதலும் அதன் அவசியமும்\nVigneskanna on புரிதல் பற்றிய ஒரு புரிதலும் அதன் அவசியமும்\nநான் எல்லா உயிரினங்களையும் சமமாக பார்க்கிறேனா\nபுரிதல் பற்றிய ஒரு புரிதலும் அதன் அவசியமும்\nஶ்ரீசெல்வ வினாயகர், மேலமருங்கூர் – தம்பி சிவஞானம் என்ற ராசு அவரின் பார்வைய\nஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயம் – MKP பாண்டுரங்கன் கண்ணோட்டத்தில்\nஸ்ரீ செல்வா விநாயகர் கோவில் வந்த உண்மை கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/news/cant-interfere-in-farmers-fighting-rights-supreme-court-notice/", "date_download": "2021-05-07T01:18:25Z", "digest": "sha1:RBWAI4YVLV5QKHJFSB42UHKZWMZ7AWO3", "length": 12365, "nlines": 123, "source_domain": "tamil.krishijagran.com", "title": "விவசாயிகளின் போராடும் உரிமையில் தலையிட முடியாது - உச்சநீதிமன்றம் அறிவிப்பு!", "raw_content": "செய்திகள் வாழ்வும் நலமும் தோட்டக்கலை கால்நடை வெற்றிக் கதைகள் விவசாய தகவல்கள் FTB அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா Directory\n#FTB விவசாய தகவல்கள் அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா\nஎங்கள் அச்சு மற்றும் டிஜிட்டல் பத்திரிகைகளுக்கு குழுசேரவும்\nசமூக ஊடகங்களில் எங்களுடன் இணைக்கவும்:\nவிவசாயிகளின் போராடும் உரிமையில் தலையிட முடியாது - உச்சநீதிமன்றம் அறிவிப்பு\nபோராடுவதற்கான அடிப்படை உரிமைகள் (Fundamental rights) அங்கீகரிக்கும்போது, போராட்டங்களால் யாருக்கும் பாதிப்பு ஏற்பட்டுவிட கூடாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே (S.A. Popte) தெரிவித்துள்ளார்.\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் நெடுஞ்சாலைகளை மறித்து போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை உடனடியாக அகற்ற உத்தரவிடக் கோரியும், பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவும் தாக்கல் செய்யப்பட்டுள்ள பொதுநல மனுக்களை (Welfare Petition) சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வு நேற்று விசாரித்தது. வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர சமரச குழு (Compromise Committee) அமைக்கப்படும் என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது.\nவிவசாயிகள் நடத்தும் போராட்டம் பற்றி, 2-வது நாளாக விசாரித்து வரும் உச்சநீதிமன்றம், விவசாயிகளின் போராடும் உரிமையில் தலையிட முடியாது என்றும் இருப்பினும், போராடும் முறையை மாற்றி, பிற குடிமக்களின் உரிமைகளை பாதுகாக்க (Protect) நினைக்கிறோம். போராடுவதற்கான அடிப்படை உரிமைகள் அங்கீகரிக்கும்போது, போராட்டங்களால் யாருக்கும் பாதிப்பு ஏற்பட்டுவிட கூடாது என்று தெரிவித்தார்.\nமேலும் வேளாண் சட்டங்களுக்கு (Agricultural Laws) எதிரான மனுக்கள் மீது தற்போதைக்கு முடிவெடுக்க போவதில்லை. விவசாயிகள் போராட்டங்கள் தொடர்பாக மட்டுமே விசாரணை நடத்தி இன்று முடிவு எடுக்கப்படும் என்றார்.\nபயிர் பாதிப்பு குறித்து இரு நாட்களில் அரசிடம் ��றிக்கை அளிக்கப்படும்\nவிவசாயிகளின் பிரச்னையை தீர்க்க தேசிய அளவில் குழு அமைக்க உச்சநீதிமன்றம் யோசனை\nஅன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.\nஉங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....\nபங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)\nஅடுத்த 48 மணிநேரத்திற்கு கடலோர மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை\nடி.என்.பி.எஸ்.சி ஆண்டு அட்டவணை வெளீயிடு : 2021ல் 42வகை தேர்வுகள் அறிவிப்பு\nகொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, முழு ஊரடங்கை அமல்படுத்த உச்ச நீதிமன்றம் பரிந்துரை\nகொப்பரை உற்பத்தி செய்ய நவீன இயந்திரம்: விவசாயிகள் மகிழ்ச்சி\n செய்ய வேண்டியவையும், செய்யக் கூடாதவையும்\nவிளைநிலங்களில் வீணாகும் தர்பூசணி பழங்கள்\nபூச்சிகளைப் புரிந்து கொள்(ல்)வோம்- காணொளி மூலம் பயிற்சி\nரூ.4000 கொரோனா நிவாரண நிதிவழங்கும் திட்டம் - நாளை ஸ்டாலின் முதல் கையெழுத்து\nவாடிக்கையாளர்களுக்கு புதியவகை டிசைனர் சிலிண்டரை அறிமுகம் செய்த IOCL\nஒரே நிமிடத்தில் cowin.gov.in தளத்தில் கொரோனா தடுப்பூசி பதிவு செய்வது எப்படி\nபருத்தியைத் தாக்கும் மாவுப்பூச்சிகளை எப்படி கட்டுப்படுத்தலாம்\nகொரோனாவைத் தடுக்கும் முயற்சியில், புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்\nஒன்றல்ல, இரண்டல்ல, ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள்\nதொற்றுநோய்களைத் தடுக்கும் ஊட்டச்சத்து அணுகுண்டு எது தெரியுமா\nமாடித்தோட்டத்திற்கு ஏற்ற மண் கலவை வகைகள் எவை\nவிவசாயிகள் நலன் கருதி சாகுபடி தொடர்பான சந்தேகம் ஏற்பட்டால் வேளாண் விஞ்ஞானிகளை அணுகலாம்: தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilkilavan.com/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A/", "date_download": "2021-05-07T01:31:01Z", "digest": "sha1:65C6KDR33LFUABHUI6WB3EGDIRZSIOAJ", "length": 5197, "nlines": 66, "source_domain": "tamilkilavan.com", "title": "இதை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள் இந்த 3 பொருட்களை மறந்தும் தானம் கொடுக்கவே கூடாது! | Tamil Kilavan", "raw_content": "\nஇதை தெ��ிந்து வைத்துக் கொள்ளுங்கள் இந்த 3 பொருட்களை மறந்தும் தானம் கொடுக்கவே கூடாது\nஒருவரின் குறையை மற்றொருவர் போக்க வேண்டும் என்பதற்காகத்தான் தானம் கொடுக்கும் முறை உருவாக்கப்பட்டது. மற்றவர்களுக்கு தானம் அளிப்பது நமக்கு மன நிம்மதி, புகழ் ஆகியவற்றை தேடித்தரும்.\nகுறிப்பாக அன்னதானம் செய்வதால் பூர்வ ஜென்ம கர்மவினைகள் தீரும். பித்ருக்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். அன்னதானம் இடுபவரை வெய்யில் வறுத்தாது. வறுமை தீண்டாது. இறையருள் எப்பொழுதும் துணை நின்று மனதில் மகிழ்ச்சி நிலையாக குடிகொண்டிருக்கும்.\nஅதே வேளையில் சில பொருட்களை நாம் எப்போதும் தானம் அளிக்கவே கூடாது.மீறி அதனை தானமாக கொடுத்தால் நமக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்படும். என்னென்ன பொருட்களை தானம் அளிக்கக்கூடாது என்பதை இங்கே பார்க்கலாம்.\nTwitterFacebook பிரபல பாடகர் எஸ்பிபியின் மறைவினை தாங்கிக்கொள்ள முடியாத ரசிகர்கள் அவரது நடிப்பு, …\nபாடகி ஜானகியிடம் குழந்தையாய் மாறி அரங்கேற்றிய குறும்பு… கைக்குட்டையால் கண்ணீரைத் துடைத்த எஸ்பிபி மிக மிக அரிய காட்சி\nTwitterFacebookஏழை கூட பணக்காரராக மாற்றும் சக்தி வாய்ந்த ரகசிய பொருள் உச்சந்தலையில் இப்படி …\nஏழை கூட பணக்காரராக மாற்றும் சக்தி வாய்ந்த ரகசிய பொருள் உச்சந்தலையில் இப்படி வைத்து பாருங்கள்.\nகடையில் முட்டை வாங்கறதுக்கு முன்னாடி இந்த வீடியோ பாருங்க\n2 முட்டை இருக்கா வீட்டில் உள்ள அனைவருக்கும் கிரிஸ்பியான ஈவினிங் ஸ்நாக்ஸ் ரெடி.\nமுட்டை சுக்கா லஞ்சுக்கு பக்காவான சைடிஷ் 10 நிமிடத்தில் இப்படி சுவையா செய்து கொடுத்து அசத்துங்க.\nபல கோடி சொத்துக்கு சொந்தக்காரி ஒரு வேலை சோற்றுக்காக வீட்டு வேலை செய்து பிழைக்கும் அவலம்\n20 ஆயிரம் வருடங்களுக்கு முன் மூழ்கிப்போன தமிழனின் வரலாறு.. தற்போது மெல்ல மெல்ல மிதந்து வருகிறது.. தற்போது மெல்ல மெல்ல மிதந்து வருகிறது.. ஒவ்வொரு தமிழனும் உலகத்துக்கு அறிய நண்பர்களுடன் பகிருங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/recipes/155136-.html", "date_download": "2021-05-07T01:40:16Z", "digest": "sha1:DVQBEKKMR7MKAGLYMRJDKJTWLCFUHX5S", "length": 12643, "nlines": 284, "source_domain": "www.hindutamil.in", "title": "தேர்வு நேரச் சத்துணவு: தனியா சூப் | தேர்வு நேரச் சத்துணவு: தனியா சூப் - hindutamil.in", "raw_content": "வெள்ளி, மே 07 2021\nதேர்வு நேரச் சத்துணவு: தனியா சூப்\nதேர்வு நெருங்க��விட்டாலே புத்தகமும் கையுமாகத்தான் பெரும்பாலான குழந்தைகள் இருப்பார்கள். படித்த பாடத்தை நினைவில் வைத்துக்கொள்வதற்காக மீண்டும் மீண்டும் படித்துக் களைப்பாகிவிடுவார்கள். இதுபோன்ற நேரத்தில் அவர்களுக்கு ஆரோக்கியமான உணவு வகைகளை அளிப்பது அவசியம். தேர்வு நேரத்தில் மூளையும் உடலும் சுறுசுறுப்பாக இருக்கவும் நினைவாற்றல் பெருகவும் சத்தான உணவு வகைகள் சிலவற்றைச் செய்யக் கற்றுத்தருகிறார் சென்னை நொளம்பூரைச் சேர்ந்த ர.கிருஷ்ணவேணி.\nதனியா, சீரகம் – தலா 2 டீஸ்பூன்\nஇஞ்சி – சிறு துண்டு\nமிளகு – கால் டீஸ்பூன்\nஎலுமிச்சைச் சாறு – 1 டீஸ்பூன்\nநறுக்கிய பூண்டு – 1 டீஸ்பூன்\nநெய் – அரை டீஸ்பூன்\nதனியாவையும் சீரகத்தையும் சிறிது நேரம் ஊறவைத்து, இவற்றுடன் இஞ்சி, மிளகு இரண்டையும் சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள். அரைத்த கலவையுடன் சிறிதளவு உப்பைச் சேர்த்து இரண்டு கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வையுங்கள். நன்றாகக் கொதித்ததும் அடுப்பை அணைத்துவிட்டு சூப்பை வடிகட்டுங்கள். அதனுடன் எலுமிச்சைச் சாறு, நெய்யில் வதக்கிய பூண்டு இரண்டையும் சேர்த்துச் சூடாகப் பரிமாறுங்கள். இரவில் நீண்ட நேரம் கண் விழித்துப் படிப்பதால் உண்டாகும் பித்தத்தை இந்த சூப் குறைக்கும்.\nசெம்ம ருசி: மணமணக்கும் மட்டன் ஈரல் வறுவல்\nசமையலறைசமையல் குறிப்புதலைவாழைசமையல் டிப்ஸ்துரித உணவுஆரோக்ய உணவுதேர்வு நேரச் சத்துணவு தனியா சூப்\nநந்திகிராமில் தோற்ற மம்தா பானர்ஜி முதல்வர் பதவியில்...\nபிரதமருக்கு வீடு கட்டச் செலவிடும் ரூ.13,450 கோடியில்...\nபிரசாந்தும் சுனிலும்: இரு பிரச்சாரக் கதைகள்\nதிமுக வெற்றியின் முக்கியத்துவம் என்ன\nஅம்மா உணவகம் சூறை; டிடிவி, ஜெயக்குமார் கண்டனம்:...\nமேற்கு வங்கத்தில் பாஜகவை வீழ்த்திய மம்தா: வெற்றிப்...\nமோடி ஒன்றும் வெல்ல முடியாதவர் அல்ல\nநல் ஆரோக்கியம் பேண நாள்தோறும் ஒரு கீரை\nகெட்டக் கொழுப்பை கரைக்கும் வெந்தயம்\nகொண்டைக் கடலை சாப்பிடுங்க உடம்பை புஷ்டியா வைச்சுக்கோங்க\nதலைவாழை: வீட்டிலேயே சத்துணவு படைக்கலாம் - ராகி மசாலா இட்லி\nஸ்நேகலதா ரெட்டி: அதிகாரத்துக்கு அடிபணியாத துணிவு\nமுகங்கள்: ஒரு கதை கேட்கலாமா\nமுகங்கள்: வாட்ஸ்-அப் மூலம் வளரும் வியாபாரம்\nஇயக்குநராக அறிமுகமாகும் போஸ் வெங்கட்\nஇம்ரான் கான் புகைப்படம் மறைப்பு: எதிர்ப்ப��க் காட்டிய மும்பை கிரிக்கெட் கிளப் ஆப்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/world-women-t-20-india-beat-17-runs-world-no-1-australia/", "date_download": "2021-05-07T00:55:27Z", "digest": "sha1:N3GACY75FNLCSFR7BWNKD2VGSNBVGECK", "length": 22051, "nlines": 151, "source_domain": "www.patrikai.com", "title": "உலக பெண்கள் டி 20 போட்டி: நம்பர் 1 ஆஸ்திரேலியாவை 17 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா – Patrikai – Tamil Daily – latest online local breaking news & reviews – Tamilnadu, India & World – politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nஉலக பெண்கள் டி 20 போட்டி: நம்பர் 1 ஆஸ்திரேலியாவை 17 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா\nஉலக பெண்கள் டி 20 போட்டி: நம்பர் 1 ஆஸ்திரேலியாவை 17 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா\nஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலக பெண்கள் டி 20 போட்டியில் உலக நம்பர் 1 ஆஸ்திரேலிய அணியை இந்திய பெண் அணி வீழ்த்தி சாதனை படைத்தது. இந்திய பந்துவீச்சாளர் பூனம் யாதவ்-ன் அதிரடியான பந்துவீச்சில் ஆஸ்திரேய அணி சுருண்டது.\nபெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் இன்று தொடங்கி அடுத்த மாதம் 8ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டிகளில் 10 நாடுகளைச்சேர்ந்த பெண்கள் அணி பங்கேற்கிறது. இந்த போட்டிகள் பிரிவு ஏ, பிரிவு பி என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நடத்தப்படுகிறது.\n‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியான ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, இலங்கை, வங்காளதேசம் அணிகள் இடம்பெற்றுள்ளன.\n‘பி’ பிரிவில் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், தாய்லாந்து ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.\nஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரண்டு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.\nஇந்த போட்டிகள் ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்டி மைதானம் உள்பட 6 மைதானங்களில் நடைபெறுகிறது. இன்று முதல் போட்டி சிட்னி மைதானத்தில் தொடங்குகின்றன. முதல்போட்டியே, இந்தியாவுக்கும், ஆஸ்திரேலியாவும் இடையே ��டைபெற்றது.\nஇன்றைய போட்டி, இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கியது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதன் காரணமாக இந்திய அணி மட்டையுடன் களத்தில் குதித்தது.\nஇந்திய அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக, ஷஃபாலி வர்மாவும், வந்தனாவும் களமிறங்கினர். நிதானமாகவும் சிறப்பாகவும் இருவரும் விளையாடி வந்த நிலையில், 4 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 40 ரன்கள் எடுத்திருந்தது. ஆனால், 5வது ஓவரில் இருந்து சொதப்பல் தொடங்கியது.\nமந்தனா 2 ஃபோர் எடுத்திருந்த நிலையில் 10 பந்துகளுக்கு மொத்தம் 11 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். அதைத்தொர்ந்து அடுத்த ஓவரில் தனது 29வது ரன்னில் ஷஃபாலி வர்மா வெளியேறினார். தொடர்ந்து களமிறங்கிய கவுர் 2 ரன்னில் ஆட்டமிழக்க இந்திய அணியின் தடுமாற்றம் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\n10ஓவர் முடிவில் இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு 63 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதையடுத்து ஆட்டம் மீண்டும் சூடுபிடிக்கும் என எதிர்பார்த்த நிலையிலும், அடுத்த 6 ஓவர்களில் ஒரு பவுண்டரி மட்டுமெ எடுத்து சோகத்தை ஏற்படுத்தியது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்து வந்தனர். இந்த நிலையில், ரோட்ரிகஸ் தனது 26 வது ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், 20 ஓவருக்கு 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 132 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. தீப்தி சர்மா, 46 பந்துகளில் 49 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்து வந்தார்.\nஇதையடுத்து 133 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி ஆர்ப்பாட்டமாக களத்தில் புகுந்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஜே ஹீலியும், பிஎல்மூனியும் களமிறங்கினர். ஆனால், இந்திய அணியைச்சேர்ந்த பூனம் யாதவ் மற்றும் கயாக்வாட் பான்டேவின் பந்துக்களை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறினர். 6வது ஓவரில் 33 ரன்கள் எடுத்திருந்த நிலையில், முதலி விக்கெட் விழுந்தது. அதையடுத்து, லேனிங் களமிறங்கினார். இந்த நிலையில், பூனம் யாதவின் பந்தில் ஹீலியை 51 ரன்னில் வெளியேற ஆஸ்திரேலிய அணி பதற்றம் அடைந்தது. 10 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி, 3 விக்கெட் இழப்புக்கு 63 ரன்கள் எடுத்தது.\nஇதையடுத்து ஆட்டம் மீண்டும் தீவிரம் அடைந்தது. அதேவேளையில் இந்திய பந்து வீச்சாளர் பூனம் யாதவ்-ன் பந்து வீச்சும் அனாயசமாக இருந்தது. ஆட்டத்தின் போக்கே மாறத்தொடங்கியது. பூனம் பந்தில் அடுத்தடுத்து ஹேன்ஸ், பெர்ரி வெளியேற ஆஸ்திரேலிய அணி ரசிகர்கள் சோர்வடைந்தனர். இந்த நிலையில், தனது 3வது ஓவரில் பூனம் மேலும் ஒரு விக்கெட்டை சாய்க்க ஆட்டம் ஆஸ்திரேலிய அணி நிலைகுலைந்தது.\nஇறுதியில் 19.5 ஓவர்களில் 115 ரன்களுக்கு ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் இந்திய அணி, 17 ரன்கள் வித்தியாசத்தில் டி20 உலகக் கோப்பையின் முதல் ஆட்டத்தில் வெற்றியடைந்துள்ளது.\nபூணம் யாதவ் 4 விக்கெட்டுகளும் ஷிகா பாண்டே 3 விக்கெட்டுகளும் வீழ்த்தி சாதனை படைத்தனர்.\nஇந்த போட்டியில், உலக சாம்பியனான ஆஸ்திரேலியாவை 17 ரன் வித்தியாசத்தில் ஹர்மன்பிரீத் தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இது இந்திய ரசிகர்களிடையே பெரும் வரவேற்பையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.\nபோட்டிக்கான வீராங்கனைகள் விவரம் :-\nஇந்தியா: ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), மந்தனா, தனியா பாட்டியா, வேதா கிருஷ்ணமூர்த்தி, ஹர்லீன் தியோல், ராஜேஸ்வரி கெய்க்வாட், ரிச்சா கோஷ், ஷிகா பாண்டே, அருந்ததி ரெட்டி, ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி ஷர்மா, பூஜா வஸ்ட்ராகர், ஷபாலி வர்மா, பூனம் யாதவ், ராதா யாதவ்.\nஆஸ்திரேலியா: மெக் லானிங் (கேப்டன்), எரின் பர்ன்ஸ், நிகோலா கேரி, ஆஷ்லி கார்ட்னெர், ராச்சல் ஹெய்ன்ஸ், அலிசா ஹீலி, ஜெஸ் ஜோனசென், டெலிசா கிம்மின்ஸ், சோபி மோலினெக்ஸ், பெத் மூனி, எலிசி பெர்ரி, மேகன் ஸ்கட், அனபெல் சுதர்லாண்ட், விலாமின்க், ஜார்ஜியா வாரஹம்.\nஉலக கோப்பை கபடி: அரை இறுதியில் இந்திய அணி ஐபிஎல் ப்ளேஆஃப்: மே8ந்தேதி பெண்கள் டி20 போட்டி நேரம் மாற்றம் ஐபிஎல் ப்ளேஆஃப்: மே8ந்தேதி பெண்கள் டி20 போட்டி நேரம் மாற்றம் தென் ஆப்பிரிக்க-மேற்கு இந்திய தீவுகள் ஆட்டம் மழையால் ரத்து: தலா ஒரு புள்ளி தரப்பட்டது\nTags: T20 World Cup, women's T20, World Cup:, உலக கோப்பை கிரிக்கெட், டி20 உலக கோப்பை, பெண்கள் 20 ஓவர்\nPrevious டோக்கியோவில் கொரோனா: ஒலிம்பிக் போட்டியை லண்டனுக்கு மாற்ற திட்டமா\nNext நியூசிலாந்துக்கெதிரான முதல் டெஸ்ட் – தடுமாறும் இந்திய அணி\nஐபிஎல் ரத்து எதிரொலி: சிஎஸ்கே வீரர்களை பத்திரமாக அனுப்பி வைத்த தோனி இன்று சொந்தஊருக்கு புறப்படுகிறார்…\nஐபிஎல் ரத்து: உடனடியாக நாடு திரும்பிய இங்கிலாந்து வீரர்கள் – ஆஸ்திரேலியர்களுக்கு வேறு திட்டம்\nஐபிஎல் தொட���் ஒத்திவைப்பால் டி-20 உலகக்கோப்பை அமீரகத்திற்கு மாற அதிக வாய்ப்பு\nஅடுத்த 17 நாட்கள் ஒவ்வொரு வீட்டிலும் பின்பற்ற வேண்டிய கட்டாய விதி\nஅடுத்த 17 நாட்கள் ஒவ்வொரு வீட்டிலும் பின்பற்ற வேண்டிய கட்டாய விதி – நெட்டிசன் பதிவு கொரோனா கட்டுப்பாடு குறித்து வலைத் தளங்களில்…\nஇன்று ஆந்திரப் பிரதேசத்தில் 21,954 கர்நாடகாவில் 49,058 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 21,954 கர்நாடகாவில் 49,058 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 49,058…\nநாளைக்குள் தமிழகத்துக்குத் தேவையான ஆக்சிஜன் வழங்குவதை உறுதி செய்ய மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\nசென்னை நாளைக்குள் தமிழகத்துக்குத் தேவையான ஆக்சிஜன் வழங்குவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது….\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் –06/05/2021\nசென்னை தமிழகத்தில் இன்றைய (06/05/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 24,898 பேருக்குப் பாதிப்பு…\nசென்னையில் இன்று 6,678 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 6,678 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 33,316 ஆகி உள்ளது இன்று சென்னையில்…\nதமிழகத்தில் இன்று 24,898 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 24,898 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 12,97,500 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 1,31,468…\nஅதிமுக எம்.எல்.ஏ. விஜய பாஸ்கருக்கு கொரோனா\n7 hours ago ரேவ்ஸ்ரீ\nதனி தகவல் தொடர்பு தளத்தை தொடங்கிய டிரம்ப்\n7 hours ago ரேவ்ஸ்ரீ\nஐபிஎல் தொடரை நடத்தி முடிக்காவிட்டால் 2500 ரூபாய் கோடி இழப்பு ஏற்படும் – கங்குலி\n7 hours ago ரேவ்ஸ்ரீ\nகளை எடுப்போம்: – கமல் டுவிட்\n7 hours ago ரேவ்ஸ்ரீ\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை\n7 hours ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vativamaippu.com/?D=98029&P=6", "date_download": "2021-05-07T00:32:08Z", "digest": "sha1:XR5NC3I6ATXYCYCA2NCCXGIAUEYQE4FR", "length": 7021, "nlines": 62, "source_domain": "www.vativamaippu.com", "title": " Medieval Rethink இடைக்கால மறுபரிசீலனை கலாச்சார மையம் - வடிவமைப்பு இதழ்", "raw_content": "\nஇடைக்கால மறுபரிசீலனை கலாச்சார மையம்\nசெவ்வாய் 6 ஏப்ரல் 2021\nஇடைக்கால மறுபரிசீலனை கலாச்சார மையம் குவாங்டாங் மாகாணத்தில் வெளியிடப்படாத ஒரு சிறிய கிராமத்திற்கு ஒரு கலாச்சார மையத்தை கட்ட ஒரு தனியார் கமிஷனுக்கு இடைக்கால ரீதிங்க் பதிலளித்தது, இது பாடல் வம்சத்திற்கு 900 ஆண்டுகளுக்கு முற்பட்டது. நான்கு மாடி, 7000 சதுர மீட்டர் வளர்ச்சி கிராமத்தின் தோற்றத்தின் அடையாளமான டிங் குய் ஸ்டோன் எனப்படும் ஒரு பழங்கால பாறை உருவாக்கத்தை மையமாகக் கொண்டுள்ளது. திட்டத்தின் வடிவமைப்பு கருத்து பண்டைய கிராமத்தின் வரலாறு மற்றும் கலாச்சாரத்தை காண்பிப்பதை அடிப்படையாகக் கொண்டது, அதே நேரத்தில் பழைய மற்றும் புதியவற்றை இணைக்கிறது. கலாச்சார மையம் ஒரு பண்டைய கிராமத்தின் மறு விளக்கமாகவும் சமகால கட்டிடக்கலைக்கு மாற்றமாகவும் நிற்கிறது.\nதிட்டத்தின் பெயர் : Medieval Rethink, வடிவமைப்பாளர்களின் பெயர் : QUAD studio, வாடிக்கையாளரின் பெயர் : QUAD studio.\nஇந்த அற்புதமான வடிவமைப்பு ஃபேஷன், ஆடை மற்றும் ஆடை வடிவமைப்பு போட்டியில் வெள்ளி வடிவமைப்பு விருதை வென்றது.\tபல புதிய, புதுமையான, அசல் மற்றும் ஆக்கபூர்வமான பேஷன், ஆடை மற்றும் ஆடை வடிவமைப்பு படைப்புகளைக் கண்டறிய வெள்ளி விருது பெற்ற வடிவமைப்பாளர்களின் வடிவமைப்பு இலாகாவை நீங்கள் நிச்சயமாகப் பார்க்க வேண்டும்.\nஇந்த வடிவமைப்பைப் பற்றி மேலும் அறிக\nஇடைக்கால மறுபரிசீலனை கலாச்சார மையம்\nகட்டிடக்கலை, கட்டிடம் மற்றும் கட்டமைப்பு வடிவமைப்பு\nஇந்த வடிவமைப்பைப் பற்றி மேலும் அறிக\nThe Float ரியல் எஸ்டேட் நிறுவனம் வியாழன் 6 மே\nOr2 ஃபோட்டோக்ரோமிக் விதான அமைப்பு புதன் 5 மே\nEye of Ra' பொது நகர்ப்புற கலை தளபாடங்கள் செவ்வாய் 4 மே\nநீங்கள் ஒரு வடிவமைப்பாளர், கலைஞர், கட்டிடக் கலைஞர், புதுமைப்பித்தன் அல்லது பிராண்ட் மேலாளரா பகிர்வதற்கு உங்களிடம் ஏதேனும் நல்ல வடிவமைப்புகள் உள்ளதா பகிர்வதற்கு உங்களிடம் ஏதேனும் நல்ல வடிவமைப்புகள் உள்ளதா உலகளவில் வடிவமைப்பாளர்கள், கலைஞர்கள், கட்டட வடிவமைப்பாளர்கள், கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் பிராண்டுகளிலிருந்து அசல் மற்றும் ஆக்கபூர்வமான வடிவமைப்புகளை வெளியிடுவதில் நாங்கள் மிகவும் ஆர்வமாக உள்ளோம். உங்கள் வடிவமைப்புகளை இன்று வெளியிடவும்.\nஅன்றைய வடிவமைப்பு நேர்காணல் வியாழன் 6 மே\nஅன்றைய வடிவமைப்பு புராணக்கதை புதன் 5 மே\nஅன்றைய வடிவமைப்பு செவ்வாய் 4 மே\nஅன்றைய வடிவமைப்பாள���் திங்கள் 3 மே\nஅன்றைய வடிவமைப்பு குழு ஞாயிறு 2 மே\nஇடைக்கால மறுபரிசீலனை கலாச்சார மையம் QUAD studio Medieval Rethink\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/21593", "date_download": "2021-05-07T00:16:59Z", "digest": "sha1:JWZEP47KJOCQRRWQVWEG6FXOIQLXETOK", "length": 11845, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "பேர்பேச்சுவல் நிறுவனத்துக்கு மத்திய வங்கி தடை | Virakesari.lk", "raw_content": "\nநாளொன்றுக்கு 2 ஆயிரத்தை விட அதிக தொற்றாளர்கள் இனங்காணப்படலாம் : எச்சரிக்கிறது தொற்று நோயியல் பிரிவு\nபிழையான எண்ணங்களை மக்கள் மயப்படுத்த எதிக்கட்சி முயற்சி - மதுர விதானகே\nகிளிநொச்சியில் புதிய கொரோனா சிகிச்சை நிலையம் - நள்ளிரவு முதல் சேவைகள் ஆரம்பம்\nமஹரகம நகரசபைக் கூட்டத்தில் மோதல் - விசாரணைகள் ஆரம்பம்\nதனியார் வங்கி உதவி முகாமையாளருக்கு கொரோனா தொற்று ; வங்கிக்கு பூட்டு\nஜம்மு-காஷ்மீரில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை\nகொரோனாவால் இலங்கையில் கர்ப்பிணித் தாய் பலி\n இனங்காணப்படும் தொற்றாளர்களை விட இருமடங்கு தொற்றாளர்கள் சமூகத்தில் \nதம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தை மீண்டும் திறக்க தீர்மானம்\nபேர்பேச்சுவல் நிறுவனத்துக்கு மத்திய வங்கி தடை\nபேர்பேச்சுவல் நிறுவனத்துக்கு மத்திய வங்கி தடை\nபேர்­பேச்­சுவல் ட்ரேசரிஸ் நிறு­வ­னத்தை தமது கொடுக்கல் வாங்கல் நடவடிக் கைகளிலிருந்து இலங்கை மத்­திய வங்­கியின் திறை­சேரி தற்­கா­லி­க­மாக தடை செய்­துள்­ளது. மத்­திய வங்­கியின் நிதிச் சபையே இந்த தீர்­மா­னத்தை நேற்று அறி­வித்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.\nஅதன் பிர­காரம் எதிர்வரு­ம் ஆறு மாதங்­க­ளுக்கு வர்த்­தக நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ளல் உள்­ளிட்ட பொரு­ளா­தாரம் சார்ந்த செயற்­பா­டு­க­ளுக்கு அந்த நிறுவனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.\nபேர்­பேச்­சுவல் ட்ரேசரிஸ் திறைசேரி தடை கொடுக்கல் வாங்கல் இலங்கை மத்திய வங்கி\nநாளொன்றுக்கு 2 ஆயிரத்தை விட அதிக தொற்றாளர்கள் இனங்காணப்படலாம் : எச்சரிக்கிறது தொற்று நோயியல் பிரிவு\nநாட்டில் நாளொன்றில் இனங்காணப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கை எதிர்வரும் நாட்களில் 2000 ஐ விட அதிகரிக்கக் கூடும் என்று சுகாதார தரப்பினர் எச்சரித்துள்ளனர். தற்போது நாடளாவிய அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றமையால் மாவட்டங்களிலுள் வைத்தியசாலைகளிலும் கொவிட் தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான பிரிவுகளை பிரத்தியேகமாக ஒதுக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதே வேளை மேல் மாகாணத்தில் மாத்திரம் நாளொன்றுக்கு சுமார் 1200 தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றனர்.\n2021-05-06 22:40:35 2000 தொற்றாளர்கள் இனங்காணல் எச்சரிக்கை\nபிழையான எண்ணங்களை மக்கள் மயப்படுத்த எதிக்கட்சி முயற்சி - மதுர விதானகே\nகொவிட்-19 வைரஸ் பரவல் காரணமாக பாதிப்படைந்துள்ள மக்களை காப்பாற்றுவதுடன் , வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கு அரசாங்கம் முயற்சிகளை எடுத்து வரும் நிலையில், எதிர்தரப்பினர் தங்களுக்கு கிடைக்கப் பெற்றுள்ள பாராளுமன்ற உறுப்புரிமையை பயன்படுத்தி பிழையான எண்ணங்களை மக்கள் மயப்படுத்த முயற்சித்து வருவதாக ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே குற்றஞ்சாட்டினார்.\n2021-05-06 22:36:58 பிழையான எண்ணங்கள் மக்கள் மயப்படுத்தல் எதிக்கட்சி\nகிளிநொச்சியில் புதிய கொரோனா சிகிச்சை நிலையம் - நள்ளிரவு முதல் சேவைகள் ஆரம்பம்\nகிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் புதிய கொவிட் 19 மருத்துவ நிலையத்தில் இன்று நள்ளிரவு முதல் சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பிரிவு தெரிவிக்கின்றது.\n2021-05-06 22:36:36 கிளிநொச்சி கொரோனா சிகிச்சை நிலையம் நள்ளிரவு\nமஹரகம நகரசபைக் கூட்டத்தில் மோதல் - விசாரணைகள் ஆரம்பம்\nமஹரகம நகரசபையில் இடம்பெற்றதாக கூறப்படும் மோதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக மாஹரகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.\n2021-05-06 22:35:00 மஹரகம நகரசபை கூட்டம் மோதல் விசாரணைகள் ஆரம்பம்\nதனியார் வங்கி உதவி முகாமையாளருக்கு கொரோனா தொற்று ; வங்கிக்கு பூட்டு\nகோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவுக்குட்பட்ட தனியார் வங்கி ஒன்றின் உதவி முகாமையாளருக்கு கொரோனா தொற்று இருப்பதாக இன்று (6) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\n2021-05-06 21:00:35 தனியார் வங்கி உதவி முகாமையாளர் கொரோனா தொற்று வங்கி\nஇலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து மேலும் 810 பேர் குணமடைவு..\nபணவீக்கம் ஏப்ரலில் 3.9 சதவீதமாக வீழ்ச்சி: இலங்கை மத்திய வங்கி\nவிலை அதிகரிப்பிற்கு அனுமதியில்லையேல் தட்டுப்பாடு ஏற்படலாம்: லாப் கேஸ் நிறுவனம்\nஸ்புட்னிக் கொரோனா தடுப்பூ���ி போடும் பணி ஆரம்பம்\nகளுத்துறை சிறைச்சாலைக்குள் போதைப்பொருட்கள் அடங்கிய பொதிகள் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newneervely.com/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE", "date_download": "2021-05-07T01:36:18Z", "digest": "sha1:ZIER2BY6NKM2545G7OIHPKSSTKYEF7Q6", "length": 5596, "nlines": 87, "source_domain": "newneervely.com", "title": "அழகிய சித்திரத்தேர் ஆலயம் வந்தடைந்தது. | நீர்வேலி", "raw_content": "10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..\nநீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது\nஅழகிய சித்திரத்தேர் ஆலயம் வந்தடைந்தது.\nநீர்வேலி செல்லக்கதிர்காமப்பெருமான் கோவிலுக்கு அழகிய புதிய சித்திரத்தேர் செய்யப்பட்டு திருப்பணி வேலைகள் இடம்பெற்ற தற்காலிக இருப்பிடத்தில் இருந்து இன்று காலை 7 மணிக்கு கோவிலுக்கு அடியார்கள் வடம்பிடித்திடித்து இழுத்துச் சென்றனர்..இத்தேரினை நீர்வேலி குறுக்குவீதி காளிகோவில்வீதி கதிர்காமகோவில்வீதி வழியாக ஆலயத்திற்கு இழுத்து செல்லும் போது உயரத்தில் இடஞ்சலாய் இருந்த போது மின்வயர்கள் தொலைபேசி வயர்கள் என்பனவற்றை உயர்த்தி உதவி செய்த மின்சார சபையினருக்கும் தொலைத்தொடர்வு நிறுவன ஊழியர்களும் பாராட்டுக்குரியவர்கள்.வெள்ளேட்ட நிகழ்வு ‪எதிர்வரும் 29 ஆம் திகதி திங்கட்கிழமை இடம்பெறவுள்ளது.\nஅத்தியார் இந்துக்கல்லூரிக்கு 5 இலட்சம் ரூபா செலவில் புதிய சைக்கிள் கொட்டகை »\n« திராவிட மரபுச் சிற்பச் சித்திரத்தேரின் வெள்ளோட்ட விழா\nஇது எமது ஊர். இங்கு பிறந்ததினால் நாம் பெருமையடைகிறோம். நீர்வேலியின் சிறப்பையும் வனப்பையும் எங்கு சென்றாலும் மறவோம். எமதூரைப் போற்றுவோம்.\nநீர்வேலி நலன்புரிச் சங்கம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/topics/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF", "date_download": "2021-05-07T00:05:06Z", "digest": "sha1:GMYHTXYZAB23OTNIHY7TGUH2WVGZCBD7", "length": 3857, "nlines": 51, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "சத்தான-ரெசிபி | Tamil News Online | Latest Tamil News on The Subeditor - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nசத்தான முளைக்கட்டிய பச்சை பயறு சாலட் ரெசிபி\nஉடலுக்கு சத்துத் தரும் முளைக்கட்டிய பச்சை பயறு சாலட் எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்..\nசத்தான மற்றும் சுவையான தினை பிசிபெலாபாத் ரெசிபி\nஉடலுக்கு சத்துத்தரும் தினையைக் கொண்டு பிசிபெலாபாத் எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்..\nசத்தான பீட்ரூட் தோசை ரெசிபி\nகுழந்தைகளுக்கு சத்தான பீட்ரூட் தோசை செய்துக் கொடுங்க.. சரி பீட்ரூட் தோசை எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்..\nசத்தான முருங்கைக்கீரை சாம்பார் ரெசிபி\nசத்து நிறைந்த முருங்கைக்கீரையைக் கொண்டு சாம்பார் எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்.\nசத்தான கொள்ளு சட்னி ரெசிபி\nஉடல் எடையை குறைக்க உதவும் கொள்ளு சட்னி எப்படி செய்வதென்று இப்போ பார்க்கலாம்..\nசத்தான உருளை - பச்சைப்பயிறு குழம்பு ரெசிபி\nஉடலுக்கு மிகவும் சத்துத் தரும், உருளை பச்சைப்பயிறு குழம்பு எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilkilavan.com/tag/%E0%AE%88%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-05-07T01:05:11Z", "digest": "sha1:PNESB3KXDEIQ4GJ77SRDIME6JVT4YDQV", "length": 2273, "nlines": 51, "source_domain": "tamilkilavan.com", "title": "ஈறுகள் Archives | Tamil Kilavan", "raw_content": "\nசில நிமிடங்களில், உங்கள் தலையில் உள்ள ஈறுகள் மற்றும் முட்டைகளை நீங்க\nசில நிமிடங்களில், உங்கள் தலையில் உள்ள ஈறுகள் மற்றும் முட்டைகளை நீங்க\nகடையில் முட்டை வாங்கறதுக்கு முன்னாடி இந்த வீடியோ பாருங்க\n2 முட்டை இருக்கா வீட்டில் உள்ள அனைவருக்கும் கிரிஸ்பியான ஈவினிங் ஸ்நாக்ஸ் ரெடி.\nமுட்டை சுக்கா லஞ்சுக்கு பக்காவான சைடிஷ் 10 நிமிடத்தில் இப்படி சுவையா செய்து கொடுத்து அசத்துங்க.\nபல கோடி சொத்துக்கு சொந்தக்காரி ஒரு வேலை சோற்றுக்காக வீட்டு வேலை செய்து பிழைக்கும் அவலம்\n20 ஆயிரம் வருடங்களுக்கு முன் மூழ்கிப்போன தமிழனின் வரலாறு.. தற்போது மெல்ல மெல்ல மிதந்து வருகிறது.. தற்போது மெல்ல மெல்ல மிதந்து வருகிறது.. ஒவ்வொரு தமிழனும் உலகத்துக்கு அறிய நண்பர்களுடன் பகிருங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2021/04/12112019/Vijay-Sethupathi-in-controversy-for-not-wearing-a.vpf", "date_download": "2021-05-07T00:28:34Z", "digest": "sha1:N64L6BRKRSJOJXLMXXDTR2EDDRVPMTXL", "length": 11036, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Vijay Sethupathi in controversy for not wearing a mask || முககவசம் அணியாததால் சர்ச்சையில் விஜய் சேதுபதி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் முடிவுகள் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nமுககவசம் அணியாததால் சர்ச்சையில் விஜய் சேதுபதி\nகொரோனா 2-வது அலை தீவிரமாகி உள்ளதால் அனைவரும் கட்டாயம் முககவசம் அணியவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் தியேட்டர்களில் ஒரு இருக்கை விட்டு இருக்கை பார்வையாளர்களை அமர வைக்கவும் அரசு அறிவுறுத்தி உள்ளது.\nமுககவசம் அணியாதவர்களுக்கு அபராதமும் விதிக்கப்படுகிறது. இந்த நிலையில் கொரோனா விதிமுறைகளை விஜய்சேதுபதி மீறி விட்டதாக விமர்சனங்கள் கிளம்பி உள்ளன. தனுஷ் நடித்துள்ள கர்ணன் படத்தின் சிறப்பு காட்சி நடிகர் நடிகைகள், இயக்குனர்கள் உள்ளிட்ட திரையுலகினருக்காக சென்னையில் உள்ள தியேட்டரில் திரையிட்டு காண்பிக்கப்பட்டது. இந்த படத்தை பார்த்து விட்டு வெளியே வந்த விஜய்சேதுபதி படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ் கையை பிடித்தபடி படம் நன்றாக இருப்பதாக பாராட்டினார். அவரை கட்டிப்பிடித்து கைகளை முத்தமிடவும் செய்தார். அப்போது விஜய்சேதுபதி முககவசம் அணிந்திருக்கவில்லை. இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. விஜய்சேதுபதி முககவசம் அணியாமல், சமூக விலகலை கடைபிடிக்காமல் மாரி செல்வராஜை கட்டிப்பிடித்து முத்தமிட்டு கொரோனா விதிமுறைகளை மீறி இருக்கிறார். விஜய்சேதுபதியே இப்படி செய்யலாமா உங்களை பார்த்து ரசிகர்களும் இப்படித்தானே செய்வார்கள் என்று கண்டித்தும், விமர்சித்தும் பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள். இந்த பிரச்சினை வலைத்தளத்தில் பரபரப்பாகி உள்ளது.\n1. விஜய் சேதுபதி காட்டம்\nநடிகர் விஜய்சேதுபதி ஓட்டு போட்டு விட்டு நிருபர்களிடம் கூறும்போது, “நான் ஓட்டு போட்டு இருக்கிறேன். வாழ்க ஜனநாயகம். நன்றி'' என்றார்.\n2. ‘துக்ளக் தர்பார்' படத்தை எதிர்ப்பதா\nவிஜய்சேதுபதி. பார்த்திபன், மஞ்சிமா மோகன், ராஷி கண்ணா ஆகியோர் நடித்துள்ள துக்ளக் தர்பார் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது.\n3. பிறந்த நாள் கொண்டாட்டத்தால் உருவான சர்ச்சை: விஜய் சேதுபதி வருத்தம்\nபிறந்த நாள் கேக்கினை பட்டாக் கத்தியால் விஜய் சேதுபதி வெட்டுவது போன்று புகைப்படம் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது.\n4. 'மாஸ்டர்' படப்பிடிப்பின்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை டுவிட்டரில் பகிர்ந்த விஜய் சேதுபதி\n'மாஸ்டர்' படப்பிடிப்ப��ன்போது எடுத்துக்கொண்ட தனது புகைப்படங்களை நடிகர் விஜய் சேதுபதி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\n5. விஜய் சேதுபதி படம் ஓ.டி.டி.யில் ரிலீஸ்\nவிஜய் சேதுபதி படம் ஓ.டி.டி.யில் ரிலீசாக உள்ளது.\n1. ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் உயிரிழப்பது, இனப்படுகொலைக்கு சமம் - அலகாபாத் ஐகோர்ட் கண்டனம்\n1. விஜய்யின் 66-வது படம்\n2. ஓ.டி.டி. தளத்தில் விஜய் சேதுபதியின் மேலும் 2 படங்கள் ரிலீஸ்\n3. 'என்னடி முனியம்மா' பாடி பிரபலமான நடிகர் டி.கே.எஸ்.நடராஜன் மரணம்\n4. மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் பிரபு வாழ்த்து\n5. வலைத்தள போலி கணக்கு ரசிகர்களை எச்சரித்த நடிகர் யோகிபாபு\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2020/11/blog-post_176.html", "date_download": "2021-05-07T02:01:16Z", "digest": "sha1:6TIIYKFPWSNUQNWFUGYMDUSOVATBQMVB", "length": 10266, "nlines": 91, "source_domain": "www.yarlexpress.com", "title": "யாழ் மாவட்ட மக்கள் ஒழுக்கத்தில் சிறந்தவர்கள் - மாவட்ட கட்டளைத் தளபதி புகழாரம். \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nயாழ் மாவட்ட மக்கள் ஒழுக்கத்தில் சிறந்தவர்கள் - மாவட்ட கட்டளைத் தளபதி புகழாரம்.\nயாழ் மாவட்ட மக்கள் ஒழுக்கத்தில் சிறந்தவர்கள் என யாழ் மாவட்ட படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார தெரிவித்துள்ளார். தற்போதைய ய...\nயாழ் மாவட்ட மக்கள் ஒழுக்கத்தில் சிறந்தவர்கள் என யாழ் மாவட்ட படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார தெரிவித்துள்ளார்.\nதற்போதைய யாழ் மாவட்ட நிலைமை தொடர்பில் கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்\nநான் யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத்தளபதியாக யாழ்ப்பாணத்தில் கடமையினை பொறுப்பேற்று கடந்த மூன்று மாதங்கள் ஆகின்றன. நான் ஏனைய மாவட்டங்களிலும் ராணுவத்தில் கடமையாற்றியிருக்கின்றேன் ஏனைய மாவட்ட மக்களை விட யாழ்ப்பாணத்தை பொறுத்தவரை யாழ்ப்பாண மாவட்ட மக்கள் ஒழுக்கத்த��ல் சிறந்தவர்களாகவே நான் நேரடியாக பார்க்கின்றேன்.\nகுறிப்பாக தற்போதைய கொரோனா சூழ்நிலையில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு கோரிக்கை விடுக்கின்ற போது அதனை பின்பற்றி சுகாதார விதிகளை சரியாக கடைப்பிடித்து வீடுகளில் இருக்கின்றார்கள். இதை நான் பெருமையாக கூறிக் கொள்ள விரும்புகின்றேன். அத்தோடு யாழ் மாவட்ட மக்கள் குறித்த சுகாதார நடைமுறையை தொடர்ச்சியாக பேணுவதன் மூலம் உலக நாடுகளை அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ள கொரோனாவிலிருந்து எமது மாவட்டத்தினை காப்பாற்ற முடியும்.\nசுகாதார பிரிவினரால் வெளியிடப்பட்டுள்ள நடைமுறைகளை மக்கள் கடைப்பிடிப்பதனால் எமது மக்களையும் எமது பிரதேசத்தையும் காப்பாற்ற முடியும் .\nஎனவே யாழ்ப்பாண மக்கள் குறித்த சுகாதார நடைமுறையினை தற்போது நீங்கள் எவ்வாறு கடைப்பிடிக்கிறீர்களோ,அதனை தொடர்ச்சியாக பின்பற்றுவதன் மூலம் எமது பிரதேசம் கொரோனா தொற்றால் பாதிக்காத வண்ணம் பாதுகாத்துக் கொள்ள முடியும்.\nமேலும் தென்னிந்தியாவிலிருந்து வடபகுதிக்கு சட்டவிரோதமாக வருவோர் மற்றும் சட்டவிரோதமாக பொருட்களைக் கொண்டு வருவோர் தொடர்பிலும் யாழ்ப்பாண மாவட்டத்தின் கரையோரப் பகுதி மக்கள் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும் என யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி தெரிவித்தார்.\nவணிகம் / பொருளாதாரம் (7)\nமாநகர காவல்படையினரின் சீருடை பறிமுதல் - மாநகரசபைக்கு ஆப்பு வைத்த பொலீஸார் ..\nBREAKING NEWS :- ஊரடங்கு தொடர்பில் இராணுவத் தளபதி சற்றுமுன் வெளியிட்ட அறிவிப்பு\nஅத்தியாவசிய சேவைக்கு மாத்திரமே அனுமதி\nYarl Express: யாழ் மாவட்ட மக்கள் ஒழுக்கத்தில் சிறந்தவர்கள் - மாவட்ட கட்டளைத் தளபதி புகழாரம்.\nயாழ் மாவட்ட மக்கள் ஒழுக்கத்தில் சிறந்தவர்கள் - மாவட்ட கட்டளைத் தளபதி புகழாரம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2013/07/blog-post_6273.html", "date_download": "2021-05-07T01:18:32Z", "digest": "sha1:WBMENTXGOBDLN7ITGTLHKUCQMNBNKCH7", "length": 17823, "nlines": 264, "source_domain": "www.ttamil.com", "title": "சிந்தனைஒளி ~ Theebam.com", "raw_content": "\n# வாழ்வு சுவைக்க வேண்டுமா உங்கள் தேடல் தொடர வேண்டும்\n# உரிமையில்லாத பெண்ணையும் உடைமையில்லாத பொருளையும் தொடாதீர்கள்\n# இது கலியுகம் -நல்லவனாயிருந்தால் மட்டும் போதாது வாய் வல்லவனாயும் இருக்கணும்\n# பகை தெரிந்து கெடுக்கும் -உறவு தெரியாமல் கெடுக்கும்\n# சொத்து போனால் – ச���்பாதித்து கொள்ளலாம், உடல்கெட்டு போனால் – சரிசெய்து கொள்ளலாம், நம்பிக்கையற்று போனால் – ஒன்றும் செய்ய முடியாது\nகந்தையா தில்லைவிநாயகலிங்கம். Saturday, July 20, 2013\nஇப்படிதான் கலியுகத்தை கூறுகிறார்கள் :\n\"மக்கள், எளியவா்கள், ஆதரவற்றவா்கள், விதவைகள் முதலியவா்களுடைய பணத்தை அபகரித்துக் கொள்வார்கள்\nவியாபாரத்தில் கொள்வினை, கொடுப்பினை செய்யும்போது பேராசையின் காரணமாக ஏமாற்றுவார்கள்.\nஎல்லோரும் இயற்கையிலேயே கொடியவா்களாகவும், மற்றவா்கள் மேல் பழிபோடுபவா்களாகவும் இருப்பார்கள்.\nஎல்லோரும் பணத்தாசை ஒன்றே குறியாக இருப்பார்கள்.\nபெண்கள் கடினமானவா்களாகவும், கொடூரமானவா்களாகவும் இருப்பார்கள்.\n16 வயதுக்கள்ளேயே பெண்கள் தாயாராவார்கள். பெண்கள் பணத்தை அபகரித்துக் கொண்டு அந்நிய ஆடவருடன் கூடுவார்கள்.\nசரீரத்தை விற்கும் பெண்கள் அதிகரிப்பார்கள்.\nகலியில் மனிதா்கள் மோக வசப்பட்டு வேசிகளிடமும், பிறா் மனைவியிடமும் பிறர் பொருள்மீதும் ஆசை கொள்வார்கள்.\nஆடவா்கள் குறைவாகவும், பெண்கள் அதிகமாகவும் இருப்பார்கள்.\nமக்கள் தோட்டங்களையும், மரங்களையும் வெட்டி விடுவார்கள்.\nவேண்டாத சமயத்தில் மழை பொழியும்.\nகடும் மழையும் , பெரும் புயலும் கடும் வெயிலும் ஏற்படும்.\nகலியுகப் பிள்ளைகளும், பெண்களும் தாங்களே தோ்ந்து திருமணம் செய்து கொள்வார்கள்.\nபிராமணா், சஷத்திரியா், வைசிகா் முதலிய ஜாதியே இருக்க மாட்டாது. எல்லா ஜாதிகளும் ஒரே ஜாதியாகி விடும்.\nதெய்வங்களைப் பூசிக்க மாட்டார்கள். கோவில்களே இருக்காது.\"\nஇந்த கலியுகத்தில் தான் நாம் இப்ப இருக்கிறோம் என்கிறார்கள்.அப்படி என்றால் நாம் \"நல்லவனாயிருந்தால் மட்டும் போதாது வாய் வல்லவனாயும் இருக்கணும்\nஆனால் எனக்கு ஒரு ஐயம் இப்படியான இந்த கலியுகத்தில் \"உரிமையில்லாத பெண்ணையும் உடைமையில்லாத பொருளையும் தொடாதீர்கள் \" என்பது செல்லுபடி ஆகுமோ என்று \" என்பது செல்லுபடி ஆகுமோ என்று ஏன் என்றால் அறிவு, தியானம், தவம் என்பன சிறப்புப் பெற்றிருந்த கிருத(சத்திய)யுகத்திலே விஷ்ணுவே இதை கடைபிடிக்கவில்லை \nபத்மபுராணம் உத்தர காண்டம் 263 இல் ஞானி ஜலந்தரின் மனைவி பிருந்தா[துளசி] மீது ஆசைப்பட்ட விஷ்ணு கற்பை சூறையாட தீர்மானித்தார். அதன்படி அவளை ஏமாற்றி கற்பழித்தார்.\nஇதையடுத்து பிருந்தா[துளசி] கோபத்துடன் \" ஓ விஷ்ணு பிறர் மனைவியின் கற்பைக் குலைப்பது உனக்கு வெட்கமில்லையா பிறர் மனைவியின் கற்பைக் குலைப்பது உனக்கு வெட்கமில்லையா ஞானிபோல் தோற்றமளிக்கிறாய்; தூ, கடைகெட்ட குற்றவாளி\" என்று சபித்தாள்.\nஅப்ப இந்த கலியுகத்தில் இது செல்லுபடி ஆகுமோ என்று ஒரு ஐயம் ஆனால் ஒன்று உண்மை இந்த கலியுக, களவு மணம் செய்து கொள்ளும் ,எல்லா ஜாதிகளும் ஒரே ஜாதியாகி வாழும் ,தெய்வங்களைப் பூசிக்கும் மூட நம்பிக்கைகளை தவிர்த்து வாழும் சாதாரண மனிதன் ஒருவேளை இதை கடை பிடிக்கலாம் \nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nvideo:தமிழின் தொன்மையும் மாண்பும்- ...\nநரபலியைத் தூண்டிய மூடநம்பிக்கை விளம்பரங்கள்\nரெடி உணவுகளில் இருக்கும் சில ஆபத்துகள்\nஉணவுக்கு பின் குளிர்பானம் அருந்துவது சரியா\nசிங்கம் 2 வெற்றி பெற்றால் சிங்கம் 3 உறுதி – சூர்யா\nநவீன தொழில் நுட்பத்தில் விஸ்வரூபம் 2 படம்: கமலஹாசன...\nVIDEO: யாழ்மண்ணிலிருந்து.... ஒரு சோக கீதம்\nஉடல் வளர்ச்சிக்குப் பயன்படும் காளான்\nதொந்தி வயிறை தொலைக்க வேண்டுமா\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nதுவரம் பருப்புகளை சாப்பிடுவதால் தீரும் நோய்கள் என்ன தெரியுமா\nஉலகெங்கிலும் ஏராளமான பருப்பு வகை பயிர்கள் மனிதர்கள் உண்பதற்காக பயிரிடப்பட்டு வளர்க்கப்படுகின்றன. இந்தப் பருப்புகள் அனைத்துமே நமது உடல...\n🗺→ இன்றைய செய்திகள்- Tamil News Today\n💢💢💢💢💢💢💢 💢💢💢💢💢💢💢 முதலில் தலைப்பு செய்திகள்- 🎌மத்தள சர்வதேச விமான நிலையம் ,சுற்றுலா மையமாக மாறுகிறது 🎌...\nமனைவியை மீட்க மன்றாடிய கடவுள்\nஇராவணன் என்ற தீயவனிடமிருந்து தனது மனைவியை மீட்க அனைத்து ஆற்றலும் கைவரப்பெற்ற மனிதக் கடவுள் இராமன், ஹனுமான் என்ற குரங்குக்கடவுளிடம் கை...\nநடிகர் பிரஷாந்த் திரையில் காணாமல் போனதற்கு காரணம் என்ன\nநடிகர் பிரஷாந்த் தன் சக கால நடிகர்களான விஜய் , அஜித்தை விட தனி திறமைகள் அதிகம் கொண்டிருந்தும் , வேறு யாருக்கும் வாய்க்காத மி...\nவாழ்க்கைப் பயணத்தில் ...வருடல்கள் /பகுதி:04\nகதையாக..... [ஆரம்பத்திலிருந்து வாசிக்க கீழே செல்லுங்கள்] 👉 [பகுதி: 04] 👉 வருடங்கள் பல எப்படி ஓடியது என்று தெரியவில்லை. அதற்குள் என் குடும...\nசங்க கால இலக்கிய காதலர்கள்: ஆதிமந்தி-ஆட்டனத்தி\"-[ஆக்கம்:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]\nஉலகப் புகழ் பெற்ற காதலர்கள் ரோமியோ-ஜூலியட், சகுந்தலை-துஷ்யந்தன், லைலா-மஜ்னூன், மும்தாஜ்-ஷாஜஹான், கிளியோபட்ரா-மார்க்ஆண்டனி, அம்பிகாபதி-அ...\nகண்ணதாசன்-ஒரு கவிப்பேரரசு வரலாறு [இன்று நினைவுதினம்]\nகண்ணதாசன் ( ஜூன் 24 1927 – அக்டோபர் 17 1981 ) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார் . நான்காயிர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://discoverarchives.library.utoronto.ca/index.php/informationobject/browse?sortDir=asc&sf_culture=ta&view=card&sort=referenceCode&%3Bsort=relevance&%3Bcollection=&%3BtopLod=0&topLod=0", "date_download": "2021-05-07T02:22:11Z", "digest": "sha1:CESRLJHVSACR5PVIVGQSH6C3C2EBRYNE", "length": 13794, "nlines": 308, "source_domain": "discoverarchives.library.utoronto.ca", "title": "Discover Archives", "raw_content": "\nதனித்தன்மையான பதிவுருக்கள், 114484 முடிவுகள் 114484\nஆங்கிலம், 114484 முடிவுகள் 114484\nதமிழ், 665 முடிவுகள் 665\nஉருப்படி, 16679 முடிவுகள் 16679\nசேர்வு, 2204 முடிவுகள் 2204\nமுடிவுகளை [இதன்] உடன் கண்டுபிடி:\nமற்றும் அல்லது அல்ல உள் எப்புலமாயினும் தலைப்பு ஆவண வரலாறு நோக்கமும் உள்ளடக்கமும் அளவும் ஊடகமும் பொருட்துறை அணுக்க நுழைவாயில்கள் பெயர் அணுக்க நுழைவாயில்கள் இட அணுக்க நுழைவாயில்கள் வகைமை அணுக்க நுழைவாயில்கள் அடையாளம்காட்டி உசாத்துணைக் குறி எண்மப் பொருள் உரை உதவு கருவி உரை அடையாளம்காட்டி உசாத்துணைக் குறி எண்மப் பொருள் உரை உதவு கருவி உரை ஆக்குனர் உதவு கருவி உரை தவிர்ந்த எப்புலமாயினும்\nபுது கட்டளை விதியை இணை\nமுடிவுகளை [இதன்] படி வடிகட்டுக:\nஉதவு கருவி ஆம் இல்லை தோற்றுவிக்கப்பட்டது பதிவேற்றப்பட்டது\nஉயர்மட்ட விவரணங்கள் அனைத்து விவரிப்புகளும்\nதிகதி வரிசை/ ஒழுங்குப் படி வடிகட்டுக\n5432 results with digital objects முடிவுகளை எண்ணிமப் பொருட்களுடன் காண்பி\nமுடிவுகள் 1 இலிருந்து 50 இன் 114484 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2020/10/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-8/", "date_download": "2021-05-07T01:48:42Z", "digest": "sha1:FP6VQ4BYD4TSW6IWPLB4KHVSNASIJ7AT", "length": 13493, "nlines": 136, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nமகரிஷிகளின் அருள் சக்திகளை நமக்குள் அணுக்களாக உருவாக்கி ஞான சக்தியாக மாற்ற வேண்டும்\nமகரிஷிகளின் அருள் சக்திகளை நமக்குள் அணுக்களாக உருவாக்கி ஞான சக்தியாக மாற்ற வேண்டும்\nகல்வியில் சிறந்தவன் ஆனாலும் ஞானம் இல்லை என்றால் கல்விக்காக நாம் கொடுத்த செல்வம் பாழாகிவிடும்.\nஏனென்றால் கற்றவன் மற்றவர்களை ஏமாற்றும் நிலைகள் கொண்டு சாதுர்யமாகத் தன் தாய் தந்தையரையும் ஏமாற்றுவார்கள். மற்றவரை ஏமாற்றத்தான் இந்தக் கல்வி பயன்படுகின்றது.\nமற்றவரை வாழ வைக்க வேண்டும் என்ற ஞானங்கள் இந்தக் கல்வியில் வரவில்லை.\n1.இன்றைய கல்வியின் நிலைகள் பார்த்தோம் என்றால்\n2.தன் தாய் தந்தையரை ஏமாற்றிக் காசை வாங்கி\n3.ஞானத்தை பேசும் நிலைகள் கொண்ட குழந்தைகளும் நிறைய உண்டு.\nகுழந்தை நன்றாகப் படித்து மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று தாய் தந்தை நினைக்கின்றனர். ஆனால் காசை வாங்கிவிட்டு அங்கே தவறான வழிகளில் செலவழித்துவிட்டு\n1.நான் அதைச் செய்தேன் இதைச் செய்தேன் என்று பொய் பேசி\n2.இங்கே கல்வி கற்கும்போதே தவறான உணர்வுகள் வளர்த்துக் கொள்கின்றனர்.\nஅது மட்டுமல்லாது.. கல்வியில் மேற்படிப்புக்குச் செல்பவர்களை\n1.முதல் நாள் உள் புகும் மாணவனை முகப்பிலேயே ஆண்பால் ஆனாலும் பெண்பால் ஆனாலும்\n2.எவ்வளவு அசிங்கத்தை உருவாக்க முடியுமோ (ragging) அதைச் செய்து\n3.படிக்க வருபவர்களைத் தீமையின் உணர்வோடு ஒன்றி வரத் தான் செய்கின்றனர்.\nஇதையும் அனுமதிக்கின்றது அரசு. பல ஆசிரியர்களும் அனுமதிக்கின்றனர். ஆனால் நாட்டைக் காக்கவும் மனித பண்பைக் காக்கவும் தான் கல்வி…\nகல்வியில் மேற்படிப்பிற்குச் செல்லும்போது இப்படி அநாகரீக நிலைகளைச் செயல்படுத்துகிறார் என்றால் கல்வி கற்ற ஜட்ஜுகளோ கல்வி கற்ற வக்கீல்களோ இதற்கென்ற சட்டங்களை வைத்து நியாயத்தையும் தர்மத்தையும் வளர்க்கக்கூடிய நிலையில் இதை ஏன் ஒன்றுப்பட்டு நிறுத்த முடியவில்லை…\nஎதிர்கால மாணவ மாணவிகளை அசுத்த வழியில் செலுத்தினால் அவன் நாட்டைக் காப்பானா…\n1.அவன் சுதந்திரத்திற்கு நல்ல குணங்களை அழிப்பான்\n2.அவன் சுகத்திற்குத் தீய வழிகளிலே தான் செல்வான்\n3.தீய மார்க்கங்களில் தான் செல்வார்கள்.\nதீய மணத்தை நுகரும்போது நல்ல மணத்தை நுகர முடியாதபடி அந்த உணர்வுகள் மடியத்தான் செய்யும். வாழ்க்கையில் இழி நிலை கொண்டு பேயாகவும் பூதமாகவும் இந்த நிலைகள் உருவாக்கப்பட்டு மனிதனைச் சிதறச் செய்யும் உணர்வே பரவும்.\nஇது போன்ற நிலைகள் நாட்டில் இருந்து விடுபட வேண்டுமென்று மக்கள் எவராக இருப்பினும் கல்விச் சாலைகளுக்குச் சென்றால் எப்படி இருக்க வேண்டும் என்ர அருள் ஞானத்தினைப் போதியுங்கள்.\nநீ என் வழியில்தான் வர வேண்டும் என்று நிர்பந்தப்படுத்துவதும் அப்படி அவன் கேட்கவில்லை என்றால் தனித்துக் கூப்பிட்டு உதைக்கும் நிலைகள் வருகின்றது.\nஅப்படிப்பட்ட அசுர உணர்விலிருந்து மீட்கப் பழக வேண்டும். கல்விச் சாலைகளுக்குள்ளே அது போன்று செய்பவர்களை நுழைய விடாமல் செயல்படுத்த வேண்டும்.\nராகிங்… என்ற நிலைகளில் அசுர உணர்வு கொண்டு உதைப்பதும் தவறான நிலையில் செயல்படுவோரையும் நீங்கள் பத்திரிக்கைகளில் படித்திருக்கலாம்.\nதன்னுடன் இணைந்து ஒன்றி வரவில்லை என்கிற போது டாக்டர் படிப்புக்காகக் கற்றுக் கொண்ட மாணவன் ஒருவன் எவருக்கும் தெரியாமல் அவனுக்கு ஆபரேஷன் செய்து அங்கங்களைத் தனித்தனியாக பெட்டிக்குள் போட்டு நான்கு மூலையில் தூக்கி வீசி எறிந்துவிட்டான்.\nஏனென்றால் அவன் கற்ற கல்வியின் ஞானம் பிறரைக் கொலை செய்து தான் தப்பும் நிலைகளுக்கே வருகிறது. பெரும்பாலான நிலைகளில் கலாச்சாரம் எல்லாம் அநாகரீகக் கலாச்சாரங்களாகத் தான் மாறுகின்றது.\n1.ஞானம் இல்லை என்றால் கல்வியைக் காக்கும் நிலை இல்லை.\n2.கல்வியால் ஞானம் வர முடியாது\n3.ஞானத்தால் கல்வியின் நிலைகள் வளர்க்க முடியும்.\nஆகவே இதைப்போல நாட்டில் வரும் தீய பண்புகளில் இருந்து நாம் மாற்றி அமைத்து மக்களைக் காக்க வேண்டும். மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்துத் தனக்குள் உருவாகும் அணுக்களை அருள் ஞானமாக மாற்றிடும் அந்தச் சக்தி பெற வேண்டும்.\nசாமியையே (ஞானகுரு) எண்ணிக் கொண்டிருப்பதைக் காட்டிலும் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து உடலுக்குள் விளைய வைக்க வேண்டும்\n என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nசீராக ஆத்ம சுத்தி செய்வோருக்குக் கிடைக்கும் பலன்கள்\nஆண்டவனில���ருந்து வந்த பிம்பங்கள் தான் அனைத்துமே என்று எண்ணினால்… “தான்” என்ற தனித்த அகங்காரம் வராது – ஈஸ்வரபட்டர்\nஉங்களுக்குக் கொடுத்த சக்திகளை ஒவ்வொருவரும் விரயம் ஆக்காது பயன்படுத்துங்கள்\n24 X 7 சாமிகள் உபதேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/05/30/%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%99/", "date_download": "2021-05-07T01:22:47Z", "digest": "sha1:ELRKUXOAE7YK4STBEVSX65FBKE2WAOXL", "length": 12184, "nlines": 118, "source_domain": "makkalosai.com.my", "title": "அந்தமானும் சென்டினல் பழங்குடியும் | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome உலகம் அந்தமானும் சென்டினல் பழங்குடியும்\nஅந்தமான் நிக்கோபார் தீவுகளில் வசிக்கும் ஆபத்தான பழங்குடியினர்களால் அமெரிக்கர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்தை உலகம் அத்தனை எளிதில் மறந்திருக்க முடியாது.\n21.11.2018 அன்று 27 வயதான ஜான் ஆலன் சாவ் என்ற அந்த அமெரிக்கரை, மீனவர்கள் வட சென்டினல் தீவிற்கு கூட்டிச் சென்றுள்ளனர். அங்கிருந்த பழங்குடியினர் அவரை அம்புகளால் எய்து கொலை செய்து விட்டு அவரது உடலை கடற்கரையோரம் விட்டுச்சென்றனர்.\nகொல்லப்பட்டவர் அமெரிக்காவின் அலபாமாவை சேர்ந்த, 27 வயதான ஜான் ஆலன் என்பது தெரியவந்தபோது உலகம் அதிர்ந்து போனது. ஜான் ஆலனின் உடலை மீட்க அந்தமான் அரசு செய்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.\nஆபத்தான அந்தமான் நிகோபார் தீவுகளில் பழங்குடியினர் அதிகமாக வாழ்ந்து வருகின்றனர். அந்தமான், நிகோபாருக்கு வெளியே உள்ளவர்களால் நோயத் தாக்கம் ஏற்படும் என வட சென்டினல் மக்கள் நம்புகிறார்கள்.\nஅவர்களுடன் தொடர்பு வைத்துக் கொள்வது சட்டவிரோதமானது என பழங்குடியினர் நம்புகின்றனர்.\nநாகரிகத்தில் இருந்து அப்பாற்பட்டு வாழும் சென்டினல் தீவு பழங்குடியினர் 50ல் இருந்து 150 எண்ணிக்கையில் மட்டுமே உள்ளனர். அவர்களுக்கு பணத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் என்றுகூட தெரியாது.\nஜான் ஆலனைக் கொன்ற வட சென்டினல் தீவு பழங்குடியினர் பற்றி தஞ்சை கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும், அவர்கள் சோழ மன்னர்கள் காலத்தில் பாதுகாவலர்களாக பணியாற்றியிருக்கலாம் என நம்புவதாகவும் ஆய்வாளர்கள் இப்போது கூறுகின்றனர்.\nஜான் ஆலனின் உடலை மீட்க அந்தமான் அரசு செய்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.\nஇந்த விவகாரத்திற்குப் பிறகுதான் சென்டினல் தீவு பழங்குடி மக்கள் குறித்து வெளியுலகத்திற்கு தெரிய வந்தது. ஆலன் படுகொலைக்குப் பிறகு செண்டினல் தீவுக்கு சுற்றுலா பயணிகள் செல்லலாம் என்கிற உத்தரவை அந்தமான் அரசு மீட்டுக் கொண்டது. இதை தொடர்ந்து செண்டினல் தீவை கண்டு உலகமே அஞ்சி நடுங்கியது. அந்த நடுக்கம் இன்று வரையில் தொடர்கிறது.\nஇந்நிலையில் செண்டினல் தீவு பழங்குடியினர் குறித்து ஏற்கனவே பல ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன என்றும், அதற்கான குறிப்புகள் தஞ்சையில் கிடைத்த சில கல்வெட்டுகளில் இடம்பெற்றுள்ளன என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.\nஅந்தமானைச் சுற்றி 572 தீவுகள் உள்ளன. ஆனால் அவற்றில் 36 தீவுகளில் மட்டுமே மக்கள் வசித்து வருகிறார்கள். மீதி தீவுகள் அனைத்தும் மனிதர்கள் வாழும் சூழ்நிலைக்கு ஏற்றதாக இல்லை. கிபி 11ம் நூற்றாண்டு காலக்கட்டத்தில் அந்தமான் தீவின் சில பகுதிகள் சோழப் பேரரசின் ஆட்சிக்கு கீழ் இருந்துள்ளன.\nநிக்கோபார் உட்பட்ட பகுதிக்கு சோழர்கள் அடிக்கடி பயணம் செய்துள்ளனர். இதனால் செண்டினல் தீவு பழங்குடியினர் சோழர்களின் பாதுகாவலராக இருந்திருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அவர்களுடைய உதவிகளைப் பெற்று அன்றைய மலாயா, சிங்கை வரை அவர்கள் ஆட்சி செய்திருக்கலாம் என்பது ஆய்வாளர்களின் நம்பிக்கை.\nஇது குறித்த தகவல்கள் தஞ்சையில் கிடைக்கப்பெற்ற சில கல்வெட்டுகளில் இடம்பெற்றுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். ஆங்கிலேயர் வருகைக்கு பிறகு அந்தமான் & நிக்கோபார் தீவுகள் ஏகப்பட்ட மாற்றங்களை சந்தித்துள்ளன. அதில் பல்வேறு இனக்குழுக்களாக வாழ்ந்து வந்த மக்களில் சிலர், மெல்ல மெல்லப் பிரிந்து நவநாகரிக உலகத்தோடு தங்களை ஐக்கியப்படுத்திக் கொண்டனர்.\nஆனால் சிலர் அதை விரும்பாமல் தங்களை வாழ்விடத்திலேயே தங்கிவிட்டனர். அப்படிப்பட்டவர்களில் ஒரு பிரிவுதான் செண்டினல் தீவு பழங்குடி மக்கள்.\nவெளியுலகத்துடனான தொடர்பு ஏற்படாமல் இன்னும் அவர்கள் பழங்கால முறையில் வாழ்ந்து வருகின்றனர். கொக்கோ கோலா கிடையாது…. கே.எப்.சி கிடையாது… பீட்ஸா கிடையாது… விவேக கைபேசி மட்டுமல்ல,\nவெகு காலத்திற்கு முந்தைய தொலைபேசி தொடர்பு கூட கிடையாது,, ஆனாலும் இவர்கள் இந்த பூமியில் நம்மோடு வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.\nPrevious articleகோவிட் 19- இன்று 30 பேர் பாதிப்பு\nஒரே பிரசவத்தில் ஒன்பது குழந்தைகள்\nவெளிநாட்டு ஆடவரிடம் கொள்ளையடித்ததாக போலீஸ்காரர் உட்பட 4 பேர் கைது\nதமிழ்நாட்டில் நாளை பதவியேற்கவிருக்கும் அமைச்சரவை பட்டியல்\nநாட்டில் 14 புதிய கோவிட் -19 கிளஸ்டர்கள் கண்டுபிடிப்பு\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\n2,500 ஆண்டுகள் பழமையான ‘மம்மி’கள்\nகாதலித்து ஏமாற்றியதாக வழக்கு: நீதிபதியின் அதிரடி தீர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newneervely.com/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%B5", "date_download": "2021-05-07T01:32:48Z", "digest": "sha1:KD5VVOGR56X5KGJVAJ335MVBRZP7A4Q2", "length": 11578, "nlines": 134, "source_domain": "newneervely.com", "title": "[:ta]அதுதான் நமக்கு திரும்ப வரும் ….[:] | நீர்வேலி", "raw_content": "10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..\nநீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது\n[:ta]அதுதான் நமக்கு திரும்ப வரும் ….[:]\n[:ta]ஒரு கிராமத்தில் ராமசாமி என்பவர் வாழ்ந்து வந்தார்..\nஅவர் வீட்டுத் தோட்டத்தில் ஒரு முருங்கை மரம் இருந்தது.\nவாரம் ஒரு முறை முருங்கை காய்களை பறித்து, பையில் நிரப்பி தோளில் வைத்துக்கொண்டு ….\nஒன்பது கிலோமீட்டருக்கு அப்பால் இருக்கும் டவுன் வரை \nரெகுலராக ஒரு மளிகை கடையில் விற்றுவிட்டு வருவது வழக்கம் \nமுருங்கை காயை கொடுத்துவிட்டு அதற்கு பதிலாக\nஅரிசி பருப்பு சர்க்கரை போன்ற வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி வருவார்\nராமசாமி கொண்டுவரும் முருங்கைக்காயின் சுவை அந்த பகுதி மக்களிடையே மிகவும் பிரபலம்\nஇதை பயன்படுத்தி மற்ற முருங்கைக்காயோடு கலந்து மளிகை கடைக்காரரும் நல்ல லாபம்\nபல வருடமாக ராமசாமி முருங்கைக்காய் கொண்டுவருவதால் மளிகை கடைக்காரர் அதை எடை போட்டு பார்த்ததில்லை; \nராமசாமி சொல்கின்ற எடையை அப்படியே நம்பி அதற்கு ஈடான மளிகை பொருட்களை கொடுத்து அனுப்புவார்\nராமசாமியின் நேர்மையும் நாணயமும் எல்லோரும் அறிந்தது\nஒரு நாள் ராமசாமி பத்து கிலோ முருங்கைக்காயை கொடுத்துவிட்டு அதற்கான பொருட்களை வாங்கிச்சென்றார்….\nபத்து கிலோ முருங்கைக்காய் மொத்தமாய் வேண்டும் என்று ஒரு சமையல்காரர் வந்து கேட்க… அவருக்காக மளிகைக்காரர் …\nஎடைபோட… அதில் ஒன்பது கிலோ\nஅன���று முழுவதும் மளிகைகாரருக்கு தூக்கமே வரவில்லை ராமசாமி மீது எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தோம்,\nஇவ்வளவு பெரிய நம்பிக்கை துரோகத்தை செய்துவிட்டாரே\nஇத்தனை வருடங்களுக்காக இப்படி முட்டாள்தனமாக எடை குறைவான முருங்கைக்காயை வாங்கி ஏமாந்து விட்டோமே\nஅடுத்த முறை ராமசாமி வந்தால் சும்மா விடக்கூடாது என்று கடுங்கோபத்தில் இருந்தார்\nநான்கு நாட்கள் கழித்து ராமசாமி மிகவும் சந்தோஷமாக வந்தார்\nநல்ல விளைச்சல் என்பதால் நிறைய கொண்டு வந்திருந்தார்\n“கையும் களவுமாக பிடிக்கவேண்டும்என்று, எத்தனை கிலோ என்று மளிகைக்காரர் கேட்க பத்து கிலோ என்றார் ராமசாமி.. \nஅவர் முன்னாலேயே எடைபோட்டு பார்க்க ஒன்பது கிலோ தான் இருந்தது. \nவந்த கோபத்தில் மளிகைக்காரர் பளார்,பளார் என ராமசாமியின் கன்னத்தில் அறைந்தார்\nஇத்தனை வருஷமா இப்படித்தான் ஏமாத்திட்டு இருக்கியா கிராமத்துக்காரங்க ஏமாத்த மாட்டாங்கன்னு நம்பி தானே எடை போடாம அப்படியே வாங்கினேன்,\nஇப்படி துரோகம் பண்ணிட்டியே சீய் என துப்ப, நிலைகுலைந்து போனார் ராமசாமி. \nஅய்யா…என்ன மன்னிச்சிடுங்க நான் ரொம்ப ஏழை, எடைக்கல்லு வாங்குற அளவுக்கு என்கிட்ட காசு இல்லீங்க..\nஒவ்வொரு முறையும் நீங்க கொடுக்கிற ஒரு கிலோ பருப்பை ஒரு தட்டுலயும், இன்னொரு தட்டுல முருங்கைக்காயையும் வச்சி தான் எடைபோட்டு கொண்டுவருவேன்.\n“இதை தவிர வேற எதுவும் தெரியாதுங்கய்யா, என்று காலை பிடித்து அழ, \nமளிகைக்காரருக்கு செருப்பால் அடித்தது போல் இருந்தது….\n“தான் செய்த துரோகம் தனக்கே வந்ததை உணர்ந்தார்\nஇத்தனை வருடங்களாக ராமசாமியை ஏமாற்ற நினைத்த மளிகைக்காரரும்…\nஅவருக்கே தெரியாமல் ஏமாந்து கொண்டுதான் இருந்திருக்கிறார் என்பது தெளிவானது\nநாம் எதை தருகிறோமோ ↪\nஅதுதான் நமக்கு திரும்ப வரும் ….↩\nநல்லதை தந்தால் நல்லது வரும்,…\nதீமையை தந்தால் தீமை வரும்\nவருகின்ற காலங்கள் வேண்டுமானால் தாமதமாகலாம்,\nஆகவே நல்லதை மட்டுமே தருவோம், நல்லதை மட்டுமே விதைப்போம்\nமனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்[:]\n[:ta]5 நிமிடத்தில் வாய் துர்நாற்றத்தைப் போக்க……[:] »\n« [:ta]பாலர்பகல்விடுதியின் அழகிய சூழல்[:]\nஇது எமது ஊர். இங்கு பிறந்ததினால் நாம் பெருமையடைகிறோம். நீர்வேலியின் சிறப்பையும் வனப்பையும் எங்கு சென்றாலும் மறவோம். எமதூரைப் போற்றுவோ��்.\nநீர்வேலி நலன்புரிச் சங்கம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akattiyan.lk/2021/04/02.html", "date_download": "2021-05-07T01:41:31Z", "digest": "sha1:3EN3W36XJVEHLBV5LB2H2QBYBVXIQYIB", "length": 5175, "nlines": 66, "source_domain": "www.akattiyan.lk", "title": "நாட்டில் மேலும் 02 கொரோனா மரணங்கள் பதிவு - அகத்தியன் | Online", "raw_content": "\nHome முதன்மை செய்திகள் நாட்டில் மேலும் 02 கொரோனா மரணங்கள் பதிவு\nநாட்டில் மேலும் 02 கொரோனா மரணங்கள் பதிவு\nநாட்டில் கொரோனா தொற்றினால் மேலும் 02 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.\nஅதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 617 ஆக அதிகரித்துள்ளது.\nTags : முதன்மை செய்திகள்\nபாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் மேலதிக வகுப்புகளுக்கு மறு அறிவித்தல் வரை விடுமுறை\nபாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் மேலதிக வகுப்புகளுக்கு மறு அறிவித்தல் வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், நோன்பு பெருநாள், வெசாக் ...\nகொரோனா பரவல் காரணமாக நாட்டின் பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள விடுமுறையானது மேலும் ஒரு வார காலத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ...\nமோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nவாகன போக்குவரத்து திணைக்களத்தின் நாரஹென்பிட்டி மற்றும் வேரஹெர அலுவலகங்கள் ஒரு வாரத்திற்கு மூடப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம த...\nDReAM என அறிமுகப்படுத்தப்பட்டுள்ள முற்பாதுகாப்பு விதிமுறைகளுக்கமைய மதுபான சாலைகளை திறந்து வைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. D – சமூக இடை...\nமுழு அதிகாரம் : அகத்தியன் ஊடக சேவை 2020\nஆசிரியர் பீட தெடர்புகளுக்கு 0779516119\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/96043", "date_download": "2021-05-07T01:58:10Z", "digest": "sha1:4ENV6ECXPJSMNMZDBG4PJBTA7XRNXNLO", "length": 12640, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு | Virakesari.lk", "raw_content": "\n4 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு\nநாட்டில் மேலும் 12 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்\nதூரநோக்குடனான திட்டமிடலின்றி நாடு நெருக்கடிக்குள் சிக்கி விட்டது - ரணில் கவலை\nநாளொன்றுக்கு 2 ஆயிரத்தை விட அதிக தொற்றாளர்கள் இனங்காணப்படலாம் : எச்சரிக்���ிறது தொற்று நோயியல் பிரிவு\nபிழையான எண்ணங்களை மக்கள் மயப்படுத்த எதிக்கட்சி முயற்சி - மதுர விதானகே\nநாட்டில் மேலும் 12 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்\nஜம்மு-காஷ்மீரில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை\nகொரோனாவால் இலங்கையில் கர்ப்பிணித் தாய் பலி\n இனங்காணப்படும் தொற்றாளர்களை விட இருமடங்கு தொற்றாளர்கள் சமூகத்தில் \nநாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nநாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nநாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஅதன்படி இன்று ஒரே நாளில் 362 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஅந்த வகையில் இவ்வாறு கொரோனா தொற்றுக்கு இலக்கானவர்களில் 285 பேர் பேலியகொட கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என்றும், 77 பேர் சிறைச்சாலை கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என்றும் அரசாங்க தகவல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nநாடு கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு Country Corona infections number Increase\n4 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு\nஅவ்வாறு தனிமைப்படுத்தப்பட்ட பல பகுதிகளின் 4 கிராம சேவகர் பிரிவுகள் இன்று விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.\n2021-05-07 07:26:56 தனிமைப்படுத்தல் கொரோனா களுத்துறை\nநாட்டில் மேலும் 12 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்\nநாட்டில் கொரோனா அச்சுறுத்தலையடுத்து கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மாவட்டங்களின் 12 கிராம சேவகர் பிரிவுகள் இன்று காலை 6 மணிமுதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜென்ரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.\n2021-05-07 07:17:30 தனிமைப்படுத்தல் கொரோனா இராணுவத்தளபதி\nதூரநோக்குடனான திட்டமிடலின்றி நாடு நெருக்கடிக்குள் சிக்கி விட்டது - ரணில் கவலை\nகொவிட் வைரஸ் தொற்று 2 ஆம் அலை ஏற்பட்ட போது போதிய தடுப்பூசிகளை கொள்வனவு செய்திருந்தால் அச்சம் கொள்ள வேண்டியதில்லை. அல்லது தடுப்பூசி கிடைக்காவிடின் அடுத்த கட்ட சிகிச்சைகளுக்கான இயற்கை சுவாசக் கருவிகள் , அவசர சிகிச்சை பிரிவு கட்டில்கள் மற்றும் ஒக்சிஜன் போன்றவற்றை பெற்றுக்கொண்டிருந்தாலும் ஏற்பட கூடிய உயிரிழப்புகள�� தடுத்திருக்கலாம். ஆனால் அரசாங்கத்தின் தூரநோக்குடனான திட்டமிடலின்றி நாடு நெருக்கடிக்குள் சிக்கி விட்டது என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.\n2021-05-07 07:01:30 தூரநோக்கு திட்டமிடல் நாடு\nநாளொன்றுக்கு 2 ஆயிரத்தை விட அதிக தொற்றாளர்கள் இனங்காணப்படலாம் : எச்சரிக்கிறது தொற்று நோயியல் பிரிவு\nநாட்டில் நாளொன்றில் இனங்காணப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கை எதிர்வரும் நாட்களில் 2000 ஐ விட அதிகரிக்கக் கூடும் என்று சுகாதார தரப்பினர் எச்சரித்துள்ளனர். தற்போது நாடளாவிய அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றமையால் மாவட்டங்களிலுள் வைத்தியசாலைகளிலும் கொவிட் தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான பிரிவுகளை பிரத்தியேகமாக ஒதுக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதே வேளை மேல் மாகாணத்தில் மாத்திரம் நாளொன்றுக்கு சுமார் 1200 தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றனர்.\n2021-05-06 22:40:35 2000 தொற்றாளர்கள் இனங்காணல் எச்சரிக்கை\nபிழையான எண்ணங்களை மக்கள் மயப்படுத்த எதிக்கட்சி முயற்சி - மதுர விதானகே\nகொவிட்-19 வைரஸ் பரவல் காரணமாக பாதிப்படைந்துள்ள மக்களை காப்பாற்றுவதுடன் , வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கு அரசாங்கம் முயற்சிகளை எடுத்து வரும் நிலையில், எதிர்தரப்பினர் தங்களுக்கு கிடைக்கப் பெற்றுள்ள பாராளுமன்ற உறுப்புரிமையை பயன்படுத்தி பிழையான எண்ணங்களை மக்கள் மயப்படுத்த முயற்சித்து வருவதாக ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே குற்றஞ்சாட்டினார்.\n2021-05-06 22:36:58 பிழையான எண்ணங்கள் மக்கள் மயப்படுத்தல் எதிக்கட்சி\nநாட்டில் மேலும் 12 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்\nதூரநோக்குடனான திட்டமிடலின்றி நாடு நெருக்கடிக்குள் சிக்கி விட்டது - ரணில் கவலை\nஇலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து மேலும் 810 பேர் குணமடைவு..\nபணவீக்கம் ஏப்ரலில் 3.9 சதவீதமாக வீழ்ச்சி: இலங்கை மத்திய வங்கி\nவிலை அதிகரிப்பிற்கு அனுமதியில்லையேல் தட்டுப்பாடு ஏற்படலாம்: லாப் கேஸ் நிறுவனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xavi.wordpress.com/2008/02/25/kathai_ezhuthum_neram/", "date_download": "2021-05-07T01:39:31Z", "digest": "sha1:Y6SXPWBRKVLBOG2F35WVJSJD3VWGKZZT", "length": 59667, "nlines": 1178, "source_domain": "xavi.wordpress.com", "title": "நெடுங் கவிதை : கதை எழுதும் நேரம் |", "raw_content": "எழுத்த��� எனக்கு இளைப்பாறும் தளம் \n← மேகத்தை மூடும் மேகங்கள்\nநெடுங் கவிதை : கதை எழுதும் நேரம்\nஉன் நாடி பிடித்தவள் தானே\nவெள்ளி வீதியில் வலம் வரும்\nஉன் பெயரை விட சுவையாய்\nமூச்சுத் திணறி மரிக்க வைப்பதும்\nகளிம்பை நீ காயம் என்கிறாய்.\nஎன்னை பூக்களோடு அனுப்பி வைத்த\nஒரு நாள் இரவில் பூத்து\nஎனக்குள் அவள் இருக்கும் வரை\nகாதல் மேல் இருக்கும் காதல்.\nஅவள் சாக முடியாது என்னும்\nவருவேன் என்று சொல்லி விட்டு\nஎதிரே வந்த காரில் ஏறி\nநீயாய் உருவாக்கும் கற்பனை வளையம்,\nசந்திக்க இயலும்” – அப்பா.\nஇது உனக்கு நான் எழுதும்\nதுளசி என்னும் பெயரில் எழுதி\n← மேகத்தை மூடும் மேகங்கள்\n11 comments on “நெடுங் கவிதை : கதை எழுதும் நேரம்”\nநீண்ட கவிதை அருமை – நண்பரே காதல் தோல்வி – அல்ல அல்ல – வெற்றி தான். கலப்பு மணத்திற்கு சம்மதம் பெற்ற பிறகு – பெற்றவர்களிடமிருந்து பெற்ற பிறகு – ஒரு மிருகம் மாளிகையை இடித்து விட்டதே காதல் தோல்வி – அல்ல அல்ல – வெற்றி தான். கலப்பு மணத்திற்கு சம்மதம் பெற்ற பிறகு – பெற்றவர்களிடமிருந்து பெற்ற பிறகு – ஒரு மிருகம் மாளிகையை இடித்து விட்டதே என் செய்வது – காதலை, காதலியை நினைந்து நினைந்து உருகி உருகி மணம் என்பதனையே மறந்தவனுக்கு வாழ்வில் வசந்தம் வீசியது. வித்யா நீ விடையா என் செய்வது – காதலை, காதலியை நினைந்து நினைந்து உருகி உருகி மணம் என்பதனையே மறந்தவனுக்கு வாழ்வில் வசந்தம் வீசியது. வித்யா நீ விடையா விண்மீன் துளசி ஆமென்று ஆமோதித்தது.\nகவிதை அழகு தமிழ் – எளிமையான சொற்கள் – சிறு சிறு அடிகள். கருத்தாழம் மிக்க கவிதை. பாராட்டுகள் நண்பரே \nமனமார்ந்த நன்றிகள் சீனா. தொடர்ந்து வருகை தாருங்கள்.\nஎன்னை பூக்களோடு அனுப்பி வைத்த\nவிளக்கமான கவித்துவமான பதிலுக்கு மனமார்ந்த நன்றிகள் பாலா.\nஇது ஒரு உண்மைக் கதை \nபேரிடர் காலங்களில், பேரன்பு பகிர்தல்\nமரண இருளின் பள்ளத்தாக்கு – ஒளி தந்த இருளின் காலம் – கோவிட் பயணம்\nஇயேசு கேட்ட கேள்வி : இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 18 : மீட்டிங்\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 17 : எழுத்து முக்கியம்\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 16 : கம்யூனிகேஷன்\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் – 15 – மீண்டும்….\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 14 – கவனித்தல்\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் – மைக்ரோ கவனி���்பு\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 12 : பணியைப் பகிர்.\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 11 :\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 10 – அணி\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 9 – ரிஸ்க்\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 8 – சவால் & ஆபத்து\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 7 – பணியாளர் மேலாண்மை\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 6 : எப்போ முடிப்பீங்க \nவிவசாயம் காப்போம்; விவசாயி காப்போம்\nகுட்டிக் குட்டிக் காதல் கவிதைகள்\nகவிதை : வானத்துப் பறவை\nகைபேசி : வியப்பூட்டும் வளர்ச்சியும், ஆபத்தும்\nதன்னம்பிக்கை : கூடா நட்பு கூடாது \nபோதை :- வீழ்தலும், மீள்தலும்\nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\n1. ஆதி மனிதன் ஆதாம் \n இந்த வார்த்தையே நமது மன வெளிகளில் புன்னகை விதைகளைத் தூவும் வல்லமை படைத்தது. எத்தனை பெரிய சோகத்தின் அலைகள் நமது பாலை வெளிகளில் புரண்டு படுத்தாலும், ஒரு சின்னக் குழந்தையின் புன்னகைக் கைக்குட்டை கிடைத்தால் அந்த சோகம் புதையுண்டு போய்விடும். மழலைகளோடு விளையாடுகையில் மலைபோன்ற மன பாரங்கள் கூட பழுத்த இலை போல உதிர்த்து பறந […]\nபேரிடர் காலங்களில், பேரன்பு பகிர்தல்\nபேரிடர் காலங்களில், பேரன்பு பகிர்தல் பல குறியீடுகளை ஆதிகாலக் கிறிஸ்தவர்கள் பயன்படுத்தினார்கள். குறிப்பாக மீன் குறியீடு அந்தக் காலத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு குறியீடாய் இருந்தது. மீன் அடையாளம் வரையப்பட்ட இடங்களை ஆராதனை இடங்களாக ரகசியக் கிறிஸ்தவர்கள் புரிந்து கொண்டார்கள். அத்தகைய இடங்களில் அவர்கள் மறைந்திருந்து நற்செய்தியை அறிவித்தார்கள். பைபிள் […]\nமரண இருளின் பள்ளத்தாக்கு – ஒளி தந்த இருளின் காலம் – கோவிட் பயணம்\nமரணஇருளின்பள்ளத்தாக்கு ஒளி தந்த இருளின் காலம் – கோவிட் பயணம் * நிகழ்வுகளெல்லாம் இறைவனால் நமக்குத் தரப்படுகின்ற அனுபவப் பாடங்கள். சில அனுபவப் பாடங்கள் நம்மை விரக்தியில் எறியும். சில நம்மை குழப்பத்தில் உருட்டும். சில அனுபவங்கள் நம்மை புரியாமைக்குள் நடத்திச் செல்லும். ஆனால் ஒன்று மட்டும் யதார்த்தம், இறைமகன் இயேசுவின் ��ரம்பிடித்து நடப்பவர்களுக்கு எந்த ஒரு துயரத் […]\nஇயேசு கேட்ட கேள்வி : இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா\nஇவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா யோவான் 14 :9 இந்தக் கேள்வி புதுசா நாம கேள்விப்படுகிற கேள்வி அல்ல. அடிக்கடி நமது வாழ்க்கையில் நாம் சந்திக்கின்ற கேள்வி. “இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா யோவான் 14 :9 இந்தக் கேள்வி புதுசா நாம கேள்விப்படுகிற கேள்வி அல்ல. அடிக்கடி நமது வாழ்க்கையில் நாம் சந்திக்கின்ற கேள்வி. “இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா” ந்னு தூய தமிழ்ல கேள்விப்பட்டிருக்க மாட்டோம், ஆனா நம்முடைய உரையாடல்களில் எப்போதேனும் நிச்சயம் இந்தக் […]\nKristilla on கி.மு : நோவாவின் பேழை\nக.மோகன சுந்தரம் on சன்னலுக்கு வெளியே கவிதைகள்\nAnonymous on கிமு : சிம்சோன் – வியப்ப…\nAnonymous on வீதியில் நாய்கள், பீதியில்…\nSuma sheyalin on அப்பா என் உலகம்\nDev on தன்னம்பிக்கை : திடீர் பணக்காரன…\nSivaranjani on தன்னம்பிக்கை : திடீர் பணக்காரன…\nTamilBM on தன்னம்பிக்கை : கல்வியால் ஆய பய…\nkavithai kavithais love POEMS Tamil Kavithai tamil kavithais writer xavier xavier இலக்கியம் இளமை கவிதை கவிதைகள் காதல் சேவியர் சேவியர் கவிதைகள் தமிழ் இலக்கியம் தமிழ்க்கவிதை தமிழ்க்கவிதைகள் புதுக்கவிதை புதுக்கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dindigul.nic.in/category/press-release/page/2/", "date_download": "2021-05-07T01:45:43Z", "digest": "sha1:I3M5XDJHUN4EEZ6LF6LYRRHCMC64UUP7", "length": 8183, "nlines": 125, "source_domain": "dindigul.nic.in", "title": "Press Release | Dindigul District | India", "raw_content": "\nதிண்டுக்கல் மாவட்டம் Dindigul District\nசெ.வெ.எண்:-28/2021 நாள்:-18.03.2021 திண்டுக்கல் மாவட்டம் வாக்குப்பதிவு மையத்தில் பணிபுரியும் அலுவலர்களுக்கு 3 கட்டங்களாக பயிற்சி அளிக்கப்படுகிறது – மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., தகவல். திண்டுக்கல் அச்சுதா மெட்ரிக் பள்ளியில் இன்று(18.03.2021) வாக்குப்பதிவு மையத்தில் பணியாற்றும் அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பினை திண்டுக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்து தெரிவித்ததாவது:- நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலில் […]\nசெ.வெ.எண்:- 27/2021 நாள்:-17.03.2021 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கான கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு பாதுகாப்பு உபகரணங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டார். இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்-2021 வருகின்ற 06.04.2021 அன்று நடைபெறவுள்ளது. அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் மொத்தம் 2,673 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளன. […]\nசெ.வெ.எண்:- 25/2021 நாள்:-16.03.2021 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்டத்திற்கு காவல்துறை பார்வையாளராக திரு. மாக்ராண்ட் எம் ரானடே, இ.கா.ப., அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்-2021 நடைபெறுவதை முன்னிட்டு,திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் செலவின கணக்கு பார்வையாளர்கள் ஏற்கனவே வருகைப்புரிந்துள்ளனர். இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கு காவல்துறை பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள திரு. மாக்ராண்ட் எம் ரானடே, இ.கா.ப., அவர்கள் (Mr.MAKRAND M RANADE, I.P.S.)இன்று(16.03.2021) வருகை புரிந்துள்ளார். திண்டுக்கல் […]\nசெ.வெ.எண்:- 15/2021 நாள்:-10.03.2021 திண்டுக்கல் மாவட்டம் வாக்காளர் பட்டியலில் முதன்முறையாக பெயர் சேர்க்கப்பட்ட வாக்காளர்கள் அனைவரும் மின்னணு வாக்காளர் அடையாள அட்டையினை பதிவிறக்கம் செய்து கொள்ள சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது – மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் – 2021-இன் போது, புதிதாக வாக்காளர் பட்டியலில் முதன்முறையாக பெயர் சேர்க்கப்பட்ட வாக்காளர்களில் தங்களது செல்லிடப்பேசி எண்ணை வழங்கிய வாக்காளர்கள் அனைவருக்கும் மின்னணு வாக்காளர் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/shalu-shammu-latest-pic-in-sizzling-red-dress/", "date_download": "2021-05-07T00:15:19Z", "digest": "sha1:J6TTZOCOIGCYN5R4PWYTA5BX2VSAI7WG", "length": 10169, "nlines": 98, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Shalu Shammu Latest Pic In Sizzling Red Dress", "raw_content": "\nHome பொழுதுபோக்கு சமீபத்திய இவங்க, காலைல எந்த போட்டோவும் போட மாட்டாங்களா நேற்று இரவு ஷாலுவின் பதிவிற்கு வந்த...\nஇவங்க, காலைல எந்த போட்டோவும் போட மாட்டாங்களா நேற்று இரவு ஷாலுவின் பதிவிற்கு வந்த கமன்ட்.\nகடந்த சில காலமாகவே தமிழ் நடிகைகளும் இந்தி நடிகைகளுக்கு இணையாக கவர்ச்சியில் தாராளம் காட்டி வருகிறார்கள். டாப் ஹீரோயின்கள் கூட தற்போது பிகினி உடை புகைப்படங்களை அசால்ட்டாக வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் ஷாலு ஷம்மு கடந்த சில கவர்ச்சி புகைப்படங்களை அல்லி வீசி வருகிறார். வடிவேலு படத்தில் வரும் காமெடி போல ஒரே நைட்டில் ஒபாமா ஆகிடலாம் என்று சொல்வார்கள். ஆனால், ஒரே ஒரு பஜாடா நடன வீடியோவை பதிவிட்டு ஒரே நாளில் சமூக வலைதளத்தில் பேமஸ் ஆனவர் இளம் நடிகயானை ஷாலு ஷம்மு.\nசிவகார்திகேயன் நடித்த ‘வறுத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் ஹீரோயினாக நடித்த ஸ்ரீதிவ்யாவிற்கு தோழியாக படம் முழுவதும் அவருடன் நடித்தவரின் பெயர் ஷாலு சம்மு. நல்ல தமிழ் நிற தோற்றத்தை உடைய இவர் நாகர்கோவிலில் பிறந்தவர்.சென்னை எத்திராஜ் கல்லுரியில் படித்தவர் தான். வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் கருப்பழகியாக ஒரு கிராமத்து பெண் போல நடித்திருந்தார். மேலும், அந்த படத்திற்கு பின்னர் தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தில் காமெடி நடிகர் சதீஸின் காதலியாக நடித்திருந்தார்.\nஇந்த இரு படத்திலும் கிராமத்து குயிளாக தெரிந்த இந்த நடிகை நேரில் பார்த்தால் மிகவும் மாடர்ன் மங்கையாக இருக்கிறார். அதற்கு முக்கிய காரணமே அம்மணி மாடலிங் துறையிலும் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மிஸ்டர் லோக்கல் படத்திலும் நடித்திருந்தார். சமீபத்தில் நீச்சல் குளத்தில் குளிக்கும் வீடியோ ஒன்றை கூட வெளியிட்டிருந்தார். தற்போது சிகப்பு நைட் ட்ரெஸ்ஸில் படு கிளாமரான ஆடையில் மீண்டும் போட்டோ ஷூட் நடித்தி அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டார்காமில் பதிவிட்டுள்ளார்.\nமேலும், அந்த புகைப்படத்தில் கூட்டத்தோட கூட்டமா நிக்குறது விஷயமே இல்ல, தனியா நிக்கிறது தான் விஷயம் என்றும் பதிவிட்டுள்ளார் ஷாலு ஷம்மு. இப்படி தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வாலிபர் சங்கங்களை வருத்தப்படாமல் பார்த்து வருகிறார் ஷாலு ஷம்மு. இது ஒரு புறம் இருக்க ஷாலு இருட்டு அறையில் முரட்டு குத்து 2 படத்தி���ும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nPrevious articleயாரடி நீ மோகினி சீரியலில் இருந்து விளகினாரா இல்லை நீக்கப்பட்டாரா \nNext articleஷங்கர் மஹாதேவன் பையனாக இருந்தாலும், இதுக்கு முன்னாடி சீரோ தான் – இமான் பேச்சு.\nதெலுங்கு சூப்பர் ஸ்டார் படத்தில் இருந்து விலகிய திரிஷா – காரணம் தளபதி 65 நடிகையா \nஇந்த செத்த நாய சப்போர்ட் பண்ற – தனது ரசிகையை திட்டிய நபருக்கு அனிதா சம்பத் கொடுத்த பதிலடி.\nபிஜேபிக்கு எதிராக தோல்வியடைந்து விட்டதாக அறிவித்த பின்னர் கமல் என்ன செய்தார் – கமலுடன் இருந்த முக்கிய நபர்.\nஎப்படி இருந்த ஷாருக்கான் அலுவலகத்தை எப்படி கொரோனா வார்டாக மாற்றியுள்ளார்கள் – மனைவி வெளியிட்ட...\nமேலாடை விலகியது கூட தெரியாமல் புகைப்படத்தை பதிவிட்ட அதுல்யா. ஷாக்கான ரசிகர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ehowtonow.com/category/tamizh/kavithai/", "date_download": "2021-05-07T01:16:12Z", "digest": "sha1:PJ5GMOP3CAYYPXBX4WCSXWOX4U47VR75", "length": 8659, "nlines": 128, "source_domain": "www.ehowtonow.com", "title": "Kavithai Archives - eHowToNow", "raw_content": "\nநினைவுகள் போதும் – காதல் கவிதை\nவிவசாயி கடைசி பக்க சேதியிலே – கவிதை\nமழை சாரல் – காதல் கவிதை\nவிலகி நின்னு ரசிக்கையில – காதல் கவிதை\nஇது என்ன மாயம் – காதல் கவிதை\nகனவில் கரைகிறேன் – காதல் கவிதை\nவிலகி செல்கிறேன் – காதல் கவிதை\nகாட்சி பிழை – காதல் கவிதை\nமன்மத தேசத்துல மயக்கிட்டு போனவளே – காதல் கவிதை\nகனவு கன்னியே – காதல் கவிதை\nகண்ணில் கண்ட மறுகணமே – காதல் கவிதை\nகண்ணதாசன் கவிதை – அனுபவமே கடவுள்\nகண்ணதாசன் கவிதை – அனுபவமே கடவுள்\nஅனுபவமே கடவுள் பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் பிறந்து பாரென இறைவன் பணித்தான் படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன் படித்துப் பாரென இறைவன் பணித்தான் படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன் படித்துப் பாரென இறைவன் பணித்தான் அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன் அறிந்து பாரென இறைவன் […]\nகண்ணில் கண்ட மறுகணமே – காதல் கவிதை\nகண்ணில் கண்ட மறுகணமே அடி காதல் கொண்டது என் மனமே அது காதல் என்று புரியவில்லை கனவு என்றே நினைத்தேனே காட்சி பிழையாய் உணர்தேனே காந்த புயலாய் நீ வந்து கவர்ந்து சென்றாய் என் […]\nகனவு கன்னியே – காதல் கவிதை\nKanavu Kanniye – Kadhal Kavithai கனவு கன்னியே உனேயே எண்ணியே காத்துக்கிடப்பேன் நாள்தோறும் இரவும் வருமே நிலவும் வருமே உன் நினைவு சுடுமே ஏன்தானோ நிலவு தேய்யலாம் உன் நினைவு என்றுமே – […]\nமன்மத தேசத்துல மயக்கிட்டு போனவளே – காதல் கவிதை\nTamil Rap Kavithai Read like Rap மன்மத தேசத்துல மஞ்சள் வெயில் மாலையில மயக்கிட்டு போனவள மறந்திட முடியல மணந்திட வழி இல்ல மனசுக்கு புரியல நெருப்புனு தெரியல Read like sad […]\nகாட்சி பிழை – காதல் கவிதை\nவிலகி செல்கிறேன் விதி என் வழியில் உன்னை சேர்க்கிறது. விடை தெரிந்தும் விடுகதை கேட்கிறது மனது. விலகி செல் மனமே. நீ காண்பது கானல் நீர். காட்சி பிழையில் கரை தேடாதே காணாமல் போய் […]\nவிலகி செல்கிறேன் – காதல் கவிதை\nஉன் கண் பார்த்து உன் கரம் கோர்த்து நம் இதழ் சேர்த்து என் காதல் சொல்ல ஆசை கனவினில் நாம் கதைத்த காதல் என் நெஞ்சில் விதைத்த காதல் உன் செவி சேர்க்க ஓர் […]\nகனவில் கரைகிறேன் – காதல் கவிதை\nகனவில் கரைகிறேன் உன் நினைவிலே உடல் மெலிகிறேன் உன் நினைவிலே உயிருடன் கலந்துவிட்டாய் உலகினை மறந்துவிட்டேன் இமைகளை கடந்துவிட்டாய் இதயத்தை நொறுக்கிவிட்டாய் என் ஜீவன் பிரித்துவிட்டாய் என் மனதில் சேமித்த காதல் மரணம் வரினும் […]\nஇது என்ன மாயம் – காதல் கவிதை\nஒரு முறை பார்த்தாய் உறையவைத்தாய் சிறு புன்னகையால் என் உயிர் பறித்தாய் உடல் மட்டும் இங்கே இருக்கிறதே உயிர் உன்னுடன் சேர்ந்தே நடக்கிறதே புன்னகை பொழியும் பூங்காற்றே உன் முகவரி எங்கே சொல்வாயோ உன் மௌனத்தாலே […]\nவிலகி நின்னு ரசிக்கையில – காதல் கவிதை\nவிலகி நின்னு ரசிக்கையில சொல்ல நினச்சேன் என் காதல் கதை…. நீ நெருங்கி வந்து பேசயில நொறுங்கி நின்னேன் வார்த்தையில சேலையில உனை பார்க்கையிலே சொக்கி நின்னேன் பூங்குயிலே நினைவுக்குள்ள உன்னை வச்சேன் நிலவு […]\nமழை சாரல் – காதல் கவிதை\nகார்மேக கூட்டம் ஒன்னு உந்தன் குழல் காண வந்ததுன்னு கான குயில் கவிபாட காத்திருந்த மயிலாட பொய் அழகு கவிதை ஒன்னு மெய்யாகி நின்றதுன்னு மேகமது பாட உந்தன் மேனி தீண்ட ஆசை கொண்டு […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinibitz.com/%E0%AE%B9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95/", "date_download": "2021-05-07T00:53:16Z", "digest": "sha1:NBOEG4I3KGXWKOEKT2D6NPXHFDOYAVBS", "length": 10589, "nlines": 72, "source_domain": "www.tamilcinibitz.com", "title": "ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி 'லாஸ்ட் கேலக்ஸி' என்ற மூச்சடைக்கக் கூடிய காட்சியை எடுக்கிறது", "raw_content": "மு���ுமையான செய்தி உலகம் உங்களுக்காக.\nஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி ‘லாஸ்ட் கேலக்ஸி’ என்ற மூச்சடைக்கக் கூடிய காட்சியை எடுக்கிறது\nஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி என்ஜிசி 4535 இன் இந்த கூர்மையான காட்சியை “லாஸ்ட் கேலக்ஸி” என்று அழைத்தது.\nபிரபஞ்சத்தில் பல அழகான விண்மீன் திரள்கள் உள்ளன, ஆனால் உண்மையிலேயே கம்பீரமான சுழல் வெல்ல கடினமாக உள்ளது, விண்வெளியின் இருளில் வளைந்த, ஒளிரும் ஆயுதங்களை சுழற்றும் விண்மீன். விண்மீன் என்ஜிசி 4535 இன் புதிய ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி உருவப்படத்தில் அது காட்டப்பட்டுள்ளது.\nஎன்ஜிசி 4535 ஒரு கவர்ச்சியான புனைப்பெயரைக் கொண்டுள்ளது: லாஸ்ட் கேலக்ஸி. இது உண்மையில் விண்வெளியில் இழக்கப்படவில்லை, ஆனால் புனைப்பெயர் ஹப்பிள் போல ஆடம்பரமானதாக இல்லாத உபகரணங்களுடன் தோற்றமளிக்கிறது.\nஆய்வகத்திலிருந்து உங்கள் இன்பாக்ஸுக்கு. ஒவ்வொரு வாரமும் CNET இலிருந்து சமீபத்திய அறிவியல் கதைகளைப் பெறுங்கள்.\n“நாசா / ஈஎஸ்ஏ ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கியிலிருந்து எடுக்கப்பட்ட இந்த படத்தின் நம்பமுடியாத தரம் இருந்தபோதிலும், என்ஜிசி 4535 ஒரு சிறிய தொலைநோக்கியிலிருந்து பார்க்கும்போது ஒரு மங்கலான, ஓரளவு பேய் தோற்றத்தைக் கொண்டுள்ளது.” ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் வெள்ளிக்கிழமை ஒரு அறிக்கையில் கூறியது.\nESA இன் படி, அமெச்சூர் வானியலாளர் லேலண்ட் எஸ். கோப்லாண்ட் 1950 களில் விண்மீனைக் கண்டார் மற்றும் அதன் தோற்றத்திற்கு மரியாதை செலுத்துவதற்காக லாஸ்ட் கேலக்ஸி என்ற விசித்திரமான புனைப்பெயரைக் கொடுத்தார்.\nகாவிய ஆண்டுவிழாவிற்காக 30 திகைப்பூட்டும் புதிய ஹப்பிள் விண்வெளி படங்களை நாசா வெளியிட்டது\nநாசாவும் படத்தைப் பகிர்ந்துள்ளார். இந்த வாரம். நாசா மற்றும் ஈஎஸ்ஏ கூட்டாக ஹப்பிளை இயக்குகின்றன. விண்வெளி தொலைநோக்கியிலிருந்து வரும் படம் வியக்கத்தக்க அளவு விவரங்களைக் காட்டுகிறது. சூடான இளம் நட்சத்திரங்கள் தொங்கும் இடத்தில் பிரகாசமான நீல புள்ளிகள் உள்ளன. மையத்திற்கு நெருக்கமான இலகுவான வண்ணங்கள் பழைய, குளிரான நட்சத்திரங்களை வெளியே கொண்டு வருகின்றன.\nலாஸ்ட் கேலக்ஸி காட்சி ஒரு பகுதியாகும் அருகிலுள்ள கேலக்ஸிகளில் உயர் கோணத் தீர்மானத்தில் இயற்பியல், அல்லது PHANGS, சர்வே, இதில் நட்சத்திர உருவாக்கம் குறித்த தரவுத் ��ொகுப்பு அடங்கும். விண்மீன் பூமியிலிருந்து 50 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் கன்னி ராசியில் வாழ்கிறது, ஆனால் ஹப்பிள் அது வீட்டிற்கு அருகில் இருப்பதைப் போல உணர்கிறது.\nபின்பற்றுங்கள் சிஎன்இடி 2021 விண்வெளி நாட்காட்டி இந்த ஆண்டு சமீபத்திய விண்வெளி செய்திகளுடன் புதுப்பித்த நிலையில் இருக்க. நீங்கள் அதை உங்களிடம் சேர்க்கலாம் google காலண்டர்.\nபொது எழுத்தாளர். ஸோம்பி நிஞ்ஜா. தீவிர தொடர்பாளர். பீர் அறிஞர். பாப் கலாச்சார ரசிகர். ஆய்வுப்பணி. ட்விட்டர் நிபுணர்.\nREAD நாசாவின் மாபெரும் சந்திர ராக்கெட்டின் விமர்சன சோதனை 'முக்கிய கூறு தோல்வி' மூலம் குறுக்கிடப்பட்டது\nஇந்த வார இறுதியில் புதன், வியாழன் மற்றும் சனியை அரிதான இணைப்பில் பார்ப்பது எப்படி\nஇரண்டு பெரிய உலகங்களும் சூரிய மண்டலத்தின் மிகச்சிறிய கிரகமும் இந்த வார இறுதியில் தோன்றும். பானை...\nமற்றொரு உயர் உயர சோதனைக்கு முயற்சிக்க ஸ்டார்ஷிப் FAA ஆல் தாமதமானது\nஇன்று இரவு வானத்தில் வியாழன், புதன் மற்றும் சனி ஆகியவற்றின் அரிய இணைப்பை எவ்வாறு கண்டறிவது என்பது இங்கே.\nஸ்பேஸ்எக்ஸ் அதன் முதல் லைவ் கார்பூல் மிஷனை, பதிவு செயற்கைக்கோள்களுடன் – டெக் க்ரஞ்ச் பார்க்கவும்\nPrevious articleபோச்செட்டினோ “பல ஆண்டுகள்” தங்குவதற்கு கடினமாக அழுத்தம் கொடுப்பதால் பி.எஸ்.ஜி ஒப்பந்தத்தின் தாமதத்தை எம்.பி.\nNext article“சோர்வு தவறானது”: ஸ்டண்ட் தோல்வியடைந்த பிறகு மனிதனின் மெர்சிடிஸ் நெருப்புடன் முடிகிறது\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஐக்கிய அரபு எமிரேட்ஸ் வளைகுடாவிற்கான அரிய இயக்கத்தில் வெளிநாட்டினரைத் தேர்ந்தெடுக்க குடியுரிமையை வழங்குகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2021-05-07T02:13:07Z", "digest": "sha1:PWSO6RQAWKATUBQT37XH6VWEITWKALTU", "length": 7432, "nlines": 160, "source_domain": "www.tamilstar.com", "title": "தவறான தகவல்களை நம்பாதீங்க - யோகி பாபு - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB ம���ணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nதவறான தகவல்களை நம்பாதீங்க – யோகி பாபு\nNews Tamil News சினிமா செய்திகள்\nதவறான தகவல்களை நம்பாதீங்க – யோகி பாபு\nதமிழ் சினிமாவில் முன்னணி காமெடியனாக யோகிபாபு வலம் வருகிறார். இன்னும் திருமணம் ஆகவில்லை. இதனால் யோகிபாபு செல்லும் இடங்களில் எல்லாம் அவரது திருமணம் பற்றிய பேச்சாகவே இருக்கிறது. கடந்த மாதம் ஒரு நடிகையுடன் இணைத்து திருமண செய்தி வெளியாகி அதை மறுத்தார்.\nஇந்நிலையில் யோகி பாவுக்கு திருமணம் முடிவாகிவிட்டது என்றும், பிப்ரவரி முதல் வாரத்தில் திருமணம் என்றும் தகவல் பரவியது. மணமகள் பெயர் பார்கவி என்று பெயருடன் செய்தி வெளியானதால், இது உண்மை என்று பலரும் யோகி பாபுவுக்கு வாழ்த்து தெரிவிக்க தொடங்கினார்கள்.\nஅவரோ மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் ‘கர்ணன்’ படப்பிடிப்புக்காக திருநெல்வேலியில் இருக்கிறார். அவருக்குத் தொடர்ச்சியாக தொலைபேசி அழைப்புகள் வரவே, தனது ட்விட்டர் தளத்தில் “என் திருமணம் பற்றி வந்த தகவல் தவறானது. என் திருமணத் தகவலை வெகு விரைவில் நானே அறிவிப்பேன். நன்றி” என்று தெரிவித்துள்ளார்.\nமீண்டும் கவர்ச்சியில் இறங்கிய எமி ஜாக்சன் – வைரலாகும் புதிய புகைப்படம்\nஅடப் பாவிகளா…. ரசிகர்களின் ஆறுதலுக்கு பதிலளித்த ஓவியா\nஉயர் அதிகாரியின் மகள் கடத்தப்பட அவரை போலீஸ் அதிகாரி வரலட்சுமி காப்பாற்றுகிறார். அதன் தொடர்ச்சியாக பெண் கடத்தல்...\nகனடியப் பெண்களில் நாடு தழுவிய உயர்சாதனை படைத்த ஈழப்பெண்\nஇந்தியாவுக்கு அவசர மருத்துவ உதவி பொருட்களை அனுப்பியது கனடா\n12 வயதிற்கு மேற்பட்டவர்கள் Pfizer தடுப்பூசியை பெற Health கனடா அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2020/11/blog-post_152.html", "date_download": "2021-05-07T01:13:39Z", "digest": "sha1:UYJHJLFKH7MGQ3GYNJEHKHU2TTX4SHHP", "length": 7965, "nlines": 87, "source_domain": "www.yarlexpress.com", "title": "அம்புலன்ஸ் சாரதிகளுக்கென சுகாதார தொற்று நீக்க பொருட்கள் வழங்கிவைப்பு. \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nஅம்புலன்ஸ் சாரதிகளுக்கென சுகாதார தொற்று நீக்க பொருட்கள் வழங்கிவைப்பு.\nபிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட வைத்தியசாலை அம்புலன்ஸ் சாரதிகளுக்கான முகக் கவசம் மற்றும் தொற்று நீக்கல் திரவம் அடங்கிய பொதி &qu...\nபிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட வைத்தியசாலை அம்புலன்ஸ் சாரதிகளுக்கான முகக் கவசம் மற்றும் தொற்று நீக்கல் திரவம் அடங்கிய பொதி \"கியூமெடிக்கா\" தன்னார்வ தொண்டு நிறுவனத்தினரால் சுகாதார பணிமனை நிர்வாகத்தினரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த தொண்டு நிறுவனத்தினரால் தற்போதைய கொரோனா நிலைமையில் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கீழ் கடமையாற்றும் 111 அம்புலன்ஸ் மற்றும் இதர வாகன சாரதிகளுக்கான முக கவசம் மற்றும் தொற்று நீக்கி திரவம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.\nகுறித்த நிகழ்வில் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கேதீஸ்வரன் மற்றும் திட்டப் பணிப்பாளர் வைத்தியர் மோகன் மற்றும் தனியார்தொண்டு நிறுவன உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டு வழங்கி வைத்தனர்.\nவணிகம் / பொருளாதாரம் (7)\nமாநகர காவல்படையினரின் சீருடை பறிமுதல் - மாநகரசபைக்கு ஆப்பு வைத்த பொலீஸார் ..\nBREAKING NEWS :- ஊரடங்கு தொடர்பில் இராணுவத் தளபதி சற்றுமுன் வெளியிட்ட அறிவிப்பு\nஅத்தியாவசிய சேவைக்கு மாத்திரமே அனுமதி\nYarl Express: அம்புலன்ஸ் சாரதிகளுக்கென சுகாதார தொற்று நீக்க பொருட்கள் வழங்கிவைப்பு.\nஅம்புலன்ஸ் சாரதிகளுக்கென சுகாதார தொற்று நீக்க பொருட்கள் வழங்கிவைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2021/01/blog-post_172.html", "date_download": "2021-05-07T01:21:47Z", "digest": "sha1:XEWMYEPAT622MBQXJOTK3P6Z2NHXBINE", "length": 8688, "nlines": 90, "source_domain": "www.kurunews.com", "title": "மோட்டார் சைக்கிள் பயன்படுத்துவோருக்கு பிரதி பொலிஸ் மா அதிபர் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை!! - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » மோட்டார் சைக்கிள் பயன்படுத்துவோருக்கு பிரதி பொலிஸ் மா அதிபர் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை\nமோட்டார் சைக்கிள் பயன்படுத்துவோருக்கு பிரதி பொலிஸ் மா அதிப���் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை\nஇலங்கையின் பல பகுதிகளில் மோட்டார் சைக்கிள் திருடும் கும்பல் ஒன்றை கண்டுபிடித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.\nநேற்றைய தினம் மாத்திரம் 6 மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவம் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த திருட்டு சம்பவங்கள் கும்பலாக இணைந்து மேற்கொள்ளப்படுவதாக தகவல் கிடைத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.\nமோட்டார் சைக்கிள்களை பாதுகாப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அதன் உரிமையாளர்களிடம் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமோட்டார் சைக்கிள்களை நிறுத்தும் போது அவதானமாக செயற்படுமாறு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\n\"Kurunews.com ஐ பார்வையிடும் அன்பர்களே Facebook பக்கத்தை Like பண்ணிட்டு போங்கள்\".\nமட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை; பல்வேறு செயற்பாடுகளுக்கு தடை- மாவட்ட அரசாங்க அதிபர்...\nமட்டக்ககளப்பில் தனியார் வகுப்பு நடாத்த தடை விதித்துள்ளதுடன் கொரோனா அதிகரிப்பால் மட்டு போதனா வைத்தியசாலையில் ஒட்சிசன் தேவை அதிகரித்துள்ளது....\nசகல பாடசாலைகளுக்கும் மே மாதம் 07ம் திகதி வரை விடுமுறை\nநாடளாவிய ரீதியில் அனைத்துப் பாடசாலைகளையும் தொடர்ந்தும் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் 7 ஆம் திகதி வரை பாடசாலை...\n10 , 11 தரங்களில் பாடவிதான மாற்றம் அத்துடன் க.பொ.த சா/த, உ/த பரீட்சை நடைபெறும் காலங்களும் மாற்றம்\nதரம் 10 ,11 க்கான பாடத்திட்டங்களை ஒரு வருடம் & 9 மாத காலத்திற்கு மறுசீரமைக்கவும், ஆகஸ்ட் மாதத்தில் க.பொ.த. (சா /த) பரீட்சையை நடாத்தவும்...\nபுனித மிக்கேல் கல்லூரி மாணவன் பௌதீக விஞ்ஞான பிரிவில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலிடம்.\nவெளியான 2020 ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பௌதீக விஞ்ஞான பிரிவில் குகராஜா சஜீவ் 3 A சித்திகளுடன் ...\nமட்டக்களப்பு மாவட்டத்தில் விஞ்ஞான பிரிவில் முதலிடத்தை பெற்ற மட்/பட்டிருப்பு தேசிய பாடசாலை மாணவன்\nவெளியான 2020 ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் விஞ்ஞான பிரிவில் மகிழூர் கண்ணகிபுரத்தை சேர்ந்த தம்பி...\nமட்டக்களப்பு- க��்லடியில் 09 பேருக்கு கொரோனா தொற்று உறுதி...\nமட்டக்களப்பு மாவட்ட மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுற்குற்பட்ட கல்லடி பிரதேசத்தில் இன்றைய தினம் 09 பேருக்கு கொரோன தொற்று உறுதிசெய்யப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/editorial-articles/special-stories/2021/may/03/polymath-leonardo-da-vinci-3616425.amp", "date_download": "2021-05-07T00:29:28Z", "digest": "sha1:MNODFIABRTWXMM6ZDNI74NEIR3H4OE3S", "length": 50594, "nlines": 111, "source_domain": "m.dinamani.com", "title": "அறிவியல் ஆயிரம்: மோனோலிசா ஓவியம் வரைந்த லியானார்டோ டா வின்சி | Dinamani", "raw_content": "\nஅறிவியல் ஆயிரம்: மோனோலிசா ஓவியம் வரைந்த லியானார்டோ டா வின்சி\nயார் இந்த லியோனார்டோ டா வின்சி\nலியோனார்டோ டா வின்சியைத் தெரியாதவர் மிகக் குறைவு. லியோனார்டோ டா வின்சி இத்தாலியில் பிறந்த பல்துறை வித்தகர். லியோனார்டோ ஓர் ஓவியர், வரைவுக் கலைஞர், பொறியாளர், விஞ்ஞானி, கோட்பாட்டாளர், சிற்பி மற்றும் கட்டிடக் கலைஞரும்கூட. அவரது புகழ் ஆரம்பத்தில் ஓர் ஓவியர் என்ற சாதனைகளில் பேசப்பட்டாலும்கூட அவர் அறிவியல் குறிப்பேடுகளுக்காகவும் அறியப்பட்டார்.\nமுக்கியமாக, உடற்கூறியல், வானியல், தாவரவியல், கார்ட்டூன், ஓவியம் மற்றும் பழங்காலவியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் வரைபடங்கள் மற்றும் குறிப்புகளை உருவாக்கி இருக்கிறார். அவரது பிரபலமான ஓவியங்களான கடைசி சப்பர் (1495-98) மற்றும் மோனாலிசா (1503-19) ஆகியவை மறுமலர்ச்சியின் மிகவும் பிரபலமான மற்றும் செல்வாக்குமிக்க ஓவியங்களில் ஒன்றாகும். அவரது குறிப்பேடுகள் அறிவியல் தேடலின் ஆன்மா மற்றும் இயந்திரகளின் கண்டுபிடிப்பு ஆகியவற்றை வெளிப்படுத்துகின்றன.\nலியோனார்டோவின் மேதைமை மறுமலர்ச்சி மனிதநேய லட்சியத்தை எடுத்துக்காட்டுகிறது. அது மட்டுமின்றி அவரது கூட்டுப் படைப்புகள் அவரைவிட இளைய சமகாலத்தவரான மைக்கேலேஞ்சலோவால் மட்டுமே பொருந்தக்கூடியது. இது பிற்கால தலைமுறை கலைஞர்களுக்கு ஒரு பங்களிப்பை உருவாக்கியுள்ளது. லியானார்டோவின் படைப்புகள் அவற்றின் காலத்திற்கு பல நூற்றாண்டுகள் முன்னால் இருந்தன.\nலியோனார்டோ டா வின்சி மறுமலர்ச்சி மனிதன் என்று அழைக்கப்படுகிறார். லியோனார்டோ மறுமலர்ச்சி மனிதனின் பட்டத்தை சம்பாதிக்கும் அறிவியல் மற்றும் கலைகளில் பரந்த அறிவுசார் ஆர்வங்களையும் சாதனைகளையும் கொண்டவர். லியோனார்டோ வரலாற்றில் மிகவும் பிரப���மான கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளில் ஒருவர். அவரது ஆர்வமும் இயற்கையின் விதிகளின் இயல்பான உணர்வும் அவரது புத்திசாலித்தனத்தை ஊக்கப்படுத்தின\nலியானார்டோ, இத்தாலியின் புளோரன்சுக்கு அருகிலுள்ள வின்சியில் வெற்றிகரமான வழக்குரைஞரும், நில உரிமையாளருமான செர் பியோரோ(Ser Piero)வுக்கும், ஓர் இளம் விவசாய பெண்ணான கேடரினாவுக்கும் 1452 ம் ஆண்டு ஏப்ரல் 15 ம் நாள் பிறந்தார்.\nடா வின்சி தனது தாயைவிட தனது தந்தையுடன் நெருக்கமாக இருந்தார். அவர் வாழ்க்கையின் முதல் ஐந்து வருடங்கள் தாயுடன் வாழ்ந்தார். அதன் பின்னர் தந்தையுடன் குடியேறினார். இருப்பினும், அவர் அவ்வப்போது தனது தாய்க்கு கடிதங்களை எழுதுவார். பின்னர் கேடரினா ஒரு கைவினைஞரை மணந்தார். லியோனார்டோ தனது தந்தையின் குடும்பத் தோட்டத்தில் வளர்ந்தார்; அங்கு அவர் ஒரு “முறையான” மகனாகக் கருதப்பட்டார்.\nலியோனார்டோவுக்கு இறுதியில் 12 உடன்பிறப்புகள் (9 சகோதரர்கள்+3 சகோதரிகள்) இருந்தனர். அவர்கள் அதிகம் அவரை விட இளையவர்கள். அவருடன் அவருக்கு அதிக தொடர்பு இல்லை.\nலியோனார்டோவின் குழந்தைப் பருவத்தைப் பற்றி மிகக் குறைவாகவே அறியப்பட்டிருக்கிறது. அவர் தனது தந்தைவழி தாத்தா அன்டோனியோ டா வின்சியின் வீட்டில் வசித்து வந்தார். லியோனார்டோவின் தந்தை ஒரு செல்வந்தர். அவரது மரணத்திற்குப் பிறகு, லியோனார்டோ தனது உடன்பிறப்புகளுடன் செல்வத்திற்கான பரம்பரை தொடர்பாக ஒரு கடினமான நேரத்தை எதிர்கொண்டார்.\nவாசிப்பு, எழுதுதல் மற்றும் எண்கணிதம். லியோனார்டோ பாரம்பரிய கற்றலின் முக்கிய மொழியான லத்தீன் மொழியைப் பற்றி தீவிரமாகப் படிக்கவில்லை, பின்னர் அவர் அதைப் பற்றிய ஒரு அறிவைப் பெற்றார். அவர் 30 வயதாகும் வரை, உயர் கணித-மேம்பட்ட வடிவியல் மற்றும் எண்கணிதத்தில் தன்னைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை, அவர் அதை விடாமுயற்சியுடன் படிக்கத் தொடங்கினார்.\nபுளோரன்ஸ் நகரில் புகழ்பெற்ற இத்தாலிய ஓவியரும் சிற்பியுமான ஆண்ட்ரியா டெல் வெரோச்சியோவால் கல்வி கற்றார். நகரத்தில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். அவரது ஓவியங்கள் அவரது வழிகாட்டியை \"ஓய்வு பெற\" செய்தன. லியோனார்டோ டா வின்சி தனது வழிகாட்டியான ஆண்ட்ரியா டெல் வெரோச்சியோவிடம் கலை படிக்கும் போது ஒரு தேவதையை வரைவதற்கு கேட்கப்பட்டார். லியோனார��டோ டா வின்சி ஒரு விதிவிலக்கான ஓவியத்தை உருவாக்கினார், ஆண்ட்ரியா டெல் வெரோச்சியோ மீண்டும் வண்ணம் தீட்ட வேண்டாம் என்று முடிவு செய்தார் ஆனால், பின்னர் மிலனில் லுடோவிகோ ஸ்ஃபோர்ஸாவின் சேவையில் அதிக நேரம் செலவிட்டார். அவர் மீண்டும் புளோரன்ஸ் மற்றும் மிலனில் பணியாற்றினார், அதே போல் ரோமில் பணியாற்றினார். லியோனார்டோ பின்பற்றுபவர்களையும் மாணவர்களையும் பெரிதும் ஈர்த்தார்.\nலியோனார்டோ கலை வரலாற்றில் மிகப் பெரிய ஓவியர்களில் ஒருவராக இருக்கிறார், மேலும் உயர் மறுமலர்ச்சியின் நிறுவனர் என்ற பெருமையைப் பெற்றார். பல இழந்த படைப்புகள் மற்றும் 25க்கும் குறைவான முக்கிய படைப்புகள் இருந்தபோதிலும், பல முடிக்கப்படாத படைப்புகள் உட்பட - அவர் மேற்கத்திய கலையில் மிகவும் செல்வாக்குமிக்க சில ஓவியங்களை உருவாக்கினார். அவரது மகத்தான பணி, மோனாலிசா ஓவியம் அவரது மிகச்சிறந்த படைப்பாகும். இது பெரும்பாலும் உலகின் புகழ்பெற்ற ஓவியமாகக் கருதப்படுகிறது. கடைசி சப்பர் என்பது எல்லா காலத்திலும் மிகவும் விரும்பப்பட்ட மத ஓவியமாகும், மேலும் அவரது விட்ரூவியன் மேன் வரைபடமும் ஒரு கலாச்சார சின்னமாக கருதப்படுகிறது. 2017 ஆம் ஆண்டில், லியோனார்டோவுக்கு முழு அல்லது பகுதியாகக் கூறப்பட்ட சால்வேட்டர் முண்டி, மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ஏலத்தில் விற்கப்பட்டது, இது பொது ஏலத்தில் இதுவரை விற்கப்பட்ட மிக விலையுயர்ந்த ஓவியத்திற்கான புதிய சாதனையை உருவாக்கியது.\nலியானார்டோ பற்றி எழுதுவதானால், இதிலுள்ள பக்கங்கள் போதாது. அத்தனை கண்டுபிடிப்புகள், அத்துணை சாதனைகள், ஓவியங்கள், உடலியல், மருத்துவம் இயந்திரங்கள் என அவரின் திறமைகள் மிகவும் மலைப்பாக உள்ளன. சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர் இத்தனை திறமைகளோடு என்பதை நினைக்கவே ஆச்சரியமும் மகிழ்ச்சியும் நிறைவாகக் கிடைக்கின்றன. எனவே இங்கு அவரின் சில பதிவுகள் மட்டுமே சொல்லப்படுகின்றன.\nலியோனார்டோ டா வின்சி தனது நேரத்தை உண்மைகளின் கண்டுபிடிப்புகளுக்கும் இயற்கையின் புதிருக்கும் அர்ப்பணித்தார். அறிவியல் மற்றும் கலைகள் குறித்த அவரது வெளிப்பாடுகள் குறிப்பிடத்தக்கவை. லியோனார்டோ டா வின்சி அறிவியல், கற்றல், காரணம் மற்றும் சகிப்புத்தன்மை ஆகிய துறைகளில் உள்ள மக்களின் ஆர்வமுள்ள மற்ற��ம் மூடநம்பிக்கை மனதைத் தீர்த்தார். அவரது சகாப்தத்தில் அவர் சர்வதேச அளவில் புகழ்பெற்ற விஞ்ஞானி, ஓவியர், கண்டுபிடிப்பாளர், சிற்பி, இசைக்கலைஞர், பொறியாளர், கட்டிடக் கலைஞர், கணிதவியலாளர், உடற்கூறியல் நிபுணர், தத்துவவாதி, புவியியலாளர், உயிரியலாளர் மற்றும் வானியலாளர் ஆவார்.\nலியோனார்டோ டா வின்சி மோனாலிசா மற்றும் தி லாஸ்ட் சப்பரின் ஓவியர் ஆவார். ஆனால் அது ஒருபுறம் இருக்க, சால்வேட்டர் முண்டி, தி விர்ஜின் அண்ட் சைல்ட் வித் செயின்ட் அன்னே, மடோனா ஆஃப் தி யர்ன்விண்டர், பேச்சஸ், பெனாயிஸ் மடோனா, ட்ரேஃபஸ் மடோனா, லா பெல்லி ஃபெரோன்னியர், லேடி வித் எர்மின், லெடா அண்ட் ஸ்வான், லிட்டா மடோனா, கார்னேஷனின் மடோனா, ஒரு இசைக்கலைஞரின் உருவப்படம், கினேவ்ரா டி பென்சியின் உருவப்படம், பாலைவனத்தில் செயின்ட் ஜெரோம், செயின்ட் ஜான் பாப்டிஸ்ட், தி மோகியின் வணக்கம், அறிவிப்பு, கன்னி ராக்ஸ் லண்டன், தி விர்ஜின் ஆஃப் தி ராக்ஸ் லூவ்ரே, மற்றும் தி பேட்டில் ஆஃப் ஆங்கியாரி போன்றவையும் லியானார்டோ வரைந்தவையே.\nஆகஸ்ட் 21, 1911இல், வின்சென்சோ பெருகியா, பிரான்சின் லூவ்ரே அருங்காட்சியகத்தில் மோனாலிசாவைத் திருடி, ஓவியத்தை பாரிஸில் உள்ள தனது குடியிருப்பில் இரண்டு ஆண்டுகள் மறைத்து வைத்தார். அவர் ஓவியத்துடன் இத்தாலிக்கு (அவரது தாயகம்) திரும்பிச் செல்ல முடிந்தது, ஆனால் இடையில் அவர் பிடிபட்டு கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்திற்குப் பிறகு, லியோனார்டோ டா வின்சியின் தலைசிறந்த படைப்பு ஊடகங்கள் மற்றும் செய்தித்தாள் தலைப்புச் செய்திகளால் இன்னும் பிரபலமானது.\nவின்சென்சோ பெருகியா ஒரு தேசபக்தி காரணத்திற்காகத்தான் இதைச் செய்ததாகவும், “நெப்போலியன் அதைத் திருடிய பிறகு” அந்த ஓவியத்தை மீண்டும் இத்தாலிக்கு கொண்டு வர விரும்புவதாகவும் கூறினார். வின்சென்சோ பெருகியா குறுகிய காலத்திற்குப் பிறகு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு, முதலாம் உலகப் போரின்போது இத்தாலிய ராணுவத்தில் பணியாற்றினார். இன்று, மோனாலிசா மீண்டும் லூவ்ரே அருங்காட்சியகத்தில் வந்துள்ளார்.\nலியோனார்டோவின் ஓவியம் மோனாலிசா 83% மகிழ்ச்சியாகவும், 9% வெறுப்பாகவும், 6% பயமாகவும், 2% கோபமாகவும் இருப்பதை முகம் அடையாளம் காணும் மென்பொருள் தீர்மானிக்கிறது. நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் பல��கலைக்கழகத்தில் நிகு செபே பிரபலமான மோனாலிசா புன்னகையில் உணர்ச்சி-அங்கீகார மென்பொருளை சோதித்தார். இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தின் பெக்மேன் நிறுவன ஆராய்ச்சியாளர்களுடன் உருவாக்கப்பட்ட இந்த வழிமுறை, மோனாலிசாவின் முக்கிய முக அம்சங்களான உதடுகளின் வளைவு மற்றும் கண்களைச் சுற்றுவது போன்றவற்றை ஆராய்ந்து, பின்னர் ஒவ்வொரு முகத்தையும் ஆறு அடிப்படை உணர்ச்சிகளுக்கு மதிப்பெண் செய்கிறது.\nமோனாலிசா முதன்முதலில் புளோரன்சில் வரையப்பட்டதாக பலர் நம்புகிறார்கள். 1503 அல்லது 1504 ஆம் ஆண்டுகளில் மோனாலிசா முதன்முதலில் புளோரன்சில் வரையப்பட்டதாக பலர் நம்புகிறார்கள். இது 1503 மற்றும் 1506 க்கு இடையில் சந்தேகத்திற்கு இடமின்றி வரையப்பட்டதாக லூவ்ரே கூறுகையில், கலை வரலாற்றாசிரியரான மார்ட்டின் கெம்ப், தேதிகளை உறுதிப்படுத்துவது கடினம் என்று குறிப்பிடுகிறார். மோனாலிசா ஓவியம் கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது. டிசம்பர் 14, 1962 இல் லியோனார்டோ டா வின்சி எழுதிய மோனாலிசாவை கின்னஸ் உலக சாதனை பட்டியலிடுகிறது. மோனாலிசாவின் மதிப்பு நூறு மில்லியன் டாலர்கள். 2018 ஆம் ஆண்டில், பணவீக்கத்தைக் கருத்தில் கொண்டு, 1962 இன் மதிப்பு சுமார் எட்டு நூற்று முப்பது மில்லியன் டாலர்களாக இருக்கும் என கணிக்கப்படுகிறது\n1482 ஆம் ஆண்டில், லியோனார்டோ புளோரன்ஸ் நகரை மிலனுக்கு விட்டுச் சென்றார், பிரான்செஸ்கோ ஸ்ஃபோர்ஸாவை கௌரவிக்கும் மகத்தான குதிரையேற்ற சிலைக்கான கமிஷனால் அங்கு ஈர்க்கப்பட்டார். இது முடிந்ததும், டொனடெல்லோ மற்றும் லியோனார்டோவின் பழைய வழிகாட்டியான வெரோச்சியோ செய்த மறுமலர்ச்சியின் மற்ற இரண்டு குதிரையேற்ற சிலைகளை விட இது பெரியதாக இருந்தது. இது 16 அடிக்கு மேல் உயரமாக இருந்திருக்கும், இது மிலன் டியூக் ஆக இருந்த ஸ்ஃபோர்ஸாவின் மகனால் நியமிக்கப்பட்டது. கிரான் கேவல்லோ (கிரேட் ஹார்ஸ்) என்ற புனைப்பெயர் வழங்கப்பட்ட இந்த திட்டத்தில் லியோனார்டோ 17 ஆண்டுகள் உழைத்தார். லியோனார்டோ மற்ற நலன்களைப் பின்தொடர்வதால், நீண்ட காலவரிசை அசாதாரணமானது அல்ல.\n12 ஆண்டுகளுக்குப் பிறகு, 1493 ஆம் ஆண்டில், சிற்பத்தின் களிமண் மாதிரி காட்சிக்கு வைக்கப்பட்டது. மேலும் லியோனார்டோ அதை வெண்கலத்தில் போடுவதற்கான விரிவான திட்டங்களில் பணியாற்றினார். துரதிர்ஷ்டவசமாக, சிற்பக்கலைக்கு பயன்படுத்தப்பட வேண்டிய உலோகம் அதற்கு பதிலாக பீரங்கிகளுக்கு நியமிக்கப்பட்டது, ஏனெனில் பிரெஞ்சு படையெடுப்பு அச்சுறுத்தல் தவிர்க்க முடியாதது. உண்மையில் டியூக் 1499 இல் தூக்கியெறியப்பட்டார் மற்றும் பிரெஞ்சு துருப்புக்கள் நகரத்தை ஆக்கிரமித்ததால் களிமண் மாதிரி பாழடைந்தது, இல்லை எனில் மறுமலர்ச்சியின் பெரிய நினைவுச்சின்னங்களில் ஒன்றாக இருந்திருக்கும்.\nதன் உருவம் வரைந்த லியானார்டோ\n1512 ஆம் ஆண்டில், லியோனார்டோ டா வின்சியின் சுய உருவப்படம் 60 வயதில் பிரான்சில் வாழ்ந்தபோது சிவப்பு சுண்ணக்கால் வரையப்பட்டது. இந்த அசல் ஓவியம், சிவப்பு சுண்ணியில் ஒரு மனிதனின் உருவப்படம் 33.3 செ.மீ x 21.3 செ.மீ அளவோடு வரையப்பட்டது. இது இப்போது டுரினில் உள்ள பிப்லியோடெகா ரியேலின் பிரமிக்க வைக்கும் தொகுப்பின் ஒரு பகுதியாகும். லியோனார்டோவின் உருவப்படம் ஒரு பாலிமத் அல்லது \"மறுமலர்ச்சி மனிதன்\" என விரிவாக பேசப்பட்டது.\nலியோனார்டோ டா வின்சிக்கு மைக்கேலேஞ்சலோவுடன் சண்டையும் முரண்பாடும் ஏற்பட்டது. அவர்களின் காலத்தின் மிகப்பெரிய இரண்டு கலைஞர்கள் போட்டியாளர்கள் என்று வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். அவர்கள் ஒருவருக்கொருவர் படைப்புகளை தொடர்ந்து விமர்சித்தனர். மைக்கேலேஞ்சலோ எப்போதுமே லியோனார்டோவின் சில படைப்புகளை முடிக்க இயலாமையை வளர்த்தார்\nமறுமலர்ச்சி மனிதனின் சுருக்கமான லியோனார்டோ டா வின்சி ஒரு திறமையான இசைக்கலைஞர் மற்றும் முதன்மை ஓவியர் ஆவார். அவர் பாடல்களையும் புல்லாங்குழலையும் வாசிப்பதைத் தவிர, பிரபுக்களின் கூட்டங்களிலும், அவரது புரவலர்களின் அரண்மனைகளிலும் அடிக்கடி பாடினார். அவரது எஞ்சியிருக்கும் கையெழுத்துப் பிரதிகளில் அவரது இசை அமைப்புகளும் உள்ளன. கலைஞர் வழக்கமாக அவர் வரைந்தபடி இசையைக் கேட்டார். அவரது சொந்த எழுத்துக்களின்படி, லியோனார்டோ இசையை காட்சி கலைகளுடன் நெருக்கமாக தொடர்புபடுத்துவதாகக் கருதினார், ஏனெனில் இது ஐந்து புலன்களில் ஒன்றைப் பொருத்தது, ஆனால் ஒரு ஓவியத்தை விட குறைவான நீடித்தது, ஏனெனில் ஒலி உடனடியாக மங்கிவிடும்.\nமக்கள் லியோனார்டோ டா வின்சியை அவரது வாழ்நாள் முழுவதும் ஒரு பொறியியலாளராக மதிப்பிட்டனர். அவர் லுடோவிகோ இல் மோரோவுக்கு (இத்தாலிய மறுமலர்ச்சி இளவரசர்) எழுதிய கடிதத்தில், நகர பாதுகாப்பு மற்றும் முற்றுகை ஆகிய இரண்டிற்கும் அனைத்து வகையான இயந்திரங்களையும் உருவாக்க முடியும் என்று எழுதினார். டாங்கிகள், விமானங்கள் மற்றும் ஆயுதங்கள் பற்றிய அவரது ஓவியங்கள் சில நூற்றாண்டுகளுக்குப் பிறகு உண்மைக்கு வந்தன.\nலியானார்டோ 72 பக்க விளக்கப்பட கையெழுத்துப் பிரதி& பில் கேட்ஸ்\nலியோனார்டோவின் பல குறிப்பேடுகள் பிரிட்டிஷ் நூலகம் மற்றும் விக்டோரியா & ஆல்பர்ட் அருங்காட்சியகம் போன்ற முக்கிய நிறுவனங்களில் உள்ளன. ஆனால் ஒன்று, குறிப்பாக, ஒரு நவீன மேதை கையில் உள்ளது லியோனார்டோ டா வின்சியின் 72 பக்க விளக்கப்படம் கொண்ட கையெழுத்துப் பிரதியின் ஒரே நகலை பில்கேட்ஸ் வைத்திருக்கிறார். இது கோடெக்ஸ் லெய்செஸ்டர், இது கோடெக்ஸ் சுத்தி என்றும் அழைக்கப்படுகிறது. இது ஐரோப்பாவிற்கு வெளியே உள்ளது. இந்த தொகுப்புக்கு ஏர்ல் ஆஃப் லீசெஸ்டர் அல்லது அர்மாண்ட் ஹேமர் என பெயரிடப்பட்டது, இவை இரண்டும் ஒரு காலத்தில் பிரதிகள் மைக்ரோசாப்ட் கோடீஸ்வரர் 1990 களின் நடுப்பகுதியில் ஒரு கிறிஸ்டியின் ஏலத்தில் அறிவியல் கருப்பொருள் நோட்புக்கை கிட்டத்தட்ட 40 மில்லியனுக்கு வாங்கினார்.\nமிலன் மற்றும் புளோரன்ஸ் நகரங்களில் லியோனார்டோ டா வின்சி 1506 முதல் 1510 வரை எழுதிய பக்கங்களை உள்ளடக்கிய இந்த படைப்பு வானம் நீலமாக இருப்பதற்கான காரணங்கள் முதல் வானத்தில் ஒளியின் பரவல், சந்திரன் ஏன் ஒளிரும் என்பதற்கான கருத்துக்கள் மற்றும் ஹைட்ரோடினமிக்ஸ் பற்றிய ஆய்வு போன்ற பல்வேறு தலைப்புகளை உள்ளடக்கியது. புதைபடிவங்கள் எவ்வாறு தோன்றின என்பது வரை பல அறிவியல் குறிப்புகள் இதில் உள்ளன\nலியோனார்டோ மனித உடலால் ஈர்க்கப்பட்டார். லியோனார்டோவின் அறிவுக்கான தாகம் மனித உடலுக்கும் நீட்டிக்கப்பட்டது. ஏற்கனவே அங்கு இருந்ததைப் படிப்பதில் திருப்தி இல்லாத அவர், மிலன், புளோரன்ஸ் மற்றும் ரோம் ஆகிய மருத்துவமனைகளில் 30 க்கும் மேற்பட்ட மனிதர்களின் அறுவை சிகிச்சைகளைச் செய்வதன் மூலம் தனது அறிவை ஆழப்படுத்தினார். லியானார்டோ மனித சடலங்களைத் திருடி மனித உடற்கூறியல் படிப்பதற்காக இரவில் கல்லறைகளில் தோண்டினார்.\nஉடற்கூறியல் மீதான அவரது ஆர்வம் மிகவும் வளர்ந்தது, அது கலைஞருக்கான அதன் சொந்த ஆய்வுப் பகுதியாக மாறியது, இது அவரது கலைப் பணியை எவ்வாறு பாதித்தது என்பதிலிருந்து சுயாதீனமாக இருந்தது.\nஆரம்பத்திலிருந்தே, அவர் உடற்கூறியல் கட்டமைப்பில் ஆர்வம் காட்டியது மட்டுமல்லாமல், உடலியல் ஆராய்ச்சியையும் தொடங்கினார். மூளை, இதயம் மற்றும் நுரையீரல் எவ்வாறு உடலின் மையமாக செயல்படுகின்றன என்பதைக் காட்டும் அவரது வரைபடங்கள் அறிவியலில் ஒரு பெரிய சாதனை என்று இன்னும் அறியப்படுகின்றன. உண்மையில், அவரது உடற்கூறியல் வரைபடங்கள் நவீன விஞ்ஞான விளக்கத்திற்கு அடிப்படையாக அமைந்தன.\nலியோனார்டோ டா வின்சி தனது பெரும்பாலான படைப்புகளை வலமிருந்து இடமாக எழுதினார். இந்த எழுத்தின் விளைவாக ஒரு கண்ணாடி ஸ்கிரிப்ட் இருந்தது. அதைப் படிக்க கடினமாக இருந்தது. அவர் தனது எழுத்தை ரகசியமாக வைத்திருக்க விரும்பியதன் காரணமாக இருக்கலாம். அதனால்தான் அவர் இந்த வழியில் எழுதத் தேர்ந்தெடுத்தார் அல்லது அவர் இடது கை எழுதும் முறை வைத்திருந்ததால் இருக்கலாம், இந்த அசாதாரண எழுத்து நடை எளிதாக இருந்தது.\nடா வின்சியின் ஓவியங்கள், கற்றல், ஆர்வங்கள், கலைப்படைப்புகள் போன்றவற்றைப் பற்றிய உண்மைகள். லியோனார்டோ டா வின்சி இடது கை பழக்கம் உள்ளவர். அதுபோலவே நெப்போலியன், மைக்கேலேஞ்சலோ, ஐன்ஸ்டீன், நியூட்டன், பில் கேட்ஸ், ஓப்ரா, ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் ஜிமி ஹெண்ட்ரிக்ஸ் ஆகியோர் அவ்வாறே இருந்தனர்.\nமுடிக்கப்படாத ஓவியங்கள், எழுத்து மற்றும் கண்டுபிடிப்புகள்\nபுகழ்பெற்ற ஓவியர் தனது வேலையை முடிக்க மெதுவாக இருந்தார். அவர் முடிக்கப்படாத பல ஓவியங்கள், எழுத்துக்கள் மற்றும் கண்டுபிடிப்புகளை தனது காலத்தில் ஒருபோதும் செயல்படுத்தவில்லை. அவரது சில கண்டுபிடிப்புகள் அவரது வடிவமைப்புகளைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டன, ஆனால் பல செயல்படத் தவறிவிட்டன.\nவிலங்குகளையும் பறவைகளையும் கூண்டில் வைத்திருப்பதில் லியோனார்டோ பிரியப்படவில்லை. எனவே கூண்டு விலங்குகளை விடுவிப்பதற்காக அவர் வாங்குவார். வாங்கி வெளியே விடுவார். எல்லாவற்றிற்கும் மேலாக, அவர் ஒரு கடுமையான சைவ உணவு உண்பவர். அவர் ஒரு செயலைத் தள்ளிப்போட்டாலும், செயலை முழுமையாக செய்பவர்.\nலியோனார்டோ டா வின்சி, தனது 24 வயதில், தனது ஆண் தோழர்களுடன் சேடோமி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். சாட்சிகள் இல்லாதிருந்தால், அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்க முடியும். லியோனார்டோவுக்கு பெண்களுடன் எந்த உறவும் இல்லை, திருமணம் செய்து கொள்ளவில்லை, குழந்தைகளும் இல்லை. உண்மையில், ஆண்-பெண் உடலுறவு தன்னை வெறுப்பதாக அவர் தனது குறிப்பேடுகளில் எழுதினார்.\nசுவாரஸ்யமாக, அவர் இளஞ்சிவப்பு நிறத்தை அணிந்திருந்தார்.\n1485 இல், டா வின்சி ஒரு கவச காரைத் திட்டமிடுகிறார்\nஅவர் ஒரு ஹைட்ராலிக் பம்பைக் கண்டுபிடித்தார். மேலும் மிலன் டியூக்கிற்காக நகரக்கூடிய பாலத்தையும் கட்டினார்.\nபறவைகளின் விமானத்தை விஞ்ஞான ரீதியாக ஆய்வு செய்த முதல் நபர் லியோனார்டோ ஆவார்.\nஅவர் தண்ணீரில் பயன்படுத்த ஒரு ஊதப்பட்ட குழாயைக் கண்டுபிடித்தார், மேலும் சாலையில் தோன்றுவதற்கு கிட்டத்தட்ட 300 ஆண்டுகளுக்கு முன்பு முதல் மிதிவண்டியை வடிவமைத்தார்.\nலியோனார்டோ டா வின்சி உராய்வு மற்றும் அதனுடன் தொடர்புடைய சட்டங்களின் சக்திகளிலும் பணியாற்றினார். உராய்வு கோட்பாட்டை உருவாக்கினார், இது உலகில் முதன்மையானது. அவரது குறிப்புகளிலிருந்து, வரைபடங்கள் வெளிப்படுத்தப்பட்டன, அவை 1920களில் பொருத்தமற்றவை என்று கருதப்பட்டன. இருப்பினும், சமீபத்தில் அவர்கள் மறு ஆய்வு செய்தபின், 1493 ஆம் ஆண்டிலிருந்து வி & ஏ காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ள வரைபடங்கள், உராய்வு சக்திகளைப் பற்றி அவரது எண்ணங்கள் எவ்வாறு முன்னேறின என்பதற்கான திறவுகோலாக இப்போது நிரூபிக்கப்படலாம்.\nவரலாற்றாசிரியர் ஹெலன் கார்ட்னர் கூறினார் 'அவருடைய மனமும் ஆளுமையும் நமக்கு மனிதநேயமற்றதாகத் தோன்றுகிறது, அந்த மனிதர் மர்மமான மற்றும் தொலைதூர மனிதர்'\nபிரான்ஸ் மன்னர் (பிரான்சிஸ் I) லியோனார்டோ டா வின்சியை அன்போடு அழைத்துச் சென்றார். முதலாம் பிரான்சிஸின் அழைப்பின் பேரில், அவர் தனது கடைசி மூன்று ஆண்டுகளை பிரான்சில் கழித்தார், மே 2, 1519 இல், தனது 67 வயதில், லியோனார்டோ டா வின்சி பக்கவாதத்தால் இறந்துவிட்டதாக மக்கள் நினைத்தனர். இறப்பதற்கு முன், அவர் தொடர்ந்து தனது அறிவியல் படிப்புகளில் பணியாற்றினார்.\nஅவரது உதவியாளர் மெல்சி அவரது முதன்மை வாரிசு மற்றும் தேவைகளை நிறைவேற்றுபவராக இருந்தார். அவர் இறந்ததிலிருந்து, அவரது சாதனைகள், மாறுபட்ட நலன்கள், தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் அனுபவ சிந்தனை ஆகியவை ஆர்வத்தைத் தூண்டத் தவறிய காலம் இல்லை\nலி��ோனார்டோ டா வின்சி அடக்கம் செய்ய விரும்பிய இடம், ஆகஸ்ட் 12, 1519 இல் நடந்தது. பிரான்சின் அம்போயிஸ், செயின்ட் புளோரண்டைன். துரதிர்ஷ்டவசமாக, 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், பிரெஞ்சு புரட்சியின் போது நடந்த போர்கள் அதை அழித்தன. 1863 ஆம் ஆண்டில், செயிண்ட்-ஹூபர்ட்டில் உள்ள தேவாலயத்தில் லியோனார்டோ டா வின்சியின் எலும்புகளை யாரோ கண்டுபிடித்தனர்.இப்போது அவை டாவின்சியின் எலும்புகளா என்பதில் டிஎன்ஏ ஆராய்ச்சிகள் நடக்கின்றன.\nஉன்னத இன்பம் புரிந்துகொள்ளும் மகிழ்ச்சி. அதைப் பயன்படுத்தும் எவருக்கும் நேரம் நீண்ட காலம் இருக்கும்.\nமௌனத்தைப் போல எதுவும் அதிகாரத்தை பலப்படுத்துவதில்லை.\nமுடிவில் எதிர்ப்பதைவிட ஆரம்பத்தில் எதிர்ப்பது எளிது.\nகூச்சல் இருக்கும் இடத்தில் உண்மையான அறிவு இல்லை.\n[மே 2 - லியானார்டோ டா வின்சியின் நினைவு நாள்]\nஅறிவியல் ஆயிரம்: அறுவைச் சிகிச்சை நிபுணர் ஜோசப் கான்ஸ்டன்டைன் கார்ப்யு\nஅறிவியல் ஆயிரம்: கணிதத்தில் பீல்ட்ஸ் மெடல் வாங்கிய முதல் பெண் மரியம் மீர்சஹானி\nத்ரிஷா பிறந்த நாள்: கோலிவுட்டை ஜெயித்த தமிழ்ப் பெண்\nஅஜித்தை ‘தல’ அந்தஸ்த்துக்கு உயர்த்திய 10 படங்கள்\nஅறிவியல் ஆயிரம்: 'நச்சுயியலின் பிதாமகன்' மருத்துவர் பாராசெல்சஸ்\nமக்கள் மறக்க முடியாத உண்மை உழைப்பாளிகள்\nகே.வி. ஆனந்த்: ஜெயித்த கனவு\nஅறிவியல் ஆயிரம்: மண்ணெண்ணெயைக் கண்டுபிடித்த கனடிய மருத்துவர் ஆபிரகாம் கெஸ்னர்\nwest bengal electionஆஸ்கர் விருதுஸ்டெர்லைட்முதல்வர் எடப்பாடி பழனிசாமிஇந்தியாவில் கரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mkppando.com/2021/02/", "date_download": "2021-05-07T01:42:29Z", "digest": "sha1:BHLHAOAJC4CAJRDNWEEYH5FQU7LHQVP3", "length": 3719, "nlines": 65, "source_domain": "mkppando.com", "title": "February 2021 - My Life Experience", "raw_content": "\nபுரிதல் பற்றிய ஒரு புரிதலும் அதன் அவசியமும்\nபுரிதல் பற்றிய ஒரு புரிதலும் அதன் அவசியமும்-5 நிர்வாகம் என்றால் என்ன ஒரு அலசலும் ஆராய்தலும் நான் மேல மருங்கூரில் கோவில் கட்ட முயற்சியில் ஈடு படத்திலிருந்து நிர்வாகம் என்றால் என்ன என்று தெரியாது என்று நிறைய நபர்களுக்கு தெரியவில்லை என்பதை கற்றுக்கொண்டேன். மேல மருங்கூரை சேர்ந்த அன்புத்தம்பி ஞானகுரு பேசிய ஒரு ஆடியோ எனக்கு அனுப்பினார். அதில் என்ன சொல்ல வருகிறார். அவரின் ஆடியோ கீழே கேட்கவும். எனது அன்புத்தம்பி மெயின் வாட்சப் குலுவிலிருந்து பொறுப்பு…\nபுரிதல் பற்றிய ஒரு புரிதலும் அதன் அவசியமும்-7\nபுரிதல் பற்றிய ஒரு புரிதலும் அதன் அவசியமும்-6\nபுரிதல் பற்றிய ஒரு புரிதலும் அதன் அவசியமும்\nVigneskanna on புரிதல் பற்றிய ஒரு புரிதலும் அதன் அவசியமும்\nநான் எல்லா உயிரினங்களையும் சமமாக பார்க்கிறேனா\nபுரிதல் பற்றிய ஒரு புரிதலும் அதன் அவசியமும்\nஶ்ரீசெல்வ வினாயகர், மேலமருங்கூர் – தம்பி சிவஞானம் என்ற ராசு அவரின் பார்வைய\nஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயம் – MKP பாண்டுரங்கன் கண்ணோட்டத்தில்\nஸ்ரீ செல்வா விநாயகர் கோவில் வந்த உண்மை கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://namathu.blogspot.com/2017/05/blog-post_582.html", "date_download": "2021-05-07T01:28:17Z", "digest": "sha1:HAZ34WGOUIWZN5X6S36KKEV3DRJ4C7P3", "length": 68256, "nlines": 827, "source_domain": "namathu.blogspot.com", "title": "நமது NAMATHU.blogspot.com . . . . . . . நல்வரவு Enter : கருத்துரிமையின் நிலை என்ன?: கொதிக்கும் இயக்குநர்கள்!", "raw_content": "\nமின்னம்பலம் : தமிழ் ஈழ இனப்படுகொலையை நினைவு கூறும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் மே பதினேழு இயக்கத்தால் நடத்தப்படும் நினைவேந்தல் நிகழ்வுக்கு இந்த ஆண்டு அரசு தடை விதித்தது. தடையை மீறி மே 21ம் தேதி மே பதினேழு இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் தமிழ் உணர்வாளர்கள் கையில் மெழுகுவர்த்தியுடன் நினைவேந்தல் நடத்த முயன்றபோது காவல்துறையால் நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். அவர்களை அன்றிரவே விடுதலை செய்த காவல்துறை 17 பேரை மட்டும் ரிமாண்ட் செய்து புழல் சிறையில் அடைத்தது. இதைத் தொடர்ந்து மே 29ம் தேதி மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, டைசன், அருண், இளமாறன் ஆகிய நான்கு பேர் மீது குண்டர் சட்டத்தைப் பயன்படுத்திச் சிறையில் அடைத்துள்ளது. இதற்குத் தமிழகம் முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின், முத்தரசன், ஜி.ராமகிருஷ்ணன், வைகோ, திருமாவளவன், சீமான் உட்படப் பல்வேறு கட்சியினரும், அமைப்புகளைச் சேர்ந்தவர்களும், படைப்பாளிகளும் சமூகச் செயல்பாட்டாளர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நேற்று (மே 30) மாலை சென்னை பத்திரிகையாளர்கள் மன்றத்தில் வைத்துப் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர், ராம், வெற்றிமாறன், பிரம்மா, வ.கௌதமன் பாலாஜிசக்திவேல், கமலக்கண்ணன், பூவுலகின் நண்பர்கள் ச���ந்தர் ராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர்.\nநினைவேந்தல் நிகழ்வு கடந்த 7 வருடங்களாக அமைதியான முறையில் நடைபெற்று வந்த நிலையில் காரணமேயில்லாமல் தடைவிதிக்கப்பட்டது. நினைவேந்தல் நடத்த முயன்ற தோழர்களைக் கைது செய்துள்ளது. அவர்கள் வன்முறைச் செயல்களில் ஈடுபடவில்லை. பொதுச் சொத்துகளுக்குச் சேதம் விளைவிக்கவில்லை ஆனால் திருமுருகன் காந்தி உள்ளிட்ட நான்கு தோழர்கள் மேல் போடப்பட்டுள்ள குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. இந்தச் சட்டம் எந்த நிபந்தனையுமின்றித் திரும்பப்பெறவேண்டும். இது கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரானது மட்டுமல்ல ஜனநாயகப் படுகொலையும் கூட.\nநாம் ஜனநாயக நாட்டில் தான் வாழ்கிறோமா என்னும் கேள்வி எழுகிறது. மக்களுக்காகக் குரல் கொடுக்கும் ஒவ்வொருவருக்கும் இது தான் கதி என இந்தக் அரசு நம்மை எச்சரிக்கிறது. அதையே இந்த குண்டர் சட்டம் பயன்படுத்தப்பட்டிருப்பது காட்டுகிறது. இது ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கின்ற செயல். இதற்கு நாம் எதிர்ப்பு தெரிவிக்காவிட்டால் நாம் தமிழர்களே அல்ல.\nஇந்தக் குண்டர் சட்டம் போடப்பட்டது தமிழக அரசு தன்னிச்சையாக எடுத்த முடிவு அல்ல. இந்திய அரசு கொடுத்த பட்டியலில் உள்ளவற்றையே இங்குள்ள தமிழக அரசு நிறைவேற்றியுள்ளது. 7 தமிழர்கள் விடுதலை, ஹைட்ரோ கார்பன் திட்டம், மீத்தேன் திட்டம், மீனவர் பிரச்னை, ஈழ இனப்படுகொலை ஆகியவற்றிற்கெல்லாம் போராடியதன் விளைவாகவே இந்தக் குண்டர் சட்டம் இந்தத் தோழர்கள் மேல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த நாட்டில் லட்சக்கணக்காகக் கொன்று குவிக்கப்பட்ட நம் சொந்தங்களுக்காக அழுதிடக் கூட உரிமையில்லை. விநாயகர் ஊர்வலம் நடத்திக் கடலையே அசுத்தப்படுத்துவதற்குத் தடை இல்லையா ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் ஆகியோர்ருக்கு நினைவஞ்சலி செலுத்துவதற்குத் தடை இல்லையா ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் ஆகியோர்ருக்கு நினைவஞ்சலி செலுத்துவதற்குத் தடை இல்லையா தமிழக அரசுக்கு அதன் அமைச்சர்களுக்கு ரெய்டு வந்துவிடுமோ என்று பயம். அவர்களது பலவீனத்திற்காகத் தமிழர் விரோதச் செயல்களில் ஈடுபடும் மத்திய அரசுக்குத் துணை போகிறது. குண்டர் சட்டம் போட்டால் அவர்களை முடக்கிவிடலாம் என்று எண்ணுவது குழந்தை தனமானது. மனித உரிமை மீறல். இங்கு வந்திருப்பவர்களில் பெரும்பாலானோர் தேசிய விருதுபெற்றவர்���ள். குரூரமான இந்தச் சட்டத்தை எதிர்க்கும் இந்தப் படைப்பாளிகளின் கோரிக்கைக்கு இந்த அரசு மதிப்பளித்து அவர்கள் குற்றமற்றவர்கள் எனக் கூறி விடுதலை செய்யப்படவேண்டும். அது தான் அறம். தனி மனித வாழ்வுக்கே அறம் முக்கியம். ஒரு அரசு அறமின்றிச் செயல்படக்கூடாது. திருமுருகன் காந்தி மேல் போடப்பட்ட குண்டர் சட்டம் தொடக்கமே. தொடர்ந்து தமிழர் நலனுக்காகக் குரல் கொடுப்பவர்கள் மேல் அடுத்தடுத்து இத்தகைய தாக்குதல்கள் தொடரும் என எனக்குத் தெரியும். என் மேலும் இந்தச் சட்டம் பாயும் நாளை எதிர்பார்த்திருக்கிறேன்.\nபள்ளி மாணவனாகத் தேசப் பற்றுடன் வளர்ந்த என்னை இவர்களது இந்த அடக்குமுறை யோசிக்கவைக்கிறது. தியேட்டரில் தேசியக் கீதம் முடிந்த பின் செல்வோம் என்று எண்ணுமளவுக்கு தூண்டியுள்ளது. மக்கள் எதை உடுத்தனும், எதை உண்ணனும், எங்கு வாழனும் என்பதை அரசு முடிவு செய்யும் சூழல் நிலவுகிறது. நினைவேந்தல் என்பது இறந்தோர்களுக்கு நாம் செய்யும் ஈமக் கிரியை. கங்கை உட்பட நீர்நிலைகளின் ஓரம் செய்யும் இந்தப் பண்பாட்டு நிகழ்வுக்குத் தடைவிதிப்பது கண்டிக்கத்தக்கது.\nகுண்டுவீசி, அவமானப்படுத்தி, கற்பழிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்ட லட்சக்கணக்கான தமிழர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் இந்தச் சடங்கைத் தடுப்பது நியாயமற்றது. இதைச் செய்த எம் தோழர்களைக் கைது செய்வதும் குண்டர் சட்டம் போடுவதும் அடிப்படை உரிமைக்கும் கருத்துரிமைக்கும் எதிரானது. இதைச் செய்த இந்த அரசு என் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். கைது செய்யப்பட்ட அனைத்துத் தோழர்களும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கிறேன்.\nவரலாற்றை மறைக்கும் வேலைகளில் இந்த அரசு தொடர்ந்து ஈடுபட்டுவருகிறது. 2000 ஆண்டு பழமைவாய்ந்த கீழடி அகழாய்வை மூடிமறைக்கும் வேலைகளில் இறங்கியுள்ள இவர்கள் 10 ஆண்டு கூட ஆகாத தமிழினப்படுகொலையை மறைக்கும் வேலையிலும் இறங்கியுள்ளனர். இதுவரை நடைபெற்ற எல்லா நினைவேந்தலிலும் நான் பங்கேற்றுள்ளேன். மிகவும் அமைதியான முறையில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நடைபெறும் இந்நிகழ்வுக்குத் தடைவிதிப்பது வேதனையளிக்கிறது. மே பதினேழு இயக்கத் தோழர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட நால்வர் மீது போடப்பட்டுள்ள குண்டர��� சட்டம் மனிதாபிமானமற்றது ஏற்றுக்கொள்ள முடியாதது. எதிர்ப்பு குரலையும் மாற்றுக்குரலையும் நசுக்குவது ஜனநாயகத்திற்குப் பிரயோஜனமற்றது. இத்தகைய நடவடிக்கைகள் ஜனநாயகப் போராட்டங்கள் வேறு திசைக்குச் செல்ல வழிவகுக்கும்.\nசகிப்புத்தன்மையற்ற போக்கின் வெளிப்பாடு தான் இத்தகைய கைது நடவடிக்கை மற்றும் குண்டர் சட்டம் பிரயோகம். இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று அவர்கள் சொல்வதைக் கேட்கவேண்டும். இரண்டு அவர்கள் சொல்வதையே கேட்க வேண்டும். இங்கு மாற்றுக்கருத்துக்கு இடமே இல்லை. ஊடகங்களில் மறுக்கப்படும் செய்திகளைச் சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகிறோம். தற்போது இதற்கும் சென்சார் வரவிருக்கிறது. மக்களைப் பிரிக்கின்ற வேலைகளில் இவர்கள் தீவிரமாக ஈடுபடுகின்றனர். பொய்வழக்கு போட்டுச் சிறையில் அடைக்கப்பட்ட தோழர்கள் மற்றும் குண்டர் சட்டம் போடப்பட்டுள்ள திருமுருகன் காந்தி உள்ளிட்ட நால்வருக்கும் எங்கள் ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறோம்.\nபோராடுபவர்களைத் தேசத்துரோகிகளாகச் சித்தரிக்கும் போக்கு இங்கு நிலவுகிறது. மாற்றுக்கருத்துகளை முன்வைப்பவர்களைத் தொடர்ந்து குறிவைத்து இத்தகைய தாக்குதல்கள் நடத்தப்படுகிறது. லட்சக்கணக்கான தமிழர்கள் ஒன்று சேர்ந்து அஞ்சலி செலுத்தும் நிகழ்வு 7 வருடங்களாக நடைபெறுகிறது. இது போராட்டம் அல்ல நினைவேந்தல். ராம்விலாஸ் பஸ்வான் உட்படப் பல்வேறு தலைவர்களும் கலந்துகொண்டுள்ளனர். தமிழர் கடல் என்று அழைக்கப்படுகிற மெரீனாவில் நினைவுத் தூண் எழுப்பக் கோரிக்கைகளும் எழுந்தவண்ணம் உள்ளது. வன்முறையாளர்கள் மேல் பிரயோகிக்கப்படும் இந்தக் குண்டர் சட்டத்தைத் திருமுருகன் காந்தி உள்ளிட்ட தோழர்கள் மேல் இந்த அரசு பயன்படுத்தியுள்ளது. இது ஆச்சரியமானது அல்ல. ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டது தான். இது அவர் நீட் தேர்வுக்கு எதிராகப் போராடியதற்கும் ரேசன் கடைகள் மூடப்படுவதைக் குறித்து முன்கூட்டியே அறிவித்ததற்கும் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் ஆகியவற்றிற்கெல்லாம் தொடர்ந்து போராடுவதற்காகவுமே இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. நாளை படைப்பாளிகள் தனிமனிதர்கள் யார் மேலும் இத்தகைய சட்டம் பாயலாம். இந்தியாவில் கொண்டுவரப்பட்ட எமர்ஜென்ஸியை நான் பார்த்ததில்லை. இப்போது நடப்பவைகளை பார்த்து எமர்ஜென்ஸி இப்படிதான் இருந்திருக்கும் என உணரமுடிகிறது. மக்களின் போராட்டங்களுக்கு ஆதரவளிப்பது தான் ஜனநாயகப்பூர்வமான அரசு எனக்கூறிய ஜெயலலிதா தனது ஆட்சியில் ஆண்டுக்கு 22,000 போராட்டங்களுக்கு மேல் நடைபெறுகிறது எனக் கூறினார். ஆனால் இப்போதுள்ள அரசு போராடுபவர்களைத் தேசத் துரோகியாகப் பார்க்கிறது. ஒரு அரசைக் கேள்வி கேட்பது தான் உண்மையான தேசப் பற்று. தோழர்கள் மேல் தொடுக்கப்பட்டுள்ள வழக்குகள் அரசப்பயங்கரவாதத்தைக் காட்டுகிறது.\nஜனநாயக நாடு என்னும் போர்வையில் உள்ள சர்வாதிகார நாட்டில் இந்தப் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. எது ஜனநாயகம் எது அடிப்படை உரிமை என்னும் கேள்வி எழுகிறது. ஊடகத்துறை தான் நாட்டை வழிநடத்தனும். சாமானியர்களுக்கும் பாமரர்களுக்கும் சொல்லவேண்டியது உங்கள் பொறுப்பு. கட்சிகள் சொல்வதை மட்டும் தான் கூறுகிறீர்கள், பின்விளைவுகளை எடுத்துக்கூறுவதில்லை. தொலைக்காட்சிகளில் நடத்தும் விவாதமே ஏமாற்று வேலையாக இருக்கிறது. ஒரு கருத்துக்கு ஆதரவு, எதிர்ப்பு, நடுநிலை என மூன்று பேரைக் கூட்டி நெறியாளர் பேசுகிறார். ஆனால் எது உண்மை என்பதை மக்களுக்குக் காட்டவேண்டும்.\nஇங்குத் தேசப் பக்தி திணிக்கப்படுகிறது. 12 வயதில் என் தந்தையுடன் நான் மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு அருகில் சென்று கொண்டிருக்கும் போது ஒரு வெளிநாட்டவரின் மேல் என் தந்தையின் கால் பட்டுவிட்டது. அதற்கு உடனே அந்த வெளிநாட்டைச் சேர்ந்தவர் ‘ப்ளடி இந்தியன்’ என்று திட்டினார். அதற்கு என் தந்தை நான் செய்தது தவறு தான். அதற்கு நான் மன்னிப்பு கேட்கிறேன். அதற்கு எதற்காக என்நாட்டை இழுக்கிறாய் என்று சண்டை போட ஆரம்பித்தார். அப்போதே என் மனதில் தேசபக்தி உருவானது. அந்த நேரம் மோடி ஆர்.எஸ்.எஸ்.-இல் சேர்ந்து எங்கோ இருந்திருப்பார். இவர்கள் எனக்குத் தேசபக்தியை ஊட்டவேண்டும் என்ற அவசியமில்லை. எங்கள் தேசப் பக்தியை நிரூபிக்க வேள்வியில் குதிக்கவா மாட்டுக்கறி தடை போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மூலம் இங்கே ஒற்றைக் கலாச்சாரத்தை நோக்கி நம்மைத் தள்ளுகிறார்கள். மாநிலச் சுயாட்சியை இந்தியாவிலேயே முதன்முறையாக முன்னெடுத்தது தமிழகம் தான். மாநில உரிமைகளை விட்டுக்கொடுக்காத அரசாகத் தான் தமிழக அரசு ஜெயலலிதா வரைக்கும் இருந்துள்ளது. ���னால் இந்த அமைச்சர்களின் பலவீனத்தால் மத்திய அரசு தலைமைச் செயலகம் வரை உள்ளே நுழைந்துள்ளது. ஜெயலலிதா எதிர்த்த நீட் தேர்வு, உணவு பாதுகாப்பு மசோதா போன்றவைகளுக்கு இவர்கள் போய்க் கையெழுத்திட்டுவந்தது கேவலமான செயல்.\nஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி அளிக்கும் இந்த அரசு நினைவேந்தலுக்குத் தடைவிதிக்கிறது. நினைவேந்தலுக்காகத் திருமுருகன் காந்தி உள்ளிட்ட தோழர்கள் கைதுசெய்யப்படவில்லை. மத்திய அரசை எதிர்த்தனாலேயே கைது செய்யப்பட்டுள்ளனர். நான் அவர்களை விடுதலை செய்யவேண்டும் என்று கேட்டு வரவில்லை. இந்த அரசை அச்சுறுத்த வந்துள்ளோம். இன்று குண்டர்சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள தோழர் திருமுருகன் காந்தி பெரிய தலைவராக வெளியே வருவார்.\nபத்திரிகையாளர்களாகிய உங்களிடம் ‘பிராது’ கொடுக்கவந்துள்ளேன். இங்கு நடைபெறும் அத்தனை சம்பவங்களுக்கும் உங்களுக்கும் பங்கு இருக்கிறது. இல்லையேல் விபரம் தெரியாதவர்களிடமெல்லாம் போய் அரசியலுக்கு வருவீர்களா என்று கேட்பீர்களா நானும் அரசியலில் இருந்தேன். இளம் வயதில் கூட்டங்களில் பேசியிருக்கிறேன். பெருந்தலைவர் காமராஜர் தோல்விக்குப் பின் அரசியலிலிருந்து வெளியேறிவிட்டேன்.\nஇப்போது குண்டர் சட்டத்தின் கீழ்க் கைதுசெய்யப்பட்டுள்ள திருமுருகன் காந்தி கொலை செய்தானா வன்முறையில் ஈடுபட்டானா அமைதியான முறையில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தியது குற்றமா தடைவிதிக்கப்பட்ட பகுதியில் நினைவேந்தல் நடத்தியதற்காகக் கைது செய்தார்களாம். தடையை மீறுவது ஓர் அடையாளம். திருமுருகன் காந்திக்காக 8 பேர் இன்று பேசுகிறோம். நாளை 800 அடுத்து 8 கோடி பேரும் பேசுவார்கள்.\nதமிழன் வேறு எங்காவது போய் அரசியல் செய்யமுடியுமா யார் வேண்டுமென்றாலும் எம் தலையில் கொட்டலாம் என்ற நிலை உள்ளது. மொழி, இனம் விஷயத்துல தமிழனின் வீரம், அறிவு, பற்று எல்லாம் துரு பிடித்துப் போய்விட்டது.\nநாங்கள் படைப்பாளிகள் எங்கள் மடியில் கணம் இல்லை அதனால் துணிந்து சொல்வோம். திருமுருகன் காந்தி உட்படச் சிறையிலடைக்கப்பட்ட தோழர்கள் அனைவரும் விடுதலைசெய்யப்பட வேண்டும்.\nதவிர்க்க முடியாத காரணங்களினால் வெளியூரில் இருக்கும் இயக்குநர் சங்க தலைவர் விக்ரமன் மற்றும் சத்யராஜ் இந்த சந்திப்பில் பங்குகொள்ளமுடியவில்லை என தெரிவிக���கப்பட்டது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅண்ணனின் மணப்பெண் கழுத்தில் தாலி கட்டிய தம்பி .. \"...\nசெங்கோட்டையன் வசூலுக்காக 1900 பதவிகளை மறைத்து மோச...\nகலைஞருக்கு வைரவிழா வாழ்த்து கவிதையை வாசித்து காட்ட...\nநான் ரெடி நீங்க ரெடியா தமிழகத்தை நோக்கி மம்தா பான...\nகனிமொழி : கலைஞர் தொண்டர்களை விரைவில் சந்திப்பார்\nகனடாவில் தமிழிலும் தேசிய கீதம் .. தமிழுக்கு மற்றொர...\nஇயக்குனர் வேலு பிரபாகரன் நடிகை சேர்லி தாஸ் திருமணம்\nசென்னை சில்க்ஸ்.. அக்கம் பக்கத்து வீடுகளில் விரிசல...\nபிகார் முதலமைச்சர் நிதீஷ்குமார்: இந்தியாவுக்கே வழி...\nதினகரன: சென்னை திரும்பியதும் கட்சி பணியாற்றுவேன் .\nகலைஞருக்கு ஒரு உடன்பிறப்பின் வைரவிழா அழைப்பிதழ் .\n கல்லக்குடி கண்ட கலைஞர் அகவ...\nதினகரன் மீது இனி நடவடிக்கை இல்லை\nலியோ வரத்கார் .... அயர்லாந்து புதிய பிரதமாராக இந்த...\nகவிக்கோ அப்துல்ரகுமான் உடல் அடக்கம் இன்று நடக்கிறது\nஐ.ஐ.டி வளாகம் முன்பு போராடிய பெண்ணின் கையை முறித்த...\nகாருக்குள் எரிந்தநிலையில் ... தற்கொலை அல்ல கொலை\nகலைஞர் வைரவிழா மலரை ரசித்து பார்க்கும் காட்சி வெளி...\nஹரியான .. ஆண்டுக்கு 35000 பெண்சிசுக்கள் இனக்கொலை ....\nBBC: பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பத்ததில் இருந்து அமெ...\nசென்னை சில்க்ஸ் .. எரியும் வீட்டில் புடுங்க முயற்ச...\nஒருவருக்கு இரண்டு இதயங்கள்.. தமிழக மருத்துவர்கள் ச...\nமாட்டிறைச்சி விற்பனை தடையின் பின்னணி...ANIMAL MARK...\nகலைஞர் வைரவிழா மலரை பார்க்கும் .. விடியோ லீக்கானத...\n28 வீத ஜி எஸ் டி.. கமலஹாசன் கடும் எதிர்ப்பு\nநீதிதேவன் குன்ஹாவின் தீர்ப்பு... .3,000 ஏக்கர் சொத...\nதிருமுருகன் காந்தியை மீண்டும் கைது செய்த போலீஸ் .....\nஒ.பன்னீர்செல்வத்தின் ராக்கெட் வேக சொத்துக்குவிப்ப...\nகூடங்குளத்தில் 5, 6-வது அணு உலைகள்: இந்தியா - ரஷிய...\nகவிக்கோ அப்துல் ரகுமான் காலமானார்... இன்று(ஜூன் 2...\nநிச்சயமாக இளையராஜா மணிமேகலையின் அட்சய பாத்திரம், ,...\nஅனுஷ்காவின் கரவன் பறிமுதல் .. முறையான ஆவணங்கள் இல்...\nசென்னை சில்க்ஸ் ரூ.300 கோடி சேதம் - தீப்பிடித்த ...\nசோனியா காந்தி : தமிழ் மக்களுக்கு பணியாற்றவேண்டும் ...\nஜிகா வைரஸ் குஜராத்திலும் வட இந்தியாவிலும் ... மிகவ...\nஇந்து தேச பரப்புரையை நிறுத்துங்கள்: பாஜகவுக்கு சித...\nராமேஸ்வரத்தில் 16 கிலோ தங்கம் பிடிபட்டது இலங்கையி...\nபசுவை வணங்குபவர்கள் பால் குடிக்க கூடாது .. பெரும் ...\nஐ ஏ எஸ் தேர்வு ... தமிழ் விருப்பு தேர்வாக எடுத்த ம...\nஹெரிடேஜ் பால் உரிமையாளர் சந்திரபாபு நாய்டு... அமை...\nடெல்லி ஐ ஐ டி யில் மாணவி மரணம் .. மின்விசிறியில் த...\nஇந்தியா ஜிடிபி 6.1 ஆக சரிவு . இனி நாம் வளரும் நாடு...\nChennai IIT மாணவன் சூரஜ் ஐ தாக்கிய பாஜக மாணவ குண்...\nவேகமாக வளரும் பொருளாதார நாடுகள் பட்டியலில் இருந்து...\nவிதிமீறலில் 500க்கும் மேற்பட்ட கட்டடங்கள்\nசென்னை சில்க்ஸ் குமரன் தங்க மாளிகை'யின் கிலோ கணக்க...\nBBC :டிடிவி தினகரனுக்கு ஜாமீன் வழங்க டெல்லி நீதிமன...\nகாரில் எரிந்த மூவரும் தற்கொலை ... சந்தேகம் ... மாம...\nசென்னை சில்க்ஸ் கட்டிடம் இடிந்து விழுந்தது\nபதஞ்சலி .. 40 சதவீதப் பொருட்கள் தரம் குறைவானவை: ஆர...\nபழ.நெடுமாறன் அல்ல.... பழம் தின்ற நெடுமாறன்\nதிராவிடத்தை எதிர்த்து பேசியவர்கள் ... பார்பனீயத்தி...\nஆண் மயில் உறவு கொள்வதில்லை; அதனால்தான் அது தேசிய ப...\nபெண் பொறியியலாளர் சுட்டு கொலை .. உத்தர பிரதேச நொய்...\nகாங்கிரஸ் தலைவர்கள் வீடுகளில் அமலாக்க துறை கடும் ச...\nChennai Silks 22 மணித்தியாலங்கள் தொடர்ந்து எரிகிறத...\nபீகார் 12 தேர்வு பெரும் தோல்வி ..கலைப்பிரிவு 76 வீ...\nசென்னை சில்க்ஸ் தீ ... டீசல் பேரல்களும் கேஸ் சிலிண...\nமாலை மாற்றிய உடனே பரீட்சை எழுதிய மாணவ தம்பதிகள் .....\nகைதான’ திருமுருகனும் ‘கைதாகாத’ வைகோவும்\nநாட்டில் சிவில் யுத்தம்: திருமாவளவன்\nசென்னை ஐ .ஐ.டி. முற்றுகை\nஇன்போசிஸ் ஊழியர் சடலமாக மீட்பு\nமீண்டும் மெரீனா புரட்சி தமிழகத்திலே உருவாகும் - மு...\nபசுவை கொன்றால் ஆயுள் தண்டனை ... ராஜஸ்தான் உயர்நீதி...\nதியாகராய நகர் ஆபத்து பகுதியாக அறிவிப்பு ..10 மணிநே...\nசென்னை குமரன் சில்க்ஸ் இல் தீவிபத்து மின்கசிவு கார...\nஆடியோ டேப்களை திருடினார் அர்னாப் கோஸ்வாமி: டைம்ஸ் ...\nஜெயலலிதா, சசிகலாவின் 68 சொத்துகள் பறிமுதல்: அரசு...\nஹோட்டல் வேலை நிறுத்தம் நேரடி காட்சிகள்\nசென்னை ஐ ஐ டி மாணவர் தாக்குதல் ..8 மாணவர்கள் மீது ...\nபார்ப்பன ஆண்கள் மட்டுமே இந்தியாவிற்குள் வந்தனர் .....\nமலேசிய குடியுரிமை பெற ஜாகிர் நாயக் முயற்சி.. இன்ட...\nபாஜக பிரமுகர்களின் மாட்டிறைச்சி ஏற்றுமதி கம்பனிகள்...\nஸ்டாலின் : கலைஞர் வைரவிழாவில் நேரில் சந்திப்பதை த...\nமெட்ரிமோனியல் இணையம் மூலம் பெண்களுக்கு வலை.. ஐ டி ...\nஇயக்குனர் தாசரி நாராயண ராவ் காலமானார் .. தெலுங்கு ...\nதங்கம் நுகர்வில் முன்னணியில் இந்தியா .. இந்தியாவில...\nBBC :மாட்டிறைச்சிக்கு தடை போட மத்திய அரசுக்கு அதிக...\nசாமியார் பிறப்புறுப்பை காதலன் உதவியுடன் மாணவி துண்...\nசென்னை ஐஐடி மாணவர் மீது கொலை வெறித்தாக்குதல்\nஜெர்மனியில் பிரதமர் மோடி வறுமை ஒழிப்பு குறித்து ப...\nஜெயாவால் வெறும் 7 கோடிக்கு முழுங்கிய 900 ஏக்கர் கொ...\nரஜினியின் கட்சிக்கு லைகா சுபாஸ்கரன் ஸ்பான்சர் செய்...\nஜெயலிதாவின் 68 சொத்துக்களை பறிமுதல் செய்ய தமிழக அர...\nகேரளத்தின் திராவிடநாடு.. பல இனங்களை கொண்ட சோவியத்...\nதிருமுருகன் காந்திக்காக ஸ்டாலின் குரல் கொடுக்கிறார...\nவெங்கட் பிரபுவின் புதிய படத்தின் பெயர் \" ஆர்.கே.ந...\nBBC : கேரளாவை திராவிடநாடு சிந்தனைக்கு தள்ளிவிட்ட ...\nப.சிதம்பரம்: :கார்த்தி வீட்டில் நடந்த சிபிஐ சோதனை...\nசமுத்திரகனி பார்ப்பனீயரா அல்லது அறியாமையில் தூங்க...\nகடதல்காரர்களை துப்பாக்கியால் சுட்டு தம்பியை மீட்ட ...\nஸ்டாலின் : திருமுருகன் காந்தி மீது போடப்பட்டுள்ள க...\nஅறம் - சாவித்திரி கண்ணன்\nநாஞ்சில் சம்பத் :\"கூவத்தூர்\" கூத்தும்.. டீக்கடையும...\nஇன்று 147 பேர் உயிரிழந்துள்ளனர்.ஒரே நாளில் அதிர்ச்...\nஆக்சிஜன் பற்றாக்குறை: டெல்லி பாட்ரா மருத்துவனையில்...\nகுஜராத் கொரோனா மருத்துவமனையில் தீ விபத்து: 18 பேர்...\nகே வி ஆனந்த் என்றொரு கேமராக்காதலன்\nதமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார்\nகங்கைகொண்ட சோழபுரத்தில் நடக்கும் அகழாய்வில் அரண்மன...\nஈவிஎம்களில் என்ன செய்ய முடியும்\nமம்மூட்டியின் ONE கடைக்கால் சந்திரன் பினராயி விஜ...\nகொரோனா இந்தியா-நிமிடத்திற்கு 2 மரணங்கள், வினாடிக்...\nகொரோனா தடுப்பூசிக்கு கே.வி.ஆனந்த் மற்றொரு பலியா..\nகொரோனா ஆக்சிஜன்: சமூக ஊடக காணொளிகளை தடுக்கக் கூடாத...\nவெற்றியைக் கொண்டாடுவதைவிட உயிரைப் பாதுகாப்பதுதான்...\nநாளை மறுநாள் ஓட்டு எண்ணிக்கை- தமிழகத்தில் 1 லட்சம்...\nஇயக்குனர் ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த் மாரடைப்பால் க...\nஜெர்மனியில் மருத்துவமனையில் நடந்த கொலைவெறி தாக்குத...\nட்ரோன் மூலம் விவசாய பயிர்களுக்கு மருந்தடிக்கும் சோ...\nமத்திய அரசு இதயமற்றதாக உள்ளது - நிர்மலா சீதாராமனின...\nஅறிஞர் ஜெயரஞ்சனுக்கு பசுமை விகடன் சவால்\nகோவிட்19 2.0 இல் இருந்து மீண்ட தொழிலதிபரின் அனுபவங...\nமே.வங்கம�� மம்தா கட்சி 158, பாஜக 115, காங். அணி 19...\nகேரளாவில் இடசாரிகள் பிரமாண்ட வெற்றி\nதிமுக 234 தொகுதிகளிலும் வெல்லும்.. வாக்கு வித்தியா...\nஅதிமுக முன்னாள் அமைச்சர் அரங்கநாயகம் உடல்நல குறைவா...\nபாஜக தமிழ்நாட்டில் 20 தொகுதிகளிலும் வாஷ் அவுட் ஆகு...\nபீகாரில் 7 ஆண்டு கால மனைவியை காதலனுக்கு மணமுடித்த...\nகடப்பாரையால் தாயை தாக்கி கொலை செய்த மகன் .. கரூரி...\nபரமக்குடி கொரோனா சிகிச்சைக்கு வந்த அரசு டாக்டர்களை...\nமகாராஷ்டிராவில் ஒரே நாளில் 985 பேரை காவு கொண்டது ...\nஸ்டெர்லைட் ஆக்சிஜன் உற்பத்தியை தூத்துக்குடி ஆட்சிய...\nயாழ்ப்பாணம் .. எமில் சௌந்தரநாயகம் .. உலகை கலக்கிய ...\nபெங்களூரில் 3 ஆயிரம் கொரோனா நோயாளர்களை காணவில்லை.\nபரமகுடி மருத்துவர்களை இரவில் கைது செய்து துன்புறுத...\nஅரசு ஒரு மாதம் லாக்டவுன் அறிவித்தால் என்ன செய்யலாம்\nதடுப்பூசியில் 3,28,000 கோடி கொள்ளை\nதமிழகத்தில் மருந்து, ஆக்சிஜன் கையிருப்பை கண்காணிக்...\nடெல்லியில் உடல்களை எரிக்க இடமில்லை; திறந்த வெளிகளி...\nகர்நாடகா: ஆக்சிஜன் கிடைக்காமல் 8 கொரோனா நோயாளிகள் ...\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஜூலை 31 வரை ஆக்சிஜ...\nஅசாமில் பயங்கர நிலநடுக்கம் 6.4 ரிச்டர் அளவில் . ...\nஇலங்கையில் முஸ்லிம் பெண்கள் பர்தா அணிய தடை- அமைச்ச...\nதிரிபுராவில் திருமண வீட்டில் புகுந்த நீதிபதி .. அ...\nதிமுகவின் வெவ்வேறு தளங்களில் அமைச்சரவை பற்றிய விவா...\nபிரெஞ்சு தமிழறிஞர் பிரான்சுவா குரோ.. பிரான்ஸ் போலி...\nஆக்சிஜன் தயாரிப்பை ஆதரிக்கவும் வேண்டும் கண்காணிக்க...\nதி.மு.க அரசு அமைந்ததும் ஸ்டெர்லைட் ஆலை முழுமையாகச்...\nஇந்திபேசா மாநில முதல்வர்களுக்கு வைகோ கடிதம்\nகாப்பர் பிளான்ட்டுக்குள் நுழையக் கூடாது: ஸ்டெர்லைட...\nஸ்டெர்லைட் அடாவடி - மார்வாடிகள் கையில் தமிழ்நாடு\nFrançois Gros பிரான்ஸ் நாட்டுத்தமிழறிஞர் பிரான்சுவ...\nஇந்தோனீசியாவில் காணாமல்போன நீர்மூழ்கிக் கப்பல்; 53...\nநாகரிகத்தைக் குலைக்கும் நாம் தமிழர் கட்சி\nஉத்தர பிரதேசதில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு இல்லையாம்\nஸ்டெர்லைட்: திமுகவின் அணுகுமுறையில் மாற்றமா\n\"தேன்\" - சமூக போராளிகளும் பார்க்க மறந்து போன குரங்...\nதமிழகத்திலும் ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடு...\nகோலார் வயல் திருமதி செல்வி தாஸ் காலமானார் .. முன்...\nதமிழகத்தில் ஓராண்டுக்கு ஜனாதிபதி ஆட்சி \nதிமுக ஆட்சி அமைந்த பிற���ு, எந்தச் சூழலிலும் நச்சு ஆ...\nமே 1 மற்றும் 2 தேதிகளில் முழு ஊரடங்கை அறிவிக்க தம...\nஸ்டெர்லைட் ஆலையில் 4 மாதத்துக்கு மட்டும் ஆக்சிஜன் ...\nசீமானால் கைவிடப்பட்ட நடிகை விஜயலட்சுமி வீதிக்கு வந...\nதமிழ்நாட்டுக்கு ஆக்ஸிஜன் தேவை; பிற மாநிலங்களுக்கு ...\nநடிகர் அஜித்தின் ஆணவத்தால் வேலையும் இழந்து நிர்கதி...\nசனாதனத்திற்கு எதிரான களத்தில் திமுகவும் ஸ்டாலினும்...\nதமிழக மருத்துவ கட்டமைப்புக்கள் மீது நம்பிக்கை வைத்...\nஇந்தியாவிற்கு கைகொடுக்க முன்வரும் உலக நாடுகள்\nதமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு: சாலைகள் வெறிச்சோடி...\nபிரான்ஸ் போலீஸ் நிலையத்துக்குள் பெண் அதிகாரி கழுத்...\nஇலங்கை முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கைது ஏன்\nசுப்புலட்சுமி ஜெகதீசன் தமிழ்நாட்டின் முதல் பெண் சப...\nஎந்த அளவுக்கு அழிவை ஏற்படுத்த முடியும் என்பதை, இந்...\nமாநிலங்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசம்: மத்திய அரசு\nகொரோனாவால் முழு இந்தியாவே திணறும் போது தமிழகம் மட்...\nநாம் தமிழர் தடா சந்திரசேகர், பழனி உள்ளிட்ட ஆபாச பே...\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://voiceofasia.co/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2021-05-07T00:52:33Z", "digest": "sha1:V4773PHBJ3HNKZTHH7DUVQRXDF3QAWY7", "length": 4239, "nlines": 59, "source_domain": "voiceofasia.co", "title": "கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு", "raw_content": "\nகிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nகிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nகிளிநொச்சி ஏ-9 வீதியின் கந்தசுவாமி கோயில் முன்பாக மாலை 5 மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்தில் மூவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.\nஅவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.\nஏ-9 வீதி வழியாக பரந்தன் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியால் நடந்து சென்றவரை மோதித் தள்ளி விபத்துக்குள்ளானது.\nவீதியில் பாதசாரியாக பயணித்த நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிசார் குறிப்பிடுகின்றனர்.\nஉயிரிழந்தவர் கிளிநொச்சி விவேகாநந்தாநகர் பகுதியை சேர்ந்த செல்லப்பா சந்திரகுமார் என உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.\nஉயிரிழந��தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.\nஇதேவேளை காயமடைந்த மற்றைய நபர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.\nவிபத்து தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nFINA World Championships நீச்சல் போட்டியில் அரையிறுதிச் சுற்றுக்கு ஸ்கூலிங் தகுதிபெறவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akattiyan.lk/2021/05/34.html", "date_download": "2021-05-07T01:45:53Z", "digest": "sha1:TQ2TZ2KTHFIMQLWLWQJXFUF43KECIJSL", "length": 7875, "nlines": 69, "source_domain": "www.akattiyan.lk", "title": "ஐபிஎல் கிரிக்கெட் - 34 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி அபார வெற்றி...! - அகத்தியன் | Online", "raw_content": "\nHome விளையாட்டு ஐபிஎல் கிரிக்கெட் - 34 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி அபார வெற்றி...\nஐபிஎல் கிரிக்கெட் - 34 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி அபார வெற்றி...\nஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் 34 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.\nஆமதாபாத்தில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 26 வது லீக் ஆட்டத்தில், பெங்களூரு – பஞ்சாப் அணிகள் மோதின. டாஸ்வென்ற பெங்களூரு அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது.\nஇதையடுத்து, தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பஞ்சாப் அணியின் பிரப்சிம்ரன் சிங் 7 ரன்னிலும், கெய்ல் 46 ரன்களிலும் வெளியேறினர். ராகுல் 51 பந்துகளில் 91 ரன்களும் ஹர்பிரீத் 17 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தனர். இறுதியில், பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்தது.\nஇதையடுத்து, 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி களமிறங்கியது. விராட் கோலி, தேவ்தத் படிக்கல் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர்.\nபஞ்சாப் அணியின் அபார பந்து வீச்சால், குறிப்பிட்ட இடைவெளியில் பெங்களூரு அணி விக்கெட்டுகள் வீழ்ந்தன. விராட் கோலி 35 ரன்னும், ரஜத் பட்டிதார் 31 ரன்னும், ஹர்ஷல் படேல் 31 ரன்னும் எடுத்தனர். பின்னர், பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுக்கு 145 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் பஞ்சாப் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி ப���ற்றது.\nஐபிஎல் கிரிக்கெட் - 34 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி அபார வெற்றி...\nபாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் மேலதிக வகுப்புகளுக்கு மறு அறிவித்தல் வரை விடுமுறை\nபாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் மேலதிக வகுப்புகளுக்கு மறு அறிவித்தல் வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், நோன்பு பெருநாள், வெசாக் ...\nகொரோனா பரவல் காரணமாக நாட்டின் பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள விடுமுறையானது மேலும் ஒரு வார காலத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ...\nமோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nவாகன போக்குவரத்து திணைக்களத்தின் நாரஹென்பிட்டி மற்றும் வேரஹெர அலுவலகங்கள் ஒரு வாரத்திற்கு மூடப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம த...\nDReAM என அறிமுகப்படுத்தப்பட்டுள்ள முற்பாதுகாப்பு விதிமுறைகளுக்கமைய மதுபான சாலைகளை திறந்து வைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. D – சமூக இடை...\nமுழு அதிகாரம் : அகத்தியன் ஊடக சேவை 2020\nஆசிரியர் பீட தெடர்புகளுக்கு 0779516119\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2021/05/03205915/2-killed-for-corona.vpf", "date_download": "2021-05-07T02:02:23Z", "digest": "sha1:QRVQORE6FUUUNOFT7MYZHDAAV2A5JSRY", "length": 7181, "nlines": 118, "source_domain": "www.dailythanthi.com", "title": "2 killed for corona || வேலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் பலி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் முடிவுகள் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\n: வரும் 7ஆம் தேதி அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் - அதிமுக தலைமை அறிவிப்பு\nவேலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் பலி + \"||\" + 2 killed for corona\nவேலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் பலி\nவேலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் பலி\nவேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எனினும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கிறது.\nஇந்த நிலையில் நேற்று வெளியான பரிசோதனை முடிவில் மாவட்டம் முழுவதும் 217 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து அவர்க��் சிகிச்சைக்காக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.\nஇந்த நிலையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 2 முதியவர்கள் உயிரிழந்துள்ளனர்.\nவேலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் பலி\n1. சிறுமி பாலியல் பலாத்காரம்\n2. காரில் கடத்தி சென்று விதவை பெண்ணுக்கு பாலியல் தொல்லை டீக்கடை ஊழியர் கைது\n3. குமரியில் தி.மு.க. கூட்டணி 4 இடங்களை கைப்பற்றியது\n4. கொரோனா நோயாளிகள், குடும்பத்தினர் வெளியே சுற்றினால் ரூ.2 ஆயிரம் அபராதம் - மாநகராட்சி கமிஷனர் எச்சரிக்கை\n5. 9-வது முறையாக கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. ஆனார்.\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/28824", "date_download": "2021-05-07T01:31:18Z", "digest": "sha1:OGROO3FBA3XOEU4X64GRWVXWAJU6SGDV", "length": 11467, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "பிணை முறி விவகாரம் தொடர்பில் விசேட அறிவிப்பு | Virakesari.lk", "raw_content": "\nநாளொன்றுக்கு 2 ஆயிரத்தை விட அதிக தொற்றாளர்கள் இனங்காணப்படலாம் : எச்சரிக்கிறது தொற்று நோயியல் பிரிவு\nபிழையான எண்ணங்களை மக்கள் மயப்படுத்த எதிக்கட்சி முயற்சி - மதுர விதானகே\nகிளிநொச்சியில் புதிய கொரோனா சிகிச்சை நிலையம் - நள்ளிரவு முதல் சேவைகள் ஆரம்பம்\nமஹரகம நகரசபைக் கூட்டத்தில் மோதல் - விசாரணைகள் ஆரம்பம்\nதனியார் வங்கி உதவி முகாமையாளருக்கு கொரோனா தொற்று ; வங்கிக்கு பூட்டு\nஜம்மு-காஷ்மீரில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை\nகொரோனாவால் இலங்கையில் கர்ப்பிணித் தாய் பலி\n இனங்காணப்படும் தொற்றாளர்களை விட இருமடங்கு தொற்றாளர்கள் சமூகத்தில் \nதம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தை மீண்டும் திறக்க தீர்மானம்\nபிணை முறி விவகாரம் தொடர்பில் விசேட அறிவிப்பு\nபிணை முறி விவகாரம் தொடர்பில் விசேட அறிவிப்பு\nஇலங்கை மத்திய வங்கியின் பிணை முறி விவகாரம் தொடர்பில் எதிர்வரும் 3ஆம் திகதி விசேட அறிவிப்பொன்றை வௌியிடவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nமத்திய வங்கியின் பிணை முறி விவகாரம் தொடர்பில் விசாரணை நடத்திவந்த ஜனாதிபதி ஆணைக்குழு, அதன் அறிக்கையை நேற்றுமுன்தினம் ஜனாதிபதியிடம் கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்க�� மத்திய வங்கி பிணை முறி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன\nநாளொன்றுக்கு 2 ஆயிரத்தை விட அதிக தொற்றாளர்கள் இனங்காணப்படலாம் : எச்சரிக்கிறது தொற்று நோயியல் பிரிவு\nநாட்டில் நாளொன்றில் இனங்காணப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கை எதிர்வரும் நாட்களில் 2000 ஐ விட அதிகரிக்கக் கூடும் என்று சுகாதார தரப்பினர் எச்சரித்துள்ளனர். தற்போது நாடளாவிய அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றமையால் மாவட்டங்களிலுள் வைத்தியசாலைகளிலும் கொவிட் தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான பிரிவுகளை பிரத்தியேகமாக ஒதுக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதே வேளை மேல் மாகாணத்தில் மாத்திரம் நாளொன்றுக்கு சுமார் 1200 தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றனர்.\n2021-05-06 22:40:35 2000 தொற்றாளர்கள் இனங்காணல் எச்சரிக்கை\nபிழையான எண்ணங்களை மக்கள் மயப்படுத்த எதிக்கட்சி முயற்சி - மதுர விதானகே\nகொவிட்-19 வைரஸ் பரவல் காரணமாக பாதிப்படைந்துள்ள மக்களை காப்பாற்றுவதுடன் , வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கு அரசாங்கம் முயற்சிகளை எடுத்து வரும் நிலையில், எதிர்தரப்பினர் தங்களுக்கு கிடைக்கப் பெற்றுள்ள பாராளுமன்ற உறுப்புரிமையை பயன்படுத்தி பிழையான எண்ணங்களை மக்கள் மயப்படுத்த முயற்சித்து வருவதாக ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே குற்றஞ்சாட்டினார்.\n2021-05-06 22:36:58 பிழையான எண்ணங்கள் மக்கள் மயப்படுத்தல் எதிக்கட்சி\nகிளிநொச்சியில் புதிய கொரோனா சிகிச்சை நிலையம் - நள்ளிரவு முதல் சேவைகள் ஆரம்பம்\nகிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் புதிய கொவிட் 19 மருத்துவ நிலையத்தில் இன்று நள்ளிரவு முதல் சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பிரிவு தெரிவிக்கின்றது.\n2021-05-06 22:36:36 கிளிநொச்சி கொரோனா சிகிச்சை நிலையம் நள்ளிரவு\nமஹரகம நகரசபைக் கூட்டத்தில் மோதல் - விசாரணைகள் ஆரம்பம்\nமஹரகம நகரசபையில் இடம்பெற்றதாக கூறப்படும் மோதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக மாஹரகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.\n2021-05-06 22:35:00 மஹரகம நகரசபை கூட்டம் மோதல் விசாரணைகள் ஆரம்பம்\nதனியார் வங்கி உதவி முகாமையாளருக்கு கொரோனா தொற்று ; வங்கிக்கு பூட்டு\nகோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் ��ிரிவுக்குட்பட்ட தனியார் வங்கி ஒன்றின் உதவி முகாமையாளருக்கு கொரோனா தொற்று இருப்பதாக இன்று (6) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\n2021-05-06 21:00:35 தனியார் வங்கி உதவி முகாமையாளர் கொரோனா தொற்று வங்கி\nஇலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து மேலும் 810 பேர் குணமடைவு..\nபணவீக்கம் ஏப்ரலில் 3.9 சதவீதமாக வீழ்ச்சி: இலங்கை மத்திய வங்கி\nவிலை அதிகரிப்பிற்கு அனுமதியில்லையேல் தட்டுப்பாடு ஏற்படலாம்: லாப் கேஸ் நிறுவனம்\nஸ்புட்னிக் கொரோனா தடுப்பூசி போடும் பணி ஆரம்பம்\nகளுத்துறை சிறைச்சாலைக்குள் போதைப்பொருட்கள் அடங்கிய பொதிகள் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/kanthrishtiyai-pokkum-karpooram/", "date_download": "2021-05-07T01:33:41Z", "digest": "sha1:6TDRMS2VOJO2TWBW2WXM5OYGT3P2S3QE", "length": 15333, "nlines": 106, "source_domain": "dheivegam.com", "title": "கண் திருஷ்டி விலக பரிகாரம் | Kan Thirusti Pariharam in Tamil", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் கண் திருஷ்டியை கண்ணிமைக்கும் நேரத்தில் போக்கக் கூடிய சக்தி இந்த ஒரு கற்பூரத்திற்கு உள்ளது. இந்த கற்பூரத்தை...\nகண் திருஷ்டியை கண்ணிமைக்கும் நேரத்தில் போக்கக் கூடிய சக்தி இந்த ஒரு கற்பூரத்திற்கு உள்ளது. இந்த கற்பூரத்தை பற்றி இதுநாள்வரை உங்களுக்கு தெரியாதா\nகண் திருஷ்டிகளில் பல வகை உண்டு. அடுத்தவர்கள் நம்மை பார்க்கும் பார்வையானது சில சமயம் நமக்கு ஆசீர்வாதத்தை தரும். சில சமயம் அதுவே கண் திருஷ்டியாக மாறும். சில பூஜை புனஸ்காரங்களை நம் வீட்டில் வைத்தால், நம் சொந்த பந்தம், உற்றார் உறவினர்கள் இவர்களை அழைத்து செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கும். பூஜை புனஸ்காரங்கள் என்றாலே, எல்லோரும் ஒன்று கூடி செய்ய வேண்டியது அவசியமான ஒன்றுதானே நம் வீட்டில் வைக்கக் கூடிய, இப்படிப்பட்ட பூஜைக்காக வருகைதரும் நம்முடைய உறவினர்கள், மூத்தவர்கள், வயது முடிந்தவர்கள் நம்மை ஆசிர்வாதம் செய்து வாழ்த்தினால், அது நமக்கு நன்மையைத் தரக்கூடியதாக அமையும்.\nஇதுவே, நம்முடைய வீட்டிற்கு வருகை தருபவர்கள், இப்படி ஒரு பூஜை வழிபாட்டு முறைகளை நம் வீட்டில் செய்ய முடியவில்லையே, இப்படிப்பட்ட ஒரு வாழ்க்கையை நம்மால் வாழ முடியவில்லையே என்ற ஏக்கத்தை அவர்கள் மனதில் விதைத்து கொண்டால், அதுவே நமக்கும் பேராபத்தாக மாறிவிடும். ஒரே விஷயத்தின் மூலம், நமக்கு நன்மையும் நடக்கும். தீமையும் நடக்கும்.\nநல்ல விசேஷங்கள் நடந்து முடிந்த பின், ஆரத்தி எடுத்து திருஷ்டி கழிப்பதற்கு காரணம் கூட இதுதான். நம்முடைய உறவினர்களின் மூத்தவர்களின் ஆசீர்வாதமும் நமக்கு தேவை, அதே சமயம் எதிர்மறை எண்ணம் கொண்டவர்களின், திருஷ்டியும் நம்மை பாதிக்க கூடாது. இதற்கு சுலபமான முறையில் நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.\nபரிகாரத்திற்கு கரித்துண்டு, கோமியம், கட்டி கற்பூரம் இந்த மூன்று பொருட்களும் தேவை. மெழுகு கற்பூரம் வாங்க வேண்டாம். நாட்டு மருந்து கடைகளில் விற்கும் பெரிய கற்பூரத்தை வாங்கிக்கொள்ளுங்கள். மெழுகு கற்பூரத்தை வாங்குவதை விட, இந்த கற்பூரம் வாங்குவதற்கு விலை கொஞ்சம் கூடுதலாக தான் செலவாகும். இருப்பினும் கட்டி கற்பூரம் திருஷ்டி கழிப்பதற்கு சிறந்தது.\nகரித்துண்டு இப்போது கடைகளில் விற்கின்றது. அந்த கரித்துண்டு ஒரு 100 கிராம் அளவு நம்முடைய வீட்டில் வாங்கி வைத்துக் கொள்ளலாம். அதிலிருந்து ஒரு துண்டை மட்டும் எடுத்து கோமியத்தில் நினைத்துக் கொள்ளுங்கள். அதன்பின்பு அந்த கரித்துண்டை, நன்றாக தூள் செய்து விட்டு வெயிலில் உலர வைத்து, ஒரு தாம்பாளத் தட்டில் கொட்டி, உங்களுக்கு தெரிந்த அம்மனுடைய பெயரை சொல்லி அந்த கரித்துண்டுக்கும் சக்தியை கொண்டு வர வேண்டும்.\nஇதற்கு பெரிய கஷ்டம் எல்லாம் ஒன்றும் வேண்டாம். உங்களது வலது கையை அந்த கரி துண்டில் தொடும்படி வைத்துக் கொண்டு, உங்களுக்கு பிடித்த இஷ்ட தெய்வத்தின் அம்மனின் பெயரை 11 முறை உச்சரித்தாலே போதும். ‘ஓம் துர்க்கா தேவியே போற்றி’ ‘ஓம் சக்தியே போற்றி’ இப்படியாக எந்த மந்திரமாக இருந்தாலும் அதை 11 முறை சொல்லி விடுங்கள். அந்த கரி தூலுக்கு ஒரு சக்தி கிடைத்துவிடும். அதன்பின்பு, இதை ஒரு டப்பாவில் சேகரித்து வைத்துக் கொள்ளலாம்.\nஇப்போது கட்டி கற்பூரத்தை இந்தத் தூளில் பிரட்டி எடுத்தீர்கள் என்றால், இந்த கரி அனைத்தும் அந்த கற்பூரத்தில் ஒட்டிக்கொள்ளும். பின்பு அந்த கற்பூரத்தை பயன்படுத்தி நீங்கள் திருஷ்டி கழித்தால், உங்கள் மேல் பட்ட திரட்டிகள் அனைத்தும், அந்த நெருப்பில் பஸ்பமாகிவிடும் என்பதில் சந்தேகமே கிடையாது.\nதிருஷ்டி கழித்து எறிகின்ற இந்த கற்பூரத்தை வாசல் படிக்கு வெளியில் கொண்டுபோய் தான் கொட்ட வேண்ட���ம் என்று சொல்வார்கள். இன்றைய சூழ்நிலையில் நிறைய பேர் ஃப்ளாட்டில் குடியிருக்கிறார்கள். இவர்களால் வீதியில் கொண்டு வந்து எறிகின்ற கற்பூரத்தை கொட்ட முடியாத நிலை. முடிந்தால் பால்கனியில் கொட்டலாம். முடியாதவர்கள் குளியலறையில் எறிகின்ற கற்பூரத்தை போட்டு, அது எறிந்த பின்பு அந்த இடத்தை சுத்தம் செய்து விடலாம். தீராத கண் திருஷ்டியால் உடல் உபாதைகள் இருந்தால் கூட, அது இந்த கற்பூர நெருப்பில் பொசுக்கி விடும். குறிப்பாக, குழந்தைகள் அழுது கொண்டே இருந்தால் இந்த முறையை பின்பற்றி பாருங்கள் நல்ல பலன் கிடைக்கும்.\nஉங்கள் வீட்டில், சமையல் செய்யும் அடுப்புக்கு பக்கத்திலேயே, பாத்திரம் தேய்க்கும் சிங்க் உள்ளதா அப்படின்னா, நீங்க கட்டாயம் பார்க்க வேண்டும் என்பதற்காகத் தான் இந்த பதிவு\nஇது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nகண் திருஷ்டி விலக பரிகாரம்\nஉங்கள் வீட்டிற்கு வருபவர்கள் வீட்டை பார்த்து பொறாமைப்படுகிறார்களா இந்த பழத்தை இப்படி ஒளித்து வையுங்கள் இந்த பழத்தை இப்படி ஒளித்து வையுங்கள் பொல்லாக் கண் திருஷ்டியும் நொடியில் ஒழிந்துவிடும்.\nவெள்ளிக்கிழமையில் இந்த கலசத்தை பூஜை அறையில் வைத்தால் உங்கள் கையில் பண புழக்கத்திற்கு பஞ்சமே இருக்காது\nகண்ணை கலங்க வைக்கும் கஷ்டம் வரும்போது, வீட்டில் இருந்தபடியே இந்த வழிபாட்டினை செய்தால் தீராத கஷ்டத்திற்கும் தீர்வு கிடைக்கும்.\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/today-rasi-palan-21-11/", "date_download": "2021-05-07T01:39:49Z", "digest": "sha1:TUJQGAZS4UGK4LTTUV4KZ3EW3YX4AEMP", "length": 15776, "nlines": 120, "source_domain": "dheivegam.com", "title": "இன்றைய ராசி பலன் 21-11-2020 | Today Rasi Palan 21-11-2020", "raw_content": "\nHome ஜோதிடம் ராசி பலன் இன்றைய ராசி பலன் – 21-11-2020\nஇன்றைய ராசி பலன் – 21-11-2020\nமேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். இதுவரை உங்கள் பேச்சுக்கு செவி சாய்க்காதவர்கள் நீங்கள் சொல்வது சரியாக இருக்கும் என்று நினைக்க துவங்குவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மன மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்க வாய்ப்புகள் உண்டு. சுய தொழில் புரிபவர்களுக்கு இடமாற்றம் போன்றவை சாதக பலன்களை கொடுக்கும்.\nரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புதிய உற்சாகம் பிறக்க கூடிய வாய்ப்புகள் உண்டு. சோர்வாக இருந்த நீங்கள் திடீரென உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்க பெறும். கொடுக்கப்பட்டுள்ள பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். தொழில் ரீதியான விஷயங்களில் நீங்கள் எடுக்கும் புதிய முடிவுகள் சாதகமாகும்.\nமிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பொருளாதார பிரச்சனைகளை சமாளிக்கக்கூடிய தைரியம் பெருகும். இதுவரை மன உளைச்சலை கொடுத்துக் கொண்டிருந்த கடன் பிரச்சினைகள் தீர்வதற்கு சந்தர்ப்பங்கள் உருவாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சிறு சிறு பிரச்சனைகள் வந்து நீங்கும். சுய தொழில் புரிபவர்களுக்கு பொறுமை அதிகம் தேவைப்படும் நாளாக அமையும்.\nகடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய மதிப்பும் மரியாதையும் உயரக் கூடிய வாய்ப்புகள் உண்டு. பல புதிய நல்ல வாய்ப்புகள் வந்து சேரும். பெண்களுக்கு நினைத்த பொருட்களை வாங்கும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பயணங்களின் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டு. தொழில் ரீதியான விஷயங்களில் வாடிக்கையாளர்கள் இடத்தில் உங்களுடைய மரியாதை உயரும்.\nசிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சாதுரியமாக செயல்பட வேண்டிய நாளாக அமைய இருக்கிறது. நீங்கள் நினைத்ததை நிறைவேற்றிக்கொள்ள சமயோஜித புத்தியுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும் வாய்ப்புகள் உண்டு. தொழில் ரீதியான விஷயத்தில் லாபம் உண்டாகும்.\nகன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய பலமும் பலவீனமும் அறிந்துகொள்ளக் கூடிய வாய்ப்புகள் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களுடைய பணிகளில் மட்டும் கவனம் செலுத்தினால் உத்தமம். பெண்கள் தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. சுய தொழில் புரிபவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும்.\nதுலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் திடீர் பணவரவு திருப்திகரமாக இருக்கும். பொருளாதாரத்தில் இருக்கும் ஏற்ற இறக்கங்களை திறம்பட சமாளித்து விடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நண��பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சுய தொழில் புரிபவர்களுக்கு ஊழியர்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது மூலம் முன்னேற்றம் காணலாம். சொத்துப் பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.\nவிருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் திருமணம் போன்ற சுப காரிய முயற்சிகள் கைகூடிவரும். மனதிற்கு பிடித்தவர்களை மணமுடியும் வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தொட்டதெல்லாம் துலங்க கூடிய நல்ல நாளாக அமையும். சுய தொழில் புரிபவர்களுக்கு புதிய நுணுக்கங்களை கற்றுக் கொள்வதன் மூலம் ஏற்றம் உண்டாகும். அரோகிய ரீதியான விஷயத்தில் சற்று எச்சரிக்கை அவசியம்.\nதனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் விடா முயற்சிக்கு சிறப்பான வெற்றி கிடைக்க கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும் வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உழைப்பிற்கேற்ற ஊதியமும் கிடைக்கும். சுய தொழில் புரிபவர்களுக்கு மகிழ்ச்சியான நாளாக அமைய இருக்கிறது.\nமகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அதிகம் உணர்ச்சிவசப்படக் கூடிய நாளாக இருக்கும். உங்களுடைய முன் கோபத்தினால் தேவையற்ற பிரச்சனைகளை சந்திக்க நேரலாம் என்பதால் சற்று பொறுமையுடன் கையாள்வது மிக மிக முக்கியம். கணவன் மனைவி இடையே அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்பட்டு மறையும். சுய தொழில் புரிபவர்களுக்கு ஏற்றம் உண்டு. பயணங்களின் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டு.\nகும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தேவையில்லாத அலைச்சல்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. எந்த ஒரு முடிவையும் ஆலோசிக்காமல் எடுப்பது நல்லதல்ல. நண்பர்கள் மற்றும் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். பொருளாதார ரீதியான இறக்கத்தை சமாளிக்க வேறு வழியைத் தேடுவீர்கள். குடும்பத்தில் இருப்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கப்பெறும். வேலை விஷயமாக வெளியூர் செல்லும் யோகம் உண்டாகும்.\nமீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சமூக அக்கறை மேலோங்கி காணப்படும். இயல்பாகவே இரக்க குணம் படைத்த நீங்கள் இன்றைய நாளில் நல்ல செய்திகளை பெற இருக்கிறீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக பணியாளர்களால் பாராட்டப்படுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய உத்திகளை கையாள்வதன் மூலம் முன்னேற்றம் காணலாம். ஆரோக்கிய ரீதியான செலவுகளை சமாளிக்க கஷ்டப்படுவீர்கள்.\nஇன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்\nஇன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.\nஇன்றைய ராசி பலன் – 7-05-2021\nஇன்றைய ராசி பலன் – 6-05-2021\nஇன்றைய ராசி பலன் – 5-05-2021\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://prosperspiritually.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-1/", "date_download": "2021-05-07T01:06:46Z", "digest": "sha1:SLUI4PIMGLJOPBPCAXFACVYVNE4DKO4V", "length": 30226, "nlines": 123, "source_domain": "prosperspiritually.com", "title": "FFC-208-அருளாளர்கள் உலகம் 1/? - Prosper Spiritually", "raw_content": "\nசிந்தித்தலின் அன்றாட சுயசோதனை பயிற்சி\nவாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு\n“அறிவில் அறிவாய் நிலைத்து அறம் வகுத்தோர்,\nஅதனை வாழ்ந்து காட்டினோர், நினைவு கூர்வாம்.”\nஎல்லா அருளாளர்களின் ஆசிகளைப் பெறுவோம்:\nஇன்று குருபூர்ணிமா தினம். எதற்காக இந்த தினம் வருடத்தில் ஒரு நாள் கொண்டாடப்படுகின்றதுவாழையடி வாழையாக திருக்கூட்ட மரபினில் உதிக்கின்ற குருமார்களை வணங்கிஅருளாளர்களை நினைவுகூர்வதற்காக வருடத்தில் ஒரு நாள் குருபூர்ணிமா தினமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. நம்மை நல்வழி நடத்துகிற, நாம் இதுவரை அறிந்திராத இறையை நமக்குக் காட்டி அருளிய நேரிடை குருவையும், உறுதுணையாக இருக்கின்ற அனைத்து அருளாளர்கள் திருக்கூட்ட மரபினையே பணிந்து அவர்கள் அனைவரின் ஆசிகளை ஏற்றுக் கொள்வோம். குருபூர்ணிமா கொண்டாடாத மற்ற நாட்களில் என்ன செய்வதுவாழையடி வாழையாக திருக்கூட்ட மரபினில் உதிக்கின்ற குருமார்களை வணங்கிஅருளாளர்களை நினைவுகூர்வதற்காக வருடத்தில் ஒரு நாள் குருபூர்ணிமா தினமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. நம்மை நல்வழி நடத்துகிற, நாம் இதுவரை அறிந்திராத இறையை நமக்குக் காட்டி அருளிய நேரிடை குருவையும், உறுதுணையாக இருக்கின்ற அனைத்து அருளாளர்கள் திருக்கூட்ட மரபினையே பணிந்து அவர்கள் அனைவரின் ஆசிகளை ஏற்றுக் கொள்வோம். குருபூர்ணிமா கொண்டாடாத மற்ற நாட்களில் என்ன செய்வது எனவே அருளாளர்களை எப்போதும் எவ்வாறு நினைவில் கொள்வது என்பது பற்றி சிந்திப்போம். இதே போன்று அருளாளர்களின் ஆசியும், அருளும் எல்லா ஆன்மீக சாதகர்களுக்கும் கிடைத்திட வேண்டிக்கொண்டு இன்றைய சிந்தனையைத் தொடங்குவோம்.\nகுருவின் பூரண ஆசியைப் பெறுவதற்காக இந்நாள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எவ்வாறு குருவிடம் ஆசி பெறவேண்டும் என்பது பற்றி இன்று சிந்திக்கலாம். குரு எப்போதும் பாரபட்சமின்றி ஆசியினைத் தந்து கொண்டேதான் இருக்கிறார். எந்தவித பாகுபாடுமின்றியும் எல்லோருக்கும் ஒளிவு மறைவின்றி சமமாக ஒரே கல்வியினைத்தான் தந்து கொண்டிருக்கிறார். இது இயற்கையின்/இறையின் புனித ஏற்பாடு. ஆனால் அதனைப் பெற்றுக் கொள்ளும் அருட்பாத்திரமாகிய சீடன் எவ்வாறு பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது பற்றியதுதான் இன்றைய சிந்தனை. எனவே இந்த புனித நாளிலே, சிந்தனைக்காக, ‘அருளாளர்கள் உலகம்’ பற்றி சிந்திப்போம். வாழ்க வளமுடன். அருளாளர்கள் உலகம் என்று தனியாக உள்ளதா\nஅருளாளர்களை மகரிஷி அவர்கள் கூறியுள்ள முறைப்படி வணங்கி நினைவு கூர்வோம்.\n“அறிவில் அறிவாய் நிலைத்து அறம் வகுத்தோர்,\nஅதனை வாழ்ந்து காட்டினோர், நினைவு கூர்வாம்.” என்கிறார் மகரிஷி அவர்கள்.\nமகரிஷி அவர்கள் அருளியுள்ள குருவணக்கப்பாடல் பற்றிய ஆய்வு:\nமகரிஷி அவர்கள் அருளியுள்ள குருவணக்கப்பாடலில் முதலில் தாயுமானவர், திருவள்ளுவர், திருமூலர், இராமலிங்கர் ஆகிய அருளாளர்களை, அவர்களின் நாமங்களை செப்பி, நினைந்ததோடுமட்டுமல்லாமல், மனித இன பரிணாமத்தில்(தன்மாற்றம்) முதன் முதலில் தோன்றிய மனிதனை முதல் மனிதன் என்று சொல்வதுபோல், என்றைக்கு மனிதகுலத்தில் ஒருநாள் முதல் மனிதர் இறையை உணர்ந்தாரோ அந்த அருளாளரிலிருந்து இன்றுவரை இறையை உணர்ந்த அனைத்து அருளாளர்களையும் வணங்கி ஆசி பெறச் சொல்கிறார் மகரிஷி அவர்கள்.\nதாயுமானவர், திருவள்ளுவர், திருமூலர், இராலிங்கர் ஆகிய நான்கு அருளாளர் பெருமக்களும் மகரிஷி அவர்களுக்கு எவ்வாறு குருவாக அமைந்தனர் என்பது மகரிஷியின் வாழ்க்கை வரலாற்றிலிருந்தும் மற்றும் மகரிஷி அவர்களே கூறியதிலிருந்தும் அறிய முடிகின்றது. அந்த நான்கு குருமார்களின் பெயரோடு குருவணக்கப்பாடலை முடித்திருக்கலாம் மகரிஷி அவர்கள். இருப்பினும் மேலும்,\n“அறிவில் அறிவாய் நிலைத்து அறம் வகுத்தோர்,\nஅதனை வாழ்ந்து காட்டினோர், நினைவு கூர்வாம்.”\nஆகிய இரண்டு வரிகளையும் சேர்த்து குருவணக்கப் பாடலை இயற்றியுள்ளார். அது அருட் கவிஞரின் சுதந்திரம். அப்படி நினைத்துக் கொண்டு ஆராய்ச்சி செய்யாமல் இருக்க முடியவில்லை. இப்பாடல் இயற்றிய நாள் 11-08-1981 ஆகும். இதற்கு முன்னரே மகரிஷி அவர்கள் உலக சமுதாய சேவா சங்கத்தை தோற்றுவித்து அதன் மூலமாக மனவளக்கலையை போதிக்க ஆரம்பித்துவிட்டார். ஞானக்களஞ்சியத்தில் பகுதி ஒன்றில் மூன்று குருவணக்கப்பாடல் இடம் பெற்றுள்ளன. இப்பாடல் மூன்றாவதாக இடம் பெற்றுள்ளது. இப்பாடலுக்கு மட்டும் இயற்றிய நாள் தெரிகின்றது. மற்ற இரண்டு பாடல்களுக்கு இயற்றிய நாள் தெரியவில்லை.\nமூன்றாவது பாடல் இயற்றிய நாள் தெரிவதை, உற்று நோக்கும்போது, அப்பாடலின் முக்கியத்துவம் உணரப்படுகின்றது. அதாவது முதன் முதலில் மனவளக்கலையை பயிற்றுவிக்கும்போது அப்பாடல் இயற்றப்படவில்லை என்றேதான் தெரிகின்றது. நாளடைவில் மனவளக்கலை பரவி வருகின்றபோது, இப்பாடலில் உள்ள உண்மையை மனவளக்கலை பயிற்சியாளர்களுக்கு அறிவித்து அவர்கள் எளிதாக பயிற்சியில் வெற்றி பெறவேண்டும் எனக்கருதி இப்பாடலை அருளியுள்ளார் மகரிஷி அவர்கள். மகரிஷி அவர்கள் என்ன கருதினாரோ, அதனை நாமும் அறிந்து கொண்டு அவ்வரிகளின் அறிவுறுத்தலுக்கு இணங்க செயல்பட்டு, மனவளக்கலையின் பயனை விரைவில் அடைந்திடுவோமாக\nமகரிஷி அவர்கள் பெரும்பாலும் பாடல்களை எட்டுவரிகளில் இயற்றுவது அவருக்குள்ள பழக்கம். அவ்வாறே முதலில் நான்கு அருளாளர்களின் நாமங்களைச் செப்புவதோடு நிறுத்திவிட்டு, அவர்களை நினைவு கூறச்செய்யும்படி பாடலை முடித்திருக்கலாம். ஆனால் எட்டுவரிகள் எழுதுவது பழக்கமாக உள்ளதால், ஆறுவரிகளோடு மேலும் இரண்டு வரிகள் சேர்க்கப்பட்டுள்ளன. அவ்வரிகளின் பொருளென்ன முக்கியத்துவம் என்ன அதனை அறிந்து கொண்டால் அவ்வரிகளில் கூறியதை முழுமையாக செயல்படுத்த முடியும்.\nபண்பேற்றத்திற்கு எளிய உறுதியான வழி:\nகுருவணக்கத்தில் மற்ற அருளாளர்களின் ஆசியினையும் பெற அவர்களையும் நினைவு கூர்வது என்பது வெறும் சம்பிரதாயமாகிவிடக்கூடாது. உள்ளார்ந்த அன்போடு எல்லா அருளாளர்களையும் நினைத்து, ‘அவர்களது உயர்வை மதித்து, ரசித்து’, போற்றி போற்றி வணங்க வேண்டும். இயல்பாகவே, பிறர் உயர்வை மதித்து, ரசித்தல் என்பது, நாம் அதில் உயர்ந்து வருவதைக் காண்பிக்கின்றது. இதுவே இயல்பூக்க நியதியின் கிளைத்தேற்றம் என நாம் கூறிவருகிறோம். எந்த ஒருகலையிலும் சிறந்து விளங்கியவர்கள் தனது வெற்றியைப்பற்றிக் குறிப்பிட��ம்போது, தனக்கு முந்தையவர்கள் யாராவது சிறந்து விளங்கியவரை மாதிரியாக ‘Role Model’ வைத்துக் கொண்டதாகக் கூறுவது வழக்கம். அதேபோன்று இறை-உணர்-ஆன்மீகத்தில் பண்பேற்றமே அடிப்படையாக உள்ளதால், அப்பண்பேற்றத்தில் உயர்ந்து பண்பாளராக பரிணமிக்க, யாரை ‘மாதிரி புருஷராக’க் கொள்ள முடியும் மனவளக்கலைஞர்களுக்கு, அறிவின் இருப்பிடம்(தெய்வத்தின் இருப்பிடம்), அதாவது தெய்வத்தை கருத்தியலாகக் காண்பித்தும் செய்முறையில் அவரவர்களே தெய்வத்தை உணர்ந்து அனுபவிக்க வழிகள் காட்டிய குருதேவரான, நவயுக வியாசரான வேதாத்திரி மகரிஷி அவர்களேதான் இருக்க முடியும். மகரிஷி அவர்கள் பண்பேற்றம் எந்த விஞ்ஞான அடிப்படையில் அமைந்துள்ளது என்பதனைக் கண்டுபிடித்து அதனை இயல்பூக்க நியதி என்கிறார். அப்பாடலை இந்நன்னாளில் நினைவு கூர்வது சாலச் சிறந்தது,\nமற்றோர் இடத்தில் உரைநடைப் பகுதியில் “தான் உயராது, மற்றவர்களின் உயர்வை மதிக்கவும் முடியாது, ரசிக்கவும் முடியாது’ என்கிற பண்பேற்றத்திற்கு தொடர்பான உண்மையினைத் தெரிவிக்கின்றார் கிடைத்தற்கரிய குருவான வேதாத்திரி மகரிஷி அவர்கள். இதனைத்தான், இதன் பயனை அனுபவிக்கின்ற நாம் அவர் கூறிய இயல்பூக்க நியதியின்(தேற்றம்-theorem as in Maths) கிளைத்தேற்றம்(corollary) என்று அழைக்கிறோம். பண்பேற்றத்திற்கான வழியினைக் கூறி அது இயல்பூக்க நியதி என்கிறார். பூர்வபுண்ணியத்தால், இறைஅருளால், பண்பேற்றம் பெற, குருவின் சேர்க்கைப் பெற்ற ஆன்ம சாதகனின் பண்பில் ஏற்றம் பெறுவதற்கு, மனவளக்கலையில், தற்சோதனைப் பயிற்சி இருந்தாலும், அதற்கு வலிவூட்டுவது இதனைத்தவிர வேறு வழி ஏதுமில்லை/ஏதும் தெரியவில்லை. அவ்வாறு பண்பேற்றம் பெற்று வரும்போது. பொருள், செயல், குணம், உயிர்(ஆன்மா) ஆகிய நான்கினையும் அடிக்கடி நினைந்து வந்தால் அப்பொருளின் தன்மையாக, அறிவு பண்பில் ஏற்றம் பெற்றுவரும் பெருமையைத்தான் இயல்பூக்க நியதியாகும் என்கிறார் மகரிஷி அவர்கள். அவ்வாறு, இயல்பூக்க நியதியின்படி ஒருவர் ‘தான் பண்பேற்றம் பெற்றுவருவதனை’ எவ்வாறு அவரே அறிந்து கொள்வது என்பதற்கான அளவுகோல்தான் இயல்பூக்க நியதியின் கிறைத்தேற்றம் என்பது.\nநா சுவை அறியும் கருவி மட்டுமல்ல:\nமகரிஷி அவர்கள் கூறும் இயல்பூக்க நியதியின்படி பண்பேற்றத்தில் உயர்வு அடைந்து வரும்போது, ‘நா’ சும்ம�� இருக்காது. ‘நா’, சுவைப்பதற்கு மட்டும் உருவான கருவி அல்ல. மற்ற உயிரினங்களுக்கு ‘நா’, சுவை அறியும் கருவியாக மட்டுமே இருக்கும். ஆனால் அறிவு, ஆறாம் நிலைக்கு வந்தபோது, நாவை சுவை அறியும் கருவியாக மட்டுமின்றி, சொற்களை உதிர்க்கும் கருவியாகவும் செயல்படுத்துகின்றது. ஆகவேதான் ஆன்றோர்கள் ‘நா, எப்போதும் நல்லவற்றையேப் பேச வேண்டும்’ என்று அறிவிற்கு அறிவுருத்துகின்றனர். நன்றி உணர்வை சொல்லாகத் தெரிவிக்க அறிவு நாவைத்தான் பயன்படுத்துகின்றது. எனவே அப்போது ‘நா’ சொற்களை உதிர்க்கும் நல்ல கருவியாக செயல்படுகின்றது.\nஆகவே, இயல்பூக்க நியதியின்படி பண்பில் உயர்வு அடைந்து வரும்போது நன்றி உணர்வைத் தெரிவிக்கும் முகத்தான், உணவை சுவைக்க நாவை கருவியாக பயன்படுத்தும் அறிவு, பண்பேற்றத்திலும், எதனை நினைத்து இயல்பூக்க நியதி தன்னிடம் செயலாகிக் கொண்டிருக்கின்றதோ, அப்பொருளின் தன்மையை, அறிவு மதிப்பதோடு நின்று விடாது, ரசிப்பதுடன், அதன் அருமை, பெருமைகளை நாவைக் கொண்டு வார்த்தைகளால் புகழ்ந்து எடுத்து இயம்பும் தன்மையுடையது அறிவு. எனவே பண்பேற்றத்தில் உயர்ந்து வரும்போது இயல்பாகவே நடைபெறுகின்ற ஒன்று இது. எனவேதான் அவ்வைத்தாய் தனது மூதுரையில் ஒர் பாடலில் “நல்லார் குணங்களுரைப்பதுவும் நன்றே” என்கிறார். நல்லார் குணங்களை எது உரைக்க முடியும். அறிவுதான் நாவைக் கருவியாகக் கொண்டு உரைக்க முடியும் அப்பாடலையும் இந்நன்னாளில் நினைவு கூர்வவோம்.\nஅவ்வையார் இயல்பூக்க நியதிபற்றி ஏதாவது கூறியுள்ளாரா\nஅவ்வைத்தாய் தனது மூதூரையில் ஓர் பாடலில் நல்லார் குணங்கள் உரைப்பதுவும் நன்றே என்கிறார். அப்பாடலை நினைவுகூர்வோம்.\nசிறுவயதில் தமிழ்ப்பாடத்தில் படித்திருப்போம். ஆனால் அன்று மனிதனின் பண்பேற்றத்தில் உள்ள இயல்பூக்க நியதி என்கின்ற அறிவியல் இப்பாடலில் இருக்கின்றது என்பதனை அறியவில்லை. ஆனால் இன்று நாம் அறிகிறோம் கிடைத்தற்கரிய குருவின் தரிசனத்தால். இதுவன்றோ இறை-உணர்-ஆன்மீக முன்னேற்றத்திற்கு திருப்புமுனையை தந்துள்ளது வேதாத்திரியம் என்பது. வாழ்த்துவோம் வேதாத்திரியத்தை. இறைவனை போற்றி போற்றி என்று வாழ்த்துவது போன்று வேதாத்திரியத்தை. வாழ்த்தி, வாழ்த்தி, வேதாத்திரியம் மேலும் மேலும் வளர்ச்சி பெற்று உலகை உய்விக்க, நம் மௌன ஊடகமா�� எண்ணத்தை பயன்படுத்துவோம். அவ்வையார் பண்பேற்றத்திற்கு இயல்பூக்க நியதி என்று சொல்லி, அதனைப் பயன்படுத்த வேண்டும் என்று கூறாமல் பண்பேற்றத்திற்கான வழிகளைக் கூறியுள்ளதும், திரூமூலர், மகரிஷி அவர்கள் கூறியுள்ளதும் ஒன்றே எனத் தெரிகின்றது. உண்மையை சொல்வது என்பது யார் எப்போது சொன்னாலும் ஒன்றாகத்தானே இருக்கும்/இருக்க முடியும்\nஇறை-உணர்-சாதகன் பண்பேற்றம் பெற, எப்பொருளை, எக்குணத்தை, எச்செயலை, எவ்வுயிரை நினைக்க வேண்டியிருக்கும் நினைக்க வேண்டும் சாட்சாத் பிரம்மமே குருவாக வந்தவரின் குணத்தையும், செயலையும் அடிக்கடி நினைந்து வருவதுதானே நியாயமும், இயல்பும். இந்த சமிக்ஞை ஒரு இறை-உணர்-சாதகனிடம் மேலெழுந்து தெரியுமானால்,\n“எவரொருவர் குருவை மதித்து ஒழுகினாலும்\nதப்பாது குருஉயர்வு மதிப்போர் தம்மைத்\nதரத்தில் உயர்த்தி பிறவிப்பயனை நல்கும்,”\nஎன்கின்ற வேதவாக்கின்படி அச்சாதகன் (மகரிஷி அவர்கள் கூறியுள்ளதுபோல்), இப்பிறவியிலேயே பிறவிப்பயனை எய்துவது திண்ணம் என்கிறார் மகரிஷி அவர்கள்.\nநாளை (20-07-2016—புதன்) அருளாளர்கள் உலகம் பற்றி மேலும் சிந்திப்போம்.\nவாழ்க அறிவுச் செல்வம் வளர்க அறிவுச் செல்வம்\nஉங்கள் கருத்துக்களை இணையதளத்தில் பதிவு செய்ய, ‘உங்கள் கருத்துக்கள்’ பகுதியில் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும். அதற்கான வழிமுறையினை அறிய: click here.\nநேரிடையாக உங்கள் கருத்துக்கள் பகுதிக்கு செல்ல click here\nசிந்தித்தலின் அன்றாட சுயசோதனை பயிற்சி\nசிந்தித்தலின் அன்றாட சுயசோதனை பயிற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/health-lifestyle/corona-vaccine-is-free-in-private-hospitals-from-the-1st/", "date_download": "2021-05-07T00:16:01Z", "digest": "sha1:A6RUPREQLUYLLCPHMROCICPDNP3NGAQH", "length": 14614, "nlines": 129, "source_domain": "tamil.krishijagran.com", "title": "தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா தடுப்பூசி இலவசம் - 1-ந்தேதி முதல் போடப்படுகிறது!", "raw_content": "செய்திகள் வாழ்வும் நலமும் தோட்டக்கலை கால்நடை வெற்றிக் கதைகள் விவசாய தகவல்கள் FTB அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா Directory\n#FTB விவசாய தகவல்கள் அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா\nஎங்கள் அச்சு மற்றும் டிஜிட்டல் பத்திரிகைகளுக்கு குழுசேரவும்\nசமூக ஊடகங்களில் எங்களுடன் இணைக்கவும்:\nதனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா தடுப்பூசி ��லவசம் - 1-ந்தேதி முதல் போடப்படுகிறது\nபிப்ரவரி 1-ந்தேதி முதல் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி முழுக்க முழுக்க இலவசமாக வழங்கப்பட உள்ளது.\nகுறையும் கொரோனா பாதிப்பு (Decreased corona exposure)\nதமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனை கண்காணிப்பில் இருப்பவர்களின் எண்ணிக்கை 4,601 ஆக குறைந்துள்ளது. உயிரிழப்பும் கணிசமான அளவுக்கு குறைந்துவிட்டது. தற்போது கொரோனா பாதித்துள்ளவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 37 ஆயிரத்து 327 ஆக உள்ளது. இந்தநிலையில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி போடப்படும் பணி கடந்த 16-ந்தேதி முதல் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.\nகொரோனா தடுப்பூசி போடப்படும் பணிகளை மேலும் தீவிரப்படுத்த தமிழக அரசு பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது.\nஇதுதொடர்பாக இன்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-\nகளப்பணியாளர்களுக்கு தடுப்பூசி (Vaccination for field workers)\nதமிழகத்தில் டிசம்பர் இறுதிக்குள் 1 கோடியே 60 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போட அரசு திட்டமிட்டுள்ளது. இதன் ஒருபகுதியாக சுகாதாரத்துறையை போன்று மற்ற துறையை சேர்ந்த முன்கள பணியாளர்களுக்கும் 1-ந் தேதி முதல் கொரோனா தடுப்பூசி வழங்கப்படும். அந்த வகையில் போலீசார், வருவாய்த்துறை, பத்திரிகை துறை உள்ளிட்ட முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்படும்.\nமூத்த குடிமக்களுக்கும் வருகிற 1-ந்தேதி முதல் கொரோனா தடுப்பூசி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. மூத்த குடிமக்களும் தங்களது விவரங்களை முன்பதிவு செய்து கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.\nஇதற்காக தமிழகத்தில் சுமார் 12 லட்சம் கோவிஷீல்டு (Covishield), கோவேக்சின் (Covaxin ) தடுப்பூசிகள் கையிருப்பு வைக்கப்பட்டுள்ளன. தடுப்பூசிகளை பொறுத்தவரை எதிர்பார்த்த இலக்குகளை எட்ட இயலாததால் தனியார் மருத்துவமனைகளிலும் தடுப்பூசி போடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. தமிழ்நாடு முழுவதும் சுமார் 200 தனியார் மருத்துவமனைகளில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nதனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி முழுக்க முழுக்க இலவசமாக வழங்கப்பட உள்ளது. எனவே சுகாதாரத்துறையை போன்று மற்ற துறையை சேர்ந்த ��ுன்கள பணியாளர்களும் இலவசமாக தடுப்பூசி பெற்றுக்கொள்ளலாம்.\nதடுப்பூசி போட்டுக்கொள்வது எந்த வகையிலும் கட்டாயம் அல்ல. அவரவர் விருப்பத்தின் பேரில் போட்டுக்கொள்ளலாம்.\nஆதார விலையில் துவரை கொள்முதல் - கரூர் விவசாயிகளுக்கு அழைப்பு\nவேலி ஓரங்களில் எந்த மரக்கன்று நடலாம்\nபட்டுப்புழு வளர்ப்பு மனை அமைக்க- ரூ.82,000 வரை மானியம்\nஅன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.\nஉங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....\nபங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)\nகொரோனா தடுப்பூசி 1ம் தேதி முதல் இலவசமாகப் போடப்படுகிறது தனியார் மருத்துவமனைகளிலும் இலவசம் Corona vaccine is free in private hospitals - from the 1st\nசிறுநீரக பிரச்சினை உள்ளவர்களுக்காக நச்சுன்னு 4 டிப்ஸ\nகொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, முழு ஊரடங்கை அமல்படுத்த உச்ச நீதிமன்றம் பரிந்துரை\nகொப்பரை உற்பத்தி செய்ய நவீன இயந்திரம்: விவசாயிகள் மகிழ்ச்சி\n செய்ய வேண்டியவையும், செய்யக் கூடாதவையும்\nவிளைநிலங்களில் வீணாகும் தர்பூசணி பழங்கள்\nபூச்சிகளைப் புரிந்து கொள்(ல்)வோம்- காணொளி மூலம் பயிற்சி\nரூ.4000 கொரோனா நிவாரண நிதிவழங்கும் திட்டம் - நாளை ஸ்டாலின் முதல் கையெழுத்து\nவாடிக்கையாளர்களுக்கு புதியவகை டிசைனர் சிலிண்டரை அறிமுகம் செய்த IOCL\nஒரே நிமிடத்தில் cowin.gov.in தளத்தில் கொரோனா தடுப்பூசி பதிவு செய்வது எப்படி\nபருத்தியைத் தாக்கும் மாவுப்பூச்சிகளை எப்படி கட்டுப்படுத்தலாம்\nகொரோனாவைத் தடுக்கும் முயற்சியில், புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்\nஒன்றல்ல, இரண்டல்ல, ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள்\nதொற்றுநோய்களைத் தடுக்கும் ஊட்டச்சத்து அணுகுண்டு எது தெரியுமா\nமாடித்தோட்டத்திற்கு ஏற்ற மண் கலவை வகைகள் எவை\nவிவசாயிகள் நலன் கருதி சாகுபடி தொடர்பான சந்தேகம் ஏற்பட்டால் வேளாண் விஞ்ஞானிகளை அணுகலாம்: தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/animation-can-wait-ar-murugadoss-has-chosen-allu-arjun-as-hero/articleshow/82380889.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article4", "date_download": "2021-05-07T00:38:51Z", "digest": "sha1:XO4ERDMRAKH2J3K2JDXZNBDAUDHVWEZH", "length": 13220, "nlines": 105, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "AR Murugadoss: விஜய் இல்லைனா பரவாயில்லை: டாப் ஹீரோவை பிடித்த ஏ.ஆர். முருகதாஸ் - animation can wait: ar murugadoss has chosen allu arjun as hero\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nவிஜய் இல்லைனா பரவாயில்லை: டாப் ஹீரோவை பிடித்த ஏ.ஆர். முருகதாஸ்\nதளபதி 65 படத்தில் இருந்து விலகிய ஏ.ஆர். முருகதாஸ் பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனை வைத்து படம் எடுக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி தீயாக பரவியிருக்கிறது.\nஷங்கர், லிங்குசாமியை அடுத்து ஏ.ஆர். முருகதாஸும் தெலுங்கு ஹீரோவை வைத்து படம் இயக்கப் போகிறாராம்.\nசன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் விஜய் நடித்து வரும் தளபதி 65 படத்தை ஏ.ஆர். முருகதாஸ் தான் இயக்குவதாக இருந்தது. ஆனால் அவர் சொன்ன கதை பிடிக்காமல் திருத்தம் செய்யச் சொன்னாராம் விஜய். கதையை இரண்டு முறை திருத்தியும் விஜய்க்கு பிடிக்கவில்லையாம். இதையடுத்து தளபதி 65 படத்தில் இருந்து வெளியேறினார் முருகதாஸ். அதன் பிறகே நெல்சன் திலீப்குமாரை வைத்து தளபதி 65 பட வேலையை ஆரம்பித்தனர். தளபதி 65 படத்தில் இருந்து வெளியேறிய முருகதாஸ் எந்த ஹீரோவுமே வேண்டாம் என்று அனிமேஷன் படத்தை இயக்கப் போவதாக கூறப்பட்டது. ஆனால் அனிமேஷன் படம் எடுக்க நேரம் வேண்டுமாம். அதனால் அதற்குள் ஒரு ஹீரோவை வைத்து படம் இயக்க முடிவு செய்துள்ளாராம்.\nஅல்லு அர்ஜுனை வைத்து படம் பண்ணப் போகிறார் முருகதாஸ் என்று கூறப்படுகிறது. அந்த படத்தை அல்லு அர்ஜுனின் தந்தை அல்லு அரவிந்த் தன் கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கவிருக்கிறாராம். அந்த படத்தை பல மொழிகளில் வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம். சிவகார்த்திகேயனை வைத்து முருகதாஸ் படம் இயக்கப் போகிறார் என்று கூட பேச்சு கிளம்பியது. ஆனால் அது வெறும் வதந்தியாகவே இருக்கிறது.\nதெலுங்கு ஹீரோக்களை வைத்து படம் பண்ண தமிழ் இயக்குநர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். ராம் சரணை வைத்து ஷங்கர் ஒரு படத்தை இயக்கவிருக்கிறார். ராம் போத்தினேனியின் படத்தை லிங்குசாமி இயக்குகிறார். இந்நிலையில் தான் அல்லு அர���ஜுனை முருகதாஸ் இயக்கப் போகிறாராம். முன்னதாக ரஜினிகாந்தின் தர்பாரை படத்தை இயக்கினார் முருகதாஸ். அந்த படத்திற்கு எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. படத்தை பார்த்தவர்கள் இதை நிஜமாகவே முருகதாஸ் தான் இயக்கினாரா என்று வியந்து கேட்டார்கள்.\nதர்பார் படத்தை முழுவதுமாக பார்க்கும் அளவுக்கு பொறுமை இல்லை என்று பலரும் தெரிவித்தனர். மேலும் நயன்தாராவை டம்மி பீஸாக்கிவிட்டதாக அவரின் ரசிகர்கள் வேறு கொந்தளித்தனர். தர்பாருக்கு பிறகே முருகதாஸின் கெரியர் டல்லடிக்க ஆரம்பித்தது. அல்லு அர்ஜுன் படம் மட்டும் வெற்றி பெற்றுவிட்டால் முருகதாஸின் நிலைமை பழையபடி நன்றாகிவிடும். மேலும் அவர் விஜய்யுடன் சேர்ந்து மீண்டும் படம் பண்ணும் வாய்ப்பும் ஏற்படும்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nஇறந்த நடிகரின் போட்டோவை தொட்டுப் பார்த்து சிரிக்கும் மகன்: ரசிகர்கள் கண்ணீர் அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nஅழகுக் குறிப்புகூந்தலுக்கு நன்மை செய்யும் ஆரஞ்சு தோல் பொடி ஹேர் மாஸ்க், எப்படி பயன்படுத்துவது\nகல்வி செய்திகள்உங்க குழந்தையின் கவன சக்தியை அதிகரிக்க உதவும் TALi App\nகிரகப் பெயர்ச்சிமிதுன ராசிக்கு சனி வக்ர பெயர்ச்சி 2021 பலன்கள் - அனைத்திலும் யோக பலன்களைப் பெற்றிடலாம்\nடிரெண்டிங்கொரோனா காரணத்தால் திருமணத்தில் மணமகன், மணமகள் செய்த விசித்திர விஷயம்\nவீட்டு மருத்துவம்மூக்கு காய்ந்து வறண்ட நிலையில் இருந்தால் இந்த கை வைத்தியம் ட்ரை பண்ணுங்க\nடெக் நியூஸ்May 2021-இல் இந்தியாவிற்கு வரும் 7 புது ஸ்மார்ட் போன்கள்; இதோ லிஸ்ட்\nடெக் நியூஸ்Realme லேப்டாப்: விலையை சொன்னா HP, Lenovo-லாம் தெறிச்சுடும்\nபொருத்தம்ஒரே நேரத்தில் பல பணிகளை செய்ய முடியாத ராசிகள்\nவங்கிSBI ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வேலைவாய்ப்பு 2021\nதமிழ்நாடுநிதித்துறைக்கு ஸ்டாலின் சாய்ஸ் பழனிவேல் தியாகராஜன்: ஏன் தெரியுமா\nதமிழ்நாடுஅண்ணே மறக்காம வந்திருங்க: ஸ்டாலின் பதவியேற்புக்கு அழகிரிக்கு அழைப்பு\nவணிகச் செய்திகள்கடன் வாங்கியோருக்கு இன்னொரு வாய்ப்பு... சலுகையைப் பயன்படுத்துவது எப்படி\nதமிழ்நாடுமுன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கொரோனா\nசினிமா செய்திகள்குட் நியூஸ் வந்தாச்சு: நல்ல வேளை, ரஜினி பயந்தது மாதிரி எதுவும் நடக்கல\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/sports/14993-cwc-pakistan-not-achieve-the-biggest-target-against-bangladesh-match-and-semifinal-chances-ends.html", "date_download": "2021-05-07T00:02:04Z", "digest": "sha1:OK3OFKM4ZQZ47BWCSTWZ3VZ7QLA2CUON", "length": 13210, "nlines": 103, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "உலகக் கோப்பை கிரிக்கெட் பாகிஸ்தான் கதை முடிந்தது | CWC, Pakistan not achieve the biggest target against Bangladesh match and semifinal chances ends: - The Subeditor Tamil", "raw_content": "\nஉலகக் கோப்பை கிரிக்கெட் பாகிஸ்தான் கதை முடிந்தது\nஉலகக் கோப்பை கிரிக்கெட் பாகிஸ்தான் கதை முடிந்தது\nஉலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அரையிறுதிக்கு முன்னேற முடியாமல் பாகிஸ்தான் வெளியேறியது. வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் எந்த அதிசயமும் நிகழ்த்த முடியாமல் 315 ரன்கள் மட்டுமே எடுத்ததால் அரையிறுதி வாய்ப்பு இல்லாமல் போனது.\nஇங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அரையிறுதிக்கு ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து அணிகள் முன்னேறி விட்டன. 4-வது அணியாக நுழையப் போவது யார் என்பதில் நியூசிலாந்துக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே ஒரு சின்னஞ்சிறிய குழப்பம் நிலவியது.அதாவது, இன்று வங்கதேசத்துக்கு எதிராக நடைபெறும் போட்டியில் பாகிஸ்தான், முதலில் டாஸ் வெல்ல வேண்டும். பின்னர் 350 ரன்களுக்கு மேல் குவிக்க வேண்டும். அதன் பின் வங்கதேசத்தை 312 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதிக்கு நுழைய முடியும் என்பது போன்ற கட்டாயம் இருந்தது.\nஆனால் இன்றைய போட்டியில் டாஸ் மட்டுமே பாகிஸ்தானுக்கு சாதகமாக இருந்தது. வங்கதேச வீரர்களின் அபார பந்து வீச்சால் பாகிஸ்தான் வீரர்கள் எந்த அதிரடியும் காட்டி அதிசயம் எதுவும் நிகழ்த்த முடியவில்லை. இதனால் 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 315 ரன்களை மட்டுமே பாகிஸ்தானால் சேர்க்க முடிந்தது.பாகிஸ்தான் அணியில் இமாம் (100) சதமடித்தார். பாபர் ஆஸம் (96) சதமடிக்கும் வாய்ப்பை 4 ரன்களில் தவறவிட்டார். வங்கதேசத்தின் முஸ்தபிகுர் 5 விக்கெட்டுகளை சாய்த்து சாதித்தார்.\nஇந்தப் போட்டியில் குறைந்�� பட்சம் 350 ரன்கள் குவித்து, வங்கதேசத்தை 312 ரன்கள் வித்தியாசத்தில் வென்றால் மட்டுமே பாகிஸ்தானுக்கு அரையிறுதி வாய்ப்பு என்ற கடினமான இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அந்த அதிசயம் எதுவும் நிகழவில்லை. இதனால் அரையிறுதி வாய்ப்யை இழந்து, இந்தப் போட்டியில் வென்றாலும், தோற்றாலும் புள்ளிப்பட்டியலில் 5-வது இடம் தான் என்ற திருப்தியுடன் பாகிஸ்தான் வெளியேறுகிறது.\nYou'r reading உலகக் கோப்பை கிரிக்கெட் பாகிஸ்தான் கதை முடிந்தது Originally posted on The Subeditor Tamil\nசூப்பரான சுவையில் வஞ்சரை மீன் ஆம்லெட் ரெசிபி\nவேலூர் மக்களவைத் தேர்தல் எதிரொலி; சட்டசபை கூட்டத்தொடர் 20-ந் தேதியுடன் முடிவடைகிறது\nவீரர்களுக்கு கொரோனா பாதிப்பு எதிரொலி - ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைப்பு\nபுகழ்பெற்ற கால்பந்து வீரர் மரடோனா மரணத்தில் மர்மம் – அதிர்ச்சி தகவல்\nவங்காளதேசத்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்: தொடரை கைப்பற்றிய இலங்கை\nமும்பை இந்தியன்ஸ் அணியை சுட்டெரிக்குமா ஐதராபாத் சன்ரைசர்ஸ்…\nகேப்டன் பதவி பறிப்பை அடுத்து வீட்டுக்கு அனுப்ப பிளான்\nகேமிரா இருப்பதை மறந்து தேவிஷா ஷெட்டிக்கு மும்பை அணி வீரர் முத்தம்...\nஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா\n- கிறிஸ்கெய்லுக்கு டஃப் கொடுத்த சஹால்.. வைரல் போட்டோ\n``அது கஷ்டமாக இருந்தது'' - அஸ்வின் குடும்பத்தினர் 10 பேருக்கு கொரோனா\n7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி\nஐபிஎல் முக்கியம் என்பவர்கள் வீட்டில் ஒருவருக்கு கொரோனா வந்தால் தெரியும் - கொதிக்கும் ஆடம் ஜாம்பா\nஇறுதி ஓவரில் 1 ரன் வித்தியாசத்தில் பெங்களூரு திரில் வெற்றி\n`பேட் கம்மின்ஸ் இன்ஸ்பிரேஷன்... 40 லட்சம் நிதியுதவி அறிவித்த பிரட் லீ\n.. வீரர்களுக்கு பிசிசிஐ கொடுத்த உத்தரவாதம்\nகிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு காலில் ஆபரேஷன்.. என்ன ஆச்சு\nமேற்கு வங்காளம்: பாரதிய ஜனதாவின் கணக்கு தோற்றது எங்கு\nஉதயநிதிக்கு பதவி இல்லை: தமிழ்நாடு அரசின் புதிய அமைச்சர்கள் யார்\nகோவிட் தடுப்பூசி பற்றிய போலி எஸ்எம்எஸ்: கிளிக் செய்தால் ஆபத்து\nஇதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா – புதிய கட்டுப்பாடுகள் என்ன\nமக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்\n - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம ���ீதிபதி\nபுறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு\nஎதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்\nஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்\nதிமுக அமைச்சரவையில் யாருக்கு என்ன பொறுப்பு…\nமனைவியுடன் உல்லாசமாக இருந்த உதவியாளர்… கோயிலுக்கு அழைத்துச்சென்று அர்ச்சனை செய்த பூசாரி\nமுதலமைச்சர் ஆனதும் ஸ்டாலினின் முதல் கையெழுத்து இதுதான்.. முழு எதிர்பார்ப்பில் மக்கள்..\nகோவிட்-19: ஆக்ஸிஜன் அளவை சோதிப்பது எப்படி\nராஜினாமா முடிவில் கே.பி.முனுசாமி – திமுகவுக்கு லாபமாக அமையுமா\nஇரவோடு இரவாக மேலும் புதியக் கட்டுப்பாடுகள் அறிவிப்பு : முழு விபரம்…\n1000ரூபாய் கையிருப்பு கூரை வீடு – சட்டமன்றத்தில் நுழையும் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ மாரிமுத்து\n தேமுதிக வீழ்ச்சிக்கு இதான் காரணம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2021/05/02060330/We-gave-up-an-extra-25-runs-in-the-match-against-Punjab.vpf", "date_download": "2021-05-06T23:59:54Z", "digest": "sha1:BZLXPWR4G44UVRD6UKZQ7B4NG4LHRQHC", "length": 11673, "nlines": 115, "source_domain": "www.dailythanthi.com", "title": "We gave up an extra 25 runs in the match against Punjab - Bangalore captain Kohli interview || பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில் 25 ரன்கள் கூடுதலாக விட்டுக்கொடுத்து விட்டோம் - பெங்களூரு கேப்டன் கோலி பேட்டி", "raw_content": "Sections செய்திகள் சட்டசபை தேர்தல் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nபஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில் 25 ரன்கள் கூடுதலாக விட்டுக்கொடுத்து விட்டோம் - பெங்களூரு கேப்டன் கோலி பேட்டி + \"||\" + We gave up an extra 25 runs in the match against Punjab - Bangalore captain Kohli interview\nபஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில் 25 ரன்கள் கூடுதலாக விட்டுக்கொடுத்து விட்டோம் - பெங்களூரு கேப்டன் கோலி பேட்டி\nபஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில் 25 ரன்கள் கூடுதலாக விட்டுக்கொடுத்ததே தோல்விக்கு முக்கிய காரணம் என்று பெங்களூரு கேப்டன் கோலி கூறினார்.\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு ஆமதாபாத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை தோற்கடித்தது. இதில் கேப்டன் லோகேஷ் ராகுல் (91 ரன்), கிறிஸ் கெய்ல் (46 ரன்) ஆகியோரது அபார பேட்டிங்கின் உதவியோடு பஞ��சாப் நிர்ணயித்த 180 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய பெங்களூரு அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 145 ரன்கள் எடுத்து அடங்கியது. 25 ரன்களுடன், 3 முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றிய பஞ்சாப் இடக்கை சுழற்பந்து வீச்சாளர் ஹர்பிரீத் பிரார் ஆட்டநாயகன் விருது பெற்றார்.\nதோல்வி குறித்து பெங்களூரு கேப்டன் விராட் கோலி கூறுகையில், ‘பஞ்சாப் அணி ஓரளவு நல்ல தொடக்கம் கண்டது. அதன் பிறகு அடுத்தடுத்து சில விக்கெட்டுகளை வீழ்த்தி அழுத்தம் கொடுத்தோம். 5 விக்கெட்டுக்கு 116 ரன்களுடன் இருந்த அவர்களை 160 ரன்களுக்குள் கட்டுப்படுத்தி இருக்க ேவண்டும். 160 ரன்கள் இலக்கு என்றால் இங்கு ‘சேசிங்’ செய்திருக்க முடியும். ஆனால் 25 ரன்கள் கூடுதலாக விட்டுக்கொடுத்து விட்டோம். பவுண்டரிகள் அடிக்கக்கூடிய மோசமான பந்துகளை அதிகமாக வீசிவிட்டோம்.\nபேட்டிங்கை பொறுத்தவரை ஒரு பேட்ஸ்மேனாக தொடக்கத்தில் சில வித்தியாசமான முயற்சிகளை செய்து பார்த்திருக்கலாம். பார்ட்னர்ஷிப்பும், 110-க்கும் மேல் ஸ்டிரைக் ரேட்டும் தேவையாக இருந்தது. ஆனால் ஒரு பேட்டிங் குழுவாக அதை செய்ய தவறி விட்டோம். பேட்டிங்கில் எந்த ஒரு தருணத்திலும் உத்வேகம் கிடைக்கவில்லை. பேட்டிங்கில் உள்ள பிரச்சினையை சரி செய்ய வேண்டியது அவசியமாகும். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் அவர்கள் அருமையாக பந்து வீசினர்.\nரஜத் படிதரை பேட்டிங்கில் 3-வது வரிசையில் ஆடவைக்கும் போது அவர் சுதந்திரமாக விளையாடுகிறார். அத்துடன் அந்த வரிசையில் ஆடும் போது தான் எங்களது பேட்டிங் வரிசை சரிசம கலவையில் இருக்கிறது. ரஜத் படிதர் தரமான வீரர். இன்றைய இரவு அவருக்குரியதாக அமையவில்லை. யாராவது ஒரு பேட்ஸ்மேன் நிலைத்து நின்று ஆடியிருந்தால் இலக்கை நெருங்கியிருப்போம். எங்களது திட்டமிடலை களத்தில் கச்சிதமாக செயல்படுத்த முடியவில்லை. இறுதிகட்டத்தில் ஹர்ஷல் பட்டேலும் (31 ரன்), கைல் ஜாமிசனும் (16 ரன்) கொஞ்சம் ரன் எடுத்தனர். இல்லாவிட்டால் தோல்வி வித்தியாசம் இன்னும் அதிகமாகியிருக்கும்’ என்றார்.\n1. ‘தோல்விக்கு நானே முழு பொறுப்பு ஏற்கிறேன்’ - ஐதராபாத் அணியின் கேப்டன் வார்னர் பேட்டி\n2. ஐ.பி.எல். கிரிக்கெட்: பஞ்சாப் அணி 3-வது வெற்றி பெங்களூருவை சாய்த்தது\n3. பிரித்வி ஷா அதிரடி அரைசதம்: டெல்லியிடம் வீழ்ந்தது கொல்கத்தா\n4. ‘பேட்டிங், பந்து வீச்சில் ஒருசேர சிறப்பாக செயல்பட முடியாமல் தடுமாறுகிறோம்’ - கொல்கத்தா அணியின் கேப்டன் மோர்கன் புலம்பல்\n5. ஐ.பி.எல். கிரிக்கெட்: ராஜஸ்தானை வீழ்த்தி மும்பை 3-வது வெற்றி\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/water-level/", "date_download": "2021-05-07T01:23:39Z", "digest": "sha1:XE6RIXA7X3YS57M4YFKXGVFZSF4N2N4R", "length": 15410, "nlines": 166, "source_domain": "www.patrikai.com", "title": "water level – Patrikai – Tamil Daily – latest online local breaking news & reviews – Tamilnadu, India & World – politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nசெம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பு…\nசென்னை: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னையின் புறநகர் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக,…\n308 நாட்களுக்கு பிறகு 100 அடிக்கு கீழ் சரிந்த மேட்டூர் அணைநீர் மட்டம்…\nசேலம்: மேட்டூர் அணை நீர் மட்டம் 308 நாட்களுக்கு பிறகு 100 அடிக்கு கீழ் சரிந்துள்ளது. தற்போதை யநிலையில், அணையில்…\nமேட்டூர் அணையில் 300 நாட்களாக 100 அடிக்குக் குறையாமல் உள்ள நீர் மட்டம்\nமேட்டூர் சுமார் 14 ஆண்டுகளுக்குப் பிறகு மேட்டூர் அணையின் நீர் மட்டம் தொடர்ந்து 300 நாட்களுக்கும் மேலாக 100 அடிக்கு…\nநடப்பாண்டில் 4-வது முறையாக முழுக் கொள்ளளவை எட்டியது மேட்டூர் அணை\nமேட்டூர்: மேட்டூர் அணை நடப்பாண்டில் 4வது முறையாக முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்….\nஆழியாறு அணையில் இருந்து 70 நாட்களுக்கு நீர் திறப்பு: முதல்வர் பழனிச்சாமி உத்தரவு\nஆழியாறு அணையில் இருந்து பாசனத்திற்காக வரும் 4ம் தேதி முதல் நீர் திறக்க முதமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். இது…\nமுழு கொள்ளளவை எட்டும் பவானிசாகர் அணை: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nபவானிசாகா் அணை முழு கொள்ளளவான 105 அடியை இன்றிரவுக்குள் எட்டுமென்பதால். கரையோரத்தில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய…\nபவானிசாகர் அணைக்கான நீர்வரத்து குறைவு: நீர் வெளியேற்றத்தில் மாற்றமில்லை\nவடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், நேற்று ஒருநாள் மழை இல்லாத காரணத்தால் பவானிசாகர் அணைக்கான நீர்வரத்து குறைந்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில்…\nநடப்பாண்டில் 3வது முறையாக முழுக் கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணை\nநடப்பாண்டில் மூன்றாவது முறையாக கடும் மழை காரணமாக மேட்டூர் அணை தனது முழுக் கொள்ளளவை மீண்டும் எட்டியுள்ளது. காவிரி நீர்ப்…\n100 அடியை எட்டியது பவானிசாகர் அணை: நீர்வரத்து அதிகரிப்பு\nதொடர் மழை மற்றும் நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக, நடப்பு ஆண்டில் முதன்முறையாக பவானி சாகர் அணை 100 அடியை எட்டியுள்ளது….\nதேனியில் கொட்டும் கனமழை: வேகமாக நிரம்பி வரும் வைகை அணை\nதேனியில் தொடர்ந்து கனமழை கொட்டி வருவதால் வைகை அணையின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது. 2019ம் ஆண்டு மிகத் தாமதமாக தொடங்கிய…\nமேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு திடீர் சரிவு: பொதுப்பணித்துறை அதிகாரிகள் விளக்கம்\nமேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவில் வினாடிக்கு 5,000 கன அடி நீர் சரிந்துள்ளதாக தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்….\nதொடர்ந்து சரியும் மேட்டூர் அணையின் நீர்வரத்து: பொதுமக்கள் அச்சம்\nமேட்டூர் அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து சரிந்து வருவதால், சேலம் மாவட்டத்திலும் குடிநீர் பற்றாக்குறை மற்றும் விவசாயத்திற்கு போதிய நீரிண்மை போன்ற…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15.66 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15,66,72,832 ஆகி இதுவரை 32,69,034 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nஅடுத்த 17 நாட்கள் ஒவ்வொரு வீட்டிலும் பின்பற்ற வேண்டிய கட்டாய விதி\nஅடுத்த 17 நாட்கள் ஒவ்வொரு வீட்டிலும் பின்பற்ற வேண்டிய கட்டாய விதி – நெட்டிசன் பதிவு கொரோனா கட்டுப்பாடு குறித்து வலைத் தளங்களில்…\nஇன்று ஆந்திரப் பிரதேசத்தில் 21,954 கர்நாடகாவில் 49,058 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 21,954 கர்நாடகாவில் 49,058 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 49,058…\nநாளைக்குள் தமிழகத்துக்குத் தேவையான ஆக்சிஜன் வழ���்குவதை உறுதி செய்ய மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\nசென்னை நாளைக்குள் தமிழகத்துக்குத் தேவையான ஆக்சிஜன் வழங்குவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது….\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் –06/05/2021\nசென்னை தமிழகத்தில் இன்றைய (06/05/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 24,898 பேருக்குப் பாதிப்பு…\nசென்னையில் இன்று 6,678 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 6,678 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 33,316 ஆகி உள்ளது இன்று சென்னையில்…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15.66 கோடியை தாண்டியது\nஅதிமுக எம்.எல்.ஏ. விஜய பாஸ்கருக்கு கொரோனா\n7 hours ago ரேவ்ஸ்ரீ\nதனி தகவல் தொடர்பு தளத்தை தொடங்கிய டிரம்ப்\n7 hours ago ரேவ்ஸ்ரீ\nஐபிஎல் தொடரை நடத்தி முடிக்காவிட்டால் 2500 ரூபாய் கோடி இழப்பு ஏற்படும் – கங்குலி\n8 hours ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithisaral.in/category/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-05-07T00:19:30Z", "digest": "sha1:2PECI5QAEE6BDVUCLRRUAOY4KFRHOUDN", "length": 9289, "nlines": 150, "source_domain": "www.seithisaral.in", "title": "செய்தி விமர்சனம் Archives - Seithi Saral", "raw_content": "\nஒரு கோடியே 71 லட்சம் பேர் ஓட்டு போடவில்லை; 100 சதவீதத்தை எட்டுவது எப்படி\n 8.4.2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஒரு கோடியே 71...\nதேர்தல் பிரசாரத்திற்கு தடை விதிக்கலாமே\n 18.3.2021தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வருகிற 6ந் தேதி...\nஅ.தி.மு.க. அவசர அவசரமாக முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது ஏன்\nகட்சத்தீவோடு மீனவர்களின் வாழ்வையும் தாரை வார்த்துவிட்டார்களே\nThey have ruined the lives of fishermen along with Katchathee 22.1.2021கச்சத்தீவை இலங்கையிடம் தாரை வார்த்ததோடு தமிழக மீனவர்களின் வாழ்வையும் தாரைவார்த்துவிட்டார்களே என்று தமிழர்கள்...\nரஜினிக்கு வலை விரிக்கும் கமல்; ரசிகர்கள் ஏற்று கொள்வார்களா\n 18/12/2020 ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற சந்தேகங்களுக்கு தற்போது முற்றுப்புள்ளி வைத்தாகி...\nஆலங்குளம் தொகுதியில் களம் இறங்க காத்திருக்கும் காங்கிரஸ்\nCongress waiting to take the field in Alangulam constituency 9/12/2020 வருகிற சட்டசபைத் ��ேர்தலில் ஆலங்குளம் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட பலர் காத்திருக்கிறார்கள்....\nஏழைகளுக்கு எட்டிவிடும் மருத்துவப் படிப்பு\nMedical study that benefits the poor நீட் தேர்வை எப்படியாவது தமிழ்நாட்டுக்குள் நுழையவிடக்கூடாது என்று பல்வேறு அரசியல் கட்சிகள் போராடி அதில் தோற்றுவிட்டன என்றே சொல்ல...\nசத்துணவு பணியாளர் தேர்வு நிறுத்தப்பட்டது ஏன்\n 10/10/2020 தமிழ்நாட்டில் சத்துணவு பணியாளர் தேர்வு நிறுத்தப்பட்டதற்கு என்ன காரணம் என்ற புதிய தகவல் வெளியாகி உள்ளது....\nவடமாநிலத் தொழிலாளர்கள் பெயரில் இப்படியும் மோசடி\nFraud in the name of Northern workers 26/9/2020 வடமாநிலத் தொழிலாளர்கள் தமிழகம் வந்து பல்வேறு தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக கட்டிடத் தொழில், செங்கல்...\n But… 1-9-2020 தமிழகத்தில் கொரோனா ஊரடங்கில் பெருமளவு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு விட்டன. குறிப்பாக இ-பாஸ் முறை முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுவிட்டது. இதனால்...\nமு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை விவரம்\nதூத்துக்குடிக்கு 2 மந்திரிகள்: திருநெல்வேலி, தென்காசி ஏமாற்றம்\nதிருப்பத்தூரில் இறந்த 5 பேர் கொரோனா நோயாளிகள் – மருத்துவ அதிகாரி விளக்கம்\nதுணை தலைவர் விலகல்; கமல் காட்டம்\nதமிழகத்தில் ஒரு நாள் கொரோனா பதிவு 24,898 ஆக உயர்வு\nUma on இராமருக்கு ஓர் அக்காள் உண்டு தெரியுமா\n.. தீராத ஒரு தகராறு….(சொல்லாராய்ச்சி/ சிவகாசி முத்துமணி)\nK.Kumaresan on தென் மாவட்ட மக்கள் வெளியே வர வேண்டாம் ; முதல்வர் எச்சரிக்கை\nPonnu on ஏழைகளுக்கு எட்டிவிடும் மருத்துவப் படிப்பு\nமு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை விவரம்\nதூத்துக்குடிக்கு 2 மந்திரிகள்: திருநெல்வேலி, தென்காசி ஏமாற்றம்\nதிருப்பத்தூரில் இறந்த 5 பேர் கொரோனா நோயாளிகள் – மருத்துவ அதிகாரி விளக்கம்\nதுணை தலைவர் விலகல்; கமல் காட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/66841", "date_download": "2021-05-07T01:42:48Z", "digest": "sha1:U6FJSMHBS6YKEZRVCMCA35JROXIUWHVS", "length": 15411, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "ரணிலா ? மஹிந்தவா ? மக்கள் தீர்மானிக்க வேண்டும் : தினேஷ் | Virakesari.lk", "raw_content": "\nதூரநோக்குடனான திட்டமிடலின்றி நாடு நெருக்கடிக்குள் சிக்கி விட்டது - ரணில் கவலை\nநாளொன்றுக்கு 2 ஆயிரத்தை விட அதிக தொற்றாளர்கள் இனங்காணப்படலாம் : எச்சரிக்கிறது தொற்று நோயியல் பிரிவு\nபிழையான எண்ணங்களை மக்கள் மயப்படுத்த எத���க்கட்சி முயற்சி - மதுர விதானகே\nகிளிநொச்சியில் புதிய கொரோனா சிகிச்சை நிலையம் - நள்ளிரவு முதல் சேவைகள் ஆரம்பம்\nமஹரகம நகரசபைக் கூட்டத்தில் மோதல் - விசாரணைகள் ஆரம்பம்\nஜம்மு-காஷ்மீரில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை\nகொரோனாவால் இலங்கையில் கர்ப்பிணித் தாய் பலி\n இனங்காணப்படும் தொற்றாளர்களை விட இருமடங்கு தொற்றாளர்கள் சமூகத்தில் \nதம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தை மீண்டும் திறக்க தீர்மானம்\n மக்கள் தீர்மானிக்க வேண்டும் : தினேஷ்\n மக்கள் தீர்மானிக்க வேண்டும் : தினேஷ்\nதேசிய பாதுகாப்பினை அலட்சியப்படுத்தி 250ற்கும் அதிகமான உயிர்களை கொன்ற பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் வேண்டுமா, அல்லது 30வருட கால சிவில் யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வந்து தேசிய பாதுகாப்பினை பலப்படுத்திய எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் வேண்டுமா என்பதை நாட்டு மக்கள் தீர்மானிக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.\nகடவத்த நகரில் நேற்று இடம் பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nஏப்ரல் 21 ஈஸ்டர் தின குண்டுத்தாக்குதலை ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் தற்போது முழுமையாக மறந்து விட்டது. தொடர் குண்டுத்தாக்குதல் கத்தோலிக்க தேவாலயங்களில் நடத்தப்படும் என்று இந்திய புலனாய்வு பிரிவு தொடர்ந்து அரசாங்கத்திற்கு அறிவித்தும் எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை.\nஅரசாங்கத்தின் அலட்சியப் போக்கினால் 250ற்கும் மேலான உயிர்கள் பறிக்கப்பட்டுள்ளது. இந்த உயிரிழப்புக்கள் அரசாங்கத்திற்கு ஒரு சாதாரண விடயமாகவே காணப்படுகின்றது. குண்டுத்தாக்குதலை தொடர்ந்து எழுந்த பல கேள்விக்ளுக்கு இதுவரையில் விடை கிடைக்கப் பெறவில்லை.\nதேசிய பாதுகாப்பினை பலப்படுத்தி மக்களின் வாழ்க்கை தரத்தினை முன்னேற்றுவதற்காகவே அரசாங்கம் மக்களால் தோற்றுவிக்கப்படுகின்றது.\nஇவ்விரண்டு விடயங்களிலும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது. ஆகவே மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு முனைவது மக்களுக்கு இழைக்கும் துரோகமாகும் என அவர் இதன்போது தெரிவித்தார்.\nஅரசாங்கம் ஆட்ச�� ஈஸ்டர் தாக்குதல் ஐக்கிய தேசிய கட்சி தினேஷ் குணவர்தன Government Easter attack United National Party Dinesh Gunawardena\nதூரநோக்குடனான திட்டமிடலின்றி நாடு நெருக்கடிக்குள் சிக்கி விட்டது - ரணில் கவலை\nகொவிட் வைரஸ் தொற்று 2 ஆம் அலை ஏற்பட்ட போது போதிய தடுப்பூசிகளை கொள்வனவு செய்திருந்தால் அச்சம் கொள்ள வேண்டியதில்லை. அல்லது தடுப்பூசி கிடைக்காவிடின் அடுத்த கட்ட சிகிச்சைகளுக்கான இயற்கை சுவாசக் கருவிகள் , அவசர சிகிச்சை பிரிவு கட்டில்கள் மற்றும் ஒக்சிஜன் போன்றவற்றை பெற்றுக்கொண்டிருந்தாலும் ஏற்பட கூடிய உயிரிழப்புகளை தடுத்திருக்கலாம். ஆனால் அரசாங்கத்தின் தூரநோக்குடனான திட்டமிடலின்றி நாடு நெருக்கடிக்குள் சிக்கி விட்டது என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.\n2021-05-07 07:01:30 தூரநோக்கு திட்டமிடல் நாடு\nநாளொன்றுக்கு 2 ஆயிரத்தை விட அதிக தொற்றாளர்கள் இனங்காணப்படலாம் : எச்சரிக்கிறது தொற்று நோயியல் பிரிவு\nநாட்டில் நாளொன்றில் இனங்காணப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கை எதிர்வரும் நாட்களில் 2000 ஐ விட அதிகரிக்கக் கூடும் என்று சுகாதார தரப்பினர் எச்சரித்துள்ளனர். தற்போது நாடளாவிய அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றமையால் மாவட்டங்களிலுள் வைத்தியசாலைகளிலும் கொவிட் தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான பிரிவுகளை பிரத்தியேகமாக ஒதுக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதே வேளை மேல் மாகாணத்தில் மாத்திரம் நாளொன்றுக்கு சுமார் 1200 தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றனர்.\n2021-05-06 22:40:35 2000 தொற்றாளர்கள் இனங்காணல் எச்சரிக்கை\nபிழையான எண்ணங்களை மக்கள் மயப்படுத்த எதிக்கட்சி முயற்சி - மதுர விதானகே\nகொவிட்-19 வைரஸ் பரவல் காரணமாக பாதிப்படைந்துள்ள மக்களை காப்பாற்றுவதுடன் , வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கு அரசாங்கம் முயற்சிகளை எடுத்து வரும் நிலையில், எதிர்தரப்பினர் தங்களுக்கு கிடைக்கப் பெற்றுள்ள பாராளுமன்ற உறுப்புரிமையை பயன்படுத்தி பிழையான எண்ணங்களை மக்கள் மயப்படுத்த முயற்சித்து வருவதாக ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே குற்றஞ்சாட்டினார்.\n2021-05-06 22:36:58 பிழையான எண்ணங்கள் மக்கள் மயப்படுத்தல் எதிக்கட்சி\nகிளிநொச்சியில் புதிய கொரோனா சிகிச்சை நிலையம் - நள்ளிரவு முதல் சேவைகள் ஆ��ம்பம்\nகிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் புதிய கொவிட் 19 மருத்துவ நிலையத்தில் இன்று நள்ளிரவு முதல் சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பிரிவு தெரிவிக்கின்றது.\n2021-05-06 22:36:36 கிளிநொச்சி கொரோனா சிகிச்சை நிலையம் நள்ளிரவு\nமஹரகம நகரசபைக் கூட்டத்தில் மோதல் - விசாரணைகள் ஆரம்பம்\nமஹரகம நகரசபையில் இடம்பெற்றதாக கூறப்படும் மோதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக மாஹரகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.\n2021-05-06 22:35:00 மஹரகம நகரசபை கூட்டம் மோதல் விசாரணைகள் ஆரம்பம்\nதூரநோக்குடனான திட்டமிடலின்றி நாடு நெருக்கடிக்குள் சிக்கி விட்டது - ரணில் கவலை\nஇலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து மேலும் 810 பேர் குணமடைவு..\nபணவீக்கம் ஏப்ரலில் 3.9 சதவீதமாக வீழ்ச்சி: இலங்கை மத்திய வங்கி\nவிலை அதிகரிப்பிற்கு அனுமதியில்லையேல் தட்டுப்பாடு ஏற்படலாம்: லாப் கேஸ் நிறுவனம்\nஸ்புட்னிக் கொரோனா தடுப்பூசி போடும் பணி ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/98026", "date_download": "2021-05-07T01:05:55Z", "digest": "sha1:OFS66YPFDX3PHIFE4W6YGCQ6M5O7RX7X", "length": 15638, "nlines": 106, "source_domain": "www.virakesari.lk", "title": "இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள் : கொழும்பில் சில பகுதிகள் விடுவிப்பு ! | Virakesari.lk", "raw_content": "\nநாளொன்றுக்கு 2 ஆயிரத்தை விட அதிக தொற்றாளர்கள் இனங்காணப்படலாம் : எச்சரிக்கிறது தொற்று நோயியல் பிரிவு\nபிழையான எண்ணங்களை மக்கள் மயப்படுத்த எதிக்கட்சி முயற்சி - மதுர விதானகே\nகிளிநொச்சியில் புதிய கொரோனா சிகிச்சை நிலையம் - நள்ளிரவு முதல் சேவைகள் ஆரம்பம்\nமஹரகம நகரசபைக் கூட்டத்தில் மோதல் - விசாரணைகள் ஆரம்பம்\nதனியார் வங்கி உதவி முகாமையாளருக்கு கொரோனா தொற்று ; வங்கிக்கு பூட்டு\nஜம்மு-காஷ்மீரில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை\nகொரோனாவால் இலங்கையில் கர்ப்பிணித் தாய் பலி\n இனங்காணப்படும் தொற்றாளர்களை விட இருமடங்கு தொற்றாளர்கள் சமூகத்தில் \nதம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தை மீண்டும் திறக்க தீர்மானம்\nஇலங்கையில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள் : கொழும்பில் சில பகுதிகள் விடுவிப்பு \nஇலங்கையில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள் : கொழும்பில் சில பகுதிகள் விடுவிப்பு \nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஅதனடிப்படையில் இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 219ஆக அதிகரித்துள்ளது.\nஇறுதியாக பதிவாகிய இரு கொரோனா மரணங்களும் தெஹிவளை மற்றும் அலவ்வ பிரதேசங்களில் பதிவாகியுள்ளது.\nதெஹிவளை பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயதுடைய ஆணொருவரும் அலவ்வ பிரதேசத்தைச் சேர்ந்த 78 வயதுடைய பெண்ணொருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.\nகொவிட் பரவல் அச்சுறுத்தல் காரணமாக நாட்டில் சில பிரதேசங்கள் இன்று புதன்கிழமை முதல் புதிதாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள அதேவேளை , மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கொவிட் தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.\nஅதற்கமைய பூஜாபிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பமுணுகம திவணவத்தை கிராம சேவகர் பிரிவு மற்றும் எஹெலியகொட பொலிஸ் பிரிவில் மொரகல கிராம உத்தியோகத்தர் பிரிவு என்பன இன்று புதன்கிழமை காலை 5 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.\nஅக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில் அக்கரைப்பற்று 5, 14 , 8/1, 8/3 மற்றும் 9 ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் , நகர வலய கிராம சேவகர் பிரிவு, பாலமுனை 1 கிராம சேவகர் பிரிவு , ஒலுவில் 2 கிராம சேவகர் பிரிவு, அட்டாளைச்சேனை 8 கிராம சேவகர் பிரிவு என்பன தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.\nஅத்துடன் கொட்டாஞ்சேனை, ஆட்டுப்பட்டித்தெரு, ருவன்வெல்ல, ஆகிய பொலிஸ் பிரிவுகள் மற்றும் கருவாத்தோட்டத்தின் 60 ஆம் இலக்க தோட்டம் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை இன்று புதன்கிழமை இரவு வரை 521 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அற்கமைய நாட்டில் மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 46,247 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 39 023 தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதோடு , 6738 தொற்றாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்\nஇலங்கை அதிகரிப்பு கொரோனா மரணங்கள் கொழும்பு சில பகுதிகள் விடுவிப்பு Sri Lanka Increase Corona Deaths Colombo some parts Release\nநாளொன்றுக்கு 2 ஆயிரத்தை விட அதிக தொற்றாளர்கள் இனங்காணப்படலாம் : எச்சரிக்கிறது தொற்று நோயியல் பிரிவு\nநாட்டில் நாளொன்றில் இனங்காணப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கை எதிர்வரும் நாட்களில் 2000 ஐ விட அதிகரிக்கக் கூடும் என்று சுகாதார தரப்பினர் எச்���ரித்துள்ளனர். தற்போது நாடளாவிய அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றமையால் மாவட்டங்களிலுள் வைத்தியசாலைகளிலும் கொவிட் தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான பிரிவுகளை பிரத்தியேகமாக ஒதுக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதே வேளை மேல் மாகாணத்தில் மாத்திரம் நாளொன்றுக்கு சுமார் 1200 தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றனர்.\n2021-05-06 22:40:35 2000 தொற்றாளர்கள் இனங்காணல் எச்சரிக்கை\nபிழையான எண்ணங்களை மக்கள் மயப்படுத்த எதிக்கட்சி முயற்சி - மதுர விதானகே\nகொவிட்-19 வைரஸ் பரவல் காரணமாக பாதிப்படைந்துள்ள மக்களை காப்பாற்றுவதுடன் , வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கு அரசாங்கம் முயற்சிகளை எடுத்து வரும் நிலையில், எதிர்தரப்பினர் தங்களுக்கு கிடைக்கப் பெற்றுள்ள பாராளுமன்ற உறுப்புரிமையை பயன்படுத்தி பிழையான எண்ணங்களை மக்கள் மயப்படுத்த முயற்சித்து வருவதாக ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே குற்றஞ்சாட்டினார்.\n2021-05-06 22:36:58 பிழையான எண்ணங்கள் மக்கள் மயப்படுத்தல் எதிக்கட்சி\nகிளிநொச்சியில் புதிய கொரோனா சிகிச்சை நிலையம் - நள்ளிரவு முதல் சேவைகள் ஆரம்பம்\nகிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் புதிய கொவிட் 19 மருத்துவ நிலையத்தில் இன்று நள்ளிரவு முதல் சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பிரிவு தெரிவிக்கின்றது.\n2021-05-06 22:36:36 கிளிநொச்சி கொரோனா சிகிச்சை நிலையம் நள்ளிரவு\nமஹரகம நகரசபைக் கூட்டத்தில் மோதல் - விசாரணைகள் ஆரம்பம்\nமஹரகம நகரசபையில் இடம்பெற்றதாக கூறப்படும் மோதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக மாஹரகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.\n2021-05-06 22:35:00 மஹரகம நகரசபை கூட்டம் மோதல் விசாரணைகள் ஆரம்பம்\nதனியார் வங்கி உதவி முகாமையாளருக்கு கொரோனா தொற்று ; வங்கிக்கு பூட்டு\nகோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவுக்குட்பட்ட தனியார் வங்கி ஒன்றின் உதவி முகாமையாளருக்கு கொரோனா தொற்று இருப்பதாக இன்று (6) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\n2021-05-06 21:00:35 தனியார் வங்கி உதவி முகாமையாளர் கொரோனா தொற்று வங்கி\nஇலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து மேலும் 810 பேர் குணமடைவு..\nபணவீக்கம் ஏப்ரலில் 3.9 சதவீதமாக வீழ்ச்சி: இலங்கை மத்திய ��ங்கி\nவிலை அதிகரிப்பிற்கு அனுமதியில்லையேல் தட்டுப்பாடு ஏற்படலாம்: லாப் கேஸ் நிறுவனம்\nஸ்புட்னிக் கொரோனா தடுப்பூசி போடும் பணி ஆரம்பம்\nகளுத்துறை சிறைச்சாலைக்குள் போதைப்பொருட்கள் அடங்கிய பொதிகள் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%20%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?page=2", "date_download": "2021-05-07T01:17:41Z", "digest": "sha1:567YM3LM6KOV6OV7OZYYNDVMI6R2PA6R", "length": 8456, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: சிறுபான்மை மக்கள் | Virakesari.lk", "raw_content": "\nநாளொன்றுக்கு 2 ஆயிரத்தை விட அதிக தொற்றாளர்கள் இனங்காணப்படலாம் : எச்சரிக்கிறது தொற்று நோயியல் பிரிவு\nபிழையான எண்ணங்களை மக்கள் மயப்படுத்த எதிக்கட்சி முயற்சி - மதுர விதானகே\nகிளிநொச்சியில் புதிய கொரோனா சிகிச்சை நிலையம் - நள்ளிரவு முதல் சேவைகள் ஆரம்பம்\nமஹரகம நகரசபைக் கூட்டத்தில் மோதல் - விசாரணைகள் ஆரம்பம்\nதனியார் வங்கி உதவி முகாமையாளருக்கு கொரோனா தொற்று ; வங்கிக்கு பூட்டு\nஜம்மு-காஷ்மீரில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை\nகொரோனாவால் இலங்கையில் கர்ப்பிணித் தாய் பலி\n இனங்காணப்படும் தொற்றாளர்களை விட இருமடங்கு தொற்றாளர்கள் சமூகத்தில் \nதம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தை மீண்டும் திறக்க தீர்மானம்\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: சிறுபான்மை மக்கள்\nகோத்தாவை வடக்கு, கிழக்கு மக்கள் ஏற்கவில்லை என்ற செய்தி தேர்தலின் பின்னரும் வரும்: அரி­ய­நேத்­திரன்\nசஜித் பிரே­ம­தா­சவின் தேர்தல் அறிக்­கையில் சிறு­பான்மை மக்கள் தொடர்­பாக சில விட­யங்கள் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது....\nஜனாதிபதி வேட்பாளர்களில் சிறுபான்மை மக்களுக்கு சேவை செய்ய கூடிய ஒருவர் சஜித் ; வே.இராதாகிருஸ்ணன்\nஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர்களில் சிறுபான்மை மக்களுக்கு சேவை செய்ய கூடிய ஒருவர் சஜித் பிரேமதாசவே ம...\nசிறுபான்மை மக்களின் பிரச்சினைகளை துணிகரனமாக தீர்க்க கூடிய அதிகாரம் படைத்த வேட்பாளருக்கே ஆதரவு - ஆறுமுகன் தொண்டமான்\nசிறுபான்மை மக்களின் பிரச்சினைகளை துணிகரனமாக தீர்க்க கூடிய அதிகாரம் படைத்த வேட்பாளருக்கே ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு வழங்கப்...\n“சிறுபான்மை மக்களுக்கு சரியான தீர்வொன்றை வழங்குவதாக உறுதியளிக்கும் கட்டிசியின் வேட்பாளரக்கு எ���து ஆதரவு”\nகாணாமல் போனோருக்கு என்ன நடந்தது என்ற உண்மையை அவர்களின் உறவுக்களுக்கு தெரிவிக்கும் வரை அவர்களுக்கு எத்தனை முறை நஸ்ட ஈடு வ...\nஇந்தியாவில் அந்நியப்படுத்தப்படுவதாக சிறுபான்மையினத்தவர்கள் ஏன் உணருகிறார்கள் \nஉண்மையில், அப்பாவி முஸ்லிம்களை கொலைசெய்வது நிச்சயமாக ஒரு சட்டம், ஒழுங்கு பிரச்சினையே.அத்தகைய வன்முறைச் சம்பவங்களைக் கையா...\nஇவ்வளவு காலமும் சிவனின் பாதமாக இருந்த சிவனடிபாதம் , திடீரென புத்தரின் பாதமாக மாறியதன் பின்னணி என்ன\nஇலங்கையில் சிறுபான்மை மக்களின் பாரம்பரியங்கள், கலாச்சார பெருமைகளை மூடி மறைப்பதற்கு முயற்சிகள் இடம்பெறுவதாக குற்றச்சாட்டு...\nஇலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து மேலும் 810 பேர் குணமடைவு..\nபணவீக்கம் ஏப்ரலில் 3.9 சதவீதமாக வீழ்ச்சி: இலங்கை மத்திய வங்கி\nவிலை அதிகரிப்பிற்கு அனுமதியில்லையேல் தட்டுப்பாடு ஏற்படலாம்: லாப் கேஸ் நிறுவனம்\nஸ்புட்னிக் கொரோனா தடுப்பூசி போடும் பணி ஆரம்பம்\nகளுத்துறை சிறைச்சாலைக்குள் போதைப்பொருட்கள் அடங்கிய பொதிகள் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2021/01/19_21.html", "date_download": "2021-05-07T00:18:48Z", "digest": "sha1:OLLFHWH7VKCRMAVDJZVE3L4G7QURBMAH", "length": 13280, "nlines": 92, "source_domain": "www.kurunews.com", "title": "நிந்தவூர் பிரதேச கொவிட்- 19 மற்றும் டெங்கு தடுப்புசெயலணிக் குழுக்கூட்டம். - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » நிந்தவூர் பிரதேச கொவிட்- 19 மற்றும் டெங்கு தடுப்புசெயலணிக் குழுக்கூட்டம்.\nநிந்தவூர் பிரதேச கொவிட்- 19 மற்றும் டெங்கு தடுப்புசெயலணிக் குழுக்கூட்டம்.\nகொவிட் 19 மற்றும் டெங்கு பாதுகாப்பு தொடர்பான பிரதேச செயற்குழு கூட்டம் நேற்று (20) நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எப்.எம்.ஏ காதர் தலைமையில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஜி.சுகுணன் வழிகாட்டலில் நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் நடைபெற்றது.\nஎமது பிராந்தியத்தில் உள்ள இரு முக்கிய பிரச்சினைகளாக கொவிட்-19 மற்றும் டெங்குவும் காணப்படுகிறது. கொவிட் மரணங்களை தடுக்கமுகமாக மக்களுக்கு சுகாதார வழிமுறைகளை மீளவும் அறிவுறுத்தல் வேண்டும் எனவும் கொவிட்-19 மற்றும் டெங்குவினை ஒழிக்க பிரதேச மட்டத்திலுள்ள அனைத்து நிறுவனங்களும் பங்களிப்பு செய்ய ��ேண்டும் என இந்நிகழ்வில் கருத்து தெரிவித்த கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஜி.சுகுணன் தெரிவித்தார்.\nஇக்கூட்டத்தில் இவ்வருடம் ஜனவரி, பெப்ரவரி ஆகிய மாதங்களை டெங்கு மற்றும் கொவிட்-19 கட்டுப்பாட்டு மாதங்களாக கருத்திற்கொண்டு அவற்றைக் கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளல்,\nஅனைத்து பாடசாலைகளிலிலும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுதலோடு, ஆசிரியர்கள் முகக்கவசம் (Face Shield) அணிதலை ஊக்கப்படுத்தலும். கோட்டக்கல்வி பணிப்பாளர் அவர்களின் முறையான கண்காணிப்புக்குட்படுத்தலும், முகக்கவசமின்றி வீதியில் நடமாடுபவர்கள் இனங்கண்டு பொலிசாரினால் சட்ட நடவடிக்கை எடுத்தல், சந்தை வியாபாரிகள் வியாபார நேரத்தில் சுகாதார நடைமுறைகளை பேணுவதோடு முகக்கவசம் (Face Shield) அணிந்திருத்தலும் அதனை பொதுச் சுகாதார பரிசோதகர்கள்.\nபொலிஸ் மற்றும் பிரதேச சபை உத்தியோகத்தர்கள் கண்காணித்தலும் ஊக்குவித்தலும், தொழுகை வேளைகளில் அனைத்து பள்ளிவாசல்களிலும் சுகாதார நடவடிக்கைகள் பொறுப்புதாரியாக இருத்தலும், பள்ளிவாசல்களில் கொவிட் 19, டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை ஊக்குவித்து தினமும் ஒரு வேளை ஒலிபெருக்கியில் அறிவிப்புச் செய்தல் என்றும் நிந்தவூர்-21 ஆம் பிரிவின் டெங்கு கட்டுப்பாடுக்காக இன்றிலிருந்து பெப்ரவரி மாதம் கடைசி வரை USSO சமூக வேவை அமைப்பிடம் பொறுப்புக் கொடுத்தல், ஒவ்வொரு கிராம உத்தியோகத்தர் பிரிவில் உள்ள கிராமிய குழுக்களை அந்தந்த பிரிவில் கொவிட் 19 ,டெங்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பயன்படுத்தல், பிரதேச சபையின் ஒத்துழைப்புடன் ஒவ்வொரு பொது சுகாதார பரிசோதகர் பிரிவிலும் வாராந்தம் டெங்கழிப்பு மேற்கொள்ளல் போன்ற தீர்மானங்கள் எடுக்கப்பட்டது.\nஇக்கூட்டத்தில் நிந்தவூர் பிரதேச செயலாளர் டீ .எம்.எம்.அன்சார், நிந்தவூர் ஜூம்மா பள்ளிவாசல் பிரிநிதிகள், சம்மாந்துறை பொலிஸ் நிலைய பிரதிநிதி, கோவில் பிரதிநிதிகள் மற்றும் நிந்தவூர் அனைத்து விளையாட்டுக் கழக சம்மேளத்தின் தலைவர் மற்றும் சமூக நல அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\n\"Kurunews.com ஐ பார்வையிடும் அன்பர்களே Facebook பக்கத்தை Like பண்ணிட்டு போங்கள்\".\nமட்டக்களப்பு மாவட்ட மக்களுக்க��� விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை; பல்வேறு செயற்பாடுகளுக்கு தடை- மாவட்ட அரசாங்க அதிபர்...\nமட்டக்ககளப்பில் தனியார் வகுப்பு நடாத்த தடை விதித்துள்ளதுடன் கொரோனா அதிகரிப்பால் மட்டு போதனா வைத்தியசாலையில் ஒட்சிசன் தேவை அதிகரித்துள்ளது....\nசகல பாடசாலைகளுக்கும் மே மாதம் 07ம் திகதி வரை விடுமுறை\nநாடளாவிய ரீதியில் அனைத்துப் பாடசாலைகளையும் தொடர்ந்தும் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் 7 ஆம் திகதி வரை பாடசாலை...\n10 , 11 தரங்களில் பாடவிதான மாற்றம் அத்துடன் க.பொ.த சா/த, உ/த பரீட்சை நடைபெறும் காலங்களும் மாற்றம்\nதரம் 10 ,11 க்கான பாடத்திட்டங்களை ஒரு வருடம் & 9 மாத காலத்திற்கு மறுசீரமைக்கவும், ஆகஸ்ட் மாதத்தில் க.பொ.த. (சா /த) பரீட்சையை நடாத்தவும்...\nபுனித மிக்கேல் கல்லூரி மாணவன் பௌதீக விஞ்ஞான பிரிவில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலிடம்.\nவெளியான 2020 ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பௌதீக விஞ்ஞான பிரிவில் குகராஜா சஜீவ் 3 A சித்திகளுடன் ...\nமட்டக்களப்பு மாவட்டத்தில் விஞ்ஞான பிரிவில் முதலிடத்தை பெற்ற மட்/பட்டிருப்பு தேசிய பாடசாலை மாணவன்\nவெளியான 2020 ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் விஞ்ஞான பிரிவில் மகிழூர் கண்ணகிபுரத்தை சேர்ந்த தம்பி...\nமட்டக்களப்பு- கல்லடியில் 09 பேருக்கு கொரோனா தொற்று உறுதி...\nமட்டக்களப்பு மாவட்ட மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுற்குற்பட்ட கல்லடி பிரதேசத்தில் இன்றைய தினம் 09 பேருக்கு கொரோன தொற்று உறுதிசெய்யப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilkilavan.com/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9C%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2-%E0%AE%AE/", "date_download": "2021-05-07T00:02:03Z", "digest": "sha1:VLNELVSWGFOW4LGKQOFCMUWXMPV7OOL2", "length": 3383, "nlines": 65, "source_domain": "tamilkilavan.com", "title": "பூஜை சாமான்கள் பொன் போல மின்னிட இந்த மாதிரி சுத்தம் செய்யுங்க . | Tamil Kilavan", "raw_content": "\nபூஜை சாமான்கள் பொன் போல மின்னிட இந்த மாதிரி சுத்தம் செய்யுங்க .\nபூஜை சாமான்கள் பொன் போல மின்னிட இந்த மாதிரி சுத்தம் செய்யுங்க\nTwitterFacebook மரணத்திற்கே அல்வாகொடுத்து உயிர்வாழும் 10 அசாதாரணமான விலங்குகள்\nமரணத்திற்கே அல்வாகொடுத்து உயிர்வாழும் 10 அசாதாரணமான விலங்குகள்\nTwitterFacebook வித்தியாசம் என்ற பெயரில் சும்மா புகுந்து விளையாடிய சைக்கிள்கள் உரிமையாளர்கள்\nவித்தியாசம் என்ற பெயரில் சும்மா புகுந்து விளையாடிய சைக்கிள்கள் உரிமையாளர்கள்.\nகடையில் முட்டை வாங்கறதுக்கு முன்னாடி இந்த வீடியோ பாருங்க\n2 முட்டை இருக்கா வீட்டில் உள்ள அனைவருக்கும் கிரிஸ்பியான ஈவினிங் ஸ்நாக்ஸ் ரெடி.\nமுட்டை சுக்கா லஞ்சுக்கு பக்காவான சைடிஷ் 10 நிமிடத்தில் இப்படி சுவையா செய்து கொடுத்து அசத்துங்க.\nபல கோடி சொத்துக்கு சொந்தக்காரி ஒரு வேலை சோற்றுக்காக வீட்டு வேலை செய்து பிழைக்கும் அவலம்\n20 ஆயிரம் வருடங்களுக்கு முன் மூழ்கிப்போன தமிழனின் வரலாறு.. தற்போது மெல்ல மெல்ல மிதந்து வருகிறது.. தற்போது மெல்ல மெல்ல மிதந்து வருகிறது.. ஒவ்வொரு தமிழனும் உலகத்துக்கு அறிய நண்பர்களுடன் பகிருங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/lifestyle/beauty/natural-conditioner-that-makes-hair-shine-like-silk/cid2703551.htm", "date_download": "2021-05-07T00:25:23Z", "digest": "sha1:2Y6AJX246QKDQR4F7QNQ6C436R5BCRY6", "length": 2947, "nlines": 47, "source_domain": "tamilminutes.com", "title": "தலைமுடியை பட்டுப் போல் மின்னச் செய்யும் கண்டிஷனர்!!", "raw_content": "\nதலைமுடியை பட்டுப் போல் மின்னச் செய்யும் இயற்கையான கண்டிஷனர்\nதலைமுடி பட்டுப்போல் இருந்தால் யாருக்குத்தான் பிடிக்காது, இப்போது நாம் எவ்வளவு வறட்சியான தலைமுடியினையும் பட்டுப்போல் மிளிரச் செய்யும் கண்டிஷனர் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nதேங்காய் எண்ணெய்- 4 ஸ்பூன்\n1. வெந்தயத்தினை நீரில் போட்டு நன்கு ஊறவைத்து மிக்சியில் போட்டு மைய அரைத்துக் கொள்ளவும்.\n2. அடுத்து அரைத்த வெந்தயக் கலவையுடன் மயோனைஸ் மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்தால் கண்டிஷனர் ரெடி.\nஇந்த கண்டிஷனரை தலைமுடியில் அப்ளை செய்து, 1 மணி நேரம் ஊறவிட்டு குளித்துவந்தால் தலைமுடி பட்டுப்போல் மின்னும்.\nTamil Minutes இணையதளம் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. புதிய செய்திகளையும், பயனுள்ள தகவல்களையும் வழங்குவதே இந்த இணையதளத்தின் நோக்கமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81/", "date_download": "2021-05-07T00:33:52Z", "digest": "sha1:H3BWBDG3UTVWHNPJN5E4Y2OC6FVIY7MI", "length": 11313, "nlines": 145, "source_domain": "www.patrikai.com", "title": "பினாங்கு ஸ்ரீ பாலதண்டாயுதபாணி தண்ணீர்மலைக்கோயில் தைப்பூசத் திரு விழா – Patrikai – Tamil Daily – latest online local breaking news & reviews – Tamilnadu, India & World – politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nபினாங்கு ஸ்ரீ பாலதண்டாயுதபாணி தண்ணீர்மலைக்கோயில் தைப்பூசத் திரு விழா\nபினாங்கு ஸ்ரீ பாலதண்டாயுதபாணி தண்ணீர்மலைக்கோயில் தைப்பூசத் திரு விழா .நேற்று தொடங்கி நடைபெறுகின்றது.\nஇன்று காலை 4 மணி காட்சிகள். மலைக்கோயிலில்…\nவெயிலில் காய்ந்து, குளிரில் நடுங்கி… ஈழ பட்டதாரிகளின் சோக போராட்டம் முகநூல்: அடுத்த சர்ச்சை பிரக்சிட் விவகாரம்….அமைச்சர்களை தொடர்ந்து 2 பிரிட்டன் எம்.பி.க்கள் ராஜினாமா\nTags: malaysia sri balathandapani thaneermalai temple, Thaipusam, தைப்பூசத் திரு விழா, பினாங்கு ஸ்ரீ பாலதண்டாயுதபாணி தண்ணீர்மலைக்கோயில் தைப்பூசத் திரு விழா ., ஸ்ரீ பாலதண்டாயுதபாணி தண்ணீர்மலைக்கோயில்\nPrevious அமெரிக்காவில் பனிப்புயல்: 6 கோடி பேர் பாதிக்கும் அபாயம்\nNext ஒன்றாம் வகுப்பில் இருந்து பாலியல் கல்வி\nதனி தகவல் தொடர்பு தளத்தை தொடங்கிய டிரம்ப்\n6 hours ago ரேவ்ஸ்ரீ\nகொரோனா அச்சம்: இந்தியர்கள், இந்திய விமானங்கள் இலங்கை வர தடை\nஅமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் புதிய வலைத் தளம் தொடக்கம்\nஅடுத்த 17 நாட்கள் ஒவ்வொரு வீட்டிலும் பின்பற்ற வேண்டிய கட்டாய விதி\nஅடுத்த 17 நாட்கள் ஒவ்வொரு வீட்டிலும் பின்பற்ற வேண்டிய கட்டாய விதி – நெட்டிசன் பதிவு கொரோனா கட்டுப்பாடு குறித்து வலைத் தளங்களில்…\nஇன்று ஆந்திரப் பிரதேசத்தில் 21,954 கர்நாடகாவில் 49,058 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 21,954 கர்நாடகாவில் 49,058 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 49,058…\nநாளைக்குள் தமிழகத்துக்குத் தேவையான ஆக்சிஜன் வழங்குவதை உறுதி செய்ய மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\nசென்னை நாளைக்குள் தமிழகத்துக்குத் தேவையான ஆக்சிஜன் வழங்குவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது….\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் –06/05/2021\nசென்னை தமிழகத்தில் இன்றைய (06/05/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 24,898 பேருக்குப் பாதிப்பு…\nசென்னையில் இன்று 6,678 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 6,678 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 33,316 ஆகி உள்ளது இன்று சென்னையில்…\nதமிழகத்தில் இன்று 24,898 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 24,898 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 12,97,500 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 1,31,468…\nஅதிமுக எம்.எல்.ஏ. விஜய பாஸ்கருக்கு கொரோனா\n6 hours ago ரேவ்ஸ்ரீ\nதனி தகவல் தொடர்பு தளத்தை தொடங்கிய டிரம்ப்\n6 hours ago ரேவ்ஸ்ரீ\nஐபிஎல் தொடரை நடத்தி முடிக்காவிட்டால் 2500 ரூபாய் கோடி இழப்பு ஏற்படும் – கங்குலி\n7 hours ago ரேவ்ஸ்ரீ\nகளை எடுப்போம்: – கமல் டுவிட்\n7 hours ago ரேவ்ஸ்ரீ\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை\n7 hours ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/bigg-boss-kasthuri-tweets-about-sanam-shetty-elimination/", "date_download": "2021-05-07T00:34:08Z", "digest": "sha1:HHPRJNVNQZI56RIQKOVNOJI3PG2MGGED", "length": 11440, "nlines": 93, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Bigg Boss Kasthuri Tweets About Sanam Shetty Elimination", "raw_content": "\nHome பிக் பாஸ் மிக்ஸ்ச்சர் பார்ட்டிகளையும் கம்பெனி ஆர்டிஸ்ட்ங்களையும் பாதுகாத்து மத்தவங்களுக்கு கல்தா குடுக்கறதுக்கு பேரு...\nமிக்ஸ்ச்சர் பார்ட்டிகளையும் கம்பெனி ஆர்டிஸ்ட்ங்களையும் பாதுகாத்து மத்தவங்களுக்கு கல்தா குடுக்கறதுக்கு பேரு என்ன தெரியுமா வெளுத்து வாங்கிய முன்னாள் போட்டியாளர்.\nவிஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் 63 நாட்களை நிறைவு செய்து இருக்கிறது. இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா ஆகியோர் வெளியேறி இருந்த நிலையில் நேற்று (டிசம்பர் 6) சனம் ஷெட்டி வெளியேற்றப்பட்டு இருந்தார். கடந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனில் ஆரி, ஆஜீத், அனிதா, ரம்யா பாண்டியன், ஷிவானி, நிஷா, சனம் ஷெட்டி ஆகியோர் இடம்பெற்றனர். இந்த வாரம் ஆஜீத், ஷிவானி, நிஷா, அனிதா ஆகிய யாரவது 4 பேரில் ஒருவர் தான் நிச்சயம் வெளியேறுவார்கள் என்று ரசிகர்கள் பலரும் எதிர் பார்த்தனர்.\nநியாயமான நேர்மையான முறையில் மக்கள் வாக்குகளை மட்டுமே நம்பி விளையாடப்படும் ஒரு Game என்று இன்னும் நம்புபவர்கள் மேடைக்கு வரவும்.\nமிக்ஸ்ச்சர் பார்ட்டிகளையும் கம்பெனி ஆர்டிஸ்ட்ங்களையும் பாதுகாத்து மத்தவங்களுக்கு கல்தா குடுக்கறதுக்கு பேரு என்ன தெரியுமா \nஇந்த நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் சனம் ஷெட்டி வெளியேற்றப்பட்டு இருந்தார்.மற்ற போட்டியாளர்களின் வெளியேற்றத்தை சனம் ஷெட்டியின் வெளியேற்றம் தான் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதற்கு முக்கிய காரணமே சனம் ஷெட்டியை விட நிஷா, ஷிவானி, ஆஜித் போன்றவர்கள் எந்த விதத்தில் சிறந்த போட்டியாளர்களாக இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. சனம் ஷெட்டி வெளியேறியதையடுத்து ட்விட்டரில் சனம் ஷெட்டி ஹேஷ் டேக் ட்ரெண்டிங்கில் கூட வந்தது.\nசனம் ஷெட்டி வெளியேறியதை தொடர்ந்து ரசிகர்கள் மட்டுமல்லாது பல்வேறு பிரபலங்கள் கூட தொடர்ந்து சனம் ஷெட்டிக்கு ஆதரவாக சமூக வலைதளத்தில் தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். அந்த வகையில் நடிகையும் பிக் பாஸ் சீசன் 3 போட்டியாளருமான கஸ்தூரியும், சனம் ஷெட்டி வெளியேற்றத்திற்கு பின்னர் ட்வீட் செய்திருக்கிறார். அதில்,நியாயமான நேர்மையான முறையில் மக்கள் வாக்குகளை மட்டுமே நம்பி விளையாடப்படும் ஒரு Game என்று இன்னும் நம்புபவர்கள் மேடைக்கு வரவும். மிக்ஸ்ச்சர் பார்ட்டிகளையும் கம்பெனி ஆர்டிஸ்ட்ங்களையும் பாதுகாத்து மத்தவங்களுக்கு கல்தா குடுக்கறதுக்கு பேரு என்ன தெரியுமா \nநடிகை கஸ்தூரி,கடந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு போட்டியாளராக கலந்து கொண்டார். ஆனால், சென்ற வேகத்திலேயே ஒரே ஒரு வாரத்தில் வெளியேறிவிட்டார். கடந்த சில சில தினங்களுக்கு முன்னர் கூட நடிகை கஸ்தூரி, பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதற்காக தனது சம்பள பாக்கி கொடுக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டி இருந்தார். ஆனால், அதற்கு பதில் அளித்த விஜய் டிவி நடிகை கஸ்தூரி பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கான சம்பளத்தை 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வழங்கப்பட்டுவிட்டது. அவருடைய GST பதிவு முறை பொருந்திப்போகாத காரணத்தால் அதை மட்டும் நிறுத்தி வைத்திருக்கிறோம். கஸ்தூரி அதற்கான ஆவணங்களை கொடுப்பதற்காக காத்திருக்கிறோம். அவை ஒப்படைத்த பின்னர் அதற்கான தொகையையும் அவரிடம் கொடுத்துவிடுவோம் என்று கூறி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious article44 வயதில் நீச்சல் உடைய��ல் போஸ் கொடுத்துள்ள புதிய கீதை பட நடிகை – வைரலாகும் புகைப்படங்கள்.\nNext articleஅவருக்கு வாக்களிக்காதவர் உள்ளங்களையெல்லாம் – ஜேம்ஸ் வசந்தன் போட்ட நெடு நீள பதிவு.\nபிக் பாஸ் 5வில் கலந்துகொள்வது பற்றி தனது யூடுயூப் சேனலில் தெரிவித்த குக்கு வித் கோமாளி பிரபலம்\nஉடல் எடை கூடி பருமனான அபிராமி – தனது புண்ணகைப்படத்திற்கு கீழ் கேலிக்கு கொடுத்த பதிலடி.\nபிக்பாஸ் சீசன் 4 மிஸ் ஆகிடுச்சு, சீசன் 5-ல் அஸீம் போகிறாரா \nவனிதாவை போல பிக் பாஸில் இருந்து வெளியேறிய கையேடு விஜய் டிவி நிகழ்ச்சியில் சுரேஷ்.\nவெளியானது பிக் பாஸ் வீட்டின் புகைப்படம் – இது தான் பிக் பாஸ் சேர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/sports/ipl-matches-suspended-due-to-corona-spread-will-it-be/cid2836793.htm", "date_download": "2021-05-07T01:24:02Z", "digest": "sha1:CNOECB6Q3MDY76LOZ3VX7ZBPTFFT772I", "length": 4754, "nlines": 42, "source_domain": "tamilminutes.com", "title": "கொரோனா பரவல் காரணமாக ஐ.பி.எல் போட்டிகள் நிறுத்தம்", "raw_content": "\nகொரோனா பரவல் காரணமாக ஐ.பி.எல் போட்டிகள் நிறுத்தம்: மீண்டும் தொடங்கப்படுமா\nதமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. தினமும் இந்தியாவில் மூன்றரை லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது\nஇந்த நிலையில் ஒரு பக்கம் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மக்கள் மடிந்து கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் வருமானத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு ஐபிஎல் போட்டிகளை நடத்துவதா என கண்டனங்கள் குவிந்தது. ஒரு சில வீரர்களும் ஐபிஎல் போட்டியில் இருந்து விலகினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது\nஅதுமட்டுமின்றி கொல்கத்தா வீரர்கள், சென்னை வீரர்கள் உள்பட ஒரு சில வீரர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து ஐபிஎல் போட்டிகளை நிறுத்த வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலித்தது. இதுகுறித்து நீதி மன்றங்களிலும் வழக்கு தொடரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது\nஇந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக போட்டிகள் நிறுத்தப்படுவதாகவும் வீரர்களின் உடல் நிலை தங்களுக்கு முக்கியம் என்றும் அதில் சமரசம் செய்து கொள்ள முடியாது என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது\nஇதனை அடுத்து ஐபிஎல் போட்டிகள் இன்று முதல் நிறுத்தப்படுகிறது. மீண்டும் இந்த போட்டிகள் தொடங்கப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\nTamil Minutes இணையதளம் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. புதிய செய்திகளையும், பயனுள்ள தகவல்களையும் வழங்குவதே இந்த இணையதளத்தின் நோக்கமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gktamil.in/2017/09/tnpsc-current-affairs-quiz-154.html", "date_download": "2021-05-07T02:03:36Z", "digest": "sha1:YYGBWFKPXSNKPWMLRVKQUFQ2266TY4US", "length": 19993, "nlines": 69, "source_domain": "www.gktamil.in", "title": "GK Tamil.in: TNPSC Current Affairs Quiz 154 - September 2017 - World and National Affairs */ /* Content ----------------------------------------------- */ body { font: normal normal 14px 'Raleway', sans-serif; color: #222222; background: #f7f7f7 none repeat scroll top left; padding: 0 40px 0 40px; } html body .region-inner { min-width: 0; max-width: 100%; width: auto; } h2 { font-size: 22px; } a:link { text-decoration:none; color: #00ae86; } a:visited { text-decoration:none; color: #00ae86; } a:hover { text-decoration:none; color: #41d5b3; transition:0.3s; } .body-fauxcolumn-outer .fauxcolumn-inner { _background-image: none; } .body-fauxcolumn-outer .cap-top { position: absolute; z-index: 1; height: 400px; width: 100%; } .body-fauxcolumn-outer .cap-top .cap-left { width: 100%; _background-image: none; } .content-outer { -moz-box-shadow: 0 0 40px rgba(0, 0, 0, .15); -webkit-box-shadow: 0 0 5px rgba(0, 0, 0, .15); -goog-ms-box-shadow: 0 0 10px #333333; box-shadow: 0 0 40px rgba(0, 0, 0, .15); margin-bottom: 1px; } .content-inner { padding: 10px 10px; } .content-inner { background-color: #ffffff; } /* Header ----------------------------------------------- */ .header-outer { _background-image: none; } .Header h1 { font: normal normal 50px 'Raleway', sans-serif; color: #222222; text-shadow: -1px -1px 1px rgba(0, 0, 0, .2); text-align:center; } .Header h1 a { color: #222222; } .Header .description { font-size: 140%; color: #777777; text-align:center; } .header-inner .Header .titlewrapper { padding: 22px 30px; } .header-inner .Header .descriptionwrapper { padding: 0 30px; } /* Tabs ----------------------------------------------- */ .tabs-inner .section:first-child { border-top: 1px solid #eeeeee; } .tabs-inner .section:first-child ul { margin-top: -1px; border-top: 1px solid #eeeeee; border-left: 0 solid #eeeeee; border-right: 0 solid #eeeeee; } .tabs-inner .widget ul { _background-image: none; border-bottom: 1px solid #eeeeee; margin-top: 0; margin-left: -30px; margin-right: -30px; } .tabs-inner .widget li a { display: inline-block; padding: .6em 1em; font: normal normal 14px 'Raleway', sans-serif; color: #999999; border-left: 1px solid #ffffff; border-right: 1px solid #eeeeee; } .tabs-inner .widget li:first-child a { border-left: none; } .tabs-inner .widget li.selected a, .tabs-inner .widget li a:hover { color: #000000; background-color: #eeeeee; text-decoration: none; } /* Columns ----------------------------------------------- */ .main-outer { border-top: 0 solid #eeeeee; } .fauxcolumn-left-outer .fauxcolumn-inner { border-right: 1px solid #eeeeee; } .fauxcolumn-right-outer .fauxcolumn-inner { /*border-left: 1px solid #eeeeee;*/ } /* Headings ----------------------------------------------- */ div.widget > h2, div.widget h2.title { margin: 0 0 1em 0; font: normal bold 11px 'Raleway', sans-serif; color: #222222; } /* Widgets ----------------------------------------------- */ .widget .zippy { color: #262626; /* text-shadow: 2px 2px 1px rgba(0, 0, 0, .1); */ } .widget .popular-posts ul { list-style: none; } /* Posts ----------------------------------------------- */ h2.date-header { font: normal bold 11px 'Raleway', sans-serif; } .date-header span { background-color: transparent; color: #222222; padding: inherit; letter-spacing: inherit; margin: inherit; } .main-inner { padding-top: 30px; padding-bottom: 30px; } .main-inner .column-center-inner { padding: 0; } .main-inner .column-center-inner .section { margin: 0 15px; } .post { margin: 0 0 25px 0; } h3.post-title a { font: normal bold 15px 'Raleway', sans-serif; margin: .75em 0 0; } h3.post-title, .comments h4 { font: normal bold 20px 'Raleway', sans-serif; } .post-body { font-size: 110%; line-height: 1.4; position: relative; } .post-body img, .post-body .tr-caption-container, .Profile img, .Image img, .BlogList .item-thumbnail img { padding: 2px; background: #ffffff; border: 1px solid #eeeeee; } .post-body img, .post-body .tr-caption-container { padding: 5px; } .post-body .tr-caption-container { color: #222222; } .post-body .tr-caption-container img { padding: 0; background: transparent; border: none; -moz-box-shadow: 0 0 0 rgba(0, 0, 0, .1); -webkit-box-shadow: 0 0 0 rgba(0, 0, 0, .1); box-shadow: 0 0 0 rgba(0, 0, 0, .1); } .post-header { margin: 0 0 1.5em; line-height: 1.6; font-size: 90%; } .post-footer { margin: 20px -2px 0; padding: 5px 10px; color: #222222; background-color: #f7f7f7; border-bottom: 1px solid #eeeeee; line-height: 1.6; font-size: 90%; } #comments .comment-author { padding-top: 1.5em; border-top: 1px solid #eeeeee; background-position: 0 1.5em; } #comments .comment-author:first-child { padding-top: 0; border-top: none; } .avatar-image-container { margin: .2em 0 0; } #comments .avatar-image-container img { /*border: 1px solid #eeeeee;*/ } /* Comments ----------------------------------------------- */ .comments .comments-content .icon.blog-author { background-repeat: no-repeat; background-image: url(); } .comments .comments-content .loadmore a { border-top: 1px solid #999999; border-bottom: 1px solid #999999; } .comments .continue { border-top: 2px solid #999999; } /* Accents ---------------------------------------------- */ .section-columns td.columns-cell { /*border-left: 1px solid #eeeeee;*/ } .blog-pager { background: transparent none no-repeat scroll top center; } .blog-pager-older-link, .home-link, .blog-pager-newer-link { background-color: #ffffff; padding: 5px; } .footer-outer { border-top: 0 dashed #bbbbbb; } /* Mobile ----------------------------------------------- */ body.mobile { background-size: auto; } .mobile .body-fauxcolumn-outer { background: transparent none repeat scroll top left; } .mobile .body-fauxcolumn-outer .cap-top { background-size: 100% auto; } .mobile .content-outer { -webkit-box-shadow: 0 0 3px rgba(0, 0, 0, .15); box-shadow: 0 0 3px rgba(0, 0, 0, .15); } .mobile .tabs-inner .widget ul { margin-left: 0; margin-right: 0; } .mobile .post { margin: 0; } .mobile .main-inner .column-center-inner .section { margin: 0; } .mobile .date-header span { padding: 0.1em 10px; margin: 0 -10px; } .mobile h3.post-title { margin: 0; } .mobile .blog-pager { background: transparent none no-repeat scroll top center; } .mobile .footer-outer { border-top: none; } .mobile .main-inner, .mobile .footer-inner { background-color: #ffffff; } .mobile-index-contents { color: #222222; } .mobile-link-button { background-color: #00ae86; } .mobile-link-button a:link, .mobile-link-button a:visited { color: #ffffff; } .mobile .tabs-inner .section:first-child { border-top: none; } .mobile .tabs-inner .PageList .widget-content { background-color: #eeeeee; color: #000000; border-top: 1px solid #eeeeee; border-bottom: 1px solid #eeeeee; } .mobile .tabs-inner .PageList .widget-content .pagelist-arrow { border-left: 1px solid #eeeeee; } .post-list{ padding: 1px 1em 1em 1em; /* margin: -20px 0; */ margin-bottom: -20px; border: 1px solid #ddd; border-radius: 5px; } .post-list:hover { background:#f7f7f7; border-color:#00ae86; transition:.2s; } .post-label a{ margin-right:2px; white-space:nowrap; color: #222222; border-bottom: 1px dashed #00ae86; } .post-comment a{ color: #222222; } .post-label a:hover,.post-comment a:hover{ color: #00ae86; } #blog-pager{ margin: 3em 0; } .feed-links {display:none !important;} div.widget > h2, div.widget h2.title { font: normal bold 16px 'Raleway', sans-serif; border-bottom: 2px solid #ddd; padding: 5px 0; } .comments h4 { text-align: center; text-transform: uppercase; } .comments .comment .comment-actions a { background:#00ae86; border-radius: 3px; color: #f7f7f7; margin-right:5px; padding:5px; text-decoration: none !important; font-weight:bold; } .comments .comment-block { border: 1px solid #dddddd; border-radius:5px; padding: 10px; } .continue { border-top:none !important; } .continue a { background:#00ae86; border-radius:3px; color: #f7f7f7; display: inline-block !important; margin-top: 8px; text-decoration: none !important; } .comments .comments-content .datetime{ float:right; } #comments .avatar-image-container img { border-radius: 50px; } .comments .avatar-image-container { float: left; overflow: hidden; } .comments .comments-content .comment-replies{ margin-top:0; } .topnav { overflow: hidden; background-color: #000; } .topnav a { float: left; display: block; color: #ffffff; text-align: center; padding: 14px 16px; text-decoration: none; font-size: 17px; } .active { background-color: #00ae86; color: #ffffff; } .topnav .icon { display: none; } .dropdown { float: left; overflow: hidden; } .dropdown .dropbtn { font-size: 17px; border: none; outline: none; color: #ffffff; padding: 14px 16px; background-color: inherit; font-family: inherit; margin: 0; } .dropdown-content { display: none; position: absolute; background-color: #f9f9f9; min-width: 160px; box-shadow: 0px 8px 16px 0px rgba(0,0,0,0.2); z-index: 5; } .dropdown-content a { float: none; color: #000000; padding: 12px 16px; text-decoration: none; display: block; text-align: left; } .topnav a:hover, .dropdown:hover .dropbtn { background-color: #00ae86; color: #ffffff; } .dropdown-content a:hover { background-color: #00ae86; } .dropdown:hover .dropdown-content { display: block; } @media screen and (max-width: 600px) { .topnav a:not(:first-child), .dropdown .dropbtn { display: none; } .topnav a.icon { float: right; display: block; } } @media screen and (max-width: 600px) { .topnav.responsive {position: relative;} .topnav.responsive .icon { position: absolute; right: 0; top: 0; } .topnav.responsive a { float: none; display: block; text-align: left; } .topnav.responsive .dropdown {float: none;} .topnav.responsive .dropdown-content {position: relative;} .topnav.responsive .dropdown .dropbtn { display: block; width: 100%; text-align: left; } } div#crosscol.tabs.section {margin: 0 0 2em 0;} .post-page { padding: 0 1em; } .date-header{ color:#888;display:block;border-bottom: 1px solid #888;margin-top: 5px; } .section{margin:0} .column-right-inner .section .widget{ border: 1px solid #ddd; margin: 5px 0; padding: 10px; border-radius: 5px; } .footer-inner .section .widget{ margin: 5px 0; padding: 10px; } footer{ background: #f7f7f7; padding: 8px; margin: 25px -25px -25px -25px; border-top: 1px solid #dddddd; } /* STYLE 1 - Custom Blogger Labels Gadget Styles by Georgia Lou Studios */ .widget li, .BlogArchive #ArchiveList ul.flat li{ padding: 8px 0; } .list-label-widget-content ul { list-style-type:none; padding-left:0px!important; } .list-label-widget-content ul li:before { content: \"\\f054\"; float: left; color: #262626; font-weight: 700; font-family: 'Font Awesome 5 Free'; margin: 4px 5px 0 0; font-size:10px; } .list-label-widget-content li span{ color: #888888; } /*** Mozilla based browsers ***/ ::-moz-selection { background-color: #00ae86; color: #ffffff; } /*** Works on common browsers ***/ ::selection { background-color: #00ae86; color: #ffffff; } .breadcrumbs{ color: #888;margin:-15px 15px 15px 15px; } .status-msg-body{ width:95%; padding:10px; } /* MY CUSTOM CODE - Responsive Table ----------------------------------------------- */ .post table {border: 1px solid #dddddd;border-collapse: collapse;margin: 0;padding: 0;width: 100%;color:#222222;} .post table caption {margin: .25em 0 .75em;} .post table tr {border: 1px solid #dddddd;padding: .35em;} .post table th,.post table td {padding: .625em;border: 1px solid #dddddd;} .post table th {color:#357ae8;letter-spacing: .1em;text-transform: uppercase;background: #dcffed;white-space: nowrap;} .post table td img {text-align: center;} .post tr:hover { background-color: #dcffed; transition:.2s; } @media screen and (max-width: 600px) { .post table,table th,table td {border: 0;} .post table caption {} .post table thead {display: none;} .post table tr {border-bottom: 3px solid #dddddd;display: block;margin-bottom: .725em;} .post table th,.post table td {border:none;} .post table td {border-bottom: 1px solid #dddddd;display: block;} .post table td:before {content: attr(data-label);float: left;font-weight: bold;text-transform: uppercase;} .post table td:last-child {border-bottom: 0;}} body .navbar{height:0;} /* MY CUSTOM CODE - Button ----------------------------------------------- */ a.btn, .btn-toggle{ display:inline-block; padding:0.3em 1.2em; margin:0.3em; border-radius:5px; box-sizing: border-box; text-decoration:none; font-family:inherit; font-weight:700; color:#ffffff; background-color:#00ae86; text-align:center; box-shadow:0px 1px 0px #dddddd; transition: all 0.2s; } a.btn, .btn-toggle{ font-size:20px; } .btn-toggle{ font-size:inherit; } a.btn:hover, .btn-toggle:hover{ background-color:#41d5b3; } a.btn:active, .btn-toggle:active { position:relative; top:1px; } a.btn:before { content: '\\f019'; font-family: 'Font Awesome 5 Free'; font-weight: 900; display: inline-block; margin: 0 10px 0 0; } .btn-info { display: block; line-height: 1; font-size: 13px; font-style: italic; margin: 7px 0 0; } @media all and (max-width:30em){ a.btn,.btn-toggle{ display:block; margin:0.2em auto; } } .label-size { position:relative; font-size:13px; } .label-size a,.label-size span { padding: 5px; margin: 0 6px 6px 0; float: left; display: block; } .label-size a { color: #ffffff; background: #00ae86; border: 1px solid #00ae86; } .label-size a:hover { background:transparent; color:#00ae86!important; } .label-size span{ color: #222222; background: #f7f7f7; border: 1px solid #dddddd; } /* Start dropdown navigation */ #navigationbar li{ list-style:none; } .searchHolder{ background:#000000!important; float:right!important; } @media screen and (max-width:600px){ .searchHolder{float:left!important;} } #searchbar { display: none; margin: 0 auto; width: 100%; text-align: center; height: 50px; background: #000000; overflow: hidden; z-index: 4; } #searchicon { text-align: center; cursor: pointer; } #searchicon:hover { color: #888888; } #searchBox { font:inherit; -webkit-appearance: none; border: 0px; background: transparent; padding: 10px; outline:none; width: 90%; color:#888888; border-bottom:2px solid #888888; } #searchBox:focus { border-color:#00ae86; transition: .3s; color:#ffffff; } /* End dropdown navigation */ .BlogArchive #ArchiveList ul li{ color:#888888; } .widget.Text ul li, .widget.HTML ul li, .post ul li{ list-style:none; } .widget.Text ul li:before, .widget.HTML ul li:before, .post ul li:before{ content: '\\f0da'; font-family: 'Font Awesome 5 Free'; font-weight: 900; margin: 0 5px 0 -15px; } blockquote{ background: #f7f7f7; padding: 10px; border: 2px dashed #dddddd; margin: 0; } #comments{ padding:10px; } .post img:hover{ opacity: 0.8; transition: 0.2s; } -->", "raw_content": "\nசிங்கப்பூர் நாட்டின் முதல் பெண் அதிபராக சமீபத்தில் பதவியேற்றவர் யார்\n2017 ஆம் ஆண்டுக்கான அமெரிக்க அழகியாக தேர்வு செய்யபட்டுள்ளவர்\n2017 உலகின் ஹை டெக் நகரங்கள் பட்டியலில் 19 வது இடம் பெற்ற இந்திய நகரம் எது\nசமீபத்தில் \"தூய்மையே சேவை\" என்ற பிரசார இயக்கத்தை பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் எப்போது தொடங்கிவைக்கப்பட்டது\n\"தூய்மையே சேவை\" என்ற பிரசார இயக்கத்தில் தூய்மை தினங்களாகக் அறிவிக்கப்பட்டுள்ள நாட்கள் எவை\nசெப்டம்பர் 15 முதல் செப்டம்பர் 30\nசெப்டம்பர் 15 முதல் அக்டோபர் 15\nசெப்டம்பர் 15 முதல் அக்டோபர் 1\nசெப்டம்பர் 15 முதல் அக்டோபர் 2\nஇந்தியாவில் தூய்மை இந்தியா திட்டம் எப்போது பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் தொடங்கிவைக்கப்பட்டது\nஇந்தியாவின் முதல் புல்லெட் ரயில் திட்டத்தின் அடிக்கல் நாட்டு விழா 14.09.2017 அன்று எந்த நகரில் நடைபெற்றது\nஇந்தியாவில் முதல் புல்லட் ரெயில் திட்டம் எந்த நாட்டின் உதவியுடன் செயல்படுத்தப் படவுள்ளது\nஇந்தியாவில் முதல் புல்லட் ரெயில் திட்டம் எந்த இரு நகரங்களுக்கிடையே செயல்படுத்தப் படவுள்ளது\nசமீபத்தில் \"சக்மா, ஹஜோங்\"அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது, இந்த அகதிகள் எந்த நாட்டிலிருந்து தஞ்சமடைந்தவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithisaral.in/category/flash-news/", "date_download": "2021-05-07T00:28:34Z", "digest": "sha1:X5TWRM5FRP2WGU5L5KVK2L44LK5EZYDN", "length": 9018, "nlines": 150, "source_domain": "www.seithisaral.in", "title": "Flash News Archives - Seithi Saral", "raw_content": "\nகோடை காலத்தின் உச்சக்கட்டம் தான் அக்கினி நட்சத்திர என்றும் கத்திரி வெயில். இந்த வெயிலின் உக்கிரம் அதிகமாக இருக்கும் நாட்களை நம்முன்னோர்கள் அக்கினி நட்சத்திர காலம்(கத்திரி வெயில்)...\nஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் 21-ந் தேதி முதல் வைகாசி மாதம் 15-ந் தேதி வரை (4-5-2021 முதல் 29-5-2021 வரை) அ��்னி நட்சத்திர காலமாக கருதப்படுகிறது....\n இந்த பிலவ ஆண்டின் தொடக்தில் குருபகவான் அதிசாரம் பெற்று கும்ப ராசியில் இருக்கிறார். இது சிறப்பான இடம். இந்த காலத்தில் அவரால் நன்மை...\nஏப்ரல் - 2021 மாத ராசிபலன்கள் ஏப்ரல் - 2021 மாத ராசிபலன்கள் மேஷம்மேஷ ராசி நேயர்களே கடந்த மாதத்தை விட நற்பலன்கள் சற்று குறைவாக கிடைக்க...\nமார்ச் – 2021 மாத ராசிபலன்கள்\n இந்த மாதம் முற்பகுதியில் அதிக பலனை எதிர்பார்க்கலாம். சூரியன் 14-ந் தேதி வரையிலும்,சுக்கிரன்...\nபொங்கல் வைக்க உகந்த நேரம் Pongal\nதை பொங்கல் ஜனவரி மாதம் 14-ந் தேதி வியாழக்கிழமை வருகிறது தமிழர் திருநாளாம் இந்த புனித நாளை ஒவ்வொரு தமிழனும் கண்டிப்பாக கொண்டாட வேண்டும். இது நமக்கு...\nஉங்கள் ராசியின் ஆட்சி நாயகன் சனிபகவான் தான். அவரின் தயவு தாட்சண்யமற்ற குணம் கொஞ்சமாவது உங்களிடம் இல்லாமல் இருக்குமா ஆம் நீங்கள் வேண்டியவர்வேண்டாதவர் என்று பார்க்கலாமல் எல்லோரையும்...\nSani perchi palngal kaliyur narayanan 25-12-2020மேஷம்எதிலும் முதன்மையையும் மரியாதை¬யும் விரும்பும் மேஷராசி அன்பர்களே செவ்வாயை ஆட்சி நாயகனாக கொண்ட நீங்கள் சற்று முன்கோபம் கொண்டவர்கள். சூரியன்...\nVaikunta eakadasi வைகுண்ட ஏகாதசி விரதம்\nஒவ்வொரு மாதமும் அமாவாசை மற்றும் பவுர்ணமிக்கு பிறகு வரும் 11-வது திதி ஏகாதசி ஆகும். பொதுவாக ஒரு மாதத்தில் இரு முறை ஏகாதசி வரும். இந்த நாளில்...\nNext year rain அடுத்த ஆண்டு மழையை அறியும் காலம்\nகாலண்டர்களில் கர்ப்போட்ட காலம் என்று குறிக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு ஆண்டும் மார்க்ழி மாதம் இந்த கர்ப்போட்ட காலம் வரும். இந்த ஆண்டு கர்ப்போட்ட காலம் 29-12-2020 அன்று தொடங்குகிறது....\nமு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை விவரம்\nதூத்துக்குடிக்கு 2 மந்திரிகள்: திருநெல்வேலி, தென்காசி ஏமாற்றம்\nதிருப்பத்தூரில் இறந்த 5 பேர் கொரோனா நோயாளிகள் – மருத்துவ அதிகாரி விளக்கம்\nதுணை தலைவர் விலகல்; கமல் காட்டம்\nதமிழகத்தில் ஒரு நாள் கொரோனா பதிவு 24,898 ஆக உயர்வு\nUma on இராமருக்கு ஓர் அக்காள் உண்டு தெரியுமா\n.. தீராத ஒரு தகராறு….(சொல்லாராய்ச்சி/ சிவகாசி முத்துமணி)\nK.Kumaresan on தென் மாவட்ட மக்கள் வெளியே வர வேண்டாம் ; முதல்வர் எச்சரிக்கை\nPonnu on ஏழைகளுக்கு எட்டிவிடும் மருத்துவப் படிப்பு\nமு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை விவரம்\nதூத்துக்குடிக்கு 2 மந்திரிகள்: திருநெல்வேலி, தென்காசி ஏமாற்றம்\nதிருப்பத்தூரில் இறந்த 5 பேர் கொரோனா நோயாளிகள் – மருத்துவ அதிகாரி விளக்கம்\nதுணை தலைவர் விலகல்; கமல் காட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://indictales.com/ta/2020/01/22/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0/", "date_download": "2021-05-07T01:56:41Z", "digest": "sha1:IZT2X7ZBVPSJC2BFVVQSIAWYYNL63FDP", "length": 11569, "nlines": 73, "source_domain": "indictales.com", "title": "புத்த விகாரங்கள் காஷ்மீரத்தின் ஓவிய பாரம்பரியத்தை காப்பாற்றுகின்றன - India's Stories From Indian Perspectives", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, மே 7, 2021\nHome > மாநிலங்களிலிருந்து வரும் கதைகள் > காஷ்மீரம் > புத்த விகாரங்கள் காஷ்மீரத்தின் ஓவிய பாரம்பரியத்தை காப்பாற்றுகின்றன\nபுத்த விகாரங்கள் காஷ்மீரத்தின் ஓவிய பாரம்பரியத்தை காப்பாற்றுகின்றன\ntatvamasee ஜனவரி 22, 2020 ஜனவரி 22, 2020 காஷ்மீரம், பேச்சு துணுக்குகள்\t0\nசுமார் 11 ஆம் நூற்றாண்டு. இது அல்ச்சி விஹார வளாகம். 108 விஹார மையங்களுள் ஒன்றாக அல்ச்சி அறியப்படுகிறது. இது ஒரு புகழ்பெற்ற எண், ஆனால் அது உண்மையாக இருந்திருக்கலாம். 108 மடங்கள், விஹாரங்களின் தொடர், இமாலய பிராந்தியத்தின் ஆரம்ப விஹாரங்களாக இருந்தன. மேற்கு திபெத், லடாக், லஹௌல்-ஸ்பிட்டி மற்றும் கிந்நௌர் ஆகிய இடங்களைக்கொண்ட குஜே மன்னர் யேசே-இன் ஆட்சியில் இவை கட்டப்பட்டன. இந்த அற்புதமான விகாரங்கள் அனைத்தும் காஷ்மீர் கலைஞர்களால் வரையப்பட்டவை மற்றும் செதுக்கப்பட்டவை, காஷ்மீர் அக்காலத்தின் சிறந்த புத்த மையங்களுள் ஒன்றாகும். லடாக் அல்லது மேற்கு திபெத்தில் இருந்தாலும் இந்த மடங்களுக்குள் காணப்படும் கலையும் முக்கியமானது, ஏனென்றால் பண்டைய காலத்தின் காஷ்மீர் கலாச்சாரத்தின் எஞ்சியிருக்கும் காட்சி பிரதிநிதித்துவம் இதுவாகும். காஷ்மீர் பள்ளத்தாக்கினுள் ஓவியங்கள் அழிக்கப்பட்டதால், லடாக் முதல் மேற்கு திபெத் வரையிலான இந்த ஓவியங்களில் மட்டுமே, அந்தக் காலத்தில் காஷ்மீரில் இருந்திருக்கும் கலை, கட்டிடக்கலை, ஜவுளி, ஆய்வுப்பொருள் ஆகியவற்றைக் காண்கிறோம்.\nஇது ஒரு பச்சைத் தாரா. அஜந்தா ஓவியங்களில் தொடங்கி நீங்கள் காணும் அந்த நேர்த்தியான நிறத்திண்மை, வடிவத்தின் நேர்த்தியான செய்முறை போல் இருப்பதை நீங்கள் காணலாம். இந்தியக் கலையின் இடைக்கால பாரம்பரியத்தில் இருக்கும் மேலும் கண்ணை நீட்டுவதை போல் உள்ள சித���தரிப்பை நீங்கள் காணலாம். ஆசியாவை ஐரோப்பாவுடன் இணைக்கும் ‘சில்க் ரூட்’-டின் மீது இவ்வகையான ஏராளமான ஜவுளி இருந்தது என்பதை உங்களுக்கு நினைவூட்டுகின்ற விதமாக இருக்கும்.\nஇந்த வழி காஷ்மீர் மற்றும் லடாக்கிலிருந்து, நலா சோபாரா வழியாக தென்னிந்தியாவில் கேரளா வரை இருந்தத0BC1. பக்கத்தில் உள்ள வடிவங்களை நீங்கள் கவனித்தால்; தெய்வங்கள் மையத்தில் வடிக்கப்படும்போது, பக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த வடிவங்கள் ஒரு சிறந்த உயிரோட்டத்தையும் மகிழ்ச்சியையும் தருகின்றன. உண்மையில் இந்த மகிழ்ச்சியின் உணர்வு காஷ்மீர் கலையின் ஒரு குறிப்பிட்ட குணம். இந்திய பாரம்பரியத்தின் அழகியலின் மிகப் பெரிய தத்துவஞானிகளுள் ஒருவரான அபிநவகுப்தா, காஷ்மீர் பள்ளத்தாக்கில் வாழ்ந்த கலைஞர்களின் காலத்திற்கு சற்று முன்பு வாழ்ந்தவர்.\nமீண்டும் காஷ்மீர் ஓவியர்கள் உருவாக்கிய அல்ச்சி ஓவியங்களிலிருந்து ஒரு விவரம். இது பலராமருக்கான ஒரு கோயில், அதில் பச்சை தாராவுக்கு ஒரு கோபுரம் இருப்பதை நீங்கள் கவனிப்பீர்கள். இது ஒரு அம்சமாகும், இந்து மதம் மற்றும் பௌத்த மதங்களின் தெய்வங்களை ஒன்றாக இருக்கும் இந்த அம்சம் நீங்கள் இங்கே மட்டுமல்ல, சீனாவின் குகைகளிலும், ஜப்பானிலும் இன்னும் பல இடங்களிலும் நீங்கள் காணும் ஒரு அம்சமாகும். ஓவியத்தின் கீழ் பகுதியில் உள்ள இசைக்கலைஞர்களை மகிழ்ச்சியால் நிரம்பியுள்ளதை நீங்கள் காண முடியும்.\n10 ஆம் நூற்றாண்டு இந்திய ஓவியங்களில் உருவப்படங்கள்\nசாவர்க்கரின் ஆரம்பகால வாழ்க்கையும் இந்தியாவின் மறக்கப்பட்ட சுதந்திர போராட்டத்தின் நம்பிக்கையும்\nமராட்டியர்களின் கொரில்லா போர் நடவடிக்கை முகலாயர்களை பல இடங்களில் வீழ்த்தியது\nமத மாற்றம் என்ற வியாபாரம் | ஜோஷுவா ப்ராஜெக்ட்\nகடல் தொல்லியல் வழி துவாரகையை அறிதல்\nஆவண காப்பகங்கள் மாதத்தை தேர்வு செய்யவும் மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 ஜனவரி 2019 டிசம்பர் 2018 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஜூன் 2018 மார்ச் 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://reviews.dialforbooks.in/robinsen-kuruco.html", "date_download": "2021-05-07T00:01:12Z", "digest": "sha1:JAHTVWTQYLX4IPBRNBDDLNTHVQYM2C6T", "length": 6368, "nlines": 214, "source_domain": "reviews.dialforbooks.in", "title": "ராபின்சன் குருசோ – Dial for Books : Reviews", "raw_content": "\nராபின்சன் குருசோ, டேனியல் டெபோ, தமிழில் லதா வாசுதேவன், சந்தியா பதிப்பகம், விலை 125ரூ.\nகடற்பயண ஆசையால் கப்பல் ஏறி பயணித்து, விபத்தில் சிக்கி ஆள் இல்லாத தீவில் தனி ஆளாக ஒதுங்கி, சவால்களைச் சந்தித்து வாழ்ந்த இளைஞன் ராபின்சன் குருசோவின் கதை. பல ஆண்டுகளாக ஏராளமான மக்களின் பெரு விருப்பமாக இருக்கிறது. இந்தக் கதை எளிமையான தமிழில் மொழிபெயர்த்து இந்த நூலில் தரப்பட்டு இருக்கிறது. நீரோட்டம் போன்ற நடை அனைவரையும் கவரும்.\nஇந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818\nநாவல், மொழிபெயர்ப்பு\tசந்தியா பதிப்பகம், டேனியல் டெபோ, தமிழில் லதா வாசுதேவன், தினத்தந்தி, ராபின்சன் குருசோ\nபவுதிகம் என்கிற இயற்பியல் ரகசியங்கள் »\nஷீரடி பாபாவின் சீரடி பணிவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/aura", "date_download": "2021-05-07T02:02:18Z", "digest": "sha1:643A43MX5QCMZKEG4OYXZ3UBVBYWSBNQ", "length": 5282, "nlines": 118, "source_domain": "ta.wiktionary.org", "title": "aura - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஉளவியல். வலிப்பு முன் அறிகுறி\nமலர் போன்ற பொருள்களினின்று நுட்பமாக வெளிப்படும் சுரப்பு, (மின்.) ஒரு கூரிய முனியினின்று மின்சாரம் வெளிப்படும்போது உண்டாகும் காற்று மின்னோட்டம், (மரு.) காக்கை வலிப்புக்கும் நரம்புத் தளர்ச்சிக்கும் முன்னுணர்வான அறிகுறி\nஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +\nஆங்கிலம்-கொடை-2010-த. இ. க. கலைச்சொல்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 30 சனவரி 2019, 06:46 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/chennai-engineer-arrest-who-cheated-using-female-voice-024753.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-05-07T00:41:06Z", "digest": "sha1:R7K2UY5B3VZFP3VWKAX2EFZCUISLFFAB", "length": 23103, "nlines": 272, "source_domain": "tamil.gizbot.com", "title": "தர்ம சங்கடம்: என் பேரு பிரியா., போன்ல பேசனும்னா ரூ.1000, போட்டோக்கு தனி- சென்னையை மிரட்டிய சம்பவம்! | Chennai engineer arrest who cheated using female voice! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதோல்வி நிலையல்ல என்று நிரூபித்த எலான் மஸ்க்: ஸ்டார்ஷிப் எஸ்என் 15 விண்கல சோதனை வெற்றி\n10 hrs ago மலிவு விலையில் அறிமுகமாகுமா புதிய ரெட்மி நோட் 10 ப்ரோ 5 ஜி\n11 hrs ago தாராளமா வாங்கலாமே- இதோ கம்மி விலையில் சிறந்த அம்சங்களோடு எம்ஐ டிவி பி1 தொடர் ஸ்மார்ட் டிவி\n11 hrs ago மே 12: இந்தியாவில் அறிமுகமாகும் அசுஸ் சென்ஃபோன் 8 மினி.\n12 hrs ago இனிமேல் இப்படித்தான். கூகுள் நிறுவனத்தின் ஊழியர்களுக்கு சுந்தர் பிச்சை அனுப்பிய முக்கியத் தகவல்.\nMovies என்னா குலுக்கு.. மாராப்பை சரியவிட்டு.. 40 வயதில் திணறடிக்கும் நடிகை.. பெருமூச்சு விடும் நெட்டிசன்ஸ்\nNews மத்திய அரசு சரியாக ஆக்சிஜனை வழங்கினால்.. ஒருவரைகூட உயிரிழக்கவிட மாட்டோம்.. அரவிந்த் கெஜ்ரிவால் உறுதி\nLifestyle இன்றைய ராசிப்பலன் 07.05.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் பண பரிவர்த்தனைகளைத் தவிர்த்திடவும்…\nAutomobiles ஆம்புலன்ஸ்கள் அதிக கட்டணம் வசூலித்தால் காலி... இப்படி ஒரு ஆக்ஸன் எடுப்பாங்கன்னு எதிர்பார்த்திருக்க மாட்டீங்க\nFinance ரூ.8 லட்சம் கோடி.. மோடி அரசு இதை செய்துவிட்டால் வேற லெவல் தான்..\nSports ஐபிஎல் 2021 தொடரை நடத்த இங்கிலாந்து கவுண்டிகள் ஆர்வம்... செப்டம்பர்ல நடத்த ஆர்வமா இருக்காங்க\nEducation ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதர்ம சங்கடம்: என் பேரு பிரியா., போன்ல பேசனும்னா ரூ.1000, போட்டோக்கு தனி- சென்னையை மிரட்டிய சம்பவம்\nசென்னையை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஆன்லைன் இணையதள ஆப் மூலம் பெண்களுடன் டேட்டிங் செய்வதற்கு ஒருவர் பணம் வசூலித்து ஏமாற்றியதாக புகார் அளித்திருந்தார். அழகான் பெண்களுடன் பேச கூகுள்பேயில் பணம் செலுத்தும்படியும் அனுப்பியவுடன் அந்த பெண் போன் செய்து பேசுவார் என கூறி பணத்தை வசூலித்ததாக தெரிவித்தார்.\nஎந்த பெண்ணும் போன் செய்யாததால் புகார்\nபணம் செலுத்தியும் எந்த பெண்ணும் போன் செய்யாத காரணத்தால் தான் ஏமாற்றப்பட்டது அறிந்து அந்த நபர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். கூகுள் பே எண்ணை வைத்து போலீஸார் அவரை கைது செய்தனர். மேலும் அவர் சமூகவலைதளங்களில் இருக்கும் அழகான பெண்களின் புகைப்படங்களை பதிவிறக்கம் செய்து தவறாக பயன்படுத்தியது கண்டற���யப்பட்டது.\nவாக்குமூலத்தில் பல அதிர்ச்சி தகவல்\nஇந்த நிலையில் பெண் குரலில் பேசி மோசடியில் ஈடுபட்டு வந்ததாக இளைஞரை போலீஸார் கைது செய்தனர். இதையடுத்து அவரிடம் பெற்ற வாக்குமூலத்தில் பல அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. அதில் தனது பெயர் வளன் ராஜ்குமார் ரீகன் என குறிப்பிட்டுள்ள அவர், 27 வயது ஆகியும் தனக்கு திருமணமாகவில்லை எனவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.\nGoogle pay-ல பணத்த போடுங்க., அந்த பொன்னு கால் பண்ணி பக்குவமா பேசும்- திணுசு திணுசா மோசடி\nபுதிய வேலை தேடும்போது வந்த போன்\nஇன்ஜினியரிங் படித்த தான் தனியார் கம்பெனி ஒன்றில் பயற்சியாளராக வேலை செய்ததாகவும் அதன் பின்பு தன் உறவினருடைய நிறுவனத்தில் பணி புரிந்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார். அதன் பின்பு தனது வேலையை விட்டுவிட்டு புதிய வேலை தேடி வந்துள்ளார். அப்போதுதான் லொகோண்டோ இணையதளத்தில் வேலை குறித்து பதிவு செய்துள்ளார்.\nரூ. 500, 1000 என கமிஷன்\nஅப்போது தான் அவருக்கு அந்த வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. அதில் தங்களுக்கு வழங்கப்படும் வேலை டெலி காலர் வேலை என்றும் வாடிக்கையாளருக்கு தேவையான வகையில் பேசினால் ரூ. 500, 1000 என கமிஷன் தரப்படும் எனவும் தெரிவித்ததாக கூறியுள்ளார்.\nபிரியா என்ற பெயரில் தொடங்கிய அழைப்பு\nஇதில் சுவாரஸ்யம் என்னவென்றால், தன்னுடைய குரல் பெண் போன்றே இருப்பதால் லொக்கோன்டாவில் பிரியா என்ற பெயரில் தன் செல்போனை பதிவு செய்ததாகவும் கூறினார். அதேபோல் தன்னிடம் பேசும் ஆண்களிடம் ஆபாசமாக பேச வேண்டும் எனவும் அந்த நிறுவனம் கூறியதாக தெரிவித்துள்ளார்.\nரூ. 100 வாங்கிக்கிட்டு ஏதாவது ஒரு பெண்ணின் போட்டோவை அனுப்பிவேன்\nவேலை இல்லை என்ற காரணத்தால் தானும் அதற்கு சம்மதித்து பெண் குரலில் பேசி சம்பாதிக்க தொடங்கியதாக கூறியுள்ளார். விளம்பரத்தைப் பார்த்து அழைக்கும் ஆண்களில் சிலர் தன்னுடைய போட்டோவை அனுப்பும்படி கேட்பார்கள். அவர்களிடம் 100 ரூபாய் வாங்கிக்கொண்டு ஏதாவது ஒரு பெண்ணின் போட்டோவை அனுப்பி விடுவேன்.\nJio-வுக்கு போட்டியாக BSNL கொடுத்த 436 நாள் வேலிடிட்டி டிரீட்\nதேவைப்படும் வாட்ஸ ஆப்-ல சொன்ன பணம் போடுவாங்க\nதன்னிடம் பெண் எனக் கருதி பேசும் ஆண்களில் பலரிடம் நான் எனக்கு தேவையானபோது வாட்ஸ்அப்பில் பேசி பணத்தைப் பெற்றுக்கொள்வேன் என கூறியுள்ளார்.அதில் சில ஆண்கள் இலவசமாகப் பேசுமாறு தன்னைத் தொந்தரவு செய்தார்கள்.\nஅதைப் பற்றி தனது கம்பெனியில் கூறியதாகவும், அவர்களின் பேரில் போலீஸார் ஆன்லைன் இணையதளத்தில் புகார் அளித்து அதை ஸ்கிரீன் ஷாட் எடுத்து அவர்களிடம் அனுப்பும்படி கூறினார்கள் என தெரிவித்துள்ளார்.\nஸ்கிரீன் ஷாட்டை தொந்தரவு செய்யும் ஆண்களுக்கு அனுப்புவேன்\nஇதையடுத்து ஆன்லைன் புகார் அளித்து அந்த ஸ்கிரீன் ஷாட்டை தொந்தரவு செய்யும் ஆண்களின் வாட்ஸ் ஆப் எண்ணுக்கு அனுப்பியதாக தெரிவித்தார். அவர்கள் புகாரை வாபஸ் வாங்கும்படி கூறினார்கள் எனவும் வாபஸ் வாங்க வேண்டும் என்றால் பணம் செலுத்தும்படி அவர்களிடம் கேட்டு வாங்கியதாக கூறினார்.\nஇரண்டு ஆண்டுகளாக இதே வேலை\nகடந்த இரண்டு ஆண்டுகளாக இதே வேலையை செய்து வந்ததாகவும் ஆனால் தற்போது போலீஸார் தன்னை கைது செய்து விட்டார்கள் எனவும் அந்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.\nஇனி போன்லாம் பண்ணாதிங்க whatsapp-லயே கேஸ் சிலிண்டர் புக் பண்ணலாம்: இதோ நம்பர் மற்றும் முறை\nஇந்த இரண்டு வருடத்தில் எத்தனை பேர் இவரை பிரியா என நினைத்து காதல் வலையில் விழுந்தார்கள் என தெரியவில்லை எனவும் ஏராளமான இளைஞர்கள் இவருக்கு பணம் செலுத்தி ஏமாந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். பிரியா என்ற போனில் பேசி ஆண்களுக்கு இது தர்ம சங்கடமாக இருந்திருக்கும் எனவும் மிகப் பெரிய ஏமாற்றமாக இருந்திருக்கும் என கருத்து தெரிவிக்கப்படுகிறது.\nமலிவு விலையில் அறிமுகமாகுமா புதிய ரெட்மி நோட் 10 ப்ரோ 5 ஜி\nதடை அதை உடை புதுசரித்திரம் படை: சொந்தமாக புதிய வலைதளத்தை தொடங்கிய டிரம்ப்- அக்கவுண்ட் ஓபன் பண்ணலாமா\nதாராளமா வாங்கலாமே- இதோ கம்மி விலையில் சிறந்த அம்சங்களோடு எம்ஐ டிவி பி1 தொடர் ஸ்மார்ட் டிவி\nவிரைவில் வரும் ரெட்மி நோட் 10ப்ரோ 5ஜி: விலை குறைவுதான் அம்சம் சிறப்பு\nமே 12: இந்தியாவில் அறிமுகமாகும் அசுஸ் சென்ஃபோன் 8 மினி.\nதோல்வி நிலையல்ல என்று நிரூபித்த எலான் மஸ்க்: ஸ்டார்ஷிப் எஸ்என் 15 விண்கல சோதனை வெற்றி\n கூகுள் நிறுவனத்தின் ஊழியர்களுக்கு சுந்தர் பிச்சை அனுப்பிய முக்கியத் தகவல்.\nசதுர டிஸ்ப்ளே, ஆரோக்கிய அம்சம்: மே 13 வெளியாகும் ரெட்மி ஸ்மார்ட் வாட்ச்\nபொசுக்குன்னு வார்த்தைய விட்டிங்கிளே: இத இந்தியாவுக்கு கொடுக்குறதுல சுத்தமா விருப்பமில்ல- பில் கேட்ஸ்\nஅனுமதி ���ிடைத்தது: சோதனை தொடங்குங்க- தயார்நிலையில் ஜியோ, ஏர்டெல், விஐ\nஇந்தியாவில் மீண்டும் அதிகாரப்பூர்வமாகக் களமிறங்கும் PUBG கேம்.. ஆனால் பெயர் தான் வேற..\nசிவாஜியும் நான்தான்., எம்ஜிஆர்ரும் நான்தான்: \"பேட்டில் கிரவுண்ட் மொபைல்\" என்ற பெயரில் வரும் பப்ஜி விளையாட்டு\nசாம்சங் கேலக்ஸி S20 பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nசாம்சங் கேலக்ஸி நோட்20 அல்ட்ரா 5G\nசியோமி Mi 10 5G\nசாம்சங் கேலக்ஸி S20 பிளஸ்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஒப்போ ஏ54 5ஜி அறிமுகம்: 90 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, 5000 எம்ஏஎச் பேட்டரி அம்சத்தோடு\nவேற லெவல் தள்ளுபடி: உச்ச விலையில் இருந்த \"எல்ஜி வெல்வெட்\" இப்போ பட்ஜெட் விலையில்- 6 ஜிபி ரேம், 48 எம்பி கேமரா\nபுடிச்சு உள்ள போடுங்க சார்: சிறுமிகளின் ஆபாசப் படங்களை அப்லோட் செய்தவர்கள் கைது..இது ஆரம்பம்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinibitz.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F/", "date_download": "2021-05-07T00:37:56Z", "digest": "sha1:CLT4BJ7JJQRGYN6IR2QJDMYYF2BGW6KV", "length": 11876, "nlines": 68, "source_domain": "www.tamilcinibitz.com", "title": "தமிழ்நாடு போட்டி வாக்கெடுப்புகளுக்கு சசிகலா? முதலில் அதிமுக கொடியைப் பயன்படுத்தி பார்த்தேன், இப்போது தினகரனின் கிரிப்டிக் துப்பு", "raw_content": "முழுமையான செய்தி உலகம் உங்களுக்காக.\nதமிழ்நாடு போட்டி வாக்கெடுப்புகளுக்கு சசிகலா முதலில் அதிமுக கொடியைப் பயன்படுத்தி பார்த்தேன், இப்போது தினகரனின் கிரிப்டிக் துப்பு\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா உதவியாளர் சசிகலா திரும்புவதற்கான மணிநேரங்களை தமிழகம் கணக்கிடுகையில், டிடிவி தினகரனின் மருமகன் அவர் திரும்பிய பிறகு அவர் எவ்வளவு சுறுசுறுப்பாக இருப்பார் என்பது பற்றி ஒரு தெளிவான கருத்தை தெரிவித்தார்.\nகோயில் சுற்றுப்பயணத்தில் இருக்கும் தினகரன், தென்காசியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், சசிகலா நிச்சயமாக தேர்தலுக்கு சவால் விடுவார். சசிகலா அறியப்பட்டபடி “சின்னம்மா” பெங்களூரிலிருந்து திரும்பிய பின்னர் தேர்தலில் போட்டியிடுவாரா என்று கேட்டதற்கு, தினகரன் “சந்தேகத்திற்கு இடமின்றி அவ்வாறு செய்வார்” என்றார்.\nஅவர் போட்டியிட்டால் முதல்வர் வேட்பாளர் யார் என்று கேட்டதற்கு, அவர் தானே முடிவு செய்வார் என்று கூறினார். அதிலிருந்து தன்னைத் த��ர விலக்கிக் கொண்டிருக்கும் ஆளும் அதிமுகவுடன் கூட்டணியில் அவர் தேர்தலில் போட்டியிடுவாரா என்று கேட்டதற்கு, தினகரன் வெறுமனே “காத்திருந்து பாருங்கள்” என்றார்.\nசட்டத்தின் படி, சசிகலாவுக்கு இன்னும் ஆறு வருடங்களுக்கு தேர்தல்களை சவால் செய்ய முடியாது என்பது தெரிந்திருந்தாலும், அவரது கருத்து வரவிருக்கும் தேர்தல்களை சவால் செய்யக்கூடிய சட்ட இடைவெளி உள்ளதா அல்லது அவர் போட்டியிடுவாரா என்று அர்த்தமா என்ற ஊகத்தைத் தூண்டியது. ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு தேதியில் தேர்தல்கள்; அல்லது அவரது உறவினர்கள் அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட மற்ற வேட்பாளர்களை பதவி நீக்கம் செய்வதன் மூலம் அவர் அரசியல் ரீதியாக சுறுசுறுப்பாக இருப்பாரா என்பது. (ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட எவரும் தேர்தலை மதிப்பீடு செய்த பின்னர் ஆறு ஆண்டுகளுக்கு சவால் விட முடியாது).\nதினகரன் ஏ.எம்.எம்.கே கட்சியின் நிறுவனர் மற்றும் தற்போதைய சட்டசபையில் எம்.எல்.ஏ.வாக உள்ளார், ஜெயலலிதா ஆர்.கே.நகரின் முந்தைய தொகுதியில் அவர் இறந்த பிறகு தேர்தலில் வெற்றி பெற்றார்.\nசஸ்காட்செவனில் அதிமுக கொடியைப் பயன்படுத்துவது தொடர்பான சர்ச்சை குறித்து கேட்டதற்கு, அவரது மருமகள், ஏ.டி.எம்.கே மூத்த அமைச்சர்கள் டி.ஜி.பி.\nமேலும் படிக்க: முன்னாள் அதிமுக தலைவர் தலைவர் சசிகலா மருத்துவமனையில் இருந்து நீக்கப்பட்டார், கட்சி கொடியுடன் காரில் புறப்படுகிறார்\n“எந்தவொரு கட்சிக் கொடியையும் பயன்படுத்துவதை யாரும் எதிர்க்க முடியாது, உண்மையில் யாரும் கட்சிக் கொடிகளைப் பயன்படுத்தலாம், அதைத் தடைசெய்ய எந்த விதிகளும் இல்லை. முன்னதாக அவர்கள் ஜெயலலிதா புகைப்படங்களைப் பயன்படுத்துவதை எதிர்த்தனர், ஆனால் இதுவும் இல்லை. அதைத் தீர்மானிக்கவும் இல்லை “நாங்கள் அவரது புகைப்படங்களை காட்சிப்படுத்த முடியாது. அதேபோல், டிஜிபி மட்டுமல்ல, மூன்று படைகளின் தளபதிகள் வந்தாலும், அவர்கள் யாரும் கட்சி கொடியைப் பயன்படுத்துவதைத் தடுக்க முடியாது,” என்று அவர் கூறினார்.\nபாப் கலாச்சாரம் டிரெயில்ப்ளேஸர். சிந்தனையாளர். சிக்கல் செய்பவர். இசை குரு. சமூக ஊடக நிபுணர். மாணவர். ஜாம்பி நிபுணர்.\nREAD தடைசெய்யப்பட்ட காளை வேட்டை விழா தமிழ்நாட்டில் முழு வீச்சில் கொண்டாடப்படுகிறது, 2 பார்வையாளர்கள் அடித்து கொல்லப்பட்டனர்\nஷெஹ்லா ரஷீத் செய்தி: ஷெஹ்லா ரஷீத் செய்தி: தந்தையின் குற்றச்சாட்டுகளுக்கு ஷெஹ்லா ரஷீத் பின்வாங்கினார், தெரியும், மகளின் கேள்விகளில் அப்துல் ரஷீத் என்ன சொன்னார் – ஷெஹ்லா ரஷீத் தனது தந்தையின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்தார்\nசிறப்பம்சங்கள்: ஷெஹ்லா ரஷீத் மீது அவரது தந்தை அப்துல் ரஷீத் குற்றம் சாட்டப்பட்டார் தேச விரோத...\nஅஸ்ட்ராஜெனெகா-ஆக்ஸ்போர்டு தடுப்பூசி தடுப்பூசி சீரம் நிறுவனம் – பீதி அடைய வேண்டாம், தடுப்பூசி முற்றிலும் பாதுகாப்பானது\nவிவசாயிகள் இயக்கம் தொடர்கிறது, ஆனால் இந்த கோரிக்கைகளுக்கு அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது\nதருண் கோகோய்: அசாமின் தாழ்மையான மற்றும் உயரமான தலைவர் இனி இல்லை\nPrevious articleகணவர் அபிஷேக் பச்சனுக்கு ஐஸ்வர்யா ராய் பச்சனின் பிறந்தநாள் வாழ்த்துக்கள் அனைத்தும் “காதல்”\nNext articleMIUI China ROM உடன் எதிர்கால தொலைபேசிகளுக்கான GMS கட்டமைப்பை Xiaomi உறுதிப்படுத்தவில்லை\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஜியா கானின் சகோதரி வெளியீடுகள் சஜித் கான் நடிகைக்கு ஒத்திகைக்காக உள்ளாடைகளை அகற்றுமாறு கேட்டார்: தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/movies/actor-atharvaa-tests-positive-for-covid-19-361579", "date_download": "2021-05-07T02:22:33Z", "digest": "sha1:WRATMYOJHQVH7XAJTL3D6KEA4MJPZ3SD", "length": 11909, "nlines": 113, "source_domain": "zeenews.india.com", "title": "Actor Atharvaa tests positive for COVID-19 | நடிகர் அதர்வா முரளிக்கு கொரோனா தொற்று உறுதி! | Movies News in Tamil", "raw_content": "\nதமிழகத்தின் முதலமைச்சராக இன்று பதவி ஏற்கிறார் மு.க. ஸ்டாலின்: தளபதி தலைவராகிறார்\nதுரோகிகளை களை எடுப்போம், கோழைகளை பொருட்படுத்தவேண்டாம்: கமல்ஹாசன் காட்டம்\nமேற்கு வங்கத்தில் தொடரும் வன்முறை; அஸ்ஸாமிற்கு தப்பியோடும் பாஜக தொண்டர்கள்\nதமிழக அமைச்சரவை பட்டியல் வெளியானது\nமுன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று உறுதி\nநடிகர் அதர்வா முரளிக்கு கொரோனா தொற்று உறுதி\nநடிகர் அதர்வாவிற்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கொடுத்துள்ளார்.\nMaruti Suzuki கார்களில் பம்பர் சலுகை: மிகக் குறைந்த விலையில் கார்களை வாங்கலாம்\nAirtel, Jio, Vi-க்கு போட்டியாக, BSNL வழங்கும் மெகா ரீசார்ஜ் திட்டம்\nIPL 2021: இந்த வீரர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி, முழு விவரம் இங்கே\nRBI on Medical Infrastructure: மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்த ரூ.50000 கோடி\nஇந்தியாவில் கொரோனா (Coronavirus) பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. நாள்தோறும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுவரை இல்லாத அளவில் தேசிய அளவில் ஒரே நாளில் 2,00,000த்துக்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,50,00,000க்கும் அதிகமாகிவிட்டது.\nமறுபுறம் தமிழகத்தில் ஒரே நாளில் 7,987 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து, தொற்று (COVID-19 ) பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்திய அளவில் மகாராஷ்டிரா (Maharashtra), கர்நாடகா, ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nகடந்த மார்ச் மாத ஆரம்பத்தில் மிகக் குறைவாக இருந்த கொரோனா தொற்று (Coronavirus) எண்ணிக்கை தற்போது வேகமாக உயர்ந்து வருகிறது. இதனிடையே அரசியல் தலைவர்கள், தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் அடுத்தடுத்து கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில் தற்போது நடிகர் அதர்வாவிற்கு (Atharvaa) கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கொடுத்துள்ளார். அதில்,\nகொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டதையடுத்து கொரோனா பரிசோதனை செய்துகொண்டேன். சோதனையில் எனக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. தற்போது நான் என்னை வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி வருகிறேன். விரைவில் குணமாகி பணிகளை தொடர்வேன் என்று நம்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.\nஅரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்\nதுரோகிகளை களை எடுப்போம், கோழைகளை பொருட்படுத்தவேண்டாம்: கமல்ஹாசன் க���ட்டம்\nதமிழகத்தின் முதலமைச்சராக இன்று பதவி ஏற்கிறார் மு.க. ஸ்டாலின்: தளபதி தலைவராகிறார்\nஇன்றைய ராசிபலன், 7 மே 2021: நம்பிக்கை அதிகரிக்கும், நன்மைகள் பல நடக்கும்\nதமிழ் பஞ்சாங்கம் 7 மே, 2021: இன்றைய நல்ல நேரம், சுப ஹோரைகள் இதோ\nகாலபைரவரை வணங்குதலால் ஏற்படும் பலன்கள் என்ன தெரியுமா\nகமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் உடைகிறது, ராஜினாமாக்கள் தொடர்கின்றன\nShocking Surprise: ஏழு குழந்தைகளை கருதரித்த பெண் பெற்றெடுத்தது 9 குழந்தைகளை\nApple அறிமுகம் செய்கிறது Foldable iPhone: எப்போது லாஞ்ச், என்னென்ன அம்சங்கள்\nIPL 2021: விரைவில் லீக் போட்டிகள், BCCI முக்கிய முடிவு\nMobile Gold shop ஹரி நாடார் மோசடி வழக்கில் கைது, பெங்களூருவில் விசாரணை\nபுனித மக்காவின் Black Stone புகைப்படத்தை முதன்முதலாக வெளியிட்டது சவுதி அரேபியா\nகட்டளை மையம் திறக்க வேண்டும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவு\nNepal பிரதமர் ஓலியின் அரசு பெரும்பான்மை பலத்தை இழந்தது\nகட்சியில் கடுமையான மாற்றங்கள் இருக்கும்: கட்சி நிர்வாகிகளை எச்சரித்தார் கமல்ஹாசன்\nபொருளாதார தடுப்பூசி: பல வித கோவிட் நிவாரணங்களை அறிவித்தார் RBI கவர்னர் ஷக்திகாந்த தாஸ்\nஎன் தம்பி மு.க. ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள், அவரை நினைத்து பெருமைப்படுகிறேன்: மு.க. அழகிரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://abedheen.wordpress.com/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE/", "date_download": "2021-05-07T02:08:27Z", "digest": "sha1:DO2EKR72VU3BY6LUFDMPD2FOWE75MIEP", "length": 98250, "nlines": 650, "source_domain": "abedheen.wordpress.com", "title": "சுபமங்களா | ஆபிதீன் பக்கங்கள்", "raw_content": "\nயு.ஆர். அனந்தமூர்த்தி நேர்காணல் – (சுபமங்களா – Sep’1993)\n22/08/2019 இல் 13:00\t(சுபமங்களா, பேட்டி, யு.ஆர். அனந்தமூர்த்தி)\nகுறிப்பு : யூ.ஆர். அனந்தமூர்த்தி எழுதிய ‘அவஸ்தை’ நாவலில் இணைக்கப்பட்டிருந்த இந்தப் பேட்டியின் முக்கியமான பகுதியை நண்பர் சாதிக் அனுப்பிவைத்திருந்தார் – சுபமங்களாவின் இணையதளத்திலிருந்து முழுப் பேட்டியையும் எடுத்து இங்கே பகிருங்கள் நாநா என்ற வேண்டுகோளுடன். அதை Google Drive’s OCR உதவியுடன் மல்லுக்கட்டி (இமேஜ் அப்படி) செய்திருக்கிறேன். பேட்டி கண்டவர் மறைந்த கோமல் சுவாமிநாதன் அவர்கள்தான் என்று நினைக்கிறேன். ’சுபமங்களா’வே ஒரு உருவமாகப் போயிருப்பதற்கும் வாய்ப்புண்டு\nதிருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் மிகப் ��ெரிய வளாகத்திற்குள் உள்ள விருந்தினர் விடுதியில் அமர்ந்திருக்கிறோம். அருகில் தமிழவனும், சாகித்ய அகாடமியின் பிராந்தியச் செயலாளர் ஏ. கிருஷ்ணமூர்த்தியும் இருக்கின்றனர். வசீகரமான முகத்துடனும் (உங்களுக்கு படத்தில் நடிக்க ஏதும் அழைப்பு வரவில்லையா) அதற்கு மேலும் அழகு செய்யும் தாடியுடனும் எதிரே அமர்ந்திருப்பவர் கன்னட நவீன இலக்கியத்தின் சிறந்த படைப்பாளி – டாக்டர். யூ. ஆர். அனந்தமூர்த்தி. பல்கலைக்கழகப் பேராசிரியர். கோட்டயம் மகாத்மாகாந்தி பல்கலைக் கழகத்தின் முதல் துணை வேந்தராக இருந்தவர். தொடர்ந்து கர்நாடகத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான போராட்டங்கள் வலுத்தபோது சிறுபான்மையினருக்காகப் பரிந்து பேசியவர் ‘கன்னடம் கட்டாயப் பாடம்’ என்ற கோகக் தீர்மானம் வந்தபோது அதை எதிர்த்து அவரவர் தாய் மொழியில்தான் கல்வி இருக்க வேண்டும் என்று போராடியவர். பெங்களூரில் திருவள்ளுவர் சிலை வைக்க எதிர்ப்பு வந்தபோது சிலை வைக்க ஆதரவு தெரிவித்தவர், சம்ஸ்காரா, அவஸ்தே, பாரதிபுரா என்ற முக்கியமான நாவல்களை எழுதியவர், அவர் நாவல் சம்ஸ்காரா படமாக்கப்பட்டு பல எதிர்ப்புகளை சந்தித்தது. அதுபோன்றே அவர் எழுதிய கடஸ்ரத்தாவும். அரசியலிலும் தீவிரமாக ஈடுபட்டவர், லோகியாவின் சோஷலிசக் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டவர். இந்தியா என்பது பல்வேறு கலாச்சாரங்களின் கூட்டு என்கிறார். ‘இந்தியாவின் மையம் டெல்லி இல்லை, ஒவ்வொரு மாநிலமும்தான்’ என்று அழுத்தமாகக் கூறுகிறவர். சமீபத்தில் சாகித்யஅகாடமி யின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். இதுவரை சாகித்ய அகாடமி பரிசைப் பெறாதவர்.\nகன்னட இலக்கியம், அரசியல், சமூகம் பற்றி தன் தெளிவான கருத்துக்களை அழகான ஆங்கிலத்தில் அவர் பதிவு செய்தார். இரண்டு மணி நேரம் நீண்ட இந்த நேர்காணலில் சலிப்புறாமல் அவர் அளித்த பதில்களைப் படியுங்கள்.\n* வழக்கமான முன்னுரையாக உங்களிடம் முதலில் கேட்கப்படும் கேள்வி உங்கள் இளமைக் காலம் பற்றிதான்.\n* மெலிகே என்ற சின்ன, கர்நாடக மலை நாட்டுப் பின் ஒரு கிராமத்தில் பிறந்தவன் நான். என் தாத்தா கேரளத்தில் வாழ்ந்தவர். ஒரு புரோகிதர். அங்கிருந்து இங்கு குடியேறியவர் என் தந்தை. சுயமாகவே கல்வி கற்றவர். அவருக்கு வான நூல், சோதிடம் எல்லாம் தெரியும். இந்தியா முழுவதும் சுற்றியவர். மிக ���ைதிகமான பிராமணக் குடும்பத்தில் அவர் பிறந்தவராக இருந்தாலும் திறந்த மனமுடையவராகவும் நவீன கருத்துக்களை ஏற்றுக்கொள்ளக் கூடியவராகவும் இருந்தார். என் சாதியை விட்டு நான் செய்து கொண்ட கலப்புத் திருமணத்தையும் (என் மனைவி கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்) பின்னால் மனசார ஏற்றுக்கொண்டவர். குழந்தைப் பருவத்திலிருந்து வாலிபப் பருவத்திற்கு மாற காலகட்டத்தில் அவருடைய கூட்டும் எனக்கு பெரும் அஸ்திவாரமாக இருந்தது. நான் படித்தது அருகில் உள்ள தீர்த்த ஹள்ளி, அது ஒரு சிறு நகரம். ஒரு நாள் அந்த நகரில் பொழுதைக் கழித்தால் பல நாற்றாண்டுகளைக் கடந்த உணர்வை அடையலாம். பழமையும் புதுமையும் நிறைந்த ஊர். ‘பகவத்கீதை என்கிற அவ்வளவு நீளமான விரிவுரை நெருக்கடியான போர்க்களத்தில் எப்படி நிகழ்ந்திருக்க முடியும். அது பொய்யாகத்தான் இருக்க வேண்டும்” என்று கேட்கும் ஆசிரியர் பள்ளியில் உண்டு. சீனிவாச ஜோயி என்ற நண்பர் – அந்தக் காலத்திலேயே டைனமோ வைத்து பி.பி.சி. கேட்டு ஆங்கில மொழியில் பாண்டித்யம் பெற்றவர் – அவர். பெர்னாட்ஷா நாடகங்களைப் பற்றியும், இங்கர் சாலைப் பற்றியும் சொல்வார். அதே நேரம், அங்கு பழமைக்கொள்கைகளும் இருந்தன. என் தந்தை அப்போது ஒரு மடத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார். ஒரு ஆரிய சமாஜத்துக்காரர் – மடத்திற்கு வந்து அங்குள்ள சம்ஸ்கிருத பண்டிதர்களிடம் சவால் விடுவார். எல்லா இரகங்களும் சூரியனைச் சுற்றி வருகின்றன என்று அவர் கூறுவதை சம்ஸ்கிருதப் பண்டிதர்கள் மறுப்பார்கள். உடனே எனக்கு கலிலியோவின் காலத்தில் வாழ்வதாக உணர்வு வரும். அந்தக் கால கிட்டத்தில்தான் நிலப் பிரபுத்துவம் தோற்றுப் போய் சோஷலிசக் கருத்துக்கள் விதையூன்றுவதையும் என்னால் உணர முடிந்தது.\n* உங்கள் அரசியல் வாழ்க்கை எப்படி -ஆரம்பமாகிறது\n* ஆரம்பத்தில் தாங்கள் எல்லாம் காந்தியத்தினால் ஈர்க்கப்பட்டோம். பின்னர் லோகியாவின் சோஷலிசக் கருத்துகள் எங்களைக் கவர்ந்தன.தீர்த்தஹள்ளியிலிருந்து ஷிமோகாவிற்கு வந்தபோது அங்கே ராயிஸ்டுகள் (எம். என். ராயைப் பின்பற்றுபவர்கள்), கம்யூனிஸ்டுகள் எல்லாருடனும் பழக்கம் ஏற்பட்டது. அவர்களின் விவாதங்களை காது கொடுத்துக் கேட்பேன், ஷிமோகாவில் இலக்கியத்திற்கும் அரசியலாக்கும் ஒரு இணைப்பு உண்டு. அரசியல் என்பது அன்றாட கட்சி அ��சியல் அல்ல. தத்துவம் சார்ந்த அரசியல். ‘இந்தியா இப்படி எல்லாம் இருக்க வேண்டும்’ என்று கனவு கான்கிற அரசியல். அவர்களுடன் சேர்ந்து நானும் ’கனவுகள்’ கண்டேன். பின்னர் தான் இங்கிலாந்து சென்று படித்தேன்.\n* சாதாரண குடும்பத்தில் பிறந்த உங்களுக்கு இங்கிலாந்து சென்று எப்படிப் படிக்க முடிந்தது\n* என் தாத்தாவின் கொள்கைப்படித்தான். “சமூகத்திற்காகத் தன்னை முழுதுமாக அர்ப்பணித்துக் கொண்டவனுக்கு , சமுதாயத்திலிருந்து உயிர் வாழ உதவி கேட்க உரிமை இருக்கிறது. பிராமணனுடைய தத்துவமே ‘பிச்சையிடுங்கள்’ (பவதி பிக்ஷாம் தேவி) என்பதுதான்” என்று கூறுவார். (சிரிப்புடன்) அந்தத் தத்துவத்தை நான் கடைபிடித்தேன். பலர் உதவியாலும், ஸ்காலர்ஷிப் உதவியாலும் படிக்க முடிந்தது.\n* இப்போது உங்களை நீங்கள் ‘லோஹியாயைட்’ என்று கூறிக் கொள்வீர்களா\n* இப்போது என்னால் அப்படிக் கூற முடியாது. பல விஷயங்களில் நான் கருத்து மாறுபட்டிருக்கிறேன். ஆனால் அடிப்படையில் நான் ஒரு ஜனநாயக சோஷலிசவாதி என்று கூறிக் கொள்வேன். ஆனால் லோகியா ஒரு மகத்தான சிந்தனையாளர். சுயமான, உண்மையான சிந்தனையாளர் என்று இந்தியாவில் காந்தியடிகளைத்தான் கூற முடியும். நேரு கூட அல்ல. காந்தியின் அடுத்தகட்ட விரிவாக்க சிந்தனையாளர் என்று நான் லோகியாவைக் கூறுவேன், ஆனால் அவர் தோல்வியடைந்தவர். அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை.\n* ஆனால் நாத்திகரான லோகியா எப்படி பல ஆண்டுகளுக்கு முன்பே ராமாயண மாநாடுகளை நடத்தினார் மதத்தைப் பற்றிய அவர் கருத்து என்ன\n* மதத்திற்கு நான்கு செயற்பாடுகள் இருக்கின்றன என அவர் நினைத்தார். ஒன்று, ஒரு தேசத்திற்கு அன்னியர்களால் படையெடுப்பு பயம் ஏற்படும்போது, எதிரிகளைத் தாக்க மக்களைத் திரட்ட மதம் அவசியமாகிறது. ரஷ்யாவை ஹிட்லர் தாக்கியவுடன் ஸ்டாலின் ரஷ்ய வைதிகத் திருச்சபையை பயன்படுத்தினார். இரண்டு, பணக்காரர்களின் சொத்துக்களைப் பாதுகாக்க மதம் பயன்படுத்தப்படுகிறது. மூன்று, சமூக ஒழுக்கக் கோட்பாடுகளையும், மதிப்புகளையும் பரவலாக்க மதம் பயன்படுகிறது. நான்கு, யோகமுறைகள், மற்றும் மனமுனைப்பு பயிற்சிகளால் வாழ்க்கைபற்றியும், மரணத்தைப்பற்றியும் உள்ளார்ந்து சிந்திக்க மதம் வழிவகுக்கிறது. மதத்தை முற்றிலுமாக நிராகரிக்காமல் விமரிசனபூர்வமாக ஏற்றுக்கொள்வதில் த��றில்லை என்பது அவர் கருத்து, சங்கரர் கூறியதை ராமானுஜர் ஏற்கவில்லை , ராமானுஜர் கூறியதை ஆனந்ததீர்த்தர் ஏற்கவில்லை. வேதத்தின் சில விளக்கங்களை வீரசைவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்து மதத்தை மறுத்துத் தோன்றியதே பெளத்தமும், ஜைனமும். ஆனால் இன்றைக்கு உள்ள கேடு என்னவென்றால், அந்த விமரிசனப் பார்வையும், விவாதங்களும் மறைந்துபோய், மதம் ‘வழிபாட்டுப் பொருள்’ ஆகிவிட்டது என்பதுதான்.\n* இப்போது ஓங்கியுள்ள இந்துத்துவக் குரல் பற்றி – உங்கள் எண்ணம் என்ன\n* மதத்தின் உயர்ந்த வடிவமே ஆன்மிகம். ஆன்மிகம் தன்வயப்பட்டது. ரமணரும், ராமகிருஷ்ணரும் மதவாதிகள் அல்ல, ஆன்மிக முனிவர்கள், இந்துத்துவம் என்பதற்கும் இந்த ஆன்மிகத்திற்கும் சம்பந்தமேயில்லை. ஆழமாக மதத்தில் ஈடுபட்டவன் மதவாதியாக இருக்க மாட்டான். அத்வானி போன்றவர்களின் எண்ணமெல்லாம் இந்தியாவை இஸ்ரேல் ஆக்குவதுதான். இஸ்ரேல் நமக்கு முன்னுதாரணம் அல்ல.\n• உங்களுடைய இலக்கிய வாழ்க்கை எப்போது தொடங்குகிறது\n* தொடக்கம் என்பதே இல்லை. எப்போதுமே அந்த வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தேன் என்றுதான் சொல்லவேண்டும். முதலில் கவிதைகள்தான் எழுத ஆரம்பித்தேன். பின்னர் சிறுகதைகள் எழுதினேன்.. நான் ஹானர்ஸ் படிக்கும்போதே ஒரு சிறுகதைத் தொகுதி வெளியிட்டேன். அந்த தொகுப்பே நவ்யா’ இயக்கத்தின் குரலாக இருந்தது என்று பாராட்டப்பட்டது. பின்னர் தோன்றிய நவீன இயக்கத்திலும் (Modernist) பங்கு கொண்டேன்.\n* ஆங்கில இலக்கிய ஆசிரியர் யாரேனும் உங்கள் எழுத்தில் செல்வாக்கு செலுத்தியதுண்டா\n* பல ஆசிரியர்கள். ஷெல்லி, கீட்ஸ், வொர்ட்ஸ்வொர்த் போன்ற ரொமான்டிக் கவிஞர்கள். டி ஹெச். லாரன்ஸ் போன்ற நாவலாசிரியர்கள். ஆனால் குறிப்பிட்ட காலத்திற்குள் இவர்கள் எனக்குள் செல்வாக்கு இழந்து போக, வேறு ஒரு ஆசிரியரைத் தேடிப் போவேன், இதுவே பக்குவமடைவதற்கான வழிமுறை என்றும் நினைக்கிறேன்.\n* உங்களுடைய பிரசித்தபெற்ற நாவலான ‘சம்ஸ்காரா’ எப்படி உருவானது\n* உண்மையைச் சொன்னால், அந்த நாவல் ஆரம்பிக்கப்பட்டது ஆங்கிலத்தில்தான். எங்கள் அக்ரஹாரத்தில் ‘தரங்கிணி’ என்ற கையெழுத்துப்பத்திரிகை நடத்தினோம். அதில் கன்னடம், சம்ஸ்கிருதம், ஆங்கிலம் என்று மூன்று மொழிகளில் விஷயங்கள் வரும். இங்க்மார் பெர்க்மாலுடைய Seventh Seal அப்போதுதான் பார்த்தேன். அதில் சொல்லப்பட்டிருந்த விஷயங்கள் என்னைக் கவர்ந்தன. அதன் அடிப்படையில் நம் நாட்டைப் பற்றி நினைக்கும்போது இது பல நூற்றாண்டுகளின், பண்பாடுகளின், தத்துவங்களின் கலவை என்பது புலனாயிற்று. எங்கள் கிராமத்தில் இருந்த இறுக்கமான வைதிகத்தனம் எனக்குப் பல கேள்விகள் எழுப்பின. கிராமத்தில் அப்போது ப்ளேக் நோய் பரவி இருந்தது. அதற்கு ஊசி போட வந்த மருத்துவர்கள் ஹரிஜனச் சேரிக்குள் போகமாட்டார்கள். அதனால் அங்கு பலர் இறக்கும்படியாக ஆயிற்று. இந்த நிகழ்ச்சிக்குக் கிராமத்துப் பெரியவர்கள், ‘மகாத்மாகாந்தி – அவர்களை ஆலயத்திற்குள் போகர் சொன்னதால்தான் அவர்களுக்கு இந்தக் கொடுமை ஏற்பட்டது’ என்று விளக்கம் கூறிக் கொண்டிருந்தனர். இரண்டாவதாக ஒரு சம்பவம். மிக அழகான ஒரு ஹரிஜனப் பெண் அந்தச் சேரியில் இருந்தாள். அவளுக்கும் அக்ரஹாரத்தில் இருந்த ஒருவருக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது. கிராமத்திலும் அதைப் பற்றிய வம்பு பேசுவார்கள். வம்பு பேச்சுக்களை நீங்கள் காது கொடுத்து கேட்கவில்லையென்றால் நீங்கள் சிறந்த நாவலாசிரியர் ஆக முடியாது. அவளுக்கு ஏற்பட்ட “தொடுதல்’ என்ற செயல் அவளுக்கு ஓர் உணர்வை தட்டி எழுப்பி இருக்க வேண்டும். ஹரிஜனச் சேரியில் பலர் பிளேக் நோயால் இறந்து கொண்டிருந்தபோது, அவள் ஊரை விட்டு வெளியே போய்விட்டாள். அவளுடைய பாலியல் – உணர்வு அவளுக்கு சாத்திரங்களால் மறுக்கப்பட்ட விடுதலையை கொடுத்ததாக நான் நினைத்தேன். இதை அடிப்படையாக வைத்து ‘தரங்கிணி’யில் எமுதிய கதைதான் பின்னர் ‘சம்ஸ்காரா’ நாவலாக விரிவடைந்தது.\n* அது பிரசுரிக்கப்பட்டபோது எப்படி வரவேற்பு இருந்தது\n* நாவல் வெளிவந்தபோது வைதிகம் பெரும் கோபம் கொண்டது. அது படமாக வந்தவுடன் அந்தக் கோபம் இன்னும் அதிகமாயிற்று. அதை தடைசெய்ய முயன்றார்கள். தமிழ்நாட்டு எம்.பி. ஒருவர்தான் அது தடைசெய்யப்படக் கூடாது என்று பாராளுமன்றத்தில் பேசினார். எனது கிராமத்தில் அது சில தனிப்பட்ட அக்ரஹாரத்து மனிதர்களைப் பற்றி எழுதப்பட்டது என்று எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஷிமோகாவில் அது மாத்வ பிராமணர்களுக்கு எதிரான நாவல் என்று எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பெங்களூரின் அது பிராமணர்களுக்கு எதிரான நாவல் என்று கருதப்பட்டது. வி.எஸ். நைபால் அதைப் படித்தவுடன் அது இந்துமதத்திற்கு எதிரான���ு என்று கருத்து தெரிவித்தார். எரிக்சன் போன்ற தத்துவ ஆசிரியர்கள் அதை படித்தபோது, அது நடுத்தர வயது நெருக்கடியைப் பற்றிக் கூறுகிறது என்று சொன்னார். அது மிகவும் யதார்த்தமான. அதேநேரம் மிகவும் பூடகமான நாவல் என்றே கூறலாம்.\n• பொதுவாக கர்நாடகத்தில் பிராமணரல்லாதார் இயக்கத்தின் தோற்றமும் பாதிப்பும் எப்படி இருந்திருக்கிறது\n* தென்னிந்தியாவில் பிராமணரல்லாதார் இயக்கம் தோன்றியபோதே அது கர்நாடகத்திலும் தோன்றியது. ஆனால் அது வேலை வாய்ப்புக்கான இயக்கமாகவே இருந்தது. இங்கு கர்நாடக பிராமணர்கள்தான் இட ஒதுக்கீட்டிற்காக முதலில் போராடினார்கள். எல்லா வேலை வாய்ப்புக்களையும் தமிழ்நாட்டு பிராமணர்கள் பறித்துக்கொண்டு போய் விடுகிறார்கள் என்று அதற்கு எதிராக கர்நாடக பிராமணர்கள் கிளர்ச்சி செய்தனர். சமஸ்தானத்தில் திவானாக இருந்து ஆட்சி செய்ததெல்லாம் சேஷாத்ரி அய்யர் போன்ற திறமைமிக்க தமிழ்நாட்டு பிராமணர்கள். அதனால் அரசாங்கத்தின் முக்கிய பதவிகளிலெல்லாம் தமிழ்நாட்டு பிராமணர்களே இருந்தனர். கர்நாடக பிராமணர்களுக்குப் பதவி அளிக்கப்பட்டபோது, பிராமணரல்லாதார் இயக்கம் தோன்றி தங்களுக்கு இடஒதுக்கீடு கேட்டனர். அவர்கள் ஹரிஜனங்களுக்குப் பதவி அளிப்பதை மறுத்தபோது, ஹரிஜனங்கள் இடஒதுக்கீடு கோரி கிளர்ச்சி செய்தனர். இது தொடர்ந்து வருகிற போராட்டம். இந்தப் போராட்டம் தொடர்ந்து வருவதனால்தான் எல்லோருக்குமே சமவேலை வாய்ப்புக் கிடைக்கிறது என்று நினைக்கிறேன்.\n• வேலை வாய்ப்புகள் என்பது தவிர, பிராமணிய மதிப்பீடுகளுக்கு எதிரான இயக்கமாக அது மாறவில்லையா\n* அப்படிக் கூறமுடியாது. பிராமண மதிப்பீடுகள் என்பது பிராமணர்களுக்கு மட்டுமே சொந்தமான மதிப்பீடுகள் இல்லை . முழு இந்து இனமும் அதில் பங்கு கொண்டிருக்கின்றன. கர்நாடகத்தில்) கல்வி பரவப்பரவ பிராமணரல்லாதாரும் தங்கள் வாழ்க்கை நிலையை பிராமணியமாக மாற்றிக் கொள்கின்றனர். இதற்கு ஒரு பெரிய எதிர்ப்பு அங்கு தோன்றவில்லை, வேலை வாய்ப்புகளுக்கான போராட்டங்கள் தொடர்ந்து நடத்து கொண்டிருந்தாலும் கூட, பிராமணிய மதிப்புகளுக்கு மாறான வாழ்க்கைமுறை அங்கு தோன்றவில்லை.\n* அப்படி ஒரு மாற்று வாழ்க்கை எங்கிருந்து தோன்றமுடியும் என்று நினைக்கிறீர்கள்.\n* அது தோன்றுவதென்றால், தலித்துகளிடமிரு��்துதான் தோன்ற வேண்டும். ஏனென்றால் பிராமணரல்லாதாரும் கூட இந்த -அமைப்பு முறையின் பங்குதாரர்களாக இருந்திருக்கின்றனர். ஆனால் தலித்துகளோ இந்த அமைப்புமுறையின் பங்காளிகளாக எப்போதும் இருந்ததில்லை , .\n* தலித் இலக்கியம் கர்நாடகத்தில் எப்படி இருக்கிறது\n* மிகச் சிறந்ததாக இருக்கிறது. புதிதாக இருக்கிறது. பரவலாக இருக்கிறது. அவருடைய எழுத்துக்கள் சமுதாயத்தைப் பற்றி வேறு ஒரு பார்வையைக் கொடுக்கும் என்று நம்புகிறேன்.\n* தலித் இலக்கியம் தலித்துக்களால்தான் படைக்கப்பட வேண்டும் என்ற கருத்து கர்நாடக தலித் இலக்கியத்தில் மேலோங்கி இருக்கிறதா\n* நான் மிகக் கடமையுணர்வுடன் தலித்துக்கள் பற்றி எழுதலாம். ஆனால் சில விஷயங்களை வெறும் கற்பனையால் மட்டுமே நெருங்க முடியாது, வாழ்ந்து பார்க்கும்போது ஏற்படும் அனுபவங்களை கற்பனையால் தொட முடியுமா ஆனால் கொள்கை அளவில் பார்க்கப் போனால் கற்பனை என்பது ஒரு பரகாய பிரவேசம்தான். (பிறர் உடலில் நுழைந்து கொள்ளுதல்) அந்த அடிப்படையில் தலித் எழுத்துக்களை தலித்துக்களே எழுத வேண்டும் என்று கூறுவது சரியாக இருக்காது. அப்படிப் பார்க்கும்போது மிகச் சிறந்த தலித் இலக்கியம் சிவராம் காரந்திடமிருந்துதான் வந்திருக்கிறது. சோமன துடி என்ற நாவல்,\n* சிவராம் காரந்த் எழுதும்போது அது தலித் இலக்கியம் என்று எழுதப்பட்டதா\n* அப்போது அந்த வார்த்தை இல்லை. இன்றைக்குசிறு -அது தலித் இலக்கியமாகத்தான் பார்க்கப்படுகிறது. நான் பள்ளிப் பையனாக இருந்தபோது சோமனதுடியைப் படித்தபோதுதான் தலித்திற்கு அப்படி ஒரு வாழ்க்கை இருக்கிறது என்று எனக்குத் தெரிய வந்தது. இன்றைய தலித் எழுத்துக்களுக்கெல்லாம் பின்னணி அந்த நாவல்தான் என்று சொல்ல வேண்டும்.\n* நீங்கள் உங்களை ஒரு மாடர்னிஸ்ட் (நவீனத்துவவாதி) என்று கூறுகிறீர்கள். இன்றைய இலக்கியத்தில் நவீனத்துவம் எது என்று குறிப்பிடுவீர்களா\n* விடுதலை இயக்க காலத்தில் சில படைப்பாளர்கள் -அன்றைக்கு நிலவிய இருண்மையை அபார சொல் ஆட்சியுடன் படைக்க முற்பட்டனர். அப்போது அது கன்னடத்தில் நவீனத்துவம் என்று பெயர் பெற்றது. விடுதலைக்குப் பின்னர் தேசிய அபிலாஷைகளில் இருந்த அளவுக்கதிகமான ஈடுபாடும் எதிர்பார்ப்புகளும் நடைமுறை வாழ்க்கையில் ஒரு பிளவை ஏற்படுத்தியபோது இந்த இருண்மை (disillusionument) வலு���்பட்டது. சொல் அலங்காரத்தின் ஆளுமையில் சந்தேகம் கொண்ட கோபாலகிருஷ்ண அடிகா, ஏ.கே. ராமானுஜன் போன்றவர்கள் அலங்காரத்தைக் கைவிட்டு உண்மையை எழுதத் துணிந்தனர். இதன் மூலம் புதிய நடைக்கு வழிகோலப்பட்டது. உள்ளடக்கத்திலும் மாறுதல் ஏற்பட்டது, இந்தியத் தலைமையிலும், இந்திய இலக்கியங்களிலும் சொல் அலங்காரங்களிலும் மக்கள் அளவுகடந்த மரியாதை கொண்டிருந்தபோது, ‘இவைகளெல்லாம் போற்றுதற்குரிய பெரிய விஷயமல்ல’ என்ற யதார்த்தத்தை நவீனத்வம் முன்வைத்தது. புத்தரும் வயிற்றுப் போக்கினால் காலமானார். பெரும் யோகிகளும் தங்கள் முதுகைச் சொறிந்து கொள்ளத்தான் வேண்டும்’ என்பன போன்ற சின்னச்சின்ன உண்மைகள் அந்த இயக்கத்தின் பெரும் சக்தியாக இருந்தது. ’புனிதத்தன்மையை விலக்குதல்’ என்பதுதான் அதன் அடிச்சரமாக இருந்தது. இதைத்தான் ‘நவ்யா இயக்கம் என்று கர்நாடகத்தில் அழைக்கிறோம்.\n* பண்டாயா என்பது என்ன\n* பண்டாயா என்பது முற்போக்கு எண்ணங்களை மீட்டுருவாக்கம் செய்யவந்த இயக்கம். கன்னடத்தில் பன்னிரெண்டாம் நூற்றாண்டில் தோன்றிய வசனக்கார இலக்கியம் கீழ்ச்சாதி என்று கருதப்பட்டவர்களாலேயே படைக்கப்பட்டது. வசனக்கார் இலக்கியம் என்பது உரைநடை இலக்கியமல்ல. ஒரு கவிதை வடிவம். வீரசைவ சித்தர்கள் படைத்தது. தமிழில் தேவாரம் போல், பின்னர் பிரிட்டிஷ் ஆட்சி வந்தவுடன் இலக்கியம் உயர்ஜாதியினர் கையில் போயிற்று. குவெம்பு (கே.வி. புட்டப்பா) என்ற மிகச் சிறந்த எழுத்தாளர் பிராமணரல்லாதார் வட்டத்திலிருந்து தோன்றியவுடன் பெரும் எழுச்சியே ஏற்பட்டது. எல்லா பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்த இளைஞர்களும் புதுப்புது அனுபவங்களைப் பற்றி புதிய நடையில், புதிய மொழியில் எழுதத் துவங்கினர். இந்த எழுச்சியின் முகிழ்ந்த காலமே பண்டாயா இயக்கத்தின் காலம்,\n* ஆனால் இப்படித் தோன்றிய படைப்புகளின் இலக்கிய மதிப்புகளும் தரமும் எப்படி இருந்தன\n* அதிர்ஷ்டவசமாக கர்நாடகத்தில் எந்த இலக்கிய இயக்கமும் இலக்கிய மதிப்புகளையும், தரத்தையும் இழந்துவிடவில்லை. பண்டாயா படைப்புகளும் இலக்கியத்தரத்தை இழந்து வெறும் பிரச்சாரமாகப் போய்விடவில்லை. தலித் எழுத்தாளர் தேவலூர் மகாதேவ தனது கோபங்களை பரிவு உணர்வுகளாக மாற்றிக் கொண்டார். அந்தப் பரிவு உணர்வுகளே அவர் எழுத்தில் சிறந்த இலக்கியமாகப் பரிணமித்தது. பல பரிசோதனை முயற்சிகளும் நடத்தப்பட்டன. இன்னொன்று. இவை எப்போதும் அரசியல் ஆக்கப்படவில்லை . அதாவது அரசியல் கட்சிகளின் பின்னாலோ, தலைவர்களின் பின்னாலோ செல்லவில்லை.\n* கர்நாடகப் பல்கலைக் கழகங்கள் கன்னட இலக்கியத்தின் வளர்ச்சிக்குச் செய்த பங்களிப்பினை கூறுங்கள். இதனைக் கூறும்போது தமிழ்நாட்டில் இல்லாத ஒன்று கர்நாடகத்திற்குக் கிடைத்திருப்பதாக நான் கருதுகிறேன்.\n* கன்னட இலக்கிய மறுமலர்ச்சி ஒரு ஆங்கிலப் பேராசிரியரிடமிருந்துதான் வந்தது என்று நான் கூறுவேன், பி.எம்.ஸ்ரீ என்றழைக்கப்பட்ட ஸ்ரீகண்டையா ஆங்கில ரொமான்டிக் கவிதைகளை கன்னடத்தில் ‘இங்கிலீஷ் கீதகளு’ என்ற பெயரில் வெளியிட்டார். அது மிக முக்கியமானதொரு மைல் கல்லாக இருந்தது. அவருடைய கவிதை நயம், லயம் எல்லாமே புதுப்புது எழுத்தாளர்களை உனக்குவித்தது. அதை ஒட்டி பல ஆங்கிலப் பேராசிரியர்கள் கன்னடத்தில் எழுத ஆரம்பித்தனர். -அதோடு பண்டைய கன்னட பண்டிட்களுக்கும், புதிய கன்னட ஆசிரியர்களுக்கும் ஒரு சண்டை . இருந்தது. இந்த இருவரையும் எதிர்த்து கல்லூரி ஆசிரியர்கள் புதிய கன்னட மொழிக்காகப் பரிந்து பேசினார்கள். இந்த மூன்று வித போக்குகளும் நிலவ புதிய போக்குகளுக்கு கர்நாடக பல்கலைக்கழகங்கள் முக்கிய தளமாக அமைந்தன. கோவிந்த பை என்ற கவிஞர் எதுகை மோனைகளை விட்டு கவிதைகள் எழுதியவுடன். ‘எதுகை மோனையையே விட்டுவிட்ட இவர்கள் வாழ்க்கையில் எதைத்தான் விடமாட்டார்கள்’ என்று கோபமாகப் பேசினார்கள்.\n• Free Verse என்பது அங்கு பிரதானப் போக்காக இருக்கிறதா\n* மூன்றுவித கவிதைகள் பிரதானப் போக்கை வகிக்கின்றன, பாடுவதற்கான கவிதைகள், படிப்பதற்கான கவிதைகள், Poety for Chanting – (உச்சாடனம் செய்ய) கம்பார் போன்றவர்களின் கவிதைகள் Chanting வகையைச் சார்ந்தன. இந்த Chanting முறையில் கவிதை ஒரு Magical Quality-ஐ அடைகிறது. பாரம்பரியக் கவிதைகள் முற்றிலும் இல்லாமல் இல்லை.\n* புரியாமல் பூடகமாக கவிதைகள் – எழுதப்படுகின்றன. ‘புரிதல் தன்மை இல்லாமல் இருக்கிறது. ஆனால் இவையே கவிதையின் சிறப்பு என்று கூறப்படுவது பற்றி என்ன நினைக்கிறீர்கள்\n* அது சரியான கருத்து இல்லை . ஆரம்பத்தில் கவிதையைப் படிக்கும் போது புரிவதற்கு சில தடைகள் இருக்கலாம். ஆனால் அந்த தடைகளைக் கடந்த பிறகு அந்த கவிதை உங்கள் அறிவிற்குப் புலப்பட வேண்டும், குழந்���ைப் பேற்றிற்கு ஒரு செவிலித்தாயின் துணை தேவை என்பது போல, புரிந்துகொள்ள சில பயிற்சிகளும், கருவிகளும் தேவைப்படுகின்றன. ஆனால் அதன் பிறகும் அது புரியவில்லை என்றால் அது பலமற்றது. பொதுவாக கவிஞரின் உள்ள வெளிப்பாடு உடனடியாக வாசகனின் உள்ளத்தோடு இணைந்து விட வேண்டும் என்றே நான் கருதுகிறேன். அப்படி இல்லையென்றால் புரியாமல் எழுதுவது என்பதே ஒரு ‘சமய வழிபாட்டுத் தன்மையாக (Cult) மாறிவிடும் அபாயம் இருக்கிறது.\n• Cult என்றவுடன் இதையும் கேட்கத் தோன்றுகிறது. தமிழ்நாட்டிலும், கர்நாடகத்திலும் ஏன், ஆந்திரத்திலும் கூட சில நடிகர்களை ஏற்றி வணங்கும் வழிபாடும், அவர்கள் வழியாகவே உலகைப் பார்ப்பதுமான ஒரு Cult இருக்கிறறே. இதற்கு சமூகதளத்தில் உள்ள ஆதாரம் என்னவென்று நினைக்கிறீர்கள்\n* மக்களிடம் கற்பனையைத் தேடும் பெரும் பசி இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. தன் அன்றாட வருமானத்தில் பாதியை வரிசையில் நின்று திரைப்படக் கற்பனைகளுக்குக் கொடுக்க சாதாரண இந்தியன் தயாராக இருக்கிறான். அதைப் போலவே மதத்தை நோக்கியும் பெரும்பசி இருக்கிறது. – சினிமாவைப் போலவே பயனில்லாத பாபாக்களின் பின்னால் போகவும் அவன் தயாராக இருக்கிறான். கற்பனைகளுக்கான இந்த தேடலையும், பசியையும் தான் பெரிதும் வரவேற்கிறேன். ஆனால் அது எந்தவிதத்தில் நிறைவேற்றப்படுகிறது என்பதில்தான் எனக்கு உடன்பாடில்லை. அதே போலத்தான் தலைவர்கள் மீது நம் மக்கள் வைத்துள்ள பேரன்பு. மக்களிடம் உள்ள இந்த அபரிமிதமான ஆற்றல் தேசத்தைக் கட்டும் பணிக்கு பலனளிக்கவில்லை என்பதுதான் வருந்தத்தக்க விஷயம். இவைகளை நாம் விமரிசனம் செய்யும்போதே மக்களுக்குள்ள இந்த அபரிமிதமான ‘பசி’யைக் குறைகூறவே கூடாது. உணவை விட இந்த ‘கற்பனையை பெரிதாக நேசிக்கும் பல கோடி இந்திய மக்களுக்கு நீங்களும் நானும் என்ன செய்து விட்டோம் என்று யோசித்துப் பார்க்க வேண்டும். இப்படித்தான் இந்த விஷயத்தை நான் பார்க்கிறேன்.\n* பொருளாதார கலாச்சார ரீதியாக பலவித நெருக்கடிகளுக்கு உள்ளாகியிருக்கும் இந்திய சமுதாயத்திலிருந்து மாபெரும் இலக்கியங்கள் தோன்றும் என்று நீங்கள் நம்புகிறீர்களா\n* சிறந்த கலைப்படைப்புகளும், இலக்கியங்களும் பொருளாதார ரீதியில் பின்னடைந்ததாகவும் பண்பாட்டில் செழுமையாகவும் உள்ள ஒரு சமுதாயத்திலிருந்து��ான் வரமுடியும். உதாரணம் பத்தொன்பதாம் நூற்றாண்டு ரஷ்யா. அப்படிப்பட்ட சமூகம் தான் டால்ஸ்டாயையும், தாஸ்தாயெவெஸ்கியையும் படைக்க முடியும். லத்தீன் அமெரிக்க தேசங்கள் இன்றைய உதாரணங்கள், நம்மைப் போலவே அவர்களும் பொருளாதார பின்னடைவும், பண்பாட்டுச் செழுமையும் உள்ளவர்கள். உலக அளவில் வைத்து எண்ணக்கூடிய தரமான மாபெரும் இலக்கியம் தம்மாலும் படைக்க முடியும். ஆனால் தாம் தவறவிடுகிறோம்.\n* டி வி போன்ற ஊடகங்களி லும், மற்றும் பல துறைகளிலும் இந்தி ஆதிக்கம் செலுத்தும்போது, ‘தேசிய ஒருமைப்பாடு’ என்பது பொருள் உள்ள சொல் என்று நினைக்கிறீர்களா\n* மையத்திலிருந்து ஆட்சி மாநிலங்களுக்குப் பிரித்துவிடப்படவில்லையென்றால் நாடு துண்டாடப்படும். மையம் (Centre) என்பது நம் அரசியல் சட்டத்திலேயே இல்லை. இந்தியாவின் மையம் எல்லா மாநிலங்களுமே.. டெல்லி அல்ல, நமது நாட்டின் சிறப்பே அதன் பன்முகத்தன்மையில்தான் உள்ளது. இந்தப் பன்முகத்தன்மையைக் கைவிட்டுவிட்டால், நாம் ஒன்றாக இருக்க முடியாது. மற்றவைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட தமிழ் என்ற மொழி இருப்பதும், மணிபுரி என்ற மொழி இருப்பதும் எவ்வளவு அற்புதமான விஷயங்கள். ’துளு மொழியைப் பொறுத்தவரை நாம் ஒருவித ஆதிக்கத்தைக் கொண்டுள்ளோம்’ என கன்னட மக்களிடம் நான் சொல்லுவேன். அதேபோல மராத்திய மொழியின் ஆதிபத்தியமும், கொங்கணி மொழியின் வளர்ச்சிக்கு உகந்ததல்ல. எல்லா மொழிகளும் எல்லாப் பண்பாடுகளும் இங்கு தங்கு தடையின்றி வளர வேண்டும், இந்து மதம் எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்ட ஒரு பண்பாடாக நான் நினைக்கிறேன். அத்வானி போன்றவர்கள் அதை குறுக்கி ஒரு குழுவாக ஆக்க நினைப்பதை நாம் எதிர்க்கிறோம். பி.ஜே.பி. போன்ற கட்சிகள் இந்து மதத்தை வெறும் அரசியலாக மட்டுமே குறுக்குவது எவ்வளவு தவறோ, அவ்வளவு தவறு இந்தியாவின் பன்முகத்தன்மையை மறுப்பதும், இந்தி மொழிமீதோ, அதன் இலக்கியங்கள்மீதோ நமக்கு வெறுப்பில்லை. ஆனால் ஒரு மொழி இன்னொரு மொழியை நகர்த்தி விட்டு அந்த இடத்தில் ஆதிக்கம் செய்ய நினைப்பது மிகத் தவறு\n• அப்படியிருக்க சாகித்ய அகாடமி போன்ற அரங்கங்களில் நடத்தப்படும் விவாதங்களில் கூட தமிழில் பேசினால் மறுக்கப்படுவதும் இந்தியில் பேச வற்புறுத்துவதும் தடை பெறுகிறதே\n* அம்மாதிரி கருத்தரங்கங்களில் ஆங்கிலத்தில் பேசலாம். இந்தி சரளமாகத் தெரியும் என்றால் இந்தியில் பேசலாம். இரண்டு மொழிகளும் தெரியாது என்றால் என் தாய் மொழியிலேயே பேச எனக்கு உரிமை வேண்டும். மற்றவர்களுக்கு அதை மொழிபெயர்க்க தகுந்த ஏற்பாடு செய்ய வேண்டும், நாம் உத்திரப் பிரதேசத்திற்குப் போனால் புழக்கத்துக்குத் தேவையான இந்தி கற்றுக்கொண்டு விடுகிறோம். கர்நாடகத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு வேலைக்கு வருபவர்கள் புழக்கத்திற்குத் தேவையான தமிழ் கற்றுக் கொண்டு விடுகிறார்கள். இது எந்த நிர்ப்பந்தமும் இல்லாமல் நடைமுறையில் நடக்கிறது. இந்த நடைமுறைதான் கைக்கொள்ளப்பட வேண்டும். இன்னொரு விஷயம்: பாரிஸ் போன்ற நகரங்களில் இலக்கிய அரங்கங்களில் ஜேம்ஸ் ஜாய்ஸைப் பற்றி அயர்லாந்துக்காரர்கள் பேசுவதை விட அதிகாரபூர்வமாகப் பேசக்கூடிய ஃபிரெஞ்சு பேராசிரியர்கள் இருப்பார்கள். இங்கு பாரதியைப் பற்றி அதிகாரதொனியுடன் பேசக்கூடிய தமிழ் மொழி அல்லாத பிறமொழி பேராசிரியர்கள் யாராவது இருக்கிறார்களா காரணம் நாம் இந்திய இலக்கியங்களைப் பற்றி கவலை கொள்வதில்லை. இரண்டாந்தர மூன்றாந்தர ஐரோப்பிய இலக்கிய ஆசிரியர்களைத் தூக்கிப் பிடித்துக்கொண்டு அதில் நிபுணர்களாக இருக்கிறோம். மற்ற இந்திய மொழியிலுள்ள முதல்தர இலக்கிய ஆசிரியர்களைக் கவனிக்கத் தவறிவிடுகிறோம்.\n* இப்படி பல்வேறு பண்பாடுகளைக் கொண்ட ஒரு நாட்டில் தேசிய இலக்கியம், அல்லது தேசிய நாடகம், அல்லது தேசிய சினிமா என்பதன் பொருள் என்ன\n* கன்னடக் கவிஞர் பேந்த்ரேயின் கவிதைகளைப் படிக்கும்போது அவர் ஐந்தாறு மைல் சுற்றளவுள்ள பிரதேசத்தைப் பற்றியும், மக்களைப் பற்றியும்தான் பாடியிருக்கிறார் என்று தெரிகிறது. வில்லியம் ஃபாக்னரின் நாவலை எடுத்துக் கொண்டால், அமெரிக்கத் தென்பகுதி மட்டுமே அவைகளில் சொல்லப்பட்டிருக்கும். ஆனால் பேந்த்ரேயும், ஃபாக்னரும் உலகத்தைப் பற்றித்தான் எழுதினார்கள். ஒரு தமிழ் கிராமத்தைப் பற்றி எழுதும்போதே இந்தியாவைப் பற்றியும், உலகத்தைப் பற்றியும் எழுதியதாக ஆகிவிட முடியும். ‘பதேர் பாஞ்சாலி’ என்ற நாவல் ஒரு சின்ன வங்காள கிராமத்தில் நடைபெறலாம். ஆனால் அது உலகில் எந்த மூலையிலும், வறுமை சூழ்நிலையில் வளர்ந்து கொண்டிருக்கும் சிறுவனைப் பற்றிய கதைதான். கலாச்சார ரீதியில் நமக்கு ஒரு தனித்துவம் இல்லையென்றால��, நாம் உலகளாவிய படைப்பைத் தரமுடியாது என்றுதான் நான் நினைக்கிறேன்.\n* சில நேரங்களில், குறிப்பாகத் தமிழ் மொழியில் மூன்றாந்தர நாலாந்தர எழுத்தாளர்களுக்கு சாகித்ய அகாடமி விருது கொடுக்கப்படுகிறது. இதற்குப் பின்னால் ஏதேனும் நிர்ப்பந்தம் இருக்கிறதா\n* எனக்குத் தெரியாது. நான் சமீபத்தில்தான் சாகித்ய அகாடமியின் தலைவராக ஆகியிருக்கிறேன்.\n* உங்கள் காலத்தில் இப்படி நிர்பந்தங்கள் ஏற்படுமேயானால் நீங்கள் அதை எப்படித் தவிர்க்கப் போகிறீர்கள்\n* நான் மட்டுமே இதைத் தவிர்க்க வேண்டுமென்பதல்ல. எல்லா உறுப்பினர்களுமே இதைத் தவிர்த்தாக வேண்டும். ஒன்று நிச்சயம் சொல்வேன். ‘இந்த நூலுக்குத்தான் பரிசு கொடுக்க வேண்டும்’ என்று என் மூலம் எந்த நிர்பந்தமும் இருக்காது. என்னை யாரும் நிர்பந்திக்கவும் முடியாது. கேரளத்தில் எந்த அரசியல்வாதியின் நிர்பந்தங்களுக்கும் ஆளாகாமல், ஒரு பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக நான்கு ஆண்டுகள் இருந்தேன். ஆனால் சட்டதிட்டங்களுக்குள்ளும் சில குறைகள் இருக்கின்றன. முதலாவதாக – ஒரு பரிசளிப்பு என்பது சலுகையாகக் கருதப்படக் கூடாது. இரண்டாவது – தொடர்ந்து யாரும் ஐந்தாண்டுகளுக்குப் பதவியில் இருக்கவும் கூடாது. அதனால்தான் ஒரு நடுவர் குழு அமைப்பது என்று தீர்மானித்துள்ளோம். செயற்குழு உறுப்பினர் ஒரு அமைப்பாளர் மட்டுமே. அவர் ஓட்டளிக்க முடியாது. இந்த மூன்று நடுவர்கள்தான் நூலைத் தேர்ந்தெடுப்பார்கள். அவர்கள் தவறான புத்தகத்தைத் தேர்ந்தெடுத்தால் அவர்களைத்தான் நீங்கள் சாடவேண்டும்.\n* இந்த மூன்று நடுவர்கள் யார் யார் என்பதை முன்கூட்டியே அறிவிப்பீர்களா\n* நிச்சயமாக அறிவிப்போம். அதுமட்டுமல்ல. புத்தகங்களின் இறுதிப்பட்டியலும் (Short List) அறிவிக்கப்படும். ஆனால் நல்ல புத்தகங்கள் இரண்டில் ஒன்றிற்கு பரிசு கொடுக்கப்பட்டால், இதைவிட அது நல்ல புத்தகம் என்றோ , இதுதான் நல்ல புத்தகம் என்றோ விமரிசனங்கள் வரலாம். அது தவிர்க்க முடியாது. எது மிக நல்ல புத்தகம், எது சுமாரான நல்ல புத்தகம் என்பதற்கு சாகித்ய அகாடமியும் எந்த தற்சான்றும் கொடுக்க முடியாது. ஆனால் மோசமான புத்தகத்துக்கு இந்த பரிசு போகாது என்று உறுதி அளிக்க முடியும்.\n• இந்த மூன்று தடுவர்களையும் சரியான நபர்களாக நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டுமே\n* இலக்கிய ரீதியாகவும், நேர்மையான விமரிசன நோக்கமுள்ளவர்களையே தேர்ந்தெடுப்போம் என்ற உறுதியும் எங்களால் தரமுடியும். அதுமட்டுமல்ல. எழுத்தாளர்கள் இது குறித்து விவாதித்து எங்களுக்கு யோசனைகள் சொன்னால் அதையும் நாங்கள் கவனிக்கிறோம்.\n* அண்மையில் காலமான ஏ. கே. ராமானுஜனுடன் உங்களுக்குள்ள தொடர்பு என்ன\n* அவர் எனக்கு ரொம்ப முக்கியமானவர், என் ‘சம்ஸ்காரா’ நாவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் என்பதால் மட்டுமல்ல, மனிதனாகவும், எழுத்தாளனாகவும், தமிழ் இலக்கியத்தின் செழுமையான பாரம்பரியத்தை எனக்கு அறிமுகப்படுத்தியவராகவும் பங்கு வகிக்கிறார். ‘மாபெரும் பாரம்பரியங்கள்’ என்பதை விடுத்து, சின்னச் சின்ன மரபுகளின் எச்சங்களைப் பற்றி சிந்தித்த முதல் பெரிய சிந்தனையாளர். நாட்டுப்புற வாய்மொழி மரபுகளை நன்றாக அறிந்தவர். இந்தியக் கலைகளை மேனாட்டுக்கு தெரியப்படுத்தியவர் ஆனந்த குமாரசாமி. ஆனால் ஆனந்த குமாரசாமி அறிமுகப்படுத்தியது சம்ஸ்கிருத மரபுகள். சம்ஸ்மிருதமில்லாத மற்ற மரபுகளை வெளியுலகிற்கு யாராவது அறிமுகப்படுத்தினார்கள் என்றால், அவர் ஏ.கே. ராமானுஜனாகத்தான் இருக்க முடியும். மானிடவியல் பயன்பாடுகளுக்காக மட்டுமே தமிழைப் படித்த மேலைநாட்டு அறிஞர்களை இலக்கியப் பயன்பாடுகளுக்காகவும், தமிழ் படிக்க வைத்தவர் ஏ.கே. ராமானுஜன்.\n* உங்கள் அறுபதாண்டு கால அளவில் வாழ்க்கையில் நீங்கள் கற்ற பாடம் என்ன\n* ‘நான் நினைப்பதே சரியானது’ என்று நினைக்காமலிருக்க வேண்டும் என்பதைக் கற்றுக் கொண்டேன். ‘எதையும் சரியாகக் கற்றுக் கொள்ளவில்லை’ என்பதையும் நான் கற்றுக் கொண்டேன். எனக்குள்ள புகழ், மரியாதை அனைத்துமே என் தகுதிக்கு மீறியது என்பதையும் நான் அறிந்துகொள்கிறேன்.\nநிழற் படங்கள்: ரவி சங்கரன்\nநன்றி : சுபமங்களா , சீர்காழி சாதிக்\nஆபிதீன் பக்கங்கள் ii :\n3. எழுத்தாளர்களின் இணையதளங்கள் (Links)\n5. கச்சேரிகள் , கஜல்கள்\n8 . நாகூர் ரூமி பதிவுகள்\nகலீபா உமர் (ரலி) (1)\nஉஸ்தாத் ஸலாமத் அலி கான் (1)\nகுலாம் முஸ்தஃபா கான் (1)\nநுஸ்ரத் ஃபதே அலிகான் (6)\nபண்டிட் ராஜ்சேகர் மன்ஸூர் (1)\nமுகேஷ் (பீர் முஹம்மது) (1)\nவிஸ்வநாதன் / ராமமூர்த்தி (2)\nதயவு பிரபாவதி அம்மா (1)\nஅப்துல் வஹ்ஹாப் பாகவி (18)\nகுலாம் காதர் நாவலர் (4)\nஅபுல் கலாம் ஆசாத் (2)\nஅஸ்கர் அலி என்ஜினியர் (1)\nஎச். பீர் முஹம்மது (2)\nகிண்ணியா எஸ்.ப���யிஸா அலி (2)\nகுர்அதுல் ஐன் ஹைதர் (1)\nகுளச்சல் மு. யூசுப் (5)\nசாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (2)\nஜே. பி. சாணக்யா (1)\nஜோ டி குரூஸ் (1)\nதொ.மு. சி. ரகுநாதன் (1)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nபோர்வை பாயிஸ் ஜிப்ரி (1)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nவேங்கட சுப்புராய நாயகர் (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (5)\nஹரி கிருஷ்ணன் (ஹரிகி) (1)\nத சன்டே இந்தியன் (1)\nநேஷனல் புக் டிரஸ்ட் (13)\nஅங்கனெ ஒண்ணு இங்கனெ ஒண்ணு (1)\nமணல் பூத்த காடு (1)\nஇரா. சண்முக வடிவேல் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mybhaaratham.com/2018/03/", "date_download": "2021-05-06T23:59:31Z", "digest": "sha1:WXB34D3ZRW4YT7B6N7YSHX5OMBE4UIBU", "length": 101629, "nlines": 448, "source_domain": "www.mybhaaratham.com", "title": "Bhaaratham Online Media: March 2018", "raw_content": "\nசுங்கை சிப்புட்; உள்ளூர் வேட்பாளரை களமிறக்கினால் தேமு வெற்றி உறுதி செய்யப்படும்- கிருஷ்ணன் (வீடியோ இணைப்பு)\nசுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியை தேசிய முன்னணி இழந்து விடக்கூடாது என கருதப்பட்டால் இம்முறை நடைபெறும் 14ஆவது பொதுத் தேர்தலில் உள்ளுரைச் சேர்ந்த ஒருவரே வேட்பாளராக களமிறக்கப்பட வேண்டும் என மூத்த குடிமக்களில் ஒருவரான க.கிருஷ்ணன் (வயது 84)வலியுறுத்தினார்.\nஇப்போது நடைபெறவுள்ள தேர்தலில் வேட்பாளர் யார் என்ற விவாதமே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆனால் பெரும்பாலானோரின் கருத்துபடி உள்ளூர் வேட்பாளரே அவர்களது தேர்வாக உள்ளது.\nவெளியிலிருந்து வரும் வேட்பாளர் வெற்றி பெற்றால் அவரை தேடி நாங்கள் தலைநகருக்குச் செல்ல வேண்டும்; தோற்றால் இந்த தொகுதியை திரும்பிக்கூட பார்க்க மாட்டார்கள்.\nஆனால், உள்ளூரைச் சேர்ந்த ஒருவரை வேட்பாளராக களமிறக்கினால் வென்றாலும், தோற்றாலும் அவர் இங்கேயே இருப்பார்; மக்களுக்கு சேவை செய்யுமாறு உரிமையுடன் குரல் உயர்த்துவோம்.\nஇங்குள்ள எதிர்கால சந்ததியினரின் வருங்காலத்தை கருத்தில் கொண்டு தேமு சார்பாக களமிறக்கப்படும் வேட்பாளர் உள்ளூரைச் சேர்ந்தவராக இருப்பதை தாம் விரும்புவதாக தேசிய முன்னணியின் தீவிர ஆதரவாளரான கிருஷ்ணன் கூறினார்.\nஅவ்வகையில், இங்கு களமிறங்கி சேவையாற்றிக் கொண்டிருக்கும் தொழிலதிபர் யோகேந்திரபாலனுக்கு போட்டியிடும் வாய்ப்பளிக்கப்பட்டால் நிச்சயம் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியை தேமு வெற்றி கொள்ளும் என அவர் மேலும் சொன்னார்.\nவீடியோ இணைப்புக்கு கீழே உள்ள லிங்க்- �� கிளிக் செய்யவும்:\nபினாங்கு விமான நிலையத்திற்கு அருகிலிருந்த கிடங்குகளில் தீ\nபினாங்கு விமான நிலையத்திற்கு அருகில் உள்ள கிடங்குகளில் ஏற்பட்ட தீச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nநேற்றிரவு ஏற்பட்ட இத்தீச்சம்பவத்தில் 4 கிடங்குகளில் தீ கொளுந்து விட்டு எரிந்தது. இரவு 10.50 மணியளவில் தகவலை பெற்ற தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.\nஇதில் நான்கு கிடங்குகளும் 90 விழுக்காடு முற்றிலுமாக சேதமடைந்தது என குறிப்பிட்ட பினாங்கு மாநில தீயணைப்பு, மீட்புப் படை குழுத் தலைவர் சாடோன் மொக்தார் கூறினார்.\nஅந்த கிடங்குகளில் உணவுப் பொருட்கள், மரச்சாமான்கள், மின்சார சாதனங்கள் ஆகியவை கிடத்தி வைக்கப்பட்டதோடு மறுசுழற்சி செய்யும் கிடங்கும் உள்ளடங்கும்.\nமறுசுழற்சி கிடங்கில் ஏற்பட்ட தீயே இதர கிடங்குகளுக்கு பரவியுள்ளதாக தொடக்கக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது என சாடோன் மொக்தார் குறிப்பிட்டார்.\nஇந்த தீச்சம்பவம் தொடர்பிலான புகைப்படங்கள் சமூக வலைதளங்கில் பரவிய வேளையில், பினாங்கு விமான நிலையத்தில்தான் தீ விபத்து ஏற்பட்டதாகவும் சில தகவல்கள் பரவி பரபரப்பை உண்டாக்கின.\nஆயினும் இத்தீச்சம்பவத்தில பினாங்கு விமான நிலையம் பாதிக்கப்படவில்லை என விமான நிலைய அதிகாரிகள் உறுதிபடுத்தினர்.\nமாணவி வசந்தபிரியாவின் மரண விசாரணை வழக்கு மே 24,25க்கு மாற்றம்\nமாணவி வசந்தபிரியாவின் மரண விசாரணை வரும் மே 24,25ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது.\nஆசிரியரின் கைப்பேசி களவு போனது தொடர்பில் விசாரிக்கப்பட்ட மாணவி வசந்தபிரியா, வீட்டின் அறையில் தூக்கு மாட்டி தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஆயினும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் அது பலனளிக்காமல் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி மரணமடைந்தார்.\nமாணவியின் மரணம் தொடர்பிலான விசாரணை ஆவணங்களை பெற்றுக் கொள்வதற்காக தாம் நீதிமன்றத்திடன் விண்ணப்பம் செய்திருப்பதாக கைப்பேசியை தொலைத்த ஆசிரியையின் சார்பில் கண்காணிக்க அமர்த்தப்பட்டுள்ள வழக்கறிஞர் வி.பார்த்திபன் கூறினார்.\nவசந்தபிரியாவின் மரண விவகாரம் தொடர்பில் எத்தனை பேர் சாட்சிகளாக நிறுத்தப்படுவர் என்பது தெரியாத நிலையில் எத்தனை நாட்களுக்கு இவ்வழக்கு ��டத்தப்படும் என்பது குறித்து கருத்துரைத்த முடியாது என இந்த\nமரண விசாரணையை நடத்தும் நீதிபதி நோர்சால்ஹா ஹம்சா குறிப்பிட்டார்.\nநிபோங் திபால் இடைநிலைபள்ளியில் இரண்டாம் படிவம் பயின்று வந்த மாணவி வசந்தபிரியாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மனமுடைந்த தற்கொலைக்கு முயன்றார் என கூறப்படுகிறது.\nவிருது பெற்றாலும் மகளின் ஏக்கம் வேதனை தருகிறது - திருமதி இந்திரா காந்தி\nஅமெரிக்காவின் துணிவுமிக்க பெண் விருதை பெற்றது பெருமையாக இருந்தாலும் ஒரு தாயாக பெற்ற மகளை இன்னமும் பிரிந்திருப்பது வேதனையாகவே உள்ளது என திருமதி இந்திரா காந்தி தனது மனவேதனையை வெளிபடுத்தினார்.\nதனது முன்னாள் கணவரால் மூன்று பிள்ளைகளும் ஒருதலைபட்சமாக மதமாற்றம் செய்யப்பட்டதை எதிர்த்து சட்டப் போராட்டம் நடத்தி அதில் வெற்றி கண்டார் திருமதி இந்திரா காந்தி.\nதனது முன்னாள் கணவரின் செயலை எதிர்த்து துணிச்சலாக சட்டப் போராட்டம் நடத்தி அதில் வெற்றி கண்டதை அடுத்து அமெரிக்காவின் 'துணிச்சல்மிகு பெண்' விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளார் அவர்.\nஇவ்விருதை நேற்று பெற்றுக் கொண்ட அவர், இவ்விருது எனக்கு பெருமையாக உள்ளது; ஆனாலும் என் மகளை பார்க்காமல் மனம் வேதனை அடைகிறது.\nபெற்ற தாய்க்கு பிள்ளைகள் தானே சொர்க்கம் என்ற நிலையில் பிள்ளையை பிரிந்துள்ள துயரம் வேதனை அடையச் செய்கிறது.\nஆயினும் இவ்விருதை எனக்கு அளித்த மலேசியாவுக்கான அமெரிக்க தூதர் கமலா ஷரீனுக்கு நன்றி கூறிக் கொள்ளும் வேளையில் இவ்விருதை என்னை போல் தனித்து வாழும் அனைத்து பெற்றோருக்கும் சமர்ப்பணம் செய்வதாக கூறினார்.\nமேலும், இந்த வழக்கில் தனது உறுதுணையாக இருந்து சட்டப் போராட்டத்தை வெற்றி பெறச் செய்த வழக்கறிஞர் எம்.குலசேகரனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.\nகடந்த 2009ஆம் ஆம் ஆண்டு தனது இஸ்லாத்திற்கு மதம் மாறிய முன்னாள் கணவர் முகமட் ரிடுவான் என்ற கே, பத்மநாபன் மூன்று பிள்ளைகளையும் ஒருதலைபட்சமாக மதமாற்றம் செய்தார்.\nஅதோடு, 9 மாத கைக்குழந்தையாக இருந்த பிரசன்னா டிக்‌ஷாவை தன்னோடு கொண்டு சென்ற முகமட் ரிடுவான் இப்போது தலைமறைவாக உள்ளார்.\nவேன் கவிழ்ந்தது; 2 அந்நிய நாட்டவர்கள் பலி\nதூக்க கலக்கத்தில் வாகனத்தை செலுத்தியதால் நிகழ்ந்த சாலை விபத்தில் இரு அந்நிய நாட்டவர்கள் மரணமடைந்தத��டு அறுவர் படுகாயம் அடைந்தனர்.\nவங்காளதேச நாட்டவர்களை ஏற்றி கொண்டுச் சென்ற வேன் பிறபகல் 4.45 மணியளவில் குவாந்தான், கிழக்கு கடற்கரை நெடுஞ்சாலை 1, 1214ஆவது கிலோ மீட்டரில் தடம் புரண்டது.\nஇதில் இரு வங்காளதேசிகள் மரணமடைந்தனர். இதில் மரணமடைந்த ஒருவர் குத்தகை தொழிலாளர் ஹுசேய்ன் ஃபோர்ஹாட் (36) என அடையாளம் காணப்பட்ட வேளையில் மரணமடைந்த மற்றொரு நபர் அடையாளம் காணப்படவில்லை என தெமர்லோ போலீஸ் தலைவர் ஏசிபி ஸுன்டின் மாமூட் கூறினார்.\nஇதில் நிஸான் வேனை செலுத்திய பொறியியல் நிறுவனத்தின் மேற்பார்வையாளரான முகமட் கமருல் பஹரின் (52) காயமடைந்தார்.\n\"வேனை செலுத்திய ஆடவர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் சாலை தடுப்பை மோதி கால்வாயில் தடம் புரண்டதாக நம்பப்படுகிறது என அவர் சொன்னார்.\nஇவ்விபத்தில் காயமடைந்தவர்களும் மரணமடைந்தவர்களின் உடலும் சுல்தான் ஹாஜி அஹ்மாட் ஷா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.\nதொகுதி எல்லை மறுசீரமைப்பு; அரசாங்கத்தின் தலையீடு கிடையாது- பிரதமர் நஜிப்\nதேர்தல் ஆணையம் முன்னெடுத்துள்ள தொகுதி எல்லை மறுசீரமைப்பு விவகாரத்தில் அரசாங்கத்தின் தலையீடு இல்லை என பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் கூறினார்.\nநாட்டுக்கும் மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் தேர்தல் ஆணையம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் மதிப்பளிப்பதாக கூறிய அவர், அவற்றின் செயல் நடவடிக்கைகளில் தலையிடுவது கிடையாது.\nதேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ள தொகுதி எல்லை மறுசீரமைப்பு நடவடிக்கையை சில கட்சிகள் ஆதரிக்கவில்லை என்ற போதிலும் அரசாங்கம் அதன் நடவடிக்கைகளில் தலையிடுவதும் அதிகாரம் செலுத்துவதும் இல்லை.\nதொகுதி எல்லை மறுசீரமைப்பு தொடர்பிலான அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு 129 உறுப்பினர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதன் மீதான விவாதத்திற்கு பின்னர் மக்களவையில் பேசியபோது பிரதமர் நஜிப் இவ்வாறு கூறினார்.\n14ஆவது பொதுத் தேர்தலில் அமல்படுத்தப்படவுள்ள இந்த தொகுதி எல்லை மறுசீரமைப்பில் கூடுதலாக எவ்வித தொகுதிகளும் உருவாக்கப்படவில்லை.\nமாறாக, 12 நாடாளுமன்றத் தொகுதிகள், 28 சட்டமன்றத் தொகுதிகள் பெயர்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\nதேர்தல் முடிவுக்கு பின்னரே மக்களின் விருப்பத்தை அறிய முடியும்- மணிமாறன்\nமக்கள் விரும்பும் வேட்பாளர் யார் என்பது தேர்தல் முடிவு தெரிந்த பின்னரே அறிய முடியும். தேர்தலில் வெற்றி, தோல்வி நிர்ணயிக்கப்படாத வரை மக்கள் யாரை விரும்புகின்றனர் என்பதை யாராலும் கணிக்க முடியாது என சுங்கை சிப்புட் மஇகா தொகுதி செயலாளர் கி.மணிமாறன் குறிப்பிட்டார்.\nநாட்டின் 14ஆவது பொதுத் தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் நிலையில் வேட்பாளர் குறித்த ஆருடங்கள் இன்னும் வலுபெற்று கொண்டிருக்கின்றன.\nஇந்நிலையில் 'மக்கள் விரும்புபவரே வேட்பாளராக களமிறக்கப்படுவர், கட்சி அடிப்படையில் அல்ல' என பேராக் மந்திரி பெசார் டத்தோஶ்ரீ ஸம்ரி அப்துல் கூறியுள்ளதாக தமிழ் நாளிதழ் ஒன்றில் வெளிவந்துள்ள செய்தி குறித்து கருத்துரைத்த மணிமாறன், மக்கள் விரும்பும் வேட்பாளர் யார் என்பதை யாராலும் கணிக்க முடியாது.\nதேர்தல் முடிவுகள் வெளிவந்த பின்னரே களமிறக்கப்படும் வேட்பாளர் மக்களின் விருப்பத்திற்குரியவரா இல்லையா என்பதை அறிந்து கொள்ள முடியும்.\nஅதை விடுத்து வீணான கருத்துகள் பகிரப்படுவது தேமுவின் பலவீனத்தை காட்டும் என சுட்டிக் காட்டிய அவர், மக்கள் விரும்புபவர்களுக்கே முன்னுரிமை என்றால் கடந்த 14ஆவது பொதுத் தேர்தலின் போது 50 விழுக்காட்டுக்கும் அதிகமான வாக்குகளை பக்காத்தான் கூட்டணி கொண்டிருந்தது. ஆனால், எண்ணிக்கை அடிப்படையில் அதிகமான 'நாற்காலி'களை கொண்டிருந்ததால் மத்திய அரசாங்கம் அமைக்கும் ஆட்சி அதிகாரத்தை தேசிய முன்னணி பெற்றது.\nமேலும், கட்சியில் இல்லாதவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படுமானால் நாட்டின் அரசியல் கட்சிகளே தேவையில்லாத சூழல் ஏற்பட்டு விடலாம்.\n14ஆவது பொதுத் தேர்தலுக்கான காலம் வெகு தொலைவில் இல்லை என்பதால் வீணான, தேவையற்ற அறிக்கைகள் மக்களை குழப்பி, கட்சி உறுப்பினர்களையும் பலவீனமாக்கி தேர்தலில் தோல்வியை சந்திக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும் என்பதை அனைவரும் உணர வேண்டும் என மணிமாறன் மேலும் கேட்டுக் கொண்டார்.\nசித்தியவான் தொகுதி பெயர் மாற்றம்; ஜசெக வெற்றியை சீர்குலைக்கும் முயற்சியா\nசித்தியவான் சட்டமன்றத் தொகுதியின் பெயரை 'அஸ்தாகா' என மாற்றம் செய்துள்ளது நியாயமானது அல்ல என பேராக் மாநில ஜசெக தலைவர் ஙா கோர் மிங் தெரிவித்தார்.\nசித்தியவான் சட்டமன்றத் தொ��ுதி ஜசெகவின் கோட்டையாகும், இங்கு நடைபெற்ற தேர்தல்களில் ஜசெக ஒருபோதும் தோற்றது இல்லை.\nதேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ள தொகுதி எல்லை மறுசீரமைப்பில் சித்தியவான் சட்டமன்றத் தொகுதியின் பெயர் 'அஸ்தாகா' என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.\nசித்தியவான் சட்டமன்றத் தொகுதியின் பெயரை 'அஸ்தாகா' என மாற்றுவதால் அதை இழந்து விடக்கூடும் என நினைக்கின்றனர். ஆனால் ஒரு திடலுக்கும் அரேனாவுக்கும் வைக்கப்பட்ட வேண்டிய பெயர் சட்டமன்றத் தொகுதிக்கு வைக்கப்படுவதில் என்ன நியாயம் உள்ளது என அவர் கேள்வி எழுப்பினார்.\nஜசெக-வை ஆதரிக்கிறார்கள் என்பதற்காக ஒரு திடலின் பெயரை சட்டமன்றத் தொகுதிக்கு வைத்து இங்குள்ள மக்களை கேவலப்படுத்தியுள்ளார். இது சித்தியவான் அக்களை அவமதிக்கும் செயலாகும்.\nதேசிய முன்னணியின் வெற்றிக்காக தொகுதி எல்லை சீரமைப்பின் வழி மிக எளிதாக சட்டமன்றத் தொகுதியின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.\nஇதனால் இங்கு களமிறங்கும் தேமு வேட்பாளர் தோல்வி காண்பதை விட, 'டெபோசிட்' இழக்கச் செய்திட வேண்டும் என இன்று காலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஙா கோர் மிங் கூறினார்.\nதொகுதி எல்லை சீரமைப்பு; 129 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் ஏற்றுக் கொள்ளப்பட்டது\nதொகுதி எல்லை மறுசீரமைப்பு தொடர்பான அறிக்கையை இன்று மக்களவையில் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் தாக்கல் செய்த நிலையில் 129 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு அந்த அறிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டது.\nதேர்தல் ஆணையம் மேற்கொண்ட தொகுதி எல்லை மறுசீரமைப்பு தீபகற்ப மலேசியாவில் 98 நாடாளுமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியுள்ளது.தீபகற்ப மலேசியாவில் மொத்தம் 165 நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளடங்கியுள்ளன.\nஇந்த அறிக்கையை தாக்கல் செய்த நிலையில் தேசிய முன்னணி சார்பில் ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிர்க்கட்சி கூட்டணி சார்பில் ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்களும் விவாதிக்க வாய்ப்பளிக்கப்பட்டது. விவாதம் முடிந்த நிலையில் அறிக்கை ஏற்றுக் கொள்வதற்காக வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.\nஇதில் 129 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாகவும் 80 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர்.\nஇந்த தொகுதி எல்லை சீரமைப்பில் சில தொகுதிகளின் பெயர்கள் மாற்றம் கண்டுள்ளதோடு சில தொகுதிகள் வாக்கா���ர் எண்ணிக்கை குறைக்கப்பட்டும் சில தொகுதிகளில் வாக்காளர் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டும் உள்ளது.\nதொகுதி எல்லை சீரமைப்பு இன்று முடிவடைந்துள்ள நிலையில் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் நாடாளுமன்றத்தை கலைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகேமரன் மலையில் போட்டியிடும் வாய்ப்பு எனக்கு மறுக்கப்பட்டால் தேமுவின் வெற்றி கேள்விக்குறியாகலாம்- டான்ஶ்ரீ கேவியஸ்\nநேர்காணல்: ரா.தங்கமணி, புனிதா சுகுமாறன்\nகேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியின் தேசிய முன்னணி உறுப்பினராக டத்தோஶ்ரீ ஜி.பழனிவேல் இன்னமும் நீடித்திருந்தால் நிச்சயம் அங்கு நான் களமிறங்கியிருக்க மாட்டேன்.\nஆனால், அவரை சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினராக அறிவித்த பின்னரே அங்கு சேவையாற்ற களமிறங்கினேன். தேசிய முன்னணி பிரதிநிதித்து டத்தோஶ்ரீ பழனிவேல் அங்கு இருந்திருந்தால் நான் அவருக்கு தொல்லைகள் கொடுத்திருக்க மாட்டேன்.\nதான் சார்ந்துள்ள ஒரு கூட்டணியை பிரதிநித்து ஒருவர் இருக்கும் சூழலில் அங்கு களமிறங்கி சேவையாற்றுவது ஆரோக்கியமான நடவடிக்கையாக கருத முடியாது. அதனால்தான் நானும் அமைதியாக இருந்தேன்.\nஆனால் டத்தோஶ்ரீ பழனிவேலை சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினராக மக்களைக்கு மஇகா அதிகாரப்பூர்வமாக தெரிவித்த பின்னரே அத்தொகுதியில் தேமுவின் வெற்றியை உறுதி செய்ய களமிறங்கினேன் என்கிறார் மைபிபிபி கட்சியின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எம்.கேவியஸ்.\nஅண்மையில் 'மை பாரதம்' மின்னியல் ஊடகம் அவருடன் மேற்கொண்ட சிறப்பு நேர்காணலின் தொடர்ச்சி இங்கே தொகுக்கப்பட்டுள்ளது.\nகே: தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஶ்ரீ ஜி.பழனிவேலை சந்திப்பதுண்டா\nப: தொடக்கத்தில் இங்கு சேவையாற்ற வந்தபோது டத்தோஶ்ரீ பழனிவேலை சந்தித்துள்ளேன். சில நிகழ்வுகளில் அவருடன் பங்கேற்றுள்ளேன். ஆனால் இப்போது அவரை சந்திப்பது குறைவாக உள்ளது.\nகே: டத்தோஶ்ரீ பழனிவேல் இங்கு போட்டியிடுவதாக இருந்தால் நீங்கள் போட்டியிட எத்தனித்திருப்பீர்களா\nப: நிச்சயமாக இல்லை. மஇகாவின் தலைவராக டத்தோஶ்ரீ பழனிவேல் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்திருந்தால் நிச்சயம் நான் இங்கு களமிறங்கியிருக்க மாட்டேன்.\nஆனால், மஇகாவின் உட்பூசலில் தேசியத் தலைவராக இருந்த அவரை கட்சியிலிருந்து நீக்கியது மட்டுமல்லாமல் சுயேட்சை நாடா���ுமன்ற உறுப்பினராகவும் மக்களவைக்கு தெரியப்படுத்திய பின்னரே கேமரன் மலையில் களமிறங்கினேன்.\nகே: கேமரன் மலைன் தொகுதியில் நீங்கள் (டான்ஶ்ரீ) போட்டியிடாமல் மஇகா வேட்பாளர் போட்டியிட்டால் மைபிபிபி ஆதரவளிப்பீர்களா\nப: எவ்வாறு ஆதரவு கொடுக்க முடியும். கட்சி உட்பூசலை அடுத்து இங்கு களமிறங்கி மக்களுக்கு சேவை செய்ய மஇகா முனையவில்லை. கடந்த நான்காண்டுகளாக நான் இங்கு களமிறங்கி மக்களுக்கு சேவை செய்து வருகிறேன். 'உண்மையான சேவையாளன்' யார் என்பதை மக்கள் நன்கு அறிந்துள்ளனர்.\nஇந்நிலையில் கடந்த பல ஆண்டுகளாக சேவை செய்து இங்கு தேசிய முன்னணிக்கான வெற்றி வாய்ப்பை உறுதி செய்துள்ளேன். கஷ்டப்பட்டு சேவை செய்துள்ள தனக்கு 'சீட்' கிடைக்காமல் பிறருக்கு அந்த வாய்ப்பு கிடைத்தால் கட்சி உறுப்பினர்கள் அதனை எவ்வாறு ஏற்றுக் கொள்வர் தேமு எனும் நிலையில் நான் ஆதரித்தாலும் கட்சி உறுப்பினர்கள், வாக்காளர்களின் ஆதரவை பெற நிச்சயம் பெற முடியாது.\nகே: நீங்கள் போட்டியிட்டால் கேமரன் மலை மஇகாவினர் ஆதரிப்பார்கள் என நினைக்கிறீர்களா\nப: நிச்சயம் ஆதரவு கிடைக்கும். கேமரன் மலை எனக்கு புதிதானது அல்ல. நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் பெந்தா தோட்டத்தில்தான். இங்கே எனக்கு அதிகமாக உறவினர்கள், நண்பர்கள் இருக்கிறார்கள். எனது சொந்த மண்ணில் நிச்சயம் எனக்கான ஆதரவு கிடைக்கும்.\nமஇகாவில் உள்ள பெரும்பாலானவர்கள் எனது உறவினர்கள், நண்பர்களாக\nஇருக்கின்றனர். அதன் அடிப்படையில் எனக்கு மக்கள் மத்தியில் ஆதரவு கிடைக்கும்.\nநான் இங்கு போட்டியிட்டால் நிச்சயம் தேசிய முன்னணி வெற்றி பெறும். என்னை தவிர யார் போட்டியிட்டாலும் அவர்களின் வெற்றி வாய்ப்பு கேள்விக்குறியே.\nஇதை நான் எச்சரிக்கையாக சொல்லவில்லை. இதுதான் உண்மை. ஆதலால் 14ஆவது பொதுத் தேர்தலில் கேமரன் மலை வேட்பாளர் விவகாரத்தில் தேசிய முன்னணி சிறந்த முடிவை எடுக்கும் என நம்புகிறேன்.\n- கேமரன் மலையை இழந்து விடக்கூடாது என்பதற்காக பிரதமர் தேடிய 'அருமருந்து'தான் நான் - டான்ஶ்ரீ கேவியஸ்- பகுதி- 2\n- எனக்கான தொகுதியில் பிரதமரின் 'ஆசி'யுடனே 'வேட்பாளராக' என்னை அடையாளப்படுத்திக் கொள்கிறேன் - டான்ஶ்ரீ கேவியஸ் - பகுதி -1\nஉறுப்பினர் எண்ணிக்கை அதிகரிக்கச் செய்வதில் மலேசிய அபிராம் இயக்கம் இலக்கு கொண்டுள்ளது - தலைவர் சண்முகம்\nநாடு தழுவிய நிலையில் 5,000க்கும் அதிகமான உறுப்பினர்களைக் கொண்டு ஒரு வலுவான இயக்கமாக உருவெடுக்க மலேசிய அபிராம் இயக்கம் இலக்கு கொண்டுள்ளது என அதன் தலைவர் சண்முகம் கிருஷ்ணன் தெரிவித்தார்.\nசமூலநல நடவடிக்கைகள் மட்டுமின்றி பல்வேறு வகைகளில் மக்களுக்கான திட்டங்களை மலேசிய அபிராம் இயக்கம் முன்னெடுத்து வருகிறது.\nஇந்திய சமுதாயம் பின்னடைவை சந்தித்து விடக்கூடாது எனும் இலக்கில் பயணிக்கும் இவ்வியக்கம், மக்களுக்கு ஆக்ககரமான திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.\nஅவ்வகையில் வரும் ஏப்ரல் மாதம் மிகப் பெரிய அளவில் ஶ்ரீ சஹஸ்ரநாம லலிதாம்பிகை பூஜையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nகல்வி, பொருளாதாரம், சமூகநலன், நாட்டுப் பற்று, சமயம் என அனைத்து ரீதியிலும் இந்திய சமுதாயத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு ஆக்ககரமான திட்டங்கள் முன்னெடுக்கபடுகின்றன என்று அண்மையில் இவ்வியக்கத்தின் ஆண்டுக்கூட்டத்தில் உரையாற்றுகையில் அவர் இவ்வாறு\nஇந்த ஆண்டுக்கூட்டத்தில் இயக்கத்தின் செயல் நடவடிக்கைகள், திட்டங்கள் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டதோடு இயக்கத்தை இன்னும் வலுவடையச் செய்வதற்கு உறுப்பினர் எண்ணிக்கை அதிகரிக்கப்பட செய்வதும் நாடு தழுவிய நிலையில் பல தொகுதிகளை அமைப்பதும் முன்னெடுக்கப்படுவதும் திட்டமிடப்பட்டுள்ளது என சண்முகம் கூறினார்.\nஇந்த கூட்டத்தில் இயக்கத்தின் ஆலோசகர் அமுசு. ஏகாம்பரம், பேராக் மாநில மஇகா மகளிர் பிரிவுத் தலைவில் திருமதி தங்கராணி, இயக்கத்தின் துணைத் தலைவர் பாஸ்கரன் துரைசாமி, செயலாளர் பி.கணேசன் உட்பட செயலவையினரும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.\nதொகுதி எல்லை சீரமைப்பு மசோதாவை எதிர்த்து பெர்சே அமைப்பின் பேரணி\nமலேசிய தேர்தல் ஆணையம் முன்னெடுத்துள்ள தொகுதி எல்லை சீரமைப்பு மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதை எதிர்த்து பெர்சே அமைப்பு இன்று மக்களவை சபாநாயகரிடம் மனுவை சமர்ப்பித்தனர்.\nஇன்று காலை நாடாளுமன்ற வளாகத்தில் திரண்ட பேர்சே ஆதரவாளர்களில் 10 பேர் மட்டும் உள்ளே நுழைவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது என டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைவர் துணை ஆணையர் சஹாருடின் அப்துல்லா கூறினார்.\nதுகு நெகாராவில் திரண்ட 200க்கும் மேற்பட்ட பெர்சே ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்தை நோக��கி வந்தனர். இந்த பேரணியில் எவ்வித விரும்பதாக செயல்களும் இடம்பெறாமல் இருக்க போலீசார் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளனர் என அவர் சொன்னார்.\nஇதில் பெரிபூமி பெர்சத்து மலேசியா கட்சியின் அவைத் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமது, தலைவர் டான்ஶ்ரீ முஹிடின் யாசின், பிகேஆர் கட்சியின் தலைவர் டத்தோஶ்ரீ வான் அஸிஸா, அமானா கட்சியின் தலைவர் முகமட் சாபு, அம்பாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஸுரைடா கமாருடின், பத்து நாடாளுமன்ற உறுப்பினர் தியான் சுவா உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nகொஸ்மோபொயிண்ட் கல்லூரியின் உபகாரச் சம்பளத்துடனான உயர்கல்வி வழிகாட்டி கருத்தரங்கு\nஎஸ்பிஎம் தேர்வை முடித்த மாணவர்கள் தங்களது உயர்கல்வியை சிறந்த முறையில் அமைத்துக் கொள்ள வேண்டும் எனும் நோக்கில் சுங்கை சிப்புட் தொகுதி மஇகா 'உயர்கல்வி வழிகாட்டி' நிகழ்வை நடத்தியது.\nஈப்போவில் உள்ள கொஸ்மோபொயிண்ட் கல்லூரியுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் மாணவர்களுக்கு உயர்கல்வி மீதான வழிகாட்டல் வழங்கப்பட்டது.\nஅதோடு, கொஸ்மோபொயிண்ட் கல்லூரி வழங்கும் உபகாரச் சம்பளத்துடனான கல்வி வாய்ப்பு தகுதி வாய்ந்த மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.\nதிரளான மாணவர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் சுங்கை சிப்புட் மஇகா செயலாளர் கி.மணிமாறன், முன்னாள் தொகுதித் தலைவர் லோகநாதன், எஸ்ஐடிஎஃப் அதிகாரி பிரகாஷ் ஆகியோர் பங்கேற்றனர்.\nதிருமதி இந்திரா காந்திக்கு அமெரிக்காவின் 'துணிச்சல்மிகு பெண்' விருது\nஒருதலைபட்சமாக தனது மூன்று பிள்ளைகள் மதமாற்றம் செய்யப்பட்டதை எதிர்த்து போராட்டம் நடத்தி வெற்றி கண்ட திருமதி இந்திரா காந்தியின் பெயர் அமெரிக்காவின் 'துணிச்சல்மிக்க பெண்' விருதுக்கு முன்மொழியப்பட்டுள்ளது.\nதமக்கு தெரியாமல் தனது முன்னாள் கணவர் கே.பத்மநாபன் மூன்று பிள்ளைகளையும் மதமாற்றம் செய்ததை எதிர்த்து சட்டப் போராட்டம் நடத்தியவர் திருமதி இந்திரா காந்தி.\nகடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த போராட்டத்தை மேற்கொண்ட இந்திரா காந்தியின் செயலை பாராட்டும் வகையில் இந்த விருது வழங்கப்படவுள்ளது.\nஇவ்வாண்டின் உலக மகளிர் தினம், மார்ச் மாதம் அமெரிக்காவில் அனுசரிக்கப்பட்டு வரும் மகளிர் வரலாற்று மாதத்தையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வில் மலேசியாவு��்கான அமெரிக்க தூதர் கமலா ஷிரின் நாளை நடைபெறும் விருந்துபசரிப்பு நிகழ்வில் இந்த விருதை இந்திரா காந்திக்கு வழங்கி சிறப்பிக்கவுள்ளார்.\nஒருதலைபட்சமாக செய்யப்பட்ட மூன்று பிள்ளைகளின் மதமாற்றமும் செல்லத்தக்கது அல்ல என கடந்த ஜனவரி 29ஆம் தேதி கூட்டரசு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.\nஅமெரிக்காவின் அனைத்துலக துணிச்சல்மிக்க பெண்மணி விருது சிறந்த தலைமைத்துவ ஆற்றல், துணிச்சல், அர்ப்பணிப்பு உணர்வு ஆகியவற்றின் அடிப்படையில் வழங்கப்படுகிறது.\nகடந்த 2007ஆம் ஆண்டு அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கொண்டோலேசா ரைஸால் அறிமுகம் செய்யப்பட்ட இவ்விருதை மலேசியாவின் திருநங்கைகள் போராட்டவாதியான நிஷா ஆயோப் 2016இல் பெற்றார்.\n2 நாடாளுமன்றம், 3 சட்டமன்றத் தொகுதிகள்; மைபிபிபி இலக்கு\nவரும் 14ஆவது பொதுத் தேர்தலில் 2 நாடாளுமன்றத் தொகுதிகள், 3 சட்டமன்றத் தொகுதிகளில் மைபிபிபி கட்சி இலக்கு கொண்டுள்ளது என அக்கட்சியின் உதவித் தலைவர் டத்தோ லோக பால மோகன் தெரிவித்தார்.\nதேசிய முன்னணியின் உறுப்புக் கட்சியாக திகழும் மைபிபிபி, இலக்கு கொண்டுள்ள நாடாளுமன்றத் தொகுதிகளில் கேமரன் மலை தொகுதியும் ஒன்றாகும்.\nஇங்கு கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எம்.கேவியஸ் களமிறங்கி சேவையாற்றி வரும் நிலையில் எஞ்சிய ஒரு நாடாளுமன்றத் தொகுதி, 3 சட்டமன்றத் தொகுதிகளை இலக்கு கொண்டுள்ளோம் என கூட்டரசு பிரதேச துணை அமைச்சருமான டத்தோ லோக பால மோகன் குறிப்பிட்டார்.\nமக்களின் நிலையை அறிந்த வேட்பாளரே வெற்றி பெற முடியும்- முகமட் நோர் ஃபட்சில் - பகுதி -2\nசுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதி கடந்த இரு தவணைகளாக எதிர்க்கட்சியிடம் வீழ்ந்து கிடக்கின்ற நிலையில் வரும் பொதுத் தேர்தலில் தேசிய முன்னணிக்கான ஆதரவு அலை திரும்பி கொண்டிருக்கின்றது.\nஅந்த ஆதரவு அலையை தேசிய முன்னணியில் உள்ள கட்சிகள் முழுமையாக பயன்படுத்திக் கொண்டு வெற்றி வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்கிறார் பேராக் மாநில மைபிபிபி கட்சியின் இளைஞர் பிரிவுத் தலைவரும் சுங்கை சிப்புட் அறவாரியத்தின் செயல்முறை அதிகாரியுமான முகமட் நோர் ஃபட்சில் பின் சாஹுல் ஹமிட்.\nஅண்மையில் அவருடன் 'மை பாரதம்' மேற்கொண்ட நேர்காணலின் தொடர்ச்சி வாசகர்களுக்காக இங்கே தொகுக்கப்பட்டுள்ளது.\nகே: யயாசான் சுங்கை சிப்புட் மூலம் இந்தியர்கள் அடைந்துள்ள பலன்கள்\nப: யயாசான் சுங்கை சிப்புட் மூலமாக இந்திய சமுதாயத்திற்கு பல உதவிகள் வழங்கப்படுகின்றன. பொருளாதார மேம்பாடு மட்டுமின்றி பலவகைகளில் உதவிகள் செய்யப்படுகின்றன.\nஆனால் அந்த உதவிகளை பெறுவதில்தான் நாம் தவறு இழைக்கின்றோம். உதவிகள் விண்ணப்பங்கள் முறையாக இல்லாததால் சில விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகின்றன.\nவிண்ணப்பங்களை முறையாக செய்யத் தெரியாதவர்களுக்காக அலுவகலத்திலேயே உதவிகள் வழங்குகிறோம். எங்களை முறையாக நாடி விண்ணப்பங்களைச் செய்தாலே உதவிகள் பெற முடியும் என்பதை இந்தியர்கள் உணர வேண்டும்.\nகே: அரசியலை பொறுத்தவரை சுங்கை சிப்புட் அரசியல் நிலவரம் எப்படி உள்ளது\nப: சுங்கை சிப்புட்டை பொறுத்தவரை அரசியல் நிலவரம் பரபரப்பாகத்தான் உள்ளது. வேட்பாளர் விவகாரம், மக்களுக்கான சேவை, அரசியல் சூழல் உட்பட பல விவகாரங்களால் இங்கு அரசியல் நிலவரம் சூடாக உள்ளது.\nகே: இங்கு களமிறங்கும் வேட்பாளர் விவகாரம் குறித்து...\nப: சுங்கை சிப்புட்டில் களமிறங்கும் வேட்பாளர் முதலில் இங்குள்ள மக்களின் நிலைமைகளை புரிந்தவராக இருப்பது மிக அவசியம். பொதுவாகவே இங்கு களமிறங்கும் வேட்பாளர்கள் கோலாலம்பூரைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள்.\nதலைநகரில் வாழும் மக்களின் சூழல் வேறு; இங்குள்ள மக்களின் வாழ்வாதார சூழல் வேறு. இங்குள்ள மக்கள் தோட்டப்புற சூழல் சார்ந்திருப்பவர்கள், ஆனால் தகைநகரில் வாழும் மக்களின் ஒட்டுமொத்த வாழ்வாதார சூழலும் மாறுபட்டிருக்கும்.\nஆதலால் இங்கு களமிறங்கும் வேட்பாளர் முதலில் மக்களின் சூழலை உணர்ந்து அவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை வழங்கி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.\nஅதை விடுத்து தான் வாழ்ந்த சூழலை இங்குள்ள மக்களிடம் திணிக்கக்கூடாது. அத்தகைய நடவடிக்கைதான் இங்குள்ள மக்களிடம் வெறுப்புணர்வை உண்டாக்கும். அது வேட்பாளருக்கு உகந்தது அல்ல.\nகே: சுங்கை சிப்புட்டில் தேசிய முன்னணிக்கான மக்களின் ஆதரவு எப்படி உள்ளது\nப: கடந்த காலங்களை விட மக்களிடையே தற்போது மாற்றங்கள் காணப்படுகின்றன. கடந்த காலங்களில் எதிர்க்கட்சியை ஆதரித்தவர்கள் எல்லாம் தற்போது தேசிய முன்னணியை ஆதரிக்கத் தொடங்கியுள்ளனர்.\nமக்களிடையேயான இந்த மாற்றத்தை தேசிய முன்னணி முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பலவீனத்தை உண்டாக்கிக் கொள்வதை விட பலம் பொருந்தியதாக தேசிய முன்னணி தன்னை உருமாற்றிக் கொள்ள வேண்டும். அதுதான் வெற்றிக்கு அடித்தளமாக அமைந்திடும்.\nநம்பிக்கைக் கூட்டணி ஆட்சியமைத்தால் 'மீஃபா'வுக்கு தலைமை ஏற்பேன் - சிவகுமார் அதிரடி\nபுத்ராஜெயாவை நம்பிக்கைக் கூட்டணி கைப்பற்றினால் மலேசிய இந்தியர் கால்பந்து சங்கத்திற்கு (மீஃபா) நிச்சயம் தலைமை தாங்குவேன் என பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் வீ.சிவகுமார் தெரிவித்தார்.\nமக்களவை கூட்டத் தொடரின்போது மீஃபா, பக்தி சக்தி, ஶ்ரீ முருகன் நிலையம் போன்ற அரசு சார்பற்ற பொது இயக்கங்களுக்கு 'செடிக்' மூலம் வழங்கப்பட்ட மானியம் எவ்வளவு\nஆனால், செடிக் அமைப்பிற்கும் சம்பந்தப்பட்ட பொது இயக்கத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் இருப்பதால் அதனை பொதுவில் சொல்ல முடியாது என மக்களவையில் பதிலளிக்கப்பட்டது.\nஆனால், மீஃபாவின் தலைவர் டத்தோ டி.மோகன், அண்மையில் செடிக் மூலம் மீஃபாவுக்கு வழங்கப்பட்ட மானியங்கள் குறித்து வெளிப்படையாக அறிவித்துள்ளார்.\nஇந்த மானிய விவரங்களைதானே நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினேன். ஆனால் ஒப்பந்த உடன்படிக்கையை காரணம் காட்டி பிரதமர் துறை துணை அமைச்சர் டத்தோஶ்ரீ எஸ்.கே.தேவமணி பதிலளிக்க மறுத்த வேளையில் டத்தோ மோகன் எவ்வாறு அவ்விவரங்களை பொதுவின் அறிவித்தார்\nடத்தோ மோகனால் மானிய விவரங்களை பொதுவில் அறிவிக்கும்போது டத்தோஶ்ரீ தேவமணி நாடாளுமன்றத்தில் அறிவிக்க மறுத்தது ஏன்\nமேலும், மீஃபாவுக்கு தலைமை ஏற்க விரும்பினால் தனக்கு விட்டுக் கொடுக்க விருப்பதாக மோகன் கூறியுள்ளார். மீஃபாவின் தலைவர் பதவியை எனக்கு விட்டு கொடுக்க வேண்டியதில்லை.\nஏனென்றால் வரும் பொதுத் தேர்தலில் புத்ராஜெயாவை நம்பிக்கைக் கூட்டணி கைப்பற்றினால் நிச்சயம் மீஃபாவுக்கு தலைமை தாங்குவேன் என இங்கு தாமான் செமிரியில் நடைபெற்ற 'புதிய அரசாங்கம்; புதிய நம்பிக்கை ' எனும் தலைப்பில் கலந்து கொண்டபோது சிவகுமார் இவ்வாறு கூறினார்.\nதமிழ் இடைநிலைப்பள்ளி; தேமு நிலம் கொடுக்கவில்லையென்றால் நம்பிக்கைக் கூட்டணி கொடுக்கும்- கணபதிராவ்\nதமிழ் இடைநிலைப்பள்ளியை அமைப்பதற்கான நிலத்தை பேராக் மாநிலத்தை தற்போது ஆட்சி புரியும் தேசிய முன்னணி அரசாங்கம் ஒதுக்கீடு செய்யாவிட்டால் அம்மாநிலத்தில் நம்பிக்கைக் கூட்டணியின் ஆட்சி அமைந்தால் நிச்சயம் ஒதுக்கீடு செய்யப்படும் என சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் குறிப்பிட்டார்.\nநம்பிக்கைக் கூட்டணி அறிமுகம் செய்துள்ள தேர்தல் கொள்கை அறிக்கையில் தமிழ் இடைநிலைப்பள்ளி நிர்மாணிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் பொதுத் தேர்தலில் புத்ராஜெயாவை நம்பிக்கைக் கூட்டணி கைப்பற்றினால் தமிழ் இடைநிலைப்பள்ளி நிச்சயம் நிர்மாணிக்கப்படும்.\nதமிழ் இடைநிலைப்பள்ளியை அமைப்பதற்கு ஏதுவாக நம்பிக்கைக் கூட்டணி ஆட்சி புரியும் பினாங்கு மாநிலத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பே நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது சிலாங்கூர் மாநில அரசு 8 ஏக்கர் நிலத்தை ஒதுக்கீடு செய்துள்ளது.\nதற்போது அதிகமான இந்தியர்கள் வாழ்கின்ற மாநிலமான பேராக் மாநிலத்தில் தமிழ் இடைநிலைப்பள்ளி நிர்மாணிப்பதற்கு தற்போதைய தேசிய முன்னணி அரசு முனைய வேண்டும்.\nஇல்லையேல், வரும் தேர்தலில் பேராக் மாநில ஆட்சியை நம்பிக்கைக் கூட்டணி கைப்பற்றியதும் நிச்சயம் தமிழ் இடைநிலைப்பள்ளிக்கான நிலம் ஒதுக்கப்படும் என இங்கு நடைபெற்ற 'புதிய அரசாங்கம், புதிய நம்பிக்கை' எனும் தலைப்பிலான சொற்பொழிவில் உரையாற்றுகையில் வீ.கணபதிராவ் குறிப்பிட்டார்.\nஎதிர்க்கட்சியை ஆதரித்தது போதும்; இனியும் தண்டிக்கப்பட வேண்டாம்- மஇகா இளைஞர் பிரிவு சாடல்\nஎதிர்க்கட்சியின் ஆட்சியில் கடந்த இரு தவணைகளாக சுங்கை சிப்புட் மக்கள் தண்டிக்கப்பட்டுள்ளனர். இந்த தண்டனையிலிருந்து மீள வரும் பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி வேட்பாளருக்கு சுங்கை சிப்புட் மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என மஇகா இளைஞர் பிரிவு துணைத் தலைவர் தினாளன் ராஜகோபாலு தெரிவித்தார்.\nமக்களுக்கு வாக்களிக்கும் அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளதே தங்களது வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் மக்கள் பிரதிநிதியை தேர்ந்தெடுப்பதே ஆகும். ஆனால் கடந்த இரு தவணைகளாக தவறான ஒரு மக்கள் பிரதிநிதியை இங்குள்ள மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். அதன் விளைவாகவே இங்குள்ள மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர்.\nவாழ்வாதார நிலை பாதிக்கப்பட்டு அடிப்படை பிரச்சினைகளை தீர்ப்பதற்கான மானியங்கள் இல்லாமல் மக்கள் தண்டிக்கப்பட்டுள்ளனர். ���தற்கு ஒரே காரணம் தங்களின் பிரதிநிதியாக எதிர்க்கட்சியினரை தேர்ந்தெடுத்ததன் விளைவே ஆகும் என நேற்று இங்குள்ள அரேனாவில் நடைபெற்ற 'பிஎன் 4 யூ' நிகழ்வில் உரையாற்றியபோது அவர் இவ்வாறு கூறினார்.\nஇத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்கு தீர்வு காண்பது மஇகாவும் தேசிய முன்னணியும் தான் ஆகும்.\nஆகவே, வரும் பொதுத் தேர்தலில் இங்கு களமிறங்கும் தேசிய முன்னணி வேட்பாளரை மக்கள் முழுமையாக ஆதரிக்க வேண்டும். அவரின் வெற்றிக்கு மக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என தினாளன் வலியுறுத்தினார்.\nமேலும் இந்நிகழ்வில் உரையாற்றிய பேராக் மாநில மஇகா இளைஞர் பிரிவுத் தலைவரும் சுங்கை சிப்புட் மஇகா இளைஞர் பிரிவுத் தலைவருமான மு.நேருஜி உரையாற்றுகையில், எதிர்க்கட்சியின் ஆட்சியில் மக்கள் தங்களது வாழ்வாதாரத்தையே அடமானம் வைத்து விட்டனர்.\nமானியம் வழங்கப்படாமல் எவ்வித சமூகநல உதவிகளும் இல்லாமல் மக்கள் தண்டிக்கப்பட்டுள்ளனர் என்பதை உணர வேண்டும். இந்த தண்டனை எல்லாம் போதும். இனிமேலாவது அந்த தண்டனையிலிருந்து விடுபட மக்கள் முனைய வேண்டும்.\nஆதலால் வரும் பொதுத் தேர்தலில் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் களமிறங்கும் தேசிய முன்னணி வேட்பாளருக்கு முழுமையான ஆதரவை மக்கள் வழங்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.\nபுகழ் பெற்ற உள்ளூர் கலைஞர்களின் படைப்புகளுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் லிந்தாங் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ ஹாஜி சூல்கிப்ளி, சுங்கை சிப்புட் மஇகா தலைவர் இளங்கோவன் முத்து, துணைத் தலைவர் அஜாட் கமாலுடின், செயலாளர் கி.மணிமாறன், உதவித் தலைவர் முனைவர் சண்முகவேலு, மஇகா இளைஞர் பிரிவினர், பொதுமக்கள் என திரளானவர்கள் கலந்து கொண்டனர்.\nஜசெகவின் 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் 10 நாட்களுக்கு இடைநீக்கம்\nமக்களவையை அவமதிப்பு செய்ததற்காக ஜசெகவைச் சேர்ந்த மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் 10 நாட்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டனர்.\n1எம்டிபி விவகாரம் தொடர்பில் மக்களவை சபாநாயகர் டான்ஶ்ரீ பண்டிகார் அமின் மூலியா மீது குற்றச்சாட்டு சுமத்தியதோடு அவரை அப்பதவியிலிருந்து விலகுமாறு தைப்பிங் நாடாளுமன்ற உறுப்பினர் ஙா மோர் மிங், பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பி��ர் வீ.சிவகுமார், புருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஙே கூ ஹா ஆகியோர் கோரியிருந்தனர்.\nஇவ்விவகாரம் தொடர்பில் மன்னிப்பு கோருமாறு கடந்த மார்ச் 14ஆம் தேதி கடிதம் வாயிலாக டான்ஶ்ரீ பண்டிகார் அமின் மூலியா கோரியிருந்த போதிலும் அவர்கள் மன்னிப்பு கேட்க தவறியதால் இன்று 26ஆம் தேதி தொடங்கி 10 நாட்களுக்கு இடைநீக்கம் செய்யப்படுவதாக மக்களவை துணை சபாநாயகர்\nடத்தோ ரோனால்ட் கியாண்டி அறிவித்தார்.\nஊழல் விவகாரத்தை மூடி மறைக்க கூட்டணி சேர வேண்டாம் எனவும் மக்களவை சபாநாயகர் பதவியிலிருந்து பண்டிகார் அமின் விலக வேண்டும் எனவும் இந்த மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களும் கோரியிருந்தனர்.\nகளைக்கட்டியது இயாசாவின் மாணவர் விழா 2018\nமலேசிய இந்திய ஆத்ம சக்தி இயக்கம் கடந்த 8 ஆண்டுகளாக மாணவர் விழாவை மிகச் சிறப்பாகவும் துடிப்புடனும் செயல்படுத்தி வருகின்றது. அந்த வகையில், இவ்வாண்டிற்கான மாணவர் விழா கிள்ளானில் அமைந்துள்ள தமது தலைமையகத்தில் மிகச் சிறப்பாக தொடக்கம் கண்டது.\nமாணவர்கள் கல்வி கேள்விகளிலும், புறப்பாட நடவடிக்கைகளிலும் சிறந்து விளங்க வேண்டும். அதோடு, இன்றைய மாணவர்கள் நாளைய தலைவர்கள் என்பதுபோல சமுதாயத்தின் நற்பெயரை பள்ளிகளில் நிலைநாட்ட வேண்டும் என்று இந்த மாணவர் விழாவை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்த பிரதமர் துறை துணை அமைச்சர் டத்தோஶ்ரீ எஸ்.கே.தேவமணி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.\nமாணவர்கள் கல்வி கேள்விகளில் மட்டுமில்லாமல் புறப்பாட நடவடிக்கைகள், பாரம்பரிய விளையாட்டுகளிலும் பீடுநடைபோட வேண்டும் என்ற உன்னத நோக்கில் இயாசா இயக்கம் மாணவர்களுக்காகவே ஒவ்வோர் ஆண்டும் பள்ளி விடுமுறை காலங்களில் இந்த மாணவர் விழாவை மேற்கொண்டு வருகிறது.\nஇந்த விழாவின் வழி, மாணவர்களின் திறமைகளை வெளிகொணரவும் இது தளமாக அமைகிறது என்றால் அது மிகையாகாது. படிவம் ஒன்று முதல் படிவம் ஐந்து வரை பயிலும் இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்கு முக்கியத்துவம் வழங்கி மொத்தம் 18 போட்டிகளை இயாசா நடத்தி வருவதாக இவ்வியக்கத்தின் தலைவர் எம்.வசந்தகுமார் தெரிவித்தார்.\nதற்போது, கிள்ளானில் மேற்கொண்டு வரும் இந்த மாணவர் விழாவை பேராக், நெகிரி செம்பிலான், மலாக்கா, ஜோகூர் பாரு என இதர மாநிலங்களில் பயிலும் இடைநிலைப்பள்ளி மாணவர்களும் நன்மை பயக்கும் வகை��ில் கொண்டு செல்லப்பட வேண்டும் என்ற இயாசாவின் நோக்கம் கூடிய விரைவில் நடத்துவதற்கு திட்டமிட்டு வருவதாக ஏற்பாட்டு குழுவினர் தெரிவித்தனர்.\nமுதல் கட்டமாக, ஜோகூர் மாநிலத்தில் உள்ள 18 இடைநிலைப்பள்ளியில் மாணவர் விழாவை தொடக்கி விட்டதாகவும் கூறினர்.\nஇந்த மாணவர் விழாவை மாணவர்களே எடுத்து நடத்துவதுதான் இதன் சிறப்பு அம்சமாக திகழ்கிறது. ASIA METROPOLITAN UNIVERSITY நிர்வாக குழுவினர் இயாசா இயக்கத்திற்கு வெ.25,000 நிதியுதவி வழங்கியது.\n'இயற்கையை காப்போம் இனியதோர் உலகை படைப்போம்' - சிறப்பு கட்டுரை\nபினாங்கு - இயற்கை என்பது இயல்பாக இருப்பது என்பது பொருள் கொண்டதாகும் . இயல்பாகவே தோன்றி மறையும் பொருட்கள் அவற்றின் இயக்கம் , அவை இயங...\nபூச்சோங்- மாரடைப்பின் காரணமாக மனைவியும் அவரை தொடர்ந்து கணவனும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. சிலாங்கூர்,பூச்சோங்கைச் ச...\nசோழன் ஆட்சியை இழந்ததைப்போல, மஇகாவை இழந்து விடாதீர்கள்\nசேரன், சோழன், பாண்டியன் ஆட்சிகளை இழந்து 500 ஆண்டுகளைக் கடந்து விட்டோம். இங்கு வந்து 200 ஆண்டுகளாகக் கட்டமைத்த வாழ்க்கையைத்தான் இன்றும...\nசுங்கை சிப்புட்; உள்ளூர் வேட்பாளரை களமிறக்கினால் த...\nபினாங்கு விமான நிலையத்திற்கு அருகிலிருந்த கிடங்குக...\nமாணவி வசந்தபிரியாவின் மரண விசாரணை வழக்கு மே 24,25க...\nவிருது பெற்றாலும் மகளின் ஏக்கம் வேதனை தருகிறது - த...\nவேன் கவிழ்ந்தது; 2 அந்நிய நாட்டவர்கள் பலி\nதொகுதி எல்லை மறுசீரமைப்பு; அரசாங்கத்தின் தலையீடு க...\nதேர்தல் முடிவுக்கு பின்னரே மக்களின் விருப்பத்தை அற...\nசித்தியவான் தொகுதி பெயர் மாற்றம்; ஜசெக வெற்றியை சீ...\nதொகுதி எல்லை சீரமைப்பு; 129 நாடாளுமன்ற உறுப்பினர்க...\nகேமரன் மலையில் போட்டியிடும் வாய்ப்பு எனக்கு மறுக்க...\nஉறுப்பினர் எண்ணிக்கை அதிகரிக்கச் செய்வதில் மலேசிய ...\nதொகுதி எல்லை சீரமைப்பு மசோதாவை எதிர்த்து பெர்சே அம...\nகொஸ்மோபொயிண்ட் கல்லூரியின் உபகாரச் சம்பளத்துடனான உ...\nதிருமதி இந்திரா காந்திக்கு அமெரிக்காவின் 'துணிச்...\n2 நாடாளுமன்றம், 3 சட்டமன்றத் தொகுதிகள்; மைபிபிபி ...\nமக்களின் நிலையை அறிந்த வேட்பாளரே வெற்றி பெற முடியு...\nநம்பிக்கைக் கூட்டணி ஆட்சியமைத்தால் 'மீஃபா'வுக்கு ...\nதமிழ் இடைநிலைப்பள்ளி; தேமு நிலம் கொடுக்கவில்லையென்...\nஎதிர்க்கட்சியை ஆதரித்தது போதும்; இனியும் தண்டிக்கப...\nஜசெகவின் 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் 10 நாட்களுக்கு...\nகளைக்கட்டியது இயாசாவின் மாணவர் விழா 2018\n; மூடி மறைப்பது ஏ...\nஇந்தியர்கள் சார்ந்த கேள்விகளுக்கு 2 நிமிடங்களில் ப...\nகடுமையான காற்று,மழை; வீட்டு கூரைகள் பறந்தன\nசுங்கை சிப்புட்; இறுதி நேர வேட்பாளராகிறார் வேள்பாரி\nவாய்ப்புகளை முழுமையாக அறிந்திடாததே இந்திய சமூகத்தி...\nஉள்ளூர் வேட்பாளர்; எதிர்க்கட்சி ஆதரவாளர்களின் ஆதரவ...\nகேமரன் மலையை இழந்து விடக்கூடாது என்பதற்காக பிரதமர்...\n'நட்சத்திர விழா'வினால் இந்திய சமுதாயத்திற்கு என்ன ...\nயோகேந்திரபாலனுக்கு 'சீட்' கொடுப்பதை தேமு பரிசீலிக்...\nமுகமட் ஹசானின் உரை குண்டர் கும்பலைக் குறிக்கவில்லை...\n\"தேமு நல்ல அரசாங்கம் தான்; ஆனால் அலட்சியமும் பலவீன...\nகையாளும் யுக்தி அறிந்தால் சிறப்பு குழந்தைகள் வாழ்வ...\nசுங்கை சிப்புட் தொகுதியை மீட்டெடுக்க யோகேந்திரபாலன...\n36 பேர் மீதான வழக்கு ஏப்.24க்கு ஒத்திவைப்பு\nமலேசிய அரசியல் சூழலை உலுக்கும் 'புகைப்பட அரசியல்...\nஎம்எச் 17 விமானத்தை ரஷ்யா சுட்டு வீழ்த்தியதாக குற்...\nசசிகலாவின் கணவர் நடராஜன் காலமானார்\nகுண்டுகள் துளைக்கப்பட்ட நிலையில் எம்எச் 370 விமானம...\nஎம்எச் 370 சுட்டு வீழ்த்தப்பட்டது; பொறியியலாளர் அத...\nபாஸ் ஆதரவு பேரவையில் இணைந்தார் டத்தோ குமார் அம்மான்\nதேமு வேட்பாளர் பட்டியல் முன்கூட்டியே அறிவிக்கப்படு...\nமனவளம் குன்றிய சிறார்களுக்கு அன்பும் கனிவும் மட்டு...\n10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் டத்தோஶ்ரீ சரவண...\n4 பேரின் 'சதி'யால் ஊத்தான் மெலிந்தாங் பறிபோனது - ட...\nகோலாலம்பூர் மருத்துவமனையில் தீ விபத்து; புலன் விசா...\nதேமு வெற்றி பெற வேண்டுமானால் உள்ளூர் வேட்பாளரை களம...\nசுங்கை சிப்புட்டில் வேள்பாரியே வேண்டும்- கோரிக்கை...\n'கேமரன் மலை' கேவியசுக்கே; வலுபெறும் ஆருடம்\nசுங்கை சிப்புட்டில் தேமுவின் வெற்றி வேட்பாளருக்கான...\nவசந்தபிரியா மரணம்; மார்ச் 30இல் நீதி விசாரணை நடத்த...\nமாணவர்களின் வெற்றிக்கு பெற்றோர்களின் ஊக்குவிப்பு ...\nசவாலாக இருந்ததெல்லாம் சாதனையாக மாறியது வெற்றி பாத...\nஎஸ்பிஎம் தேர்வு; 10ஏ பெற்றார் அஸ்வேந்திரன்\nஎஸ்பிஎம் தேர்வு; சரணமுதன் 9ஏ பெற்றார்\nஎஸ்பிஎம் முடிவுகள்; சிறந்த அடைவுநிலையை பதிவு செய்த...\nஎஸ்பிஎம் தேர்வு முடிவுகள்: டத்தோ ஹாஜி அப்துல் வஹாப...\n���ஸ்பிஎம் தேர்வில் 11ஏ பெற்றார் சஷ்வினி மேனன்\n'இந்திய சமுதாயத்திற்காக எதையுமே செய்யவில்லையா\nவாழ்க்கைத் தரத்தை மாற்றியமைக்க வேண்டுமா\nதேமு வேட்பாளரின் வெற்றியை இலக்காகக் கொள்வோம்- தங்க...\nநாளை வெளியாகிறது எஸ்பிம் தேர்வு முடிவுகள்\nபிரபல விஞ்ஞானி ஸ்டீபன் ஹக்கிங் காலமானார்\nபேராக்கில் 3 சட்டமன்றத் தொகுதிகளில் மஇகா போட்டி\nசுங்காய் தொகுதியை தான் கைப்பற்றினால் டத்தோஶ்ரீ ஸாய...\nவேட்பாளருக்கும் வாக்காளருக்கும் இடையிலான 'இடைவெளி'...\nஒருங்கிணைப்பாளரானார் டத்தோ சோதிநாதன்; வேட்பாளர் யார்\nதாய்மொழியில் மட்டுமல்லாது பிற மொழிகளிலும் நாட்டம்...\nமாணவர்கள் 'மாற்றத்திற்கானவர்களாக' இருக்கக்கூடாது; ...\nஏப்ரலில் மலேசியாவுக்கு வருகிறாரா ரஜினிகாந்த்\nஎஃகு தூண்கள் சரிந்ததில் ஒருவர் மரணம்; ஐவர் படுகாயம்\nடோவன்பி தோட்ட ஆலய வருடாந்திர திருவிழா\nமனவளம் குன்றிய சிறார்களுக்குக்கு கல்வி பயிற்றுவிக்...\nபக்காத்தான் ஹராப்பான் தேர்தல் கொள்கை அறிக்கை; இந்த...\nஎம்எச் 370: விமானத்தை தேடுவதில் அரசாங்கம் உறுதி- ப...\nபெண்கள் 'கொண்டாட்டத்திற்கு' உரியவர்கள் அல்லர்; \"வண...\n\"மீண்டு வா\"; நான்காண்டு நினைவலைகளில் 'எம்எச் 370'\nகுடிநீர் சேவை துண்டிப்பால் சிரமத்திற்கு உள்ளான தீய...\nகுடிநீர் விநியோக தடை; ஞாயிற்றுக்கிழமை வரை நீடிக்க...\nஎம்எச் 370: கூடுதல் விசாரணை தகவல்கள் நாளை வெளியிடப...\nசிலாங்கூரை தேமு கைப்பற்றுவதற்கான முதன்மையான 5 காரண...\nஇரு தவணைகளுக்கு மட்டுமே பிரதமர் பதவி; லிம் குவான் எங்\nஆலயம் உடைப்பு: தேசிய ஒற்றுமைத் துறை இலாகாவின் நடவ...\nகேமரன் மலையில் ம இகாவே போட்டியிடும்- டத்தோஶ்ரீ சுப...\nபக்காத்தான் கூட்டணியில் ஹிண்ட்ராஃப், நியூ ஜென் பார...\nஉள்ளூர் வேட்பாளர் விவகாரம்; மஇகா தேசியத் தலைவருக்க...\n'கேமரன் மலையில் கேவியஸ்'; பிரதமரிடம் போய் கேளுங்கள...\nபோலியான செய்திகளை தடுக்க புதிய சட்டம்; அரசாங்கத்தி...\nகேஎல்சிசி எதிரே இருந்த மரம் சாய்ந்தது; ஆடவர் காயம்\nசொந்தத் தொழிலில் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டு விட...\nஎங்களை புறக்கணிக்காதீர்; மீறினால் நாங்களும் புறக்க...\nபுந்தோங் தொகுதியை எங்களிடம் வழங்குக; மைபிபிபி பரிந...\nஎனக்கு தேவை 100% முழுமையான ஆதரவு; கிடைக்குமா\nமக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணாத பேராக் மாநில அ...\nஎனக்கான தொகுதியில் பிரதமரின் '��சி'யுடனே 'வேட்பாளரா...\nஎம்எச் 370: 'அப்பா வேலையில் இருப்பதாக மகன் நினைத்...\nதமிழ்ப்பள்ளி மாணவர்கள் மாநில நிலையில் சாதனை படைத்த...\nசுங்கை குருடா தோட்ட ஆலய திருவிழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anumar.vayusutha.in/sthuthi0.html", "date_download": "2021-05-07T01:16:11Z", "digest": "sha1:AP3MP2RGBCAEPFYGYRROMODCMTESJIWQ", "length": 8947, "nlines": 39, "source_domain": "anumar.vayusutha.in", "title": " Sthuthis in praise of Hanuman | இதர மொழிகளில் உள்ள அனுமன் ஸ்லோகங்கள் - \"ஸ்துதிகள்\" தமிழ் எழுத்தில் | Index| பொருளடக்கம் |", "raw_content": "Close ஸ்லோகம் துதிகள்: தமிழ் ஸ்துதி: பிற மொழி கோவில்கள் கட்டுரைகள் பலகை விருந்தினர் ஏடு எங்கள் இணையம் பற்றி ஆங்கில இணையம் ஹிந்தி இணையம் வெளியீடு புதிய சேர்க்கை: தமிழ் இணையம் புதிய சேர்க்கை: ஆங்கில இணையம் புதிய சேர்க்கை: ஹிந்தி இணையம்\nதுதிகள்: தமிழ் ஸ்துதி: பிற மொழி\nபலகை எங்கள் இணையம் பற்றி வெளியீடு இணையம் ஆங்கில இணையம் ஹிந்தி இணையம்\nதமிழ் இணைய தளம் ஆங்கில இ. தளம் ஹிந்தி இ. தளம்\nஸ்லோகம் துதிகள்: தமிழ் ஸ்துதி: பிற மொழி கோவில்கள் கட்டுரைகள் பலகை விருந்தினர் ஏடு எங்கள் இணையம் பற்றி ஆங்கில இணையம் ஹிந்தி இணையம் வெளியீடு புதிய சேர்க்கை: தமிழ் இணையம் புதிய சேர்க்கை: ஆங்கில இணையம் புதிய சேர்க்கை: ஹிந்தி இணையம்\nவாயு சுத: இதர மொழிகளில் உள்ள அனுமன் ஸ்லோகங்கள் - \"ஸ்துதிகள்\" தமிழ் எழுத்தில்\nஸ்ரீ துளசிதாஸர் எழுதியருளியது. ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமியின் பெருமையை, மஹிமையை நாற்பது ஈரடியில் அனுபவித்து படைத்துள்ளார். இது வெறும் ஸ்துதி அன்று. மாபெரும் 'ஸித்த க்ரந்தம்'. ஸ்ரீமத் இராமாயணம் மாபெரும் காவியம், இதிகாஸம். இராமாயணத்தைப் படிப்பதின் பலன் யாவரும் அறிந்த ஒன்று. இதை முழுவதும் எளியவரும் படிக்க முடியும் வகையில் 'ராம சரித்ர மானஸ்' என்ற காவியத்தை படைத்தவர் இவர். இன்றும் வடநாட்டில் இது பலரால் படிக்கப் பட்டு வருகிறது. ஸ்ரீதுளசிதாஸர் ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமியின் உபாஸகர்.\n02. ஹனுமான் சங்கட மோட்சன அஷ்டகம்\nஸ்ரீ துளசிதாஸர் எழுதியருளியது. ஹனுமான் சாலீஸா படித்தவுடன் சங்கடங்களை போக்கும் இந்த அஷ்டகத்தையும் படிப்பது வடநாட்டில் வழக்கத்தில் உள்ளது.\nஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமியின் அவதாரமான ஸ்ரீ ஸமர்த்த ராமதாஸர் அவர்களால் இயற்றப்பட்டது இந்த ஸ்துதி. மஹான் ஸ்ரீ ஸமர்த்த ராமதாஸர் அவர்களைப் பற்றி ஸ்ரீ காஞ்சி ஸ்ரீஸ்ரீபரமாச்சா��ியார் கூறியதை நம் கட்டுரை பகுதியில் காண்க. அம் மஹான் 'த்ரயோதஸாக்ஷரி' என்ற 'ஸ்ரீ ராம் ஜயராம் ஜய ஜய ராம்' என்கின்ற மஹா மந்த்ரத்தை இவ்வுலகுக்கு அளித்தவர்.\nஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமியின் வஜ்ரங்க அம்பு. இந்த ஸ்துதியில் பீஜ மந்திரங்கள் உள்ளன. சரியான உச்சரிப்புடன் கூறப்படுமானால் வாழ்வில் எல்லா தடைகளையும் வெற்றி கொள்ள முடியும்.\n05. ஸ்ரீ ஆஞ்ஜநேய சூர்ணிகா\nபத்ராசலத்தில் ஸ்ரீராமருடைய ஆலயத்தை புதிப்பித்து, கடைசியில் கைகளில் சாமரங்கள் ஏந்தி ஸ்ரீ பத்ராசல ராமதாஸர் ஹநுமானை இக்கத்யத்தினால் பணிந்தார்:\n06. ஸ்ரீ ஆஞ்ஜநேய தண்டகம்\nஸ்ரீ ஆஞ்சநேய தண்டகம் - தெலுங்கு மொழியில் ஸ்ரீ ஹநுமானை பற்றிய வர்ணனையுடன் கூடிய பணிவுறை:\n~ ~I ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க I~ ~\nகாற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்\nபல மகான்கள் ஸ்ரீ ஆஞ்சநேயரை, அவரின் வீரத்தை, ஞானத்தை, உறுதிப்பாட்டை, வாக்குவன்மையை, அஞ்சாநெஞ்சத்தை, விழிப்புணர்ச்சியை, ஸ்ரீ இராம பக்தியை பற்றி, கூறியதை 'கட்டுரை'யிலும், பாடி பரவசமானதை 'ஸ்லோக'ங்களிலும், 'துதி'களிலும், 'ஸ்துதி'களிலும், அவர் அருள்பாலிக்கும் க்ஷேத்திரங்களை 'கோயில்'களிலும் தொகுத்து அளித்துள்ளோம்.\nகாற்றின் மகன் - அனுமனின் புகழ் பாடும் இவ்விணைய தளம் தாங்களை எதிர்கொண்டு வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறது. ஆஞ்சநேய ஸ்வாமியின் புகழ் உலக தமிழர்களை சென்றடைய வரும் இணைய தளம்.\nஅனுமன் வித்தியாசமாக - வேகமாக - முன்னோக்கி சிந்திப்பவர். செயலில் வீரன். வினையத்தின் உச்சம் அவர்\nபக்தர்களின் வல்வினை தீர்த்து மங்களம் அனைத்தும் அளிக்கும் அனுமனின் பதம் பணிவோம். பக்தர்களின் துர்சிந்தனைகளையும், தீய செயல்களையும் வேருடன் அறுத்து, அவர் தம் நினைவிலும் சொல்லிலும் செயலிலும் தூய்மை புகட்டுபவர். அவ்வனுமனின் தாள் சரணம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=1111", "date_download": "2021-05-07T00:30:53Z", "digest": "sha1:MF27RIM3P22FHZRYICQVN3BYWHBNQL5A", "length": 14599, "nlines": 80, "source_domain": "www.varalaaru.com", "title": "Varalaaru - A Portal For South Asian History Varalaaru - A Monthly Web Magazine for South Asian History", "raw_content": "\n[ நவம்பர் 16 - டிசம்பர் 17, 2012 ]\nசேக்கிழாரும் அவர் காலமும் - 4\nஇதழ் எண். 89 > கலையும் ஆய்வும்\nசேக்கிழாரும் அவர் காலமும் - 4\nஇதுகாறும் கூறிப்போந்த இலக்கியச் சான்றுகளாலும் கல்வெட்டுச் சான்றுகளாலும் அநபாயன் இரண்டாம் குலோத்துங்கனே என���பது ஐயமற விளங்கும். அம்முடிபை நன்கு வலியுறுத்தும் மற்றொரு கல்வெட்டுச் செய்தியை இங்குக் காண்க. இரண்டாம் இராசராசன் காலத்துத் திருவானைக்காக் கல்வெட்டில், விக்கிரம சோழ நல்லூரிலும் அநபாய மங்கலத்திலும் இருந்த சில நிலங்கள் ஆனைக்காவுடைய மகாதேவர்க்கு விற்கப்பட்டன என்ற சொல் காணப்படுகிறது(31). விக்கிரம சோழற்கு மகன், இரண்டாம் குலோத்துங்கன்; இக்குலோத்துங்கற்கு மகன் இரண்டாம் இராசராசன். எனவே, கல்வெட்டுக் குறித்த 'விக்கிர சோழ நல்லூர்' என்பது விக்கிரம சோழன் பெயர் கொண்டது; அதற்குப் பிற்கூறப்பட்ட 'அநபாய மங்கலம்' என்பது, அவ்விக்கிரமற்குப் பின் பட்டம் பெற்ற இரண்டாம் குலோத்துங்கன் பெயர் கொண்டது என்பன மிகவும் தெளிவாகத் தெரிகின்றன. தெரியவே, 'அநபாயன்' என்பது இரண்டாம் குலோத்துங்கனது சிறப்புப் பெயரே என்பது அங்கைக் கனியென விளங்குதல் காண்க.\nமேற்சொன்ன இரண்டாம் இராசராசன் (கி.பி. 1146-1173) இராசராசபுரத்தில் (தாராசுரத்தில்) சிவன் கோயில் ஒன்றைக் கட்டினான். அங்கு அவன், அவன் கோப்பெருந்தேவி ஆகிய இருவர் உருவச் சிலைகளும் இருக்கின்றன(32). அக்கோவில் சிவனார் இறை அகத்தைச் சுற்றி உள்ள வெளிப்புறப் பட்டியற் பகுதிகளில் பெரிய புராண நாயன்மார் வாழ்க்கையிற் சிறப்புடைய ஒவ்வொரு நிகழ்ச்சி குறித்த உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன; அவற்றின்மேல் அந்நிகழ்ச்சியை விளக்கும் சொற்கள் காண்கின்றன(33). நாயன்மார் அனைவர் வரலாற்றுக் குறிப்புக்களும் இவ்வளவு தெளிவாக இவ்வரசற்கு முன் காட்டப்பட்டன என்றுகொள்ள எவ்விதச் சான்றும் இல்லை. ஆதலின், இவன் காலத்தில் நாயன்மார் வரலாற்று விவரங்கள் மக்கள் எல்லோருக்கும் விளங்கக்கூடிய முறையில் வெளிப்பட்டிருத்தல் வேண்டும் என்பது தெளிவாகிறது. அங்ஙனம் வெளியாதற்கு உறுதுணையாக இருந்திருக்கக்கூடிய நூல், இவன் தந்தை காலத்தில் பாடப்பெற்ற சேக்கிழார் திருத்தொண்டர் புராணமே ஆதல் வேண்டும் என்பது பொருத்தமன்றோ\nசேக்கிழார் பெரிய புராணம் பாடுவதற்கு முன் இவனிடமே நாயன்மார் வரலாற்றைக் கூறியுள்ளார்; அதன் பிறகே அரசன் அதனை அறிந்து அவரைப் புராணம் பாடச் செய்தான் என்று திருத்தொண்டர் புராண வரலாறு கூறல் முன்னரே கண்டோம் அன்றோ அது கொள்ளத்தக்கதாயின், இரண்டாம் இராசராசன் தன் இளவரசுக் காலத்திலிருந்தே சேக்கிழாரை நன்கு அறிந்தவ���்; நெருங்கிப் பழகியவன்; நாயன்மார் வரலாறுகளை அவர் வாயிலாகவும் பின்னர் அவர் செய்த பெரியபுராண வாயிலாகவும் தெளிவாக அறிந்தவன் என்பன உணரலாம். அவன் அரசனான பின்னர்த் தன் பெயர் கொண்டு கட்டிய பெருங்கோவிலில் சிவபிரான் இறையிடத்துப் புறச்சுவரில், அவ்விறைவனையே பாடித் தொழுது முக்தி அடைந்த நாயன்மார் வரலாற்றுக் குறிப்புகளைச் சிற்பங்கள் வாயிலாக உலகத்திற்கு உணர்த்தினான் என்பது பெரிதும் பாராட்டத் தக்கதாகும். இச்சிறப்புடைய செயலை நோக்கப் பெரியபுராணம் இரண்டாம் இராசராசன் காலத்திற்றானே மக்களிடம் பரவத் தொடங்கியதென்று ஒருவாறு நம்பலாம்(34).\nமேற்சொன்ன முடிபை அரண் செய்வதுபோலத் திருவொற்றியூர்க் கல்வெட்டு ஒன்று காண்கிறது. அஃது இரண்டாம் இராசராசற்குப் பின்வந்த இரண்டாம் இராசாதிராசனது (கி.பி. 1164-1182) ஒன்பதாம் ஆட்சியாண்டில் (ஏறத்தாழக் கி.பி. 1174இல்) வெளியிடப்பெற்றதாகும். அதனில், \"திருப்பங்குனி உத்தரத்து ஆறாந்திருநாளான புதன்கிழமையும் ஏகாதசியும் கூடிய ஆயில்யத்தினன்று மடத்துத் தலைவரான சதுரானன பண்டிதர், காபாலிகரது சோமசித்தாந்தத்தை விரித்த வாகீசப் பண்டிதர், இரண்டாம் இராசாதிராசன் முதலியவர்கட்குமுன் படம்பக்க நாயக தேவர் திருமகிழின் கீழ்த் திருவோலக்கம் செய்து எழுந்தருளியிருந்தது ஆளுடைய நம்பி ஸ்ரீபுராணம் கேட்டருளா நிற்க......\"(35) என்னும் அரிய செய்தி காணப்படுகிறது.\n'ஆளுடை நம்பி' என்பது சுந்தரர் பெயர். எனவே, அவரைப்பற்றிய புராணமே கோயிலில் படிக்கப்பட்டது என்பது தெரிகிறது. மக்கள் கேட்கத்தக்க நிலையிலும் கோயிலில் விளக்கமாக வாசிக்கத்தக்க முறையிலும் சுந்தரர் வரலாற்றைக் கூறுவது பெரியபுராணம் ஒன்றேயாகும். மேலும், சுந்தரர் வரலாறு கூறும் வடமொழி நூலோ, வேறு தமிழ் நூலோ சேக்கிழார்க்கு முன் இருந்தது என்று கூறச் சான்றில்லை யாதலின், திருவொற்றியூர்க் கோயிலில் படிக்கப்பட்டது சேக்கிழார் செய்த பெரிய புராணத்துள் அடங்கிய சுந்தரர் புராணமாகவே இருத்தல் வேண்டுமெனக் கோடல் பொருத்தமாகும்.\nஇக்கோயில் இராசராசேச்சரம் என்ற பெயர்கொண்டு இருப்பதும், இங்குள்ள கல்வெட்டுகளிற் பழையன இரண்டாம் இராசராசனுடையனவாக இருப்பதும் காண, இக்கோயில் இரண்டாம் இராசராசன் கட்டினான் எனல் பொருந்தும். இங்ஙனம் இருப்பக் கல்வெட்டறிஞர், இது மூன்றாம் குலோ��்துங்கனாற் கட்டப்பட்டது என்று குறிப்பிட்டது பொருந்தாது. -A.R.E. 1908, II, 65 & 66\nஇப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.\nதங்கள் பெயர்/ Your Name\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/vazhai-thandu-thiri-deepam/", "date_download": "2021-05-07T00:52:55Z", "digest": "sha1:OPWEWFJN4J5ONLZ3IS4RNLJAXEY4LZSM", "length": 15025, "nlines": 104, "source_domain": "dheivegam.com", "title": "குடும்பத்தில் பிரச்சனை தீர | Kudumbam Sirakka Parharam Tamil", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் இவர்கள் பரம்பரையே கொடிகட்டி வாழ்ந்த பரம்பரை என்ற பேச்சை வரும் காலங்களில் உங்கள் ஊரே பேசும்....\nஇவர்கள் பரம்பரையே கொடிகட்டி வாழ்ந்த பரம்பரை என்ற பேச்சை வரும் காலங்களில் உங்கள் ஊரே பேசும். அந்த அளவிற்கு உங்கள் குடும்பம் செல்வ செழிப்போடு வளர எந்த திரியில், என்ன தீபம் ஏற்ற வேண்டும்\nநாம் இந்த பூமியில் வாழ்ந்து சென்றதற்கு அடையாளமாக எதை விட்டு செல்கின்றோம் நாம் வாழ்ந்த காலத்திற்கு பின்பு, நம்மை பற்றி பேசுவதற்கு நம்முடைய சந்ததியினரை மட்டும்தானா நாம் வாழ்ந்த காலத்திற்கு பின்பு, நம்மை பற்றி பேசுவதற்கு நம்முடைய சந்ததியினரை மட்டும்தானா அல்லது நாம் வாழ்ந்த வாழ்க்கையைப் பற்றி, வரலாறு பேச வேண்டுமா அல்லது நாம் வாழ்ந்த வாழ்க்கையைப் பற்றி, வரலாறு பேச வேண்டுமா இந்த உலகத்தில் வாழ்ந்து இறந்த பின்பு, நம்முடைய உடல் இந்த பூமியை விட்டு மறைந்த பின்பும் கூட நாம் வாழ்ந்த வாழ்க்கையை இந்த ஊர் உலகம் பேசிக் கொண்டே இருக்க வேண்டும். நம்முடைய சந்ததியினர்களைப் பார்க்கும் போது\nசில ஊர்களில், சில குடும்பத்தைப் பார்த்தால் இப்படி சொல்லுவார்கள். குறிப்பாக கிராமப்புறங்களில் இவர்களது அம்மா அப்பா, தாத்தா பாட்டி, கொள்ளுத் தாத்தா பாட்டி எல்லாம் கொடி கட்டி வாழ்ந்தவர்கள். இவர்களுடைய குடும்பம் மிகப் பெரிய குடும்பம். என்றவாறு அவர்கள் குடும்பத்தை பற்றிய பேச்சு அந்த ஊர் முழுக்க பேசப்படும். இவ்வாறாக நம்முடைய குடும்பமும் பெரியதாகத் தழைக்க வேண்டும். செல்வ செழிப்போடு வாழ்ந்து, ஊரில் பெயர் சொல்லும் அளவிற்கு வளரவேண்டும் என்றால் இறைவழிபாட்டை தினம்தோறும் நம்முடைய வீட்டில் எப்படி செய்ய வேண்டும்.\n��ரே வார்த்தையில் சொல்லப்போனால், வாழையடி வாழையாக நம் குடும்பம் தழைக்க வேண்டும். அதுவும் செல்வ செழிப்போடு நல்ல பேரோட தழைக்கவேண்டும். வாழை மரத்தில் இருக்கக்கூடிய ஒரு பொருள் கூட, பயன்பாட்டிற்கு உகந்ததல்ல, என்று சொல்லவே முடியாது. அந்த அளவிற்கு வாழை மரத்தின் எல்லா பொருட்களையும் நம்மால் பயன்படுத்த முடியும். இதேபோல் நம்முடைய குடும்பமும், குடும்பத்தில் உள்ளவர்களும், எல்லோருக்கும் எப்போதுமே பயன் படத்தக்க விதத்தில் தான் இருக்க வேண்டும்.\nஇப்படிப்பட்ட இந்த வாழை மரத்திலிருந்து எடுக்கக்கூடிய திரி தான் வாழைத்தண்டு திரி. இந்த திரியில் நம்முடைய வீட்டில் தீபம் ஏற்றுவது நம் குடும்பத்திற்கு மிகவும் நல்லது. குறிப்பாக நம்முடைய வீட்டில் வாங்கக் கூடிய வாழை தண்டிலிருந்து, உறிக்கப்படும் பட்டையிலிருந்து, நம் கையாலேயே நாரை எடுத்து, நாம் விளக்கு ஏற்றும் தீபத்தில் போட்டு, தீபம் ஏற்ற வேண்டும்.\nவாழைத்தண்டு மட்டைகளை நன்றாக வெயிலில் உலர்த்திக் கொள்ளுங்கள். அதன் பின்பு காய்ந்த அந்த மட்டையிலிருந்து உரித்து எடுத்தால், சின்ன சின்னதாக நமக்கு திரிகள் கிடைக்கும். அதை நன்றாக காய வைத்து விட்டு, ஒரு டப்பாவில் போட்டு சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள். நாம் விளக்கேற்றும் எந்த திரியாக இருந்தாலும், பரவாயில்லை. அதனோடு இந்த வாழை தண்டிலிருந்து நாம் எடுத்த ஒரு திரையையும் சேர்த்து, திரித்து நம் வீட்டில் உள்ள விளக்கில் நெய் ஊற்றி, இந்த திரியின் மூலம் தீபம் ஏற்றினால் நம்முடைய குடும்பம் கொடி கட்டி வாழும், வாழை மரம் போல வளரும் என்பதில் சந்தேகமே கிடையாது. வாரத்தில் ஒரு முறையாவது, இந்த தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு, குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து ஒன்றாக, குலதெய்வத்தை மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். குடும்பம் செழிப்பாக வளர வேண்டும் என்று\nநம்முடைய சந்ததியினர், நாம் சொன்ன பேச்சைக் கேட்டு நல்லபடியாக வளர்ந்து, வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் அடைவார்கள். ‘இந்த குடும்பம் என்ன பாவம் செய்ததோ, கடைசிவரை உருப்படாமலேயே போய்விட்டது.’ என்ற சூழ்நிலை இருந்தால் கூட, அந்த சூழ்நிலையை மாற்றி, அந்தக் குடும்பத்தில் உள்ளவர்களை நல்வழியில் நடத்திச் செல்லக்கூடிய சக்தியும் இந்த தீப வழிபாட்டிற்கு உண்டு. உங்கள் குடும்பத்தைப��� பற்றி இந்த உலகம் நிச்சயம் தவறாக பேசாது.\nஉங்களுடைய குடும்பமும் உங்களுடைய சந்ததியினரும் இந்த பூமியில் கொடிகட்டி வாழவேண்டும் என்று நினைத்தால், நீங்களும் உங்களுடைய வீட்டில் இந்த தீபம் ஏற்றுவதை வழக்கத்திற்கு கொண்டு வாருங்கள். நிச்சயம் இந்த தீபமேற்றி தொடங்கிய குறிப்பிட்ட சில நாட்களுக்குள், உங்கள் வீட்டில் நல்ல முன்னேற்றம் அடைவதை உங்களால் உணர முடியும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.\nபுதிய வீட்டிற்கு குடியேறுபவர்கள் இந்த 1 பொருளை கொண்டு சென்றால் கோடீஸ்வரர் ஆவது உறுதி தெரியுமா\nஇது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nஉங்கள் வீட்டிற்கு வருபவர்கள் வீட்டை பார்த்து பொறாமைப்படுகிறார்களா இந்த பழத்தை இப்படி ஒளித்து வையுங்கள் இந்த பழத்தை இப்படி ஒளித்து வையுங்கள் பொல்லாக் கண் திருஷ்டியும் நொடியில் ஒழிந்துவிடும்.\nவெள்ளிக்கிழமையில் இந்த கலசத்தை பூஜை அறையில் வைத்தால் உங்கள் கையில் பண புழக்கத்திற்கு பஞ்சமே இருக்காது\nகண்ணை கலங்க வைக்கும் கஷ்டம் வரும்போது, வீட்டில் இருந்தபடியே இந்த வழிபாட்டினை செய்தால் தீராத கஷ்டத்திற்கும் தீர்வு கிடைக்கும்.\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaipoonga.net/cinema/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE/", "date_download": "2021-05-07T00:07:55Z", "digest": "sha1:ZNZYNWXXXKDLXF6F5HDKKFBY5OQCOIR6", "length": 10687, "nlines": 216, "source_domain": "kalaipoonga.net", "title": "இந்திய நடிகர்களில் அதிகம் ரீட்விட் செய்யப்பட்ட விஜய் செல்ஃபி! - Kalaipoonga", "raw_content": "\nHome Cinema இந்திய நடிகர்களில் அதிகம் ரீட்விட் செய்யப்பட்ட விஜய் செல்ஃபி\nஇந்திய நடிகர்களில் அதிகம் ரீட்விட் செய்யப்பட்ட விஜய் செல்ஃபி\nஇந்திய நடிகர்களில் அதிகம் ரீட்விட் செய்யப்பட்ட விஜய் செல்ஃபி\nகடந்த பிப்ரவரி மாதம் மாஸ்டர் படப்பிடிப்பு நெய்வேலியில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. படபிடிப்பு நடைபெறும் இடத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிய துவங்கினார்கள்.\nதொடர்ந்து அதிகரித்து வந்தது ரசிகர் கூட்டம். அவர்களை ஊக்குவிக்கும் வகையில் படபிடிப்பினை முடித்த தளபதி விஜய் அங்கிருக்கும் பேருந்து ��ன்றில் ஏறி ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார். அதனை தனது ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டார் .\nஅந்த செல்ஃபி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. தற்போது இந்திய அளவில் பலராலும் பகிரப்பட்ட ட்விட்டர் பதிவாக அது அமைந்துள்ளது. இதற்கு முன்பு ஷாருக்கானின் புகைப்படம் தான் அதிக அளவில் பகிரப்பட்டதாக இருந்தது. அதனை பின்னுக்கு தள்ளியது தளபதி விஜய்யின் இந்த க்யூட் செல்ஃபி. #INDIAsMostRTedVIJAYSelfie என்ற ஹேஷ்டேக்கில் தளபதி விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் கொண்டாடி வருகிறார்கள்.\nஇந்திய நடிகர்களில் அதிகம் ரீட்விட் செய்யப்பட்ட விஜய் செல்ஃபி\nNext article37 ஆண்டுகளுக்குப் பிறகு முந்தானை முடிச்சு… ஹீரோ, ஹீரோயின் அறிவிப்பு\nமாநாடு டப்பிங் ஆரம்பம்… படக்குழு வெளியிட்ட புகைப்படங்கள்\nமூத்த தலைவர் ஆர்.எம்.வீரப்பனை நேரில் சந்தித்து ஆசி பெற்றார் மு.க.ஸ்டாலின் | Video\nநமீதா தியேட்டர்ஸ் – உண்மை சம்பவங்களின் அடிப்படியில் உருவாகும் படங்களை ஒளிபரப்பும் முதல் OTT தளம்\nவெளியானது 34 பேர் கொண்ட தமிழக அமைச்சரவை பட்டியல்\nவெளியானது 34 பேர் கொண்ட தமிழக அமைச்சரவை பட்டியல் தமிழகத்தின் முதலமைச்சராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை சென்னை - கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்க உள்ளார். கொரோனா பரவலை கருத்தில்...\nமாநாடு டப்பிங் ஆரம்பம்… படக்குழு வெளியிட்ட புகைப்படங்கள்\nமாநாடு டப்பிங் ஆரம்பம்... படக்குழு வெளியிட்ட புகைப்படங்கள் சிம்பு நடிப்பில் உருவாகி உள்ள படம் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கியுள்ள இப்படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார். இப்படத்தில் சிம்பு அப்துல் காலிக்...\nமூத்த தலைவர் ஆர்.எம்.வீரப்பனை நேரில் சந்தித்து ஆசி பெற்றார் மு.க.ஸ்டாலின் | Video\nமூத்த தலைவர் ஆர்.எம்.வீரப்பனை நேரில் சந்தித்து ஆசி பெற்றார் மு.க.ஸ்டாலின் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றதை அடுத்து தமிழகத்தின் அடுத்த முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பு ஏற்க உள்ளார். நாளை (மே 7...\nவெளியானது 34 பேர் கொண்ட தமிழக அமைச்சரவை பட்டியல்\nவெளியானது 34 பேர் கொண்ட தமிழக அமைச்சரவை பட்டியல் தமிழகத்தின் முதலமைச்சராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை சென்னை - கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்க உள்ளார். கொரோனா பரவலை கருத்தில்...\nமாநாடு டப்பிங் ஆரம்பம்… படக்குழு வெளியிட்ட புகைப்படங்கள்\nமாநாடு டப்பிங் ஆரம்பம்... படக்குழு வெளியிட்ட புகைப்படங்கள் சிம்பு நடிப்பில் உருவாகி உள்ள படம் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கியுள்ள இப்படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார். இப்படத்தில் சிம்பு அப்துல் காலிக்...\nமூத்த தலைவர் ஆர்.எம்.வீரப்பனை நேரில் சந்தித்து ஆசி பெற்றார் மு.க.ஸ்டாலின் | Video\nமூத்த தலைவர் ஆர்.எம்.வீரப்பனை நேரில் சந்தித்து ஆசி பெற்றார் மு.க.ஸ்டாலின் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றதை அடுத்து தமிழகத்தின் அடுத்த முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பு ஏற்க உள்ளார். நாளை (மே 7...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2021/03/28/60-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2021-05-07T00:22:37Z", "digest": "sha1:VX6XDLIQLTW2S3VFK7EPCRM22RL7KT2R", "length": 6260, "nlines": 111, "source_domain": "makkalosai.com.my", "title": "60 நிமிடங்கள் மின் விளக்குகள் அணைப்பு | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome இந்தியா 60 நிமிடங்கள் மின் விளக்குகள் அணைப்பு\n60 நிமிடங்கள் மின் விளக்குகள் அணைப்பு\n‘Earth Hour’ என்னும் பூமி நேரம், மார்ச் 27ஆம் தேதியன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது.\nஇதையடுத்து, நேற்றிரவு 8:30 மணியில் இருந்து இரவு 9:30 மணிவரை பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் தங்கள் வீட்டில் உள்ள விளக்குகளை அணைத்து வைத்து ஆதரவு அளித்தனர்.\nநீடித்த நிலைத்தன்மையை ஊக்குவிக்கவும், பருவநிலை மாற்றம் குறித்த அக்கறையைப் பரப்பவும், இயற்கையை நேசிக்கவும் ‘Earth Hour’ அனுசரிக்கப்படுகிறது.\nஉலக வனவிலங்கு நிதியம் (World Wildlife Fund – WWF) முதன்முதலில் 2007ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இந்த முயற்சியைத் தொடங்கியது.\nஅப்போது சுமார் 2.2 மில்லியன் பேரிடம், விளக்குகளை அணைத்து வைத்து பருவநிலை மாற்றத்துக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஆதரவு தருமாறு WWF கேட்டுக்கொண்டது.\nஅதன் பிறகு ஆண்டுதோறும் உலகம் முழுவதும் ‘Earth Hour’ கடைப்பிடிக்கப்படுகிறது.\nஐஃபல் (Eiffel) கோபுரம், சிட்னி ஓப்ரா ஹவுஸ் (Sydney Opera House), பக்கிங்ஹாம் அரண்மனை என பல முக்கிய இடங்களும் ‘Earth Hour’ நேரத்தில், விளக்குகளை அணைத்து ஆதரவு தெரிவித்துள்ளன.\nPrevious articleஏப்ரல் 1 முதல் 8 வங்கிகளின் செக்புக் செல்லாது\nNext articleஅம்னோ ஆண்டுக்கூட்டத்தில் என்னை குறித்த அவதூறு பதாகை- அன்னுவார் குற்றச்சாட்டு\nதமிழ்நாட்டில் நாளை பதவியேற்கவிருக்கும் அமைச்சரவை பட்டியல்\nமருத்துவமனை வாசல்களில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய பஸ்கள்\nவெளிநாட்டு ஆடவரிடம் கொள்ளையடித்ததாக போலீஸ்காரர் உட்பட 4 பேர் கைது\nதமிழ்நாட்டில் நாளை பதவியேற்கவிருக்கும் அமைச்சரவை பட்டியல்\nநாட்டில் 14 புதிய கோவிட் -19 கிளஸ்டர்கள் கண்டுபிடிப்பு\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nஇமாச்சல பிரதேசத்தில் இரவு ஊரடங்கு அமல்\nரெயில்கள் நிற்கும் நிலையங்கள்- நிறுவனங்களே முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/bigg-boss-vanitha-first-ever-video-after-break-up/", "date_download": "2021-05-07T00:36:06Z", "digest": "sha1:5BFR4H7STFAEOO2DMJ6YOSUE5FVU2GSZ", "length": 11602, "nlines": 91, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Bigg Boss Vanitha First Ever Video After Break Up With Peter Paul", "raw_content": "\nHome பிக் பாஸ் பீட்டரின் பிரேக்கப் வீடியோவிற்கு பின் வனிதா வெளிட்ட முதல் வீடியோ – அதுவும் யாருக்காகனு பாருங்க.\nபீட்டரின் பிரேக்கப் வீடியோவிற்கு பின் வனிதா வெளிட்ட முதல் வீடியோ – அதுவும் யாருக்காகனு பாருங்க.\nநடிகையும் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளருமான வனிதாதான் அவ்வப்போது சமூக வளைதளத்தில் விவாதப் பொருளாக மாறி விடுகிறார். பிரபல நட்சத்திர தம்பதிகளான விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் மகளான வனிதாவிற்கு ஏற்கனவே 2 முறை திருமணம் ஆகி பின்னர் அந்த இரண்டு திருமணம் விவாகரத்தில் முடிந்தது அனைவரும் அறிந்த விஷயம் தான். அதன் பின்னர் இவர் நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டர் உடன் காதலில் இருந்து வந்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ள இருந்த நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட மனஸ்தாபம் பிரிந்துவிட்டார்கள். அதன் பின்னர் தனது இரண்டு மகள்களுடன் தனியாக வசித்து வந்த வனிதா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பீட்டர் பவுல் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.\nஇவர்கள் இருவரின் திருமண விவகாரத்தில் எண்ணெற்ற பிரச்சனைகள் வெடித்தது. ஆனால் அதையெல்லாம் மீறி வனிதா, பீட்டர் பவுலை திருமணம் செய்துகொண்டார். இந்த பிரச்சனை ஒரு சில மாதங்கள் ஓடியது மேலும், விரைவில் இருவரும் சட்டப்படி திருமணம் செய்து கொள்வதாகவும் இருந்தனர். இதனிடையே வனிதா பீட்டர் பவுலுடன் சந்தோசமாக ��ாழ்ந்து வந்தார். அடிக்கடி பீட்டர் அவருடன் இணைந்து புகைப்படத்தை போடுவது, ஒன்றாக ஊர் சுற்றுவது, பேட்டி கொடுப்பது என்று மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வந்த வனிதாவிற்கு பீட்டர் பால் ஒரு பேரிடி கொடுத்திருந்தார்.சமீபத்தில் பீட்டர் பவுல் பிரிந்துவிட்டதாக நடிகை வனிதா வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.\nஅதில் பேசிய அவர் பீட்டர் பவுலுக்கு குடி மற்றும் புகை பிடிக்கும் பழக்கம் இருந்ததாகவும் திருமணத்திற்கு பின்னர் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் அவருக்கு 10 15 லட்சத்திற்கு மேல் செலவு செய்து அவரது உயிரை காப்பாற்றியதாகவும் கூறியிருந்தார். மேலும் அவரால் குடிப் பழக்கம் மற்றும் புகை பிடிக்கும் பழக்கத்தை விட முடியவில்லை என்றும் சமீபத்தில் தனது பிறந்த நாளுக்காக கோவா சென்றிருந்த பொழுது அவர் அங்கே குடிப்பதை பார்த்து தனக்கு ஆத்திரம் வந்ததாகவும் கூறி இருந்தார் வனிதா. அதன் பின்னரும் அவர் குடிப்பழக்கத்தை விடாததால் அவரை பிரிந்து விட்டதாக கூறிய வனிதா முதல் மனைவியான எலிசபெத்திடம் மன்னிப்பும் கேட்டார். மேலும் நான் பாதியில் வந்தவள் பாதியிலேயே சென்று விடுகிறேன் என்றும் கண்ணீர் மல்க கூறியிருந்தார் வனிதா.\nவனிதாவின் புதிய வீடீயோவை காண இங்கே க்ளிக் செய்யவும்\nஅதேபோல பீட்டர் பிரிந்த சோகத்தில் இருக்கும் வனிதா இனி கொஞ்சம் நாள் தான் சமூகவலைதளத்தில் வரமாட்டேன் என்றும் கூறியிருந்தார். ஆனால் இவர் பிரபல தனியார் யூடியூப் சேனல் ஒன்றிற்கு நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வருகிறார்.இப்படி ஒரு நிலையில் நடிகை வனிதா பீட்டர் பவுல் பிரிந்த சோகத்தை பகிர்ந்து வீடியோவை அடுத்து முதல் முறையாக இன்னொரு வீடியோவை பதிவிட்டிருக்கிறார். அதாவது தன்னுடைய வழக்கறிஞர் தன்னுடைய தொழிலில் 25 வருடங்களை கடந்து உள்ளதால் அவருக்கு வாழ்த்துக்களை கூறி இருக்கிறார் வனிதா. இவரின் வழக்கறிஞரான ஸ்ரீதர் ஏற்கனவே மீராமிதுன் வழக்கறிஞராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல இவர் பல ஆண்டுகளாக வனிதாவின் நண்பராகவும் அவரின் தனிப்பட்ட வழக்கறிஞராகவும் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleகாப்பாத்துங்க, ஹோட்டலில் அலறி ஓடிய‌ சுசித்ரா. பிக் பாஸ்ஸிற்காக தனிமைபடுத்தப்பட்டுள்ள நிலையில் பரபரப்பு.\nNext articleஅட, பாவமே. கடைசில பாலாவையே அழ வச்சிட்டாய்ங்களே. ஏன்னு பாருங்க.\nபிக் பாஸ் 5வில் கலந்துகொள்வது பற்றி தனது யூடுயூப் சேனலில் தெரிவித்த குக்கு வித் கோமாளி பிரபலம்\nஉடல் எடை கூடி பருமனான அபிராமி – தனது புண்ணகைப்படத்திற்கு கீழ் கேலிக்கு கொடுத்த பதிலடி.\nபிக்பாஸ் சீசன் 4 மிஸ் ஆகிடுச்சு, சீசன் 5-ல் அஸீம் போகிறாரா \nஇது உங்களை கொன்றுவிடும் – கண்ணணீர் மல்க விஜயலஷ்மி வெளியிட்ட வீடியோ.\nவனிதாவிற்கு செம சர்ப்ரைஸ் கொடுத்த பிக் பாஸ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/crime/22253-suicide-case-serial-actress-absconding.html", "date_download": "2021-05-07T01:06:40Z", "digest": "sha1:ZQXPRTO22XQWHNVW4ZQSSX6NB7YVCC3G", "length": 13452, "nlines": 103, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "3 மாத கர்ப்பிணி தற்கொலை டிவி நடிகைக்கு வலைவீச்சு | Suicide case, serial actress absconding - The Subeditor Tamil", "raw_content": "\n3 மாத கர்ப்பிணி தற்கொலை டிவி நடிகைக்கு வலைவீச்சு\n3 மாத கர்ப்பிணி தற்கொலை டிவி நடிகைக்கு வலைவீச்சு\nகேரளாவில் வாலிபர் ஏமாற்றியதால் மூன்று மாத கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவத்தில் டிவி நடிகையை போலீசார் தேடி வருகின்றனர்.கொல்லம் அருகே உள்ள கொட்டியம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் ஹாரிஸ் (24). இவர் அப்பகுதியைச் சேர்ந்த ரம்சி (24) என்ற பெண்ணை தீவிரமாகக் காதலித்து வந்தார். இந்த திருமணத்திற்கு இரு வீட்டினரும் முதலில் சம்மதம் தெரிவித்திருந்தனர். இதையடுத்து ஹாரிசும், ரம்சியும் திருமண கனவுகளில் மிதந்தனர். இருவரும் பல இடங்களுக்குத் தனியாகச் சென்று வந்தனர். ஹாரிஸின் அண்ணன் மனைவி லட்சுமி பிரமோத். இவர் பிரபல டிவி நடிகை ஆவார். இவருக்கும் ரம்சிக்கும் நல்ல தொடர்பு இருந்து வந்தது. இருவரும் சேர்ந்து பல டிக் டாக் வீடியோக்களை செய்துள்ளனர்.\nஇந்நிலையில் ரம்சி கர்ப்பிணியானார்.இதன்பின்னர் ஹாரிஸ் அவரை மெதுவாக ஒதுக்கத் தொடங்கினார். இதற்கிடையே ஹாரிசுக்கு அவரது வீட்டில் வேறு இடத்தில் பெண் பார்க்கத் தொடங்கினர். இதை அறிந்த ரம்சி கடும் மன வேதனை அடைந்தார். இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன் ரம்சி, ஹாரிசுக்கு போன் செய்து தன்னை ஒதுக்குவது ஏன் என்று கேட்டுள்ளார். ஆனால் அதற்கு அவர் சரியாகப் பதில் அளிக்கவில்லை. இதையடுத்து ஹாரிசின் தாயை அழைத்து ரம்சி பேசினார். ஆனால் அவர், தனது மகனுக்கு வேறு இடத்தில் பெண் பார்த்���ிருப்பதாகவும், அவனை மறந்து விடவேண்டும் என்றும் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ரம்சி, வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nஇது குறித்து அறிந்த போலீசார் விரைந்து சென்று ரம்சியின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். ரம்சி தற்கொலை செய்தபோது அவர் 3 மாத கர்ப்பிணியாக இருந்தார். தொடர்ந்து ஹாரிசை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் ஹாரிசுடன் சேர்ந்து ரம்சியை நடிகை லட்சுமி பிரமோதும் தற்கொலைக்குத் தூண்டியது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்த போலீசார் தீர்மானித்தனர். ஆனால் அவர் தலைமறைவாகி விட்டார். இதையடுத்து நடிகை லட்சுமி பிரமோதை போலீசார் தேடி வருகின்றனர்.\nஹர்பஜன் சிங்கிடம் ரூ.4 கோடி அபேஸ் செய்த சென்னை தொழிலதிபர்\nமின்கம்பியை கடித்து எஜமானனின் உயிரை காப்பாற்றிய பாசக்கார நாய்\nஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…\nதம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…\nஆசைக்கு இணங்க மறுத்த பெண் - குத்தகைதாரர் வெறிச்செயல்\nகர்நாடகாவில் தடுபூசி போட்ட பெண்ணிற்கு நிகழ்ந்த கொடுமை\nபிறந்தநாள் விழாவிற்கு சென்ற 12 வயது சிறுமி… மொட்டைமாடியில் வைத்து இளைஞர் வெறிச்செயல்...\nமனைவியுடன் உல்லாசமாக இருந்த உதவியாளர்… கோயிலுக்கு அழைத்துச்சென்று அர்ச்சனை செய்த பூசாரி\n17வயது சிறுமியை 2 ஆண்டுகளாக பலாத்காரம் செய்த பலர் – உறைய வைக்கும் தகவல்கள்\nமனைவியின் தங்கைக்கூட உறவு… கண்டித்த கர்ப்பிணி பெண்ணிற்கு நிகழ்ந்த கொடூரம்\nஇரண்டு மரங்களை வெட்டியவருக்கு ரூ.1.21 கோடி அபாரதமாம்\nஇளம் பெண்ணை வசியப்படுத்திய தண்ணி கேன் சப்ளேயர் : குடும்பத்தினர்கள் விபரீதம்..\n14 வயது சிறுமியின் அந்தரங்க வீடியோக்களை வைத்து மிரட்டல்… பெற்றோர் அதிர்ச்சி..\n2 ஆண்டுகளாக சிறுமியை கற்பழித்த 3 பேர்… தாம்பரத்தில் நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்…\nசிறுமிக்கு ஆபாச வீடியோ அனுப்பிய திமுக பிரமுகரை பின்னி பெடலெடுத்த உறவினர்கள்\nதாயை கொன்று உடலை சாப்பிட்ட மகன்\nபல ஆண்களுடன் தொடர்பு.. காதலனிடம் கூறிவிட்டு இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…\nமேற்கு வங்காளம்: பாரதிய ஜனதாவின் கணக்கு தோற்றது எங்கு\nஉதயநிதிக்கு பதவி இல்லை: தமிழ்நாடு ��ரசின் புதிய அமைச்சர்கள் யார்\nகோவிட் தடுப்பூசி பற்றிய போலி எஸ்எம்எஸ்: கிளிக் செய்தால் ஆபத்து\nஇதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா – புதிய கட்டுப்பாடுகள் என்ன\nமக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்\n - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி\nபுறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு\nஎதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்\nஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்\nதிமுக அமைச்சரவையில் யாருக்கு என்ன பொறுப்பு…\nமனைவியுடன் உல்லாசமாக இருந்த உதவியாளர்… கோயிலுக்கு அழைத்துச்சென்று அர்ச்சனை செய்த பூசாரி\nமுதலமைச்சர் ஆனதும் ஸ்டாலினின் முதல் கையெழுத்து இதுதான்.. முழு எதிர்பார்ப்பில் மக்கள்..\nகோவிட்-19: ஆக்ஸிஜன் அளவை சோதிப்பது எப்படி\nராஜினாமா முடிவில் கே.பி.முனுசாமி – திமுகவுக்கு லாபமாக அமையுமா\nஇரவோடு இரவாக மேலும் புதியக் கட்டுப்பாடுகள் அறிவிப்பு : முழு விபரம்…\n1000ரூபாய் கையிருப்பு கூரை வீடு – சட்டமன்றத்தில் நுழையும் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ மாரிமுத்து\n தேமுதிக வீழ்ச்சிக்கு இதான் காரணம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mybhaaratham.com/2019/03/", "date_download": "2021-05-07T01:14:44Z", "digest": "sha1:INCM5MY7PP6DKGUAW3VIJUC4RBHS24RC", "length": 49657, "nlines": 263, "source_domain": "www.mybhaaratham.com", "title": "Bhaaratham Online Media: March 2019", "raw_content": "\nராகாவின் நடன சூறாவளி : பிரித்தா, லக்ஷிதா வெற்றி\nமலேசியாவிலுள்ள குழந்தைகளின் நடனத் திறமையைக் கண்டறிய அண்மையில் சுபாங் மைடின் பேராங்கடியில் நடைபெற்ற ராகாவின் நடன சூறாவளி மாபெறும் இறுதிச் சுற்றில் பிரித்தா பரமானந்தம் மற்றும் லக்ஷிதா சத்திய கண்ணன் வெற்றி வாகை சூடினார்கள்.\n6 முதல் 8 வயது மற்றும் 9 முதல் 11 வயது என இரண்டு பிரிவுகளாக நடைபெற்ற இந்தப் போட்டியின் முதல் சுற்றில் தேர்தெடுக்கப்பட்ட 20 போட்டியாளர்களும் ராகாவின் அகப்பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட 15 பாடல்களிலிருந்து ஒரு பாடலை தேர்தெடுத்து அதனைச் சுமார் 2 நிமிடங்களுக்கு நடனமாடினார்கள். பிறகு, அடுத்தச் சுற்றுக்கு தயாராக போட்டியாளர்களுக்கு என்ன பாடல் என்று மேடையில் வழங்கப்பட்டது.\nஇரண்டாம் சுற்றின் சவால் அவர்களுக்கு கொடுக்கப��பட்ட பாடலில், இப்போட்டியின் ஏற்பாடு குழு குறிப்பிட்ட பாடல் பகுதியை ஒலியேற்றினர்கள். அப்பாடலுக்கு போட்டியாளர்கள் 2 நிமிடங்களுக்கு நடனமாட வேண்டும். இப்போட்டியில் கலந்து கொண்ட அனைத்து போட்டியாளர்களும் இரண்டுச் சுற்றிலும் மிகச் சிறப்பாக நடனமாடினார்கள்.\nராகாவின் நடன சூறாவளி இறுதிச் சுற்றின் அறிவிப்பாளர் ஆனந்தா, நடிகர், பாடகர், தொலைக்காட்சி அறிவிப்பாளர் என பன்முகம் கொண்ட டேனிஸ் குமார் மற்றும் ஒடிசி நடனக் கலைஞர் சிவகாமி நடுவர்களாக பணியாற்றினார்கள்.\nஒவ்வொரு பிரிவின் முதல் நிலை வெற்றியாளர்களுக்கு முறையே வெ.2,000 ரொக்க பரிசு, வெற்றி கோப்பை வழங்கப்பட்டது. இப்போட்டியில் களமிறங்கிய அனைத்து போட்டியாளர்களுக்கும் நற்சான்றிதழ் வழங்கப்பட்டது.\nஈப்போ நிருபர் சந்திரசேகர் காலமானார்\nதமிழ்ப் பத்திரிகை துறையில் நன்கு அறிமுகமான நிருபர் ப.சந்திரசேகர் இன்று தம்முடைய இல்லத்தில் காலமானார்.\n25 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்ப்பத்திரிகை துறையில் பணியாற்றி வந்த சந்திரசேகர், தமிழ் நேசன், மலேசிய நண்பன் நாளிதழ்களில் பணியாற்றியிருப்பதோடு மக்கள், சமூக, அரசியல் தலைவர்களுடன் அணுக்கமான உறவை கொண்டிருந்தார்.\nதமிழ் ஊடகத்துறையில் பல்வேறு விருதுகளை வென்றுள்ள சந்திரசேகரின் அகால மரணம் ஊடகத்துறையைச் சார்ந்தவர்கள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\n பரிசீலிக்கப்படும் – துன் மகாதீர்\nநாட்டின் தேசிய விமான நிறுவனமான மலேசியா ஏர்லைன்ஸ் (மாஸ்) நிறுவனத்தை வாங்குவதற்கு பல உள்ளூர், வெளியூர் நிறுவனங்கள் ஆர்வம் கொண்டுள்ளன என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகம்மது கூறினார்.\nமாஸ் நிறுவனத்தை வாங்குவதற்கு பல தரப்பினர் முன்வந்துள்ள நிலையில் அதனை நாம் ஒதுக்கிட முடியாது (விற்பனைக்கு). எத்தகைய தரப்பினராக இருந்தாலும் அதனை விற்கலாமா வேண்டாமா\nமாஸ் இன்னமும் நட்டத்தில் தான் உள்ளது. அதற்கு சிறந்த வழி அதனை விற்பனை செய்வதே ஆகும் என்று அவர் சொன்னார்.\nகாதலியுடன் தகராறு; தன்னைத் தானே கொளுத்திக் கொண்டார் இளைஞர்\nகாதலியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்திய இளைஞர் ஒருவர் தனக்கு தானே கொளுத்திக் கொண்ட சம்பவம் சித்தியவானில் அரங்கேறியுள்ளது.\n21 வயது மதிக்கத்தக்க அவ்வாடவர் வீட்டின் வாகன நிறுத்துமிடத���தில் தன்னை தானே தீவைத்துக் கொண்ட சம்பவத்தில் 90 விழுக்காடு தீக்காயங்களுடன் மஞ்சோங் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார் என்று மஞ்சோங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமட் ஹனிப் ஒத்மான் தெரிவித்தார்.\nஅவ்வாடவர் தீயிட்டு கொள்ளும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலான வேளையில் அக்காணொளியில் உரையாடும் தரப்பினரின் உரையாடல்கள் ஆய்வுகுட்படுத்தப்படும் என்று அவர் சொன்னார்.\nபேரா ஊடகவியலாளர் மன்றத்தின் ஏற்பாட்டில் எல்லை கடந்த மனிதநேய நடவடிக்கை\nமனிதநேயத்தை நிலைநாட்டுவதற்கு எல்லைக்கோடு தேவையில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் ஈப்போ மாநகர் மன்றமும் பேரா மாநில ஊடகவியலாளர் சமூகநல, விளையாட்டு மன்றமும் இணைந்து லங்காவில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் சமூகநல நடவடிக்கையை மேற்கொண்டனர்.\nபெருநிறுவனங்களின் சமூகக் கடப்பாடு (சிஎஸ்ஆர்) திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட இந்த திட்டத்தின் ஒரு நடவடிக்கையாக லங்காவிக்கு பயணம் மேற்கொண்ட ஈப்போ மாநகர் மன்றத்தினருடன் பேரா மாநில ஊடகவியலாளர்களும் பங்கு பெற்றனர்.\nஇது குறித்து கருத்துரைத்த ஈப்போ மாநகர் மன்றத்தின் பொது உறவு அதிகாரி முகமட் ஷரிஸால் அஸ்மி, இருவழி உறவை மேம்படுத்திக் கொள்ளும் அதே வேளையில் நோர் காசே ஆதரவற்ற சிறார்களுக்கு உதவிடும் நோக்கில் சில நடவடிக்கைகள் முன்னெடுக்க்கப்பட்டன.\nஅதன் அடிப்படையில் ஆதரவற்ற சிறார்களுடன் பொழுதை கழித்தோடு அவர்களுக்கான உணவும் அம்மையத்திற்கு நன்கொடையும் வழங்கப்பட்டது.\nசிஎஸ்ஆர் நடவடிக்கையின் வழி எல்லை கடந்த மனிதநேயத்தை ஊக்குவிப்பதோடு அந்த மனிதநேயத்தை ஊடகவியலாளர்கள் நிறைவேற்றும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டு மேற்கொள்ளப்படுகிறது என்று மன்றத்தின் தலைவர் ரோஸ்லி மன்சோர் குறிப்பிட்டார்.\nஇந்த திட்டம் வெற்றிகரமாக நிறைவேற ஒத்துழைப்பு வழங்கிய ஈப்போ மாநகர் மன்றத்தினர் உட்பட அனைத்துத் தரப்பினருக்கும் நன்றி கூறி கொள்வதாக அவர் சொன்னார்.\nஇந்த நிகழ்வில் பேரா மாநிலத்தில் செயல்படும் பல்வேறு ஊடக நிறுவனங்களைச் சேர்ந்த நிருபர்கள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஎஸ்டிபிஎம் தேர்வில் 3.5% சிறப்பு தேர்ச்சி பெற்றார் சத்தியசீலன்\nநேற்று வெளியான எஸ்டிபிஎம் தேர்வு முடிவுகளில் காஜாங் , சுல்தான் அப்துல் அஸிஸ் ஷா இடைநிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவர் சத்தியசீலன் சிவசுந்தரம் 3.5 விழுக்காடு மதிப்பெண்களைப் பெற்றுள்ளார்.\nகாஜாங் தமிழ்ப்பள்ளியில் தமது தொடக்கக் கல்வியை பயின்ற இவர், செராஸ் ஜெயா இடைநிலைப்பள்ளியில் தமது கல்வியை தொடர்ந்தார்.\nதொடர்ந்து தாம் உயர்கல்வி பயிலவிருப்பதாகவும் ஒரு பட்டதாரி ஆசியராக உருவெடுக்க வேண்டும் என்பதே தமது எதிர்கால ஆசை எனவும் சத்தியசீலன் கூறினார்.\nதமது இந்த சாதனைக்கு துணையாக இருந்த பெற்றோர் சிவசுந்தரம் – பவாணி, ஆசிரியர்கள் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.\nஇதனிடையே, எஸ்டிபிஎம் தேர்வில் சிறந்த தேர்ச்சி பெற்ற சத்தியசீலன் வாழ்வில் இன்னும் பல சாதனைகள் படைக்க வேண்டும் என்று ஷா ஆலமைச் சேர்ந்த தாத்தா சாமிநாதன் – பாட்டி கலைவாணி ஆகியோர் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.\nஇந்து சமயத்தை இழிவுப்படுத்திய ஆடவர் கைது\nஇந்து சமயத்தை அவமதிக்கும் வகையில் கருத்துகளை பதிவேற்றிருந்த பேஸ்புக் பயனர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.\n“Zamri Bin Abd Razak” எனும் இந்த பேஸ்புக் அகப்பக்கத்தின் உரிமையாளர் இந்து சமயத்தை அவமதிக்கும் வகையில் கருத்துகளை பதிவேற்றம் செய்ததால் இன்று கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.\n1998 தகவல் தொடர்பு, பல்லூடக சட்டம் செக்‌ஷன் 23இன் கீழ் விசாரணைக்கு உதவும் பொருட்டு 52 வயதான அந்த ஆடவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்று போலீஸ் படைத் தலைவர் முகமட் புஸி ஹருண் தெரிவித்தார்.\nசமூக ஊடகங்களில் சமயம் சார்ந்த உணர்வை தூண்டக்கூடிய கருத்துகளை பதிவேற்றம் செய்யவோ, பகிரவோ வேண்டாம் என்று அவர் பொதுமக்களை கேட்டுக் கொண்டார்.\nஅஸ்மினின் கூற்று தனிபட்ட கருத்தாகும்- டத்தோஶ்ரீ அன்வார்\nபூமிபுத்ராவினருக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் பாரபட்சமின்றி நிறைவேற்றப்படும் என்ற பொருளாதார விவகார அமைச்சர் டத்தோஶ்ரீ அஸ்மின் அலியின் கூற்று அவரது தனிபட்ட கருத்தாகும் என்று பிகேஆர் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.\nபக்காத்தான் ஹராப்பான் கூட்டணி ஒருபோதும் இனவாத கொள்கையை பின்பற்றாது. உதவிகள் தேவைபடும் அனைத்து மக்களுக்கான தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.\nஅது அவரின் தனிபட்ட கருத்து. பூமிபுத்ராவினரின் தேவைகளை பக்காத்தான் ஹராப்பான் ஒதுக்கி வைக்காது. அதே வேளையில் இன ரீதியிலான கொள்கைகளை காட்டிலும் மக்களின் கொள்கைகளே முன்னிறுத்தப்படும். மலாய்க்காரர்கள் பெரும்பான்மையாக இருந்தாலும் இன ரிதியிலான அம்சங்களை நெருங்க மாட்டோம் என்று அவர் சொன்னார்.\nசெமினி இடைத் தேர்தலின்போது பக்காத்தான் ஹராப்பான் அடைந்த தோல்வியை அடுத்து பூமிபுத்ராவினருக்கான வாக்குறுதிகள் பாரபட்சமின்றி நிறைவேற்றப்படும் என்று அஸ்மின் அலி கருத்து தெரிவித்திருந்தார்.\nமஇகாவின் வெற்றிடத்தை பூர்த்தி செய்யும் ஐபிஎப்\nதேசிய முன்னணியின் கூட்டணியில் இருந்து மஇகா வெளியேறும் பட்சத்தில் அவ்விடத்தை ஐபிஎப் கட்சி பூர்த்தி செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.\nதேமுவுக்கு ஆதரவாக கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக விசுவாசம் காட்டி ஆதரவளித்து வந்துள்ள ஐபிஎப் கட்சி, தேமுவின் பங்காளி கட்சியாக இடம்பெற பல ஆண்டுகளாக முயற்சித்து வந்துள்ளது.\nஆனால் அதற்கான கதவு திற்க்கப்படாத நிலையில் தோழமைக் கட்சியாக மட்டுமே நீடித்து வந்த நிலையில் மஇகா தேமு கூட்டணியிலிருந்து வெளியேறுவதன் மூலம் ஐபிஎப் கட்சி அக்கூட்டணியில் இடம்பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.\nநாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் ஆட்சி அதிகாரத்தை இழந்த தேமு கூட்டணியை விட்டு பல கட்சிகள் விலகி விட்ட நிலையில் சுதந்திர காலத்தின்போதே ஒரே கூட்டணியாக செயல்பட்ட மஇகா, மசீச ஆகியவை அம்னோவை விட்டு தற்போது பிரிந்திருக்கின்றன.\nமார்ச் 7இல் திரையீடு காண்கிறது 'குற்றம் செய்யேல்' திரைப்படம்\nஆஸ்ட்ரோ வானவில், சினி சத்திரியா நிறுவனம் தயாரிப்பில் நம் உள்ளூர், தமிழ்நாடு கலைஞர்களின் கூட்டணியில் உருவாகியுள்ள ‘குற்றம் செய்யேல்’ திரைப்படம் வரும் மார்ச் 7-ஆம் தேதி மலேசியாவிலுள்ள 50 திரையரங்களில் வெளியிடூ காணவுள்ளது.\nடாக்டர் செல்வமுத்து தயாரிப்பில் உருவாக்கப்பட்டிருக்கும் இப்படத்தை தமிழக இயக்குநர் வெங்கடேஷ், மலேசிய இயக்குநர் பாரதிராஜா ஆகியோர் இணைந்து இயக்கியுள்ளனர்.\n‘குற்றம் செய்யேல்’ திரைப்படம் குண்டர் கும்பல் பற்றிய ஒரு கதையாகும். கல்லூரி மாணவ இளைஞர்கள் சிலருக்கு அக்கல்லூரி நிர்வாகம் இரண்டு பிரிவுகளாக ஆய்வு வேலை ஒன்றை வழங்குகிறது. இதில் ஓர் இளைஞர் குழுவினர் குண்டர் கும்பல் குறித்து ஆய்வு நடத்த செல்கின்றனர். இந்நிலையில் மற்றொரு குழு காவல்துறை குறித்து ஆய்வு நடத்துகின்றனர். இந்த சூழலில் உண்மையான காவல்துறை குண்டர் கும்பலையும் அதன் நடவடிக்கைகளையும் எப்படி கையாண்டு தீர்வு காண்கின்றது என்பதுதான் இத்திரைப்படத்தின் கதையாகும்.\nஇத்திரைப்படத்தில் தமிழக கலைஞர் மெட்டி ஒலி போஸ் வெங்கட், விஜித், கலக்க போவது யாரு தீனா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இவர்களுடன் தயாரிப்பாளர் டாக்டர் செல்வமுத்து, பாரதிராஜா, ஷான், சாம், சாரதி, பிரேம், ரவி, நத்ராஜன் ஆகியோர் நடித்துள்ளார்கள்.\n60 நாட்களில் முழுக்க முழுக்க மலேசியாவில் படமாக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தை இந்திய மட்டுமின்றி நம் நாட்டைச் சேர்ந்த உள்ளூர் படக்குழு இணைந்து பணியாற்றியுள்ளார்கள். அதை வேளையில், இத்திரைப்படத்தில் அர்வின் ராஜ் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார். மொத்தம் 3 பாடல்களைக் கொண்ட இத்திரைப்படத்தில் பிபரல பின்னணிப் பாடகர் கானா பாலா பாடியுள்ளார். இத்திரைப்படத்தின் இசை, டிரெய்லர் வெளியிட்டு விழா அண்மையில் சென்னையில் நடைபெற்றது.\n‘குற்றம் செய்யேல்’ திரைப்படம் குறித்த மேல் விவரங்களுக்கு ஆஸ்ட்ரோ உலகத்தின் அதிகாரப்பூர்வ அகப்பக்கமான www.astroulagam.com.my அல்லது www.facebook.com/AstroUlagam முகநூல் அகப்பக்கத்தை நாடுங்கள்.\nபுதிய கூட்டணிக்காக தேமுவிலிருந்து விலகிய மஇகா, மசீச\nஅம்னோவினரின் இனவாத கருத்துகளால் அதிருப்தி அடைந்திருந்த மஇகா, மசீச ஆகிய கட்சிகள் புதிய கூட்டணியை உருவாக்குவதற்காக தேசிய முன்னணி கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளன.\nமஇகாவின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன், மசீச தலைவர் டத்தோஶ்ரீ வீ கா சியோன் ஆகிய இருவரும் இன்று விடுத்த கூட்டு அறிக்கையில் இவ்வாறு கூறியுள்ளனர்.\nஅம்னோவினரிடையே நிலவும் இனவாதப் போக்கு தொடர்ந்து கொண்டிருப்பதால் தேசிய முன்னணி கூட்டணியில் நீடிப்பது சாத்தியமற்ற ஒன்றாக கருதப்படுகிறது. அதனால் இக்கூட்டணியிலிருந்து விலகி புதிய கூட்டணியை அமைக்கும் முயற்சியில் களமிறங்குவதாக இவ்விருவரும் தெரிவித்துள்ளனர்.\nதேசிய முன்னணியின் தலைமைச் செயலாளர் டத்தோஶ்ரீ நஸ்ரி அஸிஸ் அண்மையில் தமிழ்ப்பள்ளி, சீனப்பள்ளிகள் குறித்தி இனவாத கருத்துகளை தெரிவித்ததன் எதிரொலியாக இந்த நடவட���க்கை அமைந்துள்ளது.\n'மகாதீரிச'த்தை வீழ்த்துமா 'போஸ் கூ'\nகடந்த 14ஆவது பொதுத் தேர்தலின்போது சுனாமியாக எழுந்து சுழன்றடித்த 'மகாதீரிசம்' எனும் முழக்கத்தை இன்றைய 'போஸ் கூ' முழக்கம் சிதறடித்துள்ளது.\n60 ஆண்டுகால தேசிய முன்னணி ஆட்சியை கவிழ்ப்பதற்கு அன்று எதிர்க்கட்சியாக இருந்த நம்பிக்கை கூட்டணி 'மகாதீரிசத்தை' ஓர் ஆயுதமாக பயன்படுத்தி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது.\nதுன் மகாதீரால் மட்டுமே தேமுவை வீழ்த்த முடியும் என்ற உண்பையின் அடிப்படையில் அக்கூட்டணியின் ஆட்சி அதிகாரத்தில் பிரதமர் பதவி மகாதீருக்கு தாரை வார்க்கப்பட்டது.\nமுன்னாள் பிரதமர் என்ற தோரணையில் இன்றைய நம்பிக்கை கூட்டணியின் ஆட்சி அதிகாரம் யாவும் துன் மகாதீர் வசமே வீழ்ந்து கிடக்கும் நிலையில் 9 மாதங்களில் மக்களின் அதிருப்தி அலையை இக்கூட்டணி சம்பாதித்ததன் விளைவுதான் கேமரன் மலை, செமினி இடைத் தேர்தலில் தேசிய முன்னணி மீண்டும் வெற்றி பெற்றுள்ளதற்கான காரணம் ஆகும்.\n'மகாதீரிசத்தால்' கட்டியெழுப்பப்பட்ட நம்பிக்கை கூட்டணி ஆட்சியை வீழ்த்தக்கூடிய ஆயுதமாக 'போஸ் கூ' சுலோகம் தற்போது விஸ்வரூபம் எடுத்து வருகிறது.\nமுன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கை குறிக்கும் வகையில் பெலும் பரப்புரையாக மாறியுள்ள 'போஸ் கூ' சுலோகம் ஏற்படுத்தியுள்ள தாக்கமாகவே செமினியில் தேமு வெற்றி அமைந்துள்ளது.\n'Malu Apa BosKu' என தொடங்கப்பட்ட இந்த பரப்புரை குறித்து பிரதமர் துன் மகாதீர் கூட விமர்சனம் செய்திருந்தார்.\nதமது ஆட்சி காலத்தின்போது 1எம்டிபி நிறுவனத்தில் நிகழ்ந்த நிதி முறைகேடுகள் தொடர்பில் நீதிமன்ற வழக்குகளை எதிர்கொண்டுள்ள டத்தோஸ்ரீ நஜிப்புக்கு ஆதரவளிக்கும் வகையில் தொடங்கப்பட்டதே ‘Malu Apa Bossku' பிரச்சாரம் ஆகும்.\nஇன, மதவாத அரசியலில் வெற்றி பெற்றுள்ளது தேமு- கணபதிராவ்\nசெமினி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தேசிய முன்னணி அடைந்துள்ள வெற்றி அம்னோவின் இனவாதத்திற்கும் பாஸ் கட்சியின் மதவாதத்திற்கும் கிடைத்த வெற்றியாக கருதப்படுகிறது. அதே வேளையில் தேர்தல் நேரத்தின்போது நம்பிக்கை கூட்டணி வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததும் மக்களிடையே எழுந்த அதிருப்திக்கு காரணம் என்பதை மறுக்க முடியாது என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் தெரிவித்தார்.\nஇனவாதம், மதவாதம் ஆகியவற்றை வைத்து அரசியல் செய்யும் அம்னோ, பாஸ் கட்சிகள் இத்தேர்தலில் ஒன்றிணைந்ததால் இந்த வெற்றி கிட்டியுள்ளது.\nஇவ்விரு கட்சிகளும் இனவாதத்தை தூண்டிவிட்டு அதில் வெற்றியை நிலைநாட்டி கொண்டுள்ளன. ஆயினும் நம்பிக்கை கூட்டணி தனது தேர்தல் கொள்கை அறிக்கையில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை இன்றளவும் நிறைவேற்றப்பட்டது மக்களிடையே ஒருவித அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.\nதேர்தலின் போது வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் நாம் ஒரு போதும் தவறக்கூடாது. அதை நிறைவேற்றுவதில் சாக்குப்போக்குகளை சொல்லக்கூடாது.\nமக்கள் நம் மீதும் நாம் வழங்கிய வாக்குறுதிகள் மீதும் நம்பிக்கை வைத்துதான் 14ஆவது பொதுத்தேர்தலில் மத்திய, மாநில அரசுகளை ஆளும் அதிகாரத்தை வழங்கினர்.\nமக்களுக்கு வணங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகளை தீர பரிசீலிக்க வேண்டுமே தவிர காரணங்களை அடுக்கிக்கொண்டே போகக்கூடாது.\nமக்களின் அதிருப்தி அலை இன்னும் மோசமான சூழலை எட்டும் முன் அவர்களின் எதிர்பார்ப்புக்களையும் அபிலாஷைகளையும் நிறைவேற்ற வேண்டிய கடப்பாட்டை நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று கணபதி ராவ் மேலும் தெரிவித்தார்.\nசெமினி இடைத்தேர்தல் தோல்வி எதிரொலி; மக்கள் விடுத்திருக்கும் புதிய செய்தி\nசெமினி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி அடைந்துள்ள தோல்வியானது மக்கள் விடுத்திருக்கும் 'புதிய தகவலாக' கருதுகிறோம் என்று அதன் தலைவர்கள் கூறியுள்ளனர்.\nபெர்சத்து கட்சியின் உதவித் தலைவர் டத்தோஶ்ரீ முக்ரிஸ் மகாதீர், இந்த தோல்வியானது மக்கள் எங்களுக்கு விடுத்திருக்கும் புதிய தகவலாகவே கருதுகிறோம்.\nஎங்களது தோல்விகளையும், இயலாமையும் தவறுகளையும் திருத்திக் கொள்வதற்கான ஒரு களமாக இந்த தேர்தலில் மக்கள் எங்களை தண்டித்துள்ளனர்.\nஇனிவரும் காலங்களில் இந்த தவறுகளும் இயலாமையும் தோல்விகளும் திருத்தி கொள்ளப்படுவதற்கான வாய்ப்பாக இந்த தேர்தல் முடிவு அமைந்துள்ளது என்று கெடா மாநில மந்திரி பெசாருமான டத்தோஶ்ரீ முக்ரிஸ் குறிப்பிட்டார்.\nஅதோடு, பிகேஆர் கட்சியின் உதவித் தலைவர் தியான் சுவா கூறுகையில், செமினி இடைத்தேர்தல் தோல்வி பக்காத்தான் கூட்ட���ி மக்கள் புகட்டியுள்ள பாடமாக கருதப்படுகிறது.\nபொதுத் தேர்தலின்போது வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததே இந்த தோல்விக்கான அடித்தள காரணம் ஆகும். நிச்சயமாக இது பக்காத்தான் கூட்டணிக்கு மக்கள் விடுத்திருக்கும் தொடக்க நிலை அறிவிப்பாகும்.\nஇத்தேர்தலின் தோல்வி குறித்து நிச்சயம் சுய பரிசோதனை மேற்கொள்ளப்படும். அப்போது நிச்சயம் மக்களின் எதிர்பார்ப்புகள் மீதான கருத்துகளும் கலந்தாய்வு செய்யப்படும் என்றார் அவர்.\nசெமினி இடைத் தேர்தல்; பக்காத்தான் ஹராப்பானை தோற்கடித்தது தேசிய முன்னணி\nபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த செமினி சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் ஆளும் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியை தோற்கடித்து அத்தொகுதியை கைப்பற்றியது தேசிய முன்னணி.\nதேசிய முன்னணி வேட்பாளர் ஸக்காரியா ஹபாஃபி 19,780 வாக்குகளை பெற்ற நிலையில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் முகமட் அய்மான் ஸைனாலி 17,866 வாக்குகள் பெற்றார்.\n1,914 வாக்குகள் வித்தியாசத்தில் தேசிய முன்னணி இத்தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது.\nமேலும், பிஎஸ் எம் வேட்பாளர் நிக் அஸிஸ் அஃபிக் 847 வாக்குகளும் சுயேட்சை வேட்பாளர் குவான் சே ஹெங் 725 வாக்குகளும் பெற்றனர்.\nசெமினி இடைத்தேர்தல்; வாக்களிப்பு தொடங்கியது\nசெமினி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தல் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது.\nஆளும் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக்கும் தேசிய முன்னணிக்கும் கடுமையான பலபரீட்சையாக அமைந்துள்ள இந்த இடைத் தேர்தலுக்கான வாக்களிப்பு காலை 9.00 மணி தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.\nஇந்த தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராக முகமட் அய்மான் ஸைனாலி, தேமு வேட்பாளராக ஸக்காரியா ஹனாஃபி, பிஎஸ்எம் கட்சி வேட்பாளராக நிக் அஸிஸ் அஃபிக் அப்துல், சுயேட்சை வேட்பாளராக குவான் சே ஹெங் ஆகியோர் களமிறங்கியுள்ளனர்.\n'இயற்கையை காப்போம் இனியதோர் உலகை படைப்போம்' - சிறப்பு கட்டுரை\nபினாங்கு - இயற்கை என்பது இயல்பாக இருப்பது என்பது பொருள் கொண்டதாகும் . இயல்பாகவே தோன்றி மறையும் பொருட்கள் அவற்றின் இயக்கம் , அவை இயங...\nபூச்சோங்- மாரடைப்பின் காரணமாக மனைவியும் அவரை தொடர்ந்து கணவனும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. சிலாங்கூர்,பூச்சோங்கைச் ச...\nசோழன் ஆட்சியை இழந்ததைப்போல, மஇகாவை இழந்து விடாதீர்கள்\nசேரன், சோழன், பாண்டியன் ஆட்சிகளை இழந்து 500 ஆண்டுகளைக் கடந்து விட்டோம். இங்கு வந்து 200 ஆண்டுகளாகக் கட்டமைத்த வாழ்க்கையைத்தான் இன்றும...\nராகாவின் நடன சூறாவளி : பிரித்தா, லக்ஷிதா வெற்றி\nஈப்போ நிருபர் சந்திரசேகர் காலமானார்\n பரிசீலிக்கப்படும் – துன் மகாதீர்\nகாதலியுடன் தகராறு; தன்னைத் தானே கொளுத்திக் கொண்டார...\nபேரா ஊடகவியலாளர் மன்றத்தின் ஏற்பாட்டில் எல்லை கடந...\nஎஸ்டிபிஎம் தேர்வில் 3.5% சிறப்பு தேர்ச்சி பெற்றார்...\nஇந்து சமயத்தை இழிவுப்படுத்திய ஆடவர் கைது\nஅஸ்மினின் கூற்று தனிபட்ட கருத்தாகும்- டத்தோஶ்ரீ அன...\nமஇகாவின் வெற்றிடத்தை பூர்த்தி செய்யும் ஐபிஎப்\nமார்ச் 7இல் திரையீடு காண்கிறது 'குற்றம் செய்யேல்' ...\nபுதிய கூட்டணிக்காக தேமுவிலிருந்து விலகிய மஇகா, மசீச\n'மகாதீரிச'த்தை வீழ்த்துமா 'போஸ் கூ'\nஇன, மதவாத அரசியலில் வெற்றி பெற்றுள்ளது தேமு- கணபதி...\nசெமினி இடைத்தேர்தல் தோல்வி எதிரொலி; மக்கள் விடுத்த...\nசெமினி இடைத் தேர்தல்; பக்காத்தான் ஹராப்பானை தோற்கட...\nசெமினி இடைத்தேர்தல்; வாக்களிப்பு தொடங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinibitz.com/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-05-07T01:18:32Z", "digest": "sha1:BG2NHOBPQ5TCJ6ERFXN5S47LU2HF7ODP", "length": 12012, "nlines": 68, "source_domain": "www.tamilcinibitz.com", "title": "அடல் பிஹாரி ஸ்பாட் பதில்: அடலின் ஸ்பாட் பதில்: 'நான் ஒற்றை ஆனால் ஒற்றை அல்ல' என்று அவர் சொன்னபோது - அடல் பிஹாரி வாஜ்பாய் பிறந்த நாள்: பத்திரிகையாளருக்கு அடலின் ஸ்பாட் பதில் விவாத மையமாக மாறியது", "raw_content": "முழுமையான செய்தி உலகம் உங்களுக்காக.\nஅடல் பிஹாரி ஸ்பாட் பதில்: அடலின் ஸ்பாட் பதில்: ‘நான் ஒற்றை ஆனால் ஒற்றை அல்ல’ என்று அவர் சொன்னபோது – அடல் பிஹாரி வாஜ்பாய் பிறந்த நாள்: பத்திரிகையாளருக்கு அடலின் ஸ்பாட் பதில் விவாத மையமாக மாறியது\nஇன்று பாரத ரத்னா மற்றும் முன்னாள் பிரதமர் மறைந்தவர் அடல் பிஹாரி வாஜ்பாயின் பிறந்த நாள். வாஜ்பாய் மூன்று முறை இந்தியாவின் பிரதமரானார். இருப்பினும், அவரது முதல் இரண்டு சொற்கள் மிகவும் குறுகியவை, அவற்றில் ஒன்று 13 நாட்கள், மற்றொன்று 13 மாதங்கள். 1999 இல் மூன்றாவது முறையாக பிரதமரானபோது, ​​2004 வரை 5 ஆண்டு காலத்தை நிறைவு செய்தார். அடல் பிஹாரி வாஜ்பாய் தனது ஸ்பாட் பதிலுக்கு மிகவும் பிரபலமானவர். பெரும்பாலும் அவர் தனது ஸ்பாட் பதிலுக்கு முன்னால் பேசுவதை நிறுத்திக் கொண்டிருந்தார். அத்தகைய ஒரு நிகழ்ச்சியின் போது, ​​”நான் ஒற்றை, ஆனால் இளங்கலை அல்ல” என்று சொன்னபோது அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.\nஸ்பாட் பதிலால் கலகம் செய்யப்பட்டது\nஒரு பெரிய நபர் திருமணமாகாமல் இருக்கும்போதோ அல்லது தங்க முடிவு செய்தாலோ, பொது மக்களிடையே இது குறித்து நிறைய ஆர்வங்கள் உள்ளன. அதன் பின்னணியில் உள்ள காரணத்தைக் கண்டுபிடிக்க அவர்கள் முயற்சி செய்கிறார்கள். அடல் பிஹாரி வாஜ்பாயும் வாழ்நாள் முழுவதும் திருமணமாகாமல் இருந்தார். திருமணம் செய்து கொள்ளாத கேள்விக்கு அவர் அடிக்கடி சிரித்தார், ஆனால் ஒரு முறை அவர் தனது பதிலடி மூலம் அனைவரையும் திகைக்க வைத்தார். முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயிடம் ஒரு முறை கேள்வி கேட்கப்பட்டது, நீங்கள் ஏன் இன்னும் கன்னியாக இருக்கிறீர்கள் ஸ்பாட் பதிலுக்கு பெயர் பெற்ற வாஜ்பாய் பத்திரிகையாளர்களிடம் “நான் திருமணமாகாதவன், ஆனால் ஒரு கன்னி அல்ல” என்று கூறினார்.\nகார்கில் போரின் போது வாஜ்பாய் நவாஸ் ஷெரீப்புடன் பல முறை பேசினார், இது புத்தகத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது\nஅடலின் ஸ்பாட் பதிலின் பல கதைகள் பிரபலமானவை\nஅடல் பிஹாரியின் ஸ்பாட் பதில் பற்றி பல பிரபலமான கதைகள் உள்ளன. பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களில், அடல் கூறியிருந்தார் – ஒரு கைதட்டல் இல்லை என்று அக்கம்பக்கத்தினர் கூறுகிறார்கள், ஒரு சிட்டிகை விளையாடலாம் என்று நாங்கள் கூறினோம். அதே நேரத்தில், ஒரு பாகிஸ்தான் அமைச்சர் ஒருமுறை காஷ்மீர் இல்லாமல் பாகிஸ்தான் முழுமையடையாது என்று கூறினார். பாகிஸ்தான் இல்லாமல் இந்தியா முழுமையடையாது என்று அடல் பிஹாரி வாஜ்பாய் பதிலளித்தார். ஒருமுறை ஒரு பத்திரிகையாளர் அடல் ஜியிடம் – பாஜகவில் ஒரு வாஜ்பாயின் கட்சி உள்ளது, ஒருவர் அத்வானியின் கட்சி. ‘நான் எந்த சதுப்பு நிலத்திலும் இல்லை, மற்றவர்களின் சதுப்பு நிலத்தில் என் தாமரைக்கு உணவளிக்கிறேன்’ என்று அடல் எச்சரிக்கையுடன் கூறியிருந்தார்.\nREAD முதலமைச்சர்களுடனான கோவிட் -19 நிலைமை குறித்து பிரதமர் மோடி சந்திப்பு நடைபெற்று வருவதாக டெல்லி முதல்வர் அ��விந்த் கெஜ்ரிவால் மூன்றாவது உச்சநிலை குறித்து தெரிவித்தார்\nகுவாலியரில் பாஜகவின் போர் அறை, அடல் பிஹாரி வாஜ்பாய் மற்றும் ராஜ்மதா விஜயராஜே சிந்தியா ஆகியோரின் படம் இல்லை\nபாப் கலாச்சாரம் டிரெயில்ப்ளேஸர். சிந்தனையாளர். சிக்கல் செய்பவர். இசை குரு. சமூக ஊடக நிபுணர். மாணவர். ஜாம்பி நிபுணர்.\nயோகி ஆதித்யநாத் ஹைதராபாத் பாக்யநகர்: ஹைதராபாத்தை ‘பாக்யநகர்’ என்று பெயர் மாற்றுவது தொடர்பான ஜுபானி போர்\nசிறப்பம்சங்கள்: ஹைதராபாத் நகராட்சி தேர்தலில் யோகி ஆதித்யநாத்துக்கும் அசாதுதீன் ஒவைசிக்கும் இடையிலான வார்த்தைகளின் போர் தீவிரமடைந்தது...\nவங்காள முதல்வர் மாநில மக்கள்தொகையை 30 சதவீதம் மட்டுமே அதிகரிக்க விரும்புகிறார்: கைலாஷ் விஜயவர்ஜியா\nமழையால் பாதிக்கப்பட்ட 11.43 மில்லியன் விவசாயிகளுக்கு 1,117 மில்லியன் ரூபாய் நிவாரணத்தை பழனிசாமி அறிவித்துள்ளது – புதிய இந்தியன் எக்ஸ்பிரஸ்\nPrevious articleuk-eu brexit வர்த்தக ஒப்பந்தம்: இறுதியாக பிரெக்சிட் வர்த்தக ஒப்பந்தத்தில் இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் ஒப்புக் கொள்ளப்பட்டது, இந்தியாவுக்கு என்ன பாதிப்பு இருக்கும் என்பதை அறிந்து கொள்ளுங்கள் – uk-eu Brexit வர்த்தக ஒப்பந்தம் செய்யப்படுகிறது, இந்தியா மீதான விளைவு தெரியும்\nNext articleகிறிஸ்துமஸ் 2020 கரீனா கபூர் கான் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் கிறிஸ்துமஸ் திருமணத்தை கொண்டாடுங்கள்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\n2021 இல் மேலும் ஆக்டிவேசன் பனிப்புயல் ரீமாஸ்டர்களுக்கு தயாராகுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinibitz.com/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-3-%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2021-05-07T01:45:57Z", "digest": "sha1:TWPPPIVBK7VA75FMMZTWJKPQW2SIHCZY", "length": 13157, "nlines": 74, "source_domain": "www.tamilcinibitz.com", "title": "சூப்பர் மரியோ 3 டி உலகில் பவுசரின் ஆத்திரம் பயன்முறையைப் பற்றிய புதிய தகவல்களை நிண்டெண்டோ பகிர்ந்து கொள்கிறது", "raw_content": "முழுமையான செய்தி உலகம் உங்களுக்காக.\nசூப்பர் மரியோ 3 டி உலகில் பவுசரின் ஆத்திரம் பயன்முறையைப் பற்றிய புதிய தகவல்களை நிண்டெண்டோ பகிர்ந்து கொள்கிறது\nஇந்த வார தொடக்கத்தில், நிண்டெண்டோ ரசிகர்களுக்கு புதியது என்ன என்பதை இரண���டு நிமிட தோற்றத்தைக் கொடுத்தது பவுசரின் கோபம் இன் சுவிட்ச் பதிப்பில் சேர்க்கவும் சூப்பர் மரியோ 3D உலகம். அப்போதிருந்து, பவுசர் ஏன் இவ்வளவு பைத்தியக்காரர் என்று நாம் அனைவரும் ஆச்சரியப்பட்டோம்.\nநிண்டெண்டோவின் இங்கிலாந்து வலைத்தளம் இப்போது அவர் ஒரு “மர்மமான கருப்பு கூப்” மூலம் எவ்வாறு தாக்கப்பட்டார் என்பதை வெளிப்படுத்தியுள்ளது, இது மரியோ மற்றும் அவரது சாத்தியமில்லாத தோழர் (பவுசர் ஜூனியர்) லேப்காட் ஏரியில் பல தீவுகளில் பயணிக்க வேண்டியிருந்தது.\nஅவர்கள் ஒன்றாக கேட் ஷைன்களை சேகரிக்க வேண்டும், அவற்றின் வலிமையைப் பயன்படுத்த வேண்டும் மற்றும் பவுசரின் இந்த புதிய “பயங்கரமான” வடிவத்தை நிறுத்த வேண்டும்.\nபவுசருக்கு ஏதோ மோசமாக நடந்தது. மொத்த அழிவை நோக்கமாகக் கொண்ட ஒரு மாபெரும் அசுரனாக அவரை மாற்றிய ஒரு மர்மமான கருப்பு கூப்பால் அவர் களங்கப்பட்டார்\nஇது மரியோ மற்றும் லேப்காட் ஏரியின் தொடர்ச்சியான தீவுகளில் பயணம் செய்வதற்கும், பல்வேறு மேடை சவால்களை முடிப்பதன் மூலம் மர்மமான கேட் ஷைன்களை சேகரிப்பதற்கும், திகிலூட்டும் ப்யூரி பவுசரைத் தடுக்க தங்கள் சக்திகளைப் பயன்படுத்துவதற்கும் சாத்தியமில்லை.\nபவுசர் ஜூனியரின் தந்தையை காப்பாற்றுவதற்கான ஒரே நம்பிக்கை அவரது மிகப்பெரிய எதிரியிடம் உள்ளது. இளம் இளவரசன் தனது கூபா கோமாளி காரை ஓட்டிச் சென்று மரியோவைத் தேடி வருகிறான். அவர் தனது இயக்கங்கள் அனைத்தையும் நகலெடுக்கிறார், எதிரிகளை வெளியேற்ற உதவுகிறார், மேலும் உங்களுக்கு உதவும் சக்தி மற்றும் அப்களையும் வெளிப்படுத்துகிறார்.\nஒரு நண்பருக்கு ஜாய்-கான் அனுப்பவும், உள்ளூர் கூட்டுறவு விளையாட்டில் விளையாடவும். பூனை பிரகாசங்களைக் கண்டறிய உங்களுக்கு உதவ ஒரு வீரர் சிறிய பையனை நேரடியாகக் கட்டுப்படுத்துகிறார்.\nஇந்த கூடுதல் உள்ளடக்கத்தின் மூலம் நீங்கள் விளையாடும்போது, ​​”ப்யூரி சன்” மீது நீங்கள் ஒரு கண் வைத்திருக்க வேண்டும். வானிலை மாறினால், நீங்கள் கவனமாக இருப்பீர்கள்\nபூனையின் விளக்குகளுக்காக நீங்கள் உயரமாகவும் குறைவாகவும் தேடும்போது, ​​தீய தோற்றமுள்ள கோபமான சூரியன் நீங்கள் இப்போது இருக்கும் தீவுக்கு அருகிலுள்ள ஏரியிலிருந்து மெதுவாக எழுகிறது.\nவானிலை திடீரென வெயிலிலிருந்து புயலாக மாறு���்போது, ​​ப்யூரி பவுசர் கிட்டத்தட்ட இருப்பதால் நகர்வதற்கான நேரம் இது கோபமான வெயிலிலிருந்து அது வெளிவந்தவுடன், அது வானத்திலிருந்து விண்கற்களைக் கவரும் மற்றும் அழிவுகரமான உமிழும் கதிர்களைத் தூண்டும் – எனவே மூடிமறைக்கவும்\nநீங்கள் அனைத்து பூனை பிரகாசங்களையும் சேகரித்தவுடன், நீங்கள் கிகா கேட் மரியோவாக பவுசரை எடுத்துக் கொள்ளலாம்:\nபேரழிவு ஏற்படும் வரை நீங்கள் காத்திருக்க முடியும், நீங்கள் முற்றிலும் உதவியற்றவர் அல்ல. நீங்கள் ஒரு தீவில் ஐந்து பூனை பிரகாசங்களை சேகரித்தபோது, ​​கிகா பெல்லின் நம்பமுடியாத சக்தியை செயல்படுத்துவதற்கான நேரம் இது இந்த பிரம்மாண்டமான சூப்பர் பெல் மரியோவை கிகா கேட் மரியோவாக மாற்றுகிறது, அதாவது அவர் உண்மையிலேயே டைட்டானிக் போரில் ப்யூரி பவுசருடன் போராட முடியும்.\nஉங்கள் பாரிய பூனை வடிவத்தில் ப்யூரி பவுசரை தோற்கடிக்கவும், அவர் மீண்டும் தண்ணீருக்குள் பறந்து புதிய தீவுகளைத் திறப்பார். உங்கள் வெற்றியைக் கொண்டாட அதிக நேரம் செலவிட வேண்டாம், அது திரும்பி வரும் …\nசூப்பர் மரியோ 3 டி வேர்ல்ட் + பவுசரின் ப்யூரி அடுத்த மாதம் பிப்ரவரி 12, 2021 அன்று வரும்.\nREAD மேம்படுத்தப்பட்ட டெஸ்க்டாப் பாதுகாப்பு, ஸ்டிக்கர் குறுக்குவழி மற்றும் பல\nஆத்திரமூட்டும் தாழ்மையான ஆய்வாளர். சான்றளிக்கப்பட்ட உணவு ஆர்வலர். காபி சுவிசேஷகர். சமூக ஊடகவியலாளர். டிவி விசிறி. உணர்ச்சிமிக்க வலை பஃப். இசை மேவன்.\nஇலவச ஃபயர் மேக்ஸ் APK ஐ எவ்வாறு பதிவிறக்குவது: ஆரம்பநிலைக்கு படிப்படியான வழிகாட்டி\nஇலவச ஃபயர் மேக்ஸ் என்பது பிரபலமான போர் ராயல் விளையாட்டின் மேம்படுத்தப்பட்ட மற்றும் மேம்படுத்தப்பட்ட பதிப்பாகும்....\nஆப்பிள் ‘ஸ்டுடியோ சீரிஸ்’ பிளேலிஸ்ட்களில் உடற்தகுதி + மற்றும் ஆப்பிள் இசையின் ஒருங்கிணைப்பை ஊக்குவிக்கிறது\nஐபோன் 13 கணிசமாக மேம்படுத்தப்பட்ட குறைந்த-ஒளி செயல்திறனுடன் மேம்படுத்தப்பட்ட அல்ட்ரா-வைட் கேமராவைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது\nகாட் ஆஃப் வார்ஸ் ஈகோ மோட் வீரர்களுக்கு ஒரு புதிய பார்வையை வழங்குகிறது\nPrevious articleதடைசெய்யப்பட்ட காளை வேட்டை விழா தமிழ்நாட்டில் முழு வீச்சில் கொண்டாடப்படுகிறது, 2 பார்வையாளர்கள் அடித்து கொல்லப்பட்டனர்\nNext articleகடைசி போட்டி அறிக்கை – இலங்கை v இங்��ிலாந்து 1 வது டெஸ்ட் 2021\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nபிக் பாஸ் 14: கணவர் அபிநவ் சுக்லாவுடன் சண்டையிட்ட பிறகு ரூபினா திலாய்க் தனது முதல் உணர்ச்சி முறிவைக் கண்டார். பிந்தையது விஷயங்களைச் செய்வதற்கு முன் சிந்திக்க கற்றுக்கொடுக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vativamaippu.com/?CAT=4-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D&P=0", "date_download": "2021-05-07T02:11:30Z", "digest": "sha1:KBOM4HDPR5NFBX6XKM5K6MRY6NKKECQE", "length": 17019, "nlines": 94, "source_domain": "www.vativamaippu.com", "title": " கிராபிக்ஸ் - வடிவமைப்பு இதழ்", "raw_content": "\nஉலகளவில் வடிவமைப்பாளர்களிடமிருந்து நல்ல வடிவமைப்புகளைக் கண்டறியவும்.\nஉலகளாவிய பிராண்டுகளிலிருந்து புதுமையான தயாரிப்புகளைக் கண்டறியவும்.\nஉலகளாவிய கட்டடக் கலைஞர்களிடமிருந்து சிறந்த கட்டடக்கலை திட்டங்களைக் கண்டறியவும்.\nசர்வதேச ஆடை வடிவமைப்பாளர்களிடமிருந்து படைப்பு பேஷன் வடிவமைப்புகளைக் கண்டறியவும்.\nபடைப்பு பேஷன் டிசைன்களை ஆராயுங்கள்\nஉலகளாவிய கிராபிக்ஸ் வடிவமைப்பாளர்களிடமிருந்து சிறந்த கிராஃபிக் வடிவமைப்புகளைக் கண்டறியவும்.\nசிறந்த கிராஃபிக் வடிவமைப்புகளை ஆராயுங்கள்\nஉலகளாவிய வடிவமைப்பு நிறுவனங்களிலிருந்து சிறந்த மூலோபாய வடிவமைப்புகளைக் கண்டறியவும்.\nசிறந்த மூலோபாய வடிவமைப்புகளை ஆராயுங்கள்\nபுதன் 12 மே 2021\nஆல்பம் கவர் கலை ஹெய்சர் தனது திடமான பாஸ் ஒலிக்கு பெயர் பெற்றவர், நன்கு மெருகூட்டப்பட்ட விளைவுகளுடன் காவிய இடைவெளிகள். அதன் வகையான ஒலி நேராக முன்னோக்கி நடன இசையாக வெளிவருகிறது, ஆனால் நெருக்கமான ஆய்வு அல்லது கேட்பதில் நீங்கள் முடிக்கப்பட்ட தயாரிப்புக்குள் பல அடுக்கு அதிர்வெண்களைக் கண்டறியத் தொடங்குவீர்கள். படைப்பாற்றல் கருத்து மற்றும் செயல்பாட்டிற்கு சவால் ஹெய்சர் எனப்படும் ஆடியோ அனுபவத்தை உருவகப்படுத்துவதாகும். கலைப்படைப்பு பாணி வழக்கமான நடன இசை பாணியில் இல்லை, இதனால் ஹெய்சரை தனது சொந்த வகையாக மாற்றியுள்ளார்.\nசெவ்வாய் 11 மே 2021\nமெனுக்கான கவர் பல்வேறு வகையான அச்சிடப்பட்ட பொருட்களுக்கு சரியான மறைப்பாக செயல்படும் காந்தங்களுடன் இணைக்கப்பட்ட சில பிளாஸ்டிக் வெளிப்படையான படலம். பயன்படுத்த எளிதானது. உற்பத்தி மற்றும் பர���மரிக்க எளிதானது. நேரம், பணம், மூலப்பொருட்களை மிச்சப்படுத்தும் நீண்டகால தயாரிப்பு. அமைதியான சுற்று சுழல். வெவ்வேறு நோக்கங்களுக்காக எளிதில் பொருந்தக்கூடியது. மெனுக்களுக்கான மறைப்பாக உணவகங்களில் சிறந்த பயன்பாடு. பழ காக்டெய்ல்களுடன் ஒரு பக்கத்தையும், உங்கள் நண்பருக்கான கேக்குகளுடன் ஒரு பக்கத்தையும் பணியாளர் உங்களுக்குக் கொண்டு வரும்போது, எடுத்துக்காட்டாக, இது உங்களுக்காக உருவாக்கப்பட்ட தனிப்பயனாக்கப்பட்ட மெனுக்களைப் போன்றது.\nதிங்கள் 10 மே 2021\nடிவிடி பெட்டி ஜினா காரமெலோ எழுதிய குறுகிய அனிமேஷன் பாதைகள் ஆஃப் லைட் வைத்திருப்பதற்கான சிறந்த வழி, டிவிடிக்கு பொருந்தக்கூடிய ஒரு அழகான வழக்கு இருப்பதை உறுதி செய்வதாகும். பேக்கேஜிங் உண்மையில் காடுகளில் இருந்து பறித்து ஒரு குறுவட்டு உருவாக்க வடிவமைக்கப்பட்டுள்ளது போல் தெரிகிறது. வெளிப்புறத்தில், பல்வேறு கோடுகள் தெரியும், கிட்டத்தட்ட சிறிய மரங்கள் வழக்கின் பக்கமாக வளர்கின்றன. மர வெளிப்புறம் மிகவும் இயற்கையான தோற்றத்தை கொடுக்க உதவுகிறது. 1990 களில் குறுந்தகடுகளுக்காக பலர் பார்த்த நிகழ்வுகளிலிருந்து ஒரு தீவிரமான புதுப்பிப்புதான் பாதைகள், இது வழக்கமாக அடிப்படை பிளாஸ்டிக் கொண்டிருக்கும், அதில் உள்ள உள்ளடக்கங்களை விளக்க ஒரு காகித தொகுப்புடன் இருக்கும். (ஜே.டி. மன்ரோவின் உரை)\nஞாயிறு 9 மே 2021\nவலைத்தள வடிவமைப்பு வெள்ளை கேன்வாஸ் கட்டமைக்க சிறந்த பின்னணியை வழங்குகிறது. சர்க்கரை இனிப்பு வண்ண கலவையானது பார்வையாளரை ஈர்க்கும் சரியான கவனத்தை ஈர்க்கும் உறுப்பை வழங்குகிறது. செரிஃப் மற்றும் சான்ஸ் செரிஃப் எழுத்துருக்கள் மற்றும் வெயிட்டிங் மற்றும் வண்ணங்களின் கலவையானது பார்வையாளரை மேலும் ஆராய்வதற்கு ஒரு கவர்ச்சியான கலவையை உருவாக்குகிறது. HTML5 இடமாறு அனிமேஷன் வலைத்தளம் பொறுப்புடன், எங்களிடம் எங்கள் சொந்த பணியாளர் திசையன் எழுத்துக்கள் வடிவமைப்பு உள்ளது. நல்ல மற்றும் மென்மையான அனிமேஷன்களுடன் பிரகாசமான வண்ணத்துடன் அதன் தனித்துவமான வடிவமைப்பு ..\nபீர் கலர் ஸ்வாட்சுகள் வெவ்வேறு பீர் வண்ணங்களை அடிப்படையாகக் கொண்ட முதல் பீர் குறிப்பு வழிகாட்டியாக பீர்டோன் உள்ளது, இது கண்ணாடி வடிவ விசிறியில் வழங்கப்படுகிறது. முதல் பதிப்பிற்காக 202 வெவ்வேறு சுவிஸ் பியர்களிடமிருந்து, நாடு முழுவதும், கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி, வடக்கிலிருந்து தெற்கு நோக்கி பயணம் செய்தோம். முழு செயல்முறையும் செய்ய நிறைய நேரம் மற்றும் ஒரு விரிவான தளவாடத்தை எடுத்தது, ஆனால் இந்த இரண்டு உணர்வுகளின் விளைவாக எங்களுக்கு மிகவும் பெருமை சேர்க்கிறது, மேலும் பதிப்புகள் ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளன. சியர்ஸ்\nவெள்ளி 7 மே 2021\nபிராண்ட் அடையாளம் BIA என்பது அட்லாண்டிக் வானத்தின் உள்ளூர்-பறவை சின்னமாகும், இது நாடுகளின் மீது எண்ணங்கள் மற்றும் கனவுகளைப் பறக்கிறது, இது இயற்கையின் ஒரு பைலட், மக்கள், நினைவுகள், வணிகம் மற்றும் நிறுவனங்களை கொண்டு செல்கிறது. SATA இல், BIA எப்போதும் ஒரு அட்லாண்டிக் சவாலில் தீவுக்கூட்டத்தின் ஒன்பது தீவுகளின் ஒன்றிணைப்பைக் குறிக்கும்: அசோரஸின் பெயரை உலகிற்கு எடுத்து உலகத்தை அசோரஸுக்குக் கொண்டு வாருங்கள். BIA - ப்ளூ தீவுகள் Açor - முன்மாதிரிகளின் எதிர்காலத்தில் ஈர்க்கப்பட்டு, அதன் தனித்துவமான மரபணுக் குறியீட்டில் கட்டமைக்கப்பட்ட, அசோரஸின் ஒன்பது தீவுகளாக சமச்சீரற்ற, தனித்துவமான மற்றும் வண்ணமயமான, புனரமைக்கப்பட்ட ஒரு பறவை, ரெக்டிலினியர்.\nஅசல் மற்றும் ஆக்கபூர்வமான வடிவமைப்புகள், கலை, கட்டிடக்கலை, ஃபேஷன், கிராபிக்ஸ் வடிவமைப்பு, புதுமை மற்றும் வடிவமைப்பு உத்தி ஆகியவற்றை நாங்கள் விரும்புகிறோம். தினமும், திறமையான வடிவமைப்பாளர்கள், படைப்பாற்றல் கலைஞர்கள், புதுமையான கட்டிடக் கலைஞர்கள் மற்றும் சிறந்த பிராண்டுகளின் நல்ல வடிவமைப்புகளைத் தேர்ந்தெடுத்து வெளியிடுகிறோம். நல்ல வடிவமைப்பிற்கான உலகளாவிய பாராட்டையும் விழிப்புணர்வையும் உருவாக்குவதே எங்கள் நோக்கம்.\nThe Float ரியல் எஸ்டேட் நிறுவனம் வியாழன் 6 மே\nOr2 ஃபோட்டோக்ரோமிக் விதான அமைப்பு புதன் 5 மே\nEye of Ra' பொது நகர்ப்புற கலை தளபாடங்கள் செவ்வாய் 4 மே\nநீங்கள் ஒரு வடிவமைப்பாளர், கலைஞர், கட்டிடக் கலைஞர், புதுமைப்பித்தன் அல்லது பிராண்ட் மேலாளரா பகிர்வதற்கு உங்களிடம் ஏதேனும் நல்ல வடிவமைப்புகள் உள்ளதா பகிர்வதற்கு உங்களிடம் ஏதேனும் நல்ல வடிவமைப்புகள் உள்ளதா உலகளவில் வடிவமைப்பாளர்கள், கலைஞர்கள், கட்டட வடிவமைப்பாளர்கள், கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் பிராண்டுகளிலிருந்து அசல் மற்றும் ஆக்கபூர்வமான வடிவமைப்புகளை ��ெளியிடுவதில் நாங்கள் மிகவும் ஆர்வமாக உள்ளோம். உங்கள் வடிவமைப்புகளை இன்று வெளியிடவும்.\nஅன்றைய வடிவமைப்பு நேர்காணல் வியாழன் 6 மே\nஅன்றைய வடிவமைப்பு புராணக்கதை புதன் 5 மே\nஅன்றைய வடிவமைப்பு செவ்வாய் 4 மே\nஅன்றைய வடிவமைப்பாளர் திங்கள் 3 மே\nஅன்றைய வடிவமைப்பு குழு ஞாயிறு 2 மே\nஆல்பம் கவர் கலை மெனுக்கான கவர் டிவிடி பெட்டி வலைத்தள வடிவமைப்பு பீர் கலர் ஸ்வாட்சுகள் பிராண்ட் அடையாளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vativamaippu.com/?D=104729", "date_download": "2021-05-07T01:10:45Z", "digest": "sha1:UCI355DOFH4C7PNKXKQIIRDGD4QE4J7H", "length": 8439, "nlines": 67, "source_domain": "www.vativamaippu.com", "title": " Lavazza Desea காபி இயந்திரம் - வடிவமைப்பு இதழ்", "raw_content": "\nவியாழன் 6 மே 2021\nகாபி இயந்திரம் இத்தாலிய காபி கலாச்சாரத்தின் முழுமையான தொகுப்பை வழங்க வடிவமைக்கப்பட்ட ஒரு நட்பு இயந்திரம்: எஸ்பிரெசோவிலிருந்து உண்மையான காபூசினோ அல்லது லட்டு வரை. தொடு இடைமுகம் இரண்டு தனித்தனி குழுக்களாக தேர்வுகளை ஏற்பாடு செய்கிறது - ஒன்று காபி மற்றும் ஒன்று பால். வெப்பநிலை மற்றும் பால் நுரைக்கான பூஸ்ட் செயல்பாடுகளுடன் பானங்கள் தனிப்பயனாக்கப்படலாம். தேவையான சேவை மையத்தில் ஒளிரும் சின்னங்களுடன் குறிக்கப்படுகிறது. இந்த இயந்திரம் ஒரு பிரத்யேக கண்ணாடி குவளையுடன் வருகிறது மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட மேற்பரப்பு, சுத்திகரிக்கப்பட்ட விவரங்கள் மற்றும் வண்ணங்கள், பொருட்கள் & ஆம்ப்; பூச்சு.\nதிட்டத்தின் பெயர் : Lavazza Desea, வடிவமைப்பாளர்களின் பெயர் : Florian Seidl, வாடிக்கையாளரின் பெயர் : Lavazza.\nஇந்த விதிவிலக்கான வடிவமைப்பு பொம்மை, விளையாட்டுகள் மற்றும் பொழுதுபோக்கு தயாரிப்புகள் வடிவமைப்பு போட்டியில் பிளாட்டினம் வடிவமைப்பு விருதை வென்றது.\tபல புதிய, புதுமையான, அசல் மற்றும் ஆக்கபூர்வமான பொம்மை, விளையாட்டுகள் மற்றும் பொழுதுபோக்கு தயாரிப்புகள் வடிவமைப்பு படைப்புகளைக் கண்டறிய பிளாட்டினம் விருது பெற்ற வடிவமைப்பாளர்களின் வடிவமைப்பு இலாகாவை நீங்கள் நிச்சயமாகப் பார்க்க வேண்டும்.\nஇந்த வடிவமைப்பைப் பற்றி மேலும் அறிக\nஅற்புதமான வடிவமைப்பு. நல்ல வடிவமைப்பு. சிறந்த வடிவமைப்பு.\nசெவ்வாய் 4 மே 2021\nநல்ல வடிவமைப்புகள் சமுதாயத்திற்கு மதிப்பை உருவாக்குகின்றன. வடிவமைப்பில் சிறந்து விளங்கும் ஒரு சிறப்பு வடிவமைப்பு திட்டத்த�� தினமும் நாங்கள் இடம்பெறுகிறோம். இன்று, ஒரு விருது வென்ற வடிவமைப்பை நேர்மறையான வித்தியாசத்தை வெளிப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். நாங்கள் தினமும் மிகச் சிறந்த மற்றும் எழுச்சியூட்டும் வடிவமைப்புகளைக் காண்பிப்போம். உலகெங்கிலும் உள்ள சிறந்த வடிவமைப்பாளர்களிடமிருந்து புதிய நல்ல வடிவமைப்பு தயாரிப்புகள் மற்றும் திட்டங்களை அனுபவிக்க தினமும் எங்களைச் சந்திப்பதை உறுதிசெய்க.\nஇந்த வடிவமைப்பைப் பற்றி மேலும் அறிக\nThe Float ரியல் எஸ்டேட் நிறுவனம் வியாழன் 6 மே\nOr2 ஃபோட்டோக்ரோமிக் விதான அமைப்பு புதன் 5 மே\nEye of Ra' பொது நகர்ப்புற கலை தளபாடங்கள் செவ்வாய் 4 மே\nநீங்கள் ஒரு வடிவமைப்பாளர், கலைஞர், கட்டிடக் கலைஞர், புதுமைப்பித்தன் அல்லது பிராண்ட் மேலாளரா பகிர்வதற்கு உங்களிடம் ஏதேனும் நல்ல வடிவமைப்புகள் உள்ளதா பகிர்வதற்கு உங்களிடம் ஏதேனும் நல்ல வடிவமைப்புகள் உள்ளதா உலகளவில் வடிவமைப்பாளர்கள், கலைஞர்கள், கட்டட வடிவமைப்பாளர்கள், கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் பிராண்டுகளிலிருந்து அசல் மற்றும் ஆக்கபூர்வமான வடிவமைப்புகளை வெளியிடுவதில் நாங்கள் மிகவும் ஆர்வமாக உள்ளோம். உங்கள் வடிவமைப்புகளை இன்று வெளியிடவும்.\nஅன்றைய வடிவமைப்பு நேர்காணல் வியாழன் 6 மே\nஅன்றைய வடிவமைப்பு புராணக்கதை புதன் 5 மே\nஅன்றைய வடிவமைப்பு செவ்வாய் 4 மே\nஅன்றைய வடிவமைப்பாளர் திங்கள் 3 மே\nஅன்றைய வடிவமைப்பு குழு ஞாயிறு 2 மே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://abedheen.wordpress.com/category/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-05-07T00:15:07Z", "digest": "sha1:YP5C7MT7MBR5TLK4IZYSRTGAH5SXEPSB", "length": 80857, "nlines": 664, "source_domain": "abedheen.wordpress.com", "title": "வாசகர் | ஆபிதீன் பக்கங்கள்", "raw_content": "\nவாசகர் பார்வை : ‘தங்ஙள் அமீர்’\n02/09/2019 இல் 13:00\t(காலச்சுவடு, தங்ஙள் அமீர், தாஜ், வாசகர்)\nமறைந்த உயிர் நண்பர் தாஜ் (எழுதும்போதே கண்ணீர் வருகிறது எனக்கு) எழுதிய குறுநாவல்களின் தொகுப்பான ‘தங்ஙள் அமீர்’ பற்றி சகோதரர் முஹம்மது சுஹைப் முகநூலில் எழுதியதைப் பகிர்ந்து கொள்கிறேன். இப்படி ஒரு இஸ்லாமிய எழுத்தாளரா என்று ஆச்சரியப்படும் சுஹைப், யாரென்றே தெரியாமற் போனாரே தாஜ் என்று உருகுகிறார்.\nபதிவில் கண்ட மறுமொழிகளையும் கீழே இணைத்திருக்கிறேன். – AB\nதமிழில் இப்படி ஒரு இஸ்லாமிய எழுத்தாளர் இருந்தார் என்றே ரொம்ப நாட்���ளுக்குப் பிறகு… எனக்கு இந்தப் புத்தகம் பார்த்துதான் தெரியும்.\nசீர்காழியைச் சேர்ந்த தாஜ் அவர்கள் இப்போது நம்மிடையே இல்லை .மிகச்சமீபமாகத்தான் இவர் நம்மை விட்டும் மறைந்தார் என்ற தகவல் கூட அருமை நண்பர் நிஷா மன்சூர் சொல்லித்தான் தெரியும்.\nஇப்படித்தான் சிலர் குடத்திலிட்ட விளக்காக வாழ்ந்து மறைந்து போகின்றனர்.\nஅவரது அடர்த்தியான எழுத்துக்களைக் கொண்ட ’தங்ஙள்அமீர்’ என்ற இந்த சிறுகதைத் தொகுப்பை ..வாசிக்கும் போது இவர் இருக்கும் போது இவரை அறியாமற் போனோமே என்ற வருத்தமே மேலோங்கியது.\nசிறுகதை என்ற இலக்கணத்தையும் மீறிய சற்றே பெரிய சிறுகதைகளைக் கொண்ட தொகுப்பு இது…நாலோ…ஐந்தோ கதைகள்தான் உள்ளன.\nபொதுவாக… தமிழ் இஸ்லாமிய வாழ்வியல் சார்ந்து எங்கள் பக்கம்…அல்லது குமரி மாவட்டத்தைச் சேர்ந்ததான கதைகளையே நான் பெரிதும் வாசித்துள்ளேன். ஆனால்…முஸ்லிம்கள் தமிழகமெங்கும் பரவி வாழ்கிறார்களே…இல்லையா…\nகீழ்த் தஞ்சை மாவட்ட இஸ்லாமிய சமூகத்தின் வாழ்வியலை…மிக நேர்த்தியாக .எனதுமுதல்திருமணம்… பெருநாள்காலை..போன்ற கதைகளில் மிக விரிவாக சித்தரிக்கிறார்….\nதொகுப்பின் தலைப்புக் கதையான ’தங்ஙள் அமீர்’ கதை முழுக்க சவூதி அரேபியா தம்மாம் மற்றும் ரியாத் நகர்களில் நடக்கிறது…இந்த இரண்டு ஊர்களிலுமே நான் பணி செய்தவன் என்பதால் இக்கதையும் மனதுக்கு மிக நெருக்கமாக இருக்கிறது…\nஇந்தியாவிலிருந்து மாந்ரீகம் செய்யும் ஒரு கேரளத் தங்ஙள் மும்பை வந்த ஒரு அரபியின் அழைப்பை ஏற்று அவன் காதலிக்கும் ஒரு பெண்னை மாந்த்ரீக சக்தியால் அவனோடு சேர்த்து வைக்கும் பொருட்டு அவனோடு ரியாத் சென்று… அது முடியாத காரணத்தால் எங்கே அந்த அரபி தன்னை நாடு திரும்ப அனுமதிக்க மாட்டானோ…என்ற அச்சத்தில் கேரள முஸ்லிம்களிடம் தஞ்சமடைய…அவர்கள் தங்களது செல்வாக்கை பய்படுத்தி தங்ஙளை இந்தியாவுக்கு ரகசியமாக அனுப்பி வைக்கும் செயலை…மிக அற்புதமாக சித்தரிக்கிறது கதை.\nசவூதிக்கு ஒரு முதலாளியிடம் வேலை செய்ய வந்து அந்த முதலாளியின் அராஜகம்…பிடிக்காததால்…அவனை விட்டும் தப்பி…வேறு எங்கோ சென்று தலைமறைவாக வாழ்ந்து…நாலைந்து ஆண்டுகள் உழைத்த பொருளோடு ..இறுதியாக இந்தியத் தூதுவரகத்தில் தஞ்சமடைந்து பிறகு தூதுவரகம் வழங்கும் தற்காலிக பாஸ்போர்ட்டில் தாய்நாடு திரும்பிய பலரது கதைகளை நான் அங்கிருக்கும் போது நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன்.\nதங்ஙள் கதையும் அம்மாதிரியானதுதான். என்ன வழக்கமான கூலித் தொழிலாளியாக இல்லாமல் சற்று மேல் மட்ட கதையாக இது சொல்லப்படுகிறது\n“எனது முதல் திருமணம் “கதை தாஜ் சிறுவயதாக இருந்த போது… விளைச்சல் இல்லாத தென்னை மரத்துக்கு திருமணம் செய்து வைத்தால்…விளைச்சல் பெருகும்..என்ற பாரம்பர்ய கீழ்த்தஞ்சை மாவட்ட விவசாயிகளின் நம்பிக்கையையொட்டி….அந்த தென்னை மரத்துக்கு தாஜையே திருமணம் செய்து வைத்த கலகலப்பான நிகழ்வை… அங்குள்ள முஸ்லிம்களின் பேச்சு நடையில் சித்தரித்துள்ளார்..\n’பெருநாள் காலை’யும் அதே மாதிரியான ஒரு முஸ்லிம்கள் வாழ்வியல் சித்தரிப்புதான்.\n’இறந்தவன் குறிப்புக்கள்’ மிகவும் அடர்த்தியான இலக்கியச் சொல்லாடல்கள் மிகுந்த கதை.இப்படியான எழுத்துக்களை எழுதும் முஸ்லிம் எழுத்தாளர்கள் கூட…இருந்திருக்கிறார்களா.. என்று என்னை வியக்க வைத்த ஒரு நிரூபணம் .\nஎனக்குத்தான் தனிப்பட தெரியாமல் போனாரா… அல்லது இஸ்லாமிய சமூகமே அவரைக் கண்டு கொள்ளவில்லையா…. அல்லது இஸ்லாமிய சமூகமே அவரைக் கண்டு கொள்ளவில்லையா….\nகொண்டாடப்பட்டிருக்க வேண்டியவர். யாரென்றே தெரியாமற் போனது ஒரு இலக்கிய சோகம்.\nFirthouse Rajakumaaren Nazeer : ஒரு சிறந்த இலக்கிய வாசகர் கவிஞர் ,எழுத்தாளர் தாஜ் அவர்களைத் தெரியாமல் இருந்தது ஆச்சிரியமாக இருக்கு ஜி \nநிஷா மன்சூர் : பெரும் சோகம் இது. தமிழ்ச் சூழலில் படைப்புகளை விட படைப்பாளிகளின் பாலிடிக்ஸ் முக்கியத்துவம் பெறுகிறது\nSlm Hanifa : எனக்கு பத்துவருடங்களுக்கு முன்னரே அறிமுகமானார்.. ஆபிதீன் பக்கங்களை அவர் எழுத்துக்கள் அலங்கரித்தன.. தளம் சிற்றிதழ் அவரின் படைப்புகளை பிரசுரித்தது.. தமிழ்சினிமாவின் பின்னணியில் அசோகமித்திரன் எழுதியதைவிடவும் இவரின் எழுத்து உன்னதமானது.. ஆனாலும் இவரைப்பலரும்கண்டுகொள்ளவில்லை… மரணத்திற்கு முதல் நாளும் இவரோடு பேசினேன் … அனாரின் கவிதைகள் பற்றிய இவரின் பார்வை எத்துணை சிறப்பானது தம்பி..\nMohamed Sabry : இவர் அறிமுகமானவர்தான். கட்டாயம் வரவேண்டும் என்று அடிக்கடி சொல்வார். புத்தகம் இருந்தும் வாசிக்கவில்லை. அவர் மரணச் செய்தி கேட்டதும் மிகவும் கவலையாக இருந்தது. அண்மையில்தான் தங்ஙள் அமீர் வாசித்தேன்.\nMeeran Mitheen : நல்ல நேசமுள்ள ���ன்பாளராக இருந்தார்.\nKannan Sundaram : சுரா நடத்திய காலத்திலிருந்தே காலச்சுவடில் பங்களித்துள்ளார். அதிகம் எழுதுபவர் அல்ல.\nநசிஹா நேசன் : முகநூல் நண்பராக இருந்தவர்…முன்னர் சில நேரங்களில் முகநூல் உள்டப்பி மூலம் பேசியதுண்டு காகா….\nMoulasha Moulasha (பிறைநதிபுரத்தான்) : 2002-3 களில் திண்ணை இணைய தளத்தில் அடிக்கடி கட்டுரை கவிதை எழுதுவார். அவ்வப்போது நானும் எழுதும்போது நன்பரானோம். அடிக்கடி மெயில் மூலம் ஊக்கம் தருவார். சென்னை புத்தகக்கண்காட்சிக்கு இரண்டு முறை வந்தபோது சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இடையில் போன் மூலம் தொடர்பு கொள்வதுண்டு எழுத நிறைய விஷயங்கள் இருந்தன அவரிடம். எதிர்பாரா மரணம் – ஒரு படைப்பாளியை பறித்துக் கொண்டது.\nRasool Mohideen ; ஐம்பது லட்சம் முஸ்லிம்கள் வாழும் தமிழகம். இன்று ஐயாயிரம் முஸ்லிம் எழுத்தாளர்கள் உயிர் வாழக் கூடும். மாவட்டம், சாதி, இஸம், முற்போக்கு லாபி, குழு மனோபாவம் அழுத்துகிறது.இப்போதைக்கு முகநூல் இணைக்கிறது.\nசுஜாதா, கொஞ்சம் குஸ்கா சாப்டுறீங்களா\n23/06/2011 இல் 10:00\t(சுஜாதா, நதீம், வாசகர்)\nஇரண்டு வருடங்களுக்கு முன் இங்கே பரிமாறியது இந்த ‘குஸ்கா’. எழுதிய வாசக நண்பரின் பெயர் அப்துல் காதர். இது வேறு காதர். ’எல்லைக்கல் யூசுப்’ பற்றி எழுதி எல்லோரையும் சிரிக்கவைத்த ‘ஆஹா பக்கங்கள்’ காதர் அல்ல. உத்தமபாளையம் காதர். ’ஊஹூ பக்கங்கள்’ காதர் என்று வைத்துக்கொள்ளுங்களேன். சகோதரர் ரமீஸ் பிலாலியின் தோழர். எனவே ஆன்மிகத்தில் மிகவும் ஈடுபாடுடையவர் என்று தெரிந்திருக்கும். ‘ஒரு சூஃபி கோபப்பட இயலுமா’ என்று ஏதோ ஒரு கதையில் ஒரு வரி எழுதியிருந்தேன் போல. அதைப் படித்துவிட்டு தொடர்புகொண்ட காதர் , ‘தினம் ஒரு பூண்டை’ ப் படித்து – எச்சரிக்கையாகப் படித்தீர்கள்தானே’ என்று ஏதோ ஒரு கதையில் ஒரு வரி எழுதியிருந்தேன் போல. அதைப் படித்துவிட்டு தொடர்புகொண்ட காதர் , ‘தினம் ஒரு பூண்டை’ ப் படித்து – எச்சரிக்கையாகப் படித்தீர்கள்தானே – ’உன்னண்டை பேசமாட்டேன் போ’ சொல்லிவிட்டார். போகட்டும், ’குஸ்கா’வுக்கு நான் அன்று கொடுத்த தலைப்பு காதருக்குப் பிடிக்கவில்லை. அந்த தலைப்பு…. இங்கே வேண்டாமே.. குஸ்காவையும் கடவுளையும் தொடர்புபடுத்தி கிண்டலடித்து இருந்தேன். பிரியாணியை படைத்தவன்தானே குஸ்காவையும் படைத்தான் என்ற ஆன்மிக சிந்தனை. அப்படியில்லை போலும். காதரிடம் அனுமதி பெறாமல் நான் செய்தது தவறுதான். எதற்கு வீண் வம்பு என்று பதிவை அழித்து விட்டேன்.\nதற்போது திருச்சி ஜமாலில் படித்துக்கொண்டிருக்கும் என் செல்ல மகனார் நதீம் , ‘இந்த (ஹாஸ்டல்) குஸ்காவைத்தான் சூப்பரா இக்கிம்டு சொன்னீங்களா வாப்பா கேவலாமவுல இக்கிது’ என்று அடிக்கடி சொல்வதால் (அவருக்கு எல்லாமே கேவலம். ஒரு கதையிலும் சொல்லியிருக்கிறேன். ’மோசம்’ என்பதை கேவலம் என்பார், கேவலமாக. நான் போட்டிருந்த சட்டையை ’கேவலமா இக்கிது வாப்பா’ என்று சொன்னதால் எல்லா சட்டைகளையும் திருப்பித்தான் போடுகிறேன் இப்போதெல்லாம்.) நமது அருமையான பழைய குஸ்கா காலங்களை நினைவு கூர்வோமே என்று பட்டது. என்னுடைய, ரஃபி (நாகூர் ரூமி)யுடைய கல்லூரிக் காலம் வருகிறது இந்த ’குஸ்கா’வில் என்பதால் பதிவிடுகிறேன். வரலாறு முக்கியம். நம்ம ரூமி அந்த காலங்களில் ஹாஸ்டலில் செய்த கூத்துகளை – முக்கியமாக , பெருமழை பெய்த நாளொன்றில் ஹாஸ்டல் மைதானத்தின் நடுவே தனியாக நின்று அவர் ஆடிய நடனத்தை – பிறகு எழுதுவார், இன்ஷா குஸ்கா\nஇந்த அப்துல்காதர் தனியாக ஒரு வலைப்பதிவு வைத்திருக்கிறார். முகவரி மறந்துவிட்டது. தெரிந்ததும் ’லிங்க்’ கொடுக்கிறேன். ‘குஸ்கா’வுடன் காதர் எழுதிய ’முடிச்சு’ எனும் ஆன்மிகப் பதிவையும் படியுங்கள். சுஜாதாவுடன் முடிச்சு போடுகிறார். ‘கடவுள்’ என்ற சுஜாதாவின் புத்தகத்திலிருந்து எடுத்த ஓரிரு பத்திகள். ஆன்மிகம் என்றால் அலறி ஓடும் ஆட்களா சகோதரி ராமசந்திரன்உஷா செய்த ’குஸ்கா’வை இங்கே போய் ருசியுங்கள்.\nநதீம் பற்றி ஒருவிஷயம் சொல்ல மறந்து விட்டேன். அவருக்கு ஜமால் ஹாஸ்டல் ரூம் பிடிக்கவில்லை – இந்த வருடமும். சின்ன அறையில் ஏழெட்டு பேரைப்போட்டு கொல்லுகிறார்கள் என்கிறார். பெரிய கல்லூரி இன்னும் பெருசாக எப்படித்தான் வளர்வதாம் அப்புறம்… தினம் கூட்டங்கூட்டமாக வரும் இஸ்லாமிய அழைப்புகள் – சுவனம் காட்ட. பூமியில் உருவாக்கத் தெரியாமல் வானத்தைப் பார்த்துக்கொண்டு அலையும் கூட்டம். ஒவ்வொரு மதத்தவரும் அடுத்த மதத்தவர்களை மதித்தால் சொர்க்கம் உடனே பிறந்துவிடாதா சுலபமாக இங்கே அப்புறம்… தினம் கூட்டங்கூட்டமாக வரும் இஸ்லாமிய அழைப்புகள் – சுவனம் காட்ட. பூமியில் உருவாக்கத் தெரியாமல் வானத்தைப் பார்த்துக்கொண்டு அலையும் கூ���்டம். ஒவ்வொரு மதத்தவரும் அடுத்த மதத்தவர்களை மதித்தால் சொர்க்கம் உடனே பிறந்துவிடாதா சுலபமாக இங்கே முடிகிற காரியமா என்று முனகாதீர்கள். உதாரணத்திற்கு என்னையே எடுத்துக்கொள்ளுங்கள். கவிஞர் தாஜை நான் மதிக்கிறேனே.. 🙂\nகணபதியே வருவாய் அருள்வாய் (கணபதியே)\nமனம் மொழி மெய்யாலே தினம் உன்னைத் துதிக்க\nமங்கள இசை என்தன் நாவினில் உதிக்க (கணபதியே)\n‘பாத்து நடந்துக்க வாப்பா.. எல்லாரோடவும் ஃப்ரெண்ட்லியா பழகனும். முக்கியமா அடுத்த மதத்துகாரங்களோட அண்ணன் தம்பியா பழகனும். ஹுசைனப்பா (என் வாப்பாவை நதீம் அப்படித்தான் அழைப்பார். வாப்பாவுக்கும் அது இஷ்டம்) அப்படித்தான் சொல்வாஹா’ என்றேன். ‘எனக்கு உங்கள மாதிரிலாம் டிஃபரன்ஸ் பாக்கத் தெரியாது வாப்பா. எல்லாரும் ஒண்ணுதான் எனக்கு ’ என்று ஒரு அறை அறைந்தார். சந்தோஷமாக இருந்தது.\n‘இன்னொரு கஷ்டம் இக்கிது வாப்பா’\n’ – கால்தான் உடையுமென்று தெரியாமல் கல்லை உதைத்தேன். ஓ, அந்த ’எல்லைக்கல்’ விஷயத்தை விட்டுவிட்டேனே… நண்பர் ஒருவரை வேலை நிமித்தம் ஓரிடத்திற்கு போகச் சொல்லி விட்டு, திரும்பி வந்து பார்க்கும் சமயம் இருட்டிவிட்டதாகவும், அவர் போகாமல் இருட்டில் உட்கார்ந்திருக்கக் கண்டு எட்டி உதைத்ததாகவும், பிறகுதான் அவர் உதைத்தது ஊரின் எல்லைக்கல் என்றும், உதைத்ததில் அந்தக்கல் இரண்டு துண்டாய் உடைந்து போனதாகவும், அதனால் அவர் பெயர் எல்லைக்கல் யூசுப் என்று பெயர் விளங்கக் காரணமாகியது என்கிறார்கள் என்று கடுமையாக சிரிக்க வைக்கிறார் காதர். திட்டமாக சிரிக்க திட்டச்சேரி பற்றிய அவர் பதிவுக்குச் செல்லுங்கள். இங்கே உதைக்க வேண்டும்\nசரி, செல்ல மகனுக்கு என்ன கஷ்டமாம் சாப்பாடு ரொம்ப கேவலம் என்பாரோ வழக்கம்போல சாப்பாடு ரொம்ப கேவலம் என்பாரோ வழக்கம்போல அதுதான் வாராவாரம் ஊர்வந்து பாட்டியா பொன்னாச்சிமாவை தாளித்து வாத்துக்கறியாக அமுக்குகிறாரே.. .’என்னாவாப்பா பன்றது, கெணத்துல ஊத்துற சாம்பாரு மாதிரி அங்க போடுறாஹலாம்..’ என்று கொஞ்சுகிறார்கள் தன் பேரனை – என்னப் பெத்த உம்மா. ஒன்றும் சொல்ல முடியவில்லை நதீமை. ஊர்தான் என்னை அடக்குகிறதென்றால் நண்பர்களோ அதட்டி மிரட்டுகிறார்கள். காரைக்குடி மஜீத் அடித்தே விடுவார் போல. ’அடிக்கடி ஊருக்கு வந்துடுறான்’ என்று புகார் அளித்தால், ‘நல்லதுதானே.. அ��்மாவ பாக்கத்தான் வர்றாரு.. வேற எங்கேயும் போகலையே..’ என்று மஜீதின் முதலாளி, அதான்.. அவருடைய துனைவி, புதிய விளக்கம் கொடுக்கிறது. என்ன செய்வேன் அதுதான் வாராவாரம் ஊர்வந்து பாட்டியா பொன்னாச்சிமாவை தாளித்து வாத்துக்கறியாக அமுக்குகிறாரே.. .’என்னாவாப்பா பன்றது, கெணத்துல ஊத்துற சாம்பாரு மாதிரி அங்க போடுறாஹலாம்..’ என்று கொஞ்சுகிறார்கள் தன் பேரனை – என்னப் பெத்த உம்மா. ஒன்றும் சொல்ல முடியவில்லை நதீமை. ஊர்தான் என்னை அடக்குகிறதென்றால் நண்பர்களோ அதட்டி மிரட்டுகிறார்கள். காரைக்குடி மஜீத் அடித்தே விடுவார் போல. ’அடிக்கடி ஊருக்கு வந்துடுறான்’ என்று புகார் அளித்தால், ‘நல்லதுதானே.. அம்மாவ பாக்கத்தான் வர்றாரு.. வேற எங்கேயும் போகலையே..’ என்று மஜீதின் முதலாளி, அதான்.. அவருடைய துனைவி, புதிய விளக்கம் கொடுக்கிறது. என்ன செய்வேன் ஆமாம் , என்னதான் நதீமுக்கு பெரிய கஷ்டம்\n’வஹாபிங்க மெரட்டுறாங்க; தப்லீக்காரங்க கெஞ்சுறாங்க. ரெண்டுபேருக்கும் நடுவுலே மாட்டிக்கிட்டு முளிக்கிறேன் வாப்பா’ என்கிறார்.\n‘வஹாபிலுவ மெரட்டுறாஹா, தப்லீக்குகாரஹ கெஞ்சுறாஹாண்டு தமிள்லெ சொல்லனும்ங்கனி’\n ஆனாலும் அவர் சொன்னதை நான் ரொம்பவும் ரசித்தேன். ஒன்று பணிந்தே ஆகவேண்டும் என்ற கட்டளை. இன்னொன்று குனிந்து கெஞ்சும் கோழைத்தனம். இரண்டையும் சேர்ந்து தாங்குவது கஷ்டம்தான்.\nகுஸ்கா – அப்துல் காதர் பிலாலி\n‘நீ எங்கிருந்தாலும் நமது ஹாஸ்டல் குஸ்காவை மறவாதே’ – இவ்வாறாக எழுதி எனது ஆட்டோகிராஃபில் கையெழுத்திட்டார் கபீர். குஸ்கா என்பது யாது பிந்திய 70களில் ஜாலி ஜமால் விடுதியில் இருந்தவர்களிடம் இதைக் கேட்டால் சொல்வார்கள். இது பிரியாணி மைனஸ் கறி என்று சுருக்கமாகக் கூறி விளங்க வைக்கலாம் அறியாதவரிடம். அக்கால பி.யு.சி வகுப்புகளில் பெருங் கூட்டமாக இருக்கும். பிளஸ்2 வந்த பிறகு கல்லூரிகளின் போக்கு மாறி விட்டது. 40 வயதைக் கடந்தவர்களுக்கு இது நன்றாகத் தெரியம்.\nஅங்கு தப்லீக்காரர்கள் வலை வீசி வருவார்கள். குறிப்பாக ஞாயிற்றுக் கிழமை புரோகிராமென்று. விழுந்தடித்துக் கொண்டு ஓடி ஒளிவதில் கொல்லையிலும் உதவி தேடப்படும். இன்னும் இது முனைப்பாகத் தொடர்வதாக சொல்லப் படுகிறது.\nஒரு முறை இருந்த கொல்லைகளில் உள்ளே இருந்தவர்கள் பல மணி நேரங்களுக்கு வெளியே வராது இருந்த��ல் பெரிய கூட்டமாகி விட்டதென்றும் யாரோ ஒரு வெகு ஜன விரோதி ஒவ்வொரு கொல்லைக்குள்ளும் புகுந்து உள்ளே தாழிட்டு விட்டு பிறகு மதிலேறி மற்றொன்றில் புகுந்து இவ்வாறான தீரச் செயல் செய்து விட்டிருக்கிறானென்றும் பேசிக் கொண்டார்கள். நல்ல வேளையாக அந்த சமயத்தில் க்யூவில் நான் இல்லை.\nபவர் கட். இரவில் ஸ்டடி நேரத்தில் ஒருவர் கையில் ஒலிம்பிக் தீபம் ஏற்றி வந்து ஹாஸ்டலின் உள் மைதானில் வலம் வந்தார். டைனமோ விளக்கு எரிய ஒருவர் சைக்கிள் விட்டார். மேலே இருந்த பௌதிக விஞ்ஞானி ஒருவர் அந்தக் காலத்து சார்ஜர் லைட்டை ஃபோகஸ் செய்து அரங்கில் ஒரு இடத்தில் ஒளி வட்டத்தை ஏற்படுத்தினார். இருளில் வெளவால், கோட்டான், நரி ஆகியவைகளின் ஒலி எழுப்பப் பட்டன. இவைகளெல்லாம் நிகழ நம்மால் ஆன ஒரு காரியம் செய்தாக வேண்டுமே என்று 110 ஆம் நம்பர் ரூமில் வாசஞ் செய்த நான் களமிறங்கினேன். ஒளி வட்டத்திற்கு சென்றேன். நட்ட நடுவில் சிரசாசனம் செய்தேன். இம்பல்ஸிவ்வாக செய்தது எல்லாமே தலைகீழ் என்று ஸிம்பாலிக்காக உணர்த்துவதாக அமைந்தது. ஹோ..வென்ற பாராட்டு ஆரவாரத்தில் மூழ்கி (கண்) சிவந்தேன்.\nஅகால வேளைகளில் 111 நம்பர் ரூமில் இருக்கும் ஜன்னலை லேசாகத் திறந்து ‘ஹ்ஹ்ஹஹ்ஹபீய்ய்ர்” என்று பேரொலி இடுவது, எந்தப் பேயன் இவன் என்று எரிச்சலுடன் அவர்கள் 5 பேரும் எழுந்திருக்க கபீர் ஓடி வந்து ‘ஹ்ஹ்ஹ்ஹகாதர்” என்று பதிலுக்கு அலற இவ்வமளிகளில் மனம் சந்தோசிக்கும்.\nஇரு அஜ்மல்கள் இருந்தார்கள் அந்த அறையில். அதில் ஒருவர் இந்தி ஸ்டார் போல. போடிக்காரர். பக்கத்து ஊர்க்காரர் என்று அவரிடம் மரியாதையாக நடந்து கொண்டும் அறந்தாங்கி அஜ்மலின் எரிச்சலை சம்பாரிப்பதும் எனது ஒரு பொழுது போக்கு. அவசரமாக அவசரமாகக் கல்லூரி செல்ல நோட்டு, புத்தகங்கள் எடுக்க டேபிள் கிளாத் விரித்த மேசையில் கைப்பிடி இல்லாத மூழி டிராயரின் கீழே கையை வைத்து இழுத்து இழுத்துப் பார்ப்பார். வராது. எப்படி வரும் டேபிள் மாற்றிப் போடப்பட்டிருக்கும். டிராயர் பக்கம் மதிலைப் பார்த்தபடி இருக்கும். பேயன், பேயன் என்று டேபிளை திருப்பிப் போடும் போது பலே பலே என்று இருக்கும். கபீர் ரசிப்பார். துரை பெரிய மனிதன். இதையெல்லாம் ரசிக்கார். இவரின் ஆப்தர் ஆபிதீன். நாகூரிலிருந்து வருவார். ஓவியரான அவர் எங்களை அமர வைத்து அச்சாக வரைந்து காட்டுவார். தனது பெல்பாட்டம் பேண்ட்டுகளை மதுரை ஜிடெக்ஸில் கட்டிங் மாஸ்டரிடம் வரைந்தே காட்டி வடிவமைக்கக் கூறுவார் என்பார்கள். நாகூர் ரபி என்பவர் தோளில் ஜோல்னா பையை போட்ட படி ஆபிதீன், துரை ஆகியோரிடத்து ஆங்கிலத்தில் விவாதித்துக் கொண்டிருப்பார். பிரமிப்பாக இருக்கும்.\nஅரிஸ்டோ ஹோட்டலுக்கு போனால் நாவில் ஒட்டும் டீ கிடைக்கும். உபயம் துரை. திருச்சி வரும் போது ஆஸ்பி ஹோட்டலில் சிவாஜி கணேசனும், அரிஸ்டோவில் எம்ஜியாரும் தங்குவார்கள் என்று இருபத்தைந்து வருட இடைவெளிக்குப் பிறகு அவ்வழி சென்ற காலை என் மகனிடம் கூறிய போது அவருக்கு சற்றும் ரூபகரப்படவில்லை. டிவிஸ் டோல் கேட்டில் உள்ள கடையில் இன்ஸ் டீ என்று அக்காலத்திய இன்ஸ்டன்ட் தேநீர் கிடைக்கும். இது நாவில் ஒட்டாது. ஆனாலும் நன்றாக இருக்கும். கண்டிப்பான நிர்வாகி – துரையின் தந்தையார் முன் அரிஸ்டோவிற்கு டீ க்காகவே அடிக்கடி விஜயம் செய்தால் நன்றாக இருக்குமா என்ன கவிக்குயில் திரைப்பட பாடல்கள் அங்குமிங்கும் எங்கும் ஒலிக்கும். கலையரங்கத்தில் சிட்சோர் இந்தி திரைப்படம் பார்த்து விட்டு நானும் துரையும் பேசிக் கொண்டே வந்ததும் ஞாபகத்தில் இருக்கிறது.\nவளர்த்தியான ஜெய்னுதீன் எம்ஜிஆரின் ரசிகர். பள பள சட்டை, ரோஸ் பவுடர், கூலிங் கிளாஸ் சகிதம் மெஸ்ஸ{க்கு வருவார். இவரிடமிருந்து லேக்டோ காலமைன் லோஷனை கேட்டு வாங்கி நான் பூசுவது உண்டு. இவரது கூலிங்கிளாஸை நான் கேலி செய்த போது வெகுண்ட அவர் ‘ இதன் விலை என்ன தெரியுமா உனக்கு ” என்றார். அது விலையுயர்ந்த கண்ணாடி தான். என்ன, போட்டுக் கொண்டால் ஒரு கிழ தொழிலதிபர் தோற்றம் வரும். ‘ஆயிரமே இருக்கட்டுமுங்க ” என்றார். அது விலையுயர்ந்த கண்ணாடி தான். என்ன, போட்டுக் கொண்டால் ஒரு கிழ தொழிலதிபர் தோற்றம் வரும். ‘ஆயிரமே இருக்கட்டுமுங்க முகத்துக்கு பொருத்தக் கேடா எவனாவது போடுவானா என்ன முகத்துக்கு பொருத்தக் கேடா எவனாவது போடுவானா என்ன’ இது நான். ஆயிரம் ரூபாய் அந் நாட்களில் பெரிது. ‘அடிடா சக்கை, வெளுத்துட்டான்யா’ இது நான். ஆயிரம் ரூபாய் அந் நாட்களில் பெரிது. ‘அடிடா சக்கை, வெளுத்துட்டான்யா\nஹாஸ்டல் வார்டன் மேஜர் ஷா கறுத்த கூலிங் கிளாஸ் கண்ணாடியுடன் நின்று கொண்டிருப்பார். ஸலாமிடலாமா எங்கு தான் பார்க்கிறார், பதில் மடக்குவாரா எங்கு தான் பார்க்கிறார், பதில் மடக்குவாரா அல்லது மற்ற மாணவர்கள் மத்தியில் இவ்வமல் சுயமரியாதையை அடகு வைக்கும்படி ஆகி விடுமா அல்லது மற்ற மாணவர்கள் மத்தியில் இவ்வமல் சுயமரியாதையை அடகு வைக்கும்படி ஆகி விடுமா கேள்விகள் சிலவற்றிற்கு பதில் இல்லை என்ற பட்டியலில் இதுவும் சேரும்.\nசௌகத் அலியின் ரோதை வைத்திருந்த சிங்கப்பூர் சூட்கேஸில் அவர் இல்லாத நேரம் பார்த்து அதில் ஒருவர் ஏறி அமர்ந்து அதன் கைப் பிடியை மற்றொருவர் இழுத்து காரோ, தேரோ ஓட்டப் படும். திடும் பிரவேசமாக அவர் அறையில் நுழைந்து மனம் வெம்புவதும் நடக்கும். வெம்பிய மனம் அவருடையதாகவே இருக்கும். ஒரு அசட்டு சிரிப்பு மட்டும் ஏறி அமர்ந்தவரிடம் வெளியாகும். இழுத்தவர் நழுவி விடுவார். சித்துப் பிறவியான சௌக்கத்தால் என்ன செய்ய இயலும்\nஎன்னில் மற்றவர் பொறாமை கொள்ளும் அம்சம் என்று மருண்ட, சுருண்ட முடியுடைய ஹமீது நத்தர் தன் சிரசிற்காகவே பெருமை கொள்வார். இவ்வகையான கேசத்திற்கு நான் எப்போதுமே ஆசை கொண்டதில்லையாதலால் ‘உமக்கு வழுக்கை விழ’ என்று எப்போதும் நான் கருகியதில்லை. சராசரிக்கும் சற்றே குறைவான உயரம் உள்ள ஸலாகுத்தீனும் நானும் ‘உயரமாகுங்கள்’ என்ற வரி விளம்பரங்களில் அதிக கவனம் செலுத்துவோம்.\nசீரியஸாக திருஞானம், நத்தர் கனி போன்றோர் ஐஐடி, மண்டலப் பொறியியல் கல்லூரி என்றெல்லாம் பேசிக் கொள்வார்கள். ஆண்டுகள் பல கடந்த பின்பே ஐ.டி.ஐ க்கும் ஐ.ஐ.டிக்கும் உள்ள வித்தியாசம் எனக்குத் தெரியலாயிற்று. நாம் யார் எதற்காக இங்கு வந்தோம்\nநம்பிக்கை, நல்லெண்ணம் ஆகியவற்றின் அடிப்படையில் தோய்ந்த கீழ்க்காணும் வாசகங்களைப் பாருங்கள்:-; சீடர் ஏதாவது தவறான காரியத்தில் பிரவேசிக்க நாடினால், பிரவேசித்தால் அவருடைய குரு பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.\n சீடர் செய்வது குரு அவர்களைப் பாதிக்குமா\nஇவ்விதம் கேள்வி எழுப்புவது பகுத்தறிவு என்று பெயர் வைப்போம்.\nஒவ்வொரு விஷயத்திற்கும் அதை நிரூபணம் செய்ய சாட்சியங்களைத் தேடிக் கொண்டிருப்பது ஒரு ரகம். (நம்பிக்கை, நல்லெண்ணம் குறைச்சலுள்ளவர்) சில நம்பிக்கைகளுக்கு சாட்சியங்கள் கிடைக்கின்றன. பலவற்றுக்கு கிடைப்பதில்லை. சமீபத்தில் படித்த புத்தகத்தில் இருந்த கருத்துக்களுடன் மேலெழுதப் பட்டவைகளை முடிச்சுப் போட்டு பார்த்தேன்.\nசுஜாதாவின் ‘கடவுள்’ என்ற புத்தகத்திலிருந்து…\n‘ஜே.எஸ். பெல் என்பவர் 1964ல் ஒரு புரட்சிகரமான விஷயத்தைச் சொன்னார். பிரபஞ்சத்தில் உள்ள அத்தனை விஷயங்களும் ஒன்றுக்கொன்று தொடர்பு உள்ளது என்று நிரூபித்துச் சொன்னார். பெல்லின் சித்தாந்தம் மிகவும் சிக்கலானது. அதைக் கொஞ்சம் எளிமைப் படுத்திச் சொன்னால் க்வாண்டம் தத்துவத்தின் கணக்குகள் சரியென்றால் உண்மைகளைப் பற்றி நம் பகுத்தறிவு கூறுவதெல்லாம் தப்பு| என்று நிரூபித்தார். க்வாண்டம் தத்துவத்தின் கணக்குகள் எல்லாமே சரிதான். எனவே பகுத்தறிவு தவறு\nபகுத்தறிவுக்குப் புறம்பானது என்பது எது நீங்கள் என்னை வந்து சந்திக்கிறீர்கள். நாம் இருவரும் பேசிக் கொண்டிருக்கிறோம். நம்முடைய உரையாடல் நம் இருவரை மட்டும் பாதிக்கிறது. பிரபஞ்சத்தின் மற்ற அங்கங்களை பாதிப்பதே இல்லை. இது பகுத்தறிவு.\nநாம் பேசிக் கொள்வது பிரபஞ்சம் முழுவதையும் ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கிறது என்று சொன்னால் அது நம் பகுத்தறிவுக்கு ஒவ்வாதது. ஆனால் க்வாண்டம் மெக்கானிக்ஸின் படி இப்படி நடந்தாக வேண்டும் என்று பெல் சொல்கிறார்.\nபிரபஞ்சத்தின் நிகழ்ச்சிகளுக்கு ஒரு வித உள்ளூர்த்தன்மை காரணம் (local causality) இருக்கிறது என்பது பகுத்தறிவு. நிகழ்சிகளுக்கு ஒரு வித பிரபஞ்சத்தன்மை இருக்கிறது என்பது பெல்லின் வாதம். இதை அவர் சும்மா சொல்லவில்லை. எலக்ட்ரான்களின் சில நடவடிக்கைகளை வைத்துக் கொண்டு அதன் ஆதாரத்தில் தான் சொல்கிறார். சில சமயம் எலக்ட்ரான்கள் இரட்டை இரட்டையாக வெளிப்படுகின்றன. இந்த இரட்டையர்களைப் பிரித்து ஒன்றைக் கிழக்கேயும் மற்றதை மேற்கேயும் போகச் சொல்லுமாறு பரிசோதனைகள் அமைக்க முடியும். இவ்வாறு பிரிந்த எலக்ட்ரான்களில் ஒன்றை, கிழக்கே போனதை என்று வைத்துக் கொள்ளலாம், காந்த சக்திக்கு உட்படுத்தி வலது பக்கம் திருப்ப வைத்தால், மேற்கே போன எலக்ட்ரான் அது பிரபஞ்சத்தில் எங்கு சென்றாலும் அதை எப்போது அதே வகை காந்த திருப்பலுக்கு உட்படுத்தினாலும் முன் எலக்ட்ரான் எந்தப் பக்கம் திரும்பியதோ அதற்கு எதிர்ப்பக்கம் திரும்புகிறது அது வலது என்றால் இது இடது, அது இடது என்றால் இது வலது\nஎலக்ட்ரான் என்பது ஒரு துகள். உயிர் தன்னிச்சசை என்று ஏதும் இல்லாதது. கிழக்கே சென்ற எலக்டரானைப் பற்றி மேற்கே சென்றதற்கு, எப்படியோ ஒர��� செய்தி போய்ச் சேருகிறது. அதுவும் கால இடைவெளியில்லாமல் கிழக்கு எலக்ட்ரானின் திருப்பம் மேற்கு எலக்ட்ரானின் திருப்பத்தை, விதியை, உடனே நிர்ணயித்து விடுகிறது.\nஐன்ஸ்டைனின் தத்துவப்படி ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செய்தி போக ஒரு வேக எல்லை உண்டு. அது ஒளியின் வேகம். அதற்கு மேல் செய்தி போவதற்கு ஐன்ஸ்டைனின் தத்துவத்தில் சாத்தியமே இல்லை.\nஆனால் இங்கு நடப்பது கால இடைவெளியில்லாத ஒரு தொடர்பு. எங்கோ நிகழ்வது வேறு எங்கோ நிகழ்வதை உடனே பாதிக்கிறது.\nஎனவே பிரபஞ்சம் முழுவதும் ஒரு விதமான காரணத்தால் தொடர்பு கொண்டு இருக்கிறது. பிரபஞ்சம் முழுவதுமே பெங்களூர், நியூயார்க், சந்திர மண்டலம், கோடிக்கணக்கான மைல்கள் தூரத்தில் உள்ள நட்சத்திரம் எல்லாமே ஒரு மஹா மஹா ஒற்றுமையா பெங்களூர், நியூயார்க், சந்திர மண்டலம், கோடிக்கணக்கான மைல்கள் தூரத்தில் உள்ள நட்சத்திரம் எல்லாமே ஒரு மஹா மஹா ஒற்றுமையா\nபெல்லின் சித்தாந்தம் ஒரு விதத்தில் விஞ்ஞானத்தின் விளிம்பு. இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் துவங்கிய கோட்பாடுகளின் விளைவாக இன்று இந்த விளிம்புக்கு வந்து இதற்கு மேல் உண்மையைத் தேட முடியுமா என்கிற பிரமிப்பில் நிற்கிறது இன்றைய விஞ்ஞானம்.\n‘நான் என்ற ஆணவமும் தத்துவமும் கெட்டொழிந்து ஏன் என்ற பேச்சு இல்லாமல் ” இருக்க வேண்டும் என்றார் சித்தர்.. … …\nஉணர்வுகளுக்கும் புலன்களுக்கும் வார்த்தைகளுக்கும் நியாயங்களுக்கும் இலக்கணங்களுக்கும் விழிப்புக்கும் சிந்தனைக்கும் தோற்றங்களுக்கும் அப்பால் பரிபூர்ண ஞானம் ஒன்று கண்ணாமூச்சு காட்டுகிறது.\nஅதை அடைய முயற்சிக்கும் பாதையில் விஞ்ஞானமும் வேதாந்தமும் ஒன்று சேர்ந்து கொண்டு விட்டன. ”\nநன்றி : சுஜாதா , உயிர்மை பதிப்பகம் , அப்துல்காதர் பிலாலி\nகுஸ்காவுக்கும் பிரியாணிக்கும் என்ன வித்யாசம் என்று கேட்டேன் ஜாஃபர்நானாவிடம். ‘குஸ்கா என்றால் கோழி, ஆடு எதுவுமே போடாத சாதா பிரியாணி’ என்று ஒருவர் விளக்கியதற்கு , ‘கோழி,ஆடு எதுவும் போடலன்னா அது குஸ்கா . அப்ப மசாலா எதுவும் போடலன்னா அது மஸ்காவா என்று கேட்டேன் ஜாஃபர்நானாவிடம். ‘குஸ்கா என்றால் கோழி, ஆடு எதுவுமே போடாத சாதா பிரியாணி’ என்று ஒருவர் விளக்கியதற்கு , ‘கோழி,ஆடு எதுவும் போடலன்னா அது குஸ்கா . அப்ப மசாலா எதுவும் போடலன்னா அது மஸ்காவா’ என்று கேள்வி கேட்டிருந்தார் இன்னொருவர் – ஜமால் நண்பன் புஹாரி நடத்தும் அன்புடன் குழுமத்தில் (பிரியாணி சாப்பிடாமல் குஸ்கா மட்டும் சாப்பிடும் சங்கம்) . அப்படி ஏதும் சொல்வாரோ என்று பார்த்தால், ‘நான் எழுதுனா பிரியாணி, நீங்க எழுதுனா குஸ்கா’ என்று செமையாக வெடைத்தார் என்னை. வெடை என்ன, உண்மைதான். சுஜாதா, குஸ்கா சாப்டிங்களா’ என்று கேள்வி கேட்டிருந்தார் இன்னொருவர் – ஜமால் நண்பன் புஹாரி நடத்தும் அன்புடன் குழுமத்தில் (பிரியாணி சாப்பிடாமல் குஸ்கா மட்டும் சாப்பிடும் சங்கம்) . அப்படி ஏதும் சொல்வாரோ என்று பார்த்தால், ‘நான் எழுதுனா பிரியாணி, நீங்க எழுதுனா குஸ்கா’ என்று செமையாக வெடைத்தார் என்னை. வெடை என்ன, உண்மைதான். சுஜாதா, குஸ்கா சாப்டிங்களா\nஆபிதீன் பக்கங்கள் ii :\n3. எழுத்தாளர்களின் இணையதளங்கள் (Links)\n5. கச்சேரிகள் , கஜல்கள்\n8 . நாகூர் ரூமி பதிவுகள்\nகலீபா உமர் (ரலி) (1)\nஉஸ்தாத் ஸலாமத் அலி கான் (1)\nகுலாம் முஸ்தஃபா கான் (1)\nநுஸ்ரத் ஃபதே அலிகான் (6)\nபண்டிட் ராஜ்சேகர் மன்ஸூர் (1)\nமுகேஷ் (பீர் முஹம்மது) (1)\nவிஸ்வநாதன் / ராமமூர்த்தி (2)\nதயவு பிரபாவதி அம்மா (1)\nஅப்துல் வஹ்ஹாப் பாகவி (18)\nகுலாம் காதர் நாவலர் (4)\nஅபுல் கலாம் ஆசாத் (2)\nஅஸ்கர் அலி என்ஜினியர் (1)\nஎச். பீர் முஹம்மது (2)\nகிண்ணியா எஸ்.பாயிஸா அலி (2)\nகுர்அதுல் ஐன் ஹைதர் (1)\nகுளச்சல் மு. யூசுப் (5)\nசாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (2)\nஜே. பி. சாணக்யா (1)\nஜோ டி குரூஸ் (1)\nதொ.மு. சி. ரகுநாதன் (1)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nபோர்வை பாயிஸ் ஜிப்ரி (1)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nவேங்கட சுப்புராய நாயகர் (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (5)\nஹரி கிருஷ்ணன் (ஹரிகி) (1)\nத சன்டே இந்தியன் (1)\nநேஷனல் புக் டிரஸ்ட் (13)\nஅங்கனெ ஒண்ணு இங்கனெ ஒண்ணு (1)\nமணல் பூத்த காடு (1)\nஇரா. சண்முக வடிவேல் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bibleall.net/index.php?version=5&book_num=17&chapter=5&verse=", "date_download": "2021-05-07T01:50:05Z", "digest": "sha1:F4RD5645IXT3GMMKKCDCXXEOIB5OOWEJ", "length": 16191, "nlines": 70, "source_domain": "bibleall.net", "title": "BibleAll | Tamil Bible | எஸ்தர் | 5", "raw_content": "\nSelect Book Name ஆதியாகமம் யாத்திராகமம் லேவியராகமம் எண்ணாகமம் உபாகமம் யோசுவா ரூத் 1 சாமுவேல் 2 சாமுவேல் 1 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 1 நாளாகமம் 2 நாளாகமம் எஸ்றா நெகேமியா எஸ்தர் யோபு சங்கீதம் நீதிமொழிகள் பிரசங்கி உன்னதப்பாட்டு ஏசாயா எரேமியா புலம்பல் எசேக்கியேல் தானியேல் ஓசியா ���ோவேல் ஆமோஸ் ஒபதியா யோனா மீகா நாகூம் ஆபகூக் செப்பனியா ஆகாய் சகரியா மல்கியா மத்தேயு மாற்கு லூக்கா யோவான் அப்போஸ்தலர் ரோமர் 1 கொரி 2 கொரி கலாத்தியர் எபேசியர் பிலிப்பியர் கொலோசெயர் 1 தெசலோனிக்கேயர் 2 தெசலோனிக்கேயர் 1 தீமோத்தேயு 2 தீமோத்தேயு தீத்து பிலேமோன் எபிரேயர் யாக்கோபு 1 பேதுரு 2 பேதுரு 1 யோவான் 2 யோவான் 3 யோவான் யூதா வெளிப்படுத்தல்\nமூன்றாம் நாளிலே எஸ்தர் ராஜவஸ்திரந் தரித்துக்கொண்டு, ராஜ அரமனையின் உள்முற்றத்தில், ராஜா கொலுவிருக்கும் ஸ்தானத்துக்கு எதிராக வந்து நின்றாள்; ராஜா அரமனைவாசலுக்கு எதிரான கொலுமண்டபத்தில் ராஜாசனத்திலே வீற்றிருந்தான்.\nராஜா ராஜஸ்திரீயாகிய எஸ்தர் முற்றத்தில் நிற்கிறதைக் கண்டபோது, அவளுக்கு அவன் கண்களில் தயை கிடைத்ததினால், ராஜா தன் கையிலிருக்கிற பொற் செங்கோலை எஸ்தரிடத்திற்கு நீட்டினான்; அப்பொழுது எஸ்தர் கிட்டவந்து செங்கோலின் நுனியைத் தொட்டாள்.\nராஜா அவளை நோக்கி: எஸ்தர் ராஜாத்தியே, உனக்கு என்ன வேண்டும் நீ கேட்கிற மன்றாட்டு என்ன நீ கேட்கிற மன்றாட்டு என்ன நீ ராஜ்யத்தில் பாதிமட்டும் கேட்டாலும், உனக்குக் கொடுக்கப்படும் என்றான்.\nஅப்பொழுது எஸ்தர்: ராஜாவுக்குச் சித்தமானால், நான் தமக்குச் செய்வித்த விருந்துக்கு ராஜாவும் ஆமானும் இன்றைக்கு வரவேண்டும் என்றாள்.\nஅப்பொழுது ராஜா எஸ்தர் சொற்படி செய்ய, ஆமானைத் தீவிரித்து வரும்படி சொல்லி, எஸ்தர் செய்த விருந்துக்கு ராஜாவும் ஆமானும் வந்தார்கள்.\nவிருந்திலே திராட்சரசம் பரிமாறப்படுகையில், ராஜா எஸ்தரைப் பார்த்து: உன் வேண்டுதல் என்ன அது உனக்குக் கொடுக்கப்படும்; நீ கேட்கிறது என்ன அது உனக்குக் கொடுக்கப்படும்; நீ கேட்கிறது என்ன நீ ராஜ்யத்தில் பாதிமட்டும் கேட்டாலும் கிடைக்கும் என்றான்.\nராஜாவின் கண்களில் எனக்குக் கிருபை கிடைத்து, என் வேண்டுதலைக் கட்டளையிடவும், என் விண்ணப்பத்தின்படி செய்யவும், ராஜாவுக்குச் சித்தமாயிருந்தால், ராஜாவும் ஆமானும் நான் இன்னும் தங்களுக்குச் செய்யப்போகிற விருந்துக்கு வரவேண்டும் என்பதே என் வேண்டுதலும் என் விண்ணப்பமுமாயிருக்கிறது; நாளைக்கு ராஜாவின் சொற்படி செய்வேன் என்றாள்.\nஅன்றையதினம் ஆமான் சந்தோஷமும் மனமகிழ்ச்சியுமாய்ப் புறப்பட்டான்; ஆனாலும் ராஜாவின் அரமனை வாசலிலிருக்கிற மொர்தெ���ாய் தனக்கு முன் எழுந்திராமலும் அசையாமலும் இருக்கிறதை ஆமான் கண்டபோது, அவன் மொர்தெகாயின்மேல் உக்கிரம் நிறைந்தவனானான்.\nஆகிலும் ஆமான் அதை அடக்கிக்கொண்டு, தன் வீட்டுக்கு வந்து, தன் சிநேகிதரையும் தன் மனைவியாகிய சிரேஷையும் அழைத்து,\nதன் ஐசுவரியத்தின் மகிமையையும், தன் பிள்ளைகளின் திரட்சியையும், ராஜா தன்னைப் பெரியவனாக்கி, தன்னைப் பிரபுக்கள்மேலும் ராஜாவின் ஊழியக்காரர்மேலும் உயர்த்தின எல்லாவற்றையும் ஆமான் அவர்களுக்கு விவரித்துச் சொன்னான்.\nபின்னையும் ஆமான்: ராஜஸ்திரீயாகிய எஸ்தரும் தான் செய்த விருந்துக்கு ராஜாவுடனேகூட என்னைத்தவிர வேறொருவரையும் அழைக்கவில்லை; நாளைக்கும் ராஜாவுடனேகூட நான் விருந்துக்கு வரவழைக்கப்பட்டிருக்கிறேன்.\nஆனாலும் அந்த யூதனாகிய மொர்தெகாய் ராஜாவின் அரமனைவாசலில் உட்கார்ந்திருக்கிறதை நான் காணுமளவும் அவையெல்லாம் எனக்கு ஒன்றுமில்லையென்றான்.\nஅப்பொழுது அவன் மனைவியாகிய சிரேஷூம் அவனுடைய சிநேகிதர் எல்லாரும் அவனைப் பார்த்து: ஐம்பது முழ உயரமான ஒரு தூக்குமரம் செய்யப்படவேண்டும்; அதிலே மொர்தெகாயைத் தூக்கிப்போடும்படி நாளையதினம் நீர் ராஜாவுக்குச் சொல்லவேண்டும்; பின்பு சந்தோஷமாய் ராஜாவுடனேகூட விருந்துக்குப் போகலாம் என்றார்கள்; இந்தக் காரியம் ஆமானுக்கு நன்றாய்க் கண்டதினால் தூக்குமரத்தைச் செய்வித்தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2021/04/21/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2021-05-07T01:37:40Z", "digest": "sha1:NFWTLGKUYXAWNWJMR5N7YKEDHY6OVNVN", "length": 11276, "nlines": 120, "source_domain": "makkalosai.com.my", "title": "அரச மலேசிய போலீஸ் படையின் அடையாளம்! | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome மலேசியா அரச மலேசிய போலீஸ் படையின் அடையாளம்\nஅரச மலேசிய போலீஸ் படையின் அடையாளம்\nஅரச மலேசிய போலீஸ் படையின் அடையாளம் காணப்பட்டிருக்கும் ஊழல், அணி (கார்ட்டெல்) விவகாரம் மிகக் கடுமையானதாகவும் எதிர்மறையான தோற்றத்தையும் தரவல்லதாக உள்ளது. அதன் உயர் ஒழுக்க நெறி கேள்விக்குறியாகிறது என்று பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் கோபிந்த் சிங் டியோ நேற்று தெரிவித்தார்.\nஇந்த விவகாரங்களை ஐஜிபி டான்ஸ்ரீ அப்துல் ஹமிட் படோர் சில வாரங்களுக்கு முன் பகிரங்கப்படுத்தி இருப்பதை அவர் தம்முடைய ��ர் அறிக்கையில் சுட்டிக்காட்டினார்.\nபோலீஸ் படையின் தோற்றத்திற்கே மிகப்பெரிய களங்கத்தை ஏற்படுத்தியிருக்கும் இவ்விவகாரத்திற்குத் தீர்வு காண்பதில் பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கம் தோல்வி கண்டு விட்டது என்று தாம் கருதுவதாக அவர் சொன்ன்னார்.\nகார்ட்டெல், ஊழல் நடவடிக்கைகளில் இருந்து அரசு மலேசிய போலீஸ் படையை மீட்டெடுத்து, அதன் உயர் ஒழுக்க நெறியைப் பலப்படுத்தி, போலீஸ் படைமீது மக்களுக்குப் புதிய நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கு பிரதமர் முக்கியப் பங்காற்றி இருக்க வேண்டும்.\nஇவ்விவகாரம் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மக்கள் மத்தியில் சூடான விவாதமாக மாறியிருப்பினும் பிரதமர் அவரின் நிலைப்பாட்டை இன்றளவும் அறிவிக்கவும் இல்லை, உறுதியான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கோபிந்த் சிங் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டி இருக்கிறார்.\nஇதுபோன்ற விவகாரங்கள் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும். ஆனால், அதற்கும் வழி இல்லாமல் அவசரகாலப் பிரகடனம் நாடாளுமன்றத்தை முடக்கி வைத்திருக்கிறது.\nநாடாளுமன்றம் மட்டும் கூடியிருந்தாலும் நானும் பக்காத்தான் ஹராப்பான் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இவ்விவகாரத்தை எழுப்பி இருப்போம் என்றார் அவர்.\nஇந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பில் பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசினிடம் 10 கேள்விகளை முன் வைப்பதாக கோபிந்த் சிங் குறிப்பிட்டார்.\n1. ஐஜிபி அம்பலப்படுத்தி இருப்பதுபோல் அரசு மலேசிய போலீஸ் படையில் கார்ட்டெல், ஊழல் – லஞ்ச கலாச்சாம் இருப்பது உண்மையா\n2. அம்பலப்படுத்தியிருப்பதுபோல் இதில் மூத்த போலீஸ் அதிகாரிகள் சம்பந்தப்பட்டுள்ளனரா\n3. இது உண்மை என்றால் ஊழல் விவகாரம் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எஸ்பிஆர்எம்) அதிகாரத்திற்கு உட்பட்டதுதானே\n4. இவ்விவகாரத்தில் எஸ்பிஆர்எம் நடவடிக்கை எடுக்காதது ஏன்\n5. சொல்வதுபோல் போலீஸ்காரர்களின் தவறான செயல்களை உயர் ஒழுக்க நெறி, தர நிர்ணய கண்காணிப்பு இலாகா மூடி மறைக்கிறது என்பது உண்மையா\n6. இக்கூற்று உண்மை என்றால், இவ்விவகாரத்திற்குத் தீர்வு காண்பதற்கு எப்போது என்ன நடவடிக்கை எடுக்கப்படும்\n7. இவ்விவகாரத்தைப் புலன் விங்ாரணை ஙெ்ய்வதற்கு அரங் விங்ாரணை ஆணையம் (ஆர்சிஐ) அமைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. அரங்ாங்���த்தின் நிலைப்பாடு என்ன\n8. ஏற்கெனவே உள் விசாரணை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அந்தப் புலன் விசாரணை எந்த அளவில் உள்ளது\n9. ஊழல் சம்பவங்கள் ஆழமாக புலன் விசாரணை செய்யப்பட வேண்டும் என்பதை பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கம் ஒப்புக்கொள்கிறதா\n10. அப்படி இல்லை என்றால், இவ்விவகாரத்தை அரச மலேசிய போலீஸ் மட்டும் உள்ளுக்குள்ளேயே விசாரிக்கும் என்பது உண்மையா இத்தகவல் உண்மை என்றால் மற்ற சம்பவங்களைக் காட்டிலும் இது எந்த வகையில் மாறுபட்டிருக்கிறது\nPrevious articleமீன் குண்டுகளை பயன்படுத்தி மீன் பிடித்த இருவர் கைது\nவெளிநாட்டு ஆடவரிடம் கொள்ளையடித்ததாக போலீஸ்காரர் உட்பட 4 பேர் கைது\nநாட்டில் 14 புதிய கோவிட் -19 கிளஸ்டர்கள் கண்டுபிடிப்பு\nநஜிப்புக்கு 3 ஆயிரம் வெள்ளி அபராதம் ; அவர் உணவருந்திய கடைக்கு 10 ஆயிரம் வெள்ளி அபராதம்\nவெளிநாட்டு ஆடவரிடம் கொள்ளையடித்ததாக போலீஸ்காரர் உட்பட 4 பேர் கைது\nதமிழ்நாட்டில் நாளை பதவியேற்கவிருக்கும் அமைச்சரவை பட்டியல்\nநாட்டில் 14 புதிய கோவிட் -19 கிளஸ்டர்கள் கண்டுபிடிப்பு\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nசெலாயாங் சந்தையை ராணுவம் கட்டுக்குள் கொண்டு வந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://voiceofasia.co/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B3/", "date_download": "2021-05-07T02:04:59Z", "digest": "sha1:F6SNJ22V5ZRG2OX7SIXVTX5MHLWWDE3P", "length": 5181, "nlines": 64, "source_domain": "voiceofasia.co", "title": "நீச்சல்குளத்தில் அதிக அளவில் E.coli கிருமி – போட்டிகள் ரத்து", "raw_content": "\nநீச்சல்குளத்தில் அதிக அளவில் E.coli கிருமி – போட்டிகள் ரத்து\nநீச்சல்குளத்தில் அதிக அளவில் E.coli கிருமி – போட்டிகள் ரத்து\nE.coli கிருமி அபாயம் காரணமாக, தோக்கியோவில் உடற்குறையுள்ளோருக்கான உலகக் கிண்ண மூவகைப் போட்டிகளின் நீச்சல் அங்கம் ரத்து செய்யப்பட்டுள்ளது.\nஅடுத்த ஆண்டு தோக்கியோவில் நடக்கவிருக்கும் உடற்குறையுள்ளோருக்கான ஒலிம்பிக் போட்டிகளுக்கு ஆயத்த நிகழ்வாக அவை கருதப்படுகின்றன.\nஒடாய்பா மரின் பூங்காவில் உள்ள நீச்சல்குளத்தில் போட்டிகளை நடத்தத் திட்டமிடப்பட்டது.\nஆனால் தரச் சோதனைகளில் நீரில் கிருமிகள் அளவுக்கு அதிகமாக இருந்ததால் போட்டி ரத்து செய்யப்பட்டதாக ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்தனர்.\nதற்போது அங்கு எழுந்துள்ள சுகாதார நெருக்கடி அடுத்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளின் போதும் ஏற்படுமா என்று அச்சம் நிலவுகிறது.\nஇந்தப் பருவத்தில் தோக்கியோவில் அதிக வெப்பம் இருக்கும் என்பதால் உடற்குறையுள்ளோருக்கான ஒலிம்பிக் போட்டிகளை 2 மாதம் முன்பாகவே நடத்தத் திட்டமிட்டுள்ளது ஏற்பாட்டுக் குழு.\nபெரும்பாலான வகை E.coli கிருமிகள் உடல்நலத்திற்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்த மாட்டா. ஆனால் சில வகைக் கிருமிகள் அதிக பாதிப்பை ஏற்படுத்தலாம். சில வேளைகளில் சிறுநீரகச் செயலிழப்புக்கு இட்டுச் செல்லலாம்.\n'மியன்மார் ராணுவம் மேற்கொள்ளும் ஒடுக்குமுறை 'முற்றிலும் மூர்க்கத்தனமானது' – பைடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilsanjikai.com/news/tamilnadu/investigate-reports-says-fault-with-police-on-call-taxi-driver-rajeshs-suicide", "date_download": "2021-05-07T01:07:48Z", "digest": "sha1:LSVW3WIBTW7PA6M544Q7Z2KXVFK6G2UZ", "length": 59642, "nlines": 609, "source_domain": "www.tamilsanjikai.com", "title": "போலீசார் மீது தான் தவறு என கால் டாக்சி ஓட்டுநர் ராஜேஷ் தற்கொலை விவகாரத்தில் விசாரணை அறிக்கை! - TamilSanjikai", "raw_content": "\nதி ஒர்ல்ட்ஸ் பெஸ்ட் பட்டத்தை வென்று உலகின் ஒட்டுமொத்த கவனத்தை ஈர்த்துள்ள 13 வயது சென்னை சிறுவன்\nமயிலாப்பூர் மியூசிக் அகாடமியில் தமிழனின் ஆதி இசை\nகொச்சியில் சர்வதேச கலைச் சங்கமம்\nசாகித்ய அகாடமி விருது பெற்ற எஸ். ராமகிருஷ்ணனுக்கு வாழ்த்துகள்\nகன்னியாகுமரி மாவட்டத்துக்கு சாகித்ய அகாடமி விருது.\nசார்ஜா சர்வதேச புத்தகத் திருவிழாவில் தமிழ் புத்தகம் வெளியீடு\nபஜாஜ் கோலப்பன் – 100 சிசி\nஐதுரூஸ் கண்ட ஏதேன் தோட்டம்\nஅதீத மன உளைச்சலுடன் இந்தப் பதிவை எழுதுகிறேன்.\nகடவுளை நம்புவதில் என்ன தவறு\nகாலா - ஒரு காலம் கடந்த பார்வை\nகாலை வெட்டிருங்க டாக்டர் : இழப்பை சாதனையாக மாற்றிய இளைஞன் - குமரி மாவட்டத்தின் முதல் பிளேடு ரன்னர் விக்னேஷ்வரனுடன் ஒரு நேர்காணல்\nமினிமலிஸம் - மன நிறைவைத் தரும் நிஜ வாழ்க்கை\nகாதல் புதைத்த காணி நிலம்\nபெண்ணை ஏன் கொண்டாட வேண்டும் \nமீனவனும் ராணுவ வீரன்தான் : எழுத்தாளர் கடிகை அருள்ராஜ் நேர்காணல்\nஅதீத மன உளைச்சலுடன் இந்தப் பதிவை எழுதுகிறேன்.\nபஜாஜ் கோலப்பன் – 100 சிசி\nகடவுளை நம்புவதில் என்ன தவறு\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு – ஒருதிரைப்பார்வை\nஎனை நோக்கிப் பாயும் தோட்ட��� – ஒரு திரைப்பார்வை\nபிகில் - ஒரு திரைப் பார்வை\nகோமாளி – ஒரு திரைப்பார்வை\nநேர்கொண்ட பார்வை – ஒரு திரைப்பார்வை\nடியர் காம்ரேட் – ஒரு திரைப்பார்வை\nகடாரம் கொண்டான் – ஒரு திரைப்பார்வை\nபிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் மருத்துவமனையில் அனுமதி\nசல்மான் கான் படத்தில் நடிக்கும் பரத்\nசிறப்பு அதிகாரி நியமனத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் முறையிடுவோம்: நாசர்\nதர்பார் மோஷன் போஸ்டர், தீம் மியூசிக் வெளியானது\n‘தர்பார்’ மோஷன் போஸ்டரை வெளியிடும் கமல், சல்மான், மோகன்லால்\nபடுக்கைக்கு அழைத்தார் முன்னணி நடிகர் : இஷா கோபிகர் ‘மீ டூ’ புகார்\nடெல்லியை காப்பாற்றுங்கள் :பிரபல நடிகை\nநடிகர் ஜீவா நடித்துள்ள ஜிப்ஸி படத்திற்கு ஏ சான்றிதழ்\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு – ஒருதிரைப்பார்வை\nஎனை நோக்கிப் பாயும் தோட்டா – ஒரு திரைப்பார்வை\nபிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் மருத்துவமனையில் அனுமதி\nசல்மான் கான் படத்தில் நடிக்கும் பரத்\nசிறப்பு அதிகாரி நியமனத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் முறையிடுவோம்: நாசர்\nதர்பார் மோஷன் போஸ்டர், தீம் மியூசிக் வெளியானது\n‘தர்பார்’ மோஷன் போஸ்டரை வெளியிடும் கமல், சல்மான், மோகன்லால்\nபடுக்கைக்கு அழைத்தார் முன்னணி நடிகர் : இஷா கோபிகர் ‘மீ டூ’ புகார்\nஇன்று, மகராஷ்டிரா, குஜராத் மாநிலங்கள் உருவான தினம்\nதமிழறிஞர் வ.சு.செங்கல்வராய பிள்ளை பற்றி தெரிந்துக் கொள்வோம்\nஅனைவரும் கோவிலில் நுழைய உரிமைக் கிடைத்து 82 ஆண்டுகள் முடிகிறது\nஅழிந்துக் கொண்டிருக்கும் இரணியல் அரண்மனை\nஇந்தியாவின் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய இடம் வாகா.\nவெயிலும், மழையும் வதைக்கும் எட்டாம் நூற்றாண்டின் விஷ்ணு சிலை\nதென்னெல்லை போராட்டத்தின் முதுகெலும்பு குஞ்சன் நாடார்\nகேரளாவில் 23 வயது இளைஞருக்கு நிபா வைரஸ் பாதிப்பு\nஉலகின் ஆரோக்கியமான நாடுகள் பட்டியலில் இந்திய 120வது இடம்\nமருத்துவர்களின் அலட்சியத்தால் கர்ப்பிணிக்கு HIV ரத்தம் ஏற்றப்பட்ட அவலம்\nபன்றிக்காய்ச்சலும், பின்பற்ற வேண்டிய வழிமுறைகளும்\nஆப்கானில் 12 பச்சிளம் குழந்தைகள் மர்ம சாவு\nகழிசடை முகமாகும் மணக்குடி பொழிமுகம்\nஎம்பிபிஎஸ் மருத்துவ படிப்பின் பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறையில் திருத்தம்\nபிரதமருக்கு கடிதம் எழுதிய விவகாரத்தில், பல்கலைக்கழக மாணவர்கள் 6 பேரின் நீக்கம் திடீரென ரத்து\nபள்ளிகளுக்கு 2 நாட்கள் தீபாவளி விடுமுறை\nஅண்ணா பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் சமஸ்கிருதத் திணிப்பு - மு.க.ஸ்டாலின் கண்டனம்\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த உதித் சூர்யா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம்: மாணவர் மதுரை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் மனு\nஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் - அமைச்சர் பாண்டியராஜன்\nபாலிடெக்னிக் அரியர்ஸ் மாணவர்கள் சிறப்பு தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்\nவோல்க்ஸ்வேகன் கார் நிறுவனம் ரூ.100 கோடி அபராதம் செலுத்த பசுமை தீர்ப்பாயம் உத்தரவு\nபோகிக்கு பிளாஸ்டிக் எரித்து மாசு ஏற்படுத்துவோர் மீது நடவடிக்கை - மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்\nபிளாஸ்டிக் மீதான தடையை 5 வருடங்கள் தள்ளி வைக்க பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கம் கோரிக்கை\nபருவநிலை மாற்றம் தொடர்பான மாநாடு தோல்வி\nபருவ நிலையை மாற்றும் காற்றாலைகள்\nஜனவரி முதல் தமிழகத்தில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை\nஉலகின் மோசமான சுற்றுச்சூழல் பேரழிவுகளில் பாதிக்கப்பட்டது ஏரல் கடல்\nநியூசிலாந்தில் அடிக்கடி இறக்கும் திமிங்கலங்கள்\nஜெய்ப்பூரில், பாலியல் பலாத்காரத்தில் இருந்து சிறுமியை காப்பாற்றிய கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த சிறுவர்கள்\nதிருமணமாகாத மேஜர் பெண்கள், தந்தையிடம் ஜீவனாம்சம் பெறலாம்\n13 வயது சிறுவனை 8 கி.மீ., சுமந்து சென்று சிகிச்சை அளித்த சி.ஆர்.பி.எப்., வீரர்கள்\nவாட்ஸ் ஆப் சாட்டிங்கால் பறிபோன 2 உயிர்கள்\nதாயையும் குழந்தையையும் காப்பாற்றிவிட்டு தனது உயிரை தியாகம் செய்த ஆட்டோ ஓட்டுநர்\nடிக் டாக், மியூசிக்கலி போன்ற செயலிகளை மாணவிகள், பெண்கள் தவிர்க்குமாறு சேலம் மாநகர காவல்துறை வேண்டுகோள்.\nஆவின் பால் அட்டையில் புதிய நடைமுறை அறிமுகம்\nஅனந்தன் விக்டோரியா மார்த்தாண்ட வர்மா கால்வாய்\nபுதுச்சேரி அருகே மனைவிக்காக பிரமாண்ட மாளிகை கட்டிய கணவன்\nகிறிஸ்தவர்களின் தவக்காலம் சாம்பல் புதன் நிகழ்ச்சியுடன் இன்று தொடங்கியது\n15 வயது சிறுவனின் தொடையில் இருந்த 10 கிலோ புற்றுநோய் கட்டி அகற்றி சென்னை ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை\nகடும் குளிரில் தமிழகம் - நீரிழிவு நோயாளிகள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கான அலர்ட்\nஜெய்ப��பூரில், பாலியல் பலாத்காரத்தில் இருந்து சிறுமியை காப்பாற்றிய கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த சிறுவர்கள்\nதிருமணமாகாத மேஜர் பெண்கள், தந்தையிடம் ஜீவனாம்சம் பெறலாம்\n13 வயது சிறுவனை 8 கி.மீ., சுமந்து சென்று சிகிச்சை அளித்த சி.ஆர்.பி.எப்., வீரர்கள்\nவாட்ஸ் ஆப் சாட்டிங்கால் பறிபோன 2 உயிர்கள்\nகேரளாவில் 23 வயது இளைஞருக்கு நிபா வைரஸ் பாதிப்பு\n15 வயது சிறுவனின் தொடையில் இருந்த 10 கிலோ புற்றுநோய் கட்டி அகற்றி சென்னை ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை\nஇன்று, மகராஷ்டிரா, குஜராத் மாநிலங்கள் உருவான தினம்\nபுதுச்சேரி அருகே மனைவிக்காக பிரமாண்ட மாளிகை கட்டிய கணவன்\nமாவு பாக்கெட் தகராறில், பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் தாக்கப்பட்டார்\nமத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் காரை சோதனையிட்ட அதிகாரிகள்\nசிவாலய ஓட்டம்: குமரியில் மகாசிவராத்திரி கொண்டாட்டம்\nகன்னியாகுமரி மாவட்டத்தில் ரூபாய் 50 லட்சம் மதிப்பிலான குட்கா, புகையிலைப் பொருட்கள் பறிமுதல்\nபிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வந்தார்\n4ஜி அலைக்கற்றை சேவையை வழங்கக்கோரி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் வேலை நிறுத்தம்\nஆக்கிரமிப்பாளர்கலின் ஓட்டு உரிமையை பறிக்க நீதிபதிகளுக்கு உரிமை இல்லை - தளவாய் சுந்தரம் பேட்டி\nவேலூர் சிறையில் இருந்து ஒரு மாத பரோலில் வெளிவந்தார் பேரறிவாளன்\nசென்னை விமானநிலையத்தில் ரூ.63 லட்சம் மதிப்புடைய இரானியன் குங்குமப்பூ பறிமுதல்\nநகைக்காக மூதாட்டி கழுத்து நெரித்துக் கொலை\nவாகன சோதனையின் பொது போலீசார் தடுத்ததில் மூதாட்டி உயிரிழப்பு\nசென்னையில், வாகன சோதனையின் பொது பிரபல ரவுடி கைது\nகோவையில் மிலாதுன் நபி: மதுபானக்கடைகளை மூட உத்தரவு\nசென்னையில் சாலையில் சென்ற சொகுசு கார் தீ பிடித்தது\nவிக்கிரமசிங்கபுரத்தில் துணிகரம்: நகைக்கடையில் ரூ.30 லட்சம் தங்கம் வெள்ளி கொள்ளை\nஜம்மு : பயங்கரவாதிகளுடன் இந்திய ராணுவம் மோதல்\nசட்டம் மற்றும் ஒழுங்கை காக்க நடவடிக்கை மேற்கொள்ளுங்கள்; மாநிலங்களுக்கு அமித் ஷா வேண்டுகோள்\nவிருப்ப ஓய்வு பெற 40 ஆயிரம் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் மனு\nஆந்திர பிரதேசத்தில் தொலைக்காட்சி பெட்டி விழுந்ததில் 11 மாத குழந்தை பலி\nலஞ்சம் கேட்ட பெண் வட்டாட்சியரை எரித்து கொன்ற விவசாயி\nகுடிபோதையில் சிறுமியிடம் தவறாக நடக்க முய��்ற காவலர் கைது\nஇன்று தேர்வு : காஷ்மீரில் பள்ளியை தீக்கிரையாக்கிய பயங்கரவாதிகள்\nநிர்பயா வழக்கு : குற்றவாளிகள் ஜனாதிபதியிடம் கருணை மனு விண்ணப்பிக்க 7 நாள் அவகாசம்\nஈராக்கில் அரசுக்கு எதிராக போராட்டம்: பலி எண்ணிக்கை 320-ஐ தாண்டியது\nசிவசேனாவுக்கு ஆதரவளிப்பது குறித்து காங்கிரசுடன் பேசிய பிறகே முடிவு எடுக்கப்படும் - சரத்பவார்\nஇஸ்ரேலில் புதிய பாதுகாப்பு அமைச்சர் நியமனம்\nஅயோத்தி வழக்கில் இறுதித் தீர்ப்பு: அமைதிக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்\nமு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. பொதுக்குழு இன்று கூடுகிறது; உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை\n“சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும்” நடிகர் ரஜினிகாந்த் கருத்து\nஅயோத்தி தீர்ப்பு : \"மதநல்லிணக்கத்துடன் முன்னெடுத்து செல்ல வேண்டும்\" -திமுக தலைவர் மு.கஸ்டாலின்\nபெண் மேயரை தர தரவென இழுத்துச் சென்று முடியை வெட்டிய போராட்டக்காரர்கள்\nவெஸ்ட்இண்டீசுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில்: இந்திய பெண்கள் அணி அபார வெற்றி தொடரையும் கைப்பற்றியது\nபகல்-இரவு டெஸ்டில் வர்ணனையாளராக அறிமுகமாகும் தோனி\nஇந்தியாவுக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்காளதேச அணி வெற்றி\n20 ஓவர் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்து ரோகித் சர்மா சாதனை\nஒலிம்பிக் போட்டிக்கு இந்திய ஆடவர், மகளிர் ஹாக்கி அணிகள் தகுதி\nவங்காளதேச கிரிக்கெட் வீரர்கள் மாஸ்க் அணிந்து கொண்டு பயிற்சி\nபாரீஸ் மாஸ்டர்ஸ் பட்ட டென்னிஸ் இரட்டையர் போட்டியில் போபண்ணா இணை முதல் சுற்றில் வெற்றி\nமுதல் பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்தியா\nஆர்.சி.ஈ.பி ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்தியா மறுப்பு\nஇந்தியாவின் 7 முன்னணி துறைகளில் உற்பத்தி வீழ்ச்சி\nஇந்தியாவை விட முதலீடு செய்ய சிறந்த இடம் ஏதுமில்லை; அமெரிக்காவில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேச்சு\nரூ. 9 லட்சம் கோடி சந்தை மூலதனத்தை தாண்டிய முதல் இந்திய நிறுவனம்\nஅமெரிக்காவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் - நிர்மலா சீதாராமன்\nஇந்திய- சீன வர்த்தகம், 1000 நிறுவனங்கள் 8 பில்லியன் டாலர் முதலீடு\nஉலக அளவில் மிகப்பெரிய தனியார் எரிசக்தி துறையாக மாறும் கூகுள்\nபிரிட்டனை சேர்ந்த தாமஸ் குக் நிறுவனம் திவாலானதாக அறிவிப்பு\nசூரிய குடும்பத்தைக் கடந்து ‘இண்டர்ஸ்டெல்லார்’ பகுதிக்கு சென்றது வாயேஜர் 2 விண்கலம்\nஆண்ட்ராய்டு பீட்டா உபயோகிப்பவர்களை கவரும் வகையில் புதிய தீம்\nநிலவில் 4 விஞ்ஞானிகளை 2 வாரத்திற்கு தங்க வைத்து ஆராய்ச்சி நடத்த நாசா திட்டம்\n - கூகுள் போட்டோஸ் இல் களமிறங்கிய புதிய சேவை\nமொபைல் செயலி மூலம் மக்கள் தொகை கணக்கெடுப்பு : உள்துறை அமைச்சர் அமித்ஷா\nமுதல் ரபேல் போர் விமானத்திற்கு ஆர்.பி-01 என பெயரிடப்பட்டுள்ளது\nசந்திராயன் 2 புகைப்படத்தை வெளியிட்ட நாசா ஆர்பிட்டர்\nஅஸ்த்ரா ஏவுகணையின் சோதனை அபார வெற்றி\nஎம்பிபிஎஸ் மருத்துவ படிப்பின் பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறையில் திருத்தம்\nபிரதமருக்கு கடிதம் எழுதிய விவகாரத்தில், பல்கலைக்கழக மாணவர்கள் 6 பேரின் நீக்கம் திடீரென ரத்து\nபள்ளிகளுக்கு 2 நாட்கள் தீபாவளி விடுமுறை\nஅண்ணா பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் சமஸ்கிருதத் திணிப்பு - மு.க.ஸ்டாலின் கண்டனம்\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த உதித் சூர்யா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம்: மாணவர் மதுரை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் மனு\nஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் - அமைச்சர் பாண்டியராஜன்\nபாலிடெக்னிக் அரியர்ஸ் மாணவர்கள் சிறப்பு தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்\nபுனே நகரில் கனமழையின் காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிப்பு - மக்கள் அவதி\nவங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்பு\nகர்நாடகாவில் கனமழை உடுப்பி, குடகு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்\nசென்னையின் பல்வேறு இடங்களில் கனமழை\nதமிழ்நாட்டில் அடுத்த மூன்று தினங்களில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nதென்மேற்கு மற்றும் மத்திய வங்கக்கடலுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nவங்க கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். - வானிலை ஆய்வு மையம்\nகுஜராத்தில் நாளை கரையை கடக்கிறது ‘வாயு’ புயல்\nஎம்பிபிஎஸ் மருத்துவ படிப்பின் பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறையில் திருத்தம்\nவேலூர் சிறையில் இருந்து ஒரு மாத பரோலில் வெளிவந்தார் பேரறிவாளன்\nசிவசேனா��ுக்கு ஆதரவளிப்பது குறித்து காங்கிரசுடன் பேசிய பிறகே முடிவு எடுக்கப்படும் - சரத்பவார்\nசென்னை விமானநிலையத்தில் ரூ.63 லட்சம் மதிப்புடைய இரானியன் குங்குமப்பூ பறிமுதல்\nநகைக்காக மூதாட்டி கழுத்து நெரித்துக் கொலை\nவாகன சோதனையின் பொது போலீசார் தடுத்ததில் மூதாட்டி உயிரிழப்பு\nஜம்மு : பயங்கரவாதிகளுடன் இந்திய ராணுவம் மோதல்\nஅயோத்தி வழக்கில் இறுதித் தீர்ப்பு: அமைதிக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்\nபுல்புல் புயல்; 150 வங்காளதேச மீனவர்கள் மாயம்\nபாகிஸ்தான் அருங்காட்சியகத்தில் அபிநந்தன் பிடிபட்டது போன்ற உருவ பொம்மை\nநிரவ் மோடியின் காவலை நீட்டித்து லண்டன் கோர்ட் உத்தரவு\nஒரு குழந்தையின் தகப்பன் என்ற வகையில் சுஜித் பெற்றோரின் வலியை உணர்கிறேன்; ஹர்பஜன் சிங் டுவீட்\nஅன்பு எனும் விளக்கால் சக மனிதரின் வாழ்வில் மகிழ்ச்சி ஒளியை ஏற்றுவோம்; குடியரசு தலைவர் தீபாவளி வாழ்த்து\nநவாஸ் ஷரீஃபிற்கு ஜாமீன் - பாகிஸ்தான் கோர்ட் அனுமதி\nபிரதமர் மோடிக்கு உடலில் வெடிகுண்டுகளை கட்டியபடி பாகிஸ்தானிய பாடகி மிரட்டல்\nஈராக்கில் அரசுக்கு எதிராக போராட்டம்: பலி எண்ணிக்கை 320-ஐ தாண்டியது\nசிவசேனாவுக்கு ஆதரவளிப்பது குறித்து காங்கிரசுடன் பேசிய பிறகே முடிவு எடுக்கப்படும் - சரத்பவார்\nஇஸ்ரேலில் புதிய பாதுகாப்பு அமைச்சர் நியமனம்\nஅயோத்தி வழக்கில் இறுதித் தீர்ப்பு: அமைதிக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்\nமு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. பொதுக்குழு இன்று கூடுகிறது; உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை\n“சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும்” நடிகர் ரஜினிகாந்த் கருத்து\nஅயோத்தி தீர்ப்பு : \"மதநல்லிணக்கத்துடன் முன்னெடுத்து செல்ல வேண்டும்\" -திமுக தலைவர் மு.கஸ்டாலின்\nபெண் மேயரை தர தரவென இழுத்துச் சென்று முடியை வெட்டிய போராட்டக்காரர்கள்\nசீன ஓபன் பேட்மிண்டன்: தோல்வியை தழுவினார் சிந்து\nஇந்தியா- தென் ஆப்பிரிக்கா இடையேயான முதல் டி20 போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக மிஸ்பா உல்-ஹக் நியமனம்\nஉலக கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில், இந்தியாவுக்கு ஒரு தங்கம் மற்றும் ஒரு வெண்கலம்\nடெஸ்��் போட்டிகளிலிருந்து தென்னாபிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் ஓய்வு\nகண்களை மூடிக்கொண்டு குத்துச்சண்டை போடும் சிறுமி\nவீடியோ கேம் போட்டியில் ரூ.20 கோடி ரொக்க பரிசை வென்ற 16 வயது சிறுவன்\nஆர்.சி.ஈ.பி ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்தியா மறுப்பு\nஇந்தியாவின் 7 முன்னணி துறைகளில் உற்பத்தி வீழ்ச்சி\nஇந்தியாவை விட முதலீடு செய்ய சிறந்த இடம் ஏதுமில்லை; அமெரிக்காவில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேச்சு\nரூ. 9 லட்சம் கோடி சந்தை மூலதனத்தை தாண்டிய முதல் இந்திய நிறுவனம்\nஅமெரிக்காவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் - நிர்மலா சீதாராமன்\nஇந்திய- சீன வர்த்தகம், 1000 நிறுவனங்கள் 8 பில்லியன் டாலர் முதலீடு\nஉலக அளவில் மிகப்பெரிய தனியார் எரிசக்தி துறையாக மாறும் கூகுள்\nபிரிட்டனை சேர்ந்த தாமஸ் குக் நிறுவனம் திவாலானதாக அறிவிப்பு\nஈராக்கில் அரசுக்கு எதிராக போராட்டம்: பலி எண்ணிக்கை 320-ஐ தாண்டியது\nஇஸ்ரேலில் புதிய பாதுகாப்பு அமைச்சர் நியமனம்\nபுல்புல் புயல்; 150 வங்காளதேச மீனவர்கள் மாயம்\nபாகிஸ்தான் அருங்காட்சியகத்தில் அபிநந்தன் பிடிபட்டது போன்ற உருவ பொம்மை\nபெண் மேயரை தர தரவென இழுத்துச் சென்று முடியை வெட்டிய போராட்டக்காரர்கள்\nஆர்.சி.ஈ.பி ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்தியா மறுப்பு\nபயங்கரவாதத்திற்கு எதிராக பணியாற்றுவோம்: மோடி- ஏஞ்சலா உறுதி\nபிரதமர் மோடி நவம்பர் 2-ல் தாய்லாந்து பயணம்\nபோலீசார் மீது தான் தவறு என கால் டாக்சி ஓட்டுநர் ராஜேஷ் தற்கொலை விவகாரத்தில் விசாரணை அறிக்கை\nகால் டாக்சி ஓட்டுநர் ராஜேஷ் தற்கொலை விவகாரத்தில் போக்குவரத்து போலீசார் மீதுதான் தவறு என்பது விசாரணை அறிக்கையில், அம்பலமாகியுள்ளது. வேலூர் மாவட்டம் புதூர் கிராமத்தைச் சேர்ந்த கால் டாக்சி ஓட்டுநரான ராஜேஷ் கடந்த மாதம் 25ஆம் தேதி மறைமலைநகரில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன்னதாக தனது தற்கொலைக்கான காரணத்தை அவரது செல்போனில் பேசி பதிவு செய்திருந்தார்.\nஇந்த வீடியோவானது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியது. அந்த வீடியோவில், அண்ணா நகரில் காரை நிறுத்தி இருந்த போது பெண் பயணி முன்னிலையில் தன்னை போக்குவரத்து போலீசார் தகாத வார்த்தைகளால் திட்டியதாக குற்றம்சாட்டப்பட்டு இருந்தது.\nஇதுகுறித்து விச���ரித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு சென்னை மேற்கு மண்டல இணை ஆணையர் விஜய குமாரிக்கு உத்தரவிடப்பட்டது. இதை அடுத்து அண்ணா நகர் மற்றும் திருமங்கலம் போக்குவரத்து காவல் பிரிவில் பணியாற்றுவோர் உள்ளிட்ட 68 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.\nஇந்த அறிக்கையானது சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனிடம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், ராஜேசை திட்டிய இரு போக்குவரத்து போலீசார் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜேஷ் கூறிய அனைத்தும் உண்மை என்றும், போக்குவரத்து போலீசார் மீதே தவறு இருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇரு போலீசார் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதுடன், வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளதாக காவல்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமேலும் இதுகுறித்து தாமாக முன் வந்து வழக்குப்பதிவு செய்துள்ள மாநில மனித உரிமைகள் ஆணையத்திடமும், இந்த அறிக்கையானது சமர்பிக்கப்படவுள்ளது.\nவேலூர் சிறையில் இருந்து ஒரு மாத பரோலில் வெளிவந்தார் பேரறிவாளன்\nசென்னை விமானநிலையத்தில் ரூ.63 லட்சம் மதிப்புடைய இரானியன் குங்குமப்பூ பறிமுதல்\nநகைக்காக மூதாட்டி கழுத்து நெரித்துக் கொலை\nகாலை வெட்டிருங்க டாக்டர் : இழப்பை சாதனையாக மாற்றிய இளைஞன் - குமரி மாவட்டத்தின் முதல் பிளேடு ரன்னர் விக்னேஷ்வரனுடன் ஒரு நேர்காணல்\nஅண்டர்வேரை அவிழ்க்கும் ஆண்ட்ராய்டு ஆப்புகள்(APPS)\nஓவிய வகுப்புகளை ஆசிரியர்கள் அபகரித்துக் கொள்கிறார்கள்: ஓவியர் ராய் கந்தழி\nகுமரித் தந்தை மார்ஷல் நேசமணி அவர்களின் வரலாறு\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு – ஒருதிரைப்பார்வை\nஎனை நோக்கிப் பாயும் தோட்டா – ஒரு திரைப்பார்வை\nபிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் மருத்துவமனையில் அனுமதி\nஎம்பிபிஎஸ் மருத்துவ படிப்பின் பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறையில் திருத்தம்\n17 அமெரிக்க உளவாளிகளை கைது செய்துள்ளதாக ஈரானிய பாதுகாப்பு அமைச்சகம் அறிவிப்பு\nஇந்தியா தெரிவித்த 22 முக்கிய இடங்களில் தீவிரவாத முகாம்கள் எதுவும் இல்லை என பாகிஸ்தான் வெளியுறவு அலுவலகம் அறிவிப்பு\nசுவிக்கி நிறுவனத்தின் தலைமை பொறுப்பிற���கு தமிழக திருநங்கை ஒருவர் நியமனம்\nமனைவி, குழந்தைகளை தவிக்கவிட்டு திருநங்கையை திருமணம் செய்த விழுப்புரம் வாலிபர் 3 ஆண்டுகளுக்கு பிறகு ‘டிக்டாக்’ செயலி மூலம் சிக்கினார்\nஒகி புயல் ஓராண்டு நிறைவு, உயிரிழந்தவர்களுக்கு கடற்கரை கிராமங்களில் அஞ்சலி\nகஜா புயலால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள விவசாயிகளுக்கு புதிய திட்டம்\nபொருளாதாரக் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - மோடி\n27 - ஆம் தேதி முதல் தண்ணீர் லாரிகள் ஓடாது - லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு\nகாலை வெட்டிருங்க டாக்டர் : இழப்பை சாதனையாக மாற்றிய இளைஞன் - குமரி மாவட்டத்தின் முதல் பிளேடு ரன்னர் விக்னேஷ்வரனுடன் ஒரு நேர்காணல்\nஅண்டர்வேரை அவிழ்க்கும் ஆண்ட்ராய்டு ஆப்புகள்(APPS)\nஓவிய வகுப்புகளை ஆசிரியர்கள் அபகரித்துக் கொள்கிறார்கள்: ஓவியர் ராய் கந்தழி\nகுமரித் தந்தை மார்ஷல் நேசமணி அவர்களின் வரலாறு\nதமிழ்நாடு, சென்னை, இந்தியா மற்றும் உலகெங்கிலும் இருந்து தமிழ் செய்திகளை உங்களுக்குத் தருகிறது. தேசிய மற்றும் சர்வதேச அரசியல், வணிக, விளையாட்டு, ஆன்மீகம், ஜோதிடம், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு, தமிழ் சினிமா, கோலிவுட்டின் நகைச்சுவை, தமிழ் திரைப்பட விமர்சனங்கள், பேஷன், வாழ்க்கை முறை மற்றும் இன்னும் பலவற்றைப் பற்றிய செய்திகள், எங்கள் தளத்தில் உள்ள புகைப்படங்கள், வீடியோக்களைப் பார்க்கவும், அனைத்து செய்தி மற்றும் சமீபத்திய நிகழ்வுகள் பற்றிய நேரடி தகவலையும் பிடிக்கவும். தமிழ்சஞ்சிகை மூலம் நீங்கள் சுற்றியுள்ள உலகில் நடப்பதைப் பற்றிய அனைத்து சமீபத்திய செய்திகளையும் நீங்கள் பெறுவீர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2020/04/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2021-05-07T00:29:13Z", "digest": "sha1:G22FGHZ3ZUPLQYX27S67CHSVNYOFBWRG", "length": 8902, "nlines": 122, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nபரப்பிரம்மம் பிரம்மமாகி… தெய்வமான வழிச் செயல் மீண்டும் மீண்டும் செயல்பட வேண்டும் என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nபரப்பிரம்மம் பிரம்மமாகி… தெய்வமான வழிச் செயல் மீண்டும் மீண்டும் செயல்பட வேண்டும் என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\n1.பிரம்மத்தின் பிரம்மாவாய்… ஒவ்வொருவரும் தன் எண்ணத்தின் கர்ம காரியத்தில் ஏற்படக்கூடிய மாற்றத்தில்\n2.மாற்றம் கொள்ளக்கூடிய செயல் நிலை ஒவ்வொன்றிலுமே\n3.இன்னலில் இருந்து தன் ஞானத்தைக் கூட்டி உயர் ஞானமாக்கும் சித்தம் கொண்டால்\n4.பரப்பிரம்மத்தில் பிரம்மாவாய்ப் படைப்பில் பிம்பம் பெற்ற நாம்\n5.வாழ்க்கை நிலையிலிருந்து செயல் கொள்ளக்கூடிய எண்ணத்தின் உணர்வை\n6.தடைப்படக்கூடிய கர்ம காரியத்தில் சலிப்பு சோர்வு என்ற சஞ்சல உணர்வை வளர்க்காமல்\n7.தடைபடும் காரியங்கள் ஒவ்வொன்றையுமே உயர் ஞானத்தைக் கூட்டி மாற்றியமைத்து\n8.வளரும் தொடருக்கு வாழ்க்கையின் நிறைவை வளர்த்து\n9.எண்ணத்தின் உணர்வைச் சமமான குண நிலைக்கு\n10சாந்தமான ஞானத்தின் வீரத்தை வளர்த்துக் கொண்டோமேயானால்\n11.யாம் வழிகாட்டியபடி மேல் நோக்கிய சுவாசத்தால் எடுக்கவல்ல காந்த மின் நுண் அலைகள் மூலம்\n12.இச்சரீரம் முழுமைக்குமே வலுக்கொள்ள வழி அமையும்.\nஎப்போது ஆறு வண்ணங்களின் முலாம் கொண்ட இஜ்ஜீவ ஜடபிம்ப பிரம்ம உடல் பெற்றோமோ… அப்போதே அதற்கடுத்த வான்மீகியாரால் சுட்டிக் காட்டப்பட்ட ஒளிப் பிம்பமான… நீர் மூர்த்தி உருவங்களைத் தெய்வ குணாம்ச வித்தகராய்ப் படைத்த… காவிய ரூபத்திற்கொத்த கருத்தின் ரூபமாய் இராமனைப் போன்றும் கிருஷ்ணரைப் போன்றும்..\n1.இச்சரீரத்தின் ஆத்ம ஒளியைச் விண்ணிலிருந்து எடுக்கும் உயர் காந்தமின் அணு வளர்ப்பினால்\n2.நீல வண்ண ஒளி சரீரமாய் இச்சரீர ஆத்மாவையே ஒளிப் பிழம்பாக ஆக்கி\n3.இச்சரீரத்தில் இருந்து கொண்டே அந்த (நம்) ஆத்மாவின் ஒளியை நாம் காண முடியும்.\nஅப்படிப்பட்ட ஒளியால் ஒளிரக் கூடிய வலுப்பெறும் சித்துத் தன்மையினால் எதனையும் ஊடுருவும் செயல் தன்மை இம்மனித சரீர வாழ்க்கை உணர்வு எண்ணத்திலேயே நாம் பெற முடியும்.\nசாமியையே (ஞானகுரு) எண்ணிக் கொண்டிருப்பதைக் காட்டிலும் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து உடலுக்குள் விளைய வைக்க வேண்டும்\n என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nசீராக ஆத்ம சுத்தி செய்வோருக்குக் கிடைக்கும் பலன்கள்\nஆண்டவனிலிருந்து வந்த பிம்பங்கள் தான் அனைத்துமே என்று எண்ணினால்… “தான்” என்ற தனித்த அகங்காரம் வராது – ஈஸ்வரபட்டர்\nஉங்களுக்குக் கொடுத்த சக்திகளை ஒவ்வொருவரும் விரயம் ஆக்காது பயன்படுத்துங்கள்\n24 X 7 சாமிகள் உபதேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.hdfc.com/housing-loans/home-loans", "date_download": "2021-05-07T01:54:29Z", "digest": "sha1:FMZKMXTTTD3VV2M6ULI64CZOT2MGBTMC", "length": 262736, "nlines": 1693, "source_domain": "tamil.hdfc.com", "title": "வீட்டுக் கடன் - ஆண்டுக்கு @6.75%* முதல் எச் டி எஃப் சி லிமிடெட் உடன் வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்கவும்.", "raw_content": "\nபுதிய வீட்டு கடன் பெற மிஸ்டு கால் தரவும்: +91 9289200017\nடெபிட் கார்டு மற்றும் நெட் பேங்கிங் (தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிகள்) உடன் ஏச் இ-மேண்டேட் பதிவு\nஉங்கள் வட்டி விகிதத்தை குறைக்க\nவட்டி விகிதம் / திருப்பி செலுத்தும் விவரங்கள் (மாறுபட்ட கடன்கள்)\nபடிவம் 16A (TDS சான்றிதழ்)\nமற்ற வீட்டு கடன் தயாரிப்புகள்\nவீட்டு கடன்கள் அல்லாத கடன்கள்\nவணிக மனை இடம் கடன்கள்\nஎச்டிஎப்சி இலக்கை அடை ய கடன்\nபிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா\nஎனக்கு தேவைப்படும் வீட்டு கடன் தொகையின் அளவு\n- தேர்ந்தெடுக்கவும் -ஆக்ராஅகமதாபாத்அகமத் நகர்அஜ்மீர்அகோலாஅலிகர்அலகாபாத்அல்வர்அம்பாலாஅமராவதிஅம்ரித்சர்ஆனந்த்அங்கலேஷ்வர்அவுரங்காபாத்பெங்களூர்பரேலிபதிண்டாபருச்பிலாய்பில்வாராபிவாடிபோபால்புவனேஸ்வர்பிக்னர்பிலாஸ்பூர்புல்தானாபுதிபோரிகாலிகட்சண்டிகர்சந்திராபூர்சென்னைசிப்ளுன்கோயம்புத்தூர்கட்டாக்டேராடூன்தேவாஸ்தூலேதுர்காபூர்ஈரோடுகாந்திதாம்காந்தி நகர்கோவாகோரக்பூர்குல்பர்காகுண்டூர்குருகிராம்கவுகாத்திகுவாலியர்ஹல்த்வாணிஹரித்வார்ஹிசார்ஓசூர்ஹுப்ளிஹைதராபாத்இந்தூர்ஜபல்பூர்ஜெய்ப்பூர்ஜலந்தர்ஜல்கான்ஜம்முஜாம்நகர்ஜமஷெத்பூர்ஜான்சிஜோத்பூர்காட்பி சௌக்கிகாக்கிநாடாகண்ஹங்கத்கண்ணூர்கான்பூர்கர்னல்காஷிபூர்கழகூட்டம்கம்லாகொச்சிகோலாப்பூர்கொல்கத்தாகொல்லம்கோட்டாகோட்டயம்லக்னோலுதியானமதுரைமலப்புரம்மங்களூர்மார்த்தாண்டம்மாவேலிக்கராமீரட்மேசனாமோகாமொராதாபாத்மும்பைமூவாட்டுப்புழாமுசாபர்நகர்மைசூர்நாகர்கோயில்நாக்பூர்நாசிக்நெல்லூர்புது தில்லிநொய்டாபாலக்காடுபானிபத்பத்தனம்திட்டாபட்டியாலாபட்னாபித்தம்புராபான்டா சாகிப்புதுச்சேரிபுனேராய்ப்பூர்ராஜமண்ட்ரிராஜ்கோட்ராஞ்சிரத்லாம்ரிஷிகேஷ்ரூர்கீரோபர்ரூர்கேலாருத்ராபூர்ஷாரன்பூர்சேலம்சாங்கலிசத்தாராசிம்லாசிலிகுரிசோலாப்பூர்சோனிபட்சூரத்டேக்நோபார்கதிருச்சூர்திருநெல்வேலிதிருப்பதிதிருப்பூர்திருச்சிதிருவனந்தப���ரம்தூத்துக்குடிஉதய்பூர்உஜ்ஜைன்வதோதராவாபிவாரணாசிவிஜயவாடாவிசாகப்பட்டினம்விசாகப்பட்டினம்வாசிம்யமுனாநகர்யவத்மால்வேறு ஏதேனும் நகரம்\nஎனது அறிவுக்கு எட்டிய வரையில் நான் வழங்கிய அனைத்து விவரங்களும் மிகச் சரியானவை மற்றும் முழுமையானவை என நான் அறிவிக்கிறேன். நான் இதன் மூலம் எச் டி எஃப் சி லிமிடெட் மற்றும் அதன் துணை நிறுவனங்களை, என்னை அழைக்க, எனக்கு இமெயில் அனுப்ப, குறுஞ்செய்தி சேவை (SMS) மற்றும் /அல்லது Whatsapp மூலம் எனக்கு மெசேஜ் அனுப்ப அங்கீகரிக்கிறேன் ,அவர்களின் தயாரிப்புகள் தொடர்பாக என்னை தொடர்பு கொள்ளலாம். இங்குள்ள ஒப்புதல் DNC/NDNC-க்கான எந்தவொரு பதிவையும் மீறும்.\nவீட்டுக் கடன் EMI கால்குலேட்டர்\nவீட்டுக் கடன் தகுதி வரம்பு கால்குலேட்டர்\nஎவ்வளவு வாங்கலாம் என்பதை சரிபார்க்கவும்\nவீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் கால்குலேட்டர்\nசுற்றுச்சூழல், சமூக மற்றும் அரசாங்கம்\nஎச் டி எஃப் சி பற்றி\nஇதற்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பவும்\nஎச் டி எஃப் சி கார்ப்பரேட் அலுவலகம்\nஎச் டி எஃப் சி வைப்பு மையங்கள்\nஒரு மிஸ்டு கால் கொடுங்கள் +91-9289200017\nHDFCHOME என டைப் செய்து 56767-க்கு அனுப்பவும்\nகேள்விகள்/பரிந்துரைகள் அல்லது எச் டி எஃப் சி வங்கி தொடர்பான ஏதேனும் வினவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்\n₹649* / லட்சம் உங்கள் புதிய வீட்டுக் கடனுக்கு\nஎனக்கு தேவைப்படும் வீட்டு கடன் தொகையின் அளவு\nதயவுசெய்து சரியான கடன் தொகையை உள்ளிடவும்.\nஒரு மிஸ்டு கால் கொடுங்கள்\nநன்மைகள் & சிறப்பு அம்சங்கள்\nஆன்லைனில் வீட்டு கடனுக்கு விண்ணப்பிக்கவும்\nஎச் டி எஃப் சி ஒரு லட்சத்திற்கு ₹649 முதல் தொடங்கும் EMI-களுடன் வீட்டுக் கடன்களை வழங்குகிறது மற்றும் வட்டி விகிதங்கள் ஆண்டுக்கு 6.75%* முதல் தொடங்குகிறது. எச் டி எஃப் சி வீட்டுக் கடன்கள் மூலம் உங்கள் சொந்த இடத்தை உருவாக்குங்கள். எங்கள் வீட்டுக் கடன் சம்பளம் பெறும் தனிநபர்களுக்கு வடிவமைக்கப்பட்டது ஏனெனில் அவை கவர்ச்சிகரமான வட்டி விகிதம் மற்றும் நீண்ட தவணைக்காலத்தை வழங்குகின்றனர். வீடு வாங்குவதில் சரியான முடிவை எடுக்க சட்ட மற்றும் தொழில்நுட்ப ஆலோசனை வழங்கி நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம். நீங்கள் உங்கள் வீட்டை வாங்க, கட்ட அல்லது புதுப்பிக்க விரும்பினால் அனைத்து ஆன்லைன் வீட்டுக் கடன் தீர்வுகளையும��� எச் டி எஃப் சி வீட்டுக் கடன் வழங்குகிறது. குறைந்த வட்டி விகிதம், நீண்ட தவணைக்காலம், வசதியான வீட்டுக் கடன் EMI மற்றும் வீட்டிற்கே வந்து சேவை போன்ற நன்மைகளுடன் உங்கள் கனவு இல்லத்தை எச் டி எஃப் சி வீட்டுக் கடன்களுடன் பூர்த்தி செய்யுங்கள், இன்றே எச் டி எஃப் சி வீட்டுக் கடனுக்கு ஆன்லைனில் விண்ணப்பியுங்கள்.\nவீட்டு வசதி கடன்கள் சிறப்பம்சங்கள்\nஅங்கீகரிக்கப்பட்ட திட்டங்களில் கட்டிடம் உருவாக்கும் தனியார் நபர்களிடம் இருந்து ஒரு பிளாட், வரிசை வீடு, பங்களா வாங்குவதற்கு வீட்டு கடன்கள் வழங்கப்படும்\ndda, mhada போன்ற மேம்பாட்டு ஆணையத்திடமிருந்து சொத்துக்களை வாங்குவதற்கான வீட்டுக் கடன்கள் வழங்கப்படும்\nஏற்கனவே உள்ள கூட்டுறவு வீட்டு வசதி சங்கம் அல்லது அபார்ட்மென்ட் உரிமையாளர்களின் சங்கம் அல்லது மேம்பாட்டு ஆணையம் குடியேற்றங்கள் அல்லது தனிப்பட்ட வீடுகள் வாங்குவதற்கான வீட்டுக் கடன்கள் வழங்கப்படும்\nஒரு சொந்த இடம் / வாடகை குத்தகைத் திட்டத்தில் அல்லது ஒரு அபிவிருத்தி அதிகார சபை மூலம் ஒதுக்கப்பட்ட ஒரு திட்டத்தில் கட்டுமான கடன்கள் வழங்கப்படும்\nநீங்கள் சரியான வீடு வாங்க முடிவு எடுப்பதற்கு சட்ட நிபுணர் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்கப்படும்\nஇந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் வீட்டுக் கடன்கள் பெற மற்றும் சேவை செய்வதற்காக ஒருங்கிணைந்த கிளை வலையமைப்பு\nஇந்திய இராணுவத்தில் பணியில் உள்ளவர்களுக்கு வீட்டுக் கடனுக்கான AGIF உடனான சிறப்பு ஏற்பாடு. மேலும் அறிய, இங்கே கிளிக் செய்யவும்\nவீட்டுக் கடன் வட்டி விகிதம்\nசிறப்பு வீட்டுக் கடன் விகிதங்கள்\nசரிசெய்யக்கூடிய விகித வீட்டுக் கடன்கள்\nபிரதான சில்லறை கடன் விகிதம்: 16.05%\nவீட்டுக் கடன் வட்டி விகிதம் (% ஆண்டுக்கு)\nபெண்கள் என்றால் * (30 லட்சம் வரை) 6.75 இருந்து 7.25 வரை\nமற்றவர்களுக்கு * (30 லட்சம் வரை) 6.80 இருந்து 7.30 வரை\nபெண்கள் என்றால் * (30.01 லட்சம் முதல் 75 லட்சம் வரை) 7.00 இருந்து 7.50 வரை\nமற்றவர்களுக்கு* (30.01 லட்சம் முதல் 75 லட்சம் வரை) 7.05 இருந்து 7.55 வரை\nபெண்கள் என்றால்* (75.01 லட்சம் & அதற்கு மேல்) 7.10 இருந்து 7.60 வரை\nமற்றவர்களுக்கு* (75.01 லட்சம் & அதற்கு மேல்) 7.15 இருந்து 7.65 வரை\nவிதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் படிக்க,இங்கே கிளிக் செய்யவும்\nநிலையான வீட்டுக் கடன் விகிதங்கள்\nசரிசெய்யக்கூடிய விகித வீட்டுக் கடன்கள்\nபிரதான சில்லறை கடன் விகிதம்: 16.05%\nவீட்டுக் கடன் வட்டி விகிதம் (% ஆண்டுக்கு)\nபெண்கள் என்றால் * (30 லட்சம் வரை) 6.95 இருந்து 7.45 வரை\nமற்றவர்களுக்கு * (30 லட்சம் வரை) 7.00 இருந்து 7.50 வரை\nபெண்கள் என்றால் * (30.01 லட்சம் முதல் 75 லட்சம் வரை) 7.20 இருந்து 7.70 வரை\nமற்றவர்களுக்கு* (30.01 லட்சம் முதல் 75 லட்சம் வரை) 7.25 இருந்து 7.75 வரை\nபெண்கள் என்றால்* (75.01 லட்சம் & அதற்கு மேல்) 7.30 இருந்து 7.80 வரை\nமற்றவர்களுக்கு* (75.01 லட்சம் & அதற்கு மேல்) 7.35 இருந்து 7.85 வரை\n*மேலே உள்ள வீட்டுக் கடன் வட்டி விகிதங்கள்/ EMI ஹவுசிங் டெவலப்மெண்ட் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட்(எச் டி எஃப் சி)-யின் சரிசெய்யக்கூடிய விகித வீட்டுக் கடன் திட்டத்தின் கீழ் பொருந்தும் மற்றும் வழங்கல் நேரத்தில் மாற்றத்திற்கு உட்பட்டவை. மேலே உள்ள வீட்டுக் கடன் வட்டி விகிதங்கள் எச் டி எஃப் சி-யின் பெஞ்ச் மார்க் ரேட் (\"RPLR\") உடன் இணைக்கப்பட்டுள்ளன மற்றும் கடன் தவணைக்காலம் முழுவதற்கும் மாறுபடும். அனைத்து கடன்களும் எச் டி எஃப் சி லிமிடெட்-யின் தனிப்பட்ட விருப்பத்தின்கீழ் உள்ளன. கடன் ஸ்லாப்கள் மற்றும் வட்டி விகிதங்கள் தொடர்பான மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nட்ரூஃபிக்ஸ்டு கடன் – 2 ஆண்டு நிலையான விகித வகை\nபிரதான சில்லறை கடன் விகிதம்: 16.05%\nவீட்டுக் கடன் வட்டி விகிதம் (% ஆண்டுக்கு)\nபெண்கள் என்றால் * (30 லட்சம் வரை) 7.40 இருந்து 7.90 வரை\nமற்றவர்களுக்கு * (30 லட்சம் வரை) 7.45 இருந்து 7.95 வரை\nபெண்கள் என்றால் * (30.01 லட்சம் முதல் 75 லட்சம் வரை) 7.55 இருந்து 8.05 வரை\nமற்றவர்களுக்கு* (30.01 லட்சம் முதல் 75 லட்சம் வரை) 7.60 இருந்து 8.10 வரை\nபெண்கள் என்றால்* (75.01 லட்சம் & அதற்கு மேல்) 7.65 இருந்து 8.15 வரை\nமற்றவர்களுக்கு* (75.01 லட்சம் & அதற்கு மேல்) 7.70 இருந்து 8.20 வரை\nவிதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் படிக்க,இங்கே கிளிக் செய்யவும்\nவீட்டுக் கடனுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்\nவீட்டுக் கடனுக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது என்பதற்கான படிப்படியான செயல்முறை\nவழிமுறை 1: ஆன்லைன் வீட்டுக் கடன் வழங்குநரின் இணையதளத்தை அணுகவும் – https://www.hdfc.com\nவழிமுறை 2: 'வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்கவும்' மீது கிளிக் செய்யவும்’\nவழிமுறை 3: நீங்கள் தகுதியுள்ள கடன் தொகையை கண்டறிய, 'தகுதியை சரிபார்க்கவும்' என்பதை கிளிக் செய்யவும்’.\nவழிமுறை 4: 'அடிப்படை தகவல்' டேபின் கீழ், நீங்கள் தேடும் கடன் வகையை தேர்ந்தெடுக்கவும் (வீட்டு கடன், வீட்டு மேம்பாட்டு கடன், மனை கடன்கள் போன்றவை). மேலும் தகவலுக்கு கடன் வகையை தவிர நீங்கள் இணைப்பை கிளிக் செய்யலாம்.\nவழிமுறை 5: நீங்கள் ஒரு சொத்தை தேர்ந்தெடுத்திருந்தால், அடுத்த கேள்வியில் 'ஆம்' என்பதை கிளிக் செய்து சொத்து விவரங்களை (மாநிலம், நகரம் மற்றும் சொத்தின் மதிப்பீட்டு செலவு) வழங்கவும்; நீங்கள் இன்னும் சொத்து குறித்து முடிவு செய்யவில்லை என்றால், 'இல்லை' என்பதை தேர்ந்தெடுக்கவும்.’. விண்ணப்பதாரரின் பெயரில் உங்கள் பெயரை நிரப்பவும்’. நீங்கள் உங்கள் கடன் விண்ணப்பத்திற்கு துணை-விண்ணப்பதாரரை சேர்க்க விரும்பினால், துணை-விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கையை தேர்ந்தெடுக்கவும் (நீங்கள் அதிகபட்சமாக 8 துணை-விண்ணப்பதாரர்களை கொண்டிருக்கலாம்).\nவழிமுறை 6: ‘விண்ணப்பதாரர்கள்' டேபின் கீழ், உங்கள் குடியிருப்பு நிலையை (இந்தியா / NRI) -ஐ தேர்ந்தெடுக்கவும், தற்போது நீங்கள் வசிக்கும் மாநிலம் மற்றும் நகரத்தை வழங்கவும், உங்கள் பாலினம், வயது, தொழில், ஓய்வூதிய வயது, இமெயில் ID மற்றும் மொபைல் எண், ஒட்டுமொத்த / மொத்த மாதாந்திர வருமானம் மற்றும் தற்போதுள்ள அனைத்து நிலுவைக் கடன்களுக்கும் ஒவ்வொரு மாதமும் செலுத்தப்பட்ட EMI.\nவழிமுறை 7: பின்னர் நீங்கள் ‘சலுகைகள்’ டேப்-க்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள், அங்கு நீங்கள் பெறக்கூடிய கடன் தயாரிப்புகள், நீங்கள் பெறக்கூடிய அதிகபட்ச கடன் தொகை, செலுத்த வேண்டிய EMI மற்றும் கடன் தவணைக்காலம், வட்டி விகிதம் மற்றும் வட்டி நிலையானதா அல்லது ஃப்ளோட்டிங் ஆகியவற்றை காண்பீர்கள்.\nவழிமுறை 8: நீங்கள் விண்ணப்பிக்க விரும்பும் கடன் தயாரிப்பை தேர்ந்தெடுக்கவும். நீங்கள் ஏற்கனவே வழங்கிய விவரங்கள் (உங்கள் பெயர், மின்னஞ்சல் ஐடி போன்றவை) முன் நிரப்பப்பட்ட கடன் விண்ணப்ப படிவத்திற்கு நீங்கள் அழைத்துச் செல்லப்படுவீர்கள். மீதமுள்ள விவரங்களை பூர்த்தி செய்யவும் – உங்கள் பிறந்த தேதி மற்றும் கடவுச்சொல் மற்றும் 'சமர்ப்பிக்கவும் மீது கிளிக் செய்யவும்’.\nவழிமுறை 9: அனைத்து ஆவணங்களையும் நீங்கள் பதிவேற்ற வேண்டும்.\nவழிமுறை 10: இப்போது நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் செயல்முறை கட்டணத்தை செலுத்த வேண்டும் மற்றும் உங்கள் ஆன்லைன் கடன் விண்ணப்பம் முடிவடையும��.\nஎச் டி எஃப் சி உடன் வீட்டுக் கடனுக்கு ஏன் விண்ணப்பிக்க வேண்டும்\nஎச் டி எஃப் சி என்பது இந்தியாவின் பிரீமியர் ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனமாகும், இது உங்கள் தேவைகளுக்கு தனிப்பயனாக்கப்பட்ட பரந்த அளவிலான வீட்டுக் கடன் தயாரிப்புகளை வழங்குகிறது மற்றும் ஒரு நீண்ட தவணைக்காலத்தில் வசதியாக திருப்பிச் செலுத்த முடியும். எச் டி எஃப் சி-யின் எண்ட் டு எண்ட் ஆன்லைன் வீட்டுக் கடன் தீர்வுகள், நாடு முழுவதும் ஒருங்கிணைக்கப்பட்ட கிளை நெட்வொர்க் மற்றும் 24X7 ஆன்லைன் உதவி ஆகிய அனைத்தும் உங்கள் வீட்டை சொந்தமாக்குவதற்கான பயணத்தை மறக்கமுடியாத ஒன்றாக அமைக்கும்.\nநீங்கள் வெறும் 4 படிநிலைகளில் எச் டி எஃப் சி-யின் விரைவான மற்றும் எளிதான ஆன்லைன் முறையுடன் இப்போது ஆன்லைன் வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.\nஆன்லைனில் வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்கும் முன் சரிபார்க்க/செய்ய வேண்டிய விஷயங்கள்\nஆன்லைனில் வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்கும் முன்னர் பின்வரும் புள்ளிகளை நினைவில் கொள்ள வேண்டும்\nஉங்கள் வீட்டுக் கடன் விண்ணப்பத்தை தொடங்குவதற்கு முன்னர் உங்கள் கடன் தகுதியை சரிபார்க்கவும்.\nதேவையான ஆவணங்களின் பட்டியலை சரிபாருங்கள் மற்றும் உங்கள் ஆன்லைன் வீட்டுக் கடன் விண்ணப்ப செயல்முறையை தொடங்குவதற்கு முன்னர் அவற்றை தயாராக வைத்திருங்கள்\nஉங்களுக்கு தேவையான வீட்டுக் கடன் வகை பற்றி தெளிவாக இருங்கள் (வீட்டுக் கடன், வீட்டு மேம்பாட்டு கடன், பிளாட் கடன் போன்றவை)\nஉங்கள் வீட்டுக் கடன் விண்ணப்ப செயல்முறையை தொடங்குவதற்கு முன்னர் FAQ-களை படிக்கவும்.\nஉங்கள் விண்ணப்பத்தை செயல்முறைப்படுத்த வீட்டுக் கடன் வழங்குநருக்கு தேவையான அனைத்து விவரங்களையும் நீங்கள் வழங்குவதை உறுதி செய்யுங்கள்.\nஆன்லைனில் வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிப்பது பற்றி ஏதேனும் கேள்விகள் இருந்தால் நீங்கள் ஆன்லைன் சாட் வசதியை பயன்படுத்தலாம்\nவீட்டுக் கடனுக்கு விண்ணப்பிப்பதன் நன்மைகள்\nநீண்ட கடன் திருப்பிச் செலுத்தும் தவணைக்காலம் - 30 ஆண்டுகள் வரை நீண்ட வீட்டுக் கடன் திருப்பிச் செலுத்தும் தவணைக்காலத்தின் நன்மை\nவீடு வாங்குவதில் GST விகிதங்களில் குறைப்பு - வீடு வாங்குவதில் GST விகிதங்கள் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளன\nகுறைந்த வீட்டுக் கடன் வட்டி விகிதங���கள்- இன்று குறைந்த வட்டி விகிதங்களுடன் வீட்டுக் கடன்கள் மிகவும் மலிவானதாகிவிட்டன\nஎளிதான வீட்டுக் கடன் விண்ணப்ப செயல்முறை- ஆன்லைனில் வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிப்பது மிகவும் எளிதானது மற்றும் வசதியானது\nபல்வேறு விருப்பங்கள்- மலிவான வீடு பிரிவில் வீடு வாங்குபவர்களுக்கு பல விருப்பங்கள் உள்ளன\nவீட்டுக் கடன் பெறுவதற்கான எனது வாய்ப்புகளை நான் எவ்வாறு மேம்படுத்துவது\nஉங்கள் வீட்டுக் கடன் விண்ணப்பத்தின் ஒப்புதல் வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள்\nசரியான நேரத்தில் திருப்பிச் செலுத்துவதற்கான ஒரு நிலையான டிராக் ரெக்கார்டை உருவாக்குவதன் மூலம் உங்கள் கிரெடிட் ஸ்கோரை மேம்படுத்துங்கள், இதனால் நீங்கள் ஒரு உயர் கிரெடிட் ஸ்கோரை அடைவீர்கள், இது உங்கள் வீட்டுக் கடனை பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும்.\nஉங்கள் கிரெடிட் அறிக்கையை ஒரு வருடத்தில் ஒருமுறை அல்லது இரண்டு முறை அவ்வப்போது பெறுங்கள், அதனை ஏதேனும் பிழைகள் உள்ளதா என்பதை சரிபார்த்து தேவைப்படும் போது அவற்றை சரிசெய்யவும்.\nஉங்கள் வீட்டுக் கடன் விண்ணப்பத்தின் ஆவணங்கள் கடன் வழங்குநரின் தேவைக்கேற்ப சரியான வரிசையில் இருப்பதை உறுதிசெய்யவும்.\nஅடிக்கடி வேலை மாற்றங்களை தவிர்க்கவும் ஏனெனில் இது நிலையற்ற தன்மையை வெளிப்படுத்தும்.\nநீங்கள் தேர்ந்தெடுத்த சொத்து, வீட்டுக் கடனுக்காக கருதப்படுமா என்று கடன் வழங்குநருடன் சரிபார்க்கவும். அதே நேரத்தில், ஒரு சுயாதீனமான விரிவான சரிபார்ப்பை செய்யுங்கள்.\nவீட்டுக் கடன் பெறுவதற்கான வாய்ப்புகளை மேம்படுத்த பின்வரும் வழிமுறைகளை நீங்கள் பின்பற்றலாம்\nஆன்லைனில் வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்கும் போது செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை\nஉங்கள் வீட்டுக் கடன் விண்ணப்பத்தை தொடங்குவதற்கு முன்னர் உங்கள் கடன் தகுதியை சரிபார்க்கவும்\nஉங்கள் தகுதியை சரிபார்க்காமல் ஒரு ADHOC கடன் தொகைக்கான விண்ணப்பத்தை தவிர்க்கவும்\nதேவையான ஆவணங்களின் பட்டியலை பாருங்கள் மற்றும் உங்கள் ஆன்லைன் விண்ணப்ப செயல்முறையை தொடங்குவதற்கு முன்னர் அவற்றை தயாராக வைத்திருங்கள்\nஒரே நேரத்தில் கடன் விண்ணப்ப செயல்முறையை நிறைவு செய்வது விரும்பத்தக்கது மற்றும் நிலைகளில் இல்லை.\nஉங்களுக்கு தேவையான கடன் வகை (வீட்ட�� கடன், வீட்டு மேம்பாட்டு கடன், மனை கடன் போன்றவை) பற்றி தெளிவாக இருங்கள்\nமுக்கியமான ஆவணங்களை சமர்ப்பிப்பதை விட்டு வெளியேற வேண்டாம்.\nஉங்கள் கடன் விண்ணப்ப செயல்முறையை தொடங்குவதற்கு முன்னர் FAQ-களை படிக்கவும்\nஉங்கள் கடன் விண்ணப்பத்தை மேற்கொள்ளும் போது CIBIL ஸ்கோரை புறக்கணிக்காதீர்கள் (உங்கள் கடன் விண்ணப்பத்தின் மீது உங்கள் ஸ்கோர் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது)\nஉங்களிடம் ஏதேனும் கேள்விகள் இருந்தால் நீங்கள் ஆன்லைன் சாட் வசதியை பயன்படுத்தலாம்.\nகடன் வழங்குநர் உங்கள் விண்ணப்பத்தை செயல்முறைப்படுத்த வேண்டிய அனைத்து விவரங்களையும் நீங்கள் வழங்குவதை உறுதிசெய்யவும்.\nவீட்டுக் கடன்களுக்கு தனித்தனியாகவோ அல்லது கூட்டாகவோ விண்ணப்பிக்கலாம். சொத்தின் அனைத்து உரிமையாளர்களும் இணை விண்ணப்பதாரர்களாக இருக்க வேண்டும்.\nசம்பள நபர் / சுய வேலைவாய்ப்பு\nஇணை விண்ணப்பதாரரை சேர்ப்பது கடன் தொகையை அதிகரிக்க உதவுகிறது.\nபெண் இணை-உரிமையாளரை சேர்ப்பது சிறந்த வட்டி விகிதத்தை பெறுவதில் உதவும்.\nஅனைத்து இணை-விண்ணப்பதாரர்களும் இணை-உரிமையாளர்களாக இருக்க வேண்டும் என அவசியமில்லை, பொதுவாக இணை-விண்ணப்பதாரர்கள் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களாக இருப்பர்.\nஅதிகபட்ச நிதி மற்றும் கடன் செலுத்துதல் காலம் என்ன\n₹30 லட்சம் வரை மற்றும் உட்பட சொத்து செலவில் 90%\n₹30.01 லட்சம் முதல் ₹75 லட்சம் வரை சொத்து செலவில் 80%\n₹75 லட்சத்திற்கு மேல் சொத்து செலவில் 75%\n*எச் டி எஃப் சி மூலம் மதிப்பிடப்பட்ட படி, சொத்துக்களின் சந்தை மதிப்பு மற்றும் வாடிக்கையாளரின் கடன் திருப்பிச் செலுத்தும் திறன் ஆகியவற்றிற்கு உட்பட்டது.\nசரிசெய்யப்படும் விகித வீட்டு கடனின் கீழ் டெலஸ்கோபிக் திருப்பிச் செலுத்தல் விருப்ப தேர்விற்காக கடனை திருப்பிச் செலுத்துவதற்கான அதிகபட்ச காலம் 30 வருடங்கள் வரை வழங்கப்படும். மற்ற அனைத்து வீட்டு கடன் பொருட்களுக்கு, அதிகபட்ச திருப்பிச் செலுத்தும் காலம் 20 ஆண்டுகள் வரை இருக்கும்.\nகடன் தவணைக்காலம் என்பது வாடிக்கையாளரின் சுயவிவரம், கடன் முதிர்ச்சி அடையும் போதுள்ள வாடிக்கையாளரின் வயது, கடன் முதிர்ச்சியின் போது சொத்துக்களின் வயது, குறிப்பிட்ட திருப்பிச் செலுத்தல் திட்டம் ஆகியவற்றை பொறுத்து தேர்வு செய்யப்படலாம் மற்றும் பிற எச் ��ி எஃப் சி -யின் நடைமுறையிலுள்ள விதிமுறைகளின் அடிப்படையில் மற்ற விதிமுறைகளும் பொருந்தலாம்.\nவீட்டு வசதி கடன் தேவையான ஆவனங்கள் மற்றும் கட்டணம்\nமாத ஊதியம் பெறும் நபர்களுக்கு\nவீட்டுக் கடன் ஒப்புதலுக்கு, நிறைவு செய்யப்பட்ட மற்றும் கையொப்பமிடப்பட்ட வீட்டுக் கடன் விண்ணப்ப படிவத்துடன் விண்ணப்பதாரர்கள் / துணை-விண்ணப்பதாரர்களுக்கான பின்வரும் ஆவணங்களை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.\nவிண்ணப்பதாரர் அடையாளம் மற்றும் இருப்பிட சான்று ஆகிய இரண்டிற்கும் ஆதாரம்(KYC)\nKYC க்கான கட்டாய தேவை ஆவணங்கள்\nKYC ஆவணங்களின் முழுமையான பட்டியலுக்கு இங்கே கிளிக் செய்யவும்.\nகடந்த 3 மாத சம்பள விபரம்\nசம்பள வரவு காட்டும் கடந்த 6 மாத கால வங்கி அறிக்கைகள்,\nசமீபத்திய படிவம் -16 மற்றும் வருமான வரி தாக்கல் செய்த விபரம்\nஒதுக்கீட்டு கடிதம் / வாங்குபவர் ஒப்பந்தத்தின் நகல்\nபணம் செலுத்துதல்(கள்) / செய்யப்பட்ட ரசீதுகள்(கள்)\nசொத்து ஆவணங்கள் உட்பட அனைத்து முந்தைய தொடர்புடைய ஆவணங்கள்\nவிற்பனையாளருக்கு செய்யப்பட்ட ஆரம்ப கட்டணம் (கள்) / ரசீது (கள்)\nவிற்பனை ஒப்பந்தத்தின் நகல் (ஏற்கனவே ஏற்கனவே செயல்படுத்தப்பட்டது)\nசொத்து மீது எந்த சிக்கலும் இல்லை என்ற ஆதாரம்\nஉள்ளூர் அமைப்புகளால் அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களின் பிரதி\nஒரு ஆர்க்கிடெக்ட்/சிவில் இன்ஜினியர் இவர்களால் தயாரிக்கப்பட்ட கட்டுமான மதிப்பீடு\nவீட்டுக் கடனுக்கான மற்ற ஆவணங்கள்\nவேலைவாய்ப்பு ஒப்பந்தம் / நியமன கடிதம் தற்போதைய வேலைவாய்ப்பு ஒரு ஆண்டுக்கு குறைவாக உள்ள போது\nநடப்பு கடன்களின் திருப்பிச் செலுத்தலை காண்பிக்கும் கடந்த 6 மாத கால வங்கி அறிக்கைகள்\nஅனைத்து விண்ணப்பதாரர்கள் / இணை-விண்ணப்பதாரர்களின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் விண்ணப்பப் படிவத்தில் இணைக்கப்பட்டு மேலே கையொப்பமிட வேண்டும்.\nசெயல்முறை கட்டணம் செலுத்த காசோலையை எச்.டி.எஃப்.சி என்ற பெயரில் கொடுக்க வேண்டும்.\nஅனைத்து ஆவணங்களும் சுய சான்றளிக்கப்பட வேண்டும். மேலே உள்ள பட்டியல் குறிப்புக்காக மட்டுமே மேலும் கூடுதல் ஆவணங்கள் கேட்கப்படலாம்.\nவீட்டு வசதி கடன் செலவுகள் மற்றும் கட்டணம்\nமாத ஊதியம் பெறும் நபர்களுக்கு\nபெறப்பட்ட கடனின் தன்மையைப் பொறுத்து (*) செலுத்த வேண்டிய வீட்டுக் கடன் கட்டணங்கள் மற்றும் கட்டணங்��ளின் ஒரு குறிப்பிட்ட பட்டியல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது:\nவீட்டுக் கடன் செயல்முறை கட்டணங்கள்\nகடன் தொகையில் 0.50% வரை அல்லது ₹3,000 எது அதிகமாக உள்ளதோ அது, கூடுதலாக பொருந்தக்கூடிய வரிகள்.\nவக்கீல்/தொழில்நுட்ப மதிப்பீட்டாளரின் வெளிப்புற கருத்திற்கான கட்டணம், கொடுக்கப்பட்ட வழக்கிற்கு பொருந்தும் உண்மையின் அடிப்படையில் செலுத்தப்பட வேண்டும். இத்தகைய கட்டணங்கள் நேரடியாக உதவி வழங்கிய சம்பந்தப்பட்ட வக்கீல்/ தொழில்நுட்ப மதிப்பீட்டாளருக்கு வழங்கப்படும்.\nகடன் நிலுவையில் உள்ள போது, பாலிசி / பாலிசிகளை செயல்பாட்டில் வைத்திருக்க, வாடிக்கையாளர் தவறாமல் உடனுக்குடன் காப்பீட்டு வழங்குநருக்கு நேரடியாக பிரீமியம் தொகை செலுத்தி விட வேண்டும்.\nதாமதம் அடைந்த பணம்செலுத்தல்கள் கணக்கில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது\nவட்டி அல்லது மாத தவணை முறை தாமதமாக செலுத்துதல் வருடம் 24% வரை கூடுதலான வட்டி வாடிக்கையாளர் செலுத்த வேண்டியது இருக்கும்.\nதற்செயலான செலவுகள் மற்றும் செலவினங்களை ஈடு கட்ட, கட்டணங்கள், செலவுகள் மற்றும் பிற பணம் ஆகியவை, வாடிக்கையாளர்களிடமிருந்து செலுத்த வேண்டிய தொகையை திரும்பப் பெறும் வகையில் செலவழிக்க பட்டு இருக்கலாம். இந்தக் கொள்கை நகலை வாடிக்கையாளர் தொடர்புடைய கிளைகளில் கேட்டுப் பெற முடியும்.\nசட்டரீதியான / ஒழுங்குமுறை கட்டணங்கள்\nஸ்டாம்ப் கட்டணம் / MOD / MOE / மத்திய பாதுகாப்புப் பத்திரத்தின் இந்தியாவின் பாதுகாப்பு சீர்திருத்த மற்றும் பாதுகாப்பு வட்டி (CERSAI) அல்லது அத்தகைய பிற சட்டரீதியான / ஒழுங்குமுறை அமைப்புகள் மற்றும் பொருந்தக்கூடிய வரி ஆகியவற்றின் பொருந்தக்கூடிய அனைத்து கட்டணங்களையும் வாடிக்கையாளரே முழுமையாக ஏற்க மற்றும் செலுத்த (அல்லது திருப்பி பெற அத்தகைய சூழ்நிலைகளில்) வேண்டும். நீங்கள் அத்தகைய கட்டணங்கள் அனைத்திற்கும் CERSAI வலைத்தளம் www.cersai.org.in ஐ பார்வையிடலாம்\nகாசோலை அவமதிப்பு கட்டணம் ₹200**\nஆவணங்களின் பட்டியல் ₹500 வரை\nஆவணங்களின் நகல் ₹500 வரை\nPDC இடமாற்று ₹200 வரை\nகாசோலை அளித்த பின் ரத்து செய்வதற்கான கட்டணம் ₹200 வரை\n6 மாதங்களுக்கு பின்னர் கடன் மறு மதிப்பீடு ₹2,000 வரை அதனுடன் பொருந்தும் வரிகளுடன்\nகடன் தவணையை அதிகரிக்க / குறைக்க ₹500 வரை மற்றும் பொருந்தும் வரிகள்\nவீட்டுக் கடன் முன்பணமளிப்பு ��ட்டணங்கள்\na. மாறுபடும் வட்டி விகிதம் பொருந்தக்கூடிய காலத்தில் சரி செய்யத்தக்க விகித கடன்கள் (ARHL) மற்றும் சேர்க்கை விகித வீட்டு கடன் (\"CRHL\")\na) தனிநபர் கடன் பெறுபவர்களுக்கு:\nதனிநபர் கடனாளிகளுக்கு மட்டும் ஒப்புதல் அளிக்கப்பட்ட அனைத்து கடன்களுக்கும், எந்தவொரு ஆதாரம் மூலமும் செய்யப்பட்ட பகுதி அல்லது முழு முன்கூட்டியே செலுத்தல்களுக்கு முன்கூட்டியே செலுத்தல் கட்டணங்கள் விதிக்கப்படமாட்டாது.\nb) தனிநபர் கடன் பெறுபவர்கள் தவிர மற்ற கடன் பெறும் நபர்களுக்கு- கம்பெனி / ஒரே உரிமையாளர் கொண்ட நிறுவனம்/நிறுவனம் அல்லது இணை-விண்ணப்பதாரர்களாக ஒரு HUF உடன் ஒப்புதலளிக்கப்பட்ட கடன்களுக்கு:\ni. முதல் வழங்கல் தேதியில் இருந்து முதல் ஆறு (6) மாதங்களுக்குள் கடன் தொகையானது முன்கூட்டியே செலுத்தப்பட்டால், அவ்வாறு செலுத்தப்படும் தொகைக்கு, முன்கூட்டியே செலுத்தல் கட்டணங்கள் 2 % விகிதத்தில் வசூலிக்கப்படும் மற்றும் அதனுடன் வரிகள் மற்றும் சட்ட ரீதியான வரி கட்டணம் வசூலிக்கப்படும்;\nii. முதல் 6 (6) மாதங்களின் காலாவதி மற்றும் 36 மாதங்கள் வரை, ஒவ்வொரு நிதி ஆண்டிற்கு திறந்த பிரதான கடன், தொகையில் 25% வரை முன்னுரிமை பெறும் விருப்பத்தை, எந்த முன்னுரிமை கட்டணங்கள் இல்லாமல். கடனாளி சொந்த ஆதாரங்களில் இருந்து அத்தகைய முன்முயற்சிகள் செய்யப்பட வேண்டும்.\nஒவ்வொரு நிதி ஆண்டின் வரம்பான 25 % - க்கு மேல் முன்கூட்டியே செலுத்தப்படும் எந்தவொரு தொகைக்கும் அத்தகைய வரம்பிற்கு மீறிய தொகையின் மீது 2% ஆக முன்கூட்டியே செலுத்தல் கட்டணங்கள் சேர்க்கப்படும்.\n36 மாதங்கள் காலாவதிக்கு பிறகு, சொந்த ஆதாரங்கள் மூலம் கடன் முன்கூட்டியே செலுத்தப்பட்டால் அதற்கு முன்கூட்டியே செலுத்தல் கட்டணங்கள் பொருந்தாது. இருந்தாலும், கடன் பெறுபவருக்கு மறு நிதியுதவி அளிப்பதன் மூலம் கடன் தொகை முன்கூட்டியே செலுத்தப்பட்டால் அதற்கு முன்கூட்டியே செலுத்தலுக்கான கட்டணங்களைச் செலுத்த வேண்டும்.\nc) கடனை முன்கூட்டியே செலுத்தும் நேரத்தில் நிதி ஆதாரத்தை உறுதிப்படுத்துவதற்கு எச் டி எஃப் சி சரியானதாக கருதும் இத்தகைய ஆவணங்களை வாடிக்கையாளர் சமர்ப்பிக்க வேண்டும்.\n*இந்த நோக்கத்திற்காக \"சொந்த ஆதாரங்கள்\" என்பது ஒரு வங்கி / HFC/NBFC அல்லது நிதி நிறுவனத்திலிருந்து கடன் பெற்றதை தவிர வேறு எந்த���ொரு ஆதாரமும் ஆகும்.\nமேலே குறிப்பிட்டுள்ள முன்கூட்டியே செலுத்தல் கட்டணங்கள் இந்த கடன் ஒப்பந்தத்தை நிறைவேற்றும் நாளின் படி குறிப்பிடப்பட்டுள்ளன, எனினும் அவை எச் டி எஃப் சி -யின் நடைமுறையில் உள்ள கொள்கைகள் மாற்றத்திற்கு உட்பட்டு இருக்கின்றன, அதன்படி அவ்வப்போது மாறுபடும். முன்கூட்டியே செலுத்தல்களின் மீது பொருந்தும் சமீபத்திய கட்டணங்கள் பற்றி www.hdfc.com -ஐ பார்க்குமாறு வாடிக்கையாளர்களிடம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.\nb. நிலையான வட்டி விகிதம் பொருந்தும் காலத்தில் நிலையான விகித கடன்கள் (\"FRHL\") மற்றும் சேர்க்கை விகித வீட்டு கடன் (\"CRHL\")\na) தனிநபர் கடன் பெறுபவர்களுக்கு:\nவழங்கப்படும் அனைத்து கடனுக்காக, முன்னுரிமை கட்டணம் 2% வீதத்தில் விதிக்கப்படும், கூடுதலாக பொருந்தக்கூடிய வரிகள் மற்றும் சட்டரீதியான கட்டணங்கள் மற்றும் இதர கட்டணங்கள், எந்த வங்கி / HFC / NBFC அல்லது நிதி நிறுவனத்திடமிருந்து (அத்தகைய தொகை செலுத்தப்பட்ட நிதி ஆண்டில் ப்ரீபெய்ட் செய்யப்பட்ட அனைத்து தொகையும் அடங்கும்) மற்றும் சொந்த ஆதாரங்களின் மூலம் அல்லாத, அனைத்து பகுதி அல்லது முழுமையான முன் செலுத்தல்களுக்கு பொருந்தும்.\nb) தனிநபர் கடன் பெறுபவர்கள் தவிர மற்ற கடன் பெறும் நபர்களுக்கு- கம்பெனி / ஒரே உரிமையாளர் கொண்ட நிறுவனம்/நிறுவனம் அல்லது இணை-விண்ணப்பதாரர்களாக ஒரு HUF உடன் ஒப்புதலளிக்கப்பட்ட கடன்களுக்கு:\ni. முதல் வழங்கல் தேதியில் இருந்து முதல் ஆறு (6) மாதங்களுக்குள் கடன் தொகையானது முன்கூட்டியே செலுத்தப்பட்டால், அவ்வாறு செலுத்தப்படும் தொகைக்கு, முன்கூட்டியே செலுத்தல் கட்டணங்கள் 2 % விகிதத்தில் வசூலிக்கப்படும் மற்றும் அதனுடன் வரிகள் மற்றும் சட்ட ரீதியான வரி கட்டணம் வசூலிக்கப்படும்;\nII. காலாவதியான முதல் ஆறு (6) மாதங்கள் மீது மற்றும் 36 மாதங்கள் வரை, கடன் பெறுபவர், எந்தவித முன்கூட்டியே செலுத்தல் கட்டணங்கள் இல்லாமல், ஒவ்வொரு ஆண்டும் ஆரம்ப அசல் தொகையின் 25% ஐ முன்கூட்டியே செலுத்துவதற்கான விருப்பத் தேர்வை பெறுவார். இத்தகைய முன்கூட்டியே செலுத்தல்கள் வாடிக்கையாளரின் சொந்த ஆதாரங்கள் மூலம் செய்யப்பட வேண்டும்.\nஒவ்வொரு நிதி ஆண்டின் வரம்பான 25 % - க்கு மேல் முன்கூட்டியே செலுத்தப்படும் எந்தவொரு தொகைக்கும் அத்தகைய வரம்பிற்கு மீறிய தொகையின் மீது 2% ஆக ��ுன்கூட்டியே செலுத்தல் கட்டணங்கள் சேர்க்கப்படும்.\n36 மாதங்கள் காலாவதிக்கு பிறகு, சொந்த ஆதாரங்கள் மூலம் கடன் முன்கூட்டியே செலுத்தப்பட்டால் அதற்கு முன்கூட்டியே செலுத்தல் கட்டணங்கள் பொருந்தாது. இருந்தாலும், கடன் பெறுபவருக்கு மறு நிதியுதவி அளிப்பதன் மூலம் கடன் தொகை முன்கூட்டியே செலுத்தப்பட்டால் அதற்கு முன்கூட்டியே செலுத்தலுக்கான கட்டணங்களைச் செலுத்த வேண்டும்.\nc) கடனை முன்கூட்டியே செலுத்தும் நேரத்தில் நிதி ஆதாரத்தை உறுதிப்படுத்துவதற்கு எச் டி எஃப் சி சரியானதாக கருதும் இத்தகைய ஆவணங்களை வாடிக்கையாளர் சமர்ப்பிக்க வேண்டும்.\n*இந்த நோக்கத்திற்காக \"சொந்த ஆதாரங்கள்\" என்பது ஒரு வங்கி / HFC/NBFC அல்லது நிதி நிறுவனத்திலிருந்து கடன் பெற்றதை தவிர வேறு எந்தவொரு ஆதாரமும் ஆகும்.\nமேலே குறிப்பிட்டுள்ள முன்கூட்டியே செலுத்தல் கட்டணங்கள் இந்த கடன் ஒப்பந்தத்தை நிறைவேற்றும் நாளின் படி குறிப்பிடப்பட்டுள்ளன, எனினும் அவை எச் டி எஃப் சி -யின் நடைமுறையில் உள்ள கொள்கைகள் மாற்றத்திற்கு உட்பட்டு இருக்கின்றன, அதன்படி அவ்வப்போது மாறுபடும். முன்கூட்டியே செலுத்தல்களின் மீது பொருந்தும் சமீபத்திய கட்டணங்கள் பற்றி www.hdfc.com -ஐ பார்க்குமாறு வாடிக்கையாளர்களிடம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.\nவீட்டுக் கடன் மாற்று கட்டணங்கள்\nஎங்களது தற்போதைய வாடிக்கையாளருக்கு எங்களின் மாற்று வசதி மூலம் வீட்டுக் கடன் மீது பொருந்தக்கூடிய வட்டி விகிதங்களை குறைக்கும் விருப்பத்தேர்வை வழங்குகிறோம் (திட்டங்களுக்கு இடையில் பரப்புவதன் மூலம் அல்லது மாற்றுவதன் மூலம்). ஒரு நாமினல் கட்டணத்தை செலுத்துவதன் மூலம் நீங்கள் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம் மற்றும் உங்கள் மாதாந்திர தவணை (EMI) அல்லது கடன் தவணைக்காலத்தை குறைப்பதை தேர்வு செய்யலாம். விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பொருந்தும். எங்கள் மாற்ற வசதியைப் பெற மற்றும் கிடைக்கக்கூடிய பல்வேறு விருப்பங்களைப் பற்றி விவாதிக்க இங்கே கிளிக் செய்யவும் என்பதைக் கிளிக் செய்து உங்களை மீண்டும் அழைக்கவும் அல்லது தற்போதைய வாடிக்கையாளர்களுக்கான ஆன்லைன் அணுகல் மூலம் உள்நுழையவும், இதில் 24x7 உங்கள் வீட்டுக் கடன் கணக்கு தகவலைப் பெறலாம். ஒரு நடப்பிலுள்ள எச் டி எஃப் சி வாடிக்கையாளருக்கு கீழ்வரும் மாற்ற விருப்பதேர்வுகள் கிடைக்கப்பெறுகின்றன:\nதயாரிப்பு / சேவையின் பெயர்\nகட்டண பெயர்/ கட்டணம் விதிக்கப்பட்டது\nகடன்கள் மாறுபட்ட விகிதத்தில் குறைந்த விகிதத்திற்கு மாறுதல். கடன்கள்(வீடு கட்டுதல்/ விரிவாக்கம் / முன்னேற்றம்)\nமாற்றுதல் கட்டணம் மாற்றும் காலம் ஒவ்வொரு மாற்றத்தின் போதும் மாற்றும் நேரத்தில் அசல் தொகை மற்றும் பட்டுவாடா செய்யப்படாத தொகை (ஏதேனும் இருந்தால்) 0.50% வரை அல்லது கேப் ₹50000 மற்றும் வரிகள் எது குறைவானதோ அது பொருந்தும்.\nநிலையான விகிதம் கடனில் இருந்து மாறுபடும் விகிதம் கடனுக்கு மாறுதல் (வீடமைப்பு / நீட்டிப்பு / முன்னேற்றம்)\nமாற்றுதல் கட்டணம் மாற்றும் காலம் ஒருமுறை மாற்றும் நேரத்தில் அசல் தொகை மற்றும் பட்டுவாடா செய்யப்படாத தொகை (ஏதேனும் இருந்தால்) 0.50% வரை அல்லது கேப் ₹50000 மற்றும் வரிகள் எது குறைவானதோ அது பொருந்தும்.\nட்ரூஃபிக்ஸ்டு ரேட் இல் இருந்து மாறுபடும் விகிதத்திற்கு மாறுதல்\nமாற்றுதல் கட்டணம் மாற்றும் காலம் ஒருமுறை மாற்றியமைக்கும் நேரத்தில் முதல் தொகை மற்றும் அளிக்கப்படாது தொகையில் (ஏதாவது இருந்தால்) 1.75% மற்றும் வரிகள்.\nகுறைந்த விகிதத்திற்கு (வீட்டு கடன்கள் அல்லாது) மாறுதல்\nமாற்றுதல் கட்டணம் மாற்றும் காலம் ஒவ்வொரு மாற்றத்தின் போதும் பிரதான நிலுவை பரவல் வேறுபாடுகளின் பாதி மற்றும் அளிக்கப்படாது தொகை (ஏதேனும் இருந்தால்) மற்றும் வரிகள், குறைந்த பட்ச கட்டணம் 0.5% அதிகபட்சம் 1.50%.\nகுறைந்த விகிதத்திற்கு மாறுதல் (வீட்டுமனை கடன்கள்)\nமாற்றுதல் கட்டணம் மாற்றும் காலம் ஒவ்வொரு மாற்றத்தின் போதும் மாற்றியமைக்கும் நேரத்தில் முதல் தொகையில் மற்றும் அளிக்கப்படாது தொகையில் (ஏதாவது இருந்தால்) 0.5% மற்றும் வரிகள்.\n(*) மேலே உள்ள உள்ளடக்கங்கள் அவ்வப்போது மாற்றத்திற்கு உட்பட்டவை மற்றும் அத்தகைய கட்டணத்தின் தேதியில் பொருந்தக்கூடிய விகிதங்களில் இருக்கும்.\nவீட்டுக் கடனை திருப்பிச்செலுத்தும் விருப்பங்கள்\nமாத ஊதியம் பெறும் நபர்களுக்கு\nநீட்டிக்கப்பட்ட திருப்பிச் செலுத்தும் வசதி (SURF)\nSURF உங்கள் வருமானத்தில் எதிர்பார்க்கும் வளர்ச்சி பொருத்து திருப்பிச் செலுத்தும் கால அட்டவணை இணைக்கப்படும் ஒரு வாய்ப்பை வழங்குகிறது. நீங்கள் ஆரம்பத்தில் அதிக கடன் தொகை மற்றும் குறைந்த EMI களுக்கு பணம் ச��லுத்த முடியும். அதன் பின்னர், உங்கள் வருமானத்தில் ஏற்படும் அதிகரிப்பில் வேகமாக திரும்பிச் செலுத்த முடியும்.\nநெகிழ்வான கடன் தவணைத் திட்டம் (FLIP)\nFLIP உங்கள் கடனுக்கான காலவரையின்றி மாற்றியமைக்ககூடிய திருப்பிச் செலுத்தும் திறனை தக்கவைக்கும் தனிப்பயனாக்கப்பட்ட தீர்வை வழங்குகிறது. ஆரம்ப ஆண்டுகளில் EMI உயர்ந்த முறையிலும் அதன் பிறகு வருமானத்திற்கு தக்கவாறு குறைந்து இருக்கும்.\nநீங்கள் ஒரு கட்டுமானக் கட்டிடத்தை வாங்குகிறீர்கள் எனில், பொதுவாக மொத்த கடனில் கடன் பெற்ற தொகைக்கு வட்டிக்கு மட்டும் செலுத்தலாம். அதன் பின்னர் EMI களுக்கு பணம் செலுத்துங்கள். நீங்கள் உடனடியாக அசல் தொகையை திருப்பிச் செலுத்த வேண்டுமானால் இதுவரை பெற்ற கடன் மீது உடனடியாகத் தொடங்கலாம்.\nதுரிதப் படுத்தப்பட்ட திரும்பச் செலுத்துதல் திட்டம்\nஇந்த விருப்பம் உங்கள் வருமானம் அதிகரிக்கும் விகிதத்தில் ஒவ்வொரு ஆண்டும் EMI களை அதிகரிக்க நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது, இதனால் கடனை நீங்கள் விரைவாக திருப்பிச் செலுத்துவீர்கள்.\nஇந்த விருப்பத்துடன் நீங்கள் 30 ஆண்டுகள் வரை நீண்ட காலம் திருப்பிச் செலுத்துவீர்கள். இது ஒரு மேம்பட்ட கடன் தொகை தகுதி மற்றும் சிறிய EMI ஐ குறிக்கிறது.\nவீட்டு கடனுக்காக பரிந்துரைக்கப்பட்ட கட்டுரைகள்\nஆன்லைனில் வீட்டுக் கடன் விண்ணப்பிப்பது எப்படி\nபெண்களுக்கான வீட்டுக் கடன் நன்மைகள்\nஒரு வீட்டுக் கடனைப் பெறுவதற்கு முன்னர் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 10 விஷயங்கள்\nமுன்-ஒப்புதலளிக்கப்பட்ட வீட்டுக் கடன்களின் அடிப்படைகள்\nHDFC | சுதந்திரத்தை பெறுங்கள்\nதனிப்பயனாக்கப்பட்ட திருப்பிச் செலுத்தும் திட்டங்கள்\nவீட்டுக் கடனுக்கு ஆன்லைனில் எவ்வாறு விண்ணப்பிப்பது\nஉங்கள் வீட்டுக் கடன் கணக்கிற்கு ஆன்லைன் அணுகல்\nஉங்கள் கடனைப் பற்றிய அனைத்து விவரங்களையும் தெரிந்து கொண்டு மன அமைதியைப் பெறுங்கள்\nஎனது மாதாந்திர திருப்பிச் செலுத்துதல் எவ்வளவாக இருக்கும்\nநான் எவ்வளவு கடனைப் பெற முடியும்\nஎன்னால் அதிகபட்சமாக வாங்கக்கூடிய விலை என்ன\nவீட்டு கடன்: வீட்டு கடன் EMI கணக்கீடு -எச் டி எஃப் சி வீட்டு கடன்கள்\nஎச் டி எஃப் சி-யின் வீட்டுக் கடன் கால்குலேட்டர் உங்கள் வீட்டுக் கடன் EMI-ஐ எளிதாக கணக்கிட உதவுகிறது. வீட்டுக் கடனுக்கான ���ச் டி எஃப் சி-யின் EMI கால்குலேட்டர் ஒரு புதிய வீடு வாங்குவது பற்றிய சரியான முடிவை எடுக்க உதவுகிறது. உங்கள் வீட்டுக் கடன் தொடர்பான பணம்செலுத்தலுக்கு திட்டமிடுவதற்கு EMI கால்குலேட்டர் உதவுகிறது. எச் டி எஃப் சி ஒரு லட்சத்திற்கு ₹649 முதல் EMI-கள் மற்றும் ஆண்டுக்கு 6.75%* முதல் வட்டி விகிதங்கள் மற்றும் வசதியான திருப்பிச் செலுத்தும் விருப்பங்கள் மற்றும் டாப்-அப் கடன் போன்ற கூடுதல் சிறப்பம்சங்களுடன் வீட்டுக் கடன்களை வழங்குகிறது. குறைந்த வட்டி விகிதம் மற்றும் நீண்ட திருப்பிச் செலுத்தும் தவணைக் காலத்துடன், எச் டி எஃப் சி உங்களுக்கு வசதியான வீட்டுக் கடன் EMI-ஐ உறுதி செய்கிறது. எங்கள் நியாயமான EMI-கள் மூலம் எச் டி எஃப் சி வீட்டு கடன் சுமை உங்களுக்கு குறைவானதாக இருக்கும். எளிதாக புரிந்துகொள்ளும் எங்கள் வீட்டுக் கடன் EMI கால்குலேட்டர் மூலம் உங்கள் வீட்டுக் கடனுக்கு நீங்கள் செலுத்த வேண்டிய EMI-ஐ கணக்கிடுங்கள்.\nவீட்டுக் கடன் EMI-யை கணக்கிடுங்கள்\nவட்டி விகிதம் (% ஆண்டுக்கு)\nமாதாந்திர வீட்டுக் கடன் EMI\n₹ 19,009 விரிவான மதிப்பீடு பார்\nசெலுத்த வேண்டிய மொத்த தொகை ₹ 45,62,183 விரிவான மதிப்பீடு பார்\nஇப்போது விண்ணப்பியுங்கள் உங்களை தொடர்பு கொள்கிறோம்\nவீட்டு கடன் கடனளிப்பு அட்டவணை\nநான் எவ்வளவு கடன் வாங்க முடியும்\nஎன்னால் அதிகபட்சமாக வாங்கக்கூடிய விலை என்ன\nவீட்டுக் கடன் தகுதி உங்கள் மாதாந்திர வருமானம், தற்போதைய வயது, கிரெடிட் ஸ்கோர், நிலையான மாதாந்திர நிதி கடமைகள், கடன் வரலாறு, ஓய்வூதிய வயது போன்ற காரணிகளை பொறுத்தது. எச் டி எஃப் சி வீட்டுக் கடன் தகுதி கால்குலேட்டரைப் பயன்படுத்தி உங்கள் கடன் பற்றிய அனைத்து விவரங்களையும் அறிந்து மன அமைதியைப் பெறுங்கள்\nவீட்டுக் கடன் தகுதியை கணக்கிடுங்கள்\nமொத்த வருமானம் (மாதம் ஒன்றுக்கு) ₹.\nவட்டி விகிதம் (% ஆண்டுக்கு)\nமற்ற EMI-கள் (மாதம் ஒன்றுக்கு) ₹.\nஉங்கள் வீட்டுக்கடன் தகுதி வரம்பு\nகூடுதல் நிதி / உதவி தேவையா\nஉங்கள் வீட்டுக் கடன் EMI\nஇப்போது விண்ணப்பியுங்கள் உங்களை தொடர்பு கொள்கிறோம்\nஎனது மாதாந்திர திருப்பிச் செலுத்தும் தொகை\nஎன்னால் அதிகபட்சமாக வாங்கக்கூடிய விலை என்ன\nஉங்கள் கடனைப் பற்றிய அனைத்து விவரங்களையும் தெரிந்து கொண்டு மன அமைதியைப் பெறுங்கள்\nமொத்த வருமானம் (மாதம் ஒன்றுக்கு) ₹.\n���ட்டி விகிதம் (% ஆண்டுக்கு)\nமற்ற EMI-கள் (மாதம் ஒன்றுக்கு) ₹.\nஉங்கள் அதிகபட்ச கடன் தொகை தகுதி\nகூடுதல் நிதி / உதவி தேவையா\nஆன்லைனில் விண்ணப்பிக்க உங்களை தொடர்பு கொள்கிறோம்\nஎனது மாதாந்திர திருப்பிச் செலுத்தும் தொகை\nநான் எவ்வளவு கடன் வாங்க முடியும்\nவட்டி விகிதம் (% ஆண்டுக்கு)\nஎச் டி எஃப் சி வீட்டுக் கடன்\nவட்டி விகிதம் (% ஆண்டுக்கு)\nபண செலவில் மொத்த சேமிப்பு\nஆன்லைனில் விண்ணப்பிக்க உங்களை தொடர்பு கொள்கிறோம்\nஎனது மாதாந்திர திருப்பிச் செலுத்தும் தொகை\nஎன்னால் அதிகபட்சமாக வாங்கக்கூடிய விலை என்ன\nவீட்டு வசதி கடன்பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nவீட்டுக் கடன் என்றால் என்ன மற்றும் அது எவ்வாறு வேலை செய்கிறது\nவீட்டுக் கடன்கள் கட்டுமானத்தில் இருக்கும் ஒரு வீட்டை வாங்குவதற்காகவோ அல்லது டெவலப்பரிடம் இருந்து ஒரு கட்டிய வீட்டை வாங்கவோ வழங்கப்படுகின்றன, மேலும் ஒரு மறுவிற்பனை செய்யப்பட்ட சொத்தை வாங்குதல், நிலத்தில் வீடு கட்டுதல், ஏற்கனவே இருக்கும் வீட்டை விரிவுப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல் மற்றும் ஒரு நிதி நிறுவனத்திலிருந்து உங்கள் தற்போதைய வீட்டுக் கடனை எச் டி எஃப் சி-க்கு மாற்றுதல் ஆகிய காரணங்களுக்காகவும் வீட்டுக் கடன்கள் வழங்கப்படுகின்றன.\nஎச் டி எஃப் சி வீட்டுக் கடனானது ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதி, விரைவான கடன் செயலாக்கம், கவர்ச்சிகரமான வட்டி விகிதங்கள், தனிப்பயனாக்கப்பட்ட திருப்பிச் செலுத்தும் விருப்பங்கள் மற்றும் எளிய மற்றும் தொந்தரவு இல்லாத ஆவணங்கள் போன்ற பல நன்மைகளை வழங்குகிறது.\nஎச் டி எஃப் சி வீட்டுக் கடனை ஆன்லைனில் 4 விரைவான மற்றும் எளிதான படிகளில் பெறலாம்:\nவீட்டுக் கடனுக்கு நான் எவ்வாறு விண்ணப்பிப்பது\nநீங்கள் இப்போது ஆன்லைனில் வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்கலாம். இப்போது விண்ணப்பிக்க https://portal.hdfc.com/ ஐ அணுகவும்\nஎனது தகுதிக்கான வீட்டுக் கடன் தொகையை எச் டி எஃப் சி எவ்வாறு தீர்மானிக்கும்\nஉங்களின் வருமானம் மற்றும் திருப்பிச் செலுத்தும் திறன் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு உங்கள் வீட்டுக் கடன் தகுதி ஐ நாங்கள் தீர்மானிப்போம். உங்கள் வயது, தகுதி, உங்களைச் சார்ந்திருப்போர் எண்ணிக்கை, உங்கள் மனைவியின் வருமானம் (ஏதேனும் இருந்தால்), சொத்துகள் மற்றும் பொறுப்புகள், சேமிப்பு வரலாறு மற்றும் வேலையின் நிலைத்தன்மை & தொடர்ச்சி ஆகிய முக்கிய காரணிகளும் உள்ளடங்கும்.\nஎப்போது நான் வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்கலாம்\nநீங்கள் வெளிநாட்டில் பணிபுரிந்தாலும், எதிர்காலத்தில் இந்தியா திரும்புவதற்கு திட்டம் வைத்திருந்தாலும் வீட்டுக்கடன் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம். நீங்கள் சொத்தை தேர்வு செய்யாதபோதிலும் அல்லது கட்டுமானம் தொடங்காத நிலையிலும், நீங்கள் ஒரு கொள்முதலை செய்வதற்கு தீர்மானம் எடுத்தோ அல்லது ஒரு வீட்டை கட்டுவதற்கு தீர்மானம் எடுத்து எந்த நேரத்திலும் விண்ணப்பிக்கலாம்.\nஎனது வீட்டுக் கடன் EMI-கள் எப்போது தொடங்குகின்றன\nகடன் வழங்கப்பட்ட மாதத்திற்கு அடுத்து வரும் மாதத்திலிருந்து EMI தொடங்குகிறது. கட்டுமானத்திற்கு உட்பட்ட சொத்துக்களுக்கான கடன்களுக்காக EMI வழக்கமாக முழுமையான வீட்டுக் கடன் வழங்கப்பட்ட பிறகு தொடங்குகிறது, ஆனால் வாடிக்கையாளர்கள் தங்கள் முதல் பணப் பட்டுவாடாவை பெற்றவுடன் தங்கள் EMI-களை தொடங்கலாம் மற்றும் அடுத்தடுத்த ஒவ்வொரு பணப் பட்டுவாடாவும் விகிதாச்சாரத்தில் அதிகரிக்கும். மறுவிற்பனை நிகழ்வுகளுக்கு, மொத்த கடன் தொகையும் ஒரே நேரத்தில் வழங்கப்படுவதால், தொகை வழங்கப்பட்ட மாதத்திற்கு அடுத்து வரும் மாதத்திலிருந்து மொத்த கடன் தொகைக்கான EMI தொடங்கும்\nநான் பெறக்கூடிய அதிகபட்ச வீட்டுக் கடன் என்ன\nநீங்கள் மொத்த சொத்து செலவில் 10-25% கடன் தொகையைப் பொறுத்து ‘சொந்த பங்களிப்பாக செலுத்த வேண்டும். சொத்தின் செலவில் 75 முதல் 90% வரை வீட்டுக் கடனாக பெற முடியும். கட்டுமானம், வீட்டு மேம்பாடு மற்றும் வீட்டு விரிவாக்க கடன்கள் என்றால், கட்டுமானம்/மேம்பாடு/விரிவாக்க மதிப்பீட்டில் 75 முதல் 90% வரை நிதியளிக்கப்பட முடியும்.\nவீட்டுக்கடன் சலுகைகளின் வெவ்வேறு வகைகள் என்ன \nஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனங்கள் மூலம் வழங்கப்படும் வீட்டுக்கடன்களின் வகைகள் பின்வருமாறு: வீட்டுக்கடன்கள்: இந்த கடன்கள் இதற்காக பெறப்பட்டுள்ளன:\n1. அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களில் தனியார் டெவலப்பர்களிடமிருந்து ஒரு ஃப்ளாட், ரோ ஹவுஸ், பங்களா வாங்குதல்;\n2.DDA, MHADA மற்றும் நடப்பு கோ-ஆபரேட்டிவ் ஹவுசிங் சொசைட்டிகள், அபார்ட்மென்ட் ஓனர்ஸ் அசோசியேஷன் அல்லது டெவலப்மென்ட் அதாரிட்டீஸ் செட்டில்மென்ட்கள் அல்��து தனியார் மூலம் கட்டப்பட்ட வீடுகள் போன்ற டெவலப்மென்ட் அதாரிட்டீஸ்-யில் இருந்து சொத்துக்களை வாங்குவதற்கான வீட்டுக் கடன்கள்;\n3.ஒரு சொந்த இடம் / வாடகை குத்தகைத் திட்டத்தில் அல்லது ஒரு அபிவிருத்தி அதிகார சபை மூலம் ஒதுக்கப்பட்ட ஒரு திட்டத்தில் கட்டுமான கடன்கள் வழங்கப்படும்\nபிளாட் வாங்குவதற்கான கடன்: பிளாட் வாங்குவதற்கான கடன் என்பது டைரக்ட் அலாட்மென்ட் அல்லது ஒரு செகண்ட் சேல் பரிவர்த்தனை மூலம் பிளாட்களை வாங்குவதற்கான கடனாகும் மேலும் மற்ற வங்கி /நிதி நிறுவனம் மூலம் பெறப்பட்ட பிளாட் வாங்குதல் கடனை இதன் மூலம் மாற்றிக் கொள்ளலாம்.\nபேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் கடன்: நீங்கள் மற்ற வங்கி / நிதி நிறுவனத்தில் இருந்து பெற்ற உங்கள் நடப்பு வீட்டுக்கடனை எச் டி எஃப் சி-க்கு மாற்றுவதாகும் .\nவீட்டு சீரமைப்பு கடன்கள்: இது டைலிங், ஃப்ளோரிங், உள்புற / வெளிப்புற பிளாஸ்டர் மற்றும் பெயிண்டிங் போன்ற பல வழிகளில் உங்கள் வீட்டை புதுப்பிப்பதற்கான கடனாகும் (கட்டமைப்பு/கார்பெட் பகுதியை மாற்றாமல்).\nவீட்டு விரிவாக்க கடன்: உங்கள் வீட்டை விரிவாக்கம் செய்திட அதாவது கூடுதலான தளம் மற்றும் அறைகளை சேர்க்க பெறப்படும் கடனாகும்.\nடாப் அப் கடன்கள்: திருமணம், குழந்தையின் கல்வி, தொழில் விரிவாக்கம், கடன் ஒருங்கிணைப்பு முதலியன போன்ற தனிநபர் மற்றும் தொழில் ரீதியான தேவைகளுக்காக (ஊக நோக்கங்கள் தவிற) பெறக்கூடிய கடன்கள் ஆகும்.\nசொத்து மீதான கடன் (எல்ஏபி): இது திருமணம், மருத்துவச் செலவுகள் மற்றும் குழந்தைகளின் கல்வி போன்ற தனிபட்ட மற்றும் தொழில் தேவைகளுக்காக (யூக அடிப்படையிலான வணிகத்தை தவிர): முழுமையாக கட்டப்பட்ட, ஃப்ரீஹோல்டு குடியிருப்பு மற்றும் வணிக சொத்துகள் மீது பெறப்படும் கடனாகும். மேலும் மற்ற வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிலிருந்து நடப்பில் உள்ள சொத்து மீதான கடன்களை (எல்ஏபி) எச் டி எஃப் சி-க்கு பரிமாற்றம் செய்யலாம்.\nவீட்டுக்கடனின் பகுதியளவு/அடுத்தடுத்த பட்டுவாடா என்றால் என்ன\nஎச் டி எஃப் சி கட்டுமானத்தின்கீழ் உள்ள சொத்துக்களுக்கு அதன் கட்டுமான நிலையின் அடிப்படையில் தவணை முறையில் கடன்களை பட்டுவாடா செய்கிறது. பட்டுவாடா செய்யப்பட்ட ஒவ்வொரு தவணையும் 'பகுதி' அல்லது ஒரு 'அடுத்தடுத்த' பட்டுவாடா எனப்படும்.\nHDFC வீட்டுக்கடனின�� வட்டி விகிதம் பெண்களுக்காக மாறுபடுமா \nஆம் பெண்களுக்கு மற்றவர்களைவிட வீட்டுக்கடன் வட்டி விகிதங்கள் குறைவு. அவர்கள் உரிமையாளராகவோ / துணை உரிமையாளராகவோ இருந்து வீட்டுக்கடனைப் பெற விண்ணப்பதாரர் / துணை விண்ணப்பதாரராக இருந்து மற்றவர்களுக்கு பொருந்தக்கூடியதைவிட குறைவான வீட்டுக்கடன் வட்டி விகிதத்தை பெறலாம்.\nநான் எந்த சொத்தை வாங்க வேண்டும் என தீர்மானிக்கும் போதே வீட்டுக்கடனை பெற முடியுமா \nநீங்கள் முன் ஒப்புதலளிக்கப்பட்ட ஒரு வீட்டுக் கடனுக்காக விண்ணப்பிக்கலாம் அது உங்கள் வருமானம், கடன்தகுதி மற்றும் நிதி நிலையின் அடிப்படையில் கடனுக்காக ஒப்புதலளிக்கப்பட்ட அசல் தொகையாகும். பொதுவாக சொத்து தேர்வு செய்த பின்னர் பெறப்பட்ட முன்-ஒப்புதலளிக்கப்பட்ட கடன்கள் ஆனது கடன் ஒப்புதல் வழங்கப்பட்ட தேதியில் இருந்து மாதங்களுக்கு செல்லுபடியாகும்.\nஎவ்வாறு நான் ஒரு வீட்டுக் கடனை திருப்பிச் செலுத்துவது\nஉங்கள் வசதிக்கேற்ப, வீட்டுக் கடனை திருப்பிச் செலுத்துவதற்குப் பல்வேறு வகையான முறைகளை எச் டி எஃப் சி வழங்குகிறது. ECS (எலக்ட்ரானிக் கிளியரிங் சிஸ்டம்) மூலம் தவணைகளை செலுத்த உங்கள் வங்கியிடம் நீங்கள் ஸ்டாண்டிங் இன்ஸ்ட்ரக்ஷனை வழங்கலாம், உங்கள் சம்பள கணக்கிலிருந்து மாதந்தோறும் தவணைகளை நேரடியாக செலுத்தலாம் அல்லது உங்கள் சம்பள கணக்கிலிருந்து பிந்தைய தேதியிட்ட காசோலைகள் மூலமாகவும் தவணைகளைச் செலுத்தலாம்.\nஎச் டி எஃப் சி வீட்டு கடன் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nகடனின் பாதுகாப்பு என்பது பொதுவாக நிதியுதவி அளிக்கப்படும் சொத்து மீதான பாதுகாப்பு வட்டி மற்றும் / அல்லது எச் டி எஃப் சி கேட்கும் வேறு ஏதேனும் பிணையம் / இடைக்கால பாதுகாப்பைக் குறிப்பிடுகிறது.\nமேலே உள்ள அனைத்து தகவல்களும் விழிப்புணர்வு மற்றும் வாடிக்கையாளர் வசதிக்காக உள்ளது மற்றும் எச் டி எஃப் சி -இன் தயாரிப்புகள் மற்றும் சேவைகளைப் பற்றிய ஒரு குறிப்பான வழிகாட்டியாக மட்டுமே செயல்படுகின்றன. எச் டி எஃப் சி யின் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் குறித்த விரிவான தகவல்களுக்கு தயவுசெய்து அருகில் இருக்கும் எச் டி எஃப் சி கிளையை தொடர்பு கொள்ளுங்கள்.\nஉங்கள் கடன் தொடர்பான மிக முக்கியமான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு இங்கே கிளிக் செய���யுங்கள்.\nவீட்டு வசதி கடனின் முக்கிய நன்மைகள் மற்றும் அம்சங்கள்\nஎச் டி எஃப் சி, ஒரு வீடு தங்கும் இடம் மட்டும் அல்ல அதை விட அதிகமானது என்பதை புரிந்து கொள்கிறது. உங்களுடைய விருப்பங்கள் மற்றும் தேவைகளின் படி இது உலகின் சிறு மூலை. நீங்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்கு வாழ்க்கை என்ற பயணத்தை அனுபவிக்கும் இடமாக இது உள்ளது. நீங்கள் நம்பிக்கைச் சேகரிக்கவும், உங்கள் கனவுகளை அடைய, உங்கள் சொந்த இடங்களில் நினைவுகள் உருவாக்க எச் டி எஃப் சி வீட்டுக் கடனுடன் 'வீடு' போன்ற இடம் ஏதும் இல்லை.\nஒரு பிளாட், வரிசை வீடு, தனியார் டெவலப்பர்களிடமிருந்து அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களில் இருந்து பங்களா வாங்குவதற்கான கடன்கள்\nஒரு சொந்த இடம் / வாடகை குத்தகைத் திட்டத்தில் அல்லது ஒரு அபிவிருத்தி அதிகார சபை மூலம் ஒதுக்கப்பட்ட ஒரு திட்டத்தில் கட்டுமான கடன்கள் வழங்கப்படும்.\nபுதுமையான வீட்டு கடன் திட்டங்கள்\nவீட்டுக்கடன் தொடர்பாக உங்கள் வீட்டிற்கே வந்து உதவி புரிதல்\nநீங்கள் சரியான வீடு வாங்க முடிவு எடுப்பதற்கு சட்ட நிபுணர் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்கப்படும்\nDDA, MHDA போன்ற மேம்பாட்டு அமைப்புகளுடன் சொத்துக்களை வாங்குவதற்கான கடன்கள்\nஏற்கனவே உள்ள கூட்டுறவு வீட்டு வசதி சங்கம் அல்லது அபார்ட்மென்ட் உரிமையாளர்களின் சங்கம் அல்லது மேம்பாட்டு ஆணையம் குடியேற்றங்கள் அல்லது தனிப்பட்ட வீடுகள் வாங்குவதற்கான வீட்டுக் கடன்கள் வழங்கப்படும்\nகவர்ச்சிகரமான வீட்டுக் கடன் வட்டி விகிதங்கள் உங்கள் வீட்டுக் கடனை மலிவானதாகவும் எளிதாகவும் மாற்றுகிறது\nஇந்தியாவில் எந்த இடத்திலும் கடன் சேவையை பெறுவதற்கான ஒருங்கிணைக்கப்பட்ட கிளைகள்\nவீட்டுக் கடன் வட்டி விகிதம்\nசிறப்பு வீட்டுக் கடன் விகிதங்கள்\nசரிசெய்யக்கூடிய விகித வீட்டுக் கடன்கள்\nபிரதான சில்லறை கடன் விகிதம்: 16.05%\nவீட்டுக் கடன் வட்டி விகிதம் (% ஆண்டுக்கு)\nபெண்கள் என்றால் * (30 லட்சம் வரை) 6.75 இருந்து 7.25 வரை\nமற்றவர்களுக்கு * (30 லட்சம் வரை) 6.80 இருந்து 7.30 வரை\nபெண்கள் என்றால் * (30.01 லட்சம் முதல் 75 லட்சம் வரை) 7.00 இருந்து 7.50 வரை\nமற்றவர்களுக்கு* (30.01 லட்சம் முதல் 75 லட்சம் வரை) 7.05 இருந்து 7.55 வரை\nபெண்கள் என்றால்* (75.01 லட்சம் & அதற்கு மேல்) 7.10 இருந்து 7.60 வரை\nமற்றவர்களுக்கு* (75.01 லட்சம் & அதற்கு மேல்) 7.15 இருந��து 7.65 வரை\nவிதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் படிக்க,இங்கே கிளிக் செய்யவும்\nசரிசெய்யக்கூடிய விகித வீட்டுக் கடன்கள்\nபிரதான சில்லறை கடன் விகிதம்: 16.05%\nவீட்டுக் கடன் வட்டி விகிதம் (% ஆண்டுக்கு)\nபெண்கள் என்றால் * (30 லட்சம் வரை) 6.95 இருந்து 7.45 வரை\nமற்றவர்களுக்கு * (30 லட்சம் வரை) 7.00 இருந்து 7.50 வரை\nபெண்கள் என்றால் * (30.01 லட்சம் முதல் 75 லட்சம் வரை) 7.20 இருந்து 7.70 வரை\nமற்றவர்களுக்கு* (30.01 லட்சம் முதல் 75 லட்சம் வரை) 7.25 இருந்து 7.75 வரை\nபெண்கள் என்றால் * (75.01 லட்சம் & அதற்கு மேல்) 7.30 இருந்து 7.80 வரை\nமற்றவர்களுக்கு* (75.01 லட்சம் & அதற்கு மேல்) 7.35 இருந்து 7.85 வரை\n*மேலே உள்ள வீட்டுக் கடன் வட்டி விகிதங்கள்/ EMI ஹவுசிங் டெவலப்மெண்ட் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட்(எச் டி எஃப் சி)-யின் சரிசெய்யக்கூடிய விகித வீட்டுக் கடன் திட்டத்தின் கீழ் பொருந்தும் மற்றும் வழங்கல் நேரத்தில் மாற்றத்திற்கு உட்பட்டவை. மேலே உள்ள வீட்டுக் கடன் வட்டி விகிதங்கள் எச் டி எஃப் சி-யின் பெஞ்ச் மார்க் ரேட் (\"RPLR\") உடன் இணைக்கப்பட்டுள்ளன மற்றும் கடன் தவணைக்காலம் முழுவதற்கும் மாறுபடும். அனைத்து கடன்களும் எச் டி எஃப் சி லிமிடெட்-யின் தனிப்பட்ட விருப்பத்தின்கீழ் உள்ளன. கடன் ஸ்லாப்கள் மற்றும் வட்டி விகிதங்கள் தொடர்பான மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nட்ரூஃபிக்ஸ்டு கடன் – 2 ஆண்டு நிலையான விகித வகை\nபிரதான சில்லறை கடன் விகிதம்: 16.05%\nவீட்டுக் கடன் வட்டி விகிதம் (% ஆண்டுக்கு)\nபெண்கள் என்றால் * (30 லட்சம் வரை) 7.40 இருந்து 7.90 வரை\nமற்றவர்களுக்கு * (30 லட்சம் வரை) 7.45 இருந்து 7.95 வரை\nபெண்கள் என்றால் * (30.01 லட்சம் முதல் 75 லட்சம் வரை) 7.55 இருந்து 8.05 வரை\nமற்றவர்களுக்கு* (30.01 லட்சம் முதல் 75 லட்சம் வரை) 7.60 இருந்து 8.10 வரை\nபெண்கள் என்றால் * (75.01 லட்சம் & அதற்கு மேல்) 7.65 இருந்து 8.15 வரை\nமற்றவர்களுக்கு* (75.01 லட்சம் & அதற்கு மேல்) 7.70 இருந்து 8.20 வரை\nவிதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் படிக்க,இங்கே கிளிக் செய்யவும்\nநிபுணர் அல்லாது சுய தொழில் செய்பவர்களுக்கு\nசிறப்பு வீட்டுக் கடன் விகிதங்கள்\nசரிசெய்யக்கூடிய விகித வீட்டுக் கடன்கள்\nபிரதான சில்லறை கடன் விகிதம்: 16.05%\nவீட்டுக் கடன் வட்டி விகிதம் (% ஆண்டுக்கு)\nபெண்கள் என்றால் * (30 லட்சம் வரை) 6.90 இருந்து 7.40 வரை\nமற்றவர்களுக்கு * (30 லட்சம் வரை) 6.95 இருந்து 7.45 வரை\nபெண்கள் என்றால் * (30.01 லட்சம் முதல் 75 லட்சம் வரை) 7.15 இருந்து 7.65 வரை\nமற்றவர்களுக்கு* (30.01 லட்சம் முதல் 75 லட்சம் வரை) 7.20 இருந்து 7.70 வரை\nபெண்கள் என்றால்* (75.01 லட்சம் & அதற்கு மேல்) 7.25 இருந்து 7.75 வரை\nமற்றவர்களுக்கு* (75.01 லட்சம் & அதற்கு மேல்) 7.30 இருந்து 7.80 வரை\nவிதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் படிக்க,இங்கே கிளிக் செய்யவும்\nசரிசெய்யக்கூடிய விகித வீட்டுக் கடன்கள்\nபிரதான சில்லறை கடன் விகிதம்: 16.05%\nவட்டி விகிதங்கள் (% ஆண்டிற்கு)\nபெண்கள் என்றால் * (30 லட்சம் வரை) 7.10 இருந்து 7.60 வரை\nமற்றவர்களுக்கு * (30 லட்சம் வரை) 7.15 இருந்து 7.65 வரை\nபெண்கள் என்றால் * (30.01 லட்சம் முதல் 75 லட்சம் வரை) 7.35 இருந்து 7.85 வரை\nமற்றவர்களுக்கு* (30.01 லட்சம் முதல் 75 லட்சம் வரை) 7.40 இருந்து 7.90 வரை\nபெண்கள் என்றால் * (75.01 லட்சம் & அதற்கு மேல்) 7.45 இருந்து 7.95 வரை\nமற்றவர்களுக்கு* (75.01 லட்சம் & அதற்கு மேல்) 7.50 இருந்து 8.00 வரை\n*மேலே உள்ள வீட்டுக் கடன் வட்டி விகிதங்கள்/ EMI ஹவுசிங் டெவலப்மெண்ட் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட்(எச் டி எஃப் சி)-யின் சரிசெய்யக்கூடிய விகித வீட்டுக் கடன் திட்டத்தின் கீழ் பொருந்தும் மற்றும் வழங்கல் நேரத்தில் மாற்றத்திற்கு உட்பட்டவை. மேலே உள்ள வீட்டுக் கடன் வட்டி விகிதங்கள் எச் டி எஃப் சி-யின் பெஞ்ச் மார்க் ரேட் (\"RPLR\") உடன் இணைக்கப்பட்டுள்ளன மற்றும் கடன் தவணைக்காலம் முழுவதற்கும் மாறுபடும். அனைத்து கடன்களும் எச் டி எஃப் சி லிமிடெட்-யின் தனிப்பட்ட விருப்பத்தின்கீழ் உள்ளன. கடன் ஸ்லாப்கள் மற்றும் வட்டி விகிதங்கள் தொடர்பான மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nட்ரூஃபிக்ஸ்டு கடன் – 2 ஆண்டு நிலையான விகித வகை\nபிரதான சில்லறை கடன் விகிதம்: 16.05%\nவட்டி விகிதங்கள் (% ஆண்டிற்கு)\nபெண்கள் என்றால் * (30 லட்சம் வரை) 7.55 இருந்து 8.05 வரை\nமற்றவர்களுக்கு * (30 லட்சம் வரை) 7.60 இருந்து 8.10 வரை\nபெண்கள் என்றால் * (30.01 லட்சம் முதல் 75 லட்சம் வரை) 7.70 இருந்து 8.20 வரை\nமற்றவர்களுக்கு* (30.01 லட்சம் முதல் 75 லட்சம் வரை) 7.75 இருந்து 8.25 வரை\nபெண்கள் என்றால் * (75.01 லட்சம் & அதற்கு மேல்) 7.80 இருந்து 8.30 வரை\nமற்றவர்களுக்கு* (75.01 லட்சம் & அதற்கு மேல்) 7.85 இருந்து 8.35 வரை\nவிதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் படிக்க,இங்கே கிளிக் செய்யவும்\nவீட்டுக் கடனுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்\nவீட்டுக் கடனுக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது என்பதற்கான படிப்படியான செயல்முறை\nவழிமுறை 1: ஆன்ல��ன் வீட்டுக் கடன் வழங்குநரின் இணையதளத்தை அணுகவும் – https://www.hdfc.com\nவழிமுறை 2: 'வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்கவும்' மீது கிளிக் செய்யவும்’\nவழிமுறை 3: நீங்கள் தகுதியுள்ள கடன் தொகையை கண்டறிய, 'தகுதியை சரிபார்க்கவும்' என்பதை கிளிக் செய்யவும்’.\nவழிமுறை 4: 'அடிப்படை தகவல்' டேபின் கீழ், நீங்கள் தேடும் கடன் வகையை தேர்ந்தெடுக்கவும் (வீட்டு கடன், வீட்டு மேம்பாட்டு கடன், மனை கடன்கள் போன்றவை). மேலும் தகவலுக்கு கடன் வகையை தவிர நீங்கள் இணைப்பை கிளிக் செய்யலாம்.\nவழிமுறை 5: நீங்கள் ஒரு சொத்தை தேர்ந்தெடுத்திருந்தால், அடுத்த கேள்வியில் 'ஆம்' என்பதை கிளிக் செய்து சொத்து விவரங்களை (மாநிலம், நகரம் மற்றும் சொத்தின் மதிப்பீட்டு செலவு) வழங்கவும்; நீங்கள் இன்னும் சொத்து குறித்து முடிவு செய்யவில்லை என்றால், 'இல்லை' என்பதை தேர்ந்தெடுக்கவும்.’. விண்ணப்பதாரரின் பெயரில் உங்கள் பெயரை நிரப்பவும்’. நீங்கள் உங்கள் கடன் விண்ணப்பத்திற்கு துணை-விண்ணப்பதாரரை சேர்க்க விரும்பினால், துணை-விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கையை தேர்ந்தெடுக்கவும் (நீங்கள் அதிகபட்சமாக 8 துணை-விண்ணப்பதாரர்களை கொண்டிருக்கலாம்).\nவழிமுறை 6: ‘விண்ணப்பதாரர்கள்' டேபின் கீழ், உங்கள் குடியிருப்பு நிலையை (இந்தியா / NRI) -ஐ தேர்ந்தெடுக்கவும், தற்போது நீங்கள் வசிக்கும் மாநிலம் மற்றும் நகரத்தை வழங்கவும், உங்கள் பாலினம், வயது, தொழில், ஓய்வூதிய வயது, இமெயில் ID மற்றும் மொபைல் எண், ஒட்டுமொத்த / மொத்த மாதாந்திர வருமானம் மற்றும் தற்போதுள்ள அனைத்து நிலுவைக் கடன்களுக்கும் ஒவ்வொரு மாதமும் செலுத்தப்பட்ட EMI.\nவழிமுறை 7: பின்னர் நீங்கள் ‘சலுகைகள்’ டேப்-க்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள், அங்கு நீங்கள் பெறக்கூடிய கடன் தயாரிப்புகள், நீங்கள் பெறக்கூடிய அதிகபட்ச கடன் தொகை, செலுத்த வேண்டிய EMI மற்றும் கடன் தவணைக்காலம், வட்டி விகிதம் மற்றும் வட்டி நிலையானதா அல்லது ஃப்ளோட்டிங் ஆகியவற்றை காண்பீர்கள்.\nவழிமுறை 8: நீங்கள் விண்ணப்பிக்க விரும்பும் கடன் தயாரிப்பை தேர்ந்தெடுக்கவும். நீங்கள் ஏற்கனவே வழங்கிய விவரங்கள் (உங்கள் பெயர், மின்னஞ்சல் ஐடி போன்றவை) முன் நிரப்பப்பட்ட கடன் விண்ணப்ப படிவத்திற்கு நீங்கள் அழைத்துச் செல்லப்படுவீர்கள். மீதமுள்ள விவரங்களை பூர்த்தி செய்யவும் – உங்கள் பிறந்த தேதி மற்றும் கடவுச்சொல் மற்றும் 'சமர்ப்பிக்கவும் மீது கிளிக் செய்யவும்’.\nவழிமுறை 9: அனைத்து ஆவணங்களையும் நீங்கள் பதிவேற்ற வேண்டும்.\nவழிமுறை 10: இப்போது நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் செயல்முறை கட்டணத்தை செலுத்த வேண்டும் மற்றும் உங்கள் ஆன்லைன் கடன் விண்ணப்பம் முடிவடையும்.\nஎச் டி எஃப் சி உடன் வீட்டுக் கடனுக்கு ஏன் விண்ணப்பிக்க வேண்டும்\nஎச் டி எஃப் சி என்பது இந்தியாவின் பிரீமியர் ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனமாகும், இது உங்கள் தேவைகளுக்கு தனிப்பயனாக்கப்பட்ட பரந்த அளவிலான வீட்டுக் கடன் தயாரிப்புகளை வழங்குகிறது மற்றும் ஒரு நீண்ட தவணைக்காலத்தில் வசதியாக திருப்பிச் செலுத்த முடியும். எச் டி எஃப் சி-யின் எண்ட் டு எண்ட் ஆன்லைன் வீட்டுக் கடன் தீர்வுகள், நாடு முழுவதும் ஒருங்கிணைக்கப்பட்ட கிளை நெட்வொர்க் மற்றும் 24X7 ஆன்லைன் உதவி ஆகிய அனைத்தும் உங்கள் வீட்டை சொந்தமாக்குவதற்கான பயணத்தை மறக்கமுடியாத ஒன்றாக அமைக்கும்.\nநீங்கள் வெறும் 4 படிநிலைகளில் எச் டி எஃப் சி-யின் விரைவான மற்றும் எளிதான ஆன்லைன் முறையுடன் இப்போது ஆன்லைன் வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.\nஆன்லைனில் வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்கும் முன் சரிபார்க்க/செய்ய வேண்டிய விஷயங்கள்\nஆன்லைனில் வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்கும் முன்னர் பின்வரும் புள்ளிகளை நினைவில் கொள்ள வேண்டும்\nஉங்கள் வீட்டுக் கடன் விண்ணப்பத்தை தொடங்குவதற்கு முன்னர் உங்கள் கடன் தகுதியை சரிபார்க்கவும்.\nதேவையான ஆவணங்களின் பட்டியலை சரிபாருங்கள் மற்றும் உங்கள் ஆன்லைன் வீட்டுக் கடன் விண்ணப்ப செயல்முறையை தொடங்குவதற்கு முன்னர் அவற்றை தயாராக வைத்திருங்கள்\nஉங்களுக்கு தேவையான வீட்டுக் கடன் வகை பற்றி தெளிவாக இருங்கள் (வீட்டுக் கடன், வீட்டு மேம்பாட்டு கடன், பிளாட் கடன் போன்றவை)\nஉங்கள் வீட்டுக் கடன் விண்ணப்ப செயல்முறையை தொடங்குவதற்கு முன்னர் FAQ-களை படிக்கவும்.\nஉங்கள் விண்ணப்பத்தை செயல்முறைப்படுத்த வீட்டுக் கடன் வழங்குநருக்கு தேவையான அனைத்து விவரங்களையும் நீங்கள் வழங்குவதை உறுதி செய்யுங்கள்.\nஆன்லைனில் வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிப்பது பற்றி ஏதேனும் கேள்விகள் இருந்தால் நீங்கள் ஆன்லைன் சாட் வசதியை பயன்படுத்தலாம்\nவீட்டுக் கடனுக்கு விண்ணப்பிப்பதன் நன்மை��ள்\nநீண்ட கடன் திருப்பிச் செலுத்தும் தவணைக்காலம் - 30 ஆண்டுகள் வரை நீண்ட வீட்டுக் கடன் திருப்பிச் செலுத்தும் தவணைக்காலத்தின் நன்மை\nவீடு வாங்குவதில் GST விகிதங்களில் குறைப்பு - வீடு வாங்குவதில் GST விகிதங்கள் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளன\nகுறைந்த வீட்டுக் கடன் வட்டி விகிதங்கள்- இன்று குறைந்த வட்டி விகிதங்களுடன் வீட்டுக் கடன்கள் மிகவும் மலிவானதாகிவிட்டன\nஎளிதான வீட்டுக் கடன் விண்ணப்ப செயல்முறை- ஆன்லைனில் வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிப்பது மிகவும் எளிதானது மற்றும் வசதியானது\nபல்வேறு விருப்பங்கள்- மலிவான வீடு பிரிவில் வீடு வாங்குபவர்களுக்கு பல விருப்பங்கள் உள்ளன\nவீட்டுக் கடன் பெறுவதற்கான எனது வாய்ப்புகளை நான் எவ்வாறு மேம்படுத்துவது\nஉங்கள் வீட்டுக் கடன் விண்ணப்பத்தின் ஒப்புதல் வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள்\nசரியான நேரத்தில் திருப்பிச் செலுத்துவதற்கான ஒரு நிலையான டிராக் ரெக்கார்டை உருவாக்குவதன் மூலம் உங்கள் கிரெடிட் ஸ்கோரை மேம்படுத்துங்கள், இதனால் நீங்கள் ஒரு உயர் கிரெடிட் ஸ்கோரை அடைவீர்கள், இது உங்கள் வீட்டுக் கடனை பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும்.\nஉங்கள் கிரெடிட் அறிக்கையை ஒரு வருடத்தில் ஒருமுறை அல்லது இரண்டு முறை அவ்வப்போது பெறுங்கள், அதனை ஏதேனும் பிழைகள் உள்ளதா என்பதை சரிபார்த்து தேவைப்படும் போது அவற்றை சரிசெய்யவும்.\nஉங்கள் வீட்டுக் கடன் விண்ணப்பத்தின் ஆவணங்கள் கடன் வழங்குநரின் தேவைக்கேற்ப சரியான வரிசையில் இருப்பதை உறுதிசெய்யவும்.\nஅடிக்கடி வேலை மாற்றங்களை தவிர்க்கவும் ஏனெனில் இது நிலையற்ற தன்மையை வெளிப்படுத்தும்.\nநீங்கள் தேர்ந்தெடுத்த சொத்து, வீட்டுக் கடனுக்காக கருதப்படுமா என்று கடன் வழங்குநருடன் சரிபார்க்கவும். அதே நேரத்தில், ஒரு சுயாதீனமான விரிவான சரிபார்ப்பை செய்யுங்கள்.\nவீட்டுக் கடன் பெறுவதற்கான வாய்ப்புகளை மேம்படுத்த பின்வரும் வழிமுறைகளை நீங்கள் பின்பற்றலாம்\nஆன்லைனில் வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்கும் போது செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை\nஉங்கள் வீட்டுக் கடன் விண்ணப்பத்தை தொடங்குவதற்கு முன்னர் உங்கள் கடன் தகுதியை சரிபார்க்கவும்\nஉங்கள் தகுதியை சரிபார்க்காமல் ஒரு ADHOC கடன் தொகைக்கான விண்ணப்பத்தை தவிர்க்கவும்\nத��வையான ஆவணங்களின் பட்டியலை பாருங்கள் மற்றும் உங்கள் ஆன்லைன் விண்ணப்ப செயல்முறையை தொடங்குவதற்கு முன்னர் அவற்றை தயாராக வைத்திருங்கள்\nஒரே நேரத்தில் கடன் விண்ணப்ப செயல்முறையை நிறைவு செய்வது விரும்பத்தக்கது மற்றும் நிலைகளில் இல்லை.\nஉங்களுக்கு தேவையான கடன் வகை (வீட்டு கடன், வீட்டு மேம்பாட்டு கடன், மனை கடன் போன்றவை) பற்றி தெளிவாக இருங்கள்\nமுக்கியமான ஆவணங்களை சமர்ப்பிப்பதை விட்டு வெளியேற வேண்டாம்.\nஉங்கள் கடன் விண்ணப்ப செயல்முறையை தொடங்குவதற்கு முன்னர் FAQ-களை படிக்கவும்\nஉங்கள் கடன் விண்ணப்பத்தை மேற்கொள்ளும் போது CIBIL ஸ்கோரை புறக்கணிக்காதீர்கள் (உங்கள் கடன் விண்ணப்பத்தின் மீது உங்கள் ஸ்கோர் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது)\nஉங்களிடம் ஏதேனும் கேள்விகள் இருந்தால் நீங்கள் ஆன்லைன் சாட் வசதியை பயன்படுத்தலாம்.\nகடன் வழங்குநர் உங்கள் விண்ணப்பத்தை செயல்முறைப்படுத்த வேண்டிய அனைத்து விவரங்களையும் நீங்கள் வழங்குவதை உறுதிசெய்யவும்.\nநீங்கள் வீட்டுக் கடன்களுக்கு தனிநபராக அல்லது கூட்டாக விண்ணப்பிக்கலாம். சொத்தின் அனைத்து முன்மொழியப்பட்ட உரிமையாளர்களும்\nசுய தொழில் புரியும் வாடிக்கையாளர்களின் வகைகள்\nசுய தொழில் நிபுணர் (SEP)\nநிபுணர் அல்லாத சுய தொழில் புரிபவர் (SNEP)\nஅதிகபட்ச நிதி மற்றும் கடன் செலுத்துதல் காலம் என்ன\n₹30 லட்சம் வரை மற்றும் உட்பட சொத்து செலவில் 90%\n₹30.01 லட்சம் முதல் ₹75 லட்சம் வரை சொத்து செலவில் 80%\n₹75 லட்சத்திற்கு மேல் சொத்து செலவில் 75%\n*எச் டி எஃப் சி மூலம் மதிப்பிடப்பட்ட படி, சொத்துக்களின் சந்தை மதிப்பு மற்றும் வாடிக்கையாளரின் கடன் திருப்பிச் செலுத்தும் திறன் ஆகியவற்றிற்கு உட்பட்டது.\nசரிசெய்யப்படும் விகித வீட்டு கடனின் கீழ் டெலஸ்கோபிக் திருப்பிச் செலுத்தல் விருப்ப தேர்விற்காக கடனை திருப்பிச் செலுத்துவதற்கான அதிகபட்ச காலம் 30 வருடங்கள் வரை வழங்கப்படும். மற்ற அனைத்து வீட்டு கடன் பொருட்களுக்கு, அதிகபட்ச திருப்பிச் செலுத்தும் காலம் 20 ஆண்டுகள் வரை இருக்கும்.\nகடன் தவணைக்காலம் என்பது வாடிக்கையாளரின் சுயவிவரம், கடன் முதிர்ச்சி அடையும் போதுள்ள வாடிக்கையாளரின் வயது, கடன் முதிர்ச்சியின் போது சொத்துக்களின் வயது, குறிப்பிட்ட திருப்பிச் செலுத்தல் திட்டம் ஆகியவற்றை பொறுத்து தேர்வு செய்யப்படலாம் மற்றும் பிற எச் டி எஃப் சி -யின் நடைமுறையிலுள்ள விதிமுறைகளின் அடிப்படையில் மற்ற விதிமுறைகளும் பொருந்தலாம்.\nவீட்டு வசதி கடன் தேவையான ஆவனங்கள் மற்றும் கட்டணம்\nசுய தொழில் புரியும் தனிநபர்களுக்கு\nவீட்டுக் கடன் ஒப்புதலுக்கு, நிறைவு செய்யப்பட்ட மற்றும் கையொப்பமிடப்பட்ட வீட்டுக் கடன் விண்ணப்ப படிவத்துடன் விண்ணப்பதாரர்கள் / துணை-விண்ணப்பதாரர்களுக்கான பின்வரும் ஆவணங்களை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.\nவிண்ணப்பதாரர் அடையாளம் மற்றும் இருப்பிட சான்று ஆகிய இரண்டிற்கும் ஆதாரம்(KYC)\nKYC க்கான கட்டாய தேவை ஆவணங்கள்\nKYC ஆவணங்களின் முழுமையான பட்டியலுக்கு இங்கே கிளிக் செய்யவும்.\nகடந்த 3 மதிப்பீட்டு ஆண்டுகளுக்கான வருமான கணக்கீட்டோடு வருமான வரி தாக்கல் (தனிநபர் மற்றும் வணிக நிறுவனம் இவை இரண்டின் வருமான வரி தாக்கல் மற்றும் இது ஒரு CA-வால் சான்றளிக்கப்பட்டிருக்க வேண்டும்)\nஇணைப்புகள் / அட்டவணை உடன், கடந்த 3 ஆண்டுகளுக்கான இருப்பு நிலை மற்றும் இலாபம் & நட்டம் கணக்கு அறிக்கைகள் (தனிநபர் மற்றும் வணிக நிறுவனம் இவை இரண்டின் இருப்பு நிலை மற்றும் இலாபம் & நட்டம் கணக்கு அறிக்கைகள் மற்றும் இவை ஒரு CA-வால் சான்றளிக்கப்பட்டிருக்க வேண்டும்)\nவணிக நிறுவனத்தின் கடந்த 6 மாதங்களுக்கான நடப்பு A/c அறிக்கைகள் மற்றும் தனிநபர் சேமிப்பு கணக்கு அறிக்கைகள்\nஒதுக்கீட்டு கடிதம் / வாங்குபவர் ஒப்பந்தத்தின் நகல்\nபணம் செலுத்துதல்(கள்) / செய்யப்பட்ட ரசீதுகள்(கள்)\nசொத்து ஆவணங்கள் உட்பட அனைத்து முந்தைய தொடர்புடைய ஆவணங்கள்\nவிற்பனையாளருக்கு செய்யப்பட்ட ஆரம்ப கட்டணம் (கள்) / ரசீது (கள்)\nவிற்பனை ஒப்பந்தத்தின் நகல் (ஏற்கனவே ஏற்கனவே செயல்படுத்தப்பட்டது)\nசொத்து மீது எந்த சிக்கலும் இல்லை என்ற ஆதாரம்\nஉள்ளூர் அமைப்புகளால் அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களின் பிரதி\nஒரு ஆர்க்கிடெக்ட்/சிவில் இன்ஜினியர் இவர்களால் தயாரிக்கப்பட்ட கட்டுமான மதிப்பீடு\nவீட்டுக் கடனுக்கான மற்ற ஆவணங்கள்\nசமீபத்திய படிவம் 26 AS\nவணிக நிறுவனம் எனில் CA/CS சான்றளிப்பு இயக்குநர்கள் மற்றும் பங்குதாரர்கள் மற்றும் அவர்களின் பங்களிப்பு பட்டியல்\nநிறுவனத்தின் பதிவுக்குறிப்பு மற்றும் நடைமுறை விதிகள்\nவணிக நிறுவனம் ஒரு கூட்டாண்மை நிறுவனமாக இருப்பின் கூட்டு ஒப்��ந்தம் வேண்டும்\nநிலுவை தொகை, தவணை, பாதுகாப்பு, நோக்கம், இருப்பு கடன் காலம் ஆகியவை உள்ளிட்ட தனிநபர் மற்றும் வணிக நிறுவனத்தின் தற்போதைய கடன் விவரங்கள் தேவை.\nஅனைத்து விண்ணப்பதாரர்கள் / இணை-விண்ணப்பதாரர்களின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் விண்ணப்பப் படிவத்தில் இணைக்கப்பட்டு மேலே கையொப்பமிட வேண்டும்\n'எச் டி எஃப் சி லிமிடெட்' என்ற பெயரில் செயல்முறை கட்டணம் செலுத்திய காசோலை.’\nஅனைத்து ஆவணங்கள் சுய சான்றளிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். மேலே உள்ள பட்டியல் குறிப்பிடத்தக்கவை மேலும் கூடுதல் ஆவணங்கள் கேட்கப்படலாம்.\nவீட்டு வசதி கடன் செலவுகள் மற்றும் கட்டணம்\nசுய தொழில் புரியும் தனிநபர்களுக்கு\nபெறப்பட்ட கடனின் தன்மையைப் பொறுத்து (*) செலுத்த வேண்டிய வீட்டுக் கடன் கட்டணங்கள் மற்றும் கட்டணங்களின் ஒரு குறிப்பிட்ட பட்டியல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது:\nவீட்டுக் கடன் செயல்முறை கட்டணங்கள்\nகடன் தொகையில் 0.50% வரை அல்லது ₹3,000 எது அதிகமானதோ, மற்றும் பொருந்தும் வரிகள்.\nசுயதொழில் புரியும் தொழில்முறையாளர் அல்லாதவர்களுக்கு:\nகடன் தொகையில் 1.50% வரை அல்லது ₹4,500 எது அதிகமானதோ, மற்றும் பொருந்தும் வரிகள்.\nவழக்கறிஞர்கள்/தொழில்நுட்ப மதிப்பீட்டாளர்களிடம் இருந்து வெளிப்புற யோசனைக்கான கட்டணம் இருந்தால், அது வழங்கப்படும் முறைக்கு பொருந்தும் வகையில் செலுத்தப்படவேண்டும். இத்தகைய கட்டணங்கள் உகந்த வழக்கறிஞர்கள்/தொழில்நுட்ப மதிப்பீட்டாளருக்கு பெறப்பட்ட உதவியின் தன்மையை பொறுத்து நேரடியாக வழங்கப்படும்.\nகடன் நிலுவையில் உள்ள போது, பாலிசி / பாலிசிகளை செயல்பாட்டில் வைத்திருக்க, வாடிக்கையாளர் தவறாமல் உடனுக்குடன் காப்பீட்டு வழங்குநருக்கு நேரடியாக பிரீமியம் தொகை செலுத்தி விட வேண்டும்.\nதாமதம் அடைந்த பணம்செலுத்தல்கள் கணக்கில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது\nவட்டி அல்லது மாத தவணை முறை தாமதமாக செலுத்துதல் வருடம் 24% வரை கூடுதலான வட்டி வாடிக்கையாளர் செலுத்த வேண்டியது இருக்கும்.\nதற்செயலான செலவுகள் மற்றும் செலவினங்களை ஈடு கட்ட, கட்டணங்கள், செலவுகள் மற்றும் பிற பணம் ஆகியவை, வாடிக்கையாளர்களிடமிருந்து செலுத்த வேண்டிய தொகையை திரும்பப் பெறும் வகையில் செலவழிக்க பட்டு இருக்கலாம். இந்தக் கொள்கை நகலை வாடிக்கையாளர் தொடர்புடைய ���ிளைகளில் கேட்டுப் பெற முடியும்.\nசட்டரீதியான / ஒழுங்குமுறை கட்டணங்கள்\nஸ்டாம்ப் கட்டணம் / MOD / MOE / மத்திய பாதுகாப்புப் பத்திரத்தின் இந்தியாவின் பாதுகாப்பு சீர்திருத்த மற்றும் பாதுகாப்பு வட்டி (CERSAI) அல்லது அத்தகைய பிற சட்டரீதியான / ஒழுங்குமுறை அமைப்புகள் மற்றும் பொருந்தக்கூடிய வரி ஆகியவற்றின் பொருந்தக்கூடிய அனைத்து கட்டணங்களையும் வாடிக்கையாளரே முழுமையாக ஏற்க மற்றும் செலுத்த (அல்லது திருப்பி பெற அத்தகைய சூழ்நிலைகளில்) வேண்டும். நீங்கள் அத்தகைய கட்டணங்கள் அனைத்திற்கும் CERSAI வலைத்தளம் www.cersai.org.in ஐ பார்வையிடலாம்\nகாசோலை அவமதிப்பு கட்டணம் ₹200**\nஆவணங்களின் பட்டியல் ₹500 வரை\nஆவணங்களின் நகல் ₹500 வரை\nPDC இடமாற்று ₹200 வரை\nகாசோலை அளித்த பின் ரத்து செய்வதற்கான கட்டணம் ₹200 வரை\n6 மாதங்களுக்கு பின்னர் கடன் மறு மதிப்பீடு ₹2,000 வரை அதனுடன் பொருந்தும் வரிகளுடன்\nகடன் தவணையை அதிகரிக்க / குறைக்க ₹500 வரை மற்றும் பொருந்தும் வரிகள்\nவீட்டுக் கடன் முன்பணமளிப்பு கட்டணங்கள்\na. மாறுபடும் வட்டி விகிதம் பொருந்தக்கூடிய காலத்தில் சரி செய்யத்தக்க விகித கடன்கள் (ARHL) மற்றும் சேர்க்கை விகித வீட்டு கடன் (\"CRHL\")\na) தனிநபர் கடன் பெறுபவர்களுக்கு:\nதனிநபர் கடனாளிகளுக்கு மட்டும் ஒப்புதல் அளிக்கப்பட்ட அனைத்து கடன்களுக்கும், எந்தவொரு ஆதாரம் மூலமும் செய்யப்பட்ட பகுதி அல்லது முழு முன்கூட்டியே செலுத்தல்களுக்கு முன்கூட்டியே செலுத்தல் கட்டணங்கள் விதிக்கப்படமாட்டாது.\nb) தனிநபர் கடன் பெறுபவர்கள் தவிர மற்ற கடன் பெறும் நபர்களுக்கு- கம்பெனி / ஒரே உரிமையாளர் கொண்ட நிறுவனம்/நிறுவனம் அல்லது இணை-விண்ணப்பதாரர்களாக ஒரு HUF உடன் ஒப்புதலளிக்கப்பட்ட கடன்களுக்கு:\ni. முதல் வழங்கல் தேதியில் இருந்து முதல் ஆறு (6) மாதங்களுக்குள் கடன் தொகையானது முன்கூட்டியே செலுத்தப்பட்டால், அவ்வாறு செலுத்தப்படும் தொகைக்கு, முன்கூட்டியே செலுத்தல் கட்டணங்கள் 2 % விகிதத்தில் வசூலிக்கப்படும் மற்றும் அதனுடன் வரிகள் மற்றும் சட்ட ரீதியான வரி கட்டணம் வசூலிக்கப்படும்;\nii. முதல் 6 (6) மாதங்களின் காலாவதி மற்றும் 36 மாதங்கள் வரை, ஒவ்வொரு நிதி ஆண்டிற்கு திறந்த பிரதான கடன், தொகையில் 25% வரை முன்னுரிமை பெறும் விருப்பத்தை, எந்த முன்னுரிமை கட்டணங்கள் இல்லாமல். கடனாளி சொந்த ஆதாரங்களில் இருந்து அத்தகைய முன்முயற்சிகள் செய்யப்பட வேண்டும்.\nஒவ்வொரு நிதி ஆண்டின் வரம்பான 25 % - க்கு மேல் முன்கூட்டியே செலுத்தப்படும் எந்தவொரு தொகைக்கும் அத்தகைய வரம்பிற்கு மீறிய தொகையின் மீது 2% ஆக முன்கூட்டியே செலுத்தல் கட்டணங்கள் சேர்க்கப்படும்.\n36 மாதங்கள் காலாவதிக்கு பிறகு, சொந்த ஆதாரங்கள் மூலம் கடன் முன்கூட்டியே செலுத்தப்பட்டால் அதற்கு முன்கூட்டியே செலுத்தல் கட்டணங்கள் பொருந்தாது. இருந்தாலும், கடன் பெறுபவருக்கு மறு நிதியுதவி அளிப்பதன் மூலம் கடன் தொகை முன்கூட்டியே செலுத்தப்பட்டால் அதற்கு முன்கூட்டியே செலுத்தலுக்கான கட்டணங்களைச் செலுத்த வேண்டும்.\nc) கடனை முன்கூட்டியே செலுத்தும் நேரத்தில் நிதி ஆதாரத்தை உறுதிப்படுத்துவதற்கு எச் டி எஃப் சி சரியானதாக கருதும் இத்தகைய ஆவணங்களை வாடிக்கையாளர் சமர்ப்பிக்க வேண்டும்.\n*இந்த நோக்கத்திற்காக \"சொந்த ஆதாரங்கள்\" என்பது ஒரு வங்கி / HFC/NBFC அல்லது நிதி நிறுவனத்திலிருந்து கடன் பெற்றதை தவிர வேறு எந்தவொரு ஆதாரமும் ஆகும்.\nமேலே குறிப்பிட்டுள்ள முன்கூட்டியே செலுத்தல் கட்டணங்கள் இந்த கடன் ஒப்பந்தத்தை நிறைவேற்றும் நாளின் படி குறிப்பிடப்பட்டுள்ளன, எனினும் அவை எச் டி எஃப் சி -யின் நடைமுறையில் உள்ள கொள்கைகள் மாற்றத்திற்கு உட்பட்டு இருக்கின்றன, அதன்படி அவ்வப்போது மாறுபடும். முன்கூட்டியே செலுத்தல்களின் மீது பொருந்தும் சமீபத்திய கட்டணங்கள் பற்றி www.hdfc.com -ஐ பார்க்குமாறு வாடிக்கையாளர்களிடம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.\nb. நிலையான வட்டி விகிதம் பொருந்தும் காலத்தில் நிலையான விகித கடன்கள் (\"FRHL\") மற்றும் சேர்க்கை விகித வீட்டு கடன் (\"CRHL\")\na) தனிநபர் கடன் பெறுபவர்களுக்கு:\nவழங்கப்படும் அனைத்து கடனுக்காக, முன்னுரிமை கட்டணம் 2% வீதத்தில் விதிக்கப்படும், கூடுதலாக பொருந்தக்கூடிய வரிகள் மற்றும் சட்டரீதியான கட்டணங்கள் மற்றும் இதர கட்டணங்கள், எந்த வங்கி / HFC / NBFC அல்லது நிதி நிறுவனத்திடமிருந்து (அத்தகைய தொகை செலுத்தப்பட்ட நிதி ஆண்டில் ப்ரீபெய்ட் செய்யப்பட்ட அனைத்து தொகையும் அடங்கும்) மற்றும் சொந்த ஆதாரங்களின் மூலம் அல்லாத, அனைத்து பகுதி அல்லது முழுமையான முன் செலுத்தல்களுக்கு பொருந்தும்.\nb) தனிநபர் கடன் பெறுபவர்கள் தவிர மற்ற கடன் பெறும் நபர்களுக்கு- கம்பெனி / ஒரே உரிமையாளர் கொண்ட நிறுவனம்/நிறுவனம் அல்லது இணை-விண்ணப்பதாரர்களாக ஒரு HUF உடன் ஒப்புதலளிக்கப்பட்ட கடன்களுக்கு:\ni. முதல் வழங்கல் தேதியில் இருந்து முதல் ஆறு (6) மாதங்களுக்குள் கடன் தொகையானது முன்கூட்டியே செலுத்தப்பட்டால், அவ்வாறு செலுத்தப்படும் தொகைக்கு, முன்கூட்டியே செலுத்தல் கட்டணங்கள் 2 % விகிதத்தில் வசூலிக்கப்படும் மற்றும் அதனுடன் வரிகள் மற்றும் சட்ட ரீதியான வரி கட்டணம் வசூலிக்கப்படும்;\nII. காலாவதியான முதல் ஆறு (6) மாதங்கள் மீது மற்றும் 36 மாதங்கள் வரை, கடன் பெறுபவர், எந்தவித முன்கூட்டியே செலுத்தல் கட்டணங்கள் இல்லாமல், ஒவ்வொரு ஆண்டும் ஆரம்ப அசல் தொகையின் 25% ஐ முன்கூட்டியே செலுத்துவதற்கான விருப்பத் தேர்வை பெறுவார். இத்தகைய முன்கூட்டியே செலுத்தல்கள் வாடிக்கையாளரின் சொந்த ஆதாரங்கள் மூலம் செய்யப்பட வேண்டும்.\nஒவ்வொரு நிதி ஆண்டின் வரம்பான 25 % - க்கு மேல் முன்கூட்டியே செலுத்தப்படும் எந்தவொரு தொகைக்கும் அத்தகைய வரம்பிற்கு மீறிய தொகையின் மீது 2% ஆக முன்கூட்டியே செலுத்தல் கட்டணங்கள் சேர்க்கப்படும்.\n36 மாதங்கள் காலாவதிக்கு பிறகு, சொந்த ஆதாரங்கள் மூலம் கடன் முன்கூட்டியே செலுத்தப்பட்டால் அதற்கு முன்கூட்டியே செலுத்தல் கட்டணங்கள் பொருந்தாது. இருந்தாலும், கடன் பெறுபவருக்கு மறு நிதியுதவி அளிப்பதன் மூலம் கடன் தொகை முன்கூட்டியே செலுத்தப்பட்டால் அதற்கு முன்கூட்டியே செலுத்தலுக்கான கட்டணங்களைச் செலுத்த வேண்டும்.\nc) கடனை முன்கூட்டியே செலுத்தும் நேரத்தில் நிதி ஆதாரத்தை உறுதிப்படுத்துவதற்கு எச் டி எஃப் சி சரியானதாக கருதும் இத்தகைய ஆவணங்களை வாடிக்கையாளர் சமர்ப்பிக்க வேண்டும்.\n*இந்த நோக்கத்திற்காக \"சொந்த ஆதாரங்கள்\" என்பது ஒரு வங்கி / HFC/NBFC அல்லது நிதி நிறுவனத்திலிருந்து கடன் பெற்றதை தவிர வேறு எந்தவொரு ஆதாரமும் ஆகும்.\nமேலே குறிப்பிட்டுள்ள முன்கூட்டியே செலுத்தல் கட்டணங்கள் இந்த கடன் ஒப்பந்தத்தை நிறைவேற்றும் நாளின் படி குறிப்பிடப்பட்டுள்ளன, எனினும் அவை எச் டி எஃப் சி -யின் நடைமுறையில் உள்ள கொள்கைகள் மாற்றத்திற்கு உட்பட்டு இருக்கின்றன, அதன்படி அவ்வப்போது மாறுபடும். முன்கூட்டியே செலுத்தல்களின் மீது பொருந்தும் சமீபத்திய கட்டணங்கள் பற்றி www.hdfc.com -ஐ பார்க்குமாறு வாடிக்கையாளர்களிடம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.\nவீட்டுக் கடன் மாற்று கட்டணங்கள்\nஎங்களின் தற்போதைய வாடிக்கையாளருக்கு எங்கள் மாற்று (கன்வர்ஷன்) வசதி மூலம் வீட்டுக் கடன் மீதான பொருந்தக்கூடிய வட்டி விகிதங்களை குறைப்பதற்கான விருப்பத்தை நாங்கள் வழங்குகிறோம் (திட்டங்கள் இடையே மாற்றுவதன் மூலம்). பெயரளவு கட்டணம் செலுத்துவதன் மூலம் இந்த வசதியை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் மற்றும் உங்கள் மாதாந்திர தவணை (EMI) அல்லது கடன் காலத்தை குறைக்கலாம். விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பொருந்தும்.\nதயாரிப்பு / சேவையின் பெயர்\nகட்டண பெயர்/ கட்டணம் விதிக்கப்பட்டது\nகடன்கள் மாறுபட்ட விகிதத்தில் குறைந்த விகிதத்திற்கு மாறுதல். கடன்கள்(வீடு கட்டுதல்/ விரிவாக்கம் / முன்னேற்றம்)\nமாற்றுதல் கட்டணம் மாற்றும் காலம் ஒவ்வொரு மாற்றத்தின் போதும் மாற்றும் நேரத்தில் அசல் தொகை மற்றும் பட்டுவாடா செய்யப்படாத தொகை (ஏதேனும் இருந்தால்) 0.50% வரை அல்லது கேப் ₹50000 மற்றும் வரிகள் எது குறைவானதோ அது பொருந்தும்.\nநிலையான வட்டி விகித கடனில் இருந்து மாறும் விகித கடனுக்கு மாறுதல் (வீடு/கூடுதல்பணி/மேம்பாடு)\nமாற்றுதல் கட்டணம் மாற்றும் காலம் ஒருமுறை மாற்றும் நேரத்தில் அசல் தொகை மற்றும் பட்டுவாடா செய்யப்படாத தொகை (ஏதேனும் இருந்தால்) 0.50% வரை அல்லது கேப் ₹50000 மற்றும் வரிகள் எது குறைவானதோ அது பொருந்தும்.\nட்ரூஃபிக்ஸ்டு ரேட் இல் இருந்து மாறுபடும் விகிதத்திற்கு மாறுதல்\nமாற்றுதல் கட்டணம் மாற்றும் காலம் ஒருமுறை மாற்றியமைக்கும் நேரத்தில் முதல் தொகை மற்றும் அளிக்கப்படாது தொகையில் (ஏதாவது இருந்தால்) 1.75% மற்றும் வரிகள்.\nகுறைந்த விகிதத்திற்கு (வீட்டு கடன்கள் அல்லாது) மாறுதல்\nமாற்றுதல் கட்டணம் மாற்றும் காலம் ஒவ்வொரு மாற்றத்தின் போதும் பிரதான நிலுவை பரவல் வேறுபாடுகளின் பாதி மற்றும் அளிக்கப்படாது தொகை (ஏதேனும் இருந்தால்) மற்றும் வரிகள், குறைந்த பட்ச கட்டணம் 0.5% அதிகபட்சம் 1.50%.\nகுறைந்த விகிதத்திற்கு மாறுதல் (வீட்டுமனை கடன்கள்)\nமாற்றுதல் கட்டணம் மாற்றும் காலம் ஒவ்வொரு மாற்றத்தின் போதும் மாற்றியமைக்கும் நேரத்தில் முதல் தொகையில் மற்றும் அளிக்கப்படாது தொகையில் (ஏதாவது இருந்தால்) 0.5% மற்றும் வரிகள்.\n(*) மேலே உள்ள உள்ளடக்கங்கள் அவ்வப்போது மாற்றத்திற்கு உட்பட்டவை மற்றும் அத்தகைய கட்டணத்தின் தேதியில் பொருந்தக்கூடிய விகிதங்களில் இருக்கும்.\nவீட்டுக் கடனை திருப்பிச்செலுத்தும் விருப்பங்கள்\nசுய தொழில் புரியும் தனிநபர்களுக்கு\nநீங்கள் ஒரு கட்டுமானக் கட்டிடத்தை வாங்குகிறீர்கள் எனில், பொதுவாக மொத்த கடனில் கடன் பெற்ற தொகைக்கு வட்டிக்கு மட்டும் செலுத்தலாம். அதன் பின்னர் EMI களுக்கு பணம் செலுத்துங்கள். நீங்கள் உடனடியாக அசல் தொகையை திருப்பிச் செலுத்த வேண்டுமானால் இதுவரை பெற்ற கடன் மீது உடனடியாகத் தொடங்கலாம்.\nதுரிதப் படுத்தப்பட்ட திரும்பச் செலுத்துதல் திட்டம்\nஇந்த விருப்பம் உங்கள் வருமானம் அதிகரிக்கும் விகிதத்தில் ஒவ்வொரு ஆண்டும் EMI களை அதிகரிக்க நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது, இதனால் கடனை நீங்கள் விரைவாக திருப்பிச் செலுத்துவீர்கள்.\nஇந்த விருப்பத்துடன் நீங்கள் 30 ஆண்டுகள் வரை நீண்ட காலம் திருப்பிச் செலுத்துவீர்கள். இது ஒரு மேம்பட்ட கடன் தொகை தகுதி மற்றும் சிறிய EMI ஐ குறிக்கிறது.\nவீட்டு கடனுக்காக பரிந்துரைக்கப்பட்ட கட்டுரைகள்\nஆன்லைனில் வீட்டுக் கடன் விண்ணப்பிப்பது எப்படி\nபெண்களுக்கான வீட்டுக் கடன் நன்மைகள்\nஒரு வீட்டுக் கடனைப் பெறுவதற்கு முன்னர் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 10 விஷயங்கள்\nமுன்-ஒப்புதலளிக்கப்பட்ட வீட்டுக் கடன்களின் அடிப்படைகள்\nHDFC | சுதந்திரத்தை பெறுங்கள்\nதனிப்பயனாக்கப்பட்ட திருப்பிச் செலுத்தும் திட்டங்கள்\nவீட்டுக் கடனுக்கு ஆன்லைனில் எவ்வாறு விண்ணப்பிப்பது\nஉங்கள் வீட்டுக் கடன் கணக்கிற்கு ஆன்லைன் அணுகல்\nஎச் டி எஃப் சி வீட்டு கடன் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nகடனின் பாதுகாப்பு என்பது பொதுவாக நிதியுதவி அளிக்கப்படும் சொத்து மீதான பாதுகாப்பு வட்டி மற்றும் / அல்லது எச் டி எஃப் சி கேட்கும் வேறு ஏதேனும் பிணையம் / இடைக்கால பாதுகாப்பைக் குறிப்பிடுகிறது.\nமேலே உள்ள அனைத்து தகவல்களும் விழிப்புணர்வு மற்றும் வாடிக்கையாளர் வசதிக்காக உள்ளது மற்றும் எச் டி எஃப் சி -இன் தயாரிப்புகள் மற்றும் சேவைகளைப் பற்றிய ஒரு குறிப்பான வழிகாட்டியாக மட்டுமே செயல்படுகின்றன. எச் டி எஃப் சி யின் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் குறித்த விரிவான தகவல்களுக்கு தயவுசெய்து அருகில் இருக்கும் எச் டி எஃப் சி கிளையை தொடர்பு கொள்ளுங்கள்.\nஉங்கள் கடன் தொடர்பான மிக முக்கியமான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்.\nகடன் வட்டி சான்றிதழைப் பெறுங்கள்\nவட்டி விகிதங்கள் / திரும்பச் செலுத்துதலின் விவரங்கள்\nஉங்கள் வட்டி விகிதங்களை குறைத்திடுங்கள்\nஉங்கள் வீட்டுக் கடனிற்கான சிறந்த வட்டி விகிதங்களை பெறுங்கள்\nஎங்கள் கடன் நிபுணர் உங்கள் வீட்டிற்கே வந்து உங்களை சந்திப்பார்\nஉங்களுக்கு அருகிலுள்ள எச் டி எஃப் சி அலுவலகத்திற்கு செல்லவும்\nபிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா\nவீட்டுக் கடன் வட்டி விகிதங்கள்\nவீட்டுக் கடன் EMI கால்குலேட்டர்\nவீட்டுக் கடன் தகுதி வரம்பு கால்குலேட்டர்\nவீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் கால்குலேட்டர்\nமுந்தைய காலாண்டில் தனி நபர்களுக்கு வழங்கப்பட்ட முன்தொகைகளுக்கான வட்டி விகித மாற்றம்\nதனிநபர் வீட்டுவசதி: (அக்டோபர் 2020 - டிசம்பர் 2020 காலாண்டு)\nதனிநபர் வீடு-அல்லாத: (அக்டோபர் 2020 - டிசம்பர் 2020 காலாண்டு)\nதயவுசெய்து https://portal.hdfc.com/loginஐ பார்க்கவும் மற்றும் உள்நுழைவுக்கு பின்னர் இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு கோரிக்கைகள் > மாற்று என்கொயரி டேப் மீது கிளிக் செய்யவும்.\nரீடெய்ல் முதன்மை கடன் விகிதம் (RPLR) is 16.05%. 4 மார்ச், 2021\nரீடெய்ல் பிரைம் கடன் விகிதம் (RPLR) - வீட்டு வசதி அல்லாதவை 9.70% முதல். 12வது ஜூன், 2020\nஎச் டி எஃப் சி குழுமம்\nபிரதான சில்லறை கடன் விகிதம்\nமிக முக்கியமான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\n© 2020. HDFC லிமிடெட். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nமாநிலம் / யூனியன் பிரதேசம்\nமுகவரி - மூடப்பட்ட அலுவலகங்கள்\nமுகவரி - அருகிலுள்ள செயல்பாட்டு அலுவலகம்\n1 பீகார் சகுனா மோர்\nஎஃப் 2, ஃபர்ஸ்ட் ஃப்ளோர், டி எஸ் பிசினஸ் பார்க், பிசைடு டிஏவி ஸ்கூல், சகுனா மோர், தானாபூர், பாட்னா - 801 503 டெல்லி: 0611 - 5222267, 5222268, 5222269\nஅலாஸ்கா டவர்ஸ், ஆப்போசிட் ஆரோக்யா ஹாஸ்பிட்டல், லோதி பாரா ரோடு, சங்கர் நகர், ராய்ப்பூர் - 492007\nஃபர்ஸ்ட் ஃப்ளோர், சௌகான் காம்ப்ளக்ஸ், ஆப்போசிட் H P பெட்ரோல் பம்ப், சுந்தர் நகர், ராய்ப்பூர், பின் நம்பர். 492013\nகிச்சாரியா காம்ப்ளக்ஸ், 2/2, நேரு பரிசர், நியர் நேரு நகர் சௌக், பிலாய் - 490020\nBEDFORD INCORPORATION, நியர் ராஜீவ் காந்தி சௌக், ராய்ப்பூர் ரோடு, பிலாஸ்பூர் - 495001\nஷியாம் டவர், திம்ராபூர் ரோடு, ஜகத்பூர், ஃப்ரன்ட் ஆஃப் கிருஷ்ணா காம்ப்ளக்ஸ், ராய்கர், CG - 496001.\n2வது ஃப்ளோர், 44 ரீகல் பில்டிங், கன்னாட் பிளேஸ், நியூ டெல்லி - 110001\nஎச்எல் விங்ஸ், 1st ஃப்ளோர், செக்டர்-11, பிளாட்-2, பாக்கெட் 4, துவாரகா, நியூ டெல்லி - 110075\nஇந்தியா ஹேபிடட் சென்டர், கோர் 6A, 5th ஃப்ளோர், லோதி ரோடு, நியூ டெல்லி - 110003\nதி கேப்பிடல் கோர்ட், முனிர்க்கா, அவுட்டர் ரிங் ரோடு, ஓலோஃப் பால்ம் மார்க், நியூ டெல்லி - 110067\n251, 2வது ஃப்ளோர், TWR-B, அகர்வால் சைபர் பிளாசா, நேதாஜி சுபாஷ் பிளேஸ், நியூ டெல்லி 110 034.\n23-28, மெஜஸ்டிக் டவர், அப்பர் கிரவுண்டு ஃப்ளோர், கம்யூனிட்டி சென்டர், விகாஸ் புரி, நியூ தில்லி - 110018\n1ST ஃப்ளோர், அன்சல் பிளாசா, செக்டர் 15-A, மதுரா ரோடு, ஃபரிதாபாத் - 121001\nR-75, செக்டர்-1, சாவோய் சூட்ஸ், IMT மனேசர், குருகிராம்\n15 ஜம்மு காஷ்மீர் ஜம்மு\nஆஃபிஸ் நம்பர்.18-19, கிரவுண்ட் ஃப்ளோர் (பார்க் ஃபேசிங்), பி-1, நார்த் பிளாக், பகு பிளாசா, ஜம்மு 180 012.டெலி: 2477707 / 8. ஃபேக்ஸ்: 0191 - 2477710.\n16 மத்தியப் பிரதேசம் இந்தூர்\nBG-202, திட்டம் எண் 74-C, விஜய் நகர், நியர் V CARE ஹாஸ்பிட்டல் , இந்தூர் - 452010\n17 மத்தியப் பிரதேசம் இந்தூர்\nகீர்த்தி பிளாசா, 15/16, பிரபு நகர், அன்னபூர்ணா மெயின் ரோடு,இந்தூர்-452009\n18 மத்தியப் பிரதேசம் இந்தூர்\nஎச் டி எஃப் சி ஹவுஸ், 10-A/1, MG ரோடு, இந்தூர் - 452001\n19 மத்தியப் பிரதேசம் குவாலியர்\nஆனந்த் தீப் பில்டிங் கிரவுண்ட் ஃப்ளோர், 43, சிட்டி சென்டர், குவாலியர் - 474005\n20 மத்தியப் பிரதேசம் போபால்\nஃபர்ஸ்ட் ஃப்ளோர், ஸ்டார் ஸ்கொயர், பிளாட் நம்பர். 3, இன்டர்ஸ்டேட் பஸ் டெர்மினல், கஸ்தூர்பா நகர், போபால் 462023\n21 மத்தியப் பிரதேசம் போபால்\nகுருணாங்க் பிளாசா , பிளாட் நம்பர். 26-27 , அமல்தாஸ் காலனி பேஸ்-2, சுனாபட்டி , கோலார் ரோடு, போபால்-462017.\n22 மத்தியப் பிரதேசம் போபால்\nகம்லா பவன், HIG 6, செக்டர் B, சோனகிரி, ரைசன் ரோடு, போபால் - 462021\n23 மத்தியப் பிரதேசம் ஜபல்பூர்\n1412, ரைட் டவுன், நியர் மகாராஷ்டிரா ஹை ஸ்கூல், ஜபல்பூர் - 482002\nஎச் டி எஃப் சி லிமிடெட், ஆஃபிஸ் நம்பர். 3, யஷ் பிரைம், பிக்வான் ரோடு, பாரமதி, புனே, பின் 413102\n108 D, மாஸ்டர் கேன்டீன், 1ST ஃப்ளோர், எதிரில். லால்சந்த் ஜுவல்லர்ஸ், புவனேஸ்வர் - 751001\n1ST ஃப்ளோர், R. A .R. காம்ப்ளக்ஸ், நம்பர். 3, வில்லியனூர் மெயின் ரோடு, ஆப்போசிட். புதுச்சேரி ஹவுசிங் போர்டு, நடேசன் நகர், புதுச்சேரி - 605005\n27 உத்தரப் பிரதேசம் அலிகஞ்ச்\n1ST ஃப்ளோர், A-1/15, செக்டர்-H, புரானியா சௌராஹா, அலிகஞ்ச், லக்னோ - 226020\n28 உத்தரப் பிரதேசம் அலிகர்\n1ST ஃப்ளோர், ஆகாஷ்தீப் பில்டிங், சமத் ரோடு, அலிகர் (U. P.) - 202 001\n29 உத்தரப் பிரதே��ம் பரேலி\nஅர்ஜுன் டவர்ஸ், சௌப்லா ரோடு, 63, சிவில் லைன்ஸ், பரேலி - 243001\n30 உத்தரப் பிரதேசம் புலந்த்ஷார்\nபிரயான் பில்டிங், மொஹல்லா கோத்தியத், ஆப்போசிட். பந்தன் பேங்க், ராஜே பாபு ரோடு, புலந்த்ஷஹர் (U.P.) - 203001\n31 உத்தரப் பிரதேசம் ஃபைசாபாத்\nஃபர்ஸ்ட் ஃப்ளோர், 4106 / 4110, சிவில் லைன்ஸ், ஆப்போசிட் BSNL ஆஃபிஸ், ஃபைசாபாத், U.P - 224001\n32 உத்தரப் பிரதேசம் கோம்திநகர்\nஷாப் நம்பர். 219-220, சஹாரா பிளாசா, நியர் பத்ரகர்புரம் கிராசிங், கோம்தி நகர், லக்னோ - 226010\n33 உத்தரப் பிரதேசம் கோரக்பூர்\nலஹிரி நிவாஸ், ஆப்போசிட். ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா பேங்க் ரோடு கோரக்பூர் - 273001\n34 உத்தரப் பிரதேசம் ஜான்சி\nநியர் ஜல் நிகம் ஆஃபிஸ், குவாலியர் ரோடு, சிவில் லைன்ஸ் ஜான்சி - 284001\n35 உத்தரப் பிரதேசம் லக்னோ\nஹிந்துஸ்தான் டைம்ஸ் ஹவுஸ் செகண்ட் ஃப்ளோர், 25 அசோக் மார்க், லக்னோ - 226001\n36 உத்தரப் பிரதேசம் மொராதாபாத்\nகாந்தி காம்ப்ளக்ஸ், ஆப்போசிட். மன்சரோவர் காலனி, மஜோலி, டெல்லி ரோடு, மொராதாபாத் - 244001\n37 உத்தரப் பிரதேசம் ரே பரேலி\nஷாப் நம்பர். 201-204, UGF, சஞ்சர் கோல்டு, செக்டர் 2D, விருந்தாவன் யோஜனா, நியர் கலிந்தி பார்க், ஆப்போசிட் லக்னோ பப்ளிக் ஸ்கூல், ரேபரேலி ரோடு, லக்னோ 226014\n38 உத்தரப் பிரதேசம் வாரணாசி\nகிரவுண்ட் ஃப்ளோர், ருத்ரா பிரெஸ்டீஜ், C 32/23 & C 32/25, ஹபிப்புரா, சிக்ரா-காஷிவித்யபீத் ரோடு, வாரணாசி, U.P - 221001\n39 உத்தரப் பிரதேசம் அலகாபாத்\n1ST ஃப்ளோர், கம்லா டவர்ஸ், 12/43, சர்தார் படேல் மார்க், சிவில் லைன்ஸ், அலகாபாத் - 211001\n40 உத்தரப் பிரதேசம் அசோக் நகர்\nகிரவுண்ட் ஃப்ளோர், பிரிமைசஸ் நம்பர். 111A/12B, அசோக் நகர், கான்பூர் நகர், கான்பூர்-208012\n41 உத்தரப் பிரதேசம் கான்பூர்\nஎச் டி எஃப் சி லிமிடெட், 1ST ஃப்ளோர், படம் டவர்-2, 14/113 சிவில் லைன்ஸ், கான்பூர்-208001\n42 உத்தரப் பிரதேசம் உன்னாவ்\nஃபர்ஸ்ட் ஃப்ளோர், UDA காலனி, பிளாட் நம்பர். 1, மோதி நகர், உன்னாவ் 209801\n43 உத்தரப் பிரதேசம் முசாபர்நகர்\nகிரவுண்ட் ஃப்ளோர், ஆப்போசிட் காந்தி பாலிடெக்னிக் காலேஜ், போபா ரோடு, முசாஃபர்நகர் - 251001\n44 உத்தரப் பிரதேசம் ஷாரன்பூர்\nகிரவுண்ட் ஃப்ளோர், கமர்ஷியல் பிளாட் நம்பர். 5, ஆவாஸ் விகாஸ் காலனி, ஆப்போசிட். சக்ஷம் ஹாஸ்பிட்டல், விவேக் நகர், டெல்லி ரோடு, சஹாரன்பூர் - 247001\n45 உத்தரப் பிரதேசம் ஆக்ரா\nG-10/8, பதம்தீப் டவர், சஞ்சய் பிளேஸ், ஆக்ரா - 282002\n46 உத்தரப் பிரதேசம் ஃபிரோஜாபாத்\nமோனாபுரம் பில்டிங், பிளாட் நம்பர்.:30,ஃபர்ஸ்ட் ஃப்ளோர்,NH-2,கணேஷ் நகர்,ஃபிரோஜாபாத்-283203\n47 உத்தரப் பிரதேசம் காஸியாபாத்\nC-7, லோஹியா நகர், காஜியாபாத் 201 005. தொலைபேசி: 2721446, 2723116\n48 உத்தரப் பிரதேசம் கிரேட்டர் நொய்டா\nஎச் டி எஃப் சி லிமிடெட், ஷாப் நம்பர் 10, 11, 12, ATM 1 & 2, GF, பிளாக் பி, OMAXE NRI சிட்டி, செக்டர் ஓமேகா-I, பாரி சௌக், கிரேட்டர் நொய்டா.\n49 உத்தரப் பிரதேசம் மதுரா\nகிரவுண்ட் ஃப்ளோர், விகாஸ் டவர், பிளாட் நம்பர் 3-B, கிருஷ்ணா நகர் மெயின் ரோடு, மதுரா - 281004\n50 உத்தரப் பிரதேசம் மீரட்\n177/1, மங்கள் பாண்டே நகர் ஆப்போசிட் மீரட் யுனிவெர்சிட்டி மீரட் - 250001\n51 உத்தரப் பிரதேசம் நொய்டா\n52 உத்தரப் பிரதேசம் நொய்டா 2\nA-13 / 2, கிரவுண்ட் ஃப்ளோர், செக்டர் - 62, நொய்டா - 201309\n53 உத்தரப் பிரதேசம் நொய்டா எக்ஸ்டென்ஷன்\nஷாப் நம்பர்- 5,6,7,8, UGF, எக்ஸோடிகா ட்ரீம்வில்லே ஆர்கேட், பிளாட் NO-1A, செக்டர்-16 C, கிரேட்டர் நொய்டா வெஸ்ட்.\n54 உத்தரப் பிரதேசம் வைஷாலி\nGF-SR-10, GF, அன்சல் பிளாசா வைஷாலி, காசியாபாத் - 201010\n1ST ஃப்ளோர், அபௌவ் ஆந்திரா பேங்க், 2 ,விவேகானந்த் நகர், ஆவாஸ் விகாஸ் காலனி, டெல்லி நைனிடால் ஹைவே, ருத்ராபூர், - 263153\nகிரவுண்ட் ஃப்ளோர், ஆலம் வில்லா, அட்ஜசென்ட் டு தேனா பேங்க், ராம்நகர் ரோடு, காஷிப்பூர் 244 713.டெலி: 270333. ஃபேக்ஸ்: 05974 - 260333.\n3/94, சிவில் லைன்ஸ், நாராயின் பில்டிங் (ஜந்தா பாங்க்வெட் ஹால்) தண்டி சரக், நைனிடால் ரோடு ஹல்த்வானி - 263139\n1 ஆந்திரப் பிரதேசம் அனந்தபூர்\nD. No. 12-4-2-1, ஃபர்ஸ்ட் ஃப்ளோர், பிளாட் நம்பர். 1, Sy நம்பர். 286/1, 2 & 3, நியர் APHB காலனி, வித்யூத் நகர், அனந்தபூர் 515 001. டெலி : 08554-220043\n2 ஆந்திரப் பிரதேசம் ஏலூரு\nD.NO. 27-20-66/1, ஃபர்ஸ்ட் ஃப்ளோர், சிவா கணேஷ் டவர்ஸ், சாந்தி நகர் 15TH ரோடு, ஆப்போசிட். KKR கவுதம் ஸ்கூல், மெயின் ரோடு, எலுரு – 534007, வெஸ்ட் கோதாவரி டிஸ்ட்ரிக்ட், A.P.,\n3 ஆந்திரப் பிரதேசம் கஜுவகா\n1ST ஃப்ளோர், டோர் நம்பர். 26-42-4, எண். 103/2, NH-5, சின்னகன்டியாடா, கஜுவாகா, விசாகப்பட்டினம்-530026\n4 ஆந்திரப் பிரதேசம் கோல்லபுதி\nடாக்டர்.எண்: 7-34, 1st ஃப்ளோர், சீனியர் எண்: 538/2, ஒன் சென்டர், கொல்லபுடி, விஜயவாடா, ஆந்திர பிரதேசம், அஞ்சல் குறியீடு: 521225\n5 ஆந்திரப் பிரதேசம் கோபாலபட்டிணம்\nANR டவர்ஸ், பிசைடு மகாதி ஸ்கூல், கோபாலபட்டினம், விசாகப்பட்டினம், அஞ்சல் குறியீடு 530027\n6 ஆந்திரப் பிரதேசம் குண்டூர்\nடோர் நம்பர். 4-12-41, பி எஸ் காம்ப்ளக்ஸ், கொரிட்டிபாடு மெயின் ரோடு, குண்டூர் - 522006\n7 ஆந்திரப் பிரதேசம் கடப்பா\nடோர் நம்பர். 45-386/1, கிரவுண்ட் ஃப்ளோர், ஸ்ரீ நிலையம், பிளாட் நம்பர். 76, பாலாஜி நகர் மெயின் ரோடு, செம்முமியாபேட், ஜில்லா பரிஷாத் ஆஃபிஸ் ரோடு, கடப்பா 516002, ஆந்திர பிரதேசம்.\n8 ஆந்திரப் பிரதேசம் காக்கிநாடா\nD.NO.11-15-12, கிரவுண்ட் ஃப்ளோர், அட்சுதரமய்யா தெரு, எதிரில். மாவட்ட மருத்துவ மற்றும் சுகாதார அலுவலகம், ராமராவ்பேட்டா, காக்கிநாடா - 533001\n9 ஆந்திரப் பிரதேசம் கர்னூல்\nகடை எண் 37 & 38, கிரவுண்ட் ஃப்ளோர், ஸ்கண்டா ஷாப்பிங் மால், கோல்ஸ் காலேஜ் ரோடு, நியர் கொண்டா ரெட்டி ஃபோர்ட், கர்னூல், அஞ்சல் குறியீடு 518001\n10 ஆந்திரப் பிரதேசம் நெல்லூர்\nஆர்வீ ஹவுஸ், கிரவுண்ட் ஃப்ளோர், ராமகிருஷ்ணா நகர், சில்ட்ரன்ஸ் பார்க் மெயின் ரோடு, நியர் கிருஷ்ணா மந்திரம், நெக்ஸ்ட் டு சர்வீஸ் டாக்ஸ் ஆஃபிஸ், நெல்லூர் - 524 003\n11 ஆந்திரப் பிரதேசம் ஒங்கோல்\nஎச் டி எஃப் சி லிமிடெட், கிரவுண்ட் ஃப்ளோர், டோர் நம்பர். 9-1-19, சர்வே நம்பர். 357, ஜெயராம் ஹால் சென்டர், கோர்ட் ஸ்ட்ரீட், ஆப்போசிட் டிஸ்ட்ரிட் கோர்ட், ஓங்கோல், அஞ்சல் குறியீடு 523001\n12 ஆந்திரப் பிரதேசம் ராஜமண்ட்ரி\nD.NO.79-7-19/1, SVR மாணிக்யா என்கிளேவ், ஃப்ளாட் நம்பர் G-1 கிரவுண்ட் ஃப்ளோர், சோமலம்மா டெம்பிள் ரோடு, ராமாலயம் ஜங்ஷன், ராஜமுந்திரி - 533103\n13 ஆந்திரப் பிரதேசம் திருப்பதி\n1ST ஃப்ளோர், சின்னமகரி'ஸ் பிளாசா, டி.எண்: 10-14-582, வி வி மஹால் ரோடு, திருப்பதி - 517501\n14 ஆந்திரப் பிரதேசம் விஜயவாடா\n59A-1-5/1, 1ST ஃப்ளோர், ஸ்ரீ ஹரி டவர்ஸ், மேரி ஸ்டெல்லா கல்லூரி தவிர, விஜயவாடா, ஆந்திர பிரதேசம். அஞ்சல் குறியீடு : 520008\n15 ஆந்திரப் பிரதேசம் விசாகப்பட்டினம்\nஎச் டி எஃப் சி லிமிடெட்., டி நம்பர். 10-50-19/1, 1ST மற்றும் 2ND ஃப்ளோர், 'சௌதமணி' ஆப்போசிட் எச்எஸ்பிசி, வால்டேர் மெயின் ரோடு, சிரிபுரம், விசாகப்பட்டினம் - 530003\nகிரவுண்ட் ஃப்ளோர்,கஹிலோ கேலக்ஸி,கலம்பாக் ரோடு, அகோரியா பஜார், முசாஃபர்பூர் (பீகார்), பின் எண். 842002\nகடருகா நிவாஸ், 2ND ஃப்ளோர், சவுத் காந்தி மைதான், பாட்னா - 800001\n19 சண்டிகர் செக்டர் 41 சண்டிகர் செக்டர் 41\nSCO 33 FF, செக்டர் 41-D, சண்டிகர்.\nஆகாஷ் டவர், விவேகானந்த் நகர்\nஎச் டி எஃப் சி லிமிடெட், ஃபர்ஸ்ட் ஃப்ளோர், ஆப்போசிட் கைதல் கிளப், வோடபோன் ஸ்டோர் மேலே, அம்பாலா ரோடு, கைதல்-136027\nSCO நம்பர் 247-248, ஃபர்ஸ்ட் ஃப்ளோர், செக்டர் 12, ஆப்போசிட் மினி செக்ரடேரியட், கர்னால் ( ஹரியானா) - 132001\nFF, SCO- 65, செக்டர்- 17, குருக்ஷேத்ரா\nSCO 142, ஃபர்ஸ்ட் ஃப்ளோர், செக்டர்-5, MDC, நியர் மன்சா தேவி காம்ப்ளக்ஸ் கேட், பஞ்ச்குலா - 134114\n26 ஹரியானா பஞ்ச்குலா 2\nSCO 392 FF, செக்டர் 20, பஞ்ச்குலா, பின் 134116\nSCF 45, ஃபர்ஸ்ட் ஃப்ளோர், பதஞ்சலி ஸ்டோர் மேலே, ஹுடா மார்க்கெட், செக்டர் 11, பானிபத், ஹரியானா, அஞ்சல் குறியீடு\n# 190 - ஃபர்ஸ்ட் ஃப்ளோர், நியர் அசோகா பிளாசா, ரோதக் - டெல்லி ரோடு, ரோதக் - 124001\nஎச் டி எஃப் சி லிமிடெட், ராயல் டைமண்ட் காம்ப்ளக்ஸ், ஷாப் நம்பர். 265,1ST ஃப்ளோர், நியர் ஸ்பார் பேங்க்வெட் ஹால்.ஆப்போசிட் எல்ஐசி பில்டிங், ஓல்டு சிவில் ஹாஸ்பிட்டல் மார்க்கெட், சிர்சா - 125055.\n30 ஹரியானா யமுனா நகர்\nSCO 184-185, செக்டர்-17, கமர்ஷியல் பெல்ட், யமுனா நகர் - 135003\n31 இமாச்சலப் பிரதேசம் சிம்லா\nகுரோவர் காட்டேஜ், எதிரில். பிராக்கர்ஸ்ட் காட்டேஜ, கசும்ப்தி ரோடு, சோட்டா சிம்லா, சிம்லா - 171002\n2ND ஃப்ளோர்,போத்தர் டவர், ஷாஸ்திரி நகர், நியர் பேங்க் மோர், தன்பாத் - 826001\n1ST ஃப்ளோர், பத்மாலையா 18, ராம் மந்திர் கேரேஜ் ஏரியா, பிஸ்துபூர், ஜாம்ஷெத்பூர் - 831001\n2ND ஃப்ளோர், சாய் குஜரா ஹைட்ஸ், 5, மெயின் ரோடு ( பிரிட்ஜ் அருகில்), ஹோட்டல் ரேடிசன் Blu எதிரில், கத்ரு மோர், ராஞ்சி - 834001\nஃபர்ஸ்ட் ஃப்ளோர், ஹில்வானா பில்டிங், நியர் S.D. காலேஜ், சனத்தனபுரம் P.O., கலார்கோடு, ஆலப்புழா-688003.\n1ST ஃப்ளோர், மெனாச்சேரி டவர்ஸ், தொட்டக்கட்டுக்கரா P O, பரவூர் ஜங்ஷன், அலுவா-683108.\n1ST ஃப்ளோர், செய்கன் சேம்பர்ஸ், கன்னூர் ரோடு, காலிகட் - 673001 டெலி: +91 (495) 2367656, 2367657 ஃபேக்ஸ்: +91 (495) 2367658\nகிரவுண்ட் ஃப்ளோர், பிரியதர்ஷினி பில்டிங், மெயின் ரோடு, இரிஞ்சலகுடா - 680121\nகிரவுண்ட் ஃப்ளோர் - இன்ஃபோபார்க், விஸ்மயா பில்டிங் குசுமகிரி பி.ஓ. காக்கநாட் கொச்சி - 682030\n3RD ஃப்ளோர்,பதிச்சேரில் என்கிளேவ், சங்கம்புழா நகர் பி.ஓ, என்எச் 47,கலமசேரி-682033\n2ND ஃப்ளோர், சஃபாரி பேலஸ், ஆப்போசிட் வியாபரா பவன், கன்ஹங்காட், காசரகோடு - 671315\nஹைவே ஆற்காடு, தானா, கன்னூர் - 670002\nமூன்றாவது தளம், உதயா டவர்ஸ், கழகுட்டம், பை பாஸ் ஜங்ஷன், திருவனந்தபுரம் - 695582\nஎச் டி எஃப் சி ஹவுஸ், போஸ்ட் பேக் நம்பர். 1667 ரவிபுரம் ஜங்ஷன் , M. G. ரோடு, கொச்சி - 682015\nஃபர்ஸ்ட் ஃப்ளோர், மேரி லேண்ட் சேம்பர்ஸ், ஆப்போசிட் கடப்பாகடா ஸ்போர்ட்ஸ் கிளப், கடப்பாகடா P O, கொல்லம் 691008\nஃபர்ஸ்ட் ஃப்ளோர், வவா ஆர்கேட், திருவனந்தபுரம் ரோடு, புலமன், கோட்டாரக்கரா, பின் 691531\nஎச் டி எஃப் சி லிமிடெட், செகன்ட் ஃப்ளோர், பிஷப் தரயில் மெமோரியல் பில்டிங், அட்ஜசென்ட் டூ BCM காலேஜ், K K ரோடு, கோட்டயம் - 1\n48 கேரளா குந்நம குலம\nM.C. டவர், திரிச்சூர் ரோடு, குன்னம்குளம் - 680503\n1ST ஃப்ளோர், டானா சென்டர், மிடில் ஹில், மலப்புரம் - 676505\nகிரவுண்ட் ஃப்ளோர், ரேவதி காம்ப்ளக்ஸ், ரயில்வே ஸ்டேஷன் ரோடு, புத்தா ஜங்ஷன், மாவேலிக்கரா - 690101\n51 கேரளா மெடிக்கல் காலேஜ்\nGA/GB1,கிரவுண்ட் ஃப்ளோர், ஆஸ்டர் ஸ்கொயர், மெடிக்கல் காலேஜ் PO, திருவனந்தபுரம்-695011\nரூம் நம்பர் XIII/120B, ஃபர்ஸ்ட் ஃப்ளோர், V S ஆர்கேட், ஆப்போசிட். நிர்மலா ஹை ஸ்கூல், முவட்டுப்புழா - 686673\nஃபர்ஸ்ட் ஃப்ளோர், வட்டப்பாரா விலா பில்டிங், பிரவச்சம்பலம், நிமம் P O, திருவனந்தபுரம் - 695020\n1ST ஃப்ளோர், V J ஜச்சரியா ஆர்கேட், வைபனா, அருணாபுரம் P.O, பாலா, கேரளா ஸ்டேட், பின் - 686574\nஎச் டி எஃப் சி லிமிடெட், ஃபர்ஸ்ட் ஃப்ளோர், M.R.ஹெரிடேஜ், பலட் ஜங்ஷன், வெஸ்ட் ஃபோர்ட் ரோடு, பாலக்காடு - 678001\n1ST ஃப்ளோர், L & K டவர்ஸ், MRF ஷோரூம் அபௌவ், படிவட்டம், எர்ணாகுளம் கொச்சி - 682024\nசெம்போத்ரா டவர்ஸ், ரிங் ரோடு, பத்தனம்திட்டா - 689645\nஃபர்ஸ்ட் ஃப்ளோர், சார் பை-பாஸ் கமர்ஷியல் சென்டர், ஆப்போசிட். பிரசென்டேஷன் ஹையர் செகண்டரி ஸ்கூல், மனதுமங்களம் பை-பாஸ் ரோடு, பெரிந்தல்மன்னா - 679322.டெலி: 04933 222015 / 227015\nஎஸ்-7, கமர்ஷியல் பிளாக் , தேஜஸ்வினி அனெக்ஸ் , டெக்னோபார்க் , திருவனந்தபுரம் - 695581\n1ST ஃப்ளோர், பலமூட்டில் பில்டிங்ஸ், ராமஞ்சிரா, M.C. ரோடு, திருவள்ளா, பத்தனம்திட்டா - 689101\nஎச் டி எஃப் சி ஹவுஸ், வழுத்தக்காடு போஸ்ட் பாக்ஸ் நம்பர். 2288, திருவனந்தபுரம் - 695010\n3RD ஃப்ளோர், சென்டர் பாயிண்ட், M G ரோடு, திருச்சூர் 680 004.\n1ST ஃப்ளோர், கூலியாட்டு பில்டிங், கொச்சின் பேலஸ் P O,கரிங்கச்சிரா, திரிபுனித்துரா, எர்ணாகுளம் - 682 301\n1ST & 2ND ஃப்ளோர், செவன் ஹில்ஸ் டூ கஜானன் மகாராஜ் மந்திர் ரோடு, ஆப்போசிட் CADA ஆஃபிஸ், அவுரங்காபாத் - 431001\n1ST ஃப்ளோர், நியூக்லியஸ், C S நம்பர். 239A/1, இ வார்டு, எதிரில். தைர்யா பிரசாத் ஹால், தரபை பார்க், கோலாப்பூர் 416 003\nஆஃபிஸ் நம்பர். 1-5, 1ST ஃப்ளோர், சோனாவானே காம்ப்ளக்ஸ், காந்தி சௌக், லாத்தூர், பின் 413512\nவெங்கடேஷ் எம்பஸி, 2ND ஃப்ளோர். எதிரில். ஜில்லா பரிஷாத் ஆபிஸ், சவுத் சிவாஜிநகர் (எக்ஸ்டென்டட்), சங்கிலி - 416416\nஅபஞ்சனி, பிளாட் 2, சர்வே நம்பர். 287/1 டூ7/4 , நியூ ராதிகா ரோடு, சத்தாரா - 415002\nபட்வர்தன் காம்ப்ளக்ஸ், 1ST ஃப்ளோர், 157/2C இரயில்வே லைன்ஸ், எம்ப்ளாய்மென்ட் சௌக், நியர் ஹோட்டல் துருவ், சோலாபூர் - 413001\nSCO 25, டிஸ்ட்ரிக்ட் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ��, ரஞ்சித் அவென்யூ, அம்ரித்சர் - 143001\nSCO 25, டிஸ்ட்ரிக்ட் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், ரஞ்சித் அவென்யூ, அம்ரித்சர் - 143001\nSCF 5-6, பேஸ் I, மாடல் டவுன், டிவி டவர் எதிரில், பத்திண்டா - 151001\nயூனிட் நம்பர்.5, லிங்க் ரோடு, மாடல் டவுன், நியர் குரு அமர் தாஸ் சௌக், ஜலந்தர் - 144001\nSCO 43, கிரவுண்ட் ஃப்ளோர், நியூ சன்னி என்கிளேவ், செக்டர் 125, கரார்\nSCO #11, கிரீன் பார்க் அவென்யூ, கேனல் காலனி, நேரு சித்தாந்த் கேந்திரா அருகில், பகோவால் ரோடு, லூதியானா - 141001\nSCO 15- FF, சாவ்லா டவர், செக்டர் 32, சண்டிகர் ரோடு, லூதியானா 141 001.\nSCF எண் 31, இம்ப்ரூவ்மென்ட் டிரஸ்ட் ஏரியா, ஃபிரோஸ்பூர் ரோடு, மோகா - 142001\nSCO எண். 510, செக்டர் 70, மொஹாலி.\n1ST ஃப்ளோர், கோத்ரேஜ் பில்டிங், நியர் ஷனி தேவ் மந்திர், டல்ஹவுசி ரோடு, பதான்கோட் - 145001\n1ST ஃப்ளோர், SCO 97-98, எதிரில். எச் டி எஃப் சி லைஃப், நியூ லீலா பவன், பட்டியாலா - 147001\nராஜ் ஹோட்டல் காம்ப்ளக்ஸ், 1ST ஃப்ளோர், காலேஜ் ரோடு, ரோபர் - 140001\nSCO 006, அப்பர் கிரவுண்ட் ஃப்ளோர், லோட்டஸ் கிரீன் அவென்யூ, சிங்புரா ரோடு, ஜிரக்பூர் - பஞ்சாப்\nSCO 006, அப்பர் கிரவுண்ட் ஃப்ளோர், லோட்டஸ் கிரீன் அவென்யூ, சிங்புரா ரோடு, ஜிரக்பூர் - பஞ்சாப்\nகிரவுண்ட் ஃப்ளோர், ராஜஸ்தான் பாத்ரிகா பில்டிங், கௌரவ் பாத், வைஷாலி நகர், நியர் அர்பன் ஹாட், அஜ்மீர் - 305001\nநியர் ஜட் ஹாஸ்டல் ஆப்போசிட். பலாவத் மார்க்கெட் ஸ்டேஷன் ரோடு _ அல்வார் 301001\nஃபர்ஸ்ட் ஃப்ளோர், பிளாட் நம்பர். 48, ஹைவே காலனி, பியாவர், பின் 305901\nஹவுஸ் 8 Q 7, R C வியாஸ் காலனி ஷாப்பிங் சென்டர், பில்வாரா - 311001\nவிஜய் விஹார், 1-A சாதுல் காலனி துல்சி சர்க்கிள் பிகானேர் - 334001\nஎம் ராஜ் மால், 1st ஃப்ளோர், கடியா லுஹார் காலனி, பன்னா ஹோட்டல் அருகில், சித்தோர்கர் 312 001.\n91 ராஜஸ்தான் கங்கா நகர்\n120-121, சுகாதியா ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், 1ST ஃப்ளோர், ஸ்ரீ கங்காநகர் - 335001\nவிஷ்ணுபுரி, நியர் விஜயவர்கியா ஹாஸ்பிட்டல், மெயின் ஜகத்புரா ரோடு, ஜெய்ப்பூர் - 302025\nசி-25, பகவந்த் தாஸ் ரோடு, எதிரில். சைவர்ஸ் ஸ்கூல், C- ஸ்கீம், ஜெய்ப்பூர், 302001.\nகடை எண். 2, ரோடு எண். 3, பிரு சிங் சர்க்கிள், ஜுஞ்ஜுனு 333 001. டெல்: 01592 - 233555.\nP. நம்பர் 17, கிரவுண்ட் ஃப்ளோர், KP டவர், நியர் உம்ராவ் கான் பெட்ரோல் பம்ப், அப்பர் சோபாசனி ரோடு, ஜோத்பூர் - 342002\n2-KA-27, விக்யான் நகர், ஆப்போசிட். சுதா ஹாஸ்பிடல், ஜாலாவார் ரோடு, கோட்டா - 324005\n103 / 63, மத்தியம் மார்க், அகர்வால் ஃபார்ம், மான்சரோவர், ஜெய்ப்பூர் - 302020\n98 ராஜஸ்தான் ��ீம்ராண 9:30 AM முதல் 2:00 PM வரை\nபிளாட் நம்பர் -1, வார்டு நம்பர் - 40, பிப்ரலி ரோடு, சிகர் - 332001\nபிளாட் நம்பர் -1, வார்டு நம்பர் - 40, பிப்ரலி ரோடு, சிகர் - 332001\n4-சி, கணபத் பவன் எதிரில். மீரா கேர்ள்ஸ் காலேஜ், சர்தார்புரா, உதய்பூர் - 313001\n102 ராஜஸ்தான் வைஷாலி நகர்\nஃபர்ஸ்ட் ஃப்ளோர், பிளாட் நம்பர். B-53 & 54, ஹனுமான் நகர், கௌதம் மார்க், வைஷாலி நகர், ஜெய்ப்பூர், பின் நம்பர். 302021\n103 ராஜஸ்தான் வித்யாதர் நகர்\nஷோரூம் நம்பர். 7 & 8, சுப் லக்ஷ்மி டவர், பி-4, சென்ட்ரல் ஸ்பைன், விதிதர் நகர், ஜெய்ப்பூர்\nபழைய எண். 29, புதிய எண். 63, செகண்ட் ஃப்ளோர், செகண்ட் ஸ்ட்ரீட், காமராஜ் அவென்யூ,கஸ்தூரிபாய் நகர் (நல்லி சில்க்ஸ் அருகில்), அடையாறு, சென்னை 600 020\n1st ஃப்ளோர், நம்பர். 1, சாரங்கபாணி ஸ்ட்ரீட், ஆப்போசிட். டு அம்பத்தூர் ஓ.டி. பஸ் ஸ்டாண்ட், அம்பத்தூர், சென்னை, - 600 053\n106 தமிழ்நாடு அண்ணா நகர்\nஃபர்ஸ்ட் ஃப்ளோர், # 3362W, AF பிளாக் 8TH ஸ்ட்ரீட், 11TH மெயின் ரோடு (ஆப்போசிட் கிராண்ட் ஸ்வீட்ஸ்), அண்ணா நகர் வெஸ்ட், சென்னை, அஞ்சல் குறியீடு 600040\nசெகண்ட் ஃப்ளோர், ITC சென்டர்,760, அண்ணா சாலை, சென்னை - 600002\n108 தமிழ்நாடு DLF SEZ\nஎண்: 26C, பிளாக் 5, ஃபுட் கோர்ட் அருகில், DLF IT பார்க், 1/124 சிவாஜி கார்டன்ஸ், மணப்பாக்கம், சென்னை - 600089\nகிரவுண்ட் ஃப்ளோர், பார்க்வே அபார்ட்மென்ட், நம்பர். 122 மார்ஷல்ஸ் ரோடு, எக்மோர், சென்னை - 600008\nஎச் டி எஃப் சி லிமிடெட், நம்பர். 12, C.V. ராஜகோபால் ஸ்ட்ரீட், நியர் விஷ்ணு காஞ்சி போலீஸ் ஸ்டேஷன், காஞ்சிபுரம் - 631501\n1ST ஃப்ளோர், நம்பர். 25, பழைய எண். 7-D, டாக்டர். அம்பேத்கர் ரோடு, சாமியார் மடம் அருகில் / ஜெயின்ஸ் அந்தரிக்ஷா அப்பார்ட்மென்ட்ஸ், கோடம்பாக்கம், சென்னை - 600024\nபிளாட் நம்பர்.3, ஃபர்ஸ்ட் ஃப்ளோர், மாதவரம் ரெட் ஹில்ஸ் ஹை ரோடு, வாத்தியார் தோட்டம், சென்னை-600 060.\n113 தமிழ்நாடு மறைமலை நகர்\nபிளாட் நம்பர். 2, எம்ஜிஆர் சாலை, NH-1, மரைமலை நகர், சத்யம் ஹோட்டல் அருகில், சென்னை, 603209\n10/98A, காளீஸ்வரி டவர்ஸ், ஐ ஃப்ளோர், ரங்கநாதபுரம், மேடவாக்கம் ஹை ரோடு, மேடவாக்கம், சென்னை - 100\n115 தமிழ்நாடு ஓல்டு மகாபலிபுரம் ரோடு\nநம்பர்.328, ஓல்டு மகாபலிபுரம் ரோடு, சோழிங்கநல்லூர், சென்னை - 600119\n1ST ஃப்ளோர், ஏ.ஜே. காம்ப்ளக்ஸ், நம்பர். 2, மவுண்ட் பூணமல்லி ரோடு, ஐயப்பன்தாங்கல், சென்னை - 600056\n117 தமிழ்நாடு ராமானுஜன் IT பார்க்\nஅமென்டிட்டீஸ் ஃப்ளோர், நெவில்லே டவர், ராமானுஜன் ஐ டி சிட்டி, ராஜீவ் காந்தி சாலை, தரமணி, சென்னை, அஞ்சல் குறியீடு 600113\n1st ஃப்ளோர், நியூ நம்பர் 17, ஓல்டு நம்பர் 22, எம்‌ கே ரெட்டி ஸ்ட்ரீட், நியர் பிஎஸ்என்எல் டெலிபோன் எக்ஸ்சேஞ்ச், வெஸ்ட் தாம்பரம், சென்னை - 600045\nG1 பிளாக் C, ராதே ஷியாம் அபார்ட்மென்ட்ஸ், அடையாளம்பட்டு, வனகரம், சென்னை 095,\n1st ஃப்ளோர், விசிஆர் காம்ப்ளக்ஸ், பிளாட் நம்பர்.12, பாலாஜி நகர், வேளச்சேரி மெயின் ரோடு, பல்லிக்கரனை, சென்னை 600 100\nஎச் டி எஃப் சி லிமிடெட், ஃபர்ஸ்ட் ஃப்ளோர், சின்னிஸ், நம்பர். 97, ஃபர்ஸ்ட் வெஸ்ட் மெயின் ரோடு, (சில்க் மில் பஸ் ஸ்டாப் அருகில்), காந்தி நகர், வேலூர் - 632 006.\n3RD ஃப்ளோர், பிரீமியர் பிளாசா, 106, ராஜ்பூர் ரோடு, ஆப்போசிட். ஆஸ்ட்லி ஹால், டேராடூன் - 248001\n123 உத்தரகண்ட் டேராடூன் (GMS ரோடு)\nஃபர்ஸ்ட் ஃப்ளோர், 1061, R பிளாசா, ஜெனரல் மகாதேவ் சிங் ரோடு, நியர் EPFO ஆஃபிஸ், டேராடூன் 248 001. தொலைபேசி: 2769869. டெலிஃபேக்ஸ்: 0135 - 2761031.\nநியர் மெயின் ஹாஸ்பிடல், செக்டர் 1, பெல் டவுன்ஷிப், ஹரித்வார் - 249403\n11-ஆவாஸ் விகாஸ், நியர் LIC பில்டிங், வீர்பத்ரா மார்க், ரிஷிகேஷ், உத்தராகண்ட், 249201\n126 உத்தரகண்ட் சஹஸ்திரதாரா ரோடு\nகிரவுண்ட் ஃப்ளோர், ஓம் டவர், ஆப்போசிட். விஸ்டிலிங் வுட்ஸ் அபார்ட்மென்ட்ஸ், சஹஸ்திரதாரா ரோடு, டேராடூன் 248001\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/farm-info/echo-of-corona-ban-salem-mango-sales-at-risk-of-being-paralyzed/", "date_download": "2021-05-07T02:05:55Z", "digest": "sha1:3UKWTWLNQGVBQ6AKVSEXOSM6IG4BWQKA", "length": 16539, "nlines": 132, "source_domain": "tamil.krishijagran.com", "title": "கொரோனா தடை எதிரொலி- சேலம் மாம்பழ விற்பனை முடங்கும் அபாயம்!", "raw_content": "செய்திகள் வாழ்வும் நலமும் தோட்டக்கலை கால்நடை வெற்றிக் கதைகள் விவசாய தகவல்கள் FTB அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா Directory\n#FTB விவசாய தகவல்கள் அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா\nஎங்கள் அச்சு மற்றும் டிஜிட்டல் பத்திரிகைகளுக்கு குழுசேரவும்\nசமூக ஊடகங்களில் எங்களுடன் இணைக்கவும்:\nகொரோனா தடை எதிரொலி- சேலம் மாம்பழ விற்பனை முடங்கும் அபாயம்\nமுக்கனிகளில் முதன்மையானது மாம்பழம். ஆனால், மாம்பழம் என்றாலே சேலத்து மாம்பழம்தான், நம் அனைவரின் நினைவுக்கும் வரும். இதற்கு, அதன் தித்திக்கும் சுவையே நமக்குச் சாட்சி.\nசேலம் மாம்பழம் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. ஆண்டுதோறும் ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் சேலத���தில் மாம்பழ சீசன் தொடங்கும், அதன்படி சேலம் மாவட்டத்தில் தற்போது மாம்பழ சீசன் தொடங்கி உள்ளது.\nசேலம் மார்க்கெட்டிற்கு சங்ககிரி, ஆத்தூர், வனவாசி, மேச்சேரி, நங்கவள்ளி, தலைவாசல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்தும், தினமும் பல வகையான மாம்பழங்கள் விற்பனைக்குக் கொண்டு வரப்படுகின்றன.\nசீசன் தொடங்கிவிட்டதால், கடந்த வாரத்தை காட்டிலும் தற்போது மாம்பழங்கள் வரத்து அதிகரித்துள்ளது.\nபலவகை மாம்பழங்கள் (A variety of mangoes)\nஅதாவது சேலம் பெங்களூரா, மல்கோவா, இமாம்பசந்த், குண்டு நடுசாலை, பங்கனப்பள்ளி, செந்தூரா உள்பட பல்வேறு ரக மாம்பழங்கள் சேலம் மார்க்கெட்டுக்கு விற்பனைக்காகக் கொண்டு வரப்படுகின்றன. இதனை சேலம் மற்றும் அண்டை மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.\nவெளியூர்களுக்கு விற்பனை (Sale to outsiders)\nமேலும் சேலத்தில் இருந்து வெளியூர்களுக்கு மாம்பழங்கள் அனுப்பி வைக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சேலம் வ.உ.சி. மார்க்கெட், கடை வீதி செவ்வாய்ப்பேட்டை, அம்மாபேட்டை, அஸ்தம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரம் வியாபாரிகள் மாம்பழங்களை வைத்து விற்பனை செய்து வருகிறார்கள். தள்ளுவண்டிகளிலும் வியாபாரம் களை கட்டி உள்ளது.\nஇது குறித்து மாம்பழ வியாபாரி ஒருவர் கூறுகையில், மாம்பழ சீசன் தொடங்கியதால் சேலம் மார்க்கெட்டுக்கு கடந்த வாரத்தை காட்டிலும் தற்போது அதிகளவில் மாம்பழங்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. சேலத்தில் இருந்து சென்னை, திருச்சி, நெல்லை, மதுரை, கோவை உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு மாம்பழங்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.\nமாம்பழ ஏற்றுமதி (Export of mangoes)\nமேலும், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளுக்கும் சுவைமிகுந்த மாம்பழங்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. இனிவரும் 15 நாட்களில் மாம்பழங்களின் வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.\nதற்போது சேலம் மார்க்கெட்களில் ஒரு கிலோ மாம்பழம் ரூ.100 முதல் 200 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதற்கிடையே தமிழகத்தில் கொரோனாத் தொற்று வேகமாகப் பரவுவதால் தமிழக அரசு பல்வேறுக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதில் திருவிழாக்கள், சந்தைகளுக்கு கடந்த ஆண்டைப் போல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.\nவருவாய் குறைந்தது (Revenue is low)\nகடந்த ஆண்டும் மாம்பழ சீசன் நேரத்தில் கொரோனா ஊரடங்கால் மா மரங்களில் மகசூல் அதிகமாக இருந்தும், அதை உரிய விலைக்கு விற்பனை செய்ய முடியாமல் போனது. இதனால் விவசாயிகளுக்கு வருவாய் குறைந்தது.\nவிவசாயிகள் எதிர்பார்ப்பு (Farmers expect)\nஇந்த ஆண்டு சீசனிலாவது போதிய வருவாய் பெறலாம் என வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் காத்திருந்தனர். ஆனால் தற்போதும் சீசன் நேரத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கவலையில் உள்ளனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.\n விவசாயிகள் வாழ்வாதாரத்தை காக்க கோரைப்பாயை பயன்படுத்துவோம்\nஈரோடு ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் ரூ.41¼ லட்சத்துக்கு விவசாய விளைபொருட்கள் ஏலம்\nஇயற்கை பூச்சி விரட்டி தயாரிப்பு குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்க பயிற்சி\nஅன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.\nஉங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....\nபங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)\nகொரோனா தடை உத்தரவு சேலத்து மாம்பழம் விற்பனை முடங்கும் அபாயம் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வேதனை Echo of Corona ban Salem mango sales at risk of being paralyzed\nமருத்துவ குணம் நிறைந்த மலைப் பூண்டு- பக்குவப்படுத்தும் பணி துவங்கியது\nபால் வளத்தைப் பெருக்கும் கம்பு நேப்பியர் ஒட்டுப்புல் -சாகுபடி செய்வது எப்படி\nகொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, முழு ஊரடங்கை அமல்படுத்த உச்ச நீதிமன்றம் பரிந்துரை\nகொப்பரை உற்பத்தி செய்ய நவீன இயந்திரம்: விவசாயிகள் மகிழ்ச்சி\n செய்ய வேண்டியவையும், செய்யக் கூடாதவையும்\nவிளைநிலங்களில் வீணாகும் தர்பூசணி பழங்கள்\nபூச்சிகளைப் புரிந்து கொள்(ல்)வோம்- காணொளி மூலம் பயிற்சி\nரூ.4000 கொரோனா நிவாரண நிதிவழங்கும் திட்டம் - நாளை ஸ்டாலின் முதல் கையெழுத்து\nவாடிக்கையாளர்களுக்கு புதியவகை டிசைனர் சிலிண்டரை அறிமுகம் செய்த IOCL\nஒரே நிமிடத்தில் cowin.gov.in தளத்தில் கொரோனா ��டுப்பூசி பதிவு செய்வது எப்படி\nபருத்தியைத் தாக்கும் மாவுப்பூச்சிகளை எப்படி கட்டுப்படுத்தலாம்\nகொரோனாவைத் தடுக்கும் முயற்சியில், புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்\nஒன்றல்ல, இரண்டல்ல, ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள்\nதொற்றுநோய்களைத் தடுக்கும் ஊட்டச்சத்து அணுகுண்டு எது தெரியுமா\nமாடித்தோட்டத்திற்கு ஏற்ற மண் கலவை வகைகள் எவை\nவிவசாயிகள் நலன் கருதி சாகுபடி தொடர்பான சந்தேகம் ஏற்பட்டால் வேளாண் விஞ்ஞானிகளை அணுகலாம்: தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/crime/23756-suspicion-on-wife-s-behavior-and-women-was-murdered-by-her-husband.html", "date_download": "2021-05-07T01:12:36Z", "digest": "sha1:JE2RUK72PORIE2ZGNRQFHMWMPMVAK2TT", "length": 12314, "nlines": 103, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "மனைவியின் நடத்தையில் சந்தேகம்.. கழுத்து அறுக்கப்பட்டு இரத்த வெள்ளத்தில் மிதந்த பெண்.. | Suspicion on wifes behavior and women was murdered by her husband - The Subeditor Tamil", "raw_content": "\nமனைவியின் நடத்தையில் சந்தேகம்.. கழுத்து அறுக்கப்பட்டு இரத்த வெள்ளத்தில் மிதந்த பெண்..\nமனைவியின் நடத்தையில் சந்தேகம்.. கழுத்து அறுக்கப்பட்டு இரத்த வெள்ளத்தில் மிதந்த பெண்..\nஓசூரில் கணவன், மனையின் மேல் உள்ள சந்தேகத்தின் அடிப்படையில் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nவேலூர் மாவட்டத்தில் உள்ள ஓசூரை சேர்ந்தவர் மணிகண்டன் (30). இவர் அதே ஊரில் உள்ள சிப்காட் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு 4 ஆண்டுகளுக்கு முன்னே பெங்களூரை சேர்ந்த சிந்துஜா (27) என்ற பெண்ணுடன் பெரியவர்களால் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 3 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது.இந்நிலையில் சிந்துஜா தினமும் போனில் அதிக நேரம் யாரோ ஒருவரிடம் பேசி வந்துள்ளார். இதனை நோட்டம் செய்த மணிகண்டனின் மனதில், சிந்துஜாவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதைக்குறித்து மணிகண்டன் விசாரித்த பொழுது சிந்துஜா திமிறாக நடந்துள்ளதால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த மணிகண்டன் கத்தியால் மனைவியின் கழுத்தை கதற கதற அறுத்துள்ளார். அந்த பெண் சம்பவ இடத்திலே இறந்து இரத்த வெள்ளத்தில் மிதந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.\nஇதையடுத்து மணிகண்டன் தன் மனைவியை கொலை செய்த காரணத்திற்காக அட்கோ போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார். போலீஸ் மணிகண���டன் மேல் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். பிறகு சிந்துஜாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.\nYou'r reading மனைவியின் நடத்தையில் சந்தேகம்.. கழுத்து அறுக்கப்பட்டு இரத்த வெள்ளத்தில் மிதந்த பெண்.. Originally posted on The Subeditor Tamil\nகுரூப்பிசம்,அனிதாவின் டார்கெட் ,ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் - பிக் பாஸில் என்ன நடந்தது\nகண்ணடித்த நடிகை படு கவர்ச்சிக்கு துணிந்தார்.. திட்டித்தீர்த்த நெட்டீஸன்கள்..\nஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…\nதம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…\nஆசைக்கு இணங்க மறுத்த பெண் - குத்தகைதாரர் வெறிச்செயல்\nகர்நாடகாவில் தடுபூசி போட்ட பெண்ணிற்கு நிகழ்ந்த கொடுமை\nபிறந்தநாள் விழாவிற்கு சென்ற 12 வயது சிறுமி… மொட்டைமாடியில் வைத்து இளைஞர் வெறிச்செயல்...\nமனைவியுடன் உல்லாசமாக இருந்த உதவியாளர்… கோயிலுக்கு அழைத்துச்சென்று அர்ச்சனை செய்த பூசாரி\n17வயது சிறுமியை 2 ஆண்டுகளாக பலாத்காரம் செய்த பலர் – உறைய வைக்கும் தகவல்கள்\nமனைவியின் தங்கைக்கூட உறவு… கண்டித்த கர்ப்பிணி பெண்ணிற்கு நிகழ்ந்த கொடூரம்\nஇரண்டு மரங்களை வெட்டியவருக்கு ரூ.1.21 கோடி அபாரதமாம்\nஇளம் பெண்ணை வசியப்படுத்திய தண்ணி கேன் சப்ளேயர் : குடும்பத்தினர்கள் விபரீதம்..\n14 வயது சிறுமியின் அந்தரங்க வீடியோக்களை வைத்து மிரட்டல்… பெற்றோர் அதிர்ச்சி..\n2 ஆண்டுகளாக சிறுமியை கற்பழித்த 3 பேர்… தாம்பரத்தில் நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்…\nசிறுமிக்கு ஆபாச வீடியோ அனுப்பிய திமுக பிரமுகரை பின்னி பெடலெடுத்த உறவினர்கள்\nதாயை கொன்று உடலை சாப்பிட்ட மகன்\nபல ஆண்களுடன் தொடர்பு.. காதலனிடம் கூறிவிட்டு இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…\nமேற்கு வங்காளம்: பாரதிய ஜனதாவின் கணக்கு தோற்றது எங்கு\nஉதயநிதிக்கு பதவி இல்லை: தமிழ்நாடு அரசின் புதிய அமைச்சர்கள் யார்\nகோவிட் தடுப்பூசி பற்றிய போலி எஸ்எம்எஸ்: கிளிக் செய்தால் ஆபத்து\nஇதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா – புதிய கட்டுப்பாடுகள் என்ன\nமக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்\n - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி\nபுறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு\nஎதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்\nஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்\nதிமுக அமைச்சரவையில் யாருக்கு என்ன பொறுப்பு…\nமனைவியுடன் உல்லாசமாக இருந்த உதவியாளர்… கோயிலுக்கு அழைத்துச்சென்று அர்ச்சனை செய்த பூசாரி\nமுதலமைச்சர் ஆனதும் ஸ்டாலினின் முதல் கையெழுத்து இதுதான்.. முழு எதிர்பார்ப்பில் மக்கள்..\nகோவிட்-19: ஆக்ஸிஜன் அளவை சோதிப்பது எப்படி\nராஜினாமா முடிவில் கே.பி.முனுசாமி – திமுகவுக்கு லாபமாக அமையுமா\nஇரவோடு இரவாக மேலும் புதியக் கட்டுப்பாடுகள் அறிவிப்பு : முழு விபரம்…\n1000ரூபாய் கையிருப்பு கூரை வீடு – சட்டமன்றத்தில் நுழையும் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ மாரிமுத்து\n தேமுதிக வீழ்ச்சிக்கு இதான் காரணம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muthootgoldpoint.com/ta/gold-rate-price-bangalore/", "date_download": "2021-05-07T00:01:03Z", "digest": "sha1:VAQL2SJHXLC62PZPHJFXSPCM64CQD3BQ", "length": 16940, "nlines": 133, "source_domain": "www.muthootgoldpoint.com", "title": "Today Gold Rate in Bangalore, Current 22 & 24 Carat Gold Price Per Gram in Bangalore - Muthoot Gold Point", "raw_content": "\nநான் எனது வீட்டின் கட்டுமானத்துக்குத் தேவையான பணத்துக்காக -எனது காண்ட்ராக்டர் எங்களை ஏமாற்றி இருந்தார் - சில நகைகளை விற்க விரும்பினேன். ஒரு அரசுப் பேருந்தில் எம். பி.ஜி -யின் விளம்பரத்தைப் பார்த்த நான், அதிகமான தேவையுடன் இருந்ததால் அவர்களைச் சந்திக்க முடிவு செய்தேன். இதற்கு முன்னர் தங்கத்தை விற்பன.. மேலும் படிக்க\nமுத்தூட் கோல்டு பாயிண்ட்டை என்னால் எப்போதும் மறக்க முடியாது. சரியான நேரத்தில் எம்.பி.ஜி -யைப் பற்றி எனக்குத் தெரியாமல் போயிருந்தால், நான் எல்லாவற்றையும் இழந்திருப்பேன். குடும்பம் மற்றும் வியாபாரத்தில், உங்களுக்குப் பணம் மிகவும் தேவையாக இருக்கும் பொழுது, அது தட்டுப்பாடாக இருக்கிறது. அது போன்ற நேரங்.. மேலும் படிக்க\nநான் என்னுடைய மூத்த மகனின் கடைசி வருட பொறியியல் கல்லூரி கட்டணத்தைக் கட்ட வேண்டி இருந்தது, என்னிடம் போதுமான அளவு பணம் இல்லை. நாங்கள் பல வருடங்களாக சேர்த்து வைத்திருந்த வெள்ளி நாணயங்கள், மற்றும் தங்க நகைகளை விற்பனை செய்யுமாறு என்னுடைய மனைவி என்னிடம் கூறினார். நான் சில உள்ளூர் கடைகளுக்கு சென்ற பின்னர.. மேலும் படிக்க\nஎன்னுடைய அப்பாவுக்கு அவசரமாக பை-பாஸ் சிகிச்சை செய்ய வேண்டியிருந்த போது, நான் உடனே அனைத்து நகைகளையும் எடுத்துக் கொண்டு எம்.பி.ஜி -க்கு சென்றேன். நான் ஏற்கனவே அவர்களிடம் பரிவர்த்தனை செய்துள்ளேன். நான் அவர்களிடம் முதன் முறையாகக் கடன் பெற்றது, நான்கு வருடங்களுக்கு முன்னர் என்னுடைய அழகு நிலையத்தைத் தொட.. மேலும் படிக்க\nதொலைபேசி/மொபைல்/எஸ்.எம்.எஸ்/மின்னஞ்சல் முகவரி வாயிலாக, தங்களின் சேவை பற்றிய தகவல்கள்/விளம்பரங்களைத் தெரிவிப்பதற்காக என்னை அழைக்க/தொடர்பு கொள்ள, முத்தூட் எக்சிம் பிரைவேட் லிமிடெட், மற்றும் பிற முத்தூட் பாப்பச்சன் குழும நிறுவனங்களுக்கு (அவற்றின் முகவர்கள்/பிரதிநிதிகள் உட்பட), நான் அங்கீகாரமளிக்கிறேன்.\nநீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் கீழுள்ள இடங்களில் உள்ள எங்கள் கிளைக்கு வருவது தான் அகமதாபாத், பெங்களூர், பெர்ஹாம்பூர், சென்னை, கோயம்புத்தூர், டெல்லி, எர்ணாகுளம், கொல்கத்தா, மதுரை, விஜயவாடா மற்றும் திருச்சி\nஅகமதாபாத், பெங்களூர், பெர்ஹாம்பூர், சென்னை, கோயம்புத்தூர், டெல்லி, மும்பை, எர்ணாகுளம், கொல்கத்தா, மதுரை, விஜயவாடா மற்றும் திருச்சி\nஎங்களுடைய பிற இணையதளங்களைத் தேர்வு செய்யவும்\nஎங்களுடைய கட்டணமில்லா தொலைபேசி எண்\nஎங்கள் கட்டணம்-இல்லாத தொலைபேசி எண்ணுக்கு அழைத்து,\nஎங்கள் வாடிக்கையாளர் சேவை மையப் பிரதிநிதியிடம் பேசுங்கள்.\nமுத்தூட் எக்சிம் பிரைவேட் லிமிடெட்\n40/7384 முத்தூட் டவர்ஸ், எம்.ஜி. சாலை,\nடெக்மேக்னட் மூலம் இணையதள வடிவமைப்பு\nபதிப்புரிமை © முத்தூட் எக்ஸிம் பிரைவேட் 2021 - அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "https://www.vativamaippu.com/?CAT=4-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D&P=2", "date_download": "2021-05-07T00:16:47Z", "digest": "sha1:U4XJKPDJOR6QK4UIRY4VKOC3O4QHP5YT", "length": 17223, "nlines": 94, "source_domain": "www.vativamaippu.com", "title": " கிராபிக்ஸ் - வடிவமைப்பு இதழ்", "raw_content": "\nஉலகளவில் வடிவமைப்பாளர்களிடமிருந்து நல்ல வடிவமைப்புகளைக் கண்டறியவும்.\nஉலகளாவிய பிராண்டுகளிலிருந்து புதுமையான தயாரிப்புகளைக் கண்டறியவும்.\nஉலகளாவிய கட்டடக் கலைஞர்களிடமிருந்து சிறந்த கட்டடக்கலை திட்டங்களைக் கண்டறியவும்.\nசர்வதேச ஆடை வடிவமைப்பாளர்களிடமிருந்து படைப்பு பேஷன் வடிவமைப்புகளைக் கண்டறியவும்.\nபடைப்பு பேஷன் டிசைன்களை ஆராயுங்கள்\nஉலகளாவிய கிராபிக்ஸ் வடிவமைப்பாளர்களிடமிருந்து சிறந்த கி��ாஃபிக் வடிவமைப்புகளைக் கண்டறியவும்.\nசிறந்த கிராஃபிக் வடிவமைப்புகளை ஆராயுங்கள்\nஉலகளாவிய வடிவமைப்பு நிறுவனங்களிலிருந்து சிறந்த மூலோபாய வடிவமைப்புகளைக் கண்டறியவும்.\nசிறந்த மூலோபாய வடிவமைப்புகளை ஆராயுங்கள்\nவெள்ளி 30 ஏப்ரல் 2021\nலோகோ வுன்லின் கலை அருங்காட்சியகம் வுஹான் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்திருந்ததால், எங்கள் படைப்பாற்றல் பின்வரும் குணாதிசயங்களை பிரதிபலிக்க வேண்டியிருந்தது: மாணவர்கள் கலையை மதிக்கவும் பாராட்டவும் ஒரு மைய சந்திப்பு புள்ளி, அதே நேரத்தில் ஒரு பொதுவான கலைக்கூடத்தின் அம்சங்களைக் கொண்டுள்ளது. இது 'மனிதநேயம்' என்றும் வர வேண்டியிருந்தது. கல்லூரி மாணவர்கள் தங்கள் வாழ்க்கையின் தொடக்க வரிசையில் நிற்கும்போது, இந்த கலை அருங்காட்சியகம் மாணவர்களின் கலைப் பாராட்டுதலுக்கான தொடக்க அத்தியாயமாக செயல்படுகிறது, மேலும் கலை அவர்களுடன் வாழ்நாள் முழுவதும் வரும்.\nவியாழன் 29 ஏப்ரல் 2021\nலோகோ ஷாப்பிங் மால், ஒரு பாதசாரி தெரு, மற்றும் ஒரு எஸ்ப்ளேனேட் உள்ளிட்ட பல பொழுதுபோக்கு இடங்களை கலீடோ மால் வழங்குகிறது. இந்த வடிவமைப்பில், வடிவமைப்பாளர்கள் காலீடோஸ்கோப்பின் வடிவங்களைப் பயன்படுத்தினர், மணிகள் அல்லது கூழாங்கற்கள் போன்ற தளர்வான, வண்ணப் பொருள்களுடன். கெலிடோஸ்கோப் பண்டைய கிரேக்க from (அழகான, அழகு) மற்றும் εἶδος (காணப்படுவது) ஆகியவற்றிலிருந்து பெறப்பட்டது. இதன் விளைவாக, மாறுபட்ட வடிவங்கள் பல்வேறு சேவைகளை பிரதிபலிக்கின்றன. படிவங்கள் தொடர்ந்து மாறுகின்றன, பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தவும் வசீகரிக்கவும் மால் பாடுபடுகிறது என்பதை நிரூபிக்கிறது.\nபுதன் 28 ஏப்ரல் 2021\nஇழுப்பறைகளின் மார்பு ஆர்ட்டெனெமஸுக்கான எக்கார்ட் பெகரின் பிளாக் லாபிரிந்த் என்பது இழுப்பறைகளின் செங்குத்து மார்பு ஆகும், இது 15 இழுப்பறைகளுடன் ஆசிய மருத்துவ பெட்டிகளிலிருந்தும் ப au ஹாஸ் பாணியிலிருந்தும் அதன் உத்வேகத்தை ஈர்க்கிறது. அதன் இருண்ட கட்டடக்கலை தோற்றம் பிரகாசமான மார்க்கெட்ரி கதிர்கள் மூலம் மூன்று மைய புள்ளிகளுடன் உயிர்ப்பிக்கப்படுகிறது, அவை கட்டமைப்பைச் சுற்றி பிரதிபலிக்கின்றன. சுழலும் பெட்டியுடன் செங்குத்து இழுப்பறைகளின் கருத்தாக்கமும் பொறிமுறையும் அதன் சுவாரஸ்யமான தோற்றத்தை வெளிப்படுத்துகி��்றன. மர அமைப்பு கருப்பு சாயப்பட்ட வெனியால் மூடப்பட்டிருக்கும், அதே சமயம் மார்க்வெட்ரி எரியும் மேப்பிளில் செய்யப்படுகிறது. ஒரு சாடின் பூச்சு அடைய வெனீர் எண்ணெயிடப்படுகிறது.\nசெவ்வாய் 27 ஏப்ரல் 2021\nநகர்ப்புற சிற்பங்கள் சாண்டாண்டர் வேர்ல்ட் என்பது உலகக் கப்பல் சாம்பியன்ஷிப் சாண்டாண்டர் 2014 க்கான தயாரிப்பில் கலையை கொண்டாடும் சான்டாண்டர் (ஸ்பெயின்) நகரத்தை உள்ளடக்கிய ஒரு சிற்பக் கலைகளை உள்ளடக்கிய ஒரு பொது கலை நிகழ்வு ஆகும். 4.2 மீட்டர் உயரமுள்ள இந்த சிற்பங்கள் தாள் எஃகு மற்றும் ஒவ்வொன்றும் அவற்றில் வெவ்வேறு காட்சி கலைஞர்களால் உருவாக்கப்படுகின்றன. துண்டுகள் ஒவ்வொன்றும் 5 கண்டங்களில் ஒன்றாகும். கலாச்சார பன்முகத்தன்மை மீதான அன்பையும் மரியாதையையும் சமாதானத்திற்கான ஒரு கருவியாக, வெவ்வேறு கலைஞர்களின் கண்களால் பிரதிநிதித்துவப்படுத்துவதும், சமூகம் பன்முகத்தன்மையை திறந்த ஆயுதங்களுடன் வரவேற்கிறது என்பதையும் காண்பிப்பதே இதன் பொருள்.\nதிங்கள் 26 ஏப்ரல் 2021\nசுவரொட்டி சூக் இளமையாக இருந்தபோது, மலையில் ஒரு அழகான பறவையைப் பார்த்தாள், ஆனால் பறவை விரைவாக பறந்து சென்றது, பின்னால் ஒலி மட்டுமே இருந்தது. பறவையைக் கண்டுபிடிக்க அவள் வானத்தில் பார்த்தாள், ஆனால் அவளால் பார்க்க முடிந்ததெல்லாம் மரக் கிளைகளும் காடுகளும் தான். பறவை பாடிக்கொண்டே இருந்தது, ஆனால் அது எங்கே என்று அவளுக்கு தெரியாது. மிகச் சிறிய வயதிலிருந்தே, பறவை அவளுக்கு மரக் கிளைகளாகவும் பெரிய காடுகளாகவும் இருந்தது. இந்த அனுபவம் காடு போன்ற பறவைகளின் ஒலியைக் காட்சிப்படுத்தியது. பறவையின் ஒலி மனதையும் உடலையும் தளர்த்தும். இது அவரது கவனத்தை ஈர்த்தது, இதை அவர் மண்டலத்துடன் இணைத்தார், இது பார்வை குணப்படுத்துதலையும் தியானத்தையும் குறிக்கிறது.\nஞாயிறு 25 ஏப்ரல் 2021\nஅட்டவணை ஹரி ராயாவைப் பற்றிய ஒரு விஷயம் - கடந்த காலத்தின் காலமற்ற ராயா பாடல்கள் இன்றும் மக்களின் இதயங்களுக்கு நெருக்கமாக இருக்கின்றன. 'கிளாசிக்கல் ராயா' கருப்பொருளைக் காட்டிலும் அதையெல்லாம் செய்ய சிறந்த வழி எது இந்த கருப்பொருளின் சாரத்தை வெளிப்படுத்த, பரிசு தடை அட்டவணை பழைய வினைல் பதிவை ஒத்ததாக வடிவமைக்கப்பட்டுள்ளது. எங்கள் குறிக்கோள்: 1. தயாரிப்பு காட்சிகள் மற்றும் அந்தந்த விலைகளைக் கொண்ட பக்கங்களைக் காட்டிலும், ஒரு சிறப்பு வடிவமைப்பை உருவாக்குங்கள். 2. கிளாசிக்கல் இசை மற்றும் பாரம்பரிய கலைகளுக்கான பாராட்டு அளவை உருவாக்குங்கள். 3. ஹரி ராயாவின் ஆவி வெளியே கொண்டு வாருங்கள்.\nஅசல் மற்றும் ஆக்கபூர்வமான வடிவமைப்புகள், கலை, கட்டிடக்கலை, ஃபேஷன், கிராபிக்ஸ் வடிவமைப்பு, புதுமை மற்றும் வடிவமைப்பு உத்தி ஆகியவற்றை நாங்கள் விரும்புகிறோம். தினமும், திறமையான வடிவமைப்பாளர்கள், படைப்பாற்றல் கலைஞர்கள், புதுமையான கட்டிடக் கலைஞர்கள் மற்றும் சிறந்த பிராண்டுகளின் நல்ல வடிவமைப்புகளைத் தேர்ந்தெடுத்து வெளியிடுகிறோம். நல்ல வடிவமைப்பிற்கான உலகளாவிய பாராட்டையும் விழிப்புணர்வையும் உருவாக்குவதே எங்கள் நோக்கம்.\nHaezer ஆல்பம் கவர் கலை வியாழன் 6 மே\nUp குளியலறை சேகரிப்பு புதன் 5 மே\nIl Mosnel QdE 2012 பிரகாசமான ஒயின் லேபிள் மற்றும் பேக் செவ்வாய் 4 மே\nநீங்கள் ஒரு வடிவமைப்பாளர், கலைஞர், கட்டிடக் கலைஞர், புதுமைப்பித்தன் அல்லது பிராண்ட் மேலாளரா பகிர்வதற்கு உங்களிடம் ஏதேனும் நல்ல வடிவமைப்புகள் உள்ளதா பகிர்வதற்கு உங்களிடம் ஏதேனும் நல்ல வடிவமைப்புகள் உள்ளதா உலகளவில் வடிவமைப்பாளர்கள், கலைஞர்கள், கட்டட வடிவமைப்பாளர்கள், கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் பிராண்டுகளிலிருந்து அசல் மற்றும் ஆக்கபூர்வமான வடிவமைப்புகளை வெளியிடுவதில் நாங்கள் மிகவும் ஆர்வமாக உள்ளோம். உங்கள் வடிவமைப்புகளை இன்று வெளியிடவும்.\nஅன்றைய வடிவமைப்பு நேர்காணல் வியாழன் 6 மே\nஅன்றைய வடிவமைப்பு புராணக்கதை புதன் 5 மே\nஅன்றைய வடிவமைப்பு செவ்வாய் 4 மே\nஅன்றைய வடிவமைப்பாளர் திங்கள் 3 மே\nஅன்றைய வடிவமைப்பு குழு ஞாயிறு 2 மே\nலோகோ லோகோ இழுப்பறைகளின் மார்பு நகர்ப்புற சிற்பங்கள் சுவரொட்டி அட்டவணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-05-07T02:17:08Z", "digest": "sha1:75AMXLWKGOXA56VKNZYSW5PXJ6G26ED7", "length": 17701, "nlines": 59, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கிராம் சாயமேற்றல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகிராம் சாயமேற்றல் (Gram Staining) என்பது பாக்டீரியாக்களை இரு பெரும் வகைகளாகப் பிரிப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு சாயமேற்றல் முறையாகும். இந்தப் பெயரானது, இம்முறையைக் கண்டுபிடித்த ஹான்ஸ் கிரிஸ்டியன் கிராம் ���ன்ற டென்மார்க் நாட்டு அறிவியலாளரின் பெயரைக் கொண்டு ஏற்படுத்தப்பட்டதாகும்[1].\nகிராம் சாயமேற்றலில், கிராம்-நேர் பாக்டீரியாவான Staphylococcus aureus ஊதா நிறத்திலும், கிராம்-எதிர் பாக்டீரியாவான எசரிக்கியா கோலை இளஞ்சிவப்பு நிறத்திலும் கலந்து காணப்படுகின்றன\nஇந்தச் சாயமேற்றல் முறை மூலம் பக்டீரியாக்கள் கிராம்-நேர் பாக்டீரியாக்கள், கிராம்-எதிர் பாக்டீரியாக்கள் என இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன. பக்டீரியாக்களின் அமைப்பைப் பொறுத்து, சாயமேற்றலின்போது இவை வெவ்வேறு நிறங்களைப் பெறுகின்றமையால், இவற்றை வேறுபடுத்த முடிகின்றது. முக்கியமாக இவற்றின் கலச்சுவரில் இருக்கும் வேறுபாடே இவற்றை வேறுபடுத்த உதவுகின்றது. பக்டீரியாக்கள் பற்றிய ஆராய்ச்சிகளில் பக்டீரியாக்களைக் கண்டறிய ஈடுபடுத்தப்படும் முதல் முறை கிராம் சாயமேற்றலாகும். எனினும் இது சில வகை பக்டீரியாக்களில் ஒழுங்காக வேலை செய்யாது- அதாவது அவற்றில் இடைப்பட்ட முடிவுகளைத் தரலாம். எனவே தற்காலத்தில் பக்டீரியாக்களை இனங்காண்பதற்காக இச்சாயமேற்றலுக்கு அடுத்த படியாக மரபணுப் பரிசோதனையும் மேற்கொள்ளப்படுகின்றது.\n2.1 கிராம் சாயமேற்றும் முறை\nகிராம் சாயமேற்றல் முறையை பேர்லின் மருத்துவமனையில் வேலை செய்து கொண்டிருந்த ஹான்ஸ் கிரிஸ்டியன் கிராம் (1853–1938) என்ற டென்மார்க் நாட்டு விஞ்ஞானி 1884ஆம் ஆண்டு கண்டுபிடித்தார். நுணுக்குக்காட்டியில் பக்டீரியாக்களை இலகுவாகப் பார்வையிடுவதற்காகவே இவர் இம்முறையை விருத்தி செய்தார். எனினும் இம்முறை தற்போது பக்டீரியாக்களைப் பிரித்தறிவதற்காகவே பயன்படுத்தப்படுகின்றது.\nஇச்சாயமேற்றல் முறை மூலம் பக்டீரியாக்களை கிராம்-நேர் மற்றும் கிராம்-எதிர் பக்டீரியாக்கள் என இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்க முடிகின்றது. பக்டீரியாக்களின் கலச்சுவர் பெப்டிடோகிளைக்கன் எனும் பல்சக்கரைட்டு மற்றும் இணைக்கப்பட்ட அமினோ அமிலங்களாலானது. கிராம் நேர் பக்டீரியாக்களின் கலச்சுவர் அதிக தடிப்புடையது என்பதால் கிராம் சாயமேற்றலின் போது இடப்படும் பளிங்கு ஊதா சாயத்தை ஏற்கின்றன. இதனால் கிராம்-நேர் பக்டீரியாக்களை கிராம் சாயமேற்றலின் பின்னர் நுணுக்குக்காட்டியினால் அவதானித்தால் அவை ஊதா நிறத்தில் காட்சியளிக்கின்றன. எனினும் கிராம்-��திர் பக்டீரியாக்களில் கலச்சுவரின் பெப்டிடோகிளைக்கன் படை மிகவும் தடிப்புக் குறைவாக இருப்பதால் இவை ஏற்கும் பளிங்கு ஊதா சாயம் அற்கஹோலால் கழுவப்படும் போது அகற்றப்பட்டு விடுகின்றது. இதனால் பின்னர் இடப்படும் குங்குமச் சாயத்தையே இவை ஏற்கின்றன. இதனால் கிராம்-எதிர் பக்டீரியாக்கள் கிராம் சாயமேற்றலின் பின்னர் குங்குமத்துக்குரிய இளஞ்சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கின்றன.\nபக்டீரியாக்களைப் போல ஆர்க்கியா பெப்டிடோகிளைக்கனாலான கலச்சுவரைக் கொண்டிராமையால் இவற்றை கிராம் சாயமேற்றலின் மூலம் பிரித்தறிய முடியாது.\nகிராம் சாயமேற்றலில் பிரதானமாக நான்கு படிகள் உள்ளன:\nபக்டீரியாக்களைச் சூடாக்கி அவற்றின் மீது முதன்மைச் சாயமான பளிங்கு ஊதாச் சாயத்தை இட வேண்டும்.\nபின்னர் வழுக்கி மீது அயோடீன் கரைசல் இட வேண்டும். அயோடீன் பளிங்கு ஊதாச் சாயத்தை கலச்சுவரில் நிலைப்படுத்த உதவும்.\nஅல்கஹோல் அல்லது அசிட்டோனால் நிறநீக்கம் செய்ய வேண்டும்.\nகுங்குமப்பூச் சாயம் மூலம் மீண்டும் நிறமூட்டல் வேண்டும்.\nபளிங்கு ஊதாச் சாயத்தை (Crystal Violet- CV) நீரில் கரைக்கும் போது அது CV+ மற்றும் Cl- அயன்களாகப் பிரிகையடையும். இந்த இரண்டு அயன்களும் கிராம்-நேர் மற்றும் கிராம்-எதிர் ஆகிய இரு வகை பக்டீரியாக்களின் கலச்சுவரினூடாகவும் ஊடுருவும். CV+ அயன் பக்டீரியக் கலங்களிலுள்ள மறையேற்றமுள்ள அயன்களுடன் தாக்கமடைந்து சாயமேற்றப்பட்ட பக்டீரியாக்களை ஊதா நிறமாக மாற்றுகின்றது. பின்னர் இடப்படும் அயோடின் (I- அல்லது I3-) கலங்களிலுள்ள CV+ உடன் தாக்கமடைந்து கல்த்தினுள்ளும் கலச்சுவரிலும் பளிங்கு ஊதா-அயோடீன் சிக்கல்களை (CV-I) உருவாக்குகின்றது. இச்சிக்கல்கள் ஊதா நிறத்தை நிலைப்படுத்துகின்றன. எனவே இந்நிலையில் நுணுக்குக்காட்டியூடாக அவதானித்தால் கிராம்-நேர் மற்றும் கிராம்-எதிர் ஆகிய இரு வகைகளும் ஒரே மாதிரியாக ஊதா நிறத்திலேயே தோற்றமளிக்கும்.\nகிராம் சாயமேற்றலின் முக்கியமான படிமுறை நிறநீக்கல் பதார்த்தங்களான அற்கஹோல் அல்லது அசிட்டோன் ஆகியவற்றை இடுதலாகும். கிராம்-எதிர் பக்டீரியாக்கள் மெல்லிய பெப்டிடோகிளைக்கன் கலச்சுவருக்கு வெளிப்புறமாக ஒரு இலிப்போ-பல்சக்கரைட்டு மென்சவ்வைக் கொண்டிருக்கின்றன. கிராம்-நேர் பக்டீரியாக்கள் பிரதான பொஸ்போ-இலிப்பிட்டு மென்���வ்வுக்கு வெளிப்புறமாக பல அடுக்குகளைக் கொண்ட தடித்த பெப்டிடோகிளைக்கனாலான கலச்சுவரைக் கொண்டுள்ளன. அற்கஹோல் கிராம்-எதிர் பக்டீரியாக்களின் இலிப்போ-பல்சக்கரைட்டு மென்சவ்வுடன் தாக்கமடைந்து அம்மென்சவ்வை அகற்றி விடுகின்றது. அம்மென்சவ்வுடன் சேர்த்து CV-I ஊதா நிறச் சாயமும் அகற்றப்பட்டு விடும். ஆனால் கிராம்-நேர் பக்டீரியாக்களில் நிறப்பொருள் அகற்றப்படுவதில்லை. அற்கஹோல் கிராம்-நேர் பக்டீரிய கலத்தில் நீரிழப்பைத் தூண்டுவதால் பளிங்கு ஊதாச்சாயம் கலத்துள் சிக்கப்பட்டு கலத்தின் ஊதா நிறம் தொடர்ந்தும் பேணப்படுகின்றது. எனினும் இப்படிமுறை அவதானமாகச் செய்தல் அவசியமாகும். நிறநீக்கியான அற்கஹோலை சில நொடிகளுக்கு மேல் வழுக்கியில் பேணக் கூடாது. நீண்ட நேரம் அற்கஹோல் பேணப்பட்டால் கிராம்-நேர் பக்டீரியாக்களிலுள்ள ஊதா நிறமும் அகற்றப்பட்டு விடலாம்.\nகிராம்-நேர், கிராம்-எதிர் பாக்டீரியாக்களின் அமைப்பில் காணப்படும் வேறுபாடு\nகிராம்-நேர் பக்டீரியாக்கள் பொதுவாக கலத்தைச் சூழ ஒரு பொஸ்போ-இலிப்பிட்டு மென்சவ்வையும், அதனைச் சூழ தடிப்பான பெப்டிடோகிளைக்கன் கலச்சுவரையும் கொண்டுள்ளன. Firmicutes மற்றும் Actinobacteria வகைகளைச் சேர்ந்த பக்டீரியாக்கள் இவ்வாறு உள்ளன.\nஇவற்றின் கலக்கட்டமைப்பு சற்று வித்தியாசமானது. கலத்தைச் சூழ முதலில் ஒரு பொஸ்போ-இலிப்பிட்டு மென்சவ்வையும், அதனை அடுத்ததாக மெல்லிய தனிப் படையாலான பெப்டிடோகிளைக்கன் கலச்சுவரையும், அதனை அடுத்ததாக இலிப்போ-பல்சக்கரைட்டாலான இரண்டாவது மென்சவ்வையும் கொண்டுள்ளன. இதுவரை அறியப்பட்ட பக்டீரியாக்களில் அதிகமானவை கிராம்-எதிர் பக்டீரியாக்களாகும். சயனோ பக்டீரியா, ஸ்பைரோகீட்சுக்கள், பச்சை-சல்பர் பக்டீரியாக்கள், அனேகமான புரோட்டியோ பக்டீரியா, எசுச்சீரீச்சியா கொலி ஆகியன கிராம்-எதிர் பக்டீரியாக்களாகும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 09:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2021/04/06045146/Will-the-Delhi-team-reach-the-pinnacle.vpf", "date_download": "2021-05-07T01:47:23Z", "digest": "sha1:GNIZOEQAMBMGAOOJ6PX763JR65HFKNBP", "length": 19926, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Will the Delhi team reach the pinnacle? || உச்சம் தொடுமா டெல்லி அணி?", "raw_content": "Sections செய்திகள் சட்டசபை தேர்தல் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nஉச்சம் தொடுமா டெல்லி அணி\nஉச்சம் தொடுமா டெல்லி அணி\nஐ.பி.எல். போட்டியில் அதிக தோல்வியை சந்தித்த (105 தோல்வி) அணி என்ற மோசமான பொதியை சுமந்து கொண்டு இருக்கும் அணி டெல்லி கேப்பிட்டல்ஸ். 4 முறை ‘பிளே-ஆப்’ சுற்றுக்குள் நுழைந்துள்ள அந்த அணி கடந்த ஆண்டு முதல் முறையாக இறுதிப்போட்டியை எட்டியது.\n14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் பங்கேற்கும் 8 அணிகளில் ஒன்றான டெல்லி கேப்பிட்டல்ஸ் பற்றிய கண்ணோட்டம் வருமாறு:-\nஐ.பி.எல். போட்டியில் அதிக தோல்வியை சந்தித்த (105 தோல்வி) அணி என்ற மோசமான பொதியை சுமந்து கொண்டு இருக்கும் அணி டெல்லி கேப்பிட்டல்ஸ். 4 முறை ‘பிளே-ஆப்’ சுற்றுக்குள் நுழைந்துள்ள அந்த அணி கடந்த ஆண்டு முதல் முறையாக இறுதிப்போட்டியை எட்டியது.\nகடந்த சீசனில் முதல் 9 லீக் ஆட்டங்களில் 7-ல் வெற்றி பெற்று முன்னிலை வகித்து அனைவரின் கவனத்தையும் கவர்ந்த ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி அணி அடுத்த 4 ஆட்டங்களில் தொடர்ச்சியாக தோல்வியை தழுவி தடுமாறியது. கடைசி லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை வீழ்த்தி புள்ளி பட்டியலில் 2-வது இடத்தை பிடித்து ‘பிளே-ஆப்’ சுற்றுக்குள் நுழைந்தது. எல்லா அணிகளையும் பந்தாடி பரவசப்படுத்திய டெல்லி அணி, முரட்டு காளையாக வலம் வரும் மும்பையிடம் இறுதிப்போட்டி உள்பட மல்லுக்கட்டிய நான்கு ஆட்டங்களிலும் சரணடைந்ததுடன் கோப்பையையும் கோட்டை விட்டது.\nடெல்லி அணியின் பேட்டிங்கில் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் (2 சதம், 4 அரைசதம் உள்பட 618 ரன்கள்), மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் அய்யர் (3 அரைசதம் உள்பட 519 ரன்கள்) ஆகியோர் அசத்தினார்கள். ஆனால் அந்த அணியின் தொடக்க ஜோடி நிலையாக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. பிரித்வி ஷா, மார்கஸ் ஸ்டோனிஸ், ரஹானே ஆகியோரை மாற்றி, மாற்றி ஷிகர் தவானுடன் தொடக்க வீரராக களம் இறக்கியும் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. நிலையற்ற தொடக்க ஆட்டமும், பேட்டிங்கில் ஒரு சேர ‘கிளிக்’ ஆகாததும் சற்று பின்னடைவாக அமைந்தது. மார்கஸ் ஸ்டோனிஸ் ஆல்-ரவுண்டராக ஜொலித்தது போல் அக்‌ஷர் பட்டேல் பிரகாசிக்கவில்லை. அக்‌ஷர் பட்டேலின் பந்து வீச்சு போல் பேட்டிங் சிறப்பாக அமையவில்லை. தற்போது அக்‌ஷர் பட்டேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதால் முதல் கட்ட ஆட்டங்களில் ஆட முடியாத நிலை உருவாகி இருக்கிறது. சமீபத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விக்கெட்டுகளை அள்ளிய அக்‌ஷர் பட்டேலின் சுழல் இந்த முறை அதிகம் கவனிக்கப்படும்.\nவேகப்பந்து வீச்சு டெல்லி அணிக்கு பிரம்மாஸ்திரமாக இருக்கிறது. கடந்த ஆண்டு தென்ஆப்பிரிக்க பவுலர்களான காஜிசோ ரபடா (30 விக்கெட்), அன்ரிச் நோர்டியா (22 விக்கெட்) ஆகியோர் தங்களது அதிவேக பந்து வீச்சின் மூலம் எதிரணியினரை மிரட்டியதுடன், விக்கெட் அறுவடையிலும் முறையே முதலாவது, 4-வது இடத்தை பிடித்து அணியின் வெற்றிக்கும் முதுகெலும்பாக விளங்கினர்.\nகடந்த முறை சரியாக செயல்படாத மொகித் ஷர்மா, துஷார் தேஷ்பாண்டே, அலெக்ஸ் கேரி உள்பட 5 வீரர்களை கழற்றி விட்ட டெல்லி அணி, டாம் கர்ரன் (ரூ.5¼ கோடி), ஸ்டீவன் சுமித் (ரூ.2.20 கோடி) உள்பட 8 வீரர்களை கடந்த பிப்ரவரியில் நடந்த ஏலத்தின் மூலம் சொந்தமாக்கி தனது வலிமையை அதிகரித்துள்ளது.\nஇந்த நிலையில் யாரும் எதிர்பாராதவிதமாக டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் சமீபத்தில் புனேயில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் தரையில் விழுந்து பந்தை தடுக்க முயலுகையில் இடது தோள்பட்டை இறங்கியதால் இந்த தொடர் முழுவதும் ஆடாமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக 23 வயது இளம் விக்கெட் கீப்பர் மற்றும் அதிரடி பேட்ஸ்மேனான ரிஷாப் பண்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.\nகடந்த ஐ.பி.எல். தொடரில் பெரிய அளவில் சோபிக்காத ரிஷாப் பண்ட், சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான தொடர்களில் அதிரடியில் கலக்கினார். இதே மாதிரி கடந்த சீசனில் 13 ஆட்டங்களில் ஆடி வெறும் 228 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றம் அளித்த பிரித்வி ஷா முந்தைய மாதம் நடந்த விஜய் ஹசாரே கோப்பை போட்டியில் ஒரு இரட்டை சதம், 2 சதம் உள்பட 827 ரன்கள் குவித்து சாதனை படைத்து பழைய நிலைக்கு திரும்பி இருக்கிறார். இது அந்த அணியின் பேட்டிங்கை வலுவாக்கும். ஆன��ல் ஸ்ரேயாஸ் அய்யர் இல்லாததால் ஏற்பட்டுள்ள பெரும் வெற்றிடத்தை எப்படி நிரப்ப போகிறார்கள் என்பது கேள்விக்குறியாகும். கடந்த முறை ஜொலிக்காத ரஹானே, ஹெட்மயர் ஆகியோர் பேட்டிங்கில் ஏற்றம் காண வேண்டியது அவசியமானதாகும். வேகப்பந்து வீச்சு புயல்கள் காஜிசோ ரபடா, அன்ரிச் நோர்டியா ஆகியோர் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் 2 ஒரு நாள் போட்டியில் விளையாடி விட்டு இந்தியா புறப்பட்டுள்ளனர். கட்டாயம் 7 நாட்கள் தனிமைப்படுத்துதல் இருப்பதால் அவர்கள் தொடக்க லீக் ஆட்டத்தில் விளையாட முடியாது.\nரிஷாப் பண்ட் கேப்டன் பொறுப்பின் மூலம் இன்னும் சிறந்த வீரராக உருவெடுப்பார் என்று அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங், முன்னாள் கேப்டன் அசாருதீன் உள்பட பலரும் ஆரூடம் சொல்லி உள்ளனர். அதிக அனுபவம் இல்லாத ரிஷாப் பண்ட் கேப்டன் பொறுப்பை திறம்பட கையாண்டு புதிய சரித்திரம் படைப்பாரா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். அதேநேரத்தில் கோப்பையை கையில் ஏந்த வேண்டும் என்ற ஏக்கத்தை போக்க நீண்ட காலமாக போராடி வரும் டெல்லி இந்த முறையாவது உச்சம் தொடுமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். அதேநேரத்தில் கோப்பையை கையில் ஏந்த வேண்டும் என்ற ஏக்கத்தை போக்க நீண்ட காலமாக போராடி வரும் டெல்லி இந்த முறையாவது உச்சம் தொடுமா\nஅந்த அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் வருகிற 10-ந் தேதி சென்னை சூப்பர் கிங்சை மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் எதிர்கொள்கிறது.\n1. டெல்லியில் புதிதாக 24,235 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 395 பேர் பலி\nடெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 24,235 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\n2. டெல்லியில் தற்போது கொரோனா தடுப்பூசிகள் இல்லை - சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின்\nடெல்லியில் தற்போது கொரோனா தடுப்பூசிகள் இல்லை என்று அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தெரிவித்துள்ளார்.\n3. டெல்லியில் ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் சட்டம் நடைமுறைக்கு வந்தது\nடெல்லியில் எந்தவொரு நடவடிக்கையையும் நிறைவேற்றும் முன்னர் துணைநிலை ஆளுநரின் கருத்தையும் டெல்லி அரசு கேட்கவேண்டும் கட்டாயம் ஆகியுள்ளது.\n4. டெல்லியில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 25 ஆயிரத்தை நெருங்கியது\nடெல்லியில் இன்று மேலும் 24,149 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\n5. டெல்லியில் நேற்றைய கொரோனா பாதிப்பை விட இன்றைய பாதிப்பு சற்று குறைவு\nடெல்லியில் இன்று மேலும் 20,201 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\n1. ஐதராபாத்தை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் 5-வது வெற்றி - ருதுராஜ், பிளிஸ்சிஸ் அரைசதம் விளாசினர்\n2. ‘தோல்விக்கு நானே முழு பொறுப்பு ஏற்கிறேன்’ - ஐதராபாத் அணியின் கேப்டன் வார்னர் பேட்டி\n3. பிரித்வி ஷா அதிரடி அரைசதம்: டெல்லியிடம் வீழ்ந்தது கொல்கத்தா\n4. பெங்களூரு அணியில் நியூசிலாந்து வீரர் குக்கெலின் சேர்ப்பு\n5. டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி: டிவில்லியர்சுக்கு விராட்கோலி புகழாரம்\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/technology/81545-.html", "date_download": "2021-05-07T00:20:15Z", "digest": "sha1:766ONZY7XWNADN55BVQQJB3O6CE5YF6M", "length": 14567, "nlines": 280, "source_domain": "www.hindutamil.in", "title": "பொருள் புதுசு: பேட்டரி சைக்கிள் | பொருள் புதுசு: பேட்டரி சைக்கிள் - hindutamil.in", "raw_content": "வெள்ளி, மே 07 2021\nபொருள் புதுசு: பேட்டரி சைக்கிள்\nஜியோ என்கிற நிறுவனம் புதிய வகையிலான சைக்கிள் சக்கரத்தை வடிவமைத்துள்ளது. சார்ஜ் ஏற்றிக்கொள்ளும் வகையிலான இந்த சக்கரத்தின் மூலம் மணிக்கு 20 கி.மீ வேகம் செல்லலாம். இதை ஒரு நொடியில் கழற்றி மாற்றலாம்.\nஇப்போது பரவலாகிவரும் வயர்லெஸ் சார்ஜரில் ஒரு நேரத்தில் பல போன்களுக்கு சார்ஜ் ஏற்ற முடியாது. அதுபோல அதை கவனமாகவும் கையாள வேண்டும். அந்த பயம் இல்லாமல் இந்த ஸ்மார்ட் சார்ஜரில் ஒரே நேரத்தில் பல போன்களை சார்ஜ் ஏற்றலாம்.\nகுழந்தைகளைக் கவரும் வகையிலான தண்ணீர் குடுவை. ஸ்மார்ட்போனுடன் இணையும் சென்சாருடன் இதன் பக்கவாட்டில் ஸ்கீரீன் உள்ளது. குழந்தைகளைக் கவரும் படங்களை `குலுலு’- வுக்கு அனுப்பி உற்சாகப்படுத்தி தண்ணீர் குடிக்க வைக்கலாம்.\nசீனாவில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வாக, புதிய வகையிலான பேருந்து வடிவமைப்பை வெளியிட்டுள்ளது சீன நிறுவனம் ஒன்று. `டிரான்சிட் எக்ஸ்ப்ளோர் பஸ்’ என்கிற இந்த பேருந்தின் மாதிரியை பெய்ஜிங்கில் நடைபெற்ற தொழில்நுட்ப கண்காட்சியில் வைத்திருந்தனர். சாலையின் நடுவே வாகனங்கள் செல்வதற்கு இடையூறு இல்லாத வகையிலும், பயணிகளுக்கான இருக்கை பேருந்தின் மேல்தளத்திலும் உள்ளது. சாலையின் பக்கவாட்டில் உள்ள தண்டவாளங்கள் மூலம் இது இயங்கும்.\nநிக்சர் டெக் என்கிற கனடாவைச் சேர்ந்த நிறுவனம் பயிர் பாதுகாப்பு சாதனம் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளது. பண்ணைகள், தோட்டங்களில் பறவைகள், விலங்குகளால் ஏற்படும் சேதத்தைத் தவிர்க்க இந்தக் கருவி ஒருங்கிணைந்து செயல்படும். பழைய ஆண்டனா போல கம்பியை நீட்டிக் கொண்டிருக்கும் கருவி ஒன்று ஒலி எழுப்பிக் கொண்டே பறவைகளை விரட்டுகிறது என்றால், தரையில் உள்ள கருவி சிறு சிறு அதிர்வுகள் மூலம் சிறு விலங்குகளை அச்சறுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nபொருள் புதுசுபுதிய தொழில்நுட்பம்நவீன தொழில்நுட்பம்ஜியோபுதிய சக்கரம்ஸ்மார்ட் சார்ஜர்குலுலு பாட்டில்சீனாவின் புதிய பஸ்நவீன பஸ்பயிர் பாதுகாப்புநிக்சர் டெக்பயிர் பாதுகாப்பு சாதனம்\nநந்திகிராமில் தோற்ற மம்தா பானர்ஜி முதல்வர் பதவியில்...\nபிரதமருக்கு வீடு கட்டச் செலவிடும் ரூ.13,450 கோடியில்...\nபிரசாந்தும் சுனிலும்: இரு பிரச்சாரக் கதைகள்\nதிமுக வெற்றியின் முக்கியத்துவம் என்ன\nஅம்மா உணவகம் சூறை; டிடிவி, ஜெயக்குமார் கண்டனம்:...\nமேற்கு வங்கத்தில் பாஜகவை வீழ்த்திய மம்தா: வெற்றிப்...\nமோடி ஒன்றும் வெல்ல முடியாதவர் அல்ல\nஇனி வீடியோக்களை ம்யூட் செய்து அனுப்பலாம்: வாட்ஸ்அப்பில் அறிமுகம்\nரஷ்யா, ஈரான், அர்மேனியாவுடன் தொடர்புடைய நூற்றுக்கணக்கான கணக்குகள் நீக்கம்: ட்விட்டர் அறிவிப்பு\n5ஜி சேவை: குவால்காம் நிறுவனத்துடன் கைகோத்த ஏர்டெல்\nவிளம்பர உள்ளடக்கங்களை சமூக ஊடக ஆளுமைகள் வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும்: விளம்பரக் கட்டுப்பாட்டு...\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nமேலும் 1.5 லட்சம் ஸ்புட்னிக் வி தடுப்பூசிகளை அனுப்பும் ரஷ்யா\nதென்னாப்பிரிக்க சுரங்கத்தில் வெட்டி எடுக்கப்பட்டது: ரூ.210 கோடிக்கு ஏலம் போன இளஞ்சிவப்பு வைரம்\nதிருத்தலம் அறிமுகம்: செங்கனி நாட்டைச் செழிக்க வைத்த செங்கமலநாயகி\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vativamaippu.com/?CAT=4-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D&P=3", "date_download": "2021-05-07T01:37:09Z", "digest": "sha1:ZYDSCTXDQRUDZ4G66CE2PM3PQVIIMYL7", "length": 17553, "nlines": 94, "source_domain": "www.vativamaippu.com", "title": " கிராபிக்ஸ் - வடிவமைப்பு இதழ்", "raw_content": "\nஉலகளவில் வடிவமைப்பாளர்களிடமிருந்து நல்ல வடிவமைப்புகளைக் கண்டறியவும்.\nஉலகளாவிய பிராண்டுகளிலிருந்து புதுமையான தயாரிப்புகளைக் கண்டறியவும்.\nஉலகளாவிய கட்டடக் கலைஞர்களிடமிருந்து சிறந்த கட்டடக்கலை திட்டங்களைக் கண்டறியவும்.\nசர்வதேச ஆடை வடிவமைப்பாளர்களிடமிருந்து படைப்பு பேஷன் வடிவமைப்புகளைக் கண்டறியவும்.\nபடைப்பு பேஷன் டிசைன்களை ஆராயுங்கள்\nஉலகளாவிய கிராபிக்ஸ் வடிவமைப்பாளர்களிடமிருந்து சிறந்த கிராஃபிக் வடிவமைப்புகளைக் கண்டறியவும்.\nசிறந்த கிராஃபிக் வடிவமைப்புகளை ஆராயுங்கள்\nஉலகளாவிய வடிவமைப்பு நிறுவனங்களிலிருந்து சிறந்த மூலோபாய வடிவமைப்புகளைக் கண்டறியவும்.\nசிறந்த மூலோபாய வடிவமைப்புகளை ஆராயுங்கள்\nசனி 24 ஏப்ரல் 2021\nஊடாடும் கலை நிறுவல் பல்ஸ் பெவிலியன் என்பது ஒரு ஊடாடும் நிறுவலாகும், இது ஒளி, வண்ணங்கள், இயக்கம் மற்றும் ஒலியை பல உணர்ச்சி அனுபவத்தில் ஒன்றிணைக்கிறது. வெளிப்புறத்தில் இது ஒரு எளிய கருப்பு பெட்டி, ஆனால் அடியெடுத்து வைப்பது, தலைமையிலான விளக்குகள், துடிக்கும் ஒலி மற்றும் துடிப்பான கிராபிக்ஸ் ஆகியவை ஒன்றாக உருவாக்கும் மாயையில் மூழ்கியுள்ளன. பெவிலியனின் உட்புறத்தில் இருந்து கிராபிக்ஸ் மற்றும் தனிப்பயன் வடிவமைக்கப்பட்ட எழுத்துருவைப் பயன்படுத்தி பெவிலியனின் ஆவிக்கு வண்ணமயமான கண்காட்சி அடையாளம் உருவாக்கப்பட்டுள்ளது.\nவெள்ளி 23 ஏப்ரல் 2021\nவணிக அனிமேஷன் சீன இராசியில், 2019 என்பது பன்றியின் ஆண்டு, எனவே யென் சி வெட்டப்பட்ட பன்றியை வடிவமைத்தார், மேலும் இது சீன மொழியில் \"பல சூடான திரைப்படங்களில்\" ஒரு துணுக்கு. மகிழ்ச்சியான கதாபாத்திரங்கள் சேனலின் படத்திற்கும், சேனல் அதன் பார்வையாளர்களுக்கு கொடுக்க விரும்பும் மகிழ்ச்சியான உணர்வுகளுக்கும் ஏற்ப அமைந்துள்ளது. வீடியோ நான்கு திரைப்பட கூறுகளின் கலவையாகும். விளையாடும் குழந்தைகள் தூய்மையான மகிழ்ச்சியைக் காட்ட முடியும், மேலும் பார்வையாளர்களுக்கு படம் பார்க்கும் அதே உணர்வும் இருக்கும் என்று நம்புகிறேன்.\nவியாழன் 22 ஏப்ரல் 2021\nநிகழ்வுகளை மேம்படுத்துவது அச்சுக்கலை சுவரொட்டிகள் என்பது 2013 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட சுவரொட்டிகளின் தொகுப்பாகும். இந்தத் திட்டத்தில் கோடுகள், வடிவங்கள் மற்றும் ஐசோமெட்ரிக் முன்னோக்கு ஆகியவற்றைப் பயன்படுத்தி அச்சுக்கலை சோதனை முறையில் ஒரு தனித்துவமான புலனுணர்வு அனுபவத்தை உருவாக்குகிறது. இந்த சுவரொட்டிகள் ஒவ்வொன்றும் வகையின் ஒரே பயன்பாட்டுடன் தொடர்புகொள்வதற்கான சவாலைக் குறிக்கின்றன. 1. பெலிக்ஸ் பெல்ட்ரானின் 40 வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் சுவரொட்டி. 2. கெஸ்டால்ட் நிறுவனத்தின் 25 வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் சுவரொட்டி. 3. மெக்சிகோவில் காணாமல் போன 43 மாணவர்களை எதிர்த்து போஸ்டர். 4. வடிவமைப்பு மாநாட்டிற்கான சுவரொட்டி பேஷன் & டிசைன் வி. 5. ஜூலியன் கரில்லோவின் பதின்மூன்று ஒலி.\nபுதன் 21 ஏப்ரல் 2021\nஅணியக்கூடிய ஆடம்பர கலை NYC சிற்பி மற்றும் கலை நகைக்கடை விற்பனையாளர் கிறிஸ்டோபர் ரோஸின் அணியக்கூடிய ஆடம்பர கலைத் தொகுப்பு விலங்கு இன்ஸ்டிங்க்ட் என்பது பழங்கால ஸ்டெர்லிங் வெள்ளி, 24 காரட் தங்கம் மற்றும் போஹேமியன் கண்ணாடி ஆகியவற்றிலிருந்து கலைஞரால் சிக்கலான முறையில் வடிவமைக்கப்பட்ட விலங்கு ஈர்க்கப்பட்ட, வரையறுக்கப்பட்ட பதிப்புத் துண்டுகள் ஆகும். கலை, நகைகள், ஹாட் கூச்சர் மற்றும் ஆடம்பர வடிவமைப்பு ஆகியவற்றுக்கு இடையேயான எல்லைகளை புத்திசாலித்தனமாக மழுங்கடிக்கும் இந்த சிற்ப பெல்ட்கள் விலங்கு கலை என்ற கருத்தை உடலுக்கு கொண்டு வரும் தனித்துவமான, ஆத்திரமூட்டும் அறிக்கை துண்டுகளை உருவாக்குகின்றன. அதிகாரம், கண்கவர் மற்றும் அசல், காலமற்ற அறிக்கை துண்டுகள் சிற்ப வடிவில் பெண் விலங்கு உள்ளுணர்வை ஆராய்வது.\nசெவ்வாய் 20 ஏப்ரல் 2021\nடிஜிட்டல் மாற்றம் ஹேர் ஃபேஷனில் மிகவும் சின்னமான நிறுவனங்களில் ஒன்று டிஜிட்டல் பொருத்தத்திற்கு ஒரு துணிச்சலான நடவடிக்கை எடுக்க உள்ளது. நிபுணத்துவ டாட் காம் மற்றும் டிக்கி கலர் பதிப்புரிமை வரம்புகளின் மறுவடிவமைப்பு பெஸ்போக் உள்ளடக்கத்தை இணைப்பதன் மூலம் நிர்வகிக்கப்பட்டது, கலைஞர்களால் உருவாக்கப்பட்டது, சமகால புகைப்படக் கலைஞர்களின் ஈடுபாடு மற்றும் டிஜிட்டலில் இன்னும் காணப்படாத வடிவமைப்பு வெளிப்பாடுகள். நுட்பங்களுக்கும் கைவினைப்பொருளுக்கும் இடையில் சிறந்த, ஆனால் கூர்மையான முரண்பாடுகள். இறுதியாக 0 முதல் 100 வரையிலான உண்மையான டிஜிட்டல் மாற்றத்திற்கு படிப்படியான அணுகுமு��ையின் மூலம் ஆரோக்கியமான படி மூலம் டிக்கியை வழிநடத்துதல்.\nவிழிப்புணர்வு மற்றும் விளம்பர பிரச்சாரம்\nதிங்கள் 19 ஏப்ரல் 2021\nவிழிப்புணர்வு மற்றும் விளம்பர பிரச்சாரம் எதிர்காலத்தில் தனியார் இடம் ஒரு மதிப்புமிக்க வளமாக மாறும் என்பதால், இந்த அறையை வரையறுத்து வடிவமைக்க வேண்டிய தேவை அதிகரித்து வருவது தற்போதைய யுகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த விடயமாகும். அறியப்படாத எதிர்காலத்தை அழகாக நினைவூட்டுவதாக குழாய்-ஆதார இடத்தை தயாரிக்கவும் விளம்பரப்படுத்தவும் O3JECT உறுதிபூண்டுள்ளது. ஃபாரடே கூண்டின் கொள்கையால் கட்டப்பட்ட ஒரு கையால் செய்யப்பட்ட, மூடப்பட்ட மற்றும் கடத்தும் கனசதுரம், ஒரு விரிவான பிரச்சார வடிவமைப்பின் மூலம் விளம்பரப்படுத்தப்பட்ட ஒரு கற்பனையான அறையின் சின்னமான பொருள்மயமாக்கலைக் குறிக்கிறது.\nஅசல் மற்றும் ஆக்கபூர்வமான வடிவமைப்புகள், கலை, கட்டிடக்கலை, ஃபேஷன், கிராபிக்ஸ் வடிவமைப்பு, புதுமை மற்றும் வடிவமைப்பு உத்தி ஆகியவற்றை நாங்கள் விரும்புகிறோம். தினமும், திறமையான வடிவமைப்பாளர்கள், படைப்பாற்றல் கலைஞர்கள், புதுமையான கட்டிடக் கலைஞர்கள் மற்றும் சிறந்த பிராண்டுகளின் நல்ல வடிவமைப்புகளைத் தேர்ந்தெடுத்து வெளியிடுகிறோம். நல்ல வடிவமைப்பிற்கான உலகளாவிய பாராட்டையும் விழிப்புணர்வையும் உருவாக்குவதே எங்கள் நோக்கம்.\nCOOKOO இணைக்கப்பட்ட கடிகாரம் வியாழன் 6 மே\nBeertone பீர் கலர் ஸ்வாட்சுகள் புதன் 5 மே\nPaths of Light டிவிடி பெட்டி செவ்வாய் 4 மே\nநீங்கள் ஒரு வடிவமைப்பாளர், கலைஞர், கட்டிடக் கலைஞர், புதுமைப்பித்தன் அல்லது பிராண்ட் மேலாளரா பகிர்வதற்கு உங்களிடம் ஏதேனும் நல்ல வடிவமைப்புகள் உள்ளதா பகிர்வதற்கு உங்களிடம் ஏதேனும் நல்ல வடிவமைப்புகள் உள்ளதா உலகளவில் வடிவமைப்பாளர்கள், கலைஞர்கள், கட்டட வடிவமைப்பாளர்கள், கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் பிராண்டுகளிலிருந்து அசல் மற்றும் ஆக்கபூர்வமான வடிவமைப்புகளை வெளியிடுவதில் நாங்கள் மிகவும் ஆர்வமாக உள்ளோம். உங்கள் வடிவமைப்புகளை இன்று வெளியிடவும்.\nஅன்றைய வடிவமைப்பு நேர்காணல் வியாழன் 6 மே\nஅன்றைய வடிவமைப்பு புராணக்கதை புதன் 5 மே\nஅன்றைய வடிவமைப்பு செவ்வாய் 4 மே\nஅன்றைய வடிவமைப்பாளர் திங்கள் 3 மே\nஅன்றைய வடிவமைப்பு குழு ஞாயிறு 2 மே\nஊடாடும் கலை நிறுவல் வணிக அனிமேஷன் நிகழ்வுகளை மேம்படுத்துவது அணியக்கூடிய ஆடம்பர கலை டிஜிட்டல் மாற்றம் விழிப்புணர்வு மற்றும் விளம்பர பிரச்சாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF?page=2", "date_download": "2021-05-07T00:22:27Z", "digest": "sha1:GLL44XZFXSKCP27CW3UXUMJJ7QRZIN6W", "length": 10287, "nlines": 116, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: முன்னாள் போராளி | Virakesari.lk", "raw_content": "\nநாளொன்றுக்கு 2 ஆயிரத்தை விட அதிக தொற்றாளர்கள் இனங்காணப்படலாம் : எச்சரிக்கிறது தொற்று நோயியல் பிரிவு\nபிழையான எண்ணங்களை மக்கள் மயப்படுத்த எதிக்கட்சி முயற்சி - மதுர விதானகே\nகிளிநொச்சியில் புதிய கொரோனா சிகிச்சை நிலையம் - நள்ளிரவு முதல் சேவைகள் ஆரம்பம்\nமஹரகம நகரசபைக் கூட்டத்தில் மோதல் - விசாரணைகள் ஆரம்பம்\nதனியார் வங்கி உதவி முகாமையாளருக்கு கொரோனா தொற்று ; வங்கிக்கு பூட்டு\nஜம்மு-காஷ்மீரில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை\nகொரோனாவால் இலங்கையில் கர்ப்பிணித் தாய் பலி\n இனங்காணப்படும் தொற்றாளர்களை விட இருமடங்கு தொற்றாளர்கள் சமூகத்தில் \nதம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தை மீண்டும் திறக்க தீர்மானம்\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: முன்னாள் போராளி\nகேரள கஞ்சாவுடன் முன்னாள் போராளி உட்பட ஐவர் கைது\nவவுனியா நகரின் பல்வேறு பகுதிகளில் கேரளா கஞ்சாவுடன் முன்னாள் போராளி உட்பட ஐவர் வவுனியா மது ஒழிப்பு பிரிவு பொலிசாரால் கைத...\nவெளியானது அதிர்ச்சித் தகவல் ; யாழில் இரு பொலிஸார் மீது வாள் வெட்டு ; வழிநடத்தியவர் முன்னாள் புலி உறுப்பினர், ஆவாகுழுவின் செயற்பாட்டாளர் - காணொளி இணைப்பு\nயாழ்ப்பாணம், கொக்குவில் பகுதியில் முறைப்பாடு ஒன்று தொடர்பில் விசாரணை செய்யச் சென்ற போது, இரு பொலிஸார் மீது நந்தாவில் அ...\nஒட்டிசுட்டானில் இடம்பெற்ற கோரவிபத்தில் முன்னாள் போராளி மரணம்\nஒட்டிசுட்டானில் இடம்பெற்ற கோரவிபத்தில் முன்னாள் போராளியொருவர் உயிரிழந்துள்ளார்.\nகால்களை இழந்த முன்னாள் போராளிகளுக்கு செயற்கை கால்களை வழங்கிய இராணுவம்\nஇராணுவத்திற்கு எதிரான யுத்தத்தின் போது தமது கால்களை இழந்த முன்னாள் போராளிகளுக்கு செயற்கை கால்களை இராணுவம் வழங்கியுள்ளது.\nமுன்னாள் போராளிகள் சுமந்திரனை படுகொலை செய்ய முயன்றாத பொலிஸார் நீதிமன்றில் கூறவில்லை ; சி.வி.விக்னேஸ்வரன்\nகைது செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் 5 பேரும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை படுகொலை செய்வதற்கு முயன்றாத பொலிஸார...\nவவுனியா புனர்வாழ்வு நிலையத்திலிருந்து மூவர் சமூகத்துடன் இணைவு\nவவுனியா பூந்தோட்டம் நலன்புரி நிலையத்தில் ஒருவருட புனர்வாழ்வினைப் பூர்த்தி செய்த மூவர் இன்று சமூகத்துடன் இணைத்து வைக்கப்ப...\nமுன்னாள் போராளிகள் மர்மமானமுறையில் உயிரிழப்பு.\nவவுனியா நெடுங்கேணிப் பகுதியில் வசித்து வந்த முன்னாள் போராளி ஒருவர் நேற்று மாலை உயிரிழந்துள்ளார்.\nபுனர்வாழ்வளிக்கப்பட்ட மற்றுமொரு முன்னாள் போராளி மரணம்\nமுல்லைத்தீவு, வற்றாப்பளை பகுதியை சேர்ந்த புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலையான முன்னாள் போராளி ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார...\nவிச ஊசி விவகாரம் : உடனடி விசாரணைக்கு ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளேன் : சுவாமிநாதன்\nமுன்னாள் போராளிகளுக்கு விச ஊசி ஏற்றப்பட்டுள்ளமை தொடர்பில் உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என கோரி ஜனாதிபதிக்கு க...\nமுன்னாள் போராளிகளுக்கு விச ஊசி ; விசாரணை செய்யப்பட்டு தண்டிக்கப்படவேண்டும்: இராமலிங்கம் சந்திரசேகரன் (காணொளி இணைப்பு)\nமுன்னாள் போராளிகளுக்கு விச ஊசி ஏற்றப்பட்டிருந்தால் அது குறித்து விசாரணை செய்யப்பட்டு அவ்வாறு செய்தவர்கள் யாராக இருந்தாலு...\nஇலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து மேலும் 810 பேர் குணமடைவு..\nபணவீக்கம் ஏப்ரலில் 3.9 சதவீதமாக வீழ்ச்சி: இலங்கை மத்திய வங்கி\nவிலை அதிகரிப்பிற்கு அனுமதியில்லையேல் தட்டுப்பாடு ஏற்படலாம்: லாப் கேஸ் நிறுவனம்\nஸ்புட்னிக் கொரோனா தடுப்பூசி போடும் பணி ஆரம்பம்\nகளுத்துறை சிறைச்சாலைக்குள் போதைப்பொருட்கள் அடங்கிய பொதிகள் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xavi.wordpress.com/2007/01/22/hand/", "date_download": "2021-05-07T01:21:58Z", "digest": "sha1:46YBCURYPYFGHJUIQFB54WJAAIHLGKYQ", "length": 18883, "nlines": 269, "source_domain": "xavi.wordpress.com", "title": "கைகள் |", "raw_content": "எழுத்து எனக்கு இளைப்பாறும் தளம் \n← கைபேசி : வியப்பூட்டும் வளர்ச்சியும், ஆபத்தும்\nகல்மனிதன் – விமர்சனம் by சொக்கன். →\n( இந்தவார தமிழ் ஓசை – களஞ்சியம் இதழில் வெளியான எனது கவிதை )\nசாலை கடத்தும் கைகளை விட,\nஎழுதித் தரும் கைகளை விட,\nதொட்டுப் பேசும் கைகளை விட,\nBy சேவியர் • Posted in இதழ், Poem-General, POEMS, TAMIL POEMS\t• Tagged அழகிய கவிதைகள���, இலக்கியம், சிறந்த கவிதைகள், சேவியர், சேவியர் கவிதைகள், தமிழ்க்கவிதைகள், புதுக் கவிதைகள்\n← கைபேசி : வியப்பூட்டும் வளர்ச்சியும், ஆபத்தும்\nகல்மனிதன் – விமர்சனம் by சொக்கன். →\nபேரிடர் காலங்களில், பேரன்பு பகிர்தல்\nமரண இருளின் பள்ளத்தாக்கு – ஒளி தந்த இருளின் காலம் – கோவிட் பயணம்\nஇயேசு கேட்ட கேள்வி : இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 18 : மீட்டிங்\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 17 : எழுத்து முக்கியம்\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 16 : கம்யூனிகேஷன்\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் – 15 – மீண்டும்….\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 14 – கவனித்தல்\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் – மைக்ரோ கவனிப்பு\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 12 : பணியைப் பகிர்.\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 11 :\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 10 – அணி\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 9 – ரிஸ்க்\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 8 – சவால் & ஆபத்து\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 7 – பணியாளர் மேலாண்மை\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 6 : எப்போ முடிப்பீங்க \nவிவசாயம் காப்போம்; விவசாயி காப்போம்\nகுட்டிக் குட்டிக் காதல் கவிதைகள்\nகவிதை : வானத்துப் பறவை\nதன்னம்பிக்கை : கூடா நட்பு கூடாது \nகைபேசி : வியப்பூட்டும் வளர்ச்சியும், ஆபத்தும்\nதாவீது : ஆட்டிடையன் அரசரான கதை \nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\n1. ஆதி மனிதன் ஆதாம் \n இந்த வார்த்தையே நமது மன வெளிகளில் புன்னகை விதைகளைத் தூவும் வல்லமை படைத்தது. எத்தனை பெரிய சோகத்தின் அலைகள் நமது பாலை வெளிகளில் புரண்டு படுத்தாலும், ஒரு சின்னக் குழந்தையின் புன்னகைக் கைக்குட்டை கிடைத்தால் அந்த சோகம் புதையுண்டு போய்விடும். மழலைகளோடு விளையாடுகையில் மலைபோன்ற மன பாரங்கள் கூட பழுத்த இலை போல உதிர்த்து பறந […]\nபேரிடர் காலங்களில், பேரன்பு பகிர்தல்\nபேரிடர் காலங்களில், பேரன்பு பகிர்தல் பல குறியீடுகளை ஆதிகாலக் கிறிஸ்தவர்கள் பயன்படுத்தினார்கள். குறிப்பாக மீன் குறியீடு அந்தக் காலத்தில் மிகவும் முக்கிய���்துவம் வாய்ந்த ஒரு குறியீடாய் இருந்தது. மீன் அடையாளம் வரையப்பட்ட இடங்களை ஆராதனை இடங்களாக ரகசியக் கிறிஸ்தவர்கள் புரிந்து கொண்டார்கள். அத்தகைய இடங்களில் அவர்கள் மறைந்திருந்து நற்செய்தியை அறிவித்தார்கள். பைபிள் […]\nமரண இருளின் பள்ளத்தாக்கு – ஒளி தந்த இருளின் காலம் – கோவிட் பயணம்\nமரணஇருளின்பள்ளத்தாக்கு ஒளி தந்த இருளின் காலம் – கோவிட் பயணம் * நிகழ்வுகளெல்லாம் இறைவனால் நமக்குத் தரப்படுகின்ற அனுபவப் பாடங்கள். சில அனுபவப் பாடங்கள் நம்மை விரக்தியில் எறியும். சில நம்மை குழப்பத்தில் உருட்டும். சில அனுபவங்கள் நம்மை புரியாமைக்குள் நடத்திச் செல்லும். ஆனால் ஒன்று மட்டும் யதார்த்தம், இறைமகன் இயேசுவின் கரம்பிடித்து நடப்பவர்களுக்கு எந்த ஒரு துயரத் […]\nஇயேசு கேட்ட கேள்வி : இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா\nஇவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா யோவான் 14 :9 இந்தக் கேள்வி புதுசா நாம கேள்விப்படுகிற கேள்வி அல்ல. அடிக்கடி நமது வாழ்க்கையில் நாம் சந்திக்கின்ற கேள்வி. “இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா யோவான் 14 :9 இந்தக் கேள்வி புதுசா நாம கேள்விப்படுகிற கேள்வி அல்ல. அடிக்கடி நமது வாழ்க்கையில் நாம் சந்திக்கின்ற கேள்வி. “இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா” ந்னு தூய தமிழ்ல கேள்விப்பட்டிருக்க மாட்டோம், ஆனா நம்முடைய உரையாடல்களில் எப்போதேனும் நிச்சயம் இந்தக் […]\nKristilla on கி.மு : நோவாவின் பேழை\nக.மோகன சுந்தரம் on சன்னலுக்கு வெளியே கவிதைகள்\nAnonymous on கிமு : சிம்சோன் – வியப்ப…\nAnonymous on வீதியில் நாய்கள், பீதியில்…\nSuma sheyalin on அப்பா என் உலகம்\nDev on தன்னம்பிக்கை : திடீர் பணக்காரன…\nSivaranjani on தன்னம்பிக்கை : திடீர் பணக்காரன…\nTamilBM on தன்னம்பிக்கை : கல்வியால் ஆய பய…\nkavithai kavithais love POEMS Tamil Kavithai tamil kavithais writer xavier xavier இலக்கியம் இளமை கவிதை கவிதைகள் காதல் சேவியர் சேவியர் கவிதைகள் தமிழ் இலக்கியம் தமிழ்க்கவிதை தமிழ்க்கவிதைகள் புதுக்கவிதை புதுக்கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://xavi.wordpress.com/2008/06/25/my_angel/", "date_download": "2021-05-07T00:00:53Z", "digest": "sha1:Z5EGEMHF4HJGCAOXGFCKLBIAJTKSWKMH", "length": 26829, "nlines": 416, "source_domain": "xavi.wordpress.com", "title": "கவிதை : என் மகள் |", "raw_content": "எழுத்து எனக்கு இளைப்பாறும் தளம் \nகவிதை : சக்கரம் இல்லாத் தேர்கள்… →\nகவிதை : என் மகள்\nசின்னச் சின்ன சின்னம் வைத்து\nஎன் மீசைக் கயிறு பிடித்து\nசெதுக்கிச் செய்த சின்னச் சூரியனாய்,\nபதுக்கி வந்த பகல் நிலவாய்\nசிறு செம்மண் கோலம் வரைய,\nவெள்ளைச் சுவரை அழுக்காக்கி அழகாக்கும்.\nவரம் தருவது நிகழ் காலம்.\nமெல்லிய உன் மூச்சுக் காற்றில்,\nஉன் கண்களோடு கலந்து போய்\n‘ஊரிலில்லாத பிள்ளையைப் பெற்றுவிட்டான் ” என்று.\nஇன்னொரு முத்தம் தந்துவிட்டுப் போ.\nகவிதை : சக்கரம் இல்லாத் தேர்கள்… →\nமிக்க நன்றி புதுவை சிவா 🙂\nஇல்லை.. என்னை மிகவும் ரசிக்க வைத்த படம் 🙂\n‘ஊரிலில்லாத பிள்ளையைப் பெற்றுவிட்டான் ” சொன்னார்கள் என்றால் உண்மைதானே எம் பிள்ளை போல ஊரில் யாரிடமும் இருக்க முடியாது தானே என்று விடுங்கள்.பொறாமை அவர்களுக்கு.பூவின் அழகை ரசிக்கத் தெரியாத முட்டாள்கள்.\n//‘ஊரிலில்லாத பிள்ளையைப் பெற்றுவிட்டான் ” சொன்னார்கள் என்றால் உண்மைதானே எம் பிள்ளை போல ஊரில் யாரிடமும் இருக்க முடியாது தானே என்று விடுங்கள்.//\nமனமார்ந்த நன்றிகள் மாதரசன் 🙂\n“இறைவன் இன்னும் மனிதனை நம்புகிறான் . அதனால் தான் குழந்தைகள் பிறக்கின்றன.”\nயாரோ ஒரு மிகப் பெரிய அறிஞர் சொல்லிய கூற்று .\nஅப்படிப்பட்ட குழந்தைகள் தரும் இன்பத்தை அனுபவப் பூர்வமாக உணர்ந்து அருமையாக எழுதியுள்ளீர்கள். ரயிலில் உங்களைச் சந்திக்கையில் , தங்கள் மனைவி மடியில் அழகாக படுத்திருந்த உங்கள் குட்டி பாப்பா எப்படி இருக்கிறது , சேவியர்\n//இறைவன் இன்னும் மனிதனை நம்புகிறான் . அதனால் தான் குழந்தைகள் பிறக்கின்றன.”\nநன்றாக இருக்கிறது. பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.\n//அப்படிப்பட்ட குழந்தைகள் தரும் இன்பத்தை அனுபவப் பூர்வமாக உணர்ந்து அருமையாக எழுதியுள்ளீர்கள்//\nதங்கள் மனைவி மடியில் அழகாக படுத்திருந்த உங்கள் குட்டி பாப்பா எப்படி இருக்கிறது , சேவியர்\nநன்றாக இருக்கிறாள் மகள் 🙂 நன்றி விசாரித்தமைக்கு 🙂\nஉங்க கவிதைகளை படிக்கும் போது\nஎங்களுக்கும் கவிதை எழுதனும்னு ஆசையா இருக்கு\nஓரு கலைஞனின் உண்மையான வெற்றி இது தானோ\nபேரிடர் காலங்களில், பேரன்பு பகிர்தல்\nமரண இருளின் பள்ளத்தாக்கு – ஒளி தந்த இருளின் காலம் – கோவிட் பயணம்\nஇயேசு கேட்ட கேள்வி : இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 18 : மீட்டிங்\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 17 : எழுத்து முக்கியம்\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 16 : கம்யூனிகேஷன்\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் – 15 – மீண்டும்….\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 14 – கவனித்தல்\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் – மைக்ரோ கவனிப்பு\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 12 : பணியைப் பகிர்.\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 11 :\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 10 – அணி\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 9 – ரிஸ்க்\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 8 – சவால் & ஆபத்து\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 7 – பணியாளர் மேலாண்மை\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 6 : எப்போ முடிப்பீங்க \nவிவசாயம் காப்போம்; விவசாயி காப்போம்\nகுட்டிக் குட்டிக் காதல் கவிதைகள்\nகவிதை : வானத்துப் பறவை\nதன்னம்பிக்கை : கூடா நட்பு கூடாது \nகைபேசி : வியப்பூட்டும் வளர்ச்சியும், ஆபத்தும்\nதாவீது : ஆட்டிடையன் அரசரான கதை \nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\n1. ஆதி மனிதன் ஆதாம் \n இந்த வார்த்தையே நமது மன வெளிகளில் புன்னகை விதைகளைத் தூவும் வல்லமை படைத்தது. எத்தனை பெரிய சோகத்தின் அலைகள் நமது பாலை வெளிகளில் புரண்டு படுத்தாலும், ஒரு சின்னக் குழந்தையின் புன்னகைக் கைக்குட்டை கிடைத்தால் அந்த சோகம் புதையுண்டு போய்விடும். மழலைகளோடு விளையாடுகையில் மலைபோன்ற மன பாரங்கள் கூட பழுத்த இலை போல உதிர்த்து பறந […]\nபேரிடர் காலங்களில், பேரன்பு பகிர்தல்\nபேரிடர் காலங்களில், பேரன்பு பகிர்தல் பல குறியீடுகளை ஆதிகாலக் கிறிஸ்தவர்கள் பயன்படுத்தினார்கள். குறிப்பாக மீன் குறியீடு அந்தக் காலத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு குறியீடாய் இருந்தது. மீன் அடையாளம் வரையப்பட்ட இடங்களை ஆராதனை இடங்களாக ரகசியக் கிறிஸ்தவர்கள் புரிந்து கொண்டார்கள். அத்தகைய இடங்களில் அவர்கள் மறைந்திருந்து நற்செய்தியை அறிவித்தார்கள். பைபிள் […]\nமரண இருளின் பள்ளத்தாக்கு – ஒளி தந்த இருளின் காலம் – கோவிட் பயணம்\nமரணஇருளின்பள்ளத்தாக்கு ஒளி தந்த இருளின் காலம் – கோவிட் பயணம் * நிகழ்வுகளெல்லாம் இறைவனால் நமக்குத் தரப்படுகின்ற அனுபவப் பாடங்கள். சில அனுபவப் பாடங்கள் நம்மை விரக்தியில் எறியும். சில நம்மை குழப்பத்தில் உருட்டும். சில அனுபவங்கள் நம்மை புரியாமைக்குள் நடத்திச் செல்லும். ஆனால் ஒன்று மட்டும் யதார்த்தம், இறைமகன் இயேசுவின் கரம்பிடித்து நடப்பவர்களுக்கு எந்த ஒரு துயரத் […]\nஇயேசு கேட்ட கேள்வி : இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா\nஇவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா யோவான் 14 :9 இந்தக் கேள்வி புதுசா நாம கேள்விப்படுகிற கேள்வி அல்ல. அடிக்கடி நமது வாழ்க்கையில் நாம் சந்திக்கின்ற கேள்வி. “இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா யோவான் 14 :9 இந்தக் கேள்வி புதுசா நாம கேள்விப்படுகிற கேள்வி அல்ல. அடிக்கடி நமது வாழ்க்கையில் நாம் சந்திக்கின்ற கேள்வி. “இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா” ந்னு தூய தமிழ்ல கேள்விப்பட்டிருக்க மாட்டோம், ஆனா நம்முடைய உரையாடல்களில் எப்போதேனும் நிச்சயம் இந்தக் […]\nKristilla on கி.மு : நோவாவின் பேழை\nக.மோகன சுந்தரம் on சன்னலுக்கு வெளியே கவிதைகள்\nAnonymous on கிமு : சிம்சோன் – வியப்ப…\nAnonymous on வீதியில் நாய்கள், பீதியில்…\nSuma sheyalin on அப்பா என் உலகம்\nDev on தன்னம்பிக்கை : திடீர் பணக்காரன…\nSivaranjani on தன்னம்பிக்கை : திடீர் பணக்காரன…\nTamilBM on தன்னம்பிக்கை : கல்வியால் ஆய பய…\nkavithai kavithais love POEMS Tamil Kavithai tamil kavithais writer xavier xavier இலக்கியம் இளமை கவிதை கவிதைகள் காதல் சேவியர் சேவியர் கவிதைகள் தமிழ் இலக்கியம் தமிழ்க்கவிதை தமிழ்க்கவிதைகள் புதுக்கவிதை புதுக்கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2020/02/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1/", "date_download": "2021-05-07T01:30:12Z", "digest": "sha1:FBCQULOYWPYAVUFO2GRQBJTB6IJXBLND", "length": 11758, "nlines": 136, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nஉடலில் உள்ள எலும்புக்கூறுகளுக்கு ஊட்டமாகக் கொடுக்க வேண்டிய அருள் சக்திகளைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nஉடலில் உள்ள எலும்புக்கூறுகளுக்கு ஊட்டமாகக் கொடுக்க வேண்டிய அருள் சக்திகளைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nநம் பூமியின் இயக்கத்தில் எப்படி இருள் அத���கமாகவும் ஒளி குறைவாகவும் உள்ளதுவோ அதைப் போன்றுதான் மனிதனின் எண்ணச் செயலும் உள்ளது.\n1.கடும் இருட்டிலும் சிறிது வெளிச்சம் ஊடுருவி ஒளி பாய்ச்ச முடியும்.\n2.ஆனால் சிறிது வெளிச்சத்தையே மறைக்கக் கடும் இருட்டு தேவையாக உள்ளது.\nநம் எண்ணத்தின் இருளை ஒளியாக்கும் ஆத்ம வலுவை நாம் பெற்றோமானால்\n1.உடலின் எண்ண நிலைக்கொப்பச் செயல்படும் குணத்தையே\n2.ஆத்மாவின் செயலாக உடலைச் செயல்படும் வகையில் செயலாக்கி\n4.இருளில் இருந்து ஒளி பெறும் ஞான ஒளியாக\n5.நம் ஆத்ம ஒளி பிரகாசிக்கும் சக்தியைப் பெறும்.\nஎண்ணத்தில் உள்ள இருள்கள் எவை…\nசலிப்பு… சோர்வு… பிறரிடம் உள்ள குறை காணல்.. புகழுக்காக ஏங்கும் ஏக்க நிலை… மரண பயம்… போன்ற இருள் தன்மைகள் எல்லாவற்றையும் எண்ணத்தால் எடுக்கும் ஞான சக்தி கொண்டு நாம் மாய்க்க வேண்டும்.\nகுரோதம் வஞ்சனை என்ற தீய குணங்கள் வேறு. எண்ணத்தால் மறைத்துவிடும் இருள் குணங்கள் வேறு.\nஆத்ம ஞானத்தால் நாம் வளர்ந்து வரும் காலங்களில் சலிப்பின் சோர்வை அண்ட விடக் கூடாது.\nசலிப்பின் ஏக்கத்தால் “உயர்வு கொள்வோம்” என்ற\n1.உயர் ஞான வழிக்கு அந்த ஏக்க நிலையைச் செலுத்தி\n2.அந்த ஏக்கத்திலேயே ஆத்ம வளர்ப்பை வளர்க்கவும் முடியும்.\nஆனால்… பிறர்பால் பொருளைப் பார்த்து ஏக்கப்படும் ஏக்கத்தால் மனித வாழ்க்கை அழிவிற்கும் செல்வதுண்டு.\nகுணங்களை வழிப்படுத்தும் ஞானத்தால் பெறவல்ல ஆத்ம பலத்தால் தான் இருள் என்ற நிலை நீங்கும். மேலும் ஒளியான ஆத்ம வலுவைப் பெற்ற ஆத்ம ஞானத்தால்… எண்ணிய எண்ண நிலைக்கொப்ப கடும் பசியையும்… உடல் சோர்வையும்… கட்டுக்குள் கொண்டு வர முடியும்.\nஅதே போல் உடலின் எந்தப் பாகத்தில் எந்த வகையான உபாதைகள் ஏற்பட்டிருந்தாலும்… இவ்வுடலின் செயலுக்கும்…\n1.இவ்வாத்ம ஞானத்தால் மகரிஷிகளின் அலைத் தொடர்பில் தொடர்பு கொண்டு\n2.அவர்கள் ஈர்ப்பலை வரிசையில் எண்ணத்தைச் செலுத்தி சுவாசம் எடுக்கும் பொழுது\n3.எதை எண்ணிச் சுவாசம் எடுக்கின்றோமோ… அவ்வலை அமில உணர்வு இந்த உடலில் சாடி ஏற்படும் எண்ண நிலைக்கொப்ப…\n4.”ஆத்ம பலத்தைக் கொண்டு” இவ்வுடலின் செயலையும் சீராக்கிடும் வழியை வகுத்துக் கொள்ளலாம்.\nஇந்த உடல் ஒரு அடுப்பு தான். இந்த உடலில் சமைக்கும் அமில உணர்வின் ஆவி நிலையை ஆத்மா பெற்று அதன் வழியில் ஆத்மா வாழ்வது என்பது “சாதாரண வாழ்க்கை ��ிலை…\nஆனால் வாழ்க்கையின் ஞான ஈர்ப்பு நற்குணத் தியானச் செயலால்… எண்ணத்தின் சுவாசத்தில் ஆத்ம பலம் பெற்ற ஒரு ஞானியினால்…\n1.உடல் சமைப்பிலிருந்து ஆத்மா பலம் பெறும் நிலை மாறி\n2.ஆத்மாவின் செயலுக்குகந்த சமைப்பாக இந்த உடலை இயக்க முடியும்.\nபசி… தூக்கம்… கழிவு… காமம்… போன்ற உடலின் செயல் இயக்கத்தையே ஆத்ம வலுக்கூடிய ஞானியினால் ஆத்ம வலுவைக் கொண்டு மாற்றியமைக்க முடியும்.\nஅத்தகைய தன்மைக்கு… இச்சரீரக்கூறின் எலும்புகளை மின் காந்த வலுக் கொண்ட உறுப்புக்களாக உறுதி கொண்டிடும் செயலால்\n1.சரீர உணர்வின் சாதாரண நிலையையே\n2.எண்ணத்தின் இயக்க நிலைக்கொப்ப மாற்றியமைக்கும்\n3.ஆத்ம வலுவைக் கொண்டு செயலாக்கத்திற்குக் கொண்டு வர முடியும்.\nசாமியையே (ஞானகுரு) எண்ணிக் கொண்டிருப்பதைக் காட்டிலும் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து உடலுக்குள் விளைய வைக்க வேண்டும்\n என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nசீராக ஆத்ம சுத்தி செய்வோருக்குக் கிடைக்கும் பலன்கள்\nஆண்டவனிலிருந்து வந்த பிம்பங்கள் தான் அனைத்துமே என்று எண்ணினால்… “தான்” என்ற தனித்த அகங்காரம் வராது – ஈஸ்வரபட்டர்\nஉங்களுக்குக் கொடுத்த சக்திகளை ஒவ்வொருவரும் விரயம் ஆக்காது பயன்படுத்துங்கள்\n24 X 7 சாமிகள் உபதேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2020/03/%E0%AE%92%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2021-05-07T01:39:01Z", "digest": "sha1:QG2VOJCCU2AWYZEBIYSNCPR3HZIEJBCY", "length": 8207, "nlines": 128, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nஒவ்வொருவரும் “தெய்வ சக்திகளாக உருவாக வேண்டும்…” என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nஒவ்வொருவரும் “தெய்வ சக்திகளாக உருவாக வேண்டும்…” என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nஇதிலே ஏதாவது ஒன்றிலே இன்றைய மனித வாழ்க்கை அமைந்திருக்கின்றது.\nஇந்த வாழ்க்கைத் தொடர் சுழற்சியுடனேயே நம் வளர்ச்சியின் வலுவைக் கூட்டிக் கொண்டு இந்த வாழ்க்கைப் பிடிப்பைத் தான்\n1.மனிதனின் முற்றிய நிலை என்று இன்பத்தைக் கொள்ளாமல்\n2.மனித ஆத்மாவின் உயர்வு வழிக்கு வழிகாட்டி வருகின்றேன் (ஈஸ்வரபட்டர்)\nஇதைத் தொடர்ந்து படிப்போர் பதிவாக்கி அதைச் செயலாக்கி வரும் நிலையில் “இதில் உணர்த்தபப்டாத பல உண்மைகளும் உண்டு…\nநேரடியாக ��ணர்த்தப்படாத அவைகளைத் தங்களின் ஞானத்தைக் கொண்டு உணர்ந்து உயரக் கூடிய நிலைகளுக்குத் தான் அவ்வாறு விடப்பட்டுள்ளது.\nஇனி வரப் போகும் கால நிலையில் துர்மார்க்க… அச்சம் கொள்ளும் அலை உணர்வு தான்… காற்றலையில் நச்சுத் தன்மையாக வளர்ந்தோங்கிச் சுழலும் தருணமாக உள்ளது.\nஇதிலே மனிதன் தன்னைத் தான் உணர்ந்து\n1.தன் ஆத்ம வலுவைக் கூட்டி\n2.பிற ஈர்ப்பின் பிடிப்பில் சிக்காமல்\n3.உயர் ஞான வழித் தொடரின் தொடர்பைக் கொண்டு\n4.வளர்ந்த பல கோடி தேவாதி தேவர்களான சகல சக்திகளையும் சமைக்கவல்ல\n5.பேராற்றல் கொண்ட சப்தரிஷிகளின் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.\nஆகவே… உயர்ந்தோரின் உயர்வுடன் உயரும் எண்ணத்தில் உள்ள ஒவ்வொரு ஆன்மாவும் உயர்ந்தே செல்லும் வழி முறைக்காக\n1.இங்கே வழி காட்டும் உண்மையை ஏற்று\n2.ஞான விளக்கப் போதனைகளை ஒவ்வொரு ஆத்மாவும் பெற்று\n3.மனித சக்திகளைத் “தெய்வச் சக்தியாக” உருவாக்குங்கள் ஒவ்வொருவருமே.\nசாமியையே (ஞானகுரு) எண்ணிக் கொண்டிருப்பதைக் காட்டிலும் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து உடலுக்குள் விளைய வைக்க வேண்டும்\n என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nசீராக ஆத்ம சுத்தி செய்வோருக்குக் கிடைக்கும் பலன்கள்\nஆண்டவனிலிருந்து வந்த பிம்பங்கள் தான் அனைத்துமே என்று எண்ணினால்… “தான்” என்ற தனித்த அகங்காரம் வராது – ஈஸ்வரபட்டர்\nஉங்களுக்குக் கொடுத்த சக்திகளை ஒவ்வொருவரும் விரயம் ஆக்காது பயன்படுத்துங்கள்\n24 X 7 சாமிகள் உபதேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mkppando.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-4/", "date_download": "2021-05-07T00:17:51Z", "digest": "sha1:DXSUG6MYFQGTHA7LKN6HD75XU6LQ7C55", "length": 16524, "nlines": 104, "source_domain": "mkppando.com", "title": "புரிதல் பற்றிய ஒரு புரிதலும் அதன் அவசியமும் - My Life Experience", "raw_content": "\nபுரிதல் பற்றிய ஒரு புரிதலும் அதன் அவசியமும்\nபுரிதல் பற்றிய ஒரு புரிதலும் அதன் அவசியமும் 4\n27 1 2021 அன்று இரவில் ஸ்ரீ செல்வ விநாயகர் வாட்சப் குழுவில் நம்பிக்கை சம்பந்தமாக சில விஷயங்கள் பேசினேன். உடனே தம்பி சிவஞானம் என்னிடம் சில விபரம் கேட்டார். முழுமையாக அவருக்கு தெளிவு என்னால் கொடுக்கப்படவில்லை என்பது மட்டும் புரிந்து கொண்டேன்.\nநம்பிக்கையும் நேர்மையும் பகுதி 1\nபிள்ளையார் கோவில் கட்டிக்கொடுங்கள் என்று கேட்டு பிள்ளையார் சுழி போட்டது ஐயா பாலகிருஷ்ணன் அவர்கள். அவர் கேட்டுக்கொண்டதை முன்னிட்டு ஏற்பாடுகள் தொடர்ந்தன.\nஇன்று அதே ஐயா பாலகிருஷ்ணன் அவர்கள், என்னை, அதாவது என்னிடம் மட்டும், அல்லது செட்டியார் குடும்பம் வந்தால் மட்டும் அவர் ஒப்புக்கொண்ட தொகை கொடுப்பேன் என்கிறார். நம்பகமான நபர் யாரும் அந்த கிராமத்தில் இல்லை என்று உணர்கிறார்.\nநம்பகமான நபர் அந்த ஊரில் இல்லை என்று தெரிந்தும், பின் எதற்காக மலேசியாவில் இருக்கும் என்னை கோவில் கட்ட கேட்டுக்கொண்டார்\nஅவரின் பணம் மட்டும் உயர்மதிப்பானது, எனது பணம், நான் வசூலித்த வியாபாரிகளின் பணம் மதிப்பற்றதா\nநான் முதல், முதல் ஒரு மதுரையை சேர்ந்த என்ஜினீயர் அறிமுகம் செய்யும் பொது பல உறவினர்களை விசாரித்து நல்ல நாணயமானவரா என்று தீர்மானிக்க அனுப்பினேன்.\nஆனால் அவர், ஐயா பாலகிருஷ்ணன் அவர்கள் பேசிய ரூபாய் 50000/= செலுத்த நம்பிக்கையான நபர் இல்லாத ஊரில், என்னை கோவில் கட்டி கொடுக்க சொன்னதில் என்ன நியாயம் இருக்கிறது\nஎனது தொகையும், நான் வசூலித்த தொகையும் சேர்த்து, தொகை போல 16 மடங்கு. என்னை பின்பற்றி வந்த மருமகள் தொகையும் சேர்த்தால் எத்தனை மடங்கு என்று கணக்கு செய்ய நேரம் இல்லை.\nநாங்கள் ஒரு புது வாடிக்கையாளருக்கு கடன் கொடுக்கலாமா, என்று சக வியாபாரிகளிடம் கேட்போம். அவர் வரவு செலவு செய்து இருந்தால், அதாவது அவர் அந்த வாடிக்கையாளருக்கு கடன் கொடுத்து இருந்தால் எங்களை (அதாவது அவர் அந்த வாடிக்கையாளரை நம்பினால் மட்டுமே) கொடுக்கலாம் என்பார்.\nஅவர் நம்பவில்லை என்றாலோ, அவர் எனக்கு தெரியாது என்று கூறிவிடுவார். அவர் நம்பாத வாடிக்கைக்கு அவர் ரெக்கோம்மெண்ட் செய்ய மாட்டார்.\nஐயா பாலகிருஷ்ணன் அவர்களே நம்பாத ஊர்மக்களை நம்பி என்னை கோவில் கட்ட சொன்னது, எந்த வகையில் நியாயமானது என்பது எனக்கு தெரியவில்லை.\nநம்பிக்கையும் நேர்மையும் பகுதி 2\nகாமாச்சி என்ற அம்மணி நான் முதல் முதல் சேலை அந்த ஊருக்கு கொடுத்தபொழுது மேற்கொண்டு ஒரு சேலை வேண்டும் என்று சத்தமாக பேசி பிரச்னை செய்தார்.\nஅவர் செய்தது சற்று எனக்குகோபம் இருந்தது உண்மைதான். ஆனால், அவரிடம் ஒரு நேர்மை இருக்கிறது என்பதை மறுக்கவும் முடியவில்லை.\nமோகன் சார் மொத்த வீடுகளை கணக்கு எடுத்து, நான் விரும்பியபடி வீட்டுக்கு ஒரு சேலை என்று கொடுக்க ஏற்பாட்��ு உதவிகள் செய்தார்.\nஆனால் சேலை பற்றாக்குறையாகி விட்டது.\nகண்டிப்பாக கணக்குப்பிள்ளை மகன் கணக்கில் கோட்டை விட வாய்ப்பு கடுகளவும் இல்லைதான்.\nஎப்படி பற்றவில்லை என்று ஆராய்ந்தால், அதாவது ரூபாய் 200-300 சேலையைப்பற்றி ஆராய முடிவு செய்தால், காமாச்சி அம்மனியிடம் கேட்டால் பல பல உண்மை தெரிந்துவிடும்.\nமிக மிக சுலபமாக யூகித்து புரிய வருவது, யார் வீட்டுக்கோ ஒன்றுக்கு மேற்பட்ட சேலை போய் இருக்க வேண்டும்.\nசரி, வெறும் ரூபாய் 200 – 300 மதிப்பு, ஆகையால் புறக்கணித்து விடலாம். ஒரு வேலை வீட்டுக்கு ஒரு வெள்ளி அல்லது தங்கம் என்று கொடுக்க நினைத்தால், என்ன ஆகும்\nநம்பிக்கையும், நேர்மையும் எந்த வித பாத்திரத்தில் (Role/Character) செயல் படுகிறது என்பது இதை படிப்பவர்களுக்கு புரிந்து விட்டால் நான் இதை எழுதியது வெற்றி என்று கருதுவேன்.\nஒரு உதாரணம், நான் ஒரு வீட்டுக்கு ஒரு சேலை என்று நிர்ணயித்தேன். யாரவது ஒரு நபர் வந்து, ஐயா மேற்கொண்டு 3 சேலை கொடுங்கள் ஐயா. இந்த கிராமத்தில் 3 வீட்டில் மட்டும் மேற்கொண்டு இரு பெண்கள் உள்ளனர் என்று சொல்லி புரிய வைத்து கேட்டு வாங்குவது நேர்மையான செயல் என்று பெயர்.\nபார்த்திபன் பல தடவை அன்னதானம் செய்யும் போது, எனது எண்ணிக்கையை விட சற்று சேர்த்தே சொல்லி கேட்பார். நான் 50 நபர் என்றால், அவர் 60 அல்லது 100 என்பார். அதன் பெயர் நேர்மை. அதிக பட்சம் நான் முடியாது என்று கூறுவேன். அப்படி நடந்தது இல்லை.\nஎவனுக்கு கிடைத்தால் என்ன எந்த வீட்டுக்கு கிடைக்காமல் போனால் எனக்கு என்ன வரிசையில் என் வீட்டு 3 பெண்களை நிற்க விட்டு, உல்லூரில் எவனும் என்னை காட்டிக்கொடுக்க முடியாது, ஆக எனது வீட்டு எல்லா பெண்களும் சேலைகளை வாங்கிக்கொள்வோம் என்ற நோக்கம் இருப்பது, கொடுப்பவர் மூழ்கி விடப்போவது இல்லை.\nஅப்படி வாங்குபவர் மீது ஒரு மதிப்பும் நம்பிக்கையும் வராது. சுயநலத்தை அடிப்படையாக வைத்து, மற்றவர் பெறவேண்டியது அவர்கள் பெறமுடியாமல் போனாலும் பரவாயில்லை என்ற எண்ணத்தை மையமாக வைத்துக்கொண்டு, – எனக்கு கிடைத்தால் போதும் என்று என்னும், எண்ணி செயல்படும், நபர் கண்டிப்பாக ஒரு தலைவராக இருக்க அருகதையும் தகுதியும் இருக்காது.\nஅதுதான் சுயநலம் என்று கூறுவார்கள். சுயநலத்தலைவர் என்ற பெயரும் உண்டு.\nபொறுப்பான புரிதலும் பொறுப்பற்ற புரிதலும்.\nபொறுப்ப��ன புரிதல் பொறுப்பற்ற புரிதல், புரியாதது போல் நடித்தல் (தூங்குபவனை எழுப்பிவிடலாம், தூங்குவது போல் நடிப்பவனை எழுப்ப முடியாது) – இப்படி பல வகையில் இருக்கின்றது.\nஒரு தொழிலில், ஒரு கோவிலில் முதலீடு செய்தவர்களுக்குத்தான் அது சம்பந்தமான முடிவுகள் எடுக்க தகுதி இருக்கும். ஒன்று முதலீடு செய்து இருக்க வேண்டும். அல்லது பெரிய அளவில் வசூல்செய்து கொடுத்து இருக்க வேண்டும் இருக்க வேண்டும்.\nபள்ளியில் மாணவனுக்கு கல்வியில் உழைப்பை போட்டவன்தான் அதிக மார்க் பெறுகிறான். மாணவன் மார்க் கேட்டான் என்று கொடுக்கப்படுவது இல்லை.\nமுதலீடு செய்த முதலாளிதான் எப்படி நிர்வகிக்கப்பட வேண்டும் என்று முடிவு எடுப்பார். எப்படி தொழிலாளி உழைப்பை போடுகிறான் என்பதை வைத்துதான், உயர் பதவி கொடுக்கப்படுகிறது.\nசரியான, பொறுப்பான முறையில் புரிந்து கொள்ள இயலவில்லை என்றால், அந்நபர் தானே வலிய ஒதுங்கிக்கொள்வதை அல்லது ஒதுக்கிவிடுவது தவிர வேறு வழியில்லை.\nPrevious: Previous post: புரிதல் பற்றிய ஒரு புரிதலும் அதன் அவசியமும் 3\nNext: Next post: புரிதல் பற்றிய ஒரு புரிதலும் அதன் அவசியமும்\nபுரிதல் பற்றிய ஒரு புரிதலும் அதன் அவசியமும்-7\nபுரிதல் பற்றிய ஒரு புரிதலும் அதன் அவசியமும்-6\nபுரிதல் பற்றிய ஒரு புரிதலும் அதன் அவசியமும்\nVigneskanna on புரிதல் பற்றிய ஒரு புரிதலும் அதன் அவசியமும்\nநான் எல்லா உயிரினங்களையும் சமமாக பார்க்கிறேனா\nபுரிதல் பற்றிய ஒரு புரிதலும் அதன் அவசியமும்\nஶ்ரீசெல்வ வினாயகர், மேலமருங்கூர் – தம்பி சிவஞானம் என்ற ராசு அவரின் பார்வைய\nஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயம் – MKP பாண்டுரங்கன் கண்ணோட்டத்தில்\nஸ்ரீ செல்வா விநாயகர் கோவில் வந்த உண்மை கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0_%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2021-05-07T02:06:48Z", "digest": "sha1:5RG4F65FVXCGGDVKWEHT5TDVJDXAMSBW", "length": 3391, "nlines": 30, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அதிகார வன்முறை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஅதிகாரம் ஒருவருக்கு செயலை செய��வதற்கு அங்கீகாரம் தருகிறது. அதிகாரம் பெற்ற நபர் எந்த நோக்கத்திற்காக அதிகாரம் அளிக்கப்பட்டதோ அதைவிடுத்து கேடு ஒருவருக்கு ஏற்படுத்தும் விதமாக பயன்படுத்துவதே அதிகாரவன்முறை (Abuse of Power) ஆகும்.\nஇக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2017, 08:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2021/02/05/index-48-for-london-swaminathans-november-2016-articles-post-9234/", "date_download": "2021-05-07T01:14:10Z", "digest": "sha1:M2QCOQXVOLC2SS7Z53AUXU4RUPGOPZKW", "length": 14224, "nlines": 268, "source_domain": "tamilandvedas.com", "title": "INDEX 48 FOR LONDON SWAMINATHAN’S NOVEMBER 2016 ARTICLES (Post.9234) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\n42 திருவாசகப் பொன்மொழிகள் (Post No.3404); 30 நவம்பர் 2016\nஓரெழுத்து தமிழ் சொற்கள் (Post No.3400)29/11\nதிருவாசக வெளியீடு: டாக்டர் போப் தரும் அதிசயத் தகவல்\nபறையருக்கும் இங்கு தீயர் புலையருக்கும் விடுதலை\nஅகநானூறு கூறும் பார்ப்பானின் கதை \nபிரிட்டிஷ் பார்லிமெண்டில் 2 குட்டிக் கதைகள்\nஆண்களுக்கு உயிர் ‘வேலை’, பெண்களுக்கு உயிர் ‘கணவன்’:தமிழர் கொள்கை (Post No.3391)26/11\n காளிதாசன் உவமைகள் (Post No.3388)25/11\nபோர்க்கள உருவகம்: பரணரும் காளிதாசனும்\nநெடுவாச ல்பாளையத்துறை கொண்டான் கதை (Post No. 3380)22/11\nஒரு யானையின் சோகக் கதை\nமரமும் மேகமும் கொடை வள்ளல்கள்- புலவர்கள் புகழாரம் (Post No.3373)20/11\nசம்பாதி செய்த அற்புதம்: கம்பன் கூறும் செய்தி\nநோஞ்சான் குதிரை மூலம் லிங்கன் சொன்ன புத்திமதி\nஇடி ஓசையை மிஞ்சும் புகழ் ஓசை\nகம்பனில்,திருவாசகத்தில் ‘இயம் சீதா மம சுதா’\nகம்ப ராமாயணத்தில் பரத நூலும், சுரத நூலும்\n புறநானூற்றுப் புலவர் புத்திமதி (Post no.3348)12/11\nகம்பன், சாக்ரடீஸ், திருமூலர் சொன்ன ஒரே கருத்து(Post No.3342)11/11\nகுடிகாரர்கள் பற்றி கம்பன் எச்சரிக்கை (Post No.3337)9/11\n கம்பன், காளிதாசன் தரும் தகவல்(Post No.3330)7/11\nமனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த பரிசு\nசர்வம் சத்யே ப்ரதிஷ்டிதம்; உலகத்தை உண்மை தாங்குகிறது\nபுத்தாண்டு தினத்தன்று ஏழு கோவிலுக்குச் செல்லும் பிரிட்டிஷ் எம்.பி. (Post No.3115)3/11\n5 ம���ா யக்ஞம், 14 ச்ரௌத யக்ஞம், 7 பாக யக்ஞங்கள் (Post No.3312)2/11\nரத ஸப்தமி ஸ்லோகம் (Post No.9233)\nநடந்தவை தான் நம்புங்கள் – 6 (Post No.9235)\nanecdotes Appar ARTICLES Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya crossword Hindu Indra in Tamil Kalidasa Lincoln london swaminathan mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar POSTS proverbs Quotations quotes Rig Veda shakespeare Silappadikaram Tamil Tirukkural Valluvar Valmiki Vedas அப்பர் கங்கை கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலண்டர் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி சுவாமிநாதன் ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பட்டியல் பழமொழி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவன் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://tamilkilavan.com/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-2-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2021-05-07T00:13:11Z", "digest": "sha1:QMSQDEOWJXU3UD3BFOXETL722UWNCP63", "length": 3592, "nlines": 65, "source_domain": "tamilkilavan.com", "title": "வாருங்கள் இந்த 2 பொருள் வைத்து பழைய தோசைக்கல்லை தகதகன்னு மின்ன வைக்கலாம். | Tamil Kilavan", "raw_content": "\nவாருங்கள் இந்த 2 பொருள் வைத்து பழைய தோசைக்கல்லை தகதகன்னு மின்ன வைக்கலாம்.\nவாருங்கள் இந்த 2 பொருள் வைத்து பழைய தோசைக்கல்லை தகதகன்னு மின்ன வைக்கலாம்.\nTwitterFacebook குல தெய்வதினை தெரியாதவர்கள் நிச்சயமாக காமாட்ச்சி விளக்கினை ஒவ்வொரு நளும் ஏற்றி …\n“இல்லத்தரசிகளுக்கான முக்கிய தகவல்” காமாட்சி விளக்கினை ஏற்றும்முன் அவசியம் இதை கவனியுங்கள்\nTwitterFacebook பிரியாணி இலை இல்லாமல் இந்திய மசாலாப் பொருட்கள் முழுமையடையாது. இத்தகைய பிரியாணி …\nவீட்டில் 2 பிரியாணி இலையை இப்படி செய்ங்க 10 நிமிடம் கழித்து ஆச்சரியப்படுவீங்க..\nகடையில் முட்டை வாங்கறதுக்கு முன்னாடி இந்த வீடியோ பாருங்க\n2 முட்டை இருக்கா வீட்டில் உள்ள அனைவருக்கும் கிரிஸ்பியான ஈவினிங் ஸ்நாக்ஸ் ரெடி.\nமுட்டை சுக்கா லஞ்சுக்கு பக்காவான சைடிஷ் 10 நிமிடத்தில் இப்படி சுவையா செய்து கொடுத்து அசத்துங்க.\nபல கோடி சொத்துக்கு சொந்தக்காரி ஒரு வேலை சோற்றுக்காக வீட்டு வேலை செய்து பிழைக்கும் அவலம்\n20 ஆயிரம் வருடங்களுக்கு முன் மூழ்கிப்போன தமிழனின் வரலாறு.. தற்போது மெல்ல மெல்ல மிதந்து வருகிறது.. தற்போது மெல்ல மெல்ல மிதந்து வருகிறது.. ஒவ்வொரு தமிழனும் உலகத்துக்கு அறிய நண்பர்களுடன் பகிருங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2021/05/03224314/Medical-personnel-completing-100-days-of-Covid-duties.vpf", "date_download": "2021-05-07T01:40:51Z", "digest": "sha1:5OAS4TOAGQUTRHYFKQMTOHEBF5LHRDSO", "length": 8644, "nlines": 116, "source_domain": "www.dailythanthi.com", "title": "Medical personnel completing 100 days of Covid duties to get priority in govt recruitments || கொரோனா பணியில் ஈடுபட்டவர்களுக்கு முன்னுரிமை மத்திய அரசு அறிவிப்பு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் முடிவுகள் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nகொரோனா பணியில் ஈடுபட்டவர்களுக்கு முன்னுரிமை மத்திய அரசு அறிவிப்பு\nஎதிர்கால மருத்துவ பணி நியமனங்களில் கொரோனா பணியில் ஈடுபட்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.\nகொரோனாவால் ஏற்பட்டுள்ள நெருக்கடியில் இருந்து விடுபடுவதற்கு மருத்துவத்துறையில் பணியாளர்களை அதிகரிக்குமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது. இவ்வாறு கொரோனா பணியில் ஈடுபடும் மருத்துவ பணியாளர்களுக்கு பல்வேறு திட்டகளில் முன்னுரிமை வழங்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.\nஅந்தவகையில் எதிர்காலத்தில் டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்களை அரசு பணியில் நியமிக்கும்போது 100 நாட்கள் கொரோனா பணியில் ஈடுபட்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.\nஇந்த பணியிட முன்னுரிமை மட்டுமின்றி, பிரதமரின் புகழ்பெற்ற கொரோனா தேசிய சேவை சம்மான் திட்டமும் அவர்களுக்கு வழங்கப்படும் என அந்த அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளது.\n1. ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் உயிரிழப்பது, இனப்படுகொலைக்கு சமம் - அலகாபாத் ஐகோர்ட் கண்டனம்\n1. கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக பொருளாதார சூழல் கடுமையாக மாறியுள்ளது - ரிசர்வ் வங்கி ஆளுநர்\n2. சென்னை ஐகோர்ட் தேர்தல் ஆணையம் குறித்து கூறிய கருத்துக்கள் கடுமையானவை பொருத்தமற்றவை -சுப்ரீம் கோர்ட்\n3. கொரோனா பாதித்தவரை ஊருக்கு வெளியே தங்க வைத்த கொடூரம்: துடிதுடித்து உயிரிழந்த கூலித்தொழிலாளி\n4. நந்திகிராம் தொகுதியில் தோல்வி, மம்தா பானர்ஜி முதல்வராகக் கூடாது: திரிபுரா முதல���வர்\n5. யாருக்கெல்லாம் கொரோனா பரிசோதனை நடத்தலாம்; புதிய விதிமுறைகள் வெளியீடு\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hanyingcultural.com/ta/wholesale-cartoon-heart-shape-purses-butterfly-pattern-silicone-coin-bags-women-wallets.html", "date_download": "2021-05-07T01:31:11Z", "digest": "sha1:ARHZ5T2UK2YICN2FBBUQOVS52CZGRNUP", "length": 11735, "nlines": 248, "source_domain": "www.hanyingcultural.com", "title": "சீனா மொத்த விற்பனை கார்ட்டூன் ஹார்ட் ஷேப் பணப்பைகள் பட்டாம்பூச்சி பேட்டர்ன் சிலிகான் நாணயம் பைகள் பெண்கள் பணப்பைகள் தொழிற்சாலை மற்றும் சப்ளையர்கள் | ஹான் யிங்", "raw_content": "\nAgirlgle கால்நடை தோட்டத்தில் பிசின் பன்றி சிலை கால்நடை பிசின் ...\nமொத்த விற்பனை ஊடுருவக்கூடிய சிலிகான் பென்சில் வழக்கு விருப்ப பிளாக் ...\nஅலுவலக உருளை பென்சில் வழக்கு வண்ணமயமான மாணவர் Sta ...\nமொத்த விற்பனை அழகிய அட்டைப்பெட்டி பேட்டர்ன் பென்சில் பை ஸ்கூல் ஒரு ...\nமொத்த விற்பனை கொரியன் பதிப்பு படைப்பு ஃபேஷன் எளிய வேட்டை ...\nசூப்பர்ஹீரோ விருப்ப பெரிய கொள்ளளவு மாணவர் கேன்வாஸ் Penci ...\nசூடான விற்பனை பச்சை பெரிய திறன் மாணவர் பேனா பையில் வேட்டை ...\nமொத்த சூடான விற்பனை அழகிய சேமிப்பு பென்சில் பை மாணவர் ...\nமொத்த விற்பனை கார்ட்டூன் அழகிய ஸ்டேஷனரி பேக் பென்சில் பை ஒரு ...\nமொத்த விற்பனை ப்ளேமிங்கோ பேட்டர்ன் அழகிய கார்ட்டூன் நாணயம் பணப்பை எஸ் ...\nமொத்த விற்பனை கார்ட்டூன் ஹார்ட் ஷேப் பணப்பைகள் பட்டாம்பூச்சி பேட்டர்ன் சிலிகான் நாணயம் பைகள் பெண்கள் பணப்பைகள்\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் Download as PDF\nநேரத்திற்குள் 7 வேலை நாட்கள் கட்டணத்தைச் செலுத்திய பிறகு\nமாதம் ஒன்றுக்கு 100000 பை / பைகள்\nஅளவிடப்பட்டது. நேரம் (நாள்) 5 7 பேச்சுவார்த்தை வேண்டும்\nமொத்த விற்பனை கார்ட்டூன் ஹார்ட் ஷேப் பணப்பைகள் பட்டாம்பூச்சி பேட்டர்ன் சிலிகான் நாணயம் பைகள் பெண்கள் பணப்பைகள்\nபிங்க் / பசுமை / நீல\n1Coin பை / எதிரில் பையில்\nகட்டணத்தைச் செலுத்திய பிறகு 7 செயல்பாடுகளுக்கும் நாட்களுக்குள்\nஒற்றை நகைகள் 1. பாலி பையில்\nஉள் பாதுகாப்பு 2. குமிழி பையில்\n3. ஸ்டாண்டர்ட் ஏற்றுமதி அட்டைப்பெட்டி\n1.Lead நேரம்: 7-30 நாட்கள் ஆர்டர் அளவு படி\n2.Delivery வழி: DHL யுபிஎஸ் டிஎன்டி Fedex ஈ.எம்.எஸ் சீனா பதவ��யை முதலியன\n3.Delivery நேரம்: 3-20days வேறுபட்ட ஷிப்பிங் வழிகளில் படி\nமுந்தைய: 2018 பணப்பைகள் மற்றும் கைப்பைகள் விருப்ப சிலிகான் நாணயம் பர்ஸ் கார்ட்டூன் மினி பை நாணயம் வழக்கு பணப்பை\nஅடுத்து: கார்ட்டூன் பியர் பேட்டர்ன் பணப்பைகள் சதுக்கத்தில் சிலிகான் நாணயம் பைகள் குழந்தைகள் பணப்பைகள்\n2019 மொத்த விற்பனை விலங்குகள் பேட்டர்ன் மினி நாணயம் பணப்பை சி ...\nஒரு W வடிவத்தில் புதிய பாணி பெண்ணின் பர்ஸ் ...\n2019 புதிய விருப்ப அச்சிடுதல் சிறிய அழகிய நாணயம் பணப்பை ...\n2018 கடல் ஸ்டார் நாணயம் பணப்பை ஃபேஷன் நாணயம் பணப்பை வெட்டி ...\nசீனா சப்ளையர்கள் கார்ட்டூன் அழகிய பெண் பணப்பைகள் சிறிய ...\nபெண் லத்தீன் பொறுத்தவரை zippered நாணயம் பை வைத்திருப்பவர் மாற்று ...\nஈவு ஹான் யிங் கலாச்சார தயாரிப்புகள் கார்ப்பரேஷன் லிமிட்டெட் நிறுவனத்தின்\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n© பதிப்புரிமை - 2010-2019: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nCrystal Pig Keychain, உலோக டின் பென்சில் பெட்டி , பெண்கள் Pvc ஜெல்லி நாணயம் பணப்பை , சிலிக்கான் பென்சில் வழக்கு , விண்டேஜ் உடை ரோல் வகை பென் பேக் , Keychain With Logo,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.starkholdingsinnbikeleasingpteltd.com/about", "date_download": "2021-05-07T01:39:29Z", "digest": "sha1:2PVU46YWNSRQQYPSXGROOG6YV5WPNTXZ", "length": 8328, "nlines": 81, "source_domain": "www.starkholdingsinnbikeleasingpteltd.com", "title": "Bike Leasing | Bedok | Stark,Motorbike rental,yamaha,honda,aerox,adv,jupitor", "raw_content": "\nஸ்டார்க் ஹோல்டிங்ஸ் விடுதியின் பைக்கை குத்தகை பிரைவேட் லிமிடெட்\nநாம் வகுப்பு 2B , முதல் $ 30 இருந்து 2A பைக்குகள் வாடகைக்கு ஒரு குத்தகை நிறுவனம் உள்ளன. 1 நாள் கூடுதல் $ 30 மற்றும் இல்லை வைப்பு குத்தகை வாடகை தேவைப்படும் என்றால் குறைந்தபட்ச வாடகை காலம் , 2 நாட்கள் இருக்கும் . அனைத்து விலை நிகர விலை , தயவுசெய்து நாங்கள் இட செய்ய வேண்டாம் என்று குறிப்பு எடுத்து . உங்கள் NRIC / இபி / கடவுச்சீட்டு மற்றும் சரியான சிங்கப்பூர் ஓட்டுனர் உரிமம் அல்லது ஒரு சர்வதேச ஓட்டுனர் உரிமம் அழைத்துவரவில்லை கொள்ளவும். புதிய உரிமம் வரவேற்கிறேன்.விபத்து ஏற்பட்டால் செலுத்தப்பட சவாரி அனுபவம் அதிகப்படியான 2 ஆண்டுகள் 23 ஆண்டுகள் யார் வாடகைக்கு எடுப்பவர் செலுத்தப்பட சவாரி அனுபவம் அதிகப���படியான 2 ஆண்டுகள் 23 ஆண்டுகளுக்கு குறைவான ஒவ்வொரு கூற்றை $ 5000 இருக்கும் யார் இழப்பீட்டை, வாடகைக்கு எடுப்பவர் க்கான $ 2000 இருக்கும். நிகழ்வில் சவாரி விபத்து அறிக்கை செய்ய முடியவில்லை அல்லது காப்பீடு அதன்படி அனைத்து கூற்றுக்கள் களைவதற்கு விபத்து மறைக்கும் என்றால்.\nடெபாசிட் எதுவும் தேவையில்லை IS / இல்லை மறைக்கப்பட்ட செலவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://www.vativamaippu.com/?CAT=4-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D&P=4", "date_download": "2021-05-07T00:37:30Z", "digest": "sha1:X55HXLKFSX33B5XRTYOR5DHU54QKKMYU", "length": 17970, "nlines": 94, "source_domain": "www.vativamaippu.com", "title": " கிராபிக்ஸ் - வடிவமைப்பு இதழ்", "raw_content": "\nஉலகளவில் வடிவமைப்பாளர்களிடமிருந்து நல்ல வடிவமைப்புகளைக் கண்டறியவும்.\nஉலகளாவிய பிராண்டுகளிலிருந்து புதுமையான தயாரிப்புகளைக் கண்டறியவும்.\nஉலகளாவிய கட்டடக் கலைஞர்களிடமிருந்து சிறந்த கட்டடக்கலை திட்டங்களைக் கண்டறியவும்.\nசர்வதேச ஆடை வடிவமைப்பாளர்களிடமிருந்து படைப்பு பேஷன் வடிவமைப்புகளைக் கண்டறியவும்.\nபடைப்பு பேஷன் டிசைன்களை ஆராயுங்கள்\nஉலகளாவிய கிராபிக்ஸ் வடிவமைப்பாளர்களிடமிருந்து சிறந்த கிராஃபிக் வடிவமைப்புகளைக் கண்டறியவும்.\nசிறந்த கிராஃபிக் வடிவமைப்புகளை ஆராயுங்கள்\nஉலகளாவிய வடிவமைப்பு நிறுவனங்களிலிருந்து சிறந்த மூலோபாய வடிவமைப்புகளைக் கண்டறியவும்.\nசிறந்த மூலோபாய வடிவமைப்புகளை ஆராயுங்கள்\nஞாயிறு 18 ஏப்ரல் 2021\nஅச்சுக்கலை திட்டம் ஒரு கண்ணாடியில் பிரதிபலிப்பை அதன் அச்சில் ஒன்றால் வெட்டப்பட்ட காகித எழுத்துக்களுடன் இணைக்கும் சோதனை அச்சுக்கலை திட்டம். இது ஒரு முறை புகைப்படம் எடுத்த 3 டி படங்களை பரிந்துரைக்கும் மட்டு இசையமைப்பில் விளைகிறது. இந்த திட்டம் டிஜிட்டல் மொழியிலிருந்து அனலாக் உலகத்திற்கு மாறுவதற்கு மந்திர மற்றும் காட்சி முரண்பாட்டைப் பயன்படுத்துகிறது. ஒரு கண்ணாடியில் கடிதங்களை நிர்மாணிப்பது பிரதிபலிப்புடன் புதிய யதார்த்தங்களை உருவாக்குகிறது, அவை உண்மை அல்லது பொய் அல்ல.\nசனி 17 ஏப்ரல் 2021\nகார்ப்பரேட் அடையாளம் யானோல்ஜா என்பது சியோலை தளமாகக் கொண்ட நம்பர் 1 பயண தகவல் தளமாகும், இதன் பொருள் கொரிய மொழியில் “ஏய், விளையாடுவோம்”. லோகோடைப் எளிய, நடைமுறை உணர்வை வெளிப்படுத்தும் வகையில் சான்-செரிஃப் எழுத்துருவுடன் வடிவமை���்கப்பட்டுள்ளது. சிறிய எழுத்துக்களைப் பயன்படுத்துவதன் மூலம், தைரியமான மேல் வழக்கைப் பயன்படுத்துவதோடு ஒப்பிடும்போது இது ஒரு விளையாட்டுத்தனமான மற்றும் தாளப் படத்தை வழங்க முடியும். ஒளியியல் மாயையைத் தவிர்ப்பதற்காக ஒவ்வொரு எழுத்துக்களுக்கும் இடையிலான இடைவெளி நேர்த்தியாகத் திருத்தப்படுகிறது, மேலும் இது சிறிய அளவிலான லோகோடைப்பில் கூட தெளிவை அதிகரித்தது. தெளிவான மற்றும் பிரகாசமான நியான் வண்ணங்களை நாங்கள் கவனமாக தேர்ந்தெடுத்தோம் மற்றும் மிகவும் வேடிக்கையான மற்றும் உறுதியான படங்களை வழங்க நிரப்பு சேர்க்கைகளைப் பயன்படுத்தினோம்.\nவெள்ளி 16 ஏப்ரல் 2021\nவிவசாய புத்தகம் இந்த புத்தகம் விவசாயம், மக்கள் வாழ்வாதாரம், விவசாய மற்றும் ஓரங்கட்டல், விவசாய நிதி மற்றும் விவசாய கொள்கை என வகைப்படுத்தப்பட்டுள்ளது. வகைப்படுத்தப்பட்ட வடிவமைப்பின் மூலம், இந்த புத்தகம் மக்களின் அழகியல் தேவையை பூர்த்தி செய்கிறது. கோப்புடன் நெருக்கமாக இருக்க, ஒரு முழு மூடப்பட்ட புத்தக அட்டை வடிவமைக்கப்பட்டது. புத்தகத்தை கிழித்த பின்னரே வாசகர்கள் திறக்க முடியும். இந்த ஈடுபாடானது ஒரு கோப்பைத் திறக்கும் செயல்முறையை வாசகர்கள் அனுபவிக்க அனுமதிக்கிறது. மேலும், சுஜோ கோட் போன்ற சில பழைய மற்றும் அழகான விவசாய சின்னங்கள் மற்றும் குறிப்பிட்ட காலங்களில் பயன்படுத்தப்படும் சில அச்சுக்கலை மற்றும் படம். அவை மீண்டும் ஒன்றிணைக்கப்பட்டு புத்தக அட்டையில் பட்டியலிடப்பட்டுள்ளன.\nவியாழன் 15 ஏப்ரல் 2021\nபிராண்டிங் இது எதிர்காலத்திற்கான உள்ளூர் புத்துயிர் பற்றி மக்கள் பேசும் \"இணை உருவாக்கம் முகாம்\" நிகழ்விற்கான லோகோ வடிவமைப்பு மற்றும் பிராண்டிங் ஆகும். ஜப்பான் முன்னோடியில்லாத வகையில் குறைந்த பிறப்பு விகிதம், மக்கள் தொகை வயதானது அல்லது பிராந்தியத்தின் மக்கள் தொகை போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்கிறது. சுற்றுலாத்துறையில் ஈடுபடும் மக்களுக்கு பல்வேறு சிக்கல்களைத் தாண்டி தங்கள் தகவல்களைப் பரிமாறிக்கொள்வதற்கும் ஒருவருக்கொருவர் உதவுவதற்கும் \"இணை உருவாக்கம் முகாம்\" நிகழ்விற்கான லோகோ வடிவமைப்பு மற்றும் பிராண்டிங் ஆகும். ஜப்பான் முன்னோடியில்லாத வகையில் குறைந்த பிறப்பு விகிதம், மக்கள் தொகை வயதானது அல்லது பிராந்தியத்தின் மக்கள��� தொகை போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்கிறது. சுற்றுலாத்துறையில் ஈடுபடும் மக்களுக்கு பல்வேறு சிக்கல்களைத் தாண்டி தங்கள் தகவல்களைப் பரிமாறிக்கொள்வதற்கும் ஒருவருக்கொருவர் உதவுவதற்கும் \"இணை உருவாக்கம் முகாம்\" உருவாக்கியுள்ளது. ஒவ்வொரு நபரின் விருப்பத்திற்கும் பல்வேறு வண்ணங்கள் குறிக்கப்படுகின்றன, மேலும் இது பல யோசனைகளுக்கு வழிவகுத்தது மற்றும் 100 க்கும் மேற்பட்ட திட்டங்களை உருவாக்கியது.\nபுதன் 14 ஏப்ரல் 2021\nசாக்லேட் பேக்கேஜிங் 5 கோட்பாடுகள் ஒரு திருப்பத்துடன் வேடிக்கையான மற்றும் அசாதாரண மிட்டாய் பேக்கேஜிங் ஆகும். இது நவீன பாப் கலாச்சாரத்திலிருந்தே உருவாகிறது, முக்கியமாக இணைய பாப் கலாச்சாரம் மற்றும் இணைய மீம்ஸ்கள். ஒவ்வொரு பேக் வடிவமைப்பிலும் எளிமையான அடையாளம் காணக்கூடிய தன்மை உள்ளது, மக்கள் (தசை நாயகன், பூனை, காதலர்கள் மற்றும் பலவற்றோடு) தொடர்புபடுத்தலாம், மேலும் அவரைப் பற்றிய 5 குறுகிய தூண்டுதல் அல்லது வேடிக்கையான மேற்கோள்களின் தொடர் (எனவே பெயர் - 5 கோட்பாடுகள்). பல மேற்கோள்களில் சில பாப்-கலாச்சார குறிப்புகளும் உள்ளன. இது உற்பத்தியில் எளிமையானது மற்றும் பார்வைக்கு தனித்துவமான பேக்கேஜிங் மற்றும் ஒரு தொடராக விரிவாக்குவது எளிது\nசெவ்வாய் 13 ஏப்ரல் 2021\nலோகோ N & E லோகோவை மறு வடிவமைக்கும் போது, N, E நிறுவனர்கள் நெல்சன் மற்றும் எடிசன் பெயரைக் குறிக்கிறது. எனவே, அவர் ஒரு புதிய லோகோவை உருவாக்க N & E மற்றும் ஒலி அலைவடிவத்தின் எழுத்துக்களை ஒருங்கிணைத்தார். கைவினைப்பொருள் ஹைஃபை என்பது ஹாங்காங்கில் ஒரு தனித்துவமான மற்றும் தொழில்முறை சேவை வழங்குநராகும். அவர் ஒரு உயர்நிலை தொழில்முறை பிராண்டை வழங்குவார் மற்றும் தொழில்துறைக்கு மிகவும் பொருத்தமான ஒன்றை உருவாக்குவார் என்று எதிர்பார்க்கிறார். லோகோவைப் பார்க்கும்போது அதன் அர்த்தம் என்ன என்பதை மக்கள் புரிந்து கொள்ள முடியும் என்று அவர் நம்புகிறார். மிகவும் சிக்கலான கிராபிக்ஸ் பயன்படுத்தாமல் N மற்றும் E இன் எழுத்துக்களை எவ்வாறு எளிதாக அடையாளம் காண்பது என்பதே லோகோவை உருவாக்குவதற்கான சவால் என்று குளோரிஸ் கூறினார்.\nஅசல் மற்றும் ஆக்கபூர்வமான வடிவமைப்புகள், கலை, கட்டிடக்கலை, ஃபேஷன், கிராபிக்ஸ் வடிவமைப்பு, புதுமை மற்றும் வடிவமைப்பு உத்தி ஆகியவற்றை நாங்கள் விரும்புகிறோம். தினமும், திறமையான வடிவமைப்பாளர்கள், படைப்பாற்றல் கலைஞர்கள், புதுமையான கட்டிடக் கலைஞர்கள் மற்றும் சிறந்த பிராண்டுகளின் நல்ல வடிவமைப்புகளைத் தேர்ந்தெடுத்து வெளியிடுகிறோம். நல்ல வடிவமைப்பிற்கான உலகளாவிய பாராட்டையும் விழிப்புணர்வையும் உருவாக்குவதே எங்கள் நோக்கம்.\nSmartstreets-Smartbin™ சிகரெட் / கம் பின் வியாழன் 6 மே\nShayton Equilibrium ஹைபர்கார் புதன் 5 மே\nSATA | BIA - Blue Islands Açor பிராண்ட் அடையாளம் செவ்வாய் 4 மே\nநீங்கள் ஒரு வடிவமைப்பாளர், கலைஞர், கட்டிடக் கலைஞர், புதுமைப்பித்தன் அல்லது பிராண்ட் மேலாளரா பகிர்வதற்கு உங்களிடம் ஏதேனும் நல்ல வடிவமைப்புகள் உள்ளதா பகிர்வதற்கு உங்களிடம் ஏதேனும் நல்ல வடிவமைப்புகள் உள்ளதா உலகளவில் வடிவமைப்பாளர்கள், கலைஞர்கள், கட்டட வடிவமைப்பாளர்கள், கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் பிராண்டுகளிலிருந்து அசல் மற்றும் ஆக்கபூர்வமான வடிவமைப்புகளை வெளியிடுவதில் நாங்கள் மிகவும் ஆர்வமாக உள்ளோம். உங்கள் வடிவமைப்புகளை இன்று வெளியிடவும்.\nஅன்றைய வடிவமைப்பு நேர்காணல் வியாழன் 6 மே\nஅன்றைய வடிவமைப்பு புராணக்கதை புதன் 5 மே\nஅன்றைய வடிவமைப்பு செவ்வாய் 4 மே\nஅன்றைய வடிவமைப்பாளர் திங்கள் 3 மே\nஅன்றைய வடிவமைப்பு குழு ஞாயிறு 2 மே\nஅச்சுக்கலை திட்டம் கார்ப்பரேட் அடையாளம் விவசாய புத்தகம் பிராண்டிங் சாக்லேட் பேக்கேஜிங் லோகோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anumar.vayusutha.in/sloka0.html", "date_download": "2021-05-07T00:30:36Z", "digest": "sha1:ZEQOXZVWWND3W75V63W3U3HKS5RYVHRG", "length": 8559, "nlines": 48, "source_domain": "anumar.vayusutha.in", "title": " Slokas in praise of Hanuman | ஸம்ஸ்கிருத ஸ்லோகங்கள் தமிழ் எழுத்தில் | Index| பொருளடக்கம் |", "raw_content": "Close ஸ்லோகம் துதிகள்: தமிழ் ஸ்துதி: பிற மொழி கோவில்கள் கட்டுரைகள் பலகை விருந்தினர் ஏடு எங்கள் இணையம் பற்றி ஆங்கில இணையம் ஹிந்தி இணையம் வெளியீடு புதிய சேர்க்கை: தமிழ் இணையம் புதிய சேர்க்கை: ஆங்கில இணையம் புதிய சேர்க்கை: ஹிந்தி இணையம்\nதுதிகள்: தமிழ் ஸ்துதி: பிற மொழி\nபலகை எங்கள் இணையம் பற்றி வெளியீடு இணையம் ஆங்கில இணையம் ஹிந்தி இணையம்\nதமிழ் இணைய தளம் ஆங்கில இ. தளம் ஹிந்தி இ. தளம்\nஸ்லோகம் துதிகள்: தமிழ் ஸ்துதி: பிற மொழி கோவில்கள் கட்டுரைகள் பலகை விருந்தினர் ஏடு எங்கள் இணையம் பற்றி ஆங்கில இணையம் ஹிந்தி இணையம் வெளியீடு புதிய சேர்க்கை: தமிழ் இணையம் புதிய சேர்க்கை: ஆங்கில இணையம் புதிய சேர்க்கை: ஹிந்தி இணையம்\nவாயு சுத: ஸம்ஸ்கிருத ஸ்லோகங்கள் தமிழ் எழுத்தில்\n01. ஸ்ரீ இராம த்யானம் ஸ்ரீ இராமபிரானின் பரம பக்தர் ஆஞ்சநேய ஸ்வாமி. எங்கெல்லாம் இராம நாமம் சொல்லப் படுகிறதோ அங்கே இருப்பவர் அவர். அவரது தலைவனை முதலில் துதிப்போம்.\n02. ஶ்ரீ ஸீதாராம ஸ்தோத்ரம் இராம காவியத்தின் தலைவனையும், தலைவியையும் சேர்த்து புகழ்கிறார் ஆஞ்சநேய ஸ்வாமி\n03. ஆஞ்ஜநேய த்யானம் அனுமனை பற்றிய புகழ் மாலை - தொகுப்பு\n04. ஹனுமத் பஞ்சரத்னம் ஆதி சங்கர பகவத்பாதாள் இயற்றியது.\n05. ஆபதுத்தாரண ஹனுமத் ஸ்தோத்ரம் ஸ்ரீ விபூஷணர் இயற்றியது\n06. ஸ்ரீமத் ஹனுமத் அஷ்டகம் ஸ்ரீ மதுஸுதனாஶம ஶிஷ்யாச்யுத இயற்றியது\n07. ஹனுமத் கவசம் ஸ்ரீஇராமபிரானால் இயற்றப்பட்டது.\n08. ஸ்ரீமத் ஹனுமத் புஜங்கம் ஆதி சங்கர பகவத்பாதாள் இயற்றியது\n09. ஸ்ரீமாருதி கவசம் - கவசம் என்பது உடலுக்கு மட்டும் அல்ல, மனதிற்கும் கவசம்.\n10. மந்த்ராத்மகம் ஸ்ரீ மாருதி ஸ்தோத்ரம் - மாருதியின் வாழ்த்து எதிரிகளிடம் இருந்து தங்களை காப்பாற்றும்.\n11. ஹனுமத்ஸ்தோத்ரம் - ஸ்ரீ விபீஷணர் இயற்றியது\n12. ஸங்கட மோசன ஸ்தோத்ரம் - காசி பீடாதீஷ்வர ஜகத்குரு சங்கராசார்ய ஸ்வாமி ஸ்ரீ மஹேஸ்வராந்ந ஸரஸ்வதி ஸ்வாமி அவர்களால் இயற்றப்பட்டது.\n13. ஆஞ்சநேய ஸுப்ரபாதம் - ஆஞ்சநேயர் திருப்பள்ளி எழுச்சி\n14. ஸ்ரீ ஹனுமத் லாங்கூலாஸ்த்ர ஸ்தோத்ரம் ஆடுகின்ற வாலை அஸ்த்திரமாக்கி ஶத்ருக்களை நீறுப்படுத்தும் ஹனுமனின் வாலுக்கு வந்தனம்.\n16. ஸ்ரீ ஹனுமான் ஸ்தோத்தரம்\n19. ஆஞ்சநேய ஸ்தோத்திரம் ஸ்ரீமத் உமா மஹேஸ்வர ஸம்வாதம் இது ஆஞ்சநேய ஸ்வாமி கவசம். ஈஸ்வரன் உமையவளுக்கு உரைக்கும் ஆஞ்சநேய மகிமை.\n20. ஸ்ரீ ஹநுமத் த்வாதஶ நாம ஸ்தோத்ரம்\nஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க\nகாற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்\nபல மகான்கள் ஸ்ரீ ஆஞ்சநேயரை, அவரின் வீரத்தை, ஞானத்தை, உறுதிப்பாட்டை, வாக்குவன்மையை, அஞ்சாநெஞ்சத்தை, விழிப்புணர்ச்சியை, ஸ்ரீ இராம பக்தியை பற்றி, கூறியதை 'கட்டுரை'யிலும், பாடி பரவசமானதை 'ஸ்லோக'ங்களிலும், 'துதி'களிலும், 'ஸ்துதி'களிலும், அவர் அருள்பாலிக்கும் க்ஷேத்திரங்களை 'கோயில்'களிலும் தொகுத்து அளித்துள்ளோம்.\nகாற்றின் மகன் - அனுமனின் புகழ் பாடும் இவ்விணைய தளம் தாங்களை எதிர்கொண்டு வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறது. ஆஞ்சநேய ஸ்வாமியின் புகழ் உலக தமிழர்களை சென்றடைய வரும் இணைய தளம்.\nஅனுமன் வித்தியாசமாக - வேகமாக - முன்னோக்கி சிந்திப்பவர். செயலில் வீரன். வினையத்தின் உச்சம் அவர்\nபக்தர்களின் வல்வினை தீர்த்து மங்களம் அனைத்தும் அளிக்கும் அனுமனின் பதம் பணிவோம். பக்தர்களின் துர்சிந்தனைகளையும், தீய செயல்களையும் வேருடன் அறுத்து, அவர் தம் நினைவிலும் சொல்லிலும் செயலிலும் தூய்மை புகட்டுபவர். அவ்வனுமனின் தாள் சரணம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://svmhss.com/blog/en-pandigaiyin-naatkuripilirunthu/", "date_download": "2021-05-07T01:54:03Z", "digest": "sha1:YNDWGJPXGRWBLWH24UTO32MIXJNEAURS", "length": 3239, "nlines": 51, "source_domain": "svmhss.com", "title": "என் பண்டிகையின் நாட்குறிப்பிலிருந்து – Sri Venkateshwara Matric. Hr. Sec. School", "raw_content": "\nஎன் பண்டிகையின் நாட்குறிப்பிலிருந்து தங்கம் மூர்த்தியின் படைப்பாற்றலின் வெளிப்பாடாக…\nபெரும்பாலான இரவுகள் உறக்கமற்றதாய் இருந்து விடுகின்றன. சில இரவுகளில் இமைகள் மூடியபடி இருக்கும். மனசு திறந்துகிடக்கும். அன்றைய நாளின் நிகழ்வோ, மகிழ்வோ, கவலையோ, படித்ததோ, பாதித்ததோ, எதுவோ கவிதைகளாய்க் கிளர்ந்து மனசை மூடிக்கொள்ளும். அப்போதே விழிகள் திறந்து கொள்ளும். அப்படியாக எழுதப்பட்ட பல கவிதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. அதனால் இரவுகளின் குரல் கொஞ்சம் தூக்கலாகத் தெரியலாம்.\nஸ்ரீ வெங்கடேஸ்வரா பள்ளி ஆண்டு விழா நிகழ்வுகள் நாளிதழ் செய்திகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://saharatamil.blogspot.com/2019/10/blog-post.html", "date_download": "2021-05-06T23:57:30Z", "digest": "sha1:5U5GFR6BLNSVGHE3PZDP5XHUWM7PYT3A", "length": 10748, "nlines": 61, "source_domain": "saharatamil.blogspot.com", "title": "தோப்புத்துறை பள்ளிவாசலில் சுர்ஜித்துக்காக பிரார்த்தனை! ~ சஹாரா தமிழ்", "raw_content": "\nஞாயிறு, 27 அக்டோபர், 2019\nதோப்புத்துறை பள்ளிவாசலில் சுர்ஜித்துக்காக பிரார்த்தனை\nபிற்பகல் 4:44 #SaveSurjith, இந்திய செய்திகள், தமிமுன் அன்சாரி, தமிழ்நாடு, தமிழக செய்திகள், தொழுகை\nஇன்று (27.10.19) தோப்புத்துறை பெரிய பள்ளிவாசலில் , மதிய நேர (அஸர்) தொழுைகக்கு பின்பு , குழந்தை சுர்ஜித் மீண்டு வர சிறப்பு பிரார்த்தனை நடைப்பெற்றது.\nஇமாம் முனீர் அவர்கள் பிரார்த்தனை ( துவா) செய்தார்.\nஇதில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA, ஜமாத் தலைவர் AR.ஷேக் அப்துல்லா, முன்னாள் ஜமாத் தலைவர் K .\nM K. I. .நவாஸ்தீன், ஜமாத் செயலர் அபுபக்கர் சித்தீக் மற்���ும் ஜமாத்தினர்கள், மாணவர்கள், இளைஞர்கள் பங்கேற்றனர்.\nஇந்நிகழ்வில் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய, மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் , மீட்பு பணியில் ஈடுபடும் அமைச்சர்கள்,,அதிகாரிகள், வீரர்கள் பாராட்டுக்குரியவர்கள் என்றவர், அக்குழந்தை மீண்டு வர வேண்டும் என நாடே காத்திருப்பதாக கூறினார்.\nமேலும், இனி வரும் காலத்தில் இது போன்ற பேரிடர்களில் சீனாவின் தொழில் நுட்பத்தை பயன்படுத்த முனைப்பு காட்ட வேண்டும் என்றார்.\nஇந்திகழ்வை பிரபல கல்வி மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பான முஸ்லிம் மாணவர் முன்னணி (MSF) ஏற்பாடு செய்தது குறிப்பிடத்தக்கது.\nஇதே போன்று நாகூர் தர்ஹா மற்றும் முத்துப்பேட்டை தர்ஹாவிலும் சிறப்பு பிரார்த்தனைகள் நடைப்பெற்றதோடு, பரவலாக தமிழக மெங்கும் பள்ளிவாசல்களில் குழந்தை சுர்ஜித்துக்காக பிரார்த்தனைகள் நடைப்பெற்று வருவது அனைவரையும் உருக வைத்திருக்கிறது.\nபுனித மெக்கா, மதீனா விலும் தமிழக யாத்ரீகர்கள் பிரார்த்தனை நடத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nமின்னஞ்சல் மூலம் பின் தொடர\nதிருட்டு பயமா... இனி கவலை வேண்டாம்... குறைந்த சிலவில் நிறைந்த தரத்துடன் CCTV-கண்காணிப்பு கேமிரா மற்றும் Door Alarm- பாதுகாப்பு அலாரம் பொறுத்திட உடனே அணுகுங்கள் ஸ்பை-டேக் சேஃப்டி& செக்யூரிட்டி சொல்யூசன்ஸ் தொடர்புக்கு : 9443340341, 8344434315\nமஸ்ஜிதுந் நபவியில் நபிகளார் (ஸல்) அடக்கம் செய்யப்பட்டார்களா\n-எம்.எஸ்.எம். இம்தியாஸ் ஸலபி “மஸ்ஜிதுகள் அனைத்தும் அல்லாஹ்வுக்குச் சொந்தமானது எனவே அல்லாஹ்வுடன் எவரையும் அழைக்காதீர்கள். (72:18) என அல...\nசிந்திக்க சில நபிமொழிகள் 1) உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பாதது வரை (முழுமையான) ஈமான் கொண்டவராக மாட்டார் ...\nஅப்பாவி முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக்கிய டெல்லி காவல்துறைக்கு நீதிமன்றம் கண்டிப்பு\nபாவம் ஓரிடம் பழி ஓரிடம் என்பதைப் போல பயங்கரவாதச் செயல்களை செய்தவர்கள் எங்கோ இருப்பார்கள் ஆனால் அது தொடர்பாக காவல் துறையினரால்...\nஇணைவீர் சஹாரா தமிழ் வாட்ஸ்அப் குழுமத்தில்..\nஇணைந்திருங்கள்... உங்கள் நட்புகளை இணைய தூண்டுங்கள்... https://chat.whatsapp.com/ K3tYGhdGKw7GV1Nkt1QVAD\nவிரைவில் அகில இந்திய அளவில் முஸ்லிம்களுக்கு 6 சதவீத இடஒதுக்கீடு - மத்திய அரசு தீவிரம்\nஇந��திய அளவில் முதன் முறையாக இட ஒதுக் கீட்டு விழிப்புணர்வை அனைத்து இயக்கங்களுக்கும் வழங்கிய தமுமுகவிற்கு வெற்றி. முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீ...\nஉலக செய்திகள் (59) பலஸ்தீனம் (55) இந்திய செய்திகள் (43) இந்தியா (35) இஸ்லாம் (30) தமிழக செய்திகள் (29) மமக (27) அரசியல் (25) இந்திய முஸ்லிம்கள் (22) பாபரி மஸ்ஜித் (17) இலங்கை (11) இனப்படுகொலை (8) மனித உரிமை மீறல்கள் (8) உதவிகள் (7) குஜராத் இனப்படுகொலை (7) சட்டம் (7) அறிவியல் (6) கல்வி உதவி (6) தெரியுமா உங்களுக்கு (4) இட ஒதுக்கீடு (3) இரத்த தானம் (3) உயர் நீதிமன்றம் (2) இரத்த தான முகாம் (1) மருத்துவ உதவி... (1)\nவலைப்பதிவு காப்பகம் அக்டோபர் (1) ஜூலை (1) செப்டம்பர் (2) ஆகஸ்ட் (2) அக்டோபர் (1) ஆகஸ்ட் (1) பிப்ரவரி (3) அக்டோபர் (9) ஆகஸ்ட் (6) ஏப்ரல் (3) பிப்ரவரி (2) ஜனவரி (6) டிசம்பர் (1) நவம்பர் (2) செப்டம்பர் (5) ஆகஸ்ட் (2) ஜூலை (6) ஜூன் (16) ஏப்ரல் (4) பிப்ரவரி (5) ஜனவரி (5) ஆகஸ்ட் (44) ஜூலை (37) ஜூன் (3) மே (3) மார்ச் (1) ஜனவரி (3) செப்டம்பர் (2) ஆகஸ்ட் (12) ஜூலை (7) மே (2) ஏப்ரல் (3) மார்ச் (18) பிப்ரவரி (28) ஜனவரி (3) டிசம்பர் (4) நவம்பர் (1) ஆகஸ்ட் (4) ஜூலை (6) ஜூன் (1) மே (1) ஏப்ரல் (6) ஜனவரி (1) டிசம்பர் (1) நவம்பர் (3) அக்டோபர் (2) ஆகஸ்ட் (18) ஜூலை (9) ஜூன் (17) மே (2) ஏப்ரல் (2) மார்ச் (9) பிப்ரவரி (3) ஜனவரி (3) டிசம்பர் (8) நவம்பர் (3) அக்டோபர் (10) செப்டம்பர் (11) ஆகஸ்ட் (14) ஜூலை (10) ஜூன் (11) மே (11) ஏப்ரல் (17) மார்ச் (9) பிப்ரவரி (14) ஜனவரி (18) டிசம்பர் (20) நவம்பர் (13) அக்டோபர் (27) செப்டம்பர் (38) ஆகஸ்ட் (21)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.haiyanbolt.com/hex-socket-bolt.html", "date_download": "2021-05-07T01:56:56Z", "digest": "sha1:QKIHGFYRTODE5L2F64EVGXKLMW73QFBU", "length": 14936, "nlines": 162, "source_domain": "ta.haiyanbolt.com", "title": "ஏ 2 எஃகு 304 ஹெக்ஸ் சாக்கெட் போல்ட் - ஹையன்போல்ட்.காம்", "raw_content": "\nஹெக்ஸ் சாக்கெட் வூட் ஸ்க்ரூ\nஹெக்ஸ் ஃபிளேன்ஜ் வூட் ஸ்க்ரூ\nஹெக்ஸ் டோம் தொப்பி நட்\nதிரிக்கப்பட்ட ராட் & ஸ்டட்\nஸ்டாம்பிங் & வெல்டிங் பாகங்கள்\nஏ 2 எஃகு 304 ஹெக்ஸ் சாக்கெட் போல்ட்\nவீடு / தயாரிப்புகள் / ஆணி / ஹெக்ஸ் சாக்கெட் போல்ட் / ஏ 2 எஃகு 304 ஹெக்ஸ் சாக்கெட் போல்ட்\nஹயான் போல்ட் கார்பன் ஸ்டீல் மற்றும் எஃகு சாக்கெட் போல்ட் இரண்டையும் உற்பத்தி செய்கிறது.\nபொருள்: அலாய் ஸ்டீல், எஃகு.\nஅளவு: 1/4 ”முதல் 1” வரை, 6 மிமீ முதல் 30 மிமீ வரை.\nமேற்பரப்பு பூச்சு: துத்தநாகம் பூசப்பட்ட, வெற்று, கருப்பு ஆக்சைடு, எச்டிஜி, மெச் கால்வ், டிக்ரோமெட்\nபொதி செய்தல்: ஒட்டு பலகை கொண்ட அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: மாதத்திற்கு 200 டன்\nஹெக்ஸ் சாக்கெட் போல்ட் பற்றி மேலும் அறிக:\nஅறுகோண சாக்கெட் ஹெட் கேப் ஸ்க்ரூ, அறுகோண சாக்கெட் ஹெட் போல்ட், கப் ஹெட் ஸ்க்ரூ, அறுகோண சாக்கெட் ஹெட் ஸ்க்ரூ என்றும் குறிப்பிடப்படுகிறது, அதன் பெயர் வேறுபட்டது, ஆனால் பொருள் ஒன்றே.\nபொதுவாக, பொதுவாக பயன்படுத்தப்படும் ஆறு புள்ளி சாக்கெட் ஹெட் கேப் திருகுகள் தரம் 4.8, தரம் 8.8, தரம் 10.9 மற்றும் தரம் 12.9 ஆகும். இது அறுகோண சாக்கெட் திருகு என்றும் அழைக்கப்படுகிறது, இது அறுகோண சாக்கெட் போல்ட் என்றும் அழைக்கப்படுகிறது. இதன் தலை அறுகோண மற்றும் உருளை. பொருள் படி எஃகு மற்றும் இரும்பு உள்ளன. துருப்பிடிக்காத எஃகு SUS202 அறுகோண சாக்கெட் ஹெட் கேப் திருகுகள் எஃகு உள்ளன. இது எஃகு மூலம் தயாரிக்கப்படுகிறது.\nஎஃகு SUS304 அறுகோண சாக்கெட் ஹெட் கேப் திருகுகள் மற்றும் எஃகு SUS316 அறுகோண சாக்கெட் ஹெட் கேப் திருகுகள் உள்ளன. அறுகோண சாக்கெட் தலை திருகுகளின் வலிமை தரத்தின்படி, 4.8-தர அறுகோண சாக்கெட் தலை திருகுகள், 8.8-தர அறுகோண சாக்கெட் தலை திருகுகள், 10.9-தர அறுகோண சாக்கெட் தலை திருகுகள் மற்றும் 12.9-தர அறுகோண சாக்கெட் தலை திருகுகள் உள்ளன. தரம் 8.8-12.9 அறுகோண சாக்கெட் ஹெட் கேப் திருகுகள் அதிக வலிமை மற்றும் உயர் தர அறுகோண சாக்கெட் போல்ட் ஆகும்.\nபோல்ட் பொருளின் பெயரளவு இழுவிசை வலிமை 400MPa ஐ அடைகிறது;\nபோல்ட் பொருளின் மகசூல் வலிமை விகிதம் 0.6; போல்ட் பொருளின் பெயரளவு மகசூல் வலிமை 400 × 0.6 = 240 எம்.பி.ஏ.\nசெயல்திறன் தரம் 10.9 உயர் வலிமை கொண்ட ஆணி, மற்றும் வெப்ப சிகிச்சையின் பின்னர் பொருள் பின்வருவனவற்றை அடையலாம்:\nபோல்ட் பொருளின் பெயரளவு இழுவிசை வலிமை 1000MPa வரை இருக்கும்;\nபோல்ட் பொருளின் மகசூல் வலிமை விகிதம் 0.9; போல்ட் பொருளின் பெயரளவு மகசூல் வலிமை 1000 × 0.9 = 900MPa ஆகும்.\nஅறுகோண சாக்கெட் ஹெட் போல்ட்டின் செயல்திறன் தரத்தின் பொருள் சர்வதேச பொது தரமாகும். ஒரே செயல்திறன் தரத்துடன் கூடிய போல்ட்களுக்கு, பொருள் மற்றும் தோற்றத்தின் இடத்தைப் பொருட்படுத்தாமல் செயல்திறன் ஒரே மாதிரியாக இருக்கும். வடிவமைப்பில் செயல்திறன் தரம் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுகிறது.\nஅறுகோண சாக்கெட் போல்ட்களின் வகைப்பாடு அடிப்படையில் இது போன்றது. சந்தை விலை நிச்சயமாக வெவ்வேறு தரங்களுடன் வித்தியாசமாக இருக்கும். பொதுவாக, அதிக வலிமை கொண்ட சாக்கெட் ஹெட் போல்ட்களின் விலை பொதுவான சாக்கெட் ஹெட் போல்ட்களை விட அதிகமாக இருக்கும். சந்தையில், பொதுவாக 4.8, 8.8, 10.9 மற்றும் 12.9 தரங்கள் உள்ளன.\nசாக்கெட் ஹெட் போல்ட்டின் தலை விசித்திரமான மற்றும் வளைந்திருக்கும், இது கடுமையான சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும். உதாரணமாக, தயாரிப்பு தோற்றத்தைப் பொறுத்தவரை, இது ஒட்டுமொத்தமாக அழகாக இல்லை. விசித்திரமான நாடகமும் உள்ளது, உற்பத்தி கருவி குத்துவிளக்கு முள் எளிதில் உடைக்க வழிவகுக்கும். மிகவும் கடுமையான பிரச்சனை அறுகோண ஆணி உடைத்தல் மற்றும் பல.\nDIN912 ஹெக்ஸ் சாக்கெட் போல்ட் gr10.9 வெற்று கருப்பு\n8.8 கிரேடு ஹெக்ஸ் சாக்கெட் போல்ட் பிளாக் ஆக்சைடு\n10.9 மஞ்சள் துத்தநாகம் பூசப்பட்ட தோள்பட்டை\nஏ 2 எஃகு தோள்பட்டை போல்ட்\n8.8 தர தோள்பட்டை போல்ட் வெற்று பூச்சு\nDIN933 ஹெக்ஸ் போல்ட் A2 70 எஃகு 304 மற்றும் 316\nDIN933 DIN931 தரம் 10.9 12.9 ஹெக்ஸ் போல்ட் பிளாக் ஆக்சைடு உயர் இழுவிசை மற்றும் வலிமை\n8.8 கருப்பு ஆக்சைடில் ஹெக்ஸ் போல்ட் சமவெளி\nஎம் 3 முதல் எம் 20 பிளாக் ஆக்சைடு இன்டர்னல் ஸ்லாட்டட் லாக் வாஷர்\nDIN137b வளைந்த வாஷர் அலை வசந்த வாஷர்\nதிரிக்கப்பட்ட ராட் & ஸ்டட்\nஸ்டாம்பிங் & வெல்டிங் பாகங்கள்\nதிரிக்கப்பட்ட ராட் & ஸ்டட்\nஹையான் போல்ட் கோ, லிமிடெட்\nசேர்: எண் 883 லியாங்சியாங் சாலை, வுயுவான் டவுன், ஹையான், ஜெஜியாங், சீனா\nபதிப்புரிமை © 2015 ஹையான் போல்ட் கோ., லிமிடெட், அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. | எக்ஸ்எம்எல் தள வரைபடம் | இயக்கப்படுகிறது Hangheng.cc", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2021-05-07T02:16:27Z", "digest": "sha1:FQACYY2JG6HROICF6DKRG2SRZ3J3LCQQ", "length": 3765, "nlines": 61, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சபதம் (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசபதம் 1971 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. மாதவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரவிச்சந்திரன், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.\nடி. கே. பகவதி (இரு வேடங்கள்)\nஆடும் அலைகள் எஸ். ஜானகி\nஆத்தாடி ஆடு புலியுடன் ஏ. எல். ராகவன், ஜி. கே. வெங்கடேஷ், எல். ஆர். ஈஸ்வரி\nதொடுவதென்ன தென்றலோ எஸ். பி. பாலசுப்ரமணியம் கண்ணதாசன்\nநெஞ்சுக்கு நீதி உண்டு சீர்காழி கோவிந்தராஜன், எல். ஆர். ஈஸ்வரி\nவேறுவகையாகக் குறிப��பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 ஆகத்து 2019, 10:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilkilavan.com/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2/", "date_download": "2021-05-07T01:23:55Z", "digest": "sha1:W3PTGFFKAM4UPRFOB33OWSDQNCECZQZO", "length": 3480, "nlines": 65, "source_domain": "tamilkilavan.com", "title": "தோல் குறிச்சொற்கள் எதனால் உருவாகிறது (skin tags) இது எப்படி நீக்கிவிடலாம். | Tamil Kilavan", "raw_content": "\nதோல் குறிச்சொற்கள் எதனால் உருவாகிறது (skin tags) இது எப்படி நீக்கிவிடலாம்.\nTwitterFacebook 1 நாளில் அனைத்து சிறுநீர் கழிவு மற்றும் தொற்றுக்கள் வெளியேறும் இயற்கையே …\n1 நாளில் அனைத்து சிறுநீர் கழிவு மற்றும் தொற்றுக்கள் வெளியேறும் இயற்கையே மருந்து\nTwitterFacebook குழந்தை பிறந்தவுடன் Doctor’s என்னவெல்லாம் செய்கிறார்கள்\nகுழந்தை பிறந்தவுடன் Doctor’s என்னவெல்லாம் செய்கிறார்கள்\nகடையில் முட்டை வாங்கறதுக்கு முன்னாடி இந்த வீடியோ பாருங்க\n2 முட்டை இருக்கா வீட்டில் உள்ள அனைவருக்கும் கிரிஸ்பியான ஈவினிங் ஸ்நாக்ஸ் ரெடி.\nமுட்டை சுக்கா லஞ்சுக்கு பக்காவான சைடிஷ் 10 நிமிடத்தில் இப்படி சுவையா செய்து கொடுத்து அசத்துங்க.\nபல கோடி சொத்துக்கு சொந்தக்காரி ஒரு வேலை சோற்றுக்காக வீட்டு வேலை செய்து பிழைக்கும் அவலம்\n20 ஆயிரம் வருடங்களுக்கு முன் மூழ்கிப்போன தமிழனின் வரலாறு.. தற்போது மெல்ல மெல்ல மிதந்து வருகிறது.. தற்போது மெல்ல மெல்ல மிதந்து வருகிறது.. ஒவ்வொரு தமிழனும் உலகத்துக்கு அறிய நண்பர்களுடன் பகிருங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/education-career/career/29000-salaried-job-for-be-btech-holders/cid2828407.htm", "date_download": "2021-05-07T01:33:25Z", "digest": "sha1:CIQUJNPL2AV5ABBJPBTU3XFCW2FAG5FJ", "length": 4298, "nlines": 63, "source_domain": "tamilminutes.com", "title": "B.E/BTECH படித்திருந்தால் 29000 சம்பளத்தில் வேலை!", "raw_content": "\nB.E/BTECH படித்திருந்தால் 29000 சம்பளத்தில் வேலை\nசென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் காலியாக உள்ள Project Associate காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்���ும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.\nசென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் காலியாக உள்ள Project Associate காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.\nPROJECT ASSOCIATE - இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான வயது வரம்பு குறித்த எந்தவொரு தகவலும் இடம்பெறவில்லை.\nசம்பள விவரம்- குறைந்தபட்சம்- 21,500/-\nProject Associate – கல்வித் தகுதி எனக் கொண்டால் B.E/BTECH தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nProject Associate – பணி அனுபவம் குறித்த எந்தவொரு தகவலும் இடம்பெறவில்லை.\nஇந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்\nஎன்ற இணைய முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.\nஎன்ற லிங்கில் சென்று பார்க்கவும்.\nTamil Minutes இணையதளம் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. புதிய செய்திகளையும், பயனுள்ள தகவல்களையும் வழங்குவதே இந்த இணையதளத்தின் நோக்கமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/lifestyle/beauty/pack-to-reduce-neck-darkening/cid2715435.htm", "date_download": "2021-05-07T01:02:52Z", "digest": "sha1:RU7AXXTMRUUX3FG5O2HEWNHXPB74IWOM", "length": 2659, "nlines": 47, "source_domain": "tamilminutes.com", "title": "கழுத்தின் கருமையை சரிசெய்யும் பேக் செய்யலாம் வாங்க!", "raw_content": "\nகழுத்தின் கருமையை சரிசெய்யும் பேக் செய்யலாம் வாங்க\nகழுத்தின் கருமையை சரிசெய்யும் வகையிலான பேக் செய்வது எப்படி என்றும், அதனைப் பயன்படுத்துவது எப்படி என்றும் பார்க்கலாம் வாங்க.\nரோஸ் வாட்டர்- 2 ஸ்பூன்\nஆலிவ் ஆயில்- 1 ஸ்பூன்\n1. பாசிப்பயறினை வெயிலில் காயவைத்து அரைத்துக் கொள்ளவும்.\n2. அடுத்து பாசிப்பயறு மாவுடன் ரோஸ் வாட்டர் மற்றும் ஆலிவ் ஆயில் சேர்த்துக் கலந்தால் பேக் ரெடி.\nஇந்த பேக்கினை கழுத்தில் கருமை உள்ள இடங்களில் அப்ளை செய்து மசாஜ் செய்தால் கழுத்தின் கருமை சரியாகும்.\nTamil Minutes இணையதளம் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. புதிய செய்திகளையும், பயனுள்ள தகவல்களையும் வழங்குவதே இந்த இணையதளத்தின் நோக்கமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akattiyan.lk/2020/12/blog-post_847.html", "date_download": "2021-05-07T01:22:40Z", "digest": "sha1:DUAC4RHWOYE6XM3QUOCR3RUUP5KW3JF4", "length": 7803, "nlines": 73, "source_domain": "www.akattiyan.lk", "title": "தலவாக்கலை நகரில் கொள்ளை சம்பவம் - சந்தேக நபரை தேடும் பணியில் பொலிஸார் - அகத்தியன் | Online", "raw_content": "\nHome மலையகம் தலவாக்கலை நகரில் கொள்ளை சம்பவம் - சந்தேக நபரை தேடும் பணியில் பொலிஸார்\nதலவாக்கலை நகரில் கொள்ளை சம்பவம் - சந்தேக நபரை தேடும் பணியில் பொலிஸார்\nதலவாக்கலை நகரில் உள்ள தங்க ஆபாரணங்கள் விற்பனை செய்யும் நிலையத்தில் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான தங்கமாலையினை கொள்ளையிட்டு சென்ற சந்தேக நபரை கைது செய்வதற்கு தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகுறித்த சம்பவமானது,நேற்றைய தினம் (வியாழக்கிழமை) மாலை 3.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.\nகுறித்த சந்தேக நபர் தங்க மாலையினை கொள்வனவு செய்வது போல் பரீசிலனை செய்து அதனை பூமியில் போட்டுவிட்டு, பிறகு அதனை அவர் அணிந்திருந்த காற்சட்டையின் பையினுல் மறைக்கும் காட்சி குறித்த நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டிவி கேமராவில் பதிவாகியுள்ளது.\nகுறித்த சம்பவம் தொடர்பில் விற்பனை நிலையத்தின் உரிமையாளர் தலவாக்கலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளதைத் தொடர்ந்து சி.சி.டிவி.கேமராவின் உதவியோடு குறித்த சந்தேக நபரை பொலிஸார் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.\nகுறித்த சந்தேக நபர் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள்\nதலவாக்கலை பொலிஸ் நிலையத்திற்கு தகவலை வழங்குமாறு தலவாக்கலை பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nமேலும் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தலவாக்கலை\nபொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nதலவாக்கலை நகரில் கொள்ளை சம்பவம் - சந்தேக நபரை தேடும் பணியில் பொலிஸார் Reviewed by Chief Editor on 12/25/2020 11:16:00 am Rating: 5\nபாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் மேலதிக வகுப்புகளுக்கு மறு அறிவித்தல் வரை விடுமுறை\nபாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் மேலதிக வகுப்புகளுக்கு மறு அறிவித்தல் வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், நோன்பு பெருநாள், வெசாக் ...\nகொரோனா பரவல் காரணமாக நாட்டின் பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள விடுமுறையானது மேலும் ஒரு வார காலத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ...\nமோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nவாகன போக்குவரத்து திணைக்களத்தின் நாரஹென்பிட்டி மற்றும் வேரஹெர அலுவலகங்கள் ஒரு வாரத்திற்கு மூடப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம த...\nDReAM என அறிமுகப்படுத்தப்பட்டுள்ள முற்பாதுகாப்பு விதிமுறைகளுக்கமைய மதுபான சாலைகளை திறந்து ���ைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. D – சமூக இடை...\nமுழு அதிகாரம் : அகத்தியன் ஊடக சேவை 2020\nஆசிரியர் பீட தெடர்புகளுக்கு 0779516119\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akattiyan.lk/2021/04/ipl.html", "date_download": "2021-05-07T00:01:20Z", "digest": "sha1:T27PJ6ZGT3GP54LMUB4MVVJCWLTWMQON", "length": 9984, "nlines": 74, "source_domain": "www.akattiyan.lk", "title": "இன்றைய IPL போட்டியின் திக் திக் நிமிடங்கள் ! - அகத்தியன் | Online", "raw_content": "\nHome விளையாட்டு இன்றைய IPL போட்டியின் திக் திக் நிமிடங்கள் \nஇன்றைய IPL போட்டியின் திக் திக் நிமிடங்கள் \nஇன்றைய நாள் ஜ.பீஎல் ஆரம்ப ஆட்டத்தினை பெங்களுர் மற்றும் கொல்கத்தா ஆகிய அணிகள் மோதியிருந்தது.\nநாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ரோயல்சலஞ்சர்ஸ் பெங்களுர் அணித்தலைவர் விராட்ஹோலி முதலில் துடுப்பெடுத்தாட்டத்தினை முடிவு செய்தார் குறித்த முடிவு ரசிகர்கள் மத்தியில் ஒரு கேள்விக்குறியாக இருந்தாலும் களத்தடுப்பாட்டகாரர்களின் செயற்பாட்டில் குறித்த முடிவின் கருப் பொருள் விளங்கியிருக்கும் காரணம் சென்னையில் இன்று கடும் வெப்பம் போட்டி ஆரம்பித்தது பிற்பகல் 3.30 மணி,\nவிராட்ஹோலியின் ஆரம்ப துடுப்பாட்டம் பிரகாசிக்காமல் சென்றாலும் மெக்ஸ்வெல் மற்றும் படிக்கல் ஆகியோரது இணைப்பாட்டம் அணிக்கு மேலும் வலுச்சேர்த்ததுடன் வெற்றியின் பக்கம் பெங்களுர் செல்வதற்கு இவர்களின் இணைப்பாட்டம் உதவியாக இருந்தது.\nபின்னர் பிடியெடுப்பில் படிக்கல் ஆட்டமிளக்க களமிறங்கிய வில்லியர்ஸின் துடுப்பாட்டம் மற்றும் நிதானமான ஆட்டத்தினால் அணி மீண்டும் வலுவான நிலைக்குச் சென்றது.\nரசிகர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறிய நாளாக இன்றைய நாள் ஆட்டம் காணப்பட்டது அணித்தலைவர் களத்தில் இல்லாமல் இன்றைய நாள் ரோயல்சலஞ்சர்ஸ் பெங்களுர் அணி 2021 ஜ.பீ.எல் போட்டியில் முதல் முறையாக 200 ரண்களை கடந்த முதல் அணியாகவும் எதிர் கொண்ட 03 போட்டிகளையும் வெற்றி கொண்ட முதல் அணியாகவும் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் காணப்படுகின்றது .\nமெக்ஸ்வெல் 78(49) மற்றும் வில்லியர்ஸின் 76 (34) அரைச்சதம் தாண்டிய ஓட்டங்களும் மெக்ஸ்வெல் மற்றும் படிக்கல்லின் 86 ரண் பகிர்வும் மெக்ஸ்வெல் மற்றும் வில்லியர்ஸின் 50 ரண்பகிர்வும் அணியின் வெற்றிப்பாதைக்கு வித்திட்டது எனலாம் .\nகளத்தடுப்பில் 18வது ஓவர் வரையில் வெற்றி பெறும் அணி எதுஎன்று நிர்ணயிக்கப்படாத நிலையில் வர்ணணையாளர்களின் வர்ணனை இரண்டு அணி ரசிகர்களுக்கும் திக் திக் நிமிடங்களாகவே இருந்தது ரசலின் துடுப்பாட்டம் கொல்கத்தா அணி ரசிகர்களுக்கு சற்று மகிழ்ச்சியை தந்தாலும் 19வது ஓவர் வீசிய சிராஜின் பந்து வீச்சு ஏமாற்றத்தை கொடுத்ததுடன் பெங்களுர் அணியின் வெற்றியை நிர்ணயித்தது சிராஜ் வீசிய முதல் 05 பந்துகளையும் எதிர் கொண்ட ரசல் எதுவித ஓட்டங்களையும் பெறாமல் திண்டாடியது போட்டியை மாற்றியமைத்தது.\nஇன்றைய போட்டியின் முக்கிய கதாநாயகர்களாகமெக்ஸ்வெல் மற்றும் வில்லியர் அத்துடன் சிராஜையும் குறிப்பிடலாம்.\nஇன்றைய IPL போட்டியின் திக் திக் நிமிடங்கள் \nபாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் மேலதிக வகுப்புகளுக்கு மறு அறிவித்தல் வரை விடுமுறை\nபாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் மேலதிக வகுப்புகளுக்கு மறு அறிவித்தல் வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், நோன்பு பெருநாள், வெசாக் ...\nகொரோனா பரவல் காரணமாக நாட்டின் பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள விடுமுறையானது மேலும் ஒரு வார காலத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ...\nமோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nவாகன போக்குவரத்து திணைக்களத்தின் நாரஹென்பிட்டி மற்றும் வேரஹெர அலுவலகங்கள் ஒரு வாரத்திற்கு மூடப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம த...\nDReAM என அறிமுகப்படுத்தப்பட்டுள்ள முற்பாதுகாப்பு விதிமுறைகளுக்கமைய மதுபான சாலைகளை திறந்து வைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. D – சமூக இடை...\nமுழு அதிகாரம் : அகத்தியன் ஊடக சேவை 2020\nஆசிரியர் பீட தெடர்புகளுக்கு 0779516119\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akattiyan.lk/2021/05/blog-post_79.html", "date_download": "2021-05-07T02:04:35Z", "digest": "sha1:FPW7JBCGJFI45OOWN5NZUV2DCM5AYU7Q", "length": 5595, "nlines": 67, "source_domain": "www.akattiyan.lk", "title": "திரையரங்குகள் மற்றும் சிறுவர் பூங்காக்களுக்கு பூட்டு - அகத்தியன் | Online", "raw_content": "\nHome இலங்கை திரையரங்குகள் மற்றும் சிறுவர் பூங்காக்களுக்கு பூட்டு\nதிரையரங்குகள் மற்றும் சிறுவர் பூங்காக்களுக்கு பூட்டு\nநாட்டிலுள்ள அனைத்து திரையரங்குகள் மற்றும் சிறுவர் பூங்காக்களை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.\nபுதிய சுகாதார விழிகாட்டலுக்கமைய மறு அறிவித்தல் வரை இவ்வாறு திரையரங்குகள் மற்றும் சிறுவர் பூங்காக்களை மூடுமாறு அரசாங்கம் தெரிவித்துள்ளது.\nநாட்டில் கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வரும் நிலையிலேயே அந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குற\nதிரையரங்குகள் மற்றும் சிறுவர் பூங்காக்களுக்கு பூட்டு Reviewed by Chief Editor on 5/01/2021 06:49:00 pm Rating: 5\nபாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் மேலதிக வகுப்புகளுக்கு மறு அறிவித்தல் வரை விடுமுறை\nபாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் மேலதிக வகுப்புகளுக்கு மறு அறிவித்தல் வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், நோன்பு பெருநாள், வெசாக் ...\nகொரோனா பரவல் காரணமாக நாட்டின் பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள விடுமுறையானது மேலும் ஒரு வார காலத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ...\nமோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nவாகன போக்குவரத்து திணைக்களத்தின் நாரஹென்பிட்டி மற்றும் வேரஹெர அலுவலகங்கள் ஒரு வாரத்திற்கு மூடப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம த...\nDReAM என அறிமுகப்படுத்தப்பட்டுள்ள முற்பாதுகாப்பு விதிமுறைகளுக்கமைய மதுபான சாலைகளை திறந்து வைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. D – சமூக இடை...\nமுழு அதிகாரம் : அகத்தியன் ஊடக சேவை 2020\nஆசிரியர் பீட தெடர்புகளுக்கு 0779516119\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinibitz.com/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%B7%E0%AE%BE-%E0%AE%8F-%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2021-05-07T00:44:04Z", "digest": "sha1:XV63KOFCLXYOJL4HG4ATPHC6PJOG7I5Z", "length": 11539, "nlines": 66, "source_domain": "www.tamilcinibitz.com", "title": "ஜெய் ஷா ஏ.சி.சி தலைவர் பதவியை ஏற்றுக்கொள்கிறார்", "raw_content": "முழுமையான செய்தி உலகம் உங்களுக்காக.\nஜெய் ஷா ஏ.சி.சி தலைவர் பதவியை ஏற்றுக்கொள்கிறார்\nசனிக்கிழமை நடைபெற்ற மெய்நிகர் பொதுக் கூட்டத்தைத் தொடர்ந்து பி.சி.சி.ஐ செயலாளர் ஜே ஷா ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் (ஏ.சி.சி) தலைவராக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 32 வயதான ஷா, பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் நஸ்முல் ஹாசனின் தலைமையை ஏற்றுக்கொள்வார். ஏ.சி.சி தலைவராக பெயரிடப்பட்ட இளைய நிர்வாகி ஷா ஆவார்.\nஏ.ஜி.எம் உடன் பேசிய புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஏ.சி.சி தலைவர் கூறினார்: “ஏ.சி.சி சில சிறந்த கிரிக்கெட் நாடுகளுக்கு இடையே ஆரோக்கியமான போட்டியை ஊக்குவித்து வருகிறது, அதே நேரத��தில் விளையாட்டை அதன் சிறிய பைகளில் ஆழமாக வழிநடத்துகிறது. இந்த காரணத்திற்காக நாங்கள் தொடர்ந்து உறுதியுடன் இருக்க வேண்டும், மேலும் பிராந்தியத்தில் விரிவான வளர்ச்சி இருப்பதை உறுதி செய்ய வேண்டும். “\n“தி சர்வதேச பரவல் மிகப்பெரிய சவால்களை முன்வைத்தது, ஆனால் புதுமை பெரும்பாலும் கடினமான காலங்களில் எழுகிறது என்பதையும், முன்னேற நாம் தழுவி புதுமைப்படுத்த வேண்டும் என்பதையும் வரலாறு காட்டுகிறது. பெரும்பாலான வாரியங்கள் தங்கள் மூத்த அணிகளுடன் தங்கள் கிரிக்கெட் நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதை நான் கவனித்திருந்தாலும், சவால் பெண்கள் கிரிக்கெட் மற்றும் வயதுக்குட்பட்ட கிரிக்கெட்டில் உள்ளது. ஏ.சி.சி பெண்கள் கிரிக்கெட் மற்றும் வயதுக்குட்பட்ட இருவருக்கும் ஆண்டு முழுவதும் இயங்கும் பல போட்டிகளில் முன்னோடியாக உள்ளது, அதை நாங்கள் கட்டியெழுப்ப வேண்டும், ”என்றார் ஷா.\nதிரு சவுரவ் கங்குலிபி.சி.சி.ஐ., தலைவர், “ஜெய் ஷா புதிய ஏ.சி.சி தலைவராக நியமிக்கப்பட்டதற்கு நான் வாழ்த்துகிறேன். நாங்கள் ஒன்றாக இணைந்து பணியாற்றினோம், அவருடைய திட்டங்கள் மற்றும் கிரிக்கெட் விளையாட்டை வளர்ப்பதற்கான அவரது பார்வை ஆகியவற்றை நான் நன்கு அறிவேன். ஒரு மாற்றத்தைக் கொண்டுவர அவர் பணியாற்றிய வைராக்கியத்தை நான் தனிப்பட்ட முறையில் பார்த்திருக்கிறேன் சண்டிகர், உத்தரகண்ட் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் கிரிக்கெட் உள்கட்டமைப்பை உருவாக்குவதிலும், சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதிலும். இது நிச்சயமாக ஒரு சவாலான கட்டமாகும், ஆனால் வைரஸால் ஏற்படும் சவால்களை அவர் வெற்றிகரமாக சமாளிப்பார் என்று நான் நம்புகிறேன். பி.சி.சி.ஐ எந்த உதவியையும் விரிவுபடுத்தி ஆசியாவில் கிரிக்கெட் நடவடிக்கைகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் மறுசீரமைப்பதற்கும் முக்கிய பங்கு வகிக்கும்.\nகான்டினென்டல் அமைப்பின் உயர்மட்ட பதவிக்கு ஷா தேர்ந்தெடுக்கப்பட்டதை பொருளாளர் துமலும் பாராட்டினார்.\n“ஏ.சி.சியின் இளைய ஜனாதிபதியாக இருப்பது அவரது ஆர்வத்தின் அளவைப் பேசுகிறது. ACC க்கு வலுவான தலைமை தேவை, நிச்சயமாக பொறுப்பை ஏற்க சரியான நபர். பி.சி.சி.ஐ எப்போதும் கடந்த காலங்களில் உறுப்பினர் குழுக்களுக்கு ஆதரவாக இருந்து வருகிறது, தொடர்ந்து ஒரு முக்கிய பங்கை வகிக்���ும், ”என்றார் துமல்.\nREAD செல்சியாவிலிருந்து ஃபிராங்க் லம்பார்ட் நீக்கப்பட்டார், தாமஸ் துச்செல் மாற்றாக இருக்கிறார்\nபொதுக் கூட்டம் நடைமுறையில் நடந்தது கோவிட் 19 சர்வதேச பரவல்.\nகாபி நிபுணர். பயண ஆர்வலர். ஆல்கஹால் சுவிசேஷகர். இணைய மேதாவி. பீர் காதலன். டிவி மேவன்.\nஇந்தியா vs ஆஸ்திரேலியா: எஸ்சிஜி பார்வையாளர்கள் பும்ராவில் இனவெறி துஷ்பிரயோகம் செய்கிறார்கள் & சிராஜ்; குழு புகார் அளிக்கிறது | கிரிக்கெட் செய்திகள்\nபுதுடில்லி: இந்திய அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வ புகாரை நடுவரிடம் சமர்ப்பித்துள்ளது டேவிட் பூன் வேகமான பந்து...\nடீம் இந்தியாவுக்கு வரவில்லை என்று குயின்ஸ்லாந்து அமைச்சருக்கு வாசிம் ஜாஃபர் அளித்த பதில் ட்விட்டர் பயனர்களை பிளவுகளில் – கிரிக்கெட்டில் விட்டுவிட்டது\nபூர்வாங்க ஐபிஎல் தேதிகள் மற்றும் அட்டவணை, நேரம், ஐபிஎல் 2021 ஏலம், லைவ் ஸ்ட்ரீமிங், ஒளிபரப்பு, ஐபிஎல் அணிகள் ஐபிஎல் 2021 பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும்\nதேவைப்பட்டால் குறிப்பாக வேகப்பந்து வீச்சாளரைத் தேர்வு செய்யத் தயார் – மிஸ்பா\nPrevious articleரியல்ம் யுஐ 2.0 க்கான பீட்டா பதிவுகள் ரியல்மே 6, எக்ஸ் 2, எக்ஸ் 3, எக்ஸ் 3 சூப்பர்ஜூம், சி 12 மற்றும் சி 15 க்கு நேரலை\nNext articleஸ்பேஸ்எக்ஸ் திங்களன்று கூடுதல் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை ஏவுகிறது, க்ரூவின் அடுத்த பணியை அறிவிக்கிறது\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nமிட்வெஸ்டின் சில பகுதிகளில் உள்ள “வரலாற்று” ஸ்னோபேக்குகள் பயணத்தை சீர்குலைக்கின்றன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vativamaippu.com/?CAT=4-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D&P=5", "date_download": "2021-05-07T01:57:26Z", "digest": "sha1:W3TQ33B4QW7QDQ6TK4DBV75SCEU5IOQZ", "length": 17244, "nlines": 94, "source_domain": "www.vativamaippu.com", "title": " கிராபிக்ஸ் - வடிவமைப்பு இதழ்", "raw_content": "\nஉலகளவில் வடிவமைப்பாளர்களிடமிருந்து நல்ல வடிவமைப்புகளைக் கண்டறியவும்.\nஉலகளாவிய பிராண்டுகளிலிருந்து புதுமையான தயாரிப்புகளைக் கண்டறியவும்.\nஉலகளாவிய கட்டடக் கலைஞர்களிடமிருந்து சிறந்த கட்டடக்கலை திட்டங்களைக் கண்டறியவும்.\nசர்வதேச ஆடை வடிவமைப்பாளர்களிடமிருந்து படைப்பு பேஷன் வடிவமைப்புகளைக் கண்டறியவும்.\nபடைப்பு பேஷன் டிசைன்கள��� ஆராயுங்கள்\nஉலகளாவிய கிராபிக்ஸ் வடிவமைப்பாளர்களிடமிருந்து சிறந்த கிராஃபிக் வடிவமைப்புகளைக் கண்டறியவும்.\nசிறந்த கிராஃபிக் வடிவமைப்புகளை ஆராயுங்கள்\nஉலகளாவிய வடிவமைப்பு நிறுவனங்களிலிருந்து சிறந்த மூலோபாய வடிவமைப்புகளைக் கண்டறியவும்.\nசிறந்த மூலோபாய வடிவமைப்புகளை ஆராயுங்கள்\nதிங்கள் 12 ஏப்ரல் 2021\nவலைத்தளம் அப்ஸ்டாக்ஸ் முன்பு ஆர்.கே.எஸ்.வியின் துணை நிறுவனம் ஒரு ஆன்லைன் பங்கு வர்த்தக தளமாகும். சார்பு வர்த்தகர்கள் மற்றும் சாதாரண மனிதர்களுக்காக வடிவமைக்கப்பட்ட தனித்துவமான தயாரிப்புகள் அதன் இலவச வர்த்தக கற்றல் தளத்துடன் அப்ஸ்டாக்ஸின் வலுவான யுஎஸ்பி ஒன்றாகும். லாலிபாப்பின் ஸ்டுடியோவில் வடிவமைக்கும் கட்டத்தில் முழு மூலோபாயமும் பிராண்டும் கருத்துருவாக்கப்பட்டன. ஆழ்ந்த போட்டியாளர்கள், பயனர்கள் மற்றும் சந்தை ஆராய்ச்சி ஆகியவை வலைத்தளத்திற்கான தனித்துவமான அடையாளத்தை உருவாக்கும் தீர்வுகளை வழங்க உதவியது. தரவு உந்துதல் வலைத்தளத்தின் ஏகபோகத்தை உடைக்க உதவும் தனிப்பயன் விளக்கப்படங்கள், அனிமேஷன்கள் மற்றும் ஐகான்களைப் பயன்படுத்தி வடிவமைப்புகள் ஊடாடும் மற்றும் உள்ளுணர்வு கொண்டவை.\nஞாயிறு 11 ஏப்ரல் 2021\nவலை பயன்பாடு Batchly SaaS அடிப்படையிலான தளம் அமேசான் வலை சேவைகள் (AWS) வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் செலவுகளைக் குறைக்க உதவுகிறது. தயாரிப்பில் உள்ள வலை பயன்பாட்டு வடிவமைப்பு தனித்துவமானது மற்றும் ஈர்க்கக்கூடியது, ஏனெனில் இது பக்கத்தை விட்டு வெளியேறாமல் ஒரே புள்ளியில் இருந்து பல்வேறு செயல்பாடுகளைச் செய்ய பயனருக்கு உதவுகிறது, மேலும் நிர்வாகிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த அனைத்து தரவையும் ஒரு பறவைக் காட்சியை வழங்குவதையும் கருதுகிறது. அதன் வலைத்தளத்தின் மூலம் தயாரிப்பை வழங்குவதிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது மற்றும் முதல் 5 விநாடிகளில் அதன் யுஎஸ்பியை தொடர்பு கொள்ள வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்கு பயன்படுத்தப்படும் வண்ணங்கள் துடிப்பானவை மற்றும் சின்னங்கள் மற்றும் எடுத்துக்காட்டுகள் வலைத்தளத்தை ஊடாட வைக்க உதவுகின்றன.\nசனி 10 ஏப்ரல் 2021\nடேபிள்வேர் பாமிர்லா என்பது ஹங்கேரிய Bortor Tábor ஐ குறிக்கிறது, இது புற்றுநோய் அல்லது பிற நாட்பட்ட நோய்களுக்கான குழந்தைகளுக்கான முகாமாகும். இந்த வடி���மைப்பின் நோக்கம் வட்டமான, விளையாட்டுத்தனமான வடிவங்கள், வண்ணங்களின் பயன்பாடு மற்றும் கலை மற்றும் கைவினைகளின் தன்மை ஆகியவற்றைக் கொண்டு பயனர்களுக்கு முகாமின் வளிமண்டலத்தை அனுப்புவதாகும். அலங்காரங்கள் முகாமைக் குறிக்கின்றன, அவை பின்வரும் மூன்று யோசனைகளை அடிப்படையாகக் கொண்டவை: முகாமின் சின்னம், குழந்தைகள் தங்குமிடம் மற்றும் வீடுகளின் கிராபிக்ஸ். மேஜைப் பாத்திரங்கள் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை ஆதரிக்க முனைகின்றன, எனவே அவை அவற்றின் பரிமாணங்களில் சாப்பிட-குறைவாக-அடிக்கடி நடைமுறையில் பின்பற்றப்படுகின்றன.\nவெள்ளி 9 ஏப்ரல் 2021\nவிருது வழங்கல் இந்த கொண்டாட்ட மேடை ஒரு தனித்துவமான தோற்றத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றும் ஒரு இசை நிகழ்ச்சி மற்றும் பல்வேறு விருது விளக்கக்காட்சிகளை வழங்குவதற்கான நெகிழ்வு தேவை. இந்த நெகிழ்வுத்தன்மைக்கு பங்களிப்பதற்காக செட் துண்டுகள் உட்புறமாக எரிக்கப்பட்டன, மேலும் நிகழ்ச்சியின் போது பறக்கப்பட்ட தொகுப்பின் ஒரு பகுதியாக பறக்கும் கூறுகளையும் உள்ளடக்கியது. இது ஒரு இலாப நோக்கற்ற நிறுவனத்திற்கான விளக்கக்காட்சி மற்றும் ஆண்டு விருது வழங்கும் விழாவாகும்.\nவியாழன் 8 ஏப்ரல் 2021\nபாட்டில் நார்த் சீ ஸ்பிரிட்ஸ் பாட்டிலின் வடிவமைப்பு சில்ட்டின் தனித்துவமான தன்மையால் ஈர்க்கப்பட்டு, அந்தச் சூழலின் தூய்மையையும் தெளிவையும் உள்ளடக்கியது. மற்ற பாட்டில்களுக்கு மாறாக, வட கடல் ஸ்பர்ட்ஸ் ஒரு வண்ணமயமான மேற்பரப்பு பூச்சு மூலம் முழுமையாக மூடப்பட்டிருக்கும். லோகோவில் ஸ்ட்ராண்ட்டிஸ்டெல் உள்ளது, இது கம்பென் / சில்ட்டில் மட்டுமே உள்ளது. 6 சுவைகள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட நிறத்தால் வரையறுக்கப்படுகின்றன, அதே நேரத்தில் 4 கலவை பானங்களின் உள்ளடக்கம் பாட்டிலின் நிறத்திற்கு ஒத்ததாக இருக்கும். மேற்பரப்பின் பூச்சு மென்மையான மற்றும் சூடான ஹேண்ட்ஃபீலை வழங்குகிறது மற்றும் எடை மதிப்பு உணர்வை அதிகரிக்கிறது.\nபுதன் 7 ஏப்ரல் 2021\nவினைல் பதிவு கடைசி 9 வகை வரம்புகள் இல்லாத இசை வலைப்பதிவு; அதன் அம்சம் துளி வடிவ கவர் மற்றும் காட்சி கூறுக்கும் இசைக்கும் இடையிலான இணைப்பு. கடைசி 9 இசை தொகுப்புகளை உருவாக்குகிறது, ஒவ்வொன்றும் காட்சி கருத்தில் பிரதிபலிக்கும் முக்கிய இசை தீம் கொண��டவை. வெப்பமண்டல கலங்கரை விளக்கம் என்பது ஒரு தொடரின் 15 வது தொகுப்பாகும். இந்த திட்டம் வெப்பமண்டல காடுகளின் ஒலிகளால் ஈர்க்கப்பட்டது, மேலும் முக்கிய உத்வேகம் கலைஞரும் இசைக்கலைஞருமான மெண்டெண்டெர் மண்டோவாவின் இசை. கவர், விளம்பர வீடியோ மற்றும் வினைல் டிஸ்க் பேக்கிங் இந்த திட்டத்திற்குள் வடிவமைக்கப்பட்டுள்ளன.\nஅசல் மற்றும் ஆக்கபூர்வமான வடிவமைப்புகள், கலை, கட்டிடக்கலை, ஃபேஷன், கிராபிக்ஸ் வடிவமைப்பு, புதுமை மற்றும் வடிவமைப்பு உத்தி ஆகியவற்றை நாங்கள் விரும்புகிறோம். தினமும், திறமையான வடிவமைப்பாளர்கள், படைப்பாற்றல் கலைஞர்கள், புதுமையான கட்டிடக் கலைஞர்கள் மற்றும் சிறந்த பிராண்டுகளின் நல்ல வடிவமைப்புகளைத் தேர்ந்தெடுத்து வெளியிடுகிறோம். நல்ல வடிவமைப்பிற்கான உலகளாவிய பாராட்டையும் விழிப்புணர்வையும் உருவாக்குவதே எங்கள் நோக்கம்.\nSantander World நகர்ப்புற சிற்பங்கள் வியாழன் 6 மே\nOli ஆலிவ் கிண்ணம் புதன் 5 மே\nIllusion வலைத்தளம் செவ்வாய் 4 மே\nநீங்கள் ஒரு வடிவமைப்பாளர், கலைஞர், கட்டிடக் கலைஞர், புதுமைப்பித்தன் அல்லது பிராண்ட் மேலாளரா பகிர்வதற்கு உங்களிடம் ஏதேனும் நல்ல வடிவமைப்புகள் உள்ளதா பகிர்வதற்கு உங்களிடம் ஏதேனும் நல்ல வடிவமைப்புகள் உள்ளதா உலகளவில் வடிவமைப்பாளர்கள், கலைஞர்கள், கட்டட வடிவமைப்பாளர்கள், கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் பிராண்டுகளிலிருந்து அசல் மற்றும் ஆக்கபூர்வமான வடிவமைப்புகளை வெளியிடுவதில் நாங்கள் மிகவும் ஆர்வமாக உள்ளோம். உங்கள் வடிவமைப்புகளை இன்று வெளியிடவும்.\nஅன்றைய வடிவமைப்பு நேர்காணல் வியாழன் 6 மே\nஅன்றைய வடிவமைப்பு புராணக்கதை புதன் 5 மே\nஅன்றைய வடிவமைப்பு செவ்வாய் 4 மே\nஅன்றைய வடிவமைப்பாளர் திங்கள் 3 மே\nஅன்றைய வடிவமைப்பு குழு ஞாயிறு 2 மே\nவலைத்தளம் வலை பயன்பாடு டேபிள்வேர் விருது வழங்கல் பாட்டில் வினைல் பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2020/07/blog-post_32.html", "date_download": "2021-05-07T02:02:28Z", "digest": "sha1:RPX2BH46MBYBVFAYGKTYOWRWYQFIMQC6", "length": 9261, "nlines": 88, "source_domain": "www.yarlexpress.com", "title": "சமூக பிரச்சினைகளை ஆராய்ந்த விழுதுகள் மேம்பாட்டு மையம். \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nசமூக பிரச்சினைகளை ஆராய்ந்த விழுதுகள் மேம்பாட்டு மையம்.\nவிழுது ஆற்றல் மேம்பாட்டு மையம் மற்றும் சமுதாய சந்ததியினர் இளையோர் அணி இணைந்து தற்போதைய சூழ்நிலையில் இளைஞர்களும் பெண்களும் எதிர்நோக்கும் பிர...\nவிழுது ஆற்றல் மேம்பாட்டு மையம் மற்றும் சமுதாய சந்ததியினர் இளையோர் அணி இணைந்து தற்போதைய சூழ்நிலையில் இளைஞர்களும் பெண்களும் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று திருநெல்வேலியிலுள்ள விழுது ஆற்றல்மேம்பாட்டு மையத்தில் இன்று மேம்பாட்டு மையத்தின் ஆவணப்படுத்தல் உத்தியோகத்தர் திருமதி சிவகுமார் கோமதி தலைமையில் இடம்பெற்றது.\nஇந்தக் கலந்துரையாடலில் வரவேற்புரையை சமுதாய சங்கிலிகள் அமைப்பின் உறுப்பினர் கதிர்காமநாதன் அனோயா ஆற்றினார்.\nஇந்தக் கலந்துரையாடலில் தற்போதைய சூழ்நிலையில் பெண்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.\nஅதில் குறிப்பாக நுண்நிதிக்கடன்களால் பெண்கள் எதிர்நோக்கும் பாரிய பிரச்சினை கிடைக்கப்பெற்ற வீட்டுத்திட்டங்களுக்கான நிதி கிடைக்காமையினால் குடும்பங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் போதைப்பொருள் பாவனை அதிகரிப்பினால் இளைஞர்கள் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்பட்டது.\nஅன்றாட வாழ்வில் பெண்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளும் அவற்றை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பிலும் கலந்துகொண்டவர்களுக்கு விழிப்புணர்வுகள் வழங்கப்பட்டது.இந்த கலந்துரையாடலில் போதைப்பொருள் பாவனையின் அதிகரிப்பும் அவற்றைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக மதுவரித்திணைக்கள அதிகாரி கிருபாகரன் உரையாற்றினார்.\nயாழ்மாவட்டத்தைச் சேர்ந்த பெண்கள் அமைப்புக்கள் பொது அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள் இதில் கலந்துகொண்டனர்.\nவணிகம் / பொருளாதாரம் (7)\nமாநகர காவல்படையினரின் சீருடை பறிமுதல் - மாநகரசபைக்கு ஆப்பு வைத்த பொலீஸார் ..\nBREAKING NEWS :- ஊரடங்கு தொடர்பில் இராணுவத் தளபதி சற்றுமுன் வெளியிட்ட அறிவிப்பு\nஅத்தியாவசிய சேவைக்கு மாத்திரமே அனுமதி\nYarl Express: சமூக பிரச்சினைகளை ஆராய்ந்த விழுதுகள் மேம்பாட்டு மையம்.\nசமூக பிரச்சினை���ளை ஆராய்ந்த விழுதுகள் மேம்பாட்டு மையம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=1513", "date_download": "2021-05-07T02:13:01Z", "digest": "sha1:P6AOL337DCU75VJK2XZ3P7XHYQHPDIJP", "length": 15605, "nlines": 66, "source_domain": "www.varalaaru.com", "title": "Varalaaru - A Portal For South Asian History Varalaaru - A Monthly Web Magazine for South Asian History", "raw_content": "\nஅப்பர் என்னும் அரிய மனிதர் - 3\nஇதழ் எண். 143 > கலையும் ஆய்வும்\nசிராப்பள்ளி கல்லணைச் சாலையில் 10 கி. மீ. தொலைவில் பனையபுரத்திற்கு வடக்கிலுள்ளது சம்பந்தர் பாடல் பெற்ற திருப்பாலைத்துறை ஆதிமூலேசுவரர் கோயில். சிராப்பள்ளி மாவட்டச் சோழர் தளிகள் நான்கு எனும் நூலுக்காக அங்கு ஆய்வு மேற்கொண்டபோது பல அரிய செய்திகளும் புதிய கல்வெட்டுகளும் ஏற்கனவே படியெடுக்கப்பட்ட சில கல்வெட்டுகளின் விட்டுப்போன தொடர்ச்சிகளும் வெளிச்சத்திற்கு வந்தன. முற்சோழர் கட்டுமானமாக விளங்கும் இக்கோயிலின் விமான, முகமண்டபக் கோட்டங்களைத் தலைப்பிட்டுள்ள மகரதோரணங்கள் ஐந்தும் செறிவான சிற்றுருவச் சிற்பங்களைக் கீழ்வளைவில் கொண்டுள்ளன. அவற்றுள் முகமண்டபத் தெற்குக் கோட்ட மகரதோரணச் சிற்பம், அதன் மாறுபட்ட காட்சிப்படுத்தலால் கவனத்தைக் கவர்ந்தது. தொடர்ந்த சுண்ணப்பூச்சால் சிற்பம் சிதைந்திருந்தபோதும் உழைப்பின் பயனாய் உருவங்கள் வெளிப்பட்டன.\nஉணர்வுகளின் உச்சத்தில் படம்பிடிக்கப்பட்டுள்ள இக்காட்சியில், தோரணக்குழிவில் இடப்புறம் சடைமகுடர்களாய் இரண்டு ஆடவர்கள். தலையைச் சற்றே நிமிர்த்தியுள்ள முதலாமவரின் இடையில் சிற்றாடை. இடக்கையைத் தொடையில் இருத்தியுள்ள அவரது வலக்கை, சிற்றாடையும் முடியற்ற தலையுமாய்த் தம்மைத் தழுவியிருக்கும் இளையவரை அணைத்துள்ளது. முதலாமவரை அடுத்துள்ள ஆடவர் இடக்கையைத் தொடையில் வைத்தவாறு நிற்கிறார். குழிவில் வலப்புறம் சுடர்முடியுடன் பனையோலைக் குண்டலங்கள், முப்புரிநூல், இடைக்கட்டுடனான சிற்றாடையணிந்து வலக்கையில் முத்தலைஈட்டியும் இடக்கையில் தெளிவற்ற ஒரு பொருளும் (சிதைந்த தலை அல்லது பாசமாகலாம்) கொண்டு சினத்துடன் ஓடிவருபவர் எதிரிலுள்ளவர்களைத் தாக்கும் முனைப்பிலுள்ளார். இலை நுனிகள் தெரியாதவாறு அவரது முத்தலைஈட்டியில் குத்தப்பட்டுள்ள பொருளை ( சதைத்தொகுதி) அடையாளப்படுத்த முடியவில்லை. குழிவில் கீழ்ப்பகுதியில் விழுங்கும் முனைப்பில் வாய்பிளந்த முத்தலைப் பாம்பும் அதனிடமிருந்து தப்பிக்கும் நோக்கில் தலை திருப்பித் தாவும் மானும் காட்டப்பட்டுள்ளன.\nவரலாறு டாட் காம் 117ஆம் இதழில், பத்தர் மன்னிய திருப்பாற்றுறை என்ற தலைப்பில் இக்கோயிலைப் பற்றி எழுதியுள்ள திரு. கி. ஸ்ரீதரன், இச்சிற்பக்காட்சியை இயமனை அழித்தமூர்த்தியாகக் காட்டியுள்ளார். இதே கோயிலில் விமானத் தாங்குதளக் கண்டபாதச் சிற்பமாக இயமனை அழித்தமூர்த்தி பதிவாகியுள்ளார். அச்சிற்பத்தில் இலிங்கத்தை அணைத்த மார்க்கண்டேயரும் அவருக்கு அருள வெளிப்பட்ட சிவபெருமானும் கீழே விழுந்து கிடக்கும் இயமனும் மிகத்தெளிவாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளனர். மகரதோரணச் சிற்பத்தில் இது போன்ற படப்பிடிப்பு இல்லை. அதில் காட்டப்பெற்றுள்ள இரண்டு ஆடவர்களுமே இரண்டு கைகளுடன் உள்ளனர். அவர்களில் எவரையும் சிவபெருமானாகக் கொள்ளும் வாய்ப்பில்லை. தோரணச் சிற்பத்தில் சினத்துடன் ஓடிவருபவரை ஸ்ரீதரன் இயமனாகக் கொண்டதில் பிழையில்லை என்றாலும் அவர் இயமனில்லை.\nஇராமாயணத்தில் இராம, இலட்சுமணர் காட்டில் விராதனை எதிர்கொள்ளும் நிகழ்வை வண்ணிக்கும் வால்மீகி, அவன் இயமனைப் போல் தோற்றமளித்ததாகவே சுட்டுவார். விராதனின் கையிலிருந்த சூலத்தில் விலங்குகளின் உயிரற்ற உடல்கள் கோர்க்கப்பட்டிருந்ததாகவும் கூறுவார். சீதையைக் கவரும் விராதனை எதிர்க்கும் இராமரும் இலட்சுமணரும் பெரும் போராட்டத்திற்குப் பின் அவன் தோள்களைத் துண்டித்து, நிலத்தில் அவனைப் புதைத்து அழிப்பர். இராமனின் திருவடிக் கீழ் நசுங்கிய நிலையில் பேசும் விராதன், தாம் ஒரு கந்தர்வர் என்றும் தம் பெயர் தும்புரு என்றும் தெரிவித்து, குபேரனின் சாபத்தால் தாம் அரக்கனாய் அலைய நேரிட்டதாகவும் இராமரால் தம் சாபம் விலகியதாகவும் கூறி, இராம, இலட்சுமணரை வணங்கி வானுலகு செல்வார். இந்நிகழ்வு அமையும் காட்டில் கொடிய விலங்கினங்களும் மான்களும் இருந்ததென்பார் வால்மீகி.\nஇக்கதையின் பின்னணியில் பாலைத்துறை மகரதோரணச் சிற்பத்தை நோக்கின், சினப் பார்வையும் முத்தலைஈட்டியுமாய் ஓடிவருபவரை விராதனாக உறுதிப்படுத்தமுடியும். எதிரில் நிற்கும் ஆடவர் இருவரும் விராதனை எதிர்கொண்ட இராமர், இலட்சுமணர். இராமரைத் தழுவியுள்ளவர் விராதனிலிருந்து வெளிப்பட்ட கந்தர்வர் தும்புருவாகலாம். நிகழ்ச்சி நடக்கும் காட்டின் வன்தன்மை புலப்படுத்தச் சிற்பத்தின் கீழ்ப்பகுதியில் மானை விழுங்க முயற்சிக்கும் பாம்பு காட்டப்பட்டுள்ளது. சிராப்பள்ளி மாவட்டம் துடையூர் விஷமங்களேசுவரர் பாதச்சிற்பத்தின் விராதக் காட்சியிலும் மான் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nவிராதவதம், பாதச்சிற்பமாகவும் மகரதோரணச் சிற்பமாகவும் சிராப்பள்ளி மாவட்டத்தின் பல கோயில்களில் இடம்பெற்றுள்ளது. தவத்துறை சப்தரிஷீசுவரர் கோயில் மகரதோரண விராதன் பாலைத்துறை விராதனைப் பெரிதும் ஒத்துள்ளார். அவரது சூலத்தில் இராமாயணம் குறிக்குமாறே யானைத்தலை கோர்க்கப்பட்டுள்ளது. எதிரில் இராமர், இலட்சுமணர் நிற்கின்றனர். திருமங்கலம் சாமவேதீசுவரர் பாதச்சிற்பத்தில் விராதனின் தோள்களை இராம, இலட்சுமணர் துண்டிக்கும் காட்சியைக் காணலாம். துடையூர் விஷமங்களேசுவரர் பாதச் சிற்பம் விராதன் ஓடிவருவதைக் காட்டுகிறது.\nபாலைத்துறைச் சிற்பத்தின் கூடுதல் சிறப்பாகத் தும்புரு இராமனை அன்புடன் தழுவி, நன்றி தெரிவித்து விடைபெறும் காட்சியைக் குறிக்கலாம். இலக்கியப் பின்னணிகளை நன்கு உள்வாங்கிய நிலையிலேயே தமிழ்நாட்டுச் சிற்பிகள் கைவண்ணம் காட்டியிருக்கிறார்கள் என்பதற்குப் பாலைத்துறை விராதவதப் படைப்பு மற்றுமோர் எடுத்துக்காட்டாக அமைகிறது.\nஇப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.\nதங்கள் பெயர்/ Your Name\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/tag/kan-drishti-neenga-tamil/", "date_download": "2021-05-07T01:16:51Z", "digest": "sha1:FQTUNL55WG4AL63UKTFRB7YBPZCE7JQ4", "length": 15151, "nlines": 121, "source_domain": "dheivegam.com", "title": "Kan drishti neenga Tamil Archives - Dheivegam", "raw_content": "\nபொல்லாத கண்திருஷ்டியை பொடிப்பொடியாக்க இந்த 2 பொருட்களை சேர்த்து இப்படி சாப்பிட்டாலே போதும். அந்தக்...\nஓஹோ என்று வாழ்ந்து கொண்டு இருப்பவர்களையும் ஒன்றுமே இல்லாமல் ஆக்க கூடிய சக்தி இந்த கண்திருஷ்டிக்கு உண்டு. ஒருவருடைய மனதில் எழக்கூடிய எண்ணத்தை, வெளிப்பாடு செய்யும் கருவி தான் நம்முடைய இரண்டு கண்கள்....\nவாழ்நாள் முழுவதும் கண் திருஷ்டியிலிருந்து தப்பித்துக்கொள்ள ஒரு டம்ளர் தண்ணீரை வீட்டில் இப்படி வையுங்கள்....\nகலங்க வைக்கும் கண் திருஷ்டியால், கலங்கிக் கொண்டிருக்கும் குடும்பங்கள் ஏராளம். தங்களுடைய வாழ்க்கையில் சந்தோஷமான தருணங்கள் வந்த பிறகு, சிலருக்கு கஷ்டமான சம்பவங்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். பொதுவாகவே இது இயல்புதான்....\nஇந்த 1 பொருளை உங்க நில வாசல் படியில் இப்படி இருந்தால் போதுமே\nநம் வீட்டிற்குள் நுழைபவர்கள் எல்லோரதும் எண்ணமும் நல்ல எண்ணமாக இருக்கும் என்று சொல்லிவிட முடியாது. சிலர் நம் வீட்டிற்குள் நுழையும்போதே கெட்ட எண்ணத்தோடு, பொறாமை குணத்தோடு மனதில் தீயதை விதைத்து, வயிற்றெரிச்சல் உடன்...\nஉங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்தை பார்த்து, பொறாமைப்பட்டு, வயிற்றெரிச்சல் பாடுபவர்களின் கண் திருஷ்டி கருகிப் போகும்....\nநம்முடைய வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு முதல் தடையாக இருப்பது, நம்முடைய முன்னேற்றத்தைப் பார்த்து பொறாமைப் படுபவர்களின் கண்களும், கண் திருஷ்டியும் பெருமூச்சுதான். இதை தடுப்பதற்கு பல வழிமுறைகள் ஆன்மீக ரீதியாக சொல்லப்பட்டுள்ளது. இருப்பினும் கண்திருஷ்டியை...\nசமையலறையில் இருக்கும் இந்த 4 பொருட்களை சேர்த்து முடிச்சுப் போட்டு, நில வாசப்படியில் கட்டித்...\nஎதிர்மறை ஆற்றலை நம் வீட்டில் நெருங்க விடாமல் இருப்பதற்கு ஆன்மீக ரீதியாக, தாந்திரீக ரீதியாக நிறைய பரிகார முறைகள் உள்ளது. இருப்பினும் மிகவும் எளிமையாக எல்லோராலும் சுலபமாக செய்யக்கூடிய ஒரு பரிகாரத்தை பற்றித்...\nநீங்கள் குளிக்கின்ற தண்ணீரில் ஒரே ஒரு முறை இந்த வேர் போட்டு குளித்தாலே போதும்....\nகண்ணுக்குத் தெரிந்த எதிரிகளை சமாளிப்பது ஒரு கஷ்டம். கண்ணுக்கு தெரியாத எதிரிகளை சமாளிப்பது என்பது அதைவிட பெரிய கஷ்டம். இதோடு சேர்த்து கண்ணுக்குத் தெரியாத கெட்ட சக்திகளையும் சமாளித்து, நம்முடைய வாழ்க்கையை பிரச்சனை...\nவீட்டின் மூலை முடுக்குகளில் தேங்கிக் கிடக்கும் கெட்ட சக்திகளால் இத்தனை பிரச்சனைகள் வருமா\nநம்முடைய வீட்டில் பிரச்சனைகள் வருவதற்கு முதல் காரணம் நம் வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல்கள் தான். கண்ணுக்கு தெரியாத இந்த எதிர்மறை ஆற்றல் என்றால் என்ன நிறைய பேருக்கு இதிலேயே குழப்பம் உள்ளது....\nகண் திருஷ்டியை போக்க கூடிய உப்பு பரிகாரத்தை ஒருமுறை இப்படி செய்து பாருங்கள். இந்தப்...\nகண் திருஷ்டியை போக்குவ��ற்கு உப்பு ஒரு சிறந்த பொருளாக சொல்லப்பட்டுள்ளது. இந்த உப்பை வைத்து பலவிதமான பரிகாரங்களை பல முறைகளில், பல சொல்லி நாம் கேள்விப்பட்டு இருப்போம். ஆனால், கண் திருஷ்டியை போக்க...\nதிருஷ்டியை எடுக்கக் கூடிய இந்த 3 பொருட்களை ஒன்றாக வைத்து தான் பாருங்களேன்\nநமக்கு இருக்கக்கூடிய கஷ்டங்கள் தீர, ஏதாவது ஒரு தீர்வு கிடைத்து விடாதா என்ற தேடல் ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கத்தான் செய்கிறது. வீட்டிலாக இருந்தாலும் சரி, தொழில் செய்யும் இடமாக இருந்தாலும் சரி, ஏதாவது...\nஎதைத் தொட்டாலும் தோல்வி, நஷ்டம், கவலை முன்னேற்றம் இல்லை, கையில் காசு இல்லை. இதற்கு...\nசில பேரெல்லாம் வாழ்க்கையில், ஒரு வருடத்திலேயே நல்ல முன்னேற்றத்தை அடைந்து இருப்பார்கள். திடீரென்று யாருடைய கண் திருஷ்டியோ பட்டது போல, இவர்களுக்கு தொடர்ந்து தோல்விகள் வந்து கொண்டே இருக்கும். ஏதாவது ஒரு முயற்சி...\nஉங்களை முன்னேற விடாமல் தடுக்கும், உங்களுடைய சொந்த பந்தங்களின் பொறாமை குணத்திலிருந்து எப்படிதான் தப்பிப்பது\nபொதுவாகவே, நமக்குக் கிடைக்காத ஒரு பொருள், அடுத்தவருக்கு கிடைக்கிறது என்றால், அதைப் பார்க்கும் மனித பிறவிக்கு கட்டாயம் ஒரு ஏக்கம் இருக்கத்தான் செய்கிறது. உங்களுடைய வாழ்க்கையை நீங்கள் எப்போதும் போல் வாழ்ந்து கொண்டு...\nஉங்கள் வீட்டையோ அல்லது உங்கள் வீட்டு குழந்தையையோ பார்த்து யாராவது கண் வைத்து விட்டது...\nகுழந்தை என்றாலே எல்லாருக்கும் பிடித்துவிடும். அதிலும் சற்று அழகாக இருக்கும் குழந்தை என்றால் வருகிறவர்கள், போகிறவர்கள் எல்லாம் பார்த்து கொண்டே போவார்கள். சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு தெருவில் சென்று தான் சோறூட்ட...\nஉங்களுக்கு ஏற்படும் கண் திரிஷ்டி, எதிரிகள் தொல்லை நீங்க இதை செய்யுங்கள் போதும்\nஞானிகளின் கருத்துப்படி பிறக்கின்ற அனைத்து மனிதர்களுமே நல்ல குணங்களோடு தான் பிறக்கின்றனர். எனினும் அவர்கள் வாழும் சூழ்நிலை மற்றும் தீய மனிதர்களின் சகவாசம் போன்றவை அவர்களிடம் பல்வேறு தீய குணங்களை உருவாக்கிவிடுகின்றன. நமது...\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2017/05/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%80-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2021-05-07T00:24:37Z", "digest": "sha1:N4O2A23F7HJYYJVRIMDUCSQ4JPQ3ZIXY", "length": 11400, "nlines": 134, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\n“அருட் பெருஞ்சோதி நீ தனிப்பெருங்கருணை” – நான் இன்னொரு பிறவிக்குப் போகக்கூடாது, இந்த உடலிலேயே ஒளியாக வேண்டும்\n“அருட் பெருஞ்சோதி நீ தனிப்பெருங்கருணை” – நான் இன்னொரு பிறவிக்குப் போகக்கூடாது, இந்த உடலிலேயே “ஒளியாக வேண்டும்”\nநம் வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியிலும் வரக்கூடிய துயரங்களையும் சங்கடங்களையும் நமக்குள் வராதபடி ஒவ்வொரு நிலைகளிலும் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் சேர்த்துக் கொண்டே வந்தால் இது விஷ்ணு தனுசாகின்றது”.\n1.விஷமென்ற நிலைகள் சிவ தனுசு தாக்கிவிட்டால் அடுத்த உடலைப் பெறுகின்றோம்.\n2.அருள் ஒளி என்ற உணர்வை எடுத்தால் இன்னொரு உடல் பெறுவதில்லை.\n3.உயிருடன் சேர்த்து உணர்வின் தன்மை தீமைகளை நீக்கக்கூடிய சக்தி பெறுகின்றது,\nசூரியன் அழிந்தாலும் இந்தப் பிரபஞ்சமே அழிந்தாலும் துருவ நட்சத்திரம் அழிவதில்லை. அதனுடைய ஈர்ப்பு வட்டத்தில் உள்ள சப்தரிஷி மண்டலங்களும் அழியாது.\nஇந்தப் பிரபஞ்சம் ஏகமாக ஒளியின் சரீரமாக மாற எத்தனையோ கோடி ஆண்டுகளாகும். ஆனால், இப்பொழுது மனிதனாகி ஒளியாகின்றது.\nமுதலில் இருண்ட உலகமாக இருந்தது. அது கோள்களை உருவாக்கி மனிதனானபின் இந்த உணர்வுகளைச் சேர்க்கப்படும் பொழுது அருள் ஒளி என்ற நிலை அடைகின்றது.\nஅது என்றும் ஏகாந்த நிலை.., “பெருவீடு பெரு நிலை” நாம் வளர்ந்து கொண்டே போகலாம்.\nகூட்டுத் தியானங்களில் வெளிப்படுத்தும் உணர்வுகளெல்லாம் இந்த பூமி முழுவதும் படருகின்றது. அதே சமயத்தில் இந்த உபதேச உணர்வுகளைப் படிப்போர் அவர்களுக்குள் பதிவாக்கிக் கொண்டால் மீண்டும் இதை எண்ணும்போது அந்த அருள் உணர்வுகளும் படர்கின்றது.\n1.இத்தகைய அருள் உணர்வுகள் ஒவ்வொரு நாளும் கூடக் கூட\n2.மனிதர்கள் வெறித்தனமாகவும், சங்கடமான நிலைகளில் வாழ்வதும் குறையும்.\n3.அதே சமயம், துருவ நட்சத்திரம் நம்மை ஒளி உடல் பெறச் செய்யும்.\nநம் வாழ்க்கையில் என்னதான் கோடிக்கணக்கில் சம்பாதித்து வைத்தாலும், நம்முடன் வரப்போவதில்லை. ஆகவே, அருள் உணர்வுடன் பிறவியில்லா நிலை அடைவதுதான் கடைசி நிலை.\nஅந்த அகஸ்தியன் வழியில் வந்தவர்கள் அநேகம் பேர்கள் உண்டு. இதைத்தான் அன்று இராமலிங்க அடி���ள் தெளிவாகப் பாடியுள்ளார்.\n1.நான் இன்னொரு பிறவிக்குப் போகக்கூடாது.\n2.இந்த உடலிலேயே ஒளியாக வேண்டும்.\n3.“அருட் பெருஞ்சோதி, நீ தனிப்பெருங்கருணை” நீ உயிராக இருக்கின்றாய்,\n4.என் உணர்வுகள் அனைத்தையுமே ஒளியாக மாற்று என்று பாடியுள்ளார்.\nநம் உயிர் அருட்பெருஞ்சோதியாகிறது. நீ தனிப் பெருங்கருணையாக இருக்கின்றாய்.\nநீ ஒளியாக இருப்பது போல் என் எண்ணங்களெல்லாம் ஒளியாக வேண்டும்.\n1.பிறருடைய தீமைகள் எனக்குள் வரக்கூடாது.\n2.பிறருக்கு நல்லது செய்யக் கூடிய உணர்வே எனக்குள் வரவேண்டும்.\n3.அந்த “அருட்பிரசாதம்..,” இல்லை… என்று சொல்லாதபடி\n4.என்றுமே பசியை ஆற்றக் கூடியநிலை (சாப்பாட்டுப் பசி அல்ல) அருட்பசி மக்களுக்குக் கிடைக்க வேண்டும்.\n5.இருளிலிருந்து விடுபட்டுப் பெரும் ஜோதியாக பேரொளியாக மக்கள் அனைவரும் ஏகாந்த நிலை பெறவேண்டும்.\n6.(அதை) யாருக்கும் நான் இல்லை என்று சொல்லக் கூடாது.\n7.எல்லோருக்கும் அந்த அருள் சக்திகளை நான் கிடைக்கச் செய்யவேண்டும் என்றுதான் அவர் பாடல்களில் பாடியுள்ளார்.\nசாமியையே (ஞானகுரு) எண்ணிக் கொண்டிருப்பதைக் காட்டிலும் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து உடலுக்குள் விளைய வைக்க வேண்டும்\n என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nசீராக ஆத்ம சுத்தி செய்வோருக்குக் கிடைக்கும் பலன்கள்\nஆண்டவனிலிருந்து வந்த பிம்பங்கள் தான் அனைத்துமே என்று எண்ணினால்… “தான்” என்ற தனித்த அகங்காரம் வராது – ஈஸ்வரபட்டர்\nஉங்களுக்குக் கொடுத்த சக்திகளை ஒவ்வொருவரும் விரயம் ஆக்காது பயன்படுத்துங்கள்\n24 X 7 சாமிகள் உபதேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/228611", "date_download": "2021-05-07T00:50:38Z", "digest": "sha1:5SF5K5BA5UF4NVLMLVEPWYD4A3CXUZP7", "length": 6312, "nlines": 84, "source_domain": "selliyal.com", "title": "‘நஜிப் நாட்டிற்கு சாதகமான கூற்றை வெளியிட வேண்டும்!’- ஷாஹிடான் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P1 ‘நஜிப் நாட்டிற்கு சாதகமான கூற்றை வெளியிட வேண்டும்\n‘நஜிப் நாட்டிற்கு சாதகமான கூற்றை வெளியிட வேண்டும்\nகோலாலம்பூர்: பெர்லிஸ் அம்னோ தலைவர் ஷாஹிடான் காசிம், தேசிய கூட்டணி அரசாங்கம் குறித்து சாதகமான அறிக்கையை வெளியிடுமாறு நஜிப் ரசாக்கிற்கு அறிவுறுத்தியுள்ளார்.\nஷாஹிடானின் கூற்றுப்படி, முன்னாள் பிரதமரான நஜிப்பின் நேர்மறையான பார்வை நாட்டிற்கு முதலீட்டாளர்களை ஈர்��்க உதவும் என்று கூறினார்.\n“முன்னாள் பிரதமர், அரசாங்கத்தைப் பற்றி நேர்மறையான பார்வையை கொடுக்க நான் பரிந்துரைக்கிறேன், முதலீட்டாளர்களை உள்ளே வரச் சொல்லுங்கள்.\n“இல்லையெனில், முதலீட்டாளர்கள் உள்ளே வர மாட்டார்கள். நாட்டின் முன்னாள் பெரிய தலைவர்கள் அரசாங்கத்திற்கு உதவ வழிகளைக் கண்டறிய வேண்டும், “என்று அவர் நேற்று செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.\nதேசிய கூட்டணி அரசாங்கத்தின் கொள்கைகளை பெரும்பாலும் விமர்சிக்கும் அரசியல்வாதிகளில் நஜிப்பும் ஒருவர். பெர்சாத்துவுடன் இனி பணியாற்றுவதற்கான கட்சியின் முடிவை ஆதரித்த அம்னோ தலைவர்களில் அவரும் ஒருவர்.\nதேசிய கூட்டணி அரசு பொருளாதாரத்தை நிர்வகிக்கத் தவறிவிட்டதாகவும், கொவிட் -19 பரவலைக் கட்டுபடுத்த தவறியதாகவும் குறிப்பிட்டிருந்தார்.\nPrevious articleசித்தி நூர்ஹலிசாவுக்கு அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை\nNext articleசெக் குடியரசின் 20 தூதரக அதிகாரிகள் ரஷ்யாவிலிருந்து வெளியேற்றப்படுவர்\nகுறைந்தபட்ச ஊதியத்தை அரசு உயர்த்த முடியும் என்றால் அம்னோ ஆதரிக்கும்\nபகாங்கில் அம்னோ- பாஸ் மோதல் இல்லை\nஇந்தாண்டு அம்னோ கட்சித் தேர்தலை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது\nதிமுக அமைச்சரவை : புதிய அமைச்சர்கள் பட்டியல்\nதிமுக அமைச்சரவை : அன்பில் மகேஷ் பள்ளிக் கல்வி அமைச்சர்\nபிரசாந்த் கிஷோர் : இந்திய சட்டமன்றத் தேர்தல் வெற்றிகளின் கதாநாயகன்\nபில் கேட்ஸ் விவாகரத்து : சொத்துகளை எப்படிப் பிரிப்பார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/ipl-player-complained-about-suspicious-approach-with-him-regarding-team-details/", "date_download": "2021-05-07T02:02:48Z", "digest": "sha1:FLEVVOUKXI3B6DBQ7YPNVZHKAEUDWE6H", "length": 16080, "nlines": 142, "source_domain": "www.patrikai.com", "title": "ஐபிஎல் மேச் ஃபிக்சிங்கா? : சந்தேகதத்துக்குரிய் அணுகல் குறித்து விளையாட்டு வீரர் புகார் – Patrikai – Tamil Daily – latest online local breaking news & reviews – Tamilnadu, India & World – politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\n : சந்தேகதத்துக்குரிய் அணுகல் குறித்து விளையாட்டு வீரர் புகார்\n : சந்தேகதத்துக்குரிய் அணுகல் குறித்து வி���ையாட்டு வீரர் புகார்\nஐபிஎல் விளையாட்டு வீரர் ஒருவர் தமக்குத் தெரிந்தவர் ஒருவர் விவரங்க்ள் சேகரிக்க சந்தேகத்துக்கு உரிய முறையில் தம்மை அணுகியதாக புகார் அளித்துள்ளார்.\nகிரிக்கெட் போட்டிகளில் மேச் ஃபிக்சிங் (சூதாட்டம்) நடைபெற்றுள்ளதாக எற்கன்வே விசாரணைகள் நடந்துள்ளன. இவ்வாறான சூதாட்டத்துக்குத் துணை போனதாக முன்பு வீரர் ஸ்ரீசாந்த் ஆட்டத்தில் இருந்து விலக்கி வைக்கப்பட்டிருந்தும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரு வருடங்களுக்கு விளையாடத் தடை விதிக்கப்பட்டிருந்ததும் நினைவிருக்கலாம்.\nதற்போது ஐபிஎல் 2020 விளையாட்டுப் போட்டிகள் அரபு அமீரகத்தில் நடந்து வருகின்றன. இந்த போட்டிகளில் யாரும் சூதாட்டம் அல்லது ஊழலில் ஈடுபடக்கூடாது என்பதற்காக ஊழல் தடுப்புக் குழு மூன்று அணிகளாகப் பிரிந்து துபாய், ஷார்ஜா மற்றும் அபுதாபியில் தங்கி உள்ளனர். இந்த போட்டி தொடங்கும் முன்னரே இந்தக் குழு தலைவர் அஜித் சிங் விளையாட்டு வீரர்களுக்கு எச்சரிக்கை விட்டிருந்தார்.\nஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்ட அந்த எச்சரிக்கையில் “சமூக வலைத் தளங்கள் மூலம் பலரும் வீரர்களைத் தொடர்பு கொண்டு விவ்ரங்க்ள் சேகரிக்க முயல்வார்கள். அவர்களிடம் நாம் கவனமாக இருக்க வேண்டும். சில வேளைகளில் அவை ஒரு விசிறியின் அறியாமையில் எழுந்த விசாரணையாகவும் இருக்கலாம். ஆனால் அவற்றுக்கும் பதில் அளிக்காமல் இருக்க வேண்டும்” என கூறப்பட்டிருந்தது.\nஇந்நிலையில் ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வரும் ஒரு வீரர் தமக்குத் தெரிந்த ஒருவர் சமூக வலைத் தளங்கள் மூலம் தம்மை அணுகி அணிகளைப் பற்றிய விவரங்களை தம்மிடம் கேட்டது சந்தேகத்துக்கு இடம் அளிப்பதாக குழுவிடம் புகார் அளித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது. புகார் அளித்த வீரரிடம் இருந்து குழு அறிக்கை ஒன்றை விரைவில் பெற உள்ளது.\nதமக்கு தெரிந்தவராக இருந்தும் இவ்வாறு அணுகியது குறித்து புகார் அளித்த வீரரைப் பாராட்டிய குழுத் தலைவர் இந்த விவரங்களின் மூலம் வீரரை அணுகியவர் பந்தயம் அல்லது சூதாட்டத்தில் ஈடு பட வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளார். விளையாட்டு வீரர் தம்மை அணுகியவர் மீட்து சந்தேகம் கொண்டதால் விவரங்கள் அளிக்க மறுத்து புகார் அளித்துள்ளதாகவும் விரைவில் விசாரணை நடைபெறும் எனவும் குழு தெரிவித்துள���ளது.\nஐ பி எல் 2020 ஏலம் : தமிழக வீரர்கள் மூவர் மட்டுமே தேர்வு இன்று ஐ பி எல் 2020 தொடர் தொடக்கம் : சென்னை மும்பை அணிகள் மோதல் ஐ பி எல் 2020 : பஞ்சாப் அணி டாஸ் வென்று ஃபீல்டிங்கை தேர்வு செய்தது\nPrevious டெல்லியை விடாது விரட்டியும் 18 ரன்களில் விழுந்த கொல்கத்தா\nNext சென்னை அணிக்கு 179 ரன்கள் இலக்கு – இன்றாவது வெற்றி பெறுமா\nஐபிஎல் ரத்து எதிரொலி: சிஎஸ்கே வீரர்களை பத்திரமாக அனுப்பி வைத்த தோனி இன்று சொந்தஊருக்கு புறப்படுகிறார்…\nஐபிஎல் ரத்து: உடனடியாக நாடு திரும்பிய இங்கிலாந்து வீரர்கள் – ஆஸ்திரேலியர்களுக்கு வேறு திட்டம்\nஐபிஎல் தொடர் ஒத்திவைப்பால் டி-20 உலகக்கோப்பை அமீரகத்திற்கு மாற அதிக வாய்ப்பு\nஒரே டோஸ் கொரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக் லைட் : ரஷ்ய அரசு அங்கீகாரம்\nமாஸ்கோ ஒரே டோஸ் கொரொனா தடுப்பூசியான ஸ்புட்னிக் லைட் மருந்துக்கு ரஷ்ய அரசு அங்கீகாரம் அளித்துள்ளது. உலகெங்கும் கொரோனா பரவலைத் தடுக்க கொரோனா தடுப்பூசிகள் போடும் பணிகள் நடந்து…\nஇந்தியாவில் வரலாறு காணாத உச்சமாக நேற்று 4,14,182 பேருக்கு கொரோனா\nடில்லி இந்தியாவில் நேற்று 4,14,182 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று வரலாறு காணாத அளவுக்கு கொரோனாவால்…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15.66 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15,66,72,832 ஆகி இதுவரை 32,69,034 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nஅடுத்த 17 நாட்கள் ஒவ்வொரு வீட்டிலும் பின்பற்ற வேண்டிய கட்டாய விதி\nஅடுத்த 17 நாட்கள் ஒவ்வொரு வீட்டிலும் பின்பற்ற வேண்டிய கட்டாய விதி – நெட்டிசன் பதிவு கொரோனா கட்டுப்பாடு குறித்து வலைத் தளங்களில்…\nஇன்று ஆந்திரப் பிரதேசத்தில் 21,954 கர்நாடகாவில் 49,058 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 21,954 கர்நாடகாவில் 49,058 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 49,058…\nநாளைக்குள் தமிழகத்துக்குத் தேவையான ஆக்சிஜன் வழங்குவதை உறுதி செய்ய மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\nசென்னை நாளைக்குள் தமிழகத்துக்குத் தேவையான ஆக்சிஜன் வழங்குவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது….\nஒரே டோஸ் கொரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக் ��ைட் : ரஷ்ய அரசு அங்கீகாரம்\nஇந்தியாவில் வரலாறு காணாத உச்சமாக நேற்று 4,14,182 பேருக்கு கொரோனா\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15.66 கோடியை தாண்டியது\nஅதிமுக எம்.எல்.ஏ. விஜய பாஸ்கருக்கு கொரோனா\n8 hours ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinibitz.com/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81/", "date_download": "2021-05-07T00:25:26Z", "digest": "sha1:UFKV5LK7YJHJTJHLXLME3Q6SNPHGU2FU", "length": 18193, "nlines": 84, "source_domain": "www.tamilcinibitz.com", "title": "தொடக்கப்பள்ளியில் இன்னும் இளம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் இந்திய சகாக்களுடன் ஒப்பிடும்போது: கிரெக் சாப்பல் | கிரிக்கெட் செய்திகள்", "raw_content": "முழுமையான செய்தி உலகம் உங்களுக்காக.\nதொடக்கப்பள்ளியில் இன்னும் இளம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் இந்திய சகாக்களுடன் ஒப்பிடும்போது: கிரெக் சாப்பல் | கிரிக்கெட் செய்திகள்\nமெல்போர்ன்: ஆஸ்திரேலிய இளம் கிரிக்கெட் வீரர்கள் தங்கள் இந்திய வீரர்களுடன் ஒப்பிடும்போது இன்னும் “ஆரம்ப பள்ளியில்” இருக்கிறார்கள் என்று முன்னாள் இந்திய பயிற்சியாளர் கூறுகிறார் கிரெக் சாப்பல் மற்றும் குறுகிய காலத்தில் “தோழர்கள்-ஆயுதமாக” மாறக்கூடாது என்பதற்காக திறமைகளில் முதலீடு செய்ய தனது நாட்டின் கிரிக்கெட் வாரியத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.\nகாயம் தொடர்பான இந்தியா அதன் நட்சத்திர வீரர்கள் இல்லாமல் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியாவை எதிர்த்து 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. பி.சி.சி.ஐ.யின் வலுவான கட்டமைப்பு மற்றும் முயற்சிகள் தான் சர்வதேச கிரிக்கெட்டின் கடுமைக்கு தங்கள் இளம் வீரர்களை தயார்படுத்துகின்றன என்று சேப்பல் நம்புகிறார்.\nசிட்னி மார்னிங் ஹெரால்டுக்கான ஒரு கட்டுரையில் சேப்பல் எழுதினார்: “எங்கள் இளம் கிரிக்கெட் வீரர்கள் தங்கள் இந்திய தோழர்களுடன் ஒப்பிடும்போது வார இறுதி வீரர்கள்.\n“ஒரு இந்திய வீரர் தேசிய லெவன் எட்டும் நேரத்தில், அவர் அல்லது அவள் விரிவான பயிற்சியைப் பெற்றிருப்பார்கள், அது அவரை வெற்றிபெற நியாயமான வாய்ப்புடன் இந்திய அணிக்கு மாறத் தயார் செய்யும்.”\n“நான் ஒப்பிடுகையில் பயப்படுகிறேன் வில் புகோவ்ஸ்கி மற்றும் கேமரூன் கிரீன் அனுபவத்தின் அடிப்படையில் தொடக்கப் பள்ளியில் இன்னும் உள்ளனர். ”\nஇரண்டு வாரியங்களுக்கிடையில் செலவழிப்பதில் பெரும் வித்தியாசத்தை சுட்டிக்காட்டிய சேப்பல், கிரிக்கெட் ஆஸ்திரேலியா “மின்சார கார் சகாப்தத்தில் 1960 களில் வைத்திருப்பவர்களை செய்ய முடியாது” என்றார்.\nவில் புகோவ்ஸ்கி. (AFP புகைப்படம்)\n“பி.சி.சி.ஐ வளர்ந்து வரும் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்காக மில்லியன் கணக்கான டாலர்களை முதலீடு செய்கிறது. கிரிக்கெட் ஆஸ்திரேலியா, ஷெஃபீல்ட் கேடயத்திற்காக 44 மில்லியன் டாலர்களை செலவிடுகிறது. ஒப்பிடக்கூடிய செலவு இடைவெளி ஒரு பிளவு அல்ல, இது இந்தியப் பெருங்கடலின் அளவு” என்று அவர் எழுதினார் .\n“டெஸ்ட் கிரிக்கெட்டில் போட்டியிட என்ன தேவை என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியாவுக்குத் தெரியாவிட்டால், எங்கள் முழு கிரிக்கெட் நிர்வாகமும் திறமைகளில் முதலீடு செய்வது குறித்த அவர்களின் மனநிலையை மாற்றவில்லை என்றால், எந்த நேரத்திலும் நாங்கள் ரான்ஸாக இருப்போம்.”\n“இந்திய இளைஞர் அணிகளின் திறமை எங்கள் உயர்மட்ட அணிகளில் சிலவற்றை சங்கடப்படுத்தும்” என்று சேப்பல் கூறினார்.\n“அழுத்தத்தைக் கையாளும் உங்கள் திறன் மிகவும் போட்டித்திறன் வாய்ந்த விளையாட்டுகளில் வளர்க்கப்பட்டுள்ளது. இந்த தீவிரத்தை வலைகளில் அல்லது குறைந்த எதிரிகளுக்கு எதிராக மீண்டும் செய்ய முடியாது. இந்தியாவில் 38 உயர்மட்ட அணிகள் உள்ளன என்பது உங்களுக்கு ஆழம் குறித்த ஒரு கருத்தை அளிக்க வேண்டும் திறமை கிடைக்கிறது. “, என்று எழுதினார்.\nREAD பாகிஸ்தான் தங்கள் கராச்சி டெஸ்ட் அணிக்கு தேர்வு செய்யப்படாத ஆறு வீரர்களை தேர்வு செய்கிறது\n“நீங்கள் இந்திய இளைஞர்களையும் மூத்த அணிகளையும் பார்க்கும்போது நீங்கள் பார்ப்பது ஆச்சரியமான அளவு முதிர்ச்சி மற்றும் விளையாட்டின் அனைத்து அம்சங்களையும் பற்றிய உள்ளுணர்வு புரிதல். இது வலுவானது போலவே அரிது. ஒரு அணியைப் பற்றி நினைக்கும் போது நீங்கள் மன்னிக்க முடியும். ஆண்கள் மாணவர்களின் குழுவாக விளையாடுகிறார்கள். ”\nஇந்தியாவின் “முதலீட்டு நிலை கீழிருந்து மேலே உள்ளது” என்றும் “உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் பாக்ஸ் ஆபிஸில் கோவிட் -19 சிதைத்துள்ள குழப்பம் இந்தியாவுக்கும் உரிமையாளர்கள் அல்லாதவர்களுக்கும் இடையிலான இடைவெளியை விரிவுபடுத்தும்” என்று சேப்பல் கூறினார். பெரித��க்கு. ” . ”\n“இந்த நிகழ்ச்சியில் அவர்கள் மீது வீசப்பட்ட அனைத்தையும் இந்தியா கையாள முடியும் என்று ஆச்சரியப்பட்ட உங்களில், அவர்களின் நரம்பைப் பிடித்து மிகவும் தைரியமாக வெல்ல முடியும், நீங்கள் அதைப் பழக்கப்படுத்திக்கொள்ளுங்கள் என்று நான் சொல்கிறேன்.\n“இந்தியா சிறந்த அணியாக மாறுவது பற்றி கவலைப்பட வேண்டாம் – அவர்கள் ஏற்கனவே உலக கிரிக்கெட்டில் சிறந்த ஐந்து அணிகளை உருவாக்கும் திறன் கொண்டவர்கள்\nநான்கு டெஸ்ட் போட்டிகளிலும் ஒரே பந்து வீச்சாளர்களை விளையாடுவது தவறு என்று சேப்பல் நினைத்தார்.\n“ஒவ்வொரு டெஸ்டிலும் ஒரே நான்கு பந்து வீச்சாளர்களை விளையாடுவது மிகப்பெரிய தவறு. பேஸ்மேனைப் பொறுத்தவரை, ஐந்து வாரங்களில் நான்கு டெஸ்ட்களை விளையாடுவது என்பது பல வாரங்களில் நான்கு மராத்தான்களை இயக்குவதாகும். சிட்னியில் மிட்செல் ஸ்டார்க் குறிப்பாக தீர்ந்துவிட்டார் என்பதற்கான சான்றுகள் இருந்தன.” அவன் எழுதினான்.\nமுன்னாள் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் பேட்ஸ்மேன்களை இழப்புக்கு காரணம் என்று குற்றம் சாட்டினார்.\n“இந்த தோல்விக்கு டிம் பெயினையும் எங்கள் பந்து வீச்சாளர்களையும் நான் குறை கூறவில்லை. பழி நியாயமாகவும் நேரடியாகவும் நட்பு விக்கெட்டுகளில் ஓடாத பேட்ஸ்மேன்களிடமே உள்ளது.”\nஆஸ்திரேலியா விரைவில் மாற்றுத்திறனாளிகளைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று சேப்பல் கூறினார் டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித்.\n“முதல் இன்னிங்சில் 125 ஓவர்களில் அடித்த ஒரு பேட்ஸ்மேனை நாங்கள் உருவாக்காவிட்டால் எங்கள் ஆட்சி நாட்கள் முடிந்துவிட்டன. டேவிட் வார்னர் போராடுகிறார், ஸ்டீவ் ஸ்மித் என்றென்றும் இருக்க மாட்டார், எனவே நாங்கள் நடக்கும் சாம்பியன்களைக் கண்டுபிடிக்க வேண்டும்.” அவற்றை மாற்ற – விரைவில். ”\nதனது விக்கெட் நிலைப்பாடு மற்றும் கேப்டன் பதவிக்கு பல விமர்சனங்களை எதிர்கொண்ட பெயினையும் அவர் ஆதரித்தார்.\n“ஹெட் ரோல்களுக்கு அழைப்பு விடுப்பவர்களுக்கு, குறிப்பாக டிம் பெயினின் தலையை பைக்கில் தேடுவோருக்கு, நான் உண்மையிலேயே சொல்கிறேனா இந்த ஆஸ்திரேலிய அணியில் ஒரு தானியங்கி இடத்தைப் பெறக்கூடிய ஐந்து வீரர்களில் ஒருவர்தான் டிம். நிச்சயமாக, அவரிடம் இல்லை.” ஸ்டம்புகளுக்குப் பின்னால் சிறந்த தொடர் சோதனைகள், ஆனால் அவர் இன்��ும் சராசரியாக 40 பேட்டைக் கொண்டிருந்தார், “என்று அவர் எழுதினார்.\nREAD வாட்ச்: ரவீந்திர ஜடேஜா ஸ்டீவ் ஸ்மித்தின் இன்னிங்ஸை \"சிறந்த\" நேரடி வெற்றியுடன் முடித்தார்\nகாபி நிபுணர். பயண ஆர்வலர். ஆல்கஹால் சுவிசேஷகர். இணைய மேதாவி. பீர் காதலன். டிவி மேவன்.\nஇந்தியாவிடம் தோற்றாலும் ஆஸ்திரேலிய கேப்டனாக தொடர டிம் பெயின் சபதம் செய்தார்\nடிம் பெயின் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தைத் தவிர வேறு எதையும் பார்க்கவில்லை, ஆனால் செவ்வாயன்று இந்தியாவை 2-1...\nபந்து வீச்சாளர்கள் தவறாக நடக்கும்போது ரஹானேக்கு கோபம் வராது. விராட்டின் ஆற்றல் கோபத்தால் தவறாக உள்ளது: அருண் | கிரிக்கெட் செய்திகள்\nவார்டியின் மீட்பு, தாக்குதல் விருப்பங்கள் மற்றும் துருப்புக்களின் ஆழம் குறித்த ரோட்ஜர்ஸ்\n10 பேர் கொண்ட கிழக்கு வங்கம் கோவாவை 1-1 என்ற கோல் கணக்கில் கைப்பற்றியது\nPrevious articleஜென்ஷின் தாக்கங்கள் டெய்ன்ஸ்லீஃப் யார்\nNext articleபுதைபடிவ வேட்டைக்காரர்கள் ராட்சத கொள்ளையடிக்கும் புழுக்களின் டென் கண்டுபிடிக்கின்றனர்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nராம் கோபால் வர்மா தாவூத் இப்ராஹிம் பயோபிக் டி நிறுவனத்தின் டீஸர்களை வெளியிடுகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vativamaippu.com/?CAT=4-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D&P=6", "date_download": "2021-05-07T01:02:56Z", "digest": "sha1:C7LGPI4MGZ3DP6PJJBQHMBBTR7GPLTEA", "length": 16883, "nlines": 94, "source_domain": "www.vativamaippu.com", "title": " கிராபிக்ஸ் - வடிவமைப்பு இதழ்", "raw_content": "\nஉலகளவில் வடிவமைப்பாளர்களிடமிருந்து நல்ல வடிவமைப்புகளைக் கண்டறியவும்.\nஉலகளாவிய பிராண்டுகளிலிருந்து புதுமையான தயாரிப்புகளைக் கண்டறியவும்.\nஉலகளாவிய கட்டடக் கலைஞர்களிடமிருந்து சிறந்த கட்டடக்கலை திட்டங்களைக் கண்டறியவும்.\nசர்வதேச ஆடை வடிவமைப்பாளர்களிடமிருந்து படைப்பு பேஷன் வடிவமைப்புகளைக் கண்டறியவும்.\nபடைப்பு பேஷன் டிசைன்களை ஆராயுங்கள்\nஉலகளாவிய கிராபிக்ஸ் வடிவமைப்பாளர்களிடமிருந்து சிறந்த கிராஃபிக் வடிவமைப்புகளைக் கண்டறியவும்.\nசிறந்த கிராஃபிக் வடிவமைப்புகளை ஆராயுங்கள்\nஉலகளாவிய வடிவமைப்பு நிறுவனங்களிலிருந்து சிறந்த மூலோபாய வடிவமைப்புகளைக் கண்டறியவும்.\nசிறந்த மூலோபாய வடிவமைப்புகளை ஆராயுங்கள்\nசெவ்வாய் 6 ஏப்ரல் 2021\nசமையல் தெளிப்பு தெரு சமையலறை என்பது சுவைகள், பொருட்கள், பெருமூச்சு மற்றும் ரகசியங்களின் இடம். ஆனால் ஆச்சரியங்கள், கருத்துகள், வண்ணங்கள் மற்றும் நினைவுகள். இது ஒரு படைப்பு தளம். தரமான உள்ளடக்கம் இனி ஈர்ப்பை உருவாக்குவதற்கான அடிப்படை முன்மாதிரி அல்ல, இப்போது முக்கியமானது உணர்ச்சி அனுபவத்தை சேர்ப்பது. இந்த பேக்கேஜிங் மூலம் செஃப் ஒரு \"கிராஃபிட்டி ஆர்ட்டிஸ்ட்\" ஆகவும், வாடிக்கையாளர் கலை பார்வையாளராகவும் மாறுகிறார். ஒரு புதிய அசல் மற்றும் ஆக்கபூர்வமான உணர்ச்சி அனுபவம்: நகர உணவு. ஒரு செய்முறைக்கு ஆத்மா இல்லை, சமையல்காரர் தான் செய்முறைக்கு ஆன்மா கொடுக்க வேண்டும்.\nதிங்கள் 5 ஏப்ரல் 2021\nபேக்கரி காட்சி அடையாளம் மங்காட்டா ஸ்வீடிஷ் மொழியில் ஒரு காதல் காட்சியாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது, சந்திரனின் ஒளிரும், சாலை போன்ற பிரதிபலிப்பு இரவு கடலில் உருவாகிறது. காட்சி பார்வைக்கு ஈர்க்கப்பட்டு பிராண்ட் படத்தை உருவாக்க போதுமானது. கருப்பு மற்றும் தங்கம் என்ற வண்ணத் தட்டு, இருண்ட கடலின் வளிமண்டலத்தைப் பின்பற்றுகிறது, மேலும், இந்த பிராண்டுக்கு ஒரு மர்மமான, ஆடம்பர தொடுதலைக் கொடுத்தது.\nபானம் பிராண்டிங் மற்றும் பேக்கேஜிங்\nஞாயிறு 4 ஏப்ரல் 2021\nபானம் பிராண்டிங் மற்றும் பேக்கேஜிங் லோகோ மற்றும் பேக்கேஜிங் உள்ளூர் நிறுவனமான எம் - என் அசோசியேட்ஸ் வடிவமைத்தன. பேக்கேஜிங் இளம் மற்றும் இடுப்பு இடையே சரியான சமநிலையை தாக்குகிறது ஆனால் எப்படியாவது அழகான. வெள்ளை சில்க்ஸ்கிரீன் லோகோ வண்ணமயமான உள்ளடக்கங்களுக்கு மாறாக வெள்ளை தொப்பியை உச்சரிக்கிறது. பாட்டிலின் முக்கோண அமைப்பு மூன்று தனித்தனி பேனல்களை உருவாக்குவதற்கு நேர்த்தியாக உதவுகிறது, ஒன்று லோகோவிற்கும் இரண்டு தகவல்களுக்கும், குறிப்பாக வட்ட மூலைகளில் விரிவான தகவல்கள்.\nசனி 3 ஏப்ரல் 2021\nபீர் பேக்கேஜிங் இந்த மறுவடிவமைப்பின் பின்னணியில் உள்ள யோசனை என்னவென்றால், உற்பத்தியின் உயர் ஏபிவியை பார்வைக்கு அடையாளம் காணக்கூடிய உறுதியான பொருள் - நெளி உலோகம் வழியாகக் காண்பிப்பதாகும். நெளி உலோக புடைப்பு கண்ணாடி பாட்டிலின் முக்கிய மையக்கருவாக மாறும், அதே நேரத்தில் அதை தொட்டுணரவும் எளிதாகவும் வைத்திருக்கும். நெளி உலோகத்தை ஒத்த கிராஃப��க் முறை அலுமினியத்திற்கு மாற்றப்படுகிறது, இது அளவிடப்பட்ட மூலைவிட்ட பிராண்ட் லோகோ மற்றும் ஒரு வேட்டைக்காரனின் நவீனமயமாக்கப்பட்ட படம் ஆகியவற்றால் பூர்த்தி செய்யப்படலாம், இது புதிய வடிவமைப்பை மேலும் மாறும். பாட்டில் மற்றும் கேன் இரண்டிற்கும் கிராஃபிக் தீர்வு எளிய மற்றும் செயல்படுத்த எளிதானது. தைரியமான வண்ணங்கள் மற்றும் சங்கி வடிவமைப்பு கூறுகள் இலக்கு பார்வையாளர்களை ஈர்க்கின்றன மற்றும் அலமாரியின் தெரிவுநிலையை அதிகரிக்கும்.\nவெள்ளி 2 ஏப்ரல் 2021\nபேக்கேஜிங் 'கரைக்கும் தொகுப்பு' கருத்துடன் ஆக்கப்பூர்வமாக இணைந்த மது பானங்கள், பாரம்பரிய ஆல்கஹால் பேக்கேஜிங்கிற்கு மாறாக மெல்டிங் ஸ்டோன் தனித்துவமான மதிப்பைக் கொண்டுவருகிறது. சாதாரண திறப்பு பேக்கேஜிங் நடைமுறைக்கு பதிலாக, மெல்டிங் ஸ்டோன் அதிக வெப்பநிலை மேற்பரப்புடன் தொடர்பு கொள்ளும்போது தன்னைக் கரைக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆல்கஹால் தொகுப்பு சூடான நீரில் ஊற்றப்படும்போது, 'பளிங்கு' முறை பேக்கேஜிங் தன்னைக் கரைக்கும், இதற்கிடையில் வாடிக்கையாளர் தங்கள் விருப்பப்படி தயாரிக்கப்பட்ட தயாரிப்புடன் பானத்தை அனுபவிக்க தயாராக உள்ளனர். மதுபானங்களை அனுபவிப்பதற்கும் பாரம்பரிய மதிப்பைப் பாராட்டுவதற்கும் இது ஒரு புதிய வழியாகும்.\nவியாழன் 1 ஏப்ரல் 2021\nசமையல் புத்தகம் எழுத்தாளர் ஈவா பெஸ்ஸெக்கை அறிமுகப்படுத்திய காபி அட்டவணை ஹங்கேரிய சமையல் புத்தகம் 12 மாதங்கள், ஆர்ட்பீட் பப்ளிஷிங் நவம்பர் 2017 இல் தொடங்கப்பட்டது. இது ஒரு தனித்துவமான அழகிய கலை தலைப்பு, இது உலகெங்கிலும் உள்ள பல உணவு வகைகளின் சுவைகளை மாதாந்திர அணுகுமுறையில் இடம்பெறும் பருவகால சாலட்களை வழங்குகிறது. அத்தியாயங்கள் எங்கள் தட்டுகளிலும் இயற்கையிலும் பருவங்களில் ஏற்பட்ட மாற்றங்களை 360pp இல் பருவகால சமையல் மற்றும் அதனுடன் தொடர்புடைய உணவு, உள்ளூர் நிலப்பரப்பு மற்றும் வாழ்க்கை உருவப்படங்களை பட்டியலிடுகின்றன. ரெசிபிகளின் ஒரு கருப்பொருள் சேகரிப்பைத் தவிர, இது ஒரு நீடித்த கலை புத்தக அனுபவத்தை உறுதிப்படுத்துகிறது.\nஅசல் மற்றும் ஆக்கபூர்வமான வடிவமைப்புகள், கலை, கட்டிடக்கலை, ஃபேஷன், கிராபிக்ஸ் வடிவமைப்பு, புதுமை மற்றும் வடிவமைப்பு உத்தி ஆகியவற்றை நாங்கள் விரும்புகிறோம். தினமும், த��றமையான வடிவமைப்பாளர்கள், படைப்பாற்றல் கலைஞர்கள், புதுமையான கட்டிடக் கலைஞர்கள் மற்றும் சிறந்த பிராண்டுகளின் நல்ல வடிவமைப்புகளைத் தேர்ந்தெடுத்து வெளியிடுகிறோம். நல்ல வடிவமைப்பிற்கான உலகளாவிய பாராட்டையும் விழிப்புணர்வையும் உருவாக்குவதே எங்கள் நோக்கம்.\nReflexio அச்சுக்கலை திட்டம் வியாழன் 6 மே\nSimplest Happiness வணிக அனிமேஷன் புதன் 5 மே\nChirming சுவரொட்டி செவ்வாய் 4 மே\nநீங்கள் ஒரு வடிவமைப்பாளர், கலைஞர், கட்டிடக் கலைஞர், புதுமைப்பித்தன் அல்லது பிராண்ட் மேலாளரா பகிர்வதற்கு உங்களிடம் ஏதேனும் நல்ல வடிவமைப்புகள் உள்ளதா பகிர்வதற்கு உங்களிடம் ஏதேனும் நல்ல வடிவமைப்புகள் உள்ளதா உலகளவில் வடிவமைப்பாளர்கள், கலைஞர்கள், கட்டட வடிவமைப்பாளர்கள், கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் பிராண்டுகளிலிருந்து அசல் மற்றும் ஆக்கபூர்வமான வடிவமைப்புகளை வெளியிடுவதில் நாங்கள் மிகவும் ஆர்வமாக உள்ளோம். உங்கள் வடிவமைப்புகளை இன்று வெளியிடவும்.\nஅன்றைய வடிவமைப்பு நேர்காணல் வியாழன் 6 மே\nஅன்றைய வடிவமைப்பு புராணக்கதை புதன் 5 மே\nஅன்றைய வடிவமைப்பு செவ்வாய் 4 மே\nஅன்றைய வடிவமைப்பாளர் திங்கள் 3 மே\nஅன்றைய வடிவமைப்பு குழு ஞாயிறு 2 மே\nசமையல் தெளிப்பு பேக்கரி காட்சி அடையாளம் பானம் பிராண்டிங் மற்றும் பேக்கேஜிங் பீர் பேக்கேஜிங் பேக்கேஜிங் சமையல் புத்தகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaipoonga.net/cinema/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1/", "date_download": "2021-05-07T01:45:01Z", "digest": "sha1:FMVTVADLRAW2M2NT2NONXSB6N36DHFSB", "length": 15232, "nlines": 227, "source_domain": "kalaipoonga.net", "title": "எஸ்.பி.பி. மறைவு திரைத்துறைக்கும், இசை ரசிகர்களுக்கும் பேரிழப்பு - முதலமைச்சர் பழனிசாமி - Kalaipoonga", "raw_content": "\nHome Cinema எஸ்.பி.பி. மறைவு திரைத்துறைக்கும், இசை ரசிகர்களுக்கும் பேரிழப்பு – முதலமைச்சர் பழனிசாமி\nஎஸ்.பி.பி. மறைவு திரைத்துறைக்கும், இசை ரசிகர்களுக்கும் பேரிழப்பு – முதலமைச்சர் பழனிசாமி\nஎஸ்.பி.பி. மறைவு திரைத்துறைக்கும், இசை ரசிகர்களுக்கும் பேரிழப்பு – முதலமைச்சர் பழனிசாமி\nசென்னை: பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் பழனிசாமி வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-\nதமிழ்நாட்டு ம���்களை தேனினும் இனிமையான தனது குரலால் கவர்ந்த பிரபல திரைப்பட பின்னணிப் பாடகரும், திரைப்பட நடிகரும், ‘எஸ்பிபி’ என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படும் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன்.\nஇந்திய இசை உலகத்திற்கு 20-ம் நூற்றாண்டில், இறைவன் அளித்த இனிய கொடையாக வந்து உதித்தவர் மறைந்த எஸ்.பி.பி. ‘ஆயிரம் நிலவே வா’ என்ற புகழ் வாய்ந்த பாடலை அவர் தான் பாட வேண்டும் என்று காத்து இருந்து வாய்ப்பு அளிக்கும் அளவுக்கு எம்.ஜி.ஆரின் இதயத்தில் இடம் பெற்ற இன்னிசை நிலா எஸ்.பி.பி. அவரது குரலில் நேற்றும், இன்றும், நாளையும் ஒலிக்கும் ‘தங்கத் தாரகையே வருக வருக, தமிழ் மண்ணின் தேவதையே வருக வருக’ என்ற ஜெயலலிதாவின் புகழ் பாடும் பாடல், அதிமுகவின் வரலாற்றில் என்றும் இணைந்திருக்கும்.\nஎஸ்.பி.பி. கடவுள் மீது பக்தி கொண்டு ‘கந்த சஷ்டி கவசம்’ மற்றும் ‘ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில்’, போன்ற பல பாடல்களை உள்ளம் உருக பாடி, பக்தர்களின் மனங்களில் நீங்கா இடம் பிடித்தவர். எஸ்.பி.பி குரல் இனிமைக்கு நிகர் அவரே. இவர் மிக அதிகமான பாடல்களை பாடி கின்னஸ் சாதனை படைத்து, புகழின் உச்சிக்கே சென்றவர். இவர் பாடகர், நடிகர், பின்னணி குரல், இசையமைப்பாளர் போன்ற பன்முகத்தன்மை கொண்டவர்.\nகலைமாமணி விருது, தேசிய விருது, பல மாநில விருதுகள் உட்பட பல்வேறு விருதுகளுக்கு எஸ்.பி.பி. சொந்தக்காரர். மத்திய அரசு இவருக்கு பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ விருதுகளை வழங்கி கவுரவித்தது. எஸ்.பி.பி மறைவு தமிழ் திரைப்படத் துறைக்கும், இசை ரசிகர்களுக்கும் மிகப் பெரிய இழப்பாகும். இவருடைய இடத்தை இனி எவராலும் நிரப்ப முடியாது. அவர் மறைந்தாலும், அவரது பாடல்கள் என்றும் நம் செவிகளில் ஒலித்துக் கொண்டே அவரது நினைவைப் போற்றிக் கொண்டிருக்கும்.\nதனது ஈடு இணையற்ற குரல் வல்லமையால் தமிழ் திரைப்பட உலகுக்கும், குறிப்பாக தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்த எஸ்.பி.பி. மறைவு திரைப்படத் துறைக்கும், கலை உலகுக்கும், எனக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரை உலக நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனத��� ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்”\nஇவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nPrevious articleஎஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நாளை நல்லடக்கம்.\nNext articleகானக்குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும்: எஸ்.பி.பி மறைவுக்கு துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இரங்கல்\nமாநாடு டப்பிங் ஆரம்பம்… படக்குழு வெளியிட்ட புகைப்படங்கள்\nமூத்த தலைவர் ஆர்.எம்.வீரப்பனை நேரில் சந்தித்து ஆசி பெற்றார் மு.க.ஸ்டாலின் | Video\nநமீதா தியேட்டர்ஸ் – உண்மை சம்பவங்களின் அடிப்படியில் உருவாகும் படங்களை ஒளிபரப்பும் முதல் OTT தளம்\nவெளியானது 34 பேர் கொண்ட தமிழக அமைச்சரவை பட்டியல்\nவெளியானது 34 பேர் கொண்ட தமிழக அமைச்சரவை பட்டியல் தமிழகத்தின் முதலமைச்சராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை சென்னை - கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்க உள்ளார். கொரோனா பரவலை கருத்தில்...\nமாநாடு டப்பிங் ஆரம்பம்… படக்குழு வெளியிட்ட புகைப்படங்கள்\nமாநாடு டப்பிங் ஆரம்பம்... படக்குழு வெளியிட்ட புகைப்படங்கள் சிம்பு நடிப்பில் உருவாகி உள்ள படம் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கியுள்ள இப்படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார். இப்படத்தில் சிம்பு அப்துல் காலிக்...\nமூத்த தலைவர் ஆர்.எம்.வீரப்பனை நேரில் சந்தித்து ஆசி பெற்றார் மு.க.ஸ்டாலின் | Video\nமூத்த தலைவர் ஆர்.எம்.வீரப்பனை நேரில் சந்தித்து ஆசி பெற்றார் மு.க.ஸ்டாலின் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றதை அடுத்து தமிழகத்தின் அடுத்த முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பு ஏற்க உள்ளார். நாளை (மே 7...\nவெளியானது 34 பேர் கொண்ட தமிழக அமைச்சரவை பட்டியல்\nவெளியானது 34 பேர் கொண்ட தமிழக அமைச்சரவை பட்டியல் தமிழகத்தின் முதலமைச்சராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை சென்னை - கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்க உள்ளார். கொரோனா பரவலை கருத்தில்...\nமாநாடு டப்பிங் ஆரம்பம்… படக்குழு வெளியிட்ட புகைப்படங்கள்\nமாநாடு டப்பிங் ஆரம்பம்... படக்குழு வெளியிட்ட புகைப்படங்கள் சிம்பு நடிப்பில் உருவாகி உள்ள படம் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கியுள்ள இப்படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பெரும் ப��ருட்செலவில் தயாரித்துள்ளார். இப்படத்தில் சிம்பு அப்துல் காலிக்...\nமூத்த தலைவர் ஆர்.எம்.வீரப்பனை நேரில் சந்தித்து ஆசி பெற்றார் மு.க.ஸ்டாலின் | Video\nமூத்த தலைவர் ஆர்.எம்.வீரப்பனை நேரில் சந்தித்து ஆசி பெற்றார் மு.க.ஸ்டாலின் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றதை அடுத்து தமிழகத்தின் அடுத்த முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பு ஏற்க உள்ளார். நாளை (மே 7...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/670243/amp", "date_download": "2021-05-07T00:59:05Z", "digest": "sha1:C2ZV4KRO2WVOBSNWFPVXYTHYKYZOAPTU", "length": 7935, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "நாடு முழுவதும் சிபிஎஸ்இ பொதுத்தேர்வை ஒத்திவைக்க வேண்டும்: பிரியங்கா காந்தி வலியுறுத்தல் | Dinakaran", "raw_content": "\nநாடு முழுவதும் சிபிஎஸ்இ பொதுத்தேர்வை ஒத்திவைக்க வேண்டும்: பிரியங்கா காந்தி வலியுறுத்தல்\nடெல்லி: கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் சிபிஎஸ்இ பொதுத்தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வலியுறுத்தி உள்ளார். அசாதாரண சூழலில் தேர்வு நடத்தினால் மாணவர்கள், ஆசிரியர்கள் பாதிக்கப்படுவார்கள். கொரோனா பரவல் சூழலில் தேர்வு நடத்துவது பாதுகாப்பானது அல்ல என தெரிவித்துள்ளார்.\nஇசட் பிரிவு பாதுகாப்பு கேட்கிறார் ஆதார் பூனாவாலா: மும்பை நீதிமன்றத்தில் மனு\nஇந்தியாவில் வரலாறு காணாத உச்சம்: ஒரே நாளில் 4.12 லட்சம் பேருக்கு தொற்று: 24 மணி நேரத்தில் 3,980 பேர் பலி\nகுழந்தைகளை தாக்கும் கொரோனா 3வது அலை: நவம்பர், டிசம்பரில் பரவ வாய்ப்பு: நிபுணர்கள் கணிப்பு\nகட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மாநிலங்கள் எடுக்க வேண்டும்: பிரதமர் மோடி வலியுறுத்தல்\nநீதிபதிகளின் கருத்துக்களை ஊடகங்கள் வெளியிடுவதை தடை செய்ய முடியாது: தேர்தல் ஆணைய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி\nவிமான பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்குவதை விரைவுபடுத்துங்கள்: வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு\nசட்டீஸ்கரில் பரிதாபம்: ஹோமியோபதி மருந்து குடித்த 7 பேர் பலி\nதேர்தலுக்கு பிந்தைய வன்முறை குறித்து ஆய்வு: மேற்கு வங்கம் வந்தது மத்திய குழு\nமோசடி வழக்கில் கைதான ஹரிநாடாரிடம் இருந்து ரூ.2 கோடி மதிப்பு தங்கம் பறிமுதல்\nவேகமெடுக்கும் கொரோனா கேரளாவில் நாளை முதல் 16ம் தேதி வரை முழு ஊரடங்கு\nமாநிலங்கள��ன் பொருளாதாரம் கடுமையாக பாதிப்பு; 6 மாதமாக ஜிஎஸ்டி கவுன்சிலை கூட்டாதது ஏன்.. நிர்மலா சீதாராமனுக்கு பஞ்சாப் அமைச்சர் பகீர் கடிதம்\nகவர்னர் மாளிகையில் எளிய விழா; புதுச்சேரி முதல்வராக ரங்கசாமி நாளை பிற்பகல் பதவியேற்பு: துணை முதல்வர் பதவி உருவாக்கப்படுமா\nபிரதமரின் நிர்வாகத் தோல்வியால் மீண்டும் முழு ஊரடங்கை நோக்கி நாடு செல்கிறது: ராகுல் காந்தி ட்வீட்\nகொரோனா தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் காப்புரிமை விதிகளில் அமெரிக்க அரசு தளர்வுகள் அறிவிப்பு\nகொரோனா தடுப்பு மருந்து வீணாகவில்லை: கேரள அரசுக்கு பிரதமர் மோடி பாராட்டு\nசீரம் நிர்வாக அதிகாரி, குடும்பத்தினருக்கு ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு வேண்டும்: தொடர் அச்சுறுத்தலால் கோர்ட்டில் முறையீடு\n2 மாதங்களுக்கு இலவச ரேஷன்: மத்திய அமைச்சரவையில் ஒப்புதல்\nபதற்றத்தில் மேற்குவங்காளம்: தேர்தலுக்கு பின்னர் நடைபெற்ற வன்முறையில் இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில அரசு தகவல் \nஉ.பி தேர்தலில் சமாஜ்வாதி அபாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/229107", "date_download": "2021-05-07T01:57:09Z", "digest": "sha1:Z3DYFQGCNV2GVS5WZLRVPRQB64TWDZDG", "length": 6139, "nlines": 88, "source_domain": "selliyal.com", "title": "டுவிட்டர் மூலம் இனி வருமானம் ஈட்டலாம் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome வணிகம்/தொழில் நுட்பம் டுவிட்டர் மூலம் இனி வருமானம் ஈட்டலாம்\nடுவிட்டர் மூலம் இனி வருமானம் ஈட்டலாம்\nஉலகின் மிக முக்கியமான சமூக ஊடகங்களில் ஒன்று டுவிட்டர். தினமும் கோடிக்கணக்கானோர் இந்தத் தளத்தைப் பின்தொடர்கின்றனர். உலகின் எல்லா பிரபலங்களுக்கும் அரசியல் தலைவர்களுக்கும் டுவிட்டர் பக்கம் என்ற ஒன்று உண்டு.\nஅவர்களை மில்லியன் கணக்கானோர் டுவிட்டர் வழி பின்தொடர்வதும் வழக்கமான ஒன்றாகும்.\nஇனி அதிகமான பின்தொடர்பாளர்களைக் கொண்டிருக்கும் டுவிட்டர் தளங்கள் மூலம் வருமானம் ஈட்டும் திட்டம் ஒன்றை டுவிட்டர் நிறுவனம் விரைவில் செயல்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஒரு குறிப்பிட்ட டுவிட்டர் தளத்தின் உள்ளடக்கத்தை விரும்புபவர்கள், அது பயனானது எனக் கருதுபவர்கள் தங்களுக்கு விருப்பமான ஒரு தொகையை அந்தத் தளத்துக்கு வங்கிக் கணக்கு மூலம் சன்மானமாகச் செலுத்தலாம்.\nஇந்தத் திட்டம் எப்போது நடைமுறைக்கு வரும் என்பதை டுவிட்டர் இன்னும் அறிவிக்கவில்லை. எனினும் இது தொடர்பான விளக்கங்கள், இணையத் தளங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன.\nNext articleபிஎன்பி தலைவர் பதவியிலிருந்து செத்தி ஏப்ரல் 30-இல் விலகுகிறார்\nடுவிட்டரில் தமிழில் பதிவிட்ட நூர் ஹிஷாம்\nஎம்சிஎம்சி டுவிட்டர் கணக்கு குறித்த சந்தேகங்களை அமைச்சு கலைய வேண்டும்\nவிஜய்யின் தம்படம்தான் இந்தியாவிலேயே அதிகம் பகிரப்பட்டது\nபிபைசர், 26 பில்லியன் டாலர்களுக்கு கொவிட் தடுப்பூசிகளை விற்கும்\nபில் கேட்ஸ் விவாகரத்து : சொத்துகளை எப்படிப் பிரிப்பார்கள்\nதிமுக அமைச்சரவை : புதிய அமைச்சர்கள் பட்டியல்\nதிமுக அமைச்சரவை : அன்பில் மகேஷ் பள்ளிக் கல்வி அமைச்சர்\nபிரசாந்த் கிஷோர் : இந்திய சட்டமன்றத் தேர்தல் வெற்றிகளின் கதாநாயகன்\nபில் கேட்ஸ் விவாகரத்து : சொத்துகளை எப்படிப் பிரிப்பார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akattiyan.lk/2021/04/blog-post_568.html", "date_download": "2021-05-07T00:54:25Z", "digest": "sha1:AHCYLCMXTDHAPDZWJU4GKQUUMKVZ4CNM", "length": 5527, "nlines": 67, "source_domain": "www.akattiyan.lk", "title": "நாட்டில் அதிகரித்து வரும் தொற்றாளர்களின் எண்ணிக்கை - அகத்தியன் | Online", "raw_content": "\nHome முதன்மை செய்திகள் நாட்டில் அதிகரித்து வரும் தொற்றாளர்களின் எண்ணிக்கை\nநாட்டில் அதிகரித்து வரும் தொற்றாளர்களின் எண்ணிக்கை\nநாட்டில் மேலும் 168 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nஇவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.\nஇதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 96,356 ஆக அதிகரித்துள்ளது.\nநாட்டில் அதிகரித்து வரும் தொற்றாளர்களின் எண்ணிக்கை Reviewed by Chief Editor on 4/17/2021 06:58:00 pm Rating: 5\nTags : முதன்மை செய்திகள்\nபாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் மேலதிக வகுப்புகளுக்கு மறு அறிவித்தல் வரை விடுமுறை\nபாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் மேலதிக வகுப்புகளுக்கு மறு அறிவித்தல் வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், நோன்பு பெருநாள், வெசாக் ...\nகொரோனா பரவல் காரணமாக நாட்டின் பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள விடுமுறையானது மேலும் ஒரு வார காலத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ...\nமோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவி���்பு\nவாகன போக்குவரத்து திணைக்களத்தின் நாரஹென்பிட்டி மற்றும் வேரஹெர அலுவலகங்கள் ஒரு வாரத்திற்கு மூடப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம த...\nDReAM என அறிமுகப்படுத்தப்பட்டுள்ள முற்பாதுகாப்பு விதிமுறைகளுக்கமைய மதுபான சாலைகளை திறந்து வைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. D – சமூக இடை...\nமுழு அதிகாரம் : அகத்தியன் ஊடக சேவை 2020\nஆசிரியர் பீட தெடர்புகளுக்கு 0779516119\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaThuligal/2021/04/09175409/Fight-training-The-receiving-heroine.vpf", "date_download": "2021-05-07T01:27:01Z", "digest": "sha1:MBCMCI5QUIOWMM2EVFJ34LVOQI6NM4VO", "length": 5188, "nlines": 107, "source_domain": "www.dailythanthi.com", "title": "Fight training The receiving heroine || சண்டை பயிற்சி பெறும் நாயகி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் முடிவுகள் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசண்டை பயிற்சி பெறும் நாயகி\nபிரியாமணி தற்போது, ‘கொட்டேஷன் கேங்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.\nஇந்த படத்தில் அவர் அதிரடி சண்டைகள் போடும் நாயகியாக நடிக்கிறார். இதற்காக அவர் சண்டை பயிற்சி பெற்று வருகிறார். உடல் எடையை 8 கிலோ குறைத்து இருக்கிறார்.\n1. ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் உயிரிழப்பது, இனப்படுகொலைக்கு சமம் - அலகாபாத் ஐகோர்ட் கண்டனம்\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinibitz.com/%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B/", "date_download": "2021-05-07T01:51:49Z", "digest": "sha1:ONOTLJOIVZG56QC2M35TEJUSYSI4CL6N", "length": 19775, "nlines": 105, "source_domain": "www.tamilcinibitz.com", "title": "ஷிகர் தவான் மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஐபிஎல் இறுதிப் போட்டியில் டெல்லி தலைநகரங்களுக்கு முதல் முறையாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை 17 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்", "raw_content": "முழுமையான செய்தி உலகம் உங்களுக்காக.\nஷிகர் தவான் மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஐபிஎல் இறுதிப் போட்டியில் டெல்லி தலைநகரங்களுக்கு முதல் முறையாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை 17 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்\nஷிகர் தவான் மற்றும் மார்கஸ் ஸ்டோனிஸின் ஆல்ரவுண்ட் ஆட்டத்தின் மற்றொரு பெரிய இன்னிங்ஸ் ஞாயிற்றுக்கிழமை அபுதாபியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை 17 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி தலைநகரம் முதல் முறையாக இந்திய பிரீமியர் லீக் (ஐபிஎல்) இறுதிப் போட்டிக்கு முன்னேற உதவியது. டாஸ் வென்ற டெல்லி முதலில் பேட் செய்து மூன்று விக்கெட்டுக்கு 189 ரன்கள் எடுத்தது. இதற்கு பதிலளித்த சன்ரைசர்ஸ் எட்டு விக்கெட்டுக்கு 172 ரன்கள் எடுக்க முடிந்தது. முதல் தகுதிப் போட்டியில் தோல்வியடைந்த டெல்லி செவ்வாய்க்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் நான்கு முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்ளும்.\nஇடது கை பேட்ஸ்மேன் தவான் 50 பந்துகளில் 78 ரன்கள் எடுத்தார், அதில் ஐந்து பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்கள் அடங்கும். முதல் விக்கெட்டுக்கு மார்கஸ் ஸ்டோய்னிஸுடன் 86 ரன்கள் (27 பந்துகளில் 38, ஐந்து பவுண்டரி, ஒரு சிக்ஸர்) சேர்த்து டெல்லிக்கு நல்ல தொடக்கத்தை அளித்தார். சிம்ரான் ஹெட்மியர் 22 பந்துகளில் நான்கு பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் உதவியுடன் ஆட்டமிழக்காமல் 42 ரன்கள் எடுத்தார். சன்ரைசர்ஸ் பீல்டிங் மற்றும் பந்துவீச்சு பயனற்றதாக இருந்தது. ஸ்டோனிஸ் மற்றும் தவான் இருவருக்கும் வாழ்நாள் கிடைத்தது. பேட்டிங்கில் அவரது சிறந்த வரிசை தோல்வியடைந்தது. வென்ற ஹீரோ கேன் வில்லியம்சன் (45 பந்துகளில் 67, ஐந்து பவுண்டரி, நான்கு சிக்ஸர்) மற்றும் அப்துல் சமத் (16 பந்துகளில் 33, இரண்டு பவுண்டரி, இரண்டு சிக்ஸர்) இடையே ஐந்தாவது விக்கெட்டுக்கு 57 ரன்கள் கூட்டாண்மை அவரது இன்னிங்ஸின் சிறப்பம்சமாகும். .\nஐபிஎல் 2020: ஹைதராபாத்திற்கு எதிராக விராட் கோலி எடுத்த இந்த முடிவால் ஆச்சரியப்பட்ட சச்சின், என்ன சொன்னார் என்று தெரியும்\nஸ்டோனிஸும் பந்துவீச்சில் அற்புதமாக செயல்பட்டு 26 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். ககிசோ ரபாடா 29 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். பவர் பிளேயிலேயே சன்ரைசர்ஸ் மூன்று விக்கெட்டுகளை இழந்தது. கேப்டன் டேவிட் வார்னர் (இரண்டு) இன்ஸ்விங் யார்க்கரில் ரபாடா வீசினார். தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய பிரியாம் கார்க் (17), ஆர் அஸ்வின் மற்றும் என்ரிக் நோர்ஜே மீது சிக்ஸர்கள் அடித்தார், ஆனால் ஸ்டோனிஸ் அவரை வீசிய பிறகு, மணீஷ் பாண்டே (21) பவுண்டரி கோட்டில் பிடிபட்டு போட்��ியின் முடிவை முடிவு செய்தார்.\nவில்லியம்சன் ஸ்கோர் போர்டை இடையில் நீண்ட ஷாட்களுடன் ஓடினார், ஆனால், பிட்ச் ஹிட்டராக அனுப்பப்பட்ட ஜேசன் ஹோல்டர் (15 பந்துகளில் 11), அதே போல் பேட் செய்யவில்லை. வில்லியம்சன் 35 பந்துகளில் அரைசதம் நிறைவு செய்தார். இதற்கிடையில், அவர் பிரவீன் துபே, அக்ஷர் படேல், ரபாடா மற்றும் ஸ்டோயினிஸ் ஆகியோருக்கு சிக்ஸர் அடித்தார். ஆறு மற்றும் இரண்டு பவுண்டரிகளை நோர்ஜே மீது வைத்து சன்ரைசர்ஸ் நம்பிக்கையை சமத் எழுப்பினார். இறுதி நான்கு ஓவர்களில் சன்ரைசர்ஸ் 51 ரன்கள் தேவைப்பட்டது, ஆனால் ஸ்டோயினிஸ் வில்லியம்சனை ஆட்டமிழக்கச் செய்து டெல்லியின் வெற்றியை உறுதி செய்தார். ரபாடா தனது கடைசி ஓவரில் சமத், ரஷீத் கான் (11), ஸ்ரீவத் கோஸ்வாமி (எதுவும் இல்லை) ஆகியோரை ஆட்டமிழக்கச் செய்தார்.\nREAD ரோஹித் சர்மாவை விட மும்பை இந்தியன்ஸ் நாட்டிற்கு முக்கியமா\nஐபிஎல் 2020 வெளியேறிய பிறகு ஏபி டிவில்லியர்ஸ் ஆர்சிபி ரசிகர்களிடம் மன்னிப்பு கோருகிறார், இது பெரிய விஷயம் என்றார்\nமுன்னதாக, டெல்லிக்கு இன்னிங்ஸைத் திறந்த ஸ்டோனிஸ் மூன்று ரன்களில் இருந்தபோது, ​​ஹோல்டர் தனது கேட்சை கைவிட்டார். சந்தீப்பின் மீது ஸ்டோனிஸ் இரண்டு பவுண்டரிகள் அடித்தார், பின்னர் ஹோல்டரின் ஓவரில் 18 ரன்கள் எடுத்தார் (50 க்கு ஒரு விக்கெட்) மூன்று பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் உதவியுடன். பவர் பிளேயின் இறுதி ஓவரை வார்னர் சுழற்பந்து வீச்சாளர் ஷாபாஸ் நதீமிடம் ஒப்படைத்தார், ஆனால் சந்தீப்பை இரண்டு பவுண்டரிகள் அடித்த தவான் மிட்விக்கெட்டில் சிக்ஸர் மற்றும் பவுண்டரிகளுடன் வரவேற்றார். பவர்ப்ளேவிடம் இழப்பு இல்லாமல் ஸ்கோர் 65 ஐ எட்டியது.\nசன்ரைசர்ஸ் அணிக்கு பெரும் நிவாரணம் அளிக்க ரஷீத் கான் ஸ்டோய்னிஸை வீசினார், ஆனால் இரண்டாவது சுழற்பந்து வீச்சாளர் நதீம் (நான்கு ஓவர்களில் 48 ரன்கள்) முந்தைய போட்டியைப் போலவே தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. தவான் தனது பந்தில் ஒரு சிக்ஸர் அடித்தார் மற்றும் 26 பந்துகளில் அரைசதம் முடித்தார். கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் (20 பந்துகளில் 21) இன்னிங்ஸை முடிக்க முயன்றார், ஆனால் அவர் ஒரு நீண்ட இன்னிங்ஸை விளையாடவில்லை, மிடோஃப்பில் எளிதான கேட்சுடன் பெவிலியனுக்கு திரும்பினார். ஹெட்மியர் தனது இடத்தைப் பிடிக்க தேவையான விரைவான ரன்களை எடு���்தார். நடராஜன் ஓவரில் ஒரு சிக்ஸர் அடித்த பிறகு, அவர் மூன்று பவுண்டரிகளால் ஹோல்டரை அடித்தார். தவானின் சுலபமான கேட்சை ரஷீத் தவறவிட்டார், ஆனால் அதே ஓவரில் சந்தீப் அவரை எல்.பி.டபிள்யூ அவுட் செய்ய முடிந்தது. சந்தீப் மற்றும் நடராஜன் (நான்கு ஓவர்களில் 32 ரன்கள்) கடைசி இரண்டு ஓவர்களில் 13 ரன்கள் மட்டுமே எடுத்தனர். சந்தீப் (30 க்கு 1), ரஷீத் (26 க்கு 1) சன்ரைசர்களுக்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தினர்.\nமார்கஸ் ஸ்டோய்னிஸ் போ ரஷீத் 38\nஷிகர் தவான் பக்பாதா போ சந்தீப் 78\nஸ்ரேயாஸ் ஐயரின் பாண்டே வில் வைத்திருப்பவர் 21\nசிம்ரான் ஹெட்மியர் 42 நாட் அவுட்\nரிஷாப் பந்த் நாட் அவுட் 02\nகூடுதல் (பாய் 01, லெக் பாய் 02, நோபல் 02, பரந்த 03) 08\nமொத்தம் (20 ஓவர்களில் மூன்று விக்கெட்டுக்கு 189)\nவிக்கெட் வீழ்ச்சி 1-86, 2-126, 3-178\nREAD எம்.கே.ஸ்டாலின்: அதிகாரத்தின் 100 நாட்களுக்குள் மக்களின் குறைகளைத் தீர்ப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் சபதம் | சென்னை செய்தி\nபிரியாம் கார்க் போ ஸ்டோய்னிஸ் 17\nடேவிட் வார்னர் போ ரபாடா 02\nமஞ்சே பாண்டேவின் நோர்ஜே போ ஸ்டோய்னிஸ் 21\nகென் வில்லியம்சனின் ரபாடா போ ஸ்டோனிஸ் 67\nஜேசன் ஹோல்டரின் துபே போ படேல் 11\nஅப்துல் சமத்தின் சப் பால் போ ரபாடா 33\nரஷீத் கானின் படேல் வில் ரபாடா 11\nஸ்ரீவத்ஸா கோஸ்வாமியின் ஸ்டோய்னிஸ் போ ரபாடா 00\nஷாபாஸ் நதீம் ஆட்டமிழக்காமல் 02\nசந்தீப் சர்மா 02 நாட் அவுட்\nகூடுதல் (லெக் பை 01, அகல 05) 06\nமொத்தம் (20 ஓவர்கள், எட்டு விக்கெட்டுகள்) 172\nபாப் கலாச்சாரம் டிரெயில்ப்ளேஸர். சிந்தனையாளர். சிக்கல் செய்பவர். இசை குரு. சமூக ஊடக நிபுணர். மாணவர். ஜாம்பி நிபுணர்.\nதடைசெய்யப்பட்ட காளை வேட்டை விழா தமிழ்நாட்டில் முழு வீச்சில் கொண்டாடப்படுகிறது, 2 பார்வையாளர்கள் அடித்து கொல்லப்பட்டனர்\nதடைசெய்யப்பட்ட திருவிழாவின் போது, ​​இரண்டு வயதானவர்கள் காளைகளால் தாக்கப்பட்டனர் (பிரதிநிதி படம்). & nbsp |...\nக ut தம் கம்பீரின் பெரிய அறிக்கை- கடந்த உலகக் கோப்பையின் தவறை மீண்டும் செய்ய முடியாது, இந்த கிரிக்கெட் வீரருக்கு ஆறாவது இடத்தில் வாய்ப்பு கொடுங்கள்\nஉ.பி.யில் பிலிம் சிட்டிக்கான தயாரிப்பு, அக்‌ஷய் உள்ளிட்ட இந்த நட்சத்திரங்கள் முதல்வர் யோகியை அடைந்தனர், அரசியல் பாதரசம் அடைந்தது\nடெல்லி நேரடி புதுப்பிப்புகளை விவசாயிகள் எதிர்க்கின்றனர்: விவசாயிகள் 24 மணி நேர உண்ணாவிரதத்தை அற���வித்தனர்\nPrevious articleவெளியேறு வாக்கெடுப்பின் பார்வையைப் பார்த்து, ஆர்.ஜே.டி அறிவுறுத்தல்களைக் கொடுத்தார் – வெற்றியில் பட்டாசுகளை பதப்படுத்த வேண்டாம், பட்டாசுகளை விட வேண்டாம்\nNext articleஇந்திய பங்குச் சந்தையைத் தாக்கும் மூலதன ஓட்டத்தின் சுனாமி: ராகேஷ் ஜுன்ஜுன்வாலா பங்கு mkt க்குள் பாயும் மூலதனத்தின் சுனாமி இருக்கும்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nதமிழ்நாட்டின் கவனத்தை ஈர்க்க பாஜக பொங்கல் பக்கம் திரும்பியது | சென்னை செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vativamaippu.com/?CAT=4-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D&P=7", "date_download": "2021-05-06T23:58:17Z", "digest": "sha1:3D7AGGJU3JBYDS7N4VST27WSMWLMD7SY", "length": 17398, "nlines": 94, "source_domain": "www.vativamaippu.com", "title": " கிராபிக்ஸ் - வடிவமைப்பு இதழ்", "raw_content": "\nஉலகளவில் வடிவமைப்பாளர்களிடமிருந்து நல்ல வடிவமைப்புகளைக் கண்டறியவும்.\nஉலகளாவிய பிராண்டுகளிலிருந்து புதுமையான தயாரிப்புகளைக் கண்டறியவும்.\nஉலகளாவிய கட்டடக் கலைஞர்களிடமிருந்து சிறந்த கட்டடக்கலை திட்டங்களைக் கண்டறியவும்.\nசர்வதேச ஆடை வடிவமைப்பாளர்களிடமிருந்து படைப்பு பேஷன் வடிவமைப்புகளைக் கண்டறியவும்.\nபடைப்பு பேஷன் டிசைன்களை ஆராயுங்கள்\nஉலகளாவிய கிராபிக்ஸ் வடிவமைப்பாளர்களிடமிருந்து சிறந்த கிராஃபிக் வடிவமைப்புகளைக் கண்டறியவும்.\nசிறந்த கிராஃபிக் வடிவமைப்புகளை ஆராயுங்கள்\nஉலகளாவிய வடிவமைப்பு நிறுவனங்களிலிருந்து சிறந்த மூலோபாய வடிவமைப்புகளைக் கண்டறியவும்.\nசிறந்த மூலோபாய வடிவமைப்புகளை ஆராயுங்கள்\nபுதன் 31 மார்ச் 2021\nகாபி பேக்கேஜிங் இந்த வடிவமைப்பு ஐந்து வெவ்வேறு கையால் வரையப்பட்ட, விண்டேஜ் ஈர்க்கப்பட்ட மற்றும் சற்று யதார்த்தமான குரங்கு முகங்களைக் காட்டுகிறது, ஒவ்வொன்றும் வெவ்வேறு பிராந்தியத்திலிருந்து வெவ்வேறு காபியைக் குறிக்கும். அவர்களின் தலையில், ஒரு ஸ்டைலான, கிளாசிக் தொப்பி. அவர்களின் லேசான வெளிப்பாடு ஆர்வத்தைத் தூண்டுகிறது. இந்த டப்பர் குரங்குகள் தரத்தை குறிக்கின்றன, சிக்கலான சுவை பண்புகளில் ஆர்வமுள்ள காபி குடிப்பவர்களுக்கு அவற்றின் முரண்பாடான நுட்பம். அவற்றின் வெளிப்பாடுகள் விளையாட்டுத்தனமாக ஒரு மனநிலையைக் குறிக்கின்றன, ஆனால் க���பியின் சுவை சுயவிவரத்தையும் குறிக்கின்றன, லேசான, வலுவான, புளிப்பு அல்லது மென்மையானவை. வடிவமைப்பு எளிமையானது, ஆனால் நுட்பமாக புத்திசாலி, ஒவ்வொரு மனநிலையிலும் ஒரு காபி.\nசெவ்வாய் 30 மார்ச் 2021\nகாக்னக் கண்ணாடி காக்னாக் குடிப்பதற்காக இந்த வேலை வடிவமைக்கப்பட்டது. இது ஒரு கண்ணாடி ஸ்டுடியோவில் இலவசமாக வீசப்படுகிறது. இது ஒவ்வொரு கண்ணாடித் துண்டையும் தனித்தனியாக ஆக்குகிறது. கண்ணாடி பிடிப்பது எளிதானது மற்றும் அனைத்து கோணங்களிலிருந்தும் சுவாரஸ்யமானது. கண்ணாடியின் வடிவம் வெவ்வேறு கோணங்களில் இருந்து வெளிச்சத்தை பிரதிபலிக்கிறது. கோப்பையின் தட்டையான வடிவம் காரணமாக, கண்ணாடியை அதன் இருபுறமும் ஓய்வெடுக்க விரும்புவதால் மேசையில் வைக்கலாம். படைப்பின் பெயரும் யோசனையும் கலைஞரின் வயதைக் கொண்டாடுகின்றன. வடிவமைப்பு வயதான நுணுக்கங்களை பிரதிபலிக்கிறது மற்றும் வயதான காக்னாக் தரத்தை மேம்படுத்துவதற்கான பாரம்பரியத்தை செயல்படுத்துகிறது.\nதிங்கள் 29 மார்ச் 2021\nதோல் பராமரிப்பு தொகுப்பு புதிய தோல் பராமரிப்புப் பொருட்களில் சருமத்தை மீட்டெடுக்கும் கருத்து பாகாஸ் மறுசுழற்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் கருத்தாக்கத்தின் பூஜ்ஜிய சுமையுடன் ஒத்துப்போகிறது. 30 நாள் தோல் மேம்பாட்டு சிகிச்சை முறையின் 60 நாள் உணவு-தர வரையறுக்கப்பட்ட அடுக்கு வாழ்க்கையின் தயாரிப்பு அம்சங்களிலிருந்து, 30 மற்றும் 60 ஆகியவை உற்பத்தியின் காட்சி அங்கீகார அடையாளமாக தேர்ந்தெடுக்கப்படுகின்றன, மேலும் பயன்பாட்டின் மூன்று நிலைகள் 1,2, 3 பார்வைக்கு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.\nஞாயிறு 28 மார்ச் 2021\nஅரிசி தொகுப்பு சோங்வா ரிவர் ரைஸ், SOURCEAGE உணவுக் குழுவின் கீழ் ஒரு உயர்நிலை அரிசி தயாரிப்பு ஆகும். பாரம்பரிய சீன திருவிழா - வசந்த விழா நெருங்கி வருவதால், அவை வசந்த திருவிழா பரிசுகளின் வாடிக்கையாளர்களுக்கு பரிசாக அழகாக தொகுக்கப்பட்ட அரிசி தயாரிப்பு மூலம் வடிவமைக்கின்றன, எனவே ஒட்டுமொத்த வடிவமைப்பு வசந்த விழாவின் பண்டிகை சூழ்நிலையை எதிரொலிக்க வேண்டும், பாரம்பரிய சீன கலாச்சார கூறுகளை எடுத்துக்காட்டுகிறது மற்றும் நல்ல நல்ல பொருள்.\nசனி 27 மார்ச் 2021\nசிற்பம் நிறுவல் ஒற்றை பயன்பாட்டு காபி காப்ஸ்யூல்களின் விரைவான பெருக்கத்தை சூப்பர��க் குறிக்கிறது, இது மனித வசதி மற்றும் சுற்றுச்சூழலில் அதன் தாக்கத்தை குறிக்கிறது. கணிதவியலாளர் கேப்ரியல் லேம் ஆவணப்படுத்தியபடி, கடினமான வடிவியல் சூப்பரெக் வடிவம் தரையில் மேலே தோன்றியது, சீரற்ற நிராகரிக்கப்பட்ட காபி காப்ஸ்யூல்கள் சரியான கோடுகளாக அமைக்கப்பட்டிருக்கும். உள்ளுறுப்பு அனுபவம் பார்வையாளரை அனைத்து கோணங்களிலிருந்தும் தூரத்திலிருந்தும் ஈடுபடுத்துகிறது. சமூக ஊடகங்கள் மற்றும் உள்ளூர் சமூகத்தில் நடவடிக்கை எடுப்பதற்கான அழைப்பு மூலம் 3000 க்கும் மேற்பட்ட காப்ஸ்யூல்கள் சேகரிக்கப்பட்டன. சூப்பரெக் பார்வையாளரை கழிவுகளை ஆராயவும் புதிய மறுசுழற்சி பழக்கத்தை ஊக்குவிக்கவும் அனுமதிக்கிறது.\nநல்ல உணவை சுவை அறிந்து சொல்வதில் வல்லவர் உணவு பரிசு தொகுப்பு\nவெள்ளி 26 மார்ச் 2021\nநல்ல உணவை சுவை அறிந்து சொல்வதில் வல்லவர் உணவு பரிசு தொகுப்பு செயிண்ட்லி ஃபிளேவர்ஸ் என்பது ஒரு நல்ல உணவு பரிசுத் தொகுப்பாகும், இது உயர்நிலை கடைகளின் நுகர்வோரை குறிவைக்கிறது. உணவு மற்றும் உணவு நாகரீகமாக மாறியுள்ள போக்கைத் தொடர்ந்து, இந்த திட்டத்திற்கான உத்வேகம் கத்தோலிக்க மதத்தின் 2018 இன் மெட் காலா பேஷன் கருப்பொருளிலிருந்து வருகிறது. ஜெர்மி போங்கு காங், கத்தோலிக்க மடாலயங்களில் கலை மற்றும் உயர்தர உணவு தயாரிப்பின் வளமான பாரம்பரியத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக அலங்கரிக்கப்பட்ட மற்றும் பாரம்பரியமான பொறிப்பு பாணியிலான எடுத்துக்காட்டுகளைப் பயன்படுத்தி, உயர்தர கடை நுகர்வோரின் கண்களைக் கவரும் ஒரு தோற்றத்தை உருவாக்க முயன்றார்.\nஅசல் மற்றும் ஆக்கபூர்வமான வடிவமைப்புகள், கலை, கட்டிடக்கலை, ஃபேஷன், கிராபிக்ஸ் வடிவமைப்பு, புதுமை மற்றும் வடிவமைப்பு உத்தி ஆகியவற்றை நாங்கள் விரும்புகிறோம். தினமும், திறமையான வடிவமைப்பாளர்கள், படைப்பாற்றல் கலைஞர்கள், புதுமையான கட்டிடக் கலைஞர்கள் மற்றும் சிறந்த பிராண்டுகளின் நல்ல வடிவமைப்புகளைத் தேர்ந்தெடுத்து வெளியிடுகிறோம். நல்ல வடிவமைப்பிற்கான உலகளாவிய பாராட்டையும் விழிப்புணர்வையும் உருவாக்குவதே எங்கள் நோக்கம்.\nMangata Patisserie பேக்கரி காட்சி அடையாளம் வியாழன் 6 மே\nThe Curtain விற்பனை அலுவலகம் புதன் 5 மே\nStocker நாற்காலி செவ்வாய் 4 மே\nநீங்கள் ஒரு வடிவமைப்பாளர், கலைஞர், கட்டிடக் கலைஞர், புதுமைப்பித்தன் அல்லது பிராண்ட் மேலாளரா பகிர்வதற்கு உங்களிடம் ஏதேனும் நல்ல வடிவமைப்புகள் உள்ளதா பகிர்வதற்கு உங்களிடம் ஏதேனும் நல்ல வடிவமைப்புகள் உள்ளதா உலகளவில் வடிவமைப்பாளர்கள், கலைஞர்கள், கட்டட வடிவமைப்பாளர்கள், கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் பிராண்டுகளிலிருந்து அசல் மற்றும் ஆக்கபூர்வமான வடிவமைப்புகளை வெளியிடுவதில் நாங்கள் மிகவும் ஆர்வமாக உள்ளோம். உங்கள் வடிவமைப்புகளை இன்று வெளியிடவும்.\nஅன்றைய வடிவமைப்பு நேர்காணல் வியாழன் 6 மே\nஅன்றைய வடிவமைப்பு புராணக்கதை புதன் 5 மே\nஅன்றைய வடிவமைப்பு செவ்வாய் 4 மே\nஅன்றைய வடிவமைப்பாளர் திங்கள் 3 மே\nஅன்றைய வடிவமைப்பு குழு ஞாயிறு 2 மே\nகாபி பேக்கேஜிங் காக்னக் கண்ணாடி தோல் பராமரிப்பு தொகுப்பு அரிசி தொகுப்பு சிற்பம் நிறுவல் நல்ல உணவை சுவை அறிந்து சொல்வதில் வல்லவர் உணவு பரிசு தொகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/91999", "date_download": "2021-05-07T02:01:50Z", "digest": "sha1:NWSAHZW6MQ2RDBMOZSJOYCEW5M22D43X", "length": 13204, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "யாழில் வாள்களை உடைமையில் வைத்திருந்த ஒருவர் கைது | Virakesari.lk", "raw_content": "\n4 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு\nநாட்டில் மேலும் 12 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்\nதூரநோக்குடனான திட்டமிடலின்றி நாடு நெருக்கடிக்குள் சிக்கி விட்டது - ரணில் கவலை\nநாளொன்றுக்கு 2 ஆயிரத்தை விட அதிக தொற்றாளர்கள் இனங்காணப்படலாம் : எச்சரிக்கிறது தொற்று நோயியல் பிரிவு\nபிழையான எண்ணங்களை மக்கள் மயப்படுத்த எதிக்கட்சி முயற்சி - மதுர விதானகே\n4 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு\nநாட்டில் மேலும் 12 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்\nஜம்மு-காஷ்மீரில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை\nகொரோனாவால் இலங்கையில் கர்ப்பிணித் தாய் பலி\nயாழில் வாள்களை உடைமையில் வைத்திருந்த ஒருவர் கைது\nயாழில் வாள்களை உடைமையில் வைத்திருந்த ஒருவர் கைது\nதிருநெல்வேலி, பால்பண்ணை – அம்மன் வீதியில் உள்ள வீடு ஒன்றில் வாள்களை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர், யாழ்ப்பாணம் சிறப்பு அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇன்று நண்பகல் இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றது.\n“அந்த வீட்டில் 3 புதிய வாள்களை மறைத்து வைத்துள்ளதாக புலனாய்வு அதிகாரிகளுக்கு இரகசிய தகவல் கிடைத்தது.\nஅதனடிப்படையில் இன்று நண்பகல் குறித்த வீட்டுக்குச் சென்ற சிறப்பு அதிரடிப்படையினர் தேடுதல் மேற்கொண்டனர்.\nஅங்கு 3 வாள்களை மீட்டதுடன் அதனை மறைத்து வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் 21 வயதுடைய இளைஞர் ஒருவரையும் சிறப்பு அதிரடிப் படையினர் கைது செய்தனர்” என்று பொலிஸார் தெரிவித்தனர்.\nசந்தேக நபர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்பட்டுள்ளார்.\nயாழ்ப்பாணம் வாள்கள் உடமை வைத்திருந்தவர் கைது Jaffna Swords possession possessor Arrested\n4 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு\nஅவ்வாறு தனிமைப்படுத்தப்பட்ட பல பகுதிகளின் 4 கிராம சேவகர் பிரிவுகள் இன்று விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.\n2021-05-07 07:26:56 தனிமைப்படுத்தல் கொரோனா களுத்துறை\nநாட்டில் மேலும் 12 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்\nநாட்டில் கொரோனா அச்சுறுத்தலையடுத்து கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மாவட்டங்களின் 12 கிராம சேவகர் பிரிவுகள் இன்று காலை 6 மணிமுதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜென்ரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.\n2021-05-07 07:17:30 தனிமைப்படுத்தல் கொரோனா இராணுவத்தளபதி\nதூரநோக்குடனான திட்டமிடலின்றி நாடு நெருக்கடிக்குள் சிக்கி விட்டது - ரணில் கவலை\nகொவிட் வைரஸ் தொற்று 2 ஆம் அலை ஏற்பட்ட போது போதிய தடுப்பூசிகளை கொள்வனவு செய்திருந்தால் அச்சம் கொள்ள வேண்டியதில்லை. அல்லது தடுப்பூசி கிடைக்காவிடின் அடுத்த கட்ட சிகிச்சைகளுக்கான இயற்கை சுவாசக் கருவிகள் , அவசர சிகிச்சை பிரிவு கட்டில்கள் மற்றும் ஒக்சிஜன் போன்றவற்றை பெற்றுக்கொண்டிருந்தாலும் ஏற்பட கூடிய உயிரிழப்புகளை தடுத்திருக்கலாம். ஆனால் அரசாங்கத்தின் தூரநோக்குடனான திட்டமிடலின்றி நாடு நெருக்கடிக்குள் சிக்கி விட்டது என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.\n2021-05-07 07:01:30 தூரநோக்கு திட்டமிடல் நாடு\nநாளொன்றுக்கு 2 ஆயிரத்தை விட அதிக தொற்றாளர்கள் இனங்காணப்படலாம் : எச்சரிக்கிறது தொற்று நோயியல் பிரிவு\nநாட்டில் நாளொன்றில் இனங்காணப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கை எதிர்வரும் நாட்களில் 2000 ஐ விட அதிகரி���்கக் கூடும் என்று சுகாதார தரப்பினர் எச்சரித்துள்ளனர். தற்போது நாடளாவிய அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றமையால் மாவட்டங்களிலுள் வைத்தியசாலைகளிலும் கொவிட் தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான பிரிவுகளை பிரத்தியேகமாக ஒதுக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதே வேளை மேல் மாகாணத்தில் மாத்திரம் நாளொன்றுக்கு சுமார் 1200 தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றனர்.\n2021-05-06 22:40:35 2000 தொற்றாளர்கள் இனங்காணல் எச்சரிக்கை\nபிழையான எண்ணங்களை மக்கள் மயப்படுத்த எதிக்கட்சி முயற்சி - மதுர விதானகே\nகொவிட்-19 வைரஸ் பரவல் காரணமாக பாதிப்படைந்துள்ள மக்களை காப்பாற்றுவதுடன் , வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கு அரசாங்கம் முயற்சிகளை எடுத்து வரும் நிலையில், எதிர்தரப்பினர் தங்களுக்கு கிடைக்கப் பெற்றுள்ள பாராளுமன்ற உறுப்புரிமையை பயன்படுத்தி பிழையான எண்ணங்களை மக்கள் மயப்படுத்த முயற்சித்து வருவதாக ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே குற்றஞ்சாட்டினார்.\n2021-05-06 22:36:58 பிழையான எண்ணங்கள் மக்கள் மயப்படுத்தல் எதிக்கட்சி\n4 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு\nநாட்டில் மேலும் 12 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்\nதூரநோக்குடனான திட்டமிடலின்றி நாடு நெருக்கடிக்குள் சிக்கி விட்டது - ரணில் கவலை\nஇலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து மேலும் 810 பேர் குணமடைவு..\nபணவீக்கம் ஏப்ரலில் 3.9 சதவீதமாக வீழ்ச்சி: இலங்கை மத்திய வங்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2020/09/blog-post_359.html", "date_download": "2021-05-07T01:00:47Z", "digest": "sha1:BOVJM6CZFPG4U7XVUEG5VLOVSNMBLR6X", "length": 8442, "nlines": 89, "source_domain": "www.yarlexpress.com", "title": "விடுமுறை வழங்காததால் தற்கொலை முயற்சி செய்த பொலிஸ் உத்தியோகத்தர். \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nவிடுமுறை வழங்காததால் தற்கொலை முயற்சி செய்த பொலிஸ் உத்தியோகத்தர்.\nசுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தமக்கு விடுமுறை வழங்கவில்லை என்று அதிகளவான மாத்திரைகளை உட்கொண்டு தவறான...\nசுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தமக்கு விடுமுறை வழங்கவில்லை என்று அதிகளவான மாத்திரைகளை உட்கொண்டு தவறான முடிவெடுத்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.\nபாதிக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் தற்போது தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,\nசுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தமக்கு நீண்ட நாட்களாகியும் விடுமுறை வழங்கப்படவில்லை என பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் தமக்கு விடுமுறை வழங்குமாறு கேட்டுள்ளார்.\nஎனினும் அவருக்கு விடுமுறை வழங்கப்படவில்லை.இதனால் மன விரக்தி அடைந்த குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் அதிகளவான பனடோல் மாத்திரைகளை உட்கொண்டு தவறான முடிவெடுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். பாதிப்புக்குள்ளான பொலிஸ் உத்தியோகத்தர் உடனடியாக தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nவணிகம் / பொருளாதாரம் (7)\nமாநகர காவல்படையினரின் சீருடை பறிமுதல் - மாநகரசபைக்கு ஆப்பு வைத்த பொலீஸார் ..\nBREAKING NEWS :- ஊரடங்கு தொடர்பில் இராணுவத் தளபதி சற்றுமுன் வெளியிட்ட அறிவிப்பு\nஅத்தியாவசிய சேவைக்கு மாத்திரமே அனுமதி\nYarl Express: விடுமுறை வழங்காததால் தற்கொலை முயற்சி செய்த பொலிஸ் உத்தியோகத்தர்.\nவிடுமுறை வழங்காததால் தற்கொலை முயற்சி செய்த பொலிஸ் உத்தியோகத்தர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://anumar.vayusutha.in/kovil138.html", "date_download": "2021-05-07T00:36:46Z", "digest": "sha1:L5CROHL3N5T4423FMS25PZWCDAH75TBX", "length": 29006, "nlines": 54, "source_domain": "anumar.vayusutha.in", "title": " ஸ்ரீ ஸ்வாமி ஹாதிராம்ஜீ மடத்தின் ஸ்ரீ ஹனுமான், வேலூர், தமிழ்நாடு", "raw_content": "Close ஸ்லோகம் துதிகள்: தமிழ் ஸ்துதி: பிற மொழி கோவில்கள் கட்டுரைகள் பலகை விருந்தினர் ஏடு எங்கள் இணையம் பற்றி ஆங்கில இணையம் ஹிந்தி இணையம் வெளியீடு புதிய சேர்க்கை: தமிழ் இணையம் புதிய சேர்க்கை: ஆங்கில இணையம் புதிய சேர்க்கை: ஹிந்தி இணையம்\nதுதிகள்: தமிழ் ஸ்துதி: பிற மொழி\nபலகை எங்கள் இணையம் பற்றி வெளியீடு இணையம் ஆங்கில இணையம் ஹிந்தி இணையம்\nதமிழ் இணைய தளம் ஆங்கில இ. தளம் ஹிந்தி இ. தளம்\nஸ்லோகம் துதிகள்: தமிழ் ஸ்துதி: பிற மொழி கோவில்கள் கட்டுரைகள் பலகை விருந்தினர் ஏடு எங்கள் இணையம் பற்றி ஆங்கில இணையம் ஹிந்தி இணையம் வெளியீடு புதிய சேர்க்கை: தமிழ் இணையம் புதிய சேர்க்கை: ஆங்கில இணையம் புதிய சேர்க்கை: ஹிந்தி இணையம்\nஸ்ரீ ஸ்வாமி ஹாதிராம்ஜீ மடத்தின் ஸ்ரீ ஹனுமான், வேலூர், தமிழ்நாடு\nஸ்ரீ ஸ்வாமி ஹாதிராம்ஜீ மடம்\nஸ்ரீ சுவாமி ஹாதிராம்ஜி மடம் திருப்பதியில் மஹந்த் ஹாதிராம்ஜீ அவர்களால் நிறுவப்பட்டது. [திருமலை என்று குறிப்பாக கூறலாம்] சுமார் நானூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இது மடத்தின் தலைமைபீடமாக இருக்கிறது. மடம் எந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது என்பது சரியாக தெரியவில்லை என்றாலும், நிறுவனர் ஸ்ரீ ஹாதிராம்ஜீ மகாராஜ் அரவீடு ராயர்கள் காலத்தின்போது மடம் ஒன்றை நிறுவினார் என்று நம்பப்படுகிறது. திருமலையை தலைமையாக கொண்ட இம்மடம் சென்னை, பம்பாய், பெங்களூரு சிட்டி, ஆந்திரா, திருப்பதி, அடோனி, தஞ்சாவூர் மற்றும் வேலூர் ஆகிய இடங்களில் துணை கிளைகளை நிறுவியுள்ளார்கள். திருப்பதியில் பிரதான மடத்திலிருந்து இந்த கிளைகள் அனைத்தும் நிர்வகிக்கப்படுகின்றன. 1843ஆம் ஆண்டில், திருப்பதி கோவிலின் நிர்வாகமானது, இந்த மடத்திற்கு ஆங்கிலேயரால் வழங்கப்பட்டது. இந்த மடத்தின் மஹந்த்கள் ஆலயத்தின் தர்மகர்த்தாவாக, 1933 வரை கோவிலின் எல்லா விவகாரங்களை நிர்வகித்துள்ளனர்.\nஸ்ரீ ஹாதிராம்ஜீ மடத்தை பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்னால், பைராஹி என்பவர் யார் என்று தெரிந்து கொள்வோமா ஸ்ரீ ஹாதிராம்ஜீ மஹந்த் அவர்களும் ஒரு பைராகியே.\nவைராஹி என்னும் சொல்லின் திரிபே பைராஹி அல்லது பைராகி என்பது. இது 'வைராகியத்துடன் வாழும் மக்கள்' என்று பொருள்படும் இது 'மோக்ஷம்' அடைய வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் தங்கள் வாழ்க்கையை வழிநடத்தும் நபர்களை குறிக்கிறது. இந்த மக்கள் 'மோக்ஷம்' அடைவதற்கான எந்த அங்கீகரிக்கப்பட்ட பாதையையும் பின்பற்றுவார்கள். 'மோக்ஷம்' அடைவதற்கான பல புனித க்ஷேத்திரங்களுக்கு பயணப்பட்டவர்கள் பலர் உள்ளனர். இந்த புனித பயணத்தின் ஒரு பகுதியாக தென் இந்தியாவுக்கு பயணம் செய்த இந்த புனிதர்களில் சிலர் தென்னிந்தியாவின் பல்வேறு இடங்களில் குடியேற முடிவு செய்திருந்தனர். அவர்களில் சிலர், தங்கள் ஊர்களிலிருந்து வரும் மற்ற யாத்திரிகளுக்கு தங்கும் வசதி செய்து வைத்தனர். அவைகள் சத்திரங்கள் என்றோ அல்லது மடம் என்றோ அழைக்கப்பட்டது. அப்படி அமைக்கப்பட்ட மடங்களில் அவர்கள் தாங்கள் கொண்டாடும் தெய்வத்தின் திருவுருவத்தை நிறுவினார்கள்.\nஅப்படி உருவான மடங்கள் தென் இந்தியாவில் பைராஹி மடம் அல்லது பைரகி மடம் என்று அழைக்கப்பட்டது. ஆரணி, காஞ்சிபுரம், சென்னை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, ராமேஸ்வரம் மற்றும் வேலூர் போன்ற இடங்களிலும், ஆந்திரா மற்றும் கார்டநாடகாவில் உள்ள பல இடங்களிலும் இம்மடங்களைப் பார்க்கலாம்.\nவிஜயநகரத்தின் ராயர்கள் காலத்தில் சுமார் நானூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர், ஸ்ரீராம பக்தரான ஒரு பைராஹி தென் இந்தியாவிற்கு புனித யாத்திரை சென்றிருந்தார். அவர் திருப்பதிக்கு வந்து, ஸ்ரீ வெங்கடாசலபதியை தரிசனம் செய்தபோது, ​​சில நாட்கள் தங்கினார். அவர் ஸ்ரீ வெங்கடாசலபதியை சேவிப்பதில் மகத்தான மகிழ்ச்சியை உணர்ந்தார், மேலும் அதிகம் நாட்கள் சேவிக்க இச்சை கொண்டார். மற்ற சேவார்த்திகளுக்கு பல விதத்தில் உதவிகள் புரிவதில் ஆனந்தம் அடைந்தார். சேவையில் கிடைத்த ஆனந்தம் அவருக்கு சேவை செய்வதில் ருசியை அதிகரித்தது.\nவட இந்தியாவில் இருந்து வந்த பைரகி, பின்னர் திருமலையில் குடியேறினார். சுவாமி புஷ்கரிணியில் ஒரு நாளைக்கு மூன்று முறை புனித நீராடுவது அவரின் வழக்கமாக இருந்தது, மேலும் குளித்த பின் ஶ்ரீ வெங்கடாசலபதியை தரிசனம் செய்வது வழக்கமாயிற்று. மற்ற நேரங்களில் தனது 'ஆசிரமத்தில்' அவர் இறைவனின் புகழைப் பாடி, இறைவனை தியானித்தார்.\nதிருமலைக்கு வரும் மற்ற பக்தர்களுக்கு அவரும் அவரது கூட்டாளிகளும் உதவுவதில் கருத்தாக இருந்தார்கள். இறைவனின் பக்தர்களுக்கு சேவை செய்வது எந்த ஒரு பைராகியும் தனது கடமையாக நினைப்பார்கள். இந்த மடத்து பைராகிகளும் இதற்கு விதி விலக்கு இல்லை. பக்தர்கள் மத்தியில் கௌரவமும் மரியாதையும் அவருக்கு கிடைத்தது. மக்கள் அவரை மரியாதையுடன் 'பாவாஜி' என அழைக்கலானார்கள்.\nபாவாஜி பகடை ஆட்ட நாடகம்\nஸ்ரீ வெங்கடாசலபதி அவருக்கு நெருக்கமாகவும், அவரது இதயத்திலும் இருப்பதாக பவஜி உணர்ந்தார். இரவில் அவர் தூங்க இயலாத போது அவர் பகடை விளையாடுவது வழக்கம். அவரிடம் ஒரு விசித்திரமான பழக்கம் இருந்தது, அதாவது தன்னுடன் இறைவன் வேங்கடாசலபதி பகடை விளையாடுவதாக கற்பனை செய்துக்கொள்ளுவார். அவர் இறைவனுக்காக தானே பகடை விளையாடுவார். ஒரு நாள் இரவு அவர் வழக்கம் போல் பகடை விளையாடிக் கொண்டிருந்தபோது, ​​யாரோ ஆசிரமத்தில் நுழைந்தார்கள். திடீரென்று சூழ்நிலை மாறிவிட்டது. வந்தவரின் தெய்வீக தோற்றத்தை கண்டு பாவாஜி ஆச்சரியமடைந்தார், அவரது முன்னிலையில் தன்னை இழந்தார். பாபாஜி வேங்கடாசலபதியே தன்னுடன் பகடை ஆட வந்துள்ளதாக பாவித்தார். வந்தவரும் பாவாஜியுடன் பகடை விளையாட ஆரம்பித்தார்.\nஇப்படி பகடை விளையாடும் பழக்கம் சில இரவுகளில் தொடர்ந்தது. வேங்கடாசலபதி, தனது பைரகி பக்தருக்கு வரம் கொடுப்பது என தீர்மானித்தார் போலும். எனவே அவர் அன்று இரவு பாவாஜியுடன் பகடை விளயாடி விட்டு கிளம்பும் முன் தனது பதக்கமாலையை பாவாஜியின் ஆஸ்ரமத்திலேயே விட்டுச் சென்றார்.\nஅடுத்த நாளன்று கோவிலின் அர்ச்சகர் இறைவனின் கழுத்தணி காணாமல் போனதைக் கவனித்தார், இந்த விஷயத்தை ஆலய அதிகாரிகளுக்கு தெரிவித்தார். அதே நேரத்தில் பாவாஜி அவரது இடத்தில் இறைவன் விட்டு சென்ற கழுத்தணியை கோயிலில் ஒப்படைக்க வந்தார். பைரகி அவர்கள் கழுத்தணியை திருடி விட்டதாக அங்குள்ளவர்கள் கூறிய போது, ​​பாவாஜி, இரவு நேரத்தில் தனது விடுதியில் என்ன நடந்தது என்பதைத் தெரிவித்தார். கோவில் அதிகாரிகள் அவரை நம்பவில்லை மற்றும் விவரத்தை ராயரின் [ஆரசர்] நீதிமன்றத்திற்கு கொண்டு வந்தனர்.\nபாவாஜி ஸ்ரீ ஹாதிராம் பாவாஜி ஆனார்\nபைரகி சொன்னதை ராயார் [அரசர்] நம்பவில்லை. சிறை தண்டனை வழங்கிய ராயர், சிறைசாலையில் அடைக்கவும் செய்தார். அவரது சிறையில் கரும்பினால் நிறப்ப சொன்னார். விடியற்காலையுள் அவ்வளவு கரும்பையும் சாப்பிட வேண்டும் என்றும் கட்டளையிடார். அதன்படி பாவாஜி கரும்புடன் பலத்த காவலுடன் சிறை வைக்கப்பட்டார். தான் நிரபராதி என்பதை அறிந்த பாவாஜி இறைவனை தியானிக்க ஆரம்பித்தார். பிரகலாதனைக் காப்பாற்ற நரசிம்மராக வந்தது போல், இறைவன் ஒரு யானையாக வந்தார். அவரது பக்தர் தன்னை தியானம் செய்து கொண்டிருந்த பொழுது, யானையாக வந்த அவர் எல்லா கரும்புகளையும் விழுங்கினார். விடியற்காலை இறைவன் தனது பக்தனை தியானத்தில் இருந்து எழுப்பி, தனது விஸ்வரூப தரிசனத்தை அளித்தார்.\nராய���ின் காவலாளிகள் விடியலில் சிறைசாலையில் இருந்து வெளியேறும் யானையையும் மற்றும் வெறுமையாக உள்ள சிறையையும் கண்டனர். செய்தி பரவியது மற்றும் என்ன நடந்தது என அரசர் உணர்ந்தார், பின்பு அரசர் பைராகி பாவாஜியை கௌரவித்தார். இந்த சம்பவம் பாவாஜியின் உண்மையான இறை பக்தியினை உலகிற்கு அறிய வைத்தது. மக்கள் அவரை ஸ்ரீ ஹாதிராம் பாவாஜி என்று அழைக்கலானார்கள், இப்பெயரால் அவர் அறியப்பட்டார். அவரது ஆசிரமம், ஸ்ரீ ஹாதிராம் பாவாஜி ஆசிரமம் ஸ்ரீ ஸ்வாமி ஹாதிராம் மடம் என அறியப்பட்டது.\nஸ்ரீ ஸ்வாமி ஹாதிராம்ஜீ மடம் வேலூர்\n1843 ஆம் ஆண்டில், திருப்பதி கோவிலின் நிர்வாகம் ஆங்கிலேயரால் ஹாதிராம்ஜீ மடத்திற்கு ஒப்படைக்கப்பட்டது. இந்த மடத்தின் மஹந்த் ஆலயத்தின் தர்மகர்த்தாவாக இருந்து, 1933 வரை ஆலய நிர்வாகத்தின் விவகாரங்களை நிர்வகிக்கவும் செய்தனர். 1843 க்கு முன்பே, இந்த மடம் பல ஜனோபகரிகளால் சிறந்த தொண்டு செய்யும் நிறுவனம் என்ற நற்பெயரை பெற்றிருந்தது, ஜாதி மத வேறுபாடு இல்லாமல் பலரின் நற்மதிப்பையும் பெற்றிருந்தது. இந்த மடத்திற்கு அத்தகைய பெரிய கோவிலின் நிர்வாகத்தின் பொறுப்பை அப்போதைய பிரிட்டிஷ் ஏன் ஒப்படைத்தது என்பதற்கு இது ஒரு காரணம். மடத்திற்கு பல்வேறு தனி நபர்களும் மற்றும் ஆட்சியாளர்களால் இவர்களது சேவைகளை பார்த்து நன்கொடைகள் வழங்கினார்கள். காலப்போக்கில், மடத்தை தங்கள் சேவைகளை விரிவாக்கும் நோக்குடன் பாரதத்தின் பல்வேறு நகரங்களில் தங்கள் மடத்தை நிறுவ வேண்டியிருந்தது.\nமடத்தின் அத்தகைய கிளை திறக்கப்பட்ட ஒரு இடம் வேலூர். தெற்கு மற்றும் வடக்கு ஆற்காடுகளில் இருந்து வரும் மக்களுக்கு இந்த கிளை மடம் ஒரு மையமாக செயல்பட்டு வந்தது. இவர்கள் மடம் எங்கு வைத்திருந்தாலும், திருப்பதி மடத்தின் தலைமை மஹந்தினால் கிளை மேலாளரின் விவகாரங்களை கையாள ஒரு பைராஹி தேர்ந்தெடுக்கப்பட்டார். திருப்பதி மஹந்தின் ஒப்புதலுடன் கிளை அலுவலகத்திற்கு கடமைகள் நிர்ணயக்க பட்டது. பொதுவாக மஹந்தின் ஒப்புதலின் பெயரில் உள்ளூர் கிளைகளில் தெய்வ திருஉருவம் நிறுவப்படும்.\nஇந்திய துணை கண்டம், தென்மேற்கு சீனா மற்றும் இந்தோசீனாவிற்கு மட்டுமே காணபடுவது அரச மரம். இந்த மரம் மற்ற பெயர்களாலும் அறியப்படுகிறது: போதி மரம், அஸ்வத்தா விருக்ஷம், மற்றும் தமிழ் மொழி��ில் இது அரச மரம் எனப்படுகிறது.\nபரதத்தில், சாதுகள் [சந்யாசிகள்] மறுபிறப்பு சுழற்சியில் இருந்து தங்களை விடுதலை செய்து கொள்ள புனிதமான அரச மரங்களுக்கு கீழே தியானம் செய்கிறார்கள். பொதுவாக மக்கள் தங்களது இஷ்ட தெய்வத்தை நினைத்து இவ்வரச மரத்தினை பிரதக்ஷணம் செய்வார்கள். இவ்வரச மரத்தின் வேர்களில் பிரம்மாவும், தண்டில் விஷ்ணுவும், மரத்தின் மேற்கிளைகளில் சிவனும் வசிப்பதாக நம்பப்படுகிறது. எனவே, \"மரங்களின் அரசன்\" என்று பொருள்படும் \"விருக்ஷ ராஜா\" என்று அழைக்கப்படுகிறது. தமிழ் மொழியில் இது 'மரத்தின் ராஜா' என்று பொருள்படும் 'அரச மரம்' என்று அறியப்படுகிறது.\nவேலூர் கிளையில் ஸ்ரீ ஹனுமான்\nபைராஹி மடத்தின் நடைமுறையின்படி, இக்கிளையின் முதல் பைராஹி மஹந்தால் வேலூரில் ஸ்ரீ ஹனுமானை மடத்தில் நிறுவ பரிந்துரைக்கப்பட்டது. திருப்பதி பிரதான மஹந்தின் அனுமதியுடன், ஸ்ரீ ஹனுமானின் தெய்வ வழிபாடு இந்த மையத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. நிறுவியதன் சரியான ஆண்டு தெரியாத போதிலும், மடம் முன்னூறு ஆண்டுகளுக்கும் மேலாக வேலூரில் உள்ளது என்று கூறப்படுகிறது. பைரகி சன்யாசிகளின் நடைமுறையில் இருந்ததைப் போலவே ஹனுமான் விக்ரஹம் புனிதமான அரச மரத்தின் கீழ் நிறுவப்பட்டுள்ளது.\nவேலூர் ஸ்ரீ ஹாதிராம்ஜி ஸ்வாமி மடத்தின் ஸ்ரீ ஹனுமான்\nஇந்த மடத்தின் முக்கிய தெய்வமாக ஸ்ரீ ஆஞ்சநேயர் முதல் மஹந்தினால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஸ்ரீ ஆஞ்சநேயர் அரச மரத்தின் கீழ் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். ஹனுமான் ஒரு எளிய தெய்வம், பக்தர்கள் தங்கள் முயற்சிகளில் உண்மையானவர்களாகவும், நேர்மையுடன் நடந்து கொள்ளுபவர்களாகவும் இருப்பதை ஊக்குவிப்பவர். இந்த க்ஷேத்திரத்தில் ஹனுமார் நேர்பார்வை உடைய மூர்த்தமாக, திருவாச்சியுடன் ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ளார். ஸ்ரீ ஹனுமார் நூப்பூரம் மற்றும் தண்டை அணிந்துள்ள தனது தாமரைத் திருபாதங்களில் உருதியாக நிற்கிறார். அவரது உருதியாக நிற்க்கும் இந்த பாங்கு பக்தர்களை சுய நம்பிக்கையையும் மற்றும் நேர்மையாக முன்னேறுவதற்கும் கூறுகிறது. ஹனுமார் தனது இடது திருகரத்தில் கம்பீரமாக கதையை வைத்திருக்கிறார். ஹனுமாரின் வலது திருகரம் பக்தர்களுக்கு பயமின்மையை அளித்து, 'அபய முத்திரை’ யில் தோற்றமளிக்கிறது. இரண்டு கைகளிலும் இறைவன் கங்கணம் மற்றும் கேயூரம் அணிந்துள்ளார். அவரது நீண்ட வால் வளைந்து தலைக்கு பின்னால் செல்வது பக்தர்கள் நடைமுறையில் எப்படி வளைந்து கொடுக்க வேண்டும் என்பதை காட்டுவதாக கொள்ளலாம்.\nதிருக்கோயில் இருப்பிடம் : ஸ்ரீ ஸ்வாமி ஹாதிராம்ஜீ மடம், வேலூர்\nஅர்ப்பணிப்பு, மற்றும் உள்ளன்புடன் மனித குலத்திற்கு சேவை செய்ய வருவோருக்கு இந்த க்ஷேத்திரத்து ஹனுமார் மிகுந்த ஊக்கத்தையும் வலிமையும் அருளினார். அவரை நாம் வணங்குவதால் நமக்கும் இந்நலம் தரும் குணங்கள் சித்திக்கும் என்பது தெளிவு.\nமுதல் பதிப்பு: செப்டம்பர் 2019\nதிருத்தப்பட்ட பதிப்பு: செப்டம்பர் 2020\nஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க\nகாற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Water%20Resources%20Management%20Training%20Camp", "date_download": "2021-05-07T01:20:28Z", "digest": "sha1:APGEG3SY6UCF2VPWC72WGD3NBHP74RL6", "length": 3814, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Water Resources Management Training Camp | Dinakaran\"", "raw_content": "\nமின்னாம்பள்ளியில் அசோல்லா சாகுபடி பயிற்சி முகாம்\nதீத்தடுப்பு ஒத்திகை பயிற்சி முகாம்\nகொரோனா பரவல் காரணமாக JEE நுழைவு தேர்வுகள் ஒத்திவைப்பு: தேசிய தேர்வு முகாமை அறிவிப்பு\nமத்திய அரசின் பயிற்சி மைய பெயர் பலகையில் தமிழ் தவிர்ப்பு: தேசிய திறன் பயிற்சி நிறுவனத்தின் பெயர் பலகையால் சர்ச்சை\nமாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்டந்தோறும் கொரோனா தடுப்பூசி முகாம் அமைப்பது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு\nஇயற்கை விவசாய விழிப்புணர்வு முகாம்\nபகவாண்டிப்பட்டியில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு முகாம்\nமதுரையில் உங்களை தேடி வரும் நடமாடும் கொரோனா மருத்துவ முகாம்\nபள்ளப்பட்டி பேரூராட்சியில் கொரோனா தடுப்பு மருத்துவ முகாம்\nயுபிஎஸ்சி மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இலவச பயிற்சி: அண்ணா மேலாண்மை நிலையம் அறிவிப்பு\nகேசராபட்டியில் கொரோனா தொற்று விழிப்புணர்வு முகாம்\nவெங்கடேசா ஆட்டோ சர்வீசில் கொரோனா விழிப்புணர்வு முகாம்\nதூத்துக்குடி சிப்காட்டில் கொரோனா தடுப்பூசி முகாம்\nஇரணியம் மங்கலம் ஊராட்சியில் கொரோனா விழிப்புணர்வு மருத்துவ முகாம்\nபேராவூரணி அரசு கல்லூரியில் கொரோனா தடுப்பூசி முகாம்\nஇந்துஸ்தான் மருத்துவமனையில் தீயணைப்பு விழிப்புணர்வு முகாம்\nதேவதானப்���ட்டி பகுதியில் நீர், நில வள திட்டம் ஆய்வு\nஅலங்காநல்லூரில் திமுக சார்பில் நீர் மோர்பந்தல்\nகோவையில் வருகிற 11-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி முகாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/228613", "date_download": "2021-05-07T00:36:12Z", "digest": "sha1:ULM7LV6ZQLU2FVOIOZRIOCPK4VCPIV46", "length": 6559, "nlines": 85, "source_domain": "selliyal.com", "title": "செக் குடியரசின் 20 தூதரக அதிகாரிகள் ரஷ்யாவிலிருந்து வெளியேற்றப்படுவர் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P2 செக் குடியரசின் 20 தூதரக அதிகாரிகள் ரஷ்யாவிலிருந்து வெளியேற்றப்படுவர்\nசெக் குடியரசின் 20 தூதரக அதிகாரிகள் ரஷ்யாவிலிருந்து வெளியேற்றப்படுவர்\nமாஸ்கோ: செக் குடியரசிலிருந்து 20 தூதரக அதிகாரிகள் நாட்டிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என்று ரஷ்யா அறிவித்துள்ளது.\nசெக் குடியரசு 18 ரஷ்ய தூதரக அதிகாரிகளை சனிக்கிழமை வெளியேற்றியது.\nசெக் உள்ளூர் உளவுத்துறை அதிகாரிகள், தூதரக அதிகாரிகள் ரஷ்ய உளவுத்துறை செயற்பாட்டாளர்கள் என்று கூறுகின்றனர். 2014- ஆம் ஆண்டில் ஆயுதக் கிடங்கு வெடிப்பில் அவர்கள் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.\nஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு அமைச்சர்கள் திங்களன்று நடந்த கூட்டத்தில் குண்டுவெடிப்பு தொடர்பான கூற்றுக்கள் குறித்து விவாதிக்க உள்ளனர்.\nசெக் குடியரசு, ரஷ்யர்களுக்கு 72 மணிநேர கால அவகாசம் அளித்துள்ள நிலையில், செக் அரசதந்திரிகளுக்கு மாஸ்கோ ஒரு நாள் வழங்கியுள்ளது.\nரஷ்ய வெளியுறவு அமைச்சகம் செக் முடிவை “முன்னோடியில்லாதது” மற்றும் “விரோத செயல்” என்று குறிப்பிட்டுள்ளது.\n“ரஷ்யாவிற்கு எதிரான சமீபத்திய அமெரிக்க பொருளாதாரத் தடைகளின் பின்னணியில் அமெரிக்காவை ஆதரிப்பதற்கான அவர்களின் விருப்பத்தில், செக் அதிகாரிகள் இந்த விஷயத்தில் தங்கள் தலைவர்களை விட விஞ்சிவிட்டனர்,” என்று வெளியுறவு அமைச்சக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious article‘நஜிப் நாட்டிற்கு சாதகமான கூற்றை வெளியிட வேண்டும்\nகொவிட்19: இரஷ்ய தடுப்பு மருந்துக்கு “ஸ்பூட்னிக் வி” எனப் பெயரிடப்பட்டது\nகொவிட்19 தொற்றுக்கு எதிரான தடுப்பு மருந்தை இரஷ்யா உருவாக்கியது\n“மலேசியாவில் விண்வெளி பல்கலைக்கழகம் அமைக்க ரஷ்யா ஆர்வமாக உள்ளது\nதிமுக அமைச்சரவை : புதிய அமைச்சர்கள் பட்டியல்\nதிமுக அமைச்சரவை : அன்பில் மகேஷ் பள்ளிக் கல்வி ���மைச்சர்\nபிரசாந்த் கிஷோர் : இந்திய சட்டமன்றத் தேர்தல் வெற்றிகளின் கதாநாயகன்\nபில் கேட்ஸ் விவாகரத்து : சொத்துகளை எப்படிப் பிரிப்பார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/topic?id=14%20%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-05-07T01:30:55Z", "digest": "sha1:I5GLIDWUUO52VDWYBDXWQEMV2HHTDEO2", "length": 6526, "nlines": 99, "source_domain": "tamil.krishijagran.com", "title": "Agriculture News in Tamil, Tamil news, Tamil agriculture news, news from chennai, news from coimbatore", "raw_content": "செய்திகள் வாழ்வும் நலமும் தோட்டக்கலை கால்நடை வெற்றிக் கதைகள் விவசாய தகவல்கள் FTB அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா Directory\n#FTB விவசாய தகவல்கள் அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா\nஎங்கள் அச்சு மற்றும் டிஜிட்டல் பத்திரிகைகளுக்கு குழுசேரவும்\nசமூக ஊடகங்களில் எங்களுடன் இணைக்கவும்:\nவிவசாயப்படிப்பில் 14 பதக்கங்கள்- விவசாயி மகன் சாதனை\nவிவசாயி மகன் ஒருவர், விவசாயப் பாடத்திட்டத்தை விரும்பிப்படித்து, 14 பதக்கங்களைப் பெற்றிருப்பது மற்றவர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, முழு ஊரடங்கை அமல்படுத்த உச்ச நீதிமன்றம் பரிந்துரை\nகொப்பரை உற்பத்தி செய்ய நவீன இயந்திரம்: விவசாயிகள் மகிழ்ச்சி\n செய்ய வேண்டியவையும், செய்யக் கூடாதவையும்\nவிளைநிலங்களில் வீணாகும் தர்பூசணி பழங்கள்\nபூச்சிகளைப் புரிந்து கொள்(ல்)வோம்- காணொளி மூலம் பயிற்சி\nரூ.4000 கொரோனா நிவாரண நிதிவழங்கும் திட்டம் - நாளை ஸ்டாலின் முதல் கையெழுத்து\nவாடிக்கையாளர்களுக்கு புதியவகை டிசைனர் சிலிண்டரை அறிமுகம் செய்த IOCL\nஒரே நிமிடத்தில் cowin.gov.in தளத்தில் கொரோனா தடுப்பூசி பதிவு செய்வது எப்படி\nபருத்தியைத் தாக்கும் மாவுப்பூச்சிகளை எப்படி கட்டுப்படுத்தலாம்\nகொரோனாவைத் தடுக்கும் முயற்சியில், புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்\nஒன்றல்ல, இரண்டல்ல, ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள்\nதொற்றுநோய்களைத் தடுக்கும் ஊட்டச்சத்து அணுகுண்டு எது தெரியுமா\nமாடித்தோட்டத்திற்கு ஏற்ற மண் கலவை வகைகள் எவை\nவிவசாயிகள் நலன் கருதி சாகுபடி தொடர்பான சந்தேகம் ஏற்பட்டால் வேளாண் விஞ்ஞானிகளை அணுகலாம்: தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilkilavan.com/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%AA/", "date_download": "2021-05-07T00:51:41Z", "digest": "sha1:LYHPUUSZM5KZWOZ6Q664OHRRMJTE7ZWH", "length": 3724, "nlines": 65, "source_domain": "tamilkilavan.com", "title": "இத்தனை நாளா இது தெரியாம போச்சே...இனி இந்த மாதிரி செஞ்சு பாருங்க.. | Tamil Kilavan", "raw_content": "\nஇத்தனை நாளா இது தெரியாம போச்சே…இனி இந்த மாதிரி செஞ்சு பாருங்க..\nஇத்தனை நாளா இது தெரியாம போச்சே…இனி இந்த மாதிரி செஞ்சு பாருங்க..\nTwitterFacebook மூழ்கிப் போன உண்மைகள் வெளிவர தொடங்கியுள்ளது.(இதை படிக்க 5நிமிடம் ஒதுக்குங்கள்).நம் வரலாற்றை …\n20 ஆயிரம் வருடங்களுக்கு முன் மூழ்கிப்போன தமிழனின் வரலாறு.. தற்போது மெல்ல மெல்ல மிதந்து வருகிறது.. தற்போது மெல்ல மெல்ல மிதந்து வருகிறது.. ஒவ்வொரு தமிழனும் உலகத்துக்கு அறிய நண்பர்களுடன் பகிருங்கள்..\nTwitterFacebook எலுமிச்சை தோல் தூக்கி போடாதீங்க ஒரு கிளாஸ் போதும் நிறைய பூக்கள் …\nஎலுமிச்சை தோல் தூக்கி போடாதீங்க ஒரு கிளாஸ் போதும் நிறைய பூக்கள் பூக்கும் பூச்சிகள் இறந்துவிடும்.\nகடையில் முட்டை வாங்கறதுக்கு முன்னாடி இந்த வீடியோ பாருங்க\n2 முட்டை இருக்கா வீட்டில் உள்ள அனைவருக்கும் கிரிஸ்பியான ஈவினிங் ஸ்நாக்ஸ் ரெடி.\nமுட்டை சுக்கா லஞ்சுக்கு பக்காவான சைடிஷ் 10 நிமிடத்தில் இப்படி சுவையா செய்து கொடுத்து அசத்துங்க.\nபல கோடி சொத்துக்கு சொந்தக்காரி ஒரு வேலை சோற்றுக்காக வீட்டு வேலை செய்து பிழைக்கும் அவலம்\n20 ஆயிரம் வருடங்களுக்கு முன் மூழ்கிப்போன தமிழனின் வரலாறு.. தற்போது மெல்ல மெல்ல மிதந்து வருகிறது.. தற்போது மெல்ல மெல்ல மிதந்து வருகிறது.. ஒவ்வொரு தமிழனும் உலகத்துக்கு அறிய நண்பர்களுடன் பகிருங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/crime/665062-disagreement-with-husband-near-palladam-mother-commits-suicide-by-killing-two-children.html", "date_download": "2021-05-07T00:34:24Z", "digest": "sha1:754W4XTOJYOSJ6SBJWNTJNXCRKR5XG34", "length": 17286, "nlines": 291, "source_domain": "www.hindutamil.in", "title": "கணவருடன் கருத்து வேறுபாடு; இரு குழந்தைகளைக் கொன்று தாய் தற்கொலை முயற்சி | Disagreement with husband near Palladam; Mother commits suicide by killing two children - hindutamil.in", "raw_content": "வெள்ளி, மே 07 2021\nகணவருடன் கருத்து வேறுபாடு; இரு குழந்தைகளைக் கொன்று தாய் தற்கொலை முயற்சி\nதாய் விஷம் கொடுத்ததால் இறந்த குழந்தைகள் பிருந்தா மற்றும் பிரசந்தா\nகணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், இரு குழந்தைகளைக் கொன்று தாய் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது தொடர்பாக, பல்லடம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.\nசிவகங்கை மாவட்டம் தேவகோட்டையைச் சேர்ந்தவர் பிரபு (35). கூலித் தொழிலாளி. இவரது மனைவி தமிழ்ச்செல்வி (28). இந்தத் தம்பதியருக்கு பிருந்தா (7) மற்றும் பிரசந்தா (5) ஆகிய இரு பெண் குழந்தைகள் பிறந்தனர்.\nஇதற்கிடையில் தம்பதியரிடையே கருத்துவேறுபாடு எழுந்ததால், இருவரும் தனியாக வாழ்ந்து வந்தனர். தமிழ்ச்செல்வி தனது அண்ணன் மற்றும் தாயுடன் திருப்பூர் மாவட்டம், பல்லடம் குப்புசாமி நாயுடுபுரத்தில் கடந்த 9 மாதங்களாக வாழ்ந்து வந்தார்.\nஇந்த நிலையில் தமிழ்ச்செல்வி குடும்பத்தினர், மீண்டும் பிரபுவுடன் சேர்ந்து வாழப் பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதில் தமிழ்ச்செல்விக்கு விருப்பம் இல்லாத நிலையில், சேர்ந்து வாழத் தவிர்த்து வந்தாராம்.\nநேற்று பேச்சுவார்த்தை நடத்த பிரபுவை குப்புசாமி நாயுடுபுரத்துக்கு தமிழ்ச்செல்வி குடும்பத்தினர் அழைத்திருந்ததாகத் தெரிகிறது. இந்த நிலையில், இதில் விருப்பம் இல்லாத தமிழ்ச்செல்வி, தனது இரு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு, தானும் விஷம் அருந்தினார்.\nஇதில் மயக்கம் அடைந்த நிலையில், மூவரும் வீட்டில் மீட்கப்பட்டு, பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதையடுத்து மூவரும் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் மூத்த மகள் பிருந்தா சிகிச்சைப் பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இந்த நிலையில் தமிழ்ச்செல்வி மற்றும் பிரசந்தா ஆகியோர் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்டனர்.\nஅங்கு இளைய மகள் பிரசந்தா சிகிச்சைப் பலனின்றி இன்று மதியம் உயிரிழந்தார். சிறுமிகள் இருவரும் உயிரிழந்த நிலையில், தமிழ்ச்செல்வி தொடர் சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாகப் பல்லடம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.\nவிருதுநகர் அருகே தாய், மகள், பேத்தி விஷம் குடித்து உயிரிழப்பு\nதூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற மஞ்சள், பீடி இலை, வெங்காய விதைகள் பறிமுதல்\nசுரண்டை ஜவுளிக்கடையில் தீ விபத்து: கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான துணிகள், பொருட்கள் சேதம்\nபட்டாசுக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு குழந்தைகளைப் பறிகொடுத்த தாய் ரயில் முன் பாய்ந்து தற்கொலை: காட்பாடியில் பரிதாபம்\nகருத்து வேறுபாடுதாய் தற்கொலை முயற்சிதிருப்பூர்பல்லடம் போலீஸார்பிரபுதமிழ்ச்செல்விபல்லடம் அரசு மருத்துவமனைஅரசு மருத்துவமனைபிருந்தாபிரசந்தா\nவிருதுநகர் அருகே தாய், மகள், பேத்தி விஷம் குடித்து உயிரிழப்பு\nதூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற மஞ்சள், பீடி இலை, வெங்காய விதைகள்...\nசுரண்டை ஜவுளிக்கடையில் தீ விபத்து: கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான துணிகள், பொருட்கள் சேதம்\nநந்திகிராமில் தோற்ற மம்தா பானர்ஜி முதல்வர் பதவியில்...\nபிரதமருக்கு வீடு கட்டச் செலவிடும் ரூ.13,450 கோடியில்...\nபிரசாந்தும் சுனிலும்: இரு பிரச்சாரக் கதைகள்\nதிமுக வெற்றியின் முக்கியத்துவம் என்ன\nஅம்மா உணவகம் சூறை; டிடிவி, ஜெயக்குமார் கண்டனம்:...\nமேற்கு வங்கத்தில் பாஜகவை வீழ்த்திய மம்தா: வெற்றிப்...\nமோடி ஒன்றும் வெல்ல முடியாதவர் அல்ல\nமகளைக் கொல்லத் துணிந்ததால் காதலியைக் கொன்று வீட்டுக்குள் புதைத்த வழக்கறிஞர்; மதுரை திருமங்கலத்தில்...\nவாங்கிய கடனைத் தர மறுத்ததால் கொன்றேன்; பெண் கொலையில் மைக் செட் ஊழியர்...\nயோகா ஆசிரியரைக் கொன்று குளியலறைக்குள் புதைத்த மதுரை வழக்கறிஞர்: 20 நாட்களுக்குப் பிறகு...\nதஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவரைத் தாக்கிய 4 பேர் குண்டர் தடுப்புச்...\nஅவிநாசியில் சபாநாயகர் தனபால் தொடர்ந்து முன்னிலை\nதிருப்பூர் தெற்கு தொகுதியில் அதிமுக- திமுக இடையே கடும் இழுபறி\nமுந்தும் பாஜக; தாராபுரம் தொகுதியில் ஆரம்பம் முதலே எல்.முருகன் முன்னிலை\nவாக்கு எண்ணிக்கைக்கு முன்னரே முன்னாள் அமைச்சர் வெற்றி பெற்றதாக திருப்பூரில் சுவரொட்டி\nராம் இயக்கத்தில் நிவின் பாலி நடிக்கும் இரு மொழித் திரைப்படம்\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க எதிர்ப்பு: துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் குடும்பத்தினர், காயமடைந்தவர்கள் தூத்துக்குடி...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/world/651312-4-die-in-clashes-set-off-by-prime-minister-modi-visiting-bangladesh.html", "date_download": "2021-05-07T01:32:16Z", "digest": "sha1:JJPXPKSLDMATY3XP64VX5EXG3VKGMLN4", "length": 18219, "nlines": 291, "source_domain": "www.hindutamil.in", "title": "பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு: வங்கதேசத்தில் போலீஸாருடன் நடந்த மோதலில் 4 பேர் உயிரிழப்பு | 4 die in clashes set off by Prime Minister Modi visiting Bangladesh - hindutamil.in", "raw_content": "வெள்ளி, மே 07 2021\nபிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு: வங்கதேசத்தில் போலீஸாருடன் நடந்த மோதலில் 4 பேர் உயிரிழப்பு\nடாக்காவில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்ற காட்சி: படம் | ஏஎன்ஐ.\nவங்க தேசத்துக்குப் பிரதமர் மோடி வருகை தந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு தரப்பினர் நடத்திய போராட்டத்தில், போலீஸாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் மோதல் நடந்தது. இதில் 4 பேர் உயிரிழந்தனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவங்க தேசத்தின் 50-வது ஆண்டு சுதந்திர தின விழாவுக்கு அந்நாட்டின் பிரதமர் ஷேக் ஹசினா அழைப்பின் பேரில் 2 நாள் பயணமாகப் பிரதமர் மோடி அந்த நாட்டுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.\nஇந்நிலையில் வங்க தேசத்துக்கு பிரதமர் மோடியை அழைத்ததற்கு ஹிபாசத் இ இஸ்லாம் எனும் இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். பிரதமர் ஹசினாவையும் கடுமையாக விமர்சித்து வந்தனர். இதனால், வங்க தேசத்தில் பல்வேறு நகரங்களில் கடந்த சில வாரங்களாகவே பிரதமர் மோடி வருகைக்கு எதிராகத் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வந்தனர்.\nவங்க தேசத்துக்கு நேற்று பிரதமர் மோடி வந்ததையடுத்து, தென்கிழக்கு மாவட்டமான சட்டகிராம் நகரில் உள்ள மதராஸாவைச் சேர்ந்த ஏராளமானோர் திரண்டு வந்து சாலையில் போராட்டம் நடத்தினர். அப்போது போராட்டக்காரர்களைக் கலைந்து செல்லுமாறு போலீஸார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால், போலீஸார் மீது திடீரெனத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து போலீஸார் நடத்திய தடியடியில் 4 பேர் உயிரிழந்தனர்.\nஇதுகுறித்து சட்டோகிராம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் போலீஸ் அதிகாரி அலாவுதீன் தாலுக்தர் கூறுகையில், \"ஹிபாசத் இ இஸ்லாம் அமைப்பைச் சேர்ந்தவர்கள் சிலர் போலீஸார் வருவதற்கு முன் அரசு கட்டிடங்கள், காவல் நிலையம், பொதுச் சொத்துகள் மீது திடீரென தாக்குதல் நடத்தினர். அப்போது அங்கு போலீஸார் அங்கு சென்றபோது அவர்கள் மீதும் தாக்குதல் நடத்தினர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே நடந்த மோதலில் 5 பேர் காயமடைந்தனர். இவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் 4 பேர் உயிரிழந்தனர்\" எனத் தெரிவித்தார்.\nஇது தவிர டாக்கா நகரின் பிரதான மசூதி அருகே போராட்டக்காரர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே நடந்த மோதலில் கூட்டத்தினரைக் கலைக்க போலீஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி, ரப்பர் புல்லட்டுகளால் சுட்டனர். இதில் ஏராளமானோர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஇது தவிர பிரம்மன்பாரியா மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையத்துக்குப் போராட்டக்காரர்கள் தீ வைத்துவிட்டுத் தப்பினர். இதனால் ரயில் போக்குவரத்து சில மணி நேரம் பாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\n60 ஆயிரத்தை கடந்தது கரோனா தொற்று: பலி எண்ணிக்கையும் உயர்வு\nதமிழகத்தைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரிகள் இருவரை ஆக்ரா, கோரக்பூரில் பணி அமர்த்திய உ.பி. முதல்வர் யோகி\n‘‘யாருக்கு வாக்களித்தாலும் தாமரையிலும் பதிவாகும் வாக்கு; மேற்குவங்க தேர்தலில் முறைகேடு’’ - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு\nமகாராஷ்டிராவில் தொடர்ந்து உயரும் கரோனா தொற்று; ஊரடங்கு அமலா- முதல்வர் உத்தவ் தாக்கரே ஆலோசனை\nPrime Minister ModiBangladesh4 die in clashesPrime Minister Narendra Modi's arrival50th anniversary of independence.Injured in violent protestsபிரதமர் மோடிவங்கதேசத்தில் பிரதமர் மோடிபிரதமர் மோடிக்கு எதிர்ப்பு4 பேர் உயிரிழப்புபோலீஸார் போரட்டக்காரர்கள் மோதல்\n60 ஆயிரத்தை கடந்தது கரோனா தொற்று: பலி எண்ணிக்கையும் உயர்வு\nதமிழகத்தைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரிகள் இருவரை ஆக்ரா, கோரக்பூரில் பணி அமர்த்திய உ.பி....\n‘‘யாருக்கு வாக்களித்தாலும் தாமரையிலும் பதிவாகும் வாக்கு; மேற்குவங்க தேர்தலில் முறைகேடு’’ - திரிணமூல்...\nநந்திகிராமில் தோற்ற மம்தா பானர்ஜி முதல்வர் பதவியில்...\nபிரதமருக்கு வீடு கட்டச் செலவிடும் ரூ.13,450 கோடியில்...\nபிரசாந்தும் சுனிலும்: இரு பிரச்சாரக் கதைகள்\nதிமுக வெற்றியின் முக்கியத்துவம் என்ன\nஅம்மா உணவகம் சூறை; டிடிவி, ஜெயக்குமார் கண்டனம்:...\nமேற்கு வங்கத்தில் பாஜகவை வீழ்த்திய மம்தா: வெற்றிப்...\nமோடி ஒன்றும் வெல்ல முடியாதவர் அல்ல\nஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளைப் பெற்ற பெண்\n29% பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது: சவுதி\nஇந்தியாவிலிருந்து இலங்கை வரும் பயணிகளுக்குத் தடை: உடனடியாக அமலுக்கு வருவதாக இலங்கை அரசு...\nகரோனா தடுப்பூசிக்கான காப்புரிமையை விட்டுக் கொடுப்பதை ஆதரிக்கிறோம்: அமெரிக்கா அறிவிப்பு\nதென்னிந்தியாவில் இளைஞர்கள் மத்தியில் வேகமாகப் பரவும் உருமாற்ற கரோனா வைரஸ்: தீவிரத் தொற்றை...\n2 வாரங்களுக்க��� முன் தாய் மரணம்: இப்போது சகோதரியையும் கரோனாவில் இழந்த இந்திய...\n36 வயதான ராஜஸ்தானின் முன்னாள் ரஞ்சி வீரர் கரோனாவுக்கு பலி\nஐபிஎல் தொடரில் பங்கேற்ற ஆஸ்திரேலிய வீரர்கள் மாலத்தீவு புறப்பட்டனர்\nநானும் ஓடிடி தளம் தொடங்குவேன்: டி.ராஜேந்தர் பேச்சு\nநீங்கள் கதவைத் தட்டுவீர்கள் என்று இன்று வரை நினைத்துக் கொண்டிருக்கிறேன்; தட்டுவீர்களா\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/nellai-honour-killing-school-students-murdered-a-youth/", "date_download": "2021-05-07T02:00:21Z", "digest": "sha1:WVAO4LEZG6TUMDVACI6NO6I5YPQWQ5YE", "length": 8737, "nlines": 118, "source_domain": "www.patrikai.com", "title": "nellai: honour killing: School students murdered a youth – Patrikai – Tamil Daily – latest online local breaking news & reviews – Tamilnadu, India & World – politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nநெல்லை: பள்ளி மாணவர்கள் செய்த ஆணவக்கொலை\nபள்ளி மாணவர்கள் சேர்ந்து ஒரு இளைஞரை ஆணவக்கொலை செய்த தகவல் வெளியாகி நெல்லை மாவட்டத்தை அதிரவைத்துள்ளது. நெல்லை மாவட்டம் அம்பை…\nஒரே டோஸ் கொரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக் லைட் : ரஷ்ய அரசு அங்கீகாரம்\nமாஸ்கோ ஒரே டோஸ் கொரொனா தடுப்பூசியான ஸ்புட்னிக் லைட் மருந்துக்கு ரஷ்ய அரசு அங்கீகாரம் அளித்துள்ளது. உலகெங்கும் கொரோனா பரவலைத் தடுக்க கொரோனா தடுப்பூசிகள் போடும் பணிகள் நடந்து…\nஇந்தியாவில் வரலாறு காணாத உச்சமாக நேற்று 4,14,182 பேருக்கு கொரோனா\nடில்லி இந்தியாவில் நேற்று 4,14,182 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று வரலாறு காணாத அளவுக்கு கொரோனாவால்…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15.66 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15,66,72,832 ஆகி இதுவரை 32,69,034 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nஅடுத்த 17 நாட்கள் ஒவ்வொரு வீட்டிலும் பின்பற்ற வேண்டிய கட்டாய விதி\nஅடுத்த 17 நாட்கள் ஒவ்வொரு வீட்டிலும் பின்பற்ற வேண்டிய கட்டாய விதி – நெட்டிசன் பதிவு கொரோனா கட்டுப்பாடு குறித்து வலைத் தளங்களில்…\nஇன்று ஆந்திரப் பிரதேசத்தில் 21,954 கர்நாடகாவில் 49,058 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 21,954 கர்நாடகாவில் 49,058 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 49,058…\nநாளைக்குள் தமிழகத்துக்குத் தேவையான ஆக்சிஜன் வழங்குவதை உறுதி செய்ய மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\nசென்னை நாளைக்குள் தமிழகத்துக்குத் தேவையான ஆக்சிஜன் வழங்குவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது….\nஒரே டோஸ் கொரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக் லைட் : ரஷ்ய அரசு அங்கீகாரம்\nஇந்தியாவில் வரலாறு காணாத உச்சமாக நேற்று 4,14,182 பேருக்கு கொரோனா\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15.66 கோடியை தாண்டியது\nஅதிமுக எம்.எல்.ஏ. விஜய பாஸ்கருக்கு கொரோனா\n8 hours ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/used-tractor/eicher/eicher-242-25387/29286/", "date_download": "2021-05-07T01:17:44Z", "digest": "sha1:SYGB7XLFVYNQD6SJKWRHC7CY7UKR4VBR", "length": 27065, "nlines": 248, "source_domain": "www.tractorjunction.com", "title": "பயன்படுத்தப்பட்டது ஐச்சர் 242 டிராக்டர், 2017 மாதிரி (டி.ஜே.என்29286) விற்பனைக்கு மீரட், உத்தரபிரதேசம் - டிராக்டர்ஜங்க்ஷன்", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nஎங்களை தொடர்பு கொண்டதற்கு நன்றி\nடிராக்டர் சந்தியைத் தொடர்பு கொண்டதற்கு நன்றி விற்பனையாளரை கைமுறையாக தொடர்புகொள்வதன் மூலம் பழைய டிராக்டரை வாங்கலாம். விற்பனையாளர் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nவிற்பனையாளர் பெயர் Akshad Goyal\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அசாம் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் அருணாச்சல பிரதேசம் ஆந்திரப் பிரதேசம் இமாச்சல பிரதேசம் உத்தரகண்ட் உத்தரபிரதேசம் ஒரிசா கர்நாடகா குஜராத் கேரளா கோவா சண்டிகர் சத்தீஸ்கர் சிக்கிம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் டெல்லி தமன் மற்றும் டியு தமிழ்நாடு தாத்ரா மற்றும் நகர் ஹவேலி திரிபுரா தெலுங்கானா நாகாலாந்து பஞ்சாப் பாண்டிச்சேரி பீகார் மகாராஷ்டிரா மணிப்பூர் மத்தியப் பிரதேசம் மற்றவை மிசோரம் மேகாலயா மேற்கு வங்கம் ராஜஸ்தான் லட்சத்தீவு ஹரியானா\nமேலே செல்வதன் மூலம் நீங்கள் வெளிப்படையாக டிராக்டர் சந்திப்புகளை ஒப்புக்கொள்கிறீர்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்*\nபயன்படுத்திய டிராக்டரை வாங்கவும் இங்கே கிளிக் செய்க\nபைனான்சியர் / ஹைபோதெக்கேஷன் என்ஓசி\nவாங்க செகண்ட் ஹேண்ட் ஐச்சர் 242 @ ரூ 3,60,000 சரியான விவரக்குறிப்புகள், வேலை நேரம், ஆண்டு 2017, மீரட் உத்தரபிரதேசம் இல் வாங்கிய டிராக்டர் சந்திநல்ல நிலையில்.\nஇதே போன்ற பயன்படுத்திய டிராக்டர்கள்\nநியூ ஹாலந்து 4710 டர்போ சூப்பர்\nமாஸ்ஸி பெர்குசன் 1035 DI\nபயன்படுத்திய அனைத்து டிராக்டர்களையும் காண்க\nஇதற்கு ஒத்த ஐச்சர் 242\nகெலிப்புச் சிற்றெண் DI-854 NG\nஅதே டியூட்ஸ் ஃபஹ்ர் 3035 E\n*பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் வாங்க / விற்க முற்றிலும் விவசாயிக்கு விவசாயிக்கு உந்துதல் பரிவர்த்தனைகள். டிராக்டர் சந்தி விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதற்கும் உதவுவதற்கும் பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்களுக்கான தளத்தை வழங்கியுள்ளது. டிராக்டர் சந்தி என்பது விற்பனையாளர்கள் / தரகர்கள் வழங்கிய தகவல்களுக்காகவோ அல்லது அதன் விளைவாக ஏற்படும் மோசடிகளுக்காகவோ அல்ல. ஏதேனும் கொள்முதல் செய்வதற்கு முன் பாதுகாப்பு உதவிக்குறிப்புகளை கவனமாகப் படிக்கவும்.\n லிட்டிங் உண்மையானது அல்ல விற்பனையாளர் தொடர்பு கொள்ள முடியாது புகைப்படங்கள் தெரியவில்லை டிராக்டர்களின் விவரம் பொருந்தவில்லை டிராக்டர் விற்கப்படுகிறது\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n© 2021 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/church/news/2021-04/amoris-laetitia-number-93-94-270421.html", "date_download": "2021-05-07T01:39:16Z", "digest": "sha1:26QO7VSGMF7CGROMMUDAS42VVASUWJO7", "length": 10890, "nlines": 225, "source_domain": "www.vaticannews.va", "title": "மகிழ்வின் மந்திரம் : செயல்வழி வெளிப்படும் அன்பு - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (06/05/2021 16:49)\nஅன்பு நன்மை செய்வதில் வெளிப்படுகிறது\nமகிழ்வின் மந்திரம் : செயல்வழி வெளிப்படும் அன்பு\n\"அன்பு, சொற்களைவிட, செயல்கள் வழியே உணர்த்தப்படுகிறது\" என்று, லொயோலாவின் புனித இக்னேசியஸ் கூறியுள்ளார் (காண்க. ஆன்மீகப் பயிற்சிகள் 230)\nஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்\nதிருஅவை வரலாற்றில் திருத்தந்தையர் வெளியிட்டுள்ள மிக நீண்ட மடல்களில் ஒன்றாக, 'அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரை மடல் விளங்குகிறது. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள இம்மடல், 9 பிரிவுகளைக் கொண்டது. இந்த 9 பிரிவுகளின் மையமாக அமைந்துள்ள 4ம் பிரிவு, ஏனைய பிரிவுகளைவிட நீண்டதாக உள்ளது. காரணம், திருமண அன்பின் பல்வேறு பண்புகள் இப்பிரிவில் கூறப்பட்டுள்ளன.\n'திருமணத்தில் அன்பு' என்ற தலைப்புடன், திருத்தந்தை எழுதியுள்ள 4ம் பிரிவின் துவக்கத்தில், கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்தின் 13ம் பிரிவில், திருத்தூதர் பவுல், தொகுத்து வழங்கியுள்ள அன்பின் பண்புகள் ஒவ்வொன்றிற்கும் விளக்கங்கள் வழங்கியுள்ளார். இப்பண்புகளில், 'அன்பு பொறுமையுள்ளது' (1 கொரி. 13:4) என்ற முதல் பண்பை, 91,92 ஆகிய இரு பத்திகளில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விளக்கியபின், 'அன்பு நன்மை செய்யும்' என்ற பண்பில் பொதிந்துள்ள எண்ணங்களை, 93,94 ஆகிய இரு பத்திகளில், இவ்வாறு பதிவு செய்துள்ளார்:\n'நன்மை செய்யும்' என்று பொருள்படும் 'chrestéuetai' என்ற கிரேக்கச்சொல், விவிலியம் முழுவதிலும், இந்த ஒரே ஒரு இடத்தில் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. இச்சொல், 'நல்லவர் ஒருவர், தன் செயல்கள் வழியே, தன் நன்மைத்தனத்தை வெளிப்படுத்துதல்' என்ற பொருளை உணர்த்தும், 'chrestós' என்ற சொல்லிலிருந்து உருவாகும் மற்றொரு சொல். இந்தப்பண்பு, இதற்கு முன்பு சொல்லப்பட்டுள்ள 'பொறுமை' என்ற பண்பை இன்னும் விளக்கிக்கூறுகின்றது. பவுல் பயன்படுத்தியுள்ள 'பொறுமை', ஒன்றும் செய்யாமல் இருக்கும் பண்பு அல்ல, மாறாக, பிறருக்காக நற்செயல்கள் ஆற்றும் பண்பு. (93)\nஇப்பகுதி முழுவதிலும், திருத்தூதர் பவுல், 'அன்பு' என்பது, வெறும் உணர்ச்சி அல்ல என்பதை வலியுறுத்த விழைகிறார். எபிரேய மொழியில், 'அன்பு செய்தல்' என்பது, 'நன்மை செய்தல்' என்ற பொருளில் புரிந்துகொள்ளப்படுகிறது. \"அன்பு, சொற்களைவிட, செயல்கள் வழியே உணர்த்தப்படுகிறது\" என்று, லொயோலாவின் புனித இக்னேசியஸ் கூறியுள்ளார் (காண்க. ஆன்மீகப் பயிற்சிகள் 230) திரும்பப்பெறுவோம் என்ற எதிர்பார்ப்பு ஏதுமின்றி, கொடுப்பதிலும், பணிபுரிவதிலும் கிடைக்கும் தூய ஆனந்தத்தால், பிறருக்கு நன்மைகள் செய்வதே, 'அன்பு நன்மை செய்யும்' என்ற பண்பு. (அன்பின் மகிழ்வு 93,94)\nஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு\nஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vativamaippu.com/?CAT=4-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D&P=8", "date_download": "2021-05-07T01:23:22Z", "digest": "sha1:HSEZZBQTY4HIMZUCBXUUCKFT6YNJUF75", "length": 16110, "nlines": 94, "source_domain": "www.vativamaippu.com", "title": " கிராபிக்ஸ் - வடிவமைப்பு இதழ்", "raw_content": "\nஉலகளவில் வடிவமைப்பாளர்களிடமிருந்து நல்ல வடிவமைப்புகளைக் கண்டறியவும்.\nஉலகளாவிய பிராண்டுகளிலிருந்து புதுமையான தயாரிப்புகளைக் கண்டறியவும்.\nஉலகளாவிய கட்டடக் கலைஞர்களிடமிருந்து சிறந்த கட்டடக்கலை திட்டங்களைக் கண்டறியவும்.\nசர்வதேச ஆடை வடிவமைப்பாளர்களிடமிருந்து படைப்பு பேஷன் வடிவமைப்புகளைக் கண்டறியவும்.\nபடைப்பு பேஷன் டிசைன்களை ஆராயுங்கள்\nஉலகளாவிய கிராபிக்ஸ் வடிவமைப்பாளர்களிடமிருந்து சிறந்த கிராஃபிக் வடிவமைப்புகளைக் கண்டறியவும்.\nசிறந்த கிராஃபிக் வடிவமைப்புகளை ஆராயுங்கள்\nஉலகளாவிய வடிவமைப்பு நிறுவனங்களிலிருந்து சிறந்த மூலோபாய வடிவமைப்புகளைக் கண்டறியவும்.\nசிறந்த மூலோபாய வடிவமைப்புகளை ஆராயுங்கள்\nவியாழன் 25 மார்ச் 2021\nபொது கலை இடம் ஜின்ஜியாங் ஆற்றின் மேற்குக் கரையான செங்டுவின் டச்சுவான் பாதை, செங்டு கிழக்கு கேட் நகர சுவரின் இடிபாடுகளை இணைக்கும் ஒரு வரலாற்றுத் தெரு. திட்டத்தில், வரலாற்றில் டச்சுவான் லேன் வளைவு அசல் தெருவில் பழைய வழியால் மீண்டும் கட்டப்பட்டது, மேலும் இந்த தெருவின் கதையை தெரு கலை நிறுவலால் கூறப்பட்டது. கலை நிறுவலின் தலையீடு கதைகளின் தொடர்ச்சிக்கும் பரிமாற்றத்திற்கும் ஒரு வகையான ஊடகமாகும். இது இடிக்கப்பட்ட வரலாற்று வீதிகள் மற்றும் பாதைகளின் தடயங்களை இனப்பெருக்கம் செய்வது மட்டுமல்லாமல், புதிய வீதிகள் மற்றும் பாதைகளுக்கு நகர்ப்புற நினைவகத்தின் ஒரு வகையான வெப்பநிலையையும் வழங்குகிறது.\nபுதன் 24 மார்ச் 2021\nகாட்சி தொடர்பு வன்பொருள் கடையின் வெவ்வேறு துறைகளை நிரூபிக்க, டிடிக் பிக்சர்ஸ் அவற்றை வெவ்வேறு வன்பொருள் பொருள்களைக் கொண்ட பல தட்டுகளாகக் காண்பிக்கும் யோசனையுடன் வந்தது, அவை உணவக முறையில் வழங்கப்பட்டன. வெள்ளை பின்னணி மற்றும் வெள்ளை உணவுகள் பரிமாறப்பட்ட பொருள்களை அதிகப்படுத்த உதவுகின்றன மற்றும் கடை பார்வையாளர்களுக்கு ஒரு குறிப்பிட்ட துறையை கண்டுபிடிப்பதை எளிதாக்குகின்றன. இந்த படங்கள் எஸ்டோனியா முழுவதும் 6x3 மீட்டர் விளம்பர பலகைகள் மற்றும் பொது போக்குவரத்தில் சுவரொட்டிகளிலும் பயன்படுத்தப்பட்டன. ஒரு வெள்ளை பின்னணி மற்றும் ஒரு எளிய கலவை இந்த விளம்பர செய்தியை கார் கடந்து செல்லும் ஒரு நபரால் கூட உணர அனுமதிக்கிறது.\nசெவ்வாய் 23 மார்ச் 2021\nசிற்பம் பனிப்பாறைகள் உள்துறை சிற்பங்கள். மலைகளை இணைப்பதன் மூலம், மலைத்தொடர்களை, கண்ணாடியால் செய்யப்பட்ட மன நிலப்பரப்புகளை உருவாக்க முடியும். ஒவ்வொரு மறுசுழற்சி செய்யப்பட்ட கண்ணாடி பொருளின் மேற்பரப்பு தனித்துவமானது. இவ்வாறு, ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு தனித்துவமான தன்மை, ஒரு ஆன்மா உள்ளது. பின்லாந்தில் சிற்பங்கள் கையால் வடிவமைக்கப்பட்டு, கையொப்பமிடப்பட்டு எண்ணப்பட்டுள்ளன. பனிப்பாறை சிற்பங்களுக்குப் பின்னால் உள்ள முக்கிய தத்துவம் காலநிலை மாற்றத்தை பிரதிபலிப்பதாகும். எனவே பயன்படுத்தப்படும் பொருள் மறுசுழற்சி செய்யப்பட்ட கண்ணாடி.\nதிங்கள் 22 மார்ச் 2021\nவாட்ச் பயன்பாடு டிடிஎம்எம் என்பது 130 வாட்ச்ஃபேஸ் தொகுப்பாகும், இது பெப்பிள் 2 ஸ்மார்ட்வாட்சிற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட மாதிரிகள் நேரம் மற்றும் தேதி, வார நாள், படிகள், செயல்பாட்டு நேரம், தூரம், வெப்பநிலை மற்றும் பேட்டரி அல்லது புளூடூத் நிலையைக் காட்டுகின்றன. பயனர் தகவல் வகையைத் தனிப்பயனாக்கலாம் மற்றும் குலுக்கலுக்குப் பிறகு கூடுதல் தரவைக் காணலாம். டி.டி.எம்.எம் வாட்ச்ஃபேஸ்கள் எளிமையானவை, குறைந்தவை, வடிவமைப்பில் அழகியல். இது ஒரு ரோபோக்கள் சகாப்தத்திற்கு சரியான இலக்கங்கள் மற்றும் சுருக்க தகவல்-கிராபிக்ஸ் ஆகியவற்றின் கலவையாகும்.\nஞாயிறு 21 மார்ச் 2021\nவாட்ச் பயன்பாடு டி.டி.எம்.எம் என்பது ஃபிட்பிட் வெர்சா மற்றும் ஃபிட்பிட் அயனி ஸ்மார்ட்வாட்ச்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட 21 கடிகார முகங்களின் தொகுப்பாகும். கடிகார முகங்களில் திரையில் எளிமையான தட்டினால் சிக்கல்கள் அமைப்புகள் உள்ளன. இது பயனர் விருப்பங்களுக்கு வண்ணம், வடிவமைப்பு முன்னமைவு மற்றும் சிக்கல்களைத் தனிப்பயனாக்க மிக வேகமாகவும் எளிதாகவும் செய்கிறது. இது பிளேட் ரன்னர் மற்றும் ட்வின் பீக்ஸ் தொடர் போன்ற திரைப்படங்களால் ஈர்க்கப்பட்டுள்ளது.\nசனி 20 மார்ச் 2021\nவாட்ச்ஃபேஸ் பயன்பாடுகள் டி.டி.எம்.எம் என்பது பெப்பிள் டைம் மற்றும் பெப்பிள் டைம் ரவுண்ட் ஸ்மார்ட்வாட்ச்களுக்கான கண்காணிப்பு தளங்களின் தொகுப்பாகும். 600 க்கும் மேற்பட்ட வண்ண மாறுபாடுகளில் 50 மற்றும் 18 மாடல்களுடன் இரண்டு பயன்பாடுகளை (Android மற்றும் iOS இயங்குதளத்திற்காக) இங்கே காணலாம். டி.டி.எம்.எம் என்பது இலக்கங்கள் மற்றும் சுருக்க இன்போ கிராபிக்ஸ் ஆகியவற்றின் எளிய, குறைந்தபட்ச மற்றும் அழகியல் கலவையாகும். இப்போது நீங்கள் விரும்பும் போதெல்லாம் உங்கள் நேர பாணியை தேர்வு செய்யலாம்.\nஅசல் மற்றும் ஆக்கபூர்வமான வடிவமைப்புகள், கலை, கட்டிடக்கலை, ஃபேஷன், கிராபிக்ஸ் வடிவமைப்பு, புதுமை மற்றும் வடிவமைப்பு உத்தி ஆகியவற்றை நாங்கள் விரும்புகிறோம். தினமும், திறமையான வடிவமைப்பாளர்கள், படைப்பாற்றல் கலைஞர்கள், புதுமையான கட்டிடக் கலைஞர்கள் மற்றும் சிறந்த பிராண்டுகளின் நல்ல வடிவமைப்புகளைத் தேர்ந்தெடுத்து வெளியிடுகிறோம். நல்ல வடிவமைப்பிற்கான உலகளாவிய பாராட்டையும் விழிப்புணர்வையும் உருவாக்குவதே எங்கள் நோக்கம்.\nBionyalux தோல் பராமரிப்பு தொகுப்பு வியாழன் 6 மே\nFiro தீ சமையல் தொகுப்பு புதன் 5 மே\nPhenotype 002 வளையல் செவ்வாய் 4 மே\nநீங்கள் ஒரு வடிவமைப்பாளர், கலைஞர், கட்டிடக் கலைஞர், புதுமைப்பித்தன் அல்லது பிராண்ட் மேலாளரா பகிர்வதற்கு உங்களிடம் ஏதேனும் நல்ல வடிவமைப்புகள் உள்ளதா பகிர்வதற்கு உங்களிடம் ஏதேனும் நல்ல வடிவமைப்புகள் உள்ளதா உலகளவில் வடிவமைப்பாளர்கள், கலைஞர்கள், கட்டட வடிவமைப்பாளர்கள், கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் பிராண்டுகளிலிருந்து அசல் மற்றும் ஆக்கபூர்வமான வடிவமைப்புகளை வெளியிடுவதில் நாங்கள் மிகவும் ஆர்வமாக உள்ளோம். உங்கள் வடிவமைப்புகளை இன்று வெளியிடவும்.\nஅன்றைய வடிவமைப்பு நேர்காணல் வியாழன் 6 மே\nஅன்றைய வடிவமைப்பு புராணக்கதை புதன் 5 மே\nஅன்றைய வடிவமைப்பு செவ்வாய் 4 மே\nஅன்றைய வடிவமைப்பாளர் திங்கள் 3 மே\nஅன்றைய வடிவமைப்பு குழு ஞாயிறு 2 மே\nபொது கலை இடம் காட்சி தொடர்பு சிற்பம் வாட்ச் பயன்பாடு வாட்ச் பயன்பாடு வாட்ச்ஃபேஸ் பயன்பாடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988774.18/wet/CC-MAIN-20210506235514-20210507025514-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}