diff --git "a/data_multi/ta/2021-43_ta_all_0450.json.gz.jsonl" "b/data_multi/ta/2021-43_ta_all_0450.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2021-43_ta_all_0450.json.gz.jsonl" @@ -0,0 +1,406 @@ +{"url": "https://battimedia.lk/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF/", "date_download": "2021-10-19T11:16:13Z", "digest": "sha1:VSHLJTH3N2MEJN6CNADFE7VT3L6GSCLU", "length": 8005, "nlines": 115, "source_domain": "battimedia.lk", "title": "இலங்கையில் பல வருமான வாயில்கள் தற்போது செயலிழந்துள்ள நிலையில் உணவு பாதுகாப்பு வேலைத்திட்டம் இலங்கைக்குள் செயற்படுத்தப்படுகிறது. - Battimedia", "raw_content": "\nHome செய்திகள் இலங்கையில் பல வருமான வாயில்கள் தற்போது செயலிழந்துள்ள நிலையில் உணவு பாதுகாப்பு வேலைத்திட்டம் இலங்கைக்குள் செயற்படுத்தப்படுகிறது.\nஇலங்கையில் பல வருமான வாயில்கள் தற்போது செயலிழந்துள்ள நிலையில் உணவு பாதுகாப்பு வேலைத்திட்டம் இலங்கைக்குள் செயற்படுத்தப்படுகிறது.\nநாட்டில் மூன்று மாதங்களுக்குத் தேவையான கையிருப்புகள் தற்போது உள்ளதாகத் தெரிவித்த அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல உலகிலுள்ள அழுத்தத்துடன் அதனைப் பராமரிப்பது சவால் என்றும் தெரிவித்தார்.\nஅரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தற்போது இலங்கையில் அத்தியாவசிய உணவுகள் கையிருப்பில் உள்ளதா என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஇது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் “கையிருப்புகளின் நிலை குறித்து அரசாங்கம் மிகுந்த அவதானத்துடன் உள்ளது.\nஇது குறித்து தொடர்ச்சியாகக் கலந்துரையாடல்களை முன்னெடுத்து வருவதுடன் காணப்படும் சிக்கல்களைத் தீர்க்க பல வேலைத்திட்டங்களை செயற்படுத்த எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.\nஇலங்கையில் பல வருமான வாயில்கள் தற்போது செயலிழந்துள்ள நிலையில் உணவு பாதுகாப்பு வேலைத்திட்டம் இலங்கைக்குள் செயற்படுத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.\nமேலும் தற்போது 4.5 பில்லியன் கையிருப்புகள் காணப்பட்டாலும் சிவப்பு அபாய நிலை இன்னும் ஏற்படவில்லை என தெரிவித்த அமைச்சர் ஏற்படக் கூடிய ஆபத்தை நிராகரிக்க முடியாதென்றும் அவ்வாறான நிலைமை ஏற்படாமல் இருக்க அரசாங்கத்தால் சவால்களுக்கு முகங்கொடுத்து அதற்குத் தேவையான வேலைத்திட்டங்களை செயற்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.\nPrevious article“இரு டோஸ்கள் பைஸர் அல்லது இரு டோஸ்கள் அஸ்ட்ராஜெனகா எடுத்துக் கொண்டவர்கள் பூஸ்டராக வேறு கொரோனா தடுப்பூசியை எடுத்துக் கொள்ளலாம்.\nNext articleதிஸ்ஸமஹாராம வாவியின் புனரமைப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள சீனர்கள் இராணுவத்தினர் இல்லை .\n608,000 டோஸ் பைஸர் தடுப்பூசிகள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.\nமாடு அறுத்தலுக்கு தடை , அமைச்சரவையில் சட்டமூலம் அங்கீகாரம்.\nஎரிபொருள் விலையை அதிகரிக்க முடியாது-ஜனாதிபதி\nஅனைத்து விதமான செய்திகளையும் உடனுக்குடன் அறிந்துக்கொள்ள தொடர்ந்தும் இணைந்திருங்கள். ஊடகவியலாளர்களாக இணைய விரும்புபவர்களும் தொடர்புகொள்ளவும் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://battimedia.lk/%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-5/", "date_download": "2021-10-19T12:52:00Z", "digest": "sha1:X7DIDWQEEVJGGISJOW6KKCRD5AZO6POK", "length": 5546, "nlines": 112, "source_domain": "battimedia.lk", "title": "மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று முதல் இரவு 9 மணிவரை, அனைத்து வர்த்தக நிலையங்களையும் திறப்பதற்கு அனுமதி. - Battimedia", "raw_content": "\nHome செய்திகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று முதல் இரவு 9 மணிவரை, அனைத்து வர்த்தக நிலையங்களையும் திறப்பதற்கு...\nமட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று முதல் இரவு 9 மணிவரை, அனைத்து வர்த்தக நிலையங்களையும் திறப்பதற்கு அனுமதி.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் நாளை தொடக்கம், காலை முதல் இரவு 9 மணிவரை, அனைத்து வர்த்தக நிலையங்களையும் திறப்பதற்கு அனுமதி வழங்கப்படுவதாக அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் தெரிவித்துள்ளார்.\nவழிபாட்டுத் தளங்களில், உற்சவங்கள் மற்றும் விழாக்களை நடத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.\nஇன்று இடம்பெற்ற மாவட்ட கொரோனா தடுப்பு செயலணி கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை ஊடகங்களுக்கு அறிவிக்கும்போது, மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் குறித்த விடயங்களைத் தெரிவித்துள்ளார்.\nPrevious article12 பெண்கள், ஆண்கள் 27 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.\nNext articleவிலைகள் அதிகரிக்க பட மாட்டாது.\n608,000 டோஸ் பைஸர் தடுப்பூசிகள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.\nமாடு அறுத்தலுக்கு தடை , அமைச்சரவையில் சட்டமூலம் அங்கீகாரம்.\nஎரிபொருள் விலையை அதிகரிக்க முடியாது-ஜனாதிபதி\nஅனைத்து விதமான செய்திகளையும் உடனுக்குடன் அறிந்துக்கொள்ள தொடர்ந்தும் இணைந்திருங்கள். ஊடகவியலாளர்களாக இணைய விரும்புபவர்களும் தொடர்புகொள்ளவும�� .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-10-19T13:43:12Z", "digest": "sha1:YGBURVXR3L2LCLV3VEWHNNAFCY3ASQGX", "length": 4655, "nlines": 70, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"குமரி ஆதவன்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"குமரி ஆதவன்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nகுமரி ஆதவன் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபயனர்:வின்சு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆதவன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/married-3-persons", "date_download": "2021-10-19T11:05:57Z", "digest": "sha1:NOYAOPLC5SD6YRX2XT2U6UJP66OWGIVD", "length": 7047, "nlines": 86, "source_domain": "tamil.asianetnews.com", "title": "married 3 persons: Latest News, Photos, Videos on married 3 persons | tamil.asianetnews.com", "raw_content": "\nமுறைப்படி 3 கல்யாணம் செய்த பெண் குழந்தைக்கு சொந்தம் கொண்டாடும் 4வது நபர் குழந்தைக்கு சொந்தம் கொண்டாடும் 4வது நபர் வடிவேல் காமெடி நிஜமான பரிதாபம்..\nதற்போது நான்காவதாக ஒருவர் ரேவதிக்கு தன்மூலமாக தான் குழந்தை பிறந்ததாக அதை ஒப்படைக்க கோரியிருக்கிறார். உத்திரகோசமங்கையைச் சேர்ந்த சரத் என்னும் வேல்முருகன் என்பவர் கொடுத்திருக்கும் புகாரில், வினோத் வெளிநாடு சென்ற நேரத்தில் ரேவதியுடன் தான் நெருக்கமாக இருந்ததாகவும் அதன்காரணமாகவே அவருக்கு குழந்தை பிறந்தது என தெரிவித்துள்ளார்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகோவிட் மூன்றாவது அலையில் இருந்து நம்மை காத்து கொள்ள சுயபரிசோதனை கருவியே நமக்கு தேவை \nபலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய விளையாட்டு வீரர்கள் \n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய கலைஞர்கள்\nமஹசூஸ் வெற்றியாளர் ஏசியாநெட் நியூஸ் தமிழுக்கு அளித்த பேட்டி\nகோவிட் மூன்றாவது அலையில் இருந்து நம்மை காத்து கொள்ள சுயபரிசோதனை கருவியே நமக்கு தேவை \nபலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய விளையாட்டு வீரர்கள் \nடி20 உலக கோப்பையில் இந்திய அணியின் தொடக்க ஜோடி இதுதான்..\nபொய் வழக்குகள் போட்டு அதிமுகவினரை முடக்கிவிட முடியாது.. திமுகவை கடுமையாக சாடும் எடப்பாடி பழனிசாமி.\nஈனம், மானம், ரோஷம், சூடு, சொரணை எல்லாம் எங்கே போனது. வன்னியர்களை வச்சு செய்த ராமதாஸ்.. தாறுமாறு பேச்சு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/minister-sp-velumani-said-that-what-alagiri-had-said-stalin-could-not-always-be-the-cm-was-going-to-happen-vin-389009.html", "date_download": "2021-10-19T11:59:20Z", "digest": "sha1:QB3GXQOM3NBXZ2PEMKYHQ6LWJ3K2LOVD", "length": 11797, "nlines": 107, "source_domain": "tamil.news18.com", "title": "மு.க.அழகிரி கூறியது போல ஸ்டாலின் எப்போதும் முதல்வராக முடியாது - எஸ்.பி.வேலுமணி! Minister SP Velumani said that what Alagiri had said Stalin could not always be the CM was going to happen – News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#T20 WorldCup#பெண்குயின் கார்னர்#பிக்பாஸ்#கிரைம்\nமு.க.அழகிரி சொன்னதுதான் நடக்கப் போகிறது- அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nமு.க.அழகிரி சொன்னதுதான் நடக்கப் போகிறது- அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nமக்களுடன் இருந்து, எடப்பாடியார் முதல்வரானவர் என்பதால் எளிமையாக இருக்கின்றார் என கூறிய அமைச்சர் வேலுமணி, குடும்ப அரசியலுக்கு முற்றுபுள்ளி வைத்து தமிழக முதல்வர் மக்கள் பணியாற்றுகின்றார் என்றார்.\nஸ்டாலின் எப்போதும் முதல்வராக முடியாது என்று மு.க.அழகிரி சொல்லி இருக்கின்றார், அதுதான் நடக்க போகின்றது, எடப்பாடியார்தான் அடுத்த முதல்வர் என கோவையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்தார்.\nகோவை கெம்பட்டி காலனி பகுதியில் உள்ள நியாயவிலை கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்வை உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று காலை துவக்கி வைத்தார். பொங்கல் பரிசு பொருட்களுடன் 2500 ரூபாயும் அமைச்சர் வேலுமணி பொது மக்களுக்கு வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கோவை மாவட்டத்தில் 10,11,845 குடும்பத்திற்கு இந்த பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகின்றது என தெரிவித்தார்.\nகொரொனா காலத்தில் மக்கள் நெருக்கடியில் இருப்பதால் தமிழக முதல்வர், பொங்கல் பரிசு தொகையினை 2500 ரூபாயாக உயர்த்தி இருக்கின்றார் எனவும், பொங்கல் தொகுப்பில் முதலில் கரும்பு துண்டு கொடுக்கப்பட்டது, இப்போது முழு கரும்பாக கொடுக்க முதல்வர் உத்திரவிட்டுள்ளார் எனவும், தமிழகம் முழுவதும் 2.6 கோடி குடும்பத்தினருக்கு இந்த பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகின்றது என தெரிவித்தார்.\nஜெயலலிதா முதல்வராக இருக்கும் போது 100 ரூபாய் கொடுத்து இந்த பரிசு தொகுப்பு திட்டத்தை துவக்கி வைத்தார் எனவும் இப்போது மக்களின் நெருக்கடி சூழலை கருதி 2500 ரூபாய் வழங்க முதல்வர் உத்திரவிட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.\nமக்களுடன் இருந்து எடப்பாடியார் முதல்வரானவர் என்பதால் எளிமையாக இருக்கின்றார் என தெரிவித்த அவர்,\nஒரே குடும்பத்தில் இருந்து அரசியலுக்கு வருபவர்களுக்கு ,\nகுடும்ப அரசியலுக்கு முற்றுபுள்ளி வைத்து தமிழக முதல்வர் மக்கள் பணியாற்றுகின்றார் எனவும், குடிசையில் போய் டீ சாப்பிட்டு வந்திருக்கின்றார் எனவும் தெரிவித்தார்.\n2500 ரூபாய் மக்களுக்கு வழங்குவதை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்ற ஒரு கும்பல் இருக்கின்றது எனவும், எந்த தடைகள் வந்தாலும் 2500 ரூபாய் மக்களுக்கு சென்று சேரும் எனவும்,\nசபரிமலைக்கு மாலை போட்டு இருக்கின்றேன், உங்களுக்கும் சேர்த்து இறைவனிடம் பிராத்திக்கின்றேன் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார்.\nAlso read... Bigg boss 4 Tamil | கடைசி வாரத்திற்கான நாமினேஷன் தொடங்கியது - வெளியேறப்போவது யார்\nஇதனைத் தொடர்ந்து அமைச்சர் வேலுமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது முதல்வர் பொங்கல் பரிசாக\n2500 ரூபாய் ஒவ்வொரு குடும்பத்திற்கும் அறிவித்து துவக்கி வைத்துள்ளார் எனவும், கோவை மாவட்டத்திற்கு மட்டும் 269.83 கோடி பொங்கல் தொகுப்பிற்காக முதல்வர் ஒதுக்கியுள்ளார் எனவும் தெரிவித்தார். முதல்வர் 2500 ரூபாய் கொடுப்பார் என நாங்கள் எ��ிர்பார்க்க வில்லை எனவும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.\nமேலும், கலைஞரின் மகனான மு.க. அழகிரி பேசும் போது பொய் பேச மாட்டேன் என தெரித்துள்ளார் எனவும், மு.க ஸ்டாலின் எப்போதும் முதல்வராக முடியாது என்று மு.க.அழகிரி சொல்லி இருக்கின்றார். அதுதான் நடக்க போகின்றது எனவும், எடப்பாடியார்தான் அடுத்த முதல்வர் எனவும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube\nமு.க.அழகிரி சொன்னதுதான் நடக்கப் போகிறது- அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\n2003-ல் ரயில் பயணத்தில் நிகழ்ந்த சுவாரஸ்ய சம்பவத்தை நினைவு கூர்ந்த ராமதாஸ்\nபொதுத்துறை நிறுவன பணியாளர்களுக்கு 25% தீபாவளி போனஸ் : ராமதாஸ் கோரிகை\nகன்னியாகுமரி ஆறுகளில் கரைபுரண்டோடும் வெள்ளம் - தவிக்கும் மக்கள்\nநெல்லின் ஈரப்பதம் : 15 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என மத்திய குழு தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://udhayasankarwriter.blogspot.com/2013/10/", "date_download": "2021-10-19T10:54:51Z", "digest": "sha1:TFTSKHRQMLJXRSXO6OXBXB77P3X77W3E", "length": 94805, "nlines": 369, "source_domain": "udhayasankarwriter.blogspot.com", "title": "கரிசக்காடு: October 2013", "raw_content": "\nசௌத்ரிமௌஜூ அவனுடைய ஹூக்காவைப் புகைத்துக் கொண்டு இலைகள் அடர்ந்த ஒரு அரசமரத்தின் கீழ் ஒரு கயிற்றுக்கட்டிலில் உட்கார்ந்திருந்தான். உச்சிப்பொழுது வெப்பமாயிருந்தது. ஆனால் வயல்களிலிருந்து வீசிய மெல்லிய தென்றல் ஹூக்காவின் ஊதா நிறப்புகையைக் கலைத்து விசிறியடித்தது.\nஅவன் அதிகாலையிலிருந்தே அவனுடைய வயலை உழுது கொண்டிருந்தான். ஆனால் இப்போது சோர்ந்து போய்விட்டான். சூரியன் சுட்டெரித்தான். ஆனால் அதெல்லாம் அவனுக்கு ஒரு பொருட்டில்லை. அவன் கிடைத்த அந்த ஓய்வை அநுபவித்துக் கொண்டிருந்தான்.\nஅவனுடைய ஒரே மகளான ஜீனா அவனுடைய மதிய உணவான சுட்டரொட்டியும் மோரும் கொண்டு வருவதை எதிர்பார்த்து அவன் அங்கே உட்கார்ந்து காத்துக் கொண்டிருந்தான். வீட்டு வேலைகளில் அவளுக்கு உதவி செய்ய யாரும் இல்லையென்றாலும் அவள் எப்போதும் நேரத்திற்கு வந்து விடுவாள். அவன் ஒரு கோபாவேசத்தில் அவளுடைய அம்மாவை இரண்டு வருடங்களுக்கு முன்பு விவாகரத்து செய்து விட்டான்.\nஜீனா அப்பாவை நன்றாகக் கவனித்துக் கொள்கிற கீழ்ப்படிதலுள்ள மகளாக இருந்தாள். அவள் ஒருபோதும் சும்மா இருந்ததில்லை. அவளுடைய வீட்டு வேலைகள் முடிந்து விட்டால் அவள் கை ராட்டினத்தில் நூல் நூற்கும் வேலையைச் செய்வாள். எப்போதாவது தான் அவளுடைய தோழிகளிடம் கதை பேசப்போவாள்.\nசௌத்ரிமௌஜூக்கு அதிக நிலம் இல்லை. ஆனால் அவனுடைய எளிய தேவைகளுக்கு அதுவே போதுமானதாக இருந்தது. அந்தக் கிராமம் சிறியது. பல மைல் தூரத்தில் ரயில்நிலையம் இருந்தது. அந்த கிராமத்தை ஒரு மண்சாலை தான் இன்னொரு கிராமத்தோடு இணைத்தது. அதில் தான் சௌத்ரிமௌஜூ மாதம் இரண்டு முறை பலசரக்கு வாங்கப் போவான்.\nஅவன் மகிழ்ச்சியானவனாகவே எப்போதும் இருந்தான். ஆனால் அவனுடைய விவாகரத்திலிருந்து அவனுக்கு வேறு குழந்தைகள் இல்லை என்கிற விஷயம் அவனைத் தொந்திரவு செய்து கொண்டேயிருந்தது. இருந்தாலும் அவன் சிறந்த மதப்பற்றாளனாக இருந்ததால் இதெல்லாம் கடவுளின் சித்தம் என்று தன்னை ஆறுதல்படுத்திக் கொண்டு சமாளித்தான்.\nஅவனுடைய நம்பிக்கை ஆழமானது. ஆனால் அவனுக்கு மதத்தைப் பற்றி எதுவும் தெரியாது. கடவுள் இருக்கிறார், அவரை வணங்க வேண்டும். முகமது அவருடைய தீர்க்கதரிசி. குரான் முகமதுக்குக் கடவுள் வெளிப்படுத்திய செய்தி. அவ்வளவு தான் அவனுக்குத் தெரியும்.\nஅவன் ஒருபோதும் நோன்பு இருந்ததில்லை. தொழுகை நடத்தியதில்லை. உண்மையில் அந்த கிராமம் மிகச் சிறியது என்பதால் அதில் ஒரு மசூதி கூட இல்லை. மக்கள் தங்கள் வீடுகளில் தொழுதனர். பொதுவாகவே கடவுளுக்குப் பயந்தவர்களாக இருந்தனர். ஒவ்வொரு வீட்டிலும் குரான் ஒரு பிரதி இருந்தது. ஆனால் யாருக்கும் அதை எப்படி வாசிப்பது என்று தெரியாது. அது வீட்டிலுள்ள மேலடுக்கில் பொதிந்து வைக்கப்பட்டிருக்கும். எப்போதாவது யாராவது உறுதிமொழி எடுக்க வேண்டி வரும்போது பயன்படுத்தப்படும்.\nதிருமணங்களில் சடங்குகளை நடத்துவதற்காக ஒரு மௌல்வியை அந்தக் கிராமத்துக்கு வரவழைப்பார்கள். இறுதிச் சடங்குப் பிரார்த்தனைகளை கிராமத்துக்காரர்களே செய்து விடுவார்கள். அரபியில் இல்லை. அவர்களுடைய சொந்த மொழியான பஞ்சாபியில் பிரார்த்தனை செய்வார்கள். சௌத்ரிமௌஜூக்கு அந்த மாதிரியான நேரங்களில் கிராக்கி அதிகமாக இருக்கும். அவன் அவனுக்கென்று சுயமாக அஞ்சலி உரையை உருவாக்கிக் கொள்வான்.\nஉதாரணத்திற்கு,ஒரு வருடத்துக்கு முன்னால் அவனுடைய நண்பன் டினூ தன் மகனை இழந்து விட்டான். சௌத்ரிமௌஜூ கல்லறைக்குள் பிரேதத்தை இறக்கிய பிறகு கிராமத்தார்களிடம் இரங்கல் உரையை நிகழ்த்தினான்.\nஎப்பேர்ப்பட்ட அழகான, பலசாலியான இளைஞன் அவன் அவன் எச்சிலைத் துப்பினால் அது இருபது அடி தூரம் தள்ளி விழும். அதேபோல அவனுடைய அடிவயிற்றில் அவ்வளவு சக்தி இருந்தது. அதனால் அவனால் இந்தக் கிராமத்திலிருக்கிற எந்த இளைஞனை விடவும் மிகத் தூரமாக மூத்திரம் பெய்ய முடியும். மல்யுத்தப்போட்டியில் அவன் ஒருபோதும் தோற்றதில்லை. நீங்கள் சட்டை பொத்தானைக் கழட்டுகிற மாதிரி அவன் எதிரியின் பிடியிலிருந்து மிகச் சுலபமாகத் தன்னை விடுவித்துக் கொள்வான்.\n உனக்கான தீர்ப்பு நாள் ஏற்கனவே இங்கே எழுதப்பட்டு விட்டது. நீ அதிலிருந்து தப்பிக்க முடியாது என்று நான் சந்தேகப்படுகிறேன். நீ கட்டாயம் இறந்து விடுவாய் என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால் இவ்வளவு பெரிய அதிர்ச்சியைத் தாங்கிக் கொண்டு நீ எப்படி வாழப்போகிறாய் ஓ….எத்தனை அழகிய வாலிபன் உன்னுடைய மகன் ஓ….எத்தனை அழகிய வாலிபன் உன்னுடைய மகன் எனக்கு உண்மையில் தெரியும் தங்க ஆசாரியின் மகள் நெட்டி அவனுடைய காதலைப் பெறுவதற்காகப் பலமுறை வசிய மந்திரத்தை ஏவினாள். ஆனால் அவன் அவளை நிராகரித்து விட்டான். அவளுடைய அழகும் இளமையும் அவனை மயக்கவில்லை. கடவுள் சொர்க்கத்தில் அவனுக்கு ஒரு எழில் அணங்கை வழங்கட்டும். அங்கும் அவன் தங்க ஆசாரியின் மகள் நெட்டியிடம் இருந்ததைப் போலவே அந்த எழில் அணங்கிடம் மயங்காமல் இருக்கட்டும். கடவுள் அவன் ஆத்மாவை ஆசீர்வதிக்கட்டும்.\nஇந்தச் சுருக்கமான உரையை மிக உணர்ச்சிகரமாக நிகழ்த்துவான். சௌத்ரிமௌஜூ உட்பட எல்லோருக்கும் அழுது விடுவார்கள்.\nமௌஜூ அவனுடைய மனைவியை விவாகரத்து செய்ய வேண்டும் என்று முடிவு செய்த போது அவன் மௌல்விக்கு ஆளனுப்பவில்லை. அவனுக்கு மூத்தவர்களிடமிருந்து அவன் கேள்விப்பட்டிருந்தான். அதற்குத் தேவையானதெல்லாம் அவன் மூன்று முறை ‘ தலாக்…தலாக்…தலாக்..’ என்று சொல்ல வேண்டியது தான். உண்மையில் அதைத் தான் அவன் செய்தான். மறுநாள் அவன் வருத்தப்பட்டான். அதோடு அவனை நினைத்தே அவன் வெட்கப்பட்டான். கணவன், மனைவிக்குள் வருகிற தினசரிச் சச்சரவுக்கு மேல் பெரிய தீவிரமான எதுவும் அதில் கிடையாது. ��து விவாகரத்தில் முடிய வேண்டிய அவசியமும் இல்லை.\nஅவனுடைய மனைவி பதானை அவன் விரும்பவில்லை என்று சொல்லமுடியாது. அவன் அவளை விரும்பினான். அவள் இளமையாக இல்லையென்றாலும் அவள் உடம்பு கட்டுக்கோப்பாக இருந்தது. அதோடு அவனுடைய மகளுக்குத் தாய் அவள். இதற்கு மேல் என்ன வேண்டும். ஆனால் அவன் அவளைத் திரும்பி அழைக்க எந்த முயற்சியும் செய்யவில்லை. அப்படியே வாழ்க்கை போய்க் கொண்டிருந்தது.\nஜீனா அவளுடைய அம்மா இளமையில் இருந்ததைப் போலவே அழகாக இருந்தாள். சிறு பெண்ணாக இருந்த அவள் இரண்டு வருடங்களில் இளமையான, கவர்ச்சியான, பெண்ணாக, வளர்ந்திருந்தாள். அவன் அடிக்கடி அவளுடைய திருமணத்தைப் பற்றிக் கவலைப்பட்டான். குறிப்பாக அந்த நேரங்களில் அவனுடைய மனைவியைத் தேடுவான்.\nஅவன் இப்போது அவனுடைய கயிற்றுக் கட்டிலில் சாய்ந்து கொண்டு இன்பமாகப் புகைத்துக் கொண்டிருந்தான். அப்போது\n“ கடவுளின் ஆசீர்வாதங்களும், சாந்தியும் உன் மீது இறங்கட்டும்…”\nஅவன் திரும்பினான். அங்கே ஒரு வயதான மனிதர் தூய வெள்ளாடை உடுத்தி காற்றில் அலைபாயும் தாடியுடன், தோள்வரை வளர்ந்த நீண்ட தலைமுடியுடன், நின்று கொண்டிருப்பதைப் பார்த்தான். எங்கேயிருந்து அவர் முளைத்து வந்தார் என்று ஆச்சரியத்துடன் மௌஜூ அவரை வணங்கினான்.\nஅந்த மனிதர் உயரமாக இருந்தார். அவருடைய முகத்தில் பெரிய கருப்பிந்திய கண்கள் குறிப்பிடத்தகுந்ததாக இருந்தன.அவர் தலையில் ஒரு பெரிய வெள்ளைத் தலைப்பாகையும் அவருடைய ஒரு தோளில் மஞ்சள் துண்டும் அணிந்திருந்தார்.அவருடைய கையில் வெள்ளிப்பிடி போட்ட கைத்தடி வைத்திருந்தார். அவருடைய பூட்ஸ் மென்மையான தோலால் செய்யப்பட்டிருந்தது.\nசௌத்ரிமௌஜூ உடனே அவரால் கவரப்பட்டான். இன்னும் சொல்லப்போனால் அவருடைய அழுத்தமான பெரியமனிதத் தோற்றத்தினால் அவனுக்கு வியப்பு விளிம்பிட்ட ஒரு ஆழ்ந்த மரியாதை அவர் மீது தோன்றியது. அவன் கட்டிலிலிருந்து எழுந்து,\n“ நீங்கள் எங்கிருந்து எப்போது வந்தீர்கள்\n“ நாங்கள் கடவுளின் மனிதர்கள் சூன்யத்திலிருந்து வருவோம்.. எங்களுக்கு போவதற்கு வீடு கிடையாது. எந்தக் கணத்தில் வருவோம்.. எப்போது போவோம் என்று யாருக்கும் தெரியாது.. அந்தக் கடவுள் அவருடைய விருப்பத்தை நிறைவேற்ற எங்களுக்கு வழி காட்டுவார்.. அதேபோல அந்தக் கடவுள் தான் எங்களுடைய பிரயாணத்���ை எங்கே நிறுத்தவேண்டும் என்றும் கட்டளையிடுவார்..”\nஎன்று சொன்னார். சௌத்ரிமௌஜூவை இந்த வார்த்தைகள் மிகவும் பாதித்தன. அவன் அந்தப் புனிதரின் கையைப் பிடித்து மிகுந்த மரியாதையுடன் முத்தமிட்டு கண்களில் ஒற்றிக் கொண்டான். பின்பு,\n“ என்னுடைய எளிய வீடு உங்களுடையது..”\nஅந்தப் புனிதர் புன்னகையுடன் கட்டிலில் உட்கார்ந்தார். அவருடைய இரண்டு கைகளாலும் கைத்தடியைப் பிடித்துக் கொண்டு அதில் தலை சாய்த்துக் கொண்டு,\n“ உன்னுடைய எந்தக் காரியம் கடவுளின் கண்களுக்குப் பிடித்து அவர் இந்தப் பாவியை உன்னிடம் அனுப்பியிருக்கிறார் என்று யார் சொல்ல முடியும்\nஎன்று சொன்னார். உடனே சௌத்ரிமௌஜூ,\n“ மௌல்வி சாகிப்.. நீங்கள் கடவுளின் ஆணைப்படியா என்னைத் தேடி வந்தீர்கள்\nஎன்று கேட்டான். அந்தப் புனிதர் தலையை உயர்த்தி கோபமான குரலில்,\n“ அப்படின்னா உன்னுடைய கட்டளையின் பேரில் இங்கே வந்தேன் என்று நினைக்கிறீயா.. உனக்குக் கீழ்ப்படிவோமா இல்லை நாப்பது வருடங்களாக பணிவுடன் அந்தக் கடவுளைத் தொழுது வந்ததிருக்கிறோம். கடைசியில் அவர் அவருடைய அருளைப் பெற எங்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் அவருக்குக் கீழ்ப்படிவோமா\nஎன்று சொன்னார். சௌத்ரிமௌஜூ பயந்து விட்டான். அவனுடைய எளிய கிராமத்துப் பாணியில் அவன் தேம்பிக் கொண்டே,\n“ மௌல்வி சாகிப் நாங்கள் படிப்பறிவில்லாத மக்கள் இதைப்பற்றியெல்லாம் எதையும் அறியாதவர்கள்.. எங்களுக்கு எப்படி பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று கூடத் தெரியாது..உங்களைப் போன்ற கடவுளின் மனிதர்கள் கிடையாது.. அதனால் கடவுளின் கண்களில் பாவமன்னிபை நாங்கள் பார்த்ததேயில்லை..”\n“ அதற்காகத் தான் நாம் இங்கிருக்கிறோம்..”\nஎன்று அந்தப் புனிதர் பாதிக்கண்களை மூடிக் கொண்டே சொன்னார்.\nசௌத்ரிமௌஜூ கீழே தரையில் உட்கார்ந்து கொண்டு விருந்தினரின் கால்களை அமுக்கி விட்டுக் கொண்டிருந்தான். அப்போது ஜீனா அவனுடைய சாப்பாட்டுடன் அங்கு வந்தாள். அவள் அந்த அந்நியரைப் பார்த்தவுடன் அவளுடைய முகத்தை மூடிக் கொண்டாள்.\n“ யார் அது சௌத்ரிமௌஜூ\n“ என்னுடைய மகள்..மௌல்வி சாகிப்..”\nமௌல்வி சாகிப் ஓரக்கண்ணால் ஜீனாவைப் பார்த்துக் கொண்டே,\n“ எங்களைப் போன்ற பிச்சைக்காரங்க முன்னால ஏன் அவள் முகத்தை மூடணும்னு கேளு..”\n“ ஜீனா.. மௌல்வி சாகிப் கடவுளோட விஷேசத் தூதுவர்.. முக்கா��்ட எடுத்துரு..”\nஎன்று அவன் சொன்னான். ஜீனா அவளிடம் சொல்லப்பட்டதைச் செய்தாள். மௌல்வி சாகிப் அப்படியே அவளை மேலும் கீழும் அளவெடுத்துக் கொண்டே,\n“ உன்னோட மகள் அழகாக இருக்கிறாள்..சௌத்ரிமௌஜூ..”\nஎன்று சொன்னார். ஜீனா வெட்கப்பட்டாள். மௌஜு,\n“ அவள் அவளோட அம்மா மாதிரி..”\nஎன்று சொன்னான். ஜீனாவின் இளமை பொங்கும் கன்னியுடலை நோட்டமிட்டுக் கொண்டே,\n“ அவளோட அம்மா எங்கே\nஎன்று கேட்டார். அதற்கு எப்படிப் பதில் சொல்வதென்று தெரியாமல் சௌத்ரிமௌஜூ தயங்கினான். திரும்பவும் மௌல்வி சாகிப்,\n“ அவளோட அம்மா எங்கே\nஎன்று கேட்டார். மௌஜூ வேகவேகமாக,\nஎன்று சொன்னான். அதைக்கேட்டு திடுக்கிட்ட ஜீனாவைக் கவனமாகப் பார்த்தார். பிறகு அவர்,\n“ நீ பொய் சொல்றே..”\nஎன்று முழங்கினார். மௌஜூ அவர் காலில் விழுந்தான். குற்றவுணர்ச்சியுடன்,\n“ ஆமாம். நான் உங்க கிட்ட பொய் சொன்னேன்..தயவு செய்ஞ்சு என்ன மன்னிச்சிருங்க.. நான் ஒரு பொய்யன்.. உண்மை என்னன்னா.. நான் அவளை விவாகரத்து பண்ணிட்டேன்..மௌல்வி சாகிப்..”\n“ நீ ஒரு பெரிய பாவி.. அந்தப் பெண் செய்த தவறு தான் என்ன\n“ எனக்குத் தெரியல..மௌல்வி சாகிப்.. அது வந்து உண்மையிலே ஒண்ணுமில்லை..ஆனா கடைசியில அவளை விவாகரத்து செய்யும்படியாயிருச்சி.. உண்மையில நான் ஒரு பாவி.. நான் மறுநாளே என்னோட தப்ப உணர்ந்துட்டேன்.. ஆனால் ரெம்பத் தாமதமாகியிருச்சி..அதுக்குள்ளே அவ அவளோட அப்பாஅம்மாகிட்ட போயிட்டா..”\nமௌல்வி சாகிப் தன்னுடைய வெள்ளிக் கைப்பிடி போட்ட கைத்தடியினால் மௌஜூவின் தோள்களைத் தொட்டு,\n“ கடவுள் பெரியவர்.. அவர் கருணையும் அன்பும் கொண்டவர்.. அவர் விரும்பினால் எல்லாத் தவறுகளையும் சரி செய்து விடலாம்.. அது தான் அவருடைய கட்டளையாக இருந்தால் அவருடைய இந்த வேலைக்காரன் உன்னை உன்னுடைய மீட்சியை நோக்கி வழி நடத்தவும் உனக்கு மன்னிப்பு வழங்கவும் சக்தி படைத்தவனாகிறான்..”\nஎன்று சொன்னார். முழுமையான பணிவுடனும் நன்றியுடனும் சௌத்ரி மௌஜூ அவருடைய கால்களில் விழுந்து அழுதான். மௌல்வி சாகிப் ஜீனாவைப் பார்த்தார். அவளுடைய கன்னங்களிலும் கண்ணீர் வழிந்தோடியது.\n“ இங்கே.. வா..பெண்ணே..” என்று கட்டளையிட்டார் அவர்.\nஅவருடைய குரலில் அப்படியோரு அதிகாரம் இருந்தது. அவளால் அதற்குக் கீழ்ப்படியாமல் இருக்க முடியவில்லை.அவள் சாப்பாட்டை ஓரமாக வைத்து விட்டு அவரை நோக்கி நடந��தாள். மௌல்வி சாகிப் அவளுடைய கைகளைப் பற்றி இழுத்து,\nஅவள் கீழே தரையில் உட்காரப்போனாள். ஆனால் மௌல்வி சாகிப் அவளை அவர் பக்கமாக இழுத்து,\n“ என் பக்கத்தில இங்கே உட்கார்..”\nஎன்று உத்தரவிட்டார். ஜீனா உட்கார்ந்தாள். மௌல்வி சாகிப் அவருடைய கைகளால் அவளுடைய இடுப்பைச் சுற்றி வளைத்து அவளை இறுக்கிப் பிடித்துக் கொண்டே,\n“ சரி.. எங்களுக்காக என்ன கொண்டு வந்திருக்கிறாய்..\nஎன்று கேட்டார். ஜீனா விலக நினைத்தாள். ஆனால் மௌல்வி சாகிப்ப்பின் பிடி கிடுக்கிப் பிடியாக இருந்தது.\n“ சுட்ட ரொட்டியும் மோரும் கொஞ்சம் கீரையும் கொண்டு வந்திருக்கேன்..”\nஎன்று தாழ்ந்த குரலில் சொன்னாள். மௌல்வி அவளுடைய மெல்லிய இடையை மறுபடியும் ஒரு தடவை பிசைந்தார். பின்பு,\n“ அப்படியா..போ.. போய் அதைக் கொண்டு வந்து எங்களுக்குச் சாப்பாடு போடு..”\nஜீனா எழுந்தவுடன் மௌல்வி சாகிப் தன்னுடைய கைத்தடியினால் மௌஜூவின் தோள்களில் மெல்லத் தட்டி,\n“ மௌஜூ.. என்னுடைய கைகளைக் கழுவ உதவி செய்..”\nமௌஜூ அருகிலிருந்த கிணற்றுக்குச் சென்றான். ஒரு வாளியில் நல்ல தண்ணீரைக் கொண்டு வந்தான். ஒரு உண்மையான சிஷ்யனைப் போல அவன் மௌல்வி சாகிப் அவருடைய கைகளைக் கழுவ உதவினான். ஜீனா உணவை அவருக்கு முன்னால் வைத்தாள்.\nமௌல்வி சாகிப் எல்லாவற்றையும் சாப்பிட்டு விட்டார். பின்பு அவர் அவருடைய கைகளைக் கழுவத் தண்ணீர் ஊற்றும்படி ஜீனாவுக்கு ஆணையிட்டார். அவள் கீழ்ப்படிந்தாள். அவருடைய செய்கையில் அப்படி ஒரு அதிகாரம் இருந்தது.\nமௌல்வி சாகிப் சத்தமாக ஏப்பமிட்டார். அதை விட சத்தமாக கடவுளுக்கு நன்றி சொன்னார். ஈரக்கைகளால் அவருடைய தாடியைக் கோதி விட்டுக் கொண்டே கட்டிலில் சாய்ந்தார். ஒரு கண்ணால் ஜீனாவையும், இன்னொரு கண்ணால் அவளுடைய அப்பாவையும் கவனித்தார். அவள் சாப்பாட்டுப்பாத்திரங்களை எடுத்துக் கொண்டு போனாள். மௌல்வி சாகிப் மௌஜூவிடம்,\n“ சௌத்ரி.. நாம் சற்று ஓய்வெடுக்கப் போகிறோம்..”\nசௌத்ரி அவருடைய கால்களையும் பாதங்களையும் கொஞ்சநேரம் அமுக்கி விட்டான். அவர் உறங்கிவிட்டார் என்பதை உறுதிசெய்த பிறகு அங்கிருந்து நகர்ந்து அவனுடைய ஹூக்காவை பற்ற வைத்தான். அவன் சந்தோஷமாக இருந்தான். அவனுடைய நெஞ்சிலிருந்து மிகப்பெரிய பாரத்தை அகற்றியது போல அவன் உணர்ந்தான். அவனுக்குத் தெரிந்த எளிய வார்த்தைகளால் கருணையின் தேவ��்களில் ஒருவரை மௌல்வி சாகிப்பின் வடிவில் கடவுள் அவனிடம் அனுப்பி வைத்தற்காக இதயபூர்வமாக நன்றி சொன்னான்.\nமௌல்வி சாகிப் ஓய்வெடுப்பதையே சற்று நேரம் அங்கேயே இருந்து பார்த்துக் கொண்டிருந்து விட்டு, அவனுடைய வயலுக்கு வேலை செய்யப் போனான். அவனுடைய பசி கூட அவனுக்குத் தெரியவில்லை. உண்மையில் மௌல்வி சாகிப்புக்கு உணவளிக்கும் கௌரவமே அவனுக்குப் பெரிய விஷயமாக இருந்தது.\nமாலையில் அவன் வேலை முடிந்து திரும்பியபோது மௌல்வி சாகிப் அங்கில்லாதது மிகப் பெரிய ஏமாற்றமாக இருந்தது. அவன் அவனையே சபித்துக் கொண்டான். அந்த இடத்தை விட்டு போய் அவன் கடவுளின் மனிதரை அவமானப்படுத்தி விட்டான். ஒருவேளை போவதற்கு முன்னால் அவர் அவனைச் சபித்து விட்டும் போயிருக்கலாம். அவன் பயத்தில் நடுங்கினான். கண்ணீர் அவனுடைய கண்களில் குளமாய் கட்டியது.\nஅவன் கிராமத்தில் மௌல்வி சாகிப்பைத் தேடிப்பார்த்தான். ஆனால் அவரைக் காணவில்லை. மாலை இரவினுள் மூழ்கிக் கொண்டிருந்தது. ஆனால் மௌல்வி சாகிப்பைப் பற்றி ஒரு துப்பும் தெரியவில்லை. அவனுடைய வீட்டை நோக்கி ஏதோ இந்த உலகத்தையே அவனுடைய தோள்களில் சுமப்பதைப் போல அவன் தலையைக் குனிந்து கொ்ண்டே நடந்தான். கிராமத்திலிருந்து இரண்டு இளைஞர்களை அவன் எதிர்கொண்டான். அவர்கள் பயந்து போயிருந்தார்கள். முதலில் அவர்கள் என்ன நடந்ததென்று சொல்லவில்லை. அவன் வற்புறுத்திக் கேட்டபிறகே அவர்களுடைய கதையைச் சொன்னார்கள்.\nகொஞ்ச நாளைக்கு முன்னால் அவர்கள் கடுமையான நாட்டுச்சாரயத்தைக் காய்ச்சி வடித்து மண்பானையில் ஊற்றி ஒரு மரத்தின் அடியில் புதைத்து வைத்தார்கள். அன்று மாலை அவர்கள் அந்த இடத்துக்குப் போனார்கள். அவர்களுடைய விலக்கப்பட்ட செல்வத்தைத் தோண்டியெடுத்தார்கள். அதைக் குடிக்கப்போகும் சமயம் ஒரு வயதான மனிதர் ஒரு விசித்திரமான ஓளி முகத்தில் வீச திடீரென அந்த இடத்தில் பிரசன்னமாகி அவர்கள் அங்கே என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று கேட்டார்.\nஅவர்கள் செய்யவிருந்த பாவச்செயலுக்காக அவர்களைக் கடுமையாக ஏசினார். கடவுளே மனிதர்கள் தொடவேக்கூடாது என்று விலக்கிவைத்திருந்ததைக் எப்படி அவர்கள் குடிக்க நினைக்கலாம் என்று கேட்டார். அவர்கள் திகிலடைந்துபோய் அந்த இடத்தை விட்டு மண்பானையை அங்கேயே விட்டு விட்டு ஓடிப்போய் விட்ட���ர்கள்.\nசௌத்ரி மௌஜூ அவர்களிடம் சொன்னார், அந்த விசித்திரமான ஒளி வீசும் வயதான மனிதர் யார் தெரியுமா அவர் கடவுளின் புனிதர். அவர் அவமானப்படுத்தப் பட்டதால் அநேகமாக அந்த முழுக்கிராமத்தின் மீதும் சாபம் விட்டுப் போயிருக்கலாம்.\nகடவுள் நம்மை காப்பாற்றட்டும் என் மக்களே...கடவுள் நம்மை காப்பாற்றட்டும்…..என் மக்களே.. என்று அவன் முணுமுணுத்தவாறே அவனுடைய வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான். ஜீனா வீட்டிலிருந்தாள். ஆனால் அவன் அவளிடம் பேசவில்லை. மௌல்வி சாகிப்பின் சாபத்திலிருந்து தப்பமுடியாது என்று அவன் மனதார நம்பினான்.\nஜீனா மௌல்வி சாகிப்பிற்கும் சேர்த்துக் கூடுதல் உணவு தயாரித்திருந்தாள்.\nஅவள் “ அப்பா மௌல்வி சாகிப் எங்கே\n“ போய்ட்டாரு.. அவர் போய்ட்டாரு.. எப்படி கடவுளின் மனிதரால் நம்மைப் போன்ற பாவிகளோடு சேர்ந்து இருக்க முடியும் “ என்று வருத்தந்தோய்ந்த குரலில் அவன் சொன்னான்.\nஜீனாவும் வருத்தப்பட்டாள். ஏனென்றால் மௌல்வி சாகிப் அவளுடைய அம்மாவை திரும்பி வரவழைக்க ஒரு வழி கண்டுபிடிப்பதாக வாக்களித்திருந்தார். இப்போதென்றால் அவர் போய் விட்டார் அவளை அவளுடைய அம்மாவுடன் சேர்த்து வைப்பதற்கு. இனி யாரிருக்கிறார்கள் ஜீனா கீழே மணைப்பலகையில் உட்கார்ந்தாள். உணவு குளிர்ந்து கொண்டிருந்தது.\nகதவை நோக்கி நெருங்கி வரும் காலடி ஓசையை அவர்கள் கேட்டார்கள். அப்பாவும் மகளும் துள்ளியெழுந்தார்கள். திடீரென மௌல்வி சாகிப் உள்ளே நுழைந்தார். கிளியாஞ்சட்டி விளக்கின் மங்கலான வெளிச்சத்தில் அவர் தடுமாறிக் கொண்டே வருவதைப் பார்த்துவிட்டாள். அவருடைய கையில் ஒரு சிறிய மண்கலயத்தை வைத்திருந்தார்.\nமௌஜூ அவர் கட்டிலில் உட்காருவதற்கு உதவி செய்தான். அவனிடம் அந்த மண்கலயத்தைக் கொடுத்துக்கொண்டே மௌல்வி சாகிப்,\n” இன்று கடவுள் நம்மை பெருஞ்சோதனைக்கு ஆட்படுத்திவிட்டான். எதிர்பாராதவிதமாக உன் கிராமத்திலிருந்து கொடிய பாவமான சாரயம் குடிக்கவிருந்த இரண்டு இளைஞர்களைச் சந்தித்தேன். நாம் அவர்களை நிந்தித்த போது அவர்கள் ஓடி விட்டார்கள். நாம் மிகுந்த துக்கத்திலிலாழ்ந்து விட்டோம். அவ்வளவு இளம்வயதில் இவ்வளவு கொடிய பாவமா ஆனால் அவர்களுடைய இளமைதான் அவர்களை இந்தப்பாவத்தைச் செய்யத் தூண்டியது என்று நாம் உணர்ந்தோம். கடவுளின் மேலோக நீதிமன்றத்தில�� அவர்களை மன்னித்தருளுமாறு நாம் பிரார்த்தனை செய்தோம். நமக்கு என்ன பதில் கிடைத்ததென்று உனக்குத் தெரியுமா ஆனால் அவர்களுடைய இளமைதான் அவர்களை இந்தப்பாவத்தைச் செய்யத் தூண்டியது என்று நாம் உணர்ந்தோம். கடவுளின் மேலோக நீதிமன்றத்தில் அவர்களை மன்னித்தருளுமாறு நாம் பிரார்த்தனை செய்தோம். நமக்கு என்ன பதில் கிடைத்ததென்று உனக்குத் தெரியுமா\n” தெரியாது..” என்று உணர்ச்சிவயப்பட்டு சௌத்ரி மௌஜூ கூறினான்.\n“ அந்த பதில் என்னவென்றால் நீ அவர்களுடைய பாவத்தின் விளைவுகளை எதிர்கொள்ளத் தயாராய் இருக்கிறாயா அதற்கு நாம் சொன்னோம் சரி எல்லாம்வல்ல இறைவனே. அதன் பிறகு நாம் குரலைக் கேட்டோம்.. இந்த மண்கலயத்திலுள்ள அத்தனை சாராயத்தையும் குடிக்கும்படி ஆணையிடுகிறேன். நாம் அந்தப் பையன்களை மன்னித்தருளுவோம்..”\nமௌஜூக்கு மயிர்க்கூச்செரிந்தது. “ பிறகு நீங்கள் அதைக் குடித்தீர்களா\nமௌல்வியின் நாக்கு இன்னும் குழறியது, “ ஆமாம் நாம் குடித்தோம்.. அந்த இளம்பாவிகளின் ஆத்மாக்களைக் காப்பாற்றுவதற்காக..இந்த உலகத்தில் வணங்கவேண்டிய ஒரே ஆளான கடவுளின் கண்களுக்கு முன்னால் மதிப்பைச் சம்பாதிப்பதற்காக.. இன்னும் கொஞ்சம் மீதமிருக்கிறது அதையும் நாம் தான் குடிக்கவேண்டுமென ஆணையிடப்பட்டிருக்கிறோம்.. இப்பொழுது அதைக் கவனமாகப் பத்திரப்படுத்து.. ஒரு சொட்டுகூட வீணாகிவிடக்கூடாது..பாத்துக்கோ..”\nமௌஜூ அந்த மண்கலயத்தை எடுத்தான். அதனுடைய வாயை ஒரு சுத்தமான துணியினால் மூடிக்கட்டினான். பின்னர் அதை அவனுடைய எளிய வீட்டிலுள்ள ஒரு இருட்டறையில் வைத்தான். அவன் திரும்பிய போது மௌல்வி சாகிப் கட்டிலில் கைகால்களைப் பரப்பிக் கொண்டு கிடந்தார். ஜீனா அவருடைய தலையைப் பிடித்து விட்டுக் கொண்டிருந்தாள்.அவர் அவளிடம் சொல்லிக் கொண்டிருந்தார், “ யார் மற்றவர்களுக்கு உதவி செய்கிறார்களோ அவர்களே கடவுளின் அன்புக்கு பாத்திரமாவார்கள்.. அவர் இந்தக் கணத்தில் உன்மீது பிரீதியோடு இருக்கிறார்.. நாமும் உன்மீது பிரீதியோடு இருக்கிறோம்..”\nபிறகு மௌல்வி சாகிப் அவருக்கு பக்கத்தில் அவளை உட்காரவைத்து அவளுடைய நெற்றியில் ஒரு அழுத்தமான முத்தத்தைப் பதித்தார். அவள் எழுந்து கொள்ள முயற்சி செய்தாள் ஆனால் அவளால் அவரிடமிருந்து விடுவித்துக் கொள்ள முடியவில்லை. மௌல்வி சாகிப் அவளைக் க���்டியணைத்துக் கொண்டு மௌஜூவிடம் சொன்னார், ” சௌத்ரி நான் உன் மகளுடைய உறங்கிக் கொண்டிருக்கும் விதியை எழுப்புகிறேன்..”\nமௌஜூ மிகுந்த உணர்ச்சிவசப்பட்டான். அவனால் நன்றியைக் கூட சரியாகச் சொல்ல முடியவில்லை. அவனால் சொல்ல முடிந்ததெல்லாம்,\n“ எல்லாம் உங்களுடைய பிரார்த்தனைகளாலும் அன்பினாலும் வந்தது…”\nஅவ்வளவு தான். மௌல்வி சாகிப் ஜீனாவை அவருடைய நெஞ்சோடு சேர்த்து இறுக்கிக் கொண்டு சொன்னார், “ உண்மையில் கடவுள் தன்னுடைய அனுக்கிரகத்தை உனக்கு அளித்துவிட்டார். ஜீனா நாளை நாம் உனக்கு புனித பிரார்த்தனையைச் சொல்லிக் கொடுப்போம்.. நீ அதை எப்போதும் சொல்லிக் கொண்டிருந்தால் கடவுளின் கண்களுக்கு எப்போதும் நீ ஏற்றவளாக இருப்பாய்..”\nமறுநாள் மௌல்வி சாகிப் தாமதமாக எழுந்தார். மௌஜூ ஒருவேளை அவன் அவருக்குத் தேவைப்படலாமோ என்று பயந்து வயலுக்குப் போகவில்லை. கடமையுணர்வோடு அவன் காத்திருந்தான். மௌல்வி கண் விழித்தபோது அவர் தன்னுடைய முகத்தைக் கழுவவும், கைகளைக் கழுவவும் அவன் உதவினான். அவருடைய விருப்பத்திற்கிணங்க அந்த மண்கலயத்தை எடுத்துக் கொண்டு வந்தான்.\nமௌல்வி சாகிப் முணுமுணுத்தபடியே ஒரு தொழுகை நடத்தினார். பிறகு மண்கலயத்தின் வாயை மூடியிருந்த துணியை அகற்றி விட்டு மூன்று முறை பானைக்குள் ஊதினார். மூன்று பெரிய கோப்பைகள் நிறைய மதுவைக் குடித்தார். பிறகு இன்னொரு பிரார்த்தனையை முணுமுணுத்தார். வானத்தை அண்ணாந்து பார்த்து முழக்கமிட்டார்.\n“ கடவுளே நீ எங்களைச் சோதிக்கும் சோதனையை நாங்கள் விரும்புவதாக நீ நினைத்து விடக்கூடாது..”\nபிறகு அவர் மௌஜூவைப் பார்த்து, “ சௌத்ரி, நீ உடனே உன்னுடைய மனைவியின் கிராமத்துக்குப் போய் அவளை அழைத்துக்கொண்டு வரவேண்டும் என்று இப்போதுதான் புனிதகட்டளையை நாம் பெற்றோம்… நாம் எதிர்பார்த்திருந்த சமிக்ஞை கிடைத்துவிட்டது…” என்று சொன்னார்.\nமௌஜூவுக்குப் புல்லரித்தது. அவன் குதிரையின் மீது ஏறினான். மறுநாள் அவளை அழைத்து வருவதாக சத்தியம் செய்தான். ஜீனாவிடம் மௌல்வி சந்தோஷமாகவும் வசதியாகவும் இருப்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்து கொடுக்கும்படி அறிவுறுத்தினான்.\nஜீனாவின் தந்தை போனபிறகு அவள் வீட்டுவேலைகளில் மூழ்கி விட்டாள். மௌல்வி சாகிப் நிதானமாகக் குடித்துக் கொண்டேயிருந்தார். பிறகு அவர் சட்���ைப்பையிலிருந்து ஜெபமாலையை எடுத்து அவருடைய விரல்களில் உருட்ட ஆரம்பித்தார். ஜீனா வேலைகளையெல்லாம் முடித்தவுடன் அவர் அவளைச் மேனியலம்பும் சடங்குகளைச் செய்யச் சொன்னார்.\nஅவள் அப்பாவியாக “ மௌல்விசாகிப், எப்படி அதைச் செய்ய வேண்டும் என்று எனக்குத் தெரியாது..” என்று சொன்னாள்.\nஅவசியமான மதச்சடங்குகளைப் பற்றிய அறிவு கூட இல்லாமைக்காக அவளை மென்மையாக மௌல்விசாகிப் கடிந்து கொண்டார். பின்பு அவர் அவளுக்கு மேனியலம்பும் சடங்கை எப்படிச் செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தார். இந்த சிக்கலான பயிற்சி உடல்களின் நெருக்கம் மூலம் நிகழ்ந்தேறியது.\nமேனியலம்பும் சடங்குக்குப் பின்னால் மௌல்விசாகிப் பிரார்த்தனைபாயைக் கேட்டார்.\nஅந்த வீட்டில் அப்படியொன்று இல்லை. மௌல்விசாகிப் அதிருப்தியடைந்தார். அவர் அவளிடம் ஒரு படுக்கைவிரிப்பைக் கொண்டுவரும்படி சொன்னார். உள்ளறையில் அதைத் தரையில் விரித்து ஜீனாவை உள்ளே வரும்படி ஆணையிட்டார். அதோடு வரும்போது அந்தப்பானையையும், கோப்பையையும் கொண்டு வரச் அறிவுறுத்தினார்.\nமௌல்விசாகிப் கோப்பையில் நிறைய ஊற்றி, அதில் பாதியைக் குடித்தார். பிறகு தன் விரல்களில் ஜெபமாலையை உருட்ட ஆரம்பித்தார். ஜீனா அதை மௌனமாகக் கவனித்துக் கொண்டிருந்தாள்.\nவெகுநேரத்துக்கு மௌல்விசாகிப் ஜெபமாலையை சுறுசுறுப்பாக உருட்டிக்கொண்டிருந்தார். அவருடைய கண்கள் மூடியிருந்தன. பிறகு அவர் கோப்பைக்குள் மூன்றுமுறை ஊதி விட்டு ஜீனாவைக் குடிக்குக்கும்படிச் சொன்னார்.\nஜீனா நடுங்கும்கரங்களால் அதைக் கையில் எடுத்தாள். மௌல்விசாகிப் இடிக்குரலில் சொன்னார்,” நீ இதைக் குடிக்கும்படி நாம் கட்டளையிடுகிறோம். உன்னுடைய எல்லாவேதனைகளும், துன்பங்களும் ஒரு முடிவுக்கு வந்துவிடும்.”\nஜீனா அந்தக்கோப்பையை அவளுடைய உதடுகளுக்குக்கருகில் கொண்டு போனாள். ஒரே மூச்சில் அதைக் குடித்துவிட்டாள். மௌல்விசாகிப் புன்னகைத்தார்.\n“ நாம் நம்முடைய சிறப்புப்பிரார்த்தனையைத் தொடரப்போகிறோம்…ஆனால் எப்பொழுதெல்லாம் நாம் சுட்டுவிரலை உயர்த்துகிறோமோ அப்பொழுதெல்லாம் பானையிலிருந்து அரைக்கோப்பை ஊற்றிக் குடிக்கவேண்டும்..தெரிந்ததா\nஅவர் அவளை பதில்சொல்ல அநுமதிக்கவில்லை. அவள் ஆழ்ந்த மயக்கத்துக்குள் போய்க்கொண்டிருந்தாள். ஜீனாவின் வாயில் ஒரு மோசமான ருசி. நெஞ்சில் தீ எரிவதைப்போன்ற எரிச்சல். அவள் எழுந்து சென்று வாளிவாளியாய் குளிர்ந்த நீரைக் குடிக்க விரும்பினாள். ஆனால் அதற்கு அவளுக்குத் தைரியமில்லை. திடீரென்று மௌல்விசாகிப்பின் சுட்டுவிரல் உயர்ந்தது. அவள் மனோவசியம் செய்யப்பட்டவளைப் போல ஏற்கனவே மௌல்விசாகிப் சொல்லியமாதிரி அரைக்கோப்பை ஊற்றி ஒரே மடக்கில் குடித்தாள்.\nமௌல்விசாகிப் தொடர்ந்து பிரார்த்திக் கொண்டிருந்தார்.அவளால் ஜெபமாலையின் மணிகள் ஒன்றோடொன்று உரசும் சத்தத்ததைக் கேட்க முடிந்தது. அவளுடைய தலை சுற்றியது. அவள் உறக்கம் வருவதைப்போல உணர்ந்தாள். ஒரு முகம் மழிக்கப்பட்ட இளைஞனின் மடியில் இருப்பதாகவும், அவன் அவளிடம் அவளைச் சொர்க்கத்துக்கு அழைத்துச் சென்று கொண்டிருப்பதாகவும் சொல்லிக்கொண்டிருப்பதைப் போல அவளுக்கு ஒரு தெளிவில்லாத, கிட்டத்தட்ட தன்னுணர்வில்லாத உணர்வு தோன்றியது.\nஅவள் உணர்வுக்கு வந்தபோது அவள் உள்ளே தரையில் படுத்திருந்தாள். மங்கலான கண்களால் சுற்றிலும் பார்த்தாள். ஏன் அவள் அங்கே படுத்துக்கிடக்கிறாள் எப்போதிருந்து எல்லாமே பனிமூட்டமாக இருந்தது. மறுபடியும் தூங்க விரும்பினாள். ஆனால் அவள் எழுந்துவிட்டாள். மௌல்விசாகிப் எங்கே அப்புறம் அந்த சொர்க்கம் எங்கே மறைந்து போனது\nஅவள் திறந்தவெளி முற்றத்திற்குப் போனாள். கிட்டத்தட்ட சாயங்காலமாகி விட்டதைப் பார்த்து ஆச்சரியப்பட்டாள். மௌல்விசாகிப் மேனியலம்பும் சடங்கைச் செய்து கொண்டிருந்தார். அவள் வருகிற சத்தம் கேட்டு புன்னகைமுகத்துடன் திரும்பினார் மௌல்விசாகிப். அவள் அறைக்குத் திரும்பி தரையில் அமர்ந்து அவளுடைய அம்மா வீட்டுக்குத் திரும்பி வரப்போவதைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தாள். இன்னும் ஒரு இரவு இருக்கிறது.அவளுக்கு ரெம்பப் பசித்தது. ஆனால் அவள் சமையல் செய்ய விரும்பவில்லை. அவளுடைய மனம் முழுவதும் விளங்காத, பதிலில்லாத கேள்விகள் நிறைந்திருந்தன.\nதிடீரென மௌல்விசாகிப் கதவருகில் தோன்றினார். “ நாம் உன்னுடைய அப்பாவுக்காக விசேசபிரார்த்தனைகள் செய்ய வேண்டும். நாம் இரவு முழுவதும் கபர்ஸ்தானில் இருந்து பிரார்த்தனை செய்துவிட்டு காலையில் திரும்பி வருவோம். உனக்காகவும் நாம் பிரார்த்தனை செய்வோம்..” என்று சொன்னார்.\nஅவர் மறுநாள் காலையில் தோன்றினா��். அவருடைய கண்கள் சிவந்திருந்தன. பேசும்போது லேசாக வாய் குழறியது. அவரால் நிலையாக நிற்க முடியாமல் தள்ளாடிக் கொண்டிருந்தார். அவர் வெளிமுற்றத்துக்கு நடந்துபோய் ஜீனாவை உணர்ச்சியுடன் இறுக்கிக் கட்டிப் பிடித்து முத்தமிட்டார். ஜீனா மனைப்பலகையில் உடகார்ந்துகொண்டு கடந்த இருபத்திநாலு மணி நேரத்தில் நடந்த புதிரான, அரைகுறைஞாபகங்களோடு உள்ள நிகழ்வுகளை புரிந்துகொள்ள முயற்சித்துக்கொண்டிருந்தாள். அவளுடைய அப்பா திரும்பி வரவேண்டும் என்று விரும்பினாள். இரண்டுவருடங்களாக வீட்டை விட்டு போயிருந்த அம்மாவும் திரும்பி வரவேண்டும் என்று விரும்பினாள். அப்புறம் அங்கே அந்த சொர்க்கம்… அவளை அழைத்துக் கொண்டு போயிருந்தது என்ன வகையான சொர்க்கம் அப்புறம் மௌல்விசாகிப்…. அவரா..அவளை சொர்க்கத்துக்கு கூட்டிப் போனது…அப்படியிருக்காது.. ஏன்னா ஒரு இளைஞன் அதுவும் தாடியில்லாதவனாக அவள் ஞாபகத்தில் வந்தான்.\nமௌல்விசாகிப் அவளைப்பார்த்து, “ ஜீனா உன்னோட அப்பா இன்னும் வரல்ல..” என்று சொன்னார். அவள் ஒன்றும் சொல்லவில்லை.\nஅவர் திரும்பவும், “ இரவு முழுவதும் உன்னோட அப்பா என்னுடன் பிரார்த்தனையில் இருந்தான்..இப்பொழுது உன்னுடைய அம்மாவுடன் வந்திருக்கவேண்டுமே…”. என்று சொன்னார்.\nஜீனாவால் சொல்லமுடிந்ததெல்லாம் இதுதான்,” எனக்குத் தெரியல.. அவர் வந்துக்கிட்டிருப்பாரு..அம்மாவைக் கூட்டிக்கிட்டு..ஆனா உண்மையில் எனக்கு ஒண்ணும் தெரியாது…”\nமுன்கதவு திறந்தது. ஜீனா எழுந்தாள். அங்கே அவளுடைய அம்மா. இருவரும் ஒருவர் கைகளில் ஒருவர் விழுந்தனர். இருவருக்கும் கண்ணீர் பெருகியது. மனைவியின் பின்னால் மௌஜூவும் வந்தான். மிகுந்த மரியாதையுடன் மௌல்வி சாகிப்பை வணங்கினான். பின்னர் தன்னுடைய மனைவியிடம், “ பதான் நீ மௌல்விசாகிப்பை வணங்கவில்லையே….” என்று சொன்னான்.\nபதான் மகளிடமிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு, கண்களைத் துடைத்தாள். பின்னர் மௌல்விசாகிப்பை வணங்கினாள். அதுவரை தன்னுடைய ரத்தச்சிவப்பான கண்களால் பதானையே முறைத்துப்பார்த்துக் கொண்டிருந்த மௌல்விசாகிப், “ நாம் உனக்காக இரவு முழுவதும் பிரார்த்தனையில் இருந்தோம்; இதோ நீ வந்து விட்டாய்.. கடவுள் நம்முடைய பிரார்த்தனைகளைச் செவிமடுத்துவிட்டார்.. இனி எல்லாம் நல்லபடியாய் நடக்கும்..” என்று சொன்னார்.\n���ௌத்ரிமௌஜூ தரையில் உட்கார்ந்து மௌல்விசாகிப்பின் கால்களை அமுக்கி விட்டுக் கொண்டிருந்தான். தொண்டை தழுதழுக்க, அவன் தன் மனைவியிடம், “ பதான், இங்கே வா… மௌல்விசாகிப்புக்கு உன் நன்றியைத் தெரிவி…. எனக்கு எப்படிச் சொல்லணும்னு தெரியல..” என்று சொன்னான்.\nபதான் முன்னால் வந்து,” நாங்கள் ஏழை எளிய கிராமத்து ஆட்கள்…எங்களிடம் செய்வதற்கு எதுவுமில்லை…..புனித கடவுள்மனிதரே\nமௌல்விசாகிப் பதானை கூர்மையாகப் பார்த்துக் கொண்டே,” மௌஜூ சௌத்ரி நீ சொன்னது சரிதான்.. உன் மனைவி அழகாக இருக்கிறாள்.. இந்த வயதிலும் அவள் இளமையாகத் தெரிகிறாள்.. அவள் இன்னொரு ஜீனா… அவளை விட மேல்… நாம் எல்லாவற்றையும் சரி செய்வோம்.. பதான், கடவுள் உன்மீது அன்பும் கருணையும் கொள்ள தீர்மானித்துவிட்டார்…..” என்று சொன்னார்.\nசௌத்ரி மௌஜூ மௌல்விசாகிப்பின் கால்களைப் பிடித்து விட்டுக் கொண்டேயிருந்தான். ஜீனா சமையலில் தீவிரமாக ஈடுபட்டிருந்தாள்.\nசிறிது நேரம் கழித்து மௌல்விசாகிப் எழுந்தார். பதானின் தலையை ஆதூரத்துடன் தட்டிக் கொடுத்துக் கொண்டே மௌஜூவிடம்,” எல்லாம் வல்ல கடவுளின் விதிப்படி எப்போது ஒரு மனிதன் தன் மனைவியை விவாகரத்து செய்துவிட்டபிறகு மீண்டும் அவளை கூட்டிக் கொண்டு வரவேண்டுமானால் அவள் இன்னொரு மனிதனைத் திருமணம் செய்து விவாகரத்து செய்தபிறகே தன்னுடைய முதல் கணவனுடன் சேர முடியும்….” என்று சொன்னார்.\nமௌஜு மெல்லிய குரலில், “ நானும் கேள்விப்பட்டிருக்கேன்.. மௌல்விசாகிப்..” என்று சொன்னார்.\nமௌல்விசாகிப் அவனை எழுந்து நிற்கச் சொன்னார். அவனுடைய தோளில் அவருடைய கையைப் போட்டுக் கொண்டு, “ நேற்று ராத்திரி நீ செய்த தவறுக்காக உன்னை தண்டிக்காமலிருக்குமாறு எல்லாம் வல்ல கடவுளிடம் மன்றாடினோம்..அசரீரி சொல்லியது என்னவென்றால்,எவ்வளவு நாள் தான் மற்றவர்களுக்காக உன்னுடைய பரிந்துரைகளை நான் ஏற்றுக் கொள்வது உனக்காக எதையாவது கேள். அதை நாம் வழங்குகிறோம்… நாம் மீண்டும் மன்றாடினோம்.. பிரபஞ்சத்தின் அரசரே..எல்லாநிலங்களின் கடல்களின் இறைவனே, நாம் எதையும் நமக்காகக் கேட்பதில்லை.. நீங்கள் எமக்கு போதுமானதைக் கொடுத்திருக்கிறீர்கள்..மௌஜூ சௌத்ரி அவனுடைய மனைவிமீது அன்பாக இருக்கிறான். அதற்கு அந்தக்குரல், நாம் அவனுடைய அன்பையும் உன்னுடைய விசுவாசத்தையும் சோதிக்கப்போக���றோம்… நீ தான் அவளை ஒருநாள் திருமணம் செய்து மறுநாள் அவளை விவாகரத்து செய்து மௌஜூவிடம் ஒப்படைக்கவேண்டும்..இதைத்தான் நாம் உனக்கு வழங்கமுடியும்.. ஏனெனில் நீ நாப்பது வருடங்களாக என்னை விசுவாசமாக வணங்கிவருகிறாய்…என்றது.” என்று சொன்னார்.\nமௌஜூ உணர்ச்சிவசப்பட்டு,” நான் ஏற்றுக் கொள்கிறேன் மௌல்விசாகிப்.. நான் ஏற்றுக்கொள்கிறேன்..” என்று சொன்னான். பிறகு அவன் பதானைப்பார்த்தான். அவனுடைய கண்கள் உள்ளே பொங்கிய மகிழ்ச்சியில் ஒளிர்ந்தது. “ சரியா பதான்.. ” என்று கேட்டவன் அவளுடைய பதிலுக்காகக் காத்திருக்காமல் “ நாங்கள் இருவரும் ஏற்றுக்கொள்கிறோம்..” என்று சொன்னான்.\nமௌல்விசாகிப் அவருடைய கண்களை மூடி ஒரு பிரார்த்தனையைப் பாடினார்.பின்பு அவர்களுடைய முகத்தில் ஊதிவிட்டார். அவருடைய கண்களை மேலுலகத்தை நோக்கி உயர்த்தியபடியே, “ எல்லாவானங்களீன் கடவுளே நீங்கள் வைத்துள்ள இந்த சோதனையில் நாங்கள் தோற்றுவிடாமலிருக்க எங்களுக்கு வலிமையைத் தாரும்..” என்றார்.\nபிறகு அவர் மௌஜூவிடம், “ இப்போழுது நாம் போகிறோம்.. ஆனால் நீயும் ஜீனாவும் இன்று இரவு மட்டும் எங்காவது சென்றுவிடவேண்டும் என்று விரும்புகிறோம்.. நாம் பிறகு வருகிறோம்..” என்றார்.\nமாலையில் அவர் திரும்பி வரும்போது, ஜீனாவும், மௌஜூவும் கிளம்புவதற்குத் தயாராக இருந்தார்கள். மௌல்விசாகிப் வாய்க்குள்ளேயே ஏதோ முணுமுணுத்துக் கொண்டிருந்தார். அவர் அவர்களிடம் பேசவில்லை. அவர்களைப் போகச்சொல்லி சைகை செய்தார். அவர்கள் போய்விட்டார்கள்.\nமௌல்விசாகிப் கதவைத் தாழ்ப்பாள் போட்டார். பிறகு பதானிடம்,” இந்த ஒரு இரவு நீ என்னுடைய மனைவி… உள்ளே போ.. படுக்கையைக் கொண்டுவந்து இந்த கட்டிலில் விரித்து வை. நாம் ஒரு சிறு தூக்கம்போட விரும்புகிறோம்…” என்று சொன்னார்.\nபதான் உள்ளே சென்று படுக்கையை கொண்டுவந்து கயிற்றுக்கட்டிலில் அழகாக விரித்தாள்.மௌல்விசாகிப் அவளிடம் அவருக்காகக் காத்திருக்கும்படி சொல்லிவிட்டு உள்ளே போனார்.\nஒரு அகல்விளக்கின் நிழலான ஒளி அந்தச் சிறிய அறையை அலங்கரித்தது. அந்த மண்பானை மூலையில் இருந்தது. மௌல்விசாகிப் அதில் ஏதாவது மீந்திருக்கிறதா என்று அதைக் குலுக்கிப்பார்த்தார். அதில் இருந்தது. அவர் அந்தப்பானையை உதடுகளுக்குக் கொண்டுபோய் அவசரமாக சில மிடறுகள் குடித்தார். அவருடைய மஞ்சள்நிற பட்டுத்துணியினால் வாயைத் துடைத்துவிட்டு வெளியே வந்தார்.\nபதான் கட்டிலில் உட்கார்ந்திருந்தாள். மௌல்விசாகிப்பின் கைகளில் ஒரு கோப்பையை வைத்திருந்தார். அவர் அதில் சில புனிதமந்திரங்களை மூன்றுமுறை ஓதி அதை பதானிடம் கொடுத்து,” இதைக் குடி….” என்று சொன்னார்.\nஅவள் குடித்த உடனேயே புரையேறிச் சிரமப்பட்டாள். ஆனால் மௌல்விசாகிப் அவளுடைய முதுகில் பலமாகத் தட்டிக் கொடுத்துக்கொண்டே,” உனக்குச் சரியாயிரும்..” என்று சொல்லிவிட்டி படுத்துக்கொண்டார்.\nஅடுத்தநாள் காலையில் ஜீனாவும், மௌஜூவும் திரும்பிவந்த போது பதான் முற்றத்தில் கிடந்த கட்டிலில் படுத்துறங்கிக் கொண்டாள். மௌல்விசாகிப் அருகில் எங்கும் இல்லை. ஒருவேளை அவர் வயல்கரைகளில் நடைப்பயிற்சிக்குப் போயிருக்கலாம் என்று மௌஜூ நினைத்தான். அவன் மனைவியை எழுப்பினான். அவள் கண்களைத் திறந்ததும் “ சொர்க்கம்…சொர்க்கம்..” என்று பிதற்றினாள். அவள் மௌஜூவைப் பார்த்ததும் எழுந்து உட்கார்ந்தாள்.\nபதான் இன்னும் தள்ளாட்டத்தில் தான் இருந்தாள். “ மௌல்விசாகிப்பா… எந்த மௌல்விசாகிப் அவர் எங்கே என்று எனக்குத் தெரியாது…அவர் இங்கே இல்லை…” என்று சொன்னாள்.\n“ வேண்டாம் …நான் போய் அவரைத் தேடிப்பார்த்துட்டு வாரேன்..” என்று மௌஜூ கூவினான்.\nஅவன் கதவருகில் போய்க்கொண்டிருக்கும்போது பதானின் அலறலைக் கேட்டான். அவள் தலையணைக்கடியிலிருந்து ஏதையோ எடுத்தபடியே நடுங்கிக் கொண்டிருந்தாள்.\nஅவள், “ இது என்னது\nமௌஜூ, ‘ முடி மாதிரி தெரியுது..” என்று சொன்னான்.\nபதான் அந்தக் கறுப்புக்குவியலைத் தரையில் வீசினான். மௌஜூ அதை எடுத்து சோதித்துப் பார்த்துவிட்டு, “ மனிதமுடி மாதிரி இருக்கு..” என்று சொன்னான்.\n” மௌல்விசாகிப்பின் தாடியும் தோள்வரை தொங்கிய தலைமுடியும்…தான் இது .” என்று ஜீனா கூக்குரலிட்டாள். மௌஜூ குழப்பமடைந்தான்.\n“ அப்படின்னா மௌல்விசாகிப்பை எங்கே “ என்று அவன் கேட்டான். பிறகு அவனுடைய எளிய எதையும் நம்பும் மனசில் உடனே ஒரு பதில் தோன்றியது.\n“ ஜீனா…பதான்… உங்களுக்குப் புரியலையா.. அவர் கடவுளின் மனிதரில்லையா அவர் அற்புதங்கள் செய்வார்... நம்முடைய இதயங்கள் என்ன விரும்பியதோ அதைக் கொடுத்துவிட்டு அவரை நாம் ஞாபகப்படுத்திக்கொள்ள நமக்கு இதை விட்டு விட்டுப் போயிருக்கிறார்…” என்று சொன்னான்.\nஅவன் அந்த பொய்த்தாடியையும் தலைமுடியையும் முத்தமிட்டான். பக்தியுடன் கண்களில் ஒற்றிக் கொண்டான். பின்னர் அவற்றை ஜீனாவிடம் கொடுத்தான்.\n“ போ… போய் இவற்றை சுத்தமான துணியில் சுற்றி அந்தப் பெரிய மர அலமாரியின் மேல் வை… கடவுளின் அருள் நமது வீட்டை விட்டு அகலாதிருக்கட்டும்..” என்று சொன்னான். ஜீனா உள்ளே போனாள். மௌஜூ பதானின் அருகில் உட்கார்ந்து அவளிடம்,” நான் பிரார்த்தனை செய்வது எப்படி என்று கற்றுக் கொள்ளப்போகிறேன்… ஒவ்வொரு நாளும் என்னுடைய பிரார்த்தனைகளில் அந்தச் சாமியாரை ஞாபகப்படுத்துவேன்….”\nLabels: இலக்கியம், உதயசங்கர், காலித் ஹசன், சாதத ஹசன் மாண்டோ, சிறுகதை, மொழிபெயர்ப்பு\nபனிரெண்டு சிறுகதைத் தொகுதிகள்,ஒரு குறுநாவல் தொகுதி, ஐந்து கவிதைத் தொகுதிகள், பத்தொன்பது குழந்தை இலக்கிய நூல்கள்,எழுபது மொழிபெயர்ப்பு நூல்கள், ஆறு கட்டுரை நூல், தமுஎகசவில் மாநிலத் துணைப்பொதுச்செயலாளர். தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத்தலைவர்\nதுண்டிக்கப்பட்ட தலையில் சூடிய ரோஜாமலர்\nஇந்துக்களின் புனித நூல் எது\nபிராமணிய மேல்நிலையாக்கமும் பண்பாட்டு அழிப்பும்\nமனிதநலம் காக்கும் ஹோமியோபதி மருத்துவம்-2\nகாட்டு வாத்தாகச் சிறகை விரித்த கவிதை\nகத்தரிக்காய் குள்ளனும் கழுகுமலை பூதமும் - நாடோடிக்கதை\nகத்தரிக்காய் குள்ளனும் கழுகுமலை பூதமும் உதயசங்கர் ஒரு ஊரில் ஒரு பாட்டியும் தாத்தாவும் தனியாக வாழ்ந்து வந்தார்கள். அவர்களுக்கு எட்டு மக...\nஇந்துக்களின் புனித நூல் எது\nஇந்துக்களின் புனித நூல் எது உதயசங்கர் உலகிலுள்ள எல்லாப்பெருமதங்களுக்கும் ஒரு புனிதநூல் இருக்கிறது. கிறித்துவத்துக்கு பைபிள் என...\nசூரியனும் குட்டிக்குட்டிக்குருவிக்குஞ்சும் உதயசங்கர் காலை விடிந்தது. சூரியன் கண்களை மெல்லத் திறந்து உலகத்தைப் பார்த்தான். வெளிச்சத்தின...\nமின்னுவின் ஆசை உதயசங்கர் மின்னு சுண்டெலி தப்பித்ததே பெரிய காரியம். ஒரு விநாடி தாமதம் ஆகி இருந்தால் அவ்வளவு தான். வெள்ளைப்பூனை லபக் என்...\nபிராமணிய மேல்நிலையாக்கமும் பண்பாட்டு அழிப்பும்\nபிராமணிய மேல்நிலையாக்கமும் பண்பாட்டு அழிப்பும் உதயசங்கர் இப்போதெல்லாம் பெரும்பாலான நாட்டார் தெய்வக்கோவில்களில் கும்பாபிஷேகம் நடக...\nகுறள் அறமும் மனு (அ)தர்மமும் - (ஆய்வுக் கட்டுரை)\nஇட ஒதுக்கீடல்ல மறுபங்கீடு - ஆதவன் தீட்சண்யா உரை\nதமிழ்நாடு கிராம வங்கியை சீர்குலைக்கும் அதன் நிர்வாகம்\nஎன் 'கால்' கதை தெலுங்கில்\nபார்த்த படத்தை மறுபடி பார்க்க, படித்த கதையை மீண்டும் படிக்க விரும்புவதன் உளவியல்\nபுதுப்பேட்டை 15 ஆவது ஆண்டு நிறைவு\nமாநில திரைப்பயண நிறைவு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akuranatoday.com/45535/", "date_download": "2021-10-19T11:48:11Z", "digest": "sha1:CC6RZT53TXZG2LPGXM7GJ43354UA2PUM", "length": 10786, "nlines": 74, "source_domain": "www.akuranatoday.com", "title": "பல் துலக்கும் தூரிகைகளுக்கு ஹலால் சான்றிதழ் வழங்கியது ஏன்? ஆணைக்குழுக்கு ரிஸ்வி முப்தி பதில் - Akurana Today", "raw_content": "\nபல் துலக்கும் தூரிகைகளுக்கு ஹலால் சான்றிதழ் வழங்கியது ஏன் ஆணைக்குழுக்கு ரிஸ்வி முப்தி பதில்\n2014 முதல் பாதுகாப்புத் தரப்புக்கு தகவல்களை வழங்கினோம்\nஉலமா சபையின் நிறைவேற்றுக் குழுவில் சூபி கொள்கைகளை பின்பற்றுவோரே அதிகம்\nமத்ரஸாக்களை கல்வியமைச்சின் கீழ் கொண்டு வருவது நல்லது\nமுஸ்லிம் சமய திணைக்கள பணிப்பாளர் பதவி அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ளது\nஒவ்வொரு மதத்துக்கும் தனித்தனியான அமைச்சு அவசியமில்லை\nஅகில இலங்கை ஜம் இய்யதுல் உலமா சபை அனைத்து நிலைமைகளின் போதும் நாட்டின் நலனை முன்னிறுத்தியே செயற்பட்டுள்ளதாகவும், யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் கூட மூதூர் உள்ளிட்ட சில பகுதிகளில் தமது சபை ஊடாக பாதுகாப்புத் தரப்புக்கு கொடுக்கப்பட்ட ஒத்துழைப்புக்களுக்கு முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ நேரடி சாட்சி எனவும் குறித்த சபையின் தலைவர் அஷ்ஷெய்க் றிஸ்வி முப்தி தெரிவித்தார்.\nகடந்த 2014 ஆம் ஆண்டே அடிப்படைவாதம் தொடர்பில் உள்ள அபாயங்கள் தொடர்பில் தமது சபை தகவல்களை உரிய தரப்புக்களுடன் பகிர்ந்துகொண்டிருந்தும் கூட, மக்களின் உயிரை காப்பாற்ற முடியாமல் போனமை தொடர்பில்தான் கவலையடைவதாக இதன்போது உணர்வுபூர்வமாக சாட்சியம் வழங்கினார். ஆணைக் குழுவின் நடவடிக்கைகளுக்கு பூரண ஒத்துழைப்பினை தாம் நல்குவதாகவும், எந்த சந்தர்ப்பத்தில் வேண்டுமானாலும் சாட்சியங்களை வழங்க தான் தயாராக உள்ளதாகவும் அவர் இதன்போது ஆணைக் குழுவின் உறுபினர்களிடம் சுட்டிக்காட்டினார்.\n21/4 உயிர்த்த ஞாயிறு தினம் இடம் பெற்ற தொடர் தற்கொலை தாக்குதல்கள்களை மையபப்டுத்தி அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவின் சாட்சி விசாரணைகள் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபவளாகத்தில் அமைந்துள்ள ஆணைக்குழுவில் இடம்பெற்று வருகின்றது. இந் நிலையில் கடந்த முதலாம் திகதி இரவு அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமாசபையின் தலைவர் அஷ்ஷெய்க் றிஸ்வி முப்தி, சிரேஷ்ட அரச சட்டவாது சுஹர்ஷி ஹேரத்தின் நெறிப்படுத்தலில் சாட்சியம் அளித்தார்.\nஇதன்போது உலமா சபை தலைவர் றிஸ்வி முப்தி சார்பில் சிரேஷ்ட சட்டத்தரனி ஜாவிட் யூசுப் ஆணைக் குழுவில் பிரசன்னமாகியிருந்தார்.\nஇந்நிலையில், உலமா சபை தலைவரிடம் சாட்சிப் பதிவுகள் ஹலால் சான்றிதழ் விவகாரத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டது. இதன்போது சிரேஷ்ட அரச சட்டவாதி சுஹர்ஷி ஹேரத்தின் கேள்விகளுக்கு பதிலளித்தவாறே அஷ்ஷெய்க் றிஸ்வி முப்தி, ஹலால் என்பது அனுமதிக்கப்பட்டது எனவும் ஹராம் என்பது விலக்கப்பட்டது எனவும் சாட்சியமளித்து அது தொடர்பில் நீண்ட விளக்கத்தை ஆணைக் குழுவுக்கு அளித்தார். அத்துடன் கடந்த 2006 ஆம் ஆண்டு டிசம்பர் 13 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை ஆணைக் குழுவுக்கு கையளித்த அவர், அதன் பிரகாரம் உலமா சபைக்கு ஹலால் சான்றிதழ் வழங்க சட்ட ரீதியிலான அங்கீகாரம் கிடைக்கப் பெற்றிருந்ததாக கூறினார்.\nஅரச சட்டவாதி: ஹலால் என்றால் என்ன\nறிஸ்வி முப்தி: ஹலால், ஹராம் என இரு விடயங்கள் உள்ளன. ஹலால் என்றால் ஆகுமானவை. சட்ட ரீதியானவை. ஹராம் என்றால் கூடாதவை, சட்ட விரோதமானவை. முஸ்லிம்களின் அன்றாட நடவடிக்கைகள், குடும்ப வாழ்க்கை, உணவு, பாவனைகள் அனைத்திலும் ஹலால் ஹராம் தாக்கம் செலுத்தும். உதாரணமாக தங்கம், முஸ்லிம்களை பொறுத்தவரை ஆண்களுக்கு ஹராம். அது பெண்களுக்கு ஆகுமானது. பன்றி முற்றிலும் ஹராம். ஹலால் என்பதன் வரை விலக்கணம் நீண்டது. உணவு, பான வகைகளுக்கும் அவ்வாறே ஹலால் விடயம் பொருந்தும், எவ்வாறாயினும் ஏற்பட்ட பல்வேறு நிலைமைகளை கருத்தில் கொண்டு கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் தமது சபை ஹலால் சான்றிதழ் வழங்கும் நடைமுறையை நிறுத்திக் கொண்டதாகவும், தற்போது அந்த செயற்பாட்டை எச்.ஏ.சி.நிறுவனம் முன்னெடுப்பதாகவும் அஷ் ஷெய்க் றிஸ்வி முப்தி குறிப்பிட்டார்.\nஅரச சட்டவாதி : வர்த்தமானி அறிவித்தல் பிரகாரம் ஜம்இய்யதுல் உலமாவுக்கு உணவு, பான வகைகளுக்கு மட்டுமே ஹலால் சான்றிதழ் கொடுக்க முடியும். அப்படி இருக்கையில் பல் துலக்கும் தூரிகைகளுக்கு எதற்கு ஹலால் சான்றிதழ்\nதொடர்ச்சி … இங்கே கிளிக் பண்ணவும்\nPrevious articleஇன்றைய தங்க விலை (12-10-2020) திங்கட்கிழமை\nNext articleமருதானையில் பாடசாலை மாணவனுக்கு கொரோனா\nஇலங்கையின் நெருக்கடியும், வர்க்கமும், நுகர்வும்\nமுஸ்லீம் தனியார் சட்டம், காதி நீதிமன்றம் – புரிந்துகொள்ளாத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2021/09/19/the-goat-thieves-were-caught-and-handed-over-by-the-public-to-the-police", "date_download": "2021-10-19T12:29:40Z", "digest": "sha1:WCM2S4RWKHK5K2PNXZIYAMFIS2RUOEPZ", "length": 6959, "nlines": 55, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "The goat thieves were caught and handed over by the public to the police", "raw_content": "\nஆடு திருட கூகுள் மேப் பயன்படுத்தும் நவீன கொள்ளை கும்பல்... தர்ம அடிகொடுத்த பொதுமக்கள்: நடந்தது என்ன\nபல இடங்களில் ஆடு திருடி வந்த கும்பலை பொதுமக்கள் பிடித்து போலிஸில் ஒப்படைத்தனர்.\nபுதுக்கோட்டை மற்றும் தஞ்சாவர் மாவட்டங்களில் சில மாதங்களாக தொடர்ந்து வீடுகளில் கட்டப்பட்டிருக்கும் ஆடுகள் திருடுபோவதாக போலிஸாருக்கு புகார்கள் குவிந்து வந்தன. இந்த புகார்கள் குறித்து போலிஸார் விசாரணை நடத்தி வந்தனர்.\nஇதையடுத்து கடந்த வாரம் புதுக்கோட்டை கீரமங்கலம் கிராமத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் ஆடுகளை திருடிச் சென்றபோது பொதுமக்களிடம் மாட்டிக்கொண்டனர். அப்போது அவர்களை பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலிஸில் ஒப்படைத்தனர்.\nபின்னர் போலிஸார் நடத்திய விசாரணையில், இருவரும் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த வல்லரசு, ராமநாதன் என தெரியவந்தது. மேலும் அவர்களை எங்களுக்கெல்லாம் தலைவர் ஆடு கடை போடும் ஒருவர்தான் என விசாரணையில் தெரிவித்துள்ளனர்.\nஇந்நிலையில் இன்று தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பகுதியில் ஆடுகளை திருடிய இருவரை பொதுமக்கள் பிடித்து விசாரணை நடத்தினர். இவர்களும் ஆடு கடை போடுபவர் சொன்னதால் திருட வந்ததாக கூறியுன்னர்.\nமேலும் ஆடுகளை திருடிவிட்டு விரைந்து கிராமத்தை விட்டு செல்வதற்காக கூகுள் மேப்பை பயன்படுத்துவாகவும் இந்த கொள்ளையர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து இவர்களை கைது செய்த போலிஸார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் யார் எந்த ஆடு கடை போடுபவர் என்பது குறித்தும் போலிஸார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nஃபேக் ஐடி அமுதா... 2 வருடங்களாக ஏமாற்றிய நபரை விஷம் வைத்துக் கொன்ற இளைஞர் - விசாரணையில் ‘பகீர்’ தகவல்கள்\n“எங்க கல்யாணத்த மழை வெள்ளம் தடுப்பதா.. நெவர்” : காதல் ஜோடி எடுத்த முடிவு - இணையத்தில் வைரல்\nசிறுநீரக கல்லுக்கு பதிலாக சிறுநீரகத்தையே அகற்றிய மருத்துவர்... நுகர்வோர் ஆணையத்தின் அதிரடி உத்தரவு\n“நாளை நம்மை காப்பாற்றிக்கொள்ள எந்த வாய்ப்பும் இருக்காது” : உலகிற்கு மாலத்தீவு சொன்ன அதிர்ச்சி செய்தி\nLKG படித்த சிறுமிக்கு பாலியல் தொல்லை.. ஆசிரியருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஐகோர்ட் அதிரடி\nLKG படித்த சிறுமிக்கு பாலியல் தொல்லை.. ஆசிரியருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஐகோர்ட் அதிரடி\n“எங்க கல்யாணத்த மழை வெள்ளம் தடுப்பதா.. நெவர்” : காதல் ஜோடி எடுத்த முடிவு - இணையத்தில் வைரல்\n“விரைவில் ஆழ்கடல் அகழாய்வுப் பணிகளைத் தொடங்க ஆலோசனை” : அமைச்சர் தங்கம் தென்னரசு முக்கிய தகவல்\nசிறுநீரக கல்லுக்கு பதிலாக சிறுநீரகத்தையே அகற்றிய மருத்துவர்... நுகர்வோர் ஆணையத்தின் அதிரடி உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.noolaham.org/wiki/index.php/The_Cooperator_1969.06.01_(8.4)", "date_download": "2021-10-19T13:00:38Z", "digest": "sha1:CNPVRYDVVVAKVA4HID5VOCZRJS4POXGM", "length": 2622, "nlines": 45, "source_domain": "www.noolaham.org", "title": "The Cooperator 1969.06.01 (8.4) - நூலகம்", "raw_content": "\nசுழற்சி மாதம் இரு இதழ்\nThe Cooperator 1969.06.01 (8.4) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [11,760] இதழ்கள் [13,280] பத்திரிகைகள் [53,303] பிரசுரங்கள் [1,125] நினைவு மலர்கள் [1,513] சிறப்பு மலர்கள் [5,516] எழுத்தாளர்கள் [4,874] பதிப்பாளர்கள் [4,171] வெளியீட்டு ஆண்டு [185] குறிச்சொற்கள் [91] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,157]\n1969 இல் வெளியான பத்திரிகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/church/news/2020-07/pakistan-church-condemns-violence-discrimination-minorities.print.html", "date_download": "2021-10-19T13:37:05Z", "digest": "sha1:TEQONAT5DYTMJT5P7WRAR6YHSDIWQCS6", "length": 5742, "nlines": 25, "source_domain": "www.vaticannews.va", "title": "சிறுபான்மையினர்க்கு எதிரான வன்முறைக்கு கண்டனம் - print - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nபாகிஸ்தான் ஆயர் பேரவையின் நீதி மற்றும் அமைதி அவையின் தலைவர் பேராயர் ஜோசப் அர்ஷத்\nசிறுபான்மையினர்க்கு எதிரான வன்முறைக்கு கண்டனம்\nபாகிஸ்தான் சமுதாயம், சகிப்பற்றத் தன்மையில் வளர்ந்துவருக���ன்றது. அந்நாட்டில் சிறுபான்மை குழுமங்கள் வாழ்வது மிகக் கடினமாக மாறிவருகின்றது - பாகிஸ்தான் ஆயர் பேரவையின் நீதி மற்றும் அமைதி அவை\nமேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்\nபாகிஸ்தானில் கோவிட்-19 கொள்ளைநோய் உருவாக்கியுள்ள கடினவாழ்வு மற்றும் கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும், அந்நாட்டில் சிறுபான்மையினர்க்கு எதிராக வன்முறைகளும், பாகுபாடுகளும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன என்று, அந்நாட்டு கத்தோலிக்கத் திருஅவை கவலை தெரிவித்துள்ளது.\nபாகிஸ்தான் நாட்டின் பேஷ்வார் காலனியில், முஸ்லிம்கள் மட்டுமே வாழ விரும்பும் பகுதியில், Nadeem Joseph என்ற கிறிஸ்தவர், வீடு வாங்கி, அவரது குடும்பம் அங்கு குடியேறியதைத் தொடர்ந்து, கடந்த ஜூன் மாதம் 4ம் தேதி ஜோசப் அவர்கள், முஸ்லிம்களால் கடுமையாய்த் தாக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், ஐந்துமுறை அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டும், அவை பலனின்றி, கடந்த ஜூன் 29ம் தேதி உயிரிழந்தார்.\nபாகிஸ்தான் ஆயர் பேரவையின் நீதி மற்றும் அமைதி அவையின் தலைவர் பேராயர் ஜோசப் அர்ஷத் அவர்களும், அந்த அவையின் தேசிய இயக்குனர் இம்மானுவேல் யூசாப் அவர்களும் இணைந்து, இந்த வன்முறையைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.\nகுற்றவாளிகள் நீதி விசாரணைக்கு உட்படுத்தப்படவேண்டும் என்றும், இந்த வன்முறை செயலுக்கு, சட்டத்தின்படி கட்டாயம் தண்டனை வழங்கப்படவேண்டும் என்றும், அவ்வறிக்கை கூறுகிறது.\nபாகிஸ்தான் சமுதாயம், சகிப்பற்றதன்மையில் வளர்ந்து வருகின்றது என்றும், அந்நாட்டில் சிறுபான்மை குழுமங்கள் வாழ்வது மிகக் கடினமாக மாறி வருகின்றது என்றும் கூறும் அவ்வறிக்கை, அண்மையில், இஸ்லாமபாத்தில் ஓர் இந்துக்கோவில் கட்டப்படுவதை, சில முஸ்லிம் தீவிரவாதிகள் தடுத்து நிறுத்தியதையும் சுட்டிக்காட்டியுள்ளது. (Fides)\nஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு\nஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.worldtamilchristians.com/dealstore/robert-roy/", "date_download": "2021-10-19T13:19:46Z", "digest": "sha1:DELCIQ6WVONXPPNK5ZCWTGXJR5H43KT3", "length": 19617, "nlines": 598, "source_domain": "www.worldtamilchristians.com", "title": "Robert Roy - WorldTamilchristians-The Collections of Tamil Christians songs and Lyrics", "raw_content": "\nMaravaar Yesu maravaar - மறவார் இயேசு மறவார் C minorமறவார் இயேசு மறவார் ஒரு இமைப்பொழுதிலும்உன்னை மறவார்மறவார் இயேசு மறவார்உன்னை உருவாக்கினதேவன் மறவார்-2 1.அழைத்தவர் உன்னை மறவார்அபிஷேகம் செய்தவர் ...\nBALIPEEDATHIL Worship Medley கல்வாரியின் அன்பினையேகண்டு விரைந்தோடி வந்தேன்-2கழுவும் உம் திரு இரத்தத்தாலேகரை நீங்க இருதயத்தை-2 பலிபீடத்தில் என்னைப் பரனேபடைக்கிறேனே இந்த வேளைஅடியேனை திருச்சித்தம் ...\nSuthikariyum suthikariyum – சுத்திகரியும் சுத்திகரியும்\nSuthikariyum suthikariyum - சுத்திகரியும் சுத்திகரியும் சுத்திகரியும் சுத்திகரியும்நிலைவரமான ஆவியால் நிரப்பும் உம் இரட்சண்ய சந்தோஷத்தை தாரும்உம் ஆவி என்னை தாங்கிட செய்யும் என்னை கழுவும் உம் ...\nEn Muzhumaiyum Athu Umakku – என் முழுமையும் அது உமக்கு\nEn Muzhumaiyum Athu Umakku - என் முழுமையும் அது உமக்கு என் முழுமையும் அது உமக்குத்தான்தேவா நீர் எடுத்துக்கொள்ளும்என்னை படைக்கிறேன் படைக்கிறேன்புதிதாக்கும் புதிதாக்கும்-2 தேவனே என் தேவனேஎன்னையே ...\nஉம் பிரசன்னம் நிறைவானதே -Um prasanam niraivaanadhae\nஉம் பிரசன்னம் நிறைவானதேஉம் பிரசன்னம் குறைவற்றதே எல்ஷடாய் சர்வ வல்லவரே எல்ரோஹி என்னை காண்பவரே - ஆராதனை (4) குறைவுகளில் நிறைவானவர் தேவைகளுக்கெல்லாம் மேலானவர் தம்மண்டை வருவோரை தள்ளாதவர் தேற்றிடும் ...\nLyricsஅக்கினி மயமானவரேஅரியணையில் வீற்றிருப்பவரே (2)அக்கினி நதியாக அபிஷேகம் பாயுதேஊற்றுமே ஆவியை (2) வல்லமை வேண்டுமே வரங்கள் வேண்டுமேஉலகத்தை கலக்கிட உம்பெலன் வேண்டுமே (2)என் பாத்திரம் நிரம்பி ...\nஇயேசுவே உம்மை உயர்த்திடுவேன் -Yesuve Ummai Uyathiduven\nஇயேசுவே உம்மை உயர்த்திடுவேன்என் நேசரே உம்மைப் பாடுவேன்நீர் செய்த எல்லா நன்மைகட்காகஉமக்கே ஆராதனை உமக்கே ஆராதனை-ஐயா நீர் தான் என் தஞ்சமேநீர் தான் என் கோட்டையேதுன்ப வேளையில் தூக்கி என்னைதோளில் சுமந்தவரே ...\nஒருபோதும் விலகிடார்-Oru Pothum Vilagidaar\nஒருபோதும் விலகிடார்ஒருநாளும் கைவிடார்-2வழி காட்டும் தெய்வம் உண்டுவிழியற்ற என் வாழ்விலே-2 இருள் யாவும் நீக்கிடுவார்புது வாழ்வு தந்திடுவார்-2 1.கஷ்ட நஷ்டங்கள் சூழ்ந்த போதும்துன்பம் தொல்லைகள் ...\nஜெபம் கேட்டார் பதில் தந்தார்-Jebam kaetar bathil thandhar\nஜெபம் கேட்டார் பதில் தந்தார்தம் கிருபையினால் காத்துக் கொண்டார் அவர் இரக்கம் உள்ளவரே, மனதுருக்கம் உடையவரேஅவர் சாந்தமுள்ளவரே, அவர் கிருபை நிறைந்தவரே ஆராதிப்பேன் உம்மை என்றுமே நாளெல்லாம் துதிப்பேன் ...\nஎலியாவின் நாட்களில்பெரும் காரியம் செய்த தேவன்எங்களின் இந்த நாட்களில்பெரும் காரியம் செய்திடுவார் எலியாவின் தேவன் அவர் எங்கள் தேவன்அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் 1. அதிகார ...\nஎஜமானனே எஜமானனே -Ejamaananae Ejamaananae எஜமானனே (2)உம் சேவைக்காய் என்னை அழைத்தீர் – 2 அழியும் என் கைகளை கொண்டுஅழியா உம் ராஜ்ஜியம் கட்டபைத்தியமான என்னை தெரிந்தெடுத்தீர்அழியும் என் உதடுகள் ...\nஉம்மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள்ளேஎன்னை அழைத்து செல்கின்றீரேஉந்தனின் மகிமையை நானும் கண்டுஆராதிக்கச் செய்கின்றீர் (2) அழைத்து செல்கின்றீர்உம்மை தரிசிக்க வைக்கின்றீர் (2)பரிசுத்த கரங்களினால்உம்மை ...\nகொல்கதா மலை பாதையில் கொடும் பாவங்கள் சுமந்து செல்பவரே ஏன் நேசர் இயேசு தானோ என்ன சொல்லி நான் அழுதிடுவேன் 1.என்ன தவறு செய்தார் இவர் ஏன் சிலுவையை இவரே சுமக்கின்றாரே அழகான இவரின் அழகான அடிகள் ஏற்பதும் ...\n1. நிறைவான ஆவியானவரேநீர் வரும்போது குறைவுகள் மாறுமேநீர் வந்தால் சூழ்நிலை மாறுமேமுடியாததும் சாத்தியமாகுமே நிறைவே நீர் வாருமேநிறைவே நீர் வேண்டுமேநிறைவே நீர் போதுமேஆவியானவரே 2. வனாந்திரம் வயல் வெளி ...\nஎன்னை உம் கையில்படைத்தேன் முழுவதுமாய்என்னையும் பயன்படுத்தும் (2) குயவன் நீர் களிமண் நான்உம் சித்தம் நிறைவேற்றுமே (2) என்னை உம் கையில்படைத்தேன் முழுவதுமாய்என்னையும் பயன்படுத்தும் (2) தவறிய பாத்திரம் ...\nஉந்தன் சித்தம் போல் நடத்தும்கர்த்தாவே நீர் நித்தம் என்னைஎந்தன் சித்தம் போல வேண்டாம்என் பிதாவே என் யெகோவா இன்பமான வாழ்க்கை வேண்டேன்இனிய செல்வம் சீரும் வேண்டேன்துன்பமற்ற சுகமும் வேண்டேன்நின் தொண்டு ...\nநீர் என் சொந்தம் நீர் என் பக்கம்துன்ப வேளைகளில்ஆழியின் ஆழங்களில் ஆனந்தம் நீர் எனக்குசூரைச் செடியின் கீழிலும்உம் சமூகம் என்னைத் தேற்றிடுமே 1. வறண்ட பாலைவன வாழ்க்கையில்தாகத்தால் என் நாவு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2019/06/blog-post_23.html", "date_download": "2021-10-19T13:09:23Z", "digest": "sha1:I5ZKBXSFO3MM7OF4OKDSHUY3K5ICIT6N", "length": 23431, "nlines": 202, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: அரசு ஊழியர் யார்?", "raw_content": "\nதமிழ்நாடு அரசு ஊழியர் நடத்தை விதிகள்,1973 பிரிவு.2(3)-ன் படி, ஒரு அரசு ஊழியர்கள் என்பவர் அரசு தன் ஆட்சியின் காரியங்களை ஆற்ற பணி அல்லது பதவிக்கு அமர்த்தும் நபர் என வரையறுக்கபடுகின்றத��. இது இந்திய ஆட்சிப் பணியிலிருந்து (I.A.S) கடைநிலை ஊழியர் வரை பொருந்தும்.\n”Officer” என்பது அலுவலர் அதாவது அலுவல்களை செய்பவர் ஆவார். ”Minister’ என்பது செயலாற்றுப் பணியாளர், என பொருள்படும். ”அமைச்சு’ என்றால் பணி செய்தல், உதவியாயிருத்தல், கொடுத்துதவுதல் என பொருள். அதிகாரி என்றால் அரசு நிர்வாகத்தில் ஆனைகளை நடைமுறைபடுத்தும் பொறுப்பிலுள்ள அலுவலர் என பொருள். ஆக அனைத்தும் மக்களுக்கு பணி செய்யவே ஒழிய. அதிகாரி என அதிகாரம் செய்தல் சட்ட விரோதம் ஆகும்.\nதமிழ்நாடு அரசு ஊழியர்களை வகைப்படுத்தல்: (Classification of Government Employees)\nஅரசு ஊழியர்கள்/ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் தர ஊதியத்தை (Grade Pay) அடிப்படையாகக் கொண்டு அரசு ஊழியர்கள், அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களை கீழ்கண்டவாறு வகைப்படுத்துகிறது..\n1. தர ஊதியம் (Grade Pay) ரூபாய் 6,600ம் அதற்கு மேலும் பெறும் அரசு அலுவலர்களை வகை l (கிரேடு) என்றும், (முன்பு A Class)\n2. தர ஊதியம் ரூபாய் 4,400 முதல் 6,600க்குள் பெறும் அரசு அலுவலர்கள்/ஆசிரியர்களை வகை II (கிரேடு) என்றும், ( முன்பு B Class)\n3. தர ஊதியம் ரூபாய் 4,400க்கு கீழ் பெறும் அரசு ஊழியர்கள்/ஆசிரியர்களை வகை III & lV (கிரேடு) என்றும் பிரிக்கப்படுகிறது. (முன்பு C & D Class).\nஅரசு ஊழியர் பெறும் சம்பளம்\nஅடிப்படை சம்பளம்( Basic salary), பஞ்சப்படி எனும் அகவிலைப்படி(Dearness Allowances), பயணப்படி (Travelling Allowances), வீட்டுவாடகை படி (House allowance), அரசு ஊழியர் ஆரோக்கிய இன்சூரன்ஸ் திட்டம் (Govt. Employees Health Fund Scheme), வருங்கால வைப்பு நிதிக்கு பங்களிப்பு (provident fund) பொங்கல் பரிசு (Pongal Gift), விழா முன்பணம்(Festival Advance), மருத்துவ படி (Medical Allowance) விடுப்பு பணம்(Encashment of Leave) ஓய்வூதியம், இன்னும் பல\nமாநில அரசின் மொத்த வருவாயில் மாநில வரிவருவாய் ரூ. 99,590.13 கோடி வரி அல்லாத ஏனைய வருவாய் 12,318. கோடியில் ரூ.66,908 அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியதிற்கும் செலவிடப்படுகிறது.\nஆதி திராவிடர் (ம) பழங்குடியினர் நலத் துறை, வேளாண்மை துறை,கால்நடை பராமரிப்பு, பால்வளம் (ம) மீன்வளத் துறை, பிற்படுத்தப்பட்டோர் நலம் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை\nகூட்டுறவு,உணவு (ம) நுகர்வோர் பாதுகாப்பு துறை, வணிகவரி மற்றும் பதிவுத்துறை\nஎரிசக்தி, சுற்றுச்சூழல் (ம) வனத்துறை, நிதி துறை, கைத்தறி, கைத்திறன், துணிநூல் (ம) கதர்த்துறை\nமக்கள் நல்வாழ்வு (ம) குடும்பநலத்துறை, உயர்கல்வி துறை,நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் து��ை, உள், மதுவிலக்கு (ம) ஆயத்தீர்வை துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, தொழில் துறை, தகவல் தொழில் நுட்பவியல் துறை, தொழிலாளர் (ம) வேலைவாய்ப்பு துறை, சட்டத்துறை, நகராட்சி நிர்வாகம் (ம) குடிநீர் வழங்கல் துறை பணியாளர் (ம) நிருவாகச் சீர்திருத்தத் துறை, திட்டம்,வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை, பொது துறை, வருவாய் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, பள்ளிக் கல்வி துறை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை, சமூக நலம் (ம) சத்துணவுத் திட்டத் துறை, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை, சுற்றுலா,பண்பாடு மற்றும் இந்து சமய அறநிலையத் துறை, போக்குவரத்து துறை, இளைஞர் நலன் (ம) விளையாட்டு மேம்பாட்டுத்துறை மாற்றுத் திறனாளிகள் நலத் துறை, பொது (தேர்தல்கள்) துறை,பொதுப்பணி துறை. இத்தனை துறைகளில் ஊழியர்கள் உண்டு.\nதமிழ்நாடு அரசு ஊழியர் நடத்தை விதிகள்,1973 சொல்வது என்ன\nதமிழ்நாடு அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள், ஆசிரியர்கள், சீருடை பணியாளர்கள் மற்றும் அரசு உதவி பெறும் கல்விக்கூட ஆசிரியர்கள் மற்றும், மாநில அரசிடம் ஊதியம் பெறும் சட்ட சபை உறுப்பினர்களும், அமைச்சர்களும், வாரியத்தலைவர்களும் அரசு ஊழியர்கள் ஆவார். எனவே இவர்களும் தமிழ்நாடு அரசு ஊழியர் நடத்தை விதிகளுக்கு உட்பட்டவர்களே.\nஎந்த அரசு ஊழியரும் வரதட்சணை கொடுக்கவோ, பெறவோ கூடாது.\nஎந்த அரசு ஊழியரும் தனியார்களின் கௌரவ விழா, ஓய்வி விழா, நிறுவனங்கள், பொதுமக்கள் அவர்களுடன் புகைப்படம் எடுப்பது போன்ற செயல்களை அரசின் முன் அனுமதியின்றி செய்தல் கூடாது.\nஎந்த அரசு ஊழியரும் பங்குச் சந்தையில் ஈடுபடுதல், வேறு முதலீடுகள் செய்தல், தன் சார்பாக குடும்ப உறுப்பினர்களை ஈடுபடச் செய்தல், எந்த தொழில், வியாபாரம் போன்றவற்றில் ஈடுபடுதல் போன்றவற்றை செய்தல் கூடாது.\nஎந்த அரசு ஊழியரும் அரசின் அனுமதியின்றி யாருக்கும் 10,000 ரூபாய்க்கு மேல் அசையும் சொத்தை குத்தகை, அடமானம், வாங்குதல், விற்றல், கொடை செய்தல், பரிமாற்றம் செய்தல் போன்றவற்றை அரசின் அனுமதியின்றி செய்தல் கூடாது.\nஎந்த அரசு ஊழியரும் அரசின் அனுமதியின்றி எந்த வியாபாரம், தொழிலில் ஈடுபடக்கூடாது.\nஎந்த அரசு ஊழியரும் அரசின் அனுமதியின்றி நாளிதழ், தொலைக்காட்சி, வானொ���ி பிரசுரம் போன்றவற்றை ஈடுபடுதல் கட்டுரை வரைதல் செய்தல் கூடாது.\nஎந்த அரசு ஊழியரும் அரசின் அனுமதியின்றி பொதுவிழாவில் நடந்த விசயங்களை, கருத்தை சொல்லக் கூடாது. அரச்சின் கொள்கைகள், அரசு பரிபாலனம், அரசின் மற்ற அரசுகளுடனான உறவுகள் பற்றி பேசுதல் கூடாது. அலுவலகம் சாராத கூட்டங்களில் கலந்து கொள்ளுதல், தலைமை ஏற்றல் கூடாது.\nஎந்த அரசு ஊழியரும் தன் குடும்ப உறுப்பினர்கள் அரசியலில் ஈருபடுதலை தடுக்க வேண்டும்.\nஎந்த அரசு ஊழியரும் மதம், இனம், இடம், பிறந்த இடம், குடியிருப்பு, மொழி, ஜாதி சம்மந்தமான எந்த அமைப்பிலும் உறுப்பினராகவோ, சம்மந்தப்பட்டோ இருத்தல் கூடாது\nஎந்த அரசு ஊழியரும் நெருங்கிய சொந்தங்கள் தங்களுக்கு கீழ் பணிபுரியவோ, தன் பணி சம்மந்தப்பட்ட தனியார் நிறுவனத்தில் பணியமர்ந்திருப்பதையோ அனுமதிக்கக் கூடாது.\nஎந்த அரசு ஊழியரும் முழுமனதுடன், முழு ஈடுபாட்டுடன் பணியில் இருக்க வேண்டும்.\nஎந்த அரசு ஊழியரும் பெண் பணியாளர்களுக்கு பாலியல் தொந்திரவு கொடுத்தல், பாலியல் ஆசையை முன்மொழிதல், தொடுதல், கேட்டல், வேண்டல், சைகை, ஆபாசப்படம் காட்டுதல் போன்ற தேவையற்ற காரியங்களில் ஈடுபடக் கூடாது.\nஎந்த அரசு ஊழியரும் அரசின் அனுமதியின்றி அலுவலக நேரத்தில் அல்லது அலுவலின் போது குடித்திருக்கக் கூடாது.\nஅரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்யலாமா\n அரசியலமைப்புச் சட்டம் ஷரத்து.19.(1)(c) அமைப்புகள் மற்றும் சங்கங்கள் வைத்துக் கொள்ள உரிமை அளிக்கிறது.\n ஆனால் ஷரத்து 19(4) இன் படி ”இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு அல்லது பொது ஒழுங்கு அல்லது ஒழுக்கத்தின் மீது அக்கரை கொண்டு, சொல்லப்பட்ட உரிமையில் நியாயமான கட்டுப்பாட்டை விதிக்கக் கூடிய நடைமுறையிலுள்ள சட்டம் எதையுமோ அரசு இயற்றிய உட்கூறுகள் பாதிக்கக் கூடாது.\n O.K.Ghosh Vs.E.X.Joseph, AIR 1963 SC 812 என்ற வழக்கில் சங்கங்கள் அமைப்புகளுக்கு உரிமை கொடுக்கப்பட்ட உரிமை ஒரு உத்திரவாதமான உரிமை என கொள்ள முடியாது, தகுந்த காரணங்கள்: இருப்பின் அவை திரும்பப் பெறப்படும் என் தீர்ப்பளித்துள்ளது.\n தமிழ்நாடு அரசு ஊழியர் நடத்தை விதிகள்,1973 விதி-16 இன் படி எந்த அரசு ஊழியரும் அரசின் அனுமதியின்றி சங்கத்தில் அமைப்பில் உறுப்பினராக இருக்கக் கூடாது. விதி-22-A இன் படி அலுவலக நேரத்தில், அலுவலக வளாகத்தில் ஊர்வலம் கூட்டங்கள் நடத்தகூடாதென சொல்லப்பட்டுள்ளது.\nமேலும் All India Bank Employees’s Association Vs. National Industrial Tribunal என்ற வழக்கில் உச்ச நீதிமன்றம், “ வேலைநிறுத்தம் என்பது அரசியலமைப்பு சட்டம் ஷரத்து-19-இன் படி அடிப்படை உரிமையில்லை, ஊழியர்கள் தங்கள் கோரிக்கையை குறிப்பிட்ட எல்லைக்குள் வெளிப்படுத்தலாம் எனவும், தங்கள் குறைகளை வேலைநிறுத்தல் என்ற உரிமையை கோரமுடியாது எனவும் தீர்ப்பளித்தது.\nஎப்படியாவது அரசு வேலைக்கு செல்வது என பெரு முயற்சி எடுத்து சேர்ந்து, அரசின் அத்தனை பணப்பலன்களையும் பெற்று பணிக்கு வந்தது மக்கள் பணி ஆற்றவே. 2002ல் தமிழகத்தில் டெஸ்மா (Tamil Nadu Essential Services Maintenance Act (TESMA), 2002) போன்ற சட்டத்தை இயற்றப்பட்டது.\nமேலும், ஊழியர்கள், அலுவலர்கள் வரும் நேரம், செல்லும் நெரம், அலுவலர்கள் கள ஆய்வு செல்லும் இடம் நேரம்,என அனைத்து பணிகளைச் குறிப்பிடும் மாவட்ட அலுவல கையேடு(District Office Manual), அரசு ஊழியர் நடத்தை விதிகள்(the tamil nadu government servants' conduct rules, 1973), தமிழ்நாடு அரசு சார்நிலை ஊழியர்கள் பணி விதிகள்(tamilnadu government subordinate service rules) என ஒவ்வொரு துறைக்கும் உள்ள பணிவிதிகளை அனைவரும் தெரிந்து அதன்படி நடந்தால் அரசு இயந்திரம் சிறக்கும்\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nயார் இந்த ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்... அப்படி என்ன சிறப்பு இவருக்கு\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nதிறனாய்வுத் தேர்வு - STUDY MATERIALS\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2019/06/pg-teacher-to-higher-sec-school-hm.html", "date_download": "2021-10-19T12:15:41Z", "digest": "sha1:AFJ75IFUIDICTYBD23RJINHM7BELX6ZB", "length": 4422, "nlines": 141, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: PG TEACHER TO HIGHER SEC SCHOOL HM - TENTATIVE PANEL LIST PUBLISHED ( Date : 19.06.2019 )", "raw_content": "\n01.01.2019 நிலவரப்படி அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்விற்கான உத்தேச தேர்ந்தோர் பட்டியல் ( முதுகலை ஆசிரியர்கள்) நாள் : 19.06.2019.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nயார் இந்த ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்... அப்படி என்ன சிறப்பு இவருக்கு\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nதிறனாய்வுத் தேர்வு - STUDY MATERIALS\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://indcricketnews.com/ipl-2021-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2021-10-19T11:36:00Z", "digest": "sha1:DUWBOIMMVT7CZGJOOMMB7OAQ4B5AP2CG", "length": 8056, "nlines": 49, "source_domain": "indcricketnews.com", "title": "IPL 2021: பயிற்ச்சி ஆட்டத்தில் சதம் அடித்து விலாசிய ஏபி டிவில்லியர்ஸ்... - Indcricketnews", "raw_content": "\nIPL 2021: பயிற்ச்சி ஆட்டத்தில் சதம் அடித்து விலாசிய ஏபி டிவில்லியர்ஸ்…\nஅமீரகம்: இந்திய மண்ணில் நடைபெற்று வந்த 14 வது ஐபிஎல் போட்டி கொரோனா காரணமாக தடைபட்டது. எனவே தற்பொழுது, இரண்டாவது பகுதி ஆட்டம் வரும் செப்டம்பர் மாதம் 19-ம் தேதியில் ஐக்கிய அரபு அமீரகத்தில் துவங்கவுள்ளது. போட்டிக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் அனைத்து ஏற்ப்பாடுகளும் பரபரப்பாக நடைபெற்று வருகின்றது.\nஆகையால் அனைத்து அணிகளும் தங்களது பயிற்ச்சியை அமீரகத்தில் உள்ள மைதானத்தில் துவங்கி கடின உழைப்பை மேற்க்கொண்டு வருகின்றனர். இதில் சென்னை “சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு பிறகு அனைவரையும் கவர்ந்த அணியாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணி உள்ளது”.\nகேப்டன் விராட் கோலியின் சிறப்பான தலைமையின்கீழ் இந்த அணி விளையாடி வருகிறது. இந்நிலையில் பயிற்ச்சி ஆட்டத்தின்போது தேவ்தத் பட்டிக்கல் தலைமையில் ஒரு அணியும், ஹர்ஷல் பட்டேல் தலைமையில் மற்றொரு அணியுமாக பிரிந்து விளையாடினார்கள். கடினமாக நடந்த இந்தப் போட்டியில் சீனியர் வீரரான டிவில்லியர்ஸ் அனல் பறக்கும் 360 டிகிரி வெயிளிலும் கூட சதம் விளாசி அசித்தியுள்ளார��. வயசு ஆனாலும் உங்களது ஸ்டைல் இன்னும் மாறவில்லை என்று இரசிகர்கள் இதை ட்ரெண்டிங் ஆகி வருகிறார்கள்.\nஇவர் அனைத்து வித சர்வதேச போட்டிகளில் இருந்து ஒய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் ஓய்வுக்கு பிறகு 4 மாத காலமாக எந்தவொரு போட்டியிலும் கலந்து கொள்ளாமல் இருந்து வந்தார். பல நாட்களுக்குப் பிறகு விளையாடினாலும் தனது ஃபார்மில் மாற்றம் ஏதும் இல்லை என நிறுபித்துக் காட்டியுள்ளார்.\nஇந்த பயிற்ச்சியின் ஆரம்பத்தில் 19 பந்துகளுக்கு 19 ரன்கள் மட்டும் எடுத்திருந்தாலும் அதன் பிறகு 46 பந்துகளில் 104 ரன்கள் எடுத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். இதில் 10 சிக்ஸர்களும் 4 பவுண்டரிகளும் அடங்கும். பயிற்ச்சி ஆட்டமாக இருந்தாலும் சதம் அடித்து தன்னை நிரூபித்துள்ளார். வரவிருக்கும் போட்டிகளில் விளையாட, தான் தயாராக உள்ளதாக கூறுவதுபோல் ஆக்ரோஷமான விளையாட்டை வெளிப்படுத்தி இருக்கிறார்.\nராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தற்பொழுது ஸ்கோர் போர்டில் 3-ம் இடத்தில் உள்ளனர். இந்த அணியில் டிவில்லியர்ஸ் தவிர மேலும் சில முன்னணி வீரர்களான யுவேந்திர சாஹல், ஹசரங்கா, கெயில் ஜேமிசன், மற்றும் முகமது சிராஜ் போன்றோர்களும் நல்ல ஃபார்மில் உள்ளதாக கூறுகிறார்கள்.\nஎனவே மற்ற போட்டிகளைப் போல் அல்லாமல் இனிவரும் போட்டிகளில் பெங்களூரு அணி வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது\nBe the first to comment on \"IPL 2021: பயிற்ச்சி ஆட்டத்தில் சதம் அடித்து விலாசிய ஏபி டிவில்லியர்ஸ்…\"\nடி 20 உலகக்கோப்பை 2021: இங்கிலாந்து அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.\nடி20 உலகக் கோப்பை: விராட்கோலிக்காக உலகக்கோப்பையை வென்று ஆக வேண்டுமென இந்திய அணி வீரர்களிடம் சுரேஷ் ரெய்னா கேட்டுக்கொண்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://punkayooran.blogspot.com/2011/02/", "date_download": "2021-10-19T12:00:18Z", "digest": "sha1:3RMUI6JVKXHYYEM32X6E2DUG2MDSBHBO", "length": 6075, "nlines": 92, "source_domain": "punkayooran.blogspot.com", "title": "பகிர்வுகள்: February 2011", "raw_content": "\nமல்லிகை வாசம் மனத்தை நிறைத்தது.\nகாக்கைகள் கரையல் காதைக் கிழிக்க\nமாட்டு வண்டில்கள் வீதியில் போயின.\nகோவில் மணிகள் தாங்களும் ஒலித்துத்\nதங்கள் இருப்பையும் காட்டிக் கொண்டன.\nபயணக் களைப்புக் கொஞ்சம் குறையத்\nதம்பையர் மனமும் ஊருக்கு வந்தது.\nஇருபது வருஷம் எப்படிப் போட்டுது.\nநம்ப முடியாமல் தம்பையர் திகைத்தார்.\nகடலைப் பார்க்கத் தம்பையர் நடந்தார்.\nபோயிலைத் தோட்டங்கள் தொலைந்து இருந்தன.\nபுகைக்குடிசைகள் பாதியாய் நின்றன .\nபழைய துலாக்கள் பாறிப் போயின.\nகுழம்பிய படியே தம்பையர் நடந்தார்.\nமுள்ளிப் பத்தையில் சுட்ட நண்டுகள்\nநினைவில் மட்டும் வந்து போயின.\nகோவில் மட்டும் வெள்ளையும் சிவப்புமாய்\nபுதிசு போல நிமிர்ந்து நின்றது.\nதென்னை மரங்கள் உயிரை இழந்து\nகடலுக்குள் யாரோ மீன் பிடித்தார்கள்.\nவீசிய வலையில் தூசிகள் வந்தன\nதடியில் தொங்கிய ஓலையும் பாயும்\nகாற்றில் அசைந்து வெறுமையைக் காட்டின.\nசலித்த உருவம் கரைக்கு வந்தது\n'தம்பியை எங்கோ கண்ட மாதிரி'\nசுயமாய் வந்தது சுக விசாரணை\n'தம்பையன், என்னை மறந்து போட்டியே'\n'கனகாலம் தம்பி, வீட்டுக்கு வாவன்'\nகனிவாய் இனித்தது, அவனது அழைப்பு.\nவீட்டில் எந்த மாற்றமும் இல்லை.\nஅன்றைக்குப் போலவே இன்றைக்கும் இருந்தது.\n'தம்பி, என்ன தண்ணி சுடுகுதோ\nஅவனது கேள்வியில் அக்கறை தெரிந்தது.\nஅலட்டி முடிந்து கிளம்பும் நேரம்\nபொல்லாத கோவம் அவனுக்கு வருமாம்.\nகாசைக் கொடுத்தேன். வாங்க மறுத்தான்\nஅவனது பார்வையில் அக்கினி தெரிந்தது.\nபட்டினி என்று பல்லவி பாடுறான்.\nஎந்தன் கண்களில் கண்ணீர் துளிர்த்தது\nபாரியின் தேர்க்கதை நினைவுக்கு வந்தது\nஆயிரம் தேர்கள் அவனிடம் இருந்தது.\nஎன்னிடம் நானே கேட்கின்ற கேள்வி.\nஎதையோ ஒன்றை இழந்து விட்டேனா\nமுள்ளி வாய்க்கால் விட்டுச் சென்ற தடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akuranatoday.com/31784/", "date_download": "2021-10-19T11:43:12Z", "digest": "sha1:H2R4T63NWX6ED3HV4RS6XPG4V6Y2SAPP", "length": 6421, "nlines": 82, "source_domain": "www.akuranatoday.com", "title": "ஐ.தே.கட்சி ரணிலின் பரம்பரையில் வரும் நபர்களின் சொத்தாக மாறிவிட்டது. நான் வெறுப்படைந்துள்ளேன். - Akurana Today", "raw_content": "\nஐ.தே.கட்சி ரணிலின் பரம்பரையில் வரும் நபர்களின் சொத்தாக மாறிவிட்டது. நான் வெறுப்படைந்துள்ளேன்.\nஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவம் ரணில் விக்ரமசிங்கவின் பரம்பரையில் இருந்து\nவரும் நபர்களின் சொத்து போல் கிடைக்கும் நிலைமையை காணக்கூடியதாக இருப்பதால், அது குறித்து தான் மிகவும் வெறுப்படைந்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.\nஐக்கிய தேச���யக் கட்சியின் பிரதித் தலைவரை தெரிவு செய்யும் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தின் பின்னர் அண்மையில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.\nதலைவர் பதவி பரம்பரை சொத்து போல் ஒவ்வொருவர் கைகளுக்கும் செல்லுமாயின், கட்சியினை அவர்களிடம் ஒப்படைத்து விட்டு ஒதுங்கி இருப்பது நல்லது. ஐக்கிய தேசியக் கட்சி மக்களின் கட்சி.\nஅதனை விடுத்து இது என்னுடைய கட்சியோ, ருவான் விஜேவர்தனவின் கட்சியோ, ரணில் விக்ரமசிங்கவின் கட்சியோ அல்ல. இது அனைவருக்கும் சொந்தமான கட்சி.\nதலைவர் பதவிக்கு பரம்பரையில் வரும் நபர்களை தெரிவு செய்யக்கூடாது. தமது உறவினர்கள், ஆதரவாளர்களுக்கு வழங்கும் முறை முன்னெடுக்கப்படுகிறது. இது குறித்து நான் வெறுப்படைந்துள்ளேன்.\nஐக்கிய தேசியக் கட்சியை பணம் இருக்கும் நபர் பொறுப்பேற்க வேண்டும் என்ற கதையும் பேசப்படுகிறது.\nதேர்தலில் போட்டியிடாத ஒரு அணியும் இருக்கின்றது. இது மிகவும் மோசமான நிலைமை. இந்த நிலைமை மாற வேண்டும் என நான் நினைக்கின்றேன் என அர்ஜூன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.\nதினமும் அக்குறணை வைத்தியர்கள், ஜனாஸா, தொழுகை நேரம், பாடசாலை விபரங்களை SMS மூலம் பெற்றுக் கொள்ள, கீழே உள்ள பட்டன் ஐ அழுத்தி SMS பண்ணவும் **\n* Akurana Prayer Time (அக்குறணை தொழுகை நேரம்)\n* Akurana Breaking News (அக்குறணை முக்கிய செய்திகள்)\n* Janaza News (ஜனாஸா அறிவித்தல்கள்)\n* Akurana Sales & Discounts (சலுகை/ தள்ளுபடி செய்திகள்)\nPrevious articleவீதி விதிமுறைகளை மீறும் சாரதிகளுக்கு 2000 ரூபா அபராதம்\nNext articleஞானசார தேரர் உள்ளிட்ட மூவருக்கு எதிரான வழக்கு…. நீதிமன்றத்தின் தவிசாளர் ஏ.எச்.எம்.டீ. நவாஸ் விலகினார் .\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலை ஆட்சியை கைப்பற்ற அரசு பயன்படுத்தியது\nஉலமா சபை எமது கேள்விகளுக்கு பதில் தரவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/ezetimide-p37103771", "date_download": "2021-10-19T12:45:11Z", "digest": "sha1:QIUVQCTEYO7EMUFPMHSUFD6XFW56TD7Q", "length": 29407, "nlines": 327, "source_domain": "www.myupchar.com", "title": "Ezetimide in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Ezetimide payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nமருந்து பதிவேற்றவும், ஆர்டர் செய்யவும்\nசரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Ezetimide பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இ��ு தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Ezetimide பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Ezetimide பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்ப காலத்தில் Ezetimide-ன் தாக்கம் எப்படி இருக்கும் என்பது தெரியவில்லை, ஏனென்றால் இன்றய தேதி வரை எந்தவொரு ஆராய்ச்சியும் செய்யப்படவில்லை.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Ezetimide பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு மிதமான பக்க விளைவுகளை Ezetimide ஏற்படுத்தலாம். நீங்கள் பக்க விளைவுகளை உணர்ந்தால், இந்த மருந்தை எடுத்துக் கொள்வதை நிறுத்தி விட்டு உங்கள் மருத்துவரை சந்திக்கவும். உங்கள் மருத்துவர் அறிவுறுத்தினால் மட்டுமே அதனை மீண்டும் எடுக்கவும்.\nகிட்னிக்களின் மீது Ezetimide-ன் தாக்கம் என்ன\nEzetimide-ஆல் சிறுநீரக பாதிக்கப்படலாம். இந்த மருந்தை பயன்படுத்துவதால் நீங்கள் ஏதேனும் தேவையற்ற விளைவுகளை சந்தித்தால், அதனை எடுத்துக் கொள்வதை நிறுத்துங்கள். மருத்துவ அறிவுரைக்கு பின்பே அவற்றை மீண்டும் நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.\nஈரலின் மீது Ezetimide-ன் தாக்கம் என்ன\nEzetimide கல்லீரல் மீது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தலாம். அத்தகைய விளைவு ஏற்பட்டதாக நீங்கள் உணர்ந்தால், இந்த மருந்தை எடுத்துக் கொள்வதை நிறுத்துங்கள். மருத்துவரின் அறிவுரைக்கு பின் மீண்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.\nஇதயத்தின் மீது Ezetimide-ன் தாக்கம் என்ன\nஇதயம் மீது குறைவான பக்க விளைவுகளை Ezetimide ஏற்படுத்தும்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Ezetimide-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Ezetimide-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Ezetimide எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Ezetimide உட்கொள்ளுத���் உங்களை அதற்கு அடிமையாக்கும் சான்று எதுவுமில்லை.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nEzetimide மயக்கத்தையோ அல்லது தூக்கத்தையோ ஏற்படுத்தாது. அதனால் நீங்கள் வாகனத்தை ஓட்டலாம் அல்லது இயந்திரத்தை இயக்கலாம்.\nஆம், ஆனால் Ezetimide-ஐ உட்கொள்வதற்கு முன்பாக மருத்துவரை கலந்தாலோசிப்பது முக்கியமாகும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஇல்லை, Ezetimide மனநல கோளாறு சிகிச்சைக்கு பயன்படாது.\nஉணவு மற்றும் Ezetimide உடனான தொடர்பு\nகுறிப்பிட்ட சில உணவுகளுடன் Ezetimide எடுத்துக் கொள்வது அதன் தாக்கத்தை தாமதப்படுத்தும். இதை பற்றி உங்கள் மருத்துவரிடம் பேசுங்கள்.\nமதுபானம் மற்றும் Ezetimide உடனான தொடர்பு\nஇந்த பொருளை பற்றி ஆராய்ச்சி மேற்கொள்ளப்படாததால், Ezetimide மற்றும் மதுபானத்தை ஒன்றாக எடுத்துக் கொள்வதன் பற்றிய தகவல் இல்லை.\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.nitharsanam.net/218114/news/218114.html", "date_download": "2021-10-19T11:56:25Z", "digest": "sha1:UZTRSPDP6AWPAJKBQODIVAZY2HNQ673R", "length": 7974, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "வீட்டில் பிரசவம் பார்ப்பதால் ஏற்படும் பிரச்சனைகள்!! (மருத்துவம்) : நிதர்சனம்", "raw_content": "\nவீட்டில் பிரசவம் பார்ப்பதால் ஏற்படும் பிரச்சனைகள்\nமருத்துவமனையில் நடந்தாலும், வீட்டில் நடந்தாலும் பிரசவம் என்பது சவாலான விஷயம்தான். மருத்துவமனையில் பார்க்கும்போது ஏதாவது பாதிப்பென்றால் உடனடியாக மாற்று சிகிச்சை முறைகளைக் கையாண்டு சரிசெய்யமுடியும். வீட்டில், அதுமாதிரியான வசதிகள் இருக்காது. கடைசி நிமிடத்தில் ஏதேனும் விபரீதம் நடந்தால் வீட்டிலிருந்து மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லும் வழியிலேயே உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது.\nஉதாரணமாக, பிரசவம் முடிந்த பின் ரத்தப்போக்கு அதிகமாக ஏற்படும். ஒருசில நிமிடங்க��ில் இரண்டு அல்லது மூன்று லிட்டர் ரத்தம்கூட வெளியேறலாம். மருத்துவமனையில் இருந்தால், ரத்தப்போக்கின் காரணத்தைக் கண்டுபிடித்து அதற்கான தடுப்பு மருந்துகளைக் கொடுத்துவிடலாம். அப்படியும் நிற்காவிட்டால், ரத்தக்குழாய் அறுவை சிகிச்சை செய்து சரிசெய்ய முடியும். அதற்கும் ரத்தப்போக்கு கட்டுப்படாவிட்டால் கர்ப்பப்பை நீக்கும் அறுவை சிகிச்சை செய்வோம். ஒருபுறம் அவர்களுக்குத் தேவையான ரத்தத்தையும் ஏற்றுவோம். வீட்டில் இருந்தால் இதெல்லாம் சாத்தியமில்லை.\nஏற்கெனவே உயர் ரத்த அழுத்தப் பாதிப்புள்ள பெண்களுக்குப் பிரசவ நேரத்தில் பாதிப்பு அதிகமாகும். அதனால் வலிப்புகூட ஏற்படலாம். அதைத் தடுத்து நிறுத்த மருந்துகளோ, கருவிகளோ வீட்டில் இருக்காது. அதுமட்டுமின்றி பிரசவத்தின்போது, கர்ப்பப்பை பாதை , சிறுநீரகப் பாதையில் அடைப்பு அல்லது காயம் ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது. பிறந்த உடனே குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்படலாம். மருத்துவமனையில் இருந்தால் உடனடியாக வெண்டிலேட்டர், ஆம்புபேக் உதவியுடன் சரிசெய்துவிடலாம் . வீட்டில் அதற்கும் வாய்ப்பில்லை .\nஒருகாலத்தில், வீட்டிலேயே பிரசவம் பார்த்தோம் என்பது உண்மைதான். ஆனால், தற்போது பலவேறுவிதமான பிரச்சனைகள் பிரசவத்தின்போது ஏற்படுகின்றன. தாயையும் குழந்தையையும் பத்திரமாகப் பாதுகாக்க மருத்துவமனைகளை நாடுவதுதான் சிறந்த வழி.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nபெண்களுக்கு பந்தா இல்லாத ஆண்களை தான் மிகவும் பிடிக்கும்..\nசெக்ஸ் என்பது ஆபாசம் அல்ல… ரசித்து அனுபவியுங்கள்.. \nகுழிகளை மறைக்க O3 + ஃபேஷியல்\nபெண்களின் இடுப்புக்கு அழகூட்டும் ஒட்டியாணம்\nஅப்படி என்னதான் நடக்கிறது இங்கே ஏயலியன்கள் நடமாடும் ஒரே இடம் ஏயலியன்கள் நடமாடும் ஒரே இடம்\nதிடீரென நடுவானில் தோன்றிய விசித்திர ஏலியன் விமானம்\nசீனா வழங்கிய நிதி: ஒரு வாளி நீரில் ஒரு துளி\nஒரு டாக்டர் ஆக்டரான கதை\nஇதய நோய் வராமல் இருக்கணுமா\n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaaiman.com/2021/01/blog-post_53.html", "date_download": "2021-10-19T12:22:10Z", "digest": "sha1:7VUNHX3UGQJW22RJLS36LX57YAPDTLUW", "length": 3644, "nlines": 68, "source_domain": "www.thaaiman.com", "title": "பிரித்தானியாவில் கொரோனா தொற்றின் அச்சுறுத்தல்! அதிகரிக்கும் பலி எண்ணிக்கை - THAAIMAN", "raw_content": "\nHome / Unlabelled / பிரித்தானியாவில் கொரோனா தொற்���ின் அச்சுறுத்தல்\nபிரித்தானியாவில் கொரோனா தொற்றின் அச்சுறுத்தல்\nஉலக அளவில் கொரோனா தொற்றினால் அதிக பாதிப்பை எதிர்கொண்ட 5ஆவது நாடாக பிரித்தானியா விளங்குகின்றது.\nபிரித்தானியாவில் கொரோனா தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 54ஆயிரத்து 940பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nபிரித்தானியாவில் இதுவரை மொத்தமாக கொரோனா வைரஸ் தொற்றினால், 30இலட்சத்து 72ஆயிரத்து 349பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஅத்துடன் இதுவரை பிரித்தானியாவில் 81ஆயிரத்து 431பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.\nதற்போது வரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 15இலட்சத்து 83ஆயிரத்து 951பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇதில் மூவாயிரத்து 98பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.\nஇதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 14இலட்சத்து ஆறாயிரத்து 967பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanjai.today/minister-anbil-mahesh-poyamozhi-study-at-papanasam-government-hospital/", "date_download": "2021-10-19T11:49:12Z", "digest": "sha1:OBQEN4CE7SINU3L6PT2WFX3M623BXZBL", "length": 9505, "nlines": 129, "source_domain": "www.thanjai.today", "title": "பாபநாசம் மருத்துவமனையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி", "raw_content": "\nசமூகம் தஞ்சை நகரச்செய்தி மாநகரச் செய்தி\nபாபநாசம் அரசு மருத்துவமனையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு\nதஞ்சை மே 29: தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அரசு மருத்துவமனையில் பள்ளிகல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு செய்தார்.\nபாபநாசம் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் மற்றும் பிற நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள், கொரானா ஸ்கிரினிங் சென்டரில் உள்ள படுக்கைகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். மருத்துவமனைக்குத் தேவையான தடுப்பூசிகள் மற்றும் பிற உயிர்காக்கும் மருந்துகள் இருப்பு குறித்தும் அவர் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.\nஇதேபோல் அய்யம்பேட்டை அரசு மருத்துவமனை, கபிஸ்தலம். சுவாமிமலை மற்றும் அம்மாபேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களையும், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.\nஆய்வின்போது தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ், எம்பிக்கள் சண்முகம், ராமலிங்கம், தமிழக சட்டமன்ற கொ��டா கோவி.செழியன், பாபநாசம் சட்ட மன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜவாஹிருல்லா மற்றும் குடந்தை சட்ட மன்ற உறுப்பினர் சாக்கோட்டை அன்பழகன், மருத்துவமனைகள் இணை இயக்குனர் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், அரசு அதிகாரிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.\nலட்சத்தீவு நிர்வாக அலுவலர் நடவடிக்கைகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nவிஜய் மக்கள் இயக்கம் சார்பில் பட்டுக்கோட்டை நகராட்சிக்கு கிருமி நாசினி ஸ்பிரே வழங்கல்\nசமூகம் தஞ்சை நகரச்செய்தி மாநகரச் செய்தி\nவிபத்து இல்லா தீபாவளியாக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் தீயணைப்புத்துறை மாவட்ட அலுவலர்\nஅரசியல் தஞ்சை நகரச்செய்தி மாநகரச் செய்தி\nகட்டுமான பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த ஏஐடியூசி வலியுறுத்தல்\nதஞ்சை நகரச்செய்தி மாநகரச் செய்தி வேளாண்மை\nமாடித்தோட்ட சாகுபடியால் உடல் நிலையில் முன்னேற்றம் பெறலாம்; முதல்வர் வேலாயுதம்\nவிபத்து இல்லா தீபாவளியாக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் தீயணைப்புத்துறை மாவட்ட அலுவலர்\nகட்டுமான பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த ஏஐடியூசி வலியுறுத்தல்\nமாடித்தோட்ட சாகுபடியால் உடல் நிலையில் முன்னேற்றம் பெறலாம்; முதல்வர் வேலாயுதம்\nமுதல்வர் முன்னெடுப்பு திருவாரூர் காரைக்குடி ரயில் சேவை துவக்கம்; எம்பி பழனிமாணிக்கம்\nபள்ளி மாணவர்களுக்கு வரும் அக் 25, 26ம் தேதிகளில் கலைப்போட்டிகள்\nசமூகம் தஞ்சை நகரச்செய்தி மாநகரச் செய்தி\nவிபத்து இல்லா தீபாவளியாக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் தீயணைப்புத்துறை மாவட்ட அலுவலர்\nஅரசியல் தஞ்சை நகரச்செய்தி மாநகரச் செய்தி\nகட்டுமான பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த ஏஐடியூசி வலியுறுத்தல்\nதஞ்சை நகரச்செய்தி மாநகரச் செய்தி வேளாண்மை\nமாடித்தோட்ட சாகுபடியால் உடல் நிலையில் முன்னேற்றம் பெறலாம்; முதல்வர் வேலாயுதம்\nசமூகம் தஞ்சை நகரச்செய்தி மாநகரச் செய்தி\nமுதல்வர் முன்னெடுப்பு திருவாரூர் காரைக்குடி ரயில் சேவை துவக்கம்; எம்பி பழனிமாணிக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/election/152653-chidambaram-mp-candidates-updates", "date_download": "2021-10-19T11:42:50Z", "digest": "sha1:SMUHOYZ4JUN64P5SIYAOZGZDRJFVAQVB", "length": 14324, "nlines": 201, "source_domain": "www.vikatan.com", "title": "திருமாவளவன் vs சந்திரசேகரன்! - சிதம்பரம் தொகுதி அப்டேட்ஸ் | Chidambaram M.P. Candidates updates - Vikatan", "raw_content": "\nஅடடே ‘அன்னபோஸ்ட்’ கிராமம்... சமூகநீதி காக்கும் பனங்காட்டுப்பாக்கம்\nஓர் ஊராட்சி ஒன்றியம்... இரண்டு மாவட்டங்கள்... விநோத சிக்கலில் 12 கிராம மக்கள்\n`தேர்தல் புறக்கணிப்பு' அறிவித்த கிராம மக்கள்; படையெடுத்த அதிகாரிகள்; தொடங்கப்பட்ட பணிகள்\nபிரபல ரௌடியின் மனைவி உள்ளாட்சித் தேர்தலில் போட்டி; காவல்துறை நெருக்கடி கொடுப்பதாகப் புகார்\nஊரக உள்ளாட்சித் தேர்தல்: நெல்லையில் 333 பதற்றமான வாக்குச்சாவடிகள்; கட்டுப்பாட்டு அறை திறப்பு\nஊரக உள்ளாட்சித் தேர்தல்: 9 மாவட்டங்களில் 2 கட்டமாக வாக்குப்பதிவு - அக்டோபர் 12-ல் வாக்கு எண்ணிக்கை\nஅடடே ‘அன்னபோஸ்ட்’ கிராமம்... சமூகநீதி காக்கும் பனங்காட்டுப்பாக்கம்\nஓர் ஊராட்சி ஒன்றியம்... இரண்டு மாவட்டங்கள்... விநோத சிக்கலில் 12 கிராம மக்கள்\n`தேர்தல் புறக்கணிப்பு' அறிவித்த கிராம மக்கள்; படையெடுத்த அதிகாரிகள்; தொடங்கப்பட்ட பணிகள்\nபிரபல ரௌடியின் மனைவி உள்ளாட்சித் தேர்தலில் போட்டி; காவல்துறை நெருக்கடி கொடுப்பதாகப் புகார்\nஊரக உள்ளாட்சித் தேர்தல்: நெல்லையில் 333 பதற்றமான வாக்குச்சாவடிகள்; கட்டுப்பாட்டு அறை திறப்பு\nஊரக உள்ளாட்சித் தேர்தல்: 9 மாவட்டங்களில் 2 கட்டமாக வாக்குப்பதிவு - அக்டோபர் 12-ல் வாக்கு எண்ணிக்கை\n - சிதம்பரம் தொகுதி அப்டேட்ஸ்\nஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்\n - சிதம்பரம் தொகுதி அப்டேட்ஸ்\n - சிதம்பரம் தொகுதி அப்டேட்ஸ்\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்\nசிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி (தனி) கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோயில் அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், ஜெயங்கொண்டம், பெரம்பலூர் மாவட்டத்தில் குன்னம் ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது. தி.மு.க கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் நிற்கிறார்.\nசிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் இதுவரை காங்கிரஸ் 6 முறையும், தி.மு.க 3 முறையும், பா.ம.க 3 முறையும், விடுதலைச் சிறுத்தைகள் (திமுக கூட்டணி) 1, அ.தி.மு.க 1 முறையும் வெற்றி பெற்றுள்ளது. தொடர்ந்து சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டு வரும் திருமாவளவன் 2004-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டார். பின்னர் 2006-ல் நடந்த சட்டசபைத் தேர்தலில் அ.��ி.மு.க கூட்டணி, 2009-ல் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணி, 2011-ல் நடந்த சட்டசபை தேர்லிலும் தி.மு.க-வுடன் கூட்டணி, 2014 நாடாளுமன்றத் தேர்தலிலும் இதே கூட்டணி தொடர்ந்தது.\nகடந்த 2009-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி-யானார். இந்த முறை சிதம்பரத்தில் சுயேச்சை சின்னத்தில் திருமாவளவன் போட்டியிடுகிறார். இவர் அரியலூர் மாவட்டம் அங்கனூர் கிராமத்தில் தொல்காப்பியன், பெரியம்மாள் ஆகியோருக்குக் கடந்த 1962-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17-ம் தேதி பிறந்தார். பி.எஸ்ஸி வேதியியல், எம்.ஏ. கிரிமினாலஜி, பி.எல், பி.ஹெச்டி படித்துள்ளார். மேலும், தமிழக அரசின் தடவியல் துறையில் அறிவியல் உதவியாளராக பணியாற்றி வந்தார். பின்பு 1999-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட தன் அரசுப் பணியை ராஜினமா செய்தார். இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை.\nஇவருக்குப் போட்டியாக அ.தி.மு.க சார்பில் முன்னாள் ஒன்றிய செயலாளர் சந்திரசேகரன் போட்டியிட உள்ளார். அரியலூர் மாவட்டத்தில் உணவகம் மற்றும் லாட்ஜ் நடத்தி வருகிறார். அதே போல் சென்னை கோயம்பேடு அங்காடியில் பழக்கடை நடத்தி வருகிறார். இவருக்கு அரசு தலைமை கொறடா தாமரை. ராஜேந்திரன், ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ ராமலிங்கம் ஆகியோர் ஆதரவளிப்பதாலும், அரியலூர் மாவட்டத்தில் செல்வாக்கு உள்ளதால் இவருக்குச் சிதம்பரம் தொகுதி வேட்பாளராகக் களமிறங்கியுள்ளார்.\nஅதே போல் அ.ம.மு.க சார்பில் வழக்கறிஞரும்,ஐ.எ.எஸ். அகாடமி நிறுவனருமான இளவரசன் போட்டியிட உள்ளார். இவருடைய மனைவி சரஸ்வதி ஊரக வளர்ச்சித்துறையில் கூடுதல் இயக்குநராக பணியாற்றி வருகிறார்.இவருடைய மனைவிதான் தினகரனிடம் பேசி சீட் வாங்கிக்கொடுத்துள்ளார் என்று பரவலாகப் பேச்சுக்கள் நிலவுகிறது.\nதெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism\nஇதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/women/94302-", "date_download": "2021-10-19T13:04:09Z", "digest": "sha1:UGRBXBLPTFBQFY7XBQTYRYQAYROREIIZ", "length": 10119, "nlines": 229, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 06 May 2014 - என் இனிய கதைநாயகிகள்! - 2 | director sundharrajan - Vikatan", "raw_content": "\nஇயற்கைக்கு 'ஹலோ’... நோய்களுக்கு 'குட்பை’\nஅவன்... அவள்... அது... தெரிஞ்சுக்கோங்க... புரிஞ்சுக்கோங்க\nகுழந்தைகளைக் காக்கும்... குடும்ப பாஸ்வேர்டு\nசலவைத் தொழில்... ‘பளிச்’ வாழ்க்கை\nபிரமிக்க வைக்கும் பேப்பர் கப் பிசினஸ்\nகர்ப்பம் முதல் பள்ளிக்கூடம் வரை...\nமருத்துவ டிப்ஸ், செல் டிப்ஸ், சமையல் டிப்ஸ்\nநெகிழவைக்கும் 'ஹோட்டல் ஏலகிரி’ Follow-up\nஆச்சி மசாலா வழங்கும் வாசகிகள் கைமணம்\nஅவள் விகடன் - வாசகிகள் பக்கம்\nஅவள் விகடன் - ஜாலி டே\nஅ முதல் ஃ வரை - 10\nஎன் டைரி - 327\nபாரம்பரியம் Vs பார்லர் - 10\nமண்டை ஓடு, மூளை, ரத்த உறிஞ்சல்...\nவாசகர் வாய்ஸ்: தமிழகத்தில் திருநங்கைகள் இனி பிச்சை எடுக்கக்கூடாது - மாற்றுமா புதிய அரசு - மாற்றுமா புதிய அரசு\nகல்வெட்டுகளில் பெண்கள் மற்றும் கல்வெட்டு வாசிப்புப் பயிற்சி... நிகழ்வில் கலந்துகொள்வது எப்படி\n\"- நிறுத்துங்க... 2021-ல் இது எல்லாத்தையும் நிறுத்துங்க\n சேலையை வீசிக் காப்பாற்றிய வீரத் தமிழச்சிகள்\n\" - கடல்பாசி தேடும் பெண்களின் போராட்டக் கதை\n`அக்காக்களுக்கு கல்யாணம், ஆதரவற்றவர்களுக்கு பசியாற்றல்' - அறந்தாங்கி டீக்கடை ராதிகாவின் கதை\nஊரெல்லாம் கழிவறை கட்டவைத்து தேசிய விருது பெற்ற செல்வி - மதுரைக்கு மற்றுமொரு பெருமை\n``இரவு 10 மணி... 1 லட்சம்... போலீஸ் ஸ்டேஷன் சந்திப்பு” - The Great புஷ்பா பாட்டி\n`ஆறு வருஷம் கழிச்சு வரமா பிறந்த குழந்தை சுபஶ்ரீ' - கலங்கும் பாட்டி ஜானகி\n`வனிதா அக்கா மீண்டும் வந்துட்டாங்க' - புற்றுநோயிலிருந்து மீண்ட சேலம் பெண் காவலர்\nதிரையுலக பிரம்மாக்களின் ரீவைண்ட் தொடர்இயக்குநர் சுந்தர்ராஜன், படம் : எம்.உசேன்\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்\nதெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism\nஇதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.verkal.net/%E0%AE%8E%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2021-10-19T11:35:07Z", "digest": "sha1:SSSNEJSE4JT5CIHEW53JLQQXNFF3EE5D", "length": 16385, "nlines": 120, "source_domain": "www.verkal.net", "title": "எமது மாவீரர்களின் சுதந்திர தாகம் சாவுடன் தணிந்து போகவில்லை | வேர்கள்", "raw_content": "\nஇலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்\nதாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவ��ய மாவீரர்களுக்கு வீரவணக்கம் \nHome தமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள் எமது மாவீரர்களின் சுதந்திர தாகம் சாவுடன் தணிந்து போகவில்லை\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nஎமது மாவீரர்களின் சுதந்திர தாகம் சாவுடன் தணிந்து போகவில்லை\nஅன்றைய தமிழர் இராட்சியம் விழ்ச்சியடைந்து, பல நூறு ஆண்டுகள் அந்நியரும், அயலவருக்கும், அடிமைப்பட்டு வாழ்ந்த தமிழீழ தேசம் இன்று தலைநிமிர்ந்து நிற்கிறது. இன்று எமது தாயகத்தின் பெருநிலப் பரப்பில் எமது தன்னாட்சி நடைபெறுகிறது. ஒரு நீண்ட, துயரமான, கொடூரமான வரலாற்று இடைவெளியின் பின்பு, மீண்டும் தமிழினத்தின் வீர எழுச்சிச் சின்னமாக, தமிழர் மண்ணிற் புலிக்கொடி பட்டொளிவீசிப் பறக்கிறது. இந்த மாபெரும் வரலாறுத் திருபத்தை ஏற்படுத்தித் தந்தவர்கள் எமது மாவீரர்கள் என்பதை நான் பெருமிதத்துடன் இன்று கூறிக் கொள்ள விரும்புகின்றேன்.\nஎமது தேசிய விடுதலைப் போராட்டம் என்றுமில்லாதவாறு இன்று உலகமயமாகியுள்ளது. பல தசாப்தங்களாகப் பாராமுகம் காட்டி வந்த உலமா இன்று தனது முழுக் கவனத்தையும் எமது போராட்டத்தின் மீது திருப்பியுள்ளது. ஒரு பலம் வாய்ந்த விடுதலைப் போராட்ட சக்தியாக இன்று உலகரங்கில் நாம் முன்னணி வகித்து நிற்கின்றோம். தர்மத்தின் வழி தழுவி, ஒரு சத்திய இலட்சியத்திற்காகச் செய்யப்படும் தியாகங்கள் என்றுமே வீண்போவதில்லை. எமது தேசத்தின் விடுதலைக்கு நாம் கொடுத்த விலை ஒப்பற்றது. உலக விடுதலை வரலாற்றில் நிகரற்றது. இந்த அளப்பரிய ஈகத்தின் ஆன்மீக சக்தி இன்று உலகத்தின் மனச்சாட்சியை உலுக்கிவிட்டிருக்கிறது. எமது மாவீரர்களின் சுதந்திர தாகம் சாவுடன் தணிந்து போகவில்லை. அது எமது இனத்தின் வீர விடுதலைக் குரலாக உலகெங்கும் ஒழித்துக் கொண்டிருக்கிறது.\nசாதி, மதம், வர்க்கம் என்ற வேறுபாடுகளுக்கப்பால், ஒரு விடுதலை இயக்கத்தின் கீழ், ஒரு விடுதலை இலட்சியத்தின் கீழ். ஒன்றுபட்ட சமூகமாக எமது மக்கள் இன்று அணிதிரண்டு நிற்கின்றார்கள். வீரம் சேர்ந்த எமது விடுதலைப் போராட்டமும் அந்த விடுதலைப் போராட்டத்தில் எமது போராளிகள் ஈட்டிய அபாரமான சாதனைகளும் அவ அர்கள் புரிந்த அற்புதமான தியாகங்களுமே எமது மக்களை எழுச்சியூட்டி, உணர்வூட்டி ஒரே அணியில், ஒரே இனமாக, ஒரே தேசமாக ஒன்றுதிரள வைத்திருக்கின்றன. எமது மாவீரர்க��ின் மகத்தான தியாகங்களும் அர்ப்பணிப்புக்களுமே எமது தேசத்தின் ஒருமைப்பாட்டிற்கு ஆதாரசக்தியாக விளங்குகின்றன.\n– தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள்…\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\nPrevious articleதேசத்தின் புயல்கள் பாகம் 03.\nNext articleகல்லறை தழுவும் கானங்கள்.\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nஅந்தத் தீ என்றும் அனையாத சுதந்திர தீபம் -தமிழீழ தேசியத் தலைவர்.\nநெடுஞ்சேரலாதன் - April 19, 2019 0\n1992 ம் ஆண்டு தாயகத்தாய் அன்னை பூபதி அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் விடுத்த செய்தியை இன்று வேர்கள் இணையத்தில் வெளியீடு செய்கின்றோம் .. மனித வரலாற்றில் என்றுமே நிகழ்ந்திராத,...\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nபங்குனி 8 பெண்கள் தினம் ; தேசியத் தலைவரின் வாழ்த்திலிருந்து.\nநெடுஞ்சேரலாதன் - March 8, 2019 0\nஎமது பெண் போராளிகளின் அபாரமான போராற்றலையும் அவர்களின் வீரத்தையும் எதிரியே நன்கறிவான். அவர்கள் அறிந்ததை உலகமும் எமது மக்களும் அறியுமுகமாக வரலாற்றுப்பதிவாக ஒரு நூல் எழுதப்பட வேண்டும். இதற்கு எமது போராட்டம் பற்றிய...\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nசருகாக நெரிபட்ட தமிழனை மலையாக நிமிரச் செய்தவர்கள் மாவீரர்கள்.\nஎனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே இன்றைய நாள் மாவீரர் நாள்.இன்றைய நாளில் நாம் எமது தியாகிகளின் திருநாளாக எமது தேசத்தின் பெருநாளாக, எமது போராட்டத்தின் எழுச்சி நாளாகக் கொண்டாடுகிறோம். எமது தேசம் விடுதலைபெற வேண்டும்; எமது...\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள் நெடுஞ்சேரலாதன் - September 8, 2021 0\nதமிழீழத்தில் தலை சிறந்த பெண் போராளியான கப்டன் அக்கினோ... போராட்டம். .... இந்தச் சொல்லுக்குள் தான் எத்தனை விதமான உணர்ச்சி அலைகள் அடங்கி இருக்கின்றன.குடும்பம் என்ற சிறிய பரப்புக் குள் சில மனிதர்கள், சில உணர்வுகளென்று...\nலெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.\nமறவர்கள் வீரவணக்க நாள் நெடுஞ்சேரலாதன் - June 26, 2021 0\nலெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.1999 அன்று மன்னார் மாவட்டம் சன்னார் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட “ரணகோச” இராணுவ நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரின் போது...\nகடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார் உட்��ட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nமறவர்கள் வீரவணக்க நாள் நெடுஞ்சேரலாதன் - June 26, 2021 0\nகடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார், கடற்கரும்புலி மேஜர் சூரன், கடற்கரும்புலி மேஜர் நல்லப்பன், கடற்கரும்புலி மேஜர் சந்தனா, கடற்கரும்புலி கப்டன் பாமினி , கடற்கரும்புலி கப்டன் இளமதி வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.2000 அன்று...\nநீரிற் கரைந்த நெருப்பு லெப்.கேணல் ராஜசிங்கம்/ ராஜன்.\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள் நெடுஞ்சேரலாதன் - June 26, 2021 0\nகண்டி வீதியை ஊடறுத்திருந்த எமது பாதுக்காப்பு வியூகத்தை உடைத்து, எதிரி உட்புகுந்துவிட்டான். எமது போர்ப்பலத்தைச் சிதறடித்தவாறு எல்லா முனைகளாலும் எதிரி தாக்கினான். எமக்கு எவ்வகையிலும் சாதகமற்ற ‘மரணக்களமாய்’ மாறியிருந்தது அன்றைய களம். அன்று சித்திரை...\nதமிழர்கள் தமது வரலாற்றினையும், சாதனைகளையும் பதிவு செய்து ஆவணப்படுத்தாமை எமக்குள்ள மிகப் பெரிய குறை பாடாகும் என தமிழீழக் கல்விக்கழகப்பொறுப்பாளர் வெ.இளங்குமரன் வல்வெட்டித்துறையில் நடைபெற்ற ஆழக்கடல் வென்றவர்கள் நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றும் போதுதெரிவித்தார் அதனடிப்படையில் வேர்கள் இணையமானது எமது தாயக விடுதலை போராட்டதின் விழுமியங்களை ஆவணப்படுத்தி உலகின் அனைத்து தேசங்களிலும் வாழும் எமது அன்புத்தமிழ் உறவுகளின் வாசல் நோக்கி விடுதலை தாகத்தை வீசுகிறோம்\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்77\nகாப்புரிமை ©தமிழீழஆவணக்காப்பகம் 2016- 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2015/09/blog-post_9.html", "date_download": "2021-10-19T11:38:12Z", "digest": "sha1:RLRSN2JES227FLMMI6IGOUQKF7AA773G", "length": 24065, "nlines": 322, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : அழகாய்த் தெரிய பல வழிகள் உண்டு....மிக எளிய வழி என்ன?", "raw_content": "\nஅழகாய்த் தெரிய பல வழிகள் உண்டு....மிக எளிய வழி என்ன\n1 கழுத்துல தாலி கட்டலாம்னு நினைக்கும் பொண்ணு நம்ம கைல ராக்கி கட்ட நினைச்சிருந்தா சனீஸ்வரன் நமக்கு சம்பந்தி ஆகிட்டான்னு அர்த்தம்்\n2 அச்சம் என்பது மடமையடா\nமச்சினி என்றும் நம் உடைமையடா\n3 எதிர்ப்படும் பிகரை நீ கட்டினா நீ ராக் ஸ்டார்\nபிகரு உன் கைல ராக்கி கட்டினா நீ ராக்கி ஸ்டார்\n4 தனி ஒருவன்் பார்த்தவர்கள் பெரும்பாலும் இதை விஜய்யோ அஜித்தோ செய்திருந்தால் சூப்பர் ஹிட் மூவி லிஸ்ட்டில் சேர்ந்திருக்கும் என ஆதங்கப்படறாங்க\n5 ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தனி ஒருவன் விஜய் ஹீரோ அஜித் வில்லன் என எடுத்திருந்தா அதன் லெவலே வேற\n6 உன் வெற்றியின் சூட்சுமத்தை யாரிடமும் பகிர்ந்து பெருமைப்பட்டுக்கொள்ளாமல் இருப்பதே உன் வெற்றியைத்தக்க வைத்துக்கொள்ளும் சூட்சுமம்\n7 உன் கை வசம் எந்த ரகசியமும் இல்லாமல் போனாலும் நீயாக ஒரு ரகசியத்தை உருவாக்கி உன் காதலியிடம் சொல்லி வைப்பதே காதலியை வசப்படுத்த எளியவழி\n8 தன் நலம் மட்டுமே பார்ப்பவன் தன் மேலதிகாரியை/மன்னனை/தலைவனை புகழ்கிறான்.பொது நலம் கொண்டவன் உண்மை நிலையை எடுத்துச்சொல்லி இடித்துரைக்கிறான்\n9 திருவாரூர் தேர் உட்பட எல்லா ஊர் தேரின் மீதும் உப்பும் மிளகும் மக்களால் வீசப்படுவதால் தேருக்குக்கூட சால்ட் & பெப்பர் லுக் கம்பீரம் தருது\n10 இன்று ராகவேந்திர ஸ்வாமி ஆராதனை தினம். அனைவருக்கும் அவர் அருள் தர கபாலி ரஜினி உதவுவாராக\n11டவுன் பஸ் ல பொண்ணுங்க லட்டு மாதிரி ஏறி பூந்தி மாதிரி இறங்கறாங்க\n12அர்WINத்சாமி + ஜெயம் ரவி(ன்) = தனி ஒருWON\n13அழகாய்த் தெரிய பல வழிகள் உண்டு....மிக எளிய வழி சுமார் மூஞ்சி குமார் அருகில் இருப்பது:))\n முழு முகத்தைக்காட்டினாலே சுமாராய்த்தான் இருப்பாய்.பாதி முகத்தை மூடிக்கொண்டால் இன்னும் சுமார் பிகர் ஆகிவிடுவாய் என்பதை உணர்\n15 எந்த பொண்ணு ட்வீட்ட பாத்தாலும் 10 பசங்க மென்சன் போட்ருகானுகன்னு ஒரு நெட் தமிழன் புலம்பினா மீதி 9 போட்டியாளர்களை அவன் விரும்பலைனு அர்த்தம்\n என்னை வழி அனுப்ப வருகையில் ஒரு வடை கொடுத்தால் ப்ரியா விடை & ப்ரியா வடை தந்தாள் என மொக்கை கவிதை எழுத எனக்கு உதவியா இருக்கும்\n17 தனி ஒருவன் க்கு வெற்றி இல்லை எனில் இந்த ஜெகத்தினை அழித்திடுவோம் # தனி ஒருவன் ப்ரமோ ஐடியா\n18 புதிய நட்பு/சொந்தம் வந்தபின் பழைய நட்பை/சொந்தத்தை புறக்கணிப்பவர்களை காலதேவன் /இயற்கை தக்க பாடம் கற்பிப்பர்\n19 ஏமாற்றவேண்டும் என திட்டமிட்டு காதலிக்கும் சிலர் தவிர உண்மையாய் காதலிக்கும் ஆண்கள் யாரும் ஒரு நாளும் உயிராய் நேசித்த காதலியை ஏமாற்றியதில்லை\n20 கணவனுக்காக தன் வாழ்நாளை தியாகம் செய்த பெண்கள் சிலர் உண்டு.ஆனால் தன் காதலிக்காக தன் வாழ்க்கையை தியாகம் செய்த ஆண்கள் பலர் உண்டு\n21 வாழ்நாள் முழுவதும் தனியாகவே இருப்பேன் என நானும் அறிவிக்கத்தயார்.ஆனா அறிவிக்கமாட்டேன்.பிம்பிளிக்கி பிளாப்பி\n22 நெட் தமிழனின் ஆகச்சிறந்த பொய் எது தெரியுமா சமூக வலைத்தளங்களான FB யில் டைப்பும் பெண்களிடம் உங்க கையெழுத்து பிரமாதம் என பாராட்டுவதே\n23 9 டூ நைட் 9 இடை விடாத 12 மணி நேர மீட்டிங்கின் சாராம்சம் = துடிப்புடன் பணி ஆற்றினால் டபுள் இன்சென்ட்டிவ் # இதை ஒரே லைன்ல சொல்லி இருக்கலாம்\n அட்லீஸ்ட் டிபி யிலாவது துப்பட்டாவை கழுத்தொண்ட போடாமல் சரியாகப்போடக்கூடாதா\n25 செல்வாக்கு மிக்க அரசியல்/ சினிமா பிரபலங்களை வரம்பு மீறி கிண்டல் செய்பவர்கள் நடந்து முடிந்த கறுப்பு சரித்திரத்தை புரட்டிப்பார்க்கவும்\nநீங்கள் மிக அருமையாக பதிவுகளை வெளியிடுகிரீகள். நன்றி தொடரவும் .\nஉங்களுக்கு வசனம் அருமையாக எழுத வருகிறது suba போல வர வாழ்த்துக்கள்\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகிளு கிளு கார்னர் - ராத்திரியில் ரதி தேவி சொன்ன ஜோக்ஸ் - பாகம் 1\n -சிவகாசி ராஜ்கதிர் -சிறுகதை @ வாரமலர் ( ரூ 25,000 பரிசு பெற்ற கதை )\nபூட்டாத பூட்டுகள் (1980) _ சினிமா விமர்சனம் ( எ மகேந்திரன் ஃபிலிம்)\nசாந்தி அப்புறம் நித்யா -கில்மாவா ஜொள்மாவா\nமண்ணுளி முதல் ஈமு வரை ( மிரள வைக்கும் கொங்கு மோசட...\nஷூவில் கேமிரா பொருத்தி பெண்களை ஆபாசமாக படம் பிடித்...\nஃபேஸ்புக்ல போடுறது எல்லாம் உங்க கருத்துதானா\nஊர் ஊராக சுற்றும் ஸ்டாலினுக்கு சாமானியனின் சில கேள...\nதமிழ் நாட்டின் தீய சக்திகள் ( தர வரிசைப்படி)\nதற்போதைய ‘மெதட் ஆக்டிங்’-கருந்தேள் ராஜேஷ்\nமனுசங்க.. 20: ‘பதினைஞ்சாம் பிள்ளை’ விளையாட்டு-கி.ர...\n3/9-சென்சாரில்தப்பியத்ரிஷா இல்லன்னா நயன் தாராவசனங்கள்\nஉனக்கென்ன வேணும் சொல்லு (2015)-சினிமா விமர்சனம்\nதிருட்டு விசிடி (2015)- சினிமா விமர்சனம்\nத்ரிஷா இல்லனா நயன்தாரா-Adult Comedy Genre-\nநான் சொன்னா செய்வேன்.. 'பன்ச்'சுடன் வெளியானது கமல...\nஆங்கிலம் அறிவோமே - 74: பழமொழிகளில் ஆங்கிலம்\nதூங்காவனம்- பிரெஞ்சு மொழியில் வெளியாகி மிகப் பெரிய...\n‘‘இந்தப் படம் ஓடினால் நான் மன்னன். ஓடாவிட்டால் நாட...\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ்கொலைவழக்கு\nஅகத்தின் அழகு ஃபேஸ்புக்கில் -ஆய்வு முடிவின் சில து...\n‘விசாரணை’-உலகப் புகழ் பெற்ற வெனிஸ் சர்வதேசத் திரைப...\nட்விட்டர் தளத்தில் தற்போது இரு���்கும் நடிகைகளில் மி...\nத ஜங்கிள் புக். -கலக்கல் ஹாலிவுட்-சினிமாவிமர்சனம்\nஎனக்காக ஒரு கொலை செய்வாயா\nMy Left Foot) -1989-சினிமா ரசனை 16: மெதட் ஆக்டிங் ...\nமண்ணுளி முதல் ஈமு வரை...- மிரள வைக்கும் கொங்கு மோ...\nமண்ணுளி முதல் ஈமு வரை...- மிரள வைக்கும் கொங்கு மோ...\nமண்ணுளி முதல் ஈமு வரை...- மிரள வைக்கும் கொங்கு மோ...\nமண்ணுளி முதல் ஈமு வரை...- மிரள வைக்கும் கொங்கு மோ...\nமண்ணுளி முதல் ஈமு வரை...- மிரள வைக்கும் கொங்கு மண...\nமண்ணுளி முதல் ஈமு வரை...- மிரள வைக்கும் கொங்கு மண...\nமண்ணுளி முதல் ஈமு வரை...- மிரள வைக்கும் கொங்கு மண...\nமண்ணுளி முதல் ஈமு வரை...- மிரள வைக்கும் கொங்கு மண...\nயட்சன்,'கழுகு' ஹீரோகிருஷ்ணா வரதட்சணை கேட்டு மனைவிய...\n - ஓர் அலசல் ரிப்போர்...\nதிருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணு பிரியா தற்கொலை: அதிக...\nமண்ணுளி முதல் ஈமு வரை... கொங்கு மோசடிகள்\nமாயா -சினிமாவிமர்சனம்( கச்சிதமான பேய் சினிமா)\nஎவரெஸ்ட்-ஹாலிவுட் ஷோ: உச்சி தொடும் பயணம்..,உயரே ப...\nபுலிக்கு சென்சார்ல ஏ கிடைச்சிருந்தா என்ன ஆகி இரு...\nசென்சார் சிக்கல்கள்: மிஷ்கின் முன்வைக்கும் 8 அம்சங...\nமனுசங்க.. 19: வந்தது இரும்பு யுகம்\nநாங்க இன்னும் திருந்தவே இல்லை பாஸ்\nவாழும் போதே சொர்க்கத்தை பார்க்க ஆசையா\nசினிமா ரசனை 15: சூப்பர் ஹீரோக்களை வீட்டுக்கு அனுப்...\nமனுசங்க.. 19: வந்தது இரும்பு யுகம்\nதீபா சன்னிதியில் தீயா வேலை செய்யனும் குமாரு\nTHE TRANSPORTER 4 - தி டிரான்ஸ்போர்ட்டர்- ஒரு ஆபத்...\nதமிழனுக்கு கேரளா பிகர் பிடிக்க முக்கியக்காரணம் என...\nஸ்ட்ராபெர்ரி - சினிமா விமர்சனம்\nயட்சன் - சினிமா விமர்சனம்(சி.பி)\nசகாயம் ஐ ஏ எஸ் -தனி ஒருவன் -சவாலே சமாளி - மக்கள் ...\nபுலிக்கும் மஹாத்மா காந்திக்கும் என்ன தொடர்பு\nபுலிVSபாகுபலி-சினிமா தொழில்நுட்பம்: பலியா, புலியா\nமாஞ்சி - தி மவுன்டெயின் மேன் -உலகப்பட நாயகன் நவாசு...\nபாலோயர்ஸ் கம்மியா இருந்தா பீல் பண்ணாதீங்க., ஒருஐடி...\nஅன்பே வா-எம்ஜிஆர் உதய சூரியனின் பார்வையிலே பாடல் ...\nரஜினிமுருகன்' மீதான எதிர்பார்ப்புகள், - சிவகார்த்...\nமகள் ஷீனா போராவை கொலை செய்த இந்திராணி: விசாரணைய...\nஎன் ஆட்சியில் என் ஆணைப்படி இன்று தமிழகமெங்கும் பரவ...\nதீர்ப்பு வெளிவந்த நாளில் நேரடி ஒளிபரப்பை 10 கோடி ப...\nஜட்ஜ் பேரு ஆமாம் சாமியாகுமாரசாமியா\nவா டீல் -வில்லன்களை விரும்புகிறார்கள் இன்றைய பெண்க...\nஎனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’-கவுண்டமணியை ...\nநமீதா சிஎம் ஆகி சரத்் எதிர்க்கட்சிதலைவர் ஆனா சட்டம...\nநாளைய முதல்வர் 23ம் புலிகேசி -'மாற்றத்துக்காக- அன...\nபாயும் புலி (2015) - சினிமா விமர்சனம்\nசவாலே சமாளி ( 2015) - சினிமா விமர்சனம்\nஜராசந்தன் போல் உங்கள் எதிரி இருந்தால் வீழ்த்துவது ...\nபுலி - படத்தின் மெயின் காமெடி ஹீரோயின் வித்யூலேகா...\nசினிமா ரசனை 14 - காதலை உணரவைத்த காவியங்கள்\nNOESCAPE -நோ எஸ்கேப் (2015)- சினிமா விமர்சனம்\nஎப்போ சொல்ல போற (2015)- சினிமா விமர்சனம்\nபோக்கிரி மன்னன் (2015)- சினிமா விமர்சனம்\nபாயும் புலி - சினிமா விமர்சனம்\nஅதிபர் - திரை விமர்சனம்:\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 04/...\nஇளையதளபதி விஜய் vs கவுண்டமணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arisenshine.in/tag/%E0%AE%95%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-10-19T12:23:13Z", "digest": "sha1:GU5JOMUP2WIEKR6O4T3QE2BT52YORV2I", "length": 5933, "nlines": 80, "source_domain": "www.arisenshine.in", "title": "கஷ்டம் – Arise n shine", "raw_content": "\nஎந்த வயதில் தேவனுக்கு ஊழியம் செய்யலாம்\n1 தீமோத்தேயு:2.5 – தினத்தியானம்\nஇயேசு-லேகியோன் சந்திப்பு – பாகம் 7\nதேவனிடம் சமரசம் செய்ய விரும்புகிறோமா\nஇயேசு-லேகியோன் சந்திப்பு – பாகம் 6\nகுடும்ப நபர்களுக்காக எப்படி ஜெபிக்கிறோம்\nஎல்லா தேவ கிரியைகளுக்கும் காரணம் உண்டு\nஆண்டவர் எதற்காக இந்த கஷ்டத்தை என் வாழ்க்கையில் அனுமதித்தாரோ என்று பல கிறிஸ்தவர்களும் கூறுவதை கேட்டிருக்கிறேன். நம்மிடமே இப்படி கூறுகிறார்கள் என்றால், தேவனிடம் எத்தனை முறை இந்த கேள்வியை கேட்டிருப்பார்களோ என்று பல கிறிஸ்தவர்களும் கூறுவதை கேட்டிருக்கிறேன். நம்மிடமே இப்படி கூறுகிறார்கள் என்றால், தேவனிடம் எத்தனை முறை இந்த கேள்வியை கேட்டிருப்பார்களோ நம் வாழ்க்கையில் வரும் துன்பங்கள், கஷ்டங்கள் இடையே பெரும்பாலானோர், இந்த கேள்வியை தேவனை நோக்கி கேட்டு விடுகிறோம்.\nலூக்கா: 4.3 – தினத்தியானம்\nஎந்த வயதில் தேவனுக்கு ஊழியம் செய்யலாம்\n1 தீமோத்தேயு:2.5 – தினத்தியானம்\nஇயேசு-லேகியோன் சந்திப்பு – பாகம் 7\nதேவனாகிய கர்த்தர் தாம் மனுஷனில் எடுத்த விலா எலும்பை மனுஷியாக உருவாக்கி, அவளை மனுஷனிடத்தில் கொண்டு வந்தார். ஆதியாகமம்:2.22\nஎந்த வயதில் தேவனுக்கு ஊழியம் செய்யலாம்\nதேவனுக்கு ஊழியம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இரட்சிக்கப்பட்ட எல்லாருக்கும் இருக்கிறது. ஆனால் அதன் பின்ன��ியில் எந்த வயதில் அவருக்கு ஊழியம் செய்யலாம்\n1 தீமோத்தேயு:2.5 – தினத்தியானம்\nதேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே. 1 தீமோத்தேயு:2.5\nஎந்த வயதில் தேவனுக்கு ஊழியம் செய்யலாம்\n1 தீமோத்தேயு:2.5 – தினத்தியானம்\nஇயேசு-லேகியோன் சந்திப்பு – பாகம் 7\nதேவனிடம் சமரசம் செய்ய விரும்புகிறோமா\nஇயேசு-லேகியோன் சந்திப்பு – பாகம் 6\nஎந்த வயதில் தேவனுக்கு ஊழியம் செய்யலாம்\n1 தீமோத்தேயு:2.5 – தினத்தியானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/news/146761-dont-throw-in-toilet", "date_download": "2021-10-19T11:55:01Z", "digest": "sha1:3ZJG7MVW3UHVFYX45RT56CX2IKAWZ4VY", "length": 9326, "nlines": 210, "source_domain": "www.vikatan.com", "title": "Doctor Vikatan - 01 January 2019 - கழிவறையில் வீசக் கூடாதவை! | don't throw in toilet - Doctor Vikatan - Vikatan", "raw_content": "\nகுழந்தைகளுக்குத் தனியறை... பரவலாகும் கலாசாரம்\nமருந்தாகும் உணவு - கொள்ளு தால் மக்னி\nடாக்டர் 360: ரத்தம்... ஒரு பயணியின் கதை\nஒட்டுண்ணிகள் நிகழ்த்தும் மாய விளையாட்டு\n - வலி தீர்க்கும் வழிகள்\nவறட்டு இருமலுக்கு உப்புத் தண்ணீர்\n‘ம்மா... ப்பா... ங்கா...’ மழலைச்சொல் கேட்போம்\nகோபம் தணிக்கும் கிரீன் டீ\nகொசு கடித்தாலும் ரத்தச்சோகை வரலாம்\nஆறாம ஆறாம காயங்கள் ஏது\n“தோல்வி என்பது வாழாத நிமிடங்களும் போராடாத தருணங்களும்” - வித்யா நாராயணன்\n - ஆனந்தம் விளையாடும் வீடு - 15\nநிலவைக் காட்டி அமுது ஊட்டி - 28\nஅடுத்த இதழில் புதுப்பொலிவுடன்... 8-ம் ஆண்டில்\n - மகள்களைப் பெற்ற மகராசிகளுக்கு...\n`தடுப்பூசி காரணமாக உயிரிழந்தாரா விழுப்புரம் பெண்' - ஆய்வு முடிவுக்காகக் காத்திருக்கும் அதிகாரிகள்\nவாங்க பழகலாம்... பெருந்தொற்றுக் கால நாகரிகங்கள்\n5 ஆண்டுகளில் 20 கோடி பேர்; ஐரோப்பாவை வதைத்த புபோனிக் பிளேக் - கொள்ளை நோய்களின் வரலாறு - பகுதி 4\nமீள்வோம்... மீட்போம்: கொரோனாவை வென்ற கதைகள்\nவீணடிக்கப்பட்ட 44 லட்சம் கொரோனா தடுப்பூசிகள்... முதலிடத்தில் தமிழ்நாடு\nஇறந்த மகனுடன் பேசும் தாய், மரணித்த தந்தையை விசாரிக்கும் மகள்... #SilentPandemic எனும் துயரம்\nமகாராஷ்டிராவில் 15ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்\nதமிழகத்தில் மீண்டும் லாக்டவுன் வருமா உண்மை நிலை என்ன\nதஞ்சாவூர்: ஒரே பள்ளியைச் சேர்ந்த 56 மாணவிகளுக்கு கொரோனா - கண்காணிப்பில் 24 கிராமங்கள்\nதீ பற்றிக்கொண்டால் என்ன செய்ய வேண்டும்.. முதலுதவி முதல் சிகிச்சை வரை A டு Z\nஒட்டுமொத்த விகடனுக்கும் ஒ��ே ஷார்ட்கட்\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்\nதெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism\nபாலின சமஉரிமை, குழந்தைகள் உளவியல், உடல் நலம் குறித்த எழுத்துக்களை இங்கு தேடலாம்\nஇதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sri-lanka.mom-rsf.org/ta/%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%99%E0%AE%95%E0%AE%B3/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%95/", "date_download": "2021-10-19T12:50:52Z", "digest": "sha1:OZOCC3Q7EEN4BHMX3KUOS2MD4AEERMF5", "length": 6518, "nlines": 122, "source_domain": "sri-lanka.mom-rsf.org", "title": "பத்திரிகை | Media Ownership Monitor", "raw_content": "\nநாட்டின் மிகப்பழைய ஊடகமாக அச்சு ஊடகம் விளங்குகின்றது. தற்போது இலங்கையில் 20 க்கும் மேற்பட்ட தினசரி பத்திரிகைகளும், சுமார் 50 வார மற்றும் 30 மாதாந்த வெளியீடுகளும் உள்ளன.\nநாட்டில் 100 க்கும் மேற்பட்ட அச்சிடப்பட்ட பிரசுரங்கள் இருந்தும், வாசகர்களின் பங்களிப்பு நான்கு செய்தி நிறுவனங்களிடையே மையப்படுத்தப்பட்டுள்ளது: விஜய பத்திரிகைகள் லிமிடெட் அசோசியேட்டட் பத்திரிகைகள் சிலோன் லிமிடெட் (ANCL/லேக் ஹவுஸ்) மற்றும் உபாலி செய்தி பத்திரிகை (பிரைவேட்) லிமிடெட் மற்றும் சிலோன் பத்திரிகைகள் (பிரைவேட்) லிமிடெட். ANCL ஒரு அரசுக்குச் சொந்தமான ஊடக அமைப்பாகும், மற்றொன்று தனிப்பட்ட முறையில் சொந்தமாக உள்ளது. அதில் ஒன்று அரசுக்குச் சொந்தமான ஊடக அமைப்பாக இருக்கும் நிலையில் மற்ற மூன்றும் தனியாருக்கு சொந்தமானதாக உள்ளன.பத்திரிகைகள் பதிவு செய்ய மற்றும் செய்தித்தாள் உள்ளடக்கத்தை கண்காணிக்கும் அதிகாரத்தை அரசு1973 ஆம் ஆண்டின்,சட்ட இலக்கம் 5 ன் கீழ் நிறுவப்பட்ட இலங்கை பத்திரிகை பேரவையின் (SLPC) மூலம் பெற்றுக்கொண்டமையால், அரசு அச்சுத்துறையின் உரிமையாளாராகவும் அதை கட்டுப்படுத்தும் ஒரு சக்தியாகவும் செயலாருக்கிறது.\nசெயன்முறை, முன்னேற்றம் மற்றும் பொதுமக்கள்\nஅதிகளவு உரிமை, அதிகளவு செல்வாக்கு\nசெயன்முறை, முன்னேற்றம் மற்றும் பொதுமக்கள்\nஅதிகளவு உரிமை, அதிகளவு செல்வாக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/southern-districts", "date_download": "2021-10-19T11:54:20Z", "digest": "sha1:DTXR7ORJP4EEPFLKSXWG2WTPAWVLPJTR", "length": 18558, "nlines": 129, "source_domain": "tamil.asianetnews.com", "title": "southern districts: Latest News, Photos, Videos on southern districts | tamil.asianetnews.com", "raw_content": "\nசபாநாயகர் பதவியை அடிச்சுத்தூக்கும் தென்மாவட்டங்கள்.. 10 முறை கிடைத்த வாய்ப்பு.. நெல்லைக்கு மட்டும் 5 முறை.\nதமிழக சட்டப்பேரவைத் தலைவராக தென் மாவட்டங்களைச் சேர்ந்தோரே இதுவரை அதிகளவில் அவையை அலங்கரித்திருக்கிறார்கள்.\nநாளை முதல் இரவு நேர ஊடங்கு அமல்.. இந்த மாவட்டங்களுக்கு பகல் நேரங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்க முடிவு..\nஇரவு நேர ஊடங்கு காரணமாக நாளை முதல் தென் மாவட்டங்களுக்கு பகல் நேரங்களில் கூடுதல் அரசு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nராகுல் காந்தியால் தென் மாவட்டங்களில் எழுச்சி.. முருகன் கூறுவது தவறு.. எகிறி அடிக்கும் விஜய் வசந்த்குமார்.\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் தென் மாவட்டத்திற்கான வருகையால் எழுச்சி ஏற்படுமென தமிழக காங்கிரஸ் பொதுச்செயலாளர் விஜய் வசந்த்குமார் கூறியுள்ளார்.\nபிப்ரவரி 27, 28, மார்ச் 1 ஆகிய மூன்று தினங்கள் ராகுல் காந்தி தென்மாவட்டங்களில் சுற்றுப்பயணம். கே.எஸ் அழகிரி.\nபிப்ரவரி 27, 28 மற்றும் மார்ச் 1 ஆகிய மூன்று தினங்கள் ராகுல் காந்தி தென்மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் எனவும், மார்ச் 1 ம் தேதி கன்னியாகுமரி வருகிறார் எனவும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.\nஅடுத்த 24 மணி நேரத்தில் தென் மாவட்டங்களில் லேசான மழை.. சென்னையில் அதிகாலையில் பனிமூட்டம் என எச்சரிக்கை.\nஅடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மற்றும் வடக்கு உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.\nவரும் 19ஆம் தேதியுடன் தென் மாவட்டங்களில மழை ஓயும்.. அடுத்த 24 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் கன மழை.\nவடகிழக்கு பருவமழையானது தென் மாநிலங்களில் இருந்து வருகின்ற 19ஆம் தேதி விலகுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது\nமக்களே உஷார்.. இந்திய பெருங்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி.. தென் மாவட்டங்களில் மிதமான மழை..\nதென்மேற்கு வங்கக் கடலில் தெற்கு பகுதி மற்றும் அதனை ஒட்டிய இந்தியப்பெருங்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்துக்க�� தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், வட தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.\nஅதிதீவிர புயலாக மாறியது நிவர்... உச்சக்கட்ட பதற்றத்தில் தமிழகம்.. பேருந்தை தொடர்ந்து ரயில்களும் ரத்து..\nநிவர் புயல் அதி தீவிர புயலாக மாறியுள்ளதால் தென்மாவட்டங்களுக்கான அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவிப்பை வெளியிட்டுள்ளது.\nதென்மாவட்டங்களில் 80 தொகுதிகள்... அதிமுகவின் வெற்றிக்கு வியூகம் வகுத்த ஓ.பி.எஸ்..\nஇந்த மூன்றையும் வைத்தே வரும் சட்டமன்றத் தேர்தலில் தென்மாவட்டங்களில் அதிமுகவை அதிக தொகுதிகளில் வெற்றி வாகை சூட வைக்க அவர் வியூகம் அமைத்துள்ளதாக ரத்தத்தின் ரத்தங்கள் மார்தட்டுகிறார்கள்.\nகொங்கு மண்டலம் புறக்கணிப்பு.. தென் மாவட்டங்கள் விரட்டி அடிப்பு... திமுகவில் ஆரம்பமானது புகைச்சல்..\nதிமுக தலைமை கழக நிர்வாகிகள் நியமனத்தில் கொங்கு மண்டலம் மற்றும் தென் மாவட்டங்கள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சிக்குள் புகைச்சல் ஆரம்பமாகியுள்ளது.\nகன்னியாகுமரி இடைத்தேர்தல்: பாஜக ரேஸில் முந்தும் ஸ்டார்கள் யார்..வேட்பாளர் தேர்வு குழப்பத்தில் பாஜக.\nவரும் சட்டப்பேரவை தேர்தலில் சிறப்பான வெற்றிக்காக இந்த ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படுகிறது. தேர்தலில் தனித்துப் போட்டியிட்டாலும், கூட்டணியில் போட்டியிட்டாலும் வெற்றிவாய்ப்பைப் பெறுவது குறித்து ஆலோசித்து வருகிறோம்.தென்மாவட்டங்களில் பாஜகவின் செல்வாக்கு அதிகளவில் வளர்ந்துள்ளது. இதனால் தேர்தலில் அதிக இடங்களில் பாஜக போட்டியிட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.\nதென் மாவட்டங்களில் ஜாதி வாக்கு.. அதிமுக மேலிடம் போட்ட தப்புக் கணக்கு.. காத்திருக்கும் இன்பதுரை..\nதென் மாவட்டங்களில் ஜாதி வாக்கு வங்கியை தக்க வைக்கும் திட்டத்துடன் அண்மையில் அறிவிக்கப்பட்ட மாவட்டச் செயலாளர்கள் பட்டியலில் குறிப்பிட்ட தங்கள் சமுதாயம் கண்டுகொள்ளப்படவில்லை என்று அதிமுக மேலிடத்திற்கு அதிருப்தி மேல் அதிருப்தி தெரிவித்து தாக்கீதுகள் அனுப்பி வைக்கப்படுகின்றன.\n ரெம்டிசிவர் மற்றும் டாசிலிசிமாப் மருந்துகளை வழங்க கோரும் பாமக..\nகொரோனா வை��ஸ் தொற்று தென் மாவட்டங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், ரெம்டிசிவர் மற்றும் டாசிலிசிமாப் மருந்துகளை தென்மாவட்டங்களுக்கு வழங்க அரசு முன்வர வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி பொருளாளரான திலகபாமா கோரிக்கை விடுத்துள்ளார்,\nதென் மாவட்டங்களை சுற்றி வளைத்த கொரோனா.. திடீரென தொற்று, பலி எண்ணிக்கை இருமடங்கு உயர்வு.. அலறும் சு.வெங்கடேசன்\nதென் மாவட்டங்களில் தொற்று மற்றும் உயிரிழந்தோர் எண்ணிக்கை இருமடங்கு அதிகரித்துள்ளது. இது தொடர்பாக முதல்வர் உடனே தலையிட வேண்டும் என்று சு.வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.\n வெப்பம் தணிந்ததால் மக்கள் உற்சாகம்..\nதிருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட தென்மாவட்டங்களில் பல இடங்களில் நேற்றிலிருந்து பரவலாக மழை பெய்து வருகிறது. நள்ளிரவில் இடியுடன் தொடங்கிய மழை அதிகாலை நேரத்தில் வெளுத்து வாங்கியது.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகோவிட் மூன்றாவது அலையில் இருந்து நம்மை காத்து கொள்ள சுயபரிசோதனை கருவியே நமக்கு தேவை \nபலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய விளையாட்டு வீரர்கள் \n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய கலைஞர்கள்\nமஹசூஸ் வெற்றியாளர் ஏசியாநெட் நியூஸ் தமிழுக்கு அளித்த பேட்டி\nகோவிட் மூன்றாவது அலையில் இருந்து நம்மை காத்து கொள்ள சுயபரிசோதனை கருவியே நமக்கு தேவை \nபலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய விளையாட்டு வீரர்கள் \nதிமுக ஆட்சிக்கு 5000 கோடி பலன்... பாஜக தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை..\nடி20 உலக கோப்பையில் அவர் தான் இந்திய அணியின் \"X Factor\" பிளேயர்.. கம்பீர், இர்ஃபான் பதான் ஒருமித்த குரல்\nராகவா லாரன்ஸ் - நடிக்கும் படத்தில் ‘பாடாத பாட்டெல்லாம்’ ரீமிக்ஸ் பாடல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nitharsanam.net/178268/news/178268.html", "date_download": "2021-10-19T12:09:17Z", "digest": "sha1:KB2B7FZJTUCTBD4JPMBTYXYGXESMPTS6", "length": 30863, "nlines": 121, "source_domain": "www.nitharsanam.net", "title": "தண்டிக்கப்படுவோம் என்ற பயம் ஏற்படாத வரை தாக்குதல்கள் தொடரும்(கட்டுரை)!! : நிதர்சனம்", "raw_content": "\nதண்டிக்கப்படுவோம் என்ற பயம் ஏற்படாத வரை தாக்குதல்கள் தொடரும்(கட்டுரை)\nஇலங்கை, முஸ்லிம்களுக்கு பாதுகாப்பற்ற நாடுகளில் ஒன்றென, இலண்டன் நகரை மையமாகக் கொண்டியங்கும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான, சர்வதேச மன்னிப்புச் சபை, பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதி வெளியிட்ட, தனது வருடாந்த அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தது.\nகடந்த காலங்களில், இலங்கை முஸ்லிம்களின் வியாபார நிலையங்கள், பள்ளிவாசல்கள் மற்றும் வீடுகள் அடிக்கடி சிங்களவர்களின் தாக்குதலுக்கு இலக்காகி வந்தன.\nகடந்த நவம்பர் மாதம், காலி, கிந்தொட்டையில் சிறு பிரச்சினையொன்றின் காரணமாக, முஸ்லிம்களின் உடமைகள் மற்றும் பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டன.\nஆயினும், இலங்கை முஸ்லிம்களுக்கு மிகவும் பாதுகாப்பற்ற நாடுகளில் ஒன்று என்பதை இலங்கை முஸ்லிம்களாவது கடந்த மாதம் நினைக்கவில்லை.\n2012 ஆம் ஆண்டு முதல், 2014 ஆண்டு வரை, அதாவது மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தின் இறுதி மூன்று ஆண்டுகளில், இலங்கை முஸ்லிம்களுக்கு, எப்போது எது நடக்குமோ என்ற பீதியில், வாழ வேண்டிய நிலை ஏற்பட்டு இருந்தது.\nமுஸ்லிம் விரோதக் கும்பல்களுக்கு, அப்போதைய அரசாங்கத்தின் ஆதரவு கிடைத்தமையே அதற்கு முக்கிய காரணமாகும். அக்காலத்தில், சர்வதேச மன்னிப்புச் சபை, இந்த அறிக்கையை வெளியிட்டு இருந்தால், முஸ்லிம்கள் மட்டுமல்லாது, வேறு மதத்தவர்களும் அதை நம்பியிருப்பார்கள்.\nகடந்த மாத அறிக்கையை, வாசித்தவர்களும் அதைப்பற்றி அறிந்தவர்களும் எவ்வளவு பொருட்படுத்தாமல் விட்டார்கள் என்றால், சிலர் ஓரிரு நாட்களிலும் சிலர் ஒரு சில மணித்தியாலங்களிலும் அதை மறந்து விட்டார்கள்.\nஆனால், அந்த அறிக்கை வெளியிடப்பட்டு சுமார் 10 நாட்களில், அம்பாறையிலும் கண்டி மாவட்டத்தில் திகன, தெல்தெனிய, கட்டுகஸ்தொட்ட மற்றும் தென்னக் கும்புற போன்ற பகுதிகளிலும் முஸ்லிம்களின் வீடுகள், பள்ளிவாசல்கள் மற்றும் கடைகள் பற்றி எரியும்போது, மன்னிப்புச் சபையின் அறிக்கை உண்மையாகி விட்டது.\nஇன்று நாடெங்கிலும் முஸ்லிம்கள், எந்த நேரம் என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் வாழ வேண���டிய நிலைமை உருவாகியுள்ளது. அரசாங்கமும் பாதுகாப்புத் துறையினரும் என்னதான் உத்தரவாதம் அளித்தாலும், எந்தவொரு முஸ்லிமுடைய உயிருக்கும் உடமைகளுக்கும் மதவழிபாட்டுத் தலத்துக்கும் பாதுகாப்பு என்ற உத்தரவாதமே இல்லாத நிலையே உருவாகியிருக்கிறது. ஆம் உலகில் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடுகளில் இலங்கையும் ஒன்று என்பது, நிரூபணமாகி விட்டது.\nஅம்பாறையில், பெப்ரவரி மாதம் 26 ஆம் திகதி, இடம்பெற்ற தாக்குதல்களைப் போலல்லாது, கண்டி மாவட்டத்தில் மார்ச் நான்காம் திகதி ஆரம்பிக்கப்பட்ட தாக்குதல்கள், பயங்கரமானதும் பல நாட்கள் நீடித்ததுமாகக் காணப்பட்டன.\nஅரசாங்கம் ஐந்தாம் திகதி, கண்டி மாவட்டத்தில் பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தையும் மறுநாள், ஒரு வார காலத்துக்கு அவசரகால நிலையையும் பிரகடனப்படுத்தும் அளவுக்கு அவை பயங்கரமாகின.\nஆரம்பத்தில், இரவு நேர ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட போதிலும், வன்செயல்கள் தொடரவே, பகல் நேரங்களிலும் அச்சட்டம் அமுல்படுத்தப்பட்டது.\nகடந்த நவம்பர் மாதம் காலி, கிந்தொட்டை என்ற இடத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்செயல்கள் இடம்பெற்ற போதும், பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. ஆனால், முஸ்லிம்கள் சம்பந்தமான ஒரு விடயத்துக்காக, 103 ஆண்டுகளுக்குப் பின்னரே, அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.\nஇதற்கு முன்னர், 1915 ஆம் ஆண்டு, சிங்கள-முஸ்லிம் கலவரம் ஏற்பட்ட போதே, முஸ்லிம்கள் சம்பந்தப்பட்ட ஒரு விடயத்துக்காக, அவ்வாறான சட்டம் பிறப்பிக்கப்பட்டது. அன்று அவசரகாலச் சட்டம் நடைமுறையில் இருக்கவில்லை. எனவே, ‘மார்ஷல் லோ’ எனப்படும் இராணுவச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது.\nகண்டி மாவட்டத்தில், அவசரகாலச் சட்டம் அமுல்படுத்தப்பட்ட நிலையிலும் ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் இருந்த வேளையிலும், முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் எவ்வித தடையுமின்றி இடம்பெற்றமையாலேயே அரசாங்கம் தொடர்ந்து, ஊரடங்குச் சட்டத்தை பிறப்பிக்க வேண்டியதாயிற்று.\nமறுபுறத்தில், அச்சட்டங்கள் பெயரளவில் மட்டுமே இருந்தன என்பதற்கு, அச்சட்டங்களே சிறந்த உதாரணங்களாகும். வேறு வார்த்தைகளில் கூறுவதாக இருந்தால், அச்சட்டங்கள் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களைக் கட்டுப்படுத்தினவேயன்றி, தாக்குதல்களை நடத்திய காடையர்களைக் கட்டுப்படுத்தவில்லை.\nஅவசரகால நிலையோ அல்லது ஊரடங்குச் சட்டமோ, இலங்கை மக்களுக்கு தெரியாத அல்லது பழக்கமில்லாத சட்டங்கள் அல்ல. நாடு சுதந்திரமடைந்து கழிந்த 70 ஆண்டுகளில் அரை வாசிக்கு மேல், அதாவது 40 ஆண்டுகளுக்கு மேல் நாடு அவசரகால நிலையின் கீழேயே நடத்தப்பட்டுள்ளது.\n1971 ஆம் ஆண்டு, மக்கள் விடுதலை முன்னணியின் முதலாவது கிளர்ச்சி காரணமாக, அந்த ஆண்டு மார்ச் மாதம் 16 ஆம் திகதி பிறப்பிக்கப்பட்ட அவசரகாலச் சட்டம், புலிகளுக்கும் ஆயுதப் படையினருக்கும் இடையிலான போர் முடிவடைந்து, இரண்டு ஆண்டுகள் முடிவடையும் வரை, இடைக்கிடையே ஒரு சில மாதங்கள் நீக்கப்பட்டு, 2011 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 25 ஆம் திகதி வரை அமுலில் இருந்தது.\nஅந்தக் காலத்தில், அடிக்கடி நாட்டில் ஊரடங்குச் சட்டமும் பிறப்பிக்கப்பட்டது. அவற்றின் பயங்கரத் தன்மையை, தற்போது 20 வயதைத் தாண்டியவர்கள் நன்கறிவர். அவற்றை மீறினால் ஏற்படும் விளைவுகளையும் அவர்கள் அறிவர்.\nஅந்தச் சட்டங்கள் மட்டுமல்ல, பாதுகாப்புச் செயலாளராக கோட்டாபய ராஜபக்ஷ இருக்கும் போது, ஒரு குப்பைப் பையை வீதியில் தூக்கியெறிவதற்குக்கூட, எவருக்கும் தைரியம் இருக்கவில்லை. செயற்படும் சட்டத்துக்கு அவ்வாறுதான் பயப்படுவார்கள்.\nஆனால், கண்டிப் பகுதி காடையர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அவசரகாலச் சட்டத்தையோ அல்லது பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தையோ மதிக்கவில்லை.\nஅவை, மீறக்கூடியவை என்பதையும் மீறினால் தமக்கு எதுவும் நடக்கப் போவதில்லை என்பதையும் அவர்கள் நன்கறிந்திருந்தனர் போலும்.\nபல நூற்றுக் கணக்கான குண்டர்கள், தடிகளோடும் பொல்லுகளோடும் நடமாடுவதை தொலைக்காட்சியில் மக்கள் கண்டனர். ஆனால், சுமார் 280 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். அதாவது, குண்டர்களில் பலரை, எந்தவொரு சட்டமும் கட்டுப்படுத்தவோ பின் தொடர்ந்து வரவோ இல்லை.\nஇதற்கு முன்னைய இனக் கலவரங்களின் போது, எதையும் விசாரித்து அறியாது, சிங்கள மக்களின் பக்கத்தை எடுக்கும் ஜாதிக ஹெல உருமயவின் தலைவரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்கவே, இம்முறை சட்டம் குண்டர்களை கட்டுப்படுத்தவில்லை என்று கூறியிருக்கிறார். பிரச்சினைகள் ஆரம்பிக்கும் போது, பொலிஸார் செயற்படாததன் காரணமாகவே வன்செயல்கள் பரவின என்று அவர் கூறியிருக்கிறார்.\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் நிலைமையைக் கட்டுப்படுத்தச் செய்திருக்க வேண்டிய ஒரே வேலை, சட்டத்தை அமுல்செய்வதே எனக் கூறியிருந்தார்.\nபல இடங்களில் சம்பவங்கள் இடம்பெறும்போது, பொலிஸார் வெறும் பார்வையாளர்களாகவே இருந்துள்ளனர் என அரசாங்கத்தின் தலைவர்களின் மிக நெருங்கிய நண்பரான நாடாளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்கிரமரத்ன கூறினார். செயலுருவம் பெறாவிட்டால் அவசரகாலச் சட்டமோ, ஊரடங்குச் சட்டமோ எதற்கு என அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.\nபுலனாய்வுப் பிரிவினர் ஒழுங்காகச் செயற்படவில்லை என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல கூறுகிறார்.\nபொலிஸாரின் செயற்பாடுகளில் மந்தநிலை இருந்ததாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று பார்வையிட்டு வந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் கடந்த ஞாயிற்றுக்கிழமை கூறியிருந்தார். அவர் தான், தாக்குதல்கள் இடம்பெறும் போது, பொலிஸாருக்குப் பொறுப்பான சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக இருந்தார்.\nஅம்பாறையில் முஸ்லிம் சாப்பாட்டுக் கடை ஒன்றில், உணவருந்த வந்த சிங்களவர் ஒருவரின் உணவில், கருத்தடை மாத்திரைகளைக் கலந்துவிட்டார்கள் என்ற பொய் வதந்தியைப் பரப்பிவிட்டே, அந்தக் கடையையும் அயலில் இருந்த ஏனைய முஸ்லிம்களின் கடைகளையும் பள்ளிவாசலையும் தாக்கியிருந்தார்கள்.\nஅது தொடர்பாக, சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக, சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான ஐ.நா ஒப்பந்தத்தின் கீழ், வழக்குத் தாக்கல் செய்வதற்கு ஆரம்பத்தில் நடவடிக்கை எடுத்த பொலிஸார், பின்னர் இது இனக்கலவரம் அல்ல எனக்கூறி, சாதாரண சட்டத்தின் கீழ் வழக்கைத் தொடர்வதாக நீதிமன்றத்தில் அறிவித்துள்ளனர்.\nஇது தொடர்பாக, விசாரணை செய்யுமாறு பிரதமர், மட்டக்களப்பு பிரதேசத்துக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபரைப் பணித்துள்ளார்.\nபொலிஸாருக்கு எதிராக அரசாங்கத்தின் தலைவர்களே இவ்வளவு குற்றஞ்சாட்டும் போதும், பொலிஸ் திணைக்கள உயர்அதிகாரிகள், அதற்குப் பதிலளிப்பதாகத் தெரியவில்லை.\nஅதேவேளை, அவ்வாறு பொலிஸாரைக் குறை கூறிக் கொண்டு இருக்கும் அரச தலைவர்கள், அந்தப் பொலிஸாருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாகவும் தெரியவில்லை.\nஅம்பாறையில் இடம்பெற்ற சம்பவமே, தாக்குதல்கள் திட்டமிடப்பட்டவை என்ப��ை மிகவும் தெளிவாக, வெளிமாவட்டங்களில் உள்ளவர்களுக்கு எடுத்துக் காட்டியது. இரவு ஒன்பது மணிக்குப் பின்னர், அந்தச் சாப்பாட்டுக் கடைக்கு வந்தவர், தமது உணவில் ஏதோ வித்தியாசமான ஒரு பொருளைக் காண்கிறார். அவர் உடனே அது வேறொன்றும் அல்லாது, கருத்தடை மாத்திரையே என முடிவுக்கு வருகிறார். அவரது அலைபேசி அழைப்பை அடுத்து, அங்கு விரைந்துவரப் பலர் தயாராகவும் இருந்துள்ளனர். அவர்கள், கடையின் காசாளரை மிரட்டுகின்றனர். அவர் செய்வதறியாது பயத்தினால் தலையை அசைக்கிறார். அது வீடியோ செய்யப்பட்டு, உடனே சமூக வலைத்தளங்கள் முலம் பரப்பப்படுவதோடு கடைகள் அடித்து நொறுக்கப்படுகின்றன.\nஇப்போது, உணவில் இருந்தது வெறும் மாஉருண்டை என அரச இரசாயனப் பகுப்பாய்வாளர் ஏ. வெலிஅங்ககே முடிவு செய்துள்ளார். அவ்வாறாயின், கடையின் காசாளர், தாம் கருத்தடை மாத்திரைகளை உணவில் சேர்த்ததாக ஏற்றுக் கொண்டார் என்றவர்கள் இப்போது என்ன கூறப் போகிறார்கள்\nகுடிபோதையில் இருந்த நான்கு ‘முஸ்லிம்கள்’ ஒரு சிங்களவரைத் தாக்கி, அவர் மரணமடைந்ததை அடுத்தே, கண்டி மாவட்டத்தில் கலவரநிலை ஏற்பட்டது. ஆனால், அந்தச் சிங்களவர் தாக்கப்பட்ட சம்பவம், கலவரத்தை ஆரம்பிக்கக் காத்திருந்தவர்களுக்குக் கிடைத்த சந்தர்ப்பமாக அமைந்ததாகவும் தெரிகிறது.\n2012 முதல் 2014 வரை, இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களுக்கும் இம்முறை இடம்பெற்ற தாக்குதல்களுக்கும் இடையில் உள்ள முக்கியமானதொரு வேறுபாடு என்னவென்றால், இம்முறை ஆரம்பத்திலிருந்தே சிங்களப் புத்திஜீவிகள், இனவாதிகளுக்கு எதிராகக் குரல் கொடுத்தமையாகும்.\nகருத்தடை மாத்திரை குற்றச்சாட்டை, அவர்கள் எடுத்த எடுப்பிலேயே பகிரங்கமாகவே நிராகரித்தனர்.\nஅரசாங்கமும் ஹலால் பிரச்சினையின் போது, மஹிந்தவின் அரசாங்கம் நடந்து கொண்டதைப் போல், வருடக் கணக்கில் இழுத்தடிக்காது ஒரு வார காலத்துக்குள்ளேயே உத்தியோக பூர்வ தெளிவுபடுத்தல்களை வெளியிட்டது. அரச இரசாயனப் பகுப்பாய்வாளருக்குப் புறம்பாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், நிரந்தரமாகக் கருத்தரிப்பைத் தடுக்கும் இரசாயனப் பொருட்கள், உலகில் எங்கும் கண்டுபிடிக்கப்படவில்லை என உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.\nமுஸ்லிம்கள் சிலரது குற்றச் செயலொன்றைப் பாவித்து, கண்டியில் கலவரம் ஆர��்பிக்கப்பட்ட போதிலும், சிங்களப் புத்திஜீவிகள் அதையும் பகிரங்கமாக எதிர்த்தனர்.\nஆனால், அன்றும் இன்றும் ஒரு விடயம் பொதுவாக இருக்கிறது. அதுதான் பயங்கரமானது. இனவாதிகள் விடயத்தில் பொலிஸார் காட்டும் மிருதுவான போக்கும் அவர்களுக்குச் சார்பாகச் செயற்பட்டு, அவர்களைக் காப்பாற்ற முயற்சிப்பதுமாகும்.\nதமது சிங்கள வாக்கு வங்கி பாதிக்கப்பட்டு விடுமோ எனப் பயந்து, ஆட்சியாளர்களும் பொலிஸாரின் அந்தச் செயற்பாடுகளைக் கண்டும் காணாததைப் போல் இருப்பதும், அன்றுபோல் இன்றும் காணக்கூடியதாக இருக்கிறது. இனவாதம், பொலிஸ் திணைக்களத்தில், நிறுவனமயப்படுத்தப்பட்டு விட்டது போலும்.\nகண்டியிலும் அம்பாறையிலும் நாட்டின் ஏனைய சில பகுதிகளிலும் ஏற்கெனவே கைது செய்யப்பட்டவர்கள், தண்டிக்கப்படுவார்கள் என்பதற்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை.\nதாம் தண்டிக்கப்படுவோம் என்ற உணர்வு இனவாதிகளின் மனதில் ஏற்படாத வரை, அவர்கள் தமது நடவடிக்கைகளை நிறுத்தப் போவதில்லை. அவ்வாறானதொரு நிலைமை நாட்டில் இல்லை.\nPosted in: செய்திகள், கட்டுரை\nபெண்களுக்கு பந்தா இல்லாத ஆண்களை தான் மிகவும் பிடிக்கும்..\nசெக்ஸ் என்பது ஆபாசம் அல்ல… ரசித்து அனுபவியுங்கள்.. \nகுழிகளை மறைக்க O3 + ஃபேஷியல்\nபெண்களின் இடுப்புக்கு அழகூட்டும் ஒட்டியாணம்\nஅப்படி என்னதான் நடக்கிறது இங்கே ஏயலியன்கள் நடமாடும் ஒரே இடம் ஏயலியன்கள் நடமாடும் ஒரே இடம்\nதிடீரென நடுவானில் தோன்றிய விசித்திர ஏலியன் விமானம்\nசீனா வழங்கிய நிதி: ஒரு வாளி நீரில் ஒரு துளி\nஒரு டாக்டர் ஆக்டரான கதை\nஇதய நோய் வராமல் இருக்கணுமா\n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2021-10-19T11:38:47Z", "digest": "sha1:BSP7F7W52WUT2XGIZAAELUGQZGJFOEFE", "length": 3165, "nlines": 48, "source_domain": "www.noolaham.org", "title": "ஆரோக்கியம் தேகப்பயிற்சி - நூலகம்", "raw_content": "\nஆசிரியர் சபாரத்தினசிங்கம், வே. மு.\nநூல் வகை மருத்துவமும் நலவியலும்\nஆரோக்கியம் தேகப்பயிற்சி (6.50 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [11,760] இதழ்கள் [13,280] பத்திரிகைகள் [53,303] பிரசுரங்கள் [1,125] நினைவு மலர்கள் [1,513] சிறப்பு மலர்கள் [5,516] எழுத்தாளர்கள் [4,874] பதிப்பாளர்கள் [4,171] வெளியீட்டு ஆண்டு [185] குறிச்சொற்கள் [91] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,157]\n1958 இல் வெளியான நூல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81,_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2021-10-19T12:48:12Z", "digest": "sha1:CQL6EFDXJF7UUYISCXURQRUPPBKHZEOQ", "length": 4250, "nlines": 40, "source_domain": "www.noolaham.org", "title": "ஆளுமை:இராயப்பு, குருசுமுத்து - நூலகம்", "raw_content": "\nஇந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.\nஇராயப்பு, கு. (1949.11.10 - ) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை குருசுமுத்து. இவர் கல்விப் பொது சாதாரண தரம் வரை பயின்று, கலைத்துறையில் காலடி எடுத்து வைத்தார்.\nஇவர் 1960 - 1981 வரை 40 இற்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதியதோடு, 1968 ஆம் ஆண்டில் குருநகர் இளைஞர் கலைக்கழகத்தால் வெளியீடு செய்யப்பட்ட உலகின் ஒளி என்னும் தொகுப்பு நூலின் ஆசிரியராகவும் நம் ஒளி என்னும் சஞ்சிகையின் ஆசிரியராகவும் இருந்துள்ளார். மேலும் இவர், கடலலைகள் கொஞ்சும் நகர், குருதிக் குளியல் போன்ற நூல்களை எழுதியுள்ளார். இலக்கிய நூல் பரிசுப் போட்டியில் 2006 இற்கான பல்துறைப் பரிசும் இவருக்குக் கிடைத்துள்ளது.\nநூலக எண்: 15444 பக்கங்கள் 02-03\nநூல்கள் [11,760] இதழ்கள் [13,280] பத்திரிகைகள் [53,303] பிரசுரங்கள் [1,125] நினைவு மலர்கள் [1,513] சிறப்பு மலர்கள் [5,516] எழுத்தாளர்கள் [4,874] பதிப்பாளர்கள் [4,171] வெளியீட்டு ஆண்டு [185] குறிச்சொற்கள் [91] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,157]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.noolaham.org/wiki/index.php/Tamil_Element_in_Ceylon_Culture", "date_download": "2021-10-19T10:56:06Z", "digest": "sha1:GWIVTVXBQEEKFWMWTCMEBJT7COPWGMF3", "length": 2832, "nlines": 50, "source_domain": "www.noolaham.org", "title": "Tamil Element in Ceylon Culture - நூலகம்", "raw_content": "\nTamil Element in Ceylon Culture (4.06 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [11,760] இதழ்கள் [13,280] பத்திரிகைகள் [53,303] பிரசுரங்கள் [1,125] நினைவு மலர்கள் [1,513] சிறப்பு மலர்கள் [5,516] எழுத்தாளர்கள் [4,874] பதிப்பாளர்கள் [4,171] வெளியீட்டு ஆண்டு [185] குறிச்சொற்கள் [91] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,157]\n1959 இல் வெளியான நூல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilceylon.com/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2021-10-19T13:22:52Z", "digest": "sha1:XVI3PJEQEMRL4LLHWXNFZRXCWHCFBDGL", "length": 7498, "nlines": 101, "source_domain": "www.tamilceylon.com", "title": "பொதுத்தேர்தல் – வாக்குப்பெட்டிகளை எடுத்துச் செல்லும் பணிகள் ஆரம்பம் | Tamil Ceylon", "raw_content": "\nHome செய்திகள் பொதுத்தேர்தல் – வாக்குப்பெட்டிகளை எடுத்துச் செல்லும் பணிகள் ஆரம்பம்\nபொதுத்தேர்தல் – வாக்குப்பெட்டிகளை எடுத்துச் செல்லும் பணிகள் ஆரம்பம்\nபொதுத்தேர்தலுக்கான வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிகளை எடுத்துச் செல்லும் பணிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெறவுள்ளன.\nஇதற்கமைய குறித்த பணிகள் இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.\nமாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலரின் கண்காணிப்பின் கீழ் இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.\n2020 பொதுத்தேர்தலுக்கான வாக்களிப்பு நாளை காலை 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.\nஇந்த முறை பொதுத்தேர்தலில் 22 மாவட்டங்களில் அங்கிகரிக்கப்பட்ட 20 அரசியல் கட்சிகளும் 34 சுயேட்சைக்குழுக்களும் போட்டியிடவுள்ளன. அவற்றில் 7 ஆயிரத்து 452 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.\nஅத்துடன் குறித்த பொதுத்தேர்தலில் நாடளாவிய ரீதியில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள 12 ஆயித்து 984 வாக்களிப்பு நிலையங்களில் ஒரு கோடியே 62 இலட்சத்து 63 ஆயிரத்து 885 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர்.\nஇதேவேளை, நாளை வாக்களிப்புகள் இடம்பெறவுள்ள நிலையில், அனைத்து வாக்களிப்பு நிலையங்களிலும் தொற்று நீக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nPrevious articleவிடுமுறை தரவில்லை என்றால் முறைப்பாடு வழங்கலாம் – தேர்தல்கள் ஆணைக்குழு\nNext articleபுதிய நாடாளுமன்றம் 20ஆம் திகதி கூடுகிறது – வர்த்தமானி வெளியீடு\nவேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்பவர்களுக்கு முக்கிய தகவல்\nநாளாந்த Passport விநியோகத்தில் அதிகரிப்பு\nநாட்டில் பசுவதையை தடை செய்ய நடவடிக்கை\nஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 21வது ஆண்டு நினைவு தினம் அனுஸ்டிப்பு\nசாணக்கியன் நம்பிக்கைக்கு உரியவர் அல்ல – டக்ளஸ் குற்றச்சாட்டு\nஇலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா\nவேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்பவர்களுக்கு முக்கிய தகவல்\nஉள்நாட்டுச் செய்திகள் amal - 19-10-2021 0\nநாளாந்த Passport விநியோகத்தில் அதிகரிப்பு\nஉள்நாட்டுச் செய்திகள் amal - 19-10-2021 0\nநாட்டில் பசுவதையை தடை செய்ய நடவடிக்கை\nஉள்நாட்டுச் செய்திகள் amal - 19-10-2021 0\nஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 21வது ஆண்டு நினைவு தினம் அனுஸ்டிப்பு\nஉள்நாட்டுச் செய்திகள் amal - 19-10-2021 0\nசாணக்கியன் நம்பிக்கைக்கு உரியவர் அல்ல – டக்ளஸ் குற்றச்சாட்டு\nஉள்நாட்டுச் செய்திகள் amal - 19-10-2021 0\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilceylon.com/%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%B0%E0%AE%95%E0%AE%AE-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3/", "date_download": "2021-10-19T12:21:23Z", "digest": "sha1:5SMP4D4QMRYXX22UJGVK5LTJEJB3MNIA", "length": 7031, "nlines": 100, "source_domain": "www.tamilceylon.com", "title": "மஹரகம வைத்தியசாலை பணியாளர்கள் 15 பேர் தனிமைப்படுத்தலில்! | Tamil Ceylon", "raw_content": "\nHome செய்திகள் உள்நாட்டுச் செய்திகள் மஹரகம வைத்தியசாலை பணியாளர்கள் 15 பேர் தனிமைப்படுத்தலில்\nமஹரகம வைத்தியசாலை பணியாளர்கள் 15 பேர் தனிமைப்படுத்தலில்\nமஹரகம புற்றுநோய் வைத்தியசாலை பணியாளர்கள் 15 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.\nவைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவுக்கு அண்மையில் சிகிச்சைகளுக்காக வருகை தந்த ஒருவர், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nஇதனையடுத்தே, வைத்தியசாலைப் பணியாளர்கள் 15 பேர் இவ்வாறு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் வசந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.\nஒருகொடவத்தைப் பகுதியைச் சேர்ந்த குறித்த நபர், ஏற்கனவே தனக்கு கொரோனா தொற்று உள்ளாகி இருப்பதை அறிந்திருந்த நிலையிலேயே, வைத்தியசாலைக்கு வருகை தந்திருந்ததாக வைத்தியசாலைப் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை புத்தளம் – ஆனமடுவ பகுதியில் கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டதையடுத்து, குறித்த நபருடன் நெருங்கிய தொடர்பினை வைத்திருந்த 09 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.\nPrevious article6 ஆவது நோயாளியும் கொரோனாவினால் உயிரிழப்பு\nNext articleஉண்மை தகவல்களை மறைப்பதால் பாரிய விளைவுகள் ஏற்படக்கூடும் என எச்சரிக்கை\nஇலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா\nடிசம்பா் இறுதிவரை வரையரைகளுடன் செயற்படுக – சுகாதார பிரிவு எச்சரிக்கை\n21ஆம் திகதிக்கு பி��்னரும் பயணத்தடை நீடிப்பா\n”உரம் இன்றி உழவு இல்லை”விவசாயிகளின் தற்கால பிரச்சினைக்கு தீர்வுகோரி மட்டக்களப்பில் போராட்டம்\nஅரிசியின் விலையும் அதிகரிக்கும் அபாயம்\nஇலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா\nஉள்நாட்டுச் செய்திகள் amal - 18-10-2021 0\nடிசம்பா் இறுதிவரை வரையரைகளுடன் செயற்படுக – சுகாதார பிரிவு எச்சரிக்கை\nஉள்நாட்டுச் செய்திகள் amal - 18-10-2021 0\n21ஆம் திகதிக்கு பின்னரும் பயணத்தடை நீடிப்பா\nஉள்நாட்டுச் செய்திகள் amal - 18-10-2021 0\nஉள்நாட்டுச் செய்திகள் amal - 18-10-2021 0\n”உரம் இன்றி உழவு இல்லை”விவசாயிகளின் தற்கால பிரச்சினைக்கு தீர்வுகோரி மட்டக்களப்பில் போராட்டம்\nஉள்நாட்டுச் செய்திகள் amal - 18-10-2021 0\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaaiman.com/2021/05/blog-post_624.html", "date_download": "2021-10-19T11:24:54Z", "digest": "sha1:BAID6UR7ZVHU67MFID45W4PBAVEUYYQQ", "length": 3206, "nlines": 67, "source_domain": "www.thaaiman.com", "title": "வங்கிகளில் மட்டுப்படுத்தப்பட்ட சேவைகள் - THAAIMAN", "raw_content": "\nHome / Unlabelled / வங்கிகளில் மட்டுப்படுத்தப்பட்ட சேவைகள்\nஇலங்கையிலுள்ள அரச வங்கிகள், தங்களது மட்டுப்படுத்தப்பட்ட சேவைகளை இன்று ஆரம்பித்துள்ளன.\nஅதற்கமைய இலங்கை வங்கி, மக்கள் வங்கி உள்ளிட்ட அரச வங்கிகள், 11 மணி வரை மட்டுப்படுத்தப்பட்ட சேவைகளை முன்னெடுத்திருந்தன.\nஅத்துடன் குறித்த சேவையை, திங்கள் முதல் பகல் 1 மணி வரை முன்னெடுப்பதற்கு ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஇதேவேளை மாத இறுதி பணிகளை முன்னெடுப்பதற்காக நிதிகளை கையாளும் அரச திணைக்களங்கள் சில, இன்று திறக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\n🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷\n👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaaiman.com/2021/06/blog-post_12.html", "date_download": "2021-10-19T12:24:29Z", "digest": "sha1:PIJGHGKWB6AVFYYQ76CXN3HSTBQKJTBT", "length": 4375, "nlines": 68, "source_domain": "www.thaaiman.com", "title": "உள்ளே வரும் ரணில்; விசேட பேச்சுக்கு சஜித் ஏற்பாடு - THAAIMAN", "raw_content": "\nHome / Unlabelled / உள்ளே வரும் ரணில்; விசேட பேச்சுக்கு சஜித் ஏற்பாடு\nஉள்ளே வரும் ரணில்; விசேட பேச்சுக்கு சஜித் ஏற்பாடு\nஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களுக்கு இடையிலான மற்றுமொரு சந்திப்ப�� வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஎதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ 21ஆம் திகதிக்கு முன்னதாக மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் என கட்சித் தகவல்கள் கூறுகின்றன. எதிர்கால அரசியல் நடவடிக்கை குறித்து இந்த சந்திப்பின்போது பேசப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.\nகடந்த திங்கட்கிழமை கட்சியின் முதலாவது குழு சந்திப்பு நடந்ததில், அதில் கட்சி மற்றும் எதிர்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாஸவையே தொடர்ந்தும் சார்ந்திருப்போம் என்கிற தீர்மானத்திற்கு கட்சி உறுப்பினர்கள் வந்திருந்தனர்.\nஇந்த நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்க மீண்டும் நாடாளுமன்றத்திற்கு அடுத்துவரும் அமர்வில் கலந்துகொள்ளவிருக்கின்றார்.\nஇதன் காரணமாக ஐக்கிய மக்கள் சக்தியினுள் அதிர்வலையை ஏற்பட்டுள்ள நிலையிலேயே இந்த தீர்மானமும் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது.\n🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷\n👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/tag/29-%E0%AE%86%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2021-10-19T12:28:40Z", "digest": "sha1:PAFQGS5QDBI2AGLOLCIUITNQPGPJRRZU", "length": 4367, "nlines": 99, "source_domain": "vivasayam.org", "title": "29 ஆகிய தேதிகளில் ‘ஒருங்கிணைந்த பண்ணையம்’ பயிற்சி நடைபெறவுள்ளது. Archives - Vivasayam | விவசாயம்", "raw_content": "\nHome Tags 29 ஆகிய தேதிகளில் ‘ஒருங்கிணைந்த பண்ணையம்’ பயிற்சி நடைபெறவுள்ளது.\nTag: 29 ஆகிய தேதிகளில் ‘ஒருங்கிணைந்த பண்ணையம்’ பயிற்சி நடைபெறவுள்ளது.\nகீரனூர் ஒடுகம்பட்டி கொழிஞ்சிப் பண்ணையில் மார்ச் 27, 28, 29 ‘ஒருங்கிணைந்த பண்ணையம்’...\nதத்கல் முறையில் 10 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்\nஅக்ரிசக்தியின் வீட்டுத்தோட்டப் பயிற்சியின் வளர்ச்சி\nபூச்சி விரட்டி – வசம்பு\nகறிக்கோழிப் பண்ணை தொடங்க வங்கிக் கடன் மற்றும் மானியம் பெறுவது எப்படி \nகொரோனா காலத்தில் விவசாயிகளுக்கு உதவும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்\nபிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி\nபிரதமரின் விவசாய நீர்பாசன திட்டத்தில் பாசன கட்டமைப்பு உருவா���்கிட விவசாயிகளுக்கு மானியம்\nமரங்களும் மற்றும் அதன் பயன்கள்\nநிலத்தடி நீர் ஓட்டங்களை கண்டறிய சுலபமான முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1651990", "date_download": "2021-10-19T12:17:26Z", "digest": "sha1:6KD5CEKWVGAFZFGTSCI25YBQDJ5HFS5G", "length": 12247, "nlines": 22, "source_domain": "pib.gov.in", "title": "பாதுகாப்பு அமைச்சகம்", "raw_content": "அதிவேக ஏவுகணை தயாரிப்புக்கான ராக்கெட் என்ஜினை(HSTDV) வெற்றிகரமாக பரிசோதித்தது ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேற்பாட்டு நிறுவனம்\nஅதிவேக ஏவுகணை தயாரிப்புக்காக ஸ்கிராம்ஜெட் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ராக்கெட் என்ஜின், ஒடிசாவில் உள்ள வீலர் தீவில் அமைக்கப்பட்டுள்ள டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் ஏவுதளத்தில் இன்று காலை 11.03 மணிக்கு வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டது\nஒலியின் வேகத்தை விட 6 மடங்கு வேகத்தில் செல்லும் அதிவேக ஏவுகணைகளைத் தயாரிக்கும் முயற்சியில் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம்(டிஆர்டிஓ) ஈடுபட்டுள்ளது. இந்த ஏவுகணைகளில் பொருத்தக்கூடிய ராக்கெட் மோட்டர்கள் தற்போது பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த ராக்கெட்டில் ஸ்கிராம்ஜெட் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் எரிபொருளுடன், காற்றை உள்வாங்கி செயல்படும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. ஸ்கிராம்ஜெட் இன்ஜின் பொருத்தப்பட்ட அதிவேக ராக்கெட் (HSTDV) இன்று விண்ணில் ஏவி பரிசோதிக்கப்பட்டது. ஏவுதளத்தில் இருந்து புறப்பட்ட ராக்கெட், விண்ணில் 30 கி.மீ தூரம் சென்றது. ஸ்கிராம் ஜெட் இன்ஜின் வெற்றிகரமாக செயல்பட்டு, திட்டமிடப்பட்ட பாதையில், வினாடிக்கு 2 கி.மீ வேகத்தில், இந்த ராக்கெட் சென்றது.\nராக்கெட் செல்லும் பாதை ரேடார்கள், எலக்ட்ரோ-ஆப்டிக்கல் கருவிகள் மற்றும் தொலை தூர கண்காணிப்பு மையம் மூலம் கண்காணிக்கப்பட்டது. இவற்றை கண்காணிக்க வங்க கடலில், கப்பல் ஒன்றும் அனுப்பப்பட்டிருந்தது.\nஅதிவேக ஏவுகணை தயாரிப்புக்கு பயன்படும் இந்த ராக்கெட்டின் அனைத்து உள்நாட்டு தொழில்நுட்பங்களும் வெற்றிகரமாக செயல்பட்டது உறுதி செய்யப்பட்டது.\nஇதற்காக டிஆர்டிஓ அமைப்பை பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் பாராட்டினார். இந்த முக்கிய சாதனை , பிரதமரின் தற்சார்பு இந்தியா தொலை நோக்கை உணரவைப்பதாகவும் திரு.ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். இந்த ராக்கெட் இன்ஜின் தயாரிப்பில் ஈடுபட்ட விஞ்ஞானிகளுடன் பேசிய அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங், அவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார். அவர்களை நினைத்து நாடு பெருமைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nஅதிவேக ராக்கெட் திட்டத்தில் பணியாற்றிய அனைத்து விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு டிஆர்டிஓ தலைவர் திரு சதீஷ் ரெட்டி பாராட்டு தெரிவித்தார். இந்த வெற்றிகர பரிசோதனை மூலம், அதிவேக ராக்கெட்(ஹைபர்சோனிக்) என்ஜின் தயாரிக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் நுழைந்துள்ளது. இந்த ராக்கெட் என்ஜின், நவீன அதிவே ஏவுகணை தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅதிவேக ஏவுகணை தயாரிப்புக்கான ராக்கெட் என்ஜினை(HSTDV) வெற்றிகரமாக பரிசோதித்தது ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேற்பாட்டு நிறுவனம்\nஅதிவேக ஏவுகணை தயாரிப்புக்காக ஸ்கிராம்ஜெட் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ராக்கெட் என்ஜின், ஒடிசாவில் உள்ள வீலர் தீவில் அமைக்கப்பட்டுள்ள டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் ஏவுதளத்தில் இன்று காலை 11.03 மணிக்கு வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டது\nஒலியின் வேகத்தை விட 6 மடங்கு வேகத்தில் செல்லும் அதிவேக ஏவுகணைகளைத் தயாரிக்கும் முயற்சியில் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம்(டிஆர்டிஓ) ஈடுபட்டுள்ளது. இந்த ஏவுகணைகளில் பொருத்தக்கூடிய ராக்கெட் மோட்டர்கள் தற்போது பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த ராக்கெட்டில் ஸ்கிராம்ஜெட் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் எரிபொருளுடன், காற்றை உள்வாங்கி செயல்படும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. ஸ்கிராம்ஜெட் இன்ஜின் பொருத்தப்பட்ட அதிவேக ராக்கெட் (HSTDV) இன்று விண்ணில் ஏவி பரிசோதிக்கப்பட்டது. ஏவுதளத்தில் இருந்து புறப்பட்ட ராக்கெட், விண்ணில் 30 கி.மீ தூரம் சென்றது. ஸ்கிராம் ஜெட் இன்ஜின் வெற்றிகரமாக செயல்பட்டு, திட்டமிடப்பட்ட பாதையில், வினாடிக்கு 2 கி.மீ வேகத்தில், இந்த ராக்கெட் சென்றது.\nராக்கெட் செல்லும் பாதை ரேடார்கள், எலக்ட்ரோ-ஆப்டிக்கல் கருவிகள் மற்றும் தொலை தூர கண்காணிப்பு மையம் மூலம் கண்காணிக்கப்பட்டது. இவற்றை கண்காணிக்க வங்க கடலில், கப்பல் ஒன்றும் அனுப்பப்பட்டிருந்தது.\nஅதிவேக ஏவுகணை தயாரிப்புக்கு பயன்படும் ��ந்த ராக்கெட்டின் அனைத்து உள்நாட்டு தொழில்நுட்பங்களும் வெற்றிகரமாக செயல்பட்டது உறுதி செய்யப்பட்டது.\nஇதற்காக டிஆர்டிஓ அமைப்பை பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் பாராட்டினார். இந்த முக்கிய சாதனை , பிரதமரின் தற்சார்பு இந்தியா தொலை நோக்கை உணரவைப்பதாகவும் திரு.ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். இந்த ராக்கெட் இன்ஜின் தயாரிப்பில் ஈடுபட்ட விஞ்ஞானிகளுடன் பேசிய அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங், அவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார். அவர்களை நினைத்து நாடு பெருமைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nஅதிவேக ராக்கெட் திட்டத்தில் பணியாற்றிய அனைத்து விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு டிஆர்டிஓ தலைவர் திரு சதீஷ் ரெட்டி பாராட்டு தெரிவித்தார். இந்த வெற்றிகர பரிசோதனை மூலம், அதிவேக ராக்கெட்(ஹைபர்சோனிக்) என்ஜின் தயாரிக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் நுழைந்துள்ளது. இந்த ராக்கெட் என்ஜின், நவீன அதிவே ஏவுகணை தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/boon", "date_download": "2021-10-19T11:58:16Z", "digest": "sha1:OXZPIPJMQSNIFNED3FRYMUTIDF246K7F", "length": 4706, "nlines": 114, "source_domain": "ta.wiktionary.org", "title": "boon - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nவரப்பிரசாதம் = வரம் + பிரசாதம்\nமீன்வளம். பாய் மரச் சட்டம்\nஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +\nஆங்கிலம்-கொடை-2010-த. இ. க. கலைச்சொல்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 15 சனவரி 2021, 03:40 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/poojakumar", "date_download": "2021-10-19T12:00:53Z", "digest": "sha1:XKAHGOOKFLLIFLJ7L3KSRDXUKY7VFIUL", "length": 7863, "nlines": 94, "source_domain": "tamil.asianetnews.com", "title": "poojakumar: Latest News, Photos, Videos on poojakumar | tamil.asianetnews.com", "raw_content": "\n42 வயசிலும் கட்டுக்கோப்பான உடல்வாகு... பூஜா குமாரின் புல்லரிக்க வைக்கும் ஹாட் கேலரி...\n42 வயசிலும் கட்டுக்கோப்பான உடல்வாகு... பூஜா குமாரின் புல்லரிக்க வைக்கும் ஹாட் கேலரி..\nபிறந்து 14 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையோடு பூஜாகுமார் வெளியிட்ட புகைப்படம்\n'காதல் ரோஜாவே' படத்தின் மூலம் கடந்த 2000 ஆம் ஆண்டு அறிமுகமானவர் நடிகை பூஜா குமார். இந்த படத்தை தொடர்ந்து, மலையாளம், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களில் நடித்தார். மற்ற மொழி படங்களில் பிஸியாக நடித்து கொண்டிருந்ததால் இவரால், தமிழ் மொழி படங்களில் கவனம் செலுத்தமுடியவில்லை.\nஆண்டவரையே வளைத்து போட்ட பூஜாகுமார்... புல்லரிக்க வைக்கும் ஹாட் கேலரி..\nஇந்த வாரம் தமிழ் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழையும் பிரபல நடிகை...\nநடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகோவிட் மூன்றாவது அலையில் இருந்து நம்மை காத்து கொள்ள சுயபரிசோதனை கருவியே நமக்கு தேவை \nபலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய விளையாட்டு வீரர்கள் \n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய கலைஞர்கள்\nமஹசூஸ் வெற்றியாளர் ஏசியாநெட் நியூஸ் தமிழுக்கு அளித்த பேட்டி\nகோவிட் மூன்றாவது அலையில் இருந்து நம்மை காத்து கொள்ள சுயபரிசோதனை கருவியே நமக்கு தேவை \nபலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய விளையாட்டு வீரர்கள் \nதிமுக ஆட்சிக்கு 5000 கோடி பலன்... பாஜக தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை..\nடி20 உலக கோப்பையில் அவர் தான் இந்திய அணியின் \"X Factor\" பிளேயர்.. கம்பீர், இர்ஃபான் பதான் ஒருமித்த குரல்\nராகவா லாரன்ஸ் - நடிக்கும் படத்தில் ‘பாடாத பாட்டெல்லாம்’ ரீமிக்ஸ் பாடல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.ndpfront.com/index.php/articles/articles/nesan/1067-2012-03-30-223825", "date_download": "2021-10-19T12:12:11Z", "digest": "sha1:5M4UBNCEYDDLM73EIQWZKYJVDFO37YNN", "length": 51443, "nlines": 216, "source_domain": "www.ndpfront.com", "title": "\"ஒப்பரேசன் லிபரேசன்\" - வடமராட்சியைக் கைப்பற்றிய இலங்கை இராணுவம் -எனது அனுபவப் பகிர்வுகள் – நேசன் (பகு���ி 50)", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\n\"ஒப்பரேசன் லிபரேசன்\" - வடமராட்சியைக் கைப்பற்றிய இலங்கை இராணுவம் -எனது அனுபவப் பகிர்வுகள் – நேசன் (பகுதி 50)\nபுளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 50\nவடமராட்சி \"லிபரேசன்-ஒப்பிரேசனுக்கு\" தலைமை தாங்கிய பிரிகேடியர் கொப்பேகடுவ\n\"ஒப்பரேசன் லிபரேசன்\" - வடமராட்சியைக் கைப்பற்றிய இலங்கை இராணுவம்\n\"தீப்பொறி\"ச் செயற்குழுவுக்குள் தவறான அரசியல் போக்குகளும், தவறான முடிவுகளுமே மேலோங்கி வளர்ந்து கொண்டிருந்ததைக் காணக்கூடியதாகவிருந்தது.\nஇருந்தபோதும் செயற்குழுவின் பெரும்பான்மை முடிவுக்குக் கட்டுப்பட்டும் அதேவேளை தவறான அரசியல் போக்குகளுக்கும், தவறான முடிவுகளுக்கும் எதிராக செயற்குழுவுக்குள்ளிருந்தே தொடர்ச்சியாகப் போராடுவதென தீர்மானித்தேன். தோழர் சுனிமெல்லை \"தீப்பொறி\"க் குழுவுடன் இணைத்துக் கொள்ள முடியாது என்ற செயற்குழுவின் முடிவானது அதன் உள்ளடக்கத்தில் முழுமையான இனவாதக் கண்ணோட்டத்தின்பாற்பட்டதென்பதோடு தம்மை இடதுசாரிகள் என அழைத்துக் கொண்டு பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் பலர் எப்படி இனவாதம் என்ற சகதிக்குள் காலடி எடுத்து வைத்திருந்தனரோ அதையொத்த ஒரு செயலாகவே காணப்பட்டது. பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த இடதுசாரிகள் பலர் இனவாதிகளாகக் காணப்படுகின்றனர் என கூறிக் கொண்டிருந்த நாமும் கூட இப்பொழுது அதே பாதையில் பயணிக்கத் தொடங்கியிருந்தோம்.\nதோழர் சுனிமெல்லை சந்தித்துப் பேசி செயற்குழுவின் முடிவைத் தெரிவிப்பதற்கு டொமினிக்கை (கேசவன்) வவுனியாவுக்கு அனுப்பிவைப்பதென செயற்குழு முடிவெடுத்தது. கண்ணாடிச் சந்திரன், விசுவப்பா, ரஞ்சன் ஆகியோர் \"தீப்பொறி\" க் குழுவிலிருந்து வெளியேறியிருந்தபோது எமக்கிருந்த ஆட்பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக வேண்டி கடின உழைப்புக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்த டொமினிக் (கேசவன்), தனக்கிருந்த பாதுகாப்புப் பிரச்சினைகளுக்கு மத்தியிலும் எம்முடன் இணைந்து \"தீப்பொறி\" பத்திரிகை\" புதியதோர் உலகம்\" நாவல் என்பனவற்றை வீடு வீடாக சென்று மக்கள் மத்தியில் விநியோகிப்பதில் முன்னின்று செயற்பட்டிருந்தார். இப்பொழுது \"தீப்பொறி\" செயற்குழுவின் முடிவையடுத்து தனது \"சொந்தப் பாத���காப்பை\"யும் பொருட்படுத்தாது யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியாவுக்கு செப்பனிடப்படாத காட்டுப்பாதைகள் வழியாக வருவதற்கு தயாரானார். அடர்ந்த காடுகளை ஊடாகச் செல்லும் சேறும் சகதியும், குண்டும் குழியும் நிறைந்த பாதைகள் வழியாக சயிக்கிளில் டொமினிக் (கேசவன்) என்னுடன் வவுனியா வந்து சேர்ந்தார். இத்தகைய நீண்டதொரு தூரத்துக்கு டொமினிக் (கேசவன்) சைக்கிளில் சென்றிருந்தது கிடையாது என்பதால் டொமினிக்கை பொறுத்தவரை அது ஒரு நீண்ட பயணமாகவே இருந்தது.\nடொமினிக்கின் (கேசவன்) வவுனியா வருகையை அடுத்து தோழர் சுனிமெல்லினுடனான சந்திப்பு இடம்பெற்றது. இச்சந்திப்பில் \"தீப்பொறி\" செயற்குழு உறுப்பினர்களான டொமினிக்கும்(கேசவன்) நானும் கலந்துகொண்டிருந்தோம். தோழர் சுனிமெல் தனது கருத்துக்களையும், தனக்கு தென்னிலங்கையில் இருக்கும் பாதுகாப்புப் பிரச்சனைகளையும் எடுத்துக் கூறியதோடு \"தீப்பொறி\"க் குழுவுடன் இணைந்து செயற்பட விரும்பும் தனது முடிவையும் கூடவே தெரிவித்திருந்தார். தோழர் சுனிமெல்லினுடைய கருத்துக்களை செவிமடுத்த டொமினிக் (கேசவன்) \"தீப்பொறி\" செயற்குழுவின் முடிவை தோழர் சுனிமெல்லிடம் தெரிவித்தார். அதாவது, சுனிமெல் தென்னிலங்கைக்கு சென்று சிங்கள மக்கள் மத்தியில் செயற்படுவதன் மூலம் அவர் ஒரு இனவாதியல்ல என நிரூபிக்க வேண்டும் என்பதே அம்முடிவாகும். டொமினிக்கால் (கேசவன்) தெரிவிக்கப்பட்ட \"தீப்பொறி\" ச் செயற்குழுவின் முடிவைக் கேட்டுக்கொண்டிருந்த தோழர் சுனிமெல் சற்றுப் பொறுமையிழந்தவராக உணர்ச்சிவசப்பட்டவரானார். \"அப்படியானால் என்னை ஒரு இனவாதி என்கிறீர்களா\" என அவரால் அடக்கிக்கொள்ள முடியாத ஆவேசத்துடன் எம்மீது கேள்வி எழுப்பினார். \"இனவாதி என்று நாம் உங்களைக் கூறவில்லை, சிங்கள மக்கள் மத்தியில் சென்று செயற்படுமாறு தான் கூறுகிறோம்\" என டொமினிக்(கேசவன்) தோழர் சுனிமெல்லுக்குப் பதிலளித்தார்.\nஆனால், நாம் தோழர் சுனிமெல்லிடம் கூறிய கருத்து அல்லது செயற்குழுவின் முடிவு எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாததொன்றாகும். \"தென்னிலங்கை சென்று சிங்கள மக்கள் மத்தியில் செயற்பட்டு தோழர் சுனிமெல் ஒரு இனவாதியல்ல என்று நிரூபிக்க வேண்டும்\" என்பதானது முழுமையான இனவாதக் கருத்தேதான் என்பதை ஒரு பள்ளிச் சிறுவனால் கூடப் புரி���்து கொள்ள முடியும். இத்தகையதொரு கருத்துக்கு நாம் எவ்வளவு தான் கவர்ச்சிகரமாக விளக்கம் கொடுத்தாலும் அதன் சாராம்சம் அல்லது அதன் கருப்பொருள் இனவாதமே தான்.\nடொமினிக்கால் (கேசவன்) தெரிவிக்கப்பட்ட செயற்குழுவின் முடிவால் தனது பொறுமையை இழந்தவராகக் காணப்பட்ட தோழர் சுனிமெல் \"தீப்பொறி\"க் குழு குறித்த தனது கருத்தை முன்வைத்தார். \"நீங்கள் இடதுசாரிகள் அல்ல, பச்சை இனவாதிகள்\" என தோழர் சுனிமெல் எம்மை விமர்சித்தார். \"உங்கள் போன்றவர்களிடமிருந்து பாதுகாப்புப் பெறுவதைவிட நான் இலங்கை அரசால் கைது செய்யப்பட்டாலோ, அல்லது ஜே.வி.பியால் கொலை செய்யப்பட்டாலோ கூடப் பரவாயில்லை தென்னிலங்கைக்கு செல்கிறேன்\" எனக் கூறிய தோழர் சுனிமெல் எம்முடனான சந்திப்பை இடையில் முறித்துக் கொண்டவராய் தென்னிலங்கைக்கு புறப்பட்டுச் சென்றார்.\nதோழர் சுனிமெல் குறித்த விடயத்தில் எமது அரசியல் கருத்து மட்டுமல்ல, எமது முடிவும் கூட தவறானதென்பதில் சிறிதும் ஐயத்திற்கிடமில்லை. கடந்த காலங்களில் சிங்கள இடதுசாரிகள் பலர் குறித்து நாம் பல விமர்சனங்களைக் கொண்டிருந்தோம், அவர்களில் பலர் பேரினவாதிகளாக மாறிவிட்டனர் எனக் கூறினோம். உண்மைதான். ஆனால் இப்பொழுது எமது அரசியல் கருத்துக்கள், எமது முடிவுகள் எதைக் காட்டி நிற்கின்றன நாமும் கூட எம்மை இடதுசாரிகள் என அழைத்துக்கொண்டு இனவாதிகளாக அல்லவா எம்மை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றோம். சிங்கள பேரினவாதத்திற்கெதிராக தமிழ் மக்களின் உரிமைகளுக்காகப் போராடுவதற்கென உளசுத்தியுடன் எம்முடன் இணைந்து கொண்ட ஒரு பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த தோழரை இனவாதி என்று முத்திரை குத்தும் எமக்கு சிங்கள இடதுசாரிகள் குறித்துப் பேசுவதற்கான தார்மீக பலம் இல்லை என்றே கூறவேண்டும். ஏனெனில் நாமும் கூட அதே இனவாதம் என்ற –தமிழ் இனவாதம் - என்ற கடிவாளத்தை பிடித்தவர்களாக எம்மை வெளிப்படுத்திக் கொண்டிருந்தோம்.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் யாழ்ப்பாண மாவட்ட இராணுவப் பொறுப்பாளர் கிட்டு (சதாசிவம் கிருஸ்ணகுமார்) மீதான கைக்குண்டுத் தாக்குதலுக்கான பழிவாங்கலாக ஈழ விடுதலைப் போராட்டத்துக்காக தம்மை அர்ப்பணித்துப் போராடப் புறப்பட்ட ஏனைய இயக்கப் போராளிகள் பலர் கொன்றொழிக்கப்பட்டது நடைபெற்று முடிந்திருந்தது. தமிழீழ விடு��லைப் புலிகளின் கொடூரங்களைக் கண்ணுற்றிருந்த அல்லது அறிந்திருந்த ஏனைய இயக்கங்களில் அங்கம் வகித்திருந்து செயற்பாடற்றிருந்த போராளிகள் பலர் தமது பாதுகாப்புக் கருதி வடக்குக்-கிழக்குப் பகுதிகளிலிருந்து வெளியேறத் தொடங்கினர்.\nதமிழீழ விடுதலைப் புலிகள் தாம் சந்தேகிப்பவர்களை கைது செய்வதற்கும், அவர்களை தமது வதைமுகாம்களில் அடைத்து சித்திரவதை செய்து கொலை செய்வதற்குமான தமது தமிழ் மக்கள் மீதான ஏகப்பிரதிநிதித்துவ உரிமையை நிலைநாட்டிக் கொண்டிருந்தனர். யாழ்ப்பாணத்தில் ஏனைய இயக்கங்களில் செயற்பட்டிருந்த உறுப்பினர்கள் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் கண்காணிப்பு தீவிரமாக்கப்பட்டதையடுத்து எம்முடன் யாழ்ப்பாணத்தில் செயற்பட்டுக் கொண்டிருந்த சண்முகநாதன், தர்மலிங்கம், சுரேன், காசி(ரகு) போன்றோர் வவுனியா வந்து சேர்ந்தனர். தமிழீழ விடுதலைப் புலிகள் தாமல்லாதவர்களைச் சுத்திகரிக்கும் செயற்பாட்டைத் தொடர்ந்து கொண்டிருந்தனர்.\nபுளொட்டின் இராணுவப் பொறுப்பாளராக செயற்பட்டு தமிழீழ விடுதலைப் புலிகளால் புளொட் இயக்கம் தடை செய்யப்பட பின் செயற்பாடுகள் எதுவுமற்றிருந்த சின்னமென்டிஸை கைது செய்து படுகொலை செய்துவிட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள், புளொட்டின் மாணவர் அமைப்பில் செயற்பட்டிருந்தவர்களான கவிராஜ் (சிவகுமார்), குரு(குருபரன்) உட்பட பலரை விசாரணை என்ற பெயரில் கைது செய்திருந்தனர்.\nஇதன் தொடர்ச்சியாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவனும், தமிழீழ தேசிய ஜனநாயக முன்னணியின் (NLFT)மத்தியகுழு உறுப்பினராகச் செயற்பட்டவரும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் \"ஜனநாயகத்துக்கான போராட்டத்தில் முக்கிய பங்குபற்றியவருமான பிறைசூடி இரயாகரன் தமிழீழ விடுதலைப் புலிகளால் கடத்திச் செல்லப்பட்டிருந்தார்.\nயாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவன் விஜிதரன் கடத்திச் செல்லப்பட்டது குறித்தும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் ஜனநாயகத்திற்கான போராட்டம் குறித்தும் தொடர்ச்சியாக மௌனம் சாதித்துவந்த தமிழீழ விடுதலைப் புலிகள் ஏனைய ஈழவிடுதலை இயக்கங்களை அழித்து அவற்றிற்கு தடை விதித்ததன் பின்னான கடத்தல் சம்பவமாக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவன் பிறைசூடி இரயாகரன் கடத்தல் சம்பவம் அமைந்திருந்தது.\nஈழவிடுதலைப் போராட்ட இயக்கங்களை ஒன்றன்பின் ஒன்றாக அழித்தொழித்த தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் மக்கள் மத்தியிலிருந்து எழுந்த ஜனநாயகத்துக்கான போராட்டங்களையும், மாணவர் போராட்டங்களையும் ஈழவிடுதலைப் போராட்டத்திற்கெதிரானதாகவும், ஈழவிடுதலைப் போராட்டத்தையும் அதை முன்னெடுக்கும் ஒரே தலைமையான தமிழீழ விடுதலைப் புலிகளுக்கெதிரானதெனவும் கருத்து வெளியிட்டிருந்ததுடன், \"துரோகி\"களை களையெடுப்பதில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.\nஆனால் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா தலைமையிலான இலங்கையின் இனவாத அரசோ, அதன் பாதுகாப்புச் செயலாளர் லலித் அத்துலத் முதலியோ, இலங்கையின் இராணுவத் தளபதிகளோ தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்தொழிப்பதற்கான தமது திட்டங்களை தீட்டிக் கொண்டிருந்தனர். மே 27, 1987 தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள்ளிருந்த வடமராட்சி பகுதியைக் கைப்பற்றி அங்கிருந்து யாழ்ப்பாணக் குடாவைக் கைப்பற்றும் நோக்கில் \"ஒப்பரேசன் லிபரேசன்\" என்ற பாரிய இராணுவ நடவடிக்கையை இலங்கை இராணுவம் ஆரம்பித்திருந்தது.\nபலாலி இராணுவ முகாமிலிருந்து டென்சில் கொப்பேகடுவ, விஜய விமலரத்ன போன்ற இராணுவத் தளபதிகளின் வழிகாட்டலில், தொண்டைமானாறு மற்றும் வல்வெட்டித்துறை இராணுவ முகாமிலிருந்தும் தாக்குதல் நடத்தியவாறு வெளியேறிய இலங்கை இராணுவம் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான கடும் மோதலின் பின் வடமராட்சியின் பெரும்பகுதிகளைக் கைப்பற்றி முன்னேறிக் கொண்டிருந்தது.\nஇலங்கை இராணுவத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையிலான இந்த மோதலின் போது பெருமளவுக்கு பொதுமக்களே பாதிக்கப்பட்டனர். தாமல்லாத அனைத்து ஈழவிடுதலைப் போராட்ட இயக்கங்களையும் அழித்தொழித்து \"வெற்றி\"யீட்டியிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள், இலங்கை இராணுவத்தின் \"ஒப்பரேசன் லிபரேசன்\" நடவடிக்கைக்கு முகம் கொடுக்க முடியாதவர்களாய் \"வெற்றிகரமாக\" பின்வாங்கிக் கொண்டிருந்தனர். பலத்த இழப்புக்களுடன் இலங்கை இராணுவத்துக்கு வடமராட்சியில் கிடைத்த வெற்றியானது தனது இராணுவ நடவடிக்கையை தொடர்ந்து மேற்கொள்வதற்கான உந்துதலை கொடுத்திருந்தது.\nஇலங்கை இராணுவத்தின் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தாக்குதல் நடவடிக்கையையும், அதில் இலங்கை இராணுவம் கண்ட முன்னேற்றத்தையும் இந்தியா தனது நலன்களுக்கு – தமிழ் மக்களின் நலன்களுக்கல்ல – பாதகமானதொன்றாக இனம் கண்டுகொண்டது. ஜே.ஆர்.ஜெயவர்த்தன அரசின் அமெரிக்க சார்பு வெளியுறவுக் கொள்கையால் நீண்டகாலமாக \"கவலை\" கொண்டிருந்த இந்திய அரசு, 1983 இலங்கையில் ஜே.ஆர்.ஜெயவர்த்தன அரசால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட இனஅழிப்பு நடவடிக்கையையடுத்து ஈழவிடுதலை இயக்கங்களுக்கு இராணுவப் பயிற்சியும் ஆயுதங்களும் வழங்கியது மட்டுமல்லாமல் அவ்வவ்போது \"ஆலோசனை\"களையும் வழங்கியிருந்தது. ஈழவிடுதலைப் போராட்ட இயக்கங்களுக்கு இந்திய அரசு \"ஆலோசனை\" வழங்குவதன் மூலம் ஜே.ஆர்.ஜெயவர்த்தன அரசுக்கு நெருக்குதல்களை கொடுத்து அடிபணிய வைக்கமுடியும் என்ற இந்திய அரசின் நோக்கத்திற்கு தமிழீழ விடுதலைப் புலிகளால் அனுராதபுரத்தில் அப்பாவிச் சிங்கள மக்கள் பலிகொள்ளப்பட்ட சம்பவம் பெரிதும் துணைபுரிந்திருந்தது. அனுராதபுரத்தில் நூற்றுக்கு மேற்பட்ட அப்பாவிச் சிங்கள மக்கள் படுகொலையால் \"கலங்கி\" நின்ற ஜே.ஆர்.ஜெயவர்த்தன அரசு இந்திய மத்தியஸ்துவத்துடனான திம்புப் பேச்சுவார்த்தைக்கு சென்றிருந்த போதிலும் அப் பேச்சுவார்த்தை தோல்வியிலேயே முடிவுற்றிருந்தது.\nஜே.ஆர்.ஜெயவர்த்தன தலைமையிலான இலங்கை அரசு \"ஒப்பரேசன் லிபரேசன்\" நடவடிக்கையை வடமராட்சியில் ஆரம்பித்து அதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருந்தவேளை அவ்வெற்றியின் தொடர்ச்சி இந்தியாவின் நீண்டகால நலன்களுக்கு பாதகமாக அமையும் எனக் கண்டுகொண்ட இந்திய அரசு தனது பக்கத்திலிருந்து காய்களை வேகமாக நகர்த்தத் தொடங்கியது.\nஇலங்கை பிரச்சனையில் அதிக \"அக்கறை\" இந்தியாவுக்குத்தான் உண்டெனக் கூறிக்கொண்ட இந்திய அரசு, இலங்கை அரசால் மேற்கொள்ளப்பட்ட \"ஒப்பரேசன் லிபரேசன்\" நடவடிக்கையால் பாதிக்கப்புட்ட மக்கள் மீது \"அக்கறை\" கொண்டு \"மனிதாபிமான\" உதவிகளை ஜூன் 02, 1987 கப்பல்கள் மூலமாக அனுப்பி வைத்தது. இக்கப்பல்கள் இலங்கை கடற்படையினரால் இடைமறிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டன.\nஆனால் இலங்கைப் பிரச்சனையில் தலையீடு செய்வது என்ற தீர்க்கமான முடிவின் அடிப்படையில் செயற்பட்டுவந்த இந்திய அரசு, ஜூன் 04, 1987 இலங்கையின் இனப்பிரச்சனையில் புதியதொரு அத்தியாயத்தை ஆரம்பித்து வைத்தது. இந்திய விமானப்படை விமானங்கள் இலங்கை அரசின் அனுமதியின்றி இலங்கையின் விமானப் பரப்புக்குள் நுழைந்து ���ோரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கென உணவுப் பொதிகளை வானில் இருந்து வீசின. \"ஒப்பரேசன் பூமாலை\" என அழைக்கப்பட்ட இந்த நடவடிக்கை தமிழ் மக்களுக்கான \"மனிதாபிமான உதவி\" என்ற பெயரில் இடம்பெற்றது. இந்திய அரசால் மேற்கொள்ளப்பட்ட \"ஒப்பரேசன் பூமாலை\" இலங்கையின் இறையாண்மையை மீறிய ஒரு செயலாக அமைந்திருந்ததுடன் ஜே.ஆர்.ஜெயவர்த்தன அரசுக்கு நேரடியாக விடுக்கப்பட்ட ஒரு எச்சரிக்கையாகவும் அமைந்திருந்தது. இதன் மூலம் தமிழ் மக்களின் ஆபத்பாண்டவனாக இந்தியா தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருந்தது. இந்தியா குறித்து தமிழ் மக்கள் கொண்டிருந்த கனவுகள் நனவானது போன்றதொரு உணர்வு தமிழ் மக்கள் மத்தியில் காணப்பட்டது. ஆனால் தமிழ் மக்கள் எதிர்பார்த்திருந்ததுபோல் விடயங்கள் எதுவும் நடந்தேறிவிடவில்லை.\n41.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 41\n42.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 42\n43.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 43\n44.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 44\n45.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 45\n46.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 46\n47.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 47\n48.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 48\n49.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 49\nஇனவாதம், மதவாதம், சாதியவாதம், ஆணாதிக்க வாதம், நுகர்வு வாதம், முதலாளித்துவ சிந்தனைமுறையில் சமூகம் மூழ்கி இருக்கின்றது. இந்த சூழலில் முற்போக்கானதும், சமூகம் சார்ந்த முரண்பட்ட சிந்தனைகளையும், விவாதத்தை தூண்டக் கூடிய கருத்துகளையும், இந்த விருந்தினர் பக்கம் தன்னுள் கொண்டுள்ளது. இது அவர்களுடைய தனிப்பட்ட கருத்துகள்.\nகுடிகள் சாதியாக மாற்றப்பட்ட வரலாறு : வி.இ.குகநாதன்\t(3113) (விருந்தினர்)\nதமிழர்களிடம் ஆதியிலிருந்தே சாதிகள் உண்டா, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, ஆதியில் யார் ஆண்ட...\nகார்த்திகேசனின் நூற்றாண்டு (3082) (விருந்தினர்)\nஜூன் 25, 2019 கம்யூனிஸ்ட் கார்த்திகேசனின் நூற்றாண்டு பிறந்த தினம்ஜூன் 25, 2019 தோழர் கார்த்திகேசன் அவர்களின் நூற்றாண்டு தினத்தையொட்டி,...\nமனம் திறந்து பேசுகிறேன்.... எம்.ஏ.ஷகி\t(3117) (விருந்தினர்)\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்...\nRead more: மனம் திறந்து...\nஇலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம்: புதிய திசைகள்\t(3518) (புதிய திசைகள்)\nகிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்து குறிப்பாக தமிழ் பூசை நேரங்களை தெரிவு செய்தும் வெளிநாட்டவர்...\nஇப்போது வெள்ளம் தலைக்கு மேல்\n2002 இல் என்று நினைவு. எங்களது ஊரில் திடீரென உருவெடுத்த ஒரு பெயர் தெரியாத அமைப்பு தொலைகாட்சி...\n இலங்கை மண்ணில் நடந்து முடிந்த இன கலவரமும் , இன படுகொலையும்,...\nகூகுள் மற்றும் மைக்ரோசொப்ட் என்பன ஸ்ரீலங்காவில் தமிழர்கள் மற்றும் தமிழ்மொழிக்கு எதிரான அமைப்பு ரீதியானதும் மற்றும் நீடித்ததுமான பாகுபாடுகளில் ஈடுபட்டு வருகின்றன\t(3732) (விருந்தினர்)\nஸ்ரீலங்காவில் சிங்களம் கூகுளின் இயல்பு மொழியாக மாறியுள்ளது. நீங்கள் கூகுள் படிவத்தை...\nசுண்ணாம்பு நிலத்தூடாக கசியும் கனிமங்கள்\t(3736) (விருந்தினர்)\nபெரிய நகரங்கள் உருவாகியது சமீப காலத்திலே. ஆனால், அவற்றின் உருவாக்கத்தில் புதிய பிரச்சினைகள்...\nகல்வி தனியார்மயப்படுத்தலையும், மாணவர்களின் உரிமைகளை அடக்குவதையும் எதிர்ப்போம் - ஊடக அறிக்கை (3903) (விருந்தினர்)\nஇலங்கை விவசாயிகள்,மீனவர்கள், தோட்ட தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் ஏனைய மக்களை...\nஇலங்கையில் நடக்கும் மாணவர் அடக்குமுறையை எதிர்ப்போம்\nஇது, இலங்கையில் கல்விசுகாதாரம்உட்பட சமூகபாதுகாப்பு சேவைகளைதனியார் மயப்படுத்துவது தொடர்பிலான சகலசுமைகளையும் உழைக்கும் மக்கள் மீது சுமத்தும் நவதாராளமயதிட்டத்திற்கு எதிராக பாரியமக்கள்...\nமுன்னிலை சோஷலிஸக் கட்சியின் அமைப்பு செயலாளர் குமார் குணரட்னம் இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்...\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராக\t(3530) (விருந்தினர்)\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராகவும், உயர் கல்வியை தனியார் மயப்படுத்துவதற்கு எதிராகவும்...\nRead more: சைடம் தனியார்...\nதமிழர்களின் மரபு நெடுகிலும் பலவாறாகப் பொருள் பொதிந்த “பறை” என்னும் தமிழ் மரபினை அச்சாணியாகச் சுழற்றும் அரசியல் : ஒரு பார்வை-செல்வி\t(3689) (விருந்தினர்)\nமனித சமுதாயத்தின் தொடர்���ாடலின் தேவையும் உணர்ச்சி வெளிப்படுத்துகையின் தேவையும் குறியீடுகளாகி,...\nமண் மூடிய துயர வரலாறு\t(3665) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nமண் மூடிய துயர வரலாறு\t(3304) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nசைலோபோன் (Xylophone -1)\t(3641) (விருந்தினர்)\nமேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்க வாத்தியமான Xylophone என்ற இசைக்கருவி, 17ஆம் நூற்றாண்டில் ஆபிரிக்க...\nவளரும் வகுப்புவாதமும் சுருங்கும் சனநாயக வெளியும்\t(3428) (விருந்தினர்)\nகாங்கிரசின் பயன்நாட்ட வகுப்புவாதம் பா.ஜ.க தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி 2014ல் ஆட்சிக்கு...\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை, தேவை யாருக்கும் அடிபணியாத போராட்டம் (3692) (விருந்தினர்)\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை இன்று நேற்று ஆரம்பித்ததொன்று அல்ல, நீண்ட நாட்களாக மக்கள்...\nகேப்பாப்புலவு மாதிரிக்கிராமத்தை கேப்பாப்புலவு என்று மாற்ற முயற்சி\nஎங்களுடைய நிலங்கள் எங்களின் உயிர்களுக்கு மேலானது, அதனை இந்த நல்லாட்சி அரசு வழங்கும் வரையும்...\n\"உயிரை மாய்த்தேனும் சொந்த நிலங்களை மீட்பதற்கான வழியை மேற்கொள்வோம்”\t(3744) (விருந்தினர்)\nமுல்லைத்தீவு - கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலத்தை விமானப்படையினர் விடுவிக்க வேண்டுமென...\nசையிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி, சாமான்ய மக்களின் உயிர்களுக்கு உலை வைக்கும் திட்டம் (3726) (விருந்தினர்)\nஅரைகுறையாக யாரோ சொல்ல கேட்டுவிட்டோ அல்லது உங்கள் ஏழாம் அறிவுக்கு திடீரென எட்டியதற்கமைய \"தனியார்\"...\n எதற்காக தனியார் மருத்துவக் கல்லூரி சையிட்டத்திற்கு எதிரான போராட்டம் \nஎங்கள் போராட்டம் இலங்கை மருத்துவ சபையினதும் (SLMC), உலக சுகாதார ஸ்தாபனத்திளதும் (WHO)...\nஅரசமயமாகும் பேரினவாதம், துணை போகும் தமிழ் இனவாதம், கள்ள மௌனம் காக்கும் முஸ்லிம் அரசியல் சந்தர்ப்பவாதம்.\t(3980) (விருந்தினர்)\nஇலங்கையில் சிங்கள பேரினவாதம் அரச மயப்பட்டு வருவதை அண்மைக்கால நிகழ்வுகள் எமக்கு உணர்த்தி...\nதமிழ்தேசியம்: நெருக்கடியும் குழப்பமும்\t(3834) (விருந்தினர்)\n“தமிழ்த்தேசியத்தின் இன்றைய (2016) நிலை என்ன அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும���” என்று நோர்வேயிலிருந்து வந்திருந்த நண்பர் ஒருவர்...\nபெண்களும் இலக்கியமும்\t(3794) (விருந்தினர்)\nஉண்மையில் பெண்களின் கவிதைகளும் மிகவும் கட்டுப்பாடானது. பதிவுகளில்கூட நாங்கள் எவ்வளவு கட்டுப்பாடான...\nயாழ் பல்கலைகழக மாணவர் போராட்டம்: தவறுகளும் பலவீனங்களும்\t(3740) (விருந்தினர்)\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ”மாணவர்கள் படுகொலைக்கான நீதி அல்லது தீர்வுக்கான மாணவர்களின்...\nபடிப்பகம் நூலகம் - நூல்களின் பட்டியல்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/search/news/Agricultural%20Laws", "date_download": "2021-10-19T13:15:37Z", "digest": "sha1:2J5WKPZ2FCZQTKKM6LL2VJBZCDYKDB2S", "length": 2767, "nlines": 85, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Agricultural Laws", "raw_content": "\nஹெல்த் கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் வைரல் வீடியோ\nவிவசாய சட்டங்களுக்கு ஆதரவு - எதி...\nஅதிசய நடிகை, அபூர்வ நடிகை ஸ்ரீவித்யாவின் 15-ம் ஆண்டு நினைவு தினம்\n\"இந்தி மொழி தெரிந்திருக்க வேண்டும்\" - வலுத்த எதிர்ப்பு; பணிந்த சொமேட்டோ\nஉலகமே பாராட்டும் Squid Game-ஐ கடுமையாக விமர்சிக்கும் பாகிஸ்தானியர்கள்... காரணம் என்ன\nமேற்கு தொடர்ச்சி மலைகளில் கனமழை - பாதிப்புக்குள்ளாகும் கேரளா: காரணம் என்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.verkal.net/%E0%AE%B2%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2021-10-19T11:16:24Z", "digest": "sha1:R6YJ2GB5TOAVNWUPIYJI4VOYRNIDQXCG", "length": 19679, "nlines": 135, "source_domain": "www.verkal.net", "title": "லெப். கேணல் நீலன் வீரவணக்க நாள்.! | வேர்கள்", "raw_content": "\nஇலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்\nதாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் \nHome மறவர்கள் வீரவணக்க நாள் லெப். கேணல் நீலன் வீரவணக்க நாள்.\nலெப். கேணல் நீலன் வீரவணக்க நாள்.\nமட்டு – அம்மாறை மாவட்ட புலனாய்வுத்துறை துணைப் பொறுப்பாளர் லெப். கேணல் நீலன் வீரவணக்க நாள் இன்றாகும்.\nதென் தமிழீழத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கருணாவின் துரோகத்தனத்தால் துரோகிகள் மேற்கொண்ட தீய செயல்களால் 12.04.2004 அன்று துரோகி கருணாவால் சுட்டபட்டு வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மட்டு – அம்பாறை மாவட்ட புலனாய்வுத்துறை துணைப் பொறுப்பாளர் லெப். கேணல் நீலன் உட்பட ஏனைய போராளிகளின் 15ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதமிழீழ விடுதலை போராட்டத்தின் கறுப்பு பங்கங்களில் முதல் பக்கமாக பெயர் கூட குறிப்பிட முடியாத துரோகங்கள் சில நிறைந்துள்ளன. இந்த துரோகக் கும்பலின் சதியில் சிக்குண்டு கடந்த 12.4.2004 அன்று படுகொலை செய்யப்பட்டவர் லெப்டினன்ட் கேணல் நீலன் ஆவார்.\nசீனித்தம்பி சோமநாதன் எனும் இயற்பெயரையும் மட்டக்களப்பு ஆரையம்பதியை சொந்த இடமாகவும் கொண்டவர். தமிழ் தேசியத்தின் பால் அவர் கொண்டிருந்த ஈர்ப்பும் தலமையின் மேல் அவர் கொண்டிருந்த அழியாததும் அசைக்க முடியாததுமான விசுவாசம் அவர் மட்டக்களப்பில் வீரச்சாவடைந்தபோதும் விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்தில் அவரது வித்துடலை விதைக்கவைத்தது.\nஇன்றைய நாள் லெப்டினனட் கேணல் நீலன் அவர்களின் தியாகத்தை நினைவு கூர்ந்து வீரவணக்கத்தை செலுத்தும் ஒரு நாள் ஆகும். தமிழீழ தேசியத்தையும், தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் நேசிக்கின்ற அனைவரும் இன்றை நாளில் நீலன் அவர்களுக்கு வணக்கத்தை செலுத்துகின்றோம்.\nவிடுதலைப்போராட்டத்திற்கும் தமிழினத்திற்கும் அவமானத்தை தேடித்தந்த மாபெரும் அழுக்காக, மறையாத கறையாக, களையாக, இருந்து வரும் சிலர் தங்கள் வரலாற்று தவறுகளையும் தங்களின் குற்றங்களையும் கழுவ மாவீரர்களின் குருதியை பாவித்தமை என்றும் அழியாத சுவடு ஆகும்\nஅவ்வாறான ஆயுதத்தின் வெந்தணலில் அகப்பட்டவர் லெப்டினன்ட் கேணல் நீலன் அவர்கள். அவர் மட்டும் அல்லாமல் வேறு பல போராளிகளும் இந்த சுழியில் அகப்பட்டுக்கொண்டார்கள். இவ்வாறு மட்டக்களப்பு மாவட்டத்தில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட ஏனைய போராளிகளுக்கும் இன்றைய தினத்தில் நாம் வீரவணக்கத்தை செலுத்துகின்றோம்.\nஇவர்களுக்கு தமிழீழ விடுதலைப்புலிகள் தமது வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றனர்\nஎன்றென்றும் மாவீரர்கள் தியாகம் நிலைத்திருக்கும்.\nதாயகம் மலரும். கனவு நனவாகும்\nவிசேட அணி தமிழீழ விடுதலைப்புலிகள்\nபுலிகளின் முக்கியஸ்தர் நீலனின் படுகொலையில் துலங்கும் உண்மைகள்.\n01.03.2004 அன்றிலிருந்து கருணாவால் தடுத்துவைக்கப்ட்டிருந்த லெப்.கேணல் நீலன் அவர்களை கருணா தப்பி ஓடும்வேளை கருணாவின் மருதம் முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு வைத்து சுடப்பட்டுள்ளார் எனவும் இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் வழமையான பணிகளில் ஈடுபட்டிருந்த புலனாய்வுத்துறை\nப் போராளிகள் பிரத்தியேகமான சந்திப்புக்கென 01.03.2004 அன்று மீனகம் முகாமிற்கு கருணாவிடம் அழைக்கப்பட்டிருந்தனர்.\nமீனகம் முகாமிற்கு கருணாவால் அழைக்கப்பட்ட மேற்படி போராளிகள் நேரடியாக விசாரிக்கப்பட்டிருந்ததுடன் நீலன் அவர்கள் 01.03.04 அன்றிலிருந்தே சக போராளிகளிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டதுடன் அவர் விலங்கிடப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.\n12.04.04 அன்று காலை துரோகி கருணா தப்பி ஓடுவதற்கு முன்பாக தடுத்து வைக்கப்பட்டிருந்த நீலன் அவர்களை தான் தங்கியிருந்த மருதம் முகாமிற்கு கொண்டு வரும்படி கூறியுள்ளார். அங்கு அவரைச் சுட்டு விட்டே கருணா தப்பியோடியுள்ளான்.\nஅதன் பின்னர் 13.04.04 அன்று மருதம் முகாமில் தேடுதலை மேற்கொண்ட போது நீலன் அவர்களின் வித்துடல் கண்கள் துணியினால் கட்டப்பட்ட நிலையிலும் கைகள் விலங்கிடப்பட்ட நிலையிலும் கண்டு எடுக்கப்பட்டது.\nதாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\nPrevious articleகரும்புலி மேஜர் அறிவுக்குமரன்.\nNext articleகடற்கரும்புலி கப்டன் வீரமணி வீரவணக்க நாள்.\nலெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.\nநெடுஞ்சேரலாதன் - June 26, 2021 0\nலெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.1999 அன்று மன்னார் மாவட்டம் சன்னார் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட “ரணகோச” இராணுவ நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரின் போது...\nகடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார் உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nநெடுஞ்சேரலாதன் - June 26, 2021 0\nகடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார், கடற்கரும்புலி மேஜர் சூரன், கடற்கரும்புலி மேஜர் நல்லப்பன், கடற்கரும்புலி மேஜர் சந்தனா, கடற்கரும்புலி கப்டன் பாமினி , கடற்கரும்புலி கப்டன் இளமதி வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.2000 அன்று...\nநெடுஞ்சேரலாதன் - May 25, 2021 0\n25.05.2000 அன்று “ஓயாத அலை – 03″ தொடர் நடவடிக்கையின் போது யாழ். மாவட்டம் மண்டைதீவுப் பகுதியில் நடைபெற்ற கரும்புலித் ��ாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கரும்புலி மேஜர் சதா ஆகிய கரும்புலி மாவீரரின் ...\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள் நெடுஞ்சேரலாதன் - September 8, 2021 0\nதமிழீழத்தில் தலை சிறந்த பெண் போராளியான கப்டன் அக்கினோ... போராட்டம். .... இந்தச் சொல்லுக்குள் தான் எத்தனை விதமான உணர்ச்சி அலைகள் அடங்கி இருக்கின்றன.குடும்பம் என்ற சிறிய பரப்புக் குள் சில மனிதர்கள், சில உணர்வுகளென்று...\nலெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.\nமறவர்கள் வீரவணக்க நாள் நெடுஞ்சேரலாதன் - June 26, 2021 0\nலெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.1999 அன்று மன்னார் மாவட்டம் சன்னார் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட “ரணகோச” இராணுவ நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரின் போது...\nகடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார் உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nமறவர்கள் வீரவணக்க நாள் நெடுஞ்சேரலாதன் - June 26, 2021 0\nகடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார், கடற்கரும்புலி மேஜர் சூரன், கடற்கரும்புலி மேஜர் நல்லப்பன், கடற்கரும்புலி மேஜர் சந்தனா, கடற்கரும்புலி கப்டன் பாமினி , கடற்கரும்புலி கப்டன் இளமதி வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.2000 அன்று...\nநீரிற் கரைந்த நெருப்பு லெப்.கேணல் ராஜசிங்கம்/ ராஜன்.\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள் நெடுஞ்சேரலாதன் - June 26, 2021 0\nகண்டி வீதியை ஊடறுத்திருந்த எமது பாதுக்காப்பு வியூகத்தை உடைத்து, எதிரி உட்புகுந்துவிட்டான். எமது போர்ப்பலத்தைச் சிதறடித்தவாறு எல்லா முனைகளாலும் எதிரி தாக்கினான். எமக்கு எவ்வகையிலும் சாதகமற்ற ‘மரணக்களமாய்’ மாறியிருந்தது அன்றைய களம். அன்று சித்திரை...\nதமிழர்கள் தமது வரலாற்றினையும், சாதனைகளையும் பதிவு செய்து ஆவணப்படுத்தாமை எமக்குள்ள மிகப் பெரிய குறை பாடாகும் என தமிழீழக் கல்விக்கழகப்பொறுப்பாளர் வெ.இளங்குமரன் வல்வெட்டித்துறையில் நடைபெற்ற ஆழக்கடல் வென்றவர்கள் நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றும் போதுதெரிவித்தார் அதனடிப்படையில் வேர்கள் இணையமானது எமது தாயக விடுதலை போராட்டதின் விழுமியங்களை ஆவணப்படுத்தி உலகின் அனைத்து தேசங்களிலும் வாழும் எமது அன்புத்தமிழ் உறவுகளின் வாசல் நோக்கி விடுதலை தாகத்தை வீசுகிறோம்\nஒரு போராளியின் குருதிச் ��ுவடுகள்77\nகாப்புரிமை ©தமிழீழஆவணக்காப்பகம் 2016- 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnarealestate.lk/properties/land-with-2-houses-for-sale/", "date_download": "2021-10-19T11:18:42Z", "digest": "sha1:WJZB6MW6BIGYNBNORYCTHV2U2HGNSS7X", "length": 27757, "nlines": 743, "source_domain": "jaffnarealestate.lk", "title": "முல்லைத்தீவில் 02 வீடுகளுடன் சேர்ந்த காணி விற்பனைக்கு – Re/Max North Realty", "raw_content": "\n2 மாடி வீடு விற்பனைக்கு (3)\n2 வீடுகள் விற்பனைக்கு (1)\nஅரிசி ஆலை விற்பனைக்கு (1)\nஉல்லாச விருந்தினர் மாளிகை (1)\nகடையுடன் காணி விற்பனைக்கு (1)\nகாணியுடன் பகுதியளவு கட்டப்பட்ட வீடு விற்பனைக்கு (4)\nகாணியுடன் வீடு விற்பனைக்கு (33)\nகைதடியில் வீட்டுடன் கூடிய காணி விற்பனைக்கு (1)\nசிறிய வீட்டுடன் இணைந்த காணி விற்பனைக்கு. (1)\nநல்லூரில் Guest House விற்பனைக்கு (1)\nவணிக / குடியிருப்பு சொத்து விற்பனைக்கு (1)\nவிசாலமான நிலத்துடன் கூடிய கட்டிடத்தொகுதி விற்பனைக்கு (2)\nவிசாலமான நிலத்துடன் வீடு விற்பனைக்கு (1)\nவியாபாரக் கட்டிடம் குத்தகைக்கு (6)\nவியாபாரக் கட்டிடம் வாடகைக்கு (2)\nவியாபாரக் கட்டிடம் விற்பனைக்கு (16)\nவிவசாய நிலம் விற்பனைக்கு (3)\nகொழும்பு - 14 (1)\nகொழும்பு - 15 (1)\nகொழும்பு - 6 (1)\nபழைய பூங்கா வீதி (1)\nகொழும்பு - 14 (1)\nகொழும்பு - 15 (1)\nகொழும்பு - 6 (1)\n2 மாடி வீடு விற்பனைக்கு (3)\n2 வீடுகள் விற்பனைக்கு (1)\nஅரிசி ஆலை விற்பனைக்கு (1)\nஉல்லாச விருந்தினர் மாளிகை (1)\nகடையுடன் காணி விற்பனைக்கு (1)\nகாணியுடன் பகுதியளவு கட்டப்பட்ட வீடு விற்பனைக்கு (4)\nகாணியுடன் வீடு விற்பனைக்கு (33)\nகைதடியில் வீட்டுடன் கூடிய காணி விற்பனைக்கு (1)\nசிறிய வீட்டுடன் இணைந்த காணி விற்பனைக்கு. (1)\nநல்லூரில் Guest House விற்பனைக்கு (1)\nவணிக / குடியிருப்பு சொத்து விற்பனைக்கு (1)\nவிசாலமான நிலத்துடன் கூடிய கட்டிடத்தொகுதி விற்பனைக்கு (2)\nவிசாலமான நிலத்துடன் வீடு விற்பனைக்கு (1)\nவியாபாரக் கட்டிடம் குத்தகைக்கு (6)\nவியாபாரக் கட்டிடம் வாடகைக்கு (2)\nவியாபாரக் கட்டிடம் விற்பனைக்கு (16)\nவிவசாய நிலம் விற்பனைக்கு (3)\nகொழும்பு - 14 (1)\nகொழும்பு - 15 (1)\nகொழும்பு - 6 (1)\nபழைய பூங்கா வீதி (1)\nகொழும்பு - 14 (1)\nகொழும்பு - 15 (1)\nகொழும்பு - 6 (1)\nமுல்லைத்தீவில் 02 வீடுகளுடன் சேர்ந்த காணி விற்பனைக்கு\nமுல்லைத்தீவில் 02 வீடுகளுடன் சேர்ந்த காணி விற்பனைக்கு\nவீடு விற்பனைக்கு in விற்பனைக்கு\nமுல்லைத்தீவில் 02 வீடுகளுடன் சேர்ந்த காணி விற்பனைக்கு\nமொத்த நிலப்பரப்பு :- 04 பரப்பு 14.4 குளி\nஇவ் 02 வீடுகளிலும் ,\nகிணறும் மற்றும் குழாய் கிணறு\nதென்னை மரங்கள் போன்றன காணப்படுகின்றன.\nகோரப்படும் விலை :- LKR. 8,000,000\nமுல்லைத்தீவில் வீடு விற்பனைக்கு மொத்த நிலப்பரப்பு :- 04 பரப்பு இவ் வீட்டில் அறைகள் குளியலறை ஹால் சமையலறை போன்றன உண் [more]\nமுல்லைத்தீவில் வீடு விற்பனைக்கு மொத்த நிலப்பரப்பு :- 04 பரப்பு இவ் வீட்டில் அறைகள் குளியலறை ஹால் சமையலறை போன்றன உண் [more]\nசிலாவத்தையில் வீட்டுடன் சேர்ந்த காணி விற்பனை...\nசிலாவத்தையில் வீட்டுடன் சேர்ந்த காணி விற்பனைக்கு மொத்த நிலப்பரப்பு :- 3 ½ பரப்பு இவ் வீட்டில் 06 அறைகள் சமையலறை 02 [more]\nசிலாவத்தையில் வீட்டுடன் சேர்ந்த காணி விற்பனைக்கு மொத்த நிலப்பரப்பு :- 3 ½ பரப்பு இவ் வீட்டில் 06 அறைகள் சமையலறை 02 [more]\nபுதுக்குடியிருப்பில் வீட்டுடன் சேர்ந்த காணி ...\nபுதுக்குடியிருப்பில் வீட்டுடன் சேர்ந்த காணி விற்பனைக்கு இவ் வீட்டில் 03 அறைகள் ஹால் குளியலறை கிணறு சமையலறை போன்றன உ [more]\nபுதுக்குடியிருப்பில் வீட்டுடன் சேர்ந்த காணி விற்பனைக்கு இவ் வீட்டில் 03 அறைகள் ஹால் குளியலறை கிணறு சமையலறை போன்றன உ [more]\n83, கண்ணத்திட்டி வீதி, யாழ்ப்பாணம், இலங்கை\nபொலிகண்டியில் அழகிய வீடு விற்பனைக்க... LKR 24,000,000\nதெல்லிப்பளை,துர்க்காபுரம் கல்வளவு ஒ... LKR 5,000,000\nசாவகச்சேரியில் அழகிய வீடு வாடகைக்கு\nயாழ்பாணம் KKS வீதியில் கடை விற்பனைக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyaagarathi.com/draupathi-cinema-review-sarakku-murukku-boys-do-only-love-play/", "date_download": "2021-10-19T12:54:57Z", "digest": "sha1:7QNZ6BBUMUAV4BOJKCUQBNKUUTXMM6QK", "length": 25462, "nlines": 201, "source_domain": "puthiyaagarathi.com", "title": "திரவுபதி - திரை விமர்சனம்! சரக்கு முறுக்கு பசங்க மட்டும்தான் நாடகக்காதல் செய்கிறார்களா? - புதிய அகராதி", "raw_content": "Tuesday, October 19மெய்ப்பொருள் காண்பது அறிவு\nதிரவுபதி – திரை விமர்சனம் சரக்கு முறுக்கு பசங்க மட்டும்தான் நாடகக்காதல் செய்கிறார்களா\nபெண்ணின் அக்காள் கணவர் மீது\nஅக்கா திரவுபதி, தன் கணவர் மூலம்\n‘சாதிகள் இல்லையடி பாப்பா’ என்ற மகாகவி பாரதியின் வரிகளை மறுதலித்து, ‘சாதிகள் உள்ளதடி பாப்பா’ என்று திரவுபதி படத்தின் டிரைலரில் குறிப்பிட்டு இருந்தார் இயக்குநர் மோகன். டிரைலரில் வந்த சில வசனங்களும், பாத்திரப்படைப்பும் தமிழகத்தில் உள்ள ஒரு சாதிக்கட்சியின் தலைவரை சித்தரிப்பது போலவும், இந்தப்படமே ஆதிக்க சாதியினருக்கு ஆதரவாக ���டுக்கப்பட்ட படம் என்றும் பலவாறாக விமர்சனங்கள் கிளம்பின. இந்த பரபரப்புகளுக்கு இடையே பிப். 28ம் தேதி, திரவுபதி வெளியானது.\nநாயகன் ரிச்சர்டு, தமிழில் ஏற்கனவே ‘காதல் வைரஸ்’ உள்ளிட்ட சில படங்கள் செய்திருந்தாலும் பிரபலமானவர் அன்று. பெரும்பாலான திரைக்கலைஞர்கள் சினிமாவுக்கே புதியவர்கள் என்பதும்கூட திரவுபதிக்கு ஒருவகையில் சாதகமான அம்சம். தொழில்நுட்பக் குழுவைப் பொருத்தவரை பின்னணி இசை மட்டும் தேறுகிறது. என்றாலும், கதைக்கருவும், அதை செய்நேர்த்தியுடன் சொல்லிய விதமும் திரவுபதி தவிர்க்க முடியாத படமாகி விடுகிறது.\nவிழுப்புரம் மாவட்டம் சேந்தமங்கலம்தான் கதைக்களம். நாயகன் ருத்ர பிரபாகரன் (ரிச்சர்டு), சிலம்ப வாத்தியாராக இருக்கிறார். அவருடைய மனைவி திரவுபதி (ஷீலா ராஜ்குமார்) ஹைட்ரோ கார்பன், கோலா கம்பெனிகளை எதிர்த்துப் போராடும் சமூக சேவகர். சாதிக்கட்சித் தலைவர் ஒருவர், அந்த ஊரில் கோலா கம்பெனி தொடங்க முயற்சிக்க, அதற்கு திரவுபதியும் அவருடைய தந்தையும் குறுக்கே நிற்கிறார்கள். அவர்களை எப்படியாவது வீழ்த்த நினைக்கும் அந்தத் தலைவர், ‘நாம இந்த மண்ணுல கால வைக்கணும்னா அவுங்க வீட்டுப் பொண்ணுமேல கைய வெச்சே தீரணும்’ என்கிறார்.\nகல்லூரியில் படித்து வரும் திரவுபதியின் தங்கையை, தன் சாதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலிக்கும்படி நடித்து வலையில் வீழ்த்த அனுப்புகின்றனர். அவர்கள், கல்லூரி மாணவிக்கும் தாங்கள் அனுப்பிய இளைஞருக்கும் பதிவுத்திருமணம் நடந்து விட்டதாக போலியாக ஒரு சான்றிதழைத் தயாரித்து வாட்ஸ்அப்பில் அனுப்புகின்றனர். இதனால் அவமானம் தாங்காமல் கல்லூரி மாணவியின் தந்தை தற்கொலை செய்து கொள்கிறார். அதையடுத்து, கல்லூரி மாணவியையும், திரவுபதியையும் கொல்ல முயன்ற அந்த கும்பலுக்கு மாணவி பலியாகிறாள். திரவுபதியும் இறந்து விட்டதாகக் கருதி கொலை கும்பல் சென்று விடுகிறது.\nஅதற்குள், வேற்று சாதி இளைஞனை திருமணம் செய்த ஆத்திரத்தில் மனைவியின் தங்கையையும், மனைவியையும் ஆணவக்கொலை செய்து விட்டதாக நாயகன் பிரபாகரன் மீது பழி விழ, அவர் கைது செய்யப்படுகிறார். ஆனால் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட திரவுபதி உயிர் பிழைத்து விடுகிறாள். இந்த விவரம் நாயகனுக்குச் சொல்ல முடியாமல் போய்விடுகிறது. ஆறு மாதத்தில் பி��ையில் விடுதலை ஆகும் நாயகன், மனைவியின் சபதத்தை நிறைவேற்ற சென்னைக்குப் புறப்படுகிறார்.\nகடந்த 2013ல் சென்னையில் வடசென்னை மற்றும் ராயபுரம் ஆகிய இரண்டு சார்பதிவாளர் அலுவலகங்களில் மட்டும் 3500 போலி திருமண பதிவுச்சான்றிதழ்கள் வழங்கப்பட்டு உள்ள விவகாரம் அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது. அதை மையமாக வைத்துதான் இக்கதை எழுதப்பட்டதாக இயக்குநர் மோகன் குறிப்பிட்டுள்ளார்.\nமணப்பெண்ணை நேரில் பார்க்காமலேயே எப்படி போலியாக ஒரு திருமணப்பதிவுச் சான்றிதழ் தயாரிக்கப்படுகிறது என்பதை உண்மைக்கு நெருக்கமாக சித்தரிக்கிறது இப்படம். சார்பதிவாளர் அலுவலக அதிகாரிகள் முதல் வழக்கறிஞர்கள், அரசியல்வாதிகள், தரகர்கள் வரை ஒவ்வொருவருக்கும் உள்ள கண்ணிகளையும் நேர்த்தியான காட்சிகள் மூலம் தோலுரித்துக் காட்டுகிறார் இயக்குநர்.\nமட்டுமே நாடக காதல் போன்ற\nஎதிரானதோ, சாதி சார்புப் படமோ\n‘அடங்க மறு; அத்து மீறு’ என்று\nஊருக்கு நூறு பசங்கள தயார்\nபோலி திருமணச் சான்றிதழ் பெற\nநாயகனுக்கு உதவும் காதில் கடுக்கண்\nஅணிந்த அந்த இளைஞர், நீல சட்டையை\nபடிய வாரி சீவியிருக்கும் அந்தக்\nநடத்தி பணம் பறிக்கும் அந்த\nரோமியோ போல நாடகக் காதலுக்கு\nஅதேநேரம், திரவுபதியின் சபதத்தை நிறைவேற்றும் காட்சி ஒன்றில், நாயகன் அணிந்திருக்கும் தலைப்பாகையின் நிறமும், படத்தின் தலைப்பும், கதைக்களமும்கூட எந்த சமூகத்திற்கு ஆதரவான கதை என்று சொல்லாமல் சொல்லி விடுகிறது.\nயதார்த்தத்திலும்கூட, ஒரு பட்டியல் சாதியைச் சேர்ந்த பெண்ணோ, ஆணோ கொலையாகும்போது அவர்களுக்காக பொங்கியெழும் அச்சமூகத்து போராளிகள், அதே பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்களால் வேறு சமூகத்துப் பெண்கள் வஞ்சிக்கப்படும்போது கள்ள மவுனம் சாதிப்பதையும் காண முடிகிறது. பட்டியல் சாதியைச் சேர்ந்த பெண் கொல்லப்படும்போது, அதற்கு வேறு காரணங்கள் இருந்தாலும், அது சாதிய கொலையாகவே வலுவாக சித்தரிக்கின்றனர். இதுபோன்ற சம்பவங்களால் ஏற்பட்ட அழுத்தங்கள்கூட இயக்குநரை திரவுபதி படத்தை எடுக்க தூண்டியிருக்கலாம்.\n‘பரியேறும்பெருமாள்’ படம், ஒரு விவாதத்தை முன்வைக்கிறது. சமரசமற்ற திரைமொழியால் அப்படம் இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும் தனித்து நிற்கும். அப்படத்தின் மறுபக்கமாக திரவுபதியை ஏனோ நாம் கருத முடியாமல் போகிறது. நாம் ஏற்கனவே சொன்னதுபோல், நாடகக்காதல் போன்ற குற்றங்களை குறிப்பிட்ட ஒரு சமூகத்தினர் மட்டுமே அரங்கேற்றுவதுபோல பேசுவதே அபத்தமானதாகத் தெரிகிறது. அல்லது அதில் இயக்குநருக்கு போதிய புரிதல் இல்லையோ என்றும் தோன்றுகிறது.\nபதிவுத்திருமணத்தின்போது சிசிடிவி கேமராவில் கட்டாயம் திருமணத்தை பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கிறார் இயக்குநர். அது ஏற்புடையது. ஆனால், பதிவுத்திருமணங்களை பெண்ணின் பெற்றோர் முன்னிலையில்தான் பதிவு செய்ய வேண்டும் என்பதை சட்டமாக்க வேண்டும் என்று குரல் கொடுப்பது அறிவுப்பூர்வமானதாகத் தெரியவில்லை. அப்படிச் செய்வது, காதல் உணர்வை அற்றுப்போகச் செய்து விடும் அபாயமும் இருக்கிறது.\nஇப்படம் உண்மையான காதலுக்கு எதிரான படம் அல்ல என்று இயக்குநர் சொல்லி வந்தாலும்கூட, பெற்றோர் பார்த்து முடித்து வைக்கும் திருமணங்களையே உயர்த்திப் பிடிப்பதாக இருக்கிறது. நாடகக்காதலை தோலுரித்துக் காட்டுவதுதான் கதையின் நோக்கமெனில், இயக்குநர் இன்னும் தனது பார்வையை விசாலமாக்கி இருக்க வேண்டும். அந்த இடத்தில் அவர் சறுக்கிவிட்டார் என்றே கருதுகிறேன். ஒவ்வொரு குற்றங்களின் பின்னணியிலும் எல்லா சாதியினரும் இருக்கிறார்கள். குற்றம் புரிவோருக்கு சாதி மட்டுமே ஒரு கருவி அல்ல.\nPosted in சினிமா, சேலம், முக்கிய செய்திகள்\nTagged actor richard, cinema Review, Draupathi, love play, ஆணவக்கொலை, திரவுபதி, திரை விமர்சனம், நாடகக்காதல், பதிவுத்திருமணம், பரியேறும்பெருமாள்\n 4 கோடி பேருக்கு வேலை பறிபோகும்; எச்சரிக்கும் பண்ணையாளர்கள்\nNextமாணவனின் சொந்த கருத்திற்கும் மதிப்பெண் உண்டு பிளஸ்-2 தமிழ் வினாத்தாள் வடிவமைப்பில் மாற்றம்\nபுற்றுநோயை குணமாக்கும் ஷிமோகா வைத்தியர்; நல்லதை நாலு பேருக்கு சொல்லலாமே\nஆளுங்கட்சியிடம் தஞ்சம் புகுந்த ஊழல் மாஜி துணைவேந்தர் தோண்டி துருவும் லஞ்ச ஒழிப்புத்துறை\nசேலம் மாநகராட்சியில் குப்பை வண்டிகள் வாங்கியதிலும் கொள்ளை\nதேவதாசி முறை ஒழிப்பு போராளி முத்துலட்சுமி ரெட்டி\nசட்டம் அறிவோம்: குழந்தையை தத்து எடுப்பது எப்படி\nஉடுமலை சங்கர் ஆணவக்கொலை வழக்கில் பரபரப்பு தீர்ப்பு; கவுசல்யாவின் தந்தை உள்பட 6 பேருக்கு இரட்டை தூக்கு\n கம்பனே குழம்பிய தருணம் எது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2014/09/blog-post_27.html", "date_download": "2021-10-19T12:09:14Z", "digest": "sha1:VQTYUWLADY4WLYOBLADBNXW275HVAC3V", "length": 7617, "nlines": 141, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: சிறந்த ஆரம்ப பள்ளிகளை அரசால் அமைக்க முடியாதது ஏன்? உச்சநீதிமன்றம் கேள்வி...?", "raw_content": "\nசிறந்த ஆரம்ப பள்ளிகளை அரசால் அமைக்க முடியாதது ஏன்\nசிறந்த மருத்துவக் கல்லூரிகளை நடத்தும் அரசால், சிறந்த ஆரம்பபள்ளிகளை அமைக்க முடியாதது ஏன் என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கல்வி உரிமை சட்டப்படி பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 25 சதவீத இடங்களை ஒதுக்கும்படி சிறுபான்மையினர் அமைப்பும் நடத்தும் சில பள்ளிகளுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதைஎதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சிறுபான்மையினர் பள்ளிகள் வழக்கு தொடர்ந்தன. இந்த மனு நீதிபதிகள் ஏ.ஆர்.டாவே, லலித் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. கல்வி உரிமை சட்டவரம்புக்குள் சிறுபான்மையினர் பள்ளிகள் வராது என்றும், தங்களிடம் சிறுபான்மையினர் தேசிய கமிஷன் சான்றிதழ் இல்லாததால் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் சேர்க்கும்படி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு தடை விதிக்க வேண்டும்என சிறுபான்மையினர் பள்ளிகள் சார்பில் வாதிடப்பட்டது. இதற்குதடை விதித்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை நவம்பர் 10ம்தேதிக்கு ஒத்தி வைத்தனர். அப்போது நீதிபதிகள் கூறியதாவது:\nஅரசு பள்ளிகள்தரமானதாக இல்லாததால், சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகளில் மாணர் களை சேர்க்க போட்டி நிலவுகிறது.மருத்துவக் கல்லூரிகள் விஷயத்தில், தனியாரை விட, அரசுகல்லூரிகள்தான் சிறந்தவை என தேர்வு செய்யப்படுகிறது.அப்படியிருக்கும்போது அரசால் ஏன் தரமான ஆரம்ப பள்ளிகளைஅமைக்க முடியவில்லை தரமான ஆரம்ப பள்ளிகளை அதிகம்அமைக்க வேண்டியது அரசின் கடமை. இவ்வாறு அவர்கள் கூறினர்.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nயார் இந்த ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்... அப்படி என்ன சிறப்பு இவருக்கு\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nதிறனாய்வுத் தேர்வு - STUDY MATERIALS\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaipoonga.net/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0/", "date_download": "2021-10-19T11:32:34Z", "digest": "sha1:MEGLLGILI3JJZWDYCAUU2QMY457MBDO5", "length": 11214, "nlines": 182, "source_domain": "kalaipoonga.net", "title": "பிரபல நட்சத்திரம் துல்கர் சல்மான் SkyMan Films International “வேலன்” படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை வெளியிட்டார்! - Kalaipoonga", "raw_content": "\nTags பிரபல நட்சத்திரம் துல்கர் சல்மான் SkyMan Films International “வேலன்” படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை வெளியிட்டார்\nTag: பிரபல நட்சத்திரம் துல்கர் சல்மான் SkyMan Films International “வேலன்” படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை வெளியிட்டார்\nபிரபல நட்சத்திரம் துல்கர் சல்மான் SkyMan Films International “வேலன்” படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை வெளியிட்டார்\nபிரபல நட்சத்திரம் துல்கர் சல்மான் SkyMan Films International “வேலன்” படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை வெளியிட்டார் SkyMan Films International சார்பில் தயாரிப்பாளர் கலைமகன் முபாரக் தயாரிப்பில் முதல் படமாக, பிக்பாஸ் முகேன் மற்றும் மீனாக்‌ஷி...\nசர்ச்சைக்குரிய வீடியோ பதிவிட்டதால் பிக்பாஸ் பிரபலம் கைது\nசர்ச்சைக்குரிய வீடியோ பதிவிட்டதால் பிக்பாஸ் பிரபலம் கைது பாலிவுட்டில் இளம் நடிகையாக வலம் வருபவர் யுவிகா சவுத்ரி. இவர், இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் மிகவும் பிரபலமானார். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும்...\nஒற்றை வார்த்தையில் நடிகர் விஜய்யை புகழ்ந்த ‘பீஸ்ட்’ நாயகி\nஒற்றை வார்த்தையில் நடிகர் விஜய்யை புகழ்ந்த ‘பீஸ்ட்’ நாயகி விஜய் மற்றும் நெல்சன் கூட்டணியில் உருவாகி வருகிறது ‘பீஸ்ட்’ அதிரடி ஆக்ஷனில் உருவாகி வரும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. இப்படத்தில்...\nராகவா லாரன்ஸ் – பிரியா பவானி சங்கர் நடிக்கும் ருத்ரன் படத்தில் ‘பாடாத பாட்டெல்லாம்’ ரீமிக்ஸ் பாடல்\nராகவா லாரன்ஸ் - பிரியா பவானி சங்கர் நடிக்கும் ருத்ரன் படத்தில் ‘பாடாத பாட்டெல்லாம்’ ரீமிக்ஸ் பாடல் பல வெற்றி படங்களை தயாரித்த 5 ஸ்டார் கிரியேஷன்ஸ் S.கதிரேசன் தயாரித்து இயக்கும் “ருத்ரன்” படத்தில்...\n‘டேக் டைவ���்ஷன்’ முழு நீள கமர்ஷியல் பேக்கேஜ்\n'டேக் டைவர்ஷன்' முழு நீள கமர்ஷியல் பேக்கேஜ் 'டேக் டைவர்ஷன்' என்கிற படத்தை இயக்குநர் சிவானி செந்தில் இயக்கியுள்ளார். 80களில் 90களில் மட்டுமல்ல 2K -யில் பால்ய காலத்தைக் கடந்தவர்களையும் ஈர்க்கும் வகையில் ஒரு காதல்...\nசர்ச்சைக்குரிய வீடியோ பதிவிட்டதால் பிக்பாஸ் பிரபலம் கைது\nசர்ச்சைக்குரிய வீடியோ பதிவிட்டதால் பிக்பாஸ் பிரபலம் கைது பாலிவுட்டில் இளம் நடிகையாக வலம் வருபவர் யுவிகா சவுத்ரி. இவர், இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் மிகவும் பிரபலமானார். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும்...\nஒற்றை வார்த்தையில் நடிகர் விஜய்யை புகழ்ந்த ‘பீஸ்ட்’ நாயகி\nஒற்றை வார்த்தையில் நடிகர் விஜய்யை புகழ்ந்த ‘பீஸ்ட்’ நாயகி விஜய் மற்றும் நெல்சன் கூட்டணியில் உருவாகி வருகிறது ‘பீஸ்ட்’ அதிரடி ஆக்ஷனில் உருவாகி வரும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. இப்படத்தில்...\nராகவா லாரன்ஸ் – பிரியா பவானி சங்கர் நடிக்கும் ருத்ரன் படத்தில் ‘பாடாத பாட்டெல்லாம்’ ரீமிக்ஸ் பாடல்\nராகவா லாரன்ஸ் - பிரியா பவானி சங்கர் நடிக்கும் ருத்ரன் படத்தில் ‘பாடாத பாட்டெல்லாம்’ ரீமிக்ஸ் பாடல் பல வெற்றி படங்களை தயாரித்த 5 ஸ்டார் கிரியேஷன்ஸ் S.கதிரேசன் தயாரித்து இயக்கும் “ருத்ரன்” படத்தில்...\nசர்ச்சைக்குரிய வீடியோ பதிவிட்டதால் பிக்பாஸ் பிரபலம் கைது\nசர்ச்சைக்குரிய வீடியோ பதிவிட்டதால் பிக்பாஸ் பிரபலம் கைது பாலிவுட்டில் இளம் நடிகையாக வலம் வருபவர் யுவிகா சவுத்ரி. இவர், இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் மிகவும் பிரபலமானார். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும்...\nஒற்றை வார்த்தையில் நடிகர் விஜய்யை புகழ்ந்த ‘பீஸ்ட்’ நாயகி\nஒற்றை வார்த்தையில் நடிகர் விஜய்யை புகழ்ந்த ‘பீஸ்ட்’ நாயகி விஜய் மற்றும் நெல்சன் கூட்டணியில் உருவாகி வருகிறது ‘பீஸ்ட்’ அதிரடி ஆக்ஷனில் உருவாகி வரும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. இப்படத்தில்...\nராகவா லாரன்ஸ் – பிரியா பவானி சங்கர் நடிக்கும் ருத்ரன் படத்தில் ‘பாடாத பாட்டெல்லாம்’ ரீமிக்ஸ் பாடல்\nராகவா லாரன்ஸ் - பிரியா பவானி சங்கர் நடிக்கும் ருத்ரன் படத்தில் ‘பாடாத பாட்டெல்லாம்’ ரீமிக்ஸ் பாடல் பல வ���ற்றி படங்களை தயாரித்த 5 ஸ்டார் கிரியேஷன்ஸ் S.கதிரேசன் தயாரித்து இயக்கும் “ருத்ரன்” படத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2015/06/25/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BF/", "date_download": "2021-10-19T10:54:41Z", "digest": "sha1:IY5JRGZ7N7XUFQQ5ZUNREQAT6UBPGY6B", "length": 91855, "nlines": 248, "source_domain": "solvanam.com", "title": "கோபுலு – மறக்க முடியாத நினைவுகள் – சொல்வனம் | இதழ் 256 | 10 அக். 2021", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 256 | 10 அக். 2021\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nகோபுலு – மறக்க முடியாத நினைவுகள்\nஎஸ். சிவகுமார் ஜூன் 25, 2015 No Comments\nஜார்ஜ்டவுன் மாடிப் பூங்காவிலிருந்து, பவழக்காரத் தெருவுக்குள் நுழைந்து வலதுபுறமாகப் பார்த்துக் கொண்டு வந்தீர்கள் என்றால், முதலில் ஒரு மூத்திரச் சந்து. அதிலிருந்து சற்று தள்ளி கொஞ்ச தூரத்தில் காளாஸ்தீஸ்வரர் கோவில். அங்கிருந்து சற்று தள்ளிச் சென்றால் பவழக்காரத் தெருவில் வலமும் இடமுமாக சிறு தெருக்கள் பிரியும் சிறிய நாற்சந்தி. அதன் வலது மூலையில், அன்று…அதாவது அறுபதுகளில் இருந்தது ரமணா லெண்டிங் லைப்ரரி. ஜார்ஜ் டவுனுக்கே உரித்தான பாணியில் அமைந்த ஒரு வீட்டின் இருண்ட முன்னறையில் அது இயங்கியது. இடம், இருட்டோ… வெளிச்சமோ என் ஹிருதய விலாசத்தில் நிரந்தர இடம் பெற்ற ஓவிய மேதை கோபுலுவையும் காவிய மேதை த.நா.குமாரசாமியையும் நான் கண்டுபிடித்த இடம் இதுதான்.\nஅப்போது நான் ஐந்தாவதோ ஆறாவதோ ஃபெயிலாகி கச்சாலேஸ்வரர் அக்ரஹாரத்தில் இருந்த என் பெரியப்பாவின் வீட்டில் தங்கிப் படித்துக் கொண்டிருந்தேன். என் சின்ன அண்ணா பாலாஜி இந்த லெண்டிங் லைப்ரரியில் இருந்து விகடன், கல்கி, கலைமகள் உள்ளிட்ட வார மாத இதழ்களையும் கதைப் புத்தகங்களையும் கொண்டு வருவான். அக்ரஹாரத்தின் பெரும்பாலான வீடுகளைப் போல, நானிருந்த வீடும் ஒண்டுக் குடித்தனம். கசகசவென மனிதர்கள் புழங்கும் இந்த வீட்டின் ஆட்களால் இப்புத்தகங்கள் படித்துத் தீர்க்கப்பட்டன. குறிப்பாக, அந்த அசௌகரியமான மூணு நாட்களில், ஒதுங்கி உட்கார்ந்திருக்கும் பெண்களுக்கு இதுவொரு இலக்கிய சேவையாக இருந்தது. பெரியப்பா வீட்டில் நான் படித்தேனோ இல்லையோ… இந்தப் புத்தகங்களையெல்லாம் படித்து, பிஞ்சில் பழுத்தேன்.\nகோபுலு – சிறுவர் கதைச் சித்திரங்கள்\nஇடைவிடாமல் க��ரைகள் உதிரும் வெளிச்சக் குறைவான அறை ஒன்றில் மூட்டைப் பூச்சிகள் நிறைந்த மரத் தடுப்பில் முதுகைச் சாய்த்தபடி, த.நா.குமாரசாமியின் அன்பின் எல்லை நாவலைப் படித்து முடித்தேன். அவர் எழுதி நான் படித்த முதல் புத்தகம் இதுதான். விகடனில் தொடராக வந்த அதை, பைண்டு செய்து வைத்திருந்தார்கள். (ஒருவேளை படத்துடன் கூடிய மங்கள நூலகம் போட்ட பதிப்போ\nஅன்பின் எல்லைக்குப் படம் வரைந்தது கோபுலு. கோபுலுவின் படங்களைப் பார்த்ததும் அதுவே எனக்கு முதன் முறை. இதற்கு முன்பு, விகடன்களைத் தொடர்ந்து படித்து வந்த போதும், ஓவியர்கள் யாரென உற்றுக் கவனிக்கப் பழகவில்லை. இந்தத் தொடர்தான் முதன் முதலில் ஓவியம் பற்றிய ஆர்வத்தை என்னுள் விதைத்தது. இது கோபுலுவின் ஓவிய மாயம். சித்திர நுட்பங்களை அறியாத என் மனத்தில் அவர் தீட்டிய படங்கள், புதிய ரசனையை மொட்டுவிடச் செய்தன. அதன்பின், விகடனை எடுத்தால், முதலில் கோபுலுவின் படங்களை ஒரே மூச்சில் பார்த்துத் தீர்ப்பேன்.\nஇப்படியாக அன்பின் எல்லையில் குமாரசாமியின் எழுத்தும் கோபுலுவின் ஓவியமும் சேர்ந்து, என் உள்ளத்தில் செய்த ரசவாதம்தான் என் முதல் இலக்கிய அனுபவம்.\nஅன்பின் எல்லையில் ஒரு காட்சி\nகல்யாணக் கோலம் கலையாத மணமகன், தாகத்துக்கு நீர் அருந்த சமையல் அறைக்குள் வருகிறான். அங்கு யாருமற்ற தனிமையில் தன் இளம் மனைவியைச் சந்திக்கிறான். அவள் கொடுத்த மோரை வாங்கிக் குடிக்கும் போது அதை அவனது தமக்கை பார்த்துக் கைதட்டி கேலி செய்கிறாள். சமையலறை ஓரம் சற்றே காலை வளைத்து முகம் கவிழ்த்து நாணி நிற்கும் மணமகள். கூச்சப் புன்னகையுடன் நெளியும் மணமகன்; இந்தக் காட்சி பருவத்தின் புதிர்கள் அரும்பு கட்டிய மனத்துள் ஒரு ரகசிய கிளுகிளுப்பைத் தந்தன.\nதன் பெற்றோரைப் பிரிந்து, அவர்களைக் காண மனத்துள் ஏங்கும் புக்ககத்து நாட்டுப் பெண். அப்பா வந்தால் நன்றாக இருக்குமே என்று எண்ணுகிறாள். அவள் ஏக்கமே உருவெடுத்தது போல, அவள் தந்தை இரு கைகளில் சீர் மூட்டைகளுடன் உள்ளே நுழைகிறார். அவளுக்கு எதிர்பாரா இன்ப அதிர்ச்சி. விழிகள் விரிந்து அன்பு கசிய, துள்ளி வருகிற பெண்; தகப்பனின் மலர்ந்த வதனமும், அதில் தளும்பும் சாந்தமும்… பழைய பாணி வீட்டில், அத்தனை உள்ளலங்கார விவர நுட்பங்களும் பின்னணியில். இந்த உணர்ச்சிகரமான காட்சியின் சித்த��ர ஜாலத்தில் என் இளம் மனம் இனம் புரியாமல் மயங்கியது. இது எனது முதல் சித்திர இலக்கிய அனுபவம். என் நினைவின் திரையில் நிறம் மங்காத தடம்.\nபின்னாளில், தி.ஜானகிராமனின் மோகமுள் போன்ற பேரனுபவங்கள் எனக்கு வாய்க்க என்னுள் விதைக்கப்பட்ட ‘தெள்ளிய ஆலின் சிறு பழத்தொருவிதை’தான் அது.\nஐம்பதுகளில் மோகமுள் சுதேசமித்ரனின் வார மலரில் தொடராக வந்த போது, அதற்கு படம் வரைந்தவர் ஓவியர் சாகர். பின்னாளில்தான் எனக்கு பைண்ட் செய்யப்பட்ட மோகமுள் தொடர் பார்க்கக் கிடைத்தது. ஓவியர் சாகர் ஒன்றும் ஏப்பைசாப்பையானவர் அல்ல. இருந்தாலும், மோகமுள்ளுக்கு கோபுலு வரைந்திருந்தால்….”மாணிக்கம் தித்திக்கில் என்னாகும் மற்ற மதுரங்களே”, என்றானே கவி, அந்த வாக்குதான் நினைவுக்கு வருகிறது.\nஅன்று நான் ஜார்ஜ்டவுனில் வசித்த இடமும், அதன் சூழலும்தான் எனது சித்திர இலக்கிய ரசனைகளை புதிதாக வடித்தன. அன்றைய கும்பகோணத்திலிருந்து, பிடுங்கி எடுத்து ஜார்ஜ்\nடவுனில் பிரதிஷ்டை செய்தது போலிருந்தது நான் வசித்த கச்சாலேஸ்வரர் அக்ரஹாரம். அந்த அக்ரஹாரத்தின் முன் பகுதி கும்பகோணம் என்றால்,அதன் முதுகுப் பகுதி துறைமுகத் தொழில் நகரம். அக்ரஹாரத்தின் முன் பகுதியில் வீடுகளின் செம்மண் தீட்டிய முகப்புகளும், கோலமிட்ட வீதியில், வேம்பின் வில்வத்தின் நிழலாடும் கோவில் மதிலும், நீர் ததும்பும் திருக்குளமுமாக உள்ளே நிற்பவருக்கு ஏதோ தஞ்சை ஜில்லாவில் இருக்கிற பிரமையை ஏற்படுத்தும்,. அக்ரஹாரக் குளத்தைச் சுற்றி உள்ள மூன்று தெருக்களின் முதுகுகளையும் பின்புறத்தில் வளைத்தோடுவது மூக்கர் நல்லமுத்துச் செட்டி தெரு, செம்புதாஸ் தெரு, முத்துமாரிச் செட்டி தெரு ஆகியவை. கோவிலின் ஜாம பூஜைக்கான கண்டாமணி நாதத்தை விழுங்கும் பார லாரிகளின் கர்ஜனைகள், மீன்பாடி வண்டிகளின் ஓலங்கள், துறைமுகத்தில் கடல்வெளியையே நிரப்பும் கப்பலின் பிளிறல் (இதை ஒரே அடியில் உயிர் துறக்கும் விலங்கொன்றின் கர்ஜனை என்பார் ஜேகே). அக்ரஹாரத்தைச் சார்ந்து இப்படி முதுகோடு முதுகொட்டிய இருவேறு உலகங்கள்.\nஇவ்விரு உலகின் சங்கமத்தில் வாழக் கிடைத்த என்னை நகரத்தையும் நாட்டுப்புறத்தையும் ஒருங்கே செரித்து, தூரிகையில் உயிர்ப்பித்த பெருங்கலைஞர் கோபுலுவின் படங்கள் கவர்ந்து ஈர்த்ததில் வியப்பில்லை. கோபுல��வே கும்பகோணத்தில் பிறந்து இந்த மாநகருக்குள் தூக்கி எறியப்பட்டவர்தானே.\nபெருநகரத்தின் நடைபாதை வாழ்வு சார்ந்த செங்கல்பட்டு, வட ஆற்காடு உழைப்பாளி மக்களை மிக வேகத்துடனும், துல்லியத்துடனும் அவர் வரைந்திருப்பார். ஜார்ஜ் டவுன் ஜனப்பிரவாகத்தில் அவர் வரைந்த பல முகங்களை நான் பல முறை எதிர்கொண்டிருக்கிறேன். செம்புதாஸ் தெரு கார்ப்பரேஷன் பள்ளியில் என்னுடன் படித்த என் பால்யகால சகியும், நடைபாதை வாசியுமான பாஞ்சாலியின் முகச் சாயலை கோபுலுவின் ஏதோ ஒரு கோட்டோவியத்தில் பார்த்து வியந்திருக்கிறேன். பாஞ்சாலி மட்டுமன்று; நடைபாதைகள் சேரிகளின் பல குணச்சித்திரங்கள் அவர் தூரிகையில் உயிர் பெற்று எழுந்தார்கள். பிராமண முகங்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். குறிப்பாக தஞ்சை மாவட்ட பிராமண முகங்களின் அத்தனை வகைகளையும் அவர் வரைந்து தீர்த்திருப்பார் என்று நினைக்கிறேன்.\nஅன்று விகடனில் அவர் வரைந்த தொடர்கதைகளுக்கு தலைப்பு எழுத்துகளை ஒட்டி சின்னதாக ஒரு முகப்போவியம் வரைந்திருப்பார் பாருங்கள் இரண்டு விரற்கடை இடத்துக்குள் எத்தனை விவரணைகள். தேவன் எழுதிய ஸ்ரீமான் சுதர்ஸனம் நாவலின் முதல் அத்யாயத்தில் ஒரு முகப்போவியம். இரு புறங்களிலும் அடர்ந்த கட்டிடங்களும் வாகனங்களும் மனிதக் கூட்டமுமாக நீண்டு கிடக்கிற சாலை. மிரட்டும் நகர வேகத்தில் மிரண்டு கவலையோடு விழித்துக் கொண்டு நிற்கிற அப்பாவி குமாஸ்தா முகம். அவன்தான் சுதர்ஸனம். கதையின் சாரத்தையே சொல்லிவிடுகிற முகப்புப் படம்.\nஅதுபோலவே மிஸ்டர் வேதாந்தத்துக்கு வரைந்த முகப்புப் படங்கள். காவேரியில் கால்நனைத்து நிற்கும் கும்பகோணம் காலேஜ்; டிராம் ஓடும் கல்கத்தா வீதி; சரளைக் கல் சாலையில் நகரும் ரெட்டை மாட்டுவண்டியும் வாய்க்காலுமாக ஒரு தஞ்சை கிராமக் காட்சி; இப்படி சில முகப்புகள். தில்லானா மோகனாம்பாளில் ஒரு சாலையோரச் சாவடி; அந்த நாள் செருகோட்டுக் கூறையும் முன் வளைவுமாக ஒரு அற்புதப் படம்; இப்படிச் சொல்லிக் கொண்டெ போகலாம். அவருடைய ஸ்ட்ரோக்குகளில் ஒவ்வொரு காலகட்டத்திலும் புது மாற்றங்கள்; பாணியில் தெரியும் புதுமைகள்; இவையனைத்தும் விகடனுக்கு புதுப் பொலிவேற்றின. பின்னாளில் விகடனில் வெளிவந்த பல்வேறு மாநிலம் பற்றிய சிறப்புக் கட்டுரைகளிலும் மலர்களிலும் தேசத்தின் வெவ்வேறு கலாசாரம் சார்ந்த பல்வேறு இனக் குழுக்களின் முகங்களை, முக பாவங்களை, உடல் இயக்கங்களை, அற்புதமாக வரைந்திருந்தார். பல்வேறு நிலவெளிகளின் பல வர்ணமுள்ள வாழ்வின் காட்சி ரசங்களை எல்லாம் தனது சித்திரத்தில் தேக்கி பிரமிக்க வைத்தார் அந்த மேதை.\nஎன் முப்பது வயதுக்கு மேல், சில ஆண்டுகள் கழித்து, இப்பெருமகனை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. என் பத்திரிகை வாழ்க்கை தொடங்கி, பல ஆண்டுகள் கழித்து, சுமார் 95 வாக்கில்தான், முதன்முதலாக நேரில் அவரை சந்தித்தேன். அப்பொழுது நான், தினமணிக்கதிர் ஆசிரியர் குழுவின் மூத்த ஆசிரியன். ஆண்டு தோறும் டிஸம்பர் மாதம் தினமணிக்கதிரின் இசைச்சிறப்பு இதழைத் தயாரிக்கும் பொறுப்பாசிரியன். அப்போதைய தினமணி ஆசிரியர் இராம.திரு.சம்பந்தம், இசை இதழ் தயாரிப்பில் ஒரு சிறு தலையீடுகூட இல்லாமல், எனக்கு முழு சுதந்திரம் கொடுத்திருந்தார். இசைச் சிறப்பிதழுக்கு ஓவியம் வரைய கேட்டுக்கொள்ளும் சாக்கில், கோபுலுவைச் சந்திக்க அவர் வீட்டுக்குப் போனேன். ஈஸ்வரனுடைய கல்யாண குணங்களில் ஒன்று அவனுடைய சௌலப்யம். அதாவது அதிசுலபமாக பக்தர்கள் அவனை அணுக அனுமதிக்கிறவன்; ஈஸ்வரனைப் போலவே படைக்கிற கலைஞர் கோபுலுவும் மிக எளிதாக அணுகக்கூடியவர். சாதாரணமானவர்களை கிட்ட அண்டவிடாமல் துரத்தி அடிக்கும் ‘மேதைக் கிறுக்கு’ அவரிடம் தலைகாட்டவில்லை. எல்லாம் நிறைந்த வாழ்வு வாழ்ந்த அந்த கலைஞனின் எளிமை எனக்கு ஆச்சரியம் அளித்தது. அவருக்கு இருந்த சங்கீத அபிமானமும், என் இசை ஆர்வத்தைக் கண்டு அவர் என்னிடம் கொண்ட பரிவும்தான், எங்கள் நட்புக்கு அஸ்திவாரம்.\nகோபுலு – கோட்டுச் சித்திரங்கள்\nஒரு காரியமும் இல்லாவிட்டால்கூட இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒருமுறையாவது, அவரை சந்தித்து அரட்டை அடிப்பது எனக்கு வழக்கமாயிற்று. டிஸம்பர் மாதம், நான் அவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொள்ளுவேன். என் குரல் கேட்டவுடனேயே, “என்ன சிவகுமார், டிஸம்பர் வந்தாச்சா எல்லாம் ஜமாத்துவிடலாம்” என்பார். அவர் வரைவதற்காக நான் கொண்டுபோய் கொடுக்கும் கட்டுரைகளை ஆவலாக படித்து, அதுபற்றி சுவாரஸ்யமாக பேசுவார்.\nசில சமயம் நான் எழுதும் தலைப்பை ஒட்டி, தான் அறிந்த அரிய சம்பவங்களை, என்னைக் கேட்காமலேயே வரைந்து அனுப்பிவிடுவார். பிறகு எனக்கு ஃபோன் செய்வ��ர். “சிவா, வித்வான்கள் பொடி போடும் வழக்கம் பற்றி எழுதியிருக்கிறாய் இல்லையா நான் திருவாலங்காடு சுந்தரேசய்யர் படம் வரைந்து அனுப்பியிருக்கிறேன். அவர் எப்படி பொடி போடுவார் தெரியுமா நான் திருவாலங்காடு சுந்தரேசய்யர் படம் வரைந்து அனுப்பியிருக்கிறேன். அவர் எப்படி பொடி போடுவார் தெரியுமா” என்று படுசுவாரஸ்யமாக ஒரு விஷயத்தை சொல்வார். “பொருத்தமாய் பட்டால், சேர்த்துக்கொள்ளேன்” என்பார். நான் அதை எழுதி சேர்த்துக்கொள்ளுவேன். தினமணி இசை சிறப்பிதழுக்காய் அவ்வளவு ஈடுபாடுடன் ஒத்துழைத்தவர் அவர். எனது இசைக் கட்டுரைகளை முதலில் படிப்பவர் அவர்தான். அவரது பாராட்டுகளை என் தொழிலில் எனக்குக் கிடைத்த மிகப் பெரிய கௌரவமாக கருதுகிறேன்.\nஒரு மறக்க முடியாத நிகழ்ச்சி. நான் ஆண்டுதோறும், இசைச் சிறப்பிதழில், இசை தொடர்பாக ஒரு சிறு கதையை மலரில் சேர்த்து வந்தேன். நண்பர் இரா.முருகன் இசை மலரின் ரசிகன். ஆர்.கே.நாராயணன் எழுதிய கதை ஒன்றை என்னிடம் சொல்லி, இதை மொழிபெயர்த்துப் போடுங்களேன் என்று சிபாரிசு செய்தார். எனக்கு அந்த கதை மிகவும் பிடித்திருந்தது. அதை உடனே நண்பர் சச்சியைக் (கி.அ.சச்சிதானந்தம்) கொண்டு மொழிபெயர்த்தேன்.\nஆர்.கே. நாராயணன் அப்போது தி. நகரில், தன் சம்பந்தியான லட்சுமி கிருஷ்ணமூர்த்தி வீட்டுக்கு வந்திருந்தார். அவரிடம் இக்கதையை இசை மலரில் மொழிபெயர்த்து வெளியிட அனுமதி கேட்டேன். கிழவர், கேலிச் சிரிப்புடன் “இந்தக் கதையை யாராவது படிப்பார்கள் என்று நினைக்கிறாயா” என்றார். “தாராளமாக மொழிபெயர்த்துப் போடு” என அனுமதி தந்தார்.\nகதைச் சுருக்கம் இதுதான். சங்கீத சபை நடத்துபவர், ஒரு பாடகியின் கச்சேரிக்கு ஏற்பாடு செய்துவிட்டார். நிகழ்ச்சியை நடத்த ஒரு இடம் கிடைக்கவில்லை. இடம் தேடி சலித்துப்போய், ஒரு ரயில்வே யார்டில் கச்சேரியை நடத்த ஏற்பாடு செய்கிறார். ரயில் வராத அந்த யார்டில், மிளகாய் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. பாடகி இருமிக் கொண்டும் தும்மிக் கொண்டும் பாடுகிறாள்.பிளாட்பாரத்தில் விரிக்கப்பட்ட கோணியிலிருந்து ஏதேதோ பூச்சிகள் கடிக்க ரசிகர்கள் சொறிந்துகொண்டே பாட்டு கேட்கிறார்கள். என்ன துரதிருஷ்டம் பாருங்கள் வண்டியே வராத அந்த யார்டில் அன்று அதிசயமாக புகைக்கக்கியபடி நுழைகிறது ஒரு கூட்ஸ் வண்டி. அவ��வளவுதான் கச்சேரிக்கு கோவிந்தநாம சங்கீர்த்தனம்\nஇந்த கதைக்கு கோபுலு வரைந்த படம்\nஇதழ் வெளிவந்த கையோடு ஆர்.கே. நாராயணனைப் பார்த்துக் கொடுத்தேன். கோபுலுவின் அமர்க்களச் சித்திரத்தை மிகவும் ரசித்து சிரித்தவர் : “கோபுலு ரொம்ப பிரமாதம்பா” என்று வாய் நிறைய பாராட்டினார்.\nஅப்போது அவரிடம் நான், “உங்கள் கற்பனை ரொம்ப நன்றாக இருந்தது” என்றேன். கிழவர் என்ன சொன்னார் தெரியுமா “கற்பனையாவது கத்ரிக்காயாவது நிஜம்மாகவே இது நடந்ததய்யா..ரொம்ப காலத்துக்குமுன் கோயம்புத்தூரிலோ மைசூரிலோ ஒரு கச்சேரியை ரயில்வே யார்டில் நடத்தி ஒரே கூத்தாகிவிட்டது\nபின்னர் கோபுலுவை சந்தித்தபோது, ஆர்.கே.என் அவரது ஓவியத்தை லயித்துப் பாராட்டியதை சொன்னேன். வழக்கம்போல ஒரு சிறு புன்னகை. பாராட்டுக்களை ஒரு சிறு புன்னகையுடன் கடப்பது அவரது வழக்கம்.\nஒரு தடவை நான் அவரிடம் ஆர்.கே.லக்ஷ்மணின் கார்ட்டூங்கள் பலதொகுப்புகளாக வருவதைச் சொல்லி , “உங்கள் படங்களில் சிறந்தவைகளைத் தேர்ந்தெடுத்து ஒரு காஃபி டேபிள் புக் ஆகப் போடலாமே” என்று கூறினேன். “இதெல்லாம் விற்கும் என்று நினைக்கிறாயா யார் இதை வாங்கப் பொகிறார்கள் யார் இதை வாங்கப் பொகிறார்கள்” என்று என் யோசனைகளைப் புறந்தள்ளிவிட்டு வேறு ஏதோ விஷயத்தைப் பேச ஆரம்பித்து விட்டார். புகழ்க்கூச்சத்தில் தி.ஜானகிராமனுக்கு அண்ணன் இவர். ஜானகிராமனின் புகழ்க்கூச்சம் பற்றி அவருக்கு நெருங்கி இருந்தவர்கள் சொல்லி அறிவேன்.\nகோபுலுவிடம் எனக்கு ஒரு சின்ன குறை. இத்தனை வருஷம் என்னுடன் பேசிப் பழகியிருக்கிறார். அவர் மகன் வயதிலிருந்த என்னிடம் நீங்க..வாங்க..என்று பகு வசனமாகவே பேசுவார். இந்த பன்மை விளியை நிறுத்தி ஒருமையில் அழையுங்கள் என்று பலதடவை நான் அவரிடம் கோரியதுண்டு. உஹூம்.. மாட்டவே மாட்டார். வழக்கம்போல ஒரு புன்னகையில் என் கோரிக்கை நிராகரிக்கப்படும். இக்கட்டுரையில் அவர் பேசிய இடங்களை ஒருமையில் போட்டு ஆத்ம திருப்தி அடைகிறேன். ஏனென்று கேட்க அவர்தான் இல்லையே.\nகோபுலு – வண்ணச் சித்திரங்கள்\n0 Replies to “கோபுலு – மறக்க முடியாத நினைவுகள்”\nஜூலை 9, 2015 அன்று, 11:56 காலை மணிக்கு\nNext Next post: விடுதலையுணர்வு\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவக் கட்டுரை அனுபவங்கள் அனுபவம் அமெரி���்க அரசியல் அயல் விழா அரசியல் அரசியல் கட்டுரை அறிவிப்பு அறிவியல் அறிவியல் அதி புனைவு அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைக் கட்டுரை இசைத்தெரிவு இசையும் மொழியும் இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-232 இதழ்-233 இதழ்-234 இதழ்-235 இதழ்-236 இதழ்-237 இதழ்-238 இதழ்-239 இதழ்-24 இதழ்-240 இதழ்-241 இதழ்-242 இதழ்-243 இதழ்-244 இதழ்-245 இதழ்-246 இதழ்-247 இதழ்-248 இதழ்-249 இதழ்-25 இதழ்-250 இதழ்-251 இதழ்-252 இதழ்-253 இதழ்-254 இதழ்-255 இதழ்-256 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவி���ை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய வரலாறு இலக்கிய விமர்சனம் இலக்கியக் கட்டுரை இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக நடப்புக் குறிப்புகள் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் எழுத்து ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சத்யஜித் ரே சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தழுவல் கட்டுரை தாவரவியல் தாவரவியல் கட்டுரை திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாரதியியல் பாலியல் கல்வி புகைப்படக் கட��டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொடுவா நாட்டார் கலை பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதற்கனல் முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பு இலக்கியம் மொழிபெயர்ப்பு நாவல் மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை ரவிஷங்கர் லயம் வங்க ஓவியங்கள் வங்க மலர் வங்கச் சிறப்பிதழ் வரலாறு வரலாற்றாய்வு வரலாற்றுக் கட்டுரை வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேதியியல் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அகிலா ஆ. அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அஞ்சலி ஸச்தேவா அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அருண்குமார் மகோபாத்யாய் அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அவீக் சாட்டர்ஜீ அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆடம் இஸ்கோ ஆண்டனி கில் ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் குமார் ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆமிராபாலன் ஆரூர் பாஸ்கர் ஆர் நித்யஹரி ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி ஆஸ்டின் சௌந்தர் இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா முருகன் இரா. அரவிந்த் இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இராம் பொன்னு இலவசக் கொத்தனார் இலா இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உ நரசிம்மன் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உலகளந்த பெருமாள் உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.என். குண்டு எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் எம்.டி வாசுதேவன் நாயர் Raja எம்.ரிஷான் ஷெரீப் எரிக் நெஹர் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் எஸ் சியூயீ லு Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கஞ்சனூர் கவிப்ரியா கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட்ராமன் கண்ணன் இராமநாதன் கதீர் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கலாப்ரியா கலைச்செல்வி கல்யாணி ராஜன் கவியோகி வேதம் கா.சிவா கா.ரபீக் ராஜா காஜி நசருல் இஸ்லாம் காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் கிருபாகரன் கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலச்சுவடு கண்ணன் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் கி. ராஜநாராயணன் கிருஷ்ண பாசு Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட��டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரி எஸ். நீலகண்டன் குமரேசன் மு. குமாரநந்தன் குமார் சேகரன் குமுதினி கூம் கூம் ராய் கெ.ம.நிதிஷ் கென் லூ கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கே.பாலசுப்பிரமணி கே.ராஜலட்சுமி கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரெக் பா(வ்)ம் க்ரேஸ் பேலி ச அர்ஜுன்ராச் ச. சமரன் ச. சிவபிரகாஷ் ச.திருமலைராஜன் சக்தி சட்டோபாத்யாய சக்தி விஜயகுமார் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் சமரேஷ் மஜும்தார் சரவணன் அபி சரவணன் மாணிக்கவாசகம் சரோஜ் பந்த்யோபாத்தியாய் sarvasithan சா.கா.பாரதி ராஜா சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்லி டைஸன் சார்ல்ஸ் ஸிமிக் சி.எஸ். லக்ஷ்மி Ayshwarya Shankaranarayanan சி.சு.செல்லப்பா சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி சியாம் பாரதி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. அருண் பிரசாத் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுகாந்தொ பட்டாச்சார்யா சுகுமார் ராய் சுசித்ரா பட்டாச்சாரியா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தரம் செல்லப்பா சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுனீல் கங்கோபாத்யாய் சுபத்ரா ரவிச்சந்திரன் சுபிமல் மிஸ்ரா சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் சௌதிக் பிஸ்வாஸ் ஜகதீஷ் சந்திர போஸ் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜான்பால் ரொசாரியோ ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜாஷுவா ராத்மான் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீபனானந்தா தாஸ் ஜீவ கரிகாலன் ஜீவன் பென்னி ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தா டே ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேன் ஹெர்ஷ்ஃபீல்ட் ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜொய் கோஸ்வாமீ ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த. நரேஸ் நியூட்டன் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தஸ்லிமா நஸ்ரின் தாட்சாயணி தாமரைக்கண்ணன் தாராசங்கர் பந்த்யோபாத்யாய் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் திலீபன் தீபேஷ் சக்ரபர்த்தி தீப் ஹல்தர் தென்கரை மகாராஜன் தெரிசை சிவா தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் தைஸ் லைஸ்டர் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நபரூன் பட்டாச்சார்யா நம்பி நரசய்யா நரேன் நரோபா நளினி நவநீதா தேவ் சென் நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகிலேஷ் குஹா நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு ravishankar குழு பத்மகுமாரி பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்மா ஸச்தேவ் பத்ரி சேஷாத்ரி பனபூல் பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி பா ராமானுஜம் Pa Saravanan பா.சுதாகர் பா.தேசப்பிரியா பானு கபில் பானுமதி ந. பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan பாஸ்கர் ஆறுமுகம் Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ ��ிச்சையம்மான் பிபூதிபூஷன் பந்த்யோபாத்யாய் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபீர் சென் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புத்ததேவ போஸ் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம. செ. ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுமிதா மதுரபாரதி மதுரா மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் அரவிந்த டி ரெங்கநாதன் மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலேசியா ஸ்ரீகாந்தன் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாணிக் பந்தோபாத்யாய மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மாயா ஏஞ்சலொ மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ம இராமச்சந்திரன் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி முனைவர் ராஜேந்திர பிரசாத் நா மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோதி நந்தி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரக்ஷன் கிருதிக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரபீந்திர நாத் தாகூர் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமநாத் ராய் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ரிச்சர்ட் ரூஸ்ஸோ ருகையா ஷகாவத் ஹுசென் ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோகிணி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லாவண்யா சுந்தரராஜன் லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகமாதேவி லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வசந்ததீபன் வண்ணநிலவன் வர்ஜீனியா வுல்ஃப் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜயகுமார் சம்மங்கரை விஜயலக்ஷ்மி விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வித்யா அருண் விபீஷணன் விருட்சன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேங்கட ராகவன் நா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷாங்க்யா கோஷ் ஷாதிர் ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸிர்ஷோ பந்தோபாத்யா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் கின்சர் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாரலாம்பி மார்கோவ் ஹாலாஸ்யன் ஹுமாயுன் அஹமத் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் அக்டோபர் 2021 செப்டம்பர் 2021 ஆகஸ்ட் 2021 ஜூலை 2021 ஜூன் 2021 மே 2021 ஏப்ரல் 2021 மார்ச் 2021 பிப்ரவரி 2021 ஜனவரி 2021 டிசம்பர் 2020 நவம்பர் 2020 அக்டோபர் 2020 செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும். எழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nஆன்கர் எஃப்.எம். (anchor.fm) 4\nயூடியுப் – ஒளிவனம் (YouTube) 3\nசவுண்ட் கிள��ுட் (SoundCloud) 1\nஎழுத்தாளர் அம்பை: சொல்வனம் சிறப்பிதழ்கள் 0\nரொபெர்த்தோ பொலான்யோ ஆக்கங்களும் விமர்சனங்களும் 0\nவீடும் வெளியும்: கவிதைகளும் கதைகளும் 0\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவங்கச் சிறப்பிதழ் 1: 240\nவங்கச் சிறப்பிதழ் II: 241\nவி. எஸ். நைபால்: 194\nகவிதை பற்றி புதுமைப்பித்தன் கூறியவற்றுள் சில\nவிஞ்ஞான வளர்ச்சியின் வளர்ச்சி- 2\nபெருந்தேவிக்கு பி. ஜி. உடௌஸ் வேண்டாம்\nசோ - ஒரு தன்னிகரற்ற நிகழ்வு\nஆட்டத்தின் ஐந்து விதிகள் (8)\nஇந்து தர்மமும் அதன் கலாசாரப் போர்களும் (14)\nஇவர்கள் இல்லையேல் – நாவல் (3)\nகாவிய ஆத்மாவைத் தேடி (3)\nசட்டமும் செயற்கை நுண்ணறிவும் (2)\nதலை சிறந்த 10 தொழில்நுட்பம் (11)\nதேர்ந்த வாசகருக்கான படப்புத்தகம் (2)\nநோயாளி எண் பூஜ்யம் (2)\nபய வியாபாரியா ஹிட்ச்காக் (2)\nபேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் (4)\nமிளகு: இரா முருகன் – நாவல் (7)\nமுதலியத்தை எதிர்க்கும் பொதுமம் (1)\nமொபைல் தொடர்பாடல் வரலாறு (2)\nவண்ணநிலவன் நாவல்கள் பற்றி (2)\nஸ்லாட்டர்ராக்- தாமஸ் டிஷ் (2)\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nஎழுத்தாளர் இரா முருகனின் சரித்திரத் தொடர் நாவல் “மிளகு” அத்தியாயம் - ஏழு 1999 அம்பலப்புழை 35:47\nஎழுத்தாளர் தி.ஜானகிராமன் எழுதிய சிறுகதை \"செய்தி\" 21:56\nமரமும் நிழலும், மற்றும் சில கவிதைகள்\nதொலைபேசி – ஒரு பரிணாமம்\nஓய்வுக் காலச் சேமிப்பும் அதை அபகரிக்க அரசாங்கம் நடத்தும் போரும்\nby கடலூர் வாசு\t ஆகஸ்ட் 22, 2021\nby கா.ரபீக் ராஜா\t ஆகஸ்ட் 22, 2021\nby லியோ டால்ஸ்டாய்\t ஆகஸ்ட் 22, 2021\n”ஆசிய அமெரிக்கர்கள்” – அமெரிக்காவில் மிகையாகும் வெறுப்பரசியல்\nby லதா குப்பா\t ஆகஸ்ட் 22, 2021\nகாவிய ஆத்மாவைத் தேடி… – 2\nby ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன்\t ஆகஸ்ட் 22, 2021\nபேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்\nby பானுமதி ந.\t ஆகஸ்ட் 22, 2021\nமூத்த கதைசொல்லி – டெம்சுலா ஆவ்\nby கோரா\t ஆகஸ்ட் 22, 2021\nதொட்டாலே கண் எரியும் மிளகாயா\nby லோகமாதேவி\t ஆகஸ்ட் 22, 2021\nஷோபா சக்தியின் ‘கொரில்லா’ – ஒரு பார்வை\nby ராஜேஷ் சந்திரா\t ஆகஸ்ட் 22, 2021\nஉங்கள் மின்னஞ்சல், படைப்புகளை அனுப்ப முகவரி: solvanam.editor@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/dancing-superstar", "date_download": "2021-10-19T11:50:46Z", "digest": "sha1:67YJWTQJABSWYVI2DQXYHHMO3VUAZ2WE", "length": 6980, "nlines": 86, "source_domain": "tamil.asianetnews.com", "title": "dancing superstar: Latest News, Photos, Videos on dancing superstar | tamil.asianetnews.com", "raw_content": "\nகர்ப்பமாக இருக்கும் ஆலியாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய் டிவி குலுங்கி குலுங்கி அழுத நெகிழ்ச்சி சம்பவம்\nவிஜய் டிவியில் ஒளிபரப்பான 'ராஜா ராணி' சீரியல் மூலம் பிரபலமானவர் சின்ன கண் அழகி ஆலியா மானசா. இந்த சீரியலில் இவருக்கு ஜோடியாக நடித்த சஞ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். விஜய் டிவி நடத்திய விருது விழாவில் இவர்கள் அணைத்து பிரபலங்கள் மத்தியிலும், மோதிரம் மாற்றி நிச்சயதார்த்தம் நடந்தது. எனினும் திருமணம் மிகவும் எளிமையாக நடந்து முடிந்தது.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகோவிட் மூன்றாவது அலையில் இருந்து நம்மை காத்து கொள்ள சுயபரிசோதனை கருவியே நமக்கு தேவை \nபலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய விளையாட்டு வீரர்கள் \n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய கலைஞர்கள்\nமஹசூஸ் வெற்றியாளர் ஏசியாநெட் நியூஸ் தமிழுக்கு அளித்த பேட்டி\nகோவிட் மூன்றாவது அலையில் இருந்து நம்மை காத்து கொள்ள சுயபரிசோதனை கருவியே நமக்கு தேவை \nபலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய விளையாட்டு வீரர்கள் \nதிமுக ஆட்சிக்கு 5000 கோடி பலன்... பாஜக தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை..\nடி20 உலக கோப்பையில் அவர் தான் இந்திய அணியின் \"X Factor\" பிளேயர்.. கம்பீர், இர்ஃபான் பதான் ஒருமித்த குரல்\nராகவா லாரன்ஸ் - நடிக்கும் படத்தில் ‘பாடாத பாட்டெல்லாம்’ ரீமிக்ஸ் பாடல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/dmk-mk-stalin-resumes-election-campaign-from-today-assembly-election-2021-vai-401525.html", "date_download": "2021-10-19T10:58:51Z", "digest": "sha1:2ICBAP6WJUYKZMUXVW2ZMC6SEUEDAZ54", "length": 7426, "nlines": 98, "source_domain": "tamil.news18.com", "title": "MK Stalin campaign ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’.. தேர்தல் பிரசாரத்தை இன்று தொடங்குகிறார் மு.க.ஸ்டா���ின்| MK Stalin resumes election campaign from today – News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#T20 WorldCup#பெண்குயின் கார்னர்#பிக்பாஸ்#கிரைம்\n‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’.. தேர்தல் பிரசாரத்தை இன்று தொடங்குகிறார் மு.க.ஸ்டாலின்\n‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’.. தேர்தல் பிரசாரத்தை இன்று தொடங்குகிறார் மு.க.ஸ்டாலின்\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திருவண்ணாமலையில் இன்று தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார்.\nஉங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற தலைப்பில் மு.க.ஸ்டாலின் இன்று முதல் 30 நாட்களில் 234 தொகுதிகளிலும் பரப்புரை செய்ய திட்டமிட்டுள்ளார். அதன்படி திருவண்ணாமலை மாவட்டம் திருக்கோயிலூர் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் காலை 10 மணியளவில் நடைபெறும் முதல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். அப்போது, திருவண்ணாமலை, செங்கம், கலசபாக்கம், கீழ்பெண்ணாத்தூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கோரிக்கை மனுக்களை ஸ்டாலினிடம் வழங்க உள்ளனர்.\nஇந்த பிரசார கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நேற்றிரவு வருகை தந்த ஸ்டாலினுக்கு மாவட்ட எல்லையான கீழ்பெண்ணாத்தூரில் சுமார் 2 கிலோமீட்டர் தொலைவிற்கு பெண்கள் அணிவகுத்து நின்ற கும்ப மரியாதையுடன் வரவேற்றனர்.\nமேலும் படிக்க... கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், தடுப்பூசி திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் இன்று ஆலோசனை\nகேரள செண்டை மேளம், பறை இசையுடன் அளிக்கப்பட்ட வரவேற்பை ஏற்றுக் கொண்ட ஸ்டாலின், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து ஆயிரக்காணக்கான தொண்டர்களிடம் சால்வைகளை பெற்றுக் கொண்டார்.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube\n‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’.. தேர்தல் பிரசாரத்தை இன்று தொடங்குகிறார் மு.க.ஸ்டாலின்\nபொய் வழக்கு போட்டு அதிமுகவை உடைக்க பார்க்கிறார்கள் - எடப்பாடி பழனிசாமி\nகன்னியாகுமரியில் வெள்ள பாதிப்புகளை தடுப்பதற்காக ரூ.202 கோடி நிதி - கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்\nசேலம், புதுக்கோட்டை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கன மழை பெய்யும் என அறிவிப்பு\nசிறையில் இருந்தபடியே உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற சாராய வியாபாரி : கலெக்டரிடம் மனு கொடுத்த மனைவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tovp.org/ta/donate/seva-opportunities/sponsor-mahaprabhu-brick/", "date_download": "2021-10-19T11:47:19Z", "digest": "sha1:NJS6VDBPIP5BUG34VUXTINDDGRWXAPQA", "length": 47495, "nlines": 316, "source_domain": "tovp.org", "title": "SPONSOR A MAHAPRABHU BRICK - Temple of the Vedic Planetarium", "raw_content": "\nஉங்கள் நன்கொடைகளின் வரலாறு, நன்கொடையாளர் சுயவிவரம், ரசீதுகள், சந்தா / தொடர்ச்சியான கொடுப்பனவுகள் மற்றும் பலவற்றைக் காணலாம் மற்றும் நிர்வகிக்கவும்.\nநன்கொடையாளர்கள் தங்கள் வரலாறு, நன்கொடையாளர் சுயவிவரம், ரசீதுகள், சந்தா மேலாண்மை மற்றும் பலவற்றிற்கு தனிப்பட்ட அணுகலைக் கொண்ட இடமாகும்.\nநன்கொடையாளர் அவர்களின் அணுகலை சரிபார்த்தவுடன் (அவர்களின் மின்னஞ்சல் முகவரியை சரிபார்ப்பதன் மூலம்), பார்வையிடவும் நன்கொடை டாஷ்போர்டு பக்கம் அவர்களுக்கு நன்கொடை டாஷ்போர்டின் அனைத்து அம்சங்களுக்கும் அணுகலைப் பெறுகிறது.\nஒரு நன்கொடையாளர் முதலில் டாஷ்போர்டை ஏற்றும்போது, அவர்கள் தளத்தில் தங்கள் நன்கொடையாளர் சுயவிவரத்துடன் தொடர்புடைய அனைத்து தகவல்களின் உயர் மட்டக் காட்சியைக் காண்கிறார்கள். கணக்கில் முதன்மை என அமைக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரி தொடர்புடைய கிராவதார் படத்தைக் கொண்டிருந்தால், அது டாஷ்போர்டின் மேல் இடதுபுறத்தில் காட்டப்படும்.\nபிரதான டாஷ்போர்டு தாவலில், நன்கொடையாளர் முதல் பெட்டியில் அவர்கள் கொடுக்கும் வரலாற்றின் உயர் மட்ட கண்ணோட்டத்தையும், அதற்குக் கீழே சில சமீபத்திய நன்கொடைகளையும் காண்கிறார்.\nஇன்னும் விரிவான நன்கொடை வரலாற்றுக்கு, நன்கொடையாளர்கள் சரிபார்க்கலாம் நன்கொடை வரலாறு தாவல், இது அவர்களின் வரலாற்றில் உள்ள அனைத்து நன்கொடைகளின் மூலமும் பக்கத்தின் திறனைக் காட்டுகிறது.\nதி சுயவிவரத்தைத் திருத்து தாவல் உங்கள் நன்கொடையாளர்கள் முகவரி, மின்னஞ்சல்கள் மற்றும் தளத்தின் முன் இறுதியில் அநாமதேயராக இருக்க விரும்புகிறார்களா இல்லையா போன்ற தகவல்களைப் புதுப்பிக்க அனுமதிக்கிறது.\nஅதன் மேல் தொடர்ச்சியான நன்கொடைகள் தாவல், எல்லா சந்தாக்களின் பட்டியலையும், ஒவ்வொன்றிற்கான விருப்பங்களையும் காண்பீர்கள். நன்கொடையாளர்கள் ஒவ்வொருவருக்கும் ரசீதுகளைக் காணலாம், கட்டணத் தகவலைப் புதுப்பிக்கலாம், சந்தாவை ரத்து செய்யலாம்.\nதி ஆண்டு ரசீதுகள் வரி மற்றும் பிற பதிவுகளை வைத்திருக்கும் நோக்கங்களுக்காக நன்கொடையாளர்கள் தங்கள் வருடாந்திர ரசீதுகளை அணுகவும் பதிவிறக்கவும் தாவல் அனுமதிக்கிறது.\nஉங்கள் TOVP கணக்கைப் பற்றி ஏதேனும் குறிப்பிட்ட கேள்விகள் இருந்தால், தயவுசெய்து நிதி திரட்டல் @tovp.org இல் எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்\nஜூன் 13, 2018 முதல் இந்த வலைத்தளத்தின் மூலம் வழங்கப்பட்ட நன்கொடைகளின் வரலாற்றை மட்டுமே DONOR ACCOUNT தாவல் உங்களுக்கு வழங்கும். முன் நன்கொடை வரலாற்றுக்கு எங்களை நிதி திரட்டுதல் @tovp.org இல் தொடர்பு கொள்ளவும்.\nபரிசு அங்காடிக்கு வருகை தரவும் . புத்தக புத்தக சந்தையை ஆராயுங்கள்\nடிவிபி பற்றி ஜனனிவாச பிரபு பேசுகிறார்\nயுனிவர்சல் முக்கியத்துவத்தின் ஒரு முக்கிய ஆன்மீக திட்டம்\nஉயர் ஆய்வுகளுக்கான பக்திவேந்தா நிறுவனம்\nபக்திவேதாந்த வித்யாபிதா ஆராய்ச்சி மையம்\nஅறிவியல் மற்றும் ஆன்மீக நிறுவனம்\nTOVP பேச்சுக்கள் - பரம்பராவின் பார்வை\nஎங்கள் உலகளாவிய அணியை சந்திக்கவும்\nநிதி திரட்டும் இயக்குநரின் செய்தி\nபிரபுபாத சேவா 125 நாணயம்புதிய\nராதராணி நாணயம் - இந்தியா மட்டும்\nசைதன்யா நாணயம் - இந்தியா மட்டும்\nநித்யானந்தா நாணயம் - இந்தியா மட்டும்\nஅட்வைதா நாணயம் - இந்தியா மட்டும்\nகடதர் நாணயம் - இந்தியா மட்டுமே\nஸ்ரீவாஸ் நாணயம் - இந்தியா மட்டுமே\nராதா-மாதவா பிரிக் - இந்தியா மட்டும்\nமஹாபிரபு பிரிக் - இந்தியா மட்டும்\nகுரும்பரம்பா பிரிக் - இந்தியா மட்டும்\nஎன்.ஆர்.சிம்ஹாதேவா டைல் - இந்தியா மட்டும்\nTOVP DOME க்கு தினசரி கொடி\nசதுர அடி அல்லது மீட்டர்\nசதுர அடி அல்லது மீட்டர் - இந்தியா மட்டுமே\nபொது நன்கொடை - இந்தியா மட்டுமே\nPLEDGE PayMENTS - இந்தியா மட்டுமே\nநன்கொடை விவரங்கள் / உறுதிமொழி கொடுப்பனவுகள் / தொடர்புகள்\nராதா மாதவா செங்கல் நன்கொடையாளர்கள்\nகிடைக்கக்கூடிய அனைத்து கட்டண விருப்பங்களையும் கீழே காண்க\nஇந்த தளத்தில் நன்கொடை அல்லது உறுதிமொழி செலுத்த அனைத்து கட்டண விருப்பங்களும் கீழே உள்ள பட்டியலில் உள்ளன. ஒவ்வொரு தனிப்பட்ட நன்கொடை பக்கமும் உங்கள் இருப்பிடத்தின் அடிப்படையில் குறிப்பிட்ட பிரச்சாரத்திற்கான கட்டண விருப்பங்களுக்கு வழிகாட்டும். உறுதிமொழி செலுத்துதல்களுக்கு பொது நன்கொடை விருப்பத்தைப் பயன்படுத்தவும் அல்லது கிளிக் செய்யவும் PLEDGE PAYMENTS தலைப்பின் கீழ் DONATE NOW பக்கத்தின் மேல் வலதுபுறத்தில் உள்ள தா��ல் ..\nகடன் அல்லது பற்று அட்டை\nவங்கி பரிமாற்றம் மற்றும் கம்பி பரிமாற்றம்\nஒரு சிறப்பு மஹாபிரபு பதக்கத்தை பெறுங்கள்\nஸ்ரீல பக்திவினோதா தாக்கூரின் தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றுங்கள்.\nஸ்ரீல பிரபுபாதாவின் இதய ஆசையை பூர்த்தி செய்யுங்கள்.\nதங்க செங்கல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இருங்கள்.\nசெய்ய எளிதானது, எங்கள் ஆன்லைன் படிவத்தை நிரப்பவும்.\n1,008 செங்கற்கள் மட்டுமே கிடைக்கின்றன\nஏற்கனவே 758 -க்கும் மேற்பட்டவர்கள் ஸ்பான்சர் செய்துள்ளனர்\nஸ்பான்சர் ஒரு மஹாபிரபு பிரிக்\nபஞ்ச தத்துவ தெய்வங்கள் 1008 மஹாபிரபு செங்கற்களை வழங்குகிறோம், அவற்றில் பொறிக்கப்பட்ட ஸ்பான்சர்களின் பெயர்கள், அவர்களின் இறைவனின் பலிபீடத்தின் கீழ் வைக்கப்படும். மகாபிரபு செங்கலுக்கு நிதியுதவி செய்வதன் மூலம் இன்று வரலாற்றின் ஒரு பகுதியாக இருங்கள், உங்கள் பெயர் பல நூறு ஆண்டுகளாக அவர்களின் பலிபீடத்தின் கீழ் இருக்கும்.\nதயவுசெய்து நீங்கள் ஸ்பான்சர் செய்ய விரும்பும் செங்கற்களின் எண்ணிக்கையைத் தேர்ந்தெடுத்து, முழு கட்டணம் அல்லது தொடர்ச்சியான கட்டண விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். அனைத்து உறுதிமொழிகளையும் க ur ர் பூர்ணிமா 2023 க்குள் முழுமையாக செலுத்த வேண்டும். தனிப்பயன் தொடர்ச்சியான கட்டணத் தொகையையும் நீங்கள் தேர்வு செய்யலாம், அதை ரத்து செய்ய நீங்கள் கோரும் வரை மாதந்தோறும் கட்டணம் வசூலிக்கப்படும். ஆனால் உங்களிடம் திறன் இருந்தால், மிஷன் 23 மராத்தானின் அவசரத்தையும் முக்கியத்துவத்தையும் தயவுசெய்து கருத்தில் கொண்டு முழுமையாக செலுத்துங்கள். உங்கள் குரு அல்லது குடும்ப உறுப்பினரின் சார்பாக நன்கொடை அளிப்பதன் மூலம் ஒன்றுக்கு மேற்பட்ட உறுதிமொழிகளை வழங்கவும்.\nஉங்கள் தொடர்ச்சியான பங்களிப்பு தானாகவே செயலாக்கப்படும், மேலும் ஒவ்வொரு தொடர்ச்சியான பங்களிப்பிற்கும் மின்னஞ்சல் ரசீதைப் பெறுவீர்கள். உங்கள் உறுதிமொழி கொடுப்பனவுகளை முடித்த பிறகு, உங்கள் செங்கல் (களில்) நீங்கள் விரும்பும் பெயரைக் கோர TOVP அலுவலகத்திலிருந்து உங்களைத் தொடர்புகொள்வோம்.\nஸ்ரீல பிரபுபாதாவின் அன்பான திட்டமான TOVP ஐ ஆதரித்த உங்கள் மகத்தான தியாகத்திற்கு நன்றி. ஒரு TOVP தூதராகி, உங்கள் பக்தி குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவரையும் 2023 க்குள் TOVP ஐ முடிக்க மி��ன் 23 மராத்தானுக்கு ஆதரவளிக்கச் சொல்லுங்கள்.\nநினைவூட்டல்: TOVP ஐ சரியான நேரத்தில் முடிப்பதற்கான எங்கள் நிதித் தீர்வை உறுதிப்படுத்த 2023 க்குள் உங்கள் உறுதிமொழி கொடுப்பனவுகளை முடிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். எனவே, தயவுசெய்து உங்கள் கட்டணம் செலுத்துவதைக் கவனியுங்கள் முழு அல்லது தேர்ந்தெடுப்பது a பெரிய தொடர்ச்சியான கட்டணம் எங்கள் அவசரமாக தேவைப்படும் மாதாந்திர பட்ஜெட்டை பூர்த்தி செய்ய எங்களுக்கு உதவ. நன்றி.\nஉங்கள் உறுதிமொழியை நோக்கி தொடர்ச்சியான கொடுப்பனவுகள் மூலம் தானாக திரும்பப் பெறுவதற்கு கீழே உள்ள கட்டண விருப்பங்கள் அனைத்தும் அமைக்கப்பட்டுள்ளன. உங்கள் சொந்த நேரத்திற்குள் பணம் செலுத்த விரும்பினால், பயன்படுத்தவும் பொது நன்கொடைகள் ஒவ்வொரு முறையும் நீங்கள் பணம் செலுத்தும் போது (செங்கல், நாணயம் போன்றவை) நன்கொடை அளிக்கும் விருப்பத்துடன் நன்கொடை படிவத்தின் குறிப்புகள் பிரிவில் இதைக் குறிக்கவும். காசோலை அல்லது வங்கி பரிமாற்றத்தின் மூலம் உங்கள் உறுதிமொழியை செலுத்த விரும்பினால், செல்லுங்கள் நன்கொடை விவரங்கள் / தொடர்புகள் காசோலை அஞ்சல் முகவரி மற்றும் வங்கி பரிமாற்ற தகவல்களுக்கு உங்கள் நாட்டிற்கு பக்கமாக உருட்டவும். இந்த தனிப்பட்ட கட்டண முறையை நீங்கள் பயன்படுத்துகிறீர்களானால், நீங்கள் எங்கள் தானியங்கு ஊதிய முறைமையில் இல்லாததால் உங்கள் வழக்கமான கொடுப்பனவுகளை நீங்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்க. உங்கள் சரியான நேரத்தில் செலுத்துதல்கள் மிகவும் பாராட்டப்படும்.\nகவனம்: உங்கள் நன்கொடை வழங்கும்போது, சரியான நாடு செலுத்தும் நுழைவாயில் மற்றும் நாணய வகையைத் தேர்ந்தெடுப்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள், இதனால் உங்கள் வரி நோக்கங்களுக்காக சரியான ரசீது உங்களுக்கு வழங்கப்படும். குறிப்பாக, இங்கிலாந்திலிருந்து நன்கொடையாளர்கள் 'கிரெடிட் / டெபிட் கார்டு (யுகே & தென்னாப்பிரிக்கா)' கட்டண நுழைவாயிலை மட்டுமே பயன்படுத்த வேண்டும் மற்றும் (ஜிபிபி £) நாணய வகையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்\nகுடியிருப்பாளர்கள் ஐக்கிய இராச்சியம், உங்கள் பிரசாதத்தை வழங்க பேபால் பயன்படுத்த விரும்பினால், பின்வரும் இணைப்பைப் பயன்படுத்தவும்: https://www.paypal.me/TOVPUK\nகனடியன் உங்கள் பிரசாதத்தை வழங்க குடி��ிருப்பாளர்கள் தயவுசெய்து இந்த வலைத்தளத்திற்குச் செல்லுங்கள்: http://www.tovpcanada.org/donate.html\nகாசோலை மற்றும் வயர் டிரான்ஸ்ஃபர் மூலம் செலுத்தும் தொகை: காசோலை மூலம் பணம் செலுத்த செல்லுங்கள் நன்கொடை விவரங்கள் பக்கம். வங்கி கம்பி பரிமாற்றத்தின் மூலம் பணம் செலுத்த செல்லுங்கள் வங்கி பரிமாற்ற விவரங்கள் பக்கம்.\nசெயலாக்கக் கட்டணத்தை ஈடுசெய்ய உதவ விரும்புகிறீர்களா எனது நன்கொடைக்கு 0 என்ற பரிவர்த்தனைக் கட்டணத்தை ஈடுகட்ட உதவ விரும்புகிறேன்.\nஅமெரிக்க டாலர்கள்\tயூரோக்கள்\tபவுண்டுகள் ஸ்டெர்லிங்\tஆஸ்திரேலிய டாலர்கள்\tசீன யுவான்\nஒரு தங்க செங்கல் - முழுமையாக செலுத்துங்கள்\nஇரண்டு தங்க செங்கற்கள் - முழுமையாக செலுத்துங்கள்\nமூன்று தங்க செங்கற்கள் - முழுமையாக செலுத்துங்கள்\nநான்கு தங்க செங்கற்கள் - முழுமையாக செலுத்துங்கள்\nஐந்து தங்க செங்கற்கள் - முழுமையாக செலுத்துங்கள்\nஒரு தங்க செங்கல் - 2 தவணைகள், ��ளுக்கான ��ள் ��ள்\nஒரு தங்க செங்கல் - 5 தவணைகள், ��ளுக்கான ��ள் ��ள்\nஒரு தங்க செங்கல் - 10 தவணைகள், ��ளுக்கான ��ள் ��ள்\nஒரு தங்க செங்கல் - 15 தவணைகள், ��ளுக்கான ��ள் ��ள்\nஒரு தங்க செங்கல் - 25 தவணைகள், ��ளுக்கான ��ள் ��ள்\nஒரு தங்க செங்கல் - 35 தவணைகள், ��ளுக்கான ��ள் ��ள்\nஒரு தங்க செங்கல் - 44 தவணைகள், ��ளுக்கான ��ள் ��ள்\nதனிப்பயன் தொகை (ரத்து செய்யப்படும் வரை மாதாந்திர கட்டணம்)\n��ளை நன்கொடையாக தேர்வு செய்துள்ளீர்கள்.\nகிரெடிட் / டெபிட் கார்டு (இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்காவைத் தவிர அனைத்து நாடுகளும் *)\nகிரெடிட் / டெபிட் கார்டு (யுகே & தென்னாப்பிரிக்கா)\nவங்கியில் இருந்து நேரடி பற்று (EU, UK, SWE - EUR, GBP மற்றும் SEK மட்டும்\n* தயவு செய்து இங்கே கிளிக் செய்க இந்த கட்டண நுழைவாயில் உங்கள் நாணயத்தை ஆதரிக்கிறதா என்பதைப் பார்க்க.\nஇது பாதுகாப்பான SSL மறைகுறியாக்கப்பட்ட கட்டணம்.\nநாடு\t* அமெரிக்காகனடாஐக்கிய இராச்சியம்ஆப்கானிஸ்தான்அல்பேனியாஅல்ஜீரியாஅமெரிக்கன் சமோவாஅன்டோராஅங்கோலாஅங்குவிலாஅண்டார்டிகாஆன்டிகுவா மற்றும் பார்புடாஅர்ஜென்டினாஆர்மீனியாஅருபாஆஸ்திரேலியாஆஸ்திரியாஅஜர்பைஜான்பஹாமாஸ்பஹ்ரைன்பங்களாதேஷ்பார்படாஸ்பெலாரஸ்பெல்ஜியம்பெலிஸ்பெனின்பெர்முடாபூட்டான்பொலிவியாபோஸ்னியா மற்றும் ஹெர்சகோவினாபோட்ஸ்வானாபோவெட் தீவுபிரேசில��பிரிட்டிஷ் இந்தியப் பெருங்கடல் பகுதிபுருனே தர்ருஸ்ஸலாம்பல்கேரியாபுர்கினா பாசோபுருண்டிகம்போடியாகேமரூன்கேப் வெர்டேகெய்மன் தீவுகள்மத்திய ஆப்பிரிக்க குடியரசுசாட்சிலிசீனாகிறிஸ்துமஸ் தீவுகோகோஸ் தீவுகள்கொலம்பியாகொமொரோஸ்காங்கோ, ஜனநாயக மக்கள் குடியரசுகாங்கோ, குடியரசுகுக் தீவுகள்கோஸ்ட்டா ரிக்காகோட் டி 'ஐவோரிகுரோஷியா / ஹர்வாட்ச்காகியூபாசைப்ரஸ் தீவுசெ குடியரசுடென்மார்க்ஜிபூட்டிடொமினிகாடொமினிக்கன் குடியரசுகிழக்கு திமோர்ஈக்வடார்எகிப்துஎக்குவடோரியல் கினியாஎல் சல்வடோர்எரித்திரியாஎஸ்டோனியாஎத்தியோப்பியாபால்க்லேண்ட் தீவுகள்ஃபாரோ தீவுகள்பிஜிபின்லாந்துபிரான்ஸ்பிரஞ்சு கயானாபிரெஞ்சு பாலினேசியாபிரெஞ்சு தெற்கு பிரதேசங்கள்காபோன்காம்பியாஜார்ஜியாஜெர்மனிகிரீஸ்கானாஜிப்ரால்டர்கிரீன்லாந்துகிரெனடாகுவாதலூப்குவாம்குவாத்தமாலாகுர்ன்ஸிகினியாகினியா-பிசாவுகயானாஹைட்டிஹார்ட் மற்றும் மெக்டொனால்ட் தீவுகள்ஹோலி சீ (சிட்டி வத்திக்கான் மாநிலம்)ஹோண்டுராஸ்ஹாங்காங்ஹங்கேரிஐஸ்லாந்துஇந்தியாஇந்தோனேசியாஈரான்ஈராக்அயர்லாந்துஐல் ஆஃப் மேன்இஸ்ரேல்இத்தாலிஜமைக்காஜப்பான்ஜெர்சிஜோர்டான்கஜகஸ்தான்கென்யாகிரிபதிகுவைத்கிர்கிஸ்தான்லாவோ மக்கள் ஜனநாயக குடியரசுலாட்வியாலெபனான்லெசோதோலைபீரியாலிபிய அரபு ஜமாஹிரியாலிச்சென்ஸ்டீன்லிதுவேனியாலக்சம்பர்க்மக்காவுமாசிடோனியாமடகாஸ்கர்மலாவிமலேசியாமாலத்தீவுகள்மாலிமால்டாமார்ஷல் தீவுகள்மார்டினிக்மவுரித்தேனியாமொரீஷியஸ்மயோட்மெக்சிகோமைக்ரோனேஷியாமோல்டோவா, குடியரசுமொனாக்கோமங்கோலியாமாண்டினீக்ரோமொன்செராட்மொராக்கோமொசாம்பிக்மியான்மர்நமீபியாந uru ருநேபாளம்நெதர்லாந்துநெதர்லாந்து அண்டில்லஸ்புதிய கலிடோனியாநியூசிலாந்துநிகரகுவாநைஜர்நைஜீரியாநியுநோர்போக் தீவுவட கொரியாவடக்கு மரியானா தீவுகள்நோர்வேஓமான்பாகிஸ்தான்பலாவ்பாலஸ்தீனிய பிரதேசங்கள்பனாமாபப்புவா நியூ கினிபராகுவேபெருபிலிப்பைன்ஸ்பிட்காயின் தீவுபோலந்துபோர்ச்சுகல்புவேர்ட்டோ ரிக்கோகத்தார்ரீயூனியன் தீவுருமேனியாஇரஷ்ய கூட்டமைப்புருவாண்டாசெயிண்ட் ஹெலினாசெயிண்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ்செயிண்ட் லூசியாசெயிண்ட் பியர் மற்றும் மிகுவலன்செயிண்ட் வ���ன்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ்சான் மரினோசாவோ டோம் மற்றும் பிரின்சிபிசவூதி அரேபியாசெனகல்செர்பியாசீஷெல்ஸ்சியரா லியோன்சிங்கப்பூர்ஸ்லோவா குடியரசுஸ்லோவேனியாசாலமன் தீவுகள்சோமாலியாதென்னாப்பிரிக்காதெற்கு ஜார்ஜியாதென் கொரியாஸ்பெயின்இலங்கைசூடான்சுரினேம்ஸ்வால்பார்ட் மற்றும் ஜான் மாயன் தீவுகள்ஈஸ்வதினிசுவீடன்சுவிட்சர்லாந்துசிரிய அரபு குடியரசுதைவான்தஜிகிஸ்தான்தான்சானியாபோவதற்குடோகேலாவ்டோங்காதாய்லாந்துடிரினிடாட் மற்றும் டொபாகோதுனிசியாதுருக்கிதுர்க்மெனிஸ்தான்டர்க்ஸ் மற்றும் கைகோஸ் தீவுகள்துவாலுஉகாண்டாஉக்ரைன்ஐக்கிய அரபு நாடுகள்உருகுவேஅமெரிக்க மைனர் வெளிப்புற தீவுகள்உஸ்பெகிஸ்தான்வனடுவெனிசுலாவியட்நாம்விர்ஜின் தீவுகள் (பிரிட்டிஷ்)விர்ஜின் தீவுகள் (அமெரிக்கா)வாலிஸ் மற்றும் புட்டுனா தீவுகள்மேற்கு சாஹாராமேற்கு சமோவாஏமன்யூகோஸ்லாவியாசாம்பியாஜிம்பாப்வே\nநிலை * அலபாமாஅலாஸ்காஅரிசோனாஆர்கன்சாஸ்கலிபோர்னியாகொலராடோகனெக்டிகட்டெலாவேர்கொலம்பியா மாவட்டம்புளோரிடாஜார்ஜியாஹவாய்இடாஹோஇல்லினாய்ஸ்இந்தியானாஅயோவாகன்சாஸ்கென்டக்கிலூசியானாமைனேமேரிலாந்துமாசசூசெட்ஸ்மிச்சிகன்மினசோட்டாமிசிசிப்பிமிச ou ரிமொன்டானாநெப்ராஸ்காநெவாடாநியூ ஹாம்ப்ஷயர்நியூ ஜெர்சிநியூ மெக்சிகோநியூயார்க்வட கரோலினாவடக்கு டகோட்டாஓஹியோஓக்லஹோமாஒரேகான்பென்சில்வேனியாரோட் தீவுதென் கரோலினாதெற்கு டகோட்டாடென்னசிடெக்சாஸ்உட்டாவெர்மான்ட்வர்ஜீனியாவாஷிங்டன்மேற்கு வர்ஜீனியாவிஸ்கான்சின்வயோமிங்அமெரிக்கன் சமோவாகால்வாய் மண்டலம்வடக்கு மரியானா தீவுகளின் காமன்வெல்த்மைக்ரோனேஷியாவின் கூட்டாட்சி நாடுகள்குவாம்மார்ஷல் தீவுகள்வடக்கு மரியானா தீவுகள்பலாவ்பிலிப்பைன் தீவுகள்புவேர்ட்டோ ரிக்கோபசிபிக் தீவுகளின் நம்பிக்கை பகுதிவிர்ஜின் தீவுகள்ஆயுதப்படைகள் - அமெரிக்காஆயுதப்படைகள் - ஐரோப்பா, கனடா, மத்திய கிழக்கு, ஆப்பிரிக்காஆயுதப்படைகள் - பசிபிக்\nஜிப் / அஞ்சல் குறியீடு\t*\nDONATE / CONTRIBUTE ஐ அழுத்துவதன் மூலம் நீங்கள் எங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள் தனியுரிமைக் கொள்கை, விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள், மற்றும் எங்கள் பணத்தைத் திரும்பப் பெறும் கொள்கை பின்வருமாறு:\n\"தி வேத கோளக் கோயில் எந்தவொர�� நபரிடமிருந்தோ அல்லது நபர்களிடமிருந்தோ, நபர்கள், நிறுவனங்கள், நிறுவனங்கள், சங்கங்கள் அல்லது அறக்கட்டளைகளிடமிருந்தும், நகரக்கூடிய அல்லது அசையா சொத்துக்கள் மற்றும் பொருட்கள் உட்பட, எந்தவொரு நன்கொடைகள், சந்தாக்கள், பரிசுகள், மானியங்கள், எண்டோவ்மென்ட்கள் போன்றவற்றை ரொக்கமாகவோ அல்லது திரட்டவோ பெறலாம். அல்லது அவற்றில் ஏதேனும் ஒன்று, அவை பொருந்தக்கூடியவை எனக் கருதலாம் ...\nஏற்றுக்கொள்ள முடியாத நிபந்தனைகள் எதிர்காலத்தில் நன்கொடைக்கு ஒரு பகுதியை அல்லது அனைத்தையும் மீட்டெடுக்க நன்கொடையாளருக்கு சில உரிமைகளை வழங்குகின்றன. அனைத்து நன்கொடைகளும் இஸ்கானின் மீறமுடியாத சொத்தாகும். பணத்தைத் திரும்பப்பெறுதல் இல்லை.\"\nவிதிமுறைகளைக் காட்டு விதிமுறைகளை மறைக்க\nநன்கொடை மொத்தம்:\t$1,600.00\tஒரு முறை\nகவர் தொகையை ஈடுசெய்ய {தொகை} நன்கொடை மற்றும் {கட்டணம்_ தொகை}.\nஉங்கள் உறுதிமொழி அளிக்கப்பட்டதும் / அல்லது தொடர்ச்சியான கட்டணத் தொகையை நீங்கள் தேர்ந்தெடுத்ததும் உங்கள் நன்கொடை வரலாற்றைக் காணலாம் மற்றும் ஒரு பக்கத்தின் மேல் வலதுபுறத்தில் உள்ள DONOR ACCOUNT தாவலுக்குச் சென்று எந்த நேரத்திலும் ரசீதை அணுக முடியும்.\n2023 க்குள் TOVP ஐ முடிக்க உதவுங்கள் மற்றும் ஸ்ரீல பிரபுபாதாவின் கனவை நனவாக்குங்கள்.\nசக்ரா கட்டிடம், அறை 204\nமாவட்டம். நாடியா, மேற்கு வங்கம் இந்தியா, 741313\nசெய்திமடல் / உரைகள் கையொப்பம்\nTOVP PHONE APP ஐ பதிவிறக்கவும்\nTOVP ஸ்மார்ட் கார்டைப் பதிவிறக்கவும்\nகிருஷ்ண உணர்வுக்கான சர்வதேச சங்கத்தின் திட்டம்.\nநிறுவனர்-அகார்யா: அவரது தெய்வீக அருள் ஏ.சி பக்திவேந்த சுவாமி பிரபுபாதா\n© 2009 - 2021 வேத கோளக் கோயில். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-10-19T12:41:46Z", "digest": "sha1:UM3Z6FBORATD3JVFG63T6M4OSTPY2YS7", "length": 15469, "nlines": 206, "source_domain": "www.aanthaireporter.com", "title": "தமிழக மீனவர்கள் விரைவில் விடுதலை? - AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nதமிழக மீனவர்கள் விரைவில் விடுதலை\nதூக்கு விதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 5 பேரை 3 நாளில் விடுவிக்க ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுத்து வ���ுவதாக இலங்கை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார். இலங்கை அதிபர் ராஜபக்சேவை சந்தித்த பின் அமைச்சர் பிரபா கணேஷ் அறிவித்துள்ளார்.\nமுன்னதாக தமிழக மீனவர்கள் 5 பேருக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை எதிர்த்து, இலங்கை உச்ச நீதிமன்றத்தில் இந்தியா செவ்வாய்க்கிழமை மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கில், மீனவர்கள் 5 பேருக்கும் நீதி கிடைக்கும் என நம்புகிறோம். மீனவர்களுக்கு வாதாடுவதற்காக இலங்கையில் சிறந்த வழக்குரைஞர்களில் ஒருவரை இந்தியத் தூதரகம் ஏற்பாடு செய்துள்ளது என்றார் அவர்.எனினும், அந்த வழக்குரைஞர் யார் என்பதை அவர் தெரிவிக்க மறுத்துவிட்டார்.\nமுன்னதாக, தில்லியில் செய்தியாளர்களிடம் சையத் அக்பரூதின் திங்கள்கிழமை கூறியதாவது: இந்த விவகாரத்துக்கு இந்திய அரசு அதிக முக்கியவத்துவம் கொடுக்கிறது. கொழும்பு உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு,\n200 பக்கங்கள் கொண்டது. அந்த தீர்ப்பானது, சிங்கள மொழியில் உள்ளது. அதை வழக்குரைஞர்கள் ஆராய்ந்து வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக இலங்கையில் உள்ள சிறந்த சட்ட வல்லுநர்களை இந்தியத் தூதரகம் தொடர்பு கொண்டுள்ளது. 5 மீனவர்களையும், இந்தியாவுக்கு கொண்டு வருவது குறித்து அவர்கள் ஆராய்ந்து வருகின்றனர்’ எனக் குறிப்பிட்டார்.\nராமேசுவரத்தைச் சேர்ந்த மீனவர்கள் எமர்சன், பி.அகஸ்டஸ், ஆர். வில்சன், கே. பிரசாத், ஜே. லாங்லேட் ஆகிய 5 பேரும், இலங்கையைச் சேர்ந்த 3 பேரும் இலங்கை கடல் பகுதியில் 2011ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டனர். ஹெராயின் கடத்தியதாக அவர்கள் மீது இலங்கை நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.\nஇந்த வழக்கில் விசாரணை முடிந்து, கொழும்பு உயர் நீதிமன்றம் கடந்த மாதம் 30ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. அதில், தமிழக மீனவர்கள் 5 பேருக்கும், இலங்கையைச் சேர்ந்த 3 பேருக்கும் மரண தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டது. இந்தத் தீர்ப்பைக் கண்டித்து, ராமேசுவரம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து, தமிழக மீனவர்களின் உறவினர்களை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நேரில் சந்தித்து, மீனவர்களை இந்தியாவுக்கு கொண்டு வர தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.\nஇந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியைத் தொலைபே���ியில் தொடர்பு கொண்டு பேசிய இலங்கை அதிபர் மஹிந்த ராஜபட்ச, இந்தியா-இலங்கை இடையே கையெழுத்தாகியுள்ள “தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளை பரஸ்பரம் பரிமாற்றம் செய்தல்’ ஒப்பந்தத்தின் அடிப்படையில், 5 தமிழக மீனவர்களையும் இந்திய சிறைக்கு மாற்றுவது குறித்து ஆராயப்படும் என உறுதியளித்த நிலையில் மீனவர்கள் 5 பேரும் மூன்று நாட்களுக்குள் விடுதலை செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக இலங்கை அமைச்சர் பிரபா கணேஷ் தெரிவித்துள்ளார்.\nPrevious 140 ஆண்களை காதலித்த அனுபவம் குறித்து புத்தகம்53 வயது பெண்ணின் அட்டகாசம்\nNext ஜெனீவா விஞ்ஞானிகள் கண்டு பிடித்தது கடவுளின் துகளே அல்ல.. அல்ல\n“ஓ மணப்பெண்ணே” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பின் ஹைலைடஸ்\nஇந்திய அளவில் ட்ரெண்டாகி நொந்து போன சொமேட்டா\nசூர்யா-வின் ஜெய்பீம் படத்தில் இடம் பிடித்த ’பவர்’ பாடல் வெளியானது\nசென்னை மெட்ரோ ரயில்வேயில் பொது மேலாளர் பணி வேண்டுமா\n“ஓ மணப்பெண்ணே” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பின் ஹைலைடஸ்\nஇந்திய அளவில் ட்ரெண்டாகி நொந்து போன சொமேட்டா\nசிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு முதல் பருவத் தேர்வுகளுக்கான தேதி அறிவிப்பு\nசூர்யா-வின் ஜெய்பீம் படத்தில் இடம் பிடித்த ’பவர்’ பாடல் வெளியானது\nகேட்டராக்ட் – கண் புரை – கண்ணுக்குள் பொருத்தும் லென்ஸ்கள் சில முக்கியமான விவரங்கள் கேள்வி – பதில்கள்\nமுட்டாள்களின் கூடாரம் ‘மூடர் கூடம்’ – கோடங்கி விமர்சனம்\nமிக மிக அழகான பெண் யார்\n‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ரசிகர்களை சேர்க்காது..\n‘வீரம்’ – சினிமா விமர்சனம்\nஎம்ஜிஆர் என்கிற “சோட்டா பீம்” உருவாக்கிய அதிமுகவின் பொன்விழா சஸ்பென்ஸ்\nஏர் இந்தியா: தர்மம் மறுபடி வெல்லும் – ரமேஷ் கிருஷ்ணன் பாபு\nகாடழிப்பிற்கு வித்திடும் வகையில் சட்டத் திருத்தங்கள் – மோடி அரசுக்கு கண்டனம்\nஅச்சச்சோ,, சென்னையில் விஷக்காற்று பரவுது\nபாகிஸ்தானில் ஆட்சி மாறி ஆப்கன் போல் குழம்பம் நேரிடலாம் ஏன் தெரியுமா\nசென்னை மெட்ரோ ரயில்வேயில் பொது மேலாளர் பணி வேண்டுமா\n“ஓ மணப்பெண்ணே” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பின் ஹைலைடஸ்\nஇந்திய அளவில் ட்ரெண்டாகி நொந்து போன சொமேட்டா\nசிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு முதல் பருவத் தேர்வுகளுக்கான தேதி அறிவிப்பு\nசூர்யா-வின் ஜெய்பீம் படத்தில் இடம் பிடித்த ’பவர்’ பாடல��� வெளியானது\nஇந்திய கடற்படையின் பங்கு குறித்து கடற்படை தளபதிகள் மாநாட்டில் ராஜ்நாத் சிங் பேச்சு\nட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் படம் பூஜையுடன் ஆரம்பம்\nவரும் சனிக்கிழமை மெகா தடுப்பூசி முகாம்- ஏன் தெரியுமா\nசிம்புவின் மாநாடு ரிலீஸ் தீபாவளியன்று இல்லை : நவம்பர் 25ல் வெளியாகுமாம்\nதாமஸ் ஆல்வா எடிசன் நினைவு தினம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akuranatoday.com/54297/", "date_download": "2021-10-19T11:16:14Z", "digest": "sha1:PKXJHLL4UTGG24Y7VBBNEF3HZQSDMBJB", "length": 3282, "nlines": 65, "source_domain": "www.akuranatoday.com", "title": "அங்கவீனமான 19 வயதுடையவரின், ஜனாஸா தகனம் செய்யப்பட்டது - Akurana Today", "raw_content": "\nஅங்கவீனமான 19 வயதுடையவரின், ஜனாஸா தகனம் செய்யப்பட்டது\nகொரோனாவால் மரணித்ததாக கூறப்பட்ட, அங்கவீனமான 19 வயதுடைய மொஹமட் மின்ஹாஜ் என்பவருடைய, ஜனாஸா இன்று செவ்வாய்கிழமை 27 ஆம் திகதி தகனம் செய்யப்பட்டு விட்டதாக முன்னாள் மேல் மாகாண ஆளுநர் ஆசாத் சாலி தெரிவித்தார்.\nஇன்று கொரோனாவால் மரணித்ததாக கூறப்படும் 19 வயது அங்கவீனமான, மொஹமட் மின்ஹாஜ் வீட்டிலேயே இருந்துள்ளார். அவருக்கு எப்படி கொரோனா வந்தது என்பது புதிராக உள்ளது.\nசற்று நேரத்திற்கு முன்னர் அவருடைய ஜனாஸா, தகனம் செய்யப்பட்டு விட்டது என்றார்\nயா அல்லாஹ், மரணித்தவரின் பாவங்களை மன்னித்து, அவருக்கு உயர்தரமான ஜன்னத்துல் பிர்தௌவ்ஸ் எனும் சுவனத்தை கொடுத்தருள்வாயாக\nPrevious articleஇன்றைய தங்க விலை (27-10-2020) செவ்வாய்க்கிழமை\nNext articleஜம்இய்யத்துல் உலமாவின் செயலாளர், முபாரக் மௌலவி வபாத்தானார்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலை ஆட்சியை கைப்பற்ற அரசு பயன்படுத்தியது\nஉலமா சபை எமது கேள்விகளுக்கு பதில் தரவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/madurai/ticket-inspection-rs-4-16-crore-fine-collected-in-madurai-division/tamil-nadu20211014095801288", "date_download": "2021-10-19T11:52:19Z", "digest": "sha1:T5GZSZDKHBEORM352ZMF5NKY2635ZPWQ", "length": 3301, "nlines": 15, "source_domain": "www.etvbharat.com", "title": "அதிரடி சோதனை: மதுரை கோட்டத்தில் ரூ.4.16 கோடி அபராதம் வசூல்", "raw_content": "\nஅதிரடி சோதனை: மதுரை கோட்டத்தில் ரூ.4.16 கோடி அபராதம் வசூல்\nஅதிரடி சோதனை: மதுரை கோட்டத்தில் ரூ.4.16 கோடி அபராதம் வசூல்\nதென்னக ரயில்வேயின் மதுரை கோட்டத்தில் நடைபெற்ற அதிரடி பயணச்சீட்டு பரிசோதனையில் ரூ.4.16 கோடி அபராதமாக வசூல் செய்யப்பட்டுள்ளது.\nமதுரை: ரயில்க���ில் பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்வது, ஆள்மாறாட்டம் செய்து பயணம் செய்வது, ரயில் நிலையங்களில் முகக்கவசம் அணியாமல் இருப்பது போன்றவற்றைத் தடுக்க பயணச்சீட்டு பரிசோதகர் திடீர் சோதனை நடத்துவார்கள்.\nகடந்த ஏப்ரல் மாதம் முதல் அக்டோபர் 12ஆம் தேதி வரை மதுரை கோட்டத்தில் நடத்தப்பட்ட பயணச்சீட்டுப் பரிசோதனையில் ரூ.4.16 கோடி பயணக் கட்டண அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.\nபயணச்சீட்டு பரிசோதனையில் அக்டோபர் 12ஆம் தேதி வரை சென்னை கோட்டம் ரூ.12.78 கோடியும், சேலம் கோட்டம் ரூ. 4.15 கோடியும், திருச்சி கோட்டம் ரூ.2.81 கோடியும் வசூல்செய்துள்ளன.\nதெற்கு ரயில்வேயில் அக்டோபர் 12ஆம் தேதி மட்டும் 37 லட்சம் ரூபாய் பயணக் கட்டணம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வே அளவில் முகக்கவசம் அணியாத 32 ஆயிரத்து 624 பயணிகளிடமிருந்து ரூ.1.63 கோடி அபராதம் வசூல்செய்யப்பட்டுள்ளது என மதுரை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.\nஇதையும் படிங்க: அணையிலிருந்து வெளியேறும் உபரி நீர் - தடுப்பணை கட்ட கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/election2021/2021/10/12/made-in-tamilnadu-is-cm-mkstalins-aim-thozhil-nanban-special-article", "date_download": "2021-10-19T12:02:58Z", "digest": "sha1:63ROLU633DEAQ5FJDFBJWNY57CIF7GTP", "length": 28650, "nlines": 50, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "made in tamilnadu is cm mkstalin's aim thozhil nanban special article", "raw_content": "\n”முடிந்தது அடிமையிருள்; விடிந்தது தமிழ்நாடு” : 16 அடி பாயும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் நோக்கம் இதுதான்\nதமிழ்நாட்டில் மட்டுமல்ல. இந்திய ஜனநாயக வரலாற்றில் எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த தலைவர் வாய்த்தது இல்லை.\n‘விடியலை நோக்கி...’ என்கிற முழக்கத்தோடுதான் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை 2021 தேர்தலை எதிர்கொண்டது தி.மு.கழகம். ஏன் விடியலை நோக்கி முழங்கினோம் கடந்த பத்தாண்டு கால இருளை அகற்றி நாட்டு மக்களுக்கு ஒளிக்கீற்றை, வெளிச்சத்தைக் காட்ட வேண்டும் என்றால் விடியலை நோக்கித்தான் நாம் முன்னேறியாக வேண்டும். மிகச் சாதாரணமாக கடந்தகால தி.மு.க. அரசை விமர்சனம் செய்பவர்கள் பொதுவாகச் சொல்வது தி.மு.க. ஆட்சியில் மின்சாரம் இருக்காது. தி.மு.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு இருக்காது. தி.மு.க. ஆட்சியில் பணப்புழக்கம் இருக்காது. இவையெல்லாம் உண்மையா கடந்த பத்தாண்டு கால இருளை அகற்றி நாட்டு மக்களுக்கு ஒளிக்கீற்றை, வெளிச்சத்த��க் காட்ட வேண்டும் என்றால் விடியலை நோக்கித்தான் நாம் முன்னேறியாக வேண்டும். மிகச் சாதாரணமாக கடந்தகால தி.மு.க. அரசை விமர்சனம் செய்பவர்கள் பொதுவாகச் சொல்வது தி.மு.க. ஆட்சியில் மின்சாரம் இருக்காது. தி.மு.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு இருக்காது. தி.மு.க. ஆட்சியில் பணப்புழக்கம் இருக்காது. இவையெல்லாம் உண்மையா இல்லை எதுவுமே உண்மை இல்லை. எல்லாம் இட்டுகட்டிய பொய்கள்.\nஒரு வீடு இருக்கிறது. சாதாரண கூலிக்காரர் குடும்பம் அங்கே மூத்த பிள்ளை ஒரு பக்குவத்திற்கு வருகிறபோது இரண்டாவது குழந்தை பிறந்திருக்கும். இப்போது பெற்றவர்கள் இரண்டு பேரும் வேலை செய்யப்போக வேண்டுமானால், குழந்தையைப் பாதுகாக்கிற பொறுப்பு மூத்த பிள்ளையின் தலையிலே விழுந்துவிடும். குடும்பச் சூழல் கருதி இரண்டாவது குழந்தையை பாதுகாப்பது மட்டுமல்ல, அதைப் பராமரிப்பதும் முதல் குழந்தையின் பொறுப்பாகிவிடும். பெரும்பாலான அன்றாடங்காய்ச்சிகளின் வீடுகளில் முதல் குழந்தை இரண்டு மூன்றாவது குழந்தைகளுக்கு ஓர் ஆயாவாகவே இருக்கும். இதனாலேயே முதல் குழந்தை அந்த வயதுக்கு உரிய எந்தச் சுகத்தையும் அனுபவித்திருக்காது. சக வயது குழந்தைகளோடு விளையாட, பெற்றோரின் அன்பை, அரவணைப்பைப்பெற, உரிய வயதில் கல்வி பெற, விரும்பியதைச் சாப்பிட என எந்த வாய்ப்பும் அற்றே வளரும். வளர்ந்து ஓரளவுக்கு குறிப்பிட்ட வயது வந்தவுடன் குடும்பத்தின் பொருளாதார சுமையைத் தாங்க பெற்றோருடன் வேலைக்குச் செல்லத் தொடங்கும்.\nஇப்போது இரண்டாவது மூன்றாவது குழந்தைகளுக்குச் கொஞ்சம் வாய்ப்புக் கிடைக்கும். அவை விளையாடும், உரிய வயதில் பள்ளிக்குப் போகும். கல்வி கற்று வளமான வாழ்வை அமைத்துக் கொள்ளும். பல வீடுகளில் முதல் குழந்தையின் தியாகம் வெளியே தெரியாது. ஆனால் அடுத்த குழந்தைகளின் வளமான வாழ்வு மட்டுமே பெரிதாகப் பேசப்படும். எல்லோராலும் கொண்டாடப்படும். அந்த மகிழ்ச்சியின் பின்னணியில் முதல் குழந்தையின் வாழ்க்கையைப் பற்றி யாரும் கவலைப்படமாட்டார்கள். வேண்டுமானால் படிப்பில்லாத, பெற்றோரைப் போலவே கடின உழைப்பில் தொலைக்கப்பட்டுவிட்ட அதன் வாழ்வைக் குறை சொல்வார்கள். இந்த முதல் குழந்தைதான் தி.மு.க.ஆட்சி. கலைஞரின் ஆட்சி. அரசு, ஆட்சி அதிகாரத்தின் எந்தச் சுகமும் வளமும் தெரியாமல், காடாய், கரம்பாய், கரடு, முரடாய்க் கிடந்த நம் வாழ்வை சீர்படுத்த நேர்படுத்த திட்டங்களையும் சட்டங்களையும் போட்டு, கால நேரம் பாராமல் உழைத்து நாட்டையும் மக்களையும் முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்ல கலைஞரும், தி.மு.க. அரசும் பட்டபாடு கொஞ்சமல்ல.\n1967ஆம் ஆண்டு மிகப் பெரிய ஆரவாரத்தோடும் எதிர்பார்ப்போடும் பேரறிஞர் பெருந்தகை அண்ணா தலைமையில் தி.மு.க. அரசு அமைந்தது. இந்திய வரலாற்றில் இருபெரும் அதிசயங்களை நிகழ்த்திக் காட்டியது திராவிட இயக்கம். காந்தியின் தலைமையில் இந்திய விடுதலைக்கான முழக்கம் ஓங்கி முழங்கி விடுதலைக்கனல் மூண்டெரிந்து கொண்டிருந்தபோது சுயராச்சியம் வருவதற்கு முன் சுயமரியாதை வேண்டும் என்று குரல் எழுப்பியது தமிழ்நாடு. காரணம் திராவிடஇயக்கம்.1921ஆம் ஆண்டு ஆங்கிலேயே அரசு துணைக் கண்டம் முழுவதும் பொதுத்தேர்தலை நடத்தியது. தேர்தலைப் புறக்கணிப்பதாக காங்கிரஸ் கட்சி அறிவித்தாலும் வட நாடுகளில் எல்லாம் காங்கிரஸ் தயவிலான பினாமி கட்சிகளே வெற்றி பெற்றன. சென்னை மாகாணத்தில் மட்டும்தான் காங்கிரஸ் அல்லாத நீதிக்கட்சி வெற்றி பெற்றது. இதேபோல சுதந்திர இந்தியாவில் முதன் முறையாக 1967 ஆம் ஆண்டு மாநிலக் கட்சி ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியதும் தமிழ்நாட்டில்தான் அண்ணா தலைமையிலான தி.மு.க.அரசு. நீதிக்கட்சியின் வழித்தோன்றல் அரசு அமைந்தது.\nஇந்த வரலாற்றுப் பெருமைக்குரிய திராவிட இயக்கத்தின் மூன்றாம் தலைமுறை தலைமையை ஏற்றவர் கலைஞர். 1969ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா நம்மை விட்டுப் பிரிந்தபோது, இனி தமிழ்நாட்டிற்கும் தி.மு.கவிற்கும் யார் இருக்கிறார் தலைமை தாங்க இனி தமிழ்நாட்டின் கதி என்னாவது இனி தமிழ்நாட்டின் கதி என்னாவது என்கிற கேள்விகள் இந்தியா முழுவதுமே எழுந்தன. பலரது கேள்விகள் கவலை தோய்ந்தும் பலரது கேள்விகள் மகிழ்ச்சியில் திளைத்தும் இருந்தன. ஆனால், எல்லோருடைய புருவங்களையும் வியப்பில் ஆழ்த்தி தி.மு.க. தன் தலைவரைத் தேர்வு செய்தது. தமிழ்நாட்டிற்கு ஒரு தலைவனைப் படைத்தளித்தது. அவர்தான் கலைஞர். 1969ஆம் ஆண்டு கலைஞர் தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் பின்னர் தி.மு.கழகத்தின் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டார். கலைஞர் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற போது தமிழ்நாட்டின் உயர் கல்வி கற்போர் எண்ணிக்கை வெறும் 10 விழுக��காடு. வேலை வாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்டோரின் பங்கேற்பு 25 விழுக்காட்டிற்குள். தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு பின் தங்கி இருந்தது.\nதனிநபர் வருவாயில் பல மாநிலங்களுக்குக் கீழே இருந்தது. உள்கட்டமைப்பில் மோசமாக இருந்தது. 1967 & 71, 71 & 76, 89 & 91, 96 & 2001, 2006 & 2011 என ஐந்து முறை ஆட்சிப் பொறுப்பேற்ற கலைஞர் 19 ஆண்டுகள் முதலமைச்சராகப் பணியாற்றினார். தமிழ்நாடு சட்டமன்ற வரலாற்றில் பல சாதனைகளின் தலைமகனாக கலைஞர் இன்றைக்கும் விளங்குகிறார். 1957இல் தொடங்கி 2018 வரை 60 ஆண்டுகள் வரை சட்டமன்ற உறுப்பினர். 13 பொதுத் தேர்தல்களைச் சந்தித்து தோல்வியே காணாத தலைவர். 50 ஆண்டுகள் தொடர்ந்து ஒரு கட்சியின் தலைவராக இருந்து வழி நடத்தியவர். 19 ஆண்டுகள் என்கிற அதிக காலம் முதலமைச்சர் பொறுப்பை வகித்தவர். 25 ஆண்டுகளுக்கும் மேலாக எதிர்க்கட்சித் தலைவராக இருந்து ஆளுங்கட்சியை நேர்படுத்தியவர். தமிழ்நாட்டில் மட்டுமல்ல. இந்திய ஜனநாயக வரலாற்றில் எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த தலைவர் வாய்த்தது இல்லை. எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு மாநிலக் கட்சியின் தலைவராக இருந்து கொண்டு இந்திய ஒன்றிய அரசில் ஐந்து முறை ஜனநாயக ரீதியிலான அரசு அமைய பெரும் பங்காற்றியவர். ஏழு பிரதமர்களை தீர்மானிக்கிற சக்தியாக விளங்கியவர். இவையெல்லாம் கலைஞரின் ஆளுமைகள்.\nஆனால், இவைகள் அனைத்தையும் கடந்து தமிழ்நாட்டில் 19 ஆண்டுகால ஆட்சியில் கலைஞர் சாதித்த சாதனைகள்தான் வரலாற்றின் தலைப்புச்செய்திகள். உயர் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் தமிழ்நாட்டு இளைஞர்களையும் மாணவர்களையும் இந்தியாவின் முதன்மை இடத்தில் கொண்டு வந்து நிறுத்தினார். தொழில் வளர்ச்சியில் தமிழ்நாட்டின் விரல் பிடித்து முன்னேற்றப் பாதையில் அழைத்துச் சென்றார். உள் கட்டமைப்பில் சுய சார்பில் தமிழ்நாட்டை ஐரோப்பிய நாடுகளோடு ஒப்பிட்டுப் பேசுமளவு உயர்த்தி வைத்தார். இவைதான் இன்னும் ஒரு நூற்றாண்டுக்கு தமிழ்நாட்டின் பேசுபொருள். இந்தக் கலைஞரை, இந்தத் தி.மு.க.வை ஏன் புரளி பேசுகிறார்கள். அன்றாடங்காய்ச்சி குடும்பத்தின் மூத்த பிள்ளை நிலைதான் கலைஞரின் நிலையும். பேருந்துகளை எல்லாம் நாட்டுடமை ஆக்கி, விவசாய நிலங்களை எல்லாம் பிரித்துக் கொடுத்து, கைரிக்ஷாவை ஒழித்து சைக்கிள் ரிக்ஷா வழங்கி, குடிசை வீடுகளை அடுக்கு மாடி வீடுகளாக்கி, தெரு விளக்கு, குடிநீர் வசதி செய்து, மின் உற்பத்திக்குத் திட்டங்கள் தீட்டி, தொழில் முதலீட்டை வேலைவாய்ப்பை அதிகரித்து எல்லா நிலையிலும் நாட்டையும் மக்களையும் முன்னோக்கி நகர்த்தி வியர்வை துடைப்பார் கலைஞர். மேக்கப் கலையாமல் மேடையில் நடித்து யாராவது வந்து இடையிலே ஆட்சியைப் பிடிப்பார்கள். மொத்த நிர்வாகமும் சீரழியும். மீண்டும் கலைஞர் வருவார். சீரழிவுகளை எல்லாம் சரி செய்து தலை நிமிர்த்துவார். டில்லியில் இருப்போருக்கு அடி வயிறு கலக்கும். ஆட்சியைக் கலைப்பார்கள். மீண்டும் அரிதாரங்கள், அடிமைகள் அரியணை ஏறும், அழிச்சாட்டியம் செய்து வளர்ச்சியை முன்னேற்றத்தைக் கீழே கொட்டிக்கவிழ்த்து விடுவார்கள்.\nஇப்போது, கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ந்து தமிழ்நாட்டின் மீது கவிழ்ந்து கிடந்த இருள் தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வியை, வேலைவாய்ப்பைப் பறித்தது. தமிழ்நாட்டு இளைஞர்களின் எதிர்காலத்தைச் சூறையாடியது. தமிழ்நாட்டின் வளமான முன்னேற்றத்தைச் சீர்குலைத்தது. இந்த இருளில் இருந்து விடுபட, நாட்டையும் மக்களையும் மீட்கத்தான் ‘விடியலை நோக்கி’ என்கிற முழக்கத்தை முன்னெடுத்தார் மு.க.ஸ்டாலின். தந்தையின் வலியுணர்ந்த தாய்நாட்டின் நிலையறிந்த பிள்ளை. கொள்கையையும், அதன் நோக்கத்தையும், தேவையையும் தம்தேர்ந்த அறிவால், அனுபவத்தால் பாடமாய்ப் படித்துத் தேறிய தலைவர். எவ்வளவு இழி சொற்கள், அவமதிப்புகள், அவதூறுகள், ஏளனங்கள் ஆனால் ஒன்றுக்கும் சலனப்படாமல், பதறாமல் இலக்கில் கவனமாய், அண்ணா சொன்னது போல் ஒவ்வொரு அடியாய் எடுத்து வைத்து அதுவும் அளந்து வைத்து இனி எவரும் தொட்டுவிட முடியாத தூரத்தில், எட்டிவிட முடியாத உயரத்தில் நின்றபடி நிதானமாக, தாய் எட்டடி பாய்ந்தால் பிள்ளை பதினாறடி பாயும் என்பதுபோல, சமன் செய்ய முடியாத கலைஞரின் சாதனைகளை அதன் வடிவமும், உள்ளடக்கமும் மாறாமல் நிகழ்காலத் தேவைக்கு ஏற்ற வீரியம் கூட்டி முன்னைவிட வேகமாக, விவேகமாக அதே நேரம் தெளிவாகவும், துணிவாகவும் முன்னெடுக்கிறார் நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். அமெரிக்க டாலர் மதிப்பில் 26 பில்லியன் அளவாக இருக்கிற தமிழ்நாட்டின் ஏற்றுமதி அளவை 2030ஆம் ஆண்டிற்குள் 100 பில்லியன் டாலர் அளவிற்கு உயர்த்த வேண்டும் என்பதை இலக்காக அறிவித்திருக்கிறார்.\n‘ஏற்றுமதியில் ஏற்றம் & முன்னணியில் தமிழ்நாடு’ இதுதான் கடந்த செப்டம்பர் 22ஆம் நாள் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற தொழில் மற்றும் ஏற்றுமதியாளர்கள் மாநாட்டின் முழக்கம். செப்டம்பர் 20 & 26 நாட்களை வர்த்தகம் மற்றும் வணிக வாரமாகக் கடைப்பிடிக்க 75ஆவது விடுதலை நாளையொட்டி ஒன்றிய அரசு அறிவித்தது. இந்த மாநாட்டை பொருள் பொதிந்த நிகழ்வாக நடத்திக் காட்டியது திராவிட முன்னேற்ற கழக அரசு. 24 திட்டங்களுக்கானபுரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. இவற்றின் முதலீட்டு மதிப்பு 2120.54 கோடிகள். சென்னையிலிருந்து நெல்லை வரைக்கும் பல்வேறு மாவட்டங்களும் பயன்பெறும் வகையிலான இந்தப் புதிய முதலீட்டுத் திட்டங்களால் ஏறக்குறைய 50 ஆயிரம் இளைஞர்கள் வேலைவாய்ப்புப் பெறுவார்கள். இலக்கிய காலத்திலேயே பாய்மரக் கப்பலில் கடல் கடந்து போய் வாணிபம் செய்து பொருளீட்டியவர்களல்லவா நமது முன்னோர். இன்றைக்கு உள்ளங்கையில் உலகம் சுழலுகிற அறிவியல் உலகத்தில் தமிழ்நாடு பின் தங்கியிருக்கலாமா அடிமைகளின் ஆட்சி முடிவுக்கு வந்தவுட னேயே, தமிழ்நாட்டை இந்திய அளவில் மட்டுமல்ல, உலக அரங்கின் உயரத்திற்கு உயர்த்திக் காட்டும் நோக்கோடு, முதலமைச்சர் மாநில வளர்ச்சி கொள்கைக்குழு, பொருளாதார ஆலோசனைக்குழு என்கிற இரண்டு குழுக்களை அமைத்தார். பொருளாதார வல்லுநர்கள், பேராசிரியர்கள், அறிவுசார் சமூக செயற்பாட்டாளர்கள் என தமிழ்நாடு அளவிலும் உலக அளவிலும் சிறந்து விளங்குகிறவர்களை இந்தக் குழுக்களிலே இணைத்தார்.\nநிதி & மேலாண்மை & பொருளாதாரம் & வரலாறு & மரபு & தொலைநோக்கு என பல்நோக்கு அறிவு கொண்ட ஆளுமையாளர்களை நிதி & தொழில் துறைகளின் அமைச்சர்களாக பணியமர்த்தினார். தமிழ்நாட்டை அங்குலம் அங்குலமாக அலசி ஆராய்ந்து நமது நிலை, சிக்கல், தேவை, தீர்வு என அனைத்தும் அறிந்தவர்களாக நமது அமைச்சர்களும், ஆலோசனைக் குழுக்களும் திட்டங்களை வகுத்தார்கள். உலக வர்த்தக வரைபடத்தில் ‘தமிழ்நாடு’ தனித்த அடையாளத்தோடு, சுயசார்போடு, சுயமரியாதையோடு தனித்தியங்கும் ஆற்றலோடு தலைநிமிர்ந்து நிற்க வேண்டும். தமிழ்நாட்டு மாணவர்களும், இளைஞர்களும் தொழில் வர்த்தகத் துறைகளில் உலக நாடுகளுக்கு இணையான உயரத்தை எட்ட வேண்டும் என்கிற இலட்சியங்களைக் கலைஞரின் வழிநின்று பதினாறடி பாய்ச்சலில் செயல்படுத்தி வருகிறார் நமது முதலமைச்சர். இதை ஓங்கி முழங்குகிற முழக்கம்தான் ‘மேட் இன் தமிழ்நாடு’ இது வெறும் முழக்கமல்ல... நமது முதல்வரின் நோக்கம் ஆசை முடிந்தது அடிமையிருள்... விடிந்தது தமிழ்நாடு\nநன்றி - ’தொழில் நண்பன்’ மாத இதழ்\n“பெரியார், அண்ணா உருவாக்கிய அரசியல் தத்துவ இரட்டைக்குழல் துப்பாக்கி\" : பேரா.ராஜன் குறை சிறப்புக் கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nitharsanam.net/177398/news/177398.html", "date_download": "2021-10-19T11:30:00Z", "digest": "sha1:TF77UBK2MI2MZPJ6PHNNE7IB5XZGSOAJ", "length": 23199, "nlines": 98, "source_domain": "www.nitharsanam.net", "title": "முதுகெலும்பில்லையா, விருப்பமில்லையா(\tகட்டுரை )? : நிதர்சனம்", "raw_content": "\nமுதுகெலும்பில்லையா, விருப்பமில்லையா(\tகட்டுரை )\nஇலங்கையின் கிழக்கிலும் மத்தியிலும், முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் வன்முறைகள், அச்சத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. இருண்டதொரு யுகத்துக்கு, நாடு மீண்டும் தள்ளப்பட்டு விடுமோ என்ற அச்சத்தை, இவ்வன்முறைகள் ஏற்படுத்தியிருக்கின்றன.\nஇந்த வன்முறைகளின் உயிரிழப்புகளும் அழிவுகளும் பாதிப்புகளும் கோபத்தையும் நம்பிக்கையீனத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது என்றால், இவ்விடயத்தில் அரசாங்கத்தின் தாமதமான, போதுமற்ற நடவடிக்கைகள், அதிக ஏமாற்றத்தைத் தந்திருக்கின்றன.\nஅண்மைய நாட்களில், அம்பாறையில் ஆரம்பித்த வன்முறைகள், பெருமளவுக்குப் பரவியிருந்தன. பின்னர், கண்டியில் இவ்வன்முறைகள் தொடர்கின்றன. இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களின் அடிப்படையில், வன்முறைகளை மேற்கொள்வது என்ற முடிவை எடுத்த பின்னர் தான், சிறிய சிறிய விடயங்களைப் பயன்படுத்தி, வன்முறைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.\nகண்டியிலும், தாக்குதலில் காயமடைந்திருந்தவர் எப்போது உயிரிழப்பார் என்று பார்த்துக் கொண்டிருந்தவர்கள் போல, வன்முறைகளைத் தொடங்கியிருந்தனர். எனவே, இவை திட்டமிட்ட வன்முறைகள் என்பதில், எவ்வித சந்தேகமும் இல்லை.\nஇதே குற்றச்சாட்டை, எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவாகிய அநுர குமார திஸாநாயக்கவும் முன்வைத்திருந்தார். சபை முதல்வரும் அமைச்சருமான லக்‌ஷ்மன் கிரியெல்லவும், அரசாங்கத்தின் தோல்வி என்பதை ஏற்றுக் கொண்டிருந்தார். வன்முறைகள் இடம்பெறப் போகின்றன என்ற தகவல்கள் கிடைத்திருந்தன ��ன்றும், அவற்றின் பின்னரும் அவற்றைத் தடுப்பதற்கு அரசாங்கம் தவறிவிட்டது என்றும், அமைச்சர் கிரியெல்ல ஏற்றுக் கொண்டிருந்தார்.\nமஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான முன்னைய அரசாங்கத்தின் காலத்திலும், இப்படியான வன்முறைகள் ஏற்பட்டிருந்தன. அப்போது, அவ்வன்முறைகளைத் தடுப்பதற்கு, அவ்வரசாங்கம் விரும்பியிருக்கவில்லை என்ற நியாயமான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. ஆனால், இப்போதைய அரசாங்கத்தின் மீது, அப்படியான குற்றச்சாட்டு முன்வைக்கப்படலாமா என்ற கேள்வியும் எழுகிறது.\nஏனென்றால், இப்படியான சூழ்நிலைகளில், வன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் தவறுமாயின், பிரதானமாக இரண்டு காரணங்களே காணப்படக்கூடும். ஒன்று, வன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் விரும்பவில்லை. இரண்டு, வன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கான திறனை, அரசு கொண்டிருக்கவில்லை.\nமுன்னைய மஹிந்த அரசாங்கத்தில், முதலாவது விடயமே அதிகமாகக் கூறப்பட்ட விடயமாக இருந்தது. ஆனால் தற்போதைய அரசாங்கத்தில், அரசாங்கத்துக்கு விருப்பமின்மை என்பது காரணமாக இருந்தாலும், பிரதானமான காரணமாக, அரசாங்கத்துக்குத் திறனில்லை என்பதே காணப்படுகிறது.\nஇவ்வன்முறைகளை, அரசாங்கம் தான் ஏற்பாடு செய்தது என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டபோது, ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்த கருத்து, இவ்வரசாங்கத்தின் நிலைமையை, நகைச்சுவையாகவும் தெளிவாகவும் கூறியது: “ஒரு பிரதேச சபையையாவது கைப்பற்றுமளவுக்கு, அரசாங்கம் ஒழுங்குபடுத்தலுடன் செயற்பட்டிருந்தால், ‘அரசாங்கம் தான் இந்த வன்முறைகளை ஒழுங்குபடுத்தியது’ என்பதைக் கூறுவது இலகுவாக இருக்கும்”.\nவெவ்வேறான இரண்டு கட்சிகள் இணைந்த அரசாங்கமாக இருப்பதனால் என்னவோ, தெளிவான தகவல்களை வழங்குவதற்கும் தெளிவான நடவடிக்கைகளை எடுப்பதற்கும், அரசாங்கம் தடுமாறி வந்ததை நாங்கள் பார்க்கக் கூடியதாக இருக்கிறது. உதாரணமாக, வன்முறைகளைத் தொடர்ந்து, அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்துவதற்கான முடிவு எடுக்கப்பட்டு விட்டது என, அமைச்சர்களான எஸ்.பி. திஸாநாயக்கவும் மனோக கணேசனும், ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.\nஆனால் அதே நேரத்தில், நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர், “தேவைப்படின் அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும��” என்று குறிப்பிட்டார். இதன் காரணமாகவே, உண்மையில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டு விட்டதா, இல்லையெனில் பிரகடனப்படுத்தப்பட சிந்திக்கப்படுகிறதா என்ற குழப்பம் ஏற்பட்டது. இவ்வரசாங்கத்தின் காலத்தை ஆராய்ந்து பார்த்தால், விடயங்களைத் திட்டமிட்டுச் செய்வதில், இது தடுமாறி வந்திருக்கிறது என்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.\nவன்முறைகளுக்கான சமிக்ஞைகள் கிடைக்கப்பெற்றாலும், அது தொடர்பில் போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கவில்லை. வன்முறைகள் தொடங்கிய பின்னரும், அவற்றைக் கட்டுப்படுத்துவதற்குப் போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. ஆனால் இப்போது, அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டிருக்கிறது. இதற்கு மாறாக, வன்முறையைத் தலைமை தாங்கி நடத்தினர் என்று குற்றஞ்சாட்டப்படுவோரின் புகைப்படங்கள், தாராளமாக அடையாளங்காணப்பட்டுப் பரப்பப்பட்டிருக்கின்றன. எனவே, அவர்களைக் கைது செய்திருந்தாலோ அல்லது அவர்களைக் கட்டுப்படுத்தியிருந்தாலோ, நிலைமைகள் ஓரளவுக்கு சீராகியிருக்கக்கூடும்.\nஅதேபோல், வன்முறைகள் பரவும்வரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, போதுமான நடவடிக்கைகளை எடுக்காமலிருந்துவிட்டு, தற்போது, கண்டியின் பல பகுதிகளிலும், அலைபேசி மூலமான இணைய வசதிகள் மட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றன. ஆரம்பத்திலேயே, வன்முறையாளர்களைக் கட்டுப்படுத்தாமல் விட்டுவிட்டு, மக்களின் அடிப்படைத் தேவைகளைக் கட்டுப்படுத்துவது என்பது, தோல்வியடைந்த ஆட்சியமைப்பின் ஓர் அடையாளமே ஆகும்.\nஇலங்கையின் இருக்கின்ற சட்டங்களைக் கொண்டு, வன்முறையாளர்களைக் கட்டுப்படுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் இருக்கின்றன. ஏனென்றால், இவ்வன்முறைகள் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த சிரேஷ்ட அமைச்சரான மங்கள சமரவீர, “போதும். இனரீதியான வன்முறைகளைத் தூண்டுதல், பிணை வழங்கப்பட முடியாத குற்றமாக மாற்றப்பட வேண்டும். அவ்வன்முறைகளுக்குத் தலைமை வகிக்கும் அரசியல்வாதிகளின் குடியியல் உரிமைகள் பறிக்கப்பட வேண்டும்” என்று தெரிவித்திருந்தார். ஆனால், இலங்கைச் சட்டத்தின்படி, இனரீதியான வன்முறைகளைத் தூண்டுதல் என்பது, பிணை வழங்கப்பட முடியாத குற்றமாக, ஏற்கெனவே காணப்படுகிறது. எனவே, அரசாங்கத்துக்குத் திறனில்லை என்ற கருத்துக்கு வலுச் ���ேர்ப்பதாகவே, இக்கருத்தும் அமைந்து போனது.\nஆனால், திறனில்லை என்பது, வன்முறைகளை அனுமதிப்பதற்கான நியாயப்பாடு கிடையாது. அரசாங்கமாக இருந்தால், நாட்டின் அனைத்து மக்களையும் பாதுகாக்க வேண்டிய தேவை உள்ளது. அக்கடமையைச் சரிவரச் செய்ய முடியாவிட்டால், அவ்வரசாங்கம், பதவியில் இருப்பதற்குப் பொருத்தமற்றது.\nஇதைத் தான், நாடாளுமன்றத்தில் உரையாற்றிய எம்.ஏ. சுமந்திரன், தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார். அரசாங்கத் தலைவர்களுக்கு முதுகெலும்பில்லை எனக் கூறியதோடு, “சரியான ஒன்றுக்காக உங்களால் ஆதரவாக நிற்க முடியாவிட்டால், நாட்டில் எண்ணிக்கையில் குறைவான சமூகங்களுக்காக உங்களால் ஆதரவாக நிற்க முடியாவிட்டால், ஆளுவதற்கான எந்த உரிமையும் உங்களுக்குக் கிடையாது” என்று அவர் தெரிவித்திருந்தார்.\nஅதேபோல் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனின் நாடாளுமன்ற உரையும், முக்கியமானதாக அமைந்தது. இலங்கையின் கட்டமைப்பு ரீதியான பிரச்சினை காணப்படுகிறது என்றும், அதில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு முயல வேண்டும் எனவும் கோரியிருந்தார்.\nஇதில், ஒரு விடயத்தைத் தெளிவாகப் பார்க்க முடிந்தது. முஸ்லிம் தலைவர்களை விட, தமிழ்த் தலைவர்கள், இவ்விடயம் தொடர்பான தெளிவான புரிதல்களை முன்வைத்திருந்தமையைப் பார்க்கக்கூடியதாக இருந்தது. இலங்கையின் ஆட்சியாளர்களால், காலங்காலமாகப் புறக்கணிக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் வந்த சமூகங்கள் என்ற அடிப்படையில், தமிழ் மக்கள் பெற்றுக்கொண்ட பாடங்களின் விளைவாக அது இருக்கலாம், ஆனால், இலங்கையின் கட்டமைப்பு ரீதியான இனவாதப் பிரச்சினை இருக்கிறது என்பதை, உரத்துக் கூறியதை பார்க்கக்கூடியதாக இருக்கிறது.\nஇது, இன்னொரு பாடத்தையும் சொல்லிச் சென்றிருக்கிறது: சிறுபான்மை இனங்களுக்கிடையில் எவ்வளவு வேறுபாடுகள் காணப்பட்டாலும் கூட, அந்த வேறுபாடுகளை ஏற்றுக்கொண்டு, சிறுபான்மை இனங்கள் ஒற்றுமையாகக் காணப்படுவது தான், காலத்தின் தேவையாக இருக்கிறது. அதற்கான பணிகளை முன்னெடுக்க வேண்டிய தேவை, சிறுபான்மை இனங்களின் கடமையாக இருக்கிறது.\nஏனென்றால், இலங்கையில் ஆட்சிக்கு வருகின்ற அரசாங்கங்கள், சிறுபான்மை மக்களின் பிரதிநிதிகளின் ஆதரவைப் பெற்ற அரசாங்கமாக இருந்தாலும் சரி, சிறுபான்மை மக்களை வெறுக்கின்ற அரசாங்கமாக இருந்தாலும் சரி, சிறுபான்மை மக்களைச் சரிசமமாக நடத்தப் போவதில்லை, அவர்களை உடனடியாகக் காப்பாற்றப் போவதில்லை என்பது, வெளிப்படையாகத் தெரிகிறது.\nஎனவே, முதுகெலும்பில்லாத அரசாங்கங்களாக இருந்தாலும் சரி, சிறுபான்மைகளை விரும்பாத அரசாங்கங்களாக இருந்தாலும் சரி, சிறுபான்மை இனங்களுக்கு இடையிலான ஒற்றுமை ஒன்று தான், அம்மக்களைக் காப்பாற்றப் போகிறது என்பது, வெள்ளிடை மலை.\nPosted in: செய்திகள், கட்டுரை\nபெண்களுக்கு பந்தா இல்லாத ஆண்களை தான் மிகவும் பிடிக்கும்..\nசெக்ஸ் என்பது ஆபாசம் அல்ல… ரசித்து அனுபவியுங்கள்.. \nகுழிகளை மறைக்க O3 + ஃபேஷியல்\nபெண்களின் இடுப்புக்கு அழகூட்டும் ஒட்டியாணம்\nஅப்படி என்னதான் நடக்கிறது இங்கே ஏயலியன்கள் நடமாடும் ஒரே இடம் ஏயலியன்கள் நடமாடும் ஒரே இடம்\nதிடீரென நடுவானில் தோன்றிய விசித்திர ஏலியன் விமானம்\nசீனா வழங்கிய நிதி: ஒரு வாளி நீரில் ஒரு துளி\nஒரு டாக்டர் ஆக்டரான கதை\nஇதய நோய் வராமல் இருக்கணுமா\n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nitharsanam.net/219674/news/219674.html", "date_download": "2021-10-19T11:59:06Z", "digest": "sha1:FVRXAGSQXTBIRDSLOSQWRKEDW2JW5AWH", "length": 10614, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "உடலுக்கு பலம் தரும் கரும்பு!! (மருத்துவம்) : நிதர்சனம்", "raw_content": "\nஉடலுக்கு பலம் தரும் கரும்பு\nநமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், கரும்பின் மருத்துவ குணங்கள் குறித்து பார்க்கலாம்.கரும்பு பற்கள், ஈறுகளுக்கு பலம் கொடுக்க கூடியது. இது, சத்தூட்டமான பானமாக விளங்குகிறது. கால்சியம், இரும்பு, வைட்டமின் சி சத்துக்களை உள்ளடக்கியது. உடலில் நீர்ச்சத்து குறைந்தபோது அதை சமன்செய்கிறது. உள் உறுப்புகளை தூண்டக்கூடியது. இதயத்துக்கு இதம் தரவல்லது. நுரையீரலுக்கு பலம் தருகிறது. வயிற்று புண்களை ஆற்றும். மலச்சிக்கலை சரிசெய்கிறது.\nகரும்பு வேரை பயன்படுத்தி சிறுநீர்தாரையில் ஏற்படும் எரிச்சலுக்கான மருந்து தயாரிக்கலாம். கரும்பு வேர் ஒருபிடி அளவுக்கு சுத்தப்படுத்தி எடுக்கவும். இதனுடன் அரை ஸ்பூன் நாட்டு சர்க்கரை சேர்க்கவும். ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி ஓரிரு முறை குடித்துவர சிறுநீர் தாரையில் ஏற்படும் எரிச்சல், சிறுநீரோடு ரத்தம் கலந்து வெளியேறுதல், சிறுநீர் சரியாக செல்லாதது போன்ற பிரச்னைகள் தீரும்.\nவெண்கரும்பு, செங்கரும்பு ஆகியவை ஒரே மாதிரியான மருத்துவ குணங்களை கொண்டவை. கரும்பு சாறை பயன்படுத்தி உடல் எரிச்சலை போக்கும் மருந்து தயாரிக்கலாம். 20 முதல் 30 மில்லி அளவுக்கு கரும்புச்சாறு எடுக்கவும். இதனுடன் தயிர் சேர்த்து கலந்து ஓரிரு முறை குடித்துவர உடலில் ஏற்படும் எரிச்சல், உள்ளங்கை, உள்ளங்கால் எரிச்சல் குணமாகும்.\n30 மில்லி அளவு கரும்புச்சாறுடன் அரைமூடி எலுமிச்சை சாறு சேர்க்கவும். இதனுடன் சிறிது உப்பு சேர்த்து நீர்விட்டு கலந்து குடித்துவர நீர்ச்சத்து குறைபாடு நீங்கும். உடலுக்கு பலம் தரும். சுறுசுறுப்பை கொடுக்கும். கோடைகாலத்தில் இதை சாப்பிட செரிமானம் ஏற்படும். உடலுக்கு குளிர்ச்சி உண்டாகும். மூளை செயல்பாட்டை அதிகரிக்கும்.\nபல்வேறு நன்மைகளை கொண்ட கரும்பு, பித்தசமனியாக விளங்குகிறது. உள்ளங்கை, காலில் ஏற்படும் எரிச்சல், உடல் வறண்ட தன்மை, அதிக உஷ்ணத்தால் உடல் எரிச்சல் பிரச்னைகளுக்கு கரும்புசாறு மருந்தாகிறது. கரும்பு சாறு ஆரோக்கியம் தரும் பானமாக விளங்குகிறது. வயிற்றுபோக்கு, அதிக சிறுநீர், வியர்வை வெளியேறுவது போன்றவற்றால் நீர்சத்து குறையும். இப்பிரச்னைக்கு கரும்பு அற்புதமான மருந்தாகிறது.\nசெரிமானத்தை சீர்செய்கிறது. உடலுக்கு குளிர்ச்சி தரும். சிறுநீர்தாரையில் ஏற்படும் எரிச்சலை சரிசெய்யும். வயிற்று புண்களை ஆற்றும். கரும்பை மென்று திண்பதால் பற்கள், ஈறுகள் பலம் பெறும். கரும்பை நசுக்கி பசையை புண்களில் கட்டி வைப்பதால் புண்கள் விரைவில் குணமாகும்.\nநாட்டு சர்க்கரையை பயன்படுத்தி முகப்பருக்கான மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம். ஒரு பாத்திரத்தில் சிறிது தேன் மெழுகு போடவும். இதில், நாட்டு சர்க்கரை சேர்த்து பாகுபதத்தில் காய்ச்சவும். இதை ஆறவைத்து முகப்பரு மீது பூசிவர முகப்பரு மறையும். பல் வலி, பல் கூச்சத்தை போக்கும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். இதற்கு லவங்கப்பட்டை மருந்தாகிறது. லவங்கப்பட்டையை பொடியாக்கி, இதனுடன் தேன் கலந்து பூசிவர பல் கூச்சம், பல் வலி, ஈறுகள் வீக்கம் சரியாகும்.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nபெண்களுக்கு பந்தா இல்லாத ஆண்களை தான் மிகவும் பிடிக்கும்..\nசெக்ஸ் என்பது ஆபாசம் அல்ல… ரசித்து அனுபவியுங்கள்.. \nகுழிகளை மறைக்க O3 + ஃபேஷியல்\nபெண்களின் இடுப்புக்கு அழகூட்டும் ஒட்டியாணம்\nஅப்படி என்னதான் நடக்கிறது இங்கே ஏயலியன்கள் நடமாடும் ஒரே இடம் ஏயலியன்கள் நடமாடும் ஒரே இடம்\nதிடீரென நடுவானில் தோன்றிய விசித்திர ஏலியன் விமானம்\nசீனா வழங்கிய நிதி: ஒரு வாளி நீரில் ஒரு துளி\nஒரு டாக்டர் ஆக்டரான கதை\nஇதய நோய் வராமல் இருக்கணுமா\n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/95486-charge-sheet-filed-in-two-leaves-symbol-case", "date_download": "2021-10-19T13:15:27Z", "digest": "sha1:NSAXSXZXMINY5VRSCGWWEOHDU5NYLGQ5", "length": 13913, "nlines": 189, "source_domain": "www.vikatan.com", "title": "இரட்டை இலைச் சின்னத்துக்காக லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்! தினகரன் பெயர் இல்லை | Charge sheet filed in Two leaves symbol case - Vikatan", "raw_content": "\nசிக்கிய சி.விஜயபாஸ்கர்.. ஸ்டாலின் அறுவடை செய்யும் 3 லாபங்கள்\n``புலியின் குகையை பூனைகளுக்கு பரிசளிக்கலாமா.. கழகம் காக்கப்படும்” - தொண்டர்களுக்கு சசிகலா கடிதம்\n`அரச குடும்பம், சாதிப் பின்னணி இன்றி கிடைத்த நாடாளும் வாய்ப்பு’ - மோடி பெருமிதத்துக்குப் பின்னால்\nவிஜயபாஸ்கர்: 16 மணிநேரம் நடந்த சோதனை; தப்பிய சில முக்கிய `தலைகள்’ - ரெய்டு பின்னணி\n``மீண்டும் தாய் சமயத்துக்குத் திரும்ப வேண்டும்”... சீமான் Vs திருமாவளவன் மோதல் பின்னணி\n'என் மூச்சு உள்ளபோதே கோட்டையில் அன்புமணி' - ராமதாஸின் 'கணக்கு' எடுபடும் காலம் எப்போது\n`ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் பெயரைக்கூட இதுவரை உச்சரித்ததில்லை' - சசிகலாவின் திட்டம்தான் என்ன\nடாஸ்மாக்: ஒரு பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.5, ரூ.10 விலை - என்ன சொல்கிறார்கள் அதிகாரிகள்\nமீண்டும் தமிழக அரசுப் பணிக்குத் திரும்பும் அமுதா ஐ.ஏ.எஸ்; இவர் முக்கியத்துவம் பெறுவது ஏன்\n`கழகப் பொதுச்செயலாளர்' சசிகலாவின் கல்வெட்டு அரசியலை எப்படி எதிர்கொள்ளப் போகிறார் எடப்பாடி\nசிக்கிய சி.விஜயபாஸ்கர்.. ஸ்டாலின் அறுவடை செய்யும் 3 லாபங்கள்\n``புலியின் குகையை பூனைகளுக்கு பரிசளிக்கலாமா.. கழகம் காக்கப்படும்” - தொண்டர்களுக்கு சசிகலா கடிதம்\n`அரச குடும்பம், சாதிப் பின்னணி இன்றி கிடைத்த நாடாளும் வாய்ப்பு’ - மோடி பெருமிதத்துக்குப் பின்னால்\nவிஜயபாஸ்கர்: 16 மணிநேரம் நடந்த சோதனை; தப்பிய சில முக்கிய `தலைகள்’ - ரெய்டு பின்னணி\n``மீண்டும் தாய் சமயத்து��்குத் திரும்ப வேண்டும்”... சீமான் Vs திருமாவளவன் மோதல் பின்னணி\n'என் மூச்சு உள்ளபோதே கோட்டையில் அன்புமணி' - ராமதாஸின் 'கணக்கு' எடுபடும் காலம் எப்போது\n`ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் பெயரைக்கூட இதுவரை உச்சரித்ததில்லை' - சசிகலாவின் திட்டம்தான் என்ன\nடாஸ்மாக்: ஒரு பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.5, ரூ.10 விலை - என்ன சொல்கிறார்கள் அதிகாரிகள்\nமீண்டும் தமிழக அரசுப் பணிக்குத் திரும்பும் அமுதா ஐ.ஏ.எஸ்; இவர் முக்கியத்துவம் பெறுவது ஏன்\n`கழகப் பொதுச்செயலாளர்' சசிகலாவின் கல்வெட்டு அரசியலை எப்படி எதிர்கொள்ளப் போகிறார் எடப்பாடி\nஇரட்டை இலைச் சின்னத்துக்காக லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்\nஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்\nஇரட்டை இலைச் சின்னத்துக்காக லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்\nஇரட்டை இலைச் சின்னத்துக்காக லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்\nஇரட்டை இலைச் சின்னத்துக்காக லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டெல்லி காவல்துறை நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.\nஇரட்டை இலைச் சின்னத்தைப் பெற அப்போதைய அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாகக் குற்றம்சாட்டப்பட்டார். லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜுனா, இடைத் தரகர் சுகேஷ் சந்திரசேகர் உள்ளிட்டோரை கடந்த ஏப்ரல் மாதம் டெல்லி போலீஸார் கைது செய்து, திகார் சிறையில் அடைத்தனர். ஜூன் 1-ம் தேதி அவருக்கு ஜாமீன் கிடைத்தது.\nஇந்நிலையில் இரட்டை இலை பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் டெல்லி போலீஸ், தீஸ்ஹசாரி மாவட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளது. இந்த குற்றப்பத்திரிகையில் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் பெயர் மட்டும்தான் இடம் பெற்றுள்ளதாம். டி.டி.வி.தினகரனின் பெயர் இதில் இடம்பெறவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது. இதனால் தினகரன், வழக்கிலிருந்து விடுவிக்கப்படலாம் என்று ஆருடம் கூறப்படுகிறது. இதையடுத்து டெல்லி போலீஸ், 'வழக்கில் தொடர்புடைய மற்ற 4 பேர் மீது விரைவில் குற்ற��்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்' என்று கூறியுள்ளது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, வழக்கு விசாரணை வரும் 17-ம் தேதிக்குத் தள்ளி வைத்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nஇதுகுறித்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த டெல்லி காவல்துறை இணை ஆணையர் பிரவீன் ரஞ்சன் ‘இன்னும் இறுதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டி உள்ளது. தினகரன் குற்றவாளி இல்லை என்று கூற முடியாது’ என்றார்.\nதெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism\nஇதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2020/09/blog-post_28.html", "date_download": "2021-10-19T11:21:19Z", "digest": "sha1:C4DFYXEPRPLEGRRU5F7LIMQQBNPCMNHT", "length": 34465, "nlines": 228, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka", "raw_content": "\nஇலங்கையில் நடைமுறையில் உள்ள மாகாண சபைகளை ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற கருத்துக்கள் தற்போதைய அரசாங்கத்தின் ஒரு பகுதியினரிடம் இருந்து கிளம்பி இருக்கிறது. அதன் பொருட்டு 1987இல் செய்து கொள்ளப்பட்ட இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் விளைவாக அரசியல் அமைப்பில் மேற்கொள்ளப்பட்ட 13ஆவது திருத்தச் சட்டத்தை நீக்க வேண்டும் எனவும் அவர்கள் கோருகிறார்கள்.\nஅவர்களது இந்தக் கோரிக்கை சம்பந்தமாக பிரதான எதிர்க்கட்சியான சஜீத் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியோ, ஐக்கிய தேசியக் கட்சியோ அல்லது ஜே.வி.பியோ கூட வாய் திறக்காது மௌனமாக இருக்கின்றன. ஏன் வடக்கு கிழக்கு தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூட சிங்களப் பேரினவாதிகளின் இந்தக் கோரிக்கை பற்றி தமது வன்மையான எதிர்ப்பைத் தெரிவிக்காமல் ஆமை தலையை ஓட்டுக்குள் இழுத்து வைத்திருப்பது போல தலையை இழுத்து வைத்திருக்கின்றது.\nஇந்த மாகாண சபை முறைமை ஏன் கொண்டு வரப்பட்டது, என்ன சூழலில் கொண்டு வரப்பட்டது என்பதை மறந்துவிட்டது போல பெரும்பாலான அரசியல்வாதிகள் நடித்தாலும், பொதுமக்களும் மறந்து போய் இருப்பது கவலைக்குரிய விடயம்.\nஇலங்கை பிரித்தானிய காலனித்துவவாதிகளிடமிருந்து 1948 பெப்ருவரி 04ஆம் திகதி சுதந்திரமடைந்த பின்னர் ஆட்சியதிகாரம் ஏகாதிபத்திய சார்பு சிங்களப் பேரினவாதக் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியிடம் போய்ச் சேர்ந்தது. அந்தக் கட்சி செய்த முதல் வேலை மலையகத் தமிழத் தோட்டத் தொழிலாளர்களின் பிராஜாவுரிமையையும் வாக்குரிமையையும் பறித்ததுதான். அடுத்ததாகச் செய்த வேலை வடக்கு கிழக்கில் இருந்த தமிழ் மக்களின் பாரம்பரிய வாழ்விடங்களில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை ஆரம்பித்து வைத்தமை.\nஇத்தகைய நடவடிக்கைகளை வன்மையாக எதிர்த்திருக்க வேண்டிய தமிழ் தலைமை (ஜீ.ஜீ.பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் காங்கிரஸ் கட்சி), அதற்கு பதிலாக அரசாங்கத்தில் அங்கம் வகித்துக்கொண்டு அரசின் தமிழின விரோத நடவடிக்கைகளுக்கு பூரண ஒத்துழைப்பு நல்கியது. எனவே இன்றைய தமிழ் தலைமுறையினர் தவறாக நினைப்பது போல சிங்கள அரசியல்வாதிகளால் மட்டும் இலங்கையில் இனப்பிரச்சினை வளர்க்கப்பட்டது அல்ல. இனப் பிரச்சினை உருவாவதற்கும், பின்னர் அது பூதாகர உருவம் எடுத்ததிற்கும் தமிழ் தலைமைகளும் காலத்துக்காலம் கைகொடுத்து உதவியிருக்கின்றன.\nஆனால் தமிழரசுக் கட்சி உருவான பின்னர் இனப்பிரச்சினை தமிழ் மக்களின் மையப் பிரச்சினையாகக் கொண்டு வரப்பட்டது. ஆனால் அதைத் தமிழரசுக் கட்சி தமிழ் மக்களின் ஒரு ஜனநாயகக் கோரிக்கையாக எழுப்புவதற்குப் பதிலாக சிங்கள விரோத, தமிழ் இனவாதக் கோரிக்கையாக முன்னெடுத்தது. அதன் விளைவாக தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கையை சிங்கள மக்களை ஏற்க வைப்பதற்குப் பதிலாக அவர்களை எதிர்த் திசையில் நிறுத்தி வைத்தது.\nஇருந்தும் 1956இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்க தலைமையில் ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசாங்கம் ஒன்று ஏற்பட்ட பின்னர், பண்டாரநாயக்க தமிழரசுக் கட்சித் தலைவர் எஸ்.ஜே.வி.செல்வநாயகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி “பண்டா – செல்வா ஒப்பந்தம்” என்ற பெயரில் இனப்பிரச்சினைத் தீர்வுக்காக உடன்படிக்கை ஒன்றை ஏற்படுத்தினார். அந்த ஒப்பந்தப் பிரகாரம் வடக்கு கிழக்கில் தமிழ் மக்களால் நிர்வகிக்கப்படும் பிராந்திய சபைகள் உருவாக இருந்தன. ஆனால் ஐ.தே.க. செய்த எதிர்க் குழப்ப வேலைகளால் ஒப்பந்தத்தை நிறைவேற்ற முடியாமல் போய்விட்டது.\n1965 தேர்தலின் பின்னர் டட்லி சேனநாயக்க தலைமையிலான ஐ.தே.க. ஏழு கட்சி கூட்டரசாங்கம் ஒன்றை அமைந்தது. அந்த அரசு அமைவதற்கு தமிழரசு – தமிழ் காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவும் த��வையாக இருந்ததால், தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வாக ‘மாவட்ட சபைகள்’ என்ற அமைப்பை உருவாக்குவதாக டட்லி தமிழரசுக் கட்சித் தலைவர் செல்வநாயத்துடன் ஒப்பந்தம் ஒன்றைச் செய்தார். ஆனால் அவர் வாக்குறுதி அளித்தபடி கடைசி வரை மாவட்ட சபைகளை அமைக்காமல் தமிழரசுக் கட்சியை ஏமாற்றிவிட்டார்.\n1970இல் சிறீமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான ‘மக்கள் முன்னணி’ அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அமைந்தது. இந்தக் காலகட்டத்தில் தமிழரசுக் கட்சி சிறீமாவோ அரசுக்கு எதிராக பல சட்ட மறுப்புப் போராட்டங்களை நடத்தியதுடன், 1976இல் வட்டுக்கோட்டையில் மாநாடு கூடி தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வாக ‘தனித் தமிழீழம்’ என்ற கோரிக்கையையும் முன் வைத்தது. தமிழரசுக்கட்சியின் இந்தத் தீவிரவாதப் போக்கு தமிழ் இளைஞர்களை வன்முறைப் பாதையில் செல்லத் தூண்டிவிட்டது. முதலாவது அரசியல் கொலையாக யாழ் மாநகர முதல்வர் அல்பிரட் துரையப்பா தமிழ் இளைஞர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதுடன், தொடர்ந்தும் பல கொலைகள் நிகழ்த்தப்பட்டு, கொலைக் கலாச்சாரம் தமிழர் அரசியலில் துவக்கி வைக்கப்பட்டது.\nதனித் தமிழீழத் தீர்மானத்தின் காரணமாக அடுத்து வந்த 1977 பொதுத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி வடக்கு கிழக்கின் 18 தொகுதிகளிலும் வெற்றி பெற்றதுடன், இலங்கை நாடாளுமன்றத்தின் பிரதான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தையும் பெற்றது. ஆனால் தேர்தலின் பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சுருதி மாறத் தொடங்கியதுடன், தமிழீழத் தீர்மானம் நிறைவேற்றிய அவர்கள் 1977இல் பதவிக்கு வந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தன தலைமையிலான ஐ.தே.க. அரசியடம் சோரம்போய் எதுவித அதிகாரமும் அற்ற மாவட்ட அபிவிருத்திச் சபைகளை ஏற்கும் அளவுக்குச் சென்றனர். ஆனால் ஜே.ஆர். அரசு மாவட்ட அபிவிருத்திச் சபைகளைக் கூட இயங்க அனுமதிக்கவில்லை.\nதமிழ் தலைமையின் இந்தத் துரோகமும், தொடர்ந்து தமிழர்களை ஏமாற்றி வந்த ஐ.தே.க. தலைமையுடன் தமிழ்த் தலைமை தொடர்ந்தும் கூடிக்குலாவியதும், தமிழ் இளைஞர்கள் மத்தியில் விரக்தியையும் கோபத்தையும் தூண்டிவிட்டது. எனவே அவர்கள்\nபடிப்படியாக ஜே.ஆர் அரசுக்கு எதிரான ஆயுத நடவடிக்கைகளில் ஈடுபடத் துவங்கினர். ஆனால் ஜே.ஆர். அரசு நிலைமையை உணர்ந்து தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்குப் பதிலாக அமெரிக்காவின் தலைமையிலான மேற்குலகின் உதவியுடன் இராணுவ ஒடுக்குமுறையைத் தமிழ் மக்கள் மேல் ஏவிவிட்டது. அதன் காரணமாக இலங்கை அரசுக்கும் தமிழ் இளைஞர்களின் ஆயுத இயக்கங்களுக்கும் இடையில் முழு அளவிலான போர் ஆரம்பமானது.\nஅந்தக் காலகட்டத்தில் உலக அளவில் அமெரிக்க – சோவியத் வல்லரசுகளுக்கிடையில் ‘பனிப்போர்’ நிலவியது. இந்தப் போரில் இலங்கையின் அயல்நாடான இந்தியாவில் இருந்த இந்திராகாந்தி அரசாங்கம் தன்னை சோவியத் அணியில் இணைத்துக் கொண்டது. அதன் காரணமாக இலங்கையில் அமெரிக்கா காலூன்றுவதற்கு ஜே.ஆர். அரசு உதவி புரிவதை இந்திராகாந்தி அரசு விரும்பவில்லை. எனவே ஜே.ஆர். அரசை வழிக்குக் கொண்டுவர எண்ணிய இந்திய அரசு தமிழ் இளைஞர்களின் ஆயுத நடவடிக்கைகளை ஒரு துருப்புச் சீட்டாகப் பயன்படுத்த எண்ணி அவர்களுக்கு இந்திய மண்ணில் ஆயுதப் பயிற்சி வழங்கியதுடன், ஆயுதங்கள், பணம் உட்பட பல வழிகளிலும் உதவியது.\nஇந்தியாவின் இந்த நடவடிக்கையால் ஆடிப்போனது ஜே.ஆர். அரசு. அமெரிக்காவாலோ அல்லது மேற்குலகாலோ ஜே.ஆர். அரசைக் காப்பாற்ற முடியவில்லை. வேறு வழியின்றி இந்தியாவின் காலில் விழுந்து சரணாகதி அடைந்தது ஜே.ஆர். அரசு. அதன் விளைவாக உருவானதே 1987இல் செய்து கொள்ளப்பட்ட இந்திய – இலங்கை உடன்படிக்கை. அந்த உடன்படிக்கையின் பிரகாரம் இலங்கையின் அரசியல் அமைப்பில் செய்யப்பட்ட 13ஆவது திருத்தச் சட்டம் பெற்றெடுத்த குழந்தைகளே இந்த மாகாண சபைகள்.\nஇலங்கை தமிழ் தலைமைகள் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வாக ஆரம்பத்தில் ஐம்பதுக்கு ஐம்பது கோரிக்கையையும், பின்னர் சமஸ்டி கோரிக்கையையும், அதன் பின்னர் தனிநாட்டுக் கோரிக்கையையும் முன்வைத்தன. ஆனால் அந்தக் கோரிக்கைகள் எவற்றையும் அவையால் அடைய முடியவில்லை. மறுபுறத்தில் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வாக பண்டா – செல்வா ஒப்பந்தம், டட்லி – செல்வா ஒப்பந்தம், ஜே.ஆர். – அமிர்தலிங்கம் ஒப்பந்தம் என பல ஒப்பந்தங்கள் இலங்கை அரசுகளுக்கும் தமிழ்த் தலைமைகளுக்கும் இடையில் உருவான போதும் அவையும் நடைமுறைப் படுத்தப்படவில்லை.\nமுன்வைத்த கோரிக்கைகளை அடைய முடியாமலும், எழுதிய ஒப்பந்தங்கள் நடைமுறைப்படுத்தப்படாமலும் இருந்த சூழலில், உருவான ஆயுதப் போராட்டம் மத்தியில் உருவான இந்திய – இலங்கை ஒப்பந்தம் ஒன்றே தமிழ் மக்களுக்கு நம்பிக்கை அளிகக்கூடியதாக இருந்தது. தோல்வியுற்ற முன்னைய ஒப்பந்தங்களுக்கும் இந்த ஒப்பந்தத்துக்கும் உள்ள அடிப்படையான வித்தியாசம் என்னவெனில், முன்னைய ஒப்பந்தங்கள் யாவற்றிலும் இலங்கை அரசும் தமிழர் தரப்புமே கைச்சாத்திட்டன. அதனால் இலங்கை அரசுகள் ஒப்பந்தத்தை மதிக்காமல் ஒருதலைப்பட்சமாக அதை முறித்து ஏமாற்றக் கூடியதாக இருந்தது. ஆனால் இந்திய – இலங்கை ஒப்பந்தத்தைப் பொறுத்தவரை இலங்கை அரசுடன் இலங்கைத் தமிழர்கள் சார்பாக பலம் வாய்ந்த இந்திய அரசே கைச்சாத்திட்டது. எனவே இந்தியாவை இலங்கை ஏமாற்றுவது சுலபமான விடயமல்ல.\nவரலாற்றில் இலங்கைத் தமிழ் மக்களுக்குக் கிடைத்த பொன்னான வாய்ப்பு இது. இதை இலங்கை தமிழ் அரசியல் தலைமைகள் நன்கு பயன்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் அவை என்ன செய்தன\nபோராட்டக் களத்தில் நின்ற பிரதான இயக்கமான விடுதலைப் புலிகள் ஒப்பந்தத்தை நிராகரித்ததுமல்லாமல், பிரேமதாச தலைமையிலான ஐ.தே.க. அரசிடம் ஆயுதங்களும் பணமும் வாங்கிக்கொண்டு இந்தியாவுடன் யுத்தத்துக்குப் போனார்கள். அது மாத்திரமின்றி, இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியையும் படுகொலை செய்தார்கள். அதன் மூலம் இந்திய அரசை இலங்கைத் தமிழர் பிரச்சினையிலிருந்து எட்ட நிற்க வைத்தனர். அவர்களது இந்த நடவடிக்கை ஐ.தே.க. அரசுக்கும் அதன் ஏகாதிபத்திய எஜமானர்களுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி. புலிகளின் மேற்கத்திய சார்பு, சியோனிச இஸ்ரேலிய சார்பு போக்கே அவர்களை இவ்வாறெல்லாம் செய்யத் தூண்டியது.\nசரி, இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை எதிர்த்தவர்கள், 2000 ஆண்டில் சந்திரிக அரசாங்கம் கொண்டு வந்த, ஏறத்தாள சமஸ்டியை ஒத்த அதிகாரப் பகிர்வுத் திட்டத்தையாவது ஆதரித்தார்களா இல்லை, அதையும் புலிகள் ஐ.தே.கவுடனும் இதர சிங்கள இனவாத இயக்கங்களுடனும் சேர்ந்து நடைமுறைப்படுத்த விடாமல் குழப்பியடித்தார்கள். இவ்வளவையும் செய்துவிட்டு இன்று மாகாண சபை பறிபோகப் போகிறதே என்று ஒப்பாரி வைப்பதில் என்ன பிரயோசனம் இல்லை, அதையும் புலிகள் ஐ.தே.கவுடனும் இதர சிங்கள இனவாத இயக்கங்களுடனும் சேர்ந்து நடைமுறைப்படுத்த விடாமல் குழப்பியடித்தார்கள். இவ்வளவையும் செய்துவிட்டு இன்று மாகாண சபை பறிபோகப் போகிறதே என்று ஒப்பாரி வைப்பதில் என்ன பிரயோசனம் இதைத்தான் சொல்வது, “பட்டு ���ேட்டிக்கு ஆசைப்பட்டு இருந்த கோவணத்தையும் இழந்த கதை” என்று.\nதமிழ்த் தலைமைகளின் வங்குரோத்து அரசியல் இப்படியிருக்க, இன்றைய அரசுக்கு தமிழ் மக்கள் சம்பந்தமான பாரிய கடமை ஒன்றுண்டு. அதாவது அவர்களது பிரச்சினைக்கு இன்றைய சூழலில் முழுமையான தீர்வு காண்பது சாத்தியமில்லை என்றாலும், இருக்கின்ற ஒரேயொரு அதிகாரப் பகிர்வுத் தீர்வான மாகாண சபை முறைமையைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும். ஏனெனில், மாகாண சபை முறை தமிழ் பகுதிகளுக்கான இன ரீதியிலான அதிகாரப் பகிர்வு மட்டுமல்ல. அது ஒன்பது மாகாணங்களிலும் இயங்குவதால் பிராந்திய அடிப்படையிலான சிறந்த அதிகாரப் பகிர்வும் கூட. எனவே அரசாங்கம் அதில் கை வைக்குமாக இருந்தால் தமிழ் மக்களின் முற்றுமுழுதான நம்பிக்கையை இழந்து அவர்களின் வெறுப்பைச் சம்பாதிப்பதுடன், அரசாங்கத்தின் தற்கொலை முயற்சியாகவும் அமைந்துவிடும்.\nஇந்த அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றது தனியே சிங்கள இனவாத வாக்குகளால்தான் என்ற ஒரு எண்ணம் சில பேரினவாத சக்திகளிடம் இருக்கின்றது. சிங்கள முற்போக்கு – ஜனநாயக சக்திகளினதும், தமிழ் – முஸ்லீம் மற்றும் மலையகத் தமிழ் மக்களினதும் கணிசமான வாக்குகளும் இந்த அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற உதவியிருக்கிறது என்பதை அரச தலைவர்கள் மறந்துவிடக்கூடாது. எனவே அவர்களின் ஆதரவு மூலம் பெற்ற மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வைத்துக்கொண்டு அவர்களது தலையில் மண்ணள்ளிப் போட நினைத்தால் அதற்கு வரலாறு தகுந்த பாடம் புகட்டத் தவறாது என்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.\nஎனவே, தற்போது மாகாண சபைகளின் எதிர்காலம் குறித்து சில இனவாத சக்திகளால் கிளப்பப்பட்டிருக்கும் குழப்ப நிலைக்கு ஒரு முடிவு கட்டுவதானால் ஜனாதிபதியாகவும் பிரதமராகவும் பதவி வகிக்கும் ராஜபக்சாக்கள் மாகாண சபைகளின் எதிர்காலம் குறித்து தங்கள் அரசின் நிலைப்பாட்டை நாட்டு மக்களுக்குப் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்.\nஎஸ்.எம்.எம்.பஷீர் “ எப்பொழுதும் உனது எதிரிகளை மன்னித்துவிடு , அதை விட அவர்களை அதிகம் தொந்தரவு செய்வது வேறொன்றுமில்லை ” ( ஒ...\nஎஸ்.எம்.எம்.பஷீர் “ ஒரு தவறு பல்கிப் பெருகுவதால் உண்மையாகி விடமுடியாது: யாரும் கண்டுகொள்ள முடியவில்லை எனபதற்காக ஒரு உண்மை ...\n\"வேர��� ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nஇலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ\nமூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் பதவியில் ஓர் அரச...\nஇலங்கையில் நடைமுறையில் உள்ள மாகாண சபைகளை ஒழித்துக...\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/869105", "date_download": "2021-10-19T13:19:14Z", "digest": "sha1:5XWNP5IYFL77NDTEY4ST2NGU4HY7OXEL", "length": 3470, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஐக்கிய நாடுகள் சூழல் திட்டம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஐக்கிய நாடுகள் சூழல் திட்டம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nஐக்கிய நாடுகள் சூழல் திட்டம் (தொகு)\n00:58, 9 செப்டம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்\n128 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\n07:29, 1 ஆகத்து 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nWikitanvirBot (பேச்சு | பங்களிப்புகள்)\n00:58, 9 செப்டம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nMovses-bot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://udhayasankarwriter.blogspot.com/2019/10/", "date_download": "2021-10-19T12:20:34Z", "digest": "sha1:P2OTJ7QWKRWZLOYHUKWJMVJNPBNNAGAU", "length": 134317, "nlines": 430, "source_domain": "udhayasankarwriter.blogspot.com", "title": "கரிசக்காடு: October 2019", "raw_content": "\nஅடி முதல் நுனிவரை கசக்கின்ற மரமாக இருந்தது அந்த மரம். பூக்கவோ, காய்க்கவோ இல்லை. அதனால் அந்த மரம் வருத்தத்தில் இருந்தது. ஒரு கிளி கூட அந்த மரத்தின் கிளைகளில் பறந்து வந்து ஓய்வெடுத்ததில்லை. தன்னுடைய பிறவி இப்படி பாழாகி விட்டதே என்று நினைத்து அந்த மரம் நீண்ட பெருமூச்சு விட்டது. கூட்டத்திலிருந்து தப்பி வந்த ஒரு கிளிக்கு அந்த மரத்தின் வருத்தம் புரிந்தது. அந்தக்கிளி மரத்தைச் சுற்றிப் பறந்து வந்து கேட்டது,\n“ நீ எதற்காக இவ்வளவு வருந்துகிறாய்\nமரத்திடம் இதுவரை யாரும் அப்படி ஒரு கேள்வி���ைக் கேட்டதில்லை. மகிழ்ச்சியினால் மரத்தின் கண்கள் நிறைந்தன. இரண்டு துளி கண்ணீர் வடித்த மரம் சொன்னது,\n“ நான் ஒரு கசப்பு மரம். நான் எப்படி இப்படியானேன் என்று எனக்குத் தெரியவில்லை… இந்த வழியாகப் பறந்து போகிற கிளிகள் யாரும் என்னைத் திரும்பிப் பார்ப்பதில்லை. எல்லா மரங்களையும் தழுவிச் செல்லும் காற்று கூட என்னை மறந்து விட்டுப்போவது தான் வழக்கம்..”\nகிளி நேராகப் பறந்து சென்று ஒரு கிளையில் போய் உட்கார்ந்தது. மரம் புளகாங்கிதமடைந்தது. அது கிளியிடம்,\n“ ஆகா ஒரு கிளியின் தொடுகை எவ்வளவு சுகம் என்று எனக்கு இப்போது தான் புரிந்தது.. மிக்க நன்றி நண்பா..”\nகிளி தூரமாய் பார்த்து எதையோ நினைத்து மௌனமாக இருந்தது. அதன் பிறகு ஒரு நீண்ட பெருமூச்சு விட்டு சொன்னது,\n“ இனிமேல் நாம் மிகச்சிறந்த நண்பர்களாக இருப்போம்.. நான் உன்னுடைய கிளையில் தங்கியிருந்து உனக்காகப் பாடுவேன்..”\nமரத்திற்கு ஆச்சரியமாக இருந்தது. மரம் கேட்டது,\n“ நீ வடக்கேயிருந்து தானே வருகிறாய் உன்னுடைய நாட்டில் குளிர்காலம் கழிந்த பிறகு நீ உன்னுடைய கூட்டத்திடம் திரும்பிப் போய்விடுவாய் இல்லையா உன்னுடைய நாட்டில் குளிர்காலம் கழிந்த பிறகு நீ உன்னுடைய கூட்டத்திடம் திரும்பிப் போய்விடுவாய் இல்லையா\nகிளி வேறு வழியின்றி சொன்னது,\n“ எனக்கு யாருமில்லை.. அப்பாவோ அம்மாவோ கூடப்பிறந்தவர்களோ, ஒருவருமில்லை. அதனால் இங்கே உன்னோடு தங்கி இருப்பதில் ஒரு பிரச்னையுமில்லை..”\nஅப்போது மரத்தின் தொண்டை தழுதழுத்தது.\n“ ஒத்தையில் இருப்பதின் துயரத்தை என்னைப் போல யாருக்குத் தெரியும் ஆனாலும் நண்பா, நீ திரும்பிப் போகத்தான் வேண்டும்.. அதுவரை இங்கே தங்கியிருந்து எனக்காக பாட்டுகள் பாடுவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி..”\nகிளி கண்களை மூடிக்கொண்டு தியானித்தது. பின்னர் மிக மிக இனிய குரலில் கசப்பு மரத்துக்காக பாடத்தொடங்கியது. அத்தனை இனிய ஒரு இசையை அந்தக் காடு அதுவரையும் கேட்டதில்லை. மற்ற மரங்களிலிருந்து சளசளத்துக்கொண்டிருந்த பறவைகள் எல்லாம் சட்டென்று அமைதியாகி விட்டன. அந்த வழியாக பயணம் போன பறவைகளும் அருகில் இருந்த மரங்களில் இறங்கி சிறகுகளை மடக்கி காது கொடுத்தன. சில மிருகங்கள் கூட கசப்பு மரத்தின் கீழே வந்து வாயைத் திறந்து மேல்நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்தன. பாட்டுக்காரனான கிளி இதையெல்லாம் அறியாமல் இசை கூட்டி இனிமையாகப் பாடிக்கொண்டிருந்தது.\nபாட்டு முடிந்தபோது மரம் சொன்னது,\n“ என்னுடைய ஆன்மாவில் துளியூண்டு இனிமை கலந்து விட்டதாக தோணுது.. ஒருவேளை உன்னுடைய பாட்டைக் கேட்டு நான் ஒரு கசப்பு மரமாக இல்லாமல் மாறிவிடுவேன் என்று தோணுது..”\nநனைந்த கண்களோடு கிளி சொன்னது,\n“ அப்படி நடந்தால் நான் தான் அதிக மகிழ்ச்சியடைவேன்..”\nகிளி இடையிடையில் எங்கேயோ பறந்து சென்று இரை தேடி விட்டு வேகமாய் அந்தக் கிளைக்குத் திரும்பி வந்தது. அது புதிய புதிய பாட்டுகளை மரத்திற்காக இனிமையினிமையாகப் பாடியது. அதைக் கேட்டு கேட்டு மரத்தின் கசப்பு மாறியது. ஆத்மாவில் தெளிவு உண்டாகியது. ஒரு அதிகாலையில் மரம் வெடித்துச் சிதறிப் பூத்தது. அது ஆனந்தத்துடன் அழைத்துக் கூவியது,\n“ ஆகா என்னுடைய கிளைகளில் எல்லாம் பூக்கள் பூத்திருக்கின்றன…”\nசோர்ந்து போய் மரக்கிளையில் உட்கார்ந்து கிறங்கிப்போயிருந்த கிளியோடு மரம் சொன்னது,\n இந்தப் பூக்கள் அத்தனையும் உனக்குத்தான்..”\nதிடுக்கிட்டு முழித்த கிளியின் கண்களில் பூக்களின் நிறம் தெரிந்தது. மெல்லிய குரலில், அது சொன்னது,\n“ எனக்கு மிகவும் மகிழ்ச்சி மகிழ்ச்சி\n“ நண்பா உன்னுடைய சத்தம் மிகவும் பலகீனமாகி விட்டதே.. கண்டிப்பாக ஏதோ ஒரு துயரம் உன்னை வாட்டுகிறது… நீ என்னுடைய கசப்பை மாற்றியதற்காக நான் என்றென்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன்.. இனிமேலாவது நீ உன்னுடைய கூட்டத்திற்குத் திரும்பிப்போகணும்..”\nகிளி எதுவும் பேசாமல் சிறகுகளை மடக்கிக்கொண்டு உட்கார்ந்திருந்தது. அப்போது ஆனந்த ஆரவாரத்துடன் ஒரு கிளிக்கூட்டம் வடக்கு நோக்கிப் பறந்து போவதை மரம் பார்த்தது. அது கிளியிடம் சொன்னது,\n உன்னுடைய கூட்டமெல்லாம் வடக்கு நோக்கிப் பறக்கிறாங்க.. போ.. நீயும் அவங்களோட சேர்ந்துக்கோ..”\nகிளி கொஞ்சமும் உற்சாகமில்லாமல் சொன்னது,\n“ அது முதல் கூட்டம்.. இன்னம் கூட்டம் கூட்டமாக வருவார்கள்..”\nபூக்களில் உள்ள தேனை எடுக்க வந்த தேனீக்களின் கூட்டத்தின் ரீங்காரத்துக்கு இடையில் இரண்டாவது கிளிக்கூட்டம் வடக்கு நோக்கி பறக்கிற சத்தத்தை மரம் கேட்டது. அது பரிதவிப்புடன், சொன்னது,\n இதோ இரண்டாவது கூட்டமும் பறந்து போகிறதே நீ வேகமாக அவங்க பின்னால போ..”\nகிளி அமைதியாக தன்னுடைய கூட்டாளிகள் பறந்து செல்வத���ப் பார்த்துக் கொண்டேயிருந்தது. அதன் மனதில் என்ன இருக்கிறது என்று மரத்தினால் படிக்க முடியவில்லை. அது கண்ணீரோடு தொடர்ந்து சொன்னது,\n நீ என்னை மிகவும் கஷ்டப்படுத்துகிறாய்.. இனியும் நீ இங்கேயிருந்து போகவில்லையென்றால் இந்தக் காடு முழுவதும் என்னைக் குற்றம் சொல்லும்.. என்னுடைய சுயநலத்துக்காக நான் உன்னை இங்கே நிறுத்தியிருக்கிறேன் என்று குற்றம் சொல்லுவார்கள். பாரு இந்தப் பூக்களெல்லாம் முதிர்ந்து காய்களாகும்..பின்னர் அவையெல்லாம் பழுக்கும்.. அதையெல்லாம் சாப்பிட ஏராளமான பறவைகள் வந்து சேரும். ஆனால் உனக்காக என்னுடைய கிளையில் நான் ஒரு பழத்தை எப்போதும் பத்திரப்படுத்தி வைத்திருப்பேன்..”\nஅப்போது மூன்றாவது கிளிக்கூட்டம் பறந்து செல்கிற சத்தம் மரத்தின் காதுகளில் வந்து மோதியது.\n“ ஹா ஒருவேளை இதுவே கடைசிக் கூட்டமாக இருக்கலாம் பிரியமுள்ள நண்பா இன்னமும் அசமந்தமாக இருக்காதே.. போ..வேகமாகப் போ..”\nஅப்போதும் கிளி அசையாமல் இருப்பதைப் பார்த்து விசும்பி அழுதது.\n“ மற்றவர்களுக்காக வாழ்வதில் உள்ள மகிழ்ச்சியை நீ தானே எனக்குச் சொல்லித் தந்தாய்.. அப்படின்னா இப்போ என்னுடைய சங்கடத்தினால் இந்தப் பூக்கள் எல்லாம் உதிர்ந்து விடும்.. அப்போது எப்படி என்னால் பறவைக்கூட்டத்துக்கு உணவு கொடுக்க முடியும்\nகிளி மரக்கிளையில் உருகிப்போய் நின்றது. பிறகு சிறகுகளை மெல்ல விரித்தது. வானத்தில் குதிப்பதற்கு முன்னால் மரத்தை ஒரு தடவை சுற்றி வந்தது. பலகீனமாக இருந்தாலும் இனிமையான குரலில் மரத்துக்கு விடை கொடுத்து மறைந்து போனது.\nமரத்தில் காய்களெல்லாம் முதிர்ந்து பழுத்து விட்டன. மற்ற எந்தப் பழத்திலுமில்லாத இனிமை கொண்ட பழங்களைச் சாப்பிட காடான காடுகளிலிருந்து பறவைகள் பறந்து வந்தன. மரம் மகிழ்ச்சியோடு கிளைகளை தாழ்த்தி அவர்களை வரவேற்றது. ஆனாலும் அவர்கள் யாருக்கும் தெரியாமல் ஒரு பழத்தை தன்னுடைய இதயத்துடன் சேர்த்து பாதுகாத்து வைத்திருந்தது.\nஆனால், அந்த பாட்டுக்காரக்கிளி பின்னர் ஒருபோதும் வரவில்லை. அதை நினைத்து வருந்திய மரத்திடம் மற்ற பறவைகள் ,\n“ அந்தக்கிளி கண்டிப்பாக வேறு ஏதாவது மரத்தின் கசப்பை மாற்றப் போயிருக்கும்..” என்று சொல்லின.\nLabels: இலக்கியம், உதயசங்கர், கிரேஸி, கிளி., சிறார் இலக்கியம், மொழிபெயர்ப்பு\nசசிக்குப் போரடித்தது. பள்ளிக்கூடம் விட்டு வீட்டுக்கு வந்து வெகுநேரம் ஆகிவிட்டது. அம்மா இன்னும் அலுவலகம் முடிந்து வரவில்லை. அப்பாவும் வெளியூர் போய் இருக்கிறார். வழக்கமாகவே இரண்டு பேரும் வீட்டுக்கு வர மாலை ஆறு மணிக்கு மேலாகி விடும். ஐந்தாவது வகுப்பு படிக்கும் சசி பள்ளிக்கூடம் விட்டதும் பேருந்தில் வீட்டுக்கு வந்து அவனிடம் இருக்கும் இன்னொரு சாவியால் வீட்டைத்திறந்து உள்ளே போய் பூட்டிக் கொள்வான். பையைத் தூக்கி வீசி விட்டு ஃபிரிட்ஜைத் திறந்து ஐஸ்கிரீமையோ, சிப்ஸ் பாக்கெட்டையோ எடுத்துக்கொண்டு கம்ப்யூட்டர் முன்னால் உட்காருவான்.\nஅவன் வீட்டுக்குப் பின்னால் உள்ள தெருவில் பையன்கள் விளையாடும் சத்தம் கேட்கும். அவ்வப்போது அந்த சத்தத்தை வைத்து கிரிக்கெட், புட்பால், கபடி, எறிபந்து, கிட்டிப்புள், என்று தெரிந்து கொள்வான். இந்த விளையாட்டுகளை அவன் வேடிக்கை பார்த்திருக்கிறான். அவ்வளவுதான். அவன் விளையாண்டதில்லை. எப்போதாவது ஞாயிற்றுக்கிழமைகளில் அம்மாவிடம் அனுமதி கேட்பான். அவனுடைய உடல்நலத்தைப் பற்றி, தெருப்பையன்களின் சேட்டைகளைப் பற்றி பேசி\n“ வேண்டாம் சசி.. நீ வீட்டிலேயே அப்பா கூட விளையாடு..” என்று முடித்து விடுவாள். அப்பா ஒருநாளும் விளையாண்டதில்லை. அதனால் கேட்பதை சசி விட்டு விட்டான்.\nஅம்மாவும் அப்பாவும் வரும்வரை சசி கம்ப்யூட்டரில் கேம்ஸ் விளையாடிக்கொண்டிருப்பான். இல்லையென்றால் தொலைக்காட்சியில் போகோ, கார்ட்டூன் நெட் ஓர்க், சுட்டி, டிவி என்று ஏதாவது ஒன்றில் அனிமேஷன் படம் பார்த்துக் கொண்டிருப்பான்.\nஇன்றும் அப்படித்தான் கம்ப்யூட்டரில் கார் ரேஸ் விளையாடினான். எவ்வளவு ஒழுங்காக ஓட்டிச் சென்றாலும் இரண்டு முறையும் அவனால் வெற்றி பெறமுடியவில்லை. அவனுக்குக் கோபம் வந்து விட்டது. அடுத்தமுறை காரை பயங்கர வேகத்தில் ஓட்டினான். பிளாட்பாரத்தில் ஏற்றினான். விளக்குக்கம்பங்களைச் சாய்த்தான். சாலையில் குறுக்கே போகிறவர்களின் மீது காரை வைத்து மோதினான். அவன் வெற்றி பெறும்வரை இதையே திரும்பத்திரும்பச் செய்தான். வெற்றி பெற்றதும் அந்த விளையாட்டு சலித்து விட்டது.\nதீவிரவாதிகளை வேட்டையாடும் விளையாட்டிலும் அப்படித்தான். தீவிரவாதிகளை மட்டுமல்ல சாதாரண மக்களையும், வீடுகளையும் சுட்டான். தீவிரவாதிகளை எல்லாம் சுட்டபிறக��� தான் அவனுடைய வேகம் அடங்கியது. தொலைக்காட்சியில் திரும்பத் திரும்ப பார்த்த அனிமேஷன் தொடர்களே ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தன.\nவாசலில் ஏதோ சத்தம் கேட்டது. எழுந்து போய் கம்பிக்கதவின் வழியாக வெளியே பார்த்தான். வாசல் கதவு ஆடிக்கொண்டிருந்தது. யாராவது வந்திருப்பார்களோ\nஒரு அணில் அந்தக் கதவின் மீது ஏறி ஓடியது. கதவு ஆடியது. பின்னால் அதை விரட்டி வந்த காகம் கதவில் உட்கார்ந்தது. கதவு ஆடியது. சசிக்குச் சிரிப்பு வந்தது. அப்படியே கொஞ்சநேரம் வேடிக்கை பார்த்தான். வீட்டுக்குள் திரும்புகிற சமயம்,\n “ என்று ஒரு பையனின் குரல் கேட்டது. சசி பார்த்தான். வாசலில் ஒரு பையன் அவன் வயது தான் இருக்கும். நின்று கொண்டிருந்தான். ஒல்லியாக இருந்தான். அவனுடைய கைகள் கதவைப் பிடித்து ஆட்டிக் கொண்டிருந்தன. விளையாடிக்கொண்டிருந்த பையன் விளையாட்டைப் பாதியில் விட்டு விட்டு வந்த மாதிரி இருந்தான்.\n“ சசி விளையாட வர்றியா “ என்று கேட்டான் அந்தப்பையன்.\n“ அம்மா வெளியே போய் விளையாடக்கூடாதுன்னு சொல்லியிருக்காங்க..”\n“ சரி. வீட்டுக்குள்ளே விளையாடுவோம்..”\nசசி யோசித்தான். அந்தப் பையனை வீட்டுக்குள்ளே கூப்பிடவா வேண்டாமா அம்மா என்ன சொல்வாள் அந்தப் பையனை அவன் பார்த்தது கூட இல்லை. அந்தப் பையனை மட்டுமில்லை. அவன் வகுப்பில் படிக்கும் பையன்களைத் தவிர வேறு யாரையும் அவனுக்குத் தெரியாது. கொஞ்சநேரம் அப்படியே நின்று கொண்டிருந்தவன் திரும்பி உள்ளே போய் சாவியை எடுக்கப்போனான். சாவியை எடுத்துக் கொண்டு திரும்பி வந்து பார்த்தால் அந்தப்பையன் வீட்டுக்குள் இருந்தான்.\n “ என்று கேட்க நினைப்பதற்குள் அவன்\n“ எங்கேன்னாலும் நான் வந்துருவேன்.. குமாரா கொக்கா சரி கண்ணாமூச்சி விளையாடலாமா\nஎன்று அடுக்கினான். சசி ஆச்சரியத்துடன் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவனை தெரிந்த மாதிரியும் இருந்தது. தெரியாத மாதிரியும் இருந்தது.\nகுமாரும் சசியும் கண்ணாமூச்சி விளையாடினார்கள். குமார் சசியைச் சுலபமாகக் கண்டுபிடித்தான். ஆனால் சசியால் அவனுடைய வீட்டில் ஒளிந்திருந்த குமாரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. சசியின் முகம் வாடுகிற மாதிரி இருக்கும்போதெல்லாம் குமாரே முன்னால் வந்து அவுட்டாகி விடுவான்.\nகேரம் விளையாண்டார்கள். அதில் சசி தான் ஜெயித்துக் கொண்டேயிருந்தான். ஒர��� தடவை கூட குமாரால் ஜெயிக்க முடியவில்லை. ஆனால் குமார் அசராமல்\n“ அடுத்த ஆட்டம் பாரேன்.. நான் தான் ஜெயிக்கிறேன்.. “ என்று சொல்லுவான். அப்படித்தான் செஸ்ஸிலும். குமார் ஒரு தடவை செக்மேட் வைத்தால் சசி ஒரு தடவை செக்மேட் வைப்பான். கலகலவென பேசிக்கொண்டேயிருந்தான் குமார். சசி கெக்கேபிக்கே என்று சிரித்துக் கொண்டேயிருந்தான். அதுவும் அவனுடைய பள்ளிக்கூடத்தில் நடந்த காமெடிகள்\nசசிக்கு மனதும் உடலும் மிதந்தது. அவன் குமாரிடம்,\n“ தினமும் நீ வா நாம விளையாடலாம்..” என்றான். குமார் அவனைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே,\n“ உங்க அப்பா அம்மா ஒண்ணும் சொல்லமாட்டாங்களா “ என்று கேட்டான். அதைக்கேட்டதும் சசிக்கு அப்பா அம்மா ஞாபகம் வந்து விட்டது.\nவாசலில் கதவு திறக்கும் சத்தம் கேட்டது. சசிக்கு பயம் வந்து விட்டது. குமாரை வீட்டுக்குள் கூட்டி வந்து விளையாடியதற்கு அம்மா திட்டுவார்களோ என்று யோசித்தான். பூட்டிய கதவைத் திறப்பதற்கு சாவியை எடுத்துக் கொண்டு ஓடினான்.\nஅம்மா உள்ளே வந்ததும் சசி,\n“ அம்மா.. ஒரு விஷயம் சொல்வேன்.. நீங்க திட்டக்கூடாது..”\n “ என்று சொல்லியபடியே அம்மா ஹாலுக்கு வந்தாள். அவள் பின்னாலே வந்த சசிக்கு ஆச்சரியமாக இருந்தது.\nகுமாரைக் காணவில்லை. அவன் அடுக்களை, படுக்கையறை, சாமான்கள் அறை, கழிப்பறை, என்று எல்லா இடங்களிலும் போய் பார்த்து விட்டு வந்தான். ஒவ்வொரு இடத்திலும் போய் குமார் குமார் என்று மெல்லிய குரலில் கிசுகிசுத்தான்.\nகுமாரைக் காணவில்லை. எப்படிப் போயிருப்பான்\n“ என்ன சேட்டை பண்ணினே நான் திட்டமாட்டேன்.. சொல்லு..” அவன் காதுகளில் விழுந்தது. அவன் சிரித்துக் கொண்டே,\n“ சாக்லேட் ஐஸ்கிரிமைத் தின்னுட்டேன்..” என்று சிரித்தான். அம்மாவும் சிரித்துக் கொண்டே,\n“ உனக்குத் தானடா அது..” என்று சொன்னாள். காலையில் பள்ளிக்கூடப்பேருந்துக்காக நின்று கொண்டிருந்தபோது, தோளில் பையுடன் குமார் சாலையில் போய்க்கொண்டிருந்தான்.\nசசி அவனைப் பார்த்து, “ குமார்..” என்று கத்தினான். குமார் திரும்பிப்பார்க்காமல் அவன் பாட்டுக்குப் போய்க் கொண்டிருந்தான்.\nசசி அம்மாவிடம் எப்படியாவது கேட்டு இனிமேல் வெளியில் போய் பையன்களோடு சேர்ந்து விளையாட வேண்டும் என்று நினைத்தான்.\nLabels: udhayasankarwriter, இலக்கியம், உதயசங்கர், சிறார் இலக்கியம், வண்ணக்கதிர்\nமாயாவின் ���ையில் எப்போதும் அந்த பொம்மை இருந்தது. அழகான மரப்பொம்மை. போனமாதம் அவள் அப்பா, அம்மாவுடன் டெல்லிக்குச் சுற்றுலா போயிருந்தாள். கன்னோட்பிளேஸ் என்ற இடத்தில் இருந்த கைவினைப் பொருட்கள் விற்கும் கடையில் அந்தப் பொம்மையைப் பார்த்தாள். பார்த்தவுடன் அந்தப் பொம்மையை மாயாவுக்குப் பிடித்து விட்டது. அது ஒரு ஆதிவாசிப்பெண்ணின் பொம்மை. கருப்பு, சிவப்பு, மஞ்சள், பச்சை, என்று எல்லா வண்ணங்களும் அதன் முகத்தில் பூசப்பட்டிருந்தது. அகன்று விரிந்த வெள்ளைக்கண்களில் கருவிழி நேரில் பார்ப்பதைப் போல இருந்தது. கண்ணாடித்துண்டுகள் பதித்த ஆடை அணிந்த அந்தப்பொம்மை மாயாவுக்கு மிகவும் பிடித்து விட்டது.\nஇந்த ஆண்டு பள்ளியிறுதி வகுப்பு போகிறாள் மாயா. பள்ளிக்கூடம் போய்வரும் நேரம் தவிர மற்ற நேரம் முழுவதும் மாயா அந்தப்பொம்மையைத் தூக்கிக் கொண்டு அலைந்தாள். அதைக் குளிப்பாட்டினாள். அதற்கு ஒப்பனை செய்தாள். சோறு ஊட்டுவதாகப் பாவனை செய்தாள். எப்போதும் அந்தப் பொம்மையுடன் பேசிக்கொண்டிருந்தாள். படுக்கும்போதும் பொம்மையை அருகில் படுக்கவைத்துக் கொண்டாள்.\nஒரு நாள் இரவில் மாயா கழிப்பறை போவதற்காக எழுந்தபோது லேசான அழுகைச் சத்தம் கேட்டது. அவள் விளக்கைப் போட்டுப் பார்த்தாள். சத்தம் எதுவும் இல்லை. கழிப்பறை போய்விட்டு வந்து படுத்தாள். உறங்கி விட்டாள். காலையில் அம்மாவிடம்,\n“ அம்மா ராத்திரி யாரோ அழுகிற சத்தம் கேட்டுச்சிம்மா.. எந்திரிச்சி லைட்டைப் போட்டுப் பார்த்தேன்.. ஒண்ணும் கேட்கலை..” என்றாள். அம்மா சிரித்துக் கொண்டே\n“ ஏதாவது கனவு கண்டிருப்பேம்மா.” என்று சொன்னார்கள். மாயாவும் அப்படித்தான் நினைத்தாள். அப்புறம் இரண்டு நாட்கள் கழிந்தது. அன்று பௌணர்மி. முழுநிலா ஒளி வீசிக்கொண்டிருந்தது. அன்று இரவில் மாயாவின் காதுக்கருகில் யாரோ சிரித்ததைப் போலிருந்தது. மாயா கண் விழித்தாள். அருகில் படுக்கவைத்திருந்த அந்தப்பொம்மையைக் காணோம். விளக்கைப் போட்டு கட்டிலுக்கடியில் தேடினாள். மேசையில் தேடினாள். அவளுடைய பீரோவில் தேடினாள். அவளுடைய பையில் தேடினாள். எங்கும் இல்லை. தூக்கம் வராமல் யோசித்துக் கொண்டேயிருந்தாள். அப்படி யோசிக்கும்போது வேறெங்கும் போகவில்லை. அந்தப்பொம்மை சன்னலில் நின்று வெளியே பௌணர்மி நிலவைப் பார்த்துக் கொண்டிருப்பதா�� நினைத்தாள். அப்படியே தூங்கி விட்டாள்.\n காலையில் முழித்துப் பார்க்கிறாள். பக்கத்தில் கிடக்கிறது அந்தப்பொம்மை. கையில் அந்தப்பொம்மையை எடுத்து உற்றுக்கவனித்தாள். அந்தப் பொம்மையின் ஆடையில் கண்ணாடித்துண்டுகளுக்கு நடுவே பச்சை நிறத்தில் செடிகளும் கொடிகளும் மரங்களும் வரையப்பட்டிருந்தன. மாயாவுக்கு ஆச்சரியமாக இருந்தது.\nஇன்னொரு நாள் நடுஇரவில் மழை பெய்தது. அப்போது மாயா எழுந்திரிக்கவில்லை. ஆனால் காலையில் பார்த்தால் அந்தப்பொம்மையின் ஆடை நனைந்திருந்தது.\nமாயாவின் வீடு அடுக்குமாடிக் குடியிருப்பில் இருந்தது. சுற்றிலும் மரங்களோ, செடிகளோ, இல்லை. கீழே இருந்த ஒரு பூங்காவில் மட்டுமே குரோட்டன்ஸ் செடிகளைப் பார்க்கலாம். மாயா அந்தப் பொம்மையுடன் பூங்காவுக்குப் போய் வரும் நாளில் அழுகையோ, சிரிப்போ, கேட்பதில்லை. மாயா அப்பாவிடம் சொல்லி சிறு தொட்டிகளில் செடிகளை வாங்கி வைத்தாள். அவளுடைய அறையில் ஓரமாக வெளிச்சம் படுகிற இடத்தில் அந்தச் செடிகளை வைத்துத் தண்ணீர் விட்டாள்.\nஅடுக்கு மாடிக்குடியிருப்பின் கீழே அப்பாவிடம் சொல்லி வேம்பு, ஆல், அரசு, என்று விருட்சங்களின் கன்றுகளை வைக்கச் சொன்னாள். அந்தக் கன்றுகளை ஊன்றி வைத்த அன்று இரவு மாயா ஒரு கனவு கண்டாள். அந்தக் கனவில் அந்த ஆதிவாசிப்பொம்மை வந்தது. அவளுடைய அம்மாவைப் போலவே முகம் இருந்தது.\n“ என் அருமை மக்களே இப்பத்தான் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கு.. இயற்கை இல்லாம மனிதர்கள் இல்லை.. நானும் ஒரு விருட்சம் தான்.. அருணாச்சலப்பிரதேசக்காட்டில் நூறாண்டுகளுக்கு மேல் சுதந்திரமாக இருந்தேன்.. எங்கோ அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டுவதற்காக என்னை வெட்டினார்கள்… அன்றிலிருந்து தினம் அழுது கொண்டேயிருப்பேன்… இனிமேல் எனக்குக் கவலையில்லை.. மகளே இப்பத்தான் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கு.. இயற்கை இல்லாம மனிதர்கள் இல்லை.. நானும் ஒரு விருட்சம் தான்.. அருணாச்சலப்பிரதேசக்காட்டில் நூறாண்டுகளுக்கு மேல் சுதந்திரமாக இருந்தேன்.. எங்கோ அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டுவதற்காக என்னை வெட்டினார்கள்… அன்றிலிருந்து தினம் அழுது கொண்டேயிருப்பேன்… இனிமேல் எனக்குக் கவலையில்லை.. மகளே நீ செய்த காரியத்தை ஒவ்வொரு மனிதரும் தினமும் செய்தால் போதும்… இயற்கை அழியாது… மனிதர்களும் அழிய மாட்டார்கள்..”\nஎன்று குனிந்து மாயாவின் நெற்றியில் முத்தமிட்டது. திடுக்கிட்டு முழித்த மாயா அருகில் பார்த்தாள் அந்த ஆதிவாசிப்பெண் பொம்மை அப்படியே கிடந்தது. மாயா அவளுடைய நெற்றியைத் தொட்டாள்.\nமுத்தமிட்ட ஈரம் கையில் பட்டது.\nநன்றி - பஞ்சு மிட்டாய் சிறுவர் இதழ்\nLabels: udhayasankarwriter, இலக்கியம், உதயசங்கர், சிறார் இலக்கியம், பஞ்சு மிட்டாய், மாயா\nரொம்ப நாளாக அறிவழகனுக்கு பறக்கவேண்டும் என்று ஆசை. பாலர் வகுப்பு படிக்கும்போதே பறந்து கொண்டிருக்கும் பறவைகளை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருப்பான். கைகளைத் தட்டிச் சிரிப்பான். அவனுடைய வீட்டுக்கு அருகில் இருந்த வேப்பமரத்தில் உட்கார்ந்திருக்கும் காகங்களை வேடிக்கை பார்ப்பான். அவை சிறகுகள் விரித்துப் பறப்பதையும் அழகாக கிளைகளில் வந்து அமர்வதையும் பார்த்துக் கொண்டேயிருப்பான்.\nஅவன் சாப்பிடும் தின்பண்டங்களை கீழே தரையில் வீசுவான். சில காகங்கள் மட்டும் கா கா எனக் கரைந்து கொண்டே வந்து இரை எடுக்கும். சில காகங்கள் சந்தேகத்துடன் தலையைச் சாய்த்துப் பார்த்துக் கொண்டே மரக்கிளையிலே இருக்கும். அவன் தினம் உணவு போட்டுப் போட்டு காக்கைகளைப் பழக்கம் பிடித்துக் கொண்டான். இப்போது அவன் வீட்டை விட்டு வெளியில் வந்தால் போதும் உடனே காகங்கள் கரைய ஆரம்பித்து விடும்.\nகீழே வந்து இரை எடுத்த காகங்களில் ஒரு வயதான காகம் இருந்தது. உடம்பிலும், சிறகுகளிலும் உள்ள இறகுகள் உதிர்ந்து லேசாகத் தள்ளாடியபடியே நடக்கும். மேல் அலகு முனையில் உடைந்திருந்தது. ஒரு கண்ணால் மட்டுமே பார்த்தது. அது மரத்திலிருந்து கீழே மெல்லப் பறந்து வரும். அது இறங்கி விட்டால் மற்ற காகங்கள் ஓரமாய் ஒதுங்கி நின்று கா கா கா கா என்று கரைந்து கொண்டிருக்கும்.\nஒரு நாள் அந்த வயதான காகம் அறிவழகனிடம் பேசியது.\n‘ கா கா கா ஏன் தம்பி தெனமும் எங்களுக்கு தீனி போடறே..’\nஇது தான் சமயம் என்று அறிவழகன் அந்தக் காகத்திடம்,\n’ தாத்தா.. தாத்தா… எனக்கும் உங்கள மாதிரி பறக்க ஆசையா இருக்கு.. பறக்கறது எப்படி இருக்கும் தாத்தா..’\nஎன்று கேட்டான். உடனே தலையைச் சாய்த்து அவனைப் பார்த்தது தாத்தாக்காகம். மெல்ல இரண்டு எட்டு எடுத்து வைத்தது. வானத்தை அண்ணாந்து பார்த்தது.\n‘ கா கா கா பறக்கறது எப்படி இருக்கும் ம்ம் நல்லா இருக்கும் காத்துல லேசான மாதிரி உடம்பே இல்லாத ம��திரி இருக்கும். கீழே இருக்கிற எல்லாத்தையும் பாக்கலாம் .காத்து நம் உடம்புவழியா போகும்போது நாமே காத்தானது மாதிரி.. ம்ம் பறக்கற மாதிரியே இருக்காது… மேகங்கள் உரசிக்கிட்டு போகும். அப்புறம் அப்புறம் கீழே சின்னப்பசங்க கையில் வைச்சிருக்கிற வடை கூட தெரியும்.. தனியாச் சுத்தற கோழிக்குஞ்சு தெரியும்…. ம்ம்ம் அது ஒரு காலம்.. எனக்கு இப்ப வயசாயிருச்சு.. ரொம்ப உயரத்தில பறக்க முடியல… ‘ என்று சொல்லி மூச்சு வாங்கியது. தாத்தாக்காகம் சொல்வதை ஆ வென வாயைப் பிளந்தபடி கேட்டுக் கொண்டிருந்த அறிவழகன்,\n‘ எனக்கும் பறக்கணும்னு ஆசையா இருக்கு தாத்தா.. எப்படிப் பறக்கணும்னு சொல்லித் தாங்க தாத்தா…’\nஎன்று கெஞ்சும் குரலில் கேட்டான். அதைக் கேட்ட தாத்தாக்காகம் அவனை தன்னுடைய ஒரு கண்ணால் உற்றுப் பார்த்தது. அப்புறம் உடைந்த அலகால் சிறகுகளைக் கோதி விட்டது. காலால் தலையைச் சொறிந்தது. பின்னர் அறிவழகனைப் பார்த்து,\n‘ கா கா கா எனக்குத் தெரியலையே தம்பி..’ என்று சொன்னது.\n‘ தெரியாமலா நீங்க பறக்கிறீங்க…’\n‘ கா கா கா நாங்க பொறந்ததிலிருந்தே பறக்கிறோம்… எங்களுக்கு ரெக்கை இருக்கு.. உனக்கு ரெக்கை இருக்கா…’ என்று தாத்தாக்காகம் கேட்டது. பின்னர் அவனைச் சுற்றி மெல்ல சிறகுகள் அடித்துப் பறந்தது. அறிவழகன் முகம் வாடியதைப் பார்த்து எங்கே நமக்கு லகுவாகக் கிடைக்கிற தீனி கிடைக்காமல் போய் விடுமோ என்ற பயத்தில்,\n‘ கா கா க்ர்ர்ர்ர்ர் பொறு..பொறு..ரெக்கை இல்லாம பறக்க முடியுமான்னு என்னோட நண்பன் கிட்ட கேட்டுட்டு வாரேன்.. அப்புறம்.. எனக்கு இட்லி, தோசை, மாதிரி தீனி கொண்டுட்டு வா.. சேவு.. மிக்சர், பிஸ்கட் எல்லாம் சின்னப்பசங்களுக்கு கொடு… வயசாருச்சில்ல..’\n‘ சரி தாத்தா..’ என்று உற்சாகமாகச் சொல்லிக் கொண்டே அறிவழகன் போனான். மறுநாள் தாத்தாக்காகத்துக்குத் தனியாக இட்லித் துண்டுகளைப் போட்டான். தாத்தாக்காகம் டபக் டபக்கென்று விழுங்கியது. வயிறு நிறைந்ததும்,\n‘ கா கா கா… யப்பா வயிறு நிறைஞ்சிருப்பா.. க்ர்ர் ‘ என்று ஏப்பம் விட்டது. அறிவழகன் ஆவலுடன் தாத்தாக்காகத்தின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். மெல்ல தொண்டையைச் செருமிக் கொண்டு,\n‘ தம்பி நான் என் நண்பனிடம் கேட்டேன்.. அவன் என்ன சொல்றான்னா ரெக்கை இல்லாம யாராலும் பறக்க முடியாது.. ஆனா பறக்கிறது ஒரு செயல் மட்டுமில���லை.. அது ஒரு உணர்வு.. அதைப் பறக்காமலே கூட பெற முடியும்…அப்படிங்கிறான்..’\nஅறிவழகன் ஒண்ணும் புரியாமல் முழித்தான். அதைப் பார்த்த தாத்தாக்காகம்,\n‘ ஒண்ணும் புரியலல்ல.. எனக்கும் தான் புரியல…கிறுக்குப்பய அவன் இப்படித்தான் ஏதாச்சும் உளறிக்கிட்டே இருப்பான்.. நான் கழுகண்ணன்கிட்ட கேக்கிறேன்.. அவன் தான் சூரியன்கிட்டேயே பறந்து போவான்.. நாளைக்கு தோசை கொண்டுட்டு வர்றியா…’\nஎன்று சொல்லி விட்டு மெல்ல பறந்து வேப்பமரத்தில் கீழே இருந்த கிளையில் போய் உட்கார்ந்தது. அறிவழகன் தலையைத் தொங்கப்போட்டுக் கொண்டே பள்ளிக்கூடத்துக்குப் போனான்.\nபோகும்வழியில் இருந்த சாக்கடைக்குள் இருந்து,\n‘ ம்ஞீம்…ம்ம்ஞீம்… ‘ என்று சத்தம் கேட்டது. அறிவழகன் எட்டிப் பார்த்தான். கண் திறக்காத நாய்க்குட்டி ஒன்று நடக்க முடியாமல் சாக்கடையில் புரண்டு கொண்டிருந்தது. கன்னங்கரேலென்று உடம்பில் சாக்கடை நீர்வழிய பார்க்கப்பாவமாக இருந்தது. அப்படியே விட்டால் அது செத்துப்போய் விடும். அறிவழகன் தோளில் இருந்த புத்தகப்பையைக் கீழே வைத்தான். குனிந்து அந்த நாய்க்குட்டியை எடுத்தான். நாய்க்குட்டி ஈனக்குரலில் அழுதது. அவன் கைகளில் சாக்கடை ஒட்டிக் கொண்டது. அறிவழகன் தூக்கியவுடன் பயத்தில் உடம்பை உதறியது. சட்டையெல்லாம் சாக்கடைத்துளிகள் தெறித்தன. ஆனால் அறிவழகன் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. சுற்றிலும் பார்த்தான். கொஞ்சதூரத்தில் ஒரு அடி பைப்பு இருந்தது. தண்ணீர் அடித்து நாய்க்குட்டியைக் கழுவினான். வெள்ளை வெளேரென நாய்க்குட்டி துலங்கியது. ரொம்பநேரம் தண்ணீரில் இருந்த்தால் குளிரில் அதன் உடல் நடுங்கியது. அவனுடைய டிராயர்பையில் வைத்திருந்த கைக்குட்டையால் அதன் உடலைத் துடைத்தான். அந்த வெள்ளை நாய்க்குட்டி தன்னுடைய குட்டி நாக்கால் அவனுடைய கையை நக்கியது.\nஅவன் திரும்பி வேகமாக வீட்டுக்கு ஓடினான். ஒரு சணல்சாக்கை எடுத்து விரித்து அதில் படுக்கவைத்தான். அம்மாவிடம் சொல்லி ஒரு சிறு கிண்ணத்தில் பால் ஊற்றி நாய்க்குட்டியின் முன்னால் வைத்தான். நாய்க்குட்டி சளப் சளப் என்று பாலை நக்கியது. அம்மாவிடம் அதைப் பார்த்துக் கொள்ளச் சொன்னான். வேகமாக சீருடை மாற்றினான். அம்மா அவனுடைய செய்கைகளை புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள். பள்ளிக்கூடத்துக்கு நேரமாகி விட்டது. ஓடிப்போனால் தான் நேரத்துக்குப் போகமுடியும்.\nஅவன் வீட்டை விட்டு வெளியே வந்து ஓட கால்களை எடுத்தான். அவன் முதுகில் ரெக்கைகள் முளைத்திருந்தன. மெல்ல வானத்தில் ஏறி அவன் பறந்து போனான். வேப்பமரத்தில் மதிய உணவுக்கு என்ன செய்யலாம் என்று அண்ணாந்து யோசித்துக் கொண்டிருந்த தாத்தாக்காகம் அறிவழகன் பறப்பதை ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தது.\nநன்றி - பொம்மி தீபாவளி மலர்\nLabels: udhayasankarwriter, இலக்கியம், உதயசங்கர், சிறார் இலக்கியம், பொம்மி\nஅம்மா சுத்தமாய் தூங்குவதில்லை. விடிய விடிய முழித்துக்கொண்டிருந்தாள். பகலில் உட்கார்ந்தபடியே கோழித்தூக்கம் போட்டாள். அவ்வளவு தான். மற்றபடி அன்றாட நடைமுறைப் பழக்கவழக்கங்களில் எந்த மாற்றமுமில்லை. ஆனாலும் எனக்குப் பயமாக இருந்தது. தொடர்ந்து தூங்காமல் இருந்தால் மனநிலையின் சமநிலை மாறிவிடும் ஆபத்து இருப்பதாகப் படித்திருந்த செய்திகள் சொல்லியிருந்தன. அப்படி எதுவும் அம்மாவின் மனதில் ஏதும் மாற்றங்கள் நிகழத்தொடங்கியிருக்கிறதா. நான் அம்மாவைப் பார்த்தேன். அவள் பூஜை அறையில் மங்கலாக எரிந்து கொண்டிருக்கும் அகல்விளக்கின் வெளிச்சத்தில் சாந்தமாக சுவரில் மாட்டப்பட்டிருந்த சாமிப்படங்களைப் பார்த்தபடி படுத்திருந்தாள். அந்த மங்கலான மஞ்சள் விளக்கின் ஒளி அவளுடைய முகத்தில் படர்ந்து தனியழகைக் கொடுத்தது. அம்மாவின் உதடுகள் நடுங்கிக் கொண்டிருந்ததா அல்லது ஏதாவது முணுமுணுத்துக் கொண்டிருந்தாளா என்று தெரியவில்லை. நான் ஹாலில் உள்ள விளக்கைப் போட்டு என்னுடைய லேப்டாப்பை பார்க்கிற சாக்கில் அம்மாவைக் கவனித்துக்கொண்டிருந்தேன்.\nபோனவாரம் தான் என்னுடைய தங்கை சாலாவின் வீட்டிலிருந்து அம்மாவை அழைத்து வந்திருந்தேன். அப்பா இறந்ததிலிருந்து அவளாக விரும்பித்தான் சாலாவின் வீட்டுக்குப் போனாள். அதோடு என்னுடைய இருவரும் வேலைக்குப் போகும் வீட்டில் அவளைக் கவனித்துக்கொள்வதில் ஆவலாதிகள் வரலாம் என்று நினைத்தேன். அம்மா சாலா வீட்டுக்குப் போகிறேன் என்று சொன்னதும் உண்மையில் நானும் ஏஞ்சலும் நிம்மதிப்பெருமூச்சு விட்டோம். போனவாரம் சாலா பேசியபிறகு உடனே பதில் சொல்லவில்லை. ஏஞ்சல் அம்மாவை கூட வைத்துக்கொள்ளலாம் என்று தான் ஒரு இரவுக்கூடலில் சொன்னாள். அதைச் சொல்வதற்கு நான்கு நாட்கள�� எடுத்துக்கொண்டாள். ஏன் என்று எனக்குத்தெரியும். நானும் ஏஞ்சலும் காதல் திருமணம் செய்ததை அப்பாவும் அம்மாவும் ஏற்றுக்கொள்ளவில்லை. அப்பா அவருடைய முகத்திலேயே முழிக்கக்கூடாது என்று சொல்லிவிட்டார். நான் காதலித்துத் திருமணம் முடித்ததைவிட நான் மதம் மாறி வேங்கடேஷ் என்ற என்னுடைய பெயரை ஜோசப் என்று மாற்றியதை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. காதலின் காய்ச்சலில் எந்த மருந்தையும் தின்பதற்குத் தயாராக இருந்த நான் சாதி, மதத்தைப் பற்றியெல்லாம் கவலைப்படவில்லை.\nஎங்கள் திருமணம் முடிந்து ஒரு வருடம் கழித்து அப்பா இறந்த அன்று தான் என்னுடைய வீட்டில் நான் கால் வைத்தேன். அப்பா கண்ணாடிப்பெட்டிக்குள் தன்னுடைய பிடிவாதமான இறுகிய முகபாவத்துடன் என் மீதான அதிருப்தியை வெளிப்படுத்தியபடி கிடந்தார். அவருக்கு குடும்பத்தில் யார் மீதும் திருப்தியில்லை. நான் எஞ்சினீயரிங்கில் கம்ப்யூட்டர் சையின்ஸ் எடுத்துப் படித்ததில் திருப்தியில்லை. படித்து முடித்து பிளேஸ்மெண்ட் ஆன கம்பெனியில் திருப்தியில்லை. எனக்குக் கிடைத்த சம்பளத்தில் திருப்தியில்லை. நான் மாதாமாதம் வீட்டுக்கு அனுப்பிய பணத்தில் திருப்தியில்லை. என் மீது என்றில்லை. அவருக்கு யார் மீதும் திருப்தியில்லை. சாலா விஷயத்திலும் அப்படித்தான். நான் அவருடைய அதிருப்தியான முகத்தைப் பார்த்து வருந்துவேன். எப்படியாவது ஒரு விஷயத்திலாவது அவரைத் திருப்தியடைய வைக்கவேண்டும் என்று நினைத்தேன். அது முடியவில்லை. ஆனால் சாலா கவலையே படமாட்டாள். அவள் வெடுக் வெடுக்கென்று பேசிவிடுவாள். இப்போதும் அப்படித்தான் கண்ணாடிப்பெட்டிக்குள் இந்த உலகத்தின் மீதே அதிருப்தியுடன் படுத்திருந்தார். அருகில் ஒரு நாற்காலி போட்டு உட்கார்ந்திருந்த அம்மாவின் கண்களில் ஈரப்பசையே இல்லை. உலர்ந்த கண்களுடன் அப்பாவின் முகத்தைப் பார்ப்பதும் உடனே திரும்பிக்கொள்வதுமாக இருந்தாள். ஏன் அப்பா அப்படி இருந்தார் என்று எனக்குப் புரியவில்லை.\nஅம்மா பேசிக்கொண்டேயிருப்பாள். யாரும் கேட்கிறார்களா அதற்குப் பதில் சொல்கிறார்களா என்று கவலைப்படமாட்டாள். திருமணத்துக்கு முன்னால் அம்மாவின் குடும்பம் சிவகாசியில் பத்து வீட்டுக் காம்பவுண்டில் இருந்தது. அந்தத்தெருவில் குறைந்தது ஏழெட்டு காம்பவுண்ட் வீடு��ள் இருக்கும். எல்லாம் ஒரு தட்டு இரண்டு தட்டு குச்சு வீடுகள். வீட்டில் பாதி தீப்பெட்டிக்கட்டைகளும், குச்சிகளும், தீப்பெட்டி அட்டைகளும், பசைச் சட்டிகளும், அடைந்து கிடக்கும். அம்மா சுப்புலட்சுமியின் வீட்டில் ஒரு கிளி இருந்தது. கிளிக்கு ஒரு பெயரும் இருந்தது. சுப்புவுக்குப் பிடித்த சிவாஜிபடமான பட்டிக்காடா பட்டணமா படத்தில் வருகிற ராக்கு என்ற பெயர் சூட்டப்பட்டிருந்தது. அம்மாவின் அப்பா ராமச்சந்திரன் அதாவது என்னுடைய தாத்தா எம்ஜிஆர் ரசிகர் இல்லை வெறியர். அவர் ஒரு தீப்பெட்டிக்கம்பெனியில் கணக்கப்பிள்ளையாக வேலைபார்த்தார். ஒரு பக்கம் வீட்டுச்சுவரே தெரியாமல் முழுக்க எம்ஜிஆரின் சினிமாப் படங்களாக ஒட்டி வைத்திருப்பார். இன்னொரு பக்கம் அம்மா சிவாஜி படங்களாக ஒட்டி வைத்திருப்பாள். வீட்டின் வெளிப்புறத்தில் அவளுடைய தம்பி ஜெய்குமார் ஜெய்சங்கர் படங்களாக ஒட்டி வைத்திருப்பான். எம்ஜிஆர், சிவாஜி, ஜெய்சங்கர், எல்லோருமே ரத்தக்களறியாக இருப்பார்கள். சுவரில் ஊர்ந்து செல்லும் மூட்டைப்பூச்சிகளை அப்படியே நசுக்கி நசுக்கி எல்லோரும் ரத்தக்காயங்களோடு இருப்பார்கள்.\nசுப்புலட்சுமியைப் போல அந்தக்கிளியும் வாயாடி. ஏதாவது பேசிக்கொண்டிருக்கும். அம்மா பேசுவதை அப்படியே திருப்பிச்சொல்லும். அமைதியாக இருந்தால்,\n” ஏ.. சுப்பு.. ஏ சுப்பு…” என்று கூப்பிடும். பிள்ளைகள் கேட்பதைபோல\n“ கதை சொல்லு.. கதை சொல்லு.. “ என்று கத்தும். .ராத்திரியாகிவிட்டால் காம்பவுண்டுக்கு வெளியே இருக்கும் நடைபாதையில் தான் அந்தக்காம்பவுண்டில் உள்ள மொத்தக் குடும்பமும் கிடக்கும். எல்லோரும் சுப்புலட்சுமியின் முகத்தையே பார்த்துக் கொண்டிருப்பார்கள். சுப்புலட்சுமிக்கு அருகில் ராக்குவும் இருக்கும். அவள் சிவாஜி படங்களின் கதைகளை அதுவும் குறிப்பாக பாசமலர், பட்டிக்காடா பட்டணமா, சவாலே சமாளி போன்ற படங்களை ஒரு சீன் விடாமல் அப்படியே சொல்லுவாள். கேட்பவர்கள்,\n“ சுப்பு.. நீ சொல்றதைக் கேட்டால் சினிமாவே பார்க்க வேண்டாம்…” என்று சொல்லுவார்கள். அவளுடைய கதையைக் கேட்டு கண்னீர் சிந்துபவர்களும் உண்டு. அவ்வளவு தத்ரூபமாகச் சொல்லுவாள். அவ்வப்போது எம்ஜிஆர் படக்கதைகளையும் சொல்லுவாள். ஆனால் கதை சொல்லும்போதே கேலி, கிண்டல், செய்து கொண்டேயிருப்பாள். விழுந்து ��ிழுந்து சிரிப்பார்கள். ராமாயாணம், மகாபாரதக் கதைகளையும் சொல்வாள். அவளிடம் பார்ப்பதையும், கேட்பதையும் படிப்பதையும் உள்ளதை விட விரித்துச் சொல்லும் திறமை இருந்தது. பௌர்ணமியில் இரவு ஒரு மணி, இரண்டு மணி வரை தெருவில் கதாகாலட்சேபம் நடக்கும். சுப்பு தண்ணீர் குடிக்காமல் பேசுவாள். எல்லோருக்கும் வேலை செய்வதே தெரியாது. மூத்திரம் வந்தால்கூட எழுந்து போக மனம் வராமல் உட்கார்ந்து கதை கேட்பார்கள். அவரவர் வேலையை முடித்து விட்டு சுப்புலட்சுமியின் வேலைக்கும் உதவி செய்வார்கள். அந்தக்காம்பவுண்டில் எந்த ஒளிவு மறைவுக்கும் இடமில்லை. எப்போதும் சத்தக்காடாகக் கிடக்கும். சுப்புவின் குரல் எப்போதும் ஒலித்துக் கொண்டேயிருக்கும். யாரிடமாவது பேசிக்கொண்டேயிருப்பாள்.\n“ கொஞ்சநேரமாவது வாய் சும்மா இருக்குதான்னு பாரு..” என்று சுப்புவின் அம்மா பெருமையுடன் மற்றவர்களிடம் சொல்வாள். பள்ளியிறுதி வகுப்போடு படிப்பை நிறுத்தி விட்டார்கள். ஆனால் சுப்பு அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. அவள் அந்தக்காம்பவுண்டுக்கு மட்டுமல்ல தெருவுக்கே செல்லப்பிள்ளையாக இருந்தாள். அவளைப் பார்த்துப் பேசாதவர்களோ, அவள் பார்த்துப் பேசாதவர்களோ யாருமே இருக்கமாட்டார்கள். சுப்புவின் பத்தொன்பதாவது வயதில் அவளுடைய அத்தை மகன் மகாலிங்கத்துடன் கலியாணம் முடிந்தது. அவள் சிவகாசியிலிருந்து கோவில்பட்டிக்குக் குடிபெயர்ந்தாள். போகும்போது அந்தக்கிளியையும் கொண்டு போனாள். கிளியைப் பார்த்து அதிருப்தியில் முகம் சுளித்தான்.மகாலிங்கம். அவன் கோவில்பட்டி லாயல்மில்லில் வேலை பார்த்தான். ஷிஃப்ட் வேலை. வேலைக்குப்போன நேரம் போக மற்றநேரங்களில் தூங்கிக் கொண்டேயிருந்தான். அவன் தூங்கும்போது ஏதாவது சத்தம் கேட்டால் பழியாகக் கோபம் வந்துவிடும். அதனால் கிளிக்கூண்டை வீட்டுக்கு வெளியே இருந்த வேப்பமரத்தில் தொங்கவிட்டாள். ராக்கு ஏதோ காட்டுக்குள் விட்டமாதிரி கூப்பாடு போடும். நல்லவேளை அந்தச் சத்தம் அவனை எழுப்புகிற அளவுக்கு இல்லை. அவன் முழிக்கும் நேரங்களில் சுப்பு பேசினாள். அவன் முகத்தைச் சுளித்தான். பதில் சொல்லவில்லை. காது கேட்காத மாதிரி இருந்தான். அவளைப் பொருட்படுத்தவில்லை. ஒரு நாளைக்கு ஒரு அதிகமாகப் பத்து வார்த்தை பேசினான். அவள் பேச ஆரம்பித்ததும் அவன் தூங���கி விடுவான். சுப்பு ஒருமுறை கேட்டதுக்கு,\n“ எனக்குப் பிடிக்கலை.. நீ சளசளன்னு ஓலைப்பாயில நாய் மோண்டமாதிரி பேசுறது பிடிக்கலை.. “ என்றான். ஆனால் அதற்கெல்லாம் சுப்பு அசரவில்லை. அவன் தூங்கும்வரை பேசினாள். பேசாமல் அவளால் இருக்கமுடியாது. அவன் வேலைக்குப் போனபிறகு கிளிக்கூண்டை எடுத்து ராக்குவை வெளியே விடுவாள். ராக்கு அவளுடைய தோளில் உட்கார்ந்து கொள்ளும். அவள் பேசிக்கொண்டேயிருப்பாள். அது ம் கொட்டும். இல்லையென்றால் பேசிக்கொண்டேயிருக்கும் அவள் பின்னாலேயே நடந்து போய்க் கொண்டேயிருக்கும். அவள் இருந்தது தனிவீடென்பதால் பக்கத்தில் இருந்தவர்களே வெகுதூரத்தில் இருந்தார்கள். ஒரு நாள் அவள் அடுக்களையில் பேசிக்கொண்டே வேலை பார்க்கும்போது பின்னாலிருந்த ராக்குவின் ம் கொட்டலைக் கேட்காமல் திரும்பிப்பார்த்தாள். வாசலைத்தாண்டி ஒரு பூனையின் வாயில் ராக்கு தொங்கிக் கொண்டிருந்தது. அவள் பின்னாலேயே ஓடினாள். ஆனால் பூனை ராக்குவின் உயிரற்ற உடலைத் தூக்கிக் கொண்டு ஓடியே போய் விட்டது. அழுதாள். அழுதாள். அப்படி அழுதாள். அப்போதும் மகாலிங்கம் எதுவும் பேசவில்லை. அமைதியாக இருந்தான். இப்படி ஒரு ஊமைக்கோட்டானுடன் குடும்பம் நடத்த முடியாது என்று அவனோடு கோபித்துக்கொண்டு சிவகாசி போய்விட்டாள். அவன் கூப்பிட வரவில்லை.\nதிரும்பி வந்த கொஞ்சநாட்களுக்கு அவளும் அவனை மாதிரியே பேசாமல் இருந்து பார்த்தாள். நெஞ்சில் ஏதோ பாரத்தை வைத்த மாதிரியிருந்தது. நெஞ்சை அடைத்துக்கொண்டு வந்தது. மறுபடியும் பேச ஆரம்பித்து விட்டாள். அவன் பதில் சொல்வதைப் பற்றிக் கவலைப்படாமல் பேச ஆரம்பித்து விட்டாள். குழந்தைகள் பிறந்தபோது சிலவருடங்களுக்கு குழந்தைகளிடம் பேசிக் கொண்டிருந்தாள். திருமணவாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியான நாட்கள் என்றால் அவை தான். குழந்தைகளும் பள்ளிக்கூடம் போகும்வரை நன்றாகத்தான் பேசிக் கொண்டிருந்தன. பள்ளிக்கூடம் போகத்தொடங்கியவுடன் குழந்தைகளின் பேச்சும் குறைந்து விட்டது. அதோடு வீட்டில் பேச்சு அப்பாவின் தூக்கத்தைக் கலைத்து விடும் என்ற பயமும், சேர்ந்து பேச்சின்றி ஆகி விட்டது. அம்மா என்ன பேசினாலும் அப்பாவைப்போலவே வெங்கடேஷும் சாலாவும் பதில் சொல்வதில்லை.\nஅப்பா இருந்தவரைக்கும் அவர் பேசுகிறாரோ இல்லையோ அம்மா பேசிக் கொண்டிருப்பாள். அப்பாவின் மறைவுக்குப் பிறகு தான் சாலாவின் வீட்டில் தங்கியிருந்த நாட்களில் அம்மாவுடன் பேச ஆளில்லை. சாலாவின் வீட்டில் பூஜையறைக்குள் தன்னுடைய இருப்பிடத்தை மாற்றிக் கொண்டாள். அதன்பிறகு அம்மா தன்னுடைய வாயை இறுக மூடிக்கொண்டாள். ஆனால் அவள் உள்ளுக்குள் ஏதோ பேசிக் கொண்டிருக்கிறாள் என்பதை அவளுடைய நடுங்கும் உதடுகள் காட்டிக்கொடுத்தன. அந்தச் சமயத்தில் தான் அம்மாவின் முகத்திலும் பாதத்திலும் சிறிய வெண்புள்ளிகள் தோன்றியிருக்கின்றன.\nசாலா என்னிடம் பேசியபோது சொன்னாள். அம்மாவின் நடவடிக்கையில் சில மாற்றங்கள் தெரிகிறது. இரவில் பூஜையறைக்குள்ளிருந்து பேசுகிற சத்தம் கேட்டுக் கொண்டிருக்கிறது. அவளுடைய கணவன் கேட்டிருக்கிறான். அவன் சாலாவிடம் சொல்லி இரண்டுபேரும் பூஜையறைக்குள் எட்டிப் பார்த்திருக்கிறார்கள். அம்மா சம்மணம் போட்டு உட்கார்ந்து அங்கேயிருந்த ராமர் பட்டாபிஷேகம், திருச்செந்தூர் முருகன், இருக்கண்குடி மாரியம்மன், அவர்களுடைய குலதெய்வமான நடுக்காட்டு கருப்பசாமி, சித்தி விநாயகர், சரஸ்வதி, லட்சுமி, பார்வதி, படங்களுக்கு முன்னால் பேசிக் கொண்டிருந்தாள். என்ன பேசிக் கொண்டிருந்தாள் என்று தெரியவில்லை.\nநான் என்னுடைய வீட்டுக்கு அம்மாவை அழைத்து வருமுன்னால் ஸ்டோர் ரூமாக இருந்த ஒரு அறையை பூஜை அறையாக மாற்றினேன். அம்மாவுக்காக சாமிப்படங்களையும் ஒரு குத்து விளக்கையும், அகல்விளக்குகளையும் வாங்கி வைத்தேன். என்னுடைய வீட்டில் எந்தச் சாமிப்படங்களும் கிடையாது. ஏஞ்சலின் கழுத்தில் தொங்கும் சிலுவையைத் தவிர மத அடையாளங்கள் எதுவும் கிடையாது. நான் நாத்திகன் இல்லை என்றாலும் அனுதினமும் கடவுளரை வணங்குவது தான் ஆத்திகம் என்றால் நான் ஆத்திகனும் இல்லை. வருடத்துக்கு ஒரு முறையோ இரண்டு முறையோ சர்ச்சுக்கும், சுற்றுலா சென்றால் அங்கேயிருக்கும் கோயில்களுக்கும் செல்கிற நடைமுறை மனிதன். ஏஞ்சலின் அலுவலகத்துக்கு மூன்று மதங்களின் சாமிகளும் இருக்கிற மாதிரி ஒரு படம் வேண்டும் என்றாள். அதையும் சேர்த்து வாங்கியிருந்தேன்.\nஅம்மா வீட்டுக்கு வந்ததும் முதல்வேலையாக பூஜையறையை ஒழுங்குபடுத்தினாள். என்றால் நான் மாட்டியிருந்த சாமிகளின் வரிசையை மாற்றினாள். விளக்கு வைத்திருந்த திசையை மாற்றினாள். தரையை மொழுகி கோலம் போட்டாள். ஊதுபத்தி, சாம்பிராணி, சூடன், இவைகளைப் பயன்படுத்தினாள். தோட்டத்தில் இருந்த செவ்வரளிச்செடியிலிருந்து பூக்களைப் பறித்துக் கட்டினாள். என்னிடம் விளக்குத்திரியும் எண்ணெயும் வாங்கி வரச்சொன்னாள். குத்துவிளக்கின் நான்கு திசைகளிலும் திரிகளைப் போட்டு எண்ணெய் ஊற்றி தீபங்களை ஏற்றினாள். சாமிப்படங்களுக்கு சந்தனமும் குங்குமமும் வைத்தாள். எல்லாப்படங்களின் தலையிலும் ஒரு செவ்வரளிப்பூவைச் சூட்டினாள். எப்போதும் வாய் முணுமுணுத்துக்கொண்டிருந்தது. முகத்தில் ஒரு அபூர்வமான திருப்தி இருந்தது. இந்த ஏற்பாட்டில் ஏஞ்சலின் அலுவலகத்துக்கென்று வாங்கியிருந்த மும்மதப்படமும் ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டது. அம்மாவின் முகத்தில் அந்தப் படங்களைப் பற்றி எந்த உணர்வுமில்லை. அவளுடைய உரையாடலில் யேசுவும், அல்லாவும் சேர்ந்து கொண்டார்கள். நான் அதைக் கழட்டி விடலாம் என்று ஏஞ்சலிடம் சொன்னேன். அவள் ஏற்கனவே அம்மாவின் பக்தி நடவடிக்கைகளினால் ஈர்க்கப்பட்டிருந்தாள். அம்மா செய்யும் ஒவ்வொரு காரியத்தையும் மிகுந்த பவித்திரத்தோடு அனுசரித்தாள். அதனால் அந்தப் படத்தை எடுக்கவேண்டும் என்ற என்னுடைய கோரிக்கையை அவள் நிராகரித்தாள். பதிலாக அவளும் பூஜையறையில் நின்று எல்லாசாமிகளையும் கும்பிட ஆரம்பித்தாள்.\nஎன்னுடைய வீட்டுக்கு அம்மா வந்த பிறகு அவளுடன் தினம் கொஞ்சநேரம் செலவு செய்யவேண்டும் என்று நினைத்திருந்தேன். அப்படியே முயற்சியும் செய்தேன். அம்மாவிடம் பேச முயற்சித்தபோது அம்மா கேட்டதுக்கு மட்டும் பதில் சொன்னாள். உடனே அந்த இடத்தை விட்டு போகவேண்டும் என்பதைப்போலவோ, விட்டு விட்டுப்போன உரையாடலைத் தொடர வேண்டும் என்ற அவசரத்துடனோ தான் பேசினாள். பலநேரம் இருவருக்குமிடையில் கனத்த மௌனம் உட்கார்ந்திருந்தது. எனக்குச் சலிப்பு வந்தது. அம்மாவை அவள் போக்கில் விட்டு விட்டேன். அம்மாவின் உடலில் வெண்புள்ளிகள் பரவ ஆரம்பித்தன. அம்மா அந்த வெண்புள்ளிகளைக் கண்டுகொள்ளவில்லை. எனக்கு அம்மாவின் கோதுமை நிறம் மாறி சிறுத்தைப்புலி மாதிரி புள்ளிகளுடன் இருக்கிற விநோதமான தோற்றம் ஒவ்வாமலிருந்தது. தோல் நோய் நிபுணரிடம் சென்று காட்டினோம். அவர் வெண்புள்ளி நோயைப் பற்றி ஒரு வகுப்பு எடுத்தார். அம்மா அவர் முகத்தையே பார்க்கவில்லை. அங்கே மாட்டியிருந்த கோகுலகிருஷ்ணன் படத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். அப்போதும் அவளுடைய உதடுகள் முணுமுணுத்துக் கொண்டிருந்தன.\nஅம்மா மங்கலான அந்த மஞ்சளொளியில் முகம் மலர்ந்து காணப்பட்டாள். அவளுடைய முகம் ஒவ்வொரு சாமியையும் நோக்கித் திரும்பியது. உதடுகளிலிருந்து ஏதேதோ சொற்கள் இடையறாத அருவியைப் போலக் கொட்டிக்கொண்டிருந்தன. என்ன பேசுகிறாள் என்று தெளிவாகவில்லை. அவ்வப்போது ஒரு தியானம் போல கண்களை மூடி மூடித் திறந்து கொண்டிருந்தாள். பேசுவதற்கிடையில் சிறு இடைவெளி விடுவாள். அந்த இடைவெளிக்கப்புறம் சரிதான் என்பதைப் போல தலையாட்டுவாள். சிலசமயம் புன்முறுவல் பூப்பாள். சிலசமயம் புருவங்களை உயர்த்துவாள். சிலசமயம் முகத்தைச் சுளிப்பாள். அவள் முகத்தின் அபூர்வமான பாவங்களை நான் கவனித்துக் கொண்டிருந்தேன். நான் கவனித்துக்கொண்டிருக்கிறேன் என்று தெரியுமோ தெரியாதோ அம்மா சுற்றிலும் என்ன நடக்கிறது என்ற உணர்வே இல்லாதமாதிரி அவள் ஒரு தனி உலகத்தில் இருந்தாள்.\nஅன்று இரவு பூஜையறையில் படுத்து கடவுளரோடு பேசிக் கொண்டிருந்த அம்மாவை எழுப்பினேன். அம்மா எழுந்து உட்காராமல் படுத்தபடியே,\n“ இது கூட தெரியலையா.. கடவுளோட பேசிக்கிட்டிருக்கேன்..”\n“ ஆமாடா.. ஏஞ்சலோட கடவுளோட கூட பேசினேன்..”\n“ ஏம்மா ராத்திரியில தூங்குற சாமிகளைத் தொந்திரவு பண்றே..\n“ டேய் நான் எங்க தொந்திரவு பண்றேன்.. அவங்களுக்குத் தூக்கம் வராமத்தான் என்னையக் கூப்பிட்டுப் பேசச்சொல்றாங்க.. மத்தவுங்க மாதிரி இல்லைடா.. சொல்றதை காது கொடுத்துக் கேக்கறாங்கடா ” அதைச் சொல்லும்போது அம்மாவின் கண்களில் ஒரு மின்னல் தோன்றி மறைந்தது.\nநன்றி - தமிழ் இந்து தீபாவளி மலர்\nLabels: udhayasankarwriter, இலக்கியம், உதயசங்கர், சிறுகதை, தமிழ் இந்து\nஅதிகாலை நான்கு மணி அலாரம் அடித்தது. விநாயகத்துக்கு எங்கேயோ தூரத்தில் கேட்பதைப் போலிருந்தது. விழிப்பு வந்து விட்டது. ஆனால் கண்களைத் திறக்கமுடியவில்லை. தலை கிறுகிறுத்தது. படுக்கையில் எழுந்து உட்காரமுடியவில்லை. விநாயகம் தலையை உலுக்கினான். கண்களை இறுக்கிப்பூட்டிக் கொண்டதைப்போல இருந்தது. கஷ்டப்பட்டு கண்களைத் திறந்தால் எதிரே இருந்த பொருட்கள் எல்லாம் சுற்றிக் கொண்டிருந்தன. இன்னக்கி பேப்பர் போட்ட மாதிரி தான். லேட்டாகிவிட்டால் ஏஜெண்ட் சிங்காரம் மூஞ்சியைத் தூக்கி முகரையில் வைத்துக் கொள்வான். அலாரம் தானாக அடித்து ஓய்ந்தது. கண்களைக் கசக்கினான். சீரான மூச்சு விடமுடியவில்லை. மூக்குத்துவாரத்தில் ஏதோ ஒட்டிக்கொண்டிருந்த மாதிரி உணர்வு. விரல்களால் துழாவினான். கையில் ஒரு பூந்தி சிக்கியது. நேற்று இரவு செம பார்ட்டி. குணாளனுக்கு வேலை கிடைத்ததற்காக நண்பர்களுக்குக் கொடுத்தான். விலையுயர்ந்த விஸ்கி. பேர் கூட எதோ பகார்டியோ சிக்னேச்சரோ. போதை ஏறுவதே தெரியவில்லை. உட்கார்ந்திருந்தவரை சாதாரணமாக இருந்தது. எழுந்தால் அப்படியே இந்தப்பக்கமும் அந்தப்பக்கமும் லாத்தியது. இரண்டு புல்லை மூன்று பேர் சேர்ந்து குடித்தால் பின்ன எப்படி இருக்கும்\nஎப்படியும் வாரம் ஒருமுறை ஏதாவது ஒரு காரணத்துக்காகப் பார்ட்டி நடக்கும். குணாளனுக்குப் பிடித்த கதநாயகி நடித்த படம் வந்தால் பார்ட்டி. ராஜாவின் வீட்டுக்கு எதிர்வீட்டு ஆண்ட்டி அவனிடம் ஒரு வார்த்தை பேசிவிட்டாள் என்று பார்ட்டி. அவன் அந்த ஆண்ட்டியை இரண்டு வருடமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறான். விநாயகம் பேப்பர் போடும்போது ரோஸ்லின் எதிரே வந்து அவனிடம் பேப்பரை வாங்கிவிட்டால் பார்ட்டி. வீட்டில் எல்லோரும் ஊருக்குப் போய்விட்டால் பார்ட்டி. அவர்கள் யாருக்கும் வேலை கிடைக்கவில்லையே என்ற கவலையில் பார்ட்டி. யாருக்கும் காதல் செட்டாகவில்லையென்று பார்ட்டி. சனிக்கிழமை வந்தால் பார்ட்டி. சிலநேரம் காரணமே இல்லாமலும் பார்ட்டி நடக்கும். அநேகமாக அவர்கள் சந்திக்கும்போதெல்லாம் பார்ட்டியைப் பற்றிப் பேசுவார்கள் அல்லது பார்ட்டியைப் பற்றிப் பேசுவதற்காகச் சந்திப்பார்கள். ஆனால் நேற்று சரியான சரக்கு என்று நினைத்துக் கொண்டான். ராஜா கூட எழுந்து நடப்பதற்கே சிரமப்பட்ட விநாயகத்தை\n” ழேய்.. படுத்துட்டு காலைல போழா.தாயோளி “ என்று சொன்னான். விநாயகம் இடது பக்கத்திலிருந்து வலது பக்கச்சுவரில் போய் முட்டிக்கொண்டு,\n“ பேப்பர் யார்ழா போடுவா பேக்கூதி…” என்று சொன்னான். அதைக்கேட்ட குணாளன்,\n“ கவிதை..கவிதை..ஹா ஹா ஹ்ஹாஹா “ என்று சிரித்துக்கொண்டே அப்படியே மிக்சர், பூந்தி, சிதறலுக்கு மேலேயே :சாய்ந்து உடனே குறட்டை விட்டான்.\nவிநாயகம் சைக்கிளை எடுத்துக் கொண்டு மிதித்தான். எப்படியோ நள்ளிரவில் சாக்கடைஓரம் மேய்ந்து கொண்டிருந்த பன்னி மேல் விடாம���்., அவன் சைக்கிளில் வருகிற சீரைப்பார்த்து குலைத்த நாயினைப் பார்த்து விடாமல். தெருவில் முதல் வீட்டிலிருந்த அன்னமக்கா வீட்டுச் சுவரில் முட்டாமல், தெருவில் கட்டில் போட்டு படுத்திருந்த சுப்புத்தாத்தா மேல் விடாமல் வீட்டுக்கு முன்னாலிருந்த சாக்கடையில் விழாமல். வீட்டு வாசலுக்கு முன்னால் சைக்கிளைக் கீழே போட்டு விழுந்தான். விழுந்த இடத்தில் செமிக்காததைத் தின்ற நாய் கத்தலும் கதக்கலுமாக கக்குவதைபோல ஓங்கரித்து கொஞ்சம் வாந்தியெடுத்தான். அவ்வளவு தான். எப்படியோ அவன் கதவைத்திறந்து உள்ளே போய்விட்டான். அரவம் கேட்டு முழித்த அம்மாவின் கேள்விக்கு ஏதோ பதில் சொல்லிவிட்டு தரையில் எதையும் விரிக்காமலேயே விழுந்து உறங்கிவிட்டான்.\nஎழுந்து நடக்கும்போது லேசாகத் தள்ளாடத்தான் செய்தது. பின்வாசலுக்குப் போய் முகத்தில் தண்ணீரை அடித்தான். கொஞ்சம் தன் உஷார் வந்தது. பல்லைத்தேய்த்தான். கக்கூஸ் போனான். முக்கி முக்கிப்பார்த்தும் ஒன்றும் ரிசல்ட் இல்லை. வயிறு கல் மாதிரி இருந்தது. போட்டிருந்த பேண்டையும் சட்டையையும் கழட்டி கொடியில் போட்டு விட்டு சார்ட்ஸையும், டி சர்ட்டையும் எடுத்துப்போட்டான். வீட்டை விட்டு வெளியே சைக்கிளைத் தள்ளிக்கொண்டு வந்தான். தெருவிளக்கின் ஒளி மங்கத்தொடங்கியிருந்தது. வானத்தில் சாம்பலைக் கரைத்துத் தெளித்த மாதிரி திட்டுத்திட்டாய் வெள்ளைநிறம் படரத்தொடங்கியிருந்தது. தெரு முக்கில் ஒட்டப்பட்டிருந்த சினிமா போஸ்டரில் குனிந்து மார்பைக் காட்டிக் கொண்டிருந்த நாயகியைப் பார்த்ததும் ரோஸ்லின் ஞாபகம் வந்தது. அவள் ஒல்லிக்குச்சி. மார்பே இல்லாதது போல தட்டையாக இருப்பாள். ஆனால் முகம் அவ்வளவு லட்சணம். அவ்வளவு சாந்தம். பெரிய கண்களும், அளவான மூக்கும், செதுக்கி வைத்தமாதிரி உதடுகளும், ஓவியப்பெண்ணின் முகம் மாதிரி இருக்கும். அவளுடைய சாந்தமான முகபாவம் ஒரு ஆழ்ந்த உணர்வைத்தரும். ஏதோ மிகப்பெரிய ரகசியங்கள் அவள் பாதுகாப்பில் இருப்பதைப் போல தன்னம்பிக்கையுடன் அவளுடைய பார்வை இருக்கும். அவள் கண்களைப் பார்க்க அவனுக்குக் கூசும். பேப்பரை வாங்க நீட்டும் மெலிந்த கையையும் பிஞ்சாய் நீளும் விரல்களையே பார்த்திருக்கிறான். அந்த விரல்களுக்குரியவள் நிச்சயமாய் நல்லவளாகத்தான் இருப்பாள்.\nஐந்து மணிக்கு கட்டை���்பிரித்து எடுத்துக்கொண்டு ஏரியாவுக்குப் போனால் நூத்தைம்பது பேப்பர்களையும் போட்டு விட்டு வருவதற்கு ஏழு மணியாகிவிடும். வந்து குளித்துச் சாப்பிட்டு விட்டு கமிஷன் கடைக்குப்போய் சிட்டையை எடுத்துக்கொண்டு வசூலுக்குப் போகவேண்டும். இராத்திரி எட்டு மணிவரை வசூல் தான். அதன்பிறகு அவன் உலகம் தனி.\nஎல்லாப்பொருட்களும் மங்கலாகத் தெரிந்தன. எல்லாம் அசைந்து கொண்டேயிருந்தன. எதுவும் ஓரிடத்தில் நிற்கவில்லை. நல்லவேளை தெருத்திருப்பத்தில் ரோட்டில் கிடந்த ஒருவனின் மீது சைக்கிளை ஏற்றி விட்டிருப்பான். கடைசி நொடியில் பிரேக் பிடித்து நின்று விட்டான். ஊரே போதையில் இருப்பதைப்போல இருந்தது. சிரித்துக்கொண்டான். சைக்கிளை மிதித்துக்கொண்டே அவனுக்குப் பிடித்த சினிமாப்பாட்டை முணுமுணுத்தான்.\nகாதலின் தீபமொன்றை ஏற்றினாளே என் நெஞ்சில்\nஊடலில் வந்த சொந்தம் கூடலில் தந்த இன்பம்\nஅவன் கண்முன்னால் ரோஸ்லினின் முகம் தெரிந்தது. சைக்கிள் வலதுபக்கம் திரும்பி மெயின்ரோட்டுக்குப் போகவேண்டும். ஆனால் சைக்கிள் இடது பக்கம் திரும்பியது. அருகில் இருந்த மதுரைக்காரங்க வளவு இருந்த சந்துக்குள் திரும்பியது. அதிலிருந்து வெளியே வந்தால் அன்னமக்கா வீடுதான் முதலில் வரும். கொஞ்சதூரத்தில் சுப்புத்தாத்தா கட்டிலில் படுத்திருந்தார். நாய் நிமிர்ந்து பார்த்து விட்டு தலையைக் கவிழ்த்துக் கொண்டது. சைக்கிள் அவனுடைய வீட்டின் முன்னால் போய் நின்றது. அவன் தலையைக் குலுக்கிக் கொண்டு அடச்சே.. என்ன யோசனை மறுபடியும் வீட்டுக்கு வந்து நிக்கிறேன். என்று நினைத்தபடி சைக்கிளைத் திருப்பினான். மறுபடியும் அந்தப் பாட்டைப் பாடிக் கொண்டே போனான்.\nகாதலின் தீபமொன்றை ஏற்றினாளே என் நெஞ்சில்\nஊடலில் வந்த சொந்தம் கூடலில் தந்த இன்பம்\nமயக்கமென்ன என்ற வார்த்தையை உச்சரிக்கும்போது சைக்கிள் வலது பக்கம் திரும்புவதற்குப் பதில் இடது பக்கமே திரும்பியது. மறுபடியும் மதுரைக்காரங்க வளவு இருந்த சந்து வழியாக அன்னமக்கா வீடு , கட்டிலில் படுத்திருந்த சுப்புத்தாத்தா தலையை மட்டும் தூக்கும் நாய், என்று சுழன்றது. அவன் சைக்கிளை வீட்டுக்கு முன்னால் நிறுத்தினான். போதையினால் தான் இப்படி ஒரே இடத்தைச் சுற்றிக் கொண்டிருக்கிறோமா. நேரம் வேறு ஆகிக்கொண்டே போகிறது. தெருவின் இரண்டு முனைகளையும் உற்றுப்பார்த்தான். நடந்து போய் திரும்பினான். வலது பக்கம் மெயின்ரோடு தெரிந்தது. வாகனங்கள் போவது தெரிந்தது. கந்தன் டீக்கடையிலிருந்து புகை வந்து கொண்டிருந்தது. இடது பக்கம் பார்த்தான். மதுரைக்காரங்க வளவிலிருந்த வீடுகளில் ஆட்கள் நடமாட்டம் தெரிந்தது. திரும்பி வந்தான். சைக்கிளை எடுத்துக் கொண்டு பாட்டை பாடாமல் மிதித்தான். ஆனால் மனம் அந்த இசையை விடாமல் உள்ளுக்குள் இசைத்துக் கொண்டிருந்தது. சரியாக மயக்கமென்ன என்ற வார்த்தையின் இசைத்துணுக்கு வரும்போது சைக்கிள் இடது பக்கமே திரும்பியது. மதுரைக்காரங்க வளவு இருந்த சந்துக்குள் நுழைந்தது. அன்னமக்கா வீட்டு வழியே, சுப்புத்தாத்தாவைக் கடந்து நாயைத்தாண்டி வீட்டு வாசலில் வந்து நின்றது.\nஅவன் குழம்பிப்போனான். சைக்கிளை நிறுத்திவிட்டு விளக்குக்கம்பத்தின் அடியிலிருந்த திண்டில் உட்கார்ந்தான். தெளிவாக யோசித்தான். எல்லாம் சரிதான். சைக்கிள் தன்னிச்சையாக யோசித்து முடிவெடுக்கிறதா. அவனுடைய போதையின் குழப்பமா இந்த முறை மிகக்கவனமாக அடிமேல் அடிவைத்து சைக்கிளைத் தள்ளிக்கொண்டு போனான். ஆனால் மறுபடியும் இடது பக்கமே திரும்பினான். வீட்டுக்கு முன்னால் வந்ததும் ஆத்திரமும் கோபமும் வந்தது. உண்மையிலேயே என்ன நடக்கிறது என்று புரியவில்லை.\n“ ங்ஙோத்தாலோக்க… என்னடா நடக்குது\nஎன்று கத்தினான் விநாயகம். அப்போது தெருவின் வலது பக்கத்திலிருந்து ஒரு குரல் வந்தது.\n“ எவண்டா என்னைய திட்டுனது…ஒம்மாளோக்க..” ஒரு ஆள் தள்ளாடித் தள்ளாடி தெருவை அளந்து கொண்டே வந்தான். அவன் இடுப்பில் கட்டியிருந்த சாரம் நிப்பமா விழுவமா என்கிற மாதிரி இருந்தது. மேலே இருந்த பச்சை நிற வார்ப்பெல்ட்டினால் மட்டுமே நின்று கொண்டிருந்தது. மேலே சட்டை முழுவதும் சாக்கடை ஒட்டியிருந்தது. ஒருவேளை தெருமுக்கில் விழுந்து கிடந்த ஆளோ. முன்பின் பார்த்திராத ஆளாகத் தெரிந்தான். அவனுடைய முகம் சுமூகமாக இல்லை. வயிற்றில் ஏற்பட்ட எரிச்சல் முகத்தில் தெரிந்தது. விநாயகம் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தான். நேரே அவனுக்கு முன்னால் வந்து,\n“ ஏலே மயிராண்டி இங்க என்னல பண்றே.. என் வீட்டுக்கு முன்னால உனக்கென்னலே சோலி..”\n“ அண்ணே இது என் வீடுண்ணே… போங்கண்ணே உங்க வீட்டைத் தேடுங்க..”\n“ அதைத்தான்லே இவ்வள நேரம் தேடிக் கண்டுபிடிச்சிருக்கேன்.. திரும்பப்போய் தேடச்சொல்றியா..ங்ஙோத்தா.”\nவிநாயகத்துக்கு எரிச்சலாக வந்தது. ஏற்கனவே தெருவை விட்டு வெளியேற முடியவில்லை என்ற ஆத்திரம் வேறு. ஞாயிற்றுக்கிழமை பேப்பர் போகவில்லையென்றால் அவ்வளவு தான். பெரிய கலவரமே நடந்து விடும்.\n“ கொஞ்சம் பேசாம போறீங்களா.. நானே கடுப்பில இருக்கிறேன்..” என்று சொல்லி முடிக்கும் முன்னால் அந்த ஆள் இடுப்பில் இருந்து எதையோ உருவி அவனை வயிற்றில் சொருகி விட்டான்.\n“ கடுப்பில இருக்கானாம் மயிரு.. யார்ட்ட..”\nவிநாயகத்துக்கு வயிற்றின் இடது பக்கம் கூரான வலி பெருகி ரத்தம் களகளவென வழிந்தது. அவன் வயிற்றைப்பிடித்துக் கொண்டே,\n“ ஐயோ யாராச்சும் வாங்களேன்.. அம்மா.. அப்பா.. “\nஎன்று கத்தினான். விநாயகத்தின் சத்தத்தைக் கேட்டு அவன் கையில் இருந்த கத்தியை மறுபடியும் வீசினான். அது ரோட்டில் படுத்திருந்த நாயின் மீது விழுந்தது. அது காள் என்று கத்திக்கொண்டு எழுந்து ஓடியது.. அந்த ஆள் இடுப்பில் கட்டியிருந்த பெல்ட்டைக் கழட்டினான். விநாயகத்தை மாறி மாறி அடித்தான்.\n“ என்னலே சவுண்டு விடுறே.. தேவடியாமவனே..”\nவிநாயகம் கதறினான். அவனால் எழுந்து நடக்க முடியவில்லை. இருந்த இடத்திலேயே அப்படியே நகர்ந்து விழுகிற பெல்ட் அடிகளுக்கு முதுகைக் காட்டிக் கொண்டிருந்தான். நல்லவேளை. அந்த ஆளுக்கு கை ஓய்ந்து விட்டது. கீழே விழுந்த சாரத்தை எடுக்கக் குனிந்தான். அதை எடுத்ததாக நினைத்து பாவனையாக இடுப்பில் சொருகினான்.\n“ ராத்திரியிலிருந்து என் தெருவையும் வீட்டையும் காணோம்… ஓத்தலக்க எங்க போச்சுன்னு தெரியல.. இவனுங்க வேற.. “ என்று புலம்பிக்கொண்டே போனான்.\nவிநாயகத்துக்கு மயக்கம் வந்தது. கடகடவென பொழுது புலர்ந்து விட்டது. வெளிச்சம் பரவியது. விநாயகத்தின் கண்ணிமைகளை யாரோ இழுத்து மூடுவதைப் போலிருந்தது. விநாயகம் கடைசியாக கண்களைத் திறந்து பார்க்கும்போது அவன் போடுகிற பேப்பர் ஏஜெண்ட் சிங்காரத்தின் பெயர்ப்பலகை அடித்த கதவுகளைப் பார்த்தான்.\nஅந்த எழுத்துகள் கொஞ்சம் கொஞ்சமாக மங்கிக்கொண்டே வந்தன.\nநன்றி - சொல்வனம் இணைய இதழ்\nLabels: udhayasankarwriter, இலக்கியம், உதயசங்கர், சிறுகதை, சொல்வனம்\nபனிரெண்டு சிறுகதைத் தொகுதிகள்,ஒரு குறுநாவல் தொகுதி, ஐந்து கவிதைத் தொகுதிகள், பத்தொன்பது குழந்தை இலக்கிய நூல்கள்,எழுபது மொழிப��யர்ப்பு நூல்கள், ஆறு கட்டுரை நூல், தமுஎகசவில் மாநிலத் துணைப்பொதுச்செயலாளர். தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத்தலைவர்\nதுண்டிக்கப்பட்ட தலையில் சூடிய ரோஜாமலர்\nஇந்துக்களின் புனித நூல் எது\nபிராமணிய மேல்நிலையாக்கமும் பண்பாட்டு அழிப்பும்\nமனிதநலம் காக்கும் ஹோமியோபதி மருத்துவம்-2\nகாட்டு வாத்தாகச் சிறகை விரித்த கவிதை\nகத்தரிக்காய் குள்ளனும் கழுகுமலை பூதமும் - நாடோடிக்கதை\nகத்தரிக்காய் குள்ளனும் கழுகுமலை பூதமும் உதயசங்கர் ஒரு ஊரில் ஒரு பாட்டியும் தாத்தாவும் தனியாக வாழ்ந்து வந்தார்கள். அவர்களுக்கு எட்டு மக...\nஇந்துக்களின் புனித நூல் எது\nஇந்துக்களின் புனித நூல் எது உதயசங்கர் உலகிலுள்ள எல்லாப்பெருமதங்களுக்கும் ஒரு புனிதநூல் இருக்கிறது. கிறித்துவத்துக்கு பைபிள் என...\nசூரியனும் குட்டிக்குட்டிக்குருவிக்குஞ்சும் உதயசங்கர் காலை விடிந்தது. சூரியன் கண்களை மெல்லத் திறந்து உலகத்தைப் பார்த்தான். வெளிச்சத்தின...\nமின்னுவின் ஆசை உதயசங்கர் மின்னு சுண்டெலி தப்பித்ததே பெரிய காரியம். ஒரு விநாடி தாமதம் ஆகி இருந்தால் அவ்வளவு தான். வெள்ளைப்பூனை லபக் என்...\nபிராமணிய மேல்நிலையாக்கமும் பண்பாட்டு அழிப்பும்\nபிராமணிய மேல்நிலையாக்கமும் பண்பாட்டு அழிப்பும் உதயசங்கர் இப்போதெல்லாம் பெரும்பாலான நாட்டார் தெய்வக்கோவில்களில் கும்பாபிஷேகம் நடக...\nகுறள் அறமும் மனு (அ)தர்மமும் - (ஆய்வுக் கட்டுரை)\nஇட ஒதுக்கீடல்ல மறுபங்கீடு - ஆதவன் தீட்சண்யா உரை\nதமிழ்நாடு கிராம வங்கியை சீர்குலைக்கும் அதன் நிர்வாகம்\nஎன் 'கால்' கதை தெலுங்கில்\nபார்த்த படத்தை மறுபடி பார்க்க, படித்த கதையை மீண்டும் படிக்க விரும்புவதன் உளவியல்\nபுதுப்பேட்டை 15 ஆவது ஆண்டு நிறைவு\nமாநில திரைப்பயண நிறைவு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/130624/", "date_download": "2021-10-19T12:14:33Z", "digest": "sha1:T2W6I3ENYM23YRLJ5456GQN66CEFQV5U", "length": 20396, "nlines": 134, "source_domain": "www.jeyamohan.in", "title": "துளி,மொழி,வேரில் திகழ்வது -கடிதங்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nவாசகர்கள் வாசகர் கடிதம் துளி,மொழி,வேரில் திகழ்வது -கடிதங்கள்\nவேரில் திகழ்வது கதை ஒரு குறுநாவல். ஆனால் அதன் வேகம் காரணமாக அதை வாசித்ததே தெரியவில்லை. உண்மையைச��� சொல்லப்போனால் சிற்றிதழ்களில் கதைகளை வாசிப்பதை மிகவும் குறைத்திருந்தேன். கதைகளில் வாழ்க்கை இருக்கிறது, ஆனால் சுவாரசியம் இல்லை. கதைகள் அப்படியே வாழ்க்கையின் யதார்த்ததைச் சொன்னால்போதாது. அதை கதையாக ஆக்கவேண்டும்.\nஜானகிராமனின் எல்லாச் சிறுகதைகளும் சுவாரசியமான கதைகள். கதை என்பதற்குள் ஒரு விளையாட்டு உள்ளது. எழுதுபவனும் வாசிப்பவனும் சேர்ந்து ஆடும் ஆட்டம் அது. அந்த ஆட்டம்தான் சுவாரசியமாக்குகிறது. அது இந்தக்கதைகளில் இருக்கிறது. எல்லாக் கதைகளுமே சலிப்பில்லாமல் வாசிக்கவைப்பவையாக இருக்கின்றன. அதற்கு எல்லாவகையான உத்திகளையும் கையாள்கிறீர்கள். கதைகளில் உள்ள இந்த பரபரப்பான கதையோட்டம் மிகமிக முக்கியமான அம்சம் என நினைக்கிறேன்.\nஅந்தக்கதையிலுள்ள உணர்ச்சியான ஆன்மீகமான விஷயங்கள் எல்லாம் அதற்கு பிறகுதான். தன் மகள் பெரியவளானதும் மனைவியை மன்னிக்கப்போன ரொசாரியோவின் உணர்ச்ச்சிதான் கதையில் மையம். ஆனால் அது மிகச்சுவாரசியமான ஒரு வாழ்க்கைச்சூழலுக்குள் நிறுத்தப்பட்டிருக்கிறது\nவேரில் திகழ்வது கதையைப் படித்தேன்.\nமேசையிலிருந்த ரொசாரியோவின் படத்தைக் கண்டு திகைத்து தந்தையைக் கட்டியணைத்த அழுத தருணம் இச்சிறுகதையின் உச்சம். ஒவ்வொரு உயிரினமும் தமக்கே உரிய நுண்ணுர்வுடன் துலங்கும் உலகு புலப்பட்டது. அவ்வாறான நுண்ணுணர்வுக்கான பெயர்களில் ஒன்று அல்லது தலையாயதுதான் தன்னைப் பிறிதொன்றாக எண்ணுதல். அந்த நுண்ணுணர்வின் ஆயிரம் பெயர்களின் அன்பு கூட ஒன்றாக இருக்கலாம்.\nதுளி சிறுகதையையும் இடம் சிறுகதையையும் வீட்டில் வாசித்துக் காட்டினேன். மிகப்பெரிய கொண்டாட்டம். எங்களுக்கு திருநெல்வேலிதான். ஆகவே இந்தப் பேச்சுமொழி தெரிந்ததுதான். தாத்தா பேசுவது போலவே இருக்கிறது என்று என் மகள் சொன்னாள்.\nநான் சின்ன வயசில் வாசித்த கதைகளில் சுந்தர ராமசாமியின் சிலகதைகள் இதேபோல அபாரமான சிரிப்பும் அதற்கு அப்பால் ஒரு ஆழமும் கொண்ட கதைகள். பிரசாதம் ஒரு சிறந்த உதாரணம். நீங்கள் சுட்டிக்காட்டிய லவ்வு இன்னொரு உதாரணம். இந்தக்கதைகள் அந்த உலகைச் சேர்ந்தவை. மேலும் ஆழமான ஒரு ஆன்மிக தரிசனத்தை கொண்ட கதைகள் இவை\nஇப்போது தங்கள் தளத்தில் வெளியிட்டுவரும் சிறுகதைகளை தொடர்ந்து வசித்துவருகிறேன் . இந்த lockdown இறுக்கத்தில் உங்கள் கதை���ள் தரும் ஆசுவாசம் சொல்லி முடியாது. எனக்கு பிடித்த கதைகளாக ‘இடம்’ மற்றும் ‘மொழி’ யை குறிப்பிடுவேன். இடம் சிரித்து முடியவில்லை . மொழி நுணுக்கமாக மொழியை தாண்டிய தொடர்படுத்துதலை குறிப்பதாக எண்ணிக்கொண்டேன். அந்த சிறுகதையை என் மனைவியை வாசிக்க சொன்னேன். குழந்தை மாட்டிக்கொள்வது என்ற வுடன் பதறி வாசிக்க மறுத்தாள் . இல்லை முழுக்க வாசி என்று கட்டாயப்படுத்தவுடன் வாசித்து பேசிக்கொண்டே இருந்தாள் .\nகோவை கவிதைவிவாதம் – கடிதம்\nஅக்டோபர் 2 காந்தி ஜெயந்தி நிகழ்வு – குக்கூ காட்டுப்பள்ளி\nவடுகூரும் தோத்தாத்ரியும்- கடலூர் சீனு\nவிஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் (அமெரிக்கா) – செயல்பாடுகள்\nவெண்முரசு விவாதஅரங்கு - பல்லடம்\nஅஞ்சலி உரை : ஆற்றூர் ரவிவர்மா\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி கி.ராஜநாராயணன் கோவை ஞானி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உணவு உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் தொல்லியல் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் நகைச்சுவை நேர்காணல் நேர்காணல் மற்றும் பேட்டிகள் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பிறர் படைப்புகள் நூல் மதிப்புரை மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் மதிப்புரை விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் க��ராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெண்முரசு – ஒலிவடிவம் வெண்முரசு – வாசகர் கடிதம் வெண்முரசு – வாசகர் மதிப்புரை வெண்முரசு ஆவணப்படம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnppgta.com/2019/12/7.html", "date_download": "2021-10-19T12:22:25Z", "digest": "sha1:UEXDR4GVU7RTVU66IYMNGESTFCEMN3SF", "length": 7927, "nlines": 108, "source_domain": "www.tnppgta.com", "title": "விவசாய நகைக்கடனை இனி 7% வட்டியில் வழங்கக்கூடாது - வங்கிகளுக்கு மத்திய அரசு உத்தரவு", "raw_content": "\nHomeGENERALவிவசாய நகைக்கடனை இனி 7% வட்டியில் வழங்கக்கூடாது - வங்கிகளுக்கு மத்திய அரசு உத்தரவு\nவிவசாய நகைக்கடனை இனி 7% வட்டியில் வழங்கக்கூடாது - வங்கிகளுக்கு மத்திய அரசு உத்தரவு\nவிவசாய நகைக்கடனை, 7 சதவீத வட்டியில் வழங்கக்கூடாது என வங்கிகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. நாடுமுழுவதும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் 4 சதவீதம் வட்டிக்கு விவசாய நகைக்கடன் வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. இதன்படி வாடிக்கையாளர்கள் ரூ.1 லட்சம் வரை நகைகளை அடகு வைத்து கடன் பெற கையொப்பமிட்டு உறுதிமொழி பத்திரம் தாக்கல் செய்தால் போதும். அரை மணிநேரத்தில் நகைக்கடன் பெற முடியும். மேலும் இதே வட்டியில் ரூ.3 லட்சம் வரை கடன் பெற விவசாய நிலங்களின் விபரங்களை வழங்கவேண்டும். அது தொடர்பான கரத்தீர்வை ரசீதுகளை தாக்கல் செய்ய வேண்டும்.\nஇந்த கடன் திட்டத்தில் 9 சதவீத வட்டிக்கே விவசாய நகைக்கடன் வழங்கப்படுகிறது என்றாலும், அதில் 5 சதவீதம் மத்திய அரசு மானியமாக வங்கிகளுக்கு வழங்கும் நடைமுறை செயல்பாட்டில் இருந்து வருகிறது. விவசாய நகைக்கடன் பெறுகின்றவர்களில் பெரும்பாலானவர்கள் உண்மையான விவசாயிகள் அல்ல என்பது தொடர்பான புகார்கள் அதிக அளவில் சென்ற நிலையில் இது தொடர்பாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது. இந்த நகைக்கடன் திட்டம் உண்மையான விவசாயிக்கு மட்டுமே கிடைக்கிறது என்பதை உறுதி செய்ய இனி ‘கிசான் கிரெடிட் கார்டு’ வழியாக மட்டுமே ���டன் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே கிசான் கிரெடிட் கார்டு ஆதார் அட்டையுடன் இணைக்க உத்தரவிடப்பட்டது.\nஇந்நிலையில், மத்திய வேளாண்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், 11 சதவீத நகைக்கடன் வட்டியில் வழங்கப்பட்டு வந்த 4 சதவீத மானியம் நிறுத்தப்படுகிறது. அக்டோபர் 1-ம் தேதி முதல் வழங்கப்பட்ட விவசாய நகைக்கடன் வட்டியை உயர்த்தி, 2020 ஏப்ரல் 1-ம் தேதிக்குள் வசூலிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விவசாயிகளுக்கான விவசாய நகைக்கடன் வட்டியும் 7 சதவீதத்தில் இருந்து 9.25 சதவீதம் முதல் 11 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. ரூ.3 லட்சம் வரையிலான குறுகிய கால கடனுக்கு 9.25 சதவீத வட்டியும், ரூ.3 லட்சத்திற்கு மேலான கடனுக்கு 9.50 சதவீத வட்டியும் வசூலிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. விவசாயிகளாக இல்லாதவர்களும் விவசாய நகைக்கடன் பெற்று வருவதாக வந்த புகாரில் நடவடிக்கை என தகவல் தெரிவிக்கப்படுகிறது.\nஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தங்களது...மாத ஊதியத்தை (pay slip) Mobile மூலம் பதிவிறக்கம் செய்வது எப்படி \nFLASH NEWS-பாலிடெக்னிக் TRB தேர்வுக்கான அட்டவணை வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%8B/", "date_download": "2021-10-19T11:22:35Z", "digest": "sha1:GBBQM5BF7RYBOIQ5VWNR5TWU7EVHTCXF", "length": 11407, "nlines": 130, "source_domain": "ilakkiyainfo.com", "title": "கட்டுநாயக்க திரும்பிய போர்க்குற்றவாளியான பிரிகேடியர் பின்கதவால் தப்பிச் சென்றார் | ilakkiyainfo", "raw_content": "\nHome»உள்நாட்டு செய்திகள்»கட்டுநாயக்க திரும்பிய போர்க்குற்றவாளியான பிரிகேடியர் பின்கதவால் தப்பிச் சென்றார்\nகட்டுநாயக்க திரும்பிய போர்க்குற்றவாளியான பிரிகேடியர் பின்கதவால் தப்பிச் சென்றார்\nதுருக்கியில் இருந்து நாடு திரும்பும் பிரிகேடியர் தேசப்பிரிய குணவர்த்தனவைக் கைது செய்யக் கோரி, கட்டுநாயக்க விமான நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், அவர் பின்கதவால் வெளியேறி தப்பிச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nசுத்தமான குடிநீர் கேட்டு போராட்டம் நடத்திய ரதுபஸ்வெல பொதுமக்கள் மீது வெலிவேரியவில் துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டவர் பிரிகேடியர் தேசப்��ிரிய குணவர்த்தன.\nஇந்தச் சம்பவத்தில் மூன்று பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் 35 இற்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.\nஇதுதொடர்பாக சிறிலங்கா மனித உரிமை ஆணைக்குழு நடத்திய விசாரணைகளில் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் உறுதிப்படுத்தப்பட்டது.\nஎனினும் முன்னைய அரசாங்கத்தினால், துருக்கியில் உள்ள சிறிலங்கா தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகர் பதவி வழங்கப்பட்டதுடன், சட்டநடவடிக்கைகளில் இருந்து பாதுகாப்பும் அளிக்கப்பட்டது.\nஅதையடுத்து, துருக்கி சென்றிருந்த அவர், தனது ஒரு ஆண்டு பதவிக்காலம் முடிந்து இன்று நாடு திரும்பினார்.\nபோராட்டத்தில் ஈடுபட்ட பௌத்த பிக்கு. படம்- லங்காதீப\nஅவர் நாடு திரும்பும் தகவல் அறிந்து, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து அவரைக் கைது செய்ய வேண்டும் என்று கோரி, தெரிப்பக சிறிதம்ம தேரர் உள்ளிட்டோர், கட்டுநாயக்க விமான நிலையம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇதையறிந்து பிரிகேடியர் தேசப்பிரிய குணவர்த்தன, இரகசியமான விமான நிலையத்தின் பின்புறக்கதவின் ஊடாக வெளியேறி, போராட்டக்காரர்களின் பிடியில் இருந்து தப்பிச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nபிரிகேடியர் தேசப்பிரிய குணவர்த்தன, வன்னியில் இறுதிப் போரில், போர்க்குற்றங்களை இழைத்த மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தலைமையிலான 58ஆவது டிவிசனின் ஒரு பிரிகேட்டுக்கு கட்டளைத் தளபதியாக இருந்த போர்க்குற்றவாளி என்பதும் குறிப்பிடத்தக்கது.\nகொழும்பு தொட்டலங்க பகுதியில் இரு சடலங்கள்\nமட்டு கரடியனாறு பகுதியில் ஒன்றில் அடித்து கொலை செய்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு\n“13 வயதான சிறுமியை ஒன்றரை வருடங்களாக வன்புணர்ந்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தில் ஒருவர் கைது\nகொழும்பு தொட்டலங்க பகுதியில் இரு சடலங்கள்\nகாரைநகர் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட தமிழக மீனவர்கள் ; படகு மூழ்கியதில் ஒருவர் மாயம் – இருவர் மீட்பு\nநீர் மூழ்கி கப்பலூடாக வடகொரியா ஏவுகணை பரிசோதனை\nஇலங்கையில் பாடசாலைகள் திறக்கப்படாமையால் ஏற்படப்போகும் தாக்கங்கள் குறித்து உலக வங்கியின் எதிர்வுகூறல்\nமட்டு கரடியனாறு பகுதியில் ஒன்றில் அடித்து கொலை செய்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு\nஆப்கானிஸ்தானில் தாலிபனின் தேன் நிலவு முடிந்தது – இனி அதன் முன்னுள்ள சவால்கள் என்ன\n‘செப்டம்பர் 11’ தாக்குதல்: கடத்தப்பட்ட விமானத்துக்குள் நடந்தது என்ன\nகொழும்பு தொட்டலங்க பகுதியில் இரு சடலங்கள்\nகாரைநகர் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட தமிழக மீனவர்கள் ; படகு மூழ்கியதில் ஒருவர் மாயம் – இருவர் மீட்பு\nநீர் மூழ்கி கப்பலூடாக வடகொரியா ஏவுகணை பரிசோதனை\nஇலங்கையில் பாடசாலைகள் திறக்கப்படாமையால் ஏற்படப்போகும் தாக்கங்கள் குறித்து உலக வங்கியின் எதிர்வுகூறல்\nNakkeeran on தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆசன ஒதுக்கீட்டை வழங்கினால் பொதுதேர்தலில் போட்டியிடுவுன்- அனந்தி சசிதரன் (நேர்காணல்)\nlatha on ஒரே மலையில் 900 கோயில்கள்\narya on ஜெயலலிதாவுக்கு தண்டனை: தூக்கு -தீக்குளிப்பு– மாரடைப்பில் 14 பேர் சாவு\nஆப்கானிஸ்தானில் தாலிபனின் தேன் நிலவு முடிந்தது – இனி அதன் முன்னுள்ள சவால்கள் என்ன\n‘செப்டம்பர் 11’ தாக்குதல்: கடத்தப்பட்ட விமானத்துக்குள் நடந்தது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-10-19T12:49:51Z", "digest": "sha1:CTMZ7LQVHVTUJJQEUA6CBVXGEAI72PBA", "length": 10798, "nlines": 127, "source_domain": "ilakkiyainfo.com", "title": "சிரியா உள்நாட்டுப் போர்: ஒரே மாதத்தில் 3 ஆயிரம் மக்கள் பலி | ilakkiyainfo", "raw_content": "\nHome»வெளிநாட்டு செய்திகள்»சிரியா உள்நாட்டுப் போர்: ஒரே மாதத்தில் 3 ஆயிரம் மக்கள் பலி\nசிரியா உள்நாட்டுப் போர்: ஒரே மாதத்தில் 3 ஆயிரம் மக்கள் பலி\nசிரியாவில் அதிபரின் ஆட்சிக்கு எதிராக உள்நாட்டுப் போரில் கடந்த மாதத்தில் மட்டும் சுமார் ஆயிரம் அப்பாவி பொதுமக்கள் உள்பட 3 ஆயிரம் பேர் பலியானதாக தெரியவந்துள்ளது.\nசிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்துக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஜிஹாதி குழுவினர் நாட்டின் பல பகுதிகளை கையகப்படுத்தி, தங்களது ஆதிக்கத்தின்கீழ் வைத்து நிர்வகித்து வருகின்றனர்.\nஇதுதவிர, ஐ.எஸ். தீவிரவாதிகளும் சில பகுதிகளை கைப்பற்றி தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். இந்த குழுக்களையும் வேட்டையாட ரஷியா நாட்டின் விமானப்படை துணையுடன் அந்நாட்டு முப்படைகளும் தீவிரமாக போரிட்டு வருகின்றன.\nஇதுதவிர சிரியாவின் சில பகுதிகளை பிடித்துள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒழிக்கும் பணியில் உள்நாட்டு ராணுவத்துக்கு உதவியாக அமெரிக்க விமானப்படை ஈ��ுபட்டுள்ளது.\nஇப்படி, மும்முனை தாக்குதல்களை சந்தித்துவரும் சிரியாவில் கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் சுமார் 3 ஆயிரம் மக்கள் பலியாகியுள்ளதாக அங்குள்ள போர் நிலவரங்களை கண்காணித்துவரும் ஐ.நா. மனித உரிமை அமைப்பினர் இன்று தெரிவித்துள்ளனர்.\nஐ.எஸ். தீவிரவாதிகள், போராளி குழுக்களை சேர்ந்தவர்கள் மற்றும் ராணுவ வீரர்கள் என சுமார் 2 ஆயிரம் பேர் பலியாகியதுடன், 207 குழந்தைகள் உள்பட அப்பாவி பொதுமக்கள் 955 பேர் கடந்த மாதத்தில் கொல்லப்பட்டதாகவும் இந்த மரணங்களில் 70 சதவீதம் ரஷிய நாட்டு விமானப்படை தாக்குதல் மற்றும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான மோதலில் ஏற்பட்டதாகவும் தெரிகிறது.\nஅவ்வகையில், இந்த ஆண்டில் மிக அதிகமான உயிர் பலியை செப்டம்பர் மாதம் சந்தித்துள்ளது, குறிப்பிடத்தக்கது.\nவெளிய தல காட்ட முடியல’.. தேர்தல் பிரச்சாரத்தில்… கல் அடி பட்ட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.. தேர்தல் பிரச்சாரத்தில்… கல் அடி பட்ட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.. கொந்தளிக்கும் கனடா மக்கள்\nநியூசிலாந்தில் கத்திக்குத்து தாக்குதல்; ஐ.எஸ். அமைப்பை சேர்ந்த இலங்கையர் சுட்டுக்கொலை\nபல்கலைக் கழகத்தில் நடந்த முதலிரவு: வீடியோவால் ஷாக்கான அதிகாரிகள்\nகொழும்பு தொட்டலங்க பகுதியில் இரு சடலங்கள்\nகாரைநகர் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட தமிழக மீனவர்கள் ; படகு மூழ்கியதில் ஒருவர் மாயம் – இருவர் மீட்பு\nநீர் மூழ்கி கப்பலூடாக வடகொரியா ஏவுகணை பரிசோதனை\nஇலங்கையில் பாடசாலைகள் திறக்கப்படாமையால் ஏற்படப்போகும் தாக்கங்கள் குறித்து உலக வங்கியின் எதிர்வுகூறல்\nமட்டு கரடியனாறு பகுதியில் ஒன்றில் அடித்து கொலை செய்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு\nஆப்கானிஸ்தானில் தாலிபனின் தேன் நிலவு முடிந்தது – இனி அதன் முன்னுள்ள சவால்கள் என்ன\n‘செப்டம்பர் 11’ தாக்குதல்: கடத்தப்பட்ட விமானத்துக்குள் நடந்தது என்ன\nகொழும்பு தொட்டலங்க பகுதியில் இரு சடலங்கள்\nகாரைநகர் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட தமிழக மீனவர்கள் ; படகு மூழ்கியதில் ஒருவர் மாயம் – இருவர் மீட்பு\nநீர் மூழ்கி கப்பலூடாக வடகொரியா ஏவுகணை பரிசோதனை\nஇலங்கையில் பாடசாலைகள் திறக்கப்படாமையால் ஏற்படப்போகும் தாக்கங்கள் குறித்து உலக வங்கியின் எதிர்வுகூறல்\nNakkeeran on தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆசன ஒதுக்கீட்டை வழங்கினால் பொதுதேர்தலில் போட்டியிடுவுன்- அனந்தி சசிதரன் (நேர்காணல்)\nlatha on ஒரே மலையில் 900 கோயில்கள்\narya on ஜெயலலிதாவுக்கு தண்டனை: தூக்கு -தீக்குளிப்பு– மாரடைப்பில் 14 பேர் சாவு\nஆப்கானிஸ்தானில் தாலிபனின் தேன் நிலவு முடிந்தது – இனி அதன் முன்னுள்ள சவால்கள் என்ன\n‘செப்டம்பர் 11’ தாக்குதல்: கடத்தப்பட்ட விமானத்துக்குள் நடந்தது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2021-10-19T13:10:17Z", "digest": "sha1:PAEUNLUGEPBVN5PH4ZNVVCSHFV3FG75G", "length": 9226, "nlines": 126, "source_domain": "ilakkiyainfo.com", "title": "முதல் முறையாக இந்தியாவுக்கு சுற்றுலா சென்ற அமெரிக்க பெண்ணுக்கு நடந்த கொடுமை!! | ilakkiyainfo", "raw_content": "\nHome»இந்தியா»முதல் முறையாக இந்தியாவுக்கு சுற்றுலா சென்ற அமெரிக்க பெண்ணுக்கு நடந்த கொடுமை\nமுதல் முறையாக இந்தியாவுக்கு சுற்றுலா சென்ற அமெரிக்க பெண்ணுக்கு நடந்த கொடுமை\nசுற்றுலாப் பயணியொருவர் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்திய , இமாச்சல பிரதேசத்தின் மலை வாசஸ்தலமான தர்மசாலாவிற்கு சுற்றுலா வந்த அமெரிக்க பெண்ணையே ஒரு கும்பல் வல்லுறவுகுட்படுத்தியுள்ளது.\nஅமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த அவர் வந்துள்ளார். திங்கட்கிழமை இரவு சாப்பிட்டுவிட்டு தான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு செல்லும்போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nஇதுபற்றி பொலிஸார் கருத்து தெரிவிக்கையில்: “46 வயதான அந்தப் பெண் சம்பவத்தன்று இரவு 9 மணிக்கு சாப்பிடுவதற்காக வெளியில் சென்றுள்ளார்.\nநள்ளிரவில் ஹோட்டலுக்கு வந்துகொண்டிருந்தபோது 2 நபர்கள் அவரை இழுத்துச் சென்று போதை மருந்தை கொடுத்துள்ளனர். அவர் மயங்கி விழுந்ததும் வல்லுறவுக்குட்படுத்தியுள்ளனர். இதுபற்றி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.\nஇச்சம்பவம் இந்தியாவில் , சுற்றுலாப்பயணிகளின் பாதுகாப்பை மேலும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.\nகேரளா : ஒரே குடும்பத்தில் மூன்று தலைமுறையினர் அடித்து செல்லப்பட்ட சோகம்..\nகேரள மழை வெள்ளத்தில் பலி எண்ணிக்கை 24 ஆக உயர்வு: 9 பேரை காணவில்லை\nநாம் ஒன்றாக வேண்டும்- அ.தி.மு.க. வென்றாக வேண்டும்: சசிகலா பரபரப்பு பேச்சு\nகொழும்பு தொட்டலங்க பகுதியில் இரு சடலங்கள்\nகாரைநக���் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட தமிழக மீனவர்கள் ; படகு மூழ்கியதில் ஒருவர் மாயம் – இருவர் மீட்பு\nநீர் மூழ்கி கப்பலூடாக வடகொரியா ஏவுகணை பரிசோதனை\nஇலங்கையில் பாடசாலைகள் திறக்கப்படாமையால் ஏற்படப்போகும் தாக்கங்கள் குறித்து உலக வங்கியின் எதிர்வுகூறல்\nமட்டு கரடியனாறு பகுதியில் ஒன்றில் அடித்து கொலை செய்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு\nஆப்கானிஸ்தானில் தாலிபனின் தேன் நிலவு முடிந்தது – இனி அதன் முன்னுள்ள சவால்கள் என்ன\n‘செப்டம்பர் 11’ தாக்குதல்: கடத்தப்பட்ட விமானத்துக்குள் நடந்தது என்ன\nகொழும்பு தொட்டலங்க பகுதியில் இரு சடலங்கள்\nகாரைநகர் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட தமிழக மீனவர்கள் ; படகு மூழ்கியதில் ஒருவர் மாயம் – இருவர் மீட்பு\nநீர் மூழ்கி கப்பலூடாக வடகொரியா ஏவுகணை பரிசோதனை\nஇலங்கையில் பாடசாலைகள் திறக்கப்படாமையால் ஏற்படப்போகும் தாக்கங்கள் குறித்து உலக வங்கியின் எதிர்வுகூறல்\nNakkeeran on தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆசன ஒதுக்கீட்டை வழங்கினால் பொதுதேர்தலில் போட்டியிடுவுன்- அனந்தி சசிதரன் (நேர்காணல்)\nlatha on ஒரே மலையில் 900 கோயில்கள்\narya on ஜெயலலிதாவுக்கு தண்டனை: தூக்கு -தீக்குளிப்பு– மாரடைப்பில் 14 பேர் சாவு\nஆப்கானிஸ்தானில் தாலிபனின் தேன் நிலவு முடிந்தது – இனி அதன் முன்னுள்ள சவால்கள் என்ன\n‘செப்டம்பர் 11’ தாக்குதல்: கடத்தப்பட்ட விமானத்துக்குள் நடந்தது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://juniorpolicenews.com/2020/06/26/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A8/", "date_download": "2021-10-19T11:02:48Z", "digest": "sha1:EEMO4JF6GZYDMWNLI5CA54PWRDPQ4UMP", "length": 22186, "nlines": 206, "source_domain": "juniorpolicenews.com", "title": "பிளாட்பாரத்தில் உயிரிழந்த மூதாட்டி! இறுதிச்சடங்கில் பங்கேற்று கலங்கவைத்த பெண் இன்ஸ்பெக்டர் | Police News | 24/7 Tamil News", "raw_content": "\n10 மாவட்ட காவலர்களின் மனக்கவலைகளை போக்கும் விதமாக குறைகளை நேரில் கேட்டறிந்த தென்மண்டல காவல்துறை…\nதுப்பறியும் திறனை வெளிக்கொண்டுவர ஒரு அரிய வாய்ப்பு.\nசீர்காழியில் 3 லட்சம் மதிப்புள்ள 9 ஆயிரத்து 200 குட்கா பாக்கெட்டுகளை காவல்துறையினர் பறிமுதல்…\nதூத்துக்குடியில் என்கவுண்டரில் ரவுடி சுட்டுக்கொலை.\nதமிழகம் முழுவதும் 35 இடங்களில் ஹெல்மெட் மாட்டிக்கொண்டு இரவு நேரங்களில் பூட்டியிருந்த ���டைகளில் கொள்ளையடித்த…\n10 மாவட்ட காவலர்களின் மனக்கவலைகளை போக்கும் விதமாக குறைகளை நேரில் கேட்டறிந்த தென்மண்டல காவல்துறை…\nதுப்பறியும் திறனை வெளிக்கொண்டுவர ஒரு அரிய வாய்ப்பு.\nசீர்காழியில் 3 லட்சம் மதிப்புள்ள 9 ஆயிரத்து 200 குட்கா பாக்கெட்டுகளை காவல்துறையினர் பறிமுதல்…\nதூத்துக்குடியில் என்கவுண்டரில் ரவுடி சுட்டுக்கொலை.\nதமிழகம் முழுவதும் 35 இடங்களில் ஹெல்மெட் மாட்டிக்கொண்டு இரவு நேரங்களில் பூட்டியிருந்த கடைகளில் கொள்ளையடித்த…\nசட்டவிரோதமாக 3350 லாட்டரி சீட்டுகள் விற்ற நபரை கைது செய்து, சிறப்பாக செயல்பட்ட புதுக்கோட்டை…\nபுதுவையில் அனைத்து காவல் நிலையங்களிலும் ரூ.2 கோடி செலவில் சிசிடிவி பொறுத்தப்படும் என்று உள்துறை…\nதமிழகத்தை சேர்ந்த காவல் அதிகாரிகள் 8 பேருக்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் சார்பில் விருது…\nமுன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது 400 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல்\nசென்னை மாநகர ஆயுதப்படைபிரிவில் பணிபுரியும் காவலர் ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில்2021 நடைபெரும் ஒலிம்பிக்போட்டிக்கு தகுதி…\nகஞ்சா வியாபாரியை கைது செய்வதில் அலட்சியம்: வாணியம்பாடி காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்.. வேலூர்…\nகட்டப்பஞ்சாயத்து; கைத்துப்பாக்கி; வழிப்பறி – குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்ட ரௌடியின் பின்னணி என்ன\nபுதுவையில் அனைத்து காவல் நிலையங்களிலும் ரூ.2 கோடி செலவில் சிசிடிவி பொறுத்தப்படும் என்று உள்துறை…\nகோவையில் 10 சட்டமன்ற உறுப்பினர்கள் மீது தொற்று நோய் பரவல் சட்டம் அரசு ஊழியரை…\nபுல் பவர் தந்த ஸ்டாலின்.. வேட்டையாடிய சைலேந்திரபாபு\nகாஸ்ட்லி பைக்கை திருடி வெளியூர்களில் விற்போம்” : சிறுவனின் வாக்குமூலத்தால் அதிர்ச்சியடைந்த போலிஸ்\nசென்னை மாநகர ஆயுதப்படைபிரிவில் பணிபுரியும் காவலர் ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில்2021 நடைபெரும் ஒலிம்பிக்போட்டிக்கு தகுதி…\nஆன்லைன் ரம்மியை தடை செய்ய அவசர சட்டம் பிறப்பித்து தமிழக அரசு ஆணை –…\nமனநலம் பாதித்த தாயுடன் வறுமையில் வசித்து வரும் அரசு அதிகாரி ஆக வேண்டும் என்ற…\nகடலாடி அருகே வாலிநோக்கம் கடலில் குளித்த இளைஞர் அலையில் சிக்கி மாயம் : தேடும்…\nHome தமிழ்நாடு பிளாட்பாரத்தில் உயிரிழந்த மூதாட்டி இறுதிச்சடங்கில் பங்கேற்று கலங்கவைத்த பெண் இன்ஸ்பெக்டர்\n இறுதிச்சடங்கில் பங்கேற்று கலங்கவைத்த பெண் இன்ஸ்பெக்டர்\nசென்னை ஓட்டேரி எஸ்.வி.எம் நகரில் உள்ள பிளாட்பாரத்தில் ராஜேஸ்வரி (59), விஜயலட்சுமி(58), பிரபாவதி (57) என மூன்று சகோதரிகள் தங்கியிருந்தனர். உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த பிரபாவதியின் உயிர் நேற்று காலை பிளாட்பாரத்திலேயே பிரிந்தது. அவரின் சடலத்தை மயானத்துக்குக் கொண்டுசெல்ல வழிதெரியாமல் விஜயலட்சுமியும் ராஜேஸ்வரியும் கதறி அழுது கொண்டிருந்தனர்.\nஅவ்வழியாகச் சென்றவர்களிடம் உதவி கேட்டனர். ஆனால், கொரோனா அச்சம் காரணமாக யாருமே உதவி செய்ய முன்வரவில்லை. இதனால் பிரபாவதியின் சடலம் நீண்ட நேரமாக பிளாட்பாரத்திலேயே கிடந்தது. அதன் அருகில் சோகத்துடன் அவரின் சகோதரிகள் அமர்ந்திருந்தனர்.\nஇந்தத் தகவல் தலைமைச்செயலக காலனி இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரிக்குக் கிடைத்தது. உடனே, இன்ஸ்பெக்டர் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் மீனா, ஏட்டு பழனி, ஜான் மேனகா குமரன் மற்றும் காவலர் சிலம்பரசன் ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்றனர். அங்கு எலும்பும் தோலுமாக, கிழிந்த சேலை அணிந்தபடி பிரபாவதி கிடந்தார். உடனே இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி, போலீஸ்காரர்களை அனுப்பி சேலை, சோப், பூ, மாலை என இறுதிச் சடங்கிற்குத் தேவையான பொருள்களை வாங்கிவரும்படி கூறினார்.\nஅந்தப் பொருள்கள் வந்ததும், அருகில் உள்ள வீட்டிலிருந்து தண்ணீரை குடங்களில் போலீஸ் டீம் கொண்டு வந்தது. பிளாட்பாரத்திலேயே சேலை மறைவில் பிரபாவதியைப் பெண் போலீஸார் மற்றும் அங்குள்ள பெண்கள் சிலர் குளிப்பாட்டினர். பிறகு புதிய சேலை அணிவித்து, பிரபாவதியின் இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகளை முன்னின்று போலீஸ் டீம் செய்தது. ஓட்டேரி மயானத்துக்கு பிரபாவதியின் சடலம் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுசெல்லப்பட்டு, இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.\nஇதுகுறித்து தலைமைச்செயலக காலனி போலீஸார் கூறுகையில், “இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி, தன்னால் முடிந்த உதவிகளைச் செய்துவருகிறார். உயிரிழந்த பிரபாவதி மற்றும் அவரின் சகோதரிகளுக்கு பலமுறை உணவு வழங்கியுள்ளார். இவர்கள் மூன்று பேரும் வேலூரைச் சேர்ந்தவர்கள். சென்னை ஓட்டேரிக்கு வந்த இவர்கள் குப்பைகளைப் பொறுக்கி வாழ்ந்துவந்தனர்.\nஇந்தச் சமயத்தில்தான் ஊரடங்கால் மூன்று சகோதரிகளின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டது. அதனால் பசி, பட்டினியால் மூன்று பேரும் பாதிக்கப்பட்டனர். பிரபாவதி உயிரிழந்த தகவல் கிடைத்ததும் அங்கு சென்று, அவரின் இறுதிச்சடங்கை இன்ஸ்பெக்டர் தலைமையில் நாங்களே செய்தோம். ஆம்புலன்ஸ் மூலம் பிரபாவதியின் சடலத்தை ஓட்டேரி மயானத்துக்குக் கொண்டுசென்று இறுதி மரியாதை செலுத்தினோம். இன்ஸ்பெக்டர் முன்னின்று அனைத்தையும் செய்தார். மூன்று சகோதரிகளுக்கும் குடிசைமாற்று வாரியத்தில் வீடு உள்ளது. அந்த வீடு முழுவதும் குப்பைகளைச் சேகரித்து வைத்துள்ளனர். தற்போது அந்த வீட்டைச் சுத்தம் செய்து விஜயலட்சுமி, ராஜேஸ்வரியை தங்க வைத்துள்ளோம்” என்றனர்.\nஇறுதி சடங்கு முடிந்து இன்ஸ்பெக்டர் அங்கு இருந்து புறப்படுவதற்கு முன் இழந்த ராஜேஸ்வரி, விஜயலட்சுமிக்கு ஆறுதல் கூறினார். அப்போது, `அம்மா நீங்க நல்லா இருக்கணும்’ என கண்ணீர்மல்க அவர்கள் கூறினர். அதைக்கேட்ட போலீஸாரின் கண்களும் கலங்கின. அதன்பிறகு, கொரோனா வைரஸ் குறித்த அறிவுரைகளைக் கூறிவிட்டு போலீஸ் டீம் அங்கிருந்து புறப்பட்டு, சென்றது. ராஜேஸ்வரி, விஜயலட்சுமிக்கு உணவு உள்ளிட்ட தேவைகளை போலீஸ் டீம் உடனடியாகச் செய்துகொடுத்தது.\nஇன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி தலைமையிலான போலீஸ் டீமின் இந்தச் செயலால் பொதுமக்கள் நெகிழ்ந்தனர்.\nPrevious articleகேரளாவை கலக்கி வரும் தமிழச்சிகள்\nNext articleஇ-பாஸ் பெற வழிமுறைகள் இதோ ஊரடங்கால் அண்டை மாவட்டம் மற்றும் மாநிலங்களுகிடையே பயணிக்க e-pass அவசியம். e-pass தேவைப்படுவோர் கீழ் கண்டவாறு செயலாக்கம் செய்யலாம்.\n10 மாவட்ட காவலர்களின் மனக்கவலைகளை போக்கும் விதமாக குறைகளை நேரில் கேட்டறிந்த தென்மண்டல காவல்துறை தலைவர் அவர்கள்.\nதுப்பறியும் திறனை வெளிக்கொண்டுவர ஒரு அரிய வாய்ப்பு.\nசீர்காழியில் 3 லட்சம் மதிப்புள்ள 9 ஆயிரத்து 200 குட்கா பாக்கெட்டுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.\n10 மாவட்ட காவலர்களின் மனக்கவலைகளை போக்கும் விதமாக குறைகளை நேரில் கேட்டறிந்த தென்மண்டல காவல்துறை தலைவர் அவர்கள்.\nதுப்பறியும் திறனை வெளிக்கொண்டுவர ஒரு அரிய வாய்ப்பு.\nசீர்காழியில் 3 லட்சம் மதிப்புள்ள 9 ஆயிரத்து 200 குட்கா பாக்கெட்டுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.\nதூத்துக்குடியில் என்கவுண்டரில் ரவுடி சுட்டுக்கொலை.\nதமிழகம் முழுவதும் 35 இடங்களில் ஹெல்மெட் மாட்டிக்கொண்டு இரவு நேரங்���ளில் பூட்டியிருந்த கடைகளில் கொள்ளையடித்த கொள்ளையன் மயிலாடுதுறையில் கைது\n10 மாவட்ட காவலர்களின் மனக்கவலைகளை போக்கும் விதமாக குறைகளை நேரில் கேட்டறிந்த தென்மண்டல காவல்துறை...\nதுப்பறியும் திறனை வெளிக்கொண்டுவர ஒரு அரிய வாய்ப்பு.\nசீர்காழியில் 3 லட்சம் மதிப்புள்ள 9 ஆயிரத்து 200 குட்கா பாக்கெட்டுகளை காவல்துறையினர் பறிமுதல்...\nகரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு பாதுகாப்பு கேட்டு காதல் கணவருடன் பெண் தஞ்சம்..\nதமிழக டிஜிபி புதிய உத்தரவு.. சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் எதிரொலி தொடர்ந்து Non-Bailable...\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் பெண் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பதிலாக அவரது கணவரோ, உறவினர்களோ தலையிடக்கூடாதுதடை செய்யப்பட்டுள்ளது..ஆட்சியர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2014/05/27/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2021-10-19T12:54:20Z", "digest": "sha1:55WVBIRPAZAHIDGWWCMFOTXBKBICERC7", "length": 103209, "nlines": 370, "source_domain": "solvanam.com", "title": "கவிதையின் நேரம் – சொல்வனம் | இதழ் 256 | 10 அக். 2021", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 256 | 10 அக். 2021\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nபடிகளின் எண்ணிக்கை நாமெல்லோருமே அறிந்தது தானே\nஅவர்கள் உன்னை குளியலறைக்கு அழைத்துச் செல்லவில்லை.\nஅவர்கள் உன்னை வெளியே அழைத்துச் செல்லவில்லை\nஎண்பதை நீ கடந்து விட்டாலோ\nஒரேயொரு இடம் தான் இருக்கிறது\nஇப்போது ஒரேயொரு இடம் தான் மீந்திருக்கிறது\nநான் வசிக்கும் இடத்திற்கு அருகே, ஏரியையொட்டி ஒரு ஹோட்டல் இருக்கிறது, கடந்த யுத்தத்தின் போது அது கெஸ்டாபோவின் (Gestapo) உள்ளாட்சித் தலைமைச் செயலகமாக இருந்தது. அதில் பலரும் விசாரிக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டிருக்கிறார்கள். இப்போது அது மீண்டும் ஹோட்டலாகியிருக்கிறது. பாரிலிருந்து வெளியே நோக்கினால் நீருக்கு அப்பாலுள்ள மலைகள் தென்படும்; பத்தொன்பதாம் நூற்றாண்டின் நூற்றுக்கணக்கான கற்பனை நவிற்சிவாத (Romantic) ஓவியர்களுக்கு அக்காட்சி உன்னதமாகவே இருந்திருக்கும். இதே காட்சியைத் தான் , விசாரணைகளுக்கு முன்னேயும் பின்னேயும் , சித்திரவதை செய்யப்பட்டவர்களும் பார்த்திருப்பார்கள். அக்கட்டிடத்தில் அவர்கள் முடிவுறாது நீடித்திருக்கும் மரண அவஸ்தைக்கும், விவரிக்கவே முடி���ாத வலிக்கும் உட்படுத்தப்பட்டிருப்பதால் அதைப் பார்ப்பதற்குக் கூட திராணியில்லாமல், அவர்களது காதலர்களும் நண்பர்களும் இதே இயற்கைக் காட்சி முன் தான் ஸ்தம்பித்து நின்றிருப்பார்கள். உன்னதத்திற்கும் தற்போதய யதார்த்தத்திற்கும் இடையே, அந்த மலைகளிலும் அந்த ஏரியிலும் அவர்கள் எதைக் கண்டார்கள்\nஅனைத்து அனுபவங்களிலும், முறைப்படுத்தப்பட்ட மானுடச் சித்திரவதையே மிகவும் விவரிக்க இயலாததாக இருக்கக் கூடும். அதில் சம்பந்தப் பட்டிருக்கும் துயரத்தின் செறிவினால் மட்டுமே அல்ல, வதையின் முனைப்பு, மொழிகளனைத்தும் இயங்கும் அடிப்படை அனுமானத்தையே எதிர்த்திருப்பதாலும் கூட : வேற்றுமைகளுக்கிடையிலும் பரஸ்பர புரிந்துணர்விற்கான சாத்தியமிருக்கிறது என்ற அனுமானம். வதையோ மொழியைத் தகர்க்கிறது : மொழியை குரலிடமிருந்தும், வார்த்தைகளை உண்மையிடமிருந்தும் கிழிப்பதே அதன் குறிக்கோள். வதைபடுபவருக்குத் தெரியும் : இவர்கள் தன்னை உடைக்கிறார்கள் என்று. அவனுடைய அல்லது அவளுடைய எதிர்ப்பென்பது உடைக்கப்படும் சுயத்தின் அழிவைக் கட்டுக்குள் வைத்திருப்பதே.\nஅவர்களை நம்பாதீர்கள், என்னுடலின் படத்தை\nஅவர்களை நம்பாதீர்கள், நிலவை நிலவென்று\nநிலவை நிலவென்று உங்களிடம் கூறினால்,\nஒலிநாடாவிலிருக்கும் குரல் என்னுடையதென்று கூறினால்,\nவாக்குமூலத்திலிருக்கும் கையொப்பம் என்னுடையதென்று கூறினால்,\nஅவர்கள் உங்களிடம் கூறும் எதையுமே,\nஅவர்கள் உங்களுக்கு வாக்களிக்கும் எதையுமே,\nஅவர்கள் உங்களுக்குக் காட்டும் எதையுமே,\nசித்திரவதைக்கு மிக நீண்ட மற்றும் பரவலான ஒரு வரலாறு இருக்கிறது. இன்று பலரும் அதன் மீள்தோற்றத்தின் (அது எப்போதாவது மறைந்ததா என்ன) அளவையைக் கண்டு அதிர்ச்சியுறுகிறார்கள் என்றால், அதற்குக் காரனம் தீவினையைப் பற்றிய அவர்களின் நம்பிக்கையின்மை தான். வதை அரிதாக இருப்பதாலோ ,கடந்த காலத்திற்கே உரியது என்பதாலோ அது நமக்கு அதிர்ச்சியளிப்பதில்லை : அது தன் செயல்பாட்டின் மூலமே நம்மை அச்சுறுத்துகிறது.சித்திரவதையின் எதிர்ப்பதம் முன்னேற்றம் அல்ல, கருணையே . (இவ்விஷயம் விவிலியத்தின் புதிய ஏற்பாட்டிற்கு மிக அருகே இருப்பதால் அதன் சொல்லாடல்களையே நாம் பயன்படுத்தலாம்).\nவதை செய்வோருள் பெரும்பாலோர், மருத்துவ ரீதியின் வரையறையில் Sadists எ��்றழைக்கப்படும் துன்புறுத்தலில் இன்பம் காண்பவர்களோ சாத்தானின் அவதாரங்களோ அல்ல. குறிப்பிட்ட பயிற்ச்சியை ஏற்று அதன் பின் அதை பிரயோகிக்க பதப்படுத்தப்பட்ட ஆண்களும் பெண்களும் தான் அவர்கள். அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்ட , வதைப்பவர்களுக்கான முறைசார்ந்த மற்றும் முறைசாரா பள்ளிகள் உள்ளன. ஆனால் முதல் பதப்படுத்தல் பள்ளிக்குச் செல்வதற்கு முன்னதாகவே நிகழ்கிறது : சில வகை மனிதர்கள் நம்மிலிருந்து அடிப்படையாகவே வேறுபட்டவர்கள், அவர்களின் வேற்றுமை நமக்கு மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கக் கூடுமென்ற கருத்தியல் கூற்றுகளின் மூலமே இது நிகழ்த்தப் படுகிறது. படர்க்கையை கிழித்தெறிவது, “அவர்களை “, நம்மிடமிருந்தும் உங்களிடமிருந்தும். அடுத்த பாடம், வதை பயிற்றுவிக்கும் பள்ளிகளில் : அவர்களின் உடல்கள் பொய்கள், ஏனெனில் அவை தாங்கள் ஒன்றும் அவ்வளவு வேறுபட்டவை அல்ல என்று கோருவதால் : வதை என்பது இப்பொய்யிற்கான தண்டனையே. வதைப்பவர்களே தாங்கள் அறிந்து கொண்டதை கேள்விக்கு உட்படுத்த நேர்கையில் / நேர்ந்தால் தாங்கள் ஏற்கனவே செய்தவற்றை எண்ணி பயந்து, மீண்டும் வதையைத் தொடர்வார்கள் ; வதையே படாத தங்கள் சருமத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் நோக்கத்தோடு இப்போது மீண்டும் வதைப்பார்கள்.\nலத்தீன் அமெரிக்க ஃபாசிஸ்டு (Fascist) ஆட்சிகளில் – பினோச்செயின் சிலே (Pinochet’s Chile) ஓர் உதாரணம் – வதையின் தருக்கம் முறையான திட்டத்துடன் நீடிக்கப் பட்டிருக்கிறது. உடல்களைக் கிழித்தெறிவதோடு நிறுத்திக் கொள்ளாமல், அவர்களைப் பற்றி படிக்கவே கூடாதென்று , அவர்களின் பெயர்களையும் கிழிக்க முனைவார்கள். அவமானத்தாலோ, வெட்கத்தாலோ அவ்வரசுகள் இதைச் செய்கின்றன என்ற அனுமானம் தவறானதே. வீரத்தியாகிகளையும், நாயகர்களையும் அடியோடு ஒழித்து, மக்களிடையே அதிகபட்ச அச்சுறுத்தலை ஏற்படுத்துவதே அவர்களின் நோக்கம்.\nபெண்ணோ ஆணோ வெளிப்படையாகவே கைது செய்யப்பட்டு, அவர்களது வீட்டிலிருந்து இரவிலோ அல்லது பணியிடத்திலிருந்து பகலிலோ காரில் எடுத்துச் செல்லப்படுகிறார்கள். கைது செய்வோரும், பலாத்காரமாக தூக்கிச் செல்பவர்களும் சாதாரண ஆடைகளே அணிந்திருப்பார்கள். இதன் பிறகு மறைந்த நபரைப் பற்றிய தகவலறிவதென்பது ஏலாத காரியம். காவல்துறையினர், மந்திரிகள், நீதிமன்றங்கள் இவர்களெல்லோரும் ���ாணாமல் போன நபரைப் பற்றிய எந்தத் தகவலையுமே அங்கீகரிக்க மறுத்து விடுகிறார்கள். எனினும் காணாமல் போன நபர்கள் அனைவரும் ராணுவ நுண்ணறிவுத் துறையின் கையடைவில் தான் இருந்து கொண்டிருக்கிறார்கள். மாதங்கள், வருடங்கள் கழிகின்றன. காணாமல் போனவர்களை இறந்துவிட்டதாக எண்ணுவது கூட கொடூரமாகப் பிரிக்கப்பட்டவர்களின் நினைவிற்கு நாம் இழைக்கும் துரோகமாகும்; ஆனாலும் அவர்கள் உயிருடனிருக்கிறார்கள் என்ற நம்பிக்கை அவர்கள் வதைபடும் கொடுங்கனவையும் , பிறகு, அவர்கள் இறந்து விட்டார்கள் என்ற கசப்பான உண்மையை ஏற்கவேண்டிய நிர்பந்தத்தையும் உடனழைத்து வருகிறது. கடிதமில்லை, அறிகுறியில்லை, இருக்குமிடத்தை பற்றிய தகவலில்லை, முறையிட எவருமில்லை, விதிக்கப்பட்டிருக்கும் தீர்ப்பிற்கு முடிவுமில்லை, ஏனெனில் தீர்ப்பே இல்லை. பொதுவாக மௌனமென்பது ஒலியின் இன்மை என்றே பொருள்படும். இங்கு மௌனம் செயற்படுவதாக, மீண்டும் முறைப்படி, மனதை வதைக்கும் கருவியாக மாற்றப் பட்டிருக்கிறது. எப்போதாவது, கடற்கரையில் அலைகளால் வீசியெறியப்பட்ட சடலங்கள் தோன்றி, காணாமல் போனவர்களின் பட்டியலால் அடையாளப் படுத்தப்படும். எப்போதாவது, ஓரிருவர் இன்னமும் காணப்படாமலே இருக்கும் மற்றவர்களைப் பற்றிய தகவலுடன் திரும்புவார்கள் : ஒருகால், ஆயிரக்கணக்கான இதயங்களை வதைக்கக் கூடிய நம்பிக்கைகளை விதைப்பதற்காகவே அவர்கள் விடுவிக்கப் பட்டிருக்கலாம்.\nமே 8 –இல் இருந்து\nஉரிமத்தகடே இல்லாத அக்கார் சென்ற பிறகு,\nஆனால் இப்போது நிலைமை மாறியிருக்கிறது\nஅவனது குரலை அவனது கதறல்களை\nயாராவது என்னிடம் வெளிப்படையாகவே கூறிவிடுங்கள்\nஎன்பது தானே இதன் அனுமானம் \nஉடல் சார்ந்த வதை பிறப்புறுப்புகளின் மீது தான் அதிகம் கவனம் செலுத்துகிறது அவற்றின் கூருணர்வுத் தன்மையாலும், சம்பந்தப்பட்டிருக்கும் தாழ்வுணர்வாலும். வதைபடுவர் மலட்டுத்தனத்தால் அச்சுறுத்தப்படுகிறார் என்பதாலும். மறைந்துவிட்டவர்களை காதலிக்கும் பெண்களையும் ஆண்களையும் உணர்வு ரீதியாக வதைக்கையில் அவர்களின் நம்பிக்கைகளே வலியைப் பிரயோகிப்பதற்கான புள்ளியாகத் தேர்வு செய்யப்படுகின்றன, மேலே குறிப்பிட்ட மலட்டுத்தனத்தை பற்றிய பயத்தை வேறொரு தளத்தில் ஏற்படுத்துவதற்காக.\nஆனால் எதற்குமே இது நிருபணமல்ல.\nஅட்டூழியங்க���் நடந்து கொண்டே இருக்கையில்\nஇவ்வழக்கங்கள், அவற்றின் அதிகரிக்கும் நிகழ்வுகள், அவற்றின் தினசரி இயக்கத்தில் இல்லையென்றாலும் அவற்றிற்கான முன்னேற்பாடுகளில் சம்பந்தபட்டிருக்கும் அமெரிக்க முகமைகள் , இவற்றை நாம் எதிர்கொள்கையில், எல்லா விதமான எதிர்ப்பு மற்றும் கண்டன முறைகளையும் நாம் கையாள வேண்டும். (ஆம்னெஸ்டி இன்டெர்நேஷனல் என்ற அமைப்பு இவற்றில் சிலவற்றை ஒருங்கிணைக்கிறது.) . மேலும் கவிஞர்கள் – சிலேயின் ஆரியெல் டார்ஃப்மனைப் (Ariel Dorfman) போல் – கவிதைகள் எழுதுவார்கள் (மேலே தரப்பட்டுள்ள, அனைத்துக் கவிதை வரிகளும் டார்ஃப்மனால் எழுதப்பட்டு ஆம்னெஸ்டி இன்டெர்நேஷனலால் பதிப்பிக்கப்பட்ட “காணவில்லை (Missing)” என்ற கவிதையிலிருந்து எடுக்கப்பட்டுள்ளன). சர்வாதிபத்தியத்தின் பயங்கரமான இயந்திர அமைப்பை டாண்டேயின் எரிநரகக் (Inferno) காலத்தைக் காட்டிலும் அதிகமாகவே எதிர்கொள்ளும்போது கவிதைகளும் அதிகமாகவே எழுதப்படும்.\nபதினெட்டு மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் சமூக அநீதிக்கு எதிராக பல மறுப்புரைகள் உரைநடையில் எழுதப்பட்டன. அவை நன்கு அமைக்கப்பட்ட நியாயமான வாதங்கள், காலப்போக்கில் மக்கள் நியாயத்தை அடையாளம் கண்டு கொள்வார்கள் என்றும் இறுதியில் வரலாறு நியாயத்தின் பக்கமே திரும்பும் என்ற நம்பிக்கையிலும் எழுதப்பட்ட வாதங்கள். ஆனால் இன்று அப்படிப்பட்ட நம்பிக்கைக்கான சாத்தியங்கள் அவ்வளவு தெளிவாக இல்லை. அதன் விளைவுகளுக்கும் உத்திரவாதமில்லை. கடந்தகாலம் மற்றும் நிகழ்காலத்தின் துயரத்தை எல்லோரும் இன்புற்றிருக்கும் ஒரு வருங்கால சகாப்தம் ஈடுசெய்வதற்கான சாத்தியம் குறைவானதே. தீமை என்பது அடியோடு ஒழித்துவிட முடியாத ஒரு நிரந்திர யதார்த்தம். ஆகவே, இதற்கான தீர்வை – வாழ்க்கைக்கு அளிக்கப்பட வேண்டிய அர்த்தத்தை ஏற்று – நாம் காலம் கடத்த முடியாது. வருங்காலத்தை நம்பமுடியாது. உண்மைக்கான கணம் இப்போதே. இனி மேலும் மேலும் உரைநடையைக் காட்டிலும் கவிதையே இவ்வுண்மையை பெற்றுக்கொள்ளும். கவிதையை விட உரை நடை எளிதில் நம்பிவிடுகிறது : உடனடிக் காயத்துடன் கவிதையே பேசுகிறது.\nமொழியின் பேறு கனிவல்ல. அது தன்னிடம் தக்கவைத்திருக்கும் அனைத்தையும் துல்லியத்துடன் தக்கவைத்துக் கொள்கிறது , கழிவிரக்கமின்றி. நேயத்தை தெரிவிக்கும் பதங்களி���் கூட : நடுநிலையாக, சூழ்நிலைக்கே முக்கியத்துவமளித்து. மொழி பூரணம் ஆகக் கூடியது, மனிதகுலத்தின் ஒட்டுமொத்த அனுபவத்தையும் வார்த்தைகளில் தக்கவைத்துக் கொள்ளுவது அதற்கு சாத்தியம் என்பது அதன் பேறு. நிகழ்ந்தது மற்றும் நிகழப்போவதனைத்தையும். வார்த்தைகளில் விவரிக்க இயலாததற்கும் அது இடமளிக்கிறது. இவ்வகையில் மொழியைப் பற்றிக் கூறுகையில், அது மனிதர்களுக்கான வாசஸ்தலம், அவரிடம் பகைமை கொள்ள மாட்டாத குடியிடம். தடங்கள், பாதைகள் மற்றும் நெடுஞ்சாலைகளாலான வலையமைப்பின் மூலம் கடந்து செல்லக் கூடிய தேசத்தைப் போல் ஒரு அகன்ற நிலப்பரப்பே. உரைநடைக்கான இருப்பிடமாக அமைந்திருக்கிறது; கவிதைக்கோ இவ்விடம் செறிந்திருக்கிறது, ஒரேயொரு மையத்தில், ஒரேயொரு குரலில்.\nமொழியிடம் எதையும் கூறலாம். எனவேதான் மௌனத்தையும் கடவுளையும் விட நம்முடன் நெருக்கமாக அதனால் செவிமடுக்க முடிகிறது. ஆயினும் அதன் திறந்திருக்கும் தன்மையே பலமுறை உதாசீனமாகக் கொள்ளப்படுகிறது. (மொழியின் அக்கறையற்ற உதாசீனம் எப்போதுமே பரிந்து கோரப்பட்டுத் தகவலேடுகள், சட்ட ஆவணங்கள், அறிக்கைகள் மற்றும் கோப்புகளால் பயன்படுத்தப்படும்.) இவ்வுதாசீனத்தை அழித்து அக்கறையைத் தூண்டும் விதத்தில் தான் கவிதை மொழியை அணுகுகிறது. கவிதை எவ்வாறு நம்மீதான இக்கவனிப்பைத் தூண்டுகிறது\nஉழைப்பென்று நான் குறிப்பிடுவது கவிதை எழுதுவதற்குத் தேவையான உழைப்பையல்ல. எழுதப்பட்ட கவிதையின் உழைப்பைப் பற்றியே பேசுகிறேன். ஒவ்வொரு உண்மையான கவிதையும் கவிதை என்ற கலைவடிவத்தின் உழைப்பிற்குப் பங்களிக்கிறது. வாழ்க்கை பிரித்து வைத்ததையும் வன்முறை கிழித்தெறிந்ததையும் உடனிணைப்பதே இவ்வோயாத உழைப்பின் பணியாகும். உடல் சார்ந்த வலியை அனேகமாகச் செயலால் குறைக்கவோ நிறுத்திவிடவோ முடியும். ஆனால் மற்ற மானுட வலிகளனைத்திற்கும் பிரிவின் ஏதோவொரு ரூபமே காரணமாக இருக்கிறது. இவ்வகை வலிகளை நேரடியாக மட்டுப்படுத்துவதற்கான சாத்தியங்கள் குறைவு. கவிதை எந்த இழப்பையும் ஈடு செய்துவிடுவதில்லை என்றாலும் பிரிக்கும் இடைவெளியை எதிர்க்கிறது :சிதறடிக்கப்பட்டதை மீண்டும் ஒருங்கிணைக்கும் தனது இடையறாத உழைப்பின் மூலம்.\nஎகிப்திய சிலையொன்றில் பதிக்கப்பட்ட கவிதை, 1500 கி.மு\nஉருவகத்தைப் பிரயோகிக்கும் உத்வேகம், ���ப்புமைகளைக் கண்டறிதல், இவை நிகழ்வின் தனித்தன்மையைக் குறைக்கவோ, ஒப்பு நோக்கப்பட வேண்டும் என்பதற்காகவோ அல்ல (எல்லா ஒப்பீடுகளும் தம்மளவில் அதிகாரப் படிநிலையாக்கங்ளே). இருப்பின் வகுக்கவே முடியாத முழுமைக்கு ஒப்புமைகளின் கூட்டுத் தொகையை நிரூபணமாக கண்டறிவதே அதன் நோக்கம். இந்த முழுமையை நோக்கியே கவிதை முறையிடுகிறது, மேலும் அதன் முறையீடு உணர்ச்சி வயப்படுதலுக்கும் நேர் மாறானது. உணர்ச்சிப்பசப்பு எப்போதுமே விதிவிலக்கைக் கோருகிறது, வகுக்க முடிவதையே அது விழைகிறது.\nஉருவகத்தால் ஒன்றிணைப்பது மட்டுமல்லாது கவிதை தன் எட்டத்தாலும் (Reach) மீண்டும் இணைக்கிறது. ஓருணர்வின் எட்ட த்தை பிரபஞ்சத்தின் எட்டத்துடன் சமன்படுத்துகிறது. ஒரு குறிப்பிட்ட புள்ளியில் தட்டுக்கேட்டின் வகை முக்கியத்துவம் இழந்து அதன் அளவுத் தரமே முன்னுரிமை பெறுகிறது. அளவுத் தரமே அறுதியான தட்டுக்கேடுகளை இணைக்கிறது.\nநான் உன்னுடன் சமமாகவே தாங்கிக்கொள்கிறேன்\nநிலைத்திருக்கும் அந்த இருண்மையான பிரிவை.\nகனவில் மீண்டும் வருவேனென உறுதியளி\nநாமிருவரும் இந்த பூமியில் சந்திக்கவே மாட்டோம்.\nவிண்மீன்கள் வழியாக ஒரு வாழ்த்தை மட்டும்\nநள்ளிரவில் உன்னால் எனக்கனுப்ப முடிந்ததென்றால் …\nஇங்கு அகவழி நோக்கும் புறவழி நோக்கும் குழப்பிக் கொள்ளப்பட்டிருக்கின்றன என்று வாதிடுவதென்பது பட்டறிவு சார்ந்த ஒரு பார்வைக்கே திரும்பிச் செல்வதைப் போன்றது. தற்போதையத் துயரத்தின் பரப்பு இதற்கெதிராக அறைகூவுகிறது, அதிசயமாக நியாயப்படுத்த இயலாத ஒரு சிறப்புரிமையைக் கோருவதற்காக.\nகவிதை அனைத்தையும் அன்னியோன்யப்படுத்துவதால் மொழியை அக்கறை கொள்ள வைக்கிறது . கவிதையின் உழைப்பின் விளைவாகவும், அது சுட்டும் ஒவ்வொரு செயல், பெயர்ச்சொல், நிகழ்வு மற்றும் பார்வை இவ்வனைத்தையும் அது நெருக்கமாக ஒன்றிணைப்பதன் விளைவாகவும்தான் இந்த அன்னியோன்யம் உருவாகிறது. பெரும்பாலும் உலகின் கொடூரத்திற்கும் உதாசீனத்திற்கும் எதிராக இந்த அக்கறையை விடக் கணிசமான வேறெதையுமே நாம் நிலைநிறுத்த முடியாது.\nஎங்கிருந்து வலி நம்மிடம் வந்தடைகிறது \nஎன்று இராக்கிக் கவியாகிய நசீக்-அல்-மில்’-இகா எழுதுகிறார்.\nநிகழ்வுகளின் மௌனத்தை உடைப்பதற்கு , எவ்வளவு கசப்பாகவும் புண்படுத்துவதாகவும் இருப்பின���ம் அனுபவத்தைப் பற்றிப் பேசுவதும், அதற்கு வார்த்தைகளில் உருவமளிப்பதும், இவையனைத்தும் ஒரு நம்பிக்கையை கண்டெடுக்கின்றன : வார்த்தைகள் கேட்கப்படலாம், அவை கேட்கப்படும் போது நிகழ்வுகளுக்கும் நீதியளிக்கப்படலாம் என்ற நம்பிக்கை. நிச்சயமாக, இந்த நம்பிக்கையே நமது பிரார்த்தனைகளின் தொடக்கம். பிரார்த்தனையே – உழைப்பும் கூட- நமது பேச்சுமொழியின் தொடக்கத்தில் இருந்திருக்கக் கூடும். மொழியின் பயன்பாடுகளுள் கவிதையே இத்தொடக்கத்தின் நினைவை மிகவும் புனிதமாகப் பாதுகாத்து வந்திருக்கிறது.\nகவிதையாக வெற்றி பெறும் ஒவ்வொரு கவிதையும் ஒரு மூலமே. மூலத்திற்கோ இரு அர்த்தங்கள்: தொடக்கத்திற்கே திரும்பச் சென்று, முதன்மையாக இருப்பதனால் தனக்கு பின்னே வந்த அனைத்தையும் தோற்றுவிக்கிறது என்றொரு அர்த்தம்; மேலும் இதுவரையில் நிகழாதது என்று மற்றொரு விதமாகவும் இதை அர்த்தப்படுத்திக் கொள்ளலாம். கவிதையில், கவிதையில் மட்டுமே , இவ்விரு பொருள்களும் முரண்பாடின்றி இணைக்கப் பட்டிருக்கின்றன.\nஎனினும் கவிதைகள் எளிய பிரார்த்தனைகள் அல்ல. சமயம் சார்ந்த கவிதை கூட இறைவனிடம் மட்டுமே பிரத்தியேகமாகப் பேசுவதில்லை. கவிதை மொழியை நோக்கியே பேசப்படுகிறது. இதன் அர்த்தம் தெளிவாக இல்லையெனில் ஒப்பாரியை நினைவு படுத்திக் கொள்ளுங்கள் : அதில் இழப்பை, வார்த்தைகள் மொழியிடம் பிரலாபிக்கின்றன. இதே போலத் தான் கவிதையும் மொழியுடன் பேசிக்கொள்கிறது, ஆனால் இன்னமும் விசாலமாக.\nவார்த்தைகளில் இடுவதென்பது அவை கேட்கப்படுமென்றும் அவை விவரிக்கும் நிகழ்வுகளுக்கு நீதி வழங்கப்படுமென்ற நம்பிக்கையையும் கண்டடைவதே. கடவுளால் நீதி தீர்க்கப்பட்டு அல்லது வரலாற்றால் நீதி தீர்க்கப்பட்டு. இரண்டிலுமே நீதி தொலைவிலிருக்கிறது. எனினும் மொழியோ – உடனடியாகவும், சில சமயங்களில் ஒரு கருவியாகவும் மட்டுமே தவறாக எண்ணப்பட்டு – கவிதை அதனை அழைக்கையில் பிடிவாதமாகவும், மர்மத்துடனும் தன் தீர்ப்பை அளிக்கிறது. இத்தீர்ப்பு எந்த அறக் கோட்பாடுகளிலிருந்தும் தனித்திருந்தாலும், தான் கேட்டதை அங்கீகரித்து, நன்மைக்கும் தீமைக்குமிடையே உள்ள வேறுபாட்டை உறுதியளிக்கிறது – அவ்வேறுபாட்டைப் பாதுகாப்பதற்காகவே மொழி படைக்கப்பட்டது போல \nஇதனால் தான் “பழிமலைந் தெய்திய ஆக்கங்களை” தக்��வைத்துக் கொள்வதற்காக இழைக்கப்படும் உலகின் மிக பயங்கரமான கொடூரங்களையும் மற்ற எந்த சக்தியை விடவும் கவிதையே முழுமையாக எதிர்க்கிறது. இதனால் தான் உலைகளின் நேரம் கவிதையின் நேரமாகவும் இருக்கிறது.\nPrevious Previous post: காப்ரியெல் கார்ஸியா மார்க்கெஸ்ஸும் அமெரிக்கப் புனைதலும் – 2\nNext Next post: துண்டிக்கப்பட்ட தலையின் கதைகள்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவக் கட்டுரை அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அயல் விழா அரசியல் அரசியல் கட்டுரை அறிவிப்பு அறிவியல் அறிவியல் அதி புனைவு அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைக் கட்டுரை இசைத்தெரிவு இசையும் மொழியும் இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-232 இதழ்-233 இதழ்-234 இதழ்-235 இதழ்-236 இதழ்-237 இதழ்-238 இதழ்-239 இதழ்-24 இதழ்-240 இதழ்-241 இதழ்-242 இதழ்-243 இதழ்-244 இதழ்-245 இதழ்-246 இதழ்-247 இதழ்-248 இதழ்-249 இதழ்-25 இதழ்-250 இதழ்-251 இதழ்-252 இதழ்-253 இதழ்-254 இதழ்-255 இதழ்-256 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இத���்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய வரலாறு இலக்கிய விமர்சனம் இலக்கியக் கட்டுரை இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக நடப்புக் குறிப்புகள் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் எழுத்து ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சத்யஜித் ரே சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தழுவல் கட்டுரை தாவரவியல் தாவரவியல் கட்டுரை திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம���- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாரதியியல் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொடுவா நாட்டார் கலை பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதற்கனல் முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பு இலக்கியம் மொழிபெயர்ப்பு நாவல் மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை ரவிஷங்கர் லயம் வங்க ஓவியங்கள் வங்க மலர் வங்கச் சிறப்பிதழ் வரலாறு வரலாற்றாய்வு வரலாற்றுக் கட்டுரை வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேதியியல் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அகிலா ஆ. அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அஞ்சலி ஸச்தேவா அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அருண்குமார் மகோபாத்யாய் அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அவீக் சாட்டர்ஜீ அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆடம் இஸ்கோ ஆண்டனி கில் ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் குமார் ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆமிராபாலன் ஆரூர் பாஸ்கர் ஆர் நித்யஹரி ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி ஆஸ்டின் சௌந்தர் இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா முருகன் இரா. அரவிந்த் இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இராம் பொன்னு இலவசக் கொத்தனார் இலா இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உ நரசிம்மன் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உலகளந்த பெருமாள் உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.என். குண்டு எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் எம்.டி வாசுதேவன் நாயர் Raja எம்.ரிஷான் ஷெரீப் எரிக் நெஹர் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் எஸ் சியூயீ லு Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கஞ்சனூர் கவிப்ரியா கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட்ராமன் கண்ணன் இராமநாதன் கதீர் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கலாப்ரியா கலைச்செல்வி கல்யாணி ராஜன் கவியோகி வேதம் கா.சிவா கா.ரபீக் ராஜா கா���ி நசருல் இஸ்லாம் காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் கிருபாகரன் கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலச்சுவடு கண்ணன் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் கி. ராஜநாராயணன் கிருஷ்ண பாசு Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரி எஸ். நீலகண்டன் குமரேசன் மு. குமாரநந்தன் குமார் சேகரன் குமுதினி கூம் கூம் ராய் கெ.ம.நிதிஷ் கென் லூ கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கே.பாலசுப்பிரமணி கே.ராஜலட்சுமி கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரெக் பா(வ்)ம் க்ரேஸ் பேலி ச அர்ஜுன்ராச் ச. சமரன் ச. சிவபிரகாஷ் ச.திருமலைராஜன் சக்தி சட்டோபாத்யாய சக்தி விஜயகுமார் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் சமரேஷ் மஜும்தார் சரவணன் அபி சரவணன் மாணிக்கவாசகம் சரோஜ் பந்த்யோபாத்தியாய் sarvasithan சா.கா.பாரதி ராஜா சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்லி டைஸன் சார்ல்ஸ் ஸிமிக் சி.எஸ். லக்ஷ்மி Ayshwarya Shankaranarayanan சி.சு.செல்லப்பா சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி சியாம் பாரதி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. அருண் பிரசாத் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுகாந்தொ பட்டாச்சார்யா சுகுமார் ராய் சுசித்ரா பட்டாச்சாரியா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தரம் செல்லப்பா சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுனீல் கங்கோபாத்யாய் சுபத்ரா ரவிச்சந்த���ரன் சுபிமல் மிஸ்ரா சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் சௌதிக் பிஸ்வாஸ் ஜகதீஷ் சந்திர போஸ் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜான்பால் ரொசாரியோ ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜாஷுவா ராத்மான் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீபனானந்தா தாஸ் ஜீவ கரிகாலன் ஜீவன் பென்னி ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தா டே ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேன் ஹெர்ஷ்ஃபீல்ட் ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜொய் கோஸ்வாமீ ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த. நரேஸ் நியூட்டன் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தஸ்லிமா நஸ்ரின் தாட்சாயணி தாமரைக்கண்ணன் தாராசங்கர் பந்த்யோபாத்யாய் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் திலீபன் தீபேஷ் சக்ரபர்த்தி தீப் ஹல்தர் தென்கரை மகாராஜன் தெரிசை சிவா தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் தைஸ் லைஸ்டர் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நபரூன் பட்டாச்சார்யா நம்பி நரசய்யா நரேன் நரோபா நளினி நவநீதா தேவ் சென் நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகிலேஷ் குஹா நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர��நாத் ரேணு பதிப்புக் குழு ravishankar குழு பத்மகுமாரி பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்மா ஸச்தேவ் பத்ரி சேஷாத்ரி பனபூல் பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி பா ராமானுஜம் Pa Saravanan பா.சுதாகர் பா.தேசப்பிரியா பானு கபில் பானுமதி ந. பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan பாஸ்கர் ஆறுமுகம் Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் பிபூதிபூஷன் பந்த்யோபாத்யாய் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபீர் சென் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புத்ததேவ போஸ் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம. செ. ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுமிதா மதுரபாரதி மதுரா மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் அரவிந்த டி ரெங்கநாதன் மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலேசியா ஸ்ரீகாந்தன் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாணிக் பந்தோபாத்யாய மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மாயா ஏஞ்சலொ மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ம இராமச்சந்திரன் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி முனைவர் ராஜ��ந்திர பிரசாத் நா மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோதி நந்தி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரக்ஷன் கிருதிக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரபீந்திர நாத் தாகூர் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமநாத் ராய் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ரிச்சர்ட் ரூஸ்ஸோ ருகையா ஷகாவத் ஹுசென் ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோகிணி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லாவண்யா சுந்தரராஜன் லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகமாதேவி லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வசந்ததீபன் வண்ணநிலவன் வர்ஜீனியா வுல்ஃப் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜயகுமார் சம்மங்கரை விஜயலக்ஷ்மி விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வித்யா அருண் விபீஷணன் விருட்சன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேங்கட ராகவன் நா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷாங்க்யா கோஷ் ஷாதிர் ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் ந���ன்யெஸ் ஸிந்துஜா ஸிர்ஷோ பந்தோபாத்யா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் கின்சர் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாரலாம்பி மார்கோவ் ஹாலாஸ்யன் ஹுமாயுன் அஹமத் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் அக்டோபர் 2021 செப்டம்பர் 2021 ஆகஸ்ட் 2021 ஜூலை 2021 ஜூன் 2021 மே 2021 ஏப்ரல் 2021 மார்ச் 2021 பிப்ரவரி 2021 ஜனவரி 2021 டிசம்பர் 2020 நவம்பர் 2020 அக்டோபர் 2020 செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nமின்னஞ்சல் மூலமாக புதிய பத��வுகளைப் பெறுங்கள்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும். எழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nஆன்கர் எஃப்.எம். (anchor.fm) 4\nயூடியுப் – ஒளிவனம் (YouTube) 3\nசவுண்ட் கிளவுட் (SoundCloud) 1\nஎழுத்தாளர் அம்பை: சொல்வனம் சிறப்பிதழ்கள் 0\nரொபெர்த்தோ பொலான்யோ ஆக்கங்களும் விமர்சனங்களும் 0\nவீடும் வெளியும்: கவிதைகளும் கதைகளும் 0\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவங்கச் சிறப்பிதழ் 1: 240\nவங்கச் சிறப்பிதழ் II: 241\nவி. எஸ். நைபால்: 194\nகவிதை பற்றி புதுமைப்பித்தன் கூறியவற்றுள் சில\nவிஞ்ஞான வளர்ச்சியின் வளர்ச்சி- 2\nபெருந்தேவிக்கு பி. ஜி. உடௌஸ் வேண்டாம்\nசோ - ஒரு தன்னிகரற்ற நிகழ்வு\nஆட்டத்தின் ஐந்து விதிகள் (8)\nஇந்து தர்மமும் அதன் கலாசாரப் போர்களும் (14)\nஇவர்கள் இல்லையேல் – நாவல் (3)\nகாவிய ஆத்மாவைத் தேடி (3)\nசட்டமும் செயற்கை நுண்ணறிவும் (2)\nதலை சிறந்த 10 தொழில்நுட்பம் (11)\nதேர்ந்த வாசகருக்கான படப்புத்தகம் (2)\nநோயாளி எண் பூஜ்யம் (2)\nபய வியாபாரியா ஹிட்ச்காக் (2)\nபேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் (4)\nமிளகு: இரா முருகன் – நாவல் (7)\nமுதலியத்தை எதிர்க்கும் பொதுமம் (1)\nமொபைல் தொடர்பாடல் வரலாறு (2)\nவண்ணநிலவன் நாவல்கள் பற்றி (2)\nஸ்லாட்டர்ராக்- தாமஸ் டிஷ் (2)\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nஎழுத்தாளர் இரா முருகனின் சரித்திரத் தொடர் நாவல் “மிளகு” அத்தியாயம் - ஏழு 1999 அம்பலப்புழை 35:47\nஎழுத்தாளர் தி.ஜானகிராமன் எழுதிய சிறுகதை \"செய்தி\" 21:56\nஎன் சொல்லால் உனக்கொரு முத்தம்\nபேரிக்காய் மரத்தில் சிக்கிய மரணம்\nநம்ம கையில என்ன இருக்கு\nகாகசஸ் மலைக் கைதி – 2\nஓய்வுக் காலச் சேமிப்பும் அதை அபகரிக்க அரசாங்கம் நடத்தும் போரும்\nby கடலூர் வாசு\t ஆகஸ்ட் 22, 2021\nby கா.ரபீக் ராஜா\t ஆகஸ்ட் 22, 2021\nby லியோ டால்ஸ்டாய்\t ஆகஸ்ட் 22, 2021\n”ஆசிய அமெரிக்கர்கள்” – அமெரிக்காவில் மிகையாகும் வெறுப்பரசியல்\nby லதா குப்பா\t ஆகஸ்ட் 22, 2021\nகாவிய ஆத்மாவைத் தேடி… – 2\nby ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன்\t ஆகஸ்ட் 22, 2021\nபேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்\nby பானுமதி ந.\t ஆகஸ்ட் 22, 2021\nமூத்த கதைசொல்லி – டெம்சுலா ஆவ்\nby கோரா\t ஆகஸ்ட் 22, 2021\nதொட்டாலே கண் எரியும் மிளகாயா\nby லோகமாதேவி\t ஆகஸ்ட் 22, 2021\nஷோபா சக்தியின் ‘கொரில்லா’ – ஒரு பார்வை\nby ராஜேஷ் சந்திரா\t ஆகஸ்ட் 22, 2021\nஉங்கள் மின்னஞ்சல், படைப்புகளை அனுப்ப முகவரி: solvanam.editor@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://udhayasankarwriter.blogspot.com/2013/08/", "date_download": "2021-10-19T13:12:25Z", "digest": "sha1:WJD3VVR6R4S4TR74MZMTG62ZDGIPUVJA", "length": 13590, "nlines": 216, "source_domain": "udhayasankarwriter.blogspot.com", "title": "கரிசக்காடு: August 2013", "raw_content": "\nஆனால் இது அவனைப்பற்றி – குறுநாவல் தொகுப்பு\nவெளியீடு- நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nஒரு சிறிய காற்றில் ஒடிந்து விழுந்து விடக்கூடிய சல்லி வேர்களில் பிடிமானம் கொண்டு நிற்கும் வாழ்க்கை விதிக்கப்பட்ட ஒரு கரிசல்க்காட்டு நகரத்தின் கீழ் மத்தியதர வர்க்கத்து வாழ்க்கையை அந்த வாழ்க்கைக்கே உரிய முறையில் சொன்ன முதல் கலைஞன் உதயசங்கர். அம்மக்களின் குரலாகத் தொடர்ந்து எழுதி வரும் உதயசங்கரின் மூன்று குறுநாவல்கள் இத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. இவ்வாழ்க்கை கனவுகளும், ஏக்கப்பெருமூச்சுகளும் நிறைந்ததாக வாசக மனதைத் துயரத்தால் நிரப்புவதாக நம் முன் விரிந்து செல்கிறது. வேலையில்லாக் காலத்து இளைஞனின் வலியை இவ்வளவு உக்கிரத்துடன் சொன்ன கதைகள் தமிழில் மிகக்குறைவு.\nமலையாளத்தில்- முனைவர் எம். முல்லக்கோயா\nவெளியீடு- நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nஎல்லாக்கதைகளும் மரணத்திலிருந்து ஒரு வகையான தப்பித்தல் தான். வாழ்விற்கும், மரணத்திற்கும் இடையில் ஊஞ்சலாடுகிற நிர்ப்பந்தத்திலுள்ள மனிதனுடைய மகாபிரயத்தனங்களும், துன்பதுயரங்களும், மரணத்திலிருந்து தப்பிப்பதற்கான இயற்கையுணர்வும் விதிச் சக்கரத்தின் சுழற்சியும் எல்லாம் இந்தக் கதைகளில் தன்னுடைய புதிர் வழிகளை விரிக்கின்றது. யதார்த்ததிற்கும் உணமைக்குமிடையில் எங்கேயோ உருமாறுகிற இந்தக் கதைகள் சத்தியாசத்தியங்களையும், தர்மாதர்மங்களையும், புரிந்து கொள்வதற்கான மானசீகச் சூத்திரங்களாகவும் சமூகவாழ்வின் சந்தோஷங்களாகவும், தீவுக்காரர்களுக்கு அநுபவப்படுகின்றன. அவை நம்மை தீமைகளைப் புரிந்து கொள்வதற்கான படிப்பினைகள், குறிம���ழிகள்.\nஆயிரத்தொரு இரவுகளிலோ, மகாபாரதத்திலோ,உள்ள கதைகளுக்கு நிகரான கருத்துகளும், வேகமும் இந்தக் கதைகளில் இருக்கின்றன. அரபிக்கதைகளை வாசிக்கின்ற சுவாரசியத்தோடேயே இந்தக் கதைகளை வாசிக்கலாம்.\nLabels: இலக்கியம், உதயசங்கர், குழந்தை இலக்கியம், குறுநாவல், ச.தமிழ்ச்செல்வன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், புத்தகம், முல்லக்கோயா, லட்சத்தீவு, வெளியீடு\nபனிரெண்டு சிறுகதைத் தொகுதிகள்,ஒரு குறுநாவல் தொகுதி, ஐந்து கவிதைத் தொகுதிகள், பத்தொன்பது குழந்தை இலக்கிய நூல்கள்,எழுபது மொழிபெயர்ப்பு நூல்கள், ஆறு கட்டுரை நூல், தமுஎகசவில் மாநிலத் துணைப்பொதுச்செயலாளர். தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத்தலைவர்\nதுண்டிக்கப்பட்ட தலையில் சூடிய ரோஜாமலர்\nஇந்துக்களின் புனித நூல் எது\nபிராமணிய மேல்நிலையாக்கமும் பண்பாட்டு அழிப்பும்\nமனிதநலம் காக்கும் ஹோமியோபதி மருத்துவம்-2\nகாட்டு வாத்தாகச் சிறகை விரித்த கவிதை\nகத்தரிக்காய் குள்ளனும் கழுகுமலை பூதமும் - நாடோடிக்கதை\nகத்தரிக்காய் குள்ளனும் கழுகுமலை பூதமும் உதயசங்கர் ஒரு ஊரில் ஒரு பாட்டியும் தாத்தாவும் தனியாக வாழ்ந்து வந்தார்கள். அவர்களுக்கு எட்டு மக...\nஇந்துக்களின் புனித நூல் எது\nஇந்துக்களின் புனித நூல் எது உதயசங்கர் உலகிலுள்ள எல்லாப்பெருமதங்களுக்கும் ஒரு புனிதநூல் இருக்கிறது. கிறித்துவத்துக்கு பைபிள் என...\nசூரியனும் குட்டிக்குட்டிக்குருவிக்குஞ்சும் உதயசங்கர் காலை விடிந்தது. சூரியன் கண்களை மெல்லத் திறந்து உலகத்தைப் பார்த்தான். வெளிச்சத்தின...\nசெம்மொழி 1. உலகில் சுமார் ஆறாயிரம் மொழிகள் இருக்கின்றன. இதில் மூவாயிரம் மொழிகள் இலக்கணமும் இலக்கியமும் கொண்ட மொழிகள். 2. இந்த மூவாயிரம் ...\nமின்னுவின் ஆசை உதயசங்கர் மின்னு சுண்டெலி தப்பித்ததே பெரிய காரியம். ஒரு விநாடி தாமதம் ஆகி இருந்தால் அவ்வளவு தான். வெள்ளைப்பூனை லபக் என்...\nகுறள் அறமும் மனு (அ)தர்மமும் - (ஆய்வுக் கட்டுரை)\nஇட ஒதுக்கீடல்ல மறுபங்கீடு - ஆதவன் தீட்சண்யா உரை\nதமிழ்நாடு கிராம வங்கியை சீர்குலைக்கும் அதன் நிர்வாகம்\nஎன் 'கால்' கதை தெலுங்கில்\nபார்த்த படத்தை மறுபடி பார்க்க, படித்த கதையை மீண்டும் படிக்க விரும்புவதன் உளவியல்\nபுதுப்பேட்டை 15 ஆவது ஆண்டு நிறைவு\nமாநில திரைப்பயண நிறைவு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newsguru.news/", "date_download": "2021-10-19T11:18:00Z", "digest": "sha1:HCI2XEMSPEEC2WQSM5PFXF4L7LQVRXZW", "length": 63841, "nlines": 608, "source_domain": "newsguru.news", "title": "Home - நியூஸ் குரு", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, அக்டோபர் 19, 2021 | எங்கள் மொபைல் ஆப்-ஐ பதிவிறக்கவும்\nடி20 கிரிக்கெட் போட்டி இந்தியா-பாகிஸ்தான் போட்டி நடக்குமா\nரா.செந்தில்முருகன் - அக்டோபர் 18, 2021 0\nஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு விசேஷ அந்தஸ்த்தை அளிக்கும் 370 சட்டப்பிரிவை நீக்கியதும், யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டதும், அம்மாநிலத்தில் பயங்கரவாதிகளின் ஆட்டம் முடிவுக்கு வரத்தொடங்கியுள்ளது. நூற்றுக்கணக்கான பயங்கரவாதிகள் ராணுவத்தால் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் காஷ்மீர் மாநிலம் தங்கள் கையைவிட்டு போவதைக் கண்ட...\nஅண்டை நாடுகளில் இந்துக்கள் மீது தாக்குதல் – உலக நாடுகள் கண்டிக்கட்டும்\n இன்று தலித் தொழிலாளி கொடூர கொலை\nமனித குலத்தின் பல்வேறு பிரச்சனைகளுக்கு பாரதமே தீர்வு தரமுடியும் -ஆர்.எஸ்.எஸ் தலைவர் டாக்டர்.மோகன்பாகவத்\nசத்தம் இல்லாமல் சரித்திரம் படைக்கும் இந்தியா\nபணிந்தது தமிழக அரசு – கோயில்கள் திறப்பு\nஒரு ஓட்டு பெற்றவர் பா.ஜ.க வேட்பாளரா\n 900 பேர் கைது -காஷ்மீரில் அதிரடி\nஉலகிற்கே உத்வேகம் அளிக்கும் மோடி- டென்மார்க் பிரதமர்\nஒரு ஓட்டு பெற்றவர் பா.ஜ.க வேட்பாளரா\nதமிழகத்தில் ஊராட்சித் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் எந்த கட்சியினராக இருந்தாலும் சுயேச்சை சின்னமே...\nஐவரது ஆன்மா வைகோவை மன்னிக்குமா\n‘நான் கோழை இல்லை. நான் இந்த கட்சியை தூக்கி நிறுத்துவேன். இந்த கட்சி...\nஅரசியலுக்கு வந்து என் வாழ்க்கையை அழித்துவிட்டேன்-வைகோ\nவைகோவின் இன்றைய பேட்டி:என் மகன் துரை வையாபுரி அரசியலுக்கு வருவதை நான் விரும்பவில்லை....\nஉ.பி. கலவரத்தின் பின்னணி என்ன\nஉத்திரபிரதேச மாநிலம் லக்கீம்பூரில் நடந்த கலவரத்தில் 8 பேர் பலியானார்கள். இதில் ஒரு...\nமுதல்வர் ஸ்டாலினுக்கு பாஜக தலைவர் அண்ணாமலையின் கடிதம் \nபாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழக முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலினுக்கு கடிதம்...\nவலிமையான பாரதத்தின் நிகரில்லா தலைவன் பிரதமர் மோடி \nஇந்திய பெருநாட்டுக்கு தனிபெரும் தலைவன் வந்துவிடவே கூடாது என்பது சில அந்நியசக்திகளின் பெருங்கனவு,...\nஆஃப்கானிஸ்தானில் அம்ருல்லா ஸாலேவிற்கு பின்னான அரசியல் நகர்வுகளில் அதிலும் குறிப்பாக தாலிபான்கள் இயக்கம்...\nஇந்தியாவின் அடையாளங்களில் ஒன்றாக மின்னிய மாமேதை விஸ்வேரய்யர்\nஒரு அறிவாளி தேசத்தின் தலைவிதியினை மாற்றுவான், மிக நுட்பமான மதிபடைத்தவன் தன் அபார...\nநமது அடையாளத்தை அழிக்க நினைக்கலாமா.\nநமது நாட்டில், எண்ணற்ற கோவில்கள் இருக்கின்றன. \"கோவில்\" என்பது, \"இறைவனின் இருப்பிடம்\". ஒவ்வொரு...\nதிருவள்ளுவர் சிலையின் பெருமையை சிதைக்க தி.க.வின் சதிக்கு உடந்தையாக தி.மு.க. அரசு\nதி.க. சார்பில் திருச்சி மாவட்டத்தில் சென்னை நெடுஞ்சாலையில் சிறுகனூரில் ஈ.வே.ராமசாமிக்கு 100 கோடி...\nவிநாயகர் சிலை வழிபாட்டை தடுக்க வீதி தோறும் ஜபம் பாதிரியார் பெயரில் பகீர் கடிதம்\nதமிழக சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று தி.மு.க ஆட்சி அமைத்ததும், அரசின் முக்கிய...\nஇந்தியா ஒரு ஹிந்து நாடு… தேவாரம் பாடி பெற்ற சுதந்திரம்\nஇந்தியா ஒரு இந்து நாடு என்பதில் வெள்ளையன் மிக சரியாக இருந்தான், அதுவும்...\nதமிழக சட்டப் பேரவை – நூற்றாண்டு விழாவா\n1914 - 1918 ஆம் ஆண்டு நடந்த முதலாம் உலகப் போருக்குப் பின்னர்,...\nதமிழக பாஜவும் , அண்ணாமலையின் பயணமும்\nகடலில் தத்தளிப்பவன் கையில் ஏதாவது ஒரு மிதவைக் கிடைத்தால், எப்படியாவது நீந்தி கரைசேர்வான்...\nமதச்சார்பற்ற நாட்டில் கிறிஸ்தவ மதச்சார்பு அரசியல்\nமதச்சார்பற்ற நமது இந்திய நாட்டில், அனைவருக்கும் பொதுவான சட்டம் இருக்க வேண்டும், என்பதே...\nஆடி 18. நதியினை கொண்டாடிய தேசம் நம்முடையது. ஆடி பெருக்கு என்பது நம்...\nநுழைவு தேர்வு இல்லாத படிப்பிற்கும் இடஒதுக்கீடு அரசு பள்ளிகளின் தரமில்லை என்பதை அரசே ஒப்புக்கொள்கிறதா\nதமிழக அமைச்சரவை கூட்டத்தில், பொறியியல், வேளாண்மை, சட்டம், கால்நடை, மீன்வளம் போன்ற படிப்புகளுக்கு...\nஅனுமதியின்றி செயல்பட்டுவந்த ஜெபக்கூட்டம் இந்துமுன்னணியினரின் போராட்டத்தால் தடுத்து நிறுத்தம்\nகோவை மாவட்டம் திருமலையாம்பாளையத்தில் அனுமதியின்றி செயல்பட்டுவந்த ஜெபக்கூட்டத்தை பொதுமக்களின் புகாரின்பெயரில் தடுத்து நிறுத்திய...\nகோவை சி.எஸ்.ஆர். நர்சிங் ஹோமில் அதிநவீன ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரம்\nநோய் தொற்று முதல் முறையாக தோன்றி ஓராண்டுக்கும் மேலாகி விட்டது. கடந்து வந்த...\nகாக்கப்பட வேண்டிய கோவில்கள் இடிக்கப�� படலாமா..\n1920 ஆம் ஆண்டு பனகல் அரசர் முதலமைச்சராகப் பொறுப்பேற்று, அப்போது மதராஸ் மாகாணத்தில்...\nகாருண்யாவில் வருமான வரி சோதனை பின்னணி என்ன \nடயரில் தீ வைத்து யானை மீது வீசும் பதைபதைக்கும் காணொளி\nமசினகுடியில் காதில் தீக்காயம் பட்டு ஜன.20ஆம் தேதி யானை ஒன்று உயிரிழந்தது. இந்நிலையில்,...\nசொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்....\nரஜினி மக்கள் மன்றம் அறிவிப்பு ..\nபோலி கடிதத்தால் புகார், மத கலவரத்தை தூண்ட சாதி ..\nகோவை மாவட்ட முஸ்லிம் மக்களுக்கு பாரதிய ஜனதா தொண்டர்களின் உருக்கமான வேண்டுகோள் என்ற...\nஎன் நண்பர் ரஜினிகாந்தின் ஆரோக்கியம் தான் முக்கியம் – நடிகர் கமல் பரபரப்பு பேட்டி\nநடிகர் ரஜினிகாந்தின் ஆரோக்கியம் தான் முக்கியம். மநீம தலைவர் கமல்ஹாசன் கோவை பந்தயசாலை...\nகடந்த சில தினங்களாக வாட்சப் செயலி புதிய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை பயனாளர்களுக்கு...\nராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் – பொங்கல் விழா கொண்டாட்டம்\nகோவை ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்...\nகொரோனா தடுப்பூசி இன்று முதல்\nகோவை, கோவை அரசு மருத்துவமனையில் முதற்கட்டமாக மருத்துவ பணியாளர்கள் உட்பட முன்கள பணியாளர்கள்...\nமாஸ்டர் திரைப்படம் வெளியிடுவதில் சிக்கல்\nகொரோனா ஊரடங்கால் சினிமாத்துறை பெரும் பாதிப்பை சந்தித்தது.திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டது மட்டுமின்றி படப்பிடிப்புகலும்...\nபறவை காய்ச்சல் தொற்று அபாயம்\nகோவையில் பெய்த கனமழையால் பறவை காய்ச்சல் உள்ளிட்ட நோய்த் தொற்றுக்கள் பரவுவதைத் தடுக்க...\nகோவை எம்.ஜி.ஆர் மார்க்கெட்டில் வெங்காய மொத்த வியாபாரிகள் வேதனை\nஎம்.ஜி.ஆர்.மார்க்கெட்டில் போதிய இட வசதி இல்லாததால் இலட்சக்கணக்கான வெங்காயம் மழையில் நனைந்து சேதமடைந்துள்ளதாக...\nஎல். முருகன் கோரிக்கையை ஏற்றது தமிழக அரசு – நந்தகுமார் பாஜக\nதைப்பூசத்திருவிழா பொது விடுமுறை பட்டியலில் சேர்ப்பு கோவை மாவட்ட பாஜக சார்பில் முருகன்...\nதிமுக தலைவர் ஸ்டாலினை வெளுத்துவங்கிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி..\nகோவையில் அதிமுக விழா ஒன்றில் பேசிய பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, திமுக தலைவர் ஸ்டாலினை...\nஸ்டாலின் ஆம்பளையா இ���ுந்தா குற்றச்சாட்டுகளை நிரூபிக்கட்டும் – எஸ்.பி. வேலுமணி அதிரடி\nதிமுக தலைவர் ஸ்டாலின் வைக்கும் குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் உடனடியாக ராஜினாமா செய்ய தயார்...\nதிமுக-வினர் பெண்ணிடம் அராஜகம் | அடி, உதய்,கெட்ட வார்த்தை இதுதான் திமுக பெண்களுக்கு தரும் மரியாதையா\nகோவை மாவட்டம், தேவராயபுரம் கிராமத்தில் திமுக கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கிராமசபைக்...\nதிருமாவளவன் தொடர்ந்து இந்து மதத்தை இழுவுபடுத்தினால் அவருக்கு சேலை கட்டும் போராட்டம் நடத்தப்படும் – வேலூர் இப்ராஹிம்\nகோவை,டிசம்பர் 30 திருமாவளவன் தொடர்ந்து இந்து மதத்தை இழுவுபடுத்தினால் அவருக்கு சேலை கட்டும்...\nஎன் ரஜினி நலமாக இருக்க வேண்டும் – கமல்ஹாசன்\nநடிகர் ரஜினிகாந்த் தான் அரசியலுக்கு வரமுடியவில்லை என இன்று (டிசம்பர் 29) பகிரங்கமாக...\nமொத்த அரசியலும் பழையநிலைக்கு சென்றுவிடும் – மூத்த பத்திரிகையாளர் கோலாகல ஸ்ரீநிவாசன்\nபிரதமர் வாஜ்பாயின் 97வது பிறந்தநாள் பெண் குழந்தைக்கு தங்கமோதிரம் – பாஜக\nடிசம்பர் 25 முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 97வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று...\nபணிந்தது தமிழக அரசு – கோயில்கள் திறப்பு\nதமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்த நிலையில் தினமும் 1500 பேர் மட்டுமே...\nசெல்வம் எப்படி குவிகின்றது, செல்வந்தன் எப்படி உருவாகின்றான் என்பதை கூர்ந்து கவனித்த இந்து...\nபட்டீஸ்வரர் கோயில் நடை திறந்தது\nதமிழகத்தில் தி.மு.க ஆட்சி அமைத்ததும், கிருஸ்தவ பாதிரியார்கள் தமிழகத்தில் கிருஸ்தவர்கள் போட்ட பிச்சையால்...\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று 18,004 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்\nகடந்த 14 மாதமாக கொரோனா பிடியில் இருந்து உலக மக்களை காப்பாற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில்...\nதிருப்பதி வெங்கடேசப் பெருமாளுக்கு ஒவ்வொரு நாளைக்கும் ஒவ்வொரு விசேஷமான சேவை தொடங்குகிறது\nதிருப்பதி ஏழுமலையானுக்கு ஒவ்வொரு திங்கட்கிழமையும் காலை 6 மணிக்கு நடைபெறும் முக்கிய சேவை...\nகோவில்களில் தீர்த்தம் கொடுப்பதற்கு பின் உள்ள அறிவியல் காரணம் தெரியுமா தண்ணீர் குறித்து நீங்கள் அறியாத பல அரிய தகவல்கள்…\nதண்ணீர் தான் நம் உடம்பில் உள்ள உறுப்புகளுக்கு சக்திகளை எடுத்து செல்கிறது.நம் எண்ணங்களை...\nசுவாமி ஓங்காரனந்தர் என்ற காவல்தெய்வம்\nஇன்று என்றையும் விட ���வர் நமக்கு தேவைப்படும் நேரம்.சுவாமி ஓங்காரனந்தர் சமாதி அடைந்துவிட்டார்....\nகாது மூக்கு குத்துவது உள்ள அறிவியல் பின்னணி \nநாம் பிறந்தது முதல் பல்வேறு வகையான சடங்குகள் நம் வாழ்வில் பின்னிப் பிணைந்து...\nஅரசே… ஆலயம் விட்டு வெளியேறு..\nபெருமையும் பழமையும் வாய்ந்த தமிழகத்தில், தமிழர்கள், தொன்மை காலத்தில் இருந்தே, வாழ்ந்து வருகின்றனர்....\nகோயில் அடிமை நிறுத்து இயக்கம் வெற்றி\nஒரு இந்து வழிபடுவதற்கு கோயிலுக்கு செல்லும்போது, ஒன்றிற்கு நான்கு மடங்காக செலவளிக்க வேண்டும்....\nதமிழகத்தில் அனைத்து சுபகாரியங்களையும் பாரம்பரியமாக தமிழ்(இந்து) மாதங்களை அடிப்படையாகக் கொண்டே மக்கள் முடிவு...\nஅரசே ஆலயத்தை விட்டு வெளியேறு -சத்குரு ஜக்கி வாசுதேவ் அறைகூவல்\nகோவை ஈஷா யோகா மையத்தில் சிவராத்திரி விழா நடந்தது. இதில் சத்குரு ஜக்கி...\nஇலைமலிந்த வேல்நம்பி எறிபத்தற் கடியேன்” – சுந்தரமூர்த்தி நாயனார்\n\"இலைமலிந்த வேல்நம்பி எறிபத்தற் கடியேன்\" - சுந்தரமூர்த்தி நாயனார்காவிரியின் மகா முக்கியமான துணையாறான...\nஅனுமன் சாலிசா ஸ்லோகமும்.. உருவான வரலாறும்..\nஅனுமனை போற்றும் வகையில் பக்தி பரவசத்தோடு அவருக்காக பாடப்பட்ட 40 பாடல்களையே நாம்...\nபண்டைக்காலத்திலேயே மக்கள் கூறி வருவது தாமரை சூரியனின் மனைவி என்று தான். இப்போது...\nஞாயிற்றுக் கிழமை சிவந்த பூக்களால் சூரியனைப் பூஜிக்க வேண்டும்\nபிற விரத நாட்களைப் போலவே ஞாயிற்றுக் கிழமையும் ஆசரிக்க வேண்டும். ஆனாலும் சூரியனுக்கு...\nகாலையில் சூரிய நமஸ்காரம் செய்வது எதற்கு\nதொன்று தொட்டே பாரத மக்கள் பின்பற்றி வந்த ஓர் ஆசாரமுறை சூரிய நமஸ்காரம்....\nராமர் ஆலயம் சிறப்பாக அமையவேண்டி ஒரு நாள் முழுவதும் நாம பஜனை ..\nதிருப்பூர் மாவட்டம் செஞ்சேரி பிரிவில் உள்ள குமரன் மஹாலில் ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள்...\nஅதிகாலத்தில் முற்றும் கூட்டித் தெளித்த பின் வாசலில் அழகான கோலமிடுவது நம் நாட்டில்...\nகுளித்து முடித்தபின் ஈரமான திருநீறு அணிய வேண்டுமென்பது ஏன் \nதிருநீறு அணிவதை பற்றிக்கூறும் போது சில நேரங்களில் ஈரமான விபூதி அணிய வேண்டுமென்றும்,...\nகூடைப்பந்து விளையாட்டு வீரர்களுக்கு காப்பீடு திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது – நிர்வாகிகள் அறிவிப்பு\nகூடைப்பந்து விளையாட்டு வீரர்கள் விளையாடும் போது காயம் ஏற���பட்டால் சிகிச்சை பெற காப்பீடு...\nஒளிப்பதிவு திருத்த சட்டம் 2021 கருத்துரிமையை பாதிக்கிறதா..\nஒளிப்பதிவு திருத்த சட்டம் 2021 கருத்துரிமையை பாதிக்கிறது என்றும், இது திரைப்படத்துறையின் குரல்வளையை...\nஐசிசி உலக டெஸ்ட் இறுதிப்போட்டி நியூசிலாந்து அணி அபார வெற்றி\nஐசிசி சார்பில் இந்த ஆண்டு முதலாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஆட்டம் நடத்தப்பட்டது....\nகார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா லக்ஷ்மி உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் 'ஜகமே...\nஇந்தியா -நியூசி இன்று மோதல்\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி, நியூசிலாந்து அணியுடன் இன்று...\nபோர்ச்சுகல் அணிகள் மூன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் அபார வெற்றி\n24 நாடுகள் பங்கேற்று விளையாடிவரும் யூரோ கால்பந்து தொடரில், குரூப் எப் பிரிவில்...\nநியூசிலாந்து – இந்திய கிரிக்கெட் அணிகள் போட்டி ஜூன் 18 முதல் 22 ஆம் தேதி வரை இந்த இறுதிப் போட்டி தொடங்குகிறது\nநியூசிலாந்து - இந்தியா, ஐசிசி முதல் முறையாக நடத்தும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்...\n(யூரோ) கால்பந்து போட்டி இன்று இரவு தொடங்குகிறது.\nஉலக கோப்பைக்கு பிறகு மிகப்பெரிய கால்பந்து திருவிழாவான ஐரோப்பிய சாம்பியன்ஷிப் (யூரோ) கால்பந்து போட்டி ,...\nநடிகை ராஷி கண்ணா ரொட்டி பேங்க் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து தினமும் உணவளித்து வருகிறார்.\nஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களுக்கு உணவளித்துவரும் நடிகை ராஷி கண்ணா தொண்டு நிறுவனத்துடன்...\nஇந்தியா – இலங்கை இடையிலான ஒருநாள் போட்டிகள் ஜூலை 13, 26 மற்றும் 18 தேதிகளில் நடைபெறுகிறது\nஇந்தியா-இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டி ஜூலை 13-ஆம் தேதி...\n‘விஜய் 65’ படத்தில் நடிகர் யோகிபாபு இணைந்துள்ளார்.\nவிஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் ‘விஜய் 65’ படத்தில் நடிகர்...\nஒரு நடிகன் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு உதாரணம் தல அஜித் …\nஒரு நல்ல நடிகன் எப்படி இருக்க வேண்டுமோ அதற்கு அவர் உதாரணம் அவரை...\nபிரபல இயக்குனர் அப்படத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேலுவை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளாராம்.\nமெட்டி ஒலி சீரியல் மூலம் பிரபலமானவர் இயக்குனர் திருமுருகன். இவர் பரத், கோபிகா...\nவிஜய்யின் 66-வது படத்தை இயக்கப்போவது யார் என்கிற எதிர்பார���ப்பும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது\nமாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பின் நடிகர் விஜய் நடிக்கும் 65-வது படத்தை நெல்சன்...\nஹிப்ஹாப் ஆதி இரட்டை வேடத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது\nஇசை அமைப்பாளர், நடிகர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்டவர் ஹிப்ஹாப் ஆதி. இவர்...\n‘ஜகமே தந்திரம்’ வெளியீட்டு தேதியை விரைவில் அறிவிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ‘ஜகமே தந்திரம்’. இப்படத்தை ஏற்கனவே...\nவிக்ரம் நடிப்பில் உருவாகி வரும் ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது\nகவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் துருவ நட்சத்திரம். கவுதம் மேனனின்...\nவிக்னேஷ் சிவனும்-நயன்தாராவின் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது\nநடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற...\nஅரவிந்த் சாமி புதிதாக மலையாள படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்\nதமிழில் ரோஜா படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார் அரவிந்த்சாமி. இதையடுத்து பம்பாய், மின்சார...\nவிஜய்யின் 66-வது படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாம்\nநடிகர் விஜய்யின் 65-வது படத்தை நெல்சன் இயக்க உள்ளார். இப்படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள்...\nசத்தம் இல்லாமல் சரித்திரம் படைக்கும் இந்தியா\nநாம் வாழும் இந்த உலகில் ஆகச் சிறந்த பிரதானமான கண்டுபிடிப்பு என சக்கரத்தினை...\nடாக்டர் விக்ரம் சாராபாய், சுதந்திர‌ இந்திய அறிவியலின் தந்தை\nஇன்றைய இந்தியா விண்வெளியில் எவ்வளவோ சாதிக்கின்றது, வல்லரசு நாடுகளுக்கு இணையாக அதனால் வான்வெளியில்...\nடிவிஎஸ் ஐ கியூப் ஸ்கூட்டர் டெல்லி மற்றும் பெங்களூரு நகரங்களில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது\nடிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனம் தனது ஐ கியூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்...\nஜியோ புதிய பிரீபெயிட் சலுகை\nரிலையன்ஸ் ஜியோ ரூ. 3499 பிரீபெயிட் சலுகை அறிவிக்கப்பட்டது. இந்த சலுகை ஒரு...\nரியல்மி நார்சோ 30 5ஜி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது\nரியல்மி நார்சோ 30 மற்றும் நார்சோ 30 5ஜி ஸ்மார்ட்போன்கள் ப்ளிப்கார்ட் மூலம்...\nகடந்த வாரத்தில் அக்னி‌ எவுகனை ஒன்றை கொண்டு போய் காஷ்மீர் மாநிலத்தின் எல்லையி��்...\nபுதிய சலுகைகள் அறிவித்த ஏர்டெல்\nபாரதி ஏர்டெல் நிறுவனம் ரூ. 456 விலையில் புது பிரீபெயிட் சலுகையை அறிவித்து...\nS21 FE மாடலையும் கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வில் அறிமுகம்\nசாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி இசட் போல்டு 3 மற்றும் கேலக்ஸி இசட் ப்ளிப்...\nபுதிய கேலக்ஸி எம்32 அமேசான் மற்றும் சாம்சங் ஷாப் வலைதளங்களில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.\nபுதிய கேலக்ஸி எம்32 அமேசான் மற்றும் சாம்சங் ஷாப் வலைதளங்களில் விற்பனை செய்யப்பட...\nTN 43 குழுமம் தனது அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையிலான புதிய மினி மால் துவக்கம்\nமேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி செல்லும் சாலையில் ,TN 43 குழுமத்தின் நவீன வகை...\nபை (pi-π) என்பது நமக்கெல்லாம் ரொம்பவும் பரிச்சயமான ஒரு எண். ஆனால் இரகசியங்கள்...\nபண்டித ஜவஹர்லால் நேரு இந்தியாவில் ஒரு சொற்றொடரை பிரபலப்படுத்தியிருந்தார். ‘அறிவியல் மனப்பான்மை’ scientific...\nமென்பொருள் நிறுவனங்களின் முழு பலனும் இந்தியாவிற்கு கிடைக்குமா\nஇந்தியாவின் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் சிறந்த ஆண்டில் காலடி எடுத்து வைத்திருப்பது தெரிகிறது....\nரேடியோ கண்டுப்பிடிப்பில் ஜெகதீஸ்சந்திரபோஸின் பங்கு\nரேடியோ கடந்து வந்த பாதை : ரேடியோவின் தொழில்நுட்ப வளர்ச்சியில் தந்தி (Telegram)...\nஸ்ரீ ராமஜென்ம பூமி கடந்துவந்த பாதை – காலக்கோடு\nரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு புத்தாண்டு பரிசு..\nரிலையன்ஸ் ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியான புத்தாண்டு பரிசை அறிவித்துள்ளது அது என்னவென்றால்...\nஎதிர்காலத்திற்கான மிகவும் பயங்கரமான கணிப்புகள் ..\n1- வழக்கமான கார் பழுதுபார்க்கும் பட்டறைகள் ஒரு குறிப்பிட்ட காலத்தில் மறைந்துவிடும். 2-...\nசனி – வியாழன் கோள்களிடையேயான மாபெரும் ஒருங்கிணைவு சுமார் 400 ஆண்டுகளுக்குப் பிறகு வானில் நிகழ்கிறது.\nடிசம்பர் 21 பூமியில் இருந்து பார்க்கும்போது, இரு கோள்களும் அருகருகே நெருங்கி, பிரகாசமான...\nதகவல்தொடர்பு செயற்கைக்கோளை சுமந்தபடி பி.எஸ்.எல்.வி. சி-50 ராக்கெட் விண்ணில் பாய்கிறது..\nடிசம்பர் 17 ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து தகவல்தொடர்பு செயற்கைக்கோளை சுமந்தபடி பி.எஸ்.எல்.வி. சி-50 ராக்கெட்...\nஉலகில் ஒருசில நாடுகளில் யூடியூப், ஜிமெயில், கூகிள் தொடர்பான செயலிகள் வேலை செய்யவில்லை..\nஇந்தியா முழுவதும் பல பயனர்களுக்கு ���ூடியூப் மற்றும் ஜிமெயில் வலைத்தளங்கள் செயல்படவில்லை. பிரபலமான வலைத்தளமான...\n\"அரசு வியாபாரம் செய்தால் மக்கள் பிச்சைக்காரர்களாக இருப்பார்கள்-மகாத்மா காந்தி\". நாடு சுதந்திரம் பெற்றப்பின்னர்,...\nகொடுத்த நிதியைவிட, வராக்கடன் எழுதியது அதிகம் சவுக்கை சுழற்றியும் நழுவும் பொதுத்துறை வங்கிகள்\nவிஜய் மல்லையா, நிரவ்மோடி, மொஹூல் சோக்சி… அடிக்கடி கேட்டுப் பழக்கப்பட்டுவிட்டப் பெயர். காரணம்,...\nஆகஸ்ட் வரை அபராதம் இல்லீங்களாம்.. இந்த பட்டியலுக்கும் விதிவிலக்காம்..\nபுதுடில்லி : இந்தியாவில் விற்பனை செய்யப்படும் தங்க நகைள் மீது, பிஎஸ்ஐ முத்திரைப்...\nபெட்ரோல் விலையில் என்னதான் நடக்கிறதுஇது நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மை..\nஇந்தியாவின் இப்போதைய மிகப் பெரிய விவாதப்பொருள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் மீதான விலை...\n‘பூசலார்’ நிலையில் நடுத்தர மக்கள் சொந்த வீடு கனவுக்கு வேட்டு\nபதிவுச்சுருக்கம்: 👉என்ன ஆச்சு கட்டுமான பொருட்களுக்கு 👉ஐகோர்ட்டில் வழக்கு. 👉ஏழை மக்கள் வாயில்...\nஇந்தியாவிற்கு ஏன் ஜிஎஸ்டி அவசியம் நாடு போதிய அளவில் வளர்ச்சி பெறாததற்கு முந்தைய வரி விதிப்பு எப்படி காரணம்\nபதிவு சுருக்கம்: ஜிஎஸ்டி என்ற ஒருங்கிணைந்த வரி விதிப்பு நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமான...\nஅரசாங்க பண பரிவர்த்தனைகளில் தனியார் வங்கிகளுக்கு அனுமதியளிப்பது நல்லதா\nமத்திய அரசு அண்மையில் அதிரடியாக அரசு துறை சார்ந்த பரிவர்த்தனைகளுக்கு தனியார் வங்கிகளுக்கு...\nஎரிபொருள் விலை உயர்வுக்கு என்னதான் காரணம்\nஇந்தியாவின் பிரதான பிரச்னைகளில் ஒன்றாக, பெட்ரோலிய எரிபொருட்களின் பிரச்னை மாறிவிட்டது. மாதம் ஒருமுறை...\nபொதுத்துறையும் தனியார் துறையும் சேர்ந்தால் இவ்வளவு நடக்குமா\nஎப்படி பொதுத்துறையும் தனியார் துறையும் சேர்ந்து ஆரோக்கியமான தேசத்தை உருவாக்க முடியும் என்ற...\nஎண்ணெய் பொருளாதாரத்திலிருந்து நாம் மாறவேண்டும்\nபெட்ரோல், டீசல் விலை உயர்வு என்பது ஏற்றுக்கொள்ள முடியாத, கடும் பிரச்சினை என்பதை...\nடிஜிட்டல் கரன்சி இப்படித்தான் இருக்கும்\nமத்திய அரசின் 2021 –22ம் ஆண்டுக்கான பட்ஜெட் அறிவிப்புகளின்போது, பலரால் கவனிக்கப்படாத ஒரு...\nவருமான வரி இல்லாத இந்தியா சாத்தியமா\nமத்திய அரசின் 2021 –22ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கலாவதற்கு, சில நாட்களுக்கு முன்னர்,...\nஎன்னது, நம்மை கேலி செய்யுறதுக்காக, கூவி அழைப்பதுபோல் இருக்கிறதேனு ரொம்பவும் கோவப்படாதீங்க. காரணம்,...\nபதிவு சுருக்கம் : i ) தனிநபர் வருமான வரிவிலக்கு ii) அரசின்...\nநம்பிக்கை தருகிறதா ஜிஎஸ்டி வருமானம்\nநாட்டின் புதிய பேசுபொருட்களில் ஒன்றாக மாறிவிட்டது இந்த ஜிஎஸ்டி. அதிலும், தமிழகத்திின் சட்டசபைத்...\n2021 பிரமாண்ட பட்ஜெட்டில் என்னென்ன இருக்கும்\nஉலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டுக்கு, வரவு செலவுகளை சிக்கல் இல்லாமல் மேற்கொள்வது...\nஇந்திய பாராளுமன்ற வரலாற்றில் முதன் முறையாக காகிதங்களில் அச்சடிக்கப்படாத பட்ஜெட் \nகாகிதங்களில் அச்சடிக்கப்படாத பட்ஜெட் இந்திய பாராளுமன்ற வரலாற்றில் முதன் முறையாக, உரை விபரங்கள்...\nகோவையில் ஷாப்பிங் கண்காட்சி ..\nஜனவரி 09 எதிலும் புதுமை விரும்பும்,பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான 'கோ கிளாம்' ஷாப்பிங்...\nகோவை:கார்கள் வாங்குபவர்களுக்கும் விற்பவர்களுக்கும் ‘வண்டி மண்டி’ எனும் புதிய செயலி..\nகோவை, ஜனவரி 09 கோவையில் உபயோகித்த கார்கள் வாங்குபவர்களுக்கும் விற்பவர்களுக்கும் பயனுள்ள வகையில்...\nபங்குச் சந்தை : சிறப்பான தொடக்கம் சென்செக்ஸ் 118 புள்ளிகள் உயர்வு .\nஇந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சிறப்பாக முடிந்தது . மாருதி சுசுகி இந்தியா...\nஅரங்கன் சிலைக்கு அஞ்சிய ஆப்கானிய சுல்தான்…\nஇதுவரை உலகம் தங்கள் அடையாளத்தை காக்க பெரும்பாடு பட்ட இனம் என இஸ்ரேலிய...\nகடந்த நூற்றாண்டை புரட்டிபோட்ட விஞ்ஞானிகளில் முதன்மையானவர் ஐன்ஸ்டீன்..\nமற்ற விஞ்ஞானிகளை விட இவர் மகா வித்தியாசமானவர், அதாவது விஞ்ஞானிகள் என்றால் ஆய்வகத்தில்...\nமன்னிப்பு கடிதம் எழுதினாரா சாவர்கர்\nசாவர்க்கரின் வாழ்வினை புரட்டி பார்க்குமுன் இங்கிருக்கும் ஒரு பெரிய பொய்யினை முதலில் உடைக்க...\nஸ்ரீ ராமஜென்ம பூமி கடந்து வந்த பாதை\nஸ்ரீ ராமனின் புதல்வன் குசனால் இராமஜென்ம ஸ்தானத்தில் முதன் முதலில் ஆலயம் நிர்ணயிக்கப்பட்டது....\nதமிழனாக பிறக்க ஆசைப் படுகிறேன் – நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்\n1897 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் - 23ஆம் தேதி, ஒடிசா மாநிலத்தில்...\nடாக்டர் வி.சாந்தா: தெரிந்துகொள்ள வேண்டிய 10 தகவல்கள்\nபிரபல புற்றுநோய் மருத்துவ நிபுணரும் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவருமான டாக்டர்...\nஉயிர்போக���ம் நிலையில் கூட கொடியை காத்த வீரர் – திருப்பூர் குமரன் நினைவு தினம் இன்று\nகொடிகாத்த குமரன் என்று அனைவராலும் அறியப்படும் திருப்பூர் குமரன் இந்திய விடுதலை போராட்ட...\nஎளிமை நேர்மை தூய்மை; சுதந்திரப் போராட்ட வீரரும் முன்னாள் பிரதமருமான லால்பகதூர் சாஸ்திரி நினைவு தினம் இன்று\nஅக்டோபர் 2 என்றவுடன் அனைவருக்கும் நினைவுக்கு வருவது மகாத்மா காந்தியின் பிறந்த நாள்...\nவெள்ளையனின் துரோகத்தால் பெரும் சவால்களை சந்தித்த அறிவியல் மேதை ஜி.டி.நாயுடு நினைவு தினம் இன்று..\nசிறந்த அறிவியல் மேதையும், மகத்தான கண்டுபிடிப்பாளருமான ஜி.டி.நாயுடு நினைவு தினம் இன்று (ஜனவரி...\n‘கலாச்சார பயங்கரவாதம்: கடந்த காலங்களில் கலாச்சார மோதல்கள் மற்றும் விவாதங்கள்’\nகேரளாவின் கோழிக்கோடு, கேசரி மீடியா ஸ்டடீஸ் அண்ட் ரிசர்ச் சென்டரில் டாக்டர் பி.எஸ்.ஹரிஷங்கர்...\nபாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் வெற்றியையே – விஜய திவஸ்\nபுதுடெல்லி: ஆண்டுதோறும் டிசம்பர் 16-ந் தேதியை விஜய் திவஸ் அல்லது வெற்றி தினமாக கொண்டாடுகிறது....\nஆங்கிலேயனுக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு தினம் இன்று ..\nவீரபாண்டிய கட்டபொம்மன், தமிழகத்தில் ஆங்கிலேய கிறிஸ்தவ ஆட்சியை எதிர்த்துப் போரிட்ட 18ஆம் நூற்றாண்டைச்...\nஏவுகணை நாயகன் பாரத நாட்டிற்கு அக்னிச் சிறகு தந்த அப்துல் கலாம் பிறந்த தினம் இன்று..\n1931 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 15 ஆம் நாள் ஜைனுலாப்தீனுக்கும், ஆஷியம்மாவுக்கும்...\nநியூஸ் குரு ஒரு ஆன்லைன் செய்தி தளமாகும். நாங்கள் முக்கியமாக பிராந்திய அரசியல், கலாச்சாரம் மற்றும் பொருளாதாரத்தில் கவனம் செலுத்துகிறோம். கோயம்புத்தூரை மையமாகக் கொண்ட இந்த அமைப்பு, உண்மைகளால் இயக்கப்படும் ஊடக கலாச்சாரத்தையும், முக்கியத்துவம் வாய்ந்த கருத்துகளையும் வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newsguru.news/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2021-10-19T11:30:56Z", "digest": "sha1:Q4NWN5EYFS333EHQYLIHB36HF4EUSOU5", "length": 6949, "nlines": 92, "source_domain": "newsguru.news", "title": "சினிமா & விளையாட்டு Archives - நியூஸ் குரு", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, அக்டோபர் 19, 2021 | எங்கள் மொபைல் ஆப்-ஐ பதிவிறக்கவும்\nHome சினிமா & விளையாட்டு\nசினிமா மற்றும் விளையாட்டு தொடர���பான முக்கிய செய்திகள் மற்றும் தகவல்கள்\nகூடைப்பந்து விளையாட்டு வீரர்களுக்கு காப்பீடு திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது – நிர்வாகிகள் அறிவிப்பு\nநியூஸ் குரு - ஜூலை 16, 2021 0\nஒளிப்பதிவு திருத்த சட்டம் 2021 கருத்துரிமையை பாதிக்கிறதா..\nநாராயணன் திருப்பதி - ஜூலை 3, 2021 0\nஐசிசி உலக டெஸ்ட் இறுதிப்போட்டி நியூசிலாந்து அணி அபார வெற்றி\nநியூஸ் குரு - ஜூன் 24, 2021 0\nநியூஸ் குரு - ஜூன் 18, 2021 0\nஇந்தியா -நியூசி இன்று மோதல்\nநியூஸ் குரு - ஜூன் 18, 2021 0\nபோர்ச்சுகல் அணிகள் மூன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் அபார வெற்றி\nநியூஸ் குரு - ஜூன் 16, 2021 0\nநியூசிலாந்து – இந்திய கிரிக்கெட் அணிகள் போட்டி ஜூன் 18 முதல் 22...\nநியூஸ் குரு - ஜூன் 14, 2021 0\n(யூரோ) கால்பந்து போட்டி இன்று இரவு தொடங்குகிறது.\nநியூஸ் குரு - ஜூன் 11, 2021 0\nநடிகை ராஷி கண்ணா ரொட்டி பேங்க் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து தினமும் உணவளித்து வருகிறார்.\nநியூஸ் குரு - ஜூன் 8, 2021 0\nஇந்தியா – இலங்கை இடையிலான ஒருநாள் போட்டிகள் ஜூலை 13, 26 மற்றும் 18...\nநியூஸ் குரு - ஜூன் 8, 2021 0\nடி20 கிரிக்கெட் போட்டி இந்தியா-பாகிஸ்தான் போட்டி நடக்குமா\nஅண்டை நாடுகளில் இந்துக்கள் மீது தாக்குதல் – உலக நாடுகள் கண்டிக்கட்டும்\n இன்று தலித் தொழிலாளி கொடூர கொலை\nடி20 கிரிக்கெட் போட்டி இந்தியா-பாகிஸ்தான் போட்டி நடக்குமா\nஅண்டை நாடுகளில் இந்துக்கள் மீது தாக்குதல் – உலக நாடுகள் கண்டிக்கட்டும்\n இன்று தலித் தொழிலாளி கொடூர கொலை\nமனித குலத்தின் பல்வேறு பிரச்சனைகளுக்கு பாரதமே தீர்வு தரமுடியும் -ஆர்.எஸ்.எஸ் தலைவர் டாக்டர்.மோகன்பாகவத்\nநியூஸ் குரு ஒரு ஆன்லைன் செய்தி தளமாகும். நாங்கள் முக்கியமாக பிராந்திய அரசியல், கலாச்சாரம் மற்றும் பொருளாதாரத்தில் கவனம் செலுத்துகிறோம். கோயம்புத்தூரை மையமாகக் கொண்ட இந்த அமைப்பு, உண்மைகளால் இயக்கப்படும் ஊடக கலாச்சாரத்தையும், முக்கியத்துவம் வாய்ந்த கருத்துகளையும் வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://timestampnews.com/category/sports/", "date_download": "2021-10-19T11:12:17Z", "digest": "sha1:CE7OAJHLHAERNTYK5KRWOMYMNYXLKHWF", "length": 12919, "nlines": 133, "source_domain": "timestampnews.com", "title": "Sports – Timestamp News", "raw_content": "\nதோனியுடன் ரெய்னாவும் ஓய்வு அறிவிப்பு\nகிரிக்கெட் வீரர்கள் தோனி மற்றும் ரெய்னா இருவரும் ஒரே நாளில் தனது ஓய்வு முடிவுகளை அடுத்தடுத்த�� எடுத்துள்ளனர். இந்திய அணியின் மூத்த வீரர் தோனி நேற்று கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு…\nView More தோனியுடன் ரெய்னாவும் ஓய்வு அறிவிப்பு\nதி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் முன்னிட்டு அகில இந்திய அளவிலான மின்னொளி கபடி போட்டி\nதி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு அகில இந்திய அளவிலான மின்னொளி கபடி போட்டி நடக்க உள்ளது. திருச்செந்தூரில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 2–ந்தேதி முதல் 5–ந் தேதி வரை அகில இந்திய அளவிலான…\nView More தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் முன்னிட்டு அகில இந்திய அளவிலான மின்னொளி கபடி போட்டி\nதிமுக தலைவர் ஸ்டாலின் 67வது பிறந்த நாளையொட்டி கிரிக்கெட் போட்டி : தூ.டி. மாதாநகர் முதல்பரிசு\nதூத்துக்குடியில் திமுக தலைவர் ஸ்டாலின் 67வது பிறந்த நாளையொட்டி தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம் எல் ஏ அறிவுறுத்தலின் பேரில் வடக்கு மாவட்ட இளைஞரணி சார்பில் கிரிக்கெட் போட்டி தூத்துக்குடி எட்டயபுரம்…\nView More திமுக தலைவர் ஸ்டாலின் 67வது பிறந்த நாளையொட்டி கிரிக்கெட் போட்டி : தூ.டி. மாதாநகர் முதல்பரிசு\nதருவைக்குளத்தைச் சேர்ந்த 9 வயது சிறுவன் தங்கப்பதக்கம் – கராத்தே சேம்பியன்சிப் போட்டி\nதூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரத்தில் இன்று நடைபெற்ற தெற்காசிய அளவிலான 3வது SGKS (shobukai goju ryu karate do -india) கராத்தே சேம்பியன்சிப் போட்டியில் 8-9 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் தருவைக்குளத்தைச் சேர்ந்த திரு.சா. அந்தோணி…\nView More தருவைக்குளத்தைச் சேர்ந்த 9 வயது சிறுவன் தங்கப்பதக்கம் – கராத்தே சேம்பியன்சிப் போட்டி\nதிமுக தலைவர் ஸ்டாலின் 67வது பிறந்த நாளையொட்டிகிரிக்கெட் போட்டி : தூத்துக்குடி\nதூத்துக்குடியில் திமுக தலைவர் ஸ்டாலின் 67வது பிறந்த நாளையொட்டி தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம் எல் ஏ அறிவுறுத்தலின் பேரில் வடக்கு மாவட்ட இளைஞரணி சார்பில் கிரிக்கெட் போட்டி தூத்துக்குடி எட்டயபுரம்…\nView More திமுக தலைவர் ஸ்டாலின் 67வது பிறந்த நாளையொட்டிகிரிக்கெட் போட்டி : தூத்துக்குடி\nமாவட்ட அளவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டி : தூத்துக்குடி\nதூத்துக்குடி மாவட்ட அனைத்து அரசு பணியாளர்களுக்கிடையேயான தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்திய 2019-2020ம் ஆண்டுக்கா�� மாவட்ட அளவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற காவல்துறை அமைச்சுப்பணியாளர்களை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்…\nView More மாவட்ட அளவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டி : தூத்துக்குடி\nமாநில அளவிலான ‘தலைவா் தங்கக்கோப்பை’ கிரிக்கெட் போட்டி’ : திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள்\nதிமுக தலைவா் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, மாநில அளவிலான ‘தலைவா் தங்கக்கோப்பை’ கிரிக்கெட் போட்டி’ தூத்துக்குடி தெற்கு மாவட்ட இளைஞா் அணி செயலா் பை.மூ. ராமஜெயம் தலைமையில் இன்று தொடங்க உள்ளது. போட்டிகளில் பங்கேற்க…\nView More மாநில அளவிலான ‘தலைவா் தங்கக்கோப்பை’ கிரிக்கெட் போட்டி’ : திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள்\nமுதன் முதலாக டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி\nபெண்களுக்கான சர்வதேச டி20 உலகக்கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோத இருந்தன. ஆனால் போட்டி ஆரம்பிக்கும் முன்னர் இருந்தே மழைவிடாமல் பெய்தால் ஆட்டம்…\nView More முதன் முதலாக டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி\nமாபெரும் கிரிக்கெட் போட்டி – தூத்துக்குடி\nதூத்துக்குடி மாவட்டம் சமத்துவபுரத்தில் பிப்ரவரி மாதம் 2ம் தேதி அன்று Eleven Stars கிரிக்கெட் அணி நடத்தும் முதலாவது மாபெரும் கிரிக்கெட் போட்டியானது தொடங்கியது. பல்வேறு அணிகள் கலந்து கொண்டு தங்களின் திறமையான ஆட்டத்தை…\nView More மாபெரும் கிரிக்கெட் போட்டி – தூத்துக்குடி\nதமிழ்நாடு அளவில் பளுதூக்கும் போட்டிகள் : தூத்துக்குடி\nதமிழ்நாடு அமெச்சூர் பளுதூக்கும் சங்கம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட அமெச்சூர் பளுதூக்கும் சங்கம் தூத்துக்குடி பியர்ல் அரிமா சங்கம் சார்பில் மாநில அளவிலான 70வது ஆண் மற்றும் 34வது பெண்களுக்கான பளுதூக்கும் போட்டிகள் தூத்துக்குடி…\nView More தமிழ்நாடு அளவில் பளுதூக்கும் போட்டிகள் : தூத்துக்குடி\nதூத்துக்குடி மாவட்ட காவல்துறையில் உள்ள நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள்- மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் ஆய்வு.\nதமிழக மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நல்வாழ்வு சங்கத்தின் சார்பில் கொரோனா பணிகள்\nதூத்துக்குடி 17வது வார்டு பொதுமக்கள் சார்பில் தெரு மின் விளக்கு, சாலை வசதி மற்றும் குடிநீர் குழாய் அமைத்திட வேண்டி கோரிக்கை மனு\nதிருச்செந்தூா் கோயில் கும்பாபிஷேகம்: முதல்வா் விரைவில் அறிவிப்பாா்\nதூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அங்கன்வாடி மைய கட்டிடம் – அமைச்சர் கீதாஜீவன் அடிக்கல் நாட்டினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2015/12/blog-post_25.html", "date_download": "2021-10-19T11:31:25Z", "digest": "sha1:TBUDNSGI6OKF52SRWMHMOH3RQHDVZRTR", "length": 33112, "nlines": 283, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஒரு சென்னைவாசியின் கடிதம்!", "raw_content": "\nதமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஒரு சென்னைவாசியின் கடிதம்\nசி.பி.செந்தில்குமார் 7:59:00 PM தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஒரு சென்னைவாசியின் கடிதம்\nதமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு,\nவணக்கம். தங்கத்தாரகை, புரட்சித்தலைவி, நிரந்தர முதல்வர் போன்ற அடைமொழிகள் இல்லாததைக் கண்டு முகம் சுளித்திருப்பீர்கள். அப்படி அழைப்பதற்கான நேரமோ விருப்பமோ இல்லை. முதல்வர் என்ற முறையில் ‘மாண்புமிகு’ என்று அழைத்திருக்கலாம். ஆனால் மக்களின் மீது கரிசனம் கொள்ளும் மாண்பு தங்களுக்கு இல்லை என்று கருதுவதால் அப்படி அழைக்கவும் மனம் வரவில்லை.\nஉங்கள் கட்சிக்காரர்கள் உங்களை ‘அம்மா’ என்று அழைப்பதோடு தமிழகத்தையும் அப்படி அழைக்க வைத்துவிட்டார்கள். நீங்களும் எங்கள் வரிப்பணத்தில் அம்மா உணவகம், அம்மா மருந்தகம் என்று ஏராளமாக, தாராளமாக ‘அம்மா’ திட்டங்களைக் கொண்டுவந்துவிட்டீர்கள். அம்மா என்கிற சொல் தமிழர்களுக்கு உயர்வானது. தாய்மை என்றால் கருணை என்று அர்த்தப்படுத்திக்கொள்கிறவர்கள் தமிழர்கள். தன் குஞ்சுகளைக் கொல்ல வரும் பருந்தைக்கூட சாத்தியப்படாத உயரத்தில் பறந்து சண்டையிட்டுக் காப்பாற்ற முயலும் தாய்க்கோழி. ஆனால் நீங்களோ வெள்ளத்தால் பாதிப்படைந்த மக்களைக் கண்கொண்டும் பார்க்கத் தயாராயில்லை.\nநவம்பர் மாத இறுதியில் பெருமழை பெய்து கணிசமான பாதிப்புகள் ஏற்பட்டும், கூக்குரல்கள் எவையும் உங்கள் காதுகளை எட்டவில்லை. உங்கள் போயஸ் கார்டன் வீட்டைத் தாண்டியும் சென்னை இருக்கிறது. அங்கே உங்களுக்கு வாக்களித்த அப்பாவி மனிதர்கள் இருக்கிறார்கள் என்று நீங்கள் உணரவேயில்லை. சமூகவலைத்தளங்கள், ஊடகங்கள் என பாதிப்புகளைப் போதுமான அளவுக்குப் பட்டியலிட்டும் படம் பிடித்தும் காட்டியபிறகு, ஒருவழியாக உங்கள் வீட்டின் கதவுகள் திறந்தன. நீங்கள் தமிழகத்துக்கே முதல்வர் என்று நினைத்தால், ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ. மட்டும்தான் என்பதுபோல் ஆர்.கே.நகருக்குச் சென்றீர்கள். காரைவிட்டு இறங்காமலே ‘பார்வையிட்டீர்கள்’. மைக் பிடித்து ‘வாக்காளப் பெருமக்களே’ என்று பேசி இழிவான அரசியலின் அத்தியாயத்தைத் தொடங்கிவைத்தீர்கள். ‘ஒருமாதம் பெய்ய வேண்டிய மழை மூன்றே நாட்களில் பெய்யும் என்று எதிர்பார்க்கவில்லை’ என்று கச்சிதமாக வசனம் பேசினீர்கள். அவ்வளவுதான்\nசரி, அப்போது நீங்கள் எதிர்பார்க்கவில்லை. ஆனால் டிசம்பர் முதல் வாரத்தில் 50 செ.மீ மழை பெய்யும் என்று பி.பி.சி. அறிவித்ததே, வானிலை ஆய்வு மையமும் கனமழை பெய்யும் என்று அறிவித்ததே... அந்த மழைக்கும் பெருகப்போகும் வெள்ளத்துக்கும் என்ன செய்தீர்கள் ‘செய்வீர்களா நீங்கள் செய்வீர்களா’ என்று எங்களைப் பார்த்து கேட்ட நீங்கள், பேரிடர் தருணத்தில் கூட ஒன்றுமே செய்யவில்லையே டிசம்பர் 1 தொடங்கிய பெருமழை, பெருகிய வெள்ளம், திறந்துவிடப்பட்ட ஏரி சென்னையின் பெரும்பாலான மக்களின் வாழ்வாதாரங்களை, உடைமைகளை, கனவுகளை, சேமிப்பை, கடன்தொகையை, கால்நடைகளை, நம்பிக்கையை, பல உயிர்களை, உறவுகளை அடித்துச் சென்றுவிட்டது. அப்போதாவது போயஸ் கார்டன் கதவு திறந்ததா டிசம்பர் 1 தொடங்கிய பெருமழை, பெருகிய வெள்ளம், திறந்துவிடப்பட்ட ஏரி சென்னையின் பெரும்பாலான மக்களின் வாழ்வாதாரங்களை, உடைமைகளை, கனவுகளை, சேமிப்பை, கடன்தொகையை, கால்நடைகளை, நம்பிக்கையை, பல உயிர்களை, உறவுகளை அடித்துச் சென்றுவிட்டது. அப்போதாவது போயஸ் கார்டன் கதவு திறந்ததா\nமோடி, ஹெலிகாப்டரில் பார்வையிடப்போகிறார் என்ற செய்தி வந்ததும், அவருக்கு முன்னால் நீங்கள் ஹெலிகாப்டரில் ‘பார்வையிட்டீர்கள்’. அடுத்த மாநிலத்து முதல்வரோ, பிரதமரோ ஹெலிகாப்டரில் வந்து பார்வையிடுவதைப் புரிந்துகொள்ள முடிகிறது. சென்னை முழுக்க வெள்ளப் பாதிப்பு என்பது எல்லோருக்கும் தெரியும்போது சிலநாட்கள் கழித்து ஹெலிகாப்டரில் பார்வையிடுவதற்குப் பெயர்தான் முதல்வரா பாதிக்கப்பட்ட மக்களைப் போய்ச் சந்திப்பதில் இருந்து எது உங்களைத் தடுத்தது\nபாதிக்கப்பட்டவர்களைத்தான் பார்க்க வரவில்லை. பத்திரிகையாளர்களை அழைத்துப் பேசியிருக்கலாமே. சென்னையின் பாதிப்ப��, அதற்கு அரசு எடுக்கப் போகும் முயற்சிகள் என விலாவாரியாக விளக்கியிருக்கலாமே ‘விஸ்வரூபம்’ படப் பிரச்னையில் கமல்ஹாசனைக் குற்றம் சாட்ட மிக நீண்ட பிரஸ்மீட் நடத்தினீர்களே... லட்சோப லட்சம் மக்களைப் பாதிக்கும் இந்தப் பேரிடர் குறித்துப் பத்திரிகையாளர்களைச் சந்தித்து அரசின் நிலை பற்றி விளக்கவேண்டும் என்று உங்களுக்குத் தோன்றவில்லையா ‘விஸ்வரூபம்’ படப் பிரச்னையில் கமல்ஹாசனைக் குற்றம் சாட்ட மிக நீண்ட பிரஸ்மீட் நடத்தினீர்களே... லட்சோப லட்சம் மக்களைப் பாதிக்கும் இந்தப் பேரிடர் குறித்துப் பத்திரிகையாளர்களைச் சந்தித்து அரசின் நிலை பற்றி விளக்கவேண்டும் என்று உங்களுக்குத் தோன்றவில்லையா உங்களைச் சுற்றியிருக்கும் ஆலோசகர்கள் உங்களுக்கு உணர்த்தவில்லையா\nபாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்கவில்லை; பத்திரிகையாளர்களைச் சந்திக்கவில்லை. இதோ இத்தனை பாதிப்புகளுக்கு இடையில் ஈரநெஞ்சம் கொண்ட சாமான்ய மனிதர்களும், சிறுசிறு அமைப்புகளும், அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட அரசு ஊழியர்களும் நிவாரணப் பணிகளைச் செய்து முடித்தபிறகு, முந்தா நாள் அறிக்கை விடுகிறீர்கள், ‘கனமழை பெய்ததால்தான் வெள்ளம் ஏற்பட்டது’ என்று. இதைக் கண்டுபிடிக்க இத்தனை நாட்களா ஊரே கதறியபோது, சென்னையில் ஒன்றுமே நடக்காததுபோல் இருந்தது ஜெயலலிதாவும் ஜெயா டி.வி.யும் மட்டும்தான்.\nசாதாரண மக்கள் கொண்டுசேர்த்த நிவாரணப் பொருட்களைப் பறித்து அதில் அம்மா ஸ்டிக்கர்களை ஒட்டினார்கள் உங்கள் கட்சிக்காரர்கள். பல இடங்களில் நிவாரண உதவிகள் செய்யப்போனவர்களை மிரட்டினார்கள். ‘தவறு செய்யும் கட்சிக்காரர்களைத் தண்டிப்பவர் ஜெயலலிதா’ என்று ஒரு பிம்பத்தை உருவாக்கி வைத்திருக்கிறீர்கள். ‘அக்ரி கிருஷ்ணமூர்த்திக்குத்தான் அமைச்சர் பதவி போகுமே தவிர, ‘குற்றவாளி’ என்று குன்ஹா தீர்ப்பளித்தாலும் ஜெயலலிதாதான் அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர்’ என்று புரிந்தவர்களுக்கு இந்தப் பிம்பம் ஒரு மாயை என்று தெரியும். இந்த மாயையை நம்புபவர்கள் சார்பாகவே கேட்கிறேன், அடுத்தவர் பொருட்களில் ‘அம்மா ஸ்டிக்கர்’ ஒட்டிய அடாவடிக்காரர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் ஜெயலலிதா கொடுமையிலும் கொடுமையாக துக்க வீட்டிலும் ’அம்மா துதி’ பாடுகிறார்கள் உங்கள் கட்சிக்காரர்கள். சகிக��கவில்லை.\nபாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்கச் செல்லாதது, நிவாரணப் பொருட்களிலும் அம்மா ஸ்டிக்கர் ஒட்டுவது மட்டுமா உங்கள் ஆட்சியின் குற்றங்கள் இதோ, ‘அதிக மழை பெய்ததால் மட்டும் வெள்ளம் ஏற்படவில்லை. செம்பரம்பாக்கம் ஏரியைச் சீராகத் திறந்துவிடுவதில் ஏற்படும் தாமதமும் ஒரேடியாகத் திறந்துவிடப்பட்டதும், மக்களுக்கு முறையாக அறிவிக்காததும்கூட காரணங்கள்’ என்று செய்திகள் வெளியாகியிருக்கிறதே, இதற்கெல்லாம் காரணம் உங்கள் தலைமையிலான செயல்படாத அரசாங்கம்தானே ஜெயலலிதா அவர்களே..\n‘அம்மாவின் ஆணைக்கிணங்க’ என்று மூச்சுக்கு முன்னூறு தடவை கட்சிக்காரர்கள் தொடங்கி கலெக்டர்கள் வரை சொல்ல வைத்திருக்கிறீர்களே, அந்த ‘அம்மாவின் ஆணை’ எப்போது வரும் என்று தெரியாமல் காத்துக்கிடந்ததுதானே இந்த வெள்ளத்துக்குக் காரணம். இந்தக் கடிதத்தை எழுதிக்கொண்டிருக்கும் இந்த நொடிவரை தலைமைச் செயலாளரால் உங்களைச் சந்திக்க முடியவில்லையே. பாதிக்கப்பட்ட மக்களையும் பத்திரிகையாளர்களையும், ஏன் பிரதமரையும்கூட சந்திக்காத நீங்கள் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டி நிவாரணப் பணிகளை முறையாகச் செய்வீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இல்லை.\nபதவியில் இல்லாதபோதும் ‘மக்களின் முதல்வர்’ என்று உங்களுக்கு நீங்களே பட்டம் சூட்டிக்கொண்டீர்கள். ஆனால், பதவியில் இருக்கும் இப்போதுகூட நீங்கள் மக்களின் முதல்வராக இல்லையே\nஉங்கள் கட்சிக்காரர்கள் உங்களை நிரந்தரப் பொதுச்செயலாளர் என்றும், நிரந்தர முதல்வர் என்றும் அழைக்கிறார்கள். ஜனநாயகத்தின் வாசனை தப்பித் தவறிக்கூட கசிந்துவிடாத உங்கள் கட்சியில் நீங்கள் நிரந்தரப் பொதுச்செயலாளராக இருக்கலாம். நீங்கள் நிரந்தர முதல்வரா இல்லையா என்பதை ஆறுமாதங்களில் வரப்போகும் தேர்தல் சொல்லிவிடும். ஆனால் ஒன்றுமட்டும் உறுதி - இந்த இயற்கைப் பேரிடரும், அதில் நீங்கள் காட்டிய அலட்சியமும் ஆணவமும், உங்கள் கட்சிக்காரர்கள் காட்டிய அடிமை மோகமும், தமிழகத்துக்கு நிரந்தரக் களங்கம்.\nதனிமனிதத் துதியை விரும்பும், ஊக்குவிக்கும் ஓர் அரசின்கீழ் நாங்கள் வாழ்வது தமிழர்களான எங்களுக்கு நிரந்தர அவமானம்\nதமிழகத்தின் பாதுகாக்கப்பட்ட பிரதேசமான போயஸ் கார்டனுக்கு அப்பால் வசிக்கும் ஒரு சென்னைவாசி\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகிளு கிளு கார்னர் - ராத்திரியில் ரதி தேவி சொன்ன ஜோக்ஸ் - பாகம் 1\n -சிவகாசி ராஜ்கதிர் -சிறுகதை @ வாரமலர் ( ரூ 25,000 பரிசு பெற்ற கதை )\nபூட்டாத பூட்டுகள் (1980) _ சினிமா விமர்சனம் ( எ மகேந்திரன் ஃபிலிம்)\nசாந்தி அப்புறம் நித்யா -கில்மாவா ஜொள்மாவா\nகடமை, கண்ணியம், கட்டுப்பாடு மிக்கவர்கள் யார்\nவாட்ஸ் அப்'பில் சுய விவரங்களை பாதுகாக்க சில வழிகள்...\nபுத்தாண்டு இரவில்..- எச்சரிக்கும் போலீஸ்\nபொண்ணுங்க யாராவது வம்புச்சண்டைக்கு இழுத்தா\nஒரு கள்ளக்காதல் கதைப்படத்தை வளர விட மாட்டீங்களாப்பா\nசீனா இரண்டாவது குழந்தைக்கு அனுமதித்ததா\nமாலை நேரத்து மயக்கம் படத்துக்கு ஏன் ஏ சர்ட்டிபிகேட...\nகேப்டன் கோபப்பட்ட தருணங்கள் - ஒரு அலசல்\nவிஜய்யுடன் போட்டி போடும்எஸ்.ஏ.சந்திரசேகரன்=100 கோடி\nதிரு 'த்தூ' விஜயகாந்த் அவர்களுக்கு சில கேள்விகள்\n‘என் கதை’-ஹெலன் கெல்லர்- THE STORY OF MY LIFE\nஅநாகரிகப் பேச்சு: விஜயகாந்தை சாடும் அரசியல் விமர்ச...\nநடிகர் சிம்பு-அனிருத் மீது 2-வது வழக்கு; சென்னை சை...\nபதின் பருவம் புதிர் பருவமா 14 - நிஜமாகக் கொல்லும்...\n’ (The Hateful Eight’)- திரைக்கதைக்காக இரண்டு ஆஸ்க...\n'மாலை நேரத்து மயக்கம்-இயக்குநர் செல்வராகவன்\nகல்யாண மண்டபத்தில் பொண்ணும் மாப்ளையும் க்ளோசாப்பழக...\nபதின் பருவம் புதிர் பருவமா 13 - சாய்த்துவிடும் சந...\nகுற்றமும் தண்டனையும்: இனி சுதந்திரமாகத்தான் இருக்க...\nதென்னிந்திய சினிமா 2015: நட்சத்திர பலத்தை பின்னுக்...\n1984-ல் வெளியான ‘மகுடி’ -‘நீலக்குயிலே உன்னோடு நான்...\nசினிமா எடுத்துப் பார் 37: காலங்களில் அவள் வசந்தம்-...\n2015 - வாகை சூடிய திரைப்படங்கள்\nடியர்.உன் இதயக்கதவை எப்பவும் மூடியே வெச்சிருக்கியே...\nவெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்லமாட்டான் (2015)- சி...\nபசங்க 2 (2015)-சினிமா விமர்சனம்\nகாட்டு கோழி (2015)- சினிமா விமர்சனம்\nவேட்டைக்காரன் செம ஹிட் படம்னு அஜித் ரசிகர்களே சொல்...\nகதறி அழுத சரிதா நாயர்\nஅஜித் - விஜய் ரசிகர்கள் 'சண்டை'யால் யாருக்கு லாபம்\nகொக்கிரகுளம் (2015)- சினிமா விமர்சனம்\nசிங்க தளபதி (2015)-சினிமா விமர்சனம்\nபக் வீட் /எதிர்.வீட் பேமிலியோட பார்க்க வேண்டிய படம்\nவிஜய் 'மார்க்கெட் ஹீரோ' ஆனது எப்படி\nஷங்கர் இ��க்கத்தில் ரஜினி நடிக்கும் '2.0' படத்தின்க...\nடெல்லியில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்ய...\nஇந்தியாவின் நம்பர் ஒன் மோசடி ஆசாமி.-பட்டுக்கோட்டை ...\nபீப் பாடலுக்கும் அனிருத்துக்கும் தொடர்பில்லை: நடிக...\nதென்னிந்தியன் (2015)- திரை விமர்சனம்\nபாஜிராவ் மஸ்தானி (2015)- திரை விமர்சனம்\nதமிழக அரசியலில் இன்றைய தேவை யார்\nதங்க மகன் - சினிமா விமர்சனம்\nக்யா கூல் ஹை ஹம் - 3- இந்தியாவோட முதல் ’பலான பலான ...\nபாரீஸில் சர்வதேசப் பருவநிலை மாற்ற உச்சி மாநாடு - ப...\nகொழுப்பெடுத்த குரங்கே ன்னு காதலி திட்டினா\nகாற்றை விலை கொடுத்து வாங்கும் இன்றைய சீனா... நாளைய...\nவிராட் கோலி - 7 அசத்தல் மாற்றங்கள்\nஇயேசுவின் உண்மையான முகம் இதுவா\nமீட்புப்பணியில் மீனவர்கள் சந்தித்த சவால்கள்\nதிருட்டு ரயில் (2015)-சினிமா விமர்சனம்\nதமிழக முதல்வர் ஜெயலலிதா செய்தது என்ன\nகமர்ஷியல் படங்களின் முகம்-கருந்தேள் ராஜேஷ்\nவிஜய் சேதுபதியின் 'தர்மதுரை' படக்குழுவிடம் முதல் ப...\nசார்.ஜெயில்ல கம்பி எண்ணும்போது 1 ,2,3...., 9 வரைக்...\nவாட்ஸ் அப்பில் தமிழக மக்களுக்கு ஜெயலலிதா உரை\n'அடுத்த தேர்தலில் தி.மு.க.தான் ஜெயிக்கும்\nஆழ்வார்பேட்டை ஆளுங்கட்சியின் அராஜகத்தால் ஆள்வார் ப...\nசெம்பரம்பாக்கம் விவகாரம்: ராமதாஸ் அடுக்கும் 5 கேள்...\nதரை தட்டிய ரியல் எஸ்டேட்\nதிரைக்கதை வசனம் =கலைஞர். இயக்கம் = ஆ.ராசா\nஎல் நினோவைப் {பெருமழை}பற்றிய {உலகை பயமுறுத்தும் }1...\nட்விட்டர் கலாட்டா @ தினமலர் #14/12/2015\nதிருநெல்வேலி கலெக் டராக இருந்த ஆங்கிலேயர் ஆஷ்வாஞ்ச...\nமனுசங்க.. 31: மாட்டுக்காரப் பையன்\nநிவாரணம் என்பது பிச்சை அல்ல-பிரேமா ரேவதி\n9 ஆண்டுக்கு பின் நாசா வெளியிட்ட புளூட்டோவின் பிரமி...\nபீப்' பாடல்: சிம்பு, அனிருத் தங்கள் வக்கீல் மூலம் ...\nஎல்லோருக்கும் பெய்கிறது மழை... எல்லோருக்கும் கிடைப...\nசென்னை வெள்ளம் அரசு இயந்திரம் உருவாக்கிய செயற்கை ப...\nகடலூர் கலெக்டருக்கு எழுதப்பட்ட காட்டமான கடிதம்\nசேரிகளைப் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய 10 உண...\nகடலூரில் தன்னார்வலர்களை தாக்கும் 'பேரிடர்கள்'- ஒரு...\nபோர்ப்ஸ் வெளியிட்ட ‘டாப்-100’ பிரபலங்கள் பட்டியல்...\nஎச்சரிக்கைகளை புறந்தள்ளிய தமிழக அரசு\nஇலக்கு (2015)- சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2021/09/20/son-who-killed-mother-who-got-drunk", "date_download": "2021-10-19T11:21:03Z", "digest": "sha1:NEC2NE5226HXOAOICPNUPLNIPPHMNTKN", "length": 6059, "nlines": 49, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Son who killed mother who got drunk", "raw_content": "\n“பசிக்குது சோறு போடு” : சாப்பாடு இல்லை என்று கூறிய தாயைக் கொன்ற கொடூர மகன் - குடிபோதையில் நடந்த விபரீதம்\nசென்னை வேளச்சேரியில் குடிபோதனையில் பெற்ற தாயை மகன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னை வேளச்சேரி திரு.வி.க நகரைச் சேர்ந்தவர் லட்சுமி. இவரது மகன் மூர்த்து அடிக்கடி குடிபோதையில் தகராறு செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். இந்நிலையில் நேற்றிரவு குடிபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது தாயிடம் உணவு கேட்டுள்ளார்.\nதினமும் குடிபோதையில் வருவதால் தாய் லட்சுமி, மூர்த்தியைக் கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில், அருகில் இருந்த கத்தியை எடுத்து தாயை சரமாறியாக மூர்த்து குத்தியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே லட்சுமி பறிதாபமாக உயிரிழந்தார்.\nஇதனையடுத்து மூர்த்தி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர், தகவலறிந்து வந்த போலிஸார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தப்பியோடிய மூர்த்தியை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n“சாலையில் நடனம் ஆடியது ஏன்” : மாடல் அழகிக்கு நோட்டீஸ் அனுப்பிய டிராபிக் போலிஸ் - நடந்தது என்ன” : மாடல் அழகிக்கு நோட்டீஸ் அனுப்பிய டிராபிக் போலிஸ் - நடந்தது என்ன\nசிறுநீரக கல்லுக்கு பதிலாக சிறுநீரகத்தையே அகற்றிய மருத்துவர்... நுகர்வோர் ஆணையத்தின் அதிரடி உத்தரவு\n” : அமைச்சர் சேகர்பாபு சூசகம்\nதண்ணி இல்லாத காட்டில் மாட்டிக்கொண்ட 2 பேர்.. 1 வாரம் கழித்து மீட்ட போலிஸ்: ஆஸ்திரேலியாவில் நடந்தது என்ன\n50 ஆண்டுகளுக்குப் பிறகு மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றியத்தை கைப்பற்றிய தி.மு.க - ஆட்சிக்கு கிடைத்த நற்சான்று\n“விரைவில் ஆழ்கடல் அகழாய்வுப் பணிகளைத் தொடங்க ஆலோசனை” : அமைச்சர் தங்கம் தென்னரசு முக்கிய தகவல்\nசிறுநீரக கல்லுக்கு பதிலாக சிறுநீரகத்தையே அகற்றிய மருத்துவர்... நுகர்வோர் ஆணையத்தின் அதிரடி உத்தரவு\nதண்ணி இல்லாத காட்டில் மாட்டிக்கொண்ட 2 பேர்.. 1 வா���ம் கழித்து மீட்ட போலிஸ்: ஆஸ்திரேலியாவில் நடந்தது என்ன\n50 ஆண்டுகளுக்குப் பிறகு மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றியத்தை கைப்பற்றிய தி.மு.க - ஆட்சிக்கு கிடைத்த நற்சான்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2021/10/08/eat-27-parotta-get-gold-coin-gift-briyani-shop-advertising", "date_download": "2021-10-19T11:21:57Z", "digest": "sha1:TM6OJC2ERVX5SI2WSDRRMMXGGOWR6EZW", "length": 7846, "nlines": 56, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Eat 27 parotta get Gold coin gift : Briyani shop advertising", "raw_content": "\n27 பரோட்டா சாப்பிட்டால் தங்க நாணயம் பரிசு... அதிரடி அறிவிப்பை வெளியிட்ட பிரியாணிக் கடை\n27 பரோட்டா சாப்பிட்டால் தங்க நாணயம் பரிசாக வழங்கப்படும் என பிரியாணி கடை அறிவித்துள்ளது இளைஞர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.\n'வெண்ணிலா கபடி குழு' படத்தில் ஒரு காட்சி வரும். அதில் 50 பரோட்டா சாப்பிட்டால் காசு கொடுக்க வேண்டாம் என பரோட்டா கடை ஒன்றில் அறிவிக்கப்பட்டிருக்கும். இந்த ஆஃபரை பார்த்து நடிகர் சூரி பரோட்டா சாப்பிட்டு அசர வைத்திருப்பார். இந்த காட்சியையே தூத்துக்குடியைச் சேர்ந்த பிரியாணி கடை ஒன்று பீட் செய்துள்ளது.\nதூத்துக்குடியில் வி.ஐ.பி என்ற பெயரில் பிரியாணிக் கடை ஒன்று சில நாட்களுக்கு முன்பு துவங்கப்பட்டுள்ளது. இந்தக் கடையை மக்களிடம் கொண்டு செல்லும் விதமாக அதிரடி ஆஃபரை அறிவித்தது.\nஅது என்னவென்றால், 27 பரோட்டா, ஒரு சிக்கன் ரைஸ், ஃபலூடா ஆகியவற்றை ஒரே நேரத்தில் சாப்பிட்டு முடிக்கும் நபருக்குத் தங்க நாணயம் பரிசாக வழங்கப்படும் அறிவிக்கப்பட்டது. மேலும் இதற்குப் பரோட்டா திருவிழா என பெயர் வைக்கப்பட்டுள்ளது.\nஇதனை அறிந்த தூத்துக்குடி இளைஞர்கள் நான், நீ என போட்டி போட்டுக் கொண்டு பரோட்டா திருவிழாவில் கலந்துகொண்டு வருகின்றனர். இதையடுத்து இந்த போட்டியில் கலந்துகொண்ட அருண் பிரகாஷ் என்ற இளைஞர் 27 பரோட்டா, ஒரு சிக்கன் ரைஸ், ஃபலூடா ஆகியவற்றை ஒரே நேரத்தில் சாப்பிட்டு அசத்தியுள்ளார்.\nஇதையடுத்து வெற்றி பெற்ற அருண் பிரகாஷுக்கு கடையின் உரிமையாளர்கள் அறிவித்தபடியே தங்க நாணயத்தை வழங்கினர். இதுகுறித்து கடையின் உரிமையாளர் கண்ணா பாண்டியன், \"எங்களது கடையை மக்களிடம் கொண்டு செல்லும் நோக்கில் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறோம்.\nஅந்த வகையில் பரோட்டா திருவிழா நடத்தி வெற்றி பெறுபவர்களுக்குத் தங்க நாணயம் வழங்கப்படும் என்��ு அறிவித்தோம். இதற்குத் தூத்துக்குடி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பலரும் ஆர்வத்துடன் போட்டியில் கலந்துகொண்டு வருகிறார்கள்\" எனத் தெரிவித்துள்ளார்.\n“திகில் படங்களை பார்த்தால் ரூ.95,000 பரிசு” : அதிரடி அறிவிப்பை வெளியிட்ட நிறுவனம் - சவாலுக்கு ரெடியா\nசிறுநீரக கல்லுக்கு பதிலாக சிறுநீரகத்தையே அகற்றிய மருத்துவர்... நுகர்வோர் ஆணையத்தின் அதிரடி உத்தரவு\n” : அமைச்சர் சேகர்பாபு சூசகம்\nதண்ணி இல்லாத காட்டில் மாட்டிக்கொண்ட 2 பேர்.. 1 வாரம் கழித்து மீட்ட போலிஸ்: ஆஸ்திரேலியாவில் நடந்தது என்ன\n50 ஆண்டுகளுக்குப் பிறகு மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றியத்தை கைப்பற்றிய தி.மு.க - ஆட்சிக்கு கிடைத்த நற்சான்று\n“விரைவில் ஆழ்கடல் அகழாய்வுப் பணிகளைத் தொடங்க ஆலோசனை” : அமைச்சர் தங்கம் தென்னரசு முக்கிய தகவல்\nசிறுநீரக கல்லுக்கு பதிலாக சிறுநீரகத்தையே அகற்றிய மருத்துவர்... நுகர்வோர் ஆணையத்தின் அதிரடி உத்தரவு\nதண்ணி இல்லாத காட்டில் மாட்டிக்கொண்ட 2 பேர்.. 1 வாரம் கழித்து மீட்ட போலிஸ்: ஆஸ்திரேலியாவில் நடந்தது என்ன\n50 ஆண்டுகளுக்குப் பிறகு மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றியத்தை கைப்பற்றிய தி.மு.க - ஆட்சிக்கு கிடைத்த நற்சான்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%81_2007.12", "date_download": "2021-10-19T11:33:04Z", "digest": "sha1:4D3JKRSBWMJDYSPCOBKQSS3LMLWORYVO", "length": 2945, "nlines": 31, "source_domain": "www.noolaham.org", "title": "\"வடு 2007.12\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - நூலகம்", "raw_content": "\n\"வடு 2007.12\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு நூலகம் நூலகம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு சேகரம் சேகரம் பேச்சு வெளியிணைப்பு வெளியிணைப்பு பேச்சு தமிழம் தமிழம் பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு நூலகத்திட்டம் நூலகத்திட்டம் பேச்சு வகுப்பறை வகுப்பறை பேச்சு தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவடு 2007.12 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nநூலகம்:34 ‎ (← இ��ைப்புக்கள்)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.noolaham.org/wiki/index.php?title=%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD_%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD_%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD_%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD_%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD_%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD_%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD_%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD_%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD&oldid=411012", "date_download": "2021-10-19T11:35:56Z", "digest": "sha1:SF25T4W5TFCZKOMTLQGF53DQP6V6XSD4", "length": 4207, "nlines": 51, "source_domain": "www.noolaham.org", "title": "இரத்தோட்டை அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகப் பெருவிழா - நூலகம்", "raw_content": "\nஇரத்தோட்டை அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகப் பெருவிழா\nJeevakumari (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 21:46, 10 டிசம்பர் 2020 அன்றிருந்தவாரான திருத்தம்\n(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)\nஇரத்தோட்டை அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகப் பெருவிழா\nஇரத்தோட்டை அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகப் பெருவிழா (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [11,760] இதழ்கள் [13,280] பத்திரிகைகள் [53,303] பிரசுரங்கள் [1,125] நினைவு மலர்கள் [1,513] சிறப்பு மலர்கள் [5,516] எழுத்தாளர்கள் [4,874] பதிப்பாளர்கள் [4,171] வெளியீட்டு ஆண்டு [185] குறிச்சொற்கள் [91] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,157]\n2013 இல் வெளியான சிறப்பு மலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaaiman.com/2021/01/blog-post_216.html", "date_download": "2021-10-19T13:11:05Z", "digest": "sha1:IJAVZPWW343D7RQQXZIXVJ2423MBQ62F", "length": 3448, "nlines": 64, "source_domain": "www.thaaiman.com", "title": "தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும் - பரிஸ் காவற்துறை எச்சரிக்கை!! - THAAIMAN", "raw_content": "\nHome / Unlabelled / தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும் - பரிஸ் காவற்துறை எச்சரிக்கை\nதேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும் - பரிஸ் காவற்துறை எச்சரிக்கை\nபரிசின் கடுமையான பனிப்பொழிவை அடுத்து, தேவையற்ற பயணங்கள், மற்றும் பரிசிற்குள் வருவதையும், தவிர்க்கும் படி பரிசின் காவற்துறைத் தலைமையகம் மற்றும் மாவட்ட ஆணையம் (préfecture) எச்சரித்துள்ளது.\nகடுமையான பனிவீழ்ச்சியினால், பரிஸ் மாவட்ட ஆணையம், எசச்ரிக்கை நிலை 2 இனைப் பிரகடணப்படுத்தி உள்ளது. வீதிகளிலும், வீதியோரங்களிலும், பனிச்சறுக்கல் ஏற்படாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளைப் பரிஸ் மாநகரசபையும் மாவட்ட ஆணையமும் மேற்கொண்டு வருகின்றனர்.\nஆனால் தேவையற்றவகையில் பரிசிற்குள் நடமாடுவது, மேலும் நிலைமையயை மோசமாக்கும் எனவும், பரிஸ் மாவட்ட ஆணையம் தெரிவித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanjai.today/demonstration-in-support-of-farmers-in-tanjore-district/", "date_download": "2021-10-19T12:32:53Z", "digest": "sha1:ADZJ3BX4ONJUIPTFXDYEQBVJ25DZXERV", "length": 11571, "nlines": 131, "source_domain": "www.thanjai.today", "title": "தஞ்சை மாவட்டத்தில், உழவர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்", "raw_content": "\nதஞ்சை நகரச்செய்தி மாநகரச் செய்தி வேளாண்மை\nதஞ்சை மாவட்டத்தில், உழவர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்\nதஞ்சை மார்ச்.07- தஞ்சை மத்திய பாசிச பாஜக அரசின் மக்கள், வேளாண் விரோத 3 கருப்புச் சட்டங்களையும், மின்சார சட்டத்தையும் திரும்பப் பெற வலியுறுத்தி, குளிர், வெயில், பனியென்றும் பாராமல், தன்னெழுச்சியாக, குன்றா வேகத்துடன், டெல்லியில் 100 ஆவது நாளாக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், அனைத்து விவசாயிகள் சங்கங்களின் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு சார்பில், சனிக்கிழமை அன்று தஞ்சை மாவட்டத்தில், பல்வேறு இடங்களில் கருப்புக்கொடி ஏந்தி, மத்திய அரசைக் கண்டித்து போராட்டம் நடைபெற்றது.\nதஞ்சை ரயிலடியில் கருப்புப்பட்டை அணிந்தும், கருப்புக்கொடி ஏந்தியும் நடைபெற்ற போராட்டத்துக்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் (சிபிஎம்) பி.செந்தில்குமார் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் (சிபிஐ) வீரமோகன் கண்டன உரையாற்றினார்.\nமக்கள் அதிகாரம் தேவா, இந்திய தேசிய மாதர் சம்மேளனம் விஜயலட்சுமி, சிபிஐ செல்வகுமார், ஏஐடியுசி துரை.மதிவாணன், விவசாயிகள் சங்கம் ஞானமாணிக்கம், சிஐடியு கே.அன்பு, இந்திய மாணவர் சங்கம் அரவிந்தசாமி, சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எம்.மாலதி, மாதர் சங்கம் வசந்தி, சாந்தா, வாலிபர் சங்கம் கோஸ்கனி, ஹரிபிரசாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nபட்டுக்கோட்டை தலைமை அஞ்சலகம் அருகில் நடைபெற்ற போராட்டத்துக்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் பா.பாலசுந்தரம் (சிபிஐ), தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் துணைத் தலைவர் ஏ.கோவிந்தசாமி (சிபிஎம்) ஆகியோர் தலைமை வகித்தனர். சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் எம்.செல்வம், சிபிஐ கலியபெருமாள் முன்னிலை வகித்தனர். சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.தமிழ்ச்செல்வி, சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எஸ்.கந்தசாமி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஜீவானந்தம், உலகநாதன், ஏஐடியுசி தில்லைவனம், சிபிஐ மாவட்ட துணைச் செயலாளர் பி.காசிநாதன், ஒன்றியச் செயலாளர் காளிதாஸ், நகரச் செயலாளர் எம்.எம்.சுதாகர், நிர்வாகிகள், எம்.வீரபாண்டியன், சிவசிதம்பரம், ரோஜா ராஜசேகரன், சமூக ஆர்வலர் தாமரை குமரகுரு மற்றும் விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nதஞ்சையை அடுத்த குறும்பூண்டி ஏரியில் அமர்ந்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்\nதேசிய மாணவர் படை வருடாந்திர பயிற்சி முகாம்\nசமூகம் தஞ்சை நகரச்செய்தி மாநகரச் செய்தி\nவிபத்து இல்லா தீபாவளியாக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் தீயணைப்புத்துறை மாவட்ட அலுவலர்\nஅரசியல் தஞ்சை நகரச்செய்தி மாநகரச் செய்தி\nகட்டுமான பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த ஏஐடியூசி வலியுறுத்தல்\nதஞ்சை நகரச்செய்தி மாநகரச் செய்தி வேளாண்மை\nமாடித்தோட்ட சாகுபடியால் உடல் நிலையில் முன்னேற்றம் பெறலாம்; முதல்வர் வேலாயுதம்\nவிபத்து இல்லா தீபாவளியாக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் தீயணைப்புத்துறை மாவட்ட அலுவலர்\nகட்டுமான பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த ஏஐடியூசி வலியுறுத்தல்\nமாடித்தோட்ட சாகுபடியால் உடல் நிலையில் முன்னேற்றம் பெறலாம்; முதல்வர் வேலாயுதம்\nமுதல்வர் முன்னெடுப்பு திருவாரூர் காரைக்குடி ரயில் சேவை துவக்கம்; எம்பி பழனிமாணிக்கம்\nபள்ளி மாணவர்களுக்கு வரும் அக் 25, 26���் தேதிகளில் கலைப்போட்டிகள்\nசமூகம் தஞ்சை நகரச்செய்தி மாநகரச் செய்தி\nவிபத்து இல்லா தீபாவளியாக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் தீயணைப்புத்துறை மாவட்ட அலுவலர்\nஅரசியல் தஞ்சை நகரச்செய்தி மாநகரச் செய்தி\nகட்டுமான பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த ஏஐடியூசி வலியுறுத்தல்\nதஞ்சை நகரச்செய்தி மாநகரச் செய்தி வேளாண்மை\nமாடித்தோட்ட சாகுபடியால் உடல் நிலையில் முன்னேற்றம் பெறலாம்; முதல்வர் வேலாயுதம்\nசமூகம் தஞ்சை நகரச்செய்தி மாநகரச் செய்தி\nமுதல்வர் முன்னெடுப்பு திருவாரூர் காரைக்குடி ரயில் சேவை துவக்கம்; எம்பி பழனிமாணிக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/arts/miscellaneous/90711-", "date_download": "2021-10-19T11:01:36Z", "digest": "sha1:27V3UF6VMQIYAL2WHETB6VSD5SKTDO66", "length": 9280, "nlines": 220, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 14 January 2014 - கோலங்கள் | kolangal - Vikatan", "raw_content": "\nஎன் டைரி - 319\nபுதிதாகத் தொழில் தொடங்க கைகொடுக்கும் ‘நண்பன்’\nமலர் சிந்தும் மனசு - 6\nஉங்கள் தட்டில் உணவா... விஷமா\nஆனந்தம் விளையாடும் வீடு 5\nஜாலி டே - தூத்துக்குடி\nஹலோ விகடன் - கலங்காதிரு மனமே\nகாப்பர் டி... உயிரையே பறிக்குமா\nமிஸ்டு கால் பத்மா பாட்டி\n‘சொய்ங்... சொய்ங்...’ அருவா சத்தம் கொடுத்த அடையாளம்\n“பேரனோட காலர் டியூன்... கொலுசுக்கடை ஓரத்திலே”\n“கன்னுக்குட்டி கொம்புல 2 கிராம் மோதிரம்... பங்கு போட்டுக்க 15 பேர் மோதுறோம்\n''என் வாழ்க்கையே... ஓட்டமும் நடையும்தான்\nகொஞ்சம் மூலதனம்+நிறைய கற்பனைத் திறன்... சூப்பர் லாபம்\n30 வகை கிராமிய சமையல்\nஆச்சி மசாலா வாசகிகள் கைமணம்\nபனை ஓலையில் கருணாநிதியின் முழு உருவச்சிலை - அசத்தும் தூத்துக்குடி பனைத்தொழிலாளி\n\"ராகுல் டிராவிட்டை போட்டோ எடுக்க அவ்ளோ பிடிக்கும்... ஏன்னா\"- புகைப்படக் கலைஞர் தர்ம சந்துரு\nமயிலாடுதுறை: முகக் கவசம் அணிவதன் அவசியம் - மியூரல் முறை ஓவியங்களால் விழிப்புணர்வு\nநான் நா.முத்துக்குமார் ஆனது எப்படி\nமதுர மக்கள்: \"டேக்வாண்டோவில் 23 கின்னஸ் சாதனைகள்... இது பெண்களுக்குமான கலை\nமதுர மக்கள்: \"கலைக்குப் பணம் தடையா இருக்கக்கூடாது. அதனால...\" நாட்டுப்புறக் கலைஞர் தங்கப்பாண்டியன்\nதிருவள்ளுவன் என்னும் பிரபஞ்ச அறிஞன்.. - விவரிக்கும் வாசகர் #MyVikatan\nவீட்டிலிருந்தே சினிமா... ஓவியர் சந்தோஷ் நாராயணனின் புதிய முயற்சி\nIlayaraja தத்ரூப ஓவியங்களின் அரசன் மரணம் - யார் இவர் கலை உலகம் கலங்குவது ஏன் கலை உலகம் கலங்குவது ஏன்\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்\nதெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism\nஇதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://26ds3.ru/aktiplast-t/7117-2", "date_download": "2021-10-19T12:17:33Z", "digest": "sha1:3RREQS6XLEWF55I5BLBJHBIMLKR3U3AI", "length": 9509, "nlines": 84, "source_domain": "26ds3.ru", "title": "Contact me :- | 26ds3.ru", "raw_content": "\nகாமத்தில் கரைந்தேன் – பாகம் 08 – தமிழ் காமக்கதைகள்\nகாம பாடம் – பாகம் 03 – தமிழ் காமக்கதைகள்\nகாம பாடம் – பாகம் 02 – தமிழ் காமக்கதைகள்\nகாம பாடம் – பாகம் 01 – தமிழ் காமக்கதைகள்\nகாமத்தில் கரைந்தேன் – பாகம் 17– தமிழ் காமக்கதைகள்\nகாமத்தில் கரைந்தேன் – பாகம் 16– தமிழ் காமக்கதைகள்\nஅப்பா மகள் காமக்கதைகள் (48)\nஐயர் மாமி கதைகள் (67)\nகாமத்தில் கரைந்தேன் – பாகம் 16– தமிழ் காமக்கதைகள் – Contact me :- on காமத்தில் கரைந்தேன் – பாகம் 15– தமிழ் காமக்கதைகள்\nகாமத்தில் கரைந்தேன் – பாகம் 15– தமிழ் காமக்கதைகள் – Contact me :- on காமத்தில் கரைந்தேன் – பாகம் 14– தமிழ் காமக்கதைகள்\nகாமத்தில் கரைந்தேன் – பாகம் 12– தமிழ் காமக்கதைகள் – Contact me :- on காமத்தில் கரைந்தேன் – பாகம் 11 – தமிழ் காமக்கதைகள்\nகாமத்தில் கரைந்தேன் – பாகம் 10 – தமிழ் காமக்கதைகள் – Contact me :- on காமத்தில் கரைந்தேன் – பாகம் 09 – தமிழ் காமக்கதைகள்\nகாமத்தில் கரைந்தேன் – பாகம் 08 – தமிழ் காமக்கதைகள் – Contact me :- on காமத்தில் கரைந்தேன் – பாகம் 07 – தமிழ் காமக்கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.desistories18.com/tag/tamil-kamakathaikal/", "date_download": "2021-10-19T12:29:45Z", "digest": "sha1:4PRBJRN74JGRJD2HPJS5TOMMEQ5PXQIO", "length": 6545, "nlines": 63, "source_domain": "www.desistories18.com", "title": "Tamil Kamakathaikal Archives | Desi Sex Stories", "raw_content": "\nகெமிஸ்ட்ரி மிஸ் மற்றும் லேப் அட்டண்டர் செய்த செக்ஸ்\nஎன் பெயர் ராஜ், நான் சென்னை நகரத்தில் ஒரு மகளிர் கல்லூரியில் லேப் அட்டண்டராக வேலை பார்க்கிறேன். எனக்கு வயசு 28. இன்னும் திருமணம் ஆகவில்லை. நான் தனியாக மைலபூரில் ஒரு ரூமில் இருக்கேன். என் அம்மா திருநல்வேலியில் இருக்கிறார்கள். எனக்கு செக்சில் ஆசை ரொம்ப அதிகம். நெறைய செக்ஸ் புக் படிப்பேன். பிரிஎண்ட்ஸ் கூட சேர்ந்து பிட்டு படம் பார்ப���பேன். எங்க கல்லூரியில் கோதை என்று ஒரு கெமிஸ்ட்ரி ஆசிரியை இருக்கிறாள். அவள் பாக்க நல்ல • Read More »\nஅனைவருக்கும் வணக்கம். என் பெயர் சுஜாதா, வயதுக்கு மேல் திமிறிய இரு முலைகள், சற்றே தூக்கிய பெருத்த குண்டி. என் தந்தை திண்டுக்கல் அருகே உள்ள கிரமாத்தில் கிராம நிறுவாக அலுவலர், தாய் குடிநீர் வடிகால் வாரியத்தில் வேலை செய்கின்றனர். என் பெற்றோருக்கு நான் ஒற்றை குழந்தை. எனக்கு செக்ஸ் சம்மந்தமாக எதுவுமே தெரியாது, மே மாதம் 12ஆம் தேதி 2019 வருடம் அன்று இரவு எங்கள் வீட்டில் நான் தனி அறையில் உறங்கிக் கொண்டிருந்தேன், தண்ணீர் • Read More »\nதொடர்ந்து ஒருமணி நேரத்துக்கும் மேலாக இடி மின்னலுடன் மழை பெய்தது. குழந்தைகள் அவர்களுக்குள் ஏதேதோ பேசி சிரித்தபடி போர்த்திப் படுத்துக் கொண்டனர். ஒரு பக்கம் குழந்தைகள் படுத்திருக்க மறுபக்கம் சுகன்யாவை அணைத்தபடி நிருதியும் கட்டிலில் சாய்ந்து கொண்டான். மழைக் காற்றில் ஓரளவு குளிர் வீசியது. அந்த குளிருக்கு அவனுடன் நெருக்கமாக இருப்பதை பெரிதும் விரும்பினாள் சுகன்யா. பெரும்பாலும் தன் காதலனைப் பற்றியே அவனுடன் பேசினாள். அவனும் அவள் பேசுவதை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தான். ஆனால் அவன் கை • Read More »\nமுதல் அனுபவம் பக்கத்து வீட்டு அக்காவை ஓத்தேன் பாகம் 5\nபஸ் பயணம் தடம் மாறிய வாழ்க்கை tamil sex stories\nமுதல் அனுபவம் பக்கத்து வீட்டு அக்காவை ஓத்தேன் பாகம் 3\nதுண்டிர்க்குள் இருந்த தண்டை -1/2 வேட்டையாடிய ஆண்ட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/115715/", "date_download": "2021-10-19T11:05:46Z", "digest": "sha1:GO6IYKUXVIMQAEQFRLG5J3H5ZTJH7Y2V", "length": 22648, "nlines": 135, "source_domain": "www.jeyamohan.in", "title": "அனிதா அக்னிஹோத்ரி -கடிதங்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nவாசகர்கள் கடிதம் அனிதா அக்னிஹோத்ரி -கடிதங்கள்\n‘தகவல் அறியும் உரிமை அல்லது ஏப்ரல் 7’ – சிறுகதை – அனிதா அக்னிஹோத்ரி\nவிஷ்ணுபுரம் விருதுவிழாவின் சிறப்பு விருந்தினரான வங்க எழுத்தாளர் அனிதா அக்னிஹோத்ரி எழுதிய சிறுகதைகள் பற்றி .\nஅனிதா அக்னிஹோத்ரி அவர்களின் கதைகள் எல்லாமே அவருடைய நேரடி அனுபவம் சார்ந்தவையாக உள்ளன. அவர் வாழும் ஓர் உலகம் அதிகார வர்க்கம் சார்ந்தது. அந்த வர்க்கத்தின் இரட்டைநிலையையும் இக்கட்டுகளையும் நம்பகமாகச் சொல்கின்றன.\nஇங்கே அவர�� அந்த அதிகாரவர்க்கத்தின் குரல் என்பதனால் கொஞ்சம் மிகையாக ஆனால்கூட மொத்தமே பசப்பு ஆக மாறிவிடும். ஆகவே மிகமிகக்குறைவாக சொல்கிறார். அதுவே நம்பகத்தன்மையை உருவாக்கி இவற்றை நல்ல கதைகளாக ஆக்குகிறது\nமறுபடியும் ஒரு முத்தான கதை.\nகதையென்று என்று சொல்ல என் மனது வலிக்கின்றது.\nமறுபடியும் சா ராம்குமாரை போற்றத் தோன்றுகிறது. அழகான தமிழாக்கம்.\nதனிமா தாஸ். என்ன போராளி\nஒருவர் இப்படி போராடுகிறார் என்றால் அது உண்மையாகவே இருக்கும். உண்மையே இந்த தைரியத்தை கொடுக்கும். அந்த உண்மையைத் தான் அனிதா எழுதியிருக்கிறார் என்று நினைக்கிறேன்.\nதலை வணங்குகிறேன் தனிமாவிற்கு..இந்த பெண்மணியின் விடாமுயற்சியும் ஏதோ விதத்தில் எனக்கு ஒரு நம்பிக்கையை கொடுத்தது. ஏழைகளுக்கு ஏன் நீதி மறுக்கப் படுகிறது காந்தி மறைந்து விட்டார் ஜெ.\nபேரறிவாளனின் அம்மா அற்புதம்மாள் என் நினைவில் வந்தார். எவ்வளவு வருடங்களாக போராடுகிறார் எப்பேற்பட்ட தாய்மை அது அந்த தாய்மை ஜெயிக்க வேண்டும்.\nஇம்மாதிரியான கதைகள் மனதிற்கு அருகானவை.\nஅனிதா அக்னிஹோத்ரி கதைகள் அரசின் போலி செயல்பாடுகளை காட்டுபவையாகவும், அதிகாரம் எளியவர்கள் மீது செலுத்தும் வெற்று நடைமுறைகளையும் காட்டுகிறது. பொதுவாக இங்கு அரசு ஒரு திட்டத்தை கொண்டு வருகிறது பிறகு அத்திட்டத்தை செயல்படுத்தாமல் கிடப்பில் இருப்பதற்கு செயல்படாமல் வைப்பதற்கும் பல்வேறு முட்டுக்கட்டைகள் மூலமாக அதே திட்டத்தை முடக்குகிறது\n‘தகவல் அறியும் உரிமை அல்லது ஏப்ரல் 7’ கதையில் இதுவே நிகழ்கிறது எல்லா அரசு அதிகாரிகளும் கல்லோல் போல இளம் சிங்கங்களாக தான் பணியில் சேர்கிறார்கள். பிறகு சக ஊழியர்களால் மாற்றப்படுகிறார் மனுவை கிடப்பில் போடுவது மூலம் தனது ஆண்மை கூடிவிட்டதாக நினைக்கும் கல்லோல் பிறகு அதுவே வழமையாகவும் வசதியாகவும் மாறுகிறது ஒரு கட்டத்தில் அதிகாரம் எளியவர்கள் மீது செலுத்தும் அடக்குமுறையாக மாறுகிறது. மறுப்பின் மூலம் மக்களிடம் இருந்து விலகி விலகிச் சென்று இறுதியில் செயலற்று நின்று விடுகிறார்கள் அவர்களை சிறு துளியேனும் உசுப்ப பத்தோ இருபதோ செலுத்தி அந்த மனுவை அவரது மேஜைக்கு செலுத்த ‘தனிமா’விற்கு அனுபவம் இல்லை.\nகோபால் தாஸ் போல அரசின் மக்களின் நன்மைக்காக என்று பலர் பலியாக்கபடுகிறார்கள். அனைத்தையும் வாரிச் சுருட்டும் இவர்கள் தனக்கு கீழே இருப்பவர்களை தண்டித்து தான் நேர்மையை நிறுவிக் கொள்ள முயல்கிறார்கள். ஆனால் இதற்கெல்லாம் வெளியிலிருந்து அருணாராய் போன்றவர்கள் உண்மையிலேயே தீவிரமாக செயல்படுகிறார்கள். உண்மையில் இளம் சிங்கமாக இருக்க வேண்டும் என்றால் வேண்டுமென்றால் அரசாங்கத்திற்கு வெளியில் நின்று செயல்பட வேண்டும் இங்கு வந்து செய்கிறேன் என்றால் அருணாராய்யும் கல்லோல் போலவே தான் மறமுடியும். மிக விரிவாக சிந்திக்க வைக்கும் கதை.\nஇங்கு கல்லோல் என்றால் அங்கு சிவாஜி ‘சிதைவு’ இங்கு மக்கள் அரசாங்கத்தை கைகழுவ நினைக்கிறார்களா அல்லது அரசாங்கம் மக்களை கைகழுவி விட்டதா இதில் பலி சிவாஜி இதை நேரடியாகவே எழுத்தாளர் சொல்லிவிடுகிறார் பள்ளி, சாலை, மின்சாரம், இல்லை எந்த வசதியும் இல்லாமல் கை கழுவி விடப்பட்ட மக்கள் அவர்களின் வாழ்விடங்களை நவீனபடுத்துகிறோம் என்று நுழைகிறார்கள். இவர்களின் அரசியல் விளையாட்டுகளில் எளியவர்கள் பலிகளாக விழுந்துகொண்டே இருக்கிறார்கள். ஆமாம் அவர்களுக்கு என்ன தான் வேண்டும் இதில் பலி சிவாஜி இதை நேரடியாகவே எழுத்தாளர் சொல்லிவிடுகிறார் பள்ளி, சாலை, மின்சாரம், இல்லை எந்த வசதியும் இல்லாமல் கை கழுவி விடப்பட்ட மக்கள் அவர்களின் வாழ்விடங்களை நவீனபடுத்துகிறோம் என்று நுழைகிறார்கள். இவர்களின் அரசியல் விளையாட்டுகளில் எளியவர்கள் பலிகளாக விழுந்துகொண்டே இருக்கிறார்கள். ஆமாம் அவர்களுக்கு என்ன தான் வேண்டும்…. நிழல் யுத்தமும் கதையில் மக்கள் பலியானார்கள்… ஆழமாக வாசிக்க வேண்டிய கதைகள்.\nஅடுத்த கட்டுரைஐராவதம் மகாதேவன் அஞ்சலி பற்றி -கடிதம்\nகேரள தலித்துக்கள் – கடிதங்கள்\nஆசிரியனுக்கு முன்னால் செல்லுதல், கடிதம்\nகோவை சொல்முகம் கூட்டத்தில் செந்தில்\nதன் உருவத்தில் இருந்து மேலெழுதல்\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 70\n'வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-39\nவிஷ்ணுபுரம்- ஞானத்தின் தனிமை :சுநீல்கிருஷ்ணன்-2\nதிரு.ராஜதுரை அவர்களுக்கு உதவும் கரங்கள்\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி கி.ராஜநாராயணன் கோவை ஞானி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உணவு உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் தொல்லியல் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் நகைச்சுவை நேர்காணல் நேர்காணல் மற்றும் பேட்டிகள் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பிறர் படைப்புகள் நூல் மதிப்புரை மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் மதிப்புரை விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெண்முரசு – ஒலிவடிவம் வெண்முரசு – வாசகர் கடிதம் வெண்முரசு – வாசகர் மதிப்புரை வெண்முரசு ஆவணப்படம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/118361/", "date_download": "2021-10-19T12:56:10Z", "digest": "sha1:KCBYE22MV6BCQY77F6PZULR2WLU4CQHO", "length": 69830, "nlines": 141, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-62 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nவெண்முரசு கார்கடல் ‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-62\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-62\nஅரவான் சொன்னான்: தோழர்களே, அரவுகளுக்குரியது விழியும் செவியும் ஒன்றாகும் ஸ்ரவ்யாக்ஷம் எனும் யோகம். காட்சிகளை ஒலியென்று அறியவும் ஒலிகளை காட்சிகளாக விரிக்கவும் அவர்களால் இயலும். நாகர்குலத்து அன்னை உலூபியிலிருந்து இளைய பாண்டவர் அர்ஜுனர் கட்செவி யோகத்தை கற்றுக்கொண்டார். நாகர்களால் அந்த நுண்ணறிதல் அங்கநாட்டு அரசர் கர்ணனுக்கு வழங்கப்பட்டது. கௌரவர்களும் பாண்டவர்களும் போர்புரிந்த அவ்விரவில் விழிகொண்டவர்களாக அங்கு திகழ்ந்தவர்கள் அவர்கள் இருவருமே. துரோணர் ஒலிகளைக்கொண்டு போரிடும் சப்தஸ்புடம் என்னும் கலையை அறிந்தவர். அதை அவரிடமிருந்து அஸ்வத்தாமர் அறிந்திருந்தார். அன்றைய இரவுப்போரில் ஷத்ரியப் படைகளில் அந்நால்வர் மட்டிலுமே நோக்குகொண்டவர்கள்.\nஅரசகுடியினர் அனைவருமே அந்நால்வருக்கும் பின் அணிநிரந்தனர். அர்ஜுனரின் தேருக்குப் பின்னால் பதினெட்டு ஒளிச்செய்தியாளர்களை நிறுத்தினார் திருஷ்டத்யும்னர். அர்ஜுனரின் கையசைவை, வில்லசைவை, அம்பெழு திசைகளை அருகே நின்று நோக்கி அவற்றை ஒளியசைவுகளென இருட்திரையில் நிகழ்த்துவது அவர்களின் பணி. பாண்டவர்களின் தரப்பிலிருந்த ஷத்ரியப் படையினர் அனைவருக்கும் அவ்வசைவுகளே ஆணையெனச் சென்றன. ஒவ்வொரு ஷத்ரியப் படைப்பிரிவிலும் அந்த ஒளியசைவுகளைக் கண்டு ஆணைகளைப் பெற்று தங்களுக்குரிய ஆணைகளாக மாற்றும் இரண்டாம் நிலை ஒளிச்செய்தியாளர்கள் இருந்தனர். முதல் ஒளி நீலநிறத்திலும் இரண்டாவது ஒளி செந்நிறத்திலும் அமைந்திருந்தது. ஒவ்வொரு படைப்பிரிவிலும் இருளில் விழி துலங்கும் அசுரரோ அரக்கரோ நிஷாதரோ கிராதரோ படைமுகம்கொண்டு நின்றிருந்தனர்.\nஅவ்வண்ணமே கௌரவப் படைப்பிரிவுகளிலும் அரக்கர்களின் சிறு குழுக்கள் இருந்தன. அங்கநாட்டரசர் கர்ணனுக்குப் பின்னால் நாற்பத்தெட்டு ஒளிச்செய்தியாளர்கள் நின்று அவரது ஒவ்வொரு அசைவையும் ஆணையென்றாக்கி கௌரவப் படைகளுக்கு அளித்தனர். துரோணருக்குப் பின்னால் நால்வரும் அஸ்வத்தாமருக்குப் பின்னால் நால்வரும் ஒளிகளுடன் நின்றனர். கௌரவர்கள் மஞ்சள்நிற முதன்மை ஒளியையும் பச்சைநிற இரண்டாம் ஒளியையும் கொண்டிருந்தனர். தொலைவிலிருந்து பார்க்கையில் மின்மினிகள் சுழன்று பூசலிட்டுக்கொள்வதுபோல் குருக்ஷேத்ரம் தோற்றமளித்தது. போர் தொடங்குவதற்கு முன்னரே ஒளிகள் போரிடத் தொடங்கிவிட்டிருந்தன. ��னென்றால் அவை அங்கிருந்தோரின் உள்ளத்துடன் நேர்தொடர்பு கொண்டிருந்தன.\nஇரு தரப்பினரும் இருளுக்குள் கருநாகம் சுருளவிழ்ந்து படமெடுப்பதுபோல அணிவகுத்து சூழ்கைஅமைத்து முகம்கொண்டனர். ஒருவரை ஒருவர் இருளுக்குள் உணர்ந்தபடி காத்து நின்றனர். “இருளுக்குள் யானையை எதிர்கொள்வதுபோல” என்று ஒருவன் சொன்னான். “ஆம், இருளெல்லாம் யானையென்றாகிறது” என்றான் இன்னொருவன். இருளுக்குள் எதிர்ப்படை நோக்குகொள்வதை அவர்களால் உணரமுடிந்தது. “அவர்கள் ஒவ்வொருவரின் நோக்கையும் உணர்கிறேன். பகலில் இந்நோக்குகள் எழுவதில்லையே” என்று ஒரு வீரன் கேட்டான். “பகலில் நாம் நோக்குகிறோம்” என்று ஒருவன் மறுமொழி சொன்னான். “இருளுக்கு ஒரு கரவொளி இருக்கிறது. கரியவை அனைத்தையும்போல அதுவும் வளைவுகளில் மின்னுகிறது” என்றான் ஒருவன். “எதற்காகக் காத்திருக்கிறோம்” என்று ஒரு வீரன் கேட்டான். “பகலில் நாம் நோக்குகிறோம்” என்று ஒருவன் மறுமொழி சொன்னான். “இருளுக்கு ஒரு கரவொளி இருக்கிறது. கரியவை அனைத்தையும்போல அதுவும் வளைவுகளில் மின்னுகிறது” என்றான் ஒருவன். “எதற்காகக் காத்திருக்கிறோம்” என ஓர் இளைஞன் எவரிடமென்றிலாது கேட்டான். “இப்போது நிலவு போரை வகுக்கவிருக்கிறது” என்றது ஒரு குரல்.\nகருநிலவுக்கு முந்தைய நாள் ஆகையால் விழியால் காணமுடியாத பிறை அன்று எழுந்தது. அதை பொழுதுகணக்கிட்டு கணித்த நிமித்திகர்“பிறைநிலவு” என அறிவிக்க பாண்டவர்களின் தரப்பிலிருந்து ஒற்றைப்போர்முரசு ஒலித்தது. கடோத்கஜன் தலைமைகொண்டு நடத்திய இடும்பர்களின் படையிலிருந்து நூற்றுக்கணக்கான முழவொலிகள் எழுந்தன. சிம்மவால் குரங்குக் கூட்டத்தின் ஓசைகள்போல அவை வானில் நிறைந்தன. குரங்குத்திரள் கிளைகளினூடாக எழுந்து அணைவதுபோல் ஒலிக்க பாண்டவப் படை இருளில் இருளலை என பெருகி வந்து இருள்வெள்ளமென நின்றிருந்த கௌரவப் படையை அறைய இரவுப்போர் தொடங்கியது. இரு படைகளும் இருளுக்குள் மோதிக்கொண்டபோது அம்புகளின் ஓசை மேலும் செவிகிழிக்கும் அரம்கொண்டு ஒலித்தது. யானைகளின் பிளிறல் மண்ணுக்கடியில் பாறைகள் புரள்வது போலிருந்தது. புரவிகளின் கனைப்பொலி உலோகத்தகடுகள் உரசுவதுபோலிருந்தது. வாள்வீச்சொலியை பற்களின் கூச்சமென, நாணிழுமும் ஒலியை நரம்புகளின் உலுக்கல் எனக் கேட்க முடிந்தது.\nகுருக்ஷே��்ரம் எத்தனை ஓசை நிறைந்தது என்பதை அப்போதுதான் அதுநாள் வரை அங்கு போர்புரிந்துகொண்டிருந்தவர்களே உணர்ந்தனர். அம்பை அம்பு அறைகையில் காட்டில் கிளைமுறியும் ஒலி. அம்புமுனை கவசங்களை அறைகையில் மணியோசை. அம்புமுனையை அம்புமுனை சந்திக்கையில் உலோகமணி கல்தரையில் உதிரும் கூரிய ஒலி. அம்புகளின் இறகுகள் அதிரும் ஓசை கழுகுச் சிறகொலிபோல், விசிறப்படும் பட்டுத்துணிபோல், உதறிக்கொள்ளும் புரவிவாலின் ஒலிபோல் வெவ்வேறு வகையில் எழுந்தது. தேர்ச்சகடங்கள் மரப்பலகைப் பரப்புகள் மேல் அதிர்ந்தன, இணைப்புகளில் திடுக்கிட்டன, உருண்டோடி தயங்கி முனகித் திரும்பின. அச்சுகளில் ஆணிகள் எண்ணைப்பிசின் பரப்பில் வழுக்கிச் சுழலும் ஓசையைக்கூட கேட்கமுடிந்தது. யானைச்சங்கிலிகளின் குலுங்கலில் எடை தெரிந்தது.\nகாற்று பல அடுக்குகளென்றாகியது. ஒலிகள் தங்கள் அடர்த்திகளுக்கேற்ப தங்கள் காற்றுவெளியை தெரிவுசெய்துகொண்டன. ஆவியும் எண்ணையும் நீரும் கசடும் ஒற்றைப் பளிங்குக் குடுவைக்குள் அடுக்கப்பட்டு தெரிவதைப்போல. புரவிக்குளம்புத் தாளங்கள், கனைப்புகள், ஆணைகள், செய்திக்கூவல்கள் ஓர் அடுக்கில் பெருகி அலைத்தன. சங்குகள், கொம்புகள், முழவுகள், சிற்றூதல்கள் வேறொரு காற்றில் நிறைந்து ஒன்றுடன் ஒன்று பின்னிப் பரவின. புண்பட்ட அலறல்கள், சாவுக்கூக்குரல்கள், வெறிக்கூச்சல்கள், எக்களிப்புகள், வலியழுகைகள் பிறிதொரு காற்றில் நிறைந்திருந்தன. குருக்ஷேத்ரமெனும் கலம் குலுக்கப்பட்டது, கவிழ்ந்தெழுந்தது, ஒளிகள் ஒன்றுடன் ஒன்று ஊடுருவிக் கலந்தன. தோழரே, வண்ண ஒளிச்சரடுகளைக் கொண்டு முடைந்த பெரும்பாய்போல களம் தோன்றியது.\nபோர் தொடங்கிய சற்று நேரத்திலேயே இருளுக்குள் முட்டி மோதி போரிட்டுக்கொண்டிருந்த ஒவ்வொருவரும் தங்களை அறியாமலேயே செவியை விழியென மாற்றிக்கொள்ளத் தொடங்கினர். தொலைவில் தெரிந்த ஒளியாணைகளை மட்டுமே கண்டு, உடன் வந்த அரக்கர் குழுவினால் வழிகாட்டப்பட்டு போரிட்டனர். ஓசைகளுக்கும் அவ்வொளிகளுக்கும் இடையே ஒத்திசைவை கண்டுகொண்டதும் அவை ஒன்றாயின. போர் உளம்கூர்தலின் வெளி. உள்ளம் புலன்களை சமைக்கிறது. அங்கு ஒவ்வொன்றும் பிறிதொன்றால் நிரப்பிக்கொண்டு ஒத்திசைவை அடைகின்றன. இரு நாழிகைக்குப் பின் அங்கு போர்க்களத்தில் அத்தனை வீரர்களும் கட்செவி கொண���டவர்கள்போல் மாறினர். ஒளிபெய்யும் நடுப்பகலில் போர்புரியும் அதே இயல்புத்தன்மையுடன் அவர்கள் அம்புகளை எய்தனர், வேல்களை வீசினர். கதைகளையும் வாள்களையும் சுழற்றி ஒருவரோடொருவர் போரிட்டனர். தாங்கள் விழிநோக்கிழந்து செவிகளால் பார்த்துக்கொண்டிருப்பதையே அவர்கள் அறியவில்லை.\nஆனால் அவர்களைவிட மும்மடங்கு ஆற்றல் கொண்டிருந்தனர் நிஷாதர்களும், கிராதர்களும், அரக்கர்களும், அசுரர்களும். அவர்களிலேயேகூட இடும்பர்கள் விண்ணவருக்கு இணையான விசையும் கரவும் கொண்டிருந்தனர். நூலேணிகளில் என இருளில் கால்வைத்து ஏறி வானில் மறைந்தனர். இருள் அலைவுறும் இடியோசையுடன் மீண்டும் தோன்றினர். எட்டுத் திசைகளிலும் சூழ்ந்து பேரொலி எழுப்பி நகைத்தனர். முழவுகளை முழக்கியபடி, உடல்களில் அறைந்து வெடிப்பொலி எழுப்பியபடி தலைக்குமேல் பறவைகளைப்போல் வந்து தாக்கினர். மண்ணில் விழுந்து முற்றாக மறைந்து போயினர். ஒவ்வொரு கௌரவ வீரனும் தனக்கு மிக அருகே இடும்பன் ஒருவன் இருப்பதுபோல் உணர்ந்தான். தன்னுடன் நின்ற படைவீரர்கள் தாங்களே தங்கள் சங்கறுத்து விழுவதைப்போல் விழுந்து துடித்து உயிர்விடுவதை அவர்கள் கண்டனர். மின்னி வந்த வாளுக்குப் பின்னால் கைகளோ உடலோ இருக்கவில்லை. சுழன்றறைந்து சென்ற கதை அதற்குள் தெய்வம் குடியேறி பறப்பதுபோல் தோன்றியது.\n” என்று ஒருவன் கூவினான். “ஆம் இருள் முழுத்து எழுகிறார்கள், இருளென்றாகி மறைகிறார்கள் இருள் முழுத்து எழுகிறார்கள், இருளென்றாகி மறைகிறார்கள்” என்றான் இன்னொருவன். “இருள் தசை புழுத்து எழுந்த நெளிவுகள்” என்றான் இன்னொருவன். “இருள் தசை புழுத்து எழுந்த நெளிவுகள்” என்று ஒருவன் கூவினான். அவர்களின் வீசுகொக்கிகளில் சிக்கி கௌரவ வீரர்கள் இருண்ட வானில் எழுந்து சென்றனர். வானில் அலறி குருதி மழைத்துளி சிதற மண்ணில் அறைந்து விழுந்தனர். “முகில்களில் ஊர்கிறார்கள்” என்று ஒருவன் கூவினான். அவர்களின் வீசுகொக்கிகளில் சிக்கி கௌரவ வீரர்கள் இருண்ட வானில் எழுந்து சென்றனர். வானில் அலறி குருதி மழைத்துளி சிதற மண்ணில் அறைந்து விழுந்தனர். “முகில்களில் ஊர்கிறார்கள்” என்று எங்கோ ஓர் அலறல் எழுந்தது. “வௌவால்கள்” என்று எங்கோ ஓர் அலறல் எழுந்தது. “வௌவால்கள் கூகைகள்” என எவரோ கூச்சலிட்டார்கள். “விழிகள் விழிகளை நோக்கியே அம்புகள் எழுகின்றன விழிகளை நோக்கியே அம்புகள் எழுகின்றன விழிகளைக் கொத்தி அணைத்துவிடுகின்றன” விழிகளில் பாய்ந்த அம்புகளுடன் வீரர்கள் சுழன்று நிலையழிய அவர்களை பொதிந்து வீழ்த்தி மேலும் மேலுமென வந்து தறைத்தன அம்புகள். விழிநடுப்புள்ளியை நாடி வந்து தலைக்கவசத்தை உடைத்து உட்புகுந்தன எடைமிக்க எறிவேல்கள்.\nஅரக்கரும் அசுரரும் விண்ணிலெழுந்தமைந்து போரிட்டபோது நிஷாதரும் கிராதரும் உடலை மண்ணுடன் மண்ணென தழைத்து ஓசையில்லாது ஊர்ந்து வந்து எழுந்து போரிட்டனர். எண்ணியிராத இடங்களில் மண்ணிலிருந்து ஊற்று பீறிட்டெழுவதுபோல் அவர்கள் தோன்றினர். தரைக்கு அடியில் சென்றுவிட்டவர்கள்போல் அவர்கள் விழிகளில் இருந்து மறைந்துவிட்டனர். “அவர்கள் உரகங்களில் இருந்து பிறந்தவர்கள். நீரில் வாழ்பவை அவர்களின் தெய்வங்கள். ஓசையின்மையே அவர்களின் ஆற்றல்” என்று படைத்தலைவன் கூவினான். “வேல்களை தலைகீழாகப் பிடியுங்கள். விற்களை நிலம் நோக்கியும் தணியுங்கள். தரையில் எந்த அசைவெழுந்தாலும் தாக்குங்கள்.”\nதுரியோதனன் புரவியில் பாய்ந்து துரோணரை நோக்கிச்சென்று “ஆசிரியரே, இவர்கள் இப்போது தடுத்து நிறுத்தப்பட்டாக வேண்டும். இல்லையேல் இன்றுடன் நமது படை முற்றழியக்கூடும்” என்றான். “அவர்கள் தங்களின் ஆற்றலை காட்டட்டும். அதை புரிந்துகொண்ட பின்னரே அவர்களை நாம் வெல்லமுடியும்” என்றார் துரோணர். “இப்போதுதான் அவர்களின் சூழ்கையும் போர்முறையும் தெரியவருகிறது. இப்படையின் மையம் கடோத்கஜன். நான் அவனை சுற்றிவளைக்க முயன்றுகொண்டிருக்கிறேன்” என்றார். “அடிமரத்தை நாடி அதை முறிக்கவேண்டும். கிளைகளை வெட்டமுயல்வதில் பொருளில்லை…”\nதுரியோதனன் சீற்றத்துடன் “அவனை சுற்றிவளைக்க இயலாது, ஆசிரியரே. அவன் எங்குமிருக்கிறான். எண்ணுகையில் நமது படையில் பின்பகுதியில்கூட அவனிருக்கிறான் என்று தோன்றுகிறது. அங்கிருந்தும் அலறல்கள் எழுகின்றன…” என்றான். “அவர்கள் சரடுகளினூடாக பறப்பவர்கள். ஆனால் அத்தனை சரடுகளுக்கும் மைய முடிச்சென்று ஒன்று இருக்கும். அவர்கள் இப்படையெங்கும் பரவி போரிடும் வடிவத்திலிருந்தே குறுக்கிச்சென்று அம்மையத்தை அடையமுடியும். வலைச்சரடினூடாக மையத்தை அடைந்து அதை தாக்குவோம்” என்று துரோணர் சொன்னார். “போர் இன்னும் நான்கு நாழிகைக்க���ள் முடிந்தாகவேண்டும், ஆசிரியரே. நம் படைகள் அழிந்துகொண்டிருக்கின்றன” என்றபின் துரியோதனன் திரும்பிச்சென்றான்.\nகிராதர்களும் நிஷாதர்களும் அசுரர்களும் விழிகளைக் கொண்டு உடல்வடிவம் சமைக்கும் அக்ஷரூபம் என்னும் கலையை கற்றவர்கள். வேட்டைவிலங்கின் விழிமின் துளிகளை மட்டுமே இருளில் அவர்கள் பார்ப்பார்கள். அவ்விழிகளின் ஒளியையும், அவை அமைந்திருக்கும் உயரத்தையும், அவற்றுக்கிடையான தொலைவையும் கொண்டு அவற்றின் தலையை உள்ளத்தால் வரைந்தெடுப்பார்கள். அவற்றுக்குப் பின் உடலை முழுமை செய்து கொள்வார்கள். தலைதிருப்புகையில் விழிகள் கொள்ளும் கோண மாறுபாடு, விழிகளின் விரைவு, விழிகள் மேலெழுந்து தாழும் வளைவு என பன்னிரண்டு அசைவுகளைக் கொண்டு எதிரில் வருவது எவ்விலங்கு என்று கணித்து அவற்றின் உடலில் எப்பகுதியிலும் அம்பெய்ய அவர்களால் இயலும்.\nஅக்ஷரூபக் கலையின்படி களத்தில் எதிரிகளின் விழிகளே அசுரர்களுக்கு அனைத்தையும் காட்டித் தந்தன. பகல்போர்களில் முழுக் களமும், எதிரியின் முழுதுடலும் தெரிகையில் அவர்கள் ஆற்றலற்ற போர்வீரர்களாக இருந்தனர். அவ்வுடலில் இலக்கு தேர்வதற்குள் அவர்களின் விழிகள் மலைத்தன. உடல்களுடன் உடல்கள் பின்னி, காட்சிகள் மேல் காட்சிகள் படிந்து கொந்தளிப்பு கொள்ளும் பெருவெளியில் இலக்கு தெரிவு செய்யத் தெரியாமல் அவர்கள் இழுத்த நாணில் அம்புடன் எப்போதும் தடுமாறினர். “உடல்களை இழுத்துப் பின்னி பாய் முடைந்ததுபோல் உள்ளது இப்போர்க்களம்” என்று இளைய கிராத இளவரசன் கம்றன் சொன்னது அவர்களுக்கிடையே புகழ்பெற்ற வரியாக இருந்தது. உடல்களின் வேர்ப்பின்னல், உடல்களின் முள்வேலி, உடல்களின் இலைத்தழைப்பு என அதை சொல்லிச் சொல்லி பெருக்கிக்கொண்டனர். அவ்வுடல்களை நோக்கி இலக்கின்றி அம்பெய்வதையே எப்போதும் இயற்றி வந்தனர்.\nஆனால் அவர்களை நாடிவந்த ஷத்ரியர்களின் அம்புகள் இலக்கு கொண்டிருந்தன. அவர்கள் அணிந்திருந்த யானைத்தோல் கவசங்களின் இடுக்குகளை, உடலின் நரம்பு முடிச்சுகளை, உயிர்நிலைகளை நாடியே அவை வந்தன. குருதி குடித்து நின்று அதிர்ந்தன. அவர்களை ஷத்ரியர்கள் கலைந்து முட்டிமோதி அதனாலேயே எளிய இலக்குகளென்றாகும் மான்கூட்டங்களும் பறவைத்திரள்களுமென்று எண்ணினர். இரு படையினரும் ஷத்ரியர்களுக்கு முன்னால் இழுத்��ுவிட வேண்டிய புதர்த் திரைகளாகவோ ஷத்ரிய விசைக்கு எதிரான சகடத் தடைகளாகவோதான் அவர்களை பயன்படுத்தினர். வேல்களாலும் வாள்களாலும் வெட்டிக்குவிக்கப்பட்டு, அம்புகளால் அறைந்து வீழ்த்தப்பட்டு, யானைகளாலும் புரவிகளாலும் மிதிக்கப்பட்டு எவராலும் அறியப்படாதவர்களாக விழுந்து குருக்ஷேத்ரத்தின் பிலங்களுக்குள் மறைவதே அவர்களின் போராக அமைந்திருந்தது. அவர்களைக் கொன்ற ஷத்ரியர்கள்கூட ஒருகணம் ஏறிட்டு தங்கள் இரைகளின் முகத்தை நோக்கவில்லை.\nஆனால் இருளுக்குள் அவர்களுக்கு இலக்குகள் நன்கமைந்தன. “இருள் தேவையற்ற அனைத்தையும் மறைத்துவிட்டது. தேவையானவற்றை மட்டும் தெரிவு செய்துகொள்ள இடமளித்தது. இருளில் நாம் மறைந்துகொள்கிறோம். நம்மை தாக்குபவர்கள் நாம் ஒளியில் தவிப்பதுபோல் இருளில் முட்டித் தவிக்கிறார்கள். நமக்கு இலக்கென்று வெட்டவெளியில் நின்றிருக்கிறார்கள்” என்றார் கிராதர் குலத்தலைவர் சம்புகர். “நம் தெய்வங்கள் அவர்களை ஏற்கெனவே இலக்கு வைத்துவிட்டன. குருதி அளிப்பது மட்டுமே நமது பணி…” அவர்கள் முதல்முறையாக போர்வெறி கொண்டனர். கொல்லுந்தோறும் பெருகும் அவ்வெறியை அவர்களில் பலர் முன்னர் அறிந்திருக்கவில்லை. அவர்களில் பலர் போர்க்களத்தில் நின்று பொருதியதே இல்லை. வேட்டைவிலங்கை கொன்றபின் எழும் துயரம் போர்க்களத்தில் இல்லை என்பதை அவர்கள் கண்டனர். அங்கே உயிர்விடும் விழிகளின் இறுதி ஒளி எழுந்து கொன்றவனின் உள்ளத்தில் கூரின் சுடர் என குடியேறுவதில்லை. அதை அணையச்செய்ய தெய்வங்களை வழிபட்டு எழுப்ப வேண்டியதில்லை.\nகிராதர்களும் நிஷாதர்களும் அசுரர்களும் வேட்டைவிலங்குகள் இருளில் தங்களை காணாமலிருக்கும்பொருட்டு விழிகளை கிழே தாழ்த்தி இமைகளை பெரும்பாலும் மூடிக்கொள்ளும் வழக்கம் கொண்டிருந்தனர். அவர்களின் அம்புமுனைகள் கூர்தீட்டப்பட்ட பின்னர் கரி கலந்த அரக்கில் மூழ்க்கி எடுக்கப்பட்டு மின்னிலாதிருந்தன. அவர்களின் விற்களும் கவசங்களும்கூட கரிய அரக்கு பூசப்பட்டிருந்தன. கால்களில் அவர்கள் மரப்பட்டைகளைச் சதைத்து உருவாக்கப்பட்ட மென்மையான குறடுகளை அணிந்திருந்தனர். அவர்களின் விற்கள் நாணொலி எழுப்புவதில்லை. எனவே இருளில் முற்றாக மறைந்து தடமின்றி எழுந்து வர அவர்களால் இயன்றது. கொன்று மீள்கையில் தாங்கள் வந்த���ையும் கொன்றதையும் அவர்கள் மட்டுமே அறிந்தனர்.\nமாறாக ஷத்ரியர்கள் மின்னும் கவசங்கள் அணிந்திருந்தனர். ஒலிக்கும் குறடுகளும் சுடர் சூடிய படைக்கல கூர்களும் கவச வளைவுகளும் கொண்டிருந்தனர். அவர்களின் அஞ்சித் திகைத்த விழிகள் வெறித்து “இங்குளோம் இவ்வாறுள்ளோம்” என்று காட்டின. கிராதர்களும் நிஷாதர்களும் அசுரரும் அரக்கரும் கள்ளிச்செடிகளையும் காட்டுக்கற்றாழைகளையும் என ஷத்ரியர்களை வெட்டி வீழ்த்தினர். “இத்தனை எளிதாக நான் வேட்டையாடியதே இல்லை. விழிகள் ஒளிக்கு மயங்கிய எலிகளைப்போல் அம்புபட்டுச் சாகிறார்கள்” என்று கிராத குல இளவரசனாகிய பூதன் சொன்னான். “நெருங்கி காய்த்து குலை செறிந்து கிளைதாழ்ந்த மாமரக் கிளையில் கல்லெறிவது போலுள்ளது” என்று நகைத்தான் அசுரர்குடி இளவரசனாகிய காமிதன். சுழற்காற்றில் ஆலமரம் காயுதிர்ப்பதுபோல் ஷத்ரியர்கள் குருக்ஷேத்ரக் களமெங்கும் விழுந்தனர்.\nஅர்ஜுனனும் கர்ணனும் இருபுறத்திலிருந்தும் வழிகாட்டிய படைகள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன. அவர்கள் இருவரும் ஒருவரோடொருவர் அம்பு கோத்துப் போரிட அப்போரின் நிழல்பெருகிய வானசைவுபோல பாண்டவ கௌரவப் படைகள் போரிட்டன. அர்ஜுனனின் ஆவத்தூளியிலிருந்து எழும் அம்பின் ஓசையை கர்ணன் கேட்டான். அதற்கு நிகரான அம்பெடுத்து இருளில் வந்த அதன் ஒலிச்சீற்றத்தை இரண்டென முறித்தான். கர்ணனின் நாண் இழுபடும் ஓசையிலேயே அவ்வம்பின் விரைவை அர்ஜுனன் அறிந்தான். முன்னவர்களின் அம்புகள் ஒன்றையொன்று தாக்கி வீழ்த்த படையினர் எய்த விழியற்ற அம்புப்பெருக்கு அலை எழுந்து அலையை அறைந்து நுரை எழுப்பி சிதறுவதுபோல் படைகளின் தலைக்குமேல் கொந்தளித்தது. அம்புகள் பட்டு அலறிச் சரிந்தவர்களின் உடல்களிலும் குருதிக்குழம்பிலும் பிறர் முட்டித்தடுமாறினார்.\nஅப்பால் எரிந்த அறிவிப்பு விளக்குகளின் மெல்லிய ஒளியில் அனலென சுடர் கொண்டிருந்தது கர்ணனின் தேர். அவன் நெஞ்சக்கவசம் உருகும் பொன் என நெளிந்தணைவதை, அவன் குண்டலங்கள் இரு விண்மீன் துளிகள் என அசைவதை அர்ஜுனன் ஒருகணம் கண்டான். ஒருவரை ஒருவர் ஓர் அணுவிடையும் குறையாது எதிர்க்கும் அப்போரில் எப்போதுமென இருவரும் பிறராகி நின்று பொருதினர். அம்புகளால் கவ்விக்கொண்டு முடிவிலா சுழலொன்றில் சுற்றிவந்தனர். அந்த அம்புகளில் எழ���ந்தனர் நீத்தவர்கள், நினைவானவர்கள், நெஞ்சக்கதுப்பில் புதைந்து காத்திருந்தவர்கள். அபிமன்யு அர்ஜுனனின் அம்பில் எழுந்து கர்ணனை நோக்கி சீறிச் சென்றான். அவனை நோக்கி பாய்ந்து வந்தான் ஜயத்ரதன். ஏகலவ்யன் கர்ணனின் அம்பில் முழக்கமிட்டான். அர்ஜுனனில் இருந்து எழுந்து வந்தான் அரவான். பீஷ்மரும் பரசுராமரும் அங்கே போரிட்டனர். பின்னர் காற்றில் எழுந்த குந்தியை ராதை எதிர்கொண்டாள். அவர்களின் வஞ்சம் பிற அனைத்தையும் தன் படைக்கலமாகக் கொண்டு காற்றில் திகழ்ந்தது.\nஅவ்விரவுப்போர் கடோத்கஜனுக்கு உரியதாக இருந்தது என்று அரவான் சொன்னான். அவனை எதிர்க்க எவராலும் இயலவில்லை. துரோணர் சிலந்திவலையை இருளில் தொட்டுணர்வதுபோல மெல்ல மெல்ல அவனுடைய தாக்குதலின் சுழிமையத்தை உய்த்துணர முயன்றார். தன் செவிவிழியால் அம்புகள் எங்கிருந்து எங்கு நோக்கி செல்கின்றன என்று கணித்தார். இடும்பர்கள் எத்திசையில் தாவி தாக்கி எவ்வண்ணம் நிலைமீள்கிறார்கள் என்று உணர்ந்து மெல்ல மெல்ல அந்த சுழிமையத்தை நோக்கி தன்னைச் சூழ்ந்திருந்த படைவீரர்களை கொண்டுசென்றார். சல்யரும் அஸ்வத்தாமரும் இருபுறத்திலிருந்தும் அவரை துணைத்தனர். தாக்குதலின் கொண்டாட்டத்திலிருந்த இடும்பர்கள் துரோணரின் பொறி கைகளை விரித்துச் சூழ்வதை உணரவில்லை. கௌரவப் படைவீரர்கள் கடோத்கஜனை அவனறியாமலேயே நெருக்கி ஒற்றைப் புள்ளியை நோக்கி கொண்டுசென்றனர்.\nவளைகழை முனையில் எழுந்து வண்டெனத் தெறித்து இருளில் மிதந்து சென்று தூண்டில் முனைபோல் இறங்கி காந்தார தேர்ப்படைகளைத் தாக்கி உடைத்துச் சிதறடித்துவிட்டு துள்ளி இருளினூடாக எழுந்த இடத்திற்கே கடோத்கஜன் வந்திறங்கினான். தேர்மகுடங்களின்மேல் விண்ணிலிருந்து பெரும்பாறைகள் உதிர்வதுபோல் இறங்கி அவ்விசையிலேயே கதைகளால் அடித்து உடைத்து சிதர்களாக தெறிக்கச் செய்து, வில்லேந்திய வீரர்களையும் மழுவும் கதையும் பாசமும் ஏந்திய மல்லர்களையும் தலையுடைத்தும் உடல் சிதைத்தும் கொன்று, என்ன நிகழ்கிறது என்று அவர்கள் உணர்ந்து ஒருங்கிணைத்துக் கொள்வதற்குள் மீண்டும் கழை பற்றி ஏறி தன்னை தெறிக்கச்செய்து மையநிலைக்கே மீண்டு, ஒருவரோடொருவர் ஒலியிலா ஒற்றைச்சொல்லில் மீண்டு வந்ததை அறிவித்து, மறுபடியும் நாற்புறமும் தங்களை எய்துகொண்டனர் இடும்பர்.\nபொறிகளை சிதறடித்தபடி சுழன்று செல்லும் அனலுருளை போலிருந்தது அவர்களின் வட்டம். அதன் மையத்தில் கடோத்கஜன் வந்திறங்கி நிலைகொண்டதும் எட்டுத் திசையிலிருந்தும் இடும்பர்கள் மீண்டு வந்து அங்கு தங்கள் உடல்களைப் பொழிந்துகொண்டு வளையமாயினர். “எவரும் இழப்பில்லை செல்க” என்று கடோத்கஜன் சொன்னதும் அவர்கள் மீண்டும் இருளில் எழுந்தனர். கடோத்கஜன் கழைவளைக்கவிருந்த கணத்தில் அங்கே துரோணர் தன் படைகளுடன் தோன்றினார். போர்க்கூச்சலிட்டபடி அசுரர்களால் நடத்தப்பட்ட கௌரவப் படைகள் அம்மையத்தை முழுமையாக சூழ்ந்துகொண்டன. “இலக்கு நோக்க வேண்டியதில்லை இடைவெளியில்லாமல் அம்புகளால் அறையுங்கள் விண் அவர்களின் மாயவெளி என்று உணர்க அம்மையத்தின் மண்நிலையிலேயே அறைக ஒருமுறையேனும் அம்மையத்தில் காலூன்றாமல் அவர்களால் எழ இயலாது” என்று துரோணர் கூவினார்.\nபாஞ்சாலர்களும் விராடர்களும் இந்திரப்பிரஸ்தத்தின் வீரர்களும் பாண்டவப் படையின் முகப்பில் அரைவட்டமெனத் திரண்டு இருமுனைகளும் அகன்று துரோணரின் சூழ்கையை எதிர்த்து அது முழு வளையம் என்று ஆகாமல் தடுத்தனர். காந்தாரர்களும் உத்தரபாஞ்சாலர்களும் சைந்தவர்களும் கேகயர்களும் மகதர்களும் கோசலர்களும் கலிங்கர்களும் அங்கர்களும் வங்கர்களும் அடங்கிய கௌரவப் படை சீற்றத்துடன் அவர்களை அம்புகளால் அறைந்து விரித்து இடும்பர்களை முற்றாக வளைக்க முயன்றது. எழுந்து சென்ற அதே விசையில் மீண்டும் அங்கே வந்தாகவேண்டும் என்ற வடிவ ஒழுங்கு இடும்பர்களுக்கு எதிரியாக அமைந்தது. சுழன்றறைந்து குருதி சூடிய உடம்புடன் இருளிலெழுந்து அவர்கள் சீறிப் பாய்ந்த அம்புகளால் நிறைந்திருந்த அந்தச் சுழிமையத்திற்குள்ளேயே வந்து விழுந்தனர். உடம்பெங்கும் அம்புகள் தைக்க அலறியபடி ஒருவர் மேல் ஒருவர் உதிர்ந்தனர்.\nஅவர்கள் மேல் வந்திறங்கிய கடோத்கஜனின் உடலில் துரோணரின் பதினெட்டு அம்புகள் வந்து தைத்தன. பேரெடை கொண்ட தன் உடல் மண்ணில் அறைந்து விழுந்ததுமே நிகழ்வதென்ன என்று அவன் தெரிந்துகொண்டான். நாணொலிக்க வில்நின்று வெறியாட்டுகொள்ள விழிகூட அசையாமல் கைமட்டும் சுழல போரிட்டுக்கொண்டிருந்த துரோணரை தொலைவிலேயே அவன் கண்டான். தன் பாசக்கொடியை துரோணரின் தேர் மேல் ஏவி அதனூடாக பறந்தெழுந்து சிலந்தியென அவர் தேர் மேல��� இறங்கினான். தன் கதையால் துரோணரின் தேர்ப்பாகனின் தலையறைந்து கொன்றான். இன்னொரு அறையால் தலைகாக்க வளைந்தொழிந்த துரோணரின் தேர்த்தூணை உடைத்தான். மீண்டும் அவனுடைய கதை சுழன்று வருவதற்குள் துரோணர் தேர்த்தட்டிலிருந்து பின்னால் தாவி இறங்கி தன் வில்லுடன் ஓடி அங்கு ஊர்பவன் விழ தயங்கிச் சுழன்றுகொண்டிருந்த புரவியொன்றின்மேல் ஏறிக்கொண்டார். கடோத்கஜன் காற்றில் தாவி எழுந்து விழுந்துகிடந்த தேர்களினூடாக நிலையழிந்து கனைத்துச்சுழன்ற குதிரைகளின் மீதாக பாய்ந்து சென்று துரோணரை தாக்கினான்.\nகடோத்கஜனின் கதையின் வீச்சை தவிர்க்க அம்புகளால் தொடர்ந்து அறைந்தபடி துரோணர் கௌரவப் படைகளுக்குள் பின்வாங்கிச் சென்றார். கடோத்கஜனின் கதை அவன் கையிலிருந்து நெடுந்தொலைவுக்கு எழுந்து வந்து அறைந்து மீண்டது. நின்ற இடத்திலேயே கரைந்து எதிர்ப்புறத்தில் அவன் தோன்றினான். அவன் அறைகள் ஒவ்வொன்றும் சூழ்ந்திருந்தோர் காதுமடல்களை குளிரச்செய்யும் காற்றுவிசை கொண்டிருந்தன. துரோணர் புரவியிலேயே துள்ளி அகன்று அவன் கதை விசையைத் தவிர்க்க அந்த அறைகள் கௌரவர்களின் தேர்கள் மீதும் யானைகள் மீதும் புரவிகள் மீதும் பட்டு குருதி சிதறச்செய்தன. துரோணர் வெம்மைகொண்ட குருதிமழையில் நனைந்தார். இரவுக்காற்றில் குருதி குளிர நடுக்கு கொண்டார். அரக்கனின் விழிமின்களை அருகிலெனக் கண்டார். அம்பை எடுப்பதற்குள் அவை இரு மின்மினிகளென்றாகி அகல்வதை உணர்ந்தார்.\nதுரோணரின் புரவியின் மேல் கடோத்கஜனின் அடி விழ அது அலறவும் வாயிலாது தெறித்து அப்பால் விழுந்தது. அதற்கு அடியில் அவர் உடல் சிக்கிக்கொண்டது. கையூன்றி அவர் எழுவதற்குள் விண்ணிலிருந்து பாய்ந்து அவர் மேல் இறங்கினான் கடோத்கஜன். துரோணர் வானிலென அவன் முகத்தை கண்டார். அவன் கதாயுதத்தைச் சுழற்றி அவர் தலையை அறைந்துடைக்க முயன்றபோது இருளுக்குள் பாய்ந்து வந்த அலாயுதன் கடோத்கஜனை தன் கதாயுதத்தால் அறைந்து அப்பால் வீழ்த்தினான். இரு அரக்கர்களும் பேரொலியுடன் தங்கள் கதைகளை வீசி ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். பொறி தெறிக்க மோதிச் சுழன்றெழுந்து மீண்டும் அறைந்தனர். உறுமல்களும், பெருமூச்சொலிகளும், பற்களைக் கடிக்கும் ஓசையும், தொடையிலறைந்து வஞ்சினம் காட்டும் ஓசையும் எழ அரக்கர்கள் இருவரும் மண்ணிலும் விண்ணிலுமென பொருதினர். இருளை மிதித்துத் தாவி விண்ணிலெழுந்து அங்கேயே அறைந்துகொண்டனர். மலையிலிருந்து பாறைகள் உதிர்வதுபோல் நிலத்தில் விழுந்து சுழன்றெழுந்து மீண்டும் அறைந்தனர். நிகர்வீரர் போர்புரிவதைக் காண எழும் தெய்வங்கள் ஒவ்வொருவராக விண்ணில் தோன்றலாயினர்.\nமுந்தைய கட்டுரைகுளச்சல் மு.யூசுப் அவர்களுக்குப் பாராட்டு – இன்று\nஅடுத்த கட்டுரைபால் – ஒரு கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-16\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-15\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-14\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-13\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-12\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-11\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-10\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-9\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-8\nஐயாறப்பனை அழிப்பது - கடிதம்\nஸ்டெர்லைட்- சூழியல் இயக்கங்களின் பணி\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி கி.ராஜநாராயணன் கோவை ஞானி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உணவு உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் தொல்லியல் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் நகைச்சுவை நேர்காணல் நேர்காணல் மற்றும் பேட்டிகள் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பிறர் படைப்புகள் நூல் மதிப்புரை மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் மதிப்புரை விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெண்முரசு – ஒலிவடிவம் வெண்முரசு – வாசகர் கடிதம் வெண்முரசு – வாசகர் மதிப்புரை வெண்முரசு ஆவணப்படம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/literature/agriculture/132678-micro-organism-gives-more-profit", "date_download": "2021-10-19T12:34:15Z", "digest": "sha1:LIMYN6WVO4YNYO3J3NAAYU7M22DT526D", "length": 16514, "nlines": 227, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 25 July 2017 - இயற்கை என்.பி.கே... மண்ணை வளமாக்கும் ஜப்பான் தொழில்நுட்பம்! - உதவிக்கு வரும் உயிரியல் - 10 | Micro Organism Gives More Profit - Pasumai Vikatan - Vikatan", "raw_content": "\nஆடிப் பட்டத்துக்கு ஏற்ற சேனைக்கிழங்கு\nஇயற்கை எரிவாயுக் கழிவில் செழிக்கும் நெல் விளைச்சல்... இது கதிராமங்கலம் சாதனை\nஈஷா மையக் கட்டடங்களுக்கு அவசர அனுமதி... அடிபணிந்தார்களா அரசு அதிகாரிகள்\nசிறப்பு மின் இணைப்புத் திட்டம்... - பண முதலைகளுக்குதான் பலன் தரும்\nஉழவர் சந்தையில் இயற்கை அங்காடி - உழவர் தினவிழாவில் கோரிக்கை\nகதிராமங்கலம்... கதறிய மக்கள்... கலவரத்தைத் தூண்டிய காவல்துறை\nபயறு வகைகளுக்கு குறைந்தபட்ச விலை... - அரசுக்கு ஆராய்ச்சி மையம் கோரிக்கை\nகடன் மறுசீரமைப்பு... விவசாயிகளுக்குப் பலன் தருமா\nகுறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம்... பலனளிக்குமா விவசாயிகளுக்கு\n“பப்பாளி இருக்கும் வீட்டில் நோயாளி இல்லை\nமண்புழு மன்னாரு: சிதம்பர ரகசியமும் வெட்டிவேர் மகத்துவமும்\n - 11 - மர்ம காய்ச்சலைக் குணமாக்கும் 'ஏழிலைப்பாலை'\n - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 9\nஇயற்கை என்.பி.கே... மண்ணை வளமாக்கும் ஜப்பான் தொழில்நுட்பம் - உதவிக்கு வரும் உயிரியல் - 10\nநல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநீங்கள் கேட்டவை: நாட்டுக்கோழி வளர்ப்புக்கு மானியம் உண்டா\nமரத்தடி மாநாடு: நிரப்பப்படாத பணியிடங்கள்... தேங்கி நிற்கும் தோட்டக்கலைத் துறைப் பணிகள்\nபசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ - திருச்சி - 2017\nAGRI INTEX 2017 - விவசாயக் கண்காட்சி ஜூலை 14 முதல் 17 வரை\nபுத்தம்புது காலை: மண்ணுக்கும் விண்ணுக்கும் சம்பந்தம் உண்டென சொல்லும் மிளகாய்\nவிவசாயிகளின் நலன்... விவசாய மேம்பாடு - தமிழக அரசின் பட்ஜெட்...\nரிஸ்க் எடுப்பவர்கள் செய்ய வேண்டிய முதலீடுகள்..\n“ஒரு முழம் பூ கேட்டேன்... தோட்டத்தையே உருவாக்கிக் கொடுத்துட்டார்\nமாதம் ரூ.3,00,000... 'பலே' லாபம் தரும் சுருள்பாசி வளர்ப்பு - பதிவுகளின் பாதையில்... 4\nஅரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கை... நடைமுறையில் சாத்தியமா\nமரத்தடி மாநாடு: ‘நோட்டாவுக்குத்தான் எங்க ஓட்டு’ - விவசாயிகள் அறிவிப்பு\nஆச்சர்யம்... கரிசல் நிலத்தில் விளையும் காலிஃப்ளவர்\nவேளாண் ஏற்றுமதிக்கு உதவும் அபிடா இப்போது தமிழ்நாட்டில்..\nஇந்தியாவிலுள்ள ஆடுகள் எல்லாம் ஒரே இடத்தில்... கால்நடை வளர்ப்பில் அசத்தும் சுதீந்திரன்\nஇயற்கை என்.பி.கே... மண்ணை வளமாக்கும் ஜப்பான் தொழில்நுட்பம் - உதவிக்கு வரும் உயிரியல் - 10\nஇயற்கை என்.பி.கே... மண்ணை வளமாக்கும் ஜப்பான் தொழில்நுட்பம் - உதவிக்கு வரும் உயிரியல் - 10\nசின்னச் சின்ன நுண்ணுயிரிகள் பெரிய பெரிய லாபம் உதவிக்கு வரும் உயிரியல் - 17\nசின்னச் சின்ன நுண்ணுயிரிகள் பெரிய பெரிய லாபம் உதவிக்கு வரும் உயிரியல் - 16\nகொடூர கொசுக்களை ஒழிக்கும் இ.எம். திரவம் - உதவிக்கு வரும் உயிரியல் - 15\nஇயற்கை பூச்சி விரட்டி ‘இ.எம்-5’ - உதவிக்கு வரும் உயிரியல் - 14\nபயன்பாட்டுக்கு வராத ‘பலே’ பாக்டீரியாக்கள் - உதவிக்கு வரும் உயிரியல் - 13\nமட்க வைப்பதில் மன்னன் ஆக்டினோமைசஸ் - உதவிக்கு வரும் உயிரியல் - 12\nவிளைச்சலை அதிகரிக்கும் ‘ஆம்’ - உதவிக்கு வரும் உயிரியல் - 11\nஇயற்கை என்.பி.கே... மண்ணை வளமாக்கும் ஜப்பான் தொழில்நுட்பம் - உதவிக்கு வரும் உயிரியல் - 10\n - உதவிக்கு வரும் உயிரியல் - 9\n - உதவிக்கு வரும் உயிரியல் - 8\nஒரு கிலோ உயிர் உரம்... 30 கிலோ யூரியாவுக்குச் சமம் - உதவிக்கு வரும் உயிரியல் - 7\nவறட்சிக்கு ஏற்ற மூடாக்கு... கைகொடுக்கும் உயிர் உரங்கள் - உதவிக்கு வரும் உயிரியல் - 6\nஒரு சென்ட் நிலம்... 8 டன் உரம் தயாரிக்கலாம்\nஇயற்கை உரம் தயாரிக்க உதவும் இ.எம்\nசின்னச் சின்ன நுண்ணுயிர்கள் பெரிய பெரிய லாபம் - உதவிக்கு வரும் உயிரியல் -2\nசின்னச் சின்ன நுண்ணுயிர்கள் பெரிய பெரிய லாபம் - உதவிக்கு வரும் உயிரியல்\nஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்\nஇயற்கை என்.பி.கே... மண்ணை வளமாக்கும் ஜப்பான் தொழில்நுட்பம் - உதவிக்கு வரும் உயிரியல் - 10\nசின்னச் சின்ன நுண்ணுயிர்கள் பெரிய பெரிய லாபம் இடுபொருள்முனைவர் அ.உதயகுமார் - தொகுப்பு: ரா.கு.கனல்அரசு - படங்கள்: வீ.சிவக்குமார்\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்\nதெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism\nதஞ்சாவூர் மாவட்டம், தென்னமநாடு கிராமத்தைச் சேர்ந்த முனைவர் அ.உதயகுமார், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ரஷ்ய மொழியில் பட்டம் பெற்றவர். ரஷ்ய நாட்டின் மாஸ்கோவில் உள்ள பீப்பிள்ஸ் ஃப்ரெண்ட்ஷிப் பல்கலைக்கழகத்தில் உழவியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர். தொடர்ந்து திண்டுக்கல் காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தில் உழவியலில் முனைவர் பட்டம் பெற்றார். அதன் பிறகு, மைசூர் மத்தியப் பட்டு வாரியத்தில் ரஷ்ய மொழிபெயர்ப்பாளராகவும், பெங்களூரில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தில் திட்ட அதிகாரியாகவும் பணியாற்றியவர். தற்போது காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரும் வேளாண் அறிவியல் மையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றுகிறார். விவசாயிகளுக்கான பல்வேறு பயிற்சிகளைக் கொடுத்துவரும் உதயகுமார், திறன்மிகு நுண்ணுயிரியை தமிழகத்தில் பிரபலமாக்கியவர்களில் குறிப்பிடத்தக்க ஒருவர்\nஇதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/church/news/2021-06/myanmar-bishops-humanitarian-corridor-starvation-fears.print.html", "date_download": "2021-10-19T13:24:13Z", "digest": "sha1:KQUMAFQJ6WZ2JFQTBETW7AYFE4K2EKOR", "length": 6873, "nlines": 26, "source_domain": "www.vaticannews.va", "title": "மியான்மாரில் பல ஆயிரக்கணக்கானோர் பசியால் மடியும் ஆபத்து - print - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nகாட்டுக்குள் மியான்மார் சிறுபான்மை இனத்தவரின் குடியிருப்புகள்\nமியான்மாரில் பல ஆயிரக்கணக்கானோர் பசியால் மடியும் ஆபத்து\nமியான்மார் ஆயர்கள் : உணவுக்கும் பாதுகாப்புக்கும் உரிமையுடைய, இந்நாட்டின் குடிமக்க��ுக்கு உதவிகள் சென்றடைய வழிவகைகள் செய்துதரப்படவேண்டும்\nகிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்\nமியான்மார் நாட்டில் பசியால் மடியும் ஆபத்திலிருக்கும் பல ஆயிரக்கணக்கான மக்களுக்கு, மனிதாபிமான முறையில் உதவிகள் சென்றடைய வழி அமைத்துத் தரப்படவேண்டும் என விண்ணப்பம் ஒன்றை விடுத்துள்ளனர், அந்நாட்டு ஆயர்கள்.\nசிறுபான்மை இன மக்கள் வாழும் பகுதிகளில், பல ஆயிரக்கணக்கானோர், குறிப்பாக முதியோரும், குழந்தைகளும், தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறி, காடுகளில் தஞ்சம் புகுந்து, பட்டினிச் சாவை எதிர்நோக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக உரைக்கும் ஆயர்கள், உணவுக்கும் பாதுகாப்புக்கும் உரிமையுடைய இந்நாட்டின் குடிமக்களாகிய அவர்களுக்கு உதவிகள் சென்றடைய வழிவகைகள் செய்துதரப்படவேண்டும் என விண்ணப்பித்துள்ளனர், மியான்மார் ஆயர்கள்.\nமியான்மார் நாட்டு ஆயர் பேரவைத் தலைவர், கர்தினால் சார்ல்ஸ் மாங் போ, பொதுச்செயலர், ஆயர் ohn Saw Yaw Han, மற்றும், ஏனைய 11 ஆயர்கள் இணைந்து கையெழுத்திட்டு, ஜூன் 11, இவ்வெள்ளியன்று வெளியிட்ட இந்த அறிக்கையில், மத வழிபாட்டுத் தலங்களின் புனிதத்துவம் மதிக்கப்படவேண்டும் என்ற, விண்ணப்பம் ஒன்றையும் விடுத்துள்ளனர்.\nஎவரும் போரின் வழியாக மியான்மார் நாட்டில் வெற்றியைக் கண்டதில்லை எனக்கூறும் ஆயர்கள், மோதல்களின்போது வழிப்பாட்டுத்தலங்களும், மருத்துவமனைகளும், கல்வி நிலையங்களும், புலம்பெயர்ந்தோருக்கான புகலிடங்களாக மாறுவதால், அவைகளின் பாதுகாப்பு உறுதிசெய்யப்படவேண்டும் என, தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளோரைக் கேட்டுள்ளனர்.\nமோதல்களால் பாதிக்கப்பட்டிருக்கும் மியான்மார் நாட்டிற்கு இறை உதவியைக் கோரும் நோக்கத்தில், ஒவ்வொரு மறைமாவட்டத்திலும் இறைவேண்டல்களும், தினசரி திருநற்கருணை ஆராதனைகளும், செபமாலை பக்திமுயற்சிகளும் இடம்பெறவேண்டும் எனவும் ஆயர்கள் விண்ணப்பித்துள்ளனர்.\nஇதற்கிடையே, காடுகளில் அடைக்கலம் தேடியுள்ள மக்களுக்கு உதவிகளைக் கொண்டு செல்ல முடியாதவகையில், பல்வேறு கட்டுப்பாடுகளும், சாலைத் தடுப்புகளும், இராணுவ அரசால் விதிக்கப்பட்டுள்ளதால், பல ஆயிரக்கணக்கான மக்கள் பசியால் மடியும் ஆபத்து இருப்பதாக, மியான்மாரின் கத்தோலிக்க காரித்தாஸ் அதிகாரிகள் ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளன���். (UCAN)\nஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு\nஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyaagarathi.com/physics-chemistry-difficult-neet-candidates-are-shocked/", "date_download": "2021-10-19T12:17:10Z", "digest": "sha1:KIE5R2GOA3ZXRCSAIWYZSS2DV6B2N64O", "length": 18368, "nlines": 120, "source_domain": "puthiyaagarathi.com", "title": "இயற்பியல், வேதியியல் கடினம்!; நீட் தேர்வர்கள் அதிர்ச்சி - புதிய அகராதி", "raw_content": "Tuesday, October 19மெய்ப்பொருள் காண்பது அறிவு\n; நீட் தேர்வர்கள் அதிர்ச்சி\nஇயற்பியல், வேதியியல் பாடப்பகுதிகளில் இருந்து கேட்கப்பட்ட வினாக்கள் கடினமாக இருந்ததாக நீட் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகள் சோகத்துடன் கூறினர். பயிற்சி மையங்களுக்கு சென்று படிக்காமல் போனால், இத்தேர்வை எதிர்கொள்வதே சவாலானதுதான் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஎம்பிபிஎஸ், பிடிஎஸ் ஆகிய மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான நீட் போட்டித்தேர்வு, நாடு முழுவதும் இன்று (மே 6, 2018) நடந்தது. காலை 10 மணிக்குத் தொடங்கிய இத்தேர்வு, மதியம் 1 மணி வரை நடந்தது. கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் நீட் தேர்வர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன.\nஅதேபோல, வினாத்தாள் தாமதாக வந்தது, மொழி மாறி வந்த வினாத்தாள், பதிவெண் மாற்றம் என பல்வேறு குளறுபடிகளுக்கும் பஞ்சமில்லாமல் நடந்து முடிந்தது.\nசேலம் மெய்யனூரில் உள்ள ஸ்ரீவித்யா மந்திர் பள்ளியும் நீட் தேர்வு மையமாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த மையத்திற்கு அனுப்பப்பட்ட வினாத்தாள்கள் எல்லாமே ஹிந்தி மொழியில் இருந்தது. இதனால் தேர்வு ஏற்பாட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலும் அச்சிடப்பட்ட வினாத்தாள்கள் இந்த மையத்திற்கு வரவழைக்கப்பட்டது.\nகாலை 11.30 மணிக்கு மேல்தான் உரிய வினாத்தாள் கட்டுகள் இம்மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதனால் காலை 10 மணிக்கு தொடங்க வேண்டிய நீட் தேர்வு, ஒன்றரை மணி நேரம் தாமதமாக தொடங்கியது. தேர்வு துவங்கிய நேரத்தில் இருந்து மூன்று மணி நேர அவகாசமும் தேர்வர்களுக்கு வழங்கப்பட்டது.\nவினாத்தாள் குறித்து தேர்வர்கள் கூறியது:\nநான் இரண்டாவது முறையாக நீட் தேர்வு எழுதுகிறேன். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு தேர்வு கொஞ்சம் கடினமாக இருந்தது. குறிப��பாக இயற்பியல், வேதியியல் பாடப்பகுதியில் இருந்து கேட்கப்பட்ட வினாக்கள் மிகக் கடினமாக இருந்தன.\nஉயிரியல் பாடப்பகுதியில் இருந்து கேட்கப்பட்ட வினாக்கள் மிக எளிமையாக இருந்தது. இயற்பியல் பகுதி மிகக் கடினம். இந்த முறை மாநில பாடத்திட்டத்தில் இருந்தும் நிறைய வினாக்கள் வந்திருந்தன. என்றாலும் சிபிஎஸ்இ பாடப்பகுதியில் இருந்துதான் அதிகளவில் வினாக்கள் கேட்கப்பட்டு இருந்தன.\nநான் அரசுப்பள்ளியில் தமிழ் வழியில்தான் படித்தேன். நீட் தேர்வுக்காக அரசு வழங்கிய உண்டு உறைவிட பயிற்சி முகாமில் சேர்ந்து பயிற்சி பெற்றேன். இயற்பியல் பாடப்பகுதியில் இருந்து வினாக்கள் கடினமாகத்தான் இருக்கும் என்று முன்பே சொன்னார்கள். அதுபோலவே இன்று நடந்த தேர்விலும் இயற்பியல் பகுதி கடினமாக இருந்தது. அந்தப்பகுதியில் மொத்தம் 45 வினாக்கள் கேட்கப்பட்டது.\nஅதில் 30க்கும் மேற்பட்ட வினாக்கள் கணக்கீடு (பிராப்ளம்) ரீதியாக இருந்தது. அந்த வினாக்களுக்கு எல்லாம் தனியாக தாளில் ‘ஒர்க் அவுட்’ செய்து பார்த்தால்தான் விடையளிக்க முடியும். அதனால் கூடுதல் நேரமும் ஆகியது. மற்ற பகுதிகளில் கேட்கப்பட்ட வினாக்கள் எளிமையாக இருந்தன.\n‘மக்-அப்’ மூலம் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் மட்டுமே எம்பிபிஎஸ் படிப்பில் சேர முடியும் என்பதை நீட் போட்டித்தேர்வு உடைத்திருக்கிறது. அந்த வகையில் நீட் தேர்வை வரவேற்கலாம். அதேநேரம், நீட் தேர்வுக்கான நடைமுறைகளில் குளறுபடிகள் உள்ளதால் அதை முழுமயை£கவும் ஏற்க முடியவில்லை.\nநான் முதல்முறையாக நீட் தேர்வு எழுதினேன். இயற்பியல் பாடப்பகுதியில் கேட்கப்பட்ட வினாக்கள் கடினமாக இருந்தது. இந்தப் பகுதியில் இருந்து நிறைய கணக்குகள் கேட்கப்பட்டதால் நேரம் போதவில்லை. ஒரு மாதம்தான் நான் தனியார் பயிற்சி மையத்தில் நீட் பயிற்சிக்கு சென்று வந்தேன். கோச்சிங் சென்றால் மட்டுமே நீட் தேர்வில் வெற்றி பெற முடியும்.\nசிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இருந்து அதிகளவில் வினாக்கள் வந்திருந்தன. அதுமட்டுமின்றி என்சிஇஆர்டி பாடப்புத்தகத்தில் இருந்தும் நிறைய வினாக்கள் கேட்கப்பட்டு இருந்தன. மாநில பாடத்திட்டத்தில் 25 சதவீத வினாக்கள் வந்திருந்தன. கோச்சிங் சென்று இருந்தால்தான் என்சிஇஆர்டி புத்தக வினாக்கள் பற்றி தெரிந்து கொள்ள முடியும். வீட்டில் இருந்தே படிப்பவர்களுக்கு அதைப்பற்றிய விழிப்புணர்வு இருக்காது.\nசோபிகா, ஸ்ரீபிரீத்தி, மஞ்சுபாஷினி (சேலம்):\nநாங்கள் இங்கிலீஷ் மீடியத்தில் படித்தோம். நீட் தேர்வுக்கு நாங்கள் கோச்சிங் சென்றோம். கோச்சிங் செல்லாவிட்டால் இத்தேர்வை எதிர்கொள்வதே கடினம்தான். இன்று நடந்த தேர்வில் இயற்பியல் பகுதி மட்டும் கொஞ்சம் கடினமாக இருந்தது.\nநாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்த ஜீவிதா என்ற மாணவி, இன்று காலை 9.30 மணியளவில் சேலம் சவுடேஸ்வரி கல்லூரிக்கு மையத்திற்கு நீட் தேர்வு எழுத வந்தார். அவர் தாமதமாக வந்ததாகக் கூறி, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் முதலில் மையத்திற்கு உள்ளே செல்ல அனுமதிக்க மறுத்தனர்.\nபின்னர் அவரிடம் இருந்த ஹால் டிக்கெட்டை வாங்கி பார்த்தபோது அந்த ஹால்டிக்கெட்டில் இருந்த பதிவெண், 6 இலக்க எண்களுடன் இருந்தது. மேலும், அந்த பதிவெண் கேரளா மாநிலம் கோட்டயத்தில் உள்ள ஒரு மையத்தில் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது.\nஅதேநேரம் ஜீவிதா என்ற பெயரில் மற்றொரு மாணவி, சவுடேஸ்வரி கல்லூரியில் தேர்வு எழுதி வருவதும் தெரிய வந்தது. அவர் அவருக்குரிய ஹால் டிக்கெட் வைத்திருந்தார். இதனால் ராசிபுரம் மாணவி ஜீவிதா பெருத்த ஏமாற்றத்துடன் தேர்வு எழுதாமலேயே கண்ணீருடன் திரும்பிச் சென்றார். தான் இந்தத் தேர்வை எழுதியிருந்தால் தன்னால் கண்டிப்பாக டாக்டராகி இருக்க முடியும். ஆனால் அந்த வாய்ப்பு கிடைக்கவில்லையே என்று கண்ணீருடன் கூறினார்.\nஅவருக்கு ஆதரவாக பெற்றோர்கள் பலர் சாலை மறியலில் ஈடுபட்டனர். என்றாலும் அந்த மாணவியை தேர்வு எழுத அனுமதிக்க முடியாது என்று அதிகாரிகள் மறுத்து விட்டனர்.\nPosted in இந்தியா, கல்வி, சேலம், தமிழ்நாடு, தர்மபுரி, முக்கிய செய்திகள்\nPrevசேலம் பெரியார் பல்கலை; சிண்டிகேட் உறுப்பினர் நியமனத்தில் விதிமீறல்\nNextநீட் தேர்வில் மாபெரும் ஊழல்: வேல்முருகன் பகீர் குற்றச்சாட்டு\nபுற்றுநோயை குணமாக்கும் ஷிமோகா வைத்தியர்; நல்லதை நாலு பேருக்கு சொல்லலாமே\nஆளுங்கட்சியிடம் தஞ்சம் புகுந்த ஊழல் மாஜி துணைவேந்தர் தோண்டி துருவும் லஞ்ச ஒழிப்புத்துறை\nசேலம் மாநகராட்சியில் குப்பை வண்டிகள் வாங்கியதிலும் கொள்ளை\nதேவதாசி முறை ஒழிப்பு போராளி முத்துலட்சுமி ரெட்டி\nசட்டம் அ���ிவோம்: குழந்தையை தத்து எடுப்பது எப்படி\nசட்டம் அறிவோம்: பூர்வீக சொத்தில் பெண்ணுக்கு உரிமை உண்டா\nஉடுமலை சங்கர் ஆணவக்கொலை வழக்கில் பரபரப்பு தீர்ப்பு; கவுசல்யாவின் தந்தை உள்பட 6 பேருக்கு இரட்டை தூக்கு\nமக்களுக்காக ஜமீன் சொத்துகளை வாரி வழங்கிய 'வாழும் அதிசயம்' காளியண்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/2020/07/14/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2021-10-19T13:19:33Z", "digest": "sha1:YZIMW4ZHMSN335ARKHKACHNIMFGRQXR6", "length": 7115, "nlines": 129, "source_domain": "vivasayam.org", "title": "அமுல் நிறுவனத்தின் வெற்றிக்கதை :சொக்கன் - Vivasayam | விவசாயம்", "raw_content": "\nHome விவசாயப்புத்தகங்கள் அமுல் நிறுவனத்தின் வெற்றிக்கதை :சொக்கன்\nஅமுல் நிறுவனத்தின் வெற்றிக்கதை :சொக்கன்\nஇந்திய மக்களின் நாவோடும் இதயத்தோடும் கலந்துவிட்ட ஒரு பெயர் அமுல். பால், வெண்ணெயில் தொடங்கிச் சாக்லெட், ஐஸ்க்ரீம்வரை அமுலை ருசிக்காதவர்களே கிடையாது.\nஅமுலின் தயாரிப்புகள் சுவையானவைதான்; அதே நேரம், அந்தப் பெயருக்குப் பின்னாலிருக்கும் அதிசயமான சமூக வரலாறு இன்னும் சுவையானது. மக்களால், மக்களுக்காக உருவாக்கப்பட்ட இந்த நிறுவனம் தன்னலமில்லாத, முனைப்பும் உழைப்பும் மிகுந்த தலைவர்களுடைய வழிகாட்டுதலால் வளர்ந்தது, லட்சக்கணக்கான கிராமவாசிகள், எளிய மனிதர்களுடைய வாழ்க்கையை மாற்றியமைக்கிற, ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் வழிகாட்டுகிற நிறுவனமாகச் சிறந்து விளங்குகிறது.\nஇந்திய வெண்மைப் புரட்சியைத் தொடங்கிவைத்த அமுலின் வெற்றிக் கதையைச் சுவையான மொழியில் விவரிக்கிறார் என். சொக்கன். ஒரு நாவலைப்போல் விரியும் இந்தப் பரபரப்பான கதை, கூட்டுறவுச் சிந்தனையின் வெற்றிக்கு உண்மைச் சான்று, இந்தியர்கள் ஒவ்வொருவரும், குறிப்பாக, இளைஞர்கள் கண்டிப்பாகப் படிக்கவேண்டிய வரலாறு.\nஅமுல் நிறுவனத்தின் வெற்றிக்கதை :சொக்கன்\nPrevious articleநீர் – வேதம் முதல் விஞ்ஞானம் வரை (பகுதி-1)\nNext articleகடந்த மின்னதழுக்கான வாசகர்களின் கருத்துக்கள்\nதத்கல் முறையில் 10 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்\nஅக்ரிசக்தியின் வீட்டுத்தோட்டப் பயிற்சியின் வளர்ச்சி\nபூச்சி விரட்டி – வசம்பு\nகறிக்கோழிப் பண்ணை தொடங்க வங்கிக் கடன் மற்றும் மானியம் பெறுவது எப்படி \nகொரோனா காலத்தில் விவசாயிகளுக��கு உதவும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்\nபிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி\nபிரதமரின் விவசாய நீர்பாசன திட்டத்தில் பாசன கட்டமைப்பு உருவாக்கிட விவசாயிகளுக்கு மானியம்\nமரங்களும் மற்றும் அதன் பயன்கள்\nநிலத்தடி நீர் ஓட்டங்களை கண்டறிய சுலபமான முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/mer/merswitzerland/220-news/essays/rayakaran/raya2019", "date_download": "2021-10-19T12:56:22Z", "digest": "sha1:YRBZBORQQFR4KUWVNXIZELWZHP6G3SPB", "length": 4193, "nlines": 120, "source_domain": "ndpfront.com", "title": "2019", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nஇனமுரண்பாட்டினால் கொல்லப்பட்டவர்களின் நினைவுகளை முன்னிறுத்தி\t Hits: 2105\nமுற்போக்கு வேசம் போட்ட பிணம் தின்னிகள்\t Hits: 2017\nகோத்தபாய முன்வைக்கும் \"சமவுரிமையும்\", கண்கட்டு வித்தைகளும்\t Hits: 2117\nஅரசுடன் கூடிக் குலாவுவது எதற்காக\nபுலியெதிர்ப்பு என்பது ஒடுக்குமுறையாளர்களின் ஒடுக்குமுறையை மூடிமறைப்பதே\t Hits: 2140\nஒடுக்குவோரை \"தோழர்கள் - கம்யூனிஸ்டுகள்\" என்று கூறுவதன் பின்னால் ..\t Hits: 2058\nஒடுக்கப்படுபவர்கள் ஒடுக்குமுறையில் இருந்து விடுபடுவது எப்படி\nஒடுக்குமுறை மீதான பொது அச்சம், தேர்தலில் பிரதிபலித்திருக்கின்றது\t Hits: 2167\nஜெயமோகன்; மீதான \"வன்முறையைக்\" கொண்டாடியது தவறல்ல\t Hits: 3016\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://onetune.in/life-history/k_balachander", "date_download": "2021-10-19T12:11:32Z", "digest": "sha1:5HTIQDQXLA7HQDDN2QTY25RPHPKGYIM5", "length": 22731, "nlines": 191, "source_domain": "onetune.in", "title": "கே. பாலசந்தர் - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nரேவந்தா – சூரியனின் இளைய மகன்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\nHome » கே. பாலசந்தர்\nLife History • திரைப்பட பிரமுகர்\nதமிழ் திரையுலக இயக்குனர் சிகரம்’ எனப் புகழப்படும் கே. பாலச்சந்தர் அவர்கள், ஒரு புகழ் பெற்ற இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், நடிகர், மேடைநாடக இயக்குனர், தொலைக்காட்சி நாடகத் தயாரிப்பாளர் ஆவார்.\nதமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என நான்கு மொழிகளில் திரைப்படங்கள் இயக்கியுள்ள இவர், தென்னிந்திய திரைப்பட உலகில் சிறந்த இயக்குனராகத் தன்னை வெளிப்படுத்தி, எதிர்கால கலைஞர்களுக்கு ஒரு முன்மாதிரியாக விளங்குகிறார். பல துணிச்சலானக் கருத்துகளைத் தன்னுடைய படங்களில் மூலம் திரையில் தந்த அவரது திரைப்���டங்களான ‘அபூர்வ ராகங்கள்’, ‘புன்னகை மன்னன்’, ‘எதிர்நீச்சல்’, ‘தண்ணிர் தண்ணீர்’, ‘வறுமையின் நிறம் சிவப்பு’, ‘உன்னால் முடியும் தம்பி’, ‘சிந்து பைரவி’ போன்றவைத் தமிழ் திரையுலகில் அற்புத படைப்புகளாகப் போற்றப்படுகிறது. தமிழ் திரையுலகில் தற்போது ஜாம்புவான்களாக விளங்கும், ‘கமல்ஹாசன்’ மற்றும் ‘ரஜினிகாந்த்’ எனப் பல நடிகர்களைத் திரையுலகிற்கு தந்தவர். செறிவான கதை, நுட்பமான வசனம், பொருத்தமான பாடல்கள், அழுத்தமான நடிப்பு போன்றவை இவர் இயக்கிய திரைப்படைப்புகளின் முத்திரைகளாகும். திரைப்படத்துறைக்கு இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக இந்தியாவின் உயரிய விருதான “பத்ம ஸ்ரீ”, வழங்கி கெளரவிக்கப்பட்டார். மேலும், ‘தேசிய விருது’, ‘மாநில விருது’, ‘அண்ணா விருது’, ‘கலைஞர் விருது’, ‘ஃபிலிம்ஃபேர் விருது’, ‘கலைமாமணி விருது’ எனப் பல விருகதுளையும் வென்றுள்ளார். ஒரு மேடைநாடக கலைஞராகத் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி, தமிழ்த் திரைப்படத்துறையில் அரைநூற்றாண்டுகளையும் கடந்து, சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட தரமான படைப்புகளைத் தந்து, மாபெரும் இயக்குனராக விளங்கிய கே. பாலச்சந்தரின் வாழ்க்கை வரலாறு மற்றும் திரைத்துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பினை விரிவாகக் காண்போம்.\nபிறப்பு: ஜூலை 09, 1930\nஇடம்: நன்னிலம், தஞ்சாவூர், தமிழ்நாடு மாநிலம், இந்தியா\nபணி: இயக்குனர், திரைகதை எழுத்தாளர், தயாரிப்பாளர்\n‘இயக்குனர் சிகரம்’ கே. பாலச்சந்தர் என அழைக்கப்படும் கைலாசம் பாலச்சந்தர் அவர்கள், 1930 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 09 ஆம் நாள், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள “நன்னிலம்” என்ற இடத்தில் தண்டபாணி என்பவருக்கும், சரஸ்வதிக்கும் மகனாக ஒரு பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். இவருடைய தந்தை ஒரு கிராம அதிகாரியாக பணியாற்றி வந்தார்.\nஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி\nபள்ளிப்படிப்பை தன்னுடைய சொந்த ஊரிலேயே முடித்த கே. பாலச்சந்தர் அவர்கள், 1949 ஆம் ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பி.எஸ்.சி விலங்கியல் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பின்னர், சென்னையில் உள்ள ஏ.ஜி அலுவலகத்தில் சுமார் பத்து ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்த அவர், பணியில் இருந்து கொண்டே நாடகங்களில் நடித்து வந்தார். ‘மேஜர் சந்திரகாந்த்’, ‘எதிர் நீச்சல்’, ‘நாணல்’, ‘வினோத ஒப்பந்தம்’, போன்றவை அதிக வரவேற்பைப் பெற்ற நாடகங்களாகும்.\nதிரைப்படத்துறையில் கே. பாலச்சந்தரின் பயணம்\nமேடைநாடகத் துறையில் இருந்து திரைப்படத்துறையில் கால்பதித்த கே. பாலச்சந்தர் அவர்கள், 1965 ஆம் ஆண்டு வெளியான “நீர்க்குமிழி” திரைப்படத்தை இயக்கினார். நாகேஷ் இதில் கதாநாயகனாக நடித்திருப்பார். மனித உணர்வுகளுக்கிடையிலான சிக்கல்களைக் கதைக் கருவாகக்கொண்டு இவர் இயக்கிய இத்திரைப்படம் இவருக்கு ஒரு மிகப் பெரிய அங்கீகாரத்தை பெற்றுத்தந்தது. இத்திரைப்படம், தமிழ் சினிமாவில் சில மாறுதல்களை ஏற்படுத்திய படமாகவும் அமைந்தது. இதைத்தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களை இயக்கிய கே. பாலச்சந்தர் அவர்களுக்கு, ‘அபூர்வ ராகங்கள்’, ‘சிந்து பைரவி’, ‘இருகோடுகள்’, ‘தண்ணீர் தண்ணீர்’, ‘அச்சமில்லை அச்சமில்லை’, ‘வறுமையின் நிறம் சிவப்பு’, ‘அவள் ஒரு தொடர்கதை’, ‘தில்லு முல்லு’ போன்றவை மாபெரும் வெற்றிப் படங்களாக அமைந்தது. இதில், ‘இருகோடுகள்’, ‘அபூர்வ ராகங்கள்’, ‘தண்ணீர் தண்ணீர்’, ‘அச்சமில்லை அச்சமில்லை’ ஆகிய நான்கு படங்களும் இவருக்கு ‘தேசிய விருதை’ பெற்றுத்தந்தன. தமிழில் மட்டுமல்லாமல், ஹிந்தியில் “ஏக் துஜே கேலியே” மற்றும் தெலுங்கில் “மரோ சரித்ரா” மற்றும் “ருத்ர வீணா”, கன்னடத்தில் “அரலிதா ஹூவு” போன்ற மிகச்சிறந்த திரைப்படங்களை இயக்கியுள்ளார். மேலும், ‘கவிதாலயா’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி, சுமார் ஐம்பதிற்கும் மேற்பட்ட திரைப்படங்களைத் தாயாரித்து இருக்கிறார்.\nபாலச்சந்தர் இயக்கிய புகழ்பெற்ற படைப்புகள்\n‘நீர்க்குமிழி’, ‘மேஜர் சந்ரகாந்த்’, ‘இருகோடுகள்’, ‘பூவா தலையா’, ‘பாமா விஜயம்’, ‘நான் அவனில்லை’, ‘புன்னை’, ‘எதிர் நீச்சல்’, ‘சிந்து பைரவி’, ‘அபூர்வ ராகங்கள்’, ‘தண்ணீர் தண்ணீர்’, ‘தில்லு முல்லு’, ‘அச்சமில்லை அச்சமில்லை’, ‘அக்னிசாட்சி’, ‘வறுமையின் நிறம் சிவப்பு’, ‘புது புது அர்த்தங்கள்’, ‘வானமே எல்லை’, ‘ஜாதிமல்லி’, ‘நூற்றுக்கு நூறு’, ‘கல்கி’, ‘பார்த்தாலே பரவசம்’, ‘பொய்’.\nகே. பாலச்சந்தரின் சின்னத்திரை படைப்புகள்\n1990 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதிகளில் தன்னுடைய கவனத்தை சின்னத்திரையின் மீது செலுத்திய கே. பாலச்சந்தர் அவர்களுக்கு, தூர்தர்ஷனில் வெளிவந்த இவருடைய “ரயில் சிநேகம்” இன்றளவும் பேசப்படுகிறது. மேலு���், ‘கையளவு மனசு’, ‘ரகுவம்சம்’, ‘அண்ணி’ போன்ற தொலைக்காட்சி தொடர்கள் இவருடைய சின்னத்திரைப் படைப்புகளாகும்.\n1987 – இந்திய அரசால் “பத்மஸ்ரீ” விருது.\n2005-ல் சத்தியபாமா பல்கலைக்கழகத்திடமிருந்தும், 2005-ல் அழகப்பா பல்கலைக்கழகத்திடமிருந்தும், 2007-ல் சென்னை பல்கலைக்கழகத்திடமிருந்தும் ‘கௌரவ டாக்டர் பட்டம்’ வழங்கப்பட்டது.\n1969-ல் ‘இருகோடுகள்’, 1975-ல் ‘அபூர்வ ராகங்கள்’, 1981-ல் ‘தண்ணீர் தண்ணீர்’, 1984-ல் ‘அச்சமில்லை அச்சமில்லை’, 1988-ல் ‘ருத்ரவீணா’, 1991-ல் ‘ஒரு வீடு இருவாசல்’, 1992-ல் ‘ரோஜா’ போன்ற திரைப்படங்களுக்காக ‘தேசிய விருதுகளை’ வென்றுள்ளார். மேலும், 2011-ல் ‘தாதாசாஹெப் பால்கே’ விருதும் வழங்கப்பட்டது.\n1981 – “ஏக் துஜே கேலியே” என்ற இந்தித் திரைப்படத்திற்காக ‘ஃபிலிம்பேர் விருது’.\n1974-ல் ‘அவள் ஒரு தொடர் கதை’, 1975-ல் ‘அபூர்வ ராகங்கள்’, 1978-ல் ‘மரோ சரித்திரா’ (தெலுங்கு), 1980-ல் ‘வறுமையின் நிறம் சிவப்பு’, 1981-ல் ‘தண்ணீர் தண்ணீர்’, 1984-ல் ‘அச்சமில்லை அச்சமில்லை’, 1985-ல் ‘சிந்து பைரவி’, 1989-ல் ‘புது புது அர்த்தங்கள்’, 1991-ல் ‘வானமே எல்லை’, 1992-ல் ‘ரோஜா’ போன்ற திரைப்படங்களுக்காக தென்னிந்திய ஃபிலிம்ஃபேர் விருது வழங்கப்பட்டது. மேலும், 1995- ல் ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கப்பட்டது.\n1968-ல் ‘எதிர்நீச்சல்’ மற்றும் ‘தாமரை நெஞ்சம்’, 1978-ல் ‘தப்பு தாளங்கள்’, 1980-ல் ‘வறுமையின் நிறம் சிவப்பு’, 1980-ல் ‘அக்னி சாட்சி’, 1989-ல் ‘புது புது அர்த்தங்கள்’, 1992-ல் ‘வானமே எல்லை’, 1992-ல் ‘ரோஜா’, 1993-ல் ‘ஜாதி மல்லி ‘போன்ற திரைப்படங்களுக்காக ‘தமிழ்நாடு அரசு மாநில விருது’ வழங்கப்பட்டது.\nமேலும், தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி அரசிடமிருந்து ‘கலைமாமணி விருது’, ‘அண்ணா விருது’, ஆந்திரபிரதேச அரசிடம் இருந்து ‘நந்தி விருது’, ‘எம்.ஜி.ஆர் விருது’, ‘கலைஞர் விருது’, ‘திரைப்பட உலக பிரம்மா’, ‘பீஷ்மா விருது’, ‘கலையுலக பாரதி’ என மேலும் பல விருதுகளையும் வென்றுள்ளார்.\nஇயக்குனராக மட்டுமல்லாமல், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், நடிகர், மேடைநாடக இயக்குனர், தொலைக்காட்சி நாடகத் தயாரிப்பாளர் எனப் பன்முகம் கொண்ட ‘சகலகலா வல்லவராக’ விளங்கிய கே. பாலசந்தர் அவர்கள், தமிழ் திரையுலகில் தோன்றிய இயக்குனர்களில் மிக முக்கிய இடத்தை பிடித்தவராவார். சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கித் திரை��்படத்துரையில் முத்திரைப் பதித்த கே. பாலசந்தர் அவர்கள், வருங்கால இயக்குனர்களுக்கு ஆசானாக விளங்குகிறார் என்று சொன்னால் அது மிகையாகாது.\nLife History • இசைக்கலைஞர்கள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\nLife History • இசைக்கலைஞர்கள்\nLife History • இசைக்கலைஞர்கள்\nரேவந்தா – சூரியனின் இளைய மகன்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://roar.media/tamil/main/history/the-predominant-form-of-hindu-nationalism", "date_download": "2021-10-19T10:54:27Z", "digest": "sha1:6GKRNQZR7Z5426TVBKKPY2LLHDK4KQQX", "length": 37954, "nlines": 45, "source_domain": "roar.media", "title": "இந்தியாவை சிதைத்துக் கொண்டிருக்கின்ற இந்துத்துவா பயங்கரவாதம்", "raw_content": "\nகட்டுரைகள்காணொளிகள்குறுகிய காணொளிகள்வரலாறுவாழ்வியல்சுற்றுலாஆளுமைபொழுதுபோக்குகலை கலாசாரம்சமூகம்சுற்றாடல்தகவல் தொழில்நுட்பம்சிறுகதைகள்அனுசரணை\nஇந்தியாவை சிதைத்துக் கொண்டிருக்கின்ற இந்துத்துவா பயங்கரவாதம்\nஇந்த ஆக்கமானது வெளிநபர் மூலம் பங்களிப்பு செய்யப்பட்டுள்ளது.நீங்கள் எங்கள் தளத்திற்கு எழுதவிரும்பினால் Contributor Platform இனை\n“பட்டப்பகலில் சுமார் 400 பேர் கூடியிருந்த கூட்டத்தில் காந்திஜியை நான் சுட்டேன். அது உண்மை. சுட்ட பிறகு ஓடுவதற்கு நான் முயற்சி செய்யவில்லை. தப்பி ஓடும் எண்ணமும் எனக்கு இல்லை. என்னை சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொள்ளவும் முயலவில்லை. கொலைபற்றி நீதிமன்றத்தில் என் உணர்ச்சிகளை கொட்டி தீர்க்கவே விரும்பினேன். மரியாதைக்குரிய நீதிமன்றம் எனக்கு எந்த தண்டனையையும் விதிக்குமாறு கட்டளையிடலாம். என்மீது கருணைக்காட்ட வேண்டும் என்றும் நான் கேட்கவில்லை. பிறர் என் சார்பாக கருணை வேண்டுவதையும் நான் விரும்பவில்லை. கொலைக்கு நானே பொறுப்பு..”\nஎன்று மிகவும் திருத்தமாக, நிதானமாக, எவ்வித குற்றவுணர்ச்சியும் இல்லாது 1948 நவம்பர் 8 ஆம் திகதி டெல்லி செங்கோட்டையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் காந்தியை கொலை செய்த கோட்சே சுமார் ஐந்து மணிநேரம் நின்றுக்கொண்டே தனது வாக்குமூலத்தை படித்தான். பாரதம் போற்றும் தேசபிதாவை, உலகம் முழுவதும் மகாத்மா என்று மரியாதையுடன் அழைக்கும் காந்திஜியை கொலைசெய்த கொலைகாரன் கோட்சே உலகத்தின் முன் வைக்கின்ற பதில்களாக இவை இருந்தன.\nமகாத்மா காந்தி அவர்கள் நாதுராம் கோட்சேவால் படுகொலை செய்யப்பட்ட போது - புகைப்பட விபரம் - GetDoHelp.com\nஇவ்வளவு பெரிய தீங்கினை செய்யக்கூடிய மனநிலைதான் அல்லது கருத்தியல்தான் இந்துத்துவா பயங்கரவாதம். வெளிப்படையாக சொல்வதானால் இந்திய தேசத்தின் பல்வகைமையினை பொதுமைப்படுத்தி ஒட்டுமொத்த இந்தியாவையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறப்படி ஒரே ஒரு இந்து சாம்ராஜ்யத்தை உருவாக்க நினைத்தார்கள். பாரத நாட்டில் ஒரே மதம், ஒரே கலாச்சாரம்தான். அது இந்து சனாதன தர்மம் மட்டுமே இந்து கலாச்சாரம் என நிறுவ முனைகின்ற ஒரு சித்தாந்தமே இந்துத்துவம். அக்கோட்பாட்டை, அக்கருத்தியலை தெளிவாக புரிந்துக்கொள்வதன்மூலம் இணைந்த பாரதக்கனவை சிதைக்கின்ற, அல்லது இந்தியாவின் தனித்துவமாக விளங்குகிற பல்வகைமை தன்மையினை ஆட்டம் காண வைக்கிற ஒரு அடிப்படைவாத மனநிலையைக்கொண்ட சித்தாந்தமே இந்துத்துவ பயங்கரவாதம் என்பதனை புரிந்துக்கொள்ள முடியும்.\nஇந்தியாவில் ஒரு வருடத்தில் அல்லது ஒரு நாளில் நடக்கின்ற வன்முறைகள், கலவரங்கள், இழப்புகள், மனித உரிமை மீறல்கள் அல்லது இதுவரைகாலம் இந்தியாவில் ஏற்பட்ட இன, மத முரண்பாடுகள், கலகங்கள் என்பவற்றை ஆழ்ந்து கவனித்தால் புரியும், இந்தியாவை இந்துத்துவா பயங்கரவாதம் என்பது எந்தளவு சிதைத்துக்கொண்டிருக்கிறது என்பதை. பெரும்பாலான படிப்பறிவற்ற அப்பாவி இந்து மக்களை இந்துத்துவா பயங்கரவாதம் தவறான முறையில் வழிநடத்திச் செல்கின்றது. பல நூற்றாண்டுகளாக சகோதரர்களாக வாழ்கின்ற இந்தியாவின் ஏனைய மதங்களுக்கும், இனங்களுக்கும் இடையில் கலவரங்களையும், முரண்பாட்டையும் ஏற்படுத்துகின்றன.\nஇப்படிப்பட்ட நச்சுத்தன்மை வாய்ந்த பயங்கரவாத இந்துத்துவ கருத்தியல் முற்று முழுவதுமாக தூய இந்து சமயத்தின் கொள்கையில் இருந்து வேறுப்பட்டது. இந்து சமயத்தின் அடிப்படை கொள்கையே உலகத்தில் உள்ள உயிர்கள் அனைத்தும் நிம்மதியாக, ஆயுள் ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் வாழ வேண்டும் என்பதே. அப்படிப்பட்ட சனாதன தர்மமான இந்து சமயம் ஒருபோதும் அப்பாவி முஸ்லிம்களை குஜராத்தில் இடம்பெற்றதுபோல இனப்படுகொலை செய்யாது. மிகப்பெரிய இனப்படுகொலையை நிகழ்த்திய பின்னரும் காந்தியை கொலை செய்த கோட்சேவைப்போல மனநிம்மதியுடன் நடமாட அனுமதிக்காது. இந்தியாவின் டெஹல்கா வார இதழின் முதன்மை ஆசிரியர் தருண். ஜெ. தேஜ்பால், குஜராத் படுகொலையின் பின்னணிகளையும் அதன் உண்மையையும் அறிய அதை நிகழ்த்திய இந்துத்துவ தீவிரவாத கும்பலுக்குள் இந்து சமயத்தை ஆய்வு செய்கிற மாணவன் என்று சொல்லிக்கொண்டு ஊடுருவுகின்றார். குஜராத் கலவரத்தில் ஒரு நிறைமாத கர்ப்பிணி பெண்ணை வயிற்றில் உள்ள குழந்தையுடன் கொலைசெய்த பஜ்ரங்கி என்ற தீவிரவாதியின் குற்றவுணர்ச்சியற்ற பரவசத்தை அவனது வார்த்தைகளிலேயே பதிவு செய்கிறார். அதை கவனித்துவிட்டு, இந்துத்துவ பயங்கரவாதம் என்றால் என்ன அது எப்படி தோற்றம் பெற்றது, அதன் தாக்கங்கள் எவ்வாறு இந்தியா சமுதாயத்தை சீர்குலைக்கிறது என்பதனை ஆய்வு செய்வதையே இக்கட்டுரை நோக்கமாக கொண்டுள்ளது.\n“ கர்ப்பிணி பெண் ஒருத்தியை பற்றிய டெஹெல்காவின் குறிப்புகள் “\nபஜ்ரங்கி : இந்தக் கர்ப்பிணிப் பெண் அங்கே இருந்தாள். அவள் வயிற்றினை நான் பிளந்தேன். எது என்ன.. என்று அவர்களுக்கு காட்டினேன். என்ன மாதிரியான பழிவாங்குதலை நாம் நடத்தினோம்... அவர்களை இனப்பெருக்கம் செய்யவே அனுமதிக்ககூடாது. நான் அதை இன்றைக்கும் கூறமுடியும். அவர்கள் யாராக இருந்தாலும், பெண்கள், குழந்தைகள் யாராக இருக்கட்டும்... அவர்களை வேறொன்றும் செய்யக்கூடாது. அவர்களை வெட்டிப்போட வேண்டியதுதான்.\nடெஹெல்கா : முஸ்லிம்களைக் கொன்ற பிறகு உங்கள் உணர்வு எப்படியிருந்தது\nபஜ்ரங்கி : மாஸா ஆயா ஹை... (உற்சாகமாக நான் அனுபவித்தேன்) இராணா பிரதாப் போல உணர்ந்தேன்.\nகலவரங்களில் ஈடுப்படும் இந்துதவா அமைப்பினர் -புகைப்பட விபரம் - IndiaCurrents.com\nஇப்போது இந்து மதத்தை பற்றிய சில உண்மையான புரிதலுக்கு வருவோம். இந்துமதம் எனப்படுவது ஏனைய மதங்களைப்போல ஒரு குறிப்பிட்ட ஞானியாலோ, கடவுளர்களாலோ உருவாக்கப்பட்டதல்ல. ஒரு குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட இடத்தில் உருவாக்கப்பட்டதல்ல. இந்து மதத்திற்கென்று தனிப்பட்ட பீடமோ, தலைவரோ இல்லை. அது எப்போதும் எண்ணற்ற கடவுள்கள், வழிப்பாட்டு முறைகள், வேதங்கள் என்பவற்றை கொண்டது. எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்கிற சகிப்பு மதமாக அது இருந்திருக்கின்றது. எப்போதும் இந்திய நாடானது அகிம்சையையும், கொல்லாமையையும் போதித்த சனாதனதர்மமாக இருந்தது என்பதை உலக வரலாற்று ஆய்வாளர்கள் எவரும் மறுக்க முடியாது. மிகமுக்கியமான வரலாற்று ஆய்வாளர்களில் ஒருவரான மார்க்ஸ் என்பவர் ஜீலை 22 1853 இல் நியூய���ர்க் டெய்ஸி என்ற பத்திரிகைக்கு பின்வருமாறு கருத்தினை தெரிவித்திருந்தார்.\n“ அறுதியிட்டு கூறமுடியாத தொன்மையான காலம் தொட்டு இந்த மகத்தான வியப்பூட்டும் நாடும், அதன் கீழான வகுப்பை சார்ந்தோரும் திறமை மிக்கவர்களாக வாழ்ந்துள்ளனர். அவர்களின் பணிந்து நடக்கும் குணம்கூட அவர்களின் அமைதியான பெருந்தன்மையால் நிதானப்பட்டதாக உள்ளது. வலிமையற்ற நிலையிலும் அவர்கள் தங்கள் வீரத்தால் பிரிட்டிஷ்காரரை வியப்படைய செய்துள்ளனர். அவர்களின் நாடுதான் நமது மொழிகளின் பிறப்பிடம். நமது மதங்களின் தாய்வீடு. அந்நாட்டின் வீரம்மிகுந்த ஜாட் இனத்தினர் பழங்கால ஜெர்மனியரையும், பிராமணர் கிரேக்கர்களையும் பிரதுநிதித்துவபடுத்துவார்கள் எனலாம். அரேபியர்கள், துருக்கியர், முகாலயர் என இந்திய மீது படையெடுத்துபிடித்துக்கொண்டவர்கள் அனைவருமே கடைசியில் இந்திய மயமாகினார். காட்டுமிராண்டித்தனமான படையெடுப்பாளர்கள் அந்த தோல்வியுற்று அடிமைப்பட்ட மக்களின் உன்னதப்பண்பாட்டல் அடிமைப்பட்டு தாங்களே கரைந்து போயினர். “\nஇப்படி உலகம் முழுவதும் தொன்மையும், ஒற்றுமையும் சேர்ந்த மக்கள் குழுவாக புராதன காலம் தொட்டு இந்திய மக்கள் வாழ்ந்து வந்திருக்கின்றனர். இந்திய மண்ணின் சனாதன தர்மம் அதற்கு இடம் கொடுக்காது இருந்திருக்குமானால் அவர்களால் நிட்சயமாக உலகமே போற்றும் அகிம்சைவாதிகளாக இருந்திருக்க முடியாது. இப்படிப்பட்ட பெரும்பான்மை இந்துமதத்தை பின்பற்றுகிற அப்பாவி மக்கள்தான் உண்மையில் இன்று அதன் உள்நாட்டு வேற்றுமத மக்களுக்கு குறிப்பாக இஸ்லாமியருக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறிக்கொண்டிருக்கிறார்கள்.\nஇந்து மதத்தில் இருந்து இந்துத்துவா தத்துவம் முற்றிலும் வேறுப்பட்டிருக்கிறது என்பதை புரிந்துகொண்டோமானால், இந்து மதத்தின் பெயரைக்கொண்டு மிகவு‌ம் கீழ்த்தரமாக இயங்குகின்ற பயங்கரவாத குழுவே இந்துத்துவா அமைப்பு என்பதை விளங்கிக் கொள்ள முடியும். இந்துத்துவா பயங்கரவாதத்திற்கு அடிப்படையாக காணப்படுகின்ற “ இந்துத்துவா தத்துவத்தை உருவாக்கியவராக வி. டி. சவர்க்கர் என்பவர் காணப்படுகின்றார். 1923 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அவர் ஒரு புத்தகத்தை எழுதுகிறார். அதன் பெயர் “இந்துத்துவா - யார் இந்து அதில் அவர் இந்துத்துவா என்ற தனது க���ட்பாட்டை தெளிவாக விபரிக்கிறார். முதலாவது அவர் குறிப்பிடுவது இதைத்தான். இந்துத்துவா என்பது இந்து மதமல்ல, அதுவொரு அரசியல் தத்துவம். இந்து நாட்டை உருவாக்குவதே அதன் லட்சியம். ஒரே மதநம்பிக்கையை கொண்ட ஒரு மக்கள் கூட்டத்தை உருவாக்குவது. பல இன மத மொழிகளை கொண்ட மக்கள் இந்தியாவில் வாழ்ந்தாலும் எப்போதும் எப்படி ஜெர்மனியில் ஜெர்மனியரோடு யூதர்கள் ஒன்றாக வாழ்ந்தாலும் ஒன்றாக மாட்டார்களோ அப்படியே இந்தியாவிலும் பல இன மக்கள் எப்போதும் ஒன்றாக போவதில்லை என்ற சிந்தனையை வெளிப்படுத்தியிருந்தார் . யூதர்களை ஒழித்து, ஜேர்மனியை ஹிட்லர் தூய்மைபடுத்த முனைந்ததைபோல இந்தியாவை தூய்மைபடுத்தவேண்டும் என்று அவர் கருதினார். இந்தியாவை இந்து இந்தியா, முஸ்லிம் இந்தியா என்று பிரிப்பதை வி. டி சவர்க்கர் நியாயப்படுத்தினார்.\n2002ம் ஆண்டு குஜராத்தில் இடம்பெற்ற கலவரத்தின் போது --புகைப்பட விபரம் - Asianews.it\nஅவர் தொடர்ந்து தனது இந்துத்துவா அரசியலை இந்தியாவின் பெரும்பான்மை மக்களாக இருந்த படிப்பறிவற்ற அப்பாவி இந்துக்களிடம் விதைத்துக்கொண்டே இருந்தார். அந்த கருத்தியல் பகுத்தறிவு அற்றதாகவும், மக்களிடையே இன மத வெறியை தூண்டுவதாகவும் இருந்தது. “ நாம் - நமது தேசியம்” , “இந்துராஷ்ட்ரா - சோசலிசமல்ல இந்துராஷ்டிரம்”, “ சிந்தனைக் கொத்து” ஆகிய நூல்களில் இந்துத்துவா கோட்பாடு பற்றிய அடிப்படைவாத வன்முறை சிந்தனைகளை பரப்பிக்கொண்டே இருந்தார். இந்துத்துவா கொள்கையில் இருந்து உருவாகிய முக்கிய அமைப்பாக ஆர். எஸ். எஸ் இருந்தது. இந்துத்துவாவினால் 1925 இல் உருவாக்கப்பட்ட ஆர். எஸ். எஸ். இயக்கம் இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தில் சத்பவன் பிராமணர்களால் உருவாக்கப்பட்டது. அதன் தலைவராக கே. பி. ஹெட்கேவார் தெரிவு செய்யப்பட்டிருந்தார். அவர்கள் அவர்களது அடிப்படைவாத இனதுவேச கொள்கையில் தெளிவாக இருந்தனர். அதாவது வெளிப்படையாக இஸ்லாமியர்களை அவர்கள் எதிரிகளாக கருதியிருந்தனர். அவர்களுக்கு பிரிட்டிஷ் எதிர்ப்பு தேசபக்தியல்ல. அவர்களது உண்மையான எதிரியாக கருதுவது முஸ்லிம் மக்களையன்றி பிரிட்டிஷ் அரசை அல்ல. இந்துத்துவா கொள்கை முஸ்லிம் இனவெறுப்பை அடிப்படையாக கொண்டிருந்தது. சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அவர்களை அழித்துவிடவும், அவர்களிடமிருந்து ���ந்தியாவை விடுதலைப்பெற வைப்பதையும் நோக்கமாக கொண்டிருந்தது.\nஇந்துத்துவா சிந்தனைகளின்படி இந்து அல்லாதவர்கள் இந்துக்கலாசாரத்தையும், இந்துக்களின் மொழியான சமஸ்கிருதத்தையும் ஏற்றாகவேண்டும். அவர்கள் நிட்சயமாக இந்து மதத்தை மதித்தாகவேண்டும். இந்து மதத்தையும், கலாசாரத்தையும் பெருமைப்படுத்தும் கருத்துக்களை தவிர வேறு எதையும் யாரும் அனுமதிக்ககூடாது. இந்தியாவில் வாழ்கிற எவரும் அன்னியர்களாக இங்கு வாழக்கூடாது. இந்து தேசத்தின் அடிமைகளாக வாழவேண்டும். குறிப்பாக இஸ்லாமியர்கள் அங்கு இந்துத்துவா கோட்பாட்டுக்கு உட்பட்டு வாழலாமே தவிர அவர்கள் அதைதாண்டி எவ்வித சிறப்பு மரியாதையையோ, சிறப்பு சலுகையையோ, குடிமக்கள் என்ற உரிமையையோ கேட்க கூடாது என்கிறது.\nஇந்துத்துவா கொள்கையை உருவாக்கிய கோல்வார்கர் இந்திய அரசியல் அமைப்பு இந்தியாவின் இஸ்லாமியர்களையும் கிறிஸ்த்தவர்களையும் ஒன்றாக சமமாக்கி இருவருக்கும் சம உரிமை வழங்குவதை எதிர்க்கிறார். இஸ்லாமியர்களையும் கிறிஸ்த்தவர்களையும் ஆர். எஸ். எஸ். குழுவினர் நன்றிகெட்டவர்கள் என்று கூறுகிறார்கள்.\nஇப்படி கூறுகிறார்கள், “அவர்கள் இந்த மண்ணுக்கு உண்மையானவர்களாக உள்ளார்களா இல்லை. அவர்களுக்கு நன்றி உணர்வும், இந்த நாட்டின் மீதான அன்பும் பக்தியும் இல்லாமல் போய்விட்டது..”\n“கிறிஸ்த்தவர்கள் தமது மதமாற்ற முயற்சிகளைத் தொடரும் வரை தம்மை சர்வதேசக் கிறிஸ்துவத்தின் முகவர்களாகக் கருதும்வரை தமது பிறந்த நாடான இந்தியா மீது நன்றியையும் பக்தியையும் காட்டவும், இந்த மரபுக்கும் பண்பாட்டுக்கும் தமது முன்னோர்க்கும் உண்மையானவர்களாகவும் இங்கு தஞ்சம் புகுந்தவர்கள் போல் வாழவேண்டும். அப்படியில்லாவிட்டால், அவர்கள் பகைவர்களாகவே நடத்தப்படுவர்” என்கிறார்.\nஅவர்கள் எப்போதும் இந்து இராச்சியம் பற்றிய வெறித்தனமான கனவில் இருந்தார்கள். வெளிப்படையாகவே இந்துஸ்தானத்தில் இந்துவை தவிர வேறு யாரும் இருக்கக்கூடாது என்கிறார்கள். இந்து இனம், இந்துமதம், இந்து கலாச்சாரம், இந்து மொழி இவற்றை ஏற்காதவர்கள், இயற்கையாகவே நமது தேசியத்திலிருந்து வெளியே தள்ளப்பட்டவர்களாவர் என இந்துராஷ்டிரம் எனும் நூலில் சவார்கர் எழுதுகிறார்.\n“இஸ்லாமை ஒரு மதமாக ஏற்பது தவறு, இந்த தவறிலிருந்து துளிர���ப்பனவே மற்ற தவறுகள் யாவும். மதச்சார்பின்மை என்பதே தேசத்துரோகம் ..” என தனது ‘மதச்சார்பின்மை’ எனும் நூலில் S. R. கோயல் வெளிப்படையாகவே இஸ்லாமிய மத எதிர்ப்பை வெளிப்படுத்துகிறார். இவ்வாறான இந்துத்துவ அடிப்படைவாத கருத்துகள், மதவாதத்தை கையில் எடுத்துக்கொண்டு நிறுவனரீதியாக மிகப்பலமான அமைப்பாக உருவாகத்தொடங்கியது. அதில் முக்கியமானது ஆர். எஸ். எஸ். பள்ளிகள். 1952 இல் கோல்வால்கரால் கோராப்பூரில் முதன் முதல் ஆர். எஸ். எஸ். பள்ளி துவக்கப்பட்டது. 1998 இல் பி. ஜே. பி. ஆட்சியை கைப்பற்றிய பின்னர் அதனுடைய கண்மூடித்தனமான ஆதரவினால் 14,000 வித்தியா மந்திர்கள், 80,000 சிசு மந்திர்கள் என ஆண்டுக்கு இருபது லட்சமென வறுமைப்பட்ட இந்துக்குழந்தைகளை தமது பாடத்திட்டங்கள், பயிற்சிகள் மூலம் ஆர். எஸ். எஸ். இன் பள்ளிகள் தமக்கு சார்பானவர்களாக உருவாக்கிக்கொண்டிருக்கின்றன. அவர்கள் இந்தியாவின் உயரிய சட்டமான அரசியல் அமைப்பின் தனித்துவமும், சிறப்பம்சாக விளங்குகிற மதச்சார்பின்மை என்ற கருத்தையே தேசத்துரோகம் என்கிறார்கள். இப்படிப்பட்ட சிந்தனைகளை வளருகிற குழந்தைகளிடம், இளைஞர்களிடம் விதைக்கிறார்கள். அவர்களின் பாடத்திட்டங்கள் பிரதானமாக அவற்றையே போதிக்கின்றன.\nஅவர்களின் பாடப்புத்தகங்கள் எவ்வாறு உலக சமாதானத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளன என்பதற்கு இரு உதாரணங்களை தருகிறேன். அவர்களது நான்காம் வகுப்பு வரலாற்று பாடத்தில் அசோகன் மன்னன் பற்றி பின்வருமாறு குறிப்பிடுகிறது, “அகிம்சை போதிக்கப்பட்டது. வன்முறைகள் அனைத்தும் தவறான குற்றங்கள் எனப்பட்டன. வேட்டையாடுதல், உயிர்பலித் தரும் யாகம், ஆயுதப்பயன்பாடு போன்றவை பாவமென ஒதுக்கப்பட்டன. இது நாட்டின் ராணுவ வலிமையைப் பாதித்தது. பௌத்த பிட்சுகளுக்கு உணவளிப்பது அரசின் பெரும் பணியானது. எனவே வேலையாட்கள் பிக்குகளானார்கள். ஆயுதம் கொண்டு போரிடுவது தவறு என போதிக்கப்பட்டது. போர் மூலம் வெற்றி பெறுவது தீங்கானதாக பார்க்கப்பட்டது. கோழைத்தனம் படிப்படியாக பரவியது. ராணுவ வீரர்கள் சோர்வடைந்தனர். இது வடநாட்டை பலவீனப்படுத்தியது..”அவர்களது பத்தாவது வகுப்பு பாடத்தில் பின்வருமாறு கூறியிருக்கின்றனர்,\n“ஹிட்லர் நாம் நேசிக்கும் தலைவர். ஹிட்லர் ஜெர்மனிக்குப் பெருமை சேர்த்த பெரும் தலைவர். யூதர்களின் மேல���திக்கத்தை ஒழித்து அகண்ட ஜெர்மனியை உருவாக்கி ஜெர்மனியின் பெருமையை உயர்த்தியவர் ஹிட்லர். ஜெர்மனியர் மனதில் பெருமிதத்தையும் வீரத்தையும் விதைத்தவர்” பாசிஸவாதிகளின் கொள்கையை பின்பற்றுகிற போக்கு அதிகமாக ஆர். எஸ். எஸ். இடம் காணப்படுகிறது. அவர்களது பெரும்பான்மையான கொள்கைகள் முழுவதுமாக நாசிகள் பக்கம் சாய்வதை நோக்கமாக கொண்டது என்பதை மேலோட்டமாக வாசித்தாலே உணரமுடியும். மேலும் அவர்களது பாடநூல்களில் அடங்கியுள்ள வினாவிடைகளைப்பாருங்கள்,\n“வினா : கி. பி. 1528 முதல் 1914 வரை எத்தனை ராம பக்தர்கள் ராம கோவிலை விடுவிக்க உயிர்த்தியாகம் செய்துள்ளனர்\nவிடை : 3.5 லட்சம் பக்தர்கள் உயிர்த்தியாகம் செய்துள்ளனர்.\nவினா : 1990 அக்டோபர் 30 வரை ராம ஜென்ம பூமியை மீட்க எத்தனை போராட்டங்கள் நடந்துள்ளன\nவிடை : 78 போராட்டங்கள்\nஇப்படி அகிம்சைக்கும் போர் மறுப்புக்கும் எதிரான கருத்துகளை அவர்கள் படிப்படியாக இளைய தலைமுறையிடம் விதைத்தார்கள். அவர்கள் கொள்கையின்படி மகாத்மா காந்தி, பெரியார், அம்பேத்கர், ராஜாராம் மோகன்ராய், கேசவசென் போன்ற மத ஒற்றுமையை பேசிய யாவரும் தேசத்துரோகிகள். எனவே அவர்கள் பாடப்புத்தகம், கொள்கை, கோட்பாடு போன்றன ஹிட்லர், முசோலினி போன்றவர்களை ஆதர்ச நாயகர்களாக, வழிகாட்டியாக கொண்டாடியது. ஆகமொத்தத்தில் மேற்கூறிய கருத்தியல்களுடன் மத வெறியும், இனவெறியும் கலந்து செயற்படுகிற அரசியல் இயக்கமே இந்துத்துவா பயங்கரவாதம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sri-lanka.mom-rsf.org/ta/%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%99%E0%AE%95%E0%AE%B3/detail/outlet/dan-tv/", "date_download": "2021-10-19T13:03:03Z", "digest": "sha1:OR3BAVBYM3JBXRFLPQKWXQBNIQX7KIPJ", "length": 14782, "nlines": 164, "source_domain": "sri-lanka.mom-rsf.org", "title": "டான் தொலைக்காட்சி | Media Ownership Monitor", "raw_content": "\nவரையறுக்கப்பட்ட அஸ்க் மீடியா குகநாதன் சபாபதி சுப்பையாவினால் 2008 ம் ஆண்டு இஸ்தாபிக்கப்பட்டது. இது பல தமிழ் மொழி அலைவரிசைகளை செயல்படுத்துகின்றது. டான் நியூஸ், டான் தமிழ் ஒளி, டான் மியூசிக் எச் டி, யாழ் ரிவி, கல்வி ரிவி, ஓம் ரி வி, ஹோலி மேரி ரிவி மற்றும் பிறை ரி வி என்பன. இவை யாழ்ப்பாணம், கொழும்பு, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் கிடைக்கின்றன.\nவரையறுக்கப்பட்ட ஆஸ்க் ஊடக நிறுவனம்\nஊடக நிறுவன்கள் / குழுமங்கள்\nவரையறுக்கப்பட்ட ஆஸ்க் ஊடக நிறுவனம்\nதரவுகள் வேண்டுகோளின் பின் கிடைக்கின்ற��\nகுழுமம் / தனி உரிமையாளர்\nஊடக நிறுவன்கள் / குழுமங்கள்\nவரையறுக்கப்பட்ட ஆஸ்க் ஊடக நிறுவனம்\nஎஸ். குகநாதன் என்றும் அறியப்படும் குகநாதன் சபாபதி சுப்பையாதான் டான் டிவி க்கு சொந்தக்காரரான ஆஸ்க் மீடியா பிரைவேட் டிமிட்டடின் ஸ்தாபகரும் CEO ம் உரிமையாளரும் ஆவார். அவர் 80 களின் பிற்பகுதியில் பிரான்சுக்கு குடி பெயர்ந்து அங்கு வாராந்த செய்திப் பத்திரிகையான பாரிஸ் ஈழநாடு பத்திரிகையை ஆரம்பிப்பதற்கு முன்னர் வட மாகாணத்தில் வெளிவந்த ஈழநாடு பத்திரிகையின் உப பத்திரிகை ஆசிரியராக இருந்தார். 90 களின் பிற்பகுதியில் பிரான்சைத் தளமாகக் கொண்ட முதலாவது தமிழ் மொழி தொலைக்காட்சி நிலையத்தைத் தொடங்குவதில் துணையாகவிருந்தார். அன்றிலிருந்து அவர் குறைந்தது வேறு நான்கு ஊடகக் கம்பனிகளில் பணிப்பாளராக பணியாற்றியுள்ளார்: டிஷ் ஏசியா லிமிட்டட் (2002 ஓகஸ்ட் 30 முதல் 2007 ஜுன் 26 வரை), டிஷ் இன்டர்நேஷனல் லிமிட்டட் (2003 மார்ச் 11 முதல் 2006 ஜுன் 13 வரை), டிஷ் ஏஷியா நெட்வேக் யூரோ லிமிட்டட் (2003 ஜுன் ௧௩ முதல் 2006 ஏப்ரல் 11 வரை), மற்றும், ரெமினிசன்ட் ரெலிவிஷன் (யூரோப்) லிமிட்டட் (2000 செப்டெம்பர்; 22 முதல் 2003 ஜுலை 22 வரை). இக் கம்பனிகள் தற்போது செயற்படாதபோதிலும், அவை ஐக்கிய இராச்சியத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளன.\nபிரதம நிறைவேற்று அதிகாரியின் ஈடுபாடுகள்\nஎஸ். குகநாதன் என்றும் அறியப்படும் குகநாதன் சபாபதி சுப்பையாதான் டான் டிவி க்கு சொந்தக்காரரான ஆஸ்க்\nமீடியா பிரைவேட் டிமிட்டடின் ஸ்தாபகரும் CEO ம் உரிமையாளரும் ஆவார்.\nஏனைய முக்கிய நபர்களின் ஈடுபாடுகள்\nஜேம்ஸ்தாஸ் சவரிமுத்து - கம்பெனிகள் பதிவாளர் திணைக்களத்திலிருந்து பெறப்பட்ட ஆண்டு வருமான அறிக்கையின்படி ஜேம்ஸ்தாஸ் சவரிமுத்து நிறுவனத்தின் ஒரே பங்குதாரராகவும் ஆஸ்க் மீடியா (பிரைவெட்) லிமிட்டட் நிறுவனத்தின் வியாபார நிறைவேற்று அதிகாரியாகவும் 2008 ம் ஆண்டு ஜூலை 22 ம் திகதி நியமிக்கப்பட்டார். இவர் எஸ். குகநாதனின் மனைவியின் மாமா. இவர் தற்போது உயிருடன் இல்லை. #\nலீ ஷின் மே - 2013 மார்ச் மாதம் 21 ம் திகதி பணிப்பாளராக நியமிக்கப்பட்டார்.\nவருவாய் (அமெரிக்க டொலர் மில்லியனில்)\nசெயல்பாட்டு இலாபம் (அமெரிக்க டொலர் மில்லியனில்)\nவிளம்பரம் (மொத்த நிதியின் வீதத்தில்)\nடான் டிவி மற்றும் ஆஸ்க் மீடியா (பிரைவெட்) லிமிட்டட் தொடர்பாக ம��கக் குறைவான தகவல்களே கிடைக்கக்கூடியதாக உள்ளது. டான் டிவியின் உத்தியோகபூர்வ வலைத்தளம் அலைவரிசைகளின் பட்டியல் ஒன்றை வழங்குகின்றது. எனவே, இவ் அலைவரிசையின் உரித்தான்மை பற்றிய விபரங்கள் கம்பனிகள் பதிவாளர் திணைக்களத்தில் இருக்கும் வருடாந்த ரிட்டன்களிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டன. இறுதி வருடாந்த ரிட்டன் ஜேம்ஸ்தாஸ் சவரிமுத்து என்பவரே அதன் ஒரேயொரு பங்குதாரராக பட்டியலிட்டுள்ளபோதிலும், எஸ் குகநாதனைத் தொடர்புகொண்டதன்பேரில் MOM ஆய்வுக்குழு ஜேம்ஸ்தாஸ் சவரிமுத்து இப்போது அதன் உரிமையாளர் அல்ல என்று அறிந்துகொண்டது. ஆகையால், தற்போது அதன் உரிமையாளர் டான் டிவி யின் ஸ்தாபகரான எஸ். குகநாதன் ஆவார். ஊடக உரித்தாண்மை கண்காணிப்பு ஆராய்ச்சிக் குழு அக்கம்பனியின் தகவல்களை முறையாகக் கோரி 2018 யூலை 25 ஆந் திகதி ஏஎஸ்கே மீடியா (பிறைவேட்) லிமிடேட்டை அணுகியபோது அக்கம்பனி மேற்குறிப்பிடப்பட்ட வேண்டுகோளுக்கு செவிசாய்க்கவில்லை. குகநாதனுடனான ஒரு தொலைபேசி உரையாடலின்போது, அக் கம்பனி தாபிக்கப்பட்ட காலத்தில் தான் பிரெஞ் பிரசா உரிமையை கொண்டிருந்தமையினால், அவருக்க இலங்கையில் ஒரு ஊடக நிறுவனத்தை சொந்தமாக ஸ்தாபிக்க முடியவில்லை எனக் கூறப்பட்டது. குகநாதன் தற்போது இரட்டை பிரஜா உரிமையை கொண்டிருக்கின்றார்.\nஊடக நிறுவனத் தகவல்களின் மூலங்கள்\nசெயன்முறை, முன்னேற்றம் மற்றும் பொதுமக்கள்\nஅதிகளவு உரிமை, அதிகளவு செல்வாக்கு\nசெயன்முறை, முன்னேற்றம் மற்றும் பொதுமக்கள்\nஅதிகளவு உரிமை, அதிகளவு செல்வாக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/international/china-has-landed-a-spacecraft-on-mars-hrp-464497.html", "date_download": "2021-10-19T12:40:45Z", "digest": "sha1:24FBOUC7BAUR6O523BLZKZBKQONRLJ3B", "length": 8448, "nlines": 99, "source_domain": "tamil.news18.com", "title": "செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கிய சீன விண்கலம்/ China has landed a spacecraft on Mars hrp – News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#T20 WorldCup#பெண்குயின் கார்னர்#பிக்பாஸ்#கிரைம்\nசெவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கிய சீன விண்கலம்\nசெவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கிய சீன விண்கலம்\nசீன விண்கலம் செவ்வாய் கிரத்தின் புவியியல் அமைப்பு ஆய்வு செய்து பூமிக்கு அனுப்பும்.\nசெவ்வாய் கிரகத்திற்கு சீனா அனுப்பிய லேண்டர் வெற்றிகரமாக செவ்வாயில் தரையிறங்கியுள்ளது. இதன் மூலம் அமெரிக்கா, ரஷ்யாவிற்கு பிறகு செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய மூன்றாவது நாடு என்ற பெருமையை சீனா பெற்றுள்ளது.\nசெவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக கடந்தாண்டு ஜூலை மாதம் சீனா தியான்வென் -1 என்ற விண்கலத்தை அனுப்பியது. 6 சக்கரங்களைக் கொண்ட ‘ரோவர்’ கருவியுடன் அனுப்பப்பட்ட இந்த விண்கலத்தின் மொத்த எடை 240 கிலோ ஆகும். செவ்வாய்கிரகத்தின் மேல், கீழ் பகுதிகளின் புவியியல் அமைப்பு குறித்து ஆய்வு செய்யவும் செவ்வாய்கிரகம் தொடர்பான படங்களை எடுக்கவும் இது விண்ணுக்கு அனுப்பப்பட்டது. இந்த விண்கலமானது கடந்த பிப்ரவரி மாதம் செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதைக்குள் நுழைந்தது.\nAlso Read: நான் பயந்து வாழும் ஆளில்லை' - ரகுல் ப்ரீத் சிங்\nஇந்நிலையில் தற்போது செவ்வாய்கிரகத்தில் தியான்வென்-1 ரோவர் விண்கலம் வெற்றிகரமாக தரை இறங்கி உள்ளதாக சீனா அறிவித்துள்ளது. ஒரு லேண்டர் செவ்வாயில் தரையிறங்க 7 முதல் 9 நிமிடங்களே ஆகும். ஆனால் அந்த நேரத்தில் பூமியுடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு விடும். சீனா அனுப்பிய லேண்டரும் 9 நிமிட கடினமான நேரத்தை கடந்து செவ்வாயில் கால் பதித்துள்ளது. சீனாவின் ரோவர் அங்கு 90 நாட்கள் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அமெரிக்கா, ரஷ்யாவிற்கு பிறகு செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய மூன்றாவது நாடு என்ற பெருமையை சீனா பெற்றுள்ளது.\nசீன விண்கலம் செவ்வாய் கிரத்தின் புவியியல் அமைப்பு ஆய்வு செய்து பூமிக்கு அனுப்பும். அதேபோல் இந்த விண்கலத்துடன் அனுப்பப்பட்டுள்ள கேமராக்கள் செவ்வாய் கிரகத்தை படம் எடுத்து அனுப்பும். இதன்மூலம் செவ்வாய் கிரகம் குறித்த புதிய தகவல்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube\nசெவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கிய சீன விண்கலம்\nCrying Room : ’கொஞ்ச நேரம் அழுதிட்டு சந்தோஷமாக போங்க’ ஸ்பெயினின் சூப்பர் திட்டம்\nசரியும் சீன பொருளாதாரம்.. கொரோனாவை வென்றது.. மின்சாரத்திடம் தோற்றது..\nபில் கேட்ஸ் வீழ்ச்சிக்கு இந்த பெண் தான் காரணமா - பில் கேட்ஸை 2008ல் எச்சரித்த மைக்ரோசாஃப்ட் நிறுவனம்\nவீட்டுக்கு அடியில் 90க்கும் மேற்பட்��� ‘பாம்புகள்’ - அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/technology/apple-gives-student-million-dollar-settlement-after-nude-photos-leaked-during-iphone-repair-ghta-vjr-478707.html", "date_download": "2021-10-19T11:31:54Z", "digest": "sha1:YCE3PG2HBI3Z2CM6EBM74VGXRMRD735E", "length": 12118, "nlines": 104, "source_domain": "tamil.news18.com", "title": "நிர்வாண புகைப்படங்கள் கசிந்ததால் மில்லியன் டாலர் நஷ்டஈடு வழங்கிய ஆப்பிள் நிறுவனம் | Apple Gives Student Million-Dollar Settlement After Nude Photos Leaked During iPhone Repair vjr – News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#T20 WorldCup#பெண்குயின் கார்னர்#பிக்பாஸ்#கிரைம்\nநிர்வாண புகைப்படங்கள் கசிந்ததால் மில்லியன் டாலர் நஷ்டஈடு வழங்கிய ஆப்பிள் நிறுவனம்\nநிர்வாண புகைப்படங்கள் கசிந்ததால் மில்லியன் டாலர் நஷ்டஈடு வழங்கிய ஆப்பிள் நிறுவனம்\nஐபோன் சேவை மைய நிர்வாகிகள் இரண்டு பேர் ஒரு பெண்ணின் ஐபோனை பழுது பார்த்தபோது நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவரது பேஸ்புக் ப்ரொபைலில் வெளியிட்டதாக கூறப்படுகிறது.\nஆப்பிள் நிறுவனம் ஐபோன் உரிமையாளர் ஒருவருக்கு ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஒரு மில்லியன் டாலர் நஷ்டஈடு செலுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. ஐபோன் சேவை மைய நிர்வாகிகள் இரண்டு பேர் ஒரு பெண்ணின் ஐபோனை பழுது பார்த்தபோது நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவரது பேஸ்புக் ப்ரொபைலில் வெளியிட்டதாக கூறப்படுகிறது. இங்கிலாந்தில் தி டெலிகிராப் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அமெரிக்காவின் கலிபோர்னியாவில் கல்லூரி மாணவராக இருக்கும் அந்த ஐபோன் யூசருடன் ரகசியத்தன்மை பிரிவில் கையெழுத்திட ஆப்பிள் நிறுவனத்தை இந்த சம்பவம் தூண்டியதாக செய்தி வெளியிட்டுள்ளது.\n\"கடுமையான மன துன்புறுத்தல்\" காரணமாக மாணவரின் வழக்கறிஞர்கள் 5 மில்லியன் டாலர் (தோராயமாக ரூ.36 கோடி) நஷ்டஈடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ததாக மூல அறிக்கை கூறினாலும், பாதிக்கப்பட்ட மாணவர் கோரிய சரியான நஷ்டஈடு தொகை குறித்து தெளிவான தகவல் இல்லை. இருப்பினும் இந்த டீல் ஒப்பந்த வழக்கு குறித்து ஆப்பிள் நிறுவனம் தி டெலிகிராப்பிற்கு உறுதிப்படுத்தியுள்ளது.\nமேலும் இந்த விவகாரத்தில் ஆப்பிள் நிறுவனம் நடத்திய முழுமையான விசாரணைக்கு பின்னர் கலிபோர்னியாவில் உள்ள ஆப்பிள் சேவை மையத்தைச் சேர்ந்த இரண்டு நிர்வாகிகளும் பணியில் இருந்து நீக்கப்பட்டதாக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nAlso Read : கூகுள் அக்கவுண்ட் பெயரை மாற்றாமல் யூடியூப் சேனல் பெயரை மாற்றுவது எப்படி\nஇந்த சம்பவம் ஆப்பிளின் வழக்கமான உயர் தரமான சேவையில் ஒரு பிளாக் மார்க்கை உருவாகியுள்ளது. அந்நாட்டில் குப்பெர்டினோ என்ற மாபெரும் நிறுவனம் போன்களின் விற்பனைக்குப் பிந்தைய சேவையை தரமாக வழங்குவதில் வலுவான தடத்தை பதித்துள்ளது. இதற்காக இது உலகம் முழுவதும் பல ஒப்பந்தக்காரர்களைப் பணியாளர்களாக பயன்படுத்துகிறது.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.\nஇந்த குறிப்பிட்ட திட்டத்தில், ஆப்பிள் நிறுவனம் பெகாட்ரான் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டுள்ளது. அதில் தான் இப்போது நீக்கப்பட்ட இரண்டு நிர்வாகிகளும் பணிபுரிந்தனர். இதையடுத்து, இந்த சம்பவத்தில் பெகாட்ரான் நிறுவனத்திற்கு பங்கு இருப்பதன் காரணமாக பெண்ணுக்கு வழங்கிய முழு டீல் செலவையும் ஆப்பிள் நிறுவனத்திற்கு செலுத்தியதாக கூறப்படுகிறது.\nAlso Read : வாட்ஸ் அப் செயலியில் அடுத்த புதிய அப்டேட்... வாய்ஸ் மெசேஜில் புதிய வசதி..\nசேவை மற்றும் பழுதுபார்ப்புக்காக ஐபோன்கள் கொண்டு வரப்படும்போது, பல சேவை மையங்கள் பெரும்பாலும் சாதனத்தின் கடவு சொற்களைக் கேட்கின்றன. அவை பழுதுபார்ப்பு மற்றும் சேவைகளுக்கு பங்கம் விளைவிக்கிறது. இருப்பினும், இது தொலைபேசியில் உள்ள தனிப்பட்ட தரவுகளின் அடிப்படையில் ஆபத்தும் அதிகரிக்கிறது.\nபணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் 10 புகைப்படங்களையும் வீடியோக்களையும் பெண்ணின் ஐபோனில் பதிவேற்றியுள்ளனர். இது அவரை \"பல்வேறு கட்டங்களில்\" அவதூறாக சித்தரித்துள்ளது. தனது கணக்கில் அசாதாரண செயல்பாடுகள் குறித்து ஐபோன் உரிமையாளரின் சகாக்கள் எச்சரித்தபோது தான் இந்த சம்பவம் குறித்து அவருக்கு தெரிந்தது.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube\nநிர்வாண புகைப்படங்கள் கசிந்ததால் மில்லியன் டாலர் நஷ்டஈடு வழங்கிய ஆப்பிள் நிறுவனம்\nஇந்த தீபாவளியில் மாபெரும் தள்ளுபடி உடன் வருகிறது OnePlus Nord 2 5G மற்றும் Nord CE 5G \nநொடிப்பொ��ுதில் மின் கட்டணம் செலுத்த வேண்டுமா BHIM, Paytm மற்றும் PhonePe யூஸ் பண்ணுவது எப்படி\nஃபிளிப்கார்ட் தீபாவளி சலுகை: ஆஃபரில் ரூ.15,000க்கு கீழ் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன்கள்\nBSNL வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட்... 4 மாத இலவச பிராண்ட்பேண்டு சேவை அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/muthu-krishnan-a-dalit-student-pursuing-mphil-in-jnu-commits-suicide/", "date_download": "2021-10-19T12:03:08Z", "digest": "sha1:VXN2BU46SLIBEZIUYAAFPHJX65FKEZ5C", "length": 15326, "nlines": 201, "source_domain": "www.aanthaireporter.com", "title": "டெல்லி ஜவஹர்லால் பல்கலையில் தமிழக மாணவர் முத்துக் கிருஷ்ணன் தற்கொலைக்கு காரணம்? - AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nடெல்லி ஜவஹர்லால் பல்கலையில் தமிழக மாணவர் முத்துக் கிருஷ்ணன் தற்கொலைக்கு காரணம்\nடெல்லி ஜவஹர்லால் பல்கலையில் தமிழக மாணவர் முத்துக் கிருஷ்ணன் தற்கொலைக்கு காரணம்\nடெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நவீன வரலாறு பாடப்பிரிவில் ஆராய்ச்சி மேற்கொண்டிருந்த மாணவர் முத்துக்கிருஷ்ணன், திங்கள்கிழமை மாலை அவரது நண்பரின் வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டிருக்கிறார். தற்கொலை குறிப்பு ஏதும் கிடைக்கவில்லை என போலீஸ் தரப்பில் கூறப்பட்டாலும் கடைசியாக மார்ச் 10-ம் தேதியன்று முத்துக்கிருஷ்ணன் அவரது முகநூல் பக்கத்தில் பதிவு செய்திருந்த நிலைத்தகவல் அவர் மன உளைச்சலில் இருந்ததை உறுதி செய்வது போல் இருக்கிறது.\nஅவரது ஃபேஸ்புக் பேஜில், ‘”எம்.ஃபில்., பி.எச்.டி., மாணவர் சேர்க்கையில் சமத்துவம் பேணப்படவில்லை. ஆராய்ச்சி மாணவர்களுக்காக நடத்தப்படும் வாய்மொழித் தேர்விலும் சமத்துவம் இல்லை. அங்கே நடைபெறுவதெல்லாம் சமத்துவம் மறுக்கப்படுவது மட்டுமே. பேராசிரியர் சுகதேவ் தோரத் பரிந்துரைகள் இங்கு சிறிதும் பின்பற்றப்படுவதில்லை. மாணவர்கள் போராட்டங்கள் ஏற்றுக்கொள்ளப் படுவதில்லை. சமூகத்தின் விளிம்புநிலையில் இருந்து வருபவர்களுக்கு கல்வி மறுக்கப்படுகிறது. சமத்துவம் மறுக்கப்படும்போது அனைத்துமே மறுக்கப்படுகிறது” இவ்வாறு கடந்த 10-ம் தேதியன்று அவர் தனது முகநூலில் பதிவிட்டிருக்கிறார்.\nஇந்தச் சம்பவம் குறித்து முத்துகிருஷ்ணனின் தந்தை ஜீவானந்தம், “முத்துகிருஷ்ணன் நேற்று மாலை வழக்கம் போல தொலைபேசியில் பேசினான். தற்கொலை செய்யும் அளவிற்கு எங்கள் குடும்பத்தில் எந்தப் பிரச்னையும் இல்���ை. தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு அவன் கோழையும் கிடையாது” என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nஇந்த டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்க வேண்டும் என்பது மருத்துவம் படிப்போரின் உயர்ந்தபட்ச கனவு. அங்கு சேருவதற்கு கடும் போட்டி நிலவுகிறது. எய்ம்ஸ் மாணவர் சேர்க்கைக்கு 3 கட்ட கலந்தாய்வு நடைபெறுகிறது. இதில் 1,2 வது கலந்தாய்வுகள் முடிந்த நிலையில் தான் சரவணன் மரணம் நிகழ்ந்துள்ளது. சரவணன் இடம் காலியாவதால் 3-வது கட்ட கலந்தாய்வில் ஒரு மாணவருக்கு வாய்ப்பு கிடைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதில் நேரடி திறந்த நிலைப் போட்டியில் இடம் கிடைக்காதவர்கள், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்குரிய ஒதுக்கீட்டில் இடம் பெற முடியும். ஆகையால் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் இடம் பெறவேண்டும் என்பதற்காக, போட்டியில் இருக்கும் ஒருவர்தான் மர்மமான முறையில் மருத்துவ மாண்வரை கொலை அல்லது தர்கொலை செய்து கொள்ள தூண்டும் போக்கு அதிகம் என்று தெரிவித்திருந்தனர். இதனிடையே தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் முத்துகிருஷ்ணன் தற்கொலை செய்து கொண்டதன் பின்னணியிலும் அதிர்சசியூட்டும் பின்னணி இருக்க வாய்ப்பிருப்பதாக தெரிகிறது\nPrevious ”பன்னீர், ஸ்டாலின் இருவரின் கனவுகளும், ஆசைகளும் பலிக்காது” – டி.டி. வி. தினகரன் காட்டம்\nNext ஆர்.கே. நகர் ; அதிமுக (சசி அணி) வேட்பாளரானார் டிடிவி தினகரன்\nஇந்திய அளவில் ட்ரெண்டாகி நொந்து போன சொமேட்டா\nவரும் சனிக்கிழமை மெகா தடுப்பூசி முகாம்- ஏன் தெரியுமா\nவாங்க.. பேசலாம்- அதிமுகவினருக்கு சசிகலா அழைப்பு\n“ஓ மணப்பெண்ணே” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பின் ஹைலைடஸ்\nஇந்திய அளவில் ட்ரெண்டாகி நொந்து போன சொமேட்டா\nசிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு முதல் பருவத் தேர்வுகளுக்கான தேதி அறிவிப்பு\nசூர்யா-வின் ஜெய்பீம் படத்தில் இடம் பிடித்த ’பவர்’ பாடல் வெளியானது\nஇந்திய கடற்படையின் பங்கு குறித்து கடற்படை தளபதிகள் மாநாட்டில் ராஜ்நாத் சிங் பேச்சு\nகேட்டராக்ட் – கண் புரை – கண்ணுக்குள் பொருத்தும் லென்ஸ்கள் சில முக்கியமான விவரங்கள் கேள்வி – பதில்கள்\nமுட்டாள்களின் கூடாரம் ‘மூடர் கூடம்’ – கோடங்கி விமர்சனம்\nமிக மிக அழகான பெண் யார்\n‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ரசிகர்களை சேர்க்காது..\n‘வீரம்’ – சினிமா ���ிமர்சனம்\nஎம்ஜிஆர் என்கிற “சோட்டா பீம்” உருவாக்கிய அதிமுகவின் பொன்விழா சஸ்பென்ஸ்\nஏர் இந்தியா: தர்மம் மறுபடி வெல்லும் – ரமேஷ் கிருஷ்ணன் பாபு\nகாடழிப்பிற்கு வித்திடும் வகையில் சட்டத் திருத்தங்கள் – மோடி அரசுக்கு கண்டனம்\nஅச்சச்சோ,, சென்னையில் விஷக்காற்று பரவுது\nபாகிஸ்தானில் ஆட்சி மாறி ஆப்கன் போல் குழம்பம் நேரிடலாம் ஏன் தெரியுமா\n“ஓ மணப்பெண்ணே” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பின் ஹைலைடஸ்\nஇந்திய அளவில் ட்ரெண்டாகி நொந்து போன சொமேட்டா\nசிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு முதல் பருவத் தேர்வுகளுக்கான தேதி அறிவிப்பு\nசூர்யா-வின் ஜெய்பீம் படத்தில் இடம் பிடித்த ’பவர்’ பாடல் வெளியானது\nஇந்திய கடற்படையின் பங்கு குறித்து கடற்படை தளபதிகள் மாநாட்டில் ராஜ்நாத் சிங் பேச்சு\nட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் படம் பூஜையுடன் ஆரம்பம்\nவரும் சனிக்கிழமை மெகா தடுப்பூசி முகாம்- ஏன் தெரியுமா\nசிம்புவின் மாநாடு ரிலீஸ் தீபாவளியன்று இல்லை : நவம்பர் 25ல் வெளியாகுமாம்\nதாமஸ் ஆல்வா எடிசன் நினைவு தினம்…\nஎம்ஜிஆர் என்கிற “சோட்டா பீம்” உருவாக்கிய அதிமுகவின் பொன்விழா சஸ்பென்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/chennai/judgment-today-kollam-court-convicts-man-for-killing-wife-using-snake/tamil-nadu20211013062439926", "date_download": "2021-10-19T13:00:43Z", "digest": "sha1:IXEPMADAXPGWOB6OY6NR4URM6PDDAUVI", "length": 8849, "nlines": 26, "source_domain": "www.etvbharat.com", "title": "உத்ரா கொலை வழக்கு: இன்று தீர்ப்பு", "raw_content": "\nஉத்ரா கொலை வழக்கு: இன்று தீர்ப்பு\nஉத்ரா கொலை வழக்கு: இன்று தீர்ப்பு\nகேரளாவில் பாம்பைப் பயன்படுத்தி மனைவியைக் கொடூரமாகக் கொலைசெய்த வழக்கில் அந்தப் பாம்பு ஏழு நாள்கள் பட்டினியாக இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அவரது கணவருக்கு என்ன தண்டனை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இவ்வழக்கு மீதான தீர்ப்பு இன்று வெளியாகிறது.\nசென்னை: கேரளா, தமிழ்நாடு மாநிலங்களில் ஒருபுறம் படித்த பெண்களே வரதட்சணை கொடுமைகளுக்கு உள்ளாகி தற்கொலை முடிவுக்குச் செல்வதும், மறுபுறம் மணமுடித்து வந்த இளம்பெண்களை கணவர் குடும்பத்தார் தற்கொலைக்குத் தூண்டி உயிரைக் காவு வாங்குவதும் நடைபெற்றுவருகிறது.\nகேரள மாநிலம் கொல்லம் அஞ்சல் பகுதியைச் சேர்ந்த உத்ரா (25) என்ற பெண் 2020 மே 7ஆம் தேதி பாம்பு கடித்த நிலையில் பெற்றோர் வீட்டில் இறந்துகிடந்தார். இது குறித்து அவரின் கணவர் சூரஜிடம் விசாரணை நடத்தியபோது அதிர்ச்சிகரமான தகவல் வெளியானது.\nஉத்ராவை திருமணம் செய்த வங்கி ஊழியரான சூரஜ், உத்ராவுக்கு வரதட்சணையாக வழங்கப்பட்ட 10 லட்சம் ரூபாய், 100 பவுன் நகை, நிலம், புதிய கார் அனைத்தையும் சொந்தமாக்கிக் கொள்ளவும், வேறு திருமணம் செய்துகொள்ளவும் திட்டமிட்டுள்ளார். தங்களுக்கு ஒரு வயதில் குழந்தை இருந்தபோதும், தனது மனைவி உத்ராவை சூரஜ் கொல்ல நினைத்துள்ளார்.\nஅடூரில் உள்ள தனது வீட்டில் வைத்து அணலி வகை பாம்பைக்கொண்டு கடிக்கவைத்து உத்ராவை சூரஜ் கொலை செய்ய முதலில் முயற்சித்துள்ளார். இதில் காயமடைந்த உத்ரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிர் தப்பினார்.\nசிகிச்சைக்குப் பின்னர் கொல்லம் அஞ்சல் பகுதியில் உள்ள தன் பெற்றோர் வீட்டில் ஓய்வில் இருந்த உத்ராவை சூரஜ் பார்க்கச் சென்றுள்ளார். அப்போது, பாட்டிலில் அடைத்து எடுத்துச் சென்ற நல்ல பாம்பைக் கொண்டு உத்ராவைக் கடிக்கவைத்துள்ளார்.\nஉத்ரா இறந்ததை உறுதி செய்துவிட்டு அங்கிருந்து வெளியேறியுள்ளார். மனைவியைக் கொன்றபிறகு நாக தோஷம் காரணமாக அவர் பாம்பு கடித்து இறந்துள்ளதாக மற்றவர்களை நம்பவைக்க இவ்வாறு செய்துள்ளார்.\nகணவர் குற்றவாளி என தீர்ப்பு\nஇந்த வழக்கில் கைதுசெய்யப்பட்ட சூரஜுக்குப் பிணை வழங்கப்படவில்லை. வழக்கை விசாரித்த கொல்லம் நீதிமன்றம் சூரஜ் குற்றவாளி என அக்டோபர் 11ஆம் தேதி அறிவித்துள்ளது. இன்று (அக். 13) சூரஜுக்கு என்ன தண்டனை என்பதை கொல்லம் நீதிமன்றம் அறிவிக்க உள்ளது.\nஇந்த வழக்கில் சூரஜுக்கு பாம்பு கொடுத்த சுரேஷ் என்பவர் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டார். மொத்தம் 87 சாட்சிகள் விசாரணை செய்யப்பட்டனர். 288 ஆவணங்கள், 48 பிரமாண பத்திரங்களும் தாக்கல்செய்யப்பட்டன. பாம்பைக் கொண்டு கடிக்கவைப்பதற்கு முன்பு அது சம்பந்தமாக சூரஜ் இணையதளத்தில் தேடிய ஆதாரங்களும் கொல்லம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன.\nபாம்பின் தலையைப் பிடித்து கடிக்கவைப்பு\nஅதிலும், சூரஜ் பாம்பின் தலையைப் பிடித்து தன் மனைவி உத்ராவை கடிக்க வைத்துள்ளது தெளிவாகியுள்ளது. ஏனென்றால், சாதாரணமாக பாம்பு கடித்தால் அதன் பற்களுக்கு இடையே உள்ள இடைவெளி 1.7 செ.மீ. இருக்கும்.\nஅதன் தலையைப் பிடித்து கடிக்கவைத்தால் பற்களுக்கு இடையேயான இடைவெளி 2.8 செ.மீ. வரை இருக்கும் எனச் சோதனை மூலம் நிரூபிக்கப்பட்டது. இதற்காக குளத்துப்புழா அரிப்பாவில் உள்ள வனத் துறை பயிற்சி மையத்தில் கடந்த ஆண்டு ஜூலை கடைசி வாரத்தில் சோதனை நடத்தப்பட்டது.\nமேலும் உத்ராவை கடித்த பாம்பின் உடற்கூராய்வு முடிவில் அந்தப் பாம்பு ஏழு நாள்கள் பட்டினியாக இருந்ததும் கண்டறியப்படுள்ளது. இந்தியா முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த வழக்கில் குற்றவாளிக்கு என்ன தண்டனை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.\nஇதையும் படிங்க: பாம்பை விட்டு மனைவிக் கொடூர கொலை.. நீதிமன்றம் தீர்ப்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2021/10/05/maduari-disability-people-thanking-to-cm-mk-stalin-action", "date_download": "2021-10-19T12:02:17Z", "digest": "sha1:PVYJAJZ4XCEUF4UACAYCLGS57SLR2FPO", "length": 7122, "nlines": 53, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "maduari disability people thanking to cm mk stalin action", "raw_content": "\nமனு கொடுத்த 4 நாளில் நடவடிக்கை; முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உதவியால் நெகிழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள்\nபுகார் அளித்த நான்கு நாள்களில் நிவாரணம் வழங்கிய தமிழக முதல்வருக்கு மாற்றுத்திறனாளிகள் நன்றி தெரிவித்தனர்.\nமதுரை தெற்கு மாவட்டம் திருமங்கலம் ஒன்றிய பகுதி, பூசலப்புரம் கரடிக்கல் கிழவனேரி பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான ராக்கம்மாள், பிச்சாண்டி, ஆசைத்தம்பி ஆகியோர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் தனிப்பிரிவுக்கு கடந்த 30ம் தேதி புகார் மனுவை அனுப்பப்பியுள்ளனர்.\nஇந்நிலையில் கடந்த அக்டோபர் இரண்டாம் தேதி கிராமசபை கூட்டத்திற்காக தமிழக முதல்வர் மதுரை பாப்பாபட்டி வந்தபோது செக்கானூரணி பகுதியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் தங்களது குறைகளை அடங்கிய புகார் மனுவை மாற்றுத்திறனாளிகள் அளித்துள்ளனர்.\nமனு அளித்த நான்கே நாளில் மாற்றுத்திறனாளிகள் மூன்று பேருக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க பாதிக்கப்பட்ட 3 மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று லட்சம் மதிப்புள்ள சிறப்பு இருசக்கர வாகனத்தை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் தி.மு.க அலுவலகத்தில் வைத்து வழங்கினார்.\nஅதில் பங்கேற்ற மாற்றுத்திறனாளி ராக்கம்மாள் தமிழக முதல்வரிடம் கொடுத்த புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்தது எங்களை போன்ற ஏழை எளிய மக்களுக்கு ம��ிழ்ச்சியளிக்கிறது. தமிழக முதல்வருக்கும், தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் ஆகியோருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் எனக் கூறியுள்ளார்.\nஇவ்விழாவில் தலைமை செயற்குழு உறுப்பினர் ஏர்போர்ட் பாண்டியன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முத்துராமலிங்கம் ஒன்றிய செயலாளர் தனபாண்டியன் மகளிர் அணி அமைப்பாளர் தங்கபாண்டியன் நகர பொறுப்பாளர் முருகன் அவை தலைவர் நாகராஜ் ஏராளமானோர் பங்கேற்றனர்\nசிறுநீரக கல்லுக்கு பதிலாக சிறுநீரகத்தையே அகற்றிய மருத்துவர்... நுகர்வோர் ஆணையத்தின் அதிரடி உத்தரவு\n“விரைவில் ஆழ்கடல் அகழாய்வுப் பணிகளைத் தொடங்க ஆலோசனை” : அமைச்சர் தங்கம் தென்னரசு முக்கிய தகவல்\nதண்ணி இல்லாத காட்டில் மாட்டிக்கொண்ட 2 பேர்.. 1 வாரம் கழித்து மீட்ட போலிஸ்: ஆஸ்திரேலியாவில் நடந்தது என்ன\n50 ஆண்டுகளுக்குப் பிறகு மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றியத்தை கைப்பற்றிய தி.மு.க - ஆட்சிக்கு கிடைத்த நற்சான்று\n“எங்க கல்யாணத்த மழை வெள்ளம் தடுப்பதா.. நெவர்” : காதல் ஜோடி எடுத்த முடிவு - இணையத்தில் வைரல்\n“விரைவில் ஆழ்கடல் அகழாய்வுப் பணிகளைத் தொடங்க ஆலோசனை” : அமைச்சர் தங்கம் தென்னரசு முக்கிய தகவல்\nசிறுநீரக கல்லுக்கு பதிலாக சிறுநீரகத்தையே அகற்றிய மருத்துவர்... நுகர்வோர் ஆணையத்தின் அதிரடி உத்தரவு\nதண்ணி இல்லாத காட்டில் மாட்டிக்கொண்ட 2 பேர்.. 1 வாரம் கழித்து மீட்ட போலிஸ்: ஆஸ்திரேலியாவில் நடந்தது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/20283/", "date_download": "2021-10-19T12:31:36Z", "digest": "sha1:FBFYTI3NK4YZDM4PWIZWFR4MIIIYSXHZ", "length": 35696, "nlines": 135, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஒரு வரலாற்றுத்தருணம் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nகட்டுரை அரசியல் ஒரு வரலாற்றுத்தருணம்\nஅண்ணா ஹசாரேவை முன்வைத்து ’ஊழலுக்கு எதிராக இந்தியா’ இயக்கம் எடுத்த போர் முதல்கட்டத்தில் பெரும்வெற்றியை அடைந்திருக்கிறது. அண்ணா ஹசாரே கோரியபடியே பாராளுமன்றத்தின் இரு அவைகளும் வலுவான லோக்பால் அமைப்பு ஒன்றை அமைப்பதை வாக்களிப்பதன் மூலம் ஒத்துக்கொண்டிருக்கின்றன. அண்ணா கடைசி நிமிடம் வரை உறுதியாக இருந்த மூன்று கோரிக்கைகளும் பாராளுமன்றத்தால் கொள்கை அளவில் ஏற்கப்பட்டுள்ளன. ஒன்று, கீழ்மட்ட அதிகாரிகளையும் லோக்பாலுக்குள் கொண்டுவருவது, இரண்���ு, ஊழலை தண்டிப்பதற்கான சட்ட வரையறை, மூன்று, மாநிலங்கள் முழுக்க லோக் ஆயுக்தா அமைப்பை உருவாக்குவது. மூன்றையுமே இந்தியப்பாராளுமன்றம் கொள்கையளவில் அங்கீகரித்து வரவிருக்கும் லோக்பால் மசோதாவில் சேர்ப்பதாக ஒத்துக்கொண்டிருக்கிறது.\nஅண்ணா ஹசாரேவுடன் அவரது குழுவும் வணக்கத்துக்குரியது. ஐயத்திற்கு அப்பாற்பட்ட நேர்மை கொண்டவர்கள் அவர்கள். இல்லையேல் இப்படி பொதுமேடைக்கு வந்து நிற்கமுடியாது. அர்விந்த் கேஜ்ரிவால், கிரண்பேடி, சந்தோஷ் ஹெக்டே, பிரசாந்த்பூஷன், மேதா பட்கர் போன்றவர்கள் தங்கள் கடந்தகாலச் செயல்பாடுகள் மூலம் இந்தியாவின் ஊழலுக்கும் அதிகாரவர்க்கச் சுரண்டலுக்கும் எதிராகத் திட்டவட்டமாகப் போராடிய வரலாறு கொண்டவர்கள். பொதுவாழ்வில் நேர்மையையும் துணிச்சலையும் களத்தில் பணியாற்றி நிரூபித்தவர்கள்.\nதங்கள் தியாகத்தாலும் தகுதியாலும் இந்திய மக்களின் ஆதரவைப்பெற்று, அதைக்கொண்டு இந்தியாவின் ஆளும்கட்சியையும் எதிர்க்கட்சியையும் தார்மீகமான கட்டாயத்துக்கு ஆளாக்கி இந்த வெற்றியை அண்ணா ஹசாரேயும் அவரது குழுவும் சாதித்திருக்கிறார்கள். ஒரு சிறிய சாதாரணமான கோரிக்கைக்கு அரசையும் அரசியல்வாதிகளையும் பணிய வைப்பது எத்தனைபெரிய விஷயம் என அறிந்தவர்கள் உணர்ந்திருப்பார்கள் — வாசகர்களில் ஓரளவேனும் தொழிற்சங்க அனுபவம் கொண்டவர்கள் அதை ஊகிக்க முடியும்.\nஆகவே இந்த வெற்றி மிகப்பிரம்மாண்டமான ஒன்று. உண்மையில் இது சாதிக்கப்படுமென நான் நினைக்கவில்லை. பாராளுமன்றம் இந்த விஷயங்களைப் பரிசீலிக்கும் என ஒரு பொது உறுதிமொழியைப் பெறுவதே அதிகபட்சமாக சாத்தியம் என்று நினைத்தேன். நான் பேசியவரை அனேகமாக எல்லா முக்கியமான இதழாளர்களும் அதையே நினைத்தார்கள். கடைசி நிமிடம் வரை நிகழ்ந்த இழுபறிகளும் பின்னடைவுகளும் அதையே உறுதிசெய்தன.\nவழக்கமாக போராட்டம் ஒருகட்டத்தை தாண்டி நீளும்போது போராடும்தரப்பு பலவீனமாகிறது. ஆரம்பகட்ட ஊக்கம் குறையும், போராடும் தரப்பில் உள்மோதல்கள் உருவாகும். நான் சந்தித்த எல்லா தொழிற்சங்கப்போராட்டங்களிலும் அதைக் கண்டிருக்கிறேன். ஐந்தாறு நாட்கள் போராட்டம் நீண்டால் நாலைந்து அமைப்புகள் பிரிந்து வெளியேறும். கீழ் மட்டத்தில் இருந்து தலைமைக்கு மிக அதிகமான அழுத்தம் அளிக்கப்படும். முடிவைநோக்கி அவரை அவரது தரப்பே தள்ளிச்செல்லும். அந்த கடைசிச் சிலமணி நேரங்களிலேயே எல்லாம் தீர்மானிக்கப்படுகிறது. [அந்த சிலமணிநேரங்களை சமாளிப்பதில் மறைந்த தொழிற்சங்கவாதி கெ.டி.கெ.தங்கமணி நிபுணர் என சொல்லிக்கேட்டிருக்கிறேன்.]\nஇங்கும் அந்த கடைசிக்கட்ட நெருக்கடி உச்சத்தை எட்டியது. சந்தோஷ் ஹெக்டே போன்ற ஆதரவாளர்கள் போராட்டத்தை முடித்துக்கொள்ளும்படி வற்புறுத்தினர். ஆதரவான ஊடகங்கள் வற்புறுத்தின. ஆதரவான மக்களின் பொதுமனநிலையும் அதுவே. போராட்டத்தலைமையும் இக்கட்டைச் சந்தித்தது. அண்ணா ஹசாரேவின் உடல்நிலை மோசமடைந்தது. அவரது எடையிழப்பு மிக அபாயகரமான நிலையை எட்டியிருந்தது என்றே சொல்கிறார்கள். வருடக்கணக்காக தினம் ஒருவேளை மட்டுமே சாப்பிடுவர் என்பதனால் அவர் தாக்குப்பிடித்தாரென்றாலும் அவர் அதிக நேரம் அங்கே நீடிக்க முடியாதென்று தெரிந்தது. அவருக்கு ஏதாவது ஆயிற்றென்றால் அந்தப்பழி போராட்டத்தலைமை மேல்தான் விழும்\nஅந்தத்தருணத்தை அரசு கடைசிகட்ட சீட்டாகக் கண்டு விளையாடிப்பார்த்தது. அதற்கான பேர நிபுணர்கள் அதற்கு எப்போதுமிருப்பார்கள். பிரமிக்கத்தக்க மன உறுதியுடன் அதைத் தாண்டிவந்தார் அண்ணா ஹசாரே. அவரது குழுவும் அவருடன் இருந்தது. ஆகவே வேறு வழியில்லாமல் பாராளுமன்றம் இறங்கி வந்தது. இந்த வெற்றி சாத்தியமானது. அண்ணா ஆதரவாளர்களின் கொண்டாட்டம் புரிந்துகொள்ளத்தக்கதே.\nஆனால் இங்கே சுட்டிக்காட்டப்படவேண்டியது, இது ஒரு தொடக்கம் மட்டும்தான் என்பதே. மொத்த தேசத்தின் சிவில்சமூகத்தையும் பொதுவாழ்க்கையில் ஊழலுக்கு எதிரான மனநிலையை நோக்கி கொண்டுசெல்லும் போராட்டத்தின் முதல்படிமட்டும்தான் இது. லோக்பால் போன்ற அமைப்பை இன்னும் வலுவான மக்களியக்கம் தொடர்ந்து நிகழ்வதன் மூலமே நிறைவேற்ற முடியும். அரசியல்வாதிகளைக் கண்காணிக்கும் அமைப்பை அவர்களைக்கொண்டே உருவாக்குவதென்பது எளிய செயல் அல்ல.\nஅப்படி உருவான பின்னரும்கூட அந்த அமைப்பின் நடைமுறைக்குறைகளைக் களைந்து அதைப் பயனுறச் செயல்படச்செய்வதற்கு தொடர் விவாதமும் தொடர் மேம்பாடும் இன்றியமையாதவை. அதற்கும் தொடர்ச்சியான மக்களியக்கம் தேவை. அது இதைப்போல ஒட்டுமொத்த தேசிய போராட்டம் அல்ல. பிராந்திய அளவில் நிகழவேண்டிய போராட்டம் அது. அதாவது ஊழலுக்கு எதிரான மக்கள் கண்காணிப்புக்கான ஒரு கருவி மட்டும்தான் லோக்பால். அது ஊழலை ஒழிக்கும் மந்திரம் அல்ல. அண்ணா ஹசரே ஊழலை ஒழிக்கும் சூப்பர்மேனும் அல்ல. அந்த கருவியை அடையவும் பயன்படுத்தவும் மக்கள் விழிப்புணர்வு முக்கியம்.\nலோக்பால் அமைப்பின் குறைபாடுகள் போதாமைகள் குறித்த எந்த விவாதமும் இனிமேல் வரவேற்கத்தக்கதே. அண்ணா குழுவினரின் மசோதாவை எந்த நிலையிலும் இனிமேல் விமர்சிக்கலாம். ஆனால் போராட்டத்தை அழிப்பதற்காக அதைப்பற்றி கிண்டிக்கிண்டி பேசியவர்கள் இனிமேல் பேசமாட்டார்கள். உண்மையான ஆர்வம் கொண்ட நிபுணர்கள் பேசலாம்.\nஇந்தப்போராட்டத்தை நான் இருவகையில் வெற்றிகரமானது என்று சொல்வேன். ஒன்று கண்கூடானது, இந்தியப்பாராளுமன்றத்தை லோக்பாலுக்காக வெளிப்படையாக ஒத்துக்கொள்ளச்செய்தது. இரண்டு மறைமுகமானது, இந்த தேசத்தை எந்த சாதி மத இன அடையாளங்களும் இல்லாமல், சுயநலக் கோரிக்கைகள் இல்லாமல் ஒரு தேசிய இலட்சியத்துக்காக ஒருங்கிணையச்செய்தது. பெரும்பணத்தை குவித்து வைக்காத, எந்த அதிகாரப்பின்னணியும் இல்லாத ஒரு சிறு செயல்பாட்டாளர் குழு ஒரு மக்களியக்கத்தை நிகழ்த்திக்காட்டியது. அதன் மூலம் இச்சமூகத்தில் மீண்டும் நம்பிக்கையை உருவாக்கியது.\nஆரம்பம் முதலே இந்தப்போராட்டம் இந்தியசமூகத்தில் ஒரு திருப்புமுனை என்ற எண்ணம் எனக்கிருந்தது. வேறெந்த விஷயத்தை விடவும் இதில் நான் ஈடுபட்டமைக்குக் காரணம் இதுதான். பெண்கள், படித்த இளைஞர்கள் என அரசியல்மயப்படுத்தப்படாத ஒரு பெரும் மக்கள்திரள் இந்தியாவில் உள்ளது. அவர்களை இந்தப்போராட்டம் அரசியல் மயப்படுத்தியிருக்கிறது. அந்த அரசியலின் மையமாக சுயநலத்துக்குப் பதிலாக ஊழல் எதிர்ப்பு என்ற இலட்சியம் வைக்கப்பட்டுள்ளது.\nஉடனே இந்தியாவில் ஊழல் ஒழிந்துவிடும் என நான் நினைக்கவில்லை. ஆனால் என்றாவது ஒழியும் என்றால் அது இங்கே இப்படி ஆரம்பிக்கப்பட்டது என்பதே சமகால வரலாறு. இந்த விழிப்புணர்ச்சி தொடர்ந்து வளர்ந்து, தேர்தல்களில் எதிரொலித்து , அதற்கான அரசியல்வாதிகள் உருவாகி வந்து அதிகாரமாற்றம் நிகழவேண்டும். அது நினைக்கையில் பெரியதாக, சாத்தியமற்றதாக இருக்கலாம். ஆனால் அந்த மாற்றம் நிகழ்ந்த எல்லா நாடுகளிலும் இப்படித்தான் பல படிகளாக அது நிகழ்ந்துள்ளது.\nநம் அவநம்பிக்கையுடன் அண்ணா ஒரு பெரும் போர��� புரிந்திருக்கிறார். இந்த பன்னிரு நாட்களில் அவர் மேல் பொழியப்பட்ட அவதூறுகள், வசைகள், ஏளனங்கள் எவ்வளவு என மனசாட்சியுள்ளவர்கள் திரும்பிப்பார்க்கட்டும். இந்தியாவில் எந்தக் கேடுகெட்ட ஊழல் அரசியல்வாதியும் இந்த அளவுக்கு எதிர்மறை விமர்சனங்களை எதிர்கொண்டதில்லை இந்த அளவுக்கு வசைபாடப்பட அண்ணா என்னதான் செய்தார் இந்த அளவுக்கு வசைபாடப்பட அண்ணா என்னதான் செய்தார் என்ன சுயநலத்துக்காக அவர் செயல்பட்டார் என்ன சுயநலத்துக்காக அவர் செயல்பட்டார் எதை கொள்ளையடித்துச்சென்றார் நாம் எங்கே எப்படி அழுகியிருக்கிறோம் என்பதை காட்டும் சமகால நிகழ்வு இது.\nஇந்தப்போராட்டத்தில் ஒவ்வொரு அரசியல் விமர்சகரும் எடுத்த நிலைப்பாடு கவனிக்கத்தக்கது. சிலருக்கு இதன் வரலாற்றுத்தருணத்தை பார்க்கும் கண் அமையவில்லை. சிலர் தங்களைப் பெரிய ஆளுமைகளாகக் கற்பனைசெய்துகொண்டு மேட்டிமைநோக்குடன் பேசினர். சிலர் பொறாமையால் பேசினர். சிலர் தெளிவான அரசியல் உள்நோக்குடன் பேசினர். இந்த மாபெரும் வரலாற்றுத் திருப்புமுனைத் தருணத்தைக் கண்டுணர்ந்தவர்கள் மிகச்சில அறிவுஜீவிகளே.\nஇந்த அகிம்சைப்போரில் நம் ஆங்கில பத்தி எழுத்தாளர்களின் ஆழமின்மையும் கீழ்த்தர அகங்காரமும் வெளிப்படையாகவே தெரியவந்தது என்பது முக்கியமான விஷயம். நெடுங்காலம் மக்களிடையே நேரடியாக களப்பணியாற்றி சாதனைசெய்தவர்களான அண்ணா ஹசாரேவின் குழுவைச்சேர்ந்த அர்விந்த் கேஜ்ரிவால், மேதா பட்கர், கிரண் பேடி போன்றவர்களை வெறும் பத்தி எழுத்தாளர்கள் கிண்டலும் கேலியும் செய்யவும் , ஆலோசனைகள் சொல்லவும் துணிந்ததை ஒரு சமகால இந்திய அவலம் என்றுதான் சொல்லவேண்டும்.\nஇந்தப் போராட்டத்தை ஆரம்பத்தில் அவநம்பிக்கையுடன் எதிர்கொண்டாலும் மார்க்ஸிய கம்யூனிஸ்டுக்கட்சி போன்ற இடதுசாரிகளும் ஆர்.எஸ்.எஸ் போன்ற வலதுசாரிகளும் மெல்ல இதன் சாராம்சத்தை ஏற்றுக்கொண்டு ஏதோ ஒருவகையில் இப்போராட்டத்தை இணைந்து முன்னெடுத்திருக்கிறார்கள். அவர்கள் தங்கள் நோக்கில் இந்த சட்டத்தைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். வலுவான லோக்பாலுக்காக, அதன் தொடர் அமலாக்கத்துக்காக ,அவர்கள் தங்கள் பங்களிப்பை வழங்கவேண்டும்.\nவரலாற்றுத்தருணங்கள் நிகழும்போது அதற்கேற்ப உயர்வதற்கு ஒரு மனம் வேண்டும். தமிழகத்தில் இருந்து ��ண்ணாவுக்கு நேரில்சென்று ஆதரவளித்த ஒரே தலைவரான தொல்.திருமாவளவன் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களும் வணக்கங்களும்.\nஇது ஒரு தொடக்கம். பெரிய விஷயங்களுக்கான தொடக்கம். நம் அவநம்பிக்கைகளைத் தாண்டி இந்தப் பயணம் முன்னகரவேண்டும். அதற்கு இந்த வெற்றி உதவட்டும்.\nஅடுத்த கட்டுரைஅண்ணா- மீண்டும் ஓர் உரையாடல்\nகோவை கவிதைவிவாதம் – கடிதம்\nஅக்டோபர் 2 காந்தி ஜெயந்தி நிகழ்வு – குக்கூ காட்டுப்பள்ளி\nசிறுகதை வாசிக்க பயிற்சி அவசியமா\nவடுகூரும் தோத்தாத்ரியும்- கடலூர் சீனு\n‘கிராதம்’ வாசிப்பு - முனைவர் ப. சரவணன்\nஓர் ஓவியம் ஒரு போர்\nவிழா கடிதங்கள் -ராகவேந்திரன், சுரேஷ்குமார்\nஜப்பான், ஒரு கீற்றோவியம் -6\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி கி.ராஜநாராயணன் கோவை ஞானி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உணவு உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் தொல்லியல் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் நகைச்சுவை நேர்காணல் நேர்காணல் மற்றும் பேட்டிகள் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பிறர் படைப்புகள் நூல் மதிப்புரை மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் மதிப்புரை விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்க���டு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெண்முரசு – ஒலிவடிவம் வெண்முரசு – வாசகர் கடிதம் வெண்முரசு – வாசகர் மதிப்புரை வெண்முரசு ஆவணப்படம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilceylon.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F-%E0%AE%9A/", "date_download": "2021-10-19T11:10:48Z", "digest": "sha1:M6WPPDDTRUDADXJAV5PKCBN5B5KW5BKO", "length": 6338, "nlines": 100, "source_domain": "www.tamilceylon.com", "title": "கொழும்பில் இன்று விசேட சோதனை | Tamil Ceylon", "raw_content": "\nHome செய்திகள் உள்நாட்டுச் செய்திகள் கொழும்பில் இன்று விசேட சோதனை\nகொழும்பில் இன்று விசேட சோதனை\nகொழும்பில் இன்று (புதன்கிழமை) விசேட சோதனை நடவடிக்கையொன்று மேற்கொள்ளப்படவுள்ளது.\nபொதுமக்கள் சுகாதார அறிவுறுத்தல்களுக்கு அமைய செயற்படுகிறார்களா என்பதை அவதானிக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.\nமேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் ஆலோசனைக்கு அமைவாக குறித்த சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.\nஇதற்காக சுமார் 20 நடமாடும் பொலிஸ் வாகனங்களும் 100 சிற்றூர்திகளும் 300 பொலிஸ் அதிகாரிகளையும் கடமையில் ஈடுபடுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஇதனைத் தொடர்ந்து மேலதிகமாக இந்த நடவடிக்கையை நாடு முழுவதும் விஸ்தரிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nPrevious articleஅரசியல் கைதிகள் விடுதலை, தீர்வு விடயம் தொடர்பாக ஒரு மணி நேரம் பேச்சு\nNext articleகளுவாஞ்சிகுடி மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தின் கிணறு பொங்கி வழியும் அற்புதம்\nஇலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா\nடிசம்பா் இறுதிவரை வரையரைகளுடன் செயற்படுக – சுகாதார பிரிவு எச்சரிக்கை\n21ஆம் திகதிக்கு பின்னரும் பயணத்தடை நீடிப்பா\n”உரம் இன்றி உழவு இல்லை”விவசாயிகளின் தற்கால பிரச்சினைக்கு தீர்வுகோரி மட்டக்களப்பில் போராட்டம்\nஅரிசியின் விலையும் அதிகரிக்கும் அபாயம்\nஇலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா\nஉள்நாட்டுச் செய்திகள் amal - 18-10-2021 0\nடிசம்பா் இறுதிவரை வரையரைகளுடன் செயற்படுக – சுகாதார பிரிவு எச்சரிக்கை\nஉள்நாட்டுச் செய்திகள் amal - 18-10-2021 0\n21ஆம் திகதிக்கு பின்னரும் பயணத்தடை நீடிப்பா\nஉள்நாட்டுச் செய்திகள் amal - 18-10-2021 0\nஉள்நாட்டுச் செய்திகள் amal - 18-10-2021 0\n”உரம் இன்றி உழவு இல்லை”விவசாயிகளின் தற்கால பிரச்சினைக்கு தீர்வுகோரி மட்டக்களப்பில் போராட்டம்\nஉள்நாட்டுச் செய்திகள் amal - 18-10-2021 0\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.verkal.net/%E0%AE%8E%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2021-10-19T12:08:44Z", "digest": "sha1:SX47YINSYBMYAAMSABMWRA3TNNHFK46I", "length": 50055, "nlines": 146, "source_domain": "www.verkal.net", "title": "எமது விடுதலைப் போராட்டத்தில் மாபெரும் பணியாற்றிய லெப். கேணல் சாந்தகுமாரி. | வேர்கள்", "raw_content": "\nஇலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்\nதாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் \nHome ஒரு போராளியின் குருதிச் சுவடுகள் எமது விடுதலைப் போராட்டத்தில் மாபெரும் பணியாற்றிய லெப். கேணல் சாந்தகுமாரி.\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்\nஎமது விடுதலைப் போராட்டத்தில் மாபெரும் பணியாற்றிய லெப். கேணல் சாந்தகுமாரி.\nஎல்லோருடனும் சிரித்துக் கதைக்கின்ற சாந்தகுமாரி இன்று எங்களோடு இல்லை. ஆனால் எதிரியைச் சிதறடிக்கின்ற சாந்தகுமாரிகள் எங்களோடேயே களமுனையில் நிற்கிறார்கள். சாந்தகுமாரியின் பெயரில் தயாரிக்கப்பட்ட கண்ணி வெடிகள் எதிரிகளின் கால்களோடு கதைபேசிக் கொண்டிருக்கின்றன.\nபுயலுக்கு முந்திய அமைதியோடு புலிகள் இருந்த காலப்பகுதியது. எதிரியானவன் எமது மண்ணை வல்வளைக்கும் நோக்குடன் ஜெயசிக்குறு, ரணகோச, வோட்டஜெற் என பெயரிட்டபடி படை நடவடிக்கைகளை மாறி மாறி மேற்கொண்டு எமது வளங்களை அழிவுக்குள்ளாக்கியதுடன், எம்மக்களையும் பெரிதும் துன்பப்படுத்திக் கொண்டிருந்தான். எவரும் எதிர்பாராத பெரு வெள்ளமாக ஓயாத அலைகள்-03 சுழன்றடித்தது.\nஇம் மாபெரும் நிலமீட்பு நடவடிக்கையின் போது ஒட்டுசுட்டான், மாங்குளம் பகுதிகளுக்கு இடைப்பட்ட பகுதிகளை மீட்கும் பொறுப்பு மாலதி படையணிக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. மீட்பு நடவடிக்கையில் மாலதி படையணியின் ஒரு அணியே பங்கு கொண்டது. இன்னொரு அணி அம்பகாமப்பகுதி முன்னணிக் காப்பரண்களில் நிலைகொண்டிருந்தது. ஏனையவை வேறு வேறு இடங்களில். அம்பகாமத்தில் நிலைகொண்டிருந்த அணியின் பொறுப்பாளர்களில் ஒருவர் லெப்.கேணல் சாந்தகுமாரி ஆவார். மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த மாலதி படையணியை அதன் சிறப்புத் தளபதி பிரிகேடியர் யாழினி (விதுசா) அவர்கள் நெறிப்படுத்திக் கொண்டிருந்தார்.\nசண்டைச் சத்தங்களைக் கேட்டுக்கொண்டு இவரால் சும்மா இருக்க முடியவில்லை. தொலைத்தொடர்புக் கருவியின் ஒலியலை வாங்கியை இழுத்துவிட்டு சண்டைக் கட்டளைகளை கேட்டபடி அங்கும் இங்கும் நடப்பதாயும் இருப்பதாயும் பின் எழும்புவதாயும் இருந்தார். சண்டை பிடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் துடித்தபடி இருந்தார். சண்டை கடுமையாய் நடந்து கொண்டிருந்தது. இவருக்கு முன்னே உள்ள எதிரிக் காப்பரண்களின் முதுகுப்புறம் சண்டை நடந்து கொண்டிருக்க, இவர் தன்னை மறந்து தன் சிறப்புத் தளபதிக்கும் தெரியப்படுத்தாமல் சண்டை நடக்கும் பகுதிக்குச் சென்று, தானும் சண்டையில் கலந்து கொண்டார். சண்டை நடந்து கொண்டிருந்த பகுதியில் யாருடைய அனுமதியும் இல்லாமல் காட்சி தந்த சாந்தகுமாரியை உடனேயே காவலரண் பகுதிக்கு திரும்பும்படி பிரிகேடியர் யாழினி அவர்கள் இறுக்கமான கட்டளை ஒன்றை வழங்கிய பிறகும் மனமில்லாது தனது இடத்துக்குத் திரும்பினார். தான் சண்டைக் களத்துக்குப்போய் எதிரியோடு நேருக்கு நேர் நின்று சண்டை பிடித்துவிட்டேன் என்ற மகிழ்ச்சியில் தனக்கு வழங்கப்பட்ட ஒறுப்பைக்கூட சிரிப்புடனேயே ஏற்றுக் கொண்டார்.\nஇவர் முத்துக்குப் பெயர்போன மன்னார் மாவட்டத்தில் திரு. திருமதி சூசையப்பு இணையருக்கு 1972ம் ஆண்டு ஆடித்திங்கள் 19ம் நாள் பிறந்தார். இவருக்கு பெற்றோர் இட்டபெயர் மொறாயஸ் ரமணி. இவரது குடும்பத்தினர் மூத்த தளபதி லெப்.கேணல் விக்ரர் அவர்களின் காலப்பகுதியிலேயே சிறீலங்கா படையினருக்குத் தெரியாமல் போராளிகளை ஆதரித்துவந்தனர். அந்த நாட்களில் இவரது அண்ணா போராட்டத்தில் இணைந்துவிட்டார். இவர் தன் அண்ணா மீது அதிக அன்புடையவர். அண்ணனின் பிரிவு இவரை வாட்டியது. 1990ம் ஆண்டில் நடைபெற்ற ஒரு சண்டையில் இவரது உயிர் அண்ணனான வீரவேங்கை யேசுதாஸ் வீரகாவியமாகிவிட்டார். அண்ணனின் இலட்சியப் பாதையை பற்றி அண்ணனின் ஆயுதத்தை தானே ஏற்க வேண்டும் என்பதற்காய் அதே ஆண்டில��யே இவர் எமது விடுதலைப் போரில் இணைந்தார்.\nஇவர் 1990ம் ஆண்டு முற்பகுதியில் விடுதலைப் புலிகள் மகளிர் படையணியின் 10வது பயிற்சிப் பாசறையில் லெப். கேணல் மாதவியிடம் மணலாற்றுக் காட்டுப் பகுதிக்குள் பயிற்சியைப் பெற்றுக் கொண்டார். பள்ளிப் பட்டறிவோ படிப்பின் மணத்தையோ பெரியளவில் அறியாதவர். ஆனால் பட்டறிவினால் பல களங்களை இவர் படித்திருந்தார். மக்களோடும் போராளிகளோடும் அன்பாகப் பழகுவார். அன்போடு பண்பும் கொண்டவர். தனக்குக் கீழுள்ள போராளிகளை அவரவர் திறமைக்கேற்பவும் தரத்துக்கேற்பவும் மரியாதை கொடுத்து பணிவாக நடந்து கொள்வார். ஒவ்வொரு போராளியினதும் வளர்ச்சியிலும் அதிக அக்கறை காட்டுவார். தெரியாத விடயங்களைப் பிறரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளும் ஆர்வமுடையவர். அதற்காக ஒரு போதும் அவர் கூச்சப்பட்டதில்லை. சிறு விடயமானாலும் சிறிதளவு உணவானாலும் எல்லோரிடமும் பகிர வேண்டும் என்கின்ற எண்ணம் உடையவர். இவருக்கு நாவற் பழங்கள் என்றால் நல்ல விருப்பம். ஒரு நாள் சில போராளிகள் நீண்ட தூரம் சென்று இவருக்காய் நாவற்பழங்களை பிடுங்கிக்கொண்டு வந்தபோது முக்கால்வாசிப் பழங்கள் நசிபட்டுப் பழுதடைந்துவிட்டன. ஆனாலும் அந்தச் சிறிய தொகை நாவற்பழங்களை நன்றாகக்கழுவி, ஒவ்வொரு காவலரணாகச் சென்று எல்லாப் போராளிகளுக்கும் கொடுத்த பின்னரே தான் உண்டார். அதேபோல் புதிர் கணக்குகள் சொன்னால், அதை எல்லோருக்கும் கூறி அதற்கான விடையைச் சரி பார்த்துவிட்டுத்தான் மற்ற வேலைகளைப் பார்ப்பார். ஓய்வுடன் இருக்கும்போது தனக்குத் தெரியாத அடிப்படை விடயங்களைப் படித்தறிவதற்காய் எந்நேரமும் கொப்பியும் பேனையும் கொண்டு திரிந்து தெரிந்தவர்களிடம் கேட்டுப்படிப்பார். பம்பல் அடிப்பதிலும் நாசூக்காக மற்றவர்களை நக்கல் அடிப்பதிலும் திறமையாக இருந்தார்.\nபயிற்சியை முடித்தவுடனேயே களமுனைகள் அவரை வரவேற்றன. இவரின் முதலாவது சண்டைக்களம் யாழ். கோட்டை முற்றுகையாகும். வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டை மீட்புச் சமரே அவரது முதற்களமாய் இருந்ததற்காக இவர் அடிக்கடி பெருமைப்படுவதுண்டு. பலாலி, ஆனையிறவு மீதான ஆகாய கடல்வெளித் தாக்குதல், மின்னல், கஜபார, பலவேகய -02, மண்கிண்டிமலை மீதான இதயபூமித் தாக்குதல் எனத் தொடர் களங்கள் இவரை வரவேற்க, தனது திறமையை வெளிக்காட்டினார். தொடர்ச்சியான களமுனைகள் இவரின் வளர்ச்சிக்குப் படிக்கற்களாக இருந்தன. யாழ். தேவி எதிர் நடவடிக்கையிலும், எம்மவர்களால் பூநகரி பகுதியில் நாடாத்தப்பட்ட ‘தவளை’ நடவடிக்கையிலும் திறமையாக பங்காற்றினார். பின்னர் 1993ம் ஆண்டு காலப்பகுதியில் தேவை கருதி கண்ணிவெடிப்பிரிவுக்கு அனுப்பப்பட்டார். அங்கு நடைபெற்ற படிப்புக்களையும் பயிற்சிகளையும் வேவுப்பயிற்சியையும் ஆர்வத்துடனும் திறமையுடனும் செய்தார். இவர் கண்ணிவெடிகளோடு களமுனையில் செய்த செயற்பாடுகள் அளப்பரியது.\n1995ம் ஆண்டு 3ம்கட்ட ஈழப்போர் தொடங்கிய காலப்பகுதியில் கண்ணிவெடிப் போராளிகளின் பணி மிக முக்கியமாய் இருந்தது. இவர் மண்டைதீவுச் சண்டைக்கு சென்றதோடு மணலாற்றில் ஐந்து இராணுவத் தளங்கள் மீதான தாக்குதலிலும் திறம்படப் பங்காற்றினார்.\n‘இடிமுழக்கம்’ என்ற பெயரில் எதிரி ஒரு வலிந்த தாக்குதலை செய்தபோது இவரின் கண்ணிவெடிப்பணி அங்கிருந்தது. சூரியகதிர்-01, 02 என எதிரி மேற்கொண்ட வலிந்த தாக்குதல்களானது இவர் போன்ற கண்ணிவெடிப் பிரிவுப் போராளிகளின் சண்டைத் திறமையை வளர்ப்பதற்கும் மேன்மேலும் திறம்பட வளர்ச்சி அடைவதற்கும் உரகற்களாய் அமைந்தன. தேவையான இடங்களில் கண்ணிவெடி, மிதிவெடி, பொறிவெடிகள் என்பவற்றை வைப்பதும் அவ்விடத்தில் எதிரி வரும்போது ஏற்படும் இழப்புக்களை கண்காணிப்பதுமான கடும் பணிகளுடன் இவரது களமுனைக்காலம் நகர்ந்தது.\nசாந்தகுமாரி ஒரு நாள் களமுனைப்பகுதியில் மிதிவெடிகளை வைக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தபோது இரண்டு கைகளையும் மென்மையான துணியால் சுற்றி பந்தமாய் கட்டியிருந்தார். அவர் அருகில் சென்ற பொறுப்பாளர், “என்ன சாந்தகுமாரி கையில் காயமா” எனக் கேட்டபடி அருகில் வந்தார்.\n“ஒன்றும் இல்லையக்கா” என மழுப்ப முயன்ற சாந்தகுமாரியின் கைகளில் சுற்றப்பட்ட துணிப்பந்தத்தை அவர் விலக்கியபோது கைகள் இரண்டும் கொப்புளங்கள் போட்டு உடைத்திருந்தது தெரிந்தது. கவலையுடன் நோக்கிய பொறுப்பாளரிடம் “ஒன்றுமில்லையக்கா. கையில கொப்புளங்கள். துணியைச் சுற்றினால் வலிக்காது என்று துணியைச் சுற்றிவிட்டு வேலை செய்கின்றேன்” என்றார் தன் வழமையான சிரிப்புடன.\nதன் வேதனைகளைக்கூட களமுனைக் கடமைகளில் மறந்து சிரிக்கும் ஒரு போராளியாகவே இவர் இருந்தார். அத்துடன் இர��ில் வேவுக்கு சென்று எதிரியின் பகுதிக்கும், எமது பகுதிக்கும் இடைப்பட்ட பகுதியில் எதிரி வரக்கூடிய இடங்களில் வெடிக்கக்கூடிய மாதிரி சூழ்ச்சிப் பொறிகளை வைத்துவிட்டு வருவார். பகலில் தான் வைத்த சூழ்ச்சிப் பொறிகளை கண்காணிப்பு இடத்தில் இருந்து பார்த்தபடி இருப்பார். எதிரி முட்டுப்பட்டு வெடிப்பதை பார்த்துவிட்டுத்தான் உரிய இடத்திற்குத் திரும்புவார்.\nசூரியகதிர் – 02 முடிந்து படையணிகள் வன்னிக்கு வந்து ஓயாத அலைகள் – 01 நடைபெற்ற பின்னர் மீட்கப்பட்ட முல்லைத்தீவு பகுதிகளை சாந்தகுமாரியின் தலைமையிலான கண்ணிவெடி அணி கண்ணிவெடி, மிதிவெடிகளை பல நாட்களாக நின்று அகற்றியது. பின் சத்ஜெய 01, 02, 03 எதிர்ச்சமர்க்களங்களில் இவர்கள் விதைத்த ஜொனி மிதிவெடிகள் எதிரிக்கு கணிசமான இழப்புக்களை ஏற்படுத்தியிருந்தன. தொடர்ச்சியாக அயராது எம் போராட்டத்திற்கு அரும்பணி ஆற்றிக்கொண்டிருந்தார் சாந்தகுமாரி. களமுனைகளை தன் வீடாகவும் சண்டைகளை தன் வாழ்நாளாகவும் கொண்டவர்தான் சாந்தகுமாரி. இவர் சண்டைகளோடு மட்டும் அல்லாது குறும்புத்தனங்களும் செய்வார். வகுப்புக்கள் என்றால் ஈடுபாடு குறைவு. ஆயினும் ஒரு தடவை சொல்லிக் கொடுத்தால் மனதில் பதிய வைத்துவிடுவார். அப்போது எமதணிகள் கிளிநொச்சி காவலரண்பகுதிகளில் நின்றது. குறிப்பிட்ட எண்ணிக்கையிலான போராளிகளை பின்னணிக்கு எடுத்து படிப்பிப்பார்கள். அதில் இவரும் ஒருவர். வகுப்பு என அறிவித்த நேரத்திற்கு அரை மணிக்கு முன் எதிரியின் பகுதி மீது தாக்குதலை செய்வார். அவ வளவுதான், அலறித்துடித்து எதிரியானவன் எமது பகுதி மீது தொடர்ச்சியான எறிகணைத் தாக்குதலோடு துப்பாக்கிச்சூடும் நடத்துவான். இதனால் வகுப்புக்கள் நடைபெறாது. இப்படியாக இவர் செய்த குறும்பு வேலைகளால் தொடர்ந்து இரண்டு மூன்று நாட்கள் வகுப்புக்கள் நடைபெறவில்லை. இது எப்படியோ அப்பகுதியின் பொறுப்பாளருக்கு தெரிந்துவிட்டது. அதன்பின் சண்டை நடந்தாலும் வகுப்புக்கள் நடைபெறும் எனக் கூறிவிட்டார்.\nஒருநாள், அடுத்த வகுப்பில் பரீட்சை நடைபெறும் என ஆசிரியர் அறிவித்திருந்தார். இவரால் தப்ப முடியாத நிலை. பொறுப்பாளர் விடமாட்டார் என்பதற்காய் வகுப்புக்கு வந்தவர் இடையில் ஒருவருக்கும் தெரியாமல் ஜம்பு மரம் ஒன்றில் ஏறி ஒழிந்துவிட்டார். இவருடன் சென்ற போராளிகள் அனைவரும் இவரைத் தேடிவிட்டு பரீட்சை எழுதிவிட்டு திரும்பியபோது ஜம்பு மரத்திலிருந்து குதித்து, “அப்பாடா இப்பத்தான் நிம்மதி” என்றவாறு போராளிகளுடன் சேர்ந்து காவலரண்பகுதிக்கு சென்றார். எப்படியாவது குறும்புத்தனங்கள் செய்து படிக்காவிட்டாலும் பட்டறிவினால் திறம்படச் செய்வார். இவரைப் பொறுத்தளவில் பட்டறிவே மிகப்பெரிய ஆசானாய் இருந்தது.\nஇவ்வாறாக இவரின் களப்பணி எமது போரின் வளர்ச்சிக்கு பெரிதும் பங்காற்றியது. ஆனையிறவு-பரந்தன் சமரின் போது மிதிவெடிகளை விதைத்து எதிரிக்கு பெரிய இழப்பை இவரது அணி ஏற்படுத்தியிருந்து. ஜெயசிக்குறு களமுனையில் லெப்.கேணல் தட்சாயிணிக்கு தொலைத் தொடர்பாளராய் இருந்து கொண்டு எதிரியின் பகுதிக்குள் சென்று வேவு பார்த்து வருவதோடு, கண்ணிவெடிகளையும் விதைத்து வருவார்.\nஇவர் சிறந்த துப்பாக்கிச் சூட்டாளர் நன்றாக குறிதவறாது சுடுவார். ஒரு தடவை படையணியில் விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. அதில் மூன்று பரிசில்களையும் தேசியத்தலைவரின் கையால் பெற்றார். பின்னர் நடந்த போட்டிகளிலும் தனது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டார். படையணியில் துப்பாக்கிச் சூட்டுப் போட்டியில் அதிக பரிசில்களை பெற்றவர் என்ற பெருமை லெப்.கேணல் சாந்தகுமாரியையே சாரும்.\nஇவரின் திறமைகண்டு இவருக்கு 1996ம் ஆண்டு 40மில்லிமீற்றர் எறிகணை செலுத்தி கொடுக்கப்பட்டது. அதன்பின்னர் அவர் கிளிநொச்சி – பரந்தன் சமருக்கு சென்றபோது 01.02.1998 அன்று முதுகிலும் வாயிலும் காயப்பட்டும் தன் எறிகணை செலுத்தியைக் கைவிடவில்லை. சிகிச்சைக்காய் மருத்துவமனை சென்றவர், மீண்டும் உடற்காயங்கள் மாறும் முன்னே களமுனைக்கு வந்தார். ரணகோச சண்டைக் காலப்பகுதியில் தன் சொந்த மண்ணான மன்னாரில் குறிப்பிட்ட அணிகளுக்கு பொறுப்பாக நின்றார். பழக்கப்பட்ட இடம் ஆதலால் நீண்ட தூரம் காட்டுக்குள் சென்று வேவு பார்ப்பது என ஓயாது செயற்பட்டார்.\nஇவர் சிந்தனைகள் யாவும் சண்டையைப் பற்றியதாகவே இருக்கும். இவரது கனவுகளிலும் நினைவுகளிலும் சண்டைக்காட்சிகளே நிறைந்திருக்கும்.\nவோட்டஜெற் எதிர்ச் சண்டையில் தனது கள வேலைகளைத் திறம்படச் செய்தார் பின் 1999ம் ஆண்டு இறுதிக் காலப்பகுதியில் வெற்றிலைக்கேணிப் பகுதியில் நின்ற ஓயாத அலைகள்-03 சிறப்பு அணிகளுக்குப் பொறுப���பாய் நின்றார். அப்போது நத்தார் காலம். கிளிநொச்சியில் நின்ற எமது அணியினர் தொலைத் தொடர்புக் கருவியில் சாந்தகுமாரியிடம் “நத்தாருக்கு என்ன விசேடம்” எனக் கேட்க,\n“பெரிசா ஒண்டுமில்லை. எங்கட பகுதிக்கு நத்தார் கொண்டாட வாற விருந்தாளிகளுக்கு நல்ல விருந்து கொடுத்து, 50 பேற்ற பொடியை எடுத்து வைக்கவேணும் எண்டு முடிவு எடுத்திருக்கிறோம்” என்றார். உண்மையில் அவர் சொன்னதற்கேற்ப செயலிலும் காட்டினார்.\nஉலகமே ஆவலுடன் 2000ம் ஆண்டின் வரவிற்காய் காத்திருக்க இவரோ தனது அணியுடன் எதிரியின் வரவிற்காய் காத்திருந்தார்.\nஅந்தப் புதிய நூற்றாண்டின் முதல் நாளில் அவருக்கு அருமையான சண்டை வாய்ப்புக் கிடைத்தது. வெள்ளம் போல் வந்து எமது பகுதிக்குள் நுழைய எதிரி முயன்றபோது, இவரோடு நின்ற மேஜர் வேழினியின் அணி தனித்துவிட்டது. எதிரியோ அவர்களைச் சுற்றி வளைத்து விட்டான். இந்த இக்கட்டான நிலையிலும் இவர் ஒரு கணமும் பதட்டப்படாமல் தன் 40 மில்லி மீற்றரால் அடித்து எதிரியைச் சமாளித்தபடியே தொலைத் தொடர்புக் கருவியில் கட்டளைகளை வழங்கி எம்மவர்களை ஒருங்கிணைத்து எதிரியை அவ்விடத்தில் இருந்து முற்றாகத் துரத்தி, அங்கிருந்த கட்டளை மேலாளரோடு அணிகளையும் காப்பாற்றி எல்லோரது பாராட்டையும் பெற்றார். இதனால் எதிரியால் மேற்கொள்ளப்பட்ட பெரிய சுற்றி வளைப்புத் தாக்குதல் ஒன்று இவரது துணிகர செயற்பாட்டால் வெற்றிகரமாய் முறியடிக்கப்பட்டது. அத்தாக்குதலை முடித்துக் கொண்டு வன்னிக்கு வந்து தலைவரின் சிறப்பான பாராட்டையும் பரிசையும் பெற்றுக்கொண்டார்.\nஓயாத அலைகள் – 03 இன் கட்டம் 4ற்கான திட்டமிட்ட தாக்குதல் பயிற்சிகளை உடல் இயலாத நிலையிலும் ஊக்கத்துடன் எடுத்தார். பயிற்சி முடிந்ததும் வரலாற்றுச் சிறப்பு மிக்க குடாரப்பு தரையிறக்கச் சண்டைக்குச் சென்றார். தரையிறங்கிய அந்நாளே நெஞ்சில் காயப்பட்டு மருத்துவத்திற்காக வன்னிக்கு வந்தார். எப்போது காயம் மாறுமெனக் காத்திருந்து காயம் மாறியவுடன் அதே களமுனைக்குச் சென்றார்.\n2000ம் ஆண்டின் பிற்பகுதியில் நாகர்கோயில் முன்னணிக் காவலரண் பகுதியில் எமது அணிகளுக்கு முதன்மைப் பொறுப்பாளராக இருந்தார். இவர் ஒருபோதும் கட்டளைப் பீடத்தில் நின்றதில்லை. அடிக்கடி காவலரண் பகுதியைச் சுற்றி வருவதோடு காவலரண் வேலைகளையும் போராளிகளோடு சேர்ந்து செய்வார். அப்பகுதியில் போராளிகள் வேவுக்குச் சென்றால் அவர்கள் திரும்பி வரும்வரையும் கண்விழித்து அவர்கள் சென்ற பாதையருகே காத்திருப்பார். அவர்கள் திரும்பி வந்ததுமே தானும் உறங்கச் செல்வார்.\nஓயாதஅலைகள் – 04 திட்டமிட்ட தாக்குதலுக்கான பயிற்சி நடைபெற்றது. உடற் காயங்களால் இயலாத நிலையிலும் பயிற்சி முடித்து 05.10.2000 அன்று பகல் 1.00 மணிக்கு சண்டைக்கான அணிகள் இவரின் தலைமையில் இறங்கின. இவருக்கு அடுத்த பொறுப்பாளராக உள் நுழைந்து தாக்கிய மேஜர் வேழினியின் தொடர்பை எடுக்க முடியவில்லை. அவர் எதிரிக்கு நெருக்கமான எல்லைக்குள் கடுமையாய் தாக்குதலைத் தொடுத்தபடியிருந்தார். அவரைச் சந்திப்பதற்காக சிறு அணி ஒன்றுடன் சாந்தகுமாரி முன்னேறினார்.\nநாகர்கோயில் பகுதி சிறு சிறு பற்றைகளும் தென்னை, பனைகளும் இடையிடையே காணப்படுகின்ற வெட்டையான மணல் பிரதேசம் ஆகும். அப்படியான இடத்தில் எதிரியின் குண்டு மழை நடுவிலும் எமது அணிகள் விடாப்பிடியாக சமராடியபடி நகர்ந்து கொண்டிருந்தன. அந்தக் கணம் ஏன் வந்ததோ தெரியாது. வேழினியின் தொடர்பை எடுப்பதற்காய் சென்ற சாந்தகுமாரியை வேழினிக்காகப் பதுங்கி இருந்த எதிரியின் ரவைகள் பதம் பார்த்தன.\nமுதலாவது வேட்டில் நெஞ்சில் காயப்பட்டு எமது பகுதியை ஒரு கணம் திரும்பி பார்த்து விட்டு, அடுத்த வேட்டும் துளைத்ததில் நெஞ்சைப் பொத்தியபடி சரிந்தார். சாகும் வேளையிலும் கூட, “அடிச்சுக் கொண்டு இறங்குங்கோ, இறங்குங்கோ” என்று கத்தியபடி எதிரியின் பிடியில் உள்ள எமது பகுதியை மீட்கவேண்டும் என்ற ஓர்மமே முன்னோக்கி ஓடியபடி செங்குருதி சிந்த எம்மண்ணில் 06.10.2000 அன்று சரிந்தார். வித்துடலை மீட்கும்போது மூடியிருந்த இவரின் இரு கைகளிலும் எமது மண் இறுகப் பற்றப்பட்டிருந்தது.\nமன்னார் மண்ணுக்கே உரித்தான அவரது தமிழ் இரசிக்கத்தக்கது. தலைவர் கூட அவரின் உரையாடலை சிரித்தவாறே கேட்டுக்கொண்டிருந்திருக்கிறார்.\nஎமது விடுதலைப் போராட்டத்தில் மாபெரும் பணியாற்றிய லெப். கேணல் சாந்தகுமாரியின் இழப்பு எம் தேசத்திற்கு ஏற்பட்ட மாபெரும் இழப்பாகும்.\nஎல்லோருடனும் சிரித்துக் கதைக்கின்ற சாந்தகுமாரி இன்று எங்களோடு இல்லை. ஆனால் எதிரியைச் சிதறடிக்கின்ற சாந்தகுமாரிகள் எங்களோடேயே களமுனையில் நிற்கிறார்கள். ச��ந்தகுமாரியின் பெயரில் தயாரிக்கப்பட்ட கண்ணி வெடிகள் எதிரிகளின் கால்களோடு கதைபேசிக்கொண்டிருக்கின்றன.\nPrevious articleலெப். கேணல் நாயகன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nNext articleலெப். கேணல் அக்பர்.\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்\nதமிழீழத்தில் தலை சிறந்த பெண் போராளியான கப்டன் அக்கினோ... போராட்டம். .... இந்தச் சொல்லுக்குள் தான் எத்தனை விதமான உணர்ச்சி அலைகள் அடங்கி இருக்கின்றன.குடும்பம் என்ற சிறிய பரப்புக் குள் சில மனிதர்கள், சில உணர்வுகளென்று...\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்\nநீரிற் கரைந்த நெருப்பு லெப்.கேணல் ராஜசிங்கம்/ ராஜன்.\nநெடுஞ்சேரலாதன் - June 26, 2021 0\nகண்டி வீதியை ஊடறுத்திருந்த எமது பாதுக்காப்பு வியூகத்தை உடைத்து, எதிரி உட்புகுந்துவிட்டான். எமது போர்ப்பலத்தைச் சிதறடித்தவாறு எல்லா முனைகளாலும் எதிரி தாக்கினான். எமக்கு எவ்வகையிலும் சாதகமற்ற ‘மரணக்களமாய்’ மாறியிருந்தது அன்றைய களம். அன்று சித்திரை...\nலெப்.கேணல் பிரசாந்தன் வின்சன் ஜெயச்சந்திரன் தருமபுரம், கிளிநொச்சி வீரப்பிறப்பு: 07.07.1972 வீரச்சாவு: 25.05.1999 திருகோணமலை புல்மோட்டை கடற்பரப்பில் கடற்படையுடன் ஏற்பட்ட திடீர் மோதலில் வீரச்சாவு 1992 ஆம் ஆண்டு இயக்கத்தில் இணைந்துகொண்ட பிரசாந் கடற்புலிகளின் மூன்றாவது பயிற்சிப் பாசறையில் தனது ஆரம்பப் பயிற்சியை...\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள் நெடுஞ்சேரலாதன் - September 8, 2021 0\nதமிழீழத்தில் தலை சிறந்த பெண் போராளியான கப்டன் அக்கினோ... போராட்டம். .... இந்தச் சொல்லுக்குள் தான் எத்தனை விதமான உணர்ச்சி அலைகள் அடங்கி இருக்கின்றன.குடும்பம் என்ற சிறிய பரப்புக் குள் சில மனிதர்கள், சில உணர்வுகளென்று...\nலெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.\nமறவர்கள் வீரவணக்க நாள் நெடுஞ்சேரலாதன் - June 26, 2021 0\nலெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.1999 அன்று மன்னார் மாவட்டம் சன்னார் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட “ரணகோச” இராணுவ நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரின் போது...\nகடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார் உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nமறவர்கள் வீரவணக்க நாள் நெடுஞ்சேரலாதன் - June 26, 2021 0\nகடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார், கடற்கரும்புலி மேஜர் சூரன், கடற்கரும்புலி மேஜர் நல்லப்பன், கடற்கரும்புலி மேஜர் சந்தனா, கடற்கரும்புலி கப்டன் பாமினி , கடற்கரும்புலி கப்டன் இளமதி வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.2000 அன்று...\nநீரிற் கரைந்த நெருப்பு லெப்.கேணல் ராஜசிங்கம்/ ராஜன்.\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள் நெடுஞ்சேரலாதன் - June 26, 2021 0\nகண்டி வீதியை ஊடறுத்திருந்த எமது பாதுக்காப்பு வியூகத்தை உடைத்து, எதிரி உட்புகுந்துவிட்டான். எமது போர்ப்பலத்தைச் சிதறடித்தவாறு எல்லா முனைகளாலும் எதிரி தாக்கினான். எமக்கு எவ்வகையிலும் சாதகமற்ற ‘மரணக்களமாய்’ மாறியிருந்தது அன்றைய களம். அன்று சித்திரை...\nதமிழர்கள் தமது வரலாற்றினையும், சாதனைகளையும் பதிவு செய்து ஆவணப்படுத்தாமை எமக்குள்ள மிகப் பெரிய குறை பாடாகும் என தமிழீழக் கல்விக்கழகப்பொறுப்பாளர் வெ.இளங்குமரன் வல்வெட்டித்துறையில் நடைபெற்ற ஆழக்கடல் வென்றவர்கள் நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றும் போதுதெரிவித்தார் அதனடிப்படையில் வேர்கள் இணையமானது எமது தாயக விடுதலை போராட்டதின் விழுமியங்களை ஆவணப்படுத்தி உலகின் அனைத்து தேசங்களிலும் வாழும் எமது அன்புத்தமிழ் உறவுகளின் வாசல் நோக்கி விடுதலை தாகத்தை வீசுகிறோம்\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்77\nகாப்புரிமை ©தமிழீழஆவணக்காப்பகம் 2016- 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/sivaganga-district-youngsters-social-work-to-save-the-pond", "date_download": "2021-10-19T10:58:43Z", "digest": "sha1:C5UVGRYTY3Y4USTR5VUPB2UL2Y3HPMTP", "length": 19028, "nlines": 197, "source_domain": "www.vikatan.com", "title": "`குளத்தை அரசு தூர்வாரியது... கால்வாய நாங்க தூர்வாரிட்டோம்!' -அசத்தும் சிவகங்கை கிராம இளைஞர்கள் |sivaganga district youngsters social work to save the pond - Vikatan", "raw_content": "\nசிறையிலிருந்தே சாராய வியாபாரி உள்ளாட்சித் தேர்தலில் வென்றது எப்படி\n`உணவு, மொழி ஒவ்வொரு மாநிலத்தின், கலாசாரத்தின் இரண்டு அடித்தளங்கள்'- வருத்தம் தெரிவித்த ஜொமேட்டோ\nதூய்மைப்பணியாளர்களை டூருக்கு அழைத்துச் சென்று மகிழ்வித்த டிராவல்ஸ் உரிமையாளர்... குவியும் பாராட்டு\nகுமரியில் கொட்டித் தீர்த்த கனமழை; வெள்ளத்தில் சிக்கி பலியான 6 மாத யானைக்குட்டி\nகரம் கொடுத்த விகடன்; கண்ணீர் துடைத்த வேலூர் ஆட்சியர்; சுகந்திக்கு இலவச வீட்டுமனையும் கிடைத்தது\n`அவர்கள் பிரச்னைகளை சிறு வயதிலிருந்து பார்க்கிறேன்' - பழங்குடியினர் நல ஆணைய உறுப்பினராகும் லீலாவதி\n`சொகுசு கார் முதல் தண்ணீர் தொட்டி வரை' - விஜயபாஸ்கர் மாமனார் வீட்டை சல்லடை போட்ட அதிகாரிகள்\n``எப்பவும் சந்தோஷமா இருப்பேன்; அதான் ரகசியம்\" - 100-வது பிறந்தநாள் கொண்டாடிய பாட்டி\nஅடிதடிக்கு ரூ.2,000; லாட்டரி விற்பனைக்கு ரூ.1 லட்சம்-லஞ்சப் பட்டியலை வெளியிட்டு எச்சரித்த காவல்துறை\nமயிலாடுதுறை: சொந்த செலவில் வாகனத்தில் ஸ்மார்ட் டிவி... வீடுகளுக்கே சென்று பாடம் நடத்தும் ஆசிரியர்\nசிறையிலிருந்தே சாராய வியாபாரி உள்ளாட்சித் தேர்தலில் வென்றது எப்படி\n`உணவு, மொழி ஒவ்வொரு மாநிலத்தின், கலாசாரத்தின் இரண்டு அடித்தளங்கள்'- வருத்தம் தெரிவித்த ஜொமேட்டோ\nதூய்மைப்பணியாளர்களை டூருக்கு அழைத்துச் சென்று மகிழ்வித்த டிராவல்ஸ் உரிமையாளர்... குவியும் பாராட்டு\nகுமரியில் கொட்டித் தீர்த்த கனமழை; வெள்ளத்தில் சிக்கி பலியான 6 மாத யானைக்குட்டி\nகரம் கொடுத்த விகடன்; கண்ணீர் துடைத்த வேலூர் ஆட்சியர்; சுகந்திக்கு இலவச வீட்டுமனையும் கிடைத்தது\n`அவர்கள் பிரச்னைகளை சிறு வயதிலிருந்து பார்க்கிறேன்' - பழங்குடியினர் நல ஆணைய உறுப்பினராகும் லீலாவதி\n`சொகுசு கார் முதல் தண்ணீர் தொட்டி வரை' - விஜயபாஸ்கர் மாமனார் வீட்டை சல்லடை போட்ட அதிகாரிகள்\n``எப்பவும் சந்தோஷமா இருப்பேன்; அதான் ரகசியம்\" - 100-வது பிறந்தநாள் கொண்டாடிய பாட்டி\nஅடிதடிக்கு ரூ.2,000; லாட்டரி விற்பனைக்கு ரூ.1 லட்சம்-லஞ்சப் பட்டியலை வெளியிட்டு எச்சரித்த காவல்துறை\nமயிலாடுதுறை: சொந்த செலவில் வாகனத்தில் ஸ்மார்ட் டிவி... வீடுகளுக்கே சென்று பாடம் நடத்தும் ஆசிரியர்\n`குளத்தை அரசு தூர்வாரியது... கால்வாய நாங்க தூர்வாரிட்டோம்' -அசத்தும் சிவகங்கை கிராம இளைஞர்கள்\nஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்\nகுளம் இருந்தும் அதற்கு நீர்ப் பாதை இல்லாமல் இருந்ததை தற்போது நாங்கள் கொண்டுவந்துவிட்டோம். இதனால் பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அரசு குளத்தைத் தூர்வாரியது, நாங்கள் வரத்துக் கால்வாயை தூர்வாரிவிட்டோம்.\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்\nசிவகங்கை மாவட்டத்தில், பெரியகோட்டையை அடுத்த தெக்கூர் கிராமம் ஒரு முன்மாதிரியான கிராமமாக விளங்குகிறது. வ.உ.சி இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் தொடர்ந்து சில வருடங்க���ாக ஆகச்சிறந்த சமூகப் பணிகளை இக் கிராமம் செய்துவருகிறது. கடந்த உள்ளாட்சித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் 98 % ஓட்டுக்குப் பணம் கொடுப்பதைத் தடுக்கும் விதமாகக் களப்பணி ஆற்றி, சமூக ஆர்வலர்களின் பாராட்டுகளைப் பெற்றது.\nமரக்கன்றுகள் நடுவது, குடிநீர் வசதி அளிப்பது, மகளிர் அமைப்புகளுக்கு இலவச தொழில் பயிற்சி கொடுப்பது, இலவச மருத்துவ முகாம், பிளாஸ்டிக் ஒழிப்பு, கஜா நிவாரணப் பணி என பல சமுதாயப் பணிகளைச் செய்துவருகிறது. இதனால் மானாமதுரை ஒன்றியத்தில் சிறந்த நற்பணி மன்ற விருதைப் பெற்றது. இப்படி பல்வேறு செயல்களால் கிராமத்தின் அடிப்படைத் தேவைகளில் தன்னிறைவு அடைந்துள்ளது.\nகொரோனா தொற்று ஆரம்பித்த சமயம் முதல் தற்போது வரை நோய் தடுப்புப் பணி, விழிப்புணர்வுப் பணி என அனிச்சையாக அசத்தியது. இந்நிலையில், வ.உ.சி இளைஞர் மன்றம் பல வருடங்களாக சுத்தம் செய்யமுடியாமல் கிடந்த குளத்தின் வரத்துக் கால்வாயை ஜே.சி.பி மூலம் சுத்தம் செய்து கிராமத்தின் குளத்திற்கு உயிர்கொடுத்துள்ளது.\nஇதுகுறித்து வ.உ.சி மன்ற இளைஞர்கள்,\" எங்கள் கிராமத்தில் பிரதானமாக 2 குளங்கள் நிலத்தடி நீரை மேம்படுத்திவருகிறது. இதில் முக்கியமாக, கைலாசநாதர் சிவன் கோயில் குளம் பயனற்றுக் கிடந்தது. குளம் இருந்தும் தண்ணீர் வந்து சேரவில்லை. இந்நிலையில், அதற்கு நீரைக் கொண்டுவந்து சேர்க்கும் விதமாக சுமார் அரை கிலோ மீட்டர் இருந்த வரத்துக்கால்வாயை மேம்படுத்தி, சாதித்துக் காட்டியுள்ளோம். சிவன் கோயில்குளம் ஒரு காலத்தில் குடிநீர் குளமாக விளங்கியது.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.\nசுற்றுச்சூழல் மாற்றத்தால் நீர்ப்பிடிப்புக் குளமாக மட்டும் மாறியது. இந்நிலையில், இந்தக் குளத்திற்கு வரும் வரத்துக்கால்வாய் சிமென்ட் மூலம் கட்டப்பட்டிருந்தது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளதென மண்கள் கொட்டப்பட்டு கால்வாய் அடைக்கப்பட்டது. சிமென்ட் கால்வாய் பொதுமக்களால் சுத்தம் செய்யமுடியாத அளவிற்குக் கடினமாக மாறியதால், அந்த நீர்வழிப்பாதை முழுமையாக முடங்கிவிட்டது. இந்நிலையில், குளம் அரசு சார்பாக தூர்வாரப்பட்டது. ஆனால், குளத்திற்கு வரும் கால்வாய் அடைபட்டதால், அதை ஜே.சி.பி மூலம் சுத்தம் செய்து நீர்வரத்துக்கு மண்கால்வாயாக மாற்றியுள்ளோம்.\nஇதனால் தொடர்ந்து நீர்வழிப்பாதையைப் பாதுகாக்க முடியும் என்ற நம்பிக்கையை விதைத்துள்ளோம். குளம் இருந்தும் அதற்கு நீர்ப்பாதை இல்லாமல் இருந்ததை தற்போது நாங்கள் கொண்டு வந்துவிட்டோம். இதனால் பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அரசு, குளத்தைத் தூர்வாரியது... நாங்கள் வரத்துக்கால்வாயைத் தூர்வாரிவிட்டோம். குளத்திற்கு மழைநீரைச் சேமிக்கும் பணி முடிந்துவிட்டது. ஆனால், எங்கள் பணியை ஊக்கப்படுத்தும் விதமாக கண்மாயிலிருந்து வரும் நீண்ட தூர கால்வாயை அரசு சரி செய்து கொடுக்க வேண்டும். அது எங்களை மேலும் ஊக்கப்படுத்தி பணி செய்யத் தூண்டும்” என கோரிக்கை விடுத்தனர்\nகுளத்திற்கு வரும் நீர்வழிப்பாதையைச் சரிசெய்து குளத்திற்கு உயிர்கொடுத்த இளைஞர்களுக்கு பாராட்டுக்கள் குவிகிறது.\nதெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism\nமதுரை அமெரிக்கன் கல்லூரியில் bsc ( vis-com), 2014 - 15 விகடனில் மாணவ பத்திரிக்கையாளராக பயிற்சிபெற்று நிருபர் பணியில் இணைந்தேன். மதுரை மற்றும் சிவகங்கை செய்திகள் என்னுடைய கவனத்திற்கு கொண்டுவரலாம். எனக்கு அரசுப் பள்ளிகள், கிராமிய கலைகள், இயற்கை மீதும் அதிக ஆர்வம் உள்ளது.\nஇதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://neervai.com/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5-13/", "date_download": "2021-10-19T13:06:55Z", "digest": "sha1:GYQIF5AC6IKSFADX56WI4R2IXIRRNO7B", "length": 10275, "nlines": 78, "source_domain": "neervai.com", "title": "நீர்வேலி கந்தசுவாமி கோவில் வளைவு திறப்பு விழா – Neervai Inayam", "raw_content": "\nநீர்வேலி அத்தியார் இந்துக் கல்லுரி\nநீர்வேலி கந்தசுவாமி கோயில் / புகைப்படங்கள்\nநீர்வேலி கந்தசுவாமி கோவில் வளைவு திறப்பு விழா\nநீர்வேலி கந்தசுவாமி கோவில் வளைவு திறப்பு விழா 31.1.2017 அன்று தைப்புச நன்நாளில் காலை 8.00 மணியளவில் கலாநிதி ஆறுதிருமுருகன் அவர்களால் திறந்துவைக்கப்படவுள்ளது. வளைவு அமைப்பதற்கான உபசரணையினை நீர்வேலி தெற்கு நாகலிங்கம் சண்முகநாதன் (CTB) குடும்பத்தினர் எற்றிருந்தனர்.\nநீர்வேலி கந்தசுவாமி கோயிலில் நடைபெற்ற ஸ்கந்த மஹாத்மிய மஹா ஹோமமும் ஸ்ஹந்த சப்தசதி நூல் வெளியீடும்\nஇலங்கையில் முதல் தடவையாக நீர்வேலி கந்தசுவாமி கோயிலில் நடைபெறவுள்ள ஸ்கந்த மஹாத்மிய மஹா ஹோமமும் ஸ்ஹந்த சப்தசதி நூல் வெளியீடும்\nநீர்வேலி கந்தசுவாமி கோயில் தைப்பூச நிகழ்வுகள் (மணவாளக்கோல விழா – 2020)\nPrevious Article வலி கிழக்கு தென்பகுதி ப.நோ.கூ.சங்கம் – நீர்வேலி நடாத்தும் மாணவர் கௌரவிப்பு\nNext Article நீர்வேலி கந்தசுவாமி கோவில் வளைவு திறப்பு விழா\nவலிகாமம் கிழக்குப் பகுதியில் பல பாகங்களிலுமிருந்து பாய்ந்து வருகின்ற மழை நீரைத் தன்னுள்ளடக்கி அதனைத் தனக்கு நீர் நிலையாலான வேலியாக்கி தன் கிழக் கெல்லையாக அமைத்துக் கொண்டதால் ‘நீர்வேலி’ என்னும் பெயரைக் கொண்டதே இந்த நீர்வேலிக் கிராமம்.\nதுறை சார்ந்த செய்திகள் Select Category Foreign Assosiations (28) அத்தியார் இந்துக் கல்லூரி (44) அபிவிருத்தி (11) ஒல்லை வைரவர் கோவில் (2) கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயம் (60) காமாட்சி அம்பாள் கோவில் (1) காளி கோயில் (1) சேவைகள் (3) நீர்வேலி அரசகேசரிப் பிள்ளையார் (71) நீர்வேலி இ.த.க பாடசாலை (4) நீர்வேலி கந்தசுவாமி கோயில் (135) நீர்வேலி சி. சி. த. க பாடசாலை (5) நீர்வேலி செல்லக் கதிர்காம கோவில் (16) நீர்வேலி தெற்கு பேச்சி அம்மன் (7) நீர்வேலி றோ.க.த.க பாடசாலை (26) நீர்வேலி வீரபத்திரர் ஆலயம் (39) நீர்வேலி ஸ்ரீ கணேஷா முன்பள்ளி (22) நீர்வேலி ஸ்ரீ செல்லக்கதிர்காம சுவாமி அறநெறி பாடசாலை (3) நூல் வெளியீடு (15) பாராட்டு விழா (15) பாலர் பகல் விடுதி (13) புகைப்படங்கள் (175) மாதர் சங்கம் (5) வாய்கால் தரவை விநாயகர் கோவில் (22) வாய்க்காற்தரவைப்பிள்ளையார் (3) விளையாட்டு (2) வீதி திருத்தப்பணிகள் (2)\nவாய்க்கால் தரவை பிள்ளையார் பற்றிய செய்திகள்\nஅரசகேசரிப் பிள்ளையார் பற்றிய செய்திகள்\nநீர்வைக் கந்தன் பற்றிய செய்திகள்\nசெல்லக் கதிர்காம கோயில் பற்றிய செய்திகள்\nமூத்த விநாயகரின் வரம் தரும் அருளோசை\nஅத்தியார் இந்துக் கல்லூரி பற்றிய செய்திகள்\nகரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயம் பற்றிய செய்திகள்\nநீர்வேலி றோ.க.த.க பாடசாலை பற்றிய செய்திகள்\nநீர்வேலி சீ .சீ.த.க பாடசாலை பற்றிய செய்திகள்\nநீர்வேலி தெற்கு பாலர் பகல்விடுதி\nநீர்வேலி நலன்புரிச் சங்கம் கனடா\nதுறை சார்ந்த செய்திகள் Select Category Foreign Assosiations (28) அத்தியார் இந்துக் கல்லூரி (44) அபிவிருத்தி (11) ஒல்லை வைரவர் கோவில் (2) கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயம் (60) காமாட்சி அம்பாள் கோவில் (1) காளி கோயில் (1) சேவைகள் (3) நீர்வேலி அரசகேசரிப் பிள்ளையார் (71) நீர்வேலி இ.த.க பாடசாலை (4) நீர்வேலி கந்தசுவாமி கோயில் (135) நீர்வேலி சி. சி. த. க பாடசாலை (5) நீர்வேலி செல்லக் கதிர்காம கோவில் (16) நீர்வேலி தெற்கு பேச்சி அம்மன் (7) நீர்வேலி றோ.க.த.க பாடசாலை (26) நீர்வேலி வீரபத்திரர் ஆலயம் (39) நீர்வேலி ஸ்ரீ கணேஷா முன்பள்ளி (22) நீர்வேலி ஸ்ரீ செல்லக்கதிர்காம சுவாமி அறநெறி பாடசாலை (3) நூல் வெளியீடு (15) பாராட்டு விழா (15) பாலர் பகல் விடுதி (13) புகைப்படங்கள் (175) மாதர் சங்கம் (5) வாய்கால் தரவை விநாயகர் கோவில் (22) வாய்க்காற்தரவைப்பிள்ளையார் (3) விளையாட்டு (2) வீதி திருத்தப்பணிகள் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfox.com/2021/10/14/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-10-19T12:51:55Z", "digest": "sha1:OLHUELQMDPF3ZP35PKEY6Z67AYPBKQQS", "length": 14915, "nlines": 117, "source_domain": "www.tamilfox.com", "title": "இலங்கையில் இந்திய மீனவர்கள் கைதுநீண்ட இடைவெளிக்கு பின்னர் கைது – Tamil Fox – Tamil News – Tamil Video News – Android Tamil news", "raw_content": "\nஇலங்கையில் இந்திய மீனவர்கள் கைதுநீண்ட இடைவெளிக்கு பின்னர் கைது\nஇலங்கையில் இந்திய மீனவர்கள் கைதுநீண்ட இடைவெளிக்கு பின்னர் கைது\nநீண்ட இடைவெளிக்கு பின்னர், இலங்கையில் இந்திய மீனவர்கள் கைது\nஇலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் மிக நீண்ட இடைவெளிக்கு பின்னர் முதல் தடவையாக கைது செய்யப்பட்டுள்ளனர்.\nநாட்டின் கிழக்கு கடற்பரப்பில் வைத்து, இந்திய மீனவர்கள் நேற்றிரவு கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்தது.\nவெற்றிலைகேணி கடற்பரப்பில் 2 மீன்பிடி படகுகளில் சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 23 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nநாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்பேட்டையை சேர்ந்த 23 மீனவர்களையும் அவர்களது இரண்டு மீன்பிடி விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் கைது செய்து காரைநகர் கடற்படை முகாமில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nநாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று காலை சுமார் 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடி அனுமதி சீட்டு பெற்று மீன்பிட��க்க கடலுக்குள் சென்றனர்.\nஇலங்கை கடல் பகுதியில் இந்திய மீனவர்களை அனுமதிக்க டக்ளஸ் தேவானந்தா புதிய யோசனை\n“இங்க மீன் இருந்தா ஏன் இலங்கை கடலுக்கு போறோம்” – உயிரை பணயம் வைக்கும் தமிழக மீனவர்கள்\nஇந்நிலையில் அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த சிவகுமார் மற்றும்; சிவனேசன் ஆகியோருக்குச் சொந்தமான இரண்டு மீன்பிடி விசைப்படகுள்; நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக வழக்கு பதிவு செய்து இரண்டு படகுகளையும் அதிலிருந்த அகத்தியன், சிவராஜ், சிவசக்தி, சம்பத், கந்தன், முருகன், உள்ளிட்ட 23 மீனவர்களையும் கைது செய்து இலங்கை காரைநகர் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றனர்.\nஇலங்கையில் இந்திய மீனவர்கள் கைது\nபின்னர் மீனவர்களின் படகுகளை மயிலிட்டி துறைமுகத்தில் நிறுத்தினர். சிறைப்பிடிக்கப்பட்ட 23 மீனவர்களுக்கும் முதல் கட்டமாக கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பரிசோதனையின் முடிவு கிடைக்கும் வரை 14 நாட்கள் மீனவர்களை தனிமைப்படுத்த யாழ்பாணம் மீன் வளத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.\nயாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவர் குறித்த அறிக்கையை மட்டும் ஊர்காவற்த்துறை நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்ய இருக்கின்றனர்.\nஇலங்கையில் கோவிட் தொற்றின் 3வது அலை கடந்த ஏப்ரல் மாதம் பரவ ஆரம்பித்திருந்தது.\nஇந்த நிலையில், இலங்கை கடற்பரப்பில் இறுதியாக கடந்த மார்ச் மாதமே இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கேப்டன் இந்திக்க டி சில்வா, பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.\nஇவ்வாறு கடந்த காலங்களில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அனைத்து இந்திய மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.\nகடந்த மார்ச் மாதத்திற்கு பின்னர், நேற்றைய தினமே இந்திய மீனவர்கள் முதல்தடவையாக கைது செய்யப்பட்டதாகவும் கடற்படை பேச்சாளர் குறிப்பிட்டார்.\nஇதேவேளை, கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் சுகாதார நடைமுறைகளின் கீழ் நாட்டிற்குள் அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கேப்டன் இந்திக்க டி சில்வா தெரிவித்தார்.\nகடற்படை ஊடகப் ��ேச்சாளர் கேப்டன் இந்திக்க டி சில்வா\nகைப்பற்றப்பட்ட படகுகள் அல்லது கடற்படையினால் நடத்திச் செல்லப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களில், குறித்த மீனவர்கள் தனிமைப்படுத்தப்படவுள்ளனர்.\nமீனவர்களை தனிமைப்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகள், சுகாதார தரப்புடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவிக்கின்றார்.\nசுகாதார பிரிவின் ஆலோசனைகளுக்கு அமைய, மீனவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, தனிமைப்படுத்தல் காலம் முடிவடைந்த பின்னரே அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுக்க கடற்படை நடவடிக்கை எடுக்கப்படும்.\nஇதேவேளை, கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் நாட்டிற்குள் அழைத்து வரப்படாமையினால், அவர் இந்தியாவின் எந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது இதுவரை கண்டறியப்படவில்லை.\nஇந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கடற்படை முன்னெடுத்து வருகின்றது.\nஉலகளவில் கணவர்களை காட்டிலும் மனைவிகள் குறைவாக பணம் ஈட்டுவது ஏன்\nகடைசி ஓவரில் கைமாறிய வெற்றி: கோப்பையை தவறவிட்ட டெல்லி அணி; சென்னையுடன் மோதும் கொல்கத்தா அணி\nஎச்சில் துப்புவதால் வரும் கறைகளை நீக்க இந்திய ரயில்வே செய்யும் செலவு எத்தனை கோடி\nமேனகா காந்தி தொடர்ந்த சாதாரண வழக்கு, இந்தியாவில் ஒரு முக்கிய வழக்கானது எப்படி\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nfishermen tamilnadu sri lanka naval nagai mayladuthurai 23 fishermen மீனவர்கள் தமிழக மீனவர்கள் நாகை மயிலாடுதுறை சிறைபிடிப்பு இலங்கை கடற்படையினர்\nபறவைகள் சரணாலயமாகுமா, நஞ்சராயன் குளம்\nதமிழில் வெளியாகும் நயன்தாராவின் ‘நிழல்’\nகன்னியாகுமரி மழை பாதிப்பு; உடனடி நிவாரணம் வழங்க நடவடிக்கை: அமைச்சர்கள் குழு உறுதி\nஉத்தரகாண்ட் மழை, வெள்ளம்: பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு\nஉள்நாட்டில் சட்ட அந்தஸ்தைப் பெறுங்கள்; சர்வதேச அங்கீகாரம் கிடைக்கும்: தலிபான்களுக்கு ஹமீது கர்சாய் அறிவுரை\nவெள்ளிக்கிழமை முதல் பப்ஜி மொபைல், லைட் இந்தியாவில் வேலை செய்யாது\nஎதற்கும் அஞ்ச மாட்டோம்: ஈபிஎஸ் பொளேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newsguru.news/s21-fe-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87/", "date_download": "2021-10-19T12:37:29Z", "digest": "sha1:HE2VLHFUNV3HX44FNIC2WYIBBG6N45MU", "length": 7258, "nlines": 89, "source_domain": "newsguru.news", "title": "S21 FE மாடலையும் கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வில் அறிமுகம் - நியூஸ் குரு - நியூஸ் குரு", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, அக்டோபர் 19, 2021 | எங்கள் மொபைல் ஆப்-ஐ பதிவிறக்கவும்\nHome அறிவியல் & தொழில்நுட்பம் S21 FE மாடலையும் கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வில் அறிமுகம்\nS21 FE மாடலையும் கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வில் அறிமுகம்\nசாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி இசட் போல்டு 3 மற்றும் கேலக்ஸி இசட் ப்ளிப் 3 மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாத வாக்கில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதற்கான அறிமுக நிகழ்வு ஆகஸ்ட் 3 ஆம் தேதி நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.\nஇந்த நிலையில், இரண்டு புதிய சாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களும் ஆகஸ்ட் 27 ஆம் தேதி விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது. மேலும் கேலக்ஸி இசட் போல்டு 3 அன்டர்-டிஸ்ப்ளே கேமரா கொண்ட முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் என்ற பெருமையை பெறும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.\nமுன்னதாக கேலக்ஸி S21 FE மாடலையும் கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வில் அறிமுகம் செய்ய சாம்சங் திட்டமிட்டு பின் அதனை மாற்றி இருப்பதாக கொரியா செய்தி நிறுவனங்கள் கூறுகின்றனர்.\nடி20 கிரிக்கெட் போட்டி இந்தியா-பாகிஸ்தான் போட்டி நடக்குமா\nஅண்டை நாடுகளில் இந்துக்கள் மீது தாக்குதல் – உலக நாடுகள் கண்டிக்கட்டும்\n இன்று தலித் தொழிலாளி கொடூர கொலை\nடி20 கிரிக்கெட் போட்டி இந்தியா-பாகிஸ்தான் போட்டி நடக்குமா\nஅண்டை நாடுகளில் இந்துக்கள் மீது தாக்குதல் – உலக நாடுகள் கண்டிக்கட்டும்\n இன்று தலித் தொழிலாளி கொடூர கொலை\nமனித குலத்தின் பல்வேறு பிரச்சனைகளுக்கு பாரதமே தீர்வு தரமுடியும் -ஆர்.எஸ்.எஸ் தலைவர் டாக்டர்.மோகன்பாகவத்\nநியூஸ் குரு ஒரு ஆன்லைன் செய்தி தளமாகும். நாங்கள் முக்கியமாக பிராந்திய அரசியல், கலாச்சாரம் மற்றும் பொருளாதாரத்தில் கவனம் செலுத்துகிறோம். கோயம்புத்தூரை மையமாகக் கொண்ட இந்த அமைப்பு, உண்மைகளால் இயக்கப்படும் ஊடக கலாச்சாரத்தையும், முக்கியத்துவம் வாய்ந்த கருத்துகளையும் வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.\nஅரவிந்தன் நீலகண்டன் - பிப்ரவரி 27, 2021 0", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://timestampnews.com/the-government-of-tamil-nadu-has-paid-rs-1-crore-to-the-family-of-wilson-who-was-shot-dead/1616/", "date_download": "2021-10-19T13:16:54Z", "digest": "sha1:JK4LZXJ2PA56MXZJZTYSS7C4IIBWW665", "length": 6057, "nlines": 89, "source_domain": "timestampnews.com", "title": "சுட்டுக் கொல்லப்பட்ட வில்சனின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் வழங்கிய தமிழக அரசு – Timestamp News", "raw_content": "\nசுட்டுக் கொல்லப்பட்ட வில்சனின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் வழங்கிய தமிழக அரசு\nகன்னியாகுமரி மாவட்டத்தில் கேரள எல்லைப்பகுதியான களியக்காவிளையில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த வில்சன் என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இரண்டு பேரால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். அப்போது மக்கள் தகவல் தெரிந்ததை அடுத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் வில்சனின் தலை, மார்பு ஆகிய பகுதிகளில் குண்டு பாய்ந்தது தெரியவந்தது. அத்துடன் உடலில் பல இடங்களில் கத்திக்குத்து காயங்களும் இருந்தன.\nஇந்நிலையில் இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட அப்துல் சமிம், தவ்பிக் ஆகிய இருவரையும் கண்டுபிடித்து தருபவருக்கு ஏழு லட்சம் சன்மானம் வழங்கப்படும் என காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.\nஇதனிடையே தமிழக அரசால் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வில்சன் குடும்பத்திற்கு ஒரு கோடி நிவாரணம் அளிப்பதாக அறிவித்தார். இதனிடையே இன்று காலை சென்னை தலைமைச் செயலகத்தில் வில்சனின் மனைவி மற்றும் இரண்டு மகளிடம் ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி வழங்கினார்.\nPrevious Previous post: பட்டதாரிகளுக்கு ஒரு நல்வாய்ப்பு… மின் உற்பத்தி பகிர்மானக் கழகத்தில் 2,400 வேலைகள்\nNext Next post: டெல்லி பெண்ணை கடத்தி பாலியல் வன்புணர்வு செய்த ஐவரில் நால்வருக்கு ஆயுள் தண்டனை\nதூத்துக்குடி மாவட்ட காவல்துறையில் உள்ள நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள்- மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் ஆய்வு.\nதமிழக மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நல்வாழ்வு சங்கத்தின் சார்பில் கொரோனா பணிகள்\nதூத்துக்குடி 17வது வார்டு பொதுமக்கள் சார்பில் தெரு மின் விளக்கு, சாலை வசதி மற்றும் குடிநீர் குழாய் அமைத்திட வேண்டி கோரிக்கை மனு\nதிருச்செந்தூா் கோயில் கும்பாபிஷேகம்: முதல்வா் விரைவில் அறிவிப்பாா்\nதூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அங்கன்வாடி மைய கட்டிடம் – அமைச்சர் கீதாஜீவன் அடிக்���ல் நாட்டினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pustaka.co.in/home/author/ks-ramanaa", "date_download": "2021-10-19T13:05:22Z", "digest": "sha1:IX4IM3LOIBHPFBMB7PE7YPVMZIE5AMXR", "length": 3060, "nlines": 118, "source_domain": "www.pustaka.co.in", "title": "K.S.Ramanaa Tamil Novels | Tamil eBooks Online | Pustaka", "raw_content": "\nஇவர், முதுகலைப் பட்டம் பெற்று வழக்குறைஞராக உள்ளார். இவர் எழுதிய சமூக நோக்குள்ள நாடகங்கள் அகில இந்திய வானொலி நிலையம் - சென்னை, கோவை, திருச்சி ஆகியவற்றில் ஒலிபரப்பப்பட்டுள்ளது. இதுவரை கதை, கவிதை, நாடகம், கட்டுரை என 14 நூல்கள் எழுதியுள்ளார். தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் வழங்கிய 'சிறந்த நாடக விருது', பி.ஆர்.ஜி.நாகப்பன் ராஜம்மாள் அறக்கட்டளை வழங்கிய 'இலக்கியச் சுடர்' விருது, தமிழ்ப் படைப்பாளர்கள் சங்கம் வழங்கிய ‘பாவேந்தர் நெறிச்செம்மல் விருது' உள்ளிட்ட பல விருதுகள் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.thaaiman.com/2021/01/90.html", "date_download": "2021-10-19T11:52:30Z", "digest": "sha1:CNADO4PDYIMBAU7A5K4464BQX7RTWO3N", "length": 3874, "nlines": 66, "source_domain": "www.thaaiman.com", "title": "90 வயது முதியவர் வீட்டில் துப்பாக்கி முனையில் கொள்ளை - பெருந்தொகைப் பணம் கொள்ளை!! - THAAIMAN", "raw_content": "\nHome / Unlabelled / 90 வயது முதியவர் வீட்டில் துப்பாக்கி முனையில் கொள்ளை - பெருந்தொகைப் பணம் கொள்ளை\n90 வயது முதியவர் வீட்டில் துப்பாக்கி முனையில் கொள்ளை - பெருந்தொகைப் பணம் கொள்ளை\nAsnières-sur-Seine (Hauts-de-Seine) இல் வசிக்கும் 90 வயதுடைய முதியவர் வீட்டில் கொள்ளை நடந்துள்ளது. 50.000€ பெறுமதியான பணமும் நகையும் கொள்ளையிடப்பட்டுள்ளன.\nமுகமூடி அணிந்த இரு கொள்ளையர்கள் இரண்டு தானியங்கிப் பிஸ்டல்களுடன், உள் நுழைந்து, முதியவரைக் கட்டி வைத்து விட்டு கொள்ளையை நடாத்தி உள்ளனர். முதியவரைப் பலமாகத் தாக்கி, நிலத்திலும் வீழ்த்தி விட்டுள்ளனர்.\nஅவரது பாதுகாப்பு இரும்புப் பெட்டகத்தினை (coffre-fort) கொள்ளையர்கள் லாவமாகத் திறந்துள்ளனர். அதிலிருந்த 50.000€ பெறுமதியான பணம் மற்றும் நகை உட்பட அனைத்தும் கொள்ளையிடப்பட்டுள்ளன.\nமுதியவரின் சிற்றுந்தையும் திருடி, அதிலேயே தப்பியும் சென்றுள்ளனர்.\nபிராந்திய விசாரணைக் காவற்துறையினரான SDPJ 92 (service départemental de la police judiciaire கொள்ளையர்களைத் தேடும் முயற்சியில் திவிரமாகக் களம் இறங்கி உள்ளனர்.\nவீடுகளில் உள்ள முதியவர்கள், தனியாக இருக்கும் சமயங்களில், மிக அவதானமாக, யார் என்று அறிந்தே கத���ைத் திறப்பது பாதுகாப்பானது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2014/10/blog-post_25.html", "date_download": "2021-10-19T13:08:19Z", "digest": "sha1:74TBLEICFJUNFEAEIAEO4FLHPIFQCMCS", "length": 7646, "nlines": 146, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: புயலுக்கு பெயர் - ஹூட் ஹூட்", "raw_content": "\nபுயலுக்கு பெயர் - ஹூட் ஹூட்\nபுயல் சின்னம் உருவாகும் போதெல்லாம்,அதற்கு ஒரு பெயர் சூட்டப்படுவது பற்றி அனைவரும் அறிந்திருப்பார்கள். அவற்றிற்கு எவ்வாறு பெயர் சூட்டப்படுகிறது\nஒரே நேரத்தில் இரண்டு அல்லது மூன்று புயல்கள் உருவானால் குழப்பம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதால் தான் மனிதர்களைப் போலவே புயலுக்கு பெயர் வைக்கும் முறை உருவானது.\n20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஆஸ்திரேலியா தான் இந்தப் பழக்கத்தைமுதலில் தொடங்கி வைத்தது. ஆஸ்திரேலிய வானிலை ஆய்வு மையத்தினர் மக்களிடம்செல்வாக்கு குறைந்த அரசியல் வாதிகளின் பெயர்களை புயல்களுக்கு சூட்டியுள்ளனர். பின்னர் 1954-ஆம் ஆண்டு இந்தப் பழக்கத்தை அமெரிக்கா தொடங்கியது.\nஇந்தியாவைப் பொறுத்தவரை வங்கக் கடல் மற்றும் அரபிக் கடலில் உருவாகும்புயல்களுக்கு பெயர் வைக்கும் நடைமுறை2004-ஆம் ஆண்டில் உருவானது. இந்தியா,வங்கதேசம், மாலத்தீவு,‌ மியான்மர், ஓமன்,பாகிஸ்தான், தாய்லாந்த், இலங்கை ஆகிய 8நாடுகள் இணைந்து பெயர் பட்டியலைத் தயாரித்துள்ளன.\nநாம் கடந்து வந்த புயல்களில் லைலா என்ற பெயர் பாகிஸ்தான் கொடுத்தது. ஜல் என்ற பெயர் இந்தியா கொடுத்திருந்த பெயர். தானே என்ற பெயரை மியான்மரும், மகாசேன் என்ற பெயர் இலங்கையாலும் கொடுக்கப்பட்டதாகும்.\nஇதே போல் தாய்லந்து கொடுத்த பெயரான பைலின், மாலத்தீவு பெயரிட்ட மாதி புயலைத் தொடர்ந்து ஓமன் கொடுத்துள்ள பெயரைத் தாங்கி தற்போது ஹூட் ஹூட் புயல் உருவாகியுள்ளது.\nஹூட் ஹூட் என்பது இஸ்ரேலின் தேசியப் பறவை என கூறப்படுகிறது. இதற்கு அரபிய மொழியில் தாலாட்டு என்று அர்த்தமாம். ஆனால் நிச்சயம் இந்த ஹூட் ஹூட்தாலாட்டி நம்மை தூங்க வைக்கப்போவதில்லை.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nயார் இந்த ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்... அப்படி என்ன சிறப்பு இவருக்கு\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nதிறனாய்வுத் தேர்வு - STUDY MATERIALS\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sonakar.com/2021/04/blog-post_6.html", "date_download": "2021-10-19T12:35:48Z", "digest": "sha1:5ZTFO3GJVLRAPRH3ZFNVIZKFJYXEZN55", "length": 5274, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "மது போதை 'சாரதிகளை' பிடிக்க விசேட நடவடிக்கை - sonakar.com", "raw_content": "\nHome NEWS மது போதை 'சாரதிகளை' பிடிக்க விசேட நடவடிக்கை\nமது போதை 'சாரதிகளை' பிடிக்க விசேட நடவடிக்கை\nமது போதையில் வாகனம் ஓட்டும் சாரதிகளைப் பிடிக்கவென விசேட நடவடிக்கையொன்றை இம்மாதம் 10ம் திகதி முதல் ஆரம்பிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅண்மைக்காலமாக வாகன விபத்துகளும் அதனூடான உயிரிழப்புகளும் அதிகரித்து வரும் நிலையில் பொலிசார் இந்நடவடிக்கையைத் திட்டமிட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.\nஇப்பின்னணியில் நாட்டிலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களும் இந்நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதோடு விசேட வீதி தடுப்புகளை ஏற்படுத்தி பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படவுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.\nபணமில்லை 'ஜனாஸாவை' வைத்துக்கொள்: குடும்பங்கள் அதிரடி\nகொழும்பில் கொரேனா பாதிப்பிருப்பதாக தெரிவிக்கப்படும் ஜனாஸாக்களை அடக்குவதற்கு 58,000 ரூபா கேட்பது நிரந்தர வழக்கமாக உருவெடுத்துள்ள நிலையில்,...\nஇஷாலினி தன்னைத் தானே எரியூட்டியதாக வாக்குமூலம்\nரிசாத் பதியுதீன் வீட்டில் பணிபுரிந்த நிலையில் தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த மலையகத்தைச் சேர்ந்த இஷாலினி தன்னை...\nஅசாத் கைது செய்யப்பட்டது தெரியாது: பிரதமர்\nதேசிய ஐக்கிய முன்னணி தலைவர் அசாத் சாலி கைது செய்யப்பட்டது தனக்குத் தெரியாது என தெரிவித்துள்ளார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச. பயங்கரவாத தடுப்புச...\nஜனாஸா எரிப்பு வழக்கை விசாரணைக்கு ஏற்க மறுப்பு\nஜனாஸா எரிப்புக்கு எதிராக தொடுக்கப்பட்டிருந்த வழக்கினை விசாரணைக்கு ஏற்பதா இல்லையா என்பதனடிப்படையிலான விசாரணைகள் இரு தினங்களாக இடம்பெற்ற ந...\nநான் 'நல்ல மாதிரியான' முஸ்லிம்: முசம்மில்\nமுஸ்லிம் குடும்பம் ஒன்றில் பிறந்து இஸ்லாமிய கலாச்சாரத்தில் வளர்ந்தவன் என்ற அடிப்படையில் மாற்று மதத்தவரைத் திருமணம் செய்துள்ள போதிலும் தான்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jaffnarealestate.lk/city/chunnakam/", "date_download": "2021-10-19T11:11:49Z", "digest": "sha1:6QYUICTJT6UKBC7I2HCDREZSF57SL76E", "length": 36272, "nlines": 945, "source_domain": "jaffnarealestate.lk", "title": "சுன்னாகம் – Re/Max North Realty", "raw_content": "\n2 மாடி வீடு விற்பனைக்கு (3)\n2 வீடுகள் விற்பனைக்கு (1)\nஅரிசி ஆலை விற்பனைக்கு (1)\nஉல்லாச விருந்தினர் மாளிகை (1)\nகடையுடன் காணி விற்பனைக்கு (1)\nகாணியுடன் பகுதியளவு கட்டப்பட்ட வீடு விற்பனைக்கு (4)\nகாணியுடன் வீடு விற்பனைக்கு (33)\nகைதடியில் வீட்டுடன் கூடிய காணி விற்பனைக்கு (1)\nசிறிய வீட்டுடன் இணைந்த காணி விற்பனைக்கு. (1)\nநல்லூரில் Guest House விற்பனைக்கு (1)\nவணிக / குடியிருப்பு சொத்து விற்பனைக்கு (1)\nவிசாலமான நிலத்துடன் கூடிய கட்டிடத்தொகுதி விற்பனைக்கு (2)\nவிசாலமான நிலத்துடன் வீடு விற்பனைக்கு (1)\nவியாபாரக் கட்டிடம் குத்தகைக்கு (6)\nவியாபாரக் கட்டிடம் வாடகைக்கு (2)\nவியாபாரக் கட்டிடம் விற்பனைக்கு (16)\nவிவசாய நிலம் விற்பனைக்கு (3)\nகொழும்பு - 14 (1)\nகொழும்பு - 15 (1)\nகொழும்பு - 6 (1)\nபழைய பூங்கா வீதி (1)\nகொழும்பு - 14 (1)\nகொழும்பு - 15 (1)\nகொழும்பு - 6 (1)\n2 மாடி வீடு விற்பனைக்கு (3)\n2 வீடுகள் விற்பனைக்கு (1)\nஅரிசி ஆலை விற்பனைக்கு (1)\nஉல்லாச விருந்தினர் மாளிகை (1)\nகடையுடன் காணி விற்பனைக்கு (1)\nகாணியுடன் பகுதியளவு கட்டப்பட்ட வீடு விற்பனைக்கு (4)\nகாணியுடன் வீடு விற்பனைக்கு (33)\nகைதடியில் வீட்டுடன் கூடிய காணி விற்பனைக்கு (1)\nசிறிய வீட்டுடன் இணைந்த காணி விற்பனைக்கு. (1)\nநல்லூரில் Guest House விற்பனைக்கு (1)\nவணிக / குடியிருப்பு சொத்து விற்பனைக்கு (1)\nவிசாலமான நிலத்துடன் கூடிய கட்டிடத்தொகுதி விற்பனைக்கு (2)\nவிசாலமான நிலத்துடன் வீடு விற்பனைக்கு (1)\nவியாபாரக் கட்டிடம் குத்தகைக்கு (6)\nவியாபாரக் கட்டிடம் வாடகைக்கு (2)\nவியாபாரக் கட்டிடம் விற்பனைக்கு (16)\nவிவசாய நிலம் விற்பனைக்கு (3)\nகொழும்பு - 14 (1)\nகொழும்பு - 15 (1)\nகொழும்பு - 6 (1)\nபழைய பூங்கா வீதி (1)\nகொழும்பு - 14 (1)\nகொழும்பு - 15 (1)\nகொழும்பு - 6 (1)\n2 மாடி வீடு விற்பனைக்கு (3)\n2 வீடுகள் விற்பனைக்கு (1)\nஅரிசி ஆலை விற்பனைக்கு (1)\nஉல்லாச விருந்தினர் மாளிகை (1)\nகடையுடன் காணி விற்பனைக்கு (1)\nகாணியுடன் பகுதியளவு கட்டப்பட்ட வீடு விற்பனைக்கு (4)\nகாணியுடன் வீடு விற்பனைக்கு (33)\nகைதடியில் வீட்டுடன் கூடிய காணி விற்பனைக்கு (1)\nசிறிய வீட்டுடன் இணைந்த காணி விற்பனைக்கு. (1)\nநல்லூரில் Guest House விற்பனைக்கு (1)\nவணிக / குடியிருப்பு சொத்து விற்பனைக்கு (1)\nவிசாலமான நிலத்துடன் கூடிய கட்டிடத்தொகுதி விற்பனைக்கு (2)\nவிசாலமான நிலத்துடன் வீடு விற்பனைக்கு (1)\nவியாபாரக் கட்டிடம் குத்தகைக்கு (6)\nவியாபாரக் கட்டிடம் வாடகைக்கு (2)\nவியாபாரக் கட்டிடம் விற்பனைக்கு (16)\nவிவசாய நிலம் விற்பனைக்கு (3)\nகொழும்பு - 14 (1)\nகொழும்பு - 15 (1)\nகொழும்பு - 6 (1)\nபழைய பூங்கா வீதி (1)\nகொழும்பு - 14 (1)\nகொழும்பு - 15 (1)\nகொழும்பு - 6 (1)\nசுன்னாகம் சந்திக்கு மிக அருகில் கடை விற்பனைக...\nசுன்னாகம் சந்திக்கு மிக அருகில் கடை விற்பனைக்கு நில அளவு – 4.22 குளி பொருளாதார ரீதியாகப் பயன்படும். சிறந்த சூ [more]\nசுன்னாகம் சந்திக்கு மிக அருகில் கடை விற்பனைக்கு நில அளவு – 4.22 குளி பொருளாதார ரீதியாகப் பயன்படும். சிறந்த சூ [more]\nசுன்னாகம் கந்தரோடையில் முழுமையாக கட்டி முடிக...\nசுன்னாகம் கந்தரோடையில் முழுமையாக கட்டி முடிக்கப்படாத வீட்டுடன் இணைந்த காணி விற்பனைக்கு நில அளவு; – 2 ப [more]\nசுன்னாகம் கந்தரோடையில் முழுமையாக கட்டி முடிக்கப்படாத வீட்டுடன் இணைந்த காணி விற்பனைக்கு நில அளவு; – 2 ப [more]\nபுத்தூர் வீதி சுன்னாகத்தில் கடையுடன் காணி வி...\nபுத்தூர் வீதி சுன்னாகத்தில் கடையுடன் காணி விற்பனைக்கு நில அளவு – 7.5 பரப்பு நல்ல அக்கம் மற்றும் சிறந்த சுற்றுப்புற [more]\nபுத்தூர் வீதி சுன்னாகத்தில் கடையுடன் காணி விற்பனைக்கு நில அளவு – 7.5 பரப்பு நல்ல அக்கம் மற்றும் சிறந்த சுற்றுப்புற [more]\nசூறவத்தை சுன்னாகத்தில் வீட்டுடன் காணி விற்பன...\nசூறவத்தை சுன்னாகத்தில் வீட்டுடன் காணி விற்பனைக்கு நில அளவு – 2 பரப்பு சிறந்த சூழல், அக்கம் ,குடியிருப்பு சுற் [more]\nசூறவத்தை சுன்னாகத்தில் வீட்டுடன் காணி விற்பனைக்கு நில அளவு – 2 பரப்பு சிறந்த சூழல், அக்கம் ,குடியிருப்பு சுற் [more]\nசுன்னாகத்தில் வீடு விற்பனைக்கு மொத்த நிலப்பரப்பு :- 2.5 பரப்பு இவ் சிறிய வீட்டில் 03 அறைகள் மட்டும் உண்டு. சுன்னாகம [more]\nசுன்னாகத்தில் வீடு விற்பனைக்கு மொத்த நிலப்பரப்பு :- 2.5 பரப்பு இவ் சிறிய வீட்டில் 03 அறைகள் மட்டும் உண்டு. சுன்னாகம [more]\n83, கண்ணத்திட்டி வீதி, யாழ்ப்பாணம், இலங்கை\nபொலிகண்டி���ில் அழகிய வீடு விற்பனைக்க... LKR 24,000,000\nதெல்லிப்பளை,துர்க்காபுரம் கல்வளவு ஒ... LKR 5,000,000\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://roar.media/tamil/main/features/the-household-furnitures-that-our-future-generation-wont-see", "date_download": "2021-10-19T11:41:58Z", "digest": "sha1:ECMYDHKXNQXHSWFUWLW6QV4HI5KRIA2T", "length": 20402, "nlines": 44, "source_domain": "roar.media", "title": "காணாமல் போகும் தளபாடங்கள்", "raw_content": "\nகட்டுரைகள்காணொளிகள்குறுகிய காணொளிகள்வரலாறுவாழ்வியல்சுற்றுலாஆளுமைபொழுதுபோக்குகலை கலாசாரம்சமூகம்சுற்றாடல்தகவல் தொழில்நுட்பம்சிறுகதைகள்அனுசரணை\nஎமது அன்றாட வாழ்க்கையில் ஏராளமான பொருட்கள் பயன்பாட்டில் இருக்கின்றன, இருந்தன. அப்படி இருந்தவை பற்றிதான் இன்று மீட்டிப்பர்க்கப்போகிறோம். எம் நினைவுகளோடு ஒன்றியவை. காலவோட்டத்தில் காணாமல்போகும் நிலையில் உள்ள எம் வீட்டு பொருட்கள் எவை என்று நாம் உணரவேண்டும். இன்றைய சிறுவர்கள் கண்டிருக்க வாய்ப்பே இல்லாத பல பொருட்கள் உள. பலருக்கு பல கதைகள் அவற்றை சுற்றி இருந்திருக்கும். குழந்தையாக இருக்கும்போது சிலவற்றை அண்டவிடாமல் நம் பெற்றோர் தடுப்பதும், சொல்பேச்சுக்கேளாமல் நாம் விளையாடி தண்டனை பெறுவதும் அன்றைய நாளில் வாடிக்கை.\nஎமது முன்னோர்கள் தங்கள் வீடுகளில் வைத்து பயன்படுத்திய உரல், உலக்கை மற்றும் சுளகுகள் போன்றவை இன்று காணக்கிடைக்கா அரிய தளபாடங்களாக ஆகிவிட்டன. பட உதவி: myjunkdiary.blogspot\nஇந்தபட்டியலில் இது இடம்பெறுவது சிலருக்கு அதிர்ச்சியளிக்கலாம், சிலர் உண்மைதான் என பெருமூச்சு விடலாம். இரண்டுமே இன்றைய நாளில் சாத்தியம், ஆனால் எதிர்காலம் அன்றாட பாவனையில் அற்றுப்போய்விடும் நிலையில் இது உள்ளது தவிர்க்கமுடியாத உண்மை. வீடுகளில் சில வாசனைத்திரவியங்களை வைத்து இடித்து அந்தப்பொடியை கறிகளில் அம்மா தூவும் போது எட்டிப்பார்த்து முகரும் நினைவுகள் இனி மீளாது. தேங்காய் சம்பல் என்றால் உரலில் இடிக்கும் போது அதன் சுவையே தனி. மரம் அல்லது உலோகத்தால் செய்யப்படும் இது இன்று காணாமல் போக காரணம் தயார்நிலை மசாலாக்கள், அரைக்கும் இயந்திரங்களின் அதீத பயன்பாடு போன்றவையே. இதற்கெல்லாம் மேல் உரலில் இடிக்கும் ஒலி பல சமூக ஆர்வலருக்கு ஒலிமாசை ஏற்படுத்துவதாகவும் தோன்றியிருக்கலாம். இந்து ஆலயங்களில் திருவிழா நேரங்களில் ‘பொற்சுண்ணம்’ இடிக்கும் நிகழ்வு, ஈமைக்கிரியைகளின் போது சுண���ணம் இடித்தல் ஆகிய சடங்குகள் இருக்கும் வரை இதன் பாவனை ஆண்டுக்கொருமுறையாவது இருக்கும். இது பல்வேறு அளவுகளில் தேவையை பொருத்து காணப்படும். வெற்றிலை,பாக்கு இடிப்பது முதல் நெல் இடிப்பது வரை இதன் அளவு மாறும்.\nஇது அருகி அல்ல அற்றே போய்விட்ட பொருட்களின் பட்டியலில் இணைத்தாலும் வியப்பில்லை. இன்றும் ஏதாவது கிராமத்தில் சிலவீடுகளில் இருக்க வாய்ப்புண்டு. முழுக்க முழுக்க கருங்கல்லாலானது. சரிவக வடிவான ஒரு பாகம்(அம்மி), அதன் அகலமளவு நீளமுடைய உருளை (குழவி) இணைந்ததே இது. அம்மியின் மேல்தளம், குழவி ஆகியவை சிறு குழிகள் கொண்டவை. இந்துக்களின் திருமணத்தில் ‘மெட்டி அணிவிக்கும் சடங்கு’ இருக்கும் வரை இதனை நாம் திருமணங்களில் நிச்சயமாக காணலாம். ஆயிரந்தான் நவீன கருவிகள் இதன் பாவனையை மழுங்கடித்தாலும் அனுபவம் மிக்கவர்கள் அம்மியில் அரைக்கும் பதம் எப்பேற்பட்ட அரைப்பானிலும் வராது என்பர். அம்மிக்கல்லில் உள்ள சிறு குழிகளை கண்கள் என்பர். தொடர் பாவனையின் காரணமாக அவை மழுங்கும் போது அவற்றை செம்மைப்படுத்த அம்மிக்கல் பொளிவோரிடம் கொண்டுசெல்வர். இன்றைய நாளில் அப்படி ஒரு தொழில்வர்க்கமே அழிந்துவிட்டது என்பதுதான் உண்மை. இன்றும் சில மூலிகை மருந்து தயாரிக்க அம்மியை தான் பிரயோகிப்பர். காரணம் மேற்கூறியது போல அதன் பதமாக அரைக்கும் தன்மை தான்.\nஎமது முன்னோர்கள் தங்கள் வீடுகளில் வைத்து பயன்படுத்திய அம்மி மற்றும் ஆட்டுக்கல் போன்றவை இன்று காணக்கிடைக்கா அரிய தளபாடங்களாக ஆகிவிட்டன. பட உதவி: myjunkdiary.blogspot\nஅழிந்து விட்ட பட்டியலில் அடுத்தவர் இவர். முழுக்க முழுக்க கருங்கல்லால் ஆனது. பெரிய விட்டமுடைய கல்லில் ஓரளவான குழி அதனுள் வைத்து ஆட்டும் வகையில் குழவி, ஆனால் இந்த குழவி அம்மியுடையதை போன்றன்று. மேல்முனை சிறிய விட்டமும், கீழ்முனையில் பெரிய விட்டமும் உடையது. ஒரு வகையில் கூம்பு போன்ற வடிவுடையது. இட்லி, தோசை, வடை போன்றவற்றுக்கு மாவரைக்க இது பயன்படும். இதிலரைக்கும் போது வரும் பதம் எந்த மின்கருவியாலும் ஈடுசெய்ய முடியாத ஒன்று. இதனை மையப்படுத்தி சடங்குகள் இன்மையால் இனிக்காண்பது இயலாத காரியம் தான்.\nமுழுவதும் கருங்கல்லால் ஆனது. இருபாகமுடையது, மேல்பாகம் சுழலக்கூடியது, கீழ்பாகம் நிலையானது. அரிசிமா, குரக்கன்மா போன்ற மாவரைக்க பயன்���டும். இதனிடையில் தானியங்களை இட்டு சுழற்ற வேண்டும். மா அதுவாகவே நாலாபக்கமும் வெளிவரும். அந்தக்காட்சி பார்க்கவே அழகாக இருக்கும். புகைப்படக்கலைஞருக்கு நல்ல தீனி.\nபனையோலையால் பின்னப்பட்டது இது. தானியங்களில் உள்ள அழுக்குகளை நீக்க பயன்படும். வீடுகளில் அரிசியிலுள்ள கல், உமி(நெற்கோது) ஆகியவற்றை நீக்க இதன் மூலம் புடைப்பர். சுளகு மூலம் புடைத்தல் உண்மையிலேயே ஒரு கலை. மிகக்கவனமாக அதன் மீது விசையை வழங்க வேண்டும். கூடினால் முகத்தில் தானியங்கள் மழை பொழிவது உறுதி. சுளகு மூலம் புடைக்கும் போதும் புகைப்படக்கலைஞனுக்கு தீனி போடும் காட்சிகள் ஏராளம் கிடைக்கும்.\nஇதுவும் ஓலையால் பின்னப்பட்ட சற்சதுரமான பாய். அக்காலத்தில் குழந்தைகளின் உடல்மீது எண்ணெய் பூசி சூரியஒளி படுமாறு இதன்மீது படுக்கவைப்பர். சாதாரணமாகவே குழந்தைகளை படுக்கவைக்க இதனைத்தான் பயன்படுத்துவர். குழந்தைகளின் உடலமைப்பு சீராக வருவதற்கு இது உதவும். ஒரு குழந்தை முதன்முதலில் பிறழ்வதும் இதன்மீதே.\nபலருக்கு ஆச்சரியமாக இருப்பினும் இதுதான் உண்மை. பிளாஸ்டிக் யுகத்தில் பாயும் பிளாஸ்டிக் ஆனது. புற்பாயானது நாணல் எனப்படும் ஆற்றங்கரையோரத்தில் வளரும் ஒரு வகைப்புல்லால் தயாரிக்கப்படும். மற்றையது பனையோலைப்பாய் இவற்றின் மீதுறங்குவது ஒரு தனி சுகம் என பலர் கூறுவர். உடலுக்கும் சுகாதாரமானது.\nமுந்தைய தலைமுறையில் வீட்டில் உள்ள குழந்தைகள் நடைபழக உதவியாக நடைவண்டிகளை பெற்றோர் வைத்திருப்பர். இக்காலத்திலும் சில இடங்களில் இது பயபடுத்தப்படுகிறது . பட உதவி: eluthu.com\nஅக்காலத்தில் குழந்தையொன்று நடக்கப்பழக வழங்கும் விளையாட்டு உபகரணம் இது. மூன்று சக்கரங்களை கொண்டதும் ஒரு கைப்பிடியுடையதும் மிக எளிமையான ஒரு விளையாட்டுப்பொருள். எல்லா வீடுகளிலும் தமது குழந்தைக்காக தச்சனிடம் சொல்லி செய்விப்பர். அதில் அந்த குழந்தை விளையாடுவது பார்க்கவே கொள்ளை அழகு. பல வீடுகளில் குழந்தை இளைஞனான பின்பும் இதனை பார்த்து மகிழ்வர்.\nமுழுவதும் மரத்தாலான இது. இன்று அழிந்துவிட்ட ஒரு அற்புதமான விளையாட்டுப்பொருள் ‘BayBlade’ வருவதற்கு நூற்றாண்டுகளுக்கு முன்பே பாவனையிலிருந்தது. இதனை கையிலெடுத்து கையிற்றை சுற்றி அப்படியே வேகமாக சுழல விடுவது தனித்திறமை. பௌதிகவியல் தத்துவத்தை பள்ளிப்���ருவத்திலேயே சிறார்கள் புரிந்து கொண்டனர்.\nசில வீடுகளில் இது இப்போது பாவனையில் இருக்க வாய்ப்புண்டு. ஆனால் எதிர்காலம் இதற்கு இல்லை என்பதே நிதர்சனம். பொதி செய்த தேங்காய் பால் அதுவும் பொடியாக கிடைக்கிறது. இல்லத்தரசிகளுக்கு அப்படியே கறியில் போடுவது தான் வேலை. ஆகையால் தேங்காய் துருவ இது இனி தேவை இல்லை. பல கடைகளில் மின்னியந்திரம் பொருத்திய திருவு இருப்பதால் சிலர் கடைகளில் தேங்காயை கொடுத்து தேங்காய்ப்பூ பெறுவதும் வாடிக்கையாகி விட்டது.\nவயோதிபர்கள் பாக்கு வெட்ட பாக்குவெட்டியை பயன்படுத்துவர். கால்தட்டம் என்பது இவற்றை வைத்து பரிமாற பயன்படும் ஒரு தட்டாகும். இக்காலத்தில் இதன் பாவனை வெகுவாக குறைந்து விட்டது.\nமுந்தைய தலைமுறையில் வீட்டில் உள்ள குழந்தைகள் தூங்கவைக்க, தாலாட்ட இது பயன்படுத்தப்பட்டது. இப்போதும் பயன்படுத்தப்ட்டு வருகிறது. ஆனால் புதிய சில தொட்டில்களின் வருகையால் இவை இல்லாது போய்விடலாம். பட உதவி: subaillam.blogspot\nகுழந்தையை தாலாட்ட பயன்படும். வீட்டிலுள்ள தீராந்தி(கூரையை தாங்கும் பலகை)யில் பருத்தி சேலையால் ஊஞ்சல் போன்ற அமைப்பை உருவாக்குவர். அதில் குழந்தையை வளர்த்தி தாலாட்டுவர். ஏணை கட்டுவதற்காகவே தாய்மார் பருத்தி சேலை வாங்கி அணிவர். இதில் குழந்தை உறங்கும் போது தாயின் கருப்பையில் இருப்பது போன்ற நிலையில் இருக்கும். அத்துடன் குழந்தை நிறைய நேரம் நிம்மதியாக உறங்கும். இன்றைய நாளில் பலவிதமான குழந்தை தொட்டில்கள் வருகையால் தூளி கட்டும் பழக்கம் வீடுகளில் இல்லை.\nஇது போலவே மட்பாண்டங்கள், அரிவாள், ஏர் ஆகியவற்றின் பாவனை நவீன யுகத்தில் அருகிப்போய் விட்டது. அம்மி, ஆட்டுக்கல், திருகைக்கல் மற்றும் திருவுபலகை போன்றன வெறுமனே சமையல் உபகரணங்கள் மட்டுமின்றி உடற்பயிற்சி உபகரணங்களும் தான். இவற்றை பாவித்த பெண்மணிகள் ஆரோக்கியமாகவே இருந்தனர், இருக்கின்றனர். அன்றைய பெண்கள் மென்மையானவர்கள் என்று கூறுவோர் அம்மிக்கல்லை தூக்கிப்பார்த்திருக்க மாட்டார்கள் போலும். எது எப்படி இருப்பினும் சமைக்க நேரமில்லை என்று நவீனம் நாடி ஓடும் நாம் உடல் பருத்துவிட்டது என்று உடற்பயிற்சிக்கூடத்தில் மணிக்கணக்கில் செலவுசெய்யும் எம் வாழ்க்கைமுறை உண்மையில் நகைப்புக்குரியதே.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arisenshine.in/tag/study/", "date_download": "2021-10-19T12:55:50Z", "digest": "sha1:FUQQ7QB5I6QJD7X5IWBM5HQCR7XGGAFX", "length": 5775, "nlines": 80, "source_domain": "www.arisenshine.in", "title": "study – Arise n shine", "raw_content": "\nஎந்த வயதில் தேவனுக்கு ஊழியம் செய்யலாம்\n1 தீமோத்தேயு:2.5 – தினத்தியானம்\nஇயேசு-லேகியோன் சந்திப்பு – பாகம் 7\nதேவனிடம் சமரசம் செய்ய விரும்புகிறோமா\nஇயேசு-லேகியோன் சந்திப்பு – பாகம் 6\nகுடும்ப நபர்களுக்காக எப்படி ஜெபிக்கிறோம்\nகுடும்ப நபர்களுக்காக எப்படி ஜெபிக்கிறோம்\nஒவ்வொரு கிறிஸ்தவர்களின் வாழ்க்கையிலும் ஜெபம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். தனி ஜெபம், குடும்ப ஜெபம், சபை ஜெபம் என பல ஜெபங்களில் நாம் கலந்து கொள்கிறோம். ஆனால் இதில் பலரும் தங்களுக்கு சார்ந்த காரியங்களுக்காக ஜெபிப்பது மிகவும் குறைவு.\nகர்த்தரை தேடினால் ஒரு நன்மையும் குறையாது\nஜெபத்தில் ஏற்படும் மாற்றங்கள்– 4\nஜெபத்தில் ஏற்படும் மாற்றங்கள் – 2\nஎந்த வயதில் தேவனுக்கு ஊழியம் செய்யலாம்\n1 தீமோத்தேயு:2.5 – தினத்தியானம்\nஇயேசு-லேகியோன் சந்திப்பு – பாகம் 7\nதேவனாகிய கர்த்தர் தாம் மனுஷனில் எடுத்த விலா எலும்பை மனுஷியாக உருவாக்கி, அவளை மனுஷனிடத்தில் கொண்டு வந்தார். ஆதியாகமம்:2.22\nஎந்த வயதில் தேவனுக்கு ஊழியம் செய்யலாம்\nதேவனுக்கு ஊழியம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இரட்சிக்கப்பட்ட எல்லாருக்கும் இருக்கிறது. ஆனால் அதன் பின்னணியில் எந்த வயதில் அவருக்கு ஊழியம் செய்யலாம்\n1 தீமோத்தேயு:2.5 – தினத்தியானம்\nதேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே. 1 தீமோத்தேயு:2.5\nஎந்த வயதில் தேவனுக்கு ஊழியம் செய்யலாம்\n1 தீமோத்தேயு:2.5 – தினத்தியானம்\nஇயேசு-லேகியோன் சந்திப்பு – பாகம் 7\nதேவனிடம் சமரசம் செய்ய விரும்புகிறோமா\nஇயேசு-லேகியோன் சந்திப்பு – பாகம் 6\nஎந்த வயதில் தேவனுக்கு ஊழியம் செய்யலாம்\n1 தீமோத்தேயு:2.5 – தினத்தியானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1174442", "date_download": "2021-10-19T12:14:02Z", "digest": "sha1:LB3Q5MIZ32ERY6QS3M4NX3544Y537VXB", "length": 21760, "nlines": 254, "source_domain": "www.dinamalar.com", "title": "குன்னூரில் பிரமிப்பை ஏற்படுத்திய கராத்தே சாகச நிகழ்ச்சி| Dinamalar", "raw_content": "\nஅமெரிக்காவின் முக்கிய பொறுப்புகளில் மேலும் 3 இந்திய ...\nஅமெரிக்காவில் இந்திய உணவகம் மீது தாக்குதல்: எப்.பி.ஐ ...\nஅமெரிக்காவின் பொருளாதார தடையை நீக்க வேண்டும்: ஈரான் ...\nபொய் வழக்குகளுக்கு எல்லாம் அ.தி.மு.க., அஞ்சாது: ...\nஉ.பி., தேர்தலில் காங்கிரசில் 40% பெண் வேட்பாளர்கள்: ... 4\nஆப்கன் விவகாரங்களில் பாக்., தலையிடக்கூடாது: முன்னாள் ... 1\nஎம்.பி., பதவியை ராஜினாமா செய்தார் பாபுல் சுப்ரியோ 5\nகாஷ்மீரில் அப்பாவி மக்கள் கொலை: என்.ஐ.ஏ.,விசாரணை 4\n99 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தி சாதனை: மத்திய அரசு 9\nமதுரை, சேலம் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழைக்கு ...\nகுன்னூரில் பிரமிப்பை ஏற்படுத்திய கராத்தே சாகச நிகழ்ச்சி\nகுன்னூர் : குன்னூரில் நடந்த கராத்தே சாகச நிகழ்ச்சி பிரம்மிப்பை ஏற்படுத்தியது.குன்னூர் அருகே அருவங்காடு ஐயப்பன் \"ஷோட்டாகான்' கராத்தே பள்ளியில், பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் கராத்தே பயின்று வருகின்றனர். இப்பள்ளி சார்பில், வெலிங்டனில் கராத்தே சாகச நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.இதில், கருணாகரன் என்பவர், தன்னுடைய வயிற்றின் மீது, ஒன்றன் பின் ஒன்றாக, 20 ஆமினி\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகுன்னூர் : குன்னூரில் நடந்த கராத்தே சாகச நிகழ்ச்சி பிரம்மிப்பை ஏற்படுத்தியது.குன்னூர் அருகே அருவங்காடு ஐயப்பன் \"ஷோட்டாகான்' கராத்தே பள்ளியில், பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் கராத்தே பயின்று வருகின்றனர். இப்பள்ளி சார்பில், வெலிங்டனில் கராத்தே சாகச நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.இதில், கருணாகரன் என்பவர், தன்னுடைய வயிற்றின் மீது, ஒன்றன் பின் ஒன்றாக, 20 ஆமினி வேன்களை ஏற்றி இறக்கிய காட்சி, பார்வையாளர்களை பிரம்மிப்பில் ஆழ்த்தியது.இதனை தொடர்ந்து, ராஜா என்பவர், தனது இரண்டு கைகளை தரையில் வைத்து, விரல்கள் மீது ஐந்து ஆமினி வேன்களை ஏற்றி சாதனை படைத்தார்.மேலும், ராஜா மற்றும் கருணாகரன் ஆகிய இருவரும் இரண்டு ஆணி படுக்கையின் மீது, ஒருவர் மீது ஒருவர் படுத்துக்கொண்டு, 500 கிலோ எடை கொண்ட ஐஸ் கட்டிகளை சம்மட்டியால் உடைத்து அசத்தினர்.பள்ளி மாணவி ரீத்திகாவை, ஆணி மீது படுக்க வைத்து,75 கிலோ ஐஸ் கட்டி வைத்து சம்மட்டியால் உடைக்கும் சாகச நிகழ்ச்சியும் நடந்தது. மேலும், கராத்தே பள்ளி மாணவன் தன் வயிற்றின் மீது இரு கர வாகனத்தை ஏற்றி சாதனை படைத்தான். இதுபோல, பல பள்ளி மாணவ, மாணவியரும் சாதனை படைத்து அசத்தினர்.\nகுன்னூர் : குன்னூரில் நடந்த கராத்தே சாகச நிகழ்ச்சி பிரம்மிப்பை ஏற்படுத்தியது.குன்னூர் அருகே அருவ��்காடு ஐயப்பன் \"ஷோட்டாகான்' கராத்தே பள்ளியில், பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவ,\nஊடக தர்மம் உங்கள் கரங்களில்...\nசமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...\nஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.\nஇங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nநச்சு நீர் குடிநீராச்சு: மே.வங்க மக்களின் சாதனை(8)\nஉலக சதுப்பு நில தினம்; ஊட்டியில் விழிப்புணர்வு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nநச்சு நீர் குடிநீராச்சு: மே.வங்க மக்களின் சாதனை\nஉலக சதுப்பு நில தினம்; ஊட்டியில் விழிப்புணர்வு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/118391/", "date_download": "2021-10-19T12:57:18Z", "digest": "sha1:OR7NNQ3AOEFHHCGBW7QYPFJL3FCZM64S", "length": 71675, "nlines": 147, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-64 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nவெண்முரசு கார்கடல் ‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-64\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-64\nசஞ்சயன் சொன்னான்: அரசே, எவருடைய கண்களால் நான் பார்க்கிறேன் என்று தெரியவில்லை. நான் எங்கோ இக்கதையை ஓர் அரக்கர் கூட்டத்திற்கு சொல்லிக்கொண்டிருக்கிறேன். மறு சொற்றொடரை நாகர்களுக்கு சொல்கிறேன். ஆழ்ந்த கனவென அக்காட்சி திரும்புகையில் அரண்மனையில் காந்தாரப் பேரரசியிடம் சொல்லிக்கொண்டிருக்கிறேன். இப்போது இதை சொல்லும்போது நான் எங்கோ ஒரு வழிச்சாவடியில் வணிகர் நடுவே விழியிலாத சூதனாக அமர்ந்து இக்கதையை பாடுவதாக உணர்கிறேன்.\nபடைகளுக்கு மேல் இரும்புக்கவசம் இருளில் விண்மீன் ஒளியில் மின்னும் சுனைநீர்போல அலைகொள்ள பால்ஹிகர் சென்றுகொண்டிருப்பதை துரியோதனன் பார்த்தான். முதலில் அது என்ன அசைவென்று அவனுக்கு தெரியவில்லை. அப்பால் ஒரு செய்தி அறிவிப்பு பந்தம் எழுந்து சுழன்றபோது கோட்டுருவில் அது யானைமேல் செல்லும் பால்ஹிகர் என்று புரிந்துகொண்டு “பிதாமகரா அவர் களம்காண வேண்டியதில்லை என்று சென்று சொல்” என்று கூவினான். “அவர் இரவில் நோக்கும் விழி கொண்டவரல்ல. ஒளிச்செய்திகளையோ ஒலிச்செய்திகளையோ கேட்டு போரிடவும் அறிந்தவர் அல்ல.”\nபால்ஹிகர் முகில்களின் மேல் கால்வைத்து நடப்பவர்போல் தோன்றினார். அங்காரகனின் கவசங்கள் கரியவையாக இருந்தமையால் அது முற்றாகவே இருளுக்குள் மறைந்துவிட்டிருந்தது. பால்ஹிகரை நோக்கியபின் கீழே நோக்கியபோது இருளின் புரளலாக யானை தெரிந்தது. இருளின் ஓர் அலைமேல் பால்ஹிகர் செல்வதுபோல. “அவர் படைமுகம் செல்லக்கூடாது… என் ஆணை” என்றான் துரியோதனன். சுபாகு புரவியில் ஏறிக்கொண்டு பாறைப்பகுதியின் ஆறுபோல முட்டிமோதிச் சுழன்ற கௌரவப் படையினூடாக பிளந்து சென்றான். வழிவிடும்பொருட்டு அவன் கூச்சலிட்டுப் பார்த்தான். ஆனால் எவ்வொலியும் எவர் செவிகளிலும் விழவில்லை என உணர்ந்தபின் வீரர்களை பிடித்துத் தள்ளியும் இடைவெளிகள் வழியாக சிட்டுக்குருவி என வளைந்து சுழன்றும் அவன் முன் சென்றான்.\nவிண்ணிலிருந்து அரக்கர்களும் அசுரர்களும் வௌவால்கள்போல் இறங்கி தாக்கி அலறல்களையும் கூச்சல்களையும் எஞ்சவிட்டு மீண்டும் எழுந்தகன்றுகொண்டிருந்தனர். நிஷாதர்களும் கிராதர்களும் எய்த அம்புகள் குறி பிழைக்காது வந்து ஷத்ரியர்களை அலறி விழச்செய்தன. நீண்ட கழைகளை ஊன்றி விண்ணில் தாவி எழுந்து எடையுடன் இறங்கிய இடும்பர்கள் கையிலிருந்த நீண்ட சாட்டை நுனியில் கட்டப்பட்ட கூர்முனை கொண்ட இரும்புவட்டை வீசி வீரர்களின் கழுத்துகளை வெட்டி மீண்டும் கழைகளை ஊன்றி எழுந்தகன்றனர். கௌரவப் படைகள் அணிகுலைந்து ஒன்றையொன்று முட்டி நெருக்கி சில இடங்களில் விரிந்தகன்று குழம்பி அலைகொண்டிருந்தன. அவற்றின் நடுவே சுழியில் சிக்கிக்கொண்ட பெருங்கலம்போல் தயங���கியும் சுழன்றும் நிலையழிந்து நின்றிருந்தது அங்காரகன். அதைச் சூழ்ந்து கௌரவப் படை வட்டமிட்டது.\nசுழிபிளந்து அங்காரகனை அணுகிய சுபாகு புரவி மேல் எழுந்து நின்று “பிதாமகரே தாங்கள் பின்னடைய வேண்டுமென்று ஆணை தாங்கள் பின்னடைய வேண்டுமென்று ஆணை தாங்கள் போருக்கெழ வேண்டியதில்லை” என்று கூறினான். பால்ஹிகர் தனது கதையைச் சுழற்றி அறைந்தபடி “மேலும் மேலும்” என யானையை முன்செலுத்த முயன்றுகொண்டிருந்தார். அங்காரகன் நான்கு அடி முன் சென்று சுழன்று திரும்பி மூன்றடி பின் வந்து மீண்டும் முன்சென்றது. பால்ஹிகரின் கதைச்சுழற்சியில் அவரைச் சூழ்ந்திருந்த கௌரவ வீரர்களே பெரும்பாலும் அறைபட்டு விழுந்தனர். தன் முன் சீறலொலியுடன் கதை உருளை கடந்து செல்ல சுபாகு தலைகுனிந்து அதிலிருந்து தப்பினான். உரத்த குரலில் “பிதாமகரே, தாங்கள் இப்போரை நிகழ்த்த இயலாது. செல்க பின்திரும்பிச் செல்க” என்று கூவினான். “பின் திரும்புக அரசாணை\nபின்னர் உணர்ந்தான், அப்போர் தொடங்கிய நாள் முதல் அவரிடம் எவருமே உரையாடியதில்லை என்று. ஒரு சொல்லும் உரைக்கப்படாதவராக, பிறரை நோக்கி ஒரு சொல்லும் உரைக்காதவராக அந்தப் பதினான்கு நாட்களும் அவர் குருக்ஷேத்ரக் களத்தில் இருந்தார். அவர் அறிந்தது புலரியில் ஒலிக்கும் போர்முரசின் அறைகூவலை மட்டுமே. அந்தியில் போர்முடிவுக்குப் பின்னரும்கூட பெரும்பாலான நாட்களில் அவர் கதைசுழற்றி போரில் மூழ்கித்தான் இருந்தார். சூழ்ந்திருந்த படைகள் விலகி பின்னடையத் தொடங்குகையில் அதைக் கண்டு அங்காரகனே முடிவெடுத்து பின்னடையத் தொடங்கும். தன் பாடிவீட்டை அடைந்ததும் அவர் யானையிலிருந்து இறங்கி எடை மிக்க கவசங்கள் குலுங்கி ஒலிக்க தன் குடிலுக்கு முன்னால் சென்று வெறுந்தரையில் கால் நீட்டி அமர்வார். ஒவ்வொரு முறையும் அந்த இடத்தை புதிதெனக் கண்டு துணுக்குறுபவர்போல் அவர் தோன்றுவார்.\nயானை அவர் அருகிலேயே நின்றிருக்கும். அதை யானைக்கொட்டிலுக்கு கொண்டுசெல்ல முயன்றபின் அதன் மறுப்பை உணர்ந்து பாகர்கள் கைவிட்டனர். அங்காரகனை பாகர்கள் எவரும் அணுகவோ ஆணையிடவோ இயலவில்லை. அத்திரிகள் இழுக்கும் வண்டிகளில் அதற்கான உணவு கொண்டுவரப்பட்டது. உப்புநீர் நனைத்த வைக்கோலும், காட்டுத்தழையும், கிழங்குகளுடன் வேகவைத்து உருட்டிய புல்லரிசிச்சோற்றுக் கவளங்களும் அதன் முன் விரித்த ஈச்சைப்பாயில் குவிக்கப்பட்டன. அங்காரகன் உடலை அசைத்தபடி சீரான துதிக்கைச் சுழற்சிகளுடன் அவ்வுணவை உண்டது. அருகே பால்ஹிகருக்கும் கூடைகளில் அப்பங்களும், ஊன்துண்டுகள் நிறைந்த கொப்பரைகளும், மதுக்குடங்களும் கொண்டுவந்து வைக்கப்பட்டன. அவர்கள் இருவரும் உண்பதை அப்பால் நின்று கௌரவப் படைவீரர்கள் பார்த்தனர். தொன்மையான வேள்விச்சடங்கு ஒன்றை பார்ப்பதுபோல் சிலர் அறியாது கைகூப்பினர்.\nஅங்கே பல்லாயிரம் பேர் சூழ்ந்திருந்த போதிலும்கூட அவர்களிருவரும் முற்றிலும் தனிமையில் இருப்பதை பலமுறை அங்கே நின்று சுபாகு பார்த்ததுண்டு. அவர்களிடையேகூட எதுவும் பேசப்படுவதில்லை. யானையிலிருந்து இறங்கியதுமே பால்ஹிகர் யானையையும் அறியாதவரானார். அவர் எப்போதுமே கவசங்களை கழற்றுவதில்லை என்பதை முதல்நாளுக்குப் பின் அப்படையில் அனைவருமே அறிந்திருந்தனர். தலைக்கவசத்தை உணவுக்குப் பின் மீண்டும் அணிந்துகொண்டு வெறுந்தரையில் கைகால்களை விரித்து அவர் படுத்திருக்கையில் அப்பால் நின்று நோக்கும்போது இரும்புக்கலங்கள் நீட்டி அடுக்கப்பட்டதாகவே தோன்றும். இரவில் பந்தங்களின் ஒளி கவசங்களின் வளைவுகளில் நெளிந்துகொண்டிருக்கும். பின்னிரவில் நிலவொளியில் நனைந்து அங்கே ஒரு நீர்ச்சுனை ஊறியிருப்பதுபோல் தோன்றும். அவர் குறட்டை விடுவதில்லை. துயிலில் புரண்டுபடுப்பதுமில்லை. அந்தக் கவசங்களுக்குள் அப்போது ஒரு மானுட உடல் இருப்பதாகவே தோன்றாது.\nஅங்காரகனும் கவசங்களை கழற்றுவதில்லை. அதன் இரும்புக் கவசங்கள் பிறிதொரு யானை அளவுக்கே எடை கொண்டவை. துதிக்கையின் அடுக்குக்கவசங்களை கழற்றாமல் உணவை அள்ளிச்சுருட்டி உண்ண பிற யானைகளால் இயல்வதில்லை. அங்காரகன் தன் துதிக்கையை சரித்து வளைத்து கவசங்களுடன் உண்ணவும் கற்றுக்கொண்டிருந்தது. அதன் அசைவில் உலோகப் பொருட்கள் நிறைந்த வண்டி மேடுபள்ளங்களில் செல்வதுபோல் கவசத் தகடுகள் உராய்ந்து ஒலியெழுப்பின. அதன் காதுகள் அசைகையில் நுனிகளில் கட்டப்பட்ட மணியோசை வண்டிமாடுகள் செல்வதுபோல் கேட்டது. அங்காரகன் பால்ஹிகரைப் போலவே குரலற்றது. படைமுழுக்க பிற யானைகள் முழக்கமிடும்போதுகூட அங்காரகன் அவ்வொலியுடன் கலந்துகொள்வதில்லை. மலையுச்சிப் பாறைபோல விழியருகில் நெடுந்தொலைவில் இருப்பது. குளிர்ந்தது. அவ்வப்போது முழுமையாகவே வானில் மறைந்துவிடுவது.\nமுதல் இருநாட்களில் அவ்விருவரும் கௌரவப் படையினருக்கு பெருவிந்தையென இருந்தனர். மிக விரைவிலேயே அவ்விந்தையும் பழகியது. கதையுருளையிலிருந்து தெறித்த குருதி வழிந்து உறைந்து பிசுக்காகி, அரக்காகி, பொருக்காகி படிந்த கவசங்களுடன் மாபெரும் இரும்புப்பாவை என நின்றிருந்த அங்காரகன் சற்றும் அறியாமல் அவ்வழியாகச் செல்லலாயினர் படையினர். அவர்களின் உடலிலிருந்து அச்செய்தியை பெற்றுக்கொண்ட அத்திரிகளும் கழுதைகளும் புரவிகளும்கூட அதை ஒரு இரும்பு மண்டபம் என்றோ கற்பாறை என்றோ எண்ணியவைபோல் நடந்துகொண்டன. பறவைகள் இயல்பாக அதன்மேல் வந்தமர்ந்து எழுந்துசென்றன. எப்போதேனும் பாகர்கள் அருகே வந்து உணவு வைத்துச் செல்கையில் அதன் சிறிய விழிகளை அருகே கண்டு உளம் அதிர்ந்தனர். ஒருவன் அலறியபடி பின்னால் சரிந்து விழுந்து உடல்நடுங்கி எழுந்து அப்பால் சென்று மீண்டும் விழுந்தான். அவன் மீண்டும் உளம்மீளவே இல்லை. அங்காரகனுக்குள் வாழும் தெய்வத்தை அவன் கண்டுவிட்டான் என்றனர்.\nபால்ஹிகர் முழுக் கவசத்துடன் காலையில் எழுந்தார். தலைக்கவசத்தையும் இடைக்கவசத்தையும் மட்டும் கழற்றி முகத்தைக் கழுவி காலைக்கடன் முடித்தார். உணவை உண்டு மீண்டும் கையுறைகளை அணிந்தபடி காத்திருந்தார். அங்காரகன் அந்தப் பெருங்கதையுருளையை தன் துதிக்கையில் சுருட்டித் தூக்கியபடி சீரான அசைவுகளுடன் வந்து அவர்முன் நின்றதும் ஏறி அமர்ந்துகொண்டார். அங்காரகன் செவிகளை மட்டும் அசைத்தபடி முரசொலிக்காக காத்திருந்தது. அதன் கவசங்களுக்கிடையே பாறைவெடிப்புக்குள் பொன்வண்டு என விழிகள் ஒளிகொண்டிருந்தன. படைநகர்வு தொடங்கியதுமே எறும்புகளால் இழுத்துச் செல்லப்படும் வண்டுபோல் நிரைக்குள் நுழைந்து படைமுகப்பை நோக்கி சென்றது. போர்முரசு எழுந்ததும் பிளிறலோ தலைகுலுக்குதலோ இல்லாமல் கதையைச் சுழற்றியபடி எதிரிப்படைக்குள் புகுந்து சென்றது. நீரில் மூழ்கும் இரும்புருளைபோல.\n“அவர் போரிடவில்லை. இங்கு நிகழ்வது எதையும் அவர் புரிந்துகொள்ளவும் இல்லை. அவர் பிறிதொன்றை செய்து கொண்டிருக்கிறார். அவர் மானுட உயிர் என்பதையே அறிந்திருக்கவில்லை” என்று கௌரவப் படைவீரர்கள் சொன்னார்கள். “தொல்நிலத்தின் கொடுந்��ெய்வம் ஒன்றை மானுட உடலில் ஏற்றி கொண்டுவந்திருக்கிறார்கள். லட்சம் தலைகளை உடைத்து குருதிபலி கொண்ட பின்னரே அது மண் நீங்கும்” என்று பாண்டவர் தரப்பில் கூறினார்கள். முதல் சில நாட்களுக்குப் பின்னர் எவ்வகையிலும் பால்ஹிகரை எதிர்கொள்ள இயலாதென்று பாண்டவப் படையினர் உணர்ந்தனர். பாண்டவப் படையில் பீமனும் கடோத்கஜனும் மட்டுமே அவரை சற்றேனும் எதிர்கொண்டு செறுத்தனர். அவர்களும் அவர் பெருங்கதையின் வீச்சை ஒழிந்தும் தவிர்த்தும் களமாடி அவரை தாங்கள் எண்ணிய இடத்தில் நிலைகொள்ளச் செய்வதையே போர்முறையென்று கொண்டிருந்தனர்.\nபீமனும் கடோத்கஜனும் பின்னடையும்போது பாண்டவப் படைகளுக்குள் புகுந்த அங்காரகன் கதை வீசி தேர்களையும் யானைகளையும் மானுடத் திரளையும் உடைத்துச் சிதைத்தழித்தபடி ஊடுருவிச்சென்று சுழன்று மீண்டது. அங்காரகனைப் பார்த்ததுமே படைவீரர்கள் சிதறி அகன்று வழிவிட, காற்றுச் சருகுகளை ஊதி விலக்குவதுபோல் வெற்றிடத்தை உருவாக்கியபடி அவர் பாண்டவப் படைகளுக்குள் சுழன்று வந்தார். யானைகளும் புரவிகளும்கூட இயல்பாக அகன்றோடி அவரை தவிர்த்தன. ஆனால் அணிநிறைந்த படை எங்கோ ஓரிடத்தில் சுழித்து அசைவிலாது சிக்கிக்கொள்ள நேர்ந்தது. அப்போது அதன் மேல் பறந்த கதை குருதி உண்டு விண்ணில் சுழன்றது. படைவீரர்கள் அஞ்சிச் சிதறி ஓடினர். வழி மூடிக்கொண்டபோது விழிமூடி உடலை இறுக்கி தலைகொடுத்து விழுந்தனர். சில தருணங்களில் ஆட்கொள்ளப்பட்டவர்கள்போல வீரர்கள் அப்பாலிருந்து படைக்கலங்களை எறிந்துவிட்டு “பிதாமகரே, என்னை கொள்க” என கூச்சலிட்டபடி வந்து அவர்முன் மண்டியிட்டு தலையை அக்கதைக்கு அளித்து சிதறிவிழுந்தனர்.\nதொலைவிலிருந்து போர்புரியும் பால்ஹிகரை பார்க்கையில் அக்கவசங்களுக்குள் ஒரு மானுட உடல் இருப்பதே தெரியவில்லை. அவர் தன் கதைச்சுழற்சியை எவ்வகையிலும் மாற்றிக்கொள்ளவில்லை. விசைகூட்டவோ குறைக்கவோ செய்யவில்லை. வென்று களிப்புறவோ, பின்வாங்கி சீற்றம் அடையவோ, இலக்கு தேடி செல்லவோ, தவறும் இலக்குகளை குறிவைத்து தொடரவோ இல்லை. அந்த விலக்கமே பேரச்சத்தை உருவாக்குவதாக இருந்தது. அவர் படைகளை வழிநடத்தவில்லை. ஆனால் யானை சென்ற வழியே சென்றுமேயும் மான்கூட்டங்கள் என கௌரவப் படை அவரைச் சூழ்ந்து பின்தொடர்ந்தது. அவர் செல்லும் வழியை தங்கள��க்கான திறப்பாக பயன்படுத்திக் கொண்டது. அவர் அனைத்து ஆணைகளுக்கும் அப்பாலிருந்தார்.\nஅவரிடம் எச்சொல்லும் சென்றடையாதென்று உணர்ந்தபின் சுபாகு புரவியை திருப்பி பின்னடைந்தான். எதிரில் வந்துகொண்டிருந்த துர்முகனை நோக்கி “எப்போதும் பிதாமகரின் இருபுறமும் கௌரவர்கள் ஐவர் நிலைகொள்க அவர் இப்போது தனித்து பாண்டவப் படைக்குள் சென்றுவிடலாகாது. அவரை கிராதர்கள் சூழாது நோக்குக அவர் இப்போது தனித்து பாண்டவப் படைக்குள் சென்றுவிடலாகாது. அவரை கிராதர்கள் சூழாது நோக்குக” என்று ஆணையிட்டான். துர்முகன் தலைவணங்கி கைவீசி பிற உடன்பிறந்தாருக்கு ஆணையிட்டபடி பால்ஹிகரை நோக்கி சென்றான். சுபாகு புரவியில் திரும்பி துரியோதனனை வந்தடைந்தான். கர்ணனும் துரோணரும் அஸ்வத்தாமனும் மூன்று முனைகளில் பாண்டவர்களின் படையெழுச்சியைத் தடுத்து பின்னடையச் செய்துகொண்டிருந்தனர். கிராத படைத்தலைவரும் வெவ்வேறு முனைகளிலிருந்து எதிர்பாராத தருணத்தில் தோன்றி அவர்களை அறைந்து அக்கணமே அலையென பின்வாங்கி மறைந்து மீண்டும் தோன்றி தாக்கினர்.\nதுரியோதனனை அணுகிய சுபாகு “மூத்தவரே, பிதாமகரை எவ்வகையிலும் நம்மால் கட்டுப்படுத்த இயலாது. நம்மிடமிருந்து ஒரு சொல்லும் அவரை நோக்கி செல்வதில்லை” என்றான். ஒரு கணத்திற்குப்பின் அவன் சொல்வதை புரிந்துகொண்ட துரியோதனன் “ஆம், உண்மை. நானும் அதை முன்னரே பலமுறை உணர்ந்திருக்கிறேன்” என்றான். பின்னர் “ஒன்று செய்க, அவரது யானையுடன் நம்மால் உரையாடமுடியும் அங்காரகனிடம் கூறுக” என்று சுபாகு கேட்டான். “ஆம், அது நம் சொற்களை கேட்கும். பிதாமகர் நாமறியாத நிலத்திலிருந்து இங்கே எழுந்தவர். அங்காரகன் நம்முடன் குழவியாக இருந்து வளர்ந்தது. இங்கு பட்டத்து யானையாக பழகியது. அதனுடன் பேசுக அதற்கு ஆணையிடுக உளம் கொண்டால் அது கேட்கக்கூடும்” என்றான்.\n“மூத்தவரே, அது மதம் கொண்டதுபோல் தோன்றுகிறது. சூழ மானுடர் இருப்பதையே உணராததுபோல் இருக்கிறது. அவர் முற்றமைந்து அதை ஆள்கிறார். தான் வாழும் விண்ணுலகிலிருந்து அதனுடன் பேசிக்கொண்டிருக்கிறார்” என்றான். “முறையிடுக அதை நோக்கி ஓயாது பேசிக் கொண்டிரு. ஓரிரு சொற்களையேனும் அது ஏற்கக்கூடும். செல்க அதை நோக்கி ஓயாது பேசிக் கொண்டிரு. ஓரிரு சொற்களையேனும் அது ஏற்கக்கூடும். செல்க” என்று த��ரியோதனன் சொன்னான். “இன்று இரவு பிதாமகர் இக்களத்திலிருந்து மீண்டாக வேண்டும். நாம் அவரை முன்னரே களமெழாது செய்திருக்க வேண்டும். பெரும்பிழை செய்துவிட்டோம் என்று என் உள்ளம் பதைக்கிறது. செல்க” என்று துரியோதனன் சொன்னான். “இன்று இரவு பிதாமகர் இக்களத்திலிருந்து மீண்டாக வேண்டும். நாம் அவரை முன்னரே களமெழாது செய்திருக்க வேண்டும். பெரும்பிழை செய்துவிட்டோம் என்று என் உள்ளம் பதைக்கிறது. செல்க\nஅக்கணம் விண்ணிலிருந்து அவன் முன் இறங்கிய இடும்பன் ஒருவன் தன் இரு கைகளிலும் இருந்த நீண்ட வாள்களால் அவனை அறைந்தான். வில்லின் கணையால் இரு வாள்முனைகளையும் தடுத்து “பின்னடைக பின்னடைக” என்று பாகனுக்குச் சொல்லி தேரை பின்னடையச் செய்தபின் தன் வாளை உருவியபடி அவ்வரக்கனை எதிர்த்துப் போரிட்டான் துரியோதனன். ஒரு வாள் உடைந்து பிறிதொரு வாளை துரியோதனன் மேல் வீசி எறிந்தான் இடும்பன். தலை தணித்து அதை தவிர்த்து தன் இடையிலிருந்த வேலை எடுத்து இடும்பனை நோக்கி எறிந்தான். இடும்பன் வௌவால்போல் ஒலி எழுப்பிச் சிதறி மல்லாந்து விழ பிறிதொரு இடும்பன் வந்திறங்கி கதையோடு அவனை நெருங்கினான். அவனிடம் கதையால் போரிடத் தொடங்கினான் துரியோதனன்.\nசுபாகு தன் புரவியை திருப்பிக்கொண்டு விண்ணிலிருந்து இறங்கி பொருதி மீண்டு ஏறிச் சென்றுகொண்டிருந்த இடும்பர்களையும் மண்ணிலிருந்து முளைப்பதெனத் தோன்றிய கிராதர்களையும் ஒழிந்து விழுந்துகிடந்த பிணங்களின் மேல் தாவி நிலைகெட்டு சுழன்று கொண்டிருந்த யானைகளினூடாக வளைந்து பால்ஹிகர் போரிட்டுக்கொண்டிருந்த இடம் நோக்கி சென்றான். சங்கொலி எழக் கேட்டு திரும்பிப்பார்த்தபோது கடோத்கஜனும் கர்ணனும் எதிர்நின்று போரிடுவதைக் கண்டான். அவர்களின் அசைவுகளுக்கேற்ப விளக்கொளிகள் சுழன்று அப்போரை விண்ணில் ஒளியாடலென ஆக்கிக்கொண்டிருந்தன. பல்லாயிரம் நாகங்கள் செந்நா பறக்க படமெடுத்து சீறி, அறைந்து வால்பின்னி நெளிய இருளெல்லாம் நிறைந்து போரிடுவது போலிருந்தன அவை.\nசுபாகு புரவியைத் தூண்டி பால்ஹிகரை நோக்கி சென்றான். பால்ஹிகரின் இருமருங்கும் நின்றிருந்த கௌரவப் படையினர் திரைபோல் மூடியிருந்த இருளுக்குள் இலக்கிலாது அம்புகளை தொடர்ந்து செலுத்தி அங்கிருந்து இடும்பர்கள் வந்திறங்காது செய்தனர். “பிதாமகரின் கதை சுழலும் எல்லைக்குள் நமது படைவீரர்கள் எவரும் செல்ல வேண்டியதில்லை… விலகுங்கள்” என்று துர்முகன் ஆணையிட்டுக்கொண்டிருந்தான். சுபாகு பால்ஹிகரை அணுகி அங்காரகனின் செவியசைவுக்கு நேராக சென்று நின்று “அங்காரகன் அறிக” என்று துர்முகன் ஆணையிட்டுக்கொண்டிருந்தான். சுபாகு பால்ஹிகரை அணுகி அங்காரகனின் செவியசைவுக்கு நேராக சென்று நின்று “அங்காரகன் அறிக அங்காரகன் அறிக” என்றான். “மூத்தவரே, என்ன செய்கிறீர்கள்” என்று துர்முகன் கூவினான். “அங்காரகனிடம் சொல்க” என்று துர்முகன் கூவினான். “அங்காரகனிடம் சொல்க பின்னடையும்படி அதனிடம் ஆணையிடுக இப்போர் அவருடையதல்ல என்று அதனிடம் விளக்குக” என்று சுபாகு சொன்னான். “யானையிடமா” என்று சுபாகு சொன்னான். “யானையிடமா” என்று துர்மர்ஷணன் கேட்டான். “ஆம், நம்முடன் வளர்ந்தது அது. நம் மொழி அதற்கு தெரியும். சொல்க” என்று துர்மர்ஷணன் கேட்டான். “ஆம், நம்முடன் வளர்ந்தது அது. நம் மொழி அதற்கு தெரியும். சொல்க” என்றபின் “அங்காரகன் அறிக” என்றபின் “அங்காரகன் அறிக பின்னடைக\nஅத்தருணத்தில் இரு யானைகளின் மேல் காகங்கள்போல் மொய்த்து ஊர்ந்து வந்த இடும்பர்கள் அதன் விலாக்களிலிருந்து சிறகுகொண்டு எழுந்து காற்றில் பாய்ந்து வந்து அங்காரகனை தாக்கினர். அங்காரகனின் துதிக்கையால் தூக்கி சுழற்றப்பட்ட பெருங்கதை அவர்களை அறைந்து சிதறடிக்க யானைகள் அலறி விழுந்தன. “பின்னடைக பின்னடைக” என்று சுபாகு சொல்லிக்கொண்டிருந்தான். யானையின் செவிகள் அவன் குரலை கேட்டதாகத் தோன்றவில்லை. “அம்புகள் ஓயவேண்டியதில்லை. அம்புகளால் வேலியிடுங்கள்” என்று துர்முகன் கூவிக்கொண்டிருந்தான். அங்காரகன் கதையுடன் பாண்டவப் படையை அழுத்தி முன்னால் சென்றது. இடும்பர்கள் கூச்சலிட்டபடி வானில் எழ பாண்டவப் படையினர் இருளில் முட்டிமோதிச் சிதறினர். சிலர் கீழே விழுந்தனர். எழக்கூடாதென அவர்களுக்கு தெரிந்திருந்தும் எழுந்து தலையறையப்பட்டு உயிர்விட்டனர்.\nதொலைவில் பீமனின் தேர் வருவதை சுழலும் விளக்கொளி அறிவித்தது. “பீமசேனர் இங்கு வருகிறார். அவர் பால்ஹிகரை எதிர்கொள்ளக் கூடாது. பின்னடையச் செய்யுங்கள்” என்று சுபாகு சொன்னான். ஆனால் தன்னெதிரில் வந்த இடும்பர்களை அறைந்து வீழ்த்தியபடி அங்காரகன் மேலும் முன்னடைந்தது. “இறையுருவே, செ���ி கொள்க” என்று சுபாகு சொன்னான். ஆனால் தன்னெதிரில் வந்த இடும்பர்களை அறைந்து வீழ்த்தியபடி அங்காரகன் மேலும் முன்னடைந்தது. “இறையுருவே, செவி கொள்க பின்னடைக” என்று சுபாகு கூவிக்கொண்டிருந்தான். ஒருகணம் யானையின் செவிகள் அசைவிழப்பதை அவன் கண்டான். மெய்யாகவே அது நிகழ்கிறதா என அவன் உள்ளம் துணுக்குற்றது. பின்னர் ஆம் என்று அவன் அகம் கொந்தளித்தது. “அங்காரகனே, அறிக பின்னடைக” என்று அவன் கைகளை வீசியபடி கூவினான்.\nயானை தலைதிருப்பி அவனை பார்த்தது. அடுக்கடுக்காக அமைந்த இரும்புக்கவசங்களுக்கிடையே அதன் விழிகள் எங்கிருக்கின்றன என்று தெரியவில்லை. ஆயினும் சுபாகு அதன் பார்வையை உணர்ந்தான். “பின்னடைக, தேவா பின்னடைக” என்று இறைஞ்சிக் கூவினான். இரு கால்களையும் ஊன்றி உடலை முன்னும் பின்னும் அசைத்து புல்முனை நீர்த்துளிபோல் அசைந்தது அங்காரகன். பின்னர் அது முன்வலக்காலை பின்னெடுத்து வைத்தது. “பின்னடைகிறது யானை பின்னடைகிறது” என்று சுபாகு உவகையுடன் கூறினான். அங்காரகன் மேலும் மேலும் கால்களை எடுத்து வைத்து பின்னடைந்தது. கதாயுதத்தை நிலத்திலிட்டு இழுத்தபடி கௌரவப் படைகளுக்குள் புதைந்தது. சுபாகு “நான் அதை வழிநடத்தி கொண்டுசென்று படைப் பின்னணியில் அமரச்செய்கிறேன். யானை எழவில்லையென்றால் பிதாமகரும் போருக்கெழமாட்டார்” என்றான்.\nபுரவியில் ஏறி யானைக்குப் பின்னால் சென்றபடி அவன் கூவினான். “பெருகி வரும் எதிரிகளை இங்கு நின்று எதிர்கொள்ளுங்கள். வந்துகொண்டிருப்பவர் பீமசேனர் என நினைவில் கொள்க அவர் ஒலிகளை விழிகளாக்கும் திறனற்றவர். வழிகாட்டி வரும் இடும்பர்களை அறைந்து வீழ்த்துங்கள். அவர்களின் விளக்கடையாளங்களை நோக்கி அம்புகளை குறிவையுங்கள்.” சுபாகு புரவிமேல் எழுந்து யானையின் காதை நோக்கி “பின்னடைக அவர் ஒலிகளை விழிகளாக்கும் திறனற்றவர். வழிகாட்டி வரும் இடும்பர்களை அறைந்து வீழ்த்துங்கள். அவர்களின் விளக்கடையாளங்களை நோக்கி அம்புகளை குறிவையுங்கள்.” சுபாகு புரவிமேல் எழுந்து யானையின் காதை நோக்கி “பின்னடைக அங்காரகனே, பின்னடைக” என்றான். யானை பின்னடைவதன் விசை மேலும் கூடியது. கௌரவப் படைகளின் முகப்பு மீண்டும் ஒன்றாக இணைந்து பால்ஹிகரை முழுக்க மூடிக்கொண்டது. தன் யானை பின்னடைவதைக்கூட உணராதவராக பால்ஹிகர் இருந்தார். யானையின் விழிகளின் மின்னை ஒருகணம் சுபாகு கண்டான். கண்டோமா என மறுகணம் ஐயுற்றான்.\nமறுபக்கம் பாண்டவப் படைமுகப்பில் இடும்பர்களால் வழிகாட்டப்பட்டு பீமன் தோன்றினான். இரு இடும்பர்கள் ஓங்கி ஊன்றிய கழைக்கோல் வழியாக எழுந்து கௌரவப் படையின் முகப்பில் பாய்ந்திறங்க அவர்களுக்குப் பின்னால் பீமனின் தேர் விரைந்து வந்தது. நீளம்பொன்றை எடுத்து அவன் அங்காரகன் நெற்றி நோக்கி அறைந்தான். அம்பு அங்காரகனின் தலைக்கவசத்தின் மேல் மணியோசை எழுப்பியபடி அறைந்து உதிர்வதை சுபாகு கேட்டான். “பின்னடைக இது உங்கள் போரல்ல” என்று அவன் கூவினான். மீண்டும் மீண்டும் பீமனின் அம்புகள் வந்து அங்காரகனை அறைந்தன. அங்காரகன் அவ்வம்புகளை பொருட்படுத்தாமல் பின்னடி வைத்து திரும்பிச் செல்வதற்காக திரும்பிய கணம் அம்பு ஒன்று வந்து அதன் கவச இடுக்குக்குள் நுழைந்தது. உரக்கப் பிளிறியபடி அங்காரகன் திரும்பியது.\n” என்று சுபாகு கூவினான். ஆனால் பிளிறலோசையுடன் மீண்டும் பெருங்கதையைத் தூக்கிச் சுழற்றியபடி பீமனை நோக்கி அங்காரகன் சென்றது. அங்காரகனின் கதையால் அறைபட்டு இடும்பர்கள் சிதறி விலகிய வழியினூடாக அது வெறிகொண்ட பிளிறலுடன் பீமனை நோக்கி சென்றது. போர்க்களத்தில் அதன் குரல் முதன்முறையாக எழுவதை சுபாகு கேட்டான். பீமன் தன் தேரிலிருந்து பாய்ந்திறங்கிய கணமே அங்காரகனின் பெருங்கதை பீமனின் தேரை அறைந்து துண்டுகளாக சிதறடித்தது. சூழ்ந்திருந்த இடும்பர்கள் சிதறி விலக கதை அப்பகுதியெங்கும் விம்மலோசை எழுப்பியபடி சுழன்றெழுந்தது. அது தொட்ட இடங்களெல்லாம் உடைந்து தெறித்தன. யானை ஒன்று குருதி சிதற சிதைந்து மண்ணில் விழுந்து துடிப்பதை சுபாகு கண்டான்.\nபீமன் பாய்ந்து புரவியொன்றின் மேலேறி அங்காரகனை நோக்கி வந்தான். அங்காரகனின் கதைச்சுழற்சியை புரவியிலமர்ந்தபடி மிக எளிதாக ஒழிந்து அதை அணுகி கையிலிருந்த நீள்வேலை அதை நோக்கி எறிந்தான். அங்காரகனின் அலறல் கேட்டதுமே மீண்டும் கவச இடைவெளியினூடாக வேல் உள்ளே சென்றுவிட்டதென்பதை சுபாகு உணர்ந்தான். பீமன் புரவியில் பின்னடைந்து தன்னை நோக்கி வந்த இடும்பர்களிடமிருந்து பிறிதொரு நீள்வேலை வாங்கி ஓங்கி வீச அந்த வேலும் அங்காரகனின் அதே கவச இடைவெளியில் பாய்ந்தது. அங்காரகன் அலறியபடி உடலை ஊசலாட்டி தன்னைத்தானே ��ுழற்றியது. என்ன நிகழ்கிறது என்பதை சுபாகு புரிந்துகொண்டான். பகலில் விழிகளால் இலக்குகள் சிதறடிக்கப்பட்டு அங்காரகனின் கவசத்தை கடந்து அம்புகள் செல்லாதொழிந்தன. இரவில் ஒலிகளையே இலக்காக்கி தாக்குவதனால் முதல் இலக்கு தற்செயலாகப் பட்ட அதே புள்ளிக்கு மீண்டும் மீண்டும் அம்புகளையும் வேலையும் செலுத்த பீமனால் முடிந்தது.\nசுழலும் யானையின் உடலில் அந்த இலக்கை எப்படி அறிகிறான் மீண்டும் ஒரு வேலால் பீமன் அங்காரகனை அதே இலக்கில் அறைந்தான். சுழலும் யானையை கவசங்களின் உரசல் ஒலியாக மட்டுமே பீமன் பார்த்துக்கொண்டிருக்கிறான். அவ்வொலியை மிக அருகிலென பார்க்க இயல்கிறது. ஒளியாலான இலக்குகள் தொலைவால் மங்கலடைகின்றன. ஒலியாலான காட்சிகளுக்கு அண்மையும் சேய்மையும் இல்லை. கைகளால் தொட்டு உணர்வதுபோல் இலக்குகளை அறிய முடிகிறது. மீண்டுமொரு வேல் அங்காரகனின் அதே இலக்கை தாக்க சுழன்று அலைபாய்ந்த யானையின் செவிப் பள்ளத்தில் புதைந்திருந்த ஏழு வேல்களை சுபாகு பார்த்தான். “அங்காரகனை காத்துக்கொள்க மீண்டும் ஒரு வேலால் பீமன் அங்காரகனை அதே இலக்கில் அறைந்தான். சுழலும் யானையை கவசங்களின் உரசல் ஒலியாக மட்டுமே பீமன் பார்த்துக்கொண்டிருக்கிறான். அவ்வொலியை மிக அருகிலென பார்க்க இயல்கிறது. ஒளியாலான இலக்குகள் தொலைவால் மங்கலடைகின்றன. ஒலியாலான காட்சிகளுக்கு அண்மையும் சேய்மையும் இல்லை. கைகளால் தொட்டு உணர்வதுபோல் இலக்குகளை அறிய முடிகிறது. மீண்டுமொரு வேல் அங்காரகனின் அதே இலக்கை தாக்க சுழன்று அலைபாய்ந்த யானையின் செவிப் பள்ளத்தில் புதைந்திருந்த ஏழு வேல்களை சுபாகு பார்த்தான். “அங்காரகனை காத்துக்கொள்க சூழ்ந்துகொள்க” என்று அவன் கௌரவர்களுக்கு ஆணையிட்டான். அவர்கள் தங்கள் விற்களுடன் அங்காரகனைச் சூழ்ந்து வந்து பீமனை தாக்கினர். பீமனைச் சூழ்ந்துவந்த ஷத்ரியர்கள் விற்களால் கௌரவப் படைகளை தாக்கினர்.\nபீமன் அங்காரகனுடன் போர்புரிந்துகொண்டே எதிர்பாராத கணத்தில் புரவியிலிருந்து எழுந்து தாவி வந்து கதாயுதத்தால் துர்மர்ஷணனை அறைந்து கொன்றான். திகைத்துப் பின்னடைந்த துர்தர்ஷனையும் ஊர்ணநாபனையும் கொன்றான். சுபாகு பின்னடைந்து “விலகுக விலகுக” என்று கூவிக்கொண்டிருக்கையில் பாய்ந்து அங்காரகனின் அந்த செவிப் பள்ளத்தில் மீண்டுமொரு வேல���ல் அறைந்தான். அங்காரகனின் கையிலிருந்து பெருங்கதை நழுவி தரையில் விழுந்தது. சங்கிலி உருவி வளையங்களாகி அதன்மேல் பொழிந்தது. யானை உடலை முன்னும் பின்னும் ஊசலாட்டி துதிக்கையைச் சுருட்டி தலைகுலுக்கி உரக்க பிளிறியது. காற்றில் பாய்மரம் உலைவதுபோல் ஆடி கவசத்தின் இரும்புப் பலகைகளும் சங்கிலிகளும் உராய்ந்து எழுந்த குவியலோசையுடன் பக்கவாட்டில் விழுந்தது. கவசங்களின் எடையால் அந்த வீழ்வொலி நிலத்தை அதிரச் செய்தது. பீமன் பாய்ந்து அங்காரகனின் மேலேறி அதன் செவிப் பள்ளத்தில் பாய்ந்திருந்த வேலின்மேல் கதையால் ஓங்கி அறைந்து இறக்கினான்.\nயானையின் உடலுடன் சேர்ந்து விழுந்து ஒரு கால் யானைக்கு அடியில் சிக்கிக்கொள்ள கையூன்றி எழ முயன்றுகொண்டிருந்த பால்ஹிகரை அணுகி தன் கதையால் அவர் தலையை ஓங்கி அறைந்தான் பீமன். தலைக்கவசம் உடைந்து தெறிக்க பால்ஹிகர் நிமிர்ந்து பீமனை பார்த்தார். மறுமுறை கதையைச் சுழற்றி பால்ஹிகரின் தலையை அறைந்து மண்டை ஓடு உடைந்து அகலச் செய்தான். மீண்டும் இருமுறை அறைந்து தலைக்கூழ் அப்பகுதியெங்கும் சிதறச் செய்தபின் தன் கதையை தலைக்குமேல் தூக்கினான். சூழ்ந்திருந்த இடும்பர்கள் தங்கள் படைக்கலங்களைத் தூக்கி வெற்றிக்குரலெழுப்ப அவ்வோசை பாண்டவப் படைகளுக்குள் பரவிச்சென்றது. சுபாகுவின் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. புரவியைத் தட்டி செலுத்த அவனால் இயலவில்லை. அவன் உணர்வுகளை புரிந்துகொண்டதைப்போல் புரவி பின்னடைந்து பாய்ந்து விலகி கௌரவப் படைகளுக்குள் புகுந்து ஓடியது. அவனைச் சூழ்ந்து “பிதாமகர் விண்புகுந்தார் விண்ணேகுக மூதாதை” என வாழ்த்தொலிகள் எழுந்து பரவிக்கொண்டிருந்தன.\nமுந்தைய கட்டுரைகுளச்சல் மு.யூசுப் பாராட்டுவிழா\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-16\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-15\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-14\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-13\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-12\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-11\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-10\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-9\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-8\nஇந்து என உணர்தல்- கடிதம்\nவனவாசம், ஓநா��ின் மூக்கு -கடிதங்கள்\nதீ அறியும் (குறுநாவல்) : 2\n‘சந்திப்பு’ நூல் அறிமுக விழா\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி கி.ராஜநாராயணன் கோவை ஞானி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உணவு உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் தொல்லியல் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் நகைச்சுவை நேர்காணல் நேர்காணல் மற்றும் பேட்டிகள் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பிறர் படைப்புகள் நூல் மதிப்புரை மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் மதிப்புரை விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெண்முரசு – ஒலிவடிவம் வெண்முரசு – வாசகர் கடிதம் வெண்முரசு – வாசகர் மதிப்புரை வெண்முரசு ஆவணப்படம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/1642/", "date_download": "2021-10-19T12:23:48Z", "digest": "sha1:JAXZ47TM2VXF4LYCGVFJXCGHPP4GIDDJ", "length": 19228, "nlines": 135, "source_domain": "www.jeyamohan.in", "title": "நான் கடவுள், இன்னும் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nகட்டுரை திரைப்படம் நான் கடவுள், இன்னும்\nநான் கடவுள் விமரிசனங்களை மீண்டும் திரட்டி அளித்திருக்கிறேன். நீங்கள் பிறகு இவற்றை படித்துப்பார்ப்பது உங்களுக்கு உதவியாக இருக்கும் என்று எண்ணுகிறேன். நான் ஒரு நண்பருடன் இன்று மதியம் உதயம் அரங்குக்கு போனேன். அங்கே டிக்கெட் கிடைக்கவில்லை. நல்ல கூட்டம் இருந்தது. மாலைக்காட்சிக்கு டிக்கெட் எடுத்து பார்த்தேன். இப்போது பொதுவாக படத்தை கவனமாகப்பார்க்கும் ரசிகர்கள் வந்திருக்கிறார்கள் என்று தோன்றியது.\nநீங்கள் படத்தைப்பற்றி பேச விரும்பவில்லை என்று சொன்னீர்கள். அதை நான் புரிந்துகொள்கிறேன். ஆனால் ஏராளமான வசனங்கள் சம்ஸ்கிருதத்திலேயே இருப்பதனால் பொதுவாக ரசிகர்கள் அவ்வளவாக ரசிக்கவில்லை என்பதை நான் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். அதேபோல எனக்கு சினிமாவைப்பற்றி நிறைய கருத்துக்கள் உள்ளன. முக்கியமாக நான் பத்தாண்டுகளாக சினிமாவில் வேலைபார்ப்பவன் என்பதனால் இந்த இணைய விமரிசனங்களில் பலர் சினிமாவை எடுப்பவரின் கோணத்தில் ஷாட், பிஜிஎம் , லைட்டிங் எல்லாம் தெரிந்ததுபோல பேசியிருப்பது அபத்தமாக இருக்கிறது என்று தோன்றியது. டிவிடி பார்த்து சினிமாவின் டெக்னிக் தெரிந்தது போல சொல்லிக்கொள்கிறார்கள். ரசிகர்கள் தங்களை ரசிகர்களாக மட்டுமே எண்ணிக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். உங்கள் கருத்து என்ன\nஉங்கள் கடிதம். நீங்கள் எனக்கு என் படைப்புகள்– இந்த இணைய தளம் பறி இதுவரை ஒரு கடிதம்கூட எழுதவில்லை என்பதை இப்போதுதான் பார்த்தேன். சரி, நான் கடவுள் வேகம் இன்னும் கொஞ்சநாள்தான். அதன்பின்னர் இந்த இணையதளத்தையும் பிற கட்டுரைகளையும் கொஞ்சம் வாசித்துப் பாருங்கள். நீங்கள் சினிமாவைச்சேர்ந்தவர் என்பதை இத்தனை கஷ்டப்பட்டு இவற்றை நீங்கள் சேகரித்த போதே தெரிந்துகொண்டேன்\nசினிமா ஒரு வெகுஜனக் கலை. 50 ரூ கொடுத்து அதை பார்ப்பவர்களுக்கு எல்லாம் அதைப்பற்றி பேச உரிமை இருக்கிறது. அப்படிபேசுவதும்கூட ஒருவகை ரசனைதான். இந்தப்படம் ஓடிக்கொண்டிருப்பதே பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ எல்லாரும் இதைப்பற்றிப் பேசுவதனால்தான்\nஆரியாவுக்கு நிறைய தமிழ் வசனங���கள் இருந்தன. சொல்லிவிட்டேன் கடைசியில் சினிமாவில் என்ன எஞ்சுமென்பது கடவுள் கையில்தான்\nகோவை கவிதைவிவாதம் – கடிதம்\nஅக்டோபர் 2 காந்தி ஜெயந்தி நிகழ்வு – குக்கூ காட்டுப்பள்ளி\nவடுகூரும் தோத்தாத்ரியும்- கடலூர் சீனு\nவிஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் (அமெரிக்கா) – செயல்பாடுகள்\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 38\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி கி.ராஜநாராயணன் கோவை ஞானி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உணவு உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் தொல்லியல் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் நகைச்சுவை நேர்காணல் நேர்காணல் மற்றும் பேட்டிகள் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பிறர் படைப்புகள் நூல் மதிப்புரை மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் மதிப்புரை விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெண்முரசு – ஒலிவடிவம் வெண்முரசு – வாசகர் கடிதம் வெண்முரசு – வாசகர் மதிப்புரை வெண்முரசு ஆவணப்படம் வெய்யோன் வெண்முரசு ��ொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.noolaham.org/wiki/index.php?title=%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD_%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD,_%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD._%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD._(%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD)&oldid=411317", "date_download": "2021-10-19T11:22:48Z", "digest": "sha1:NAZE5MSVOCJGTNV4XMUYXBPXAMYEJUO7", "length": 3846, "nlines": 50, "source_domain": "www.noolaham.org", "title": "அந்தோனி அண்ணாவியார், நீ. வ. (நினைவுமலர்) - நூலகம்", "raw_content": "\nஅந்தோனி அண்ணாவியார், நீ. வ. (நினைவுமலர்)\nJanatha (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:34, 16 டிசம்பர் 2020 அன்றிருந்தவாரான திருத்தம்\n(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)\nஅந்தோனி அண்ணாவியார், நீ. வ. (நினைவுமலர்)\nநினைவு மலர்: கலைக்குரிசில் அந்தோனி அண்ணாவியார் 1989 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [11,760] இதழ்கள் [13,280] பத்திரிகைகள் [53,303] பிரசுரங்கள் [1,125] நினைவு மலர்கள் [1,513] சிறப்பு மலர்கள் [5,516] எழுத்தாளர்கள் [4,874] பதிப்பாளர்கள் [4,171] வெளியீட்டு ஆண்டு [185] குறிச்சொற்கள் [91] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,157]\nஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டு நிறுவனம்\nஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டு நிறுவனம்/நினைவுமலர்\n1989 இல் வெளியான நினைவு மலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/thalaivi-movie-release", "date_download": "2021-10-19T11:15:27Z", "digest": "sha1:4UORGA7XTV4EGLJBNCFLETJEPPKSKIFT", "length": 7770, "nlines": 89, "source_domain": "tamil.asianetnews.com", "title": "thalaivi movie release: Latest News, Photos, Videos on thalaivi movie release | tamil.asianetnews.com", "raw_content": "\n'தலைவி' பட நடிகை கங்கனா ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி\nமறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள, 'தலைவி' திரைப்படம் செப்டம்பர் 10 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தில் ஜெயலலிதாவாக நடித்துள்ள நடிகை கங்கனா ரனாவத் ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.\nதலைதூக்கிய கொரோனா... 'தலைவி' படக்குழு எடுத்த அதிரடி முடிவு\nமறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள, 'தலைவி' திரைப்படம் ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில், மீண்டும் கொரோனா பிரச்சனை தலை தூக்கியுள்ளதால் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகோவிட் மூன்றாவது அலையில் இருந்து நம்மை காத்து கொள்ள சுயபரிசோதனை கருவியே நமக்கு தேவை \nபலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய விளையாட்டு வீரர்கள் \n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய கலைஞர்கள்\nமஹசூஸ் வெற்றியாளர் ஏசியாநெட் நியூஸ் தமிழுக்கு அளித்த பேட்டி\nகோவிட் மூன்றாவது அலையில் இருந்து நம்மை காத்து கொள்ள சுயபரிசோதனை கருவியே நமக்கு தேவை \nபலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய விளையாட்டு வீரர்கள் \nடி20 உலக கோப்பையில் இந்திய அணியின் தொடக்க ஜோடி இதுதான்..\nபொய் வழக்குகள் போட்டு அதிமுகவினரை முடக்கிவிட முடியாது.. திமுகவை கடுமையாக சாடும் எடப்பாடி பழனிசாமி.\nஈனம், மானம், ரோஷம், சூடு, சொரணை எல்லாம் எங்கே போனது. வன்னியர்களை வச்சு செய்த ராமதாஸ்.. தாறுமாறு பேச்சு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2809802&Print=1", "date_download": "2021-10-19T13:05:40Z", "digest": "sha1:VBHG2O73UATTGWGQC4MNFYANAZ7JCXZE", "length": 12671, "nlines": 111, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "ராஜஸ்தான் அமைச்சரவை மாற்றம் எப்போது\nராஜஸ்தான் அமைச்சரவை மாற்றம் எப்போது\nஜெய்ப்பூர்-பஞ்சாபை தொடர்ந்து ராஜஸ்தானில் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காணும் முயற்சியில், காங்., ஈடுபட்டுள்ளது. அடுத்த சில நாட்களில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. போர்க்கொடிராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்., அரசு அமைந்துள்ளது. உரிய அங்கீகாரம் கிடைக்காததால் அதிருப்தி அடைந்த இளம் தலைவர்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஜெய்ப்பூர்-பஞ்சாபை தொடர்ந்து ராஜஸ்தானில் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காணும் முயற்சியில், காங்., ஈடுபட்டுள்ளது. அடுத்த சில நாட்களில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.\nராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்., அரசு அமைந்துள்ளது. உரிய அங்கீகாரம் கிடைக்காததால் அதிருப்தி அடைந்த இளம் தலைவர் சச்சின் பைலட், கடந்தாண்டு ஜூலையில் திடீரென போர்க்கொடி துாக்கினார். அவருக்கு 18 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு தெரிவித்திருந்தனர்.கட்சி தலைமை கேட்டுக் கொண்டதால் ஓராண்டாக பைலட் தரப்பினர் அமைதி காத்து வந்தனர்.காங்., ஆளும் பஞ்சாபில் முதல்வர் அமரீந்தர் சிங் மற்றும் முன்னாள் அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து இடையே மோதல் ஏற்பட்டது. கட்சி தலைமை தலையிட்டு சுமுக முடிவு ஏற்பட்டுள்ளது. முன்னாள் கிரிக்கெட் வீரரான சித்து, கட்சியின் மாநில தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇதையடுத்து ராஜஸ்தானில் கட்சியில் உள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காண தலைவர் சோனியா மற்றும் அவரது மகன் ராகுல் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். சந்திப்புஅதன்படி கட்சியின் பொதுச் செயலர்களான கே.சி.வேணுகோபால், அஜய் மாக்கன் ஆகியோர் ஜெய்ப்பூரில் முதல்வர் அசோக் கெலாட்டை நேற்று முன்தினம் இரவு சந்தித்து பேசினர். மூன்று மணி நேரத்துக்கு மேலாக இந்த சந்திப்பு நடந்தது.\nஇந்நிலையில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் மூத்த நிர்வாகிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தப்பட்டது.இது குறித்து அஜய் மாக்கன் கூறியுள்ளதாவது:கட்சியில் எந்தப் பிரச்னையும் இல்லை. அனைவருடனும் பேசினோம். கட்சி தலைமை எடுக்கும் எந்த முடிவையும் ஏற்பதாக கூறியுள்ளனர்.நிர்வாகிகள் மாற்றம் மற்றும் அமைச்சரவை விரிவாக்கம் குறித்து, அடுத்த சில நாட்களுக்குள் கட்சி தலைமை முடிவு எடுக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.\nஜெய்ப்பூர்-பஞ்சாபை தொடர்ந்து ராஜஸ்தானில் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காணும் முயற்சியில், காங்., ஈட��பட்டுள்ளது. அடுத்த சில நாட்களில் அமைச்சரவை விரிவாக்கம்\nஊடக தர்மம் உங்கள் கரங்களில்...\nசமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...\nஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.\nஇங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags ராஜஸ்தான் அமைச்சரவை மாற்றம் எப்போது\nநாளை டில்லி வருகிறார் அமெரிக்க வெளியுறவு அமைச்சர்(1)\nஉலக பாரம்பரிய சின்னமாக ராமப்பா கோவில் அறிவிப்பு(5)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/121893/", "date_download": "2021-10-19T12:08:55Z", "digest": "sha1:QH53OMLI25LKZHP63KEDG6VKIF3AI4FM", "length": 37435, "nlines": 129, "source_domain": "www.jeyamohan.in", "title": "சுனில் கிருஷ்ணன் சிங்கை, மலேசியா வருகை -சரவணன் விவேகானந்தன் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nகட்டுரை சந்திப்பு சுனில் கிருஷ்ணன் சிங்கை, மலேசியா வருகை -சரவணன் விவேகானந்தன்\nசுனில் கிருஷ்ணன் சிங்கை, மலேசியா வருகை -சரவணன் விவேகானந்தன்\nசிங்கப்பூரின் வளரும் இலக்கிய தலைமுறையினருக்கு கூடுதலான இலக்கிய அறிமுகத்தை வழங்கும் நோக்கத்தில் சிங்கப்பூர் தமிழ்முரசு நாளிதழ் தேசிய கலைகள் மன்றத்துடன் (National Arts Council) இணைந்து படைப்பிலக்கிய திட்டம் ஒன்றைத் தொடங்கியுள்ளது. அதன் ஒரு நிகழ்வுக்கு நம் நண்பர் சுனில் கிருஷ்ணன் வந்திருந்தார். இத்திட்டம் புதிய மற்றும் வளரும் எழுத்தாளர்களின் படைப் பாற்றலை வளர்க்க உதவும் நோக்கத்தில் முன்னெடுக்கப்பட்ட்து என்பதால் இளையர்களால் தம்மை நெருக்கமாக பொருத்திக் கொள்ள இயலும் இளம் தமிழ் படைப்பாளிகள் இத்திட்டத்திற்கு பொருத்தமானவர்களாக இருப்பார்கள் என்று கருதுகிறார்கள் என்று நினைக்கிறேன். மேலும் இளம் படைப்பாளிகளால் இவ்விளையர்களின் தளத்தில் இருந்து இதை விரிவாக எடுத்துரைக்க இயலும் என்பது இத்திட்டத்தின் நோக்கத்தை எளிமையாக்குகிறது.\nஇத்திட்டத்தின் ஒரு பகுதியாக முதல் பயிலரங்கு இந்த மாதம் முதல் வாரத்தில் நடைபெற்றது. எழுத்தாளர். சு.வேணுகோபால் வழிநடத்தினார். ஒரு சிறு விபத்தினால் கை எலும்பு முறிவு ஏற்பட்டு, என்னால் சு.வே நிகழ்வுகளில் கலந்து கொள்ள முடியவில்லை. இரண்டாம் பயிலரங்குதான் போன வாரம் சுனிலால் அறிவியல் புனைக் கதைகள் மற்றும் வரலாற்றுக் புனைக்கதைகள் எழுதுவது சார்ந்து வழிநடத்தப்பட்டது. கையொடிந்து மெடிக்கல் லீவில் இருந்ததால் (:-) ) ஏர்போர்ட்டில் சுனிலை ரிஸீவ் பண்ணியதில் இருந்து சிங்கப்பூர் மலேசிய பயணம் முடிந்து கடைசிநாள் வழி அனுப்பியது வரை கூடவே இருக்க முடிந்தது. நிறைய சுற்றினோம்.\nசென்ற வெள்ளிக்கிழமை மாலை முதல் நிகழ்வாக சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்துடன் இணைந்த பொது நிகழ்ச்சியாக “கதைவழிப் பயணம்” ல் பொதுவாக கதைகள் வழி நாம் என்ன உணர்ந்து கொள்கிறோம், கதைகள் நம்மை என்ன செய்கிறது, அப்படி எதோ ஒன்றை செய்வதற்கு அந்த கதைக்கு என்ன தேவையாக இருக்கிறது என்று கதைகளை எடுத்துகாட்டுகளாக கொண்டு ஒருமணிநேரம் உரையாற்றினார். அது ஒரு பொது நிகழ்வு என்பதால் பல்வேறு தரப்பில் இருந்து வந்திருந்தார்கள்.\nசனிக்கிழமை பயிலரங்கிற்கு சுமார் 28 பேர் வந்திருந்தார்கள். எழுத்தாளர்கள், மாணவர்கள் என்று பலதரப்பட்ட பேர் பங்கு கொண்டார்கள். சிறுகதை என்றால் என்ன என்பதில் ஆரம்பித்து ஏன் அறிவியல் சிறுகதை என்ற வகைமை தேவையாகிறது, அதன் நோக்கம், அதில் பயன்படும் யுக்திகள், எது ஒன்றை அறிவியல் சிறுகதையாக்குகிறது, அறிவியல் ஹைப்போதீசிஸ் எப்படி ஒரு சிறுகதைக்குள் இயங்குகிறது, எது அனுமதிக்கப்பட்ட்து, எதை செய்யக் கூடாது, Science, Pseudoscience and Anti-science வித்தியாசம், அதன் வரம்புகள், பயிற்சி கேள்விகள் கேட்டு அதற்கான பதில்க���் கொண்டு அவர்கள் புரிதலை அளவிடல், பின் அதிலிருந்து அவர்களை மேலே கொண்டு செல்லல், பயிலரங்கில் பங்கேற்றவர்கள் அனுப்பிய கதைகளை விமர்சித்தல், அதை முன்வைத்து அவர்களுடன் விவாதித்தல் என்று விரிவாக போனது. அதன் பின் வரலாற்று புனைவு சார்ந்த அறிமுகம், எடுத்துக்காட்டுகள் மூலம் விவாதம், பயிற்சி என அந்த ஒரு நாள் முழுவதும் வகுப்பு நீண்டது.\nஉண்மையில் சுனிலின் இந்த சிங்கப்பூர் மலேசிய நிகழ்வுகள் மிக சிறப்பாக அமைந்தது. சிஙகப்பூர் நிகழ்வு ஒரு முழு நாள் நிகழ்வு… முழு நாளும் தனியாக ஒரு நிகழ்வை சுவாரஸ்யம் குறையாமல் நடத்திசெல்வது அவ்வளவு எளிதல்ல. ஆனால் சிறப்பாக எல்லோரையும் கையாண்டார். அறிவியல் புனைக்கதைகள் மட்டும் ஒரு நாள் நிகழ்வில் கொண்டு செல்ல முடியாது என்றுதான் வரலாற்று புனைக்கதைளையும் சேர்த்திருந்தார்கள் என்று நினைக்கிறேன். ஆனால் அது தேவையேயில்லாமல் அறிவியல் புனைகதைகள் மட்டுமே ஒருநாளை கிட்டதட்ட எடுத்து ஒரு முழுமையான நிகழ்வாக அமைந்தது. நமது அரூ அறிவியல் சிறுகதைகள் போட்டியில் வென்ற மற்றும் பங்கு பெற்ற சிறுகதைகளும் விவாதத்திற்கான எடுத்துக்காட்டுகளாக அமைந்தன, பிறமொழி அறிவியல் சிறுகதைகளும். மாணவர்களுக்கு பயனுள்ள நிகழ்வு, இதிலிருந்து அவர்கள் தம்மை மேலெடுத்து செல்ல நிறைய சாத்தியங்களை உள்ளடக்கிய நிகழ்வு.\nபின் மலேசியாவுக்கு பேருந்தில் சென்றோம். நவீன் கோலாலம்பூருக்கு வந்து அழைத்து சென்றார். சீ. முத்துசாமி இதற்காகவே அவரது ஊரில் இருந்து கொலாலம்பூர் வந்திருந்தார், மிகுந்த உற்சாகமாக பேசினார். டாக்டர். சண்முகசிவா வையும் சந்தித்தோம். ஸ்ரீதர் ரங்கராஜ் மற்றும் மஹாத்மன் போன்றவர்களும் வந்திருந்தார்கள் அங்கு சுனிலின் நிகழ்ச்சி இரு பகுதிகளாக நடைபெற்றது. முதல் பகுதி “சமகால சிறுகதைகளின் செல்நெறிகள்” என்ற தலைப்பில் உத்தேசமாக 2010 ல் இருந்து இப்போது வரை எழுதப்படட சிறுகதைகள் மற்றும் படைப்பாளிகளை முன்வைத்தான உரை. இந்த காலகட்டங்களில் எழுதப்படட சிறுகதைகளின் பல்வேறு வடிவங்கள், வேறு வேறான கதைக் களங்கள், பேசாப் பொருட்களை பேசுதல், அதன் உத்திகள் என்று சமகால படைப்பாளர்கள் ஒவ்வொருவரையும் குறிப்பிட்டு….. மிகுந்த உழைப்பை கோரக்கூடிய செறிவான உரை அது.\nஏறத்தாழ 20 க்கும் மேற்படட தொகுப்புக்களை வாசித்து பேசுவதற்கான களத்தை உருவாக்கி கொண்டதாக சொன்னார். இன்றைய சமகால சிறுகதைகளின் போக்கு சார்ந்த ஒரு ஒட்டுமொத்த சித்திரத்தை கொடுத்தார். பெரும்பாலும் இளம் படைப்பாளிகளை இந்த உரைக்கு எடுத்துக் கொண்டது வாசகர்களுக்கு அவர்கள் சார்ந்த நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது. முத்த எழுத்தாளர்களை அறிமுகப்படுத்த தேவையில்லை, ஆனால் இளம் எழுத்தாளர்களை அறிமுகப்படுத்துவது மிக முக்கியமானது. ஒவ்வொரு படைப்பாளர்களையும் குறிப்பிட்டு அவர்கள் முக்கியத்துவத்தையும் அவர்கள் மேலான தனது நம்பிக்கையையும் சொன்னார். உரைக்கு பின்னரான ஒரு மணி நேரம் சமகால சிறுகதைகள் குறித்த வாசகர்களின் கேள்விகளுக்கான பதில்களாக அமைந்தது.\nநிகழ்வின் இரண்டாம் பகுதி சுனிலின் படைப்புகள் சார்ந்து வாசகர்களின் சந்தேகங்கள், கேள்வி-பதில்களாக அமைந்தது. கிடடதடட எல்லோரும் சுனிலின் ஒவ்வொரு சிறுகதைகளையும் குறிப்பிட்டு கேள்வி கேடடார்கள். நவீன் இந்த நிகழ்வுக்கு முன்பே அவர்களுக்கு சிறுகதைகளை அனுப்பி படித்து வர ஏற்பாடு செய்திருக்கிறார் என்று நினைக்கிறேன். ஏனெனில் எல்லா கேள்விகளும் செறிவான கேள்விகளாக இருந்தன. நவீனின் இலக்கிய முன்னெடுப்பு, அதன் தீவிரம் சார்ந்து நான் சொல்லி நீங்கள் தெரியவேண்டியதில்லை என்று நினைக்கிறேன்.\nஉண்மையில் சிங்கப்பூர் மற்றும் மலேசியா நிகழ்ச்சிகள் சார்ந்து சுனில் ஒரு பிரமிப்பை ஏற்படுத்தினார். ஒரு நீண்ட நிகழ்ச்சியை ஒருவராக தொய்வில்லாமல் நடத்தி செல்வது, இதற்கான உழைப்பு, சக படைப்பாளர்களை, அவர்களின் முக்கியத்துவத்தை வாசகர்களுக்கு எடுத்துரைத்தது மற்றும் பங்கேற்பாளர்களை கையாண்டவிதம் என்று பிரமிப்பாகத்தான் இருந்தது. இந்த சுனிலை இப்படி பார்ப்பது இதுதான் முதல்முறை. மலேசிய நிகழ்ச்சியில் ஒரு படைப்பாளியாக தன மேலான/ தன் படைப்புகள் மேலான விமர்சனங்களுக்கு எந்த பாசாங்கும் இல்லாமல் அதை புத்திசாலித்தனமாகவோ, மழுப்பலாகவோ எதிர்கொண்டு மறுக்காமல், அவர்கள் விமர்சனங்களை உண்மை என்று கொண்டு, பின் அதற்கான பதிலை சொன்னது உண்மையில் மகிழ்ச்சியாக இருந்தது.\nஒரு எழுத்தாளனாக அரசியல் சரிநிலையை பேணக்கூடாது அப்படி அதைக் “கறாராக” பேணுபவர்கள் சார்ந்து தமக்கு பெரிய மரியாதை ஒன்றும் இல்லை என்பதையும் தெளிவாக எடுத்து சொன்னார். நவீன் இதுவ��ை மலேசியாவுக்கு அழைத்து நிகழ்வு நடத்தியது எல்லாம் மூத்த படைப்பாளர்கள் மட்டும்தான் என்று நினைக்கிறேன். சுனில்தான் முதல் இளைய படைப்பாளி. ஆனால் இந்த நிகழ்வு இவ்வளவு சிறப்பாக இளையர்களால் உள்வாங்கபட்டது சார்ந்து நவீனுக்கு மிகுந்த மகிழ்சி ஏற்பட்டிருக்கும் என்றே நினைக்கிறேன்.\nபின் அடுத்தநாள் முழுவதும் நவீனுடன் மலேசியாவின் பல்வேறு பகுதிகளை சுற்றினோம்….சுற்றுலாவுக்குரிய பகுதிகள் என்று இல்லாமல், புக்கிட் பித்தாங் எனும் உணவு சாலை , திருநங்கையர்கள் வாழும் பிரத்யோக பகுதி, பழங்குடியினர் வாழும் பகுதி, செம்பனைத் தோட்டம், தமிழர்களின் ஆதி கோயில்கள் என்று. பின்பு குவாலா செலாங்கூரில் உள்ள புகிட் மெலவாடி சென்று Silvered leaf monkeys எனும் நம் முன்னோர்களுக்கு கீரை மற்றும் காரட்களை நாங்கள் அளிக்க அதை ஏற்று எங்கள் தோளில் அமர்ந்து தமது பஞ்சு போன்ற கைகளால் எங்களுக்கு பித்ருக்களின் ஆசியை வழங்கினார்கள். இன்னும் அவர்களின் தொடுகையின் மென்மை மனதிற்குள் இருக்கிறது. பின் அடுத்தநாள் பஸ்சில் மீண்டும் சிங்கப்பூர் வந்து அன்றிரவு சுனில் ஊர் திரும்பினார்.\nசுனில் ஏற்கிறாரோ இல்லையோ இளம் படைப்பாளிகளுக்குள் அவர் ஒரு காந்தியவாதி அல்லது காந்தியத்தை தொடர்ந்து முன்னிறுத்துபவர். அப்படிதான் அவரை நாங்கள் பார்க்கிறோம். எனவே காந்தியத்திற்கு, ஜனநாயகத்திற்கு எதிரான சமூகத்தவறுகளுக்கு எதிரான அவர் குரல் எப்போதும் ஒலித்துக் கொண்டே இருக்கவேண்டும் என்ற இயல்பான எதிர்பார்ப்பு எங்களுக்கு இருக்கிறது. 2011 வாக்கில் “வைரலான” காந்தி பற்றிய அவதூறுகளுக்கு நான் எழுதிய பதிலை பார்த்துவிட்டு நீங்கள் எனக்கு ஒரு கடிதம் எழுதியிருந்ததீர்கள். அதில் இருந்த சிலவரிகள் இப்படி இருந்தது “/நாம் நம்முடைய கடமை என எல்லா இடத்திலும் இப்படியான திட்டவட்டமான பதில்களைச் சொல்லிக் கொண்டே இருக்கவேண்டும், சரண். நாம் பாறையுடன் பேசுகிறோம் என்ற உணர்வுடன், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், முடிந்த இடங்களில் எல்லாம் சொல்லியாக வேண்டும். அந்தகுரல் எழுவது நின்றுவிடக்கூடாது. அதில் சலிப்பும் வரக்கூடாது”\nஒர் எழுத்தாளனாக எல்லா சமூக பிரச்சனையிலும் தம் கருத்தை சுனில் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஒரு இலக்கியவாதி அப்படி எல்லாவ���்றுக்கும் கருத்து சொல்லிக் கொண்டிருக்க முடியாது, கூடாது என்றும் சொல்லலாம். ஆனால் காந்தியத்திற்கு எதிரான, தாம் தவறு என்று உணரும் ஒவ்வொரு சமூக தவறுகளுக்கும், அந்த போக்குக்கும் எதிரான தமது கருத்துக்களை அவர் “தொடர்ந்து” மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும் என்றே நினைக்கிறேன்.ஒரு கருத்துருவாக்கச் செயல்பாடாக.\nமுக்கியமாக பண்பாட்டு அடையாளங்களை உணர்ச்சிபூர்வமான குறியீடுகளாக ஆக்கி, அண்பாட்டுக் கருத்துக்களை ஒற்றைப்படையாக்கி, அவற்றின் கீழே மக்களைத் தொகுத்து, அவற்றை எதிர்ப்பவர்களை இந்திய பண்பாட்டை எதிர்பவர்களாக முத்திரை குத்தி, கருத்துக்களின் சுதந்திரமான வளர்ச்சியையும் மோதலையும் தடுக்கும் ஒரு காலகட்டத்தில், ஜனநாயகத்துக்கான குரலாக காந்தியத்தின் குரல் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.\nசிங்கப்பூர் – மலேசியா பயணம்- 1சுனில் கிருஷ்ணன்\nசிங்கப்பூர் -மலேசிய பயணம் – 2சுனில் கிருஷ்ணன்\nமுந்தைய கட்டுரைமாணவர்கள் நடுவே ராஜா\nஅடுத்த கட்டுரைமுழுக் கோடையும் ஒரே நாளில்-ரே பிராட்பரி – டி.ஏ.பாரி\nகோவை கவிதைவிவாதம் – கடிதம்\nஅக்டோபர் 2 காந்தி ஜெயந்தி நிகழ்வு – குக்கூ காட்டுப்பள்ளி\nவடுகூரும் தோத்தாத்ரியும்- கடலூர் சீனு\nவிஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் (அமெரிக்கா) – செயல்பாடுகள்\nஞானமும் சந்தையும் ஒரு கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை - 31\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி கி.ராஜநாராயணன் கோவை ஞானி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உணவு உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் தொல்லியல் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்ச��� பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் நகைச்சுவை நேர்காணல் நேர்காணல் மற்றும் பேட்டிகள் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பிறர் படைப்புகள் நூல் மதிப்புரை மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் மதிப்புரை விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெண்முரசு – ஒலிவடிவம் வெண்முரசு – வாசகர் கடிதம் வெண்முரசு – வாசகர் மதிப்புரை வெண்முரசு ஆவணப்படம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/148029/", "date_download": "2021-10-19T12:36:11Z", "digest": "sha1:YD3GEYCIBQM3BFOLZZ6AFFODFCWJTA2U", "length": 23077, "nlines": 195, "source_domain": "www.jeyamohan.in", "title": "அனலோனும் குட்டிப் பயலும்-என். நிரஞ்சனா தேவி | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nவிருது குமரகுருபரன் விருது அனலோனும் குட்டிப் பயலும்-என். நிரஞ்சனா தேவி\nஅனலோனும் குட்டிப் பயலும்-என். நிரஞ்சனா தேவி\n’மதார்’ருக்கு குமரகுருபரன் விருது 2021\nதிருநெல்வேலி வாசிகள் எப்போதுமே வெயில் பிரியர்கள். நான் ஒருமுறை போத்தீஸ் சென்ற போது அங்கே லிப்ட் இயக்குபவர் இப்படி புலம்பிக் கொண்டிருந்தார், “ஒரு வாரமா ஒரே மழ ஒன்னும் ஓடல பாத்திக்கிடுங்க… இன்னைக்கி தான் சத்த வெயிலு தலயக் காட்டுது” என்றார். இந்நகரின் வாழ் மக்களின் மனநிலையை சொல்லும் வாக்கியம் அது. இங்குள்ளவர்கள் வெயிலில் மட்டும் தான் சமநிலையில் வாழப் பழகியவர்கள் சிறு மழையோ, பனியோ அவர்களின் உடல் அல்லது மனதின் சமநிலையை குலைத்துவிடும்.\nஇங்குள்ள சிறுதெய்வங்கள் ���லவற்றின் பெயரில் அதனைக் காணலாம். எங்கள் குல தெய்வத்தின் பெயர் ‘வெயிலுகந்த சாஸ்தா’. அதே போல் வெயிலுகந்த அம்மன், வெயிலுந்த மாடன் என பல சிறு தெய்வங்கள் இங்கே உண்டு. இவர்கள் அனைவரும் வெயிலை தாங்கியே நிற்பர். கோவிலுக்கு பெரும்பாலும் மேற்கூரை இருக்காது. அவர்களுக்கான பூஜை உச்சி மதியத்திலேயே நடக்கும். கால் சுட சுட சாஸ்தா கோவிலின் வாசலில் நின்ற என் குழந்தைப் பருவ நினைவுகள் மதார் கவிதைகளை வாசிக்கையில் எழுகிறது. வெயில் சுட சுட தான் ஆனந்தம், அந்த அனலோனின் தித்திப்பும், திகிலும் அதன் உக்கரத்திலேயே அமைந்திருக்கிறது.\nமுகம் கழுவ இவ்வளவு நேரமா\nயோசித்துப் பார்த்தால் தமிழர்கள் குறிப்பாக திருநெல்வேலி வாசிகள் வெயிலோடு உறவாடியது போல், மழையோடோ, பனியோடோ உறவாடியிருக்க மாட்டார்கள். எங்களுக்கு வெயில் என்பது ஒரு விளையாட்டு, தினம் தோறும் உடன் வரும் தோழி.\nமேலே சொன்ன கவிதையில் முகம் தேடும் திகில் பின்னால் வரும் மதார் கவிதையில் வேறொன்றாக மாறுவதைக் காணலாம்.\nநதி நீரில் ஒரு இலை\nநதி நீர் குளியல் நீர்\nதரையில் போய் விழுந்தன துளிகள்\nமண்ணை விட்டுப் போகவே இல்லை\nஉதட்டில் புன்னகையை எடுத்துக் கொண்டு வெயில் மீது வீசினேன் என்ற வரிக்கு நிகராக வந்து நிற்கிறது இக்கவிதையின் இறுதி வரியில் வெயில் தும்மிய ஈரம்.\nமதாரின் இக்கவிதையிலும், பிறக் கவிதைகளிலும் தென்படும் இன்னொரு அம்சம் குழந்தையின் கள்ளமின்மை. அந்த கள்ளமின்மையே மேலே வெயிலை அழகாக்குகிறது. பிறிதொரு கவிதையில் வீட்டின் கதவாய் வந்து நின்ற மரத்தை,\nவேறொரு கவிதையில் அப்போது பேசத் தொடங்கிய குழந்தையின் குழந்தைமை நோக்கி செல்லும் நானின் சொற்கள்,\nஇறுதியாக அந்த கள்ளமின்மை தெய்வச் சிலையின் புன்னகையில் வந்து அமர்கிறது,\nகடவுள் உதட்டில் கை வைத்துப் புன்னகைக்கிறார்\nகுழந்தை புன்னகைத்தபடியே கடவுளைப் பார்க்கிறது\nஇந்த காணாமல் போன கடவுளையே மதார் தன் ஒவ்வொரு கவிதையிலும் தேடி விரிகிறார். கைகளால் கண்ணைப் பொத்தி அதனோடு கண்ணாமூச்சி விளையாடிப் பார்க்கிறார். அந்த கள்ளமின்மையே அவர் கவிதையை அழகாக்குகிறது.\nவெயில் பறந்தது தபாலில் பெற :\nஅல்லது Whatsapp ல் தொடர்புக்கு :\nமுந்தைய கட்டுரைவிருது – கடிதங்கள்\nஅன்றாட வாழ்வின் அழகியல்- பிச்சைக்காரன்\nகுமரகுருபரன் விஷ்ணுபுரம் – விருதளி��்பு நிகழ்வு\n’மதார்’ருக்கு குமரகுருபரன் விருது 2021\nவெங்களிற்றின் மீதேறி…- கடலூர் சீனு\nகுளிர்ந்த நீரின் எளிய குவளை – -வேணு தயாநிதி\nவலி என்பதும் குறியீடே - விஷால்ராஜா\nவிஷ்ணுபுரம் இலக்கிய விருது விழா கடிதம்\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி கி.ராஜநாராயணன் கோவை ஞானி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உணவு உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் தொல்லியல் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் நகைச்சுவை நேர்காணல் நேர்காணல் மற்றும் பேட்டிகள் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பிறர் படைப்புகள் நூல் மதிப்புரை மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் மதிப்புரை விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெண்முரசு – ஒலிவடிவம் வெண்முரசு – வாசகர் கடிதம் வெண்முரசு – வாசகர் மதிப்புரை வெண்முரசு ஆவணப்படம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொ���ர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilceylon.com/%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2021-10-19T12:07:44Z", "digest": "sha1:J4HRBO3H4ASG6FC2UGMDQ6EGSL5OS5BU", "length": 8663, "nlines": 101, "source_domain": "www.tamilceylon.com", "title": "மட்டு.தேசிய கல்வியியல் கல்லூரி முதல்வரின் இடமாற்றத்தினை நிறுத்துமாறு கோரி போராட்டம் | Tamil Ceylon", "raw_content": "\nHome செய்திகள் மட்டு.தேசிய கல்வியியல் கல்லூரி முதல்வரின் இடமாற்றத்தினை நிறுத்துமாறு கோரி போராட்டம்\nமட்டு.தேசிய கல்வியியல் கல்லூரி முதல்வரின் இடமாற்றத்தினை நிறுத்துமாறு கோரி போராட்டம்\nமட்டக்களப்பு- தாழங்குடாவிலுள்ள தேசிய கல்வியியல் கல்லூரி முதல்வரின் இடமாற்றத்தினை நிறுத்துமாறு கோரியும் குறித்த கல்லூரிக்கு அட்டாளைச்சேனை முதல்வரை இடமாற்றியதை இடைநிறுத்துமாறு கோரியும் ஆர்ப்பாட்டமொன்று இன்று (சனிக்கிழமை) பகல் முன்னெடுக்கப்பட்டது.\nமட்டக்களப்பு தேசிய கல்வியியல் கல்லூரியினை பாதுகாக்கும் அமைப்பின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம், கல்வியில் கல்லூரிக்கு முன்பாக நடைபெற்றது.\nமேலும் இப்பகுதிகளிலுள்ள தமிழர்களின் கலாசாரத்தினையும் பாரம்பரியத்தினையும் கொண்ட தேசிய கல்வியியல் கல்லூரிக்கு, முதல்வராக தமிழரே நியமிக்கப்படவேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவிக்கின்றனர்.\n1992ஆம் ஆண்டு கல்லூரி ஆரம்பிக்கப்பட்ட காலம் தொடக்கம் தமிழர் ஒருவரே நியமிக்கப்பட்டுவந்த நிலையில் இன்று இந்த மாற்றம் வேறு ஒரு இனத்தவருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் இது உடனடியாக நிறுத்தப்படவேண்டும் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் குறிப்பிட்டனர்.\n‘இது முஸ்லிம்களுக்கு எதிரான போராட்டம் அல்ல எமது கலாசாரத்தினை பாதுகாக்கவே முற்படுகின்றோம்’, ‘மட்டக்களப்பு தேசிய கல்வியியல் கல்லூரியை முஸ்லிம்களுக்கு தாரைவார்க்காதே’ போன்ற சுலோசகங்களை தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் அவர்கள் ஈடுபட்டனர்.\nகுறித்த ஆர்ப்பாட்ட இடத்திற்கு வருகைதந்த பொதுஜன பெரமுனவின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் ப.சந்திரகுமாரிடம் இதன்போது மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.\nஅதனைத் தொடர்ந்து இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி, பிரதமரின் கவனத்திற்கு கொண்டுசென்று நடவடிக்கையெடுப்பதாக அமைப்பாளர் சந���திரகுமார் உறுதியளித்தார்.\nPrevious articleஊரடங்குச் சட்டத்தை மீறிய 173 பேர் கல்முனையில் கைது\nNext articleமுகக்கவசம் அணியுமாறு WHO பரிந்துரை\nஇலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா\nடிசம்பா் இறுதிவரை வரையரைகளுடன் செயற்படுக – சுகாதார பிரிவு எச்சரிக்கை\n21ஆம் திகதிக்கு பின்னரும் பயணத்தடை நீடிப்பா\n”உரம் இன்றி உழவு இல்லை”விவசாயிகளின் தற்கால பிரச்சினைக்கு தீர்வுகோரி மட்டக்களப்பில் போராட்டம்\nஅரிசியின் விலையும் அதிகரிக்கும் அபாயம்\nஇலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா\nஉள்நாட்டுச் செய்திகள் amal - 18-10-2021 0\nடிசம்பா் இறுதிவரை வரையரைகளுடன் செயற்படுக – சுகாதார பிரிவு எச்சரிக்கை\nஉள்நாட்டுச் செய்திகள் amal - 18-10-2021 0\n21ஆம் திகதிக்கு பின்னரும் பயணத்தடை நீடிப்பா\nஉள்நாட்டுச் செய்திகள் amal - 18-10-2021 0\nஉள்நாட்டுச் செய்திகள் amal - 18-10-2021 0\n”உரம் இன்றி உழவு இல்லை”விவசாயிகளின் தற்கால பிரச்சினைக்கு தீர்வுகோரி மட்டக்களப்பில் போராட்டம்\nஉள்நாட்டுச் செய்திகள் amal - 18-10-2021 0\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/tag/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-10-19T12:01:15Z", "digest": "sha1:MV4IQG65NAIF4LQ7RMI6PJYPGFEZ6UNI", "length": 4869, "nlines": 118, "source_domain": "vivasayam.org", "title": "இயற்கை உரம் Archives - Vivasayam | விவசாயம்", "raw_content": "\nHome Tags இயற்கை உரம்\nகழனியும் செயலியும் (பகுதி – 7)\nதென்னைக்கு இயற்கை உரம் செய்முறை\nகோகோ சாகுபடி செய்வோர் கவனத்திற்கு..\nவாழைச் சாகுபடி செய்யும் முறை\nஒரு சென்ட் நிலத்தில் 8.1 டன் இயற்கை உரம் தயாரிப்பு முறை\nமிளகு சாகுபடி செய்யும் முறை\nஅறுபது சென்ட் நிலத்தில், செண்டுமல்லி சாகுபடி..\nஒரு ஏக்கர் நிலத்தில் காய்கறிகள் சாகுபடி..\nதத்கல் முறையில் 10 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்\nஅக்ரிசக்தியின் வீட்டுத்தோட்டப் பயிற்சியின் வளர்ச்சி\nபூச்சி விரட்டி – வசம்பு\nகறிக்கோழிப் பண்ணை தொடங்க வங்கிக் கடன் மற்றும் மானியம் பெறுவது எப்படி \nகொரோனா காலத்தில் விவசாயிகளுக்கு உதவும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்\nபிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி\nபிரதமரின் விவசாய நீர்பாசன திட்டத்தில் பாசன கட்டமைப்பு உருவாக்கிட விவசாயிகளுக்கு மானியம்\nமரங்களும் மற்றும் அதன் பயன்கள்\nநிலத்தடி நீர் ஓட்டங்களை கண்டறிய சுலபமான முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sonakar.com/2021/03/blog-post_676.html", "date_download": "2021-10-19T12:13:32Z", "digest": "sha1:IOCICPMFWTJJQC2T2V2TB7PH3DMDEFBD", "length": 5520, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "இலங்கை மீதான கண்காணிப்பை ஆரம்பித்துள்ள ஐ.நா - sonakar.com", "raw_content": "\nHome NEWS இலங்கை மீதான கண்காணிப்பை ஆரம்பித்துள்ள ஐ.நா\nஇலங்கை மீதான கண்காணிப்பை ஆரம்பித்துள்ள ஐ.நா\nமனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நேற்றைய தினம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இலங்கையை கண்காணிக்கும் நடவடிக்கைகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nதொடர்ச்சியான மனித உரிமை மீறல்கள், கட்டாய ஜனாஸா எரிப்பு, சமய அடக்குமுறைகள் என பல்வேறு விடயங்களின் பின்னணியில் இப்பிரேரணை முன் வைக்கப்பட்டிருந்தது. ஈற்றில் நேற்றைய தினம் 21:11 என்ற வாக்கு அடிப்படையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.\nஇத்தீர்மானத்தினால் உடனடி எதிர் விளைவுகள் இல்லாவிடினும் சர்வதேச மட்டத்தில் நீண்ட கால இழப்புகள் மற்றும் வர்த்தக சிக்கல்களை இலங்கை எதிர்நோக்கும் என எதிர்வு கூறப்படுகிறது.\nபணமில்லை 'ஜனாஸாவை' வைத்துக்கொள்: குடும்பங்கள் அதிரடி\nகொழும்பில் கொரேனா பாதிப்பிருப்பதாக தெரிவிக்கப்படும் ஜனாஸாக்களை அடக்குவதற்கு 58,000 ரூபா கேட்பது நிரந்தர வழக்கமாக உருவெடுத்துள்ள நிலையில்,...\nஇஷாலினி தன்னைத் தானே எரியூட்டியதாக வாக்குமூலம்\nரிசாத் பதியுதீன் வீட்டில் பணிபுரிந்த நிலையில் தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த மலையகத்தைச் சேர்ந்த இஷாலினி தன்னை...\nஅசாத் கைது செய்யப்பட்டது தெரியாது: பிரதமர்\nதேசிய ஐக்கிய முன்னணி தலைவர் அசாத் சாலி கைது செய்யப்பட்டது தனக்குத் தெரியாது என தெரிவித்துள்ளார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச. பயங்கரவாத தடுப்புச...\nஜனாஸா எரிப்பு வழக்கை விசாரணைக்கு ஏற்க மறுப்பு\nஜனாஸா எரிப்புக்கு எதிராக தொடுக்கப்பட்டிருந்த வழக்கினை விசாரணைக்கு ஏற்பதா இல்லையா என்பதனடிப்படையிலான விசாரணைகள் இரு தினங்களாக இடம்பெற்ற ந...\nநான் 'நல்ல மாதிரியான' முஸ்லிம்: முசம்மில்\nமுஸ்லிம் குடும்பம் ஒன்றில் பிறந்து இஸ்லாமிய கலாச்சாரத்தில் வளர்ந்தவன் என்ற அடிப்படையில் மாற்று மதத்தவரைத் திருமணம் செய்துள்ள போதிலும் தான்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhdesiyam.com/2020/11/", "date_download": "2021-10-19T11:17:38Z", "digest": "sha1:DNFZK2A3HBCTXTBQP4MQDP7LSU7O6M3D", "length": 131201, "nlines": 1217, "source_domain": "www.tamizhdesiyam.com", "title": "November 2020 ~ தமிழ்த்தேசியப் பேரியக்கம் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n - ஐயா கி.வெங்கட்ராமன் கண்டனம்\nதமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர்\nஇந்திய அரசின் தமிழ்த் தொலைக்காட்சியான பொதிகைத் தொலைகாட்சி உள்ளிட்ட அனைத்து மாநில மொழி தொலைக்காட்சிகளும் அன்றாடம் காலை 7.15 முதல் 7.30 வரை சமற்கிருத செய்தி அறிக்கையை கட்டாயம் ஒளிபரப்ப வேண்டும், ஒரு வேளை அந்த நேரத்தை ஒதுக்க முடியவில்லை என்றால் அடுத்த அரைமணி நேரத்திற்குள் 15 நிமிடத்தை சமற்கிருதச் செய்தி ஒளிபரப்பிற்காக ஒதுக்க வேண்டும் என்று இந்திய அரசின் பிரசார் பாரதி சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறது.\nஅதுமட்டுமின்றி ஒவ்வொறு சனிக்கிழமையும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகும் சமற்கிருத வாரந்திர செய்தியை ஒளிபரப்ப வேண்டும் என்றும், அந்த குறிப்பிட்ட நேரம் வாய்க்கவில்லை என்றால் அந்த நாளுக்குள் நேரத்தை ஒதுக்கீடு செய்து அதனை கட்டாயம் ஒளிபரப்ப வேண்டும் என்றும் இந்த சுற்றறிக்கை கட்டளையிடுகிறது.\nயாருக்கும் தாய்மொழி இல்லாத சமற்கிருதத்திற்கு நாள் தோறும் கால்மணிநேரம் செய்தி அறிக்கைக்காக ஒதுக்கீடு செய்தவதும் வாரந்தோறும் ஒளிபரப்புவதுமே மிகையானது.\nஇப்போது அது போதாதென்று ஒவ்வொறு நாளும் கால்மணிநேரம் தமிழ் நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு அதற்கு பதிலாக சமற்கிருத செய்தியை ஒளிபரப்பவேண்டும் என்பது சமற்கிருதத் திணிப்பு மட்டுமின்றி தமிழ் நீக்கமும் ஆகும்.\nஇந்தியா ஆரியத்துவா நாடுதான் என்பதை சமற்கிருதத் திணிப்பின் மூலம் மோகன் பகவத் - மோடி அரசு நிலைநிறுத்த விரும்புகிறது.\nஏற்கெனவே பல துறைகளில் சமற்கிருதத்தையும் இந்தியையும் திணித்துவருவதன் தொடர் நடவடிக்கையாகவே இந்த சமற்கிருத திணிப்பு விளங்குகிறது. தமிழின ஒதுக்கலின் இன்னொறு நடவடிக்கையாகும் இது. தமிழினம் இதை ஒரு போதும் ஏற்காது.\nஇந்திய அரசின் செய்தி ஒளிபரப்பு துறை இந்த சமற்கிருதத் திணிப்பு சுற்றறிக்கையை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.\n\"தில்லி முற்றுகை: மக்கள் போரின் மகத்துவம்\" - ஐயா பெ. மணியரசன் அவர்களின் உரை\nதில்லியில் புதிய வேளாண் சட்டத்திற்கு எதிராக பஞ்சாப் உழவர்கள் நடத்திகொண்டிருக்கும் தொடர் போராட்டம் பற்றி..\nஐயா பெ. மணியரசன் அவர்களின் உரை\nகரூர் பசுபதீசுவரர் கோயில் குடமுழுக்கைத் தமிழ்வழியில் நடத்த வேண்டும் - ஐயா பெ. மணியரசன் கோரிக்கை\nஐயா பெ. மணியரசன் கோரிக்கை\nகரூர் பசுபதீசுவரர் கோயில் மற்றும் அவ்வளாகத்தில் உள்ள கருவூரார் கோயில் உள்ளிட்ட திருக்கோயில்களுக்கு 04.12.2020 காலை திருக்குடமுழுக்கு நடைபெற இருப்பதாக திருப்பணிக் குழுவினர் அறிவித்துள்ளார்கள். கொரோனாவால் தள்ளிப்போன இக்குடமுழுக்கை இப்போது நடத்துவதை வரவேற்கிறோம்.\nஅதே வேளை தென்னாடுடைய சிவனார்க்கும், அம்மைக்கும், செந்தமிழில் திருவிசைப்பா பாடிய கருவூரார்க்கும் கருவறையிலும் கோபுரத்திலும் தமிழ் மந்திரங்கள் ஓதி இக்குடமுழுக்கு நடைபெற வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறையினர்க்கும் தமிழ்நாட்டு ஆட்சியாளர்க்கும் குட முழுக்குத் திருப்பணிக் குழுவார்க்கும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கனிவுடன் வேண்டுகோள் வைக்கிறேன்.\nகடந்த 05.02.2020 அன்று தஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கைத் தமிழ் மந்திரங்கள் ஓதி நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கும் இந்து சமய அறநிலையத்துறைக்கும் தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழு சார்பில் வேண்டுகோள் வைத்தோம். அத்துடன் மதுரை உயர்நீதிமன்றத்தில் இவ்வேண்டுகோளை செயல்படுத்த வலியுறுத்தி வழக்கும் தொடுத்தோம். தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் என் பெயரில் அவ்வழக்கு தொடுக்கப்பட்டது. இதே கோரிக்கைக்காக மற்ற நண்பர்களும் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்.\nமதுரை உயர்நீதிமன்றத்தில், தமிழ்நாடு அரசு தஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கு தமிழிலும் சமற்கிருதத்திலும் நடத்தப்படும் என்று உறுதியளித்தது. அதே போல் தஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கு தமிழிலும் நடந்தது. அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டம் தொடர்பாக நடந்த வழக்கில் 2015 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம், சமற்கிருத மொழியில்தான் கருவறையில் பூசை நடைபெற வேண்டும் என்று எந்த ஆகமும் கூறவில்லை எனத் தீர்ப்புரையில் குறிப்பிட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் அலுவல் மொழியாகத் தமிழ் இருக்கிறது. தமிழில் கருவறை அர்ச்சனை செய்வதற்குரிய தமிழ் மந்திரங்களைத் தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை அச்சிட்டு வெளியிட்டுள்ளது. அரசு அர்ச்சகர்களுக்கு தமிழ் வழிப் பூசைக்கான பயிற்சி கொடுத்துப் பட்டயமும் வழங்கியுள்ளது.\nஎனவே அருள் கூர்ந்து கரூர் பசுபதீசுவரர் – கருவூரார் கோயில் குடமுழுக்கையும் கருவறைப் பூசையையும் தகுதிமிக்கத் தமிழ் ஓதுவாமூர்த்திகளைக் கொண்டு தமிழ் மந்திரங்களைச் சொல்லி தமிழ் வழியில் நடத்த வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களைக் கனிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.\n\"மாவீரர் நாள் 2020\" - ஐயா பெ. மணியரசன் அவர்களின் உரை\nஐயா பெ. மணியரசன் அவர்களின் உரை\n\"தமிழர் கடைகளில் பொருட்கள் வாங்குவோம் எச். இராசாவுக்கு பதிலடி\" “தமிழ் கேள்வி” இணைய ஊடகத்துக்கு, - ஐயா பெ. மணியரசன் அவர்களின் நேர்காணல்..\n\"தமிழர் கடைகளில் பொருட்கள் வாங்குவோம்\n“தமிழ் கேள்வி” இணைய ஊடகத்துக்கு,\nஐயா பெ. மணியரசன் அவர்களின் நேர்காணல்..\n\"தமிழரசன் புகழை எவராலும் அழிக்க முடியாது\" - ஐயா பெ. மணியரசன் அவர்களின் உரை\n\"தமிழரசன் புகழை எவராலும் அழிக்க முடியாது\nஐயா பெ. மணியரசன் அவர்களின் உரை\n\" -தூசு அம்மாள் அவர்களின் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்வில் - ஐயா பெ. மணியரசன் நினைவேந்தல் உரை\nதமிழ்த்தேசியப் போராளி தோழர் தமிழரசன் அவர்களின் தாயார் வீரத்தாய் பதூசு அம்மாள் அவர்களின் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்வில் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் நினைவேந்தல் உரை\nஉச்ச நீதிமன்றம் கண்டித்தும் பேரறிவாளன் விடுதலையை மறுத்தால் தமிழின வெறுப்பு - தமிழினத் துரோகம்\nதமிழின வெறுப்பு - தமிழினத் துரோகம்\nதலைவர் - தமிழ்த்தேசியப் பேரியக்கம்.\nநீட் தேர்வு நீக்கம், மருத்துவ மேற்படிப்பில் நடுவண் அரசுத் தொகுப்பிற்குக் கொடுக்கும் தமிழ்நாட்டு இடங்களில் இடஒதுக்கீடு போன்றவற்றில் உச்ச நீதிமன்றம் தங்கள் கைகளைக் கட்டிப் போட்டது; நாங்கள் என்ன செய்ய முடியும் என்று கூறிக் கொள்ளும் தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள், ஏழு தமிழர் விடுதலைக்கு உச்ச நீதிமன்றம் பச்சைக்கொடி காட்டிப் பல ஆண்டுகள் ஆன பின்னும் செயல்படாமல் இருப்பது ஏன் என்ற கேள்வி, பரவலாகத் தமிழ்நாட்டில் எழுந்துள்ளது.\nஅன்றையத் தலைமை நீதிபதி சதாசிவம் அவர்கள் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசமைப்பு ஆயம் 18.02.2014 அன்று அளித்த தீர்ப்பில், சிறையாளிகளின் தண்டனைக் குறைப்பு, விடுதலை ஆகியவற்றில் மாநில அரசுக்கு அரசமைப்புச் சட்ட உறுப்பு 161 வழங்கும் அதிகாரம் தங்கு தடையற்றது; நிபந்தனை இல்லாதது என்று கூறியது. அந்த அரசமைப்பு ஆயம் ஏழு தமிழர் விடுதலைக்கு அன்றைய முதலமைச்சர் செயலலிதா போட்ட ஆணையை எதிர்த்து அமைக்கப்பட்டது ஆகும்.\nசெயலலிதா நேரடியாகப் போட்ட விடுதலை ஆணையை செல்லாது என்று கூறிய நீதிபதி சதாசிவம் ஆயம், அரசமைப்புச் சட்ட உறுப்பு 161-இன் கீழ் மாநில அமைச்சரவை பரிந்துரை நிறைவேற்றி ஆளுநர் கையொப்பம் பெற்று, தனது மாநிலத்தில் உள்ள எந்தக் கைதிக்கும் தண்டனைக் குறைப்பு வழங்கலாம்; விடுதலை செய்யலாம் என்று தனது தீர்ப்பில் கூறியது.\nஉச்ச நீதிமன்றம் அவ்வாறு கதவு திறந்து விட்டும் அன்றைய முதல்வர் செயலலிதா தனது அமைச்சரவையில் ஏழு தமிழர் விடுதலைக்குப் பரிந்துரை நிறைவேற்றி ஆளுநர்க்கு அனுப்பவில்லை.\nஅதன்பிறகு, அப்போதைய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எச்.எல். தத்து தலைமையில் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசமைப்பு ஆயம் அமைக்கப்பட்டது. அது தண்டனைக் கைதிகள் விடுதலை பற்றி ஆய்வு செய்து 2015 ஆகத்தில் தீர்ப்பு வழங்கியது. இந்த ஆயமும், அரசமைப்புச் சட்டக் கூறு 161-இன் கீழ், மாநில அரசு ஆளுநர் வழியாக எந்தக் கைதியையும் விடுதலை செய்யலாம்; நடுவண் அரசின் புலனாய்வுத்துறை நடத்திய வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களையும் விடுதலை செய்யலாம் என்று தனது தீர்ப்பில் கூறியது. அத்துடன் இதில் அரசமைப்புச் சட்ட உறுப்பு 161 – மாநில அரசுக்கு வழங்கியுள்ள அதிகாரம் தங்கு தடையற்றது (Unfettered) என்றும் கூறியது.\n2015 ஆகத்து மாதம் வந்த இந்தத் தீர்ப்பைப் பயன்படுத்தி, ஏழு தமிழர்களை விடுதலை செய்ய அன்றைய முதலமைச்சர் செயலலிதா எதுவும் செய்யவில்லை.\nஇந்தப் பின்னணியில் தம்பி பேரறிவாளன் தன்னை விடுதலை செய்வதற்குரிய காரணங்களைக் கூறியும், தான் அப்பாவி என்பதற்கு, இராசீவ் கொலை வழக்கை விசாரித்த காவல் கண்காணிப்பாளர் தியாகராசன் பணி ஓய்வுக்குப் பின் – தான் செய்த தவறை வெளிப்படுத்தியதைச் சுட்டிக்காட்டியும், இவ்வழக்கின் மேல் முறையீட்டில் உச்ச நீதிமன்ற அமர்வுக்குத் தலைமை தாங்க�� தீர்ப்பு எழுதிய நீதிபதி கே.டி. தாமசு பணி ஓய்வுக்குப் பின், இராசீவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டவர்கள் அனைவரும் குற்றவாளிகள் என்பது – ஐயமற – தெள்ளத் தெளிவாக மெய்ப்பிக்கப்படவில்லை, எனவே அரசு அவர்களுக்கு மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யலாம் என்று கூறி வந்ததையும் சுட்டிக்காட்டி – தன்னை விடுதலை செய்யுமாறு தமிழ்நாடு ஆளுநர்க்கு 2015 டிசம்பர் 30 அன்று விண்ணப்பித்தார்.\nபேரறிவாளனின் இந்த மனுவைக் கிடப்பில் போட்டுவிட்டார் ஆளுநர். இந்த விண்ணப்பத்தின் மீது தமிழ்நாடு ஆளுநர் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், உச்ச நீதிமன்ற ஆயங்களின் தீர்ப்புகளைச் சுட்டிக்காட்டியும் தம்பி பேரறிவாளன் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டார்.\nபேரறிவாளனின் இந்த முறையீட்டை உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதி நவீன் சின்கா, நீதிபதி கே.எம். சோசப் ஆகியோர் அமர்வு விசாரித்து, 06.09.2018 அன்று தீர்ப்பளித்தது. அரசமைப்புச் சட்ட உறுப்பு 161-இன்படி, கைதிகளுக்குத் தண்டனைக் குறைப்பு – விடுதலை ஆகியவற்றை செயல்படுத்த மாநில அரசுக்குத் தங்கு தடையற்ற அதிகாரம் இருக்கிறது என்று அத்தீர்ப்பு கூறியது.\nஅதன்பிறகு, 09.09.2018 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தனது அமைச்சரவையைக் கூட்டி, மேற்படி இராசீவ் வழக்கில் 26 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கும் ஏழு தமிழர்களையும் விடுதலை செய்யத் தீர்மானித்து, அப்பரிந்துரையை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களுக்கு அனுப்பி வைத்தது. இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக, “ஆய்வு செய்வதாகக்” கூறிக் கொண்டு அமைச்சரவையின் பரிந்துரையைத் திட்டமிட்டுக் கிடப்பில் போட்டு விட்டார் ஆளுநர்.\nதம்பி பேரறிவாளன் உச்ச நீதிமன்றத்தை அணுகினார். கடந்த 20.01.2020 அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இவ்வளவு காலமாக ஆளுநர் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது சரியல்ல, அவர் என்ன செய்கிறார் என்று கேட்டுச் சொல்லுங்கள் என்று தமிழ்நாடு அரசுக்கு ஆணையிட்டது. கடந்த 03.11.2020 அன்று உச்ச நீதிமன்ற நீதிபதி எல். நாகேசுவரராவ் தலைமையில் நீதிபதிகள் அஜய் ரஸ்த்தோகி, ஏமந்த குப்தா ஆகியோரைக் கொண்ட அமர்வு, ஆளுநர் தாமதம் செய்வதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்தது.\nபன்னாட்டுச் சதி பற்றி விசாரணை இன்னும் முடியவில்லை; அதனால் இவர்களை ���ிடுதலை செய்ய முடியாது என்று இந்திய அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் கே.எம். நடராசு கூறினார். உடனடியாக நீதிபதி நாகேசுவரராவ், “இவ்வழக்கில் சிறையில் உள்ளவர்கள் தண்டிக்கப்பட்டு சிறையில் இருக்கிறார்கள். பன்னாட்டுச் சதி வழக்கில் இவர்களைச் சேர்க்க முடியாது. இருபது ஆண்டுகளாகப் பன்னாட்டுச் சதியைக் கண்டறிய முடியவில்லையா” என்று கண்டனக் குரலில் கூறினார்.\nஆளுநர் விடுதலை செய்யக் கையொப்பமிடவில்லை என்றால், உச்ச நீதிமன்றம் அரசமைப்புச் சட்ட உறுப்பு 142 –இன் கீழ் தானே முன்வந்து விடுதலை செய்யும் என்றார் நீதிபதி நாகேசுவரராவ். விரைந்து முடிவெடுக்க வேண்டும் என்று எச்சரித்து வழக்கை 23.11.2020-க்குத் தள்ளி வைத்துள்ளார்கள்.\nஉச்ச நீதிமன்றத்தின் இந்தக் கடும் எச்சரிக்கை மற்றும் கண்டிப்புக்குப் பின்னும் ஆளுநர் அமைதி காப்பதும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அமைதி காப்பதும், அசைய மறுப்பதும் என்ன செய்தியை வெளிப்படுத்துகின்றன\nஉச்ச நீதிமன்ற நீதிபதிகள் கத்தினால் கத்திக் கொள்ளட்டும். நான் மோடி – அமித்சாவின் கட்டளை இல்லாமல் அசையவே மாட்டேன் என்று ஆளுநர் பன்வாரிலால் வெளிப்படையாகச் சொல்லாமல் அனைவர்க்கும் உணர்த்துகிறார்.\nதமிழ்நாடு முதலமைச்சரோ, கணக்குக் காட்ட - என் கடமையை முடித்து விட்டேன்; இதற்கு மேல் இதில் தலையிட்டு தில்லி ஆட்சியாளர்களின் எதிர்ப்பைத் தேடிக் கொள்ள நான் விரும்பவில்லை என்று எடப்பாடி சொல்லாமல் சொல்கிறாரா\nமோடி – அமித்சா – பன்வாரிலால் மூவருக்கும் தமிழினத்திற்கு எதிரான வெறுப்புணர்வு இருக்கிறது. பழிவாங்கும் உள்மன உந்துதல் இருக்கிறது. அதனால்தான் அரசமைப்புச் சட்டம் வழங்கும் நீதி, உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு மற்றும் வழிகாட்டல் – தமிழர்களுக்குப் பொருந்தாது; இன ஒதுக்கலுக்கு உள்ளாக வேண்டிய இனம் இது என்று அவர்கள் கருதலாம். ஆனால், எடப்பாடி அவர்களோடு ஒத்துப் போவது இனத்துரோகம் அல்லவா\nகாந்தியடிகளைச் சுட்டுக் கொன்ற வழக்கில் வாழ்நாள் தண்டனை பெற்ற கோபால் கேட்சேயை (நாதுராம் கோட்சேயின் தம்பியை) 14 ஆண்டுகளில் விடுதலை செய்தது மராட்டிய காங்கிரசு ஆட்சி\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை உடனடியாக நேரில் சந்தித்து, முதல் கட்டமாக தம்பி பேரறிவாளனை விடுதலை செய்யக் கையெழுத்துப் பெற வேண்டும். ஆளுநர் பன்வாரிலால் கையெழுத்துப் போட மறுத்தால் அவருக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் உடனடியாக தமிழ்நாடு அரசு மனுப் போட்டு – நடவடிக்கை கோர வேண்டும்.\nமுதல் கட்டமாகப் பேரறிவாளனை விடுதலை செய்ய இதுபோன்ற அல்லது அதற்குரிய வேறு வழியைக் கையாண்டு தமிழ்நாடு முதல்வர் தீர்வு காண வேண்டும். அதன்பிறகு அதே வழியில் எஞ்சிய ஆறு பேரையும் விடுதலை செய்ய வேண்டும்.\nவெளிப்படையாக – பேரறிவாளன் விடுதலைக்குக் கருத்துத் தெரிவித்தும், ஆளுநரின் இரண்டாண்டு தாமதத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பேரறிவாளனை விடுதலை செய்யவில்லை என்றால், கட்சி கடந்து தமிழின உணர்வாளர்கள் – நடுநிலையாளர்கள் – மனித உரிமை ஆர்வலர்கள் என்ன கணிப்பார்கள் என்பதையும் அவர் எண்ணிப் பார்க்க வேண்டும்\n“இந்துத்துவா இந்தியம் தமிழீழத்துக்குத் துணை வருமா” கனடாவிலிருந்து ஒருங்கிணைக்கப்பட்ட இணையவழி சிறப்புக் கருத்தரங்கில் - ஐயா கி. வெங்கட்ராமன் அவர்களின் கருத்துரை\nஅனைத்துலக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சார்பில் 08.11.2020 அன்று கனடாவிலிருந்து ஒருங்கிணைக்கப்பட்ட இணையவழி சிறப்புக் கருத்தரங்கில் தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் ஐயா கி. வெங்கட்ராமன் அவர்களின் கருத்துரை\nஓங்கி வரும் உள் மோதல்கள்-2 இந்துத்துவா பேசிய சிவசேனையின் இன அரசியல் - ஐயா பெ. மணியரசன்,\nஓங்கி வரும் உள் மோதல்கள்-2\nதலைவர் - தமிழ்த்தேசியப் பேரியக்கம்\n“ஒற்றை அதிகார பாசிசத்தை - இந்தியாவின் உள் மோதல்கள் உடைக்கும்” என்ற தலைப்பில் 11.11.2020 அன்று ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தோம்.”\nஇந்தியத் தேசியம் பேசுவோரிடையே உள்ள மோதல்களையும், இந்துத்துவா பேசுவோரிடையே உள்ள மோதல்களையும் சுட்டிக் காட்டியிருந்தோம். இந்த உள் மோதல்களில் பெரும்பான்மையாய் உள்ளவை இன அடிப்படையிலான மோதல்களே\nஇந்துத்துவா அரசியல் பேசுவதில் பாசகவும் சிவசேனையும் பங்காளிக் கட்சிகள். ஆனால் பாசக - ஆரியத்துவா அடிப்படையிலும், சிவசேனை மராத்திய இன அடிப்படையிலும் செயல்படும் கட்சிகள். இப்போது, மராட்டிய முதலமைச்சர் பதவியில் சிக்கல் ஏற்பட்டு – பாசக – சிவசேனைக் கூட்டணி உடைந்து விட்டது. தேசியவாதக் காங்கிரசு – காங்கிரசுக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து – அக்கூட்டணி அ���ைச்சரவையின் முதலமைச்சராக சிவசேனைக் கட்சித் தலைவர் உத்தவ் தாக்ரே உள்ளார்.\nபாசகவையும் தலைமை அமைச்சர் மோடியையும் கடுமையாக விமர்சித்து வருகிறது சிவசேனை.\nமும்பை அலிபாக்கைச் சேர்ந்த கட்டட வடிவமைப்பாளர் அன்வய் நாயக் தற்கொலைக்குத் தூண்டுதலாக இருந்தவர் ரிபப்ளிக் தொலைக்காட்சி முதலாளி அருணாப் கோசுவாமி என்ற குற்றச்சாட்டில் வழக்குப் பதிவாகியுள்ளது. அவ்வழக்கில் அண்மையில் அருணாப் தளைப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரைச் சிறையில் அடைத்தது உத்தவ் தாக்ரே அரசு.\nஅந்த ஆத்திரத்தில், உத்தவ் தாக்ரே மனைவி, மேற்படி அன்வய் நாயக்கிடம் நிலம் வாங்கிய போது குறைந்த விலை கொடுத்து ஏமாற்றிவிட்டார். அதனால் அன்வய் தற்கொலை செய்து கொண்டார் என்று பாசகவின் மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் கிரீட் சோமையா குற்றம் சாட்டியுள்ளார்.\nஇக்குற்றச் சாட்டை மறுத்த சிவசேனையின் மாநிலங்களவை உறுப்பினரும், அக்கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளருமான சஞ்சய் ரெளத் பாசக தலைமையை இன அடிப்படையில் கண்டனம் செய்தார்.\n“பாசக ஒரு சேட்ஜி கட்சி, கிரீட் சோமையா ஒரு வணிகர். கட்டட வடிவமைப்பாளரின் மனைவி கணவனை இழந்து அழுது கொண்டிருக்கிறார். அவருக்கும் அவர்கள் மகளுக்கும் நீதி கிடைக்க பாசக எதுவும் பேசவில்லை. அந்த வழக்கைத் திசை திருப்பவே சர்ச்சைகளைக் கிளப்பி வருகிறது” என்றார் ரெளத்.(தினமணி, 14.11.2020)\nஒட்டு மொத்த பாசகவை சேட்ஜி கட்சி என்கிறார் சிவசேனை செய்தித் தொடர்பாளர். சேட்ஜி என்பது குசராத்தி வணிகர்களைக் குறிக்கும். மோடியும் அமித்சாவும் குசராத்தைச் சேர்ந்தவர்கள். மராத்தி X குசராத்தி இன முரண்பாட்டைச் சுட்டிக் காட்டுகிறார் சிவசேனைத் கட்சியின் தலைமைச் செய்தித் தொடர்பாளர்.\nகடந்த 2019 – இல், மராட்டிய மாநிலத்தின் தேசியவாதக் காங்கிரசுக் கட்சி நிறுவகத் தலைவர் சரத்பவார் மீது இந்திய அரசின் அமலாக்கத்துறை – ஊழல் விசாரணை நடத்தப் போவதாக அறிவித்தது. அப்போது சரத்பவார் “வீர சிவாஜி மரபிலே வந்த மராட்டியன் ஒரு போதும் புது தில்லிக்குத் தலைவணங்க மாட்டான்” என்று செய்தியாளர்களிடம் கூறினார். இச்செய்தி ஏடுகளில் வந்தது.\nஇப்போது சிவசேனைத் தலைவர்களில் ஒருவர், அதே மராட்டியப் பெருமிதத்தோடு, குசராத்தி இனத்தைச் சேர்ந்த பாசக தலைவர்களைக் கண்டிக்கிற��ர்\nஇந்தியத் தேசியத்தின் உள் மோதல்கள் ஒவ்வொரு வடிவில் வெளிவந்து கொண்டுள்ளன.\n“உச்ச நீதி மன்றத்தில் பாசக கொடியைப் பறக்க விடலாம்” – சிரிப்பு நடிகர் விமர்சனம்\nஅருணாப் கோசுவாமி, தளைப்பட்ட பின் நேரடியாக மும்பை உயர்நீதிமன்றத்தில் பிணை மனு போட்டார்கள். கீழ்நீதி மன்றத்தை அணுகு மாறு கூறி, அது பிணை மனுவைத் தள்ளுபடி செய்தது.\nமாவட்ட நீதி மன்றத்தில் பிணை மனு போட்டார்கள். ஆனால் அது விசாரிக்கும் முன்பாகவே உச்சநீதி மன்றத்திலும் பிணை மனு போட்டார்கள். உச்சநீதிமன்ற நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், இந்திரா முகர்ஜி ஆகியோர் அமர்வு உடனடியாகப் பிணை கொடுத்தது.\nஉச்சநீதிமன்றத்தின் இத்தீர்ப்பைப் பலரும் விமர்சிக்கிறார்கள். ஓராண்டுக்கும் மேலாக காசுமீர் உரிமைப் பறிப்பு வழக்கை – அதில் சிறையில் உள்ளோர் பிணை வழக்கை – பீமா கொரேகான் – வழக்கில் – மோடியைக் கொலை செய்யச் சதித் திட்டம் தீட்டினார்கள் என்று பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பேராசிரியர்கள், மூத்த வழக்கறிஞர்கள், மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள் போன்ற முதியவர்களின் பிணை மனுவைப் பல மாதங்களாக விசாரிக்காமல் கிடப்பில் போட்டு வைக்கும் உச்சநீதி மன்றம் பாசகவின் பரப்புரை வம்பர் அருணாப் கோசுவாமி பிணை மனுவை, கீழ் நீதிமன்றத்தில் அப்பிணை மனு விசாரணையில் இருக்கும் நிலையில் மரபுகளைக் கைவிட்டு, உடனடியாகப் பிணை வழங்கியதை பலரும் விமர்சிக்கின்றனர்.\nஇந்தித் திரைப்பட சிரிப்பு நடிகர் குணால் கம்ரா, காரசாரமாக விமர்சித்துவிட்டார். உச்சநீதிமன்றக் கட்டடத்தின் உச்சியில் பாசக கொடியை ஏற்றிவையுங்கள் என்று சுட்டுரையில் கூறிவிட்டார். அதே போல் நீதிபதி சந்திசூட் பற்றியும் விமர்சித்து விட்டார். இதனால் ஆத்திரமடைந்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் நடிகர் குணால் கம்ரா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் பதிவு செய்ய உள்ளார்கள். இந்திய அரசின் சட்டத்தலைவர் கே.கே.வேணுகோபால் அவர்களும் அவமதிப்பு வழக்குப் பதிவு செய்ய தமது ஒப்புதலைத் தெரிவித்துள்ளார்.\nநடிகர் குணால் கம்ரா – இந்தியத் தேசியத்தை ஏற்றுக்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.\n\"பேரறிவாளன் விடுதலைக்காக ஆளுரை முதல்வர் நேரில் சந்திக்க வேண்டும்\" - ஐயா கி. வெங்கட்ராமன் அவர்களின் உரை\nமுதல்வர் நேரில் சந்திக்க வேண்டும்\nஐயா கி. வெங்��ட்ராமன் அவர்களின் உரை\nதொழிலாளர் பகைச் சட்டங்களுக்கு எதிரான அனைத்திந்திய வேலை நிறுத்தம் தமிழ்த்தேசியப் பேரியக்கம் ஆதரவு - தோழர் கி. வெங்கட்ராமன் அறிக்கை\nதொழிலாளர் பகைச் சட்டங்களுக்கு எதிரான\nதோழர் கி. வெங்கட்ராமன் அறிக்கை\nநரேந்திர மோடி அரசின் தொழிலாளர் பகைச் சட்டங்களை எதிர்த்தும், உழவர் பகைச் சட்டங்களை எதிர்த்தும் தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாக்க 26.11.2020 அன்று நடைபெறும் அனைத்திந்திய பொது வேலை நிறுத்தத்தை தமிழ்த்தேசியப் பேரியக்கம் ஆதரிக்கிறது. தமிழகத் தொழிற்சங்க முன்னணி இப்போராட்டத்தில் பங்கேற்கிறது\nநீண்டகாலப் போராட்டங்களின் விளைவாக தொழிலாளர்களுக்கு சில அரைகுறை உரிமைகளை வழங்கிவந்த பல்வேறு தொழிலாளர் சட்டங்களை நான்கு தொகுப்புகளுக்குள் கொண்டு வருவது என்ற பெயரால் தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பு அளித்துவந்த பல்வேறு விதிகளை, சூதான முறையில் கைவிட்டு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை (Labour Codes) மோடி அரசு பிறப்பித்திருக்கிறது.\nஇதுபோன்ற அடிப்படை மாறுதல்கள் செய்வதற்கு முன்னால் தொழிலாளர் அமைப்புகள், தொழில் முனைவோர் அமைப்புகள், அரசு ஆகிய முத்தரப்பினர் கூடி முடிவு செய்வதுதான் இதுவரையிலும் பழக்கமாக இருந்திருக்கிறது. அவ்வாறான கூட்டுக் கூட்டம் எதுவும் நடைபெறாமலும், இந்த சட்டத் தொகுப்புகள் வரைவு நிலையில் இருந்தபோது, அதுகுறித்து தொழிற்சங்கங்களும் மனித உரிமை ஆர்வலர்களும் அளித்த பல்வேறு கருத்துகளை முற்றிலும் புறக்கணித்தும், நாடாளுமன்றத்திலும் முறையான விவாதமின்றியும் அவசர அவசரமாக இச்சட்டத் தொகுப்புகளை மோடி அரசு நிறைவேற்றி இருக்கிறது.\nநரேந்திர மோடி அரசு அதனுடைய புதிய உத்தியை, அதாவது அரசமைப்புச் சட்டத்தை அப்படியே வைத்துக் கொண்டு அதை அப்பட்டமாக மீறுவது என்ற மோசடியான உத்தியை இதிலும் செயல்படுத்தியிருக்கிறது.\nதொழிலாளர் (Labour) என்பது அரசமைப்புச் சட்டப்படி இந்திய அரசுக்கும், தேசிய இன மாநில அரசுக்கும் இணை அதிகாரமுள்ள பொதுப்பட்டியலில் இருக்கிறது. ஆனால், இப்போது பிறப்பிக்கப்பட்டிருக்கிற சட்டத் தொகுப்புகள் பெரும்பாலான இடங்களில் “தொடர்புடைய அரசு” என்பதை இந்திய அரசு என்பதாகவே குறிப்பிடுகிறது. தொழிலாளர் சட்டங்கள் தொடர்பாக மாநில அரசுகளுக்கு இருந்த அரைகுறை அதிகாரங்களும் முற்றில���ம் பறிக்கப்பட்டுவிட்டன.\nதொழிற்சாலை சட்டம் எட்டுமணி நேர வேலையை உறுதி செய்திருந்த நிலையை புதிய சட்டம் முற்றிலும் மாற்றுகிறது. பத்து மணி நேர வேலையை இயல்பாக்குவது, நிர்வாகங்கள் விரும்பினால் 12 மணி நேரம் வரை வேலை வாங்கலாம் என்பது தொழிலாளர் நிலையை 19ஆம் நூற்றாண்டிற்கு இழுத்துச் செல்கிறது.\nஇன்று பெரும்பாலான தொழிலகங்களில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் முறை பரவலாக இருக்கிறது. இந்த முறையில் ஒப்பந்தக்காரர்கள் தொழிலாளர்களுக்கு ஊதியமோ, மற்ற பலன்களோ தரத் தவறினால் அதற்கான இறுதிப் பொறுப்பு முதன்மை நிர்வாகத்திற்கு (Principal Employer) இருந்தது.\nஆனால், மோடி அரசின் புதிய சட்டம் இந்த சட்டப் பாதுகாப்பை நீக்கி விட்டது. ஒப்பந்தக்காரர்கள் ஊதியத்தையோ வருங்கால வைப்பு நிதியையோ பணிக்கொடையையோ (கிராஜூட்டி) கொடுக்காமல் போனாலோ, நிலுவை வைத்தாலோ இனி முதன்மை நிர்வாகத்திடம் இதைக் கோர முடியாது.\n“வரையறுத்த காலத்திற்கான பணி“ (Fixed Term Employment) என்ற பெயரால் எல்லா வேலைகளுக்கும் ஓராண்டு அல்லது ஈராண்டு மட்டுமே பணிக்காலமுள்ள தொழிலாளர்களை பரவலாக்குவதற்கு இச்சட்டம் வழி செய்கிறது. அடிபட்டால் முதலுதவி செய்வது, எந்திரங்களுக்கு இடையில் இருக்க வேண்டிய இடைவெளி, உணவு இடைவேளை இவற்றை வரையறுக்கும் எல்லா நல விதிகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டு, கிட்டத்தட்ட எந்தப் பாதுகாப்புமற்ற நிலைக்குத் தொழிலாளர்கள் தள்ளப்படுகிறார்கள்.\nஅமர்த்து துரத்து என்பது எல்லா நிலையிலும் நிலைப்படுத்தப்படுகிறது.\nதொழிலாளர்களுக்கான வருங்கால வைப்பு நிதியிலிருந்து பல தொழில்களுக்கு விலக்கு அளிக்கும் வகையில் குறைந்தபட்ச தொழிலாளர் எண்ணிக்கை உயர்த்தப்பட்டு விட்டது.\nமறுபுறம், 100 தொழிலாளர்களும் அதற்கு மேல் இருக்கக்கூடிய நிறுவனங்களுக்கு இதுவரை பொருந்தி வந்த தொழில் உறவுச் சட்டங்கள், இனி 300 தொழிலாளிகளுக்கு மேல் உள்ள நிறுவனங்களுக்குத்தான் பொருந்தும் என்று மாற்றம் செய்திருப்பதன் வழியாக கிட்டத்தட்ட 90 விழுக்காடு தொழில் நிறுவனங்கள் சட்டத்தின் ஆட்சிக்குக் கட்டுப்படாத காட்டாட்சியில் விடப்படுகிறது.\nஇதுவரை ஒழுங்கமைக்கப்படாத தொழில்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் (Minimum Wages) என்பது சட்டப் பாதுகாப்பையாவது வழங்கி வந்தது. அதையும் மாற்றி, குறைந்தபட்ச ஊதியத்திற்குக் கீழ் அடிமட்��� ஊதியம் (Floor Wages) என்ற புதிய வகையினத்தை நரேந்திர மோடியின் சட்டம் புகுத்துகிறது.\nதொழிற்சங்கங்கள் பதிவு செய்யப்படுவதை கடுமையான கட்டுத்திட்டங்களுக்கு உள்ளாக்கி நடைமுறையில் தொழிற்சங்கம் சேரும் உரிமை இல்லாமல் ஆக்கப்படுகிறது. தொழிலகத்திற்குள் தீர்க்க முடியாத சிக்கல்களை சமரசப் பேச்சின் மூலம் தீர்ப்பதற்கான தொழிலாளர் அதிகாரிகள் பொறியமைவு ஏற்கெனவே எந்த சட்ட வலுவும் இல்லாமல் இருக்கிறது. இப்போது, அது இன்னும் மேலும் சிதைக்கப்பட்டு தொழில் நிர்வாகங்களை எல்லா விதக் கட்டுப்பாடுகளிலிருந்தும் விடுவித்து விடுகிறது.\nகட்டடத் தொழிலாளர்கள், தானி ஓட்டுநர்கள், நெசவுத் தொழிலாளர்கள், வீட்டு வேலைப் பணியாளர்கள் போன்ற அமைப்புசாராத் தொழிலாளர் தொடர்பாக இருந்துவந்த நலவாரியங்கள் பெரும்பாலானவை செயலற்றதாக மாற்றப்படுகின்றன.\nதொழிலாளர்கள் மீது இப்படிப்பட்ட தாக்குதல் என்றால், மறுபுறம் உழவர்களை வேளாண்மையிலிருந்து வெளியேற்றும் நோக்கோடு ஒப்பந்தப் பண்ணையச் சட்டம், விளைபொருள் விலைபெறும் சட்டம், தனியார் கொள்முதலுக்கு வழிவகுக்கும் சட்டம் போன்றவற்றின் மூலமாக பெருந்தாக்குதலை மோடி அரசு தொடுத்துள்ளது.\nஇவை அனைத்தையும் கண்டித்து உழைப்பாளர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு அனைத்திந்திய தொழிற்சங்க அமைப்புகளும், தற்சார்பான தொழிற்சங்கக் கூட்டமைப்புகளும் வரும் 26.11.2020 இந்திய நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருக்கிறார்கள்.\nஇந்தப் பொதுவேலை நிறுத்தத்தை தமிழ்த்தேசியப் பேரியக்கம் ஆதரிக்கிறது. பேரியக்கத்தின் வழிகாட்டுதலில் இயங்கும் தமிழகத் தொழிற்சங்க முன்னணி பங்கேற்கிறது. தமிழ்நாட்டிலுள்ள அனைத்துப் பகுதி உழைப்பாளர்களும், பொது மக்களும் இப்போராட்டத்திற்கு ஆதரவு தர வேண்டுமென்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.\nபா.ச.க.வின் திட்டம் : அ.தி.மு.க.வை ஓரங்கட்டுவது தி.மு.க.வை எதிர்க்கட்சியாக்குவது - ஐயா பெ. மணியரசன்,\nதலைவர் - தமிழ்த்தேசியப் பேரியக்கம்\nதமிழ்நாட்டில், தி.மு.க. எதிர்ப்பை முதன்மைப்படுத்தி, அன்றாடம் தி.மு.க.வுக்கு எதிராகக் கடுமையாகப் பேசி வருகிறது பா.ச.க.\nமேம்போக்காகப் பார்ப்பவர்களுக்கு, ஆரியத்துவா பா.ச.க.வுக்குத் திராவிடத் தி.மு.க. மீது அவ்வளவு வெறுப்பு என்று ��ோன்றும். ஆனால், பா.ச.க.வின் உண்மைத் திட்டம் தி.மு.க. ஒழிப்பல்ல; அ.தி.மு.க.வை ஓரங்கட்டுவதுதான்\nதமிழ்நாட்டு அரசியல், அ.இ.அ.தி.மு.க. எதிர் தி.மு.க. என்று இருமுனை முகாம்களாக இருப்பதை மாற்ற வேண்டும் என்பதே பா.ச.க.வின் உடனடித் திட்டம். இதைப் பா.ச.க. எதிர் தி.மு.க. என்று மாற்ற வேண்டும் என்பது அதன் போர் உத்தி\nஎதிர்க்கட்சி என்ற நிலையில் தி.மு.க. இருக்க வேண்டும்; ஆளுங்கட்சியாகவோ அல்லது முதன்மை எதிர்க்கட்சியாகவோ அ.இ.அ.தி.மு.க. இருக்கக் கூடாது என்பதே பா.ச.க.வின் வேலைத் திட்டம். அ.இ.அ.தி.மு.க.வுக்கு வலிமையான தலைமை இல்லை என்பதால் அதை ஓரங்கட்ட முடியும் என்று பா.ச.க. கருதுகிறது.\nஇதற்காகத்தான் 24 மணி நேரமும் தி.மு.க. எதிர்ப்புப் பரப்புரை செய்கிறது பா.ச.க. தமிழ்நாட்டு மக்கள் 24 மணி நேரமும் முதலிடத்தில் வைத்துப் பா.ச.க.வையும் தி.மு.க.வையும் பேச வேண்டும். பா.ச.க. கதாநாயகன், தி.மு.க. வில்லன் என்பது போல் மக்களிடையே விவாதங்களைக் கிளப்ப வேண்டும். ஆரியத்துவா கையாளும் உளவியல் போர் முறை இது\nஆளும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி என்று சொல்லிக் கொண்டே, எடப்பாடி தலைமையை இடது காலால் எத்தி விடுகிறார் பா.ச.க. தலைவர் எல். முருகன்\n“பா.ச.க. கைகாட்டும் நபர்தான் அடுத்த தமிழ்நாட்டு முதலமைச்சர்; பா.ச.க. பங்கேற்கும் கூட்டணியே ஆட்சி அமைக்கும்”, “டிசம்பர் வாக்கில் தமிழ்நாட்டு அரசியலில் பெரும் மாற்றம் ஏற்படும்”, “டிசம்பர் வாக்கில் தமிழ்நாட்டு அரசியலில் பெரும் மாற்றம் ஏற்படும்\nஇவையெல்லாம் பா.ச.க.வின் தமிழ்நாட்டுத் தலைவர் எல். முருகன் பேசியவை\nஎடப்பாடி – ஓ.பி.எஸ். தலைமை பா.ச.க.வின் அடாவடித்தனங்களுககு உரியவாறு எதிர்வினை ஆற்றாமல் பம்மிப் பதுங்குகிறது. ஏன் பதவியைப் பயன்படுத்திப் பதுக்கி வைத்திருப்பது அவ்வளவு பதவியைப் பயன்படுத்திப் பதுக்கி வைத்திருப்பது அவ்வளவு மோடி ஏவிவிட்டால் தில்லியின் பல்வேறு துறையினர் அ.இ.அ.தி.மு.க. தலைவர்களின் - உறவினர்களின் – நண்பர்களின் வீடுகளும் அலுவலகங்களும் முற்றுகை இடப்படும் மோடி ஏவிவிட்டால் தில்லியின் பல்வேறு துறையினர் அ.இ.அ.தி.மு.க. தலைவர்களின் - உறவினர்களின் – நண்பர்களின் வீடுகளும் அலுவலகங்களும் முற்றுகை இடப்படும்\nதி.மு.க. எதிர்க்கட்சியாக இருப்பதால் ஆரியத்துவாவுக்கோ, பா.ச.க.வுக்கோ ஆபத்து ஒன்றுமில்லை. பழைய நட்புக் கழகம்; தி.மு.��.வின் - அதன் திராவிட ஊதுகுழல்களின் – திராவிடப் பரப்புரைகள், தமிழ்த்தேசிய வளர்ச்சியை – தமிழர் இன உணர்ச்சியைத் தடுக்கப் பயன்படும்; கூப்பிட்டால் கூட்டணிக்கு வந்துவிடும்; இந்தியத்தேசிய ஏகபோகத்தின் கையடக்கப் பதிப்பு தி.மு.க.; இவையெல்லாம் பா.ச.க.வின் கணிப்பு\nஎனவே, தி.மு.க.விற்கு எதிர்வகை விளம்பரம் (Negative Propaganda) கொடுப்பதற்காக பா.ச.க.வினர் எந்நேரமும் தி.மு.க. எதிர்ப்புப் பேசுகின்றனர். அ.இ.அ.தி.மு.க.வை எளிதாகக் கலைத்துப் போடலாம் என்றும் கணக்குப் போட்டுள்ளார்கள்.\nபா.ச.க. – ஆரியத்துவா பாசிசக் கட்சி பா.ச.க. பாசிசத்தை எதிர்ப்பதற்குத் தி.மு.க. அணியை வலுப்படுத்த வேண்டும் என்று பலர் பேசுகின்றனர்.\nவலிக்காமல் வாக்குச்சாவடி மூலம் பாசிசத்தை வீழ்த்திவிடலாம் என்பவர்களின் மனக் கணக்கு இது நோகாமல் நொங்கெடுக்க நினைப்பவர்கள் இவர்கள்\nதமிழ்த்தேசியம் பேசுவோரிலும் ஒருசாரார் “வாக்குச்சாவடிப் புரட்சி”யில் பெரு நம்பிக்கை வைத்துள்ளார்கள்.\nவாக்குச்சாவடி வேண்டாம் என்பது நமது வாதமல்ல; வாக்குச் சாவடியை முதன்மைப்படுத்தாதீர்கள்; வாக்குச்சாவடி மூலம் தமிழ்த்தேசியம் வெற்றி பெறும் என்று எண்ணாதீர்கள்\n“எந்த அடக்குமுறை வந்தாலும் எதிர்கொண்டு, ஆரியத்துவா பாசிசத்தை முறியடிக்க முன்னேறுவோம்; இலட்சக்கணக்கான தமிழர்களின் நெஞ்சில் தமிழ்த்தேசிய உரமேற்றி எந்த நெருக்கடியையும் சமாளிக்கும் உளவியலை உருவாக்குவோம்” என்பவற்றைத் தமிழ்த்தேசியர்கள் முதற்பெரும் கடமையாக ஏற்க வேண்டும்.\nகல்விக் கொள்கை - 2019-ஐ திரும்பப் பெற\nஇந்திய அரசு கொண்டு வந்துள்ள வரைவுக் கல்விக் கொள்கை - 2019-ஐ திரும்பப் பெற கீழே கையெழுத்திடவும்\n\"தில்லி முற்றுகை: மக்கள் போரின் மகத்துவம்\nகரூர் பசுபதீசுவரர் கோயில் குடமுழுக்கைத் தமிழ்வழியி...\n\"மாவீரர் நாள் 2020\" - ஐயா பெ. மணியரசன் அவர்களின் ...\n\"தமிழர் கடைகளில் பொருட்கள் வாங்குவோம்\n\"தமிழரசன் புகழை எவராலும் அழிக்க முடியாது\nஉச்ச நீதிமன்றம் கண்டித்தும் பேரறிவாளன் விடுதலையை ம...\n“இந்துத்துவா இந்தியம் தமிழீழத்துக்குத் துணை வருமா\nஓங்கி வரும் உள் மோதல்கள்-2 இந்துத்துவா பேசிய சிவச...\n\"பேரறிவாளன் விடுதலைக்காக ஆளுரை முதல்வர் நேரில் சந்...\nதொழிலாளர் பகைச் சட்டங்களுக்கு எதிரான அனைத்திந்திய ...\nபா.ச.க.வின் திட்டம் : அ.தி.மு.க.வை ஓரங்கட்டுவது தி...\nஒற்றை அதிகார பாசிசத்தை இந்தியாவின் உள்மோதல்கள் உட...\n\" - “தம்பி” வலையொலிக...\n“பா.ச.க.வோடு அ.தி.மு.க. சேர்ந்தால் இந்த சாபம் எடப்...\n\"திராவிடவாதிகள் சாதியை ஒழித்தார்களா, வளர்த்தார்கள...\n\"தமிழ்நாடு நாளிலும் திராவிடக் குழப்பமா\nஉச்ச நீதிமன்றம் இடித்துரைத்து விட்டது\n“மனு நூலை எரிக்கலாமா, வேண்டாமா\n” - ஐயா பெ. மணிய...\nதமிழ்நாடு நாளில் புளியங்குடி காவல்துறையின் அடாவடிக...\nதமிழ்நாடு நாளை அடக்குமுறை நாளாக்கி விட்டனர் ஆட்சிய...\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி. Powered by Blogger.\n'சிங்களன் பங்காளி – தமிழன் பகையாளி (1)\n'சிங்களன் பங்காளி – தமிழன் பகையாளி' (1)\n“தமிழீழ ஏதிலியர் உரிமைக் கூட்டமைப்பு” (1)\n“தமிழ் அடையாளம்” பேசுவோர்க்கு சமஸ் நண்பரா\n(ஐ.பி.சி.) பிரிவு 124 (1)\n10 பேரை குறிவைக்கிறதா அரசு\n11 பேர் சிறையிலடைப்பு (1)\n90% தமிழர்களுக்கு வேலை (1)\nஅ.இ.அ.தி.மு.க. ஆள் கடத்தல் - தி.மு.க. அராஜகம் (1)\nஅடக்குமுறையைக் கண்டித்து தெருமுனைக் கூட்டம் (1)\nஅயலாருக்கு பங்கீடு தமிழருக்கு முக்காடு (1)\nஅரசியல் குற்றவாளிகளை அறம் தண்டிக்கும் (1)\nஅறிக்கைகள். கி. வெங்கட்ராமன் (1)\nஅனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் (1)\nஆ ரியத்துவா எதிர்ப்பு (1)\nஆரியத்தால் கொல்லப்பட்ட அனிதா (3)\nஆளுநருக்கு ஆர்.எஸ்.எஸ். வழி காட்டுகிறதா\nஆளுநர் காலம் தாழ்த்துவது ஏன்\nஆளுநர் பன்வாரிலால் புரோகித் (1)\nஇடித்தவர்களைக் கைது செய்க (1)\nஇந்தித் திணிப்பு ஆணை எரிப்புப் போராட்டம் (3)\nஇந்திப் பிரசார சபை (2)\nஇந்திய அரசு வருமானவரித்துறை அலுவலகம் (1)\nஇந்தியா தமிழ்நாட்டுக்கு எதிரி நாடா பெ. மணியரசன் வினா (1)\nஇந்தியாவிலும் தடையை நீக்க வேண்டும்\nஇராசா முத்தையா கல்லூரி மாணவர் போராட்டம் (1)\nஇராமேசுவரம் மீனவர் படுகொலை (4)\nஇருவரில் யாருக்கு உங்கள் வாக்கு\nஇனத்திற்காக சில நொடிகள் செலவிட ஓர் அழைப்பு\nஈகி ந. வெங்கடாசலம் 40ஆம் ஆண்டு நினைவேந்தல் (2)\nஉலக வர்த்தகக் கழகம் (1)\nஉலகத் தமிழ் அமைப்பு (1)\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு (1)\nஎடப்பாடி வீடு முற்றுகை (1)\nஎழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி (1)\nஏழு தமிழர் விடுதலை (22)\nஏழு தமிழர்களுக்கும் நீண்டகால பரோல் (1)\nஏளனம் செய்த லலிதா குமாரமங்கலம் (1)\nஐயா ஆனைமுத்து அவர்களைச் ஐயா பெ. மணியரசன் சந்திப்பு\nஒசூர் புத்தகக்காட்சி 2019 (1)\nஓ.என்.ஜி.சி.யிடம் - தமிழ்நாடு அரசு கை ஏந்தலாமா \nகடலூரில் மூவர் பலி (1)\nகட்சி ��லுவலகமாக மாறும் (1)\nகப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. (1)\nகர்நாடகத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் (2)\nகாசுமீரில் உடனடியாக பொது வாக்கெடுப்பு நடத்துக\nகாணொலிகள். ஆரிய எதிர்ப்பு (1)\nகாணொலிகள். பெ. மணியரசன் (1)\nகாப்பியத்தலைவி கண்ணகிக்கு வீரவணக்கம் (1)\nகாவிரி உரிமை மீட்புக் குழு (48)\nகாவிரி உரிமை மீட்புக் குழு அறிவிப்பு (1)\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமைக்காக உயிரீகம் செய்த தழல் ஈகி விக்னேசுக்கு வீரவணக்கம்\nகாவிரி நீர் கடலில் கலப்பது வீணா\nகாவிரி வழக்கில் கோட்டை விடக்கூடாது (1)\nகாவிரியில் புதிய அணை (1)\nகி. வெங்கட்ராமன் தாயகப் பாதுகாப்பு\nகி. வெங்கட்ராமன் ஆரியத்துவா எதிர்ப்பு\nகி. வெங்கட்ராமன் உலகமய எதிர்ப்பு (1)\nகி. வெங்கட்ராமன் உலகமய எதிர்ப்பு\nகி. வெங்கட்ராமன் காவல் அதிகாரிகள் மீது (1)\nகி. வெங்கட்ராமன் தமிழ்மொழிப் பாதுகாப்பு\nகி. வெங்கட்ராமன் தாயகப் பாதுகாப்பு (2)\nகி. வெங்கட்ராமன் தாயகப் பாதுகாப்பு\nகி. வெங்கட்ராமன் நீர் உரிமை\nகிரண்பேடியைத் திருப்பி அனுப்ப வேண்டும் (1)\nகுற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம் (1)\nகேசவனின் தன்னோவியக் கண்காட்சி (1)\nகேரளத்தின் பொய் அம்பலம் (1)\nகேரளத்தோடு பேச வேண்டும் (1)\nகோவை ஈசுவரன் அவர்களுக்கு வீரவணக்கம் (1)\nசசிகலா – பன்னீர் (1)\nசமூக வலைதளத் தோழர்களுக்கு (1)\nசாதி ஒழிப்பு மாநாடு (1)\nசாந்தலிங்க இராமசாமி அடிகளார் (1)\nசான்றிதழ் சரிபார்ப்பு தள்ளிவைப்பு (1)\nசிங்கப்பூரில் தமிழும் ஆட்சி மொழி (1)\nசிதம்பரம் தோழர் ஆ. குபேரன் கைது (2)\nசித்தராமையாவின் கன்னட இனவெறிப் பேச்சு (1)\nசிவாஜி கணோசன் சிலை (1)\nசுருங்கி வரும் ஜனநாயகம் (1)\nசுவரொட்டிகளைக் கிழித்த காவல்துறையினர் (1)\nசுவாதி கொலையைத் தடுக்க முன் வராத மக்கள் (1)\nத. செ. தீர்மானங்கள் (1)\nதஞ்சை பெரிய கோவிலுக்கு சமற்கிருதப் பெயரா\nதஞ்சை பெரிய கோவில் (3)\nதமிழக இளைஞர் முன்னணி (4)\nதமிழக உழவர் முன்னணி (2)\nதமிழக உழவர் முன்னணி தோழர்கள் பங்கேற்பு. (1)\nதமிழக எல்லை மீட்பு போராட்டம் (1)\nதமிழக மாணவர் முன்னணி (1)\nதமிழக மீனவர் சிக்கல் (4)\nதமிழகத் தொழிற்சங்க முன்னணி (1)\nதமிழகத் தொழிற்சங்க முன்னணித் தலைவர் தோழர் கி. வெங்கட்���ாமன் பேச்சு\nதமிழர் எழுச்சி உரைவீச்சு (1)\nதமிழர் கண்ணோட்டம் படிப்பு வட்டம் (2)\nதமிழர் தற்காப்பு அரசியல் (3)\nதமிழர் மீட்சிப் பெருங்கூடல் (5)\nதமிழர்களுக்கு எதிராக ஸ்டாலின் ராஜாங்கம் (1)\nதமிழில் பெயர்ப் பலகை (1)\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் (1)\nதமிழ் வழக்கு மொழி (1)\nதமிழ் வழிக் கல்வி (4)\nதமிழ்க் கலை இலக்கியப் பேரவை (3)\nதமிழ்த் தேசியப் பேரியக்க தலைவர் தோழர் பெ. மணியரசன் கேள்வி (1)\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தோழர் பெ. மணியரசன் (1)\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுத் தீர்மானம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுவில் முடிவு\nதமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுக்குழுத் தீர்மானம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கம் (31)\nதமிழ்த் தேசியப்பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் விடையளிக்கிறார்\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயர்குழுத் தீர்மானம் (1)\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அறிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் பாராட்டு\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் பேச்சு\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கோரிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கப் தோழர் கி. வெங்கட்ராமன் கண்டன அறிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு\nதமிழ்த்தேசியப் போராளி கா. பரந்தாமன் (1)\nதமிழ்நாடு தழுவிய முழு கடையடைப்பு இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகை இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகை\nதமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே (7)\nதலைமைச் செயற்குழு தீர்மானங்கள் (4)\nதலைவர் மணியரசனுக்கு தோழர்களின் சிறப்பான வரவேற்பு\nதழல் ஈகி விக்னேசு (1)\nதிராவிட அரசியலின் தலைவர் வழிபாடு (1)\nதிராவிட அரசியல் இனியும் தேவையா\nதிராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா\nதிருடனை நெடுவாசல் மக்கள் பிடித்தனர் (1)\nதிருமுருகன் மீது குண்டர் சட்டம் (1)\nதேவிகுளம் - பீரிமேடு மீட்பு (1)\nதொழிற்சங்கத் தலைவர் டி. ஞானய்யா மறைவு. (1)\nதோழர் ஆரல்கதிர்மருகன் சாதி ஒழிப்பு (1)\nதோழர் கி. வெங்கட்ராமன் கண்டனம்\nதோழர் கி. வெங்கட்ராமன் கோரிக்கை\nதோழர் குபேரனை விடுதலை செய்க\nதோழர் குபேரன் பிணையில் விடுதலை..\nதோழர் சீமானைக் கைது செய்ய காவல்துறையினர் முயற்சி (1)\nதோழர் பெ. மணியரசன் (3)\nதோழர் பெ. மணியரசன் அறிக்கை\nதோழர் பெ. மணியரசன் இரங்கல் அறிக்கை\nதோழர் பெ. மணியரசன் இரங்கல்\nதோழர் பெ. மணியரசன் மீண்டும் கோரிக்கை\nதோழர் முகிலனை விடுதலை செய்க (1)\nந. அரணமுறுவல் திடீர் மறைவு (1)\nநடிகர் சத்தியராஜ்க்கு பாராட்டுகள் (1)\nநடுநிலை தவறக் கூடாது (1)\nநலமாகி வருகிறேன் – நன்றி (1)\nநால்வரையும் விடுதலை செய்க (1)\nநீங்கள் வழிகாட்ட உரிமையும் தகுதியும் படைத்தவர்கள் (1)\nநீட் தேர்வு நிரந்தர விலக்கு (2)\nநீதி கேட்கும் ஒன்றுகூடல் (1)\nநீதிபதி சி.டி. செல்வம் (1)\nபரப்புரையின் தொடக்க விழா (1)\nபவானியில் கேரள அரசு தடுப்பணை (1)\nபறிபோகும் தமிழர் தாயகம் (2)\nபாடி - இடைத்தெரு (1)\nபாம்பை விரட்ட பச்சோந்திகளால் முடியாது (1)\nபாரதமாதா பலிகொண்ட தமிழன் (1)\nபிப்ரவரி 25 - தமிழ்த் தேசிய நாள் - ஏன்\nபுதிய கல்வி கொள்கை (2)\nபுலவர் கலியப்பெருமாள் வீரவணக்கம் நிகழ்வு (1)\nபுலவர் கு. கலியபெருமாள் (1)\nபூம்புகார் மொதுக் கூட்டம் (1)\nபெ. மணியரசன் ஆரியத்துவா எதிர்ப்பு\nபெ. மணியரசன் ஆரியத்துவா எதிர்ப்பு (1)\nபெ. மணியரசன் ஆரியத்துவா எதிர்ப்பு தமிழ்மொழிப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் ஆரியத்துவா எதிர்ப்பு தாயகப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் ஆரியத்துவா எதிர்ப்பு\nபெ. மணியரசன் இறுதி வணக்கம்\nபெ. மணியரசன் கோரிக்கை (2)\nபெ. மணியரசன் சாதி ஒழிப்பு\nபெ. மணியரசன் சாதி ஒழிப்பு ஆரியத்துவா எதிர்ப்பு\nபெ. மணியரசன் தமிழீழ விடுதலை\nபெ. மணியரசன் தமிழ்த் திரை\nபெ. மணியரசன் தமிழ்மொழிப் பாதுகாப்பு (1)\nபெ. மணியரசன் தமிழ்மொழிப் பாதுகாப்பு தாயகப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் தமிழ்மொழிப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் தாயகப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் திராவிட எதிர்ப்பு (1)\nபெ. மணியரசன் திராவிட எதிர்ப்பு தாயகப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் திராவிட எதிர்ப்பு\nபெ. மணியரசன் நீர் உரிமை\nபெ. மணியரசன் பங்கேற்பு (2)\nபெ. மணியரசன் பேட்டி (1)\nபெ. மணியரசன் வெளியார் சிக்கல் தாயகப் பாதுகாப்பு\nபெ. மணியரசன். ஆரியத்துவா எதிர்ப்பு\nபெ.மணியரசன் அவர்கள் கைது (1)\nபெண்களை இழிவுபடுத்தும் விஜய் தொலைக்காட்சி (2)\nபெரியாருக்கு பின் பெரியார் (1)\nபேராசிரியர் து. மூர்த்தி (2)\nபொன்மலை தொடர்வண்டிப் பணிமனை (1)\nபோராட்டக் களத்தில் நின்ற பெண்கள் (1)\nமகளிர் ஆயத்தின் தீரமிக்கப் பணிகள்\nமகளிர் நாள் - மார்ச்சு 8 (1)\nமக்கள் போராட்டமும் சனநாயகமும் (1)\nமண்ணின் மக்களுக்கு வேலை வழங்கு (2)\nமண்ணின் மக்களுக்கே வேல�� (1)\nமதுபான ஆலை முற்றுகை (1)\nமயிலாடுதுறை மாணவ ஈகி சாரங்கபாணிக்கு (1)\nமரண தண்டனை எதிர்ப்பு (2)\nமரபீனி மாற்றக் கடுகை அனுமதிக்காதே\nமருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை (1)\nமனிதச் சங்கிலிப் போராட்டம் (1)\nமனிதச் சுவர் போராட்டம் (1)\nமாட்டுக்கறித் தடைச் சட்டம் (2)\nமாணவி அனிதா தற்கொலை (2)\nமாநில சுயாட்சியும் கூட்டாட்சிக் கோட்பாடும் (1)\nமாமணிக்கு மணிவிழா ஆண்டு (1)\nமாவீரர் நாள் வீரவணக்கக் கூட்டம் (1)\nமூளைச் சோம்பல் முகமூடித் தமிழ்த்தேசியம் (1)\nமே நாள் - எழுச்சிப் பொதுக்கூட்டம்\nமேதகு வே. பிரபாகரன் (1)\nமொழி வழி மாநிலம் (1)\nயாரும் வாக்களிக்கவே போக மாட்டார்கள் (1)\nரேசன் கடைகளுக்கு மூடுவிழா (1)\nலட்சுமி என்னும் பயணி (1)\nலட்சுமி என்னும் பயனி (2)\nவழக்கறிஞர்களின் உண்ணாப் போராட்டம் (1)\nவிமானப் படைத்தள முற்றுகைப் போர் (1)\nவீரசந்தானம் இல்லாத வெறுமை உணரப்படும் (1)\nவெளி மாநிலத்தவருக்கு அரசு வேலை (1)\nவெளி மாநிலத்தவரும் வெளி நாட்டினரும் (1)\nவெளியார் ஆக்கிரமிப்பு எதிர்ப்பு (6)\nவேலூர் சிறையில் பேரறிவாளனுடன் பெ. மணியரசன் சந்திப்பு\nவேளாண்மையைப் பலியிட மோடி அரசின் புதிய திட்டம் (1)\nவைரமுத்து கங்காணி வேலை பார்க்கக்கூடாது (1)\nஜனகணமன பாடும் வரைதான் “திராவிடம்” இருக்குமா\nஜேக்டோ ஜியோ போராட்டம் (1)\nஸ்பாரோ இலக்கிய விருது (1)\nCopyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-10-19T12:56:34Z", "digest": "sha1:7CMVNU2AKR42KAZXSDKUH2ASEFLSJY4V", "length": 12954, "nlines": 134, "source_domain": "ilakkiyainfo.com", "title": "பெற்றோர் கண்ணெதிரே பயங்கரம்: 2 வயது குழந்தையை கடித்து குதறி கொன்ற தெரு நாய்கள்; விசாகப்பட்டினத்தில் சோகம் | ilakkiyainfo", "raw_content": "\nHome»உலகம்»பெற்றோர் கண்ணெதிரே பயங்கரம்: 2 வயது குழந்தையை கடித்து குதறி கொன்ற தெரு நாய்கள்; விசாகப்பட்டினத்தில் சோகம்\nபெற்றோர் கண்ணெதிரே பயங்கரம்: 2 வயது குழந்தையை கடித்து குதறி கொன்ற தெரு நாய்கள்; விசாகப்பட்டினத்தில் சோகம்\nவிசாகப்பட்டினம்: ஆந்திராவில் உள்ள விசாகபட்டினத்தில் பெற்றோர் கண்ணெதிரிலேயே 2 வயது குழந்தையை தெருநாய்கள் கடித்து குதறி கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஆந்திரா மாநிலம், விசாகபட்டினத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் வாட்ச்மேனாக வேலை பார்த்து வருபவரின் 2 வயது குழந்தை சிவா கேசவ். ஆர்.கே. பீச் ரோட்டில் இந்த அடுக்குமாடி குடியிருப்புள்ளது.\nகுழந்தை சிவா கேசவ் தற்போதுதான் நடக்கத் தொடங்கியிருந்தான். எனவே மிகவும் துருதுருவென அங்கும் இங்கும் விளையாடிக் கொண்டிருப்பான்.\nஇதனால் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள அனைவரின் கவனைத்தையும் ஈர்த்த குழந்தையாக இருந்தான்.\nநேற்று மாலை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த குழந்தை சிவாவின் அலறல் சத்தம் கேட்டுள்ளது.\nபதறியடித்துக் கொண்டு பெற்றோரும், அக்கம் பக்கத்தினரும் அங்கு சென்று பார்த்த போது அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.\nசுமார் 5, 6 தெரு நாய்கள் குழந்தை சிவாவை கடித்து இழுத்துக் கொண்டு சென்றது. குழந்தை வலி தாங்க முடியாமல் அலறினான். இதை கண்ட பெற்றோரும், மற்றவர்களும் அதிர்ச்சியில் நாய்களை விரட்ட முயன்றனர்.\nகற்களை வீசி எறிந்தனர். ஆனால் பெற்றொர் கண்ணெதிரிலேயே கர்ண கொடூரமாக குழந்தையை கடித்து குதறி தரதரவென சில அடி தூரத்திற்கு இழுத்து சென்றன.\nஅக்கம்பக்கத்தினர் உதவியுடன் மிகுந்த போராட்டத்திற்கு பிறகு நாயிடம் இருந்து குழந்தையை மீட்டு ஜார்ஜ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.\nஅங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் கொண்டு வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.\nஇதை கேட்டு அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். குழந்தையின் உடலில் சுமார் 200க்கும் அதிகமான நாய்க்கடி காயங்கள் இருந்ததாக அவனை பரிசோதித்த டாக்டர்கள் தெரிவித்தனர்.\nஇதே போல் கடப்பா மாவட்டத்திலும் தெரு நாய்கள் தாக்கியதில் 2 குழந்தைகள் காயமடைந்தனர்.\nகடந்த ஏப்ரல் மாதம் குண்டூரில் தெருநாய்கள் கடித்து குதறியதில் 5 வயது குழந்தை ஒன்று உயிரிழந்தது. ஆந்திராவில் உள்ள குண்டூர், கிருஷ்ணா, நெல்லூர், கர்னூல், கடப்பா, அனந்தப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடுமையான தெருநாய்கள் தொல்லை இருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.\nமக்கள் பலமுறை புகார் அளித்தும் நகராட்சி நிர்வாகத்தினர் தெரு நாய் தொல்லைகளை கட்டுப்படுத்த தவறியதன் காரணமாகவே இது போன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளன என்றும் அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்தனர்.\nநீர் மூழ்கி கப்பலூடாக வடகொரியா ஏவுகணை பரிசோதனை\nஇலங்கையில் பாடசாலைகள் திறக்கப்படாமையால் ஏற்படப்போகும் தாக்கங்கள் குறித்து உலக வங்கியின் எதிர்வுகூறல்\nவாங்க, கொஞ்சம் நேரம் ‘அழுதிட்டு’ சந்தோஷமா போங்க… ‘அழுறதுக்கு வரிசை கட்டி நிற்கும் மக்கள்…’ – நல்ல வரவேற்பை பெற்றுள்ள ‘அழுகை’ அறை…\nகொழும்பு தொட்டலங்க பகுதியில் இரு சடலங்கள்\nகாரைநகர் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட தமிழக மீனவர்கள் ; படகு மூழ்கியதில் ஒருவர் மாயம் – இருவர் மீட்பு\nநீர் மூழ்கி கப்பலூடாக வடகொரியா ஏவுகணை பரிசோதனை\nஇலங்கையில் பாடசாலைகள் திறக்கப்படாமையால் ஏற்படப்போகும் தாக்கங்கள் குறித்து உலக வங்கியின் எதிர்வுகூறல்\nமட்டு கரடியனாறு பகுதியில் ஒன்றில் அடித்து கொலை செய்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு\nஆப்கானிஸ்தானில் தாலிபனின் தேன் நிலவு முடிந்தது – இனி அதன் முன்னுள்ள சவால்கள் என்ன\n‘செப்டம்பர் 11’ தாக்குதல்: கடத்தப்பட்ட விமானத்துக்குள் நடந்தது என்ன\nகொழும்பு தொட்டலங்க பகுதியில் இரு சடலங்கள்\nகாரைநகர் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட தமிழக மீனவர்கள் ; படகு மூழ்கியதில் ஒருவர் மாயம் – இருவர் மீட்பு\nநீர் மூழ்கி கப்பலூடாக வடகொரியா ஏவுகணை பரிசோதனை\nஇலங்கையில் பாடசாலைகள் திறக்கப்படாமையால் ஏற்படப்போகும் தாக்கங்கள் குறித்து உலக வங்கியின் எதிர்வுகூறல்\nNakkeeran on தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆசன ஒதுக்கீட்டை வழங்கினால் பொதுதேர்தலில் போட்டியிடுவுன்- அனந்தி சசிதரன் (நேர்காணல்)\nlatha on ஒரே மலையில் 900 கோயில்கள்\narya on ஜெயலலிதாவுக்கு தண்டனை: தூக்கு -தீக்குளிப்பு– மாரடைப்பில் 14 பேர் சாவு\nஆப்கானிஸ்தானில் தாலிபனின் தேன் நிலவு முடிந்தது – இனி அதன் முன்னுள்ள சவால்கள் என்ன\n‘செப்டம்பர் 11’ தாக்குதல்: கடத்தப்பட்ட விமானத்துக்குள் நடந்தது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2372746", "date_download": "2021-10-19T10:52:35Z", "digest": "sha1:DZFFHPCEPRTGVHUYC3H4T6YS3SCOFW3N", "length": 4525, "nlines": 77, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"சுப்பிரமணியன் சந்திரசேகர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"சுப்பிரமணியன் சந்திரசேகர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n14:49, 15 சூலை 2017 இல் நிலவும் திருத்தம்\n3 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 4 ஆண்டுகளுக்கு முன்\n14:45, 15 சூலை 2017 இல் நிலவும் திருத்தம�� (தொகு)\nTNSE nisha DIETKGI (பேச்சு | பங்களிப்புகள்)\n14:49, 15 சூலை 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nTNSE nisha DIETKGI (பேச்சு | பங்களிப்புகள்)\n[[பகுப்பு:கிருஷ்ணகிரிமாவட்டஆசிரியர்கள் கிருஷ்ணகிரி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/movie-name", "date_download": "2021-10-19T11:24:56Z", "digest": "sha1:Y7HRDGJ7JXY3TQDZYR4SNDQJAFGCHLAZ", "length": 16185, "nlines": 128, "source_domain": "tamil.asianetnews.com", "title": "movie name: Latest News, Photos, Videos on movie name | tamil.asianetnews.com", "raw_content": "\nசூர்யா படத்தை பார்த்து கதறி அழுத சூப்பர் ஸ்டார்..\nபாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் 'சூரரை போற்று' படத்தை பார்த்து கதறி அழுத்ததாக தெரிவித்துள்ளது, பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.\nஇது நம்ப லிஸ்ட்டிலேயே இல்லையே... தளபதி 65 படத்திற்கு மிரட்டல் தலைப்பு... வெளியானது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்...\nயாருமே எதிர்பார்க்காத வகையில் அசத்தலான தலைப்பை படக்குழு அறிவித்துள்ளது.\nஹரீஷ் கல்யாண் - பிரியா பவானி படத்திற்கு வைக்கப்பட்ட சூப்பர் டைட்டில்..\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின், நடிகர் ஹரீஷ் கல்யாண் தேர்வு செய்து நடிக்கும் படங்கள் அனைத்திற்குமே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் கடைசியாக இவர் நடித்த 'தாராள பிரபு' படம், நல்ல விமர்சனங்களை பெற்றது.\n பட்டையை கிளப்பும் சிறுத்தை சிவா..\n பட்டையை கிளப்பும் சிறுத்தை சிவா..\nசூப்பர் மாடல் நமீதாவை சுற்றி சுற்றி காதலிக்க தயாராகும் டி.ராஜேந்தர் 13 வருடத்திற்கு பின் வெறித்தனம்\nதமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், எழுத்தாளர், இசையமைப்பாளர், பாடகர், என பல்வேறு திறமைகளும் கொண்டு விளங்கும் ஒரு சில கலைஞர்களில் ஒருவர் டி.ராஜேந்தர். இவரின் அடுக்குத்தொடர் வசனங்களுக்கும், தனித்துவமான நடிப்பிற்கும் பல ரசிகர்கள் உள்ளனர்.\nவிஜய் ரசிகர்கள் செய்த \"சம்பவம்\" எல்லாம் வீணாப்போச்சு... \"தளபதி 64\" படம் பற்றி தீயாய் பரவிய வதந்தி... முற்றுப்புள்ளி வைக்க படக்குழு எடுத்த அதிரடி ஆக்‌ஷன்...\nஎனவே தளபதி 64 படத்தின் தலைப்பு குறித்து பரவி வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடிவு செய்த படக்குழுவினர். விஜய் படத்திற்கு இன்னும் தலைப்பு முடிவு செய்யப்படவில்லை என்றும், அதனால் தலைப்பு குறித்து பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் ரசிகர்களின் தலையில் இடியாய் இறக்கியுள்ளனர்.\n’உலகம் சுற்றும் வாலிபன்’ எம்.ஜி.ஆர். வேடத்தில் விஷால்...ரத்தத்தின் ரத்தங்களுக்கு ஷாக் கொடுக்கும் சுந்தர்.சி...\n“நான் எம்ஜிஆரின் தீவிர ரசிகர் “உலகம் சுற்றும் வாலிபன்” படத்தைப்போல ஒரு படம் எடுக்க வேண்டும் என்று பல வருடங்களாக ஆசைப்பட்டேன்.தற்போது நடிகர் விஷால் மூலம் அந்த கனவு நிறைவேறியுள்ளது’என்று கொஞ்சமும் அச்சமில்லாமல் விஷாலுக்கு அடுத்த எம்ஜியார் என்கிற படத்தைத் தூக்கிக்கொடுக்கிறார் இயக்குநர் சுந்தர்.சி.\nகீர்த்தி சுரேஷின் படப்பெயரை அதிரடியாக வெளியிட்ட பிரபலம்\nநடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடந்த வருடம் வெளியான படங்கள் அவருடைய திரை வாழ்வில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. குறிப்பாக 'நடிகையர் திலகம் ' திரைப்படம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்று தந்ததோடு, விருதுகளையும் பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஜி.வி.பிரகாஷ் - பிக்பாஸ் ரைசா படத்திற்கு இப்படி ஒரு டைட்டிலா\nஇசையமைப்பாளராக தமிழ் திரையுலகில் அறிமுகமாகி, இன்று வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் ஜி.வி.பிரகாஷ். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'சர்வம் தாளமயம்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.\nரஜினியின் '165' படத்தின் பெயர் 'பேட்ட'\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் காலா, 2.0 படங்களை தொடர்ந்து கார்த்தி சுப்புராஜ் இயக்கும் படம் வெளியாகிறது.\nலஷ்மியை தொடர்ந்து அடுத்த படத்தின் பெயரை வெளியிட்ட பிரபுதேவா..\nஇயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் 'தேவி' படத்தை தொடர்ந்து நடிகர் பிரபுதேவா நடித்த, 'லஷ்மி' திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி, ரசிகர்களின் ஆதரவோடு அனைத்து திரையரங்கிலும் ஓடிக்கொண்டிருக்கிறது.\nகாத்திருக்க வைத்து படப்பெயரை காப்பி அடித்து ஏமாற்றிய விஜய் படக்குழு...\nஇளைய தளபதி விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்துள்ள 'விஜய் 62' ஆவது படத்தின் தலைப்பு 'சர்கார்' என இன்று மாலை சரியாக 6 மணிக்கு சன்\nசூர்யாவின் மகன் பெயரை படத்திற்கு சூட்டிய கார்த்தி...\nசூர்யாவின் '2டி எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் சார்பில், இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி வந்த 'கடைக்குட்டி சிங்கம்' படத்தின்,\nஆர் கே. சுரேஷின் அடுத்த படத்துக்கு இப்படி ���ரு பெயரா...\nபுதுமுக நடிகர், நடிகை நடித்து கடந்த வருடம் வெளியான 'அட்டு ' திரைப்படம் பலரது கவனத்தையும் பெற்றது\nகார்த்திக் நரேனின் மூன்றாவது படத்தின் பெயர் வெளியானது...\n'துருவங்கள் பதினாறு ' இயக்குநர் கார்த்திக் நரேனின் புதிய படத்தின் பெயர் இன்று 5 மணிக்கு வெளியிடப்பட்டது.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகோவிட் மூன்றாவது அலையில் இருந்து நம்மை காத்து கொள்ள சுயபரிசோதனை கருவியே நமக்கு தேவை \nபலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய விளையாட்டு வீரர்கள் \n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய கலைஞர்கள்\nமஹசூஸ் வெற்றியாளர் ஏசியாநெட் நியூஸ் தமிழுக்கு அளித்த பேட்டி\nகோவிட் மூன்றாவது அலையில் இருந்து நம்மை காத்து கொள்ள சுயபரிசோதனை கருவியே நமக்கு தேவை \nபலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய விளையாட்டு வீரர்கள் \nராகவா லாரன்ஸ் - நடிக்கும் படத்தில் ‘பாடாத பாட்டெல்லாம்’ ரீமிக்ஸ் பாடல்..\nஎனது மூச்சு இருப்பதற்குள் கோட்டையில் அன்புமணி உட்கார வேண்டும்... இயலாமையில் துடித்த ராமதாஸ்.\nஇதெல்லாம் அக்கிரமம்... டாக்டர் ராமதாஸ் கொதிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/132199/", "date_download": "2021-10-19T11:08:26Z", "digest": "sha1:LMKOVHPX7RSGCV3NHDNKVHS2ZDRPWHQB", "length": 36701, "nlines": 209, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஆனையில்லா, ஆகாயம்- கடிதங்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nவாசகர்கள் வாசகர் கடிதம் ஆனையில்லா, ஆகாயம்- கடிதங்கள்\nஆகாயம் என்ற சொல்லில் இருக்கும் “ஆ” “ஆகா” இரண்டுமே எனக்குப் பிடிக்கும். ஒருவர் அவர் அன்றாடம் பேசி கேட்கும் மொழியில் வாசிக்கும் இலக்கியம் கொஞ்சம் மேம்பட்டது, நுட்பமானது என்று நான் நினைப்பது இதனால்தான். இவ்வாறு சில சூட்சுமமான உணர்ச்சிகளை, மொழிசார்ந்த நுட்பங்களை நாம் பெறமுடிகிறது. இந்தக்கதையில் உண்மையில் அந்த ஸ்பிரிச்சுவல் அம்சம் என்பது ஆகாசம்லா என்று ஆசாரி சொல்லும் இடத்தில், ஆகாசம் என்ற வார்த்தையில்தான் உள்ளது.\nஅதோடு ஓர் அரசமரத்தைப் பார்க்கையில் நாம் ஆகாயத்தைப் பார்ப்பதுபோல வேறு எப்போதுமே பார்ப்பதில்லை. அரசமரம் ஆகாசத்தை மறைக்காது. அதன் ஃபோலியேஜ் அடர்த்தியானது இல்லை. அது வானத்தில் ஒரு சில்லௌட் மாதிரித்தான் தெரியும். அதன் இலைகளின் அசைவே வானத்தில் பதிந்திருப்பதுபோல தெரியும். தெய்வங்கள் சிற்பியை மீறி அவன் கைவழியாக வந்திறங்குவதுதான் கதை என்று வரும்போது ஆகாசம் என்பது மிகப்பெரிய அர்த்தம் அடைகிறது.\nஆகாயம் என்ற ஒன்றே தோற்றப்பிழைதான் என்று எண்ணுவதுண்டு. உண்மையில் பூமியினின்று நம் கண்ணால் காணக்கூடிய பிரபஞ்சத்தின் சிறு துளியையே ஆகாயம் என்று கொள்கிறோம் என நினைப்பேன் நான். ஆனால், பூமியையும் தாண்டி, இந்த பிரபஞ்ச ஆகாயங்களைப் பற்றி யோசிக்கிறேன். அது அளவுகோள்களுக்கு அப்பாற்பட்டதாகப்படுகிறது. “ஆகாசமுல்லா” என்ற வார்த்தையைத் தவிற முடிவிலியைக் குறிக்க வேறொரு சொல் வேண்டுமா என்ன\nகோயில்களில் அப்படி எண்ணற்ற சிலைகளைக் கண்டிருக்கிறேன். சிலவற்றுக்கு அதன் கீழேயே பெயரும், அவர்களைக் கும்பிட்டால் என்ன பலன் கிடைக்கும் என்றெல்லாமும் கூட எழுதியிருப்பார்கள். சிலைகளின் அழகை இரசிப்பதற்காவே தனியாக செல்வதுண்டு. அகழ்வாராய்வாய்ச்சியின் மூலம் கண்டறியப்பட்ட, பெயர் தெரியாத பழங்கால சிலைகளைப் பற்றிப் பார்க்கும் போதெல்லாம் ஆச்சரியமாய் இருப்பதுண்டு. ஒரு வேளை வழக்கொழிந்த தெய்வங்களாய் இருக்கும் என்று நினைப்பதுண்டு. இந்து மதத்தில் மட்டும் எத்தனை கோடி தெய்வங்கள் என்று பகடியாய் கூட நினைத்துக் கொள்வதுண்டு. ஆனால் இன்று வேறோர் கண்ணோட்டம் கிட்டியது ஜெ.\nசிற்பிகளின் எண்ணங்கள் வழி அதனை நான் ஊடுருவியிருக்கவில்லை. பெரும்பாலும் மன்னர் சொல்வதை, மக்கள் விரும்புவதை மட்டுமே வடிக்கும் கலைஞர்ளாக நினைத்தது ஒரு காரணமாயிருக்கலாம்.\nநான் அப்படியே சிந்து சமவெளி நாகரிகத்தில் கண்டெடுக்கப்பட்ட இரண்டு சிலைகளை நினைத்துக் கொண்டேன். ஒன்று ஆதி சிவனாயிருக்கலாம் என்று கருதக் கூடிய சிலை, இன்னொன்று பெண் கடவுள் சிலை. தனியாக கோயில்கள் அந்த மக்கள் சமைத்தாகத் தெரியவில்லை. ஆனால் கடவ��ள் வழிபாடு இருந்திருக்கலாம் என்கிறார்கள். அன்றிலிருந்து இன்றுவரை கண்டெடுக்கப்பட்ட அனைத்து சிலைகளை, கலைப் பொருட்களை எல்லாம் நினைத்துக் கொள்கிறேன். எல்லாமுமே ஒரு கலைஞனின் எண்ணத்தினின்று உதித்ததல்லவா.\n“தெய்வமெல்லாம் ஒண்ணுதான். அணியும் முத்திரையும் மனுஷன் பாக்குதது. அதவச்சுத்தான் சிவன் வேறே விஷ்ணு வேறே” எத்துனை நிதர்சனமான உண்மை ஜெ. கோடி சிலைகள், கோடி எண்ணங்கள், கோடி கடவுள்களின் தோற்றங்கள். அவைகளுக்குள் நம் முன்னோர்களின் ஆசைகள், துன்பங்கள், கனவுகள், புலம்பலகள் யாவையும் நிறைத்து, உயிரேற்றி வைத்திருக்கிறோமே. அங்கு சென்றால் கவலைகள் தீர்ந்துவிடும் என்ற நம்பிக்கை கதிர்களை பல நூறு வருடங்களாக விதைத்து, அங்கே நேர்மறை எண்ணங்களை விதைத்திருக்கிறோமே. சுடுகாட்டிற்கு செல்லும் போது ஏற்படும் துன்பமும், பயமும்; கோயில்/தர்கா/சர்ச் –க்கு செல்லும் போது ஏற்படும் நேர்மறை எண்ணங்களும் காலங்காலமாக நம் முன்னோர்கள் விதைத்ததோ என்ற எண்ணம் எழுகிறது என்னுள்.\nஎங்கள் ஊரிலுள்ள திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கும், அங்கே மடவார் வளாகத்திலுள்ள சிவன் கோயிலுக்கும், யாரும் பெரும்பாலும் வராத நாட்களில், வேளைகளில் போவதுண்டு. கருவறையின் வெளியே ஆளறவமற்ற நேரங்களில் கண்களை மூடி தியானித்திருப்பேன். அங்குள்ள ஆற்றலை நுகர்ந்திருப்பேன். எத்தனையோ நூற்றாண்டுகளாக குடியிருக்கும் நேர்மறை எண்ணங்களை/ அதன் அலைவரிசைகளை கவனித்திருப்பேன். நேரம் செல்வதறியாமல் மிரண்டு விழித்த தருணங்கள் ஏராளம். இந்த கற்கோவிலுக்குள் உயிரேற்றி வைத்தவர்கள் நாம் தானே. அதன் உணர்வுகளை, பலன்களை நம்பிக்கைகளாக நிர்ணயிப்பவர்கள் நாம் தானே என்ற என் எண்ணங்களுக்கு நீங்கள் உரமேற்றுவது போலக அமைந்தது இந்தக் கதை.\nஇனி எங்கு பெயரற்ற சிலைகளைப் பற்றிக் கேட்க நேர்ந்தாலும் குமரன் ஞாபகத்திற்கு வருவான் ஜெ.\nஅது தவிரவும் அனைத்துக் கலைஞர்களையும் நினைக்கிறேன். அவர்களின் எண்ணம் என்னும் கருவறையில் பிறக்கும் ஓவியங்கள், கதைகள், திரைக்கதைகள், கவிதைகள், சிலைகள், பாடல்கள், இசைகள், ஒலிகள், வண்ணங்கள் யாவற்றையும் நினைத்துப் பார்க்கிறேன். ஜாதகக் கதைகளையும், புராணங்களையும், இதிகாசங்களையும், இன்னும் எத்தனையோ கதைகளும் எங்கோ யார் மனதிலோ கருக்கொண்டு எண்ணங்களின் வழியல்லவா பிறந்திருக்கும். உங்கள் எண்ணங்களில் கூட எத்தனை கருக்கள் குவிந்திருந்தால் இப்படிக் கொட்டித்தீர்ப்பீர்கள். வேறெந்த விடயத்தைப் பற்றிய சிந்தனையில்லாத மனமும், கேட்காத காதுகளும், பேசாத உதடுகளும் ஒரே மூச்சாக, உங்கள் படைப்புகளைப் பற்றியே சிந்தித்து எழுதும் நீங்களும் குமரன் தானே. அப்படி செய்யும் கலைஞர்கள் யாரும் குமரன் தானே. நாம் விட்டுச் செல்லும் படைப்புகள் அப்படியல்லவா இருக்க வேண்டும்\nகலைஞர்களைத் தாண்டி, எல்லா மனிதர்களும் எண்ணுகிறார்களே. அத்துனை எண்ணங்களும் பிரபஞ்சம் நிறைத்து வழிந்துவிட வாய்ப்பில்லையா ஜெ\n”இது வித்து, உள்ள அவரு கருவடிவா கண்ணுறங்குதாரு” இப்படி எத்தனை கருக்கள் நிறைவடையாமலேயே கண்ணுரங்கிக் கொண்டிருக்கும் என்பதைப் பார்க்கிறேன். பார்க்கும் கற்கள் தோறும் இனி கருக்களையே காண்பேன். அது உறங்கிக் கொண்டிருக்கும் ஓர் உயிரல்லவா. கற்களைப் போலவே மரங்களும், மலைகளும், காடும், ஆறும், கடலும், பனியும், யாவும் கருக்கொண்டிருக்கின்றனவே. அது வெளிப்படாதவறை அதன் தெய்வீகம் புரிவதில்லை. வெளிப்படாதவைகள், வெளிப்பட்டவைகள் என எத்துனை. “ஆகாசமுல்லா\nஆனையில்லா கதையில் இருந்து திரும்ப வாசிக்க ஆரம்பித்திருக்கிறேன். வாசித்தபிறகு அப்படியே ஆனையில்லா என்று அடித்து தேடி அதன்கீழே வரும் எல்லா கடிதங்களையும் வாசிக்கிறேன். உண்மையில் ஒரு மிகப்பெரிய சிறுகதை பட்டறையே இங்கே இரண்டுமாதம் இடைவெளியே இல்லாமல் நடைபெற்றிருக்கிறது.\nஆனால் வெளியே சென்று அறியப்பட்டவர்கள், தங்களை விஷயம்தெரிந்தவர்கள் என்று நம்பிக்கொள்பவர்கள் எழுதிய விமர்சனங்களை எல்லாம் பார்த்தால் தலையில் மடேர் மடேர் என்று அடித்துக்கொள்ளலாம் போல தோன்றுகிறது. அவர்களால் கதைகளுக்குள் புகுவதற்கான கற்பனையே இல்லை. கதையின் சூட்சுமங்கள் எதுவும் பிடிகிடைக்கவில்லை. கதையின் ஸ்பிரிச்சுவல் ஸ்பேஸ் பற்றி ஒரு பிரக்ஞையே இல்லை.\nஅவர்கள் அறிந்தது ஒன்று வழக்கமான அதிமுக- திமுக- பிஜேபி அரசியல். அதிலுள்ள கட்சிகட்டல்கள். இல்லையென்றால் எனக்கும் விஷயம் தெரியும் என்று காட்டுவதற்காக ‘அப்படியென்றால் இதெப்படி’ என்பது போன்ற சில்லியான சர்ச்சைகள். அல்லது சம்பந்தமே இல்லாமல் வேறேதேனும் கதைகளை சுட்டிக்காட்டுவது. உண்மையில் இந்த இடத்திற்கு வெளியே எ���்தக்கதைக்குமே வாசிப்பு நடக்கவில்லை என்ற எண்ணம்தான் ஏற்பட்டது.\nஅதன்பின் ஆனையில்லா கதையை வாசித்தபோது சட்டென்று ஒரு சிரிப்பு வந்துவிட்டது. அவர்கள் ஆனையிடம் வந்து அமர்ந்து நீ ஆனையில்லை என்று மந்திரம் போட்டுக்கொண்டே இருக்கிறார்கள் சொல்லிச்சொல்லி ஆனையை சிறியதாக ஆக்கிவிடலாம் என்று கற்பனைசெய்கிறார்கள்\nஆனயில்லா கதையை வாசித்தேன். உடனே ஆகாயம் கதையை வாசிக்கவேண்டும் என்று தோன்றியது. இரண்டுகதைகளையும் அருகருகே வாசித்தபோது ஒரு பெரிய ஆச்சரியம் ஏற்பட்டது. ஆனையில்லா கதை மிகப்பெரிய ஒன்றை ‘ஒண்ணுமே இல்லை, அவ்ளவுதான்’ என்று சொல்லி முடிக்கமுயல்வது. ஆனால் ஆகாயம் ஒவ்வொரு சின்னவிஷயமும் வானத்தை இணைத்துக்கொண்டிருக்கிறது என்று சொல்லி பெரிதாக்குகிறது. ‘ஆகாசமுல்லா”என்று ஆசாரி சொல்கிறார்.\n” என்பதற்கும் எவ்வளவு வேறுபாடு அங்கிருந்து இஙே வரை ஒரு கோடு. அது லௌகீகம். இது ஆன்மீகம். லௌகீகத்திலே எல்லாவற்றையும் சின்னதாக்கு. ஆன்மீகத்தில் எல்லாவற்றையும் ஆகாசம்போல பெரிசாக்கு. அதுதான் இந்தக்கதைகளில் தெரிகிறது என்று நினைக்கிறேன்\n64. கரு [குறுநாவல்]- பகுதி 1\n64. கரு [குறுநாவல்]- பகுதி 2\n50. ஐந்து நெருப்பு[ சிறுகதை]\n46. மலைகளின் உரையாடல் [சிறுகதை]\n45. முதல் ஆறு [சிறுகதை]\n37. ஓநாயின் மூக்கு [சிறுகதை]\n35. பாப்பாவின் சொந்த யானை [சிறுகதை]\n34. பத்துலட்சம் காலடிகள் [சிறுகதை]\n21. பொலிவதும் கலைவதும் [சிறுகதை]\n20. வேரில் திகழ்வது [சிறுகதை]\n19. ஆயிரம் ஊற்றுக்கள் [சிறுகதை]\n18. தங்கத்தின் மணம் [சிறுகதை]\n17. வானில் அலைகின்றன குரல்கள் [சிறுகதை]\n8. தவளையும் இளவரசனும் [சிறுகதை]\n3. சர்வ ஃபூதேஷு [சிறுகதை]\n1. எண்ண எண்ணக் குறைவது [சிறுகதை]\nகோவை கவிதைவிவாதம் – கடிதம்\nஅக்டோபர் 2 காந்தி ஜெயந்தி நிகழ்வு – குக்கூ காட்டுப்பள்ளி\nவடுகூரும் தோத்தாத்ரியும்- கடலூர் சீனு\nவிஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் (அமெரிக்கா) – செயல்பாடுகள்\n‘தகவல் அறியும் உரிமை அல்லது ஏப்ரல் 7’ - சிறுகதை - அனிதா அக்னிஹோத்ரி\nவெண்முரசு ஆவணப்படம் – சாக்ரமாண்டோ, போர்ட்லாண்ட், டொராண்டோ\nவண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 11\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 86\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி கி.ராஜநாராயணன் கோவை ஞானி சு���்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உணவு உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் தொல்லியல் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் நகைச்சுவை நேர்காணல் நேர்காணல் மற்றும் பேட்டிகள் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பிறர் படைப்புகள் நூல் மதிப்புரை மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் மதிப்புரை விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெண்முரசு – ஒலிவடிவம் வெண்முரசு – வாசகர் கடிதம் வெண்முரசு – வாசகர் மதிப்புரை வெண்முரசு ஆவணப்படம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nitharsanam.net/235066/news/235066.html", "date_download": "2021-10-19T12:29:07Z", "digest": "sha1:CKCUTCDXSEV5ECVTMXES7UZW5MDHST4A", "length": 8432, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "முதுகுத்தண்டு பக்கவளைவு!! (மருத்துவம்) : நிதர்சனம்", "raw_content": "\nமுதுகுத்தண்டில் வளைவு என்பது குழந்தைகளிடம் எந்தவொரு வயதிலும் அவர்களது முதுகுத்தண்டில் உருவாகக்கூட��ய ஒரு வளைவு நிலையாகும். ஸ்கோலியோசிஸ் (Scoliosis) எனப்படும் இந்த பிரச்னைக்கு ஆரம்ப நிலையிலேயே சிகிச்சையளிக்க வேண்டும். இல்லாவிட்டால் நுரையீரல் நோய், நடப்பதில் சிரமம் மற்றும் உடல் செயல்பாடுகளின்போது கடுமையான முதுகுவலி போன்ற சிக்கல்களுக்கு இப்பாதிப்பு நிலை வழிவகுக்கக்கூடும்.\nஇந்தியாவில் முதுகுத்தண்டில் காணப்படும் இந்த உருக்குலைவின் காரணமாக 5 மில்லியன் குழந்தைகள் சிரமப்படுகின்றனர் மற்றும் இவர்களுள் 60%-க்கும் அதிகமானவர்கள், இதற்கு சிகிச்சைப் பெறாமலேயே விட்டுவிடுகின்றனர்.இதுகுறித்த விழிப்புணர்வு இல்லாமையும் மற்றும் இக்குழந்தைகளின் குடும்பத்தில் வறிய சமூக பொருளாதார நிலையுமே இதற்கு காரணமாக இருக்கின்றன.\nஒரு குழந்தைக்கு 3 ஆண்டுகள் என்ற மிக சிறிய வயதிலேயே முதுகுத்தண்டு பாதிப்பு நிலை இருக்கிறதா என அடையாளம் காண முடியும். ஏற்றஇறக்கமுள்ள தோள்பட்டைகள் (இரு தோள்பட்டைகளின் உயரத்தில் வித்தியாசம்) ஒரு பக்கமாக உடல் சாய்ந்திருக்கும் நிலை, ஒருபக்கத்தில் இடுப்பிற்கும், கைக்குமிடையே பெரிய இடைவெளி, சுவாசிப்பதில் சிரமம் மற்றும் முன்புறமாக சாயும்போது முதுகுப்பக்கத்தில் கூன் ஆகிய நிலைகளின் மூலம் இப்பாதிப்பு இருக்கிறதா என்பதை வைத்து கண்டறியலாம். மிக ஆரம்ப நிலையிலேயே இப்பாதிப்பு நிலை கண்டறியப்படுமானால், அறுவைசிகிச்சையின் துல்லியமும், வெற்றியும் மிக அதிகமாக இருக்கும்.\nமேலும், குழந்தை வளர்ச்சியடையவும் மற்றும் பிற குழந்தைகள் போல இயல்பான வாழ்க்கையை நடத்தவும் அறுவைசிகிச்சை உதவுகிறது. சிறுவர்களோடு ஒப்பிடுகையில், அதிக எண்ணிக்கையில் இளவயது சிறுமிகளே இந்நிலையால் பாதிக்கப்படுகின்றனர். நம்நாட்டின் பல பகுதிகளில், ஸ்கோலியோசிஸ் கூன் முதுகு என்பது, ஏழை மனிதனின் நோய் என்று கருதப்படுகிறது.\nஇதற்கான சிகிச்சைகளுக்கு அதிக பணம் செலவாகும் என்ற காரணத்தால் பாதிக்கப்பட்டவர்களுள் பெரும்பாலானோர், முதுகுத்தண்டு சிறப்பு மருத்துவர்களை சிகிச்சைக்காக அணுகுவதில்லை. எனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு வசதி படைத்தவர்கள் உதவி செய்யவும் முன் வர வேண்டும்.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nபெண்களுக்கு பந்தா இல்லாத ஆண்களை தான் மிகவும் பிடிக்கும்..\nசெக்ஸ் என்பது ஆபாசம் அல்ல… ரசித்து அனுபவியுங்கள்.. \nகுழிகளை மறைக்க O3 + ��பேஷியல்\nபெண்களின் இடுப்புக்கு அழகூட்டும் ஒட்டியாணம்\nஅப்படி என்னதான் நடக்கிறது இங்கே ஏயலியன்கள் நடமாடும் ஒரே இடம் ஏயலியன்கள் நடமாடும் ஒரே இடம்\nதிடீரென நடுவானில் தோன்றிய விசித்திர ஏலியன் விமானம்\nசீனா வழங்கிய நிதி: ஒரு வாளி நீரில் ஒரு துளி\nஒரு டாக்டர் ஆக்டரான கதை\nஇதய நோய் வராமல் இருக்கணுமா\n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF", "date_download": "2021-10-19T12:24:31Z", "digest": "sha1:KSAIEOPMHTPMNZWHADHCZ5FN4JGHCKKX", "length": 3772, "nlines": 39, "source_domain": "www.noolaham.org", "title": "ஆளுமை:இராசரத்தினம், சாமித்தம்பி - நூலகம்", "raw_content": "\nஇந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.\nஇராசரத்தினம், சாமித்தம்பி (1951.11.20 - ) யாழ்ப்பாணம், நிலாவரையில் பிறந்த நாடகக்கலைஞர், வில்லிசைக் கலைஞர். இவரது தந்தை சாமித்தம்பி. இசை நாடகம், சிந்து நடைக்கூத்து, வில்லிசை போன்ற பல துறைகளில் ஆர்வம் கொண்ட இவர், வி. வி. நல்லையா, ந. சிவசுப்பிரமணியம், கே. சுப்பிரமணியம் போன்றோரிடம் கலைபயின்றார். 1971 முதல் கலைத்துறையில் ஈடுபட்டார். பாரம்பரிய கலைகள் பண்பாட்டுக் கழகத்தின் பாராட்டுப் பெற்றுள்ளார்.\nநூலக எண்: 15444 பக்கங்கள் 131\nநூல்கள் [11,760] இதழ்கள் [13,280] பத்திரிகைகள் [53,303] பிரசுரங்கள் [1,125] நினைவு மலர்கள் [1,513] சிறப்பு மலர்கள் [5,516] எழுத்தாளர்கள் [4,874] பதிப்பாளர்கள் [4,171] வெளியீட்டு ஆண்டு [185] குறிச்சொற்கள் [91] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,157]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyaagarathi.com/category/other-news/history-news-and-history-articles/", "date_download": "2021-10-19T13:15:17Z", "digest": "sha1:NOIMFABBT7G4756TWEUVASD5MQYKYHMK", "length": 13880, "nlines": 108, "source_domain": "puthiyaagarathi.com", "title": "வரலாறு - புதிய அகராதி", "raw_content": "Tuesday, October 19மெய்ப்பொருள் காண்பது அறிவு\n ‘சதி’ கல் சொல்லும் சேதி\nசேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள், வரலாறு\nகணவன் இறந்தால் அவனோடு மனைவியும் எரியும் சிதையில் குதித்து உயிரை மாய்த்துக்கொள்ளும் சதி என்னும் உடன்கட்டை ஏறும் நடைமுறை தமிழ்ச்சமூகத்திலும் இருத்திருக்கிறது என்பதற்கான நடுகற்கள் கண்டறியப்பட்டு உள்ளன. உடன்கட்டை என்றாலே நமக்கான அண்மைய வரலாற்றில் அடிபடும் ஒரே பெயர் ராஜாராம் மோகன் ராய்தான். வங்கத்தில் பிறந்த அவர், சதி என்னும் பெண்கள் உடன்கட்டை ஏறும் அவலத்தை அடியோடு ஒழிக்க பெரிதும் பாடுபட்டார். அவருடைய தொடர் முயற்சிகளால், 1833ம் ஆண்டில் அப்போதைய வங்க ஆளுநர் வில்லியம் பெண்டிங் பிரபு 'சதி'யை ஒழித்து சட்டம் கொண்டு வந்தார். வங்கம் மட்டுமின்றி ராஜஸ்தானிலும் சதி நடைமுறை அதிகமாக இருந்தது. உண்மையில் தமிழ்ச்சமூகத்திலும் பரவலாக உடன்கட்டை ஏறும் பழக்கம் இருத்திருக்கிறது. பூதப்பாண்டியனின் ஈமத்தீயில் மனைவி பெருங்கோப்பெண்டு பாய்ந்து இறந்ததாக புறநானூற்றுப்பாடல் (246) ஒன்றில்\nகீழடி அகழாய்வு ஏன் தொடர வேண்டும்\nஇந்தியா, உலகம், சிறப்பு கட்டுரைகள், சிவகங்கை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள், வரலாறு\nசிவகங்கை மாவட்டத்தில் உள்ளது கீழடி கிராமம். தமிழகத்தின் குக்கிராமங்களில் ஒன்றாக கீழடியை நாம் கடந்து போய்விட முடியாது. அங்கேதான், பழந்தமிழரின் அரிய ரகசியங்கள் ஒளிந்திருக்கின்றன. கடந்த 2015ம் ஆண்டில் இருந்து கீழடி கிராமத்தில் மைய அரசின் தொல்லியல் துறை அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக 110 ஏக்கர் பரப்பளவு நிலத்தை மைய அரசு கையகப்படுத்தியது. இரண்டு கட்ட ஆய்வு நடந்த நிலையில், திடீரென்று தொல்லியல் துறையினர் பாதியிலேயே மூட்டை முடிச்சுகளைக் கட்டிக்கொண்டு கிளம்ப, வரலாற்று ஆய்வாளர்கள், அரசியல் கட்சியினரிடம் இருந்து அப்போது கடும் கண்டனங்கள் எழுந்தன. ஒருவழியாக உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் மூன்றாம் கட்ட அகழாய்வுப் பணிகள் தொடங்கின. ஒரு கட்ட அகழாய்வு என்பது ஓர் ஆண்டில் குறைந்தபட்சம் 10 மாதங்களாவது நடத்தப்பட வேண்டும். ஆனால், ஆறே மாதத்தில் திடீரென்று ஆய்வுப்பணிகள் முடிந்ததாகக்கூறி\nதிராவிட மண்ணில் மூக்கறுப்பு போர் சேலம் கல்வெட்டில் ஆதாரம் #மூக்கறுப்புபோர்\nசிறப்பு கட்டுரைகள், சேலம், திருச்சி, மதுரை, முக்கிய செய்திகள், வரலாறு\nபாகுபலியை கட்டப்பா ஏன் கொன்றார் என்பதைவிட பல திடுக்கிடும் திருப்பங்களும், மர்ம முடிச்சுகளும் கொண்டது, மூக்கறுப்புப் போர். யுத்தத்தில் வீரர்கள் வெல்வர்; அல்லது, மடிவர். ஆனால் எதிரிகளை மட்டுமின்றி எதிரி நாட்டில் எதிர்ப்படும் எல்லோரின் மூக்கையும், மேலுதட்டையும் அறுத்து, மூட���டையில் கட்டிச்செல்லும் யுத்தமும் நம் திராவிட மண்ணில் நடந்திருக்கிறது. இப்படி ஒரு மூர்க்கத்தனமான போர், மதுரை திருமலை நாயக்கருக்கும், மைசூர் அரசன் கந்தீரவனுக்கும் இடையே நடந்துள்ளதாகச் சொல்கிறார், சேலம் வரலாற்று ஆய்வாளர் ஆறகழூர் வெங்கடேசன். போர்க்களம், சேலம் அல்ல; ஆனால் மூக்கறுப்பு யுத்தம் நடந்ததற்கான ஆதாரம் சேலத்தில்தான் கிடைத்திருக்கிறது. சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள ஆறகழூரை சேர்ந்த வெங்கடேசன், அடிப்படையில் ஒரு மருந்தாளுநர். தீவிர கடவுள் மறுப்பாளர்; அறிவியல் சிந்தனையாளர். ஆனால், தற்போது கோயில் கோயிலா\nஇந்தியா, கிருஷ்ணகிரி, சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள், வரலாறு\nஓசூரில் 100 தொழிலாளர்களுடன் இயங்கும் அட்டைப்பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலையின் அதிபர். அலட்டல் இல்லாத கவிஞர். 'கவிக்கோ' அப்துல் ரஹ்மான், வைரமுத்து, அறிவுமதி ஆகியோரை வைத்து மூன்று கவிதை நூல்களை வெளியிட்டுள்ளார். இவற்றையெல்லாம் விட அவர் பெருமையும், மன நிறைவும் அடைவது தன்னை ஒரு 'வரலாற்று ஆய்வாளர்' என்று சொல்லிக்கொள்வதில்தான் என்றால் மிகையாகாது. இப்படி பன்முகத்தன்மையுடன் திகழ்பவர்தான், 'அறம்' கிருஷ்ணன். அவருடனான உரையாடலில் இருந்து... புதிய அகராதி: உங்கள் பெயரின் முன்னொட்டாக 'அறம்' ஒட்டிக்கொண்டது எப்படி அறம் கிருஷ்ணன்: எனக்குள் இருக்கும் இலக்கிய ஆர்வம் காரணமாக, 'அறம் இலக்கிய அமைப்பு' என்ற அமைப்பை தொடங்கினேன். அதன்மூலம், ஒவ்வொரு அரசுப்பள்ளியிலும் கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் நடத்தி வருகிறோம். அறம் என்றாலே கொடுப்பதுதானே. அதனால் விழா நடைபெறு\nபுற்றுநோயை குணமாக்கும் ஷிமோகா வைத்தியர்; நல்லதை நாலு பேருக்கு சொல்லலாமே\nஆளுங்கட்சியிடம் தஞ்சம் புகுந்த ஊழல் மாஜி துணைவேந்தர் தோண்டி துருவும் லஞ்ச ஒழிப்புத்துறை\nசேலம் மாநகராட்சியில் குப்பை வண்டிகள் வாங்கியதிலும் கொள்ளை\nதேவதாசி முறை ஒழிப்பு போராளி முத்துலட்சுமி ரெட்டி\nசட்டம் அறிவோம்: குழந்தையை தத்து எடுப்பது எப்படி\nஉடுமலை சங்கர் ஆணவக்கொலை வழக்கில் பரபரப்பு தீர்ப்பு; கவுசல்யாவின் தந்தை உள்பட 6 பேருக்கு இரட்டை தூக்கு\n கம்பனே குழம்பிய தருணம் எது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sonakar.com/2021/04/sb.html", "date_download": "2021-10-19T12:26:34Z", "digest": "sha1:EAWRPUL2MRPJY7WGKVGNXCXIF6NQGEB2", "length": 5071, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "ஜனாதிபதி மன அளவில் 'வீழ்ந்திருக்கிறார்': SB - sonakar.com", "raw_content": "\nHome NEWS ஜனாதிபதி மன அளவில் 'வீழ்ந்திருக்கிறார்': SB\nஜனாதிபதி மன அளவில் 'வீழ்ந்திருக்கிறார்': SB\nஜனாதிபதி மன அளவில் வீழ்ந்திருப்பதாகவும் அவர் திட்டமிட்ட எதுவும் நடப்பதாக இல்லையெனவும் தெரிவிக்கிறார் எஸ்.பி. திசாநாயக்க.\nஅவரைச் சுற்றியுள்ளவர்கள் சொல்லப்படும் பணிகளை செய்யாததன் காரணத்தினாலேயே இந்நிலை காணப்படுவதாகவும் அவர் மேலும் விளக்கமளித்துள்ளார்.\nஜனாதிபதியின் திட்டங்களை செயற்படுத்த வேண்டிய அதிகாரிகளின் அலட்சியம் குறித்து தான் ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தியதாகவும் அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nபணமில்லை 'ஜனாஸாவை' வைத்துக்கொள்: குடும்பங்கள் அதிரடி\nகொழும்பில் கொரேனா பாதிப்பிருப்பதாக தெரிவிக்கப்படும் ஜனாஸாக்களை அடக்குவதற்கு 58,000 ரூபா கேட்பது நிரந்தர வழக்கமாக உருவெடுத்துள்ள நிலையில்,...\nஇஷாலினி தன்னைத் தானே எரியூட்டியதாக வாக்குமூலம்\nரிசாத் பதியுதீன் வீட்டில் பணிபுரிந்த நிலையில் தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த மலையகத்தைச் சேர்ந்த இஷாலினி தன்னை...\nஅசாத் கைது செய்யப்பட்டது தெரியாது: பிரதமர்\nதேசிய ஐக்கிய முன்னணி தலைவர் அசாத் சாலி கைது செய்யப்பட்டது தனக்குத் தெரியாது என தெரிவித்துள்ளார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச. பயங்கரவாத தடுப்புச...\nஜனாஸா எரிப்பு வழக்கை விசாரணைக்கு ஏற்க மறுப்பு\nஜனாஸா எரிப்புக்கு எதிராக தொடுக்கப்பட்டிருந்த வழக்கினை விசாரணைக்கு ஏற்பதா இல்லையா என்பதனடிப்படையிலான விசாரணைகள் இரு தினங்களாக இடம்பெற்ற ந...\nநான் 'நல்ல மாதிரியான' முஸ்லிம்: முசம்மில்\nமுஸ்லிம் குடும்பம் ஒன்றில் பிறந்து இஸ்லாமிய கலாச்சாரத்தில் வளர்ந்தவன் என்ற அடிப்படையில் மாற்று மதத்தவரைத் திருமணம் செய்துள்ள போதிலும் தான்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yazhpanam.com/2020/07/blog-post_16.html", "date_download": "2021-10-19T12:09:30Z", "digest": "sha1:WYALZFUXR7NBHFMYNA5GMCX2LL5XNRJB", "length": 29279, "nlines": 183, "source_domain": "www.yazhpanam.com", "title": "மக்கள் நேர்மையான துணிச்சலான தீர்க்கதரிசனம் மிக்க பிரதிநிதிகளைத் தெரிவு செய்வார்களா? - Yazhpanam.Com - எமது உணர்வு! எமது உரிமை!", "raw_content": "\n9ஆம் ஆண்டில் இணையத்தில் தடம் பதித்து கொண்டிருக��கிறோம்...\nஇத்தருணத்தில் எமது வாசகர்கள் மற்றும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.\nHome Unlabelled மக்கள் நேர்மையான துணிச்சலான தீர்க்கதரிசனம் மிக்க பிரதிநிதிகளைத் தெரிவு செய்வார்களா\nமக்கள் நேர்மையான துணிச்சலான தீர்க்கதரிசனம் மிக்க பிரதிநிதிகளைத் தெரிவு செய்வார்களா\nகிளிநொச்சியைச் சேர்ந்த ஒரு கூர்மையான அவதானி என்னிடம் கேட்டார் ‘முன்பு புலிகளின் ஆட்சிக்காலத்தில் அந்த அமைப்புடன் சேர்ந்து செயற்பட்ட பலரும் இப்பொழுது ஒன்றில் கூட்டமைப்புடன் நிற்கிறார்கள் அல்லது சந்திரகுமாரோடு நிற்கிறார்கள். எப்படி அவர்களால் அப்படி நிற்க முடிகிறது\nநான் சொன்னேன், “அவர்களில் பலர் புலிகளின் காலத்தில் கொள்கை ரீதியாக புலிகளோடு இணைந்து நின்றார்கள் என்று நீங்கள் நம்புகிறீர்களா அங்கேதான் பிழை விடுகிறீர்கள். அவர்கள் விடுதலை இலட்சியத்தோடு சேர்ந்து நிற்கவில்லை. மாறாக அதிகாரத்தோடு சேர்ந்து நின்றார்கள்.\nஅந்தக்காலம் புலிகள் இயக்கமே ஓர் அதிகார மையமாக காணப்பட்டது. எனவே அந்த அதிகார மையத்தை நோக்கி அவர்கள் சார்ந்து நின்றார்கள். இப்பொழுது கூட்டமைப்பு ஒரு அதிகார மையம், சந்திரகுமார் மற்றொரு அதிகார மையம். எனவே அதிகார மையங்களை நோக்கி அவர்கள் இப்போதும் சார்ந்து நிற்கிறார்கள்.\nஇது விடயத்தில் மக்களை போதிய அளவிற்கு அரசியல் மயப்படுத்தத் தவறிய எல்லா தரப்புகளும் தவறை ஏற்றுக்கொள்ள வேண்டும். அரசியல் மயப்படுத்தப்படாத மக்கள் இப்படித்தான் அதிகாரத்தை நோக்கி எப்பொழுதும் சாய்வார்கள்.\nதவிர இதில் மற்றொரு அம்சமும் உண்டு. முன்பு புலிகள் இயக்கத்தோடு நின்ற ஒரு பகுதியினர் இப்பொழுது தற்காப்பு உணர்வோடு சந்திரகுமாரோடு நிற்கிறார்கள். ஏனெனில் முன்னாள் இயக்கத்தவர்கள் இப்பொழுதும் இலங்கை தீவில் அதிகம் சந்தேகிக்கப்படும் ஒரு தரப்பாக காணப்படுகிறார்கள்.\nஅதனால் இலங்கை தீவில் அதிகம் எளிதில் பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய ஒரு தரப்பாக முன்னாள் விடுதலைப் புலிகள் உறுப்பினர்களே காணப்படுகிறார்கள். எனவே அவர்கள் தற்காப்புக்காக வெவ்வேறு தரப்புக்களோடு இணைந்து நிற்கிகிறார்கள்.\nஇதில் அதிகம் விமர்சிக்கப்பட வேண்டியது ஒரு அதிகார மையம் என்பதற்காக ஒரு கட்சியை அல்லது ஒரு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரை சார்ந்து நிற்பதுதான். எனவே இந்த விசயத்தில் இலட்சியத்தைப் போட்டுக் குழப்பத் தேவையில்லை” என்று அவரிடம் சொன்னேன்.\nகடந்த 11 ஆண்டு கால அரசியல் எனப்படுவது பெருமளவுக்கு இலட்சிய வாதத்துக்கு எதிரானதாகவே திரும்பி விட்டது. தேர்தல் அரசியல் எனப்படுவது பெருமளவிற்கு இலட்சியவாத அரசியலுக்கு எதிரானதாகத்தான் காணப்படுகிறது.\n2009இற்கு முன்புவரை தமிழ் அரசியலானது இலட்சியவாதத் தன்மை மிகுந்ததாக காணப்பட்டது. அப்பொழுது அரசியலுக்குள் இறங்குபவர்கள் தியாகம் செய்யத் தயாராக இருக்க வேண்டும்.\nஆனால் 2009இற்குப் பின்னர் அப்படியல்ல. தியாகம் செய்யத் தேவையில்லாத, ஆனால் தியாகம் செய்வது போல வேசம் காட்டிக் கொண்டு பிழைப்பதற்கான ஒரு துறையாக அரசியல் மாறிவிட்டது. இப்பொழுது அரசியல் எனப்படுவது பெருமளவிற்கு ஒரு பிழைப்பு, ஒரு நடிப்பு, ஒரு மிகப் பெரிய பொய்.\nஆனால், இப்படி பொய்கூறி மக்களால் தெரிந்தெடுக்கப்பட்டவர்களே ஒரு இனத்தின் தலைவிதியை தீர்மானிக்கும் முடிவுகளை எடுக்கப் போகிறார்கள் என்பதுதான் இங்குள்ள கொடுமையாகும். இந்த நிலைமையை எப்படி மாற்றுவது\n‘நீ முன்னுக்கு வரவில்லை என்று சொன்னால் உன்னைவிட தகுதி குறைந்தவர்களால் ஆளப்படுவதற்கு தயாராக இரு’ என்று அரிஸ்டோட்டிலின் கூற்று ஒன்று உண்டு.\nதமிழ் சமூகத்தில் தேர்தல் அரசியலை விமர்சிக்கும் பலரும் அதில் ஈடுபடத் தயாரில்லை. குறிப்பாக புத்திஜீவிகளும் கருத்துருவாக்கிகளும் இது விடயத்தில் களத்தில் இறங்கத் தயாரில்லை.\nதேர்தல் அரசியல் எனப்படுவது சாக்கடை போன்றது என்றுதான் பலரும் கருதுகிறார்கள். அந்த சாக்கடைக்குள் இறங்கி சேற்றை பூசிக்கொள்ள நிதானமானவர்கள் நேர்மையானவர்கள் பின்னடிக்கிறார்கள். இதனால் நேர்மையற்றவர்களும் மோசடிக்காரர்களும் பிழைப்புவாதிகளும் இரட்டை நாக்கால் கதைப்பவர்களும் அரசியலை தங்களுக்கு உரிய சிறப்புத் துறையாகக் கருதி அதில் இறங்குகிறார்கள்.\nஇதுதான் பிரச்சினை. தமிழ் அரசியலில் நேர்மையானவர்களும் நிதானமானவர்களும் இலட்சியவாதிகளும் அதிகமதிகம் இறங்க வேண்டும். ஆயுத மோதலுக்குப் பின்னரான சமூகத்தில் இது விடயத்தில் வெற்றிடம் அதிகம் இருக்கும்தான்.\nஏனெனில், ஆயுத மோதலின்போது அதில் நேரடியாக சம்பந்தப்பட்டவர்களும் அதை ஆதரிப்பவர்களும் அந்த ஆயுத மோதல் தோற்கடிக்கப���பட்ட பின்பு தற்காப்பு நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.\nஇதை இன்னும் ஆழமாகச் சொன்னால் ஆயுத மோதல் காலகட்டத்தில் தியாக சிந்தையுடன் அர்ப்பணிப்பு உணர்வோடும் வீர உணர்வோடும் அரசியலில் இறங்கிய பலரும் அந்தப் போராட்டம் தோற்கடிக்கப்பட்ட பின்பு தற்காப்பு நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.\nஇதனால் பாதுகாப்பான இறந்தகாலத்தைப் பெற்ற பலரும் நிகழ்காலத்தின் பேச்சாளர்களாக மாறுகிறார்கள். கடந்த 11 ஆண்டுகளாக தமிழ் அரசியல் பரப்பில் முன்னணியில் நிற்கும் அநேகர் அவ்வாறு பாதுகாப்பான இறந்த காலத்தை பெற்றவர்கள்தான்.\nஅவர்களுக்கு எப்படி பாதுகாப்பான கடந்தகாலம் கிடைத்தது எப்படியெனில் அவர் கடந்த காலத்தில் போராடவில்லை அல்லது போராட்டக் களத்தில் வசிக்கவில்லை, ரிஸ்க் எடுக்கவில்லை. அவ்வாறு ரிஸ்க் எடுக்காத பலர் இப்பொழுது அரங்கை நிறைத்துக் கொண்டிருக்கிறார்கள்.\nஇந்த நிலைமையை மாற்ற வேண்டும். தமிழ் அரசியலை பிழைப்பு வாதத்தில் இருந்து இலட்சிய பாங்கானதாக மாற்ற வேண்டும். அதற்கு என்ன செய்யலாம் தேர்தலுக்கு இன்னமும் கிட்டத்தட்ட நான்கு கிழமைகளே உண்டு. இந்த நான்கு கிழமைகளுக்குள் மக்களை அவசரமாக அரசியல் மயப்படுத்த முடியாது. தேர்தல் அரசியலை திடீரென்று திருத்தி அமைக்கவும் முடியாது.\nஇந்த தேர்தலில் போட்டியிடுபவர்களில் ஒப்பீட்டளவில் நேர்மையானவர்களை, இலடச்சியவாதிகளை, கறைபடாத கரங்களைக் கொண்டவர்களை ஆதரிக்கலாம். இதன்மூலம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு மோசமாகத் தோற்பதிலிருந்து ஓரளவுக்குத் தப்பலாம். அதைத்தவிர இப்போதைக்கு வேறு எதையும் செய்ய முடியாது.\nஆனால், தமிழ் அரசியலை நீண்டகால நோக்கில் செயற்பாட்டு ஒழுக்கம் மிக்க இலட்சியவாதம் நிறைந்த நேர்மையான ஒரு வழியில் செலுத்துவதாக இருந்தால் அதற்கு முதலில் ஒரு தமிழ் தேசியப் பேரியக்கத்தைத் தொடங்க வேண்டும்.\nஎடுத்த எடுப்பிலேயே பேரியக்கமாக தொடங்கத் தேவையில்லை. ஒரு சிறிய இயக்கமாக தொடங்கலாம். ஒரு பண்பாட்டு இயக்கமாகத் தொடங்கலாம். குறைந்தது வாக்காளர்களுக்கு அறிவூட்டி அவர்களை விமர்சன பூர்வமாக சிந்திக்கும் வாக்காளர்களாக மாற்றுவதற்குரிய அறிவூட்டும் இயக்கமாக ஒன்றைத் தொடங்கலாம்.\nஏனெனில் தேர்தல் அரசியலில் இலட்சியவாதிகள் வெல்வதென்றால் அதற்கு வாக்காளர்களைத் தயார்படுத்த வேண்டும். வ���க்காளர்களை எப்படி தயார்படுத்துவது\nமுதலில் வாக்காளர்களை விமர்சனபூர்வமாகச் சிந்திக்கச் செய்ய வேண்டும். குருட்டு வாக்காளர்கள் உணர்ச்சிவசப்பட்டு கும்பலோடு கோவிந்தாவாக பழகிய கட்சிக்கு பழகிய சின்னத்துக்கு அல்லது பெரிய கட்சிக்கு வாக்குகளை வழங்கி விட்டுச் சென்றுவிடுவார்கள்.\nவாக்களிக்க முன்பு யார் தங்களை ஆளப்போவது என்பதனை எந்த அடிப்படையில் தீர்மானிக்க வேண்டும் என்று மக்களுக்கு விழிப்பூட்ட வேண்டும். எவ்வளவுக்கு எவ்வளவு விமர்சன பூர்வமாக மக்கள் சிந்திக்கிறார்களோ அவ்வளவுக்கு அவ்வளவு வாக்களிப்புக் கோலத்தை மாற்றலாம். தலைவர்களையும் மாற்றலாம். தமிழ் மக்களின் தலைவிதியையும் மாற்றலாம்.\nஎனவே, நேர்மையானவர்களையும் துணிந்தவர்களையும் தியாக சிந்தை கொண்டவர்களையும் மக்கள் பிரதிநிதிகளாக தெரிந்தெடுப்பதற்கு முதலில் மக்களை சிந்திக்கத் தூண்ட வேண்டும். கடந்த பதினோரு ஆண்டுகளாக தேசிய நீக்கம் செய்யப்பட்ட ஒரு வாக்கு வங்கி தமிழ் மக்கள் மத்தியில் பலம்பெற்று வருகிறது.\nஇதில் படித்தவர்கள் உண்டு. நடுத்தர வர்க்கத்தவர்கள் உண்டு. நலிவுற்ற சமூகப் பிரிவினரும் உண்டு. படித்தவர்களும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களும் தற்காப்பு உணர்வோடு சிந்திக்கிறார்கள். எந்தக் கட்சிக்கு வாக்களித்தால் தங்களுடைய நடுத்தர வர்க்க நலன்களை பாதுகாத்துக் கொள்ளலாம் என்று சிந்திக்கிறார்கள்.\nஎந்தக் கட்சி தமது பொருளாதார நலன்களைப் பாதுகாக்கும் என்று சிந்திக்கிறார்கள். எந்தக் கட்சி அரசியலில் தங்களை தியாகம் செய்யச் சொல்லி கேட்காது என்று பார்க்கிறார்கள். அந்தக் கட்சிக்கு வாக்களிக்கிறார்கள்.\nஅதேசமயம், நலிவுற்ற சமூகப் பிரிவுகளை குறிவைத்து தென்னிலங்கை மையக் கட்சிகள் வேலை செய்கின்றன. தமிழ் தேசியக் கட்சிகளால் போதிய அளவுக்கு உள்ளீர்க்கப்படாத சமூகங்களை தென்னிலங்கை மையக் கட்சிகள் சலுகைகள் மூலம் கையாளப் பார்க்கின்றன. அல்லது சமூக முரண்பாடுகளை பெரிதாக்கி அவர்களை தேசியவாத வாக்கு வங்கியில் இருந்து பிரித்தெடுக்க முயற்சிக்கின்றன.\nஅந்த மக்களின் நலிவுற்ற சமூக நிலையை சமூக ஏற்றத் தாழ்வுகளை வெற்றிகரமாகக் கையாண்டு தமது வாக்கு வங்கியை பெரிதாக்க முயற்சிக்கின்றன. இவ்வாறாக தமிழ் பரப்பில் தேசிய நீக்கம் செய்யப்பட்ட ஒரு வாக்கு வங்கி பலமடைந்து வருகிறது. இந்த வாக்கு வங்கியை தென்னிலங்கை மையக் கட்சிகளும் தமிழ் தேசியத்துக்கு எதிரான கட்சிகளும் மட்டும்தான் கட்டி எழுப்புகின்றன என்பதல்ல.\nசிவப்பு, மஞ்சள் கொடியின் கீழ் இணக்க அரசியலை முன்னெடுக்கும் தமிழ் தேசியக் கட்சிகளும் அதைச் செய்கின்றன. தமிழ் தேசியக் கட்சிகள் என்று சொல்லிக் கொள்ளும் கட்சிகள் விட்ட வெற்றிடத்தில்தான் தென்னிலங்கை மையக் கட்சிகள் வேலை செய்கின்றன.\nஇவ்வாறு தேசிய நீக்கம் செய்யப்பட்ட வாக்கு வங்கி பெருத்துக்கொண்டே போனால் எதிர்காலத்தில் இலட்சியவாத அரசியலை முன்னெடுப்பது மேலும் கடினமாகும். நடுத்தர வர்க்கம் தன்னைப் பாதுகாத்துக் கொண்டு சௌகரிய வலையத்துக்குள் தற்காப்பு நிலைக்குச் சென்றுவிடும்.\nஎனவே நேர்மையான இலட்சியப் பாங்கான அரசியலை முன்னெடுக்க விரும்பும் தரப்புக்கள் தங்களுக்கிடையே ஐக்கியப்பட்டு ஒரு தமிழ் தேசிய இயக்கத்தைத் தொடங்க வேண்டும். தமிழ் மக்கள் பேரவையின் போதாமையில் இருந்து கற்றுக்கொண்ட பாடங்களின் அடிப்படையில் ஒரு தேசியப் பேரியக்கத்தைத் தொடங்க வேண்டும்.\nஅதில், புலம் பெயர்ந்த தமிழ் சமூகத்துக்கும் உரிய இடத்தைக் கொடுத்து தேர்தல் அரசியலை வழிநடத்தும் அளவுக்கு அத்தேசிய இயக்கத்தை பலப்படுத்த வேண்டும். ஒரு பொதுத் தேர்தலுக்கு கிட்டத்தட்ட நான்கு கிழமைகளே இருக்கும் ஒரு காலச் சூழலுக்குள் ஒரு தமிழ் தேசிய இயக்கத்தை அவசரப்பட்டு தொடங்கத் தேவையில்லை.\nஆனால், பொதுத் தேர்தலில் வாக்களிக்கப் போகும் தமிழ் வாக்காளர்களை விமர்சன பூர்வமாக சிந்திக்க வைப்பதற்கு மேலும் 5 ஆண்டுகளுக்கு காத்திருக்கத் தேவையில்லை. அதை இப்பொழுதே தொடங்கலாம்.\nஉலகமெங்கும் சரக்குகள் பற்றாக்குறை - நெருக்கடியால் தவிக்கும் நாடுகள் - உலகம் முழுக்க, மக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் மற்றும் வியாபாரிகள் காபி முதல் நிலக்கரி வரை பல பொருட்களின் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றனர் கொரோனா பெருந்தொற்...\nJaffna Mullivaikkal news SriLanka தமிழினவழிப்பு பொத்துவில்2பொலிகண்டி\nஇன்று உறவுகளின் நினைவுக் கல்லறைக்காக போராட வேண்டிய நிலை: எஸ்.சிவகரன்\nமீள் நிர்மானம் செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் - பல்கலைக் கழக மாணவர்களால் திறந்து வைப்பு\nஇலங்கையில் பொருளாதார அவசரநிலை அமல் - மக்கள் இன்னலுக���குள்: எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு\nவவுனியா காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு உலருணவுப் பொதிகளை வழங்கிய கனடா வாழ் குப்பிளான் உறவுகள்\nயாழ். பல்கலைக்கழகதில் முள்ளிவாய்க்கால் நினைவு தூபி சற்றுமுன் இடித்தழிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaipoonga.net/tag/%E0%AE%8F-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-10-19T10:53:55Z", "digest": "sha1:CSOHKUIR2HDZFEMARKZXR7AET2MLZJEE", "length": 11315, "nlines": 182, "source_domain": "kalaipoonga.net", "title": "ஏ.ஆர்.ராஜசேகர் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையில் 12 மொழிகளில் உருவாகும் 75 வது சுதந்திர தின பாடல் \"பெருங்காற்றே\" - Kalaipoonga", "raw_content": "\nTags ஏ.ஆர்.ராஜசேகர் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையில் 12 மொழிகளில் உருவாகும் 75 வது சுதந்திர தின பாடல் \"பெருங்காற்றே\"\nTag: ஏ.ஆர்.ராஜசேகர் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையில் 12 மொழிகளில் உருவாகும் 75 வது சுதந்திர தின பாடல் \"பெருங்காற்றே\"\nஜி.வி.பிரகாஷ்குமார் இசையில் உருவாகும் ‘பெருங்காற்றே’ மியூஸிக் ஆல்பம்\nஜி.வி.பிரகாஷ்குமார் இசையில் உருவாகும் ‘பெருங்காற்றே’ மியூஸிக் ஆல்பம் இந்திய சுதந்திரதின 75வது ஆண்டு கொண்டாட்டங்கள் வரும் ஆகஸ்டு 15-லிருந்து துவங்குகிறது. கப்பலோட்டிய தமிழன் என்று புகழப்படும் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 150-வது பிறந்த நாள் கொண்டாட்டமும் வரும்...\nஒற்றை வார்த்தையில் நடிகர் விஜய்யை புகழ்ந்த ‘பீஸ்ட்’ நாயகி\nஒற்றை வார்த்தையில் நடிகர் விஜய்யை புகழ்ந்த ‘பீஸ்ட்’ நாயகி விஜய் மற்றும் நெல்சன் கூட்டணியில் உருவாகி வருகிறது ‘பீஸ்ட்’ அதிரடி ஆக்ஷனில் உருவாகி வரும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. இப்படத்தில்...\nராகவா லாரன்ஸ் – பிரியா பவானி சங்கர் நடிக்கும் ருத்ரன் படத்தில் ‘பாடாத பாட்டெல்லாம்’ ரீமிக்ஸ் பாடல்\nராகவா லாரன்ஸ் - பிரியா பவானி சங்கர் நடிக்கும் ருத்ரன் படத்தில் ‘பாடாத பாட்டெல்லாம்’ ரீமிக்ஸ் பாடல் பல வெற்றி படங்களை தயாரித்த 5 ஸ்டார் கிரியேஷன்ஸ் S.கதிரேசன் தயாரித்து இயக்கும் “ருத்ரன்” படத்தில்...\n‘டேக் டைவர்ஷன்’ முழு நீள கமர்ஷியல் பேக்கேஜ்\n'டேக் டைவர்ஷன்' முழு நீள கமர்ஷியல் பேக்கேஜ் 'டேக் டைவர்ஷன்' என்கிற படத்தை இயக்குநர் சிவானி செந்தில் இயக்கியுள்ளார். 80களில் 90களில் மட்டுமல்ல 2K -யில் பால்ய காலத்தைக் கடந்தவர்களையும் ஈர்க்கும் வகையில் ஒரு காதல்...\nSKLS கேலக்சி மால் புரொடக்‌ஷன்ஸ், மெட்ராஸ் ஸ்டோரிஸ் உடன் இணையும் சர்ஜுன் இயக்கத்தில் புதிய படம் : கலையரசன் ஜோடியாக மிர்னா\nSKLS கேலக்சி மால் புரொடக்‌ஷன்ஸ், மெட்ராஸ் ஸ்டோரிஸ் உடன் இணையும் சர்ஜுன் இயக்கத்தில் புதிய படம் : கலையரசன் ஜோடியாக மிர்னா பல வெற்றிப்படங்களை விநியோகம் செய்த SKLS கேலக்சி மால் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் மெட்ராஸ்...\nஒற்றை வார்த்தையில் நடிகர் விஜய்யை புகழ்ந்த ‘பீஸ்ட்’ நாயகி\nஒற்றை வார்த்தையில் நடிகர் விஜய்யை புகழ்ந்த ‘பீஸ்ட்’ நாயகி விஜய் மற்றும் நெல்சன் கூட்டணியில் உருவாகி வருகிறது ‘பீஸ்ட்’ அதிரடி ஆக்ஷனில் உருவாகி வரும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. இப்படத்தில்...\nராகவா லாரன்ஸ் – பிரியா பவானி சங்கர் நடிக்கும் ருத்ரன் படத்தில் ‘பாடாத பாட்டெல்லாம்’ ரீமிக்ஸ் பாடல்\nராகவா லாரன்ஸ் - பிரியா பவானி சங்கர் நடிக்கும் ருத்ரன் படத்தில் ‘பாடாத பாட்டெல்லாம்’ ரீமிக்ஸ் பாடல் பல வெற்றி படங்களை தயாரித்த 5 ஸ்டார் கிரியேஷன்ஸ் S.கதிரேசன் தயாரித்து இயக்கும் “ருத்ரன்” படத்தில்...\n‘டேக் டைவர்ஷன்’ முழு நீள கமர்ஷியல் பேக்கேஜ்\n'டேக் டைவர்ஷன்' முழு நீள கமர்ஷியல் பேக்கேஜ் 'டேக் டைவர்ஷன்' என்கிற படத்தை இயக்குநர் சிவானி செந்தில் இயக்கியுள்ளார். 80களில் 90களில் மட்டுமல்ல 2K -யில் பால்ய காலத்தைக் கடந்தவர்களையும் ஈர்க்கும் வகையில் ஒரு காதல்...\nஒற்றை வார்த்தையில் நடிகர் விஜய்யை புகழ்ந்த ‘பீஸ்ட்’ நாயகி\nஒற்றை வார்த்தையில் நடிகர் விஜய்யை புகழ்ந்த ‘பீஸ்ட்’ நாயகி விஜய் மற்றும் நெல்சன் கூட்டணியில் உருவாகி வருகிறது ‘பீஸ்ட்’ அதிரடி ஆக்ஷனில் உருவாகி வரும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. இப்படத்தில்...\nராகவா லாரன்ஸ் – பிரியா பவானி சங்கர் நடிக்கும் ருத்ரன் படத்தில் ‘பாடாத பாட்டெல்லாம்’ ரீமிக்ஸ் பாடல்\nராகவா லாரன்ஸ் - பிரியா பவானி சங்கர் நடிக்கும் ருத்ரன் படத்தில் ‘பாடாத பாட்டெல்லாம்’ ரீமிக்ஸ் பாடல் பல வெற்றி படங்களை தயாரித்த 5 ஸ்டார் கிரியேஷன்ஸ் S.கதிரேசன் தயாரித்து இயக்கும் “ருத்ரன்” படத்தில்...\n‘டேக் டைவர்ஷன்’ முழு நீள கமர்ஷியல் பேக்கேஜ்\n'டேக் டைவர்ஷன்' முழு நீள கமர்ஷியல் பேக்கேஜ் 'டேக் டைவர்ஷன்' என்கிற படத்தை இயக்குநர் சிவானி செந்தில் இயக்கியுள்ளார். 80களில் 90களில் மட்டுமல்ல 2K -யில் பால்ய காலத்தைக் கடந்தவர்களையும் ஈர்க்கும் வகையில் ஒரு காதல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://juniorpolicenews.com/2020/06/22/%E0%AE%89%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-2/", "date_download": "2021-10-19T11:10:43Z", "digest": "sha1:3B7ORG6RRQ6USCR7WX54PUWQCJHATXKP", "length": 15101, "nlines": 200, "source_domain": "juniorpolicenews.com", "title": "உடுமலை சங்கர் கொலை வழக்கில் இன்று வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து உடுமலை கவுசல்யா நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் பகுதியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய வீடியோ உள்ளே.. | Police News | 24/7 Tamil News", "raw_content": "\n10 மாவட்ட காவலர்களின் மனக்கவலைகளை போக்கும் விதமாக குறைகளை நேரில் கேட்டறிந்த தென்மண்டல காவல்துறை…\nதுப்பறியும் திறனை வெளிக்கொண்டுவர ஒரு அரிய வாய்ப்பு.\nசீர்காழியில் 3 லட்சம் மதிப்புள்ள 9 ஆயிரத்து 200 குட்கா பாக்கெட்டுகளை காவல்துறையினர் பறிமுதல்…\nதூத்துக்குடியில் என்கவுண்டரில் ரவுடி சுட்டுக்கொலை.\nதமிழகம் முழுவதும் 35 இடங்களில் ஹெல்மெட் மாட்டிக்கொண்டு இரவு நேரங்களில் பூட்டியிருந்த கடைகளில் கொள்ளையடித்த…\n10 மாவட்ட காவலர்களின் மனக்கவலைகளை போக்கும் விதமாக குறைகளை நேரில் கேட்டறிந்த தென்மண்டல காவல்துறை…\nதுப்பறியும் திறனை வெளிக்கொண்டுவர ஒரு அரிய வாய்ப்பு.\nசீர்காழியில் 3 லட்சம் மதிப்புள்ள 9 ஆயிரத்து 200 குட்கா பாக்கெட்டுகளை காவல்துறையினர் பறிமுதல்…\nதூத்துக்குடியில் என்கவுண்டரில் ரவுடி சுட்டுக்கொலை.\nதமிழகம் முழுவதும் 35 இடங்களில் ஹெல்மெட் மாட்டிக்கொண்டு இரவு நேரங்களில் பூட்டியிருந்த கடைகளில் கொள்ளையடித்த…\nசட்டவிரோதமாக 3350 லாட்டரி சீட்டுகள் விற்ற நபரை கைது செய்து, சிறப்பாக செயல்பட்ட புதுக்கோட்டை…\nபுதுவையில் அனைத்து காவல் நிலையங்களிலும் ரூ.2 கோடி செலவில் சிசிடிவி பொறுத்தப்படும் என்று உள்துறை…\nதமிழகத்தை சேர்ந்த காவல் அதிகாரிகள் 8 பேருக்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் சார்பில் விருது…\nமுன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது 400 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல்\nசென்னை மாநகர ஆயுதப்படைபிரிவில் பணிபுரியும் காவலர் ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில்2021 நடைபெரும் ஒலிம்பிக்போட்டிக்கு தகுதி…\nகஞ்சா வியாபாரியை கைது செய்வதில் அ���ட்சியம்: வாணியம்பாடி காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்.. வேலூர்…\nகட்டப்பஞ்சாயத்து; கைத்துப்பாக்கி; வழிப்பறி – குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்ட ரௌடியின் பின்னணி என்ன\nபுதுவையில் அனைத்து காவல் நிலையங்களிலும் ரூ.2 கோடி செலவில் சிசிடிவி பொறுத்தப்படும் என்று உள்துறை…\nகோவையில் 10 சட்டமன்ற உறுப்பினர்கள் மீது தொற்று நோய் பரவல் சட்டம் அரசு ஊழியரை…\nபுல் பவர் தந்த ஸ்டாலின்.. வேட்டையாடிய சைலேந்திரபாபு\nகாஸ்ட்லி பைக்கை திருடி வெளியூர்களில் விற்போம்” : சிறுவனின் வாக்குமூலத்தால் அதிர்ச்சியடைந்த போலிஸ்\nசென்னை மாநகர ஆயுதப்படைபிரிவில் பணிபுரியும் காவலர் ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில்2021 நடைபெரும் ஒலிம்பிக்போட்டிக்கு தகுதி…\nஆன்லைன் ரம்மியை தடை செய்ய அவசர சட்டம் பிறப்பித்து தமிழக அரசு ஆணை –…\nமனநலம் பாதித்த தாயுடன் வறுமையில் வசித்து வரும் அரசு அதிகாரி ஆக வேண்டும் என்ற…\nகடலாடி அருகே வாலிநோக்கம் கடலில் குளித்த இளைஞர் அலையில் சிக்கி மாயம் : தேடும்…\nHome அரசியல் உடுமலை சங்கர் கொலை வழக்கில் இன்று வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து உடுமலை கவுசல்யா நீலகிரி மாவட்டம்...\nஉடுமலை சங்கர் கொலை வழக்கில் இன்று வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து உடுமலை கவுசல்யா நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் பகுதியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய வீடியோ உள்ளே..\nPrevious articleபோலீஸ் வேலை; ரூ.30 லட்சம்’ -கதையை நம்பிப் பணத்தை இழந்த திருவண்ணாமலை இளைஞர்கள்\nNext articleஇந்திய எல்லையில் நுழைய முயன்ற சீன வீரர்களுக்கு மரண அடி கொடுத்த இந்திய இராணுவ வீரர்கள்.இப்படித்தான் கால்வான் பள்ளத்தாக்கிலும் நமது வீரர்கள் சீன இராணுவத்தோடு கைகலப்பில் ஈடுபட்டனர்..\n10 மாவட்ட காவலர்களின் மனக்கவலைகளை போக்கும் விதமாக குறைகளை நேரில் கேட்டறிந்த தென்மண்டல காவல்துறை தலைவர் அவர்கள்.\nதுப்பறியும் திறனை வெளிக்கொண்டுவர ஒரு அரிய வாய்ப்பு.\nசீர்காழியில் 3 லட்சம் மதிப்புள்ள 9 ஆயிரத்து 200 குட்கா பாக்கெட்டுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.\n10 மாவட்ட காவலர்களின் மனக்கவலைகளை போக்கும் விதமாக குறைகளை நேரில் கேட்டறிந்த தென்மண்டல காவல்துறை தலைவர் அவர்கள்.\nதுப்பறியும் திறனை வெளிக்கொண்டுவர ஒரு அரிய வாய்ப்பு.\nசீர்காழியில் 3 லட்சம் மதிப்புள்ள 9 ஆயிரத்து 200 குட்கா பாக்கெட்டுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.\nதூத்துக்குடியில் என்கவுண்டரில் ரவுடி சுட்டுக்கொலை.\nதமிழகம் முழுவதும் 35 இடங்களில் ஹெல்மெட் மாட்டிக்கொண்டு இரவு நேரங்களில் பூட்டியிருந்த கடைகளில் கொள்ளையடித்த கொள்ளையன் மயிலாடுதுறையில் கைது\n10 மாவட்ட காவலர்களின் மனக்கவலைகளை போக்கும் விதமாக குறைகளை நேரில் கேட்டறிந்த தென்மண்டல காவல்துறை...\nதுப்பறியும் திறனை வெளிக்கொண்டுவர ஒரு அரிய வாய்ப்பு.\nசீர்காழியில் 3 லட்சம் மதிப்புள்ள 9 ஆயிரத்து 200 குட்கா பாக்கெட்டுகளை காவல்துறையினர் பறிமுதல்...\nகரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு பாதுகாப்பு கேட்டு காதல் கணவருடன் பெண் தஞ்சம்..\nதமிழக டிஜிபி புதிய உத்தரவு.. சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் எதிரொலி தொடர்ந்து Non-Bailable...\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் பெண் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பதிலாக அவரது கணவரோ, உறவினர்களோ தலையிடக்கூடாதுதடை செய்யப்பட்டுள்ளது..ஆட்சியர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nchokkan.wordpress.com/2017/12/29/pchustry/", "date_download": "2021-10-19T11:44:38Z", "digest": "sha1:MDD5B5WOYDKOYUFOPAOUVBBTPG2I2QRE", "length": 32519, "nlines": 322, "source_domain": "nchokkan.wordpress.com", "title": "பூச்சு (சிறுகதை) | மனம் போன போக்கில்", "raw_content": "\nமின்னூல்களைப் பதிப்பித்தல்: எழுதுவோருக்கிருக்கும் வாய்ப்புகள்\nமிகுந்த எரிச்சலோடு பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தேன்.\nஎரிச்சலில் கால்வாசி மனத்தில், மீதியெல்லாம் உதட்டில்.\nபெங்களூரில் குளிர்காலம் தொடங்கியதும் ஸ்வெட்டர்கள், கம்பளிகள் தூசு தட்டப்படும், செவிமூடும் மஃப்ளர்கள் தேடியெடுக்கப்படும், அல்லது, புதிதாக வாங்கப்படும், அதிகாலையில் எழுந்து வாக்கிங், ஜாகிங், ரன்னிங், யோகாசனமிங் என்று சுறுசுறுப்பாகிக்கொண்டிருந்தவர்கள் அலாரத்தை ஒருமணிநேரம் தள்ளிவைத்துச் சோம்பேறிகளாவார்கள்.\nநெடுங்காலமாக இவ்வூரில் வாழ்கிறவர்கள், ‘பெங்களூரு முன்னைப்போல இல்லை’ என்று எப்பப்பார் புலம்புகிறார்கள். ‘முன்னெல்லாம் எப்படிக் குளிரும் தெரியுமா’ என்று நினைவுகளில் சிலிர்க்கிறார்கள்.\nநான் இவ்வூருக்கு வந்து பதினெட்டு வருடங்களாகிவிட்டன. பதினெட்டு வருடங்களாக இதே வசனத்தைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன். வருடாவருடம் குளிர்மட்டும் அதிகமாகிறதேயன்றிக் குறைவதில்லை.\nஅப்படியானால், இவர்கள் ஒப்பிட்டுச் சலித்துக்கொள்ளும் ‘அந்தக்காலப் பெங்களூர் குளிர்’ என்பது உண்மையில் எந்தக்காலம் ஒருவேளை, இவர்களெல்லாம் பனியுகத்தில் வாழ்ந்தவர்களாயிருப்பார்களோ\nநம்மால் இந்தக்குளிரையே தாங்கமுடிவதில்லை. குறிப்பாக, உதட்டைச்சுற்றிச் சிறு ஊசிகளால் குத்தினாற்போல் அது நிகழ்த்தும் தாக்குதலை.\nநல்லவேளையாக, இந்தப் பனித்தாக்குதலைச் சமாளிக்க யாரோ ஒரு புண்ணியவான் ‘பெட்ரோலியம் ஜெல்லி’ என்ற பூச்சைக் கண்டுபிடித்துவைத்திருக்கிறார். திகுதிகுவென்று எரிந்துகொண்டிருக்கும் உதட்டுப்பிரதேசங்கள் இந்தப் பூச்சைப் பூசியதும் மந்திரம் போட்டாற்போல் சில விநாடிகளில் குளிர்ந்து இயல்பாகிவிடுகின்றன. அதன்பிறகு, அடுத்த தாக்குதல் வரும்வரை பிரச்னையில்லை.\nகுளிர்காலம் தொடங்கியதும் எங்கள் வீட்டில் பெட்ரோலியம் ஜெல்லியை வாங்கிக்குவித்துவிடுவோம். மேசையிலொன்று, குளியலறையிலொன்று, பெண்டிர்தம் கைப்பைகளில் ஒவ்வொன்று, அலுவலகத்திலொன்று, அங்கு செல்வதற்கான முதுகுப்பையிலொன்று என எங்குநோக்கினும் அவ்வெண்ணிற அதிசயம் இருக்கும்.\nபெட்ரோலியம் ஜெல்லியைக் கண்டுபிடித்த புண்ணியவானின் சீடர்கள் அதை ஐந்து ரூபாய்க்குச் சிறு டப்பாக்களில் விற்கிறார்கள். ஆகவே, ஒரே நேரத்தில் ஏழெட்டை வாங்கிவைக்கலாம், தொலைந்தாலும் பெரிய இழப்பில்லை, இன்னொன்றை எடுத்துப் பூசலாம்.\nஇந்த ஐந்து ரூபாய் டப்பாக்கள் சுலபத்தில் தீர்வதில்லை என்பதுதான் ஆச்சர்யம். இழுக்க இழுக்க இன்பம் என்று சிகரெட் விளம்பரங்கள் தெரிவிப்பதுபோல் இவை பூசப்பூசப் பொங்கிவருவதுபோலோர் உணர்வு. வற்றாத ஜீவநதிகளைப்போல் அந்த டப்பாவின் அடிப்பகுதியை யாராவது பார்த்திருப்பார்களா என்பது சந்தேகமே. எப்போதாவது அதிசயமாக ஒரு டப்பா தீர்ந்துபோவதுண்டு, பெரும்பாலும் அதற்குள் அது தொலைந்துவிடும்.\nஐந்து ரூபாய்க்கு இப்படியொரு பொருளைத் தயாரித்துப் பொட்டலம்கட்டிக் கடைகளுக்குக் கொண்டுவந்து விற்கமுடிகிறதென்றால் அதன் அடிப்படை விலை என்னவாக இருக்கும் அந்த அற்ப விலையில் அது இப்படியோர் அதிசயத் தீர்வைத் தருகிறதென்றால் அதைக் கண்டுபிடித்தவன் எப்பேர்ப்பட்ட மாமேதை\nஆனால், இப்படி உடனடி, நிச்சயப் பலனைத் தருகிறது என்பதற்காக அதைப் பூசிக்கொண்டே இருத்தல் சரிதானா ஒருவேளை, இதனால் உடலுக்கு ஏதேனும் கெடுத��் வந்தால் ஒருவேளை, இதனால் உடலுக்கு ஏதேனும் கெடுதல் வந்தால் உதட்டுப்பூச்சுதானெனினும் உணவுப்பொருட்களோடு உள்ளே சென்றுவிடாதா\nஇதைப்பற்றியும் நான் இணையத்தில் தேடியிருக்கிறேன். பெட்ரோலியம் ஜெல்லியால் உடலுக்கு எந்தக் கெடுதலும் வராதாம். அதை ஸ்பூனில் எடுத்துச் சாப்பிட்டால்கூட எந்தப் பிரச்னையும் ஆகாதாம். பெட்ரோலியம் ஜெல்லியைக் கண்டுபிடித்தவர் அப்படிச் சாப்பிட்டு நெடுநாள் வாழ்ந்தாராம்.\nவராதாம், ஆகாதாம், வாழ்ந்தாராம் என ‘ஆம்’ விகுதியில் நிறைவடையும் வாக்கியங்களை வாசிப்பதால் எந்த நிரந்தர உறுதியும் கிடைப்பதில்லை. எனினும், அவைதரும் தாற்காலிக ஆசுவாசம் அலாதியானது.\nஎப்படியோ, பெட்ரோலியம் ஜெல்லியால் உடலுக்கு எந்தப் பிரச்னையும் வராது என்று நம்பத்தான் வேண்டும்; காரணம், குளிர்காலத்து உதட்டெரிச்சலுக்கு அதைவிட்டால் வேறு நம்பகமான தீர்வில்லை.\nஇயற்கைமுறையில் இதற்கு வெண்ணெய்யைப் பூசலாம், எண்ணெய்யைப் பூசலாம் என்பார்கள் உண்டு. ஆனால் அவையெல்லாம் ஐந்து ரூபாய்க்குச் சிறு பிளாஸ்டிக் டப்பாக்களில் சவுகர்யமாகக் கிடைக்குமா\nஆண்டுக்கு மூன்று மாதங்கள் வெண்ணிற ஜெல்லியின் அடிமையாதல் சிறப்பானதல்ல, மோசமானதுமல்ல. ஒரே பிரச்னை, அதை மறந்துவிட்டு எங்கேயாவது வெளியே வந்து சிக்கிக்கொள்ளும்போது உதட்டுத்தாக்குதல் தொடங்கினால்தான்.\nஇன்றைக்கு மாரத்தஹள்ளியில் ஒரு முக்கியமான கூட்டம். அதற்காக அவசரமாகக் கிளம்பிவந்ததில் பெட்ரோலியம் ஜெல்லியைக் கொண்டுவர மறந்துவிட்டேன். அதைத் தெரிந்துகொண்டாற்போல் இந்த உதட்டெரிச்சல் தொடங்கிவிட்டது.\nஒருபக்கம் சூரியன், இன்னொருபக்கம் குளிர் குறையாத காற்று, இரண்டுமே உதட்டெரிச்சலை அதிகப்படுத்தின. அதைத் தொட்டால் இன்னும் எரிந்தது.\nபக்கத்தில் மருந்துக்கடை எங்கேனும் இருக்கிறதா என்று தெரியவில்லை. அதைத் தேடுவதற்கு நேரமில்லை. உடனே பேருந்தைப் பிடித்தாகவேண்டும்.\nயோசித்துக்கொண்டிருந்தபோதே பேருந்து வந்துவிட்டது. சட்டென்று ஏறிக்கொண்டேன்.\nஒரே நிம்மதி, இன்றைக்கு அவ்வளவாகக் கூட்டமில்லை. இன்னும் ஒன்றரைமணிநேரம் செல்லவேண்டியிருப்பதால், கொஞ்சம் காற்றுவாங்கியபடி உட்காரலாம்.\nமெதுவாக ஒரு சன்னலோர இருக்கையை நெருங்கினேன். உட்கார்ந்து எரியும் உதட்டைத் தடவியபடி எதிர் இருக்கையைப் பார்த்தேன், திடுக்கிட்டேன்.\nஅங்கே காலியாக இருந்த இரு இருக்கைகளுக்கு நடுவே, ஒரு பெட்ரோலியம் ஜெல்லி டப்பா.\nநாங்கள் வழக்கமாக வாங்குகிற அதே ஐந்து ரூபாய் டப்பாதான். இருக்கைகளுக்கு மத்தியில் இருக்கும் இடைவெளியில் கிடந்தது.\nஅதைக் கிடந்தது என்று சொல்வதுகூடச் சரியில்லை. யாரோ அதை அந்த இடத்தில் வைத்தாற்போல் அழகாக அமர்ந்திருந்தது.\nமருந்துக்கடையில் கிடைத்தாலும் பெட்ரோலியம் ஜெல்லியை மருந்தாகக் கொள்ளலாமா என்று தெரியவில்லை. அநேகமாக FMCG எனப்படும் விரைவாக விற்பனையாகும் பயனாளர் பொருட்களின் பட்டியலில்தான் அது இடம்பெறும் என்பது என் ஊகம்.\nஇந்தியாவில் பல லட்சம் FMCG பொருட்கள் விற்பனையாகின்றன, அவற்றில் சரியாக இந்த பெட்ரோலியம் ஜெல்லியை வாங்கி உதட்டெரிச்சலோடு இருக்கும் என் எதிர் இருக்கையில் கொண்டுவந்து வைத்தது யார் இதற்கான நிகழ்தகவைக் கணக்கிட்டால் புள்ளிவைத்து எத்தனை பூஜ்ஜியங்களை எழுதவேண்டியிருக்கும்\nஎனக்குக் கடவுள் நம்பிக்கை உண்டு. என்னுடைய சிரமத்தைப் புரிந்துகொண்டு கடவுளே இந்த டப்பாவை அனுப்பினார் என்று நினைத்துக்கொண்டுவிடுவதில் தயக்கமில்லைதான். அதேசமயம் பக்தர்களின் உதட்டெரிச்சலையெல்லாம் கவனிக்குமளவு உம்மாச்சிக்கு நேரமிருக்குமா என்கிற சந்தேகமும் வருகிறது.\nநடத்துநர் வந்தார், என்னிடம் சில்லறையைப் பெற்றுக்கொண்டு பயணச்சீட்டைக் கொடுத்துவிட்டுச் சென்றுவிட்டார். அப்போதும் அந்த இரு இருக்கைகளுக்கு யாரும் வரவில்லை.\nநான் உதட்டெரிச்சலோடு அந்த பெட்ரோலியம் ஜெல்லி டப்பாவையே பார்த்துக்கொண்டிருந்தேன். இது எனக்குத்தானா எடுத்துக்கொண்டுவிடலாமா ஐந்து ரூபாய் டப்பாவைத் தேடி இன்னொருமுறை இங்கே வருவாரா நான் தொலைத்த ஐந்து ரூபாய் டப்பாக்கள்தான் எத்தனை எத்தனை நான் தொலைத்த ஐந்து ரூபாய் டப்பாக்கள்தான் எத்தனை எத்தனை ஒன்றையேனும் தேடியிருக்கிறேனா அவற்றில் ஒன்றுதான் சுற்றி எனக்கே வந்திருக்கிறது என்று நினைத்துக்கொண்டால் என்ன தவறு\nஆனால், யாருடைய உதட்டுப்பூச்சையோ நாம் பூசிக்கொள்வது சுகாதாரம்தானா\nபோக்குவரத்தில்லாத சாலைகளில் பேருந்து அதிவேகமாக விரைந்தது. எந்த நிறுத்தத்திலும் அதிகப்பேர் ஏறவில்லை. என்னெதிரில் யாரும் வந்து அமரவில்லை.\nநேரம் செல்லச்செல்ல, என்னுடைய உதட்டெரிச்சல் அதிகர��த்தது. சட்டென்று அந்த டப்பாவை எடுத்துப் பூசிக்கொண்டுவிடவேண்டும்போல் கைகள் பரபரத்தன. நாவால் உதடுகளை ஈரப்படுத்திச் சமாளிக்க முயன்றேன். எரிச்சல் இன்னும் கூடியது.\nநான் மறுபடி அந்த பெட்ரோலியம் ஜெல்லி டப்பாவைப் பார்த்தேன். வெளியிலிருந்து பார்க்கும்போது அதில் ஏதாவது இருக்கிறதா, இல்லையா என்பதே தெரியவில்லை. ஒருவேளை, இது காலி டப்பாவாக இருக்குமோ குப்பைத்தொட்டிக்குப்போகவேண்டிய ஒரு பொருளை எதிரில் வைத்துக்கொண்டு தத்துவ நியாயங்களைச் சிந்தித்துக்கொண்டிருக்கிறேனோ\nரயில் நிலையங்களில் ‘ஆளில்லாத பொருட்களைத் தொடவேண்டாம்’ என்று அறிவிப்பு வைத்திருப்பார்கள். அது பேருந்துகளுக்கும் பொருந்துமா இந்தச் சிறு டப்பாவுக்குள் வெடிகுண்டொன்றைப் பொருத்துவது சாத்தியமா\nயோசிக்க யோசிக்க எனக்கே என்மீது எரிச்சல் அதிகரித்தது. தேவைப்படும் பொருள் ஏதோ அதிசயத்தால் எதிரில் வந்து உட்கார்ந்திருக்கிறது, குறைந்தபட்சம் அதைத் திறந்துபார்த்தால் என்னவாம் நெடுஞ்சாலையில் கழிப்பறை தென்படாதபோது சாலையோரமாகச் சிறுநீர் கழிப்பதைப்போல்தானே இதுவும்\nஇந்த டப்பாவைத் தொலைத்த ஆள் இங்கேயே உட்கார்ந்திருக்கக்கூடாதோ, அல்லது, இதைத் தேடிக்கொண்டு இங்கே வரக்கூடாதோ\nஅப்படி யாராவது வந்தால், ‘இதையா தேடறீங்க’ என்று அவர்களிடம் எடுத்துத்தந்துவிட்டு ஒரு ‘நன்றி’யை வாங்கிக்கொள்ளலாம். பின்னர் அவர்களிடமே கொஞ்சம் கடன்வாங்கிப் பூசிக்கொள்ளலாம்.\nநான் சுற்றியிருந்தவர்களைப் பார்த்தேன். எல்லாரும் அவரவர் சிந்தனையில் இருந்தார்கள். சிலர் மொபைல் திரைகளில் மூழ்கியிருந்தார்கள். சிலர் பாட்டுக்கேட்டுக்கொண்டிருந்தார்கள். நடத்துநரும் ஓட்டுநரும் யாரைப்பற்றியோ கிசுகிசுவில் மும்முரம்.\nஎன்னுடைய நிறுத்தம் வரப்போகிறது. இன்னும் சில நிமிடங்கள்தான்.\nஜன்னல்வழியே எட்டிப்பார்த்தேன். சரியாக அந்நிறுத்தத்துக்குப்பின்னே ஒரு மருந்துக்கடை தெரிந்தது. உள்ளே ஆளிருக்கிறார்களா என்பதுதான் தெரியவில்லை.\nசட்டென்று எழுந்துகொண்டேன். பேருந்து வேகம் குறையும்போதே குதித்து இறங்கி அந்தக் கடையை நோக்கி விரைந்தேன்.\nஇவ்வலைப்பதிவில் வெளியான என்னுடைய பிற சிறுகதைகள் இங்கே\nசமீபத்தில் வெளியான என்னுடைய ‘கார்காலம்’ நாவல் இங்கே\nபெங்களூரு குளிரிலிருந்து என்ன��க் காப்பாற்றுவதும் இந்த நீல நிற டப்பாவில் இருக்கும் பெட்ரோலியம் ஜெல்லி தான். நிறைய வாங்கி வீட்டில் அங்கங்கே வைத்திருப்பேன்\nநீங்கள் எழுதியிருப்பதைப் படித்துவிட்டு எனக்கும் இதைப் போல (முடிவைச் சற்று மாற்றி) எழுத வேண்டும் என்று தோன்றுகிறது. முயற்சி செய்கிறேன்.\nஇங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்\nஎன் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)\nஎன். சொக்கன் இணையத் தளம்\nமின்னூல்களைப் பதிப்பித்தல்: எழுதுவோருக்கிருக்கும் வாய்ப்புகள்\n03. விக்கிபீடியா என்ன சொல்கிறது\n04. எனது நூல்களை வாங்க – இந்தியாவில் (Nhm.in)\n05. எனது நூல்களை வாங்க – அமெரிக்கா, மற்ற நாடுகளில் (Amazon.com)\n06. சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் எனது நூல்கள்\n02. கிழக்கு பதிப்பகம் ஆர்குட் குழுமம்\n06. ’மினிமேக்ஸ்’ பதிப்பகம்: ஓர் அறிமுகம்\n08. ச. ந. கண்ணன்\nநிதானமாக வாசிக்கலாம் (இணையத்தில் வெளியான எனது கதைகள் / கட்டுரைகள்)\nநான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:\nட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்\nதமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்\nசெவிநுகர் கம்பன் CD : சில விமர்சனங்கள்\nட்விட்டர் வெற்றிக்கதை : A TwitReview By @eestweets\nமகாத்மா காந்தி கொலை வழக்கு (Chennai Avenue Nov 2012)\nமகாத்மா காந்தி கொலை வழக்கு: விமர்சனம்\nஷேக்ஸ்பியர் : நாடகமல்ல உலகம் : Review By Uma Ganesh\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.ciuciu.at/barack-obama-quotes", "date_download": "2021-10-19T11:59:34Z", "digest": "sha1:ZSB5RQB6TF2G56CCKKIDP5FF4XWLRGWH", "length": 14724, "nlines": 66, "source_domain": "ta.ciuciu.at", "title": "பராக் ஒபாமா - சிலருக்காக காத்திருந்தால் மாற்றம் வராது ... - மேற்கோள்", "raw_content": "\nநீங்கள் விஷயங்களைப் பார்க்கும் விதத்தை மாற்றினால், நீங்கள் பார்க்கும் விஷயங்கள் மாறுகின்றன. வெய்ன் டையர் மாற்றம் பார்வை வழி நீங்கள் உலகில் பார்க்க விரும்பும் மாற்றமாக இருக்க வேண்டும். மகாத்மா காந்தி மாற்றம் உலகம் காண்க என்னால் மாற்ற முடியாத விஷயங்களை ஏற்றுக்கொள்வதற்கான அமைதியையும், என்னால் முடிந்ததை மாற்றுவதற்கான தைரியத்தையும், வித்தியாசத்தை அறிந்து கொள்ளும் ஞானத்தையும் கடவுள் எனக்கு வழங்குகிறார். Reinhold Niebuhr விவேகம் கடவுளை மாற்றுங்கள் நாம் இனி ஒரு சூழ்நிலையை மாற்��� முடியாதபோது - நம்மை மாற்றிக் கொள்ள சவால் விடுகிறோம். விக்டர் ஈ. பிராங்க்ல் மாற்ற நிலைமை நேரம் எப்போதும் விஷயங்களை மாற்றுகிறது என்று அவர்கள் எப்போதும் கூறுகிறார்கள், ஆனால் நீங்கள் உண்மையில் அவற்றை நீங்களே மாற்றிக் கொள்ள வேண்டும். ஆண்டி வார்ஹோல் நேரத்தை மாற்றும் நேரம் மாற்றத்திலிருந்து வெளியேற ஒரே வழி, அதில் மூழ்கி, அதனுடன் நகர்ந்து, நடனத்தில் சேருவதுதான். ஆலன் வாட்ஸ் வே நடனத்தை மாற்றுகிறோம் நாம் மாறவில்லை என்றால், நாங்கள் வளரவில்லை. நாம் வளரவில்லை என்றால், நாங்கள் உண்மையில் வாழவில்லை. கெயில் ஷீஹி சேஞ்ச் க்ரோ லிவிங் மாற்றத்திற்கான முதல் படி விழிப்புணர்வு. இரண்டாவது படி ஏற்றுக்கொள்வது. நதானியேல் பிராண்டன் படி விழிப்புணர்வை மாற்றுகிறோம் அதை ஏற்றுக்கொள்ளும் வரை எதையும் மாற்ற முடியாது. கண்டனம் விடுவிக்காது, அது ஒடுக்குகிறது. கார்ல் ஜங் மாற்றம் எதையும் ஏற்றுக்கொள் மாற்றத்தை நிராகரிப்பவர் சிதைவின் சிற்பி. முன்னேற்றத்தை நிராகரிக்கும் ஒரே மனித நிறுவனம் கல்லறை. ஹரோல்ட் வில்சன் முன்னேற்றத்தை மனிதனாக மாற்றலாம் சில நேரங்களில் இது உங்கள் வாழ்க்கையை என்றென்றும் மாற்றக்கூடிய மிகச்சிறிய முடிவுகள். கெரி ரஸ்ஸல் வாழ்க்கை மாற்றம் சில நேரங்களில் சிலருக்கு மாற்றம் பிடிக்காது, ஆனால் மாற்று பேரழிவு என்றால் நீங்கள் மாற்றத்தைத் தழுவ வேண்டும். எலோன் கஸ்தூரி மக்கள் பேரழிவை மாற்றவும் உங்களுக்கு ஏதாவது பிடிக்கவில்லை என்றால், அதை மாற்றவும். உங்களால் அதை மாற்ற முடியவில்லை என்றால், உங்கள் அணுகுமுறையை மாற்றவும். மாயா ஏஞ்சலோ அணுகுமுறை உங்கள் வாழ்க்கையை மாற்றுவது என்பது அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று தெரியாமல், தெரியாமல் இருப்பது, மாற்ற வேண்டியது, தருணத்தை எடுத்துக்கொள்வது மற்றும் அதைச் சிறப்பாகச் செய்வது. கில்டா ராட்னர் வாழ்க்கை மாற்றம் சிறந்தது\nஅன்டோயின் டி செயிண்ட்-எக்ஸ்புரி மேற்கோள்கள்\n'நடவடிக்கைக்கான நேரம் இப்போது. இது ... '- அன்டோயின் டி செயிண்ட்-எக்ஸ்புரி மேற்கோள்கள்\n'நான் என் நாய் மீது ஸ்பாட் ரிமூவரை ஊற்றினேன். இப்போது அவர் போய்விட்டார். ' - ஸ்டீவன் ரைட் மேற்கோள்கள்\nவின்சென்ட் வான் கோ மேற்கோள்கள்\n'இரவு இன்னும் உயிருடன் இருப்பதாக நான் அடிக்கடி நினைக்கிறேன் ...' - வின்சென்ட் வான் க�� மேற்கோள் காட்டுகிறார்\n'எங்கள் படி உண்மை மாறாது ...' - ஃபிளனரி ஓ'கானர் மேற்கோள் காட்டுகிறார்\n'இளமையாகவும் ஊமையாகவும் இருப்பதில் பெரிய விஷயம் என்னவென்றால் ...' - பீட்டர் ஹெல்லர் மேற்கோள் காட்டுகிறார்\n'பெண்ணியம் பெண்களை விட்டு வெளியேற ஊக்குவிக்கிறது ...' - பாட் ராபர்ட்சன் மேற்கோள் காட்டுகிறார்\n'மனிதனுக்கு மகிழ்ச்சி, அவர் மட்டும் மகிழ்ச்சியாக இருக்கிறார், அவரால் முடியும் ...' - ஜான் ட்ரைடன் மேற்கோள் காட்டுகிறார்\nஜான் டி. ராக்பெல்லர் மேற்கோள்கள்\n'செல்ல நல்லதை விட்டுவிட பயப்பட வேண்டாம் ...' - ஜான் டி. ராக்பெல்லர் மேற்கோள் காட்டுகிறார்\nமேரி கே ஆஷ் மேற்கோள்கள்\n'காற்றியக்கவியல் ரீதியாக, பம்பல் தேனீ இருக்கக்கூடாது ...' - மேரி கே ஆஷ் மேற்கோள் காட்டுகிறார்\n'நான் ஒரு குழந்தையைப் போல உணருவதை ஒருபோதும் நிறுத்தவில்லை என்று நினைக்கிறேன்.' - ஸ்டான் லீ மேற்கோள் காட்டுகிறார்\n'' அந்த பாடல் வேண்டும் 'நான் விரும்பும் அனைத்தையும் கொண்டுள்ளது ...' - பிரட் எல்ட்ரெட்ஜ் மேற்கோள் காட்டுகிறார்\n'சட்டத்திற்கு வெளியே வாழ, நீங்கள் நேர்மையாக இருக்க வேண்டும்.' - பாப் டிலான் மேற்கோள் காட்டுகிறார்\n'நான் ஒரு அழுக்கு மனதுடன் நம்பிக்கையற்ற காதல்.' - லீலி சோபீஸ்கி மேற்கோள்கள்\n'கண்ணை முட்டாளாக்குவது எளிது, ஆனால் அது கடினம் ...' - அல் பசினோ மேற்கோள் காட்டுகிறார்\n'நீங்கள் தட்டிக் கேட்கப்படுகிறீர்களா என்பது அல்ல, அது ...' - வின்ஸ் லோம்பார்டி மேற்கோள் காட்டுகிறார்\n'தெருவில் நீங்கள் கேட்கும் அனைத்தையும் நம்ப வேண்டாம்.' - எர்னி இஸ்லி மேற்கோள் காட்டுகிறார்\n'நான் சிறு வயதில் பணம் என்று நினைத்தேன் ...' - ஆஸ்கார் வைல்ட் மேற்கோள் காட்டுகிறார்\n'கடவுள் இறந்துவிட்டார். கடவுள் இறந்துவிட்டார். நாங்கள் ... '- ஃபிரெட்ரிக் நீட்சே மேற்கோள் காட்டுகிறார்\nஆர்தர் கோனன் டாய்ல் மேற்கோள்கள்\n'சாத்தியமற்றதை நீக்கிவிட்டால் ...' - ஆர்தர் கோனன் டாய்ல் மேற்கோள் காட்டுகிறார்\nஹாரி எமர்சன் ஃபோஸ்டிக் மேற்கோள்கள்\n'வெறுமனே எதையாவது ஓய்வு பெறாதீர்கள்; ...' - ஹாரி எமர்சன் ஃபோஸ்டிக் மேற்கோள் காட்டுகிறார்\n'நான் வார்ஹோல். நான் மிகவும் பயனுள்ள நம்பர் 1 ... '- கன்யே வெஸ்ட் மேற்கோள்கள்\n'நகைச்சுவையில் நிறைய உண்மை கூறப்படுகிறது.' - எமினெம் மேற்கோள்கள்\n'ஒரு நல்ல நாடகத்தை எழுதுவது கடினம், அது அதிகம் ...' - ஜாக் லெமன் மேற்கோள் காட்டுகிறார்\n'என் கண்ணாடி இல்லாமல் என்னால் சிந்திக்க முடியாது.' - விவியென் வெஸ்ட்வுட் மேற்கோள்கள்\n'காத்திருப்பவர்களுக்கு விஷயங்கள் வரக்கூடும், ஆனால் மட்டுமே ...' - தெரியாத மேற்கோள்கள்\nசில நேரங்களில் உங்கள் வாயை மூடிய மேற்கோள்களை வைத்திருப்பது நல்லது\nஉங்களுக்காக விஷயங்களைச் செய்வது பற்றிய மேற்கோள்கள்\nநான் எல்லா காலத்திலும் மிகப் பெரியவன்\nஒளி மிகவும் பிரகாசமாக பிரகாசிக்க வேண்டும் என்பதற்காக\nஉங்கள் நாட்டிற்கு நீங்கள் என்ன செய்ய முடியும் என்று jfk கேளுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2021-10-19T13:20:18Z", "digest": "sha1:3K2WYVGZALXPA3SG6XC4V7UOYHEATG6J", "length": 5066, "nlines": 38, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சூனிய அணி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(பூச்சிய அணி இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nகணிதத்தில், குறிப்பாக நேரியல் இயற்கணிதத்தில், சூனிய அணி அல்லது பூச்சிய அணி (zero matrix) என்பது சூனியத்தையே எல்லா உறுப்புகளாகக்கொண்ட ஒரு அணி. சூனிய அணிக்கு சில எடுத்துக்காட்டுகள்:\nm × n {\\displaystyle m\\times n} அளவில், ஒரு குறிப்பிட்ட வளையத்தில் உறுப்புகளைக்கொண்டாதாக ஒரு சூனிய அணிதான் இருக்கும். அதனால் சந்தர்ப்பத்தைப்பொருத்து தாய் வளையத்தைக் குறிப்பிடத் தேவையில்லாமல் சூனிய அணி என்று மட்டும் சொன்னால் போதும்.\nசூனிய அணியும் மற்றைய அணிகளைப்போல் ஒரு நேரியல் உருமாற்றத்தைக்குறி காட்டும். எல்லா திசையன்களையும் சூனியத்திசையனுக்கு இழுத்துச்செல்லும் உருமாற்றம் தான் அது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2019, 10:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akuranatoday.com/8260/", "date_download": "2021-10-19T12:45:03Z", "digest": "sha1:PDK5IHA2UDKHKPXOD6KL2WQIEXHGHMMQ", "length": 11383, "nlines": 76, "source_domain": "www.akuranatoday.com", "title": "வீரகேசரி, தினக்குரல், சுடர்ஒளி பத்திரிகைகளை போலியாக தயாரித்த நபர் சிக்கினார் - ஆரம்பகட்ட தகவல்கள் இதோ! - Akurana Today", "raw_content": "\nவீரகேசரி, தினக்குரல், சுடர்ஒளி பத்திரிகைகளை போலியாக தயாரித்த நபர் ��ிக்கினார் – ஆரம்பகட்ட தகவல்கள் இதோ\nதேசிய தமிழ் பத்திரிகைகளான வீரகேசரி, தினக் குரல் மற்றும் சுடர் ஒளி ஆகிய பத்திரிகைகளின் சில பிரதிகளை, போலியாக தயாரித்து, அதனை வெளிநாட்டில் அரசியல் தஞ்சம் கோருவதற்காக பயன்படுத்த திட்டமிட்ட நிலையில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் ( சி.ஐ.டி.) கைதுசெய்யப்பட்ட 31 வயதான பாலசுப்ரமணியம் செந்தூரன் என்பவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.\nநேற்றைய தினம் அவர் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட நிலையிலேயே அவர் இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.\nஇந் நிலையில், அவருடன் இந்த விவகாரம் தொடர்பில், தொடர்புகளைப் பேணியதாக கூறப்படும் ஜேர்மனியில் உள்ள ஒருவர் தொடர்பில் தற்போது சி.ஐ.டி. சிறப்பு விசரணைகளை நடாத்துவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஜாலிய சேனாரத்ன வீரகேசரிக்கு தெரிவித்தார்.\nகுறித்த ஜேர்மனியில் உள்ள நபரின் பின்னணி, அவருக்கும் பயங்கரவாத இயக்கங்களுக்கும் உள்ள தொடர்புகள், இவ்வாறான நடவடிக்கைகளுக்கு உதவி ஒத்தாசை வழங்குவதன் பின்னணி தொடர்பில் விரிவான விசாரணைகள் நடாத்தப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.\nஇந் நிலையில் இந்த விவகாரம் குறித்த சிறப்பு விசாரணைகளை சி.ஐ.டி.யின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நுவன் வெதிசிங்கவின் கட்டுப்பாட்டில், அதன் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் பிரசன்ன அல்விஸின் ஆலோசனைக்கு அமைய சிறப்பு குழுவொன்று முன்னெடுத்துள்ளது.\nகடந்த 23 ஆம் திகதி வியாழக்கிழமை, கிரிபத்கொட நகரில் , போலியாக தயாரிக்கப்பட்ட வீரகேசரி, தினக்குரல் மற்றும் சுடர் ஒளி பத்திரிகைகள், சில போலி இறப்பர் முத்திரைகளுடன் , இலக்கம் 227/16, முகத்துவாரம் வீதி கொழும்பு 15 ஐ சேர்ந்த 31 வயதான பாலசுப்ரமணியம் செந்தூரன் என்பவரை சி.ஐ.டி. கைது செய்திருந்தது.\nகுறித்த நபர் தேசிய தமிழ் பத்திரிகை ஒன்றில் கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை பக்க வடிவமைப்பாளராக செயற்பட்ட, கிராபிக் டிசைனிங் பயிற்சி நெறியைப் பூர்த்தி செய்துள்ள ஒருவராவார் என பொலிஸார் கூறினர்.\n2017 ஆம் ஆண்டு பத்திரிகை தொழிலில் இருந்து விலகியுள்ள குறித்த நபர், ருமேனியா செல்ல முயற்சித்துள்ளதுடன், கொட்டிகாவத்தை பகுதியில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனம் ஒன்றினூடாக அதற்கான முயற���சிகளை முன்னெடுத்துள்ளார்.\nஇது தொடர்பில் கடந்த மே 28 ஆம் திகதி நேர்முகத் தேர்வுக்கும் முகம்கொடுத்துள்ள அவர், அங்கு செல்ல 2 இலட்சத்து 70 ஆயிரம் ரூபா பணம் கோரப்பட்டுள்ளது.\nவெளிநாடு செல்ல குறித்த முகவர் நிலையத்துக்கு கோரப்பட்ட பணத் தொகையில் 80 ஆயிரம் ரூபாவை சந்தேக நபர் வழங்கியுள்ளார்.\nஇந் நிலையிலேயே ருமேனியா சென்று அங்கிருந்து ஜேர்மனி அல்லது பிரான்ஸில் அரசியல் தஞ்ஞசம் கோர, தான் இலங்கையில் பத்திரிகை துறையில் இருந்ததாகவும், அப்போது எழுதிய எழுத்துக்களால் தனக்கு உயிர் அச்சுறுத்தல் உள்ளதாகவும், இந் நாட்டில் தனக்கு மத, அரசியல் ரீதியில் அநியாயம் நடந்துள்ளதாகவும் காட்டுவதற்கு போலியாக தேசிய தமிழ் பத்திரிகைகளை தயாரித்து, அதனை கிரிபத்கொடை பகுதி தனியார் அச்சகமொன்றில் அச்சிட்டுள்ளார்.\nஇந் நிலையில் இது தொடர்பில் சி.ஐ.டி. முன்னெடுத்த விசாரணைகளில், குறித்த பத்திரிகைகளின் ஆசிரியர்களிடம் விஷேட வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அதில் சி.ஐ.டி. கைப்பற்றிய போலி தமிழ் செய்திப் பத்திரிகைகள், உண்மையில் குறித்த தேசிய பத்திரிகைகளை வெளியிடும் நிறுவனங்களால் அச்சிடப்பட்டவை அல்ல என தெரியவந்ததாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஜாலிய சேனாரத்ன வீரகேசரிக்கு தெரிவித்தார்.\nஇந் நிலையில், 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாத தடை சட்டத்தின் 6(1) ஆம் பிரிவின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்ட, சந்தேக நபரிடமிருந்து மேலும் சில விடயங்களை சி.ஐ.டி. வெளிப்படுத்திக்கொண்டுள்ளது.\nஇதன் பிரகாரமே ஜேர்மனியில் உள்ள நபர் ஒருவர் தொடர்பிலான வலையமைப்பு குறித்து வெளிப்படுத்தப்பட்டுள்ளதுடன் அதுசார்ந்த மேலதிக விசாரணைகள் தற்போது இடம்பெறுகின்றன.\nஇந் நிலையிலேயே நேற்று சந்தேக நபர், நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.\nVIAவீரகேசரி பத்திரிகை ( எம்.எப்.எம்.பஸீர்)\nPrevious articleதரம் 11 , 12 , 13 மாணவர்களுக்கு நாளை பாடசாலைகள் ஆரம்பம்: கல்வி அமைச்சு\nNext articleNight Club மையப்படுத்தி சட்டவிரோத நடவடிக்கை – வெளியான அதிர்ச்சித் தகவல்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலை ஆட்சியை கைப்பற்ற அரசு பயன்படுத்தியது\nஉலமா சபை எமது கேள்விகளுக்கு பதில் தரவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arisenshine.in/tag/%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-10-19T11:11:26Z", "digest": "sha1:HD7EJG6ZWZ3FD2H2ECHV337FHKN6ZNXU", "length": 6164, "nlines": 80, "source_domain": "www.arisenshine.in", "title": "வசனம் – Arise n shine", "raw_content": "\nஎந்த வயதில் தேவனுக்கு ஊழியம் செய்யலாம்\n1 தீமோத்தேயு:2.5 – தினத்தியானம்\nஇயேசு-லேகியோன் சந்திப்பு – பாகம் 7\nதேவனிடம் சமரசம் செய்ய விரும்புகிறோமா\nஇயேசு-லேகியோன் சந்திப்பு – பாகம் 6\nகுடும்ப நபர்களுக்காக எப்படி ஜெபிக்கிறோம்\nநீங்கள் வாலாகாமல் தலையாக மாற வேண்டுமா\nபைபிளில் எண்ணற்ற வசனங்களை, தேவனின் வாக்குறுதிகள் அல்லது வாக்குத்தத்தங்களாக எடுத்து கொள்கிறோம். அதுவும் புத்தாண்டு கூட்டங்களில், இது போன்ற வசனங்களுக்கு தனி மவுசு உண்டு. இந்நிலையில், நாம் ஆசையாக கூறும் பல வாக்குத்தத்தங்கள், நம் வாழ்க்கையில் ஆசீர்வாதத்தையும், செழிப்பையும் உண்மையில் கொண்டு வருகிறதா என்று கேட்டால், பலரும் ‘இல்லை’ என்று தான் கூறுகிறார்கள்.\n1 ராஜாக்கள்:19.9 – தினத்தியானம்\nவேத வசனத்தை கூறி ஜெபித்தால் கிடைக்கும் ஆசீர்வாதம்\nதவறாக கூறும் வேத வசனங்கள்\nஎந்த வயதில் தேவனுக்கு ஊழியம் செய்யலாம்\n1 தீமோத்தேயு:2.5 – தினத்தியானம்\nஇயேசு-லேகியோன் சந்திப்பு – பாகம் 7\nதேவனாகிய கர்த்தர் தாம் மனுஷனில் எடுத்த விலா எலும்பை மனுஷியாக உருவாக்கி, அவளை மனுஷனிடத்தில் கொண்டு வந்தார். ஆதியாகமம்:2.22\nஎந்த வயதில் தேவனுக்கு ஊழியம் செய்யலாம்\nதேவனுக்கு ஊழியம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இரட்சிக்கப்பட்ட எல்லாருக்கும் இருக்கிறது. ஆனால் அதன் பின்னணியில் எந்த வயதில் அவருக்கு ஊழியம் செய்யலாம்\n1 தீமோத்தேயு:2.5 – தினத்தியானம்\nதேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே. 1 தீமோத்தேயு:2.5\nஎந்த வயதில் தேவனுக்கு ஊழியம் செய்யலாம்\n1 தீமோத்தேயு:2.5 – தினத்தியானம்\nஇயேசு-லேகியோன் சந்திப்பு – பாகம் 7\nதேவனிடம் சமரசம் செய்ய விரும்புகிறோமா\nஇயேசு-லேகியோன் சந்திப்பு – பாகம் 6\nஎந்த வயதில் தேவனுக்கு ஊழியம் செய்யலாம்\n1 தீமோத்தேயு:2.5 – தினத்தியானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2806988", "date_download": "2021-10-19T13:01:45Z", "digest": "sha1:XFJQ7X7YS6SRZKP4RF4YRBC2C2REZUXJ", "length": 17753, "nlines": 254, "source_domain": "www.dinamalar.com", "title": "பெரியாறு நீர்திறப்பு குறைப்பு | தேனி செய்திகள் | Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் தேனி மாவட்டம் பொது செய்த��\nஇது உங்கள் இடம்: நினைவுக்கு வரும் எம்.ஜி.ஆரின் பேச்சு\nதுணைத் தலைவர் பதவிக்கு பணம் ரூ.1 லட்சத்தை வீசியெறிந்த பெண் அக்டோபர் 19,2021\nஇரு விஷயங்கள் குறித்து பிரதமர் மோடி பேசவே மாட்டார்: ஓவைசி அக்டோபர் 19,2021\nபா.ஜ., சார்பில் போட்டியிட்ட 381 பேர் வெற்றி: அண்ணாமலை அக்டோபர் 19,2021\nமொழி பிரச்னையை கிளப்பிய சொமேட்டோ: எதிர்ப்புக்குப் பின் பணிந்தது அக்டோபர் 19,2021\nதேக்கடி:பெரியாறு அணை நீர்திறப்பு 900 கனஅடியாக குறைக்கப்பட்டது.நீர்ப்பிடிப்பில் 2 வாரம் தொடர்ந்து மழை பெய்ததால் அணை நீர்மட்டம் உயர்ந்து வந்தது.\nதமிழக குடிநீர், சாகுபடிக்காக வினாடிக்கு 1200 கனஅடி நீர் திறந்து விடப்பட்டது. இதனால் அணை நீர்மட்டம் 142 அடியை எட்டுவதில் சிக்கல் ஏற்படும் என தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் குற்றம்சாட்டினர். நீர்திறப்பை குறைக்க வலியுறுத்தினர்.\nஇந்நிலையில் நேற்று காலை 8:30 மணி நிலவரப்படி நீர்திறப்பு 900 கனஅடியாக குறைக்கப்பட்டது. அணைக்கு வினாடிக்கு 1344 கனஅடி நீர் வந்தது. அணை நீர்மட்டம் 130.10 அடியாக (மொத்த உயரம் 152 அடி) இருந்தது. நீர் இருப்பு 4720 மில்லியன் கன அடியாகும். நீர்திறப்பு குறைப்பால் லோயர்கேம்ப் பெரியாறு நீர்மின்நிலையத்தில் மின் உற்பத்தி 108ல் இருந்து 81 மெகாவாட்டாக குறைந்தது. நேற்று காலை முதல் நீர்ப்பிடிப்பில் தொடர்ந்து மழை பெய்தது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் தேனி மாவட்ட செய்திகள் :\n1.கம்பம் பள்ளத்தாக்கில் மாடுகள் காணை நோயால் பாதிப்பு இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தாததால் சிக்கல்\n1. கறவைமாடு வளர்ப்பு பயிற்சி\n2. முல்லைப்பெரியாற்றில் குளிக்க தடை\n3. அணைப்பிள்ளையார் அணையில் நீர் வரத்து : மக்கள் மகிழ்ச்சி\n5. 7 பேருக்கு நலத்திட்ட உதவிகள்\n1. சேதமடைந்த ரேஷன் கடை மேற்கூரையால் ஆபத்து; குடிநீர் பற்றாக்குறையால் தவிக்கும் மக்கள்\n2. கண்காணிப்பு கேமராக்கள் பழுது\n2. போலீசாரை கண்டித்து ஆர்ப்பாட்டம்\n3. கள்ளக்காதலை வெளியே கூறிய நண்பர் கொலை: 6 பேர் கைது\n4. நகராட்சி துப்புரவு பணியாளர் தற்கொலை: மேஸ்திரி கைது\n» தேனி மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வக��யில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%9A%E0%AF%8B._(%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D)", "date_download": "2021-10-19T12:15:40Z", "digest": "sha1:ING7ZLLNERGS2RWYQHXTYF5O6XGPM4SN", "length": 3236, "nlines": 31, "source_domain": "www.noolaham.org", "title": "\"செல்வநாயகம், சோ. (நினைவுமலர்)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - நூலகம்", "raw_content": "\n\"செல்வநாயகம், சோ. (நினைவுமலர்)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← செல்வநாயகம், சோ. (நினைவுமலர்)\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு நூலகம் நூலகம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு சேகரம் சேகரம் பேச்சு வெளியிணைப்பு வெளியிணைப்பு பேச்சு தமிழம் தமிழம் பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு நூலகத்திட்டம் நூலகத்திட்டம் பேச்சு வகுப்பறை வகுப்பறை பேச்சு தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nசெல்வநாயகம், சோ. (நினைவுமலர்) பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nநூலகம்:758 ‎ (← இணைப்புக்கள்)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/agriculture/central-government-schemes-for-cows", "date_download": "2021-10-19T13:11:49Z", "digest": "sha1:ODYVIPF2XQIO26DPE4P3AVO3NY4ONLZA", "length": 23527, "nlines": 213, "source_domain": "www.vikatan.com", "title": "அடையாள அட்டை முதல் இன்ஷூரன்ஸ் வரை... கால்நடைகளுக்கான திட்டங்கள்! | central government schemes for Cows - Vikatan", "raw_content": "\n`பயிரை விளைவித்தால் மட்டுமே வாழ முடியும்'-வருசநாட்டில் வனத்துறையினரைச் சிறைப்பிடித்த வன விவசாயிகள்\nவிவசாயிகள் மீது காரை ஏற்றி கொலை... நடுநடுங்க வைக்கும் உத்தரப் பிரதேசம்\nமகசூலைக் கூட்டும் 'மண்புழு உரநீர்' உற்பத்தி\n’ஊழல்பேய்’களின் சவால்... ஷேர் செய்வோம் - முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் காதுகளில் ஏறும் வரை\nலக்கிம்பூர் விவசாயிகளின் கொலைக்கு நீடிக்கும் அமைதி; இதுதான் உங்கள் பதிலா மோடி\n`நெல் கொள்முதல் ஊழல்கள்; முடிந்தால் தடுத்துப் பாருங்கள்' - மு.க. ஸ்டாலினுக்கு `ஊழல்பேய்'களின் சவால்\n‘’1 லட்சம் விவசாய மின்இணைப்புகள்... வரலாற்றுச் சாதனையே’’ முதல்��ரை நேரில் பாராட்டிய விவசாயிகள்\nவிவசாயத் தியாகிகளுக்கு மணிமண்டபம் வேண்டும்கோரிக்கை வைக்கும் விவசாய அமைப்புகள்\n`பயிரை விளைவித்தால் மட்டுமே வாழ முடியும்'-வருசநாட்டில் வனத்துறையினரைச் சிறைப்பிடித்த வன விவசாயிகள்\nவிவசாயிகள் மீது காரை ஏற்றி கொலை... நடுநடுங்க வைக்கும் உத்தரப் பிரதேசம்\nமகசூலைக் கூட்டும் 'மண்புழு உரநீர்' உற்பத்தி\n’ஊழல்பேய்’களின் சவால்... ஷேர் செய்வோம் - முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் காதுகளில் ஏறும் வரை\nலக்கிம்பூர் விவசாயிகளின் கொலைக்கு நீடிக்கும் அமைதி; இதுதான் உங்கள் பதிலா மோடி\n`நெல் கொள்முதல் ஊழல்கள்; முடிந்தால் தடுத்துப் பாருங்கள்' - மு.க. ஸ்டாலினுக்கு `ஊழல்பேய்'களின் சவால்\n‘’1 லட்சம் விவசாய மின்இணைப்புகள்... வரலாற்றுச் சாதனையே’’ முதல்வரை நேரில் பாராட்டிய விவசாயிகள்\nவிவசாயத் தியாகிகளுக்கு மணிமண்டபம் வேண்டும்கோரிக்கை வைக்கும் விவசாய அமைப்புகள்\nஅடையாள அட்டை முதல் இன்ஷூரன்ஸ் வரை... கால்நடைகளுக்கான திட்டங்கள்\nஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்\nகடந்த ஐந்தாண்டுகளில் கால்நடைப் பராமரிப்புகளுக்கு பல நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டு அவை செயல்வடிவத்தை நோக்கி நகர்ந்துள்ளன. அவை என்னென்ன என்று பார்ப்போம்.\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்\nபிரதமர் மோடிக்கு உத்தரப்பிரதேசம் கொஞ்சம் உகந்த மாநிலம். கடந்த இரண்டு மக்களவைத் தேர்தலுக்கான பிரசாரத்தையும்கூட உத்தரப்பிரதேசத்திலிருந்துதான் தொடங்கினார் மோடி. இந்நிலையில் கடந்த 11-ம் தேதி மதுராவில் நடந்து முடிந்த நிகழ்ச்சியில் 12 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் தேசிய கால்நடை நோய்க் கட்டுப்பாட்டுத் திட்டத்தைத் தொடங்கி வைத்துள்ளார் மோடி.\nகால்நடைகளுக்கு அதிகம் ஏற்படக்கூடிய நோய்களான கால்பாதங்கள், வாய்களில் ஏற்படும் கோமாரி நோய் மற்றும் அதிகரித்து வரும் கருச்சிதைவு ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதற்காக அறிவிக்கப்பட்டுள்ளது இத்திட்டம். இதன் மூலம் 2024-ம் ஆண்டுக்குள் இந்தியா முழுவதுமுள்ள 50 கோடி கால்நடைகளுக்குத் தடுப்பூசி போடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் கால்நடைகளுக்கு வரக்கூடிய நோய்கள் 2025-க்குள் கட்டுப்படு���்தப்படும் என்றும் 2030-ம் ஆண்டுக்குள் முற்றிலுமாக ஒழிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக மத்திய அரசு 12,652 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கியுள்ளது. கால்நடைகளின் பாதுகாப்புக்கு ஒதுக்கப்பட்டுள்ள இந்த பிரமாண்ட நிதிதான் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆனால் இதேபோல் கடந்த ஐந்தாண்டுகளில் கால்நடைப் பராமரிப்புகளுக்கு பல நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டு அவை செயல்வடிவத்தை நோக்கி நகர்ந்துள்ளன. அவை என்னென்ன என்று பார்ப்போம்.\nமோடி ‘1.0’ ஆட்சிக்காலத்தில், அரியணை ஏறிய ஆறு மாதத்தில் அறிவிக்கப்பட்ட திட்டம் ‘ராஷ்ட்ரிய கோகுல்’ திட்டம். அறிவியல் பூர்வமான முறையில் உள்நாட்டுக் கால்நடை இனங்களைப் பாதுகாத்து அவற்றை மேம்படுத்த வேண்டும் என்பதே இந்தத் திட்டத்தின் நோக்கம் என அறிவித்தது மத்திய அரசு. இந்தியாவின் பால் உற்பத்தி அதிகரித்தல் மற்றும் இயற்கை சேவைகளுக்காக உயர் மரபியற்பண்புடைய கால்நடைகளை உருவாக்குதல் போன்றவை இந்தத் திட்டத்தின் அடிப்படைக் குறிக்கோள்கள் என அறிவிக்கப்பட்டன.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.\nஇதே திட்டத்தின் மூலம், சிறந்த உழவர்களுக்கு ‘கோபால் ரத்னா’ விருது, கால்நடை பாதுகாப்பில் ஈடுபடும் சங்கங்களுக்கு ‘காமதேனு’ விருது ஆகியவற்றை வழங்கிச் சிறப்பித்து வருகின்றனர். ராஷ்ட்ரிய கோகுல் திட்டத்திற்காகக் கடந்த 2014-2015 நிதியாண்டிலிருந்து 2018-2019 நிதியாண்டு வரை 1,286.17 கோடி நிதியானது ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் ஒதுக்கீடு செய்யப்பட்டதைவிட அதிகமாக 1,297.61 கோடி ரூபாய் நிதி செலவு செய்யப்பட்டுள்ளது என்று கால்நடைப் பராமரிப்புத் துறையின் ஆண்டறிக்கை அறிவிக்கிறது.\nஇந்தியா முழுவதும் 95 மில்லியன் பசுக்கள் முறையாகக் கவனிக்கப்படவில்லை. கால்நடைகள் குறித்த முறையான தகவல்கள் இல்லை என்பதே இதற்கு காரணமாகப் பார்க்கப்பட்டது. தகவல்கள் முறையாக இருக்கும் பட்சத்தில், நோயால் பாதிக்கப்பட்ட பசுக்களை நல்ல உடல் நலத்துடன் இருக்கும் கால்நடைகளிடமிருந்து பிரித்து வைத்தால் நோய்கள் பரவுதை கட்டுப்படுத்த முடிவும் என்பதற்காகப் பசு சஞ்சீவனி என்ற திட்டத்தை அறிவித்தத�� மத்திய அரசு.\nஇந்தப் பசு சஞ்சீவனி திட்டம் மூலம் நடைமுறைப்படுத்தப்பட்ட இரண்டு செயல்கள் கவனம் ஈர்த்தன. 1) கால்நடைகளுக்கான அடையாள அட்டை 2) கால் நடைகளுக்கான ஹெல்த் கார்டு.\nகால்நடைகளுக்கு ஆதார் அட்டை வழங்கும் முறைமை என்பது கிட்டத்தட்ட ஆதார் கார்டு போன்றதொரு முறைதான். ஒவ்வொரு கால்நடைகளுக்கும் 12 இலக்க பிரத்யேக அடையாள எண்களானது (Animal Unique Identification Number (AUID) ) வழங்கப்படும். இந்த அடையாள எண்ணைப் பயன்படுத்தி கால்நடைகளின் உடல்நலன் குறித்த தகவல்கள் அனைத்தும் இணையத்தின் உதவியுடன் Information Network for Animal Productivity and Health (INAPH) எனும் தளத்தில் பதிவு செய்யப்படும். இந்தத் தகவல்களின் அடிப்படையில் நோய் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்குத் தேவையான மருத்துவ உதவிகளைச் செய்துவிட முடியும் என்கிறது அரசு. இந்தத் திட்டத்திற்காக இதுவரை 148 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இதுவரை 20 மில்லியன் மாடுகளுக்கு பிரத்யேக அடையாள எண் வழங்கப்பட்டு அந்தக் கால்நடைகள் குறித்தான தகவல்கள் இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன. அதேபோல் கால்நடைகளை பரிசோதனை செய்து அந்தக் கால்நடைகளுக்கு எடுக்கப்பட்ட மருத்துவ நடவடிக்கைகள் குறித்தான தகவல்கள் அடங்கிய ஹெல்த் கார்டுகளையும் வழங்கி வருகிறது. இதுவரை 80 மில்லியன் கால்நடைகளுக்கான ஹெல்த் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன.\nபசு பீம யோஜன திட்டம்\nஅடையாள அட்டை, ஹெல்த் கார்டு இவை ஒருபுறம் இருக்க, கால்நடைகளுக்கு இன்ஷூரன்ஸ் வழங்கும் திட்டமான பசு பீம யோஜனா திட்டத்தை 2016-ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது பி.ஜே.பி அரசு.\nஇந்தத் திட்டத்தின் மூலம், கால்நடைகளின் உரிமையாளர்களிடமிருந்து பசு மாடுகளுக்கான பிரீமியம் தொகை 100 ரூபாயும், ஆடு மற்றும் பன்றி போன்ற உயிரினங்களுக்கான பிரீமியம் தொகை 25 ரூபாயும் வசூலிக்கப்படுகின்றன. இயற்கை சீற்றம், தீவிரவாதத் தாக்குதல் (முக்கியமாக, காஷ்மீர் போன்ற பகுதிவாழ் மக்களுக்காக) போன்றவற்றால் இறக்கும் கால்நடைகளுக்கான நஷ்ட ஈடு கிடைக்கும் என்பது இத்திட்டத்தின் பயன்.\nராஷ்ட்ரிய காமதேனு அயோக் என்பது பசுப் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்காகக் கடந்த பிப்ரவரி மாதம் அமைக்கப்பட்ட ஆணையமாகும். கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற 2019-2020-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கலின் போது 500 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கியது மத்திய அரசு. இதன் தலைவராக முன்னாள் மத்திய அமைச்சர் வல்லபபாய் காத்ரியா செயலாற்றி வருகிறார்.\nகடந்த 9-ம் தேதி அகமதாபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராஷ்ட்ரிய காமதேனு அயோக்-கின் தலைவர் வல்லபபாய் காத்ரியா, “இந்திய இளைஞர்கள் பலரும் கால்நடை சார்ந்த தொழிலுக்குள் வரவேண்டும். அதேவேளையில் பால் பொருள் சார்ந்த தொழில்களில் மட்டுமல்லாமல், மருத்துவம் மற்றும் விவசாயத்துக்குப் பயன்படக்கூடிய பொருள்களான மாட்டின் கோமியம் சார்ந்த தொழில்களிலும் ஆர்வம் காட்ட வேண்டும். இதில் ஆர்வமுள்ள தொழில் முனைவோருக்கு, தொழில் தொடங்க தேவைப்படும் நிதியில் 60 சதவிகிதத்தை அரசு ஏற்கும்” என்றார்.\nஇவை போக சில லட்சங்களில் தொடங்கி பல நூறுகோடிகளில் செயல்வடிவம் பெறும் பல திட்டங்களை கால்நடைத் துறை கைவசம் வைத்திருக்கிறது\nதெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism\nஇதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/literature/animals/152900-belgium-pigeon-auctioned-for-97-crores", "date_download": "2021-10-19T13:08:51Z", "digest": "sha1:2MT3TCKE347ECWRD7S7PIY2N3EYQPZ2L", "length": 13258, "nlines": 193, "source_domain": "www.vikatan.com", "title": "உலக வரலாற்றில் 9.7 கோடிக்கு ஏலம் போன பெல்ஜியம் புறா! | belgium pigeon Auctioned for 9.7 crores - Vikatan", "raw_content": "\nபோட்டியில் சிங்கம், புலி, யானை- காட்டுக்கு முயல் ராஜாவான கதை- காட்டுக்கு முயல் ராஜாவான கதை\n``ஒரு வருஷம்கூட சாப்டாம இருப்பேன்... ஆனா கொட்டுனா செத்துருவ\" - சர்வைவல் கதைகளில் இது வேறமாதிரி\nபாகன்களின் கட்டளைகளுக்கு மறுப்பு - சின்னதம்பி யானைக்கு மீண்டும் கூண்டு\nபணம் குவிக்கும் பண்ணைத்தொழில்கள் - 9 - கலக்கல் லாபம் தரும் கலப்பின மீன் வளர்ப்பு\nமுளைக்காத விதைநெல்... விரக்தியில் விவசாயிகள்\n`மனுஷன்தான் எங்களுக்கு முதல் எதிரி' மலைப்பாம்புகளின் சர்வைவல் கதை\n`தந்தம் இல்லையா... அப்போ இதை டிமாண்ட் ஆக்கு' எறும்புத்தின்னியின் கதைமுடித்த கடத்தல்காரர்கள்\nஏற்காடு கோடைவிழாவில், சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்த நாய் கண்காட்சி\n`பசிக்காக செங்குத்துப் பாறைகளில் பயணம்’ - நீலகிரியில் யானைகளின் அவலநிலை\n`காலம் முழுதும் காரணமே இல்லாமல் ஓடணும்' காட்டுப்பன்றிகளின் சர்வைவல் கதை\nபோட்டியில் சிங்கம், புலி, யானை- காட்டுக்கு முயல��� ராஜாவான கதை- காட்டுக்கு முயல் ராஜாவான கதை\n``ஒரு வருஷம்கூட சாப்டாம இருப்பேன்... ஆனா கொட்டுனா செத்துருவ\" - சர்வைவல் கதைகளில் இது வேறமாதிரி\nபாகன்களின் கட்டளைகளுக்கு மறுப்பு - சின்னதம்பி யானைக்கு மீண்டும் கூண்டு\nபணம் குவிக்கும் பண்ணைத்தொழில்கள் - 9 - கலக்கல் லாபம் தரும் கலப்பின மீன் வளர்ப்பு\nமுளைக்காத விதைநெல்... விரக்தியில் விவசாயிகள்\n`மனுஷன்தான் எங்களுக்கு முதல் எதிரி' மலைப்பாம்புகளின் சர்வைவல் கதை\n`தந்தம் இல்லையா... அப்போ இதை டிமாண்ட் ஆக்கு' எறும்புத்தின்னியின் கதைமுடித்த கடத்தல்காரர்கள்\nஏற்காடு கோடைவிழாவில், சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்த நாய் கண்காட்சி\n`பசிக்காக செங்குத்துப் பாறைகளில் பயணம்’ - நீலகிரியில் யானைகளின் அவலநிலை\n`காலம் முழுதும் காரணமே இல்லாமல் ஓடணும்' காட்டுப்பன்றிகளின் சர்வைவல் கதை\nஉலக வரலாற்றில் 9.7 கோடிக்கு ஏலம் போன பெல்ஜியம் புறா\nஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்\nஉலக வரலாற்றில் 9.7 கோடிக்கு ஏலம் போன பெல்ஜியம் புறா\nஉலக வரலாற்றில் 9.7 கோடிக்கு ஏலம் போன பெல்ஜியம் புறா\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்\nபுறா பந்தயத்தில் சம்பியன் பட்டம் வென்ற பெல்ஜியம் புறா, வரலாறு காணாத வகையில் 1.25 மில்லியன் யுரோவுக்கு (இந்திய மதிப்பில் 9.7 கோடி ரூபாய்) ஏலம் விடப்பட்டுள்ளது. பிபா எனும் இணைய தளம், அர்மாண்டோ எனும் புறாவை ஏலம் விட்டதில் இந்தத் தொகைக்கு ஏலம் போயிருக்கிறது.\nலூயிஸ் ஹாமில்டன் என்பவர் பிரிட்டனைச் சேர்ந்த பிரபல கார் பந்தய வீரர். ஐந்துமுறை உலக சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறார். அதனால், அதிக தூரம் கடந்த சிறந்த புறாவாகக் கருதப்படும் அர்மாண்டோ புறாவானது, `புறாக்களின் லூயிஸ் ஹாமில்டன்' என அழைக்கப்படுகிறது. இதற்கு முன்னர் ஒரு புறா அதிகபட்சமாக 3,76,000 யூரோவிற்கு விற்பனையாகி இருந்ததே அதிகபட்ச சாதனையாக இருந்தது. இந்தப் புறாவுக்கு வயது ஐந்து. இப்போது ஓய்வுக்காலத்தில் இருக்கிறது. இதை ஏலம் விட்ட நிறுவனத்திற்கு இது உண்மையான நிகழ்வுதானா என்று சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. இப்படியொரு விலைக்கு புறா விலை போனது என்பதை அவர்கள் கனவில்கூட நினைத்துப் பார்க்கவில்லை. அதிகபட்சமாக 4 முதல் 5 லட்ச யூரோவிற்கு விலைபோகும் என நினைத்திருந்தனர். ஏலத்தில் விட்ட ஒரு மணிநேரத்திலேயே சீனர்கள், 5.32 லட்சம் யூரோவிலிருந்து, 1.25 மில்லியன் யூரோவிற்கு அதிகமாக்கி விட்டனர்.\nஅர்மாண்டோ எனும் புறா வழக்கமான பந்தயப் புறா கிடையாது. தான் பங்கேற்ற கடைசி மூன்று போட்டிகளிலும் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்திருக்கிறது. இதற்கு முன்னர் மூன்று முறை சாம்பியன் பட்டத்தை எந்தப் புறாவும் வென்றது இல்லை. அதனால் புறா ஆர்வலர்களிடையே இது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.\nதெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism\nகடந்த 7 ஆண்டுகளாக பசுமை விகடன் சார்பாக பல்வேறு மாவட்டங்களில் விவசாயிகளைச் சந்தித்து கட்டுரைகளை எழுதியிருக்கிறேன். முன்னோடி விவசாயிகளின் தொடர்பு காரணமாக விவசாயம் சார்ந்த அனுபவ அறிவு மேம்பட்டுக்கொண்டே இருக்கிறது. தற்போது பசுமை விகடனில் நிருபராக பணியாற்றுகிறேன். Channel Manager | Agriculture Reporting |Social media enthusiast\nஇதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://neervai.com/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-16/", "date_download": "2021-10-19T13:02:00Z", "digest": "sha1:C7NPXNLYVUQ4QTAQQK2IAFWRNMAKIA2Q", "length": 10155, "nlines": 83, "source_domain": "neervai.com", "title": "நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் புதிய நிர்வாக சபை – Neervai Inayam", "raw_content": "\nநீர்வேலி அத்தியார் இந்துக் கல்லுரி\nநீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் புதிய நிர்வாக சபை\n09.06.2019 நடைபெற்ற நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் பொதுக்கூட்டத்தின் போது தெரிவு செய்யப்பட்ட புதிய நிர்வாக சபைக்கு எமது வாழ்த்துக்கள்\nஅத்தியார் இந்துவின் இல்ல மெய்வல்லுநர் போட்டி பதிவுகள்\nஅத்தியார் இந்துக் கல்லூரியின் இல்ல மெய்வல்லுநர் போட்டி\nஅத்தியார் இந்துவின் மரதன் ஓட்டப் போட்டி\nPrevious Article நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் வருடாந்த பொதுக்கூட்டம்\nNext Article நீர்வேலி செல்லக்கதிர்காமப்பெருமானின் மஹோற்சவம்\nOne Comment on “நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் புதிய நிர்வாக சபை”\nவலிகாமம் கிழக்குப் பகுதியில் பல பாக���்களிலுமிருந்து பாய்ந்து வருகின்ற மழை நீரைத் தன்னுள்ளடக்கி அதனைத் தனக்கு நீர் நிலையாலான வேலியாக்கி தன் கிழக் கெல்லையாக அமைத்துக் கொண்டதால் ‘நீர்வேலி’ என்னும் பெயரைக் கொண்டதே இந்த நீர்வேலிக் கிராமம்.\nதுறை சார்ந்த செய்திகள் Select Category Foreign Assosiations (28) அத்தியார் இந்துக் கல்லூரி (44) அபிவிருத்தி (11) ஒல்லை வைரவர் கோவில் (2) கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயம் (60) காமாட்சி அம்பாள் கோவில் (1) காளி கோயில் (1) சேவைகள் (3) நீர்வேலி அரசகேசரிப் பிள்ளையார் (71) நீர்வேலி இ.த.க பாடசாலை (4) நீர்வேலி கந்தசுவாமி கோயில் (135) நீர்வேலி சி. சி. த. க பாடசாலை (5) நீர்வேலி செல்லக் கதிர்காம கோவில் (16) நீர்வேலி தெற்கு பேச்சி அம்மன் (7) நீர்வேலி றோ.க.த.க பாடசாலை (26) நீர்வேலி வீரபத்திரர் ஆலயம் (39) நீர்வேலி ஸ்ரீ கணேஷா முன்பள்ளி (22) நீர்வேலி ஸ்ரீ செல்லக்கதிர்காம சுவாமி அறநெறி பாடசாலை (3) நூல் வெளியீடு (15) பாராட்டு விழா (15) பாலர் பகல் விடுதி (13) புகைப்படங்கள் (175) மாதர் சங்கம் (5) வாய்கால் தரவை விநாயகர் கோவில் (22) வாய்க்காற்தரவைப்பிள்ளையார் (3) விளையாட்டு (2) வீதி திருத்தப்பணிகள் (2)\nவாய்க்கால் தரவை பிள்ளையார் பற்றிய செய்திகள்\nஅரசகேசரிப் பிள்ளையார் பற்றிய செய்திகள்\nநீர்வைக் கந்தன் பற்றிய செய்திகள்\nசெல்லக் கதிர்காம கோயில் பற்றிய செய்திகள்\nமூத்த விநாயகரின் வரம் தரும் அருளோசை\nஅத்தியார் இந்துக் கல்லூரி பற்றிய செய்திகள்\nகரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயம் பற்றிய செய்திகள்\nநீர்வேலி றோ.க.த.க பாடசாலை பற்றிய செய்திகள்\nநீர்வேலி சீ .சீ.த.க பாடசாலை பற்றிய செய்திகள்\nநீர்வேலி தெற்கு பாலர் பகல்விடுதி\nநீர்வேலி நலன்புரிச் சங்கம் கனடா\nதுறை சார்ந்த செய்திகள் Select Category Foreign Assosiations (28) அத்தியார் இந்துக் கல்லூரி (44) அபிவிருத்தி (11) ஒல்லை வைரவர் கோவில் (2) கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயம் (60) காமாட்சி அம்பாள் கோவில் (1) காளி கோயில் (1) சேவைகள் (3) நீர்வேலி அரசகேசரிப் பிள்ளையார் (71) நீர்வேலி இ.த.க பாடசாலை (4) நீர்வேலி கந்தசுவாமி கோயில் (135) நீர்வேலி சி. சி. த. க பாடசாலை (5) நீர்வேலி செல்லக் கதிர்காம கோவில் (16) நீர்வேலி தெற்கு பேச்சி அம்மன் (7) நீர்வேலி றோ.க.த.க பாடசாலை (26) நீர்வேலி வீரபத்திரர் ஆலயம் (39) நீர்வேலி ஸ்ரீ கணேஷா முன்பள்ளி (22) நீர்வேலி ஸ்ரீ செல்லக்கதிர்காம சுவாமி அறநெறி பாடசாலை (3) நூல் வெளியீடு (15) பாராட்டு ��ிழா (15) பாலர் பகல் விடுதி (13) புகைப்படங்கள் (175) மாதர் சங்கம் (5) வாய்கால் தரவை விநாயகர் கோவில் (22) வாய்க்காற்தரவைப்பிள்ளையார் (3) விளையாட்டு (2) வீதி திருத்தப்பணிகள் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://26ds3.ru/aktiplast-t/archives/8312", "date_download": "2021-10-19T10:53:06Z", "digest": "sha1:LO3OHX3DHMQPSS4U3DY3K6PFSJ4P52OC", "length": 21230, "nlines": 167, "source_domain": "26ds3.ru", "title": "செண்பக சிலையே – பாகம் 03 – தமிழ் காமக்கதைகள் – ஓழ்சுகம் | 26ds3.ru", "raw_content": "\nசெண்பக சிலையே – பாகம் 03 – தமிழ் காமக்கதைகள்\n“என் வீட்டுக்குள் வா சொல்றேன்..” என்றபடி, கதவைத் திறந்து உள்ளே சென்றேன்.\nபின்னாலேயே கீதா வந்தாள். வீட்டு ஹாலில் ஜன்னல் திறந்திருந்தாலும் வெளியே இருந்து பார்க்க முடியாமல் அதற்கு திரை போட்டு இருந்தது.\nசெண்பக சிலையே – பாகம் 04 – தமிழ் காமக்கதைகள்\nசெண்பக சிலையே – பாகம் 02 – தமிழ் காமக்கதைகள்\n” என்று அவளை ஹாலில் உட்கார வைத்துவிட்டு, பக்கத்தில் இருக்கும் ஒரு அறைக்குள் போய் பேண்டைக் கழட்டினேன்.\nஹாலில் இருந்துகொண்டே அவள் என் பக்கம் பார்த்தபடி நான் பேண்டைக் கழட்டுவதைப் பார்ப்பது எனக்கும் தெரிந்தது. அவள் மனசைப் பார்க்கலாம் என்று நினைத்தபடி சட்டையையும் கழட்டினேன்.\nஉள்ளே பனியன் ஏதும் கிடையாது. மார்பில் நிறைய கொச கொச என ஒரே முடியோடும், கொஞ்சம் கிரிக்கெட் விளையாடுவதால் தொப்பை இல்லாத உடம்போடு, ஓரக் கண்ணால் நான் பார்த்தபோது அவள் என்னையே பார்ப்பது போல்த்தான் இருந்தது.\nஎனக்குள் உடம்புக்குள் ஏதோ பதற்றம் ஓட, ஜட்டியையும் இப்படியே கழட்டினால் என்ன என்று என்று முளைக்குள் ஏதோ செய்தி ஓட, என் ஜட்டிக்குள் இருந்த 9 அங்குல தடித்த சுண்ணி லேசாய் விறைக்க ஆரம்பித்தது.\nநான் ஜட்டியோடு திரும்பி அவளைப் பார்க்க, அவள் என்னப் பார்த்து தலையைக் குனிந்துவிட்டு, இருந்த இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு போய் விட்டாள். அவசரப்பட்டு காரியத்தை கெடுத்துவிடக் கூடாது என நினைத்துக்கொண்டேன்.\nஜட்டியை கழட்டவில்லை. கைலி மட்டும் அணிந்துகொண்டு, வேறு சட்டையைப் போட்டுக்கொண்டு ஹாலுக்கு வந்தேன். அவள் நான் கொடுத்த செயினையே பார்த்துக்கொண்டு இருந்தாள்.\n உன்னோட வழு வழுன்னு இருக்கிற சங்கு கழுத்துக்கு இது அமோகமா இருக்கும். போட்டுப் பாரு..\nஅதன் ஹூக்கைக் கழட்டி செயினை கழுத்தில் வைத்துப் பிடித்துக்கொண்டு, எனக்கு முன்னால் ���ிரும்பி நின்றுகொண்டு, “இதை மாட்டி விடுங்க சார்..” என்றதும், நான் அவளது ஜடையை விலக்கி அவளுக்கு முன்பக்கம் போடுவது போல கையைக் கொண்டு செல்லும்போது, அவளது மார்பை மூடிய தாவணியில் என் கை உரசியது.\nஅவள் அதைக் கவனித்த மாதிரி தெரியவில்லை. கவனிக்கவில்லையா.. அல்லது கவனித்துவிட்டு நடிக்கிறாளா..\nஹூக்கை மாட்டுவது போல் அவள் கழுத்தில் என் கை விரல்கள் உரசி நடமாடின.\n” என்றபடி நான் என் இரண்டு கைகளையும் அவள் கழுத்தில் தொட்டு விளையாட, அவளது கழுத்தில் இருந்த சின்ன சின்ன முடிகள் புல்லரித்து நேராய் நின்றது.\nமெதுவாய் நெளிந்தாள். நெளியும்போது அவள் பின்பக்கம் அசைந்தது ஒரு இனிய கவிதை. ஒரு வழியாய் அதை மாட்டிவிட்டேன்.\n இந்தக் கண்ணாடியில் வந்து பாரு..” என்றபடி, அவளை அங்கிருந்த ஒரு பெரிய கண்ணாடி முன்னால் தள்ளிக்கொண்டு போனேன்.\n” என்றபடி, அவள் அந்த ஆளுயர கண்ணாடி முன்னால் நிற்க நான் அவள் பின்னால் போய் நின்றுகொண்டேன்.\n சினிமா ஸ்டார் மாதிரி பள பளக்கிற.. இந்த சின்ன செயின் போட்டதுக்கே, இந்தக் கழுத்துக்கு இப்படி ஒரு அழகா.. இந்த சின்ன செயின் போட்டதுக்கே, இந்தக் கழுத்துக்கு இப்படி ஒரு அழகா..” என்றபடி, அவள் இரண்டு தோள்களிலும் கை வைத்து அவளை ஒட்டி நின்றேன்.\nகண்ணாடி வழியாய் என்னைப் பார்த்து புன்னகை செய்தாள்.\n“அந்த அஜய் எல்லாம் உன் அழகுக்கு முன்னால் தூசு கீதா. நீ அவனைப் பத்தி இனிமேல் நினைக்காதே..\n“அதுக்கு காரணம் இருக்கு. அவன் உனக்கு எதாவது முத்தம் கொடுத்திருப்பான். அதையேதான் இந்த வயசு நினைக்கும். அது உன் தப்பு இல்லை. நான் சொல்றது சரிதானே..\nகீதா தலையைக் குனிந்து கூச்சப்பட்டாள். நான் அவள் பின்னால் நின்றுகொண்டே கண்ணாடியைப் பார்த்துக்கொண்டே ஒரு கையால் அவள் நாடியைத் தொட்டு தூக்கினேன். அப்படி செய்யும்போது என் மடக்கிய கை அவள் மார்பின் மேல் பட்டும் படாமல் இருந்தது.\n“என்னிடம் என்ன தயக்கம். பயப்படாமல் சொல்லு. நான் யார்கிட்டவும் சொல்ல மாட்டேன்..” என்றதும், தலையை உயர்த்தியவள் “ம்ம்” என்று சொல்லிவிட்டு, மீண்டும் குனிந்துகொள்ள, நான் என் மடக்கிய கையால் அவள் மார்பின் வனப்பையும், உறுதியையும் தெரிந்துகொள்ள அங்கே கொஞ்சம் அழுத்தம் கொடுக்க, அது கிண் என்று அசைந்து கொடுக்காமல் திண்மையாய் இருப்பதைக் கண்டு உள்ளம் குஷியால் பொங்கியது.\nஎனக்க��� டென்சனில் நெற்றியில் வியர்க்க ஆரம்பித்தது.\n“அதை நீ மறக்க வழி இருக்கு கீதா..” என்றபடி, மீண்டும் அவள் முகவாய்கட்டையில் கை வைத்து மேலே தூக்கினேன்.\nஎனக்கு என் ஜட்டிக்குள் இருந்த காளை துள்ளி எழுந்துகொள்ள, அவளை இன்னும் நெருங்க அவள் பின்பக்கம் என் சுண்ணி மெதுவாய் உரசியது. அது கண்டிப்பாய் அவள் உணர்ந்திருக்க வேண்டும்.\nதலையை தூக்கியவள் மீண்டும் குனிந்துகொண்டு, “எப்படி சார்..\nஅவள் குரலில் ஒரு நடுக்கம் தெரிந்தது. கீதாவுக்கு பின்னால் ஒட்டி நின்றுகொண்டு, ஆளுயர கண்ணாடி வழியாக அவளைப் பார்த்துக்கொண்டு இருந்தேன்.\n” என்று கேட்டதும், என்ன சொல்வது என்று எனக்கு தெரியவில்லை.\n“என்ன கீதா. முள்ளை முள்ளால்தான் எடுக்கனும். நீ அதையே நினைச்சு கவலைப்படுறே.. நானும் அதே மாதிரி உனக்கு ஒரு முத்தம் கொடுத்தேன்னு வச்சுக்க. எல்லாம் சரியாய் போயிடும்.. நானும் அதே மாதிரி உனக்கு ஒரு முத்தம் கொடுத்தேன்னு வச்சுக்க. எல்லாம் சரியாய் போயிடும்..\nபூவும் புண்டையையும் – பாகம் 307 – தமிழ் காமககதைகள்\nதிருமதி கிரிஜா : பாகம் 22 : தமிழ் காமக்கதைகள்\nதிருமதி கிரிஜா : பாகம் 21 : தமிழ் காமக்கதைகள்\nஅப்பா மகள் காமக்கதைகள் (33)\nஐயர் மாமி கதைகள் (35)\nRaju on சுண்ணி வலிக்குது – தங்கை காமக்கதைகள்\nRaju on திருமதி கிரிஜா : பாகம் 21 : தமிழ் காமக்கதைகள்\nRaju on முனகினாள் – பாகம் 01- தங்கச்சி காமக்கதைகள்\nfree sex stories Latest adult stories mangolia sex stories Mansi mansi story Oolkathai Oolraju Poovum Poovum Pundaiyum Sasi Sasi sex Sex story Swathi sex tamil incest stories Tamil love stories tamil new sex stories tamil sex Tamil sex stories Tamil sex story xossip xossip stories அக்கா அக்கா xossip அக்கா ஓழ்கதைகள் அக்கா செக்ஸ் அக்கா தம்பி அண்ணி செக்ஸ் அம்மா அம்மா செக்ஸ் காதல் கதைகள் குடும்ப செக்ஸ் குரூப் செக்ஸ் சித்தி சித்தி காமக்கதைகள் சுவாதி சுவாதி செக்ஸ் செக்ஸ் தமிழ் செக்ஸ் நண்பனின் காதலி மகன் மான்சி மான்சி கதைகள் மான்சிக்காக மான்சி சத்யன் விக்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://battimedia.lk/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2021-10-19T11:30:36Z", "digest": "sha1:YTNL2S7GBL5KSIPIYZLR3WY5KIFBCQ6P", "length": 5576, "nlines": 112, "source_domain": "battimedia.lk", "title": "அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளனரா ? - Battimedia", "raw_content": "\nHome செய்திகள் அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளனரா \nஅரச மற்றும் தனியார் நிறுவனங்களில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளனரா \nநாடளாவிய ரீதியில் இயங்கும் அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் சுகாதார பிரிவிற்கு அறிவிக்காமல் மறைத்து வைத்துள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.\nஇது குறித்து தகவல்கள் தெரியவந்துள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.\nஅவ்வாறு தொற்றாளர்களை மறைத்து வைத்திருக்கும் எந்தவொரு நிறுவனமாக இருந்தாலும் அவற்றுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.\nPrevious articleபாலசுந்தரத்தின் சடலம் மக்களின் கண்ணீருடன் ஊறணி மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.\nNext articleமட்டக்களப்பில் இராணுவ வாகனமொன்று விபத்துக்குள்ளானது.\n608,000 டோஸ் பைஸர் தடுப்பூசிகள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.\nமாடு அறுத்தலுக்கு தடை , அமைச்சரவையில் சட்டமூலம் அங்கீகாரம்.\nஎரிபொருள் விலையை அதிகரிக்க முடியாது-ஜனாதிபதி\nஅனைத்து விதமான செய்திகளையும் உடனுக்குடன் அறிந்துக்கொள்ள தொடர்ந்தும் இணைந்திருங்கள். ஊடகவியலாளர்களாக இணைய விரும்புபவர்களும் தொடர்புகொள்ளவும் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://karudannews.com/?cat=57&paged=2", "date_download": "2021-10-19T11:39:58Z", "digest": "sha1:CHEXTV3FUJRCHCKTW36DHZBM7B3LK7E3", "length": 5248, "nlines": 54, "source_domain": "karudannews.com", "title": "உலகம் Archives - Page 2 of 11 - Karudan News", "raw_content": "\nதெற்கு தாய்வானின் அடுக்குமாடி குடியிருப்பொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 46 பேர்...\nபாகிஸ்தான் அணுசக்தித் திட்டத்தின் தந்தை அப்துல் காதிர் கான் மரணமடைந்தார்.\nஉத்தரப் பிரதேசத்தில் வன்முறை விவசாயிகள் உட்பட 8 பேர் பலி.\nதாய்லாந்தை தாக்கிய சூறாவளி; இதுவரை 7 பேர் உயிரிழப்பு\nதமிழ் பாரம்பரிய முறையில் லெஸ்பியன் திருமணம்- புகைப்படங்கள் உள்ளே\nசூப்பர் சிங்கர் சீசன் 8 இல் வின்னர் ஸ்ரீதர் சேனா.\nகாதல் மனைவியை பெட்ரோ ஊற்றி எரித்துக் கொலை.\nகுறும்புத்தனம் செய்த குழந்தையை வாயில் பிஸ்கட் கவரை திணித்து கொலை செய்த...\nசாலையோர உணவகத்தில் உணவருந்திய பிரேசில் அதிபர் – இதுதான் காரணம்\nநியூயோர்க்கில் வீதியோர உணவகம் ஒன்றில் பீஸா சாப்பிட்ட ஜனாதிபதி. நடந்த��ு என்ன…\nஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்.\nஸ்பெயினின் எரிமலை வெடிப்பு 1000 ற்கு மேற்பட்ட மக்கள் வெளியேற்றம்\nஊடக பணியால் ஹட்டன் குடாஓய விநாயகபுர மக்களுக்கு சுத்தமான குடிநீர்.\nஇஸ்லாமியர்களுக்கு செந்தில் தொண்டமான் மிலாதுன் நபி வாழ்த்து\nபசு வதையை தடைசெய்தல் தொடர்பான சட்ட திருத்தத்திற்கு அமைச்சரவை அனுமதி.\nமுதல் பயிற்சி ஆட்டத்தில் சிக்ஸர், பவுண்டர்களாக பறக்க விட்ட இந்திய அணி.\nராஜபக்ச, பெர்னான்டோவின் பொறுப்பான பேட்டிங்கால் இலங்கை முதல் வெற்றி.\nஇந்திய – இலங்கைக்கான இராஜதந்திர உறவு பாலத்தை வலுப்படுத்தும் முக்கிய புள்ளியாக மாறியுள்ள செந்தில் தொண்டமான்\nகுதிகால் வெடிப்பால் அவதிப்படுபவர்களா நீங்கள்\nசின்ன வெங்காயத்தை உணவில் சேர்த்துக்கொள்வதால் இத்தனை நன்மைகளா…\nஆசிரியர் – அதிபர்கள் தொழிற்சங்கங்களின் முக்கிய அறிவிப்பு\nஇராகலை 5 வயது சிறுமியிடன் தனது சேட்டையைகாட்டிய சிறுவன் கைது.\nகிளங்கன் வைத்தியசாலைக்கு ஜீவன் தொண்டமான் விசேட விஜயம்\nவங்கதேச அணிக்கு அதிர்ச்சி கொடுத்த ஸ்காட்லாந்து.\nமுதல் டி20 உலககோப்பையில் போட்டியில் சாதனை செய்த ஓமன் அணி.\nநுவரெலியாவில் கொடும்பாவியை எரித்து விவசாயிகள் போராட்டம்.\nம.மு முன்னாள் செயலாளர் நாயகம் எஸ். விஜயகுமாரனின் பதினோராவது நினைவு தினம் அனுஷ்டிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-10-19T13:44:31Z", "digest": "sha1:P22J5LARRLKQ22TW2JXMC2HUTQQ3UY2X", "length": 7604, "nlines": 76, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:ஆஸ்திரேலியாவின் மாநிலங்களும் ஆட்சிப் பகுதிகளும் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "பேச்சு:ஆஸ்திரேலியாவின் மாநிலங்களும் ஆட்சிப் பகுதிகளும்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nTerritory என்பதற்கான தமிழ்ப் பதம் விக்கிப்பீடியாவில் வெவ்வேறு விதமாக வழங்கப்பட்டுள்ளது. எனினும், பழைய வழக்கில் ஆள் புலம் அல்லது ஆணிலம் (ஆள்+நிலம்) என்றே பயன்படுத்தப்பட்டுள்ளது. விக்கிப்பீடியாவிலும் ஆணிலம் என்ற பதம் பயன்படுத்தப்பட்டிருப்பதைக் காண்கிறேன். எ��வே, ஆணிலம் என்றோ ஆள் புலம் என்றோ பயன்படுத்துவதே முறையென நான் நினைக்கிறேன். மாறாக, ஆட்சிப் பகுதி என்பது சற்று ஏற்கத் தக்கதாக இருப்பினும் மண்டலம் என்று பயன்படுத்தப்பட்டிருப்பது ஏற்புடையதன்று.--பாஹிம் (பேச்சு) 07:49, 24 ஏப்ரல் 2013 (UTC)[பதில் அளி]\nஇக்கட்டுரையின் தலைப்பு மாற்ற வேண்டிய தேவையில்லை என்றே நினைக்கிறேன். ஆனால் சில ஆட்சிப்பகுதிகளின் பெயர்கள் மாற்ற வேண்டும். Northern territory ஐ பலரும் பலவிதமாக எழுதுகிறார்கள். வட மண்டலம் என்பது எனக்கும் ஏற்புடையதல்ல. கலாநிதி ஆ. கந்தையா தனது நூல்களில் இச்சொல்லையே பயன்படுத்தி வந்தார். ஆட்புலம் என்பதும் நல்ல சொல்லே. அதனையே பயன்படுத்தலாம்.--Kanags \\உரையாடுக 08:25, 24 ஏப்ரல் 2013 (UTC)[பதில் அளி]\nநானும் ஆட்புலம் என்றே பயன்படுத்துவது வழமை. மண்டலம் என்பது \"region\" என்ற பொருளையல்லவா தருகிறது--பாஹிம் (பேச்சு) 14:19, 24 ஏப்ரல் 2013 (UTC)[பதில் அளி]\nமாற்றுக் கருத்து ஏதும் இல்லை. இச்சொல்லை முதன்முறையாகக் கேட்கிறேன். தமிழகத்தில் பரவலாக இல்லை. எளிதான வேறு சொல் இருந்தால் பயன்படுத்துங்கள். இல்லை என்றால் தற்போது உள்ள பெயரை கட்டுரையில் எங்கேனும் தெரியும்படி இடுங்கள். நன்றி-தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:26, 24 ஏப்ரல் 2013 (UTC)[பதில் அளி]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 ஏப்ரல் 2013, 14:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/murasoli-thalayangam/2021/10/08/murasoli-editorial-has-accused-the-bjp-government-of-being-a-sign-of-evil-rule-in-uttar-pradesh", "date_download": "2021-10-19T10:52:46Z", "digest": "sha1:BHCRA77ET5QXXUXOTFZCTRYIYAAEJTV6", "length": 17708, "nlines": 62, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Murasoli editorial has accused the BJP government of being a sign of evil rule in Uttar Pradesh", "raw_content": "\n“உத்தரப்பிரதேசம் நல்லாட்சியின் அடையாளம் அல்ல; பொல்லாத ஆட்சியின் அடையாளங்கள்” : பாஜக அரசை சாடிய ‘முரசொலி’\nபோராடும் விவசாயிகள் மீது காரை ஏற்றிப் படுகொலைகள் செய்வதும் எதனுடைய அடையாளம் நல்லாட்சியின் அடையாளம் அல்ல பொல்லாத ஆட்சியின் அடையாளங்கள் ஆகும்\nமுரசொலி நாளேட்டின் இன்றைய தலையங்கம் (08-10-2021) வருமாறு:\nஒரு ஆட்சி எப்படி நடக்கக் கூடாது என்பதற்கு உதாரணம் உத்தரப்பிரதேச பா.ஜ.க ஆட்சி ஆகும் என்பதை மனச்சாட்சி உள்ள பா.ஜ.க.வினரே அறிவார்கள்\nஎதிராளிக்குத் த�� வேண்டிய குறைந்தபட்ச ஜனநாயக உரிமையைத் தராதது மட்டுமல்ல - மக்களை மனிதர்களாகக் கூட மதிக்காத தன்மைக்கு எத்தனையோ உதாரணங்களைச் சொல்லலாம்\nஇந்தக் கொடூரத்தின் உச்சம்தான் போராடிய விவசாயிகள் மீது காரை ஏற்றிக் கொல்வதும் அந்தக் கொலையைக்கூட நியாயப்படுத்துவதும். ஒன்பது உயிர்கள் பலியாகி உள்ளன. அதற்கு ஒட்டு மொத்தமாகப்பொறுப்பேற்க வேண்டியது உத்தரப்பிரதேச முதலமைச்சர் தான். ஆனால் அவருக்கு அது எல்லாம் ஒரு விஷயமாகவே தெரியாது. ஆகாயத்தில் கோட்டை கட்டி வாழ்பவர் அவர்.\nஉத்தரப் பிரதேசம் லக்கிம்பூர் கேரியில் போராடும் விவசாயிகள் மீது காரை மோத விடும் வீடியோ இணையதளங்களில் வைர லாகப் பரவி வருகிறது. இந்தக் காட்சியைப் பார்ப்பவர்கள் அனைவரையும் ரத்தம் உறைய வைக்கும் காட்சிகள் அவை. இதனை சமூக வலைத்தளங்களில் ராகுலும், பிரியங்காவும் பகிர்ந்துள்ளார்கள். பா.ஜ.க எம்.பி.யான வருண் காந்தியும் பகிர்ந்துள்ளார். வருண் பகிர்ந்துள்ளதற்கு என்ன சொல்வார்கள் அவரை பா.ஜ.க.வில் இருந்து நீக்கிவிடுவார்களா அவரை பா.ஜ.க.வில் இருந்து நீக்கிவிடுவார்களா அல்லது இந்திரா குடும்பத்து ரத்தம் வேலை செய்கிறது என்று காரணம் கண்டு பிடிப்பார்களா\nஅமைதி வழியில் போராடியவர்கள் மீது வழக்கும், கைது நடவடிக்கையும். ஆனால் காரை ஏற்றிக் கொலை செய்தவர்கள் வெளியில் நடமாடுகிறார்கள். இதுதான் உத்தரப்பிரதேசம்ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி ஓராண்டு காலமாக ஓய்வில்லாமல் போராட்டம் நடத்தி வருகிறார்கள் விவசாயிகள். அதன் ஒரு பகுதியாக உத்தரப்பிரதேச மாநிலம், லக்கிம்பூர்கேரி மாவட்டத்தில், விவசாயிகள் கறுப்புக் கொடி காட்டி போராட்டம் நடத்தத் திட்டமிட்டிருந்தனர்.\nலக்கிம்பூர் கேரி மாவட்டம், பன்வீர்பூர் கிராமம்தான் ஒன்றிய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் சொந்த ஊர். அக்டோபர் 3 ஆம் தேதி அங்கு நடக்க இருந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக உ.பி துணை முதல்வர் கேசவ் மௌரியா, ஹெலிகாப்டர் மூலம் வருகை தர இருந்தார். ஹெலிகாப்டர் இறங்கு தளத்தில் கறுப்புக்கொடி காட்டிப் போராட்டம் நடத்தத் திட்டமிட்டிருந்தனர் லக்கிம்பூர் விவசாயிகள். இதை அறிந்து, துணை முதல்வரின் பன்வீர்பூர் பயணம் தரை வழியாக மாற்றப்பட்டது. விவசாயிகளும் தங்கள் திட்ட���்தை மாற்றினார்கள். கார் வரும் சாலையை நோக்கி பேரணியாகச் சென்றனர்.\nஅப்போது டிகோனியா கிராமம் அருகே வந்த பா.ஜ.க.வினரின் இரண்டு கார்கள் முன்பாகக் கறுப்புக்கொடி காட்டிப் போராட்டத்தில் ஈடுபட்டனர் விவசாயிகள். அப்போது அதில் ஒரு கார், விவசாயிகளை நோக்கிப் பாய்ந்தது. பட்டப்பகலில் நடந்த பச்சைப் படுகொலை அது. இதில் தல்ஜீத் சிங் (35), குர்விந்தர் சிங் (19), லவ்ப்ரீத் சிங் (20), நச்சட்டார் சிங் (60) ஆகிய நான்கு விவசாயிகள் சம்பவ இடத்திலேயே உயிர்ப்பலி ஆனார்கள்.\nஅப்போது பலத்த காயமடைந்தார் உள்ளூர் நிருபர் ரத்தன். பின்னர் அவர் சிகிச்சை பலனின்றி காஷ்யப் மருத்துவமனையில் அக்டோபர் 4-ஆம் தேதியன்று உயிரிழந்தார். இக்கொடூர கார் கொலைவெறித் தாக்கு தலைத்தொடர்ந்து அந்த இடமே கலவர பூமியானது. அதில் நான்கு பேர் பலியானார்கள்.\nபாரதிய கிசான் யூனியன் அமைப்பு என்ற விவசாய அமைப்புதான் இதன் உண்மைத் தன்மையை முதலில் சொன்னது. “அமைதியாகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் மீது வன்முறை நிகழ்த்தப்பட்டிருக்கிறது. விவசாயிகள் மீது ஏறிய காரை ஓட்டிவந்தது அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராதான்” என்று குற்றம் சாட்டியது. கார் எங்களுடையதுதான்; ஓட்டியது என் மகன் அல்ல என்று சொல்லி இருக்கிறார் ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ரா.\n“துணை முதல்வரை வரவேற்கச் சென்ற பா.ஜ.க ஆதரவாளர்களின் கார்கள்மீது போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் கற்களை வீசியிருக்கின்றனர். அதனால், நிலை தடுமாறிய கார், விவசாயிகள் மீது ஏறியிருக்கிறது. அந்தக்காரை எனது மகன் ஓட்டவில்லை. அங்கு என் மகன் இருந்திருந்தால் போராட்டக்காரர்களின் தாக்குதலில் அவர் கொல்லப்பட்டிருப்பார். அவர் என்னோடு நிகழ்ச்சி நடந்த இடத்தில்தான் இருந்தார். அதற்கான வீடியோ, போட்டோ ஆதாரங்கள் எங்களிடம் இருக்கின்றன” என்றிருக்கிறார். ஒரு சம்பவம் நடந்த பிறகு உ.பி அரசு நடந்து கொண்ட விதம்தான் அது விவசாயிகளுக்கு எதிரான அரசு என்பதற்கான எடுத்துக்காட்டு.\nஇந்த சம்பவத்தைக் கடுமையாகக் கண்டித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், “மூன்று வேளாண் சட்டங்களை முழுமையாகத் திரும்பப் பெறுவதுதான் இந்தப் பிரச்சினைக்கு முழுமையான தீர்வாக அமையும்” என்று கோரிக்கை வைத்துள்ளார். ஒன்றிய அரசு கௌரவம் பார்க்காமல் மூ��்று சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும். ஏனென்றால் இத்தகைய போராட்டம் - இவ்வளவு காலம் நீடித்த போராட்டம் சுதந்திரம் அடைந்த இந்தியாவில் இல்லை. அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமானால் மூன்று வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்பட வேண்டும்.\nஐக்கிய விவசாயிகள் முன்னணி (சம்யுக்த கிசான் மோர்ச்சா) வெளியிட்ட அறிக்கையில் கசப்பான பல உண்மைகள் உள்ளன. 2021 ஜனவரி 22க்குப்பின் போராடும் அமைப்புகளுடன் ஒன்றிய அரசாங்கம் எவ்விதமான பேச்சுவார்த்தையையும் நடத்திட வில்லை என்றும், கடந்த ஓராண்டு காலத்தில் 605 விவசாயிகள் தங்கள் இன்னுயிரை இழந்திருக்கிறார்கள் என்றும் அந்த அறிக்கையில் சொல்லி இருக்கிறார்கள். சராசரியாக நாளொன்றுக்கு இரண்டு பேர் உயிர்த் தியாகம் புரிந்துகொண்டிருக்கிறார்கள். இந்த மரணங்கள் ஏன் பேசப்படுவது இல்லை விவசாயிகளின் உயிர் மட்டும் இளக்காரமா விவசாயிகளின் உயிர் மட்டும் இளக்காரமா\n“நம்மைப்போன்ற ஒரு ஜனநாயக நாட்டில் போராடுபவர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப்பேச்சுவார்த்தைதான் ஒரே வழி. அதுவே எப்போதும் எஸ்.கே.எம் கோரிக்கை” என்றும் அவர்கள் சொல்லி இருக்கிறார்கள். பேச்சுவார்த்தையே நடத்தாமல் அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று தெரியவில்லை என்று பிரதமர் சொல்வதும் - போராடும் விவசாயிகள் மீது காரை ஏற்றிப் படுகொலைகள் செய்வதும் எதனுடைய அடையாளம் நல்லாட்சியின் அடையாளம் அல்ல பொல்லாத ஆட்சியின் அடையாளங்கள் ஆகும்\n“அக்.5ஆம் நாளை ‘தனிப்பெரும் கருணை’ நாளாக அறிவித்து இருப்பது வகைப்பட்ட பண்பாட்டுப் புரட்சியே\n” : அமைச்சர் சேகர்பாபு சூசகம்\n50 ஆண்டுகளுக்குப் பிறகு மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றியத்தை கைப்பற்றிய தி.மு.க - ஆட்சிக்கு கிடைத்த நற்சான்று\n\"பூனைக்குட்டி என நினைத்து புலிக்குட்டியை தூக்கியவர் பதறியடித்து ஓட்டம்” - சாலையில் நடந்தது என்ன\n“பெண் வேட்பாளரிடம் அத்துமீறிய பா.ஜ.க அமைச்சர்.. முதல்வர் கண்முன்னே நடந்த அநாகரீகம்”: ம.பி-யில் அதிர்ச்சி\nதண்ணி இல்லாத காட்டில் மாட்டிக்கொண்ட 2 பேர்.. 1 வாரம் கழித்து மீட்ட போலிஸ்: ஆஸ்திரேலியாவில் நடந்தது என்ன\n50 ஆண்டுகளுக்குப் பிறகு மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றியத்தை கைப்பற்றிய தி.மு.க - ஆட்சிக்கு கிடைத்த நற்சான்று\n” : அமைச்சர் சேகர்பாபு சூசகம்\nபெயர் ஒற்றுமையை பயன்படுத்தி ரூ.10 லட்சம் மதிப்பிலான நிலம் மோசடி... 3 பேர் கைது : நடந்தது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2021/10/06/former-policeman-suicide-in-erode", "date_download": "2021-10-19T12:25:30Z", "digest": "sha1:K7YCTU2RTWEYEHGXJEHBHMNTUMWXFXE3", "length": 7416, "nlines": 56, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Former policeman suicide in Erode", "raw_content": "\nபோலி வருமான வரித்துறை அதிகாரியாக உலாவந்த முன்னாள் போலிஸ்.. உண்மை வெளிவந்ததால் தற்கொலை - நடந்தது என்ன\nபோலி வருமான அதிகாரியாக உலாவந்த முன்னாள் காவலர் தற்கொலை செய்து கொண்டார்.\nதிண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவர் கோவையில் காவலராக பணியாற்றி வந்தார். பின்னர் அந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு, வேறு எந்த வேலைக்கும் செல்லாமல் விட்டிலேயே இருந்துள்ளார்.\nஇதனால், சிவக்குமாரின் குடும்பத்தினர் தொடர்ந்து கண்டித்து வந்துள்ளனர். இதையடுத்து சில மாதங்களுக்கு முன்பு தனக்குத் திருப்பூரில் வருமான வரித்துறை அலுவலகத்தில் வேலை கிடைத்துள்ளதாக மனைவி மற்றும் குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார்.பிறகு தினமும் அலுவலகம் செல்வது போல் நடித்து குடும்பத்தினரை ஏமாற்றி வந்துள்ளார்.\nஇந்நிலையில், நேற்று முன்தினம் மனைவியிடம் ஈரோடு செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து சிவக்குமாருக்கு மனைவி பிரேமலதா செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் சிவகுமார் போனை எடுக்கவில்லை.\nஇதனால், கணவன் வேலை செய்வதாகக் கூறிய வருமான வரித்துறை அலுவலகத்திற்குத் தொடர்பு கொண்டு விசாரித்துள்ளார். அப்போது சிவக்குமார் என்ற பெயரில் இங்கு யாரும் வேலை பார்க்கவில்லை என கூறியுள்ளனர். இதை கேட்டு பிரேமலதா அதிர்ச்சியடைந்துள்ளார்.\nஇந்நிலையில், அரச்சலூர் பகுதியில் காரில் வாலிபர் ஒருவர் இறந்து கிடப்பதாக போலிஸாருக்கு தகவல் கிடைத்தது. அங்குச் சென்ற போலிஸார் இறந்த வாலிபர் குறித்து விசாரணை நடத்தியதில் அவர் சிவக்குமார் என்பது தெரியவந்தது.\nஇதையடுத்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் குடும்பத்தாரை ஏமாற்றியதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n“அ.தி.மு.க முன்னாள் அமைச்சரின் மோசடியால் காவலர் பலி” : விசாரணைக்கு பயந்து காவலர் எடுத்த விபரீத முடிவு\n“��ங்க கல்யாணத்த மழை வெள்ளம் தடுப்பதா.. நெவர்” : காதல் ஜோடி எடுத்த முடிவு - இணையத்தில் வைரல்\nசிறுநீரக கல்லுக்கு பதிலாக சிறுநீரகத்தையே அகற்றிய மருத்துவர்... நுகர்வோர் ஆணையத்தின் அதிரடி உத்தரவு\nLKG படித்த சிறுமிக்கு பாலியல் தொல்லை.. ஆசிரியருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஐகோர்ட் அதிரடி\n“நாளை நம்மை காப்பாற்றிக்கொள்ள எந்த வாய்ப்பும் இருக்காது” : உலகிற்கு மாலத்தீவு சொன்ன அதிர்ச்சி செய்தி\nLKG படித்த சிறுமிக்கு பாலியல் தொல்லை.. ஆசிரியருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஐகோர்ட் அதிரடி\n“எங்க கல்யாணத்த மழை வெள்ளம் தடுப்பதா.. நெவர்” : காதல் ஜோடி எடுத்த முடிவு - இணையத்தில் வைரல்\n“விரைவில் ஆழ்கடல் அகழாய்வுப் பணிகளைத் தொடங்க ஆலோசனை” : அமைச்சர் தங்கம் தென்னரசு முக்கிய தகவல்\nசிறுநீரக கல்லுக்கு பதிலாக சிறுநீரகத்தையே அகற்றிய மருத்துவர்... நுகர்வோர் ஆணையத்தின் அதிரடி உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaaiman.com/2021/01/blog-post_927.html", "date_download": "2021-10-19T12:19:11Z", "digest": "sha1:AUI5D7LQJ5EK6IVWLZZGCIL52UKYLANY", "length": 3446, "nlines": 66, "source_domain": "www.thaaiman.com", "title": "யாழ். நெடுந்தீவு கடற்பரப்பில் சடலங்கள் கண்டெடுப்பு - THAAIMAN", "raw_content": "\nHome / Unlabelled / யாழ். நெடுந்தீவு கடற்பரப்பில் சடலங்கள் கண்டெடுப்பு\nயாழ். நெடுந்தீவு கடற்பரப்பில் சடலங்கள் கண்டெடுப்பு\nயாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பரப்பில் விபத்துக்குள்ளாகி, கடலில் மூழ்கிய படகிலிருந்து நான்கு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.\nகடற்படை ஊடகப் பேச்சாளர் கெப்டர் இந்திக டி சில்வா இதை தெரிவித்தார்.\nஇந்த சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, தேடுதல் நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.\nகடந்த 18ஆம் திகதி பின்னிரவில் நெடுந்தீவிலிருந்து சுமார் 8 கடல் மைல் தொலைவில் இந்திய மீனவ படகு ஒன்று கடலில் கவிழ்ந்து விபத்து இடம்பெற்றது.\nஇலங்கை கடற்படையின் சூழியோடிகள் குழு, கடற்படை படகுகள் மற்றும் கப்பல்கள் இணைந்து படகில் பயணித்த மீனவர்களை தேடும் நடவடிக்கைகளை முன்னெடுத்தது.\nஇந்நிலையில் இந்திய மீனவர்கள் இருவரது சடலங்கள் காங்கேசன்துறை கடற்பரப்பில் மீட்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மேலும் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/travel/128363-soon-east-coast-road-to-be-changed-to-national-highway", "date_download": "2021-10-19T10:59:43Z", "digest": "sha1:KNUJO4ENB55ZVZKDHBCY6I7IMZDEGJKR", "length": 19886, "nlines": 197, "source_domain": "www.vikatan.com", "title": "தேசிய நெடுஞ்சாலையாக மாறுகிறது கிழக்கு கடற்கரை சாலை... மத்திய அரசின் அடுத்த அதிரடி! | Soon east coast Road to be changed to National Highway - Vikatan", "raw_content": "\nநாடோடிச் சித்திரங்கள்: நீலமேக மலையில் விழைவின் ஊற்று | பகுதி 4\nபுல் தீவு... வேர்ப் பாலம்... சாகசக் குகை - வடகிழக்கில் வசந்த சுற்றுலா\nநாடோடிச் சித்திரங்கள்: இயற்கையின் கொடையும் பழியும் - வடகிழக்கிந்தியாவின் மறுமுகம். | பகுதி 3\nநாடோடிச் சித்திரங்கள்: இருமை மொழி பேசும் 'ஆண் நதி'| பகுதி 2\nநாடோடிச் சித்திரங்கள்: `இந்தியாவின் கிழக்கு முகம்' | பகுதி 1\nஅனைத்து ரயிலின் கடைசி பெட்டியிலும் `X' என்று குறிப்பிடப்பட்டிருக்கிறதே, ஏன்\nபடகுப் பயணம்; முக்கடல் சங்கமம்; திருவள்ளுவர் சிலை; களைகட்டும் கன்னியாகுமரி\nதடுப்பூசி சான்றிதழை பாஸ்போர்ட்டுடன் இணைக்க வழிமுறைகள் | How to link vaccine certificate to passport\nஇந்தியாவின் ஒரு பழமையான நகரம் Gue Village - Spiti Vally\nகன்னியாகுமரி: கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளால் வெறிச்சோடிய சுற்றுலாத்தலங்கள் #PhotoAlbum\nநாடோடிச் சித்திரங்கள்: நீலமேக மலையில் விழைவின் ஊற்று | பகுதி 4\nபுல் தீவு... வேர்ப் பாலம்... சாகசக் குகை - வடகிழக்கில் வசந்த சுற்றுலா\nநாடோடிச் சித்திரங்கள்: இயற்கையின் கொடையும் பழியும் - வடகிழக்கிந்தியாவின் மறுமுகம். | பகுதி 3\nநாடோடிச் சித்திரங்கள்: இருமை மொழி பேசும் 'ஆண் நதி'| பகுதி 2\nநாடோடிச் சித்திரங்கள்: `இந்தியாவின் கிழக்கு முகம்' | பகுதி 1\nஅனைத்து ரயிலின் கடைசி பெட்டியிலும் `X' என்று குறிப்பிடப்பட்டிருக்கிறதே, ஏன்\nபடகுப் பயணம்; முக்கடல் சங்கமம்; திருவள்ளுவர் சிலை; களைகட்டும் கன்னியாகுமரி\nதடுப்பூசி சான்றிதழை பாஸ்போர்ட்டுடன் இணைக்க வழிமுறைகள் | How to link vaccine certificate to passport\nஇந்தியாவின் ஒரு பழமையான நகரம் Gue Village - Spiti Vally\nகன்னியாகுமரி: கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளால் வெறிச்சோடிய சுற்றுலாத்தலங்கள் #PhotoAlbum\nதேசிய நெடுஞ்சாலையாக மாறுகிறது கிழக்கு கடற்கரை சாலை... மத்திய அரசின் அடுத்த அதிரடி\nஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்\nதேசிய நெடுஞ்சாலையாக மாறுகிறது கிழக்கு கடற்கரை சாலை... மத்திய அரசின் அடுத்த அதிரடி\nகிழக்கு கடற்கரை சாலையை தேசிய நெடுஞ்சாலையாக மத்திய அரசு அறிவிக்கவுள்ளது. இதற்கான வேலைக��் மும்முரமாக நடந்து வருகின்றன.\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்\n`ECR’ (East Coast Road) என்று நாம் செல்லமாக அழைக்கும் கிழக்கு கடற்கரை சாலையை இனி அப்படி அழைக்க முடியாது. சென்னையின் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த இந்தச் சாலை, விரைவில் தேசிய நெடுஞ்சாலையாக மாறப் போகிறது.\nசென்னைவாசிகள் தினமும் சந்திக்கும் பிரச்னைகளில் முக்கியமானது போக்குவரத்து நெரிசல். லட்சங்களையும், கோடிகளையும் கொடுத்து வாங்கிய வாகனங்கள் என்றாலும் சென்னைச் சாலைகளின் நெரிசலில் சிக்கி நத்தை போல் ஊர்ந்துதான் செல்ல வேண்டும். இதனாலேயே சென்னைவாசிகள் வாரத்தில் ஒருநாளாவது கிழக்கு கடற்கரை சாலையில் `ஹாயாக' ஒரு பயணத்தை மேற்கொள்வார்கள். கிழக்கு கடற்கரை சாலை பயணத்தை அழகூட்டும் விதமாக மாயாஜால் சினிமாஸ், வி.ஜி.பி, எம்.ஜி.எம் தீம் பார்க்குகள், முட்டுக்காடு படகுக்குழாம், கோவளம் கடற்கரை, திருவிடந்தை நித்திய பெருமாள் கோயில், முதலைப்பண்ணை, புலிக்குகை, மாமல்லபுரம் என ஏராளமான பொழுதுபோக்கு சுற்றுலாத் தலங்கள் நிறைந்துள்ளன. சென்னையிலிருந்து புதுச்சேரி வரை மாநில நெடுஞ்சாலையாகவும், அங்கிருந்து நாகப்பட்டினம் வரை தேசிய நெடுஞ்சாலையாகவும், நாகப்பட்டினத்திலிருந்து கன்னியாகுமரி வரை மீண்டும் மாநில நெடுஞ்சாலையாகவும் இருந்து வருகிறது. இப்போது சென்னையிலிருந்து - கன்னியாகுமரி வரை தேசிய நெடுஞ்சாலையாக மாற்றப்பட உள்ளது.\n1998ம் ஆண்டிற்கு முன்புவரை சென்னை, அக்கரை பகுதியிலிருந்து மரக்காணம் அடுத்த கூனிமேடு வரை ஒருவழித்தடமாக இருந்தது கிழக்கு கடற்கரை சாலை. அப்போது புதுச்சேரியிலிருந்து இரண்டு பேருந்துகளும், கடலூரிலிருந்து இரண்டு பேருந்துகளும் மட்டுமே சென்னைக்கு இயக்கப்பட்டன. 1998ல் இருவழிச்சாலையாக தரம் உயர்த்தப்பட்ட பிறகு அதிக அளவில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. 2002ம் ஆண்டு முதல் கிழக்கு கடற்கரை சாலை, தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனத்தின் (TNRDC) வசம் வந்தது. பின்பு சர்வதேச தரத்துக்கு இணையாகச் சாலையின் தரம் உயர்த்தப்பட்டு கட்டண சாலையாக மாற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து பயணப் போக்குவரத்து அதிகம் இருந்ததால் சென்னையிலிருந்து மாமல்லபுரம் பூஞ்சேரி வரையிலும் நான்கு வழிச்சாலையாக தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் மாற்றியது.\nதுறைமுகம் மற்றும் சரக்குப் போக்குவரத்தை எளிதாக்கும் வகையில் சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை தேசிய நெடுஞ்சாலையாக மாற்ற மத்திய அரசு பல ஆண்டுகளாக முயன்று வந்தது. சுங்கவரி வசூல் செய்வது மத்திய அரசின் வசம் போய்விடும் என்பதால், ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, இந்தத் திட்டத்துக்கு அனுமதி கொடுக்காமலேயே இருந்தார். எடப்பாடி பழனிசாமி முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டதும், ஜெயலலிதா முட்டுக்கட்டை போட்ட மத்திய அரசின் திட்டங்களுக்கெல்லாம் சிவப்புக் கம்பளம் விரித்தார். அதில் கிழக்கு கடற்கரை சாலையை மத்திய அரசுக்குத் தாரை வார்த்துக் கொடுத்த திட்டமும் அடங்கும்.\nமாமல்லபுரத்திலிருந்து புதுச்சேரிக்குச் செல்லும் கிழக்கு கடற்கரை சாலை தற்போதுவரை இருவழிச்சாலையாக இருந்து வருகிறது. அதை 64 மீட்டர் அகலம் கொண்ட நான்கு வழிப்பாதையாக மாற்றும் பணிகள் தொடங்கப்பட உள்ளன. கிழக்கு கடற்கரை சாலை மாநில நெடுஞ்சாலை எண் 49 என இதுவரை அழைக்கப்பட்டு வந்தது. தற்போது, தேசிய நெடுஞ்சாலையாக மாற்றப்பட்டபின் மாமல்லபுரத்திலிருந்து புதுச்சேரி வரை உள்ள சாலை 332A என மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. நடுவில் 4 மீட்டர் அகலம் கொண்ட இடைவெளியில், இரண்டு பக்கங்களிலும் 30 மீட்டர் அகலத்தில் சாலைகள் அமையஉள்ளன. கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்தே தேசிய நெடுஞ்சாலைத்துறையினரால் அந்தச் சாலை ஆய்வு செய்யப்பட்டு, தேசிய நெடுஞ்சாலை வசம் உள்ள நிலம் என்பதை குறிக்கும் வகையில் மஞ்சள் நிற கற்கள் நடப்பட்டு வந்தன. அதிக வளைவுகள் மற்றும் கல்பாக்கம் அணுஉலை காரணமாக புதுப்பட்டினம் பகுதியில் புறவழிச்சாலை அமைகிறது. இதனால் புதுப்பட்டினத்துக்கும் கிழக்கு கடற்கரை சாலைக்கும் தொடர்பு இருக்காது.\nஇது குறித்து சென்னையில் உள்ள தேசிய நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் பேசினோம். ``திட்ட இயக்குநரிடம்தான் நீங்கள் முழுமையான தகவல்களை பெறமுடியும். தற்போது, நிலத்தைக் கையகப்படுத்தும் பணி மேற்கொள்ளவிருக்கிறோம். அதன் பிறகு இது தொடர்பாக அறிவிப்பை வெளியிடுவோம்.” எனச் சுருக்கமாக முடித்துக்கொண்டார். ஏற்கெனவே, சென்னை - சேலம் 6 வழிச்சாலை சமூக ஆர்வலர்களையும், விவசாயிகளையும் கொந்தளிக்கச் செய்துள்ளது. இந்த நிலையில் த���சிய நெடுஞ்சாலைத்துறையின் அடுத்த அறிவிப்பு தமிழகத்தில் எந்தமாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது போகப்போகத்தான் தெரியும்.\nதெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism\nசட்டக் கல்லூரி பயின்றபோது மாணவ நிருபராக 2009ல் விகடனில் பணியைத் தொடங்கினேன். தற்போது விகடனில் தலைமை நிருபராக பணியாற்றி வருகிறேன்.\nஇதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnarealestate.lk/properties/22811/", "date_download": "2021-10-19T13:28:11Z", "digest": "sha1:AEN3MDIORGJ2U3XRANKJFJHI52EQMRIW", "length": 27851, "nlines": 740, "source_domain": "jaffnarealestate.lk", "title": "அரியாலை தபால்கட்டை சந்திக்கு அருகாமையில் வீட்டுடன் காணி விற்பனைக்கு – Re/Max North Realty", "raw_content": "\n2 மாடி வீடு விற்பனைக்கு (3)\n2 வீடுகள் விற்பனைக்கு (1)\nஅரிசி ஆலை விற்பனைக்கு (1)\nஉல்லாச விருந்தினர் மாளிகை (1)\nகடையுடன் காணி விற்பனைக்கு (1)\nகாணியுடன் பகுதியளவு கட்டப்பட்ட வீடு விற்பனைக்கு (4)\nகாணியுடன் வீடு விற்பனைக்கு (33)\nகைதடியில் வீட்டுடன் கூடிய காணி விற்பனைக்கு (1)\nசிறிய வீட்டுடன் இணைந்த காணி விற்பனைக்கு. (1)\nநல்லூரில் Guest House விற்பனைக்கு (1)\nவணிக / குடியிருப்பு சொத்து விற்பனைக்கு (1)\nவிசாலமான நிலத்துடன் கூடிய கட்டிடத்தொகுதி விற்பனைக்கு (2)\nவிசாலமான நிலத்துடன் வீடு விற்பனைக்கு (1)\nவியாபாரக் கட்டிடம் குத்தகைக்கு (6)\nவியாபாரக் கட்டிடம் வாடகைக்கு (2)\nவியாபாரக் கட்டிடம் விற்பனைக்கு (16)\nவிவசாய நிலம் விற்பனைக்கு (3)\nகொழும்பு - 14 (1)\nகொழும்பு - 15 (1)\nகொழும்பு - 6 (1)\nபழைய பூங்கா வீதி (1)\nகொழும்பு - 14 (1)\nகொழும்பு - 15 (1)\nகொழும்பு - 6 (1)\n2 மாடி வீடு விற்பனைக்கு (3)\n2 வீடுகள் விற்பனைக்கு (1)\nஅரிசி ஆலை விற்பனைக்கு (1)\nஉல்லாச விருந்தினர் மாளிகை (1)\nகடையுடன் காணி விற்பனைக்கு (1)\nகாணியுடன் பகுதியளவு கட்டப்பட்ட வீடு விற்பனைக்கு (4)\nகாணியுடன் வீடு விற்பனைக்கு (33)\nகைதடியில் வீட்டுடன் கூடிய காணி விற்பனைக்கு (1)\nசிறிய வீட்டுடன் இணைந்த காணி விற்பனைக்கு. (1)\nநல்லூரில் Guest House விற்பனைக்கு (1)\nவணிக / குடியிருப்பு சொத்து விற்பனைக்கு (1)\nவிசாலமான நிலத்துடன் கூடிய கட்டிடத்தொகுதி விற்பனைக்கு (2)\nவிசாலமான நிலத்துடன் வீடு விற்பனைக்கு (1)\nவியாபாரக் கட்டிடம் குத்தகைக்கு (6)\nவியாபாரக் கட்டிடம் வாடகைக்கு (2)\nவியாபாரக் கட்டிடம் விற்பனைக்கு (16)\nவிவசாய நிலம் விற்பனைக்கு (3)\nகொழும்பு - 14 (1)\nகொழும்பு - 15 (1)\nகொழும்பு - 6 (1)\nபழைய பூங்கா வீதி (1)\nகொழும்பு - 14 (1)\nகொழும்பு - 15 (1)\nகொழும்பு - 6 (1)\nஅரியாலை தபால்கட்டை சந்திக்கு அருகாமையில் வீட்டுடன் காணி விற்பனைக்கு\nஅரியாலை தபால்கட்டை சந்திக்கு அருகாமையில் வீட்டுடன் காணி விற்பனைக்கு\nவீடு விற்பனைக்கு in விற்பனைக்கு\nஅரியாலை தபால்கட்டை சந்திக்கு அருகாமையில் வீட்டுடன் காணி விற்பனைக்கு\nநில அளவு – 1 பரப்பும் 16.6 குளி\nவீட்டின் சதுரடி – 460 சதுரடி\nஅனைத்து ஆவணங்களும் தெளிவாக உள்ளன\nஇனிமையான சூழலுடன் நல்ல அக்கம்\nஅரியாலை தபால்க்கட்டை சந்தியிலிருந்து 700 மீ தூரம்\nகொழும்புத்துறை இந்து மஹா வித்தியாலயத்திலிருந்து 900 மீ தூரம்\nசெபமாலை அன்னை தேவாலயத்திலிருந்து 1 கி.மீ தூரம்\nகொழும்புத்துறை மீன் சந்தையில் இருந்து 1.1 கி.மீ தூரம்\nபாசையூர் அந்தோனியார் ரோமன் கத்தோலிக்க பெண்கள் வித்தியாலயத்திலிருந்து 1.9 கி.மீ தூரம்\nசுண்டிக்குளி பெண்கள் கல்லூரியில் இருந்து 2.1 கி.மீ தூரம்\nகொழும்புத்துறையில் பகுதியளவு கட்டப்பட்ட வீடு...\nகொழும்புத்துறையில் பகுதியளவு கட்டப்பட்ட வீடு விற்பனைக்கு. நில அளவு :- 1 பரப்பு 4 குளி • நெடுங்குளம் பிள்ளையார் கோவி [more]\nகொழும்புத்துறையில் பகுதியளவு கட்டப்பட்ட வீடு விற்பனைக்கு. நில அளவு :- 1 பரப்பு 4 குளி • நெடுங்குளம் பிள்ளையார் கோவி [more]\nகொழும்புத்துறையில் ஒன்றேகால் பரப்பில் அமைந்த...\nகொழும்புத்துறையில் ஒன்றேகால் பரப்பில் அமைந்த இரண்டு கடையுடன் கூடிய புதிய மாடி வீடு விற்பனைக்கு (வடக்கு வாசல் வீடு) [more]\nகொழும்புத்துறையில் ஒன்றேகால் பரப்பில் அமைந்த இரண்டு கடையுடன் கூடிய புதிய மாடி வீடு விற்பனைக்கு (வடக்கு வாசல் வீடு) [more]\n83, கண்ணத்திட்டி வீதி, யாழ்ப்பாணம், இலங்கை\nபொலிகண்டியில் அழகிய வீடு விற்பனைக்க... LKR 24,000,000\nதெல்லிப்பளை,துர்க்காபுரம் கல்வளவு ஒ... LKR 5,000,000\nமன்னாரில் 2 மாடி வீடு விற்பனைக்கு\nகட்டுவன் கிழக்கு ,தெல்லிப்பளையில் பகுதியளவு கட்டப்பட்ட வீடு விற்பனைக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://battimedia.lk/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B7-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3/", "date_download": "2021-10-19T11:56:19Z", "digest": "sha1:T4GDT5MVDGZH2MX7JQ6SJ4BL43NQVKPB", "length": 5795, "nlines": 115, "source_domain": "battimedia.lk", "title": "விசேஷ பெண்மணி, சாதாரண பெண்மணியாக லண்டன் தெரு ஒன்றில் நடந்து வரும் காட்சி பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. - Battimedia", "raw_content": "\nHome செய்திகள் விசேஷ பெண்மணி, சாதாரண பெண்மணியாக லண்டன் தெரு ஒன்றில் நடந்து வரும் காட்சி பலரையும்...\nவிசேஷ பெண்மணி, சாதாரண பெண்மணியாக லண்டன் தெரு ஒன்றில் நடந்து வரும் காட்சி பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.\nசிறிலங்காவின் முன்னாள் அரசதலைவர் சந்திரிக்கா குமாரதுங்க சாதாரண பெண் கிடையாது.\nதாயும் ஒரு பிரதமர். தந்தையும் ஒரு பிரமதர்.\nஉலகின் முதல் பெண் பிரதமரின் மகள்.\nஉலகின் முதலாவது பெண் ஜனாதிபதி.\nஅப்படிப்பட்ட சந்திரிக்கா லண்டன் தெருவோரத்தில் சாதாரணமாக நடமாடும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது.\n90களின் நடுப்பகுதிகளில் ‘சந்திரிக்கா சேலை’.. ‘சந்திரிக்கா காப்பு’.. ‘சந்திரிக்கா தோடு’.. என்று மக்களின் நாயகியாக இருந்த சந்திரிக்கா அம்மையாரின் இந்த சாதாரண தோற்றம் பார்ப்பவரை வியப்பில் ஆழ்த்திவருகின்றது.\nPrevious articleஅமெரிக்காவின் பெருந்தன்மை, உலக நாடுகளுக்கு 5.5 கோடி கொரோனா தடுப்பூசி மருந்துகளை நன்கொடையாக வழங்க முடிவு.\nNext articleகொரோனா அறிகுறிகள் காணப்பட்டால் வீட்டில் சுய வைத்தியம் செய்ய வேண்டாம் .\n608,000 டோஸ் பைஸர் தடுப்பூசிகள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.\nமாடு அறுத்தலுக்கு தடை , அமைச்சரவையில் சட்டமூலம் அங்கீகாரம்.\nஎரிபொருள் விலையை அதிகரிக்க முடியாது-ஜனாதிபதி\nஅனைத்து விதமான செய்திகளையும் உடனுக்குடன் அறிந்துக்கொள்ள தொடர்ந்தும் இணைந்திருங்கள். ஊடகவியலாளர்களாக இணைய விரும்புபவர்களும் தொடர்புகொள்ளவும் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://karudannews.com/?cat=57&paged=3", "date_download": "2021-10-19T11:06:43Z", "digest": "sha1:FUEWQZ7TONSR26HCOR736JENWLAJGFAI", "length": 5249, "nlines": 54, "source_domain": "karudannews.com", "title": "உலகம் Archives - Page 3 of 11 - Karudan News", "raw_content": "\nதெற்கு தாய்வானின் அடுக்குமாடி குடியிருப்பொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 46 பேர்...\nபாகிஸ்தான் அணுசக்தித் திட்டத்தின் தந்தை அப்துல் காதிர் கான் மரணமடைந்தார்.\nஉத்தரப் பிரதேசத்தில் வன்முறை விவசாயிகள் உட்பட 8 பேர் பலி.\nதாய்லாந்தை தாக்கிய சூறாவளி; இதுவரை 7 பேர் உயிரிழப்பு\nதமிழ் பாரம்பரிய முறையில் லெஸ்பியன் திருமணம்- புகைப்படங்கள் உள்ளே\nசூப்பர் சிங்கர் சீசன் 8 இல் வின்னர் ஸ்ரீத��் சேனா.\nகாதல் மனைவியை பெட்ரோ ஊற்றி எரித்துக் கொலை.\nகுறும்புத்தனம் செய்த குழந்தையை வாயில் பிஸ்கட் கவரை திணித்து கொலை செய்த...\nசாலையோர உணவகத்தில் உணவருந்திய பிரேசில் அதிபர் – இதுதான் காரணம்\nநியூயோர்க்கில் வீதியோர உணவகம் ஒன்றில் பீஸா சாப்பிட்ட ஜனாதிபதி. நடந்தது என்ன…\nஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்.\nஸ்பெயினின் எரிமலை வெடிப்பு 1000 ற்கு மேற்பட்ட மக்கள் வெளியேற்றம்\nஊடக பணியால் ஹட்டன் குடாஓய விநாயகபுர மக்களுக்கு சுத்தமான குடிநீர்.\nஇஸ்லாமியர்களுக்கு செந்தில் தொண்டமான் மிலாதுன் நபி வாழ்த்து\nபசு வதையை தடைசெய்தல் தொடர்பான சட்ட திருத்தத்திற்கு அமைச்சரவை அனுமதி.\nமுதல் பயிற்சி ஆட்டத்தில் சிக்ஸர், பவுண்டர்களாக பறக்க விட்ட இந்திய அணி.\nராஜபக்ச, பெர்னான்டோவின் பொறுப்பான பேட்டிங்கால் இலங்கை முதல் வெற்றி.\nஇந்திய – இலங்கைக்கான இராஜதந்திர உறவு பாலத்தை வலுப்படுத்தும் முக்கிய புள்ளியாக மாறியுள்ள செந்தில் தொண்டமான்\nகுதிகால் வெடிப்பால் அவதிப்படுபவர்களா நீங்கள்\nசின்ன வெங்காயத்தை உணவில் சேர்த்துக்கொள்வதால் இத்தனை நன்மைகளா…\nஆசிரியர் – அதிபர்கள் தொழிற்சங்கங்களின் முக்கிய அறிவிப்பு\nஇராகலை 5 வயது சிறுமியிடன் தனது சேட்டையைகாட்டிய சிறுவன் கைது.\nகிளங்கன் வைத்தியசாலைக்கு ஜீவன் தொண்டமான் விசேட விஜயம்\nவங்கதேச அணிக்கு அதிர்ச்சி கொடுத்த ஸ்காட்லாந்து.\nமுதல் டி20 உலககோப்பையில் போட்டியில் சாதனை செய்த ஓமன் அணி.\nநுவரெலியாவில் கொடும்பாவியை எரித்து விவசாயிகள் போராட்டம்.\nம.மு முன்னாள் செயலாளர் நாயகம் எஸ். விஜயகுமாரனின் பதினோராவது நினைவு தினம் அனுஷ்டிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://muthusidharal.blogspot.com/2015/06/2.html", "date_download": "2021-10-19T10:58:53Z", "digest": "sha1:4HZ53MPLOMJGUZB4FSATKVPZ4KWVEKBR", "length": 39545, "nlines": 364, "source_domain": "muthusidharal.blogspot.com", "title": "முத்துச்சிதறல்: சர்க்கரை நோய் -பாகம் 2", "raw_content": "\nகலைகளும் சிந்தனையுமாய் சிதறுகின்ற முத்துக்கள் இங்கே\nசர்க்கரை நோய் -பாகம் 2\nசர்க்கரை நோயிலிருந்து நம்மை காத்துக்கொள்ளுவதற்கும் மற்ற‌வர்களைப்போல மகிழ்வாக வாழ்வதற்கும் முக்கியமான மூன்று விஷயங்களை பின்பற்றுதல் அவசியம்.\nசரியான உணவு, உடற்பயிற்சி, தகுந்த மருந்துகளும் மருத்துவமும்.\nபெரும்பாலும் இது நடுத்��ர வயதில் தாம் மக்களைத்தாக்குகிறது. அதுவரை நாம் சாப்பிடாத உணவு வகைகளா ருசிக்காத பலகாரங்களா இப்படியெல்லாம் நமக்கு நாமே சொல்லிக்கொண்டாலும் எல்லாவற்றையும் ஏறக்கட்டுவது என்பது சுலபமான விஷயமில்லை நாக்கும் மனசும் போராட்டம் நடத்தும். அந்தப்போராட்டத்திலிருந்து மீண்டு வர மிகுந்த சுயக்கட்டுப்பாடும் மன உறுதியும் தேவை.\nநீரழிவு நோயாளி எதைச் சாப்பிட வேண்டும் அல்லது கூடாது என்று சொல்லப்படுவதை சரியாகப் புரிந்து கொள்ளுதல் அவசியம். அடிப்படையை புரிந்து கொண்டால் உங்கள் உணவு வகைகளை நீங்களே அமைத்துக் கொள்ளலாம்.\nநீரழிவு நோயாளிகள் உண்ணும் உணவு மெதுவாக சர்க்கரையை சேமிக்கக் கூடிய தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். விரைவாகச் சர்க்கரையை சேமிக்கும் உணவு, இரத்ததின் சர்க்கரையின் அளவை விரைவாக ஏற்றிவிடும். ஆகவே நார்ப்பொருட்கள் அடங்கிய உணவு ஏற்றதாகும்.\nகேழ்வரகில் நார்ப்பொருள்(தவிடு) கலந்திருப்பதால் மெல்லச் சீரணம் ஆகும். எனவே அதைச் சேர்த்துக் கோள்ளலாம். அரிசி, கோதுமை இவற்றில் சம அளவே (70%) மாவுப் பொருள் இருக்கிறது.\nமேலும் எந்த வகை உணவு உண்கிறோம் என்பதும் எவ்வளவு உண்கிறோம் என்பதும் தான் இதில் முக்கியம். பொதுவாக கிழங்கு வகைகளைத்தவிர்ப்பது அவசியம் என்று அன்று சொல்லப்பட்டது. இன்று சர்க்கரை வள்ளிக்கிழங்கு சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு நல்லது என்று சொல்லப்படுகிறது. 20 வருடங்களுக்கு முன்னரே ஒரு சினேகிதி சொன்னார், அவரின் கணவருக்கு சர்க்கரை வியாதி இருப்பதால் மருத்துவர் உருளைக்கிழங்கையெல்லாம் இனி உண்ணுதல் கூடாது என்று அறிவிக்க, உணவில் உருளைக்கிழங்கை தினமும் சாப்பிட்டு பழக்கமான அவர் அழுது விட்டாராம். உடனேயே மருத்துவர் ' தினமும் வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு 2 மேசைக்கரண்டி சாப்பிடலாம்' என்று அனுமதித்ததால் அவரும் தினமும் அப்படியே சாப்பிட்டு வருகிறாராம். சர்க்கரை அளவு ஏறவில்லை என்று என் சினேகிதி சொன்னார். முன்பு தவிர்க்கப்பட்ட காரட்டும் இன்று மருத்துவர்களால் பரிந்துரை செய்யப் படுகிறது.நமக்குப்பிடித்த உணவைக்கூட இப்படி அளவோடு சாப்பிட நம்மால் முடியும். ஆனால் ஒன்று, இதில் சர்க்கரை கலந்த உணவுகளோ, இனிப்பு வகைகளோ சேர்க்கப்படவில்லை.\nஒரு நாள் உணவை ஐந்து பாகங்களாகப் பிரித்துண்பது நல்லது. இதனால் குள���க்கோஸ் அளவு உடனே கூடிவிடாமலும் அளவுக்குக் கீழே குறைந்து விடாமலும் பார்த்துக் கொள்ளலாம்.\nகண்ட கண்ட எண்ணெயில் பொரித்த பண்டங்களை கடைகளில் வாங்கி சாப்பிடுவதைத் தவிருங்கள்.\nவயிற்றுப்பாதிப்பு இருப்பவர்கள் காலை காப்பிக்கு பதிலாக கஞ்சி குடிக்கலாம். கஞ்சியில் மாவுச் சத்து அதிகமிருக்கக்கூடாது. மிகச் சிறிய அளவில் சிகப்பு அரிசியும் பெரிய அளவுகளில் புரதப்பொருள்களும் கலந்து மாவாக்கப்பட்டிருக்க வேண்டும்.\nவிபரம் தெரியாத சமயத்தில் காதியில் கிடைக்கும் கம்பு கஞ்சி பவுடர் வாங்கி வந்து கஞ்சி தயாரித்து குடித்தேன். சர்க்கரை ஏறியிருந்தது சில மாதங்களுக்குப்பிறகு தான் தெரிந்தது. பின் விபரம் தெரிந்த சினேகிதி ஒருவரிடம் செய்யும் முறை அறிந்து கஞ்சிப்பொடி தயாரித்து அதையே காலை வேலைகளில் காப்பிக்கு பதிலாக குடிக்கிறேன். சர்க்கரை ஏறுவதில்லை என்பதுடன் வயிறு பாதிப்புகள் இல்லாது இருக்கின்றது. திரவ உணவு உடனேயே ஜீரணம் ஆகி உடலில் சர்க்கரை ஏறும் என்பதால் இந்தக் கஞ்சியையே சற்று கெட்டியாக கூழை விட கெட்டியாக காய்ச்சி சிறிது மோரும் சிட்டிகை உப்பும் கலந்து சாப்பிடலாம்.\nஉப்பு உணவில் அதிகம் சேர்ப்பதைத் தவிர்க்கவும். அதனால் ஊறுகாய், வற்றல் வகைகள் கடையில் வாங்கி உபயோகிப்பதைத் தவிருங்கள். இனிப்புகள், இனிப்பு சார்ந்த பொருள்கள், வெல்ல்ம், சர்க்கரை, தேங்காய்ப்பால், தேங்காய் எண்ணெய், தேங்காய்ச் சட்னி, ஹார்லிக்ஸ், பூஸ்ட் போன்றவை, கோக்கோ கோலா, பெப்ஸி போன்ற பானங்கள், டின், புட்டிகளில் விற்கும் பழச்சாறு, அதிக இனிப்புள்ள பழங்கள் முதலியவை.\nநம் உடலின் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருந்தால் பழங்கள் ஒன்றிரண்டு துண்டுகள் மட்டும் உண்ணலாம். மிருக புரதங்களைக்காட்டிலும் காய்கறிகளிலுள்ள புரதம் நன்மை பயக்கும் என்பது தற்கால கன்டு பிடிப்பு.\nநாம் உணவைத்தேர்ந்தெடுக்கும்போது அதன் கலோரி அளவு, நார்ச்சத்து இவற்றை கவனித்து நமக்கு நாமே ஒரு அட்டவணை போட்டுக்கொண்டால் நிச்சயம் சுவையான உணவுகளை உண்ண நம்மால் முடியும். தினமும் ஒரு வேளையாவது அரிசி உணவைக் குறைத்து வந்தாலே சர்க்கரையின் அளவு குறையும்.\nஇதன்படி ஒரு மாதிரி உணவுப்பட்டியல் தயார் செய்யலாம்.\nஒரு கப் காப்பி அல்லது டீ சர்க்கரை சேர்க்காமல். இதில் ஒரு விஷயம் கவனிக்க வேண்டும். சர்க்கரை நோயாளிகள் அநேகர் சாப்பிடுவது மெட்ஃபோர்மின் என்ற சக்தியை அடக்கிய மாத்திரைகள் தான். இதில் பல வகை மெட்ஃபோர்மின்கள் வயிற்றுப்பிரச்சினைகள் சிறிதளவாவது கொடுத்துக்கொண்டிருக்கும் என்பது உண்மை. சில வகை மாத்திரைகள் சாப்பிடுபவர்களுக்கு காப்பி ஒத்துக்கொள்ளாது. அவர்கள் ஆடை நீக்கப்பட்ட கெட்டி மோர் ஒரு தம்ளர் குடிக்கலாம். அல்லது நான் ஏற்க்னவே குறிப்பிட்ட கூழ் அரை கப் சாப்பிடலாம். உங்களுக்கு சர்க்கரை அதிகமாக ஏறும் தன்மை இல்லையென்றால் அல்லது காலை உணவு சாப்பிடும் நேரம் தள்ளிப்போக வாய்ப்பிருக்கிறது என்றால் ஒரு கப் கூழ் கூட சாப்பிடலாம். டீ சாப்பிடுவது நல்லதில்லை உடலுக்கு என்று என் சித்த மருத்துவர் கூறியிருக்கிறார். உங்களுக்கு நல்லதொரு குடும்ப மருத்துவர் இருந்தால் அவரிடம் பேசி உங்கள் உணவு பட்டியல் தயார் செய்து கொள்ளுங்கள்.\nகாலை 8 -9 மணி:\nகாலை உணவாக இட்லி அல்லது தோசை அல்லது பொங்கல், உப்புமா என்று சாப்பிடலாம். பொதுவாய் இட்லி நான்கு சாப்பிடலாம் என்று மருத்துவர்கள் சொல்லுகிறார்கள். அது பஞ்சு போல் இருக்கும் சின்ன சின்ன இட்லிகளுக்குப் பொருந்தும். சிறிது கடினமான, பெரிதான இட்லி என்றால் 3 இட்லிகளே போதும். ஹோட்டல் இட்லி என்றால் நிச்சயம் இரண்டு இட்லிகள் போதுமானது. இந்த அளவிற்கு மேல் சாப்பிட்டால் சர்க்கரை அதிகம் ஏறும். அவற்றிற்கு பக்க உணவைப்பொருத்தும் சர்க்கரை ஏறுவதும் இறங்குவதும் நடக்கிறது. தேங்காய் சட்னிக்கு சர்க்கரை ஏறும். அளவோடு சாப்பிட வேண்டும். சாம்பாரும் அப்படித்தான். வெள்ளமாக ஊற்றி சாப்பிடக்கூடாது. தக்காளி சட்னி, காய்கறி சட்னி சரியானது. அதேபோல தோசை என்றால் இரண்டே அதிகம். என் சித்த மருத்துவர் தோசையைத் தவிருங்கள் என்று தான் கூறுகிறார். ' தோசைக்கல்லைப் பழுக்க காய வைத்தாலொழிய தோசை சுட முடியாது. அப்படியென்றால் என்ன அர்த்தம். மாவை எண்ணெயில் பொரிப்பதற்கு சமம். சீக்கிரம் அதனால் ஜீரணமாகாது. அதனால் உங்கள் இரத்தத்தில் சர்க்கரை ரொம்ப நேரத்திற்கு அதிகமாகவே இருக்கும் ' என்கிறார். அதற்கு பதிலாக கேழ்வரகு அல்லது கோதுமை தோசை பிரச்சினைகளைக் குறைக்கும் என்றும் சொன்னார். இப்போதெல்லாம் சிறு தானியக்குறிப்புகள் சோள இட்லி, திணை உப்புமா, கோதுமை இட்லி போன்ற விஷயங்களெல்லாம் வந்து விட்டன. அவை இன்னும் அதிகமான நார்ச்சத்து கொண்டிருப்பதால் சர்க்கரை நோயுள்ளவர்களுக்கு மிகவும் நல்லது.\n2 மேரி பிஸ்கட், தக்காளி அல்லது எலுமிச்சை ஜூஸ் அல்லது மோர் குடிக்கலாம்.\nமதியம் 12- 1 மணி\nமதியம் சாப்பாட்டிலும் அரிசி சாதம் ஒரு கப் எடுத்தால் காய்கறிகள் இரண்டு மடங்கு சாப்பிடுவது வயிற்றை நிரப்பும்.\nசாதத்திற்கு பதில் கோதுமை சதம் அல்லது கைக்குத்தல் அரிசி சாதம் அல்லது சிகப்பரிசி சாதம் மிகவும் நல்லது. சப்பாத்தி என்றால் மெதுவான சிறிய சப்பாத்திக்கள் மூன்று வரை சாப்பிடலாம். அசைவ உணவு சாப்பிடுபவர்கள் எண்ணெயில் வறுத்த அசைவ உணவுகளைத் தவிர்த்து வேக வைத்த அசைவ உணவுகளை உண்பது நல்லது.\nகாப்பி அல்லது டீயுடன் மேரி பிஸ்கட் அல்லது வேக வைத்த சுண்டல் அல்லது அவித்த கடலை ஒரு கைப்பிடி சாப்பிடலாம்.\nஎளிதில் ஜீரணமாகும் இட்லி அல்லது இடியாப்பம் சாப்பிடுவது நல்லது. ஜீரணம் எளிதிலாகாத சப்பாத்தியைத் தவிர்ப்பது நல்லது. இதயப் படபடப்பு இருப்பவர்களுக்கு பரோட்டா, சப்பாத்தி சாப்பிடுவது எளிதில் ஜீரணமாகாது சில சமயங்களில் படபடப்பு அதிகமாகும்.\nமுக்கியமான விஷயம், இனிப்பை அறவே தவிர்க்க வேண்டும். சில சமயம் விருந்தினர் வீட்டுக்குச் செல்லும்போதோ அல்ல‌து திருமணம் போன்ற விசேடங்களின் போதோ இனிப்புகளைத்தவிர்ப்பது தயக்கமாக இருக்கும். அல்லது உங்கள் விருந்தினர் தப்பாக நினைத்துக்கொள்ள்க்கூடாது என்ற எண்ணமாக இருக்கும் அந்த தயக்கத்தை அறவே விட்டொழியுங்கள். உங்களை இனிப்பு எடுத்துக்கொள்ளச் சொல்லும் விருந்தினரிடம் கண்டிப்புடன் மறுத்து விடுங்கள். என் இதய மருத்துவர் கூட ஒரு முறை சொன்னார், 'இத்தனை கண்டிப்பு தேவையில்லை. அவ்வப்போது ஒரு ஜாங்கிரி, ஒரு மாம்பழம் என்று சாப்பிடலாம், தவறில்லை' என்று அப்படி எப்போதாவது இனிப்பை சாப்பிட ஆரம்பித்தால் நம் சபலமும் நாக்கும் நம்மை சுலபமாக பள்ளத்தில் தள்ளி விடுகிறது. அவ்வப்போது உடம்பு வலி, கால் வலி, வயிற்றுப்பிரச்சனைகள் என்று சிறு சிறு தொந்தரவுகளும் கூடவே நம்மை பின் தொடரும். இனிப்பை அறவே தவிர்த்தால் இந்த சிறு சிறு பிரச்சினைகள் கொஞ்சம் கொஞ்சமாக உங்களை விட்டு விலகுவதை நீங்கள் உணர முடியும். சர்க்கரை சாப்பிடுவதால் ஏற்கனவே கோளாறான கணையம் இன்னும் பாதிப்பை அடையும். பீடா செல்கள் அதிகம் அழற்சி அடையும்.\nகாப்பி, டீ இவற்றில் செயற்கை இனிப்பூட்டியைச் சேர்ப்பது பற்றி இரு வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. அதனால் உங்கள் ம்ருத்துவரிடம் கேட்டுக்கொண்டு அதை உபயோகிப்பது நல்லது.\nஉடற்பயிற்சிகள் எல்லோராலும் செய்ய இயலாது. அதனால் தினமும் ஓரளவு வேகமாக நடைப்பயிற்சியை மேற்கொள்ளுவது நல்லது. சில வகை யோகா பயிற்சிகள் சர்க்கரை நோய்க்கும் இரத்த அழுத்தத்திற்கும் மிக அருமையாகக் கை கொடுக்கின்றன. தகுந்த ஆசிரியர் மூலம் இந்த யோகாசங்களிளை செய்யலாம். தனுராசனம் என்ற யோகாசனம் சர்க்கரை நோய்க்கு மிகவும் நல்லது. இரத்த அழுத்தம் குறைய மிக எளிமையான பயிற்சியை நான் ஏற்கனவே என் பதிவில் விவரித்துள்ளேன். அதன் இணைப்பை இத்துடன் கொடுத்திருக்கிறேன்.\nஇடுகையிட்டது மனோ சாமிநாதன் நேரம் 23:10\nஅதீத அக்கறையுடன் விரிவானப் பதிவாகத்\nஉபயோகமான பதிவு சகோதரி. நன்றி\nஉணவுப்பட்டியல் உட்பட அனைத்தும் பயனுள்ள தகவல்கள்... நன்றி...\nசர்க்கரை குறைப்பாடு உடையவர்களுக்கு பயன் தரும் குறிப்புக்கள் தந்தமைக்கு நன்றி \n#சேமிக்கக் கூடிய தன்மை #இது செரிக்கக்கூடிய தன்மை என்றிருக்க வேண்டுமென நினைக்கிறேன் ,சரிதானே மேடம் \nசர்க்கரை குறைபாடு உள்ளவர்களுக்கு நல்ல பயனுள்ள குறிப்பு அக்கா.\nஎனது பதிவு கூழ் வத்தலை நேரம் கிடைக்கும் போது பார்வையிட வாருங்கள்.\nமிகவும் பயனுள்ள செய்திகள். பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றிகள். தங்களின் ஆலோசனைகள் தொடரட்டும். வாழ்த்துகள்.\nமிக அருமை மனோ மேம். எனக்கு சர்க்கரை இல்லை. ஆனா காலையில் காஃபி குடிக்கும்போது ஒரு மாதிரி எதிர்க்கும். ஏனென்று தெரியவில்லை. ஒரு வேளை சர்க்கரை இருக்கோ என்னவோ டெஸ்ட் செய்யணும்\nசக்கரை நோய் பற்றிய மிகசிறந்த விழிப்புணர்வு ஆக்கம் பாராட்டுகள்\nஅனைவருக்கும் பயனுள்ள பதிவாக, யோசித்து பல விவரங்களைத் திரட்டித் தந்துள்ளீர்கள். நன்றி.\nஅவசியமான தகவலை அருமையாகத் தொகுத்து அளித்துள்ளீர்கள். அனைத்தும் பயனுள்ளவை. மிக்க நன்றி பதிவுக்கு வ்லதுக்கள் தொடர\nமிக அருமையான பகிர்வு மனோ அக்கா\nஎப்படி இருக்கீங்க நல்ல இருக்கிறீர்களா\nமிகவும் பயனுள்ள பதிவு சகோதரியாரே\nஇனிய பாராட்டிற்கும் நல்வாழ்த்துக்களுக்கும் அன்பு நன்றி சகோதரர் ரமணி\nவருகைக்கும் கருத்துரைக்கும் இனிய நன்றி கிரேஸ்\nஇனிய கருத்துரைக்கு அன்பு நன்றி தனபாலன்\n//���ர்க்கரை குறைப்பாடு உடையவர்களுக்கு பயன் தரும் குறிப்புக்கள் தந்தமைக்கு நன்றி \n#சேமிக்கக் கூடிய தன்மை #இது செரிக்கக்கூடிய தன்மை என்றிருக்க வேண்டுமென நினைக்கிறேன் ,சரிதானே மேடம் \n'' சர்க்கரையை சேமிக்கக் கூடிய தன்மை கொண்டதாக இருக்க வேண்டும்.'' என்று நான் எழுதியிருக வேண்டும். 'சர்க்கரையை' என்ற வார்த்தையை விட்டு விட்டேன். அதனால் தவறுதலாக புரிந்து கொள்ள‌ப்பட்டு விட்டது. இப்போது பிழையை சரி செய்து விட்டேன்.\nவருகைக்கும் கருத்துரைக்கும் என் பிழையை சுட்டிக்காண்பித்ததற்கும் இனிய நன்றி\nவருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி சாரதா\nதஞ்சைக்குக் கிளம்பிக்கொண்டிருப்பதால் உங்கள் வலைத்தளம் உட்பட மற்ற‌ வலைத்தளங்களுக்கும் செல்ல முடியவில்லை. விரைவில் வருகிறேன்.\nவருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி தேனம்மை காலையில் காப்பி குடிப்பது ஒத்துக்கொள்ள‌வில்லையெனில் அது காஸ் பிரச்சினையாகத்தான் அநேகமாக இருக்கும். சர்க்கரையாக இருக்காது என்று தான் தோன்றுகிறது.\nபாராட்டுக்களுக்கும் இனிய வாழ்த்துக்களுக்கும் அன்பு நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்\nபாராட்டுக்களுக்கு அன்பு நன்றி மாலதி\nகருத்துரைக்கு அன்பு நன்றி கில்லர்ஜி\nஇனிய பின்னூட்டத்திற்கு அன்பு நன்றி சகோதரர் ஜம்புலிங்கம் நீங்கள் சொல்லியுள்ள‌து உண்மை தான் நீங்கள் சொல்லியுள்ள‌து உண்மை தான் இந்த பதிவிற்காக நான் நிறைய நேரத்தை செலவழித்திருக்கிறேன். காரணம் அனைவருக்கும் இந்தப் பதிவு பயனுள்ள‌தாக இருக்க வேண்டுமென்ற ஒரே நோக்கம் தான்\nபாராட்டிற்கு அன்பு நன்றி ஜனா\nவருகைக்கும் இனிய பாராட்டிற்கும் அன்பு நன்றி இனியா\n நான் நலமே. நீங்கள் நன்றாக இருக்கிறீர்களா ரொம்ப‌ நாட்களுக்குப்பிறகு வந்த உங்கள் பின்னூட்டம் மிகவும் மகிழ்ச்சியைக்கொடுத்தது\nஇனிய பாரட்டிற்கு அன்பு நன்றி தனிமரம்\nவருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி சகோதரர் ஜெயக்குமார்\nவருகையாளருக்கு நல்வரவேற்பும் அன்பு வந்தனங்களும்\nவருகையாளருக்கு இதோ கூடை நிறைய வாசமிகு மலர்கள்\nசர்க்கரை நோய் -பாகம் 2\nமேனகா, ஜலீலாவிற்கு அன்பு நன்றி\nசினேகிதி வேதா, சகோதரர் கோபாலகிருஷ்ணனுக்கு அன்பு நன்றி\nசகோதரி ஆசியாவிற்கு அன்பு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-10-19T13:12:21Z", "digest": "sha1:ZTWNLQ7VTF6P2ADG7BT4Z4HRBX4IC4VN", "length": 44953, "nlines": 137, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "நுண்ணுயிரியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\nநுண்ணுயிரியல் (இலங்கை வழக்கு: நுண்ணங்கியியல்; ஆங்கிலம்: Microbiology) என்பது நுண்ணுயிர் அவை சார்ந்த அனைத்தையும் பற்றிய படிப்பாகும். இதில் நிலை/மெய்க்கருவிலியான பாக்டீரியாக்களிலிருந்து மெய்க்கருவுயிர்களான பூஞ்சை, பாசி, மூத்தவிலங்கிகளும் அடங்கும். இதில் தீநுண்மங்களைச் சார்ந்த படிப்புகளும் அடங்கும். இவைகளை ஆங்கிலத்தில் மைக்ரோ ஒர்கனிசம்சு (கிரேக்க மொழியில்,μῑκρος mīkros என்றால் \"நுண்ணிய\",βίος bios என்றால் \"உயிர்\", மற்றும் -λογία -logia) நுண்ணுயிர்கள் என்பவை ஒற்றை செல் அல்லது கொத்து-செல்களாலான நுண்ணோக்கி வகை உயிரினங்களாகும்.[1] பூஞ்சைகள் மற்றும் அதிநுண்ணுயிரிகள் (புரோடிஸ்ட்கள்) போன்ற யூகேரியோட்டுகள் மற்றும் புரோகேரியோட்டுகள் இதில் அடங்கும். வைரஸ்கள், வாழும் உயிரினங்களாக தெளிவுற வகைப்படுத்தப்படவில்லை என்றாலும், அவையும் படிக்கப்படுகின்றன.[2] சுருக்கமாக நுண்ணுயிரியல் என்பது வெறும் கண்ணுக்குப் புலப்படாத அளவுக்கு சிறியதாய் இருக்கும் வாழ்க்கை மற்றும் உயிரினங்கள் குறித்த கல்வியைக் குறிக்கிறது. நுண்ணுயிரியல் பொதுவாக நோய்த்தடுப்பு அமைப்பு பற்றிய கல்வி, அல்லது நோய்த்தடுப்பியல் கல்வியை அடக்கியதாகும். பொதுவாக நோய்த்தடுப்பு அமைப்புகள் நோய் விளைவிக்கும் நுண்கிருமிகளைக் கையாளுகின்றன; இந்த இரண்டு படிப்புகளுமே ஒன்றுடன் ஒன்று குறுக்கிடுபவையாகும், அதனால் தான் தான் பல கல்லூரிகளும் இரண்டும் இணைந்த \"நுண்ணுயிரியல் மற்றும் நோய்த்தடுப்பியல்\" போன்ற பட்டப் படிப்புகளை வழங்குகின்றன.\nநுண்ணுயிரிகள் நிரம்பிய ஒரு நுண்ணுயிரி வளர்ப்புத்தட்டு\nநுண்ணுயிரியல் என்பது வைராலஜி, பூஞ்சையியல், ஒட்டுண்ணியியல், பாக்டீரியாவியல் மற்றும் பிற பிரிவுகளை அடக்கிய ஒரு விரிந்த சொல்லா���ும். நுண்ணுயிரியலாளர் என்பவர் நுண்ணுயிரியலில் நிபுணத்துவம் பெற்றவாராவார்.\nஅதி பயங்கர வைரஸ் கிருமியை தகுந்த பாதுகாப்பு முறைகளுடன் கையாளும் நுண்ணுயிரியலாளர்\nநுண்ணுயிரியல் செயலூக்கத்துடன் ஆய்வு செய்யப்படுகிறது. அத்துடன் இந்த துறை தொடர்ந்து முன்னேறி வருகிறது. பூமியில் இருக்கும் நுண்ணுயிர்கள் அனைத்திலும் சுமார் ஒரு சதவீதம் பற்றி மட்டுமே நாம் அநேகமாகக் கற்றிருக்கிறோம் என்று கூறலாம்.[3] சுமார் முந்நூறு ஆண்டுகளுக்கும் மேலாக நுண்ணுயிர்கள் நேரடியாகவே ஆய்வு செய்யப்படுகின்றன என்ற போதிலும், விலங்கியல் மற்றும் தாவரவியல் போன்ற பழமைப்பட்ட உயிரியல் பிரிவுகளுடன் ஒப்பிடுகையில் நுண்ணுயிரியல் துறை தனது குழந்தைப் பருவத்தில் தான் இருக்கிறது என்று நாம் கூறலாம்.\nநுண்ணுயிரிகள் இருக்கின்றன என்பது, 17 ஆம் நூற்றாண்டில் அவை உண்மையாகக் கண்டறியப்படும் முன்பே, பல நூற்றாண்டுகளாக அனுமானிக்கப்பட்டு வந்ததாகும். கிமு 600 ஆம் ஆண்டில், புராதன கால இந்திய அறுவைச் சிகிச்சை நிபுணரான சுஸ்ருதா பல்வேறு நோய்களுக்கும் நுண்ணுயிரிகள் காரணமாக இருக்கின்றன என்பதையும் அவை தொடுவதன் மூலமும், காற்று அல்லது நீர் மூலமும் பரவ முடியும் என்பதையும் சுஸ்ருதா சமிதாவில் விளக்கினார். நுண்ணுயிர்கள் குறித்த சித்தாந்த கருத்துகள் ரோமானிய அறிஞரான மார்கஸ் டெரென்சியஸ் வர்ரோ எழுதிய ஆன் அக்ரிகல்சர் என்கிற புத்தகத்தில் இடம்பெற்றன. நீர்தேங்கிய இடங்களின் அருகில் குடியிருக்கும் இடம் அமைவதற்கு எதிராக அவர் அதில் எச்சரிக்கிறார். கண்ணுக்கு புலப்படாத உயிரினங்களால் பரவக் கூடிய நோய்கள் குறித்த விழிப்புணர்வு பழங்காலத்தில் இருந்தது என்பதையே இது சுட்டிக் காட்டியது.\nஉடல் சுரப்பு தொற்றுறும் முன்னதாக பூமியிலிருக்கும் அசுத்தமான வெளிப் பொருட்களால் அசுத்தமுறுவதாக தி கேனான் ஆஃப் மெடிசின் புத்தகத்தில் அவிசெனா (Abū Alī ibn Sīnā) கூறினார்.[4] ஆஸ்துமா மற்றும் பிற தொற்று நோய்களின் தொற்றும் தன்மை குறித்தும் அவர் அனுமானம் செய்திருந்தார். தொற்றுநோய்கள் பரவுவதைக் குறைக்கும் ஒரு வழியாக தனிமைப்படுத்தி வைப்பதை பயன்படுத்தினார்.[5]\n14 ஆம் நூற்றாண்டில், கறுப்பு மரண புபோனிக் பிளேக் அல்-அன்டலஸை எட்டிய சமயத்தில், \"நுண்ணிய பொருட்கள்\" மனித உடலுக்குள் நுழைந்த��� நோய்க்கு காரணமாவதால் தான் தொற்று நோய்கள் ஏற்படுகின்றன என்று இப்ன் கதிமா அனுமானம் செய்தார்.[4]\nபரவத்தக்க விதைபோன்ற பொருட்களால் தான் தொற்று நோய்கள் ஏற்படுகின்றன. இந்த பொருட்கள் நோய்த் தொற்றினை நேரடி அல்லது மறைமுக தொடர்பின் வழியாகவோ அல்லது நெடுந் தொலைவுகளில் இருந்து நேரடித் தொடர்பு இல்லாமலும் கூட பரவச் செய்ய முடியும் என்று 1546 ஆம் ஆண்டில் கிரோலமோ ஃப்ரகஸ்டோரோ கூறினார்.\nநுண்ணுயிர்கள் இருப்பது பற்றிய இந்த ஆரம்ப கால கூற்றுகள் எல்லாம் ஊக அடிப்படையிலானவையாக இருந்தன. எந்த தரவு அல்லது அறிவியலையும் அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை. 17 ஆம் நூற்றாண்டு வரை நுண்ணுயிரிகள் நிரூபிக்கப்பட்டோ ஆய்வு செய்யப்பட்டோ இருக்கவில்லை. அல்லது சரியாகவும் துல்லியமாகவும் விவரிக்கப்பட்டும் இருக்கவில்லை. இதற்குக் காரணம், இந்த ஆய்வுகள் அனைத்திலுமே, நுண்ணுயிரியலும் பாக்டீரியாவியலும் ஒரு அறிவியலாக உயிர்வாழ்வதற்கு மிக அடிப்படை அவசியமான நுண்ணோக்கி என்கிற ஒரு கருவி இல்லாதிருந்ததே ஆகும்.\nஆன்டனி வான் லீவென்ஹோக், முதல் நுண்ணுயிரியல் விஞ்ஞானி மற்றும் முதன்முதலில் நுண்ணுயிரிகளை நுண்ணோக்கி கொண்டு ஆய்வு செய்தவர். 'நுண்ணுயிரியலின் தந்தை' என்று அழைக்கப்படுகிறார். இவர் நுண்ணோக்கியை கண்டுபிடிக்கவில்லை என்றாலும், அதனை பெருமளவில் மேம்படுத்தினார்.\nபாக்டீரியா, மற்றும் பிற நுண்ணுயிரிகளை, 1676 ஆம் ஆண்டில் ஆன்டன் வான் லீவென்ஹோக், தானே சொந்தமாய் வடிவமைத்த ஒற்றை-லென்ஸ் நுண்ணோக்கி மூலம் முதன்முதலில் ஆராய்ந்தார். இந்த செயலின் மூலம் உயிரியலில் மிக முக்கிய கண்டுபிடிப்புகளில் ஒன்றை உருவாக்கிய லீவென்ஹோக் பாக்டீரியாவியல் மற்றும் நுண்ணுயிரியல் போன்ற அறிவியல் துறைகளுக்கும் முன்முயற்சியளித்து விட்டார்.[1] \"பாக்டீரியம்\" என்கிற பெயர் அதற்கு வெகு காலத்திற்கு பின் தான் 1828 ஆம் ஆண்டில் எரென்பெர்க் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டது. \"சிறு குச்சி\" என்னும் பொருள் கொண்ட βακτηριον என்னும் கிரேக்க வார்த்தையில் இருந்து அதனைத் தேற்றம் செய்தார். பெரும்பாலும் வான் லீவென்ஹோக் தான் முதல் நுண்ணுயிரியல் விஞ்ஞானியாகக் குறிப்பிடப்படுகிறார் என்றாலும், பழப் பொருட்களின் மீதான பூஞ்சைகள் குறித்ததான முதல் பதிவு செய்யப்பட்ட நுண்ணுயிரியல் ஆய்வு ���தற்கு வெகுகாலம் முன்பே ராபர்ட் ஹூக் மூலம் 1665 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டிருந்தது.[6]\nபாக்டீரியாவியல் துறை (பின்னர் நுண்ணுயிரியலின் துணைத் துறையாக ஆனது) பொதுவாக ஃபெர்டினான்ட் கோன் (1828-1898) மூலம் நிறுவப்பட்டதாகக் கருதப்படுகிறது. ஒரு தாவரவியல் விஞ்ஞானியான இவர் நீர்ப்பாசிகள் மற்றும் ஒளிச்சேர்க்கை பாக்டீரியாக்களில் செய்த ஆய்வு பாசிலஸ் மற்றும் பெகியடோவா உள்ளிட்ட பல பாக்டீரியாக்களை விவரிக்கும் திறனுக்கு இட்டுச் சென்றது. பாக்டீரியா குறித்த வகைப்பாட்டியல் வரைமுறைக்கான ஒரு திட்டத்தை முதலில் ஏற்படுத்தியவரும் கோன் தான்.[7] லூயிஸ் பாஸ்சர் (1822-1895) மற்றும் ராபர்ட் கோச் (1843- 1910) ஆகியோரும் கோனின் சம காலத்தவரே. இவர்கள் மருத்துவ நுண்ணுயிரியலின் ஸ்தாபகர்களாக பல சமயங்களில் குறிப்பிடப்படுவதுண்டு.[8] அப்போது பரவலாக இருந்த தன்னிச்சையான தலைமுறை தத்துவத்தை தவறென நிரூபணம் செய்யவும், அதன்மூலம் ஒரு உயிரியல் விஞ்ஞானமாக நுண்ணுயிரியலின் அடையாளத்தை உறுதிப்படுத்தவும் நோக்கம் கொண்டு பல தொடர்ச்சியான பரிசோதனைகளை வடிவமைத்து பாஸ்சர் பெரும் புகழ் பெற்றார்.[9] உணவைப் பாதுகாக்கும் வழிமுறைகளையும் (பாஸ்சரைசேஷன்) ஆந்த்ராக்ஸ், கோழிக் காலரா மற்றும் வெறிநாய்க் கடி போன்ற பல்வேறு நோய்களுக்கான மருந்துகளையும் பாஸ்சர் கண்டறிந்தார்.[1] நோய்க்கான கிருமி சித்தாந்தத்திற்கு தான் செய்த பங்களிப்பின் மூலம் கோச் மிகவும் அறியப்பட்டார். குறிப்பிட்ட நோய்கள் குறிப்பிட்ட நோய்க்காரண நுண்கிருமிகளால் தான் உண்டாகின்றன என்பதை அவர் நிரூபணம் செய்தார். கோச் ஏராளமான தகுதிவகைகளை அபிவிருத்தி செய்தார். இவை கோச்'சின் அடிக்கோள்கள் என்று அழைக்கப்படுகின்றன. நுண்ணுயிர் வளர்ப்பில் பாக்டீரியாக்களை மட்டும் தனிமைப்படுத்தி வளர்த்து ஆய்வு செய்த முதல் விஞ்ஞானிகளில் கோச்சும் ஒருவர். இதன் காரணத்தால் அவரால் ஆஸ்துமா நோய்க்கு காரணமாக இருக்கும் மைகோபாக்டீரியம் ட்யூபர்குளோசிஸ் உள்ளிட்ட பல்வேறு முக்கியமான பாக்டீரியாக்களை விவரிக்க முடிந்தது.[1]\nபாஸ்சர் மற்றும் கோச் ஆகியோர் தான் நுண்ணுயிரியலின் ஸ்தாபகர்கள் என்று பெரும்பாலும் கருதப்பட்டாலும், அவர்களது பணிகள் நுண்ணுயிர் உலகின் உண்மையான பன்முகத்தன்மையைத் துல்லியமாக பிரதிபலிக்கவில்லை. ஏனென்றா��் அவர்களின் பிரத்யேக கவனம் நேரடி மருத்துவத் தொடர்பு கொண்ட நுண்ணுயிர்கள் மீதே குவிந்திருந்தது. பொது நுண்ணுயிரியலின் (நுண்ணுயிர்களின் உடலியல், பன்முகத்தன்மை மற்றும் சூழலியல் அனைத்தையும் அடக்கிய பழைய சொற் பிரயோகம்) ஸ்தாபகர்களான மார்டினஸ் பெய்ஜெரிங்க் (1851 - 1931) மற்றும் செர்ஜி வினோகிராட்ஸ்கி (1856 - 1953) ஆகியோரது பணிகளுக்குப் பிறகு தான், நுண்ணுயிரியலின் உண்மை விஸ்தீரனம் புலப்பட்டது.[1] பெய்ஜெரிங்க் வைரஸ்களைக் கண்டறிந்தது மற்றும் செறிந்த நுண்ணுயிர் வளர்ப்பு தொழில்நுட்பங்களை அபிவிருத்தி செய்தது ஆகிய இரண்டு பெரும் பங்களிப்புகளை நுண்ணுயிரியலுக்கு செய்தார்.[10] டொபாகோ மொசைக் வைரஸ் மீதான இவரது பணி வைராலஜியின் அடிப்படை கோட்பாடுகளை ஸ்தாபித்தது. இவரது செறிந்த நுண்ணுயிர் வளர்ப்பு அபிவிருத்தி தொழில்நுட்பம், பரந்த மாறுபாடுகளுடனான உடலியல் கொண்ட பல்வேறுவகைப்பட்ட நுண்ணுயிர்களை செயற்கையாய் வளர்ப்பதற்கு அனுமதித்து நுண்ணுயிரியல் துறையில் மிகப்பெரும் தாக்கத்தை உடனடியாய் ஏற்படுத்தியது. வினோகிராட்ஸ்கி தான் கெமோலிதோடிராபி என்னும் கருத்தை முதலில் அபிவிருத்தி செய்தவராவார். இதன்மூலம் புவிவேதியியல் செயல்முறைகளில் நுண்ணுயிர்களின் அத்தியாவசிய பங்களிப்பை அவர் வெளிக்கொணர்ந்தார்.[11] முதன்முதலாக நைட்ரஜன் சேர்க்கை மற்றும் நைட்ரஜன் நிலைநிறுத்தும் பாக்டீரியாக்கள் இரண்டையுமே பிரித்தெடுக்கவும் விளக்கவும் திறன் பெற்றிருந்த முதல் விஞ்ஞானி இவரே.[1]\nநுண்ணுயிரியல் துறை பொதுவாக பல்வேறு துணைத் துறைகளாக பிரிக்கப்படலாம்:\nநுண்ணுயிர் உடலியல் : இது உயிர்வேதியியல்ரீதியாக நுண்ணுயிர் செல் எவ்வாறு செயல்படுகிறது என்பதைக் கற்கும் அறிவியல். நுண்ணுயிர் வளர்ச்சி, நுண்ணுயிர் வளர்சிதை மாற்றம் மற்றும் நுண்ணுயிர் செல் கட்டமைப்பு ஆகியவற்றை படிப்பதும் இதில் அடங்கும்.\nநுண்ணுயிர் மரபணுவியல் : இது நுண்ணுயிரிகளில் அவற்றின் செல் செயல்பாடுகளுக்கேற்ப மரபணுக்கள் எவ்வாறு ஒழுங்குபடுத்தப்படுகின்றன மற்றும் கட்டுப்படுத்தப்படுகின்றன என்பதைக் கற்கும் கல்வி. இது மூலக்கூறு உயிரியல் துறைக்கு மிக நெருக்கமுற்ற துறையாகும்.\nசெல் நுண்ணுயிரியல் : இது நுண்ணுயிரியலுக்கும் செல் உயிரியலுக்கும் பாலமாக இருக்கும் துறையாகும்.\nமருத்துவ நுண்ணுயிரியல் : இது நோய்க்காரண நுண்ணுயிர்கள் மற்றும் மனித நோய்களில் நுண்ணுயிர்களின் பங்கு ஆகியவை குறித்த கல்வியாகும். நுண்ணுயிர் நோய்தோன்றும் வகை மற்றும் தொற்றுநோயியல் கல்வியை இது அடக்கியிருக்கும். நோய்க் குறியியல் மற்றும் நோய்த்தடுப்பியல் கல்வியுடன் தொடர்புடையது.\nகால்நடை நுண்ணுயிரியல் : கால்நடை மருத்துவம் அல்லது விலங்கு வகைப்பாட்டியலில் நுண்ணுயிர்களின் பங்கு குறித்த கல்வி.\nசுற்றுச்சூழல் நுண்ணுயிரியல் : இது நுண்ணுயிர்களின் இயல்பான சூழலில் அவற்றின் செயல்பாடுகள் மற்றும் பன்முகத்தன்மை குறித்த கல்வி.\nபரிணாமகர நுண்ணுயிரியல் : நுண்ணுயிரிகளின் பரிணாமம் குறித்த கல்வி. பாக்டீரிய அமைப்பியல் மற்றும் வகைப்பாட்டியல் குறித்த கல்வியை அடக்கியது.\nதொழிலக நுண்ணுயிரியல் : தொழில்துறை செயல்முறைகளுக்கு பயன்படுத்துவதற்கேற்ற வகையில் நுண்ணுயிர்களை உபயோகப்படுத்துவது. தொழிலக நொதித்தல் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆகியவை இதன் உதாரணங்களில் அடங்கும். உயிரித்தொழில்நுட்பத் துறைக்கு மிகவும் நெருக்கமுற்ற துறையாகும். நுண்ணுயிரியலின் முக்கியமான பயன்பாடான நொதியாதலும் இந்த துறையில் அடங்கும்.\nவளிநுண்ணுயிரியல் : காற்றில் இருக்கும் நுண்ணுயிர்கள் குறித்த கல்வி.\nஉணவு நுண்ணுயிரியல் : உணவு கெட்டுப் போவதற்கும் உணவினால் வரும் நோய்களுக்கும் காரணமான நுண்ணுயிரிகள் குறித்த கல்வி. உணவுத் தயாரிப்பில் நுண்ணுயிர்களை பயன்படுத்துதல் (உதாரணமாய் நொதித்தல் செயல்முறை மூலம்) இதில் அடங்கும்.\nபார்மசூடிகல் மைக்ரோபயாலஜி : இது மருந்தாக்கம் கெட்டுப் போவதற்கும் மோசமுறுவதற்கும் காரணமாகும் நுண்ணுயிர்கள் பற்றிய கல்வி ஆகும். (நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பிற்கான மையத்தில் அநேக பணியிடங்களுக்கு நுண்ணுயிரியலில் பட்டம் பெற்றிருப்பது அவசியமாயிருக்கிறது).\nஈஸ்டுகளுடனான நொதித்தல் தொட்டிகள் பீர் காய்ச்ச பயன்படுத்தப்படுகிறது\nபல்வேறு மனித நோய்களுடன் சில நுண்ணுயிரிகள் தொடர்புபடுத்தப்படுவதால் எல்லா நுண்ணுயிர்களையும் பார்த்து சிலர் பயப்படுகிறார்கள். என்றாலும், தொழிலக நொதித்தல் செய்முறை நுட்பம் (உ-ம். ஆல்கஹால், வினிகர் மற்றும் பால் பொருட்கள் தயாரிப்பு), எதிர்-உயிரி உற்பத்தி, மற்றும் தாவரங்கள் போ��்ற உயர் உயிரினங்களில் குளோனிங் சோதனைக்கு முன்னோட்ட வாகனமாகச் செயல்படுவது போன்ற ஏராளமான நன்மை பயக்கும் செயல்முறைகளுக்கும் பல நுண்ணுயிரிகள் காரணமாய் இருக்கின்றன.\nதொழில்துறையில் அமினோ அமிலங்கள் தயாரிக்க பாக்டீரியா பயன்படுத்தலாம். வருடத்திற்கு இரண்டு மில்லியன் டன்களுக்கும் அதிகமான அமினோ அமிலங்கள், முக்கியமாக L-க்ளுடமேட் மற்றும் L-லைசின், தயாரிக்க அவசியமான மிக முக்கிய பாக்டீரியா உயிரினங்களில் ஒன்றாக கோரினெபாக்டீரியம் க்ளூடமிகம் இருக்கிறது.[12]\nபாலிசாகரைடுகள், பாலியெஸ்டர்கள், மற்றும் பாலியமைடுகள் போன்ற பல்வேறு வகை பயோபாலிமர்களும் நுண்ணுயிர்களால் உற்பத்தி செய்யப்படுகின்றன. திசு பொறியியல் மற்றும் மருந்து செலுத்தம் போன்ற உயர்-மதிப்பு மருத்துவ பயன்பாடுகளுக்கு பொருத்தமான மிகச்சரியான குணங்களுடனான பயோபாலிமர்களை உயிரிதொழில்நுட்பரீதியாக உற்பத்தி செய்ய நுண்ணுயிர்கள் பயன்படுத்தப்படுகின்றன.[13]\nவீட்டு, விவசாய மற்றும் தொழில்துறை கழிவுகள் மற்றும் மண், சகதி மற்றும் கடல்சார் சூழல்களில் பரப்பின்கீழிருக்கும் அசுத்தம் ஆகியவற்றை நுண்ணுயிர்நுட்பம் மூலம் சிதைவுறச் செய்வதற்கும் (பயோடிகிரேடேஷன்) மற்றும் பயோரீமீடியேஷன் செயல்முறைக்கும் நுண்ணுயிர்கள் உதவி புரிகின்றன. நச்சுக் கழிவுகளை கொல்லும் ஒரு நுண்ணுயிரின் திறனானது ஒவ்வொரு அசுத்தத்தின் தன்மையைப் பொறுத்ததாகும். பொதுவாக மாசுபாட்டு தளங்களில் பலவகை மாசுபாட்டு வகைகளும் ஒன்றாய் இருக்கும் என்பதால், நுண்ணுயிர்வகை சிதைவுக்கு மிகத் திறம்பட்ட அணுகுமுறை என்னவென்றால், ஒன்று அல்லது கூடுதல் வகையான அசுத்தங்களை சிதைவுறச் செய்யும் பல்வேறு பாக்டீரியா வகைகள் மற்றும் இனப்பிரிவுகளின் ஒரு கலவையை பயன்படுத்துவதாகும்.[14]\nபுரோபயாடிக்குகள் (ஜீரண அமைப்புக்கு நன்மை பயக்கும் திறனுற்ற பாக்டீரியா) மற்றும்/அல்லது ப்ரீபயாடிக்குகள் (புரோபயாடிக் நுண்ணுயிர்களின் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக உட்கொள்ளப்படும் பொருட்கள்) உட்கொள்வதன் மூலம் மனித மற்றும் விலங்குகளின் ஆரோக்கியத்திற்கும் நுண்ணுயிர்கள் பங்களிப்பு செய்வதாகவும் பல்வேறு கூற்றுகள் தெரிவிக்கின்றன.[15]\nநுண்ணுயிரிகள் புற்றுநோய் சிகிச்சையிலும் பயனளிக்க முடியும் என்று சமீபத்திய ஆய்வுகள் சுட்டிக் காட்டியுள்ளன. நோய் விளைவிக்காத க்ளோஸ்ட்ரிடாவின் பல்வேறு இனப்பிரிவுகளும் திடப்பட்ட புற்றுகளுக்குள் ஊடுருவி தன்னை பெருக்கிக் கொள்ள முடியும். க்ளோஸ்ட்ரிடல் வெக்டார்கள் பாதுகாப்பாக நிர்வகிக்கப்பட முடியும் என்பதோடு அவை மருத்துவகுணமுற்ற புரதங்களை வழங்கும் திறனுற்றவையாகும் என்பது பல்வேறு மருத்துவபரிசோதனை மாதிரிகளில் விளங்கப்படுத்தப்பட்டுள்ளது.[16]\n\". பார்த்த நாள் 2007-07-23.\nநுண்ணுயிரியல் துறையில் முக்கிய வெளியீடுகள்\nவிக்கிப்பல்கலைக்கழகத்தில் நீங்கள் இது பற்றி கற்றுக்கொள்ளவும், கற்பிக்கவும் நுண்ணுயிரியல் பார்க்கவும்:\nMicrobiology Online பரணிடப்பட்டது 2010-04-17 at the வந்தவழி இயந்திரம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 ஆகத்து 2021, 00:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/oru-kutti-kathai", "date_download": "2021-10-19T13:05:54Z", "digest": "sha1:3LMBL5FMVH2THSEIP7VVGTJXDMRUKA3I", "length": 7624, "nlines": 92, "source_domain": "tamil.asianetnews.com", "title": "oru kutti kathai: Latest News, Photos, Videos on oru kutti kathai | tamil.asianetnews.com", "raw_content": "\nஅஜித் ஃபேன்ஸ் முதல் ஐ.டி. ரெய்டு வரை... \"குட்டி கத\" சொல்லி கதற விட்ட மாஸ்டர் விஜய்...\nஏற்கனவே அறிவித்திருந்த படி காதலர் தினத்தை முன்னிட்டு இன்று வெளியாகியுள்ள ''குட்டி கத'' லிரிக் வீடியோவில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளார் விஜய்.\nஅனிருத்தே சொல்லிட்டாரே... துள்ளி குதிக்கும் தளபதி ரசிகர்கள்... \"குட்டி கத\" கேட்க மரண வெயிட்டிங்...\nஅப்படத்தின் இசையமைப்பளாரான அனிருத் போட்ட ட்வீட்டால் செம்ம கொண்டாட்டத்தில் இருக்கின்றனர்.\nஇப்போ வாங்கய்யா சண்டைக்கு... வாண்டடா வம்பிழுக்கும் விஜய்... \"மாஸ்டர்\" போஸ்டரில் இதை கவனித்தீர்களா\nஅதில் என்ன பிரச்சனை என்று கேட்கிறீர்களா.... அதுல எந்த பிரச்சனையும் இல்ல. அதுக்காக படக்குழு வெளியிட்ட ''மாஸ்டர்'' போஸ்டரில் தான் பெரிய சிக்கலே மறைந்திருக்கிறது.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகோவிட் மூன்றாவது அலையில் இருந்து நம்மை காத்து கொள்ள சுயபரிசோதனை கருவியே நமக்கு தேவை \nபலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய விளையாட்டு வீரர்கள் \n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய கலைஞர்கள்\nமஹசூஸ் வெற்றியாளர் ஏசியாநெட் நியூஸ் தமிழுக்கு அளித்த பேட்டி\nகோவிட் மூன்றாவது அலையில் இருந்து நம்மை காத்து கொள்ள சுயபரிசோதனை கருவியே நமக்கு தேவை \nபலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய விளையாட்டு வீரர்கள் \nராகுல்காந்தி போதைப்பொருள் கடத்தல்காரர்…. கடுமையாக விமர்சித்த பா.ஜ.க. தலைவர்..\nமனைவிக்கு இன்னொரு புருசனை தேடிய முதல் கணவன்…. இதுதான் காரணமாம்…\nபேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் ஆப்புதான்.. அமைச்சர் ராஜகண்ணப்பன் எச்சரிக்கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thaaiman.com/2021/01/9.html", "date_download": "2021-10-19T11:59:19Z", "digest": "sha1:IQJTI73CPVPCCXGRXKR64QACFOL27IUY", "length": 3968, "nlines": 65, "source_domain": "www.thaaiman.com", "title": "கொரோனத் தடுப்பு ஊசி போட்டவர்கள் 9 பேர் சாவு - தொடர்பில்லை என்கின்றது அரசு!! - THAAIMAN", "raw_content": "\nHome / Unlabelled / கொரோனத் தடுப்பு ஊசி போட்டவர்கள் 9 பேர் சாவு - தொடர்பில்லை என்கின்றது அரசு\nகொரோனத் தடுப்பு ஊசி போட்டவர்கள் 9 பேர் சாவு - தொடர்பில்லை என்கின்றது அரசு\nPfizer/BioNTech கொரோனத் தடுப்பு ஊசியின் முதல் அலகு ஊசிகளைப் போட்டுக் கொண்ட ஒன்பது வயதானவர்கள் சாவடைந்துள்ளார்கள்.\nஇவர்களின் சாவுகளிற்கும் கொரோனத் தடுப்பு ஊசிகளிற்கும் எந்நதவித் சம்பந்தமும் இல்லை இல்லை என மருந்துகளிற்கான தேசிய நிறுவனம் தெரிவித்துள்ளது.\nதற்போதுள்ள தரவுகளின்படி, இவர்களின் சாவுகளிற்கும் கொரோனத் தடுப்பு ஊசிகளிற்கும், எந்நதத் தொடர்புகளும் உறுதிப்படுத்தப்படவில்லை என, மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்களிற்கான தேசியப் பாதுகாப்பு நிறுவனமான ANSM (Agence nationale de sécurité du médicament et des produits de santé) தெரிவித்துள்ளது.\nஇவர்கள் ஒன்பது பேரும் வயது முதிர்ந்தவர்கள் என்றும், மற்றவர்களின் உதவியுடன் தங்கி வாழும் முதியோர் இல்லங்களான EHPAD (établissement d’hébergement pour personnes âgées dépendantes) என்றும், பல தீவிர நோய்களிற்காகச் சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தவர்கள் எனவும் ANSM தெரிவித்துள்ளது.\nஇதுவரை தடுப்பு ஊசிகள் போடப்பட்டுள்ள 823.000 பேரில், இதுவரை 135 பக்கவிளைவுகள் மட்டுமே பதிவாகி உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanjai.today/%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2021-10-19T12:13:05Z", "digest": "sha1:UP4OQI5CI7TDB26ZE65AHZWOFSVMQONX", "length": 7169, "nlines": 125, "source_domain": "www.thanjai.today", "title": "தஞ்சை திருவள்ளுவர் திரையரங்கம் இடிப்பு | தஞ்சை டுடே thanjai.today", "raw_content": "\nதஞ்சை திருவள்ளுவர் திரையரங்கம் இடிப்பு\nதஞ்சை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டங்கள் நடை பெற்று வருகின்றது அதில் ஒரு பகுதியாக தஞ்சையில் இயங்கி வந்த திருவள்ளுவர் திரையரங்கம் இடிக்கப்பட்டு அதில் வணிக வளாகம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.\nசுமார் 63 கோடி மதிப்பிட்டில் இந்த வணிக வளாகம் கட்டப்பட்டு வருகின்றது, இந்த வணிக வளாகம் கட்டிய பின் பல்வேறு வணிக நிறுவனங்கள் ‍‍ஒரே இடத்தில் இயங்கும் இதனால் பொது மக்கள் பலன் அடைவார்கள் என்று தஞ்சை நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nதொடர் மழையில் வீணாகும் விளைந்த பயிர்கள்\nமாமன்னர் இராஜராஜன் பிறந்த நாள் விழா\nஉழவர்களுக்கு மின் இணைப்பை 4 மாதத்திற்குள் வழங்க நடவடிக்கை அமைச்சர் பேச்சு\nதஞ்சை மாவட்டத்தில் நடந்த 5வது கட்ட தடுப்பூசி முகாம்\nதஞ்சை ஆட்சியர் அலுவலகத்தில் ‍உ.பி. விவசாயிகள் படுகொலையை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்\nவிபத்து இல்லா தீபாவளியாக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் தீயணைப்புத்துறை மாவட்ட அலுவலர்\nகட்டுமான பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த ஏஐடியூசி வலியுறுத்தல்\nமாடித்தோட்ட சாகுபடியால் உடல் நிலையில் முன்னேற்றம் பெறலாம்; முதல்வர் வேலாயுதம்\nமுதல்வர் முன்னெடுப்பு திருவாரூர் காரைக்குடி ரயில் சேவை துவக்கம்; எம்பி பழனிமாணிக்கம்\nபள்ளி மாணவர்களுக்கு வரும் அக் 25, 26ம் தேதிகளில் கலைப்போட்டிகள்\nசமூகம் தஞ்சை நகரச்செய்தி மாநகரச் செய்தி\nவிபத்து இல்லா தீபாவளியாக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் தீயணைப்புத்துறை மாவட்ட அலுவலர்\nஅரசியல் தஞ்சை நகரச்செய்தி மாநக��ச் செய்தி\nகட்டுமான பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த ஏஐடியூசி வலியுறுத்தல்\nதஞ்சை நகரச்செய்தி மாநகரச் செய்தி வேளாண்மை\nமாடித்தோட்ட சாகுபடியால் உடல் நிலையில் முன்னேற்றம் பெறலாம்; முதல்வர் வேலாயுதம்\nசமூகம் தஞ்சை நகரச்செய்தி மாநகரச் செய்தி\nமுதல்வர் முன்னெடுப்பு திருவாரூர் காரைக்குடி ரயில் சேவை துவக்கம்; எம்பி பழனிமாணிக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/food/recipes/90701-", "date_download": "2021-10-19T12:04:34Z", "digest": "sha1:IEBWIIYWUHPQXNVXVC7U6ISKNYF2CIND", "length": 9391, "nlines": 218, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 14 January 2014 - ஆச்சி மசாலா வாசகிகள் கைமணம் | readers cookin - Vikatan", "raw_content": "\nஎன் டைரி - 319\nபுதிதாகத் தொழில் தொடங்க கைகொடுக்கும் ‘நண்பன்’\nமலர் சிந்தும் மனசு - 6\nஉங்கள் தட்டில் உணவா... விஷமா\nஆனந்தம் விளையாடும் வீடு 5\nஜாலி டே - தூத்துக்குடி\nஹலோ விகடன் - கலங்காதிரு மனமே\nகாப்பர் டி... உயிரையே பறிக்குமா\nமிஸ்டு கால் பத்மா பாட்டி\n‘சொய்ங்... சொய்ங்...’ அருவா சத்தம் கொடுத்த அடையாளம்\n“பேரனோட காலர் டியூன்... கொலுசுக்கடை ஓரத்திலே”\n“கன்னுக்குட்டி கொம்புல 2 கிராம் மோதிரம்... பங்கு போட்டுக்க 15 பேர் மோதுறோம்\n''என் வாழ்க்கையே... ஓட்டமும் நடையும்தான்\nகொஞ்சம் மூலதனம்+நிறைய கற்பனைத் திறன்... சூப்பர் லாபம்\n30 வகை கிராமிய சமையல்\nஆச்சி மசாலா வாசகிகள் கைமணம்\nமதுரை - பருத்திப்பால் | கோயம்புத்தூர் காளான் மசாலா | ஸ்பெஷல் வடை - நம்ம ஊர் வீக் எண்ட் ரெசிப்பீஸ்\nமசாலா வடகறி வீட் பீட்சா | சீஸ் - எக் குழிப்பணியார பீட்சா - பீட்சா ஸ்பெஷல் வீக் எண்ட் ரெசிப்பீஸ்\nபனிவரகு பிரெட் கட்லெட் | உருளைக்கிழங்கு கம்பு தட்டை - சிறுதானிய ஸ்பெஷல் வீக் எண்ட் ரெசிப்பீஸ்\nநவராத்திரி ஸ்பெஷல் - சுவையான பாயசம்... மணமணக்கும் சாம்பார் சாதம்... சிறுதானிய ரெசிப்பிகள்\nஇத்தாலியன் க்ரீம் சோடா | ப்ருசெட்டா | லாசானியா - இத்தாலியன் ஸ்பெஷல் வீக் எண்ட் ரெசிப்பீஸ்\nவெஜ் பரோட்டா சிப்ஸ் | டபுள் டெக்கர் தோசை | ஸ்பைரல் பொட்டேட்டோ - வெரைட்டியான வீக் எண்ட் ரெசிப்பீஸ்\nவிரால் மீன் ரோஸ்ட் | இறால் மசால் | நாட்டுக்கோழி சாப்ஸ் | நண்டு மசால் - கார சார வீக் எண்ட் ரெசிப்பீஸ்\nவிநாயகர் சதுர்த்தி: வீட்டில் செய்ய 13 வகையான கொழுக்கட்டை ரெசிப்பீஸ் இதோ\nபிரவுன் ரைஸ் போமகிரனேட் மூஸ் | காஷ்மீரி பிர்னி | சாக்லேட் சூஃப்ளே - வீக் எண்ட் ரெசி���்பீஸ்\nஆச்சி மசாலா வாசகிகள் கைமணம்\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்\nதெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism\nஇதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.worldtamilchristians.com/kalvari-natha-kalvari-natha/", "date_download": "2021-10-19T11:51:22Z", "digest": "sha1:AEYNDP6IM4AVOW3NGGLXBAIS2R32EEII", "length": 8703, "nlines": 202, "source_domain": "www.worldtamilchristians.com", "title": "கல்வாரி நாதா கல்வாரி நாதா - Kalvari Natha Kalvari Natha", "raw_content": "\nKalvari Natha Kalvari Natha – கல்வாரி நாதா கல்வாரி நாதா\nகல்வாரி நாதா கல்வாரி நாதா\nகறைபோக்கிடும் கரைசேர்ந்திடும் – 2\nநான் செய்த பாவங்கள் என் கண்முன்னே\nநின்றாடுதே நிழலாடுதே – 2\n1. சிற்றின்ப கவர்ச்சியால் தரித்திர நானேன்\nதயைசெய்து மனம் இரங்கும் – 2\nதயைசெய்து மனம் இரங்கும் (2)\nகல்வாரி நாதா கல்வாரி நாதா\n2. மறைவான குற்றம் துணிகர பாவம்\nவிடுதலை தாராமைய்யா – 2\nவிடுதலை தாராமைய்யா – ஏசுவே (2)\nகல்வாரி நாதா கல்வாரி நாதா\n3. பார்வையில் பாவம் சிந்தையில் தங்கி\nதடுமாற செய்கின்றதை – 2\nதடுமாற செய்கின்றதை – ஏசுவே\nகல்வாரி நாதா கல்வாரி நாதா\nகறைபோக்கிடும் கரைசேர்ந்திடும் – 2\nநான் செய்த பாவங்கள் என் கண்முன்னே\nநின்றாடுதே நிழலாடுதே – 2\nMeetpar Yesu Kurusil - மீட்பர் இயேசு குருசில்\nPaaviyaana yennai paarum - பாவியான என்னைப்பாரும்\nENATHAAN NERNTHALUME – என்ன தான் நேர்ந்தாலுமே\nArputham Adhisayam – அற்புதம் அதிசயம்\nENNAI VITTU KODUKATHAVAR என்னை விட்டுக்கொடுக்காதவர் Lyrics\nkartharai nambiye jeevippom கர்த்தரை நம்பியே ஜீவிப்போம் lyrics\nஎதிர்ப்புகளை எதிர்கொள்ள -Ethirpugalai Ethirkolla\nENATHAAN NERNTHALUME – என்ன தான் நேர்ந்தாலுமே\nஉயிரோடு எழுந்த இயேசுவே-Uyiroadu Ezhundha Yaesuvae\nYesuvae Unthan Sinthanai – இயேசுவே உந்தன் சிந்தனை\nதுர்குணத்தில் நான் உருவானேன் -Durgunathil naan uruvaanean\nஎன் உயிரும் என் இயேசுவுக்காக – EN UYIRUM EN YESU\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2021/05/blog-post_59.html", "date_download": "2021-10-19T13:10:27Z", "digest": "sha1:CZOPHSD7Y6NHQCSM5XSXU6Q3FK7YF5SF", "length": 26723, "nlines": 288, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: மனத்தைக் கொல்லும் மரண பயம்-டாக்டர் ஆ.காட்சன்", "raw_content": "\nமனத்தைக் கொல்லும் மரண பயம்-டாக்டர் ஆ.காட்சன்\nமனிதனுக்கு வரும் பயங்களிலேயே உச்சக்கட்ட பயம் மரண பயம்தான். அந்தப் பயத்தை எல்லோருக்கும் கரோனா காட்டிவிட்டதைக் கண்கூடாகப் பார்த்துவருகிறோம். சமீபத்தில் ‘இவரா இப்படிப் பயப்படுகிறார்’ என்று ஆச்சரியப்படும் அளவிற்கு மனோதிடம் வாய்ந்த நபர்கள், மருத்துவர்கள்கூட மனநல ஆலோசனைக்கு வருகிறார்கள். இந்தப் பயத்திற்கு யாரும் விதிவிலக்கல்ல.\nஅன்றாடம் கரோனா வைப் பற்றிய விழிப்புணர்வு செய்திகள் மட்டுமல்லாது, மரணச் செய்திகளையும் கேட்பது வாடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது. இதனால் பலர் தேவைக்கு அதிகமான, அதீத முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு மனப்பதற்றத்திற்குள்ளாகக்கூடும்.\nதேவைக்கு அதிகமாகக் கைகழுவுதல், அறிகுறிகள் இல்லாதபோதும் பல்ஸ் ஆக்ஸிமீட்டரில் ஆக்ஸிஜன் அளவை அடிக்கடி பரிசோதித்துக்கொள்வது, மன திருப்திக்காக அடிக்கடி கரோனா பரிசோதனை மேற்கொள்வது, இந்த அளவீடுகளில் வரும் சாதாரண ஏற்ற தாழ்வுகளைக்கூட நோயின் அறிகுறியாக எடுத்துக்கொள்வது, தூக்கமின்மை போன்ற செயல்கள் இதன் அறிகுறிகள்.\nஒரு சிலர் இந்தப் பயத்தினாலேயே ஏற்படும் அதிக இதயத்துடிப்பு, மூச்சுவிடுவதில் சிரமம், உடல் சோர்வு போன்ற அறிகுறிகளைத் தவறாகப் புரிந்துகொண்டு மரண பயத்திற்கு ஆளாவார்கள். கரோனா அறிகுறிகளைவிட, கரோனாவாக இருக்குமோ என்கிற பதற்றத்தின் அறிகுறிகள் அதிகம் இருப்பதே இவர்களைப் பிரித்தறிய உதவும்.\nதிடீர் மரணங்களையும், மரண பயத்தையும் ஏற்படுத்தும் மாரடைப்பு போன்ற நோய்களைக்கூடச் சாதாரண நோயாகக் கருதும் அளவிற்கு கரோனா எல்லோரையும் ஆட்டிப்படைத்து வருகிறது. அதனால்தான், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களைவிட, தனக்கு அல்லது தனது குடும்ப நபர்களுக்கு கரோனா வந்துவிடுமோ என்கிற பயத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. இதில் பலர் தங்களுக்குத் திடீர் மரணம் ஏற்பட்டுவிடுமோ என்கிற உச்சக்கட்ட மனப்பதற்றத்தில் அவதிப்படுகின்றனர். இந்த மரண பயத்திற்கான காரணங்கள் மற்ற காரணங்களால் வரும் பயத்தைவிடச் சற்று வித்தியாசமானவை. அவை என்னவென்று பார்ப்போம்.\n# மற்றவர்களால் ஆற்றுப்படுத்த முடியாத அளவிற்கு உலகளாவிய பெருந்தொற்று நோயாக கோவிட்-19 இருப்பது\n# எங்கோ கேள்விப்பட்ட மரணச் செய்திகள், நண்பர்கள், உறவினர்கள் வட்டாரம், அக்கம்பக்கத்திலிருந்து கேட்க ஆரம்பித்த பிரச்சினைகள்\n# நோய்த்தொற்றைவிடத் தனிமைப் படுத்துதலைப் பற்றிய அதிக பயம்\n# மற்ற நோய்களைப் போல் இல்லாமல், குடும்ப நபர்கள் உடன் இருந்து கவனிக்க முடியாத நிலை\n# தங்கள் வயதை ஒத்த நபர்கள் பாதிக்கப் படுவது - மரணம் அடைவதைப் பற்றிய செய்திகளை அதிகம் கேட்பது\n# ஊடகங்கள் - சமூக வலைத்தளங் களில் வரும் கரோனா விழிப்புணர்வு செய்திகளைவிட, அது ஏற்படுத் திய பாதிப்புகளை அதிகம் தெரிந்து கொள்வது\n# ‘ஆக்ஸிஜன் இல்லை, படுக்கைகள் இல்லை, மயானங்களில் இடம் இல்லை’ என்பது போன்ற எதிர்மறை செய்திகளை அதிகம் கேட்பது\n# குடும்ப நபர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப் படுத்தலிலோ மருத்துவமனையிலோ இருப்பது\n# ஏற்கெனவே மனப்பதற்றமுள்ள ஆளுமையாக இருப்பவர்கள், மனப்பதற்ற நோயாளிகள்\n# மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் இதுவரை காணாத நெருக்கடி நிலையைக் காண நேரிடுவது\n# கரோனாவால் பாதிக்கப்படும் எல்லோ ருக்கும் உயிரிழப்பு ஏற்படுவதில்லை. எனவே, மரணத்தைத் தழுவும் மிகக்குறைந்த சதவீதத்தினர் மீது மனதளவில் கவனம் கொள்வதைவிட, பெரும்பான்மையோருக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்கிற நேர்மறை நம்பிக்கை மீது கவனத்தைச் செலுத்த வேண்டும்.\n# அரசு சொல்லும் அனைத்து முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகளையும் தேவையான இடங்களில், தேவையான அளவிற்குச் செயல்படுத்த வேண்டும். அதைச் சரியாகச் செயல்படுத்தும்பட்சத்தில் தொற்று வர வாய்ப்பில்லை என்கிற நம்பிக்கையை மனத்தில் நிறுத்த வேண்டும்.\n# வீட்டிலிருந்தாலும், உடலையும் மனத்தையும் அடிக்கடி வெவ்வேறு ஆக்கப்பூர்வமான பணிகளில் அல்லது பொழுதுபோக்குகளில் ஈடுபடுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.\n# சொந்தபந்தங்களுடன் அலைபேசியில் கரோனாவைத் தவிர்த்து, மற்ற விஷயங்களைப் பகிர்ந்துகொள்வது நல்லது.\n# எப்பொழுதும் சமூக வலைத்தளங்களி லும், 24 மணி நேரச் செய்தி அலைவரிசைகளின் முன்பு அமர்வதைவிட, மூச்சுப்பயிற்சி, பாரம்பரிய விளையாட்டுக்கள், வீட்டிற்குள் இருந்து விளையாடும் விளையாட்டுக்கள் போன்றவற்றில் ஈடுபடுவது மனத்துக்குப் புத்துணர்ச்சியைத் தரும்.\n# கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு மனப்பதற்றம், மரண பயம் இருந்தால் மனநல மருத்துவரை நேரடியாகவோ, ஆன்லைன் வாயிலாகவோ தொடர்புகொண்டு சிகிச்சை பெறுவது நல்ல பலன் தரும்.\n# எப்போதும் ‘கரோனா ஆராய்ச்சியாளர்’ போல அதைப் பற்றிய எதிர்மறை செய்தி��ளைக் கேட்பதைத் தவிர்க்க வேண்டும்.\n# பிறருக்கு நிகழும் அசம்பாவிதங்கள் தனக்கும் வந்துவிடுமோ என்று பாதிக்கப்பட்ட நபர்களின் நோய் அறிகுறிகளை மனத்தில் அசைபோடு வதைத் தவிர்க்க வேண்டும். அப்படிச் செய்வது உங்கள் காலை மற்றவர்கள் காலணிக்குள் நுழைப்பது போன்றது. ஒன்று காலைக் கடிக்கும்; இல்லை கழன்று போகும்.\n# ஏற்கெனவே பயத்திலும் பதற்றத்திலும் இருக்கும் நபர்களிடம், கரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்கள் அல்லது மரணமடைந்த நபர்கள் கஷ்டப்பட்டதைக் குறித்து விலாவரியாக வர்ணனை செய்வது போல் விவரிப்பதைத் தவிர்க்க வேண்டும்.\n# அங்கே ஆக்ஸிஜன் பற்றாக்குறையாம், இங்கே படுக்கைகள் நிரம்பிவிட்டன வாம்’ என்பது போன்ற எதிர்மறை செய்திகளைப் பேசுவது, பகிர்வதைத் தவிர்க்க வேண்டும்.\n# தேவையற்ற உடல் சுயபரிசோதனை களைக் குறைக்க வேண்டும்.\nஅதீத முன்னெச்சரிக்கையாலும் மனப்பதற்றத்தாலும் மருத்துவமனை களை நாடுபவர்கள், படுக்கைகளை ஆக்கிரமித்துக்கொள்பவர்களின் எண்ணிக்கை பெருகிவருகிறது என்று சக மருத்துவர்கள் சொல்வதைக் கேள்விப்பட்டுவருகிறோம். இது நிச்சயமாகப் படுக்கை வசதி தேவைப்படும் நோயாளிகளுக்குக் கொடுக்கப்பட வேண்டிய முன்னுரிமையைத் தடுப்பதுடன், மருத்துவத் துறைக்கு அதிக நெருக்கடியையும் ஏற்படுத்துகிறது. எனவே, மருத்துவர்களை அணுகும் முன்பு உண்மையில் நோய் அறிகுறிகளுடன் செல்கிறோமா அல்லது மனப் பதற்றத்தின் விளைவாகச் செல்கிறோமா என்பதைப் பிரித்தறிந்துகொள்வது நல்லது.\nகட்டுரையாளர், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி உதவிப் பேராசிரியர்\nஎஸ்.எம்.எம்.பஷீர் “ எப்பொழுதும் உனது எதிரிகளை மன்னித்துவிடு , அதை விட அவர்களை அதிகம் தொந்தரவு செய்வது வேறொன்றுமில்லை ” ( ஒ...\nஎஸ்.எம்.எம்.பஷீர் “ ஒரு தவறு பல்கிப் பெருகுவதால் உண்மையாகி விடமுடியாது: யாரும் கண்டுகொள்ள முடியவில்லை எனபதற்காக ஒரு உண்மை ...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nதொழிலாளர்களின் வரலாற்றில் புதிய அத்தியாயம்\nஊழலின் மறுபெயர் மோடி அரசாங்கம்\nஅரவிந்த கெஜ்ரிவால்: டெல்லி மாடல் எனும் பொய் வித்தை...\nபாசிசத்துக்கு எதிரான போராட்டத்தில் இடதுசாரி சக்திக...\nசமூக செயல்பாட்டாளர் அகில் கோகாய் சிறையிலிருந்தே வெ...\nமே 4: திப்பு சுல்தான் நினைவு தினம்\nஒரிரண்டு வாரங்களுக்கு முடக்குவதால் எதிர்பார்த்த பல...\nதிமுக வெற்றியின் முக்கியத்துவம் என்ன\nகேரளம்: இடது கூட்டணி வெற்றி சொல்லும் சேதி- –செ.இளவ...\nதடுப்பூசியைத் தவிர்த்து, கொரோனாவிடம் வீழத் தயாராகி...\nஇஸ்ரேல்-பலஸ்தீனம் மோதல்: ‘1948 – 2021’ ; ஜெருசலேம்...\nவிடுதலைப் புலிகளில் இணைந்து போராடியதற்கு வருந்துகி...\nசாணக்கியனின் அசாணக்கிய அரசியல்- — எழுவான் வேலன் —\n‘கர்ணன்’ திரைப்படம் பேசும் கொடியன்குளம் சம்பவம்\nஇலங்கையில் 5 நாட்களில் 100க்கும் அதிகமான கோவிட் மர...\nசொல்லத் துணிந்தேன் – 71— தம்பியப்பா கோபாலகிருஷ்ணன்—\nபற்றி எரியும் பலஸ்தீனம்: நாமென்ன செய்வது\nவடக்கு, கிழக்கு இணைப்பு சாத்தியமற்றதொரு விடயம்\nஇடதுசாரிகளின் புதிய முகம் - பர்டன் க்ளிட்டஸ்\nகரிசல் இலக்கியத்தின் தந்தை கி.ராஜநாராயணன் காலமானார...\nவடக்கு, கிழக்கு மக்கள் அகதிகளாக அலைந்து திரிந்த யு...\nஇலங்கையின் எட்டு மாவட்டங்களில் தீவிரமாக பரவிவரும் ...\nஅஞ்சலி - கி.ராவின் சினிமாப் பார்வை- அம்ஷன் குமார்\nஉலக எழுத்தாளர் கி.ரா.- சமஸ்,\nமனத்தைக் கொல்லும் மரண பயம்-டாக்டர் ஆ.காட்சன்\nஇளைஞர்களைக் குறிவைத்துத் தாக்கும் கொரோனா 2-வது அலை...\nஉலகப் போர் ஆரம்பிக்கப்பட்டால் முழு ஏகாதிபத்திய உலக...\n - என் கதைகளும் என்னைப் பற்றிய கதைகளும் ...\nதமிழர் பிரச்சினைக்கு தீர்வு என்பது கற்பனையே - தோழர...\nகொழும்பு துறைமுக நகரமும் ஒரு சீன ‘கடன் பொறி’யா\nசீனா – 2050: ஆதிக்கவாதியல்ல, ஆனால் தலைவர்\nகடாபி உண்மையில் ஒரு சர்வாதிகாரியா\nபிரேமதாஸா எப்படி படுகொலை செய்யப்பட்டார்\nராவுல் கஸ்ட்ரோவைக் கொலை செய்ய்யவும் சீ.ஐ.ஏ. திட்டம...\nஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்-–பாலகிரி\nகனடாவில் முன்னாள் சுதேசிகள் பாடசாலை வளவில் 215 குழ...\nதவறான முன்னுரிமைகள் புதுடெல்லியை மோசமான பெருந்தொற்...\nஎம்மை விட்டுப் பிரிந்த மதிப்புக்குரிய பத்தேகம சமித...\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://juniorpolicenews.com/2020/06/12/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-10-19T12:48:51Z", "digest": "sha1:IVTVRU6XUPKWZ7AMWZHCXXDHDFGTFSPS", "length": 17157, "nlines": 207, "source_domain": "juniorpolicenews.com", "title": "புதுக்கோட்டை மாவட்டத்தில் ஹெலிகாப்டர் விபத்து எதுவும் நடைபெறவில்லை; வதந்திகளை நம்ப வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி | Police News | 24/7 Tamil News", "raw_content": "\n10 மாவட்ட காவலர்களின் மனக்கவலைகளை போக்கும் விதமாக குறைகளை நேரில் கேட்டறிந்த தென்மண்டல காவல்துறை…\nதுப்பறியும் திறனை வெளிக்கொண்டுவர ஒரு அரிய வாய்ப்பு.\nசீர்காழியில் 3 லட்சம் மதிப்புள்ள 9 ஆயிரத்து 200 குட்கா பாக்கெட்டுகளை காவல்துறையினர் பறிமுதல்…\nதூத்துக்குடியில் என்கவுண்டரில் ரவுடி சுட்டுக்கொலை.\nதமிழகம் முழுவதும் 35 இடங்களில் ஹெல்மெட் மாட்டிக்கொண்டு இரவு நேரங்களில் பூட்டியிருந்த கடைகளில் கொள்ளையடித்த…\n10 மாவட்ட காவலர்களின் மனக்கவலைகளை போக்கும் விதமாக குறைகளை நேரில் கேட்டறிந்த தென்மண்டல காவல்துறை…\nதுப்பறியும் திறனை வெளிக்கொண்டுவர ஒரு அரிய வாய்ப்பு.\nசீர்காழியில் 3 லட்சம் மதிப்புள்ள 9 ஆயிரத்து 200 குட்கா பாக்கெட்டுகளை காவல்துறையினர் பறிமுதல்…\nதூத்துக்குடியில் என்கவுண்டரில் ரவுடி சுட்டுக்கொலை.\nதமிழகம் முழுவதும் 35 இடங்களில் ஹெல்மெட் மாட்டிக்கொண்டு இரவு நேரங்களில் பூட்டியிருந்த கடைகளில் கொள்ளையடித்த…\nசட்டவிரோதமாக 3350 லாட்டரி சீட்டுகள் விற்ற நபரை கைது செய்து, சிறப்பாக செயல்பட்ட புதுக்கோட்டை…\nபுதுவையில் அனைத்து காவல் நிலையங்களிலும் ரூ.2 கோடி செலவில் சிசிடிவி பொறுத்தப்படும் என்று உள்துறை…\nதமிழகத்தை சேர்ந்த காவல் அதிகாரிகள் 8 பேருக்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் சார்பில் விருது…\nமுன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது 400 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல்\nசென்னை மாநகர ஆயுதப்படைபிரிவில் பணிபுரியும் காவலர் ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில்2021 நடைபெரும் ஒலிம்பிக்போட்டிக்கு தகுதி…\nகஞ்சா வியாபாரியை கைது செய்வதில் அலட்சியம்: வாணியம்பாடி காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்.. வேலூர்…\nகட்டப்பஞ்சாயத்து; கைத்துப்பாக்கி; வழிப்பறி – குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்ட ரௌடியின் பின்னணி என்ன\nபுதுவையில் அனைத்து காவல் நிலையங்களிலும் ரூ.2 கோடி செலவில் சிசிடிவி பொறுத்தப்படும் என்று உள்துறை…\nகோவையில் 10 சட்டமன்ற உறுப்பினர்கள் மீது தொற்று நோய் பரவல் சட்டம் அரசு ஊழியரை…\nபுல் பவர் தந்த ஸ்டாலின்.. வேட்டையாடிய சைலேந்திரபாபு\nகாஸ்ட்லி பைக்கை திருடி வெளியூர்களில் விற்போம்” : சிறுவனின் வாக்குமூலத்தால் அதிர்ச்சியடைந்த போலிஸ்\nசென்னை மாநகர ஆயுதப்படைபிரிவில் பணிபுரியும் காவலர் ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில்2021 நடைபெரும் ஒலிம்பிக்போட்டிக்கு தகுதி…\nஆன்லைன் ரம்மியை தடை செய்ய அவசர சட்டம் பிறப்பித்து தமிழக அரசு ஆணை –…\nமனநலம் பாதித்த தாயுடன் வறுமையில் வசித்து வரும் அரசு அதிகாரி ஆக வேண்டும் என்ற…\nகடலாடி அருகே வாலிநோக்கம் கடலில் குளித்த இளைஞர் அலையில் சிக்கி மாயம் : தேடும்…\nHome இந்தியா புதுக்கோட்டை மாவட்டத்தில் ஹெலிகாப்டர் விபத்து எதுவும் நடைபெறவில்லை; வதந்திகளை நம்ப வேண்டாம் என மாவட்ட ஆட்சியர்...\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் ஹெலிகாப்டர் விபத்து எதுவும் நடைபெறவில்லை; வதந்திகளை நம்ப வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி\nகலிபோர்னியா ஹெலிகாப்டர் விபத்து படங்களைப் பரப்பி வதந்தி..\nபுதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே செங்கானூர் ஊராட்சி வைந்தனூர் கண்மாயில் ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானதாக வெள்ளிக்கிழமை சமூக ஊடகங்களில் பரபரப்பான தகவல் பரவியது.\nஇதுகுறித்து விசாரித்தபோது ஆடியோவில் குறிப்பிட்டிருந்தபடி எந்த விபத்தும் நடைபெறவில்லை என அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் மறுப்பு ஆடியோ ஒன்றை வெளியிட்டார்.\nகடந்த ஜனவரி 26ஆம் தேதி கலிபோர்னியாவில் நேரிட்ட ஹெலிகாப்டர் விபத்து ஒன்றின் படங்கள்தான் சமூக ஊடகங்களில் பரவும் படங்கள்.\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் ஹெலிகாப்டர் விபத்து எதுவும் நடைபெறவில்லை; வதந்திகளை நம்ப வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி கேட்டுக் கொண்டுள்ளார்.\nஅதை போல புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அருண்சக்திகுமார் இந்த செய்தி வதந்தி என்று கூறியுள்ளார்கள்..\nPrevious articleபுதுக்கோட்டை அருகே குடும்ப பிரச்சினை காரணமாக அண்ணன் தம்பி தற்கொலை.. போலிசார் விசாரணை..\nNext articleபுதுச்சேரியில் கொலை முயற்சி வழக்கில் பிடிபட்ட 23 வயது இளைஞருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தன்வந்திரி நகர் காவல் நிலையம் காவல் ஆய்வாளர் உட்பட 12 போலீசார��� தனிமைப்படுத்த சுகாதாரத் துறை உத்தரவு\n10 மாவட்ட காவலர்களின் மனக்கவலைகளை போக்கும் விதமாக குறைகளை நேரில் கேட்டறிந்த தென்மண்டல காவல்துறை தலைவர் அவர்கள்.\nதுப்பறியும் திறனை வெளிக்கொண்டுவர ஒரு அரிய வாய்ப்பு.\nசீர்காழியில் 3 லட்சம் மதிப்புள்ள 9 ஆயிரத்து 200 குட்கா பாக்கெட்டுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.\n10 மாவட்ட காவலர்களின் மனக்கவலைகளை போக்கும் விதமாக குறைகளை நேரில் கேட்டறிந்த தென்மண்டல காவல்துறை தலைவர் அவர்கள்.\nதுப்பறியும் திறனை வெளிக்கொண்டுவர ஒரு அரிய வாய்ப்பு.\nசீர்காழியில் 3 லட்சம் மதிப்புள்ள 9 ஆயிரத்து 200 குட்கா பாக்கெட்டுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.\nதூத்துக்குடியில் என்கவுண்டரில் ரவுடி சுட்டுக்கொலை.\nதமிழகம் முழுவதும் 35 இடங்களில் ஹெல்மெட் மாட்டிக்கொண்டு இரவு நேரங்களில் பூட்டியிருந்த கடைகளில் கொள்ளையடித்த கொள்ளையன் மயிலாடுதுறையில் கைது\n10 மாவட்ட காவலர்களின் மனக்கவலைகளை போக்கும் விதமாக குறைகளை நேரில் கேட்டறிந்த தென்மண்டல காவல்துறை...\nதுப்பறியும் திறனை வெளிக்கொண்டுவர ஒரு அரிய வாய்ப்பு.\nசீர்காழியில் 3 லட்சம் மதிப்புள்ள 9 ஆயிரத்து 200 குட்கா பாக்கெட்டுகளை காவல்துறையினர் பறிமுதல்...\nகரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு பாதுகாப்பு கேட்டு காதல் கணவருடன் பெண் தஞ்சம்..\nதமிழக டிஜிபி புதிய உத்தரவு.. சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் எதிரொலி தொடர்ந்து Non-Bailable...\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் பெண் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பதிலாக அவரது கணவரோ, உறவினர்களோ தலையிடக்கூடாதுதடை செய்யப்பட்டுள்ளது..ஆட்சியர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4/", "date_download": "2021-10-19T11:54:29Z", "digest": "sha1:XIKU7H7XN2GXSLQKQKQKZNF2QE6FD2KE", "length": 14343, "nlines": 201, "source_domain": "www.aanthaireporter.com", "title": "\"சேதுபதி டைட்டிலை சொன்னதும் பயந்தேன் .. ஏன் தெரியுமா?\" - விஜய் சேதுபதி பேச்சு + மூவி ஸ்டில்ஸ் + டீசர்! - AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\n“சேதுபதி டைட்டிலை சொன்னதும் பயந்தேன் .. ஏன் தெரியுமா” – விஜய் சேதுபதி பேச்சு + மூவி ஸ்டில்ஸ் + டீசர்\n‘பண்ணையாரும் பத்மினியும்’ படத்தை தந்த அருண்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கும் “சேதுபதி”. ஒரு போலீஸ் அதிகாரியின் வேலை யையும், அவரது குடும்பத்தையும் பற்றிய கதையிது என்றார் அருண்குமார். அருண்குமார் மதுரையைச் சேர்ந்தவர் என்பதால் மதுரை கதைக்களத்தில் படத்தை எடுத்துள்ளார். அதற்காக மதுரை பின்னணியை கொண்ட படங்களில் இடம்பெறும் பறந்து பறந்து சண்டையோ, அரிவாள் கலாச்சாரமோ இந்தப் படத்தில் இருக்காது என உறுதிபட அறிவித்தார். இதுவரை வந்துள்ள போலீஸ் கதைகளிலிருந்து இது முற்றிலும் மாறுபட்டிருக்கும் என்றும் தெரிவித்தார்.\nஇன்று காலை சென்னை சத்யம் தியேட்டரில் நடந்த இசை வெளியீட்டு விழாவில் விஜய்சேதுபதி பேசும்போது, ‘‘அருண் குமார் இந்த போலீஸ் கதையை சொல்லும்போது இந்த கதையும், கேரக்டரும் எனக்கு ‘செட்’டாகுமானு யோசித்தேன். பிறகு ஒருவித தயக்கத்தோட தான் நடிக்க ஒப்புக்கொண்டேன். படப்பிடிப்பு துவங்கிய பிறகு படத்திற்கு என்ன டைட்டில் வைப்பது என்ற டிஸ்கஷன் நடந்தபோது அருண்குமார் ‘சேதுபதி’ங்கற தலைப்பு ரொம்ப பொருத்தமாக இருக்கும், அதை வைக்கலாம் என்று சொன்னார். அவர் ‘சேதுபதி’ என்ற டைட்டிலை சொன்னதும் எனக்கு ஒருவித பயம் வந்துருச்சு. ஏனா நாம ரொம்ப ஓவரா போறோமோன்னு படம் ஏதாவது ஆச்சுனா அவ்வளவு தான் படம் ஏதாவது ஆச்சுனா அவ்வளவு தான் மொத்தமும் எனக்கு தான் கிடைக்கும் மொத்தமும் எனக்கு தான் கிடைக்கும் ‘சேதுபதி’ங்கற தலைப்பு வேண்டாம்னு சொன்னேன். ஆனால் இயக்குனர் அருண்குமாரும், ஒளிப்பதிவாளர் தினேஷும் அந்த தலைப்பில் உறுதியாக, நம்பிக்கையோட இருந்தாங்க ‘சேதுபதி’ங்கற தலைப்பு வேண்டாம்னு சொன்னேன். ஆனால் இயக்குனர் அருண்குமாரும், ஒளிப்பதிவாளர் தினேஷும் அந்த தலைப்பில் உறுதியாக, நம்பிக்கையோட இருந்தாங்க அதனால கடைசியில நானும் ஒத்துக்கிட்டேன்.\n‘பீட்சா’ படத்திற்கு பிறகு மீண்டும் இப்படத்தில் நானும், ரம்யா நம்பீசனும் இணைந்து நடித்துள்ளோம். ரம்யா நல்ல நடிகை அவங்களுக்கு ஈடு கொடுத்து நடிக்கிறது ரொம்ப கஷ்டம். அவங்களை ‘பீட்சா’ படத்திற்கு பிறகு இப்போதான் பார்க்கிறேன். ‘ஆனா எங்களுக்கு இரண்டு குழந்தைங்க இருக்காங்க, என்று ‘சேதுபதி’யில் நடித்துள்ள இரண்டு குழந்தைகளை அணைத்தவாறு ‘யாரும் தவறாக நினைக்க வேண்டாம் ‘சேதுபதி’யில் நானும், ரம்யாவும் இரண்டு குழந்தைகளுக்கு அப்பாவா, அம்மாவா நடிச்சிருக்கோம்’’ என்று தெரிவித்தார��� \nPrevious பஸ் ஓட்டை வழியாக விழுந்து இறந்த சிறுமியின் தந்தைக்கு ரூ.10 லட்சம் நஷ்டஈடு\n” – தமிழ்நாடு தேர்தல் கமிஷன் ஸ்டேட்மெண்ட்\n“ஓ மணப்பெண்ணே” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பின் ஹைலைடஸ்\nசூர்யா-வின் ஜெய்பீம் படத்தில் இடம் பிடித்த ’பவர்’ பாடல் வெளியானது\nட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் படம் பூஜையுடன் ஆரம்பம்\n“ஓ மணப்பெண்ணே” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பின் ஹைலைடஸ்\nஇந்திய அளவில் ட்ரெண்டாகி நொந்து போன சொமேட்டா\nசிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு முதல் பருவத் தேர்வுகளுக்கான தேதி அறிவிப்பு\nசூர்யா-வின் ஜெய்பீம் படத்தில் இடம் பிடித்த ’பவர்’ பாடல் வெளியானது\nஇந்திய கடற்படையின் பங்கு குறித்து கடற்படை தளபதிகள் மாநாட்டில் ராஜ்நாத் சிங் பேச்சு\nகேட்டராக்ட் – கண் புரை – கண்ணுக்குள் பொருத்தும் லென்ஸ்கள் சில முக்கியமான விவரங்கள் கேள்வி – பதில்கள்\nமுட்டாள்களின் கூடாரம் ‘மூடர் கூடம்’ – கோடங்கி விமர்சனம்\nமிக மிக அழகான பெண் யார்\n‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ரசிகர்களை சேர்க்காது..\n‘வீரம்’ – சினிமா விமர்சனம்\nஎம்ஜிஆர் என்கிற “சோட்டா பீம்” உருவாக்கிய அதிமுகவின் பொன்விழா சஸ்பென்ஸ்\nஏர் இந்தியா: தர்மம் மறுபடி வெல்லும் – ரமேஷ் கிருஷ்ணன் பாபு\nகாடழிப்பிற்கு வித்திடும் வகையில் சட்டத் திருத்தங்கள் – மோடி அரசுக்கு கண்டனம்\nஅச்சச்சோ,, சென்னையில் விஷக்காற்று பரவுது\nபாகிஸ்தானில் ஆட்சி மாறி ஆப்கன் போல் குழம்பம் நேரிடலாம் ஏன் தெரியுமா\n“ஓ மணப்பெண்ணே” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பின் ஹைலைடஸ்\nஇந்திய அளவில் ட்ரெண்டாகி நொந்து போன சொமேட்டா\nசிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு முதல் பருவத் தேர்வுகளுக்கான தேதி அறிவிப்பு\nசூர்யா-வின் ஜெய்பீம் படத்தில் இடம் பிடித்த ’பவர்’ பாடல் வெளியானது\nஇந்திய கடற்படையின் பங்கு குறித்து கடற்படை தளபதிகள் மாநாட்டில் ராஜ்நாத் சிங் பேச்சு\nட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் படம் பூஜையுடன் ஆரம்பம்\nவரும் சனிக்கிழமை மெகா தடுப்பூசி முகாம்- ஏன் தெரியுமா\nசிம்புவின் மாநாடு ரிலீஸ் தீபாவளியன்று இல்லை : நவம்பர் 25ல் வெளியாகுமாம்\nதாமஸ் ஆல்வா எடிசன் நினைவு தினம்…\nஎம்ஜிஆர் என்கிற “சோட்டா பீம்” உருவாக்கிய அதிமுகவின் பொன்விழா ச���்பென்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%87-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%9F%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%80/", "date_download": "2021-10-19T12:53:38Z", "digest": "sha1:CHCZ5MFC7ALFFO5S4GQSIHXYXQ5N36UL", "length": 13103, "nlines": 203, "source_domain": "www.aanthaireporter.com", "title": "ஜன்னலே இல்லாத 'டச் ஸ்கிரீன்' விமானம்! - வீடியோ - AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nஜன்னலே இல்லாத ‘டச் ஸ்கிரீன்’ விமானம்\nபிரிட்டனை சேர்ந்த விஞ்ஞானி ஒருவர் வடிவமைத்துள்ள இந்த தொழில்நுட்பம் வாயிலாக விமானத்தில் பயணம் செய்யும் பயணிகள் முழுமையாக வெளியில் உள்ளவற்றை பார்க்கலாம். வானத்தை தொடர்ச்சியாக பார்க்கக்கூடிய வகையில் வழக்க மான ஜன்னல்களுக்கு பதிலாக முழு நீள தொடுதிரைகள் பொருத்தப்படுகிறது. பயணிகள் அவர்களது வசதிகளுக்கு ஏற்ப அந்த ஸ்கீரீனை டச் செய்து வானத்தை பார்க்கலாம். விமானத்திற்கு வெளியே பொருத்தப்பட்டுள்ள கேமிராக்கள் மூலம் ஹை-டெபனீஷன் குவாலிட்டியில் தெளிவாக விரும்பிய ஆங்கிளில் பார்க்க முடியும். மேலும், பயணிகள் தாங்களாகவே பிரைட்நெஸ் மற்றும் கான்ட்ராஸ்டை அட்ஜஸ்ட் செய்து கொள்ள முடியும். அதேபோல், அந்த திரையில் டிஜிட்டல் வால்பேப்பர்களும் தோன்றுகிறது.\nஓ.எல்.இ.டி. தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மெல்லிய கண்ணாடி திரை எடை குறைந்ததும்,நன்றாக வளையக்கூடியதுமாகும். இந்த திரையை பொருத்துவதால் விமானத்தின் எடையும் கணிசமாக குறைகிறது. எந்த ஒரு விமானத்திற்கும் எடை ஒரு பிரச்சனையாகவே இருக்கும். எரிபொருள் நிரப்பப்பட்ட ஒரு விமானம் 80 சதவீத எடையை பிடித்துக் கொள்கிறது.\nவிமானத்தின் எடை குறையும் ஒவ்வொரு சதவீதமும் 0.75 சதவீத எரிபொருளை சேமிக்கிறது. அந்த வகையில், இந்த டச் ஸ்கிரீன் தொழில்நுட்பம் சுற்றுச்சூழலுக்கு ஏற்றவாறும், செலவையும் குறைக்கும். தற்போதுள்ள கண்ணாடி ஜன்னல் திரைக்கு கடினமான பொருட்கள் தேவைப்படுகின்றன. ஏனெனில், 35 ஆயிரம் அடி உயரத்தல் பறக்கும்போது ஏற்படும் காற்றின் அழுத்தத்தால் கண்ணாடி கீறிட்டு உடையாமல் இருக்க வேண்டும். ஆனால், புதிய டச் ஸ்கிரீன் தொழில்நுட்பத்தில் அப்படி எதுவும் தேவையில்லை.சி.பி.ஐ. எனப்படும் இந்த புதிய தொழில்நுட்பம் விரைவில் சோதனைக்கு வரும் என ஆராயச்சியாளர் சைமன் ஓகியர் தெரிவித்தார்.\nPrevious சோடாவை போன்று இனிப்புச் சாற்றை உமிழும�� ஆப்பிள் \nNext சகாயம் குழுப் பற்றி நான் அப்பவே சொன்னேன்\n“ஓ மணப்பெண்ணே” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பின் ஹைலைடஸ்\nசூர்யா-வின் ஜெய்பீம் படத்தில் இடம் பிடித்த ’பவர்’ பாடல் வெளியானது\nட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் படம் பூஜையுடன் ஆரம்பம்\nசென்னை மெட்ரோ ரயில்வேயில் பொது மேலாளர் பணி வேண்டுமா\n“ஓ மணப்பெண்ணே” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பின் ஹைலைடஸ்\nஇந்திய அளவில் ட்ரெண்டாகி நொந்து போன சொமேட்டா\nசிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு முதல் பருவத் தேர்வுகளுக்கான தேதி அறிவிப்பு\nசூர்யா-வின் ஜெய்பீம் படத்தில் இடம் பிடித்த ’பவர்’ பாடல் வெளியானது\nகேட்டராக்ட் – கண் புரை – கண்ணுக்குள் பொருத்தும் லென்ஸ்கள் சில முக்கியமான விவரங்கள் கேள்வி – பதில்கள்\nமுட்டாள்களின் கூடாரம் ‘மூடர் கூடம்’ – கோடங்கி விமர்சனம்\nமிக மிக அழகான பெண் யார்\n‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ரசிகர்களை சேர்க்காது..\n‘வீரம்’ – சினிமா விமர்சனம்\nஎம்ஜிஆர் என்கிற “சோட்டா பீம்” உருவாக்கிய அதிமுகவின் பொன்விழா சஸ்பென்ஸ்\nஏர் இந்தியா: தர்மம் மறுபடி வெல்லும் – ரமேஷ் கிருஷ்ணன் பாபு\nகாடழிப்பிற்கு வித்திடும் வகையில் சட்டத் திருத்தங்கள் – மோடி அரசுக்கு கண்டனம்\nஅச்சச்சோ,, சென்னையில் விஷக்காற்று பரவுது\nபாகிஸ்தானில் ஆட்சி மாறி ஆப்கன் போல் குழம்பம் நேரிடலாம் ஏன் தெரியுமா\nசென்னை மெட்ரோ ரயில்வேயில் பொது மேலாளர் பணி வேண்டுமா\n“ஓ மணப்பெண்ணே” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பின் ஹைலைடஸ்\nஇந்திய அளவில் ட்ரெண்டாகி நொந்து போன சொமேட்டா\nசிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு முதல் பருவத் தேர்வுகளுக்கான தேதி அறிவிப்பு\nசூர்யா-வின் ஜெய்பீம் படத்தில் இடம் பிடித்த ’பவர்’ பாடல் வெளியானது\nஇந்திய கடற்படையின் பங்கு குறித்து கடற்படை தளபதிகள் மாநாட்டில் ராஜ்நாத் சிங் பேச்சு\nட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் படம் பூஜையுடன் ஆரம்பம்\nவரும் சனிக்கிழமை மெகா தடுப்பூசி முகாம்- ஏன் தெரியுமா\nசிம்புவின் மாநாடு ரிலீஸ் தீபாவளியன்று இல்லை : நவம்பர் 25ல் வெளியாகுமாம்\nதாமஸ் ஆல்வா எடிசன் நினைவு தினம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/109568/", "date_download": "2021-10-19T12:08:13Z", "digest": "sha1:O5QSDRLC2MYFLKUQBXZ5NBYNHT4HV2IF", "length": 58055, "nlines": 146, "source_domain": "www.jeyamohan.in", "title": "கால யந்திரத்தினூடாக நல்லூர் ராஜதானிக்கு ! | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஇலக்கியம் மொழியாக்கம் கால யந்திரத்தினூடாக நல்லூர் ராஜதானிக்கு \nகால யந்திரத்தினூடாக நல்லூர் ராஜதானிக்கு \n‘நல்லூர் ராஜதானி நகர அமைப்பு’ ஆய்வு நூல் பற்றிய ஒரு குறிப்பு\nதமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்\nபருத்தித்துறையிலிருந்து யாழ்ப்பாண நகரத்துக்குச் சென்ற பயணத்தின் போது நாங்கள் கண்ட அந்தப் பழைய அரண்மையானது, ‘மந்திரி மனை’ என அழைக்கப்படுகிறது. தென்னிந்திய வீடுகளின் கட்டடக்கலையும், ஐரோப்பிய வீடுகளின் கட்டடக்கலையும் ஒருங்கே அமைந்திருந்த அந்த அரண்மனையை முதன்முதலாகக் கண்டபோது, இலங்கையின் தென்பகுதியில் காணக்கூடிய மழையும், வெயிலும், காலமும் பொலிவிழக்கச் செய்திருக்கும் பழங்கால, பாழடைந்த ‘வளவ்வ’ எனப்படும் பாரம்பரிய வீடுகளை அது நினைவுபடுத்திற்று. யாழ்ப்பாணத்தில் நல்லூர் பிரதேசத்தில் அமைந்திருக்கும் அந்த அரண்மனையானது, போர்த்துக்கேயர்களின் வருகையோடு ஆரம்பித்த காலனித்துவ யுகத்தில் யாழ்ப்பாணத்தில் வசித்த மந்திரியொருவரின் இல்லமாக இருந்திருக்கக் கூடும் எனக் கருதப்படுகிறது. அவ்வாறே யாழ்ப்பாணத்தை போர்த்துக்கேயர்கள் கைப்பற்ற முன்பு இம் மந்திரி மனை அமைந்திருக்கும் இடத்துக்கு அண்மையில் யாழ்ப்பாண மன்னரொருவரின் அரண்மனையும் இருந்திருக்கக் கூடும் என்றும் கருதப்படுகிறது.\nமுதன்முறையாக ‘மந்திரி மனை’யைக் கண்ட எனது உள்ளத்தில் யாழ்ப்பாண வரலாறு குறித்த பல தரப்பட்ட எண்ணங்கள் கேள்வியெழுப்பின. எனினும், பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் அங்கே இருந்திருக்கக் கூடிய தமிழ் மன்னரொருவரின் ராஜதானியைக் குறித்து கற்பனை செய்து பார்ப்பதைத் தவிர, அதைக் குறித்து மேலதிக விபரங்களைத் தேடிப் பெற்றுக் கொள்ள எனக்கு வாய்ப்பில்லை என்பதனால் அந்தக் கற்பனைகளும் கூட தோன்றிய இடத்திலேயே மரித்து விடவும் வாய்ப்பிருந்தது. அனுராதபுரம், பொலன்னறுவை மற்றும் கண்டி ராஜதானிகள் குறித்து நாங்கள் பலதரப்பட்ட வரலாறுகளைப் படித்திருந்த போதிலும், ஆயிரக்கணக்கான வருடங்கள் யாழ்ப்பாணத்தில் நிலவியிருந்த ராஜதானிகளின் அமைவிடங்கள் மற்றும் வரலாறு குறித்த விரிவான குறிப்���ொன்றை எங்கிருந்து தேடிப் படிப்பேன் என்பதை அப்போது நான் அறிந்திருக்கவில்லை.\nஎனினும் அதற்கு சில வாரங்களின் பின்னர், ‘நல்லூர் ராஜதானி நகர அமைப்பு’’ எனும் ஆய்வு நூலொன்று எனக்குக் கிட்டியதானது, கோடையில் துவண்டிருக்கும் ஒருவர் மீது அகாலத்தில் பெய்த மழை போன்றிருந்தது. மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் கட்டடவியல்பட்டதாரியும், தமிழ் எழுத்தாளருமான நவரத்தினம் கிரிதரன் (வ.ந.கிரிதரன்) எழுதிய இந்த ஆய்வு நூலானது பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த யாழ்ப்பாண ராஜதானி நகர அமைப்பு குறித்து எழுதப்பட்ட முதல் அறிவியல் ரீதியான ஆய்வு நூலாகக் கருதப்படுகிறது. தமிழ் மொழியில் எழுதப்பட்ட அந் நூலானது, இந்திய எழுத்தாளர்களில் ஒருவரான லதா ராமகிருஷ்ணனால் ஆங்கில மொழியில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. நான் வாசித்தது ஆங்கில மொழிபெயர்ப்புப் பிரதியாகும்.\nஎனக்கு முதன்முதலாக கிரிதரன் அறிமுகமாவது ஒரு கவிஞராகவும், சிறுகதை மற்றும் நாவல்எழுத்தாளராகவும்தான். அதற்கும் மேலதிகமாக உலகம் முழுவதும் தமிழ் வாசகர்களிடையே பிரபலமான வலைத்தளமாகவுள்ள ‘பதிவுகள்’ இணைய இதழாசிரியர் அவர். ஆயிரக்கணக்கான வருடங்களாக யாழ்ப்பாணத்தில் திகழ்ந்த ராஜதானிகளின் வரலாறுகள் குறித்தும், அதன் இறுதி ராஜதானியாகக் கருதப்படும் நல்லூர் ராஜதானியின் நகர அமைப்பு குறித்தும் மிக முக்கியமான தகவல்கள் பலவற்றை, பல வருடங்கள் பாடுபட்டு ஆய்வுகள் செய்து அவர் எழுதியிருக்கும் இச் சிறந்த ஆய்வு நூலிலிருந்து அறிந்து கொண்டேன்.\n“சிறு பராயத்திலிருந்து தென்னிந்திய வரலாற்று நாவல்களை வாசிக்க நேர்ந்தபோதும், அனுராதபுரம் போன்ற இதிகாசப் பழமை வாய்ந்த ராஜதானிகள் குறித்த விபரங்களை அறியக் கிடைத்த போதும், அக் காலத்தில் இலங்கையின் தமிழ் மன்னர்கள் ஆட்சி செய்த ராஜதானிகள் எவ்வாறிருந்திருக்கும் என எப்போதும் சிந்தித்துக் கொண்டிருப்பேன். அத்தோடு, நான் பாடசாலைக்குச் செல்லும் காலத்தில், இற்றைக்கு ஐநூறு வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்திலிருந்த நல்லூர் ராஜதானியைக் குறித்து தமிழ் எழுத்தாளர் ஒருவர் எழுதிய நந்திக்கடல் எனும் நாவலை வாசித்ததுவும் நினைவிருக்கிறது.”\nஎனினும் தொல்லியல் ஆய்வுத் துறை மூலம், இலங்கையிலிருந்த சிங்கள ராஜதானிகள் குறித்து விரிவான ஆய்வுகள் செய���யப்பட்டிருப்பதோடு வடக்கின் தமிழ் ராஜதானிகள் குறித்த போதிய ஆய்வுகள் செய்யப்படவில்லை என்பது அவருக்கு வளரும்பருவத்தில் தெளிவாகிறது. அது மாத்திரமல்லாது, அக் காலகட்டத்தில் வடக்கிலிருந்த தொல்லியல் பெறுமதி வாய்ந்த ஸ்தலங்கள் சரியான முறையில் பாதுகாக்கப்பட்டிருக்கவுமில்லை.\n“அது மாத்திரமல்ல. இலங்கை தமிழ் மக்கள் வரலாறு குறித்து முறையான ஆய்வு செய்யப்பட்டிருக்கவில்லை என்பதுவும் எனக்குத் தெளிவானது. சிங்கள மக்களுக்கு வரலாற்று நூலாக மகாவம்சம் எனும் தொகுப்பாவது இருக்கிறது. தமிழ் மக்கள் தமது பழங்காலப் பெருமைகளை அதிகம் கதைத்தபோதிலும் கூட, அவர்களுக்கென இருக்கும் ஒரே வரலாற்றுக் கிரந்தம் ‘யாழ்ப்பாண வைபவ மாலை’ என்பது புரிந்தது. எனினும் அதுவும் எழுதப்பட்டிருந்தது இற்றைக்கு இருநூறு, முன்னூறு வருடங்களுக்கு முன்னர்தான். அடுத்தது, அனுராதபுரம், பொலன்னறுவை போன்ற ஆயிரக்கணக்கான வருடங்கள் பழமை வாய்ந்த ராஜதானிகள் குறித்து பல ஆய்வுகள் செய்யப்பட்டிருந்த போதிலும், இற்றைக்கு ஐநூறு வருடங்களுக்கு முன்பு யாழ்ப்பாணத்திலிருந்த நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்வாறிருந்தது என்பது எமக்குத் தெரியவில்லையே எனவும் எனக்குத் தோன்றியது.”\nயாழ்ப்பாணத்தில் பிறந்து, அங்கு பாடசாலைக் கல்வியைப் பூர்த்தி செய்த நவரத்னம் கிரிதரன், பட்டப்படிப்புக்காகஎண்பதுகளின் ஆரம்பத்தில் மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் கட்டடக் கலைத் துறையில் பிரவேசிக்கிறார். மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் கட்டடக் கலை பிரிவானது அவரது நல்லூர் ராஜதானி கனவை பெரு விருட்சமாக செழித்து வளர்ந்திட உரமிட்டது.\n“எமது விரிவுரைகளின் போது ஒரு தடவை பேராசிரியர் நிமல் த சில்வா (Nimal De Silva) அவர்கள், அனுராதபுர ராஜதானி குறித்தும், அங்கு ராஜதானி நகர அமைப்பு எவ்வாறிருந்தது என்பது குறித்து பேராசிரியர் ரோலண்ட் சில்வா நடத்திய ஆய்வு குறித்தும் விவரித்தார். அனுராதபுர நகரமானது ஸ்தூப வளையங்கள் இரண்டு மற்றும் நகரத்தின் மத்தியிலிருந்த வியாபார மத்திய நிலையத்தோடு திட்டமிடப்பட்ட ஒன்றெனவும் கூறக் கேட்டபோதுதான் எனக்கு அந்த எண்ணம் திடீரென உதித்தது. அக் கணத்தில் பேரானந்தத்தை உணர்ந்தேன். நல்லூர் இராசதானியைக் குறித்து நான் சிந்திக்கத் தலைப்பட்டது அப்போதிலிருந்துதான்”\nஅப்போது அவர்களுக்கு பட்டப்படிப்புக்கான ஆய்வுக்காக வரலாற்றோடு சம்பந்தப்பட்ட கட்டடக் கலை தொடர்பான தலைப்பொன்றின் கீழ் ஆராய்ச்சிக் கட்டுரையொன்றை சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டிருக்கிறது.\n“அக் காலத்தில் என்னுடனிருந்த சிரேஷ்ட மாணவரான தனபாலசிங்கம், எனக்கு முன்பே அதைக் குறித்து எழுதத் திட்டமிட்டிருந்ததாகக் கேள்விப்பட்டேன். எனினும் போதியளவு தகவல்களும், சாட்சிகளும் இல்லாத காரணத்தால் அவர் அந்த எண்ணத்தைக் கை விட்டதாகவும் அறிந்து கொள்ளக் கிடைத்தது. எனினும் இதைக் குறித்துத் தேடிப் பார்க்க அவர் எனக்கு ஊக்கமளித்தார்” என கிரிதரன் கூறுகிறார்.\nஅவர் கூறும் விதத்தில், அந்த ஆய்வை போதியளவு தொல்லியல் சான்றுகள் இல்லாமலேயே செய்ய நேர்ந்திருக்கிறது. போர்த்துக்கேயர்களின் ஆக்கிரமிப்பின் பின்னர் கடந்த ஐநூறு வருடங்களுக்குள் யாழ்ப்பாண ராஜதானியின் நகர அமைப்பானது முற்றுமுழுதாக மாறியிருக்கிறது. எனினும் அண்மைக்கால ஆய்வாளர்களால் யாழ்ப்பாண வரலாறு குறித்து எழுதப்பட்டிருக்கும் தொகுப்புக்கள் அவருக்கு பெருமளவு உதவி புரிந்திருக்கின்றன. அவற்றுள் தமிழ் மொழியில் எழுதப்பட்டுள்ள வரலாற்று ஆய்வு நூல்கள் பலவற்றையும் வாசித்து பரிசீலித்துப் பார்த்ததில் அவருக்கு முதலியார் ராசநாயகம் எழுதிய ‘The Ancient Jaffna’ எனும் தொகுப்பை தர்க்கரீதியாக ஏற்றுக் கொள்ள முடியுமாக இருந்திருக்கிறது.\nகிரிதரனின் ஆய்வு நூலை வாசித்துக் கொண்டிருக்கும்போது நானும் கூட அவர் எனக்கு அனுப்பி வைத்திருந்த அந்தத் தொகுப்பின் பி.டி.எஃப் பிரதியை வாசிக்கத் தொடங்கினேன். அந்தத் தொகுப்பிலும், ஏனைய வரலாற்று நூல்களிலும் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது நல்லூர் ராஜதானி உருவாகும் வரைக்கும், யாழ்ப்பாணக் குடா நாட்டில் நிலவி வந்திருக்கும் ராஜதானிகள் குறித்த வரலாற்றை இவ்வாறு விவரிக்க முடியும்.\nகிறிஸ்துவ வருடம் பதினைந்தாம் நூற்றாண்டளவில் இலங்கையின் வடக்குப் பிரதேசத்தில் நாக மன்னர்களின் ராஜதானியொன்று இருந்திருக்கிறது என்பதை அனுமானிக்க முடிவதோடு அதன் தலைநகரம் இப்போது யாழ்ப்பாணத்தில் ‘கந்தரோடை’ எனத் தமிழிலும் ‘கதுருகொட’ என சிங்களத்திலும் அழைக்கப்படும் பிரதேசத்தில் அமைந்திருந்ததை அனுமானிக்க முடிக��றது. இந்த நாக ராஜதானியானது, கி.பி. மூன்றாம் நூற்றாண்டு வரைக்கும் யாழ்ப்பாணத்தில் நிலவி வந்திருக்கிறது. இற்றைக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்தியாவுக்கும், யாழ்ப்பாண குடா நாட்டுக்கும் இடையே நிகழ்ந்த பாரியளவிலான தொடர்பாடல்களின் காரணமாகஇலங்கை அடையாளத்துடன் கூடிய தமிழ் குடியிருப்புக்கள் வடக்கில் உருவாகத் தொடங்கியிருக்கின்றன. கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் இந்தியாவின் சோழ மன்னரொருவர், நாக இளவரசியொருவரை சுயம்வரம் செய்திருக்கிறார்.சோழ மற்றும் நாக வம்சத்தின் இத் திருமணத்தினால் அத் தொடர்பாடல் மேலும் பலம் பெற்றிருக்கக் கூடும் என எண்ணிப் பார்க்க முடிவதோடு அப்போது இலங்கையில் வாழ்ந்து வந்த நாக, யட்ச, காலிங்க போன்ற இனங்களுடன் அத் தமிழ்மக்கள் ஒன்றாகக் கலந்து இலங்கைக்கே உரித்தான தமிழ் குயிருப்புக்கள் யாழ்ப்பாணத்தில் உருவாகியிருப்பதையும் எண்ணிப் பார்க்க முடிகிறது. (அது, இந்தியாவிலிருந்து வந்த விஜயன் உள்ளடங்கிய குழுவின் பரம்பரையிலிருந்து உருவானதாகக் கூறப்படும் சிங்கள இனத்தவர்கள் இந் நாட்டின் பூர்வீக இனங்களான யட்ச, நாக இனங்களோடு ஒன்றாகக் கலந்ததை ஒத்திருக்கிறது.)\nஅதன்பிறகு உருவாகிறது வெற்றிடமொன்று. அதாவது கி.பி. நான்காம் நூற்றாண்டிலிருந்து ஒன்பதாம் நூற்றாண்டு நூற்றாண்டு வரைக்கும் யாழ்ப்பாண ராஜதானி குறித்த போதியளவு விபரங்கள் கிடைக்கப் பெறாத தெளிவற்ற கால கட்டம்.(நாக மன்னர்களின் ஆட்சிக் காலத்துக்குப் பிறகு தமிழ் மன்னர்களின் ஆட்சிக் காலம் தோன்றுவது அக் காலகட்டத்திலாக இருக்கக் கூடும்.) அந்தக் காலத்திலோ அல்லது அதன் பிறகோ யாழ்ப்பாண ராஜதானியானது பருத்தித் துறையை அண்டிய சிங்கை நகரில் தோன்றியிருக்கக் கூடும் என்பதை எண்ணிப்பார்க்க முடிகிறது. யாழ்ப்பாண ராஜதானி வரலாற்றில் ‘நல்லூர் காலம்’ தோன்றுவது அதன்பிறகுதான். அது, கி.பி. 1250 களில் சோழ இளவரசர்களில் ஒருவரான சேகராஜசேகரன் இலங்கைக்கு வருகை தந்து சேகராஜசேகர சக்கரவர்த்தி என யாழ்ப்பாணத்தில் முடிசூடப்பட்டதும் நிகழ்ந்திருக்கிறது. அவர் மூலமாக யாழ்ப்பாணத்தில் ஆரிய சக்கரவர்த்தி ராஜ வம்சம் தோன்றத்தொடங்குவதோடு சக்கரவர்த்திதனது ராஜதானியாக நல்லூரைக் களமமைத்துக் கொள்கிறார்.\nநல்லூர் ராஜதானியின் அடுத்த முக்கியமான அத்தியாயம் ���ருவாவது கி.பி. 1450 களில் தெற்கிலிருந்து வந்த சபுமல் இளவரசன் யாழ்ப்பாணத்தை ஆண்டு கொண்டிருந்த சக்கரவர்த்தி வழித் தோன்றலான மன்னர் கனக்சிங்காரியனை தோற்கடித்து, ஸ்ரீ சங்கபோதி புனனேகபாகு எனும் பெயரில் அங்கு மன்னராக முடிசூடிய போது நிகழ்ந்திருக்கிறது. அவர் நல்லூர் கந்தஸ்வாமி கோயிலை முற்றுமுழுதாக புணர்நிர்மாணம் செய்ததாகக் கூறப்படுகிறது.\nஇலங்கையின் தென்பகுதியிலிருந்து கிளம்பி, தமிழ் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்ட சபுமல் இளவரசன் குறித்து எழுதப்பட்டிருக்கும் ‘கோகில சந்தேஷய’ எனப்படும் சிங்கள சங்கக் கவிதை இலக்கியத்தின் கவிதைகள் பலவற்றிலும் அக் காலத்தில் இருந்த நல்லூர் ராஜதானியின் பெருமை பாடப்பட்டிருப்பதாக கிரிதரன் தனது ஆய்வு நூலில் எழுதியிருக்கிறார். அது வரையில், பல தடவைகள் கேள்விப்பட்டிருக்கும்,‘கோகில சந்தேஷய’ எனப்படும் சிங்கள சங்கக் கவிதை இலக்கியத்தை நான் முதன்முதலாக தொடக்கத்திலிருந்து முடிவு வரைக்கும் கவனமாக வாசிக்கத் தொடங்கியது,அக் கவிதைகளை வாசிப்பதன் மூலம் நான் வாசித்துக் கொண்டிருந்த நல்லூர் ராஜதானியின் நகர அமைப்பின் மீது மிகுந்த நேச உணர்வை உள்ளத்தில் தோற்றுவித்துக் கொள்ளத்தான்.\nதங்கத் தோரணங்களும் மணிகளும் தொங்கும்\nஅலங்கரித்த விசாலமான அரண்மணை வீற்றிருக்கும்\nஆங்காங்கே பூத்துச் செழித்திருக்கும் மலர்த் தோப்புக்களுடன்\nவைஷ்ணவ எனும் கடவுள் குடியிருக்கும் யாழ் நகரை (நல்லூர் ராஜதானியை) பாருங்கள்\nஇவ்வாறு உரைக்கப்பட்டிருக்கும் விதமாக அந்தக் காலத்தில் திகழ்ந்த அழகிய நல்லூர் ராஜதானியானது பதினாறாம் நூற்றாண்டில் போர்த்துக்கேயர்களின் படையெடுப்பின் காரணத்தால் முற்றுமுழுதாக அழிக்கப்பட்டிருக்கிறது. மந்திரி மனையையும், இன்னும் சில இடிபாடுகளையும் தவிர வேறு எதுவும் அங்கு எஞ்சியிருக்கவில்லை. நல்லூர் ராஜதானியைக் குறித்த சான்றுகள் பலவும் அழிந்துபோயிருந்த அவ்வாறானதோர் இக்கட்டான நிலைமையில்தான் கிரிதரன் தனது ஆராய்ச்சியை நடத்தியிருக்கிறார். எனினும் அவர் தனது முயற்சியைக் கைவிடத் தயாராகவிருக்கவில்லை.\nபௌத்த மற்றும் இந்து கட்டடக் கலை மற்றும் நகர அமைப்புக்கள் குறித்து எழுதப்பட்ட புத்தகங்கள், மற்றும் போர்த்துக்கேயர்களால் எழுதப்பட்ட குறிப்புக்களை ஆய்வு செய்ததன் மூலம் அவருக்கு யாழ்ப்பாண தமிழ் ராஜதானிகளின் அமைவுகள் குறித்த விடயங்களை பெற்றுக் கொள்ள முடிந்திருக்கிறது. நில அளவையாளர் காரியாலயத்திலிருந்து பெற்றுக்கொண்ட வரைபடங்களினூடாக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களினதும் பாதைகளினதும் பெயர்களைக் கண்டறிந்து அதனூடாக கடந்த காலத்தில் ஓரோர் இடங்களினதும் அமைவிடங்கள் குறித்த தெளிவையும் பெற்றுக் கொள்ள முடிந்திருக்கிறது.\nபோர்த்துக்கேயர்களால் பதினேழாம் நூற்றாண்டில் எழுதப்பட்டிருக்கும் Early Christanity of Ceylon தொகுப்பில் நல்லூர் ராஜதானியில் அமைக்கப்பட்டிருந்த வியாபார மத்திய நிலையம் ஒன்றைக் குறித்து குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதன் செயற்பாடுகளை மன்னர் தனது மாளிகையிலிருந்தே கண்காணிக்கக் கூடிய விதமாக அது அமைக்கப்பட்டிருந்தது என அத் தொகுப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும் நல்லூர் ராஜதானியின் பாதுகாப்புக்காக நகரத்தைச் சூழவும் சிறிய காவலரண்கள் மூன்று அமைக்கப்பட்டிருந்ததாகவும், அக் காவலரண்களைத் தொடர்புபடுத்தி ஒவ்வொன்றினூடாகச் செல்லும் பிரதான பாதைகளிரண்டும் அமைந்திருந்ததாகவும் அத் தொகுப்பில் எழுதப்பட்டிருப்பதைக் காணக்கூடியதாகவிருக்கிறது.\nஅதற்கும் மேலதிகமாக, இன்றும் கூட யாழ்ப்பாணத்தில் சிதைவுகளாகக் காணப்படக் கூடிய யமுனை ஏரி அல்லது யமுனாரி எனப்படும் ஏரியானது நல்லூர் ராஜதானி குறித்த ஆராய்ச்சியின் போது கிரிதரனுக்கு பெரிதளவில் பயனளித்திருக்கிறது. ராஜவம்சத்தினர் தமது குளியல் தேவைகளுக்காகவோ அல்லது நல்லூர் கந்தஸ்வாமி கோயில் பூஜைகளுக்குப் பயன்படுத்திய குஏரியாகவோ இந்தப் பொய்கை பாவிக்கப்பட்டிருக்கக் கூடும் என்பதை எண்ணிப் பார்க்க முடிகிறது.\nஇந்த அனைத்து விடயங்களோடும் பண்டைய இந்து வாஸ்து ரீதியான கட்டடக் கலை பொருந்துவதால் கிரிதரனுக்கு தனது நல்லூர் ராஜதானி நகர அமைப்பை கட்டமைக்க முடிந்திருக்கிறது. அது சதுர வடிவான நகரமாகத் திகழ்ந்திருக்குமெனத் தீர்மானிக்கும் அவர் அதில் வட மேற்குத் திசையில் அரச மாளிகை, யமுனை ஏரி, வியாபார மத்தியநிலையம் மற்றும் கந்தஸ்வாமி கோயில் இருந்திருக்கலாமென தீர்மானிக்கிறார். வட கிழக்குத் திசையில் பணியாளர்களது குடியிருப்பும், வேலைத்தளங்களும்,, தென்கிழக்குத் திசையில் படையினரதும், வி���ாபாரிகளினதும் குடியிருப்பும், தென் மேற்குத் திசையில் புலவர்களினதும், மந்திரிகளினதும், ராஜ குலத்தவர்களினதும் காணிகளாகவும், நகரத்தைச் சூழவும் நான்கு கோயில் இருக்கத் தக்கதாகவும் அவர் அந்த நகர நகர அமைப்பை நிர்மாணித்திருக்கிறார். அந்தத் திட்டமிடலுக்கேற்ப நான் இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டிருக்கும் மந்திரி மனையானது அமையப் பெறுவது தென் மேற்குத் திசையிலாகும்.\n“மந்திரி மனை அமைந்திருக்கும் காணிக்கு பண்டைய காலத்திலிருந்து குறிப்பிடப்படும் பெயர் சங்கிலித் தோப்பு என்பதாகும் என நில அளவையாளர் காரியாலயத்தின்வரைபடத்தைப் பரிசோதித்துப்பார்த்தபோது எனக்குப் புலப்பட்டது. அதற்கு முன்பு அதனை யாரும் கண்டுபிடித்திருக்கவில்லை. சங்கிலித் தோப்பு என்பது ராஜாவுக்கு உரிய தோப்பு (சோலை) என்பதாகும். ஆகவே அதைச் சுற்றிவர அரச மாளிகையும், ஏனைய உயரதிகாரிகளின் கட்டடங்களும் இருந்திருக்கக் கூடுமென தீர்மானிக்க முடிகிறது” என கிரிதரன் விவரிக்கிறார்.\nஅவர் இந்த ஆய்வுத் தொகுப்பை மீளவும் எழுதி ஒரு நூலாக வெளியிடுவது, பல்கலைக்கழகப் பட்டப்படிப்பைப் பூர்த்தி செய்து, நாட்டை விட்டு வெளியேறியிருக்கும் காலப்பகுதியில்தான். அந்த நூல் 1996 ஆம் ஆண்டு இந்தியாவிலிருக்கும் சினேகா பதிப்பகத்தினூடாக வெளிவந்திருக்கிறது.\n“இன்னும் கூட எனது ஆராய்ச்சி முடிவடையவில்லை. நான் இடைக்கிடையே அதற்குரிய பாகங்களைச் சேகரித்து வருகிறேன். அந்தக் காலத்தில் போதியளவு தொல்லியல் சான்றுகளேதுமற்றுத்தான் நான் இந்த ஆய்வை எழுத வேண்டியிருந்தது. இது இலகுவான விடயமல்ல. மிகவும் பாடுபட வேண்டியதொன்று. உண்மையில் இதனூடாகப் பயணித்து இதைக் குறித்து மேலதிக ஆய்வுகளைச் செய்ய விரும்புவோருக்கு ஒரு அடிப்படை அத்திவாரமாக எனது ஆய்வு நூலை அறிமுகப்படுத்த விரும்புகிறேன்” என நவரத்தினம் கிரிதரன் குறிப்பிடுகிறார்.\nஅவரது இந்த ஆய்வு நூலுக்கு ஆய்வாளர்களதும், வாசகர்களதும் உச்ச வரவேற்பு கிடைத்துள்ளதோடு, நல்லூர் மற்றும் யாழ்ப்பாண ராஜதானிகள் குறித்த ஆராய்ச்சிக் கட்டுரைகளிலும், இணையத்தளங்களில் அதைக் குறித்து எழுதப்படும் கட்டுரைகளிலும் அவரது ஆய்வை அடித்தளமாகக் கொண்டு எழுதப்பட்டிருப்பதை இன்றும் கூடக் காண முடிகிறது.\n“இலங்கை வரலாற்றைக் கு���ித்து ஆராய்ச்சிகள் செய்யப்படும்போது அது ஒருதலைப்பட்சமாக அமையக் கூடாது என நான் ஆழமாக நம்புகிறேன். இலங்கையில் தெற்கு, மேற்கிலிருப்பதைப் போலவே வடக்கிலும் கிழக்கிலுமிருக்கும் தொல்லியல் சான்றுகள் குறித்த ஆய்வுகளை ஒருதலைப்பட்சமாக நிகழ்த்தக் கூடாது என்பதே எனது கருத்து. இந்த அனைத்துப் பிரதேசங்களும் இலங்கை எனும் நாட்டுக்கே உரித்தாகிறது. அனைத்துப் பிரதேசங்களினதும் வரலாறுகள் ஒன்றிணைந்துதான் ஒரு நாட்டின் வரலாறு உருவாகிறது. அவ்வாறு நோக்கும்போது நாங்கள் எமது வரலாறு குறித்து செய்திருக்கும் ஆய்வுகள் போதாது. நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இருக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் அனைத்தும் பாதுகாக்கப்பட வேண்டும் என எனக்குத் தோன்றுகிறது. இந்த நாட்டின் வரலாறானது நாம் நினைத்துப் பார்ப்பதை விடவும் மிகவும் புகழ் வாய்ந்தது.”\nகிரிதரனின் அந்தக் கூற்றோடு என்னாலும் இணைய முடிகிறது. நான் ஒரு கணம் நல்லூர் ராஜதானியை மனதால் உருவகித்துப் பார்க்க முயன்றேன். அதில் மனிதர்களின் குரல்களால் எழுந்து நிற்கும் தெருக்கள், உயர்ந்த மதில் சுவர்கள், வியாபார மத்திய நிலையம், இடையறாது மணியோசை எழுப்பும் கோயில்கள், கம்பீரமாக எழுந்து நிற்கும் அரசவை, மாளிகைகள் மற்றும் காவலரண்கள் எனது கற்பனையில் எழுகின்றன.\nநான் கிரிதரனுக்கு திரும்பவும் நன்றி தெரிவிக்கிறேன். மரித்துக் கொண்டிருந்த எனது பண்டைய யாழ்ப்பாண நினைவுகளுக்கு அவரால்தான் உயிர் கிடைத்திருக்கிறது.நான் அவரது நல்லூர் ராஜதானியின் நகர அமைப்பு எனும் கால யந்திரத்தினூடாக கடந்த காலத்துக்குச் சென்று நல்லூர் ராஜதானியைக் கண்டு கொண்டிருக்கிறேன்.\nதமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்\nநாவலும் மறைபிரதியும் – பி.கே.பாலகிருஷ்ணன்\nஜீன் ட்ரெஸ் – பொருளியல் பேராசிரியர்; மனிதாபிமானி; துறவி\nபுரட்சிகரம் எனும் ரகசிய ஊற்று – ‘அன்னை’ மாக்ஸிம் கார்க்கி\nசிவ நடனம் – ஆனந்த குமாரசாமி\nஇளம் எழுத்தாளன் மொழியாக்கம் செய்யலாமா\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 49\nதூயனின் இரு கதைகள் - கடலூர் சீனு\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 50\n'வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை - 22\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆ���்றூர் ரவிவர்மா காந்தி கி.ராஜநாராயணன் கோவை ஞானி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உணவு உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் தொல்லியல் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் நகைச்சுவை நேர்காணல் நேர்காணல் மற்றும் பேட்டிகள் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பிறர் படைப்புகள் நூல் மதிப்புரை மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் மதிப்புரை விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெண்முரசு – ஒலிவடிவம் வெண்முரசு – வாசகர் கடிதம் வெண்முரசு – வாசகர் மதிப்புரை வெண்முரசு ஆவணப்படம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/26726/", "date_download": "2021-10-19T12:43:53Z", "digest": "sha1:4MSRHN2KACOFD72OKFPPCK2YGJGQLHDY", "length": 28002, "nlines": 149, "source_domain": "www.jeyamohan.in", "title": "சந்திப்புகள் – சில கடிதங்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nவாசகர்கள் வாசகர�� கடிதம் சந்திப்புகள் – சில கடிதங்கள்\nசந்திப்புகள் – சில கடிதங்கள்\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.\nஏறத்தாழ பன்னிரெண்டு வருடங்களுக்கு முன்னதாக உங்களோடு பயணிக்கத் தொடங்கினேன் – உங்கள் படைப்புகளின் ஊடாக. என் தந்தை வழியாகத்தான் உங்களை வந்தடைந்தேன். வீட்டில் எங்கு திரும்பினாலும் புத்தகங்கள் என்ற சூழலில் வளர்ந்தேன். அலுவல் முடிந்து மிகத் தாமதமாக படுக்கையில் விழுந்த ஓர் இரவில், விஷ்ணுபுரம் (அகரம் வெளியீடு) புத்தகத்தைக் கையில் எடுத்தேன். தொடர்ச்சியாகப் பல இரவுகள் அந்தப் புத்தகத்தோடு பயணித்தேன். கொந்தளிப்பான இரவுகள் அவை. அன்று உங்களோடு ஆரம்பித்த விவாதம் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. விஷ்ணுபுரம் படித்த அந்த நாட்கள் மன எழுச்சிகொண்டவை. மிக அந்தரங்கமாக உணர்ந்த இரவுகள் அவை. படித்து முடித்த ஓர் அதிகாலையில், உங்களுக்கு ஓர் மின்னஞ்சல் அனுப்பினேன். விஷ்ணுபுரம் படித்து நான் அடைந்த பேரனுபவத்திற்கு நன்றி தெரிவித்து. நான் மீண்டும் மீண்டும் படிக்கும் புத்தகமாக விஷ்ணுபுரமும் காடும் ஆகிவிட்டன.\nநான் படிக்காமல் இருப்பது உங்கள் கொற்றவை மட்டும் தான். அதையும் இன்று படிக்க ஆரம்பிக்கிறேன். இதுவே நான் உங்கள் பிறந்த நாளைக் கொண்டாடும் முறை.\nஅலுவல் சூழலில் சிக்கிப் புத்தகமே படிக்காத நாட்களில் உங்களது ‘ஊமைச்செந்நாய்’ என்னை மீண்டும் இலக்கிய உலகத்திற்குள் இழுத்துக்கொண்டது. ‘மாடன் மோட்சமும்’ , ‘ஊமைச்செந்நாய்’ புதினமும் உலகின் தலைசிறந்த இலக்கியப் படைப்புகளில் என்றும் இடம் பெறக்கூடியவை.\n‘அறம்’ தொகுப்பு நான் விஷ்ணுபுரம் படித்த நாட்களில் அடைந்த மனவெழுச்சியை மீண்டும் என்னுள் ஏற்படுத்தியது. என் அடுத்த தலைமுறையினருக்கு இன்று ‘அறம்’ நூலையே பரிசாக அனுப்பி வைத்துக்கொண்டிருக்கிறேன்.\nசுனாமி காலத்தில் உங்களோடு ஓர் கடித உரையாடல் நடந்தது. நீங்கள் அந்த நேரத்தில் எழுதிய ‘இந்தியா’ பற்றிய மன எழுச்சியை விவாதத்திற்கு உட்படுத்தி இருந்தேன். உங்கள் பதில் மிக சுருக்கமாக இருந்தது – ‘இது மேலோட்டமாக போகிற போக்கில் பேசக்கூடிய விஷயமல்ல. ஆழமாக விவாதிக்க வேண்டிய ஒன்று’ என்று கூறி இருந்தீர்கள். இந்தியாவில் உள்ள அனைத்து மக்களையும் இணைக்கும் கூறு என்ன என்பதைப் பின்னாட்களில் மெதுவாக உணரத்தொடங்கிய பொழுது நீங்கள�� சுனாமி காலத்தில் எழுதிய கட்டுரையின் முழு வீச்சும் புரிந்தது.\nஉங்கள் இலக்கியப் படைப்பாகட்டும், கட்டுரை ஆகட்டும் அல்லது தனிப்பட்ட மின்னஞ்சல் ஆகட்டும். அனைத்திலும் நீங்கள் எதிர்த்தரப்பினர் விவாதிக்கத் தேவையான வெளியைக் (Space) கொடுக்கிறீர்கள். அதுவே எனக்கு உங்களிடம் மிகவும் நெருக்கமானவனாக உணரவும் செய்கிறது. விவாதங்களின் மூலமாகவே நான் முன்னேறிச் செல்கிறேன்.\nஇன்றைய தமிழ்ச்சூழலில் தவிர்க்கமுடியாத ஆளுமை நீங்கள். A top intellect. மீண்டும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.\n வாழ்த்துக்கு நன்றி. சிறுவனாக இருந்த காலத்தைத் தவிர்த்தால் நேற்றுதான் முதல் பிறந்தநாள் கொண்டாட்டம். சென்னையில் இருந்தேன், சிறில் அலெக்ஸ் வீட்டு கிருகப்பிரவேசத்துக்குச் சென்று அங்கே ஒரு விடுதியில். கூட மற்ற நண்பர்கள் இருந்தார்கள். அரங்கா, சிறில் போன்றவர்கள். எல்லாருமாகச் சேர்ந்து திடீரென்று கேக்கெல்லாம் வெட்டிக் கொண்டாடினோம். வேடிக்கையாக இருந்தது.\nஅலுவலகச்சூழல் பெரும்பாலானவர்களுக்கு அந்தரங்கமான கலை, ஆன்மீக உலகில் வாழமுடியாத அளவுக்கு நெருக்கடி மிக்கதாக ஆகிவிட்டிருக்கிறது. ஆனால் அப்படி வாழ முடியாவிட்டால் அது பெரும் இழப்பே. பாறையைப் பிளந்து இதழ் விரிக்கும் சிறுசெடி போல நேரத்தைக் கண்டுகொள்ளத்தான் வேண்டும்.\nஉங்கள் தனிப்பட்ட உலகின் விரிவுக்கு என் எழுத்துக்களின் பங்கு ஒன்று இருப்பது நிறைவளிக்கிறது. எழுதுங்கள்.\nசனிக்கிழமை மாலை உங்களை சந்திக்க முடிந்ததில் மகிழ்ச்சி. ஆனால், உங்களுடன் என்னால் சாதாரணமாக உரையாட முடியவேயில்லை. ஒரு படி மேலே சொல்ல வேண்டும் என்றால் உங்கள் அண்மை ஏதோ செய்தது :). இயல்பாக இருக்கவே முடியவில்லை. இதை நீங்கள் உணர்ந்தீர்களா தெரியாது.\nநான் இதுவரை என் ஆதர்சங்களாகக் கொண்டவர்களுடன் அதிகம் உரையாடியது கிடையாது, என் பெரியப்பாவைத்தவிர. என் மனைவி சொன்னாள், “you are in awe of him”. அது உண்மைதான். இதையும் மீறி, வரும் வாழ்வில் (நாட்களோ, மாதங்களோ, வருடங்களோ தெரியாது) ஒரு அர்த்தமுள்ள நட்பு சாத்தியமாகும் என்று நம்புகிறேன் (இதை எழுதும் போது அந்த நம்பிக்கை மிகக் குறைவே:) ). என்ன ஆகிறதென்று பார்ப்போம்.\nஇந்தக் கடிதத்தை முதலாகக்கொண்டு உங்களுடன் உரையாட முயல்கிறேன்.\nநாம் இதுவரை இருமுறை நேரில் சந்தித்திருக்கிறோம். இருந்தும் பேசமுடி���வில்லை என்பது கொஞ்சம் ஆச்சரியம்தான். நான் எப்போதுமே புதிய நண்பர்களிடம் அந்த வேறுபாடு எழக்கூடாது என்பதில் கொஞ்சம் கவனம் எடுத்துக்கொள்வேன்.\nஆனால் ஒன்றுண்டு, ஆழமான அந்தரங்கப்பகிர்வு ஒன்று உண்டு. அது ஒரு பொதுச்சந்திப்பில் சாதாரணமாக நிகழாது. அதற்கான தருணம் ஒன்றுண்டு. அதற்காகக் காத்திருக்கவே வேண்டும்.\nசற்று முன்தான் ‘ஏழாம் உலகம்’ வாசித்து முடித்தேன். என் மனம் தற்பொழுது சமநிலையில் இல்லை.\nஎன் வாழ்க்கையில், எனது அசட்டுத்தனங்களால் பலமுறை விளைந்த தவறுகளை, நான் ‘ஏதோ நடந்துவிட்டது, இனி மாற்ற இயலாது’ என்று சுலபமாகத் தாண்டிச் சென்று இருக்கின்றேன். ஆனால், 2009-ஆம் ஆண்டு தங்களின் அமெரிக்கப் பயணத்தினூடே சாக்ரமெண்டோஅருகே Folsom Intel-இல் நடந்த கலந்துரையாடலில் கலந்துகொள்ள ஆசைப்பட்டு அந்த அறை வாசல் வரை வந்து நின்று விட்டு பிறகு ஏனோ ஒரு அர்த்தமற்ற தயக்கத்தினால் திரும்பிச் சென்ற தவறை மறந்து, கடந்து செல்ல இயலாமல் இப்பொழுது தவிக்கின்றேன்.\nஎன் மனக்கொந்தளிப்பு அடங்கிய பின்னர் இந்நாவலைப் பற்றிய எனது புரிதலை விரிவாக எழுத ஆசை. என்னால் முடியுமா, எனக்கு அந்தத் தகுதி இருக்கின்றதா என்று தெரியவில்லை.\nஎனக்கு தற்பொழுது சொல்லத் தோன்றும் ஒன்றே ஒன்று – “என் நெஞ்சம் நிறைந்த நன்றிகள் ஐயா”.\nஅன்று சந்தித்திருக்கலாம். ஆனால் சந்திக்காமல் போனதிலும் இழப்பு ஏதும் இல்லை. இன்னும் பொருத்தமான ஒரு தருணத்துக்காக அந்தச் சந்திப்பு ஒத்திப்போயிருக்கலாம். சந்தித்தே ஆகவேண்டுமென்ற நிலை உருவாகும்போதுதான் பலசமயம் முக்கியமான சந்திப்புகள் நிகழ்கின்றன.\nஏழாம் உலகம் நாவலைப்பற்றி எழுதுங்கள். நாவலைக் கடந்துசெல்ல, உள்வாங்கிக்கொள்ள அது நல்ல வழி.\nஅடுத்த கட்டுரைவினோபா, ஜெபி, காந்தி\nகோவை கவிதைவிவாதம் – கடிதம்\nஅக்டோபர் 2 காந்தி ஜெயந்தி நிகழ்வு – குக்கூ காட்டுப்பள்ளி\nசிறுகதை வாசிக்க பயிற்சி அவசியமா\nவடுகூரும் தோத்தாத்ரியும்- கடலூர் சீனு\nஅறமென்ப, வழக்கறிஞர்கள் - கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 25\nஅண்ணா ஹசாரே- அரசியல் ஆய்வுகள்\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 16\nஏற்காடு இலக்கியமுகாம் - வானவன்மாதேவி\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி கி.ராஜந���ராயணன் கோவை ஞானி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உணவு உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் தொல்லியல் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் நகைச்சுவை நேர்காணல் நேர்காணல் மற்றும் பேட்டிகள் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பிறர் படைப்புகள் நூல் மதிப்புரை மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் மதிப்புரை விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெண்முரசு – ஒலிவடிவம் வெண்முரசு – வாசகர் கடிதம் வெண்முரசு – வாசகர் மதிப்புரை வெண்முரசு ஆவணப்படம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2021/10/06/tn-govt-will-take-over-expenditure-of-8-month-infant-treatment", "date_download": "2021-10-19T11:55:04Z", "digest": "sha1:NU5IC2TJN43TR7CCFIQXR7MUIOSRX7UU", "length": 9181, "nlines": 50, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "tn govt to take over expenditure of girl child treatment who is batteling against Genetic blood clotting", "raw_content": "\nரத்த உறைதலால் உயிருக்கு போராடும் 8 மாத பெண் குழந்தை; சிகிச்சை செலவ��� ஏற்ற தமிழ்நாடு அரசு\nமரபணு ரத்த உறைதல் குறைபாடு காரணமாக உயிருக்கு போராடும் 8 மாத குழந்தை - சிகிச்சைக்கான செலவை அரசே ஏற்கும் என சுகாதாரத்துறை அமைச்சர் குழந்தையின் தந்தைக்கு ஆறுதல்.\nசென்னையை அடுத்த அம்பத்தூர் பகுதியை சேர்ந்த கொளஞ்சி - கார்த்திகா தம்பதிக்கு பிறந்த குழந்தை தியாயினி. அந்த குழந்தைக்கு பிறவியிலேயே மரபணு ரத்த உறைதல் குறைபாடு நோய் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் கிருஷ்ண ஜெயந்தி அன்று குழந்தைக்கு கிருஷ்ணர் வேடமிட்டு குடும்பத்தினர் மகிழ்ந்தனர்.\nஅன்று இரவே குழைந்து தொடர் வாந்தி எடுத்ததால் உடனடியாக எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டது. அப்பொழுது மருத்துவர்கள் பரிசோதனை செய்த பொழுது குழந்தைக்கு மரபணு ரத்த உறைதல் குறைபாடு இருப்பதால், தலையில் ரத்த கசிவு பல இடங்களில் ஏற்பட்டுள்ளது.\nஇதனால் உடனடியாக சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவ குழுவினர் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். அதன் பின்னர், ரத்தம் உறைவதற்காக அவ்வப்பொழுது ஊசிகள் மூலம் மருத்துகளும் செலுத்தப்படுகிறது. ஆனால் ரத்த கசிவு குறையாததால், தலையின் பின் பகுதி வீக்கமடைந்து, உடலின் பல பகுதிகளில் ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது.\nஇந்நிலையில் குழந்தையின் தந்தை கண்ணீருடன் தனது குழந்தையை காப்பாற்றி கொடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்தார். இதனை தொடர்ந்து, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியனையும் நேரில் சந்தித்து கண்ணீருடன் கோரிக்கை வைத்தனர். உடனடியாக அமைச்சர், எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை இயக்குநர் எழிலரசியை தொடர்பு கொண்டு, குழந்தைக்கு தேவையான சிகிச்சையை மேற்கொள்ளவும், தேவைப்பட்டால் வெளி மருத்துவர்களின் உதவி கொண்டும் சிகிச்சையளிக்கவும், அதற்கான செலவை அரசே ஏற்கும் எனவும் தெரிவித்துள்ளது குழந்தையின் குடும்பத்தினருக்கு ஆறுதலாக உள்ளது.\nஇந்த நோய் மிகவும் அரிதான நோய் எனவும், சிரமமான நோயாக இருப்பதால் அறுவை சிகிச்சையை மேற்கொள்ள தயக்கம் இருப்பதாகவும், மேலும் தலை வீக்கமடைந்திருப்பதால் அதற்கும் ஒரு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் ஆலோசித்து வருகின்றனர். வீக்கம் குறைந்த பிறகு ரத்த கசிவை கட்டுப்படுத்துவதற்கான அறுவை சிகிச்சை செய்யப்படும் என மருத்துவமனை இயக்குநர் எழிலரசி தகவல் தெரிவித்துள்ளார்.\nஅழகான பிஞ்சு குழந்தைக்கு அபூர்வ நோய் பாதிப்பு ஏற்பட்டு, ஒரு மாதத்திற்கு மேலாக சிகிச்சை மேற்கொண்டு வருவது அனைவருக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\n“FIR நகலை காட்டுங்க... அப்போதான் உடலை தகனம் செய்வோம்” : பலியான விவசாயிகளின் குடும்பத்தினர் ஆவேசம்\nசிறுநீரக கல்லுக்கு பதிலாக சிறுநீரகத்தையே அகற்றிய மருத்துவர்... நுகர்வோர் ஆணையத்தின் அதிரடி உத்தரவு\n“விரைவில் ஆழ்கடல் அகழாய்வுப் பணிகளைத் தொடங்க ஆலோசனை” : அமைச்சர் தங்கம் தென்னரசு முக்கிய தகவல்\nதண்ணி இல்லாத காட்டில் மாட்டிக்கொண்ட 2 பேர்.. 1 வாரம் கழித்து மீட்ட போலிஸ்: ஆஸ்திரேலியாவில் நடந்தது என்ன\n50 ஆண்டுகளுக்குப் பிறகு மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றியத்தை கைப்பற்றிய தி.மு.க - ஆட்சிக்கு கிடைத்த நற்சான்று\n“எங்க கல்யாணத்த மழை வெள்ளம் தடுப்பதா.. நெவர்” : காதல் ஜோடி எடுத்த முடிவு - இணையத்தில் வைரல்\n“விரைவில் ஆழ்கடல் அகழாய்வுப் பணிகளைத் தொடங்க ஆலோசனை” : அமைச்சர் தங்கம் தென்னரசு முக்கிய தகவல்\nசிறுநீரக கல்லுக்கு பதிலாக சிறுநீரகத்தையே அகற்றிய மருத்துவர்... நுகர்வோர் ஆணையத்தின் அதிரடி உத்தரவு\nதண்ணி இல்லாத காட்டில் மாட்டிக்கொண்ட 2 பேர்.. 1 வாரம் கழித்து மீட்ட போலிஸ்: ஆஸ்திரேலியாவில் நடந்தது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D,_%E0%AE%A8%E0%AF%80._%E0%AE%B5._(%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D)&action=edit", "date_download": "2021-10-19T12:55:42Z", "digest": "sha1:5E5CY5F7SNDY75VFO7ROOZYXN5X6XC4S", "length": 3914, "nlines": 36, "source_domain": "www.noolaham.org", "title": "அந்தோனி அண்ணாவியார், நீ. வ. (நினைவுமலர்) என்பதற்கான மூலத்தைப் பார் - நூலகம்", "raw_content": "\nஅந்தோனி அண்ணாவியார், நீ. வ. (நினைவுமலர்) என்பதற்கான மூலத்தைப் பார்\n← அந்தோனி அண்ணாவியார், நீ. வ. (நினைவுமலர்)\nஇப்பக்கத்தைத் தொகுக்கவும்- இதற்கு தங்களுக்கு அனுமதி இல்லை. அதற்கான காரணம்:\nநீங்கள் கோரிய செயற்பாடு பயனர்கள் குழு பயனர்களுக்கு மட்டுமே.\nநீங்கள் இந்தப் பக்கத்தின் மூலத்தைப் பார்க்கவும் அதனை நகலெடுக்கவும் முடியும்:\n{{நினைவுமலர்| நூலக எண் = 76788 | வெளியீடு = [[:பகுப்பு:1989|1989]].. | ஆசிரியர் = [[:பகுப்பு:-|-]] | வகை = நினைவு வெளியீடுகள்| மொழி = தமிழ் | பதிப்பகம��� = [[:பகுப்பு:-|-]] | பதிப்பு = [[:பகுப்பு:1989|1989]] | பக்கங்கள் = 50 | }} =={{Multi|வாசிக்க|To Read}}== <--pdf_link-->* [http://noolaham.net/project/768/76788/76788.pdf நினைவு மலர்: கலைக்குரிசில் அந்தோனி அண்ணாவியார் 1989] {{P}}<\nஅந்தோனி அண்ணாவியார், நீ. வ. (நினைவுமலர்) பக்கத்துக்குத் திரும்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B0._%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88:_%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95_%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D&oldid=411038", "date_download": "2021-10-19T12:46:41Z", "digest": "sha1:IJYU4Q62AZZXGW7EQBRBT6CTNTMRFN4F", "length": 4308, "nlines": 51, "source_domain": "www.noolaham.org", "title": "அமரர் இர. சிவலிங்கம் ஞாபகார்த்த பதினைந்தாவது நினைவுப் பேருரை: மலையக மக்களின் வாழ்வியல் - நூலகம்", "raw_content": "\nஅமரர் இர. சிவலிங்கம் ஞாபகார்த்த பதினைந்தாவது நினைவுப் பேருரை: மலையக மக்களின் வாழ்வியல்\nJeevakumari (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:12, 10 டிசம்பர் 2020 அன்றிருந்தவாரான திருத்தம்\n(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)\nஅமரர் இர. சிவலிங்கம் ஞாபகார்த்த பதினைந்தாவது நினைவுப் பேருரை: மலையக மக்களின் வாழ்வியல்\nஅமரர் இர. சிவலிங்கம் ஞாபகார்த்த பதினைந்தாவது நினைவுப் பேருரை: மலையக மக்களின் வாழ்வியல் (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [11,760] இதழ்கள் [13,280] பத்திரிகைகள் [53,303] பிரசுரங்கள் [1,125] நினைவு மலர்கள் [1,513] சிறப்பு மலர்கள் [5,516] எழுத்தாளர்கள் [4,874] பதிப்பாளர்கள் [4,171] வெளியீட்டு ஆண்டு [185] குறிச்சொற்கள் [91] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,157]\n2014 இல் வெளியான சிறப்பு மலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanjai.today/rs-65-10-crore-allocated-for-cauvery-delta-districts/", "date_download": "2021-10-19T12:21:23Z", "digest": "sha1:ZHDKSM2EBPE3QK7GSFQAMPNBS4S47ZZG", "length": 14640, "nlines": 134, "source_domain": "www.thanjai.today", "title": "காவிரி டெல்டா பகுதிகளில் தூர்வார ரூ.65.1 கோடி நிதி ஒதுக்கீடு", "raw_content": "\nதஞ்சை நகரச்செய்தி மாநகரச் செய்தி வேளாண்மை\nகாவிரி டெல்டா மாவட்டங்களில் தூர்வார ரூ.65.10 கோடி நிதி ஒதுக்கீடு\nதஞ்சை மே 21: காவிரி டெல்டா மாவட்டங்களில் நிகழாண்டு ஆறுகள், வாய்க்கால்கள், வடிகால்கள் உள்ளிட்டவற்றை தூா்வார ரூ. 65.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.\nமேட்டூா் அணையின் நீா்மட்டம் நேற்று மாலை நிலவரப்படி 97.89 அடியாக உள்ளது. இந்நிலையில், நிகழாண்டு டெல்டா பாசனத்துக்கு ஜூன் 12 ஆம் தேதி தண்ணீா் திறக்கலாமா என்பது குறித்து தஞ்சாவூரில் விவசாயிகளிடம் நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் கடந்த 16ம் தேதி கலந்தாலோசனை நடத்தினார். அப்போது, மேட்டூா் அணையை திறப்பதற்கு முன்பாக காவிரி டெல்டா மாவட்டங்களில் தூா்வாரும் பணி மேற்கொள்ளப்படும். இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என அமைச்சா் துரைமுருகன் அறிவித்தார்.\nஇதன்படி, காவிரி டெல்டாவில் ஆறுகள், வாய்க்கால்கள், வடிகால்கள் ஆகியவை தூா்வாரும் பணிக்கான அரசாணையை அரசின் முதன்மைச் செயலா் மணிவாசன் வெளியிட்டுள்ளார். இதில், திருச்சி மாவட்டத்தில் அரியாறு கோட்டத்தில் 43 பணிகளும், ஆற்றுப் பாதுகாப்புக் கோட்டத்தில் 20 பணிகளும் என மொத்தம் 63 பணிகள் மூலம் 162.81 கி.மீ. தொலைவுக்கு தூா்வாரும் பணி மேற்கொள்ள ரூ. 5.62 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nகரூா் மாவட்டத்திலுள்ள திருச்சி ஆற்றுப் பாதுகாப்புக் கோட்டத்தில் 10 பணிகள் மூலம் 60.60 கி.மீ. தொலைவுக்கு தூா்வார ரூ. 1.60 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரியலூா் மாவட்டத்திலுள்ள திருச்சி ஆற்றுப் பாதுகாப்புக் கோட்டப் பகுதியில் 10 பணிகளும், மருதையாறு கோட்டத்தில் 23 பணிகளும் என மொத்தம் 33 பணிகள் மூலம் 123.65 கி.மீ. தொலைவுக்கு தூா்வார ரூ. 7.01 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nதஞ்சாவூா் மாவட்டத்தில் தஞ்சாவூா் காவிரி கோட்டத்தில் 62 பணிகளும், மயிலாடுதுறை கோட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் 6 பணிகளும், வெண்ணாறு கோட்டத்தில் 53 பணிகளும், கல்லணைக் கால்வாய் கோட்டத்தில் 44 பணிகளும், பட்டுக்கோட்டை அக்னியாறு கோட்டத்தில் 20 பணிகளும் என மொத்தம் 185 பணிகள் மூலம் 1,169.14 கி.மீ. தொலைவுக்கு தூா் வார ரூ. 20.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nதிருவாரூா் மாவட்டத்தில் காவிரி கோட்டத்தில் 48 பணிகளும், வெண்ணாறு தஞ்சாவூா் கோட்டத்தில் 50 பணிகளும், வெண்ணாறு திருவாரூா் கோட்டத்தில் 75 பணிகளும், பட்டுக்கோட்டை அக்னியாறு கோட்டத்தில் ஒரு பணியும் என மொத்தம் 174 பணிகள் மூலம் 1,282.35 கி.மீ. தொலைவுக்கு தூா் வார ரூ. 16.34 கோடி நிதி ஒதுக்கீட��� செய்யப்பட்டுள்ளது.\nநாகை மாவட்டத்தில் தஞ்சாவூா் காவிரி கோட்டத்தில் 49 பணிகளும், திருவாரூா் வெண்ணாறு கோட்டத்தில் 40 பணிகளும் என மொத்தம் 89 பணிகள் மூலம் 574 கி.மீ. தொலைவுக்கு தூா் வார ரூ. 5.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் காவிரி தஞ்சாவூா் கோட்டத்தில் 3 பணிகளும், காவிரி மயிலாடுதுறை கோட்டத்தில் 23 பணிகளும் மொத்தம் 26 பணிகள் மூலம் 460.85 கி.மீ. தொலைவுக்கு தூா் வார ரூ. 5.73 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் தஞ்சாவூா் கல்லணைக் கால்வாய் கோட்டத்தில் 3 பணிகளும், பட்டுக்கோட்டை அக்னியாறு கோட்டத்தில் 6 பணிகளும் என மொத்தம் 9 பணிகள் மூலம் 25.54 கி.மீ. தொலைவுக்கு தூா் வார ரூ. 83.60 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடலூா் மாவட்டத்தில் சிதம்பரம் கொள்ளிடம் கோட்டத்தில் 58 பணிகள் மூலம் 202 கி.மீ. தொலைவுக்கு தூா்வார ரூ. 2.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nகாவிரி டெல்டா மாவட்டங்களில் மொத்தம் 647 பணிகள் மூலம் 4,061.44 கி.மீ. தொலைவுக்கு தூா் வார ரூ. 65.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரும் பணியும் தொடங்கப்பட்டுள்ளது.\nதஞ்சை காற்றுடன் கூடிய மழையால் சாய்ந்த வாழை மரங்கள்\nநாஞ்சிக்கோட்டையில் தினமும் சளி பரிசோதனை நடத்தி தடுப்பூசி போடும் பணி\nசமூகம் தஞ்சை நகரச்செய்தி மாநகரச் செய்தி\nவிபத்து இல்லா தீபாவளியாக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் தீயணைப்புத்துறை மாவட்ட அலுவலர்\nஅரசியல் தஞ்சை நகரச்செய்தி மாநகரச் செய்தி\nகட்டுமான பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த ஏஐடியூசி வலியுறுத்தல்\nதஞ்சை நகரச்செய்தி மாநகரச் செய்தி வேளாண்மை\nமாடித்தோட்ட சாகுபடியால் உடல் நிலையில் முன்னேற்றம் பெறலாம்; முதல்வர் வேலாயுதம்\nவிபத்து இல்லா தீபாவளியாக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் தீயணைப்புத்துறை மாவட்ட அலுவலர்\nகட்டுமான பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த ஏஐடியூசி வலியுறுத்தல்\nமாடித்தோட்ட சாகுபடியால் உடல் நிலையில் முன்னேற்றம் பெறலாம்; முதல்வர் வேலாயுதம்\nமுதல்வர் முன்னெடுப்பு திருவாரூர் காரைக்குடி ரயில் சேவை துவக்கம்; எம்பி பழனிமாணிக்கம்\nபள்ளி மாணவர்களுக்கு வரும் அக் 25, 26ம் தேதிகளில் கலைப்போட்டிகள்\nசமூகம் தஞ்சை நகரச்செய்தி மாநகரச் செய்���ி\nவிபத்து இல்லா தீபாவளியாக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் தீயணைப்புத்துறை மாவட்ட அலுவலர்\nஅரசியல் தஞ்சை நகரச்செய்தி மாநகரச் செய்தி\nகட்டுமான பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த ஏஐடியூசி வலியுறுத்தல்\nதஞ்சை நகரச்செய்தி மாநகரச் செய்தி வேளாண்மை\nமாடித்தோட்ட சாகுபடியால் உடல் நிலையில் முன்னேற்றம் பெறலாம்; முதல்வர் வேலாயுதம்\nசமூகம் தஞ்சை நகரச்செய்தி மாநகரச் செய்தி\nமுதல்வர் முன்னெடுப்பு திருவாரூர் காரைக்குடி ரயில் சேவை துவக்கம்; எம்பி பழனிமாணிக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaipoonga.net/tag/actor-surya-tweet-about-eia2020/", "date_download": "2021-10-19T11:40:19Z", "digest": "sha1:LHKZVHZT4ZGTI43ZMBWZRDOHVRU2XQIA", "length": 10436, "nlines": 182, "source_domain": "kalaipoonga.net", "title": "Actor surya tweet about EIA2020 - Kalaipoonga", "raw_content": "\nநம் மௌனம் கலைப்போம் – EIA 2020 வரைவு அறிக்கை பற்றி சூர்யா கருத்து\nநம் மௌனம் கலைப்போம் - EIA 2020 வரைவு அறிக்கை பற்றி சூர்யா கருத்து சுற்றுச்சூழலை காக்க நம் மெளனம் கலைப்போம் என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு சட்டம் 2020க்கு...\nசர்ச்சைக்குரிய வீடியோ பதிவிட்டதால் பிக்பாஸ் பிரபலம் கைது\nசர்ச்சைக்குரிய வீடியோ பதிவிட்டதால் பிக்பாஸ் பிரபலம் கைது பாலிவுட்டில் இளம் நடிகையாக வலம் வருபவர் யுவிகா சவுத்ரி. இவர், இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் மிகவும் பிரபலமானார். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும்...\nஒற்றை வார்த்தையில் நடிகர் விஜய்யை புகழ்ந்த ‘பீஸ்ட்’ நாயகி\nஒற்றை வார்த்தையில் நடிகர் விஜய்யை புகழ்ந்த ‘பீஸ்ட்’ நாயகி விஜய் மற்றும் நெல்சன் கூட்டணியில் உருவாகி வருகிறது ‘பீஸ்ட்’ அதிரடி ஆக்ஷனில் உருவாகி வரும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. இப்படத்தில்...\nராகவா லாரன்ஸ் – பிரியா பவானி சங்கர் நடிக்கும் ருத்ரன் படத்தில் ‘பாடாத பாட்டெல்லாம்’ ரீமிக்ஸ் பாடல்\nராகவா லாரன்ஸ் - பிரியா பவானி சங்கர் நடிக்கும் ருத்ரன் படத்தில் ‘பாடாத பாட்டெல்லாம்’ ரீமிக்ஸ் பாடல் பல வெற்றி படங்களை தயாரித்த 5 ஸ்டார் கிரியேஷன்ஸ் S.கதிரேசன் தயாரித்து இயக்கும் “ருத்ரன்” படத்தில்...\n‘டேக் டைவர்ஷன்’ முழு நீள கமர்ஷியல் பேக்கேஜ்\n'டேக் டைவர்ஷன்' முழு நீள கமர்ஷியல் பேக்கேஜ் 'டேக் டைவர்ஷன்' என்கிற படத்தை இயக்குநர் ச���வானி செந்தில் இயக்கியுள்ளார். 80களில் 90களில் மட்டுமல்ல 2K -யில் பால்ய காலத்தைக் கடந்தவர்களையும் ஈர்க்கும் வகையில் ஒரு காதல்...\nசர்ச்சைக்குரிய வீடியோ பதிவிட்டதால் பிக்பாஸ் பிரபலம் கைது\nசர்ச்சைக்குரிய வீடியோ பதிவிட்டதால் பிக்பாஸ் பிரபலம் கைது பாலிவுட்டில் இளம் நடிகையாக வலம் வருபவர் யுவிகா சவுத்ரி. இவர், இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் மிகவும் பிரபலமானார். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும்...\nஒற்றை வார்த்தையில் நடிகர் விஜய்யை புகழ்ந்த ‘பீஸ்ட்’ நாயகி\nஒற்றை வார்த்தையில் நடிகர் விஜய்யை புகழ்ந்த ‘பீஸ்ட்’ நாயகி விஜய் மற்றும் நெல்சன் கூட்டணியில் உருவாகி வருகிறது ‘பீஸ்ட்’ அதிரடி ஆக்ஷனில் உருவாகி வரும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. இப்படத்தில்...\nராகவா லாரன்ஸ் – பிரியா பவானி சங்கர் நடிக்கும் ருத்ரன் படத்தில் ‘பாடாத பாட்டெல்லாம்’ ரீமிக்ஸ் பாடல்\nராகவா லாரன்ஸ் - பிரியா பவானி சங்கர் நடிக்கும் ருத்ரன் படத்தில் ‘பாடாத பாட்டெல்லாம்’ ரீமிக்ஸ் பாடல் பல வெற்றி படங்களை தயாரித்த 5 ஸ்டார் கிரியேஷன்ஸ் S.கதிரேசன் தயாரித்து இயக்கும் “ருத்ரன்” படத்தில்...\nசர்ச்சைக்குரிய வீடியோ பதிவிட்டதால் பிக்பாஸ் பிரபலம் கைது\nசர்ச்சைக்குரிய வீடியோ பதிவிட்டதால் பிக்பாஸ் பிரபலம் கைது பாலிவுட்டில் இளம் நடிகையாக வலம் வருபவர் யுவிகா சவுத்ரி. இவர், இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் மிகவும் பிரபலமானார். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும்...\nஒற்றை வார்த்தையில் நடிகர் விஜய்யை புகழ்ந்த ‘பீஸ்ட்’ நாயகி\nஒற்றை வார்த்தையில் நடிகர் விஜய்யை புகழ்ந்த ‘பீஸ்ட்’ நாயகி விஜய் மற்றும் நெல்சன் கூட்டணியில் உருவாகி வருகிறது ‘பீஸ்ட்’ அதிரடி ஆக்ஷனில் உருவாகி வரும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. இப்படத்தில்...\nராகவா லாரன்ஸ் – பிரியா பவானி சங்கர் நடிக்கும் ருத்ரன் படத்தில் ‘பாடாத பாட்டெல்லாம்’ ரீமிக்ஸ் பாடல்\nராகவா லாரன்ஸ் - பிரியா பவானி சங்கர் நடிக்கும் ருத்ரன் படத்தில் ‘பாடாத பாட்டெல்லாம்’ ரீமிக்ஸ் பாடல் பல வெற்றி படங்களை தயாரித்த 5 ஸ்டார் கிரியேஷன்ஸ் S.கதிரேசன் தயாரித்து இயக்கும் “ருத்ரன்” படத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://karudannews.com/?p=120651", "date_download": "2021-10-19T12:54:51Z", "digest": "sha1:ZLNTAQ745PZJQ374CYNLGUYQI4CEQIWH", "length": 14305, "nlines": 72, "source_domain": "karudannews.com", "title": "கள்ள காதலனுடன் சேர்ந்து கணவனை துடி துடிக்க கொன்ற மனைவி - Karudan News", "raw_content": "\nHome Slider கள்ள காதலனுடன் சேர்ந்து கணவனை துடி துடிக்க கொன்ற மனைவி\nகள்ள காதலனுடன் சேர்ந்து கணவனை துடி துடிக்க கொன்ற மனைவி\nஇந்தியாவில் கணவனை மனைவி பெட்ரோல் ஊற்றி எரிக்க, காதலன் கல்லால் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபெங்களூருவின் Baddihalli-வில் வசித்து வரும் தம்பதி நாரயணப்பா(52)-அண்ணபூர்ணா(36). இந்த தம்பதிகளுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். நாரணயப்பா Nelamangala-வில் இருக்கும் தனியார் கம்பெனி ஒன்றில் எல்க்டிரிசியனாக வேலை செய்து வருகிறார்.\nஅண்ணபூர்ணா அங்கிருக்கும் வெங்காய மண்டியில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் அண்ணபூர்ணாவுக்கு அப்பகுதியைச் சேர்ந்த ஓவியர் மற்றும் பணம் கொடுத்து உதவுபவருமான ராமகிருஷ்ணா(35) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.\nஇவர்களின் பழக்கம் நாளைடைவில் நெருங்கி பழகும் அளவிற்கு ஆகியதால், இதை அறிந்த நாரணயப்பா இது குறித்து மனைவியிடம் அடிக்கடி பிரச்சனை செய்துள்ளார்.\nஇந்நிலையில், சம்பவ தினத்தன்று இது குறித்து நாரயணப்பா மற்றும் அண்ணபூர்ணாவிற்கும் இடையே வாக்குவாதம் கடுமையாக முற்றியதால், வீட்டில் இருந்த பெட்ரோலை நாரணப்பா மீது ஊற்றிய அண்ணபூர்ணா அவர் மீது தீயை கொளுத்தி போட்டுள்ளார்.\nஇதனால் தீயில் கருகி துடித்த அவர், அருகில் இருக்கும் வடிகால்வாயிலில் சென்ற விழ முயற்சித்துள்ளார். அந்த நேரத்தில் காதலன் ராமகிருஷ்ணனும் அங்கு இருந்ததால், தண்ணீரில் விழுந்து எங்கு இவர் உயிர்பிழைத்துவிடுவார் என்று எண்ணி அவர் மீது கல்லைப் போட்டுள்ளார்.\nஇதில் சம்பவ இடத்திலே நாரயணப்பா துடி துடித்து இறந்துள்ளார்.\nஇந்த சம்பவம் குறித்து பொலிசாருக்கு தெரியவந்ததால், வீட்டில் இருந்த மூன்று மகள்களிடம் விசாரித்துள்ளனர்.\nஅப்போது 14 வயது மதிக்கத்தக்க மூத்த மகள் சாட்சியாக இருந்ததால், அவர்கள் இருவரையும் பொலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு கொண்டு வருகின்றனர்\nஇஸ்லாமியர்களுக்கு செந்தில் தொண்டமான் மிலாதுன் நபி வாழ்த்து\nபசு வதையை தடைசெய்தல் தொடர்பான சட்ட திருத்தத்திற்கு அமைச்சரவை அனுமதி.\nமுதல் பயிற்சி ஆட்டத்தில் சிக்ஸர், பவுண்டர்களாக பறக்க விட்ட இந்திய அணி.\nராஜபக்ச, பெர்னான்டோவின் பொறுப்பான பேட்டிங்கால் இலங்கை முதல் வெற்றி.\nஇந்திய – இலங்கைக்கான இராஜதந்திர உறவு பாலத்தை வலுப்படுத்தும் முக்கிய புள்ளியாக மாறியுள்ள செந்தில் தொண்டமான்\nகுதிகால் வெடிப்பால் அவதிப்படுபவர்களா நீங்கள்\nஊடக பணியால் ஹட்டன் குடாஓய விநாயகபுர மக்களுக்கு சுத்தமான குடிநீர்.\nஊடக துறையின் பணி காரணமாக ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் குடாஓயா விநாயகபுர மக்களுக்கு சுத்தமான குடிநீர் பெற்றுக்கொடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் நீர்வழங்கல் வடிக்கால் அமைச்சின் இணைப்பாளரும்...\nஇஸ்லாமியர்களுக்கு செந்தில் தொண்டமான் மிலாதுன் நபி வாழ்த்து\nமனித நேயம் தழைக்க நல்வழி காட்டிய நபிகள் நாயகம் அவர்கள் அவதரித்த திருநாளை மகிழ்வோடு கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்களுக்கு இ.தொ.காவின் உப தலைவரும்,பெருந்தோட்ட பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமான் மீலாதுன்...\nபசு வதையை தடைசெய்தல் தொடர்பான சட்ட திருத்தத்திற்கு அமைச்சரவை அனுமதி.\nபசு வதையை தடை செய்வது தொடர்பான 5 சட்டங்கள் மற்றும் கட்டளைச் சட்டங்களை திருத்துவது தொடர்பாகத் தயாரிக்கப்பட்ட சட்டமூலம் அரசியலமைப்பு ஏற்பாடுகளுக்கு இணங்கவில்லையென சட்டமா அதிபர் அறிவித்துள்ளார். அதற்கமைய, அது தொடர்பான திருத்தச் சட்டமூலத்தை...\nமுதல் பயிற்சி ஆட்டத்தில் சிக்ஸர், பவுண்டர்களாக பறக்க விட்ட இந்திய அணி.\nகே.எல்.ராகுல், இஷான் கிஷன் ஆகியோரின் காட்டடி ஆட்டத்தில் துபாயில் நேற்று நடந்த டி20உலகக் கோப்பைக்கு முந்தைய பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி. முதலில் பேட் செய்த...\nராஜபக்ச, பெர்னான்டோவின் பொறுப்பான பேட்டிங்கால் இலங்கை முதல் வெற்றி.\nராஜபக்ச, பெர்னான்டோவின் பொறுப்பான பேட்டிங்கால் அபுதாபியில் நேற்று நடந்த டி20உலகக் கோப்பைப் போட்டிக்கான ஏ பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் நமிபியா அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இலங்கை அணி. முதலில் பேட்...\nஇந்திய – இலங்கைக்கான இராஜதந்திர உறவு பாலத்தை வலுப்படுத்தும் முக்கிய புள்ளி��ாக...\n- உத்ர பிரதேசத்தில் உள்ள குஷி நகருக்கு முதலாவது நேரடி விமான சேவையை இலங்கைக்கு பெற்றுக்கொடுத்து இந்திய - இலங்கை அரச உயர்மட்ட பாராட்டுதல்களையும் பெற்றுள்ளார் - உத்ர பிரதேசம் குஷி நகருக்கும் இலங்கைக்கும்...\nகுதிகால் வெடிப்பால் அவதிப்படுபவர்களா நீங்கள்\nவெளியிடங்களுக்கு செல்லும் போது கால்களுக்கு அணிந்துள்ள காலணிகளை கழற்றி விட தர்ம சங்கடமாக உள்ளதா நம்மில் பெரும்பாலானோர் நமது முகத்திற்கு கொடுக்கும் அளவில் பாதங்களுக்கு பராமரிப்புக்களைக் கொடுப்பதில்லை. ஆனால் நமது உடலிலேயே நமது...\nசின்ன வெங்காயத்தை உணவில் சேர்த்துக்கொள்வதால் இத்தனை நன்மைகளா…\nமூல நோயால் அவதிப்படுவோர் உணவில் சின்ன வெங்காயத்தை அதிகமாக சேர்ப்பது நல்லது. நீர்மோரில் சின்ன வெங்காயத்தை வெட்டிப்போட்டு குடித்தாலும் பலன் கிடைக்கும். தினமும் சாப்பிடவேண்டிய காய்கறிகளில் சின்ன வெங்காயத்துக்குத்தான் முதல் இடம். ஆனால், உரிக்க...\nஆசிரியர் – அதிபர்கள் தொழிற்சங்கங்களின் முக்கிய அறிவிப்பு\nஎதிர்வரும் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் கடமைக்கு சமுகமளிக்காமல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக ஆசிரியர் – அதிபர்கள் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. அத்துடன் 25ஆம் திகதி முதல் பாடசாலைகளுக்கு செல்லவும், மாற்று தொழிற்சங்க நடவடிக்கைகளை...\nஇராகலை 5 வயது சிறுமியிடன் தனது சேட்டையைகாட்டிய சிறுவன் கைது.\nஇராகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அல்கரனோயா தோட்டத்தில் 16 வயதுடைய சிறுவன் ஒருவரை இராகலை பொலிசார் (17) இரவு கைது செய்துள்ளனர். அல்கரனோயா தோட்டத்தில் வசிக்கும் இச் சிறுவன் தனது பக்கத்து வீட்டில் உள்ள...\nஊடக பணியால் ஹட்டன் குடாஓய விநாயகபுர மக்களுக்கு சுத்தமான குடிநீர்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nchokkan.wordpress.com/category/media/e-zines/", "date_download": "2021-10-19T13:05:27Z", "digest": "sha1:JN3UAOIBIFOSHRNYQU7RPLYJN2SM4QJT", "length": 325243, "nlines": 1246, "source_domain": "nchokkan.wordpress.com", "title": "E-zines | மனம் போன போக்கில்", "raw_content": "\nகடந்த 271 நாளாக தினமணி டாட் காமில் நான் எழுதிவந்த ‘தினம் ஒரு திருவாசகம்’ தொடர் நிறைவடைந்தது. முன்செலுத்திய குருவருளுக்கும் திருவருளுக்கும் நன்றி வாசித்து ஆதரவுதந்த நண்பர்களுக்கு என் அன்பு.\n‘மாணிக்கவாசகர்’ என்பது காரணப்பெயர். தினந்தோறும் அவரது மாணிக்கச்சொற்களில் தோய்கிற வாய்ப்பைத் தந்த தினமணி டாட் காம் ஆசிரியர் பார்த்தசாரதி அவர்களுக்குப் பெருவணக்கம்.\nஇத்தொடரில் திருவாசகத்தின் முழு உரை கிடைக்காது, சுமார் 60% பாடல்கள்தான் இடம்பெற்றுள்ளன. வாய்ப்பிருக்கும்போது மீதமுள்ளவற்றை எழுதி நூலாக்க விருப்பம்.\nஆச்சர்யமான விஷயம், பொதுவாகப் பழந்தமிழ் இலக்கியங்களைப்பற்றிய நூல்களை வெளியிட யாரும் ஆர்வம் காட்டமாட்டார்கள். ஆனால் இந்தத் தொடரை வெளியிடுவதற்கு இதுவரை மூன்று பதிப்பாளர்கள் என்னைக் கேட்டுள்ளார்கள். மீதமுள்ள பகுதிகளை எழுதியபிறகு தொடர்புகொள்கிறேன் என்று சொல்லிவிட்டேன்.\nஅதுவரை, ‘தினம் ஒரு திருவாசகம்’ அனைத்து அத்தியாயங்களையும் இங்கே காணலாம்:\n”சொல்வனம்” இணைய இதழின் “அசோகமித்திரன் சிறப்பிதழ்”க்காக எழுதியது. இதனை இணையத்தில் வாசிக்க: http://solvanam.com/\nநான் க்ரைம் நாவல்களில் மனம் குவிந்திருந்த கல்லூரிப் பருவம். கோவை மாநகரின் பழைய புத்தகக் கடைகளில் இருந்த அனைத்து ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா நாவல்களையும் ‘ரொட்டேஷன்’முறையில் ஒருதடவையேனும் படித்திருப்பேன்.\nஅப்போது ஒரு கடையில் அந்த பவுண்ட் வால்யூம் கிடைத்தது. அட்டையில் ‘இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த கதைகள்’ என்று ஸ்கெட்ச் பேனாவால் எழுதப்பட்டிருந்தது.\n அல்லது, அவரிடம் இந்தப் புத்தகத்தை எடைக்குப் போட்டவரா\nசாவி அல்லது இதயம் பேசுகிறது இதழில் இருந்து கிழித்த சிறுகதை நறுக்குகளின் தொகுப்பு அது. நியூஸ்ப்ரின்ட் காகிதத்தில் ஜெயராஜ், கரோ, மணியம் செல்வன், மாருதி போன்ற வெகுஜன ஓவியர்களின் படங்களோடு இலக்கியவாதிகளின் கதைகள். வித்தியாசமான கலெக்‌ஷன்.\nபத்து ரூபாய் கொடுத்து அந்தப் புத்தகத்தை வாங்கினேன். க்ரைம் நாவல்கள் ரூ 2க்குக் கிடைத்த அன்றைய நாள்களில் அது கணிசமான முதலீடுதான். இலக்கியவாதி ஆவதென்றால் சும்மாவா\nஅந்தத் தொகுப்பில் நான் படித்த முதல் கதை, அசோகமித்திரனின் ‘புலிக் கலைஞன்’.\nஅதுதான் நான் படித்த முதல் அசோகமித்திரன் கதையும். கொஞ்சம் நிதானமாகப் பாத்திரங்களை அறிமுகப் படுத்தத் தொடங்கி, ’டைகர் ஃபைட் காதர்’ சரேலென்று உள்ளிழுத்துக்கொண்டுவிட்டார்.\n‘டைகர் ஃபைட்’ என்றால், புலியாட்டம். ‘அண்ணாத்தே’ செய்த கொலையில் சிக்கிக்கொண்ட அப்பாவி கமலஹாசன் புலியாட்டம் வேஷம் கட்டி ஆடுவாரே, அதுதான்.\nஆனால், சினிமாப் புலியாட்டங்களெல்லாம் அசோகமித்திரன் காட்டும் சித்திரத்தின் அருகே நிற்கமுடியாது. அந்தக் கதையில் வருகிற பாத்திரங்கள்மட்டுமல்ல, வாசிக்கும் நாமும் புலி நம்மைக் கடித்துவிடுமோ என்று பதறித் தவிக்குமளவு ஒரு நிஜமான கர்ஜனையை எழுத்தில் கொண்டுவந்திருப்பார்.\nஇத்தனைக்கும், அந்தக் கதையில் வரும் புலியின் பாய்ச்சல் சில வரிகள்தான். கதை படித்த யாரிடமும் இதைச் சொன்னால் நம்பக்கூடமாட்டார்கள். மொத்தக் கதையிலும் ஒரு புலி கம்பீரமாக நடந்து சென்றாற்போன்ற ஓர் உணர்வுதான் அவர்களுக்குள் இருக்கும்.\nஅதற்குக் காரணம், திரை விலகிப் புலி தெரிவது ஓரிரு விநாடிகள்தான் என்றாலும், அதற்கு முன்பும் பின்பும் அந்தப் புலியை அசோகமித்திரன் விவரிக்கும் மிக இயல்பான (அந்தப் பாய்ச்சலுக்கு முற்றிலும் Contrastஆன) வர்ணனைகள்தான், இனிப்பு ரொட்டிக்குள் காரக் குழம்பைத் தடவிச் செய்த சாண்ட்விச்போல.\nயார் அந்தப் புலிக் கலைஞன் வறுமை என்ற அடையாளம் தாண்டி அவன் எப்படிப்பட்டவன் வறுமை என்ற அடையாளம் தாண்டி அவன் எப்படிப்பட்டவன் எங்கே புலி வேஷம் கற்றான் எங்கே புலி வேஷம் கற்றான் இத்துணை நுட்பமான கலை அவனுக்கு எப்படிச் சாத்தியப்பட்டது இத்துணை நுட்பமான கலை அவனுக்கு எப்படிச் சாத்தியப்பட்டது முகமூடியை அணிந்தவுடன் தன்மை மாறும் தொழில் வல்லமை (Professionalism) அவனுகு எப்படி வந்தது முகமூடியை அணிந்தவுடன் தன்மை மாறும் தொழில் வல்லமை (Professionalism) அவனுகு எப்படி வந்தது அவனுடைய குருநாதர் யார் அவன் இதுவரை எப்படிப் பிழைத்துவந்தான் எதனால் அவனுடைய கலை அழிந்தது எதனால் அவனுடைய கலை அழிந்தது எப்படி வாய்ப்பிழந்தான் என்றைக்காவது அவன் புகழின் உச்சியில், கை நிறைய காசோடு இருந்திருக்கிறானா அப்போது கர்வத்தால் வேறு கலை கற்கவில்லையா அப்போது கர்வத்தால் வேறு கலை கற்கவில்லையா தன் கலைக்கு அவசியம் இன்றிப் போவதை உணராமல் இருந்துவிட்டானா தன் கலைக்கு அவசியம் இன்றிப் போவதை உணராமல் இருந்துவிட்டானா அவன் அந்தக் கணத்தைச் சந்தித்த அதிர்ச்சி எப்படி இருந்தது அவன் அந்தக் கணத்தைச் சந்தித்த அதிர்ச்சி எப்படி இருந்தது வீட்டில் அவனுக்கு என்ன மரியாதை வீட்டில் அவனுக்கு என்ன மரியாதை மதிக்காத மனைவி சரி, குழந்தைகள் அவனை எப்படிப் பார்ப்பார்கள் மதிக்காத மனைவி சரி, குழந்தைகள் ���வனை எப்படிப் பார்ப்பார்கள் ‘அப்பா, எனக்குப் புலி வேஷம் போட்டுக் காட்டுப்பா’ என்று ஏதாவது ஒரு குழந்தை அவனைக் கேட்டால் அவன் எப்படி உணர்வான்\nஇவற்றில் எதையும் அசோகமித்திரன் அந்தக் கதையில் சொல்லவில்லை. கதையைப் படித்துமுடித்தபிறகு நமக்குள் இந்தக் கேள்விகளும் இன்னும் பலவும் சுற்றிவரும்.\nசொல்லப்போனால், இந்தக் கேள்விகளை நான் பட்டியலிட்டதுகூட அநாகரிகம்தான். புலிக் கலைஞன்பற்றி உங்களுக்குள் முற்றிலும் மாறுபட்ட ஒரு செட் கேள்விகள் இருக்கும். அதற்கான ஒரு தளத்தை அமைத்துக் கொடுத்துவிட்டு, ஜஸ்ட் லைக் தட் அங்கிருந்து நகர்ந்துவிடுகிறார் அசோகமித்திரன். அவரது நாவல்களில்கூட, ‘அப்புறம் என்ன நடந்தது தெரியுமா’ என்று விவரிக்கிற தன்மை இல்லை. அவை எல்லாம் நம் மனத்துக்குள் நிகழ்ந்துகொள்ளவேண்டியதுதான். இதற்குமேல் ஓர் எழுத்தாளர் வாசகர்களைக் கௌரவித்துவிடமுடியுமா என்ன\nதீவிர இலக்கிய வாசிப்பாளர்களுக்கு நான் சொல்வது ஓர் அற்ப உதாரணமாக / வரையறையாக இருக்கக்கூடும். ஆனால் என்னைப்போன்ற ஒரு (இப்போதும்) ஜனரஞ்சக வாசகன் அசோகமித்திரனை இப்படிதான் முதலில் வியக்கமுடியும், அதன்பிறகு, மேலும் நுட்பங்களை உணர்ந்தோ உணராமலோ ரசிப்பது அவரவர் சமர்த்து\nநான் நகர்ந்த வேகத்தைப் பார்த்துப் பக்கத்தில் அமர்ந்திருந்தவர் திகைத்துப்போயிருக்கவேண்டும், ‘ஏனாயித்து குரு\n‘ஒண்ணுமில்லை’ என்றபடி கண்டக்டரை நோக்கி நகர்ந்தேன், ‘நான் இறங்கணும்\n‘அதெல்லாம் நீங்க நினைச்ச இடத்துல நிறுத்தமுடியாது’ என்றார் அவர், ‘அடுத்த ஸ்டாப்ல இறங்கிக்கோங்க’ என்று சொல்லிவிட்டு டிக்கெட் விசாரிக்கச் சென்றுவிட்டார்.\nநான் பொறுமையாகக் காத்திருந்து அடுத்த நிறுத்தத்தில் இறங்கிக்கொண்டேன். பஸ் வந்த திசையிலேயே பின்னோக்கி நடக்க ஆரம்பித்தேன்.\nஉண்மையில், நான் இறங்கவேண்டிய இடம் இன்னும் நான்கைந்து கிலோமீட்டர்கள் தள்ளியிருக்கிறது. பஸ்ஸின் ஜன்னலோர சீட்டில் ஜாலியாகக் காற்று வாங்கியபடி வந்துகொண்டிருந்தவன், ஒரு போர்டைப் பார்த்தவுடன் சட்டென்று மனம் மாறி, இங்கேயே இறங்கிவிட்டேன்.\nஅந்த போர்ட், ‘Book Fair’.\nஇங்குமட்டுமல்ல, ’Book Fair’, ‘Books Sales’, ‘Book Exhibition’ போன்ற வார்த்தைகளை எங்கே பார்த்தாலும் சரி, எனக்குச் சட்டென்று புத்தி கெட்டுவிடும். உடனடியாக உள்ளே நுழைந்தாகவேண்டும���, பழைய வாசனையடிக்கும் புத்தகங்களைப் புரட்டியாகவேண்டும். வாங்குவதுகூட இரண்டாம்பட்சம்தான்.\nபெங்களூரில் வருடம்முழுக்க எந்நேரமும் ஏதாவது ஓர் ஏரியாவில் இதுமாதிரி புக்ஃபேர்கள் நடந்துகொண்டிருக்கும். ஒரு பெரிய ஹால், அங்கே ஏழெட்டு நீள மேஜைகளைப் போட்டுப் பழையதும் புதியதுமாகப் புத்தகங்களைக் குவித்துவைத்திருப்பார்கள். இவற்றில் பெரும்பாலானவை க்ரைம் நாவல்கள், மில்ஸ் அண்ட் பூன் ரகப் புத்தகங்கள், பைரேட் செய்யப்பட்ட ‘பெஸ்ட் செல்லர்’கள், சுற்றுலாக் கையேடுகள், சமையல் நூல்கள்தாம். மிக அபூர்வமாக எப்போதாவது சில நல்ல புத்தகங்கள் சகாய விலையில் சிக்கும்.\nஅந்த ‘அபூர்வ’மான வாய்ப்புக்காக, ஒவ்வொரு புக்ஃபேரினுள்ளும் நுழைந்துவிடுவது. உள்ளே இருக்கும் புத்தகங்களின் எண்ணிக்கையைப் பொறுத்து அரை மணி நேரமோ இரண்டு மணி நேரமோ காலாற நடந்து, குறைந்தபட்சம் இருநூறு புத்தகங்களையாவது புரட்டிப் போட்டு ஒன்றோ, இரண்டோ புத்தகங்களை வாங்குவதில் ஓர் அலாதியான சந்தோஷம் இருக்கிறது. அதற்காகதான் இப்படி ஓடும் பஸ்ஸிலிருந்து (கிட்டத்தட்ட) குதிப்பது.\nஅதென்னவோ, ஏஸி போட்ட வெளிச்சமான புத்தகக் கடைகளைவிட, இந்தக் குடிசைத் தொழில் ரேஞ்ச் கடைகள்தான் எனக்கு அதிகம் பிடித்திருக்கிறது. காரணம், பெரிய கடைகளில் இதற்கப்புறம் இதுதான் வரும் என்கிற ஓர் ஒழுங்கு இருக்கும், ஒவ்வொரு பிரிவிலும் எல்லாருக்கும் தெரிந்த, மிகப் பிரபலமான சில புத்தகங்கள்தாம் பிரதானமாக அடுக்கப்பட்டுக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும், இதையெல்லாம் பார்க்கையில், அந்தக் கடைக்காரர்கள் என்னை ‘இதுதான் வாங்கவேண்டும்’ என்று கழுத்தைப் பிடித்து நெரிப்பதாக எனக்குத் தோன்றும்.\nமாறாக, இதுபோன்ற பழைய புத்தகக் கடைகளில் இருக்கும் Randomness, வித்தியாசமான சுகம். எங்கே எந்தப் பொக்கிஷம் கிடைக்கும் என்று யாருக்கும் தெரியாது. அவற்றைப் புரட்டித் தேடுவதில் ஒரு சந்தோஷம் உண்டு. என்னிடம் இருக்கும் பெரும்பாலான நூல்கள் இப்படி ’எதேச்சையாகக் கண்ணில் பட்டு’ வாங்கியவைதான்.\nஐந்து நிமிட நடையில் அந்த ‘புக் ஃபேர்’ வந்துவிட்டது. கும்பலுக்கு நடுவே சிக்கித் திணறி உள்ளே நுழைந்தேன்.\nபுத்தகக் கடையில் கும்பலா என்று சந்தேகப்படவேண்டாம். பெங்களூருவில் இதுமாதிரி பழைய புத்தகக் கடைகள் அனைத்துடனும் ஒரு துணிக்கடையை ஒட்டுப்போடுகிற விநோதப் பழக்கம் இருக்கிறது. அங்கே துணி எடுப்பதற்கென்று மக்கள் ஏராளமாகக் குவிவார்கள், பக்கத்திலேயே இருக்கும் புத்தகக் கடையில் என்னைமாதிரி நான்கைந்து ஜந்துக்கள்மட்டும் தென்படுவர்.\nஇந்த ‘புக் ஃபேர்’ரிலும் அதே கதைதான். கும்பலைத் தாண்டி உள்ளே வந்தால், எண்ணி நாலே பேர். மூலையில் பிளாஸ்டிக் நாற்காலியில் சரிந்து உட்கார்ந்தபடி எதிரே மினி டிவியில் சினிமா பார்க்கிற சிப்பந்தி.\nஅதைப்பற்றி நமக்கென்ன, புத்தகங்களைக் கவனிப்போம். கையைப் பின்னால் கட்டிக்கொண்டு மெதுவாக நடந்து எல்லா மேஜைகளையும் மேலோட்டமாக ஒரு நோட்டம் விட்டேன். வழக்கமான குப்பைகள்தாம், இவற்றில் எங்கே கவனத்தைக் குவிக்கலாம் என்று தீர்மானிக்க முயன்றேன்.\nரொம்ப யோசித்தபிறகு, ’எதை எடுத்தாலும் ரூ 30’ என்று எழுதியிருந்த குழந்தைப் புத்தகங்களின் குவியலில்மட்டும் கொஞ்சம் சுவாரஸ்யம் தெரிந்தது. உள்ளே குதித்தேன்.\nஅடுத்த அரை மணி நேரத்தில், என் கையில் பன்னிரண்டு உருப்படிகள், அனைத்தும் வண்ணப் புத்தகங்கள், எளிதில் கிடைக்காத நல்ல நல்ல கதைகள், முப்பது ரூபாய் என்பது மிக மலிவு\nமினி டிவியில் பரபரத்துக்கொண்டிருந்த சண்டைக் காட்சியைக் கடைக்காரர் மென்னியைப் பிடித்து நிறுத்திவிட்டு நான் தேர்ந்தெடுத்த புத்தகங்களைப் பார்வையிட்டார், பொறுமையாக எண்ணிப்பார்த்து, ‘முந்நூத்தறுவது ரூபா’ என்றார். வாங்கிக்கொண்டு வந்த வழியில் நடந்தேன்.\nசில மணி நேரம் கழித்து நான் வீட்டுக்குள் நுழைந்தபோது, குழந்தைகள் இருவரும் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். ரகசியமாக பையைத் திறந்து, வாங்கிவந்த புத்தகங்களைத் தலா ஆறு விகிதம் இருகூறாகப் பிரித்தேன்.\nசாப்பிட்டு முடித்து எழுந்து வந்தவர்கள்முன் அந்தப் புத்தகங்களை நீட்டியபோது, அவர்கள் கண்ணில் தெரிந்த வியப்புக்கும் உற்சாகத்துக்கும், முந்நூற்றறுபது ரூபாய் என்பது ஒரு சாதாரண விலை.\nஅதுமட்டுமல்ல, இரு மகள்களும் ஆளுக்கொரு சோஃபாவில் அமர்ந்து அன்று இரவே அந்த ஆறு சிறிய புத்தகங்களையும் படித்துமுடித்துவிட்டுதான் தூங்கினார்கள். மறுநாள் காலை இவளுக்குத் தந்த ஆறை அவளும், அவளுக்குத் தந்த ஆறை இவளும் பகிர்ந்துகொண்டு மொத்தத்தையும் படித்துவிட்டார்கள்.\nஅந்தச் செய்தியை அவர்கள் என்னிடம் சொன்னபோத��, ‘வெரி குட்’ என்றேன் நிஜமான மகிழ்ச்சியுடன். ‘நாளைக்கு வெளியே போகும்போது வேற புத்தகம் வாங்கி வர்றேன், ஓகேயா’ என்றேன் நிஜமான மகிழ்ச்சியுடன். ‘நாளைக்கு வெளியே போகும்போது வேற புத்தகம் வாங்கி வர்றேன், ஓகேயா\n’சரிப்பா’ என்று அவர்கள் விளையாடச் சென்றுவிட்டார்கள். கொஞ்ச நேரத்தில், ஷெல்ஃபிலிருந்து வேறு புத்தகங்களை எடுத்துப் படிப்பார்கள், மூன்று வேளைச் சாப்பாட்டுக்கும் துணை புத்தகங்கள்தான், எங்கேயாவது வெளியூர் சென்றாலும் படிப்பதற்குப் புத்தகங்களை அவர்களே தேர்ந்தெடுத்துக் கொண்டுவருவார்கள்…\nஇதெல்லாம் நானோ என் மனைவியோ வலுக்கட்டாயமாகத் திணித்த பழக்கங்கள் அல்ல. நான் புத்தகம் படிப்பதைப் பார்த்து அவர்களுக்காக ஆர்வம் வந்தது, பின் அவர்கள் வயதுக்கு ஏற்ற புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து வாங்கிக்கொடுத்தேன், சட்டென்று பிடித்துக்கொண்டுவிட்டார்கள்.\nஆரம்பத்தில் மற்ற எல்லாப் பெற்றோரையும்போல் நாங்களும் குழந்தைகளுக்கான புத்தகங்களை வாங்கி, நாங்களே அவர்களுக்குப் படித்துக் காண்பித்துக்கொண்டிருந்தோம். அது போதாது என்று மகள்களின் ஆசிரியை சொன்னார், ‘அவங்களே படிக்கறமாதிரி சின்னச் சின்ன வாக்கியங்களைக் கொண்ட புக்ஸ், நிறைய படம் போட்ட புக்ஸ் வாங்கிக் கொடுங்க, வாசிக்கும் வேகமும் ஆர்வமும் பலமடங்கு அதிகரிக்கும்.’\nஅவர் சொன்னபடி, எளிதில் வாசிக்கக்கூடிய புத்தகங்களை வாங்கிக்கொடுத்தேன். ஆரம்பத்தில் ‘நீயே படிச்சுக் கதை சொல்லு’ என்று வற்புறுத்தியவர்கள், அவர்களுக்கே எழுத்துக் கூட்டத் தெரிந்தவுடன் வார்த்தை வார்த்தையாக, வாக்கியம் வாக்கியமாகப் படிக்க ஆரம்பித்தார்கள். கதை புரிகிறதோ இல்லையோ, சொந்தமாக ஒவ்வொரு பக்கமும் படித்து முடித்து அவர்கள் அடையும் திருப்தி அலாதியானது\nபின்னர், அவர்களுக்கே கதைகள் புரிய ஆரம்பித்தன. Self Service Modeக்குச் சென்றுவிட்டார்கள். அதன்பிறகு, புத்தகங்களை வாங்கித்தருவதுமட்டுமே என் வேலை. மற்றதை அவர்கள் பார்த்துக்கொள்கிறார்கள். ஒரு புத்தகம் என்றால் ஒரு புத்தகத்தையும் நிராகரிப்பதில்லை, எல்லாவற்றையும் படித்துக் களிக்கிறார்கள்.\nஇன்றைக்கு, என் மகள்களிடம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் இருக்கின்றன. தொலைக்காட்சியோ சினிமாவோ மற்ற Passive Entertainmentகளோ அவர்களுக்குத் தேவைப்படுவதே இல்���ை. நினைத்த நேரத்தில் ஏதாவது ஒரு புத்தகத்தை உருவி எடுத்துக்கொண்டு படிக்கத் தொடங்கிவிடுவார்கள்.\nபள்ளி நாள்களில் இருந்து புத்தகப் பிரியனாக வாழ்கிற, அதைமாத்திரமே பிரதான பொழுதுபோக்காகக் கொண்ட எனக்கு, இதில் இருக்கும் சுகம் தெரியும். நான் என் இரு மகள்களுக்கும் தந்திருக்கும் மிகப் பெரிய சொத்தாக, இந்தப் பழக்கத்தைதான் கருதுகிறேன்.\nஇன்னும் சில வருடங்கள் கழித்து, அவர்களும் ஏதாவது ஒரு புத்தகக் கடைப் பலகையைப் பார்த்துவிட்டு பஸ்ஸிலிருந்து இறங்கி ஓடுவர். நான் பெரிதுவப்பேன்\nநம் ஊரில் ராமாயணக் கதையைத் தெரியாதவர்களே இருக்கமுடியாது. வால்மீகி எழுதிய ஒரிஜினலாகட்டும், அதிலிருந்து பிறந்த பலமொழிக் காவியங்களாகட்டும், புதுமையான பெயர்களுடன் வெளிநாடுகளில் வளைய வருகிற விதவிதமான ராமாயணங்களாகட்டும், எல்லாமே கிட்டத்தட்ட ஒரே சரித்திரத்தைதான் சிறு மாற்றங்களுடன் விவரித்துச் செல்கின்றன. மேடைப் பேச்சாளர்கள் இப்போதும் அதை வாரக்கணக்கில் விரிவுரையாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.\nஇத்தனைக்கும் அது ஒரு பெரிய, விரிவான கதைகூடக் கிடையாது. சந்தேகமிருந்தால் அமர் சித்ர கதாவைப் பாருங்கள், காமிக்ஸ் மகாபாரதத்தை 1500 ரூபாய் விலைக்குப் பெரிய வால்யூமாக வெளியிட்டிருக்கிறார்கள், ஆனால் காமிக்ஸ் ராமாயணம்\nஆனால் அந்தத் தக்கனூண்டு கதையை வைத்துக்கொண்டு, ஒவ்வொரு பாத்திரத்தையும், ஒவ்வொரு பாடலையும், அதற்குள் இருக்கும் ஒவ்வொரு வரியையும் வெவ்வேறு கோணங்களில் மிக விரிவாக அலசிப் பிழிந்து காயப்போடுவதில் நமக்கு ஒரு சந்தோஷம். அதே கதையை, அதே சம்பவத்தை இவர் எப்படிச் சொல்லப்போகிறாரோ என்று தெரிந்துகொள்கிற ஆர்வம்.\nஅதனால்தான், இப்போதும் யாராவது ராமாயணத்தைப் பேசிக்கொண்டிருக்கிறார்கள், மீண்டும் மீண்டும் எழுதிக்கொண்டிருக்கிறார்கள், காரசாரமாக வாதிட்டுக்கொண்டிருக்கிறார்கள், விருத்தம், வெண்பா, புதுக்கவிதை, ஹைக்கூ, ட்விட்டர் என்று எத்தனை வடிவத்தில் வந்தாலும், அந்தக் கதைமீது நமக்கு ஈர்ப்பு குறைவதில்லை.\nநூலாக வெளிவந்த ராமாயணங்கள் நூறு என்றால், சொற்பொழிவுகளாக, பட்டிமன்றங்களாக, வழக்காடுமன்றங்களாக, கலந்துரையாடல்களாக, விவாதங்களாகக் காற்றில் கரைந்துபோன ராமாயணங்கள் ஆயிரக்கணக்கில் இருக்கும். ரசிகமணி டி. கே. சி., கம்பன் அடிப்பொடி சா. கணேசன், தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான், புலவர் கீரன், கி. வா. ஜகந்நாதன், அ. ச. ஞானசம்பந்தன், நீதியரசர் மு. மு. இஸ்மாயில் என்று தொடங்கிப் பல்வேறு அறிஞர்கள் ராமாயணக் கதையை, மாந்தர்களை, நிகழ்வுகளை, சாத்தியங்களை, உணர்வுகளைப் பலவிதமாக அலசியிருக்கிறார்கள். அதையெல்லாம் நேரில் உட்கார்ந்து கேட்டவர்கள் பாக்கியவான்கள், வேறென்ன சொல்ல\nஅபூர்வமாக, இவற்றுள் சில உரைகள்மட்டும் ஒலி நாடாக்களாக, புத்தகங்களாக வெளிவந்திருக்கின்றன, அவையும் இன்றுவரை விற்பனையில் இல்லை, டிஜிட்டல் வடிவத்தில் பாதுகாக்கப்படவும் இல்லை, இனிமேலும் அதற்கான வாய்ப்பு ஏற்படுமா என்று தெரியாது.\nஇந்தப் பின்னணியுடன் பார்க்கும்போது, விகடன் பிரசுரம் சமீபத்தில் வெளியிட்டிருக்கும் ‘கம்பனில் ராமன் எத்தனை ராமன்’ உரைத் தொகுப்பு நூல் ஓர் ஆனந்த அதிர்ச்சியாகவே உள்ளது. ’இதையெல்லாம் இந்தக் காலத்துல யார் படிக்கப்போறாங்க’ என்று அலட்சியமாக ஒதுக்காமல் இதனைச் சிறப்பானமுறையில் பதிப்பித்திருக்கும் விகடன் குழுமத்தைப் பாராட்டவேண்டும்.\nசில ஆண்டுகளுக்குமுன்னால் சென்னையில் நடைபெற்ற ஏழு சொற்பொழிவுகளின் தொகுப்பு இது. சுதா சேஷய்யன், கு. ஞானசம்பந்தன், சத்தியசீலன், அறிவொளி, செல்வக்கணபதி, தெ. ஞானசுந்தரம், பெ. இலக்குமிநாராயணன் ஆகியோர் ராமனை மகனாக, மாணவனாக, சகோதரனாக, கணவனாக, தலைவனாக, மனித நேயனாகப் பல கோணங்களில் அலசியிருக்கிறார்கள். கே. பாசுமணி இவற்றைத் தொகுத்திருக்கிறார்.\nஇந்த நூலின் சிறப்பு அம்சம், சொற்பொழிவுகளின் எழுத்து வடிவம் என்கிற விஷயமே தெரியாதபடி தேர்ந்த இலக்கிய ஆய்வுக் கட்டுரைகளைப்போல் கட்டமைக்கப்பட்டுள்ளது. எளிமையான மொழி, பொருத்தமான மேற்கோள்கள், ஆசிரியர்கள் (சொற்பொழிவாளர்கள்) பற்றிய நல்ல அறிமுகம் எல்லாம் உண்டு. ஒவ்வொரு கட்டுரையும் அதே பாத்திரத்தை (ராமன்) வெவ்வேறுவிதமாக அணுகுவதால் நமக்கு ஒரு முழுமையான பார்வை கிடைக்கிறது.\nதொகுப்பின் மிக நேர்த்தியான கட்டுரை, முனைவர் சத்தியசீலன் எழுதியுள்ள ‘கம்பனில் ராமன் : ஒரு கணவனாக…’. பொதுவாகப் பலரும் விவாதிக்கத் தயங்கும் அக்கினிப் பிரவேசக் காட்சியையே எடுத்துக்கொண்டு அதனை உளவியல் நோக்கில் ஆராய்ந்து தன் வாதங்களைச் சிக்கலில்லாமல் முன்வைக்கும் அவரது லாகவம் எண்ணி வியக்கவைக்கிறது.\nஇதேபோல், முனைவ���் இலக்குமிநாராயணனின் கட்டுரை ராமன் ஏன் ஒரு சிறந்த மாணவன் என்று விவரிக்கிறது. அதன்மூலம் மாணவர்களுக்கு இருக்கவேண்டிய நற்பண்புகள் என்னென்ன என்று தெளிவாகச் சொல்லிவிடுகிறது.\nகுறைகள் என்று பார்த்தால், ஆழமான கட்டுரைகளுக்கு நடுவே சில மேம்போக்கான கட்டுரைகளும் தலைகாட்டுகின்றன. குறிப்பாக, சில ’பிரபல’ பேச்சாளர்கள் கம்பனைச் சும்மா ஊறுகாய்மாதிரி தொட்டுக்கொண்டு மற்ற கதைகளையே சொல்லி மேடையில் நேரத்தை ஓட்டியிருப்பதை ஊகிக்கமுடிகிறது. அவையெல்லாம் இங்கே பக்க விரயமாகத் துருத்திக்கொண்டு நிற்கின்றன.\nஇன்னொரு பிரச்னை, கம்பனில் பல ஆயிரம் பாடல்கள் இருப்பினும், பல பேச்சாளர்கள் சுமார் 25 முதல் நூறு பாடல்களைதான் திரும்பத் திரும்ப மேற்கோள் காட்டுவார்கள். இந்தத் தொகுப்பிலும் பெருமளவு அவையே இடம்பெறுவது மிகவும் ஆயாசம் அளிக்கிறது. அதிகம் அறியப்படாத அற்புதமான கம்பன் பாக்களை அறிமுகப்படுத்தியிருக்கலாமே என்கிற ஆதங்கம் எழுகிறது.\nஇதுபோன்ற சில சிறிய குறைகளைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், இது ஓர் அருமையான முயற்சி. இன்னும் அச்சு வடிவத்தில் வெளியாகாத நல்ல கம்ப ராமாயண உரைகள் இதேபோல் தொகுக்கப்படவேண்டும். முக்கியமாக, தூர்தர்ஷன் யாரும் பார்க்கமுடியாத நேரங்களில் அடிக்கடி ஒளிபரப்புகிற பழைய கம்பர் கழகச் சொற்பொழிவுகளைத் தொகுத்து வெளியிட்டால் புண்ணியம்\nஅது சரி, இந்த நூலின் முதல் பதிப்போடு அந்தந்தச் சொற்பொழிவுகளின் ஆடியோ சிடி இலவசமாகத் தரப்பட்டதாகத் தெரிகிறது. ஆனால் நான் வாங்கிய இரண்டாம் பதிப்பில் அது இல்லை. அறியாப்புள்ளையை இப்படி ஏமாத்தலாமா விகடன் தாத்தா\n(கம்பனில் ராமன் எத்தனை ராமன் : விகடன் பிரசுரம் : 160 பக்கங்கள் : ரூ 70)\nதிருச்சி, புதுக்கோட்டை பகுதிகளில் ஒரு மினி சுற்றுலா சென்றிருந்தோம். கொஞ்சம் அலுவல், நிறைய ஊர் சுற்றல்.\n(பயப்படாதீர்கள், இது பயணக் கட்டுரை அல்ல\nநாட்டரசன் கோட்டைக்குச் சென்று திரும்பிக்கொண்டிருந்த நேரம். உறவினர் ஒருவர் ஃபோன் செய்தார், ‘நீங்க வர்ற வழியிலதான் திருக்கோஷ்டியூர் இருக்கு, அருமையான கோயில், ராமானுஜரோட வாழ்க்கையோட நெருங்கின தொடர்பு கொண்டது. அவசியம் பார்த்துட்டு வாங்க.’\nசிறிது நேரத்தில், அவர் சொன்ன திருக்கோஷ்டியூர் வந்தது. ’சௌம்ய நாராயணப் பெருமாள்’ ஆலயத்தின் வாசலில் ��ாரை நிறுத்தினோம்.\nசின்னக் கோயில்தான், ஆனால் மிக உயரமாகத் தென்பட்டது. நான்கு தளங்களில் பெருமாள். கீழ்த்தளத்திலும் மேல்தளத்திலும் ராமானுஜரும் உண்டு.\n(பயப்படாதீர்கள், இது ஆன்மிகக் கட்டுரை அல்ல\nகோயிலைவிட, எனக்கு அந்த ஊரின் பெயர்தான் வியப்பைத் தந்தது. அதென்ன திருக்’கோஷ்டி’யூர் காங்கிரஸ் செல்வாக்கு நிறைந்த இடமோ\n(பயப்படாதீர்கள், இது அரசியல் கட்டுரை அல்ல\nஉடனடியாக, மொபைல் இணையத்தைத் திறந்து தேட ஆரம்பித்தேன். ‘மிஸ்டர் கூகுள், திருக்கோஷ்டியூர் என்ற பெயருக்குக் காரணம் என்னவோ\nஓர் அசுரன், அவனை அழிப்பதற்காகப் பிரம்மா, சிவன், விஷ்ணு உள்ளிட்ட தேவர்கள் எல்லாரும் கலந்தாலோசனை நடத்துகிறார்கள். அதற்காக அவர்கள் தேர்வு செய்த இடம்தான், இந்த ஊர். ஆகவே, தேவர்கள் ‘கோஷ்டி’ சேர்ந்து பேசிய இடம் என்ற அர்த்தத்தில் அதற்குத் ‘திருக்கோஷ்டியூர்’ என்று பெயர் வந்ததாம்.\nசுவாரஸ்யமான கதைதான். பொருத்தமான விளக்கம்தான், ஆனால், இந்தப் பெயரில் ஒரு கிரந்த எழுத்து (ஷ்) இருக்கிறதே. அதைத் தவிர்த்துவிட்டால் ‘திருக்கோட்டியூர்’ என்று மாறிவிடுமே.\nஎனக்குத் தெரிந்து ஹைதாராபாதில் ‘கோட்டி’ என்ற பெயரில் ஓர் இடம் உண்டு. அதே ஆந்திராவில் ராஜ் கோட்டி என்ற பெயரில் இரண்டு இசையமைப்பாளர்கள் இருக்கிறார்கள். அவர்களிடம்தான் துள்ளிசையின் நுட்பங்களைக் கற்றுக்கொண்டதாக ஏ. ஆர். ரஹ்மான் பாராட்டிச் சொல்லியிருக்கிறார்.\n(பயப்படாதீர்கள், இது சினிமாக் கட்டுரை அல்ல\nஆனால் தமிழ்நாட்டின் தென் மூலையில் உள்ள இந்த ஊருக்கும், அந்தக் ‘கோட்டி’களுக்கும் சம்பந்தம் இருக்க வாய்ப்பில்லை. அல்லவா\nமொழிமாற்றம், கிரந்தம் தவிர்ப்பு போன்றவற்றில் இந்தப் பிரச்னை எப்போதும் உண்டு. கொஞ்சம் அசந்தாலும் அர்த்தம் சுத்தமாக மாறிவிடும்.\nஉதாரணமாக, ’ஸ்ரீனிவாசன்’ என்று ஒரு பெயர். ’ஸ்ரீ’ என்றால் ‘திரு’, ‘செல்வம்’, ‘வளம்’, ஆக, இந்தப் பெயரின் அர்த்தம், மிகவும் வளமாக / வளத்தில் வாசம் செய்பவன்.\nஅந்தப் பெயரைக் கிரந்தம் தவிர்த்து ‘சீனிவாசன்’ என்று எழுதுகிறோம். எல்லாருக்கும் பழகிவிட்டது. தவறில்லை. ஆனால் இந்தத் தமிழ்ப் பெயருக்குச் ‘சர்க்கரையில் வாசம் செய்கிறவன்’ (அதாவது எறும்பு) என்று ஓர் அர்த்தம் (அனர்த்தம்) வருகிறதல்லவா\nசில வருடங்களுக்குமுன்னால் நாங்கள் ‘தினம் ஒரு கவித��’ என்ற பெயரில் ஒரு மின்னஞ்சல் குழுமத்தை நடத்திக்கொண்டிருந்தோம். ‘Dhinam Oru Kavithai’ என்ற ஆங்கிலப் பெயர் நீளமானது என்பதால், அந்தக் குழுவுக்கு ‘DOKAVITHAI’ என்று சுருக்கமாகப் பெயர் சூட்டியிருந்தோம்.\nஅந்தக் குழுமத்தின் ஆண்டு விழாவில் ஒருவர் பேசினார், ‘தினம் என்பது வடமொழிச் சொல், ஆகவே அதை ‘நாளும் ஒரு கவிதை’ என்று மாற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன்.’\nஇன்னொருவர் இதற்குப் பதில் சொன்னார், ‘நண்பர் சொன்னது நல்ல யோசனைதான். ஆனால் அப்படி மாற்றினால் நம் குழுவின் ஆங்கிலப் பெயரை ‘NaaLum Oru Kavithai’ அதாவது ‘NOKAVITHAI’ என்று மாற்றவேண்டியிருக்கும். கவிதையே இல்லை என்கிற அர்த்தம் வந்துவிடுமே.’\nஇதை வேடிக்கைக்காகக் கேட்கும்போது சிரிப்பு வருகிறது. ஆனால் கொஞ்சம் முயன்றால், மொழியின் சாத்தியங்களைப் பயன்படுத்தி எந்தப் பெயருக்கும் நல்ல அர்த்தம் ஒன்றைச் சொல்லிவிடமுடியும் என்பது என் கட்சி.\nஉதாரணமாக, ‘நீடாமங்கலம்’ என்று ஓர் ஊர். திருவாரூர் பக்கத்தில் உள்ளது. அந்த ஊர் பால் திரட்டு முன்பு ரொம்பப் பிரபலம். இப்போது கிடைப்பதில்லை.\nஒரு பெரிய பேச்சாளர் (கி. வா. ஜகந்நாதன் என்று நினைவு) அந்த ஊரில் சொற்பொழிவு ஆற்ற வந்திருந்தாராம். அவரை வரவேற்று அழைத்துச் சென்ற உள்ளூர்ப் பிரமுகர் பேச்சுவாக்கில் ஒரு விஷயத்தைச் சொன்னாராம், ‘ஐயா, இந்த ஊர் ரொம்ப நல்ல ஊர்தான், ஆனா இதுக்கு ஏன் நீடாமங்கலம்ன்னு பேர் வெச்சாங்க தப்பான அர்த்தம் வருதே\nஅவருடைய புலம்பலில் நியாயம் உண்டு. ‘நீடா’ (நீளா) மங்கலம் என்றால், நல்ல விஷயங்கள் தொடர்ந்து நிகழாத ஊர் என்ற பொருள்தான் வருகிறது.\nஆனால், அந்தச் சொற்பொழிவாளர் அசரவில்லை, ‘நீங்கள் வார்த்தையைச் சரியாகப் பிரிக்கவில்லை’ என்றார், ’அது நீடா + மங்கலம் அல்ல, நீள் + ஆம் + மங்கலம் என்று பிரிக்கவேண்டும், அதாவது, மங்கலம் எப்போதும் நீண்டு தங்கியிருக்கும் ஊர் இது\nஅதுபோல, ‘திருக்கோட்டியூர்’ என்ற கிரந்தம் தவிர்த்த பெயருக்கும் ஏதாவது பொருத்தமான அர்த்தம் இருக்குமோ தொடர்ந்து கூகுளை விசாரித்தேன். அட்டகாசமான விளக்கம் ஒன்று சிக்கியது.\nதமிழில் ’திருக்கு’ என்றால் துன்பம், தீய வினைகள், மாறுபாடு, வஞ்சனை போன்ற பொருள்கள் உண்டு. கம்ப ராமாயணத்தில் ‘திருக்கு இல் சிந்தையர்’ என்று வானரப் படையினரைப் புகழ்கிறார் கம்பர். அதாவது ‘புத்தி குறுக்கால யோசிக்��ாத பயல்கள்’, Straightforward Personalities\nஆக, உங்களுக்குக் ‘கோஷ்டி’ பிடிக்காவிட்டால், திருக்கோட்டியூர் = திருக்கு + ஓட்டி + ஊர், நம்முடைய துன்பங்களை, பழைய வினைகளை, பொல்லாத்தனங்களை விரட்டும் ஊர் என்றும் அர்த்தம் கொள்ளலாம்.\nஇப்படித் தமிழ்நாட்டில் ஒவ்வோர் ஊருக்கும் பெயர்க்காரணம் இருக்கிறது. பஸ்ஸில் செல்லும்போது வரிசையாக வரும் ஊர்களின் (குறிப்பாகக் கிராமங்களின்) பெயர்ப்பலகைகளை ஒவ்வொன்றாக வாசித்து, ‘இதற்கு என்ன பெயர்க் காரணமாக இருக்கும்’ என்று யோசிக்கத் தொடங்கினால், அற்புதமான பல புதிய (அதாவது, பழைய) தமிழ் வார்த்தைகளைத் தெரிந்துகொள்வதற்கான வாய்ப்பும் அது.\nஆர்வம் உள்ளவர்கள், ரா. பி. சேதுப்பிள்ளை எழுதிய ‘ஊரும் பேரும்’ என்ற நூலை வாங்கி வாசிக்கலாம். இணையத்திலேயே இலவசமாகவும் கிடைக்கிறது. கொஞ்சம் தேடுங்கள்.\n’புக்’ மார்க்ஸ் : தொகுப்பு 10\n’மோனை’ என்றால், இரண்டு சொற்களின் முதல் எழுத்துகள் ஒன்றி வருவது, உதாரணமாக ‘கல்விக் கடல்’, ’காத்திருந்த கண்கள்’… இப்படி.\nசெய்யுளில் ‘மோனை’ பயன்படும்போது, அதில் பல வகைகள் உண்டு. அவை:\n* இணை மோனை : முதல், இரண்டாவது சொற்களில்மட்டும் மோனை அமைவது.\nஉதாரணம்: ’கடற்கரையில் காற்று வாங்கித் திரும்பினோம்’\n* பொழிப்பு மோனை : முதல், மூன்றாவது சொற்களில் மோனை அமைவது\nஉதாரணம்: ’கடற்கரையில் இன்று காற்று அதிகம்’\n* ஒரூஉ மோனை : முதல், நான்காவது சொற்களில் மோனை அமைவது\nஉதாரணம்: ’கடற்கரையில் இன்று நல்ல காற்று’\n* கூழை மோனை : முதல் மூன்று சொற்களில் மோனை அமைவது\nஉதாரணம்: ‘கடற்கரைக் காற்றைக் காணாமல் வாடினோம்’\n* மேற்கதுவாய் மோனை: 1, 3, 4 சொற்களில் மோனை அமைவது\nஉதாரணம்: கடற்கரை என்றாலே காற்று கிறங்கடிக்கும்\n* கீழ்க்கதுவாய் மோனை : 1, 2, 4 சொற்களில் மோனை அமைவது\nஉதாரணம்: கடற்கரைக் காற்றில் மனம் கிறங்கியது\n* முற்று மோனை : நான்கு சொற்களிலும் மோனை அமைவது\nஉதாரணம்: கடற்கரைக் காற்றில் கந்தன் கிறங்கினான்\n(ஆதாரம்: கி. வா. ஜகந்நாதன் எழுதிய ‘கவி பாடலாம்’)\nகல்கி தன்னுடைய சொந்தப் பெயரில் ஒரு பத்திரிகை தொடங்கிய நேரம். அதன் நிர்வாகத் தலைமையை ஏற்றிருந்தவர் சதாசிவம். அவருக்கு ஒரு பெரிய கவலை. காரணம், காகிதத் தட்டுப்பாடு.\nஇதைப் பற்றிக் கேள்விப்பட்ட கல்கி கிண்டலாகச் சிரித்தார்., ‘கவலைப்படாதீங்க, நான் ஒரு தமிழ்நாட்டுச் சரித்திர நாவல் எழு��ப்போறேன், அதை அதிகப் பேர் படிக்கமாட்டாங்க, நமக்கு அச்சிடக் காகிதமும் நிறையத் தேவைப்படாது’ என்று வேடிக்கையாகச் சொன்னார்.\n1941ல் தொடங்கிய அந்தச் சரித்திர நாவலின் பெயர், ‘பார்த்திபன் கனவு’. சதாசிவத்திடம் சொன்னதுபோலவே, அதிக எதிர்பார்ப்புகள் இல்லாமல் சாதாரணமாகதான் எழுத ஆரம்பித்தார் கல்கி.\nஆனால், கல்கியின் எழுத்து லாகவம், அந்த நாவல் உடனடி ஹிட். தமிழர்கள் கல்கி இதழைத் தேடித் தேடி வாசிக்க, விற்பனை கிடுகிடுவென்று உயர்ந்தது. கூடுதல் பிரதிகளை அச்சிடுவதற்காக சதாசிவம் காகிதத்தைத் தேடிப் பல ஊர்களுக்குப் பயணமாகவேண்டிய நிலைமை.\n’பார்த்திபன் கனவு’ தந்த உற்சாகத்தில் கல்கி தனது அடுத்த சரித்திர நாவலை இன்னும் விரிவான களத்தில் எழுதத் தொடங்கினார், 1944ல் ‘சிவகாமியின் சபதம்’ வெளிவந்து பெரும் வெற்றி பெற்றது.\nஆறு வருடங்கள் கழித்து, கல்கி ‘பொன்னியின் செல்வன்’ நாவலை எழுதத் தொடங்கினார். அது தொடர்ந்து மூன்றரை ஆண்டு காலம் தொடராக வந்து மிகப் பெரிய வெற்றி பெற்றது. இன்றுவரை தமிழில் மிக அதிகம் விற்பனையாகும் நூல்களில் அதுவும் ஒன்று.\nபக்க அளவு என்று பார்த்தால், ‘பார்த்திபன் கனவு’ சுமார் 400 பக்கங்கள், ‘சிவகாமியின் சபதம்’ 1000 பக்கங்கள், ‘பொன்னியின் செல்வன்’ 2400 பக்கங்கள்\n(ஆதாரம்: பூவண்ணன் எழுதிய ‘டைட்டானிக்கும் டி.கே.சி.யும்’ நூல்)\n’முன்னுரை’கள் என்பவை புத்தகங்களின் ட்ரெய்லர்மாதிரி. பலர் இந்த முன்னுரைகளை வாசித்துவிட்டுதான் புத்தகத்தை வாங்கலாமா வேண்டாமா என்று தீர்மானிப்பார்கள். ’அதெல்லாம் போர், நான் நேரடியா மெயின் பிக்சர் பார்க்கிறேன்’ என்று சொல்கிற தீவிர வாசகர்களும் உண்டு.\nசில முன்னுரைகளில் சுய புகழ்ச்சியே நிரம்பிக் கிடக்கும், சிலவற்றில் அடுத்தவர்களுக்கு நன்றி சொல்லிப் பட்டியல் போடுவார்கள். இன்னும் சிலர் தங்களுக்கு நெருக்கமான பிரபலங்களிடம் முன்னுரை வாங்கிப் பிரசுரிப்பார்கள். புத்தகத்தைவிட முன்னுரை அதிகம் உள்ள ஒரு நூலைக்கூட நான் வாசித்திருக்கிறேன்.\nஅபூர்வமாகச் சில எழுத்தாளர்கள், தங்களது முன்னுரைகளுக்காகவே புகழ் பெற்றவர்கள். சிறந்த உதாரணம், ஜெயகாந்தன். இவரது முன்னுரைகள் தொகுக்கப்பட்டுத் தனி நூலாகவே வெளிவந்துள்ளது. அந்தத் தொகுப்பில் ஜெயகாந்தன் குறிப்பிடும் சுவாரஸ்யமான ஒரு விஷயம்:\nசரத் சந்திரர் தன்னுடைய நாவல்களுக்கு முன்னுரை எழுதமாட்டாராம். காரணம் கேட்டால், ‘400 பக்க நாவலில் விளக்கமுடியாத எந்த விஷயத்தை இந்த நாலு பக்க முன்னுரை விளக்கிவிடப்போகிறது\nதிருக்குறளுக்குப் பலர் உரை எழுதியுள்ளார்கள். அதன் தொடக்க கால உரை ஆசிரியர்களில் மிக முக்கியமான பத்து பேர்:\nதிருக்குறள் முழுமையும் வெண்பாக்களால் ஆனதுதான். அதே பாணியில், இந்தப் பத்து பேரின் பெயர்களைக் குறிப்பிடும் வெண்பா ஒன்றும் உள்ளது:\nதருமர், மணக்குடவர், தாமத்தர், நச்சர்,\nபரிதி, பரிமே லழகர், திருமலையார்,\nமல்லர், பரிப்பெருமாள் காளிங்கர் நூலினுக்கு\nதமிழில் தனித்துவமான உரை நடை (வசன நடை) கொண்டவர்கள் யார்\n1984ம் வருடம் வெளிவந்த ‘விமரிசனக் கலை’ நூலில் இந்தக் கேள்விக்கு விமர்சகர் க. நா. சுப்ரமணியம் ஒரு பதில் சொல்லியிருக்கிறார். அவருடைய பட்டியல்:\n* லா. ச. ராமாமிருதம்\nஎத்தனையோ எழுத்தாளர்கள் இருக்க, இவர்களை ஏன் தேர்ந்தெடுக்கவேண்டும் அதற்கும் க.நா.சு.விடம் தெளிவான பதில் உண்டு. அவரது அளவுகோல்:\nஇவர்களுடைய வசன நடையிலே குறைகள் இருக்கலாம், ஆனால் அடிப்படையாக ஒரு தனித்துவம் இருக்கிறது. வார்த்தையை உபயோகிப்பதிலே, வார்த்தைகளை ஒன்று சேர்ப்பதிலே, அந்த வார்த்தைகளையும் வாக்கியங்களையும் தனி அழகு, ‘தன்’ அழகு கூடுவதாகச் சொல்வதிலே அவர்களுக்கு ஒரு திறமை இருக்கிறது. புதுமைப்பித்தனேதான் அவர் நடை என்றும், டிகேசியே அவர் நடை என்றும் சொல்வதற்கு ஆதாரம் உண்டு.\n‘சூரிய நாராயண சாஸ்திரி’ என்கிற ‘பரிதி மால் கலைஞர்’ அற்புதமான ஆசிரியர். தமிழை அழகாகவும் ஆழமாகவும் ரசித்து ருசித்துச் சொல்லித்தருகிறவர்.\nஉதாரணமாக, சீவக சிந்தாமணியில் ஒரு வரி, ஆண்மகன் ஒருவனைப் பெண்கள் ‘தாமரைக் கண்ணால் பருகினார்கள்’ என்று வரும்.\nமேலோட்டமாகப் பார்த்தால், இது ஒரு சாதாரணமான வாக்கியம்தான். ஆனால், பரிதி மால் கலைஞர் இதை விளக்கும்போது, மூன்று விதமான விளக்கங்களைத் தருவார்:\n1. பெண்கள் தாமரை போன்ற தங்களுடைய கண்களால் அவனைப் பருகினார்கள்\n2. தாம் அரைக் கண்ணால், அதாவது, பெண்கள் அவனை முழுவதுமாகப் பார்க்க வெட்கப்பட்டு, ஓரக்கண்ணால், அதாவது அரைக் கண்ணால் பார்த்து ரசித்தார்கள்\n3. தாம் மரைக் கண்ணால், ’மரை’ என்றால் மான் என்று பொருள், பெண்கள் தங்களது மான் போன்ற கண்களால் அவனைப் பார்த்து மகிழ்ந்தார்கள்\n(ஆதாரம்: பி. சி. கணேசன் எழுதிய ‘தமிழ் வளர்த்த பேராசிரியர்கள்’ நூல்)\nசென்ற ஆண்டு (2011) ‘அமுத சுரபி’ தீபாவளி மலரைப் புரட்டிக்கொண்டிருந்தேன். அதில் தீபாவளி மலர்களைப் பற்றிய சுவாரஸ்யமான பல புள்ளி விவரங்கள். தொகுத்து வழங்கியவர் பெயர் ‘சின்னஞ்சிறுபோபு’. அவற்றிலிருந்து சில இங்கே:\n* தமிழில் வந்த முதல் தீபாவளி மலர், 1934ம் வருடம். வெளியிட்டது, ஆனந்த விகடன்\n* தமிழில் அதிக தீபாவளி மலர்களை வெளியிட்ட பத்திரிகை, கல்கி (60+)\n* இப்போதெல்லாம் தீபாவளி மலர்களின் அட்டையில் புகைப்படங்களைப் பிரசுரித்துவிடுகிறார்கள். ஆனால் அன்றைய தீபாவளி மலர்களுக்கான அட்டைப்படங்கள் தனித்துவம் வாய்ந்தவை, பெரும்பாலும் புராண அல்லது இலக்கியக் காட்சிகளின் விரிவான சித்திரிப்புகளாக இருக்கும். அவற்றை அதிக எண்ணிக்கையில் வரைந்தவர், கோபுலு\n* சிறுவர்களுக்குமட்டுமான சிறப்பு தீபாவளி மலர்களும் ஐம்பதுகள், அறுபதுகளில் வெளியானதுண்டு. அவற்றை வெளியிட்ட பத்திரிகையின் பெயர் ‘கண்ணன்’, இதன் ஆசிரியர், எழுத்தாளர் ஆர்.வி.\n’புக்’ மார்க்ஸ் : தொகுப்பு 9\nபதினைந்து வயதில் சிறுகதைகள் எழுத ஆரம்பித்தவர் தி. ஜானகிராமன். பள்ளி ஆசிரியராகவும், பின்னர் வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பாளர், அமைப்பாளர் போன்ற பொறுப்புகளையும் வகித்தவர்.\nதி. ஜானகிராமனின் அற்புதமான சிறுகதைகளை வாசித்திருக்கிறோம், ‘மோக முள்’, ‘அம்மா வந்தாள்’ போன்ற நாவல்கள், ‘நடந்தாய் வாழி காவேரி’ போன்ற அபுனைவுகளும் மிகப் புகழ் பெற்றவைதான்.\nஅபூர்வமாக, அவர் சில மொழிபெயர்ப்புகளையும் செய்துள்ளார். உலகப் புகழ் பெற்ற ‘மாபி டிக்’ நாவல், வில்லியம் ஃபாக்னரின் சிறுகதைகள், அணு விஞ்ஞானம், புவியியல் பற்றிய ஆங்கில நூல்கள் சிலவற்றை அவர் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.\n(ஆதாரம்: ’கருங்கடலும் கலைக்கடலும்’ நூலின் ஆசிரியர் அறிமுகக் குறிப்பு)\nபல வருடங்களுக்கு முன்னால், இந்தியா டுடே ஒரு சிறுகதைப் போட்டியை நடத்தியது. அதில் முதல் பரிசு பெற்றவர், க. சீ. சிவகுமார், இரண்டாவது பரிசு, பாஸ்கர் சக்தி.\nஇந்தப் போட்டி முடிவு அறிவிக்கப்பட்டவுடன், க. சீ. சிவகுமார் ஊர் விட்டு ஊர் சென்று பாஸ்கர் சக்தியைச் சந்தித்திருக்கிறார். எதற்கு ‘நம்முளுதவிடவும் உங்குளுது நல்லாருக்குங்க’ என்று பாராட்டுவதற்காகதான்\n(ஆதாரம்: க. சீ. சிவகுமார் எழுதிய ‘கன்னிவாடி’ நூலின் அறிமுக உரையில் ரமேஷ் வைத்யா)\nபுகழ் பெற்ற ஆங்கில எழுத்தாளர் ஆர். கே. நாராயணன் ஒரு தமிழர் என்பது எல்லாருக்கும் தெரியும். ஆனால் அவர் தமிழில் எதுவும் எழுதியதில்லை என்பதை ஒரு குறையாகவே குறிப்பிடுகிறவர்கள் உண்டு. அவருக்குத் தமிழ் வாசிக்கத் தெரியுமா என்று சந்தேகமாக எழுதப்பட்ட கட்டுரைகளைக்கூடப் பார்த்திருக்கிறேன்.\nஅந்தச் சந்தேகமே உங்களுக்கு வேண்டாம். ஆர். கே. நாராயணன் நன்கு தமிழ் கற்றவர். குறிப்பாக, கம்ப ராமாயணத்தை ஊன்றிப் படித்தவர். அவர் எழுதிய ‘The Ramayana’ என்ற ஆங்கில நூல் முழுவதும் கம்பன் பாக்களின் அடிப்படையில்தான் எழுதப்பட்டுள்ளன. இதை அவரே அந்நூலின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். ‘கம்பன் கவிதையை நான் ரசித்து மகிழ்ந்த அதே அனுபவத்தை உங்களுக்கும் தெரிவிக்கவேண்டும் என்பதற்கான முயற்சிதான் இந்தப் புத்தகம்\nநபிகள் நாயகத்தின் வரலாறைக் கவிதை நூலாக எழுதினார் மு. மேத்தா. அந்நூல் வெளியானது, அதை இசையமைப்பாளர் இளையராஜாவுக்குப் பரிசாக வழங்கினார்.\nராஜா அந்தப் புத்தகத்தை மேஜைமேல் வைத்துவிட்டு வேறு வேலைகளைக் கவனித்துக்கொண்டிருந்தார். அப்போது ஒரு பாடல் பதிவிற்காகக் கவிஞர் வாலி அங்கே வந்திருந்தார். அவர் இந்தப் புத்தகத்தைப் புரட்டிப் பார்த்திருக்கிறார். படிக்கப் படிக்கச் சிலிர்த்துப்போய், ராஜாவிடம் மேத்தாவைப் பாராட்டி மகிழ்ந்திருக்கிறார்.\nஅன்றுமட்டுமில்லை, மறுநாளே மேத்தாவையும் நேரில் சந்தித்து, இந்தப் புத்தகத்துக்காக அவரைப் பாராட்டிய வாலி, ‘இது எனக்குள் ஒரு மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது’ என்றார்.\nசில வாரங்கள் கழித்து, ஆனந்த விகடனில் வாலி எழுதும் ‘அவதார புருஷன்’ தொடர் ஆரம்பமானது. ராமாயணத்தைக் புதுக்கவிதை வடிவில் சொல்லும் முயற்சி அது.\n’மு. மேத்தாவின் ‘நாயகம் ஒரு காவியம்’ நூலை வாசித்தபிறகு, அதைப்போலவோ, அல்லது அதைவிட மேலான ஒரு படைப்பையோ எழுதவேண்டும் என்ற தீவிரமான எண்ணம் எனக்குள் ஏற்பட்டதால்தான், அவதார புருஷன் ராமனின் கதையைக் கவிதையாக எழுத ஆரம்பித்தேன்’ என்று வாலியே பின்னர் குறிப்பிட்டிருக்கிறார்.\n(ஆதாரம்: ‘மு. மேத்தா திரைப்படப் பாடல்கள்’ நூலுக்கு இளையராஜா எழுதிய முன்னுரை)\nசிறுகதைகளை அளப்பதற்கு தி.ஜ.ர. வைத்திருந்த அளவுகோல்:\nநமது கதைகளில் நமது பழக்கவழக்கங்கள் நிறைந்திருக்கவேண்டும். நமது நடை உடை பாவனைகள் நிரம்பியிருக்கவேண்டும்\nகதைகள் எல்லாவற்றிலும் ஒரு செய்தி / நீதி இருக்கவேண்டும் என்று எண்ணவேண்டாம். தற்காலத்தில் அந்த வகைப் பிரசாரக் கதைகளுக்கும் தேவை உள்ளது உண்மைதான். ஆனால் என்றும் மங்காத புகழுடன் புரியக்கூடிய கதைச்சுவை நிரம்பிய சௌந்தர்யமான கதைகளும் வேண்டும்\n(ஆதாரம்: ‘அன்று’ நூல் தொகுப்பின் முன்னுரையில் மாலன்)\nகுழந்தைகளுக்கான புத்தகங்களைப் பற்றி, தஞ்சாவூர்க் கவிராயர் எழுதிய ஒரு குறிப்பு:\nசின்னஞ்சிறு வயதிலேயே நல்ல புத்தகங்களை குழந்தைகளின் நண்பனாக்கி விடவேண்டும். அவை கேட்கிற புத்தகங்களை வாங்கிக் கொடுக்கவேண்டும்.\nமேலை நாடுகளுடன் ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கான புத்தகங்கள் போதுமான அளவு இல்லை என்றுதான் சொல்லவேண்டும். குழந்தைகளுக்காக எழுதப்பட்டுள்ள புத்தகங்கள் பெரும்பாலும் குழந்தைத்தனமாக இருக்கின்றன. குழந்தைகளுக்கு இப்படிச் சொன்னால் புரியாது; இதற்குமேல் சொன்னால் புரியாது என்று நாமாகவே ஓர் அபிப்பிராயம் வைத்துக்கொண்டு எழுதுகிறோம்.\nஇது தவறு, குழந்தைகள் நம்மைவிடப் புத்திசாலிகள். குழந்தைகளுக்கு இருக்கிற புத்தம்புதுசான பார்வை நமக்குக் கிடையாது. குழந்தைகளுக்கான புத்தகம் எழுத குழந்தை மனசு வேண்டும்.\nகுழந்தைகளுக்கு ஏராளமாகப் புத்தகங்கள் அச்சிடப்படுகின்றன. வழவழ தாளில் பளீரென்ற வண்ணப் புத்தகங்கள். உள்ளே யானை, குதிரை படங்கள். விலையும் யானை விலை, குதிரை விலையாகத்தான் இருக்கிறது.\nநரிக்கு எட்டாத திராட்சைப் பழங்கள்மாதிரி குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் இந்தப் புத்தகங்கள் காய்த்துத் தொங்குகின்றன\n(ஆதாரம்: ‘குழந்தைகளைக் கிழிக்காத புத்தகங்கள்’ கட்டுரை)\n’சின்னப் பூ’ என்றால் என்ன தெரியுமா\n‘லிட்டில் ஃப்ளவர்’ பள்ளியின் பெயரை மொழிபெயர்க்கவில்லை. அது ஒரு பழந்தமிழ்ச் சிற்றிலக்கிய வகை. அரசர்களின் பத்து வகைச் சின்னங்களை எடுத்துக்கொண்டு, ஒவ்வொன்றையும் ஐந்து முதல் பத்து பாடல்களால் வர்ணித்துப் பாடுவது. ஆகவே ‘சின்ன’ப் பூ என்று பெயர் சூட்டப்பட்டது.\nஅரசியல் கட்சிகளுக்கு ஒரு சின்னம்தான் உண்டு. அரசர்களுக்குமட்டும் பத்தா\nஅரசனின் நாட்டு வளத்தைச் சொல்ல : நாடு, ஊர், மலை, ஆறு (4)\nஅவன் ��ணியும் ’மாலை’யின் பெருமையைச் சொல்ல (1)\nஅவனது படை பலத்தைச் சொல்ல: யானைப்படை, குதிரைப்படை (2)\nஅவனுடைய ஆட்சியின் கம்பீரத்தைச் சொல்ல: கொடி, முரசு, செங்கோல் (3)\n(ஆதாரம்: ஞா. தேவநேயப் பாவாணர் எழுதிய ‘பழந்தமிழாட்சி’ நூல்)\n’புக்’ மார்க்ஸ் : தொகுப்பு 8\nபுத்தகங்களைப் பற்றிய புதுக்கவிதை (அல்லது பொன்மொழி) ஒன்று. எழுதியவர், நெல்லை ஜெயந்தா:\nநாம் புத்தகங்களை மேலிருந்து கீழாக வாசிக்கிறோம், அவையோ நம்மைக் கீழிருந்து மேலாகத் தூக்கிவிடுகின்றன\nதமிழில் இது எதார்த்த எழுத்துகள், சோதனை முயற்சிகளின் காலம். இதற்குமுன்னால் ‘லட்சியவாத’ எழுத்துகள் ஆட்சி செய்தன. அந்தக் காலகட்டத்து எழுத்து வேந்தர்களில் ஒருவர், ’தீபம்’ நா. பார்த்தசாரதி. பரவலான வாசகர் வட்டத்துடன் எழுதியவர், அதேசமயம் பல விருதுகளையும் வென்றவர். ’சமுதாய வீதி’ என்ற அவரது நூலுக்கு இந்திய அரசு வழங்கும் ‘சாகித்ய அகாதெமி’ விருது கிடைத்தது.\nநா. பார்த்தசாரதி ’கல்கி’ இதழில் ‘மணிவண்ணன்’ என்ற பெயருடன் எழுதிய ’சூப்பர் ஹிட்’ தொடர்கதை, ‘குறிஞ்சி மலர்’. பின்னர் இது ஒரு பிரபலமான தொலைக்காட்சித் தொடராகவும் வந்தது நினைவிருக்கலாம்.\n‘குறிஞ்சி மலர்’ முன்னுரையில், லட்சியவாத எழுத்து பற்றி நா. பார்த்தசாரதி ஓர் அழகிய உதாரணம் தந்துள்ளார். அது:\n‘மருக்கொழுந்துச் செடியில் வேரில் இருந்து நுனித் தளிர்வரை எங்கே கிள்ளி மோந்தாலும் மணக்கும். அதுபோல, என்னுடைய இந்த நாவலின் எந்தப் பகுதியை எடுத்து வாசித்தாலும் பண்பும் ஒழுக்கமும் வற்புறுத்தப்படுகிற குரல் ஒலிக்கவேண்டும் என்று நினைத்து நான் எழுதினேன். கல்லூரிகளிலும் பள்ளிக்கூடங்களிலும் இன்று வளர்ந்து வரும் தமிழ் நம்பியரும் நங்கையரும் எதிர்காலத் தமிழ்ச் சமுதாயப் பண்ணையின் நாற்றங்கால் என்று நினைவூட்ட விரும்பினேன்.’\nதமிழின் சங்க இலக்கிய நூல்கள் அனைத்தும் வாசிக்கச் சுகமானவை, சொற்செறிவு, அற்புதமான கற்பனை நயம் போன்றவற்றைத் தாண்டி, அன்றைய வாழ்க்கைமுறையை, நம்பிக்கைகளை, மதிப்பீடுகளை (ஓரளவு சரித்திரத்தையும்) உணர்வதற்கு உதவுகிறவை.\nஆனால், இந்த நூல்கள் எப்போது எழுதப்பட்டவை என்பதுகுறித்துத் திட்டவட்டமாகச் சொல்வதுதான் மிகச் சிரமமாக இருக்கிறது. இதுபற்றிய ஆராய்ச்சியில் பல அறிஞர்கள் நேரம் செலவிட்டிருக்கிறார்கள். ‘அவை எப்போது ��ழுதப்பட்டால் என்ன அதைப் பற்றிக் கவலைப்படாமல் வாசித்து மகிழ்வோம்’ என்று சொல்கிறவர்களும் பலர் உண்டு.\nபேராசிரியர் எஸ். வையாபுரிப் பிள்ளை அவர்களின் ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்றில், பல ஆதாரங்களின் அடிப்படையில், ’எட்டுத்தொகை’ எனப்படும் முதன்மையான சங்க இலக்கிய நூல்கள் இந்த வரிசையில்தான் எழுதப்பட்டிருக்கவேண்டும் என்று ஊகித்துள்ளார்:\nஷேக்ஸ்பியரின் புகழ் பெற்ற ‘ரோமியோ : ஜூலியட்’ நாடகம் பல மொழிகளில் வெளிவந்துள்ளது. தமிழிலேயே பலமுறை மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.\nஅப்படி ஒரு மொழிபெயர்ப்பு, 1992ம் வருடம் ’அன்னை வெளியீட்டகம்’ என்ற பதிப்பகத்தால் வெளியானது. இதை மொழிபெயர்த்தவர் பெயர் என்ன தெரியுமா\nசிரிக்காதீர்கள், நிஜமாகவே அதுதான் அந்த மொழிபெயர்ப்பாளரின் புனைபெயர்.\n’மனிதர் நல்ல தமாஷான பேர்வழியாக இருப்பார்போல’ என்று உள்ளே போனால், முன்னுரையிலேயே ஏகப்பட்ட வெடிச்சிரிப்புகள். உதாரணமாக, அங்கே குறிப்பிடும் ஒரு குறும்புக் கவிதை:\nசோழ நாட்டை ஆண்ட பெருமன்னர்களில் ஒருவன், அனபாய சோழன். அவனுடைய சபையில் முதலமைச்சராகப் பணியாற்றியவர், அருண்மொழித் தேவர்.\nஅன்றைய சோழ நாட்டில் சமண இலக்கியங்கள்தான் பரவலாக வாசிக்கப்பட்டன. சிவனை வழிபடும் மரபில் வந்த அருண்மொழித் தேவர் சைவ இலக்கியங்களும் அப்படிப் பிரபலமாகவேண்டும் என்று விரும்பினார். சோழனிடம் அதுபற்றிப் பேசினார். சைவத் தொண்டர்கள் பலருடைய வாழ்க்கையை விவரித்துச் சொன்னார்.\nசோழன் மகிழ்ந்தான். ‘இதைத் தாங்களே ஒரு பெருங்காப்பியமாக எழுதித் தரவேண்டும்’ என்று கேட்டுக்கொண்டான்.\nஇப்படி எழுதப்பட்ட நூல்தான், ’திருத்தொண்டர் புராணம்’ எனப்படும் ‘பெரிய புராணம்’. அதனை எழுதிய அருண்மொழித் தேவரை நாம் இப்போது ‘சேக்கிழார்’ என்ற பெயரால் அறிகிறோம். அது அவர் பிறந்த வேளாளர் குல மரபின் பெயர்.\n(ஆதாரம்: மு. அருணாசலம் எழுதிய ‘சேக்கிழார்’ நூல்)\nதமிழுக்குப் பல முக்கியமான திறனாய்வு நூல்களையும் மொழிபெயர்ப்புகளையும் தந்தவர் தி. க. சி. (திருநெல்வேலி கணபதி சிவசங்கரன்), இந்திய அரசின் சாகித்ய அகாதெமி விருது பெற்றவர், வண்ணதாசன், கல்யாண்ஜி என்ற புனைபெயர்களில் அற்புதமான சிறுகதைகளும் கவிதைகளும் எழுதியுள்ள எஸ். கல்யாணசுந்தரம் இவரது மகன்.\nதி.க.சி.யைப் பற்றிப் பேசும்போது, அவரது கடிதங்களைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். தனக்கு வரும் புத்தகங்கள், பத்திரிகைகள் அனைத்தையும் விடாமல் படித்துவிட்டு, தனது பாராட்டுகள், விமர்சனங்களை ஒரு போஸ்ட் கார்டில் எழுதி அனுப்பிவிடுவார். அவரது கடிதங்களைப் படித்து ஊக்கம் கொண்டவர்கள், அந்த அஞ்சல் அட்டையை ஒரு விருதுக்கு இணையாகப் பாதுகாக்கிறவர்கள், அதனாலேயே மிகத் தீவிரமாக எழுதத் தொடங்கிய இளம் எழுத்தாளர்கள் ஏராளம்.\nமுதிர்ந்த வயது காரணமாக, தி.க.சி.க்குக் கை நடுக்கம் ஏற்பட்டுவிட்டது. அப்போதும் தொடர்ந்து வாசித்து, கடிதங்கள் எழுதிவந்தார். நண்பர்கள் அதைக் கண்டித்தபோது அவர் சொன்ன பதில், ‘அரை மணி நேரம் எழுதுவேன், பிறகு அரை மணி நேரம் ஓய்வு எடுத்துக்குவேன், அப்படியே கொஞ்சம் கொஞ்சமா எழுத நினைச்சதை எழுதி முடிச்சுடுவேன்.’\n‘கடிதங்களுக்கு இவ்வளவு சிரமப்பட்டுப் பதில் எழுதணுமா\n’ரோட்டுல நடந்து போறோம், எதிர்த்தாப்ல ஒருத்தர் வர்றார், நம்மளப் பார்த்து வணக்கம் சொல்றார், ஒரு மரியாதைக்குத் திருப்பி நாமளும் வணக்கம் சொல்லணுமா, வேண்டாமா\n(ஆதாரம்: வே. முத்துக்குமார் எழுதிய ’தி.க.சி. : மாறாத இலக்கியத்தடம்’ கட்டுரை)\nதமிழில் உள்ள 42 எழுத்துகள் ’ஓரெழுத்து ஒரு மொழி’ என்ற வகையைச் சேர்ந்தவை. அதாவது, அந்த எழுத்தே ஒரு சொல்லாகப் பொருள் தரும். அவற்றின் பட்டியல் இங்கே, அதிகம் புழக்கத்தில் இல்லாத சொற்களுக்குமட்டும் அடைப்புக்குறியில் விளக்கம் தந்துள்ளேன்.\nஆ (பசு), ஈ, ஊ (இறைச்சி), ஏ (அம்பு), ஐ, ஓ, மா (பெரிய / விலங்கு), மீ (உயரம்), மு (மூப்பு), மே (மேன்மை), மை, மோ (முகர்தல்), தா, தீ, தூ (வெண்மை), தே (தெய்வம்), தை, பா, பூ, பே (நுரை, அழகு), பை, போ, நா, நீ, நே (அன்பு), நை, நோ (நோவு), கா (சோலை), கூ, கை, கோ (அரசன்), வா, வீ (பூ, அழகு), வை, வௌ (கௌவுதல்), சா, சீ, சே (எருது), சோ (மதில்), யா (மரம்), நொ (துன்பம்), து (கெடு)\n(ஆதாரம்: ’ஊற்று’ சிற்றிதழ் : மே 2008)\n’புக்’ மார்க்ஸ் : தொகுப்பு 7\nதமிழகத்தில் திராவிட இயக்கம் பரபரப்பாக வளர்ந்துகொண்டிருந்த நேரம். கதாநாயகனைக் கடவுள் அவதாரமாகக் குறிப்பிடுகிற நூல் என்ற ஒரே காரணத்தால், ‘கம்ப ராமாயணம்’ கடுமையாகக் கிண்டலடிக்கப்பட்டது. பகுத்தறிவுக் கொள்கைகளை முன்வைத்த இயக்கங்களின் பேச்சாளர்கள் பல மேடைகளில் கம்பனிலிருந்து உதாரணங்களைக் காட்டிக் கேலி செய்து பேசினார்கள். ‘கம்ப ரசம்’ என்ற தலைப்பில் ஒரு ’வஞ்சப் புகழ்��்சி’ப் புத்தகமே எழுதினார் அண்ணா.\nஅப்போது, கவிஞர் கண்ணதாசனும் கடவுள் மறுப்பில் ஆர்வம் கொண்டிருந்தார். ’சகாக்கள் எல்லாரும் கம்பனைத் திட்டுகிறார்களே, நாமும் திட்டலாம்’ என்று முடிவெடுத்தார். திட்டுவதற்கு Points வேண்டாமா அதற்காகக் கம்பனை முழுக்கப் படிக்க ஆரம்பித்தார்.\n’அவ்வளவுதான், அதுவரை நான் படித்தவை எல்லாம் வீண் என்று புரிந்துகொண்டேன், இவன்தான் கவிஞன், இதுதான் நிஜமான கவிதை என்று உணர்ந்துகொண்டேன். அதன்பிறகு கம்பனில் இருந்து மீளமுடியவில்லை’ என்று பின்னர் ஒரு மேடையில் குறிப்பிட்டார் கண்ணதாசன்.\n(ஆதாரம்: தமிழறிஞர், எழுத்தாளர் ஹரி கிருஷ்ணன் நேரில் கேட்டது)\nநந்தனார் சரித்திரம் உங்களுக்குத் தெரிந்திருக்கும். அவரைத் தெய்வ தரிசனம் செய்யவிடாது தடுத்தது யார்\n நந்தனாரின் முதலாளிதான். ‘மாடு தின்னும் புலையா, உனக்கு மார்கழித் திருநாளா’ என்று சொல்லி அவர் நந்தனாரைத் தடுத்து நிறுத்திவிட்டார். அவர்மீது கொண்ட பயத்தால்தான் நந்தனார் சிதம்பரத்துக்குச் செல்லாமல் தள்ளிப்போட்டுக்கொண்டே இருந்தார்.\nஉண்மையில், 63 நாயன்மார்களின் வரலாறைப் ‘பெரிய புராண’மாக எழுதிய சேக்கிழார் சொல்லுகிற நந்தனார் கதையே வேறு. அதில் அவர் தொழிலாளி இல்லை, (கிட்டத்தட்ட) முதலாளி. சொந்த நிலத்தில் பயிரிட்டுச் சம்பாதித்தவர், தன்னால் இயன்றவற்றைச் சிவன் கோயிலுக்கு நன்கொடையாகத் தந்து வாழ்ந்தவர்.\nஆனால், பிறப்பால் அவர் தாழ்த்தப்பட்டவர் என்பதால், கோயிலுக்குள் அவரை அனுமதிக்க மறுக்கிறார்கள். அதை எண்ணிதான் அவர் வருந்துகிறார். எந்த ‘முதலாளி’யும் அவரைத் தடுத்து நிறுத்தவில்லை.\nபின்னாள்களில் நந்தனார் வரலாறை எழுதிய கோபால கிருஷ்ண பாரதி, அதில் நாடகத்தன்மையைச் சேர்ப்பதற்காக ஒரு முதலாளியைக் கொண்டுவந்தார், நந்தனாரை அவருக்கு அடங்கியிருப்பவராக மாற்றினார், அதன்மூலம் அன்றைய சமூகத்தில் பலர் ஒடுக்கப்பட்டதை அழகாகப் பதிவு செய்தார்.\nஇன்னொரு சுவாரஸ்யமான தகவல், ‘கோபால கிருஷ்ண பாரதி’யின் ‘மாடு தின்னும் புலையா’ மெட்டில் மகாகவி சுப்ரமணிய பாரதி ஒரு பாட்டு எழுதியுள்ளார். விடுதலைக்காகப் போராடுகிற தொண்டர்களைப் பார்த்து ஆங்கிலேய அதிகாரிகள் பாடுவதுபோல் அமைந்த அந்தப் பாடல் ‘தொண்டு செய்யும் அடிமை, உனக்குச் சுதந்தர நினைவோடா\nரசிகமணி டி.கே.சி. அவர்களைப் பற்றிய நூல் ஒன்று வெளியாகியிருந்தது. அதை அவருக்கே தபாலில் அனுப்பிவைத்தார்கள்.\nபிரித்துப் பார்த்தவருக்கு முதலில் ஆச்சர்யம், அடுத்து, ஆர்வம், ‘அப்படி என்னதான் எழுதியிருக்கிறார்கள்’ என்று ஆங்காங்கே புரட்டினார்.\nஇப்போது, ஆச்சர்யம், ஆர்வம் போய், வெட்கம் வந்துவிட்டதாம். காரணம், அந்தப் புத்தகத்தில் ஆங்காங்கே அவரைப் பாராட்டி எழுதப்பட்டிருந்த வரிகள்.\nஇதனால், டி.கே.சி.க்கு அந்தப் புத்தகத்தைத் தொடர்ந்து படிக்கக் கூச்சம். ‘யாராவது பார்த்தால் தவறாக நினைத்துவிடுவார்களோ’ என்று தயங்கினார்.\nஅதேசமயம், அதைப் படிக்காமலும் இருக்கமுடியாது. முழுக்கப் படித்துக் கருத்துச் சொல்லவேண்டும், ஏதாவது தவறான விவரங்கள் இருந்தால் பதிப்பாளருக்குத் தெரிவித்துச் சரி செய்தாகவேண்டும் அல்லவா\nஆகவே, டி.கே.சி. ஒரு வேலை செய்தார். அந்தப் புத்தகத்தின் தலைப்பு யாருக்கும் தெரியாதபடி அட்டை போட்டுக் கொண்டுவரச் செய்தார். அதன்பிறகுதான் அதைத் தொடக்கத்திலிருந்து படிக்க ஆரம்பித்தார்.\nநீங்கள் (பள்ளி / கல்லூரியிலிருந்து வெளியே வந்தபின்) எந்தப் புத்தகத்துக்காவது ‘அட்டை போட்டு’ப் படித்தது உண்டா\n(ஆதாரம்: இராஜேஸ்வரின் நடராஜன் தொகுத்த ‘ரசிகமணி டி.கே.சி.யின் கடிதங்கள்’ நூல்)\nஒரு நாவல் சினிமாவுக்குப் போகிறது. கதையைப் படித்துவிட்டுப் படத்தைப் பார்க்கும் ரசிகர்கள் ‘ம்ஹூம், தேறாது’ என்று அதனை ஒதுக்கித் தள்ளிவிடுகிறார்கள்.\n இலக்கியக் கதைகள் சினிமா மொழிக்குப் பொருந்தவில்லையா அல்லது, நல்ல கதையைச் சினிமாக்காரர்கள் பாழாக்கிவிடுகிறார்களா\nஇந்தக் கேள்விக்கு எழுத்தாளர் நாஞ்சில் நாடனின் பதில்:\n’நாவலை எடுத்துக்கொண்டால், அது முழுக்க முழுக்க எழுத்தாளனின் ராஜ்யம். ஆனால், சினிமா என்பது பலர் கூடி இழுக்கும் தேர். சினிமாவுக்குப் போகிற எழுத்தாளன் சினிமா வேறு, எழுத்து வேறு என்பதில் சரியான புரிதலுடன் இருக்க வேண்டும்.\nநான் வட்டார வழக்கில் எழுதிய ‘தலைகீழ் விகிதங்கள்’ நாவல் ‘சொல்ல மறந்த கதை’ என சினிமாவாக வெளியானபோது, அதில் ஒரு வட்டார வழக்குச் சொல்கூட இல்லை. ஆனால், அதுதான் சினிமா\nஆறு பக்கங்கள் நான் எழுதித் தள்ளுவதை இயக்குநர் ஒரே ஒரு ஷாட்டின் மூலம் கடந்து விடுவார். இதை எல்லாம் கணக்கில் கொண்டுதான் என் கதையைச் சினிமாவாக மாற்ற���வதற்கு நான் சம்மதிக்கிறேன். அதன்பிறகு, ‘நாவலைச் சினிமா சிதைத்துவிட்டது’ என்று புலம்புவதில் அர்த்தமே இல்லை’ என்று புலம்புவதில் அர்த்தமே இல்லை\n(ஆதாரம்: பத்திரிகையாளர் ரீ. சிவக்குமார் பதிவு செய்த எழுத்தாளர் நாஞ்சில் நாடனின் பேட்டி)\n’குலதெய்வம்’ என்ற படத்தில் ஒரு பாட்டு. மனைவியால் பாதிக்கப்பட்ட ஒரு கணவன், எல்லாப் பெண்களையும் வெறுத்துப் பாடுவதாகச் சூழ்நிலை. அந்தப் பாடலை எழுதியவர், மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்.\nஇந்தப் பாடல் வெளியாகிச் சில நாள்கள் கழித்து, பட்டுக்கோட்டையாருக்கு ஒரு கடிதம் வந்தது. அதன் சாரம்:\n‘இதுபோல் பெண்களைக் கேவலப்படுத்தும் ஒரு பாடலை நீங்கள் எழுதலாமா இப்போதெல்லாம் பல இளைஞர்கள் பெண்களைக் கிண்டல் செய்ய இந்தப் பாடலைதான் பயன்படுத்துகிறார்கள்.’\nஇதைப் படித்த கவிஞர் மிகவும் வருந்தினார். அந்தக் கடிதத்துக்கு அவர் எழுதிய பதில்:\n‘நீங்கள் குறிப்பிட்டுள்ள பாடலை மீண்டும் படித்துப்பார்த்தேன். தங்களுடைய நியாயமான கோபம் எனக்குப் புரிகிறது. பெண்ணால் பாதிக்கப்பட்ட மனநிலையில் உள்ள ஓர் இளைஞனின் கோணத்திலிருந்துதான் நான் அந்தப் பாடலை எழுதினேன். ஆனால் அது பொதுவாகவே பெண்களைக் கிண்டல் செய்ய உபயோகப்படுகிறது என்று இப்பொழுதுதான் தெரிந்துகொண்டேன். இனிமேல் இதுபோன்ற பாடல்களை எழுதும்போது கவனத்துடன் இருப்பேன், தவறு செய்யமாட்டேன்.’\n(ஆதாரம்: கார்த்திகேயன் எழுதிய ‘பாட்டாளிக் கவிஞன் பட்டுக்கோட்டை’ நூல் & சி. சேதுராமன் எழுதிய ’பாரதியும், பட்டுக்கோட்டையாரும்’ கட்டுரைகள்)\nபெரும்பாலான நூல்களின் தொடக்கத்தில் ‘சமர்ப்பணம்’ என்று ஒருவருடைய பெயரைப் போட்டிருப்பார்கள். இது நிஜமாகவே பயனுள்ள ஒரு விஷயமா\nஇந்தக் கேள்விக்கு எழுத்தாளர் வண்ணதாசனின் பதில்:\n‘இன்னார்க்குச் சமர்ப்பணம் என்று போடுவதற்காகவே புத்தகங்கள் எழுதவும் வெளியிடவும் வேண்டும் என்று தோன்றுகிறது. எழுத்தாளன் தன் மரியாதையை, பிரியத்தை, காதலை எல்லாம் வேறு எப்படிச் சொல்லிக்கொள்ளமுடியும் சமர்ப்பணத்தைவிட அருமையாகக் கட்டின மாலை எந்தப் பூக்கடையில் வாங்கிப் போடமுடியும் சமர்ப்பணத்தைவிட அருமையாகக் கட்டின மாலை எந்தப் பூக்கடையில் வாங்கிப் போடமுடியும்\n(ஆதாரம்: ’தீராநதி’ இதழில் வெளியான வண்ணதாசன் நேர்காணல்)\nபாரதியார் சுதேசமித்திரனில் வேலை செய்துகொண்டிருந்த நேரம். அவருக்குச் சம்பளம் 50 ரூபாய்.\nஒருமுறை பாரதி சம்பளம் வாங்கிக்கொண்டு ரிக்‌ஷாவில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அந்த ரிக்‌ஷாவை ஓட்டியவரிடம் பேச்சுக்கொடுக்க, அவர் குடும்பம் மிகவும் கஷ்டப்படுவதைத் தெரிந்துகொண்டார். உடனே, தன் கோட் பையில் இருந்த ஐம்பது ரூபாயை எடுத்துக் கொடுத்துவிட்டார்.\nஇந்தத் தகவல் தெரிந்த பாரதியின் மனைவி மிகவும் வருந்தினார். ஆனால் கணவரின் மனம் புரிந்ததால் நேரடியாக எதுவும் சொல்லவில்லை. அக்கம்பக்கத்து வீட்டாரிடம் இதைச் சொல்லிக் கவலைப்பட்டிருக்கிறார். ‘இப்படிச் சம்பளம் மொத்தத்தையும் தூக்கிக் கொடுத்துட்டா நம்ம வீட்டுச் செலவை எப்படிச் சமாளிக்கறது\nநல்லவேளையாக, அந்த ரிக்‌ஷாக்காரரை அவர்களுக்குத் தெரிந்திருந்தது. அவரைத் தேடிப் பிடித்து, ‘அய்யாகிட்ட மொத்தப் பணத்தையும் வாங்கிட்டியாமே’ என்று விசாரிக்க, அவர் அசடு வழிந்தபடி 45 ரூபாயைத் திருப்பிக் கொடுத்தாராம்\n(ஆதாரம்: அம்ஷன் குமார் எழுதிய ‘பாரதியின் இளம் நண்பர்கள்’ கட்டுரை)\n’புக்’ மார்க்ஸ் : தொகுப்பு 6\nபிறருக்காக எழுதுகிறவர்கள் ஒருபக்கமிருக்க, தனக்காக எழுதுகிறவர்கள்தான் உலகில் அதிகம். டைரி / தினசரி நாள்குறிப்புப் பழக்கம் உள்ளவர்களைச் சொல்கிறேன்.\nஇப்படிப் ‘பர்ஸன’லாக எழுதப்பட்ட பல டைரிக் குறிப்புகள் பின்னர் பொதுவெளியில் புத்தகமாக வெளியாகிப் பிரபலமடைந்திருக்கின்றன. தமிழில் அப்படிக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய நாள்குறிப்புகளை எழுதிப் புகழ் பெற்றவர், ஆனந்தரங்கம் பிள்ளை. 18ம் நூற்றாண்டில் இந்தியாவின் சில பகுதிகளை ஆட்சி செய்த பிரெஞ்சு அரசாங்கத்தைப்பற்றிய பல சுவாரஸ்யமான விவரங்கள் இவரது டைரியில் கிடைக்கின்றன. இந்தக் குறிப்புகளைப் பின்புலமாகக் கொண்டு பிரபஞ்சன் எழுதிய ஓர் அருமையான சரித்திர நாவல், ‘மானுடம் வெல்லும்’.\nஇன்னும் இருநூறு வருடங்கள் கழித்து, இன்றைய வலைப்பதிவுகள் அப்படிப்பட்ட சரித்திர / வாழ்வியல் ஆவணங்களாக அமையுமா\nஎழுத்தாளர் ஆர். கே. நாராயணுக்குக் குடைகள்மீது அலாதி பிரியமாம். உலகின் பல பகுதிகளில் இருந்து வரவழைக்கப்பட்ட குடைகளைச் சேகரித்துவைத்திருந்தாராம்.\nஇத்தனைக்கும், அவர் வாழ்ந்த மைசூரில் அடிக்கடி மழையெல்லாம் பெய்யாது. ஆனாலும் மடித்துவைக்கப்பட்ட குடையோடுதான் அவர் எப்போதும் வெளியே கிளம்புவார்.\nசரி, ஆர். கே. நாராயணிடம்தான் இத்தனை குடைகள் இருக்கின்றனவே என்று யாராவது அவரிடம் ஒரு குடையை இரவல் கேட்டுவிட்டால் போச்சு. என்னதான் அடைமழை கொட்டினாலும், பொக்கிஷம்போல் சேமித்துவைத்திருக்கும் தன்னுடைய குடை கலெக்‌ஷனிலிருந்து ஒரு குடையை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள அவருக்கு மனமே வராதாம்.\nஆக, அவரைப் பொறுத்தவரை குடைக்கும் மழைக்கும் சம்பந்தமே இல்லை. ’எனக்கு அது ஒரு Status Symbol, நடைக்குத் துணைவன்’ என்பார். இந்தக் காரணத்தாலே, குடைப் பிரியர்களான மலையாளிகளை அவருக்கு ரொம்பப் பிடிக்குமாம்.\n(ஆதாரம்: புகைப்படக் கலைஞர், பத்திரிகையாளர் டி. எஸ். நாகராஜன் எழுதிய ’The R. K. Narayan Only I Knew’ கட்டுரை)\nஒரு புத்தகத்தை வாசித்து முடித்தவரிடம் ‘எப்படி இருக்கு’ என்று கேட்கிறோம். என்ன பதில் வரும்\nசிலர் ‘சூப்பர்’ அல்லது ‘குப்பை’ என்று ஒரே வார்த்தையில் முடித்துவிடுவார்கள். இந்த மிகைப் பாராட்டும் சரி, தடாலடி எதிர்ப்பும் சரி, அந்தப் புத்தகத்தை எழுதியவர்களுக்குச் சுத்தமாகப் பயன்படாது.\nவேறு சிலர், கொஞ்சம் விரிவாகத் தங்களது கருத்துகளைச் சொல்வார்கள், ‘இந்தப் பகுதி சுவையா இருந்தது, அதுக்கப்புறம் நாலஞ்சு சாப்டர் ரொம்ப இழுவை, எப்படா முடியும்ன்னு ஆகிடுச்சு, க்ளைமாக்ஸ் படு போர்’… இப்படி.\nஇதுபோன்ற வாசகர் கருத்துகளைச் சில எழுத்தாளர்கள் கேட்க விரும்புவதே இல்லை. ‘நான் எழுதியதை விமர்சிக்க நீ யார்’ என்று வாசகனை ஒரு படி கீழே வைத்துப் பார்க்கிற அந்த மனப்பான்மை ஒருபுறமிருக்க, இப்படிப்பட்ட அனுபவக் குறிப்புகளைத் தொகுத்து அலசினால், எந்தப் பகுதி பலரால் விரும்பப்படுகிறது, எந்தப் பகுதி வெறுக்கப்படுகிறது, எதைத் தாண்டிச் செல்ல அவர்கள் சிரமப்படுகிறார்கள் என்று பல விஷயங்களைத் தெரிந்துகொள்ளமுடியும். அதன் அடிப்படையில் ஒரு சுமாரான புத்தகத்தைக்கூட நன்கு எடிட் செய்து சுவையாக்கிவிடமுடியும், அல்லது, அடுத்த புத்தகத்தை எப்படி வடிவமைக்கலாம் என்று புரிந்துகொள்ளமுடியும். கிட்டத்தட்ட சினிமா எடிட்டிங்மாதிரிதான்.\nஅதற்கான ஒரு சாத்தியத்தை, இப்போதைய ஈபுத்தகங்களும் அவற்றை படிப்பதற்கான கருவிகளும் (Ebook Readers) உருவாக்கியிருக்கின்றன. பல ஆயிரம் பேர் ஒரே புத்தகத்தை டவுன்லோட் செய்து இ���்தக் கருவிகளின்மூலம் வாசிக்கிறபோது, யார் என்ன செய்கிறார்கள், எதை எப்படி வாசிக்கிறார்கள் என்று எளிதில் வேவு பார்த்துவிடலாம். அதை அடிப்படையாக வைத்து அந்தப் புத்தகத்தையோ, மற்ற புத்தகங்களையோ சிறப்பாக்கலாம். இதுபற்றி ஒரு மிகச் சுவையான கட்டுரையை ‘வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ சமீபத்தில் வெளியிட்டிருக்கிறது : http://online.wsj.com/article/SB10001424052702304870304577490950051438304.html\nஇன்னொருபக்கம், இப்படிப்பட்ட புள்ளி விவரச் சேமிப்புகளைப் பலர் எதிர்க்கிறார்கள். ’புத்தக வாசிப்பு என்பது ஒரு தனிப்பட்ட அனுபவம். அதில் மற்றவர்கள் எட்டிப்பார்ப்பது அழகல்ல’ என்பது ஓர் எதிர்ப்பு, ‘இதுபோன்ற வாசக அனுபவத்தின் அடிப்படையில் புத்தகங்கள் வடிவமைக்கப்படுவது தவறு, அது எழுத்தாளர்களின் உரிமையைப் பாதிக்கிறது, படைப்பு என்பது ஒரு கலை, Product Design அல்ல’ என்பது இன்னோர் எதிர்ப்பு.\nநீங்கள் ஒரு புதிய புத்தகத்தை எழுதி முடித்து வெளியிடுகிறீர்கள். உடனே அதற்கான பதிப்புரிமை உங்களுக்குத் தானே கிடைத்துவிடுகிறது. இதைத் தனியே எங்கும் பதிவு செய்யத் தேவையில்லை.\nஅதேசமயம், நாம் விரும்பினால், அல்லது ’இந்தப் படைப்பு மற்றவர்களால் காப்பியடிக்கப்படக்கூடும், பிரச்னைகள் எழும்’ என்று முன்கூட்டியே எதிர்பார்த்தால், நம்முடைய உரிமையை முறைப்படி பதிவு செய்துகொள்ளலாம். இதற்கான வழிமுறை:\nநம்முடைய நூல்பற்றிய விவரங்கள், அதன் மூன்று பிரதிகள், பதிவுக் கட்டணம் ரூ 50 ஆகியவற்றைச் சேர்த்துத் தில்லியில் உள்ள காப்புரிமைப் பதிவாளருக்கு அனுப்பவேண்டும்\nஅவர்கள் இதனைப் பரிசீலித்துப் பதிப்புரிமைச் சான்றிதழ் வழங்குவார்கள்\nகூடவே, நூலின் பிரதி ஒன்றில் முத்திரை குத்தி உங்களுக்கே திரும்ப அனுப்பிவைப்பார்கள்\nஅதன்பிறகு, யாரேனும் உங்கள் நூலைத் தவறுதலாகக் காப்பியடித்தால், அல்லது வேறுவிதத்தில் பயன்படுத்தினால், அவர்கள்மீது வழக்குத் தொடுக்கலாம், தவறு நிரூபிக்கப்பட்டால் ஆறு மாதங்கள்முதல் மூன்று வருடங்கள்வரை சிறைத் தண்டனையோ, ஐம்பதாயிரம் ரூபாய்மூலம் இரண்டு லட்ச ரூபாய்வரை அபராதமோ விதிக்கப்படலாம்\nஅதேசமயம், நூலின் சில வரிகள், பக்கங்கள், பகுதிகளைச் சொந்தப் பயன்பாட்டுக்காகவோ, ஆராய்ச்சிக்காகவோ, விமர்சனத்துக்காகவோ, மதிப்புரைக்காகவோ, சட்டம் தொடர்பான பணிகளுக்காகவோ யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். இது உரிமை மீறல் ஆகாது\n(ஆதாரம்: பழ. அதியமான் எழுதிய ‘காப்புரிமை பற்றிச் சில குறிப்புகள்’ கட்டுரை)\nகடந்த சில பத்தாண்டுகளாகத் தமிழ்ப் பத்திரிகைகளைத் தொடர்ந்து வாசிக்கிற எவரும் ஓவியர் ’ஜெ’ என்கிற ஜெயராஜை அறியாமல் இருக்கமுடியாது. பல பிரபலங்களின் கதைகள், தொடர்களுக்கு வரைந்திருந்தாலும், அவரை மிகப் பிரபலமாக்கியவை, சுஜாதாவின் கணேஷ், வசந்த் தொடர்களுக்கு அவர் வரைந்த ஓவியங்களும், மற்ற பலருடைய கதைகளுக்குத் தீட்டிய ’கவர்ச்சி’ கலந்த சித்திரங்களும்தாம். குறிப்பாக, சாண்டில்யனின் சரித்திர நாவல்களுக்கு அவர் வரைந்த ஓவியங்களை இன்றைக்கும் நினைவில் வைத்திருப்பதாகப் பலர் ‘ஜொள்’வார்கள்.\nபலருக்குத் தெரியாத விஷயம், ஜெயராஜ் பெயரில் உள்ள ‘ராஜ்’ என்பது மூதறிஞர் ராஜாஜியைக் குறிக்கிறது. இவர் பிறந்த தினத்தன்று ராஜாஜி ஒரு முக்கியமான தேர்தலில் வென்று பெரிய பதவி ஒன்றில் அமர்ந்தாராம். அதைக் குறிக்கும்வகையில் ஜெயராஜின் தந்தை அவருக்கு இந்தப் பெயரைச் சூட்டினராம்.\nஜெயராஜின் கையெழுத்திலும் ஒரு சுவாரஸ்யமான தகவல் உண்டு. ’ஜெ’ என்ற அந்தப் பெயரின் முன்னும் பின்னும் உள்ள புள்ளிகள் ஒவ்வொன்றும், அவரது குடும்ப உறுப்பினர்களைக் குறிக்கின்றன. ஜெ வரைந்த ஓவியங்களைக் கால வரிசைப்படி எடுத்துப் பார்த்தால், இந்தப் புள்ளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்வதைக் காணலாம்\n(ஆதாரம்: பத்திரிகையாளர் ஸ்ரீஹரி பதிவு செய்த ஓவியர் ஜெயராஜின் பேட்டி)\nகவிஞர் சுரதாவின் இயற்பெயர் ராஜகோபாலன். பாரதிதாசன் பாடல்கள்மீது அதிக ஆர்வம் கொண்ட இவர், புதுவைக்குச் சென்று அவரை நேரில் சந்திக்க விரும்பினார்.\nஅப்போது சுரதா (ராஜகோபாலன்) பள்ளிச் சிறுவர். புதுச்சேரி சென்று திரும்புவதற்கான காசு கைவசம் இல்லை.\nஆகவே, அவர் ஒரு வீட்டில் சுண்ணாம்பு பூசும் வேலையை ஏற்றுக்கொண்டார். அதில் கிடைத்த கூலியை வைத்துப் பயணம் செய்து புதுச்சேரி சென்று சேர்ந்தார். பாரதிதாசனை நேரில் சந்தித்தார். ‘நான் உங்களுக்குப் பணிவிடை செஞ்சுகிட்டு இங்கேயே இருந்துடறேன்’ என்றார்.\nபாரதிதாசன் அதை ஏற்கவில்லை. ’அப்பா, அம்மாவுக்குச் சொல்லாம நீ இப்படித் தனியாப் புறப்பட்டு வந்ததே தப்பு’ என்று கண்டித்தார். ‘வேணும்ன்னா அவங்க அனுமதியோட வா, என்னோட தங்கலாம்’ என்று அறிவு��ை சொன்னார். திரும்பிச் செல்வதற்கான தொகையையும் கையில் கொடுத்து அனுப்பிவைத்தார்.\nஅந்தச் சந்திப்பின்போது பாரதிதாசன் அன்பாகப் பேசிய விதம் இளைஞர் ராஜகோபாலனை மிகவும் ஈர்த்துவிட்டது. ’கனக சுப்பு ரத்தினம்’ என்ற இயற்பெயரைக் கொண்ட அந்தப் பாரதிதாசனின் தாசன் என்ற அர்த்தத்தில் தன்னுடைய பெயரைச் ‘சுரதா’ (சுப்பு ரத்தின தாசன்) என்று மாற்றிக்கொண்டுவிட்டார்.\n‘சுரதா’வின் இந்தப் பெயர்க் காரணம் எல்லாருக்கும் தெரியும். உவமைகளைக் கையாளும் அற்புதத் திறமை காரணமாக, அவருக்கு ‘உவமைக் கவிஞர்’ என்று இன்னொரு பெயர் உள்ளதும் தெரியும்.\nஆனால், சுரதாவுக்கு ’உவமைக் கவிஞர்’ என்று பெயர் சூட்டியது யார், தெரியுமோ\n1945, 46ம் ஆண்டுவாக்கில், பிரபல நாவலாசிரியர் ஜெகச்சிற்பியன் ’சிரஞ்சீவி’ என்ற பெயரில் ஒரு பத்திரிகை நடத்திவந்தார். அதில் அவர்தான் சுரதாவை ‘உவமைக் கவிஞர்’ என்று முதன்முறையாகக் குறிப்பிட்டார். அதன்பிறகு எல்லாரும் அதனைப் பின்பற்ற ஆரம்பித்தார்கள்.\n(ஆதாரங்கள்: சுரதா எழுதிய ‘வினாக்களும், சுரதாவின் விடைகளும்’ புத்தகம் & விக்கிரமன் எழுதிய ‘உவமைக் கவிஞர் சுரதா’ கட்டுரை)\nஒரு பெரிய கவிஞர், இன்னொரு சிறந்த கவிஞரின் புத்தகத்துக்கு எழுதிய வாழ்த்து வெண்பா இது. யார் யாருக்காக எழுதியது என்று ஊகிக்கமுடிகிறதா பாருங்கள்:\nநித்தம் இளமை நீடிக்கும் படிஈசன்\nவைத்திலனே என்று வருந்துகிறேன், சித்த(ம்)மகிழ்\nசித்திரமும் பாட்டும் சிறந்து விளங்கிடும்இப்\nபாராட்டியவர்: கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை\nபாராட்டுப் பெற்ற நூல்: குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா எழுதிய ’மலரும் உள்ளம்’\n’புக்’ மார்க்ஸ் : தொகுப்பு 5\nநடிகர் அமிதாப் பச்சன் அடுத்தடுத்து பல சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்து ஹிந்தியின் ‘நம்பர் 1’ நட்சத்திரமாகியிருந்த நேரம். பல பத்திரிகைகள் அவரைப் பாராட்டிக் கட்டுரைகள், பேட்டிகளை வெளியிட்டுக்கொண்டிருந்தார்கள்.\nஅப்படி ஒரு பேட்டியில், அவரிடம் கேட்கப்பட்ட கேள்வி ஒன்று, ‘உங்களுடைய வாழ்க்கையில் மிகவும் தர்மசங்கடமான அனுபவம் எது\nஅதற்கு அமிதாப் சொன்ன பதில்:\n‘சமீபத்தில் ஒரு தமிழ் எழுத்தாளரை எதேச்சையாகச் சந்தித்தேன். ஆனால் அவருக்கு நான் யார் என்று தெரியவில்லை. ‘நீங்க என்ன வேலை பண்றீங்க’ என்று அப்பாவியாகக் கேட்டார்.’\n‘நான் அத���ர்ந்துபோனேன். இந்தியாவிலேயே மிகப் பிரபலமான நடிகன் என்று என்னை நானே நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் இந்த எளிய மனிதர் அந்த கர்வத்தைக் கலைத்துவிட்டார்.’\n‘ஒருவேளை, அவர் பொய் சொல்கிறாரோ உற்றுப்பார்த்தேன். ம்ஹூம், அந்த முகத்தில் எந்தச் சலனமும் இல்லை.’\n‘அன்றைக்கு அவர்மட்டும் பொய் சொல்லியிருந்தால், என்னைவிடச் சிறந்த நடிகர் அவர்\nஇப்படி அமிதாபைக் கலங்கடித்த அந்தத் தமிழ் எழுத்தாளர், க. நா. சு. உண்மையில் அவருக்கு அமிதாபை நன்றாகத் தெரியும், சும்மா வேண்டுமென்றேதான் அப்படிக் கேட்டாராம்.\n(ஆதாரம்: பாரதி மணி எழுதிய ‘க.நா.சு.’ கட்டுரை)\nஎழுத்தாளர் எர்னஸ்ட் ஹெமிங்வேவுக்குப் ‘பாதுகாப்பான வாழ்க்கை’ என்றால் பிடிக்காதாம். ‘Adventure Lifestyle’ என்பதைப் பிரபலமாக்கியவர்களில் அவரும் ஒருவர்.\nபதினெட்டு வயதில், இத்தாலியின் ரெட் க்ராஸ் அமைப்பில் சேர்ந்தார் ஹெமிங்வே. அங்கே அவருக்குத் தரப்பட்ட வேலை, போர் முனையில் ஆம்புலன்ஸ் ஓட்டுவது. சந்தோஷமாக ஏற்றுக்கொண்டார்.\nஇதனால் அவர் ஏகப்பட்ட விபத்துகள், காயங்களைச் சந்திக்க நேர்ந்தது, ஒவ்வொருமுறை அவற்றிலிருந்து தப்பும்போதும் ’திரும்பப் பிறந்த புத்துணர்ச்சி’ என்றார்.\nபின்னர், ஸ்பெயின் உள்நாட்டுப் போர், இரண்டாம் உலகப் போர் ஆகியவற்றில் செய்தி சேகரிக்கச் சென்றார் ஹெமிங்வே. காளைச் சண்டை, ஆழ்கடல் மீன் பிடித்தல், வேட்டையாடுதல் என்று எதையும் அவர் விட்டுவைக்கவில்லை. எல்லாச் சாகசங்களையும் ’அனுபவித்து’, அவற்றைத் தன்னுடைய படைப்புகளில் பதிவு செய்துவைத்தார்.\n(ஆதாரம்: வெ. இறையன்பு எழுதிய ‘போர்த் தொழில் பழகு’ தொடர்)\nகவிஞர் கண்ணதாசன் எட்டாம் வகுப்புவரைதான் படித்தார். அதற்குமேல் படிக்க வசதி இல்லை. ஒரு தொழிற்சாலையில் குமாஸ்தாவாகச் சேர்ந்தார். வாரம் ஐந்து ரூபாய் சம்பளம்.\nஇந்தத் தொகை கண்ணதாசனின் செலவுகளுக்குப் போதுமானதாக இருந்தது. ஆனால் அவருக்கு இந்த வேலை பிடிக்கவில்லை. ‘இதில் திருப்தி அடைந்துவிட்டால் என் வளர்ச்சி தடைபட்டுவிடும்’ என்று நினைத்தார்.\nஅப்போதே அவருக்குக் கவிதை எழுதுவதில் பெரிய ஆர்வம். 40 பக்க நோட்டு ஒன்று வாங்கினார். அலுவலக ரெஜிஸ்டருக்குள் அதை மறைத்துவைத்துத் தினந்தோறும் புதுப்புதுக் கவிதைகளை எழுதினார்.\nஒருநாள், அவருடைய சக ஊழியரான பத்மநாபன் என்பவர் இதைப் பார���த்துவிட்டார். ‘இந்த ஆசை உனக்கு வேண்டாம். கவிதை சோறு போடாது’ என்று கண்டித்தார்.\nஇதனால் சலனமடைந்த கண்ணதாசன், கதை எழுத முயற்சி செய்தார். பத்திரிகைகளில் இடம் தேடினார். இன்னும் ஏதேதோ முயற்சிகள்.\nஅதன்பிறகு, அவர் மீண்டும் கவிதைக்குத் திரும்பினார். அதுதான் அவருக்குச் சோறு போட்டது\n(ஆதாரம்: கண்ணதாசன் எழுதிய ‘துன்பங்களிலிருந்து விடுதலை’ நூல்)\nசாவி எழுதிய ‘வாஷிங்டனில் திருமணம்’ மிகப் பிரபலமான நகைச்சுவை நாவல். இப்போதும் தமிழில் அதிகம் விற்பனையாகும் புனைகதைகளில் அதுவும் ஒன்றாக இருக்கும்.\nஆனால், பலருக்குத் தெரியாத விஷயம், கிட்டத்தட்ட இதேமாதிரி இன்னொரு படைப்பையும் வழங்கியிருக்கிறார் சாவி. அந்தப் புத்தகத்தின் பெயர் ‘வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு.’\nஇந்தியத் தேர் ஒன்று ஜப்பான் தெருக்களில் ஓடுகிறது. இதுதான் ஒன்லைன். இந்தக் கதைக்குள் பல நிஜப் பிரபலங்களையும் கற்பனையாக உள்ளே நுழைத்து நகைச்சுவையை ஓடவிட்டிருப்பார் சாவி.\nஜப்பான் தேர்த் திருவிழாவைப்பற்றி மேலும் வாசிக்க ஆசையா சாவி அவர்களின் படைப்புகள் நாட்டுடைமை ஆகிவிட்டதால், இந்த நாவல் உள்ளிட்ட அவரது பல நூல்கள் இணையத்தில் இலவசமாகவே கிடைக்கிறது. இங்கே : http://tinyurl.com/saavibooks\nநடிகை பானுமதி ராமகிருஷ்ணா ஒரு சகலகலா வல்லவர். திரைத்துறையில் வெறுமனே நடிப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல் ஒரு நல்ல பாடகியாக, திறமையுள்ள இசையமைப்பாளராக, இயக்குனராக, தயாரிப்பாளராகவும் முத்திரை படைத்தவர்.\nதிரைக்கு வெளியே, அவர் ஒரு பிரமாதமான (தெலுங்கு) எழுத்தாளரும்கூட. பானுமதியின் ‘அத்தகாரி கதலு’ (அத்தைக் கதைகள்) வரிசை நகைச்சுவைப் படைப்புகள் மிகவும் புகழ் பெற்றவை. இந்தக் கதைகளின் தொகுப்பு நூலுக்காக அவருக்கு ஆந்திர மாநில சாஹித்ய அகாதெமி விருது கிடைத்தது.\nஅதெல்லாம் போக, கவியரசர் கண்ணதாசன் ஒரு படத்தில் பானுமதியின் கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்துவதற்காக எழுதிய வசனம்தான், அவருக்குக் கிடைத்த மிகப் பெரிய பாராட்டாக இருக்கும். அந்த வசனம்:\n’ஞானத்தில் பானு, நளினத்தில் மதி’ (பானு = சூரியன், மதி = சந்திரன்)\nகுஷ்வந்த் சிங் எழுதிய முதல் நாவலின் பெயர் இது. அந்தக் கதை நிகழ்கின்ற கிராமத்தின் பெயரையே நாவலுக்குச் சூட்டியிருந்தார் அவர்.\nநாவலை எழுதி முடித்ததும், அதைத் தட்டச்சு செய்கிற பணி தொடங��கியது. இதைச் செய்தவர் குஷ்வந்த் சிங்கின் நண்பர் ஒருவருடைய மனைவி. அவர் பெயர் டாட்டி பெல்.\nதட்டச்சுப் பிரதி தயாராகில் வந்தவுடன், டாட்டி பெல்லிடம் ஆர்வமாகக் கேட்டார் குஷ்வந்த் சிங், ‘எப்படி இருக்கு நாவல்\n‘ம்ஹூம்’ என்று அலட்சியமாக உதட்டைப் பிதுக்கினார் டாட்டி பெல். ‘ஒண்ணும் சரியில்லை, இதை யாரும் பிரசுக்கமாட்டாங்க\nகுஷ்வந்த் சிங்கிற்க்கு ஏமாற்றம். வெறுப்பு. பல நாள் உழைப்பு வீணாகிவிட்டதே என்கிற பதற்றம். வந்த எரிச்சலில் பேசாமல் அந்த நாவல் பிரதியைக் கிழித்து எறிந்துவிடலாமா என்றுகூட யோசித்தார்.\nஆனாலும், அவருக்கு ஏதோ ஒரு நம்பிக்கை. அதைத் தூக்கி வீசாமல் பத்திரமாக வைத்திருந்தார்.\nகொஞ்சநாள் கழித்து. ’க்ரூவ் ப்ரெஸ்’ என்ற பதிப்பகம் இந்திய நாவல்களுக்கான போட்டி ஒன்றை அறிவித்தது. அதற்கு ‘மனோ மஜ்ரா’வை அனுப்பிவைத்தார் குஷ்வந்த் சிங்.\nஅந்தப் போட்டியில் அவருக்குதான் முதல் பரிசு கிடைத்தது. ’மனோ மஜ்ரா’ என்ற தலைப்புமட்டும் மாற்றப்பட்டு வெளியான அந்த நாவல், இன்றுவரை சுடச்சுட விற்றுக்கொண்டிருக்கிறது. இப்போது அதன் பெயர் ‘Train To Pakistan’\nநாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளையின் கவிதைகளைப் படித்திருப்பீர்கள். குறிப்பாக, ‘கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது’, ‘கதர்த் துணி வாங்கலையோ’ உள்ளிட்ட அவரது காந்தியப் பாடல்களும், ‘தமிழன் என்றோர் இனம் உண்டு’ போன்ற தமிழின் பெருமையைச் சொல்லும் பாடல்களும் மிகவும் புகழ் பெற்றவை.\nஅவர் ஒரு நல்ல ஓவியரும்கூட, அது தெரியுமா\nமிக இளம் வயதிலேயே அவர் ஓவியம் வரையப் பழகிவிட்டார். தன்னுடைய கல்லூரி ஆசிரியரின் படத்தை வரைந்து கொடுத்து அவரிடமே பாராட்டும், பரிசும் பெற்றிருக்கிறார்.\nஅப்போது டெல்லியில் ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் முடிசூட்டு விழா நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட ராமலிங்கம் பிள்ளை மன்னரை ஓவியமாக வரைந்து கொடுத்துத் தங்கப் பதக்கம் பெற்றார்.\nநாமக்கல் கவிஞரின் மற்ற ஓவியங்கள் என்ன ஆயின என்பது தெரியவில்லை. அவர் வரைந்த விவேகானந்தர் ஓவியம் ஒன்று திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்தில் உள்ளதாகத் தெரிகிறது. அதன் புகைப்படப் பிரதி இங்கே : http://namakkal4u.com/\n(ஆதாரம்: புலவர் சிவ. கன்னியப்பன் தொகுத்த ‘நாமக்கல் கவிஞர் பாடல்கள்’ நூல்)\n’புக்’ மார்க்ஸ் : தொகுப்பு 4\nநம் ஊர் ராமாயணம் பல நாடுகள���, மொழிகள், கலாசாரங்களில் சற்றே மாறுபட்ட வடிவத்தில் உண்டு. தாய்லாந்தில் அதன் பெயர் ‘ராமகியான்’.\nஇந்தியாவில் எழுதப்பட்டுள்ள ராமாயணங்கள் அனைத்தின் அடிப்படைக் கதை ஒன்றுதான் என்றாலும், கிளைக்கதைகள், சம்பவங்களில் பல மாறுபாடுகள் இருக்கும். தாய்லாந்து ராமாயணமும் அப்படிப் பல இடங்களில் வேறுபடுகிறது. குறிப்பாக, கதாபாத்திரங்களின் பெயர்களில்.\nஇந்த இரண்டு ராமாயணங்கள் இடையே ஓர் ஒப்பீடு இங்கே, இடது பக்கம் உள்ள பெயர் இந்திய ராமாயணத்திலிருந்து, வலது பக்கம் உள்ள பெயர் தாய்லாந்து ராமாயணத்திலிருந்து.\nமண்டோதரி : நங் மோன்டோ\n(ஆதாரம்: மு. சீனிவாசன் எழுதிய ‘கலை, வரலாற்றுப் பயணங்கள்’ நூல்)\nஇலக்கியச் சிறுபத்திரிகைகளில் மிகப் பிரபலமானது, கணையாழி. கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளாக (சிறு இடைவெளிகளுடன்) தொடர்ந்து வெளியாகிறது. தமிழின் நேற்றைய, இன்றைய பிரபல எழுத்தாளர்கள் பலரும் ஆரம்ப காலத்தில் கணையாழியில் வளர்ந்தவர்கள்தாம்.\nஆனால் பலருக்குத் தெரியாத விஷயம், ‘கணையாழி’ தொடங்கப்பட்டபோது அது ஓர் இலக்கியப் பத்திரிகையாக இல்லை. ’அரசியல், ஆன்மிகம், மருத்துவம், அத்துடன் கொஞ்சம் இலக்கியம்’ என்றுதான் திட்டமிட்டு வெளியிடத் தொடங்கினார்கள். பின்னர்தான் அது இலக்கியத்தில் தீவிர கவனம் செலுத்த ஆரம்பித்தது.\nமுதல் கணையாழி இதழ் வெறும் 24 பக்கங்கள்தான். ஜெயகாந்தன் பேட்டி, அரசியல் கட்டுரைகள், சில கதைகள், விமர்சனங்கள், அட்டைப்படத்தில் ஜவஹர்லால் நேருவும், லால் பகதூர் சாஸ்திரியும்\n(ஆதாரம்: வே. சபாநாயகம் எழுதிய ‘கணையாழியின் கதை’ கட்டுரை)\n‘பிக்ஸார்’ நிறுவனத்தின் அனிமேஷன் படங்கள் உலகப் பிரபலம். பல நேரங்களில் நிஜ மனிதர்கள் / நடிகர்கள்கூட ஏற்படுத்தமுடியாத உணர்வுகளை அவர்களது கார்ட்டூன் கதாபாத்திரங்கள் நம் மனத்தில் உருவாக்கி அழுத்தமாகப் பதிந்துவிடுகின்றன. இதற்குச் சிறந்த உதாரணமாக, ‘Finding Nemo’ படத்தில் வரும் மீன்களையும், ‘Toy Story’ வரிசைப் படங்களில் வரும் பொம்மைகளையும் குறிப்பிடலாம்.\nஇந்த மாயம் எப்படி நிகழ்கிறது பிக்ஸாரில் பணிபுரியும் எம்மா கோட்ஸ் என்பவர் அவர்களுடைய ‘கதை ரகசிய’ங்களை இணையத்தில் பகிர்ந்துகொண்டார். எல்லாக் கதாசிரியர்களுக்கும் பயன்படக்கூடிய பயனுள்ள அந்த டிப்ஸில் சில, இங்கே:\nபிரமாதமான கதை யோசனை ஒன்று உங்கள் மூளையில் தோன்றிவிட்டதா சந்தோஷம், அதைப் பேப்பரில் எழுதுங்கள், அப்போதுதான் அதில் எத்தனை ஓட்டைகள் உள்ளது என்று தெரியும், பொறுமையாக உட்கார்ந்து சரி செய்யுங்கள், அடுத்தவர்களிடம் காண்பித்து ஆலோசனை கேளுங்கள்\nமுதலில், உங்கள் கதையின் க்ளைமாக்ஸை எழுதிவிடுங்கள், மற்றதெல்லாம் அப்புறம்\nகதையைப் பாதி எழுதிவிட்டீர்கள், அடுத்து என்ன செய்வது என்று குழப்பமா பிரச்னையே இல்லை. ’அடுத்து என்னவெல்லாம் நிகழவே நிகழாது’ என்று யோசித்து ஒரு பட்டியல் போடுங்கள், அந்தப் பட்டியலுக்குள்தான் உங்களுடைய அடுத்த காட்சி ஒளிந்திருக்கிறது\nஉங்கள் கதையின் முதல் வடிவம் (first draft) எழுதியாகிவிட்டதா அதைக் கிழித்துப்போடுங்கள், அப்படியே 2ம், 3ம், 4ம், 5ம் வடிவங்களையும் கிழித்து வீசுங்கள், அதன்பிறகுதான் ஆச்சர்யகரமான மாற்றங்கள் நிகழ ஆரம்பிக்கும்\nஒரு கதாபாத்திரம் வெற்றியடைவதுகூட இரண்டாம்பட்சம்தான். அந்த வெற்றிக்காக அது உண்மையுடன் முயற்சி செய்கிறதா அதுதான் முக்கியம், அதற்காகதான் மக்கள் அந்தப் பாத்திரத்தை ரசிப்பார்கள்\nஒரு கதாபாத்திரத்தைக் கச்சிதமாக உருவாக்கிவிட்டீர்களா அது என்னவெல்லாம் சிறப்பாகச் செய்யும் என்று தீர்மானித்துவிட்டீர்களா அது என்னவெல்லாம் சிறப்பாகச் செய்யும் என்று தீர்மானித்துவிட்டீர்களா இப்போது அந்த நிலையிலிருந்து அதனை 180 டிகிரி எதிர் திசைக்குக் கொண்டுசெல்லுங்கள், முற்றிலும் மாறுபட்ட இந்தச் சூழலில் அந்தக் கதாபாத்திரம் என்ன செய்கிறது என்று பாருங்கள்\nஉங்கள் கதாபாத்திரங்கள் ‘எதேச்சையாக’ச் சிக்கலில் மாட்டலாம், தப்பில்லை. ஆனால் அவர்கள் ‘எதேச்சையாக’ அதிலிருந்து மீளமுடியாது, அது ஏமாற்று வேலை, அதுபோன்ற சூழ்நிலைகளில் லாஜிக் மீறாமல் ஒரு தீர்வை யோசியுங்கள்\nஉங்களுக்கு எழுதச் சந்தோஷமாக இருக்கும் விஷயங்களைமட்டும் எழுதிக்கொண்டிருந்தால் போதாது, மக்களுக்கு எதைப் பார்க்கச் சந்தோஷமாக இருக்கும் என்பதையும் யோசியுங்கள், இவை இரண்டும் ஒன்றல்ல\nஒரு யோசனை சரியானபடி அமையாவிட்டால், மனம் தளராதீர்கள். அதை ஓரமாக வைத்துவிட்டு வேறு யோசனையைக் கவனியுங்கள், என்றாவது ஒருநாள் நீங்கள் ஓரங்கட்டி வைத்த இந்தப் பழைய யோசனை திரும்ப வந்து பலன் தரும். உங்கள் உழைப்பு நிச்சயம் வீணாகாது\nகதை, கவிதை, கட்டுரைகளுக்குத் தலைப்பு எந்த அளவு முக்கியம்\nஎனக்குத் தெரிந்த பலருக்கு, நல்ல, புத்திசாலித்தனமான, அதேசமயம் ஜனரஞ்சகமான, ‘அட’ என்று அனைவரையும் வியக்கவைக்கும்படியான ஒரு தலைப்பு வைக்காவிட்டால் எதுவுமே எழுதவராது. கதை எழுதுகிற நேரத்துக்குச் சமமாக, அல்லது அதைவிட அதிகமாகவே தலைப்புக்காக மெனக்கெடுவார்கள்.\nஇன்னும் சிலர், எழுதி முடித்துவிட்டுத் தலைப்பை யோசிப்பார்கள். என்னைப்போன்ற சோம்பேறிகள் சட்டென்று தோன்றும் ஒற்றை வார்த்தையை Working Titleஆக வைத்துவிட்டு எழுதுவோம், அதன்பிறகு அந்தத் தலைப்பை யோசித்துச் சரி செய்வோம், அப்படியும் எதுவும் சிக்காவிட்டால் ’எடிட்டர்கள் பார்த்துக்கொள்வார்கள்’ என்று விட்டுவிடுவோம்.\nகதைகளுக்குத் தலைப்பு வைப்பதுகுறித்து அசோகமித்திரன் என்ன சொல்கிறார்\n”சில படைப்புகள், தலைப்பிலிருந்து உருவாகுபவை. சில, படைப்பு முடிந்தபின் தலைப்பைத் தானே நிர்ணயித்துக்கொள்பவை, தலைப்பு உட்பொருளில் இருந்து இயல்பாக எழுவது.\nஒரு படைப்பு நினைவுகூரப்படுமானால், அது அதன் தலைப்பிற்காக அல்ல. அதன் உட்பொருளுக்காகதான்.”\n(ஆதாரம்: அசோகமித்திரன் எழுதிய ‘விடுதலை’ நூலின் பின்னுரை)\nலியோ டால்ஸ்டாய், அன்டன் செகாவ் இருவரும் ரஷ்ய மொழியின் முக்கியமான எழுத்தாளர்கள்.\nஒருமுறை டால்ஸ்டாய் செகாவைச் சந்திக்கச் சென்றிருந்தார். அப்போதுதான் அவர் செகாவ் எழுதிய ஒரு கதையைப் படித்திருந்தார். அதன் முக்கியக் கதாபாத்திரங்களைப்பற்றியும், அவர்களை செகாவ் எத்தனை அருமையாகச் சித்திரித்திருக்கிறார் என்பதைப்பற்றியும் நீளமாகப் பாராட்டிப் பேசினார் டால்ஸ்டாய். நெகிழ்ச்சியில் அவரது கண்களில் நீர்த்துளிகள் ததும்பி நின்றன.\nஇத்தனை பாராட்டுகளையும் கேட்ட செகாவுக்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை. சிறிது நேரம் அமைதியாக அமர்ந்திருந்தார். பிறகு ஒரு பெருமூச்சு விட்டபடி சொன்னார், ‘அந்தக் கதையில் அச்சுப் பிழைகள் நிறைய\n(ஆதாரம்: மாக்ஸிம் கார்க்கி எழுதிய ‘Literary Portraits’ நூல்)\nஅந்தக் காலத்தில் சில எழுத்தாளர்கள் ’நான் எழுதியது அப்படியே அச்சாகவேண்டும். ஒரு காற்புள்ளி, அரைப்புள்ளி, நிறுத்தல்குறிகளைக்கூட மாற்றக்கூடாது’ என்று பத்திரிகை ஆசிரியர்களிடம் சொல்வார்களாம். இப்போதும் அதுமாதிரி நிபந்தனை போடுகிறவர்கள் இருக்கலாம். அவர்களுக்குத் தங்களது எழுத்���ின்மீது அப்படி ஒரு நம்பிக்கை.\nஇன்னொரு கோணத்திலிருந்து பார்த்தால், எந்த வகை எழுத்துக்கும் எடிட்டிங் / மெருகேற்றல் அவசியப்படுகிறது. எழுத்துப் பிழைகள், இலக்கணப் பிழைகளைத் திருத்துவதில் தொடங்கி, தகவல் பிழைகளைச் சரி செய்வது, வாசிப்பை எளிமையாக மாற்றுவது என்று பலவகையான மாற்றங்களுக்குப்பிறகு அந்தப் படைப்பு வெளியானால், இன்னும் அதிகப் பேரைச் சென்று சேரும்.\nஇந்த இரண்டு கட்சிகளில் எது சரி எனக்குத் தெரியவில்லை. ஆனால் இதுபற்றி ஒரு பழைய கதையைச் சமீபத்தில் படித்தேன்:\nநேரு பிரதமராக இருந்த நேரம். அவருடைய மேடைப் பேச்சுகளைத் தொகுத்து ஒரு நூல் வெளியாகவிருந்தது.\nஅப்போது, அந்த நூலை எடிட் செய்யவிருந்தவரை நேரு அழைத்தார். ‘இதெல்லாம் நான் எழுதிப் படித்தவை அல்ல, மேடையில் அப்படியே நேரடியாகப் பேசியவை’ என்று சொன்னார். ‘அதனால், பல விஷயங்களைத் திரும்பத் திரும்ப வலியுறுத்திச் சொல்லியிருப்பேன், அல்லது ஏதாவது விவரங்களைத் தவறாகச் சொல்லியிருக்கவும் வாய்ப்பு உண்டு. அவை மேடைக்குச் சரியாக இருக்கலாம். ஆனால், புத்தகமாக வரும்போது சரிப்படாது.’\n‘ஆகவே, நீங்கள் இந்தப் புத்தகத்தை எடிட் செய்யும்போது பிரதமரோட எழுத்தாச்சே என்று கரிசனம் காட்டவேண்டாம்’ என்றார் நேரு. ‘உங்கள் வேலையைச் சுதந்தரமாகச் செய்யுங்கள். புத்தகமாக வாசிக்கும்போது எதெல்லாம் பொருந்தாது என்று தோன்றுகிறதோ அதையெல்லாம் தாராளமாக வெட்டி எறிந்துவிடுங்கள்\n’தமிழ்த் தாத்தா’ உ. வே. சாமிநாத அய்யர் அவர்களைச் சந்திப்பதற்காக ’தணிகைமணி’ டாக்டர் செங்கல்வராயப் பிள்ளை என்பவர் வந்திருந்தார்.\nடாக்டர் செங்கல்வராயப் பிள்ளை மிகப் பெரிய அறிஞர். தேவாரம், திருப்புகழ் ஆகிய நூல்களை ஆராய்ந்து புகழ் பெற்றவர்.\nஆகவே, அவரைப் பார்த்ததும் தமிழ்த் தாத்தா நெகிழ்ந்துபோனார். அவரது கைகளைப் பற்றிக்கொண்டு கண்களில் ஒற்றினார்.\n’ என்று பதறினார் டாக்டர் செங்கல்வராயப் பிள்ளை.\n இவை திருப்புகழை ஆராய்ச்சி செய்த கைகள் ஆயிற்றே, உரிய மரியாதை தரவேண்டாமா\nசட்டென்று உ.வே.சா. அவர்களின் காலில் விழுந்தார் டாக்டர் செங்கல்வராயப் பிள்ளை, ‘சங்கத் தமிழ் ஏடுகளைத் தேடித் தேடி அலைந்த கால்கள் உங்களுடையவை, உரிய மரியாதை தரவேண்டாமா\n(ஆதாரம்: முல்லை பி. எஸ். முத்தையா எழுதிய ‘புலவர்கள் உதிர்த்த முத்து���ள்’ நூல்)\n’புக்’ மார்க்ஸ் : தொகுப்பு 3\nஆண்டாளுக்கும் தெனாலி ராமனுக்கும் என்ன சம்பந்தம்\nமொட்டைத்தலை, முழங்கால் ஞாபகம் வருகிறதா நிஜமாகவே இந்த இருவருக்கும் பொதுவான ஒரு மனிதர் இருக்கிறார்: கிருஷ்ண தேவராயர்.\nதெனாலி ராமனை விகடகவியாக நியமித்து அழகு பார்த்த கிருஷ்ண தேவராயர், ஒரு நல்ல கவிஞரும்கூட. அவர் படைத்த ஒரு நூல் ’அமுக்த மால்யதா’ (சூடப்படாத மாலை), இதில் அவர் ஆண்டாளைப்பற்றி விரிவாக எழுதியுள்ளார்.\nஇந்த நூல் எழுதப்பட்டதுபற்றியும் ஒரு சுவாரஸ்யமான கதை உண்டு. விஷ்ணுவே கிருஷ்ண தேவராயரின் கனவில் தோன்றி ‘ஆண்டாளைப்பற்றித் தெலுங்கில் விரிவாக எழுது’ என்று ஆணையிட்டதாகச் சொல்கிறார்கள்.\n’அமுக்த மால்யதா’ தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்லதா\nஎழுத்தாளர் ’கடுகு’வின் இயற்பெயர், பி. எஸ். ரங்கநாதன், ‘அகஸ்தியன்’ என்ற தலைப்பில் பிரபலமான ‘கமலா, தொச்சு’ சீரிஸ் கதைகளை எழுதியவரும் இவர்தான்.\n’கல்கி’யால் எழுத வந்த இந்தக் ‘கடுகு’வுக்கு அவர்மீது பக்தி அதிகம். ஆகவே, தான் கட்டிய வீட்டுக்குக் ‘கல்கி’ என்று பெயர் வைத்தார், மகளுக்கு ‘ஆனந்தி’ என்று பெயர் சூட்டினார், தன் புத்தகங்களைப் பிரசுரிக்கும் நிறுவனத்துக்கு ‘நந்தினி’ என்று பெயர் வைத்தார்.\nஅதோடு நிறுத்தவில்லை, இவர் உருவாக்கிய தமிழ் எழுத்துருக்கள் (Fonts) அனைத்துக்கும் கல்கியின் கதாபாத்திரங்களையே பெயராகச் சூட்டினார்: குந்தவி, வந்தியத்தேவன், ராஜராஜன், தாரிணி, கரிகாலன் மற்றும் ‘பொன்னியின் செல்வன்’.\n(ஆதாரம்: ‘கடுகு’ எழுதிய ‘கமலாவும் நானும்’ நூல்)\nபிரபல எழுத்தாளர் ஜெஃப்ரே ஆர்ச்சர் சமீபத்தில் ஜெயிலுக்குப் போனார். அங்கே தனது அனுபவங்களை ‘டயரி’யாகவும் சிறுகதைகளாகவும் எழுதி வெளியிட்டார்.\nபல வருடங்களுக்கு முன்னால் இதேபோல் இன்னோர் எழுத்தாளரும் ஜெயிலுக்குப்போனார். அவர் பெயர் வில்லியம் சிட்னி போர்ட்டர்.\n’இந்தப் பெயரைக் கேள்விப்பட்டமாதிரியே இல்லையே’ என்கிறீர்களா நிஜம்தான், ஜெயிலில் அவர் தனக்கு ஒரு புனைபெயர் சூட்டிக்கொண்டார். அந்தப் பெயர் இப்போது உலகப் பிரபலம்: ஓ. ஹென்றி.\n‘வில்லியம் சிட்னி போர்ட்டர்’ எப்படி ஓ. ஹென்றி ஆனார் என்பதுபற்றிப் பல கதைகள் உண்டு. அவற்றில் மிகப் பிரபலமான ஒன்று: ஜெயிலில் இருந்தபடி சில கதைகளை எழுதிய இவர், அவற்றைத் தன்னுடைய சொந்தப் பெ���ரில் பத்திரிகைகளுக்கு அனுப்பி வைக்கக் கூசினார், அப்போது அந்தச் சிறையின் காவலாளிகளில் ஒருவரான ஓரின் ஹென்றி என்பவருடைய பெயரைச் சுருக்கித் தன்னுடைய புனைபெயராக்கிக்கொண்டார்.\nபுலவர் ஔவையாரை நமக்கெல்லாம் நன்றாகத் தெரியும், அவரது பாடல்களை நிறையப் படித்திருக்கிறோம், பல கதைகளைக் கேட்டிருக்கிறோம்.\nஉண்மையில், தமிழ்ச் சரித்திரத்தில் ஒன்று அல்ல, பல ‘ஔவையார்கள்’ உண்டு என்று சொல்கிறார்கள். இதுபற்றி நிறைய ஆய்வுகள் நிகழ்ந்துள்ளன.\nஊர் ஊராகச் சென்று தமிழ் பரப்பிய ஔவைக்குத் தமிழகத்தில் பல கோயில்களும் இருந்தனவாம். ’ஔவையாரம்மன்’, ‘தமிழ்வாணி’ என்கிற பெயர்களில் அவர் வழிபடப்பட்டதாகச் சொல்கிறார்கள்.\nஇந்தக் கோயில்களில் பல, கால ஓட்டத்தில் காணாமல் போய்விட்டன. தற்போது மிஞ்சியிருப்பவை சில : கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முப்பந்தல், நெல்லிமடம், முல்லைவாடி, குரத்தியறை, ஆதிச்சபுரம், தோவாளை, தஞ்சை மாவட்டத்தில் தஞ்சாவூர், தாழக்குடி, பூதப்பாண்டி, நாவல்காடு, திருஇடும்பாவனம், துளசியாபட்டிணம், ஔவைக்கோட்டம் (திருவையாறு), குற்றாலம், சேலம் மாவட்டத்தில் ஆத்தூர், கல்வராயன் மலை, கராங்காடு, உத்தமசோழபுரம் மற்றும் பசுபதிபாளையம்.\n(ஆதாரம்: ஔவையார் எழுதிய ‘கல்வியொழுக்கம்’ நூலிற்கு வேம்பத்தூர் கிருஷ்ணனின் பின்னுரை)\n‘ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி’ படத்துக்கு வசனம் எழுதியது யார் தெரியுமா\nஅந்தக் காலத்தில் பாரதிதாசன் இந்தப் படத்தில் பணியாற்ற ஒப்புக்கொண்டதும் அவரது சுயமரியாதை இயக்கத் தோழர்கள் கோபத்தில் கொதித்தார்கள். ‘புராணங்கள், இதிகாசங்களையெல்லாம் எதிர்க்கும் பாரதிதாசன் இப்படிப்பட்ட கதைக்கு வசனம் எழுதலாமா\nபாரதிதாசன் அவர்களுக்குக் கூலாகச் சொன்ன பதில், ‘மக்களிடையே மிகுந்த செல்வாக்கு பெற்று வரும் திரைப்படத்துறையில் நான் நுழைந்திருக்கிறேன், பிராணநாதா, ஸ்வாமி, சஹியே, தவஸ்ரேஷ்டரே போன்ற சொற்களை நீக்கி, தமிழில் அத்தான், தோழி, குருவே என்று அழைக்கவைக்கிறேன். அசுரர்களாகக் காட்டப்பட்டுவந்தவர்களைத் தமிழ் அறிந்த, இரக்க சிந்தை உடையவர்களாகப் படைத்திருக்கிறேன். இந்தத் தொடக்க நிலையில் இதைதான் செய்யமுடியும். இன்னும் முன்னேறி, முற்போக்குக் கருத்துக்குச் சிறப்பான இடம் அளிக்கமுடியும்.’\nஅவர் சொன்னது அப��படியே நடந்தது. தமிழ் சினிமாவில் புராணக் கதைகள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து, இப்போது காணாமலேபோய்விட்டன\n(ஆதாரம்: டி. வி. ராமநாத் எழுதித் தொகுத்த ‘திரை வளர்த்த தமிழ்’ நூல்)\nஎனக்கு ஒரு கணமும் அமைதி இல்லை\nபிரிவின் வலி என்னைத் துன்புறுத்துகிறது.\nஇந்தத் துயரத்தை உணர்ந்தவர்கள் யாருமே இல்லை\nகாதலால் இத்தனை வலி வரும் என்று\nஊரெல்லாம் முரசு அறைந்து அறிவித்திருப்பேன்,\nஇதை எழுதியது யாராக இருக்கும்\nஉணர்ச்சிகளைப் பார்த்து மாடர்ன் கவிஞர்களை வம்புக்கு இழுக்காதீர்கள். இதை எழுதியது பக்த மீரா\nஇன்றைய ’உருகுதே, மருகுதே’ ரகக் காதல் கவிதைகளுக்கெல்லாம் முப்பாட்டி அவள்தான். ஒரே வித்தியாசம், இது ‘தெய்விகக் காதல்’, மீராவின் பிரபு, அந்தக் கிரிதர கோபாலன்\nஉலகில் அதிகம் பதிப்பிக்கப்பட்ட, விற்பனையான புத்தகங்கள் யாருடையவை\nமுதல் இடம் (பலரும் எதிர்பார்த்ததுபோல்) பைபிள், இரண்டாவது இடம், வில்லியம் ஷேக்ஸ்பியர் நாடகங்கள்.\nஇந்தப் பட்டியலின் மூன்றாவது இடத்தில் உள்ளவர் அகதா க்ரிஸ்டி. இவரது புத்தகங்கள் இதுவரை 400 கோடிப் பிரதிகளுக்குமேல் விற்பனையாகியிருப்பதாக கின்னஸ் சாதனைப் புத்தகம் சொல்கிறது.\nஅகதா க்ரிஸ்டியின் கிரீடத்தில் இன்னொரு சாதனைச் சிறகும் உண்டு. உலகிலேயே அதிகமுறை அரங்கேறியிருக்கும் நாடகம் இவருடையதுதான். அதன் பெயர் ‘Mousetrap’. சுமார் ஐம்பது வருடங்களுக்குமுன்னால் முதன்முறையாக நிகழ்த்தப்பட்ட இந்த நாடகம் இதுவரை கிட்டத்தட்ட இருபத்தைந்தாயிரம்முறை மேடையேறியிருக்கிறது.\n’புக்’ மார்க்ஸ் : தொகுப்பு 2\nசில புத்தகங்களைப் படித்தால் பிடிக்கும், வேறு பல புத்தகங்களின் அட்டையைப் பார்த்தால் பிடிக்கும், அபூர்வமாகச் சில புத்தகங்களை, அவற்றின் பெயரைக் கேட்டாலே பிடித்துவிடும்.\nஅப்படி ஒரு புத்தகம், ‘போஜன குதூகலம்’\nசிரிக்காதீர்கள், நிஜமாகவே அப்படி ஒரு புத்தகம் இருக்கிறது. பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்த மராட்டியரான ரகுநாதர் என்பவர் எழுதியது, பலவிதமான உணவுகள், அதில் பயன்படுத்தப்படும் பொருள்கள், அவற்றின் குணங்கள் போன்றவற்றைப்பற்றி விவரிக்கும் நூல் இது.\n1974ம் வருடம், இந்தப் புத்தகம் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்திருப்பதாகத் தெரிகிறது. உங்கள் கண்ணில் பட்டால் எனக்கும் சேர்த்து ஒரு பிரதி வாங்குங்கள்.\nபி��பல எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜனிடம் அவரைக் கவர்ந்த படைப்புகள்பற்றிக் கேட்கப்பட்டபோது அவர் தந்த சிறு பட்டியல்:\nபா. செயப்பிரகாசம் எழுதிய ‘இருளுக்கு இழுப்பவர்கள்’\nலா. ச. ரா. எழுதிய ‘சிந்தா நதி’\nஜெகச்சிற்பியன் எழுதிய ‘காணக் கிடைக்காத தங்கம்’\nர. சு. நல்லபெருமாள் எழுதிய ‘கேட்டதெல்லாம் போதும்’\nர. சு. நல்லபெருமாள் எழுதிய ‘கல்லுக்குள் ஈரம்’\nகல்கி ராஜேந்திரன் எழுதிய ‘சுழிக்காற்று’\nரா. கி. ரங்கராஜன் மொழிபெயர்ப்பில் வந்த ‘பட்டாம்பூச்சி’\nசுஜாதா, மேலாண்மை பொன்னுசாமியின் சிறுகதைகள்\n(ஆதாரம் : ‘இவள் புதியவள்’ மாத இதழ் : ஜூன் 2012)\nLiterary Criticism என்பதற்கு இணையான தமிழ்ச் சொல் என்ன\nஆரம்பத்தில் இதனை ‘இலக்கிய விமர்சனம்’ என்றுதான் சொல்லிக்கொண்டிருந்தார்கள். பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன் அவர்களுக்கு இந்த வார்த்தை பொருத்தமாகத் தோன்றவில்லை. ஒரு படைப்பின் இலக்கியத்திறனை ஆராய்ச்சி செய்வது எனும் அர்த்தத்தில் ‘இலக்கியத் திறனாய்வு’ என்ற சொல்லை உருவாக்கிப் பயன்படுத்த ஆரம்பித்தார்.\nஅப்போது பிரபலமான விகடன் இதழ் அ. ச. ஞா. அவர்களைக் கிண்டலடித்தது, ‘திறனாம் ஆய்வாம் விமர்சனம் என்ற அருமையான வார்த்தை இருக்கும்போது இது எதற்கு’ என்று கேலி செய்து எழுதியது.\nசில வருடங்கள் கழித்து, அதே விகடன் ‘திறனாய்வு’ என்ற வார்த்தையைப் பயன்படுத்த ஆரம்பித்தது. ‘ஏன்’ என்று கேட்டபோது விகடன் ஆசிரியர் எஸ். எஸ். வாசன் சொன்னது, ‘இனிமே விமர்சனம்ன்னு எழுதினா ஆனந்த விகடனைக் கொளுத்திப்புடுவாங்க.’\n(ஆதாரம்: பேராசிரியர் அ.ச.ஞா.வின் பதில்கள்)\n’மணிமேகலை’ காவியத்தை எழுதிய ’சீத்தலை சாத்தனார்’ என்ற புலவரைப் பற்றி ஒரு சுவாரஸ்யமான கதை கேட்டிருப்பீர்கள்.\nஅவர் ஓலைச் சுவடி கொண்டு எழுதுவாராம், அதில் ஏதாவது தப்பாகிவிட்டால் தன் தலையிலேயே அதனால் குத்திக்கொள்வாராம், இப்படிக் குத்திக் குத்தித் தலை புண்ணாகி சீழ் கண்டுவிட்டதாம், ஆகவே அவருக்குச் ‘சீழ்த் தலைச் சாத்தனார்’ என்று பெயர் வந்ததாம், அது பின்னர் ‘சீத்தலைச் சாத்தனார்’ என்று மாறியதாம்.\nஇதெல்லாம் யாரோ விட்ட ரீல். நம்பாதீர்கள்\n‘சீத்தலை’ என்பது சோழ நாட்டில் உள்ள ஓர் ஊர். அங்கே பிறந்த இந்தப் புலவரின் பெயர் சாத்தன், மரியாதை காரணமாக அவரை எல்லாரும் ‘சாத்தனார்’ என்று அழைத்தார்கள்.\nஆனால் அந்தக் காலத்தில் ‘சாத்தனார்’ என்ற பெயரில் பல புலவர்கள் இருந்ததால், ‘சீத்தலையைச் சேர்ந்த சாத்தனார்’ என்று இவர் அழைக்கப்பட்டார். ’பட்டுக்கோட்டை கலியாண சுந்தரம்’, ‘சீர்காழி கோவிந்தராஜன்’, ‘நெல்லை கண்ணன்’ போல, இவர் ‘சீத்தலை சாத்தனார்’, அவ்வளவுதான்.\n(ஆதாரம்: டாக்டர் இராசமாணிக்கனார் எழுதிய ‘நாற்பெரும் புலவர்கள்’)\nஒரு நல்ல சிறுகதை என்பது எப்படி இருக்கவேண்டும் நம்முடைய அனுபவங்களை அப்படியே எழுதுவது கதைதானா நம்முடைய அனுபவங்களை அப்படியே எழுதுவது கதைதானா அதில் விசேஷமாக எதுவும் இல்லாமல் போய்விட்டால் என்ன செய்வது அதில் விசேஷமாக எதுவும் இல்லாமல் போய்விட்டால் என்ன செய்வது பேசாமல் மற்ற மொழி எழுத்தாளர்களின் நல்ல உத்திகளைக் கற்றுக்கொண்டு அவற்றை இங்கே கொண்டுவந்துவிட்டால் என்ன பேசாமல் மற்ற மொழி எழுத்தாளர்களின் நல்ல உத்திகளைக் கற்றுக்கொண்டு அவற்றை இங்கே கொண்டுவந்துவிட்டால் என்ன\nஇந்த விவாதங்கள் பல காலமாக உள்ளன. எழுத்தாளர் தி. ஜ. ரங்கநாதன் இதற்கு ஒரு சுவையான, நெத்தியடியான பதில் எழுதியிருக்கிறார்:\n‘எங்கள் கதை ஒவ்வொன்றும் ஒரு ராஜ்யத்தையே (எங்கள் அனுபவ உலகத்தையே) கொடுத்து வாங்கியதாகும். இந்த விலையெல்லாம் தந்து வாங்கியபின்னும், எங்கள் கதை ஒரு நொண்டி மாடாகவே இருக்கலாம். ஆயினும், அது எங்கள் கதை. சுழியும் குறியும் சுத்தமாக இருந்தாலும் திருட்டு மாட்டை அப்படி விலை கூறமுடியுமா\n‘மீனுக்கு ஒரே சொர்க்கம்தான் உண்டு: தண்ணீர். அதில் வியப்பென்ன\n(ஆதாரம்: ‘தொலைந்தவன்’ என்ற சிறுகதைத் தொகுப்பு நூலின் முன்னுரை, எழுதியவர்\nநடிகர் கமலஹாசனின் புதுப்படம் வரப்போகிறது. போஸ்டர்களில் படத்தின் பெயரை அரபி எழுத்துகளில் எழுதியிருப்பதால் இஸ்லாமியர்களை மையமாகக் கொண்ட கதையாக இருக்குமோ என்று பல ஊகங்கள் உலவுகின்றன.\nகமலஹாசன் பிரபலமாகத் தொடங்கிய நேரம். ‘குமுதம்’ ஆசிரியர் குழுவினர் அவரைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள். எடிட்டர் எஸ். ஏ. பி. ‘தமிழ் சினிமாவில் ஓர் இஸ்லாமியர் இந்த அளவு உயரத்துக்கு வருவது அபூர்வம்’ என்றார்.\n’ என்றார் ரா. கி. ரங்கராஜன்.\n‘ஆமாம், கமால் ஹாசன் என்பது முஸ்லிம் பெயர்தானே\n‘இல்லவே இல்லை’ என்று மறுத்தார் ரா. கி. ரங்கராஜன், ‘அவர் பரமக்குடியைச் சேர்ந்த வைணவர். எனக்கு நன்றாகத் தெரியும்.’\n‘சும்மாக் கதை விடாதீர்கள்’ என்றார் எஸ். ஏ. பி. ‘வேண்டுமென்றால், ஒரு நிருபரை அனுப்பி இதுபற்றி விசாரிக்கச் சொல்லுங்கள்.’\nஉடனடியாக, செல்லப்பா என்ற திரைப்பட நிருபர் கமலஹாசன் வீட்டுக்குச் சென்றார். அவருடைய தந்தையை நேரில் சந்தித்து, ‘நீங்கள் முஸ்லீமா\n‘அப்புறம் ஏன் உங்கள் மகன்களுக்குக் கமலஹாசன், சாருஹாசன், சந்திரஹாசன் என்று பெயர் வைத்திருக்கிறீர்கள்\n‘ஹாசன் என்று எனக்கு ஒரு முஸ்லிம் நண்பர் இருந்தார்’ என்றார் கமலின் தந்தை. ‘அவர் நினைவாகதான் என் மகன்களுக்கு இப்படிப் பெயர் வைத்தேன்.’\nநிருபர் திரும்பி வந்து எஸ். ஏ. பி.யிடம் விஷயத்தைச் சொன்னார். அப்புறம்தான் அவர் ’கமலஹாசன் முஸ்லிம் அல்ல’ என்று ஒப்புக்கொண்டார்.\n’எங்கிருந்து வருகுதுவோ…’ என்ற புத்தகத்தில் இந்தச் சம்பவத்தைக் குறிப்பிடும் ரா. கி. ரங்கராஜன் ‘சிலர் பேருக்குச் சில தப்பான கருத்துகள் மனத்தில் ஆழமாகப் பதிந்துவிடும். அதை மாற்றுவது கடினம். ஆதாரம் காட்டினால் மாற்றிக்கொள்வார்கள். என் குருநாதர் எஸ். ஏ. பி.யும் அப்படிதான்’ என்கிறார்.\n‘இல்லவே இல்லை’ என்பது ‘தினந்தந்தி’ நிறுவனர் ஆதித்தனாரின் கட்சி. குறிப்பாக, நாளிதழ்களுக்கு எழுதும்போது எப்படி எழுதவேண்டும் என்பதுபற்றி அவர் தனது ‘இதழாளர் கையேடு’ நூலில் சொன்ன சில டிப்ஸ்:\nபேச்சு வழக்கில் இருக்கும் தமிழே, உயிருள்ள தமிழ். அதைக் கொச்சை நீக்கி எழுதுங்கள்\nஇலக்கியத் தமிழில் எழுதுவது பெருமையாகக் கருதப்படுகிறது. ஆனால் நாளிதழில் அப்படி எழுதினால் அது பலருக்குப் புரியாது. பேச்சுத் தமிழையே எழுதவேண்டும். இதுவே தமிழ் உரைநடை வளர்ச்சிக்கு ஒரு நாளிதழ் செய்யவேண்டிய தொண்டு\nதாரணமாக, ‘நான்மாடக்கூடலை நண்ணினோம்’ என்று எழுதாதீர்கள் ‘மதுரைக்குப் போனேன்’ என்று எழுதுங்கள், ‘கரத்தில் பெற்றார்’ என்று எழுதாதீர்கள், ‘கையில் வாங்கினார்’ என்று எழுதுங்கள்\n‘புக்’ மார்க்ஸ் : தொகுப்பு 1\n‘புத்தகம்’ என்ற சொல் எப்படி வந்தது\nஅந்தக் காலத்தில் காகிதம் கிடையாது. நூல்களைப் பனை ஓலையில்தான் எழுதினார்கள்.\nபனையைக் குறிக்கும் தமிழ்ச் சொல் ‘போந்து’, பனை ஓலையைக் குறிப்பது ‘போந்தை’. இந்தச் சொற்கள் பின்னர் ‘போத்து’ என மாறின, ‘பொத்து’ எனக் குறுகின, அதில் எழுதப்பட்ட விஷயங்களைப் ‘பொத்தகம்’ என்று அழைத்தார்கள்.\nதமிழில் பல சொற்கள் ஒகரம் மாறி உகரம் ஆவது வழக்கம், அதன்படி, பின்னர் ‘பொத்தகம்’ என்பது ‘புத்தகம்’ என்று மாறிவிட்டது.\nஆக, ‘பொத்தகம்’ என்பதுதான் சரியான பழந்தமிழ்ச் சொல். ‘புத்தகம்’ என்பது இப்போது பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் சொல்.\n(ஆதாரம்: இரா. இளங்குமரனார் எழுதிய ‘பிழை இல்லாமல் எழுதுவோம்’ நூல்)\nடி. கே. சி. என்றும் ‘ரசிகமணி’ என்றும் செல்லமாக அழைக்கப்பட்ட டி. கே. சிதம்பரநாத முதலியார் எழுதிய புத்தகம் இது. பல பழைய தமிழ் இலக்கியங்களைச் சுவையாக அறிமுகப்படுத்தும் கட்டுரைகளின் தொகுப்பு.\nபல வருடங்களுக்குமுன்னால், இந்தப் புத்தகம் வெளியான நேரம். ஓர் இளைஞன் அதைப் படிக்க விரும்பினான். ஆனால் அதைக் காசு கொடுத்து வாங்கும் வசதி இல்லை.\nபின்னர் ஒருநாள், எதேச்சையாக ஒரு நண்பரின் வீட்டில் அந்தப் புத்தகத்தைப் பார்த்தான், புரட்டினான், படித்தான், சொக்கிப்போனான், இந்தப் புத்தகத்தைப் படித்தே தீரணும் என்று அதை ரகசியமாகச் ‘சுட்டுக்கொண்டு’ ஓடிவிட்டான்.\nபல வருடங்கள் கழித்து, அந்த இளைஞர் ஒரு சிறந்த புத்தகப் பதிப்பாளர் ஆனார். டி. கே. சி. யின் நெருங்கிய நண்பராகவும் ஆனார், தான் திருடிச் சென்ற அதே புத்தகத்தை வைத்து அச்சுக் கோர்த்து, அந்த ‘இதய ஒலி’யின் இரண்டாவது பதிப்பை வெளியிட்டார்.\nஅவர் பெயர், சின்ன அண்ணாமலை. விடுதலைப் போராட்ட வீரர், நல்ல பேச்சாளர், எழுத்தாளர், ‘தமிழ்ப்பண்ணை’ என்ற புத்தக வெளியீட்டு நிறுவனத்தை நடத்தியவர்.\n(ஆதாரம் : சின்ன அண்ணாமலை எழுதிய ‘சொன்னால் நம்பமாட்டீர்கள்’ நூல்)\nபுகழ் பெற்ற கிரேக்கப் பேச்சாளர் டெமாஸ்தனிஸ். எந்தத் தகவலையும் உரிய உணர்ச்சிகளோடு சொல்வதில் கில்லாடி. சிறந்த வழக்கறிஞரும்கூட.\nஒருவிதத்தில், டெமாஸ்தனிஸ் ஓர் எழுத்தாளராகவும் இயங்கியிருக்கிறார். இவருடைய மேடைப் பேச்சுகள், நீதிமன்ற வாதங்களைப் பார்த்துக் கிறங்கிப்போன பலர் தங்களுடைய சொற்பொழிவுகளுக்கான உரையை எழுதித் தருமாறு இவரைக் கேட்க ஆரம்பித்தார்கள். இவரும் ஒப்புக்கொண்டார், அதன்மூலம் நன்றாகச் சம்பாதித்தார்.\nபலருக்குத் தெரியாத விஷயம், பின்னாள்களில் மேடையில் பிரமாதமாக முழங்கிப் பெயர் வாங்கிய டெமாஸ்தனிஸுக்குச் சின்ன வயதில் திக்குவாய். ஒரு வார்த்தைகூட ஒழுங்காகப் பேசமுடியாமல் ஊராரின் கேலியைச் சம்பாதித்துக்கொண்டவர் அவர்.\nஅப்போது, ஸாடி��ஸ் என்ற புகழ் பெற்ற நடிகரைச் சந்தித்தார் டெமாஸ்தனிஸ். அவர் இவருடைய பிரச்னையைக் கேட்டுவிட்டுப் பேச்சுக்கலைபற்றியும் உணர்ச்சியுடன் பேசவேண்டியதன் அவசியம்பற்றியும் ஏராளமான டிப்ஸ்களை அள்ளி வீசினார். ‘முக்கியமா, வாய்ல கூழாங்கல்லை வெச்சுகிட்டுக் கண்ணாடி முன்னாடி நின்னு பேசிப் பழகு’ என்றார்.\nஸாடிரஸின் அறிவுரைப்படி, டெமாஸ்தனிஸ் பயிற்சி எடுக்க ஆரம்பித்தார். தன் வீட்டிலேயே ஒரு பாதாள அறை அமைத்துக்கொண்டார். அதற்குள் புகுந்த கதவைச் சாத்திக்கொண்டு மணிக்கணக்காகப் பேசத் தொடங்கினார்.\nஎப்போதாவது வெளியே போகிற ஆர்வம் வந்தால் அது கூடாது என்பதற்காக, தன் தலையின் ஒரு பகுதியை மொட்டை அடித்துக்கொண்டுவிட்டார் டெமாஸ்தனிஸ். வெளியே போனால் கேலி செய்வார்கள் என்கிற பயத்தில் எந்நேரமும் பயிற்சி, பயிற்சி, பயிற்சி.\nசில மாதங்கள் கழித்து அவர் அந்தப் பாதாள அறையிலிருந்து வெளியே வந்தபோது, திக்குவாய்ப் பிரச்னை காணாமல் போயிருந்தது. உலகை வெல்லும் ஒரு பேச்சாளர் உருவாகியிருந்தார்.\n(ஆதாரம்: மதன் எழுதிய ’கிளியோபாட்ரா, மற்றும் சிலர்’ நூல்)\nக்ளாசிக் தமிழ்ப் படங்களில் ஒன்றான ‘தில்லானா மோகனாம்பாள்’, பத்திரிகையில் தொடர்கதையாக எழுதப்பட்ட நாவல். அதன் சுருங்கிய வடிவத்துக்குதான் சிவாஜியும் பத்மினியும் பாலையாவும் நாகேஷும் இன்னபிறரும் திரையில் உயிர் கொடுத்தார்கள்.\nஆனால் இவர்கள் பிரபலமான அளவுக்குத் ‘தில்லானா மோகனாம்பா’ளைப் படைத்த எழுத்தாளர் பிரபலமாகவில்லை. அவர் பெயர் ‘கலைமணி’, நிஜப் பெயர் ‘கொத்தமங்கலம் சுப்பு’.\nபலருக்குத் தெரியாத விஷயம், கொத்தமங்கலம் சுப்பு ஓர் ஆல் ரவுண்டர். மேடை நாடகங்களில் நடித்திருக்கிறார், வில்லுப்பாட்டுக் கச்சேரிகளை நடத்தியிருக்கிறார், பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார், சினிமாக் கதை, வசனம், பாடல்கள் என்று சகலத்திலும் பங்காற்றியிருக்கிறார், பின்னர் விகடன் ஆசிரியர் குழுவிலும், ‘ஜெமினி’ கதை இலாகாவிலும் முக்கியப் பொறுப்பு வகித்தார், நான்கு படங்களை இயக்கினார்.\n‘தில்லானா மோகனாம்பாள்’போலவே இன்னொரு தமிழ் சினிமா க்ளாசிக், ‘ஔவையார்’. அந்தப் படத்தை இயக்கியது கொத்தமங்கலம் சுப்புதான்\n’திரு வி. க.’ என்று எப்போதும் கௌரவ அடைமொழியோடே மரியாதையுடன் அழைக்கப்பட்ட திரு. வி. கலி��ாண சுந்தரனார், சிறந்த எழுத்தாளர், பேச்சாளர், பத்திரிகையாளர், அரசியல், சமுதாயம், ஆன்மிகம் என்று பலதுறைகளில் முக்கியப் பணியாற்றியவர்.\nஒருமுறை திரு. வி. க.வைச் சந்திக்கப் பெரியார் வந்திருந்தார். அவர் பெரிய நாத்திகர் என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம்.\nஆனால் திரு. வி. க. அதுபற்றிக் கவலைப்படவில்லை. நேராக அவரிடம் சென்று விபூதிப் பிரசாதத்தை நீட்டினார். சுற்றியிருந்தவர்கள் திகைத்துப்போனார்கள்.\nபெரியார் ஒரு கணம்கூட யோசிக்கவில்லை. சட்டென்று விபூதியை எடுத்து இட்டுக்கொண்டார். எதுவும் நடக்காததுபோல் அவருடன் உரையாட ஆரம்பித்தார்.\nஅங்கிருந்து அவர் புறப்பட்டபோது, பெரியாரின் தொண்டர்கள் அவரை நெருங்கி, ‘அந்த விபூதிய அழிச்சுடுங்க’ என்றார்கள்.\n‘ம்ஹூம், நானா அழிக்கக்கூடாது, அதுவா அழிஞ்சாப் பரவாயில்லை’ என்றார் பெரியார். ‘அதுதான் திரு. வி. க.வுக்கு நான் காட்டும் மரியாதை\n(ஆதாரம்: பிரபுசங்கர் எழுதிய ‘கரும்புச் சாறு’ நூல்)\nஇன்றைக்கும், உலக அளவில் அதிகப் புகழ் பெற்ற இந்தியக் கதை என்றால், ’தி ஜங்கிள் புக்’தான். ருட்யார்ட் கிப்ளிங்கின் இந்தக் கதை சிறுவர்களுக்காக எழுதப்பட்டிருந்தாலும்கூட, பெரியவர்கள்தான் இதை அதிகம் வாசிக்கிறார்கள்.\nருட்யார்ட் கிப்ளிங் இந்தியாவில் பிறந்தவர். அவரை வளர்த்த ’ஆயா’க்களிடம் ஹிந்தி பேசக் கற்றுக்கொண்டார்.\nஇந்த ‘ஆயா’க்கள்தான் இந்தியக் காடுகளைப் பற்றி அவருக்குக் கதைகதையாகச் சொன்னார்கள். காட்டு வர்ணனையும், மிருகங்களைப் பற்றிய அறிமுகமும், அவை வளரும் விதம்பற்றிய தகவல்களும், அவற்றைப் பின்னணியாக வைத்து உருவாகியிருக்கும் விதவிதமான கற்பனைகளும் அவருக்குச் சோற்றுடன் சேர்ந்து ஊட்டப்பட்டன.\nபின்னர், கிப்ளிங் அலஹாபாத்தில் பத்திரிகையாளராகப் பணியாற்றினார். அப்போது இந்தச் சிறுவயது நினைவுகளையும் தன்னுடைய கற்பனையையும் சேர்த்துக் காட்டில் வளரும் ஒரு சிறுவனின் கதையாக ‘தி ஜங்கிள் புக்’கை எழுதினார்.\n1894:95ம் ஆண்டுவாக்கில் வெளிவந்த இந்த நாவல் உடனடி ஹிட். அப்போது பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்த இந்தியாவைப்பற்றிப் பல ’வெள்ளைக்காரர்’களுக்கு முதல் அறிமுகம், இந்தக் கற்பனைக் கதைதான். பின்னர் பல வருடங்கள் கழித்து இந்தக் கதை கார்ட்டூன் சித்திரமாகவும் வெளியாகி நிரந்தரப் புகழ் பெற்றது.\nகிட்டத்தட்ட ஒன்றே கால் நூற்றாண்டுக்குப்பிறகு இப்போதும் ‘தி ஜங்கிள் புக்’ தொடர்ந்து வாசிக்கப்படுகிறது. பக்கத்துப் புத்தகக்கடையிலோ, கூகுள் செய்தால் இலவசமாகவோ கிடைக்கும்.\nஅமெரிக்காவில் நடைபெற்ற விழா ஒன்று. சிறப்பு விருந்தினர், எழுத்தாளர் த. ஜெயகாந்தன்.\nவிழாவின் முடிவில் ஜெயகாந்தனுடன் கேள்வி பதில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. ஒருவர் இந்தப் புராதனக் கேள்வியைக் கேட்டார், ‘இன்றைய இளைய தலைமுறைக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன\nஜெயகாந்தன் சட்டென்று பதில் சொன்னார், ‘ஒன்றுமில்லை\n உங்களைப் போன்ற பெரிய எழுத்தாளர் எங்களுக்குச் சொல்வதற்கு நிறைய விஷயங்கள் இருக்குமே\n‘உண்மைதான். ஆனால், அந்த வயதில் நான் யாருடைய அறிவுரையையும் கேட்டதில்லையே\n(ஆதாரம்: டாக்டர் வைத்தியலிங்கம் கங்காதர தேவ் பேட்டி : ‘தென்றல்’ மாத இதழ், ஜனவரி 2010)\n600024.com என்ற பொழுதுபோக்கு இணையதளம்பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கக்கூடும். நண்பர் விக்கியின் முயற்சி இது, ஆரம்பத்தில் சினிமாச் செய்திகளோடு களம் இறங்கியவர்கள் பின்னர் வேறு விஷயங்களில் கால் பதிக்கத் தொடங்கினார்கள். இப்போது ஒரு நல்ல புத்தக விற்பனைத் தளமாகவும் அவதாரம் எடுத்திருக்கிறார்கள்.\nஇந்த ஆன்லைன் புத்தகக் கடையின் சார்பில் ஒரு ஃபேஸ்புக் பக்கமும் உள்ளது (https://www.facebook.com/600024books) இதனை வெறும் விற்பனை உத்தியாகமட்டும் பயன்படுத்தாமல், நல்ல வாசகர் குழுவாக வளர்த்தெடுக்க முனைந்துவருகிறது 600024 டீம்.\nஅந்த வரிசையில், ’புக்’மார்க்ஸ் என்ற பெயரில் ஒரு புதிய தினசரித் தொடரை நான் எழுதவிருக்கிறேன். தமிழ் / பிறமொழிப் புத்தகங்கள் / எழுத்தாளர்களைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களின் தொகுப்பாக இது இருக்கும்.\n‘மைக்ரோ’தொடர் என்று அறிவித்திருக்கிறார்கள். அதன் அர்த்தம், ட்விட்டர் / ஃபேஸ்புக் தலைமுறையின் Attention Spanக்குள் விஷயம் சொல்லப்படும் என்பதுதான். துணுக்குச் செய்தியைவிடக் கொஞ்சம் பெரியதாக, கட்டுரையைவிடக் கொஞ்சம் சிறியதாக, ஒரு நிமிடத்துக்குள் வாசித்துவிடக்கூடிய வகையில் இந்தக் குறுங்கட்டுரைகள் இருக்கும். புத்தகம், எழுத்து, வாசிப்பு பற்றிய ஒரு பொதுவான ஆர்வத்தை உண்டாக்குவதுதான் இந்தத் தொடரின் நோக்கம்.\nதினமும் மேற்சொன்ன ஃபேஸ்புக் பக்கத்தில் நீங்கள் இந்தத் தொடரை வாசிக்கலாம். இதுபற்றி உங்கள் கருத்துகளை அறியவும் யோசனைகளைக் கேட்கவும் ஆவலாக இருக்கிறேன்.\nஎன்னைமாதிரியே நீங்களும் ‘ஃபேஸ்புக்’ என்றால் அலர்ஜியாகிறவரா பிரச்னையில்லை, வாரக் கடைசியில் ஏழு குறுங்கட்டுரைகள் கொண்ட தொகுப்பாக இங்கேயும் அவற்றை Update செய்துவைப்பேன் :>\nமுன்குறிப்பு: இவை வெண்பாக்கள் அல்ல, வெண்பாம்கள், அதாவது, வெண்பாவின் ஒலி, எதுகை, மோனை, இயைபு போன்றவை இருக்கும், இலக்கணம் அங்கங்கே குறைபடலாம், அது தெரிந்தே செய்யும் பிழை என்பதறிக\n1. இலவசமாய் ட்விட்டரில் இன்றே புகுந்திடுநீ\n2. ஒன்ஃபார்ட்டி எழுத்துகளில் உலகத்தை வலம்வரலாம்\n3. நண்பர்கள் இங்குஉண்டு, நச்சரிப்பும் மிகஉண்டு,\n4. புத்தியில் தோன்றியதைப் பட்டுன்னு எழுதிவைக்கச்\n5. சுருக்கமா எழுதுதற்கு ஜோரான நெட்ப்ராக்டீஸ்,\n6. இணையத்தில் தென்படும் இனிப்பான மேட்டரெல்லாம்\n7. ஆரேனும் ஒருகருத்தை அழகாகச் சொல்லிவிட்டால்,\n9. ட்ரெண்டில் வரணுமா, ட்விட்டரில் உன்னுடைய\n10. அளவாக ட்வீட்டினால் அமுதேதான், அனுபவி,\nஅறுசீர் விருத்தம்பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதுகுறித்த ஓர் அறிமுகமாக நான் எழுதிய கட்டுரை ஒன்று தமிழோவியம் இணைய இதழில் வெளியாகியுள்ளது. அதை இங்கே வாசிக்கலாம்: http://www.tamiloviam.com/site/\nமுன்குறிப்பு: ’பண்புடன்’ குழுமத்தின் தீபாவளி மலர் (கொஞ்சம் லேட்டாக ) வெளிவந்துள்ளது. அதைப் படிக்க இந்த இணைப்புக்குச் செல்லலாம் –> http://www.scribd.com/doc/44817485/deepavali-panbudan1\nஇந்த மலரில் வெளியாகியுள்ள எனது சிறுகதை ஒன்றை Backupக்காக இங்கே குறித்துவைக்கிறேன்:\nஎங்களது ‘திரும்பிப் போகலாம்’ இணைய தளத்துக்கு உங்களை வரவேற்கிறோம். தங்கள் வரவு, நல்வரவாகுக.\nஇந்தத் தளம், இன்றைய இணையத் தொழில்நுட்பத்தின் சகல சாத்தியங்களையும், அடுத்த தலைமுறைத் தொழில்நுட்பத்துடன் கவனமாக இணைத்து உருவாக்கப்பட்டது. இதுபோல் ஒரு தளம் இதுவரை இல்லை, இனிமேலும் இருக்காது என்று எங்களால் உறுதிபடச் சொல்லமுடியும்.\nமுதலில், இந்தத் தளம் யாருக்கு\nஅடிப்படையில் இது ஒரு வாழ்க்கைப் பதிவு. கிட்டத்தட்ட டைரிபோல, உங்களுடைய தினசரி நடவடிக்கைகளை, நினைவுகளை, குறிப்புகளை, கற்பனைகளை, கவலைகளை, சந்தோஷங்களையெல்லாம் நீங்கள் இங்கே உங்கள் மொழியிலேயே பதிவு செய்து வைக்கலாம்.\nஇந்த வசதிதான் எல்லாத் தளங்களிலும் இருக்கிறதே, இணையத்தில் ’தமிழ் வலைப்பூ’ என்று தேடினால் ஆயிரக்கணக்���ில் வந்து கொட்டுகிறதே, பிறகு எப்படி ‘திரும்பிப் போகலாம்’ தளம் விசேஷமானது\nஎங்கள் தளத்தின் சிறப்பு, இது வாழ்க்கையைப் பதிவு செய்வதுமட்டுமில்லை. அன்றைய தினத்துக்கே உங்களைத் திரும்ப அழைத்துச் சென்றுவிடக்கூடிய தொழில்நுட்பத்தைக் கைக்கொண்டிருக்கிறது.\nஉதாரணமாக, எங்கள் தளத்தின் கற்பனை உறுப்பினர் ஒருவர், சில மாதங்களுக்குமுன் இப்படி ஒரு பதிவை எழுதியிருக்கிறார்:\n’இன்றைக்கு நல்ல குளிர். இரண்டு ஸ்வெட்டர்கள் மாட்டிக்கொண்டு, கம்பளியைப் போர்த்திக்கொண்டு நன்றாகத் தூங்கினேன்\nஅவர் இந்தப் பதிவை எழுதி ரொம்ப நாளாகிவிட்டது, குளிர் காலம் போய், வெயில் காலம் ஆஜர்.\nஆனால் இப்போது, அவருக்கு மீண்டும் அந்தக் குளிரை அனுபவிக்கவேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. அவர் என்ன செய்வார், பாவம்\nகவலையே வேண்டாம், அவர் எங்களுடைய ‘திரும்பிப் போகலாம்’ இணைய தளத்துக்கு வந்து, இந்தக் குறிப்பிட்ட பதிவைத் தேர்ந்தெடுத்து, ‘திரும்பிப் போகலாம்’ என்ற பொத்தானை அமுக்கினால் போதும்.\nமறுவிநாடி, வியர்த்து விறுவிறுத்துக்கொண்டிருக்கும் அவருடைய வீடுமுழுவதும் குளிர் சூழ்ந்துகொள்ளும். அவர் உடம்பில் இரண்டு ஸ்வெட்டர்கள், ஒரு கம்பளி எல்லாம் தானாக வந்து சேரும்.\n இதைத்தான் நாங்கள் அடுத்த தலைமுறை இணையத் தொழில்நுட்பம் என்று குறிப்பிட்டோம்.\nயோசித்துப்பாருங்கள், உங்களுடைய வாழ்க்கையில் எத்தனையோ சுப நினைவுகள் இருக்கின்றன, உதாரணமாக, முதல் காதல், முதல் முத்தம், முதல் வேலை, முதல் சம்பளம், முதன்முறை உங்கள் மனைவியை(அல்லது கணவரை)ச் சந்தித்தது, திருமண நாள் (சிலருக்கு விவாகரத்து நாள்), பரிசு வாங்கியது, பாராட்டுகளை வாங்கியது, அவ்வளவு ஏன், மனத்துக்குப் பிடித்த உணவை நிறையச் சாப்பிட்டுவிட்டு சோஃபாவில் கவிழ்ந்து கிடந்து டிவி பார்ப்பதுகூட ஓர் இனிமையான ஞாபகம்தானே\nஇந்த மென்மை நினைவுகளெல்லாம், நம்முடைய மூளையில் நிரந்தரமாகத் தங்கிவிடுகின்றன. அவற்றை அவ்வப்போது வெளியில் எடுத்து அசைபோடுவது அலாதியான ஓர் அனுபவம்.\nஆனால், இவை வெறும் ஞாபகங்கள்தான். காகிதத்தில் சர்க்கரை என்று எழுதிச் சாப்பிட்டால், இனிக்காது.\nஅதற்குபதிலாக, அந்த நினைவுகள் நிகழ்ந்த அதே நாளுக்குத் திரும்பச் சென்று, மீண்டும் வாழ்ந்து பார்த்தால் எப்படி இருக்கும்\nஅதாவது, உங்களுடைய மு��ல் காதலியைச் சந்தித்த அதே தினத்துக்கு இப்போது நீங்கள் மறுபடி பயணம் செய்யலாம். அப்போது உங்களுக்கு வயது என்ன பதினாறா அந்த வயதுக்கே உங்கள் உடலும் மனமும் சென்றுவிடும், உணர்வுகள், சிந்தனைகள் எல்லாம் அப்போதைய காலகட்டத்துக்கு ஏற்ப இருக்கும்.\nஎங்களுடைய நவீன தொழில்நுட்பம், இத்துடன் நின்றுவிடுவதில்லை, உங்களுடைய அந்த முதல் காதலியையும் நாங்கள் அந்த அனுபவத்தில் நேருக்கு நேர் கொண்டுவருகிறோம்.\nஅதற்கு நீங்கள் எங்களுடைய தளத்தில் பதிவு எழுதும்போதே, உங்களுடைய நினைவுகளை முழுமையாகக் குறிப்பிடவேண்டும். உங்கள் காதலியின் பெயர், வயது, நிறம், உயரம், எடை, சந்தித்தபோது அவர் அணிந்திருந்த உடையின் நிறம், வகை என்று சகல விவரங்களையும் நீங்கள் நுணுக்கமாகக் குறிப்பிட்டால், அவருடைய நெற்றிப் பொட்டு, காது லோலாக்குவரை சகலத்தையும் எங்களால் மீண்டும் உருவாக்கிவிடமுடியும்.\nஅதேசமயம், நீங்கள் எதையாவது பதிவு செய்ய மறந்துவிட்டால் அதனால் நிகழ்கிற பிரச்னைகளுக்கு நாங்கள் பொறுப்பேற்கமுடியாது.\nஉதாரணமாக, உங்கள் காதலியின் மூக்கு மிகவும் கூர்மையானது, அவரிடம் உங்களுக்குப் பிடித்த அம்சமே, அந்தக் கூர் மூக்குதான்.\nஇந்த விவரத்தை நீங்கள் உங்கள் பதிவில் மறக்காமல் குறிப்பிடவேண்டும். ஒருவேளை அப்படிக் குறிப்பிடாவிட்டால், நீங்கள் மீண்டும் அதே நாளுக்குத் திரும்பிச் செல்லும்போது, உங்கள் காதலிக்குக் கூர் மூக்கு இருக்காது, சாதாரணமான மூக்குதான் இருக்கும்.\nஆகவே, எங்கள் தளத்தில் பதிவுகள் எழுதும்போது, எந்த விவரத்தையும் விட்டுவைக்காதீர்கள், நுணுக்கமாக, விரிவாக, விளக்கமாகப் பதிவு செய்துவைத்தால்தான், அது உங்களுக்குப் பிற்காலத்தில் பயன்படும்.\nஆனால், நான் இப்படி அந்தரங்கமான விஷயங்களை எழுதப்போய், அதை மற்றவர்கள் படித்துவிடமாட்டார்களா\nஉங்களுக்கு அந்தப் பயமே வேண்டியதில்லை. எங்களுடைய நவீன தொழில்நுட்பம் உங்கள் நினைவுகளை வேறு யாரும் பார்க்கமுடியாதபடி, படிக்கமுடியாதபடி, பயன்படுத்தமுடியாதபடி தடுத்துவிடுகிறது.\nசரி, நான் என் நினைவுகளை எழுதுகிறேன், நடுவில் ஒரு பொய்யான தகவலை எழுதினால் என்ன ஆகும்\nநீங்கள் எழுதுவது உண்மையா, பொய்யா என்று எங்களால் கண்டுபிடிக்க இயலாது. ஆகவே, நீங்கள் பொய்யான, பொருந்தாத ஒரு விவரத்தை எழுதினாலும் அது நிஜத்தில் அப்படியே நிகழ்ந்துவிடும்.\nசொன்னால் நம்பமாட்டீர்கள், இந்த ஒரு விஷயத்துக்காகவே எங்களுடைய தளத்தைப் பயன்படுத்துகிறவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள்.\nஉதாரணமாக, எங்களுடைய உறுப்பினர் கந்தசாமி ஒரு நோஞ்சான், யாரேனும் பலமாகத் தட்டினால் கீழே விழுந்து உடைந்துவிடுவார்.\nஇதனால், கந்தசாமிக்கு உள்ளுக்குள் ஒரு பெரிய ஆசை: நான் ஒரு பெரிய பலசாலியாக, எல்லோர்மீதும் ஆதிக்கம் செலுத்துகிறவனாக, அடித்து உதைப்பவனாக மாறவேண்டும்\nஇதற்காக, அவர் எங்களுடைய தளத்தைப் பயன்படுத்துகிறார். நிஜமான நோஞ்சான் நினைவுகளைப் பதிவு செய்யாமல், கற்பனையில் தன்னை ஒரு பலசாலியாக வர்ணித்துக் கதைகள் எழுதுகிறார், தன் பலத்தைப் பார்த்து மயங்கும் பெண் கதாபாத்திரங்களை அவரே உருவாக்குகிறார், பிறகு அந்தக் கனவைக் கண்முன்னே வாழ்ந்து பார்க்கிறார்.\nநீங்களும் கந்தசாமியைப்போல் கற்பனைக் கதைகள் எழுதவேண்டும் என்று அவசியம் இல்லை. நிஜமான அனுபவத்துக்கு மத்தியில், ‘இப்படி நேர்ந்திருக்கலாமே’ என்று நீங்கள் நினைத்து ஆதங்கப்படுகிற சமாசாரங்களையும் இணைத்து எழுதிக்கொள்ளலாம்.\nஉதாரணமாக, நீங்கள் ஓர் அரசு அலுவலகத்துக்குச் செல்கிறீர்கள், ஒரு மணி நேரம் காத்திருந்தபிறகு, அங்குள்ள அதிகாரி உங்கள் விண்ணப்பத்தில் கையெழுத்துப் போடுவதற்கு நூறு ரூபாய் கேட்கிறார். வயிறு எரிய அந்தத் தொகையைக் கொடுத்துவிட்டு வீடு வருகிறீர்கள்.\nஇந்த நினைவுகளை எழுதும்போது, நீங்கள் கொஞ்சம் அதனை மாற்றி எழுதலாம். லஞ்சம் கேட்ட அந்த அரசு அதிகாரிக்கு நீங்கள் கும்மாங்குத்து விடுவதுபோலவோ, காவல்துறையில் புகார் கொடுத்து அவரை ஜெயிலில் தள்ளுவதுபோலவோ குறிப்பு எழுதிக்கொள்ளலாம். பிறகு அவற்றை நிஜத்தில் நிகழ்த்திப் பார்க்கலாம்.\nசில சமயங்களில், உங்களுடைய வெவ்வேறு நினைவுகளை ஒன்றாகச் சேர்க்கவேண்டும் என்கிற விருப்பம் உங்களுக்கு ஏற்படலாம். உதாரணமாக, பெங்களூருக்கு அலுவல் நிமித்தம் சென்றிருக்கிறீர்கள், அப்போது, ‘இங்கே என் மனைவி, குழந்தை இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்\nரொம்பச் சுலபம், பெங்களூர் நினைவுகளில் இருந்து ஒரு பகுதி, பிறகு நீங்கள் உங்கள் ஊரில் மனைவி, குழந்தைகளுடன் பார்க்குக்கோ, பீச்சுக்கோ சென்ற ஓர் அனுபவம், இரண்டையும் இணைத்து ஒரு புது நினைவை உருவாக்கலாம், ���தைக் கண்முன்னே வாழ்ந்து பார்க்கலாம்.\nஇப்படி ஒவ்வொரு பதிவாக, ஒவ்வொரு நினைவாக உங்களுடைய ஒட்டுமொத்த வாழ்க்கையையும் இங்கே மறுபடி, நீங்கள் விரும்பும் விதத்தில் வாழ்ந்து பார்க்கலாம், எந்தத் தடையும் கிடையாது, வானம்கூட எல்லை இல்லை.\nஇதற்காக நாங்கள் வசூலிக்கும் கட்டணம் பின்வருமாறு:\n1. நீங்கள்மட்டும் இடம்பெறுகிற ஓர் அரை மணி நேர நினைவுகள் அல்லது கற்பனைகளை மீண்டும் வாழ்ந்து பார்ப்பதற்கு: ரூபாய் பன்னிரண்டாயிரம் மட்டும்\n2. அதே நினைவில், உங்களுடன் இன்னொருவரும் இடம்பெறவேண்டும் என்றால்: ரூபாய் இருபதாயிரம் மட்டும்\n3. அந்த இன்னொருவர், எதிர்பாலினராக இருந்தால் (ஆணுக்குப் பெண், பெண்ணுக்கு ஆண்): ரூபாய் முப்பத்தொன்பதாயிரம் மட்டும்\n4. அரை மணி நேரத்துக்குமேல் நீள்கிற ஒவ்வொரு நிமிடத்துக்கும்: ரூபாய் ஆயிரம் மட்டும்\n5. உங்கள் நினைவில் கூடுதலாக இடம்பெறும் ஒவ்வொரு நபருக்கும்: ரூபாய் ஆறாயிரம் முதல் பத்தாயிரம்வரை\nஇந்த அளவு குறைவான கட்டணத்தில் உங்களுடைய வாழ்க்கையை நீங்கள் விரும்பும்வகையில் திரும்ப வாழமுடிகிறது என்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கும் செய்தி. இந்தத் தொகையை நீங்கள் தவணை முறையில் செலுத்துவதற்கான வசதியும் உண்டு.\nஎங்களுடைய இணைய தளத்தில் ஒருவர் எழுதும் நினைவுகளை, மற்றவர்கள் பார்க்கமுடியாதபடி தடுத்திருக்கிறோம். இதற்காக நாங்கள் உலகின் மிகச் சிறந்த நவீன பாதுகாப்புத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகிறோம்.\nஅதேசமயம், இந்த வேலிகளையெல்லாம் தாண்டித் திருடவேண்டும் என்கிற நோக்கத்துடன் வருகிறவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். அவர்களுடைய வேகத்துக்கு நாங்கள் தடை போடமுடியாது.\nஎங்களால் இயன்றவரை, இந்த நினைவுத் திருடர்களின் கையில் உங்களுடைய பதிவுகள் சிக்கிவிடாதபடி நாங்கள் பாதுகாக்கிறோம். ஒருவேளை இந்தப் போட்டியில் அவர்கள் ஜெயித்துவிட்டால், அதனால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு நாங்கள் பொறுப்பேற்கமுடியாது.\nஇப்படி ஏதும் விபரீதம் நேர்ந்து, உங்களுடைய நினைவுகள் அவர்கள் கையில் சிக்கினால், அவர்கள் அதனை எப்படி வேண்டுமானாலும் தவறாகப் பயன்படுத்தலாம், இந்த ஆபத்துக்கு நீங்கள் தயாராக இருப்பது நல்லது.\nநல்ல வேளையாக, நினைவுத் திருடர்களிடமிருந்து தப்புவதற்கு ஒரு சுலபமான வழி இருக்கிறது.\nபெரும்பாலான தி��ுடர்களுக்கு, தனிப்பட்ட நபர்களின் நினைவுகளில் ஆர்வம் இருப்பதில்லை. இரண்டு பேர், அதுவும் ஆண், பெண் சம்பந்தப்பட்ட ஞாபகங்களைதான் அவர்கள் முனைந்து தேடுகிறார்கள், அதை வாசித்துக் கிளுகிளுப்பு அடைவது, தங்களுக்குப் பிடித்தவண்ணம் அதனை மாற்றி அனுபவிப்பது என்று தவறு செய்கிறார்கள்.\nஅவர்களிடமிருந்து தப்பவேண்டுமென்றால், நீங்கள் நிறையத் தனிநபர் நினைவுகளை எழுதிக் குவிக்கவேண்டும், இடையிடையே ஓரிரு அந்தரங்கமான ஆண் – பெண் நினைவுகள், சம்பவங்களும் வரலாம், ஆனால் மேலோட்டமாகப் பார்க்கிறபோது உங்களுடைய சிந்தனைகளில் திருடுவதற்கு எதுவும் இருக்காது என்கிற எண்ணம் திருடர்களுக்கு வரவேண்டும். அப்போது அவர்கள் உங்களுடைய நினைவுகளைச் சீண்டமாட்டார்கள்.\nஅடுத்தபடியாக, நீங்கள் இந்தத் தளத்தினுள் நுழைவதற்காக நாங்கள் கொடுத்திருக்கும் ரகசியச் சொல், பத்திரமாகப் பாதுகாக்கப்படவேண்டும். அதை நீங்கள் யாரிடமும் பகிர்ந்துகொள்ளக்கூடாது – சொந்தக் கணவன் / மனைவி / மகன் / மகள் / சகோதரர்கள் / நண்பர்கள் யாரிடமும்\nஏனெனில், அந்தச் சொல்மட்டும் இன்னொருவருக்குத் தெரிந்துவிட்டால், அவ்வளவுதான். அவரே நீங்களாக மாறிவிடலாம், உங்களுடைய அடையாளத்தைத் திருடிக்கொண்டு வாழத் தொடங்கலாம், அதுபோன்ற ஒரு விபரீதத்துக்கு நீங்களாகவே வலியச் சென்று இடமளித்துவிடாதீர்கள்.\nகடைசியாக, நீங்கள் ஏதேனும் சட்டப்படி குற்றமான செயல்களில் ஈடுபட்டால் (உதாரணம்: சிவப்பு விளக்கு எரியும்போது போக்குவரத்து சிக்னலைக் கடப்பது, அடுத்தவர்களிடம் திருடுவது, கொலை, இன்னபிற) தயவுசெய்து அந்த நினைவுகளை இங்கே பதிவு செய்யாதீர்கள்.\nகாரணம், ஒருவேளை அரசாங்கம் உங்கள்மீது சந்தேகப்பட்டு எங்களை அணுகினால், நாங்கள் உங்களுடைய சகல நினைவுகளையும் பதிவு செய்து அவர்களிடம் தரவேண்டியிருக்கும், எங்களுக்கு வேறு வழி இல்லை.\nஅதுபோன்ற சந்தர்ப்பங்களில், உங்களுடைய நினைவுகளே உங்களுக்கு எதிராகச் சாட்சி சொல்லிவிடும், வசமாக மாட்டிக்கொள்வீர்கள், ஜாக்கிரதை.\nஎங்களுடைய சேவையைப் பயன்படுத்திப் பலன் அடைந்த சில வாடிக்கையாளர்களின் அனுபவம்:\n* நான் கடந்த இருபத்தெட்டாம் தேதி வேலையிலிருந்து ஓய்வு பெற்றேன். அன்றிலிருந்து, நான் முதன்முதலாக வேலைக்குச் சேர்ந்த தினம்பற்றிய நினைவுகள் என்னை வருத்திக��கொண்டிருக்கின்றன. அவற்றை ‘திரும்பிப் போகலாம்’ இணைய தளத்தில் பதிவு செய்து மீண்டும் வாழ்ந்து பார்த்தேன், இப்போது சந்தோஷமாக எனது ஓய்வுக் காலத்தைக் கழிக்கிறேன், நன்றி – சேகர், சென்னை.\n* எனக்குத் திருமணமாக நாற்பது ஆண்டுகள் கடந்துவிட்டன, ஒரு பையன், ஒரு பெண், மூன்று பேரன்கள், ஒரு பேத்தி என்று சந்தோஷமான வாழ்க்கை. ஆனால் இன்னும், என்னால் என்னுடைய முதல் காதலை மறக்கமுடியவில்லை.\nஅது காதல் இல்லை, வெறும் இனக் கவர்ச்சிதான் என்பது புரிகிறது. எதுவாயினும், ஒரு பெண் அதனை வெளிப்படையாகச் சொல்கிற சூழல் நம்முடைய சமூகத்தில் இல்லை.\nஇந்தச் சூழ்நிலையில், ‘திரும்பிப் போகலாம்’ இணைய தளம்தான் எனக்கு அந்த அபூர்வமான வாய்ப்பை வழங்கியது. என்னை முதன்முதலாகக் காதலித்த அந்த அவனை, மீண்டும் ஒருமுறை சந்தித்து, பேசி மகிழ்ந்தேன், நன்றி – பெயர் வெளியிட விரும்பவில்லை, திருவனந்தபுரம்.\n* பத்தாம் வகுப்புவரை நான் நன்றாகதான் படித்துக்கொண்டிருந்தேன், அதன்பிறகுதான் கெட்ட நினைவுகளில் பாதை மாறிவிட்டேன், கல்லூரிப் படிப்பு, வேலை, சொந்தத் தொழில் என சகலத்திலும் தில்லுமுல்லுகள் செய்து முன்னுக்கு வந்த எனக்கு, ஆரம்ப காலப் புனித வாழ்க்கையை மறுபடி வாழ்ந்துபார்க்கும் சந்தர்ப்பத்தை ‘திரும்பிப் போகலாம்’ வழங்கியது, இதன்மூலம் என்னுடைய குற்றவுணர்ச்சி குறைகிறது, ’அடிப்படையில் நான் நல்லவன்தான், இந்தச் சமூகம்தான் என்னைக் கெட்டவனாக்கிவிட்டது’ என்று நம்பத் தொடங்கியிருக்கிறேன், நன்றி – பெயர் வெளியிட விரும்பவில்லை, மும்பை.\n* காதலிக்கும்போது, அவர் நல்லவராகதான் இருந்தார், கல்யாணத்துக்குப்பிறகுதான் அவருடைய சுபாவம் மாறிவிட்டது, எதற்கெடுத்தாலும் திட்டு, சந்தேகம், என்னை மனைவியாக இல்லை, ஒரு மனுஷியாகக்கூட மதிப்பதில்லை, இப்படிப்பட்ட ஒருவரையா காதலித்தேன் என்கிற வேதனையில் மூழ்கியிருக்கிற நான், அவ்வப்போது எங்களுடைய பழைய, இனிய நினைவுகளைத் திரும்பவும் வாழ்ந்து பார்ப்பதற்கு இந்தத் தளம் உதவுகிறது, இதில் வரும் காதலரை வெட்டி, என்னுடைய நிஜக் கணவர்மீது ஒட்டிவிடமுடிந்தால் மிகவும் நன்றாக இருக்கும், அதற்கான தொழில்நுட்பம் வளரும்வரை, ‘திரும்பிப் போகலாம்’ இணைய தளம்தான் என்னுடைய தோழி, வழிகாட்டி, குரு, கடவுள் எல்லாமே, நன்றி – குங்குமா, சென்னை.\n* பல ஆண்��ுகளுக்குமுன்னால், நான் பள்ளியில் படித்த காலத்தில், திருக்குறள் மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் போட்டியில் இரண்டாவது பரிசு பெற்றேன், அதன்பிறகு, இன்றுவரை எனக்கு வாழ்க்கையில் வேறு எந்தப் பரிசும் கிடைக்கவில்லை, பிறந்தநாள் பரிசுகள்கூட.\nஇந்த வேதனையை மறக்க, எனக்கு ‘திரும்பிப் போகலாம்’ தளம் உதவுகிறது, என்னுடைய அந்தப் பரிசு அனுபவத்தை இதுவரை நாற்பது, ஐம்பதுமுறை மீண்டும் கண் முன்னே வாழ்ந்து பார்த்திருக்கிறேன், ஒவ்வொருமுறை பரிசு வாங்கும்போதும், எனக்குள் தன்னம்பிக்கை பொங்குகிறது, நம்மால் இன்னும் நிறைய சாதிக்கமுடியும் என்கிற எண்ணம் உருவாகிறது, நன்றி – கணேசன், மதுரை\n* என் மகன்கள் இருவரும் இப்போது அமெரிக்காவில் இருக்கிறார்கள், என்னதான் அவர்களுடன் அடிக்கடி தொலைபேசியில், இணைய அரட்டையில் பேசினாலும், அருகருகே உட்கார்ந்து மகிழ்வதுபோல் வருமா இப்போதெல்லாம் அவர்களுடைய தினசரி நடவடிக்கை நினைவுகளை எங்களுடன் இணைத்து நாங்கள் மகிழ்ச்சியாக வாழ்கிறோம், மகன்களுடன் ஒரே வீட்டில் வசிப்பதுபோல் உணர்கிறோம், நன்றி – நரசிம்மன், சுமதி, தாம்பரம்\nஇது ஒரு சிறிய சாம்பிள்தான், இதுபோல் இன்னும் எண்ணற்ற அனுபவங்களை, பாராட்டுகளை எங்களுடைய இணைய தளத்தில் வாசிக்கலாம்.\nஒருபக்கம் எங்களுக்குப் பாராட்டுகள் குவியும் அதே நேரத்தில், ’திரும்பிப் போகலாம்’ இணைய தளம் இயற்கைக்கு எதிரானது என்று பல எதிர்மறை விமர்சனங்களும் எழுந்துள்ளன. அவற்றுக்குப் பதில் விளக்கம் சொல்லவேண்டிய கடமை எங்களுக்கு உண்டு.\nமுதலாவதாக, ‘திரும்பிப் போகலாம்’ இணைய தளத்தைக் கடுமையாக விமர்சிக்கிறவர்கள் யாரும், இதன் சேவைகளைப் பயன்படுத்திப் பார்த்தவர்கள் இல்லை, சும்மா வெளியில் இருந்துகொண்டு இவர்கள் கூச்சல் போடுவதற்கு வேறு உள்நோக்கங்கள் இருக்கின்றன.\nபழைய நினைவுகளை மனத்தில் மறுபடி வாழ்ந்து பார்க்காதவர்கள் அநேகமாக யாருமே இல்லை. அதையே நிஜத்தில் வாழ்ந்து பார்ப்பதற்கான ஒரு வாய்ப்பை நாங்கள் தருகிறோம், இதில் என்ன தவறு இருக்கமுடியும்\nதினந்தோறும் ஆயிரக்கணக்கான உறுப்பினர்கள் எங்களுடைய தளத்தில் லட்சக்கணக்கான நினைவுகளைப் பதிவு செய்கிறார்கள், மறுபடி வாழ்ந்து பார்க்கிறார்கள், இத்தனை பேரின் ஆதரவு எங்களுக்குக் குவிவதால், பலருக்குப் பொறாமை, அவர்கள்த��ன் எங்களுடைய தளம் தவறானது என்று தொடர்ந்து பிரசாரம் செய்கிறார்கள்.\nஅவர்கள் எல்லோருக்கும் நாங்கள் சொல்ல விரும்புவது ஒன்றுதான், ஒரே ஒருமுறை எங்கள் தளத்துக்குள் வந்து பாருங்கள், ஏதேனும் ஒரு பழைய நினைவைப் பதிவு செய்து, மறுபடி வாழ்ந்து பாருங்கள், அதன்பிறகு நீங்கள் திரும்பிச் செல்லவேமாட்டீர்கள், அதற்கு நாங்கள் உத்திரவாதம்\nஇந்தத் தளத்துக்கு முதன்முறை வருகை தரும் உங்களுக்கு, ஒரு சிறப்புப் பரிசு. இரண்டு நிமிட நினைவு ஒன்றை மீண்டும் வாழ்ந்து பார்க்கும் அபூர்வமான அனுபவத்தை முற்றிலும் இலவசமாக வழங்குகிறோம்.\nகீழே உள்ள பொத்தானை க்ளிக் செய்து, ’திரும்பிப் போகலாம்’ இணைய தளத்தில் உறுப்பினராகுங்கள், உங்களுடைய இரண்டு நிமிட அனுபவத்தைப் பதிவு செய்யுங்கள், அதனை மறுபடி இன்னொருமுறை வாழ்ந்து பாருங்கள்.\nஇந்த அனுபவம் உங்களுக்கு முழுத் திருப்தி அளிக்கும் என நாங்கள் உறுதியாக நம்புகிறோம். இதை நேருக்கு நேர் அனுபவித்து நிச்சயபடுத்திக்கொண்டபின்னர், நீங்கள் எங்களுடைய முழுமையான சேவையைப் பணம் செலுத்திப் பெற்றுக்கொள்ளலாம்.\nஒருவேளை உங்களுக்கு இதில் திருப்தி இல்லாவிட்டால், நாங்கள் உங்களை எந்தவிதத்திலும் வற்புறுத்தப்போவதில்லை, அந்த இரண்டு நிமிடங்களின் முடிவில் நீங்கள் உடனடியாக இந்தத் தளத்தை மூடிவிட்டு வெளியே சென்றுவிடலாம். அதன்பிறகு உங்களை எப்போதும் தொந்தரவு செய்வதில்லை என்று நாங்கள் உறுதியளிக்கிறோம்.\nநன்றி, கீழே ‘க்ளிக்’குங்கள், வாழ்க்கையை மீண்டும் நல்லவிதமாக வாழுங்கள், அட்வான்ஸ் வாழ்த்துகள்\n’தமிழோவியம்’ இணைய இதழின் தீபாவளி மலரில் வெளியாகியுள்ள எனது கட்டுரை ஒன்று –> http://www.tamiloviam.com/site/\nஅனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்\n1948 ஜனவரி 21ம் தேதி. டெல்லி. பிர்லா இல்லம்.\nடெல்லி போலிஸ் டி.ஐ.ஜி.யாகிய டி. டபிள்யூ. மெஹ்ரா காந்தியைப் பார்க்கக் காத்திருந்தார். அவருடைய நேர்த்தியான சீருடையின்மீது குளிருக்கு வசதியாக ஓர் ஓவர்கோட். உள்ளுக்குள் நூற்று மூன்று டிகிரி ஜூரம் கொதித்துக்கொண்டிருந்தது.\nஆனால் இன்றைக்கு அவர் லீவ் எடுக்கமுடியாது. அவசியம் காந்தியைப் பார்க்கவேண்டும். நிறையப் பேசவேண்டும்.\nமுந்தின நாள் மாலைதான் மகாத்மா காந்தியின் பிரார்த்தனைக் கூட்டத்தில் சில விஷமிகள் ஊடுருவியிருந்தார்கள். மதன்லால் என்ற இருபது வயது இளைஞன் ஒரு வெடிகுண்டைக் கொளுத்திவிட்டுத் தப்பி ஓடும்போது பிடிபட்டிருந்தான்.\nநல்லவேளையாக அந்த வெடிவிபத்தில் யாருக்கும் உயிர் இழப்போ, காயங்களோ இல்லை. முக்கியமாக காந்திமீது ஒரு சின்னக் கீறல்கூட விழவில்லை.\nஆனால் அதற்காக டெல்லி போலிஸ் நிம்மதிப் பெருமூச்சு விடமுடியவில்லை. குண்டு வெடித்துப் புகை ஓய்ந்த அடுத்த சில நிமிடங்களுக்குள் அவர்களுடைய அடுத்த பிரச்னை ஆரம்பமாகிவிட்டது.\nகாந்தியின் பிரார்த்தனைக் கூட்டத்தில் வெடிகுண்டு வைத்ததாகக் கைது செய்யப்பட்ட மதன்லால் தனி ஆள் இல்லை என்று தெரிகிறது. ‘வோ ஃபிர் ஆயேகா’ என்று அவன் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருக்கிறான்.\n‘வோ ஃபிர் ஆயேகா’ … ‘அவன் மறுபடி வருவான்\nஅதைத்தான் மதன்லால் சொல்ல மறுக்கிறான். நிஜமாகவே தெரியவில்லையா அல்லது சொல்லக்கூடாது என்று பிடிவாதமாக முரண்டு பிடிக்கிறானா\nமெஹ்ராவின் கட்டளைப்படி டெல்லி போலிஸ் மதன்லாலைப் பிழிந்து நொங்கெடுத்திருந்தார்கள். அத்தனை அடி, உதையையும் வாங்கிக்கொண்டு ஒருசில வார்த்தைகளைதான் கக்குகிறானேதவிர ‘வோ ஃபிர் ஆயேகா’ என்பது யாரைப்பற்றி என்றுமட்டும் தெளிவாகச் சொல்ல மறுக்கிறான்.\nமதன்லாலை வழிக்குக் கொண்டுவருவது ஒரு பெரிய விஷயமில்லை. ஆனால் அதற்குள் அவனுடைய கூட்டாளிகளைக் கண்டுபிடிக்கவேண்டும். அவர்கள் மறுபடி காந்தியின்மீது குறிவைத்துவிடாதபடி தடுக்கவேண்டும். ஒருவேளை அவர்கள் மீண்டும் இந்தப் பக்கம் புறப்பட்டு வந்தால் வாசலிலேயே பிடித்து உள்ளே தள்ளவேண்டும். அத்தனைக்கும் பெரியவருடைய ஒத்துழைப்பு தேவை.\nமெஹ்ரா நம்பிக்கையோடு காத்திருந்தார். காந்தியைக் காப்பாற்றுவது தன்னுடைய தனிப்பட்ட கடமை என்று அவருக்குத் தோன்ற ஆரம்பித்திருந்தது.\nசிறிது நேரத்தில் மெஹ்ராவுக்கு அழைப்பு வந்தது. கைகளைக் குவித்து வணங்கியபடி உள்ளே சென்றார். ‘வாழ்த்துகள் பாபு\n’ காந்தியின் குரல் சற்றே பலவீனமாக ஒலித்தது. சில நாள்களுக்கு முன்பாக அவர் நிகழ்த்திய உண்ணாவிரதம் அவருடைய உடம்பை குறுக்கிப்போட்டிருந்தது.\nஆனாலும் அவருடைய கம்பீரம்மட்டும் குறைந்ததாகத் தெரியவில்லை.\nமெஹ்ரா மரியாதையாக பதில் சொன்னார். ‘நாங்க உங்களுக்கு ரெண்டு விஷயத்துக்காக வாழ்த்துச் சொல்லணும் பாபுஜி. போன வாரம் உங்க உண்ணாவிரதம் வெற்றிகரமா முடிஞ்சதுக்காக\nஒரு வாழ்த்து, நேத்து பாம் விபத்தில நீங்க உயிர் பிழைச்சதுக்காக இன்னொண்ணு.’\nகாந்தி சிரித்தார். ‘நான் என்னோட வாழ்க்கையைக் கடவுள் கையில ஒப்படைச்சுட்டேன்.’\n‘இருந்தாலும் உங்க உயிரைக் காப்பாத்தவேண்டியது எங்க பொறுப்பில்லையா\n‘இங்கே பிர்லா ஹவுஸ்ல பாதுகாப்பை அதிகம் பண்ணியிருக்கோம்’ என்றார் மெஹ்ரா. ‘இனிமே பிரார்த்தனைக்கு வர்ற ஒவ்வொருத்தரும் ஏதாவது ஆயுதம் வெச்சிருக்காங்களான்னு பரிசோதனை செய்யாம உள்ளே விடப்போறதில்லை. அதுக்கு உங்க அனுமதி வேணும்.’\n‘நான் இதை ஒப்புக்கமுடியாது’ என்றார் காந்தி. ‘அவங்க பிரார்த்தனைக்காக வர்றாங்க. ஒரு கோவிலுக்குள்ள வர்றவங்களைத் தடுத்து நிறுத்திச் சோதனை போடுவீங்களா\n‘அதில்ல பாபுஜி. உங்களைக் கொல்லறதுக்கு ஒரு பெரிய கூட்டமே அலையறதா எங்களுக்குத் தகவல் கிடைச்சிருக்கு. அவங்க இங்கே நுழைஞ்சிடாம பார்த்துக்கணுமில்லையா\nகாந்தி மீண்டும் சிரித்தார். முந்தின நாள் பிரார்த்தனைக் கூட்டத்தில் குண்டு வெடித்தபோதுகூட அவருக்கு ஏதும் விபரீதமாகத் தோன்றவில்லை. ராணுவ வீரர்கள் ஏதோ ஆயுதப் பயிற்சி நடத்துகிறார்கள் என்றுதான் நினைத்துக்கொண்டார்.\nஆனால் இப்போது அவருக்கு நிலைமையின் தீவிரம் புரிய ஆரம்பித்திருந்தது. நேற்றைக்கு வெடித்தது ஒற்றைக் குண்டு அல்ல, ஒரு பெரிய சதித் திட்டத்தின் ஆரம்பப் புள்ளி என்று உணர்ந்துகொண்டிருந்தார்.\nஇன்று காலையில்கூட ஒரு தொண்டர் அவரிடம் சொன்னார். ‘பாபுஜி, நேத்திக்கு அந்தப் பையன் வெச்ச வெடிகுண்டைப் பத்தி எல்லோரும் பரபரப்பாப் பேசிக்கறாங்களே. எனக்கென்னவோ அது ஒரு பெரிய பிரச்னையாத் தெரியலை. ஒரு சாதாரண விஷயத்தை இவங்க எல்லோருமாச் சேர்ந்து ஊதிப் பெரிசாக்கிட்டாங்க-ன்னு நினைக்கறேன்.’\nஅப்போதும் காந்தியால் புன்னகை செய்யமுடிந்தது. ‘முட்டாள், இதுக்குப் பின்னாடி ஒரு பெரிய சதித் திட்டம் இருக்கறது உனக்குப் புரியலையா\nஅந்தத் தொண்டருக்குப் புரியவில்லை. டி.ஐ.ஜி. மெஹ்ராவுக்குப் புரிந்திருந்தது. அதனால்தான் பிர்லா இல்லத்துக்குப் பாதுகாப்பை அதிகப்படுத்துவதாக முடிவெடுத்திருந்தார்.\nஆனால் காந்தி இதனை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்தச் சதிகாரர்களால் தன் உயிருக்கு ஆபத்து வரக்கூடும் என்கிற விஷயம் தெளிவாகத் தெரிந்தபோதும் ‘எனக்குப் பாதுகாப்பு ராமர்மட்டும்தான்’ என்று சொல்லிவிட்டார்.\n‘பாபுஜி, அந்தப் பையன் மதன்லாலோட கூட்டாளிங்க மறுபடி இங்கே வரமாட்டாங்க-ங்கறது என்ன நிச்சயம்\n‘ஆஃபீசர், என் வாழ்க்கையை எப்போ முடிக்கணும்ங்கறது அந்த ராமருக்குத் தெரியும். அவர் ஒரு முடிவெடுத்துட்டார்ன்னா லட்சக்கணக்கான போலிஸ்காரங்க பாதுகாப்புக்கு வந்தாலும் என்னைக் காப்பாத்தமுடியாது. அதேசமயம் என்னால இந்த உலகத்துக்கு இன்னும் ஏதாவது பிரயோஜனம் இருக்குன்னு ராமர் நினைச்சார்ன்னா, நிச்சயமா அவர் என்னைச் சாக விடமாட்டார்.’\nகாந்தி ஒரு முடிவெடுத்துவிட்டால் அதை யாராலும் மாற்றமுடியாது என்பது மெஹ்ராவுக்குத் தெரியும். பெருமூச்சோடு எழுந்துகொண்டார். ‘பாபுஜி, தயவுசெஞ்சு இங்கே பிரார்த்தனைக் கூட்டத்துக்கு வர்றவங்களைப் பரிசோதனை செய்யறதுக்காவது அனுமதி கொடுங்களேன்\n‘கூடாது. நீங்க அப்படி ஏதாவது செஞ்சீங்கன்னா நான் இங்கே இருக்கமாட்டேன். உடனடியா டெல்லியை விட்டுக் கிளம்பிடுவேன்.’\nகடைசியில் காந்தியின் பிடிவாதம்தான் ஜெயித்தது. அன்று மாலை பிரார்த்தனைக் கூட்டத்தில் போலிஸ் காக்கிச்சட்டைகள் ஒன்றுகூடத் தென்படவில்லை. பிரார்த்தனைக்காக வந்த மக்களை யாரும் பரிசோதனை செய்யவில்லை – பத்து நாள் கழித்து நாதுராம் விநாயக் கோட்ஸே துப்பாக்கியோடு வந்தபோதுகூட தடுக்காமல் உள்ளே அனுமதித்துவிட்டார்கள்.\nமற்ற விஷயங்களில் எப்படியோ. ‘என்னுடைய காவலுக்குப் போலிஸ்காரர்கள் தேவை இல்லை’ என்கிற காந்தியின் கொள்கையை அவரது சீடர்கள் மறக்காமல் பின்பற்றுகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்வதற்கான ஒரு வாய்ப்பு சென்ற வாரத்தில் அமைந்தது.\nபெங்களூரு குமாரகிருபா சாலையோரமாக குதிரைப் பந்தயங்கள் தூள் பறக்கும் ரேஸ் கோர்ஸ். அங்கிருந்து சற்றுத் தொலைவு நடந்தால் ஆடம்பரம் வழியும் பச்சைப்பசேல் கால்ஃப் மைதானம். இவை இரண்டுக்கும் நடுவே அந்த அமைதியான வளாகம் இருக்கிறது.\nமுதல் கட்டடத்தில் ‘காந்தி பவன்’ என்றெழுதிய பெயர்ப்பலகை துருப்பிடித்துக் கிடக்க, பக்கத்தில் உள்ள ‘கஸ்தூரிபா பவன்’க்குமட்டும் யாரோ புதுசாகப் பெயின்ட் அடித்திருக்கிறார்கள்.\nஆனால் இரண்டு கட்டடங்களிலும் வாசல்கள் அகலத் திறந்து கிடக்கின்றன. பாதுகாப்புக்கு யாரும் இல்லை.\nபெங்களூரில் மூன்று, நான்கு வீடுகளைக் கொண்ட தக்கனூண்டு அபார்ட்மென்ட்களுக்குக்கூட 24*7 செக்யூரிட்டிகளை உட்காரவைப்பதுதான் சம்பிரதாயம். இந்த ‘வாட்ச்மேன்’கள் நாள்முழுவதும் செய்தித்தாள் படித்தபடியோ, வீட்டு உரிமையாளர்களுக்குக் கார் துடைத்துக் கழுவி எக்ஸ்ட்ரா சம்பாதித்தபடியோ, நடுப்பகலிலும் குறட்டை விட்டுத் தூங்கியபடியோ நேரத்தைப் போக்கினாலும்கூட ஒரு சாஸ்திரத்துக்கு அவர்கள் இருந்தால்தான் கட்டடத்துக்குப் பாதுகாப்பு என்பது ஐதீகம்.\nஅதோடு ஒப்பிடும்போது அத்தனை பெரிய ‘காந்தி பவ’னில் காக்கிச் சட்டைக் காவலர்கள் யாரும் தென்படாதது ரொம்ப ஆச்சர்யமாக இருந்தது. ‘அண்ணல் காட்டிய வழியம்மா’ என்று பாதுகாப்புச் செலவை மிச்சப்படுத்துகிறார்களோ என்னவோ\nகாந்தி பவனுக்குள் நுழைந்தவுடன் வலதுபக்கம் ஓர் அகலப்பாட்டைப் படிகள் மேலேறுகின்றன. அதன்வழியே சென்றால் ‘மகாத்மாவின் வாழ்க்கை புகைப்படக் கண்காட்சி’ என்று அறிவிக்கும் அறை வாசலில் மூன்று கருப்பு நிறப் பூட்டுகள் தொங்குகின்றன.\n சுற்றிலும் ஆள் அரவம் இல்லை. இடது பக்கமிருந்த ‘வினோபா அறை’யும் பூட்டப்பட்டிருந்தது.\nஇங்கேயே எவ்வளவு நேரம் காத்திருப்பது இறங்கிக் கீழே போய்விடலாமா என்று யோசித்தபோது எங்கிருந்தோ இரண்டு வெள்ளைப் புறாக்கள் படபடத்தபடி பறந்து வந்தன. சுவரிலிருந்த காந்தி ஓவியத்தின் காலருகே அவை வந்து உட்கார்ந்த அழகை நான் அப்படியே புகைப்படம் எடுத்திருந்தால் சத்தியமாக யாரும் நம்பியிருக்கமாட்டார்கள்.\nசுமார் ஐந்து நிமிடக் காத்திருப்புக்குப்பிறகும் யாரும் வருவதாகத் தெரியவில்லை. புறாக்கள்கூட போரடித்துக் கிளம்பிச் சென்றுவிட்டன. நானும் படிகளில் கீழே இறங்கினேன். இடதுபக்கம் அலுவலகம். அங்கேயும் விளக்கு எரிந்ததேதவிர மானுடர்கள் யாரையும் காணமுடியவில்லை.\nஅலுவலகத்துக்குப் பக்கத்தில் ஓர் அகல மேஜை போட்டு அன்றைய ஆங்கில, கன்னடச் செய்தித்தாள்களைப் பரத்தியிருந்தார்கள். அவையும் படிக்க ஆளின்றிக் கிடந்தன.\nயாராவது வரும்வரை ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’வில் ‘பேஜ் 3’ படித்துக்கொண்டு காத்திருக்கலாமா என்று யோசித்தபோது வலதுபக்கம் ஓர் அறையின் கதவுகள் திறந்தன. அங்கே ‘க்ரந்தாலய்’ (நூலகம்) என்று எழுதப்பட்டிருந்தது.\nநூலகத்தினுள் சற்றுமுன் வெளியேறிச் சென்றவரைத்தவிர வேறு வாசகர்கள் யாரும் இல்லை. ஒரே ஒரு பெண்மணி கம்ப்யூட்டரில் எதையோ தேடிக்கொண்டிருந்தார். அவரை நெருங்கி ‘இந்த ஃபோட்டோ எக்ஸிபிஷன் எப்போ திறப்பாங்க மேடம்\n‘அது ஆகஸ்ட் 15 டைம்லமட்டும்தாங்க திறக்கறது’ கூலாகச் சொன்னார் அவர்.\n‘இது தினமும் திறந்திருக்கும். மார்னிங் 10:30 டு ஈவினிங் 5.’\nபெங்களூரு காந்தி பவனைப்பற்றி எனக்குச் சொல்லி அனுப்பிய நண்பர்கள் எல்லோரும் காந்தியின் வாழ்க்கையை விவரிக்கிற அந்தப் புத்தகக் கண்காட்சியைதான் வியந்து புகழ்ந்திருந்தார்கள்.\nஆனால் அதற்கு இன்னும் ஏழெட்டு மாதம் காத்திருக்கவேண்டும் என்பதால் இப்போதைக்கு அந்த நூலகத்தை அலசத் தீர்மானித்தேன்.\nசுமார் 750 சதுர அடிப் பரப்பளவு கொண்ட நல்ல பெரிய அறை அது. அதில் நான்கு நீண்ட வரிசைகளாகப் புத்தகங்கள் அடுக்கப்பட்டிருந்தன. நடுவில் பெரிய மேஜை வைத்து மாத இதழ்கள், வாராந்தரிகளைப் பரப்பியிருந்தார்கள்.\nஇது என்னமாதிரி நூலகம் என்பதைப் புரிந்துகொள்வதற்காக எல்லா அலமாரிகளையும் ஒருமுறை வலம் வந்தேன். பெரும்பாலும் ஆங்கிலம், ஹிந்தி, கன்னடப் புத்தகங்கள்தான்.\nஆங்காங்கே தமிழ், தெலுங்கு, ஒரியா, பெங்காலி, மலையாளம் என்று சகல இந்திய மொழிகளையும் பார்க்கமுடிந்தது. குழந்தைகளுக்கென்று தனிப் பிரிவு.\nஆச்சர்யமான விஷயம், அங்கிருந்த புத்தகங்களில் பெரும்பாலானவை காந்தி எழுதியவை. அல்லது அவரைப்பற்றி மற்றவர்கள் எழுதியவை.\nமுக்கியமாக நான்கு அலமாரிகள் நிறைய அடுக்கப்பட்டிருந்த காந்தியின் புத்தகங்களைப் பார்க்கப் பார்க்கத் திகைப்பாக இருந்தது. ஒரு முழு நேரப் பத்திரிகையாளர் அல்லது எழுத்தாளர்கூட அந்த அளவுக்கு எழுதிக் குவித்திருக்கமுடியாது. அரசியல், சமூகப் பணிகளுக்கு இடையே அவர் இவ்வளவு எழுத நேரம் ஒதுக்கியிருக்கிறார் என்றால் எழுத்தின்மூலம் சமுதாய மாற்றத்தைக் கொண்டுவந்துவிடமுடியும் என்பதில் அவருக்கு எப்பேர்ப்பட்ட நம்பிக்கை இருந்திருக்கவேண்டும் என்பது புரிந்தது.\nஅளவு ஒருபக்கமிருக்க, அவர் எழுதத் தேர்ந்தெடுத்திருக்கும் தலைப்புகளும் மிகுந்த ஆச்சர்யம் அளித்தன. ஆன்மிகம், அரசியல், தத்துவம், இயற்கை உணவு, வாழ்க்கைமுறை, கல்வி, சுய முன்னேற்றம், பிரார்த்தனை என்று அவர் எதையும் விட்டுவைத்திருப்பதாகத் தெரியவில்லை. கதை, கவிதைகூட எழுதியிருக்கிறாரோ என்னவோ, என் கண்ணில் படவில்லை.\nகாந்தி எழுத���யது ஒருபக்கமிருக்க, அவருடன் நெருங்கிப் பழகிய நண்பர்கள், தொண்டர்கள், பக்தர்கள் எழுதிய புத்தகங்கள் இன்னும் ஏராளமாகக் குவிந்திருக்கின்றன. குறிப்பாகக் காந்தியின் உதவியாளர்களாகப் பணியாற்றிய மகாதேவ தேசாய் மற்றும் ப்யாரேலால் இருவரும் அவரைப்பற்றித் தலையணை தலையணையாகப் பல ஆயிரம் பக்கங்களுக்கு எழுதிக் குவித்திருக்கிறார்கள்.\nஇதுதவிர காந்தியோடு சுதந்தரப் போராட்டத்தில் பணியாற்றிய தலைவர்கள், நண்பர்கள், எப்போதோ ஒரு பிரார்த்தனைக் கூட்டத்தில் காந்தியைப் பார்த்து நாலு வரி பேசியவர்கள், ரயில் நிலையத்தின் ஓரத்திலிருந்து அவரைத் தரிசித்துப் புளகாங்கிதம் அடைந்தவர்கள், அவருடன் பழகிப் பேட்டி எடுத்த பத்திரிகையாளர்கள், புகைப்படக்காரர்கள், பணிவிடை செய்த தொண்டர்கள் என மேலும் பலர் தங்களுடைய அனுபவங்களைப் பரவசத்தோடு எழுதிவைத்திருக்கிறார்கள். ‘பம்பாயில் காந்தி’, ‘கல்கத்தாவும் காந்தியும்’, ‘காந்தியின் தென் இந்தியப் பயணம்’ என்று வேறொரு குறுக்குவெட்டுத் தோற்றத்தில் அவரது வாழ்க்கையை அலசுகிற புத்தகங்களும் உள்ளன. உலகெங்குமிருந்து பத்திரிகையாளர்களும் பேராசிரியர்களும் காந்தியின் கொள்கைகள், கோட்பாடுகளை அலசி ஆராய்ந்து மற்ற பெரும் தலைவர்களோடு ஒப்பிட்டு எழுதியிருக்கிறார்கள்.\nகாந்தியைப்பற்றித் தெரிந்துகொள்ளவேண்டும் என்று நினைக்கிறவர்களுக்கு அந்த நூலகம் ஒரு பொக்கிஷம். துப்பாக்கிக் காவல் தேவைப்படாத புதையல்.\nபெங்களூர்வாசிகள் முடிந்தால் ஒரு சனிக்கிழமை (ஞாயிறு வார விடுமுறை) குழந்தைகளையும் கூட்டிக்கொண்டு ஒரு நடை சென்று வாருங்கள் \nஎங்களுக்கு ரோபோ பார்க்க தான் நேரம் இருக்கிறது . யாராவது செலிப்ரிட்டி இந்த எடத்துக்கு வந்தால் தான் இங்கேயும் கூட்டம் கூடும் \nஇத எல்லாம் பார்க்க நல்ல வேலை காந்தி உயிரோட இல்லை \nஇங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்\nஎன் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)\nஎன். சொக்கன் இணையத் தளம்\nமின்னூல்களைப் பதிப்பித்தல்: எழுதுவோருக்கிருக்கும் வாய்ப்புகள்\n03. விக்கிபீடியா என்ன சொல்கிறது\n04. எனது நூல்களை வாங்க – இந்தியாவில் (Nhm.in)\n05. எனது நூல்களை வாங்க – அமெரிக்கா, மற���ற நாடுகளில் (Amazon.com)\n06. சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் எனது நூல்கள்\n02. கிழக்கு பதிப்பகம் ஆர்குட் குழுமம்\n06. ’மினிமேக்ஸ்’ பதிப்பகம்: ஓர் அறிமுகம்\n08. ச. ந. கண்ணன்\nநிதானமாக வாசிக்கலாம் (இணையத்தில் வெளியான எனது கதைகள் / கட்டுரைகள்)\nநான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:\nட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்\nதமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்\nசெவிநுகர் கம்பன் CD : சில விமர்சனங்கள்\nட்விட்டர் வெற்றிக்கதை : A TwitReview By @eestweets\nமகாத்மா காந்தி கொலை வழக்கு (Chennai Avenue Nov 2012)\nமகாத்மா காந்தி கொலை வழக்கு: விமர்சனம்\nஷேக்ஸ்பியர் : நாடகமல்ல உலகம் : Review By Uma Ganesh\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88_%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-10-19T13:23:54Z", "digest": "sha1:FPOFE4OSL5CF7TSRCMQLIGZINOCTHQBC", "length": 9117, "nlines": 103, "source_domain": "ta.wikipedia.org", "title": "மத்தியப் பிரதேசம் மாநிலங்களவை உறுப்பினர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "மத்தியப் பிரதேசம் மாநிலங்களவை உறுப்பினர்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தியப் பாராளுமன்றத்தின் 245 உறுப்பினர்கள் கொண்ட மேலவையான மாநிலங்களவை அல்லது ராஜ்ய சபா என அழைக்கப்படுகின்ற அவையில் மத்தியப் பிரதேசம் மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்து எடுக்கப்பட்டவர்கள் 11 பேர். இவர்களின் பதவிக்காலம் ஆறு ஆண்டுகள்.\nதற்போது மத்தியப் பிரதேசத்திலிருந்து தேர்வு செய்யப்பட்டு மாநிலங்களவையில் உறுப்பினர்களாக இருப்பவர்கள், அவர்கள் சார்ந்துள்ள கட்சி போன்றவை கொண்ட பட்டியல் இது.\n1 அணில் மாதவ் தேவ் பாரதிய ஜனதா கட்சி 30-06-2010 முதல் 29-06-2016 வரை\n2 பிரபாத் ஜா பாரதிய ஜனதா கட்சி 10-04-2008 முதல் 09-04-2014 வரை\n3 நாராயண்சிங் கேசரி பாரதிய ஜனதா கட்சி 03-04-2006 முதல் 02-04-2012 வரை\n4 டாக்டர் சந்திரன் மித்ரா பாரதிய ஜனதா கட்சி 30-06-2010 முதல் 29-06-2016 வரை\n5 டாக்டர் விஜயலட்சுமி சத்கோ இந்திய தேசிய காங்கிரஸ் 30-06-2010 முதல் 29-06-2016 வரை\n6 ரகுநந்தன் சர்மா பாரதிய ஜனதா கட்சி 10-04-2008 முதல் 09-04-2014 வரை\n7 அர்ஜீன் சிங் இந்திய தேசிய காங்கிரஸ் 03-04-2006 முதல் 02-04-2012 வரை\n8 மாயா சிங் பாரதிய ஜனதா கட்சி 10-04-2008 முதல் 09-04-2014 வரை\n9 கேப்டன்சிங் சோலங்கி பாரதிய ஜனதா கட்சி 04-08-2009 முதல் 02-04-2012 வரை\n10 அனுசுயா உய்கே பாரதிய ஜனதா கட்சி 03-04-2006 முதல் 02-04-2012 வரை\n11 விக்ரம் வெர்மா பாரதிய ஜனதா கட்சி 03-04-2006 முதல் 02-04-2012 வரை\nமாநிலங்களவை உறுப்பினர் பதவியிலிருப்பவர்கள் இடையில் பதவியை விலக்கிக் கொண்டாலோ அல்லது இறப்பால் அந்த இடம் காலியாகும் நிலையில் முன்பிருந்த உறுப்பினரின் பதவிக் காலத்தின் மீதமுள்ள காலத்திற்கு மட்டுமே புதிய உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டவர் பதவி வகிக்க முடியும்.\nஆந்திரப்பிரதேசம் · அருணாச்சலப் பிரதேசம் · அசாம் · பீகார் · சட்டீஸ்கர் · கோவா ·குஜராத் · அரியானா · இமாச்சலப் பிரதேசம் · ஜம்மு காஷ்மீர் · ஜார்க்கண்ட் · கர்நாடகா · கேரளா · மத்தியப் பிரதேசம் · மகாராஷ்டிரா · மணிப்பூர்· மேகாலயா · மிசோரம் · நாகாலாந்து · தில்லி · நியமன உறுப்பினர்கள் · ஒரிசா · புதுச்சேரி · பஞ்சாப் · இராஜஸ்தான் · சிக்கிம் · தமிழ்நாடு · திரிபுரா · உத்திரப் பிரதேசம் · உத்தர்காண்ட் · மேற்கு வங்காளம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 சூன் 2019, 04:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/user-review/datsun-go-cross/excellent-car-46079.htm", "date_download": "2021-10-19T10:53:34Z", "digest": "sha1:IBWIH3XXPWDHCUUTDEAIAI6CCKTRDHW6", "length": 6871, "nlines": 203, "source_domain": "tamil.cardekho.com", "title": "excellent car - User Reviews டட்சன் கிராஸ் 46079 | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nமுகப்புபுதிய கார்கள்டட்சன்கிராஸ்டட்சன் கிராஸ் மதிப்பீடுகள்Excellent Car\nடட்சன் கிராஸ் பயனர் மதிப்புரைகள்\nஎல்லா கிராஸ் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா கிராஸ் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஎல்லா டட்சன் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 15, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 11, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 15, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 08, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: nov 10, 2021\n* கணக்கிடப்பட்ட விலை புது டெல்லி\nஆல் car காப்பீடு companies\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.sonakar.com/2020/08/blog-post_83.html", "date_download": "2021-10-19T11:29:17Z", "digest": "sha1:DI3BKDBIFXPTE7WMRRES46D7MROQPP4J", "length": 5768, "nlines": 52, "source_domain": "www.sonakar.com", "title": "தென் பகுதியில் பெரமுன முன்னணியில்! - sonakar.com", "raw_content": "\nHome NEWS தென் பகுதியில் பெரமுன முன்னணியில்\nதென் பகுதியில் பெரமுன முன்னணியில்\nகாலி - மாத்தறை மாவட்டத்தின் பல தொகுதிகளில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றியீட்டி முன்னணியில் திகழ்கிறது.\nஇறுதியாக ஹக்மன, தெனியாய மற்றும் ரத்கம முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் அனைத்து இடங்களிலும் பொதுஜன பெரமுன முன்னணியிலும் சமகி ஜன பல வேகய இரண்டாமிடத்தையும் பெற்றுள்ளது.\nதேசிய அளவில் இதுவரையான முடிவுகளின் பிரகாரம் பெரமுன 637,938 வாக்குகளைப் பெற்று 68 வீத மக்கள் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளதுடன் சமகி ஜன பல வேகய 159, 312 வாக்குகளுடன் 17.09 வீத மக்கள் அங்கீகாரத்தையும், தேசிய மக்கள் சக்தி 53,289 வாக்குகளுடன் 5.72 வீத அங்கீகாரத்தையும், ஐக்கிய தேசியக் கட்சி 24,285 வாக்குகளுடன் 2.60 வீத அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது.\nரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி பாரிய சரிவை சந்தித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nபணமில்லை 'ஜனாஸாவை' வைத்துக்கொள்: குடும்பங்கள் அதிரடி\nகொழும்பில் கொரேனா பாதிப்பிருப்பதாக தெரிவிக்கப்படும் ஜனாஸாக்களை அடக்குவதற்கு 58,000 ரூபா கேட்பது நிரந்தர வழக்கமாக உருவெடுத்துள்ள நிலையில்,...\nஇஷாலினி தன்னைத் தானே எரியூட்டியதாக வாக்குமூலம்\nரிசாத் பதியுதீன் வீட்டில் பணிபுரிந்த நிலையில் தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த மலையகத்தைச் சேர்ந்த இஷாலினி தன்னை...\nஅசாத் கைது செய்யப்பட்டது தெரியாது: பிரதமர்\nதேசிய ஐக்கிய முன்னணி தலைவர் அசாத் சாலி கைது செய்யப்பட்டது தனக்குத் தெரியாது என தெரிவித்துள்ளார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச. பயங்கரவாத தடுப்புச...\nஜனாஸா எரிப்பு வழக்கை விசாரணைக்கு ஏற்க மறுப்பு\nஜனாஸா எரிப்புக்கு எதிராக தொடுக்கப்பட்டிருந்த வழக்கினை விசாரணைக்கு ஏற்பதா இல்லையா என்பதனடிப்படையிலான விசாரணைகள் இரு தினங்களாக இடம்பெற்ற ந...\nநான் 'நல்ல மாதிரியான' முஸ்லிம்: முசம்மில்\nமுஸ்லிம் குடும்பம் ஒன்றில் பிறந்து இஸ்லாமிய கலாச்சாரத்தில் வளர்ந்தவன் என்ற அடிப்படையில் மாற்று மதத்தவரைத் திருமணம் செய்துள்ள போதிலும் தான்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhdesiyam.com/2007/03/", "date_download": "2021-10-19T10:57:09Z", "digest": "sha1:BWDMPP3AXX6WOO22YEQAJNABUGOSHJ35", "length": 185708, "nlines": 1392, "source_domain": "www.tamizhdesiyam.com", "title": "March 2007 ~ தமிழ்த்தேசியப் பேரியக்கம் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதமிழக மீனவர்கள் மீது சிங்கள கடற்படையினர் துப்பாக்கிச் சூடு: 4 பேர் பலி\nசிறிலங்கா கடற்படையினர் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் கடலில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.\nஇச்சம்பவம் இன்று வியாழக்கிழமை மதியம் அளவில் இடம்பெற்றதாக இராமேஸ்வரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகன்னியாகுமரி மாவட்டம் சின்னத்துறை கிராமத்தைச் சேர்ந்த ஆறு மீனவர்கள் கடலில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, அப்பகுதிக்கு வந்த சிறிலங்கா கடற்படையினர் எதுவித முன்னெச்சரிக்கையோ அறிவிப்பையோ விடுக்காது, திடீரென கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூட்டினை நடத்தியுள்ளனர்.\nமீன்பிடித் தொழில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பகுதி சிறிலங்கா கடல் எல்லைக்கு உட்பட்டது என்றும், இருப்பினும் எச்சரிக்கை வழங்காது துப்பாக்கிச் சூட்டினை சிறிலங்காப் படையினர் நடத்தியது தவறு என்றும் இந்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.\nசிறிலங்கா கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டில் சம்பவ இடத்தில் இருவரும் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் இருவர் கடலில் வீழ்ந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.\nபடுகாயமடைந்த இருவர் கன்னியாகுமரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nகொல்லப்பட்டவரில் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் மற்றைய இருவரின் சடலங்கள் இதுவரை கிடைக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.\nமீனவர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து கன்னியாகுமரிப் பகுதியில் பதற்றம் நிலவுவதாக தமிழகத்திலிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.\nகடந்த புதனன்று மக்கள் தொலைக்காட்சியில் நீதியின் குரல் நிகழ்ச்சியில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொது செயலாளர் தோழர் பெ.மணியரசன் கூறியது போல் டில்லியும் சிங்களவனும் கூட்டு சேர்ந்து தமிழினத்தை அழிக்க செய்யும் சதிகளில் ஒன்றாக இச்சம்பவம். நடந்துள்ளது..\nசிங்கள கடற்படையி���லின் கொடூரத் தாக்குதலில் இருந்து தமிழக மீனவரை காப்பாற்றத் தவறிய இந்திய கப்பற்படைக்கும், டில்லி ஏகாதிபத்தியத்திறகும் எமது கடுமையான கண்டனங்கள்...\nஈழப் போராளிகளுடன் செய்த எந்த உடன்பாட்டையும் சிங்கள இனவாத அரசுகள் செயல்படுத்தியதில்லை. உலக நிர்பந்தத்திற்காய் பணிந்து அந்த உடன்பாடுகளில் சிங்கள அரசின் அதிபர்கள் கையெழுத்திட்டிருக்கின்றனர். ஆனால் சிங்கள இனவாதக் கட்சிகளின் எதிர்ப்புகளின் காரணமாக, சிங்கள ராணுவத்தின் வெறி காரணமாக, அந்த உடன்பாடுகளை அவர்கள் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டனர். இவைதான் கடந்த பல பத்தாண்டுகளாக ஈழ மக்கள் கண்ட அனுபவம்.\nஉடன்பாடுகளால் எந்த பயனும் ஏற்படவில்லை என்பது மட்டுமல்ல, தமிழ் இனத்தையே அழிக்கின்ற ஈனச் செயலை சிங்கள அரசும் ராணுவமும் தொடர்ந்து செய்து வருகின்றன. எனவே வேறு வழியின்றி \"ஈழப் பிரச்சினைக்குத் தனி ஈழம் தான் தீர்வு\" என்று மாவீரர் எழுச்சி நாளில் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் அறிவித்திருக்கிறார்.\nசிங்கள இனவாதத்திற்குச் சேவை செய்யும் சில தமிழ்ப் புல்லுருவிக் குழுக்கள் உண்டு. அந்த குழுக்கள் கொழும்பு நகரில் இனவாத அரசின் அரவணைப்பில் அச்சத்தோடு இருக்கின்றன. அவர்கள்தான் ஈழத்துப் பிரதிநிதிகள் என்று ராஜபட்சேக்கள் நாடகமாடுகிறார்கள். ஈழத்தமிழர்களெல்லாம் புலிகள் அல்ல என்று ராஜபட்சே புதிய தத்துவம் சொல்லியிருக்கிறார்.\nவிடுதலைப் புலிகள்தான் ஈழமக்கள் ஏற்றுக்கொண்ட தளபதிகள். அதனால் தான் ஜெனிவாவில் சிங்கள அரசின் பிரதிநிதிகள் ஈழப்போரளிகளின் பிரதிநிதிகளுடன் பேசினார்கள். ஆனால் கொழும்பிற்கு வந்தால் குரலை மாற்றிக் கொள்கிறார்கள். \"அரசு பயங்கரவாதம்\" என்றால் என்ன என்பதற்கு இன்றைக்கு ஈழத்தில் சிங்கள இனவாத அரசு இலக்கணம் எழுதிக் கொண்டிருக்கிறது.\nஒவ்வொரு ஊரையும் இரண்டாகப் பிரித்து சிங்கள ராணுவம் முகாம் போட்டிருக்கிறது. ஆங்காங்கே ஈழத்தமிழர்களை சிறை வைத்திருக்கிறது. நடமாடுவதற்குக் கூட அவர்களுக்கு உரிமை இல்லை. பாடிப் பறந்த தமிழ் குயில்கள் ராணுவச்சிறைக்குள் அடைக்கப்படுகின்றன. யாழ்ப்பாண நெடுஞ்சாலை அடைக்கப்பட்டதால் எண்ணிப் பார்க்க முடியாத அளவிற்கு எல்லா உணவுப் பொருட்களின் விலையும் உயர்ந்திருக்கிறது. ஒரு கிலோ இஞ்ஜி விலை 2 ஆயிரம் ���ூபாய். ஒரு முட்டை விலை 50 ரூபாய். இப்படி செயற்கை பஞ்சத்தை உருவாக்கி ஈழ மக்களை உயிரோடு சித்திரவதை செய்கிறது.\nஈழத்து இளைஞர்களுக்கோ, பெண்களுக்கோ எந்தப் பாதுகாப்பும் இல்லை. யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில்தான் விடுதலைப் புலிகள் தயாராகிறார்கள் என்று ஒரு அபாண்டத்தை இப்போது அவிழ்த்து விட்டிருக்கிறது. இதன் பொருள் என்னவெனில் அந்தப் பல்கலைக் கழகத்தை சிங்கள இனவாத அரசு மூடுவதற்கு முயற்சிக்கிறது என்று பொருள்.\nசிங்கள இனவாத கட்சிகளுக்கு ராஜபட்சே கொத்தடிமையாகிவிட்டார் என்று அண்மையில் சந்திரிகாவே குற்றம் சாட்டியிருப்பது நினைவிருக்கலாம். எனவே ராஜபட்சேக்களின் பரிபாலனத்தில் ஈழத்து மக்களுக்கு எந்த உரிமையும் கிடைக்கப் போவதில்லை. எனவே ஈழமக்களுக்கு தனி நாடுதான் வழி என்ற நிலைக்கு அவர்களை சிங்கள இனவாதிகளே தள்ளிவிட்டிருக்கிறார்கள். அதனைத்தான் மாவீரர் நினைவு தினத்தில் பிரபாகரன் பிரகடனம் செயிதிருக்கிறார்.\nதமிழர்களின் தேசியப் பிரச்சினைகளுக்கு சிங்களத் தலைவர்கள் நியாயமான தீர்வினை ஒருபோதும் முன் வைக்க மாட்டார்கள் என்பது தெள்ளத்தெளிவாகிவிட்டது. ஆகவே நடக்க முடியாத காரியத்தில் நம்பிக்கை வைத்து அதே பழைய பாதையில் (பேச்சுவார்த்தை) நடப்பதற்கு இனியும் நாங்கள் தயாராக இல்லை. அதில் பயனும் இருக்கப் போவதில்லை என்று அவர் அனுபவத்தை உணர்வுப் பூர்வமாக வெளியிட்டிருக்கிறார்.\nஇது நூற்றுக்கு நூறு உண்மை. இப்போது சிங்கள அதிபர் ராஜபட்சே இன்னொரு நாடகம் நடத்துகிறார். ஈழ மக்களுக்கு எந்த அளவு உரிமை அளிப்பது என்பதனை ஆராய அனைத்துக் கட்சிக் குழுவை அமைத்திருக்கிறார். அந்தக் குழுவில் ஈழப் போராளிகளுக்கு இடமில்லை. நாடாளுமன்ற ஈழ உறுப்பினர்களுக்கு இடமில்லை. சிங்கள அரசுக் கட்சி, எதிர்க்கட்சி, இரண்டு சிங்கள இனவாதக் கட்சிகள், ஈழ மக்கள் குப்பைத் தொட்டியில் வீசிவிட்ட சில கண்காணிக் குழுக்கள் இடம் பெற்றிருக்கின்றன. இந்தக் குழுவின் பணி என்ன தெரியுமா இலங்கையில் பஞ்சாயத்துக்களுக்கு எப்படி உரிமை அளிப்பது இலங்கையில் பஞ்சாயத்துக்களுக்கு எப்படி உரிமை அளிப்பது எவ்வளவு உரிமை அளிப்பது என்று தீர்மானிப்பதுதான் இந்தக் குழுவின் வேலையாகும். இந்தக் குழுவினர் அண்மையில் இந்தியாவிற்குச் சுற்றுலா வந்தனர். அப்படியே பஞ்சாயத்து��ாஜ் மத்திய மந்திரி மணிசங்கர அய்யரையும் சந்தித்தனர்.\nஈழ மக்கள் தங்கள் ஊராட்சிகளுக்கு அதிகாரம் கேட்டா போராடுகிறார்கள் சிங்கள மக்களுக்கு ஈடாக தங்களுக்கு சம உரிமை கோரிப் போராடுகிறார்கள். ஆனால் இல்லாத ஊருக்குப் போகாத வழியை ராஜபட்சேக்கள் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஈழத்தமிழர்களை தங்கள் நாட்டுக் குடிமக்களாக அங்கீகரிப்பதற்குக்கூட மறுக்கிறார்கள். ஆகவே அரசியல் உரிமைக்காகப் போராடும் ஈழ மக்களை ஊருக்கு ஊர் பிளவுபடுத்த ஆலயங்களையும், மாதா கோவில்களையும் ராணுவப் பாசறைகளாக்கி இருக்கிறார்கள்.\nராஜபட்சே அதிபராக பொறுப்பேற்ற பின்னர்தான் ஈழம் முழு ராணுவமாகியது. ஈழப்பிரச்சினைக்கு ராணுவ ரீதியாகத் தீர்வு காண்பதற்கே விரும்புகிறார் என்பது தெளிவாகிறது. எனவே மண்ணின் மானம் காக்க ஈழப்போராளிகளை ராஜபட்சே உருவாக்கி இருக்கிறார். அவர்கள் இப்படித் தொடர்ந்து பிரச்சினைகளை உருவாக்குகிறார்கள். ஆனால் தீர்வுக்கு வழி தெரியவில்லை. ராணுவத்தை நம்புகிறார்கள். இதுவரை எவரிடமும் உதவி கோரி ஈழப்போரளிகள் கையேந்தி நின்றதில்லை. அமரர் எம்.ஜி.ஆர் தந்த நிதியை மட்டும் அவர்கள் பெற்றுக் கொண்டனர்.\nஇஸ்ரேலின் இனவாத வெறியை எதிர்த்து பாலஸ்தீன வீரர்கள் போராடுகிறார்கள். அவர்களுக்குப் பின்னே அரபு நாடுகள் அணிவகுக்கின்றன. அதே போல் லெபனானில் போராடி வரும் இஸ்புல்லா போராளிகளுக்குப் பின்னே அண்டை நாடுகள் துணை நிற்கின்றன. ஆனால் ஈழப்போராளிகளுக்கு ஆதரவாக எந்த நாடும் நிற்கவில்லை. எந்த நாடும் உதவி செய்ததில்லை. ஆனால் உலகம் முழுமையும் பரவியிருக்கும் உணர்வுள்ள தமிழர்கள் உதவிக்கரம் நீட்டுகிறார்கள். உலகத் தமிழர்களின் உதவி தேவை என்று முதன்முதலாக பிரபாகரன் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.\nதங்களது ஆதரவுக் குரலைத் தொடர்ந்து வழங்கிவரும் தமிழ்நாட்டு மக்களும் தலைவர்களும் ஈழவிடுதலைப் போராட்டத்திற்கு உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார். இரத்த உறவுக்காரர்களின் உதவியைத்தான் அவர் நாடுகிறார். ஈழப்பிரச்சினையில் இன்றைய மைய அரசு சிங்கள இனவாத அரசிற்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகிறது. தமிழக அரசிற்குத் தெரியாமலே கோவையில் சிங்கள காவல்துறையினருக்குப் பயிற்சி அளித்தன; அதனைச் சட்டமன்றத்திலேயே கலைஞர் கண்டித்தார்.\nஅடுத்து அந்த போலிஸ்காரர்களை பெங்களூருக்கு அனுப்பி பயிற்சி கொடுத்தார்களே தவிர தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கவில்லை. இன்றைக்கு போர் விமானங்களை ஓட்ட சிங்கள விமானப் படையினருக்கு சண்டிகாரில் பயிற்சி அளிக்கிறார்கள். அந்த விமானங்கள் நாளை ஈழத்தின்மீதுதான் குண்டுமாரி பொழியும். இதனைத் தெரிந்தே செய்கின்ற மைய அரசின் பெரிய அதிகாரிகள் நாளை என்ன சொல்வார்கள் தனி ஈழக்கோரிக்கைகளை ஆதரிக்க மாட்டோம் என்பார்கள்.\nஅவர்கள் ஒன்றை மறந்து விடக்கூடாது. ஒன்றுபட்ட இலங்கையில் ஈழத்திற்கு சுயாட்சி என்ற நிலையை இதுவரை சிங்கள அரசிடம் இந்திய அரசு தெரிவித்து வந்தது. அந்த யோசனையை இன்றுவரை அந்த அரசு ஏற்றுக்கொண்டதில்லை. அதன் விளைவுதான் தனித்தமிழ் ஈழம்தான் ஒரே வழி என்ற ஈழப்போராளிகளின் பிரகடனமாகும்.\nநன்றி: தமிழர் கண்ணோட்டம் பொங்கல் மலர் 2007\nபுதிய பொருளாதாரக் கொள்கையின் சீரழிவுகள்\nபுதிய பொருளாதாரக் கொள்கையின் சீரழிவுகள்\nஇந்தியாவின் வறுமைக்கும் நோய்களுக்கும் கல்லாமைக்கும், சமுக - பொருளியல் எற்றத்\nதாழ்வுகளுக்கும் ஆங்கிலேயரின் ஏகாதிபத்திய ஆட்சியே காரணம் என்று இந்தியத்\nதேசியவாதிகள் 1947க்கும் முன் கூறி வந்தனர்.\nசுதந்திர இந்தியாவில், சோசலிசவாதி என்று சொல்லப்பட்ட நேருவின் ஆட்சியில், ஒரு\nசனநாயக அரசமைப்பில் அளிக்கப்பட வேண்டிய அடிப்படை வசதிகள் நமக்குத் தரப்படும்\nஎன்று உழைக்கும் மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் ஏமாற்றமே எஞ்சியது. அடுத்து\nஆட்சிக்கு வந்த இந்திராகாந்தி ''மன்னர் மானிய ஒழிப்பு'' பெரிய தனியார் வங்கிகளை\nநாட்டுடைமையாக்கல்'' என்ற திட்டங்களைச் செயல்படுத்தினர். ''வறுமையே வெளியேறு''\nஎன்று முழங்கினார். நேரு 19 ஆண்டுகளும் இந்திரா காந்தி 17 ஆண்டுகளும் முடிசூடா\nமன்னர்களாக ஆட்சி செய்தனர். ஆனால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள்\nநிறைவேற்றப்படவில்லை. உழைக்கும் மக்களின் வாழ்வில் பெரிய முன்னேற்றம்\nநேருவின் பேரன் இராசிவ் காந்தி 1984இல் ஆட்சிப் பொறுப்பேற்றார். தன்னுடைய\nஅம்மாவைவிட பாட்டனை விட வேகமாகப் பேசினார். இந்தியா, அய்ரோப்பாவில் ஏற்பட்ட\nதொழிற்புரட்சிக் காலத்தைத் தவறவிட்டு விட்டது. இப்போது தகவல் தொழிழ்நுட்ப\nயுகம். இதை இந்தியா தவறவிடக் கூடாது. 21ஆம் நூற்றாண்டு இந்தியாவின் நூற்றாண்டாக\nஇருக்க வேண்டும் என்று கூறி மக்களிடையே புதிய நம்பிக்கையை ஊட்டினார்.\nதாராளமயம், தனியார் மயம், உலகமயம் என்கின்ற புதிய பொருளாதாரக் கொள்கை\nஇந்தியாவில் நடைமுறைப்படுத்துவதற்கான வலிமையான அடித்தளம் அமைத்தவர் அவரே\nகுப்பை மேட்டிலிருந்த ஒன்று கோபுரக் கலசமானதுபோல் 1991இல் இராசிவ்காந்தி\nகொலையுண்டதால் நரசிம்மராவ் தலைமை அமைச்சரானார். உலக வங்கியிலும் பன்னாட்டு\nநிதியத்திலும் பெரும் பதவிகள் வகித்த மன்மோகன் சிங் நிதியமைச்சரானார். இவர்கள்\nஇருவரும் உலகவங்கியும், பன்னாட்டு நிதியமும் அமெரிக்காவும் இடுகின்ற\nகட்டளைகளைத் தலைமேல் ஏற்று இந்தியாவின் சந்தையை ஏகாதிபத்திய நாடுகளின்\nபெருந்தொழில் வணிக நிதிக்குழுமங்களுக்கு முழுமையாகத் திறந்துவிட்டனர்.\n1989 இல் பெர்லின் சுவர் தகர்க்கப்பட்டது. அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு\nஅறைகூவலாகவும், உலகம் முழுவதும் உழைக்கும் மக்களுக்கு நம்பிக்கை ஒளியாகவும்\nவிளங்கிவந்த சோவியத் ஒன்றியம் 1990இல் வீழ்ந்தது. பனிப்போர் முடிவுக்கு வந்தது.\nஇந்தப் பின்னணியில் உலக மயத்திற்கு மாற்று இல்லை என்ற பரப்புரை வளர்முக\nநாடுகளின் மக்களிடையே ஊடகங்களாலும், படித்த- பணக்கார ஆளும் வர்க்க\n மரத்தின் உச்சியில், கிளையில் தேன் கூடு இருக்கிறது; அதற்கு நேர்\nகீழகாக நின்று கொள்; தேன் சொட்டும் என்று சொல்வது போல் இருக்கிறது\nஆட்சியாளர்களின் வாக்குறுதிகள். இப்பிறவியில் வருணாசிரம் உனக்கு விதித்துள்ள\n என்று இந்து ஆதிக்க வாதிகள் உழைக்கும்\nகீழ்ச்சாதி மக்களுக்குச் சொன்னதையே சற்று மாற்றிச் சொல்கிறார் இன்றைய\nஇற்தியாவின் மொத்த தேசிய உற்பத்தியின் வளர்ச்சி (2007-2012) 8 விழுக்காட்டை\nஎட்டிவிட்டது. 11 ஆவது அய்ந்தாண்டு திட்டக்காலத்திற்குள் இது 10 விழுக்காடு\nஎன்ற நிலையை எய்திவிடும். கடந்த இரண்டு ஆண்டுகளில் பங்குச் சந்தையின்\nகுறியீட்டு எண் 7000 என்ற நிலையிலிருந்து 15000 என்று உயர்ந்துள்ளது. இந்தியப்\nபொருளாதாரம் உறுதிப் பாடான வளர்முக நிலையில் இருப்பதன் அடையாளம் இது.\nவெளிநாட்டு மூலதனம் குவிதற்கான சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. அந்நியச் செலவாணிக்\nகையிருப்பு தேவைக்கு மேல் உள்ளது. மொத்த விற்பனை விலை உயர்வு என்பது 5\nவிழுக்காட்டிற்குள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியா அணு ஆயுத\nவல்லரசாகிவிட்டது. 2020 இல் மாபெரும் வல்லரசு ந��டாக உருவெடுக்கும் என்பன போன்ற\nசெய்திகள் நாள்தோறும் முதன்மைப்படுத்தப்படுகின்றன. ஆனால் இவற்றால் ஏழை எளிய\nமக்களாக இருக்கும் குப்பனுக்கும் சுப்பனுக்கும் என்ன பயன் கிடைத்துள்ளது என்பதே\nவேலை வாய்ப்பை உருவாக்காத வளர்ச்சி\nபுதிய பொருளாதாரக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டதாகக் கூறப்படும்\nவளர்ச்சி என்பது புதிய வேலைவாய்ப்பை உருவாக்கவில்லை என்பது புதிய வேலைவாய்ப்பை\nஉருவாக்கவில்லை என்பதே கண்கூடான உண்மையாக இருக்கிறது. எனவே இது வேலைவாய்ப்பு\nஇல்லா வளர்ச்சி (Jobless Growth) என்று கூறப்படும் குற்றச் சாட்டை\nஉலகமயமாக்கலின் தீவிர ஆதரவாளர்களால் கூட மறுக்க முடியவில்லை. மேலும் இது\nஇருக்கின்ற வேலை வாய்ப்புகளையும் பறித்துக் கொண்டு வருகிறது. அமெரிக்காவில்\nகடந்த பத்து ஆண்டுகளில் முப்பது இலக்கத்திற்கு மேற்பட்டவர்கள் தம் வேலையை\nஇழந்துள்ளனர். அதிக மூலதனமும் உயர் தொழில் நுட்பமும் கொண்டதாக உற்பத்தி முறை\nமாற்றப்படுவதால் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைக்கப்படுகிறது. பொருள்களின்\nஉற்பத்தி என்பது பின்னுக்குத் தள்ளப்பட்டு சேவைப்பிரிவு முதன்மை நிலையைப்\nபெற்றுவிட்டது. இதனால் தொழிலாளர்களும், தொழிற்சங்க இயக்கமும் தன் செல்வாக்கை\nமொத்த உழைப்பாளர் எண்ணிக்கையில் தொழிற்சாலைகளில் வேலை செய்வோரின் விழுக்காடு\n1950-70 காலத்தில் மின்னணுவியல் தொழில்நுட்பம் முதன்மையானதாக இருந்தது.\nஅதன்பின், தகவல் தொழில்நுட்பமே (Information Technology-IT) உலகப்\nபொருளாதாரத்தை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. எல்லா நாடுகளிலும் மேல்\nதட்டினராக, பணம் படைத்தோராக உள்ளவர்களின் துய்ப்பிற்காக பொருள்கள் உற்பத்திச்\nசெய்யப்படுகின்றன. தொலைக்காட்சிப் பெட்டிகள், குளிர்சாதனப்பெட்டிகள், இரு சக்கர\nவாகனங்கள், கார்கள், தொலைபேசி, கைபேசி கணிணி, மற்ற ஆடம்பரப்பொருள்கள் முதலானவை\nஉற்பத்தி செய்யப்படுகின்றன. இவையனைத்தும் பன்னாட்டு நிறுவனங்களால் உற்பத்தி\nசெய்யப்படுகின்றன. உலகச் சந்தை முதல் நிலையில் உள்ள 200 பன்னாட்டு\nநிறுவனங்களின் ஆதிக்கத்தின் கீழ் உள்ளது. 200இல் 83 அமெரிக்காவின் பன்னாட்டு\nமுதலாளிய உற்பத்தி முறையுடன் உருவான தொழிலாளர் வர்க்கம் 1800க்குப்பின்\nதொடர்ந்து கடுமையாகப்போராடிப் பெற்ற 8மணிநேர வேலை, சங்கம் அமைக்கும் உரிமை,\nவேலை நிறுத்த உரிமை, நிலையான வேலை, குறிப்பிட்ட அளவு ஊதியம், ஊதிய உயர்வு,\nபோனசு, மருத்துவ வசதி, வீட்டு வசதி, வைப்பு நிதி முதலானவை புதிய பொருளாதாரக்\nகொள்கையால் பறிக்கப்படுகின்றன. சேவைப்பிரிவுகளில் சங்கம் அமைக்கும் உரிமை\nமறுக்கப்படுகின்றது. அரியானா மாநிலம் குர்கானில் உள்ள சப்பான் பன்னாட்டு\nநிறுவனமான ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் தயாரிக்கும்\nதொழிற்சாலையில் 2005 சூலை மாதம் சங்கம் அமைக்க முயன்ற தொழிலாளர்களை அரியானா\nகாவல்துறை கடுமையாகத் தாக்கியது. தங்கள் சங்கத்தை ஹோண்டா நிர்வாகம் அங்கீகரிக்க\nவேண்டும். வேலை செய்யும் இடத்தின் சூழ்நிலையை மேம்படுத்த வேண்டும் என்று\nமட்டுமே தொழிலாளர்கள் கோரிக்கை வைத்தனர். 63 தொழிலாளர்களின் மண்டை உடைந்தது.\n400 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர். தொழிலாளர்களின் மனைவியரும் அன்னையரும்\nகாவல் துறையுடன் மோதிடத் துணிந்து நின்றனர். இதைப் பற்றியெல்லாம் மய்ய அரசு\nவருந்தவில்லை. சப்பான் நாட்டின் மோட்டார் தொழிற்சாலையில் தொழிலாளர்கள்\nகிளர்ச்சி செய்தால் அந்நிய நாட்டு மூலதனம் இந்தியாவுக்கு வருவது தடைப்படுமே\nஎன்று நாடாளுமன்றத்தில் தன் கவலையைத் தெரிவித்தது. தகவல் தொழில்\nநுட்பத்துறையில் தொழிற்சங்கம் என்பது பெயரளவில் மட்டுமே இருக்க வேண்டும் என்று\nகூறுகிறார் மேற்கு வங்க முதுலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சாரியா\n100 தொழிலாளர்களுக்கு மேல் பணிபுரியும் தொழிற்சாலைகளில் தொழிலாளர்களை\nவேலையிலிருந்து நீக்கவோ, கதவடைப்புச் செய்யவோ, தொழிற்சாலையை மூடவோ அரசின் முன்\nஅனுமதியைப்பெற வேண்டும் என்று தொழிற்தகராறு சட்டத்தில் உள்ள பிரிவை (V(b))\nநீக்கிவிட மத்திய அரசு முயன்று வருகிறது. 100 தொழிலாளர்கள் என்ற வரம்பை 1000\nதொழிலாளர்கள் என்று உயர்த்த வேண்டும் என்று 2001-02 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவு\nதிட்டத்தை நாடாளுமன்றத்தின் முன்வைத்து ஆற்றிய உரையின் போது அன்றைய நிதி\nஅமைச்சர் யசுவன் சின்கா கூறினார். இப்படிச் செய்தால் 90 விழுக்காடு\nதொழிற்சாலைகள் தொழிற்தகராறுச் சட்டத்திலிருந்து விடுபட்டுவிடும். 300\nதொழிலாளர்கள் வரை உள்ள தொழிற் சாலைகளுக்கு இச்சட்டம் பொருந்தாது என்று முடிவு\nஎடுக்கப்பட்டுள்ளது. இது 60 விழுக்காடு தொழிற்சாலைகளுக்கு விலக்கு\nஅளித்துவிடும். தொழிற்சங்க இயக்கம் அடியோடு முடங்கிவிட்டது. மே நாள் ஊர்வலங்கள்\nகூட நடத்தப்படுவதில்லை. மக்கள் திரள் போராட்டங்களில் முன்னிலை வகித்த நாட்டின்\nசனநாயகக் கட்டமைப்பில் பெரும் பங்காற்றிய தொழிலாளர் இயக்கம் நலிந்து\nமய்ய அரசும், மாநில அரசும், நீதித்துறையும் தொழிற் சங்க இயக்கங்களை\nஒடுக்குகின்றன. தமிழ்நாடு அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தின் போது முதலமைச்சராக\nஇருந்த செயலலிதா ஒன்றரை இலக்கம் அரசு ஊழியர்களை ஒரே சமத்தில் பணியிலிருந்து\nதூக்கி எறிந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் முதலமைச்சரின் சனநாயக\nஉரிமைப் பறிப்புப் போக்கைக் கண்டிப்பதற்குப் பதிலாக வேலை நிறுத்தம் செய்த அரசு\nஇந்தியாவில் இன்று 15 வயது முதல் 59 வயதில் 40கோடி பேர்கள் உள்ளனர். இவர்கள்\nஉழைக்கும் வயதினர் (Work force) எனப்படுகின்றனர். 0-15 வயதில் 20 கோடிக்\nகுழந்தைகளும் சிறுவர்களும் உள்ளனர். இவ்விருபிரிவினரும் சேர்ந்து 60கோடி.\nஎனவேதான் உலகிலேயே அதிக இளைஞர்களைக் கொண்ட நாடு இந்தியா என்று பெருமையுடன்\nபேசப்படுகிறது. ஆனால் தற்போது அழைக்கும் வயதினராக இருப்பவர்களுக்கு\nவேலைவாய்ப்பும் மற்ற அடிப்படை வாழ்க்கை வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளனவா\nஇளைஞர் பருவத்தை நெருங்கிக் கொண்டீருப்பவர்களுக்கு கல்வியும் வேலைவாய்ப்பும்\nஉழைக்கும் வயதினராக உள்ள 40கோடி மக்களுள் மய்ய அரசு, மாநில அரசுகள், பொதுத்துறை\nநிறுவனங்கள் மற்றும் தனியார்துறையில் அமைப்புசார் தொழிலாளர்களாக உள்ளவர்கள்\n3கோடி பேர்கள் உள்ளனர். தனியார் துறைகளில் முறையாக மாத ஊதியம் பெறுகின்ற ஆனால்\nஅமைப்பு சாரா தொழிலாளர்களாக இருப்பவர்கள் 3கோடி. இந்த 6 கோடிப் பேர்களும்\nஅவர்களின் குடும்பங்களும் தரமான அடிப்படை வசதிகளைப் பெறும் நிலையில் உள்ளனர்.\nசுயதொழில் செய்வோராக 20 கோடிப்பேர்களும் அன்றாடம் கூலி வேலைசெய்து பிழைப்போராக\n14 கோடி மக்களும் இருக்கின்றனர். கூலி வேலை செய்வோராக இருப்பவர்களில் 95\nவிழுக்காட்டினர் பட்டியல் குலத்தினர், பழங்குடியினர், பிற்பட்ட வகுப்பினரே\nஆவார். சுயதொழில் செய்வோருள் வெரும்பான்மையினர் சிறு விவசாயிகளாகவும்,\nகுத்தகைக்குப் பயிரிடுவோராகவும் சிறிய அளவில் தொழில்கள், வணிகம் செய்வோராகவும்\nஉள்ளனர். 40 கோடிப்பேர்களில், 4 கோடிப்பேர்கள் இந்திய அளவில் வேலைவாய்ப்பு\nஅலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர். தமிழ்நா���்டில் வேலைக்காக 54 இலக்கம் பேர்\nபதிவு செய்துள்ளனர். மேற்கு வங்கத்தில் 70 இலக்கம் பேர் வேலைக்காகப் பதிவு\nவாஜ்பாய் பிரதமராகப் பதவி ஏற்றதும் 10ஆவது அய்ந்தாண்டு திட்டக் காலத்திற்குள் 5\nகோடி வேலைகளைப் புதியதாக உருவாக்கி நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டத்தையே\nஒழித்துவிடப் போவதாக அறிவித்தார். வேளாண்மை போன்ற அடிப்படைத் தொழிழ்களில்\n92.6இலக்கம், தொழிற் துறைகளில் 145 இலக்கம், சேவைப்பிரிவுகளில் 252\nவேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று விரிவானதோர் பெரிய நூலை வாஜ்பாய் அரசு\nவெளியிட்டது. ஆனால் வேலையில்லாதார் எண்ணிக்கைதான் பெருகிவருகிறது.\nபுதியதாக உருவாகின்ற வேலைவாய்ப்பு என்பது பெரிய மூலதனத்துடன் பன்னாட்டு\nநிறுவனங்களால், இந்தியப் பெருமுதலாளிகளால் தொடங்கப்படும் சேவைப்பிரிவுகளிலும்,\nதானியங்கிவகைத் தொழிழ்களில் மட்டுமே உருவாகிறது. சில ஆயிரம் இடங்களுக்கான\nவேலையாக மட்டும் இவை உள்ளன. செயலலிதாவும் கலைஞர் கருணாநிதியும் நோக்கியா, ஹ\"ரோ\nஹோண்டா, மோட்டரோலா போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் சில நூறு கோடிகள் முதலீட்டில்\nதொழில்கள் தொடங்குவதற்கு ஒப்பந்தம் போடப்படும் காட்சிகள் ஊடகங்களில்\nமேற்கு வங்கத்தில் இந்தோனேசியாவின் சலீம் பெருங்குழுமம் ரூ.44,000 கோடிக்கு\nமுதலீடு செய்வதற்கு ஒப்பந்தமாகியுள்ளது. இதனால் 30,000 பேர்களுக்கு வேலை\nகிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 1.5கோடி முதலீடு செய்தால் ஒருவருக்கு\nவேலை என்பது எவ்வளவு கொடிய நிலை சலீம் குழுமம் என்ன தொழிலில் முதலீடு\n தொழில்நுட்பப் பூங்கா, அறிவுப்பூங்க, (Knowledge park) பெரிய\nவணிகவளாகம், உடல்நலப்பூங்கா (Health park) போன்றவைகளைத் தொடங்க மேற்கு வங்க\nஅரசு 5400 ஏக்கர் நிலத்தை அளிக்கிறது. இவற்றால் மேற்கு வங்கத்தில் உள்ள\n கொல்கத்தாவில் உள்ள வெகுமக்களுக்கு என்ன பயன்\nகொல்கத்தாவில் உள்ள அரசுப் பொது மருத்துவ மனையில் மருத்துவம் செய்து கொள்ளக்\nகொண்டு வரப்படும் குழந்தைகள் அதிக எண்ணிக்கையில் இறக்கின்றன. பெரிய செய்தியாக\nஇது வெளிவருகிறது. சலீம் குழுமம் தொடங்கும் நட்சத்திர மருத்துவமனைகளில் ஏழை\nஎளிய மக்களின் குழந்தைகளுக்கு இலவச மருத்துவம் செய்யப்படுமா\nஅமெரிக்காவில் 1950இல் 60இலக்கம் வேளாண் பண்ணைகள் இருந்தன. இவற்றைச் சார்ந்து\n25 விழுக்காடு மக்கள் இருந்தனர். இப்பண்ணைகள் தமக்��ுள் இணைந்து 2000இல் 20\nஇலக்கம் பணைகளாகி விட்டன. 2 விழுக்காடு மக்களே இவற்றைச் சார்ந்து வாழ்கின்றனர்.\nஅமெரிக்காவில் வேளாண்மை, வணிக வேளாண்மை (Agro-bussiness) யாகிவிட்டது. இந்திய\nநாட்டிலும் வணிக வேளாண்மையை உருவாக்கிடவே பன்னாட்டு நிறுவனங்களுடன் கூட்டுச்\nசேர்ந்து கொண்டு மாநில அரசுகள் அதற்கான செயலில் ஈடுபட்டு வருகின்றன. பன்னாட்டு\nநிறுவனங்களை கார்க்கில், கான்டினன்டல் போன்றவை வணிக வேளாண்மையில் ஈடுபட்டுள்ளன.\nஉலக தானியச் சந்தையில் 3இல் 2 பங்கு இவ்விரு நிறுவனங்களின் கட்டுப்பாட்டில்\nஉள்ளது. பூச்சி மருந்துச் சந்தையில் 84% பத்து பன்னாட்டு நிறுவனங்களிடம்\nஉள்ளது. அமெரிக்காவின் மொத்த உற்பத்தி மதிப்பில் வேளாண்மையின் பங்கு 2\n ஆனால் சேவைப்பிரிவின் பங்கு 72%.\nஇதேபோல் மொத்த உற்பத்தி மதிப்பில் வேளாண்மையின் பங்கு பிரான்சில் 2%\nசெருமனியில் 1%, பிரிட்டனில் 2% இந்நாடுகளில் வேளாண்மையைச் சார்ந்து வாழ்வோர்\nஎண்ணிக்கை முறையே 6%, 3%, 3% (உலக வங்கி அறிக்கை 2000) ஆகும். ஆனால்\nஅமெரிக்காவிலும் அய்ரோப்பிய நாடுகளிலும் ஓராண்டில் 360 மில்லியன் டாலர் (ரூ.\n15,20,000 கோடி) வேளாண் மானியம் தரப்படுகிறது. தொழில் வளர்ச்சி பெற்ற\nஇந்நாடுகளின் வேளாண்மையின் உயர் விளைச்சல் அதிக அளவில் இடுபொருள்கள்\nசார்ந்ததாகவும், முழுவரும் இயந்திரமயமானதாகவும் ஆகிவிட்டது. இடுபொருள்களான\nவிதை, உரங்கள், பூச்சிக் கொல்லி, களைக்கொல்லி, இயந்திரங்கள் ஆகியவற்றைத்\nதயாரிக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கே பெரும்பகுதி வேளாண் மானியம் போய்ச்\nஇந்தியாவிலும் முதலாளிய உற்பத்தியில் தயாரிக்கப்படும் இடுபொருள்கள் சார்ந்ததாக\nவேளாண்மை ஆக்கப்பட்டுவிட்டது. 1960களின் இறுதியில் தொடங்கப்பட்ட பசுமைப்பருட்சி\nமூலம் மேலைநாட்டு வேளாண்மை முறைகள் இங்கே புகுத்தப்பட்டன. இதனால் புன்செய்\nவேளாண்மை žர்குலைந்துவிட்டது. அந்தந்த பகுதிகளுக்குரிய, சூழலுக்கு ஏற்ற,\nவிதைகள் அழிந்து விட்டன. இரசாயன உரங்கள், பூச்சி மருந்துகளின் நஞ்சால் நிலமும்,\nநீரும் சுற்றுச் சூழலும் பாழ்பட்டுவிட்டன. இயந்திர மய வேளாண்மை வேளாண்\nதொழிலாளர்களின் வேலை வாய்ப்பைப் பறித்தது. விளைச்சலில் பெரும் தேக்கம்\nஏற்பட்டுவிட்டது. 1998 முதல் 2003 காலத்தில் 1,10,000 விவசாயிகள் தற்கொலை\nகாவிரித் தீர்ப்பும் களவு போன உரிமையும்\nநாற்புறமும் பகைவர் சூ��� நடுவில் சிக்கிக் கொண்டுள்ளது தமிழினம். மேற்புறத்தில் கன்னடர்கள், கீழ்ப்புறக் கடலில் சிங்களர், தென்மேற்கில் மலையாளிகள், வடக்கே தெலுங்கர்@ உச்சந்தலையிலோ தில்லியர்.\nஇந்த எதிரிகளுக்கு முகம் கொடுக்கும் ஆற்றல் தமிழினத்திற்கு இருக்கிறதா முகம் கொடுப்பதென்ன, எதிரிகளை முறியடிக்கும் ஆற்றலே தமிழினத்திற்கு உண்டு. ஆனால்...\nமயக்கத்தில் ஒரு பகுதி, உறக்கத்தில் ஒரு பகுதி, குழப்பத்தில் சிறு பகுதி, கொந்தளிப்பில் மறுபகுதி@ இதுவே இன்றையத் தமிழ் இனத்தின் நிலை.\nதமிழர்களுக்குக் கட்சித் தலைவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அரசியல் தலைவர்கள் இல்லை. உண்மையைச் சொல்வதெனில், அரசியல் அனாதையாகத் தமிழினம் இன்றுள்ளது. புரட்சிகரத் தமிழ்த் தேசியம் இப்பொழுது தான் முகிழ்த்து வருகிறது. போதிய வலிவினை இனிமேல் தான் அது பெற வேண்டும்.\nதண்ணீரின் அருமையைக் கூட அறிய முடியாத வகையில் தமிழ் மக்களைத் தேர்தல் அரசியல், உறக்கத்திலும் மயக்கத்திலும் ஆழ்த்தியுள்ளது.\nநீர்இன்று அமையாது உலகெனின், யார்யார்க்கும்\nநீர்இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்\nஉண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே\nஉண்டி முதற்றே உணவின் பிண்டம்\nஉணவெனப் படுவது நிலத்தோடு நீரே\nநீரும் நிலனும் புணரியோர் ஈண்டு\nஉடம்பும் உயிரும் படைத்திசி னோரே\n- குடபுலவியனார், புறநானூறு -18\nஇப்பொழுது பெட்ரோலுக்காக ஈராக்கில் படையெடுத்திருக்கிறது அமெரிக்க ஐக்கிய நாடுகள். அமெரிக்காவின் அக்கம் பக்கம் உள்ள நாடல்ல ஈராக். பத்தாயிரம் கிலோமீட்டருக்கு மேல், தொலைவுள்ள ஈராக்கின் மீது படையெடுத்து, தனது நாட்டிற்கு பெட்ரோலியத்தைக் கொள்ளையிட்டுச் செல்கிறது. அமெரிக்க ஐக்கிய நாடுகளில் ஏராளமாக பெட்ரோல் கிடைக்கிறது. அதை எடுக்காமல் சேமிப்பில் வைத்துள்ளது அந்நாடு. எதிர்காலத் தேவைக்கு அந்த இருப்பு இன்றியமையாததாம்.\nவருங்காலத்தில் ஒரு நாட்டின் தண்ணீர் வளத்தைக் கைப்பற்றுவதற்காக நாடுகளுக்கிடையே போர் நடக்கும் என்று இந்தியக் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கூறுகிறார். அப்போர் அணுஆயுதப் போராக இருக்கும் என்று எச்சரிக்கிறார். இக்கருத்தைத் தமிழ்நாட்டு வெலிங்கடன் இராணுவப் பயிற்சிக் கல்லூரியில் 24.02.2007 அன்று பேசியுள்ளார்.(தினமலர் 25.02.2007).\n'முதல் உலகப் போர் நாடுகளைப் பிடிப்பதற்கு நடந்தது. இரண்டாவது உலகப் போர் அரசியல் கொள்கைகளுக்காக நடந்தது. அண்மையில் நடந்த ஈராக் போர் எண்ணெய் வளத்தைக் கைப்பற்ற நடந்தது. எதிர்காலத்தில், தண்ணீர், எண்ணெய், இயற்கை வாயு, தங்கம், யுரேனியம், தோரியம் போன்ற வளங்களைக் கைப்பற்றவும் போர் நடக்கும்.\"\n'இந்தப் போரில் அணு ஆயுதங்களின் பயன்பாடே மிக அதிக அளவில் இருக்கும். மேலும், கொள்ளை நோயை உண்டாக்கும் கிருமிகளை வெளியேற்றுவது, மனித உயிரைப் பறிக்க ரசாயனங்களைப் பயன்படுத்துவது போன்றவை முக்கியமானவை\"\nகுடியரசுத் தலைவரின் எச்சரிக்கையைப் படிக்கும் போதே, நம் எதிர்காலத் தலை முறையினர் என்ன பாடுபடப் போகின்றார்களோ, என்ன ஆகப் போகிறார்களோ என்ற கவலை மனதைக் கவ்விக் கொள்கிறது.\nகாலங்காலமாகக் காவிரியில் தமிழர்க்கிருந்து வந்த உரிமையைக் கருவறுக்கும் வகையில் நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பு வந்த பின்னும், எதுவுமே நடக்காதது போல் நம் தமிழ் மக்கள் இருப்பது நமது கவலையை மேலும் அதிகப்படுத்துகிறது.\nமக்களைக் குற்றம் சொல்வது சரியல்ல. ஊடகங்களும் கட்சித் தலைமைகளும் கட்சி ஏடுகளும் தவறான தகவல்களைத் தமிழ் மக்களுக்குத் தந்தன@ தந்து கொண்டுள்ளன.\nகாவிரி நடுவர் மன்றம் இறுதித் தீர்ப்பு வழங்கிய 5.02.2007 அன்று காலையிலிருந்தே தில்லி ஆங்கிலத் தொலைக் காட்சிகளான என்.டி.டிவி, சி.என்.என்- ஐ.பி.என் போன்றவை, 'இன்று காவிரித் தீர்ப்பு: எதிர்பாருங்கள்-சிறப்புச் செய்திகள்\" என்று அறிவித்துக் கொண்டிருந்தன. தமிழ்த் தொலைக்காட்சிகளில் மக்கள் தொலைக்காட்சியைத் தவிர மற்றவை இதை கண்டு கொள்ளவே இல்லை.\nஅன்ற பிற்பகல் 2 மணிக்குத் தீர்ப்பு வழங்கப்பட்டது. உடனே மேற்கண்ட ஆங்கிலத் தொலைக்காட்சிகள் செய்தி வெளியிட்டு, அது தொடர்பான நேர்காணல்களை ஒளிபரப்பின. கர்நாடகாவில் பெங்களுர்-மைசூர் ஆகிய இடங்களிலிருந்து நேர்காணல்களை- மக்கள் பிரதிபலிப்புகளை நேரடியாக ஒளிபரப்பின. தமிழ் நாட்டிலிருந்தும் சில நேர்காணல்களை நேரடி ஒளிபரப்புச் செய்தன.\nதமிழகத்திற்கு 419 ஆ.மி.க(ஆயிரம் மில்லியன் கனஅடி - வு.ஆ.ஊ), கர்நாடகத்திற்கு 270 ஆ.மிக, புதுவைக்கு 7 ஆ.மி.க என்று அவை செய்தி வெளியிட்டன. அப்போது தமிழ்த் தொலைக்காட்சிகளான சன், ஜெயா, ராஜ் போன்றவற்றில் திரைப்படம், தொடர்கதைகள், கூத்து கும்மாளம் என்று நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்தன.\nஇது பற்றி செய்தி அலசல் நடத்த���ய மக்கள் தொலைக்காட்சி தமிழகத்திற்கு கர்நாடகம் தர வேண்டியது 419 ஆ.மி.க. என்ற கருத்திலேயே விவாதம் நடத்திக் கொண்டிருந்தது. அதில் கலந்து கொண்ட தலைவர்களும் அதே கருத்தில் பேசிக் கொண்டிருந்தனர்.\n2.30 மணிக்கெல்லாம், தமிழகத்திற்குக் கர்நாடகம் தரவேண்டியது 192 ஆ.மி.க. என்றும் அதில் 7 ஆ.மி.க. வை தமிழகம் புதுவைக்குத் தர வேண்டும் என்றும் மேற்படி ஆங்கிலத் தொலைக்காட்சிகளில் செய்தி வெளியானது.\nசற்றேறக் குறைய 4 மணிவாக்கில் தான் மக்கள் தொலைக்காட்சி அலசலில் 192 ஆ.மி.க. என்ற விவரம் பேசப்பட்டது. இக்கட்டுரையாளரிடம் தொலைபேசி வழி கருத்துக் கேட்ட போது, 'இது மோசடித் தீர்ப்பு\" என்று கூறினார். 'இத்தீர்ப்பை எதிர்த்து நாளையும் நாளை மறுநாளும், சென்னை, சிதம்பரம், திருத்துறைப்பூண்டி, தஞ்சாவூர், மதுரை, கோவை, சேலம், ஓசூர் ஆகிய இடங்களில் த.தே.பொ.க மற்றும் தமிழ்த் தேசிய முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்\" என்றார்.\nசிறிது நேரம் கழித்து மருத்துவர் இராமதாசின் தொலைபேசி நேர்காணல் ஒளிபரப்பானது. அதில் அவர் தெளிவாக 192 ஆ.மி.க என்றும், இது குறைவானது என்றும் கூறினார்.\nசன் தொலைக்காட்சியில் 419 ஆ.மி.க தமிழகத்திற்கு என்ற செய்தியைத் தொடர்ந்து போட்டுக் கொண்டிருந்தார்கள். தீர்ப்பு வந்த போது, தமிழக முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி தில்லியில் இருந்தார். அவருடைய கருத்து தொலைக்காட்சிகளில் வந்தது. 'ஞாயத்தீர்ப்பு@ ஆறுதல் அளிக்கிறது\" என்றார். அப்போது முதல்வருடன் தில்லியில் இருந்த தமிழகப் பொதுப்பணி அமைச்சர் துரைமுருகன், 'மகிழ்ச்சி, மகி;ழ்ச்சி\" என்று ஆனந்தக் கூத்தாடினார்.\nமறுநாள் காலை வந்த தினத்தந்தியில் தலைப்பில் கொட்டை எழுத்தில் 'காவிரியில் தமிழகத்திற்கு 419 டி.எம்.சி\" என்றும் அதன் கீழே அதை விட சிறிய எழுத்தில் கர்நாடகம் தர வேண்டியது 192 டி.எம்.சி என்றும் செய்தி வெளியி;டப்பட்டது. சி.பி.எம் நாளிதழான தீக்கதிர் 'தமிழகத்திற்கு 419 டி.எம்.சி தண்ணீர்\" என்று எட்டுக் கலக் கொட்டைச் செய்தி வெளியிட்டது. அதே போல் சி.பி.ஐ ஏடான ஐனசக்தி 'தமிழகத்திற்கு 419 டி.எம்.சி\" என்று முதல் பக்கத் தலைப்புச் செய்தி வெளியிட்டது.\nதினமணி 'தமிழகத்துக்கு 192 டி.எம்.சி\" என்றும், தினமலர் 'தமிழகத்துக்கு 185 டி.எம்.சி\" என்றும் செய்தி வெளியிட்டன.\nஇன்றுவரை தமிழக முதல்வரும் பொதுப்பணி அமைச்சர் துரைமுருகனும் காவிரித் தீர்ப்பு ஞாயமானது என்றும், கர்நாடகத்திற்குத் தான் கொஞ்சம் அதிகமாகக் குறைந்து விட்டது என்றும் கூறிக் கொண்டுள்ளனர்.\n'இத்தீர்ப்பு தமிழ்நாட்டிற்குப் பாதகமானது@ உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடுக்க வேண்டும்@ இப்பொழுது கொடுத்ததை நடைமுறைப்படுத்தச் சொல்ல வேண்டும்\" என்று, காலதாமதமாக 7.02.2007 அன்று ஒருநாள் மட்டும் காரசாரமான அறிக்கை வெளியிட்டதோடு அமைதியாகிவிட்டார் ஜெயலலிதா.\n'நடுநிலையில் வழங்கப்பட்ட தீர்ப்\"பென்று சி.பி.ஐ செயலாளர் தா.பாண்டியன் நாக்குத் தெறிக்க ஒலித்தார். சி.பி.எம், இத்தீர்ப்பை நிறைவேற்றுவதற்குரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்று கூறியது. திருமாவளவன் கலைஞர் நிலைபாட்டுடன் முரண்பாடு வந்துவிடாமல், 'இத் தீர்ப்பை செயல்படுத்துவதற்குரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்\" என்று கூறினார். தமிழகக் காங்கிரசும் இதே பாணியில் தான் பேசியது.\nஊடகங்களும் அரசியல் கட்சிகளும் இவ்வாறு, மயக்கத்தையும் குழப்பத்தையும் ஊட்டினால் மக்கள் என்ன செய்வார்கள் உழவர்கள் என்ன புரிந்து கொள்வார்கள் உழவர்கள் என்ன புரிந்து கொள்வார்கள் எனவே தான் மக்களைக் குறை சொல்வதில் பயனில்லை என்கிறோம்.\nகாவிரியில் கர்நாடகம், தமிழகம், கேரளம் ஆகியவற்றுக்குக் கிடைக்கும் மொத்த நீர் 740 ஆ.மி.க. கர்நாடகத்தில் ஏமாவதி, ஏரங்கி, கேரளத்தில் உற்பத்தியாகி வரும் கபினி போன்ற காவிரித் துணை ஆறுகளின் நீரும், தமிழகத்தில் பவானி, அமராவதி, நொய்யல் ஆகிய துணை ஆறுகளின் நீரும் சேர்த்து காவிரியின் மொத்த நீர் 740 ஆ.மி.க என்று நடுவர் மன்றம் கணக்கிட்டது. அதாவது தலைக்காவிரியிலிருந்து தமிழக அணைக்கரை வரை காவிரியில் சேரும் மொத்த நீர் இது. இது 50 விழுக்காடு சார்புத் தன்மை கொண்டது.\nசார்புத் தன்மை என்பது என்ன 100 ஆண்டுகளில் ஓடிவந்த நீரில் 50 ஆண்டுகள் எந்தக் குறிப்பிட்ட அளவுக்கு சமமாக அல்லது சற்றுக்கூடுதலாக நீர் வந்ததோ அந்தக் குறிப்பிட்ட அளவு 50 விழுக்காடு சார்புத் தன்மை கொண்டது. இவ்வாறான 50 விழுக்காடு சார்புத் தன்மை கொண்ட அளவானது 740 ஆ.மி.க. இதன் பொருள் ஓர் ஆண்டு மொத்த நீர் 740 ஆ.மி.க கிடைக்கும். அதன் அடுத்த ஆண்டில் அந்த அளவு தண்ணீர் கிடைக்காது என்பதாகும். ஓர் ஆண்டு விட்டு ஓர் ஆண்டில் தான் 740 ஆ.மி.க. தண்ணீர் காவிரியில் கிடைக்கும்.\n75 விழுக்காடு ���ார்புத் தன்மை என்பது: 100 ஆண்டுகளில் ஓடிவந்த நீரில் எந்தக் குறிப்பிட்ட அளவுக்குச் சமமாக அல்லது சற்று கூடுதலாக 75 ஆண்;டுகள் தண்ணீர் கிடைத்ததோ அந்த குறிப்பிட்ட அளவு 75 விழுக்காடு சார்புத் தன்மை உடையதாகும். இவ்வாறான 75 விழுக்காடு சார்புத் தன்மை கொண்ட தண்ணீர் அளவு 671 ஆ.மி.க. இதன் பொருள் 100 ஆண்டுகளில் 75 ஆண்டுகள் 671 ஆ.மி.க. அல்லது சற்றுக்கூடுதலாக தண்ணீர் ஓடிவந்தது என்பதாகும். அதாவது 4 ஆண்டுகளில் மூன்றாண்டுகள் மேற்கண்ட அளவு தண்ணீர் கிடைக்கும். ஓராண்டு அதைவிடக் குறைவாகத் தண்ணீர் கிடைக்கும்.\nஇந்திய அரசு 1972 சூன் மாதம் அமைத்த காவிரி உண்மை அறியும் குழு, கர்நாடகம், தமிழகம், கேரளம் ஆகிய மாநிலங்களில் 50 விழுக்காட்டு சார்புத் தன்மையில் கிடைக்கும் மொத்த நீர் 740 ஆ.மி.க. என்றும், 75 விழுக்காட்டு சார்புத் தன்மையில் கிடைக்கும் நீர் 671 ஆ.மி.க. என்றும் முடிவு செய்தது.\nநடுவர் மன்றம், 50 விழுக்காட்டு சார்புத் தன்மையை எடுத்துக் கொண்டு 740 ஆ.மி.க. என்று தீர்மானித்தது. அவ்வழக்கில் தமிழ்நாடு, 75 விழுக்காட்டு சார்புத் தன்மையை எடுத்துக் கொள்ளும்படி வற்புறுத்தியது. ஆனால் நடுவர் மன்றம் அதை ஏற்காமல், ஓராண்டில் 740-ம் அடுத்த ஆண்டில் அதைவிடக் குறைவாகவும் வரக்கூடிய 50 விழுக்காட்டு சார்புத் தன்மையை எடுத்துக் கொண்டது. இது கர்நாடகத்தின் கருத்துக்கு இணக்கமானது.\n1924ஆம் ஆண்டு காவிரி ஒப்பந்தம் 75 விழுக்காட்டு சார்புத் தன்மையை எடுத்துக் கொண்டு மொத்த நீர் 671 ஆ.மி.க. என்று முடிவு செய்திருந்தது. இதில் 489 ஆ.மி.க. தமிழகத்திற்கும், 177 ஆ.மி.க. கர்நாடகத்திற்கும், 5 ஆ.மி.க. கேரளத்திற்கும் ஓதுக்கியது.\n1924 ஒப்பந்தம் ஞாயமானதே என்பதை 1972-ல் அமைக்கப்பட்ட உண்மை அறியும் குழு அளித்த புள்ளிவிவரங்கள் மெய்ப்பிக்கின்றன.\nசார்புத் தன்மை : 50 மூ\nமொத்த நீர் : 740 ஆ.மி.க\nமேட்டூர் வந்த சராசரி : 376.8 ஆ.மி.க.\nகர்நாடகம் பயன்படுத்திக் கொண்ட சராசரி : 155.6 ஆ.மி.க.\nகேரளம் பயன்படுத்திக் கொண்ட சராசரி : 3.0 ஆ.மி.க.\nதமிழ்நாட்டில் மேட்டூருக்குக் கீழ் கிடைத்த நீர் : 196.6 ஆ.மி.க.\nதமிழ்நாடு மொத்தம் பயன்படுத்திக் கொண்ட சராசரி நீர் : 573.4 ஆ.மி.க.\nதமிழ்நாட்டில் காவிரிப் பாசனம் பெற்ற மொத்த நிலப்பரப்பு : 25,30,000 ஏக்கர்\nகர்நாடகம் 177 ஆ.மி.க. வரை பயன்படுத்திக் கொள்ள உரிமை இருந்தும் அதனால் பயன்படுத்திக் கொள்ள முடிந்தது 155.6 ஆ.மி.க. மட்டுமே. காரணம் அம்மாநிலம் மலைப்பகுதி நிறைந்தது@ வேளாண் வளர்ச்சி கன்னடர்களிடையே மிகவும் பிற்காலத்தில் தான் தொடங்கியது.\nஉண்மை அறியும் குழு புள்ளி விவரத்தில் தமிழகப் பாசனப்பரப்புப் பகுதிகள் சில சேர்க்கப்படவில்லை. சிறுபாசன விரிவாக்கங்களையும் சேர்த்து இப்பொழுது தமிழ்நாட்டில் நடைமுறையில் காவிரி பாசனப்பரப்பு 29,30,000 ஏக்கர் உள்ளது. இது நடுவர் மன்றத்தில் தமிழகம் முன்வைத்துள்ள கணக்கு.\nமேட்டூர் அணை 1934-ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. அதன் 50வது ஆண்டுவிழா 1984-இல் கொண்டாடப்பட்டது. 1974-ஆம் ஆண்டிலிருந்தே 1924 ஓப்பந்தம் காலாவதி ஆகிவிட்டதாகக் கர்நாடகம் வல்லடி வழக்கு பேசி, தமிழகத்திற்குரிய நீரைத் திறந்துவிட மறுத்துவிட்டது.\nஅப்படி இருந்தும் 1934-84 இடையே உள்ள 50 ஆண்டுச் சராசரி நீர் கர்நாடகத்திலிருந்து மேட்டூருக்கு வந்ததைக் கணக்கிட்டார்கள். அது ஆண்டுக்கு 361.3 ஆ.மி.க. (சான்று: வுhந ஐசசபையவழைnநுசய - மேட்டூர் பொன்விழா மலர், தமிழகப் பொதுப்பணித் துறை-1984)\nமொத்த நீர் 740 ஆ.மி.க. என்றால் தமிழகத்திற்குக் கர்நாடகத்திலிருந்து வர வேண்டிய நீர் 376.8 ஆ.மி.க.(1972 வரை), 361.3 ஆ.மி.க. (1984 வரை)\nஆனால் நடுவர் மன்றம் 740 ஆ.மி.க மொத்த நீர் என்று கூறிவிட்டு வெறும் 192 ஆ.மி.க நீர் கர்நாடகம் தந்தால் போதும் என்று கூறியுள்ளது. 1972-இல் இருந்ததைவிட 184.8 ஆ.மி.க. குறைத்துவிட்டது. நடுவர் மன்றம் தனது இறுதித் தீர்ப்பில் தமிழகத்திற்கு இழைத்திருக்கும் தீங்கு கொஞ்ச நஞ்சமா திருத்திக் கொள்ளக் கூடிய தவறா திருத்திக் கொள்ளக் கூடிய தவறா இட்டு நிரப்பக் கூடிய இறக்கமா இட்டு நிரப்பக் கூடிய இறக்கமா அதல பாதாளத்தில் தமிழகத்தை தள்ளிவிட்டுள்ளது நடுவர் மன்றம்.\nஇதை நியாயத் தீர்ப்பு என்கிறார் தமிழக முதல்வர் கருணாநிதி ஆறுதல் அளிக்கிறது என்று கூறுகிறார்@ மறு ஆய்;வு மனுச் செய்து சிற்சில குறைகளைப் போக்கிக் கொள்ளலாம் என்கிறார்.\nநடுவர் மன்றம் கர்நாடகத்திற்கு வாரி வழங்கியது எவ்வளவு 270 ஆ.மி.க. 1972-இல் உண்மை அறியும் குழு கண்டறிந்த படி கர்நாடகம் பயன்படுத்திய நீர் 155.6 ஆ.மி.க. இது 740 ஆ.மி.க. மொத்த நீருக்கான கணக்கு.\nஆனால் நடுவர் மன்றம் 114.5 ஆ.மி.க கூடுதலாகச் சேர்த்து 270 ஆ.மி.க. வை வழங்கியுள்ளது.\nநடுவர் மன்றம் லாட்டரிக் குலுக்கல் போல் 'கன்னடர்களுக்கு பம்பர் பரிசு\" வழங்கியுள்ளது. ஆனால் அவர்கள் அதையும் எதிர்த்துக் கலகம் செய��கிறார்கள். ஓரு சொட்டுத் தண்ணீர்கூடத் தமிழகத்திற்குத் தரக்கூடாது என்பது தான் கன்னடர்களின் கட்சி.\nநடுவர் மன்றம் திட்டமிட்டே மோசடித் தீர்ப்பு வழங்கியுள்ளது. திருடர்கள் திருடும் அவசரத்தில் சில தடயங்களை விட்டுச் செல்வது போல் நடுவர் மன்றம் தனது அநீதியை அடையாளம் காட்டக்கூடிய தடயங்களை விட்டு வைத்துள்ளது.\nநடுவர்மன்றக் கணக்கின்படி மொத்த நீர் 740 ஆ.மி.க.\nஇதில் சுற்றுச்சூழலுக்கு 10 ஆ.மி.கவும் தவிர்க்க முடியாமல் கடலில் கலக்கும் நீராக 4 ஆ.மி.கவும் சேர்த்து மொத்தம் 14 ஆ.மி.கவை கழித்துவிட்டு 726 ஆ.மி.கவை மட்டுமே நான்கு மாநிலங்களுக்கும் பங்கிட்டுள்ளது.\nகழிக்கப்பட்ட 14 ஆ.மி.க. யாருக்காகக் கழிக்கப்பட்டது தமிழகத்திற்காக தமிழகச் சுற்றுச்சூழலுக்கு 10 ஆ.மி.க. என்றும், தமிழக அணைக்கரைக்குக் கீழே, தவிர்க்க முடியாமல் தப்பிச் சென்று கடலில் விழும் நீருக்காக 4 ஆ.மி.க. என்றும் நடுவர் மன்றம் கூறியுள்ளது. இந்த 14ஐ தமிழ்நாட்டு ஓதுக்கீட்டுடன் சேர்த்து 192 + 14 ஸ்ரீ 206 ஆ.மி.க. என்று கணக்கிட்டிருந்தால் சரி. ஆனால் அந்த 14 ஆ.மி.கவை ஓதுக்கீடு (சுநளநசஎந) செய்வதாக தீர்ப்புப் பிரிவு ஏ கூறுகிறது. அது எங்கே வைக்கப்படுகிறது அதை நடுவர் மன்றம் நேரடியாகச் சொல்லவில்லை.\nதமிழகத்திற்குக் கர்நாடகம் தரும் 192 ஆ.மி.கவில் சுற்றுச்சூழலுக்கான 10 ஆ.மி.க இருக்கிறது. அது போக 182 ஆ.மி.க தான் கர்நாடகம் தமிழகத்திற்குத் தரும் நீர் என்று நடுவர் மன்றத் தீர்ப்புப் பிரிவு ஐஓ கூறுகிறது. இந்த 10 ஆ.மி.கவையும் கடலில் கலக்கும் 4 ஆ.மி.கவையும் மொத்த நீரில் கழித்துவிட்டு தான் (740-14)-726 ஆ.மி.க பங்கிடப்படுகிறது.\nகூட்டல் கணக்கில் சேராத இந்த 14 ஆ.மிக கர்நாடகத்திற்கே மறைமுகமாக ஓதுக்கப்பட்டுள்ளது. நடுவர் மன்ற மோசடியைப் பாமரர்களும் கண்டுகொள்ள அதுவிட்டுச் சென்றுள்ள தடயம் இந்த 14 ஆ.மி.கவாகும். இதையும் சேர்த்தால் கர்நாடகத்திற்கு (270+14) - 284 ஆ.மி.க. ஓதுக்கீடு ஆகிறது.\nதமிழக முதல்வர் கருணாநிதி நடுவர் மன்றம் கூறியதையும் விஞ்சி, எஜமானனை விஞ்சிய விசுவாசத்தோடு ஒரு குழப்படிக் கணக்குப் போடுகிறார்.\nதமிழகத்தின் பெயரைச் சொல்லி ஓதுக்கிவிட்டு, கர்நாடகத்திற்காகப் பதுக்கி வைத்துள்ள 14 ஆ.மி.க. பற்றி கலைஞருக்குக் கவலையில்லை. அந்த 192 ஐ, அப்படியே கர்நாடகம் தர வேண்டும் என்று தீர்ப்பைத் தாண்டி பேசுகிறார். அது மட்டுமல்ல, பில்லிகுண்டுவிலிருந்து மேட்டூர் வரை, 25 ஆ.மி.க. தண்ணீர் கிடைக்க வாய்ப்புண்டு என்று நடுவர் மன்றம் கூறிய கருத்தையும் அப்படியே எடுத்துக் கொண்டு, மேட்டூருக்கு 217 ஆ.மி.க. தண்ணீர் வரும்@ இதில் 7 ஆ.மி.க. புதுவைக்குப் போனால், 210 ஆ.மி.க. மேட்டூரில் நமக்குக் கிடைக்கும் என்கிறார். இடைக்காலத் தீர்ப்பில் 6 ஆ.மி.க. புதுவைக்குப் போக தமிழகத்திற்கு 199 ஆ.மி.க. கிடைத்தது இறுதித் தீர்ப்பில் அதைவிட 11 ஆ.மி.க. கூடுதலாகக் கிடைத்துள்ளது என்று நீட்டி முழக்குகிறார்.\nதமிழக அரசு நடுவர் மன்றத்தில் வாதாடியதற்கு நேர் எதிராகக் கலைஞர் இந்தக் கணக்கைச் சேர்க்கிறார். ஓரு முதலமைச்சர் நீதிமன்றத்தில் வாதாட ஒரு முகமும், மக்களிடம் பேச வேறொரு முகமும் கொண்டிருந்தால் எது அசல் முகம், எது முகமூடி, என்று எப்படிக் காண்பது\nஇடைக்காலத் தீர்ப்பின்படி கர்நாடகம் தரவேண்டிய 205 ஆ.மி.க நீரை மேட்டூரில் தான் அளக்க வேண்டும். பில்லிகுண்டுலுவில் அல்ல. இறுதித் தீர்ப்பிலும் இதே போல் மேட்டூரில் அளக்கம் தீர்ப்பளிக்கும்படி நடுவர் மன்றத்திடம் கோரியது தமிழக அரசு. அதற்கு தமிழக அரசு முன் வைத்த காரணங்கள்:\n1. பில்லிகுண்டுலுவில் 24மணிநேரமும் அளவெடுக்கும் ஏற்பாடு இல்லை. ஒரு நாளில் காலை மாலை மட்டுமே அளவெடுத்து ஒரு நாள் சராசரி வரத்து கணக்கிடப்படுகிறது. அக்குறிப்பிட்ட இருவேளைகளில் உரிய நீரைவிட்டு விட்டு, மற்ற நேரங்களில் கர்நாடகம் குறைத்து தண்ணீர் திறந்து விட்டால், அதைக் கண்டு பிடிக்க முடியாது. பில்லிகுண்டுலுவில் அளப்பது இந்திய அரசின் நீர்வள ஆணையம். மேட்டூரில் எனில் அணை நீர் உயர்வதையும் கணக்கிட்டு, தமிழக அரசின் நேரடி அளவையையும் கணக்கிட்டு வந்து சேரும் நீரைத் துல்லியமாக அளக்க முடியும்.\n2. பில்லிகுண்டுலுவிலிருந்து சற்றேறக் குறைய 60 கி.மீ தொலைவில் மேட்டூர் உள்ளது. இதற்கிடையே தண்ணீர் சேதாரமும் ஏற்படும்.\n3. பில்லிகுண்டுலுவிலிருந்து மேட்டூர் வரையிலான தொலைவில் பெரிதாக மழை நீர் சேர்ந்திட வாய்ப்பில்லை.\n4. நடுவர் மன்றம் 1991-இல் வழங்கிய இடைக்காலத் தீர்ப்பின் படி 1991-92 முதல் 2005-2006 வரை பில்லிகுண்டுலுவில் எடுத்த அளவு நீர் மேட்டூர் வரும் போது குறைந்துள்ளதைப் பின்வரும் பட்டியல் காட்டுகிறது.\nவ. ஆண்டு பில்லிகுண்டுலு மேட்டூரில\nஎண் அளவு(ஆ.மி.க) அளவு (ஆ.மி.க)\nபில்லிகுண்டுலுவிலிருந்து வந்ததாகக் கூறப்பட்ட தண்ணீர் மேட்டூரில் அளந்து பார்த்த போது குறைந்ததே தவிர கூடவில்லை. அதிகபட்சமாக 27.20 ஆ.மி.க. அளவிற்கு(2001-02) குறைந்துள்ளது. 2005-2006ஆம் ஆண்டில் வரலாறு காணாத பெருமழைப் பெய்ததால் அவ்வாண்டில் மட்டும் 15.31 ஆ.மி.க. பிலிகுண்டுலுவை விட மேட்டூருக்கு அதிகமக வந்துள்ளது. ஏனைய 14 ஆண்டுகளும் பில்லிகுண்டுலுவில் திறந்து விடப்பட்ட நீரின் அளவு மேட்டூரில் அளக்கும் போது குறைவாகவே வந்துள்ளது.\nஇது தமிழ்நாடு அரசு நடுவர் மன்றத்தில் எடுத்து வைத்த வாதங்களின் சாரம். மேற்கூறிய காரணங்களை அடுக்கிவிட்டு, கர்நாடகம் தரும் நீரை பில்லிகுண்டுலுவில் அளக்;கக்கூடாது, மேட்டூரில் தான் அளக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு வாதிட்;டது. ஆனால் தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதி கர்நாடகம் தரும் நீரைப் பில்லிகுண்டுலுவிலிருந்து அளப்பது நமக்கு சாதகமானது@ கூடுதலாக 25 ஆ.மி.க. கிடைக்கும் என்று கூப்பாடு போடுகிறார். ஏன் இந்தக் குட்டிக்கரணம் ஏனிந்த முரண்பாடு காவிரி நடுவர் மன்றத்தில் தமிழக அரசு சார்பில் எடுத்து வைக்கப்பட்ட வாதங்களை முதலிலேயே கருணாநிதி கவனிக்கவில்லையா இப்படியொரு முதலமைச்சர் இருந்தால் அந்த மாநில மக்களின் உரிமைகள் என்னவாகும்\nஉண்மைக்கு மாறாக கருணாநிதி கூறும் கூடுதல் 25 ஆ.மி.கவை ஒரு வாதத்திற்காக ஏற்றுக் கொண்டு பார்ப்போம். அப்பொழுதும் அவர் கணக்கு தப்புக் கணக்கு தான்\nகாவிரி நீரில் தமிழகப் பங்கு 419 ஆ.மி.க. இதில் கர்நாடகம் தரவேண்டிய 192ஆ.மி.க. போக, மீதியுள்ள 227 ஆ.மி.க தண்ணீர் தமிழகத்திற்குள் கிடைக்கும் நீர். பில்லிகுண்டுலுவிலிருந்து மேட்டூர் வரை கலைஞர் கணக்குப்படி கிடைக்கும் 25 ஆ.மி .க நீர, தமிழ்நாட்டின் பங்கான 227 ஆ.மி.கவுக்குள் அடக்கம் தானே அது எப்படி கூடுதலான நீர் ஆகும் அது எப்படி கூடுதலான நீர் ஆகும் அது தமிழக பங்கிற்குள் வராதென்றால் 419ஆ.மி.க உடன் 25ஆ.மிகவை சேர்த்து தமிழகத்திற்கு 444 ஆ.மி.க என்று சொல்ல வேண்டியது தானே அது தமிழக பங்கிற்குள் வராதென்றால் 419ஆ.மி.க உடன் 25ஆ.மிகவை சேர்த்து தமிழகத்திற்கு 444 ஆ.மி.க என்று சொல்ல வேண்டியது தானே கலைஞர் குழம்பவில்லை. தமிழர்களைக் குழப்பப் படாதபாடுபடுகிறார்.\n'பட்டு வேட்டி பற்றி கனா கண்டு கொண்டிருந்தபோது கட்டியிருந்த கோவணத்துணியும் களவாட பட்டது\" போல் பவானியிலிருந்து 6ஆ.மி.கவும் அமராவதியிலிருந்து 3 ஆ.மி.கவும் கேரளத்திற்குத் தமிழகம் தர வேண்டும் என்று நடுவர் மன்றம் தீர்ப்பளித்துள்ளது. கேரளத்தின் பாசனத் தேவைக்காக இது ஒதுக்கப்படுகிறதாஅதெல்லாம் மலைப்பகுதி. அங்கு நீர் பாசனச் சாகுபடி கிடையாது. கேரள அரசு, கோக்-பெப்சி போன்ற நிறுவனங்களுக்கு தண்ணீரை விற்கக் கூட கேட்டிருக்கலாம்.\nசில ஆண்டுகளுக்கு முன்பு கோவை ஆனைகட்டி அருகே முக்காலியில் பவானியின் குறுக்கே கேரள அரசு அணைகட்ட முனைந்ததையும் தமிழகம் எதிர்த்ததையும் இப்பொழுது நினைத்துப் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்பொழுது முக்காலியில் கோக் நிறுவனத்திறகு தண்ணீர் தர கேரள அரசு திட்டமிட்டது என்று பேசப்பட்டது.\nஇனி அதே முக்காலியில் இருந்து கேரளம் பவானியின் குறுக்கே அணைக் கட்டலாம். அப்படி அணைக் கட்டினால் ஒரு சொட்டு தண்ணீர் கூட பவானியிலிருந்து தமிழகத்திற்கு கிடைக்காது. தமிழக நீலகிரி மலையில் உற்பத்தியாகி சிறிது தொலைவு கேரள எல்லையில் ஓடி மீண்டும் தமிழகத்திற்குள் நுழைந்து விடுகிறது பவானி. இதற்கு ஆபத்து வந்துள்ளது.\nஆக, 9 ஆ.மி.கவை பவானி, அமராவதி நீரில் இழந்துள்ளோம். இதையெல்லாம் கழித்தால் கர்சாடகத்திலிருந்து தமிழகத்திற்கு எவ்வளவு நிகர நீர் தீர்ப்பின்படி கிடைக்கும்.\nஒதுக்கீடு - 192 ஆ.மி.க\nசுற்றுச்சூழலுக்காக பிடித்தம் - 10 ஆ.மி.க\nகடலில் கலப்பதன் பெயரில் பிடித்தம் - 4 ஆ.மி.க\nபுதுவைக்கு - 7 ஆ.மி.க\nகேரளத்திற்கு - 9 ஆ.மி.க\nமிச்சம் 162ஆ.மி.க தண்ணீர் தான். இதில் தான் 'ஞாயம்\" காண்கிறார் கலைஞர் கருணாநிதி. சாதகம் என்கிறார். ஆறுதல் என்கிறார்.\nசாகுபடி நிலப்பரப்பில் கர்நாடகத்திற்குப்பாதகம் நேர்ந்து விட்டதாகவும், தமிழ்நாட்டிற்குச் சாதகம் கிடைத்துவிட்டதாகவும் முதலமைச்சர் கூறுகிறார்.\n'நடுவர் மன்றத்தில் நாம் வாதாடும் போது தமிழகத்துக்குப் பாசனப்பரப்பு 29.26 லட்சம் ஏக்கர் என்று கேட்டோம். நடுவர் மன்றம் அனுமதித்திருப்பது 24.7 லட்சம் ஏக்கர். இதில் பெரிய வித்தியாசம் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் கர்நாடக மாநிலத்துக்குப் பாசனத்துக்காக அவர்கள் கோரியது 27.28 லட்சம் ஏக்கர். நடுவர் மன்றம் அவர்களுக்கு அனுமதி கொடுத்தது 18.85 லட்சம் ஏக்கர். இதை நான் சொல்வதற்குக் காரணம் நாம் ஒன்றும் நஷ்டப்பட்டு விடவில்லை. நாம் கேட்டதில் கொஞ்சம் குறைவாகக் கிடைத்தது. ஆனால் கர்நாடகம் கேட்டதில் கொஞ்சம் அதிகமாகக் குறைந்து விட்டது என்று ஒரு ஒப்பீட்டுக்காக இதைச் சொன்னேன்.\nநடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பில் கர்நாடகம் 11.2 லட்சம் ஏக்கர் அளவுக்கு மேல் பாசனவசதியைப் பெருக்கக்கூடாது என்று உத்தரவிட்டிருந்தது. ஆனால் இறுதித் தீர்ப்பில் 18.85 லட்சம் ஏக்கர் அளவுக்கு உயர்த்தியுள்ளது. வேறொரு விவரத்தை ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.\nஇறுதித் தீர்ப்பில் உள்ள ஒரு விவரத்தை இடைக்காலத் தீர்ப்பில் உள்ள விவரத்தோடு ஒப்பீட்டு, எனது கருத்து ஆச்சரியமாக உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கு இடைக்காலத் தீர்ப்பில் எவ்வளவு அனுமதிக்கப்பட்டது, இப்பொழுது எவ்வளவு கிடைக்கிறது என்று ஒப்பிட்டு பார்த்திருந்தால் இந்தக் கேள்வியே எழுந்திருக்காது\"\n- முதல்வர் கருணாநிதி, தினமணி 26-02-2007.\n1968லிருந்து காவிரிப் பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டு வந்ததாக மூச்சுக்கு மூச்சு பெருமையடித்துக் கொள்ளும் கலைஞர் கருணாநிதி அவர் கலந்து கொண்ட பேச்சுக்கிளில் உருவான கருத்தொருமைபாடுகள், கண்டறியப்பட்ட புள்ளி விவரங்கள் போலும். எதிர்க்கட்சியினரை மடக்க பழைய செய்தித்தாள்களில் இருந்து மேற்கோள் காட்டும் பழக்கமுள்ள இவருக்கு தமிழினத்தின் உரிமை காப்பதில் மட்டும் பழையதெல்லாம் மறந்து விடுமா\n1972 மே மாதம் அப்போதைய கர்நாடக முதல்வருடன் அப்போதைய தமிழக முதல்வர் பேச்சுவார்த்தையில் இருவரும் ஒப்புக் கொண்ட செய்தி, புதிய உடன்பாடு வரும் வரைக்கும் 1972 மே மாதம் பயன்படுத்திய தண்ணீருக்கு மேல் எந்த மாநிலமும் கூடுதராக நீரை பயன்படுத்தக் கூடாது. கர்நாடகம் 11லட்சம் ஏக்கருக்கு மெல் பாசனப்பரப்பை விரிவு படுத்தக் கூடாது என்பதாகும்.\n1972ல் கர்நாடகத்திடம் 11லட்சம் ஏக்கருக்கு ஆயக்கட்டு(பாசன நிலப்பரப்பு) கிடையாது. அம்மாநிலம் எதிர்பார்க்கும் திட்டங்களையும் சேர்த்துச் சொல்லப்பட்டது தான் 11 லட்சம் ஏக்கர்.\nஇதை உறுதி செய்து கொள்ள, இந்திய அரசின் உண்மை அறியும் குழு எடுத்த விவரத்தைக் காணலாம். அதன்படி 1971ல் கர்நாடகத்தில் காவிரிப் பாசனப்பரப்பு - 4.42லட்சம் ஏக்கர் மட்டுமே. 1971ல் தமிழகத்தின் பாசனப்பரப்பு 25.30 லட்சம் ஏக்கர்.\nநடுவர் மன்றம் இடைக்கால தீர்ப்பு வழங்கிய போது (1991-ஜுன் 25) மேற்கண்ட 1972 - முதலமைச்சர்கள் உடன்;பாட்டை கருத்தில் கொண்டு இறுதித் தீர்ப்பு வரும் வரை 11லட்சம் ஏக்கருக்கு மேல் கர்நாடகம் பாசனப்பரப்பை விரிவு படுத்தக் கூடாது என்று நிபந்தனை விதித்தது. தமிழ்நாட்டிற்கு அவ்வாறு நிபந்தனை விதிக்க வேண்டிய தேவையே எழவில்லை. ஏனெனில் அது கர்நாடகத்திடமிருந்து தண்ணீர் பெறும் நிலையில் உள்ளது. பழைய பாசனப்பரப்பை பாதுகாத்தால் போதும் என்ற பரிதாப நிலையில் இருக்கிறது. கர்நாடகமோ காவிரித் துணை ஆறுகளில் புதிய புதிய அணைகள் கட்டி, தமிழகத்திற்கு வரும் தண்ணீரை தடுத்து வந்தது. புதிய பாசனப்பரப்பிற்கான கோரிக்கையே தமிழகத்தரப்பிலிருந்து இல்லை.\n1987-இல் தமிழகப் பொதுப்பணித் துறை தயாரித்த ஆவணத்தில், 1986-இல் தமிழகத்தில் உள்ள காவிரி நீர்ப் பாசனப்பரப்பு 25.80 லட்சம் ஏக்கர் என்று முடிவு செய்யப்பட்டது. இப்பொழுது நடுவர் மன்றம்; அனுமதித்துள்ளது தமிழகத்திற்கு 24.7 லட்சம் ஏக்கர் மட்டுமே. 1986-இல் இருந்ததற்கு 1.1 லட்சம் ஏக்கர் குறைவு. நடுவர் மன்றத்தில் தமிழக அரசு கேட்டது 29.26 லட்சம் ஏக்கர் பாசனப்பரப்பு. 5 லட்சம் ஏக்கர் குறைவாக இறுதித் தீர்ப்பு வந்;துள்ளது. 'இதில் பெரிய வித்தியாசமில்லை\" என்கிறார் முதலமைச்சர். 5 லட்சம் ஏக்கர் வித்தியாசம் சிறிய வித்தியாசமா\nகீழ் பவானி அணையில் மொத்தப் பாசனப்பரப்பு 2.07 லட்சம் ஏக்கர். இதைவிட 1½\nமடங்கு கூடுதல் 5 லட்சம் ஏக்கர் என்பது. முல்லை பெரியாறு அணையின் மொத்த பாசனப்பரப்பு 2.20 லட்சம் ஏக்கர். கீழ்பவானி, முல்லை பெரியாறு அணைகளின் மொத்த பாசனப்பரப்பைவிட கூடுதலாக உள்ள 5 லட்சம் ஏக்கர் பாசனப்பரப்பை நடுவர் மன்றம் ஏற்க மறுத்துவிட்டது. கணக்கில் எடுக்கத் தேவையில்லாத மிக சிறு நிலப்பரப்புப் போல் 5 லட்சம் ஏக்கரை அலட்சியப்படுத்துகிறார் கலைஞர் கருணாநிதி.\nமாறாக, கர்நாடகம் கற்பனையாக கேட்ட நிலப்பரப்பான 27.28 லட்சம் ஏக்கரை ஏற்காமல் சுமார் 9 லட்சம் ஏக்கர் குறைத்து, 18.85 லட்சம் ஏக்கர் தான் நடுவர் மன்றம் வழங்கியுள்ளது என்றும் 'கொஞ்சம் அதிகமாகக் குறைத்துவிட்டது\" என்றும் சமாதானம் சொல்கிறார்.\nஉண்மையில் இறுதித் தீர்ப்பு கர்நாடக பாசனப்பரப்பிற்கு இருந்த உச்ச வரம்பை நீக்கி விட்டது. தீர்ப்பின் பிரிவு ஓஏஐஐஐ இதை உறுதி செய்கிறது. நடுவர் மன்றம் கருத்துகளாக வரிசைப் படுத்திய சில வாதங்களையெல்லாம் தீர்ப்பு போல் வர்ணிக்கிறார் கலைஞர்.\nஉயரதிகாரம் படைத்த ஒரு நீதி மன்றத்தில் நடந்த வ���க்கில் நமது அரசு முன் வைத்த வாதங்களையெல்லாம் மறுக்கும் அல்லது புறக்கணிக்கும் ஒரு முதலமைச்சர் உலகத்திலேயே கலைஞர் கருணாநிதியாகத் தான் இருப்பார்.\nபதவிக்கு தமிழ்நாடு, வணிகத்திற்கு இந்தியா என அவர் தேவைகள் இடத்திற்கு இடம் மாறுபடக்கூடும்.\nகாவிரியில் தமிழகத்திற்குள்ள உரிமையை வலியுறுத்தினால் - அதற்காக போராடினால் கர்நாடகத்தில் உள்ள தமிழர்களுக்கு ஆபத்து வந்து விடும் என்று கூறுகிறார்கள். ஏன் தமிழ்நாட்டில் கன்னடர்களே வாழவில்லையா கர்நாடகத் தமிழர்களுக்கு ஆபத்து வந்தால் தமிழகக் கன்னடர்களுக்கு ஆபத்து வரும்.\nகர்நாடகத் தமிழர்கள் மீது உண்மையான அக்கறையும் அன்பும் இவர்களுக்குக் கிடையாது. தங்கள் துரோகத்தை மறைக்க அதை ஓரு சாக்காக பயன்படுத்திக் கொள்கிறார்கள். தமிழினத் தலைவர் காவிரியில் தமிழர்க்கு இழைக்கும் துரோகம் செயலலிதாவுக்கு வசதியாக போய்விட்டது. இந்த அம்மையார் போராடவில்லையே என்பது உருத்தலாக தெரியாது. அம்மையாரின் ஊழல் வழக்கு கர்நாடகத்தில் நடக்கிறது. மற்ற பல கட்சிகள் இந்த இரு கழகங்களோடு உடன்கட்டை ஏற்காதிருப்பவை போல், அமைந்திருக்கின்றன.\nதமிழ் இனம் அரசியல் தலைமையற்று இருக்கும் அவலத்தை புரிந்து கொண்ட கன்னட வெறியாளர்கள் 9-02-2007லிருந்து தொடர்ந்து மூன்று நாட்கள் ஓசூருக்குள் புகுந்து, காவிரியும் கன்னடருக்கே, ஓசூரும் கன்னடர்க்கே என்று கூச்சலிட்டுச் சென்றனர். தமிழகக் காவல்துறை அவர்களை கைது செய்யவில்லை. சமாதானம் சொல்லி அனுப்பியது.\nதமிழ்நாட்டிலிருந்து பரிக்கப்பட்ட தமிழ்நாட்டோடு சேர வேண்டிய கொள்ளேகாலம், கோலார் தங்க வயல், பெங்களுரு, போன்ற பகுதிகளை தமிழர்கள் கேட்காமல் இருப்பதால் ஓசூரைக் கேட்கும் துணிச்சல் கன்னடர்களுக்கு வந்துள்ளது. காவிரித் தீர்ப்பை எதிர்த்து கன்னடர்கள் நடத்திய போராட்டங்கள், வெறியாட்டங்கள் அனைத்தையும் ஜனநாயக வழிப்பட்டவை என்று கூறி கர்நாடக முதல்வர் குமாரசாமி பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் கூட்டிய அனைத்துக்கட்சி அப்போராட்டங்களுக்குப் பாராட்டும் நன்றியும் கூறியுள்ளது.\nதமிழகத்தில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியும், தமிழ்த் தேசிய முன்னணியும் நடுவர் மன்றத் தீர்ப்பை எதிர்த்து போராடிய போது பாய்ந்து பாய்ந்து கைது செய்தனர் காவல்துறையினர். திருச்செந்��ூர் குறும்பூரில் தீர்ப்பு நகலை எரித்த த.தே.பொ.க, தமிழக உழவர் முன்னணி மேதாழர்கள் 16 பேரை பிணையில் வர முடியாத பிரிவைச் சேர்த்து திருவைகுண்டம் சிறையில் அடைத்துள்ளது. கர்நாடகத்தில் தீர்ப்பு நகலை மட்டுமல்ல, மூன்று நீதிபதிகளின் கொடும்பாவிகளையே கொளுத்தினார்கள். தொலைக்காட்சிகளில் பார்த்தோம்@ அவர்களை சிறையில் அடைக்கவில்லை. காவிரியில் நடுவர் மன்றம் தந்த மோசமானத் தீர்ப்பை எதிர்த்துத் தீர்ப்பு வந்த மறுநாளும்(6-02-2007) அடுத்த நாளும் த.தே.பொ.க, தமிழ்த் தேசிய முன்னணி அமைப்புகள் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தின. பா.ம.க, ம.தி.முக கட்சிகளும் தீர்ப்பையும், தமிழக முதல்வரின் நிலைப்பாடம்டையும் விமர்சித்தனர். ம.தி.மு.க பட்டினிப் போராட்டத்தை நடத்தின. தினமலர், தினமணி ஏடுகள் தீர்ப்பை விமர்சித்து செய்திகளும் கட்டுரைகளும் வெளியிட்டன.\nமிகவும் தாமதமாக, மெத்தனமாக 19-2-2007 அன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டினார் தமிழக முதல்வர். சில விளக்கங்கள், சில திருத்தங்கள் கோர மறு ஆய்வு மனு நடுவர் மன்றத்தில் போடவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nமறுஆய்வு மனுவெல்லாம் பயன் தராது நடுவர் மன்றம் திட்டமிட்டு, ஏமாற்றிவிட்டதை அதன் தன் முரண்பாட்டை, ஒரு சார்புத் தன்மையை எடுத்து விளக்கி, இவற்றால் 6½ கோடி தமிழக மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதகங்களை சுட்டிக்காட்டி உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடர வெண்டும்.\nபுதிய நடுவர் மன்றம் நியமித்திட ஆணையிட்டு, அது ஓர் ஆண்டுக்குள் தீர்ப்பு வழங்கிட கால வரம்பிடக் கோர வேண்டும். அதுவரை ஏற்கனவே செயலில் உள்ள( ளுவயவரள பரயசயவெநந) நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பின் படி 205 ஆ.மி.க தண்ணீரை கர்நாடகம் தமிழகத்திற்கு தரவும் ஆணையிட வேண்டும். அரசமைப்புச் சட்ட விதி 131 மற்றும் வௌ;வேறு உச்சநீதி மன்றத் தீர்ப்புகள் துணை கொண்டு வழக்கை தமிழக அரசு தொடுக்க வேண்டும்.\nகாவிரித் தீர்ப்பை எதிர்த்து மனிதச்சங்கிலி\nகாவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை எதிர்த்து 05-03-2007 அன்று மாலை தியாகராய நகர் பனாகல் பூங்காவிலிருந்து, நந்தனம் வரை மனிதச்சங்கிலி போராட்டம் நடைபெற்றது.\nபோராட்டத்தில் பழ.நெடுமாறன், பெ.மணியரசன், ம.செ.தெய்வநாயகம், ம.நடராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். காவிரி உரிமை மீட்புக்கான தமிழ்க் கலைஞர்கள் மற்றும் படைப்பாளிகள் அமைப்பு இந்நிகழ்வை நடத்தியது. தமிழ்க் கலை இலக்கிய பேரவை செயலாளர் தோழர் நெய்வேலி பாலு, ஓருங்கிணைப்பாளர் தோழர் உதயன், தமிழர் கண்ணோட்டம் மாத இதழ் வெளியீட்டாளர் தோழர் அ.பத்மனாபன், ஓவியர் வீரசந்தானம், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக்கட்சி செங்குன்றம் கிளைச் செயலாளர் தோழர் பாலமுரளி, கவிஞர் கவிபாஸ்கர், கவிஞர் தாமரை, கவிஞர் சினேகன் உள்ளிட்ட தமிழ் படைப்பாளிகளும் எண்ணற்ற மாணவ மாணவியரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கோஷமிட்டனர்.\n06-03-2007 அன்று டெக்கான் க்ரானிக்கல் ஆங்கில ஏட்டில் வெளிவந்த புகைப்படம்\nகாவிரி நகல் எரிப்புப் போராட்டம்:: சிதம்பரம்\nகாவிரி நகல் எரிப்புப் போராட்டம்:: சிதம்பரம்\nகாவிரி நகல் எரிப்புப் போராட்ட புகைப்படங்கள்\nசெய்தியாளர் :: தோழர் அரவிந்தன்\nகாவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பில்\nதமிழகத்திற்கு இழைக்கப்பட்டுள்ள அநீதியைக் கண்டித்து\nநாள் : 5-03-2007, திங்கள்\nநேரம் : மாலை 4 -5 மணிவரை\nஇடம்: தியாகராய நகர், பனகல் பூங்கா அருகில்\nதலைமை : முனைவர் ம.செ.தெய்வநாயகம்\nசெயலாளர், தமிழக் கலை இலக்கிய பேரவை\nதமிழ்க் கலை இலக்கியப் பேரவை\nகல்விக் கொள்கை - 2019-ஐ திரும்பப் பெற\nஇந்திய அரசு கொண்டு வந்துள்ள வரைவுக் கல்விக் கொள்கை - 2019-ஐ திரும்பப் பெற கீழே கையெழுத்திடவும்\nபுதிய பொருளாதாரக் கொள்கையின் சீரழிவுகள்\nகாவிரித் தீர்ப்பும் களவு போன உரிமையும்\nகாவிரித் தீர்ப்பை எதிர்த்து மனிதச்சங்கிலி\nகாவிரி நகல் எரிப்புப் போராட்டம்:: சிதம்பரம்\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி. Powered by Blogger.\n'சிங்களன் பங்காளி – தமிழன் பகையாளி (1)\n'சிங்களன் பங்காளி – தமிழன் பகையாளி' (1)\n“தமிழீழ ஏதிலியர் உரிமைக் கூட்டமைப்பு” (1)\n“தமிழ் அடையாளம்” பேசுவோர்க்கு சமஸ் நண்பரா\n(ஐ.பி.சி.) பிரிவு 124 (1)\n10 பேரை குறிவைக்கிறதா அரசு\n11 பேர் சிறையிலடைப்பு (1)\n90% தமிழர்களுக்கு வேலை (1)\nஅ.இ.அ.தி.மு.க. ஆள் கடத்தல் - தி.மு.க. அராஜகம் (1)\nஅடக்குமுறையைக் கண்டித்து தெருமுனைக் கூட்டம் (1)\nஅயலாருக்கு பங்கீடு தமிழருக்கு முக்காடு (1)\nஅரசியல் குற்றவாளிகளை அறம் தண்டிக்கும் (1)\nஅறிக்கைகள். கி. வெங்கட்ராமன் (1)\nஅனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் (1)\nஆ ரியத்துவா எதிர்ப்பு (1)\nஆரியத்தால் கொல்லப்பட்ட அனிதா (3)\nஆளுநருக்கு ஆர்.எஸ்.எஸ். வழி காட்டுகிறதா\nஆளுநர் காலம் தாழ்த்துவது ஏன்\nஆளுநர் பன்வாரிலால் புரோகித் (1)\nஇடித்தவர்களைக் கைது செய்க (1)\nஇந்தித் திணிப்பு ஆணை எரிப்புப் போராட்டம் (3)\nஇந்திப் பிரசார சபை (2)\nஇந்திய அரசு வருமானவரித்துறை அலுவலகம் (1)\nஇந்தியா தமிழ்நாட்டுக்கு எதிரி நாடா பெ. மணியரசன் வினா (1)\nஇந்தியாவிலும் தடையை நீக்க வேண்டும்\nஇராசா முத்தையா கல்லூரி மாணவர் போராட்டம் (1)\nஇராமேசுவரம் மீனவர் படுகொலை (4)\nஇருவரில் யாருக்கு உங்கள் வாக்கு\nஇனத்திற்காக சில நொடிகள் செலவிட ஓர் அழைப்பு\nஈகி ந. வெங்கடாசலம் 40ஆம் ஆண்டு நினைவேந்தல் (2)\nஉலக வர்த்தகக் கழகம் (1)\nஉலகத் தமிழ் அமைப்பு (1)\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு (1)\nஎடப்பாடி வீடு முற்றுகை (1)\nஎழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி (1)\nஏழு தமிழர் விடுதலை (22)\nஏழு தமிழர்களுக்கும் நீண்டகால பரோல் (1)\nஏளனம் செய்த லலிதா குமாரமங்கலம் (1)\nஐயா ஆனைமுத்து அவர்களைச் ஐயா பெ. மணியரசன் சந்திப்பு\nஒசூர் புத்தகக்காட்சி 2019 (1)\nஓ.என்.ஜி.சி.யிடம் - தமிழ்நாடு அரசு கை ஏந்தலாமா \nகடலூரில் மூவர் பலி (1)\nகட்சி அலுவலகமாக மாறும் (1)\nகப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. (1)\nகர்நாடகத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் (2)\nகாசுமீரில் உடனடியாக பொது வாக்கெடுப்பு நடத்துக\nகாணொலிகள். ஆரிய எதிர்ப்பு (1)\nகாணொலிகள். பெ. மணியரசன் (1)\nகாப்பியத்தலைவி கண்ணகிக்கு வீரவணக்கம் (1)\nகாவிரி உரிமை மீட்புக் குழு (48)\nகாவிரி உரிமை மீட்புக் குழு அறிவிப்பு (1)\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமைக்காக உயிரீகம் செய்த தழல் ஈகி விக்னேசுக்கு வீரவணக்கம்\nகாவிரி நீர் கடலில் கலப்பது வீணா\nகாவிரி வழக்கில் கோட்டை விடக்கூடாது (1)\nகாவிரியில் புதிய அணை (1)\nகி. வெங்கட்ராமன் தாயகப் பாதுகாப்பு\nகி. வெங்கட்ராமன் ஆரியத்துவா எதிர்ப்பு\nகி. வெங்கட்ராமன் உலகமய எதிர்ப்பு (1)\nகி. வெங்கட்ராமன் உலகமய எதிர்ப்பு\nகி. வெங்கட்ராமன் காவல் அதிகாரிகள் மீது (1)\nகி. வெங்கட்ராமன் தமிழ்மொழிப் பாதுகாப்பு\nகி. வெங்கட்ராமன் தாயகப் பாதுகாப்பு (2)\nகி. வெங்கட்ராமன் தாயகப் பாதுகாப்பு\nகி. வெங்கட்ராமன் நீர் உரிமை\nகிரண்பேடியைத் திருப்பி அனுப்ப வேண்டும் (1)\nகுற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம் (1)\nகேசவனின் தன்னோவியக் கண்காட்சி (1)\nகேரளத்த���ன் பொய் அம்பலம் (1)\nகேரளத்தோடு பேச வேண்டும் (1)\nகோவை ஈசுவரன் அவர்களுக்கு வீரவணக்கம் (1)\nசசிகலா – பன்னீர் (1)\nசமூக வலைதளத் தோழர்களுக்கு (1)\nசாதி ஒழிப்பு மாநாடு (1)\nசாந்தலிங்க இராமசாமி அடிகளார் (1)\nசான்றிதழ் சரிபார்ப்பு தள்ளிவைப்பு (1)\nசிங்கப்பூரில் தமிழும் ஆட்சி மொழி (1)\nசிதம்பரம் தோழர் ஆ. குபேரன் கைது (2)\nசித்தராமையாவின் கன்னட இனவெறிப் பேச்சு (1)\nசிவாஜி கணோசன் சிலை (1)\nசுருங்கி வரும் ஜனநாயகம் (1)\nசுவரொட்டிகளைக் கிழித்த காவல்துறையினர் (1)\nசுவாதி கொலையைத் தடுக்க முன் வராத மக்கள் (1)\nத. செ. தீர்மானங்கள் (1)\nதஞ்சை பெரிய கோவிலுக்கு சமற்கிருதப் பெயரா\nதஞ்சை பெரிய கோவில் (3)\nதமிழக இளைஞர் முன்னணி (4)\nதமிழக உழவர் முன்னணி (2)\nதமிழக உழவர் முன்னணி தோழர்கள் பங்கேற்பு. (1)\nதமிழக எல்லை மீட்பு போராட்டம் (1)\nதமிழக மாணவர் முன்னணி (1)\nதமிழக மீனவர் சிக்கல் (4)\nதமிழகத் தொழிற்சங்க முன்னணி (1)\nதமிழகத் தொழிற்சங்க முன்னணித் தலைவர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு\nதமிழர் எழுச்சி உரைவீச்சு (1)\nதமிழர் கண்ணோட்டம் படிப்பு வட்டம் (2)\nதமிழர் தற்காப்பு அரசியல் (3)\nதமிழர் மீட்சிப் பெருங்கூடல் (5)\nதமிழர்களுக்கு எதிராக ஸ்டாலின் ராஜாங்கம் (1)\nதமிழில் பெயர்ப் பலகை (1)\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் (1)\nதமிழ் வழக்கு மொழி (1)\nதமிழ் வழிக் கல்வி (4)\nதமிழ்க் கலை இலக்கியப் பேரவை (3)\nதமிழ்த் தேசியப் பேரியக்க தலைவர் தோழர் பெ. மணியரசன் கேள்வி (1)\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தோழர் பெ. மணியரசன் (1)\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுத் தீர்மானம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுவில் முடிவு\nதமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுக்குழுத் தீர்மானம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கம் (31)\nதமிழ்த் தேசியப்பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் விடையளிக்கிறார்\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயர்குழுத் தீர்மானம் (1)\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அறிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் பாராட்டு\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் பேச்சு\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கோரிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கப் தோழர் கி. வெங்கட்ராமன் கண்டன அறிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு\nதமிழ்த்தேசியப் போராளி கா. பரந்தாமன் (1)\nதமிழ்நாடு தழுவிய முழு கடையடைப்பு இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகை இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகை\nதமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே (7)\nதலைமைச் செயற்குழு தீர்மானங்கள் (4)\nதலைவர் மணியரசனுக்கு தோழர்களின் சிறப்பான வரவேற்பு\nதழல் ஈகி விக்னேசு (1)\nதிராவிட அரசியலின் தலைவர் வழிபாடு (1)\nதிராவிட அரசியல் இனியும் தேவையா\nதிராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா\nதிருடனை நெடுவாசல் மக்கள் பிடித்தனர் (1)\nதிருமுருகன் மீது குண்டர் சட்டம் (1)\nதேவிகுளம் - பீரிமேடு மீட்பு (1)\nதொழிற்சங்கத் தலைவர் டி. ஞானய்யா மறைவு. (1)\nதோழர் ஆரல்கதிர்மருகன் சாதி ஒழிப்பு (1)\nதோழர் கி. வெங்கட்ராமன் கண்டனம்\nதோழர் கி. வெங்கட்ராமன் கோரிக்கை\nதோழர் குபேரனை விடுதலை செய்க\nதோழர் குபேரன் பிணையில் விடுதலை..\nதோழர் சீமானைக் கைது செய்ய காவல்துறையினர் முயற்சி (1)\nதோழர் பெ. மணியரசன் (3)\nதோழர் பெ. மணியரசன் அறிக்கை\nதோழர் பெ. மணியரசன் இரங்கல் அறிக்கை\nதோழர் பெ. மணியரசன் இரங்கல்\nதோழர் பெ. மணியரசன் மீண்டும் கோரிக்கை\nதோழர் முகிலனை விடுதலை செய்க (1)\nந. அரணமுறுவல் திடீர் மறைவு (1)\nநடிகர் சத்தியராஜ்க்கு பாராட்டுகள் (1)\nநடுநிலை தவறக் கூடாது (1)\nநலமாகி வருகிறேன் – நன்றி (1)\nநால்வரையும் விடுதலை செய்க (1)\nநீங்கள் வழிகாட்ட உரிமையும் தகுதியும் படைத்தவர்கள் (1)\nநீட் தேர்வு நிரந்தர விலக்கு (2)\nநீதி கேட்கும் ஒன்றுகூடல் (1)\nநீதிபதி சி.டி. செல்வம் (1)\nபரப்புரையின் தொடக்க விழா (1)\nபவானியில் கேரள அரசு தடுப்பணை (1)\nபறிபோகும் தமிழர் தாயகம் (2)\nபாடி - இடைத்தெரு (1)\nபாம்பை விரட்ட பச்சோந்திகளால் முடியாது (1)\nபாரதமாதா பலிகொண்ட தமிழன் (1)\nபிப்ரவரி 25 - தமிழ்த் தேசிய நாள் - ஏன்\nபுதிய கல்வி கொள்கை (2)\nபுலவர் கலியப்பெருமாள் வீரவணக்கம் நிகழ்வு (1)\nபுலவர் கு. கலியபெருமாள் (1)\nபூம்புகார் மொதுக் கூட்டம் (1)\nபெ. மணியரசன் ஆரியத்துவா எதிர்ப்பு\nபெ. மணியரசன் ஆரியத்துவா எதிர்ப்பு (1)\nபெ. மணியரசன் ஆரியத்துவா எதிர்ப்பு தமிழ்மொழிப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் ஆரியத்துவா எதிர்ப்பு தாயகப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் ஆரியத்துவா எதிர்ப்பு\nபெ. மணியரசன் இறுதி வணக்கம்\nபெ. மணியரசன் கோரிக்கை (2)\nபெ. மணியரசன் சாதி ஒழிப்பு\nபெ. மணியரசன் சாதி ஒழிப்பு ஆரியத்துவா எதிர்ப்பு\nபெ. மணியரசன் தமிழீழ விடுதலை\nபெ. மணியரசன் தமிழ்த் திரை\nபெ. மணியரசன் தமிழ்மொழிப் பாதுகாப்பு (1)\nபெ. மணியரசன் தமிழ்மொழிப் பாதுகாப்பு தாயகப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் தமிழ்மொழிப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் தாயகப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் திராவிட எதிர்ப்பு (1)\nபெ. மணியரசன் திராவிட எதிர்ப்பு தாயகப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் திராவிட எதிர்ப்பு\nபெ. மணியரசன் நீர் உரிமை\nபெ. மணியரசன் பங்கேற்பு (2)\nபெ. மணியரசன் பேட்டி (1)\nபெ. மணியரசன் வெளியார் சிக்கல் தாயகப் பாதுகாப்பு\nபெ. மணியரசன். ஆரியத்துவா எதிர்ப்பு\nபெ.மணியரசன் அவர்கள் கைது (1)\nபெண்களை இழிவுபடுத்தும் விஜய் தொலைக்காட்சி (2)\nபெரியாருக்கு பின் பெரியார் (1)\nபேராசிரியர் து. மூர்த்தி (2)\nபொன்மலை தொடர்வண்டிப் பணிமனை (1)\nபோராட்டக் களத்தில் நின்ற பெண்கள் (1)\nமகளிர் ஆயத்தின் தீரமிக்கப் பணிகள்\nமகளிர் நாள் - மார்ச்சு 8 (1)\nமக்கள் போராட்டமும் சனநாயகமும் (1)\nமண்ணின் மக்களுக்கு வேலை வழங்கு (2)\nமண்ணின் மக்களுக்கே வேலை (1)\nமதுபான ஆலை முற்றுகை (1)\nமயிலாடுதுறை மாணவ ஈகி சாரங்கபாணிக்கு (1)\nமரண தண்டனை எதிர்ப்பு (2)\nமரபீனி மாற்றக் கடுகை அனுமதிக்காதே\nமருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை (1)\nமனிதச் சங்கிலிப் போராட்டம் (1)\nமனிதச் சுவர் போராட்டம் (1)\nமாட்டுக்கறித் தடைச் சட்டம் (2)\nமாணவி அனிதா தற்கொலை (2)\nமாநில சுயாட்சியும் கூட்டாட்சிக் கோட்பாடும் (1)\nமாமணிக்கு மணிவிழா ஆண்டு (1)\nமாவீரர் நாள் வீரவணக்கக் கூட்டம் (1)\nமூளைச் சோம்பல் முகமூடித் தமிழ்த்தேசியம் (1)\nமே நாள் - எழுச்சிப் பொதுக்கூட்டம்\nமேதகு வே. பிரபாகரன் (1)\nமொழி வழி மாநிலம் (1)\nயாரும் வாக்களிக்கவே போக மாட்டார்கள் (1)\nரேசன் கடைகளுக்கு மூடுவிழா (1)\nலட்சுமி என்னும் பயணி (1)\nலட்சுமி என்னும் பயனி (2)\nவழக்கறிஞர்களின் உண்ணாப் போராட்டம் (1)\nவிமானப் படைத்தள முற்றுகைப் போர் (1)\nவீரசந்தானம் இல்லாத வெறுமை உணரப்படும் (1)\nவெளி மாநிலத்தவருக்கு அரசு வேலை (1)\nவெளி மாநிலத்தவரும் வெளி நாட்டினரும் (1)\nவெளியார் ஆக்கிரமிப்பு எதிர்ப்பு (6)\nவேலூர் சிறையில் பேரறிவாளனுடன் பெ. மணியரசன் சந்திப்பு\nவேளாண்மையைப் பலியிட மோடி அரசின் புதிய திட்டம் (1)\nவைரமுத்து கங்காணி வேலை பார்க்கக்கூடாது (1)\nஜனகணமன பாடும் வரைதான் “திராவிடம்” இருக்குமா\nஜேக்டோ ஜியோ போராட்டம் (1)\nஸ்பாரோ இலக்கிய விருது (1)\nCopyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://battimedia.lk/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9/", "date_download": "2021-10-19T12:23:51Z", "digest": "sha1:KMAY7BRVABEEUCAGIFEY2HS45CO34NGY", "length": 5855, "nlines": 111, "source_domain": "battimedia.lk", "title": "நடிகை சமந்தா ‘பேமிலி மேன்-2’ ‘வெப்’ தொடரில் நடிப்பதற்காக ரூ.4 கோடி வரை சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது. - Battimedia", "raw_content": "\nHome சினிமா நடிகை சமந்தா ‘பேமிலி மேன்-2’ ‘வெப்’ தொடரில் நடிப்பதற்காக ரூ.4...\nநடிகை சமந்தா ‘பேமிலி மேன்-2’ ‘வெப்’ தொடரில் நடிப்பதற்காக ரூ.4 கோடி வரை சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது.\nநடிகை சமந்தாவும் ‘பேமிலிமேன்-2’ மூலம் ‘வெப்’ தொடருக்கு வந்துள்ளார். இந்த தொடர் சமீபத்தில் வெளியானது. இதில் சமந்தாவின் போராளி கதாபாத்திரத்துக்கு வரவேற்பு கிடைத்தது. எதிர்ப்புகளும் கிளம்பின.\nஇதையடுத்து மேலும் புதிய ‘வெப்’ தொடர் ஒன்றில் நடிக்க அவருக்கு வாய்ப்பு வந்துள்ளது. இந்த தொடரை தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் எடுக்க திட்டமிட்டு உள்ளனர். இதில் நடிக்க சமந்தாவுக்கு ரூ.8 கோடி சம்பளம் பேசி வருவதாக தகவல் பரவி உள்ளது. சமந்தா ஒரு படத்தில் நடிக்க அதிகபட்சமாக ரூ.1 கோடியே 50 லட்சம் சம்பளம் வாங்குகிறார். ‘பேமிலி மேன்-2’ ‘வெப்’ தொடரில் ரூ.4 கோடி வரை சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது.\nPrevious articleமட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரையில் 3935 பேர் கோவிட் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதுடன், 57 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nNext articleகதிரவெளி, கித்துள் பிரதேசங்களில் இரு யானைகளின் உடலங்கள்\nசமந்தாவை நான் சகோதரியாகவே பார்க்கிறேன்.\nநிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாக நடிகை நயன்தாரா கூறியுள்ளார்.\nஓ அந்த நாட்கள் திரைப்படத்தில் ,1980-1990 நடிகைகள் சங்கமம்.\nஅனைத்து விதமான செய்திகளையும் உடனுக்குடன் அறிந்துக்கொள்ள தொடர்ந்தும் இணைந்திருங்கள். ஊடகவியலாளர்களாக இணைய விரும்புபவர்களும் தொடர்புகொள்ளவும் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2021-10-19T13:20:35Z", "digest": "sha1:6ONSA4K4FVJHG6P4BNB6M3B5G6AZJTRJ", "length": 5318, "nlines": 38, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "விக்ரம் நாட்காட்டி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவிக்ரம் நாட்காட்டி (விக்ரம் சம்வாட், அல்லது பிக்ரம் சம்பாத்), (தேவநாகரி:विक्रम संवत) இந்திய பேரரசன் விக்கிரமாதித்தன் நிறுவிய நாட்காட்டியாகும். நேபாளத்தின் அலுவல்முறை நாட்காட்டியாகவும் இந்தியாவில் பலரும் பாவிக்கும் நாட்காட்டியாகவும் உள்ளது.நேபாளத்தில் விக்ரம் சம்வாத் தவிர அங்கு பழங்காலத்தில் நிலவிய நேபாள் சம்பாத்தும் கிரெகொரியின் நாட்காட்டியும் அங்கு பயன்படுத்தப்படுகிறது.\nசந்திரகுப்த விக்கிரமாதித்தனால் நிறுவப்பட்டதாக எண்ணப்படும் பொதுவான கருத்துக்கு மாறாக, உண்மையில் இந்த நாட்காட்டி உஜ்ஜைனை ஆண்டுவந்த விக்கிரமாதித்தனால் கி.மு 56ஆம் ஆண்டில் அவன் சகா வம்சத்தவர்களை வெற்றி கண்டதைக் கொண்டாடும் வகையில் நிறுவப்பட்டது.[1]. இது சந்திர நாட்காட்டியை பின்பற்றிய இந்து நாட்காட்டியாகும்.விக்ரம் நாட்காட்டி 56.7 ஆண்டுகள் சூரிய நாட்காட்டியான கிரெகொரியின் நாட்காட்டியை விட கூடுதலாகும்.காட்டாக,விக்ரம் சம்வாட் 2056 கிரெகொரியின் நாட்காட்டியில் கி.பி 1999 ஆண்டு துவங்கி 2000ஆம் ஆண்டு முடிவடைந்தது.வட இந்தியாவில் மார்ச்/ஏப்ரல் மாதங்களில் துவங்கும் சைத்ரா மாதத்தின் அமாவாசையன்று ஆண்டு துவங்குகிறது.\nநேபாளத்திலிருந்து ஆங்கில மற்றும் ஆங்கிலத்திலிருந்து நேபாளத்திற்கு நாள் மாற்றுதல்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 மே 2019, 05:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arisenshine.in/tag/forgiveness/", "date_download": "2021-10-19T11:42:44Z", "digest": "sha1:RSO2IHNFZARDOAL2R4YCQ6CAXUXODSB3", "length": 5021, "nlines": 72, "source_domain": "www.arisenshine.in", "title": "forgiveness – Arise n shine", "raw_content": "\nஎந்த வயதில் தேவனுக்கு ஊழியம் செய்யலாம்\n1 தீமோத்தேயு:2.5 – தினத்தியானம்\nஇயேசு-லேகியோன் சந்திப்பு – பாகம் 7\nதேவனிடம் சமரசம் செய்ய விரும்புகிறோமா\nஇயேசு-லேகியோன் சந்திப்பு – பாகம் 6\nகுடும்ப நபர்களுக்காக எப்படி ஜெபிக்கிறோம்\nதன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டு விடுகிறவனோ இரக்கம் பெறுவான். நீதிமொழிகள்.28:13\nஜெபத்தில் ஏற்படும் மாற்றங்கள்– 6\nஎந்த வயதில் தேவனுக்கு ஊழியம் செய்யலாம்\n1 தீமோத்தேயு:2.5 – தினத்தியானம்\nஇயேசு-லேகியோன் சந்திப்பு – பாகம் 7\nதேவனாகிய கர்த்தர் தாம் மனுஷனில் எடுத்த விலா எலும்பை மனுஷியாக உருவாக்கி, அவளை மனுஷனிடத்தில் கொண்டு வந்தார். ஆதியாகமம்:2.22\nஎந்த வயதில் தேவனுக்கு ஊழியம் செய்யலாம்\nதேவனுக்கு ஊழியம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இரட்சிக்கப்பட்ட எல்லாருக்கும் இருக்கிறது. ஆனால் அதன் பின்னணியில் எந்த வயதில் அவருக்கு ஊழியம் செய்யலாம்\n1 தீமோத்தேயு:2.5 – தினத்தியானம்\nதேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே. 1 தீமோத்தேயு:2.5\nஎந்த வயதில் தேவனுக்கு ஊழியம் செய்யலாம்\n1 தீமோத்தேயு:2.5 – தினத்தியானம்\nஇயேசு-லேகியோன் சந்திப்பு – பாகம் 7\nதேவனிடம் சமரசம் செய்ய விரும்புகிறோமா\nஇயேசு-லேகியோன் சந்திப்பு – பாகம் 6\nஎந்த வயதில் தேவனுக்கு ஊழியம் செய்யலாம்\n1 தீமோத்தேயு:2.5 – தினத்தியானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/india/2021/09/26/kerala-priest-sentenced-to-life-imprisonment", "date_download": "2021-10-19T12:59:17Z", "digest": "sha1:TDAJCEEQ7KR6OAPX6UGKNNVPWEGP62JC", "length": 9576, "nlines": 53, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Kerala priest sentenced to life imprisonment", "raw_content": "\n“பாலியல் குற்றவாளியின் காணிக்கையை எந்த கடவுளும் ஏற்றுக்கொள்ள மாட்டார்” : கேரள சாமியாருக்கு ஆயுள் தண்டனை\nகேரள மாநிலத்தில் மனநில பாதிக்கப்பட்ட பெண்ணின் குழந்தைக்கு சிறார் வதை செய்த சாமியாருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகேரள மாநிலத்தில் பெண் ஒருவர் மனநில பாதிக்கப்பட்ட நிலையில், தனது மூன்று குழந்தைகளை வைத்துக்கொண்டு சாலையில் திரிந்துள்ளார். இதனைக் கவணித்த சமூக ஆர்வலர் ஒருவர், கேரள பெண்கள் பாதுகாப்பு மைத்திற்கு தொடர்புக்கொண்டு உதவி கோரினார்.\nஇதனையடுத்து கேரள பெண்களுக்கான ஹெல்ப்லைன் ‘வனிதா செல்’லைச் சேர்ந்தவர்கள் அந்த பெண் மற்றும் குழந்தையை மீட்டு மனநல காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே அந்தப் பெண்ணிடம் மனநல மருத்துவர்கள் ஆலோசனை நடத்தியத்தில் சாமியார் ஒருவரால் அந்தப் பெண்ணுக்கு நடந்த அவலம் குறித்து தெரியவந்துள்ளது.\nதிருமணம் நடந்து மூன்று குழந்தைகள் ஆனபிறகு கணவனால் கைவிடப்பட்ட வருத்தத்தில் இருந்த அந்தபெண் பின்னர் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சாமியார் ஒருவர் அந்த பெண்ணிற்கும் குழந்தைகளுக்கும் அடைக்கலம் கொடுப்பதாகக் கூறி, தனது ஆசிர���த்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.\nஅங்கு அந்தபெண் மற்றும் அந்தப் பெண்ணினுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்தாகத் தெரியவந்தது. அதுமட்டுமல்லாது அந்த பெண்ணின் முதல் குழந்தையான பள்ளி சிறுமிக்கு சிறார் வதைக் கொடுமையைக் கொடுத்துள்ளார்.\nமேலும் பல நேரங்களில் சிறுமியின் தாய், தங்கை மற்றும் தம்பி முன்னிலையிலேயே சிறார் வதை செய்துள்ளார் அந்த சாமியார். ஒருவருடத்திற்கு மேலாக இந்த சிறார் வதையை சாமியார் செய்துவந்ததாகவும், இதுதொடர்பாக வெளியே யாரிடமாது சொன்னால், குடும்பத்தோடு கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளார்.\nஇந்நிலையில் ‘வனிதா செல்’ நிர்வாகிகள் அளித்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலிஸார் சாமியாரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் சாமியாருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nஇந்நிலையில் இதுதொடர்பான வழக்கு நேற்று முன்தினம் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதி, “ ஒரு ஆண் தன் மனைவி மற்றும் குழந்தைகளைக் கைவிடம் போது, அந்தப் பெண்ணை மட்டுமல்லா, ஆதரவற்றுப் போகும் குழந்தைகளையும் இரையாக்க இன்றைய சமூகத்தில் கழுகுகள் அதிகம் காத்திருக்கின்றன.\nஇந்த வழக்கில் சிறுமி ஒருவர் ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்ட தாய் மற்றும் தன் தம்பி தங்கையின் முன்னிலையிலேயே சாமியாரால் சிறார் வதைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார் என்றால் அது எவ்வளவு கொடூரமானது. அந்த சாமியாரின் வணக்கத்தையும் காணிக்கையும் எந்த கடவுளும் ஏற்றுக்கொள்ளமட்டார். அவர் எப்படி கடவுளுன் ஊடகமாக இருக்கமுடியும்” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.\n“தாய், தம்பி முன்னிலையிலேயே ஒரு வருடமாகச் ‘சிறார் வதைக்கு’ ஆளான சிறுமி” : கேரள சாமியாரின் கொடூர செயல் \n“எங்க கல்யாணத்த மழை வெள்ளம் தடுப்பதா.. நெவர்” : காதல் ஜோடி எடுத்த முடிவு - இணையத்தில் வைரல்\n\"பூனைக்குட்டி என நினைத்து புலிக்குட்டியை தூக்கியவர் பதறியடித்து ஓட்டம்” - சாலையில் நடந்தது என்ன\n“நாளை நம்மை காப்பாற்றிக்கொள்ள எந்த வாய்ப்பும் இருக்காது” : உலகிற்கு மாலத்தீவு சொன்ன அதிர்ச்சி செய்தி\nLKG படித்த சிறுமிக்கு பாலியல் தொல்லை.. ஆசிரியருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஐகோர்ட் அதிரடி\n\"சகிப்புத்தன்மை குறித்து யார் பா��ம் எடுப்பது” : Zomato நிறுவனரின் ட்வீட்டால் மீண்டும் சர்ச்சை\nLKG படித்த சிறுமிக்கு பாலியல் தொல்லை.. ஆசிரியருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஐகோர்ட் அதிரடி\n“எங்க கல்யாணத்த மழை வெள்ளம் தடுப்பதா.. நெவர்” : காதல் ஜோடி எடுத்த முடிவு - இணையத்தில் வைரல்\n“விரைவில் ஆழ்கடல் அகழாய்வுப் பணிகளைத் தொடங்க ஆலோசனை” : அமைச்சர் தங்கம் தென்னரசு முக்கிய தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndpfront.com/index.php/authors/135-news/articles/vijayakumaran", "date_download": "2021-10-19T11:10:37Z", "digest": "sha1:4UXPGRF7HVVTOGXXTIGDPBRMSXVQORV2", "length": 42484, "nlines": 349, "source_domain": "www.ndpfront.com", "title": "விஜயகுமாரன்", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nபுலம்பெயர் தேசபக்த வேடக்காரர்களின் இலங்கை அரச சந்திப்பு\t Hits: 5358\nபிரேமானந்தாவும் இயேசுவை மாதிரி ஒரு தீர்க்கதரிசி தான் - அய்யா விக்கினேஸ்வரன்\t Hits: 3966\nயூதாஸ் என்ற யேசுவின் துரோகியும், ஈழத் துரோகிகளும்...\t Hits: 4541\nதமிழ்நாட்டில் தமிழில் பாடுவதற்கு போராடிய சிவனடியார் மறைந்தார்\nஒரு வேலையற்ற பட்டதாரியின் மரணம்\t Hits: 14020\nகத்தி முனையில் சிவப்பு இரத்தம்\nஎங்கள் பெண்களை மற்றவர்கள் எப்படி காதலிக்கலாம்\nசின்னப் பெடியன்கள் சொன்ன பிறகு தான் தமிழ் தலைமைகளைப் பற்றித் தெரியுதோ\nஅமெரிக்காக்காரன் ஜெனீவாவில் புடுங்குவான் என்றார்கள் பிழைப்புவாத தமிழ், முஸ்லிம் அரசியல் தலைமைகள்\nமீளா அடிமை உமக்கே ஆனோம்\nபோராட்டங்களிற்கு விலை பேசும் கயவர்கள்\t Hits: 3708\nஏன் மகிழ்ச்சியாக இருக்கும் ஒருவரையும் இந்தக் கடவுள்கள் தம்மிடத்தில் சேர்த்துக் கொள்ளுவதில்லை\nதமிழரை தமிழச்சி ஆண்டால் மிச்சமிருக்கும் தமிழ்நாடும் கொள்ளையடிக்கப்படும்\t Hits: 3499\nநந்தினி, ஒரு தாழ்த்தப்பட்ட ஏழைப்பெண்ணின் கொலை\t Hits: 3549\nபதவி விலக வேண்டியது தமிழ்நாட்டு அரசியல் பொறுக்கிகளா, காவல்துறை நாய்களா\nகேப்பாபுலவுவில் மக்கள் போராடுகிறார்கள்; எம் மக்களே இறுதி வரை நாம் போராடுவோம்\nஉண்ணாவிரதம் முடித்து வைக்கப்பட்டிருக்கலாம்; ஆனால் போராட்டங்கள் முடிவதில்லை\nகொல்ல வருகிறது கொக்கோ கோலா\t Hits: 3803\nமாட்டை உண்டதற்காக மனிதரை கொல்லும் மதவெறிக் கொலையாளிகள்\nஏறு தழுவிட எழுந்து வருவீர் நல்லூருக்கு\nதமிழர்கள் ஒல்லாந்தர்களால் புகையிலை பயிரிட கொண்டு வரப்பட்டவர்களாம் - ஒரு கண்டுபிடிப்பு Hits: 3765\nநீ உருப்படவே மாட்டாய், ஒரு ஆசிரியரின் வாழ்த்துப்பா\t Hits: 3650\nதமிழக அரசியலை நக்கல் அடிப்பவர்களே, நமது கேவலத்தை என்னவென்பது\nபோராளிகளைக் கை விடும் சமூகம் மண் மூடிப் போகட்டும்\nகாந்திக்கு சிலை வைத்து கசிய விடப்படும் கள்ள அரசியல்\t Hits: 3795\nகெளதம சித்தார்த்தன் இலங்கையில் வைத்து இனவாதிகளால் கொல்லப்பட்டான்\nமக்கள் போராடும் போது மலைகளும் வழி விடும்\nஒரு பார்ப்பனப் பயங்கரவாதி பாடையிலே போகிறான்\t Hits: 4865\nஎமது தோழர்கள் லலித் - குகன் கடத்தப்பட்டு காணாமல் போய் ஐந்து வருடங்கள்...\nஅ.தி.மு.கவும், ஆயிரம் திருடர்களும் கொள்ளைக்கூட்டத்தின் தலைவி மரணம்\t Hits: 5940\nமனிதர்கள் எழுவார்கள்\t Hits: 4400\nபுரட்சி கியூபாவை விடுதலை செய்தது\t Hits: 3800\nஅவனும் என்னை மாதிரி ஒரு கெட்டிக்காரன் தான்\nசவுதியில் கொல்லப்பட்ட மலையகத்தின் ஏழைத் தாய்\t Hits: 4609\n\"தமிழ் நாயே, நான் உன்னைக் கொல்லுவேன்\" Hits: 3821\nஅயோக்கியர்களின் அரசியலில் அடிமைத்தனம் சகஜமப்பா\nகல்வியை நாளைய நம்பிக்கையாக இறுகப் பிடித்திருக்கும் நம் குழந்தைகளிற்காக குரல் கொடுப்போம்\nஈழம் மாமி கிலாரிக்காக தேங்காய் உடைக்க அனைவரும் வருக - தேங்காய் சிவாஜிலிங்கம்\t Hits: 4151\nஇலங்கையில் பெளத்தர்களை தவிர மற்றவர்களிற்கு இடமில்லை - பெளத்த மதவெறி Hits: 3474\nமாணவர்களின் கொலைகளிற்குப் பின் மறைந்திருக்கும் நயவஞ்சகர்கள்\t Hits: 3691\nபிரபாகரனின் தாயாரை திருப்பியனுப்ப காரணமாக இருந்தவள் காசி ஆனந்தனிற்கு அம்மாவாம்\nஎன்னத்தை செய்து என்னத்தை புடுங்கப் போகிறியள்\nஇலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் சிவசேனா என்னும் நச்சுக் கிருமி\t Hits: 5143\nஅப்ப, அய்யா விக்கினேஸ்வரன் ஒரு போராளி ஆகிட்டாரோ\nமலையகம் எரிகிறது, வாக்கு வாங்கிப் போன கள்ளர்கூட்டங்கள் எங்கே\nஎழுக தமிழரே, எழுந்து கட் அவுட்டுக்கு பால் ஊற்றும் தமிழரே\nநான் கொல்லப்படலாம், அதற்காக அழாதீர்கள்\t Hits: 3682\nகிளிநொச்சியில் தீயணைக்க வண்டி இல்லை; அய்யாமாருக்கோ அதிவிரைவு வாகனங்கள்\t Hits: 6599\nதேசபக்தியைக் கிழித்தாய், வாழி காவேரி\nஎளிய மனிதர்களிற்கு மிக அரிதாகவே வெற்றிகள் கிட்டுகின்றன\t Hits: 3262\nதம்மை எதற்கும் இழக்காத போராளிகள்\t Hits: 3791\nகாணாமல் போனவர்களிற்காக ஆயிரம் பேர், என்றுமே காணாத முருகனிற்காக மூன்று லட்சம் பேர்\t Hits: 3815\nதமிழ்த் திரைப்படக்காரர்களின் உண்மை முகம் இ��்போது தான் தெரிகிறதா, அறிவுக் கொழுந்துகளே\nஇறந்தும் இரக்க வேண்டின் அழியட்டும் இந்த உலகு\t Hits: 2672\nஇந்திய இராணுவத்திற்கு அஞ்சலி, அடுத்தது என்ன ராஜிவ் காந்திக்கு சிலையோ\nவிகாரைகளைத் திணிக்கும் சிங்கள பெளத்த இனவெறி அரசு\t Hits: 2293\nகடல் சூழ் கீரிமலை சிவனிற்கு கருவாட்டு மணம் பிடிக்காதாம், என்ன ஒரு சாதிவெறி\nலண்டன் ஈலிங் அருள்மிகு கனகதுர்க்கை அம்மன் தேர்த்திருவிழா சிறப்புக் கட்டுரை\nஒரு இனப்படுகொலையாளி பாதயாத்திரை போகின்றான்\t Hits: 3300\nவேண்டாம் இனியும் மக்களைக் கொல்லும் இனவாதம்\nகிளிநொச்சியில் மறுபடியும் ஒரு அநியாயம்\t Hits: 4103\nகிளிநொச்சி தமிழ்த்தேசியத்தில் மலையகத் தமிழருக்கு இடமில்லை Hits: 2904\nநான் உன்னை விட்டு பிரிவதுமில்லை, உன்னை விட்டு விலகுவதுமில்லை\nஐரோப்பாவில் இனவாதம், அது கிடக்கட்டும் நாங்கள் தேர் இழுப்போம்\t Hits: 3095\nநல்லூர் கந்தசாமி கோவில் தண்ணீர் பந்தல் - உபயம் இந்திய தூதரகம்\t Hits: 2390\nசாத்தான்களின் சட்டத்தரணிகள்\t Hits: 2675\nதொண்டைமானில் தொடங்கி மனோ கணேசன் வரையான மலையக மக்களின் எதிரிகள்\t Hits: 2251\nநூல்நிலையத்தை எரித்ததை ஒத்துக் கொள்ளாதவர்கள், இனப்படுகொலைக்கு நீதி வழங்குவார்களாம்\nவிடியலை நோக்கிய ஒரு பயணம்\t Hits: 2225\nஒடுக்கப்பட்ட கரங்கள் மீண்டும் எழும்\nதமிழனை தமிழன் ஆண்டால் கூவத்தில் தேனும், பாலும் பாய்ந்து ஓடும்\nதமிழ்மக்களை கொன்றது மகிந்தா இல்லை; நாயக்கர்கள் தான் கொன்றார்கள், அண்ணன் சீமான்\t Hits: 3292\nசரவணபாபா என்னும் ஜிலேபி சாமியார் நெதர்லாந்தில். உங்கள் பணம் பத்திரம்..\nநின்னிடைத் தோன்றி நின்னிடை அடங்கும்\t Hits: 2700\nசம்பந்தன் அய்யா; நீங்கள் கெட்டவரா, ரொம்ப கெட்டவரா\nகாசி ஆனந்தன் தமிழ் மக்களிற்கு வைக்கும் கண்ணிவெடி\t Hits: 2397\nவழிந்தோடிய குருதியில் வரைந்த செங்கொடி\t Hits: 1955\nகாற்றையும், போராளியையும் கட்டிப் போட முடியுமா\nஎதிர்த்து ஒரு வார்த்தை பேசுமா எதிர்க்கட்சி தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு\nஜல்லிக்கட்டிற்கு தடை என்றால் தமிழன், திருமணம் என்றால் தேவன்\t Hits: 2057\nஆதரவற்ற அகதிகளை துன்புறுத்தும் தமிழ்நாட்டு அதிகார வர்க்க நாய்கள்\t Hits: 1973\nசெந்தமிழன் சீமானும் பிறகு இரண்டு கொள்ளைக்காரர்களும்\t Hits: 3004\nஅடிமையானாலும் இந்திய எசமானர்களின் அடிமையாவோம், அய்யா சம்பந்தன்\t Hits: 2229\n, என்னது மறுபடியும் போரா\nநல்லூர் கந��தசாமியும், பாவாடை - தாவணியும்\t Hits: 2121\nபற நாயே, ஒரு தமிழ்த்தேசிய சாதிவெறி\t Hits: 2481\nபேராசிரியர்கள் வெள்ளிக்கிழமைகளில் கோவணம் மட்டுமே கட்ட வேண்டும் - யாழ் பல்கலைக்கழகம்\t Hits: 8662\n\"கற்பு கொள்ளையர் தினம்\" என்று ஊளையிடும் மதவெறி மிருகங்கள்\t Hits: 2164\nஇன்னுமாடா இந்த உலகம் ஐக்கிய நாடுகள் சபையை நம்புது\nசவுதிக்கும், சபரிமலைக்கும் மாதவிடாய் பெண்கள் என்றால் ஏன் சரியாவதில்லை\t Hits: 2841\nசும்மா கிடைக்க சுதந்திரம் என்ன சுக்கா மிளகா கிளியே\nநம் அன்னையர் அழும் கண்ணீர் ஒரு நாள் மகிந்தாவை எரிக்கும்\nவைரமுத்து அண்ணாந்து விட்ட கொட்டாவி எல்லாம் ஈழ காவியமாக வரப்போகிறது\t Hits: 2701\nஉங்கள் பதவி ஆசைகளிற்கு மக்களை பலியிடாதீர்கள், தமிழ்த்தலைமைகளே\nஇந்து பயங்கரவாதம் செய்த கொலை ரோகித்தின் மரணம்\nஎம் பச்சை வயல்களை பறிக்க வரும் கொள்ளையர்கள் Hits: 2101\nதமிழ்த்தேசியம், இலங்கை அரசு ஆதரவு; ஒரே மேடையில் இரண்டு நாடகங்கள்\t Hits: 2200\nஇறந்த மனிதரைக் கூட இழிவுபடுத்தும் இந்துமத சாதிவெறி\nசெந்தமிழில் பெண்களைத் திட்டும் பைந்தமிழ் மறவர்கள்\t Hits: 3180\nஅடுத்ததாக அண்ணன் சீமான் பேச வருகிறார், அனைவரும் காதுகளை பொத்திக் கொள்ளவும்\t Hits: 3037\nகோலஞ்செய் யாழ்ப்பாணத்து பிரின்சிபலே நீயெனக்கு ஆறாம் வகுப்பு அட்மிசன் ஒன்று தா\nமித்திரனில் இருந்து யாழ்ப்பாண இணையத்தளம் வரையான ஊடகப்பொறுக்கிகள்\t Hits: 3604\nஆண்களால் தினம், தினம் கொல்லப்படும் வித்தியாக்கள்\nபொறுத்தது போதும் பொங்கியெழு, மாவை சேனாதிராசா\nஇந்த காவாலிகளின் பாட்டு மட்டும் தான் பெண்களை இழிவுபடுத்துகிறதா\nஅழாதே அம்மா, உன் கண்ணீர் ஒரு நாள் அவர்களின் அதிகாரங்களை எல்லாம் அழித்து ஒழிக்கும்\t Hits: 2844\nமாட்டை உண்டதற்காக மனிதரை கொல்லும் மதவெறிக் கொலையாளிகள்\t Hits: 2903\nஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எல்லாமே மக்களின் எதிரிக்கட்சிகள் என்பது தான் காலங்காலமான வரலாறு\t Hits: 1985\nஏழைக்கு மரணதண்டனை, காமுகனிற்கு அரசபதவி, இது தான் மதச்சட்டம்\t Hits: 2084\nசெருப்படி நாராயணணிற்கு மட்டும் தானா\nதோழர் கோவனை சிறையிலிட்ட சாராய வியாபாரி ஜெயாவை விரட்டுவோம்\nஅரசுகள் மக்களிற்காக என்று எந்த மடையன் சொன்னான்\nஅமெரிக்காவும், கத்தோலிக்க சபையும் சேர்ந்து காப்பாற்றிய இனப்படுகொலையாளி\nதொண்ணூறு வயது பயங்கரவாதியே, போய் வாரும் அய்யா\nநாங்களும் தான் மகிந்த ராஜபக்சவின் சட்டையைக் கழட்டினோம்\t Hits: 2173\nமாடு மேய்ப்பது கேவலம், ஒரு \"தமிழ்த்தேசியக்\" கண்டுபிடிப்பு\nஇங்கு கம்புச்சண்டை கற்றுத் தரப்படும் - யாழ் பல்கலைக்கழகம்\t Hits: 2249\nஅகதிகளின் குருதி குடிக்கும் தமிழ் நாட்டு பொலிஸ்நாய்கள்\t Hits: 2057\nவிளங்கிக் கொள்ளாவிட்டால், விலகிக் கொள்ளட்டும்\nமதங்களும் மக்களுக்கு இடையிலான பிரிவினைகளும் \nகொடைவள்ளல் எம்.ஜி.ஆரின் இலங்கை அவதாரம் அண்ணன் சுமந்திரன்\t Hits: 2432\nபார்க்குண்டா (Farkhunda), இஸ்லாமிய மதவெறியர்களின் படுகொலை\t Hits: 2329\nசரியான பாதை சமத்துவ பாதை தான் எம்மக்களே\nபிள்ளையாரை முள்வேலிக்குள் சிறை வைத்த கரவெட்டி சாதிவெறியர்கள்\nகொடிமரமே மாயமாய் மறைந்த மர்மம் என்ன மருதடி பிள்ளையானே\nயாழ் இந்து பழைய மாணவர்கள் பெருமையுடன் வழங்கும் \"கொலையரசி\"\t Hits: 2857\nநாளை வரும் போர்க்களங்களில் அவனது பாடல்களை நாம் பாடுவோம்...\t Hits: 2020\nசக்கிலியர்கள் மனிதர்கள் அல்ல, தமிழ்தேசியக் கூட்டமைப்பின் சாதிவெறி\n\"வெல்வோம்-அதற்காக\": மரணத்தின் வெளிகளில் வாழ்ந்த ஒரு போராளியின் பதிவுகள்\nசேர்ந்து நடப்போம், வாரும் சகோதர, சகோதரியரே\nசைவ வேளாள வெறி நல்லூர் ஆறுமுகத்தின் அடுத்த வாரிசு அ.முத்துலிங்கம்\nஅன்று வந்ததும் இதே கொலைகாரர்கள், இன்று வந்ததும் அதே கொலைகாரர்கள்\nபார்ப்பனியமும், யாழ் சைவ வேளாளியமும் ஒரு பாம்பின் இரு தலைகள்\nகருத்திற்கு எதிராக கத்தியை தூக்கும் மூடர்கூட்டம்\n2020 இலங்கை தேர்தல், அய்யாமுத்துவின் அதிரடி தீர்க்கதரிசனம்\nமகிந்தாவோ, மைத்திரியோ மக்களின் எதிரி இல்லை, முன்னிலை சோசலிசக் கட்சி தான் முதல் எதிரி\nஇந்திய அமைதிப்படையை நியாயப்படுத்தும் ஜெயமோகனிற்கு இலக்கிய தேட்ட விருது\nஎழுந்து வாரும் எம் சகோதர, சகோதரியரே\nபுதிய திசைகள் என்னும் அரசியல் வக்கிரம் பிடித்த குழு\nஎமது தோழர்கள் லலித் - குகன் கடத்தப்பட்டு காணாமல் போய் மூன்று வருடங்கள்...\nமகிந்தவின் பாவங்களை கழுவ வரும் போப்பு\nகியூப படைவீரர்களைக் கொண்டு சே குவாராவைக் கொலை செய்த தமிழ் தேசிய வியாபாரிகள்\t Hits: 2452\n\"உடல் மண்ணுக்கு, உயிர் தத்துவமேதைக்கு\"\nசீமானும் எவ்வளவு நேரம் தான் வலிக்காத மாதிரியே நடிக்க முடியும் \nகாற்றிடம் என்னைக் கொடுத்து போகச் சொல்\nமவுண்ட் ரோட் மகாவிஷ்ணுவின் மகா உளறல்கள்\n\"கருணா அம்மான்\" - நோய்க்குறி\t Hits: 2574\nமண்ணெண்ணெய் வியாபாரியும், சந்தா பிச்சைக்காரனும்\nகாதிலே பூ, அல்லது லைக்கா முதலாளி கைது\t Hits: 2327\nஜாமீன் என்று ஒரு மீன் கடலிலேயே இல்லையாம்\nநட்ட கல்லை சுற்றி வரும் மூடர்கள்\nஒரு சிறுபொறி சுடர்ந்து ஒராயிரம் விளக்குகளை ஏற்றி வைக்கும்\nவாழ்வை மறுதலிக்க முடியாதென்ற உண்மை உணர்ந்து எழுந்து வருவார்கள்\nஇருள் சூழ்ந்த வானத்தில், ஒருநாள் விடிவெள்ளி நிச்சயம் முளைக்கும்\nஅதி உத்தம ஜனாதிபதி மகிந்த சிந்தனைகள் பாகம் இரண்டு\t Hits: 2645\nராஜீவ் செய்த கொலைகளிற்கு என்ன தண்டனை\nராஜினி, ஒரு மனித உரிமை போராளியின் மரணம்\t Hits: 2692\nஒரு இந்துத்துவ நாய் ஊளையிடுகிறது\nஉடல் மண்ணுக்கு, உயிர் தமிழ்ப்பட கோமாளிக்கு\nயாழ் இந்து மாணவன் யதுசனின் மரணம் ஒரு அரசியல் கொலை\nதமிழர்களை கைது செய்து இனவெறி பிரச்சாரம் செய்யும், இலங்கை அரசு\t Hits: 2204\nதயவு செய்து பெரியாரை விட்டு விடுங்கள் சீமான்களே\nஜனநாயகத்திற்கு ஆபத்தாம், எல்லோரும் ஓடி வாங்கோ\nசிவனுடன் தீட்சிதர்கள் சிதம்பரம் வந்தார்களாம். தீட்சிதர்கள் சிதம்பரத்தில், சிவன் எவ்விடத்தில்\nநெல்சன் மண்டேலா: உன்னதமான மனிதன், தோற்றுப்போன புரட்சியாளன்\t Hits: 2124\nசங்கராச்சாரி கொலை செய்தால் குற்றமில்லை\nமன்மோகன்சிங்கு வராது. ஆனால் அசோக் லேலான்ட் வரும், பஜாஜ் வரும்\t Hits: 2083\nஅன்னையர் இட்ட தீ மூழ்க மூழ்கவே\nஒடுக்கப்படும் மக்கள் ஒன்று சேர்ந்து போராடுவதே முன்னுள்ள ஒரே வழி.\t Hits: 1999\nசென்று வா தாயே, ஒரு நாள் பகை முடிப்போம்\nதம்புள்ள அம்மன் கோயில் இடிப்பும், இரண்டு செய்திகளும்\t Hits: 2060\nநான் உன்னை விட்டு பிரிவதுமில்லை, உன்னை விட்டு விலகுவதுமில்லை\t Hits: 2376\nசர்வதேசத்தின் துணையுடன் இலட்சியத்தை அடைய போகிறதாம் கூட்டமைப்பு. வெட்கம் என்பதே கிடையாதா\nராமராசன் பசுநேசன், மகிந்து வெறிநாய்நேசன்\t Hits: 2325\nஅவர்கள் தெரிந்தே கொன்றார்கள்.\t Hits: 2155\nதமிழின கொலையாளி மகிந்து முன் பதவியேற்கும் தமிழ் தேசிய முதலமைச்சர்\nநல்லூர் கந்தசுவாமியின் மேல் தூவப்பட்டவை பூக்கள் அல்ல, தமிழ் மக்களின் குருதி.\t Hits: 2209\nஎமது பெண் போராளிகளை நாம் எம்நெஞ்சில் தாங்கிக் கொள்வோம்\nலலிதா அன்று ஈழ அகதி, இன்று டென்மார்க்கில் - பிறாண்டா அம்மன்\t Hits: 4546\nஅதிசயம், ஆனால் உண்மை. ஒரு பெண்ணிற்கு குழந்தை பிறந்திருக்கிறது.\t Hits: 2363\nஏறுகிறது கோவில்களில் கொடி, இறங்குகிறது தமிழரின் மானமும் பகுத்தறிவும்\nகொலைகாரர்கள் இனம், மதம் பார்த்து கொல்வதில்லை\t Hits: 2347\nஅவர்கள் தேர்தல் சலங்கை கட்டிக்கொண்டு வருகிறார்கள்...\t Hits: 2254\nஇராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதை தேவனுக்கும் கொடுங்கள்\t Hits: 2305\nமனமும், மனம் சார்ந்த பெண்களும்\t Hits: 2855\nதமிழீழம் என் தலைமையில் தான், இல்லையென்றால் எல்லாத்தையும் அழிப்பேன்\nவெள்ளையின வெறியை வளர்த்து விடும் இஸ்லாமிய அடிப்படைவாதம்\t Hits: 2166\nமே தினம் கொண்டாடிய மேதகு பிள்ளையான் வாழ்க\nதலைவரும், மூன்றெழுத்து நடிகையும்\t Hits: 2696\nமானிடத்தின் விரோதிகளை, மக்களின் எதிரிகளை, காங்கிரசு கயவர்களை மக்களே தண்டியுங்கள்\nஉதயசூரியன் உதிக்கப்போவதுமில்லை, இலை மலரப்போவதுமில்லை\t Hits: 2259\nஎந்த காலத்திலும் எந்த நேரத்திலும் Hits: 2467\nசுப்பிரமணியசுவாமி என்னும் பார்ப்பன பயங்கரவாதி\t Hits: 2849\nஎன் கடவுளே, என் கடவுளே ஏன் என்னைக் கை விட்டீர்\nநாங்க இதுவும் சொல்லுவோம் இதுக்கு மேலேயும் சொல்லுவோம்\nஉடலாலும், சொல்லாலும் காயப்படுத்தப்படும் உயிரினம்\t Hits: 2240\nகள்ளர்களும், வேட்டைக்காரர்களும்\t Hits: 2209\nஒரு பேப்பர் ஆசிரியரின் சில பொய்கள். - நக்கிப் பிழைக்கும் ஒரு வாழ்க்கை Hits: 2410\nஇவங்கள் இதுக்கு சரிப்படமாட்டான்கள்\t Hits: 2230\nதமிழனில்லை, சிங்களவனில்லை நாம் மனிதர்கள் என்று அவை மானுடத்தை பாடுகின்றன.\t Hits: 2468\nநம்புங்கள் நாளை தோசைக்கு சட்னி கிடைக்கும்\t Hits: 2229\nஇளையராஜா இசைக்க வருவது தேசத்துரோகம், ஆனால் படம் பார்ப்பது தமிழ்த்தேசியம்\t Hits: 2260\nஅத்தான் இல்லையேல், நான் செத்தேன்...\nஎல்லாப் புகழும் இறைவனிற்கு, எல்லாப் பணமும் எங்களிற்கு\t Hits: 2162\n நீங்க ஒரு சிரிப்பு கம்யுனிஸ்ட்டு\t Hits: 2418\nசண்முகதாசன் என்ற துரோகி கொல்லப்பட்டார் Hits: 2268\nஉயிர் வெந்து சாகும் Hits: 2429\nஇரண்டு ஆணுறைகளும், ஒரு கறுப்பு டோக்கனும்\t Hits: 2475\nஅவனும் என்னை மாதிரி ஒரு கெட்டிக்காரன் தான்\t Hits: 2364\nவெள்ளாள மார்க்சிஸ்ட்டு\t Hits: 2238\nவாழிய யாழ்நகர் இந்துக்கல்லூரி, டோனேசன் பணத்திலே, நடன பெண்களுடனே\t Hits: 2215\nஎன்னடா,இந்த மதுரைக்கு வந்த மயிர் சோதனை\t Hits: 2187\nநமக்கு வாய்த்த இலக்கியவாதிகள் மிகவும் திறமைசாலிகள்\nஒரு பிரியாவிடை\t Hits: 2260\nவிட்டு விடுதலை ஆகி Hits: 2042\nநீங்கள் ஆணியே புடுங்க வேண்டாம்\nயாழ் மாநகர சபையில் ஒரு வெறிநாய்\nநித்தியானந்தாவும் லிங்க வழிபாடும் – (அய்யாமுத்து – பகுதி 2)\t Hits: 2309\nசி���ிமாவிற்கு போன சித்தாளும், நண்பனிற்கு பாலாபிசேகம் செய்தவர்களும்\t Hits: 2081\nஅம்மன் கோயில் அய்யாமுத்து – பகுதி 1 Hits: 2205\nஎன்னது, புலிகள் அனுதாபத்தோடு பார்த்தாங்களா\nமுட்டையிலே மயிர் புடுங்குதல் Hits: 2193\nசரவணபாபா என்னும் ஜிலேபி சாமியார் லண்டனில். உங்கள் பணம் பத்திரம்..\nதீதும் நன்றும் பிறர் தர வாரா\t Hits: 2203\nஎன்னத்தை செய்து என்னத்தை புடுங்கப் போகிறியள்\nசோனியா மாதாவே எங்களைக் காப்பாற்று\nகீற்று இணையம் கண்டு பிடித்த கோயில் கட்டும் புரட்சியாளர்கள் Hits: 2873\nஎகிப்தின் தெருக்களிலே Hits: 2040\nதமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதி பேசுகிறேன்\nதூங்கா விளக்கும் காண்டா மணியும்….தமிழ் எழுத்தாளர் மகாநாடு குறித்து\t Hits: 2100\nரொனியின் நினைவுக் குறிப்புகளும் கள்ளபிரானின் கீதையும்\t Hits: 2053\nபத்து மாதத்தில் உயர்சாதி குழந்தை பெறுவது எப்படி\nநல்லூர் கந்தசாமியும், பாவாடை- தாவணியும்\t Hits: 2769\nசாதியை சொல்லித் திட்டும் சமூக விரோதி\t Hits: 2217\nஜெயலலிதாவின் உதிர்ந்த முடிகள் (அய்யாமுத்து – பகுதி 3)\t Hits: 2214\nமக்களை நேசித்த போராளிகளும் மரண வியாபாரத் தலைவர்களும் Hits: 2129\nநாங்கள் தாகமாய் இருந்தோம். நீர் நஞ்சு தருகிறீர்\t Hits: 2174\nஒரு தீர்க்கதரிசியின் பொன்மொழிகள்\t Hits: 2129\nஅயோக்கியர்களினது தேசபக்தி\t Hits: 2144\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.noolaham.org/wiki/index.php?title=%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD,_%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD_(%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD)&oldid=450909", "date_download": "2021-10-19T12:27:21Z", "digest": "sha1:GI7GAHUOWZQGXLR7H3GK7EEIGJS2XTUZ", "length": 3580, "nlines": 50, "source_domain": "www.noolaham.org", "title": "சண்முகராசா, ஐயாத்துரை (நினைவுமலர்) - நூலகம்", "raw_content": "\nKeerthika Velu (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:38, 6 ஆகத்து 2021 அன்றிருந்தவாரான திருத்தம்\n(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)\nசண்முகராசா, ஐயாத்துரை (நினைவுமலர்) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [11,760] இதழ்கள் [13,280] பத்திரிகைகள் [53,303] பிரசுரங்கள் [1,125] நினைவு மலர்கள் [1,513] சிறப்பு மலர்கள் [5,516] எழுத்தாளர்கள் [4,874] பதிப்பாளர்கள் [4,171] வெளியீட்டு ஆண்டு [185] குறிச்சொற்கள் [91] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,157]\n2017 இல் வெளியான நினைவு மலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilceylon.com/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4-4/", "date_download": "2021-10-19T12:55:18Z", "digest": "sha1:SG5SCFYQO45VV2TXNUHRON73CPNXUWO3", "length": 7049, "nlines": 100, "source_domain": "www.tamilceylon.com", "title": "உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர் பாதுகாப்பு அமைப்புகளுக்கு 97 எச்சரிக்கைகள் கிடைத்தன | Tamil Ceylon", "raw_content": "\nHome செய்திகள் உள்நாட்டுச் செய்திகள் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர் பாதுகாப்பு அமைப்புகளுக்கு 97 எச்சரிக்கைகள் கிடைத்தன\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர் பாதுகாப்பு அமைப்புகளுக்கு 97 எச்சரிக்கைகள் கிடைத்தன\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர் பாதுகாப்பு அமைப்புகளுக்கு 97 எச்சரிக்கைகள் வந்ததாக பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.\nபாதுகாப்பு அமைச்சுகளுக்கு இவ்வாறு 97 முறை முன்கூட்டியே எச்சரிக்கைகள் வந்த போதிலும், பொறுப்பானவர்கள் அதன் மகத்துவத்தையும் ஆபத்தையும் கவனிக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.\nஇந்த தாக்குதல் காரணமாக 290 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், 500 க்கும் அதிகமானவர்கள் காயமடைந்திருந்தனர்.\nநாட்டின் பாதுகாப்பிற்கு தேசிய பாதுகாப்பும் மிக முக்கியமானது. அவற்றைப் பாதுகாக்காமல் ஒரு நாடு முன்னேறவும் அபிவிருத்தி செய்யவும் இயலாது.\nமேலும் நாட்டிற்கு மிகவும் தேவையான நேரடி முதலீட்டை ஈர்ப்பதில் தேசிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு ஆகியவை முக்கியமானது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.\nPrevious articleபாராளுமன்ற உறுப்பினர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம்\nNext articleநாடு திரும்பிய மேலும் 494 இலங்கையர்கள்\nவேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்பவர்களுக்கு முக்கிய தகவல்\nநாளாந்த Passport விநியோகத்தில் அதிகரிப்பு\nநாட்டில் பசுவதையை தடை செய்ய நடவடிக்கை\nஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 21வது ஆண்டு நினைவு தினம் அனுஸ்டிப்பு\nசாணக்கியன் நம்பிக்கைக்கு உரியவர் அல்ல – டக்ளஸ் குற்றச்சாட்டு\nஇலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா\nவேலைவ���ய்ப்புக்காக வெளிநாடு செல்பவர்களுக்கு முக்கிய தகவல்\nஉள்நாட்டுச் செய்திகள் amal - 19-10-2021 0\nநாளாந்த Passport விநியோகத்தில் அதிகரிப்பு\nஉள்நாட்டுச் செய்திகள் amal - 19-10-2021 0\nநாட்டில் பசுவதையை தடை செய்ய நடவடிக்கை\nஉள்நாட்டுச் செய்திகள் amal - 19-10-2021 0\nஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 21வது ஆண்டு நினைவு தினம் அனுஸ்டிப்பு\nஉள்நாட்டுச் செய்திகள் amal - 19-10-2021 0\nசாணக்கியன் நம்பிக்கைக்கு உரியவர் அல்ல – டக்ளஸ் குற்றச்சாட்டு\nஉள்நாட்டுச் செய்திகள் amal - 19-10-2021 0\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tag/maha/", "date_download": "2021-10-19T13:04:29Z", "digest": "sha1:NM7GXC752PGAB5CMOO423VG2T6SBCBUZ", "length": 9088, "nlines": 177, "source_domain": "www.tamilstar.com", "title": "Maha Archives - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nNews Tamil News சினிமா செய்திகள்\nசிம்பு படத்துக்கு தடை கோரிய வழக்கு – நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nநடிகை ஹன்சிகாவின் 50-வது படம் ‘மஹா’. யு.ஆர்.ஜமீல் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் நடிகர் சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மதியழகன் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி...\nNews Tamil News சினிமா செய்திகள்\nநடிகை ஹன்சிகாவின் 50-வது படத்துக்கு தடையா\nநடிகை ஹன்சிகாவின் 50-வது படம் ‘மஹா’. யு.ஆர்.ஜமீல் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் நடிகர் சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மதியழகன் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி...\nNews Tamil News சினிமா செய்திகள்\nசிம்பு – ஹன்சிகாவின் ‘மஹா’ படத்தை ஓடிடி-யில் வெளியிட தடை கோரி இயக்குனர் வழக்கு\nநடிகை ஹன்சிகாவின் 50-வது படம் ‘மஹா’. யு.ஆர்.ஜமீல் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் நடிகர் சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மதியழகன் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி...\nNews Tamil News சினிமா செய்திகள்\nநேரடியாக ஓடிடி-யில் ரிலீசாகும் சிம்பு படம்\nதமிழகத்தில் தற்போது கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதன் காரணமாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. அதன்படி திரையரங்குகளை மூடவும் உத்தரவிட்டுள்ளனர். திரையரங்குகள் திறக்க இரண்டு மாதங்கள் ஆகும்...\nஅரண்மனை 3 திரை விமர்சனம்\nஜமீன்தாராக இருக்கும் சம்பத், ஒரு திருமணத்தை தலைமை தாங்கி நடத்தி வைக்க செல்கிறார். சென்ற இடத்தில் மணப்பெண்ணான...\nவிநோதய சித்தம் திரை விமர்சனம்\nகனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொவிட்-19 தொற்றினால் 2,323பேர் பாதிப்பு- 71பேர் உயிரிழப்பு\nஒன்ராறியோ மக்கள் தடுப்பூசி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்\nகனடாவில் கண்டெடுக்கப்பட்ட 4,000 ஆண்டுகள் பழமையான கத்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.thaaiman.com/2021/06/blog-post_87.html", "date_download": "2021-10-19T13:17:33Z", "digest": "sha1:LME7MVKFU52DTLWP5ZRBXBIGZVBFSVOO", "length": 6699, "nlines": 69, "source_domain": "www.thaaiman.com", "title": "இந்தியால இருந்து கொரோனா போகணும்னா இது நடக்கணும்; நித்தியானந்தா அதிரடி - THAAIMAN", "raw_content": "\nHome / Unlabelled / இந்தியால இருந்து கொரோனா போகணும்னா இது நடக்கணும்; நித்தியானந்தா அதிரடி\nஇந்தியால இருந்து கொரோனா போகணும்னா இது நடக்கணும்; நித்தியானந்தா அதிரடி\nசர்ச்சைக்கு பெயர்போன நித்தியானந்தா கொரோனாவிற்கு குறி பார்த்து கூறிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சாமியார் நித்தியானந்தா கொலை, கொள்ளை, ஆட்கடத்தல், ஆண் சீடர் பாலியல் புகார், மோசடி என்று பல வழக்குகளில் சிக்கியவர்.\nஇவர் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக தலைமறைவாகி, வீடியோ கான்பெரென்ஸ்ஸில் மட்டும் வந்து தலைக்காட்டி வருகிறார். இவர் வெளியிடும் வீடியோ அடிக்கடி இணையத்தில் வைரலாகிவரும் நிலையில் சமீபத்திய வீடியோ ஒன்றில் தான் இந்தியாவில் காலடி எடுத்து வைத்தால் கொரோனா போகும் என கூறியுள்ளார்.\nஇந்தியாவில் இருந்து தப்பிய நித்யானந்தா கைலாசா என்ற புதிய நாட்டை அறிவித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதோடு இளைஞர்கள் தன் நாட்டிற்கு வரலாம் என்று அறிவித்த நிலையில், ஆர்வம��� உள்ளவர்கள் ஆஸ்திரேலியா வந்தால் அங்கிருந்து கைலாசாவிற்கு தனி விமானம் மூலம் அழைத்து செல்லப்படுவார்கள் என்றும் நித்தியானந்தா கூறியிருந்தார்.\nஇந்நிலையில் நித்தியானந்தா அநேகமாக இந்தோனேஷியா நாட்டின் தீவுகளில் ஒன்றையோ அல்லது நியூசிலாந்து நாட்டின் அருகில் உள்ள ஆளில்லாத தீவுகளில் ஒன்றையோ அவர் விலைக்கோ அல்லது நீண்ட நாள் குத்தகைக்கோ எடுத்திருக்க வாய்ப்புள்ளதாக பரவலாக பேசப்பட்டு வருகிறது.\nஇப்போது நித்தியானந்தா தன் புதிய வேஷத்தில், புருவத்தை அடர்த்தியாக வரைந்துக்கொண்டு கண்களில் கலர் லென்சுடன் கண்களை சிமிட்டி சிமிட்டி பேசி, மகமாயி, மீனாட்சி, காளி அம்மன் போன்ற பெண்தெய்வங்கள் பெயரில் தனது சீடர்களுக்கு குறி சொல்லி வருகின்றார். அப்போது ஒருவர் கொரோனா எப்போது இந்தியாவை விட்டு போகும் எனக் கேட்டதற்கு, 'தன் உடலில் புகுந்துள்ள அம்மன் இந்தியாவில் காலடி எடுத்து வைத்து தால் தான் கொரோனா இந்தியாவை விட்டு ஓடும்' என நித்தியானந்தா கூறியுள்ளார்.\nநித்தியானந்தாவின் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகியுள்ள நிலையில் கொரோனாவை அழிக்க வருவரா நித்தியானந்தா என நெட்டிசன்கள் கலாய்த்துள்ளனர்\n🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷\n👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/19113--2", "date_download": "2021-10-19T13:16:42Z", "digest": "sha1:3CMCRQAPVCIBKDNM5HJQASJTHSCWUIVR", "length": 26246, "nlines": 299, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 09 May 2012 - காக்காக் கடை! | - Vikatan", "raw_content": "\nஎன் விகடன் - மதுரை\nஅய்யாவுக்கும் அம்மாவுக்கும் பாப்பாவுக்கும் உம்மா கொடு\nநடிகர்களுக்கு டாக்டர் பட்டம் கொடுக்கலாமா\nஎன் ஊர் : வத்தலக்குண்டு\nகெட்ட விஷயங்களை மனசுல ஏத்திக்கலை\nஎன் விகடன் - சென்னை\nஎனக்கு நானே ரோல் மாடல்\nஎன் ஊர் : மேற்கு சி.ஐ.டி.நகர்\nஎன் விகடன் - கோவை\nசாக்ஸபோன் அல்ல... முகவை யாழ்\nஎன் ஊர் : மூக்கனூர்பட்டி\nபன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிராகப் பாய்ந்த விவசாயிகள்\nஇது ஹைதர் காலத்துக் கடை\nஎன் விகடன் - திருச்சி\nஇலை என்பது ஓரு இயல்பு \nஎங்களின் தவறே குடும்ப அமைப்பை உடைத்ததுதான் \nபுது உலகம் திறந்த புத்தகங்கள் \nஎ��் விகடன் - புதுச்சேரி\nவலையோசை - கைகள் அள்ளிய நீர்\nதாவரங்களளத் தெரிந்துகொள்ள இங்கே வாருங்கள் \nவரலாற்றை எப்போதும் சந்தேகத்தோடு பார்க்கவேண்டும் \nவிகடன் மேடை - பழ.நெடுமாறன்\nநண்டு ஊருது... நரி ஊருது\nவிகடன் மேடை - சந்தானம்\nநானே கேள்வி... நானே பதில்\nதலையங்கம் - கிருமிகள் இலவசம்\nசிம்பு அப்பாபத்தி மெயில் வரும்\nசினிமா விமர்சனம் : லீலை\nவட்டியும் முதலும் - 39\nஹாய் மதன் கேள்வி - பதில்\nWWW - வருங்காலத் தொழில்நுட்பம்\nஜிஆர்டி ஜுவல்லர்ஸ் - மூன்று `டைம்ஸ் பிசினஸ் விருதுகள்' வென்று சாதனை\nமியாட் மருத்துவமனை - விபத்துக் காயங்கள் மேலாண்மையில் \"பொன்னான நேரம்\" என்றால் என்ன\nசொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா - கிராமத்தானின் பயணம் 14\nநம் வாழ்வில் ஒருமுறையாவது பார்க்க வேண்டிய இரண்டு தமிழ்ப்படங்கள்\nமழைக்கால மின்கசிவிலிருந்து வீட்டை பாதுகாப்பது எப்படி\nதேவிஸ்ரீ பிரசாத்தை பார்த்து அடுத்த இளையராஜான்னு கமல் சொன்னதுக்கு காரணம் இருக்கு\nவணிகத் தேவைக்காக நாட்டு விலங்குகள் படும் துயர் - தெளிவாக விளக்கும் புத்தகம்\nஅமைதியோ அமைதி ஓமான், ஆச்சர்யப்பட வைத்த ஜோர்டான் - கிராமத்தானின் பயணம் 13\nபாச மலர் 2.0 - வாசகி ஷேரிங்ஸ்\nஜிஆர்டி ஜுவல்லர்ஸ் - மூன்று `டைம்ஸ் பிசினஸ் விருதுகள்' வென்று சாதனை\nமியாட் மருத்துவமனை - விபத்துக் காயங்கள் மேலாண்மையில் \"பொன்னான நேரம்\" என்றால் என்ன\nசொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா - கிராமத்தானின் பயணம் 14\nநம் வாழ்வில் ஒருமுறையாவது பார்க்க வேண்டிய இரண்டு தமிழ்ப்படங்கள்\nமழைக்கால மின்கசிவிலிருந்து வீட்டை பாதுகாப்பது எப்படி\nதேவிஸ்ரீ பிரசாத்தை பார்த்து அடுத்த இளையராஜான்னு கமல் சொன்னதுக்கு காரணம் இருக்கு\nவணிகத் தேவைக்காக நாட்டு விலங்குகள் படும் துயர் - தெளிவாக விளக்கும் புத்தகம்\nஅமைதியோ அமைதி ஓமான், ஆச்சர்யப்பட வைத்த ஜோர்டான் - கிராமத்தானின் பயணம் 13\nபாச மலர் 2.0 - வாசகி ஷேரிங்ஸ்\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்\n'சென்னை-அம்பத்தூர் சத்யமூர்த்தி நகரில் டீக்கடை நடத்திவரும் குமார், 15 ஆண்டுகளாகக் காக்கைகளுக்குத் தினமும் உணவு அளித்துவருகிறார். அவரைப் பற்றி என் விகடனில் எழுதலாமே’ - இது அம்பத்தூர் வாசகி, கிருஷ்ணவேணி வாய்ஸ் ஸ���நாப்பில் சொன்ன தகவல்.\nசத்யமூர்த்தி நகரில் நாம் குமாரைச் சந்திக்கச் சென்ற போது, நமக்கு முன்னாலேயே அவரை எதிர்பார்த்து ஏகப்பட்ட காகங்கள் காத்திருந்தன. ''15 வருஷத்துக்கு முன்ன ஒருநாள் கடையைத் திறக்கிறப்ப இங்க பத்துப் பதினைந்து காக்கைகள் கூட்டமா நின்னு கத்திட்டு இருந்துச்சு. விரட்டி அடிக்க மனசு இல்லாம, கடையில இருந்த காராசேவை கொஞ்சம் அள்ளிப் போட்டேன். அதுங்க பறந்துப் பறந்து சாப்பிடுறதைப் பார்த்தப்ப, மனசுக்குச் சந்தோஷமா இருந்துச்சு. பிறகு மறுநாள் கடையைத் திறந்தப்ப முதல் நாளைவிட நிறைய காக்கைகள் வந்தன. போனாப்போகுதுனு அன்னைக்குக் கொஞ்சம் அதிகமாவே காராசேவை அள்ளிப் போட்டேன். அப்ப ஆரம்பிச்ச பழக்கம், இப்போ வரைக்கும் தொடருது. என் டீக்கடையை எல்லாரும் 'குமார் டீக்கடை’னுதான் சொல்வாங்க. ஆனா, இப்ப 'காக்காக் கடை’னு சொல்றாங்க. அஞ்சு, பத்துன்னு வந்துட்டு இருந்த காக்கைங்க இப்போ நூத்துக்கணக்குல வர ஆரம்பிச்சிருச்சு. என்னைக்காவது உடம்புக்கு முடியலை, வீட்டுல விசேஷம்னு கடைக்கு லீவு விட்டாலும் காக்கைகளுக்கு ஆள்வெச்சாவது சாப்பாடு போடச் சொல்லிடுவேன். 'லூஸாய்யா நீ. கஷ்டப்பட்டு சம்பாதிக்கிற பணத்தை இதுங்களுக்குச் சாப்பாடு போட்டு வீணாக்குற’னு இந்த ஏரியாவுல உள்ளவங்க கேட்பாங்க. இதுகளுக்காகவே தினமும் பொரிகடலை, காராசேவுனு 50 ரூபாய்க்கு மேல செலவு பண்றேன். ஆனா, இதை நான் செலவா கணக்குப் பண்றது இல்லை. நான் தொட்டாக்கூட எந்தப் பயமும் இல்லாம, பக்கத்துல நின்னு அதுங்க சாப்பிடுறதே தனி அழகு. இதுங்க எல்லாத்தையும் என் உறவுக்காரங்களாத்தான் நினைக்கிறேன். எனக்குப் பின்னாடி இதுங்களுக்கு யாரு சாப்பாடு கொடுப்பாங்கனு தெரியலை. அதை நினைச்சாத்தான் கவலையா இருக்கு\nகாமெடி, குணச்சித்திரம் என வெவ்வேறு கதாபாத்திரங்களில் 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ள குமாரி சச்சுக்கு, சமீபத்தில் தி.நகர் கிருஷ்ண கான சபாவில் 'நடன சூடாமணி’ விருது வழங்கப்பட்டது.\nடி.என்.பி.எஸ்.சி தலைவர் நடராஜிடம் விருதைப் பெற்றுக்கொண்டு பேசிய குமாரி சச்சு, ''நாடகத்தில் என் பாட்டிதான் எனக்குக் குரு. எந்த இயக்குநரா இருந்தாலும் என் பாட்டிகிட்டதான் முதல்ல கதையைச் சொல்வாங்க. கதை ஓ.கே.ன்னா அந்தக் கதையை பாட்டி எனக்குச் சொல்லி எப்படி எல்லாம் நடிக்கணும்னு சொல்லித்தருவாங்க.\n'வீரத்திருமகள்’ உள்பட ஏராள மான சிறந்த படங்களைக் கொடுத்து, என் வளர்ச்சிக்குக் கார ணமா இருந்தது ஏவி.எம். நிறுவனம்தான். 'ரோஜா மலரே ராஜகுமாரி’ பாட்டை என்னால் வாழ்நாளில் மறக்கவே முடியாது. பி.சுசீலா மேடம் எனக்காகப் பாடுன அந்தப் பாட்டு இன்னும் எனக்குள்ள ஓடிக்கிட்டே இருக்கு. காமெடி பண்றதுக்கும் அதை ரசிக்கிறதுக்கும் என்னைக்குமே வயது வரம்பு கிடையாது. எனக்கு ஆறு வயசா இருக்குறப்ப, ஒரு மேடையில் என் அக்கா பரதநாட்டியம் ஆடினாங்க. அப்ப பார்வையாளர் வரிசையில இருந்து எழுந்துபோய் அக்காவோட சேர்ந்து ஆடினேன். அப்ப என்னை 'அந்தக் குழந்தை ஆடட்டும்’னு ஆடவெச்சு ரசிச்சாங்க. தேவைப்படும்போது தட்டிக்கொடுத்து வளர்க்கிற அந்த எண்ணம் இன்னைக் குக் குறைஞ்சு இருக்கு. அந்த வகையில் என் வளர்ச்சிக்கு உதவியா இருந்த அனைவருக்கும் நன்றி'' என்று முடித்தபோது அரங்கம் எழுந்து நின்று கைதட்டி அவரை வாழ்த்தியது\n''எங்க வீட்டுல மட்டும் மின்வெட்டு பிரச்னை கிடையாதுங்க'' என்று ஜாலியாகச் சிரிக்கிறார் சுரேஷ். சென்னை கீழ்ப் பாக்கத்தில் வசிக்கும் இவர், தனியார் நிறுவனம் ஒன்றின் நிர்வாக இயக்கு நர். தன்னுடைய வீட்டில் சோலார் தகடுகளைப் பொருத்தி, அதன் மூலம் கிடைக்கும் மின்சாரத்தைப் பயன்படுத்திவருகிறார்.\n''மழை நீர் சேகரிப்புத் திட்டம் உள்பட ஏகப்பட்ட திட்டங்களை நம்ம அரசு அறிமுகப்படுத்துவதற்கு முன்னாடியே என் வீட்டுல அறிமுகப்படுத்திட்டேன். காரணம், நல்ல விஷயங்கள்ல நாம மத்தவங்களுக்கு முன் மாதிரியா இருக்கணும்கிற எண்ணம்தான். வீட்டுல சோலார் தகடுகளைப் பொருத்தின இந்த மூணு மாசமா ஒரு செகண்ட் கூட எங்க வீட்ல கரன்ட் கட் கிடையாது. மின் விசிறி, லைட்டுகள்னு எங்க வீட்டுக்கான மின்சாரத் தேவை சுமார் ஒரு கிலோ வாட். அதுக்காக, 10 சோலார் தகடுகளைப் பொருத்தி இருக்கேன். சூரியஒளியில் இருந்து கிடைக்கும் மின்சாரம், நேரடியா மெயின் போர்டில் சேரும்படி இணைப்புக் கொடுத்து இருக்கேன். அப்படி கிடைக்கிற மின்சாரத்தை 10 இன்வெர்ட்டர் பேட்டரிகளில் சேமிச்சுவெச்சுப் பயன்படுத்துறேன்.\nசோலார் தகடுகளில் இருந்து கிடைக்கிற மின்சாரத்தைக் காலையில் இருந்து சாயங்காலம் வரை மட்டுமே பயன் படுத்த முடியும். இரவு வேளைகளில் பேட்டரியில் சேமிக்கப் பட்டு உள்ள மின்சாரத���தைப் பயன்படுத்துவோம். இங்கே நான் பொருத்தி இருக்கிற சோலார் தகடு, இன்வெர்ட்டர் பேட்டரிகளுக்குக் கிட்டத்தட்ட இரண்டரை லட்ச ரூபாய் செலவாச்சு. இது பெரிய தொகைதான். ஆனால், இதில் 80 ஆயிரம் ரூபாயை அரசாங்கம் மானியமாக் கொடுத் தாங்க. 20 ஆயிரம் ரூபாய் செலவில்கூட சோலார் தகடுகள் மூலம் மின்சாரம் தயாரிக்கலாம். இப்ப பெரும்பாலான வீடுகள்ல டிஷ் ஆண்டனா இருக்கிற மாதிரி வருங்காலத்துல எல்லா வீட்டு மாடிகளிலும் சோலார் தகடுகள் இருக்கும். என்கிட்ட ஏகப்பட்ட பேர் இதைப் பற்றி விசாரிக்கிறாங்க. இதை ஃபாலோ பண்ணினா பவர்கட்டுக்கு கட் சொல் லலாம்\nபடங்கள்: ச.இரா.ஸ்ரீதர், அ.ரஞ்சித், க.கோ.ஆனந்த்\nதெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism\nஇதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://timestampnews.com/a-letter-to-thoothukudi-collector/959/", "date_download": "2021-10-19T11:37:01Z", "digest": "sha1:4PELGIRPAJJKIMQYQTEB6X7J5JFMAVUT", "length": 4163, "nlines": 87, "source_domain": "timestampnews.com", "title": "தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்க்கு கடிதம்… – Timestamp News", "raw_content": "\nதூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்க்கு கடிதம்…\nதூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரிக்கு மாணவர் ஒருவர் அவர் ஆட்சியரின் பணிகளை பாராட்டி கடிதம் எழுதியுள்ளார். இதனை ஆட்சியர் சந்தீப் நந்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த தொழில்நுட்ப காலத்திலும் மாணவர் ஒருவர் எனக்கு தனது கைப்பட கடிதம் எழுதியிருப்பது மிகவும் ஆச்சரியமாக உள்ளது என பதிவிட்டுள்ளார்.\nPrevious Previous post: அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஸ்மார்ட் கார்டு – பள்ளிக் கல்வி இயக்குநரகம்\nNext Next post: வாக்காளர் அடையாள அட்டை எண் தெரிந்தால் போதும்\nதூத்துக்குடி மாவட்ட காவல்துறையில் உள்ள நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள்- மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் ஆய்வு.\nதமிழக மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நல்வாழ்வு சங்கத்தின் சார்பில் கொரோனா பணிகள்\nதூத்துக்குடி 17வது வார்டு பொதுமக்கள் சார்பில் தெரு மின் விளக்கு, சாலை வசதி மற்றும் குடிநீர் குழாய் அமைத்திட வேண்டி கோரிக்கை மனு\nதிருச்செந்தூா் கோயில் கும்பாபிஷேகம்: முதல்வா் விரைவில் அறிவிப்பாா்\nதூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அங்கன்வாடி ���ைய கட்டிடம் – அமைச்சர் கீதாஜீவன் அடிக்கல் நாட்டினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ta.otao.biz/2x-3x-strong/", "date_download": "2021-10-19T11:06:26Z", "digest": "sha1:RQ54YUUXSBKOKQGXMGEI32VG2ZRPM6NC", "length": 7301, "nlines": 219, "source_domain": "ta.otao.biz", "title": "2 எக்ஸ் -3 எக்ஸ் வலுவான உற்பத்தியாளர்கள் - சீனா 2 எக்ஸ் -3 எக்ஸ் வலுவான தொழிற்சாலை மற்றும் சப்ளையர்கள்", "raw_content": "\n3D புற ஊதா பசை\n2 எக்ஸ் -3 எக்ஸ் ஸ்ட்ராங்\n2 எக்ஸ் -3 எக்ஸ் ஸ்ட்ராங்\n2 எக்ஸ் -3 எக்ஸ் ஸ்ட்ராங்\n3D புற ஊதா பசை\n2 எக்ஸ் -3 எக்ஸ் ஸ்ட்ராங்\nஐபோன் 12 தொடர் கார்னிங் கோ ...\nசாம்சங் எஸ் 21 அல்ட்ரா 3D ஹாட்-பீ ...\nதனிப்பயன் லோகோ மென்மையான கண்ணாடி ...\n2.5 டி ஆன்டி ப்ளூ லைட் டெம்பர் ...\n2.5 டி உயர் தெளிவான தூசி எதிர்ப்பு டி ...\nஐபோன் 12 சீரிஸ் 2 எக்ஸ் ஷட்டர்ப்ரூஃப் டெம்பர்டு கிளாஸ் ஸ்கிரீன் ப்ரொடெக்டர்\n2 எக்ஸ் ஷட்டர் ப்ரூஃப் கிளாஸ் என்றால் என்ன\nடெம்பர்டு கண்ணாடியின் கடினத்தன்மை மற்றும் தாக்க எதிர்ப்பை மேம்படுத்துவதற்காக உற்பத்தி செயல்பாட்டில் ஒரு சிறப்பு இரட்டை வலுப்படுத்தும் செயல்முறையால் மென்மையாக்கப்பட்ட கண்ணாடி செயலாக்கப்படுகிறது.\nநாங்கள் ஒரு புதிய மொபைல் ஃபோனை வாங்கும்போது, ​​அதிக கடினத்தன்மை மற்றும் வலுவான தாக்க எதிர்ப்பைக் கொண்ட ஒரு மென்மையான கண்ணாடித் திரை பாதுகாப்பாளரை நிச்சயமாக ஒட்ட விரும்புகிறோம். ஒரு சிறந்த திரை பாதுகாப்பு விளைவை அடைவதற்கு, OTAO க்கு ஒரு யோசனை உள்ளது, இரட்டை வலுப்படுத்துதல் (2x ஷட்டர் ப்ரூஃப் கிளாஸ்) எடுத்துக்கொள்வது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தைத் தருகிறது.\n3D புற ஊதா பசை\n© பதிப்புரிமை - 2010-2021: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. சிறப்பு தயாரிப்புகள், தள வரைபடம், அனைத்து தயாரிப்புகளும்\nதேட உள்ளிடவும் அல்லது மூட ESC ஐ அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lyricspedia.net/annaatthe-annaatthe-lyrics/", "date_download": "2021-10-19T11:50:38Z", "digest": "sha1:H24WCQZHBYGG6DVYNCAOBGKWG2OCC7VE", "length": 11202, "nlines": 272, "source_domain": "lyricspedia.net", "title": "Annaatthe Annaatthe Lyrics", "raw_content": "\nகாந்தம் கணக்கா கண்ணப்பாரு கண்ணப்பாரு\nஆளே மிடுக்கா அண்ணன் பாரு அண்ணன் பாரு\nஊரு பூரா தாறு மாறா விசிலு பறக்க\nஆற வாரத்தோட சத்தம் தெறிக்க தெறிக்க\nவீரத்துக்கு வேற பேரு காளையன்னு சொல்லு\nவெற்றி வாகை சூட போறோம் கூட சேந்து நில்லு\nஹேய் ஹேய் ஹேய் ஹேய்\nஹேய் ஹேய் ஹேய் ஹேய்\nஹேய் ஹேய் ஹேய் ஹே���் தலைவா\nஹேய் தலைவா ஹேய் தலைவா\nஹேய் தலைவா ஹேய் தலைவா\nஹேய் ஹேய் ஹேய் ஹேய்\nதுணிஞ்சு வா கடவுளே துணை நமக்கு\nஉனக்கு இணை ஏது ஏது\nஹேய் ஹேய் ஹேய் ஹேய்\nஹேய் ஹேய் ஹேய் ஹேய்\nஹேய் ஹேய் ஹேய் ஹேய் தலைவா\nஹேய் தலைவா ஹேய் தலைவா\nஹேய் தலைவா ஹேய் தலைவா\nநித்தம் நித்தம் நெல்லுச் சோறு ஹேய்\nபசியாறும் பத்து ஊரு ஹேய்\nவேரில் வீரம் தாங்கி ஓங்கி\nவாழும் அதிசய நிலமடா ஹேய்\nமாரில் ஈட்டி வாங்கி போரில் மோதும்\nஅதை கவனம் வைத்து முன்னேறிடு\nஅதன் காதைத் திருகி கரை சேர்ந்திடு\nஉலகினில் அழகு எது சொல்லவா\nஉயர்தர வீரம் எது சொல்லவா\nஆண் : எதற்கும் நீ அஞ்சக்கூடாதே\nஆண் : நொடியும் நீ துஞ்சக்கூடாதே\nஆண் மற்றும் குழு : கொல கொல மாஸு\nஹேய் தலைவா ஹேய் தலைவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://muthusidharal.blogspot.com/2014/12/33.html", "date_download": "2021-10-19T12:35:40Z", "digest": "sha1:AP4JAF2WLLLD2FUILVXYSIIR6GVEKIEX", "length": 19340, "nlines": 288, "source_domain": "muthusidharal.blogspot.com", "title": "முத்துச்சிதறல்: முத்துக்குவியல்-33!!", "raw_content": "\nகலைகளும் சிந்தனையுமாய் சிதறுகின்ற முத்துக்கள் இங்கே\nஉச்சரிப்பு சரியில்லை. பேசினாலே இலக்கணப்பிழைகள் அதிகம். கூடவே ஒருமைக்குத்தாவும் மரியாதையின்மை. இப்படி யாராவது குறுக்கே வந்தால் நமக்கு எரிச்சல் வருகிறது. கோபம் வருகிறது. சில சமயம் கை நீட்டும்போது கோபம் தலைக்கேறுகிறது.\nஆனால் இதுவே ஒரு மழலைப்பிஞ்சென்றால் நமக்கு ஏன் அத்தனையும் இனிமையாகவே இருக்கிறது 'தொப்'பென்று தன் பிஞ்சுக்கையால் ஒரு அடி அடித்தால் ஏன் அது மட்டும் பூமாலை மேலே விழுந்தது போல அத்தனை சுகமாக இருக்கிறது\nஐந்து நிமிடத்தில் தோசைக்கல்லை அடுப்பில் போட்டு விட்டு ஒரு சட்னி செய்யலாம். இதற்கு நாங்கள் 'அவசர சட்னி' என்று தான் பெயர் வைத்திருக்கிறோம் சற்று பெரிய தக்காளி ஒன்று, பெரிய வெங்காயம் 2, புளி ஒரு சிறிய எலுமிச்சை அளவு, வற்ற‌ல் மிளகாய் 8 இவற்றை உப்பு சேர்த்து நைய அரைக்கவும். ஒரு தாளிப்புக்கரண்டியில் சிறிது நல்லெண்ணெயை ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் தாளித்து நாலைந்து சிறிய வெங்காயங்களை பொடியாக அரிந்து சிறிது கறிவேப்பிலையை கிள்ளிப்போட்டு வதக்கி சட்னியில் கொட்டவும். தோசைக்கு அத்தனை சுவையாக இருக்கும் இந்த சட்னி\nசில வருடங்களுக்கு முன்பு ஜெயா தொலைக்காட்சியில் பாலச்சந்தர் இய‌க்கத்தில் சிந்து பைரவி 2 என���ற 'சஹானா' என்ற சீரியல் வெளியாகிக்கொண்டிருந்தது. நான் இதை எப்போதாவது நின்று சில காட்சிகளைப்பார்த்திருக்கிறேன். அந்தக் காட்சிகள் எல்லாமே பாடகி அனுராதா கிருஷ்ணமூர்த்தி, நடிகர் பிரகாஷ் ராஜ் நடித்த சில காட்சிகள் தான். அதில் ஒரு காட்சியில் நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் ரசனையுடன் கவனிக்க பிரகாஷ் ராஜ் வசன நடையில் பாடுவார். பிரபல் பாடகர் ஓ.எஸ்.ஆருண் அதற்குப்பாடினார் என்று நினைக்கிறேன். அந்த பாடல் எப்படி ஆரம்பிக்கும், அதன் ஆரம்ப வரிகள் என்ன‌ என்பதை யாராவது சொல்ல முடியுமா\nதும்பை இலைகளை காய வைத்து பொடித்து தணலில் போட்டால் வரும் புகைக்கு கொசுக்கள் ஓடி விடும்.\nஇது ஒரு சகோதரியின் அனுபவமாக ஒரு பழைய புத்தகத்தில் படித்தேன். அவருடைய மகனுக்கு மெட்ராஸ் ஐ வந்திருக்கிறது. அந்த வலியோடு நண்பர்களை அழைத்துக்கொண்டு அவருடைய மகன் கடலில் குளித்து விட்டு வ‌ந்திருக்கிறார். மறு நாள் விழிக்கும் போது மெட்ராஸ் ஐ வ‌ந்த சுவ‌டே இல்லையாம். அதனால் உப்பு நீர் மெட்ராஸ் ஐயை குண‌ப்படுத்துகிறது என்பதைப்புரிந்து கொண்டு, சில நாட்களில் அவர் கண‌வருக்கு மெட்ராஸ் ஐ வந்ததும் உப்பு கலந்த வெதுவெதுப்பான நீரை விட்டு நாலைந்து தடவை கண்க‌ளை கழுவச்சொல்லியிருக்கிறார். அவர் கணவருக்கும் வந்த மெட்ராஸ் ஐ உடனேயே மறைந்து விட்டதென எழுதியிருக்கிறார் அந்த சகோதரி\nசமீபத்தில் படித்தேன். ஒரு பெண் பஸ்ஸில் போய்க்கொண்டிருந்தபோது இரவில் சிறிது நேரம் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்திருக்கிறார். இத்தனைக்கும் அவரின் சகோதரி அருகிலேயே அமர்ந்திருக்கிறார். விழித்த போது தான் தெரிந்திருக்கிறது பின்னால் தொங்க விட்டிருந்த அவருடைய நீளமான கூந்தல் கழுத்து வரை வெட்டப்பட்டிருக்கிறது என்ற விபரம். தனியே பிரயாண‌ங்கள் செய்கிற போது நகைகள், உடமைகள், பணம் மட்டும் தான் இதுவரை பாதுகாக்கப்படுகிற பொருள்களாக இருந்தன. இனி அவற்றோடு கூந்தலையும் பெண்கள் கவனமாகப் பாதுகாக்க வேண்டும்போலத் தெரிகிறது\nஇந்தப்பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று. சித்ரா, எஸ்.பி.பாலசுப்ரமணியம் இவர்களது ஆழ்ந்த உச்சரிப்பா, மனதை ஈர்க்கும் பாடல் வரிக‌ளா, இந்த வரிகளை இவர்கள் தங்களது தேன் குரலில் பாடிய விதமா, அருமையான இசையமைப்பா, எதுவென்று எனக்கு இனம் பிரிக்கத்தெரிந்ததில்லை, ஆனால் எப்போது கேட்டாலும் அது முடியும் வரை அமைதியாக அப்படியே ரசித்துக்கொண்டிருப்பேன். அதன் காணொளி இதோ. நீங்களும் ரசியுங்கள். ஆனால் இதில் சித்ரா பாடிய பகுதி மட்டும் தான் இருக்கிறது. முழுப்பாடல் கிடைக்கவில்லை.\nஇடுகையிட்டது மனோ சாமிநாதன் நேரம் 15:41\nமெட்ராஸ் ஐ க்கு உப்பு நீர் மருந்து அதிசயம்தான் நினைவில் வைத்துக் கொள்கின்றேன்.\nமுத்துகுவியலில் உள்ள அனைத்து முத்துகளும் அருமை மனோ அக்கா\nமெட்ராஸ் ஐக்கு .சும்மா தண்ணீரில் கண்ணை கழுவுவோம் உப்பு தண்ணீரில் கண்ணை கழுவது உங்கள் பதிவின் மூலம் தெரிந்து கொண்டேன் .\nபல முத்துக்கள் பயனுள்ளவை... நன்றி...\nஅதிர்ச்சியடையவைத்த முத்து ஆச்சர்யமாக உள்ளது.\nஅருமையான முத்துக்குவியல்....மெட்ராஸ் ஐக்கு உப்புத்தண்ணீர் மருந்தாவது...புதிய விஷயம்...\nசித்ரா பாடல் மிகவும் ரசித்தொம்...\nமுத்துக்குவியலின் அனைத்து முத்துக்களும் அழகு என்றாலும் அந்த மழலை முத்தின் அழகு...\nஎனது புதிய பதிவு : விடாது துரத்திய விஷ்ணுபுரம் \nதங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள்.\nஅவசரச் சட்னி புளி சேர்க்காமல் செய்வோம்.\nகேள்வி முத்துக்கு பதில் தெரியவில்லையே...\nஇந்த தடவை வந்த மெட்ராஸ் ஐ கொஞ்சம் ஸ்பெஷல்\nபாடல் இப்போதுதான் கேட்கிறேன். அருமை.\nபகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி.\nஅந்த கூந்தல் செய்தியை படித்தவுடன் பகீரென்றாகிவிட்டது.\nபயனுள்ள குறிப்புகள். அத்தனையும் முத்துக்கள். நன்றி.\nஅனைத்து முத்துக்களும் அருமை அம்மா...\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்\nவருகையாளருக்கு நல்வரவேற்பும் அன்பு வந்தனங்களும்\nவருகையாளருக்கு இதோ கூடை நிறைய வாசமிகு மலர்கள்\nமேனகா, ஜலீலாவிற்கு அன்பு நன்றி\nசினேகிதி வேதா, சகோதரர் கோபாலகிருஷ்ணனுக்கு அன்பு நன்றி\nசகோதரி ஆசியாவிற்கு அன்பு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newsguru.news/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F/", "date_download": "2021-10-19T11:43:32Z", "digest": "sha1:CQ673KR7C5Q6GYE7UNV2W25FNZNQ5E7Z", "length": 10130, "nlines": 94, "source_domain": "newsguru.news", "title": "உயிர்போகும் நிலையில் கூட கொடியை காத்த வீரர் - திருப்பூர் குமரன் நினைவு தினம் இன்று - நியூஸ் குரு - நியூஸ் குரு", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, அக்���ோபர் 19, 2021 | எங்கள் மொபைல் ஆப்-ஐ பதிவிறக்கவும்\nHome சரித்திரம் உயிர்போகும் நிலையில் கூட கொடியை காத்த வீரர் – திருப்பூர் குமரன் நினைவு தினம் இன்று\nஉயிர்போகும் நிலையில் கூட கொடியை காத்த வீரர் – திருப்பூர் குமரன் நினைவு தினம் இன்று\nகொடிகாத்த குமரன் என்று அனைவராலும் அறியப்படும் திருப்பூர் குமரன் இந்திய விடுதலை போராட்ட வீரர் ஆவார். ஈரோடு மாவட்டம் சென்னிமலையில், நாச்சிமுத்து – கருப்பாயி தம்பதியினருக்கு முதல் மகனாக 1904-ஆம் ஆண்டு அக்டோபர் 4-ம் தேதி பிறந்தார்.\nகுடும்ப சூழ்நிலை காரணமாக பள்ளிப் படிப்பை ஆரம்ப பள்ளியிலேயே முடித்துக் கொண்டு நெசவுத் தொழிலை செய்து வந்தார். ராமாயி என்ற பெண்ணுடன் குமரனுக்கு அவரது 19-வது வயதில் திருமணம் முடித்து வைக்கப்பட்டது.\nஇளம் பருவம் முதலே நாட்டுப் பற்று மிக்கவராக திகழ்ந்த குமரன், காந்தியக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டிருந்தார். திருப்பூரில் நடக்கும் அறப் போராட்டங்களில் கலந்து கொண்ட அவர், பல போராட்டங்களுக்கு தலைமை ஏற்றும் நடத்தினார்.\nஇந்நிலையில், 1932- ஆம் ஆண்டு சட்ட மறுப்பு இயக்கம் மீண்டும் தொடங்கிய போது தமிழகம் முழுவதும் அறப்போராட்டம் பரவியது. அச்சமயம், தேசபந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள் திருப்பூரில் ஏற்பாடு செய்த மறியல் போராட்டத்தில் தீவிரமாகப் பங்குகொண்டிருந்தார் குமரன்.\n1932- ஆம் ஆண்டு ஜனவரி 10-ம் தேதியன்று கையில் தேசியக் கொடியினை ஏந்தி, தொண்டர் படைக்குத் தலைமை ஏற்று ஆர்வமுடன் அணிவகுத்துச் சென்றார் திருப்பூர் குமரன். தடையை மீறி ஊர்வலம் சென்ற போது, காவலர்கள் தடியடி நடத்தினர்.\nஇளைஞர் கூட்டம் வந்தே மாதரம் வந்தே மாதரம் என்ற முழக்கங்களை எழுப்பி முன்னோக்கிச் சென்றது.\nஅப்போது, காவலர்களால் தாக்கப்பட்டு, தடியடிபட்டு மண்டை பிளந்து வந்தே மாதரம் வந்தே மாதரம் என்று வீர முழக்கம் இட்டு கீழே சரிந்து விழுந்தார் குமரன். வீதியெங்கும் ரத்த ஆறு ஓடிக் கொண்டிருந்தது. உயிருக்கு போராடிய அந்த நிலையிலும், கரத்தில் பற்றியிருந்த தேசியக் கொடியை அவரது விரல்கள் பற்றியே இருந்தன.\nஅதன்பின்னர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குமரன், மறுநாளான ஜனவரி 11-ம் தேதி அதிகாலையில் மருத்துவமனையில் உயிரிழந்தார்.\nஇன்று திருப்பூர் குமரன் நினைவு தினம்.\nடி20 கிரிக்கெட் போட்டி இந்தியா-பாகிஸ்தான் போட்டி நடக்குமா\nஅண்டை நாடுகளில் இந்துக்கள் மீது தாக்குதல் – உலக நாடுகள் கண்டிக்கட்டும்\n இன்று தலித் தொழிலாளி கொடூர கொலை\nடி20 கிரிக்கெட் போட்டி இந்தியா-பாகிஸ்தான் போட்டி நடக்குமா\nஅண்டை நாடுகளில் இந்துக்கள் மீது தாக்குதல் – உலக நாடுகள் கண்டிக்கட்டும்\n இன்று தலித் தொழிலாளி கொடூர கொலை\nமனித குலத்தின் பல்வேறு பிரச்சனைகளுக்கு பாரதமே தீர்வு தரமுடியும் -ஆர்.எஸ்.எஸ் தலைவர் டாக்டர்.மோகன்பாகவத்\nநியூஸ் குரு ஒரு ஆன்லைன் செய்தி தளமாகும். நாங்கள் முக்கியமாக பிராந்திய அரசியல், கலாச்சாரம் மற்றும் பொருளாதாரத்தில் கவனம் செலுத்துகிறோம். கோயம்புத்தூரை மையமாகக் கொண்ட இந்த அமைப்பு, உண்மைகளால் இயக்கப்படும் ஊடக கலாச்சாரத்தையும், முக்கியத்துவம் வாய்ந்த கருத்துகளையும் வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.\n‘கலாச்சார பயங்கரவாதம்: கடந்த காலங்களில் கலாச்சார மோதல்கள் மற்றும் விவாதங்கள்’\nநியூஸ் குரு - டிசம்பர் 30, 2020 0", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2014/11/10/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-4/", "date_download": "2021-10-19T11:14:38Z", "digest": "sha1:GOPLXVJYV5NKE52ITO4KQ2RTANQ5QH6Z", "length": 76756, "nlines": 217, "source_domain": "solvanam.com", "title": "யாமினி – பகுதி 4 – சொல்வனம் | இதழ் 256 | 10 அக். 2021", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 256 | 10 அக். 2021\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nயாமினி – பகுதி 4\nவெங்கட் சாமிநாதன் நவம்பர் 10, 2014 No Comments\nசொல்லப்போனால், யாமினி மனித ரூபத்தில் வந்துள்ள மான் தான். மானின் அத்தனை குணங்களையும், அதன் துள்ளலும் வேகமும், கண்களின் மிரட்சியும், யாமினியிடம் காணலாம். எவ்வளவு வேகத்தில் வெகு இயல்பாக முக பாவங்கள் மாறுகின்றன, எத்தனை உணர்வுகளை அவை சட்டென மாறி மாறிக் காட்டுகின்றன. அத்தனை அழகுடனும் துவளும் கைகள், விரல்கள், வித வித அழகான தோற்றங்களில் காட்சி தரும் உடல்வாகு, சட்டென அழகாக வடித்த சிலையென சலனமற்று உறைந்து காட்சி தரும் பயிற்சியின் லாகவம், அதே போல் மீண்டும் சட்டென சிலையென உறைந்த நிலையிலிருந்து விடுபட்டு ஒரு துள்ளலில் மேடையை தன்னதாக்கிக் கொள்ளும் தடையற்றுப் பெருகும் ஆற்றல், எல்லாம் வருஷங்கள் செல்லச் செல்ல, திறனும் வருஷங்களோடு வளர்கின்றன\nஆனால் யாமினியின் ஆரம்ப கட்டத்தில் கண்ட திறனே, அவர் காலத்திய மற்ற நடன கலைஞர்களிடையே, பரத நாட்டியம�� மட்டும் அல்ல, மற்ற குச்சிபுடி போன்ற வடிவங்களிலும்கூட அவர் தனித் திறமையும் கலை நோக்கும் கொண்டவர் என்ற நமபிக்கையைத் தோற்றுவித்துவிட்டது\nஇங்கு யாமினியின் திறன்கள் அத்தனையையும் கொண்டு யாமினியும் வளர்கிறார். பரதமும் யாமினியின் வளரும் திறன்களுக்கும் கற்பனை வீச்சுக்கும், அவரது தனித்த பார்வைக்கும் ஏற்ப பரதமும் தன் எல்லைகளை விஸ்தரித்துக் கொள்கிறது.\nஅன்று ஐம்பதுகளில் யாமினிக்கு இணையான ஒரு பரத நாட்டிய கலைஞராக பாலசரஸ்வதியைத் தான் சொல்ல முடிந்தது. பால சரஸ்வதியோ அபிநயத்தின் ராணியாகக் கொண்டாடப்பட்டவர். பாலசரஸ்வதி அந்நாட்களில் தன் ஐம்பதுகளின் முதிர்ந்த பிராயத்தில் இருந்தவர். உடல் பருத்திருந்த தேகவாகு. நம்மூர். விமர்சகர்களால், யானையை ஒப்பிட்டு பரிகசிக்கப்படும் நிலையில் இருந்தவர். நின்று நடனமாட முடியாமல் போனால் என்ன தாளத்திற்கேற்ப தேகமும் கால்களும் பேசமுடியாமல் போனால் என்ன தாளத்திற்கேற்ப தேகமும் கால்களும் பேசமுடியாமல் போனால் என்ன கண்களும் முகமும் பேசும் அபிநயங்களுக்குக் குறைவா என்ன கண்களும் முகமும் பேசும் அபிநயங்களுக்குக் குறைவா என்ன பாலசரஸ்வதியோ அபிநய சரஸ்வதியாயிற்றே. பாலாவின் உள்ளிருக்கும் கலைஞருக்கு அந்த மொழி தெரியுமே. அது பேசும். யானை போல் பருத்த அந்த உடலே அபிநய மொழியில் பேசத் தொடங்கினால் அந்த மொழியின் மங்காத பிரகாசம், வற்றாத கலைத் திறன், அவரது அபிநயம் குறிப்புணர்த்தலோடு, சிறு சமிக்ஞைகளோடு, ஒரு கோடிகாட்டலோடு நிற்கும். அந்த எல்லைக்கோட்டை என்றும் மீறியதில்லை. ஒரு பதத்தை எத்தனை முறை ஆட எடுத்துக்கொண்டாலும், எவ்வளவு இடங்களில் எத்தனை நூற்றுக்கணக்கான தடவைகள் ஆடியிருப்பார் பாலசரஸ்வதியோ அபிநய சரஸ்வதியாயிற்றே. பாலாவின் உள்ளிருக்கும் கலைஞருக்கு அந்த மொழி தெரியுமே. அது பேசும். யானை போல் பருத்த அந்த உடலே அபிநய மொழியில் பேசத் தொடங்கினால் அந்த மொழியின் மங்காத பிரகாசம், வற்றாத கலைத் திறன், அவரது அபிநயம் குறிப்புணர்த்தலோடு, சிறு சமிக்ஞைகளோடு, ஒரு கோடிகாட்டலோடு நிற்கும். அந்த எல்லைக்கோட்டை என்றும் மீறியதில்லை. ஒரு பதத்தை எத்தனை முறை ஆட எடுத்துக்கொண்டாலும், எவ்வளவு இடங்களில் எத்தனை நூற்றுக்கணக்கான தடவைகள் ஆடியிருப்பார். இருப்பினும் அவரது அபிநய மொழி என்றும் சொன்னதைய�� திருப்பிச் சொல்வதில்லை. வற்றாத கற்பனையும், அவ்வப்போதே உள்ளுணர்வில் தோன்றும் மாறுபட்ட அர்த்தத்திற்கும் பாவத்திற்கும் ஏற்ப அவரது அபிநயமும் பாவங்களும் மாறிக்கொண்டே இருக்கும். ஒரு மலரின் மலர்ச்சி போல, மெதுவாக, இதழ் இதழாக, விரிந்து மலர்ந்து கொண்டே போகும். அது திட்ட மிட்ட பயிற்சியின் விளைவு அல்ல.\nஉள்ளுணர்வு தரும் அவ்வப்போது தோன்றும் அர்த்தங்களின் வளம் தானறியாது தானே வெளிப்பாடு பெறும் மாயம் அது. உலகத்தின் மிகச் சிறந்த நடனக் கலைஞர் என்று பாலாவைப் பற்றி, கலீனா உலனோவாவும், மார்காட் ஃபாண்டெய்னுமே புகழ்ந்து பேசியிருக்கிறார்கள். அந்த யானை போல் பருத்த தேகம் ஆடுவதைத் தான் பரதத்தின், பதத்தின் மொழிப் பரிச்சயமில்லாத மேற்கத்திய கலைவிமர்சகரகள் பார்த்து வியந்தனர். கிழக்கத்திய அழகின் மென்மையும், கவித்வ வெளிபபாடும் மேற்கத்திய அறிவார்த்தத்தை நினைவு இழந்து பணியச் செய்த காரியம். ஆனால் பாலாவின் நடன வாழ்க்கை மெல்ல மெல்ல ஓய்ந்து மறைந்து விட்ட காலம் அது, பாலா, அவரது இளமைக் காலத்தில், பரதக்கலை, பாலா போன்ற ஒரு கலை மேதையை அவரது சிருஷ்டி உச்சத்தில் என்னவாக உலகத்திற்கு ஆக்கித் தந்திருக்கும் என்பதை இந்தத் தலைமுறையைச் சார்ந்த நாம் அறியும் உணரும் வாய்ப்பில்லை. நமக்குத் தெரிந்தது, காணக்கிடைப்பது, பரதத்தின் ஒரு அங்கமேயான பாலாவின் அபிநயம் தான். நம்மிலிருந்து விலகிச் செல்லும் மூத்த தலைமுறையினரின் நினைவுகளில் மாத்திரமே, அந்த மங்கி மறைந்து வரும் நினைவுகளில் மாத்திரமே சிறைப்பட்டு மறைந்து வரும் துரதிர்ஷ்டத்தில் இருப்பது பாலாவின் பரதக் கலையின் பிரசன்னம் அதன் முழுமையில். யாமினியை பாலாவிற்கேற்ற வாரிஸாக காலம் நமக்குத் தந்துள்ளது போலும். பாலாவின் கலைவாழ்க்கை மெல்ல மெல்ல மறையத் தொடங்கியதும் அதன் உடன் நிகழ்வாக யாமினியின் தோற்றமும் நமக்கு விதி குறிப்புணர்த்துவது இதைத்தான் போலும். ”செவ்வியல் மரபில், இன்று நடனமாடும் இளம் வயதினரில் சிறந்திருப்பது யாமினி தான்” என்று பாலசரஸ்வதி சொன்னதும் தானே யாமினியைத் தன் வாரிஸாக பிரகடனப் படுத்தியது போலத்தான். பாலசரஸ்வதியிடமிருந்து பாராட்டாக ஒரு வார்த்தையைப் பெறுவது ஆழ்கடலில் மூழ்கி முத்தெடுப்பது போலத் தான்.\nஇந்த ஒரு வரி பாராட்டே பாலாவின் சிக்கனத்திற்கும் வார்த்தைத் தேர்வுக்கும் உதாரணம்.\nவருடங்கள் செல்லச் செல்ல யாமினியும் தன் நடனத்திற்கான பாடாந்தரத்தையும் பெருக்கி வளப்படுத்திக்கொள்ளலானார். ஏற்கனவே இருக்கும் வர்ணங்கள், பதங்களைக் கற்று தேர்வதில் மட்டுமல்ல இதுவரை மற்ற நடனக் கலைஞர்கள் கால் பதித்திராத புதிய வெளிகளிலும் பயணம் செய்யத் தொடங்கினார். இத்தகைய பயணத்தில் அவருக்கு உதவியாக இருந்தது அவருடைய தந்தையார், ப்ரொஃபஸர் எம். கிருஷ்ணமூர்த்தி. அவர் தெலுங்கு, சமஸ்கிருதம் இரண்டிலும் மிகுந்த பாண்டித்யம் பெற்றவர் என்பதோடு ஒரு கவிஞரும் கூட. அவர் யாமினியின் நடன நிகழ்வுகளை நிர்வகிப்பதிலும், நிகழ்ச்சி நிரல்களை வரைந்து கொடுப்பதிலும் பொறுப் பேற்றுக் கொண்டவர். இது காரணமாக, வேதங்களின் பகுதிகள், பழம் காவியங்களிலிருந்து எடுக்கப்பட்ட பகுதிகள், ஸ்லோகங்கள், ஸ்துதிகள், கீர்த்தனைகள் எல்லாம் நடனத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிகழ்ச்சி நிரலில் இடம் பெற்றன. இது பரத நாட்டியத்திற்கான பாடாந்தரத்தை விஸ்தரித்தது. வழக்கமாக பரதநாட்டியத்திற்கான பதங்கள், கீர்த்தனைகள் சமீபத்திய பழமையிலிருந்தே தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தன. அவ்வாறு தேர்ந்தெடுக்கப் பட்டவை சிருங்காரத்தையே மையமாகக் கொண்டவை. வாய்மொழி மரபிலேயே வளர்ந்து ஜீவித்து வந்த பரதநாட்டியம் சமீபத்திய பழமையையே பெரும்பாலும் சார்ந்திருந்தது. ஆனால் அந்தப் பழமையின் பின்னால், அது ஆயிரங்காலத்திய பழமையாக்கும் என்று பெருமை பேசும் ஒரு ஒளி வட்டம் சுழலும். சமீபத்திய பழமை சார்ந்த அந்த மரபில், பெரும்பாலான சமயங்களில் சிருங்காரம் என்பது, பல நாட்டியம் ஆடுபவர் பார்வையிலும் நடனத்திலும் ரசமற்ற பாலியல் சமாச்சாரங்களையே சொல்வதாக, விவரிப்பதாக முடியும். இதன் காரணமாகவே அந்த ஆரம்ப காலங்களில், பரதத்தை சதிர் வட்டத்திலிருந்து மீட்டு புத்துயிர் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்ட ருக்மணி அருண்டேல், பரதத்தை சிருங்காரத்திலிருந்து மீட்டு, அதை பக்தி பாவ வெளியீட்டிற்கே முதன்மை தருவதென தீர்மானித்தார். பாலாவோ, ருக்மணி அருண்டேல் சிருங்காரத்தை பக்தி பாவமாக்கியது பிராமணப் படுத்தும் காரியம் என்று கேலி சொல்லி ஏற்க மறுத்தார். ஆனால் பாலாவின் எதிர்ப்பு ருக்மிணி அருண்டேலின் தீர்மானத்தை ஏதும் செய்துவிடவில்லை. ஆக, ருக்மணி அருண்டேல் பரதத்தை சிருங்கார பாவம் அண்டி விடக்கூடாது என்பதில்மிக எச்சரிக்கை கொண்டிருந்தார். சிருங்காரம், பால சரஸ்வதி அல்லாது அவரினும் குறைந்த கலை உணர்வும் திறனும் கொண்டவர் கையாளலில் அது ஆபாசமாகத் தான் சீரழியும் என்ற பயமும் தயக்கமும் அவரிடம் இருந்தது.\nயாமினி, அடையாறு கலாக்ஷேத்திரத்தில் நடனம் பயின்றவர். ஆனால் யாமினியின் கலை ஆளுமையும், ஒரு கலைஞராக அவரது பரிணாம வளர்ச்சியும் அவரை எந்த பள்ளியின் அல்லது குருவின் மாணவி என்ற அடையாளமிட்டு வகைப் படுத்தலுக்கு கட்டுப்பட மறுத்தன. அந்தக் காலத்தில் எந்த நடனமணியும் இம்மாதிரியான பள்ளி சார்ந்த, குருவின் பெயர் சார்ந்த அடையாளங் களாலேயே அறியப்படுவது வழக்கமாக இருந்தது. யாமினியே சொல்வார். “ நான் classical – ஆகட்டும், அல்லது romantic ஆகட்டும் எதையுமே ஒதுக்குவதில்லை. என் நாட்டியத்தின் ரூபம் claasical அது வெளிப்படுத்தும் பாவம் romantic என்பார். அதை ஒதுக்குவது தன் வர்ணங்களை இழந்த வானவில் போலாக்குவதாகும்.”\nநவம்பர் 20, 2014 அன்று, 11:20 மணி மணிக்கு\nதன் நடனத்திற்கான பாடாந்தரத்தையும் பெருக்கி வளப்படுத்திக்கொள்ளலானார். ஏற்கனவே இருக்கும் வர்ணங்கள், பதங்களைக் கற்று தேர்வதில் மட்டுமல்ல இதுவரை மற்ற நடனக் கலைஞர்கள் கால் பதித்திராத புதிய வெளிகளிலும் பயணம் செய்யத் தொடங்கினார். –\nPrevious Previous post: 'நான் கண்ட பாரதம்' – அம்புஜத்தம்மாள் சுயசரிதையிலிருந்து\nNext Next post: ஷார்லட் ப்ராண்டியும் ராபர்ட் சௌதியும் எழுதிக் கொண்ட கடிதங்கள்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவக் கட்டுரை அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அயல் விழா அரசியல் அரசியல் கட்டுரை அறிவிப்பு அறிவியல் அறிவியல் அதி புனைவு அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைக் கட்டுரை இசைத்தெரிவு இசையும் மொழியும் இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 ��தழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-232 இதழ்-233 இதழ்-234 இதழ்-235 இதழ்-236 இதழ்-237 இதழ்-238 இதழ்-239 இதழ்-24 இதழ்-240 இதழ்-241 இதழ்-242 இதழ்-243 இதழ்-244 இதழ்-245 இதழ்-246 இதழ்-247 இதழ்-248 இதழ்-249 இதழ்-25 இதழ்-250 இதழ்-251 இதழ்-252 இதழ்-253 இதழ்-254 இதழ்-255 இதழ்-256 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய வரலாறு இலக்கிய விமர்சனம் இலக்கியக் கட்டுரை இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக நடப்புக் குறிப்புகள் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் எழுத்து ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்ப���ாமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சத்யஜித் ரே சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தழுவல் கட்டுரை தாவரவியல் தாவரவியல் கட்டுரை திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாரதியியல் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொடுவா நாட்டார் கலை பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதற்கனல் முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பு இலக்கியம் மொழிபெயர்ப்பு நாவல் மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை ரவிஷங்கர் லயம் வங்க ஓவியங்கள் வங்க மலர் வங்கச் சிறப்பிதழ் வரலாறு வர���ாற்றாய்வு வரலாற்றுக் கட்டுரை வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேதியியல் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அகிலா ஆ. அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அஞ்சலி ஸச்தேவா அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அருண்குமார் மகோபாத்யாய் அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அவீக் சாட்டர்ஜீ அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆடம் இஸ்கோ ஆண்டனி கில் ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் குமார் ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆமிராபாலன் ஆரூர் பாஸ்கர் ஆர் நித்யஹரி ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி ஆஸ்டின் சௌந்தர் இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா முருகன் இரா. அரவிந்த் இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இராம் பொன்னு இலவசக் கொத்தனார் இலா இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உ நரசிம்மன் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்த�� உலகளந்த பெருமாள் உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.என். குண்டு எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் எம்.டி வாசுதேவன் நாயர் Raja எம்.ரிஷான் ஷெரீப் எரிக் நெஹர் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் எஸ் சியூயீ லு Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கஞ்சனூர் கவிப்ரியா கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட்ராமன் கண்ணன் இராமநாதன் கதீர் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கலாப்ரியா கலைச்செல்வி கல்யாணி ராஜன் கவியோகி வேதம் கா.சிவா கா.ரபீக் ராஜா காஜி நசருல் இஸ்லாம் காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் கிருபாகரன் கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலச்சுவடு கண்ணன் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் கி. ராஜநாராயணன் கிருஷ்ண பாசு Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரி எஸ். நீலகண்டன் குமரேசன் மு. குமாரநந்தன் குமார் சேகரன் குமுதினி கூம் கூம் ராய் கெ.ம.நிதிஷ் கென் லூ கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கே.பாலசுப்பிரமணி கே.ராஜலட்சுமி கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரெக் பா(வ்)ம் க்ரேஸ் பேலி ச அர்ஜுன்ராச் ச. சமரன் ச. சிவபிரகாஷ் ச.திருமலைராஜன் சக்தி சட்டோபாத்யாய சக்தி விஜயகுமார் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் ச��கிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் சமரேஷ் மஜும்தார் சரவணன் அபி சரவணன் மாணிக்கவாசகம் சரோஜ் பந்த்யோபாத்தியாய் sarvasithan சா.கா.பாரதி ராஜா சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்லி டைஸன் சார்ல்ஸ் ஸிமிக் சி.எஸ். லக்ஷ்மி Ayshwarya Shankaranarayanan சி.சு.செல்லப்பா சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி சியாம் பாரதி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. அருண் பிரசாத் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுகாந்தொ பட்டாச்சார்யா சுகுமார் ராய் சுசித்ரா பட்டாச்சாரியா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தரம் செல்லப்பா சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுனீல் கங்கோபாத்யாய் சுபத்ரா ரவிச்சந்திரன் சுபிமல் மிஸ்ரா சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் சௌதிக் பிஸ்வாஸ் ஜகதீஷ் சந்திர போஸ் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜான்பால் ரொசாரியோ ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜாஷுவா ராத்மான் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீபனானந்தா தாஸ் ஜீவ கரிகாலன் ஜீவன் பென்னி ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தா டே ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேன் ஹெர்ஷ்ஃபீல்ட் ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜொய் கோஸ்வாமீ ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல��� பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த. நரேஸ் நியூட்டன் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தஸ்லிமா நஸ்ரின் தாட்சாயணி தாமரைக்கண்ணன் தாராசங்கர் பந்த்யோபாத்யாய் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் திலீபன் தீபேஷ் சக்ரபர்த்தி தீப் ஹல்தர் தென்கரை மகாராஜன் தெரிசை சிவா தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் தைஸ் லைஸ்டர் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நபரூன் பட்டாச்சார்யா நம்பி நரசய்யா நரேன் நரோபா நளினி நவநீதா தேவ் சென் நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகிலேஷ் குஹா நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு ravishankar குழு பத்மகுமாரி பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்மா ஸச்தேவ் பத்ரி சேஷாத்ரி பனபூல் பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி பா ராமானுஜம் Pa Saravanan பா.சுதாகர் பா.தேசப்பிரியா பானு கபில் பானுமதி ந. பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan பாஸ்கர் ஆறுமுகம் Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் பிபூதிபூஷன் பந்த்யோபாத்யாய் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபீர் சென் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புத்ததேவ போஸ் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமா��் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம. செ. ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுமிதா மதுரபாரதி மதுரா மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் அரவிந்த டி ரெங்கநாதன் மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலேசியா ஸ்ரீகாந்தன் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாணிக் பந்தோபாத்யாய மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மாயா ஏஞ்சலொ மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ம இராமச்சந்திரன் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி முனைவர் ராஜேந்திர பிரசாத் நா மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோதி நந்தி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரக்ஷன் கிருதிக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரபீந்திர நாத் தாகூர் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமநாத் ராய் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ரிச்சர்ட் ரூஸ்ஸோ ருகையா ஷகாவத் ஹுசென் ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோகிணி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லாவண்யா சுந்தரராஜன் லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா ���ாரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகமாதேவி லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வசந்ததீபன் வண்ணநிலவன் வர்ஜீனியா வுல்ஃப் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜயகுமார் சம்மங்கரை விஜயலக்ஷ்மி விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வித்யா அருண் விபீஷணன் விருட்சன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேங்கட ராகவன் நா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷாங்க்யா கோஷ் ஷாதிர் ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸிர்ஷோ பந்தோபாத்யா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் கின்சர் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாரலாம்பி மார்கோவ் ஹாலாஸ்யன் ஹுமாயுன் அஹமத் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் அக்டோபர் 2021 செப்டம்பர் 2021 ஆகஸ்ட் 2021 ஜூலை 2021 ஜூன் 2021 மே 2021 ஏப்ரல் 2021 மார்ச் 2021 பிப்ரவரி 2021 ஜனவரி 2021 டிசம்பர் 2020 நவம்பர் 2020 அக்டோபர் 2020 செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்���ர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும். எழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nஆன்கர் எஃப்.எம். (anchor.fm) 4\nயூடியுப் – ஒளிவனம் (YouTube) 3\nசவுண்ட் கிளவுட் (SoundCloud) 1\nஎழுத்தாளர் அம்பை: சொல்வனம் சிறப்பிதழ்கள் 0\nரொபெர்த்தோ பொலான்யோ ஆக்கங்களும் விமர்சனங்களும் 0\nவீடும் வெளியும்: கவிதைகளும் கதைகளும் 0\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவங்கச் சிறப்பிதழ் 1: 240\nவங்கச் சிறப்பிதழ் II: 241\nவி. எஸ். நைபால்: 194\nகவிதை பற்றி புதுமைப்பித்தன் கூறியவற்றுள் சில\nவிஞ்ஞான வளர்ச்சியின் வளர்ச்சி- 2\nபெருந்தேவிக்கு பி. ஜி. உடௌஸ் வேண்டாம்\nசோ - ஒரு தன்னிகரற்ற நிகழ்வு\nஆட்டத்தின் ஐந்து விதிகள் (8)\nஇந்து தர்மமும் அதன் கலாசாரப் போர்களும் (14)\nஇவர்கள் இல்லையேல் – நாவல் (3)\nகாவிய ஆத்மாவைத் தேடி (3)\nசட்டமும் செயற்கை நுண்ணற���வும் (2)\nதலை சிறந்த 10 தொழில்நுட்பம் (11)\nதேர்ந்த வாசகருக்கான படப்புத்தகம் (2)\nநோயாளி எண் பூஜ்யம் (2)\nபய வியாபாரியா ஹிட்ச்காக் (2)\nபேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் (4)\nமிளகு: இரா முருகன் – நாவல் (7)\nமுதலியத்தை எதிர்க்கும் பொதுமம் (1)\nமொபைல் தொடர்பாடல் வரலாறு (2)\nவண்ணநிலவன் நாவல்கள் பற்றி (2)\nஸ்லாட்டர்ராக்- தாமஸ் டிஷ் (2)\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nஎழுத்தாளர் இரா முருகனின் சரித்திரத் தொடர் நாவல் “மிளகு” அத்தியாயம் - ஏழு 1999 அம்பலப்புழை 35:47\nஎழுத்தாளர் தி.ஜானகிராமன் எழுதிய சிறுகதை \"செய்தி\" 21:56\nயாமினி – பகுதி 3\nயாமினி கிருஷ்ணமூர்த்தி – பகுதி ஐந்து\nஓய்வுக் காலச் சேமிப்பும் அதை அபகரிக்க அரசாங்கம் நடத்தும் போரும்\nby கடலூர் வாசு\t ஆகஸ்ட் 22, 2021\nby கா.ரபீக் ராஜா\t ஆகஸ்ட் 22, 2021\nby லியோ டால்ஸ்டாய்\t ஆகஸ்ட் 22, 2021\n”ஆசிய அமெரிக்கர்கள்” – அமெரிக்காவில் மிகையாகும் வெறுப்பரசியல்\nby லதா குப்பா\t ஆகஸ்ட் 22, 2021\nகாவிய ஆத்மாவைத் தேடி… – 2\nby ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன்\t ஆகஸ்ட் 22, 2021\nபேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்\nby பானுமதி ந.\t ஆகஸ்ட் 22, 2021\nமூத்த கதைசொல்லி – டெம்சுலா ஆவ்\nby கோரா\t ஆகஸ்ட் 22, 2021\nதொட்டாலே கண் எரியும் மிளகாயா\nby லோகமாதேவி\t ஆகஸ்ட் 22, 2021\nஷோபா சக்தியின் ‘கொரில்லா’ – ஒரு பார்வை\nby ராஜேஷ் சந்திரா\t ஆகஸ்ட் 22, 2021\nஉங்கள் மின்னஞ்சல், படைப்புகளை அனுப்ப முகவரி: solvanam.editor@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2460771", "date_download": "2021-10-19T13:09:07Z", "digest": "sha1:SJNWUBWR5OTQW5PK63PXEY4C2TNZU46W", "length": 3685, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"இறால் வளர்ப்பு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"இறால் வளர்ப்பு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n07:32, 22 திசம்பர் 2017 இல் நிலவும் திருத்தம்\n1 பைட்டு சேர்க்கப்பட்டது , 3 ஆண்டுகளுக்கு முன்\n→‎இறால் வளர்ப்புக்கு உகந்த நீர் அளவுருக்கள்(water parameters) :-\n07:31, 22 திசம்பர் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nIrusamal Martin (பேச்சு | பங்களிப்புகள்)\n(→‎இறால் வளர்ப்புக்கு உகந்த நீர் அளவுருக்கள்(water parameters) :-)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n07:32, 22 திசம்பர் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nIrusamal Martin (பேச்சு | பங்களிப்புகள்)\n(→‎இறால் வளர்ப்புக்கு உகந்த நீர் அளவுருக்கள்(water parameters) :-)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n==இறால் வளர்ப்புக்கு உகந்த நீர் அளவுருக்கள்(water parameters) :- ==\nநீர் அளவுருக்கள் உகந்த அளவு\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/swiggy-and-zomato-halt-services-in-hyderabad-mur-469001.html", "date_download": "2021-10-19T12:49:28Z", "digest": "sha1:C2EJ57ZMC6QLU5UO5E3TG2CSV6NQUI4Y", "length": 9847, "nlines": 102, "source_domain": "tamil.news18.com", "title": "ஊழியர்களிடம் போலீசார் கடுமை: ஹைதராபாத்தில் சேவையை நிறுத்திய ஜொமாட்டோ, ஸ்விகி/Swiggy, Zomato call off services in Hyderabad – News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#T20 WorldCup#பெண்குயின் கார்னர்#பிக்பாஸ்#கிரைம்\nஊழியர்களிடம் போலீசார் கடுமை: ஹைதராபாத்தில் சேவையை நிறுத்திய ஜொமாட்டோ, ஸ்விகி\nஊழியர்களிடம் போலீசார் கடுமை: ஹைதராபாத்தில் சேவையை நிறுத்திய ஜொமாட்டோ, ஸ்விகி\nஉணவு விநியோக சேவை நிறுத்தம்\nஉணவு விநியோகம் செய்ய சென்ற ஜொமாட்டோ, ஸ்விகி நிறுவனத்தின் ஊழியர்களை தடுத்து நிறுத்திய தெலங்கானா போலீசார், அவர்களிடம் கடுமையாக நடந்துகொண்டனர். ஊழியர் ஒருவரை போலீசார் தாக்கிய வீடியோ சமூக ஊடகத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது\nதங்கள் ஊழியர்களிடம் போலீசார் கடுமையாக நடந்துகொண்டதையடுத்து ஹைதராபாத்தில் உணவு விநியோக சேவையை ஜொமாட்டோ, ஸ்விகி நிறுவனங்கள் நிறுத்தி வைத்துள்ளன.\nகொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்கள் ஊடங்கை அமல்படுத்தியுள்ளன. ஊரடங்கை மீறி சாலையில் சுற்றித் திரிவோருக்கு அபராதம் விதிப்பது, வாகனங்களை பறிமுதல் செய்வது என போன்ற கடுமையான நடவடிக்கைகளையும் அந்தந்த மாநில போலீசார் எடுத்து வருகின்றனர்.\nஅதேவேளையில், மருத்துவ பணியாளர்கள், ஊடகவியலாளர்கள், சுகாதார பணியாளர்கள், உணவு விநியோகம் செய்பவர்கள் ஆகியோர் தங்களின் பணியை எவ்வித தடையும் இன்றி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nதெலங்கானா மாநிலத்தில் ஊடங்கு அமலில் உள்ளபோதிலும் ஜொமாட்டோ, ஸ்விகி ஆகிய நிறுவனத்தின் ஊழியர்கள் உணவு விநியோகம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலை��ில், நேற்று உணவு விநியோகம் செய்ய சென்ற ஜொமாட்டோ, ஸ்விகி நிறுவனத்தின் ஊழியர்களை தடுத்து நிறுத்திய தெலங்கானா போலீசார், அவர்களிடம் கடுமையாக நடந்துகொண்டனர். ஊழியர் ஒருவரை போலீசார் தாக்கிய வீடியோ சமூக ஊடகத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.\nமேலும் ஒருசில இடங்களில், உணவு விநியோகத்தில் ஈடுபட சென்ற ஊழியர்களின் வண்டிகளை பறிமுதல் செய்த போலீசார் 1000 ரூபாய் வரை அபராதமும் விதித்தனர். போலீசாரின் இந்த செயல் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத் எம்.பி.யும் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் தலைவருமான ஓவைசி, போலீசாரின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.\nமேலும் படிக்க.. முகக் கவசம் அணியக் கோரி காலில் விழுந்து வேண்டுகோள் வைத்த பேரூராட்சி ஊழியர்..\nஇந்நிலையில், தங்கள் ஊழியர்களிடம் போலீசார் கடுமையாக நடந்துகொண்டது தொடர்பாக தகுந்த விளக்கம் கிடைக்கும் வரை ஹைரதாபாத்தில் உணவு விநியோக சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக ஜொமாட்டோ, ஸ்வுகி நிறுவனங்கள் அறிவித்துள்ளனர்.\nகொரோனா ஊடங்கு காரணமாக பலரும் உணவை ஆன்லைனின் ஆர்டர் செய்து பசியை போக்கி வருகின்றனர். போலீசாரின் கடுமை மற்றும் உணவு விநியோக நிறுவனங்களின் முடிவால் அவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube\nஊழியர்களிடம் போலீசார் கடுமை: ஹைதராபாத்தில் சேவையை நிறுத்திய ஜொமாட்டோ, ஸ்விகி\n’பால் பண்ணை, இறந்த பசுவில் இருந்து உரம்’ - மாதம் ரூ.10 லட்சம் சம்பாதிக்கும் சிவில் இன்ஜினியர்\nசிறிய தவறை தேசிய பிரச்சினையாக்குவதா ஊழியரை மீண்டும் பணியமர்த்துவோம்: சோமேட்டோ நிறுவனர்\n‘பிச்சை எடுக்க விருப்பமில்லை’....பேனா விற்று சம்பாதிக்கும் ஏழை பாட்டி - இணையத்தில் வைரல்\nநரேந்திர மோடி ஏன் வெற்றியாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/lifestyle/health-know-the-health-risk-and-side-effects-of-ice-water-cold-water-esr-461373.html", "date_download": "2021-10-19T13:08:02Z", "digest": "sha1:F7D5FVFRYZAUZ6N2FPI2CCZ42VB64W2H", "length": 7783, "nlines": 94, "source_domain": "tamil.news18.com", "title": "கோடையில் தொண்டைக்கு இதம் தரும் ஐஸ் வாட்டர்..அதனால் வரும் ஆபத்தையும் தெரிஞ்சுக்கிட்டா தொடவே மாட்டீங்க..! | know the health risk and side effects of ice water cold water – News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#T20 WorldCup#பெண்குயின் கார்னர்#பிக்பாஸ்#கிரைம்\nகோடையில் தொண்டைக்கு இதம் தரும் ஐஸ் வாட்டர்... அதனால் வரும் ஆபத்தையும் தெரிஞ்சுக்கிட்டா தொடவே மாட்டீங்க..\nநேரடியாக ஃபிரிட்ஜை திறந்து தண்ணீர் குடிக்கும் பழக்கம் கோடைகாலத்தில் அதிகமாகவே இருக்கும். அது அந்த சமயத்தில் தொண்டைக்கு இதமாக இருக்கலாம். ஆனால் அதனால் வரும் பின்விளைவுகளையும் தெரிந்துகொள்ளுங்கள்.\nகோடைகாலத்தில் ஜில்லென குடிக்கலாம் என பலரது வீட்டில் வாட்டர் பாட்டில்களில் தண்ணீர் நிரப்பி ஃபிரிட்ஜில் தேக்கி வைத்திருப்பார்கள். அது அந்த சமயத்தில் தொண்டைக்கு இதமாக இருக்கலாம். ஆனால் அதனால் சில பக்க விளைவுகளும் ஏற்படுகின்றன.\nசெரிமானமின்மை : உடல் வெப்பநிலையை சீராக்க வேலை செய்து கொண்டிருக்கும் சமயத்தில் ஐஸ் தண்ணீர் குடித்து அதன் வெப்பநிலையைக் குறைத்தால் மீண்டும் சமநிலைப்படுத்த தன் ஒட்டுமொத்த ஆற்றலையும் வெளிப்படுத்தும். இதனால் மற்ற செயல்கள் குறிப்பாக செரிமான வேலைகள் தடைபடும்.\nமலச்சிக்கல் : செரிமானம் சீராக இல்லை என்றாலே மலச்சிக்கல் தானாக உண்டாகும்.\nதொண்டை கரகரப்பு : குளுர்ச்சியாக ஃபிரிட்ஜில் இருந்து தண்ணீரை அப்படியே குடிப்பதால் தொண்டை வலி, கரகரப்பு, வீக்கம் உண்டாகும். மூக்கடைப்பு ஏற்படும்.\nஉடல் பருமன் : உணவு உண்ட பின் குளுர்ச்சியான நீரைக்குடிப்பதால் உணவில் உள்ள கொழுப்புகளை உடல் பிரிப்பதற்கு முன்பாகவே அவை குளுர்ச்சியால் திடமாக மாறிவிடும். பின் செரிமாணமின்றி உடலிலேயே தங்கி கெட்ட கொழுப்புகள் சேர்ந்து உடல் பருமன் அதிகரிக்கும்.\nஇதய பாதிப்பு : ஆய்வு மூலம் நிரூபிக்கப்பட்ட உண்மை என்னவெனில் மிகவும் குளுர்ச்சியான நீரைக் குடிப்பதால் அவை இதயத்திற்குச் செல்லும் நரம்பு மண்டலங்களை பாதித்து இதயத் துடிப்பை குறைக்கும். இதனால் மாரடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.\nஅதிர்ச்சி : உடற்பயிற்சி அல்லது கடுமையான வேலைக்குப் பின் குளுர்ச்சியான நீரைப் பருகினால் உடல் சூட்டில் இருக்கும்போது உடனடியாக குளிர்ந்த நீரை உட்செலுத்துவது உடலின் திடீரென மின்சாரம் ( shock to your body ) பாய்ந்தது போன்ற உணர்வை உண்டாக்கும்.\nநீரிழப்பு : ஐஸ் வாட்டர் குடித்த கொஞ்ச நேரத்தில் மீண்டும் உங்களுக்குத் தண்ணீர் தாகம் ஏற்படும். இதற்குக் காரணம் உடல் சூட்டை தணிக்க நீரை அதிகமாக உறிஞ்சி நீர்ப்பற்றாக்குறையை உண்டாக்கும். இதற்கு மீண்டும் ஐஸ் வாட்டர் குடிக்காமல் அறையின் வெப்பநிலையில் உள்ள நீரைக் குடியுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://timestampnews.com/new-technology-to-calculate-power-generation/1867/", "date_download": "2021-10-19T13:13:17Z", "digest": "sha1:SB55CVEFQ3MYSOHDKFO3V4RICONPTCVG", "length": 8951, "nlines": 89, "source_domain": "timestampnews.com", "title": "மின் உற்பத்தி அளவை கணக்கிட புது தொழில்நுட்பம் அறிமுகம் – Timestamp News", "raw_content": "\nமின் உற்பத்தி அளவை கணக்கிட புது தொழில்நுட்பம் அறிமுகம்\nமின் தேவை எதிர்பாராத வகையில் அதிகரிக்கும்போதும், குறையும்போதும், உற்பத்தி அளவை கண்காணிக்க, தமிழக மின் வாரியம், புதிய தொழில்நுட்பத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளது.\nசென்னை, மின் வாரிய தலைமை அலுவலக வளாகத்தில், மாநில மின் பகிர்ந்தளிப்பு மையம் உள்ளது. இது, தமிழக மின் தேவையை பூர்த்தி செய்வதற்கான மேலாண்மை பணிகளை மேற்கொள்கிறது. இந்த மையம், அடுத்த நாள் எவ்வளவு மின் தேவை இருக்கும்; பூர்த்தி செய்ய எவ்வளவு மின்சாரம் தேவை; அதை எந்த மின் நிலையங்களில் இருந்து பெறலாம் என்ற விபரங்களை, உத்தேச அடிப்படையில், முந்தைய நாள் திட்டமிடுகிறது. திட்டமிட்டதை விட, மின் தேவை எதிர்பாராத வகையில் அதிகரிக்கும்போது, அதற்கு ஏற்ப, மின் உற்பத்தியை உடனே அதிகரிக்க வேண்டும். அதே போல, மின் தேவை குறையும்போது, மின் உற்பத்தியை குறைக்க வேண்டும்.இந்த முடிவை எடுக்க வேண்டிய சூழல் வரும்போது, பகிர்ந்தளிப்பு மைய அதிகாரிகள், அனல், காற்றாலை உள்ளிட்ட மின் நிலையங்களை, தொலைபேசி வழியாக, மின் உற்பத்தியை அதிகரிக்குமாறு அல்லது குறைக்குமாறு கூறுகின்றனர்.இதனால், அந்த பணியை மேற்கொள்வதில் தாமதம் ஏற்படுகிறது.\nஇது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:மின் தேவையை பூர்த்தி செய்ய, மத்திய அரசு அனுமதித்துள்ள அளவில், மின் உற்பத்தியை அதிகரிக்கவும், குறைக்கவும் செய்ய வேண்டும். இல்லையேல், அபராதம் விதிக்கப்படும். தொலைபேசி, இணையதளம் வாயிலாக அறிவுறுத்தினால், துல்லியமாக, விரைவாக செயல்படுவதில்லை. உதாரணமாக, 100 மெகா வாட் குறைக்க அறிவுறுத்தினால், அதை விட, அதிகமாக குறைத்து விடுகின்றனர். இதை தவிர்க்க, புதிய தொழில்நுட்பம் அமல்படுத்தப்பட உள்ளது. இந்த தொழில்நுட்பத்தில், மின் நிலையங்களுடன் இணைக்க���்பட்டு உள்ள துணை மின் நிலையங்களில், தொலைதொடர்பு வதியுடன் கூடிய கட்டமைப்பு அமைக்கப்படும். அதில், மின் தேவை, மின் உற்பத்தி உள்ளிட்ட விபரங்கள் பதிவேற்றம் செய்து, பகிர்ந்தளிப்பு மையத்துடன் இணைக்கப்படும். இதனால், மின் தேவை திடீரென அதிகரிக்கும்போதும், குறையும்போதும், அந்த கட்டமைப்பு தானாகவே செயல்பட்டு, எந்தெந்த மின் நிலையங்களில் உற்பத்தியை அதிகரிக்க, குறைக்க வேண்டும் என்பதை உடனே தெரிவிக்கும். இதனால், சரியான அளவில், மின் உற்பத்தி செய்ய முடியும்.இந்த பணி, சோதனை ரீதியாக, 6 கோடி ரூபாய் செலவில், தற்போது, காற்றாலை மின் நிலையங்களுடன் இணைக்கப்பட்டுள்ள துணை மின் நிலையங்களில் மேற்கொள்ளப்பட உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.\nPrevious Previous post: ‛அடுத்த 2 ஆண்டுகளில் இந்தியா பொருளாதார சரிவை சந்திக்கும்’\nNext Next post: 5, 8ம் வகுப்பு பொது தேர்வுக்கு ‘சென்டர்’ அமைப்பதில் குழப்பம்\nதூத்துக்குடி மாவட்ட காவல்துறையில் உள்ள நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள்- மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் ஆய்வு.\nதமிழக மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நல்வாழ்வு சங்கத்தின் சார்பில் கொரோனா பணிகள்\nதூத்துக்குடி 17வது வார்டு பொதுமக்கள் சார்பில் தெரு மின் விளக்கு, சாலை வசதி மற்றும் குடிநீர் குழாய் அமைத்திட வேண்டி கோரிக்கை மனு\nதிருச்செந்தூா் கோயில் கும்பாபிஷேகம்: முதல்வா் விரைவில் அறிவிப்பாா்\nதூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அங்கன்வாடி மைய கட்டிடம் – அமைச்சர் கீதாஜீவன் அடிக்கல் நாட்டினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/worldnews/2021/09/27/taliban-ban-barbers-from-trimming-beards-in-afghanistans-helmand-province", "date_download": "2021-10-19T13:12:04Z", "digest": "sha1:NUHVET4VOMDYQNZBXG4RBOYZVVXS74CD", "length": 7244, "nlines": 56, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Taliban ban barbers from trimming beards in Afghanistans Helmand province", "raw_content": "\nதாடியை ஷேவ், ட்ரிம் செய்ய தடை போட்ட தாலிபான்கள் : கடும் கட்டுப்பாடுகளால் அதிர்ச்சியில் ஆப்கன் ஆண்கள்\nஆண்களின் தாடியை வெட்டவோ, ட்ரிம் செய்யவோ கூடாது என சலூன் கடைக்காரர்களுக்கு தாலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர்.\nஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப்படை வெளியேறியதை அடுத்து தாலிபான்கள் அந்நாட்டைக் கைப்பற்றினர். இதையடுத்து பிரதமராக முல்லா முகமது ஹசனும், துணை பிரதமராக அப்துல் கனி பரதரும் பதவி ஏற்று ஆட்சி செய்த��� வருகின்றனர்.\nதாலிபான்கள் ஆட்சிக்கு வந்ததிலிருந்தே பொதுமக்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். ஆண் துணை இல்லாமல் பெண்கள் வெளியே வரக்கூடாது, கல்லூரிகளில் பெண்களும், ஆண்களும் தனித்தனியாக அமர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளைத் தாலிபான்கள் விதித்துள்ளனர்.\nஅதேபோல், விளையாட்டு, இசை, சினிமா போன்ற பொழுதுபோக்கு நிகழ்வுகளுக்குத் தாலிபான்கள் முற்றிலுமாக தடை விதித்துள்ளனர். இதனால் மீண்டும் தாலிபான்களின் கொடூர ஆட்சி நடக்குமோ என ஆப்கன் மக்கள் அஞ்சுகின்றனர்.\nஇந்நிலையில் ஆப்கனின் ஹெல்மாண்ட் மாகாணத்தில் ஆண்களின் தாடியை மழிக்கவோ அல்லது ட்ரிம் செய்யவோ கூடாது என்று சலூன் கடைக்காரர்களுக்குத் தாலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர். மேலும் சலூன் கடைகளில் மேற்கத்திய இசை போன்றவற்றையும் ஒலிக்கக்கூடாது. இதை மீறினால் பொதுவெளியில் தண்டிக்கப்படுவார்கள் என தாலிபான்கள் தெரிவித்துள்ளனர். இதனால் ஆண்களும், சலூன்கடைக்காரர்களும் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nநேற்று முன்தினம் கூட கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறி நான்கு பேரைச் சுட்டுக் கொலை செய்து அவர்களின் சடலங்களைத் தாலிபான்கள் பொதுவெளியில் தொங்கவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.\n4 பேர் சுட்டு கொலை - சடலத்தை வீதியில் தொங்கவிட்டு எச்சரிக்கும் தாலிபான்கள்: பீதியில் ஆப்கன் மக்கள்\n\"சகிப்புத்தன்மை குறித்து யார் பாடம் எடுப்பது” : Zomato நிறுவனரின் ட்வீட்டால் மீண்டும் சர்ச்சை\n“எங்க கல்யாணத்த மழை வெள்ளம் தடுப்பதா.. நெவர்” : காதல் ஜோடி எடுத்த முடிவு - இணையத்தில் வைரல்\n“நாளை நம்மை காப்பாற்றிக்கொள்ள எந்த வாய்ப்பும் இருக்காது” : உலகிற்கு மாலத்தீவு சொன்ன அதிர்ச்சி செய்தி\nLKG படித்த சிறுமிக்கு பாலியல் தொல்லை.. ஆசிரியருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஐகோர்ட் அதிரடி\n\"சகிப்புத்தன்மை குறித்து யார் பாடம் எடுப்பது” : Zomato நிறுவனரின் ட்வீட்டால் மீண்டும் சர்ச்சை\nLKG படித்த சிறுமிக்கு பாலியல் தொல்லை.. ஆசிரியருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஐகோர்ட் அதிரடி\n“எங்க கல்யாணத்த மழை வெள்ளம் தடுப்பதா.. நெவர்” : காதல் ஜோடி எடுத்த முடிவு - இணையத்தில் வைரல்\n“விரைவில் ஆழ்கடல் அகழாய்வுப் பணிகளைத் தொடங்க ஆலோசனை” : அமைச்சர் தங்கம் தென்னரசு முக்கிய தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%88_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE_2006&action=edit", "date_download": "2021-10-19T12:10:49Z", "digest": "sha1:6QGEVCW4TOJ6IZ6QJOXDF2RGNFTYVITZ", "length": 4030, "nlines": 36, "source_domain": "www.noolaham.org", "title": "வடபுல முஸ்லிம் சான்றோரை வாழ்த்தும் விழா 2006 என்பதற்கான மூலத்தைப் பார் - நூலகம்", "raw_content": "\nவடபுல முஸ்லிம் சான்றோரை வாழ்த்தும் விழா 2006 என்பதற்கான மூலத்தைப் பார்\n← வடபுல முஸ்லிம் சான்றோரை வாழ்த்தும் விழா 2006\nஇப்பக்கத்தைத் தொகுக்கவும்- இதற்கு தங்களுக்கு அனுமதி இல்லை. அதற்கான காரணம்:\nநீங்கள் கோரிய செயற்பாடு பயனர்கள் குழு பயனர்களுக்கு மட்டுமே.\nநீங்கள் இந்தப் பக்கத்தின் மூலத்தைப் பார்க்கவும் அதனை நகலெடுக்கவும் முடியும்:\n{{சிறப்புமலர்| நூலக எண் = 76278 | வெளியீடு = [[:பகுப்பு:2006|2006]].. | ஆசிரியர் = [[:பகுப்பு:-|-]] | வகை = இஸ்லாம்| மொழி = தமிழ் | பதிப்பகம் = [[:பகுப்பு:மீள்குடியேற்றுகை அமைச்சு|மீள்குடியேற்றுகை அமைச்சு]] | பதிப்பு = [[:பகுப்பு:2006|2006]] | பக்கங்கள் = 156 | }} =={{Multi|வாசிக்க|To Read}}== <--pdf_link-->* [http://noolaham.net/project/763/76278/76278.pdf வடபுல முஸ்லிம் சான்றோரை வாழ்த்தும் விழா 2006] {{P}}<--pdf_link--> [[பகுப்பு:2006]] [[பகுப்பு:மீள்குடியேற்றுகை அமைச்சு]] {{சிறப்புச்சேகரம்-முஸ்லிம்ஆவணகம்/சிறப்பு மலர்கள்}}\nவார்ப்புரு:சிறப்புச்சேகரம்-முஸ்லிம்ஆவணகம்/சிறப்பு மலர்கள் (மூலத்தைக் காண்க)\nவடபுல முஸ்லிம் சான்றோரை வாழ்த்தும் விழா 2006 பக்கத்துக்குத் திரும்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilceylon.com/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF/", "date_download": "2021-10-19T12:59:09Z", "digest": "sha1:BDIGBSXGLZSF6RB6RTOPAMSB4GUIIOM3", "length": 8359, "nlines": 103, "source_domain": "www.tamilceylon.com", "title": "ஜனாதிபதியின் கருத்து வாய்சொல்லாகவே இருக்குமா? – அருட்தந்தை ஜோசப்மேரி | Tamil Ceylon", "raw_content": "\nHome செய்திகள் உள்நாட்டுச் செய்திகள் ஜனாதிபதியின் கருத்து வாய்சொல்லாகவே இருக்குமா\nஜனாதிபதியின் கருத்து வாய்சொல்லாகவே இருக்குமா\nஅமெரிக்காவிற்கு சென்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ள கருத்தானது வாய்சொல்லாகவே இருக்கும் நடைமுறையிலிருக்காது என அருட்தந்தை ஜோசப்மேரி தெரிவித்துள்ளார்.\nமட்டு.ஊடக அமையத்தில் நேற்று (செவ்வாய்��்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஅவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் இதற்கு முன்னிருந்த அரசாங்கம் மனித உரிமை மீறப்பட்டுள்ள வேளையில் நாங்கள் அதனை ஆவணம் செய்வோம் என்று ஐ.நாவில் கூறியிருந்தார்கள். அதுவும் கிடப்பில் கிடந்ததுடன், இந்த அரசையும் குற்றம்சாட்டியிருந்தார்கள் அத்துடன் எமது மக்களை விலைபேசி வந்துவிட்டார்கள்.\nஇதே பாணியில் ஜனாதிபதியும் அமெரிக்காவில் கூறியது பழைய அரசை போன்று வெறுமனே வாய் சொல்லே தவிர செயல்முறையில் நடக்குமா என்பது கேள்விக்குறி.\nஆகவே கண்துடைப்புக்காக இதை செய்கின்றார்களா மனதார உணர்ந்து செயற்படுகின்றார்களா இந்த மக்கள் நிம்மதியாக வாழ சிங்கள மக்களுடன் கை கொடுத்து வாழ இவர்கள் செய்ய வேண்டியது காலத்தின் தேவை.\nஆனால் வெளியில் இவ்வாறு பேசிவிட்டு மீண்டும் நாட்டுக்கு வந்து அவற்றை மறந்து விடுகின்றனர். இதை தான் நான் கடந்த காலங்களிலிருந்து பார்த்து வருகின்றேன்.\nநாட்டில் உள்ள மக்களை பாகுபாடு இல்லாமல் ஜனாதிபதி கூறிய வார்த்தையை செயற்படுத்துபவராக இருந்தால் அவர் ஒரு பெயர் போன தலைவராவார். அவர் மக்களை இணைத்து செயற்பட வேண்டும் என்றும் பகிரங்க சவால் விடுத்துள்ளார்.\nPrevious articleகைதிகள் அச்சுறுத்தல் சம்பவம் குறித்து விசாரிக்க குழு – நீதியமைச்சர் நடவடிக்கை\nNext articleஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் ஜனாதிபதி இன்று உரை\nவேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்பவர்களுக்கு முக்கிய தகவல்\nநாளாந்த Passport விநியோகத்தில் அதிகரிப்பு\nநாட்டில் பசுவதையை தடை செய்ய நடவடிக்கை\nஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 21வது ஆண்டு நினைவு தினம் அனுஸ்டிப்பு\nசாணக்கியன் நம்பிக்கைக்கு உரியவர் அல்ல – டக்ளஸ் குற்றச்சாட்டு\nஇலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா\nவேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்பவர்களுக்கு முக்கிய தகவல்\nஉள்நாட்டுச் செய்திகள் amal - 19-10-2021 0\nநாளாந்த Passport விநியோகத்தில் அதிகரிப்பு\nஉள்நாட்டுச் செய்திகள் amal - 19-10-2021 0\nநாட்டில் பசுவதையை தடை செய்ய நடவடிக்கை\nஉள்நாட்டுச் செய்திகள் amal - 19-10-2021 0\nஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 21வது ஆண்டு நினைவு தினம் அனுஸ்டிப்பு\nஉள்நாட்டுச் செய்திகள் amal - 19-10-2021 0\nசாணக்கியன் நம்பிக்கைக்கு உரியவர் அல்ல – டக்ளஸ் குற்றச்சாட்டு\nஉள்நாட��டுச் செய்திகள் amal - 19-10-2021 0\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.verkal.net/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-10-19T12:34:48Z", "digest": "sha1:OAILTHSJTA7ZWO7BO7NXAP4W5SPS23VY", "length": 25437, "nlines": 138, "source_domain": "www.verkal.net", "title": "பனம் பொருள் உற்பத்தி .! | வேர்கள்", "raw_content": "\nஇலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்\nதாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் \nHome பொருண்மியம் பனம் பொருள் உற்பத்தி .\nபனம் பொருள் உற்பத்தி .\nதமிழீழத் தில் பனைமரங்கள் பரவலாகக காணப்படுகின்றன யாழ்ப்பாண மாவட்டத்தில் அதிகமாகவும் ஏனைய தமிழ் மாவட்டங்களில் சற்று குறைவாகவும் காணப்படுகின்றன. ஆரம்பத்தில் இவைகள் காட்டு மரங்கள் போன்றே அறிமுகமாகின. திட்டமிட்ட முறையில் நடப்பட்டிருக்கவில்லை . எனினும் தமிழர்களது வாழ்வோடு பின்னிப் பிணைந்திருந்தன . உணவுத் தேவைக்கும் மருத்துவ தேவைக்கும் பல்வேறு பாவனைப் பொருட்களாகவும் விட்டுத்தேவைகளுக்கும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. பனம் பொருள் உற்பத்தியின் நிறுவன ரீதியான மாற்றம் பற்றியும் தற்போதைய நிலையில் அதன் முக்கியத்துவம் பற்றியும் குறிப்பிடுதல் இக்கட்டுரையின் பிரதான நோக்கமாகும்\nபன்டைக் காலம் தொட்டு பணம்பொருள் சார்ந்த தொழில் குடிசைக் கைத்தொழிலாகவே இருந்துவந்துள்ளது.\nஐரோப்பியர் வருகையின் பின்பு குறிப்பாக பிரித்தானியரின் ஆட்சியின் கீழ் அவர்களது இறக்கு மதிப் பொருட்கள் மீது நா ட்டம் செல்லவே உள்ளுர் உற்பத்திக்கு குறிப்பாக பனம் பொருள் உற்பத்திகளுக்கு போதிப ஊக்கம் அளி க்கப்படவில்லை பெருந்தோட்டப் பயிர்களான தேயிலை , ரப்பர் , தெங்குப் பொருட்களுக்கு கொடுக்கப்பட்ட\nஅதே ஊக்கம் பணம் பொருட்களுக்கும் கொடுக்கப்பட்டிருப்பின் தமிழீழத்தின் பெருந்தோட்ட உற்பத்தியாக பனம் பொருள் உற்பத்தியே விருத்தியடைந்திருக்கும் கள் உற்பத்தி,பதனிர் உற்பத்திகளில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரே ஈடுபட்டு வந்தனர். இவை மட்டுமன்றி பிரித்தானியர் வருகையின் பின்பு மக்களின் நுகர்வு முறை மேலைத்யே நாட்டு இறக்குமதிகளின் மீது செல்லத் தொடங்கியபின்பு பனம்பொருள் உற்பத்திகள் அதிலும் சிறப்பாக பனை சார் ந் த உணவுப்பொருட்களின் உற்பத்திச் செலவு குற��வு அல்லது இலவசப் பன்டமாக இருந்தமையால வருமானம் குறைந்த காலத்தில் நுகரப்படும் இழிவுப்பொருட்களாகவே காணப்பட்டது. மேலும் பனை சார்ந்த தொழிலில் ஈடுபடுபவர் ஒரு வகுப்பினராகவும் அதனை உடமையாளர்கள் இன்னொரு சாராராகவும் இருந்தமையும் பனம்பொருளின் முக்கியத்துவம் உணரப்படாமையும், பின்தங்கிய நிலைக்கு பிரதான காரணங்களாகின 1970ம் ஆண்டுகளில் அரசாங்கம் போன்றவைகளை கூட்டுறவுச் சங்கத்தின் கீழ் கொண்டுவந்து உற்பத்தியாளர்களிட மிருந்து கள்ளை குறித்த விலைக்கு கொள்வனவு செய்து ஆங்காங்கே விற்பனை நிலையங்களை நிறுவி விற்பனை செய்து வந்தன. இதன் மூலம் உற்பத்தியாளர்களுக்கு தங்கள் உற்பத்திகள் சிறந்தத சந்தைகக்கு வர வாய்ப்பு கிடைத்தது மட்டுமன்றி உயர் விலையும் கிடைத்தது. இவை மட்டுமன்றி இத்தகைய கொள்வனவு விற்பனை வாய்ப்புக் கிடைத்தது .\n1977ம் ஆண்டு இப் பனம்பொருள் உற்பத்திகளை பரந்த அளவில் செய்யும் நோக்குடன் பனம்பொருள் அபிவிருத்திச்சபை என்ற பெயரில் கூட்டுத் தாபனத்தின் கழ் கொண் டுவரப்பட்டது. இக்கூட்டுதத் தாபனத்தின் கீழ் நிர்வாகப்பகுதி நிலப் பகுதி உற்பத்திப் பகுதி, சந்தைப்படுத்தல் பகுதி, ஆராய்ச்சிப் பகுதி எனப் பல் வேறு பிரவுகளாகச் செயற்பட்டு வருகின்றன கூட்டுத்தாபன அமைப்பின் கீழ் உள் ளுர் த தேவைகளுக்கு மட்டுமின்றி ஏற்றுமதி நோக்குடனும் பனங்கட்டி, பனைஞ்சீனி, பனந் தும்பு போன்ற பல்வேறு கைப்பணிப் பொருட்கள் எற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.\nபனம்பொருள்களின் உற்பத்தி குறித்து ஏற்பட்ட நிறுவன ரீதியான மற்றும் குறிப்பாக கூட்டுறவு,கூட்டுத்தாபனம் உற்பத்திகளின் வளர்ச்சியில் ஒரு மைல்கல் எனலாம். அப்படி இருந்தபோது நாடுதழுவிய ரீதியில் ஒரு உந்துதலை அரசாங்கமோ அல்லது பொதுமக்களோ ஏற்படுத்தவில்லை அல்லது பனம் பொருள் வளங்களை உச்சஅளவுக்குப்படுத்தவில்லை எனலாம்\nஇத்தகைய நிலைமையை உணர்ந்த தமிழீழ பொருண்மிய மேம்பட்டு கழகம்\nகழகம் தெங்கு , காய்வெட்டி பனம் பொருள் சீவும் முறை உற்பத்திகளை மேம்படுத்தும் முகமாக பிரத்தியேகமாக தெங்கு பனம் பொருள் அபிவிருத்தி ஒன்றியம் ஒன்றை நிறுவியது.\nஇவ் ஒன்றியம் வெகு சிறப்பாகச் செயற்பட்டு வருவதுகுறிப்படத்தக்கது போராட்டம் உக்கிரமடைந்திருக்கும் இக்காலகட்டத்தில் சிறிலங்கா அரசு தமிழீழத் த��் மது பொருளாதாரத தடைகளை விதித்துள்ளது . இதனால் தமிழீழத்தில் குறிப்பாக மீட்கப்பட்ட பிரதேசத்தில் பொருட்களுக்குத தட்டுப்பாடு நிலவுவது இயல்பானதே. குறிப்பாக கரும்புச்சீனிக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது.\nஅதனை பனை வெல்ல உற்பத்தி மூலம் பிரதியீடு செய்ய த.பொ.மே.க அயராது உழைத்து வருகிறது . இதன் விளைவாக உற்பதத்தியும் துரிதமாக அதிகரித்துள்ளமையை கிழ் வரும் அட்டவணை காட்டுகிறது .\nபனை வெல்ல உற்பத்தி தமிழீழம் 1990 – 93\nஆண்டு – உற்பத்தி (கிலோ)\nமூலம் : காப்பரண் – 1994\nமேற்காட்டிய அட்டவணையின் படி 1990 ம் ஆண்டு 3,565 கிலோவாகாக் காணப்பட்ட பனை வெலல உற்பத்தியானது 1991ம் ஆண்டு 99,386கிலோவாக (ஏறக் குறைய 30 மடங்காக) அதிகரித்துள்ளது.1992ம் ஆண்டு 100,847 கிலோவாக் காணப்பட்ட பனை வெலல உற்பத்தி ஓர் ஆண்டில் இரண்டு மடங்கிற்கு அதிகரிப்பைக் கொண்டு 20,106கிலோவாக உயர்ந்துள்ளது. இப்போராட்ட சூழ்நிலையில் விறகு மற்றும் எரிபொருள், மின்சாரம் என்பனவற்றின் விலை மிகவும் உயர்வாகவே உள்ளது. இதனால் பனை வெல்லத்தின் ஒரு கிலோவிற்கான உற்பத்திச் செலவு 100ரூபாவுக்கும் அதிகமாகவே காணப்படுகின்றது .\nஇருந்தபோதும் சுதேச உற்பத்தியைப் பாதுகாத்து ஊக்குவிக்கும் முகமாக உற்பத்தி செய்யப்படும்\nபனைவெல்ல அளவிற்கு ஏற்ப த.பொ .மே.க மானியம் வழங்கி உற்பத்தியாளர்களை பாதுகாத்து வருகின்றது. குறிப்பாக 1994ம் ஆண்டு த.பொ.மே.க உற்பத்தி செய்யப்பட்ட ஒவ்வொரு கிலோ அளவிறற்கும் 55ருபா வீதம் மொத்தம் 21,423,664ருபாவை மானியமாக வழங்கியபுள்ளமை குறிப்பிடத்தக்கது. இது போன்ற நிகழ்வுகள் சுதந்திரம்அடையவிருக்கும் நாட்டின் முன்னேற்ற நடவடிக்கைகள் என குறிப்பிடலாம்.\nமானியம் வழங்கியதன் மறு விளைவு நுகர்வோர் குறைந்த செலவில் பனை வெல்லத்தினை\nநுகர வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது உற்பத்திச் செலவு 100 ரூபாவுக்கு மோலாக இருந்தபோதும் சில்லறை விற்பனைவிலை 1994ம் ஆண்டு 50 ரூபாவாகவும் மொத்த விற்பனை விலை 47 ரூபாவாகவும் நிர்மாணிக்கப்பட்டு வசதி குறைந்த மக்களுக்கும் நுகரும் வகைபில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.\nமானியம் வழங்குதல் மட்டுமின்றி பனம்பொருள் உற்பத்தி சார்ந்த தொழில் பயிற்சி நவீன தொழில் நுட்பம் இயந்திர மயப்படுத்துதல்,சந்தைப் படுத்துதல், புதிய உற்பத்திகள் அறிமுகம், ஏற்றுமதி ஊக்குவிப்பு போன்ற ���ல்வேறு நடவடிக்கைகளும் மேற்கொள்ளளப்பட்டு வருகின்றன.\nதமிழீழத்திலுள்ள பெரும்பாலான பனை மரங்கள் முதிர்ச்சிக்காலங்களை நெருங்கி வருகின்றன. இவை மட்டுமின்றி நாளாந்தம் கணிசமான மரங்கள் தறிக்கப்பட்டு வருகின்றன.\nஇவை மட்டுமின்றி சிறீலங்கா அரசின்குண்டு வீச்சாலும் அழிக்கப்பட்டு வருகின்றன. இவைகளை 15 –20வருடங் ளின் பின்பாவது பிரதியீடு செய்யும் நோக்குடன்பனம் விதைகள் திட்டமிட்ட அடிப்படையில் நாட்டப்பட்டு வருகின்றன. 1991ம் ஆண்டு 100,000 பனம் விதைகளும் 1992ம்\nஆண்டு 157,000 பனம் விதைகளும்1993ம் ஆண்டு 346,000 பனம் விதைகளும் நாட்டப்பட்டன.\nஇதன் மூலம் சுற்றாடல் பாதுகாப்பு, மழை விழ்ச்சி ஏற்படவும் வாய்ப்பாக இருக்கும். மொத்தத்தில் தமிழீழபொருண்மிய மேம்பாட்டுக் கழகதத் தநினை இததகைய\nந டவடிக்கைகள் பனையைவளர்ப்போம் பயனைப் பெறுவோம் என்ற இலக்கிற்கு உதாரணமாகஉள்ளதாக தெரிகிறது\nவெளியீடு :தமிழீழ பொருண்மிய மேம்பாட்டுக்கழகம் (கார்த்திகை 1994)\nமீள் வெளியீடு :வேர்கள் இணையம்\nமுதல் இணைய தட்டச்சு உரிமை :வேர்கள் இணையம்\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\nஅலுமினிய பாத்திரங்கள் பாவனைக்கு நல்லதல்ல.\nநெடுஞ்சேரலாதன் - June 16, 2018 0\nஎமது நாட்டில் மண் சட்டிகளில் சமைப்பதை விடஅலுமினிய சட்டிகளில் சமைப்பது ஒரு நாகரீக வளர்ச்சியாக நம்பப்படுகிறது .அனால் இதில் ஏற்படக்கூடிய தீமைகள் என்ன அலுமினியம் கூடிய வெப்பத்தில் நீரில் கரைகிறது அல்லது அமில...\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள் நெடுஞ்சேரலாதன் - September 8, 2021 0\nதமிழீழத்தில் தலை சிறந்த பெண் போராளியான கப்டன் அக்கினோ... போராட்டம். .... இந்தச் சொல்லுக்குள் தான் எத்தனை விதமான உணர்ச்சி அலைகள் அடங்கி இருக்கின்றன.குடும்பம் என்ற சிறிய பரப்புக் குள் சில மனிதர்கள், சில உணர்வுகளென்று...\nலெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.\nமறவர்கள் வீரவணக்க நாள் நெடுஞ்சேரலாதன் - June 26, 2021 0\nலெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.1999 அன்று மன்னார் மாவட்டம் சன்னார் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட “ரணகோச” இராணுவ நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரின் போது...\nகடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார் உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nமறவர்கள் வீரவணக்க நாள் ��ெடுஞ்சேரலாதன் - June 26, 2021 0\nகடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார், கடற்கரும்புலி மேஜர் சூரன், கடற்கரும்புலி மேஜர் நல்லப்பன், கடற்கரும்புலி மேஜர் சந்தனா, கடற்கரும்புலி கப்டன் பாமினி , கடற்கரும்புலி கப்டன் இளமதி வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.2000 அன்று...\nநீரிற் கரைந்த நெருப்பு லெப்.கேணல் ராஜசிங்கம்/ ராஜன்.\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள் நெடுஞ்சேரலாதன் - June 26, 2021 0\nகண்டி வீதியை ஊடறுத்திருந்த எமது பாதுக்காப்பு வியூகத்தை உடைத்து, எதிரி உட்புகுந்துவிட்டான். எமது போர்ப்பலத்தைச் சிதறடித்தவாறு எல்லா முனைகளாலும் எதிரி தாக்கினான். எமக்கு எவ்வகையிலும் சாதகமற்ற ‘மரணக்களமாய்’ மாறியிருந்தது அன்றைய களம். அன்று சித்திரை...\nதமிழர்கள் தமது வரலாற்றினையும், சாதனைகளையும் பதிவு செய்து ஆவணப்படுத்தாமை எமக்குள்ள மிகப் பெரிய குறை பாடாகும் என தமிழீழக் கல்விக்கழகப்பொறுப்பாளர் வெ.இளங்குமரன் வல்வெட்டித்துறையில் நடைபெற்ற ஆழக்கடல் வென்றவர்கள் நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றும் போதுதெரிவித்தார் அதனடிப்படையில் வேர்கள் இணையமானது எமது தாயக விடுதலை போராட்டதின் விழுமியங்களை ஆவணப்படுத்தி உலகின் அனைத்து தேசங்களிலும் வாழும் எமது அன்புத்தமிழ் உறவுகளின் வாசல் நோக்கி விடுதலை தாகத்தை வீசுகிறோம்\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்77\nகாப்புரிமை ©தமிழீழஆவணக்காப்பகம் 2016- 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnarealestate.lk/properties/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2021-10-19T12:53:36Z", "digest": "sha1:JENSQ6E56HF6ZHIXILK25LAH3S3H4DD4", "length": 27327, "nlines": 725, "source_domain": "jaffnarealestate.lk", "title": "சுன்னாகம் கந்தரோடையில் முழுமையாக கட்டி முடிக்கப்படாத வீட்டுடன் இணைந்த காணி விற்பனைக்கு – Re/Max North Realty", "raw_content": "\n2 மாடி வீடு விற்பனைக்கு (3)\n2 வீடுகள் விற்பனைக்கு (1)\nஅரிசி ஆலை விற்பனைக்கு (1)\nஉல்லாச விருந்தினர் மாளிகை (1)\nகடையுடன் காணி விற்பனைக்கு (1)\nகாணியுடன் பகுதியளவு கட்டப்பட்ட வீடு விற்பனைக்கு (4)\nகாணியுடன் வீடு விற்பனைக்கு (33)\nகைதடியில் வீட்டுடன் கூடிய காணி விற்பனைக்கு (1)\nசிறிய வீட்டுடன் இணைந்த காணி விற்பனைக்கு. (1)\nநல்லூரில் Guest House விற்பனைக்கு (1)\nவணிக / குடியிருப்பு சொத்து விற்பனைக்கு (1)\nவிசாலமான நிலத்துடன் கூடிய கட்டிடத்தொகுதி விற���பனைக்கு (2)\nவிசாலமான நிலத்துடன் வீடு விற்பனைக்கு (1)\nவியாபாரக் கட்டிடம் குத்தகைக்கு (6)\nவியாபாரக் கட்டிடம் வாடகைக்கு (2)\nவியாபாரக் கட்டிடம் விற்பனைக்கு (16)\nவிவசாய நிலம் விற்பனைக்கு (3)\nகொழும்பு - 14 (1)\nகொழும்பு - 15 (1)\nகொழும்பு - 6 (1)\nபழைய பூங்கா வீதி (1)\nகொழும்பு - 14 (1)\nகொழும்பு - 15 (1)\nகொழும்பு - 6 (1)\n2 மாடி வீடு விற்பனைக்கு (3)\n2 வீடுகள் விற்பனைக்கு (1)\nஅரிசி ஆலை விற்பனைக்கு (1)\nஉல்லாச விருந்தினர் மாளிகை (1)\nகடையுடன் காணி விற்பனைக்கு (1)\nகாணியுடன் பகுதியளவு கட்டப்பட்ட வீடு விற்பனைக்கு (4)\nகாணியுடன் வீடு விற்பனைக்கு (33)\nகைதடியில் வீட்டுடன் கூடிய காணி விற்பனைக்கு (1)\nசிறிய வீட்டுடன் இணைந்த காணி விற்பனைக்கு. (1)\nநல்லூரில் Guest House விற்பனைக்கு (1)\nவணிக / குடியிருப்பு சொத்து விற்பனைக்கு (1)\nவிசாலமான நிலத்துடன் கூடிய கட்டிடத்தொகுதி விற்பனைக்கு (2)\nவிசாலமான நிலத்துடன் வீடு விற்பனைக்கு (1)\nவியாபாரக் கட்டிடம் குத்தகைக்கு (6)\nவியாபாரக் கட்டிடம் வாடகைக்கு (2)\nவியாபாரக் கட்டிடம் விற்பனைக்கு (16)\nவிவசாய நிலம் விற்பனைக்கு (3)\nகொழும்பு - 14 (1)\nகொழும்பு - 15 (1)\nகொழும்பு - 6 (1)\nபழைய பூங்கா வீதி (1)\nகொழும்பு - 14 (1)\nகொழும்பு - 15 (1)\nகொழும்பு - 6 (1)\nகாணியுடன் பகுதியளவு கட்டப்பட்ட வீடு விற்பனைக்கு\nசுன்னாகம் கந்தரோடையில் முழுமையாக கட்டி முடிக்கப்படாத வீட்டுடன் இணைந்த காணி விற்பனைக்கு\nசுன்னாகம் கந்தரோடையில் முழுமையாக கட்டி முடிக்கப்படாத வீட்டுடன் இணைந்த காணி விற்பனைக்கு\nகாணியுடன் பகுதியளவு கட்டப்பட்ட வீடு விற்பனைக்கு in விற்கப்பட்டு விட்டது\nசுன்னாகம் கந்தரோடையில் முழுமையாக கட்டி முடிக்கப்படாத வீட்டுடன் இணைந்த காணி விற்பனைக்கு\nநில அளவு; – 2 பரப்பு 8.93 குளி\n1 – சமையல் அறை\nநல்ல சூழலுடன் குடியிருப்புக்கு மிகவும் பொருத்தமானது.\nஅனைத்து ஆவணங்களும் தெளிவாக உள்ளன.\nஉதயா பேக் ஹவுஸ், கந்தரோடை – 67m\nகந்தரோடை விநாயகர் கோவில், வலிகாமம் தெற்கு, உடுவில் – 190m\nஇந்து கோவில் – 400m\nதுணை தபால் அலுவலகம், கந்தரோடை, யாழ்ப்பாணம் – 900m\nகந்தரோடை கல்லூரி, புத்தூர் – 950m\nகிருபா லேர்னர்ஸ், சுன்னாகம் – 1.2km\nவேளாங்கண்ணி மாதா ஆலயம், சண்டிலிப்பாய் – 2.6km\nகாவல் நிலையம் சுன்னாகம், புத்தூர், சுன்னாகம்- 2.8km\nஉடுவில் பெண்கள் கல்லூரி, உடுவில் – 3.2km\nஉடுவில் அம்மன் கோவில், உடுவில் – 3.5km\nபிரதேச செயலகம் வலிகாமம் தென்மேற்கு சண்டிலிபே, சாண்டிலிபே – 3.5 கி.மீ.\nசண்டிலிபே இந்து கல்லூரி, பி 398, சண்டிலிப்பாய் – 3.9km\nகார்கில்ஸ் பூட் சிட்டி மானிப்பாய், யாழ்ப்பாணம் – 4.6km\nகோரப்படும் விலை – LKR. .00 (விலை பேச்சுவார்த்தைக்குட்பட்டது).\nகோரப்படும் விலை: LKR 2,800,000.00\n(விலை பேச்சு வார்த்தைக்கு உட்பட்டது)\n83, கண்ணத்திட்டி வீதி, யாழ்ப்பாணம், இலங்கை\nபொலிகண்டியில் அழகிய வீடு விற்பனைக்க... LKR 24,000,000\nதெல்லிப்பளை,துர்க்காபுரம் கல்வளவு ஒ... LKR 5,000,000\nஉடுவில் அம்பலவாணர் வீதியில் 4 படுக்கையறையுடன் கூடிய வீடு விற்பனைக்கு உள்ளது.\nவீட்டுடன் கூடிய அழகிய வர்த்தக நடவடிக்கைக்கு மிகவும் பொருத்தமான காணி விற்பனைக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyaagarathi.com/manushi-chhillar-from-india-won-the-title-of-miss-world-mother-is-the-greatest-in-the-world/", "date_download": "2021-10-19T13:09:21Z", "digest": "sha1:GI7FMN2KQNAYVCKNEIZHTXEIUTWDVVD7", "length": 17417, "nlines": 130, "source_domain": "puthiyaagarathi.com", "title": "உலக அழகி பட்டம் வென்றார் இந்தியாவின் மானுஷி சில்லார்!; \"உலகத்தில் அதியுயர்ந்தது அம்மா ஸ்தானம்தான்\" - புதிய அகராதி", "raw_content": "Tuesday, October 19மெய்ப்பொருள் காண்பது அறிவு\nஉலக அழகி பட்டம் வென்றார் இந்தியாவின் மானுஷி சில்லார்; “உலகத்தில் அதியுயர்ந்தது அம்மா ஸ்தானம்தான்”\nஉலக அழகியாக இந்தியாவின் மானுஷி சில்லார் மகுடம் சூடினார். 17 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவிற்கு மீண்டும் உலகி அழகி பட்டம் கிடைத்திருக்கிறது.\nசீனாவின் பெய்ஜிங்கில் உள்ள சான்யா சிட்டியில் உலக அழகி பட்டத்திற்கான இறுதிக்கட்ட தேர்வு இன்று (நவம்பர் 18, 2017) நடந்தது. 188 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் இந்தப் போட்டியில் கலந்து கொண்டனர். இறுதிக்கட்டத்தில் 5 நாடுகளின் அழகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.\nஇந்தப் போட்டியில் அனைத்து சுற்றுகளிலும் முன்னிலை பெற்ற இந்தியாவின் மானுஷி சில்லார், உலக அழகி பட்டத்தை வென்றார். முன்னாள் உலக அழகியான போர்ட்டோ ரிகோ நாட்டைச் சேர்ந்த ஸ்டெஃபானி டெல் வாலி, அவருக்கு உலக அழகிக்கான கிரீடத்தைச் சூட்டினார்.\nதற்போது 20 வயதான மானுஷி சில்லார், ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர். தாய், நீலம் சில்லார். மருத்துவர். தனியார் மருத்துவக்கல்லூரியில் உதவி பேராசிரியர். தந்தை, மித்ர பாசு சில்லார். டிஆர்டிஓ-ல் விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறார்.\n5.9 அடி உயரமுள்ள மானுஷி சில்லாரும், தாயைப் போலவே மருத்துவர்தான். செயின்ட் தாமஸ் மருத்துவக்கல்லூரியில் எம்பிபிஎஸ் முடித்துள்ளார்.\nகல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போதே விளம்பர மாடல் ஆகவும் பணியாற்றி வந்தார். ஏற்கனவே ஃபெமினா மிஸ் இந்தியா பட்டத்தையும் வென்றுள்ளார். அந்தப் போட்டியில் வெற்ற பெற்ற நம்பிக்கையில்தான் உலக அழகிப் போட்டியிலும் கலந்து கொண்டார்.\nமுன்னெப்போதையும் விட இந்த முறை 188 நாடுகள் இந்தப் போட்டியில் கலந்து கொண்டாலும், தன்னம்பிக்கையுடன் பங்கேற்று, உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.\nஏற்கனவே உலக அழகி பட்டத்தை இந்தியாவைச் சேர்ந்த 5 பேர் வென்றிருக்கிறார்கள். முதன்முதலில் ரீட்டா ஃபரியா (1966) உலக அழகி பட்டம் வென்றார். அதன்பிறகு இந்த பட்டத்தை வெல்ல 28 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியதாகி விட்டது.\nநம் எல்லோருக்கும் ரொம்பவே பரிச்சயமான அய்ஸ்வர்யா ராய் 1994ம் ஆண்டு உலக அழகியாக மகுடம் சூடினார். உலக அழகி பட்டம் வெல்லக்கூடியவர்கள் அதே வேகத்தில் சினிமா துறைக்குள் நுழைந்து விடுவார்கள்.\nஅந்த எதிர்பார்ப்பை அய்ஸ்வர்யா ராயும் பூர்த்தி செய்தார். இன்று வரை அவர் சினிமா துறையில் தனக்கென ஓர் இடத்தை தக்க வைத்துக்கொண்டுள்ளார்.\nஅய்ஸ்வர்யா ராய்க்குப் பிறகு, உலக அழகிப் போட்டி என்றாலே இந்தியா மீது ஓர் எதிர்பார்ப்பு நிலவும். 1997ம் ஆண்டில் நட ந்த போட்டியில் இந்தியாவின் டயானா ஹைடன் உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nஅதன்பின் 1999ம் ஆண்டில் யுக்தா முகி, உலக அழகி பட்டத்தை வென்றார். இவரும் பாலிவுட், கோலிவுட் சினிமாக்களில் நடித்தார். ஆனாலும் பெரிய அளவில் சோபிக்கவில்லை.\nயாரும் எதிர்பாராத வேளையில் அதற்கு அடுத்த ஆண்டும் (2000) இந்தியாவிற்கே உலக அழகி பட்டம் கிடைத்தது. பிரியங்கா சோப்ரா உலக அழகி மகுடம் சூடினார். இப்போது பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக பிரியங்கா சோப்ரா வலம் வருகிறார்.\nஇதையடுத்து பிரியங்கா சோப்ராவிற்குப் பிறகு 17 ஆண்டுகள் கழித்து, இப்போது மானுஷி சில்லார் உலக அழகியாக வெற்றி பெற்றுள்ளார். இந்தப் பட்டத்தை வெல்லும் 6வது இந்திய அழகி, மானுஷி சில்லார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉலக அழகி போட்டிகளில் கலந்து கொள்வோரிடம் வெறும் உடல் அழகை மட்டுமே வைத்து முடிவுகளை அறிவிப்பதில்லை. கடைசி சுற்றில் அவர்களின் அறிவுத்திறனும் சோதிக்கப்படும்.\nகடைசி சுற்றில் ஐந்து நாடுகளின் ���ழகிகளும் களத்தில் இருந்தனர். அப்போது மானுஷி சில்லாரிடம் போட்டி நடுவர்கள் ஒரு கேள்வி எழுப்பினர். ”உலகத்திலேயே அதிக ஊதியம் பெறக்கூடிய வேலை எது ஏன்” என்ற கேள்வி கேட்கப்பட்டது.\nஉடனடியாக மானுஷியிடம் இருந்து பதில் வந்தது. அப்போது அவர், ”உலகத்திலேயே உயர்வான வேலை எது என்றால், அம்மாவாக இருப்பதுதான். தாயாக இருப்பதுதான் அதியுயர்ந்த பதவி. தாய்க்குத்தான் அதிக ஊதியம் கொடுக்க வேண்டும். ஆனால் பணமாக அல்ல. அன்பும் மரியாதையுமாக வழங்க வேண்டும். அப்படித்தான் வழங்கிக் கொண்டிருக்கிறோம். எனக்கு என் அம்மாதான் எப்போதும் உத்வேகம் அளிக்கக் கூடியவர்,” என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.\nபெற்றோர், உறவினர்களுடன் மானுஷி சில்லார்.\nஇந்த பதிலால் மானுஷி சில்லார், ஒட்டுமொத்த விழா அரங்கத்தையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தி விட்டார். அதன்பிறகே, அவர் உலக அழகி பட்டத்தை வென்றார்.\nமானுஷி சில்லார் விளம்பர மாடல், மருத்துவர், உலக அழகி மட்டுமல்ல. சமூக சேவையிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். பெண்களின் மாதவிலக்கு பிரச்னை குறித்து ஏற்கனவே கிராமம் கிராமமாகச் சென்று விழிப்புணர்வு பிரச்சாரம் செய்திருக்கிறார்.\nமாதவிலக்கு காலங்களில் உடல்நலத்தை பேணுவது குறித்து பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் சேவையை தொடர்ந்து மேற்கொள்ள இருப்பதாகவும் அவர் கூறினார். இதற்காக ‘புராஜக்ட் சக்தி’ என்ற திட்டத்தையும் அவர் செயல்படுத்தி வருகிறார். மானுஷி, இரக்கமுள்ள மனுஷியும் கூட என்பதை அவருடைய வார்த்தைகள் உணர்த்தியது.\nPosted in இந்தியா, உலகம், முக்கிய செய்திகள்\nPrevதீரன் அதிகாரம் ஒன்று – சினிமா விமர்சனம்\nNextபோர் விமானம் கொள்முதலில் 35 ஆயிரம் கோடி ஊழல்; மோடி மீது அடுத்த அட்டாக்\nபுற்றுநோயை குணமாக்கும் ஷிமோகா வைத்தியர்; நல்லதை நாலு பேருக்கு சொல்லலாமே\nஆளுங்கட்சியிடம் தஞ்சம் புகுந்த ஊழல் மாஜி துணைவேந்தர் தோண்டி துருவும் லஞ்ச ஒழிப்புத்துறை\nசேலம் மாநகராட்சியில் குப்பை வண்டிகள் வாங்கியதிலும் கொள்ளை\nதேவதாசி முறை ஒழிப்பு போராளி முத்துலட்சுமி ரெட்டி\nசட்டம் அறிவோம்: குழந்தையை தத்து எடுப்பது எப்படி\nஉடுமலை சங்கர் ஆணவக்கொலை வழக்கில் பரபரப்பு தீர்ப்பு; கவுசல்யாவின் தந்தை உள்பட 6 பேருக்கு இரட்டை தூக்கு\n கம்பனே குழம்பிய தருணம் எது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyaagarathi.com/t-20-cricket-indian-heads-rolled-aussie-won-the-match/", "date_download": "2021-10-19T12:20:51Z", "digest": "sha1:CS5QZVXGXSFLNVHQJZALAZVV4KSCLKCK", "length": 11241, "nlines": 106, "source_domain": "puthiyaagarathi.com", "title": "டி-20 கிரிக்கெட்: இந்திய தலைகள் உருண்டன; ஆஸி. அசத்தல் வெற்றி - புதிய அகராதி", "raw_content": "Tuesday, October 19மெய்ப்பொருள் காண்பது அறிவு\nடி-20 கிரிக்கெட்: இந்திய தலைகள் உருண்டன; ஆஸி. அசத்தல் வெற்றி\nகவுகாத்தியில் நடந்த ஆஸி. அணிக்கு எதிரான இரண்டாவது டுவென்டி-20 கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் முன்னணி வீரர்கள் கைகொடுக்காததால், 8 விக்கெட்டில் ஆஸி அணியிடம் தோல்வியைத் தழுவியது.\nஇந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, ஒருநாள் தொடரை 4-1 என இழந்தது. இந்நிலையில் இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட டி-20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்கிறது.\nமுதல் டி-20 போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றியை பதிவு செய்தது. இரு அணிகள் மோதும் இரண்டாவது டி-20 போட்டி கவுஹாத்தியில் இன்று (அக். 10) நடந்தது. இதில் ‘டாஸ்’ வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் வார்னர், முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.\nஇதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு ரோஹித் ஷர்மா (8), ஷிகர் தவான் (2), விராட் கோலி (0), மனீஷ் பாண்டே (6) என ‘டாப்-ஆர்டர்’ பேட்ஸ்மேன்களை, ஆஸி பந்து வீச்சாளர் பெஹர்டெண்டிராப் பெவிலியனுக்கு அனுப்பினார். அடுத்து வந்த கேதர் ஜாதவ் (27), தோனி (13), பாண்டியா (25) நீண்டநேரம் தாக்கு பிடிக்கவில்லை. இதையடுத்து இந்திய அணி, 20 ஓவர்களில் 118 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.\nஎட்டக்கூடிய இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணிக்கு துவக்க வீரர்களான வார்னர் (2), பின்ச் (8) ஏமாற்றம் அளித்தனர். பின் வந்த ஹென்ரிக்ஸ், டிராவிஸ் ஹெட் ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்திய பந்து வீச்சாளர்களை மிக எளிதாக சமாளித்த இந்த ஜோடி, அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றது. இதையடுத்து ஆஸ்திரேலிய அணி 15.3 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 122 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.\nஇந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரை 1-1 என ஆஸ்திரேலிய அணி சமன் செய்தது. முதன்முறையாக இந்திய சுழல் பந்து வீச்சாளர்கள் ஒரு விக்கெட் கூட வீழ்த்தாத போட்டியாகவும் இந்த போட்டி அமைந்தது.\nஇந்த தோல்வியின் மூலம் சுமார் 70 ஆண்டுகளுக்கு பின் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 4 தொடர்களை தொடர்ச்ச��யாக கைப்பற்றும் வாய்ப்பை இந்திய அணி தவறவிட்டது. எனினும், அடுத்த போட்டியில் இந்திய அணி வெல்லும் பட்சத்தில் இந்த சாதனையை இந்திய அணி வசமாக்கலாம்.\nஇந்தப் போட்டியில் விளாசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி கேப்டன் விராட் கோஹ்லி, ‘டக்’ ஆகி ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்தார். முதல் ‘டக்’ அவுட்டை ஆஸி பந்து வீச்சாளர் பெஹர்டெண்டிராப் வீழ்த்தியதால், அவரும் கிரிக்கெட் வரலாற்றில் இடம் பிடித்துவிட்டார். இதுவரை 52 சர்வதேச டி-20 போட்டியில் ஆடியுள்ள கோஹ்லி, முதன்முறையாக ‘டக்’ அவுட் ஆகியுள்ளார். சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் கோஹ்லியின் சராசரி 54.57 ஆகும்.\nPosted in இந்தியா, உலகம், முக்கிய செய்திகள், விளையாட்டு\nPrev”பிரபாகரன் உடலைப் பார்த்து வேதனை அடைந்தேன்” – சொல்கிறார் ராகுல்காந்தி\nNext‘குடிமகன்’களுக்கு ஓர் அதிர்ச்சி தகவல்\nபுற்றுநோயை குணமாக்கும் ஷிமோகா வைத்தியர்; நல்லதை நாலு பேருக்கு சொல்லலாமே\nஆளுங்கட்சியிடம் தஞ்சம் புகுந்த ஊழல் மாஜி துணைவேந்தர் தோண்டி துருவும் லஞ்ச ஒழிப்புத்துறை\nசேலம் மாநகராட்சியில் குப்பை வண்டிகள் வாங்கியதிலும் கொள்ளை\nதேவதாசி முறை ஒழிப்பு போராளி முத்துலட்சுமி ரெட்டி\nசட்டம் அறிவோம்: குழந்தையை தத்து எடுப்பது எப்படி\nசட்டம் அறிவோம்: பூர்வீக சொத்தில் பெண்ணுக்கு உரிமை உண்டா\nஉடுமலை சங்கர் ஆணவக்கொலை வழக்கில் பரபரப்பு தீர்ப்பு; கவுசல்யாவின் தந்தை உள்பட 6 பேருக்கு இரட்டை தூக்கு\nமக்களுக்காக ஜமீன் சொத்துகளை வாரி வழங்கிய 'வாழும் அதிசயம்' காளியண்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2021/09/blog-post_26.html", "date_download": "2021-10-19T11:43:04Z", "digest": "sha1:ERXYFLAE3UMU76VBUVUBTSKO66PBG2VS", "length": 20074, "nlines": 259, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: இலங்கையில் ஆட்சி மாற்றம் நடக்குமா?", "raw_content": "\nஇலங்கையில் ஆட்சி மாற்றம் நடக்குமா\nஇலங்கையில் ஆட்சி மாற்றம் ஒன்று நடைபெற வாய்ப்புள்ளதாக அல்லது நடைபெற வேண்டும் என்ற கருத்துப்பட சில தரப்புகள் கூறி வருகின்றன.\nஇந்தமுறை வழமைபோல வெளிநாட்டு ஊடகங்களோ அல்லது ஐக்கிய தேசியக் கட்சியோ இதைக் கூறவில்லை. ஜே.வி.பி அல்லது தமிழ் தேசியக் கூட்டமைப்போ கூட உள்ளுர விரும்பினாலும் அவ்வாறு கூறுவதைக் காணோம். இந்தக் கருத்தைத் தொடர்ந்து கூறி வருபவர்கள் ஐ.தே.கவிலிருந்து பிரிந்���ு ஐக்கிய மக்கள் சக்தி என்ற பெயரில் தனிக்கட்சியை உருவாக்கி நாட்டின் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் சஜித் பிரேமதாச குழுவினரே இந்தக் கருத்தைக் கூறி வருகின்றனர்.\nஅவர்களது இந்தக் கருத்துக்கு சில பௌத்த குருமார்கள் ஆதரவளிப்பதுடன், ஊடகங்களும் குறிப்பாகத் தமிழ் ஊடகங்களும் முக்கியத்துவம் அளித்து வருகின்றன.\nஆனால் என்ன வகையில் ஆட்சி மாற்றம் நிகழும் என சஜித் குழுவினர் கூறவில்லை.\nஆட்சி மாற்றம் நிகழ்வதானால் சில வழிமுறைகளில்தான் நிகழ முடியும்.\nஅதாவது, ஜனாதிபதியினதும் நாடாளுமன்றத்தினதும் பதவிக்காலம் முடிவடைந்து தேர்தல் நடந்தால் ஆட்சி மாற்றம் நிகழலாம்.\nஅல்லது ஜனாதிபதி மீதும் அரசாங்கத்தின் மீதும் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வந்து அது வெற்றி பெற்றாலும் ஆட்சி மாற்றம் நிகழலாம்.\nஅல்லது 1953இல் அன்றைய ஐ.தே.க. அரசுக்கு எதிராக இடதுசாரிக் கட்சிகள் மக்களை அணிதிரட்டி ஒரு மாபெரும் ஹர்த்தால் போராட்டம் நடத்தி அரசாங்கத்தைச் செயலிழக்க வைத்தது போல ஒரு முயற்சியை மேற்கொண்டாலும் ஆட்சி மாற்றம் நிகழலாம்.\nஅல்லது 1971 மற்று 1988 – 89 காலப்பகுதியில் ஜே.வி.பி. இயக்கம் மேற்கொண்டது போன்ற ஆயுதக் கிளர்ச்சி ஒன்றை நடத்தியும் ஆட்சி மாற்றம் ஒன்றை நிகழ்த்தலாம்.\nஅல்லது இராணுவத்தினர் ஒரு சதி நடவடிக்கையை நிகழ்த்தியும் ஆட்சி மாற்றம் ஒன்றைச் செய்யலாம்.\nஆனால் தற்போதைய நிலைமையில் இலங்கையில் இப்படியான நடவடிக்கைகள் எதற்குமே வாய்ப்பிருப்பதாகத் தெரியவில்லை. எனவே எதிர்க்கட்சியினர் வெறுமனே ஆகாயத்தில் கோட்டை கட்டி மகிழ்கின்றனர் என்பது நிரூபணமாகிறது.\nஎதிர்க்கட்சியினர் இப்படியெல்லாம் பேசுவதற்கு அவர்கள் அரசாங்கத்தின் மீது வைக்கும் குற்றச்சாட்டுகள் என்ன\nஇரண்டாவது, அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடு.\nமூன்றாவது, கொவிட் நோயைக் கையாள்வதில் அரசாங்கத்தின் திறமையீனம்.\nநான்காவது, அரசாங்கம் இராணுவமயமாகி வருவதாகவும், மக்கள் மீது அடக்குமுறையை ஏவி விடுவதாகவும் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு. இப்படி இன்னும் பல.\nகொவிட் தொற்றுக் காரணமாக நாட்டின் அன்றாட இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளதால் நாட்டில் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டு, அரசாங்கம் சுமூகமாகச் செயற்பட முடியாத ஒரு நிலை தோன்றியுள்ளது என்பது உண்மையே. இந்த நிலைம��� இன்றைய அரசாங்கத்தால் தோற்றுவிக்கப்பட்ட ஒன்றல்ல. சுதந்திரத்துக்குப் பின்னர் மாறிமாறி நாட்டை ஆட்சி செய்த இரண்டு முதலாளித்துவக் கட்சிகளினதும் தூரநோக்கற்றதும், நாட்டு நலன் கருதாததுமான ஆட்சிகளின் தொடர்ச்சியே இந்த நிலைமைக்குப் பிரதான காரணம். கொவிட் அதன் பாரதூரத்தன்மையை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது.\nஎனவே, இன்று ஆட்சியில் இருக்கும் சிறீலங்கா பொதுஜன பெரமுன மட்டுமின்றி வேறெந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் இந்த நிலைமையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை. சில வேளைகளில் அத்தகைய கட்சிகளின் ஆட்சியில் இப்போதிருப்பதை விட நிலைமை இன்னும் மோசமாகவும் இருக்கலாம்.\nஉண்மையில் நாட்டின் இத்தகைய நிலைமைகளுக்கு அடிப்படைக் காரணம் நடைமுறையில் இருக்கும் ஏற்றத்தாழ்வான முதலாளித்துவ ஆட்சி முறையே. நாட்டை ஆட்சி செய்த இரண்டு பிரதான கட்சிகளும் அந்த அமைப்பு முறையை மாற்றுவதற்கு எந்த முயற்சியும் செய்யவில்லை. அவர்கள் செய்யவும் மாட்டார்கள். ஏனெனில் அவர்கள் பிரித்தானிய ஏகாதிபத்தியம் கையளித்துச் சென்ற முதலாளித்துவ பாராளுமன்ற முறையையே தொடர்ந்து பேணிப் பாதுகாத்து வருகின்றனர். அதை அவர்கள் ஒருபோதும் மாற்றத் துணியமாட்டார்கள் என்பதோடு, விரும்பவும் மாட்டார்கள்.\nநாட்டின் பெரும்பான்மையான உழைக்கும் மக்கள் தமக்குள் ஐக்கியப்பட்டு, ஒரு சரியான தலைமையை கட்டியெழுப்பி, பரந்துபட்ட வெகுஜனப் போராட்டங்களை முன்னெடுப்பதன் மூலமே நாட்டில் ஒரு அடிப்படையான அரசியல் மாற்றத்தையும் சமூக மாற்றத்தையும் கொண்டுவர முடியும். இதைத்தவிர, இலங்கையின் இன்றைய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு வேறு ஏதும் குறுக்கு வழிகள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.\nஎஸ்.எம்.எம்.பஷீர் “ எப்பொழுதும் உனது எதிரிகளை மன்னித்துவிடு , அதை விட அவர்களை அதிகம் தொந்தரவு செய்வது வேறொன்றுமில்லை ” ( ஒ...\nஎஸ்.எம்.எம்.பஷீர் “ ஒரு தவறு பல்கிப் பெருகுவதால் உண்மையாகி விடமுடியாது: யாரும் கண்டுகொள்ள முடியவில்லை எனபதற்காக ஒரு உண்மை ...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nதடுப்பூசி ஏற்றிக்��ொள்வதே ஒரே வழி\nஆப்கானின் தற்போதைய நிலைக்கு அமெரிக்காவே பொறுப்பு\nஇந்தியாவில் இஸ்லாமியராக இருப்பது ஒரு குற்றமா\nகெய்ல் ஓம்வெத்: அடையாளங்களைக் கடந்த தோழர்\nஉலகின் போக்கை மாற்றிய அமெரிக்க இரட்டை கோபுரத் தாக்...\n-– எம்.என்.ராய் எழுதிய ‘பாசிச...\nபாரதியாரின் கடைசி நாட்கள் எப்படியிருந்தன\nசத்யஜித் ரே எனும் கம்யூனிஸ்ட்\nஇலங்கையில் அவசரகாலச் சட்டம் ஏன் கொண்டு வரப்பட்டது\nஇந்திய மத்திய அரசுக்கு மண்டியிடாத தமிழக முதல்வரின்...\nஇலங்கை முஸ்லிம் சமூகம் எதிர்கொண்டிருக்கும் நெருக்க...\n‘ஐக்கிய நாடுகள் சபையின் உயர்ந்தபட்ச ஒத்துழைப்பை இல...\nஐக்கிய நாடுகள் சபையின் 76ஆவது பொதுச்சபை கூட்டத்தொட...\nஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்த தமிழ் கைதி, ஏனைய கைதி...\nசீன எழுத்தாளர் லூ சுன் அவர்களின் 140வது பிறந்ததினம்\nஇலங்கையில் ஆட்சி மாற்றம் நடக்குமா\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tnppgta.com/2020/09/flash-news_28.html", "date_download": "2021-10-19T13:06:38Z", "digest": "sha1:K4H3OFANJHI4H5NYT66FMNOUQKS6JFPG", "length": 3747, "nlines": 111, "source_domain": "www.tnppgta.com", "title": "Flash News - பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான ரேங்க் பட்டியல் வெளியீடு.", "raw_content": "\nHomeGENERAL Flash News - பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான ரேங்க் பட்டியல் வெளியீடு.\nFlash News - பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான ரேங்க் பட்டியல் வெளியீடு.\n1 லட்சத்து 8 ஆயிரம் பேர் தகுதி பெற்றுள்ளனர்.\nபொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான ரேங்க் பட்டியலை உயர் கல்வித்துறை அமைச்சர் வெளியிட்டார்.\nபிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் பட்டியல் வெளியீடு.\n199.67 கட்-ஆப் மதிப்பெண் பெற்று சஷ்மிதா என்ற மாணவி முதலிடம் பெற்றுள்ளார்.\nதரவரிசை பட்டியல் வெளியானபின் அதனை கீழ் வழங்கியுள்ள இணைய முகவரி மோளம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.CLICK KNOW THE RANK LIST BELOW LINK\nஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தங்களது...மாத ஊதியத்தை (pay slip) Mobile மூலம் பதிவிறக்கம் செய்வது எப்படி \nFLASH NEWS-பாலிடெக்னிக் TRB தேர்வுக்கான அட்டவணை வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.tamilfox.com/2021/10/14/%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-10-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3/", "date_download": "2021-10-19T13:04:11Z", "digest": "sha1:FAAR6W4COYVISEWVWKOCV2EY6USLFZLI", "length": 4802, "nlines": 69, "source_domain": "www.tamilfox.com", "title": "இங்கிலாந்து பயணிகள் 10 நாள் தனிமைப்படுத்துதல் கட்டுப்பாட்டை தளர்த்தியது மத்திய அரசு!\tOct 14, 2021 – Tamil Fox – Tamil News – Tamil Video News – Android Tamil news", "raw_content": "\nஇங்கிலாந்து பயணிகள் 10 நாள் தனிமைப்படுத்துதல் கட்டுப்பாட்டை தளர்த்தியது மத்திய அரசு\nஇங்கிலாந்தில் இருந்து வரும் பயணிகளுக்கான பயணக் கட்டுப்பாட்டு விதிகளை மத்திய அரசு தளர்த்தியுள்ளது. கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு 10 நாட்கள் தனிமைப்படுத்தல் இல்லை என இங்கிலாந்து அரசு அண்மையில் அறிவித்தது.\nஇந்நிலையில், அந்நாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை மத்திய அரசு தளர்த்தியுள்ளது. இதன்படி இந்தியாவிற்கு வரும் இங்கிலாந்து பயணிகளுக்கான 10 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தல் உத்தரவை இந்திய அரசு திரும்ப பெற்றுள்ளது.\nமீண்டும் தள்ளிப்போகும் ‘தள்ளிபோகாதே’ ரிலீஸ்….\nஜப்பானில் தற்கொலை செய்து கொள்ளும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு\tOct 14, 2021\nஓடும் ரயிலில் இருந்து தவறிவிழுந்த கர்ப்பிணி.. ஒரு நொடியில் காப்பாற்றிய ரயில்வே காவலர் \nடீன் ஏஜ் பெண்களிடம் அதிகரிக்கும் நடுக்கங்கள், பதற்றங்கள்… டிக்டாக் ஏற்படுத்தும் விளைவு \nதடுப்பூசியால் பெண்களுக்கு உடல் எடை அதிகரிக்குமா..\nடீன் ஏஜ் பெண்களிடம் அதிகரிக்கும் நடுக்கங்கள், பதற்றங்கள்… டிக்டாக் ஏற்படுத்தும் விளைவு \nஅத்துமீறும் சுற்றுலாப் பயணிகள்; ஆக்ரோஷத்தில் காட்டு யானைகள்; விழிக்குமா முதுமலை நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfox.com/2021/10/14/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BE-3/", "date_download": "2021-10-19T11:41:41Z", "digest": "sha1:GLVQ53MI2JCRKEP5RYYSAVW6NPB65S5K", "length": 4207, "nlines": 67, "source_domain": "www.tamilfox.com", "title": "குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவின் சூரசம்ஹாரம் நிகழ்ச்சிக்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிப்பு – Tamil Fox – Tamil News – Tamil Video News – Android Tamil news", "raw_content": "\nகுலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவின் சூரசம்ஹாரம் நிகழ்ச்சிக்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிப்பு\nதூத்துக்குடி: குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவின் சூரசம்ஹாரம் நிகழ்ச்சிக்கு பக்தர்களுக்கு அனுமதி ���ல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நிகழ்ச்சிக்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\nகோவாவில் தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியமைக்க விரும்புகிறோம்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேட்டி\nமகாராஷ்டிரா, கர்நாடகா, டெல்லி மாநில கொரோனா அப்டேட்ஸ்\nமுதலீட்டாளர்களுக்கு செம சான்ஸ்.. HUL ரூ.2,187 கோடி லாபம்.. டிவிடெண்ட் ரூ15..\nநாடெங்கிலும் புனித மீலாதுந்நபி நிகழ்வுகள்\nMcDonalds-ல் நடக்கிறதா உளவு பார்க்கும் பணி\n3,500 ரூபாயில் ஜியோ ஸ்மார்ட் போன்: அடுத்த மாதம் அறிமுகம்..\n70 வயது மூதாட்டிக்கு ஆண் குழந்தை பிறந்தது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://muthusidharal.blogspot.com/2012/08/blog-post_26.html", "date_download": "2021-10-19T11:27:06Z", "digest": "sha1:ELLTZEKLBEHU4LOP3KKZ2XXFNCIHZARH", "length": 27022, "nlines": 380, "source_domain": "muthusidharal.blogspot.com", "title": "முத்துச்சிதறல்: முத்துக்குவியல்கள்", "raw_content": "\nகலைகளும் சிந்தனையுமாய் சிதறுகின்ற முத்துக்கள் இங்கே\nமுத்துக்குவியல்களிலிருந்து இரண்டு அதிசய முத்துக்களும் ஒரு மருத்துவ முத்தும் ஒரு ரசித்த முத்தும் ஒரு குறிப்பு முத்தும் இன்றைக்கு சிதறுகின்றன:\nகொலம்பியா நாட்டில் இந்த அதிசயம் நடக்கிறது. நீலம் மற்றும் தங்க நிறமான பெண் கிளியுடன் குரங்கிற்கு நெருக்கமாக சினேகம் ஏற்பட்டு விட, தினமும் அந்தக் கிளி தன் முதுகில் குரங்கை ஏற்றிக்கொண்டு நகரை வலம் வருகிறது. கொலம்பியா நாட்டின் அகஸ்டன் நகரில் இந்த காட்சியை நாம் காணலாம். இதில் ஆச்சரியம் என்னவென்றால் இந்தக் குரங்கு ஒரு போதும் தவறிக்கீழே விழுந்ததில்லை\n12 வயது சிறுவனுக்கு ரூ 82000 சம்பளம்\nமலேஷிய தலைநகர் கோலாலம்பூரைச் சேர்ந்தவன் ஆதி புத்ர அப்துல் கனி. இவன் 3ஆம் வகுப்பு வரை தான் படித்தவன். அதற்கு மேல் படிப்பு ஏறவில்லை. ஆனாலும் இயற்பியல், வேதியல், கணிதம், பொறியியல், உயிரியல் போன்றவற்றில் அபிரிதமான அறிவைப்பெற்றிருக்கிறான். அவனுடைய தாயாரின் மருந்துக்கம்பெனி இப்போது அவனது கட்டுப்பாட்டில் இருக்கிறது. இவனது அபார ஞானத்தைப்பற்றி அறிந்த மலேஷிய கல்லூரிகள் இவனை பகுதி நேர விரிவுரையாளராக அழைக்கின்றன. இவனும் அதை ஏற்றி விரிவுரையாளராக பணி புரிகின்றான். தன் ஒரு மணி நேர விரிவுரைக்கு 82000 ரூ ஊதியம் பெறுகின்றான்\nஇளநீரில் பனங்கல்கண்டு சேர்த்து அருந்தலாம்.\nஎலுமிச்சை சாற்றில் தேன் கலந்து அருந்தலாம்.\nநெல்லிக்காய் சாற்றில் தேன் கலந்து அருந்தலாம்.\nதேனில் ஊறிய பேரீச்சம்பழம் பித்தம் தெளிய வைக்கும்.\nமோரில் இஞ்சி சாறு விட்டு அருந்தலாம்.\nஉணர்ச்சி அரியணையில் அமர்ந்திருக்கும்போது அறிவு வெளியே போய் விடும்.\nஅவற்றை நியூஸ் பேப்பரில் சுற்றி, ஒரு பிளாஸ்டிக் கவரில் வைத்து குளிர்சாதனப்பெட்டியில் வைத்தால் ஒரு வாரத்திற்கு நன்றாக இருக்கும்.\nஇடுகையிட்டது மனோ சாமிநாதன் நேரம் 23:38\nஅழகான பெண்ணை கிளி போல வளர்த்து விட்டு, எவனோ ஒருவனுக்குக் அவசரமாகக் கட்டிக் கொடுத்து விட்டு, அந்தக்காலத்தில் பிறகு புலம்புவார்கள் பெண்ணின் பெற்றொர்கள்.\n”கிளியை வளர்த்து குரங்கு கையில் [அல்லது பூனைகையில்] கொடுத்து விட்டேனே” என்று.\nஇங்கு கிளியின் முதுகினில் ஏறி சவாரி செய்கிறதே குரங்கு.\nஎப்படியோ அன்பாக ஒற்றுமையாக இருந்தால் சரிதான்.\nஆதி புத்ர அப்துல் கனிக்கு வாழ்த்துகள்.\n”படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு” என்பதற்கு உதாரணம் இவர்.\nமருத்துவ முத்து தேனாக இனிக்கிறது.\nஉணர்ச்சிக்கும் அறிவுக்கும் ஒத்து வராது. உணர்ச்சிவசப்படும் போது அறிவு மழுங்கிவிடும் என்பது உண்மை தான்.\nவாழையிலைகளை வாடாமல் வாழ வைக்க நல்ல ஐடியா சொல்லியுள்ளீர்கள்.\n[இருப்பினும் பொறுமையாக மடித்து சுருட்டி அழகாகக் கட்டி கிழியாமல் வைக்க ஓர் ஆள் போட வேண்டியிருக்கும்.]\nபகிர்ந்து கொண்ட முத்துக்கள் அத்தனையும் அருமை.\nசிறு வயதிலேயே எத்தனை திறமை அச்சிறுவனுக்கு. நிச்சயம் பெரிய ஆளாக வருவார்.....\nமுதல் இரண்டு முத்துகளும் பிரமிக்க வைக்கின்றன. குறிப்புகள் உபயோகம்.\nகுரங்கின் எடை அதிகமாச்சே... கிளியின் மீது சுதந்திர உலாவலா ஆச்சர்யமாக தான் இருக்கிறது. அதுவும் சண்டை போட்டுக்காம சமர்த்தா ரெண்டும் இத்தனை சினேகமா இருப்பது ரொம்ப ரொம்ப பாராட்டக்கூடிய விஷயம்... மனிதர்களுக்குள் தான் சண்டை, பொறாமை, ஈகோ இதெல்லாம்.. விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் இந்த பிரச்சனையே இல்லை...\nஆதிபுத்ர அப்துல்கனி குழந்தை இத்துணூண்டு வயசுல இத்தனை பெரிய சாதனையா இறைவனோட அருள் அந்த குழந்தைக்கு பிரம்மாண்டமா இருக்கு.... சாதனைகள் தொடரட்டும்... அன்பு வாழ்த்துகள்....\nமருத்துவ முத்த�� மிக அருமை... எல்லோருக்குமே பயன் தரக்கூடியது மனோ அம்மா...\nஅன்பு நன்றிகள் அம்மா முத்துக்குவியல்களின் அற்புத தொகுப்புக்கு....\nதொகுத்த முத்துக்கள் அருமை மனோஅக்கா.பயனுள்ள பகிர்வு.\nமுத்துக்கள் அனைத்தும் மிக அழகு,ரசித்தேன்..\nபகிர்ந்து கொண்டதற்கு வாழ்த்துக்கள்... நன்றி...\nமிகவும் ரசித்து விரிவான பின்னூட்டங்கள் எழுதியதற்கு மனமார்ந்த நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்\nஇனிய கருத்துரைக்கும் அன்பான பாராட்டிற்கும் உளமார்ந்த நன்றி சகோதரர் வெங்கட் நாகராஜ்\nகருத்துரைக்கு அன்பு நன்றி ஸ்ரீராம்\nபாராட்டுக்கும் கருத்துரைக்கும் அன்பு ந்ன்றி சகோதரர் ஜனா\nஅன்பார்ந்த க‌ருத்துரைக்கு இனிய நன்றி வரலாற்றுச்சுவடுகள்\nநீண்ட நாட்களுக்குப்பிறகு மஞ்சுபாஷிணியை இங்கே பார்ப்பது மகிழ்ச்சியைத் தருகிறது விரிவான கருத்துரைக்கும் பாராட்டுக்கும் இதயங்கனிந்த நன்றி மஞ்சு\nகருத்துரைக்கும் பாராட்டுக்கும் அன்பு நன்றி மேனகா\nபாராட்டிற்கும் க‌ருத்துரைக்கும் இனிய நன்றி ஆசியா\nவருகைக்கும் கருத்துரைக்கும் அன்பார்ந்த ந‌ன்றி ச்கோதரர் தனபாலன்\nஇனிய கருத்துரைக்கு அன்பு நன்றி சீனி\nகுரங்கு,கிளி ஒற்றுமை அதிசயமானது...12 வயது சிறுவனுக்கு இத்தனை திறமையா... அபாரம்...மிக மிக பயனுள்ள வாழை இலை குறிப்பு. பகிர்வுக்கு நன்றி மேடம்..\nமனோ மேடம் நலம் தானே இன்னைக்கு காலையில் தான் என் மனைவியிடம் சொன்னேன். நான் உனக்கு ஒரு நல்ல நண்பன் என்று. இங்க வந்து பார்த்தா கிளி குரங்கு மேட்டர். என்னை வச்சு காமெடி ஏதும் பண்ணல்லியே\nமனோ மேடம் நலம் தானே இன்னைக்கு காலையில் தான் என் மனைவியிடம் சொன்னேன். நான் உனக்கு ஒரு நல்ல நண்பன் என்று. இங்க வந்து பார்த்தா கிளி குரங்கு மேட்டர். என்னை வச்சு காமெடி ஏதும் பண்ணல்லியே இன்னைக்கு காலையில் தான் என் மனைவியிடம் சொன்னேன். நான் உனக்கு ஒரு நல்ல நண்பன் என்று. இங்க வந்து பார்த்தா கிளி குரங்கு மேட்டர். என்னை வச்சு காமெடி ஏதும் பண்ணல்லியே\n:) ரசித்தேன் மோகன்ஜி சிரிப்பு வந்துவிட்டது...\n// மனோ சாமிநாதன் said...\nநீண்ட நாட்களுக்குப்பிறகு மஞ்சுபாஷிணியை இங்கே பார்ப்பது மகிழ்ச்சியைத் தருகிறது விரிவான கருத்துரைக்கும் பாராட்டுக்கும் இதயங்கனிந்த நன்றி மஞ்சு விரிவான கருத்துரைக்கும் பாராட்டுக்கும் இதயங்கனிந்த நன்றி மஞ்சு\nஎனக்கும் மனோம���மா... ரொம்ப சந்தோஷம் உங்கள் எல்லோரையும் மீண்டும் பார்த்ததில்...\nஅவ்ளோ பெரியதா அந்த கிளி \nஏட்டு படிப்பு அவசியாமா என்ற கேள்வி எழுகிறது\nஆச்சரியம் என்னவென்றால் இந்தக் குரங்கு ஒரு போதும் தவறிக்கீழே விழுந்ததில்லை\n இரண்டாவது முத்து சின்னஞ்சிறு வயதில் என்னே ஒரு அறிவு .ரசித்த முத்து மற்றும் மருத்துவ முத்து அனைத்தும் அருமை அக்கா\nமிக சிறப்பான பதிவு. பாராட்டுகள் சகோதரி.\nபல நேரம் அலுப்பில் இருந்து விடும் என் போன்றவர்களுக்கு உற்சாக டானிக் நீங்கள்.....\nஅது சரி, எனக்கு ஒரு மருத்துவக் குறிப்பு கொடுங்களேன்... ஓயாமல் படுத்தும் வாய்ப்புண்ணில் இருந்து விடுதலைப் பெறுவது எப்படி தாங்க முடியலை மேடம். பேசாமல் செய்ய முடியாத வேலையில் இருந்து கொண்டு, வாய்ப்புண்ணால் நான் படும் அவஸ்தையை போக்க ஒரு வழி சொல்லுங்க மேம்..\nஅழ‌கிய‌ முத்து மாலையாய் தொகுத்த‌ செய்திக‌ள் ப‌ல‌வும் ஆச்ச‌ர்ய‌மூட்டும்ப‌டி உங்க‌ள் முத்துச் ச‌ர‌த்திலிருந்து அவ்வ‌ப்போது உற‌வுக்கும் ந‌ட்புக்கும் ப‌கிரும்ப‌டியாய் ப‌ல‌ முத்துக்க‌ள்\nவிரிவான பின்னூட்டத்திற்கு அன்பு நன்றி ராதாராணி\nநீண்ட நாட்களுக்குப் பின்னான வருகைக்கும் நகைச்சுவை கலந்த பின்னூட்டத்திற்கும் அன்பு நன்றி\nமறுபடியும் நீண்ட பின்னான வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்வான நன்றி எல்.கே\nஅன்பான கருத்துரைக்கு இனிய நன்றி ஏஞ்சலின்\nஇனிய கருத்துரைக்கு உளமார்ந்த நன்றி வேதா\nபாராட்டுக்கும் உற்சாகமான கருத்துரைக்கும் அன்பு நன்றி நிலா\nகுறிஞ்சி மலர் போன்ற வருகைக்கும் பாராட்டுக்கும் அன்பு நன்றி கிருஷ்ணப்ப்ரியா\nபுழுங்கல் அரிசி- 1 கப், பாசிப்பருப்பு[ மணம் வரும் வரை வறுத்தது]- அரை கப், பொன்னிறமாக வறுத்த வெந்தயம்- 2 மேசைக்கரண்டி, உரித்த சிறிய பூண்டு ஒரு கை இவற்றை உப்புடன் குழைய வேகவைத்து, சூடாக இருக்கும்போதே ஒரு தேங்காயைப் பாலெடுத்து சாதத்துடன் கலந்து சாப்பிடவும். இப்படி அடிக்கடி செய்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் வராததோடு, வயிற்றுச் சூடும் சரியாகும். மணத்தக்காளி ரசமும் நல்ல பலன் தரும்.\nஇன்று தான் படிக்கிறேன்... அடுத்த வாய்ப்புண் வருமுன் இதை செய்து அவதியிலிருந்து விடுபட முயல்கிறேன் மேம். ரொம்ப நன்றி...\nவருகையாளருக்கு நல்வரவேற்பும் அன்பு வந்தனங்களும்\nவருகையாளருக்கு இதோ கூடை நிற���ய வாசமிகு மலர்கள்\nமேனகா, ஜலீலாவிற்கு அன்பு நன்றி\nசினேகிதி வேதா, சகோதரர் கோபாலகிருஷ்ணனுக்கு அன்பு நன்றி\nசகோதரி ஆசியாவிற்கு அன்பு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://onetune.in/life-history/vaali", "date_download": "2021-10-19T12:27:29Z", "digest": "sha1:3BKEYEUNU2PT4U67R3WESPWHFMLEHEO5", "length": 27332, "nlines": 194, "source_domain": "onetune.in", "title": "வாலி - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nரேவந்தா – சூரியனின் இளைய மகன்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\nLife History • திரைப்பட பிரமுகர்\nகவிஞர் வாலி அவர்கள், தமிழ்நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற ஒரு ‘கவிஞர்’, ‘பாடலாசிரியர்’ மற்றும் ‘சிறந்த ஓவியரும்’ ஆவார்.\nகருத்தாழமிக்க எளியத் தமிழ் சொற்களைப் பாடல்களில் அமைத்து, எல்லோருக்கும் எளிதாகப் புரியும் வகையில் தன் மனதில் பட்டதைக், கவிதை நயத்துடன் வெளிப்படுத்தும் அற்புதக் கவிஞர். தத்துவப் பாடல்களாக இருந்தாலும் சரி, விழிப்புணர்ச்சிப் பாடல்களாக இருந்தாலும் சரி, கவித்துவமானப் பாடல்களாக இருந்தாலும் சரி, காட்சிக்கேற்ப பாடல் வரிகளை எழுதி, தமிழ் திரையுலகில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர். எதுகை மோனையுடன் பாடல் வரிகளை எழுதுவதில் இவரை வெல்ல எவரும் இல்லையென்றே கூறலாம். சுமார் பதினைந்தாயிரத்திற்கும் மேற்பட்டத் திரைப்படப்பாடல்களை எழுதியுள்ள இவர், ‘பொய்கால் குதிரை’, ‘சத்யா’, ‘பார்த்தாலே பரவசம்’, ‘ஹே ராம்’ போன்ற திரைப்படங்களில் நடித்தும் உள்ளார். இவர் எழுதிய ‘பாண்டவர் பூமி’, ‘கிருஷ்ணா விஜயம்’ போன்ற கவிதைத்தொகுப்புகள் புகழ்பெற்ற படைப்புகளாகப் போற்றப்படுகின்றன. ஸ்ரீரங்கத்தில் பிறந்து, எழுத்துலகில் தனக்கென்று தனி முத்திரையைப் பதித்த கவிஞர் வாலியின் வாழ்க்கை வரலாறு மற்றும் கவிதைப் படைப்புகளை விரிவாகக் காண்போம்.\nபிறப்பு: அக்டோபர் 29, 1931\nஇடம்: ஸ்ரீரங்கம், தமிழ்நாடு மாநிலம், இந்தியா\nபணி: கவிஞர், பாடலாசிரியர், எழுத்தாளர் மற்றும் நடிகர்\nஇறப்பு: ஜூலை 18, 2013\n‘டி. எஸ் ரங்கராஜன்’ என்ற இயற்பெயர் கொண்ட கவிஞர் வாலி அவர்கள், 1931 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 29 ஆம் நாள், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் திருச்சி மாவட்டதிலுள்ள “ஸ்ரீரங்கம்” என்ற இடத்தில் ‘ஸ்ரீனிவாசன் ஐயங்காருக்கும்’, ‘பொன்னம்மாள்’ என்பவருக்கும் மகனாகப் பிறந்தார். இவர்களுடைய சொந்த ஊர் திருச்சிக்கு அருகிலுள்ள திருப்பராய்த்துறை ஆகும்.\nஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி\nசிறுவயதிலேயே ஒரு சிறந்த ஓவியனாகவும், கவிஞனாகவும் தன்னை வெளிப்படுத்திய வாலி அவர்கள், வெற்றிகரமாகத் தன்னுடைய பள்ளிப்படிப்பை முடித்த பின்னர், சென்னை ஓவியக்கல்லூரியில் சேர்ந்து, ஓராண்டு ஓவியக்கலை பயின்றார். அதன் பிறகு, தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து “நேதாஜி” என்னும் கையெழுத்து பத்திரிக்கையை தொடங்கினார். அதன் முதல் பிரதியை வெளியிட்டவர் புகழ்பெற்ற எழுத்தாளர் ‘கல்கி’ ஆவார். பின்னர், திருச்சி வானொலிக்கு ‘கதைகள்’, ‘நாடகங்கள்’ எழுதிக்கொடுக்கும் வாய்ப்பும் அவருக்கு கிடைத்தது.\nஸ்ரீரங்கத்தில் ‘பத்திரிக்கை பணி’, ‘கவிதைகள் எழுதுவது’, ‘ஓவியங்கள் வரைவது’, ‘வானொலிக்கு கதைகள் மற்றும் நாடகங்கள் எழுதுவது’ என நகர்ந்து கொண்டிருந்தது கவிஞர் வாலி அவர்களின் ஆரம்ப வாழ்க்கை. அதன் பிறகு, தமிழ் சினிமா உலகில் புகழ்பெற்று விளங்கிய ‘டி. எம். சௌந்தரராஜன்’ அவர்களால், சினிமாவிற்கு பாட்டெழுத சென்னைக்கு அழைத்துவரப்பட்டார். 1958 ஆம் ஆண்டு “அழகர் மலைக் கள்ளன்” என்ற திரைப்படத்தில் தன்னுடைய முதல் பாடலை எழுதினார். இத்திரைபடத்தில் வாலியின் முதல் பாடலை ‘பி. சுசிலா’ அவர்கள் பாடியிருப்பார். பின்னர், தொடர்ந்து ‘சந்திரகாந்த்’, ‘இதயத்தில் நீ’, ‘நல்லவன் வாழ்வான்’, ‘எதையும் தாங்கும் இதயம்’ போன்றத் திரைப்படங்களில் பாடல்களை எழுதியிருந்தாலும், 1963 ஆம் ஆண்டு “கற்பகம்” என்ற திரைப்படத்தில் அவர் எழுதிய பாடல்கள் அவருக்கு திருப்பு முனையை ஏற்படுத்தியது. அத்திரைப்படத்தில் ஒலித்த ‘மன்னவனே அழலாமா கண்ணீரை விடலாமா’, ‘ஆயிரம் இரவுகள் வருவதுண்டு’, ‘அத்தை மடி மெத்தையடி’ போன்ற பாடல்கள் தமிழ் சினிமா ரசிகர்கள் இடையே கைத்தட்டல்களைப் பெற்றுத்தந்தது.\nஅதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் பலவிதமான பாடல்களை எழுதிய வாலி அவர்கள், தான் குடித்த காவிரி ஆற்றுத் தண்ணீரின் ஒவ்வொரு துளியையும் கவிதை வடிவில் பாடல்களாக வெளிபடுத்தினார். பக்தி, நட்பு, காதல், தத்துவம், என அனைத்து விதப் பரிமாணங்களிலும் பாடல்களை எழுதி எல்லா தலைமுறையினருக்கும் ஏற்ற பாடலாசிரியராக புகழ்பெற்றார். கடமை பற்றி இவர் எழுதிய ‘மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்’, ‘நான் ஆணையிட்டால்’ போன்ற பா��ல்களும், ‘கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்’, ‘ஓராறு முகமும் ஈராறு கரமும்’, ‘ராம நாமம் ஒரு வேதமேம்’ போன்ற பக்திப் பாடல்களும், நட்பைப் பற்றி வெளிபடுத்தும் ‘முஸ்தபா முஸ்தபா’, ‘காட்டுக்குயிலு மனசுக்குள்ளே’ போன்ற பாடல்களும், ‘அம்மா என்றழைக்காத உயிரில்லையா’, ‘தாயில்லாமல் நானில்லை’, ‘அம்மா அம்மா எந்தன் ஆருயிரே’, ‘நானாக நானில்லை தாயே’, ‘சின்னத்தாயவள் தந்த ராசாவே’, ‘ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம்’, ‘காலையில் தினமும் கண்விழித்தால்’ என அம்மாவைப் பற்றி இவர் எழுதிய அனைத்து பாடல்களும் கேட்பவர் மனதில் ஒரு வித உன்னதமான உணர்வை ஏற்படுத்தும் அற்புதப் பாடல்களாக அமைந்தன. சொற்கோர்வை, சந்தம், கருத்து, என அனைத்துமே அவரின் கற்பனையில் சொற்களாய் கவிதை வடிவில் உதிர்ந்தன. எத்தனை எத்தனை பாடல்கள், அதில் எத்தனை எத்தனை ராகங்கள் என இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். இதுமட்டுமல்ல ‘காதல் வெப்சைட் ஒன்று’, ‘வைகாசி நிலவே’, ‘பூங்கொடி தான் பூத்ததம்மா’, ‘மலையோரம் வீசும் காற்று’, ‘சுந்தரி கண்ணால் ஒரு சேதி’, ‘நிலாவே வா செல்லாதே வா’, ‘முன்பே வா என் அன்பே வா’, ‘என்ன விலை அழகே’ போன்ற பாடல்களில் தொடங்கி ‘சின்ன ராசாவே சித்தெறும்பு என்ன கடிக்குது’ போன்ற வித்தியாசமான பாடல்களையும் எழுதி, இன்றைய சமூகத்தினருக்கும் ஏற்ற பாடலாசிரியராக முத்திரைப் பதித்தார். இன்னும் சொல்லப்போனால் அன்று ‘எம்.ஜி.ஆர் – சிவாஜிக்கு’ எழுதினார், பிறகு ‘கமல் – ரஜினிக்கு’ எழுதினார், அதன்பிறகு ‘விஜய் – அஜித்துக்கு’ எழுதினார் இன்று ‘தனுஷ் – சிம்பு’ என நான்கு தலைமுறையையும் கடந்து பாடல்களை எழுதி உண்மை நாயகனாக விளங்குகிறார்.\nகவிஞர் வாலி எழுதிய சில பாடல்கள்\n‘தரைமேல் பிறக்க வைத்தார்’, ‘ஆண்டவனே உன் பாதங்களில்’, ‘தொட்டால் பூ மலரும்’, ‘மல்லிகை என் மன்னன் மயங்கும்’, ‘கொடுத்ததெல்லாம் கொடுத்தார்’, ‘கண்போன போக்கிலே கால் போகலாமா’, ‘எனக்கொரு மகன் பிறப்பான்’, ‘காத்திருந்த கண்களே’, ‘மாலையில் சந்தித்தேன்’, ‘நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்’, ‘ஆடலுடன் பாடலைக் கேட்டு’, ‘குங்குமப் பொட்டின் மங்களம்’, ‘துள்ளுவதோ இளமை’, ‘சிரித்து வாழவேண்டும்’ என இதுபோல் இன்னும் எத்தனையோ பாடல்கள் என சொல்லிக்கொண்டே போகலாம்.\nகண்ணதாசன் இறந்தபொழுது வாலி எழுதிய கண��ணீர் துளிகள்\n“எழுதப் படிக்கத் தெரியாத எத்தனையோ பேர்களில் எமனும் ஒருவன்.\nஒரு அழகியகவிதைப் புத்தகத்தைக் கிழித்துப் போட்டுவிட்டான்.”\nகவிஞர் வாலி எழுதிய ஒரு சில திரைப்படங்கள்\n‘சந்தரகாந்த்’, ‘இதயத்தில் நீ’, ‘எதையும் தாங்கும் இதயம்’, ‘படகோட்டி’, ‘எங்க வீட்டு பிள்ளை’, ‘அன்பே வா’, ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘மோட்டார் சுந்தரம்’, ‘காவல்காரன்’, ‘ஒலி விளக்கு’, ‘குடியிருந்த கோயில்’, ‘அடிமைப்பெண்’, ‘இருகோடுகள்’, ‘எங்கள் தங்கம்’, ‘குமரிக்கோட்டம்’, ‘நீரும் நெருப்பும்’, ‘உலகம் சுற்றும் வாலிபன்’, ‘பாரத விலாஸ்’, ‘நேற்று இன்று நாளை’, ‘நினைத்ததை முடிப்பவன்’, ‘அன்னை ஒரு ஆலயம்’, ‘அன்புக்கு நான் அடிமை’, ‘மூன்று முகம்’, ‘தூறல் நின்னுப் போச்சு’, ‘வாழ்வே மாயம்’, ‘எங்கேயோ கேட்டக் குரல்’, ‘அடுத்த வாரிசு’, ‘தங்க மகன்’, ‘பாயும் புலி’, ‘தாய் வீடு’, ‘விதி’, ‘அன்புள்ள ரஜினிகாந்த்’, ‘நல்லவனுக்கு நல்லவன்’, ‘மங்கம்மா சபதம்’, ‘படிக்காதவன்’, ‘நான் சிவப்பு மனிதன்’, ‘மௌன ராகம்’, ‘ஊர்காவலன்’, ‘குரு சிஷ்யன்’, ‘தர்மத்தின் தலைவன்’, ‘ராஜநடை’, ‘வருஷம் 16’, ‘சிவா, நடிகன்’, ‘அஞ்சலி’, ‘கிழக்கு வாசல்’, ‘இதயம்’, ‘சின்னத் தம்பி’, ‘நாடோடி பாட்டுக்காரன்’, ‘தேவர் மகன்’, ‘உழைப்பாளி’, ‘எஜமான்’, ‘காதலன்’, ‘ராஜாவின் பார்வையிலே’, ‘இந்தியன்’, ‘காதலர் தினம்’, ‘ஹே ராம்’, ‘பிரியமானவளே’, ‘மின்னலே’, ‘மௌனம் பேசியதே’, ‘கஜினி’, ‘சந்திரமுகி’, ‘வல்லவன்’, ‘சிவாஜி’, ‘சென்னை 600028’, ‘தசாவதாரம்’, ‘நாடோடிகள்’, ‘நான் கடவுள்’, ‘ஆதவன்’, ‘கோவா’, ‘அயன்’, ‘மங்காத்தா’, ‘எதிர்நீச்சல்’ போன்ற எண்ணற்ற திரைப்படங்களுக்குப் பாடல் எழுதியுள்ளார்.\n‘அவதாரப் புருஷன்’, ‘அம்மா’, ‘பொய்க்கால் குதிரைகள்’, ‘ராமானுஜ காவியம்’, ‘நிஜ கோவிந்தம்’, ‘கலைஞர் காவியம்’, ‘பாண்டவர் பூமி’, ‘கிருஷ்ண விஜயம்’, ‘நானும் இந்த நூற்றாண்டும்’ என பதினைந்து புத்தகங்களுக்கு மேல் எழுதியுள்ளார். மேலும் ‘கலியுகக் கண்ணன்’, ‘காரோட்டிக் கண்ணன்’, ‘ஒரு செடியில் இரு மலர்கள்’ என சுமார் பதினைந்து திரைப்படங்களுக்கு மேல் திரைக்கதை-வசனம் எழுதியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல், ‘பொய்கால் குதிரை’, ‘சத்யா’, ‘பார்த்தாலே பரவசம்’, ‘ஹே ராம்’ என நான்கு திரைப்படங்களில் நடித்துள்ளார்.\n2007 – இந்திய அரசால் “பத்ம ஸ்ரீ” விருது.\n1973 – ‘பாரத வில���ஸ்’ திரைப்படத்தில் “இந்திய நாடு என் நாடு” என்ற பாடலுக்காக “தேசிய விருதை” வென்றுள்ளார்.\n1970- ல் ‘எங்கள் தங்கம்’, 1979-ல் ‘இவர்கள் வித்தியாசமானவர்கள்’, 1989-ல் ‘வருஷம் பதினாறு’ மற்றும் ‘அபூர்வ சகோதரர்கள்’, 1990-ல் ‘கேளடி கண்மணி’, 2008-ல் ‘தசாவதாரம்’ போன்றத் திரைப்படத்திற்காக சிறந்த பாடலாசிரியருக்கான “தமிழ்நாடு அரசு மாநில விருது” வழங்கப்பட்டது.\nதிரைப்படங்களுக்கு பாடல் எழுத வயது ஒரு தடை இல்லை என்பதை நிருபித்து, எழுத்துலகில் ‘மார்கண்டேயக் கவிஞர்’ என அனைவராலும் புகழப்படும் கவிஞர் வாலி அவர்கள், தன்னுடைய பாடல் வரிகளால் கவிஞர்களை மட்டுமல்லாமல், பாமர மக்களையும் தலையசைக்க வைத்திருக்கிறார் என்றே சொல்லவேண்டும். இன்னும் சொல்லப்போனால், இன்றைய திரைப்படப் பாடலாசிரியர்கள் இவர் நடையைப் பின்பற்றியே பாட்டெழுதி கொண்டிருக்கின்றனர். ‘கவிப்பேரரசு கண்ணதாசனுக்கு’ பிறகு திரையுலகம் பரிணாம வளர்ச்சியைப் பெற்றது இவரின் காலங்களில்தான் என்பதை யாராலும் மறுக்கவோ, மறைக்கவோ இயலாது.\nLife History • இசைக்கலைஞர்கள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\nLife History • இசைக்கலைஞர்கள்\nLife History • இசைக்கலைஞர்கள்\nரேவந்தா – சூரியனின் இளைய மகன்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2460772", "date_download": "2021-10-19T12:39:45Z", "digest": "sha1:5RO7PQDU65AIVEKWO6IQIASRODGMBRNH", "length": 3815, "nlines": 46, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"இறால் வளர்ப்பு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"இறால் வளர்ப்பு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n07:33, 22 திசம்பர் 2017 இல் நிலவும் திருத்தம்\n86 பைட்டுகள் நீக்கப்பட்டது , 3 ஆண்டுகளுக்கு முன்\n→‎இறால் வளர்ப்புக்கு உகந்த நீர் அளவுருக்கள்(water parameters) :-\n07:32, 22 திசம்பர் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nIrusamal Martin (பேச்சு | பங்களிப்புகள்)\n(→‎இறால் வளர்ப்புக்கு உகந்த நீர் அளவுருக்கள்(water parameters) :-)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n07:33, 22 திசம்பர் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nIrusamal Martin (பேச்சு | பங்களிப்புகள்)\n(→‎இறால் வளர்ப்புக்கு உகந்த நீர் அளவுருக்கள்(water parameters) :-)\nஅடையாளங்கள்: கைப்பேசியி���் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n==இறால் வளர்ப்புக்கு உகந்த நீர் அளவுருக்கள்(water parameters) :- ==\nநீர் அளவுருக்கள் உகந்த அளவு\nவெப்ப அளவு 26-32 (°C)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-10-19T12:01:00Z", "digest": "sha1:HHRYRGZ7K5IWM7UZLXR6USGMIQ6DQJ4Y", "length": 18592, "nlines": 97, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பழனி முருகன் கோவில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபழனி முருகன் கோவில் (அ) பழநி முருகன் கோவில் (Arulmigu Dhandayuthapani Swami Temple) முருகனது சிறப்புடைய கோவில்களில் ஒன்றாகும். இது தமிழ்நாட்டில், மதுரையில் இருந்து 115 கிமீ மேற்கே உள்ள பழனியில் அமைந்துள்ளது. இங்குள்ள முருகனது சிலை போகர் எனும் சித்தரால் உருவாக்கப்பட்டது. முருகனது கோவில் குன்றின் உச்சியில் அமைந்துள்ளது.\nபழனி பால தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில்\n2 முருகன் சிலையின் சிறப்பு\nஒருநாள் நாரதர் மிக அரிதாக கிடைக்கும் ஞானப்பழத்தை பரமசிவனுக்கு படைப்பதற்காக கொண்டு வந்தார். அப்பொழுது அருகிலிருந்த உமையாள் அந்தப் பழத்தை தனது குமாரர்களான குமரனுக்கும், விநாயகனுக்கும் பகிர்ந்து கொடுக்க விரும்பினாள். ஆனால் பரமசிவனோ பழத்தை பகிர்ந்தால் அதன் தனித்தன்மை போய்விடும் எனக்கூறி தனது மைந்தர்கள் இருவருக்கும் ஒரு போட்டியை அறிவித்தார் அதில் உலகத்தை யார் முதலில் சுற்றிவருகிறார்களோ அவர்களுக்கு அந்த ஞானப்பழத்தை பரிசாக அறிவித்தார். குமரனோ தனது மயில் வாகனத்தில் ஏறி உலகத்தை சுற்றி வந்தார். விநாயகனோ தனது பெற்றோரை உலகமாக கருதி அவர்களை சுற்றிவந்து ஞானப்பழத்தை வென்றார். இதனால் ஏமாற்றமடைந்த குமரன் அனைத்தையும் துறந்து பழனி மலையில் குடியேறினார். அன்றிலிருந்து அவரது நின்ற இடம் \"பழம் நீ \" (பழனி) என அழைக்கப்படுகிறது.\nபழனிமலை அங்கே வருவதற்கு உதவியவர் இடும்பன். அவர் பெரிய தராசின் முலம் பழனிமலையும் இடும்பமலையையும் தூக்கிக்கொண்டு வந்து வைத்தார் என்று புராணங்கள் கூறுகின்றன.\nபுராணங்களில் இப்படியான பெயர்க்காரணங்கள் வழங்கப்பட்டாலும் பழனம் என்ற பழந்தமிழ்ச் சொல்லில் அடிப்படையில் உருவான பெயரே பழனி. பழனம் என்ற சொ��் விளைச்சலைத் தருகின்ற நிலத்தைக் குறிக்கும். அப்படிப்பட்ட நல்ல விளைச்சல் நிலம் நிறைந்த பகுதி என்பதால் பழனி என்ற பெயர் உருவானது.\nஇக்கோவிலுக்கு வி.வி.சி.ஆர். முருகேச முதலியார் என்பவர் தேவஸ்த்கான கல்லூரிக்கு இலவச இடம், தங்கத் தேர், வைரவேல், தங்க மயில் வாகனம், விஞ்ச் மின் இழுவை வாகனம் ஆகியவற்றை நன்கொடையாக செய்து கொடுத்தார்.[1][2][3]\nமுருகனின் சிலை நவபாஷாணத்தால், சித்தர்களில் ஒருவரான போகரால் வடிவமைக்கப்பட்டது. நவபாஷாணம் எனப்படுவது ஒன்பது வகையான நச்சுப்பொருட்கள் சேர்ந்தது. இந்த நவபாஷாண சிலை மீன்களை போன்று செதில்களை கொண்டதாக கூறப்படுகிறது. தற்பொழுது இந்த சிலை சிறிது பழுதுபட்டுள்ளது. இரவில் இந்த சிலையின் மீது முழுவதுமாக சந்தனம் பூசப்பட்டு (சந்தனக்காப்பு) காலையில் விசுவரூப தரிசனம் செய்யும் அனைத்து பக்தர்களுக்கும் சிறு வில்லை பிரசாதமாக வழங்கப்படுகிறது இது மிகச்சிறந்த மருந்தாக கருதப்படுகிறது.\nபோகர் தமிழ் நாட்டிலுள்ள பிரபலமான சித்தராவார். இவர் நவபாஷாண முருகன் சிலையை செய்ததே மிகசுவையான தகவலாகும். அகத்தியர் தன்னை நாடி வருவோர்க்கு பஸ்பம்,வில்லை போன்று மருந்துகள் அளித்து நோயை குணப்படுத்தி வந்தார். போகரோ நவபாஷாணம் கொண்டு செய்த வில்லைகளை தன்னை நாடி வருவோர்க்கு அளித்துவந்தார்.\nஅகத்தியரின் மருந்துகளால் சீக்கிரமாக மக்கள் குணமடைந்து வந்தனர். ஆனால் போகரின் மருந்துகளுக்கு வீரியம் அதிகமானதால் மக்கள் உயிரிழந்தனர். இது கண்ட போகர் நவபாஷணத்தால் ஒரு சிலை செய்து அதன் மீது சந்தனத்தை பூசி அதிலிருந்து ஒரு குண்டுமணி அளவுக்கு வில்லையாக தன்னை நாடி வருபவர்களுக்கு அளித்து நோயை குணப்படுத்தி வந்தார் என்பது பழனியில் வழங்கி வரும் ஒரு செவிவழி செய்தியாகும்.klkl\nகேரள மாநிலம் எழபெத்தவீடு என்ற ஊரைச் சேர்ந்த பக்தர் ஒருவர் சுமார் 450 ஆண்டுகளுக்கு முன்பு காவடியை சுமந்து வந்தார்.மரம் மற்றும் அலுமினியக் கலவையால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த காவடியின் ஒரு பக்கத்தில் வள்ளி, தெய்வானை சமேத முருகரும், மற்றொரு பக்கத்தில் சித்தி, புத்தி சமேத விநாயகரும் பொறிக்கப்பட்டுள்ளனர். மலை உச்சியில் போகர் சமாதி பகுதியில் இந்த முதல் காவடியை தற்போது வரை பத்திரமாக பாதுகாத்து வருகின்றனர்.[4]\nபழனி திருவிழாக்களுக்கு பெயர்பெற்ற ஊர���கும். இங்கு நடக்கும் குறிப்பிடத்தக்க திருவிழாக்கள்,\nபஞ்சாமிர்தம் - மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு பிரசாதம்.\nகுழந்தை வேலாயுதசாமி திருக்கோயில் (பழனி மலைக்கு கீழ்(அடிவாரத்தில்) உள்ளது)\nஉச்சியை அடைவதற்கு இரண்டு வழிகள் உள்ளது 1.யாணை பாதை ஏறுவதற்கு இதை பயன்படுத்தினால் எளிதாக இருக்கும் 2.நோ் பாதை இதை இறங்குவதற்கு பயன்படுத்தலாம்\nபழனி மலையின் அடிவாரத்தில் அமைந்த குழந்தை வேலாயுத சுவாமி கோயில் அறுபடை வீடுகளில் ஒன்று, இதுவே திருவாவினன்குடி மூன்றாம் படைவீடு ஆகும். பலரால் மலை மீதுள்ள தண்டாயுதபாணி சுவாமி கோயிலே அறுபடை வீடுகளில் ஒன்று என்று தவறாக எண்ணப்படுகிறது. சங்க இலக்கியத்தில் பத்துப்பாட்டின் முதல் நூலான திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் குறிப்பிடுவது ஆவினன்குடியே ஆகும். “தா இல் கொள்கை மடந்தையொடு சில் நாள் ஆவினன்குடி அசைதலும் உரியன்” என்று திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் குறிப்பிடுகிறார். முருகன் ஆண்டிக்கோலத்தில் இருப்பதாக நக்கீரர் சொல்லவில்லை. வருத்தமே இல்லாத வள்ளியோடு சில நாட்கள் முருகன் தங்கியிருந்து இயங்கிய ஆவினன்குடி என்பது அதன் பொருள். ஆகையால் நக்கீரர் குறிப்பிடும் கோயிலும் இன்று கொண்டாடப்படும் பழனிமலைக் கோயிலும் வேறு வேறு. நக்கீரருக்குப் பிறகு வந்த போகர் உருவாக்கியதுதான் பழனியாண்டவர் மலைக்கோயில்.\nவையாவி கோப்பெரும் பேகன் என்று அழைக்கப்படும் கடையெழு வள்ளல்களில் ஒருவரான மயிலுக்குப் போர்வை தந்த பேகன் பிறந்த குடிக்குப் பெயர் ஆவியர்குடி. அந்தக் குடி அமர்ந்து அரசு புரிந்த இடம் தான் ஆவினன்குடி.\nபழனி மலையின் அடிவாரத்திலிருந்து மலைஉச்சி பகுதியிலுள்ள முருகன்கோவிலுக்கு செல்ல மூன்று இழுவைத் தொடருந்து ஒரு கம்பிவட இழுவை ஊர்திகள் அமைக்கப்பட்டுள்ளது.\nஇழுவை ஊர்திக்காக நிலையத்தில் காத்திருக்கும் பயணிகள்\nபழனி மலையின் அடிவாரத்திலிருந்து மலைஉச்சி பகுதியிலுள்ள முருகன்கோவிலுக்கு செல்ல கம்பிவட ஊர்திகள் அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பக்தர்களின் கூட்டம் அதிகரிப்பதால் மீண்டும் ஒரு கன்பிவட ஊர்தி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.[6]\n↑ விஜயதசமியன்று வன்னிகாசுர வதத்துடன் நிறைவுபெற்ற பழநி நவராத்திரி விழா\n↑ பழநி கோயிலில் விரைவில் இரண்டாவது ரோப் கார்: உலகளாவிய டெண்டர் கோரப்பட்டுள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சி\nவேங்கடம் முதல் குமரி வரை 4/பழநி ஆண்டவன்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2021, 06:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/new-promo", "date_download": "2021-10-19T11:26:38Z", "digest": "sha1:OB2KIOWZMSQRKNIPZT6RF5DA3I5D2IKC", "length": 16422, "nlines": 128, "source_domain": "tamil.asianetnews.com", "title": "new promo: Latest News, Photos, Videos on new promo | tamil.asianetnews.com", "raw_content": "\nஇந்த வீட்டுல கிசு கிசு பேசுறது ரொம்ப கஷ்டம் தான் போல இருக்கு வெளியானது பிக்பாஸ் 5 புத்தம் புது புரோமோ\nபிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் அடுத்தடுத்த புரோமோக்கள் வெளியாகி இந்த சீசனுக்கான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்து வரும் நிலையில், தற்போது கிசுகிசுவை வைத்தே... புதிய புரோமோ வெளியாகியுள்ளது.\n செட்டில் ரம்யா கிருஷ்ணனுடன் முட்டி மோதிய வனிதா..\nநடிகை வனிதா காளி வேடம் போட்டு டான்ஸ் ஆடிய பின்னர், நடுவராக ரம்யா கிருஷ்ணனுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக, நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார் என கூறப்பட்டது. இதுகுறித்த நிகழ்ச்சி வரும் ஞாயிற்று கிழமை அன்று ஒளிபரப்பாக உள்ள நிலையில்... தற்போது வனிதா - ரம்யா பிரச்சனை குறித்த பரபரப்பான புரோமோ வெளியாகியுள்ளது.\n'பாண்டியன் ஸ்டோர்' சீரியலில் இப்படி ஒரு ட்விஸ்ட்டா.. புதிய புரோமோவால் உற்சாகத்தில் ரசிகர்கள்..\nவரும் வாரங்களில் சத்திய மூர்த்தி மற்றும் தனம் திருமணம் எப்படி நடந்தது என்பது குறித்த காட்சிகள் தான் ஒளிபரப்பாக உள்ளது.\nஒன்று கூடிய போட்டியாளர்கள்... மீண்டும் நடைபெறும் நாடா - காடா டாஸ்க் இதை செஞ்சா மட்டும் போதும் இதை செஞ்சா மட்டும் போதும்\nபிக்பாஸ் வீட்டில் மீண்டும் நாடா... காடா... டாஸ்க் அரங்கேற உள்ளது குறித்த கலகலப்பான புரோமோ வெளியாகியுள்ளது.\nசித்ரா கடைசியாக கலந்து கொண்ட நிகழ்ச்சியின் புதிய புரோமோவை வெளியிட்ட விஜய் டிவி..\nமறைந்த சீரியல் நடிகை சித்ரா, கடைசியாக கலந்து கொண்ட நிகழ்ச்சியின் புதிய புரோமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது.\nஷிவானியை பின்னால் சுற்ற வைத்த பாலா..\nபிக்பாஸ் வீட்டில் நேற்று முன் தினம், \"தங்கமே உன்னை தான�� தேடி வந்தேன் நானே\", என்கிற டாஸ்க் நடத்தபட்டது. இந்த டாஸ்கில் போட்டியாளர்கள் சேர்த்த தங்கங்களை நேற்று பிக்பாஸ் அறையில் எடைபோட்டு காட்டினர். பாலா தான் இதில் அதிக பட்சமாக 3 கிலோவுக்கு மேல் சேகரித்திருந்தார்.\n பொங்கிய ரியோ... சிக்கிய பாலாஜியை வச்சி செய்யும் புரோமோ..\nஇன்றைய முதல் புரோமோவில், அனிதா தேவை இல்லாமல்... தன்னுடைய மனதை தானே குழப்பி கொண்டு, தேம்பி தேம்பி அழுதார்.\n“அப்பா, அம்மா இரண்டு பேருமே சரக்கடிச்சிட்டு”... கதறி அழுத பிக்பாஸ் பிரபலம்.. கட்டியணைத்து தேற்றிய ஹவுஸ் மேட்ஸ்\nஉடனடியாக ரியோ ராஜ், சுரேஷ் சக்கரவர்த்தி, ரேகா உள்ளிட்ட சக போட்டியாளர்கள் ஓடிவந்து கண்ணீர் விட்டு அழும் பாலாஜியை கட்டியணைத்து ஆறுதல் கூறி தேற்றுகின்றனர்.\nமுதல் நாளே கவர்ச்சி குயின் ஷிவானியை ஓரம் கட்டும் போட்டியாளர்கள்..\nஉலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்க, 16 போட்டியாளர்களுடன் அமோகமாக நேற்று ஆரம்பமானது பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி.\nஇருவர் சொல்வதும்... உண்மை வெல்வதும்.. வெளியானது பிக்பாஸ் புதிய புரோமோ..\nஉலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய கடைசி மூன்று பிக்பாஸ் சீசன்கள் நல்ல படியாக முடிவடைந்த நிலையில், நாளை முதல் 4 ஆவது சீசன் துவங்க உள்ளது. இதில் மொத்தம் 14 போட்டியாளர்கள் கலந்து கொள்வார்கள் என கூறப்படுகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளவர்கள் பற்றி, நிகழ்ச்சியாளர் தரப்பில் இருந்து ரகசியம் காத்து வருவதால், தினம் தோறும் பல தகவல்கள் வெளியாகி வருகிறது.\nபிக்பாஸ் 4க்கு நேரம் வந்தாச்சு... கனீர் குரலில் வெளியானது புதிய புரோமோ...\nஇந்நிலையில் சற்று நேரத்திற்கு முன்பு பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் புதிய புரோமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸின் குரலில் ஆடியோவாக வெளியாகியுள்ளது.\nசும்மாசொல்லுங்க லிஸ்டு மேட்ச் ஆகுதான்னு பார்ப்போம்.. பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நியூ போஸ்டர்..\nவிரைவில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தமிழில் துவங்க உள்ள நிலையில், இந்த நிகழ்ச்சி மீதான ஆர்வத்தை ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்கும் வண்ணம் ப்ரோமோக்கள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் தற்போதும் ஒரு புதிய புரோமோ வெளியாகி உள்ளது.\nரேஷ்மா வாழ்க்கையில் இவ்வளவு பெரிய சோகமா கண்ணீரில் மூழ்கிய பிக்பாஸ் வீடு\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது வெளியாகியுள்ள புத��ய புரோமோவில் பிக்பாஸ் வீடே கண்ணீரில் மூழ்கியுள்ளது.\nபொன்னம்பலத்திற்கு பாட்டு சொல்லி தரும் ஆனந்த்... யாசிகா கேட்ட கேள்வி...\nஇன்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் நாளாக, இதில் கலந்து கொண்டுள்ள போட்டியாளர்கள், செய்யும் சேட்டைகள் ஒளிபரப்பாக உள்ளது.\nசமூக சேவையும் பிரமோஷன் தானா...வசமாக சிக்கிய லட்சுமி ராமகிருஷ்ணன்...\nநடிகை லட்சுமி ராமகிருஷ்ணனை தெரியாதவர்கள் யாரும் இருக்க வாய்ப்பில்லை, நடிப்பு, இயக்கம், தொகுப்பாளர்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகோவிட் மூன்றாவது அலையில் இருந்து நம்மை காத்து கொள்ள சுயபரிசோதனை கருவியே நமக்கு தேவை \nபலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய விளையாட்டு வீரர்கள் \n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய கலைஞர்கள்\nமஹசூஸ் வெற்றியாளர் ஏசியாநெட் நியூஸ் தமிழுக்கு அளித்த பேட்டி\nகோவிட் மூன்றாவது அலையில் இருந்து நம்மை காத்து கொள்ள சுயபரிசோதனை கருவியே நமக்கு தேவை \nபலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய விளையாட்டு வீரர்கள் \nராகவா லாரன்ஸ் - நடிக்கும் படத்தில் ‘பாடாத பாட்டெல்லாம்’ ரீமிக்ஸ் பாடல்..\nஎனது மூச்சு இருப்பதற்குள் கோட்டையில் அன்புமணி உட்கார வேண்டும்... இயலாமையில் துடித்த ராமதாஸ்.\nஇதெல்லாம் அக்கிரமம்... டாக்டர் ராமதாஸ் கொதிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://time.astrosage.com/holidays/vietnam/vietnamese-kings-day?year=2022&language=ta", "date_download": "2021-10-19T12:39:36Z", "digest": "sha1:NRB6IB4POI4WL57C6YRIXVBOUOR5E6VI", "length": 2483, "nlines": 52, "source_domain": "time.astrosage.com", "title": "Hung Kings Festival 2022 in Vietnam", "raw_content": "\n2020 வி 2 ஏப்ரல் Hung Kings Festival தேசிய விடுமுறை\n2021 பு 21 ஏப்ரல் Hung Kings Festival தேசிய விடுமுறை\n2024 வி 18 ஏப்ரல் Hung Kings Festival தேசிய விடுமுறை\n2025 தி 7 ஏப்ரல் Hung Kings Festival தேசிய விடுமுறை\nஞ, 10 ஏப்ரல் 2022\nச, 29 ஏப்ரல் 2023\nபு, 21 ஏப்ரல் 2021\nபிற ஆண்டுகளுக்கான தேதிகளின் பட்டியல்\nஎங்களை பற்றி அறிக | ��ொடர்பு கொள்ளவும் | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://udhayasankarwriter.blogspot.com/2019/06/1.html", "date_download": "2021-10-19T12:04:12Z", "digest": "sha1:JD4B3J3P27BDIFQCFV2VOXTPXK3K5AME", "length": 13189, "nlines": 233, "source_domain": "udhayasankarwriter.blogspot.com", "title": "கரிசக்காடு", "raw_content": "\n1. உலகில் சுமார் ஆறாயிரம் மொழிகள் இருக்கின்றன. இதில் மூவாயிரம் மொழிகள் இலக்கணமும் இலக்கியமும் கொண்ட மொழிகள்.\n2. இந்த மூவாயிரம் மொழிகளில் ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேல் வரலாற்றை கொண்ட மொழிகள் ஆறு மட்டுமே.\n3. தமிழ், சீனம், சமஸ்கிருதம், கிரீக், லத்தீன், ஹீப்ரு, ஆகிய மொழிகளை யுனஸ்கோ பழமையான மொழிகளாக அங்கீகரித்துள்ளது.\n4. இவற்றில் லத்தீன் வழக்கொழிந்து விட்டது.\n5. வழக்கில் இல்லாத ஹீப்ருவை இஸ்ரேல் அரசு உயிரூட்ட முயற்சித்துக்கொண்டிருக்கிறது.\n6. கிரீக் இடையில் ஏற்பட்ட பின்னடைவுக்குப் பிறகு மெல்ல நிலைபெற்று வருகிறது.\n7. சமஸ்கிருதம் மந்திரமொழியாக மிகக்குறைந்த நபர்களால் மனனம் செய்து ஒப்பிக்கப்படுகிறது.\n8. சீனமும், தமிழும் மட்டுமே ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேலாக செம்மொழியாக உலக அளவில் திகழ்கின்றன.\n9. சீனமொழி சித்திர வடிவத்தில் இருப்பதால் மனித உணர்வுகளைத் துல்லியமாக வெளிப்படுத்த முடியவில்லை என்பது மொழியியலாளரின் கருத்து.\n5) பல மொழிகளின் வேர்மொழி\n6) அநுபவங்களை துல்லியமாக வெளிப்படுத்தும் மொழி\n7) பிறமொழிக்கலப்பினால் சுயம் இழக்காத மொழி\n8) இலக்கிய வளம் கொழிக்கும் மொழி\n9) உயர்ந்த சிந்தனைகளை வெளிப்படுத்த தடையில்லாத மொழி\n10. கலையில் இலக்கியத்தில் தனித்தன்மை கொண்ட மொழி\n11) தனக்கென தனித்துவமிக்க மொழிக்கோட்பாடும் இலக்கணமும் கொண்ட மொழி\n11) உலகிலுள்ள மொழிகளில் தமிழ் மட்டுமே தன்னிகரில்லாத தனித்துவம் கொண்ட மொழியாகத் திகழ்கிறது.\n12) உலகில் ஏறத்தாழ பதினைந்து கோடி மக்கள் பேசும், எழுதும் பழமையான செம்மொழி தமிழ் மட்டுமே.\n13) தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.\nLabels: இலக்கியம், உதயசங்கர், செம்மொழி, தமிழ்\nபனிரெண்டு சிறுகதைத் தொகுதிகள்,ஒரு குறுநாவல் தொகுதி, ஐந்து கவிதைத் தொகுதிகள், பத்தொன்பது குழந்தை இலக்கிய நூல்கள்,எழுபது மொழிபெயர்ப்பு நூல்கள், ஆறு கட்டுரை நூல், தமுஎகசவில் மாநிலத் துணைப்பொதுச்செயலாளர். தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத்தலைவர்\nது���்டிக்கப்பட்ட தலையில் சூடிய ரோஜாமலர்\nஇந்துக்களின் புனித நூல் எது\nபிராமணிய மேல்நிலையாக்கமும் பண்பாட்டு அழிப்பும்\nமனிதநலம் காக்கும் ஹோமியோபதி மருத்துவம்-2\nகாட்டு வாத்தாகச் சிறகை விரித்த கவிதை\nகத்தரிக்காய் குள்ளனும் கழுகுமலை பூதமும் - நாடோடிக்கதை\nகத்தரிக்காய் குள்ளனும் கழுகுமலை பூதமும் உதயசங்கர் ஒரு ஊரில் ஒரு பாட்டியும் தாத்தாவும் தனியாக வாழ்ந்து வந்தார்கள். அவர்களுக்கு எட்டு மக...\nஇந்துக்களின் புனித நூல் எது\nஇந்துக்களின் புனித நூல் எது உதயசங்கர் உலகிலுள்ள எல்லாப்பெருமதங்களுக்கும் ஒரு புனிதநூல் இருக்கிறது. கிறித்துவத்துக்கு பைபிள் என...\nசூரியனும் குட்டிக்குட்டிக்குருவிக்குஞ்சும் உதயசங்கர் காலை விடிந்தது. சூரியன் கண்களை மெல்லத் திறந்து உலகத்தைப் பார்த்தான். வெளிச்சத்தின...\nமின்னுவின் ஆசை உதயசங்கர் மின்னு சுண்டெலி தப்பித்ததே பெரிய காரியம். ஒரு விநாடி தாமதம் ஆகி இருந்தால் அவ்வளவு தான். வெள்ளைப்பூனை லபக் என்...\nபிராமணிய மேல்நிலையாக்கமும் பண்பாட்டு அழிப்பும்\nபிராமணிய மேல்நிலையாக்கமும் பண்பாட்டு அழிப்பும் உதயசங்கர் இப்போதெல்லாம் பெரும்பாலான நாட்டார் தெய்வக்கோவில்களில் கும்பாபிஷேகம் நடக...\nகுறள் அறமும் மனு (அ)தர்மமும் - (ஆய்வுக் கட்டுரை)\nஇட ஒதுக்கீடல்ல மறுபங்கீடு - ஆதவன் தீட்சண்யா உரை\nதமிழ்நாடு கிராம வங்கியை சீர்குலைக்கும் அதன் நிர்வாகம்\nஎன் 'கால்' கதை தெலுங்கில்\nபார்த்த படத்தை மறுபடி பார்க்க, படித்த கதையை மீண்டும் படிக்க விரும்புவதன் உளவியல்\nபுதுப்பேட்டை 15 ஆவது ஆண்டு நிறைவு\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nசெம்மொழி 1. உலகில் சுமார் ஆறாயிரம் மொழிகள் இருக்கி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arisenshine.in/tag/ghost/", "date_download": "2021-10-19T13:02:59Z", "digest": "sha1:6JX4RWBQ7SAWTFKTNV55FZITIE6MJYHW", "length": 5388, "nlines": 72, "source_domain": "www.arisenshine.in", "title": "ghost – Arise n shine", "raw_content": "\nஎந்த வயதில் தேவனுக்கு ஊழியம் செய்யலாம்\n1 தீமோத்தேயு:2.5 – தினத்தியானம்\nஇயேசு-லேகியோன் சந்திப்பு – பாகம் 7\nதேவனிடம் சமரசம் செய்ய விரும்புகிறோமா\nஇயேசு-லேகியோன் சந்திப்பு – பாகம் 6\nகுடும்ப நபர்களுக்காக எப்படி ஜெபிக்கிறோம்\nஇயேசு-லேகியோன் சந்திப்பு – பாகம் 7\nஇந்த வேதப்பாடத்தில் லேகியோன் பிசாசின் தன்மைகளை குறித்து நாம் படித்து வரும் நிலையில், மா��்கு:5.9-ல் பிசாசு பிடித்த மனிதனிடம் இயேசு பெயரை கேட்கிறார். அதற்கு அவன், நாங்கள் அநேகர் என்பதால், என் பேர் லேகியோன் என்று கூறுகிறான்.\nஅசுத்தாவி பிடித்தவர்கள் இப்படியும் செய்யலாம்\nஎந்த வயதில் தேவனுக்கு ஊழியம் செய்யலாம்\n1 தீமோத்தேயு:2.5 – தினத்தியானம்\nஇயேசு-லேகியோன் சந்திப்பு – பாகம் 7\nதேவனாகிய கர்த்தர் தாம் மனுஷனில் எடுத்த விலா எலும்பை மனுஷியாக உருவாக்கி, அவளை மனுஷனிடத்தில் கொண்டு வந்தார். ஆதியாகமம்:2.22\nஎந்த வயதில் தேவனுக்கு ஊழியம் செய்யலாம்\nதேவனுக்கு ஊழியம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இரட்சிக்கப்பட்ட எல்லாருக்கும் இருக்கிறது. ஆனால் அதன் பின்னணியில் எந்த வயதில் அவருக்கு ஊழியம் செய்யலாம்\n1 தீமோத்தேயு:2.5 – தினத்தியானம்\nதேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே. 1 தீமோத்தேயு:2.5\nஎந்த வயதில் தேவனுக்கு ஊழியம் செய்யலாம்\n1 தீமோத்தேயு:2.5 – தினத்தியானம்\nஇயேசு-லேகியோன் சந்திப்பு – பாகம் 7\nதேவனிடம் சமரசம் செய்ய விரும்புகிறோமா\nஇயேசு-லேகியோன் சந்திப்பு – பாகம் 6\nஎந்த வயதில் தேவனுக்கு ஊழியம் செய்யலாம்\n1 தீமோத்தேயு:2.5 – தினத்தியானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.noolaham.org/wiki/index.php?title=Debates_in_the_Feminist_Movement&action=history", "date_download": "2021-10-19T13:10:54Z", "digest": "sha1:TIPHFZBFUTJSOWRIPGDJOQG4ZFHAVPBV", "length": 5868, "nlines": 45, "source_domain": "www.noolaham.org", "title": "திருத்த வரலாறு - \"Debates in the Feminist Movement\" - நூலகம்", "raw_content": "\nவரலாற்றில் தேடவும் ஆண்டு உட்பட முந்திய: மாதம் உட்பட முந்திய: அனைத்து மாதங்களும் ஜனவரி பெப்ரவரி மார்ச் ஏப்ரல் மே சூன் சூலை ஆகத்து செப்டம்பர் அக்டோபர் நவம்பர் டிசம்பர் குறிச்சொல் வடிப்பான்:\nவேறுபாட்டைக் காண வேண்டிய இரண்டு பத்திப்புக்களை தெரிவுச் செய்து கீழுள்ள பொத்தானை அழுத்தவும்.\nகுறியீட்டு விளக்கம்: (நடப்பு) = நடைமுறையிலுள்ள பதிப்புடனான வேறுபாடு, (கடைசி) = முந்திய பதிப்புடனான வேறுபாடு, சி = சிறு தொகுப்பு\n(நடப்பு | முந்திய) 19:54, 14 டிசம்பர் 2020‎ Mathubashini (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (1,315 எண்ணுன்மிகள்) (+111)‎\n(நடப்பு | முந்திய) 20:42, 22 அக்டோபர் 2016‎ NatkeeranBot (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (1,204 எண்ணுன்மிகள்) (+166)‎\n(நடப்பு | முந்திய) 05:15, 7 செப்டம்பர் 2015‎ Nirosha (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (1,038 எண்ணுன்மிகள்) (+42)‎\n(நடப்பு | முந்திய) 02:40, 4 ஆகத்து 2015‎ Meuriy (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (996 எண்ணுன்மிகள்) (+265)‎\n(நடப்பு | முந்திய) 07:05, 22 மே 2015‎ Gopi (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (731 எண்ணுன்மிகள்) (+25)‎\n(நடப்பு | முந்திய) 10:30, 17 மே 2015‎ Gopi (பேச்சு | பங்களிப்புகள்)‎ சி . . (706 எண்ணுன்மிகள்) (-14)‎ . . (Text replace - \" பதிப்பகம் = - |\" to \" பதிப்பகம்=-|\")\n(நடப்பு | முந்திய) 10:18, 17 மே 2015‎ Gopi (பேச்சு | பங்களிப்புகள்)‎ சி . . (720 எண்ணுன்மிகள்) (-16)‎ . . (Text replace - \" மொழி = ஆங்கிலம்|\" to \" மொழி=ஆங்கிலம்|\")\n(நடப்பு | முந்திய) 06:46, 13 மே 2015‎ Gopi (பேச்சு | பங்களிப்புகள்)‎ சி . . (736 எண்ணுன்மிகள்) (-60)‎ . . (Text replace - \"பகுப்பு:பிரசுரங்கள்\" to \"\")\n(நடப்பு | முந்திய) 09:37, 22 ஏப்ரல் 2015‎ Gopi (பேச்சு | பங்களிப்புகள்)‎ சி . . (796 எண்ணுன்மிகள்) (-1)‎ . . (Text replace - \"{{ பிரசுரம்|\" to \"{{பிரசுரம்|\")\n(நடப்பு | முந்திய) 11:52, 19 ஏப்ரல் 2013‎ Anuheman04 (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (815 எண்ணுன்மிகள்) (-43)‎ . . (→‎{{Multi|வாசிக்க|To Read}})\n(நடப்பு | முந்திய) 20:36, 27 மார்ச் 2011‎ கோபி (பேச்சு | பங்களிப்புகள்)‎ சி . . (858 எண்ணுன்மிகள்) (0)‎\n(நடப்பு | முந்திய) 03:45, 16 நவம்பர் 2010‎ Valarmathy (பேச்சு | பங்களிப்புகள்)‎ சி . . (858 எண்ணுன்மிகள்) (+858)‎ . . (4821)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/search/videos/thala%20ajith", "date_download": "2021-10-19T12:48:47Z", "digest": "sha1:R77PLQNMKKJVIGJZVW26AGDRVU272W32", "length": 2701, "nlines": 85, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | thala ajith", "raw_content": "\nஹெல்த் கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் வைரல் வீடியோ\nஅதிசய நடிகை, அபூர்வ நடிகை ஸ்ரீவித்யாவின் 15-ம் ஆண்டு நினைவு தினம்\n\"இந்தி மொழி தெரிந்திருக்க வேண்டும்\" - வலுத்த எதிர்ப்பு; பணிந்த சொமேட்டோ\nஉலகமே பாராட்டும் Squid Game-ஐ கடுமையாக விமர்சிக்கும் பாகிஸ்தானியர்கள்... காரணம் என்ன\nமேற்கு தொடர்ச்சி மலைகளில் கனமழை - பாதிப்புக்குள்ளாகும் கேரளா: காரணம் என்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.quotespick.com/ta/1653/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD.php", "date_download": "2021-10-19T11:05:37Z", "digest": "sha1:J7WLZM5XAE2A5K5ABWMXSHU3GFKN5M6I", "length": 2427, "nlines": 39, "source_domain": "www.quotespick.com", "title": "என் ரசிகர்கள் விரும்பும் வரை என் Quote by இளையராஜா @ Quotespick.com", "raw_content": "\nஎன் ரசிகர்கள் விரும்பும் வரை என்\nஎன் ரசிகர்கள் விரும்பும் வரை, என் இசை பயணம் தொடரும்.\nநீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய்\nசிறிய தவறுகளை திருத்திக் கொள்ளவிட்டால்\nதுன்பங்கள் அனுபவித்த காலத்தை மறந்து விடு\nதுப்பாக்கியை தொலைத்துவிட்டு துப்பட்டாவை தேடுங்கள்\nபொறுமை இல்லாதவன் கூட ஒரு குழந்தைக்கு\nநம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும்\nமற்றொரு புத்தாண்டு கதவுகளை தட்டுகிறது நாம்\nஇருளை நீக்கி ஒளியை அருள தமிழ்\nவீரம் தமிழ் மரபின் வேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanjai.today/vaccination-of-government-bus-drivers/", "date_download": "2021-10-19T11:54:49Z", "digest": "sha1:XIE42MPDYDSDMQZMGTOPOQ2RIDAXHEBE", "length": 8409, "nlines": 128, "source_domain": "www.thanjai.today", "title": "அரசு பேருந்து ஒட்டுநர் நடத்துநர்களுக்கு தடுப்பூசி போடும் பணி", "raw_content": "\nசமூகம் தஞ்சை நகரச்செய்தி மாநகரச் செய்தி\nஅரசு பேருந்து கழக ஒட்டுநர், நடத்துநர்களுக்கு தடுப்பூசி போடும் பணி\nApr 14, 2021 கொரோனா, பட்டுக்கோட்டை\nதஞ்சை ஏப்ரல் 14 பட்டுக்கோட்டை: தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தடுப்பூசி போடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. அந்த வகையில் பட்டுக்கோட்டையில் அரசு போக்குவரத்துக்கழகத்தில் பணிபுரியும் 45 வயதிற்கு மேற்பட்ட டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.\nஅந்தோணியார் கோவில் தெருவில் உள்ள சி.ஆர்.சி. பணிமனை ஓட்டுநர் பயிற்சி வளாகத்தில் போக்குவரத்துக்கழக தஞ்சை கோட்ட மேலாளர் செந்தில் தலைமையில், கிளை மேலாளர் தங்கராசு முன்னிலையில் பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி அரசு போக்குவரத்துக் கழகங்களை சேர்ந்த 106 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.\nடாக்டர் சாமிபாலாஜி அவர்களின் தலைமையில் குழுவினர் தடுப்பூசி போட்டனர்.\nஅண்ணல் அம்பேத்கார் 130 வது பிறந்த நாள்\nதிருவையாறு முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்\nசமூகம் தஞ்சை நகரச்செய்தி மாநகரச் செய்தி\nவிபத்து இல்லா தீபாவளியாக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் தீயணைப்புத்துறை மாவட்ட அலுவலர்\nஅரசியல் தஞ்சை நகரச்செய்தி மாநகரச் செய்தி\nகட்டுமான பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த ஏஐடியூசி வலியுறுத்தல்\nதஞ்சை நகரச்செய்தி மாநகரச் செய்தி வேளாண்மை\nமாடித்தோட்ட சாகுபடியால் உடல் நிலையில் முன்னேற்றம் பெறலாம்; முதல்��ர் வேலாயுதம்\nவிபத்து இல்லா தீபாவளியாக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் தீயணைப்புத்துறை மாவட்ட அலுவலர்\nகட்டுமான பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த ஏஐடியூசி வலியுறுத்தல்\nமாடித்தோட்ட சாகுபடியால் உடல் நிலையில் முன்னேற்றம் பெறலாம்; முதல்வர் வேலாயுதம்\nமுதல்வர் முன்னெடுப்பு திருவாரூர் காரைக்குடி ரயில் சேவை துவக்கம்; எம்பி பழனிமாணிக்கம்\nபள்ளி மாணவர்களுக்கு வரும் அக் 25, 26ம் தேதிகளில் கலைப்போட்டிகள்\nசமூகம் தஞ்சை நகரச்செய்தி மாநகரச் செய்தி\nவிபத்து இல்லா தீபாவளியாக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் தீயணைப்புத்துறை மாவட்ட அலுவலர்\nஅரசியல் தஞ்சை நகரச்செய்தி மாநகரச் செய்தி\nகட்டுமான பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த ஏஐடியூசி வலியுறுத்தல்\nதஞ்சை நகரச்செய்தி மாநகரச் செய்தி வேளாண்மை\nமாடித்தோட்ட சாகுபடியால் உடல் நிலையில் முன்னேற்றம் பெறலாம்; முதல்வர் வேலாயுதம்\nசமூகம் தஞ்சை நகரச்செய்தி மாநகரச் செய்தி\nமுதல்வர் முன்னெடுப்பு திருவாரூர் காரைக்குடி ரயில் சேவை துவக்கம்; எம்பி பழனிமாணிக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://timestampnews.com/terrorists-arrested-delhi/1031/", "date_download": "2021-10-19T12:40:37Z", "digest": "sha1:C7CH3V2DAFTISUIA4AXKSZUM5FEN2DQW", "length": 5219, "nlines": 87, "source_domain": "timestampnews.com", "title": "குண்டுவெடிப்பு நடத்த திட்டமிட்டிருந்த 3 தீவிரவாதிகள் கைது – டெல்லி – Timestamp News", "raw_content": "\nகுண்டுவெடிப்பு நடத்த திட்டமிட்டிருந்த 3 தீவிரவாதிகள் கைது – டெல்லி\nஅஸ்ஸாம் மாநிலம் கோல்பாரா பகுதியில் ரகசிய தகவலின்பேரில் டெல்லி காவல்துறை சிறப்பு பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்திய போது, அங்கு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பால் ஈர்க்கப்பட்டு புதிய அமைப்பு தொடங்கிய 3 தீவிரவாதிகளை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 3 பேரிடம் இருந்து வெடிகுண்டு தயாரிக்க பயன்படும் கருவிகள் உள்ளிட்டவற்றையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். அவர்களை விசாரித்த போது கைது செய்யப்பட்ட 3 பேரும் அஸ்ஸாமிலும், டெல்லியிலும் குண்டுவெடிப்பு நிகழ்த்த திட்டமிட்டிருந்தது தெரியவந்தது, தற்போது அவர்கள் கைது செய்யப்பட்டு விட்டதால் தாக்குதல் சதி முறியடிக்கப்பட்டு விட்டதாகவும் டெல்லி காவல்துறை துணை ஆணையர் பிரமோத் குஸ்வாஹா தெரிவித்துள்ளார்.\nPrevious Previous post: ரூ.1,000 பரிசுத் தொகை அறிவித்தார் ��� முதல்வர் பழனிசாமி\nNext Next post: காய்கறி சந்தைகளில் நடத்திய ஆய்வில் டன் கணக்கில் பறிமுதல் செய்த அதிகாரிகள் – சென்னை\nதூத்துக்குடி மாவட்ட காவல்துறையில் உள்ள நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள்- மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் ஆய்வு.\nதமிழக மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நல்வாழ்வு சங்கத்தின் சார்பில் கொரோனா பணிகள்\nதூத்துக்குடி 17வது வார்டு பொதுமக்கள் சார்பில் தெரு மின் விளக்கு, சாலை வசதி மற்றும் குடிநீர் குழாய் அமைத்திட வேண்டி கோரிக்கை மனு\nதிருச்செந்தூா் கோயில் கும்பாபிஷேகம்: முதல்வா் விரைவில் அறிவிப்பாா்\nதூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அங்கன்வாடி மைய கட்டிடம் – அமைச்சர் கீதாஜீவன் அடிக்கல் நாட்டினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arisenshine.in/1-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AF%E0%AF%812-5-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE/", "date_download": "2021-10-19T12:04:28Z", "digest": "sha1:LZZBEW6YEVHSNUZ36GUDQ7ZGVJ2WUB2L", "length": 11215, "nlines": 80, "source_domain": "www.arisenshine.in", "title": "1 தீமோத்தேயு:2.5 – தினத்தியானம் – Arise n shine", "raw_content": "\nஎந்த வயதில் தேவனுக்கு ஊழியம் செய்யலாம்\n1 தீமோத்தேயு:2.5 – தினத்தியானம்\nஇயேசு-லேகியோன் சந்திப்பு – பாகம் 7\nதேவனிடம் சமரசம் செய்ய விரும்புகிறோமா\nஇயேசு-லேகியோன் சந்திப்பு – பாகம் 6\nகுடும்ப நபர்களுக்காக எப்படி ஜெபிக்கிறோம்\n1 சாமுவேல்:21.9 – தினத்தியானம்\n1 தீமோத்தேயு:2.5 – தினத்தியானம்\nதேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே.\nமனிதனை படைத்தது முதல் அவனோடு பேசி பழக வேண்டும் என்று தேவன் விரும்புவதாக வேதம் குறிப்பிடுகிறது. ஆனால் ஆதி மனிதனாகிய ஆதாம், அதை புரிந்து கொள்ளவில்லை. அந்த அறியாமை இன்று வரை பலரிடமும் தொடர்கிறது.\nதேவனுக்கும் மனிதனுக்கும் இடையே இருந்த மிகப்பெரிய பிளவை நீக்கவே, இயேசு இந்த உலகத்திற்கு வந்தார். அவர் வருகையில் ஏற்பட்ட மாற்றங்களில், இதுவும் ஒன்று. தேவனையும் மனிதனையும் இணைக்க, தம்மையே பலியாகவும் அளித்தார்.\nதேவனுக்கும் மனிதனுக்கும் இடையே இயேசுவை தவிர, வேறு யாரும் மத்தியஸ்தராக மாற முடியாது. ஆனால் இன்று இரட்சிக்கப்பட்ட பலரும், தேவனுக்கான நேரத்தை ஒதுக்க விரும்பாமல், தேவ ஊழியர்களை மத்தியஸ்தராக வைத்து கொள்ள விரும்புகிறார்கள்.\nஏதாவது தேவை என்றால், தேவ ஊழியர்களை தொடர்பு கொண்டு ஆலோசனை கேட்பது, ஜெபிக்க சொல்வது, தீர்க்கத்தரிசனம் கேட்பது ஆகியவை இதில் அடங்கும். இன்னும் சிலர் குறிப்பிட்ட ஊழியர்களை மட்டுமே வைத்து கொண்டு, அவர்களிடம் கேட்டால் தான் சரியாக இருக்கும் என்றும் நினைக்கிறார்கள்.\nமோசே உடன் பாலைவனத்தில் இருந்த இஸ்ரவேல் மக்களுக்கும் இதே பிரச்சனை தான் இருந்தது. தேவன் எங்களோடு பேச வேண்டாம். நீர் கேட்டு சொல்லும் என்று மோசேயிடம் இஸ்ரவேல் மக்கள் கூறினார்கள். இதனால் தேவனும் அப்படியே செய்தார்.\nமோசே மரித்த பிறகு, அந்த பணியை யோசுவா செய்தார். அதன்பிறகு, என்ன முடிவு எடுப்பது, தாங்கள் செய்வது சரியா, தவறா என்று தெரியாமல் இஸ்ரவேல் மக்கள் திணறினார்கள். நியாயாதிபதிகள் இருந்த போது தேவனிடம் திரும்பினார்கள்.\nஆனால் ஒரு கட்டத்தில் ஆகாப் போன்ற மோசமான ராஜாக்கள் வந்த போது, தேவனை விட்டு முழுமையாக விலகினார்கள். எல்லா காரியங்களையும் தேவனிடம் விசாரித்து செய்ய வேண்டும் என்ற எண்ணம் இஸ்ரவேல் மக்களுக்கு ஏற்படவில்லை. இதனால் பல ஜாதிகளிடம் அடிமைகளாக போனார்கள்.\nஎனக்காக ஜெபித்து கொள்ளுங்கள் என்று ஊழியர்களிடம் கூறிவிட்டு, நமக்கும் தேவனுக்கு எந்த உறவும் இல்லாமல் இருந்தால், ஒரு கட்டத்தில் நாம் நம்பியிருக்கும் ஊழியர் இறந்தாலோ அல்லது விழுந்து போனாலோ, நம் நிலையும் இஸ்ரவேல் மக்களை போன்றதாகிவிடும்.\nதேவ ஊழியர்களை கணப்படுத்தலாம், அவர்களுக்கு மதிப்பு அளிக்கலாம். ஆனால், அவர்கள் மூலம் மட்டுமே நான் தேவனுடைய ஆலோசனையை பெறுவேன் என்று இருக்கக்கூடாது. இன்னும் சிலர் தேவ ஊழியர்களை, தேவனுக்கு நிகராக வைத்திருப்பவர்களும் உண்டு. இது முற்றிலும் ஒரு தவறான முறையாக ஆகும்.\nஜெபத்தில் தினமும் தேவனோடு பேசும் அனுபவத்தை வளர்த்து கொண்டால், நாம் தடுமாறும் போது, அவர் நம்மை உணர்த்துவார். தாவீதின் வாழ்க்கையில் இந்த அனுபவத்தை காணலாம்.\nதீர்க்கத்தரிசி சாமுவேலுக்கு தேவையான மரியாதையை தாவீது கொடுத்தார். ஆனால் எல்லாவற்றிற்கும் சாமுவேலை மட்டுமே நம்பி இருக்கவில்லை. தனக்கு இக்கட்டான நேரத்தில், தேவனிடம் அவரே ஆலோசனை கேட்பதை காண முடிகிறது.\nஎனவே, நமக்கு மத்தியஸ்தராக உள்ள இயேசுவை பற்றிக் கொள்வோம். அவரோடு ஜெபத்தில் தினமும் பேசுவோம். அப்போது அவரும் நமக்கு தேவையான ஆலோசனைகளை தந்து நடத்துவார் என்பதில் சந்தேக���ில்லை.\nஎங்களை நேசிக்கிற அன்புள்ள ஆண்டவரே, நீர் எங்களோடு பேச விரும்பும் நிலையில், தினமும் அதற்கு நேரத்தை ஒதுக்கி தேவ சமூகத்தில் காத்திருக்க உதவி செய்யும். உம்மோடு ஒரு தனிப்பட்ட உறவை பாதுகாத்து கொள்ள கிருபை செய்யும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம் எங்கள் நல்ல பிதாவே, ஆமென்.\nஎந்த வயதில் தேவனுக்கு ஊழியம் செய்யலாம்\n1 தீமோத்தேயு:2.5 – தினத்தியானம்\nஇயேசு-லேகியோன் சந்திப்பு – பாகம் 7\nதேவனிடம் சமரசம் செய்ய விரும்புகிறோமா\nஇயேசு-லேகியோன் சந்திப்பு – பாகம் 6\nஎந்த வயதில் தேவனுக்கு ஊழியம் செய்யலாம்\n1 தீமோத்தேயு:2.5 – தினத்தியானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sonakar.com/2021/03/blog-post_925.html", "date_download": "2021-10-19T11:52:14Z", "digest": "sha1:4QK6XVWPCRVOZWD6SAFYS5FWKMI7233W", "length": 5894, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "மாடறுப்பு தடையை துரிதப்படுத்த நடவடிக்கை - sonakar.com", "raw_content": "\nHome NEWS மாடறுப்பு தடையை துரிதப்படுத்த நடவடிக்கை\nமாடறுப்பு தடையை துரிதப்படுத்த நடவடிக்கை\nஇலங்கையில் மாடறுப்புக்கான தடையை அமுலுக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகடந்த வருடம் செப்டம்பர் மாதம், பிரதமர் மஹிந்த ராஜபக்சவினால் முன் மொழியப்பட்டிருந்த மாடறுப்புத் தடைக்கு அமைச்சரவை அங்கீகாரமளித்திருந்தது. இந்நிலையில், தற்போது அதனைத் துரிதப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.\nபசுக்கள் மற்றும் கன்றுக்குட்டிகளும் இறைச்சிக்காக அறுக்கப்படுவதாகவும் இதனால் விவசாயிகளுக்கு பொருளாதார இழப்புகள் ஏற்படுவதாகவும், அதன் பின்னணியிலேயே இவ்வாறான 'பாதுகாப்பு' சட்டம் தேவைப்படுவதாகவும் அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளதுடன் வயதான மாடுகளை ஏற்றுமதி செய்வதற்கு திட்டமிடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nபணமில்லை 'ஜனாஸாவை' வைத்துக்கொள்: குடும்பங்கள் அதிரடி\nகொழும்பில் கொரேனா பாதிப்பிருப்பதாக தெரிவிக்கப்படும் ஜனாஸாக்களை அடக்குவதற்கு 58,000 ரூபா கேட்பது நிரந்தர வழக்கமாக உருவெடுத்துள்ள நிலையில்,...\nஇஷாலினி தன்னைத் தானே எரியூட்டியதாக வாக்குமூலம்\nரிசாத் பதியுதீன் வீட்டில் பணிபுரிந்த நிலையில் தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த ம��ையகத்தைச் சேர்ந்த இஷாலினி தன்னை...\nஅசாத் கைது செய்யப்பட்டது தெரியாது: பிரதமர்\nதேசிய ஐக்கிய முன்னணி தலைவர் அசாத் சாலி கைது செய்யப்பட்டது தனக்குத் தெரியாது என தெரிவித்துள்ளார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச. பயங்கரவாத தடுப்புச...\nஜனாஸா எரிப்பு வழக்கை விசாரணைக்கு ஏற்க மறுப்பு\nஜனாஸா எரிப்புக்கு எதிராக தொடுக்கப்பட்டிருந்த வழக்கினை விசாரணைக்கு ஏற்பதா இல்லையா என்பதனடிப்படையிலான விசாரணைகள் இரு தினங்களாக இடம்பெற்ற ந...\nநான் 'நல்ல மாதிரியான' முஸ்லிம்: முசம்மில்\nமுஸ்லிம் குடும்பம் ஒன்றில் பிறந்து இஸ்லாமிய கலாச்சாரத்தில் வளர்ந்தவன் என்ற அடிப்படையில் மாற்று மதத்தவரைத் திருமணம் செய்துள்ள போதிலும் தான்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://battimedia.lk/12-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5/", "date_download": "2021-10-19T11:08:15Z", "digest": "sha1:KF34W3XQAVPDI5NEQJ76I5ELIABRU3OA", "length": 6334, "nlines": 112, "source_domain": "battimedia.lk", "title": "12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுமா? - Battimedia", "raw_content": "\nHome செய்திகள் 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுமா\n12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுமா\n12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது தொடர்பில் அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக ஒளடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குபடுத்துகைகள் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமான அறிவித்துள்ளார்.\nநாட்டிலுள்ள 60 வயது, 30 வயது மற்றும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி ஏற்றப்படும் என்றும் திட்டத்தின் படி 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கும் தடுப்பூசி ஏற்றுவது தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.\nதடுப்பூசிகளுக்கான நிதியொதுக்கீட்டில் அரசாங்கம் அக்கறை செலுத்தவில்லை என்று கூறப்படுவதாகவும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் அனுமதிக்கமைய அபிவிருத்தியடைந்த நாடுகள் பின்பற்றும் செயல்முறைகளையே பின்பற்றி வருவதாகக் குறிப்பிட்ட அவர், தடுப்பூசி ஏற்றலின் மூலம் அரசாங்கம் எவ்வித சுயலாபத்தையும் எதிர்பார்க்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.\nPrevious articleடொலரின் பெறுமதி அதிகரிப்பதாக பொய் பிரசாரங்கள் செய்யப்படுகிறது, இதை எதிர்கொள்வதற்கு நான் எதற்கும் தயார்- பசில் ராஜபக்ஸ\nNext articleஃபைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகளை கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்குமாறு கோரிக்கை.\n608,000 டோஸ் பைஸர் தடுப்பூசிகள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.\nமாடு அறுத்தலுக்கு தடை , அமைச்சரவையில் சட்டமூலம் அங்கீகாரம்.\nஎரிபொருள் விலையை அதிகரிக்க முடியாது-ஜனாதிபதி\nஅனைத்து விதமான செய்திகளையும் உடனுக்குடன் அறிந்துக்கொள்ள தொடர்ந்தும் இணைந்திருங்கள். ஊடகவியலாளர்களாக இணைய விரும்புபவர்களும் தொடர்புகொள்ளவும் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://indcricketnews.com/suresh-raina-virat-kohli-wolrd-cup-2019-ms-dhoni/", "date_download": "2021-10-19T11:33:32Z", "digest": "sha1:QW6DASYHGEG66FB4SCC2Y6C2BKSZHCD3", "length": 14690, "nlines": 54, "source_domain": "indcricketnews.com", "title": "Suresh Raina: Virat Kohli is the world cup MS Dhoni in the Lord's ground", "raw_content": "\nசுரேஷ் ரெய்னா: விராட் கோஹ்லி லார்ட்ஸ் மைதானத்தில் உலகக் கோப்பை எம் எஸ் தோனி முக்கிய பங்கு வகிப்பார்\nஇங்கிலாந்து நாட்டில் நடக்க இருக்கிற உலகக் கோப்பை போட்டியை இந்தியா வெல்வதற்கு, எம் எஸ் தோனியின் மிகச் சிறந்த விளையாட்டு அனுபவம், இளம் விளையாட்டு வீரர்களிடம் அவர் அணுகும் முறை இதை பார்த்தால் அவர் உலகக் கோப்பை போட்டியில் ஒரு முக்கிய பங்குவகிப்பார் என்று சுரேஷ் ரெய்னா ஹிந்துஸ்தான் நாளிதழுக்கு ஒரு பேட்டியளித்தார்.\nஉலகக் கோப்பை போட்டியில் ஒவ்வொரு அணியும் அதனுடைய திறமையை வெளிப்படுத்துவதற்கு முயற்சி செய்கிறது. பண்டிதர்கள், இந்தியா போட்டிகளில் வெற்றி பெறுவதை பிடித்துள்ளதாக பேசியுள்ளார்கள். விராத் கோலி ஜூலை 14 ம் தேதி உலக கோப்பை தொடரில் பங்கேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மூத்த இந்தியன் விளையாட்டு வீரர் சுரேஷ் ரெய்னா இவ்வாறு உணருகிறார்; இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி அவர்கள் இந்த உலகக் கோப்பையில் ஒரு முக்கிய பங்கு வகிப்பார்.\nரெய்னா ஹிந்துஸ்தான் நாளிதழில் இவ்வாறு குறிப்பிட்டார். தோனியின் சிறப்பான விளையாட்டு அனுபவம் மற்றும் அவர் இளம் விளையாட்டு வீரர்களிடம் அணுகும் முறை இதன் காரணமாக இந்தியாவின் வெற்றி வாய்ப்புக்கு அவர் மிக முக்கியமான பங்கு வகிப்பார் என்றார். தோனியின் சிறப்பான ரன் குவிப்பு – ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து அணிக்கு எதிராக, இளம் விளையாட்டு வீரர்களுக்கு அவர் சொல்லும் வழிகா���்டும் முறை; குறிப்பாக பந்து வீச்சாளர்களுக்கு, இது ஒரு நல்லவிதமாக ஆட்ட வீரர்களுக்கு அமையும் என்றார் அவர். தோனி விளையாட்டில் ஒரு நல்ல வெற்றி மற்றும் தோல்விகளை கண்டு இருக்கிறார்; இது மட்டுமில்லாமல் ஒரு சில உலகக் கோப்பை போட்டியில் பங்கு பெற்றிக்கிறார்; மற்றும் இந்தியன் பிரீமியர் லீக் போட்டிக்கான இறுதி போட்டியில் பல தடவை வந்து இருக்கிறார்; இதனால்தான் அவர் கேப்டன் விராட் கோஹ்லிக்கு ஒரு சிறப்பான பயிற்சியாளர் மற்றும் அறிவுரையாளராக இருக்கிறார் என்று சுரேஷ் ரெய்னா குறிப்பிட்டார்.\nஒரு விவாத மேடையில் ரெய்னா இவ்வாறாக தெரிவித்தார். தோனி எங்கே, எப்பொழுது, எத்தனாவது பேட்ஸ்மேன் ஆக விளையாடவேண்டும் மற்றும் தோனி மிகச் சிறப்பாக விளையாடி ஒரு நல்ல ஓட்டத்தை அவருக்கும் மற்றும் அணிக்கும் சேர்த்து இருக்கிறார். என்னை பொறுத்தவரை உலகக் கோப்பைக்கான இந்தியா அணியில் நான்காவது இடத்தில இருக்கிறார் என்று ரெய்னா கருத்து தெரிவித்தார்.\nகோஹ்லியின் அனைத்து நம்பிக்கையுடனும் ரன்கள் எடுக்கப்பட்டதால், கோஹ்லி தனிச்சிறப்பு வாய்ந்தவராக இருப்பதாக எல்லோரும் பேசிக்கொண்டிருக்கையில், ரெய்னா, ஓய்வுபெற்ற கோஹ்லி தன்னையே நம்புவதாக கூறுகிறார். நடு நிலை ஆட்டக்காரரான விராட் கோஹ்லி விளையாட்டின் உடைய கொதிப்பு மற்றும் பளுவை உணருகிறார் என்றும் மற்றும் மற்ற அணிகளுடன் விளையாடும் பொழுது அதனுடைய வெற்றிகளை இந்தியாவிற்க்காக பெரும்பொழுது மிகவும் வெற்றியை அனுபவிக்கிறார். இதனால் இது இவரை ஒரு பிரபலமான விளையாட்டு வீரராக்கும் என்றார் ரெய்னா.\nவிராட் கோஹ்லி ஒரு சிறந்த தலைவர் மற்றும் ஒரு சிறந்த வீரர் ஆவார். அவர் எடுத்த ரன்கள் எத்தனை என்று அனைவருக்கும் தெரியும். அனால் என்னை பொறுத்தவரை கோஹ்லி ஒவ்வரு தருணத்திலும் மிகச் சிறப்பாக செய்யவேண்டும் என்ற தீவிரம் அவரிடம் இருக்கிறது. ஒவ்வரு முறையும் அவரிடம் ஒரு அழுத்தம் இருக்கிறது மற்றும் அவர் ஒரு நல்ல கடமையுள்ள ஆட்ட வீரராக இருக்கிறார் என்று முப்பத்தி இரண்டு வயதான சுரேஷ் ரெய்னா கூறினார்.\nஉலகக் கோப்பைக்கு செல்லும் இந்திய வீரர்களுக்கு எதிர்பார்ப்பின் அழுத்தம் தேவையற்றது என பலர் நினைக்கிறார்கள். ரெய்னா இவ்வாறாக உணர்கிறார் இந்தியா அணியின் வீரர்கள் சிறப்பாக விளையாடுவார்கள் என்றும் அனாவசியமான மன அழுத்தம் தேவையில்லை.\nமன அழுத்தம் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. வீரர்கள் நன்றாக விளையாடுவதால் இந்திய அணி சிறப்பாக செய்து வருகிறது. இந்தியா, உலகக் கோப்பை போட்டியில், நான்காவது (குழு நிலைகளின் முடிவில்) இடத்திற்கு வந்தால் எனக்கு ஆச்சரியம் ஏற்படாது. இது இந்திய அணிக்கு நேர்ந்தால், கண்டிப்பாக லார்ட்ஸ் மைதானத்தில் நாம் கோப்பையை கைப்பற்றுவோம் என்று சிரித்துக்கொண்டே ரெய்னா சொன்னார்.\nவரவிருக்கும் இந்திய பிரீமியர் லீக் போட்டியில் ரெய்னா இவ்வாறாக சொன்னார் அவர் நட்சத்திர சீசனை எதிர்பார்ப்பதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் கூறினார். மற்றும் தோனி இந்த லீக் போட்டியில் ஒரு சிறந்த அணித் தலைவர் என்றார் அவர்.\nஇது ஆச்சரியமாக இருந்தது, கடவுள் ஆசிர்வாதத்தால். நாங்கள் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு (8 ஆண்டுகள்) ஒன்றாக விளையாடி இருக்கிறோம் மற்றும் சி.எஸ்.கே.வில் எனக்கு நிறைய நினைவுகள் இருந்தன. எம்.எஸ். தோனி, சி.எஸ்.கே.யில் சிறந்த அணித்தலைவராக உள்ளார். வெளிநாட்டு வீரர்களும் வரவேண்டும். நான் இந்திய பிரீமியர் லீக்கின் போட்டியை விரைவில் எதிர்பார்த்திருக்கிறேன், “என்று ரெய்னா கூறினார்.\nஐபி கிரிக்கெட் சூப்பர் ஓவல் லீக்கை ஊக்குவிப்பதற்காக நகரில், மெய்நிகர் விளையாட்டை அனுபவிக்கும் அனுபவத்தை அவர் விரும்பினார் என்று பேட்ஸ்மேன் கூறினார். இது மிகவும் உற்சாகமானது, உண்மையில் அது அனுபவித்தது. அரங்கில் நீங்கள் விளையாடுவதைப் போல் நிறைய சறுக்கி உள்ளது. நல்ல சத்தம் மற்றும் ரசிகர்களிடமிருந்து நல்ல மகிழ்ச்சி. இது மிகவும் உண்மையானது மற்றும் உங்களுக்கு ஒரு நிதானமான விளைவைக் கொண்டிருக்கிறது மற்றும் உங்கள் நண்பர்களுடன் அதை அனுபவிக்க முடியும், என்று அவர் கையெழுத்திட்டார்.\nBe the first to comment on \"சுரேஷ் ரெய்னா: விராட் கோஹ்லி லார்ட்ஸ் மைதானத்தில் உலகக் கோப்பை எம் எஸ் தோனி முக்கிய பங்கு வகிப்பார்\"\nடி 20 உலகக்கோப்பை 2021: இங்கிலாந்து அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.\nடி20 உலகக் கோப்பை: விராட்கோலிக்காக உலகக்கோப்பையை வென்று ஆக வேண்டுமென இந்திய அணி வீரர்களிடம் சுரேஷ் ரெய்னா கேட்டுக்கொண்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://karudannews.com/?p=121249", "date_download": "2021-10-19T13:05:36Z", "digest": "sha1:F6NP4QJXF3W4C33UPTCVBVG45B2TUEQ7", "length": 28841, "nlines": 92, "source_domain": "karudannews.com", "title": "சிஎஸ்கே மீண்டும் முதலிடம் பெங்களூரு அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது சென்னை அணி. - Karudan News", "raw_content": "\nHome Slider சிஎஸ்கே மீண்டும் முதலிடம் பெங்களூரு அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது சென்னை அணி.\nசிஎஸ்கே மீண்டும் முதலிடம் பெங்களூரு அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது சென்னை அணி.\nபிராவோவின் பந்துவீச்சு, பேட்ஸ்மேன்களின் பங்களிப்பு ஆகியவற்றால் ஷார்ஜாவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 35-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.\nமுதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் சேர்த்தது. 157 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணி 11 பந்துகள் மீதமிருக்கையில் 4 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.\nஇந்த வெற்றியின் மூலம் சிஎஸ்கே அணி புள்ளிப்பட்டியலி்ல் முதலிடத்துக்கு முன்னேறியது. இதுவரை 9 போட்டிகளில் 7 வெற்றிகள், 2 தோல்விகள் என 14 புள்ளிகளுடன் சிஎஸ்கே அணி இருக்கிறது.\nஆர்சிபி அணி 2-வது சுற்றில் சந்திக்கும் 2-வது தோல்வியாகும். கடந்த சீசனில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆர்சிபி அணி தொடர்ந்து சந்திக்கும் 7-வது தோல்வியாகும். இதுவரை 9 போட்டிகளில் 5 வெற்றிகள், 4 தோல்விகள் என 10 புள்ளிகளுடன் தொடர்ந்து 3-வது இடத்தில் இருக்கிறது. நிகர ரன்ரேட்டில் ஆர்சிபி மிக மோசமாக இருப்பதால், அடுத்தடுத்துவரும் போட்டிகளை நல்ல ரன்ரேட்டில் வெல்லாவிட்டால், புள்ளிகள் இருந்தாலும், கடைசி நேரத்தில் ப்ளேஆஃப் செல்வதில் சிக்கலை ஏற்படுத்தும்.\nஆர்சிபி அணியின் பேட்டிங் வரிசையைக் குலைத்த சிஎஸ்கே பந்துவீச்சாளர் பிராவோவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. பிராவோ 4 ஓவர்கள் வீசி 24 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.\nரெய்னா 17 ரன்களுடனும், தோனி 11 ரன்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து சிஎஸ்கே அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். ஐபிஎல் தொடரில் இருவரும் சேஸிங்கில் 4-வது முறையாக ஆட்டத்தை முடித்து வைத்துள்ளனர்.\nஆர்சிபி அணியைப் பற்ற��க் குறிப்பிட வேண்டுமென்றால், இப்படிப் போவோம் அல்லது அப்படிப் போவோம் என்ற ரீதியில்தான் விளையாடுகிறார்கள். தொடக்க வரிசை சிறப்பாக இருந்தால், நடுவரிசை வீரர்கள் கவிழ்த்துவிடுகிறார்கள், நடுவரிசை சிறப்பாக இருந்தால் தொடக்க வரிசை சொதப்பி விடுகிறார்கள். ஆல்ரவுண்ட் பெர்ஃபாமன்ஸ் என்பது ஆர்சிபியில் அரிதாகவே இருக்கிறது.\nஐபிஎல் தொடரில் தொடர்ந்து 7-வது ஆட்டத்தில், 7-வது தோல்வியை ஆர்சிபி அணி சந்தித்துள்ளது. கடந்த போட்டியில் 92 ரன்னில் ஒட்டுமொத்த பேட்டிங்கிலும் ஆர்சிபி கொலாப்ஸ் ஆனது.\nஆனால், இந்த ஆட்டத்தில் “ ஓபனிங்கெல்லாம் நல்லாதான்யா இருக்கு, பினிஷிங் சரியில்லையே” என்ற நடிகர் வடிவேலுவின் வசனம் போல், கோலி-படிக்கல் அமைத்துக் கொடுத்த அடித்தளத்தை அடுத்துவந்த நடுவரிசை பேட்ஸ்மேன்கள் பயன்படுத்திக் கொள்ளத் தவறிவிட்டனர்.\n100 மீட்டர் ஓட்டப் பந்தய வேகத்தில் ஓடிய ஆர்சிபி ரன்ரேட், பின்னர் நடைப் போட்டியாக மாறி, கடைசியில் உட்கார்ந்துவிட்டது.\n13 ஓவர்கள் வரை 111 ரன்களுக்கு எந்தவிக்கெட் இழப்பின்றி இருந்த ஆர்சிபி அணியின் ஸ்கோர் எப்படியும் 190 ரன்களை எட்டும் என கணக்கிடப்பட்டது. ஏனென்றால், ஏபிடிவில்லியர்ஸ், மேக்ஸ்வெல், டேவிட் போன்ற பேட்ஸ்மேன்கள் இருந்ததால் நல்ல ஸ்கோரை எட்டும் என எதிர்பார்க்கப்பட்டது.\nஆனால், அடுத்த 7 ஓவர்களில் வெறும் 45 ரன்களில் 6 விக்கெட்டுகளை இழந்ததை என்னவென்று குறிப்பிடுவது. அதிலும் கடைசி 4 விக்கெட்டுகளை வெறும் 16 ரன்களுக்குள் இழந்தது ஆர்சிபி அணி.\nஅதிலும் முதல் 10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 90 ரன்களை ேசர்த்து ஆர்சிபி அணி அசைக்க முடியாத நிலையில் இருந்தது. ஆனால் கடைசி 10 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 66 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளது. கோலி, படிக்கல் ஆட்டமிழந்தபின் ஆர்சிபியின் பேட்டிங் வரிசை ஆட்டம் கண்டது.\nஅதிலும் ஷார்ஜா போன்ற சிறிய மைதானத்தில் 156 ரன்கள் என்றஸ்கோரை வைத்துக் கொண்டு சிஎஸ்கே போன்ற ஜாம்பவான்களைக் கொண்ட அணியை கட்டுப்படுத்துவது என்பது கடினமானது. அதற்கு திறமையான பந்துவீச்சாளர்கள் தேவை, அது ஆர்சிபியில் இல்லை என்றபோதே தோல்வி உறுதியானது.\n157 ரன்களை எட்ட முடியாமல் சிஎஸ்கே அணி தோல்வி அடையும் என்று கணக்கிட்டால் ஒன்று சிஎஸ்கே அணியின் பேட்டிங் படுமட்டமாக இருக்க வேண்டும், அல்லது ஆ��்சிபி அணியின் பந்துவீச்சு மிகப்பிரமாதமாக இருக்க வேண்டும். இவை இரண்டும் நடந்தால்தான் ஆர்சிபி வெற்றி சாத்தியம். ஆனால், இரண்டுக்கும் வாய்ப்பில்லை ராஜா…. என்ற போதே சிஎஸ்கே வெற்றி உறுதியானது.\nவிராட் கோலி(53), படிக்கல்(70) ரன்கள் அருமையான தொடக்கத்தை அளித்தனர். சிஎஸ்கே பந்துவீச்சாளர்களுக்கு எந்தவிதமான வாய்ப்பும் கொடுக்காமல் பவுண்டரி, சிக்ஸர்களாக விளாசித் தள்ளினர். இருவரையும் பிரிக்க சிஎஸ்கே கேப்டன் தோனி பல பந்துவீச்சாளர்களை மாற்றி மாற்றி பயன்படுத்தியும் எந்தப் பலனும் இல்லை.\nமுதல் விக்கெட்டுக்கு 111 ரன்கள் சேர்த்த நிலையில் பிராவோ பந்துவீச்சில் 53 ரன்கள் சேர்த்த நிலையில் கேப்டன் கோலி ஆட்டமிழந்தார்.\nகேப்டன் விராட் கோலி தனக்குரிய பொறுப்பை வெளிப்படுத்தி பேட்டிங் செய்தார், பீல்டிங்கிலும் கெய்க்வாட்டுக்கு அருமையான கேட்ச் பிடித்து திருப்புமுனையை ஏற்படுத்தினார். அணையும் விளக்கு பிரகாசமாக எரியும் என்பதைப் போல், கேப்டன் பதவியிலிருந்து விலகப் போகும் நேரத்தில் கோலி தனக்குரிய பணியை சிறப்பாகச் செய்துள்ளார்.\nஅடுத்துவந்த டிவில்லியர்ஸ், படிக்கலுடன் சேர்ந்தார். இருவரின் அதிரடியால் ஸ்கோர் உயரும் என எதிர்பார்க்கப்பட்டது. டவில்லியர்ஸும் அதற்கேற்றார்போல் ஒரு சிக்ஸர் அடித்து மிரட்டினார். ஆனால், ஷர்துல் தாக்கூர் பந்துவீச்சில் டிவில்லியர்ஸ்(12), படிக்கல்(70 5பவுண்டரி, 3 சிக்ஸர் ) ஆகிய இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது ஆர்சிபிக்கு பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியது.\nஆர்சிபியின் நம்பிக்கை நாயகன் டிவில்லியர்ஸ் தொடர்ந்து 2-வது போட்டியிலும் சொதப்பினார். கடந்த போட்டியில் டக்அவுட்ஆகிய டிவல்லியர்ஸ் இதில் 12 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்\nஇந்த சீசனின் 2-வது பாதி தொடக்கத்தில் இருந்தே பேட்டிங்கில் திணறிவரும் மேக்ஸ்வெல் இந்த ஆட்டத்திலும் சொதப்பினார்.\nபாவம் மேக்ஸ்வெல் என்ன செய்வார்…. டைமிங் கிடைக்கவில்லை,பந்து பேட்டில் மீட் ஆகவில்லை. பிராவோவின் பந்துவீச்சில் தொடர்ந்து திணறிய மேக்ஸ்வெல் ஒரு சிக்ஸர் உள்ளி்ட்ட 11 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார்.\nஅடுத்துவந்த டிம் டேவிட்(1) சஹர் பந்துவீச்சிலும், ஹர்ஸல் படேல்(3) ரன்னில் பிராவோ பந்துவீச்சிலும் விக்கெட்டை இழந்தனர். 140 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள��� இழந்திருந்த ஆர்சிபி அணி அடுத்த 16 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது.\n20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் சேர்த்தது.\n157 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் சிஎஸ்கே அணி களமிறங்கியது. கெய்க்வாட், டூப்பிளசிஸ் நல்ல தொடக்கத்தை அளித்தனர். இருவரும் எந்த விதமான சிரமும் இல்லாத வகையில் ரன்களைச் சேர்த்தனர். அந்த அளவுக்கு ஆர்சிபி அணியின் பந்துவீச்சு அமைந்திருந்தது. பவர்ப்ளேயில் சிஎஸ்கே அணி விக்கெட் இழப்பின்றி 59 ரன்கள் சேர்த்தது.\nபவுண்டரி, சிக்ஸர் அடிக்க டூப்பிளசிஸ், கெய்க்வாட்டுக்கு எந்த சிரமமும் இல்லாத வகையி்ல்தான் ஆர்சிபி வீரர்கள் தவறான இடத்தில் பந்தை பிட்ச் செய்து பந்துவீசினர். ஆர்சிபி பந்துவீச்சைப் பார்த்து பலமுறை கோலியின் முகம் மாறியது.\nகெய்க்வாட் 38 ரன்கள் சேர்த்த நிலையில் சாஹல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்த சிறிது நேரத்தில் மேக்ஸ்வெல் பந்துவீச்சில் டூப்பிளசிஸ் 31 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார். மொயின் அலி, அம்பதி ராயுடு இருவரும் 3-வது விக்கெட்டுக்கு கூட்டணி அமைத்து அணியை வெற்றிக்குநகர்த்தினர். இருவரும் 3-வது விக்கெட்டுக்கு 47 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.\n2 சிக்ஸர் உள்பட23 ரன்கள் சேர்த்த மொயின் அலி ஹர்ஸல் படேல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஹர்ஸல் படேல்பந்துவீச்சில் ராயுடு 33 ரன்கள் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.\nசின்ன தல ரெய்னா, தல தோனி இருவரும் இணைந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். ரெய்னா 17 ரன்னிலும் தோனி 11 ரன்னிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். 18.1 ஓவர்களில் சிஎஸ்கே அணி 4 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது. ஆர்சிபி தரப்பில் படேல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.\nஇஸ்லாமியர்களுக்கு செந்தில் தொண்டமான் மிலாதுன் நபி வாழ்த்து\nபசு வதையை தடைசெய்தல் தொடர்பான சட்ட திருத்தத்திற்கு அமைச்சரவை அனுமதி.\nமுதல் பயிற்சி ஆட்டத்தில் சிக்ஸர், பவுண்டர்களாக பறக்க விட்ட இந்திய அணி.\nராஜபக்ச, பெர்னான்டோவின் பொறுப்பான பேட்டிங்கால் இலங்கை முதல் வெற்றி.\nஇந்திய – இலங்கைக்கான இராஜதந்திர உறவு பாலத்தை வலுப்படுத்தும் முக்கிய புள்ளியாக மாறியுள்ள செந்தில் தொண்டமான்\nகுதிகால் வெடிப்பால் அவதிப்படுபவர்களா நீங்கள்\nஊடக பணியால் ஹட்டன் குடாஓய விநாயகபுர மக்களுக்கு சுத்தமான குடிநீர்.\nஊடக துறையின் பணி காரணமாக ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் குடாஓயா விநாயகபுர மக்களுக்கு சுத்தமான குடிநீர் பெற்றுக்கொடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் நீர்வழங்கல் வடிக்கால் அமைச்சின் இணைப்பாளரும்...\nஇஸ்லாமியர்களுக்கு செந்தில் தொண்டமான் மிலாதுன் நபி வாழ்த்து\nமனித நேயம் தழைக்க நல்வழி காட்டிய நபிகள் நாயகம் அவர்கள் அவதரித்த திருநாளை மகிழ்வோடு கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்களுக்கு இ.தொ.காவின் உப தலைவரும்,பெருந்தோட்ட பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமான் மீலாதுன்...\nபசு வதையை தடைசெய்தல் தொடர்பான சட்ட திருத்தத்திற்கு அமைச்சரவை அனுமதி.\nபசு வதையை தடை செய்வது தொடர்பான 5 சட்டங்கள் மற்றும் கட்டளைச் சட்டங்களை திருத்துவது தொடர்பாகத் தயாரிக்கப்பட்ட சட்டமூலம் அரசியலமைப்பு ஏற்பாடுகளுக்கு இணங்கவில்லையென சட்டமா அதிபர் அறிவித்துள்ளார். அதற்கமைய, அது தொடர்பான திருத்தச் சட்டமூலத்தை...\nமுதல் பயிற்சி ஆட்டத்தில் சிக்ஸர், பவுண்டர்களாக பறக்க விட்ட இந்திய அணி.\nகே.எல்.ராகுல், இஷான் கிஷன் ஆகியோரின் காட்டடி ஆட்டத்தில் துபாயில் நேற்று நடந்த டி20உலகக் கோப்பைக்கு முந்தைய பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி. முதலில் பேட் செய்த...\nராஜபக்ச, பெர்னான்டோவின் பொறுப்பான பேட்டிங்கால் இலங்கை முதல் வெற்றி.\nராஜபக்ச, பெர்னான்டோவின் பொறுப்பான பேட்டிங்கால் அபுதாபியில் நேற்று நடந்த டி20உலகக் கோப்பைப் போட்டிக்கான ஏ பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் நமிபியா அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இலங்கை அணி. முதலில் பேட்...\nஇந்திய – இலங்கைக்கான இராஜதந்திர உறவு பாலத்தை வலுப்படுத்தும் முக்கிய புள்ளியாக...\n- உத்ர பிரதேசத்தில் உள்ள குஷி நகருக்கு முதலாவது நேரடி விமான சேவையை இலங்கைக்கு பெற்றுக்கொடுத்து இந்திய - இலங்கை அரச உயர்மட்ட பாராட்டுதல்களையும் பெற்றுள்ளார் - உத்ர பிரதேசம் குஷி நகருக்கும் இலங்கைக்கும்...\nகுதிகால் வெடிப்பால் அவதிப்படுபவர்களா நீங்கள்\nவெளியிடங்களுக்கு செல்லும் போது கால்களுக்கு அணிந்துள்ள காலணிகளை கழற்றி விட தர்�� சங்கடமாக உள்ளதா நம்மில் பெரும்பாலானோர் நமது முகத்திற்கு கொடுக்கும் அளவில் பாதங்களுக்கு பராமரிப்புக்களைக் கொடுப்பதில்லை. ஆனால் நமது உடலிலேயே நமது...\nசின்ன வெங்காயத்தை உணவில் சேர்த்துக்கொள்வதால் இத்தனை நன்மைகளா…\nமூல நோயால் அவதிப்படுவோர் உணவில் சின்ன வெங்காயத்தை அதிகமாக சேர்ப்பது நல்லது. நீர்மோரில் சின்ன வெங்காயத்தை வெட்டிப்போட்டு குடித்தாலும் பலன் கிடைக்கும். தினமும் சாப்பிடவேண்டிய காய்கறிகளில் சின்ன வெங்காயத்துக்குத்தான் முதல் இடம். ஆனால், உரிக்க...\nஆசிரியர் – அதிபர்கள் தொழிற்சங்கங்களின் முக்கிய அறிவிப்பு\nஎதிர்வரும் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் கடமைக்கு சமுகமளிக்காமல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக ஆசிரியர் – அதிபர்கள் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. அத்துடன் 25ஆம் திகதி முதல் பாடசாலைகளுக்கு செல்லவும், மாற்று தொழிற்சங்க நடவடிக்கைகளை...\nஇராகலை 5 வயது சிறுமியிடன் தனது சேட்டையைகாட்டிய சிறுவன் கைது.\nஇராகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அல்கரனோயா தோட்டத்தில் 16 வயதுடைய சிறுவன் ஒருவரை இராகலை பொலிசார் (17) இரவு கைது செய்துள்ளனர். அல்கரனோயா தோட்டத்தில் வசிக்கும் இச் சிறுவன் தனது பக்கத்து வீட்டில் உள்ள...\nஊடக பணியால் ஹட்டன் குடாஓய விநாயகபுர மக்களுக்கு சுத்தமான குடிநீர்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/195333", "date_download": "2021-10-19T12:25:00Z", "digest": "sha1:ROBSFRBT57FL5AGCC2TTRRMYWEO5GAU6", "length": 10643, "nlines": 82, "source_domain": "malaysiaindru.my", "title": "எதிர்க்கட்சித் தலைவராக அன்வர் – ‘மேம்படுத்தல்’ கடிதத்தைப் பெற்றார் – Malaysiakini", "raw_content": "\nஎதிர்க்கட்சித் தலைவராக அன்வர் – ‘மேம்படுத்தல்’ கடிதத்தைப் பெற்றார்\nநேற்று, எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தை ஓர் அமைச்சரின் அலுவலகத்திற்கு நிகராக உயர்த்துவதற்கான உறுதி கடிதத்தைப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் வழங்கினார்.\nடிஏபி அமைப்புச் செயலாளர் அந்தோணி லோக்கின் கூற்றுப்படி, இந்த மாற்றத்துடன், அன்வர் இப்ராகிம் ஓர் அமைச்சர் போன்ற பல்வேறு வசதிகளைப் பெறுவார்.\nமத்திய அரசு மற்றும் பக்காத்தான் ஹராப்பான் (பிஎச்) இடையே மாற்றம் மற்றும் அரசியல் நிலைத்தன்மை பற்றிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் (எம்ஒயு) வழிகாட்டல் குழுவின் இரண்டாவது கூட்டத்திற்கு முன்பாக, இஸ்ம���யில் சப்ரி அன்வரிடம் அந்த நிலை மாற்றத்தை அறிவித்தார் என லோக் தெரிவித்தார்.\nஇந்தச் சந்திப்பு நேற்று பிற்பகல் நாடாளுமன்ற கூட்ட அரங்கில் நடைபெற்றது.\n“கூட்டம் தொடங்குவதற்கு முன், எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தின் நிலையசோர் அமைச்சரின் அலுவலகத்திற்கு இணையான வசதிகளுடன் மேம்படுத்த எதிர்க்கட்சித் தலைவரிடம் பிரதமர் உறுதி கடிதத்தை வழங்கினார்,” என்று அவர் கூறினார்.\nபுத்ராஜெயாவும் பிஎச்-உம் செப்டம்பர் 13 அன்று ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர், இது நாட்டில் அரசியல் நிலைத்தன்மையை அடைய இரு தரப்பினரும் பல அம்சங்களில் புரிந்துணர்வை அடைந்ததற்கு பொருள்.\nபுரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம், நாடாளுமன்றச் சீர்திருத்தம், வாக்கு18, பிரதமர் அலுவலக வரம்புகள் மற்றும் நீதித்துறையின் சுதந்திரம் உள்ளிட்ட பல சீர்திருத்தங்களை அரசாங்கம் உறுதியளித்தது.\nபுதிய அரசியல் கலாச்சாரத்தைக் கொண்டு வாருங்கள்\nபதிலுக்கு, பிஎச் – பிரதிநிதிகள் சபையின் மிகப்பெரிய எதிர்க்கட்சி தொகுதி – B2022 வாக்கு மற்றும் தொடர்புடைய வழங்கல் அல்லது நிதிச் சட்டங்களுக்கு ஆதரவு வழங்கும் அல்லது விலகி நிற்கும்.\nவரவுசெலவுத் திட்டம் மற்றும் தொடர்புடைய மசோதாக்கள் அரசு மற்றும் பி.எச். இடையே கூட்டாகப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு ஒப்புக்கொள்ளப்படுகிறது.\nநம்பிக்கை வாக்கெடுப்பாகக் கருதப்படும் எந்தவொரு மசோதாவையும் பி.எச். ஆதரிக்கும் அல்லது தவிர்த்துவிடும், அதன் புள்ளிவிவரங்களும் பரஸ்பரப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு ஒப்புக்கொள்ளப்படும்.\nசமீபத்தில் ஒப்புக்கொண்ட சீர்திருத்த நிகழ்ச்சி நிரல்களைச் செயல்படுத்துவது குறித்து நேற்றையக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக லோக் கூறினார்.\nகூட்டாட்சி அரசியலமைப்பில் பல திருத்தங்கள், அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என்றார் அவர்.\nஇரண்டு வாரங்களுக்கு ஒருமுறை செயற்குழு கூட்டம் நடைபெறும் என்று முன்னாள் போக்குவரத்து அமைச்சருமான அவர் கூறினார்.\n“இது போன்ற சந்திப்புகள் நம் நாட்டிற்கு ஒரு புதிய அரசியல் கலாச்சாரத்தைக் கொண்டு வருகின்றன.\n“கட்சிகளுக்கு இடையே அரசியல் வேறுபாடுகள் இருந்தபோதிலும், நாட்டின் நலனுக்காக நாம் ஒன்றாக அமர்ந்து விவாதிக்கலாம் ம��்றும் பொதுவான காரணத்தைக் காணலாம்,” என்று அவர் கூறினார்.\nஇட்ரிஸ் ஹரோன் பிஎச் டிக்கெட்டில் போட்டியிடலாம்\nமலேசியப் பெரியவர்களில் 94 விழுக்காட்டினருக்கு முழு…\nபிரதமர்; தடுப்பூசி எதிர்ப்பாளர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களுக்கு…\nகட்சி தாவல் : அரசாங்கம் சர்வதேச…\n5,434 புதிய நேர்வுகள், 112 நாட்களில்…\nபடிவம் 5 மாணவர்கள் சுழற்சி முறையில்…\nநவம்பர் 20-ல் மலாக்காவில் இடைத்தேர்தல்\nமார்ஹேன் ஒன்றுகூடல் : கோவிட் -19…\nதிகேஎம் பதவி போராட்டம் : குற்றச்சாட்டுகளை…\nஎதிர்க்கட்சித் தலைவராக ஒரு மாதத்திற்கு RM33.5k…\nபண்டோரா ஆவணங்கள் வெளிப்பாட்டை விசாரிக்க எம்ஏசிசி…\nகோவிட்-19 (அக்.15): 7,420 புதிய நேர்வுகள்\nவெளிநாட்டு பயணிகளுக்கு எல்லைகளை மீண்டும் திறப்பது…\n‘மலிவு விலை வீடுகள் மனித உரிமையாகப்…\n‘ஐபிசிஎம்சி தேங்காய் போன்றது, ஐபிசிசி அதன்…\nசிலாங்கூரில் வேலையில்லாதவர் எண்ணிக்கை 165,000-ஆக உயர்ந்தது\n‘பத்து பூத்தே மத்திய அரசுக்குச் சொந்தமானது…\n‘எங்களை ஒதுக்கி வைக்காதீர்கள்’ – இந்திரா…\n‘தடுப்பூசி போடாத தனிநபர்களைப் பிடிக்க மாநிலம்…\nஅல்தான்துயா, பெங் ஹாக் மரணம் :…\nரட்ஸி : சுமார் 80 விழுக்காடு…\nமை டிரவல் பாஸ் இல்லாமலேயே வெளிநாடுகளுக்குப்…\nபார்ட்டி குவாசா ரக்யாட் : பிஎன்-உடன்…\nமாநில எல்லை கடந்த பயணம் –…\nபெரியவர்களுக்கு 89.7 விழுக்காடு முழு தடுப்பூசி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mugaiyurasadha.blogspot.com/2012_01_21_archive.html", "date_download": "2021-10-19T11:55:36Z", "digest": "sha1:37BPGNXEEBSRVGLKFRORJZ37OWPZLU7P", "length": 71556, "nlines": 143, "source_domain": "mugaiyurasadha.blogspot.com", "title": "அசதா: 21 January 2012", "raw_content": "\nமீன்கள் வெயிலில் காயத்துவங்கிய அந்தக் காலைப் பொழுதில் காற்றினூடாக நான்கு திசைகளிலும் பின் பறவைகளற்ற வான் நோக்கியும் பரவ ஆரம்பித்த மீன்வாடையால் மூக்கைச் சுளித்தபடி வெளியே வந்தவர்களுக்கு நேற்று ஊர் ஏரியில் மீன் கொள்ளையிட்டது நினைவிலாடியது. எவ்விதப் புகாருமற்றவர்களாய் மீன்வாடையோடு அந்நாளை அவர்கள் தொடங்கிய அக் காலையில் தேவாலயத்தின் பரந்த மைதானத்தைத் தவிர ஊரின் எல்லாவிடங்களிலும் மீன் காய்ந்தது. முற்றங்களில், மொட்டைமாடிகளில், அகலமான தெருக்களின் ஓரங்களில், இடமில்லாதபோது வீட்டுக் கூரைகளில், நடைபாதைகளில், நெல்லடிக்கும் களங்களில் என உயிரின் மினுமினுப்பு இன்னும் எச்சமிருந்த உடல்களை கா���ைச் சூரியனுக்குக் காட்டியபடி மீன்கள் பரவிக் கிடந்தன. பிறகே மீன்களைக் கண்ட காக்கைக் கூட்டங்களின் சந்தோஷ இரைச்சல் கேட்டது. அது அவற்றை விரட்ட முற்பட்ட பலவகைக் குரல்களையும் விஞ்சி ஒலித்தது.\nதன் அறையிலிருந்து வெளியே வந்த சின்ன ஃபாதர் தாமஸ் வழக்கமாய் பெரிய ஃபாதரின் அறையை நிறைத்து அறைவீடு முழுமையையும் வியாபித்திருக்கும் புகையும் சுருட்டின் மணத்தை எதிர்கொண்டார்.பிறகு மெதுவாகவே அவர் மீன்கள் வெயிலில் வதங்கும் வாசனையை நுகரத் தொடங்கினார். திடுமென அவ்வாசம் அவரை இன்னொரு காலத்தின் இன்னொரு வெளியின் சீதோஷ்ணத்துக்குள் கொண்டு நிறுத்தியபோது நிகழிலிருந்து வேறுபட்ட அந்தக் காற்றையும் வெயிலையும் வாசனைகளையும் மனிதர்களையும் அவர் உணர்ந்தார். கால நகர்வில் பின்னோக்கி இழுக்கப்பட்டவராகி, இறுகிப் படிமமாகிவிட்டவைகள் தடையற்று நீந்த ஆரம்பித்த தன் நினைவு மீன் வாசமேறி மிக ரம்மியமானதொன்றாகி ஆழ்மனத்தில் உறைந்துபோன ஞாபகத்தின் இடுக்குகளிலும் நுழைவதை அவர் கண்டார். அங்கே அவர் எட்டாம் வகுப்பு படிக்கும் அரைக் கால்சட்டையணிந்த சங்கோஜமிக்க பையனாக இன்னமும் குத்தகைதாரர்கள் மீன்பிடித்து முடித்திராத ஏரியின் கரையில் பொறுமையற்றுக் காத்திருந்த மக்கள் கூட்டத்துள் ஒருவராக நின்றிருந்தார். “ஊரே நவுந்து போயி கடலோரம் குடியேறிட்டமாதிரி இருக்கு சாமி” என்றபடி சோம்பாய் கொண்டு வந்த டீயில் மீன் மணத்தது.\nஅன்றைய பாடல் பூசைக்குத் தெரிந்து வைத்திருந்த பாடல்களை மேலோட்டமாக ஒரு முறை வாசித்துப் பார்த்த ஃபாதர் தாமஸ் வென்னீர் தயாராவதற்காகக் காத்திருந்த தருணத்தில் சுவரிலிருந்த அந்த ஓவியத்தைப் பார்த்தார். அதுவொரு பரந்த இயற்கைக் காட்சி ஓவியம். அவருக்கு முன்னிருந்த பாதிரியார்களில் யாரோ ஒருவர் வாங்கி மாட்டிவிட்டுப் போயிருந்த அந்த நீர்வண்ண ஓவியத்தில் முன்னணியில் வெளிறிய பூக்கள் காணப்பட்ட புல்வெளியையடுத்து மூடுபனியினூடாக துயரார்ந்த மலையொன்று தெரிந்தது. அம்மலையை சிரமத்துடன் ஏறிக் கடந்தபோது அந்தப் பக்கம் வறண்ட நிலக்காட்சியின் மையமாக ஏரியொன்றை அவர் கண்டார். வினோதமாக அந்தப்பக்கம் மூடுபனி இருக்கவில்லை. அங்கே நீர் துளியுமற்று வறண்டு முழுக்க முழுக்க மீன்களால் நிரம்பி விட்டிருந்த ஏரியில் தத்தளிப்புடன் சிறு���ியொருத்தி மூழ்கிக் கொண்டிருப்பதைக் கண்டார். அவள் அவர் எப்போதும் காண்பவளும் இப்போது கைவிடப்படுதலின் துயரத்தைக் கண்களில் கொண்டிருந்தவளுமான மெலிந்த தேகம் கொண்ட குறும்புக்காரச் சிறுமி. “நீரில்லாத ஏரியில் மீன்களால் பயமில்லை” தடுமாற்றத்துடன் தனக்குத் தானே சொன்னவராய் அவர் திரும்பி நடந்தார். ஆனால் நடுங்கிய கால்களை எவ்வளவு பிரயாசைப்பட்டும் நகர்த்த முடியாதவராய் அசைவற்று பீதியுடன் நின்றார். பின்னால் திரும்பிப் பார்க்கவும் அவருக்குத் துணிவில்லை. நீண்ட நெடுநேரம் அசைக்கமுடியாது தரையோடு பிணைந்துவிட்ட பாதங்களை இயலாமையோடு பார்த்தபடியிருந்தார். “கர்த்தர் நம் முன் செல்கையில் நமக்கு எங்கும் பயமில்லை சாமி, சுடுதண்ணி தயாராயிருக்கு” சோம்பாய் வெளியேயிருந்து குரல் கொடுத்தார்.\nபெரிய வலைகள், கைப்பிடியுடன்கூடிய கச்சா வலைகள், வாளிகள், பழைய வேட்டி, புடவை, துண்டு என அவரவர் மீன் ஆசைக்கும் மீன் பிடிக்கும் திறமைக்கும் ஏற்றவாறு கரைமீது நின்றிருந்த கூட்டத்தில் வெறுங்கையுடன் மீன்பிடி என்ற விளையாட்டுக்காய் வந்திருந்த சிறுவர்களே அதிகமிருந்தனர். இது போலப் பெருங்கூட்டமாய் மீன் பிடிக்க வாய்க்கும் சந்தர்ப்பங்கள் அரிது என்பதனால் ஊரே கூடித் திரண்டிருந்த அந்த ஏரியின் கரையில் தாமஸ் நின்றிருந்த இடத்திலிருந்து சற்றுத் தள்ளி நின்றிருந்த ஜோஸஃபின் தலையில் கவிழ்த்திருந்த பிளாஸ்டிக் வாளியை சற்றே உயர்த்தி அவனைப் பார்த்து முறுவலித்தாள். ஆரஞ்சு வண்ணப் பாவாடையும், வெள்ளைப் பூக்கள் விரவிக் கிடந்த, கைப்பகுதி புடைப்புடன் தைக்கப்பட்ட மேல்சட்டையும் அணிந்திருந்த மெலிந்த தேகத்தினளான அவள் அந்த மஞ்சள்நிற வாளியெனும் வினோதத் தொப்பியினால் ஒளிபொருந்தி வசீகரமிக்கவளாகி நின்றாள். இது போன்ற இடங்களில் அவளைக் காண முடியாதபடிக்கான ஒழுங்குக் கட்டுப்பாடுகள் மதிற்சுவராய் நின்ற குடும்பத்தில் பிறந்திருந்த அவள் அக் கட்டுப்பாடுகளை மீறுவதில் தனித்தவொரு சந்தோஷம் இருப்பதைக் கண்டுபிடித்தவளாயும் எப்போதும் அவற்றை மீறும் துணிவுள்ளவளாயும் இருந்தாள். திடீரென அவனறியாத ஏதோவொரு அன்னியப் பிரதேசத்திலிருந்து அங்கு வந்துவிட்டவளைப் போலிருந்தவளைப் பார்த்து பதிலுக்கு முறுவலித்த தாமஸை இனம் புரியாத ஒரு சந்தோஷம் பற்றிய���ு. வகுப்பில் உடன் படிக்கும் பெண்கள் யாருடனும் பேசியறியாதவனாக இருந்தபோதும் ஜோஸஃபினைக் பார்க்கையில் மட்டும் கிலேசமும் குளிர்ச்சியுமான கிளர்ச்சியொன்று தன்னுள் எழுந்து அடங்குவதை தாமஸ் உணர்ந்திருந்தான். சரியான குறும்புக்காரியும் அடாவடிக்காரியுமான அவள் தன்னைக் காணும் போது மட்டும் கண்களைத் தாழ்த்தி குறுஞ்சிரிப்போடு நாணிச் சென்றுவிடுவதையும் அவனால் புரிந்துகொள்ள முடியாமலிருந்தது. அவள் மஞ்சள் வாளியைக் கீழே இறக்காமல் ஓரக் கண்ணால் அவனையே பார்த்துக் கொண்டிருக்கையில் உச்சிச் சூரியன் அவளைப் பார்த்தபடியே மேற்கே நகர ஆயத்தமாகியது. “ராத்திரி பொரிச்ச தலப்பெரட்டயக்கூட விடாம பிடிச்சிட்டுத்தான் கரைஏறுவானுங்க போலருக்கு” கூட்டத்திலிருந்த ஒரு முதியவள் சலித்துக் கொண்டாள்.\n`தேனினிமையிலும் ஏசுவின் நாமம் திவ்ய மதுரமாமே`. அஸ்தகால மணிக்கப்புறம் ஒலித்த ரிக்கார்டைக் கேட்டபடி கண்விழித்த பாதருக்கு அன்று ஞாயிற்றுக்கிழமை என்ற நினைவு வந்தது. அருகே மேசையில், போர்த்தப்பட்டிருந்த மெல்லிய வெள்ளைத் துணிக்குள்ளாக வெக்கைமிகு இரவொன்றை எதிர்கொண்டு உறைந்திருந்த அக்கார்டியனை எடுத்துக் கழுத்தில் மாட்டிக் கொண்டதும் மெதுவாக இளகிய அக்கார்டியன் இறுக்கம் தளர்ந்த துருத்தியினூடாக தன்னைத் ஆசுவாசப்படுத்திக் கொண்டு தயாரானபோது “உட்கார்ந்தபடி அக்கார்டியன் வாசிப்பது படுத்தபடி கக்கூஸ் போவதற்கு சமம்”, மேஜர் செமினரியில் பயின்ற காலத்தில் பாதர் லாசரஸ் கடும் நெடிமிக்க சுருட்டுப் புகையினூடாக உரத்துச் சிரித்தபடி சொன்னதும் தான் தனிமையில் அக்கார்டியன் வாசிக்கும் தருணங்களிலெல்லாம் மாறாத அதே நெடியுடன் ஒலிப்பதுமான அக்குரலை ஃபாதர் தாமஸ் அன்றும் கேட்டார். நரைத்து அழுக்கேறிய தாடியின் ரோமங்களைக் கடந்து பரவும் அந்த சுருட்டு நெடி பாதர் லாசரஸின் வாசம். அவர் புகைத்த சுருட்டிலிருந்து மட்டுமல்லாமல் அவருக்குள் எங்கேயோயிருந்த அந்தரங்கமான வாசனைகள் கலந்ததுமாய் அது இருந்தது. நெருப்பில் புகையும் வெறும் புகையிலையின் மணமாக மட்டும் அது இருந்ததில்லையென்பதை ஒரு பாதிரியாராகி இந்த ஊருக்கு வந்தபின் நாளெல்லாம் இந்த அறைவீட்டில் தன்னை சூழ்ந்திருக்கும் பெரிய பாதிரியாரின் சுருட்டு வாசத்தை ஒப்பிட்டு அவர் உணர்ந்து ���ொண்டிருந்தார். அக்கார்டியன் மட்டுமல்லாது தாமஸுக்கு எவ்வளவோ விஷயங்களில் தெளிவு பெற உதவியிருக்கிறார் பாதர் லாசரஸ். பேராசிரியராக குருத்துவக் கல்லூரியில் அவர் கற்பித்த இறையியல் பாடத்துக்கும் நடை போகிற மாலை நேரங்களில் மர்ஃபி டவுன் சிறுவர்களோடு சேர்ந்து கிரிக்கெட் விளையாடுவதோடல்லாமல் பலநேரம் அவர்களோடு நிஜமாகவே சண்டைபோட்டு கோபமாக ஆட்டத்தை முறித்துக்கொண்டு வருவது போன்ற செய்கைகளுக்கும் இடையிலான ஒரு விசித்திர வெளியில் அவர் தன்னை நிறுத்தி வைத்திருந்தார். ‘தாமஸ், திஸ் மேன் ஈஸ் எ ரியல் க்ராக்பாட், அன் எக்ஸ்ட்ரீம் எக்ஸென்ட்ரிக்’ தாமஸ் அவரோடு நெருக்கமாகத் தொடங்கிய நாட்களில் கால்பந்து ஆட்டமொன்றின் போது இணையாக ஓடிவந்தபடியே மூத்த செமினரியன் அருள் டேவிட் குசுகுசுப்பாக சொன்னதோடு அவரைப் பற்றி தாமஸ் ஏற்கனவே அறிந்திருந்த செமினரியில் எப்போதும் உலவும் வதந்திகளையும் ஒப்பித்தான். அதில் முத்தாய்ப்பனது அவர் ஒருபால் உறவில் நாட்டங்கொண்டவர் என்பது. ‘உன் பின்புறத்தை நீ பத்திரமாய் பார்த்துக்கொள்வது நல்லது’ மூச்சு வாங்க ஆங்கிலத்தில் சொல்லிவிட்டு பந்தைக் காலில் காவியபடி அருள் டேவிட் விலகியோடினான்.\nஎக்ஸ் சுபேதார் மிக்கேல்சாமி மதராஸ் என்ஜினியர்ஸில் பாய்ஸ் பட்டாளம் தொடங்கி ஆனரரி கேப்டன் வரையிலான தனது முப்பத்தியிரண்டு வருட சர்வீஸைப் பற்றிப் பேச ஆரம்பித்தாரென்றால் அது கால் நூற்றாண்டுக்கும் சற்றுகூடிய இந்திய ராணுவத்தின் வரலாறாகவும் மாறிவிடுவதால் எழுபத்தியொன்றில் பாகிஸ்தான் சண்டையின்போது வங்கதேச எல்லையில் இறைச்சி கிடைக்காமல் அணில்களைச் சுட்டுத் தின்ன நேர்ந்த வீரர்களின் அவலம் தொடங்கி, எண்பத்து நான்கில் ஆபரேஷன் ப்ளூ ஸ்டாரின்போது பொற்கோவிலுக்குள் பூட்ஸ் கால்களுடன் நுழைய நேர்ந்த வீரர்களது மனநெருக்கடி வரையான சுவாரஸ்யமிக்க பின்னணித் தகவல்களை நீங்கள் வேறு யாரிடமும் அத்தனைத் துல்லியமாகப் பெற முடியாது. ஆனால் அவர் அதே சம்பவங்களை ஒரு சிறிதும் கலப்படமின்றி அதே நபர்களிடம் திரும்பத் திரும்பச் சொன்னபடியிருந்ததனால் அவர் பேச ஆரம்பித்து பேச்சின் கடிவாளத்தை இறுக்கி அதன் அடி வயிற்றில் பூட்ஸ் காலின் பின்புறத்தால் குத்தி வேகமூட்ட முனையும்போது கேட்டுக் கொண்டிருப்பவர் அங்கிருந்��ு கிளம்புவதற்கான கற்பனையான ஒரு காரணத்தை உருவாக்கியிருப்பார். முதிர் வயதின் பிசகுகள் படிந்த தன் ஞாபகப் பரப்பில் யாரொருவரையும் ஐயப்பட அறியாதவராக மாறிவிட்டிருந்தருந்த அவர் சொல்லப்பட்ட காரணத்தினை கரிசனத்துடன் கேட்டு வந்தவரை வழியனுப்பி வைத்துவிட்டு சோர்வுடன் பேச்சை லாயத்தில் கட்டுவார். மனைவி பாக்கியமரியின் மரணத்துக்குப் பின் மௌனம் சகிக்க முடியாத சகவாசியாகிப்போனதால் பேச்சு அவரது தீராத விருப்பமாக மாறியிருந்தது. தொலைபேசிகளின் அண்மையில் பெற்றபாசம் பேணுபவர்களாக பிள்ளைகள். வடநாட்டில் குடும்பத்தோடு இருக்கும் பெரியவன் மோசஸ், அடுத்தவன் ஸ்டாலின் கடல் தாண்டி சிங்கப்பூரிலிருக்க அவன் மனைவி தாய்வீட்டிலிருந்தாள். கடைக்குட்டி ஜோஸஃபின். ஜோஸஃபினின் நினைவு அவரைத் தடுமாற வைத்தது. அவளைப் பற்றிய நினைவு எப்போதும் மிக்கேல் சாமியின் நினைவாற்றலின் செதில்களை உதிர்த்துவிடச் செய்து, பழகியதானாலும் அந்தப் பழைய வலியினை நிகழ்காலத்தினுடையதாகவும் மாற்றிவிடுவது. பாக்கியம் எவ்வளவு சொன்னாள். ஏன் அப்படி நடந்துகொண்டோம். எங்கிருந்து அப்படியொரு மூர்க்கம் வந்தது. ஆடிக்கொண்டிருந்த நாற்காலி நின்றபோது மிக்கேல்சாமியின் விழியோரம் துளி நீர் தெரிந்தது. சலனமும் நிச்சலமுமான மனஓட்டம் சில கணங்கள் குமிழியிட்டுப் பின் அடங்கியது. போர்ட்பிளேரில் ஏழே நாட்களில் ஒரு விமான ஓடுபாதையை அமைக்கத் தன் கம்பெனிக்கு கமாண்டர் கர்னல் ராம்நாத் உத்தரவிட்டதும் அவர் லாயத்திலிருந்து திரும்பக் குதிரையொன்றை அவிழ்த்துத் தயாரானார். திரும்பவும் நாற்காலி ஆடத்தொடங்கியது.\n“விபச்சாரத்தில் சிக்கிய பெண்ணைக் காப்பாற்ற ‘உங்களுள் பாவம் செய்யாதவன் அவள் மீது முதல் கல்லை எறியட்டும்’ என்றவர் ‘ஒரு பெண்ணை இச்சையோடு நோக்கும்போதே அவளோடு உன் மனதில் நீ விபச்சாரம் செய்தாயிற்று’ எனச் சொல்வது முரணாயிருக்கிறது - ஒரு லிபரல் சடாரென கன்ஸர்வேடிவ் பள்ளத்தில் இறங்குவது போல”.\nபதிலாக எதுவும் சொல்லாமல் பாதர் லாசரஸ் எழுந்து அக்கார்டியனில் ‘உன் திரு யாழினில் இறைவா’ வாசிக்க ஆரம்பித்தார். அவர் இந்தப் பாடலை வாசிக்கிறார் என்றால் உற்சாகமான மனநிலையில் இருக்கிறார் என்று அர்த்தம். அபூர்வமாகவே அவர் இந்தப் பாடலை வாசிப்பார். அன்று ‘யாழினை நீயும் மீட்டுகையில், இந்த ஏழையின் இதயம் துயில் கலையும்’ வரியினை சங்கதிகள் எல்லாம் சேர்த்து இரண்டு மூன்று தரம் திரும்பத் திரும்ப வாசித்தார்.\n“ஃபாதர் இன்னைக்கு ரொம்ப உற்சாகமாக இருக்கீங்க போல”\nஃபாதர் லாசரஸ் சிரித்தார். அக்கார்டியனை மெதுவாக மேசைமீது வைத்தபின் சொன்னார் “தாமஸ், பைபிள்ள ஏசுவுக்கு லிபரல் இமேஜ் உண்டாகற அல்லது உண்டாக்கப்படற இடங்கள்ள நீ சொன்ன முதல் சந்தர்ப்பமும் முக்கியமான ஒண்ணு. ஆனா நீ குறிப்பிடும் இந்த இரண்டு சந்தர்ப்பங்களையும் ஒப்பிட்டு அவர் கன்ஸர்வேடிவோனு நினைக்கத் தூண்டறது உன்னுடைய வயசு”. ஃபாதர் மறுபடியும் சிரித்தார். சிரிப்பை நிறுத்திவிட்டு ஒரு கணம் தாமஸின் கண்களையே உற்றுப் பார்த்தவர் கேட்டார் “யார் அந்தப் பெண்\nஎதிர்பாராத இந்தக் கேள்வி தாமஸை சற்றே நிலை குலைய வைத்தது. அவன் மௌனமாக அமர்ந்திருந்தான். அவன் தோளில் ஆதரவாய்க் கை வைத்தார் “கமான் மை பாய், ஐ வாஸ் ஜஸ்ட் கிடிங்”.\n“இல்ல பாதர், உங்ககிட்ட நான் பொய்சொல்ல விரும்பல.” நிலை மீண்டவனாக தாமஸ் சொன்னான்.\nஅந்த வருடம் மீன்பாடு உண்மையிலேயே மிக அதிகமாக இருந்தது. கடந்த எட்டு நாட்களாக எங்கிருந்தெல்லாமோ வியாபாரிகள் வந்து கூடை கூடையாக சைக்கிளில் வைத்து ஏற்றிக் கொண்டு போனதில் குத்தகைத் தொகையைவிடவும் பலமடங்கு லாபம் கண்டபின்னும் ஏரியில் தீராமல் பெருகியபடி இருந்த மீன்கள் குத்தகைதாரர்களையே வியக்க வைத்தது. மீன்பிடி முடிந்தபின் இரவுகளில் வானிலிருந்து வந்து யாரோ மீன்களைக் கொட்டித் திரும்பவும் ஏரியை நிரப்பிவிடுகிறார்களோ எனவும் சிலர் ஐயப்பட்டனர். ஆனாலும் அவர்களுக்கு மீனைக் கொள்ளையிட இன்னமும் மனம் வரவில்லை. கரையில் நின்றிருந்த கூட்டமோ கட்டுமீறிப்போகும் அளவை எட்டியிருந்தது.ஏரியினுள் மீன்கள் குவிக்கப்பட்டிருந்த இடத்தில் மேற்பார்வையில் ஈடுபட்டிருந்த குத்தகைதாரர்களில் ஒருவரான முன்னாள் சபைமணியம் அந்தோணி மற்ற குத்தகைதாரர்களோடு ஏதோ பேசினார். இவர் சொன்னதை அவர்கள் பலமாக மறுத்தது போலிருந்தது. அவர்கள் தொடர்ந்து பேசியபடி இருந்தனர். சற்று கழித்து அவர்களிடையேயான பேச்சு வாக்குவாதமாய் மாறியது. கரை மீதிருந்தவர்கள் ஆர்வம் கூடியவர்களாய் கவனிக்க ஆரம்பித்திருந்தனர். மீன் கொள்ளையிடுவார்கள் என வந்து இதுவரை அவர்கள் ஐந்து நாட்களா��� ஏமாற்றத்துடன் திரும்பிப் போய்க்கொண்டிருந்தனர். வாக்குவாதத்தின் முடிவில் கோபத்துடன் விலகிவந்த அந்தோணி மாறாத அதே கோபத்துடன் தலையில் கட்டியிருந்த துண்டை அவிழ்த்தார். கரைமீது நின்றிருந்த கூட்டத்தில் சலசலப்பு அடங்கி திடீர் அமைதி வந்தது. அந்தோணி துண்டை தலைக்கு மேலே உயர்த்தி கரையைப் பார்த்து மூன்று முறை வலுவாகச் சுழற்றினார். அடுத்த கணம் ‘மீன் கொள்ளையிட்டாச்சு’ என்ற உரத்த குரல்களும் ‘ஓ’ வென்ற இரைச்சலுமாக சரிவான கரையில் திமுதிமுவென ஓடி ஊர் மொத்தமும் ஏரிக்குள் இறங்கியது.\nஞாயிற்றுக்கிழமைகளில் நடக்கும் இரண்டாவது பூசையின்போது பாட்டுக் குழுவில் தாமஸ் ஃபாதர் அக்கார்டியன் வாசிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஞாயிற்றுக்கிழமை பூசை கடன் பூசை, அதிலும் இரண்டாவது பூசை வாரத்தின் சிறப்பான பூசை, பாடல் பூசை. காலை முதல்பூசைக்குப் பெரியவர்களும் வயதானவர்களும் கறி எடுத்து சமைக்கும் வேலையிருக்கும் பெண்களும் வந்து போய்விடுவதால் எட்டுமணிக்கு நடக்கும் இரண்டாவது பூசையின்போது தேவாலயம் எப்போதும் சிறுவர்களாலும் வயசுப்பிள்ளைகளாலும் நிறைந்திருக்கும். அக்கார்டியன் வாசிப்பதற்காகவே தாமஸ் ஃபாதர் தனக்கு ஒதுக்கப்பட்ட கிளைப் பங்குகளில் விரைவாக பூசைகளை முடித்துக் கொண்டு எட்டு மணிக்குள் திரும்பி விடுவார். அவர் அக்கார்டியன் வாசிக்க ஆரம்பித்த தொடக்க நாட்களில் ஒருநாள் எல்லோரும் பூசையை கவனிக்காமல் அக்கார்டியனில் அமுங்கி விரியும் துருத்தியையும் அதிலிருந்து சிலீரென்று ஒலித்த சன்னமான இசையையும் வியப்புடன் கவனித்தபடி ‘ஆண்டவர் உங்களோடு இருப்பாராக’ என்ற பெரிய ஃபாதரின் பாடலுக்கு ‘உம்மோடும் இருப்பாராக’ என பதில் பாட மறந்த ஒரு சந்தர்ப்பத்தில் பெரிய ஃபாதருக்கு அக்கார்டியன் மீதும் அதை வாசித்த தாமஸ் ஃபாதர் மீதும் வந்த கோபத்தில் சற்று நேரம் பூசையை நிறுத்திவிட்டு அமைதியாக இருந்தார். அப்போதுமுதல் யார் பார்வையிலும் படாத, பாடல் குழு அமருமிடத்துக்கு அருகேயிருந்த பெரிய தூணின் உட்குழிந்த பகுதியை தனக்கும் தன் அக்கார்டியனுக்குமான இடமாக ஃபாதர் தாமஸ் தேர்ந்துகொண்டார்.\nஅதிகாலையில் விலகாத தூக்கத்துடன் பாடல் பாடும் கொயர் பிள்ளைகள் மறந்தும் கண்ணயர்ந்துவிடாதபடிக்கு ‘திடும் திடும்’ என அதன் பெடல் கட���டைகள் மரச்சுவரில் மோதி அதிர்வுகள் உண்டாகும்படி தேவாலயத்தின் சர்ச் ஆர்கனை வாசித்த சவரிமுத்து வாத்தியார்தான் பெரிய ஃபாதருக்கு அடுத்து அக்கார்டியனை எதிரியாகப் பார்த்த இரண்டாவது நபர். தன் ஏகபோக ராஜ்ஜியமாயிருந்த பாடல் குழுவில் நுழைந்து கம்பீரம்மிக்க தனது பழைய ஆர்கனை ஒரு ஒன்றுமற்ற வஸ்துவாக்கிவிட்ட அந்த வினோத இசைப்பெட்டியை, ‘வாசிச்சுப் பார்க்கறீங்ளா’ எனக்கேட்டு தாமஸ் ஃபாதர் அதை வாசிக்கவும் கற்றுக் கொடுத்த தினம் வரை தீராத வன்மத்துடனே பார்த்து வந்தார். “ஆர்மோனியத்தத்தான் ரெண்டு பக்கமும் கட்டைங்களை வச்சு நடுவுல துருத்திய திணிச்சு மாத்தி செஞ்சிருக்கான். துருத்தியோட சேர்ந்து கட்டைங்களும் முன்ன பின்ன போய்வருது அவ்ளோதான். ஆனா நம்ம ஆர்மோனிய சவுண்டு என்ன கம்பீரம். இதென்னமோ எச்சிலடைச்சிக்கிட்ட பீப்பி மாதிரி முக்கிக் முக்கிக் கத்துது.” மரியசவரி வாத்தியரோடு சேர்ந்து தண்ணியடிக்கும்போது அக்கார்டியன் பற்றி சவரிமுத்து வாத்தியார் இப்படிச் சொல்லித்தான் புரையேறும் வரை சிரித்தார்.\nஏரியின் முட்டிக்காலளவு தண்ணீர் தாமஸுக்கு இடுப்பைத் தொடுமளவாக இருந்தது. ஏரி முழுக்க ஆட்களாய் இறங்கிய கணம் நீர்ப்பரப்பின் ஓரங்களிலிருந்த பீதியுற்ற தவளைகள் நாலாபுறமும் தாவித் தாவி ஓடி கரையோரப் புகலிடங்களையடைந்தன. சுற்றியிருப்பவர்கள் யாரென்று அடையாளங்காண முடியாதிருந்த நெரிசலில் கச்சா வலையை நீரில் அமுக்கி வெளியே எடுக்கையில் எதிரே குனிந்திருந்த பெண்ணின் வழித்துக்கட்டிய சேலையை, ஆணின் வேட்டியை, சிறுமியின் பாவாடையை மேலும் அது உயர்த்த சில இடங்களில் கோபமும் சில இடங்களில் சிரிப்புமாய் மீன்பிடி தொடர்ந்தது.எல்லோரும் மீன்களைப் பிடிப்பதில் மும்முரமாயிருக்க படபடப்பும் சந்தோஷமுமாய் நீரிலிறங்கிய தாமஸுக்கு முதலில் என்ன செய்வதெனத் தெரியவில்லை. குழம்பிச் சகதியாகிக் கொண்டிருந்த நீரில் கைகளை மூழ்கவிட்டு அளைகையில் வழுவழுவென நழுவியும் துள்ளியும் சென்றவைகளில் எதுவும் கைகளில் சிக்குவனவாகவில்லை. சற்றுநேரம் கழித்து சிக்கியவொன்றை வெளியே எடுத்து அது தவளையெனக் கண்டதும் அச்சத்துடன் தூர எறிந்தான். அப்படியே அளைந்து கொண்டிருந்தவன் சற்று கழித்து ஒருசேரக் கிடைத்த சின்னச் சின்ன ஆனால் அவ்வளவாக வழுவழுப்பற்ற நான்கு ஜந்து மீன்களை வலுவாகப் பற்றி மேலே கொண்டுவந்தபோது ஒரு பெண்ணின் விரல்களும் அவற்றோடு வளையல்களணிந்த அவள் கைகளும் மேலே வந்தன. சிரிப்புடன் அவன் முன்னே ஜோஸஃபின் நிமிர்ந்தெழுந்து நின்றாள். அழுக்கு மஞ்சளாய் சகதி நீர் வழிந்து சொட்டிய கைகளைப் பற்றியபடி அவர்கள் நின்றனர். அவனும் சிரித்தான். விரல்களின் ஸ்பரிஸம் அவர்களுள் அந்தப் புதுவித விளையாட்டின் ருசியை தீவிரப்படுத்தியது. சுற்றி நின்றவர்கள் கவனமெல்லாம் தங்கள் கலன்களை மீன்களால் நிறைப்பதில் இருக்க, வந்து சிக்கிய மீன்களைக்கூடப் பிடிக்காமல் நெடுநேரம் இருவரும் நீருக்குள் விரல் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தனர். அன்று அந்த ஏரியின் நீர் மீன்கள், நண்டுகள், நத்தைகள், தவளைகள், சில நீர்க்கோழிகள், விலாங்கு மீன்கள் எனத் தவறாய் கணிக்கப்பட்டு பின் தூர எறியப்பட்ட தண்ணீர்ப் பாம்புகள் என தன்னிலிருந்து கொடுத்து பிள்ளைக் காதலொன்றின் களிகூடிய விளையாட்டில் தன்னைச் சேர்த்துக் கொண்டது. நிலத்தின் விளையாட்டுக்கள் நீருக்குள் நிகழ்கையில் அதீத மர்மமும் அமானுஷ்யமும் கூடியனவாக அவை மாறிவிடுவது நிலத்தைப் போலன்றி வெறும் பார்வையாளனாக இராமல் நீரும் விளையாட்டில் ஒருவராகத் தன்னைச் சேர்த்துக் கொள்ளும்போதுதான்.\nஅன்றொருநாள் காலைப்பூசை முடிந்து போகும்போது தூம்பாக் கொட்டகைக்குள்ளிருந்தபடி கிசுகிசுப்பான குரலில் அழைத்து “ஹாப்பி பர்த்டே” என ஜோஸப்பின் நீட்டிய சாக்லெட் டப்பாவை தாமஸின் தம்பியும் தங்கையும் துப்பறிந்து கண்டுபிடித்த நாளில் அம்மாமுன் பதில் பேச வார்த்தைகளற்று நின்றான். ரோஸாலி தன் மகன் மீது வைத்திருந்த நம்பிக்கையை பளபளப்பான அந்த டப்பாவும் அதிலிருந்த விலைகூடிய இனிப்புகளும் இரக்கமற்று உடைத்திருந்தன. தனக்குப் பாத்தியதையல்லாத ஒரு திருட்டுப் பட்டத்தினை ஏற்றுக்கொண்டிருப்பதன் மூலமாக தன் வாழ்வில் அதுவரையும் அதன்பிறகும் தான் அனுபவித்திராத பவித்திரமான ஒரு பிரியத்தின், காதலின் இதம்கூடிய வெம்மையை எப்போதைக்கும் இழக்காமல் இருந்திருக்கலாம் என்பது மட்டுமல்லாது யூதாஸ் ஸ்காரியோத்தினது போலாகிய தனது உண்மை தன்னிடம் பிரியம் காட்டியது தவிர்த்து ஒரு களங்கமுமறியாத ஆத்துமாவொன்றை சிலுவையில் பூட்டி வதைத்துவிட்டதில் காட்டிக் கொடுத்தலின் துரோகநிழலாவது தன் மேல் விழாமல் தப்பியிருக்கலாம் என பிறகான காலங்களில் பலநூறு தரம் தாமஸ் கழிவிரக்கத்துடன் நினைத்து மறுகியிருக்கிறார். மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து அப்பாவின் போட்டோ முன்பாக பைபிளில் அவனிடம் சத்தியம் வாங்கிய அம்மா அந்த சாக்லேட் டப்பாவை அதற்கு பாத்தியதையானவளது வீட்டில் ஒப்படைத்தாள். ஹவில்தாரிலிருந்து நாயப் சுபேதாராக பதவி உயர்வு பெற்ற கையோடு விடுமுறையில் வந்திருந்த மிக்கேல்சாமி தன் நரம்புகளில் ஓடி திடப்பட்டுவிட்ட ஒழுங்கின் கிரமங்களை தன் மகளே பகிஷ்கரித்துவிட்டதாக சீற்றமடைந்தார். அடுத்து நடந்தவைகளுக்கு மிக்கேல்சாமி என்ற நபரை பொறுப்பாக்க முடியாதபடிக்கு ஒழுங்கின் வளையாத செங்கோல் அவரை வழிநடத்தியது. மறுநாள் காலையே ஜோஸஃபின் கேரளத்தில் வசிக்கும் தன் சித்தி வீட்டுக்கு அனுப்பப்பட்டாள். மனைவி பாக்கியமரியின் கெஞ்சல்களும் கதறல்களும் அவரை சற்றும் அசைக்கவில்லை. ஜோஸஃபின் கேவியபடி ரயிலேறும்போது அவர் சொன்னார் “நானாக விருப்பப்பட்டு உன்னைப் பார்க்க வரும்வரை, எத்தனை வருடங்களானாலும் சரி, என் முகத்தில் வந்து நீ விழிக்கக் கூடாது.” மீறல்களுக்கு அனுமதியில்லாத தனது ஆளுகைப் பிரதேசத்தில் நிகழ்ந்த முதல் அத்துமீறலை சரியான வகையில் சீர் செய்த நிம்மதியும் பெருமையும் முகத்தில் தெரிய ரயில் நிலையத்திலிருந்து குலையாத கம்பீரத்துடன் அவர் வெளியே வந்தார்.\nஜெர்மனியின் டூபிங்கன் பைபிள் விமர்சனப் பள்ளி, திருச்சபை தடை செய்த ‘கறுப்பு வேதாகமம்’, கைவிடப்பட்ட புதிய ஏற்பாடுகள், பைபிளின் பல ஆகமங்களும் புதிய ஏற்பாட்டின் பல பகுதிகளும் திறமையாக எப்படி எடிட் செய்யப்பட்டன என்பது பற்றியெல்லாம் ஃபாதர் லாசரஸ் அவனோடு பேசியிருக்கிறார். “பின்காலத்தில் கடுமையான நிறுவனமயமாதலுக்கு ஆட்பட்டது உள்ளிட்ட கிறித்தவத்தின் இந்த எல்லாப் பிசகுகளையும் மூடி மறைக்குமளவுக்கான ஆளுமையும் அகதரிசனமும் மிக்க மனிதராக இயேசு கிறிஸ்து இருப்பதும், உலகத்தின் மீதான கிறித்தவ நிறுவனத்தன்மையின் இறுகிய பிடியும் எந்தக்காலத்திலும் எப்படிப்பட்ட சவால்களை எதிர்கொண்டாலும் அது உயிர்த்திருக்க உதவும்”. ஒரு பாதிரியாராக கிறித்தவத்தைக் கண்மூடி ஏற்கவேண்டிய அவசியமில்லை என ஃபாதர் லாசரஸிடமிருந்து தாமஸ் கற்றுக்கொண���டிருந்தார். வாழ்வின் அர்த்தத்தை நமக்கு விதிக்கப்பட்டவற்றினூடாக வாழ்ந்து தேடுவதும், கேள்விகளுக்கு வெளியேயிருந்தல்லாமல் கேள்விகளின் வழியாக தொடர்ந்து நகர முற்படுவதுமே சிறந்த வழிமுறையாக இருக்கமுடியும் என்பார். ஜோஸஃபின் தந்த சாக்லெட் டப்பாவினூடாக அல்லாமல் அதற்கு வெளியே நின்று தான் தீர்வைத் தேட முற்பட்டிருக்க வேண்டாம் என தாமஸ் எண்ணிக் கொண்டார். ஃபாதர் லாசரஸ் பரிசளித்த அக்கார்டியன் ஒரு பெரிய சாக்லெட் டப்பாவாய் இருந்தது. அதனூடாக கடக்க வேண்டிய தருணங்களை முன்னிட்டு அதை எப்போதும் பத்திரமாய் தன்னோடு வைத்திருக்க உறுதிகொண்டார் தாமஸ்.\nஅவித்த மரவள்ளியின் வாசனை நிறைந்ததிருந்த திருவனந்தபுரத்து புறநகரொன்றின் சற்றே குறுகலான தெருவிலிருந்த அவ்வீட்டின் முன் புதிய ஆடைகளும், இனிப்புகளும், இன்னபிற தின்பண்டங்களும் நிறைந்த பையுடன் ஆட்டோவில் இறங்கிய மிக்கேல்சாமி இரண்டு வருடங்களில் தன் மகள் எப்படி வளர்ந்திருப்பாள் என்ற கற்பனை மேலிட்ட சாதாரணத் தகப்பனாக அழைப்பு மணியை அழுத்தினார். கண்டிப்பான ஒழுக்கம் என்கிற ஆயுதத்தாலன்றி மனிதனுக்கு விமோசனமில்லை எனும் உறுதிப்பட்ட தனது கோட்பாட்டின் மீதான நம்பிக்கையினால் தன் மகள் பெரும் ஒழுக்கச் சரிவிலிருந்து காப்பாற்றப்பட்டது குறித்த நிம்மதியையும் அவர் கொண்டிருந்தார்.அவர் மனைவியின் தங்கை வீட்டில் சிரம பரிகாரம் முடித்தவர் தாளாத ஏக்கத்தை அடக்கியவராய் இயல்பாக `ஜோஸஃபின் எங்கே` எனக் கேட்டார். உள்ளே சம்மனசுமரி சென்ற திசையில் சற்று நேரம் அமைதியும் அதைத் தொடர்ந்து உரத்த பேச்சாக மறுக்கும் குரலும் கெஞ்சல்களும் மாறி மாறிக் கேட்டன. அப்படியே நெடு நேரத்துக்கு நீடித்த உரையாடலின் முடிவில் சம்மனசுமரி மட்டும் திரும்பி வந்தாள். `ஒண்ணுமில்ல… அவளுக்கு இன்னும் அந்தக் கோவம் போகல… உங்களப் பார்க்க மாட்டேங்கறா… சின்னப்புள்ளதான கொஞ்சநாள் போயி விவரம் புரிஞ்சா சரியாயிடுவா…`. மிக்கேல்சாமி சற்று நேரம் ஒன்றும் பேசாமலே அமர்ந்திருந்தார். பிறகு சொல்லிக்கொள்ளாமலே எழுந்து வெளியே வந்தவர் எப்போதும் வட்டத்தின் விளிம்புகள் வளைவானதாகவும், சதுரத்தின் பக்கங்கள் நேர்க்கோடாகவும் எல்லாருக்கும் இருந்துவிடுவதில்லை என எண்ணிக்கொண்டார். தன் ஒழுக்க விதிகள் ஏதோவொன்றைக் கா��த் தவறிவிட்டதாக அவருக்குத் தோன்றியது. நுட்பமான அது புலப்பட்டும் புலப்படாதது போலிருந்தது. அதன் பிறகு பலமுறை, ஜோஸஃபின் அவரை மட்டுமல்ல அவர் வீட்டில் யாரையுமே பார்ப்பதில்லை என்பதில் திண்ணமாக இருந்தாள்.பாக்கியமரி தொலைவே நின்று தன் மகளை அவளறியாமல் பார்த்துவிட்டு வர நேரும் அவலத்தை அழுதழுது பேசி ஓய்ந்தாள்.சமரச முயற்சிகள் எதற்கும் அசைந்து தராத ஜோஸஃபின் தன் புகைப்படம் கூட தன் வீட்டுக்குப் போகாமல் பார்த்துக்கொண்டாள். தன் குடும்பத்திடமிருந்து தன்னை முற்றிலுமாகத் துண்டித்துக் கொண்ட அவள் இறுதி வரை அக்குடும்பத்துக்கு தொடர்பற்றவளாய் வாழ்ந்து மடிவது என்ற வைராக்கியமொன்றையே வாழ்வின் குறிக்கோளாய்க் கொண்டாள்.\nஇன்டர்வெலுக்கு வெளியே வந்த பள்ளிக் கூடப் பிள்ளைகள் மூன்றரை மணிக்கெல்லாம் திடீரென இருள ஆரம்பித்த வானத்தைக் கண்டு முதலில் வெருண்ட போதும் கனமான துளிகள் விழக்கண்டு ஆரவாரக் கூச்சல் எழுப்பினர். ஆலங்கட்டிகள் கடும் ஓசையுடன் கூரைகள் மீதும் சிமெண்ட் தரைமீதும் விழுந்தன. திறந்த வைளியில் இருந்த சில பானைகள்கூட உடைந்தன. பின் வானம் திறந்துகொண்டதுபோல மழை கொட்ட ஆரம்பித்தது.யாரும் எதிர்பாராத இக் கோடைமழை குழந்தைகளை குதூகலப்படுத்தியது. ஆலங்கட்டி சேகரிக்கும் சாக்கில் மழையில் நனைய விரும்பிய பிள்ளைகள் டீச்சர்களின் அதட்டலுக்குப் பயந்து வகுப்பறைகளுக்குள் ஒடுங்கினர். ஆலங்கட்டிகள் மேல்விழுந்தபோது ஊரெங்கும் காய்ந்துகொண்டிருந்த மீன்கள் உயிர்பெற்ற பாவனையில் சற்றே துள்ளின. பிறகு கொட்டிய மழை சடுதியில் வெள்ளமாய் மாறியபோது மீன்களை சேகரித்து பத்திரப்படுத்த யாருக்கும் அவகாசம் இருக்கவில்லை. கிட்டத்தட்ட எல்லா மீன்களையுமே மழைவெள்ளம் தன்னுள் இழுத்துக் கொண்டுவிட்டிருந்தது. ஆலங்கட்டிகள் வீழ்ந்த ஓசையும்,மழை கொட்டிய பேரோசையும் சின்ன ஃபாதர் தாமஸின் மதிய தூக்கத்தை முன்கூட்டியே கலைத்துவிட்டதில் எழுந்து வெளியே வந்தவர் ஜன்னலோரம் நின்று திரண்டோடிய வெள்ளத்தைப் பார்த்தார்.வெள்ளம் எவ்வெவற்றையோ தன்னுடன் சேர்த்தபடி கலங்கலாய் ஓடியது. தேவையற்றவை தேவையுள்ளவை என எல்லாமே ஒன்றாகி வெள்ளத்தில் கலந்தோடின.அவர் அழுக்காய் பெருக்கெடுத்தோடிய வெள்ளத்தைப் பார்த்துக்கொண்டிருக்கையில் அதில் ஊரெல்லாம் கா���வைக்கப்பட்டிருந்த மீன்களும் பயணிப்பதைக் கண்டார். சுழித்தோடிய வெள்ளத்தில் மிதந்த உயிரற்ற மீன்கள் நீந்தும் பாவனையிலிருந்தன. வெள்ளத்தின் ஓட்டம் அவற்றுக்கு அளித்திருந்த அந்த பாவனை பொருந்தாமல் கூட்டம் கூட்டமாய் எல்லாக் குப்பைகளையும் போல புரண்டோடிய அவைகள் எப்படியேனும் திரும்ப உயிர்பெற்றுவிட வேண்டும் என்ற உத்வேகத்துடன் செல்வன போலிருந்தன.அவர் அம்மீன்களையே பார்த்துக் கொண்டிருந்தார். ஒரு மஞ்சள் நிற வாளியும் சில சாக்லெட் டப்பாக்களும்கூட வெள்ளத்தில் பயணிப்பதை அவர் கண்டார். “நாளைக்குக் காலையில மூக்கப் பிடிச்சிக்கிட்டு எழுந்திருக்க வேண்டியிருக்காது சாமி” தக்காளி சூப்புடன் வந்த சோம்பாய் சொன்னார். ஏறத்தாழ காய்ந்த மீன்களெல்லாமே வெள்ளத்தோடு போனபின்பும் தீராமல் மழை பெய்தபடியிருக்கையில் அவசரமாய் தன் அறைக்குத் திரும்பிய ஃபாதர் தாமஸ் அக்கார்டியன் அங்கே பத்திரமாய் இருக்கிறதா என ஒருமுறை பார்த்துக் கொண்டார்.\nஅவர்களது விளையாட்டு சலிக்காததாய் நெடு நேரத்துக்கு நீண்டுகொண்டிருந்தது. பிறகு, ஒற்றை மீனுமின்றி கரையோரம் தவளைகள் சூழக்கிடந்த அவளது மஞ்சள் வாளிக்கு ஒரு சிறு மீனையேனும் கொண்டு சேர்க்க உறுதி கொண்டவர்களாய் அவர்கள் விளையாட்டிலிருந்து நீரை விலக்கிவிட்டு எல்லோரையும் போல கை கோர்த்து மீன் தேடினர். நீருக்குள் தன்னைப் பிடிக்க நீண்ட பல நூறு வலைகளையும் கைகளையும் தப்பித் துள்ளியும் நீந்தியும் வந்த கெளுத்தியொன்று விளையாட்டில் கோர்த்துக் கிடந்தபடி தன்னைப் பிடிக்க முயன்ற இரு ஜோடிக் கைகளெனும் வலையினை தன் கொடுக்கால் வெட்ட முனைந்தது.ஒரு கையில் மீனுடன் வலிதாளாமல் மறுகையை உதறினான் தாமஸ். அவன் கையைப் பரிசோதித்துவிட்டு எங்கோ ஓடிப்போனவள் சுண்ணாம்புடன் திரும்பி வந்தாள். கடிவாயைச் சுற்றி சிவந்திருந்த விரல்பரப்பில் அவள் வைத்த சுண்ணாம்பின் வெண்மை மெல்லக் காதலின் வண்ணமாய்ப் பரிணமிக்கத் தொடங்குகையில் ஏரியினை மேற்குச் சூரியன் நிறம் மாற்றத் தொடங்கியது. அந்த மாலையில் மனம் இன்னும் ஏரிக்குள் மிதந்தபடியிருக்க வானத்தின் பொன்மஞ்சள் நிறைந்திருந்த பிளாஸ்டிக் வாளிக்குள் மீசை விரைக்க நீந்திக்கொண்டிருந்த ஒரேயொரு கெளுத்தி மீனுடன் எல்லாரோடும் சேர்ந்து அவளும் வீடு திரும்பினாள்.\nஅறை���ீடு - ஊரில் பாதிரியார்கள் வசிக்கும் பங்களா. சோம்பாய் - பாதிரியார்களுக்கு சமையல் செய்பவர். தூம்பா - இறந்தவரின் உடலை வைத்து கல்லறைக்கு எடுத்துச் செல்லப் பயன்படுத்தப்படும் வண்டி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2009/07/22/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF-2/", "date_download": "2021-10-19T10:57:46Z", "digest": "sha1:ILZE4WECTYA2SWNEP4QEP5CR5SNWJQJW", "length": 84966, "nlines": 236, "source_domain": "solvanam.com", "title": "ஜான் சிபேலியஸ் – இயற்கையின் ஊடாக இசை நிகழ்வுகள் – பகுதி 2 – சொல்வனம் | இதழ் 256 | 10 அக். 2021", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 256 | 10 அக். 2021\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nஜான் சிபேலியஸ் – இயற்கையின் ஊடாக இசை நிகழ்வுகள் – பகுதி 2\nரா. கிரிதரன் ஜூலை 22, 2009\nஇரு பாகங்களாக வெளிவரும் கட்டுரையின் இரண்டாவது (நிறைவுப்) பகுதி இது.\nமுதல் பகுதியை இங்கே படிக்கலாம்: பகுதி 1\nசிம்போனி என்ற இசை வடிவத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் சிபேலியஸ். இவர் தன் முதல் சிம்பொனி (E Minor) மூலம் உலகத்திற்கு கட்டுப்போன வடிவத்தை அறிமுகப் படுத்தினார். சிம்பொனி இசை வடிவத்தின் மூலம் தாளத்தையும், சுரஸ்தானங்களையும் சேர்ந்து ஒலிப்பதற்கான வடிவத்தை வகுத்ததும் இவரே.\nதன் முதல் இரு சிம்பொனிக்களையும் 1898, 1902 ஆம் ஆண்டுகளில் எழுதி முடித்ததுமில்லாமல் அவற்றைப் பற்றிய விரிவான விவாதத்தையும் தொடங்கி வைத்தார். மேலோட்டமாகப் பார்க்கும்போது நாடகத்தன்மைகளான ரொமாண்டிஸிஸம், மதிப்பீடுகளுக்காக உருவாக்கும் பகுதிகளென தோற்றம் கொண்டாலும், இந்த இரு சிம்பொனிகளும் அவற்றின் மெளனமான கருத்தாக்கங்களாலேயே மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது. அந்த இசைக்கோப்பு முழுவதும் ஒரு தொடர் முணுமுணுப்பைப் போலவும், மெல்ல அது மேலெழுந்து பெரிய சலசலப்பை உருவாக்கும் காற்றாறு போலவும் சிபேலியஸ் வடிவமைத்திருந்தார். இசை ஒருங்கிணைப்பாளர் கஜானுஸ் – ‘இந்த காலகட்டத்திலிருக்கும் நீதி மற்றும் ஒழுக்கக்கேட்டுக்கு எதிர்ப்பாக அழும் இதயம் உடைந்த ஆன்மாவின் குரலாக’ இந்த சிம்பொனியை உருவகப்படுத்தினார்.\nகொஞ்சம் கொஞ்சமாக சிபேலியஸின் சிம்பொனிகள் ஃபின்லாந்து நாட்டின் விடுதலை எழுச்சியுணர்வை எழுப்பும் அமைப்புகளாக மாறியது. சிபேலியஸ் முதலில் இதை எதிர்த்தாலும், ஃபின்லாந்து நாட்டில் அப்போது ��ிலவிய ரஷ்ய ஆதிக்கத்துக்கு எதிர்ப்பாகச் செயல்பட தன்னாலான முயற்சியென அதை ஆதரிக்கத்தொடங்கினார்.\nஇதற்குப் பிறகு பெரிய எதிர்ப்பார்புடன் வெளியான மற்றொரு இசைத் தொகுப்பு – Valse Triste என்னும் வயலின் இசைத் தொகுப்பாகும். இதை வயலின் கான்செர்ட்டோ எனக் குறிப்பிடுவர். கான்சர்ட்டோவின் அமைப்பு சிம்பொனியிடமிருந்து மாறுபட்டது. மூன்று பகுதிகளைக் கொண்டிருக்கும் கான்சர்ட்டோவில், பொதுவாக இருக்கும் ஆர்க்கெஸ்ட்ரா வாத்தியக் கருவிகளுடன் ஏதாவதொரு வாத்தியக்கருவி முதன்மையாக இசைக்கப்படும். இந்த வாத்தியத்தை lead என்று பரவலாக குறிப்பிடுவர். சிம்பொனியில் இத்தகைய ஒரு கருவிக்கு அதிக முக்கியத்துவம் இருக்காது. கான்சர்ட்டோவில் வயலின், புல்லாங்குழல், செல்லோ (Cello) போன்றவை முதன்மையாக இருக்கும்.\nஇதையெல்லாவற்றையும் தாண்டி அமெரிக்காவையும் இவர் பக்கம் திருப்பிய இசை மூன்றாம் சிம்பொனியே ஆகும். இதில் அவர் இசை முழுமையை அடைந்ததாக இசை ஆர்வலர்கள் கூறுவர். முதல் சிம்பொனியைப் போல தொல்லிசை சார்ந்ததோ, இரண்டாவதைப் போல கவித்துவ எழுச்சியோ இந்த மூன்றாவதில் கிடையாது. அகவயமான மனித மனத்துடன் போராட்டம் மெளனமாக நிறுவப்பட்ட இசை வடிவம். இசைக்கான மீமொழியில் புனையப்பட்டது. அதேசமயம் இது சிம்பொனி என்ற பழங்கால வடிவத்தையும் சற்று புரட்டிப் போட்டது எனலாம்.\nமாஹ்லெருக்குக் கூட உவப்பாக இல்லாத இந்த உருவ சிதைத்தலை வடிவ நேர்த்தியாக எல்லா இசைக் கலைஞர்களும் இன்று கையாண்டு வருகின்றனர். அப்படி என்ன செய்தார் நம் நாயகன்\nபொதுவாக சிம்பொனி வடிவங்களில் நான்கு பகுதிகள் இருக்கும். பல சிம்பொனிகளின் கரு இந்த பகுதிகளில் ஒளிந்திருக்கும்.\n2. அடாஜியோ (மிக மெதுவான Adagio)\n3. செர்ஷோ (வேகமான Sherzo)\nநடு இரண்டு பகுதிகளில் மட்டுமே சில மாற்றங்களை இசையமைப்பாளர்கள் செய்து வந்தனர். ஆனால், சிபேலியஸோ கடைசிப் பகுதியை வேகவேகமாகத் தொடங்கி, சீரான ஒரு ராணுவ அணிவகுப்பு போலத் தொடர்ந்து, கடைசியில் பிரம்மாண்டமாக முடித்திருந்தார். இந்த மாற்றத்தை மாஹ்லர் போன்றவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. `சிம்பொனி என்பது மாற்றங்களே இல்லாத ஒரு உலகம் போன்றது, எல்லாவற்றையும் அது தன்னுள் இழுக்க வேண்டுமே தவிர அதிலிருந்து புது அர்த்தங்களை வெளிக்கொணர ஒன்றுமேயில்லை` – என வாதிட்டார்.\nஇதனால் சிபேலியஸ் ஒன்றும் மனம் தளரவில்லை. தொடர்ந்து ஐரோப்பாவில் ஷோன்பெர்க், ஸ்ட்ராவின்ஸ்கி போன்றோரால் நடக்கும் இசைப் புரட்சியை கவனித்து வந்திருந்தார். ஜெர்மன் இசை மாற்றங்களினால் சோற்வுற்ற சிபேலியஸ் தன் தாய் நாட்டுக்கே திரும்பச் சென்று, இயற்கை அழகுகளோடு இருந்த அய்னோலா (Ainola) என்ற ஊரில் தன் வாழ்நாள் முடியும் வரை வாழ்நதார்.\nநான்காவது சிம்பொனி ஐரோப்பாவே பார்த்திராத ஒன்று. இப்போது சிபேலியஸ் செய்தது தாளம் அல்லது நேரத்திலான புரட்சி.\nநான்காவது சிம்பொனி ஐரோப்பாவே பார்த்திராத ஒன்று. இப்போது சிபேலியஸ் செய்தது தாளம் அல்லது நேரத்திலான புரட்சி. இசையின் அடிப்படை நுணுக்கத்தின் ஊடாகவே சிபேலியஸின் புரட்சி நிகழ்ந்து வந்துள்ளதற்கு இது ஒரு சிறந்த உதாரணம். தாளம் இசையின் ஆதாரம். அந்த ஆதாரத்தை வேரோடு மாற்றாமல், அதன் உபயோகத்தை மாற்றினார். C, D, F-Sharp, E என சுரக்கோர்வையின் மூன்றாம் சமன்பாட்டை மட்டுமே உபயோகித்தார் (Third triad). ஆனால் இந்த நோட்ஸ்களுக்கு மத்தியிலிருந்த நேரத்தை மட்டும் மாற்றிக்கொண்டே சென்றார். முதலில் முக்கால் நேர அளவு ஆரம்பித்து, பின்னர் அதற்கும் பாதியாய் குறைந்து, மீண்டும் பாதி அளவு நேர வித்தியாசத்தில் தாளத்தை மாற்றிக்கொண்டேயிருந்தார். இதன் மூலம், சிம்பொனி ஒலிகள் குறுகி, விரிந்து ஒருவித புவியீர்ப்பு சக்தியினால் ஈர்க்கப்படுவதைப் போல மெல்ல மெல்ல மெளனத்தை நோக்கி மெதுவாக பயணித்தது.\nஇசை ஒலிகளில், குறிப்பாக சிம்பொனி போன்ற பல்லிசை (Polyphony) இசைத் தொகுப்புகளில் conflict எனப்படும் முரணியக்கம் முக்கியமான ஒன்றாகும். ஒரு இசைக் கருவி மேல் ஸ்தாயிக்களில் ஒலிக்கும்போது, மற்றொன்று அதே நேரத்தில் கீழ் ஸ்தாயியில் ஒலிக்கும். இது ஒருவித முரண்பாட்டை விளைவித்தாலும், கேட்பதற்கு இனிமையாகவே இருக்கும். இவை இரண்டும் ஒலித்து முடியும் வரை கேட்பவருக்கும் இந்த நெருக்கடி இருக்கும். இதைப் போன்ற நெருக்கடியை உருவாக்குவதே ஒரு நல்ல இசைப் படைப்பின் அடிநாதமாகும். அந்த நெருக்கடி கடைசியில் ஆதார சுருதி இசைக்கப்படும்போதே விடுவிக்கப்படும். அதனாலேயே, tonal இசை வடிவங்கள் எங்கு தொடங்கினாலும் ஆதார சுருதியை நோக்கியே பயணிக்கும்.\nஇதைக் கச்சிதமாக சிபேலியஸ் பயன்படுத்தினார். C-யில் தொடங்கும் இந்த முதல் பகுதி, F-Sharp க்கு வர பல மாற்றுப் பயணங்களை மேற்கொள்ள���ம். F-Sharpஇல் ஒலிக்கும் இசை நெருக்கடியை ஏற்படுத்தி, திரும்ப எப்போது C என்ற நோட்ஸுக்கு வருமென ஏங்கவைக்கும். இந்தப் பாணியை மேற்கொண்டே சிபேலியஸ் நான்காவது சிம்பொனியில் வெற்றி பெற்றார். இதைப் போல் மெதுவாகத் தொடங்கும் இந்த சிம்பொனி, கடைசிப் பகுதியில் அனைத்து வாத்தியக் கருவிகளும் முழங்க ஒரு பெரிய ஆரவாரத்துடன் முடிவடையும்.\nதன் ஐந்தாவது சிம்பொனியின் கருவை சிபேலியஸ் இயற்கையிலிருந்தே பெற்றுக் கொண்டார். அவர் இருந்து வந்த அய்னோலா வீட்டைச் சுற்றி அற்புதமான ஏரி இருந்தது. அந்த ஏரியைச் சுற்றி பல மரங்களுடன் ஒரு காடும் இருந்தது. அந்த மரத்தினூடாக வெளிவந்து, ஏரி மேல் பறக்கும் அன்னம் உருவாக்கிய பிம்பங்களை இந்த சிம்பொனியில் உபயோகப்படுத்தியுள்ளார் சிபேலியஸ். ஒரு நாள் தன் சிறு குறிப்பேட்டுடன் நடைப் பயிற்சிக்குச் சென்றிருந்த சிபேலியஸ் பதினாறு அன்னங்கள் ஒரே போன்றதொரு இறக்கை விரிப்புடன் அந்த ஏரி மீது பறந்த காட்சியைப் பார்த்தார். பல நிமிடங்கள் இந்தக் காட்சியை பார்த்த சிபேலியஸ் அன்னத்தின் பாடல்கள் என அதை வருணித்தார்.\n‘நான் அன்று பார்த்த பறவைகள் என் நினைவில் தங்கிவிட்டன. என் வாழ்வின் ஜீவாதாரமே அவர்கள் தான். இந்த உலகத்தில் இசை, கலை, இலக்கியம் போன்ற எதுவுமே எனக்கு முக்கியமில்லை. இந்த பறவைகள் காண்பித்த காட்சி, அதன் சத்தம் மட்டுமே போதும்’ – எனத் தன் நாட்குறிப்பில் எழுதியிருந்தார். இந்த பறவைகளின் பயணம், அவற்றின் ஒலிகள் கிளப்பிய எண்ண ஓட்டங்களே இந்த ஐந்தாவது சிம்பொனி.1915களில் வடிவமைக்கப்பட்ட இந்த சிம்பனியில், இசைப் புரட்சி வடிவங்களின் எந்த பாணியிலும் இல்லை. கடிகார முட்கள் போல ஒரே வித சுழற்சியைக் காணும் பறவைகள். அவற்றைப் பற்றிய இசையில் இயக்கவியலின் முதல் பரிணாமங்களை இப்போது இசை விமர்சகர்கள் காண்கிறார்கள்.\nஆறாவது மற்றும் ஏழாவது சிம்பொனி, டாபையோலா (Tapiola) என்ற இசைக் கவிதை மட்டுமே எஞ்சிய நாட்களில் அவர் அமைத்த சில இசை கோப்புகள். அவை மிகப் பெரிய வெற்றியைப் பெறவில்லை. தன் வாழ்நாளின் கடைசி வரை எட்டாவது சிம்பொனிக்காக உழைத்துக் கொண்டிருந்தார். ஆனால், அவர் மனைவின் கூற்றுப்படி, தான் இறப்பதற்கு பல மாதங்களுக்கு முன்னாலேயே அந்த கோப்புக்களை எரித்து விட்டதாகவும், அதன் மேல் தனக்கு நம்பிக்கை போய்விட்டதெனவும் கூ���ியிருக்கிறார்.\nஇரண்டாம் உலக யுத்தத்திற்குப் பின்\nசிபேலியஸ் Valse Triste எழுதிய 1910ஆம் காலகட்டத்திலேயே குடிப்பழக்கத்திற்கு தன்னை ஆட்படுத்திக்கொண்டார். சீராக வெளியான இவர் படைப்புகளில் அதன் தேக்கம் தெரியாவிட்டாலும், இவர் புழங்கி வந்த நட்பு வட்டாரம் இவரை ஒதுக்கத் தொடங்கியது.ஒரே காலகட்டத்தில் மிகத் தெளிவாகவும், அதே நேரத்தில் குழப்பமான மனநிலையிலும் இருந்து வந்ததாக இவரும், இவர் நண்பர்களும் எழுதிய நாட்குறிப்புகள் தெரிவிக்கின்றன்.\nரஷ்ய அரசிடமிருந்து விடுதலை பெற, ஃபின்லாந்து ஜெர்மனியை ஆதரித்தது. 1939 ஆம் ஆண்டு ஹிட்லர் போலந்தை ஆக்கிரமித்து, ஃபின்லாந்தை பகடைக் காயாக மாற்றினார். இதனால், சிபேலியஸ் உட்பட ஃபின்லாந்து மக்கள் , ரஷ்ய ஆட்சியிலிருந்து விடுதலை கிடைத்தால் போதுமென, ஹிட்லரை ஆதரிக்கத் தொடங்கினர். நாஜிப் படைகளை சிபேலியஸ் ஆதரித்தபோது, இசை உலகம் ஸ்தம்பித்தது. பின்னர் தன் நாட்குறிப்புகளில் இதைப் பற்றி குறிப்பிட்டு – `எப்படி ஆர்ய எண்ணங்களுக்கு துணைப் போகிறாய், சிபேலியஸ் ` என தன் செயல்களையே கடிந்து கொண்டார். அதே சமயம் கழிவிரக்கத்தால் மனம் நொந்து போனார். இவை அனைத்திற்கும் தீர்வாகக் குடிப்பதை மட்டுமே நாடினார்.\nஇங்குதான் மாஹ்லர், ஸ்ட்ராவின்ஸ்கி போன்ற கலைஞர்களுடன் வேறுபடுகிறார் இவர். மாஹ்லர் தன் எல்லாவித துன்பங்களுக்கும் வடிகாலாக, தன்னுள்ளே இசையைத் தேடி, அதை மெருகேற்றி அனுபந்தம் அடைந்தார். ஸ்ட்ராவின்ஸ்கியோ ரஷ்ய கொடுங்கோலாட்சியில் இசைக்க மாட்டேன் என சபதம் செய்து அதை நிறைவேற்றியும் காட்டினார். சிபேலியஸ்ஸிடம் இந்த இரு குணங்களும் காணப்படவில்லை. அவர் இசையும் சரி, நடத்தையும் எந்தவிதமான அகவய, புறவய எதார்த்தங்களை சந்திக்க முடியாமலேயே இருந்தது.\nகலைக்குண்டான குணாதிசயம் – மனித மனங்களை மேன்மைப்படுத்துவது. அந்த உயரிய ஓர் உண்மையை அடையவே தொல்லிசை ஆவணங்களும், இசை அமைப்பாளர்களும் பாடுபட்டனர். உணர்வுமயமான இசைப் பாடல்கள், தெளிவான கரு முதலியவையே அந்த மேன்மையை உருவாக்க முடியும். மாஹ்லரின் இசையிலும், பாக்கின் இசையிலும் இதைக் கண்டெடுத்த மக்கள் சிபேலியஸ்ஸிடம் அப்படிப்பட்ட எதிர்பார்ப்பை ஏமாற்றத்துடனேயே சந்தித்தனர்.\nஆனால் இவர்கள் யாரும் காணாத ஒன்றை சிபேலியஸ் தன் வாழ்நாளில் பார்த்தார். புரட்சி���ரமான atonal வகை இசைகள் சிதைந்து போனதையும், மக்களுக்கு மெலடி என்ற அமைப்பின் மேல் திரும்ப வந்த பற்றும் தான் அது. முப்பது வருடங்கள், போர் நடக்கும் போது avant-garde போன்ற புது வடிவ முயற்சிகளை வேடிக்கை மட்டுமே பார்த்த இவர், சாகாத புரட்சியை தன் இசை மூலம் நிரூபித்தார். திரும்பவும் 1940 களின் முடிவிலேயே சிபேலியஸ் அமெரிக்க மற்றும் ஐரோப்பா இசை மேதைகளால் போற்றப்பட்டார். தான் வாழும் காலத்திலேயே போற்றப்படுவதும், மீட்டெடுக்கப்படுவதும் பல இசை மேதைகளுக்கு நடக்காத ஒன்றாகும்\n1957 ஆம் ஆண்டு, தன் தொண்ணூற்றி ஒன்றாம் வயதில் இறந்த சிபேலியஸ், தன் சாவை ஆரோக்கியமான மனப்பக்குவத்துடனே எதிர்கொண்டார் – `குடிக்காதே, புகைப்பிடிக்காதே என எனக்கு அறிவுரை செய்த வைத்தியர்கள் யாரும் இப்போது உயிருடன் இல்லை` – என தன் நண்பர்களிடம் கூறியிருக்கிறார்.\nமார்டோன் பெல்ட்மேன், 1984 ஆம் ஆண்டு ஜெர்மனியிலுள்ள ஒரு பயிற்சிப் பள்ளியில் சிபேலியஸின் ஐந்தாவது சிம்பொனியை இசைப்பதற்கு முன் கூறியது: `தங்களைப் புரட்சியாளர்கள் என அறிவித்தவர்கள் உண்மையிலேயே பழமைவாதிகள், தங்களைப் பழமைவாதிகளாகக் கண்டவர்களின் படைப்புகளே புரட்சிகரமாக உள்ளன`.\nOne Reply to “ஜான் சிபேலியஸ் – இயற்கையின் ஊடாக இசை நிகழ்வுகள் – பகுதி 2”\nPingback: சொல்வனம் » இசைவழி ஓடும் வாழ்க்கை - பகுதி 2\nPrevious Previous post: அமெரிக்காவில் ஜெயமோகன்\nNext Next post: சீனாவின் தலைவலி இந்தியாவின் நிவாரணி\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவக் கட்டுரை அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அயல் விழா அரசியல் அரசியல் கட்டுரை அறிவிப்பு அறிவியல் அறிவியல் அதி புனைவு அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைக் கட்டுரை இசைத்தெரிவு இசையும் மொழியும் இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இ���ழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-232 இதழ்-233 இதழ்-234 இதழ்-235 இதழ்-236 இதழ்-237 இதழ்-238 இதழ்-239 இதழ்-24 இதழ்-240 இதழ்-241 இதழ்-242 இதழ்-243 இதழ்-244 இதழ்-245 இதழ்-246 இதழ்-247 இதழ்-248 இதழ்-249 இதழ்-25 இதழ்-250 இதழ்-251 இதழ்-252 இதழ்-253 இதழ்-254 இதழ்-255 இதழ்-256 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய வரலாறு இலக்கிய விமர்சனம் இலக்கியக் கட்டுரை இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக நடப்புக் குறிப்புகள் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் எழுத்து ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட���டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சத்யஜித் ரே சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தழுவல் கட்டுரை தாவரவியல் தாவரவியல் கட்டுரை திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாரதியியல் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொடுவா நாட்டார் கலை பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதற்கனல் முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பு இலக்கியம் மொழிபெயர்ப்பு நாவல் மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை ரவிஷங்கர் லயம் வங்க ஓவியங்கள் வங்க மலர் வங்கச் சிறப்பிதழ் வரலாறு வரலாற்றாய்வு வரலாற்றுக் கட்டுரை வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேதியியல் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அகிலா ஆ. அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அஞ்சலி ஸச்தேவா அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அருண்குமார் மகோபாத்யாய் அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அவீக் சாட்டர்ஜீ அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆடம் இஸ்கோ ஆண்டனி கில் ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் குமார் ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆமிராபாலன் ஆரூர் பாஸ்கர் ஆர் நித்யஹரி ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி ஆஸ்டின் சௌந்தர் இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா முருகன் இரா. அரவிந்த் இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இராம் பொன்னு இலவசக் கொத்தனார் இலா இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உ நரசிம்மன் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உலகளந்த பெருமாள் உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.என். குண்டு எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் எம்.டி வாசுதேவன் நாயர் Raja எம்.ரிஷான் ஷெரீப் எரிக் நெஹர் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் எஸ் சியூயீ லு Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கஞ்சனூர் கவிப்ரியா கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட்ராமன் கண்ணன் இராமநாதன் கதீர் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கலாப்ரியா கலைச்செல்வி கல்யாணி ராஜன் கவியோகி வேதம் கா.சிவா கா.ரபீக் ராஜா காஜி நசருல் இஸ்லாம் காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் கிருபாகரன் கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலச்சுவடு கண்ணன் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் கி. ராஜநாராயணன் கிருஷ்ண பாசு Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரி எஸ். நீலகண்டன் குமரேசன் மு. குமாரநந்தன் குமார் சேகரன் குமுதினி கூம் கூம் ராய் கெ.ம.நிதிஷ் கென் லூ கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கே.பாலசுப்பிரமணி கே.ராஜலட்சுமி கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரெக் பா(வ்)ம் க்ரேஸ் பேலி ச அர்ஜுன்ராச் ச. சமரன் ச. சிவபிரகாஷ் ச.திருமலைராஜன் சக்தி சட்டோபாத்யாய சக்தி விஜயகுமார் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்த��ய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் சமரேஷ் மஜும்தார் சரவணன் அபி சரவணன் மாணிக்கவாசகம் சரோஜ் பந்த்யோபாத்தியாய் sarvasithan சா.கா.பாரதி ராஜா சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்லி டைஸன் சார்ல்ஸ் ஸிமிக் சி.எஸ். லக்ஷ்மி Ayshwarya Shankaranarayanan சி.சு.செல்லப்பா சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி சியாம் பாரதி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. அருண் பிரசாத் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுகாந்தொ பட்டாச்சார்யா சுகுமார் ராய் சுசித்ரா பட்டாச்சாரியா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தரம் செல்லப்பா சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுனீல் கங்கோபாத்யாய் சுபத்ரா ரவிச்சந்திரன் சுபிமல் மிஸ்ரா சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் சௌதிக் பிஸ்வாஸ் ஜகதீஷ் சந்திர போஸ் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜான்பால் ரொசாரியோ ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜாஷுவா ராத்மான் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீபனானந்தா தாஸ் ஜீவ கரிகாலன் ஜீவன் பென்னி ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தா டே ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேன் ஹெர்ஷ்ஃபீல்ட் ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜொய் கோஸ்வாமீ ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ��னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த. நரேஸ் நியூட்டன் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தஸ்லிமா நஸ்ரின் தாட்சாயணி தாமரைக்கண்ணன் தாராசங்கர் பந்த்யோபாத்யாய் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் திலீபன் தீபேஷ் சக்ரபர்த்தி தீப் ஹல்தர் தென்கரை மகாராஜன் தெரிசை சிவா தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் தைஸ் லைஸ்டர் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நபரூன் பட்டாச்சார்யா நம்பி நரசய்யா நரேன் நரோபா நளினி நவநீதா தேவ் சென் நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகிலேஷ் குஹா நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு ravishankar குழு பத்மகுமாரி பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்மா ஸச்தேவ் பத்ரி சேஷாத்ரி பனபூல் பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி பா ராமானுஜம் Pa Saravanan பா.சுதாகர் பா.தேசப்பிரியா பானு கபில் பானுமதி ந. பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan பாஸ்கர் ஆறுமுகம் Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் பிபூதிபூஷன் பந்த்யோபாத்யாய் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபீர் சென் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புத்ததேவ போஸ் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆல��ன் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம. செ. ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுமிதா மதுரபாரதி மதுரா மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் அரவிந்த டி ரெங்கநாதன் மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலேசியா ஸ்ரீகாந்தன் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாணிக் பந்தோபாத்யாய மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மாயா ஏஞ்சலொ மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ம இராமச்சந்திரன் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி முனைவர் ராஜேந்திர பிரசாத் நா மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோதி நந்தி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரக்ஷன் கிருதிக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரபீந்திர நாத் தாகூர் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமநாத் ராய் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ரிச்சர்ட் ரூஸ்ஸோ ருகையா ஷகாவத் ஹுசென் ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோகிணி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லாவண்யா சுந்தரராஜன் லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகமாதேவி லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வசந்ததீபன் வண்ணநிலவன் வர்ஜீனியா வுல்ஃப் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜயகுமார் சம்மங்கரை விஜயலக்ஷ்மி விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வித்யா அருண் விபீஷணன் விருட்சன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேங்கட ராகவன் நா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷாங்க்யா கோஷ் ஷாதிர் ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸிர்ஷோ பந்தோபாத்யா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் கின்சர் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாரலாம்பி மார்கோவ் ஹாலாஸ்யன் ஹுமாயுன் அஹமத் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் அக்டோபர் 2021 செப்டம்பர் 2021 ஆகஸ்ட் 2021 ஜூலை 2021 ஜூன் 2021 மே 2021 ஏப்ரல் 2021 மார்ச் 2021 பிப்ரவரி 2021 ஜனவரி 2021 டிசம்பர் 2020 நவம்பர் 2020 அக்டோபர் 2020 செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும். எழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nஆன்கர் எஃப்.எம். (anchor.fm) 4\nயூடியுப் – ஒளிவனம் (YouTube) 3\nசவுண்ட் கிளவுட் (SoundCloud) 1\nஎழுத்தாளர் அம்பை: சொல்வனம் சிறப்பிதழ்கள் 0\nரொபெர்த்தோ பொலான்யோ ஆக்கங்களும் விமர்சனங்களும் 0\nவீடும் வெளியும்: கவிதைகளும் கதைகளும் 0\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவங்கச் சிறப்பிதழ் 1: 240\nவங்கச் சிறப்பிதழ் II: 241\nவி. எஸ். நைபால்: 194\nகவிதை பற்றி புதுமைப்பித்தன் கூறியவற்றுள் சில\nவிஞ்ஞான வளர்ச்சியின் வளர்ச்சி- 2\nபெருந்தேவிக்கு பி. ஜி. உடௌஸ் வேண்டாம்\nசோ - ஒரு தன்னிகரற்ற நிகழ்வு\nஆட்டத்தின் ஐந்து விதிகள் (8)\nஇந்து தர்மமும் அதன் கலாசாரப் போர்களும் (14)\nஇவர்கள் இல்லையேல் – நாவல் (3)\nகாவிய ஆத்மாவைத் தேடி (3)\nசட்டமும் செயற்கை நுண்ணறிவும் (2)\nதலை சிறந்த 10 தொழில்நுட்பம் (11)\nதேர்ந்த வாசகர��க்கான படப்புத்தகம் (2)\nநோயாளி எண் பூஜ்யம் (2)\nபய வியாபாரியா ஹிட்ச்காக் (2)\nபேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் (4)\nமிளகு: இரா முருகன் – நாவல் (7)\nமுதலியத்தை எதிர்க்கும் பொதுமம் (1)\nமொபைல் தொடர்பாடல் வரலாறு (2)\nவண்ணநிலவன் நாவல்கள் பற்றி (2)\nஸ்லாட்டர்ராக்- தாமஸ் டிஷ் (2)\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nஎழுத்தாளர் இரா முருகனின் சரித்திரத் தொடர் நாவல் “மிளகு” அத்தியாயம் - ஏழு 1999 அம்பலப்புழை 35:47\nஎழுத்தாளர் தி.ஜானகிராமன் எழுதிய சிறுகதை \"செய்தி\" 21:56\nஜான் சிபேலியஸ் – இயற்கையின் ஊடாக இசை நிகழ்வுகள் – பகுதி 1\nஇந்திய இசையில் முதல் சிம்பொனி\n’How to name it’ – இருபதாண்டுகளாகத் தொடரும் மெளனப்புரட்சி\nஒலியன்றி வேறல்ல: இளையராஜாவின் ஆதார சுருதி\n02. மீண்டெழுந்த நாட்டுப்புற இசை\nஓய்வுக் காலச் சேமிப்பும் அதை அபகரிக்க அரசாங்கம் நடத்தும் போரும்\nby கடலூர் வாசு\t ஆகஸ்ட் 22, 2021\nby கா.ரபீக் ராஜா\t ஆகஸ்ட் 22, 2021\nby லியோ டால்ஸ்டாய்\t ஆகஸ்ட் 22, 2021\n”ஆசிய அமெரிக்கர்கள்” – அமெரிக்காவில் மிகையாகும் வெறுப்பரசியல்\nby லதா குப்பா\t ஆகஸ்ட் 22, 2021\nகாவிய ஆத்மாவைத் தேடி… – 2\nby ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன்\t ஆகஸ்ட் 22, 2021\nபேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்\nby பானுமதி ந.\t ஆகஸ்ட் 22, 2021\nமூத்த கதைசொல்லி – டெம்சுலா ஆவ்\nby கோரா\t ஆகஸ்ட் 22, 2021\nதொட்டாலே கண் எரியும் மிளகாயா\nby லோகமாதேவி\t ஆகஸ்ட் 22, 2021\nஷோபா சக்தியின் ‘கொரில்லா’ – ஒரு பார்வை\nby ராஜேஷ் சந்திரா\t ஆகஸ்ட் 22, 2021\nஉங்கள் மின்னஞ்சல், படைப்புகளை அனுப்ப முகவரி: solvanam.editor@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-10-19T11:10:07Z", "digest": "sha1:F6SHDOKQY7DKCJTTC6OKVGJ3WJY2SP4U", "length": 8714, "nlines": 151, "source_domain": "ta.wiktionary.org", "title": "சங்கம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n(எ. கா.) சங்கந் தருமுத்தி (திருக்கோ. 85).\n(எ. கா.) சங்கமுண்கிகள் (திருப்பு. 556).\nஒருநதி வேறொரு நதியுடனேனும் கடலோடேனும் கூடுமிடம் (யாழ். அக.)\n(எ. கா.) சங்கமாகி வெங்கணை வீக்க மொடு (பெருங். மகத. 17, 38).\n(எ. கா.) புலம்பரிச் சங்கம் பொருளொடு முழங்க (மணி. 7, 114).\nபாண்டியர் ஆதரவுபெற்று விளங்கிய தலைச்சங்கம், இடைச் சங்கம், கடைச்சங்கம் என்ற முச்சங்கங்கள்\n(எ. கா.) எம்மைப் பவந்தீர்ப்பவர் சங்கமிருந்தது (பெரியபு. மூர்த்திநா.)\n(எ. கா.) அடுதிரைச் சங்க மார்ப்ப (சீவக. 701).\n(எ. கா.) சங்கங் கழல (இறை. 39, உரை, 260).\n(எ. கா.) நெய்தலுங் குவளையு மாம்பலுஞ் சங்கமும் (பரிபா. 2, 13).\nச+க=சங்க (தோன்றல் விதி / இடைநிலை மயக்கம்)\nதொழிற்சங்கம், கூட்டுறவுச் சங்கம், தமிழ்ச் சங்கம், மாதர் சங்கம். விற்பனைச் சங்கம்\nசான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +\nயாழ். அக. உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 9 சனவரி 2021, 04:23 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnarealestate.lk/properties/land-with-house-and-shops-for-sale-in-kantharmadam-junction-palaly-road/", "date_download": "2021-10-19T11:43:33Z", "digest": "sha1:TUDI4FIYF3KS7N2LB4PF7V7BOPZCIJ73", "length": 38180, "nlines": 1032, "source_domain": "jaffnarealestate.lk", "title": "கந்தர்மடம் சந்தி, பலாலி வீதியில் காணியுடன் சேர்ந்த வீடு மற்றும் கடை விற்பனைக்கு – Re/Max North Realty", "raw_content": "\n2 மாடி வீடு விற்பனைக்கு (3)\n2 வீடுகள் விற்பனைக்கு (1)\nஅரிசி ஆலை விற்பனைக்கு (1)\nஉல்லாச விருந்தினர் மாளிகை (1)\nகடையுடன் காணி விற்பனைக்கு (1)\nகாணியுடன் பகுதியளவு கட்டப்பட்ட வீடு விற்பனைக்கு (4)\nகாணியுடன் வீடு விற்பனைக்கு (33)\nகைதடியில் வீட்டுடன் கூடிய காணி விற்பனைக்கு (1)\nசிறிய வீட்டுடன் இணைந்த காணி விற்பனைக்கு. (1)\nநல்லூரில் Guest House விற்பனைக்கு (1)\nவணிக / குடியிருப்பு சொத்து விற்பனைக்கு (1)\nவிசாலமான நிலத்துடன் கூடிய கட்டிடத்தொகுதி விற்பனைக்கு (2)\nவிசாலமான நிலத்துடன் வீடு விற்பனைக்கு (1)\nவியாபாரக் கட்டிடம் குத்தகைக்கு (6)\nவியாபாரக் கட்டிடம் வாடகைக்கு (2)\nவியாபாரக் கட்டிடம் விற்பனைக்கு (16)\nவிவசாய நிலம் விற்பனைக்கு (3)\nகொழும்பு - 14 (1)\nகொழும்பு - 15 (1)\nகொழும்பு - 6 (1)\nபழைய பூங்கா வீதி (1)\nகொழும்பு - 14 (1)\nகொழும்பு - 15 (1)\nகொழும்பு - 6 (1)\n2 மாடி வீடு விற்பனைக்கு (3)\n2 வீடுகள் விற்பனைக்கு (1)\nஅரிசி ஆலை விற்பனைக்கு (1)\nஉல்லாச விருந்தினர் மாளிகை (1)\nகடையுடன் காணி விற்பனைக்கு (1)\nகாணியுடன் பகுதியளவு கட்டப்பட்ட வீடு விற்பனைக்கு (4)\nகாணியுடன் வீடு விற்பனைக்க��� (33)\nகைதடியில் வீட்டுடன் கூடிய காணி விற்பனைக்கு (1)\nசிறிய வீட்டுடன் இணைந்த காணி விற்பனைக்கு. (1)\nநல்லூரில் Guest House விற்பனைக்கு (1)\nவணிக / குடியிருப்பு சொத்து விற்பனைக்கு (1)\nவிசாலமான நிலத்துடன் கூடிய கட்டிடத்தொகுதி விற்பனைக்கு (2)\nவிசாலமான நிலத்துடன் வீடு விற்பனைக்கு (1)\nவியாபாரக் கட்டிடம் குத்தகைக்கு (6)\nவியாபாரக் கட்டிடம் வாடகைக்கு (2)\nவியாபாரக் கட்டிடம் விற்பனைக்கு (16)\nவிவசாய நிலம் விற்பனைக்கு (3)\nகொழும்பு - 14 (1)\nகொழும்பு - 15 (1)\nகொழும்பு - 6 (1)\nபழைய பூங்கா வீதி (1)\nகொழும்பு - 14 (1)\nகொழும்பு - 15 (1)\nகொழும்பு - 6 (1)\nகந்தர்மடம் சந்தி, பலாலி வீதியில் காணியுடன் சேர்ந்த வீடு மற்றும் கடை விற்பனைக்கு\nகந்தர்மடம் சந்தி, பலாலி வீதியில் காணியுடன் சேர்ந்த வீடு மற்றும் கடை விற்பனைக்கு\nவீடு விற்பனைக்கு in விற்பனைக்கு\nKantharmadam Junction, Palaly Road, யாழ்ப்பாணம், கந்தர்மடம், யாழ்ப்பாணம்\nகந்தர்மடசந்தி, பலாலி வீதியில் காணியுடன் சேர்ந்த வீடு மற்றும் கடை விற்பனைக்கு\nமொத்த நிலப்பரப்பு :- 1 ½ பரப்பு\nஇங்கு காணப்படும் 02 கடைகள் காணியின் முன் பக்கம் காணப்படுகின்றது.\nகோரப்படும் விலை :- Rs.17,000,000\nயாழ்ப்பாணம் 5-சந்திக்கு மிக அருகில் 3 படுக்க...\nயாழ்ப்பாணம் 5-சந்திக்கு மிக அருகில் 3 படுக்கையறையுடன் கூடிய வீடு விற்பனைக்கு உண்டு. நில அளவு – 1 பரப்பும் 15. [more]\nயாழ்ப்பாணம் 5-சந்திக்கு மிக அருகில் 3 படுக்கையறையுடன் கூடிய வீடு விற்பனைக்கு உண்டு. நில அளவு – 1 பரப்பும் 15. [more]\nC. பொன்னம்பலம் வீதி , யாழ்ப்பாணத்தில் 1.5 பர...\nC. பொன்னம்பலம் வீதி , யாழ்ப்பாணத்தில் 1.5 பரப்பு காணி யுடன் அழகிய வடக்கு வாசல் வீடு விற்பனைக்கு • யாழ் போதனா வைத்தி [more]\nC. பொன்னம்பலம் வீதி , யாழ்ப்பாணத்தில் 1.5 பரப்பு காணி யுடன் அழகிய வடக்கு வாசல் வீடு விற்பனைக்கு • யாழ் போதனா வைத்தி [more]\nவிதானையார் ஒழுங்கை, சுண்டுக்குளி, யாழ்ப்பாணத...\nவிதானையார் ஒழுங்கை, சுண்டுக்குளி, யாழ்ப்பாணத்தில் 1 1/4 பரப்பில் அழகிய மாடி வீடு விற்பனைக்கு, • பிரபலமான சுண்டுக்கு [more]\nவிதானையார் ஒழுங்கை, சுண்டுக்குளி, யாழ்ப்பாணத்தில் 1 1/4 பரப்பில் அழகிய மாடி வீடு விற்பனைக்கு, • பிரபலமான சுண்டுக்கு [more]\nI'm interested in [ கந்தர்மடம் சந்தி, பலாலி வீதியில் காணியுடன் சேர்ந்த வீடு மற்றும் கடை விற்பனைக்கு ]\n2 மாடி வீடு விற்பனைக்கு (3)\n2 வீடுகள் விற்பனைக்கு (1)\nஅரிசி ஆலை விற்பனைக்கு (1)\nஉல்லாச விருந்தினர் மாளிகை (1)\nகடையுடன் காணி விற்பனைக்கு (1)\nகாணியுடன் பகுதியளவு கட்டப்பட்ட வீடு விற்பனைக்கு (4)\nகாணியுடன் வீடு விற்பனைக்கு (33)\nகைதடியில் வீட்டுடன் கூடிய காணி விற்பனைக்கு (1)\nசிறிய வீட்டுடன் இணைந்த காணி விற்பனைக்கு. (1)\nநல்லூரில் Guest House விற்பனைக்கு (1)\nவணிக / குடியிருப்பு சொத்து விற்பனைக்கு (1)\nவிசாலமான நிலத்துடன் கூடிய கட்டிடத்தொகுதி விற்பனைக்கு (2)\nவிசாலமான நிலத்துடன் வீடு விற்பனைக்கு (1)\nவியாபாரக் கட்டிடம் குத்தகைக்கு (6)\nவியாபாரக் கட்டிடம் வாடகைக்கு (2)\nவியாபாரக் கட்டிடம் விற்பனைக்கு (16)\nவிவசாய நிலம் விற்பனைக்கு (3)\nகொழும்பு - 14 (1)\nகொழும்பு - 15 (1)\nகொழும்பு - 6 (1)\nபழைய பூங்கா வீதி (1)\nகொழும்பு - 14 (1)\nகொழும்பு - 15 (1)\nகொழும்பு - 6 (1)\n83, கண்ணத்திட்டி வீதி, யாழ்ப்பாணம், இலங்கை\nபொலிகண்டியில் அழகிய வீடு விற்பனைக்க... LKR 24,000,000\nதெல்லிப்பளை,துர்க்காபுரம் கல்வளவு ஒ... LKR 5,000,000\nகல்வயல் சாவகச்சேரியில் காணியுடன் சேர்ந்த வீடு விற்பனைக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nchokkan.wordpress.com/2017/04/04/", "date_download": "2021-10-19T12:31:03Z", "digest": "sha1:6XSMU4UCJK56Z62GDWAP6OXX4X33DMCI", "length": 14829, "nlines": 243, "source_domain": "nchokkan.wordpress.com", "title": "04 | April | 2017 | மனம் போன போக்கில்", "raw_content": "\nகடந்த சில நாள்களில் தொல்காப்பியத்தின் அகத்திணையியல், புறத்திணையியலை முழுக்க வாசித்தேன். என்னவொரு நுணுக்கமான சித்திரிப்பு. காதல்காட்சிகள்/போர்க்காட்சிகள்/பொதுக்காட்சிகள் ஒவ்வொன்றுக்கும் பழந்தமிழர் தேர்வுசெய்திருக்கும் களங்கள், பெயர்கள் பிரமிக்கவைக்கின்றன.\n1. காதலனும் காதலியும் தங்கள் ஊரைவிட்டுக் கிளம்புகிறார்கள், வேறு ஊர் சென்று திருமணம் செய்துகொண்டு பிழைக்க நினைக்கிறார்கள், வழியில் அவர்களைச் சந்திக்கும் சிலர், ‘அடடா இந்தப் பாலைவன வழியில் இந்த இளைஞர்கள் செல்லவேண்டுமே’ என்று இரங்குகிறார்கள், ‘அவர்களுக்கு ஆபத்து வருமோ’ என்று கலங்குகிறார்கள், அவர்களிடம் இப்படிச் சொல்கிறார்கள், ‘நீங்கள் செல்ல நினைக்கும் ஊர் நெடுந்தொலைவில் உள்ளது, ஆனால், எங்கள் ஊர் அருகே உள்ளது.’ என்ன அழகான, நாசூக்கான குறிப்பு, வரவேற்பு\n2. ஒரு குறிப்பிட்ட வகைப் போர்ச்சூழலுக்குப் ‘பாசி’ என்று பெயர்வைத்திருக்கிறார்கள். ஏன் அந்தப்பெயர் என்றால், நீர்நிலையினருகே இருதரப்புப் படையினர் மோதுகிறார்களாம். நீரிலே பாசி இருக்கும், அதை ஒதுக்கினால், மீண்டும் வந்து சேர்ந்துகொள்ளும், அதுபோல, இந்தப் படையினர் நெருங்கி, மோதி, வீழ்ந்து, விலகி, மீண்டும் நெருங்கி, மோதி…. அந்தக் காட்சிக்குப் பாசி என்பது என்ன அழகான பெயர்\n3. இதேபோல், ஒரு வீரனை ‘எருமை’ என்கிறார். திட்டாக அல்ல, பாராட்டாகதான், யார் வந்து மோதினாலும் அசராமல் நிற்கும் எருமையைப்போல அவன் எதிரியைத் தடுத்துநிற்கிறான்.\n4. சில குறிப்பிட்ட விழாக்களை ‘வெள்ளணி’ என்கிறார்கள். வெள்ளை அணி, அந்நாட்களில் விழாநடத்துவோர் வெள்ளை உடை அணிவது வழக்கம், அப்போது வெள்ளையே சிறப்புடையாக இருந்திருக்கிறது, ஆகவே, அந்த விழாக்களுக்கே ‘வெள்ளணி’ என்ற பெயர் அமைந்துவிட்டது\nஇப்படி நுணுக்கமான பல காட்சிகள், பெயர்கள், விளக்கங்கள் … இத்தனைக்கும் இந்த வேக வாசிப்பில் நான் புரிந்துகொண்டது 20%கூட இருக்காது (அதுவே மிகைமதிப்பீடுதான் என்பேன்). நிறுத்தி நிதானமாக வாசித்து, உதாரணங்களைத் தேடிப் புரிந்துகொண்டால், தொல்காப்பியத்தைமட்டும் குறைந்தது ஐந்தாறு வருடங்கள் வாசிக்கவேண்டியிருக்கும்போல் தோன்றுகிறது.\nநல்லவேளையாக, இளம்பூரணர், நச்சினார்க்கினியர் போன்றோர் அத்தகைய ஆழமான ஆராய்ச்சிப் பணியை ஏற்கெனவே செய்துவிட்டார்கள். அவர்களுடைய உரைகளுக்கு இன்னோர் உரை தேவைப்படுமளவு தமிழ்ச்சொற்களை, பயன்பாடுகளை நாம் தொலைத்துவிட்டதால், இப்போது திகைத்துநிற்கிறோம். நம் வீட்டின் மூலையிலிருக்கும் பெருஞ்செல்வத்தை நாமே பயன்படுத்திக்கொள்ள இயலாமலிருக்கிறோம்.\nஇது சற்றே மிகையான புலம்பலாகத் தோன்றலாம். ‘தொல்காப்பியத்தைப் புரிந்துகொண்டு வாசிப்பதால் இன்றைக்கு என்ன பயன்’ என்கிற எதார்த்தக்கேள்வியிலும் ஓரளவு நியாயமுண்டுதான். ஆனால் எதைப் பின்பற்றுவது, எதை விடுவது என்று தெரிந்துகொள்ளவேனும் அதை வாசிக்கவேண்டுமல்லவா’ என்கிற எதார்த்தக்கேள்வியிலும் ஓரளவு நியாயமுண்டுதான். ஆனால் எதைப் பின்பற்றுவது, எதை விடுவது என்று தெரிந்துகொள்ளவேனும் அதை வாசிக்கவேண்டுமல்லவா தொல்காப்பியம்போன்ற ஒரு முழுமையான இலக்கணநூலைக்கொண்ட மொழியில் அதை வாசிப்போர், புரிந்துகொள்வோர் அரைக்கால் சதவிகிதம்கூட இலர் என்பது வரலாற்று/கலாசாரத் துயரமே.\nTwenty Management Secrets In Tholkaappiyam என்று ஆங்கிலத்தில் யாராவது ஒரு Bestseller எழுதிப் பிரசுரித்தால் நம்மிடையே அதைக் கற்க ஒ��ு புதிய வேகம் வருமோ\nஇங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்\nஎன் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)\nஎன். சொக்கன் இணையத் தளம்\nமின்னூல்களைப் பதிப்பித்தல்: எழுதுவோருக்கிருக்கும் வாய்ப்புகள்\n03. விக்கிபீடியா என்ன சொல்கிறது\n04. எனது நூல்களை வாங்க – இந்தியாவில் (Nhm.in)\n05. எனது நூல்களை வாங்க – அமெரிக்கா, மற்ற நாடுகளில் (Amazon.com)\n06. சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் எனது நூல்கள்\n02. கிழக்கு பதிப்பகம் ஆர்குட் குழுமம்\n06. ’மினிமேக்ஸ்’ பதிப்பகம்: ஓர் அறிமுகம்\n08. ச. ந. கண்ணன்\nநிதானமாக வாசிக்கலாம் (இணையத்தில் வெளியான எனது கதைகள் / கட்டுரைகள்)\nநான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:\nட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்\nதமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்\nசெவிநுகர் கம்பன் CD : சில விமர்சனங்கள்\nட்விட்டர் வெற்றிக்கதை : A TwitReview By @eestweets\nமகாத்மா காந்தி கொலை வழக்கு (Chennai Avenue Nov 2012)\nமகாத்மா காந்தி கொலை வழக்கு: விமர்சனம்\nஷேக்ஸ்பியர் : நாடகமல்ல உலகம் : Review By Uma Ganesh\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nchokkan.wordpress.com/category/book-fair-2011/", "date_download": "2021-10-19T10:56:43Z", "digest": "sha1:USLDEU33HWSZDV2RR5XOBCBLIJLKMYQN", "length": 57910, "nlines": 488, "source_domain": "nchokkan.wordpress.com", "title": "Book Fair 2011 | மனம் போன போக்கில்", "raw_content": "\nசென்னை புத்தகக் கண்காட்சி 2011 பற்றி பத்ரி சேஷாத்ரி பேட்டி\nதற்போது சென்னையில் நடைபெற்றுவரும் புத்தகக் கண்காட்சி பற்றிக் கிழக்கு பதிப்பகம் பத்ரி சேஷாத்ரியை கானா பிரபா எடுத்த பேட்டி. ஆஸ்திரேலிய வானொலி ஒன்றில் ஒலிபரப்பானதன் இணைய வடிவம். இதனை இங்கே வலையேற்ற அனுமதி தந்த நண்பர் கானா பிரபாவுக்கு நன்றி.\nசென்னை புத்தகக் கண்காட்சிபற்றிய இதர பதிவுகளின் தொகுப்பு: https://nchokkan.wordpress.com/2011/01/05/cbf2011/\nபின்குறிப்பு: கானா பிரபா தனது புகைப்படத்தை வெளியிடவேண்டாம் என்று சொல்லிவிட்டார். ஆகவே நீங்கள் இந்த இடத்தில் அவரது படத்தைக் கற்பனை செய்துகொள்ளவும் :>\nசென்னை புத்தகக் கண்காட்சி 2011 – இணையப் பதிவுகளின் தொகுப்பு\n(முன்குறிப்பு: சென்னை புத்தகக் கண்காட்சி 2011பற்றி என் கண்ணில் படும் பதிவுகள் அனைத்தையும் இங்கே தொகுத்துவைக்கிறேன். ஏதாவது விடுபட்டிருந்தால் nchokkan@gmail.comக்கு அனுப்பிவையுங்கள். சேர்த்துவிடுகிறேன். நன்றி\nசில புது வெளியீடுகள் பட்டியல் –> http://goo.gl/kfStA\nபுத்தகக் கண்காட்சிபற்றி வெங்கட்ரமணன் தொகுக்கும் விக்கி பக்கம் –> https://venkatramanan.wiki.zoho.com/BookFair2011.hlp\nஇட்லிவடையில் ஹரன் பிரசன்னா ரிப்போர்ட்ஸ்\n(வைரமுத்து உரை வீடியோவுடன்) http://wp.me/pILtz-UU\nபுத்தகக் கண்காட்சியில் பிரபல எழுத்தாளர்களின் புத்தகங்கள் கிடைப்பதுபற்றி மனுஷ்ய புத்திரன் மற்றும் சாரு நிவேதிதா –> http://charuonline.com/blog/\nபுத்தகக் கண்காட்சிக்கென்று தனி விமான நிலையம் கோரும் ச. ந. கண்ணன் –> http://sanakannan.blogspot.com/2011/01/blog-post_07.html\nசின்னக் குட்டி (புத்தகக் கண்காட்சி வீடியோ தொகுப்பு) –> http://sinnakuddy1.blogspot.com/2011/01/2011.html\nஎன். சொக்கன் (புத்தகக் கண்காட்சி புகைப்படங்கள் தொகுப்பு) –>http://goo.gl/V18mm\nசென்னை புத்தகக் கண்காட்சி 2011 – புது வெளியீடுகள்\nபல்வேறு பதிப்பகங்கள் சென்னை புத்தகக் கண்காட்சி 2011ல் வெளியிடவிருக்கும் புதுப் புத்தகங்களைப்பற்றிய தகவல்கள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. ஆனால் அவை ஒரே இடத்தில் தேடும் வசதியோடு இல்லை என்பது ஒரு பெரிய குறை.\nநான் புத்தகக் கண்காட்சிக்குக் கிளம்பும்போதே இந்த வருடம் வாங்கவேண்டிய புத்தகங்களின் பட்டியலை அச்சிட்டு எடுத்துக்கொண்டு செல்வதுதான் வழக்கம். அப்போதுதான் நேரம் வீணாகாமல் இருக்கும் – முக்கியமான எந்தப் புத்தகத்தையும் தவறவிட்டுவிடமாட்டோம் – பட்டியலின்படி வாங்கவேண்டியதை வாங்கியபிறகு கண்ணில் படுபவை, கவனம் ஈர்ப்பவை என்று இன்னும் பலவற்றை அள்ளுவது தனிக்கதை 🙂\nஎன்னைப்போல புத்தகக் கண்காட்சிக்கு விருப்பப் பட்டியலோடு செல்ல விரும்புகிறவர்கள் பலர் இருக்கலாம். அவர்களுக்கு ஒரு தக்கனூண்டு டேட்டாபேஸ் எழுதி யாராவது உதவினால் புண்ணியமாகப் போகும்.\nஇப்போதைக்கு, சென்னை புத்தகக் கண்காட்சியில் வெளியாகும் புதுப் புத்தகங்களைப்பற்றி எனக்கு அவ்வப்போது கிடைக்கும் விவரங்களை இந்த கூகுள் ஸ்ப்ரெட்ஷீட்டில் சேர்க்கப்போகிறேன். இது முழுமையான பட்டியல் அல்ல. நான் எதையாவது தவறவிட்டிருந்தால் (அல்லது தவறான விவரத்தைச் சேர்த்திருந்தால்) nchokkan@gmail.com என்ற முகவரிக்கு எழுதிச் சொல்லவும். நன்றி.\n’விநாயக்ஜி, வாழ்த்துகள்’ உள் அறையிலிருந்து யாரோ ஓடி வந்து அவர் கையைப் பிடித்துக் குலுக்கினார்கள், ‘உங்களுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது’\n’ விநாயக் கோட்ஸே அதிர்ந்துபோய் ��ின்றார், ‘கடவுளே\n‘விநாயக், உன் குடும்பத்தில் பிறக்கிற ஆண் குழந்தைகள்மீது ஒரு சாபம் இருக்கிறது, அதனால்தான் அடுத்தடுத்து உன் மகன்கள் எல்லோரும் இறந்துபோயிருக்கிறார்கள்’\n‘இப்போது நான் என்ன செய்யவேண்டும் ஸ்வாமிஜி\n‘விதியை நம்மால் ஜெயிக்கமுடியாது. ஆனால், கொஞ்சம் தந்திரம் செய்து ஏமாற்றலாம்’\n‘அடுத்து பிறக்கிற உன் மகனை, ஒரு பெண்போல வளர்க்கவேண்டும், அதன்மூலம் உங்கள் குடும்பத்தின்மீது இருக்கிற சாபம் நீங்கும்’\nசின்ன வயதிலிருந்தே, நாதுராம் சராசரியான ஒரு பையனாகதான் வளர்ந்தான். படிப்பு, விளையாட்டு என எதிலும் அவனுக்குப் பெரிதாக ஆர்வம் இல்லை.\nஆனால், அவனிடம் ஒரு மிக விசேஷமான சக்தி இருந்தது. அல்லது, அப்படி அவனுடைய குடும்பத்தினர் நம்பினார்கள்.\nநாதுராம்மீது தங்களுடைய குலதெய்வம் இறங்கி வந்து குறி சொல்வதாகக் கோட்ஸே குடும்பம் நினைத்தது. நடந்தவை, இனி நடக்கப்போகிறவை என எல்லாவற்றையும் விளக்கிச் சொல்கிற ஆற்றல் அவனுக்கு உண்டு என்பது அவர்களுடைய நம்பிக்கை.\nவேடிக்கை என்னவென்றால், இந்த விஷயமெல்லாம் நாதுராம்க்குச் சுத்தமாகத் தெரியாது. அவன்பாட்டுக்குப் பேஸ்த் அடித்தாற்போல் ஒரு மூலையைப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருப்பான். திடீரென்று அவனுடைய கண்கள் தியானத்தில் விழுந்ததுபோல் சுருங்கும், சட்டென்று குலதெய்வத்தின் குரலில் பேசத் தொடங்கிவிடுவான், அதுவரை அவன் எப்போதும் கேட்டிருக்காத சமஸ்கிருத ஸ்லோகங்களைத் துல்லியமான உச்சரிப்பில் மடை திறந்ததுபோல் பொழிவான், மற்றவர்கள் பயபக்தியோடு கை கட்டி, வாய் பொத்திக் கேட்கிற கேள்விகள், சந்தேகங்களுக்கெல்லாம் கணீரென்ற தொனியில் பதில் சொல்லுவான்.\nகொஞ்ச நேரம் கழித்து, குலதெய்வம் மலையேறிவிடும். நாதுராம் பழையபடி திருதிருவென்று விழித்துக்கொண்டு, ‘இங்கே என்ன நடந்தது நான் எங்கே இருக்கேன்’ என்று அப்பாவியாக விசாரிப்பான்.\nசாவர்க்கர் ரத்னகிரிக்கு வந்து சுமார் ஆறு வருடம் கழித்து கோட்ஸே குடும்பம் அங்கே குடியேறியது.\nஅப்போது விநாயக் கோட்ஸே ஓய்வு பெறும் வயது நெருங்கிக்கொண்டிருந்தது. ஆனால் அவருடைய மூத்த மகன் நாதுராம் கோட்ஸே இன்னும் சொந்தக் காலில் நிற்கமுடியாமல் தடுமாறிக்கொண்டிருந்தான்.\nநாதுராம்க்குப் படிப்பு வரவில்லை. மெட்ரிகுலேஷன் பாஸ் செய்யமுடியவில்லை. ’சரி, போகட்டும்’ என்று விட்டுத் தொலைத்துவிட்டு வேறு வேலைகளைப் பார்க்கலாம் என்றால் அதுவும் சரிப்படவில்லை.\nஆரம்பத்தில் நாதுராம் தச்சுவேலை கற்றுக்கொண்டான். அது சரிப்படாமல் பழ வியாபாரம், கப்பல் துறைமுகத்தில் எடுபிடி வேலைகள், டயர் ரீட்ரேடிங், தச்சு வேலை என்று ஏதேதோ முயற்சி செய்து பார்த்தான். கார் ஓட்டினான். ஏதோ காரணத்தால் அவனுக்கு எந்தத் தொழிலும் ஒத்துவரவில்லை.\nஅப்போது அவர்கள் வசித்துவந்த ஊருக்குச் சில அமெரிக்கப் பாதிரியார்கள் வந்திருந்தார்கள். இவர்கள் அந்த ஊர் இளைஞர்களுக்குத் தையல் பயிற்சி தருவதாக அறிவித்தார்கள்.\nஎத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்று சுற்றிக்கொண்டிருந்த நாதுராம் அந்த வகுப்பிலும் சேர்ந்தான். ஓரளவு நன்றாகவே தைக்கக் கற்றுக்கொண்டான். ஒரு கடை வைத்தான். அடுத்த சில வருடங்களுக்கு அந்தக் கடைதான் அவனுக்குக் கொஞ்சமாவது சோறு போட்டுக்கொண்டிருந்தது.\nஅப்போதுதான் நாதுராமுக்கு ஒரு விஷயம் புரிந்தது. ’வேறெதையும்விட ஹிந்து மகாசபா பணிகளில் ஈடுபடுவதும் ஹிந்து மக்களுக்காக உழைப்பதும்தான் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இனி என் எதிர்காலம் அரசியலில்தான்\nஆனால் ஒன்று. அரசியலில் சேர்ந்து பெரிய பதவியில் உட்காரவேண்டும், புகழ், பணம் சம்பாதிக்கவேண்டும் என்கிற ஆர்வமெல்லாம் நாதுராம்க்கு இல்லை. இந்து ராஜ்யம் அமையப் பாடுபடுகிறோம் என்கிற உணர்வுதான் அவனைச் செலுத்திக்கொண்டிருந்தது.\nஅரசியலில் ஈடுபடுவது என்று ஆனபிறகு சங்க்லிமாதிரி சின்ன ஊரில் உட்கார்ந்துகொண்டிருந்தால் நாதுராமின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுவிடும். ஆகவே பம்பாய் அருகில் உள்ள பூனாவுக்குக் குடிபெயரத் தீர்மானித்தான் அவன்.\nநாதுராம் மிக எளிமையாகதான் உடுத்துவார். அவருடைய அறையில் அநாவசிய ஆடம்பரங்கள் எதையும் பார்க்கமுடியாது. சிகரெட் புகைப்பது, மது அருந்துவது மாதிரியான கெட்ட பழக்கங்கள் கிடையாது. அவரது ஒரே பலவீனம் என்று பார்த்தால், காஃபி நல்ல காஃபிக்காகப் பல கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று குடித்துவிட்டுத் திரும்புவதற்குக்கூட அவர் தயாராக இருந்தார்.\nஇப்படிப் பரிசுத்தமாக வாழ்ந்த நாதுராம் கோட்ஸேவுக்கு நாராயண் ஆப்தே என்கிற அதிஆடம்பரமான, ஆர்ப்பாட்டமான, பெண் வாசனை பட்டாலே கிறங்கி விழக்கூடிய ஒரு சிநே��ிதம் கிடைத்தது பெரிய ஆச்சர்யம்தான்\nநாராயண் ஆப்தே பிறந்தது பூனாவில். பிராமணக் குடும்பம். நாதுராமைவிட ஒரு வயது சிறியவர்.\nஇப்படி கோட்ஸே, ஆப்தே குழுவினர் பல்வேறு திட்டங்களை யோசித்து, நிராகரித்து, மறுபடி யோசித்துக்கொண்டிருந்த நேரம். தங்களுடைய கொள்கைப் பிரசாரத்துக்காக ஒரு பத்திரிகை தொடங்குகிற எண்ணம் அவர்களுக்குத் தோன்றியது.\nகோட்ஸேவுக்கோ ஆப்தேவுக்கோ அதற்குமுன் பத்திரிகை நடத்திய முன் அனுபவம் இல்லை. ஆனால் காந்திஜி உள்படப் பெரும்பாலான தலைவர்கள் பத்திரிகைகளின்மூலம் தங்களுடைய கருத்துகளை முன்னெடுத்துச் சென்ற காலகட்டம் அது. ஆகவே இந்துக்களின் நிஜமான உரிமைகளையும் அடுத்து செய்யவேண்டியவற்றையும் அவர்களுக்கு எடுத்துச் சொல்வதற்கு ஒரு பத்திரிகை இருந்தால் நல்லது என்று நாதுராம் கோட்ஸே நினைத்தார்.\nவாசலில் ஒரு கார் வந்து நின்றது. ‘காந்திஜி வந்துவிட்டார்’ என்று யாரோ கத்தினார்கள்.\nவிழா அமைப்பாளர்கள் அவசரமாக வாசலுக்கு ஓடினார்கள். கூட்டமும் ஆவலாகத் திரும்பிப் பார்த்தது.\nஅந்த நேரத்தில் எங்கிருந்தோ ‘திம்’மென்ற பெரும் சத்தம். காந்தியடிகளின் கார் அருகே ஒரு நாட்டு வெடிகுண்டு வந்து விழுந்து வெடித்தது.\nமறுநிமிடம் அந்த இடத்தைப் புகையும் குழப்பமும் சூழ்ந்துகொண்டது. ‘காந்திஜிக்கு என்னாச்சு’ என்று மக்கள் அலறினார்கள்.\nசிறிது நேரத்தில் புகை அடங்கியது. காந்தி அங்கே இல்லை. விழா அமைப்பாளர்கள் பதறிப்போய்த் தேடினார்கள்.\nகாந்தி தன்னுடைய கொலை முயற்சியை ஒரு பெரிய விஷயமாகக் கருதவில்லை. எதுவுமே நடக்காததுபோல் தன்னுடைய பிரார்த்தனைக் கூட்டங்களைத் தொடர ஆரம்பித்துவிட்டார்.\nஆனால் காந்தியின் தொண்டர்களால் அப்படிச் சாதாரணமாக இருக்கமுடியவில்லை. இன்றைக்கு இல்லாவிட்டாலும் நாளையோ நாளை மறுநாளோ மறுபடி காந்தியின் உயிருக்கு ஆபத்து வரலாம் என்று அவர்களுக்குக் கவலை.\n நீங்கள் தயவுசெய்து போலிஸ் பாதுகாப்புக்கு ஒப்புக்கொள்ளவேண்டும்’ என்று அவர்கள் காந்தியிடம் கெஞ்சினார்கள். ‘பெரிதாக எதுவும் இல்லை. உங்களுடைய பிரார்த்தனைக் கூட்டத்துக்கு யார் யாரோ வருகிறார்கள். அவர்களையெல்லாம் ஒழுங்காகப் பரிசோதனை செய்து உள்ளே அனுமதித்தாலே போதும். எந்த அசம்பாவிதமும் நடக்காமல் பார்த்துக்கொண்டுவிடலாம்.’\n’முடியவே முடியாது’ என்று கண்டிப்பாக மறுத்துவிட்டார் காந்தியடிகள். ‘இந்த விஷயத்தில் நீங்கள் என்னை வற்புறுத்தினால் நான் ராத்திரியோடு ராத்திரியாக எங்கேயாவது புறப்பட்டுச் சென்றுவிடுவேன்.’\nஅப்போதுமட்டுமில்லை. பிறகு எப்போதும் காந்தி தன்னுடைய பிடிவாதத்தைத் தளர்த்திக்கொள்ளவே இல்லை. கடைசிவரை, காந்தியின் பிரார்த்தனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட யாரும் – நாதுராம் கோட்ஸே உள்பட – போலிஸால் பரிசோதிக்கப்பட்டதே கிடையாது.\n’மிலிட்டரி’ மனிதராகிய ஆப்தே இந்த விஷயத்தில் மிகத் தீவிரமாக இருந்தார். முஸ்லிம் லீக் தலைவர்கள் சேர்ந்து பேசுகிற கூட்டத்தில் குண்டு வைக்கலாம். அவர்கள் தங்குகிற ஹோட்டல் அறைக்குள் ஜன்னாடி வழியே துப்பாக்கியால் சுடலாம். பாகிஸ்தானுக்குச் செல்லும் ரயில்களை வழிமறித்துக் கொள்ளையடிக்கலாம். அந்த ஊர்ப் பாராளுமன்றத்தையே ராக்கெட் வைத்துத் தகர்த்துவிடலாம். இங்கே இந்தியாவுக்குள் இருந்துகொண்டு நமக்குத் துரோகம் செய்யும் முஸ்லிம் ஆட்சியாளர்களுடைய கஜானாவைக் கொள்ளையடிக்கலாம் … இப்படி ஆப்தே இஷ்டம்போல் திட்டங்களை அடுக்கிக்கொண்டே போனார். அவருடைய மற்ற தோழர்கள் வாயைப் பிளந்து கேட்டுக்கொண்டிருந்தார்கள்.\nஇதில் காமெடியான விஷயம் நாராயண் ஆப்தே மிலிட்டரியில் வேலை செய்தாரேதவிர அவருடைய வேலை முழுக்க முழுக்க உள்ளூர் ஆஃபீஸ் கட்டடத்துக்குள்தான். அவர் போர்க்களத்துக்கெல்லாம் சென்றதே கிடையாது. எப்போதாவது போர்வீரர்களுடைய துப்பாக்கிகள், வெடிபொருள்கள், மற்ற ஆயுதங்களைத் தொட்டுப்பார்த்திருப்பாரேதவிர அவற்றை எப்படி இயக்கவேண்டும், எந்த ஆயுதத்தால் என்னமாதிரியான சேதம் உண்டாக்கலாம் என்றெல்லாம் அவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை.\nஆனால் இந்த விஷயம் கோட்ஸேவுக்கோ மற்ற நண்பர்களுக்கோ தெரியவில்லை. ஆப்தேவின் கதையளப்புகளை உண்மை என நம்பினார்கள். அவர் நினைத்தால் ஒரே வாரத்தில் பாகிஸ்தானைச் சிதைத்துப் பாரதத்தோடு இணைத்துவிடுவார் என்று நினைத்தார்கள்.\nநாதுராம் கோட்ஸேவுக்கு இந்தியக் கலாசாரம், ஹிந்து மதம் சார்ந்த புத்தகங்களுக்கு அடுத்தபடியாக மிகவும் பிடித்தவை துப்பறியும் நாவல்கள்தான். ஆகவே அவருக்கும் ஆப்தேயின் கற்பனைத் திட்டங்கள் மிகுந்த பரவசம் தந்திருக்கவேண்டும்.\nஆப்தே வெறுமனே திட்டம் தயாரிப்பதோடு நிறுத்திக்கொள்ளவில்லை. அவற்றை நிஜமாக நிறைவேற்றுவதற்காக நிதி திரட்டத் தொடங்கினார்.\n இந்தக் காமெடி திட்டங்களை நம்பி யார் காசு தருவார்கள்\nநம்புங்கள். அதற்கும் ஒரு கூட்டம் இருந்தது. பூனாவில், பம்பாயில், இன்னும் பல பகுதிகளில்\nஇந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிந்து செல்வது உறுதியாகிவிட்ட நேரம். அவர்களுக்கு வெறுமனே நிலப் பரப்பைமட்டும் பங்கிட்டுக் கொடுத்தால் போதாது. ஒன்றுபட்ட இந்தியாவின் அனைத்துச் சொத்துகளையும் இந்த இரு தேசங்களுக்கும் சரியான விகிதத்தில் பிரித்துத் தருவதுதான் நியாயமாக இருக்கும்.\nஅப்போது இந்திய ரிஸர்வ் வங்கியின் கையிருப்பில் சுமார் நானூறு கோடி ரூபாய்க்குச் சற்றே குறைவான தொகை இருந்தது. இதில் 75 கோடி ரூபாய் பாகிஸ்தானுக்குச் சொந்தமானது என்று தீர்மானிக்கப்பட்டது.\nஅதாவது பாகிஸ்தான் என்கிற புது தேசம் உருவானதும் அதன் ஆரம்பக் கட்டமைப்புச் செலவுகளுக்காக இந்தியா அவர்களுக்கு எழுபத்தைந்து கோடி ரூபாய் தரவேண்டும். அதன்பிறகு அவர்களுக்குத் தனி கஜானா, தனி ரிஸர்வ் வங்கி, தனி வருவாய், தனிச் செலவினங்கள், எல்லாம் அவர்கள் பாடு.\nஇதன்படி இந்தியா சுதந்தரம் பெற்றுப் பாகிஸ்தான் என்கிற புது தேசம் தோன்றியவுடன் அவர்களுக்கு முதல் தவணையாக இருபது கோடி ரூபாய் வழங்கப்பட்டுவிட்டது. இந்தத் தொகையைப் பயன்படுத்தி அவர்கள் தங்களுடைய நாட்டின் நிர்மாணப் பணிகளை உடனடியாகத் தொடங்கமுடிந்தது.\nஆனால் அப்போது பாகிஸ்தான் கவனிக்க மறந்த விஷயம், அவர்களுடைய பங்குப் பணமாகிய எழுபத்தைந்து கோடியில் பெரும்பகுதி (55 கோடி ரூபாய்) இன்னும் இந்தியாவின் கையில்தான் இருக்கிறது. அதை எப்போது எத்தனை தவணைகளாகக் கொடுக்கலாம் என்பதை இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேருவும் மற்ற அமைச்சர்களும் சேர்ந்துதான் முடிவெடுக்கவேண்டும். அதற்குள் இந்த இரு நாடுகளின் எல்லையில் வேறொரு பெரிய பிரச்னை தொடங்கிவிட்டது.\nபாகிஸ்தானுக்கு இந்தியா தரவேண்டிய பணத்தை நிறுத்திவைத்திருக்கிறது என்கிற தகவலே காந்திக்குத் தெரியாது. அதை அவருக்குச் சொன்னது மவுன்ட்பேட்டன்தான்.\n‘இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்’ மவுன்ட்பேட்டனிடம் கேட்டார் காந்தி.\n’இத்தனை நாள்களில் இந்திய அரசாங்கம் செய்த முதல் நேர்மையற்ற செயல் என்று இதைத்தான் சொ��்வேன்\nகாந்தி துடித்துப்போய்விட்டார். இவ்வளவு கஷ்டப்பட்டுச் சுதந்தரம் வாங்கியது நேர்மையற்ற செயல்களைச் செய்வதற்குதானா\n1948 ஜனவரி 13ம் தேதி மதியம் 11:55க்குக் காந்தியின் கடைசி உண்ணாவிரதம் தொடங்கியது. அடுத்த சில மணி நேரங்களுக்குள் அவருடைய மருத்துவர்கள் பதற ஆரம்பித்துவிட்டார்கள். ‘பாபுவின் இதயமும் சிறுநீரகமும் ரொம்பப் பலவீனமா இருக்கு. இந்த நிலைமையில அவரோட உடம்பு பசியைத் தாங்காது. உடனடியா நாம ஏதாவது நடவடிக்கை எடுத்தாகணும்\n இந்த நேரத்தில் என்ன நடவடிக்கை எடுக்கமுடியும் காந்தி என்ன பல்லி மிட்டாயா கேட்கிறார் காந்தி என்ன பல்லி மிட்டாயா கேட்கிறார் கடைக்குப் போய் வாங்கிக் கொடுத்துச் சமாதானப்படுத்துவதற்கு கடைக்குப் போய் வாங்கிக் கொடுத்துச் சமாதானப்படுத்துவதற்கு இந்து – முஸ்லிம் ஒற்றுமை வேண்டும் என்கிறார். அதுவும் பிரிவினையினால் எல்லாரும் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிற இந்த நேரத்தில். நடக்குமா\nகாந்தி உண்ணாவிரதம் அறிவித்துச் சில மணி நேரங்கள் கழித்து பூனாவில் ‘ஹிந்து ராஷ்ட்ரா’ பத்திரிகை அலுவலகத்தில் இருந்த டெலிப்ரின்டர் உயிர் பெற்றது. ஒரு செய்தியைப் பரபரவென்று அடித்துத் துப்பியது.\nகோட்ஸேயும் ஆப்தேயும் அந்தச் செய்தியை எடுத்துப் படித்தார்கள். ‘டெல்லியில் அமைதி திரும்புவதற்காகக் காந்தி உண்ணாவிரதம்.’\nஅடுத்த சில மணி நேரங்களில் இன்னும் பல செய்திகள் வந்தன. அவை ஒவ்வொன்றும் கோட்ஸே, ஆப்தேயின் ரத்த அழுத்தத்தை எகிறச் செய்தன. காங்கிரஸ்மீது, காந்திமீது அவர்கள் கொண்ட வெறுப்பு இன்னும் தீவிரமாகியிருந்தது.\n‘இந்த மனிதர்தான் எல்லாப் பிரச்னைக்கும் காரணம்’ என்றார் நாதுராம் கோட்ஸே. ‘நாம பாகிஸ்தானை அழிக்கறதுக்காக என்னென்னவோ திட்டம் போட்டோமே. அதெல்லாம் வேஸ்ட். இப்போதைக்கு நாம செய்யவேண்டிய ஒரே வேலை, காந்தியைக் கொலை பண்றதுதான்\n’ஆமாம்’ என்று ஒப்புக்கொண்டார் ஆப்தே. ‘நாம உடனடியா டெல்லி புறப்படணும். காந்தியால இந்தியாவுக்கும் இந்துக்களுக்கும் இன்னும் நிறைய ஆபத்து வர்றதுக்குள்ள நாம அவரை முடிச்சுடணும்.’\nஒரு த்ரில்லர் நாவலின் முதல் அத்தியாயம்போல் படிப்பதற்குப் பரபரவென்று இருக்கிறதில்லையா அடுத்து என்ன நடக்கும் என்று நெஞ்சு துடிக்கிறதில்லையா\nஆனால் இது கதையா, நிஜமா உண்மையிலேயே அந்த ஐம்ப���்தைந்து கோடி ரூபாய்க்காகதான் கோட்ஸே கோஷ்டி காந்தியைக் கொல்ல முடிவெடுத்ததா\nஇதுவரை நீங்கள் படித்தது சென்னை புத்தகக் கண்காட்சியில் கிழக்கு பதிப்பகம் வெளியிடவிருக்கும் எனது ‘மகாத்மா காந்தி கொலை வழக்கு’ புத்தகத்திலிருந்து சில காட்சிகள். இது என்னமாதிரியான புத்தகம் என்று சாம்பிள் காட்டுவதற்காக ட்ரெய்லர்போல் ஆங்காங்கே வெட்டி ஒட்டியிருக்கிறேன். முழுசாகப் புரியாவிட்டால் நான் பொறுப்பில்லை 🙂\nகாந்தியின் கொலைக்கான அரசியல் காரணங்களில் தொடங்கி சதித் திட்டம், அதில் ஈடுபட்டவர்களுடைய சுருக்கமான வாழ்க்கை வரலாறு, அவர்களுடைய தனிப்பட்ட உள்நோக்கங்கள், கோட்ஸே கோஷ்டியின் சொதப்பல்கள், அதைவிட ஒரு படி மேலாகப் போலிஸ் சொதப்பல்கள், அவர்கள் முட்டாள்தனமாகத் தவறவிட்ட வாய்ப்புகள் என்று தொடர்ந்து காந்தி கொலை, அதன்பிறகு நிகழ்ந்த காலம் கடந்த துப்பறிதல்கள், நீதிமன்ற விசாரணை, தண்டனை, பின்கதை, கோட்ஸே ஆதரவாளர்களின் வாதங்கள் என்று எந்தப் பக்கச்சார்பும் இல்லாத ஒரு முழுமையான வரலாற்று ஆவணமாக இதைத் தர முயன்றிருக்கிறேன்.\nநான் இதுவரை எழுதிய புத்தகங்களில் எனக்கு மிகவும் பிடித்தது ‘சாப்ளின் கதை’. அடுத்து கூகுளின் சரித்திரம். அந்த இரண்டைவிடவும் இந்தப் புத்தகம் மிகுந்த மன நிறைவைத் தந்தது. உங்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன். வாய்ப்புள்ளவர்கள் வாசித்துவிட்டுச் சொல்லவும். நன்றி\nபுத்தகத்தை வாங்க விரும்புகிறவர்கள் இந்த இணைப்பைப் பயன்படுத்தலாம் –> https://www.nhm.in/shop/978-81-8493-596-7.html\nஇந்நூல் பற்றி பா. ராகவனின் அறிமுகம் –> http://www.writerpara.com/paper/\nஇங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்\nஎன் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)\nஎன். சொக்கன் இணையத் தளம்\nமின்னூல்களைப் பதிப்பித்தல்: எழுதுவோருக்கிருக்கும் வாய்ப்புகள்\n03. விக்கிபீடியா என்ன சொல்கிறது\n04. எனது நூல்களை வாங்க – இந்தியாவில் (Nhm.in)\n05. எனது நூல்களை வாங்க – அமெரிக்கா, மற்ற நாடுகளில் (Amazon.com)\n06. சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் எனது நூல்கள்\n02. கிழக்கு பதிப்பகம் ஆர்குட் குழுமம்\n06. ’மினிமேக்ஸ்’ பதிப்பகம்: ஓர் அறிமுகம்\n08. ச. ந. கண்ணன்\nநிதானமாக வாசிக்கலாம் (இணையத்தில் வெளியான எனது கதைகள��� / கட்டுரைகள்)\nநான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:\nட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்\nதமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்\nசெவிநுகர் கம்பன் CD : சில விமர்சனங்கள்\nட்விட்டர் வெற்றிக்கதை : A TwitReview By @eestweets\nமகாத்மா காந்தி கொலை வழக்கு (Chennai Avenue Nov 2012)\nமகாத்மா காந்தி கொலை வழக்கு: விமர்சனம்\nஷேக்ஸ்பியர் : நாடகமல்ல உலகம் : Review By Uma Ganesh\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2021-10-19T11:44:36Z", "digest": "sha1:AFCQFSTAZS33T4L65CSSAN5JWYSZU4XP", "length": 15999, "nlines": 201, "source_domain": "www.aanthaireporter.com", "title": "” கத்தி” வெளியாக அனுமதிக்கக் கூடாது! - திருமா அறிக்கை! - AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\n” கத்தி” வெளியாக அனுமதிக்கக் கூடாது\nஇலங்கை அதிபர் ராஜபக்சே குடும்பத்தினருடன் நெருக்கமான லைகா நிறுவனம் தயாரித்த கத்தி திரைப்படத்தை திரையிடக் கூடாது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nஇது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடிகர் விஜயின் நடிப்பிலும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்திலும் உருவான ‘கத்தி’ திரைப்படம் தீபாவளிக்கு வெளிவருவதாகத் தெரிய வருகிறது. இத்திரைப்படம் லைகா மொபைல் நிறுவனத்தாரால் தயாரிக்கப்பட்டுள்ளது.இந்நிறுவனத்தின் உரிமையாளர் சுபாஷ்கரன் என்பவர் தமிழீழத்தைச் சேர்ந்தவர். ஐரோப்பா உள்ளிட்ட புலம்பெயர்ந்த நாடுகளில் உலகத் தமிழர்களுக்கிடையே இந்நிறுவனம் சிம் கார்டு உற்பத்தியில் முன்னணி நிறுவனம். தற்போது தமிழகத் திரைத் துறையில் அடியெடுத்து வைத்துள்ள இந்நிறுவனம் உலகத் தமிழர்களிடையே கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.\nஏனெனில், லைகா மொபைல் உரிமையாளரும் சிங்கள இனவெறியர் இராஜபக்சேவின் மகனும் இணைந்து தொழில் செய்து வருவதாக தமிழ்ச் சமூகத்தினரிடையே வலுவான கருத்து பரவியுள்ளது. இனப்படுகொலைக் குற்றவாளி இராஜபக்சேவோடு தொழில்ரீதியாக நட்புறவு கொண்டுள்ள சுபாஷ்கரன் தமிழ்த் திரையுலகத்தில் முதலீடு செய்வது தமிழ் மக்களிடையே பெரும் அய்யத்தை உருவாக்கியுள்ளது.இராஜபக்சே திட்டமிட்டு திரையுலகத்தின் மூலம் தமிழக அரசியலில் ஊடுருவ முயற்சிப்பதாக சந்தேகம் எழுந்துள��ளது. தமிழகத்தில் இளைய தலைமுறையினர் சிங்கள இனவெறிக்கு எதிராக அணிதிரண்டுவிடக் கூடாது என்றும் இளைஞர்களின் போர்க் குணத்தை மழுங்கச் செய்யும் வகையிலும் இராஜபக்சே கும்பல் திட்டமிட்டு திரைத்துறையின் மூலம் ஊடுருவுவதாக சந்தேகம் எழுந்துள்ளது.\nஎனவேதான், ‘கத்தி’ திரைப்படத்திற்கு எதிராக தமிழ் உணர்வாளர்கள், தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பாக அணிதிரண்டு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். அக்கூட்டமைப்பில் விடுதலைச் சிறுத்தைகள் உறுப்பு இயக்கமாக இடம்பெறவில்லையென்றாலும், ஈழத் தமிழர் பிரச்சனைகளில் ஒத்துழைப்பு எனும் அடிப்படையில், அக்கூட்டமைப்பு கடந்த செப்டம்பர் 24 அன்று நடத்திய பேரணியில் கலந்துகொண்டது. அத்துடன், ‘கத்தி’ திரைப்படத்திற்கு எதிரான போராட்ட நடவடிக்கைகளிலும் விடுதலைச் சிறுத்தைகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.குறிப்பாக, இராஜபக்சேவின் பினாமி நிறுவனம் என்று சந்தேகத்திற்குள்ளாகியிருக்கிற லைகா நிறுவனத் தயாரிப்பில் ‘கத்தி’ திரைப்படத்தை தமிழகத்தில் எங்கும் திரையிடக் கூடாது என்னும் கோரிக்கையை விடுதலைச் சிறுத்தைகளும் வலியுறுத்துகிறது.\nஇது, நடிகர் விஜய், இயக்குநர் முருகதாஸ் ஆகியோருக்கு எதிரான நடவடிக்கை ஆகாது. தமிழின எதிரி இனவெறியன் இராஜபக்சேவுக்கு எதிரான கோரிக்கை என்பதை புரிந்துகொண்டு திரைப்பட வெளியீட்டாளர்களும், திரையரங்க உரிமையாளர்களும் ‘கத்தி’ திரைப்படத்திற்கு எதிரான எமது கோரிக்கைக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டுமென்று விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்.”என்று தொல். திருமாவளவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nPrevious பெங்களூர் டூ சென்னை: ஜெ. ரிட்டர்ன்\nNext தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் தீபாவளி பரிசு..\n“ஓ மணப்பெண்ணே” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பின் ஹைலைடஸ்\nசூர்யா-வின் ஜெய்பீம் படத்தில் இடம் பிடித்த ’பவர்’ பாடல் வெளியானது\nட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் படம் பூஜையுடன் ஆரம்பம்\n“ஓ மணப்பெண்ணே” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பின் ஹைலைடஸ்\nஇந்திய அளவில் ட்ரெண்டாகி நொந்து போன சொமேட்டா\nசிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு முதல் பருவத் தேர்வுகளுக்கான தேதி அறிவிப்பு\nசூர்யா-வின் ஜெய்பீம் படத்தில் இடம் பிடி���்த ’பவர்’ பாடல் வெளியானது\nஇந்திய கடற்படையின் பங்கு குறித்து கடற்படை தளபதிகள் மாநாட்டில் ராஜ்நாத் சிங் பேச்சு\nகேட்டராக்ட் – கண் புரை – கண்ணுக்குள் பொருத்தும் லென்ஸ்கள் சில முக்கியமான விவரங்கள் கேள்வி – பதில்கள்\nமுட்டாள்களின் கூடாரம் ‘மூடர் கூடம்’ – கோடங்கி விமர்சனம்\nமிக மிக அழகான பெண் யார்\n‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ரசிகர்களை சேர்க்காது..\n‘வீரம்’ – சினிமா விமர்சனம்\nஎம்ஜிஆர் என்கிற “சோட்டா பீம்” உருவாக்கிய அதிமுகவின் பொன்விழா சஸ்பென்ஸ்\nஏர் இந்தியா: தர்மம் மறுபடி வெல்லும் – ரமேஷ் கிருஷ்ணன் பாபு\nகாடழிப்பிற்கு வித்திடும் வகையில் சட்டத் திருத்தங்கள் – மோடி அரசுக்கு கண்டனம்\nஅச்சச்சோ,, சென்னையில் விஷக்காற்று பரவுது\nபாகிஸ்தானில் ஆட்சி மாறி ஆப்கன் போல் குழம்பம் நேரிடலாம் ஏன் தெரியுமா\n“ஓ மணப்பெண்ணே” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பின் ஹைலைடஸ்\nஇந்திய அளவில் ட்ரெண்டாகி நொந்து போன சொமேட்டா\nசிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு முதல் பருவத் தேர்வுகளுக்கான தேதி அறிவிப்பு\nசூர்யா-வின் ஜெய்பீம் படத்தில் இடம் பிடித்த ’பவர்’ பாடல் வெளியானது\nஇந்திய கடற்படையின் பங்கு குறித்து கடற்படை தளபதிகள் மாநாட்டில் ராஜ்நாத் சிங் பேச்சு\nட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் படம் பூஜையுடன் ஆரம்பம்\nவரும் சனிக்கிழமை மெகா தடுப்பூசி முகாம்- ஏன் தெரியுமா\nசிம்புவின் மாநாடு ரிலீஸ் தீபாவளியன்று இல்லை : நவம்பர் 25ல் வெளியாகுமாம்\nதாமஸ் ஆல்வா எடிசன் நினைவு தினம்…\nஎம்ஜிஆர் என்கிற “சோட்டா பீம்” உருவாக்கிய அதிமுகவின் பொன்விழா சஸ்பென்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA/", "date_download": "2021-10-19T12:14:38Z", "digest": "sha1:6SH54ABNSNWOABVCT7O2IJH2S3SW322H", "length": 12181, "nlines": 200, "source_domain": "www.aanthaireporter.com", "title": "குறைந்த விலையில் தரமான புகைப்படங்களை எடுக்க உதவும் கேமரா! - AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nகுறைந்த விலையில் தரமான புகைப்படங்களை எடுக்க உதவும் கேமரா\nஇப்போதெல்லாம் முதல்ல மொபைல் ஃபோன் வாங்கும்போதே நம்ம மக்கள் பார்ப்பது கேமரா என்ன பிக்ஸல் – முன் கேமரா இருக்குதா – ஹை டெஃபனீஷனா என்று – சிலர் இதற்காக சுமார் 5000 முதல் 60 ஆயிரம் வரை அதிகம் செலவிடப்படுகிறது. இதனால் நல்ல கேமரா வேண்டுமாயின் நல்ல விலை உயர்ந்த மொபைல் தான் வாங்கனும்ங்கிற கட்டாயம் இனிமே இல்லை. HTC RE என்னும் கேமரா ஒன்று வந்திருக்கிறது. இது எந்த விதத்திலும் முழு கேமராவாக இல்லாமல் ஆன்ட்ராயிட் அல்லது ஆப்பிள் ஃபோனுடன் ப்ளூடூத் மூலம் இனைத்து கொண்டு விரும்பிய படங்களை / வீடியோக்களை மொபைல் ஃபோன் கேமராவின் மூலம் கன்ட்ரோல் செய்து எடுக்க இயலும்.\nஅது மட்டுமல்ல ஒரே நேரத்தில் 1200 அதிக தரம் வாயந்த படங்கள் அல்லது ஹ டெஃபனீஷன் எனப்படும் வீடீயோக்கூட எடுக்க முடியும். அதே மாதிரி திடிரென்று தண்ணீருக்குள் பாய்ந்தும் வீடியோ அல்லது புகைப்படம் எடுக்க முடியும் ஏன் என்றால் இது முழுக்க வாட்டர் ஃப்ரூப் கொண்டதாகும். இதன் விலை சுமார் 6000 முதல் 8000 வரை இருக்கலாம் என கணிக்கப்படுகிறது.\nஅது மட்டுமல்ல இனிமே சாதா காமெரா வாங்கி இதையும் வாங்கினால் இனிமே 50 ஆயிரம் 70 ஆயிரம் விலை உயர்ந்த மொபைல் ஃபோன் தேவையே இல்லை.என்ன ஒரு அச்சம் என்றால் இனிமேல் எங்கிருந்து யார் கேமராவை இயக்குறாங்கன்னு தெரியாம ப்டம் எடுக்க கூடிய சாத்தியத்தை தவிர்ப்பதற்க்கு இல்லை.\nPrevious விஷால் + ஸ்ருதி + ஹரியின்“ பூஜை’ ஆல்பம்\nNext செவ்வாய் பயணம் போகத் தயாராகும் 13 வயதான சிறுமிக்கு நாசா பயிற்சி\n“ஓ மணப்பெண்ணே” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பின் ஹைலைடஸ்\nசூர்யா-வின் ஜெய்பீம் படத்தில் இடம் பிடித்த ’பவர்’ பாடல் வெளியானது\nட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் படம் பூஜையுடன் ஆரம்பம்\n“ஓ மணப்பெண்ணே” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பின் ஹைலைடஸ்\nஇந்திய அளவில் ட்ரெண்டாகி நொந்து போன சொமேட்டா\nசிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு முதல் பருவத் தேர்வுகளுக்கான தேதி அறிவிப்பு\nசூர்யா-வின் ஜெய்பீம் படத்தில் இடம் பிடித்த ’பவர்’ பாடல் வெளியானது\nஇந்திய கடற்படையின் பங்கு குறித்து கடற்படை தளபதிகள் மாநாட்டில் ராஜ்நாத் சிங் பேச்சு\nகேட்டராக்ட் – கண் புரை – கண்ணுக்குள் பொருத்தும் லென்ஸ்கள் சில முக்கியமான விவரங்கள் கேள்வி – பதில்கள்\nமுட்டாள்களின் கூடாரம் ‘மூடர் கூடம்’ – கோடங்கி விமர்சனம்\nமிக மிக அழகான பெண் யார்\n‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ரசிகர்களை சேர்க்காது..\n‘வீரம்’ – சினிமா விமர்சனம்\nஎம்ஜிஆர் என்கிற “சோட்டா பீம்” உருவா��்கிய அதிமுகவின் பொன்விழா சஸ்பென்ஸ்\nஏர் இந்தியா: தர்மம் மறுபடி வெல்லும் – ரமேஷ் கிருஷ்ணன் பாபு\nகாடழிப்பிற்கு வித்திடும் வகையில் சட்டத் திருத்தங்கள் – மோடி அரசுக்கு கண்டனம்\nஅச்சச்சோ,, சென்னையில் விஷக்காற்று பரவுது\nபாகிஸ்தானில் ஆட்சி மாறி ஆப்கன் போல் குழம்பம் நேரிடலாம் ஏன் தெரியுமா\n“ஓ மணப்பெண்ணே” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பின் ஹைலைடஸ்\nஇந்திய அளவில் ட்ரெண்டாகி நொந்து போன சொமேட்டா\nசிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு முதல் பருவத் தேர்வுகளுக்கான தேதி அறிவிப்பு\nசூர்யா-வின் ஜெய்பீம் படத்தில் இடம் பிடித்த ’பவர்’ பாடல் வெளியானது\nஇந்திய கடற்படையின் பங்கு குறித்து கடற்படை தளபதிகள் மாநாட்டில் ராஜ்நாத் சிங் பேச்சு\nட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் படம் பூஜையுடன் ஆரம்பம்\nவரும் சனிக்கிழமை மெகா தடுப்பூசி முகாம்- ஏன் தெரியுமா\nசிம்புவின் மாநாடு ரிலீஸ் தீபாவளியன்று இல்லை : நவம்பர் 25ல் வெளியாகுமாம்\nதாமஸ் ஆல்வா எடிசன் நினைவு தினம்…\nஎம்ஜிஆர் என்கிற “சோட்டா பீம்” உருவாக்கிய அதிமுகவின் பொன்விழா சஸ்பென்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2021-10-19T11:11:26Z", "digest": "sha1:DO7OM6EX4N6YPAYCZEYOGVVQKFR7QS2A", "length": 13844, "nlines": 201, "source_domain": "www.aanthaireporter.com", "title": "தொழுகை செய்யாத சிறுவனின் கையை காணிக்கையாக கேட்ட மதகுரு! - AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nதொழுகை செய்யாத சிறுவனின் கையை காணிக்கையாக கேட்ட மதகுரு\nஎங்கும் — கிடைக்கும் சுத்தமான இடங்களில் எல்லாம், எந்த நிலையிலும் — போர்சூழலோ, புரட்சி சமயமோ, முக்கிய விளையாட்டு இருக்கும்போதோ, மீன்பிடிக்க தூண்டில் போட்டிருக்கும்போதோ, பனிக்கட்டி மீதோ, குளிரிலோ, வெயிலிலோ, மழையியோ.. பாறையோ, பள்ளமோ, மேடோ, காடோ, ரோடோ, ரோட்டோர பிளாட்ஃபாரமோ, மைதானமா, ரயிலோ, பேருந்தோ, விமானமோ, கப்பலோ, கடலோ, பாலைவனமோ… என்றெல்லாம் பாராமல்…எப்படியும் — உண்மையான இறையச்சம் கொண்ட முஸ்லிம்கள், தொழுகையை எக்காரணம் கொண்டும் விடுவதில்லை.\nஇந்நிலையில் பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் லாகூர் அருகே உள்ள குஜ்ர ஷா முகீம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ள மசூதியில் மதகுருவாக இருப்பவர் ஷபீர் அகமது.நேற்��ு முன்தினம் மசூதியில் வழக்கமான தொழுகை நடந்தது. அப்போது யார் தொழுகையில் ஈடுபடவில்லை என மதகுரு கேட்டார். அப்போது அங்கிருந்த முகமது அன்வர் என்கிற 15 வயது சிறுவன் கையை உயர்த்தி ஒப்புக் கொண்டான். எனவே அவன் தெய்வ நிந்தனை செய்ததாக அறிவிக்கப்பட்டது.\nஅதற்கு தண்டனையாக சிறுவன் தனது கையை வெட்டி துண்டித்து தன்னிடம் காணிக்கையாக செலுத்த வேண்டும் என மதகுரு உத்தரவிட்டார். அவரது கட்டளையை ஏற்றுக் கொண்ட அச்சிறுவன் வீட்டிற்கு சென்றான். பின்னர் அரிவாளால் தனது ஒரு கையை துண்டாக வெட்டி அதை ஒரு தட்டில் வைத்து மதகுரு ஷபீர் அகமதுவிடம் எடுத்துச் சென்று வழங்கினான். அந்த சிறுவன் இச்செயலை பெற்றோரும், அண்டை வீட்டினரும் தடுக்க வில்லை. மாறாக ஆடிப்பாடி கொண்டாடினர்.\nஇதற்கிடையே இச்சம்பவம் அப்பகுதியில் காட்டுத் தீயாக பரவியது. உடனே அங்கு வந்த போலீசார் சிறுவன் கையை துண்டிக்க தூண்டிய மதகுரு ஷபீர் அகமதுவை கைது செய்தனர். தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், மதகுரு மீது சிறுவனின் குடும்பத்தினர் புகார் கொடுக்கவில்லை. கைது நடவடிக்கைக்கும் எதிர்ப்பு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது .\n” – கோர்ட்டில் ஆஜரானார் தி மு க தலைவர்\nNext “நானும் கட்சி அரம்பிச்சிட்டேனே” கூடங்குளம் உதயகுமார் அறிவிப்பு\nசூர்யா-வின் ஜெய்பீம் படத்தில் இடம் பிடித்த ’பவர்’ பாடல் வெளியானது\nட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் படம் பூஜையுடன் ஆரம்பம்\nசிம்புவின் மாநாடு ரிலீஸ் தீபாவளியன்று இல்லை : நவம்பர் 25ல் வெளியாகுமாம்\nசிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு முதல் பருவத் தேர்வுகளுக்கான தேதி அறிவிப்பு\nசூர்யா-வின் ஜெய்பீம் படத்தில் இடம் பிடித்த ’பவர்’ பாடல் வெளியானது\nஇந்திய கடற்படையின் பங்கு குறித்து கடற்படை தளபதிகள் மாநாட்டில் ராஜ்நாத் சிங் பேச்சு\nட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் படம் பூஜையுடன் ஆரம்பம்\nவரும் சனிக்கிழமை மெகா தடுப்பூசி முகாம்- ஏன் தெரியுமா\nகேட்டராக்ட் – கண் புரை – கண்ணுக்குள் பொருத்தும் லென்ஸ்கள் சில முக்கியமான விவரங்கள் கேள்வி – பதில்கள்\nமுட்டாள்களின் கூடாரம் ‘மூடர் கூடம்’ – கோடங்கி விமர்சனம்\nமிக மிக அழகான பெண் யார்\n‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ரசிகர்களை சேர்க்காது..\n‘வீரம்’ – சினிமா விமர்சனம்\nஎம்ஜிஆர் என்கிற “சோட்டா பீம்” உருவாக்கிய அதிமுகவின் பொன்விழா சஸ்பென்ஸ்\nஏர் இந்தியா: தர்மம் மறுபடி வெல்லும் – ரமேஷ் கிருஷ்ணன் பாபு\nகாடழிப்பிற்கு வித்திடும் வகையில் சட்டத் திருத்தங்கள் – மோடி அரசுக்கு கண்டனம்\nஅச்சச்சோ,, சென்னையில் விஷக்காற்று பரவுது\nபாகிஸ்தானில் ஆட்சி மாறி ஆப்கன் போல் குழம்பம் நேரிடலாம் ஏன் தெரியுமா\nசிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு முதல் பருவத் தேர்வுகளுக்கான தேதி அறிவிப்பு\nசூர்யா-வின் ஜெய்பீம் படத்தில் இடம் பிடித்த ’பவர்’ பாடல் வெளியானது\nஇந்திய கடற்படையின் பங்கு குறித்து கடற்படை தளபதிகள் மாநாட்டில் ராஜ்நாத் சிங் பேச்சு\nட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் படம் பூஜையுடன் ஆரம்பம்\nவரும் சனிக்கிழமை மெகா தடுப்பூசி முகாம்- ஏன் தெரியுமா\nசிம்புவின் மாநாடு ரிலீஸ் தீபாவளியன்று இல்லை : நவம்பர் 25ல் வெளியாகுமாம்\nதாமஸ் ஆல்வா எடிசன் நினைவு தினம்…\nஎம்ஜிஆர் என்கிற “சோட்டா பீம்” உருவாக்கிய அதிமுகவின் பொன்விழா சஸ்பென்ஸ்\nவிண்வெளியில் நட்சத்திரக் குழுவுடன் நடந்து முடிந்த முதல் ரஷ்ய படபிடிப்பு\nட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் 30வது படம்: சமந்தா நடிக்கும் ரொமான்டிக் ஃபேண்டஸி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2018/03/blog-post_12.html", "date_download": "2021-10-19T13:13:48Z", "digest": "sha1:GTU4T3PBMYNDI2WADZ5OKZ5SQOR3RYHU", "length": 18025, "nlines": 267, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : இப்டி\"ஆளாளுக்கு மஞ்ச நோட்டீஸ் விட்டா மத்தவங்க\"எல்லாம்\"மஞ்சமாக்கானா?", "raw_content": "\nஇப்டி\"ஆளாளுக்கு மஞ்ச நோட்டீஸ் விட்டா மத்தவங்க\"எல்லாம்\"மஞ்சமாக்கானா\nசி.பி.செந்தில்குமார் 7:30:00 PM CINEMA, COMEDY, jokes, POLITICS, அரசியல், அனுபவம், காமெடி, சிரிப்பு ., சினிமா, ஜோக்ஸ் No comments\n1 விரைவில் வருகிறது தமிழக அரசின் “அனைவருக்கும் பசு மாடுகள் வழங்கும் திட்டம்”# சீக்கிரம் ஆட்சிக்கு பால்\"ஊத்திடுவாங்க போல.இது பாஜக திட்டம் மாதிரி தெரியுது\n2 #BREAKING | ஓரியண்டல் வங்கியில் ரூ.200 கோடி மோசடி..\n#SimbhaoliSugar | #CBI | #எல்லா பேங்க் மேனேஜர்சையும் விசாரிச்சு\"ரெய்டு பண்ணனும்.பல பெரும் தலைகள் மாட்டும்\n3 இந்தியா முழுவதும் மோடி அலை வீசியபோது தமிழகத்தில் மட்டும்தான் லேடி அலை வீசியது - அமைச்சர் செல்லூர் ராஜூ\n# ஆனா\"அதே,ல���டி\"யோட\"கட்சி ஆளுங்க பதவி\"க்காக மோடியை ஓனரா ஏத்துக்கிட்டாங்களே,அது\"ஏன்பதவிக்காகவா\n4 தமிழ்நாட்டு மக்களை காப்பாற்றுவதற்காக நாளை முக்கிய முடிவை எடுக்க உள்ளேன் - டி.ஆர் # உங்களையும் உங்க பையனையும் காப்பாத்தவே ஆள் வேணும்,இதுல நீங்க ஜனங்களைக்காப்பாத்தப்போறீங்களா\nலஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலருக்கு\n7 ஆண்டுகள் சிறை தண்டனை-செய்தி\n# ஜட்ஜூங்க\"எல்லாம்\"கணக்குல வீக்,போல.கோடிக்கணக்குல திருடுனவங்க,ஊழல்\"பண்ணவங்களுக்கு 500 ₹ அபராதம்\"போடறாங்க\nவேறு வேறு - எடப்பாடி\n# நம்ம கொள்கை தஞ்சாவூர்\"தலையாட்டி பொம்மையாய் ஆடுவது,அவங்க\"கொள்கை உங்களை ஆட்டுவிப்பது\n7 10 லட்சம் லஞ்சம்,பெற்ற வழக்கில்\nகார்த்தி சிதம்பரம் கைது- சிபிஐ கைது செய்தது\n8 சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோது ஐஎன்எக்ஸ் மீடியாவிடம் ரூ. 10 லட்சம் பெற்ற கார்த்தி சிதம்பரம் கைது # அப்பாவையும் துணைக்கு உள்ளே வைங்க\n9 #BREAKING : காஞ்சிபுரம் மடாதிபதி ஜெயேந்திரர் காலமானார்\n(உடல்நலக்குறைவால்) # தர்மத்தை,ஜட்ஜை ஏமாத்துனவரு எமதர்மரை ஏமாத்த முடியலை\n10 இந்தியா விரைவில் உலகின் 5-வது பொருளாதார வல்லரசாக மாறும் - பிரதமர் மோடி உறுதி\n#அதனால ஏழை/நடுத்தர/விவசாய மக்களுக்கு 10 பைசா வுக்கு பிரயோஜனம் இருக்குங்களா\n11 மத்திய அரசுக்கு மாநில அரசு அடிபணிந்துள்ளது என்பது தவறானது - முதலமைச்சர்\n# மாநில அரசு வேறு வழி இல்லாமல் இப்போதைக்கு\"மத்திய அரசிடம் அடிபணிந்ததைப்போல் காட்டிக்கொள்கிறது,எப்படி சசிகலா\"ஜெயிலுக்குப்போகும்\"வரை கால்ல\"விழுந்து,கும்பிட்டமே அப்டி\n12 லட்சிய திமுக, இனி இலட்சிய திமுக என அழைக்கப்படும்- டி.ஆர்\n# ஈ ஓட்டீட்டு இருக்கற கட்சில அந்த \"இ\" யை ஒட்டுனா என்ன ஒட்டாட்டி என்னஎல்லாரும் வந்து ஓட்டப்போறாங்க உங்களை\n13 திமுக தலைவர் கருணாநிதியின் தனி பாதுகாப்பு காவல் அதிகாரி பாண்டியன் ஊழல் புகாரில் பணியிடை நீக்கம்//செய்தி\n#கலைஞர் வீட்டுக்கட்டுத்தறியும் கை நீட்டும்\n14 கீதாஞ்சலி ஜிவல்லரி - ரூ.5280 கோடி வங்கி கடன் ஊழல்...# ஒரு நகைக்கடை வங்கிக்கே அஞ்சலி செலுத்தி விட்டதே ,அடடேமோடி ஆட்சி லோன் ஸ்பெஷல் ஆட்சி ஆகிடும் போல\n15 எல்லோரும் முதல்வர் பதவியை பிடிக்க கட்சி தொடங்குகிறார்கள் - ஸ்டாலின் # 10% வாக்கு\"கூட\"கிடைக்காது\"என்று\"தெரிய\"வந்த பின்\"அடங்குகிறார்கள்\n16 ஏர்செல் சேவையில் மீண்டும் டவர் ��ிக்னலில் சிக்கல் ஏற்பட வாய்ப்பு- தென்னிந்திய சி.இ.ஓ. சங்கர நாரயணன்\n17 ரூ. 15000 கோடி கடனை திருப்பி செலுத்த முடியாததால், தங்கள் நிறுவனத்தை #திவால் என அறிவிக்கக்கோரி தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் ஏர்செல் நிறுவனம் மனு# இப்டி\"ஆளாளுக்கு மஞ்ச நோட்டீஸ் விட்டா மத்தவங்க\"எல்லாம்\"மஞ்சமாக்கானா\n18 பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வழக்கில் தலைமறைவாக உள்ள நிரவ் மோடி இந்தியா திரும்ப மறுப்பு\nபல நாடுகளில் வேலை உள்ளதால் இந்தியா திரும்ப முடியாது என சிபிஐக்கு நிரவ் மோடி தகவல் # என்னத்த வேல\n19 13 வங்கிகளில் 750 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி..\nசுபிக்‌ஷா சூப்பர் மார்க்கெட் நிறுவனர் சுப்ரமணியன் 2வது முறையாக கைது..# பண்றதெல்லாம் பிக்காலித்தனம் ,பேரைப்பாரு,சுபிக்சாவாம்\n20 நேர்மை ஒன்றுதான் என்னுடைய கவசம்- வைகோ. # ஹமாம் சோப்புக்கு மார்க்கெட் பண்றார்\"போல\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகிளு கிளு கார்னர் - ராத்திரியில் ரதி தேவி சொன்ன ஜோக்ஸ் - பாகம் 1\n -சிவகாசி ராஜ்கதிர் -சிறுகதை @ வாரமலர் ( ரூ 25,000 பரிசு பெற்ற கதை )\nபூட்டாத பூட்டுகள் (1980) _ சினிமா விமர்சனம் ( எ மகேந்திரன் ஃபிலிம்)\nசாந்தி அப்புறம் நித்யா -கில்மாவா ஜொள்மாவா\nநான் பத்துப்பேர வெட்டிசாய்ச்ச குடும்பத்திலிருந்து ...\nஇன்சூரன்ஸ் பணத்திற்காக கள்ளக்காதலனுடன் சேர்ந்து கண...\n அ ம மு\"க அப்டின்னா\"என்ன\nவிமான விபத்து பரபரப்பாக ஊடகச் செய்தியாவதின் உளவியல...\n,ரஜினி நடிச்ச \"கழுகு\"ரீமேக் ல விஜய்\nகுப்பை ஆட்சிக்கு சொல்வோம் குட்பை\nடைரக்டர் சார் படத்தோட டைட்டிலை அடிக்கடி மாத்தீட்டே...\nஉன்னை நினைத்து\" பட லைலாக்கள் ஜாக்கிரதை,\nஇந்த கோழி மூட்ற வேலையை யார் பாத்தது- மாம்ஸ் இது ...\nசிந்து சமவெளி ஏ படம்,அமலா பால் கில்மா சீன்\nதண்ணி காட்றவன்தான்\"தமிழன்- மாம்ஸ் இது மீம்ஸ் - வா...\nஒரு ஊர்ல ஒரு\"ராஜா இருந்தாரு...\nபிசிக்ஸ் லெக்சரர்ஸ்க்கு கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகல...\nஇப்டி\"ஆளாளுக்கு மஞ்ச நோட்டீஸ் விட்டா மத்தவங்க\"எல்ல...\nடாக்டர்,குறட்டை வருது, வராம இருக்க என்ன பண்ணும் \nஜவுளிக்கடைக்கு டிரஸ் எடுக்கப்போறப்ப\"ஆம்பளைங்க\"ஏன் ...\nபேஸ்புக் கருத்து மோதலில் ஒருவருக்கு அரிவாள் வ��ட்டு\nசந்திரிகா சோப் ,ஓல்டு சிந்தால் சோப் ,ஹமாம்\"சோப் ,ம...\nகவுண்ட்டர் குடுக்கறதுல நீங்க\"படிச்ச ஸ்கூல்ல அவரு\"வ...\nமாம்ஸ் இது மீம்ஸ் - வாட்சப் கலக்கல்ஸ் -தமிழனா\n11 ஆண்டுகளுக்கு பின் 2 வது கள்ளக்காதலனுடன்\nமாம்ஸ் இது மீம்ஸ் - வாட்சப் கலக்கல்ஸ் -ஒத்தையில நி...\n6 குஷ்பூ\"= 1 கமல் how\nமாம்ஸ் இது மீம்ஸ் - வாட்சப் கலக்கல்ஸ் -பன்னிக்குட்...\nடைரக்டர் செல்வராகவன் - அட்லீ\nகலைஞரின் \"பேர் சொல்லும் பிள்ளை\"\nசார்,நீங்க ஜோக் சொல்லும்போது 2 வரி ல சுருக்கமா முட...\nDark Humour படம்ன்னு சொன்னீங்களே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akuranatoday.com/728/", "date_download": "2021-10-19T10:52:47Z", "digest": "sha1:OVNKO65MUY34UJQ3AZMAO4MSX3GMRRYG", "length": 7456, "nlines": 68, "source_domain": "www.akuranatoday.com", "title": "தேர்தல் தினத்தில் நிதானத்தைப் பேணுவோம் - Akurana Today", "raw_content": "\nதேர்தல் தினத்தில் நிதானத்தைப் பேணுவோம்\nஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி நடைபெறவுள்ளது என்பதை நாம் அறிவோம். இலங்கைப் பிரஜைகள் என்ற வகையில் தான் விரும்புகின்ற வேட்பாளருக்கு வாக்களிப்பது ஒவ்வொருவரதும் உரிமையாகும். எனவே இவ்வுரிமையை வீணடிக்காமல் பயன்படுத்திக் கொள்ளுமாறு வேண்டிக் கொள்கின்றோம்.\nதேர்தல் தினத்தன்று வாக்குரிமை பெற்ற அனைவரும் மாலை வரை தாமதிக்காமல் காலையில் நேர காலத்துடன் வாக்குச் சாவடிக்களுக்குச் சென்று தாம் விரும்புகின்ற வேட்பாளருக்கு வாக்களிப்பதில் கவனமெடுக்குமாறும் வாக்குச் சாவடியில் கடமையில் ஈடுபட்டிருக்கும் உத்தியோகத்தர்கள் தமது கடமைகளை சிறப்பாகச் செய்வதற்கு ஒத்தாசையாக இருக்குமாறும் வாக்களிக்கும்போது தமது ஆளடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கான தேசிய அடையாள அட்டை போன்ற அனுமதிக்கப்பட்ட ஆவணங்களை தம்முடன் வைத்துக் கொள்ளுமாறும் வேண்டிக் கொள்கின்றோம்.\nவாக்வாக்குச் சாவடிக்குள் நுழையும் போதே ஆளடையாளத்தை உறுதிப்படுத்தும் அவசியம் இருப்பதால், குறிப்பாக முகத்திரை அணியும் பெண்கள் வாக்குச் சாவடிக்குள் நுழையும்போது அவர்களது முகங்களை திறந்து, ஆளடையாளத்தை உறுதிப்படுத்தி, தேர்தல் பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் வாக்குச் சாவடிக்குச் செல்லும்போது தனியாகச் செல்லாமல் மஹ்ரமான ஆணுடன் செல்லுமாறும் முடிந்த அளவு வாகனத்தில் செல்வதற்கு ஒழுங்கு செய்து கொள்ளுமாற���ம் வாக்களித்தவுடன் தாமதிக்காது தத்ததமது வீடுகளுக்கு திரும்புமாறும் வேண்டிக் கொள்கின்றோம். இவ்வாறு நடந்து கொள்வதன் மூலம் வீணான பிரச்சினைகள் உருவாகுவதைத் தடுக்க வழியாக அமையும் என்பதை ஆலோசனையாக முன்வைக்கின்றோம்.\nஅத்துடன் வாக்களித்த பின்னர் வீதிகளில் கூடி நின்று வீணாக நேரத்தைக் கழித்துக் கொண்டிருக்காமல் பயனுள்ள பணிகளில் ஈடுபடுமாறும் தேர்தலில் வெற்றி பெறுபவர் நாட்டை நேசிக்கின்ற, குடிமக்களின் நலனுக்காக உழைக்கின்ற, நாட்டைக் கட்டியெழுப்பும் உணர்வும் வல்லமையும் மிக்கவராக இருப்பதற்கு பிரார்த்தனையில் ஈடுபடுமாறும் உலமாக்கள், மஸ்ஜித் நிருவாகிகள், ஜம்இய்யாவின் பிரதேச கிளை உறுப்பினர்கள் இது தொடர்பாக மக்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்குமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டிக் கொள்கின்றது.\nகுறிப்பு: இவ்வறிவித்தலை ஜுமுஆவிற்குப் பின்னர் சகல பள்ளிவாசல்களிலும் மக்களுக்கு வாசித்துக் காட்டுமாறு நிர்வாக சபையினரிடம் வேண்டுகின்றோம்.\nஅஷ்-ஷைக் ஏ.ஸீ. அகார் முஹம்மத்\nஅகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா\nPrevious articleரோயல் பார்க் கொலை – ஜனாதிபதி ஊடக பிரிவு வெளியிட்டுள்ள விஷேட அறிக்கை\nNext articleஇன்ஷாஅல்லாஹ் சஜித், வெற்றிபெறுவது உறுதியாகிறது – இதோ புள்ளிவிபரம்\nஇலங்கையின் நெருக்கடியும், வர்க்கமும், நுகர்வும்\nமுஸ்லீம் தனியார் சட்டம், காதி நீதிமன்றம் – புரிந்துகொள்ளாத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2834618&Print=1", "date_download": "2021-10-19T11:07:50Z", "digest": "sha1:OUQBETSU53M6CKP5MJPA6ROGUVIHMBUH", "length": 9329, "nlines": 107, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "\nசிவகங்கை : சிவகங்கை அரசு மருத்துவமனையில் கண்தான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. டீன் ரேவதி தலைமை வகித்தார்.கண்காணிப்பாளர் பாலமுருகன், நிலைய மருத்துவ அலுவலர் முகமது ரபீக், டாக்டர்கள் வைரவராஜன், வீனஸ்குமாரி, கண் டாக்டர் பிரியதர்ஷினி பங்கேற்றனர்.நிகழ்ச்சியில் கண்தானத்தின் அவசியம், நன்மை குறித்த விழிப்புணர்வு நோட்டீஸ்களை வழங்கினர். கண் மருத்துவ துறையினர் ஏற்பாட்டை\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசிவகங்கை : சிவகங்கை அரசு மருத்துவமனையில் கண்தான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. டீன் ரேவதி தலைமை வகித்தார்.\nகண்காணிப்பாளர் பாலமுருகன், நிலைய ம��ுத்துவ அலுவலர் முகமது ரபீக், டாக்டர்கள் வைரவராஜன், வீனஸ்குமாரி, கண் டாக்டர் பிரியதர்ஷினி பங்கேற்றனர்.நிகழ்ச்சியில் கண்தானத்தின் அவசியம், நன்மை குறித்த விழிப்புணர்வு நோட்டீஸ்களை வழங்கினர். கண் மருத்துவ துறையினர் ஏற்பாட்டை செய்தனர்.\nசிவகங்கை : சிவகங்கை அரசு மருத்துவமனையில் கண்தான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. டீன் ரேவதி தலைமை வகித்தார்.கண்காணிப்பாளர் பாலமுருகன், நிலைய மருத்துவ அலுவலர் முகமது ரபீக், டாக்டர்கள்\nஊடக தர்மம் உங்கள் கரங்களில்...\nசமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...\nஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.\nஇங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகோயில் விழாவில் விதிமீறல் அதிகாரிகள் எச்சரிக்கை\nகேரள--தமிழக நீர்ப்பாசன பிரச்னை ஒப்பந்தத்தை தி.மு.க., தொடர வேண்டும் விவசாயிகள் சங்கம் வேண்டுகோள்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2021/09/30/dinakaran-editorial-says-industry-has-started-to-look-tn-against-is-good-sign", "date_download": "2021-10-19T11:56:38Z", "digest": "sha1:BDJMX3RWPOC2DA4GRPTBF6KAOEC3UAGV", "length": 12315, "nlines": 57, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "dinakaran editorial says industry has started to look tn against is good sign", "raw_content": "\n”அதிமுகவின் அவலத்தால் தளர்ந்த தமிழகம்; திமுகவின் அதிரடியால் தலை நிமிர்கிறது” - தினகரன் நாளேடு புகழாரம்\nஓட்டம் பிடித்த ���ொழில் நிறுவனங்கள் மீண்டும் தமிழகம் பக்கம் பார்வையை வீசத் தொடங்கியிருப்பது தலை நிமிரும் தமிழகத்தின் நல்ல அறிகுறி என தினகரன் நாளேடு தலையங்கம் தீட்டியுள்ளது.\n10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியின் அவலங்களால் தளர்ந்த தமிழகம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உறுதியான நடவடிக்கையால் மீண்டும் வளர்ச்சிப் பாதையில் பயணிக்கத் தொடங்கிவிட்டது. ஓட்டம் பிடித்த தொழில் நிறுவனங்கள் மீண்டும் தமிழகம் பக்கம் பார்வையை வீசத் தொடங்கியிருப்பது தலை நிமிரும் தமிழகத்தின் நல்ல அறிகுறி என ‘தினகரன்’ நாளேடு 29.09.2021 தேதியிட்ட இதழில் ‘தலை நிமிரும் தமிழகம்’ என்ற தலைப்பில் தலையங்கம் தீட்டியுள்ளது.\nஅது பற்றிய விவரம் வருமாறு:-\n10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியின் அவலங்களால் தமிழகம் தளர்ந்து விட்டது. ஆனால், தி.மு.க. ஆட்சிக்கு வந்து 4 மாதங்கள் எட்டிய நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் உறுதியான நடவடிக்கையால் தமிழகம் மீண்டும் வளர்ச்சிப் பாதையில் பயணிக்கத் தொடங்கிவிட்டது. அத்தனை வளங்கள் இருந்தும் உறுதியான தலைமை இல்லாததால் ஓட்டம் பிடித்த தொழில் நிறுவனங்கள் மீண்டும் தமிழகம் பக்கம் பார்வையை வீசத் தொடங்கியிருப்பது தலைநிமிரும் தமிழகத்தின் நல்ல அறிகுறி.\nகாமராஜர் ஆட்சிக் காலத்தில் இருந்து தொழிற்துறையில் தமிழகம் எப்போதும் முதலிடம்தான். பெரும் பொருளாதார பலம் மிக்க மகாராஷ்டிரா, குஜராத் போன்ற மாநிலங்களைப் போல் தமிழகத்தின் வளர்ச்சியும் எப்போதும் உயர்ந்தே இருந்தது. கார் தொழிற்சாலையின் பூங்காவாக சென்னையை. மாற்றினார் கலைஞர். எண்ணற்ற கார் நிறுவனங்கள் இங்கே கார்களை உற்பத்தி செய்து உலகம் முழுவதும் அனுப்பி வைத்தன என்றால் கலைஞர் எடுத்த நடவடிக்கையின் மகத்துவம் அனைவருக்கும் புரியும்.\nஅதேபோல் சென்னை மட்டுமல்லாமல் ஒவ்வொரு முக்கிய நகரத்திலும் ஐ.டி. பூங்காக்கள் திறக்கப்பட்டன. அதோடு சிப்காட் தொழிற் பூங்காக்கள் அமைக்கப்பட்டு, தொழிற்சாலைகளுக்கு நிலம் ஒதுக்கி கொடுக்கப்பட்டு, அந்தந்த மாவட்டங்களில் வேலை வாய்ப்புகள், உற்பத்தி திறன், தொழிற்திறன் அதிகரிக்கப்பட்டது. ஆனால், அ.தி.மு.க. ஆட்சியால் தமிழகத்தின் வளர்ச்சி வேகம், தொழிற்திறன் அத்தனையும் முடக்கப்பட்டன. சிறு நகரங்களின் வளர்ச்சி முடக்கப்பட்டு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகள் மட்ட���மே தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி மண்டலமாக கருதப்பட்டன அல்லது இங்கு மட்டுமே அத்தனை வசதிகளும் கிடைத்தன.\nதற்போது எல்லாம் மாறிவிட்டது. தளர்ந்து இருக்கும் கோவை தொழில் மையத்திற்கு நம்பிக்கை ஊட்டியிருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். திருப்பூர் ஜவுளி தொழில், ஈரோடு சாயப்பட்டறை. உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்களின் அத்தனை பிரச்சினைகளும் இப்போது முதல்வர் கையில். அதோடு கொரோனாவால் நலிந்த, மூடப்பட்ட சிறு குறு நிறுவனங்களின் பிரச்சினையை தீர்த்து மீண்டும் வளர்ச்சிப்பாதையில் தொழில் துறையை கொண்டு செல்ல அத்தனை நடவடிக்கைகளும் மின்னல் வேகத்தில் எடுக்கப்பட்டு வருகின்றன. இத்தனைக்கும் சிகரம் வைத்தாற்போல் தமிழகத்தில் முதன்முறையாக போயிங் விமான பாகம் தயாரிப்பு தொழிற்சாலை ஒப்பந்தம் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தாகி இருக்கிறது.\nஇந்த திட்டம் தமிழக வரலாற்றில் ஒரு மைல் கல். அத்தனைக்கும் ஊக்கசக்தியாக இருப்பவர் நம் முதல்வர் மு.க.ஸ்டாலின். கலைஞரால் தொடங்கப்பட்டு அ.தி.மு.க. ஆட்சியால் புதைக்கப்பட்ட நாங்குநேரி தொழில்நுட்ப பூங்கா போன்று தமிழகம் முழுவதும் நிறுத்தப்பட்ட தொழிற்திட்டங்களும் நிச்சயம் தி.மு.க. ஆட்சியில் மீண்டும் உயிர்பெறும். அப்போது அந்தப் பகுதி இளைஞர்களுக்கு அந்த பகுதியிலேயே நல்ல வேலைவாய்ப்பு கிடைப்பதுடன் சென்னையைப் போல் ஒட்டுமொத்த தமிழகமும் முழுமையான பொருளாதார வளர்ச்சி பெற்ற பகுதியாக மாறும் என்பதில் சந்தேகம் இல்லை.\n’பிரதமரின் உண்மையான மனதின் குரல் இதுவாகதான் இருக்க வேண்டும்’ -மோடிஅரசுக்கு சுட்டிக்காட்டிய முரசொலி நாளேடு\nசிறுநீரக கல்லுக்கு பதிலாக சிறுநீரகத்தையே அகற்றிய மருத்துவர்... நுகர்வோர் ஆணையத்தின் அதிரடி உத்தரவு\n“விரைவில் ஆழ்கடல் அகழாய்வுப் பணிகளைத் தொடங்க ஆலோசனை” : அமைச்சர் தங்கம் தென்னரசு முக்கிய தகவல்\nதண்ணி இல்லாத காட்டில் மாட்டிக்கொண்ட 2 பேர்.. 1 வாரம் கழித்து மீட்ட போலிஸ்: ஆஸ்திரேலியாவில் நடந்தது என்ன\n50 ஆண்டுகளுக்குப் பிறகு மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றியத்தை கைப்பற்றிய தி.மு.க - ஆட்சிக்கு கிடைத்த நற்சான்று\n“எங்க கல்யாணத்த மழை வெள்ளம் தடுப்பதா.. நெவர்” : காதல் ஜோடி எடுத்த முடிவு - இணையத்தில் வைரல்\n“விரைவில் ஆழ்கடல் அகழாய்வுப் பணிகளைத் தொடங்க ஆ���ோசனை” : அமைச்சர் தங்கம் தென்னரசு முக்கிய தகவல்\nசிறுநீரக கல்லுக்கு பதிலாக சிறுநீரகத்தையே அகற்றிய மருத்துவர்... நுகர்வோர் ஆணையத்தின் அதிரடி உத்தரவு\nதண்ணி இல்லாத காட்டில் மாட்டிக்கொண்ட 2 பேர்.. 1 வாரம் கழித்து மீட்ட போலிஸ்: ஆஸ்திரேலியாவில் நடந்தது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanjai.today/%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%82-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2021-10-19T11:50:36Z", "digest": "sha1:OA6KWBWI6572BXBXPDGFZ4EK7X56P2A3", "length": 7611, "nlines": 124, "source_domain": "www.thanjai.today", "title": "தஞ்சை பூச்சந்தை அண்ணா நகருக்கு இடமாற்றம் | தஞ்சை டுடே thanjai.today", "raw_content": "\nதஞ்சை பூச்சந்தை அண்ணா நகருக்கு இடமாற்றம்\nதஞ்சையின் பழமையான சந்தைகளில் பூச்சந்தை ஒன்று, அது இயங்கும் இடமே பூக்காரத் ‍தெருவென்று அழைக்கப்படும், மிகவும் நெருக்கமான இடத்தில் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது, கொரோனா தொற்று காரணமாக இச்சந்தை மார்ச் மாதமே மூடப்பட்டது, பின்பு கல்லுக்குளம் அருகேயுள்ள கிறித்துவ தேவாலயத்தில் தற்காலிகமாக இயங்கி வந்தது, இப்போது, மத வழிபாட்டு தலங்கள் அனைத்தும் திறந்ததால், இந்தச் சந்தை இப்போது அண்ணா நகர் 14வது தெருவில் உள்ள ஆண்கள் மேநிலைப்பள்ளி வளாகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.\nஊரடங்கு நீக்கம் பாதுகாப்பை மறந்த தஞ்சை மக்கள்\nதஞ்சை நகரின் நடுவே பேய் வீடு பயம்\nசமூகம் தஞ்சை நகரச்செய்தி மாநகரச் செய்தி\nவிபத்து இல்லா தீபாவளியாக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் தீயணைப்புத்துறை மாவட்ட அலுவலர்\nஅரசியல் தஞ்சை நகரச்செய்தி மாநகரச் செய்தி\nகட்டுமான பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த ஏஐடியூசி வலியுறுத்தல்\nதஞ்சை நகரச்செய்தி மாநகரச் செய்தி வேளாண்மை\nமாடித்தோட்ட சாகுபடியால் உடல் நிலையில் முன்னேற்றம் பெறலாம்; முதல்வர் வேலாயுதம்\nவிபத்து இல்லா தீபாவளியாக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் தீயணைப்புத்துறை மாவட்ட அலுவலர்\nகட்டுமான பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த ஏஐடியூசி வலியுறுத்தல்\nமாடித்தோட்ட சாகுபடியால் உடல் நிலையில் முன்னேற்றம் பெறலாம்; முதல்வர் வேலாயுதம்\nமுதல்வர் முன்னெடுப்பு திருவாரூர் காரைக்குடி ரயில் சேவை துவக்கம்; எம்பி பழனிமாணிக்கம்\nபள்ளி மாணவர்களுக்கு வரும் அக் 25, 26ம் தேதிகளில் கலைப்போட்���ிகள்\nசமூகம் தஞ்சை நகரச்செய்தி மாநகரச் செய்தி\nவிபத்து இல்லா தீபாவளியாக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் தீயணைப்புத்துறை மாவட்ட அலுவலர்\nஅரசியல் தஞ்சை நகரச்செய்தி மாநகரச் செய்தி\nகட்டுமான பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த ஏஐடியூசி வலியுறுத்தல்\nதஞ்சை நகரச்செய்தி மாநகரச் செய்தி வேளாண்மை\nமாடித்தோட்ட சாகுபடியால் உடல் நிலையில் முன்னேற்றம் பெறலாம்; முதல்வர் வேலாயுதம்\nசமூகம் தஞ்சை நகரச்செய்தி மாநகரச் செய்தி\nமுதல்வர் முன்னெடுப்பு திருவாரூர் காரைக்குடி ரயில் சேவை துவக்கம்; எம்பி பழனிமாணிக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/indian-team", "date_download": "2021-10-19T12:53:32Z", "digest": "sha1:6FY6UTZILXOMZKX4OJXFOS2TYQATTNL5", "length": 6166, "nlines": 164, "source_domain": "www.vikatan.com", "title": "indian team | indian team Latest Tamil News Updates, Videos, Photos | Vikatan", "raw_content": "\nபழுதான துப்பாக்கி, பறிபோன பதக்க கனவு... மனு பாக்கருக்கு நடந்தது என்ன\n\"வாடா வாடா ஏரியா பக்கம் வாடா...\" இதயங்களை ஜெயித்த இந்தியா... #AUSvIND கலகல மீம்ஸ் தொகுப்பு\n\"15 நிமிடங்களில் டிராவிட்டின் விக்கெட்டை வீழ்த்துங்கள். இல்லையென்றால்...\" - மாவீரனின் கதை\n5 முறை ஐபிஎல் கோப்பை... ரோஹித்தை இந்திய அணிக்கும் கேப்டனாக மாற்றலாமா\nThank you for everything - நீங்கள் எப்போதும் லெஜெண்ட்தான் தோனி\n`2014 டி20 உலகக் கோப்பை ஃபைனல்; வில்லன்... வீட்டில் கல்லெறி’ - யுவராஜ் சிங் ஷேரிங்ஸ்\n`உனக்கு ஒரு ஓவர்தான் நண்பா’, நம்பிய கங்குலி, நிகழ்த்திய சச்சின் - மாஸ்டர் ப்ளாஸ்டரின் மேஜிக் ஸ்பெல்ஸ்\nஇந்தியாவின் பேட்டிங், ஃபீல்டிங், பெளலிங்.... எப்படி சொதப்பவைத்தது ஆஸ்திரேலியா\n`கோப்பை கனவை தகர்த்த மேகன், அலிஷா ஹீலே' -மகளிர் உலகக்கோப்பையில் இந்தியா படுதோல்வி #TeamIndia #LiveUpdates\nநியூஸிலாந்தில் இன்னொரு ஒயிட்வாஷ்... கோலி அணியின் பிரச்னைதான் என்ன\n`16 விக்கெட்டுகள்; அரைமணி நேரத் திருப்பம்' - இரண்டாவது டெஸ்டிலும் நியூசிலாந்து ஆதிக்கம் #NZvIND\nநியூஸிலாந்தின் மாஸ்டர் பிளான்.. பம்மிய கோலி... பேட்டிங் சொதப்பலுக்குக் காரணம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://timestampnews.com/andhra-pradesh-chief-minister-jegan-mohan-reddy-has-ordered-the-arrest-of-his-own-mla/490/", "date_download": "2021-10-19T12:19:50Z", "digest": "sha1:LCIITFMTDPU4N3H3SHEDG5WEMSKPK4LJ", "length": 6765, "nlines": 88, "source_domain": "timestampnews.com", "title": "சொந்த கட்சி எம்.எல்.ஏ வை கைது செய்ய உத்தரவிட்ட ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி – Timestamp News", "raw_content": "\nசொந்த கட்சி எம்.எல்.ஏ வை கைது செய்ய உத்தரவிட்ட ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி\nஆந்திர மாநிலத்தில் உள்ள நெல்லூர் ரூரல் தொகுதி எம்.எல்.ஏ ஸ்ரீதர்ரெட்டி. இவர் ஆந்திராவில் ஆளும்கட்சியான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் ஆவார். இவர் , அந்த பகுதி மண்டல வளர்ச்சி அதிகாரி சரளா என்பவரை தொலைப்பேசியில் மிரட்டியதாகவும் பின்னர் வீட்டுக்கு வந்து குடும்பத்தை மிரட்டியதாகவும் தெரியவருகிறது.இது தொடர்பாக சரளா, காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். ஆனால் சரளாவின் புகாரை வாங்க காவல் துறையினர் மறுத்துவிட்டனர். ஸ்டேஷனில் துணை காவல் ஆய்வாளர் இல்லாததால் அவரின் புகாரை வாங்க முடியாது என்று கூறி அலைகழித்துள்ளார்கள். ஆனால் சரளா துணை காவல் ஆய்வாளர் வரும் வரை காத்திருப்பதாக கூறி அங்கேயே அமர்ந்து கொண்டிருந்தார். இந்த செய்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியது. இதைப் பார்த்த முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உடனே டி.ஜி.பி., மற்றும் மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டு என்ன நடந்தது என்பது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்.\nயார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுங்கள். தயவு தாட்சணை வேண்டாம் என்றார். இதனால் பெண் அதிகாரியை மிரட்டிய ஸ்ரீதர்ரெட்டி எம்.எல்.ஏ.வை போலீசார் உடனடியாக கைது செய்தனர்- ஆளும் கட்சி எம்எல்ஏவை கைது செய்ய முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்ட சம்பவம் அம்மாநில மக்கள் மற்றும் கட்சிகளிடையே வியப்பை ஏற்படுத்தி உள்ளது.\nPrevious Previous post: 1300 புத்தகங்களை பயன்படுத்தி சரஸ்வதிக்கு கோயில் கட்டிய ஆசிரியர் -கரூர்\nNext Next post: சீன அதிபரின் இந்திய வருகை – பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி\nதூத்துக்குடி மாவட்ட காவல்துறையில் உள்ள நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள்- மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் ஆய்வு.\nதமிழக மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நல்வாழ்வு சங்கத்தின் சார்பில் கொரோனா பணிகள்\nதூத்துக்குடி 17வது வார்டு பொதுமக்கள் சார்பில் தெரு மின் விளக்கு, சாலை வசதி மற்றும் குடிநீர் குழாய் அமைத்திட வேண்டி கோரிக்கை மனு\nதிருச்செந்தூா் கோயில் கும்பாபிஷேகம்: முதல்வா் விரைவில் அறிவிப்பாா்\nதூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அங்கன்வாடி மைய கட்டிடம் – அமைச்சர் கீதாஜீவன் அடிக்கல் நாட்டினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://battimedia.lk/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2021-10-19T12:56:33Z", "digest": "sha1:FVUG7ANG2NZPDWQHEKXKUJ4QNB3ZXQ5M", "length": 6121, "nlines": 111, "source_domain": "battimedia.lk", "title": "இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது. - Battimedia", "raw_content": "\nHome செய்திகள் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது.\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது.\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர்களான சச்சின் டெண்டுல்கர், மகேந்திர சிங் தோனி மற்றும் முகமது அசாருதீன் ஆகியோரை தொடர்ந்து சவுரவ் கங்குலியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகவுள்ளது. இதற்கு கங்குலி சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் பாலிவுட் முன்னணி நடிகர் ரன்பீர் கபூர் நடிக்க உள்ளதாகவும், 200 முதல் 250 கோடி ரூபாய் முதலீட்டில் பெரிய பட்ஜெட் படமாக உருவாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.\nஇதுகுறித்து நியூஸ் 18 சேனலுக்கு பேட்டியளித்த சவுரவ் கங்குலி, ‘ஆம், என் சுயசரிதையை படமாக்க ஒப்புக்கொண்டுள்ளேன். இது இந்தியில் படமாக உள்ளது. ஆனால் இயக்குனரின் பெயரை தற்போது வெளியிட முடியாது. எல்லாம் இறுதி செய்ய இன்னும் சிறிது காலம் ஆகும்’ என அவர் தெரிவித்துள்ளார்.\nPrevious article12 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்படுமா \nNext article1.5 மில்லியன் மொடர்னா தடுப்பூசிகள் இலங்கைக்கு வருகிறது.\n608,000 டோஸ் பைஸர் தடுப்பூசிகள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.\nமாடு அறுத்தலுக்கு தடை , அமைச்சரவையில் சட்டமூலம் அங்கீகாரம்.\nஎரிபொருள் விலையை அதிகரிக்க முடியாது-ஜனாதிபதி\nஅனைத்து விதமான செய்திகளையும் உடனுக்குடன் அறிந்துக்கொள்ள தொடர்ந்தும் இணைந்திருங்கள். ஊடகவியலாளர்களாக இணைய விரும்புபவர்களும் தொடர்புகொள்ளவும் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://battimedia.lk/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-10-19T11:22:18Z", "digest": "sha1:Q4BBTEQJ2R4H4N3J3JVQQRXMCUEW3QWG", "length": 6435, "nlines": 116, "source_domain": "battimedia.lk", "title": "ஒருநாள் போட்டியில் இலங்கை அணிக்கு 226 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. - Battimedia", "raw_content": "\nHome விளையாட்டு ஒருநாள் போட்டியில் இலங்கை அணிக்கு 226 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nஒருநாள் போட்டியில் இலங்கை அணிக்கு 226 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nசுற்றுலா இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் இலங்கை அணிக்கு 226 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nபோட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.\nஅதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 43.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 225 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது.\nஅவ்வணி சார்பில் பிரித்திவ் ஷா 49 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.\nசஞ்சு சம்சன் 46 ஓட்டங்களையும், சூரியகுமார் யாதவ் 40 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.\nபந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் அகில தனஞ்சய 3 விக்கெட்டுக்களையும், பிரவீன் ஜயவிக்கிரம 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.\nபோட்டியின் 23 ஆவது ஓவரில் மழை குறுக்கிட்ட காரணத்தால் போட்டியை 47 ஓவர்களுக்கு மட்டுப்படுத்த நடுவர்கள் தீர்மானித்துள்ளனர்.\nPrevious articleநேற்றைய தினம் கொவிட் தொற்றால் 43 பேர் உயிரிழந்துள்ளனர்.\nNext articleகடுக்காமுனை வில்லு குளத்து நீரினை பயன்படுத்தி இடைப்போக பயிர்ச்செய்கை\nஇலங்கை வீராங்கனை பற்றி சமூக வலைத்தளங்களில் விமர்சனம் குவிந்து வருகின்றன.\nஇலங்கை அணி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி.\nஇலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான 20 க்கு 20 கிரிக்கெட் போட்டியின் மீதமுள்ள இரண்டு போட்டிகளை நடத்த முடியுமா\nஅனைத்து விதமான செய்திகளையும் உடனுக்குடன் அறிந்துக்கொள்ள தொடர்ந்தும் இணைந்திருங்கள். ஊடகவியலாளர்களாக இணைய விரும்புபவர்களும் தொடர்புகொள்ளவும் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ec2-34-235-123-65.compute-1.amazonaws.com/sivakarthikeyan-says-about-women-tamilfont-news-295284", "date_download": "2021-10-19T12:30:33Z", "digest": "sha1:X4OEVAEBAHIRALY2SLAM5UMMO7HOSANI", "length": 15135, "nlines": 155, "source_domain": "ec2-34-235-123-65.compute-1.amazonaws.com", "title": "Sivakarthikeyan says about women - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » என் மகனுக்கு கண்டிப்ப��க இதை சொல்லி கொடுப்பேன்: சிவகார்த்திகேயன்\nஎன் மகனுக்கு கண்டிப்பாக இதை சொல்லி கொடுப்பேன்: சிவகார்த்திகேயன்\nபெண்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை என் மகனுக்கு நான் கண்டிப்பாக சொல்லிக் கொடுப்பேன் என சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளது அனைவரையும் பாராட்டும் வகையில் உள்ளது.\nதமிழகம் உள்பட இந்தியா முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மிக அதிகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பெண் குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்று பெற்றோர்கள் சொல்லிக் கொடுக்கும் அதே நேரத்தில், ஆண் குழந்தைகளிடம் பெண் குழந்தைகளிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று பெரும்பாலான பெற்றோர்கள் சொல்லிக் கொடுப்பதில்லை. அதனால்தான் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.\nஇந்த நிலையில் இது குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் கூறும்போது ’பெண்கள் பார்வையில் இந்த உலகம் இன்னும் அழகாக மாறுவது ஆண்கள் கையில் தான் உள்ளது என்று கூறியுள்ளார். மேலும் பெண்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை என் மகனுக்கு சொல்லிக் கொடுப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Follow\nஅபிஷேக் காலில் விழுந்த தாமரை: எல்லாம் இதுக்குதானா\n'அண்ணாத்த' படத்தில் ரஜினியின் கேரக்டர்: குஷ்பு கூறிய ரகசியம்\nபிக்பாஸ் 5: இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்டவர்கள் யார் யார்\nவிஜய் குறித்து ஒரே ஒரு வார்த்தை கூறிய பூஜா ஹெக்டே\nநடிகை ஸ்ரேயா மகளுக்கு “ராதா“ பெயர்…. காரணத்தை கேட்டு அசந்துபோன ரசிகர்கள்\nராகவா லாரன்ஸின் 'ருத்ரன்' படத்தில் 60 வருடங்களுக்கு முந்தைய பாடலின் ரீமிக்ஸ்\nநான் சொல்றத மட்டும் கேளு: முழுசா சந்திரமுகியா மாறிய அபிஷேக்\nராகவா லாரன்ஸின் 'ருத்ரன்' படத்தில் 60 வருடங்களுக்கு முந்தைய பாடலின் ரீமிக்ஸ்\nசூர்யாவின் அடுத்த இரண்டு படங்களுக்கும் இவர்தான் இசையமைப்பாளர்\nநடிகை தற்கொலைக்கு காதலர் காரணமா பிரேத பரிசோதனையில் தெரிந்த உண்மை\nவிஜய் குறித்து ஒரே ஒரு வார்த்தை கூறிய பூஜா ஹெக்டே\n'அண்ணாத்த' படத்தில் ரஜினியின் கேரக்டர்: குஷ்பு கூறிய ரகசியம்\nநடிகை ஸ்ரேயா மகளுக்கு “ராதா“ பெயர்…. காரணத்தை கேட்டு அசந்துபோன ரசிகர்கள்\nஅபிஷேக் காலில் விழுந்த தாமரை: எல்லாம் இதுக்குதானா\nநாமினேஷனில் திடீர் திருப்பம்: ஒருவர் தப்பிக்க வாய்ப்பு கொடுத்த பிக்பாஸ்\nபிக்பாஸ் 5: இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்டவர்கள் யார் யார்\nபட்டு சாரி கட்டி போர் அடிச்சிருச்சா… நடிகை சினேகா ஸ்டைலை ஃபாலோ பண்ணுங்க..\nபுது ஹேர் ஸ்டைலால் ரசிகர்களை மிரள வைத்த நடிகை ஷில்பா ஷெட்டி… வைரல் புகைப்படம்\nஇந்த வார நாமினேஷனில் நீங்கள் காப்பாற்ற விரும்பும் போட்டியாளர் யார்\nகையில எடு பவர, துணிஞ்சு எடு பவர.. சூர்யாவின் 'ஜெய்பீம்' பாடல் வைரல்\nதனுஷை அடுத்து ஹாலிவுட் செல்லும் பிரபல தமிழ் நடிகர்\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் 'மருதாணி' பாடல் வீடியோ வைரல்\nமறுபடியும் பிக்பாஸ் வந்து அபிஷேக் மூஞ்சியில ஒண்ணு போடுங்க: நமீதா வீடியோவுக்கு நெட்டிசன் கமெண்ட்\nசாலையோர கடையில் பேரம் பேசினாரா நயன்தாரா\nபிக்பாஸ் வீட்டின் முதல் சண்டை: எதிர்பார்த்தது போலவே அபிஷேக் தான்\nநடிகர் ராமராஜனுக்கு என்ன ஆச்சு பரவி வரும் வதந்தியால் பரபரப்பு\n'சோலோவாக ரிலீஸ் ஆகிறதா ரஜினியின் 'அண்ணாத்த': பின்வாங்கும் தீபாவளி படங்கள்\nதலைவர் பதவிக்கு போட்டியிடும் போட்டியாளரை டார்ச்சர் செய்யும் அபிஷேக்\nதீபாவளி ரிலீஸ் பட்டியலில் இணைந்த மேலும் ஒரு பிரபல நடிகரின் படம்\nசிம்புவின் 'வெந்து தணிந்தது காடு' படத்தின் சூப்பர் அப்டேட்\nஷாருக்கான் படத்தில் நடிக்க மறுத்தாரா சமந்தா\nபாவாடை தாவணியில் நடிகை ரோஜா: வைரலாகும் போட்டோஷூட் புகைப்படங்கள்\nஇந்த வாரம் டார்கெட் செய்யப்படும் இரண்டு பெண் போட்டியாளர்கள்\nகுஷ்பு, மீனாவுடன் ரஜினியின் 'அண்ணாத்த' பாடல்: ரிலீஸ் தேதி அறிவிப்பு\n'கர்ணன்' படத்திற்கு பின் மீண்டும் தனுஷுடன் இணைந்த பிரபல நடிகர்\n'விஷால் 32' படத்தின் அட்டகாசமான டைட்டில் போஸ்டர்\nசூர்யாவின் அடுத்த படத்தில் 'தெருக்குரல் அறிவு' பாடல்: ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஉமா மகேஷ்வரி இறப்புக்கு இதுதான் காரணம்: நடிகை சாந்தி வில்லியம்ஸ்\nபிக்பாஸ் வீட்டிற்கு செல்கிறாரா ப்ரியா பவானிசங்கர்\nகமல்ஹாசனிடம் அபிஷேக்கை போட்டு கொடுத்த ஐக்கி, பாவனி ரெட்டி\nகமல் முன்னிலையில் சின்னப்பொண்ணுவை கதறி அழவைத்த அபிஷேக்\n'மெட்டி ஒலி' சீரியல் நடிகை காலமானார்: ரசிகர்கள் அதிர்ச்சி\nசாம்பியன் பட்டம் வென்ற சிஎஸ்கே அணிக்கு இத்தனை கோடியா\nவீட்டில் பொரி கடலை அதிகமா இருக்கா\nமாஸ் காட்டிய தோனி… சிஎஸ்கே ரசிகர்களை குளிர வைக்கும் இன்னொரு வரலாற்று சம்பவம்\nவாக்கிங் செல்லும் இளம்பெண்களிடம் பாலியல் சீண்டல்: ஸ்டார் ஓட்டல் ஊழியர் கைது\nபிரமிக்க வைக்கும் சுந்தர்பிச்சையின் தினசரி வழக்கம் பற்றி தெரியுமா\nதோனியை வித்தியாசமாகப் பாராட்டிய கல்லூரி மாணவி… ரசிகர்கள் வரவேற்பு\n ஆச்சர்யத்தில் ஒரு லட்சத்தை இழந்த இளைஞர்\nKKR vs CSK யாருக்கு அதிக பலம் 2021 சாம்பியன் பட்டம் யாருக்கு\nடி20 உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் அதிரடி மாற்றம்\nவிருந்தில் கலந்துகொண்ட புலியால் அதிரும் சோஷியல் மீடியா\nமென்டர் பதவிக்கு தோனி வாங்கும் சம்பளத்தைப் பார்த்து வியந்துபோன ரசிகர்கள்\nவேகமாக வளரும் சிம்பு திரைப்படம்: அடுத்தகட்ட படப்பிடிப்பு எங்கே\nநடைப்பயிற்சியின்போது பொதுமக்களிடம் உரையாடிய முதல்வர் ஸ்டாலின்: வைரல் வீடியோ\nவேகமாக வளரும் சிம்பு திரைப்படம்: அடுத்தகட்ட படப்பிடிப்பு எங்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2012/03/29/%E0%AE%95%E0%AF%82%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80/", "date_download": "2021-10-19T13:17:33Z", "digest": "sha1:AYQKRXG6W6UJG3O6VJ45Q523CB275MKC", "length": 101629, "nlines": 218, "source_domain": "solvanam.com", "title": "கூந்தப்பனை – வேர்களின் நீரூற்று – சொல்வனம் | இதழ் 256 | 10 அக். 2021", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 256 | 10 அக். 2021\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nகூந்தப்பனை – வேர்களின் நீரூற்று\nமித்திலன் மார்ச் 29, 2012\nவாழ்க்கையின் சுவைகள் அதன் எதிர்பாராத்தன்மை இழக்கப்பட்டால் குன்றிவிடும். வேறொரு புத்தகத்தைப் பற்றிதான் எழுதுவதாக இருந்தேன், தேவையான குறிப்புகளையும் எழுதி வைத்திருந்தேன், அவற்றைத் தொகுத்து எழுதும் கட்டத்தில் இருந்தபோது கூந்தப்பனை குறுநாவல் தொகுப்பை எதிர்பாராமல் வாசிக்க நேர்ந்தது. வாசித்தபின் அதைப் பற்றிய யோசனைகளைத் தவிர்க்க முடியவில்லை – குறிப்பாக, “கூந்தப்பனை” என்ற தலைப்பு கொண்ட குறுநாவலில், தன் ஆண்மையற்ற நிலையை நேரடியாகவே எதிர்கொள்கிறான் சதீஷ். மனைவியைத் தன் நண்பனுக்கு மணமுடித்துத் தந்தபின்னான அனுபவ வெளிச்சத்தில் அவனது மனப்போக்கு புரிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது. ஆனால், அவனது செயல்களின் விளைவுகள் தொடர்ந்து புதிராகவே இருந்தன. இந்தப் புதிர் என் எண்ணங்களை எதிர்பாரா திசைகளில் கொண்டு சென்றது.\nசு.வேணுகோபாலின் ‘கூந்தப்பனை’ தொகுப்பை என்னுடன் பகிர்ந்து கொண்ட நண்பர், தான் விரும்பி வாசித்த எழுத்தை எனக்குப் பரிந்துரைத்திருந்தார் என்று நினைத்திருந்தேன். மாறாக, நான் இதைப் படித்து முடித்ததும் அது குறித்த தன் தீவிரமான எதிர்மறை விமரிசனங்களை அவர் முன் வைத்தார். அதற்கு முன்னரே நான் இந்த நூல் குறித்த என் கருத்துகளை எழுதி வைத்திருந்தேன் – அவருடன் உரையாடிய பின், புத்தகம் குறித்து மேலும் சில பார்வைகள் கிட்டின. அவருடனான உரையாடலின் அடிப்படையில் கூந்தப்பனையை மீண்டும் வாசித்து, திரும்ப எழுதும்போதுதான், நான் வாசித்ததாக நினைத்திருந்த நூல் வேறு தளத்தில் இயங்குவதை உணர்ந்தேன். முதல் வாசிப்பில் நான் எனக்குள் உருவாக்கிக் கொண்ட கதைகள் காமம் சார்ந்த வடிவம் பெற்றிருந்தன என்றால், இரண்டாம் வாசிப்பு எழுத்துருவம் பெற்றபோது அவை ஒழுக்க விழுமியங்களைப் பேசும் வடிவம் கொண்டன.\nஇதற்குமுன், சு.வேணுகோபாலைக் குறித்து என் மனதில் ஆழப் பதிந்திருந்த எண்ணம் இதுதான்: சமகால எழுத்தாளர்களில் அவர் மட்டுமே காமத்தின் உக்கிர அனுபவத்தை முழுமையாகத் தன் எழுத்தில் வெளிப்படுத்துகிறார் என்று ஒரு நண்பர் கூறியிருந்தார். கூந்தப்பனையை வாசிக்கும்போதும், அது குறித்து சிந்திக்கும்போதும் காமத்தை மையமாகக் கொண்டே இதிலுள்ள கதைகளை வாசித்துப் புரிந்து கொண்டிருந்தேன். ஆனால், காமத்துக்கு அப்பால், அதன் அறம் குறித்த அக்கறையும் மனித ஆன்மாவின் மெய்ப்பாடு குறித்த கவலையும் சு.வேணுகோபாலின் எழுத்தின் உள்ளார்ந்த (ஆனால் நேரடியாகப் பேசப்படாத) உணர்வாக இருக்கிறது என்று அறிகிறேன்.\nவிவசாயத்தின் நசிவைப் பேசும் ‘கண்ணிகள்’, விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள பொருளாதாரம் இன்று சந்திக்கும் அச்சுறுத்தல்களை விவரிக்கிறது, அதன் இழப்புகளைச் சந்திப்பவர்களின் சொத்துகள் மட்டுமல்ல, ஆன்மாவே விலை பேசப்படுகிறது என்பதை உணர்த்தும் கதை அது. இந்தச் சிறுகதையில் நொடிந���து போன விவசாயியின் நிலம் அநியாய வட்டிக்குப் பணம் தருபவர்களிடம் மோசம் போகிறது, அதிலிருந்து மீளும் முயற்சி அவனது ஆன்மாவை விலை பேசும் கிருத்தவப் பெருவணிகரிடம் அவனை இட்டுச் செல்கிறது.\nபிறந்த வீட்டுக்குப் போய் விட்ட தன் மனைவியைத் திரும்ப அழைத்து வர “வேதாளம் ஒளிந்திருக்கும்” குறுநாவலின் கதைசொல்லியின் உதவியைக் கேட்கிறான் விஸ்வநாதன். அவர்கள் சென்ற இடத்தில் கண்டவை, மூவரும் ஒன்றாய் பேருந்தில் திரும்பும்போது விஸ்வநாதனின் மனைவி சொல்லக் கேட்டு அறியக் கிடைப்பவை என்று ஒழுங்குபடுத்தப்படாத வரிசையில் விரிகிறது கதை. இங்கு இழப்பதற்கென்று எந்த ஆன்மாவும் இல்லை, ஆனால் ஆண்மனதின் அச்சங்கள் கேள்விக்குள்ளாகின்றன – “ஆதிக்கத்தின் மேல் நின்றுதான் நம்மால் அன்பை செலுத்த முடியுமா விடாப்பிடியான மாய கௌரவ தடிமன் அது. அது இல்லையென்றால் ஆணும் இல்லை என்ற பின்னல் கொடி எங்கும் வியாபித்துக் கிடக்கிறது.” விஸ்வநாதனால் ஈஸ்வரி இல்லாமல் இருக்க முடியவில்லை – ஆனால், பெண்மேல் ஆதிக்கம் செலுத்துவதைத் தன் இயல்பாகக் கொண்டிருப்பதால் அவன் அன்பின் இயல்பை அறியாதவனாக இருக்கிறான். “அபாயச்சங்கு” சுரேந்திரனையும் இந்த ஆதிக்க வெறிதான் தோற்கடிக்கிறது – “அவள் மீதான மோகம் – மோகம் என்று சொல்வதைவிட அவமானத்தின் பிரதிபிம்பம் என்று சொல்லலாம்- நாளாக நாளாக அவளைத் தன்னுள் சுருட்ட முயலும் ஆக்ரோஷம் மிகுந்ததாக வளர்ந்தது. அவள் உடலை ஆக்கிரமித்து முறுக்கிப் பிழிந்தெடுக்க மனம் ஆலாய்ப் பறந்தது.”\n“மரத்த தடிமன் இது என்று அறியாமலே மனிதனாக நிற்கும் ஜந்து” என்று “வேதாளம் ஒளிந்திருக்கும்” விஸ்வநாதன் விவரிக்கப்படுகிறான். பெண்ணுள்ளத்தைப் புரிந்து கொள்ள முடியாத, தன் பொறுப்பை உணராத, ஆண்பிள்ளைத்தனம் என்ற தடித்தனத்தால் இல்லற இன்பம் தன் தனியுரிமை என்று நினைத்து, தன் தோல்வியிலும் பிறரைத் தண்டிக்கும் ஆண்மையை விமரிசிக்கும் குறுநாவல் இது.\nஆண்மையின் இந்த மாய கௌரவ தடிமன் “வேதாளம் ஒளிந்திருக்கும்” மௌனமாய் இறுகி ஈஸ்வரியை அச்சுறுத்துகிறது – இந்த ஆண்மையே “அபாயச்சங்கு” மற்றும் “கூந்தப்பனை” ஆகிய இரு குறுநாவல்களிலும் வெவ்வேறு வகைகளில் குலைகிறது: கண்ணாடியின் எதிரெதிர் பிம்பங்களைப் போல் அபாயச்சங்கிலியின் சுரேந்திரனும் கூந்தப்பனையின் சதீஷும் இருக்கின்றனர் : முன்னவனது வீழ்ச்சி ஒரு எச்சரிக்கையாக இருந்தால், பின்னவனது மேன்மை ஒரு இயற்கை நியதியின் நிச்சயத்தன்மையைச் சுட்டுகிறது. தன் காதல் தோற்றுவிட்ட நிலையில் காதலியின் தாயின் பெண்ணுடலை ஆண்டு அந்த உறவில் அன்பை நிறுவ முயற்சிக்கும் சுரேந்திரன், தன் ஆன்மாவை இழக்கிறான். இல்லற வாழ்வில் அடிப்படை ஆண்மைக் குறைவுள்ள சதீஷின் இயல்பான கருணை, அவனது ஆன்மாவை பிரபஞ்ச அளவில் விரிப்பதாக இருக்கிறது.\nஎன் நண்பர் இத்தொகுப்பில் உள்ள கதைகள் சமூக இயல்பைப் பிரதிபலிக்கவில்லை என்று சொன்னார், இவற்றில் விவரிக்கப்படும் சமூகம் நம்பகத்தன்மை இல்லாத ஒன்று, சமூக வழக்குகளை, வாழ்க்கை முறைமைகளைப் பொருட்படுத்தாத வணிக திரைப்படங்களுக்குரிய கற்பனை இந்தக் கதைகளின் ஊடே ஒரு சரடாக இருக்கிறது என்றார் அவர். “அபாயச்சங்கிலியில் வருவதுபோல் தன் காதலியின் தாயுடன், அண்டை வீடாக இருந்தாலும், வேலையில்லாத ஒரு இளைஞன் யாருக்கும் தெரியாமல் தொடர்ந்து கள்ள உறவு வைத்திருப்பது சாத்தியமா அவனது தாய் வீட்டோடிருப்பவள். காதலியின் தாயாருக்குப் பள்ளி செல்லும் மகன் இருக்கிறான். அக்கம்பக்கத்து வீடுகளுடன் நட்பு இருக்கிறது. இந்த உறவு எப்படி சாத்தியம் அவனது தாய் வீட்டோடிருப்பவள். காதலியின் தாயாருக்குப் பள்ளி செல்லும் மகன் இருக்கிறான். அக்கம்பக்கத்து வீடுகளுடன் நட்பு இருக்கிறது. இந்த உறவு எப்படி சாத்தியம்” என்று கேட்டார் அவர். அதே போல், “கூந்தப்பனையில் வருவது போல் நெருங்கியவர்களாக இருந்தாலும், நாலு பேரறிய ஒருவன் தன் மனைவிக்கு மறுமணம் செய்து வைக்க முடியுமா” என்று கேட்டார் அவர். அதே போல், “கூந்தப்பனையில் வருவது போல் நெருங்கியவர்களாக இருந்தாலும், நாலு பேரறிய ஒருவன் தன் மனைவிக்கு மறுமணம் செய்து வைக்க முடியுமா அவர்கள் யார் எவர் என்பதைப் பார்க்க வேண்டும். அப்படி ஒரு சம்பவம் நடந்து விட்டால், உறவுக்காரர்கள் இவர்களை நிம்மதியாக வாழ விடுவார்களா அவர்கள் யார் எவர் என்பதைப் பார்க்க வேண்டும். அப்படி ஒரு சம்பவம் நடந்து விட்டால், உறவுக்காரர்கள் இவர்களை நிம்மதியாக வாழ விடுவார்களா எல்லாவற்றுக்கும் மேலாக, வேறொருவனைக் கல்யாணம் செய்து கொண்ட தன் மனைவியுடன் அவன் ஒரே வீட்டில் வசிக்கிறான். இன்றைய சமூக நடப்புக்குப் பொருந்தாத கற்பனையாக இருக்கிறது இது,” என்றார் அவர்.\n“நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யெனப் பெய்யும் மழை.” என்ற குறள் எப்படிப்பட்ட மனநிலையை வெளிப்படுத்துகிறதோ, அந்த மனநிலையே, அதன் அற விழுமியங்களே கூந்தப்பனையை ஒரு தனித்துவம் கொண்ட படைப்பாக நிலை நிறுத்துகிறது, என்று சொன்னேன் நான். அதன் முன் சு.வேணுகோபாலின் எழுத்தில் நாம காணக்கூடிய குறைகள் எத்தனை இருந்தாலும் அவை பொருட்டல்ல. நண்பருக்கு அதில் திருப்தியில்லை.\nநீதிநூல்கள் இலக்கியமாகுமா என்ற கேள்வியை எழுப்பினார் அவர். இத்தொகுப்பில் உள்ள கதைகளை நீதிக் கதைகள் என்று சொல்ல முடியாது என்றாலும், இவற்றின் அடிப்படையில் உள்ள நீதி விசாரணையே இவற்றை இலக்கியமாகுகிறது என்று நினைக்கிறேன். பிரபஞ்ச நியதியை மனித வாழ்வோடு பிணைக்கும் எழுத்து அபூர்வமாகவே காணக் கிடைக்கிறது. சு.வேணுகோபாலின் கூந்தப்பனை, அதன் அத்தனை குறைகளோடும், இன்றைய காலகட்டத்தில் அவ்வகைப்பட்ட எழுத்தின் உயர்ந்த சாத்தியங்களைத் தொடுகிறது என்று சொல்லலாம்.\n“அபாயச்சங்கு” குறுநாவலை ஒரு cautionary taleஆக வாசிக்க இடமிருக்கிறது – மிகவும் செயற்கையாக எழுதப்பட்ட கதை- பாத்திரங்கள் கதையைக் கொண்டு செல்லும் வாகனங்களாகப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. ஆனால் இந்த செயற்கையான மொழியையும் மீறி அபாயச் சங்கின் நீதி நம்மைத் தாக்குகிறது. “சிதறியதில் மிச்சம் மீதியை நினைவின் துருத்தி ஊதி ஊதி அவஸ்தையை நீண்ட நாள் உயிரோடு வைத்திருக்கிறது,” என்று எழுதுகிறார் சு.வேணுகோபால். இது தவிர, அபாயச்சங்கின் பேச்சுத் தமிழ் வடிவமான சைரனுக்கு கிரேக்க இலக்கியத்தில் வேறொரு தனிப்பொருள் உண்டு.\n“அபாயச்சங்கு” நினைவின் துருத்தி ஊதி ஊதி கொல்லாமல் கொல்லும் அவஸ்தை மட்டுமல்ல – கடற்கப்பல்களைத் தம் இனிய கானங்களின் கவர்ச்சியால் ஈர்த்து பாறைகளில் சிதறடித்துச் சாகடிக்கும் கிரேக்கக் கன்னிமார்களும் சைரன்கள்தான். “பொங்குவதை நீர் தெளித்து மட்டுப்படுத்த முடிந்ததே தவிர பொங்காமல் இருப்பதற்கான வழி” தெரியாத சுரேந்திரன் முன் விரியும் காட்சி இது: “குழாய் தள்ளும் நீரின் உருளையான வளைந்த வடிவம் நீரில் முங்கியிருக்கும் கல்லோடு மோதி உருளை சிதைந்து வாய்க்கால் நீராக உருக்கொண்டு போகிறது”. – இதுவும் ஒரு உடைதல்தான், இல்லையா இந்த வாய்க்கால் நீரும் உடைதலின் விளிம்பில் நிற்கும் அவன் கண்முன் வற்றிப் போகிறது.\nஅபாயச் சங்கிலி கதையில் சுரேந்திரன் இளைஞன். பக்கத்து வீட்டில் இருக்கும் தன் அத்தை பெண்ணைக் காதலிக்கிறான். அத்தை கொஞ்சம் அழகானவள், அழகு குறித்த கர்வம் உள்ளவள். வசதியானவள். சுயநலம். இவன் கல்லூரி மாணவனாக இருக்கும்போது அவள் பள்ளி மாணவி. படித்து முடித்ததும் காசு கொடுத்து சொசைட்டி ஒன்றில் கிளார்க் வேலை வாங்குகிறான். முதலில் இருவரையும் விலக்கி வைத்த அத்தை, இப்போது இவர்கள் காதலை மறைமுகமாக ஊக்குவிக்கிறாள். வேலை போய் விடுகிறது. அத்தை இருவரையும் பிரித்து விடுகிறாள். இவனது காதலி சேலம் போய் கம்ப்யூட்டர் டிப்ளமா படிக்கிறாள். இவன் வேலையில்லாமல் வீட்டில் இருக்கிறான். அப்புறம் அவளுக்குக் கல்யாணம் நிச்சயம் செய்கிறார்கள். அவள் இவனை உதாசீனப்படுத்திவிட்டு தன் கல்யாணத்துக்குத் தயாராகிறாள். இவனுக்கு அவமானமாகப் போய் விடுகிறது. ஒரு நாள் அத்தை வாசலில் நின்று இவனை உற்றுப் பார்த்துத் திரும்புகிறாள். இவன் ஒரு உந்துதலில் சற்று நேரம் கழித்து அவளைத் தொடர்ந்து அவள் வீட்டினுள் நுழைந்து விடுகிறான். என்ன எப்படி என்று தெரியவில்லை, எப்படியோ தொடர்பு ஏற்பட்டுவிடுகிறது. அந்தக் கள்ள உறவு தொடர்கிறது. ஒரு ஆவேசத்தில் துவங்கிய அந்த உறவு காதலாகக் கனிகிறது. ஆனால் அது அர்த்தமற்ற காதல் என்று அவன் உணர்கிறான். தான் சீரழிந்துவிட்டதை அவன் உணரும்போது எல்லாம் முடிந்து விடுகிறது.\nகதையின் வணிக சினிமாவின் எளிய கணங்களில் ஒன்று, முகமூடிக் கிழவன். சுரேந்திரனின் அகக்காட்சி இவன். காதலில் தோற்ற சுரேந்திரன் காமம் தன்னைச் சிறுமைப்படுத்திவிட்டதை உணரும்போது, முகமூடிக் கிழவன் கேட்கிறான், “உனக்கென்று எதை வைத்திருக்கிறாய்” என்று. “சான்றிதழ்” என்று மட்டும்தான் சுரேந்திரனால் சொல்ல முடிகிறது. “மண்ணாங்கட்டி” என்கிறான் கிழவன். ஒழுக்கத்தையும், சுயத்தையும், உறவுகளையும் இழந்தது சுரேந்திரன் மட்டுமல்ல – சான்றிதழைத் தவிர வேறு எந்த அடையாளத்தையும் அவனுக்குத் தர முடியாத கல்வி முறையும் தோற்கிறது. அந்தக் கல்விக்காக பரம்பரை பரம்பரையாக விவசாயம் செய்து வரும் நிலங்களை இழக்கும் மக்களும்தான். சுரேந்திரனின் தந்தை முன்னர் பண்ணை வேலை செய்திருந்த மிராசுதாரின் குடும்பம் நொடிந்து போய், அவர்களுடைய விவசாய நிலங்கள் குழந்தைகளின் கல்விக்கு விற்கப்பட்டு, அந்தக் கல்வியும் பயனற்றுப் போகிறது – இந்த சமூக விமரிசனம், அபாயச்சங்கின் உட்சரடாக ஓடிக் கொண்டே இருக்கிறது. ஒரு தனி மனிதனின் ஆன்மா மட்டுமல்ல, சமூக ஆன்மாவின் இழப்பே அபாயச் சங்கிலியில் பேசப்படுகிறது.\nஇவ்வளவு விஷயமிருந்தும் அபாயச் சங்கிலி, கதையாக வணிக சினிமாவின் செயற்கைத்தன்மையைத் தாண்டுவதில்லை. கூந்தப்பனையின் செயற்கைத்தன்மை இதைவிட அதீதமானதாக இருந்தாலும், அது தொடும் உச்சம் பிரம்மாண்டமான ஒன்று.\nசதீஷ் தனக்கு ஆண்மையில்லை என்பதை மணமானபின்தான் உணர்கிறான். தன் மனைவி இல்லறம் நிறைவு பெறாமல் தவிப்பதற்கு இரங்கி, தன் நெருங்கிய நண்பனை அவளுக்குக் கல்யாணம் செய்து வைக்கிறான். சதீஷ் எப்போதும் தன்னோடு இருக்க வேண்டும் என்று அவள் கேட்டுக் கொண்டாள் என்பதற்காக மூவரும் ஒரே வீட்டில் இருக்கிறார்கள். ஒரு நாள் அசந்தர்ப்பமான வேளையில் அவன் வீட்டுக்குள் நுழைகிறான்; வாரிச் சுருட்டிக் கொண்டு அவள் “திறந்த வீட்டில் நாய் மாதிரி நுழையறியே, நீயெல்லாம் மனுசனா” என்று கேட்கிறாள். எத்தனை முறை நான் பார்த்த உடம்பு என்று நொந்து போய்விடுகிறான் இவன். இது தவிர ஊரே இவனை ஏளனம் பேசுகிறது. ஆக, ஊரைவிட்டு ஓடுகிறான். எங்கெங்கோ செல்கிறான். கதையின் முடிவில் ஒரு கிராமத்திலிருந்து கேனில் பாலைக் கொண்டு போய் சொசைட்டிக்குத் தரும் வேலை கிடைக்கிறது. அந்த வேலையைச் செய்துவிட்டுத் திரும்பி வரும்போது வெடிகளால் பாறைகளைப் பிளக்கும் இடத்தைச் சுற்றி உள்ள தென்னந்தோப்பு நீரில்லாமல் கருகுவதைப் பார்க்கிறான் சதீஷ். அங்குள்ள ஒரு பாறைப் பள்ளத்தில் தேங்கிக் கிடக்கும் நீரை எடுத்து ஒரு மரத்துக்கு ஊற்றிவிட்டு திரும்பி வந்து பார்க்கும்போது ஒரு அதிசயம் நிகழ்ந்திருக்கிறது.\nகூந்தப்பனை குறித்து ஜெயமோகன் ஒரு ஆழமான விமரிசனக் கட்டுரை எழுதியிருக்கிறார். இந்தக் குறுநாவல் வாசிப்புக்கு அந்தக் கட்டுரை இன்றியமையாத ஒன்று. அதில் ஜெயமோகன் இவ்வாறு எழுதுகிறார்: “மண்ணில் முளைத்தெழுந்த ஒரு கலைஞனைப் புரிந்துகொள்ள நமக்கு எவ்வளவு தகவல்கள் தேவைப்படுகின்றன இல்லையா நாம் எத்தனை தூரம் விலகி வந்திருக்கிறோம் நாம் எத்தனை தூரம் விலகி வந்திருக்கிறோம்” என்று. உண்மைதான், நாம் ��ேற்கொண்டிருப்பது தகவல் இழப்பு மட்டுமல்ல, நாம் நம் சமூக ஆன்மாவையே தொலைத்துக் கொண்டிருக்கிறோம். அதன் மொழி நமக்குப் புரியாததாக இருக்கிறது. வணிக சினிமாவின் எளிய கற்பனையே இன்று நம் மண்ணின் கதையாடலாக மாறிவரும் நிலையில், அந்த வடிவின் உச்சங்களைத் தொடும் சு.வேணுகோபாலை மண்ணில் முளைத்தெழுந்த கலைஞர் என்று ஜெயமோகன் அழைப்பதில் தவறிருப்பதாகத் தெரியவில்லை. அது ஏன் என்று புரிந்து கொள்ள, இங்கு சுட்டப்பட்டிருக்கும் ஜெயமோகனின் கட்டுரையை நீங்கள் படிக்க வேண்டும்.\nநார்த்ராப் ஃப்ரை (Northrop Frye) என்ற விமர்சகர், தொன்மத்தின் நீட்சியே இலக்கியம் என்று சொன்னதாகத் தெரிகிறது. கூந்தப்பனை தொன்மத்தின் ஆழங்களைத் தொடும் கதை என்பது ஜெயமோகனின் இந்தக் கட்டுரையைப் படிக்கும்போது வலுப்பெறுகிறது. சதீஷ் தனியன்தான், ஆனால் தனியனில்லை. அவனது துயரங்கள், அவற்றை அவன் உத்தமமாய் எதிர்கொள்ளும் தன்மை, அவனை இயற்கையோடு இயற்கையாய் ஒன்ற வைப்பதாக இருக்கிறது. பொதுவாக வேணுகோபாலின் கதைகளில் கலவியனுபவங்களில் இது நிகழ்கிறது – “பாம்புப் பிணையல். வயது வித்தியாசம் அழிந்து ஒத்த நாய்க்குட்டிகளின் செல்லாட்டம். அடக்குமுறை மறைந்து என்னை ஆண்டுகொள் என்ற விட்டுக்கொடுத்தல் சட்டென்று அந்தப் புள்ளியில் மையம் கொண்டது இருவருக்கும். மனிதர்கள் அழிந்து, விலங்குகள் அழிந்து, புழு பூச்சிகள் அழிந்து, எங்கும் மல்லிகை மொட்டு மெத்தென்று உதிர்ந்திருக்கும் மிகப் பெரிய வெளியில் யோசிப்பற்ற இரு குழந்தைகள் உருவிப் போட்டது போல் விளையாடுகின்றன,” என்று வேணுகோபால் எழுதுகிறார் ஓரிடத்தில் (அபாயச்சங்கு, பக்கம் 53).\nஇன்னோரிடத்தில் ஆணும் பெண்ணும் தத்தம் இயற்கையை ஒன்றியுணர்தல் இப்படி விவரிக்கப்படுகிறது: “அவளுக்குள் அவனுக்குள் பதுங்கி இருக்கும் ஆண்மை, பெண்மை பிரவாகமெடுத்து பரவசமாய்க் கசிந்தது. உச்சத்தின் உதிர்ப்பு நிகழ தனித்த தூக்கலான தாக்குதல் மறைந்தது. பெண்ணுக்குள் ஆணையும், ஆணுக்குள் பெண்ணையும்… அர்த்தநாரி மீட்டலென நிகழ்ந்தது. ஐம்புலன்களும் வெளி இரைச்சல் அடங்கி ஐந்தும் ஒன்றன் கவனமாகிக் குவிந்தது. ஜதிகளில் மயங்கும் பாதலீலைகள் போல் ஆனந்த லகரி. வெட்கங்கள் ஒழிந்த மல்யுத்தம். முக்குளித்ததில் பிறந்தது லயம். இப்படி மோகத்தில் ஒன்றிப் பிணைத்து போகும் நி��ையை அவள் இதற்குமுன் பெற்றதில்லை. தம்மை மறந்தனர். கொத்தான நரம்பு மண்டலத்தின் ஒரு கீற்றில் ஒட்டியிருந்த அவளது கழுத்துச் சுளுக்கின் முடிச்சு அவிழ்ந்து கொண்டது” (அபாயச்சங்கு, பக்கம் 80).\nகூந்தப்பனையில் சதீஷின் ‘நினைப்பில் மட்டுமே இருந்தது காமம்’, ‘சர்வவல்லமை பொருந்திய அந்த ஜீவாதார காந்தப்புலம். உடம்பில் எந்த இடத்தில் அது ஒட்டிக கிடக்கிறது அதை எப்படி வெட்டியெடுக்க’ என்று ஒரே சிந்தனையாக, “ஒரே ஒரு முறை ஒரு மின்னலெனத் தெறித்து மறைந்தால் போதும்…” என்று எப்போதும் நீங்காத தன் குறை நினைவால், வாழ்க்கையை விரும்பித் தொலைத்தவன் அவன். தன் மனைவியை நண்பனுக்கு மணமுடித்து, அவளை “… நடுவில் கிடத்தி இருவரையும் தன் இரு கரத்தால் குழந்தைகளைத் தழுவிக் கொள்வதுபோலத் தழுவி நிம்மதியாகத் தூங்கும் அமைதியைத் தேடினான் அவன். “அவனோடு அவனது அம்மா மூச்சாக இருக்கிறாள். அவள் உடல்தான் சத்திரப்பட்டியில் சுற்றி வருகிறது,” என்று நினைத்துக் கொள்ளக்கூடியவன் – சதீஷுக்கு ஆணும் பெண்ணும் கூடி அறியக்கூடிய அர்த்தநாரி மீட்டல் இல்லை: அவனே அர்த்தநாரியாக இருக்கிறான். அதனால் சிறுமைப்பட்டாலும், சிறுமை தொடாதவனாக இருக்கிறான். துயர் மிகுந்திருந்தும், துயரைக் காணும்போதெல்லாம் கருணை அவனுள் சுரந்து கொண்டே இருக்கிறது.\nஇந்தக் கதையின் முடிவில் என்றும் தன்னுள் ஈரமறறிருந்த சதீஷ் தன்னைச் சுற்றி ஈரமற்ற உலகில் உயிர்கள் வாடுவதைக் காண்பது நாம் தொன்மங்களில் உணரும் உச்சம். இந்த உச்ச துயரில் அவனுள் சுரக்கும் கருணையில் இயற்கை நெகிழ்கிறது. அவனுக்காகக் ஒரு பேரதிசயம் நிகழ்கிறது – அது, “இதுவரை ருசித்திராத நீரமுதம். கருணையின் ஜீவித அழகு”. ஆண் பெண் அறிதலில் இயற்கை தொட்டு ஒரு அர்த்தநாரிஸ்வர மீட்டல் நிகழ்கிறதென்றால், அர்த்தநாரிஸ்வரத்தைத் தம்மியல்பாய்க் கொண்ட இயற்கையும் சதீஷும்- வேறொரு, அதனினும் உன்னத மீட்டலை நிகழ்த்துகின்றனர்.\nநல்லார் ஒருவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை என்ற நீதி எந்த மண்ணில் வேரூன்றி இருந்ததோ, அந்த மண்ணின் கதைகளை நீக்கி அவற்றின் இடத்தை என்றோ ஆக்கிரமித்து விட்டன வணிக சினிமாவின் எளிய கதைகள். ஆனால் அந்த நீதியுணர்வு தொடர்ந்து வெளிப்படுவதால் சு.வேணுகோபாலின் கதைகள், அவற்றின் அத்தனை குறைகளையும் தாண்டி, இந்த மண்ணின் கதைகளுக்குரிய குரலில் பேசும் இயல்பு கொண்ட இலக்கியமாகின்றன.\nகூந்தப்பனையில் ஓரிடத்தில் சதீஷ் கிருத்தவ தேவாலயமொன்றில் இறைவனிடம் இறைஞ்சுகிறான் : “எத்தனை முறை கேட்டிருப்பேன் தரவில்லையே இறைவா நீ ஒரு இந்துவுக்குத் தரமாட்டாயா இந்த சந்நிதானத்தில் சொல்கிறேன். எனக்கு அதை – ஒரே ஒரு முறை போதும்- தந்து எடுத்துக் கொள். மதம்மாறி உன் பாதங்களில் கிடக்கிறேன்.”\nஜெரார்ட் மான்லி ஹாப்கின்ஸ் என்றொரு பதினெட்டாம் நூற்றாண்டு கவிஞர். கத்தோலிக்க பாதிரியார். ஏறத்தாழ இதே போன்ற ஒரு இறைஞ்சுதலை அவரும் கவிதையாகப் பதித்திருக்கிறார். ஒரு முறை படித்தாலும் மறக்க முடியாத கவிதை: ‘Thou art indeed just, Lord, if I contend’ என்று துவங்கும் அந்தக் கவிதை இயற்கை புத்துயுயிர்ப்பு கொண்டு செழிப்பதை வர்ணித்து, இப்படி முடிவு பெறும்-\nஜெரார்ட் மான்லி ஹாப்கின்ஸ் கதை என்ன ஆயிற்றென்று தெரியாது- கூந்தப்பனையில் இந்தப் பிரார்த்தனைக்குக் கடவுள் செவி சாய்க்கிறார்: சதீஷின் வேர்களுக்கு நீரூற்றுகிறார், அது உலகின், அல்லது உலகின் அவனிருக்கும் பகுதியின் தாகத்தைத் தீர்க்கும் “கருணையின் ஜீவித அழகாக மிளிர்கிறது”. அந்த முடிவை நம் மனம் இன்றும் ஏற்றுக் கொள்கிறது என்பது புதையுண்டு போகும் நம் பண்பாடு சரியான குரல்களுக்குத் துளிர்க்கும் உயிர்ப்புடன் இருக்கும் அதிசயத்தை உணர்த்துகிறது. கூந்தப்பனையில் நாம் அறியும் குரல் அப்படிப்பட்ட ஒன்று.\n(கூந்தப்பனை, குறுநாவல்கள், சு.வேணுகோபால். தமிழினி பதிப்பகம். 2001ஆம் ஆண்டு பதிப்பு. 144 பக்கங்கள். விலை ரூ.50)\nPrevious Previous post: சாமத்தில் முனகும் கதவு – சிறுகதை குறித்து…\nNext Next post: மொழியின் கடைசிப்பெண்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவக் கட்டுரை அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அயல் விழா அரசியல் அரசியல் கட்டுரை அறிவிப்பு அறிவியல் அறிவியல் அதி புனைவு அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைக் கட்டுரை இசைத்தெரிவு இசையும் மொழியும் இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இ���ழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-232 இதழ்-233 இதழ்-234 இதழ்-235 இதழ்-236 இதழ்-237 இதழ்-238 இதழ்-239 இதழ்-24 இதழ்-240 இதழ்-241 இதழ்-242 இதழ்-243 இதழ்-244 இதழ்-245 இதழ்-246 இதழ்-247 இதழ்-248 இதழ்-249 இதழ்-25 இதழ்-250 இதழ்-251 இதழ்-252 இதழ்-253 இதழ்-254 இதழ்-255 இதழ்-256 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய வரலாறு இலக்கிய விமர்சனம் இலக்கியக் கட்டுரை இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக நடப்புக் குறிப்புகள் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் எழுத்து ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சத்யஜித் ரே சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தழுவல் கட்டுரை தாவரவியல் தாவரவியல் கட்டுரை திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாரதியியல் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொடுவா நாட்டார் கலை பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதற்கனல் முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பு இலக்கியம் மொழிபெயர்ப்பு நாவல் மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்பு��் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை ரவிஷங்கர் லயம் வங்க ஓவியங்கள் வங்க மலர் வங்கச் சிறப்பிதழ் வரலாறு வரலாற்றாய்வு வரலாற்றுக் கட்டுரை வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேதியியல் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அகிலா ஆ. அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அஞ்சலி ஸச்தேவா அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அருண்குமார் மகோபாத்யாய் அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அவீக் சாட்டர்ஜீ அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆடம் இஸ்கோ ஆண்டனி கில் ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் குமார் ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆமிராபாலன் ஆரூர் பாஸ்கர் ஆர் நித்யஹரி ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி ஆஸ்டின் சௌந்தர் இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா முருகன் இரா. அரவிந்த் இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இராம் பொன்னு இலவசக் கொத்தனார் இலா இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உ நரசிம்மன் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உலகளந்த பெருமாள் உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.என். குண்டு எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் எம்.டி வாசுதேவன் நாயர் Raja எம்.ரிஷான் ஷெரீப் எரிக் நெஹர் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் எஸ் சியூயீ லு Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கஞ்சனூர் கவிப்ரியா கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட்ராமன் கண்ணன் இராமநாதன் கதீர் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கலாப்ரியா கலைச்செல்வி கல்யாணி ராஜன் கவியோகி வேதம் கா.சிவா கா.ரபீக் ராஜா காஜி நசருல் இஸ்லாம் காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் கிருபாகரன் கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலச்சுவடு கண்ணன் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் கி. ராஜநாராயணன் கிருஷ்ண பாசு Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரி எஸ். நீலகண்டன் குமரேசன் மு. குமாரநந்தன் குமார் சேகரன் குமுதினி கூம் கூம் ராய் கெ.ம.நிதிஷ் கென் லூ கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கே.பாலசுப்பிரமணி கே.ராஜலட்சுமி கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரெக் பா(வ்)ம் க்ரேஸ் பேலி ச அர��ஜுன்ராச் ச. சமரன் ச. சிவபிரகாஷ் ச.திருமலைராஜன் சக்தி சட்டோபாத்யாய சக்தி விஜயகுமார் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் சமரேஷ் மஜும்தார் சரவணன் அபி சரவணன் மாணிக்கவாசகம் சரோஜ் பந்த்யோபாத்தியாய் sarvasithan சா.கா.பாரதி ராஜா சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்லி டைஸன் சார்ல்ஸ் ஸிமிக் சி.எஸ். லக்ஷ்மி Ayshwarya Shankaranarayanan சி.சு.செல்லப்பா சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி சியாம் பாரதி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. அருண் பிரசாத் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுகாந்தொ பட்டாச்சார்யா சுகுமார் ராய் சுசித்ரா பட்டாச்சாரியா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தரம் செல்லப்பா சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுனீல் கங்கோபாத்யாய் சுபத்ரா ரவிச்சந்திரன் சுபிமல் மிஸ்ரா சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் சௌதிக் பிஸ்வாஸ் ஜகதீஷ் சந்திர போஸ் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜான்பால் ரொசாரியோ ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜாஷுவா ராத்மான் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீபனானந்தா தாஸ் ஜீவ கரிகாலன் ஜீவன் பென்னி ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தா டே ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேன் ஹெர்ஷ்ஃபீல்ட் ஜேப�� ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜொய் கோஸ்வாமீ ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த. நரேஸ் நியூட்டன் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தஸ்லிமா நஸ்ரின் தாட்சாயணி தாமரைக்கண்ணன் தாராசங்கர் பந்த்யோபாத்யாய் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் திலீபன் தீபேஷ் சக்ரபர்த்தி தீப் ஹல்தர் தென்கரை மகாராஜன் தெரிசை சிவா தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் தைஸ் லைஸ்டர் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நபரூன் பட்டாச்சார்யா நம்பி நரசய்யா நரேன் நரோபா நளினி நவநீதா தேவ் சென் நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகிலேஷ் குஹா நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு ravishankar குழு பத்மகுமாரி பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்மா ஸச்தேவ் பத்ரி சேஷாத்ரி பனபூல் பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி பா ராமானுஜம் Pa Saravanan பா.சுதாகர் பா.தேசப்பிரியா பானு கபில் பானுமதி ந. பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan பாஸ்கர் ஆறுமுகம் Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் பிபூதிபூஷன் பந்த்யோபாத்யாய் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபீர் சென் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புத்ததேவ போஸ் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்ல��� பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம. செ. ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுமிதா மதுரபாரதி மதுரா மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் அரவிந்த டி ரெங்கநாதன் மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலேசியா ஸ்ரீகாந்தன் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாணிக் பந்தோபாத்யாய மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மாயா ஏஞ்சலொ மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ம இராமச்சந்திரன் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி முனைவர் ராஜேந்திர பிரசாத் நா மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோதி நந்தி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரக்ஷன் கிருதிக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரபீந்திர நாத் தாகூர் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமநாத் ராய் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ரிச்சர்ட் ரூஸ்ஸோ ருகையா ஷகாவத் ஹுசென் ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோகிணி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் ��ஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லாவண்யா சுந்தரராஜன் லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகமாதேவி லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வசந்ததீபன் வண்ணநிலவன் வர்ஜீனியா வுல்ஃப் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜயகுமார் சம்மங்கரை விஜயலக்ஷ்மி விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வித்யா அருண் விபீஷணன் விருட்சன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேங்கட ராகவன் நா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷாங்க்யா கோஷ் ஷாதிர் ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸிர்ஷோ பந்தோபாத்யா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் கின்சர் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாரலாம்பி மார்கோவ் ஹாலாஸ்யன் ஹுமாயுன் அஹமத் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் அக்டோபர் 2021 செப்டம்பர் 2021 ஆகஸ்ட் 2021 ஜூலை 2021 ஜூன் 2021 மே 2021 ஏப்ரல் 2021 மார்ச் 2021 பிப்ரவரி 2021 ஜனவரி 2021 டிசம்பர் 2020 நவம்பர் 2020 அக்டோபர் 2020 செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப���ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும். எழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nஆன்கர் எஃப்.எம். (anchor.fm) 4\nயூடியுப் – ஒளிவனம் (YouTube) 3\nசவுண்ட் கிளவுட் (SoundCloud) 1\nஎழுத்தாளர் அம்பை: சொல்வனம் சிறப்பிதழ்கள் 0\nரொபெர்த்தோ பொலான்யோ ஆக்கங்களும் விமர்சனங்களும் 0\nவீடும் வெளியும்: கவிதைகளும் கதைகளும் 0\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவங்கச் சிறப்பிதழ் 1: 240\nவங்கச் சிறப்பிதழ் II: 241\nவி. எஸ். நைபால்: 194\nகவிதை பற்றி புதுமைப்பித்தன் கூறியவற்றுள் சில\nவிஞ்ஞான வளர்ச்சியின் வளர்ச்சி- 2\nபெருந்தேவிக்கு பி. ஜி. உடௌஸ் வேண்டாம்\nசோ - ஒரு தன்னிகரற்ற நிகழ்வு\nஆட்டத்தின் ஐந்து விதிகள் (8)\nஇந்து தர்மமும் அதன் கலாசாரப் போர்களும் (14)\nஇவர்கள் இல்லையேல் – நாவல் (3)\nகாவிய ஆத்மாவைத் தேடி (3)\nசட்டமும் செயற்கை நுண்ணறிவும் (2)\nதலை சிறந்த 10 தொழில்நுட்பம் (11)\nதேர்ந்த வாசகருக்கான படப்புத்தகம் (2)\nநோயாளி எண் பூஜ்யம் (2)\nபய வியாபாரியா ஹிட்ச்காக் (2)\nபேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் (4)\nமிளகு: இரா முருகன் – நாவல் (7)\nமுதலியத்தை எதிர்க்கும் பொதுமம் (1)\nமொபைல் தொடர்பாடல் வரலாறு (2)\nவண்ணநிலவன் நாவல்கள் பற்றி (2)\nஸ்லாட்டர்ராக்- தாமஸ் டிஷ் (2)\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nஎழுத்தாளர் இரா முருகனின் சரித்திரத் தொடர் நாவல் “மிளகு” அத்தியாயம் - ஏழு 1999 அம்பலப்புழை 35:47\nஎழுத்தாளர் தி.ஜானகிராமன் எழுதிய சிறுகதை \"செய்தி\" 21:56\nஓய்வுக் காலச் சேமிப்பும் அதை அபகரிக்க அரசாங்கம் நடத்தும் போரும்\nby கடலூர் வாசு\t ஆகஸ்ட் 22, 2021\nby கா.ரபீக் ராஜா\t ஆகஸ்ட் 22, 2021\nby லியோ டால்ஸ்டாய்\t ஆகஸ்ட் 22, 2021\n”ஆசிய அமெரிக்கர்கள்” – அமெரிக்காவில் மிகையாகும் வெறுப்பரசியல்\nby லதா குப்பா\t ஆகஸ்ட் 22, 2021\nகாவிய ஆத்மாவைத் தேடி… – 2\nby ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன்\t ஆகஸ்ட் 22, 2021\nபேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்\nby பானுமதி ந.\t ஆகஸ்ட் 22, 2021\nமூத்த கதைசொல்லி – டெம்சுலா ஆவ்\nby கோரா\t ஆகஸ்ட் 22, 2021\nதொட்டாலே கண் எரியும் மிளகாயா\nby லோகமாதேவி\t ஆகஸ்ட் 22, 2021\nஷோபா சக்தியின் ‘கொரில்லா’ – ஒரு பார்வை\nby ராஜேஷ் சந்திரா\t ஆகஸ்ட் 22, 2021\nஉங்கள் மின்னஞ்சல், படைப்புகளை அனுப்ப முகவரி: solvanam.editor@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/coimbatore-district-police-officials-said-outer-vehicles-are-not-allowed-in-tamil-nadu-without-e-pass-vin-477451.html", "date_download": "2021-10-19T13:18:52Z", "digest": "sha1:ORRQI7NLLSFDMQDRJEFHRNELTFAOSK5R", "length": 10498, "nlines": 103, "source_domain": "tamil.news18.com", "title": "இ-பாஸ் இல்லாமல் வெளிமாநில வாகனங்கள் தமிழகத்திற்குள் அனுமதிக்கபடுவதில்லை...! | Police officials said Outer vehicles are not allowed in Tamil Nadu without e-pass – News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#T20 WorldCup#பெண்குயின் கார்னர்#பிக்பாஸ்#கிரைம்\nஇ-பாஸ் இல்லாமல் வெளிமாநில வாகனங்கள் தமிழகத்திற்குள் அனுமதிக்கபடுவதில்லை...\nஇ-பாஸ் இல்லாமல் வெளிமாநில வாகனங்கள் தமிழகத்திற்குள் அனுமதிக்கபடுவதில்லை...\nமேற்கு மண்டல காவல் துறை தலைவர் சுதாகர்\nபோதுமான பாதுகாப்பு உபகரணங்கள் கா��ல் துறையிடம் இருப்பதாகவும் மேற்கு மண்டல காவல் துறை தலைவர் சுதாகர் தெரிவித்தார்.\nகோவை, ஈரோடு மாவட்ட சோதனை சாவடிகளில் போலீசார் கண்காணிப்பு தொடர்ந்து வருவதாகவும், இ பாஸ் இல்லாமல் வெளிமாநில வாகனங்கள் தமிழகத்திற்குள் அனுமதிக்கபடுவதில்லை என மேற்கு மண்டல காவல் துறை தலைவர் சுதாகர் தெரிவித்தார்.\nகோவை சீரப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் சோனு சூட் பவுண்டேசன் என்ற தன்னார்வ அமைப்பின்சார்பில் கொரொனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு இலவச ஆக்ஸிஜன் சிலிண்டர் விநியோகம் செய்யும் சேவை துவக்க விழா நடைபெற்றது. இந்த துவக்க விழா நிகழ்வில் மேற்கு மண்டல காவல் துறை தலைவர் சுதாகர் கலந்து கொண்டு, இந்த இலவச சேவையை துவக்கி வைத்தார்.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.\nபெரிய மற்றும் சிறிய அளவிலான ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் மூலம் தொற்று காரணமாக ஆக்ஸிஜன் தேவைபடுபவர்களுக்கு வாகனம் மூலமும், இரு சக்கர வாகனம் மூலம் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை கொண்டு சென்று உயிர் காக்க உதவுவதே இந்த திட்டத்தின் நோக்கம்.\nஇந்த அமைப்பு கர்நாடக மாநிலத்தின் பல பகுதிகளிலும், இந்த இலவச சேவையை வழங்கும் நிலையில் தமிழகத்தில் கோவையிலும் துவங்கியுள்ளது. இந்த சேவையை துவக்கி வைத்த மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகர் , பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களையும் வழங்கினார்.\nபின்னர் பேட்டியளித்த அவர், ஆக்சிஜன் தேவை அதிகம் இருக்கும் நிலையில், இந்த சேவை பயனுள்ளதாக இருக்கும் என தெரிவித்தார். மற்ற மாநிலங்களில் இந்த சேவை இருக்கும் நிலையில் கோவையில் தன்னார்வ அமைப்பினர் இந்த சேவையை துவங்கி இருப்பதாகவும் தெரிவித்தார்.கோவை, ஈரோடு மாவட்ட சோதனை சாவடிகளில் போலீசார் கண்காணிப்பு தொடர்ந்து ஈடுபட்மு வருவதாகவும், இ பாஸ் இல்லாமல் வெளிமாநில வாகனங்கள் தமிழகத்திற்குள் அனிமதிக்க படுவதில்லை எனவும் தெரிவித்தார்.\nAlso read... 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண் வழங்கப்படும்\nமருத்துவமனைக்கு செல்வதற்கும், ஊசி போடுவதற்கும் பொது மக்கள் வெளியில் வருகின்றனர் எனவும் அதனால் வாகனங்கள் அதிகமாக சாலையில் இருப்பது போல தெரிகின்றது எனவும், அனைத்து இடங்களிலும் வாகனங்களில் வர��ம் பொதுமக்களிடம் எங்கு செல்கின்றனர் என்பதை விசாரித்துதான் அனுப்புகின்றோம் எனவும் காவல் துறை விசாரிக்க தயங்குவதில்லை எனவும், போதுமான பாதுகாப்பு உபகரணங்கள் காவல் துறையிடம் இருப்பதாகவும் மேற்கு மண்டல காவல் துறை தலைவர் சுதாகர் தெரிவித்தார்.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube\nஇ-பாஸ் இல்லாமல் வெளிமாநில வாகனங்கள் தமிழகத்திற்குள் அனுமதிக்கபடுவதில்லை...\nதமிழகத்தில் உரிய நேரத்தில் 2வது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் எண்ணிக்கை 30 லட்சமாக அதிகரிப்பு\n‘எனக்கு நடந்தது யாருக்கும் நடக்கக்கூடாது’ - சொமேட்டோ விவகாரம் குறித்து புகார்தாரர் விகாஷ் பேட்டி\nதடுப்பூசி செலுத்தாத நபர்களுக்கு பூத் ஸ்லிப் போல நினைவூட்டும் சீட்டு வழங்கல்\n2003-ல் ரயில் பயணத்தில் நிகழ்ந்த சுவாரஸ்ய சம்பவத்தை நினைவு கூர்ந்த ராமதாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/news/135131-story-about-glory-of-lord-krishna", "date_download": "2021-10-19T12:27:42Z", "digest": "sha1:TATTW4KX2LXRTB5G23BKW2KL4AVP6C64", "length": 21005, "nlines": 200, "source_domain": "www.vikatan.com", "title": "கண்ணன் புல்லாங்குழலை விடுத்து மகுடி எடுத்த கதை! | Story about glory of lord krishna - Vikatan", "raw_content": "\nசபரிமலை மேல்சாந்தியாக பரமேஸ்வரன் நம்பூதிரி தேர்வு... ஆன்லைன் தரிசன முன்பதிவு குறித்த முழு விவரங்கள்\nசரஸ்வதி தேவி ஸ்தாபித்த சிவாலயம்... சரஸ்வதி விளாகத்தில் வித்யாரம்பம் - விஜயதசமி கொண்டாட்டம்\nவிஜயதசமி: கூத்தனூர் சரஸ்வதி கோயிலில் நோட்டு, புத்தகம் வைத்து வழிபாடு\nகுடுமியான்மலையைக் காவல் காக்கும் 12 பேர் - பல தலைமுறைகளாக இதைச் செய்யும் 2 கிராமங்கள்\n‘எங்கும் அன்பு ஒளி பரவட்டும்\n2K கிட்ஸ்: நிறம், மணம், நிறைவு... மதுரை மீனாட்சி தாழம்பூ குங்குமம்\nசபரிமலை மண்டல பூஜை: தினமும் 25,000 பக்தர்கள் - பம்பையில் நீராட, நெய் அபிஷேக பிரசாதம் வழங்க அனுமதி\nமகாராஷ்டிரா: கொரோனா 2வது அலைக்குப் பிறகு வழிபாட்டுத்தலங்கள் திறப்பு... என்னென்ன கட்டுப்பாடுகள்\nதிருமலை திருப்பதி புரட்டாசி பிரம்மோற்சவ விழா: கட்டுப்பாடுகளுடன் நடக்கவிருக்கும் வைபவங்கள் என்னென்ன\nசபரிமலை மேல்சாந்தியாக பரமேஸ்வரன் நம்பூதிரி தேர்வு... ஆன்லைன் தரிசன முன்பதிவு குறித்த முழு ���ிவரங்கள்\nசரஸ்வதி தேவி ஸ்தாபித்த சிவாலயம்... சரஸ்வதி விளாகத்தில் வித்யாரம்பம் - விஜயதசமி கொண்டாட்டம்\nவிஜயதசமி: கூத்தனூர் சரஸ்வதி கோயிலில் நோட்டு, புத்தகம் வைத்து வழிபாடு\nகுடுமியான்மலையைக் காவல் காக்கும் 12 பேர் - பல தலைமுறைகளாக இதைச் செய்யும் 2 கிராமங்கள்\n‘எங்கும் அன்பு ஒளி பரவட்டும்\n2K கிட்ஸ்: நிறம், மணம், நிறைவு... மதுரை மீனாட்சி தாழம்பூ குங்குமம்\nசபரிமலை மண்டல பூஜை: தினமும் 25,000 பக்தர்கள் - பம்பையில் நீராட, நெய் அபிஷேக பிரசாதம் வழங்க அனுமதி\nமகாராஷ்டிரா: கொரோனா 2வது அலைக்குப் பிறகு வழிபாட்டுத்தலங்கள் திறப்பு... என்னென்ன கட்டுப்பாடுகள்\nதிருமலை திருப்பதி புரட்டாசி பிரம்மோற்சவ விழா: கட்டுப்பாடுகளுடன் நடக்கவிருக்கும் வைபவங்கள் என்னென்ன\nகண்ணன் புல்லாங்குழலை விடுத்து மகுடி எடுத்த கதை\nஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்\nகண்ணன் புல்லாங்குழலை விடுத்து மகுடி எடுத்த கதை\nகண்ணனின் கரங்களில் மகுடி தவழ்ந்த சம்பவம் ஒன்று உண்டு\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்\nகண்ணன் என்றாலே புல்லாங்குழல்தான் நம் நினைவுக்கு வரும். ஆனால், கண்ணனின் கரங்களில் மகுடி தவழ்ந்த சம்பவம் ஒன்று உண்டு. அதேபோல் கண்ணன் காளிங்கன் என்ற பாம்பின் தலையில் நடனம் புரிந்தது நமக்குத் தெரியும். ஆனால், மகுடி வாசித்து பல விஷப் பாம்புகளை மயக்கிய நிகழ்ச்சி ஒன்றும் மகாபாரதத்தில் இருக்கவே செய்கிறது. அந்த இரு நிகழ்ச்சிகளை இங்கே பார்க்கலாம்.\nவடமதுராவில் கம்சனின் சிறைச்சாலையில் தங்கள் குழந்தையாக அவதரித்த கண்ணனை, இறைவனின் கட்டளைப்படி கோகுலத்தில் கொண்டு விடச் சென்றார் வசுதேவர். குழந்தை கண்ணனை ஒரு கூடையில் வைத்துக்கொண்டு யமுனையின் அக்கரையிலிருக்கும் கோகுலத்துக்குச் செல்லும்போது, யமுனை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. கூடவே இடி மின்னலுடன் மழையும் சேர்ந்துகொண்டது.\nவசுதேவர் இறைவனைப் பிரார்த்தித்தபடி யமுனை ஆற்றைக் கடந்து செல்லத் தொடங்கினார். கூடையில் இருக்கும் குழந்தை நனைகிறதே என்று கவலைப்பட்ட வசுதேவரின் கவலையைப் போக்குவது போல், மிகப் பெரிய நாகம் தன் ஐந்து தலைகளையும் விரித்து கூடையில் இருந்த குழந்தையின் மீது மழைநீர் படாமல் பார்த்துக்கொண்டது. அந்தப் ���ாம்பின் நோக்கம் அதுமட்டுமல்ல; குழந்தையாக வந்திருக்கும் இறைவனின் திருவடி ஸ்பரிசம் தன் மீது படவேண்டும் என்பதுதான் பாம்பின் பிரதானமான விருப்பம். ஆனால், கூடையில் இருந்த கண்ணனின் கால்களோ மேல் நோக்கி அந்தப் பாம்பை ஸ்பரிசிப்பதற்கு பதிலாக, கீழே வெள்ளமென பெருகி வந்த யமுனையை ஸ்பரிசித்து யமுனைக்கு ஆனந்தம் தந்தது.\nஅந்தப் பாம்பு வேறு யாருமல்ல; கோகுலத்தில் கண்ணனின் காளிங்க நர்த்தனத்துக்குக் காரணமான காளிங்கன்தான் அந்தப் பாம்பு.\nகாளிங்கனின் தலைகளின் மீது நடனம் புரிந்து அவனுடைய அகந்தையை அடக்கிய கண்ணன், பிறிதொரு தருணத்தில் பாம்புப் பிடாரனாக மாறி மகுடி வாசித்து பல நாகங்களை மயக்கவும் செய்தார்.\nமகாபாரதத்தில் கௌரவர்கள் எப்போதுமே பாண்டவர்களிடம் துவேஷம் கொண்டவர்களாக இருந்தனர். குறிப்பாக, பீமனைக் கண்டாலே துரியோதனனுக்கு மாளாத வெறுப்பு. கெட்ட குணங்களுடன் தகாத சகவாசமும் கொண்டிருந்த துரியோதனனை எப்போது பார்த்தாலும் பீமன் வம்புக்கு இழுத்துக்கொண்டேஇருப்பான். அதனால் பீமனைக் கொன்றுவிடவேண்டும் என்று முடிவு செய்தான் துரியோதனன். ஒரு நாள் பாண்டவர்களிடம் சென்ற துரியோதனன் நயமாகப் பேசி அவர்களை வனபோஜனத்துக்கு அழைத்தான். துரியோதனனின் தீய எண்ணம் தெரியாத பாண்டவர்கள் வனபோஜனத்துக்குச் சென்றனர். பீமன் அளவுக்கதிகமாக உண்பவன் என்பதால், அவனிடம் சென்ற துரியோதனன், ''பீமா, நீ அதிகம் சாப்பிடுபவன் என்பதால், உனக்குத் தனியாக விருந்து தயாராக இருக்கிறது'' என்று சொல்லி, அவனைத் தனியே அழைத்துச்சென்று விஷ மூலிகைகள் கலந்த உணவைக் கொடுத்து சாப்பிடச் செய்தான். துரியோதனனின் சூது அறியாத பீமனும் அந்த உணவு முழுவதையும் உண்டுவிட்டான். விஷ மூலிகைகள் கலந்த உணவை உண்ட காரணத்தினால் பீமன் மயங்கி விழுந்துவிட்டான். உடனே துரியோதனனும் அவனுடைய தம்பிகளும் பீமனை காட்டுக் கொடிகளால் இறுக்கிப் பிடித்துக் கட்டி, விஷப் பாம்புகள் நிறைந்த ஒரு மடுவிற்குள் தள்ளிவிட்டனர். மடுவுக்குள் விழுந்த பீமனை அங்கிருந்த அத்தனை விஷப் பாம்புகளும் கடித்துவிடவே பீமன் மடிந்து போனான்.\nதுரியோதனனுடன் சென்ற தம்பி பீமன் நீண்ட நேரமாகியும் திரும்பாத காரணத்தால், துரியோதனனை அழைத்துக் கேட்டார் தர்மர். அவனோ, பீமன் வந்து சாப்பிட்டுவிட்டு உடனே திரும்பிவிட்டதாகக் கூறிவிட்டான். வருத்தத்துடன் வீடு திரும்பிய தர்மர் நடந்த விஷயத்தைத் தன் தாய் குந்தியிடம் கூறினார். மேற்கொண்டு என்ன செய்வதென்று அவர்களுக்குப் புரியவில்லை. ஆபத்பாந்தவனாகிய கண்ணனை நினைத்தனர். நினைத்ததும் நினைத்த மாத்திரத்தில் வந்துவிடும் கண்ணன் அவர்களுக்கு முன் தோன்றினார். அவர்களின் வருத்தத்துகான காரணமும், பீமன் இருக்கும் இடமும் கண்ணனுக்குத் தெரிந்தது.\nஉடனே பாம்புப் பிடாரனாக மாறி, பீமன் தள்ளப்பட்டிருந்த மடுவின் அருகில் சென்றார். தன் கையில் இருந்த மகுடியை இசைத்தார். கண்ணனின் குழலிசைக்கு இயற்கையே வசமாகும் என்றால், கண்ணனின் மகுடி இசைக்கு பாம்புகள் மயங்காதா என்ன மடுவிலிருந்த அத்தனை நாகங்களும் வெளியேறி கரைக்கு வந்துவிட்டன. கண்ணனின் மகுடி இசையில் தங்களை மறந்து லயித்திருந்தன. மடுவில் இருந்த அத்தனை பாம்புகளும் காணாததைக் கண்ட பாம்புகளின் அரசன் வாசுகி மடுவிலிருந்து வெளியே வந்து பார்த்தது. மகுடி இசைப்பவன் சாட்சாத் கண்ணபிரானே என்பதைப் புரிந்துகொண்ட வாசுகி, கண்ணனிடம் மன்னிப்புக் கேட்டதுடன், பீமனின் உடலைத் தீண்டிய அத்தனை பாம்புகளையும் பார்த்து பீமனின் ரத்தத்திலுள்ள விஷத்தை உறிஞ்சி எடுக்கும்படிக் கட்டளையிட்டது. அப்படியே பாம்புகள் பீமனின் ரத்தத்திலிருந்த விஷம் முழுவதையும் உறிஞ்சி எடுத்து விட்டன. உறக்கத்திலிருந்து எழுபவனைப் போல் பீமன் எழுந்துகொண்டான். எதிரில் கண்ணன் இருப்பதைக் கண்டு வணங்கினான்.\nகண்ணனை மறுபடியும் வணங்கிய வாசுகி, ''பீமனின் உடலில் இருந்த மூலிகைகளின் விஷத் தன்மையும், பாம்புகளின் விஷமும் சேர்ந்து அவனுடைய உடலை வஜ்ரம் போல் ஆக்கிவிட்டது. இனி எந்த விஷமும் அவனைப் பாதிக்காது'' என்று வரமும் கொடுத்தது.\nதெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism\nஇதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyaagarathi.com/cauvery-a-question-to-the-supreme-court/", "date_download": "2021-10-19T11:50:18Z", "digest": "sha1:7XTSNPX6FVWEBC2TNCSDSL2HX46AIZ5R", "length": 18955, "nlines": 113, "source_domain": "puthiyaagarathi.com", "title": "காவிரி: உச்ச நீதிமன்றத்திற்கு ஒரு கேள்வி! - புதிய அகராதி", "raw_content": "Tuesday, October 19மெய்ப்பொருள் காண்பது அறிவு\nகாவிரி: உச்ச நீதிமன்றத்த���ற்கு ஒரு கேள்வி\nகாவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் கடந்த 16ம் தேதி இறுதித் தீர்ப்பை அளித்துள்ளது. அடுத்த 15 ஆண்டுகளுக்கு இது தொடர்பாக யாரும் மேல்முறையீடு செய்ய இயலாது என்பதால், இப்போதைக்கு கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களும் பெரிய அளவில் கொந்தளிப்பை வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பு இல்லை.\nஅதற்காக உச்ச நீதிமன்றம் நடுநிலையான தீர்ப்பை வழங்கி விட்டதாக நாம் கருதிவிட முடியாது. காவிரி நீர் பங்கீட்டில் பெரிய அளவில் ஆதாயம் அடைவது கர்நாடகமும், தமிழகமும்தான். கேரளாவும், புதுச்சேரியும் சொற்ப அளவில் ஆதாயம் பெறக்கூடிய இதர மாநிலங்கள்.\nகாவிரி விவகாரம் தொடர்பாக அமைக்கப்பட்ட காவிரி நடுவர் மன்றம், கடந்த 1991ம் ஆண்டு அளித்த இடைக்காலத் தீர்ப்பில், தமிழ்நாட்டிற்கு ஆண்டுக்கு 205 டிஎம்சி (ஒரு டிஎம்சி என்பது ஆயிரம் மில்லியன் கன அடி) தண்ணீர் வழங்க வேண்டும் என்று சொல்லி இருந்தது.\nஇந்த நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு 2007ல் வழங்கப்பட்டது. அப்போது, முன்பு சொன்னதைவிட 13 டிஎம்சி தண்ணீரைக் குறைத்து அதாவது, தமிழகத்திற்கு காவிரியில் இருந்து ஆண்டுக்கு 192 டிஎம்சி தண்ணீர் வழங்கினால் போதும் என்று தீர்ப்பு அளித்தது.\nஒவ்வொரு முறை தீர்ப்பு வெளியாகும்போதும் பரஸ்பரம் இரு மாநில அரசுகளும் எதிர்த்து மேல்முறையீடு செய்து வந்தன. தீர்ப்பின் அம்சங்கள் தமிழகத்திற்கு சாதகமானது போலதான் முந்தைய தமிழக அரசுகள் குறிப்பாக அதிமுக அரசு பேசி வந்தது.\nஆனால் சற்றே யோசித்துப் பார்த்தால் ஒவ்வொருமுறை தீர்ப்பு வழங்கப்படும்போதும் முன்பைவிட கணிசமான தண்ணீர் ஒதுக்கீடு குறைக்கப்பட்டு வந்திருப்பது தெரியவரும்.\nஇந்த நிலையில்தான், காவிரி விவகாரத்தின் இறுதித் தீர்ப்பை கடந்த 16ம் தேதி உச்ச நீதிமன்றம் வழங்கியது. அப்போதும்கூட, தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தரப்பட வேண்டிய தண்ணீர் அளவை முன்பைக் காட்டிலும் (192 டிஎம்சி) மேலும் 14.75 டிஎம்சி குறைத்து, அதாவது 177.25 டிஎம்சி வழங்கினால் போதுமானது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nஇந்த தண்ணீர் பங்கீடு அளவு குறைப்புக்கு உச்ச நீதிமன்றம் கணக்கில் எடுத்துக்கொண்ட காரணங்கள்தான் மிகவும் மொன்னையானது.\nதமிழகத்தின் காவிரி படுகைகளில் நிலத்தடி நீர் மட்டம் 20 டிஎம்சி அளவுக்கு இருப்பதால் அதிலிருந்த��� விவசாயத்திற்கும், குடிநீருக்கும் 10 டிஎம்சி தண்ணீரை பயன்படுத்திக் கொள்ளலாம் என சொல்லியிருக்கிறது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா உள்ளிட்ட அமர்வு.\nகர்நாடகாவில் இருபோக விவசாயம் நடப்பதாகக் கணக்கிட்ட உச்ச நீதிமன்றம், தமிழகத்தில் ஒரு போகம் மட்டுமே சாகுபடி செய்யப்படுவதாக எந்த அடிப்படையில் தீர்மானித்தது என்பதை விளங்கிக் கொள்ள இயலவில்லை. நிலத்தடி நீர் மட்டம் என்பது மழைப்பொழிவை சார்ந்தது. டெல்டா பகுதிகளில் எல்லா இடங்களிலும் ஒரே அளவில் நிலத்தடி நீர்மட்டம் இருக்கவும் முடியாது.\nகடந்த 2016ம் ஆண்டு தமிழக நீர்வள ஆதார அமைப்பு மேற்கொண்ட ஆய்வில், நெற்களஞ்சியமான தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டணம், புதுக்கோட்டை, வேலூர், கிருஷ்ணகிரி, அரிeயலூர், ஈரோடு, கோயம்பத்தூர், திருப்பூர், திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, நாமக்கல் ஆகிய 15 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் அபாய அளவை எட்டிவிட்டது தெரிய வந்துள்ளது.\nதமிழ்நாட்டின் நிலவியல் அமைப்பின்படி, நிலத்தடி நீர்மட்டம் போதிய அளவில் இல்லை என்பதே நிதர்சனம். பூமிக்கு அடியில் 73 சதவீதம் திடப்பாறைகளும், 27 சதவீதம் படிவுப்பாறைகளும் அமைந்துள்ளன. திடப்பாறை பகுதிகளில் குறைந்த அளவே நிலத்தடி நீர் இருக்கும். படிவுப்பாறைகளில் நிலத்தடி நீர்மட்டம் போதிய அளவில் இருந்தாலும் அதை குடிப்பதற்கு பயன்படுத்த முடியாத அளவுக்கு உவரி நீராக இருக்கிறது.\nஇதையெல்லாம் உச்ச நீதிமன்றம் கணக்கில் கொள்ளவே இல்லை. ஒரு நதி உருவாகும் இடத்தைவிட அது பாய்ந்தோடும் பகுதிகளுக்குத்தான் கூடுதல் உரிமை இருக்கிறது என்ற சர்வதேச நதிநீர் சட்டத்தையும் உச்ச நீதிமன்றம் கவனத்தில் கொள்ளவில்லை. கர்நாடகா மாநிலம் பெங்களூர் நகர மக்களின் குடிநீர் தேவையை மட்டும் கருத்தில் கொண்டு தீர்ப்பு அளித்திருப்பது நடுநிலையானது என்று எப்படி சொல்ல முடியும்\nதமிழக டெல்டா மாவட்டங்களில் நிலத்தடி நீரில் இருந்து 10 டிஎம்சியை பயன்படுத்திக் கொள்ளலாம் என தமிழ்நாட்டுக்கு அறிவுரை கூறியுள்ள உச்ச நீதிமன்றம், அதேபோன்ற அம்சங்களை கர்நாடகத்துக்கு பரிந்துரைக்காதது ஏன் பூகோள ரீதியாகவே தமிழ்நாடு மழை மறைவு பிரதேசம் என்பதாவது உச்ச நீதிமன்றத்திற்கு தெரியுமா பூகோள ரீதியாகவே தமிழ்நாடு மழை மறைவு பிரதேசம் என்பதாவது உச்ச நீதிமன்றத்திற்கு தெரியுமா நிலத்தடி நீர் பயன்பாட்டை மேலும் அதிகரிப்பது என்பது சுற்றுச்சூழலுக்கு உகந்ததா நிலத்தடி நீர் பயன்பாட்டை மேலும் அதிகரிப்பது என்பது சுற்றுச்சூழலுக்கு உகந்ததா எத்தனை அடி ஆழம் வரை நிலத்தடி நீரை உறிஞ்சலாம் என்பதற்கு தெளிவான வழிகாட்டுதல் இல்லாத தேசத்தில் இது எந்தளவுக்கு சாத்தியப்படும் எத்தனை அடி ஆழம் வரை நிலத்தடி நீரை உறிஞ்சலாம் என்பதற்கு தெளிவான வழிகாட்டுதல் இல்லாத தேசத்தில் இது எந்தளவுக்கு சாத்தியப்படும் இப்படி பல வினாக்களை உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு எழுப்பியுள்ளது.\nஆனாலும், காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் கண்காணிப்புக் குழுவை ஆறு வார காலத்திற்குள் அமைக்க வேண்டும் என்ற மாய்மால வார்த்தைகளால் தமிழக அரசும், இங்குள்ள அரசியல்வாதிகளும் தீர்ப்பை மனதளவில் ஏற்கத் தயாராகி விட்டனர்.\nஇந்த தீர்ப்பில் உச்ச நீதிமன்றத்தின் அரிய கண்டுபிடிப்பை நாம் மெச்சத்தான் வேண்டும். நதிகள் தேசிய சொத்து. அதை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது என்று கருத்து தெரிவித்திருக்கிறது. நமது அரசியல் அமைப்புச் சட்டத்திலேயே சொல்லப்பட்ட சேதியைத்தான் இப்போது கண்டுபிடித்துச் சொல்லியிருக்கிறது உச்ச நீதிமன்றம். இதுபோன்ற நகாசு வார்த்தைகளால் இது ஏற்றுக்கொள்ளும்படியான தீர்ப்பு என்ற மாயாஜாலங்களை உச்ச நீதிமன்றம் மிகத்தந்திரமாக நிகழ்த்தியிருக்கிறது என்றும் சொல்லலாம்.\nதீர்ப்பை வரவேற்று இனிப்பு வழங்கி கொண்டாடுகிறது கர்நாடகா. வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது தமிழக அரசு. கர்நாடகாவில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் வர உள்ள நிலையில், அங்கு ஆளும் காங்கிரஸூக்கும், அடுத்து ஆட்சியைப் பிடித்துவிடும் எண்ணத்தில் இருக்கும் பாஜகவுக்கும் இந்த தீர்ப்பால் கொண்டாட்டம்தான்.\nஆசை, குரோதம், இயலாமை எல்லா உணர்வுகளும் பொதிந்தவர்கள்தானே உச்ச நீதிமன்ற நீதிபதிகளும்.\nPosted in அரசியல், இந்தியா, சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்\nPrevஇமாலய ஊழல்: நீரவ் மோடியின் மோசடி வெளியானது எப்படி\nNextமுதல் டி-20: இந்தியா அபார வெற்றி; புவி. 5 விக்கெட் வீழ்த்தி புதிய சாதனை\nபுற்றுநோயை குணமாக்கும் ஷிமோகா வைத்தியர்; நல்லதை நாலு பேருக்கு சொல்லலாமே\nஆளுங்கட்சியிடம் தஞ்சம் புகுந்த ஊழல் மாஜி துணைவேந்தர் தோண்டி துருவும் லஞ்ச ஒழிப்புத்துறை\nசேலம் மாநகராட்சியில் குப்பை வண்டிகள் வாங்கியதிலும் கொள்ளை\nதேவதாசி முறை ஒழிப்பு போராளி முத்துலட்சுமி ரெட்டி\nசட்டம் அறிவோம்: குழந்தையை தத்து எடுப்பது எப்படி\nசட்டம் அறிவோம்: பூர்வீக சொத்தில் பெண்ணுக்கு உரிமை உண்டா\nமக்களுக்காக ஜமீன் சொத்துகளை வாரி வழங்கிய 'வாழும் அதிசயம்' காளியண்ணன்\n: வரவு எட்டணா செலவு பத்தணா...: (தொடர்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.meiyuantapes.com/", "date_download": "2021-10-19T13:08:32Z", "digest": "sha1:E2ZZIXVCJIBHXJTLQGZDDA5FZN55VRSD", "length": 14989, "nlines": 204, "source_domain": "ta.meiyuantapes.com", "title": "பிசின் டேப், அலுமினியம் ஃபாயில் டேப், கம்மட் பேப்பர் டேப் - மெய்யுவான்", "raw_content": "\nஇரட்டை பக்க பிசின் டேப்\nலேமினேட் படலம் காப்பு எதிர்கொள்ளும்\nநிறுவனம் மற்றும் தயாரிப்பு விளக்கம்\nநாங்கள் அடிசீவ் டேப் தொழிலில் இருக்கிறோம்\n1998 இல் நிறுவப்பட்ட, ஜியாஞ்சின் மெய்யுவான் இண்டஸ்ட்ரீஸ் கார்ப்பரேஷன் ஆர் & டி, HVAC/குளிர்பதன-சிறப்பு டேப், பிரீமியம் கலப்பு காப்பு வெனீர், இரட்டை பக்க பிரதிபலிப்பு அலுமினியத் தகடு காப்பு, இரட்டை பக்க டேப் மற்றும் அழுத்தம்-உணர்திறன் பிசின் உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தலில் ஈடுபட்டுள்ளது. எங்கள் நிறுவனம் சீனாவில் மிகவும் வளர்ந்த பொருளாதாரத்தைக் கொண்ட யாங்சே நதி டெல்டாவின் மையப் பகுதியில் உள்ள ஜியாஞ்சினில் அமைந்துள்ளது, மேலும் வடக்கில் யாங்சே நதி மற்றும் தெற்கில் ஷாங்காய் ஆகியவற்றுடன் வசதியான போக்குவரத்தை அனுபவிக்கிறது.\nஎங்கள் தயாரிப்புகள் மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன\nஅனைத்து அலுமினியத் தகடு கலப்புப் பொருட்களிலும் சீம்களைப் பிணைப்பதற்கு ஏற்றது, மற்றும் காப்பு ஆணி பஞ்சர் மற்றும் உடைப்பு சீல் மற்றும் சரிசெய்தல்; பல்வேறு கண்ணாடி கம்பளி/பாறை கம்பளி காப்பு பலகைகள்/குழாய்கள் மற்றும் குழாய்களின் காப்பு மற்றும் நீராவி இறுக்கம்; குளிர்சாதனப்பெட்டிகள் மற்றும் உறைவிப்பான் போன்ற வீட்டு உபகரணங்களின் உலோகக் கோடுகளின் பிணைப்பு சரிசெய்தல்.\nஎங்கள் தயாரிப்புகள் மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன\nஇரட்டை பக்க பிசின் டேப்\nசூப்பர் செயல்திறன், தொழில்முறை தரம் 120μm இரட்டை பக்க டேப், அதிக பிணைப்பு வலிமை. கைப்பை, ஆட்டோமொபைல் உட்புற பாகங்கள் மற்றும் குளிர்சாதன பெட்டி மற்றும் ஏர் கண்டிஷனர் போன்ற வீட்டு உபயோகப் பொருள்களுக்கு ஒட்டக்கூடிய நுரைகளில் பரவலாகப் பயன்படுத்தப்படும் தோல் பொருட்களுக்கு ஏற்றது.\nஎங்கள் தயாரிப்புகள் மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன\nலேமினேட் படலம் காப்பு எதிர்கொள்ளும்\nஒரு பயன்பாட்டு தர படலம்-கிராஃப்ட் ஃபேசிங் 7 மைக்ரான் படலம் மற்றும் 50gsm கிராஃப்ட் காகிதத்தைக் கொண்டுள்ளது, இது முக்கியமாக கண்ணாடி மற்றும் ராக்வூல் / மினரல் கம்பளி / நுரை டக்ட் மடக்கு இன்சுலேஷனின் எதிர்கொள்ளும் மற்றும் நீராவி தடையாகப் பயன்படுத்தப்படுகிறது. பின்னடைவு தேவை. கதிர்வீச்சு தடை பயன்பாடுகளுக்கு இது ஒரு சிறந்த தேர்வாகும், ஏனெனில் அதன் குறைந்த உமிழ்வு.\nஆர் & டி வலிமை\nMeiyuan அதன் சொந்த ஆய்வகம் மற்றும் தொழில்நுட்ப R&D குழுவை நிறுவியுள்ளது, மேலும் சமீபத்திய சோதனை உபகரணங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. தொழில்நுட்ப சேவைகளை மையமாகக் கொண்டு, வாடிக்கையாளர்களுக்கு பழைய தயாரிப்புகளை மேம்படுத்தவும், புதிய தயாரிப்புகளை உருவாக்கவும், வாடிக்கையாளர்களுக்கு தனிப்பயனாக்கப்பட்ட பயன்பாட்டு தொழில்நுட்ப சேவைகள் மற்றும் ஒரு-ஸ்டாப் டேப் தீர்வுகளை வழங்குவதில் Meiyuan உறுதியாக உள்ளது.\nமெய்யுவான் மேம்பட்ட உற்பத்தி உபகரணங்கள், நேர்த்தியான தொழில்நுட்ப செயல்முறை மற்றும் கடுமையான தர மேலாண்மை ஆகியவற்றைக் கொண்டுள்ளது. அதன் இடைநிலை உற்பத்தி செயல்முறை ஆய்வுடன், தயாரிப்புகளின் முழு செயல்முறை தரக் கட்டுப்பாடு செயல்படுத்தப்பட்டுள்ளது, இது மெய்யுவான் தயாரிப்புகளின் உயர் தரத்திற்கு பெரும் ஆதரவை வழங்குகிறது.\nமெய்யுவான் எப்போதும் சிரத்தை மற்றும் ஒருமைப்பாடு கொள்கைகளை கடைபிடித்து வருகிறார். மெய்யுவானின் தொழில்முறை வாடிக்கையாளர் சேவை பணியாளர்கள் தயாரிப்புகளின் துல்லியமான தகவமைப்புக்கான தொழில்முறை ஆலோசனைகளை உங்களுக்கு வழங்க முடியும். உங்களிடம் ஏதேனும் கேள்விகள் இருந்தால், தயவுசெய்து எங்களை தொடர்பு கொள்ள தயங்காதீர்கள், எங்கள் சேவைகள் சரியான நேரத்தில் வழங்கப்படும்.\nஇப்போது, ​​எங்கள் தயாரிப்புகளைப் பார்ப்போம்.\nஇரட்டை பக்க பிசின் டேப்\nலேமினேட் படலம் காப்பு எதிர்கொள்ளும்\nகுளிர் வானிலை அலுமினியம் படலம் டேப்\nகண்ணாடியிழை துணி அலுமினியம் படலம் டேப்\nவலுவூட்டப���பட்ட அலுமினியத் தகடு நாடா\nசுய காயம் அலுமினியம் படலம் டேப்\nநெய்த மற்றும் மெஷ் வகை கலவை அலுமினியம் படலம் டேப்\nகிராஃப்ட் வெளியீட்டு காகிதம்- இரட்டை பக்க டேப்\nவெள்ளை வெளியீட்டு காகிதம்-இரட்டை பக்க டேப்\nகண்ணாடி வெளியீட்டு காகிதம் - இரட்டை பக்க டேப்\nDFR-1001B லேமினேட் படலம் காப்பு எதிர்கொள்ளும்\nFPW-765 லேமினேட் படலம் காப்பு\nFSK-R7150A லேமினேட் படலம் காப்பு எதிர்கொள்ளும்\nதுணி குழாய் டேப் -நீலம்\nதுணி குழாய் டேப் -பச்சை\nதுணி குழாய் நாடா- வெள்ளை\nஇப்போது, ​​எங்கள் தயாரிப்புகளைப் பார்ப்போம்.\nஇரட்டை பக்க டேப், நுரை இரட்டை பக்க டேப், அனைத்து வகையான இரட்டை பக்க டேப்பின் தடயங்களை எப்படி அகற்றுவது\nஅலுமினியத் தகடு நீர்ப்புகா நாடா எஃகு அமைப்பு கூரையின் கட்டுமான முறை\n300 ℃ உயரத்தை அடைவது எப்படி ..\nஅலுமினிய டேப்பின் பயன்கள் என்ன\nபொது கிராஃப்ட் உற்பத்தி மற்றும் பண்புகள் ..\nஉங்களுக்கு மிகவும் தேவையான தயாரிப்புகளைக் கண்டறியவும்\n© பதிப்புரிமை - 2010-2019: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. குறிப்புகள் - சூடான பொருட்கள் - தள வரைபடம் - AMP மொபைல்\nஇன்டர்டேப் பாலிமர் குழு அலுமினியம் ஃபாயில் டேப், டேப், ஒற்றை பக்க அலுமினியம் படலம் எதிர்கொள்ளும், அலுமினியம் படலம் கண்ணாடி துணி நாடா, இரட்டை பக்க வலுவூட்டப்பட்ட அலுமினியம் படலம் எதிர்கொள்ளும், அலுமினியம் ஃபாயில் டேப் எவ்வளவு சூடாக இருக்கும்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://battimedia.lk/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4/", "date_download": "2021-10-19T11:07:26Z", "digest": "sha1:YVYBLRILN2WY6O7ZXVCDRAAOTYQNDDAB", "length": 7247, "nlines": 115, "source_domain": "battimedia.lk", "title": "சமையல் எரிவாயு விலையை அதிகரிப்பது தொடர்பில் இதுவரை எந்தவொரு தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை . - Battimedia", "raw_content": "\nHome செய்திகள் சமையல் எரிவாயு விலையை அதிகரிப்பது தொடர்பில் இதுவரை எந்தவொரு தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை .\nசமையல் எரிவாயு விலையை அதிகரிப்பது தொடர்பில் இதுவரை எந்தவொரு தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை .\nகோதுமை மாவின் விலையை அதிகரிப்பது தொடர்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகார சபையிடம் குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ள போதிலும் இதுவரை அதற்கான அனுமதி கிடைக்கப்பெறவில்லை என நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, சமையல் எரிவாயுவின் விலையை 700 ரூபாவினால் அதிகரிப்பதற்காக நுகர்வோர் விவகார அதிகாரசபையிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.\nஎனினும் அதற்கு இதுவரை அனுமதி வழங்கப்படாததுடன், முன்வைக்கப்பட்டுள்ள விலை நிர்ணயம் தொடர்பில் ஆராய்வதற்காக ஐந்து பேர் அடங்கிய அமைச்சரவை உப குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த குழுவினரால் ஊடாக உலக சந்தையில் எரிவாயு விலை அதிகரிப்பது தொடர்பில் விரிவான ஆராய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளர்.\nஇந்த விலை அதிகரிப்பு தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகாரசபையின் தலைவர், ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சாந்த திஸாநாயக்க கருத்துத் தெரிவிக்கையில்,\nசமையல் எரிவாயு விலையை அதிகரிப்பது தொடர்பில் இதுவரை எந்தவொரு தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.\nPrevious articleமட்டக்களப்பு கல்லடி வேலூர்,கல்லடி புது முகத்துவாரம், நாவற்குடா கிழக்கு ஆகிய பகுதி மக்களுக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டன.\nNext articleஆழ்ந்த தூக்கம் உங்கள் வாழ்நாளை அதிகரிக்கும் .\n608,000 டோஸ் பைஸர் தடுப்பூசிகள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.\nமாடு அறுத்தலுக்கு தடை , அமைச்சரவையில் சட்டமூலம் அங்கீகாரம்.\nஎரிபொருள் விலையை அதிகரிக்க முடியாது-ஜனாதிபதி\nஅனைத்து விதமான செய்திகளையும் உடனுக்குடன் அறிந்துக்கொள்ள தொடர்ந்தும் இணைந்திருங்கள். ஊடகவியலாளர்களாக இணைய விரும்புபவர்களும் தொடர்புகொள்ளவும் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sitharsastrology.com/blog/Uteres-issue-in-Tamil", "date_download": "2021-10-19T11:25:58Z", "digest": "sha1:GEF72QJE7Q5WPFKKTDZ2MBPZ2P5JHGQF", "length": 4731, "nlines": 77, "source_domain": "sitharsastrology.com", "title": "Uteres issue in Tamil|Sithars Astrology Blog", "raw_content": "\nகருப்பை பிரச்சனை – பரிகாரங்கள்\nகருப்பை பிரச்சனை மட்டுமின்றி, ரத்த சோகை, மாதவிடாய் பிரச்சனை உள்ளவர்களும் இதே பரிகாரம் செய்யலாம்.\nகாலபுருஷனுக்கு எட்டாம் வீடான விருச்சிகத்தில் செவ்வாய் ஆட்சி பெற்று நீச்ச சந்திரன் மற்றும் சனியோடு சேர்க்கை பெரும்போது கருப்பை கோளாறுகள், கருப்பை அகற்றுதல் ஆகியவை ஏற்படும்.\nசெவ்வாய் ரத்தத்திலுள்ள ஹீமோக்ளோபின் எனப்படும் இரும்புசத்தின் காரகனாய் இருப்பதால், தாம்பரத்தை அடுத்த வைத்தீஸ்வரன் கோயில் ஒரு சிறந்த செவ்வாய் பரிகார ஸ்தலமாகும். செவ்வாய் கிழமைகளில் இந்த திருத்தலத்திற்க்கு சென்று வணங்குவது சிறந்த பரிகாரமாகும். மேலும் ரத்தத்தில் குறைபாடு உள்ளவர்கள் செவ்வாய் எனும் அங்காரகனின் அதிதேவதையான முருகப்பெருமானின் வாகனமான கோழி மற்றும் சேவல் இறைச்சி சாப்பிடுவதை அறவே நிறுத்திவிட வேண்டும். மாதவிடாய் பிரச்சனை மட்டுமின்றி, ரத்த சோகை, கருப்பை பிரச்சனை உள்ளவர்களும் இதே பரிகாரம் செய்யலாம்.\nமுருங்கை கீரை, புளிச்ச கீரை, பேரிச்சம்பழம், கறிவேப்பிலை பொடி போன்றவை இரும்பு சத்து மிகுந்த உணவு வகைகளை உண்ணலாம். இரும்புச்சத்து மாத்திரைகள் உட்கொள்வதன் மூலம் ஞாபகசக்தித் திறன் அதிகரிக்கும். சோர்வு நீங்கும். இரத்த ஓட்டம் சீராகும். பெண்களுக்கு மாதவிடாய் பிரச்னைகள் சீராகும். மேலும் இரும்புச்சத்து பற்றாக்குறையால் ஏற்படும் நோய்கள் அனைத்தும் தவிர்க்கப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2021-10-19T13:35:13Z", "digest": "sha1:5RFYAC5HINREUG3A3MITCICH2KHWJY3L", "length": 33641, "nlines": 196, "source_domain": "ta.wikipedia.org", "title": "சபரிமலை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள்\nபத்தனம்திட்டா மாவட்டம், ரன்னி வட்டம்\nசபரிமலை (Sabarimala), மலையாளம்: (ശബരിമല) என்பது கேரளாவிலுள்ள மேற்கு ‎மலைத்தொடர்களில் பத்தனம்தித்தா மாவட்டத்தில் உள்ள ஒரு புண்ணியத் தலமாகும். மஹிஷி என்ற ‎பெயர்கொண்ட அசுரபலம் கொண்ட அரக்கியை கொன்ற பிறகு ‎சுவாமி ஐயப்பன் தியானம் செய்த இடமே சபரிமலை என ‎வழங்கப்படுகிறது. பதினெட்டு மலைகளுக்கு இடையே சபரிமலை அய்யப்பன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் ஒரு ‎மலையின் உச்சியில் உள்ளது. மேலும் சராசரியான ‎கடல் மட்டத்துடன் ஒப்பிடும் போது, 914 மீட்டர் உயரத்தில் ‎காணப்படுகிறது. மேலும் மலைகள் மற்றும் காடுகளால் ‎சூழ்ந்துள்ளது. சபரிம���ையை சூழ்ந்துள்ள ஒவ்வொரு மலையிலும் ‎கோவில்கள் காணப்படுகின்றன. நிலக்கல், காளகெட்டி, மற்றும் ‎கரிமலை போன்ற இடங்களில் இன்றும் நாம் நடைமுறைச்சார்ந்த ‎மற்றும் குறைபடாத கோவில்களை காணலாம். இதர மலைகளில் ‎பழங்காலத்து கோவில்களின் எஞ்சிய பாகங்களைக் காணலாம். [1]\n4 திருவாங்கூர் தேவஸ்வம் வாரியம்\n8 அகம் பிரம்மாஸ்மி மற்றும் தத்வமசி\n9 சபரிமலைக்கு ‎அருகாமையிலுள்ள இதர புகழ் பெற்ற ‎கோவில்கள்\nஇது சங்ககாலச் சேரர்களின் வழிபாட்டுத் தலம்.\nமுதன்மைக் கட்டுரை: அயிரை மலை (சங்க காலம்)\nஆண்டுதோறும் சுமார் 45 முதல் 50 மில்லியன் பக்தர்கள் ‎சபரிமலைக்கு புனிதப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.[2] உலக ‎அளவில் ஒவ்வொரு ஆண்டும் மிகையான அளவில் ‎புனிதப்பயணம் மேற்கொள்ளப்படும் புண்ணியத்தலம் ‎சபரிமலையே ஆகும். சபரிமலைக்குப் புனிதப்பயணம் ‎மேற்கொள்ளும் ஒவ்வொரு பக்தனும், சாதி, மத, இன, தகுதி ‎அல்லது சமூக அந்தஸ்து போன்ற வேறுபாடுகளை ‎பொருட்படுத்தாமல், ஒரே மனதுடன், ஒரே வேட்கையுடனும், ஒரே ‎மந்திரத்தை உட்கொண்டும், அதாவது இறைவனான சுவாமி ‎ஐயப்பனின் திருவடிகளை அடைய வேண்டும் என்ற ‎குறிக்கோளுடன் புனிதப்பயணம் மேற்கொள்ளும் பக்தர்களின் ‎மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறது. இருந்தாலும் 10 முதல் 50 ‎வயதுக்குட்பட்ட பெண்கள் சமூக ரீதியாக இப்பயணத்தை ‎மேற்கொள்வதில்லை. மேலும் கோவிலுக்குள் செல்வதற்கு ‎அனுமதி வழங்கப்படுவதில்லை. சுவாமி ஐயப்பனை சார்ந்த ‎வரலாற்றுக் கதைகளில் வீட்டு விலக்குக்குரிய பெண்கள் இங்கு ‎வருவதை தடை செய்துள்ளபடியாலும் மேலும் இதர பல ‎காரணங்களாலும், பொதுவாக பெண்கள் இந்தக் கோவிலுக்கு ‎வருகை புரிவதில்லை. இதற்கான முக்கிய காரணம் சுவாமி ‎ஐயப்பன் ஒரு பிரம்மச்சாரி என்ற ஐதீகமே. மண்டல பூசை என ‎அறிவிக்கப்பட்ட நாட்களிலும் (தோராயமாக நவம்பர் 15 முதல் ‎திசம்பர் 26 வரையிலும்), மகர விளக்கு அன்றும் (சனவரி 14- \"மகர ‎சங்கராந்தி\") மற்றும் விஷு (ஏப்ரல் 14), மற்றும் ஒவ்வொரு ‎மலையாள மாதத்தின் முதல் ஐந்து நாட்களில் மட்டும் கோவில் ‎பிரார்த்தனை செய்வதற்காக திறந்து வைக்கப்படுகிறது. ‎\nசபரிமலைப் புனிதப் பயனம் மேற்கொள்ளும் அடியார்கள்\nபுனிதப்பயணம் மேற்கொள்வதற்கு முதலில் பக்தர்கள் 48 நாட்கள் ‎கொண்ட விருதத்தை (கடினமான தவம்) பக்தர்கள் ஏற்றுக் ‎க��ள்ளவேண்டும். இதற்காக பக்தர்கள் துவக்க நாளன்று உருத்திராட்சத்தினாலோ அல்லது துளசி மணிகளாலோ செய்யப்பட்ட ‎சிறப்பு மாலையை கழுத்தில் அணிந்து கொள்ளவேண்டும். ‎அப்பொழுது முதலே விரதத்தை மேற்கொள்ளும் அடியார்கள் ‎பொதுவாக மாமிச உணவு, மீன், மதுபானங்கள், புகையிலை, ‎பெண்களுடன் தொடர்பு, அநாகரிகமான பேச்சுக்கள் மற்றும் ‎வார்த்தைகளை தவிர்த்தல், மேலும் தலை முடி மற்றும் ‎முகத்தில் வளரும் மீசை போன்றவைகளை திருத்தாமல் இருக்க ‎வேண்டும், மேலும் இது போன்ற விதிமுறைகளை ஆசாரத்துடன் ‎கடைப்பிடிக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் அவர்கள் உள்ளூர் ‎கோவில்களுக்கு சென்று அங்கு பிரார்த்தனை செய்ய வேண்டும். ‎மேலும் எளிய கருப்பு, நீல அல்லது குங்குமப்பூ நிறத்திலுள்ள ‎பாரம்பரிய துணிகளை மட்டுமே அணிய வேண்டும். தற்பொழுது ‎விரதங்களுக்கான விதிமுறைகளை கெடுபிடியுடன் முந்தைய ‎நாட்களில் இருந்தது போன்று பின்பற்றாவிட்டாலும், ‎மக்கள் பொதுவாக ஒரு விதிமுறைக்கு உட்பட்டு, அனுட்டித்து வருகின்றனர்.\nபயணம் மேற்கொள்பவர்களுக்கு உள்ள கட்டுப்பாடுகளுக்குக் காரணமாக பின்பவருவன சொல்லப்படுகின்றன: முற்காலத்தில் \"பெரிய பாதை\" மட்டுமே இருந்தது. காட்டின் வழி செல்லவேண்டும், விலங்குகள் அதிகம், வெள்ளை நிறம் வெகு தூரம் வரை தெரியும் நிறம் என்பதால் காட்டு விலங்குகளிடமிருந்து தப்ப குறைந்த ஒளி சிதறல் கொண்ட கருப்பு, நீலம் ஆகிய நிறங்கள் ஆகிய துணிகள் பயன்படுத்தினர். முந்தைய காலத்தில் காட்டு வழியாக சென்று பம்பா நதியை அடைய வெகு நாட்கள் ஆகும் எனவே, இறைவனுக்கு சமர்பிக்கும் பொருள்கள் ஒரு புறமும், வழி உணவிற்கான பொருள்கள் மற்றொரு புறமுமாக இருமுடி பை ஏற்றுச் சென்றனர். குளிர்ந்த நீரில் குளிக்கவேண்டும், பிரம்மச்சரியம் மேற்கொள்ள வேண்டும், சவரம் செய்யக்கூடாது ஆகியன போன்றும், இப்புனித யாத்திரையை மேற்கொள்ளும்போது ஏற்படகூடிய நிகழ்வுகளுக்காக பயணிகளைத் தயார்படுத்தும் முறையாக இவ்வழி முறைகள் உதவும். நூற்றுக்கணக்கான பக்தர்கள் இன்றும், சுவாமி ஐயப்பன் அன்றைய ‎தினங்களில் மேற்கொண்டது போலவே என்ற நம்பிக்கையுடன், ‎எருமேலியில் இருந்து புறப்பட்டு, பரம்பரை பரம்பரையாக வரும் ‎காட்டு மலைப்பாதைகளில், (சுமார் 45 கிலோ மீட்டர்கள் தூரம் ‎கொண்டது) காலணிகள் அணியாமல், ��டந்து செல்வதையே ‎விரும்புகின்றனர். இந்தப் பயணத்தின் முதல் பகுதி, ‎எருமேலியில் இருந்து தொடங்கி அழுதா நதி வரை கொண்டு ‎செல்லும். பிறகு அழுதா மலையைத்தாண்டி கரியம் தோடினை ‎அடைய வேண்டும். இப்பொழுது புனிதமான கரிமலையை ‎ஏறிக் கடக்க வேண்டும். அங்கிருந்து செறியனவட்டம், ‎வலியனவட்டம் ஆகிய இடங்களைக் கடந்து முடிவில் பம்பா ‎நதியைச் சேரும். 'திருவாபரண கோஷப் பயணம்' ‎மேற்கொள்வோர் ஆறன்முள கொட்டாரம் என்ற இடத்தில் ‎தங்கிச் செல்ல வேண்டும். ஆனால் புனிதப் பயணத்தை ‎மேற்கொள்ளும் பல பக்தர்கள் வாகனங்களில் பயணம் செய்து ‎மாற்றுவழிகளில் புனிதமான பம்பா நதிக்கரையை அடைகின்றனர். ‎அதற்குப்பிறகு, புனிதப் பயணம் மேற்கொள்ளும் அனைவரும் ‎சுமார் நான்கு கிலோமீட்டார் தூரம் கொண்ட ஏற்றத்துடன் கூடிய ‎‎(நீலிமலை) காட்டுமலைப்பாதையில் ஏறி சபரிமலையை அடைய ‎வேண்டும். ஒரு காலத்தில் கனத்த காட்டுப் பகுதியாக இருந்த ‎இந்த ஒற்றைவழிப்பாதை, தற்பொழுது மேம்படுத்தப்பட்டு, இரு ‎பக்கங்களிலும் கடைகள் மற்றும் மருத்துவ வசதிகளுடன் கூடிய ‎சாலையாக காணப்படுகின்றன.\n‎நீண்ட தொலைவில் இருந்து வரும் பக்தர்கள் தரிசன வசதிக்காக, சபரிமலையில் 2011 முதல் இணையத்தில் முன்பதிவு செய்யும் வசதியும் தொடங்கப்பட்டுள்ளது. கேரள காவல் துறை இதற்காக ஏற்பாட்டினை செய்துள்ளது.[3]\nதேவஸ்வம் வாரியம் (TDB) சபரிமலை சுவாமி ‎ஐயப்பன் கோவிலை சுமார் ரூபாய் 30 கோடியளவில் ($7 ‎மில்லியன்) காப்பீடு செய்து கொண்டுள்ளது. மேலும் இந்த ‎இடத்திற்கு வருகை தரும் பயணிகளுக்கு ‎விபத்துகளில் இருந்து இலவசமாகக் காப்பீடு அளிக்கும் திட்டத்தையும் ‎அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது. நீலக்கல்லில் இருந்து ‎மலையேற்றப் பாதையில் சன்னிதானம் வரை சென்றடையும் 18 ‎கிலோ மீட்டர் தூரம் கொண்ட பாதையில் வரும் பக்தர்களில் ‎விபத்துக்குள்ளாகி அடிபட்டோர் மற்றும் இறந்தவர்களுக்கு சுமார் ‎ஒரு லட்சம் ரூபாய் வரை இந்த காப்பீட்டு திட்டத்தின் மூலமாக ‎வழங்க இயலும். ‎சபரிமலைப் பயணம் காரணமாக கேரள அரசாங்கத்திற்கு நல்ல ‎வருமானம் கிடைப்பதோடு, கேரளத்தின் பொருளாதாரத்திற்கு ‎சுமார் 10,000 கோடி ரூபாய் வரை வருமானத்தை பங்களித்து ‎வருகிறது.\nசபரிமலை கோவிலில் அரவணை மற்றும் அப்பம் பிரசாதமாக ‎வழங்கப்படுகின்றன. இவை அரிசி, நெ��், சர்க்கரை போன்ற ‎பொருட்களால் உருவாக்கப்படுகின்றன. சபரிமலையில் இந்தப் ‎பிரசாதத்தை செய்வதற்கான அரிசி செட்டிக்குளங்கரை தேவி ‎கோவிலில் இருந்து பெறப்படுகிறது. திருவாங்கூர் தேவஸ்வம் வாரியத்தின் கீழ் உள்ள கோவில்களில் இக்கோவில் இரண்டாவது ‎மிகப்பெரிய கோவிலாகும். இந்தக்கோவில் மாவேலிக்கரா என்ற ‎இடத்தில் உள்ளது.‎\nஇரவில் கோவிலின் நடை சார்த்தப்படுவதற்கு முன்பு ‎ஹரிவராசனம் என்ற பாடல் இசைக்கப்படுகிறது. தற்காலத்தில் ‎சபரிமலையில் இறைவன் உறங்கச்செல்வதற்கு முன் ‎இசைக்கப்படும் தாலாட்டுப் பாட்டு (உறக்கப்பாட்டு), ‎ஹரிவராசனம் என்ற பாடல், ஸ்ரீ கம்பக்குடி குளத்தூர் ஸ்ரீனிவாச ‎அய்யர் இயற்றி இசை அமைத்ததாகும். ஸ்ரீனிவாச ‎அய்யர் கோவிலில், சுவாமி அய்யப்பரின் சந்நிதியில் ‎நின்றுகொண்டு, அத்தாழ பூசைக்குப் பிறகு, இந்தப் பாடலை பாடி ‎வந்தார். சுவாமி விமோசானனந்தா அவர்களின் முயற்சியால், ‎கோவிலின் தந்திரி மற்றும் மேல்சாந்தி, இப்பாடலை ஒரு ‎தாலாட்டுப்பாடலாக ஏற்றுக்கொண்டனர். இந்தப் பாடல் 352 ‎எழுத்துக்கள், 108 சொற்கள் மற்றும் 32 வரிகள் கொண்டதாகும் (8 ‎செய்யுள் பத்திகள்).\nஅநேக புகழ் பெற்ற பாடகர்களால் பாடப்பெற்ற இந்தப்பாடலின் ‎பதிப்புகள் இருந்தாலும், கோவில் நடையில் கே. ஜே. யேசுதாஸ் ‎பாடிய பாடலே ஒலிபரப்பப்படுகின்றது. அச்சமயம் பக்தர்கள் மட்டுமல்லாது அரசுப் பணியில் ஈடுபட்டிருப்போரும், வணிகத்தில் ஈடுபட்டுள்ளோரும் எழுந்து நிற்கிறார்கள். பாரம்பரிய இராக தாளத்துடன் இப்பாடல் இசையமைக்கப்பட்டுள்ளது. ஒரு தேசிய கீதம் இசைக்கப்படும்போது தரப்படும் மரியாதை, இப்பாடல் ஒலிபரப்பப்படும்போதும் தரப்படுகிறது.\nசபரிமலைக் கோவிலில் மேற்கொள்ளப்பட்டு வரும் முதன்மை ‎சடங்கானது பக்தர்கள் அவர்களுடைய தலையில் சுமந்து வரும் ‎பள்ளிக்கட்டு அல்லது இருமுடியில் (பருத்தித் துணியால் ‎கைகளால் தைக்கப்பெற்ற இறைவனுக்கு படைப்பதற்காக ‎பொருட்களை வைப்பதற்கு இரு அறைகள் கொண்ட பை) ‎காணப்படும் புனிதமான நெய்யைக் கொண்டு சுவாமி ஐயப்பனின் ‎மூல விக்கிரகத்தின் மீது புரியப்படும் நெய்யபிசேகம் ஆகும். ‎ஜீவாத்மா மற்றும் பரமாத்மாவின் புனித சேர்க்கையைக் குறிக்கும் ‎தத்துவமாக இது கருதப்படுகிறது. முதல் முறையாக பயணம் ‎மேற்கொள்ளும் பக்தர்கள் (கன்னி அய்யப்பன்மார்கள் எனப்படுவோர்) ‎குங்குமப்பூ நிறம் கொண்ட இருமுடியை சுமந்துவர வேண்டும். ‎இதர புனிதப்பயணம் மேற்கொள்வோர் கருப்பு அல்லது நீல ‎வண்ணத்திலான இருமுடிகளை பயன்படுத்துவார்கள்.\nஅகம் பிரம்மாஸ்மி மற்றும் தத்வமசி[தொகு]\n‎இந்தக் கோவிலுக்கு புனிதப்பயணம் புரிந்து வரும் பக்தர்களுக்கு ‎கிடைக்கும் இணையற்ற அறிவு, சமக்கிருத மொழியில், தத் த்வம் ‎அசி, அதன் பொருளானது \"நீயும் ஒரு கடவுள்\" என்பதற்கான ‎ஞானமே. இதனால் புனிதப்பயணம் மேற்கொள்ளும் ‎ஒவ்வொருவரும் ஒருவரை ஒருவர் சுவாமி என்று ‎அழைக்கிறார்கள். மேலும் அனைவரும் அந்த பரமாத்மா அல்லது உலகளாவிய ஆத்மா ‎என்ற நிலையை அடைய வேண்டும் என்ற வேட்கையை ‎இச்சொல் குறிக்கிறது. கண்டரரு மகேஸ்வரரு என்ற தழமொன் ‎குடும்பத்தினரே தற்போது சபரிமலை கோவிலின் தலைமை பூசாரியாக (தந்திரி) இருப்பவர்.\nசபரிமலைக்கு ‎அருகாமையிலுள்ள இதர புகழ் பெற்ற ‎கோவில்கள்[தொகு]\nஆரன்முலா பார்த்தசாரதி கோவில் ‎\n‎செட்டிக்குளங்கரை தேவி கோவில், மாவேலிக்கரா\n‎கண்டியூர் மகாசிவர் கோவில், மாவேலிக்கரா\n‎சுனக்கற மகாதேவர் கோவில், மாவேலிக்கரா\n‎பதநிலம் பரப்பிரம்மா கோவில், நூரநாடு\n↑ சபரிமலை பிறந்த கதை\n↑ \"சபரிமலை நடை திறப்பு நாட்கள்\". தெய்வீகம்.\n↑ சபரிமலை தரிசனத்திற்கு இணைய முன்பதிவு\n360 டிகிரி கோணத்தில்சபரிமலை ஐயப்பன் கோயில் தினமலர்\nசபரிமலையின் அதிகாரபூர்வ இணையத்தளம் பரணிடப்பட்டது 2011-10-26 at the வந்தவழி இயந்திரம்\nஅய்யப்ப சுவாமி - வரலாறு, வண்ணப்படங்கள், பாடல்கள், ‎வழித்தடங்கள், காலண்டர், பூஜை பற்றிய தகவல்கள் ‎\n‎* விக்கிமேப்பியாவில் கோயில் அமைவிடம்\nகேரள மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 ஆகத்து 2021, 22:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2021/07/25/minister-sm-nasser-answer-about-admk-jayakumar-and-bjp-annamalai", "date_download": "2021-10-19T12:01:36Z", "digest": "sha1:K5J4OKTFXD6KD6DXKRCU6BOLH4X7W3MG", "length": 8556, "nlines": 58, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Minister SM Nasser answer about ADMK Jayakumar and BJP annamalai", "raw_content": "\n” - கேள்வி கேட்ட செய்தியாளர்.. அமைச்சரின் பதிலால் டேமேஜ் ஆன ஆட்டுக்குட்டி\nஅ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ஆகியோர் குறித்த கேள்விகளுக்கு அமைச்சர் சா.மு.நாசர் கிண்டலாக பதிலளித்தார்.\nபா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் கருத்து குறித்த கேள்விக்கு, “அண்ணாமலை யார் பத்திரிகையாளர்கள் கூறித்தான் அவர் யாரென்றே தெரிகிறது” என கிண்டலாக பதிலளித்தார் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர்.\nதிருவள்ளூர் மாவட்டம் ஆவடி பருத்திப்பட்டு கிராமத்தில் 350 குடும்பத்தினருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை ஆவடி சட்டமன்ற உறுப்பினரும் பால்வளத்துறை அமைச்சருமான சா.மு.நாசர் இன்று வழங்கினார்.\nஆவடி சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பலர் ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டத்தின் கீழ் பட்டா வேண்டி கோரிக்கை மனு அளித்திருந்தனர். பொதுமக்களின் மனுக்களுக்கு விரைந்து தீர்வு காணப்பட்டு வருகிறது.\nஆவடி பருத்திப்பட்டு பகுதியில் 200 ஆண்டுகளாக பட்டா இல்லாமல் 400 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வந்த நிலையில் இன்று 350 பயனாளிகளுக்கு 318 கோடி மதிப்பிலான நிலங்களின் பட்டாக்களை அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார். பட்டாக்களைப் பெற்றுக்கொண்ட மக்கள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி கூறினர்.\nபின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசரிடம் செய்தியாளர் ஒருவர் ‘சார்பட்டா பரம்பரை’ படம் குறித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் விமர்சனம் குறித்து கேள்வி எழுப்பினார்.\nஅதற்குப் பதிலளித்த பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர், “ரோட்டோர அமைச்சர் ஜெயக்குமார் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்களை பார்த்து அரசியலுக்கு வந்தவர். அவருக்கு வரலாறும் தெரியாது. கொள்கை கோட்பாடும் கிடையாது. தி.மு.க நீண்ட வரலாறு கொண்டது தி.மு.கவினர் வாலாறு தெரிந்தவர்கள்” எனத் தெரிவித்தார்.\nதொடர்ந்து, தமிழ்நாட்டில் 3 முதலமைச்சர்கள் என்ற பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் கருத்து குறித்து கேட்கப்பட்டதற்கு, “அண்ணாமலை யார் பத்திரிகையாளர்கள் கூறித்தான் அவர் யாரென்றே தெரிகிறது. அவருக்கு தி.மு.க பற்றியும் அதன் வரலாறு பற்றியும் ஏதும் தெரியாது அவர்கள் அப்படிதான் கூறுவார்கள்” எனப் பதிலளித்தார்.\n\"மக்களைத் தேடி மருத்துவம்... புதன்கிழமை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்\": அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்\nசிறுநீரக கல்லுக்கு பதிலாக சிறுநீரகத்தையே அகற்றிய மருத்துவர்... நுகர்வோர் ஆணையத்தின் அதிரடி உத்தரவு\n“விரைவில் ஆழ்கடல் அகழாய்வுப் பணிகளைத் தொடங்க ஆலோசனை” : அமைச்சர் தங்கம் தென்னரசு முக்கிய தகவல்\nதண்ணி இல்லாத காட்டில் மாட்டிக்கொண்ட 2 பேர்.. 1 வாரம் கழித்து மீட்ட போலிஸ்: ஆஸ்திரேலியாவில் நடந்தது என்ன\n50 ஆண்டுகளுக்குப் பிறகு மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றியத்தை கைப்பற்றிய தி.மு.க - ஆட்சிக்கு கிடைத்த நற்சான்று\n“எங்க கல்யாணத்த மழை வெள்ளம் தடுப்பதா.. நெவர்” : காதல் ஜோடி எடுத்த முடிவு - இணையத்தில் வைரல்\n“விரைவில் ஆழ்கடல் அகழாய்வுப் பணிகளைத் தொடங்க ஆலோசனை” : அமைச்சர் தங்கம் தென்னரசு முக்கிய தகவல்\nசிறுநீரக கல்லுக்கு பதிலாக சிறுநீரகத்தையே அகற்றிய மருத்துவர்... நுகர்வோர் ஆணையத்தின் அதிரடி உத்தரவு\nதண்ணி இல்லாத காட்டில் மாட்டிக்கொண்ட 2 பேர்.. 1 வாரம் கழித்து மீட்ட போலிஸ்: ஆஸ்திரேலியாவில் நடந்தது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/87790/", "date_download": "2021-10-19T11:29:33Z", "digest": "sha1:7CRESGCC2YAZPNXXUC6HVRV7Q6M42RII", "length": 22753, "nlines": 119, "source_domain": "www.jeyamohan.in", "title": "போதி – சிறுகதை குறித்து.. | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nவாசகர்கள் வாசகர் கடிதம் போதி – சிறுகதை குறித்து..\nபோதி – சிறுகதை குறித்து..\nபோதி சிறுகதையைப் படித்தேன். ஏனோ, எனக்கு அது க.நா.சு.வின் பொய்த்தேவு நாவலையும், ஜெயகாந்தனின் துறவு சிறுகதையையும் நினைவூட்டியது.\nஅவிசுவாசியாக இருப்பதற்கு ஒருபோதும் நாம் ஒப்புக்கொள்வதில்லை. நம் இயல்பான நிலை அதுதான் என்று தெரிந்தபின்னும் விசுவாசத்தை நோக்கியே நாய்போல் ஓடுகிறோம். நிலைத்த சமூக வாழ்விலிருந்துதான் நம்மிடம் விசுவாசம் ஒட்டிக்கொண்டிருக்க வேண்டும். கல்வி, காதல், கல்யாணம், குடும்பம், மரணம் என வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் ஏதோ ஒன்றின் மீதான் விசுவாசத்துடன்தான் இருக்கிறோம். விசுவாசம் நம்மை ஏமாற்றும் நேரங்களில் அதிகம் வருந்துகிறோம். கொஞ்ச நேரத்திலேயே அது விசுவாசத்தின் தவறிலை, நம் தவறு எனச் சமாதானமும் கொள்கிறோம். கடவுள் நம்பிக்கை தொடர்பாக ஆத்திக விசுவாசம், நாத்திக விசுவாசம் என இரண்டு முக்கிய விசுவாசங்கள் நம்மிடம் உண்டு. ஆத்திக விசுவாசிகளும், நாத்திக விசுவாசிகளும் தங்க���் சடங்குகளில் இன்றுவரை தெளிவோடு இருக்கின்றனர். ஒருபோதும் அவர்கள் அவ்விசுவாதத்தை எதற்காகச் சுமக்கிறோம் எனச் சுயபரிசீலனை செய்து கொள்ள எண்ணியதே இல்லை. ஒரு ஆத்திக விசுவாசி நாத்திக விசுவாசியின் கருத்தையும், ஒரு நாத்திக விசுவாசி ஆத்திக விசுவாசியின் கருத்தையும் கிண்டல் செய்வதையே தங்கள் விசுவாசத்திற்கான செய்நன்றியாகக் கருதுகின்றனர். என்னே கொடுமை\nபல நேரங்களில் விசுவாசம் நமக்கு கடும் எரிச்சலைத் தந்தாலும் அதைத் துறக்கத் துணிவதில்லை. அப்படி துறக்கத் தயாராகிவிட்டோம் என்றால், வேறு ஏதோ ஒன்றின் மீது நமக்கு விசுவாசம் வந்திருக்கிறது என்றே பொருள். ஒரு ஆத்திக விசுவாசி நாத்திக விசுவாசியாகவும், ஒரு நாத்திக விசுவாசி ஆத்திக விசுவாசியாகவும் மாறமுடியுமே தவிர, அவர்களால் எப்போதும் அவிசுவாசியாக இருக்கவே முடியாது. அவிசுவாசியாக இருப்பது அவ்வளவு எளிதுமன்று. சமயத்தளத்தில் பக்தியை விசுவாசமாகவும், ஞானத்தை அவிசுவாசமாகவும் நான் பார்க்கிறேன். அதனால்தான் ஞானத்தை நம்மில் பெரும்பாலானோர் சீண்டுவதே இல்லை. வேறுவிதமாகச் சொல்வதாயின், பக்தி சில சடங்குகளின் அடிப்படையில் விசுவாசத்தை முன்வைக்கிறது. ஞானமோ சும்மா இருக்கச் சொல்லி அவிசுவாசத்தை சுட்டுகிறது. விசுவாசிகளை பக்தர்கள் என்றும், அவிசுவாசிகளை சித்தர்கள் எனவும் குறிக்கலாம்.\nசமயம் நம்மை விசுவாசம் மற்றும் அவிசுவாசத்தின் தொகுப்பாகவே பார்க்கிறது. விசுவாசம் ஒருகட்டத்தில் அவிசுவாசமாகவும், அவிசுவாசம் ஒருகட்டத்தில் விசுவாசமாகவும் மாறக்கூடும். எவ்வளவு நூல்களைப் படித்திருந்தாலும் அல்லது அனுபவங்களைப் பெற்றிருந்தாலும் வாழ்வின் சம்பவங்கள் நம்மை விசுவாசத்துக்கும், அவிசுவாசத்துக்கும் அலைக்கழித்துக் கொண்டேதான் இருக்கும். அதுவே இயற்கை. இருமையை இயல்பாகக் கொண்ட மனிதனுக்கு ஒருமையைக் கடவுளாகக் காட்டியதன் மூலம் அற்புதச் செய்தியொன்றை நம் சமயம் சொல்லி இருக்கிறது. அது ஒருமையின் தரிசனம் கண்ட ஒருவனுக்கு இருமையின் அலைக்கழிப்பு அவ்வளவு இறுக்கம் தராது என்பதே. இதை யாரிடம் இருந்தும் நாம் கற்றுக்கொள்ள முடியாது; நாமாகவேதான் உணர வேண்டும். ஒருமையின் தரிசனத்தை அகத்தில் காண விசுவாசம், அவிசுவாசம் இரண்டிலிருந்தும் கொஞ்சம் தள்ளிநிற்க வேண்டும். அப்படி நிற்கும் சமயம் விசுவாசம், அவிசுவாசம் இரண்டுமே தற்காலிகமானவை எனும் புரிதல் கிட்ட வாய்ப்புண்டு. அதுவே சத்தியம்; இறை; முடிந்த முடிபு.\n“ஒருசமயம் நீ பக்தனாக இருப்பாய்; பிறிதொரு சமயம் சித்தனாக இருப்பாய். சிலசமயம் இரண்டும் அற்றும் இருப்பாய். எனவே, பக்தனாக அல்லது சித்தனாக மட்டுமே இருக்க முயற்சி செய்து மாட்டிக்கொள்ளாதே” – இதுவே சமயத்தின் வழியாக நான் கண்டுகொண்ட சத்தியம். “ஒருசமயம் நீ விசுவாசியாக இருப்பாய். பிறிதொரு சமயம் அவிசுவாசியாக இருப்பாய். சிலசமயம் இரண்டும் அற்றும் இருப்பாய். எனவே, விசுவாசியாக அல்லது அவிசுவாசியாக மட்டுமே இருக்க முயற்சி செய்து அலைக்கழியாதே” – என் புரிதலை போதி கதைக்குப் பிறகு இப்படி மாற்றிக்கொள்ளலாம் என்றும் தோன்றுகிறது.\nபோதி - சிறுகதை குறித்து..\nமுந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 51\nகோவை கவிதைவிவாதம் – கடிதம்\nஅக்டோபர் 2 காந்தி ஜெயந்தி நிகழ்வு – குக்கூ காட்டுப்பள்ளி\nசிறுகதை வாசிக்க பயிற்சி அவசியமா\nவடுகூரும் தோத்தாத்ரியும்- கடலூர் சீனு\nராஜ் கௌதமனின் பண்பாட்டு வரலாற்றுப் பார்வை-1\nபுவியரசு 90, நிகழ்வு அழைப்பிதழ்\nஒப்பீடுகளின் அழகியல் -தி. ஜானகிராமன்\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 11\nஏர்டெல், அந்த 3000 ரூபாய்\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி கி.ராஜநாராயணன் கோவை ஞானி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உணவு உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் தொல்லியல் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் நகைச்சுவை நேர்காணல் நேர்காணல் மற்றும் பே��்டிகள் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பிறர் படைப்புகள் நூல் மதிப்புரை மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் மதிப்புரை விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெண்முரசு – ஒலிவடிவம் வெண்முரசு – வாசகர் கடிதம் வெண்முரசு – வாசகர் மதிப்புரை வெண்முரசு ஆவணப்படம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndpfront.com/index.php/articles/articles/nesan/1176-2012-04-20-224543", "date_download": "2021-10-19T10:53:18Z", "digest": "sha1:5APV2Z3BT4R6SS5H7ODWTOJKMAV5FQ4E", "length": 51726, "nlines": 229, "source_domain": "www.ndpfront.com", "title": "பலமுனை நெருக்கடிக்குள்ளான இந்திய-இலங்கை ஒப்பந்தம் - எனது அனுபவப் பகிர்வுகள் – நேசன் (பகுதி 53).", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nபலமுனை நெருக்கடிக்குள்ளான இந்திய-இலங்கை ஒப்பந்தம் - எனது அனுபவப் பகிர்வுகள் – நேசன் (பகுதி 53).\nபுளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 53\nபலமுனை நெருக்கடிக்குள்ளான இந்திய-இலங்கை ஒப்பந்தம்\nஇந்திய-இலங்கை ஒப்பந்தம் குறித்த விவாதம் \"தீப்பொறி\" செயற்குழுவுக்குள் நடைபெற்றுக் கொண்டிருந்தவேளையில் தென்னிலங்கையிலும், வடக்கு-கிழக்குப் பகுதிகளிலும் நிலைமைகள் வேகமாக மாற்றமடைந்து கொண்டிருந்தன.\nராஜீவ் காந்தியினாலும் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவாலும் கைச்சாத்திடப்பட்ட இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த உறுதிபூண்டிருந்த இந்திய அரசு இந்திய அமைதிகாக்கும் படையின் எண்ணிக்கையை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டு தொடர்ச்சியாக இந்திய இராணுவத்தினரை வடக்கு-கிழக்குப் பிரதேசங்களுக்கு அனுப்பி வைத்த வண்ணம் இருந்தது. பயங்கரவாதிகள் அல்லது பிரிவினைவாதிகள் என அவசரகாலச் சட்டத்தின் கீழ் பல வருடங்களாக சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஈழவிடுதலைப் போராட்ட இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் இந்திய-இலங்கை ஒப்பந்தத்திற்கமைய பகுதி பகுதியாக விடுதலை செய்யப்பட்டுக் கொண்டிருந்தனர்\nஇந்திய-இலங்கை ஒப்பந்தத்தை அடுத்து வடக்கு கிழக்கில் தோன்றியிருந்த இயல்பு வாழ்க்கையின் காரணமாக தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னணி உறுப்பினர்களான குமரப்பா (பாலசுந்தரம் இரத்தினபாலன் - வல்வெட்டித்துறை), புலேந்திரன் (குணநாயகம் தருமராசா - பாலையூற்று, திருகோணமலை) உட்பட தமிழீழ விடுதலைப் புலிகளைச் சேர்ந்த பலர் திருமண வாழ்க்கைக்குள் நுழைந்து கொண்டிருந்தனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னணி உறுப்பினர்களான குமரப்பா, புலேந்திரன் ஆகியோரின் திருமண வைபவங்களுக்கு இந்திய அமைதி காப்புப் படை அதிகாரிகள் முக்கிய பிரமுகர்களாகப் பங்கேற்றிருந்தனர்.\nதமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தோற்றத்தின் ஆரம்ப நாட்களிலிருந்து அதன் உறுப்பினர்கள் திருமணம் செய்வது தடை செய்யப்பட்டதொன்றாகவும், மரண தண்டனைக்குரியதொன்றாகவும் இருந்துவந்தது. ஆனால் இந்நிலை 1984ல் இடம்பெயர்ந்த பல்கலைக்கழக மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்ட உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த வேளையில் ஆயுத முனையில் தமிழீழ விடுதலைப் புலிகளால் கடத்திச் செல்லப்பட்ட உண்ணாவிரதப் போராளிகளில் ஒருவரான ஏரம்பு மதிவதனி (புங்குடுதீவு) என்பவரை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் திருமணம் செய்த பின் மாற்றமடைந்து விட்டிருந்தது.\nதமிழீழ விடுதலைப் புலிகளால் தடைசெய்யப்பட்ட பின் இந்தியாவில் தளமிட்டிருந்த ஈழவிடுதலைப் போராட்ட இயக்கங்கள் இந்திய-இந்திய ஒப்பந்தத்தையடுத்து வடக்கு-கிழக்குப் பகுதியில் மீண்டும் தமது செயற்பாடுகளை ஆரம்பித்ததை தமிழீழ விடுதலைப் புலிகள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கவில்லை. இதனால் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் ஏனைய ஈழவிடுதலைப் போராட்டக் குழுக்களுக்குமிடையிலான முரண்பாடுகளும் அதனையொட்டி தமிழீழ விடுதலைப் புலிகள் ஏனைய ஈழவிடுதலைப் போராட்ட இயக்க உறுப்பினர்களை அழித்தொழிக்கும் நடவடிக்கைகளும் ஆரம்பித்திருந்தன.\nஏனைய விடுதலைப் போராட்ட இயக்கங்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களை குறிவைத்து தமது பங்குக்குக்கு தாக்குதல்களை ஆரம்பித்திருந்தனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் ஏனைய ஈழவிடுதலைப் போராட்ட இயக்க உறுப்பினர்கள் மீதான அழித்தொழிப்பானது சில சமயங்களில் வெளிப்படையான படுகொலைகளாகவும், சிலசமயங்களில் நயவஞ்சகத் தன்மை கொண்டதுமானதாக காணப்பட்டிருந்தது.\nபுளொட்டின் படைத்துறைச் செயலர் கண்ணன், அரசியல் செயலர் வாசுதேவா ஆகியோரைச் மட்டக்களப்பில் சந்தித்துப் பேசுவதற்கென அழைப்பு விடுத்திருந்த தமிழீழ விடுதலைப் புலிகள், சந்திப்புக்குச் சென்று கொண்டிருந்த புளொட் உறுப்பினர்களின் வாகனம் மீது கிரான் சந்தியில் தாக்குதல் நடத்தி அவர்களைக் கொன்றொழித்திருந்தனர்.\nஇந்திய-இலங்கை ஒப்பந்தத்தை ஏற்று இந்தியாவிடம் தமிழ் மக்களின் பாதுகாப்பை ஒப்படைப்பதாக சுதுமலையில் நடைபெற்ற பகிரங்கக் கூட்டத்தில் தெரிவித்திருந்த தமிழீழ விடுதலைப் புலிகள், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை இலங்கை அரசு மீறிச் செயல்படுகின்றதெனக் குற்றம் சாட்டிய வண்ணம் ஏனைய ஈழவிடுதலைப் போராட்ட உறுப்பினர்களை அழித்தொழிப்பதில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததன் மூலம் தம்மால் கைச்சாத்திடப்பட்ட, தம்மால் பகிரங்கமாக ஏற்றுக் கொள்ளப்பட்ட இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை மீறிச் செயற்பட்டுக் கொண்டிருந்தனர்.\nமறுபுறத்தில் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை மீறிய செயற்பாடுகளை ஜே.ஆர்.ஜெயவர்த்தன தலைமையிலான இலங்கை அரசு கிழக்கு மாகாணத்தில் மேற்கொண்டு வந்தது. இதனால் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்குமிடையிலும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிங்களக் குடியிருப்பாளர்களுக்குமிடையிலும் வன்முறை தோற்றம் பெற்று, போர்ச்சூழல் ஏற்பட்டிருந்த அதேவேளை இச்சூழ்நிலை இந்திய அமைதி காக்கும் படையால் தோன்றிவிட்டதொன்று என இருதரப்பும் குற்றம் சாட்டத் தொடங்கியிருந்தனர்.\nஇலங்கை அரசும், தமிழீழ விடுதலைப் புலிகளும் கிழக்கு மாகாணத்தில் நடப்பவை அனைத்துக்கும் இந்திய-இலங்கை ஒப்பந்தமும், இந்திய அமைதி காக்கும் படையும் தான் காரணமென தமது சுட்டுவிரலை இந்தியா மீது நீட்டத் தொடங்கியிருந்தனர். இந்திய-இலங்கை ஒப்பந்தமும் இந்திய அமைதி காக்கும் படையும் இலங்கை அரசாலும���, தமிழீழ விடுதலைப் புலிகளாலும் கேள்விக்குள்ளாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பொறுப்பாளர் திலீபன் (இராசையா பார்த்திபன்- ஊரெழு) ஜந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து நல்லூர் கந்தசாமி கோவில் முன்றலில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார்.\n1983ல் இலங்கை அரசால் ஏவிவிடப்பட்ட இனஅழிப்பினாலும், இனவன்முறைகளாலும் பாதிக்கப்பட்ட இடம்பெயர்ந்த பல்கலைக்கழக மாணவர்கள் 1984ல் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் ஆரம்பித்த சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்குபற்றியவர்களை ஆயுதமுனையில் கடத்திச் சென்று அகிம்சைப் போராட்டத்தை அங்கீகரிக்க மறுத்த தமது செயற்பாட்டை தமிழீழ விடுதலைப் புலிகள் நியாயப்படுத்தியிருந்தனர்.\nஇதன் மூலம் இடம்பெயர்ந்த பல்கலைக்கழக மாணவர்களின் சுதந்திரமான போராட்டத்தையும், அவர்களின் போராடும் உரிமையையும் தமிழீழ விடுதலைப் புலிகள் மறுத்திருந்தனர்.\nஆனால், 1986 பிற்பகுதியில் இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தகவல் தொடர்பு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதையிட்டு சாகும்வரை உண்ணாவிரதத்தை ஆரம்பித்த தலைவர் பிரபாகரன் தனது உண்ணாவிரதத்தை ஒருநாளில் முடிவுக்குக்குக் கொண்டுவந்ததன் பின்னரான சம்பவமாக திலீபனின் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் அமைந்திருந்தது.\n(சாகும்வரை உண்ணாவிரதத்தை ஆரம்பித்த தலைவர் பிரபாகரன்)\nஇடம்பெயர்ந்த பல்கலைக்கழக மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்ட உண்ணாவிரதப் போராட்டத்தை நிராகரித்திருந்த, அப்போராட்டத்தை அங்கீகரித்த மறுத்த தமிழீழ விடுதலைப் புலிகள் இப்பொழுது அதே போராட்ட வழிமுறையை பின்பற்றத் தொடங்கியிருந்தனர்.\nதிலீபனின் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுதே தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனும் பிரதித் தலைவர் மாத்தையாவும் (கோபாலசாமி மகேந்திரராஜா) பத்திரிகையாளர்களுடனான சந்திப்புக்களின் போது இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை விமர்சிக்கத் தொடங்கியிருந்தனர். இந்திய அரசுக்கு நெருக்கடியைக் கொடுக்குமுகமாக திலீபனுடைய உண்ணாவிரதப் போராட்டத்தை மையப்படுத்தி மக்களைக் கவர்ந்திழுக்க தம்மாலான அனைத்தையும் மேற்கொண்டனர். திலீபன் உண்ணாவிரதம் இருந்த இடத்தில் எழுச்சிப்பாடல��கள் ஒலிபரப்பப்பட்டுக் கொண்டிருந்ததுடன் ஒலிபெருக்கிகள் மூலம் உண்ணாவிரதத்திற்கு ஆதரவாக மக்களை அணிதிரளுமாறு அழைப்பு விடுத்துக் கொண்டிருந்தனர்.\nயாழ்ப்பாணம் குடாநாட்டுக்குள்ளிருந்து மட்டுமின்றி குடாநாட்டுக்கு வெளியிலிருந்தும் திலீபனின் உண்ணாவிரதத்தைப் பார்வையிட மக்கள் அணிதிரண்டதுடன் நவசம சமாசக் கட்சியின் தலைவர் வாசுதேவ நாணயக்காரவும் கூட சமூகமளித்திருந்தார்.\nதிலீபனின் உண்ணாவிரதப் போராட்டத்துடன் கூடவே இந்திய எதிர்ப்புப் பிரச்சாரமும் இணைந்து தமிழீழ விடுதலைப் புலிகளால் முன்னெடுத்துச் செல்லப்பட்டது. இந்திய-இலங்கை ஒப்பந்தத்துக்கும், இந்திய அமைதி காக்கும் படை இலங்கையில் நிலைகொண்டிருப்பதற்கு எதிராகவும் விடுக்கப்படும் ஒரு மிரட்டலாக அல்லது சவாலாக திலீபனது சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டமும் இந்திய எதிர்ப்புக் கோசங்களும் இந்திய அரசால் நோக்கப்பட்டது.\nஇதனால் இந்திய அதிகாரிகள் புதுடெல்லிக்கும் யாழ்ப்பாணத்துக்கும், கொழும்புக்குமிடையே இராஜதந்திர முயற்சியில் ஈடுபடத் தொடங்கினர். இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராக இருந்த சென்னையைச் சேர்ந்த ஜோதின்ரா நாத் டிக்சித்தும், இந்திய அமைதி காப்புப்படை அதிகாரிகளும் யாழ்ப்பாணத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்களான பிரபாகரன், மாத்தையா, பாலசிங்கம் (மார்க்கண்டு அன்ரன் ஸ்ரனிஸ்லஸ் பாலசிங்கம் - மட்டக்களப்பு) ஆகியோரை சந்தித்துப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதுடன் திலீபனின் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தையும் கைவிடும்படி கோரினர்.\nஇந்திய அரசு இலங்கையில் வடக்கு-கிழக்கு பகுதிகளில் இடைக்கால அரசு ஒன்றை உருவாக்குவதை நோக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதுடன் அதிகாரப் பரவலாக்கம் குறித்துக் கருத்தளவில் உடன்பாட்டையும் எட்டியிருந்தனர்.\nவடக்கு-கிழக்குப் பகுதிகளில் இந்திய அமைதி காக்கும் படைக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமான முரண்பாடுகள் கூர்மையடைந்து இந்திய அமைதிகாக்கும் படையினர் குறித்த குற்றச்சாட்டுக்கள் வலுவடைந்து கொண்டிருந்தன.\nதென்னிலங்கையில் ஜே.ஆர்.ஜெயவர்த்தன தலைமையிலான இலங்கை அரசுக்கும் ஜனதா விமுக்தி பெரமுனவுக்குமிடையிலான முரண்பாடுகள் கூர்மையடைந்திருந்ததுடன் ஜனதா விமுக்தி பெரமுனவினரின் \"���ுரோகி\" ஒழிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டிருந்தனர். இந்திய-இலங்கை ஒப்பந்தத்தையும், இந்திய மேலாதிக்கத்தையும் ஜனதா விமுக்திப் பெரமுன எதிர்ப்பதன் மூலமாக சிங்கள தேசியவாதத்தை முன்னிறுத்தி தமது போராட்டத்தை முன்னெடுத்துச் சென்று கொண்டிருந்தது.\nஇலங்கை இனப்பிரச்சனைக்குத் தீர்வினைக் கண்டு சமாதானத்தை ஏற்படுத்துவதே ஒரே நோக்கமென இந்திய அரசால் கூறப்பட்டு இலங்கை மக்கள் மீது திணிக்கப்பட்ட இந்திய-இலங்கை ஒப்பந்தம் இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு மாறாக புதிய முரண்பாடுகளையும், மோதல்களையும், போராட்டங்களையும் தோற்றுவித்துவிட்டிருந்ததுடன் முழு இலங்கை மக்களையும் இருண்ட யுகத்தை நோக்கி நகர்த்திச் சென்றுகொண்டிருந்தது.\nஇந்திய-இலங்கை ஒப்பந்தத்திற்கமைய, தமிழீழ விடுதலைப் புலிகள் தமது ஆயுதங்களைக் கையளிப்பதை ஆரம்பித்துவிட்டிருந்த போதிலும், இந்திய அதிகாரிகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையிலான பல பேச்சுவார்த்தைகள் நடைபெற்றிருந்தும் கூட வடக்கு-கிழக்கு இடைக்கால நிர்வாகத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகள் பெயர்ப் பட்டியல் குறித்த விடயத்தில் இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையில் இழுபறி நிலையே காணப்பட்டுக் கொண்டிருந்தது.\nதிலீபனின் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடும்படி இந்திய அதிகாரிகளால் விடுக்கப்பட்ட வேண்டுகோளை நிராகரித்த தமிழீழ விடுதலைப் புலிகள், திலீபன் உண்ணாவிரதத்தில் இறக்க நேர்ந்தால் அதற்கான முழுப்பொறுப்பையும் இந்தியாவே ஏற்கவேண்டும் என கருத்து வெளியிட்டிருந்தனர்.\nதிலீபனின் உண்ணாவிரதத்தைக் காணவும் அதற்கு ஆதரவளிக்கவும் தினம் தினம் மக்கள் பெருமளவில் திரண்டு கொண்டிருந்தனர். ஆனால் நீர் கூட அருந்தாமல் தொடர்ந்து கொண்டிருந்த உண்ணாவிரதத்தால் திலீபனின் இறுதிநாட்கள் எண்ணப்பட்டுக் கொண்டிருந்தன. இந்திய அரசுக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைக்குமிடையில் நடைபெற்ற அரசியல் சதுரங்கத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளால் முன்வைக்கப்பட்டிருந்த ஜந்து அம்சக் கோரிக்கைகளுக்காக உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்த திலீபன் பலிக்கடாவாக்கப்பட்டார்.\nசாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்து 12வது நாளில் ��ிலீபன் உயிரிழந்தார்.\nதிலீபனுடைய உயிரிழப்புக்கு இந்தியாவே காரணம் என தமிழீழ விடுதலைப் புலிகள் இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரத்தை மேலும் முடுக்கி விட்டிருந்ததுடன் இந்திய எதிர்ப்புக் கருத்தை மக்கள் மத்தியில் கொண்டு சென்றனர். இதனால் இந்திய அமைதி காக்கும் படைக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையில் முறுகல் நிலை தோற்றம் பெற்றது.\nஇத்தகையதொரு நிலையில் பருத்தித்துறைக் கடற்பரப்பில் சென்று கொண்டிருந்த படகையும் அதில் சென்ற 17 தமிழீழ விடுதலைப் புலிகள் உறுப்பினர்களையும் இலங்கைக் கடற்படையினர் கைது செய்தனர்.\nஇவர்களில் யாழ் மாவட்டப் பொறுப்பாளர் குமரப்பா, திருகோணமலை மாவட்டப் பொறுப்பாளர் புலேந்திரன் ஆகியோரும் அடங்கியிருந்தனர். இலங்கை அரசு இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை மீறி இந்தியாவிலிருந்து ஆயுதங்களைக் கடத்தி வந்ததாக 17 தமிழீழ விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் மீது குற்றம் சாட்டியதுடன் அவர்கள் அனைவரையும் கொழும்புக்கு கொண்டு சென்று விசாரணை செய்வதற்கான முயற்சியில் இறங்கியது.\nஇலங்கை அரசின் இந்த முடிவை கடுமையாக எதிர்த்திருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இந்திய அதிகாரிகள் மூலமாக 17 பேரின் விடுதலையையும் வேண்டி நின்றனர். இலங்கை அரசோ தனது முடிவை மாற்றும் நிலையில் இருக்கவில்லை.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமை தமக்குத் தெரிந்த வழியில் பிரச்சனையை அணுகியது. பலாலி இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 17 பேரையும் சந்திக்க இந்திய அதிகாரிகள் அனுமதி பெற்று அன்ரன் பாலசிங்கம் உட்பட சில புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் சென்றிருந்த போது முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 17 பேருக்கும் இரகசியமாக சயனைட் கையளிக்கப்பட்டது.\n17 பேரின் கைதையடுத்து இந்தியாவுடனும் இலங்கையுடனும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஏற்பட்டிருந்த பிரச்சனைக்கு இலகுவான தீர்வு காணப்பட்டிருந்தது. தமிழீழ விடுதலைப் புலிகளால் வழங்கப்பட்டிருந்த சயனைட்டை உண்டு பலாலி இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த குமரப்பா, புலேந்திரன் உட்பட 12 தமிழீழ விடுதலைப் புலிகள் உயிர் துறந்தனர்.\n41.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 41\n42.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 42\n43.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 43\n44.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 44\n45.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 45\n46.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 46\n47.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 47\n48.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 48\n49.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 49\n50.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 50\n51.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 51\n52.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 52\nஇனவாதம், மதவாதம், சாதியவாதம், ஆணாதிக்க வாதம், நுகர்வு வாதம், முதலாளித்துவ சிந்தனைமுறையில் சமூகம் மூழ்கி இருக்கின்றது. இந்த சூழலில் முற்போக்கானதும், சமூகம் சார்ந்த முரண்பட்ட சிந்தனைகளையும், விவாதத்தை தூண்டக் கூடிய கருத்துகளையும், இந்த விருந்தினர் பக்கம் தன்னுள் கொண்டுள்ளது. இது அவர்களுடைய தனிப்பட்ட கருத்துகள்.\nகுடிகள் சாதியாக மாற்றப்பட்ட வரலாறு : வி.இ.குகநாதன்\t(3113) (விருந்தினர்)\nதமிழர்களிடம் ஆதியிலிருந்தே சாதிகள் உண்டா, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, ஆதியில் யார் ஆண்ட...\nகார்த்திகேசனின் நூற்றாண்டு (3082) (விருந்தினர்)\nஜூன் 25, 2019 கம்யூனிஸ்ட் கார்த்திகேசனின் நூற்றாண்டு பிறந்த தினம்ஜூன் 25, 2019 தோழர் கார்த்திகேசன் அவர்களின் நூற்றாண்டு தினத்தையொட்டி,...\nமனம் திறந்து பேசுகிறேன்.... எம்.ஏ.ஷகி\t(3117) (விருந்தினர்)\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்...\nRead more: மனம் திறந்து...\nஇலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம்: புதிய திசைகள்\t(3518) (புதிய திசைகள்)\nகிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்து குறிப்பாக தமிழ் பூசை நேரங்களை தெரிவு செய்தும் வெளிநாட்டவர்...\nஇப்போது வெள்ளம் தலைக்கு மேல்\n2002 இல் என்று நினைவு. எங்களது ஊரில் திடீரென உருவெடுத்த ஒரு பெயர் தெரியாத அமைப்பு தொலைகாட்சி...\n இலங்கை மண்ணில் நடந்து முடிந்த இன கலவரமும் , இன படுகொலையும்,...\nகூகுள் மற்றும் மைக்ரோசொப்ட் என்பன ஸ்ரீலங்காவில் தமிழர்கள் மற்றும் தமிழ்மொழிக்கு எதிரான அமைப்பு ரீதியானதும் மற்றும் நீடித்ததுமான பாகுபாடுகளில் ஈடுபட்டு வருகின்றன\t(3732) (விருந்தினர்)\nஸ்ரீலங்காவில் சிங்களம் கூகுளின் இயல்பு மொழியாக மாறியுள்ளது. நீங்கள் கூகுள் படிவத்தை...\nசுண்ணாம்பு நிலத்தூடாக கசியும் கனிமங்கள்\t(3736) (விருந்தினர்)\nபெரிய நகரங்கள் உருவாகியது சமீப காலத்திலே. ஆனால், அவற்றின் உருவாக்கத்தில் புதிய பிரச்சினைகள்...\nகல்வி தனியார்மயப்படுத்தலையும், மாணவர்களின் உரிமைகளை அடக்குவதையும் எதிர்ப்போம் - ஊடக அறிக்கை (3903) (விருந்தினர்)\nஇலங்கை விவசாயிகள்,மீனவர்கள், தோட்ட தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் ஏனைய மக்களை...\nஇலங்கையில் நடக்கும் மாணவர் அடக்குமுறையை எதிர்ப்போம்\nஇது, இலங்கையில் கல்விசுகாதாரம்உட்பட சமூகபாதுகாப்பு சேவைகளைதனியார் மயப்படுத்துவது தொடர்பிலான சகலசுமைகளையும் உழைக்கும் மக்கள் மீது சுமத்தும் நவதாராளமயதிட்டத்திற்கு எதிராக பாரியமக்கள்...\nமுன்னிலை சோஷலிஸக் கட்சியின் அமைப்பு செயலாளர் குமார் குணரட்னம் இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்...\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராக\t(3530) (விருந்தினர்)\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராகவும், உயர் கல்வியை தனியார் மயப்படுத்துவதற்கு எதிராகவும்...\nRead more: சைடம் தனியார்...\nதமிழர்களின் மரபு நெடுகிலும் பலவாறாகப் பொருள் பொதிந்த “பறை” என்னும் தமிழ் மரபினை அச்சாணியாகச் சுழற்றும் அரசியல் : ஒரு பார்வை-செல்வி\t(3689) (விருந்தினர்)\nமனித சமுதாயத்தின் தொடர்பாடலின் தேவையும் உணர்ச்சி வெளிப்படுத்துகையின் தேவையும் குறியீடுகளாகி,...\nமண் மூடிய துயர வரலாறு\t(3665) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nமண் மூடிய துயர வரலாறு\t(3304) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nசைலோபோன் (Xylophone -1)\t(3641) (விருந்தினர்)\nமேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்க வாத்தியமான Xylophone என்ற இசைக்கருவி, 17ஆம் நூற்றாண்டில் ஆபிரிக்க...\nவளரும் வகுப்புவாதமும் சுருங்கும் சனநாயக வெளியும்\t(3428) (விருந்தினர்)\nகாங்கிரசின் பயன்நாட்ட வகுப்புவாதம் பா.ஜ.க தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி 2014ல் ஆட்சிக்கு...\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை, தேவை யாருக்கும் அடிபணியாத போராட்டம் (3692) (விருந்தினர்)\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை இன்று நேற்று ஆரம்பித்ததொன்று அல்ல, நீண்ட நாட்களாக மக்கள்...\nகேப்பாப்புலவு மாதிரிக்கிராமத்தை கேப்பாப்புலவு என்று மாற்ற முயற்சி\nஎங்களுடைய நிலங்கள் எங்களின் உயிர்களுக்கு மேலானது, அதனை இந்த நல்லாட்சி அரசு வழங்கும் வரையும்...\n\"உயிரை மாய்த்தேனும் சொந்த நிலங்களை மீட்பதற்கான வழியை மேற்கொள்வோம்”\t(3744) (விருந்தினர்)\nமுல்லைத்தீவு - கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலத்தை விமானப்படையினர் விடுவிக்க வேண்டுமென...\nசையிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி, சாமான்ய மக்களின் உயிர்களுக்கு உலை வைக்கும் திட்டம் (3726) (விருந்தினர்)\nஅரைகுறையாக யாரோ சொல்ல கேட்டுவிட்டோ அல்லது உங்கள் ஏழாம் அறிவுக்கு திடீரென எட்டியதற்கமைய \"தனியார்\"...\n எதற்காக தனியார் மருத்துவக் கல்லூரி சையிட்டத்திற்கு எதிரான போராட்டம் \nஎங்கள் போராட்டம் இலங்கை மருத்துவ சபையினதும் (SLMC), உலக சுகாதார ஸ்தாபனத்திளதும் (WHO)...\nஅரசமயமாகும் பேரினவாதம், துணை போகும் தமிழ் இனவாதம், கள்ள மௌனம் காக்கும் முஸ்லிம் அரசியல் சந்தர்ப்பவாதம்.\t(3980) (விருந்தினர்)\nஇலங்கையில் சிங்கள பேரினவாதம் அரச மயப்பட்டு வருவதை அண்மைக்கால நிகழ்வுகள் எமக்கு உணர்த்தி...\nதமிழ்தேசியம்: நெருக்கடியும் குழப்பமும்\t(3834) (விருந்தினர்)\n“தமிழ்த்தேசியத்தின் இன்றைய (2016) நிலை என்ன அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்” என்று நோர்வேயிலிருந்து வந்திருந்த நண்பர் ஒருவர்...\nபெண்களும் இலக்கியமும்\t(3794) (விருந்தினர்)\nஉண்மையில் பெண்களின் கவிதைகளும் மிகவும் கட்டுப்பாடானது. பதிவுகளில்கூட நாங்கள் எவ்வளவு கட்டுப்பாடான...\nயாழ் பல்கலைகழக மாணவர் போராட்டம்: தவறுகளும் பலவீனங்களும்\t(3740) (விருந்தினர்)\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ”மாணவர்கள் படுகொலைக்கான நீதி அல்லது தீர்வுக்கான மாணவர்களின்...\nபடிப்பகம் நூலகம் - நூல்களின் பட்டியல்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81_%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BE_%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%87%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE&action=edit", "date_download": "2021-10-19T12:47:17Z", "digest": "sha1:S2AUEWWNY3WANJZOZ45WH2HE2Q7ZUY7A", "length": 4509, "nlines": 36, "source_domain": "www.noolaham.org", "title": "இரத்தோட்டை அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகப் பெருவிழா என்பதற்கான மூலத்தைப் பார் - நூலகம்", "raw_content": "\nஇரத்தோட்டை அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகப் பெருவிழா என்பதற்கான மூலத்தைப் பார்\n← இரத்தோட்டை அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகப் பெருவிழா\nஇப்பக்கத்தைத் தொகுக்கவும்- இதற்கு தங்களுக்கு அனுமதி இல்லை. அதற்கான காரணம்:\nநீங்கள் கோரிய செயற்பாடு பயனர்கள் குழு பயனர்களுக்கு மட்டுமே.\nநீங்கள் இந்தப் பக்கத்தின் மூலத்தைப் பார்க்கவும் அதனை நகலெடுக்கவும் முடியும்:\n{{சிறப்புமலர்| நூலக எண் = 58545 | வெளியீடு = [[:பகுப்பு:2013|2013]].. | ஆசிரியர் = [[:பகுப்பு:-|-]] | வகை = கோயில் மலர்| மொழி = தமிழ் | பதிப்பகம் = [[:பகுப்பு:-|-]] | பதிப்பு = [[:பகுப்பு:2013|2013]] | பக்கங்கள் = 104 | }} =={{Multi|வாசிக்க|To Read}}== <--pdf_link-->* [http://noolaham.net/project/586/58545/58545.pdf இரத்தோட்டை அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகப் பெருவிழா] {{P}}<--pdf_link-->* [http://noolaham.net/project/586/58545/58545.pdf இரத்தோட்டை அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகப் பெருவிழா] {{P}}<--pdf_link--> [[பகுப்பு:2013]] [[பகுப்பு:-]] [[பகுப்பு:-]][[பகுப்பு:-]]{{சிறப்புச்சேகரம்-மலையகஆவணகம்/சிறப்புமலர்}}\nஇரத்தோட்டை அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகப் பெருவிழா பக்கத்துக்குத் திரும்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfox.com/2021/10/14/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B-%E0%AE%8740-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-10-19T12:51:16Z", "digest": "sha1:AP2VBDLLMVF5WK66S7T2GIAD7NBBBED4", "length": 5382, "nlines": 86, "source_domain": "www.tamilfox.com", "title": "’மோட்டோ இ40’ ஸ்மார்ட்போன் அறிமுகம் – Tamil Fox – Tamil News – Tamil Video News – Android Tamil news", "raw_content": "\n’மோட்டோ இ40’ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nமோட்டோரோலா நிறுவனத்தின் புதிய தயாரிப்பான ’மோட்டோ இ40’ மற்றும் ‘மோட்டோ ஜி பியூர்’ ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகமாகி இருக்கிறது.\nதொடர்ந்து தன்னுடைய தொழிநுட்பங்களை சந்தைக்கு கொண்டு வரும் மோட்டோரோலா நிறுவனம் ���ன்னுடைய ‘மோட்டோ’ வரிசை ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக இதையும் சந்தைப்படுத்த இருக்கிறது.\nஇதையும் படிக்க | இன்ஃபோஸிஸ் லாபம் 12% அதிகரிப்பு\n’மோட்டோ இ40’ சிறப்பம்சங்கள் :\n*6.5 ஃபுல் எச்டி திரை\n* உள்ளக நினைவகம் 4ஜிபி + கூடுதல் நினைவகம் 64 ஜிபி ,\n*48 எம்பி முதன்மை கேமரா\n* மெமரி கார்டு வசதி\n*5000 எம்ஏஎச் அளவுள்ள பாட்டரி\n’மோட்டோ ஜி புயூர்’ சிறப்பம்சங்கள் :\n*6.5 ஃபுல் எச்டி திரை\n*உள்ளக நினைவகம் 3ஜிபி + கூடுதல் நினைவகம் 32 ஜிபி\n*13எம்பி முதன்மை கேமரா , 5 எம்பி செல்பி கேமரா\n*5000 எம்ஏஎச் அளவுள்ள பாட்டரி\nமேலும் மோட்டோ இ40 இந்திய விலை ரூ.12,600 ஆகவும் மோட்டோ ஜி பியூர் ரூ.12,000 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.அமேசான் , பிளிப்கார்ட் விற்பனைத் தளங்களிலும் இதனைப் பெற்றுக் கொள்ளலாம்.\nஇன்று மாலை 6 மணிக்கு ’அண்ணாத்த’ டீசர்\nமுகக்கவசம் கட்டாயம்: தென்றல் காற்றிலும் கரோனா பரவுமா\nகன்னியாகுமரி மழை பாதிப்பு; உடனடி நிவாரணம் வழங்க நடவடிக்கை: அமைச்சர்கள் குழு உறுதி\nஉத்தரகாண்ட் மழை, வெள்ளம்: பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு\nஉள்நாட்டில் சட்ட அந்தஸ்தைப் பெறுங்கள்; சர்வதேச அங்கீகாரம் கிடைக்கும்: தலிபான்களுக்கு ஹமீது கர்சாய் அறிவுரை\nவெள்ளிக்கிழமை முதல் பப்ஜி மொபைல், லைட் இந்தியாவில் வேலை செய்யாது\nஎதற்கும் அஞ்ச மாட்டோம்: ஈபிஎஸ் பொளேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://26ds3.ru/aktiplast-t/archives/9484", "date_download": "2021-10-19T11:00:11Z", "digest": "sha1:OEEBOZ3U6CO4OFBP3BVOAAHUEORHJ5A6", "length": 23584, "nlines": 222, "source_domain": "26ds3.ru", "title": "மாமியாருடன் சல்லாபம் - Tamil incest stories * ஓழ்சுகம் | 26ds3.ru", "raw_content": "\nமாமியாருடன் சல்லாபம் – Tamil incest stories\nஎன் புருஷன் என் அம்மாவுடன் உடல் உறவு செஞ்சது …\nபுருஷன் மணி வந்ததும் , வாழ்க்கை சகஜமாகியது .\nஅன்று , ஒரு ஞாயிற்று கிழமை . மாமியார் , தாம்பரத்தில் பெண் வீடுக்கு போயிருந்தார்.\nகார்லிங் பெல் அடித்தது . திறந்தேன் .\nவந்திருந்தது , என் அம்மா சுலோ .\n” அம்மா . என்ன திடிர்னு வந்திருக்க . அப்பா எங்க …\n” நாளைக்கு வடபழனில ஒரு கல்யாணத்துக்கு போகணும் . அதான் …”\nமாமனார் வரவேற்றார் ; அம்மாவை உபசரித்தார் .எனக்குள் திக்கென்றது .\nமாமியார் வேறு இல்லை . என் அப்பாவும் வரவில்லை .\nஇந்த மனுஷன் அம்மாவை என்ன செய்வாரோ என பயந்தேன் .\nபார்வை வேறு அம்மாவின் மார்பகத்தை நோட்டம் விட்டன . அம்மாவும் , விவஸ்வதை இல்லாமல் இடப் ���க்க முந்தானையை ஒதுக்கி விட்டிருந்தாள் .\nபிதுங்கிய மார்க் காம்பு ரவிக்கையில் புடைத்துத் தெரிந்தது . ஜாடையாய் காண்பித்தாலும் , அம்மாவுக்கு புரியவில்லை . ஒரு வழியாய் கிசுகிசுத்து சரி செய்தேன் .\nஎன் அம்மா ,செம கட்டை . முப்பத்தெட்டு வயது . இடுப்பு பிடுங்கலை , பிதுங்கும் மார்ச் சதையை , நானே ஆச்சரியமாய் பார்ப்பேன் .\nஅந்தளவிற்கு பிதுங்கிய பப்பாளி மார்பகம் அம்மாவுக்கு உண்டு . தொடையோ பெருத்து பரந்திருக்கும் .\nநல்லவேளை , என்னவர் வந்தார் .\n” வாங்க …அத்தை . என்ன திடீர்னு வந்திருக்கீங்க …\nஅம்மா சிரித்தாள் . ” சும்மாதான் . ஏன் வரக் கூடாதா …\n” தாராளமா . ரெஸ்ட் எடுங்க . ஒரு டாக்குமெண்ட் ப்ரிபேர் பண்றேன் ..” என்னவர் சிரித்தபடி கம்ப்யுட்டரில் முழ்கி விட்டார் .\nஆச்சரியப்படும் விதமாய் , மாமனார் வெளியே கிளம்பி விட்டார் .\n” ம்ம் . நிம்மதி …. ” நான் முணகினேன் .\n” அம்மா கேட்டாள் .\n” ஒண்ணுமில்ல .. . ”\n மாமனார் , மார்பகத்தை பிசைந்தார் . விருப்பமிருந்தால் வா என்கிறார் எனவா சொல்ல முடியும் ..\nசமையலை ஆரம்பித்தோம் . ” கிரிங் …” போன் வந்தது . மாமியார் பேசினார் .\n” வனிதா , ஒரு நிலம் வாங்கியிருக்கா . பத்திரம் , அங்க வைச்சிட்டு வந்துட்டேன் .\nஅவசரமா வேணும் . புள்ளையை எடுத்துட்டு வரச் சொல்லு …”\nஅவரிடம் சொன்னேன் . ” என்னால ஆகாது . ஆபிஸ் டாகுமெண்ட் முடிக்கல .”\nநாங்களிருபது சாலிகிராமம் . தாம்பரம்தானே ..\n” நானே போயிட்டு வந்துடறேன் . தாம்பரம்தானே . ” என்னவர், என் அம்மாவிடம் சொல்லிக் கிளம்பினேன்.\nமணி இரண்டு . தாம்பரம் போய் கொடுத்து முடிக்க மணி ஏழு .\nடெஸ்ட் செய்ய , போன் செய்தேன் மாமனாருக்கு .\nஅவர் வீட்டில் இல்லை . நிம்மதியானது .\n” வர லேட்டாயிடும் . காலேல வர்ரேன் …” என்னவரிடம் சொல்லி போனை வைத்து விட்டேன் .\nகிளம்புவதை சொன்னால் , அம்மாவும் , அவரும் பயப்படுவர் என சொல்லாதிருந்தேன் .\nமாமியாரையும் சொல்லாதிருக்க வேண்டி கிளம்பினேன்.\nஅது , எத்தனை நல்லது ; எத்தனை அனுபவங்களை அறிய வைத்தது என பின்னால்தான் புரிந்தது .\nஅந்த ஒரு இரவுதான் , என் வாழ்வை புரட்டிப் போட்டது .\nஉறவுகளுள் , எத்தனை உடல் உறவு என உணர வைத்தது .\nட்ரெயின் பிடித்து கோடம்பாக்கம் வந்து , பஸ் பிடித்து வடபழனி வந்த போது மணி இரவு – 9.30 p.m.\nநடந்தே சாலிகிராமம் வந்தேன் .\nவரும் வழியில் , மாமனார் ஏ.வி.எம்.ஸ்டுடியோ வழி வந்தார் .\n” சுசி , என்ன இந்த நேரத்தில வர்ற . உன் அம்மா எங்க …\nநான் மாமியாருக்காய் , தாம்பரம் போனது வந்தது சொன்னேன்.\nமாமனார் , அப்போதுதான் திரும்புகிறார் . ஸோ , அம்மாவுக்கு ஆபத்தில்லை என நிம்மதியானேன்.\nநிதானமாய் , மாமனாரும் நானும் திரும்பினோம் . ஒரக் கண்ணால் என்னைப் பார்த்தார் .\n” ம். நினைவிருக்கா . ஆல்வேஸ் ஐ ஆம் வெல்கம் …” சிரித்தார் .\n” ஸ்டாப் இட் . இப்படி பேசாதிங்க . அவர் கிட்ட சொல்லிடுவேன் …”\nமாமனார் பயந்தார் . மெளனமானார் .\nவீடு நெருங்கினோம் . படுக்கை அறை விளக்கு எரிந்தது . அம்மா உறங்கி விட்டாள் என நினைத்தேன்.\nவீட்டு இடப் பக்க கதவு சாவி , மாமனார் வைத்திருப்பார் . கார்லிங் பெல் அடித்து எழுப்ப வேணாம் என உள்ளே வந்தோம் .\nஹால் இருட்டாக இருந்தது . அம்மாவைக் காணவில்லை . எங்கள் படுக்கை அறை விளக்கு எரிந்தது .\nமாமனாருக்கும் குழப்பம் . எனக்கும் தய்க்கம் . பாத்ரும் போயிருப்பாள் என மெல்ல அசைந்தேன்.\nÊசத்தம் கேட்டது . முனகல் , கெஞ்சல்கள் தெளிவாய் கேட்டது .\nமாமனார் என்னைத் தடுத்தார் . ‘ உஷ் ‘ என வாயில் விரலை வைத்தார் .\n யப்பா …. செம கொம்பு மணி . ஸ்பிடா ….குத்து . ம்ம்ம்…ஆ. ..ஆ ”\nஅம்மாவின் மோக விரக குரலேதான்.\n” ம்்மா …எவ்ளோ பெரிசு . இரண்டு கை போதாது உங்க மாம்பழம் பிடிக்க .\nசுசிக்கு இவ்ளோ பெரிசில்ல . இது பெருசு . கனிஞ்ச காம்பு …” என் புருஷன் மணி சொன்னார் .\n” காஞ்ச காம்பு மணி . போன வாட்டி நீ சப்பினதுதான் . திருப்பவும் , நீதான் என் காம்பை சப்பற . பொந்தில குத்தற …ஆ ….குத்து ….குத்து …”\nஅம்மா அரற்றினாள் . உளறினாள் .\nஎனக்கு மயக்கமே வந்தது . போன வாட்டி சப்பினது என்கிறாள் . அப்போது , அவர் அம்மாவை அப்போதும் அனுபவித்திருக்கிறார் ,.\nஆத்திரமாய் அறைக்குப் போக முயன்றேன்.\nமாமனார் தடுத்தார் . அறையின் ஜன்னலோரம் செல்ல வைத்தார் .\nபார்த்தேன் ; மனதுள் என்ன தோன்றியது என தெரியவில்லை .\nஎன் கட்டிலில் , என் அம்மா காலை விரித்தபடி படுத்திருந்தாள் . அடியில் , என்னைப் போலவே இரண்டு தலைகாணி , என் புருஷன் மணி வைத்திருந்தார் ,.\nஅவரது ஆறடி நீள கொம்பு . எனக்கான ஆண் குறிக் கம்பு , அம்மாவின் அந்தர்ங்க பொந்தை இடித்தபடி இருந்தது . இழுத்து இழுத்து குத்தினார். ஆட்டி அடித்தார் .\nவிரிந்த ரவிக்கையின் வலப் பக்கம் திறந்து இருந்தது .\nஎன்னவர் அழுந்த இடித்தபடி , இடப் பக்க மார்பை பிசைந்தார். ரவிக்கையை விலக்கி விட்டு குனிந்து சப்பினார். மார்க் காம்பை குனிந்து நிரடியபடி வேகமாய் ஆடினார்.\nஇப்போது , அம்மாவின் மார்பகம் முழுக்க திறக்கப்பட்டது . குலுங்கி ஆடும் மொசக் குட்டிகளாய் ஆடியது .\nநிதானமாய் , என் புருஷன் என் அம்மாவின் மார்பின் மேல் குனிந்தார் . என் மார்பை எப்படி சப்புவாரோ அப்படி அம்மாவின் காம்பிலும் சப்பினார் .\n” ஆங் . கம்பால குத்து மணி . இடி …அடி …” எப்ப வேணா நான் சப்ப குடுப்பேன் . ஆனா இடிக்கற இடம் கிடைக்குமா . சுசி வேற இல்ல …” அம்மா நெளிந்தாள் .\n” ம்ம்ம். என்னா புஸ்ஸி ஊறல் உங்களுக்கு . சுசிய விட இருக்கு …”\n” சுசிய பத்தி பேசாதீங்க மாப்பிள்ளை . எனக்கு வெக்கமா இருக்கு …”\n”அதான் , மணின்னு சொல்லுங்க . ஈசியா இருக்கும் ” என்றபடி என்னவர் அவரது ஆண் குறியை பொந்து விட்டு நீட்டினார் .\nஎல்லாம் முடிந்து விட்டது என நினைத்தேன்.\nஅம்மா முணகினாள் . முக்கினாள் .\nநிதானமாய் ,என்னவர் ஆண் குறியை சுவைக்கத் துவங்கினாள் . உருவி , உருவி மேல் தோல் கீழ் தோல் என உருவி சப்பினாள் .\nஎன்னவர் தவித்தார் ; ஆடினார் .\nஎனக்கு நடுங்கியது ; மானமே போனது .\nமாமனாரும் பார்க்கிறாரே என்று .\nதிருமதி கிரிஜா – பாகம் 28 – Tamil sex stories\nதிருமதி கிரிஜா – பாகம் 28 – Tamil sex stories\nமாமியாருடன் சல்லாபம் – Tamil incest stories\nதிருமதி கிரிஜா – பாகம் 28 – Tamil sex stories\nதிருமதி கிரிஜா – பாகம் 27 – Tamil sex stories\nஅப்பா மகள் காமக்கதைகள் (33)\nஐயர் மாமி கதைகள் (35)\nRaju on திருமதி கிரிஜா – பாகம் 25 – தமிழ் காமகதைகள்\non திருமதி கிரிஜா – பாகம் 25 – தமிழ் காமகதைகள்\nfree sex stories Latest adult stories mangolia sex stories Mansi mansi story Oolkathai Oolraju Poovum Poovum Pundaiyum Sasi Sasi sex Sex story Swathi sex tamil incest stories Tamil love stories tamil new sex stories tamil sex Tamil sex stories Tamil sex story xossip xossip stories அக்கா அக்கா xossip அக்கா ஓழ்கதைகள் அக்கா செக்ஸ் அக்கா தம்பி அண்ணி செக்ஸ் அம்மா அம்மா செக்ஸ் காதல் கதைகள் குடும்ப செக்ஸ் குரூப் செக்ஸ் சித்தி சித்தி காமக்கதைகள் சுவாதி சுவாதி செக்ஸ் செக்ஸ் தமிழ் செக்ஸ் நண்பனின் காதலி மகன் மான்சி மான்சி கதைகள் மான்சிக்காக மான்சி சத்யன் விக்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blog.arasan.info/2020/08/Rama%20refutes%20Jabali.html", "date_download": "2021-10-19T12:11:35Z", "digest": "sha1:GHMVC4VSRK7YC4JCO4CYMEXNRVVVCSA5", "length": 23848, "nlines": 80, "source_domain": "blog.arasan.info", "title": "ராமனின் மறுமொழி - இராமாயணம் - அயோத்யா காண்டம் - 109ம் ஸர்கம்", "raw_content": "\nமுகப்பு | முழுமஹாபாரதம் | ஹரிவம்சம் | வலைப்பூ | கிண்டில்மின்நூல்கள்| தொடர்புக்கு\nராமனின் மறுமொழி - இராமாயணம் - அயோத்யா காண்டம் - 109ம் ஸர்கம்\nவாய்மையை ஆன்மாவாகக் கொண்டவர்களில் சிறந்தவனான ராமன், ஜாபாலியின் சொற்களைக் கேட்டு, பக்தியுடனும், கலக்கமடையாத தற்புத்தியுடனும் {பின்வருமாறு} சொன்னான்.(1)\nஎன்னிடம் கொண்ட அன்பினால் இப்போது நீர் சொன்ன சொற்கள் செய்யத்தக்கன போன்று தோன்றினாலும் செய்யத்தகாதனவாகும். ஏற்புடையவை போன்று தோன்றினாலும் ஏற்கமுடியாதவையாகும்.(2) மதிப்பில்லாதவனும், பாவச் செயலுக்கு உடன்படுபவனும், கெட்ட பெயர் கொண்டவனும், தான் காணும் அனைத்திலும் வேறுபாட்டைக் காண்பவனுமான மனிதன், நல்லோரிடம் மதிப்பை ஈட்டமாட்டான்.(3) ஒருவன் நற்குலத்தில் பிறந்தவனென்றும், கெட்ட குலத்தில் பிறந்தவனென்றும், வீரனென்றும், ஆண்மகனென்றும், தூயவனென்றும், தூய்மையற்றவனென்றும் அவனது ஒழுக்கமே {ஆசாரமே} விளங்கச் செய்யும்.(4)\nஇழிந்தவனாக {அனார்யனாக} இருந்து கொண்டு உன்னதமானவனை {ஆரியனைப்} போலவும், நேர்மையற்றவனாக, தூய்மையற்றவனாக, நற்குணங்களற்றவனாக இருந்து கொண்டு நற்குணங்களைக் கொண்டவனைப் போலவும், கெட்ட நடத்தையுள்ளவனாக இருந்து கொண்டு நன்னடத்தையாளனைப் போலும், நன்மையை {நீதியைக்} கைவிட்டு, அதர்மத்தை {அநீதியைப்} பின்பற்றிக் கொண்டு நீதிமானைப் போலும் காட்டிக் கொண்டு, உலகத்தில் குழப்பத்தை உண்டாக்கி, ஒழுக்கவிதிகளை நான் புறக்கணித்து வந்தால், தக்கன தகாதனவற்றில் வேறுபாடு காணத் தெரிந்த {பகுத்தறிவுள்ள} எந்த மனிதன்தான் இவ்வுலகில் என்னை மதிப்பான்\nஇவ்வாறு நம்பிக்கையிழக்கும் வகையில் நான் நடந்து கொண்டால், {சாத்திரங்களில்} பரிந்துரைக்கப்படும் ஒழுக்கத்தை நான் எவனுக்கு அறிவுறுத்த முடியும் நான் எப்படிச் சொர்க்கத்தை அடைவேன் நான் எப்படிச் சொர்க்கத்தை அடைவேன்(8) மன்னர்களின் ஒழுக்கம் எவ்வாறு இருக்குமோ, அவ்வாறே குடிமக்களின் ஒழுக்கமும் இருக்கும் என்பதால் இவ்வுலகம் முழுவதும் தான் விரும்பிய ஒழுக்கத்தையே பின்பற்றும் {உலகத்தோர் யாவரும் விரும்பியவாறு நடக்கத் தொடங்குவார்கள்}.(9)\nகொடுமையற்ற {இரக்கத்துடன் கூடிய} வாய்மையே தொன்மையான அரசவொழுக்கம் என்பதால் அரசாங்கமானது வாய்மையைத் தன் சாரமாகக் கொண்டிருக்க வேண்டும். வாய்மையிலேயே உல���ம் நிலைத்திருக்கிறது.(10) ரிஷிகளும், தேவர்களும் கூட வாய்மையை மட்டுமே மதிக்கின்றனர். வாய்மை பேசுபவன் இவ்வுலகில் பரம நிலையை {உயர்ந்த நிலையை} அடைகிறான்.(11) பொய் பேசும் மனிதனைப் பாம்பைப் போலக் கண்டு {மக்கள்} அஞ்சுகிறார்கள். வாய்மையே உயர்ந்த அறம் என்றும், சொர்க்கத்தின் பிறப்பிடம் என்றும் சொல்லப்படுகிறது.(12) வாய்மையே ஈஷ்வரன். இவ்வுலகில் வாய்மையுடனே எப்போதும் பத்மா {அதிர்ஷ்டதேவி} தன்னை இணைத்துக் கொள்கிறாள். அனைத்தும் வாய்மையையே தங்கள் மூலமாகக் கொண்டிருக்கின்றன. வாய்மையைவிட உயர்ந்த நிலை வேறெதும் இல்லை.(13)\nகொடைகள், யாகங்கள், படையல்கள் {ஹோமங்கள்}, தபங்கள், வேதங்கள் ஆகியன வாய்மையையே தங்கள் அடித்தளமாகக் கொண்டிருப்பதால் ஒருவன் வாய்மைக்கு முற்றாக அடிபணிய வேண்டும் {வாய்மையை ஒருபோதும் கைவிடலாகாது}.(14) {பயிலப்படும் வாய்மையின் அளவுப்படியே} ஒருவன் உலகை ஆள்கிறான், ஒருவன் குலத்தை ஆள்கிறான், ஒருவன் நரகில் மூழ்குகிறான், ஒருவன் சொர்க்கத்திற்கு உயர எழுகிறான்.(15) நானும் அதுபோலவே வாய்மைக்கு உண்மையாக இருக்கிறேன். வாய்மை பயின்ற என் தந்தையின் ஆணையை நான் ஏன் நிறைவேற்றக் கூடாது(16) வாய்மைக்கு இணக்கமானவனான என்னால், பேராசை, மயக்கம், இருள் குணத்தோடு சேர்ந்த அறியாமை ஆகியவற்றின் காரணமாக என் தந்தையிடம் செய்து கொடுத்த உறுதி மொழியை உடைக்க முடியாது.(17) வாய்மையற்றவர்கள், நிலையற்றவர்கள், மனத்தில் உறுதியற்றவர்கள் ஆகியோரின் காணிக்கைகளை தேவர்களோ, பித்ருக்களோ ஏற்க மாட்டார்கள். இதுவே நமக்குக் கற்பிக்கப்பட்டது.(18)\nவாய்மையின் வடிவிலுள்ள இந்த அறத்தை அண்டத்தில் படர்ந்து ஊடுருவியிருக்கும் ஆன்மாவாக நான் காண்கிறேன். எனவேதான், நோன்பென நோற்கப்படும் சுமை நல்லோரால் மதிக்கப்படுகிறது.(19) க்ஷத்திரிய அறம் என்று சொல்லப்படுவதும், அறமென்ற பெயரில் பாவச் செயல் செய்யும் மனிதர்களாலும், கொடூரர்களாலும் பயிலப்படுவதுமான இந்த மறத்தை நான் துறக்கிறேன்.(20) மனத்தில் கரு கொண்ட பிறகே, உடலால் பாவம் செய்யப்படுகிறது, நாவால் பொய்ம்மை சொல்லப்படுகிறது. இந்தப் பாதகச் செயல் (உடல், மனம், நாவைச் சார்ந்து) மூன்று வகையானது.(21) நிலம், புகழ், செல்வம், நற்பேறு ஆகியவை உண்மையில் மனிதனைக் கவர்ந்திழுக்கின்றன. அவை தொடர்ந்து {எப்போதும்} வாய்மையிலேயே நிலைபெற்றிருக்கின���றன. எனவே, வாய்மையை உறுதியுடன் பின்பற்ற வேண்டும்.(22) \"இந்த நல்லதைச் செய்\" என்று நல்லவையாக என்னிடம் நீர் சொன்னவை உண்மையில் தகாதவை (ஆரியமற்றவை).(23)\nவனவாசம் செய்யப் போகிறேன் என்று என் தந்தையிடம் உறுதியளித்துவிட்டு, என் தந்தையின் சொற்களைக் கைவிட்டு பரதனின் சொற்களை எவ்வாறு நான் ஏற்பேன்(24) என் தந்தையின் முன்னிலையில் நான் நிலையான உறுதிமொழியை ஏற்றபோது கைகேயி தேவி மகிழ்ச்சியடைந்தாள்.(25) நான் இவ்வகையில் வனவாசத்தை ஏற்றுக் கொண்டு, என் உலகப் பயணத்தைத் தொடர்ந்து, {மனத்தளவிலும், உடலளவிலும்} தூய்மையானவனாக, உணவுக் கட்டுப்பாட்டுடன், புண்ணியமான கிழங்குகள், மலர்கள், கனிகள் ஆகியவற்றைத் தேவர்களுக்கும், பித்ருக்களுக்கும் அளித்து, ஐம்புலன் அடக்கத்துடனும், வஞ்சகமில்லாமலும், முழுமையான அர்ப்பணிப்புடனும், எது செய்யப்பட வேண்டும், எது செய்யப்படக்கூடாது என்ற பகுத்தறிவுடனும் இருப்பேன் {இவ்வாறே என் காலத்தைக் கழிப்பேன்}.(26,27) இந்தக் கர்ம பூமியை {செயற்களத்தை} அடைந்தவன் அறச்செயல்களையே செய்ய வேண்டும். அக்னியும் {நெருப்பானவனும்}, வாயுவும் {காற்றானவனும்}, சோமனும் {நிலவானவனும்} தங்கள் செயல்களுக்கான கனியையே அறுவடை செய்கின்றனர் {பலனையே அடைந்து வருகின்றனர்}.(28) தேவராதன் {இந்திரன்} நூறு வேள்விகளைச் செய்துவிட்டுச் சொர்க்கத்திற்குச் சென்றான். மஹாரிஷிகள் கடுந்தபங்களைச் செய்து சொர்க்கத்திற்குச் சென்றனர்\" {என்றான் ராமன்}.(29)\nபேரொளியுடன் கூடிய அந்த இளவரசன் {ராமன்}, {ஜாபாலி சொன்ன} நாத்திகவாதத்தைக் கேட்டு, அவர் சொன்னதைப் பொறுத்துக் கொள்ள இயலாமல் அவரை நிந்திக்கும் வகையில்,(30) \"வாய்மை, அறம், ஆற்றல்மிகுவீரம், உயிரினங்களிடம் கருணை, இன்சொல், இருபிறப்பாளர்களையும், தேவர்களையும், {எதிர்பாரா} விருந்தினர்களையும் வழிபடுதல் ஆகியவை சொர்க்கத்திற்கான பாதைகளென நல்லோர் சொல்கின்றனர்.(31) எனவே, எதில் பொருள் {அர்த்தம் / பெரும்பயன்} உள்ளது என்பதை நன்கறிந்த கல்விமான்கள், தங்கள் நோக்கத்தை உறுதியாகப் பின்பற்றித் தங்கள் கடமையை முழுமையாகவும், கவனமாகவும் நிறைவேற்றி, உயர்ந்த உலகங்களை நாடுகின்றனர்.(32) அறப்பாதையில் இருந்து வழுவி விழுந்த உறுதியான நாத்திகரும், தவறான வழிவகுக்கும் புத்தியைக் கொண்டவருமான உம்மைப் பணிக்கு ஏற்றுக் கொண்டதில் என் தந்தையின் ச���யலை நான் நிந்திக்கிறேன்.(33) கள்ள புத்தனைப் போன்றவனே {போலியானவனே} நாத்திகனென அறிவதற்கு இஃது ஏற்ற சந்தர்ப்பமாகும். எனவே, ஒரு புத்தன் {நல்லோன்} மக்கள் நலனில் ஐயங்கொண்ட நாத்திகனுடன் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் பழக்கம் வைத்துக் கொள்ளக்கூடாது[1].(34) உமக்கு முன்பு வாழ்ந்த மனிதர்கள், இம்மையிலும் மறுமையிலும் (பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கைகள்) அனைத்தையும் கைவிட்டு மங்கலச் செயல்கள் பலவற்றைச் செய்திருக்கின்றனர். எனவேதான், இருபிறப்பாளர்கள் புனித நெருப்பில் படையலிட்டு {ஹோமம் செய்து}, நற்செயல்களைச் செய்கிறார்கள்.(35) அறத்தில் அர்ப்பணிப்புள்ள முனிவர்கள், ஒளிபொருந்தியவர்களும், ஏராளமான கொடையளிப்பவர்களும், எதற்கும் தீங்கிழைக்காமல் களங்கத்திலிருந்து விடுபட்டவர்களுமான நல்ல மனிதர்களுடன் சேர்ந்து உலகத்தில் மதிக்கப்படுகிறார்கள்\" {என்றான் ராமன்}.(36)\n[1] \"யதா² ஹி சோர꞉ ஸ ததா² ஹி பு³த்³த⁴ | ஸ்ததா²க³தம் நாஸ்திகமத்ர வித்⁴ஹி | தஸ்மாத்³தி⁴ ய꞉ ஶங்க்யதம꞉ ப்ரஜாநாம் | ந நாஸ்தி கேநாபி⁴முகோ² பு³த⁴꞉ ஸ்யாத் 2-109-34\" என்பது மூலம் முதல் பத்தியில் வரும் \" பு³த்³த⁴\" என்பதற்கு நல்லபுத்தி என்றும் \"சோர\" என்பதற்குக் களவு என்றும் பொருள் கொள்ள வேண்டும். \"நல்லபுத்தி கொண்டவன் போன்ற கள்வன்\" என்பது பொருள். அதுவே இங்கே கள்ள புத்தன் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்தப் பொருளை மேலும் நெருக்கமாகப் புரிந்து கொள்ள இந்த அத்தியாயத்தில் ஏற்கனவே 5-7 ஸ்லோகங்களில் சொல்லப்பட்டுள்ளவற்றை மீண்டும் பார்க்கவும். இறுதி பத்தியில் வரும் \"பு³த⁴꞉\" புத்தன் என்பதற்கு நல்லோன் என்பது பொருள். இங்கே பௌத்தம் குறித்தோ, புத்தம் குறித்தோ, சார்வாகம் குறித்தோ ஏதும் சொல்லப்பட வில்லை. அறத்தில் நம்பிக்கையற்ற நாத்திகத்திற்கே பதில் சொல்லப்பட்டிருக்கிறது.\nதன்னிரக்கம் கொள்ளாதவனும், இது போலக் கோபமாகப் பேசியவனுமான ராமனிடம் அந்த விப்ரர் {ஜாபாலி}, வாய்மையுடன், தகுந்த சொற்களில் ஆத்திகத்தைச் சொல்லும் வகையில்,(37) \"நான் நாத்திகம் சொல்ல மாட்டேன். நான் நாத்திகனல்ல. {பரலோகம்} ஏதுமில்லை என்பது உண்மையுமல்ல. காலத்தை {ஆபத்து காலத்தை} உணர்ந்தே நான் மீண்டும் நாத்திகனானேன்.(38) ராமா, அந்தக் காலத்திலும், இந்தக் காலத்திலும் அது மெல்ல தானாக வந்து சேர்கிறது. நான் சொன்ன நாத்திகச் சொற்கள் நீ {அயோத்திக்குத்} திரும்ப வேண்டும் என்ற நோக்கில் உனக்காகவே சொல்லப்பட்டன\" {என்றார் ஜாபாலி}.\nஇதற்கு முந்தைய 108ம் ஸர்கம் - ஜாபாலியின் நாத்திக வாதம்\nLabels: இராமாயணம், ராமன், ஜாபாலி\n14 பாகங்கள் - கெட்டி அட்டையில்\nஎன்ற சுட்டிக்குச் சென்று வாங்கிக் கொள்ளலாம்.\nஅல்லது மேற்கண்ட சுட்டியில் தற்போதைய விலையைப் பார்த்துவிட்டு\nஎன்ற வங்கிக் கணக்கில் மேற்கண்ட சுட்டியில் கண்ட தற்போதைய தொகையைச் செலுத்திவிட்டு, சீரோ டிகிரி பதிப்பகத்தாரின் கைபேசி எண் +91 - 9840065000க்கு உங்கள் முகவரியை குறுஞ்செய்தியாக அனுப்பி கொரியர் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.\nசாந்தி பர்வம் - 1\nசாந்தி பர்வம் - 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%87._%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-10-19T13:20:41Z", "digest": "sha1:LBSLENL7LYM2YLBG5KLCLA4N6L53YHIC", "length": 3823, "nlines": 30, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வே. பாக்கியநாதன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபாக்கியநாதன்.வே (ஆகஸ்ட் 13,1946 - ஏப்ரல் 14, 2011) தமிழ்நாட்டின் சிறந்த பத்திரிகையாளர்களில் ஒருவர். தமிழ் ஓசை நாளிதழ் தொடங்கப்பட்டதிலிருந்து தாம் மறையும் வரை நாளிதழ் ஆசிரியராகப் பணியாற்றியவர்.\nபாக்கியநாதன் தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்துரை அடுத்த ஜம்புலிங்கபுரத்தில் பிறந்தார். கணிதத்தில் பட்டப்படிப்பை முடித்த அவர், வேலூர் மாவட்டம் அரக்கோணத்தில் உள்ள பள்ளி ஒன்றில் கணித ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர் 1973 ஆம் ஆண்டில் அலை ஓசை நாளிதழில் செய்தியாளராகப் பயணத்தைத் தொடங்கினார். 1975 ஆம் ஆண்டு முதல் மக்கள் குரல் நாளிதழில் செய்தியாளராகவும், மூத்த துணை ஆசிரியராகவும் பணியாற்றினார். 1995 ஆம் ஆண்டில் மாலைச்சுடர் நாளிதழ் தொடங்கப்பட்ட போது அதன் செய்தி ஆசிரியராகப் பொறுப்பேற்றார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 செப்டம்பர் 2011, 04:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akuranatoday.com/29144/", "date_download": "2021-10-19T12:43:14Z", "digest": "sha1:DN27OY2FIHI3GG3MGJ4KW3BZIRMGBJ4E", "length": 4768, "nlines": 68, "source_domain": "www.akuranatoday.com", "title": "இலங்கை வரலா��்றில் கடந்த ஐந்நூறு ஆண்டுகளாகத் தான் மாட்டு இறைச்சி உணவாகி வருகிறது. - Akurana Today", "raw_content": "\nஇலங்கை வரலாற்றில் கடந்த ஐந்நூறு ஆண்டுகளாகத் தான் மாட்டு இறைச்சி உணவாகி வருகிறது.\nஇலங்கையில் பசுவதைத் தடைச் சட்டத்தை கொண்டு வருவதற்காகப் பிரதமரைப் பாராட்டுவதாக\nஇலங்கை சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு க. சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார்.\nஅவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nஅதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ள தாவது, சிவசேனையின் கோரிக்கையை ஏற்று பிரதமர் மகிந்த ராஜபக்ச பசுவதைத் தடைச் சட்டத்தைக் கொண்டு வரப் போகிறார்.\nஇலங்கைச் சைவர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைவர். இலங்கையில் வாழ்கின்ற சைவப் பெருமக்கள் அனைவரும் நன்றியைப் பிரதமருக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.\nஇலங்கைச் சைவர்கள் சார்பில் பிரதமரைப் பசுவதைத் தடைச் சட்டம் கோரியிருந்தது.\nஇச்சட்டத்தைக் கொண்டு வருவதாக அரசாங்க நாடாளுமன்றக் குழுவில் முன்மொழிந்து ஏற்றுக்கொண்டிருக்கி றார்கள். இலங்கை மண்ணில் 10 ஆயிரம் ஆண்டு கால வரலாற்றில் கடந்த ஐந்நூறு ஆண்டுகளாகத் தான் மாட்டு இறைச்சி உணவாகி வருகிறது.\nபசுவ தைத் தடைச் சட்டத்தைக் கொண்டு வருவது போலவே அரசு சார்பற்ற மதமாற்ற நிறுவனங்களின் நடவடிக் கைகளைக் கண்காணித்து மதமாற்றத் தைக் குறைக்கவும் மதமாற்றத் தடைச் சட்டத்தை கொண்டு வரவும் பிரதமர் மகிந்த ராஜபக்ச முயற்சிப்பார் என தெரி விக்கப்பட்டுள்ளது.\nPrevious article“ஜம்மியதுல் உலமா மீதோ, உலமாக்கள் மீதோ கலங்கம் ஏற்படுத்தி விடக் கூடாது”\nNext articleகழுவி, உலர வைத்து கொழும்பில் விற்கப்படும் ‘மாஸ்க்’\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலை ஆட்சியை கைப்பற்ற அரசு பயன்படுத்தியது\nஉலமா சபை எமது கேள்விகளுக்கு பதில் தரவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akuranatoday.com/54713/", "date_download": "2021-10-19T12:52:47Z", "digest": "sha1:3CFVB346ED7GTYXXBIYPRL2VSJDYNLRN", "length": 4822, "nlines": 67, "source_domain": "www.akuranatoday.com", "title": "ஊரடங்கு உயர்தரப் பரீட்சைக்கு தடையாகாது - பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் - Akurana Today", "raw_content": "\nஊரடங்கு உயர்தரப் பரீட்சைக்கு தடையாகாது – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்\nமேல்மாகாணத்தில் நாளை நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்படவுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தினால் கல்வி பொதுதராதர உயர்தர பரீட்ச��க்கு தோற்றும் மாணவர்களுக்கு எவ்வித நெருக்கடி நிலையும் ஏற்படாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித குறிப்பிட்டுள்ளார்.\nஇது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,\nகொவிட்-19 வைரஸ் தாக்கத்தின் காரணமாக மேல்மாகாணம் முழுவதும் நாளை நள்ளிரவு தொடக்கம் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.\nகல்வி பொது தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு பொது போக்குவரத்து சேவைகள் பாதுகாப்பான முறையில் இதுவரையில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.\nஉயர்தர பரீட்சை நிறைவு பெறும் வரையில் இச்சேவையை தொடர்ந்து சிறப்பான முறையில் முன்னெடுக்குமாறு புகையிரத திணைக்களம் மற்றும் அரச போக்குவரத்து சேவைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nமாணவர்களின் பாதுகாப்பினை கருத்திற் கொண்டு பொது போக்குவரத்து சேவையினை வழமை போன்று முன்னெடுப்பதாக அரச பொதுபோக்குவரத்து துறையினர் உத்தரவாதம் வழங்கியுள்ளார்.\nஆகவே மேல் மாகாணத்தில் அமுல்படுத்தப்படவுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தினால் பரீட்சார்த்திகளுக்கு எவ்வித நெருக்கடி நிலையும் ஏற்படாது என்றார்.\nPrevious articleமேல் மாகாண மக்களுக்கு இராணுவத் தளபதி விடுத்துள்ள அவசர வேண்டுகோள்\nNext articleதிருமண நிகழ்வுகள் மற்றும் பிற நிகழ்வுகளை ஊரடங்கு காலப்பகுதியில் நடத்துதல் தடை .\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலை ஆட்சியை கைப்பற்ற அரசு பயன்படுத்தியது\nஉலமா சபை எமது கேள்விகளுக்கு பதில் தரவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2021/10/03/college-student-drowns-in-amaravati-river", "date_download": "2021-10-19T11:54:12Z", "digest": "sha1:DDYJT5MN7OR6GAAGB3YECE6I3CYUVC3H", "length": 6476, "nlines": 54, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "College student drowns in amaravati river", "raw_content": "\nநண்பனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது நடந்த விபரீதம் - நீரில் மூழ்கி இளைஞர் பலி..திருப்பூரில் சோகம்\nஅமராவதி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழந்தார்.\nதிருப்பூரைச் சேர்ந்த முத்துச்சாமி என்பவரின் மகன் ஆதித்யா ராம். இவர் தனியார் பாலி டெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், இவரது நண்பன் சூர்யாவின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக நேற்று திண்டுக்கல் சென்றுள்ளார்.\nபின்னர் நண்பனைச் சந்தித்து ஆதித்யா பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதையடுத்து மற்றொரு நண்பன் செல்வகுமாருடன் இணைந்து தாராபுரத்தில் உள்ள அமராவதி ஆற்றில் ஆதித்யா குளித்துள்ளார். அப்போது திடீரென நீரில் மூழ்கியுள்ளார்.\nஇதனால் அதிர்ச்சியடைந்த சக நண்பவர் அவரை மீட்டக முயற்சி செய்தார். ஆனால் அவர்களால் ஆதித்யாவை மீட்க முடியாமல் போனது. பின்னர் இது குறித்து போலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.\nபிறகு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலிஸார் மற்றும் தீயணைப்பு வீரர்களும் இரண்டு மணி நேரம் போராடி ஆதியின் உடலை மீட்டனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து போலிஸார் ஆதியின் நண்பர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். நண்பனின் பிறந்தநாள் கொண்டாடுவதற்காக வந்த கல்லூரி மாணவன் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nகணவனைக் கொன்று கிணற்றில் வீசிய மனைவி.. திருமணமாகி 4 மாதத்தில் நடந்த கொடூரம் - விசாரணையில் ‘பகீர்’ தகவல்\nசிறுநீரக கல்லுக்கு பதிலாக சிறுநீரகத்தையே அகற்றிய மருத்துவர்... நுகர்வோர் ஆணையத்தின் அதிரடி உத்தரவு\n“விரைவில் ஆழ்கடல் அகழாய்வுப் பணிகளைத் தொடங்க ஆலோசனை” : அமைச்சர் தங்கம் தென்னரசு முக்கிய தகவல்\nதண்ணி இல்லாத காட்டில் மாட்டிக்கொண்ட 2 பேர்.. 1 வாரம் கழித்து மீட்ட போலிஸ்: ஆஸ்திரேலியாவில் நடந்தது என்ன\n50 ஆண்டுகளுக்குப் பிறகு மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றியத்தை கைப்பற்றிய தி.மு.க - ஆட்சிக்கு கிடைத்த நற்சான்று\n“எங்க கல்யாணத்த மழை வெள்ளம் தடுப்பதா.. நெவர்” : காதல் ஜோடி எடுத்த முடிவு - இணையத்தில் வைரல்\n“விரைவில் ஆழ்கடல் அகழாய்வுப் பணிகளைத் தொடங்க ஆலோசனை” : அமைச்சர் தங்கம் தென்னரசு முக்கிய தகவல்\nசிறுநீரக கல்லுக்கு பதிலாக சிறுநீரகத்தையே அகற்றிய மருத்துவர்... நுகர்வோர் ஆணையத்தின் அதிரடி உத்தரவு\nதண்ணி இல்லாத காட்டில் மாட்டிக்கொண்ட 2 பேர்.. 1 வாரம் கழித்து மீட்ட போலிஸ்: ஆஸ்திரேலியாவில் நடந்தது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/94856/", "date_download": "2021-10-19T12:45:43Z", "digest": "sha1:RI7J2ESMBBF2FVCNGOE2HVTUJOPAGTFF", "length": 30315, "nlines": 160, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஒரு செல்லசிணுங்கல்போல…. | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஇலக்கியம் மதிப்புரை ஒரு செல்லசிணுங்கல்போல….\nமிக எளிமையாகச் சொல்லப்போனால் கவிதையென்பது ஒரு குறிப்பிட்ட வகையான மொழிவெளிப்பாடு மட்டுமே. நம்மைச் சூழ்ந்திருக்கும் அனைத்தையும் மொழியாக ஆக்கிக் கொண்டிருக்கிறோம். பொருட்கள் நிகழ்வுகள் உணர்வுகள். இந்த நிகழ்வையே உளம் என்கிறோம். உள்ளும் புறமும் என ஓடும் பிரக்ஞையினூடாக இவற்றை இணைத்து முடைந்து பேருரு ஒன்றை உருவாக்குகிறோம். அதுவே நம்மைச் சூழ்ந்திருக்கும் மொழியென்னும் இப்பெருவெளி. அது நாம் பிறந்து திளைத்து வாழும் கடல். பல கோடிபேரால் பலகோடி முறை பேசப்படுவதனாலேயே அது முடிவிலாத நுட்பங்களைக் கொண்டுள்ளது. புரிந்து கொள்ளப்படவேண்டும் என்பதற்காகவே மாறாத வடிவங்களையும் மறுகணம் அடைந்துகொண்டுள்ளது.\nகவிதை இவ்விரு எல்லைகளுக்கு நடுவே முன்பிலாத ஒரு புதிய இணைப்பை உருவாக்கும் முயற்சி எனலாம். மொழியின் மாறாத தன்மையை அது மீற முயல்கிறது. பழைமையே தன் வடிவெனக்கொண்ட மொழியிலிருந்தே புதியவற்றை எடுத்து முன்வைப்பதே அதன் வழியாகும். மாபெரும் கவிதைகள் பலவும் சற்றே மாறுபட்ட பிறிதொரு மொழியில் சொல்லப்பட்டுவிட்டவை என்பதனாலேயே அழியாத்தன்மை கொண்டவை. ”அற்றைத்திங்கள் அவ்வெண்ணிலவில்” எனத் தொடங்கும் பாரிமகளிரின் கவிதை அதன் உள்ளடக்கத்தினால் அல்ல, மிக இயல்பாக ஒரு துயரத்தை சொல்லிவிட்டதனால், அச்சொல்லல் முறை வழக்கத்திற்கு சற்றே மாறுபட்டதாக எப்போதுமே ஒலித்துக் கொண்டிருப்பதனால்தான் ஈராயிரம் ஆண்டுகளைக் கடந்து இங்கு வந்திருக்கிறது.\nஒவ்வொரு காலகட்டத்திலும் இக்கூறுமுறையை சற்றே மாற்றுவதற்கு கவிஞர்கள் முயல்கிறார்கள். அதை எப்படி அடைகிறார்கள் என்பது விந்தையானதுதான். மிகத்தீவிரமான் கவிதைகளை எழுதும் தேவதேவன்\nஒரு காபி சாப்பிடலாம் வா”\nஎன்று எழுதும்போது வேறொரு உளநிலையில் நின்று மொழியின் பெரும்போக்குக்கு சிறிய ஒரு மாற்றை அமைக்கிறார். அந்த புள்ளியிலிருந்து நீண்டு வளர்ந்தவை என்று இசை, வெயில், லிபி ஆரண்யா போன்றவர்களின் கவிதைகளைச் சொல்ல முடியும். அவற்றில் உள்ள இயல்பான ஒழுக்கும் மொழியை சற்றே இடம்மாற்றி வைக்கும் நுட்பமும் தான் அவற்றை கவிதையாக்குகிறது.\nஆரம்பகட்டக் கவிதைகளில் இசை படிமங்களையும் சித்தரிப்புகளையும் அதிகமாக பயன்படுத்தியிருந்தார். கூடவே அவருடைய தனித்தன்மை கொண்ட மொழி அதாவது வழக்கமாகச் சொல்லப்படும் ஒன்றை சற்றே வேறொரு கோணத்தில் சொல்லும் விலக்கக்கோணம் அமைந்திருந்தது. இவருடைய முந்தைய தொகுதிகள் இன்னும் அதிகமான வாசக ஈர்ப்பை அடைந்ததற்கு காரணம் ஏற்கனவே அவர்களுக்குத் தெரிந்த கவிதை முறைகளில் எழுதப்பட்ட சில கவிதைகள் அதில் இருந்தன என்பதுதான்.\n”ஆட்டுதி அமுதே” இசையின் புதிய தொகுதி. முழுக்க முழுக்க மொழியின் கோணமாற்றம் உருவாக்கும் அழகியல் சாத்தியங்களை நம்பி மட்டுமே எழுதப்பட்ட கவிதைகள் இவை. இக்கவிதைகளிலிருந்து படிமங்களையோ தீவிரமான நுண்புனைவுத் தருணங்களையோ எடுக்க முடியவில்லை. அனைத்துக் கவிதைகளுமே புன்னகையுடன் கலந்த அவருடைய விலக்க மொழியில் அமைந்துள்ளன.\nநிலவைத் திருகுகிறான் ஒருவன். ’’\n”இன்னிரவு” என்னும் கவிதை. எப்போதும் கவிதையில் சொல்லப்பட்ட அந்த மனஎழுச்சிதான். ஆம், ”அற்றைத் திங்கள்”. அக்கவிதையிலிருந்து அத்துயரம் மிக்க உவகை அதன் உருக்கம் இவ்வண்ணம் ஆகியிருக்கிறது. “நிலவின் ஊளை” என்று எழுதிய பிரமிளின் கொந்தளிப்பு. ஆனால் இக்கவிதை வெளிப்படுவதற்கு இதுவரை இல்லாத ஒரு வடிவத்தையும் ஒரு பார்வைக் கோணத்தையும் கொண்டிருக்கிறது. இது ஒரு படிமம் அல்ல. எதையும் மேலதிகமாகக் குறிக்கவில்லை இது. இக்கவிதையிலிருந்து பெரிதாக வளர்ந்து செல்வதற்கு எண்ணமோ தரிசனமோ ஏதுமில்லை. அறிந்த அத்தருணம் முற்றிலும் எதிர்பாராத சொற்கோவையாக நிகழ்ந்திருக்கிறது. இவ்வியல்பே இசையின் கவிதைகள் ஆகும் அடிப்படை.\nஇவ்வியல்பை மட்டுமே நம்பி இத்தொகுப்பில் உள்ள ஏறத்தாழ அனைத்து கவிதைகளையுமே எழுதியிருக்கிறார். ஒரு நீண்ட கவிதையின் அலகுகள் போல இத்தொகுதியின் அனைத்து கவிதைகளுமே இந்த மொழியால் இணைக்கப்பட்டிருக்கின்றன.\nஅண்ணன் துப்பாக்கிக் குண்டுக்கு குறுக்கே விழுபவன்.\nதாத்தா உழைப்பில் உயர்ந்த உத்தமர்\nமாமா மாமருந்து சித்தி குளிர் தரு\nஆனாலும் வீட்டை நெருங்குகையில் மூக்கைப் பிடித்துக் கொள்ள வேண்டும்’\nதமிழ் நவீனக் கவிதையில் வீடு வெவ்வேறு வகையில் எப்போதும் சொல்லப்படுவதே. விடுவதற்குரியது. அதை எப்போதும் பற்றிக்கொண்டிருக்கிறது உலகியலான் உள்ளம்.\nஎன்னும் பிரமிளின் வரி கவிஞனின் முடிவில்லாத வீடு தேடல் அலைதல் வீடுகளின் மீதான காதல். வீடுகளின் மூர்க்கமான மறுதலிப்பு. வீடுகளின் வாய்திறந்த புன்னகையை தஸ்தயேவ்ஸ்கி வெண்ணிற இரவுகளில் எழுதியிருக்கிறார்\nநான் அங்கே ஓரு வீடுகட்டிமுடித்துள்ளேன்\nஎன்னும் கவிதை தேவதேவனின் கனவு வீட்டின் பதிவு. அதே உணர்வைத்தான் இக்கவிதை முற்றிலும் புதிய ஒரு மனநிலையுடன் சொல்கிறது. கண்டடைதலாக அல்ல துயரமாகவும் கசப்பாகவும் அல்ல ’அதெல்லாம் அப்படித்தானே’ என்னும் அறிந்த புன்னகையுடன்\nஇசை தனிப்பட்ட முறையில் எனக்கு அணுக்கமான கவிஞராக ஆவது இதனால்தான். ஒரு மூன்று தலைமுறைக்கால கவிதைமொழி அவருக்குப் பின்னால் உள்ளது. அத்தொடர்ச்சியில் வந்து இங்கு நிற்கும்போதுதான் அவரது கவிதைகளின் மொழிமாறுபாடு திசைக்கோணலின் அழகு அர்த்தப்படுகிறது. அதனூடாக அணுகுபவர்களுக்கு மட்டுமே இக்கவிதை கவிதையாகிறது\nஇக்கவிதைகளை மட்டும் வாசிக்கும் ஒரு புது வாசகன் இவை எதனால் கவிதையென்றே வியப்படைவான். பல கவிதைகள் மிக அன்றாட வாழ்க்கையின் தருணத்தை அப்படியே எழுதியது போல அவனுக்குத் தோன்றும்.\nநான் பார்க்க எவ்வளவு காலமாய்\nஇப்படி புதன் கிழமை சந்தையில் வீற்றிருக்கிறார்\nஇக்கவிதையின் தலைப்பு ”நீதி நெறி விளக்கம்”. ஒர் எளிய விமர்சனமாக மட்டுமே தோன்றக்கூடிய கவிதை. இசையின் தனித்தன்மை கொண்ட மொழி இதுவரையுமான தமிழ் நவீனகவிதைக்கு அளிக்கப்பட்ட எதிர்வினை என்ற புரிதலுடன் படிக்கப்படுமென்றால் மேலதிக அழுத்தம் பெற்று இதைக் கவிதையாக ஆக்குவதைக் காணலாம்.\nஅப்படி வாசிக்கும் ஒருவனுக்கு ”இந்த நகரத்தின் சாக்கடையைப்போல சுழித்தோடுகிறதே இது எங்கள் கண்ணீர்” என் ஆரம்பிக்கும் கவிதை [செல்வத்தை தேய்க்கும் படை] ஒரு புரட்சிக் கூவல் அல்ல என்று தெரியும். அதற்குள் உள்ள புன்னகைதான் அதைக் கவிதையாக்குகிறது என்று பிடிகிடைக்கும்..\n’’இப்போது எனக்கு ஒண்ணுக்கு முட்டிக் கொண்டு வருகிறது உடனே அதை எங்காவது பீச்சி அடிக்கவேண்டும் மற்றதெல்லாம் அப்புறம் தான் சற்றைக்கேனும் மற்றதனைத்தும் மறக்கடித்த என் இனிய மூத்திரப் பிரச்னையே” [ வாழ்வில் ஒரு அர்த்தம்] என்பது எப்படி கவிதை ஆகிறது அந்த இறுதிவரியின் பிரியமான நையாண்டியால். மகத்தான கவிதை மகத்தான் உணர்வுகளை உருவாக்கவேண்டியதில்லை. எளிய புன்னகையே அதன் அடையாளமாக ஆகக்கூடும். பெருங்காதலைச் சொல்ல மொழி தேவையில்லை, ஒரு சின்னச்சிணுங்கலே போதுமானது\n[ஆட்டுதி அமுதே. கவிதைகள். இசை. காலச்சுவடு பிரசுரம்]\nஅடுத்த கட்டுரைமுன்னாளெழுத்தாளர் டாட் காம்\n���னந்தத்தை அறிந்தவன் – கடலூர் சீனு\nரத்தம் படிந்த காலம்- கிருஷ்ணன் சங்கரன்\nகடைசி முகலாயன்: ஒரு மதிப்புரை\nமீண்டு நிலைத்தவை- சுனில் கிருஷ்ணன்\nஜரேட் டைமண்ட்டுடன் சந்திப்பு- ராஜன் சோமசுந்தரம்\nஊட்டி சந்திப்பு ஒரு முழுப்பதிவு\nஒரு நாவல், நாற்பதாண்டுகள், நான்கு வாசிப்புகள்-2\nஅ.கா.பெருமாள்- மக்களைக் கலைப்படுத்துதல்- சுரேஷ் பிரதீப்\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி கி.ராஜநாராயணன் கோவை ஞானி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உணவு உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் தொல்லியல் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் நகைச்சுவை நேர்காணல் நேர்காணல் மற்றும் பேட்டிகள் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பிறர் படைப்புகள் நூல் மதிப்புரை மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் மதிப்புரை விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெண்முரசு – ஒலிவடிவம் வெண்முரசு – வாசகர் கடிதம் வெண்முரசு – வாசகர் மதிப்புரை வெண்முரசு ஆவணப்படம் வெய��யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pustaka.co.in/home/author/js-raghavan", "date_download": "2021-10-19T12:47:10Z", "digest": "sha1:FMD6ETGB6LALIH7T7VZGBG447VSOWLG2", "length": 4191, "nlines": 133, "source_domain": "www.pustaka.co.in", "title": "J.S. Raghavan English, Tamil Novels | English, Tamil eBooks Online | Pustaka", "raw_content": "\n1964 முதல் ஆங்கிலத்திலும், 1980 முதல் தமிழிலும் இந்தியா வின் பிரபல ஏடுகளில் நகைச்சுவைக் கட்டுரைகள், கதைகள் எழுதிவரும் இவரது வயது 78.\nவட்டார ஏடுகளான அண்ணாநகர் மற்றும் மாம்பலம் டைம்ஸில் தமாஷா வரிகள் என்கிற பத்தியைத் தொடர்ந்து 15 வருடங்களுக்கும் மேலாக எழுதி வருகிறார்.\nதொடர்ந்து எழுத அருளாசி வழங்குபவர் வேழமுகத்து விநாயகன் என்றும், ஊக்குவிப்பவர்கள் பி.ஜி.உட்ஹவுஸ், தேவன், கல்கி மற்றும் தி.ஜானகிராமன் என்றும் நன்றியுடன் கூறும் இவர், 55 ஆண்டுகளுக்கும் மேலாக பிரபல கட்டுமான நிறுவனத்தின் மூத்த அதிகாரியாகப் பணிபுரிந்து ஒய்வு பெற்றவர்..\nLaughing Tablets என்கிற ஆங்கிலத் தொகுப்பு, சிவசாமி துணை என்கிற நாவலை இரண்டாவது பாகமாக உள்ளடக்கிய இந்த சிவசாமியின் சபதம் முழுநீள நகைச்சுவை நாவல் உள்பட, இதுவரை இவர் எழுதி வெளிவந்துள்ள புத்தகங்களின் எண்ணிக்கை 28.\nதேவன் அறக்கட்டளை விருதுபெற்ற இவருக்குப் பிடித்த சவால் வாசகம்: 'அறிவில் சிறந்தவர்களைச் சிரிக்கவைப்பது கடினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.tamilceylon.com/20-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2021-10-19T13:24:21Z", "digest": "sha1:FJREFTZGVLY7KUAB5A2TPWNFBATE6LPQ", "length": 7742, "nlines": 101, "source_domain": "www.tamilceylon.com", "title": "20 ஆவது திருத்ததிற்கான சட்டமூல வரைபை தயார்படுத்த ஐவர் அடங்கிய குழு! | Tamil Ceylon", "raw_content": "\nHome செய்திகள் உள்நாட்டுச் செய்திகள் 20 ஆவது திருத்ததிற்கான சட்டமூல வரைபை தயார்படுத்த ஐவர் அடங்கிய குழு\n20 ஆவது திருத்ததிற்கான சட்டமூல வரைபை தயார்படுத்த ஐவர் அடங்கிய குழு\nஇலங்கை அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் உருவாக்கத்துக்கான சட்டமூல வரைபை தயார்படுத்த ஐவர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது.\nநீதியமைச்சர் அலிசப்ரி, கல்வி அமைச்சர் பேராசிரியர். ஜி.எல்.பீரிஸ், தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, மற்றும் வெளிவிவகார அமைச்சர��� தினேஷ் குணவர்தன, சக்திவலு அமைச்சர் உதய கம்மன்பில ஆகியோர் குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான முதலாவது அமைச்சரவை கூட்டம் இன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.\nஅரசியலமைப்பின் 19வது திருத்தம் இரத்து செய்யப்பட்டு 20வது திருத்தம் உருவாக்குவதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியதை தொடர்ந்து சட்ட வரைபு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஐவர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது.\n20 ஆம் திருத்திற்கான சட்ட வரைபை உருவாக்கும் உபகுழுவின் நடவடிக்கைகள் செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் இருந்து முன்னெடுக்கப்பட்டு ஒக்டோபர் மாதத்திற்கு முன் திருத்தத்தை நிறைவேற்ற எதிர்பார்க்கப்படுகிறது.\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை 20வது திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு முழுமையாக செயற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleஒரு இலட்சம் பேருக்கு அரச வேலை வாய்ப்பு – வடக்கு, கிழக்கு மாகாணங்கள் புறக்கணிப்பு\nNext articleமஹிந்த யாப்பா அடுத்த சபாநாயகர், குழுக்கள் பிரதித் தலைவர் அங்கஜன்\nவேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்பவர்களுக்கு முக்கிய தகவல்\nநாளாந்த Passport விநியோகத்தில் அதிகரிப்பு\nநாட்டில் பசுவதையை தடை செய்ய நடவடிக்கை\nஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 21வது ஆண்டு நினைவு தினம் அனுஸ்டிப்பு\nசாணக்கியன் நம்பிக்கைக்கு உரியவர் அல்ல – டக்ளஸ் குற்றச்சாட்டு\nஇலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா\nவேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்பவர்களுக்கு முக்கிய தகவல்\nஉள்நாட்டுச் செய்திகள் amal - 19-10-2021 0\nநாளாந்த Passport விநியோகத்தில் அதிகரிப்பு\nஉள்நாட்டுச் செய்திகள் amal - 19-10-2021 0\nநாட்டில் பசுவதையை தடை செய்ய நடவடிக்கை\nஉள்நாட்டுச் செய்திகள் amal - 19-10-2021 0\nஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 21வது ஆண்டு நினைவு தினம் அனுஸ்டிப்பு\nஉள்நாட்டுச் செய்திகள் amal - 19-10-2021 0\nசாணக்கியன் நம்பிக்கைக்கு உரியவர் அல்ல – டக்ளஸ் குற்றச்சாட்டு\nஉள்நாட்டுச் செய்திகள் amal - 19-10-2021 0\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/general-news/folk-artists-affected-for-coronavirus-lockdown", "date_download": "2021-10-19T12:24:24Z", "digest": "sha1:3BMX4SFAJE4XTGYP53KP73AHV7KCK3WS", "length": 11391, "nlines": 223, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 16 June 2021 - தனித்திருக்கும் தெய்வங்கள்... தவித்திருக்கும் கலைஞர்கள்! | folk artists affected for coronavirus lockdown - Vikatan", "raw_content": "\nசீன ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட ஆயுதமே கொரோனா வைரஸ் - துப்பு துலக்கிய இந்தியர்\n+2 தேர்வு ரத்து சரிதானா\nகுறுக்கு வழியில் சரக்கு எக்ஸ்பிரஸ்\nஎப்படி இருக்கும் டெஸ்ட் சாம்பியன்ஷிப்\n சர்ச்சையைக் கிளப்பியிருக்கும் இன்னோர் அவசரகால மருந்து\nகளை கட்டப்போகும் சட்டமன்றம்... காத்திருப்பில் தமிழ்நாடு\n - ஐஸ்வர்யா சொல்லும் ரகசியம்\nவிகடன் TV: ரிமோட் பட்டன்\nவிகடன் TV: அவருக்குப் பதில் இவர்\nவிகடன் TV: “மத்தவங்க தூங்கும்போது வீடியோ எடுப்பேன்\n‘ஹீரோவுக்கு பிரபுவும் சூரியும் கத்துக்கொடுத்தாங்க\n“நடிகன்னா தினமும் நடிக்க வேண்டியதில்லை\nபார்வதி வெறும் நடிகை மட்டுமல்ல...\nமனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் 5G - இனியும் இனிது - 10 - சுவாமி சுகபோதானந்தா\nதமிழ் நெடுஞ்சாலை - 10 - உள்ளேன் ஐயா...\nவாசகர் மேடை: கொரோனாவுக்கு சிலையா\nஃபர்ஸ்ட் இயர்... ஃபர்ஸ்ட் டே\nதனித்திருக்கும் தெய்வங்கள்... தவித்திருக்கும் கலைஞர்கள்\nவிசாரணை ஆணைய செலவு: நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்துக்கு ரூ.4.23 கோடி... ஆறுமுகசாமி ஆணையத்துக்கு\nநெல்லை: தேர்தல் முன் விரோதத்தால் தாக்குதல் - 4 குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற தாய்\nஹரியானா: சாதிரீதியிலான அவதூறுப் பேச்சு: யுவராஜ் சிங் கைதாகி, ஜாமீனில் விடுதலை\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\n``ஏழைகளுக்கு சேவை செய்வேன்; தவறான வழியில் செல்ல மாட்டேன்\"- ஷாருக்கான் மகன் ஆர்யன் கான்\nகேரளா: நிலச்சரிவில் 6 பேர் பலி; சில பகுதிகளில் போக்குவரத்து நிறுத்தம்; சபரிமலையில் அனுமதி மறுப்பு\nTamil News Today: `4 ஆண்டுகளாக மனதில் இருந்த பாரத்தை இறக்கி வைத்துள்ளேன்’ - சசிகலா பேட்டி\nஇந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 50 - அல்பெரூனியின் இந்தியா\nதனித்திருக்கும் தெய்வங்கள்... தவித்திருக்கும் கலைஞர்கள்\nஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்\nபசி, பட்டினியை வெளியில் காட்டிக்கொள்ளாமல் கம்பீரமாக வாழ்ந்த கலைஞர்களையும் அது தெருவுக்கு இழுத்துவந்துவிட்டது.\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்\nதெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism\nசொந்த ஊர் புதுக்கோட்டை. பத்திரிக்கைத் துறையில் 7வருஷ அனுபவம். சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட நகரங்கள்�� வேலை பார்த்து விட்டு, இப்போ சொந்த ஊர்ல விகடனின் கைபிடித்து நடக்கிறேன். சமூக அவலங்களையும், எளிய மனிதர்களின் வாழ்வியலையும் அப்படியே படம் புடிச்சி, எழுத்து வடிவத்தில கொண்டுவந்து ஏதாவது மாற்றத்தை உருவாக்கணும். இதற்காகத் தான் விகடனுடனான இந்த பயணம்.\nஇதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnarealestate.lk/", "date_download": "2021-10-19T12:55:42Z", "digest": "sha1:2XHCDVIYBILAN66Z6T7JVLCOCWGU7FS7", "length": 36607, "nlines": 773, "source_domain": "jaffnarealestate.lk", "title": "Re/Max North Realty – Re/Max North Realty", "raw_content": "\nவத்தளையில் 2 மாடி வீடு விற்பனைக்கு\nவத்தளையில் 2 மாடி வீடு விற்பனைக்கு (பள்ளியாவத்த ,ஹெந்தள,வத்தளை ) நில அளவு – 13 பேர்ச் வீட்டின் அளவு -3000 சதுர அடி இவ் வீட்டில் ...Read more\nகொழும்பு 15 இல் வணிகக்கட்டிடம் வாடகைக்கு அல்லது குத்தகைக்கு\nகொழும்பு 15 இல் வணிகக்கட்டிடம் வாடகைக்கு அல்லது குத்தகைக்கு இல 22 பார்ம் வீதி, மட்டக்குளி ,கொழும்பு 15 இக் கட்டிடத்தில் மொத்தமாக 5 அறைகள் அதில் ...Read more\nகிராமக்கோட்டு சந்தி பருத்தித்துறையில் வணிக கட்டிடம் விற்பனைக்கு\nகிராமக்கோட்டு சந்தி பருத்தித்துறையில் வணிக கட்டிடம் விற்பனைக்கு நில அளவு –6.1பரப்பு மொத்த சதுர அடி –50771  கட்டிட அம்சங்கள்  நில கீழ் தளத்தில் ...Read more\nவண்ணார்பண்ணையில் புதிதாக கட்டப்பட்ட மாடி வீடு விற்பனைக்கு\nவண்ணார்பண்ணையில் புதிதாக கட்டப்பட்ட மாடி வீடு விற்பனைக்கு நில அளவு – 2 பரப்பு 5.6 குளி சிறந்த சுற்றுப்புற சூழல்,அக்கம்,குடியிருப்பு சுற்றிவர மதிலால் சூழப்பட்டுள்ளது சொத்து ...Read more\nகொழும்புத்துறையில் ஒன்றேகால் பரப்பில் அமைந்த இரண்டு கடையுடன் கூடிய புதிய மாடி வீடு விற்பனைக்கு (வடக்கு வாசல் வீடு)\nகொழும்புத்துறையில் ஒன்றேகால் பரப்பில் அமைந்த இரண்டு கடையுடன் கூடிய புதிய மாடி வீடு விற்பனைக்கு (வடக்கு வாசல் வீடு) • ஐயனார் கோவில் 90m தூரத்திலும் • ...Read more\nஎழில் கொஞ்சும் கந்தன் வாழ் நல்லூரில் நோர்வே நாட்டு கட்டிடக்கலை நிபுணர்களினால் வடிவமைக்கப்பட்ட புதிய சொகுசு வீடு விற்பனைக்கு\nஎழில் கொஞ்சும் கந்தன் வாழ் நல்லூரில் நோர்வே நாட்டு கட்டிடக்கலை நிபுணர்களினால் வடிவமைக்கப்பட்ட புதிய சொகுசு வீடு விற்பனைக்கு, சகல ஆடம்பரமான வசதிகளுடன் ஒரு வீட்டிற்���ு தேவையான ...Read more\nவிதானையார் ஒழுங்கை, சுண்டுக்குளி, யாழ்ப்பாணத்தில் 1 1/4 பரப்பில் அழகிய மாடி வீடு விற்பனைக்கு,\nவிதானையார் ஒழுங்கை, சுண்டுக்குளி, யாழ்ப்பாணத்தில் 1 1/4 பரப்பில் அழகிய மாடி வீடு விற்பனைக்கு, • பிரபலமான சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மற்றும் சென். ஜோன்ஸ் கல்லூரி ...Read more\nதிருகோணமலை நிலாவெளியில் பிரபலமான கண்கவர் உல்லாச விருந்தினர் மாளிகை விற்பனைக்கு. (Palmera Eco Resorts ) (824 , கோபாலபுரம், நிலாவெளி, திருகோணமலை)\nதிருகோணமலை நிலாவெளியில் பிரபலமான கண்கவர் உல்லாச விருந்தினர் மாளிகை விற்பனைக்கு. (Palmera Eco Resorts ) (824 , கோபாலபுரம், நிலாவெளி, திருகோணமலை) மொத்த நில அளவு: ...Read more\nஇயற்கை எழிலோடு கந்தன் வாழ் நல்லூரில் விருந்தினர் இல்லம் ஒன்று விற்பனைக்கு\nஇயற்கை எழிலோடு கந்தன் வாழ் நல்லூரில் விருந்தினர் இல்லம் ஒன்று விற்பனைக்கு,  இயற்கை எழிலோடு அமைதியான இடத்தில் கந்தன் வாழ் நல்லூரில் இவ் அழகான விருந்தினர் ...Read more\nஅராலியில் புத்தம் புதிதாக கட்டப்பட்ட வீடு விற்பனைக்கு\nஅராலியில் புத்தம் புதிதாக கட்டப்பட்ட வீடு விற்பனைக்கு மொத்த நிலப்பரப்பு :- 04 பரப்பு இவ் வீட்டில் 03அறைகள் 03குளியலறைகள் போன்றன காணப்படுகின்றன. கோரப்படும் விலை :- ...Read more\nயாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் புதிய வீடு ஒன்று விற்பனைக்கு\n‘ரோஸ் வில்லா’ பாரம்பரிய இல்லம் – உடுவில்\n2 மாடி வீடு விற்பனைக்கு (3)\n2 வீடுகள் விற்பனைக்கு (1)\nஅரிசி ஆலை விற்பனைக்கு (1)\nஉல்லாச விருந்தினர் மாளிகை (1)\nகடையுடன் காணி விற்பனைக்கு (1)\nகாணியுடன் பகுதியளவு கட்டப்பட்ட வீடு விற்பனைக்கு (4)\nகாணியுடன் வீடு விற்பனைக்கு (33)\nகைதடியில் வீட்டுடன் கூடிய காணி விற்பனைக்கு (1)\nசிறிய வீட்டுடன் இணைந்த காணி விற்பனைக்கு. (1)\nநல்லூரில் Guest House விற்பனைக்கு (1)\nவணிக / குடியிருப்பு சொத்து விற்பனைக்கு (1)\nவிசாலமான நிலத்துடன் கூடிய கட்டிடத்தொகுதி விற்பனைக்கு (2)\nவிசாலமான நிலத்துடன் வீடு விற்பனைக்கு (1)\nவியாபாரக் கட்டிடம் குத்தகைக்கு (6)\nவியாபாரக் கட்டிடம் வாடகைக்கு (2)\nவியாபாரக் கட்டிடம் விற்பனைக்கு (16)\nவிவசாய நிலம் விற்பனைக்கு (3)\nகொழும்பு - 14 (1)\nகொழும்பு - 15 (1)\nகொழும்பு - 6 (1)\nபழைய பூங்கா வீதி (1)\nகொழும்பு - 14 (1)\nகொழும்பு - 15 (1)\nகொழும்பு - 6 (1)\n2 மாடி வீடு விற்பனைக்கு (3)\n2 வீடுகள் விற்பனைக்கு (1)\nஅரிசி ஆலை விற்பனைக்கு (1)\nஉல்லாச விருந்தினர் மாளிகை (1)\nக���ையுடன் காணி விற்பனைக்கு (1)\nகாணியுடன் பகுதியளவு கட்டப்பட்ட வீடு விற்பனைக்கு (4)\nகாணியுடன் வீடு விற்பனைக்கு (33)\nகைதடியில் வீட்டுடன் கூடிய காணி விற்பனைக்கு (1)\nசிறிய வீட்டுடன் இணைந்த காணி விற்பனைக்கு. (1)\nநல்லூரில் Guest House விற்பனைக்கு (1)\nவணிக / குடியிருப்பு சொத்து விற்பனைக்கு (1)\nவிசாலமான நிலத்துடன் கூடிய கட்டிடத்தொகுதி விற்பனைக்கு (2)\nவிசாலமான நிலத்துடன் வீடு விற்பனைக்கு (1)\nவியாபாரக் கட்டிடம் குத்தகைக்கு (6)\nவியாபாரக் கட்டிடம் வாடகைக்கு (2)\nவியாபாரக் கட்டிடம் விற்பனைக்கு (16)\nவிவசாய நிலம் விற்பனைக்கு (3)\nகொழும்பு - 14 (1)\nகொழும்பு - 15 (1)\nகொழும்பு - 6 (1)\nபழைய பூங்கா வீதி (1)\nகொழும்பு - 14 (1)\nகொழும்பு - 15 (1)\nகொழும்பு - 6 (1)\nஊரணி விஸ்கி பாயிண்டில் காணி விற்பனைக்கு\nஊரணி விஸ்கி பாயிண்டில் காணி விற்பனைக்கு நில அளவு – 50 பரப்பு நல்ல அக்கம் கொண்ட நல்ல சூழல் சொத்து முறையாக பராம [more]\nஊரணி விஸ்கி பாயிண்டில் காணி விற்பனைக்கு நில அளவு – 50 பரப்பு நல்ல அக்கம் கொண்ட நல்ல சூழல் சொத்து முறையாக பராம [more]\nமருதனார்மடத்தில் காணி விற்பனைக்கு நில அளவு – 15 பரப்பு குடியிருப்புக்கு மிகவும் பொருத்தமானது நல்ல சுற்றுப்புற [more]\nமருதனார்மடத்தில் காணி விற்பனைக்கு நில அளவு – 15 பரப்பு குடியிருப்புக்கு மிகவும் பொருத்தமானது நல்ல சுற்றுப்புற [more]\nநாவற்குழியில் வீட்டுடன் காணி விற்பனைக்கு\nநாவற்குழியில் வீட்டுடன் காணி விற்பனைக்கு நில அளவு – 1.5பரப்பு சுவரால் முழுமையாக சூழப்பட்டுள்ளது நல்ல அக்கம் க [more]\nநாவற்குழியில் வீட்டுடன் காணி விற்பனைக்கு நில அளவு – 1.5பரப்பு சுவரால் முழுமையாக சூழப்பட்டுள்ளது நல்ல அக்கம் க [more]\nஏன் எம்மை தெரிவு செய்ய வேண்டும்\nரீமெக்ஸ் 110 க்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்படுகிறது, மற்றும் 750010 அலுவலகங்களும் உலகளவில் 130,000 ரியல்டர்களும் கொண்டது. ரீமெக்க்ஸை விட அதிகம் ரியல் எஸ்டேட் விற்பவர்கள் யாரும் இல்லை.\nஉள்ளூர் மற்றும் சர்வதேச அளவில் உங்கள் சொத்து அதிகபட்ச வெளிப்பாடு பெறுவதை நாங்கள் உறுதி செய்கிறோம். அது உங்கள் விற்பனையை அதிகரிக்க எவ்வாறு உதவும் எண்பதை அறிய எங்கள் தரகர் ஒருவருடன் தொடர்பு கொள்ளுங்கள்.\nஉங்கள் சொத்தின் மதிப்பு என்ன\nஎம்முடைய ரியல் எஸ்டேட் துறையில் புலமைத்துவமும் அனுபவமும் வாய்ந்த சொத்து மதிப்பீட்டாளர்களின் ஊடாக உங்கள் சொத்துப் பெறுமதியை கணியுங்கள்.\nடிஜிடல் மீடியாவும் சமூக வலைத்தளங்களும்\nஇன்றைய கால முன்னேற்றத்தில் தடம்பதித்திருக்கும் அனைத்து புதிய தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தி உங்கள் சொத்துக்களை அதிகமானவர்களிடம் கொண்டு சேர்க்கிறோம்.\nஉங்களுக்கான பதில்களை நாம் தருகிறோம\nயாழ்ப்பாணம், யாழ்ப்பாணம் நகர், யாழ்ப்பாணம்\nகொழும்பு - 6, கொழும்பு - 6\nகிருலபனையில் வீடு வாடகைக்கு உண்டு. (கொழும்பு...\nகிருலபனையில் வீடு வாடகைக்கு உண்டு. (கொழும்பு – 6) 🏠 • இணைக்கப்பட்ட குளியலறையுடன் 4 படுக்கையறைகள் • சரக்கறை கப [more]\nகிருலபனையில் வீடு வாடகைக்கு உண்டு. (கொழும்பு – 6) 🏠 • இணைக்கப்பட்ட குளியலறையுடன் 4 படுக்கையறைகள் • சரக்கறை கப [more]\n83, கண்ணத்திட்டி வீதி, யாழ்ப்பாணம், இலங்கை\nபொலிகண்டியில் அழகிய வீடு விற்பனைக்க... LKR 24,000,000\nதெல்லிப்பளை,துர்க்காபுரம் கல்வளவு ஒ... LKR 5,000,000\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyaagarathi.com/category/other-news/the-information/", "date_download": "2021-10-19T11:30:19Z", "digest": "sha1:LWJLEUXJHYQNBESVOZH2RO5V3NKYKG3B", "length": 26943, "nlines": 146, "source_domain": "puthiyaagarathi.com", "title": "தகவல் - புதிய அகராதி", "raw_content": "Tuesday, October 19மெய்ப்பொருள் காண்பது அறிவு\nஇலக்கியம், சிறப்பு கட்டுரைகள், தகவல், முக்கிய செய்திகள்\nஎத்தொகை கொடுத்தாலும் ஈடாகாது நற்குறுந்தொகைக்கு. குறுந்தொகையானாலும், நெடுந்தொகையாக சிலாகித்துப் பேசிக்கொண்டே இருக்கலாம். 'இலக்கியம் பேசுவோம்' பகுதியில் குறுந்தொகையில் இருந்து இன்னொரு பாடலோடு வந்திருக்கிறேன். உலகம் முழுவதும் எத்தனை முகங்கள்... எத்தனை மொழிகள் இருந்தாலும் ஒரு சொல் கேட்ட மாத்திரத்திலேயே நமக்குள் ஒரு கணம், பேருவகையை தந்து விட்டுப் போகும். அதுதான், காதல். அதனால்தான் மகாகவி பாரதி, 'ஆதலால் காதல் செய்வீர் உலகத்தீரே' என அறைகூவல் விடுத்தான். காதலினால் கலவி உண்டாம்; காதலினால் கவலைகள் போம்' என்றான். உள்ளத்தால் கூடிய காதலின் உச்சக்கட்ட அக்னாலெட்ஜ்மென்ட்தான், உடல் தீண்டல். உள்ளத்தால் இணைந்த பிறகு, உடல்தீண்டல் நிகழ்கிறது. அங்கே, ஈருடல் ஓருயிராகிறது. தலைவனும், தலைவியும் கட்டி அணைத்துக் கொண்டால் அங்கே காற்றுகூட இடையறுத்துச் செல்லக்கூடாதாம். அந்தளவு\nஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் ஆக. 23ல் மாணவர் சேர்க்கை தொடக்கம்\nகல்வி, தகவல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்\nஅரசு கலை மற்றும் அறி��ியல் கல்லூரிகளில், வரும் 23ம் தேதி முதல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வை தொடங்குமாறு கல்லூரிக்கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 143 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இக்கல்லூரிகளில் சேர ஏற்கனவே விண்ணப்பங்கள் பெறப்பட்டு உள்ளன. இந்நிலையில், நடப்புக் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக் கலந்தாய்வை வரும் 23ம் தேதி முதல் தொடங்க கல்லூரிக்கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. செப். 3ம் தேதிக்குள் மாணவர் சேர்க்கையை நடத்தி முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. கொரோனா தொற்றின் தாக்கத்தைப் பொறுத்து அந்தந்தக் கல்லூரி முதல்வர்கள் ஆன்லைன் அல்லது நேரடி கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்திக்கொள்ள வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு உள்ளன. பிளஸ்2 மதிப்பெண் சான்றிதழ், இதர சான்றிதழ்களை சரிபார்த்த பின்னரே சேர்க\nகொரோனா தொற்றால் இறந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு ஆயுள் முழுக்க நிவாரண உதவி\nதகவல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்\nஇஎஸ்ஐசி திட்டத்தில் சந்தாதாரராக உள்ள ஒரு தொழிலாளி, கொரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்திருந்தால், அவர்களின் குடும்பத்தினருக்கு ஆயுள் முழுக்க நிவாரண உதவித்தொகை கிடைக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் தொழிலாளர்கள் நலன்களுக்காக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி எனப்படும் இபிஎப்ஓ மற்றும் தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம் எனப்படும் இஎஸ்ஐசி (Employee's State Insurance Corporation). இரண்டுமே தொழிலாளர் நலன்களுக்கானதுதான் என்றாலும், ஒவ்வொன்றும் அதன் அளவில் தனிச்சிறப்பு வாய்ந்ததுதான். பணியில் இருக்கும் தொழிலாளர் வேலை இழந்த பிறகோ அல்லது ஓய்வு பெற்ற பிறகோ அவருக்கு சமூகப்பாதுகாப்பை வழங்குவது இபிஎப்ஓ (Employees' Provident Fund Organisation). அதே தொழிலாளி, பணியில் இருக்கும்போதே அவருக்கு சமூகப்பாதுகாப்பை ஏற்படுத்\nதொழில் தொடங்க 5 கோடி வரை கடனுதவி\n'நீட்ஸ்' திட்டத்தின் கீழ், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் புதிதாக தொழில் துவங்க 10 லட்சம் முதல் 5 கோடி ரூபாய் வரை மாவட்ட தொழில் மையம் மூலமாக கடனுதவி வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. புதிய தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் வகையில், 'புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம்' (நீட்ஸ��) என்ற திட்டம், அந்தந்த மாவட்ட தொழில் மையம் மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் உற்பத்தி, சேவை தொழில்களுக்கு 10 லட்சம் ரூபாய் முதல் அதிகபட்சமாக 5 கோடி ரூபாய் வரை திட்ட மதிப்பீடு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இத்திட்டத்தில் கடனுதவி பெற, குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ஏதுமில்லை. பட்டப்படிப்பு / பட்டயப்படிப்பு / தொழில் பயிற்சி தேர்ச்சி பெற்ற 21 வயது முதல் 35 வரை உள்ள ஆண், பெண் விண்ணப்பிக்கலாம். சிறப்பு பிரிவினருக்கு மட்டும் அதி\nநீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்னும் 23 நாள்தான் அவகாசம்\nகல்வி, தகவல், முக்கிய செய்திகள்\nஅடுத்த ஆண்டு நடக்கவுள்ள தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு எனப்படும் 'நீட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க, இன்னும் 23 நாள்கள் மட்டுமே அவகாசம் உள்ளது. இளநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளில் சேர நீட் தேர்வில் வெற்றி பெற வேண்டியது கட்டாயம். வருகிற 2020ம் ஆண்டு மே 3ம் தேதி நடைபெற உள்ள நீட் தேர்வுக்கு விண்ணப்பம் பதிவு செய்யும் நடைமுறைகள் டிசம்பர் 2, 2019ம் தேதி தொடங்கியது. விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, பதிவேற்றம் செய்ய கடைசி நாள், டிசம்பர் 31ம் தேதி ஆகும். நீட் தேர்வுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே பதிவு செய்ய வேண்டும். அஞ்சல் வழியில் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்கப்பட மாட்டாது. இதற்கென தொடங்கப்பட்டுள்ள தேசிய தேர்வு முகமையின் இணையதளத்தில் விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள் தெளிவாக குறிப்பிடப்பட்டு உள்ளன. மாதிரி விண்ணப்பமும் வழங்கப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு விண்ண\nவிளையாட்டு வீரர்களுக்கு கைநிறைய சம்பளத்துடன் தபால் துறையில் வேலை\nபிளஸ்2 முடித்த, விளையாட்டுத்துறையில் சிறந்த நிலையில் உள்ளவர்களுக்கு தமிழ்நாடு அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது. இத்துறையில் காலியாக உள்ள Multi tasking staff, Postman, Postal assistant / Sorting assistant பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மொத்தம் 231 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கான அறிவிப்பு கடந்த 25.11.2019ம் தேதியன்று வெளியிடப்பட்டது. விண்ணப்பிக்க, 31.12.2019ம் தேதி கடைசி நாள். முற்றிலும் தகுதி (meritorious) அடிப்படையில் மட்டுமே இப்பணியிடங்கள் நிரப்பப்படும். பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவோர் தமிழ்நாட்டில் எங்கு வேண்டுமானாலும் பணியமர்த்தப்பட���வார்கள். காலியிடம் மற்றும் ஊதிய விவரம்: போஸ்டல் அசிஸ்டன்ட்: 89 சம்பளம்: ரூ.25500 - ரூ.81100 போஸ்ட்மேன்: 65 சம்பளம்: ரூ.21700 -\nநாளை நடக்க இருந்த கூட்டுறவு உதவியாளர் தேர்வு தள்ளிவைப்பு\nசேலத்தில், நாளை (நவ. 23) நடக்க இருந்த கூட்டுறவு வங்கி, கூட்டுறவு சங்க உதவியாளர் பணியிடங்களுக்கான போட்டித்தேர்வுகள் திடீரென்று தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் கிளைகளில் காலியாக உள்ள 89 உதவியாளர் பணியிடங்கள் மற்றும் சேலம் மாவட்டத்தில் உள்ள இதர கூட்டுறவு வங்கிகள், சங்கங்களில் காலியாக உள்ள 52 உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு நாளை (நவ. 23ம் தேதி) மற்றும் நாளை மறுநாள் (நவ. 24) போட்டித்தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டதோடு, இதற்கான தேர்வுக்கூட அனுமதி சீட்டுகளும் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய இணையதளத்தின் மூலம் வெளியிடப்பட்டு வந்தது. இந்நிலையில், உயர்நீதிமன்ற ஆணையின்படி நவ. 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் (நாளை மற்றும் நாளை மறுநாள் ) நடக்க இருந்த\nசேலம்: கூட்டுறவு உதவியாளர் பணிக்கு தேர்வு; நவ. 23, 24ல் நடக்கிறது\nசேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் இதர கூட்டுறவு அமைப்புகளில் காலியாக உள்ள உதவியாளர் பதவிக்கான போட்டித்தேர்வு நவ.23, 24 ஆகிய நாள்களில் நடக்கிறது. சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகம் மற்றும் அதன் கிளைகளில் காலியாக உள்ள 89 உதவியாளர் பணியிடங்கள், போட்டித்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பு, கடந்த 28.8.2019ம் தேதி (அறிவிக்கை எண்: 02/2019) வெளியிடப்பட்டது. அதேபோல், மத்திய கூட்டுறவு வங்கி தவிர இதர நகர கூட்டுறவு வங்கிகள், கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள 52 உதவியாளர் பணியிடங்களும் மேற்சொன்ன தேர்வு முறைகள் மூலம் நிரப்பப்பட உள்ளன. இதுகுறித்த அறிவிப்பும் மேற்கண்ட தேதியில் (அறிவிக்கை எண்: 01/2019) வெளியிடப்பட்டது. இனசுழற்சி உள்ளிட்ட அனைத்து இடஒதுக்கீடு விதிமுறைகளின்படி இப்பணியிடங\nடிகிரி படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு 10000 ரூபாய் உதவித்தொகை\nகல்வி, தகவல், முக்கிய செய்திகள்\n(தகவல்) 'பிச்சை புகினும் கற்கை நன்றே' என்பதுதான் அவ்வை வாக்கு. பொருளாதார நெருக்கடிகள் கல்வி பயிலும் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு எந்த விதத்திலும் தடைக்கல்லாக இருந்து விடக்கூடாது என்பதற்காகவே, மத்திய அரசு உதவித்தொகை திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. மத்திய அரசின் பல உதவித்தொகைத் திட்டங்கள் மாணவர்களுக்கு தெரிவதில்லை அல்லது கல்வி நிலையங்கள் அதுபற்றி பெரிதாக அக்கறை காட்டுவதில்லை. அது என்ன திட்டம் பிளஸ்-2 முடித்துவிட்டு, நடப்புக் கல்வி ஆண்டில் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு மத்திய அரசு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம். தகுதிகள் என்னென்ன பிளஸ்-2 முடித்துவிட்டு, நடப்புக் கல்வி ஆண்டில் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு மத்திய அரசு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம். தகுதிகள் என்னென்ன: 1. பிளஸ்-2வில் 80 சதவீதம் மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும் 2. பிளஸ்-2வை பள்ளியில் சேர்ந்து பயின்றிருக்க வேண்டும். தனித்தேர்வராகவோ, தொலைநிலைக் கல்வித் திட்டத்தின் மூலமோ படித்திர\nபத்தாம் வகுப்பு மாணவர்கள் தேசிய திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு\nகல்வி, தகவல், முக்கிய செய்திகள்\n-தகவல்- பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் தேசிய திறனாய்வுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க, தமிழக அரசுத்தேர்வுகள் இயக்ககம் அழைப்பு விடுத்துள்ளது. பள்ளி மாணவர்களிடையே அறிவியல், சமூக அறிவியல் படிப்புகளின் மீது ஆர்வத்தைத் தூண்டும் வகையில் தேசிய திறனாய்வுத்தேர்வு (NTSE - National Talent Search Examination) நடத்தப்பட்டு, உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. 1963ம் ஆண்டு முதல் இத்திட்டம் அமலில் இருந்து வருகிறது. தேசியக்கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்குழு (NCERT) இத்தேர்வை நடத்தி வருகிறது. அரசு அங்கீகாரம் பெற்ற அனைத்து அரசு, தனியார், நிதியுதவி பெறும் பள்ளிகளில் தற்போது பத்தாம் வகுப்புப் படித்துக்கொண்டிருக்கும் மாணவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். இரண்டு நிலைகளில் இத்தேர்வு நடத்தப்படுகிறது. முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் இரண்டாம்\nபுற்றுநோயை குணமாக்கும் ஷிமோகா வைத்தியர்; நல்லதை நாலு பேருக்கு சொல்லலாமே\nஆளுங்கட்சியிடம் தஞ்சம் புகுந்த ஊழல் மாஜி துணைவேந்தர் தோண்டி துருவும் லஞ்ச ஒழிப்புத்துறை\nசேலம் மாநகராட்சியில் குப்பை வண்டிகள் வாங்கியதிலும் கொள்ளை\nதேவதாசி முறை ஒழிப்பு போராளி முத்துலட்சுமி ரெட்டி\nசட்டம் அறிவோம்: குழந்தையை தத்து ��டுப்பது எப்படி\nசட்டம் அறிவோம்: பூர்வீக சொத்தில் பெண்ணுக்கு உரிமை உண்டா\nமக்களுக்காக ஜமீன் சொத்துகளை வாரி வழங்கிய 'வாழும் அதிசயம்' காளியண்ணன்\n: வரவு எட்டணா செலவு பத்தணா...: (தொடர்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaipoonga.net/business/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9/", "date_download": "2021-10-19T11:05:47Z", "digest": "sha1:OLYDGNC7G46AKB7LA23QBBNHQU4QIQOM", "length": 15831, "nlines": 193, "source_domain": "kalaipoonga.net", "title": "மேன்கைண்ட் பார்மா நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக விஜய் சேதுபதி நியமனம் - Kalaipoonga", "raw_content": "\nHome Business மேன்கைண்ட் பார்மா நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக விஜய் சேதுபதி நியமனம்\nமேன்கைண்ட் பார்மா நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக விஜய் சேதுபதி நியமனம்\nமேன்கைண்ட் பார்மா நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக விஜய் சேதுபதி நியமனம்\nஇந்தியாவின் முன்னணி மருந்து நிறுவனமான மேன்கைண்ட் பார்மா, தமிழ் சினிமாவில் முக முக்கிய நடிகர்களில் ஒருவரான இந்திய நடிகர் மற்றும் தயாரிப்பாளர் விஜய்சேதுபதியை பிராண்ட் அம்பாசிடராக நியமித்துள்ளதை அறிவித்துள்ளது. தொழில்துறையில் மிகச்சிறந்த நடிகர் மற்றும் ரசிகர்களால் “மக்கள் செல்வன்” என கொண்டாடப்படுபவர் விஜய்சேதுபதி. இவரை மேன்கைண்ட் பார்மா நிறுவனத்துடன் இணைத்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.\nமலிவான மருந்துகள் மற்றும் அவற்றின் சிஎஸ்ஆர் செயல்பாடுகளை வழங்குவதன் மூலம் மனிதகுல வளர்ச்சிக்காக தொடர்ந்து சேவையாற்றிவரும் நிறுவனமாகும். விஜய் சேதுபதி மிகப்பெரிய நட்சத்திரம் மட்டுமல்ல மிகச்சிறந்த மனிதர். நல்ல இதயம் கொண்டவர். இந்த கூட்டணியானது நிச்சயம் மிகப்பெரிய செயல்பாடுகளை நிகழ்த்தும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. இந்தக் கூட்டணி மற்றும் மேன்கைண்ட் பார்மா நிறுவனமானது தென்னிந்திய திரைப்பட ஊழியர் கூட்டமைப்பிற்கு (FEFSI) ரூ. 31 லட்சம் ரூபாய் நன்கொடை அளிக்க இருக்கிறது. FEFSI என்பது தமிழ்நாட்டில் தமிழ் திரைப்படத் துறையைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர்களைக் கொண்ட ஒரு இந்திய அமைப்பாகும். நன் கொடையளிக்கப்பட்ட தொகை தொற்றுநோயால் மந்தநிலையை எதிர்கொள்ள அனைவருக்கும் உதவும். தவிர, அமைப்பு மற்றும் அதன் உறுப்பினர்களின் வளர்ச்சிக்குக் கைகொடுக்கும்.\nவிஜய் சேதுபதி ��ிறந்த நடிகருக்கான பிரிவில் 15 விருதுகளை வென்றுள்ளார், இதில் பிலிம்பேர் விருது- தமிழ், தேசிய திரைப்பட விருது, சிறந்த நடிகருக்கான விஜய் விருது மற்றும் பல அடங்கும்.\nஇந்த கூட்டாண்மை குறித்து பேசிய சூப்பர் ஸ்டார் விஜய் சேதுபதி, “மேன்கைண்ட் பார்மாவுடன் பிராண்ட் அம்பாசிடராக இணைவது மற்றும் தெற்கு சந்தையில் பிராண்டை பிரதிநிதித்துவப்படுத்துவது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும், நிறுவனம் ‘மேன்கைண்ட்’ என்பதன் உண்மையான அர்த்தத்தையும், தொழிலில் ‘சேவை செய்யும் வாழ்க்கையின்’ முழக்கத்தையும் சரியாக நியாயப்படுத்துகிறது. மேன் கைண்ட் பார்மா குடும்பத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் பெருமைப்படுகிறேன், மேலும் சமூகத்திற்கு ஒன்றாக சேவை செய்வேன் என்று நம்புகிறேன்” என்றார்.\nநிகழ்ச்சியில் பேசிய, மேன்கைண்ட் பார்மாவின் நிர்வாக இயக்குநரும் துணைத் தலைவருமான ராஜீவ் ஜுனேஜா பேசும்போது, “விஜய் சேதுபதி ஒரு பிராண்ட் அம்பாசிடராக எங்களுக்கு ஒரு சிறந்த ஆளுமை என்று நாங்கள் நம்புகிறோம் . மேலும், பார்வையாளர்களுடன் ஒரு உணர்ச்சிபூர்வமான தொடர்பு உள்ளது, அதனால் மக்கள் அவரை” மக்களின் புதையல் “என்று அழைக்கிறார்கள். மேன்கைண்ட் பார்மா மற்றும் சூப்பர் ஸ்டார் ஆகிய இருவருக்கும் பொதுவான ஒத்துழைப்பு மற்றும் சிந்தனை ஒத்த செயல்முறையும் இருக்கிறது. மேன்கைண்ட் பார்மா நிறுவனமானது எப்போதும் சுயநலமின்றி சமூகத்தின் முன்னேற்றத்திற்கு பங்களிக்கிறோம் மற்றும் வாழ்க்கைக்கு சேவை செய்வோம் என்று நம்புகிறோம், அதோடு, FEFSI க்கு நன்கொடையாக வழங்கப்பட்ட டோக்கன் தொகை நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உறுதியளிக்க உதவும் என்று நாங்கள் நம்புகிறோம். கூடுதலாக, சமுதாய முன்னேற்றத்திற்காக நாம் அனைவரும் தன்னலமின்றி தொடர்ந்து பங்களிப்போம்.” என்று கூறினார்.\nமேன்கைண்ட் பார்மா நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக விஜய் சேதுபதி நியமனம்\nPrevious articleபாலிவுட் நடிகர் வித்யுத் ஜாம்வால் நடித்திருக்கும் ‘சனக்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nகல்வி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் தமிழ்நாடு முன்னுதாரணம் – ஐக்கிய நாட்டின் சுற்றுச்சூழல்துறையின் நிர்வாக இயக்குனர் எர்ரிக் சால்ஹிம் பெருமிதம்\nசர்ச்சைக்குரிய வீடியோ பதிவிட்டதால் பிக்பாஸ் பிரபலம் கைது\nசர்ச்ச���க்குரிய வீடியோ பதிவிட்டதால் பிக்பாஸ் பிரபலம் கைது பாலிவுட்டில் இளம் நடிகையாக வலம் வருபவர் யுவிகா சவுத்ரி. இவர், இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் மிகவும் பிரபலமானார். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும்...\nஒற்றை வார்த்தையில் நடிகர் விஜய்யை புகழ்ந்த ‘பீஸ்ட்’ நாயகி\nஒற்றை வார்த்தையில் நடிகர் விஜய்யை புகழ்ந்த ‘பீஸ்ட்’ நாயகி விஜய் மற்றும் நெல்சன் கூட்டணியில் உருவாகி வருகிறது ‘பீஸ்ட்’ அதிரடி ஆக்ஷனில் உருவாகி வரும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. இப்படத்தில்...\nராகவா லாரன்ஸ் – பிரியா பவானி சங்கர் நடிக்கும் ருத்ரன் படத்தில் ‘பாடாத பாட்டெல்லாம்’ ரீமிக்ஸ் பாடல்\nராகவா லாரன்ஸ் - பிரியா பவானி சங்கர் நடிக்கும் ருத்ரன் படத்தில் ‘பாடாத பாட்டெல்லாம்’ ரீமிக்ஸ் பாடல் பல வெற்றி படங்களை தயாரித்த 5 ஸ்டார் கிரியேஷன்ஸ் S.கதிரேசன் தயாரித்து இயக்கும் “ருத்ரன்” படத்தில்...\nசர்ச்சைக்குரிய வீடியோ பதிவிட்டதால் பிக்பாஸ் பிரபலம் கைது\nசர்ச்சைக்குரிய வீடியோ பதிவிட்டதால் பிக்பாஸ் பிரபலம் கைது பாலிவுட்டில் இளம் நடிகையாக வலம் வருபவர் யுவிகா சவுத்ரி. இவர், இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் மிகவும் பிரபலமானார். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும்...\nஒற்றை வார்த்தையில் நடிகர் விஜய்யை புகழ்ந்த ‘பீஸ்ட்’ நாயகி\nஒற்றை வார்த்தையில் நடிகர் விஜய்யை புகழ்ந்த ‘பீஸ்ட்’ நாயகி விஜய் மற்றும் நெல்சன் கூட்டணியில் உருவாகி வருகிறது ‘பீஸ்ட்’ அதிரடி ஆக்ஷனில் உருவாகி வரும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. இப்படத்தில்...\nராகவா லாரன்ஸ் – பிரியா பவானி சங்கர் நடிக்கும் ருத்ரன் படத்தில் ‘பாடாத பாட்டெல்லாம்’ ரீமிக்ஸ் பாடல்\nராகவா லாரன்ஸ் - பிரியா பவானி சங்கர் நடிக்கும் ருத்ரன் படத்தில் ‘பாடாத பாட்டெல்லாம்’ ரீமிக்ஸ் பாடல் பல வெற்றி படங்களை தயாரித்த 5 ஸ்டார் கிரியேஷன்ஸ் S.கதிரேசன் தயாரித்து இயக்கும் “ருத்ரன்” படத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-10-19T12:32:39Z", "digest": "sha1:GQWV6ZYSATINPXSZXKEPQH5VFLSGPZ2D", "length": 5726, "nlines": 121, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:கணிதம் மற்றும் கோட்பாட்டு உயிரியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:கணிதம் மற்றும் கோட்பாட்டு உயிரியல்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇப்பகுப்புக்குரிய முதன்மைக் கட்டுரை: கணிதம் மற்றும் கோட்பாட்டு உயிரியல்.\n\"கணிதம் மற்றும் கோட்பாட்டு உயிரியல்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nகணிதம் மற்றும் கோட்பாட்டு உயிரியல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 சனவரி 2020, 00:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akuranatoday.com/23736/", "date_download": "2021-10-19T12:02:11Z", "digest": "sha1:DCGT5CL46OG2XXQZTGHMTCGZDPXNUWNR", "length": 2361, "nlines": 70, "source_domain": "www.akuranatoday.com", "title": "இன்றைய தங்க விலை (14-09-2020) திங்கட்கிழமை - Akurana Today", "raw_content": "\nஇன்றைய தங்க விலை (14-09-2020) திங்கட்கிழமை\nஇன்று தங்க விலை பவுனுக்கு ரூபா 500ஆல் அதிகரிப்பினை கொண்டுள்ளது, இன்றைய விலை விபரங்கள் வருமாறு.\n24 கரட் தங்கம் – 98,500 ரூபா\n22 கரட் தங்கம் – 90,300 ரூபா\n21 கரட் தங்கம் – 84,300 ரூபா\nதவறாமல் தினமும் காலையில் தங்க விலைகளை உங்கள் போனுக்கு SMS ஆக பெற்றுக்கொள்ள வேண்டுமா கீழே பட்டனை கிளிக் செய்து SMS செய்யவும்.\nPrevious articleஜனாசா – முஹம்மத் அஸ்ரப்\nNext articleஇலங்கையில் 13 ஆவது கொரோனா மரணம் பதிவு\nஇலங்கையின் இன்றைய தங்க விலை பற்றிய விபரம் – Today Srilanka Gold Price\nஇன்றைய தங்க விலை (07-09-2021) செவ்வாய்க்கிழமை\nஇன்றைய தங்க விலை (25-08-2020) புதன்கிழமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.noolaham.org/wiki/index.php?title=Firstness,_History,_Place_%26_Legitimate_Claim_to_Place-as-Homeland_in_Comparative_Focus&action=history", "date_download": "2021-10-19T13:11:08Z", "digest": "sha1:SFU3DQVVBGWKK6E5SS3BK5JXEBP3NADS", "length": 5107, "nlines": 41, "source_domain": "www.noolaham.org", "title": "திருத்த வரலாறு - \"Firstness, History, Place & Legitimate Claim to Place-as-Homeland in Comparative Focus\" - நூலகம்", "raw_content": "\nவரலாற்றில் தேடவும் ஆண்டு உட்பட முந்திய: மாதம் உட்பட முந்திய: அனைத்து மாதங்களும் ஜனவரி பெப்ரவரி மார்ச் ஏப்ரல் மே சூன் சூலை ஆகத்து செப்டம்பர் அக்டோபர் நவம்பர் டிசம்பர் குறிச்சொல் வடிப்பான்:\nவேறுபாட்டைக் காண வேண்டிய இரண்டு பத்திப்புக்களை தெரிவுச் செய்து கீழுள்ள பொத்தானை அழுத்தவும்.\nகுறியீட்டு விளக்கம்: (நடப்பு) = நடைமுறையிலுள்ள பதிப்புடனான வேறுபாடு, (கடைசி) = முந்திய பதிப்புடனான வேறுபாடு, சி = சிறு தொகுப்பு\n(நடப்பு | முந்திய) 20:17, 24 செப்டம்பர் 2017‎ OCRBot (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (1,274 எண்ணுன்மிகள்) (+221)‎\n(நடப்பு | முந்திய) 03:42, 5 அக்டோபர் 2015‎ Nirosha (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (1,053 எண்ணுன்மிகள்) (+98)‎\n(நடப்பு | முந்திய) 10:17, 17 மே 2015‎ Gopi (பேச்சு | பங்களிப்புகள்)‎ சி . . (955 எண்ணுன்மிகள்) (-16)‎ . . (Text replace - \" மொழி = ஆங்கிலம்|\" to \" மொழி=ஆங்கிலம்|\")\n(நடப்பு | முந்திய) 06:51, 13 மே 2015‎ Gopi (பேச்சு | பங்களிப்புகள்)‎ சி . . (971 எண்ணுன்மிகள்) (-60)‎ . . (Text replace - \"பகுப்பு:பிரசுரங்கள்\" to \"\")\n(நடப்பு | முந்திய) 09:37, 22 ஏப்ரல் 2015‎ Gopi (பேச்சு | பங்களிப்புகள்)‎ சி . . (1,036 எண்ணுன்மிகள்) (-1)‎ . . (Text replace - \"{{ பிரசுரம்|\" to \"{{பிரசுரம்|\")\n(நடப்பு | முந்திய) 06:18, 23 செப்டம்பர் 2010‎ Valarmathy (பேச்சு | பங்களிப்புகள்)‎ சி . . (1,151 எண்ணுன்மிகள்) (+3)‎\n(நடப்பு | முந்திய) 01:15, 25 சூன் 2010‎ Valarmathy (பேச்சு | பங்களிப்புகள்)‎ சி . . (1,148 எண்ணுன்மிகள்) (+1,148)‎ . . (6141)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tag/thalapathy-66/", "date_download": "2021-10-19T11:48:04Z", "digest": "sha1:KGSSKJU4PI3UWZSY7SVFCOM42UMTXR4G", "length": 13303, "nlines": 201, "source_domain": "www.tamilstar.com", "title": "Thalapathy 66 Archives - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nNews Tamil News சினிமா செய்திகள்\n3வது முறையாக விஜய்யுடன் இணையும் பிரபல நடிகை\n‘மாஸ்டர்’ படத்தின் வெற்றிக்குப்பிறகு நடிகர் விஜய், நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், அடுத்ததாக தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிப்பல்லி...\nNews Tamil News சினிமா செய்திகள்\n‘தளபதி 66’ படத்தில் இணையும் பிரபல நடிகரின் மகள்\nநடிகர் விஜய்யின் 66-வது படத்தை வம்சி பைடி பல்லி இயக்க உள்ளார். தெலுங்கு திரையுலகில் முன்னணி இயக்குனராக இருக்கும் இவர், வி���ய்யுடன் கூட்டணி அமைப்பது இதுவே முதன்முறை. இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு...\nNews Tamil News சினிமா செய்திகள்\nவிஜய்க்கு வில்லனாகும் பிரபல நடிகர்\nநடிகர் விஜய்யின் 65-வது படம் ‘பீஸ்ட்’. நெல்சன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டேவும், வில்லனாக செல்வராகவனும் நடிக்கின்றனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில்,...\nNews Tamil News சினிமா செய்திகள்\n‘தளபதி 66’ அப்டேட் – முதன்முறையாக விஜய்யுடன் இணையும் பிரபல இசையமைப்பாளர்\nநடிகர் விஜய்யின் 66-வது படத்தை வம்சி பைடி பல்லி இயக்க உள்ளார். தெலுங்கு திரையுலகில் முன்னணி இயக்குனராக இருக்கும் இவர், விஜய்யுடன் கூட்டணி அமைப்பது இதுவே முதன்முறை. இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு...\nNews Tamil News சினிமா செய்திகள்\nவிஜய் படத்தின் அறிவிப்பை வெளியிட்டு நீக்கிய பிரபலம்\nகார்த்தி, நாகார்ஜுனா நடித்த ‘தோழா’ படத்தை இயக்கிய தெலுங்குத் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான வம்சி பைடிபள்ளி விஜய்யின் 66வது படத்தை இயக்கப் போவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியுள்ளது. விஜய்யின் பிறந்தநாளில் அப்படத்தின் அறிவிப்பு...\nNews Tamil News சினிமா செய்திகள்\nவிஜய்யின் ‘தளபதி 66’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்\nநடிகர் விஜய், மாஸ்டர் படத்துக்கு பிறகு நெல்சன் இயக்கும் ‘பீஸ்ட்’ படத்தில் நடிக்கிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் முடிந்துள்ளது. அடுத்தகட்ட படப்பிடிப்பு...\nNews Tamil News சினிமா செய்திகள்\nவிஜய்யின் ‘தளபதி 66’ படத்தை உறுதி செய்த பிரபல தெலுங்கு இயக்குனர்\nநடிகர் விஜய், மாஸ்டர் படத்துக்கு பிறகு நெல்சன் இயக்கும் ‘தளபதி 65’ படத்தில் நடிக்கிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே வருகிறார். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் முடிந்துள்ளது. கொரோனா தீவிரம்...\nNews Tamil News சினிமா செய்திகள்\n‘தளபதி 66’ இயக்கப்போவது யார் – 4 இயக்குனர்களிடையே கடும் போட்டி\nநடிகர் விஜய்யின் 65-வது படத்தை நெல்சன் இயக்க உள்ளார். இப்படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட��ம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே விஜய்யின் 66-வது படம் குறித்த தகவல்களும்...\nநடிகர் விஜய்யின் அடுத்த திரைப்படத்தை தயாரிக்கவுள்ள பிக் பாஸ் தயாரிப்பு நிறுவனம்\nதளபதி விஜய்யின் நடிப்பில் சென்ற வருடம் வெளியான பிகில் பெரிய வெற்றியடைந்தது. அதன்பின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்திருந்தார். மேலும் இவரின் அடுத்த திரைப்படமான தளபதி 65 யை பிரபல...\nஅரண்மனை 3 திரை விமர்சனம்\nஜமீன்தாராக இருக்கும் சம்பத், ஒரு திருமணத்தை தலைமை தாங்கி நடத்தி வைக்க செல்கிறார். சென்ற இடத்தில் மணப்பெண்ணான...\nவிநோதய சித்தம் திரை விமர்சனம்\nகனடாவில் கண்டெடுக்கப்பட்ட 4,000 ஆண்டுகள் பழமையான கத்தி\nகனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொவிட்-19 தொற்றினால் 1,353பேர் பாதிப்பு- 11பேர் உயிரிழப்பு\nகனேடியப் படையினரில் 90% பேர் முழுமையாகத் தடுப்பூசி பெற்றனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/154780-twitter-ceo-gets-97-rupees-as-salary-do-you-know-about-this-one-dollar-salary-trend", "date_download": "2021-10-19T13:12:29Z", "digest": "sha1:C4Q6LRCFUN56YD5XSNTUIGVHVWXVH4WH", "length": 18985, "nlines": 203, "source_domain": "www.vikatan.com", "title": "வெறும் 97 ரூபாய் சம்பளம் பெறும் ட்விட்டர் CEO... எதற்காக? #OneDollarSalary | Twitter CEO gets 97 rupees as salary, Do you know about this 'One dollar salary' trend! - Vikatan", "raw_content": "\nஜிஆர்டி ஜுவல்லர்ஸ் - மூன்று `டைம்ஸ் பிசினஸ் விருதுகள்' வென்று சாதனை\nமியாட் மருத்துவமனை - விபத்துக் காயங்கள் மேலாண்மையில் \"பொன்னான நேரம்\" என்றால் என்ன\nசொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா - கிராமத்தானின் பயணம் 14\nநம் வாழ்வில் ஒருமுறையாவது பார்க்க வேண்டிய இரண்டு தமிழ்ப்படங்கள்\nமழைக்கால மின்கசிவிலிருந்து வீட்டை பாதுகாப்பது எப்படி\nதேவிஸ்ரீ பிரசாத்தை பார்த்து அடுத்த இளையராஜான்னு கமல் சொன்னதுக்கு காரணம் இருக்கு\nவணிகத் தேவைக்காக நாட்டு விலங்குகள் படும் துயர் - தெளிவாக விளக்கும் புத்தகம்\nஅமைதியோ அமைதி ஓமான், ஆச்சர்யப்பட வைத்த ஜோர்டான் - கிராமத்தானின் பயணம் 13\nபாச மலர் 2.0 - வாசகி ஷேரிங்ஸ்\nஜிஆர்டி ஜுவல்லர்ஸ் - மூன்று `டைம்ஸ் பிசினஸ் விருதுகள்' வென்று சாதனை\nமியாட் மருத்துவமனை - விபத்துக் காயங்கள் மேலாண்மையில் \"பொன்னான நேரம்\" என்றால் என்ன\nசொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா - கிராமத்தானின் பயணம் 14\nநம் வாழ்வில் ஒருமுறையாவது பார்க்க வேண்டிய ��ரண்டு தமிழ்ப்படங்கள்\nமழைக்கால மின்கசிவிலிருந்து வீட்டை பாதுகாப்பது எப்படி\nதேவிஸ்ரீ பிரசாத்தை பார்த்து அடுத்த இளையராஜான்னு கமல் சொன்னதுக்கு காரணம் இருக்கு\nவணிகத் தேவைக்காக நாட்டு விலங்குகள் படும் துயர் - தெளிவாக விளக்கும் புத்தகம்\nஅமைதியோ அமைதி ஓமான், ஆச்சர்யப்பட வைத்த ஜோர்டான் - கிராமத்தானின் பயணம் 13\nபாச மலர் 2.0 - வாசகி ஷேரிங்ஸ்\nவெறும் 97 ரூபாய் சம்பளம் பெறும் ட்விட்டர் CEO... எதற்காக\nஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்\nவெறும் 97 ரூபாய் சம்பளம் பெறும் ட்விட்டர் CEO... எதற்காக\nநம்மில் பலருக்கும் மாதத்தில் மிகமுக்கிய நாள் சம்பள நாளாகத்தான் இருக்கும். அன்று உங்கள் கணக்கில் வெறும் ஒரு டாலர் (70 ரூபாய்) சம்பளமாக போடப்பட்டால் எப்படி இருக்கும் ஆனால் பெரிய டெக் நிறுவனங்களின் CEO-க்கள் இந்த சம்பளத்தைத்தான் மொத்த வருடத்திற்கே பெறுகின்றனர். இது ஏன் ஆனால் பெரிய டெக் நிறுவனங்களின் CEO-க்கள் இந்த சம்பளத்தைத்தான் மொத்த வருடத்திற்கே பெறுகின்றனர். இது ஏன் இந்த 'One dollar salary' யின் பின்னணி என்ன\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்\nபொதுவாக பெரிய டெக் நிறுவனங்களின் CEO-க்களின் வருடாந்திர சம்பள விவரங்கள் வெளிவரும்போது அவை பெரியளவில் செய்தி ஆகும். காரணம் அந்தளவுக்குப் பெரிய தொகையை சம்பளமாக பெற்றிருப்பர் . உதாரணத்துக்கு ஆப்பிள் நிறுவனத்தின் CEO டிம் குக்கின் 2018-க்கான சம்பள விவரங்களைப் பார்ப்போம். கடந்த ஆண்டு ஆப்பிள் நிறுவனத்திடமிருந்து இவர் ஏற்படுத்திய முன்னேற்றங்களுக்காக போனஸாக மட்டும் 12 மில்லியன் டாலர்களைப் பெற்றார். அவரது சம்பளத்தையும் கடந்த வருடம் 22 சதவிகிதம் அதிகரித்து 3 மில்லியனாக கொடுத்தது ஆப்பிள். இதுபோக பிரைவேட் ட்ராவல் மற்றும் செக்யூரிட்டி அலவன்ஸ் என 6,82,000 டாலர்கள் பெற்றார் குக்.\nநிலைமை இப்படியிருக்க, ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான (CEO) ஜாக் டார்சி, கடந்த ஆண்டுக்காக வாங்கிய மொத்த சம்பளமும் வெறும் 1.40 டாலர்கள்தான் என்று அமெரிக்க அரசின் SEC ஆணையத்திடம் சமர்ப்பித்த ஆவணங்களில் தெரிவித்திருக்கிறது ட்விட்டர். இது இந்திய ரூபாய் மதிப்பில் வெறும் 97 ரூபாய். சொல்லப்போனால் இதுவே அவருக்கு அதிகம்தானாம். 2015 முதல் 2017 வரை இந்தப் பதவியி��் இருக்க எந்த ஒரு பணமும் பெறவில்லை. இதுமட்டுமல்லாமல் இவர் தொடங்கிய 'ஸ்கோயர்' என்ற மொபைல் பேமன்ட் நிறுவனத்திலும் இவர் CEO-வாக இருக்கிறார். அதில் அவர் பெரும் சம்பளமும் 2.75 டாலர்கள்தான்.\nஇது ஏனென்றால் இந்த நிறுவனங்களின் பெரும்பாலான பங்குகள் அவரிடம்தான் இருக்கிறது. தற்போது ஜாக் டார்சியின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 4.7 பில்லியன் டாலர்கள். இதில் இவர் வைத்திருக்கும் `ஸ்கோயர்' நிறுவனப் பங்குகளின் மதிப்பு மட்டும் 3.9 பில்லியன் டாலர்கள். ட்விட்டர் பங்குகளின் மதிப்பு 600 மில்லியன் டாலர்கள். ட்விட்டரை நிறுவியவர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. சரி, இவ்வளவு சொத்துகள் வைத்திருக்கும் இவர் ஏன் அந்த சொற்ப 1.40 டாலர்களைச் சம்பளமாக பெறவேண்டும் அதையும் பெறாமல் இருக்கலாம்தானே என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். அதற்கும் ஒரு காரணம் உண்டு.\nஇந்த ஒரு டாலர் சம்பளத்தின் பின்னணி என்ன\nசொல்லப்போனால் இந்த 1 டாலர் சம்பளம் என்பதை இவர் மட்டும் பெறவில்லை. ஃபேஸ்புக்கின் CEO மார்க் சக்கர்பெர்க் 2012-ல் 770,000 டாலர்களைச் சம்பளமாகவும், போனஸாகவும் பெற்றார். ஆனால், இப்போது ஃபேஸ்புக்கில் மிகக்குறைந்த சம்பளம் வாங்குவது அவர்தான். மேலும் ஆரக்கிளின் லாரி எலிசன், கூகுளின் லாரி பேஜ் எனப் பலரும் இந்த ஒரு டாலர் சம்பளமே பெறுகின்றனர். இப்படி சம்பளம் பெறுவதை 'One dollar salary' என்று குறிப்பிடுகின்றனர்.\nஇந்த வழக்கம் 1900-களில் பிரபலமடையத் தொடங்கியது. உலகப்போர் மற்றும் பிற போர்களின்போது பல தொழில்துறை தலைவர்கள் அமெரிக்க அரசுக்காக சேவை ஆற்றினர். ஆனால், அதற்காக எந்த ஒரு சலுகைகளையும் பெற அவர்கள் விரும்பவில்லை. அப்போது ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ஒரு கணக்குக்காக ஒரு டாலர் சம்பளம் பெற்றனர். இவர்களை `டாலர் ஏ இயர் மென்' (Dollar-a-year men) என்றழைத்தனர். இந்த ட்ரெண்ட் மீண்டும் 1990-களில் எட்டிப்பார்க்கத்தொடங்கியது. பல வசதி படைத்த CEO-க்கள் ஒரு டாலர் சம்பளம் பெறத்தொடங்கினர். இப்படி 'One dollar salary' பெறுவது அவர் பங்குதாரர்களை மனதில் வைத்திருக்கிறார் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமையும். மேலும், பெரிய சம்பளம் எதுவும் இல்லாததால் நிறுவனத்தின் பங்குகள் வளர்ச்சியடைவதில் அவரது முழு கவனம் இருக்கும். ஏனென்றால் அவர்களுக்குப் பங்குகள் மூலம் வருவது மட்டுமே வருமானம். இப்படி பல ���ாரணங்கள் இதற்கு உண்டு. சம்பளம் வாங்குவதை விட இப்படி பங்குகள் மூலம், வருமானம் ஈட்டினால் வரிகள் குறையும் என்றும் சிலர் தெரிவிக்கின்றனர்.\nதொழில்நிறுவனங்களின் தலைவர்கள் என்றில்லை, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் தலைவர்களில் சிலரும்கூட இந்த ஒரு டாலர் சம்பளத்தை பெற்றிருக்கின்றனர். தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரான ஜெயலலிதாவும் தனது முதல் ஆட்சிக்காலத்தில் (1991-1996) இப்படி மாதம் ஒரு ரூபாய் சம்பளமாக பெற்றிருக்கிறார். ஓஹியோ பல்கலைக்கழகம் (Ohio State University) 2011-ம் ஆண்டு நடத்திய ஆய்வு இப்படி 'One dollar salary' பெறுபவர்கள் அனைவரும் பணம் சேர்ப்பதில் கெட்டிக்காரர்கள் என்றும், மிகப்பெரிய தாக்கத்தை அவர்களால் ஏற்படுத்தமுடியும் என்றும் தெரிவித்திருக்கிறது.\nதெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism\nஇதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.zoomgu.com/ta/Trouble-shooting", "date_download": "2021-10-19T12:18:23Z", "digest": "sha1:U652LHQJLYKD2EUIVABNFETJ7RMRQYGY", "length": 6415, "nlines": 93, "source_domain": "www.zoomgu.com", "title": "சிக்கல் படப்பிடிப்பு-ஹுனான் ஜாங்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், லிமிடெட்.", "raw_content": "\nமைக்ரோ சந்தை விற்பனை இயந்திரம்\nமருத்துவ பொருட்கள் விற்பனை இயந்திரம்\nமைக்ரோ சந்தை விற்பனை இயந்திரம்\nமருத்துவ பொருட்கள் விற்பனை இயந்திரம்\nநாங்கள் ஒரு (1) ஆண்டு உத்தரவாதத்தையும் வாழ்நாள் தொழில்நுட்ப ஆதரவையும் வழங்குகிறோம்.\nஇயந்திரங்கள் இயக்கப்படுகின்றன / அறிவுறுத்தல்களின் கீழ் பயன்படுத்தப்படுகின்றன மற்றும் ஒழுங்காக இருந்தால் மற்றும் எந்தவொரு பகுதியும் உத்தரவாதக் காலத்திற்குள் உடைந்தால், நாங்கள் புதிய பகுதிகளை இலவசமாக அனுப்புவோம்.\nஏதேனும் சிக்கல்கள் / சிக்கல்கள் எழுந்தால், வாங்குபவர்கள் சிக்கல்-படப்பிடிப்பு தீர்வுகளுக்காக எங்களை அணுகலாம்.\nபின்வரும் எந்த சூழ்நிலைகளுக்கும் நாங்கள் பொறுப்பேற்க மாட்டோம்:\na. இயந்திரம் முதலில் வந்ததும் அங்கீகரிக்கப்பட்ட / ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர் உரிமையாளர் / ஆபரேட்டரின் முறையற்ற பயன்பாடு காரணமாக இயந்திரம் உடைகிறது.\nb. தவறான நிறுவல் அல்லது வரிசைப்படுத்தலில் இருந்து சேதம்.\nc. நேரடி வலுவான ஒளியின் வெளிப்பாடு காரணமாக சேதமடைந்த எல்சிடி / தொடுதிரை.\nவிற்பனைக்குப் பிந்தைய ஆதரவுக்காக நாங்கள் 12 மணிநேரம் / நாள் * 5 நாட்கள் / வாரம் (8: 00-20: 00, பெய்ஜிங் நேரம்) ஆன்லைனில் இருக்கிறோம்.\nமைக்ரோ சந்தை விற்பனை இயந்திரம்\nமருத்துவ பொருட்கள் விற்பனை இயந்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnppgta.com/2019/12/emis.html", "date_download": "2021-10-19T12:16:56Z", "digest": "sha1:527P7A32JJ7KBTIQFOF2L26KNIA73PPJ", "length": 10957, "nlines": 111, "source_domain": "www.tnppgta.com", "title": "EMIS - பெர்பாமென்ஸ் இண்டிகேட்டர் மூலம் ஆசிரியர்களை கண்காணிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு!", "raw_content": "\nHomeGENERALEMIS - பெர்பாமென்ஸ் இண்டிகேட்டர் மூலம் ஆசிரியர்களை கண்காணிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு\nEMIS - பெர்பாமென்ஸ் இண்டிகேட்டர் மூலம் ஆசிரியர்களை கண்காணிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு\nஇணையதளம் வாயிவாக , அரசு பள்ளி ஆசிரியர்களின் கற்றல் திறனை , மதிப்பீடு செய்ய பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது .\nதகுதியான ஆசிரியர்கள் தான் திறமையான மாண வர்களை உருவாக்க முடியும் . முதல் மார்க்கில் தேர்ச்சி அடையும் மாணவ ருக்கு , போதிய திறமை இல்லை என்ற காரணத் தால் வேலைவாய்ப்பு பறிபோகிறது . மார்க் முக்கியமில்லை ; மாணவர்களின் திறமையே முக்கியம் என்று ஐ . டி . உள்ளிட்ட எல்லா துறைகளும் வடிகட்டி வருகின்றன . மார்க் குவித்த மாணவர் களால் , நீட் , ஜேஇஇ போன்ற உயர்கல்வி நுழைவுத் தேர்வுகளிலும் , டிஎன் பிஎஸ்சி , வங்கித் தேர்வுகள் , ஆர்ஆர்பி போன்ற வேலை வாய்ப்பு போட்டித் தேர்வுகளிலும் ஜொலிக்க முடிவதில்லை .\nஇந்த நிலை தமிழகம் மட்டுமின்றி , நாடு முழுவதும் உள்ளது . எனவே , மனப்பாட கல்வி முறையை கொஞ்சம் , கொஞ்சமாக ஒழிக்க வேண்டும் என்று கல்வியாளர்கள் ஆலோசனை கூறி வருகின்றனர் . அதற்கேற்ப , மத்திய , மாநில பாடத் திட்டங்களிலும் , ஆசிரியர்கள் , மாணவர்களுக்கான பயிற்சிகளிலும் பல மாற்றங்களை மத்திய , மாநில அரசுகள் செய்து வருகின்றன . தமிழகத்தில் , மத்திய பாடத்திட்டத்துக்கு இணையாக , கல்வித்துறையில் பல மாற்றங்களை தமிழக அரசு புகுத்தி வருகிறது . புத்தக தகவலை மட்டும் மாணவர்கள் படித்தால் போதாது . புத்தகம் தாண்டி , கூடுதல் தகவல்களை தேடி படிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் , பாடப் புத்தகத்தில் ஒவ்வொரு பக்கத்திலும் கியூஆர் கோடு வழங்கப்பட்டுள்ளது . ஸ்மார்ட் போன் மூலம் அந்த ' கியூஆர் கோடு ஸ்கேன் செய்தால் , புத்தகத் தில் உள்ள சப்ஜெக்ட் தொடர்பாக கூடுதலாக பல தகவல்களை தேடி படிக்கலாம் .\nஇது , மாணவர்களின் சுய அறிவை வளர்க்க உதவும் . அதேபோல , அரசு பள்ளி ஆசிரியர்களின் திறனையும் கண்காணிக்க முடிவு செய்துள்ளது . தகுதியான ஆசிரியர்கள் ' டெட் ' தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர் . ஆசிரியர் பணிக்கு வந்த பின் குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை ' டெட் ' தேர்வு நடத்தி அவர்கள் திறனை சோதிக்க வேண்டும் என்ற கோரிக்கை . மேம்பட்டு வருகிறது .\nஇத்திலையில் , பள்ளி மாணாவர்களை மதிப்பீடு செய்வது போல , ஆசிரியர்களில் கற்பிக்கும் இறனை சுய மதிப்பீடு செய்ய கல்வித்துறை இப்போது நடவடிக்கை எடுத்துள்ளது . ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் அனைவரும் இந்த முறையில் மதிப்பீடு செய்யப்பட உள்ளனர் . இதற்காக , ' எமிஸ் கல்வி இணையதளத்தில் ஆசிரியர்களின் , பெர்பாமென்ஸ் இண்டிகேட்டர் என்ற பிரிவு கூடுதலாக இணைக்கப்பட் டுள்ளது . இதில் , தான் கற்பிக்கும் வகுப்பு பாடத்தை தேர்வு செய்து , தகவல்களை ஆசிரியர்கள் பதிவு செய்ய வேண்டும் . பாடப்புத்தகம் மற்றும் கற்றல் உபகரணங்களைப் பயன்படுத்தி கற்பித்தல் மற்றும் கற்றல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் . கற்றல் செயல்பாட்டில் எல்லா மாணவர்களையும் ஒருசேர ஈடுபடுத்துதல் , மாணவர்கள் வகுப்பறை சூழலை பசிக்கும் வகையில் கற்றல் செயல்பாடுகளை திட்டமிடல் , பாடக்குறிப்புகள் தயார் செய்தல் , கற்றல் திறன் குறைந்த மாணவர்கள் மீது கவனம் செலுத்துதல் , சரியான உதாரணம் கூறுதல் போன்ற கேள்விகளுக்கு ஆசிரியர்கள் பதிலளிக்க வேண்டிவிருக்கும் .\nஇதன்மூலம் ஆசிரியர்களின் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டு , மதிப்பீடு செய்யப்பட உள்ளது . தொடர்ந்து ஆசிரியர்களின் மதிப்பீடுகள் குறையும்பட்சத்தில் , குறிப்பிட்ட ஆசிரியருக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்படும் . இதுகுறித்து , மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் , அனைத்து பள்ளி தலைமை ஆசிரி யர்களுக்கும் கற்றறிக்கை அனுப்ப பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட் டுள்ளது . இதற்கான பணிகளில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர் .\nஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தங்களது...மாத ஊதியத்தை (pay slip) Mobile மூலம் பதிவிறக்கம் செய்வது எப்படி \nFLASH NEWS-பாலிடெக்னிக் TRB தேர்வுக்கான அட்டவணை வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blog.arasan.info/2013/05/blog-post.html", "date_download": "2021-10-19T11:31:55Z", "digest": "sha1:LBYQO3OCXB4OLLVG4EBMPXOCY5CRYZH2", "length": 24833, "nlines": 96, "source_domain": "blog.arasan.info", "title": "இந்தியா?... சீனா?.. நாம் எங்கே செல்கிறோம்.", "raw_content": "\nமுகப்பு | முழுமஹாபாரதம் | ஹரிவம்சம் | வலைப்பூ | கிண்டில்மின்நூல்கள்| தொடர்புக்கு\n.. நாம் எங்கே செல்கிறோம்.\nகீழ்க்கண்ட இரண்டு செய்திகளைப் படியுங்கள். ஒவ்வொரு கட்சிகளின் உண்மை முகங்களையும் காணுங்கள். நாம் ஏற்கனேவே சீனாவிடம் தோல்வி கண்ட ஒரு தேசம். உலகத்திலேயே இந்தியாவுக்கு பெரிய எதிரி சீனாதான் என்று தைரியமாகச் சொன்ன ஒரே பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்ணான்டஸ்தான். கீழ்க்கண்ட பதிவுகளைப் படித்துவிட்டு நேர்மையான நெஞ்சம் கொண்டவர்கள், நீங்களே முடிவெடுத்துக் கொள்ளுங்கள். கம்யூனிஸ்ட் கட்சி என்பது யாது அதன் கொள்கைகள் என்ன அது யாருக்காக உழைக்கிறது. கடந்த காலப் பார்வையோடு இணைத்து வருங்கால நிகழ்வுகளைக் கணித்துப் பாருங்கள். சீனா நமது நண்பனா எதிரியா கம்யூனிஸ்ட் கட்சி என்பது (அது எந்த கம்யூனிஸ்ட் கட்சியாக இருந்தாலும் சரிதான்) உளவு நிறுவனமா அல்லது இந்தியாவுக்கு ஆபந்தாந்தவனா நன்மக்களே முடிவு செய்வீர் (இலங்கையின் ராணுவத்தளவாடம் அமைக்கும் அதே சீனாதான் காஷ்மீரத்தையும் அபகரிக்கிறது. சீனப் பிரதம் இந்தியா வருவதற்கு சில காலத்திற்கு முன் இப்படி நிகழ்வது தற்செயலானதா ஏற்பாடு செய்யப்பட்டதா தமிழக மீடியாக்கள் ஏன் இந்த செய்திக்கு அதி முக்கியத்துவம் கொடுக்க மாட்டேன் என்கின்றன பழங்கலாத்திலிருந்து பல காலங்களாக சீனாவுக்கு, ஆன்மிகத்தில் ஆகட்டும், தத்துவத்தில் ஆகட்டும், பொருளாதாரத்தில் ஆகட்டும். இந்தியாவே வழிகாட்டி தேசமாக இருந்திருக்கிறது (மாவோ வந்த பிறகு வேறு கதை என்பது வேறு). இன்று சீனா நமக்குப் பாடம் கற்பிக்கிறதோ என்று தோன்றுகிறதா பழங்கலாத்திலிருந்து பல காலங்களாக சீனாவுக்கு, ஆன்மிகத்தில் ஆகட்டும், தத்துவத்தில் ஆகட்டும், பொருளாதாரத்தில் ஆகட்டும். இந்தியாவே வழிகாட்டி தேசமாக இருந்திருக்கிறது (மாவோ வந்த பிறகு வேறு கதை என்பது வேறு). இன்று சீனா நமக்குப் பாடம் கற்பிக்கிறதோ என்று தோன்றுகிறதா நன்மக்களே சிந்திப்பீர் (இத்தாலிய அடிவருடி) காங்கிரஸ், கம்யூனி��� உளவு நிறுவனங்கள் இதற்கு மத்தியில் நாம் அடுத்த நாடாளுமன்றத்திற்கு நாம் யாரைத் தேர்ந்தெடுக்கப் போகிறோம்..... சிந்திப்பீர்.... (மோடியாக இருந்தால் இந்தியா பிழைக்கும்.)\n(http://mahabharatham.arasan.info என்ற வலைப்பூவில் மஹாபாரதத்தை மொழிபெயர்த்துக் கொண்டிருப்பதால் அரசியல் சமூகம் குறித்த கட்டுரைகளை இட முடியவில்லை. மன்னிக்கவும்.)\nஎல்லைக்குள் சீன ராணுவம் 10 கி.மீ ஊடுருவல் இந்திய படைகள் விரைகின்றன - 24.4.2013, தினகரன்\nபுதுடெல்லி : காஷ்மீர் எல்லையில் இந்திய பகுதிக்குள் சீன ராணுவம், 10 கி.மீ தூரம் ஊடுருவிய நிலையில், அங்கு இந்திய படைகள் விரைகின்றன. ராணுவ தளபதி விக்ரம் சிங்கும் காஷ்மீர் விரைந்துள்ளார். எனினும், பேச்சுவார்த்தை மூலம் பிரச்னைக்கு சுமுக தீர்வு காணப்படும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது. இதற்கு பா.ஜ. கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.\nகாஷ்மீரில் லடாக்கில் உள்ள தவ்லத் பெக் ஆல்டி பகுதியில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி இந்திய பகுதிக்குள் சீன ராணுவத்தினர் கடந்த 15ம் தேதி இரவு ஊடுருவினர். இந்தியாவுக்குள் 10 கி.மீ. தூரம் வந்த சீன ராணுவத்தினர் அங்கு தற்காலிக கூடாரம் அமைத்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்ததும், சீனாவுடன் மத்திய அரசு தொடர்பு கொண்டு பேசி வருகிறது. ஆனால், ஊடுருவல் இல்லை என்றும் தங்கள் ராணுவத்தினர் எல்லை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டதாகவும் சீனா கூறியது.\nஹெலிகாப்டர்கள் ஊடுருவல்: லடாக் பகுதியில் சீன ராணுவத்தினர் மட்டுமின்றி அந்நாட்டின் ராணுவ ஹெலிகாப்டர்களும் இந்திய பகுதிக்குள் ஊடுருவியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதைத் தொடர்ந்து எல்லையில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.\nமேலும், சீன ராணுவம் ஊடுருவியுள்ள எல்லைப்பகுதிக்கு இந்திய படைகள் அனுப்பப்பட்டு வருகின்றன. அங்கு ஏராளமான வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால், எல்லையில் பதற்றம் நிலவுகிறது. காஷ்மீர் மட்டுமின்றி அருணாச்சல பிரதேச மாநிலத்தில் சீன எல்லையை ஒட்டியுள்ள பகுதியிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், டெல்லியில் நேற்று மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அக்பரூதீன் கூறியதாவது: சீன ராணுவத்தினர் ஊடுருவியது குறித்து அந்நாட்டு அரசுடன் இந்தியா தொடர்ந்து பேசி வருகிறது. எல்லையில் ஊடுருவலுக்கு ���ுன் இருந்த நிலைமையே தொடர வேண்டும் என்று சீனாவிடம் இந்தியா வலியுறுத்தியுள்ளது. ஊடுருவல் காரணமாக இருநாட்டு வீரர்களும் எதிர் எதிரே இருக்கும் நிலை உருவாகியுள்ளது.\nஎல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் தவறான கணிப்புகளால் இதுபோன்ற ஊடுருவல் நடந்திருக்கலாம். எல்லையில் இருதரப்பு ராணுவத்தினரும் பேச்சு நடத்தி வருகின்றனர். இந்தியா , சீனா இடையே ஏற்கனவே உள்ள ஒப்பந்தப்படி இப்போது ஏற்பட்டுள்ள நிலைமைக்கு பேச்சுவார்த்தை மூலம் சுமுக தீர்வு காணப்படும். இந்திய,சீன எல்லையில் அமைதி நீடிக்கிறது.\nஇவ்வாறு அக்பரூதீன் கூறினார். சீனா உறுதி: பெய்ஜிங்கில் நேற்று பேட்டியளித்த சீன வெளியுறவு செய்தி தொடர்பாளர் ஹுவா சன்யிங், ‘‘சீன ராணுவம் ஊடுருவவில்லை என்று ஏற்கனவே தெரிவித்தோம். இந்தியா,சீனா உறவு நல்ல நிலைமையில் உள்ளது. உறவை மேம்படுத்தும் வகையில் எல்லை பிரச்னைக்கு தீர்வு காண இருதரப்பும் சுமுகமான முறையில் பேசுவதற்கு ஒத்துழைப்போம்’ என்றார்.\nவிக்ரம் சிங் ஆய்வு: இதனிடையே, ராணுவ தளபதி விக்ரம் சிங் நேற்று காஷ்மீர் சென்றார். எல்லையில் நிலவும் நிலைமைகள் குறித்து ராணுவ அதிகாரிகளுடன் ஆய்வு நடத்துகிறார். சுமுக தீர்வு ஏற்பட அவர் முயற்சி மேற்கொள்வார் என்று ராணுவ அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.\nபா.ஜ. கோபம்: டெல்லியில் பேட்டியளித்த பா.ஜ. மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி, ‘‘சீன ஊடுருவல் முற்றிலும் தவறானது. கடுமையான கண்டனத்துக்குரியது. சீனாவை பார்த்து மத்திய அரசு பயப்படுகிறது. இந்திய அரசு பலவீனமாக இருப்பதாலும் அதன் மென்மையான கொள்கைகளாலும் சீனா அடிக்கடி நம்மை சீண்டிப்பார்க்கிறது. ஊடுருவலுக்கு பொறுப்பேற்று பிரதமர் மன்மோகன் சிங் பதவி விலக வேண்டும்’’ என்றார்.\nவெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறுகையில், ‘‘எல்லையில் இதுபோன்று பிரச்னைகள் வந்தால் பேசி தீர்த்துக்கொள்ள ஏற்கனவே ஒப்பந்தம் உள்ளது. இதன் அடிப்படையில் இருதரப்பு ராணுவ அதிகாரிகள் பேசி வருகின்றனர். பேச்சு மூலம் பிரச்னைக்கு தீர்வு காணப்படும். இந்தியாவின் நலனை காக்க தேவையான எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்படும்’’ என்றார். - நன்றி: தினகரன்\nஇந்திய-சீன உறவு பாதிக்காத வகையில் எல்லைப் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்: பிரகாஷ் காரத் - 01.05.2013 தினமணி\nஇந்திய-சீன உ���வு பாதிக்காத வகையில் இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைப் பிரச்னைக்கு தீர்வுகாண வேண்டும் என்று பிரகாஷ்காரத் தெரிவித்தார்.\nஇது குறித்து பெங்களூரில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:\nநிலக்கரி ஒதுக்கீடு முறைகேடு வழக்கு விசாரணை அறிக்கையை மத்திய சட்டத்துறை அமைச்சர் அஸ்வனிகுமார் மற்றும் உயர் அதிகாரிகளுடன் பகிர்ந்து கொண்டதன் மூலம் மத்திய புலனாய்வுத்துறை(சிபிஐ) தனது நம்பகத்தன்மையை இழந்துவிட்டதாக உச்சநீதிமன்றம் கடுமையாக சாடியுள்ளது. உச்சநீதிமன்றத்தின் விமர்சனத்தை தொடர்ந்து, சட்டத்துறை அமைச்சர் அஸ்வனிகுமார் பதவிவிலக வேண்டும். அஸ்வனிகுமாரை ராஜிநாமா செய்ய வேண்டுமென்ற நிலைப்பாட்டை பிரதமர் எடுக்க வேண்டும். இந்த நடவடிக்கையை பிரதமரிடம் நாடு எதிர்ப்பார்க்கிறது.\nஇந்திய-சீன எல்லையில் திடீர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. சீனப்படைகள் இந்திய எல்லைக்குள் ஊடுருவியுள்ளதாக பிரச்னை எழுந்துள்ளது. எல்லை சிக்கலை தீர்த்து கொள்வதற்கு இரு நாடுகளும் பரஸ்பரம் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளதோடு, செயல்திட்டத்தையும் உருவாக்கியுள்ளன. கட்டுப்பாட்டு எல்லை, இரு நாடுகளுக்கும் இடையிலான இறுதி எல்லை இல்லை. ஊடகங்கள் வர்ணிப்பது போல இது மிகப் பெரிய சிக்கலும் இல்லை. இது நீண்டகாலமாக நிலவும் பிரச்னை. எனினும், கடந்த 50 ஆண்டுகளாக சீனாவுடன் இந்தியா நல்லுறவை பேணி பாதுகாத்து வந்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே சுமுகமான உறவு நீடிக்கிறது. அடுத்தவாரம் வெளியுறவுத்துறை அமைச்சர் சீனா செல்லும்போது பிரச்னைக்கு தீர்வு ஏற்படும் என்று எதிர்ப்பார்க்கிறோம். ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் அல்லாமல் உயர்மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தினால் பிரச்னைக்கு நல்ல முடிவு கிடைக்கும் என்றார். - நன்றி : தினமணி\nஇந்திய-சீன எல்லையில் தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது : அமெரிக்கா\nஇந்தியாவின் லடாக் எல்லைப்பகுதிக்குள் சீன ராணுவத்தினர் அத்துமீறி நுழைந்து, தவுலத் பெக் ஒல்தி பகுதியில் கூடாரங்களை அமைத்து அடாவடி செய்தனர். நான்கு முறை நடைபெற்ற கொடி அமர்வு பேச்சு வார்த்தைகளை தொடர்ந்து சீன ராணுவம் இந்திய பகுதியைவிட்டு ஞாயிற்றுக்கிழமை வெளியேறியது.\nஇந்நிலையில் அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகன் சீனா குறித்த தனது ஆண்டு அறிக்கையை அமெரிக்க நாடாளுமன்றத்தில் அளித்தது.\nகடந்த ஆண்டுகளில் இந்திய - சீன பொருளாதார, அரசியல் உறவுகள் வளர்ந்துள்ள போதிலும், இருநாட்டு எல்லைகளிலும் தொடர்ந்து பதட்டம் நிலவிவருகிறது. இருநாடுகளும் அருணாச்சல பிரதேச மாநிலத்தில் 4,057 கிலோமீட்டர் நீளமுள்ள எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளன.\nஆசிய வளர்ச்சி வங்கி இந்தியாவுக்கு வழங்குவதாக இருந்த 2.9 பில்லியன் டாலர் கடனை தடுக்க சீனா முயற்சித்தது. இந்தக் கடனில் ஒருபகுதி அருணாச்சல பிரதேசத்தில் தண்ணீர் வசதியை மேம்படுத்த பயன்படுத்தப்படலாம் என்று கூறி இந்த செயலை செய்தது. இது சீனா எல்லைப் பிரச்சினைகளில் பன்னாட்டு அமைப்பு வழியாக தனது அதிகாரத்தை நிலைநிறுத்த செய்த முதல் முயற்சியாகும்.\nஇந்தியாவுக்குள் சீனாவின் ஊடுருவல் முன்பை விட அதிகரித்து இருப்பதாக இந்திய செய்தித்தாள் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. எல்லை பிரச்சினைகளில் சீனா ராணுவத்தை பயன்படுத்திய விதம் சில நேரங்களில் போர் மூள வழிவகுத்துள்ளது. இதனால் இந்தியாவுடன் 1962-ம் ஆண்டும், வியட்நாமில் 1979 ம் ஆண்டும் போர் நடந்தது குறிப்பிடத்தக்கது.\nநன்றி : மாலை மலர்\n14 பாகங்கள் - கெட்டி அட்டையில்\nஎன்ற சுட்டிக்குச் சென்று வாங்கிக் கொள்ளலாம்.\nஅல்லது மேற்கண்ட சுட்டியில் தற்போதைய விலையைப் பார்த்துவிட்டு\nஎன்ற வங்கிக் கணக்கில் மேற்கண்ட சுட்டியில் கண்ட தற்போதைய தொகையைச் செலுத்திவிட்டு, சீரோ டிகிரி பதிப்பகத்தாரின் கைபேசி எண் +91 - 9840065000க்கு உங்கள் முகவரியை குறுஞ்செய்தியாக அனுப்பி கொரியர் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.\nசாந்தி பர்வம் - 1\nசாந்தி பர்வம் - 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ad/honda-benly-1990-for-sale-gampaha-13", "date_download": "2021-10-19T11:07:22Z", "digest": "sha1:N7CW6U6KDSWUXGFSFF27RG3MKK3ISU2T", "length": 6434, "nlines": 141, "source_domain": "ikman.lk", "title": "Honda Benly 1990 | களனி | ikman.lk", "raw_content": "\nஉங்களுக்கு சிறந்த ஆன்லைன் அனுபவத்தை வழங்க நாங்கள் cookieகளை பயன்படுத்துகிறோம். இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம் எங்கள் cookie கொள்கையை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள் என்று கருதப்படுகிறது.\nமோட்டார் சைக்கிள்கள் உள் கம்பஹா\nமோட்டார் சைக்கிள்கள் உள் களனி\nஅன்று 21 செப்ட் 8:03 முற்பகல், களனி, கம்பஹா\nதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nதொடர்பு கொள்க RukShan WijeKoon\nபிராண்ட் வாரியாக ட்ரென்டாகியுள்ள மோட்டார்\nஇலங்கை இல் Honda மோட்டார்\nஇலங்கை இல் Bajaj மோட்டார்\nஇலங்கை இல் Yamaha மோட்டார்\nஇலங்கை இல் TVS மோட்டார்\nஇலங்கை இல் Hero மோட்டார்\nகன்டிசனைப் பொறுத்து Honda Benly மோட்டார்\nபயன்படுத்தபட்ட Honda Benly மோட்டார்\nபுதிய Honda Benly மோட்டார்\nமீளமைக்கபட்ட Honda Benly மோட்டார்\nஇடங்கள் வாரியாக Honda Benly மோட்டார்\nHonda Benly கொழும்பு இல் மோட்டார்\nHonda Benly கம்பஹா இல் மோட்டார்\nHonda Benly குருணாகலை இல் மோட்டார்\nHonda Benly களுத்துறை இல் மோட்டார்\nHonda Benly கண்டி இல் மோட்டார்\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/194745", "date_download": "2021-10-19T12:07:39Z", "digest": "sha1:RIIPNXDDR6FITW64U4VN436QRBAHVWXS", "length": 9899, "nlines": 77, "source_domain": "malaysiaindru.my", "title": "அரசாங்கம் அசாதாரண இலாப வரியை விதிக்க முடியாது – Malaysiakini", "raw_content": "\nஅரசாங்கம் அசாதாரண இலாப வரியை விதிக்க முடியாது\nநாடாளுமன்றம் | குறிப்பிட்ட காலங்களில், அசாதாரண இலாபம் ஈட்டும் இரப்பர் உற்பத்தி நிறுவனங்களுக்குப் புதிய வரிக் கொள்கைகள் அல்லது சலுகைகளை உருவாக்கும் நடவடிக்கை, நாட்டில் முதலீடு செய்வதற்கான முதலீட்டாளர்களின் உறுதிப்பாட்டைப் பாதிக்கும் என்று துணை நிதி அமைச்சர் முகமட் ஷாஹர் அப்துல்லா கூறினார்.\nசையத் சதிக் சையது அப்துல் இரஹ்மானின் கூடுதல் கேள்விக்குப் பதிலளித்த முகமட் ஷஹார், இந்த விஷயத்தில் எடுக்கப்படும் ஒவ்வொரு முடிவிலும் அரசாங்கம் கவனமாக இருக்க வேண்டும் என்று கூறினார்.\n“பெரிய சுற்றுச்சூழல் அமைப்பைப் பார்க்காமல் நாங்கள் வரி நடவடிக்கைகளைச் செய்ய முடியாது. உள்நாட்டு அல்லது வெளிநாட்டு முதலீட்டாளர்கள் எப்படி தேசிய முதலீடுகள் செய்கிறார்கள் என்பதையும் நாம் பார்க்க வேண்டும்.\n“புதிய கொள்கைகள் அல்லது புதிய வரி சலுகைகள் அசாதாரணமானால் அல்லது இலாபத்தை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டால், இது நம் நாட்டில் முதலீடு செய்ய நிறுவனத்தின் முதலீட்டாளர்களின் அர்ப்பணிப்பு அல்லது விருப்பத்தையும் பாதிக்கும்.\n“என்ன செய்கிறோம் என்பதில் நாம் கவனமாக இருக்க வேண்டும்,” என்று அவர் இன்று மக்களவையில் கூறினார்.\nமுன்னதாக, இரப்பர் உற்பத்தி நிறுவனங்களுக்கு அசாதாரண இலாபத்திற்கு இன்னும் வரி விதிக்க வேண்டாமா என்று சையத் சதி���் கேட்டார்.\n“வெளிநாட்டில் வசூலிக்கப்படுகிறது (அசாதாரண இலாப வரி). மலேசியாவில், அவர்களின் இலாபம் (இரப்பர் நிறுவனங்கள்) இரட்டிப்பாக இருந்தாலும், நாம் அதனை இன்னும் (செயல்படுத்த) விரும்பவில்லை.\n“இந்த இரப்பர் நிறுவனங்கள் அரசாங்கத்தில் எந்தக் கட்சிக்கும் அரசியல் பங்களிப்பைச் செய்கின்றனவா, எனக்கு அதிகாரப்பூர்வ பதில் வேண்டும்\nசையத் சதிக் தவிர, மே 6-ம் தேதி, பேங்க் பெம்பங்குனான் மலேசியா பெர்ஹாட் (பிபிஎம்பி) தலைவர் நசீர் ரசாக், கோவிட் -19 தொற்றுநோயால் பெரும் இலாபம் ஈட்டியதாக நிரூபிக்கப்பட்ட கையுறை உற்பத்தியாளர்கள் போன்ற நிறுவனங்களுக்கு ஏன் கூடுதல் வரி அல்லது ‘ சூப்பர் டெக்ஸ்’ விதிக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார்.\nசிஐஎம்பி குரூப் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட்டின் முன்னாள் தலைவருமான அவர், ஒரு பாதுகாப்பு வலை மற்றும் மிகவும் பயனுள்ள மறுவிநியோகக் கொள்கையை வழங்குவதற்காக தற்போதுள்ள வரிவிதிப்பு முறை மிகவும் முற்போக்கானதாக இருக்க வேண்டிய நேரம் இது என்றார்.\n“மலேசியாவில், இந்தத் தொற்றுநோயின் விளைவாக பில்லியன் கணக்கான பெரும் இலாபம் ஈட்டிய கையுறை உற்பத்தி நிறுவனங்கள், தொற்றுநோயைக் கையாள்வதற்கான செலவை ஈடுசெய்ய எந்தக் கூடுதல் வரிகளுக்கும் உட்படுத்தப்படவில்லை,” என்று அவர் கூறினார்.\nஇட்ரிஸ் ஹரோன் பிஎச் டிக்கெட்டில் போட்டியிடலாம்\nமலேசியப் பெரியவர்களில் 94 விழுக்காட்டினருக்கு முழு…\nபிரதமர்; தடுப்பூசி எதிர்ப்பாளர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களுக்கு…\nகட்சி தாவல் : அரசாங்கம் சர்வதேச…\n5,434 புதிய நேர்வுகள், 112 நாட்களில்…\nபடிவம் 5 மாணவர்கள் சுழற்சி முறையில்…\nநவம்பர் 20-ல் மலாக்காவில் இடைத்தேர்தல்\nமார்ஹேன் ஒன்றுகூடல் : கோவிட் -19…\nதிகேஎம் பதவி போராட்டம் : குற்றச்சாட்டுகளை…\nஎதிர்க்கட்சித் தலைவராக ஒரு மாதத்திற்கு RM33.5k…\nபண்டோரா ஆவணங்கள் வெளிப்பாட்டை விசாரிக்க எம்ஏசிசி…\nகோவிட்-19 (அக்.15): 7,420 புதிய நேர்வுகள்\nவெளிநாட்டு பயணிகளுக்கு எல்லைகளை மீண்டும் திறப்பது…\n‘மலிவு விலை வீடுகள் மனித உரிமையாகப்…\n‘ஐபிசிஎம்சி தேங்காய் போன்றது, ஐபிசிசி அதன்…\nசிலாங்கூரில் வேலையில்லாதவர் எண்ணிக்கை 165,000-ஆக உயர்ந்தது\nஎதிர்க்கட்சித் தலைவராக அன்வர் – ‘மேம்படுத்தல்’…\n‘பத்து பூத்தே மத்திய அரசுக்குச் சொந்தமானது…\n‘எங்களை ஒதுக்கி ��ைக்காதீர்கள்’ – இந்திரா…\n‘தடுப்பூசி போடாத தனிநபர்களைப் பிடிக்க மாநிலம்…\nஅல்தான்துயா, பெங் ஹாக் மரணம் :…\nரட்ஸி : சுமார் 80 விழுக்காடு…\nமை டிரவல் பாஸ் இல்லாமலேயே வெளிநாடுகளுக்குப்…\nபார்ட்டி குவாசா ரக்யாட் : பிஎன்-உடன்…\nமாநில எல்லை கடந்த பயணம் –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://roar.media/tamil/main/features/is-cryptocurrency-an-investment", "date_download": "2021-10-19T12:52:24Z", "digest": "sha1:TAKSKOXSHLRSEAJHVCN33ENU3XYQM74O", "length": 28652, "nlines": 53, "source_domain": "roar.media", "title": "மறைகுறியீட்டு நாணயம் (Cryptocurrency): முதலீடா? சூதாட்டமா?", "raw_content": "\nகட்டுரைகள்காணொளிகள்குறுகிய காணொளிகள்வரலாறுவாழ்வியல்சுற்றுலாஆளுமைபொழுதுபோக்குகலை கலாசாரம்சமூகம்சுற்றாடல்தகவல் தொழில்நுட்பம்சிறுகதைகள்அனுசரணை\nமறைகுறியீட்டு நாணயம் (Cryptocurrency): முதலீடா\nஇது எனது சமூக வலைத்தள கணக்கிற்கு வந்த குறுஞ்செய்தி. “வீட்டிலிருந்தே நிகழ்நிலை(online)யில் பணம் சம்பாதிக்கலாம்” என ஆரம்பிக்கிறது அந்த குறுஞ்செய்தி. இன்றைய நாளில் டொலர் இருக்கும் மதிப்பிற்கு அதில் கூறப்பட்டுள்ள தொகையை தாங்களே மதிப்பிட்டு கொள்ளுங்கள்.(இதனால் வரும் தலைச்சுற்றுக்கு நான் பொறுப்பல்ல” என ஆரம்பிக்கிறது அந்த குறுஞ்செய்தி. இன்றைய நாளில் டொலர் இருக்கும் மதிப்பிற்கு அதில் கூறப்பட்டுள்ள தொகையை தாங்களே மதிப்பிட்டு கொள்ளுங்கள்.(இதனால் வரும் தலைச்சுற்றுக்கு நான் பொறுப்பல்ல\nஒட்டுமொத்த உலகமும் ஒரு நுண்ணிய வைரஸால் வீட்டுக்குள் முடங்கி இருக்கும் இவ்வேளையில் நம்மில் பலர் வேலை இழந்திருப்போம்; ஆண்டாண்டு காலமாக செய்து வந்த வணிகம் மூடுவிழா கண்டிருக்கும்; அடைந்த நட்டங்களுக்கு அளவிலாது இருந்திருக்கும். வீட்டிலிருந்தே சம்பாதிப்பது எப்படியென்று பலரும் பலவிதமாக மண்டையை பிய்த்து எடுத்திருப்போம். அவ்வேளையில் இவ்வாறான அழைப்புகள் உங்களை சபலப்பட வைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை. உட்கார்ந்துகொண்டே சம்பாதிக்க யாருக்கு தான் விருப்பமில்லை.\nபண்டைய காலத்தில் பண்டமாற்றாக இருந்த கொடுக்கல் வாங்கலில் பிற்பாடு பணம் என்ற கோட்பாடு உள்நுழைந்தது. முதலில் நாகரீகத்திற்கு நாகரீகம் பின்னர் நாட்டுக்கு நாடு என பணவழி கொடுக்கல் வாங்கல் பரவலடைந்தது. களிமண், வெள்ளி, தங்கம், அச்சிட்ட தாள், காந்த அட்டை என உருமாறி இன்று மின்னணு குறியாக வலம் வருகிறது. ��ண்டாண்டு காலமாக மக்கள் துரத்தி திரிந்த அந்த அச்சிட்ட செவ்வகத்தாள் தன் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டதா அதுவும் இனிமேல் மின்னணு துவித குறியாக (Binary Code) அதாவது மறைகுறியீட்டு நாணயமாக (Cryptocurrency) மாறிவிடுமா அதுவும் இனிமேல் மின்னணு துவித குறியாக (Binary Code) அதாவது மறைகுறியீட்டு நாணயமாக (Cryptocurrency) மாறிவிடுமா இது முதலீடா\nஇந்த ஆற்றில் காலை விடலாமா\nஇந்த மறைகுறியீட்டு நாணயம் (Cryptocurrency) என்றால் என்ன\nசில பிரபல்யமான மறைகுறியீட்டு நாணயங்களின் இலச்சினைகள்\nமறைகுறியீட்டு நாணயம் (Cryptocurrency) என்பது பொருட்கள் மற்றும் சேவைகளை நிகழ்நிலையில் (online) கொள்வனவு செய்யக்கூடிய ஒருவகை பண அலகு ஆகும். பல நிறுவனங்கள் தமது சொந்த நாணயங்களை வெளியிட்டுள்ளன. அவை பெரும்பாலும் டோக்கன்கள் என அழைக்கப்படுகின்றன. இவை மூலம் குறித்த நிறுவனம் வழங்கும் பொருள் அல்லது சேவையை கொள்வனவு செய்யலாம். Casino நாணயங்கள் மூலம் நீங்கள் பரிவர்த்தனை செய்வதைப்போல என்று வைத்துக்கொள்ளுங்கள். இவற்றுக்கு நம் நாணய அலகில் பெறுமதி உண்டு. அது நாளுக்குநாள் மாறும். குறித்த பொருள் அல்லது சேவையை அணுக மறைகுறியீட்டு நாணயத்தின் அன்றைய பெறுமதிக்கு ஈடான உண்மையான பணத்தை நீங்கள் வழங்கி பரிவர்த்தனையில் ஈடுபடலாம்.\nஇந்த மறைகுறியீட்டு நாணயங்கள், Blockchain என்ற தொழில்நுட்பம் மூலம் கட்டுப்படுத்தப்படுகின்றன. இவற்றின் பரிவர்த்தனைகள் இதில் பதியப்படும். Blockchain என்பது ஒரு மையக்கட்டுப்பாடற்ற/ பரவலாக்கப்பட்ட உலகம் முழுதும் பல கணினிகளில் இயங்கும் ஒரு தொழில்நுட்பம் ஆகும். ஏலவே கூறியது போல் பணப்பரிவர்த்தனைகளை இது கண்காணித்து பதிவு செய்யும். பாதுகாப்பு என்பது இந்த தொழில்நுட்பத்தின் ஒரு அங்கமாக உள்ளது.\nஎன்னதான் பொருள் மற்றும் சேவை கொள்வனவுக்கான ஒரு ஊடகமாக இது அறிமுகமானாலும் இப்போது தங்கம், வைரம், பங்குச்சந்தையில் பங்குகள் போன்று இன்றைய டிஜிட்டல் யுக சொத்தாக இந்த மறைகுறியீட்டு நாணயம் (Cryptocurrency) இப்போது உருவெடுத்துள்ளது என்பதே நிதர்சனம்.\n“மறைகுறியீட்டு நாணயம் என்பது பரவலாக்கப்பட்ட (மையக்கட்டுப்பாடற்ற) மெய்நிகர் பணம், இது Blockchain தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டது.” இது Forbes தளத்தால் வெளியிடப்பட்ட வரைவிலக்கணம் ஆகும்.\nசரிவர ஆராயாமல் இதில் முதலிடுவது தங்களை அதலபாதாளத்தில் தள்ளவும் வாய்ப்புண்ட�� என்கின்றனர் நிபுணர்கள். இது ஒரு சவர்க்கார குமிழ் போன்றது எனவும் சிலர் வாதாடுகின்றனர்.\nCryptocurrency என்பது டிஜிட்டல் வழி பரிவர்த்தனை செய்யும் ஒரு ஊடகம். இதில் Crypto என்பது இது மறைகுறியாக்கப்பட்டதை (encrypted- பிறிதொரு நபரால் வாசிக்க அல்லது விளங்கிக்கொள்ள இயலாதவாறு கணினி சங்கேத மொழியில் மாற்றப்பட்டு இருக்கும்) குறிக்கிறது. இதன்மூலம் பாதுகாப்பு ஊர்ஜிதப்படுத்தப்படுகிறது. WhatsAppல் “Messages and calls are end-to-end encrypted” என்று கூறப்பட்டிருக்கும். இதன் அர்த்தம் தங்களையும் தங்களோடு தொடர்பு கொள்பவரையும் தவிர வேறு யாருக்கும் உங்களிருவரிடையே இடம்பெற்ற உரையாடல்களை பார்வையிடவோ செவிமடுக்கவோ முடியாது. காரணம் அவையனைத்தும் சங்கேத குறிகளாக இருமருங்கிலிருந்தும் மொழிமாற்றம் செய்யப்படும். மூன்றாம் நபர் ஒருவர் இதனை ஒட்டுக்கேட்பது பகீரத ப்ரயத்தனம் என்பதே உண்மை. அதுமட்டுமின்றி இந்த பணம் பரவலாக்கப்பட்டது. அதாவது அமெரிக்க டொலர், யூரோ போன்று குறியாக்கபணத்தின் பெறுமதியை நிர்ணயிக்க, நிர்வகிக்க மத்திய அதிகாரம் கொண்ட அமைப்பு அல்லது ஆணைக்குழு என்று ஒன்று கிடையாது. உதாரணத்திற்கு இலங்கை ரூபாயானது இலங்கை மத்திய வங்கியின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதுபோல் இதனை கட்டுப்படுத்த ஒரு நிறுவனம் இல்லை. அதற்கு பதிலாக இந்தப்பணி உலகம் முழுவதும் வியாபித்துள்ள அதன் பயனர்கள் மத்தியில் இணைய வழியாக பரவலாக்கப்பட்டுள்ளது. இதன் பெறுமதி அதன் பயனர்கள் கையிலேயே உள்ளது. இது பரவலாக்கப்பட்டது என்ற பதத்திற்கான அர்த்தம் தற்போது தங்களுக்கு புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.\nநாணயத்தாள் போலோ நாணயக்குற்றி போலோ இதற்கு பௌதிக வடிவம் கிடையாது. கணினியில் ஒரு தரவாகவே இன்னும் தெளிவாக சொல்லப்போனால் கணினிக்குறியாகவே (Computer code) இது புழங்குகிறது.\nசரி அது எங்கு எவ்வாறு சேமிக்கப்படும்\nBlockchain - தொகுதிச்சங்கிலி சித்தரிப்புப்படம்\nபுகைப்பட உதவி : Devops.com\nமறைகுறியீட்டு நாணயத்தை இணைய, கணினி வெளியில் நிலைக்க வைக்கும் தொழில்நுட்பம் இது. எமது கணினி தரவுகளை கோப்புகளில் (File) சேமிப்போமல்லவா அதுபோன்றதென வைத்துக்கொள்ளுங்கள். ஆனால் ஒரு கணினியில் சேமிக்கப்பட்டிருக்கும் கோப்பு அல்ல. உலகம் முழுதும் ஒரு வலையமைப்பில் பரவிக்கிடக்கிறது. இது Bitcoin (ஒரு வகை மறைகுறியீட்டு நாணயம்), மற்றும் ஏனை��� மறைகுறியீட்டு நாணயங்களுக்கு மாத்திரமே பிரத்யேகமானது அல்ல. இதில் வேறு பல பயன்பாடுகளும் உள்ளன. அந்த பயன்பாடுகளில் இதுவும் ஒன்று.\nஅடிப்படையில் தொகுதிச்சங்கிலி என்பது பரிவர்த்தனைகளை குறியாக பதிவு செய்யும் ஒரு திறந்த, விநியோகிக்கப்பட்ட பேரேடு ஆகும். நடைமுறை வழக்கில் கூறினால் எண்ணற்ற கணினிகளுக்கு மத்தியில் விநியோகிக்கப்பட்ட காசோலை புத்தகம் என்று வைத்துக்கொள்ளலாம். பரிவர்த்தனைகள் ‘தொகுதி’களில் (Blocks) பதியப்பட்டு முன்னைய மறைகுறியீட்டுநாணய பரிவர்த்தனைகளின் ‘சங்கிலி’யில் (Chain) இணைக்கப்படும். “ஒவ்வொரு நாளும் நீங்கள் பணம் செலவழிக்கும் அனைத்தையும் எழுதும் ஒரு புத்தகத்தை கற்பனை செய்து பாருங்கள், ஒவ்வொரு பக்கமும் ஒரு தொகுதிக்கு ஒத்ததாக இருக்கும், மேலும் முழு புத்தகமும், பக்கங்களின் கோர்ப்பு, ஒரு தொகுதிச்சங்கிலி (Blockchain) ஆகும்” என ஆபிரிக்காவை சேர்ந்த மறைகுறியீட்டு நாணயமாற்று சேவையான Quidaxன் தலைமை நிறைவேற்று அதிகாரி மற்றும் இணை நிறுவனரான Buchi Okoro அவர்கள் கூறியுள்ளார். (மூலம்: Forbes)\nதொகுதிச்சங்கிலி மூலமாக மறைகுறியீட்டு நாணயத்தை பாவிக்கும் அனைவரும் ஒரு ஒருங்கிணைந்த பரிவர்த்தனை பதியப்பட்ட மேற்குறித்த புத்தகத்தின் தமக்கான பிரதியை தம்வசத்தே வைத்திருப்பர். இதில் உலகம் முழுவதும் இடம்பெறும் பரிவர்த்தனைகள் பதியப்பட்டு இருக்கும். மென்பொருள் ஒவ்வொரு புதிய பரிவர்த்தனையையும் நடக்கும் போது பதிவுசெய்கிறது. மேலும் தொகுதிச்சங்கிலியின் ஒவ்வொரு நகலும் புதிய தகவலுடன் ஒரே நேரத்தில் புதுப்பிக்கப்பட்டு, எல்லா பதிவுகளையும் ஒரே மாதிரியாகவும் துல்லியமாகவும் வைத்திருக்கும். மோசடியைத் தடுக்க, ஒவ்வொரு பரிவர்த்தனையும் இரண்டு முக்கிய சரிபார்ப்பு நுட்பங்களில் ஒன்றைப் பயன்படுத்தி சரிபார்க்கப்படுகிறது ஒன்று வேலை சான்று (Proof of work) அல்லது பங்குச்சான்று (Proof of Stake) மூலம் இது நடைபெறும்.\nவேலை சான்று மற்றும் பங்குச்சான்று\nவேலைச்சான்று மற்றும் பங்குச்சான்று என்பன ஏற்கனவே கூறியது போல பரிவர்த்தனைகளை ஒரு தொகுதிச்சங்கிலியில் இணைப்பதற்கு முன்பாக அதனை சரிபார்க்க பயன்படும் இருவேறு நுட்பங்கள் ஆகும். இது சரிபார்ப்பவர்களுக்கு மேலதிக மறைகுறியீட்டு நாணயங்களை வெகுமதியாக வழங்குகிறது.\nவேலைச்சான்று: “வேலைச்சான்று என்��து தொகுதிச்சங்கிலியில் பரிவர்த்தனைகளை சரிபார்க்கும் ஒரு நுட்பமாகும். இது ஒரு கணித பிரசினத்தை கணினிக்கு வழங்கி அதனை தீர்க்கச்செய்யும் ஒரு வழிமுறை (algorithm) ஆகும்” என்கிறார் Xcoins.comன் சமூக வலைத்தள மேலாளர் Simon Oxenham.\nபங்கேற்கும் ஒவ்வொரு கணினியும் ஒரு ‘தோண்டுனர்’ அதாவது ‘Miner’ என அழைக்கப்படும். இது ஒரு கணித புதிரை தீர்க்கிறது. இதன்மூலம் ஒரு தொகுதி (Block) என குறிப்பிடப்படும் ஒரு தொகை பரிவர்த்தனைகளை சரிபார்க்க உதவுகிறது. பின்னர் அவற்றை தொகுதிச்சங்கிலி பேரேட்டில் பதிவு செய்கிறது. இதனை முதலில் வெற்றிகரமாக நிறைவு செய்யும் கணினிக்கு சிறிதளவு மறைகுறியீட்டு நாணயம் அதன் முயற்சிக்கு வெகுமதியாக அளிக்கப்படுகிறது.\nவேலை சான்று தொழிற்படும் விதம் - சித்தரிப்பு வரைபடம்\nதொகுதிச்சங்கிலி புதிர்களை தீர்ப்பதற்கான இந்த பந்தயத்திற்கு பாரியளவான கணினி வலுவும் மின்சாரமும் தேவைப்படும். இதற்காக செலவாகும் வலுச்செலவு மற்றும் கணினி வளங்களை கருத்தில்கொள்ளும் போது நடைமுறையில் இந்த Minerகள் பரிவர்த்தனைகளை சரிபார்ப்பதற்காக தமக்கு கிடைக்கும் மறைகுறிகளையும் முடிக்க வாய்ப்புள்ளது.\nபங்குச்சான்று: பரிவர்த்தனைகளை சரிபார்க்க செலவாகும் சக்தியின் அளவை குறைக்க சில மறைகுறியீட்டு நாணயங்கள் பங்குச்சான்று முறை மூலம் பரிவர்த்தனைகளை சரிபார்க்கின்றன. பங்குச்சான்று மூலம் ஒவ்வொரு நபரும் தமது பங்காக எடுக்க விரும்பும் மறைகுறியீட்டு நாணயத்தின் அளவு கொண்டு அவர்கள் சரிபார்க்கக்கூடிய பரிவர்த்தனைகளின் அளவு மட்டுப்படுத்தப்படுகிறது. அல்லது இந்த செயற்பாட்டில் பங்கெடுக்கும் பொருட்டு தற்காலிகமாக ஒரு பொது பெட்டகத்தில் இது பூட்டிவைக்கப்படும் (இங்கு பெட்டகம் என குறிப்பிடப்படுவது உண்மையான பெட்டகம் அல்ல. இது மெய்நிகரானது, வெறுமனே கணினி குறிகள் அவ்வளவே). “இது கிட்டத்தட்ட வங்கி இணை போன்றது” என Okoro கூறுகிறார். மறைகுறியீட்டு நாணயத்தை வைத்திருக்கும் ஒவ்வொருவரும் பரிவர்த்தனைகளை சரிபார்க்க தகுதியுடையவரே ஆயினும் அதற்கு நீங்கள் தேர்வு செய்யப்பட எதிர்கொள்ள வேண்டிய முரண்கள் நீங்கள் முன்வைக்கும் பணத்துடன் அதிகரிக்கும்.\n“பங்குச்சான்றானது அதீத ஆற்றல் உறிஞ்சும் சமன்பாடு தீர்க்கும் பிரச்சினையை இல்லாது செய்வதால் இது வேலை சான்றை விட வினைத்திறன்மிக்கது. இது பரிவர்த்தனைகளுக்கு விரைவான சரிபார்ப்பு/உறுதிப்படுத்தல்களுக்கு தேவையான இடத்தை வழங்குகிறது” என Osom Financeன் தலைமை நிறைவேற்று அதிகாரி Anton Altement கூறுகிறார்.\nஒரு புதிய தொகை பரிவர்த்தனைகளை சரிபார்க்க ஒரு பங்கு உரிமையாளர் (சில வேளைகளில் மதிப்பீட்டாளர் என அழைக்கப்படுவதுண்டு) தேர்ந்தெடுக்கப்பட்டால் அவருக்கு மறைகுறியீட்டு நாணயம் வழங்கப்படும். இது பரிவர்த்தனைகளின் தொகுதியிலிருந்து (Block) மொத்த பரிவர்த்தனை கட்டணங்களின் அளவாக இருக்கலாம்.\nமோசடியை தவிர்க்கும் பொருட்டு, ஒரு வேளை நீங்கள் தெரிவுசெய்யப்பட்டு தவறான பரிவர்த்தனைக்கு தாங்கள் அங்கீகாரம் அளிக்கும்போது உங்களுடைய பங்கில் ஒரு பகுதியை தாங்கள் இழக்க நேரிடும். ஆகவே சரியான பரிவர்த்தனைகளை மாத்திரமே உறுதிப்படுத்தல் உங்கள் பங்குகளை தக்கவைக்கும்.\nவேலை சான்று மற்றும் பங்குச்சான்று ஆகிய இரண்டும் பரிவர்த்தனைகளை சரிபார்க்க ஒருமித்த வழிமுறைகளை நம்பியுள்ளன. இதன் பொருள் ஒவ்வொருவரும் பரிவர்த்தனைகளை சரிபார்க்க தனிப்பட்ட பயனர்களைப் பயன்படுத்தும் போது, ஒவ்வொரு சரிபார்க்கப்பட்ட பரிவர்த்தனையும் பெரும்பான்மையான பேரேடு வைத்திருப்பவர்களால் சரிபார்க்கப்பட்டு அங்கீகரிக்கப்பட வேண்டும்.\nஉதாரணத்துக்கு ஒரு கணினி ஊடுருவிக்கு (Hacker) தொகுதிச்சங்கிலி (Blockchain) பேரேட்டை மாற்றியமைக்க அவரது மோசடிப்பதிப்பு குறைந்தது 51% பேரேடுகளுடன் அது பொருந்த வேண்டும். இவ்வாறு செய்வதற்கு தேவையான பாரிய அளவு வளங்களுடன் அதனால் பெறப்படும் இறுதிவிளைவை ஒப்பிடுகையில் யானைப்பசிக்கு சோளப்பொறி என்பதே நிதர்சனம்.\nஇத்துடன் இந்த கட்டுரை முற்றுப்பெறவில்லை. இந்த நாணயங்கள் எவ்வாறு மாற்றப்படுகின்றன மற்றும் இவை பற்றி எம் இலங்கை மத்திய வங்கியின் நிலைப்பாடு யாது மற்றும் இவை பற்றி எம் இலங்கை மத்திய வங்கியின் நிலைப்பாடு யாது என்பவை பற்றி இதன் அடுத்த பாகத்தில் அறியத்தருவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akuranatoday.com/28372/", "date_download": "2021-10-19T12:40:28Z", "digest": "sha1:H4URNXAIH2LBJQ37BZ5YIEI7BSBI7CVC", "length": 3670, "nlines": 64, "source_domain": "www.akuranatoday.com", "title": "ஞானசார தேரரின் சாட்சியத்தை இரகசியமாக வீடியோ செய்ததால் சர்ச்சை !! - Akurana Today", "raw_content": "\nஞானசார தேரரின் சாட்சியத்தை இரகசியமாக வீடியோ செய்ததால் சர்ச்சை \nஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் வாக்குமூலங்கள் பெற்று வரும் நிலையில், இன்றைய தினம் ஞானசார தேரர் மற்றும் அகில இலங்கை ஜாமிஅதுல் உலமாவின் உப செயலாளர் உட்பட மேலும் சிலர் ஆஜராகியிருந்தனர்.\nஇந்நிலையில், ஞானசார தேரரின் வாக்குமூலத்தை இரகசியமாக தனது சட்டத்தரணி மூலம் உள்ளே எடுத்துவந்த கையடக்க தொலைபேசி மூலம் பதிவு செய்ததை அடுத்து சந்தேகத்திற்கிடமான செயலின் காரணமாக குறித்த மௌலவியை சோதனைக்குட்படுத்திய போது இரகசியமாக பதிவு செய்தது தெரியவந்தது.\nபின்னர் அகில இலங்கை ஜாமிஅதுல் உலமாவின் உப செயலாளர் மற்றும் இதற்கு உடந்தையாக இருந்த சட்டத்தரணியிடமிருந்து அறிக்கைகளைப் பெற பொலிஸ் விசாரணை பிரிவுக்கு ஆணைக்குழுவின் தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.\nPrevious articleமு.கா. Mp க்கள் சிலர், அரசாங்கத்தில் இணைய உள்ளார்களா..\nNext articleஆசிய வல்லரசு ஒன்று இலங்கை முஸ்லிம்களை குறி வைத்ததா\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலை ஆட்சியை கைப்பற்ற அரசு பயன்படுத்தியது\nஉலமா சபை எமது கேள்விகளுக்கு பதில் தரவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akuranatoday.com/40279/", "date_download": "2021-10-19T11:35:22Z", "digest": "sha1:5LS6COL6TIBIWBXA2L2U6IPBWIISJLSL", "length": 2746, "nlines": 70, "source_domain": "www.akuranatoday.com", "title": "இன்றைய தங்க விலை (31-10-2020) சனிக்கிழமை - Akurana Today", "raw_content": "\nஇன்றைய தங்க விலை (31-10-2020) சனிக்கிழமை\nஇன்று இலங்கை தங்க விலைகளில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை, நேற்றைய தின விலைகளின் அடிப்படையிலேயே இன்றைய விலைகளும் அமைந்து காணப்படுகின்றது\n24 கரட் தங்கம் – 105,500 ரூபா\n22 கரட் தங்கம் – 96,700 ரூபா\n21 கரட் தங்கம் – 92,350 ரூபா\nதவறாமல் தினமும் காலையில் தங்க விலைகளை உங்கள் போனுக்கு SMS ஆக பெற்றுக்கொள்ள வேண்டுமா கீழே பட்டனை கிளிக் செய்து SMS செய்யவும்.\nPrevious articleஉங்கள் வீட்டுக்கு வரும் பொதுச் சுகாதார, பரிசோதகர்கள் குறித்து விழிப்புடன் இருங்கள்\nNext articleஇலங்கையில் பரவுவது B.1.42 என்ற, சக்திவாய்ந்த கொரோனா – ஆய்வில் அதிர்ச்சித் தகவல்\nஇலங்கையின் இன்றைய தங்க விலை பற்றிய விபரம் – Today Srilanka Gold Price\nஇன்றைய தங்க விலை (07-09-2021) செவ்வாய்க்கிழமை\nஇன்றைய தங்க விலை (25-08-2020) புதன்கிழமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2021/09/17/chief-minister-mk-stalin-pledges-social-justice-day", "date_download": "2021-10-19T11:37:45Z", "digest": "sha1:HGPBFZSHSMAZUY7YISHS2PJYFEXH4ZPM", "length": 8300, "nlines": 56, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Chief Minister MK Stalin pledges Social Justice Day", "raw_content": "\n“சென்னை முதல் குமரி வரை ‘சமூகநீதி நாள்’ உறுதிமொழி ஏற்பு” : தந்தை பெரியாருக்கு மகுடம் சூட்டிய முதலமைச்சர்\nதந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு சமூக நீதி நாள் உறுதிமொழியேற்பிற்கு முன்னதாக தந்தை பெரியார் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.\nதந்தை பெரியார் பிறந்தநாள் விழா இன்று (செப். 17) கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்தநாளை “சமூகநீதி நாள்” என அறிவித்து அரசாணை வெளியிட்டு கவுரவப்படுத்தியுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.\nஅந்தவகையில், தமிழ்நாடு முழுவதும் பெரியாரின் பிறந்தநாளை சமூகநீதி நாளாக மக்கள் கடைபிடித்து வருகின்றனர். மேலும் தி.மு.க உள்ளிட்ட அரசியல் கட்சியினர் தமிழ்நாடு முழுவதும் உள்ள தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். மேலும் அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்றனர்.\nஅதுமட்டுமல்லாது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த “சமூகநீதி நாள்” உறுதிமொழியையும் எடுத்துவருகின்றனர். மேலும் சம கல்வி, பெண்கள் முன்னேற்றம், சுயமரியாதை, கலப்புத்திருமணம், தீண்டாமை எதிர்ப்பு, மூட நம்பிக்கைகள் எதிர்ப்பு நிலை, கைம்பெண் மறுமணம் என தந்தை பெரியாரின் கொள்கைகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை, அண்ணா சாலையில் அமைந்துள்ள தந்தை பெரியார் அவர்களின் திருவுருவச் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.\nஅதனைத் தொடர்ந்து, தலைமைச் செயலகத்தில், தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு சமூக நீதி நாள் உறுதிமொழியேற்பிற்கு முன்னதாக தந்தை பெரியார் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். பின்னர் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.\nஇந்நிகழ்வில், சட்டப்பேரவைத் தலைவர் மு. அப்பாவு, அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர், அரசு துறைச் செயலாளர்கள், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.\nசமூகநீதி காத்த பகுத்தறிவுப் பகலவன்.. சமூக வலைதளங்களில் வைரலாகும் தந்தை பெரியாரின் டிஜிட்டல் ஓவியம்\nசிறுநீரக கல்லுக்கு பதிலாக சிறுநீரகத்தையே அகற்றிய மருத்துவர்... நுகர்வோர் ஆணையத்தின் அதிரடி உத்தரவு\n50 ஆண்டுகளுக்குப் பிறகு மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றியத்தை கைப்பற்றிய தி.மு.க - ஆட்சிக்கு கிடைத்த நற்சான்று\nதண்ணி இல்லாத காட்டில் மாட்டிக்கொண்ட 2 பேர்.. 1 வாரம் கழித்து மீட்ட போலிஸ்: ஆஸ்திரேலியாவில் நடந்தது என்ன\n” : அமைச்சர் சேகர்பாபு சூசகம்\n“விரைவில் ஆழ்கடல் அகழாய்வுப் பணிகளைத் தொடங்க ஆலோசனை” : அமைச்சர் தங்கம் தென்னரசு முக்கிய தகவல்\nசிறுநீரக கல்லுக்கு பதிலாக சிறுநீரகத்தையே அகற்றிய மருத்துவர்... நுகர்வோர் ஆணையத்தின் அதிரடி உத்தரவு\nதண்ணி இல்லாத காட்டில் மாட்டிக்கொண்ட 2 பேர்.. 1 வாரம் கழித்து மீட்ட போலிஸ்: ஆஸ்திரேலியாவில் நடந்தது என்ன\n50 ஆண்டுகளுக்குப் பிறகு மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றியத்தை கைப்பற்றிய தி.மு.க - ஆட்சிக்கு கிடைத்த நற்சான்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/131221/", "date_download": "2021-10-19T12:18:33Z", "digest": "sha1:7VVBKJSFQQ6L3UN6QXKSN7DJCBCW5XCE", "length": 18487, "nlines": 122, "source_domain": "www.jeyamohan.in", "title": "சித்திரைநிலவு- கடிதங்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nவாசகர்கள் கடிதம் சித்திரைநிலவு- கடிதங்கள்\nஇன்று சித்திரை முழு நிலவு நாள். பெரும்பாலும் இன்று அருணை மலையில் வ்ருபாக்ஷ குகையில் இருப்பேன். நிலவு பொழியும் அருணைக் கோவிலை, வரை குகை வாயிலில் இருந்து பார்த்துக் கொண்டிருப்பது ஒரு அதீத அனுபவம். ரமணரின் இருப்பை அப்போது நான் உணர்வதாக நினைத்துக் கொள்வேன். ரமணர் எந்த குகையில் அமர்ந்து எந்த நிலவை எந்தக் கோவிலை பார்த்துக்கொண்டிருந்தாரோ அதே நிலா அதே குகை அதே கோவில். ஆனால் நான் மட்டும் ரமணன் இல்லை. பார்ப்போம் இருக்கவே இருக்கிறது வேறு பல பிறவிகள். புல்லாய் பூண்டாய் புழுவாய் இங்கே மீண்டும் மீண்டும் பிறப்பதே என் எண்ணம்.\nஇன்று மொட்டை மாடியில் நிலவின் கீழ் நின்றிருப்பேன். நீங்களும் நிலவு காணுங்கள் . :)\nகீழ்கண்ட அருணைமலை வம்சி எடுத்தது.\nமீண்டுமொரு சித்திரை முழுநிலவு. உலகமே வீடுகளுக்குள் தாளிட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்தபடி இன்றைய சித்திரை நிலவு ப���ணிக்கும். மதுரையில் தனிமையில் மீனாட்சி அன்னையும் சுந்தரேஸ்வரும் மணமுடித்து இருக்கிறார்கள். ஆற்றில் அழகர் இறங்குவதற்கும் தடை. ஆனால் மண்டூகருக்கு சாப விமோசனம் உண்டாம், அதுவும் அழகர் கோவிலிலேயே இம்முறை. இன்று சாபங்களுக்கு விமோசனம் தரும் தினமும் போல என்று இன்றைய பலிக்கல் படித்ததும் நினைத்தேன்.\nசென்ற ஆண்டின் ஒவ்வொரு முழுநிலவு நாளும் வேறு வேறு இடங்களில் இருந்தேன். நிலவுகளை சேகரித்துக் கொண்டிருந்தேன். முன் திட்டமல்ல; அப்படிச் சொல்ல முடியாது, என் திட்டமல்ல என்று மட்டும் சொல்லலாம். இப்போது அனைத்துப் பயணங்களையும் அங்கு கண்ட நிலவுகளையும் நினைவில் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அடுத்த சித்திரை நிலவு எங்கோ தெரியவில்லை.\nஎன்றென்றும் சித்திரை நிலவு இவ்வரிகளையும் ஆசிரியரின் பாதங்களையும் நினைவுறுத்தும்.\nஅது சித்திரை மாதம் முழுநிலவு நாள். இனி என்றென்றும் ஞானம் விளையும் தருணமாகவே அது எண்ணப்படும் என்றார் பைலர். இந்த நாளில் பேராசிரியரின் பாதங்களைப் பணிந்து அவரளித்த ஞானத்திற்கு கைமாறாக தங்களை முழுதளிக்க வேண்டும் என்று அவர்கள் முடிவெடுத்தனர். “இச்சொல் இங்கு வாழவேண்டும். இது இந்நிலத்தின் விதைக்களஞ்சியம்” என்றார் ஜைமினி\nகேரள தலித்துக்கள் – கடிதங்கள்\nஆசிரியனுக்கு முன்னால் செல்லுதல், கடிதம்\nகோவை சொல்முகம் கூட்டத்தில் செந்தில்\nதன் உருவத்தில் இருந்து மேலெழுதல்\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 81\nகடவுளெனும் குறியீட்டின் அர்த்தங்கள்(விஷ்ணுபுரம் கடிதம் ஐந்து)\nசிறுகதைகள் என் மதிப்பீடு -5\nஅண்ணா ஹசாரே மீண்டும் ஒரு கடிதம்\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி கி.ராஜநாராயணன் கோவை ஞானி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உணவு உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் தொல்லியல் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் நகைச்சுவை நேர்காணல் நேர்காணல் மற்றும் பேட்டிகள் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பிறர் படைப்புகள் நூல் மதிப்புரை மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் மதிப்புரை விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெண்முரசு – ஒலிவடிவம் வெண்முரசு – வாசகர் கடிதம் வெண்முரசு – வாசகர் மதிப்புரை வெண்முரசு ஆவணப்படம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/93787/", "date_download": "2021-10-19T11:24:13Z", "digest": "sha1:WVZ7IPHZZ6ERNFWECNSE2JEKNCGVZPG7", "length": 57917, "nlines": 153, "source_domain": "www.jeyamohan.in", "title": "’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 70 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nவெண்முரசு கிராதம் ’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 70\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 70\nஉக்ரனின் குரல் மிக மெல்லிய ஊழ்க நுண்சொல்போல் முதலில் எழுந்தது. “அடிமுடி.” அவன் அதையே சொல்லிக்கொண்டிருக்க பைலனின் உள்ளத்தில் அச்சொல் குழம்பிப்பரவியது. அடிதல், முடிதல். அடித்து அடித்து அடிமையெனப் பணிந்து அடிதொழுது முடிந்தமைந்த முடி. முடிந்த முடி, முதலென முடியென எழுதல். அடியென அமைவென விழுதல். சொல் எங்கெல்லாம் சென்று தொடுகிறது நச்சுக்கொடுக்கு இல்லாத சொல்லென ஏதுமில்��ை. அத்தனை சொற்களும் ஊழ்க நுண்சொற்களே. மொழி என்பது ஓர் ஊழ்கவெளி. மொழிப்படலம். அடிமுடி காணாத அனல்வெளி. மொழியாகி நின்றிருக்கும் இதில் எல்லா சொற்களும் அடிமுடியற்றவை.\nஉக்ரனின் சொற்கள் நஞ்சுண்டு மயங்கி காலிடறி நடக்கும் வெள்ளாட்டுநிரைகளென ஒன்றுடன் ஒன்று முட்டிக்கொண்டு ஒன்றை ஒன்று சார்ந்தும் சரித்தும் நிரைகொண்டன. நிரைகலைந்து மீண்டும் கண்டுகொண்டன. என்ன சொல்கின்றான் அவன் விரல்கள் தவிப்பதை பைலன் கண்டான். வைசம்பாயனன் அவன் கையில் அரணிக்கட்டையை எடுத்து அளித்தான். அச்செயல் பைலனை மெல்லிய அதிர்வுக்குள்ளாக்கியது. அறியாப்பொருள்கொண்ட ஒரு செயல். மானுடர் கைகளை தெய்வங்கள் எடுத்துக்கொள்ளும் தருணம். எப்போதும் முள்முனைமேல் நிலைபிறழாதிருக்கிறான் இவ்விளையசூதன். சொல்லே அருளென்றாகுமா அவன் விரல்கள் தவிப்பதை பைலன் கண்டான். வைசம்பாயனன் அவன் கையில் அரணிக்கட்டையை எடுத்து அளித்தான். அச்செயல் பைலனை மெல்லிய அதிர்வுக்குள்ளாக்கியது. அறியாப்பொருள்கொண்ட ஒரு செயல். மானுடர் கைகளை தெய்வங்கள் எடுத்துக்கொள்ளும் தருணம். எப்போதும் முள்முனைமேல் நிலைபிறழாதிருக்கிறான் இவ்விளையசூதன். சொல்லே அருளென்றாகுமா\nஅரணிக்கட்டையின் மென்மரப்பரப்பில் உக்ரனின் விரல்கள் ஓடலாயின. தொட்டுத்தொட்டு அவை தாவ மென்மரம் தோற்பரப்பென ஒலிகொண்டது. அறிதல்களுக்குரிய அடி. அடிதாளம். அறிந்தறிந்து செல்லும் முடி. முடிதாளம். “அவ்வண்ணம் எழுந்தான் அனலுருக்கொண்ட முதலோன்” என்றான் உக்ரன். “அது அறியவொண்ணா அப்பழங்காலத்தில் நிகழ்ந்தது. ஒவ்வொரு நாளும் அவனை அழகுருவனாக தன் அருகே கண்டுகொண்டிருந்தாள் அன்னை. அருள்புரிக் கைகளுடன் அவனை தங்கள் தவத்திற்குப் பின் எழுப்பினார்கள் முனிவர்கள். ஆட்டன் என அவனை அறிந்துரைத்தனர் கவிஞர்.”\nஆனால் அனைவரும் அறிந்திருந்தனர், அனலென்பது என்னவென்று. தங்கள் காதலை, தவத்தை, சொற்களைக் கடந்து அரைக்கணத்தின் ஆயிரத்தில் ஒரு மாத்திரையில் அடிமுடி அறியவொண்ணா அப்பெருங்கனலைக் கண்டு அஞ்சிப்பின்னடைந்து அறிந்தவற்றுள் மீண்டமைந்தனர். அறியவொண்ணாமையும் அறிதலுமாக நின்றிருந்தது அது. அதன் நிழலில் வாழ்ந்தது விசும்பு.\nஅந்நாளில் ஒருமுறை விண்ணுலாவியாகிய நாரதர் பிரம்மனின் அவைக்கு சென்றார். அங்கு தன் தேவியுடன் அமர்ந்து படைப்பிறைவன் தாயம் விளையாடிக்கொண்டிருப்பதைக் கண்டார். ஒரு முகம் சிரிக்க இன்னொன்று கணிக்க மற்றொன்று வியந்து நோக்கியிருக்க பிறிதொன்று ஊழ்கத்திலமைந்திருக்க ஒரு கையில் தாமரையும் மறுகையில் மின்படையும் கொண்டு கீழிருகைகளால் எண்களத்தில் பகடை உருட்டிய பிரம்மன் திரும்பி “வருக நாரதரே, இங்கு விசைமுற்றிய ஓர் ஆடல் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. வெற்றியும் தோல்வியும் வாள்முனை கொண்டுள்ளன” என்றார்.\n“ஆம், இருவர் முகத்திலும் அதன் உவகை உள்ளது” என்றபடி அருகணைந்தார் நாரதர். பகடையை உருட்டிவிட்டு புன்னகையுடன் பின்சாய்ந்து “ஆம், ஆடுக” என்றார் பிரம்மன். திரும்பி நாரதரிடம் கண்சிமிட்டி “ஒவ்வொரு பகடையும் ஒரு புதுப் படைப்பு. பகடை நின்றபின்னரே படைக்கப்பட்டது என்ன என நான் அறிவேன். காலம், இடம், பரு, பொருள் என நான்கு பக்கங்களின் ஆடல் மட்டுமே இப்பகடை” என்றார். உதடுகோட்டி பகடையின் எண்களை நோக்கிய கலைமகளைச் சுட்டி “என் படைப்புக்கு இவள் சொல்நிகர் வைக்கவேண்டும். அவள் சொல்லுக்கு நான் படைத்தளிக்கவேண்டும் என்பதே ஆடல்நெறி” என்றார்.\nதேவி அக்களங்களை சுட்டுவிரலால் தொட்டு எண்ணி காய்களை கருதிக்கருதி நகர்த்திவைத்தாள். பின்னர் “ஆம்” என தலையசைத்து காய்நிரைத்து நிமிர்ந்து புன்னகைத்தாள். “நன்று” என்றார் நாரதர். குனிந்து நோக்கிய பிரம்மன் “ஆம், அது தன் பெயரைப் பெற்றுவிட்டது” என்றார். “சொல்சூடுவதுவரை பொருள் நின்று பதைக்கிறது. சொல் அதன் அடையாளம் ஆனதும் பிற அனைத்து அடையாளங்களையும் அதற்கேற்ப ஒடுக்கி அதற்குள் நுழைந்து ஒடுங்கிக்கொள்கிறது. விந்தைதான்” என்றார் நாரதர். “சொல்லெனும் சரடால் பொருள்வெளியுடன் இணைந்து தானில்லாதாகிறது” என்றாள் கலைமகள்.\n“இனி உன் ஆடல்” என்றார் பிரம்மன். பகடையை கையில் எடுத்து மெல்லிய சீண்டலுடன் நகைத்து கலைமகள் அதை உருட்டினாள். புரண்டு விழுந்த எண்களை நோக்கி பிரம்மன் குனிய நாரதரிடம் “ஒலி, வரி, பொருள், குறிப்பு என நான்கு பட்டைகளால் ஆன புதிய ஒரு சொல், அதற்குரிய பொருளைப் படைத்தமைப்பது அவர் ஆட்டம்” என்றாள். தலையில் மெல்ல சுட்டுவிரலால் தட்டியபடி இடக்கையால் காயொன்றை நகர்த்தி தயங்கி பின்னெடுத்து மீண்டும் தயங்கி மீண்டும் வைத்தார் நான்முகன். மீண்டும் நகர்த்தியபோது முகம் தெளிந்தது. “இதோ” என்றார்.\n“ஆம், பொருள் பிறந்து சொல்லென்றாகிவிட்டது” என்றார் நாரதர். “விந்தை, பொருள் தனக்கு முன்னரே இருந்த சொல்லை நடிக்கிறது.” மீண்டுமொரு ஆடலுக்கென அன்னை பகடையை எடுத்தபோது “மொழி தொடாத பொருளொன்று புடவியில் இல்லை என்பார்கள். மொழியிலிருந்து பொருளுக்கோ பொருளிலிருந்து மொழிக்கோ சென்றுகொண்டிருக்கிறது நில்லாப்பெருநெசவு” என்று தனக்குத்தானே என சொன்னார். “சொற்பொருள் என விரியும் இதை தன் ஆடையென்றாக்கி அணிந்து நின்றாடுகிறான் ஒருவன். அவனுக்கு சிவம் என்று சொல். அச்சொல்லுக்கு ஆடல் என்று பொருள். அச்சொல்லுக்கும் பொருளுக்கும் அப்பால் அவனொரு அடிமுடியிலி மட்டுமே” என்றார்.\nபிரம்மன் திரும்பி நோக்கி “அடிமுடி காணவொண்ணா ஒன்று என்றால் அது பிரம்மம் மட்டுமே. அதுவன்றி பிறிதேதும் ஆக்கப்பட்டதும் அழிவுடையதுமேயாகும்” என்றார். நாரதர் “ஆம், அதையே நானும் எண்ணினேன். தங்கள் படைப்பிலிருந்து எழுந்தது புடவி. புடவியிலிருந்து எழுந்தது சிவம் என்பது தொல்கூற்று. அவ்வண்ணமெனில் அடியிலிருப்பது தங்கள் படைப்பே. அதன் சுழியத்தில் எழுந்த அனல் எப்படி அடியிலியாகும்” என்றார். பிரம்மன் நகைத்து “ஆம், அதை நீர் சென்று கேளும்” என்றார். “சென்று கேட்கலாம், ஆனால் நான் விழைந்த வடிவில் அவன் வரும்போது அவ்வினாவுக்கு பொருளே இல்லை. அனைத்து உசாவல்களுக்கும் அப்பால் எழுந்து நிற்கும் அந்த அனற்பெருந்தூணிடமல்லவா அதை நாம் கேட்க வேண்டும்” என்றார். பிரம்மன் நகைத்து “ஆம், அதை நீர் சென்று கேளும்” என்றார். “சென்று கேட்கலாம், ஆனால் நான் விழைந்த வடிவில் அவன் வரும்போது அவ்வினாவுக்கு பொருளே இல்லை. அனைத்து உசாவல்களுக்கும் அப்பால் எழுந்து நிற்கும் அந்த அனற்பெருந்தூணிடமல்லவா அதை நாம் கேட்க வேண்டும்\nகையில் பகடையுடன் புன்னகைத்து நின்ற தேவி “இவர் அறியாத ஒன்றுள்ளது, முனிவரே. படைப்பின் முன் படைத்தவன் மிகச்சிறியவன். தன்னை நிகழ்த்தி வளர்ந்தெழும் படைப்புக்கு வேரும் கிளையும் முடிவடைவதே இல்லை. எனவே அதற்கு மண்ணும் வானும் இல்லை” என்றாள். “அது நீ படைக்கும் சொல்லுக்கு. அது உளமயக்கு. நான் படைப்பவை காலமும் இடமும் கொண்ட இருப்புக்கள். அவை என் கைக்கு அடங்குபவை” என்றார். “நீங்கள் அதை அறியமுயல்கையிலேயே அது அறிபடுபொருள் என்றாகிவிடுகிறது. அறிவை மட்டுமே அறியமுடியும் என்��தனால் அனைத்து அறிபடுபொருட்களும் அறிவை அளித்து அறிவுக்கு அப்பால் நின்றிருப்பவை மட்டுமே” என்றாள் கலைமகள்.\nஅவள் சிரிப்பால் சீண்டப்பட்டு சினம்கொண்டு “அறிந்து வந்து உனக்கு அறிவென்பது பொருள் அளிக்கும் தோற்றம் மட்டுமே என்று காட்டுகிறேன்” என்றபடி பிரம்மன் எழுந்துகொண்டார். அவருடைய களிமுகம் சினத்தில் வெறித்தது. கணித்த முகம் தன்னுள் ஆழ்ந்தது. வியந்த முகம் பதைக்க ஊழ்கமுகம் விழித்தெழாதிருந்தது. “அளிகூர்ந்து அமருங்கள், படைப்பவரே ஒரு சொல்லாடலின்பொருட்டு நான் சொன்னது இது. சென்று அம்முடிவிலியை அடி தேடுவதென்பது வீண் வேலை. அத்துடன்…” என்றார் நாரதர்.\n” என்றார் பிரம்மன். “ஒருவேளை அடி சென்று தொடமுடியாவிடில்…” என நாரதர் தயங்க “வீண்சொல்” என்று பிரம்மன் சீறினார். “அடியென அமைந்திருக்கிறது என் படைப்பு. சொல் எத்தனை வளர்ந்தாலும் ஆணிவேரிலிருக்கிறது விதையின் முதல் துளி. சென்று அதைத் தொடுவதொன்றும் எனக்கு அரிதல்ல. வருக, சென்று தொட்டுக்காட்டுகிறேன்” என்றார். நாரதர் உடனெழுந்து “நான் இதை எண்ணவில்லை, தேவி” என்றார். கலைமகள் சிரித்து “நன்று, சிலவற்றை அவர் கற்கலுமாகும்” என்றாள். “வந்து நான் என்ன கற்றேன் என்று சொல்கிறேன். இங்கு படைத்தவன் நானே, எனவே மூவரில் முதல்வனும் நானே” என்றபின் நாரதரிடம் “வருக” என்று பிரம்மன் சீறினார். “அடியென அமைந்திருக்கிறது என் படைப்பு. சொல் எத்தனை வளர்ந்தாலும் ஆணிவேரிலிருக்கிறது விதையின் முதல் துளி. சென்று அதைத் தொடுவதொன்றும் எனக்கு அரிதல்ல. வருக, சென்று தொட்டுக்காட்டுகிறேன்” என்றார். நாரதர் உடனெழுந்து “நான் இதை எண்ணவில்லை, தேவி” என்றார். கலைமகள் சிரித்து “நன்று, சிலவற்றை அவர் கற்கலுமாகும்” என்றாள். “வந்து நான் என்ன கற்றேன் என்று சொல்கிறேன். இங்கு படைத்தவன் நானே, எனவே மூவரில் முதல்வனும் நானே” என்றபின் நாரதரிடம் “வருக” என்று சொல்லி பிரம்மன் நடந்தார்.\nவிண்வெளியில் பிரம்மனுடன் நடக்கையில் நாரதர் “தாங்கள் அடிதேடலாகும். அடிதொடுவதும் உறுதி. ஆனால் அதற்கு முடியுமில என்று சில நூல்கள் உரைக்கின்றன. விண்வடிவோன் அறியாத முடியென்று இருக்கலாகுமா என்ன” என்றார். ”ஆம், முடியென்று ஒன்றெழுந்தால் அவர் விண்வடிவப் பேருடலிலேயே அது சென்றமையலாகும்” என்றார் பிரம்மன். “அவரிடம் முடி சென்று தொடமுடியுமா என்று கேட்போம்” என்ற நாரதர் “ஒருவேளை தொடமுடியாமலானால் அதையும் தாங்களே தொட்டுக்காட்டலாம்” என்றார். நகைத்து “ஆம், அடியும் முடியும் அறிந்தபின் அவன் எல்லையை நான் வகுப்பேன்” என்றார் பிரம்மன்.\nஅவர்கள் சென்றபோது நாரணனும் நங்கையும் பாற்கடலின் கரையில் கரந்தறிதலை விளையாடிக்கொண்டிருந்தனர். அவரை கண்மூடச்செய்துவிட்டு மணல்கூட்டி வைத்து தன் கையிலிருந்த அணி ஒன்றை திருமகள் ஒளித்துவைத்தாள். அவர் அவள் விழிநோக்கி சிரித்தபடி கைவைத்து அதை எடுத்தார். “எப்படி எடுத்தீர்கள் கண்களை நீங்கள் மூடவில்லை” என்று அவள் சினந்தாள். “மூடிக்கொண்டுதான் இருந்தேன்…” என்றார் நாரணன். “மீண்டும்… இம்முறை நீங்கள் அறியவே இயலாது” என்றபடி அவள் தன் கணையாழியின் சிறிய அருமணி ஒன்றை மண்ணில் புதைத்தாள். “சரி, விழிதிறவுங்கள்… தேடுங்கள்” என்றாள்.\nஅவர் அவளை நோக்கி நகைத்தபின் அந்த மணல்மேல் கையை வைத்தார். “இல்லை” என அவள் கைகொட்டி நகைத்தாள். மீண்டும் ஓர் இடத்தில் கை வைத்தார். “இல்லை… இன்னும் ஒரே முறைதான்… ஒரேமுறை… தவறினால் நான் வென்றேன்” என்றாள். அவர் கையை வைத்ததும் முகம் கூம்பி “ஆம்” என்றாள். அவர் எடுப்பதற்கு முன் தானே மணலைக் கலைத்து அருமணியை எடுத்தபடி “ஏதோ பொய்யாடல் உள்ளது. எப்படி உடனே கண்டுபிடிக்கிறீர்கள்” என்றாள். நாரணன் சிரித்தார். அவர்களை நோக்கி பிரம்மனும் நாரதரும் வருவதைக் கண்டு தேவி முகம் திருப்பிக்கொண்டாள்.\nஅருகணைந்த நாரதர் “தேவி சினந்திருக்கிறார்” என்றார். “ஆம், அவள் மறைத்துவைத்தவற்றை நான் எளிதில் கண்டுபிடிக்கிறேன் என வருந்துகிறாள்” என்றார் நாரணன். நாரதர் “தேவி, செல்வங்களை மண்ணிலன்றி எங்கும் ஒளித்து வைக்கமுடியாது. அவரோ மண்மகளின் தலைவர்” என்றார். தேவி சினத்துடன் திரும்ப “அறிவிழிகொண்டவர் முன் எதை மறைக்கமுடியும் என சொல்லவந்தேன்” என்றார். பிரம்மன் “நாம் வந்ததை சொல்லும், முனிவரே” என்றார்.\n“முழுமுதன்மைக்கு ஒரு அணு குறைவென்றே மும்மூர்த்திகளும் அமையமுடியுமென தாங்களும் அறிந்திருப்பீர்கள்” என்றார் நாரதர். “ஆனால் சிவப்படிவர் தங்கள் இறைவன் அடியும்முடியுமற்ற பெருநீட்சி என எழுந்தவர் என்கிறார்கள். அது ஆணவம் என அனைத்தையும் படைத்தவர் எண்ணுகிறார். அடி தேடிக் கண்டடைந்து இவ்வளவுதான் என அவரை வ���ுத்துரைக்க சென்றுகொண்டிருக்கிறார்.” நாரணன் “முடி தேடி நான் செல்லவேண்டியதில்லை. அது என் அடிவரை வந்து நின்றிருக்கும் என அறிவேன்” என்றார். “ஆம், அதை அறியாதோர் எவர்” என்றார் நாரதர். “ஆனால் ஆற்றப்படாதவை அனைத்தும் விழைவுகளும் கூற்றுகளுமென்றே பொருள்படும் என்று நான் சொல்லவில்லை என்றாலும் நூலோர் பின்னர் சொல்லக்கூடும்.”\n“அதை ஆற்றிவிடுகிறேன். அவன் முடிதொட்டு மீள்கிறேன்” என்று விஷ்ணு எழுந்தார். “நன்று, ஆனால் முன்னரே நீங்கள் மூன்றடியால் அளந்த விண் அது. அதை மீண்டும் அளப்பதில் விந்தை என்ன இருக்கிறது அன்று அளக்காது எஞ்சியது அவுணன் சென்றமைந்த ஆழம். அதை அளந்து மீள்கையில்தான் உங்கள் மூன்றாம் அடியும் முழுதமைகிறது” என்றார் நாரதர். பிரம்மன் ஏதோ சொல்ல முயல அதை முந்தி “பருவுருக்கொண்டவை அனைத்தும் நான்முகன் படைப்பென்று அனைவரும் அறிவர். பரு அனைத்திலும் உறையும் விண்ணையும் படைத்தவர் முழுதளந்துவிட்டால் அதன்பின் அவரை முனிவர்கள் முழுமுதலுக்கு நிகர் என்றே போற்றுவர்” என்றார் நாரதர்.\nதேவி புன்னகையுடன் “இங்கு கைப்பிடி மண்ணை அகழ்ந்து மணி தேர்வதுபோல் அல்ல அது. அடியிலா ஆழம். அங்கே அனலென அகழ்ந்து ஆழ்ந்துசெல்கிறது அவர் அடி என்கிறார்கள்” என்றாள். சினத்துடன் திரும்பி “அளந்து மீள்கிறேன். அது நான் என்னையும் அறிந்துகொள்ளுதலே” என்றார் விஷ்ணு. “நன்று, இதோ நூலோர் நவின்று மகிழும் ஒரு நூலுக்கான கதை” என்று நாரதர் சொன்னார்.\nஅவர்கள் கயிலாய மலைக்குச் சென்றபோது அங்கே தன் இரு இளமைந்தருடன் ஆடிக்கொண்டிருந்தாள் அன்னை. “தேவி, உங்கள் கொழுநன் எங்கே” என்று நாரதர் கேட்டார். “இங்கு இவர்களின் தந்தையென இருப்பவர் நினைத்தபோது எழுந்தருள்வார். அயனும் அரியும் சேர்ந்து தேடுபவர் எவரென நான் அறியேன். அவரை நீங்களே கண்டடைக” என்று நாரதர் கேட்டார். “இங்கு இவர்களின் தந்தையென இருப்பவர் நினைத்தபோது எழுந்தருள்வார். அயனும் அரியும் சேர்ந்து தேடுபவர் எவரென நான் அறியேன். அவரை நீங்களே கண்டடைக” என்றாள் தேவி. “திசையிலியின் மையத்தில் அடியிலியில் தொடங்கி முடியிலியில் ஓங்கி நின்றிருக்கும் அனலே அவர் என்றனர் நூலோர். அடிமுடி காண சென்றுகொண்டிருக்கிறார்கள் இவர்கள். அவர்கள் காண்பதைக் காண சென்றுகொண்டிருக்கிறேன் நான்” என்றார் நாரதர்.\n“நானும் உடன்வருகிறேன்” என தன் வேலுடன் எழுந்தான் இளைய மைந்தன். “அது முறையல்ல, மைந்தா” என்றாள் அன்னை. “எந்தையென வந்தவரை நான் இன்றுவரை முழுதாகக் கண்டதில்லை.” தேவி அவனைத் தடுத்து “தனயர் தந்தையரை முழுதுறக் காணலாகாது, மைந்தா. அவர் அளிக்கும் முகமே உனக்குரியது” என்றாள். உணவுண்டுகொண்டிருந்த மூத்த மைந்தன் “ஆம், அன்னை சொல்லியே தந்தைமுகம் வந்தமையவேண்டும்” என்றான்.\nஅவர்கள் செல்லும் வழியில் விண்கடல் கரையோரம் அமர்ந்து தன் சிறு கமண்டலத்தில் மணலை அள்ளி அப்பாலிட்ட அகத்தியரைக் கண்டனர். “என்ன செய்கிறீர்கள், குறுமுனியே” என்றார் நாரதர். தலைதூக்கி நோக்கியபின் அதே கூருள்ளத்துடன் மணல் அள்ளிக் கொட்டியபடி “அளந்துகொண்டிருக்கிறேன்” என்றார் அகத்தியர். “கடல்மணலையா” என்றார் நாரதர். தலைதூக்கி நோக்கியபின் அதே கூருள்ளத்துடன் மணல் அள்ளிக் கொட்டியபடி “அளந்துகொண்டிருக்கிறேன்” என்றார் அகத்தியர். “கடல்மணலையா நன்று” என நகைத்தார் பிரம்மன். “அதை அளந்து முடித்துவிட்டு கடலை அளப்பீர் அல்லவா நன்று” என நகைத்தார் பிரம்மன். “அதை அளந்து முடித்துவிட்டு கடலை அளப்பீர் அல்லவா” என்றார் விஷ்ணு. “இல்லை, நான் அளந்துகொண்டிருப்பது என்னை. எனக்கு எப்போது சலிக்கிறதென்று பார்க்கிறேன்” என்றார் அகத்தியர். “சலிக்காத ஒன்றை அளக்கச் செல்கிறோம். உங்கள் கமண்டலத்துடன் வருக” என்றார் விஷ்ணு. “இல்லை, நான் அளந்துகொண்டிருப்பது என்னை. எனக்கு எப்போது சலிக்கிறதென்று பார்க்கிறேன்” என்றார் அகத்தியர். “சலிக்காத ஒன்றை அளக்கச் செல்கிறோம். உங்கள் கமண்டலத்துடன் வருக” என்றார் நாரதர். அவர் ஆவலுடன் எழுந்து “செல்வோம்… நான் திரும்பிவந்து இதை அளக்கிறேன்” என்றார்.\nஆசிரியனை அளக்க நான்கு மாணவர்கள் கிளம்பிச்சென்றனர். ஒருவர் தன் ஆணவத்தால், பிறிதொருவர் தன் அறிவால், மூன்றாமவர் தன் ஆர்வத்தால் சென்றனர். நான்காமவர் சென்றது அளந்து விளையாடும்பொருட்டு. பதினான்கு வெளிகளை, இறத்தல், நிகழ்தல், வருதல், நுண்மை, இன்மை எனும் ஐந்து காலங்களை, காலம், நியதி, கலை, வித்தை, இராகம், புருஷன், மாயை, துரியம் என்னும் எட்டு தன்னிலைகளை அவர்கள் கடந்துசென்றனர். நால்வரும் அப்பால் அப்பாலெனச் சென்று அவர்கள் உற்றதெல்லாம் அகன்றபின் கடுவெளியின் மையப்பெரும்பாழில் முழுமுதன்மை என எழுந்த அனல்பேருருவைக் கண்டு நின்றனர்.\n“நான் சென்று அடியளந்து மீள்கிறேன்” என்றார் பெருமாள். தன் உருப் பெருக்கி கொடுந்தேற்றையும் மதவிழியும் கொண்டு பன்றி வடிவெடுத்தார். அவ்வுருக் கண்டதும் நீரென புகையென நெகிழ்ந்து அவரை தன்னுள் அணைத்துக்கொண்டாள் புவிமகள். “நான் விண்சென்று முடிதொட்டு மீள்கிறேன்” என்று எழுந்தார் பிரம்மன். “எங்கு செல்கிறார்கள்” என்றார் அகத்தியர். “அளந்துவர” என்றார் நாரதர். “விளையாடும்பொருளை ஏன் அளக்கவேண்டும்” என்றார் அகத்தியர். “அளந்துவர” என்றார் நாரதர். “விளையாடும்பொருளை ஏன் அளக்கவேண்டும் அளந்தால் ஆட்டம் முடிந்துவிடுமே\nகாலமிலியில் இரு தெய்வங்களும் பறந்தும் அகழ்ந்தும் சென்றனர். மண்ணைக் கடந்து ஏழு ஆழுலகுகளைக் கடந்து மொழியின்மை, வடிவின்மை, ஒளியின்மை, விழியின்மை, அகமின்மை, நுண்மையின்மை, இன்மையின்மை எனும் ஏழு இருளுலகுகளையும் கடந்து சென்றுகொண்டே இருந்தார் விஷ்ணு. அங்கும் முடிவிலாது சென்றது அனலுருவின் அடி. மேலும் மேலுமென செல்லச்செல்ல அவர் உள்ளம் ஒடுங்கிக் கூம்பி குறுகி ஊசியென்றாகி நீண்டு மேலும் மேலும் கூர்ந்து இன்மையென்றாகியது. இன்மையென இருந்தது. அந்த முழு விடுதலையை அடைந்து மீண்டதும் அது என்ன என திகைத்தார். அப்பெருநிலை கலைய எழுந்த முதல் அதிர்வின் ஓசையையே அந்நிலைக்கான பெயரெனச் சூட்டினார். “தம\nமேலெழுந்து சென்றுகொண்டே இருந்த பிரம்மன் செல்லுந்தோறும் விரிந்தார். ஒளியால் ஒலியால் திசையால் மையத்தால் இருப்பால் இன்மையால் நுண்மையால் ஆன வான்களைக் கடந்தார். வானென விரிந்து அகன்று பரவி மெலிந்து இலாதானார். பின் மீண்டபோது தான் கண்டடைந்தது என்ன என திகைத்தார். தன் படைப்புக்கற்பனை அனைத்தும் பெருக நான்கு கைகளாலும் வெளிதுழாவினார். “எழுதழலென எழுக ஒரு மலர்” என்றார். அவர் முன் செம்மஞ்சள் ஒளியுடன் வந்து நின்றது செந்தாழை. அதன் ஒரு மடலை எடுத்துக்கொண்டு கீழிறங்கி வந்தார்.\nஅவர்களை நோக்கி ஓடிவந்த நாரதர் “திருமகள் தலைவனே, நீங்கள் அறிந்ததென்ன” என்றார். “அறியவொண்ணாமையை அறிந்து ஓர் ஊழ்கநுண்சொல் என்றாக்கி கொண்டுவந்தேன்” என்றார் நாரணன். “அது தம என்னும் பொருள்பெருகும் ஒலி.” நாரதர் வணங்கி “ஆம், முடிவிலிக்கு ஒரு மந்திரம் நிகர். நீங்கள் அறிந்து மீண்டீர் என ஒப்புகிறேன்” என்றார்.\nபி���ம்மனிடம் திரும்பி “தாங்கள் அறிந்ததென்ன, கலைமகள் கொழுநரே” என்றார் நாரதர். “கூறமுடியாமை கவிஞனிடம் அணியென்று மலர்கிறது. இது பெருந்தழலின் ஒரு கொழுந்து” என்று தாழைமலர் மடலைக் காட்டினார். “இது வெம்மையும் வீறும் இல்லாத தழல். அதன் அழகு மட்டுமே ஆகி என் கையில் அடங்குவது.” நாரதர் கைகூப்பி “ஆம், பொருந்தியெழும் ஒப்புமை ஒன்று பொருளுக்கு நிகர். முடியிலாதெழும் அனலே இம்மலர். நீங்களும் அறிந்துமீண்டீர்” என்றார்.\nநாரதர் தலைநிமிர்ந்து நோக்கி “அலகிலியே, அறியமுடியாமை அறிந்து மீண்டுளார்கள் இருவரும். இவை மெய்யென்றால் அவ்வாறே ஆணையிடுக” என்றார். இடியோசை எழுந்து “ஆம் ஆம் ஆம்” என முழங்கியது. “நாங்கள் அறியுமொரு உருக்கொண்டெழுந்து அருள்புரிக” என்றார். இடியோசை எழுந்து “ஆம் ஆம் ஆம்” என முழங்கியது. “நாங்கள் அறியுமொரு உருக்கொண்டெழுந்து அருள்புரிக” என்றார் நாரதர். இடியோசை நகைப்பென்று ஆகி மறைந்தது. அகத்தியரிடம் திரும்பி “நீங்கள் சென்று முயல்க” என்றார் நாரதர். இடியோசை நகைப்பென்று ஆகி மறைந்தது. அகத்தியரிடம் திரும்பி “நீங்கள் சென்று முயல்க” என்றார் நாரதர். தன் கமண்டலத்துடன் சென்று எதிரே நின்றிருந்த எரியெழுகையை கமண்டலத்தில் அள்ளி வந்து அவர்களிடம் காட்டினார் குறுமுனி. ஓங்கி நிறைந்திருந்த அனல் அங்கே குளிர்ந்த சிற்றலைகளுடன் ஒளிகொண்டிருந்ததை அவர்கள் நால்வரும் கண்டனர்.\n“காலநாகக் குழவி சுருண்டமைந்த தாழைமடலுக்கு வணக்கம். தன் வாலை தான் கவ்வி ஒலிக்கும் ஊழ்கநுண்சொல்லுக்கு வணக்கம். ஆம், அவ்வாறே ஆகுக” என்று உக்ரன் சொல்லி முடித்தான். அவனைத் தாங்கி நின்றிருந்த உள்ளங்கை ஒன்று விலகியதுபோல மண்ணில் விழுந்து உடல்வளைத்து கைத்தாளமென ஒலித்த அரணிக்கட்டைமேல் முகம் பதித்து அவன் கிடந்தான். மெல்லிய கரிய உடல் அப்போதுதான் முட்டையை உடைத்து வெளிவந்த குஞ்சுபோல ஈரத்துடன் மெல்ல விதிர்த்து உதறிக்கொண்டிருந்தது. ஜைமினி எழுந்துசென்று அவனைத் தொட்டபோதும் எம்பி விழுந்தது. அவன் உக்ரனை மெல்லத்தூக்கி எடுத்தான். அவன் கைகளும் கால்களும் விரைத்து இழுபட்டிருக்க வாயோரம் மென்னுரை வழிந்தது.\nஉக்ரனை தோளில் சாய்த்தபடி ஜைமினி வெளியே செல்வதை அவர்கள் நோக்கி அமர்ந்திருந்தனர். ஜைமினியின் தோளில் எச்சில் வழிந்தது. மெல்லிய குரலில் உக்ரன் ஏதோ சொன்னான். இருமுறை அவன் குழறிய பின்னரே அவன் சொல்வதென்ன என அவனுக்குப் புரிந்தது. உக்ரன் “தரமாட்டேன்” என்றான். மெல்ல நெளிந்தபடி மீண்டும் “யாருக்கும் தரமாட்டேன்” என்றான். “அது என் அரணிக்கட்டை”\nஜைமினி “ஆம், எவருக்கும் அதை அளிக்கவேண்டியதில்லை” என்றான். உக்ரன் விழித்துக்கொண்டு எழுந்து தலைதிருப்பி அவனை பார்த்தான். சிறிய சுட்டுவிரலைக் காட்டி “நான் அதில் தாளமிடுவேன்” என்றான். ஜைமினி “ஆம், நீங்கள் நெருப்பில் தாளமிடுபவர், மகாசூதரே” என்றான்.\nமுந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விருதுவிழா – இரா .முருகன் உரை\nஅடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் விருதுவிழா, சுப்ரபாரதிமணியன் பேச்சு\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-16\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-15\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-14\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-13\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-12\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-11\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-10\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-9\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-8\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-7\nஎன்ன இந்த உறவு, எதன் தொடர்வு\nஇரு நோயாளிகள், விசை - கடிதங்கள்\nஇந்தத் தொலைக்காட்சிப் பேச்சாளர்கள்... கடிதம்\nசிறுகதை விவாதம்- லீலாவதி- பிரபு மயிலாடுதுறை-1\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி கி.ராஜநாராயணன் கோவை ஞானி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உணவு உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் தொல்லியல் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் நகைச்சுவை நேர்காணல் நேர்காணல் மற்றும் பேட்டிகள் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பிறர் படைப்புகள் நூல் மதிப்புரை மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் மதிப்புரை விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெண்முரசு – ஒலிவடிவம் வெண்முரசு – வாசகர் கடிதம் வெண்முரசு – வாசகர் மதிப்புரை வெண்முரசு ஆவணப்படம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://battimedia.lk/%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-6/", "date_download": "2021-10-19T12:36:25Z", "digest": "sha1:HPNK2TO77DDTMX7AQWYSJMRAMSA2LIO5", "length": 7267, "nlines": 112, "source_domain": "battimedia.lk", "title": "மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் 169 பேருக்கு கொரோனா தொற்று . - Battimedia", "raw_content": "\nHome மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் 169 பேருக்கு கொரோனா தொற்று .\nமட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் 169 பேருக்கு கொரோனா தொற்று .\nமட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் 169 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி நா.மயூரன் நேற்று (28) திங்கட்கிழமை தெரிவித்தார்.\nமட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 34 பேரும், களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 18 பேரும், வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 03 பேரும், காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 37 பேரும், ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 02 பேரும், கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 15 பேரும், செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 03 பேரும்,\nஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 25 பேரும், வாகரை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 08 பேரும், வவுனதீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 05 பேரும், வெல்லாவெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 02 பேரும், ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 16 பேரும், ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட மொத்தமாக 169 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதுடன், ஏறாவூரில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nPrevious articleவெளிநாடுகளில் 142 இலங்கையர்கள் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nNext articleநாடு திரும்பிய கிரிக்கெட் வீரர்கள் மூவரும் தனிமைப்படுத்தபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nபாடசாலைகள் மிண்டும் 21ம் திகதி ஆரம்பம் 52536 மாணவர்கள் பாடசாலைக்கு வருகை தரவுள்ளனர்.\nவிவசாயத்துக்கான உரத்தை வழங்கக் கோரி, மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று (18) பரவலாக ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றன.\nமட்டக்களப்பின் எல்லைக் கிராமங்களை பாதுகாக்கும் பணியினை ஆரம்பித்து வைத்த தமிழ் இளையோர் மக்கள் இயக்கம்\nஅனைத்து விதமான செய்திகளையும் உடனுக்குடன் அறிந்துக்கொள்ள தொடர்ந்தும் இணைந்திருங்கள். ஊடகவியலாளர்களாக இணைய விரும்புபவர்களும் தொடர்புகொள்ளவும் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/hyundai/alcazar/price-in-ambajogai", "date_download": "2021-10-19T13:06:14Z", "digest": "sha1:ZQKOQSC7DE77BDABFGUXNAVKCJTP4I4V", "length": 48391, "nlines": 820, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹூண்டாய் அழகேசர் அம்பாஜோகை விலை: அழகேசர் காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nsecond hand ஹூண்டாய் அழகேசர்\nஅம்பாஜோகை சாலை விலைக்கு ஹூண்டாய் அழகேசர்\nலடுர் இல் **ஹூண்டாய் அழகேசர் price is not available in அம்பாஜோகை, currently showing இன் விலை\nபிரஸ்டீஜ் 7-seater டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in லடுர் :(not available அம்பாஜோகை) Rs.19,72,037*அறிக்கை தவறானது விலை\non-road விலை in லடுர் :(not available அம்பாஜோகை) Rs.19,89,824*அறிக்கை தவறானது விலை\non-road விலை in லடுர் :(not available அம்பாஜோகை) Rs.21,99,705*அறிக்கை தவறானது விலை\nபிளாட்டினம் 7-seater டீசல்(டீசல்)Rs.21.99 லட்சம்*\non-road விலை in லடுர் :(not available அம்பாஜ���ாகை) Rs.22,57,334*அறிக்கை தவறானது விலை\non-road விலை in லடுர் :(not available அம்பாஜோகை) Rs.22,75,120*அறிக்கை தவறானது விலை\nபிளாட்டினம் 7-seater டீசல் ஏடி(டீசல்)\non-road விலை in புது டெல்லி :(not available அம்பாஜோகை) Rs.23,07,670**அறிக்கை தவறானது விலை\nபிளாட்டினம் 7-seater டீசல் ஏடி(டீசல்)Rs.23.07 லட்சம்**\nபிரஸ்டீஜ் 7-seater டீசல் ஏடி(டீசல்)\non-road விலை in லடுர் :(not available அம்பாஜோகை) Rs.23,40,338*அறிக்கை தவறானது விலை\nபிரஸ்டீஜ் 7-seater டீசல் ஏடி(டீசல்)Rs.23.40 லட்சம்*\non-road விலை in லடுர் :(not available அம்பாஜோகை) Rs.23,58,124*அறிக்கை தவறானது விலை\nபிளாட்டினம் டீசல் ஏடி(டீசல்)Rs.23.58 லட்சம்*\non-road விலை in லடுர் :(not available அம்பாஜோகை) Rs.23,83,025*அறிக்கை தவறானது விலை\nsignature டீசல் ஏடி(டீசல்)Rs.23.83 லட்சம்*\non-road விலை in லடுர் :(not available அம்பாஜோகை) Rs.24,20,961*அறிக்கை தவறானது விலை\nprestige 7-seater(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\non-road விலை in லடுர் :(not available அம்பாஜோகை) Rs.19,31,465*அறிக்கை தவறானது விலை\nprestige 7-seater(பெட்ரோல்)(பேஸ் மாடல்)Rs.19.31 லட்சம்*\non-road விலை in லடுர் :(not available அம்பாஜோகை) Rs.19,48,977*அறிக்கை தவறானது விலை\non-road விலை in லடுர் :(not available அம்பாஜோகை) Rs.21,21,763*அறிக்கை தவறானது விலை\non-road விலை in லடுர் :(not available அம்பாஜோகை) Rs.21,55,620*அறிக்கை தவறானது விலை\non-road விலை in லடுர் :(not available அம்பாஜோகை) Rs.22,12,359*அறிக்கை தவறானது விலை\non-road விலை in லடுர் :(not available அம்பாஜோகை) Rs.22,29,871*அறிக்கை தவறானது விலை\non-road விலை in லடுர் :(not available அம்பாஜோகை) Rs.23,11,595*அறிக்கை தவறானது விலை\non-road விலை in லடுர் :(not available அம்பாஜோகை) Rs.23,45,451*அறிக்கை தவறானது விலை\non-road விலை in லடுர் :(not available அம்பாஜோகை) Rs.23,62,963*அறிக்கை தவறானது விலை\nபிரஸ்டீஜ் 7-seater டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in லடுர் :(not available அம்பாஜோகை) Rs.19,72,037*அறிக்கை தவறானது விலை\non-road விலை in லடுர் :(not available அம்பாஜோகை) Rs.19,89,824*அறிக்கை தவறானது விலை\non-road விலை in லடுர் :(not available அம்பாஜோகை) Rs.21,99,705*அறிக்கை தவறானது விலை\nபிளாட்டினம் 7-seater டீசல்(டீசல்)Rs.21.99 லட்சம்*\non-road விலை in லடுர் :(not available அம்பாஜோகை) Rs.22,57,334*அறிக்கை தவறானது விலை\non-road விலை in லடுர் :(not available அம்பாஜோகை) Rs.22,75,120*அறிக்கை தவறானது விலை\nபிளாட்டினம் 7-seater டீசல் ஏடி(டீசல்)\non-road விலை in புது டெல்லி :(not available அம்பாஜோகை) Rs.23,07,670**அறிக்கை தவறானது விலை\nபிளாட்டினம் 7-seater டீசல் ஏடி(டீசல்)Rs.23.07 லட்சம்**\nபிரஸ்டீஜ் 7-seater டீசல் ஏடி(டீசல்)\non-road விலை in லடுர் :(not available அம்பாஜோகை) Rs.23,40,338*அறிக்கை தவறானது விலை\nபிரஸ்டீஜ் 7-seater டீசல் ஏடி(டீசல்)Rs.23.40 லட்சம்*\non-road விலை in லடுர் :(not available அம்பாஜோகை) Rs.23,58,124*அறிக்கை தவறானது விலை\nபிளாட்டினம் டீசல் ஏடி(டீசல்)Rs.23.58 லட்சம்*\non-road விலை in லடுர் :(not available அம்பாஜோகை) Rs.23,83,025*அறிக்கை தவறானது விலை\nsignature டீசல் ஏடி(டீசல்)Rs.23.83 லட்சம்*\non-road விலை in லடுர் :(not available அம்பாஜோகை) Rs.24,20,961*அறிக்கை தவறானது விலை\nprestige 7-seater(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\non-road விலை in லடுர் :(not available அம்பாஜோகை) Rs.19,31,465*அறிக்கை தவறானது விலை\non-road விலை in லடுர் :(not available அம்பாஜோகை) Rs.19,48,977*அறிக்கை தவறானது விலை\non-road விலை in லடுர் :(not available அம்பாஜோகை) Rs.21,21,763*அறிக்கை தவறானது விலை\non-road விலை in லடுர் :(not available அம்பாஜோகை) Rs.21,55,620*அறிக்கை தவறானது விலை\non-road விலை in லடுர் :(not available அம்பாஜோகை) Rs.22,12,359*அறிக்கை தவறானது விலை\non-road விலை in லடுர் :(not available அம்பாஜோகை) Rs.22,29,871*அறிக்கை தவறானது விலை\non-road விலை in லடுர் :(not available அம்பாஜோகை) Rs.23,11,595*அறிக்கை தவறானது விலை\non-road விலை in லடுர் :(not available அம்பாஜோகை) Rs.23,45,451*அறிக்கை தவறானது விலை\non-road விலை in லடுர் :(not available அம்பாஜோகை) Rs.23,62,963*அறிக்கை தவறானது விலை\nஅம்பாஜோகை இல் ஹூண்டாய் அழகேசர் இன் விலை\nஹூண்டாய் அழகேசர் விலை அம்பாஜோகை ஆரம்பிப்பது Rs. 16.30 லட்சம் குறைந்த விலை மாடல் ஹூண்டாய் அழகேசர் பிரஸ்டீஜ் 7-seater மற்றும் மிக அதிக விலை மாதிரி ஹூண்டாய் அழகேசர் signature dual tone டீசல் ஏடி உடன் விலை Rs. 20.14 லட்சம். உங்கள் அருகில் உள்ள ஹூண்டாய் அழகேசர் ஷோரூம் அம்பாஜோகை சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் மஹிந்திரா எக்ஸ்யூவி700 விலை அம்பாஜோகை Rs. 12.49 லட்சம் மற்றும் டொயோட்டா இனோவா கிரிஸ்டா விலை அம்பாஜோகை தொடங்கி Rs. 17.18 லட்சம்.தொடங்கி\nஅழகேசர் பிளாட்டினம் 7-seater Rs. 21.55 லட்சம்*\nஅழகேசர் பிளாட்டினம் டீசல் ஏடி Rs. 23.58 லட்சம்*\nஅழகேசர் signature ஏடி Rs. 23.45 லட்சம்*\nஅழகேசர் பிரஸ்டீஜ் 7-seater டீசல் ஏடி Rs. 23.40 லட்சம்*\nஅழகேசர் பிளாட்டினம் 7-seater டீசல் Rs. 21.99 லட்சம்*\nஅழகேசர் signature டீசல் ஏடி Rs. 23.83 லட்சம்*\nஅழகேசர் பிளாட்டினம் ஏடி Rs. 23.11 லட்சம்*\nஅழகேசர் பிளாட்டினம் 7-seater டீசல் ஏடி Rs. 23.07 லட்சம்*\nஅழகேசர் பிரஸ்டீஜ் ஏடி Rs. 21.21 லட்சம்*\nஅழகேசர் பிரஸ்டீஜ் 7-seater டீசல் Rs. 19.72 லட்சம்*\nஅழகேசர் பிரஸ்டீஜ் Rs. 19.48 லட்சம்*\nஅழகேசர் signature டீசல் Rs. 22.57 லட்சம்*\nஅழகேசர் பிரஸ்டீஜ் 7-seater Rs. 19.31 லட்சம்*\nஅழகேசர் பிரஸ்டீஜ் டீசல் Rs. 19.89 லட்சம்*\nஅழகேசர் மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nஅம்பாஜோகை இல் எக்ஸ்யூவி700 இன் விலை\nஅம்பாஜோகை இல் இனோவா கிரிஸ்டா இன் விலை\nஇனோவா கிரிஸ்டா போட்டியாக அழகேசர்\nஅம்பாஜோகை இல் ஹ���க்டர் இன் விலை\nஅம்பாஜோகை இல் ஹெரியர் இன் விலை\nஅம்பாஜோகை இல் Seltos இன் விலை\nஅம்பாஜோகை இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா அழகேசர் mileage ஐயும் காண்க\nடீசல் மேனுவல் Rs. 1,804 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,556 1\nடீசல் மேனுவல் Rs. 3,158 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,937 2\nடீசல் மேனுவல் Rs. 4,045 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,050 3\nடீசல் மேனுவல் Rs. 5,208 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,987 4\nடீசல் மேனுவல் Rs. 4,438 5\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,158 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா அழகேசர் சேவை cost ஐயும் காண்க\nஹூண்டாய் அழகேசர் விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா அழகேசர் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா அழகேசர் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா அழகேசர் விதேஒஸ் ஐயும் காண்க\nஅம்பாஜோகை இல் உள்ள ஹூண்டாய் கார் டீலர்கள்\nஎல்லா ஹூண்டாய் செய்திகள் ஐயும் காண்க\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் அழகேசர் இன் விலை\nசோலாபூர் Rs. 19.31 - 24.20 லட்சம்\nகுல்பர்கா Rs. 20.43 - 25.21 லட்சம்\nஔரங்காபாத் Rs. 19.31 - 24.20 லட்சம்\nஅகமத் நகர் Rs. 19.31 - 24.20 லட்சம்\nநிசாமாபாத் Rs. 19.71 - 24.10 லட்சம்\nஎல்லா ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 15, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 15, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 12, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 15, 2022\nஎல்லா உபகமிங் ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nமுகப்புபுதிய கார்கள்ஹூண்டாய்அழகேசர்road price அம்பாஜோகை ஒன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81", "date_download": "2021-10-19T13:17:41Z", "digest": "sha1:W4S3EFKMBQN3IXFAUXCZOSCTIPNPRWLC", "length": 9275, "nlines": 188, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:நாட்டுத் தகவல் துவாலு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇது நாட்டுத் தகவல் துவாலு வார்ப்புருவிற்கான தகவல்களை மையப்படுத்தும் வார்ப்புரு மட்டுமே நேரடியாக கட்டுரைகளில் பயன்படுத்துவதை தவிர்க்கவும். இது வார்ப்புரு:Country showdata (தொகு • பேச்சு • இணைப்புகள் • வரலாறு) என்பதை பயன்படுத்தி தானியங்கியாக உருவாக்கப்பட்டதாகும்.\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் துவாலு உள்ளகத் தகவல் சேமி��்பிற்காக உருவாக்கப்பட்ட ஒரு வார்ப்புருவாகும். இது கட்டுரைகளில் நேரடியாக பயன்படுத்துவதற்கு வடிவமைக்கப்படவில்லை.இதன் தகவல்களை வார்ப்புரு:flagicon, வார்ப்புரு:நாட்டுக்கொடி போன்றவற்றைப் பயன்படுத்தி கட்டுரைகளில் இணைக்கவும்.\nஏதாயினும் தகவல்கள் இற்றைப்படுத்தப்படவில்லையாயின் இதை அழுத்தி purge செய்யவும்.\nalias துவாலு விக்கிபீடியா கட்டுரை பெயர் (துவாலு) {{கொடி}}, {{நாட்டுக்கொடி}} ({{flagicon}}) கட்டாயம்\nபெயர் விகுதியுடன் துவாலுவின் பெயர் விகுதியுடன் கொடுக்கப்படல் வேண்டும், உதாரணமாக இலங்கையின், தென்னாபிரிக்காவின் {{கொடி}}, {{நாட்டுக்கொடி}} ({{flagicon}}) கட்டாயம்\nசுருக்கமான பெயர் துவாலு சுருக்கமான பெயர் துவாலு {{நாட்டுக்கொடி}} கட்டாயமற்றது\nகொடியின் பெயர் Flag of Tuvalu.svg நாட்டுக் கொடியின் பெயர்(இடது புறம் பார்க்க) {{flagicon}}, {{கொடி}}, {{நாட்டுக்கொடி}} கட்டாயம்\nஇந்த வார்ப்புருவை வழிமாற்றுப் பெயர்கள் கொண்டும் பயன்படுத்தலாம்:\nTUV (பார்) துவாலு துவாலு\nஅனைத்து நாட்டுத் தகவல் வார்ப்புருக்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 செப்டம்பர் 2007, 07:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2021/09/28/three-people-were-arrested-in-pocso-act-for-child-marriage", "date_download": "2021-10-19T10:58:11Z", "digest": "sha1:PWF4C3OXADWU56GLHGPITS66TALD7LV6", "length": 6920, "nlines": 54, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Three people were arrested in pocso act for Child Marriage", "raw_content": "\nToll Free எண்ணுக்கு வந்த புகார்.. சிறுமியை திருமணம் செய்த மாப்பிள்ளை உட்பட 3 பேர் போக்சோவில் கைது\nஆரணி அருகே மைனர் பெண்ணுக்கு திருமணம் நடந்ததாக புகாரின் பேரில் ஆரணி அனைத்து மகளிர் காவல்நிலைய போலிஸார் மாப்பிள்ளை உட்பட 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.\nதிருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகேயுள்ள திருமலை கிராமத்தைச் சேர்ந்த சேகர் என்பவரின் மகன் மணிகண்டன். இவருக்கும் திருவண்ணாமலை டவுன் பகுதியை சேர்ந்த சேகர் சுந்தரி தம்பதியினரின் 15 வயதான மகள் ரம்யாவுக்கும் (பெயர் மாற்றபட்டுள்ளது) இருவீட்டாரின் சம்மதத்துடன் போளுர் தாலுகா வம்பலூர் கிராமத்தின் அருகில் உள்ள கோயிலில் திருமணம் நடைபெற்றுள்ளது.\nநேற்று திருவண்ணாமலை குழந்தை திருமணம் தடுப்ப�� ஆலோசனை மையத்திற்கு மைனர் திருமணம் நடைபெற்றதாக வந்த புகாரின் பேரில் திருவண்ணாமலை சமூக நலத்துறை அதிகாரிகள் திருமலை கிராமத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.\nமேலும் விசாரணை நடத்தி, மைனர் பெண்ணுக்கு கட்டாய திருமணம் செய்யபட்டதாக கூறி ஆரணி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் சமூகநலத் துறை அதிகாரிகள் புகார் அளித்தனர்.\nபுகாரின் பேரில் ஆரணி அனைத்து மகளிர் காவல்நிலைய போலிஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, மைனர் பெண்ணை திருமணம் செய்த மணிகண்டன் மற்றும் பெண்ணின் பெற்றோர் சேகர் சுந்தரி ஆகிய 3 பேரை கைது செய்து ஆரணி நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.\nஆரணி அருகே மைனர் பெண்ணை திருமணம் செய்த சம்பவத்தில் மாப்பிள்ளை உள்ளிட்ட 3 பேரை போக்சோ சட்டத்தில் கீழ் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nராணுவ வீரரின் பண்ணை வீட்டை அபகரித்து கொலை மிரட்டல் : நாகை அதிமுக நிர்வாகிகள் உட்பட 6 பேருக்கு வலைவீச்சு\n” : அமைச்சர் சேகர்பாபு சூசகம்\n50 ஆண்டுகளுக்குப் பிறகு மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றியத்தை கைப்பற்றிய தி.மு.க - ஆட்சிக்கு கிடைத்த நற்சான்று\nதண்ணி இல்லாத காட்டில் மாட்டிக்கொண்ட 2 பேர்.. 1 வாரம் கழித்து மீட்ட போலிஸ்: ஆஸ்திரேலியாவில் நடந்தது என்ன\n\"பூனைக்குட்டி என நினைத்து புலிக்குட்டியை தூக்கியவர் பதறியடித்து ஓட்டம்” - சாலையில் நடந்தது என்ன\nசிறுநீரக கல்லுக்கு பதிலாக சிறுநீரகத்தையே அகற்றிய மருத்துவர்... நுகர்வோர் ஆணையத்தின் அதிரடி உத்தரவு\nதண்ணி இல்லாத காட்டில் மாட்டிக்கொண்ட 2 பேர்.. 1 வாரம் கழித்து மீட்ட போலிஸ்: ஆஸ்திரேலியாவில் நடந்தது என்ன\n50 ஆண்டுகளுக்குப் பிறகு மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றியத்தை கைப்பற்றிய தி.மு.க - ஆட்சிக்கு கிடைத்த நற்சான்று\n” : அமைச்சர் சேகர்பாபு சூசகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.verkal.net/kdarkarumbuli-lt-colonel-neethiyappan-major-anthamaan-veravanakkam/", "date_download": "2021-10-19T13:12:52Z", "digest": "sha1:VQRMOWDLKEGINYFW7P4K4JFCQZDJVH5U", "length": 14383, "nlines": 122, "source_domain": "www.verkal.net", "title": "கடற்கரும்பு​லி லெப். கேணல் நீதியப்பன், கடற்கரும்பு​லி மேஜர் அந்தமான் வீரவணக்க நாள் இன்றாகும். | வேர்கள்", "raw_content": "\nஇலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்\nதாயக விடியலுக்காக ��ன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் \nHome மறவர்கள் வீரவணக்க நாள் கடற்கரும்பு​லி லெப். கேணல் நீதியப்பன், கடற்கரும்பு​லி மேஜர் அந்தமான் வீரவணக்க நாள் இன்றாகும்.\nகடற்கரும்பு​லி லெப். கேணல் நீதியப்பன், கடற்கரும்பு​லி மேஜர் அந்தமான் வீரவணக்க நாள் இன்றாகும்.\nகடற்கரும்பு​லி லெப். கேணல் நீதியப்பன், கடற்கரும்பு​லி மேஜர் அந்தமான் வீரவணக்க நாள் இன்றாகும்.\n16.08.1999 அன்று திருகோணமலை மாவட்டம் புல்மோட்டைக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினரின் அதிவேக தாக்குதல் “டோறா” பீரங்கிப் படகு மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்பு​லி லெப். கேணல் நீதியப்பன், கடற்கரும்பு​லி மேஜர் அந்தமான் ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின் 21ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதிருமலை மாவட்டத்திலிருந்து முல்லைத்தீவு கடற்பரப்பில் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சிறிலங்கா கடற்படையின் டோறா பீரங்கிப் படகு அணி மீது, அதிகாலை கொக்குளாய் கடற்பரப்பில் வைத்து கடற்புலிகளால் தாக்குதல் தொடுக்கப்பட்டது.\nகடுமையான சமர் நடைபெற்றுக் கொண்டிருந்தவேளை சிறிலங்கா கடற்படையின் டோறாப் படகு ஒன்றை மீது கடற்கரும்புலிகள் தமது வெடிமருத்துப் படகினோல் மோதி வெடிக்கவைத்து எத்தனித்த தருணத்தில் டோறா சேதங்களுடன் தப்பிக்கொண்டது.\nவிடுதலையின் கனவுகளுடன் பல வெற்றிகளுக்கு வித்திட்டு காற்றோடு கலந்திட்ட உயிராயுதங்கள் .\nதாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\nPrevious article15.08 இன்றைய திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம்\nNext articleகடற்கரும்புலி கப்டன் அங்கையற்கண்ணி\nலெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.\nநெடுஞ்சேரலாதன் - June 26, 2021 0\nலெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.1999 அன்று மன்னார் மாவட்டம் சன்னார் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட “ரணகோச” இராணுவ நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரின் போது...\nகடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார் உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nநெடுஞ்சேரலாதன் - June 26, 2021 0\nகடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார், கடற்கரும்புலி மேஜர் சூரன், கடற்கரும்புலி மேஜர் நல்லப்பன், கடற்கரும்புலி மேஜர் சந்தனா, கடற்கரும்புலி கப்டன் பாமினி , கடற்கரும்புலி கப்டன் இளமதி வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.2000 அன்று...\nநெடுஞ்சேரலாதன் - May 25, 2021 0\n25.05.2000 அன்று “ஓயாத அலை – 03″ தொடர் நடவடிக்கையின் போது யாழ். மாவட்டம் மண்டைதீவுப் பகுதியில் நடைபெற்ற கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கரும்புலி மேஜர் சதா ஆகிய கரும்புலி மாவீரரின் ...\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள் நெடுஞ்சேரலாதன் - September 8, 2021 0\nதமிழீழத்தில் தலை சிறந்த பெண் போராளியான கப்டன் அக்கினோ... போராட்டம். .... இந்தச் சொல்லுக்குள் தான் எத்தனை விதமான உணர்ச்சி அலைகள் அடங்கி இருக்கின்றன.குடும்பம் என்ற சிறிய பரப்புக் குள் சில மனிதர்கள், சில உணர்வுகளென்று...\nலெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.\nமறவர்கள் வீரவணக்க நாள் நெடுஞ்சேரலாதன் - June 26, 2021 0\nலெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.1999 அன்று மன்னார் மாவட்டம் சன்னார் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட “ரணகோச” இராணுவ நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரின் போது...\nகடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார் உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nமறவர்கள் வீரவணக்க நாள் நெடுஞ்சேரலாதன் - June 26, 2021 0\nகடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார், கடற்கரும்புலி மேஜர் சூரன், கடற்கரும்புலி மேஜர் நல்லப்பன், கடற்கரும்புலி மேஜர் சந்தனா, கடற்கரும்புலி கப்டன் பாமினி , கடற்கரும்புலி கப்டன் இளமதி வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.2000 அன்று...\nநீரிற் கரைந்த நெருப்பு லெப்.கேணல் ராஜசிங்கம்/ ராஜன்.\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள் நெடுஞ்சேரலாதன் - June 26, 2021 0\nகண்டி வீதியை ஊடறுத்திருந்த எமது பாதுக்காப்பு வியூகத்தை உடைத்து, எதிரி உட்புகுந்துவிட்டான். எமது போர்ப்பலத்தைச் சிதறடித்தவாறு எல்லா முனைகளாலும் எதிரி தாக்கினான். எமக்கு எவ்வகையிலும் சாதகமற்ற ‘மரணக்களமாய்’ மாறியிருந்தது அன்றைய களம். அன்று சித்திரை...\nதமிழர்கள் தமது வரலாற்றினையும், சாதனைகளையும் பதிவு செய்து ஆவணப்படுத்தாமை எமக்குள்ள மிகப் பெரிய குறை பாடாகும் என தமிழீழக் கல்விக்கழகப்பொறுப்ப���ளர் வெ.இளங்குமரன் வல்வெட்டித்துறையில் நடைபெற்ற ஆழக்கடல் வென்றவர்கள் நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றும் போதுதெரிவித்தார் அதனடிப்படையில் வேர்கள் இணையமானது எமது தாயக விடுதலை போராட்டதின் விழுமியங்களை ஆவணப்படுத்தி உலகின் அனைத்து தேசங்களிலும் வாழும் எமது அன்புத்தமிழ் உறவுகளின் வாசல் நோக்கி விடுதலை தாகத்தை வீசுகிறோம்\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்77\nகாப்புரிமை ©தமிழீழஆவணக்காப்பகம் 2016- 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://neervai.com/15579-2/", "date_download": "2021-10-19T12:25:48Z", "digest": "sha1:DL2SZ5NJQDNF4RT6RTNQLSGEC642I7VI", "length": 9089, "nlines": 77, "source_domain": "neervai.com", "title": "சமூக சேவகி அமரர் திருமதி வேதவல்லி கந்தையா அவர்களின் சிலை திறப்பு விழா – Neervai Inayam", "raw_content": "\nநீர்வேலி அத்தியார் இந்துக் கல்லுரி\nசமூக சேவகி அமரர் திருமதி வேதவல்லி கந்தையா அவர்களின் சிலை திறப்பு விழா\nகந்தையா வேதவல்லி அவர்களின் சிலை அமைப்பதற்கு அடிக்கல் வைபவம் 2019.01 12\nதிருமதி. ருக்மணி ஆனந்தவேல் அவர்களின் பாராட்டு விழா புகைப்படங்கள்\nPrevious Article நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரி இல்ல மெய்வல்லுநர் போட்டி\nNext Article மரண அறிவித்தல்\nவலிகாமம் கிழக்குப் பகுதியில் பல பாகங்களிலுமிருந்து பாய்ந்து வருகின்ற மழை நீரைத் தன்னுள்ளடக்கி அதனைத் தனக்கு நீர் நிலையாலான வேலியாக்கி தன் கிழக் கெல்லையாக அமைத்துக் கொண்டதால் ‘நீர்வேலி’ என்னும் பெயரைக் கொண்டதே இந்த நீர்வேலிக் கிராமம்.\nதுறை சார்ந்த செய்திகள் Select Category Foreign Assosiations (28) அத்தியார் இந்துக் கல்லூரி (44) அபிவிருத்தி (11) ஒல்லை வைரவர் கோவில் (2) கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயம் (60) காமாட்சி அம்பாள் கோவில் (1) காளி கோயில் (1) சேவைகள் (3) நீர்வேலி அரசகேசரிப் பிள்ளையார் (71) நீர்வேலி இ.த.க பாடசாலை (4) நீர்வேலி கந்தசுவாமி கோயில் (135) நீர்வேலி சி. சி. த. க பாடசாலை (5) நீர்வேலி செல்லக் கதிர்காம கோவில் (16) நீர்வேலி தெற்கு பேச்சி அம்மன் (7) நீர்வேலி றோ.க.த.க பாடசாலை (26) நீர்வேலி வீரபத்திரர் ஆலயம் (39) நீர்வேலி ஸ்ரீ கணேஷா முன்பள்ளி (22) நீர்வேலி ஸ்ரீ செல்லக்கதிர்காம சுவாமி அறநெறி பாடசாலை (3) நூல் வெளியீடு (15) பாராட்டு விழா (15) பாலர் பகல் விடுதி (13) புகைப்படங்கள் (175) மாதர் சங்கம் (5) வாய்கால் தரவை விநாயகர் கோவில் (22) வாய்க்காற்தரவைப்பிள்ளையார் (3) விளையாட்டு (2) வீதி திருத்தப்பணிகள் (2)\n���ாய்க்கால் தரவை பிள்ளையார் பற்றிய செய்திகள்\nஅரசகேசரிப் பிள்ளையார் பற்றிய செய்திகள்\nநீர்வைக் கந்தன் பற்றிய செய்திகள்\nசெல்லக் கதிர்காம கோயில் பற்றிய செய்திகள்\nமூத்த விநாயகரின் வரம் தரும் அருளோசை\nஅத்தியார் இந்துக் கல்லூரி பற்றிய செய்திகள்\nகரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயம் பற்றிய செய்திகள்\nநீர்வேலி றோ.க.த.க பாடசாலை பற்றிய செய்திகள்\nநீர்வேலி சீ .சீ.த.க பாடசாலை பற்றிய செய்திகள்\nநீர்வேலி தெற்கு பாலர் பகல்விடுதி\nநீர்வேலி நலன்புரிச் சங்கம் கனடா\nதுறை சார்ந்த செய்திகள் Select Category Foreign Assosiations (28) அத்தியார் இந்துக் கல்லூரி (44) அபிவிருத்தி (11) ஒல்லை வைரவர் கோவில் (2) கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயம் (60) காமாட்சி அம்பாள் கோவில் (1) காளி கோயில் (1) சேவைகள் (3) நீர்வேலி அரசகேசரிப் பிள்ளையார் (71) நீர்வேலி இ.த.க பாடசாலை (4) நீர்வேலி கந்தசுவாமி கோயில் (135) நீர்வேலி சி. சி. த. க பாடசாலை (5) நீர்வேலி செல்லக் கதிர்காம கோவில் (16) நீர்வேலி தெற்கு பேச்சி அம்மன் (7) நீர்வேலி றோ.க.த.க பாடசாலை (26) நீர்வேலி வீரபத்திரர் ஆலயம் (39) நீர்வேலி ஸ்ரீ கணேஷா முன்பள்ளி (22) நீர்வேலி ஸ்ரீ செல்லக்கதிர்காம சுவாமி அறநெறி பாடசாலை (3) நூல் வெளியீடு (15) பாராட்டு விழா (15) பாலர் பகல் விடுதி (13) புகைப்படங்கள் (175) மாதர் சங்கம் (5) வாய்கால் தரவை விநாயகர் கோவில் (22) வாய்க்காற்தரவைப்பிள்ளையார் (3) விளையாட்டு (2) வீதி திருத்தப்பணிகள் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfox.com/2021/10/14/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4/", "date_download": "2021-10-19T11:39:55Z", "digest": "sha1:CRECJ66GWFLJDI2B4BUFCEZHQ4I4WCOZ", "length": 9499, "nlines": 76, "source_domain": "www.tamilfox.com", "title": "நாமக்கல்: கடன் பிரச்னை; அதிமுக ஒன்றிய செயலாளர் தற்கொலை! – சந்தேகம் கிளப்பும் கட்சியினர் – Tamil Fox – Tamil News – Tamil Video News – Android Tamil news", "raw_content": "\nநாமக்கல்: கடன் பிரச்னை; அதிமுக ஒன்றிய செயலாளர் தற்கொலை – சந்தேகம் கிளப்பும் கட்சியினர்\nநாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அ.தி.மு.க ஒன்றிய செயலாளர் ஒருவர் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ‘கடன் பிரச்னை’ என்று காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தாலும், ‘கட்சியில் ஒன்றிய செயலாளராக இருக்கும் அவர், கடன் பிரச்னையால் இறந்தார் என்பது நம்பும்படியாக இல்லை. அவரது சாவு���்கு வேறு ஏதோ காரணம்’ என்று அ.தி.மு.கவினர் சொல்கிறார்கள்.\nநாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் அருகில் உள்ள ஏரப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் சந்திரசேகரன். இவர், பள்ளிப்பாளையம் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க செயலாளராக இருந்து வந்தார். இவருக்கு, ரூபா என்ற மனைவி உள்ளார். அவரும் வழக்கறிஞராக உள்ளார்.\nஇந்த நிலையில், வீட்டில் இருந்த சந்திரசேகர் திடீரென விஷத்தைக் குடித்ததாக சொல்லப்படுகிறது. அதனால் மயங்கி விழுந்த அவரை மனைவி ரூபா, அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் உதவியோடு, மருத்துவமனைக்கு கொண்டுபோய் சிகிச்சைக்கு சேர்த்தனர். ஆனால், சந்திரசேகரன் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால், ரூபா அதிர்ச்சியடைந்தார். இந்த சம்பவம் குறித்து அறிந்த பள்ளிப்பாளையம் காவல் நிலைய போலீஸார், மருத்துவமனைக்கு விரைந்து சென்று சந்திரசேகரன் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nஅதோடு, இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடன் பிரச்னையால் சந்திரசேகரன் தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறை தரப்பில் சொல்லப்படுகிறது.\nகடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சந்திரசேகரன் அதிக பொருட்செலவில் சொந்தமான வீடு கட்டினாராம். இதற்காக, அவர் பலரிடமும் கடன் வாங்கியதாகவும் சொல்லப்படுகிறது. அந்த கடன் கிட்டத்தட்ட ரூ. 2 கோடியை உரிய காலத்தில் அவரால் திருப்பி செலுத்த முடியாமல் போனதாம். இதனால், கடந்த சில நாள்களாகவே அதிக மன உளைச்சலில் இருந்த சந்திரசேகரன், தற்கொலை செய்துகொள்ளும் முடிவுக்கு வந்து, இப்படி விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டதாக சொல்கிறார்கள்.\nAlso Read: `தோஷம் இருக்கு’ – ஏமாற்றிய குடுகுடுப்பைக்காரன் வேடத்தில் வந்த நபர்… நகையை இழந்த பெண் தற்கொலை\nஆனால், அ.தி.மு.கவினர் சிலரோ, “அ.தி.மு.க கடந்த 10 வருடங்களாக ஆட்சியில் இருந்தது. இவர் ஒன்றிய செயலாளராக இருக்கிறார். இன்னொரு பக்கம், இவருக்கு சொல்லிக்கொள்ளும்படி சொத்தும் இருக்கிறது. இந்த நிலையில், இவர் கடனுக்காக தற்கொலை செய்துகொண்டார் என்பதை நம்ப முடியவில்லை. வேறு ஏதும் காரணமாக கூட இருக்கலாம். அவரது உறவினர்கள் இதுகுறித்து பேசினால்தான் உண்மை காரணம் தெரிய வரும்” என்று சந்தேகம் எழுப்புகிறார்கள். போலீஸ் விசாரணையில் முடிவில் தான் உண்மை என்ன என்று தெரியவரும்.\nசைக்கிளில் ரோந்து சென்ற போது விபத்தில் சிக்கிய தலைமை காவலரை வீட்டிற்கே நேரில் சென்று ஆறுதல் கூறிய காவல் ஆணையாளர்..\n8ம் வகுப்பு முடித்தவர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறையில் வேலை..\nமுதலீட்டாளர்களுக்கு செம சான்ஸ்.. HUL ரூ.2,187 கோடி லாபம்.. டிவிடெண்ட் ரூ15..\nநாடெங்கிலும் புனித மீலாதுந்நபி நிகழ்வுகள்\nMcDonalds-ல் நடக்கிறதா உளவு பார்க்கும் பணி\n3,500 ரூபாயில் ஜியோ ஸ்மார்ட் போன்: அடுத்த மாதம் அறிமுகம்..\n70 வயது மூதாட்டிக்கு ஆண் குழந்தை பிறந்தது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnppgta.com/2021/07/10-12.html", "date_download": "2021-10-19T12:20:20Z", "digest": "sha1:MRBAAZAWAJIBQRJWWGYUN4A4GPSSX45S", "length": 3638, "nlines": 109, "source_domain": "www.tnppgta.com", "title": "10, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாதம் தோறும் அலகுத் தேர்வு - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு", "raw_content": "\nHomeGENERAL10, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாதம் தோறும் அலகுத் தேர்வு - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு\n10, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாதம் தோறும் அலகுத் தேர்வு - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு\nUSTIN | 10, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாதம் தோறும் அலகுத் தேர்வு - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு\n10, 12-ஆம் வகுப்பு மாணவர்களை பொதுத்தேர்வுக்கு தயார் படுத்த நடவடிக்கை\nகல்வித்தொலைக்காட்சி, ஆன்லைனில் நடத்தப்படும் பாடங்களில் இருந்து ஒவ்வொரு மாத இறுதியிலும் WhatsApp மூலம் அலகுத் தேர்வு நடத்த வேண்டும்.\nஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தங்களது...மாத ஊதியத்தை (pay slip) Mobile மூலம் பதிவிறக்கம் செய்வது எப்படி \nFLASH NEWS-பாலிடெக்னிக் TRB தேர்வுக்கான அட்டவணை வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://cyclosdsdt.cluster011.ovh.net/piwi/index.php?/category/172/created-monthly-list&lang=ta_IN", "date_download": "2021-10-19T11:30:17Z", "digest": "sha1:I3KTVOGQUPWHZRJZRFLUIGAKGWY2G2RH", "length": 7800, "nlines": 182, "source_domain": "cyclosdsdt.cluster011.ovh.net", "title": "Dans les délégations / Drôme-Ardèche 2018", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nசாதாரண காட்சி முற���க்குத் திரும்ப\nமுதல் | முந்தைய | 1 2 3 ... 14 | அடுத்து | இறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://ec2-34-235-123-65.compute-1.amazonaws.com/yennanga-sir-unga-sattam-official-trailer--tamilfont-news-295286", "date_download": "2021-10-19T13:01:48Z", "digest": "sha1:3HMGDODK6LFKN6GVXHZWA2MQVUGQUY7E", "length": 15732, "nlines": 154, "source_domain": "ec2-34-235-123-65.compute-1.amazonaws.com", "title": "Yennanga Sir Unga Sattam Official Trailer - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » அனைத்து சாதியினர் அர்ச்சகர் கதையா 'என்னங்க சார் உங்க சட்டம்' டிரைலர்\nஅனைத்து சாதியினர் அர்ச்சகர் கதையா 'என்னங்க சார் உங்க சட்டம்' டிரைலர்\nசமீபத்தில் திமுக அரசு பதவியேற்றவுடன் பல்வேறு அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தி வந்தது என்பது தெரிந்ததே. அந்த வகையில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தை இயற்றியது என்பதும் அந்த சட்டத்தின் படி அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் பதவி வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த சட்டத்தை தமிழகம் முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த நிலையில் இதனை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட திரைப்படம் தான் ’என்னங்க சார் உங்க சட்டம்’ என்ற திரைப்படம் என தெரிகிறது. சற்றுமுன் வெளியான இந்த படத்தின் டிரெய்லரில் முழுக்க முழுக்க இட ஒதுக்கீடு மற்றும் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளதால் சரியான நேரத்தில் இந்த படம் ரிலீசாக உள்ளது என்று தெரிகிறது. மேலும் இந்த படத்தில் ஒரு மெல்லிய காதல் மற்றும் காமெடியும் உள்ளது என்பது இந்த படத்தின் டிரைலரில் இருந்து தெரிய வருகிரது.\nஆர்எஸ் கார்த்திக், ஆர்யா, சௌந்தர்யா பாலா நந்தகுமார், ரோகினி, பகவதி பெருமாள் உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்தை பிரபு ஜெயராம் இயக்கியுள்ளார். அருண் கிருஷ்ணா ராதா கிருஷ்ணன் ஒளிப்பதிவில், குணா பாலசுப்பிரமணியன் இசையில், பிரகாஷ் கருணாநிதி படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி உள்ளது. இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Follow\nநாமினேஷனில் திடீர் திருப்பம்: ஒருவர் தப்பிக்க வாய்ப்பு கொடுத்த பிக்பாஸ்\nசூர்யாவின் அடுத்த ���ரண்டு படங்களுக்கும் இவர்தான் இசையமைப்பாளர்\nவிஜய் குறித்து ஒரே ஒரு வார்த்தை கூறிய பூஜா ஹெக்டே\nநடிகை ஸ்ரேயா மகளுக்கு “ராதா“ பெயர்…. காரணத்தை கேட்டு அசந்துபோன ரசிகர்கள்\nபுது ஹேர் ஸ்டைலால் ரசிகர்களை மிரள வைத்த நடிகை ஷில்பா ஷெட்டி… வைரல் புகைப்படம்\nபிக்பாஸ் 5: இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்டவர்கள் யார் யார்\nசூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' ரிலீஸ் தேதி இதுவா\nகோவில் கோவிலாக சுற்றும் விக்னேஷ்-நயன்: வைரல் புகைப்படங்கள்\nவைல்ட்கார்ட் எண்ட்ரியாக செல்கிறாரா பிரபல தயாரிப்பாளர்\nவிஜய்சேதுபதியை சந்தித்தது மிகவும் மிகழ்ச்சி: பிரபல நடிகர் பகிர்ந்த புகைப்படம் வைரல்\nஏஜிஎஸ் நிறுவனத்துடன் இணைந்த மாதவன்: அதிரடி அறிவிப்பு\nநான் சொல்றத மட்டும் கேளு: முழுசா சந்திரமுகியா மாறிய அபிஷேக்\nராகவா லாரன்ஸின் 'ருத்ரன்' படத்தில் 60 வருடங்களுக்கு முந்தைய பாடலின் ரீமிக்ஸ்\nசூர்யாவின் அடுத்த இரண்டு படங்களுக்கும் இவர்தான் இசையமைப்பாளர்\nநடிகை தற்கொலைக்கு காதலர் காரணமா பிரேத பரிசோதனையில் தெரிந்த உண்மை\nவிஜய் குறித்து ஒரே ஒரு வார்த்தை கூறிய பூஜா ஹெக்டே\n'அண்ணாத்த' படத்தில் ரஜினியின் கேரக்டர்: குஷ்பு கூறிய ரகசியம்\nநடிகை ஸ்ரேயா மகளுக்கு “ராதா“ பெயர்…. காரணத்தை கேட்டு அசந்துபோன ரசிகர்கள்\nஅபிஷேக் காலில் விழுந்த தாமரை: எல்லாம் இதுக்குதானா\nநாமினேஷனில் திடீர் திருப்பம்: ஒருவர் தப்பிக்க வாய்ப்பு கொடுத்த பிக்பாஸ்\nபிக்பாஸ் 5: இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்டவர்கள் யார் யார்\nபட்டு சாரி கட்டி போர் அடிச்சிருச்சா… நடிகை சினேகா ஸ்டைலை ஃபாலோ பண்ணுங்க..\nபுது ஹேர் ஸ்டைலால் ரசிகர்களை மிரள வைத்த நடிகை ஷில்பா ஷெட்டி… வைரல் புகைப்படம்\nஇந்த வார நாமினேஷனில் நீங்கள் காப்பாற்ற விரும்பும் போட்டியாளர் யார்\nகையில எடு பவர, துணிஞ்சு எடு பவர.. சூர்யாவின் 'ஜெய்பீம்' பாடல் வைரல்\nதனுஷை அடுத்து ஹாலிவுட் செல்லும் பிரபல தமிழ் நடிகர்\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் 'மருதாணி' பாடல் வீடியோ வைரல்\nமறுபடியும் பிக்பாஸ் வந்து அபிஷேக் மூஞ்சியில ஒண்ணு போடுங்க: நமீதா வீடியோவுக்கு நெட்டிசன் கமெண்ட்\nசாலையோர கடையில் பேரம் பேசினாரா நயன்தாரா\nபிக்பாஸ் வீட்டின் முதல் சண்டை: எதிர்பார்த்தது போலவே அபிஷேக் தான்\nநடிகர் ராமராஜனுக்கு என்ன ஆச்சு பரவி வரும் வதந்தியால் பரபரப்பு\n'சோலோவாக ரிலீஸ் ஆகிறதா ரஜினியின் 'அண்ணாத்த': பின்வாங்கும் தீபாவளி படங்கள்\nதலைவர் பதவிக்கு போட்டியிடும் போட்டியாளரை டார்ச்சர் செய்யும் அபிஷேக்\nதீபாவளி ரிலீஸ் பட்டியலில் இணைந்த மேலும் ஒரு பிரபல நடிகரின் படம்\nசிம்புவின் 'வெந்து தணிந்தது காடு' படத்தின் சூப்பர் அப்டேட்\nஷாருக்கான் படத்தில் நடிக்க மறுத்தாரா சமந்தா\nபாவாடை தாவணியில் நடிகை ரோஜா: வைரலாகும் போட்டோஷூட் புகைப்படங்கள்\nஇந்த வாரம் டார்கெட் செய்யப்படும் இரண்டு பெண் போட்டியாளர்கள்\nகுஷ்பு, மீனாவுடன் ரஜினியின் 'அண்ணாத்த' பாடல்: ரிலீஸ் தேதி அறிவிப்பு\n'கர்ணன்' படத்திற்கு பின் மீண்டும் தனுஷுடன் இணைந்த பிரபல நடிகர்\n'விஷால் 32' படத்தின் அட்டகாசமான டைட்டில் போஸ்டர்\nசூர்யாவின் அடுத்த படத்தில் 'தெருக்குரல் அறிவு' பாடல்: ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஐபிஎல் 2021- இல் அதிக ரன்கள், அதிக விக்கெட் எடுத்த வீரர்கள் யார்\nசாம்பியன் பட்டம் வென்ற சிஎஸ்கே அணிக்கு இத்தனை கோடியா\nவீட்டில் பொரி கடலை அதிகமா இருக்கா\nமாஸ் காட்டிய தோனி… சிஎஸ்கே ரசிகர்களை குளிர வைக்கும் இன்னொரு வரலாற்று சம்பவம்\nவாக்கிங் செல்லும் இளம்பெண்களிடம் பாலியல் சீண்டல்: ஸ்டார் ஓட்டல் ஊழியர் கைது\nபிரமிக்க வைக்கும் சுந்தர்பிச்சையின் தினசரி வழக்கம் பற்றி தெரியுமா\nதோனியை வித்தியாசமாகப் பாராட்டிய கல்லூரி மாணவி… ரசிகர்கள் வரவேற்பு\n ஆச்சர்யத்தில் ஒரு லட்சத்தை இழந்த இளைஞர்\nKKR vs CSK யாருக்கு அதிக பலம் 2021 சாம்பியன் பட்டம் யாருக்கு\nடி20 உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் அதிரடி மாற்றம்\nவிருந்தில் கலந்துகொண்ட புலியால் அதிரும் சோஷியல் மீடியா\nகணவர், குழந்தைகளுடன் பீச் பிகினியில் சமீரா: வைரல் புகைப்படங்கள்\n7 கண்டங்கள், 64 நாடுகள்: பைக்கில் பயணம் செய்ய அஜித் திட்டம்\nகணவர், குழந்தைகளுடன் பீச் பிகினியில் சமீரா: வைரல் புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nastiknation.org/product/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE/", "date_download": "2021-10-19T11:11:30Z", "digest": "sha1:2KRRIY5DLQZR6EWEFZBQHXUUQM4TXYHG", "length": 4088, "nlines": 102, "source_domain": "nastiknation.org", "title": "திரு & திருமதி ஜின்னா – Nastik Nation", "raw_content": "\nதிரு & திருமதி ஜின்னா\nஇந்தியாவையே திடுக்கிட வைத்த திருமணம்\n1918ம் ஆண்டில் ருட்டி பெத்தித், முகமது அலி ஜி��்னாவை ரகசியத் திருமணம் செய்து கொள்வதற்காகத் தன் தகப்பனாரின் மாளிகையிலிருந்து வெளியேறியதை அறிந்து, மொத்த சமூகமே அதிர்ந்தது; சீற்றமும் அடைந்தது. அவர்கள் இருவருக்குள்ளும் அத்தனை வேற்றுமைகள் – வேறு வேறு சமூகம்; வேறு வேறு மதம்; இருவருக்கும் 24 ஆண்டுகள் வயது வித்தியாசம். இது போன்ற மிக வித்தியாசமான ஓர் உறவுப் பின்னலை, ஷீலா ரெட்டி என்னும் புகழ் பெற்ற இதழியலாளர், இதுவரை வெளிவராத கடிதங்கள், நண்பர்கள் மற்றும் ஏனைய சம காலத்தினர் விட்டுச் சென்ற தகவல்கள், ஆவணங்களோடு பெரும் இரக்கமும் அக்கறையும் கலந்து வெளிக்கொணர்ந்துள்ளார். தில்லி, பம்பாய், கராச்சி போன்ற கதைமாந்தர்களின் வாழ்விடங்களில் ஆழமாகவும், மிக உன்னிப்பாகவும் ஆய்வுகள் மேற்கொண்டு ரெட்டி எழுதிய வாழ்க்கை வரலாறு இது.\nதிரு & திருமதி ஜின்னா quantity\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://newsguru.news/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2021-10-19T11:08:55Z", "digest": "sha1:LEVIXNRUH5K45DYZ4YH4XDN26CQ32PAY", "length": 9661, "nlines": 101, "source_domain": "newsguru.news", "title": "மாஸ்டர் திரைப்படம் வெளியிடுவதில் சிக்கல்? - நியூஸ் குரு - நியூஸ் குரு", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, அக்டோபர் 19, 2021 | எங்கள் மொபைல் ஆப்-ஐ பதிவிறக்கவும்\nHome சினிமா & விளையாட்டு மாஸ்டர் திரைப்படம் வெளியிடுவதில் சிக்கல்\nமாஸ்டர் திரைப்படம் வெளியிடுவதில் சிக்கல்\nகொரோனா ஊரடங்கால் சினிமாத்துறை பெரும் பாதிப்பை சந்தித்தது.\nதிரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டது மட்டுமின்றி படப்பிடிப்புகலும் ரத்து செய்யப்பட்டன.\nபின்பு கொரோனா தொற்று குறைய தொடங்கிய பின் கடந்த நவம்பர் மாதம் திரையரங்குகளை திறக்க தமிழக அரசு அனுமதியும் அளித்தது.\nஆனால் 50 சதவீத இருக்கைக்கு மட்டுமே அனுமதி என்ற நிலையில் திரையுலகம் பெரிதும் பாதிப்புக்குள்ளானது.\nபெரிய படங்கள் வெளியாகவில்லை. வெளியான சிறிய படங்களுக்கும் போதிய வரவேற்பு இல்லை. எனவே திரையரங்கு உரிமையாளர்கள் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி வழங்குமாறு தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.\nதயாரிப்பாளர் சங்கம் உள்ளிட்ட திரைத்துறை அமைப்புகளும் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுத்தன. இவர்களின் கோரிக்கையை ஏற்று 100 சதவீத இருக்கைக்கு தமிழக அரசும் அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்தது.\nஇதனை எதிர்க்கும் வகையில் மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா தமிழக அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். திரையரங்குகளில் 100 சதவீத இருக்கை அனுமதி மறுபரிசீலனை செய்யுமாறு அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் மீண்டும் 50 சதவீத இருக்கைக்கு மட்டுமே அனுமதி என்ற உத்தரவு பிறப்பிக்கப்படவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.\nஇதன் காரணமாக பொங்கலுக்கு வெளியாக இருக்கும் நடிகர் விஜய் நடித்த ‘மாஸ்டர்’ மற்றும் நடிகர் சிம்பு நடித்த ‘ஈஸ்வரன்’ படம் வெளியாகுமா, ஆகாதா என்ற குழப்ப நிலை நீடிக்கிறது. திரையுலகினரும் குழம்பிப்போய் தான் உள்ளனர். ஒருவேளை அரசு 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என்ற நிலை மாறினால் வெளியிடப்படும் படத்தின் வசூல் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.\nதற்போதைய நிலவரப்படி ‘மாஸ்டர்’ பட வெளியீடு நிலை என்ன என்பது அரசின் அறிவிப்புக்குப் பிறகே தெரிய வரும் என்கிறார்கள்.\nடி20 கிரிக்கெட் போட்டி இந்தியா-பாகிஸ்தான் போட்டி நடக்குமா\nஅண்டை நாடுகளில் இந்துக்கள் மீது தாக்குதல் – உலக நாடுகள் கண்டிக்கட்டும்\n இன்று தலித் தொழிலாளி கொடூர கொலை\nடி20 கிரிக்கெட் போட்டி இந்தியா-பாகிஸ்தான் போட்டி நடக்குமா\nஅண்டை நாடுகளில் இந்துக்கள் மீது தாக்குதல் – உலக நாடுகள் கண்டிக்கட்டும்\n இன்று தலித் தொழிலாளி கொடூர கொலை\nமனித குலத்தின் பல்வேறு பிரச்சனைகளுக்கு பாரதமே தீர்வு தரமுடியும் -ஆர்.எஸ்.எஸ் தலைவர் டாக்டர்.மோகன்பாகவத்\nநியூஸ் குரு ஒரு ஆன்லைன் செய்தி தளமாகும். நாங்கள் முக்கியமாக பிராந்திய அரசியல், கலாச்சாரம் மற்றும் பொருளாதாரத்தில் கவனம் செலுத்துகிறோம். கோயம்புத்தூரை மையமாகக் கொண்ட இந்த அமைப்பு, உண்மைகளால் இயக்கப்படும் ஊடக கலாச்சாரத்தையும், முக்கியத்துவம் வாய்ந்த கருத்துகளையும் வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.\nஅஜித்தை கண்ட ரசிகர்கள் சிலர் வலிமை அப்டேட் எப்போது வரும் என்று கேட்டுள்ளனர்\nநியூஸ் குரு - பிப்ரவரி 2, 2021 0", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sitharsastrology.com/blog/About-Saranagadhi-in-Tamil", "date_download": "2021-10-19T11:59:30Z", "digest": "sha1:2HNNFOAKZUPBTE4ITVA7BXSX46DFDVFE", "length": 4287, "nlines": 75, "source_domain": "sitharsastrology.com", "title": "About Saranagadhi in Tamil|Sithars Astrology Blog", "raw_content": "\nசரணாகதி என்பது, தன்னையே ஒருவரிடம் ஒப்படைத்து விடுவது. “இனி, என��்கு நீ தான் கதி. நீ என்னை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். எனக்கு என்று எதுவுமில்லை. எல்லாமே (உடல், பொருள், ஆவி) உன்னுடையது தான்’ என்று ஒப்படைத்து விடுவதை சரணாகதி என்பர். இப்படி சரணாகதி செய்வதை, பகவானுடைய காலடியில் செய்து விடு; உன் ஷேமத்தை அவன் கவனித்துக் கொள்வான் என்பது மகான்களின் வாக்கு. “பகவானே… நீ தான் கதி; நீ விட்ட வழி…’ என்று பொறுப்பை அவனிடம் விட்டு விட்டால், பொறுப்பு பகவானுடையதாகி விடுகிறது. பகவான் இவனைக் காப்பாற்றுகிறான்; நல்வழி காட்டுகிறான்; துயர் துடைக்கிறான்; நற்கதியடையச் செய்கிறான்; பிறவித் துன் பத்தையும் போக்குகிறான். நீயே கதி என்று சரணடைந்தவர் களுக்கு இப்படி. “நான், நான்’ என்று சொல்லி, “நான் தான் செய்தேன், நானே செய்து விடுவேன்…’ என்று சொல்பவர்களிடம் அவன் போவதில்லை; அவனே செய்து கொள்ளட்டும் என்று விட்டு விடுகிறான். பகவானைக் கூப்பிட்டால் அவன் ஓடி வந்து உதவுவான்.\nபக்தியால் சிறந்தவர்களான பல மகான்கள், பெரியோர் பற்றிய கதைகள் நிறைய உண்டு. ஆக, பகவானிடம் சரணாகதி அடைந்து விட்டால், அவன் கைவிட மாட்டான். நம்பிக்கையும், பக்தியும் தான் இதற்கு முக்கியம்.\nசரணாகதி – அர்த்தம் என்ன \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2021-10-19T12:10:15Z", "digest": "sha1:47WEGRM2ISQJKXC4G66PBBN45MZ6YE2D", "length": 6175, "nlines": 105, "source_domain": "ta.wiktionary.org", "title": "ஆடை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஅணிந்த சிறுமி & ஆடையில்லாக் குழந்தை\nஉடலுக்கு மேல் அணியப்படும் துணி/உடை\nபால் முதலியவற்றின் மேல் படியும் படலம்\nகணினி நிரல்களின் வரைகலை பயனர் இடைமுகப்பின் தோற்றத்தையும், வரைவையும் மாற்றியமைக்கும் அம்சம்\nஅலங்கார ஆடை அணிவகுப்பு (fancy dress show)\nஅழுக்கான ஆடை (dirty dress)\nசிவப்பு ஆடை (red dress)\nஉலாவியின் தோற்றத்தை மாற்றியமைக்க இந்த ஆடையை பயன்படுத்தலாம். You can use this skin to change how the browser looks.\nமெய்யினில் ஈர ஆடை (எதிர்பாராத முத்தம், பாரதிதாசன்)\nஆடை கட்டி வந்த நிலவோ (பாடல்)\nசான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைச��யாக 11 ஏப்ரல் 2020, 06:28 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/cars/Strom_Motors", "date_download": "2021-10-19T12:57:50Z", "digest": "sha1:DHECB3OFMFWTJ3F2H2IYKFPLIMTKF4BB", "length": 7204, "nlines": 165, "source_domain": "tamil.cardekho.com", "title": "strom motors கார் விலை, புதிய கார் மாடல்கள் 2021, படங்கள், வகைகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nமுகப்புபுதிய கார்கள்strom motors கார்கள்\nstrom motors சலுகைகள் 1 கார் மாதிரிகள் இந்தியாவில் விற்பனைக்கு உட்பட 1 ஹாட்ச்பேக். மிகவும் மலிவான strom motors இதுதான் ஆர்3 இதின் ஆரம்ப விலை Rs. 4.50 லட்சம் மற்றும் மிகவும் விலையுயர்ந்த strom motors காரே ஆர்3 விலை Rs. 4.50 லட்சம். இந்த strom motors ஆர்3 (Rs 4.50 லட்சம்), இருந்து மிகவும் பிரபலமான கார்கள் உள்ளன strom motors. வரவிருக்கும் strom motors வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் கார்கள் 2021/2022 சேர்த்து .\nstrom motors கார்கள் விலை பட்டியல் இந்தியாவில்\n7 மதிப்புரைகளின் அடிப்படையில் strom motors கார்களுக்கான சராசரி மதிப்பீடு\nstrom motors கார் மாதிரிகள்\nRs.4.50 லட்சம்* (price in புது டெல்லி)\nமாருதி இகோ போட்டியாக strom motors ஆர்3\nஎல்லா car comparison ஐயும் காண்க\nஆர்3 படங்கள் ஐ காண்க\nஎல்லா strom motors படங்கள் ஐயும் காண்க\nstrom motors கார்கள் பற்றிய சமீபத்திய விமர்சனங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/director-naveen-mohamedali-slams-lol-comedians-abishek-and-maya-for-their-chennai-slang-video-087016.html", "date_download": "2021-10-19T12:16:25Z", "digest": "sha1:JPL4QIBLXIVENBJXKY2GWXQ4FQXDXWGF", "length": 18415, "nlines": 191, "source_domain": "tamil.filmibeat.com", "title": "எங்க ஊருல உங்களுக்கு பேரு ‘ஊலப்பிலிமு’; LOL காமெடியன்களை வெளுத்து வாங்கிய பிரபல இயக்குநர்! | Director Naveen Mohamedali slams LOL comedians Abishek and Maya for their Chennai slang video - Tamil Filmibeat", "raw_content": "\nAutomobiles ஹூண்டாய் க்ரெட்டா காரை வாங்க போறீங்களா இந்த இரு வேரியண்ட்களின் டெலிவிரிக்கு 8 மாதம் காத்திருக்கனும்\nNews உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 24 கோடியை தாண்டியது\nLifestyle Today Rasi Palan: இந்த ராசிக்காரர்களுக்கு ஆரோக்கியத்தில் பெரும் சரிவு ஏற்படலாம்....\nSports வலுக்கும் எதிர்ப்புகள்.. இந்தியா-பாகிஸ்தான் போட்டி ரத்து செய்யப்படாது - பி.சி.சி.ஐ துணைத்தலைவர்\nFinance 4 வயது குழந்தைக்கு 6,500% லாபம்.. பிட்காயின் செய்த மேஜிக்..\nTechnology புது கலர்., வேற லெவல் லுக்: ஒப்போ கே9 ப்ரோ ஸ்மார்ட்போனின் புது மாறுபாடு அக்டோபர் 20- விலை, அம்சங்கள்\nEducation ரூ.30 ஆயிரம் ஊதியத்தில் மத்திய FACT நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎங்க ஊருல உங்களுக்கு பேரு ‘ஊலப்பிலிமு’; LOL காமெடியன்களை வெளுத்து வாங்கிய பிரபல இயக்குநர்\nசென்னை: ஸ்டாண்ட் அப் காமெடியன் அபிஷேக் மற்றும் மாயா ஆகியோர் வெளியிட்ட காமெடி வீடியோவிற்கு மூடர்கூடம் இயக்குநர் நவீன் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nசென்னை மக்களின் பேச்சு மொழியை கிண்டல் செய்யும் வகையில் இருவரும் இணைந்து அந்த வீடியோவை போட்டுள்ளனர்.\nஅமேசான் பிரைமில் வெளியான காமிக்ஸ்தான் நிகழ்ச்சியில் அபிஷேக் டைட்டிலை வென்ற நிலையில் சமீபத்தில் ஒளிபரப்பான விவேக்கின் கடைசி ஷோவான LOL நிகழ்ச்சியில் அபிஷேக் மற்றும் மாயா இருவரும் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர்.\nவிஜய் ஆண்டனியின் “கோடியில் ஒருவன்“… 3 நிமிட வீடியோவே சும்மா அமர்க்களமா இருக்கே\nஅமேசான் பிரைமில் ஒளிபரப்பான காமிக்ஸ்தான் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஸ்டாண்ட் அப் காமெடிகளை கூறி அசத்திய அபிஷேக் அந்த நிகழ்ச்சியின் டைட்டிலையும் 10 லட்சம் ரூபாய் பரிசையும் தட்டிச் சென்றார். தொடர்ந்து விஜய் டிவியின் முரட்டு சிங்கிள்ஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்ட அவர் சில விளம்பர படங்களிலும் நடித்துள்ளார்.\nநடிகர் விவேக்கின் கடைசி ஷோவான LOL எங்க சிரி பார்ப்போம் நிகழ்ச்சியிலும் அபிஷேக் போட்டியாளராக கலந்து கொண்டார். அவருடன் ஸ்டாண்ட் காமெடியனான மாயாவும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஆனால், LOL டைட்டிலை விஜய் டிவியின் குக் வித் கோமாளி பிரபலம் புகழ் தட்டிச் சென்றார்.\nஇந்நிலையில், ஸ்டாண்ட் அப் காமெடியன்களான அபிஷேக் மற்றும் மாயா இருவரும் இணைந்து உருவாக்கிய சென்னை ஸ்லாங் பற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சிலர் அதை ரசித்து பார்த்து சிரித்தாலும், சிலர் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க தவறவில்லை.\nஏப்ரல் மாதத்தை ஆப்ரல் என்று சென்னை மக்கள் பேசுவதாக ஆரம்பிக்கும் அந்த வீடியோவில் ஸ்டேஷன், ஜெராக்ஸ், சச்சின் டெண்டுல்கர், தோனி, பேப்பர், ஜீரோ உள்ளிட்ட பல வார்த்தைகளை சென்னை மக்கள் இப்படித்தான் பேசுகின்றனர் என கேவலப்படுத்தும் தொனியில் இருவரும் காமெடி என்கிற பெயரில் செய்��ுள்ள அலம்பலை இயக்குநர் நவீன் கடுமையாக கண்டித்துள்ளார்.\nஇங்லீஸ்காரன் என்னிக்காவது வேற மொழிய சரியா உச்சரிச்சிருக்கானா அவவென் நாக்கு எப்படி பழகிருக்கோ அப்படித்தாண்டா உச்சரிப்பு வரும். நீங்க மொக்கயா ஒரு எக்ஸ்பிரஷன் குடுக்கறிங்கல்ல, அதுக்கு பேருதான் மேட்டுக்குடி பூஷ்வாத்தனம். எங்க ஊருல உங்களுக்கு பேரு #ஊலப்பிலிமு\n\"இங்லீஸ்காரன் என்னிக்காவது வேற மொழிய சரியா உச்சரிச்சிருக்கானா அவவென் நாக்கு எப்படி பழகிருக்கோ அப்படித்தாண்டா உச்சரிப்பு வரும். நீங்க மொக்கயா ஒரு எக்ஸ்பிரஷன் குடுக்கறிங்கல்ல, அதுக்கு பேருதான் மேட்டுக்குடி பூஷ்வாத்தனம். எங்க ஊருல உங்களுக்கு பேரு #ஊலப்பிலிமு\" என வெளுத்து வாங்கி உள்ளார்.\nமூடர்கூடம், அலாவுதினும் அற்புத கேமராவும் மற்றும் அக்னிச் சிறகுகள் உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ள இயக்குநர் நவீன் காமெடியன்கள் அபிஷேக் மற்றும் மாயா குறித்து \"ஊலப்பிலிமு\" என வெளுத்து வாங்கியதை பார்த்த ரசிகர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். பிறரை கொச்சைப்படுத்துவது தான் நகைச்சுவை என நினைத்துக் கொண்டு இவர்கள் இருப்பதால் தான் காமெடி சரியாகவே வரவில்லை என கண்டித்து வருகின்றனர்.\nஆறாவது அறிவை நமக்கெல்லாம் அறிமுகம் செய்தவர்.. தந்தை பெரியாரை போற்றும் சினிமா பிரபலங்கள்\nவரலாற்றை திரிப்பவர்களுக்கு தக்க பதிலடி மேதகு.. சத்யராஜ் முதல் ஜிவிபி வரை பகிர்ந்த ட்வீட்கள்\n7 பேர் விடுதலையை புதிய அரசு நிறைவேற்றும்… இயக்குனர் நவீன் நம்பிக்கை \nகொரோனா 2வது மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது… பிரபல இயக்குனர் ட்விட்\n'எப்போதும் நீங்கள்தான்..' 3 வது திருமண நாள்.. காதல் கணவருக்கு பிரபல நடிகை டச்சிங் முத்தம்\nஅந்த ஹீரோயினுக்கு பதில் இந்த நடிகை.. ரீஷூட்டுக்கு காத்திருக்கும் அருண் விஜய்யின் அக்னிச் சிறகுகள்\nஎப்படி நடந்தது அந்த மேஜிக்.. காதல் தொடங்கி 9 வருடங்கள்.. கணவருக்கு நன்றி சொல்லும் பிரபல நடிகை\nகிழிஞ்ச பாராசூட்ல பறக்காதீங்க.. அந்த ட்வீட்டுக்கு இப்போ பதிலடி கொடுத்த திரெளபதி இயக்குநர்\nகஜகஸ்தானில் புத்தாண்டு... முன்னால் சென்ற அருண் விஜய், நவீன்... பின்னால் செல்லும் விஜய் ஆண்டனி\nகஜகஸ்தான்ல நியூ இயர்... அப்படியே சுவிஸ், ஜெர்மனி... 'அக்னிச் சிறகுகள்' டீம் பிளான்\nஓவர் பனி, ஓயாத குளிர்... மாஸ்கோ சாலைகளி��் ஓடிய அருண் விஜய், விஜய் ஆண்டனி\nஷாலினியை நீக்கிவிட்டு அக்‌ஷரா ஹாசனை ஒப்பந்தம் செய்தது இதற்குத்தானா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசுட்டித்தனமாக நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த ஜோ... பிறந்தநாள் கொண்டாட்டம்\nஎன்னடா சொல்ல வர்ற... ராஜு, பாவனியை கதற விட்ட அபிஷேக்\nஅஜித்தின் ஆட்டோகிராஃப்பை பார்த்திருக்கீங்களா...செம வைரலாகும் ஃபோட்டோ\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/chennai-cheppak/", "date_download": "2021-10-19T12:20:15Z", "digest": "sha1:Q4LYWA5B5IXDXAFHCAEIZK3ABWPXLGVR", "length": 6583, "nlines": 118, "source_domain": "tamil.indianexpress.com", "title": "chennai cheppak News in Tamil:chennai cheppak Latest News, Photos, Breaking News Headlines, Videos- Indian Express Tamil", "raw_content": "\n‘வலிமை அப்டேட் என்னால் மறக்க முடியாதது’ – நெகிழும் மொயீன் அலி\nEnglish cricketer Moeen Ali recalls actor ajith’s ‘Valimai Update’ Tamil News: சமீபத்தில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த இங்கிலாந்து…\nசென்னையில் 2-வது டெஸ்ட்: ஆன்லைனில் டிக்கெட் ‘புக்’ செய்வது எப்படி\nIndia vs England 2nd test match ticket sale details: டெஸ்ட் போட்டியைக் காண டிக்கெட் முன் பதிவு செய்ய நீங்கள் அணுக வேண்டிய இணைய…\nசென்னை சேப்பாக்கம் டெஸ்ட் போட்டி : ரசிகர்களுக்கு அனுமதி அளித்த தமிழக அரசு\nசென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 13-ந் தேதி நடைபெறும் 2-வது டெஸ்ட் போட்டிக்கு 50% ரசிகர்களுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் அடுத்த தலைவர் யார் சோனியா காந்தி அழைத்த முக்கிய தலைவர்\nஉங்களைக் காயப்படுத்திய நபரைப் பழிவாங்கத் தோன்றுகிறதா அதற்கு முன்பு இதைக் கொஞ்சம் பாருங்க…\nஇல்லம் தேடி கல்வி; அரசுப் பள்ளி மாணவர்களுக்கான தமிழக அரசின் புதிய திட்டம்\nசிபிஎஸ்சி தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட 4 லட்சம் அதிகம்\nஉ.பி. தேர்தலில் 40% இடங்களை பெண்களுக்கு ஒதுக்க முடிவு – பிரியங்கா காந்தி\nஅபிஷேக் காலில் விழுந்த தாமரைச்செல்வி… காரணம் என்ன\nவாட���ஸ்அப் குழு அழைப்புகளில் நடுவில் சேருவது எப்படி\nசினிமா ஆசை… வாய்ப்புக்காக போராட்டம்… சீரியல் நடிகர்… பிக்பாஸ் போட்டியாளர் ராஜூ ஜெயமோகன் லைப்\nஇலங்கை கடற்படை தாக்குதலில் தமிழக மீனவர் உயிரிழப்பு; தொடரும் துயரம்\nடெல்லி ரகசியம்: பாஜகவை எச்சரித்த மேகாலயா ஆளுநர்; பின்னணி என்ன\nஇந்துசமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு; 8 ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்\nபயிற்சி ஆட்டத்தில் வெற்றியை ருசித்த இந்தியா; அணியின் நிலை என்ன\nSBI Alert: எஸ்பிஐ எச்சரிக்கை… உங்க பணம் பாதுகாப்பா இருக்கணும்னா இந்த 3 விஷயத்தை மறக்காதீங்க\nஎன்னங்க ஜே.சி.பிய வச்சு தூக்குறீங்க\nNEET Results: இந்த தேதிக்குள் நீட் ரிசல்ட்; அடுத்து செய்ய வேண்டியது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/sun-tv-gave-rs-30-crore-for-corona-relief-mur-461459.html", "date_download": "2021-10-19T12:54:37Z", "digest": "sha1:NMG4Y4Z7G2V22QXYWNOREVUWKOVO2CTY", "length": 7566, "nlines": 100, "source_domain": "tamil.news18.com", "title": "SUN TV Relief Fund: கொரோனா 2வது அலை: சன் தொலைக்காட்சி ரூ.30 கோடி நிவாரணம்!/Sun TV is donating Rs.30 crores for corona relief – News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#T20 WorldCup#பெண்குயின் கார்னர்#பிக்பாஸ்#கிரைம்\nகொரோனா 2வது அலை: சன் டிவி நிறுவனம் ரூ. 30 கோடி நிவாரணம்\nகொரோனா 2வது அலை: சன் டிவி நிறுவனம் ரூ. 30 கோடி நிவாரணம்\nகொரோனா தொற்றின் 2வது அலை தீவிரமாக பரவிவரும் நிலையில் நிவாரணப் பணிகளுக்காக சன் தொலைக்காட்சி நிறுவனம் ரூ.30 கோடி வழங்கியுள்ளது.\nகொரோனா தொற்றின் 2வது அலை தீவிரமாக பரவிவரும் நிலையில் நிவாரணப் பணிகளுக்காக சன் தொலைக்காட்சி நிறுவனம் ரூ.30 கோடி வழங்கியுள்ளது.\nகொரோனா தொற்றின் 2வது அலை இந்தியாவின் அதிகரித்து வருகிறது. சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் ஆகியோரும் தொற்று பாதிப்புக்கு உள்ளாகின்றனர். ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்ற வீரர்களில் சிலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து போட்டி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.\nகொரோனா தொற்றின் முதல் அலையின்போது ஏராளமானோர் பிரதமர் நிவாரண நிதிக்கு நன்கொடை அளித்திருந்தனர். அதேபோது தற்போதும், கொரோனா நிவாரணப் பணிகளுக்காக கிரிக்கெட் பிரபலங்கள், திரைப் பிரபலங்கள், தொழில் நிறுவனங்கள் நன்கொடை வழங்கி வருகின்றன. இந்நிலையில், பல்வேறு மொழிகளில் இயங்கிவரும் சன் தொலைக்காட்சி நிறுவனம் கொரோனா நிவாரணப் பணிகளுக்காக ரூ.30 கோடி நன்க���டை வழங்கியுள்ளது.\nஇந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் கொரோனா தடுப்பு திட்டங்களுக்கு இந்த நிதி செலவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறிப்பாக, இந்திய அரசு மற்றும் மாநில அரசுகள் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து ஆக்சிஜன் சிலிண்டர்கள், மருந்துகள் வாங்க இந்த நிதி செலவிடப்படும் என சன் தொலைக்காட்சி நிர்வாகம் கூறியுள்ளது.\nமேலும் படிக்க.. முதல்வர் ஸ்டாலின் மனித நாகரீகத்தின் உச்சம்..\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube\nகொரோனா 2வது அலை: சன் டிவி நிறுவனம் ரூ. 30 கோடி நிவாரணம்\nபிக் பாஸ் வீட்டுக்கு வைல்ட் கார்டு எண்ட்ரியில் நுழையும் பிரபலம்\nதிருட்டுப் பயலே 2 இந்தி ரீமேக்கில் நடிக்கும் ஊர்வசி ரவுத்லா...\nஒரு முக்கியமான வேலை... அவசரமாக பிக் பாஸ் வீட்டுக்குள் செல்லும் 2 பிரபலங்கள்\n புதிய சீரியலை களமிறக்கும் விஜய் டிவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/actress-rashmika-mandanna/news/", "date_download": "2021-10-19T11:28:15Z", "digest": "sha1:CJ4UBEXWK2ZTUPUKPG5UIVVVM6DGQ3II", "length": 5843, "nlines": 98, "source_domain": "tamil.news18.com", "title": "actress rashmika mandanna News in Tamil| actress rashmika mandanna Latest News and Updates - News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#T20 WorldCup #பெண்குயின் கார்னர் #பிக்பாஸ் #கிரைம்\nஎப்பா என்னா நடிப்பு.. ராஷ்மிகாவை கொஞ்சி தள்ளிய ராதிகா மற்றும் ஊர்வசி..\nஒரே வருடத்தில் 3 சொகுசு பங்களாக்களை வாங்கிய ராஷ்மிகா\nமீண்டும் காதல் வதந்தியில் சிக்கிய ராஷ்மிகா மந்தனா...\nவிஜய்க்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா\n900 கி.மீ பயணம் செய்து ராஷ்மிகா மந்தனாவை பார்க்க சென்ற ரசிகர்\nராஷ்மிகா மந்தனாவுக்கு ‘நான் ஸ்டாப்’ முத்தம் - வைரலாகும் படங்கள்\nநடிகை ராஷ்மிகா மந்தனாவின் மனம் கவர்ந்த சிஎஸ்கே நாயகன்\n’தமிழ்நாட்டின் மருமகளாகணும்’ - ராஷ்மிகா மந்தனாவின் திருமண ஆசை\nஅடேய், என் கமெண்ட்ல வந்து.. கொதித்தெழுந்த சுல்தான் தயாரிப்பாளர்\nஇணையத்தில் வெற்றிநடை போடும் கார்த்தியின் சுல்தான்\nசுல்தான் பட இயக்குநர் பாக்யராஜ் கண்ணணை பாராட்டிய சிவகார்த்திகேயன்\nபடம் மரண மாஸ்... கார்த்தியின் சுல்தான் ட்விட்டர் ரிவ்யூ\nதிரையரங்கிற்கு வருகை தந்த நடிகர் கார்த���தி\nSulthan: கார்த்தியின் ’சுல்தான்’ லேட்டஸ்ட் அப்டேட்\nகார்த்தியின் சுல்தான் ட்ரெய்லர் ரிலீஸ் - வீடியோ\nஇணையத்தில் வைரலாகும் சீரியல் மீம்ஸ்\nரொம்ப டார்ச்சர் பண்றான் பா ... வைரலாகும் பிக்பாஸ் மீம்ஸ்\nஐப்பசி பௌர்ணமியில் சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுவது ஏன்\nசேலம், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்யும் என அறிவிப்பு\nடி20 உலகக்கோப்பை- ‘வருண் சக்ரவர்த்தியை சாதாரணமாக எடைபோடாதீர்கள்’\n‘புலியின் குகையை பூனைகளுக்கு பரிசளிக்கலாமா’ - சசிகலா கடிதம்\n2 தடுப்பூசிகளை அடுத்தடுத்த டோஸாக போட்டு கொள்வது பாதுகாப்பானதா..\nதமிழகம் முதல் அசாம் வரை.. சொத்துக்களை வாங்கிய 12 மத்திய அமைச்சர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://udhayasankarwriter.blogspot.com/2015/01/", "date_download": "2021-10-19T11:29:10Z", "digest": "sha1:SWRZQT4QIJONBQ5TMGS5T6EBUWAYCI24", "length": 41202, "nlines": 266, "source_domain": "udhayasankarwriter.blogspot.com", "title": "கரிசக்காடு: January 2015", "raw_content": "\nபச்சை நிழல் ( குழந்தைக்கதைகள் )\nமுன்காலத்தைப் போல குழந்தைகளுக்கு சொல்லக் கதைகள் இல்லை எனும் மேம்போக்குக் கருத்துகளை மறுக்கும் விதமாக குழந்தைகளுக்கான நல்ல பல கதைகளை இப்புத்தகம் தாங்கி வந்துள்ளது. இந்தக் கதைகளை வாசிக்கும் குழந்தைகளின் கற்பனை உலகத்தைத் தாங்களாகவே மென்மேலும் விரித்துச் செல்லும் சாத்தியங்களை இக்கதைகள் உருவாக்கித் தருகின்றன. வெறும் ஏட்டுக்கல்வி மட்டுமே குழந்தைகளை வளர்த்தெடுத்துவிடும் என்ற மூடத்தனத்திலிருந்து விடுவித்து குழந்தைகளின் நிஜ உலகத்தை குழந்தைகளுக்குத் தெளிவாக உணர்த்துவதோடு பெற்றோருக்கும் சமூகத்துக்கும் அக்கறையோடு தெளிவுறுத்தத் தலைப்படுகிறது இப்புத்தகம்.\nலால் சலாம் காம்ரேட் இ.எம்.எஸ். ( இ.எம்.எஸ். நினைவுக்கட்டுரைகள் )\nதொகுப்பும் மொழிபெயர்ப்பும் – உதயசங்கர்/உத்ரகுமாரன்\nஇ.எம்.எஸ். என்ற ஆளுமையைப் புரிந்து கொள்வதற்கு ஒரு மனித ஆயுட்காலம் முழுவதும் போதாது என்று கூடச் சொல்லலாம். அரசியலில் இ.எம்.எஸ்ஸினுடைய மிகப்பெரிய வெற்றி என்பது அவர் முதல் மந்திரியானதிலோ, கட்சியினுடைய பொதுச்செயலாளரானதிலோ இல்லை. தன்னுடைய ஆதரவாளர்களையும் எதிராளிகளையும் ஒரு நிமிடம் கூட உறங்க அநுமதிக்காமல் என்றென்றும் அவர்களைக் கேள்விகளிலும் விசாரணைகளிலும் ஈடுபடச்செய்து இந்திய அரசியலை பெரிதும் அறிவுப்பூர்வமாக மாற��றியது தான் என்று நான் நம்புகிறேன்.\nமலையாள எழுத்தாளர்- சுகுமார் அழிக்கோடு\nLabels: இ.எம்.எஸ், இலக்கியம், உதயசங்கர், கட்டுரை, குழந்தை இலக்கியம், குழந்தைகள், சி.பி.எம்., நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், நூல்வெளியீடு, மலையாளம், மார்க்சியம், மார்க்ஸ், மொழிபெயர்ப்பு\n இல்லை. இல்லவே இல்லை. அவர்கள் நல்ல ஒற்றுமையுடன் வாழும் ஒழுக்க சீலர்கள் ஆவார்கள். ஆனால் அவர்களிடையே குறும்பன் என்ற பெயர் கொண்ட ஒரு எறும்பும் இருந்தது. அவனுடைய கதையைச் சொல்கிறேன்.\nஇயற்கை ஒவ்வொரு உயிரினங்களுக்கும் அவர் அவர்களுக்கே உரிய வாழ்க்கை முறையும், வசிப்பிடமும் பிரித்துக் கொடுத்திருக்கிறதல்லவா ஆமாம். எறும்புகள் எத்தனை சிறிய உயிரினங்கள் ஆமாம். எறும்புகள் எத்தனை சிறிய உயிரினங்கள் அவர்களுக்கு புற்றுகள் தான் இருப்பிடங்கள். அவர்கள் சேர்ந்து தங்களை விட பெரியதான இரையைப் பிடித்து புற்றுக்குள் கொண்டுவந்து சேர்க்கும். சிறியவர்களானதால் அவர்களுடைய சக்தி என்பது அவர்களுடைய ஒற்றுமையில் தான் இருக்கிறது. பரிபூரணமான ஒத்துழைப்பு.\nஆனால் குறும்பன் மாத்திரம் ஒத்துழைப்பதில்லை. எறும்புகள் வரிசை வரிசையாக செய்திகளை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டு போகும்போது குறும்பன் ஏதாவது ஒரு கல்லின் மீது ஏறி சும்மா உட்கார்ந்திருக்கும். அவருக்கு எப்போதும் யோசனை தான். மற்றவர்கள் புற்றுக்குள் ஏதாவது நல்ல தீனியைக் கொண்டு வந்தால் குறும்பன் கொஞ்சம் உதவி செய்யும். எதற்கு அதைத் தின்பதற்கு. தின்று முடித்ததும் மறுபடியும் யோசனையில் ஆழ்ந்து விடும். நாட்கள் இப்படிப் போய்க் கொண்டிருந்தன.\nகுறும்பனை மற்றவர்கள் கண்டுகொள்வதில்லை. மற்றவர்களின் உழைப்பினால் தன் வயிறு வளர்க்கிற ஒரு அற்பஜீவி என்று மற்றவர்கள் நினைத்தார்கள். குறும்பன் ஒருபோதும் வரிசையில் நடப்பதில்லை. மற்ற எறும்புகள் ஒருவருக்கொருவர் அவர்களுடைய சங்கேதமொழியில் சொல்லிக் கொண்டார்கள்,\n எறும்புகளின் மொழி ஒருவகையான சங்கேதமொழி. ஒவ்வொரு விசயத்துக்கும் தனித்தனியான சங்கேதவார்த்தைகளைஅவர்களுக்குள் பரிமாறிக் கொள்வது வழக்கம். குறும்பனால் அவதிக்குள்ளான மற்றவர்கள் அவனை புற்றிலிருந்து வெளியே தள்ளி விட்டார்கள். எல்லோரும் சேர்ந்து ஒரு பெரிய கல்லை உருட்டிக் கொண்டு வந்து புற்றின் வாசலை அடைத்து விட்டார்கள். தனியாக வெளியே நின்று கொண்டிருந்த குறும்பன் ஒரு கர்ச்சனையைக் கேட்டு நடுங்கினான்.\nஒற்றை யானை. அவன் காட்டினை மிதித்துக் கொண்டு போகிறான். குறும்பனின் மனசில் ஒரு ஆசை. தான் ஒரு யானையாக இருந்தால் எப்படி இருக்கும் தன்னுடைய சக்தியை இந்த கர்வம்பிடித்த உயிர்களிடம் காண்பிக்கணும்.எறும்புக்கூட்டம் எப்பவாச்சும் புற்றை விட்டு வெளியில் வருமில்லையா தன்னுடைய சக்தியை இந்த கர்வம்பிடித்த உயிர்களிடம் காண்பிக்கணும்.எறும்புக்கூட்டம் எப்பவாச்சும் புற்றை விட்டு வெளியில் வருமில்லையா அப்போது ஒரே மிதி. ஒரு தேய்ப்பு. ஆயிரம் எறும்புகளாவது சட்னியாக வேண்டும்.\nகுறும்பனின் மனசு பொங்கியது. யானையாக வேண்டுமே அவனுடைய வாழ்க்கையில் ஒரு உறுதியான தீர்மானம் எடுத்தான். தீனி கிடைக்காதல்லவா அவனுடைய வாழ்க்கையில் ஒரு உறுதியான தீர்மானம் எடுத்தான். தீனி கிடைக்காதல்லவா அதனால் பட்டினியுடன் கடும் தவம் செய்ய வேண்டும். அப்படி இயற்கையன்னையை சந்தோசப்படுத்தி வரம் கேட்க வேண்டும்.\nகுறும்பன் தவமிருந்தான். இரவும் பகலும் இருந்தான். மழையிலும் வெயிலிலும் பனியிலும் இருந்தான். தவமான தவம். குறும்பன் மெலிந்து துரும்பாகி விட்டான். அவனுடைய பக்தியைக் கண்டு மனமிரங்கிய இயற்கையன்னை அங்கே தோன்றினாள்.\nகுறும்பன் ஒரே ஒரு வரம் தான் கேட்டான். ஒரு யானையாக மாற வேண்டும். இயற்கையன்னை சிரித்தாள். பௌர்ணமி நிலவைப் போல பனியைப்போல அருளும் வழங்கினாள். குறும்பன் யானையாகி விட்டான். அவன் பிளிறினான். காடு சிலிர்த்தது. தன்னுடைய கூட்டாளிகள் குடியிருக்கிற பாறைகளுக்கு அருகில் சென்று கர்ச்சனை செய்தான். பாறையினைப் போல அவனுடைய மொழி இறுகிப் போயிருந்தது. ஒரே ஒரு எறும்பு மட்டுமே வெளியில் அலைந்து திரிந்து கொண்டிருந்தது. அதை மிதித்துத் தேய்த்துக் கொல்ல முயற்சித்தது.உற்றுக் கவனித்த அந்த எறும்பு புற்றுக்குள் இறங்கி மறைந்தது.\nகுறும்பன் யோசித்தது. ஒரு பிரச்னை இருக்கிறதே. யானைக்கு எறும்பின் புற்றுக்குள் இறங்க முடியாது. இறங்கினால் தானே எறும்புக்கூட்டத்துக்கு தன்னுடைய சக்தியைப் பற்றித் தெரியும். அதற்கு என்ன செய்ய ம். அதற்கும் வழி உண்டு. என்ன வழி ம். அதற்கும் வழி உண்டு. என்ன வழி\nமறுபடியும் கடுமையான தவம். இயற்கையன்னையின் நிம்மதி போச்சு. மறுபடியும் தோன்றினாள். குறும்பன் சொன்னான்.\n“ அன்னையே.. யானையாக இருக்கும்போதே எனக்கு எறும்புப்புற்றுக்குள் நுழையவும் வேணும்..”\nஇயற்கையன்னையின் கண்கள் சிவந்தன. சேட்டைக்கார இந்தச் சிறிய எறும்பின் தன்னுடைய தவறை உணர்ந்து கொள்ள என்ன வழி அன்னை சிரித்தாள். மழைக்கால இடி மின்னலைப்போல. பின்பு அன்னை சொன்னாள்.\n“ குறும்பா..ஒவ்வொரு உயிருக்கும் அதற்குரித்தான தகுதியும் வாழ்க்கை முறைகளும் இருக்கிறது. ஆனால் உனக்கு அது புரியவில்லை. உனக்கு ஒரே சமயத்தில் யானையாகவும் எறும்பாகவும் ஆனால் தான் திருப்தி. இல்லையா அது பேராசை. பேராசைக்காரனுக்கு ஒருபோதும் திருப்தி வராது…நீ இன்று முதல் மணலில் குழி பறித்து குடியிருக்கிற குழிநரியாகக் கடவது அது பேராசை. பேராசைக்காரனுக்கு ஒருபோதும் திருப்தி வராது…நீ இன்று முதல் மணலில் குழி பறித்து குடியிருக்கிற குழிநரியாகக் கடவது\nஅன்னை ஒரு சாரல் மழையின் துல்லியமான சத்தத்தில் மறுபடியும் சிரித்தாள், பின்பு மறைந்து விட்டாள். குறும்பன் மணலில் வட்டம் சுற்றிச் சுற்றிக் கீழே இறங்கினான். மணலுக்குள் குடியிருந்தான். பாவம் எறும்புகளையே இரையாகப் பிடிப்பதற்கு சபிக்கப்பட்ட ஒரு குழிநரியாக வாழ்ந்தான்.\nகுறும்பன் என்ற எறும்பு தான் இப்போது நாம் காண்கிற குழிநரி.\nநன்றி- மாயாபஜார் தமிழ் இந்து\nLabels: இலக்கியம், உதயசங்கர், கதை, குழந்தை இலக்கியம், தமிழ் இந்து, மாயாபஜார், வைசாகன்\nஅடுத்த கட்டத்துக்கான ஊக்கமே சாகித்ய அகாடமி விருது – பூமணி\n( 1970-களில் மரபுக்கவிதையில் துவங்கிய இலக்கியப்பயணம் தமிழின் மிக முக்கியமான படைப்பாளில் ஒருவராக பரிணமித்து ” வயிறுகள் “ துவங்கி ஐம்பத்தியிரண்டு சிறுகதைகள், ” ”பிறகி “ லிருந்துஆறு நாவல்கள், மொழிபெயர்ப்பு, கருவேலம்பூக்கள் என்ற திரைப்படம், என்று தன் இலக்கிய ஆளுமையால் தமிழிலக்கியத்தில் தனக்கென ஒரு தனியிடம் பிடித்தவர். எழுத்தாளர் பூமணி. அதிர்ந்து பேசாத இயல்பும், எழுத்தின்பால் ஆழ்ந்த நேசமும் கொண்ட அவருடைய சமீபத்திய படைப்பான “ அஞ்ஞாடி “ என்ற நாவலுக்கு இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது கிடைத்திருக்கிறது. எப்போதும் ஒதுங்கியிருக்கும் சுபாவம் கொண்ட அவருடைய வீட்டில் இப்போது எப்போதும் ஊடக வெளிச்சம். இந்தியா டூடேவுக்காக அவருடைய மனம் திறந்த நேர்காணல் )\nகேள்வி: உங்களுடைய அஞ்ஞாட��� நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்தமைக்கு இந்தியா டூடே சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள் இந்த விருதின் தருணம் எப்படியிருக்கிறது\nபூமணி:, விருது கிடைக்க வேண்டும் என்பதற்காக எழுதவில்லை. அதனால் பெரிய ஆரவாரமோ, மகிழ்ச்சியோ இல்லை. அஞ்ஞாடி எழுதுவதற்காக இரண்டு வருட காலம் ஆராய்ச்சி செய்ய வேண்டியதிருந்தது. அதைத் தொடர்ந்து ஏழு வருடங்கள் அஞ்ஞாடி நாவலை எழுதினேன். கிட்டத்தட்ட ஒன்பது வருட உழைப்பு. அந்த உழைப்புக்குக் கிடைத்த அங்கீகாரமாக இந்த விருதை நினைக்கிறேன். அதே மாதிரி அடுத்த கட்ட நகர்வுக்கான ஊக்கமாக சாகித்ய அகாடமி விருது கிடைத்தாக நினைக்கிறேன்..\nகேள்வி: கரிசல் இலக்கியத்தின் மூத்த எழுத்தாளரான கி.ராஜநாராயணனை முன்னத்தி ஏர் என்று முன்பு சொல்லியிருக்கிறீர்கள். அவருடைய எழுத்துக்கும் உங்களுடைய எழுத்துக்குமான ஊடாடலைப் பற்றிச் சொல்ல முடியுமா\nபூமணி: கரிசல் வட்டார இலக்கியம் என்று சொல்வதில் இப்போது எனக்கு உடன்பாடில்லை. சாதிய இலக்கியம் என்று இப்போது சொல்லுவதைப்போல குறுகிய பார்வை கொண்டதாக இருக்கிறது. கரிசல் இலக்கியம் கரிசல் இலக்கியம் என்று ஆரவாரித்ததில் கு.அழகிரிசாமி மாதிரியான எழுத்தாளர்களை நாம் தவறவிட்டு விட்டோம். கு.அழகிரிசாமி முன்பே நாம் அங்கீகரித்திருந்தால் கரிசல் இலக்கியத்தின் வேகம் குறைந்திருக்கும். இப்போது எனக்கு குற்றவுணர்ச்சியே இருக்கிறது. அருமையான கதைகளை எழுதியுள்ள கு.அழகிரிசாமியின் எழுத்து கிராமங்களில் காலையில் ஆலங்குச்சியால் நிதானமாக ஒவ்வொரு பல்லாக விளக்குவதைப் போன்ற எழுத்து. புறவயமான சூழ்நிலைச் சித்திரத்தை அகவயப்படுத்தி அந்தக்கதையின் ஓட்டத்துக்கு இசைவாகவோ, கூடுதல் வெளிச்சம் தருகிற மாதிரியோ இருக்கிறது அவருடைய கதைகள். அவரையெல்லாம் விட்டு விட்டு காடு கரை என்று எதை எதையோ எழுதியாச்சு..\nகேள்வி: அஞ்ஞாடி நாவலில் ஒரு இருநூறு ஆண்டு கால தென் தமிழக வரலாறு பேசப்படுகிறது. அஞ்ஞாடி என்ற பெயரே இனவரைவியல் தன்மையோடு சூட்டப்பட்டிருக்கிறது. பள்ளர், நாடார், வண்ணார், மறவர், என்ற சாதிகளின் வரலாறாகவும், சிவகாசிக்கலவரம், கழுகுமலைக்கலவரம்,, கிறித்துவ மதமாற்றம் போன்ற நிகழ்வுகளையும் கண்முன்னே கொண்டு வந்திருக்கிறீர்கள். பின் நவீனத்துவ கோட்பாடுகளில் ஒன்றான அடையாள அரசியலை அ��்ஞாடி முன்வைக்கிறதா\nபூமணி: அடையாள அரசியலில் பூமணி இல்லை. எனக்கு அதில் உடன்பாடுமில்லை. ஒரு சாதியை அடையாளப்படுத்தி அதைச் சார்ந்து எழுதினாலே அது அடையாள அரசியல். ஆனால் நான் அப்படி எழுத வில்லை. இன்று தமிழகத்தின் வரலாற்றை எழுத வேண்டுமானால் சாதிகளைப் பற்றி எழுதாமலிருக்க முடியாது. அஞ்ஞாடி மார்க்சீயநோக்கில் எழுதப்பட்ட நாவல். அஞ்ஞாடி என்றால் அம்மாடி என்று அர்த்தம். குடும்பர்கள் மட்டுமே வாழும் கலிங்கல் கிராமத்தை என்னுடைய லட்சியக்கிராமமாக நான் எழுதியுள்ளேன். அதில் அவர்களுக்கு சலவை செய்யும் ஒரே ஒரு வண்ணார் குடும்பத்தையும் எழுதியுள்ளேன். இனக்குழு வரலாறும் இருக்கிறது. தொன்மங்களின் வரலாறும் இருக்கிறது. நாவலுக்காக ஆய்வு செய்கையில் நம்முடைய வரலாறே வன்முறைகளின் வரலாறாக இருப்பதை என்னால் பார்க்க முடிந்தது.\nகேள்வி: அஞ்ஞாடி நாவலின் முதல் மின்னல் எப்படித் தோன்றியது\nபூமணி: 1800 – களின் துவக்கத்தில் தமிழகத்தின் தென்கோடியில் வாழ்ந்த நாடார் இன மக்கள் திருவிதாங்கூர் மன்னரின் அடக்குமுறைகளை எதிர்த்து தோள்சீலைப் போராட்டம் நடத்துகிறார்கள். அதில் நிறையப்பேர் அடக்குமுறைகளுக்கு அஞ்சி திருநெல்வேலி, மாவட்டம், ராமநாதபுரம் மாவட்டம், என்று குடிபெயருகிறார்கள். சிவகாசிக்கொள்ளை என்று பெரும்பான்மை மக்கள் பேசுகிற நாடார் இன மக்களுக்கு எதிராக மறவர் இன மக்களின் தலைமையில் எல்லா சாதியினரும் சேர்ந்து நடத்திய கலவரத்தைப் பற்றி அங்கொன்றும் இங்கொன்றுமாக செய்திகள் கேள்விப்பட்டிருக்கிறேன். என்னுடைய கிராமத்திலிருந்த ஒரு தாத்தாவின் கட்டை விரல் வளைந்திருந்தது. அதைப் பற்றிக் கேட்டபோது அவர் சிவகாசிக்கொள்ளையில் அவரைக் குத்த வந்த வேல்கம்பைப் பிடித்து மல்லுக்கட்டும் போது கவண்கல் வந்து விரலில் தாக்கியதினால் எலும்பு வளைந்து விட்டது என்றார். . சாதாரண மக்களும் கலந்து கொண்ட அந்தச் செய்தி எனக்கு சிவகாசிக்கலவரம் பற்றி ஆய்வு செய்யும் ஆர்வத்தைத் தூண்டியது. அங்கே அஞ்ஞாடி கருக்கொண்டது.\nகேள்வி: உங்களுடைய நாற்பதாண்டுகளுக்கு மேலான இலக்கியப்பயணத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்\nபூமணி: 1966 – ஆம் ஆண்டு நா.பா. நடத்திய தீபம் பத்திரிகையில் மரபுக்கவிதை வெளிவந்தது. அது தான் என்னுடைய முதல் படைப்பு. அதன் பிறகு 1969 – ஆம் ஆண்டு எழுத்��ு பத்திரிகையில் அறுப்பு என்ற என் முதல் சிறுகதை வெளியானது… இப்போது யோசிக்கும்போது இன்னும் கொஞ்சம் சிறுகதைகள் எழுதியிருக்கலாம் என்று தோன்றுகிறது. 1979- ஆம் ஆண்டில் என்னுடைய முதல் நாவல் பிறகு வெளியானதிற்குப் பிறகு சிறுகதைகள் எழுதும் ஆர்வம் குறைந்து விட்டது நாவலின் விரிந்த களத்தில் எழுதிய பிறகு சிக்கனமான மொழியில் சிறுகதை எழுத முடியவில்லை. இப்போது கதைக்கட்டுரை என்று ஒரு புதிய வடிவத்தில் எழுதிக் கொண்டிருக்கிறேன். அறிவுப்பூர்வமான கருத்துக்களும் உணர்வுமயமான நிகழ்வுகளும் இணைந்த வடிவம்.\nகேள்வி: உங்களுடைய அடுத்த நாவலைப் பற்றிச் சொல்ல முடியுமா\nபூமணி: கிறிஸ்து பிறப்பதற்கு முன்பாக முதல் ஆயிரமாவது ஆண்டிலிருந்து எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆண்டாள் வரையிலும் வெளியில் மறைந்து போய் பூமிக்கடியில் ஓடிக் கொண்டேயிருக்கும் சரஸ்வதி நதி மாதிரி பெண்களின் ஓலம் கேட்டுக் கொண்டேயிருக்கிறது. ஒரு சாதாரண இனக்குழுத்தலைவனான கிருஷ்ணன் எப்படி கடவுளாக மாறுகிறான். பெண்கள் எப்படி அடிமைப்படுத்தப்படுகிறார்கள் வெறும் உற்பத்திக் கருவிகளாக பெண்களை எப்படி மாற்றுகிறார்கள் வெறும் உற்பத்திக் கருவிகளாக பெண்களை எப்படி மாற்றுகிறார்கள் என்றெல்லாம் விவாதிக்கிற நாவலை எழுதத் தொடங்கியிருக்கிறேன்.\nஅஞ்ஞாடி நாவல் இதுவரை பெற்ற விருதுகள்\n2. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கம் வழங்கிய கே.பி.பாலச்சந்தர் நினைவு நாவல் விருது\n3. ஆனந்த விகடன் விருது\n4. புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய தமிழ்ப்பேராய விருது\n5. கலைஞர் பொற்கிழி விருது\n6. உலகத் தமிழ் பண்பாட்டு மைய விருது கோயம்புத்தூர்\nநன்றி- இந்தியா டுடே ஜனவரி,7\nபனிரெண்டு சிறுகதைத் தொகுதிகள்,ஒரு குறுநாவல் தொகுதி, ஐந்து கவிதைத் தொகுதிகள், பத்தொன்பது குழந்தை இலக்கிய நூல்கள்,எழுபது மொழிபெயர்ப்பு நூல்கள், ஆறு கட்டுரை நூல், தமுஎகசவில் மாநிலத் துணைப்பொதுச்செயலாளர். தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத்தலைவர்\nதுண்டிக்கப்பட்ட தலையில் சூடிய ரோஜாமலர்\nஇந்துக்களின் புனித நூல் எது\nபிராமணிய மேல்நிலையாக்கமும் பண்பாட்டு அழிப்பும்\nமனிதநலம் காக்கும் ஹோமியோபதி மருத்துவம்-2\nகாட்டு வாத்தாகச் சிறகை விரித்த கவிதை\nகத்தரிக்காய் குள்ளனும் கழுகுமலை பூதமும் - நாடோடிக்கதை\nகத்தரிக்காய் குள்ளனும் கழுகுமலை பூதமும் உதயசங்கர் ஒரு ஊரில் ஒரு பாட்டியும் தாத்தாவும் தனியாக வாழ்ந்து வந்தார்கள். அவர்களுக்கு எட்டு மக...\nஇந்துக்களின் புனித நூல் எது\nஇந்துக்களின் புனித நூல் எது உதயசங்கர் உலகிலுள்ள எல்லாப்பெருமதங்களுக்கும் ஒரு புனிதநூல் இருக்கிறது. கிறித்துவத்துக்கு பைபிள் என...\nசூரியனும் குட்டிக்குட்டிக்குருவிக்குஞ்சும் உதயசங்கர் காலை விடிந்தது. சூரியன் கண்களை மெல்லத் திறந்து உலகத்தைப் பார்த்தான். வெளிச்சத்தின...\nமின்னுவின் ஆசை உதயசங்கர் மின்னு சுண்டெலி தப்பித்ததே பெரிய காரியம். ஒரு விநாடி தாமதம் ஆகி இருந்தால் அவ்வளவு தான். வெள்ளைப்பூனை லபக் என்...\nபிராமணிய மேல்நிலையாக்கமும் பண்பாட்டு அழிப்பும்\nபிராமணிய மேல்நிலையாக்கமும் பண்பாட்டு அழிப்பும் உதயசங்கர் இப்போதெல்லாம் பெரும்பாலான நாட்டார் தெய்வக்கோவில்களில் கும்பாபிஷேகம் நடக...\nகுறள் அறமும் மனு (அ)தர்மமும் - (ஆய்வுக் கட்டுரை)\nஇட ஒதுக்கீடல்ல மறுபங்கீடு - ஆதவன் தீட்சண்யா உரை\nதமிழ்நாடு கிராம வங்கியை சீர்குலைக்கும் அதன் நிர்வாகம்\nஎன் 'கால்' கதை தெலுங்கில்\nபார்த்த படத்தை மறுபடி பார்க்க, படித்த கதையை மீண்டும் படிக்க விரும்புவதன் உளவியல்\nபுதுப்பேட்டை 15 ஆவது ஆண்டு நிறைவு\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nஅடுத்த கட்டத்துக்கான ஊக்கமே சாகித்ய அகாடமி விருது ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/146753-health-benefits-of-horse-gram", "date_download": "2021-10-19T11:26:58Z", "digest": "sha1:5JX3AV46PNNUJGQZ3WSD2BFE6AN65HMC", "length": 10894, "nlines": 212, "source_domain": "www.vikatan.com", "title": "Doctor Vikatan - 01 January 2019 - மருந்தாகும் உணவு - கொள்ளு தால் மக்னி | Health Benefits Of Horse gram - Doctor Vikatan - Vikatan", "raw_content": "\nகுழந்தைகளுக்குத் தனியறை... பரவலாகும் கலாசாரம்\nமருந்தாகும் உணவு - கொள்ளு தால் மக்னி\nடாக்டர் 360: ரத்தம்... ஒரு பயணியின் கதை\nஒட்டுண்ணிகள் நிகழ்த்தும் மாய விளையாட்டு\n - வலி தீர்க்கும் வழிகள்\nவறட்டு இருமலுக்கு உப்புத் தண்ணீர்\n‘ம்மா... ப்பா... ங்கா...’ மழலைச்சொல் கேட்போம்\nகோபம் தணிக்கும் கிரீன் டீ\nகொசு கடித்தாலும் ரத்தச்சோகை வரலாம்\nஆறாம ஆறாம காயங்கள் ஏது\n“தோல்வி என்பது வாழாத நிமிடங்களும் போராடாத தருணங்களும்” - வித்யா நாராயணன்\n - ஆனந்தம் விளையாடும் வீடு - 15\nநிலவைக் காட்டி அமுது ஊட்டி - 28\nஅடுத்த இதழில் ���ுதுப்பொலிவுடன்... 8-ம் ஆண்டில்\n - மகள்களைப் பெற்ற மகராசிகளுக்கு...\nஜிஆர்டி ஜுவல்லர்ஸ் - மூன்று `டைம்ஸ் பிசினஸ் விருதுகள்' வென்று சாதனை\nமியாட் மருத்துவமனை - விபத்துக் காயங்கள் மேலாண்மையில் \"பொன்னான நேரம்\" என்றால் என்ன\nசொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா - கிராமத்தானின் பயணம் 14\nநம் வாழ்வில் ஒருமுறையாவது பார்க்க வேண்டிய இரண்டு தமிழ்ப்படங்கள்\nமழைக்கால மின்கசிவிலிருந்து வீட்டை பாதுகாப்பது எப்படி\nதேவிஸ்ரீ பிரசாத்தை பார்த்து அடுத்த இளையராஜான்னு கமல் சொன்னதுக்கு காரணம் இருக்கு\nவணிகத் தேவைக்காக நாட்டு விலங்குகள் படும் துயர் - தெளிவாக விளக்கும் புத்தகம்\nஅமைதியோ அமைதி ஓமான், ஆச்சர்யப்பட வைத்த ஜோர்டான் - கிராமத்தானின் பயணம் 13\nபாச மலர் 2.0 - வாசகி ஷேரிங்ஸ்\nமருந்தாகும் உணவு - கொள்ளு தால் மக்னி\nஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்\nமருந்தாகும் உணவு - கொள்ளு தால் மக்னி\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்\nதெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism\nபாலின சமஉரிமை, குழந்தைகள் உளவியல், உடல் நலம் குறித்த எழுத்துக்களை இங்கு தேடலாம்\n15 வருடங்களாக வாழ்வியல் பத்திரிகையாளர். படித்தது முதுகலை வரலாறு. குடிமைப்பணி கனவு கலைந்தவுடன் மக்களுடன் இணைந்து இயங்க பத்திரிகைத்துறையைத் தேர்ந்தெடுத்தேன். ஆரோக்கியத்தில் ஆர்வம் அதிகமென்பதால், அதில் ஆதி, அந்தக் கட்டுரைகள் இங்கு நிறைந்து காணப்படும். கூடவே குழந்தைகளுக்கான கதைகளில் மான்குட்டியும் புலிக்குட்டியும் நட்பு பாராட்டும். ஆண்-பெண் உறவுச்சிக்கல்களுக்கும் இங்கு தீர்வு கிடைக்கும். அரசியல் பெண்களில் ஆரம்பித்து சாமான்யப்பெண்கள் வரை பலருடைய போராட்டங்களும் வெற்றிக்கதைகளும் உத்வேகம் அளிக்கும். அந்த உத்வேகத்தில் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கிறேன்.\nஇதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/gods/maha-periyava-spiritual-stories", "date_download": "2021-10-19T11:22:30Z", "digest": "sha1:U7AGVKXUYGIATORBMLQWHDWJLCC74YJA", "length": 11111, "nlines": 255, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 30 July 2019 - மகா பெரியவா - 33| Maha Periyava: Spiritual stories - Vikatan", "raw_content": "\nதிருவருள் திருவுலா: அம்பிகையே... ஈஸ்வரியே\nஅமுதமாய் எழுந்தருளிய வெள்ளை லிங்கம்\nஅகத்தியருக்குப் பாடம் சொன்ன அரனார்...\nநட்சத்திர குணாதிசயங்கள்: ‘ஓணத்தில் பிறந்தவர் கோணத்தை ஆள்வார்\nமருத்துவ சிகிச்சைக்கும் நாள் நட்சத்திரம் உண்டா\n`ஆடாது அசங்காது வா கண்ணா\nநாரதர் உலா: தெப்போற்சவம் நடக்குமா\nசிவமகுடம் - பாகம் 2 - 32\nஆதியும் அந்தமும் - 8 - மறை சொல்லும் மகிமைகள்\nகேள்வி - பதில்: சிலைகளுக்குச் சக்தி உண்டா\n - 8 - பஜகோவிந்தம் பாடல்களும் பாடங்களும்\nமகா பெரியவா - 33\nரங்க ராஜ்ஜியம் - 34\nபுண்ணிய புருஷர்கள் - 8\nகண்டுகொண்டேன் கந்தனை - 8\nசக்தி யாத்திரை: ஷீர்டியை நோக்கி சிலிர்ப்பூட்டும் பயணம்\nஎமவாதனை போக்கிடும் தட்சிண காளி வழிபாடு\nஐப்பசி அன்னாபிஷேக மகிமைகள்: சோற்றுக்குள்ளே மறைந்திருக்கும் சொக்கநாதரை தரிசிக்கும் நாள்\nகந்த சஷ்டியில் சிங்கார வேலனுக்குச் சிறப்பான ஆராதனை... மஹாஸ்கந்த ஹோமத்தில் நீங்களும் சங்கல்பிக்கலாம்\nஎல்லாம் சிவமென நின்றாய் போற்றி\nசனீஸ்வரரின் தொல்லைகளை நீக்கும் பெருமாள் வழிபாடு... புரட்டாசி கடைசி நாளில் நாம் செய்யவேண்டியது என்ன\nசெய்தி வாசிப்பாளர் ரத்னா வீட்டு பிரமாண்ட கொலு | News Reader Ratna's House Grand Golu | V.I.P Golu\n - யானை ஏறுவார் திருக்கல்யாணம்\n‘ஆசையோடு சேர்த்த தயிர் தங்கமே தங்கம்’\nமகா பெரியவா - 33\nமகா பெரியவா - 33\nமகா பெரியவா - 50\nமகா பெரியவா - 48\nமகா பெரியவா - 47\nமகா பெரியவா - 46\nமகா பெரியவா - 45\nமகா பெரியவா - 44\nமகா பெரியவா - 43\nமகா பெரியவா - 42\nமகா பெரியவா - 40\nமகா பெரியவா - 39\nமகா பெரியவா - 38\nமகா பெரியவா - 37\nமகா பெரியவா - 36\nமகா பெரியவா - 33\nமகா பெரியவா - 32\nமகா பெரியவா - 31\nமகா பெரியவா - 30\nமகா பெரியவா - 29\nமகா பெரியவா - 28 - `தமிழுக்கு அந்தப் பெயர் ஏன் வந்தது\nமகா பெரியவா - 27 - ‘எது ஜனநாயகம்\nமகா பெரியவா - 26: ‘திருவுள்ளச் சீட்டு’\nமகா பெரியவா - 25: ‘நாம் வேறு பிறர் வேறு அல்ல’\nமகா பெரியவா - 24: ‘பிரபஞ்சமும் லிங்கோத்பவரும்\nமகா பெரியவா - 23: ‘லோகத்துக்காகப் பாடு\nமகா பெரியவா - 22 - ‘அனைத்தும் அனுமனிடம் உண்டு\nமகா பெரியவா - 21 - ‘சர்வ ஜீவனிடத்திலும் சதாசிவன்\nமகா பெரியவா - 20 - சகலமும் ஈஸ்வரார்ப்பணம்\nமகா பெரியவா - 19 - பதியே பரமேஸ்வரன்\nமகா பெரியவா - 18 - ‘அம்பாள் கவலையை அழிச்சுட்டா\nமகா பெரியவா - 17\nமகா பெரியவா - 16\nமகா பெரியவா - 15\nமகா பெரியவா - 14\nமகா பெரியவா - 13\nமகா பெரியவா - 12\nமகா பெரியவா - 11\nமகா பெரியவ��� - 10\nமகா பெரியவா - 9\nமகா பெரியவா - 8\nமகா பெரியவா - 7\nமகா பெரியவா - 6\nமகா பெரியவா - 5\nமகா பெரியவா - 4\nமகா பெரியவா - புதிய தொடர்\nஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்\nவாழ்க்கையில் தாங்க முடியாத அளவுக்குத் துயரங்கள் நேரிடும்போது, ‘பகவான் எனக்கு மட்டும் ஏன் இப்படி அடுக்கடுக்கா கஷ்டங்களைக் கொடுக்கிறார்.\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்\nதெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism\nஇதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newsguru.news/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2021-10-19T11:07:10Z", "digest": "sha1:HMDODL6TOKRISLRJ2J2WFWGYKKTPGIHE", "length": 13238, "nlines": 97, "source_domain": "newsguru.news", "title": "டாக்டர் வி.சாந்தா: தெரிந்துகொள்ள வேண்டிய 10 தகவல்கள் - நியூஸ் குரு - நியூஸ் குரு", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, அக்டோபர் 19, 2021 | எங்கள் மொபைல் ஆப்-ஐ பதிவிறக்கவும்\nHome சரித்திரம் டாக்டர் வி.சாந்தா: தெரிந்துகொள்ள வேண்டிய 10 தகவல்கள்\nடாக்டர் வி.சாந்தா: தெரிந்துகொள்ள வேண்டிய 10 தகவல்கள்\nபிரபல புற்றுநோய் மருத்துவ நிபுணரும் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவருமான டாக்டர் வி.சாந்தா உடல்நலக் குறைவால் நேற்று (ஜனவரி 19) காலமானார். அவருக்கு வயது 93.\nசென்னை மயிலாப்பூரில் (1927) பிறந்தவர். உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானி சர். சி.வி.ராமன் இவரது தாத்தாவின் சகோதரர். நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி டாக்டர் எஸ்.சந்திரசேகர் இவரது தாய்மாமா.\nஅவர்கள் போலவே இவரும் இயற்பியல் துறையில் சாதிக்க வேண்டும் என்று விரும்பினர் குடும்பத்தினர். இவரோ மருத்துவத்தில் சாதனை படைக்க விரும்பினார். வித்தியாசமாக எதையாவது சாதிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.\nபி.எஸ்.சிவசாமி பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் கல்வி கற்றார். சென்னை மருத்துவக் கல்லூரியில் 1949-ல் டாக்டர் பட்டம் பெற்றார். 1955-ல் எம்.டி. பட்டம் பெற்றார். நாட்டின் முதல் பெண் மருத்துவரான முத்துலட்சுமி ரெட்டியின் முயற்சியால் சென்னை அடையாறில் தொடங்கப்பட்ட மருத்துவமனையில், எம்.டி. பட்டம் பெற்ற உடனேயே மருத்து���ராகப் பணியில் சேர்ந்தார். அது இவரது வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது.\nகொள்கைப் பிடிப்பும், தொலைநோக்கும், கண்டிப்புடன் வழிநடத்தும் குணமும் கொண்ட டாக்டர் எஸ்.கிருஷ்ணமூர்த்தியைத் தனது குருவாகப் போற்றுகிறார். 12 படுக்கைகளுடன் இயங்கிவந்த அடையாறு மருத்துவமனையைத் தனது குருவுடன் சேர்ந்து உலகத் தரம்வாய்ந்த, புற்றுநோய் சிகிச்சை மையமாக மாற்றுவதில் பெரும் பங்காற்றினார்.\nஇவரது தன்னலமற்ற மருத்துவ சேவையால் அடையாறு புற்றுநோய் மருத்துவமனை பல சாதனைகளைப் படைத்துள்ளது. 65 ஆண்டுகளாக இந்த மருத்துவமனையையே தன் வீடாக மாற்றிக் கொண்டவர். புற்றுநோய் தொடர்பாக தேசிய மற்றும் சர்வதேச இதழ்களில் ஏராளமான கட்டுரைகளை எழுதியுள்ளார். விரிவுரைகள் பக்கம் பக்கமாக இருந்தாலும், சளைக்காமல் கையால் எழுதுவார்.\nமகசேசே விருது, பத்மஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண், நாயுடம்மா நினைவு விருது, அவ்வையார் விருது, அன்னை தெரசா விருது உட்பட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார். விருதுகள் மூலம் கிடைக்கும் தொகை முழுவதையும் மருத்துவமனை வளர்ச்சிக்கே செலவு செய்வார்.\nஉலக சுகாதார நிறுவனத்தின் ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றிருந்தார். இந்திய வேளாண் ஆய்வுக்கழக குழுவின் உறுப்பினர், அண்ணா பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினர், இந்திய புற்றுநோயியல் கழகத் தலைவர் என பல அமைப்புகளில் இணைந்து மகத்தான பங்களிப்பை வழங்கியுள்ளார்.\nஉலகில் எந்த மூலையில் புற்றுநோய் ஆராய்ச்சி நடந்தாலும், புதிய மருந்துகள், புதிய மருத்துவ முறைகள் கண்டுபிடிக்கப்பட்டாலும், அவற்றை உடனடியாக அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் அறிமுகம் செய்வதை தலையாய கடமையாகக் கொண்டவர்.\nஎளிமை, பணிவு நிறைந்தவர். ஓய்வின்றி நாள் முழுவதும் உழைப்பவர். நோயாளிகளுக்கு உதவுவதுடன் ஆயிரக்கணக்கான மருத்துவர்களுக்கு வழிகாட்டியாகச் செயலாற்றி வருகிறார். ‘சிறிதும் சுயநலம் கூடாது என்பதையும், பெறுவதைவிட கொடுப்பதே சிறந்தது’ என்ற கொள்கையையும் குடும்பத்தினர் மற்றும் ஆசிரியர்களிடம் இருந்து கற்றதாகக் குறிப்பிட்டுள்ளார்.\nமூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் கடைசி நேரம் வரை டாக்டர் சாந்தா பணியாற்றிக் கொண்டே இருந்தார் என்றும், நன்கொடையாளர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பும் வேலையில் ஈடுபட்டிருந்தார் என்றும் அவருடன் பணியாற்றிய மருத்துவர்கள் உருக்கமுடன் தெரிவித்துள்ளனர்.\nடி20 கிரிக்கெட் போட்டி இந்தியா-பாகிஸ்தான் போட்டி நடக்குமா\nஅண்டை நாடுகளில் இந்துக்கள் மீது தாக்குதல் – உலக நாடுகள் கண்டிக்கட்டும்\n இன்று தலித் தொழிலாளி கொடூர கொலை\nடி20 கிரிக்கெட் போட்டி இந்தியா-பாகிஸ்தான் போட்டி நடக்குமா\nஅண்டை நாடுகளில் இந்துக்கள் மீது தாக்குதல் – உலக நாடுகள் கண்டிக்கட்டும்\n இன்று தலித் தொழிலாளி கொடூர கொலை\nமனித குலத்தின் பல்வேறு பிரச்சனைகளுக்கு பாரதமே தீர்வு தரமுடியும் -ஆர்.எஸ்.எஸ் தலைவர் டாக்டர்.மோகன்பாகவத்\nநியூஸ் குரு ஒரு ஆன்லைன் செய்தி தளமாகும். நாங்கள் முக்கியமாக பிராந்திய அரசியல், கலாச்சாரம் மற்றும் பொருளாதாரத்தில் கவனம் செலுத்துகிறோம். கோயம்புத்தூரை மையமாகக் கொண்ட இந்த அமைப்பு, உண்மைகளால் இயக்கப்படும் ஊடக கலாச்சாரத்தையும், முக்கியத்துவம் வாய்ந்த கருத்துகளையும் வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.\nகடந்த நூற்றாண்டை புரட்டிபோட்ட விஞ்ஞானிகளில் முதன்மையானவர் ஐன்ஸ்டீன்..\nஸ்டான்லி ராஜன் - ஏப்ரல் 19, 2021 0", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/933263", "date_download": "2021-10-19T12:17:01Z", "digest": "sha1:O4SFZ47ZOV3DSWSCAJPVZFMDRNU4DPX4", "length": 2901, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"நிறுவனம் (வணிகம்)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"நிறுவனம் (வணிகம்)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n00:58, 21 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்\n6 பைட்டுகள் நீக்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n07:49, 8 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nMerlIwBot (பேச்சு | பங்களிப்புகள்)\n00:58, 21 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nWikitanvirBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.1) (தானியங்கிமாற்றல்: ps:ملتون)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:HK_Arun", "date_download": "2021-10-19T12:04:54Z", "digest": "sha1:CSZTJ7AHNOIK7KS4QA7VLA7U5SELZZRM", "length": 9741, "nlines": 80, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பயனர்:HK Arun\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபயனர்:HK Arun பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபேச்சு:விசயன் (இலங்கை அரசன்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:மலையகத் தமிழர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:இலங்கைத் தமிழர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:புவியில் தமிழ் மக்களின் பரம்பல் அட்டவணை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:தமிழ் அகரமுதலி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:பலா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:வேடுவர் (இலங்கை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:இலங்கையில் ஆட்கடத்தல்களும் காணாமல் போதல்களும் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:சிவிங்கிப்புலி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:சிங்களப் புத்தாண்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:ஈழத்தமிழர் உதவி அமைப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:சிங்கள எழுத்துமுறை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:சிங்களம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:இந்தோனேசிய மொழி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா பேச்சு:கிரந்த எழுத்துப் பயன்பாடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:மலாய் மொழி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:HK Arun ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:ஒளிப்படக்கருவி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:HK Arun ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:ஆங்காங் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:ஹொங்கொங்கில் தமிழ் மொழி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:தற்கொலைத் தாக்குதல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு பேச்சு:தமிழ் வலைப்பதிவுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:மையம் (ஹொங்கொங்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு பேச்சு:சீனா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:டேட்டிங் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:டங் சியாவுபிங் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:சமசுகிருதமயமாக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:கூழைக்கடா ‎ (← இணைப்பு���்கள் | தொகு)\nபேச்சு:தோடம்பழம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:காகிதம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:ஆங்கில மொழியின் வரலாறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:ஆண் தமிழ்ப் பெயர்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:பெண் தமிழ்ப் பெயர்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:வைசாகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு17 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:தமிழர் அமைப்புகளின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:நகரங்கள் வாரியாக தமிழ் விக்கிப்பீடியர்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:ஒக்டோப்பஸ் செலவட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:சிங்கள பௌத்தம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:பரப்புரை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:விக்கிப்பீடியா பயிற்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:2009 உலகளாவிய ஈழத்தமிழர் இனவழிப்பு எதிர்ப்புப் போராட்ட பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:தகவல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:ஒவ்வாமை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:அணுகப்பட்ட தமிழ் அமைப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:இலங்கையில் மனித உரிமைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு17b ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Natkeeran/தொகுப்பு08 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Kanags/தொகுப்பு 2 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/53335-2/", "date_download": "2021-10-19T13:13:51Z", "digest": "sha1:TGNX7BNEG34MTUCR7YBBKNG4F2QSDU5T", "length": 17638, "nlines": 198, "source_domain": "www.aanthaireporter.com", "title": "- AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nஒரு நடுத்தர வர்க்கத்து யுவனுக்கும் நவயுக யுவதிக்கும் இடையேயான காதலும் காதல் சார்ந்த சண்டையும் சமாதனங்களுமே `பியார் பிரேமா காதல்.’ `ப்ச்… காதல்லாம் சும்மா… பெட் ஷேர் டைம்பாஸ்’னு சொல்றாங்க ப்ரோ – ‘பியார் பிரேமா காதல்’ விமர்சனம்\nஅலுவலகத்து கம்ப்யூட்டரில் வின்டோவை ஓப்பன் செய்துவிட்டு, `வின்டோ’ வழியாக பக்கத்து அலுவலகப் பெண் சிந்துஜாவைப் பார்த்து, லயித்து, காதலித்து உருகுவதையே முழுநேர வேலையாக வைத்திருக்கிறார் ஸ்ரீ. `செர்ரி நழுவி கேக்கில��� விழுவதுபோல’ ஒருநாள் ஸ்ரீயின் அலுவலகத்திலேயே பணிக்கு சேர்கிறார் சிந்துஜா. பசிக்கு தோசைக்கடையைத் தேடும் ஸ்ரீயும் பீட்சா கடையைத் தேடும் சிந்துஜாவும் ஒருகட்டத்தில் ஆல்கஹால் ஊற்றி நட்பை வளர்க்கிறார்கள். நட்புச் செடியில் குட்டிக்குட்டி குறும்புகளும் சந்தோஷங்களும் சச்சரவுகளும் பூத்துக் குலுங்க, காலத்தின் கோலத்தால் ஒருநாள் இரவு நண்பர்களுக்குள் `கசமுசா’ நடந்துவிடுகிறது. அதே படுக்கையில் வைத்து `ஐ லவ் யூ’ எனத் தன் நீண்டநாள் காதலை ஸ்ரீ சொல்ல, `வி ஆர் ஜஸ்ட் ஃப்ரெண்ட்ஸ். இது கேசுவலா நடந்தது’ எனத் திகிலாக்குகிறார் சிந்துஜா. இப்படி `காமம் வேறு, காதல் வேறு, கல்யாணம் வேறு’ எனக் கட்டம்கட்டி வாழும் சிந்துஜாவுக்கும் `மூணும் ஒண்ணுதான்’ என கண்ணைக் கசக்கும் ஸ்ரீக்கும் இடையேயான உறவின் அடுத்தகட்டம் என்ன என்பதை யூத்ஃபுல்லாய், கலர்ஃபுல்லாய் சொல்லியிருக்கிறார் இயக்குநர் இளன்.\nஅம்மாவை நல்லா வெச்சி பார்த்துக்கணும் என்பதையே வாழ்நாள் லட்சியமாகக் கொண்ட, டீ, காபி மட்டுமே குடிக்கும் டீட்டோட்டலர் இளைஞனாக ஹரீஷ் கல்யாண். சூதுவாது தெரியாத நடுத்தரவர்க்கத்து இளைஞன் கதாபாத்திரத்துக்கு கச்சிதமாகப் பொருந்துகிறார். நடிப்பில் ஃபர்ஸ்ட் க்ளாஸில் பாஸ் ஆகிறார், அடுத்த முறை டிஸ்டின்க்‌ஷன் வாங்கணும் ப்ரோ\nலாஸ் ஏஞ்சல்ஸில் உணவகம் திறக்க வேண்டும் என்பதையே வாழ்நாள் லட்சியமாகக் கொண்ட, ஒரே தம்மில் பீர் பாட்டிலைக் காலியாக்கும் பெண்ணாக ரைஸா. நடிப்போ அயர்ன் பாக்ஸைப்போல நேரம் அதிகமாக ஆக சூடுபிடிக்கிறது. ஹரீஷ் கல்யாணுக்கும் ரைஸாவுக்கும் இடையேயான தாறுமாறான கெமிஸ்ட்ரிதான் படத்தின் மூச்சு. ட்ரூ ட்ரூ..\nவழக்கமான திரைக்கதையையும் சுவாரஸ்யமாக்குகின்றன, தமிழ் சினிமாவுக்கு புத்தம் புதிதான காட்சிகள். சிரிப்பு, அழுகை, கோவம், காதல் என எல்லா உணர்வுகளும் கலந்த காக்டெயிலாக கிரங்க வைக்கிறது திரைக்கதை. படத்தின் இறுதிப் பகுதிகள் மட்டும் முகத்தில் தண்ணியைத் தெளிக்கின்றன. இந்தத் தலைமுறையினருக்கு காதலின் மீதான புரிதல்களையும் அதிலுள்ள சிக்கல்களையும் பேசுகிறது படம். காதலர்களின் எல்லாத் தரப்பு நியாயங்களையும் பேசி, இறுதியாக என்ன முடிவெடுப்பது என்பது தெரியாமல், அந்த வாய்ப்பை நம்மிடமே கொடுத்திருக்கிறார் இயக்குநர். எல்லாக் த��ய்வீக காதலர்களுக்கும் இடையே ஓர் அமெரிக்க மாப்பிள்ளை கேட்டகிரி பலி ஆடு சிக்குமல்லவா. அதேபோல், இந்தப் படத்தில் ஒரு பெண்ணை பலிஆடு ஆக்கியிருக்கிறார்கள் அந்தப் பொண்ணு யாருக்கு என்ன பாவம் பாஸ் பண்ணுச்சு காதலர்களின் நியாய, அநியாயங்களை எல்லாம் பேசுபவர்கள் இந்தப் பலியாடுகளை பற்றியும் பேசியிருக்கலாம். மக்களுக்கு இன்னும் தெளிவான புரிதல் கிடைத்திருக்கும் இயக்குநர் இளன்.\nஒளிப்பதிவாளர் ராஜா பட்டாச்சாரியாவின் கேமராவில் `காதல்’ இன்னும் அழகாகப் படமாகியிருக்கிறது. கலை இயக்குநர் தியாகராஜன், ஆடை வடிவமைப்பாளர்கள் ஜப்ரோன் நிஸார், மகேஸ்வரி ஆகியோருக்கும் இதில் பாதி பங்குண்டு. இரண்டாம் பாதியில் மட்டும் காட்சிகளின்மீது கருணை காட்டி வெட்டாமல் விட்டுவிட்டார் படத்தொகுப்பாளர் மணிக்குமரன். `பியார் பிரேமா காதலு’க்கு இசையால் பிங்க் நிறம் அடித்திருக்கிறார் யுவன் சங்கர் ராஜா. பின்னணி இசை துறுத்தாமல் காட்சிகளோடு பிணைந்து பயணிக்கிறது. பாடல்களோ ஆல்ரெடி ஹிட் இதுவரை 90’ஸ் கிட்ஸுகளுக்கு மட்டும் ஆஸ்தான இசை வித்தகராக இருந்த யுவன், இப்படத்தின் மூலம் 2K கிட்ஸின் ப்ளே லிஸ்டிலும் இடம் பிடிப்பார்.\n`பியார் பிரேமா காதல்’, இளைஞர்கள் பார்த்துக் கொண்டாட பக்காவான படம். குழந்தைகளிடமிருந்து மட்டும் தள்ளி வையுங்கள்.\nPrevious தாஜ்மகாலை மெயிண்டெய்ன் பண்ணற பொறுப்பு எங்களுது – மத்திய அரசு உறுதி\nஇந்திய கடற்படையின் பங்கு குறித்து கடற்படை தளபதிகள் மாநாட்டில் ராஜ்நாத் சிங் பேச்சு\nகவிஞர் பிறைசூடன் காலமானார் – நினைவஞ்சலி ரிப்போர்ட்\nமன அழுத்தத்தால் கொலை, கொள்ளை – பீதியை கிளப்ப வரும் ‘தி புக் ஆஃப் ஏனோக்’\nசென்னை மெட்ரோ ரயில்வேயில் பொது மேலாளர் பணி வேண்டுமா\n“ஓ மணப்பெண்ணே” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பின் ஹைலைடஸ்\nஇந்திய அளவில் ட்ரெண்டாகி நொந்து போன சொமேட்டா\nசிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு முதல் பருவத் தேர்வுகளுக்கான தேதி அறிவிப்பு\nசூர்யா-வின் ஜெய்பீம் படத்தில் இடம் பிடித்த ’பவர்’ பாடல் வெளியானது\nகேட்டராக்ட் – கண் புரை – கண்ணுக்குள் பொருத்தும் லென்ஸ்கள் சில முக்கியமான விவரங்கள் கேள்வி – பதில்கள்\nமுட்டாள்களின் கூடாரம் ‘மூடர் கூடம்’ – கோடங்கி விமர்சனம்\nமிக மிக அழகான பெண் யார்\n‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ரசிகர்களை ச���ர்க்காது..\n‘வீரம்’ – சினிமா விமர்சனம்\nஎம்ஜிஆர் என்கிற “சோட்டா பீம்” உருவாக்கிய அதிமுகவின் பொன்விழா சஸ்பென்ஸ்\nஏர் இந்தியா: தர்மம் மறுபடி வெல்லும் – ரமேஷ் கிருஷ்ணன் பாபு\nகாடழிப்பிற்கு வித்திடும் வகையில் சட்டத் திருத்தங்கள் – மோடி அரசுக்கு கண்டனம்\nஅச்சச்சோ,, சென்னையில் விஷக்காற்று பரவுது\nபாகிஸ்தானில் ஆட்சி மாறி ஆப்கன் போல் குழம்பம் நேரிடலாம் ஏன் தெரியுமா\nசென்னை மெட்ரோ ரயில்வேயில் பொது மேலாளர் பணி வேண்டுமா\n“ஓ மணப்பெண்ணே” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பின் ஹைலைடஸ்\nஇந்திய அளவில் ட்ரெண்டாகி நொந்து போன சொமேட்டா\nசிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு முதல் பருவத் தேர்வுகளுக்கான தேதி அறிவிப்பு\nசூர்யா-வின் ஜெய்பீம் படத்தில் இடம் பிடித்த ’பவர்’ பாடல் வெளியானது\nஇந்திய கடற்படையின் பங்கு குறித்து கடற்படை தளபதிகள் மாநாட்டில் ராஜ்நாத் சிங் பேச்சு\nட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் படம் பூஜையுடன் ஆரம்பம்\nவரும் சனிக்கிழமை மெகா தடுப்பூசி முகாம்- ஏன் தெரியுமா\nசிம்புவின் மாநாடு ரிலீஸ் தீபாவளியன்று இல்லை : நவம்பர் 25ல் வெளியாகுமாம்\nதாமஸ் ஆல்வா எடிசன் நினைவு தினம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akuranatoday.com/42388/", "date_download": "2021-10-19T11:26:33Z", "digest": "sha1:N6DDANWY23UUABFI7JJBZPU4EYMBPKYH", "length": 3871, "nlines": 65, "source_domain": "www.akuranatoday.com", "title": "இலங்கையில் முதன்முறையாக மருத்துவருக்கு கொரோனா - Akurana Today", "raw_content": "\nஇலங்கையில் முதன்முறையாக மருத்துவருக்கு கொரோனா\nகம்பஹா வைத்தியசாலையில் சேவையாற்றும் மருத்துவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.\nகம்பஹா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் பிரியந்த இலேபெரும இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.\nஏற்கனவே கொரோனா வைரஸ் தொற்றாளர் என உறுதிப்படுத்தப்பட்ட மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையின் பெண் ஊழியர், இந்த மருத்துவரின் தனியார் சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்றுக் கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.\nகொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட பின்னர், குறித்த மருத்துவரை தற்போது கொழும்பு ஐ.டி.எச் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.\nஇதேவேளை இலங்கையில் முத��்முறையாக மருத்துவரொருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleசுகாதார வழிமுறைகளைப் பின்பற்றாத பஸ்களின் அனுமதிப்பத்திரங்கள் இரத்து\nNext articleமத்திய மாகாணத்தில் மறு அறிவித்தல் வரை தனியார் கல்வி நிலையங்களை மூடுமாறு ஆளுனர் உத்தரவு.\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலை ஆட்சியை கைப்பற்ற அரசு பயன்படுத்தியது\nஉலமா சபை எமது கேள்விகளுக்கு பதில் தரவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2021/09/20/rusk-factory-got-sealed-for-not-being-hygienic-at-karaikudi", "date_download": "2021-10-19T13:16:19Z", "digest": "sha1:3D7FNNTGI6L6HTBMEDL3HC2PBXTG4BXC", "length": 7215, "nlines": 55, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "rusk factory got sealed for not being hygienic at karaikudi", "raw_content": "\nநாக்கால் நக்கி, காலால் மிதித்த வடமாநில தொழிலாளி: ரஸ்க் ஆலை மீது அதிரடி ஆக்‌ஷன் எடுத்த அதிகாரிகள்\nரஸ்க்குகளை பேக் செய்த போது வடமாநில தொழிலாளி அதனை தனது நாக்கால் நக்கி, தட்டில் வைக்கப்பட்டிருந்த ரஸ்க்குகளை காலால் தேய்த்தது தொடர்பான காணொளி இணையத்தில் வெளியாகி மக்களிடையே முகம் சுழிப்பை ஏற்படுத்தியது.\nதமிழ்நாட்டில் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் உணவு பண்டங்களில் அட்டூழியங்களில் ஈடுபடுவது தொடர் கதையாகி வருகிறது.\nசென்னை அம்பத்தூரில் கெட்டுப்போன உருளைக்கிழங்கில் புழு இருந்ததை அடுத்து பானிபூரி விற்று வந்த வட மாநில இளைஞரை பொதுமக்கள் கட்டி வைத்து அடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஅதேபோன்று, காரைக்குடியில் ரஸ்க் தயாரிக்கும் தொழிற்சாலையில் ரஸ்க்குகளை பேக் செய்த போது வட மாநில தொழிலாளர் ஒருவர் அதனை தனது நாக்கால் நக்கி, தட்டில் வைக்கப்பட்டிருந்த ரஸ்க்குகளை காலால் தேய்த்தது தொடர்பான காணொளி இணையத்தில் வெளியாகி மக்களிடையே முகம் சுழிப்பை ஏற்படுத்தியது.\nமேலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உண்ணும் ரஸ்க்குகள் மீது இதுபோன்ற இழி செயல்களில் ஈடுபட்ட நபர் மீதும் தொடர்புடைய தொழிற்சாலைகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்தன.\nஇந்நிலையில், காரைக்குடியில் உள்ள சுமார் பத்து ரஸ்க் பேக்டரிகள் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தயாரிக்கப்பட்ட ரஸ்குகளை தரையில் கொட்டி அதனை பாக்கெட்டுகளில் நிரப்புவதை கண்டு அதிர்ச்சிக்குள்ளாகினர்.\nஇ��னையடுத்து தரமற்ற, சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்ட சுமார் 200 கிலோ ரஸ்குகளை குப்பையில் கொட்டிய அதிகாரிகள் அந்த தொழிற்சாலைக்கு சீல் வைத்து, விசாரணைக்கும் முடுக்கிவிட்டுள்ளனர்.\nபானிபூரி பிரியர்களே உஷார்: கெட்டுப்போன மசாலாக்குள் புழு; சென்னையில் வட மாநில இளைஞரை துவம்சம் செய்த மக்கள்\n\"சகிப்புத்தன்மை குறித்து யார் பாடம் எடுப்பது” : Zomato நிறுவனரின் ட்வீட்டால் மீண்டும் சர்ச்சை\n“எங்க கல்யாணத்த மழை வெள்ளம் தடுப்பதா.. நெவர்” : காதல் ஜோடி எடுத்த முடிவு - இணையத்தில் வைரல்\nLKG படித்த சிறுமிக்கு பாலியல் தொல்லை.. ஆசிரியருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஐகோர்ட் அதிரடி\n“நாளை நம்மை காப்பாற்றிக்கொள்ள எந்த வாய்ப்பும் இருக்காது” : உலகிற்கு மாலத்தீவு சொன்ன அதிர்ச்சி செய்தி\n\"சகிப்புத்தன்மை குறித்து யார் பாடம் எடுப்பது” : Zomato நிறுவனரின் ட்வீட்டால் மீண்டும் சர்ச்சை\nLKG படித்த சிறுமிக்கு பாலியல் தொல்லை.. ஆசிரியருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஐகோர்ட் அதிரடி\n“எங்க கல்யாணத்த மழை வெள்ளம் தடுப்பதா.. நெவர்” : காதல் ஜோடி எடுத்த முடிவு - இணையத்தில் வைரல்\n“விரைவில் ஆழ்கடல் அகழாய்வுப் பணிகளைத் தொடங்க ஆலோசனை” : அமைச்சர் தங்கம் தென்னரசு முக்கிய தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pustaka.co.in/home/author/shivani-selvam", "date_download": "2021-10-19T11:10:20Z", "digest": "sha1:U3UGTANTUL6EFKZ36TSKNHOSKG6XVNRY", "length": 2665, "nlines": 97, "source_domain": "www.pustaka.co.in", "title": "Shivani Selvam Tamil Novels | Tamil eBooks Online | Pustaka", "raw_content": "\nShivani Selvam\t(ஷிவானி செல்வம்)\nவணக்கம். நான் ஷிவானி செல்வம். நான் தமிழகத்தில் மண் மணமிக்க மதுரையில் வசிக்கிறேன். புத்தகங்கள் வாசிப்பதென்றால் எனக்கு அலாதி பிரியம். அந்த தாக்கத்தில் எழுத்துலகிலும் நுழைந்து விட்டேன். நான் இதுவரையில் நிஜமது நேசம் கொண்டேன், காதலா காதலா, நின் உச்சிதனை முகர்ந்தால், காதலாற்றுப்படை என நான்கு குடும்ப நாவல்களை எழுதியுள்ளேன். வாசகர்களின் ஊக்கத்தில் மேலும் மேலும் முன்னேறி கொண்டிருக்கிறேன். ஆகையால் என்றும் அவர்களுக்கு நன்றிக்கடன் பட்டவளாகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/7088/?replytocom=4582", "date_download": "2021-10-19T12:44:53Z", "digest": "sha1:UXXY54KNZP5PHCVDYMWCETIAJJPZIVJ2", "length": 26774, "nlines": 100, "source_domain": "www.savukkuonline.com", "title": "வித்தாரக் கள்ளி விறகொடிக்கப் போனாளாம்…. – Savukku", "raw_content": "\nவித்தாரக் கள்ளி விறகொடிக்கப் போனாளாம்….\nவித்தாரக் கள்ளி விறகொடிக்கப் போனாளாம்…. கத்தாழ முள்ளு கொத்தோட வந்துச்சாம் என்று எங்கள் ஊரில், பெண்கள், புடவையை தூக்கி சொருகிக் கொண்டு சண்டையிடும்போது சொல்வார்கள். இதற்கு பொருள் என்னவென்றால், “என்னடி கதை விடுற…. நீ சொல்ற கதை தெரியாதா \nசென்னை பாஷையில் சொல்வதானால், “எருமை மாடு ஏரோப்ளேன் ஓட்டுதுன்னா, கேக்கறவன் கேனப் பயலா“ என்பதுதான் அர்த்தம். தெற்கே, இன்னும் பிரபலமான பழமொழி, “கேழ்வரகுல நெய் வடியுதுன்னா, கேப்பாருக்கு மதியெங்கே போச்சு“ என்பது.\nஇது போல பழமொழிகளை இப்போது குறிப்பிடக் காரணம் எதுவும் இல்லாமல் இல்லை. இருக்கிறது.\nகருணாநிதியைப் பற்றி பதிவுகள் எழுதி, எழுதி, சவுக்குக்கு கை வலித்ததுதான் மிச்சம். கருணாநிதியும் விடுவதாய் இல்லை. சவுக்கும் விடுவதாய் இல்லை.\nமரம் ஓய்வை விரும்பினாலும், காற்று விடுவதில்லை\nகரை ஓய்வை விரும்பினாலும், அலைகள் விடுவதில்லை\nஓடி ஓடி ஒளிந்த போதும், வாழ்க்கை விடுவதில்லை…. விடுவதில்லை\nஎன்று ஒரு கவிஞன் சொன்னான்.\nஇதோடு, சவுக்கு, சுருட்டி வைக்கப் பட்டாலும், கருணாநிதி விடுவதில்லை என்பதை சேர்த்துக் கொள்ளுங்கள்.\n சரி, செவனேன்னு இருக்கலாம்னு பாத்தா, கருணாநிதி விடமாட்டேங்குறாரு….\nநேத்து, ஆர்.எம்.வீரப்பன் பொண்ணு கல்யாணத்துல, கருணாநிதி பேசின பேச்ச கேட்டதுக்கப் புறம், “சவுக்கு“ எப்படி சும்மா இருக்க முடியும் \nஜெயலலிதா சும்மா இருக்கலாம். ஏன்னா… யாராவது, ஸ்டேட்மென்ட் எழுதி குடுத்து, அதப் படிச்சதுக்கப்புறம், அதுல கையெழுத்துப் போடலாமா, வேண்டாமான்னு முடிவு செய்யறதுக்கே, ரெண்டு வாரம் ஆயிடும். சவுக்கு நியாயத்தப் பேசுற ஆள் இல்லையா நியாயம்னா, சூட்டோட பேசுனாத்தானே லேட்டா பேசுனா, அது அரசியல் ஆயிடும் இல்லையா \nஅதுனாலத்தான், சவுக்கு, உடனடியா சுழற்றப் படுது.\n“மறைந்தும் மறையாத என் ஆருயிர் நண்பர் எம்.ஜி.ஆரின் அணுக்கத் தொண்டர்களில் ஒருவராக விளங்கியவர் ஆர்.எம்.வீ. 1945ல் பெரியாரின் குடியரசு பத்திரிகையில் துணை ஆசிரியராக பணியாற்றச் சென்ற காலந்தொட்டு எனக்கும் ஆர்.எம்.வீ.க்கும் நட்பு தொடர்கின்றது. அவர் என்னை எதிர்ப்பதாக காட்டிக் கொண்ட காலத்திலேயும் என்னிடத்தில் கள்ளக் காதல் கொண்டவர். தி.மு.க.வுக்கும் அ.தி.மு.க.வுக்கும் இடையில் ச��ல பிரச்னைகள் தோன்றும் போதெல்லாம் ஆர்.எம்.வீ.யிடமிருந்து எனக்கு ரகசிய கடிதம் வரும்.\nஎங்களிடையே பிரிவு ஏற்படக்கூடிய சூழல் 1971ல் ஏற்பட்ட போது என் இல்லத்திற்கு வந்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக பேசி, நீங்கள் பிரியக் கூடாது, ஒன்றாக இயங்கவேண்டும்; பிரிக்கிறவர்கள் யார் என்பது எங்களுக்கு தெரியும், நீங்கள் ஒன்றுபட்டு தமிழகத்திற்காக பணியாற்றுங்கள் என்று கவலை தெரிவித்தவர் ஆர்.எம்.வீ. எம்.ஜி.ஆருக்கும் எனக்கும் இடையில் பிணக்கு விளைந்த போதெல்லாம், அதை சரி செய்ய பாடுபட்டவர் ஆர்.எம்.வீ. ஏன் அவருக்கு அந்தக் கவலை என்றால், நாங்கள் இருவரும் இணைந்து உழைத்த இடம் பெரியாரின் குருகுலம். எவ்வளவுதான் அரசியல் மாறுபாடுகள், வேறுபாடுகள் ஏற்பட்டாலும் அடிப்படை உணர்விலிருந்து பதவிக்காக எங்களை நாங்கள் மாற்றிக் கொண்டதில்லை.\nஆர்.எம்.வீ.க்கு பதவி கொடுங்கள் என்று திருநாவுக்கரசு சொன்னார். பதவிகளை பல பேருக்கு கொடுக்கிற இடத்தில் இருந்தவர் ஆர்.எம்.வீ. அவருக்கு நான் பதவி கொடுப்பது என்பதல்ல. அவர் பதவிகளை பகிர்ந்து எடுத்துக் கொள்ள வேண்டியவரே தவிர கேட்டு பெற்றுக் கொள்ள வேண்டியவர் அல்ல. அந்த அளவிற்கு இந்த இயக்கத்தினுடைய ஆணிவேராக இருந்தார். இன்றைக்கும் இருப்பவர்.\nகோவை மாநாட்டு பணிகளை ஆய்வு செய்ய செல்கிறோம், அங்கிருந்து உதகமண்டலம் சென்று ஓரிரு நாட்கள் ஓய்வு பெறலாமே என்று எண்ணினேன். ஆனால் இந்த திருமண நினைவு சாட்டையாக விழுந்தது.\nஆர்.எம்.வீ. இல்லத் திருமணத்திற்கு செல்லாமல் ஓய்வு ஒரு கேடா என்று எனக்கு நானே கேட்டுக் கொண்டு இங்கே வந்திருக்கிறேன் என்றால் அது நட்பின் ஆழத்தை உணர்த்தக் கூடிய ஒன்று. “\nவரலாற்றை சற்றே திரும்பிப் பார்ப்போம். 1981ம் ஆண்டு. அப்போது எம்.ஜி.ஆர் முதலமைச்சர். இப்போது கலைஞரை ஆதரிக்கும் ஆர்.எம்.வீரப்பன் அற நிலைய அமைச்சர். திருச்செந்தூர் கோயில் விடுதியில் கோவில் அதிகாரி சுப்பிரமணியப்பிள்ளை மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.\nஉண்டியல் பணத்தை அவர் திருடி மாட்டிக் கொண்டதாகவும் அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டதாகவும் ஆர்.எம்.வீ முதல் அ.தி.முகவினர் எல்லாரும் பிரசாரம் செய்தார்கள். கலைஞர் கருணாநிதியும் தி.முகவும் இதை மறுத்தார்கள். உண்டியலில் இருந்த வைர வேலைத் திருடிக் கொண்டது வீரப்பன்தான் என்றும் அதைத் தட்டிக் கேட்ட நேர்மையான அதிகாரி சுப்பிரமணியப்பிள்ளை கொலை செய்யப்பட்டதாகவும் தி.மு.க குற்றம் சாட்டியது.\nஉடனே விசாரணைக் கமிஷன் போட்டார் எம்.ஜி.ஆர். நீதிபதி சி.ஜெ.ஆர்.பால் அறிக்கையைக் கொடுத்துவிட்டு அடுத்த விமானத்தில் ஒரேயடியாக அமெரிக்கா சென்று செட்டிலாகிவிட்டார். கோவில் அதிகாரியின் மரணம் தற்கொலை அல்ல என்றும் கொலை என்றே சந்தேகிக்க இடமிருப்பதாகவும் அவர் அறிக்கை தெரிவித்தது. எம்.ஜி.ஆர் இந்த அறிக்கையை சட்டசபை முன்பு வைக்க மறுத்துவிட்டார். கலைஞர் கருணாநிதி அறிக்கையின் பிரதியைக் கைப்பற்றி 24.11.1981 அன்று நிருபர்களிடம் வெளியிட்டார்.\nநீதி கேட்டு நெடிய பயணமாக மதுரையிலிருந்து திருச்செந்தூருக்கு 150 கிலோ மீட்டர் நடந்து சென்றார்.\nஅரசு ரகசியமான பால் கமிஷன் அறிக்கையை வெளியிட்டதாக எம்.ஜி.ஆர் குற்றம் சாட்டினார். அதற்காக அரசு அதிகாரிகள் சதாசிவம் (மொழி பெயர்ப்புத் துறை), இப்போதும் கலைஞரின் செயலாளராக இருக்கும் அன்றைய அரசு அதிகாரி சண்முக நாதன் இருவர் மீதும் எம்.ஜி.ஆர் அரசு கடும் நடவடிக்கை எடுத்தது.\nஇன்று கருணாநிதியால் பாராட்டப் படும் இந்த ஆர்.எம்.வீரப்பன் யார் தெரியுமா \nஎம்.ஜி.ஆர் நோய் வாய்பட்டு, ப்ரூக்ளின் மருத்துவமனையிலே சிகிச்சை பெற்று, திரும்பும் வரையில், தமிழ்நாட்டின், உளவுத்துறை ஐஜியாக இருந்தவர், மோகன்தாஸ். இவர் உட்பட, அனைவருக்கும், எம்ஜிஆருக்கு ஏற்பட்டிருக்கும் நோய், குணமாக்கக் கூடியதல்ல என்று ஒரு கருத்து. 1984ம் ஆண்டுகளிலேல்லாம், சிறுநீரகப் பழுது, இன்று போல, எளிதாக குணமாக்கும் ஒரு நோய் அல்ல. இந்நிலையில், ஆர் எம் வீரப்பன், தமிழ்நாட்டின் நிர்வாகத்தை கையில் எடுத்துக் கொண்டார். தமிழ்நாட்டில் தனக்கென்று ஒரு கோஷ்டியை வளர்த்து எடுத்தார்.\nஅப்போதெல்லாம் பெரிய அளவில் இன்று திருநாவுக்கரசர் ஆகியிருக்கும், திருநாவுக்கரசு அரசியல் ரீதியாக வளரவில்லை. ஆக, ஆர்.எம்.வீரப்பனுக்கு, அரசியல் ரீதியாக கட்சியில் எதிரி என்றால், அது ஜெயலலிதா தான்.\nஎம்.ஜி.ஆர், அமேரிக்காவில் சிகிச்சை முடிந்து திரும்பி வருகையில், அப்போது உளவுத்துறை ஐஜியாக இருந்த, மோகன்தாசிடம் சொல்லி, விமான நிலையத்தில், ஜெயலலிதா, எம்.ஜி.ஆரை பார்க்கக் கூடாது என்று ஆர்.எம்.வீரப்பன் உத்தரவு பிறப்பித்தார்.\nஅதன் அடிப்படையில், ஒரு டிஎஸ்பி, ஐந்து இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய குழு ஒன்று, ஜெயலலிதாவை, எம்ஜிஆர், இந்த நுழைவாயிலில் அல்ல, இன்னொரு நுழைவாயிலில் வழியாக வருகிறார் என்று நம்ப வைத்து, அழைத்துச் சென்றது. எம்.ஜி.ஆர். விமான நிலையத்திலிருந்து கிளம்பிச் சென்றதும், ஜெயலலிதாவை போயஸ் தோட்ட இல்லம் வரை பத்திரமாக கொண்டு சென்று விட்டு விட்டு வர வேண்டும் என்பது, இந்த ஆர்.எம்.வீரப்பன் அன்றைய போலீசாருக்கு வழங்கிய உத்தரவு.\nஅதன்படியே, போலீசார், ஜெயலலிதாவை, விமான நிலையத்தில், எம்ஜிஆரை பார்க்க விடாமல், பத்திரமாக வேறு வழி வழியாக ஏமாற்றி, போயஸ் தோட்டத்திற்கு அழைத்துச் சென்றனர். ஏமாற்றம் அடைந்த ஜெயலலிதா, கோபப் படாமல், அவரை ஏமாற்றி அழைத்துச் சென்ற போலீசார் அனைவருக்கும் காபி கொடுத்து, உபசரித்து, என்னை ஏமாற்றி விட்டீர்களே என்று வருத்தத்தோடு, சொல்லி விட்டு அறை உள்ளே சென்றதாக அப்போது, உளவுத் துறையில் பணியாற்றிய போலீசார் சொல்கின்றனர்.\nஇதுதான் இன்று கருணாநிதி பாராட்டும் இந்த ஆர்.எம்.வீரப்பன். இன்று கருணாநிதி, ஆர்.எம்.வீரப்பனை பாராட்டக் காரணம், நன்றி உணர்ச்சிதான்.\nவேறு ஒன்றும் இல்லை. 1996ம் ஆண்டு, “பாட்சா“ பட, வெள்ளி விழாவில் பேசிய, ரஜினிகாந்த், தமிழ்நாட்டில் வெடிகுண்டு கலாச்சாரம் வளர்ந்து விட்டது என்று, எப்போதும் போல, வாய்க்கு வந்ததை பேசிச் செல்ல, அது தமிழ்நாட்டில் ஒரு பெரிய புயலை கிளப்ப, 1996ல் ஆட்சிக்கு வருவதற்கு, கருணாநிதிக்கு, ஆர்.எம்.வீரப்பன் நடத்திய அந்த விழா உதவியது என்பதற்கான நன்றிதான், இந்த பாராட்டும், அடுத்து, “மேலவை உறுப்பினர் பதவி“ என்ற வாக்குறுதியும்.\nஆனால், கருணாநிதி தெரிவித்தது போலவே, அவருக்கும், ஆர்.எம்.வீரப்பனுக்கும் இருப்பது, “கள்ளக் காதல்“ தான்.\nஏனென்றால், தன்னை வாழவைத்த, எம்.ஜி.ஆர் என்ற மனிதருக்கு விசுவாசமாக இல்லாமல், கருணாநிதிக்கு ரகசியமாக கடிதம் எழுதினார் என்ற செய்தியும், எம்ஜிஆர் உயிரோடு இருக்கையிலேயே, நிழல் முதலமைச்சராக செயல்பட்டார் என்பதிலும், அவர் எம்ஜிஆருக்கு விசுவாசமாக இல்லாமல், கருணாநிதியோடு, “கள்ளக் காதல்“ கொண்டிருந்தார் என்பதை, கருணாநிதியே இன்று, வெளிப்படையாக சொல்லி விட்டார்.\nஇந்த லட்சணத்தில், 2006ம் ஆண்டுக்கான அண்ணா விருது, ஆர்.எம்.வீரப்பனுக்கு வழங்கப் பட்டது. அண்ணாவுக்கு, கருணாநிதி போலவோ, வீரப்பன் போலவோ, கயமை தெரி���ாது என்றாலும், அண்ணா விருதை வீரப்பனுக்கு வழங்கியதன் மூலம், அண்ணாவின் தம்பி என்று சொல்லிக் கொள்ளும் கருணாநிதி, அண்ணாவை இதை விட பெரிய அவமானத்துக்கு எப்படி உள்ளாக்க முடியும் \nஇவ்வாறு, கணவருக்கு விசுவாசமாக இல்லாமல், கள்ளக் காதலனுக்கு விசுவாசமாக இருந்ததற்கான பரிசுதான், நாளைக்கு ஆர்.எம்.வீரப்பனுக்கு கிடைக்கப் போகும், “மேலவை உறுப்பினர்“ பரிசு.\nஇவ்வாறு, கருணாநிதியும், ஆர்.எம்.வீரப்பனும், இன்றைய தலைமுறைக்கு தெரியாது என்று வாய்க்கு வந்த பொய்யை அவிழ்த்து விடலாம். ஆனால், வரலாறு வரலாறுதானே. அதை மாற்ற முடியுமா என்ன \nNext story புதிய தலைமைச் செயலக கட்டிடமும், டாஸ்மாக் பாரும்\nPrevious story கருணாநிதியின் பல்வேறு பரிமாணங்கள்.\nதமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள். சவுக்கின் ப்ரத்யேக ஆல்பம்\nஇது வேற வாய்…… அது….. \nசவுக்கை சுழற்றும் அந்த கவ்பாய் போட்டோ சூப்பர்.சவுக்கு தளத்துக்கு அதையே பயன்படுத்தலாமே.பிரபாகரனுக்கு சற்று ஓய்வு கொடுத்துவிட்டு.\nபச்சோந்தி பயலுக சார், இந்த அரசியல்வாதிகள் ..\nபல தெரியாத விஷயங்கள் வெளிவருகின்றன, நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newsguru.news/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-10-19T12:48:45Z", "digest": "sha1:UUHTY3NP4KLY6QW23B6DIQGUKP43L7OD", "length": 19714, "nlines": 183, "source_domain": "newsguru.news", "title": "அனுமன் சாலிசா ஸ்லோகமும்.. உருவான வரலாறும்.. - நியூஸ் குரு - நியூஸ் குரு", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, அக்டோபர் 19, 2021 | எங்கள் மொபைல் ஆப்-ஐ பதிவிறக்கவும்\nHome ஆன்மிகம் & கலாச்சாரம் அனுமன் சாலிசா ஸ்லோகமும்.. உருவான வரலாறும்..\nஅனுமன் சாலிசா ஸ்லோகமும்.. உருவான வரலாறும்..\nஅனுமனை போற்றும் வகையில் பக்தி பரவசத்தோடு அவருக்காக பாடப்பட்ட 40 பாடல்களையே நாம் அனுமன் சாலிசா என்கிறோம். இந்த பாடல்கள் அனைத்தும் அவாதி என்னும் மொழியில் துளசிதாசரால் பாடப்பட்டவை ஆகும். ராமசரிதமனசாவை விட இந்த பாடல்கள் சிறப்பானவை என்று கூறப்படுகிறது.\nஇதில் உள்ள நாற்பது பாடல்களும் தனி தனியாக ஒரு வரத்தினை நல்குகிறது. அனுமன் சாலிசா 40 பாடல்களின் தமிழாக்கம் இதோ..\nஉலகத்தின் ஒளியே வானரர் கோனே.\nஞானத்தை அருள்வாய், நன்மையை தருவாய்.\n(4)தங்க மேனியனே, பட்டாடை அணிபவனே\nமின்னும் குண்டலமுடன் அலைமுடியும் கொண்டவனே.\nமுஞ்சைப் பூணூல் தோ ளணிவோ��ே\nஉனதொளி வீரத்தை உலகமே வணங்குமே\n(8)உன் மனக் கோவிலில் ராமனின் வாசம்\nராமனின் புகழை கேட்பது பரவசம்\n(9)நுண்ணிய உருவாய் அன்னைமுன் தோன்றினாய்\nகோர வுருவினில் இலங்கையை எரித்தாய்\n(10)அசுரரை அழித்த பெரும்பல சாலியே \nராம காரியத்தை முடித்த மாருதியே \n(11)சஞ்சீவி கொணர்ந்தே இலக்குவனை எழுப்பிட விஞ்சிய அன்புடன் ராமனுனைத் தழுவினார்\n(12)ராமன் உன்னை பெரிதும் புகழ்ந்து\nபரதனைப் போல நீ உடனுறை என்றார்\n(13)ஆயிரம் நாவுடை ஆதி சேஷனுன்\nபெருமையைப் புகழ்வதாய் அணைத்தே சொன்னார்\n(14)சனகாதி முனிவரும் பிரம்மாதி தேவரும்\nஈசனும் நாரதர் கலைமகள் சேஷனும்\n(15)எமன், குபேரன், திசைக் காவலரும், புலவரும்\nஉன் பெருமை தனை சொல்ல முடியுமோ\nராமனின் நட்பால் உதவிகள் செய்தாய்\n(17)உன் அறிவுரையை வீடணன் கொண்டதால்\nஅரியணை அடைந்ததை இவ்வுலகு அறியும்\n(18)தொலைவினில் ஒளிரும் ஞாயிறைக் கண்டே\nசுவைதரும் கனியெனப் பிடித்து விழுங்கினாய்\n(19)வாயினில் ராமனின் மோதிரம் கவ்வியே\nஆழியைக் கடந்ததில் வியப்பெதும் உண்டோ\n(20)உலகினில் முடியாக் காரியம் யாவையும்\nநுழைந்திட வியலுமோ நின்னருள் இன்றி\n(22)உனைச் சரணடைந்தால் இன்பங்கள் நிச்சயம்\nகாவலாய் நீவர ஏதிங்கு எமக்கு அச்சம்\n(23)நின்னால் மட்டுமே நின்திறல் அடங்கும்\nமூவுலகும் அதன் முன்னே நடுங்கும்\n(24)பூதப் பிசாசுகள் நெருங்கிட வருமோ\nமஹாவீர னுன் திருநாமம் சொல்வாரை\n(25)நோய்களும் அகலும் துன்பங்கள் விலகும்\nபலமிகு நின்திரு நாமம் சொல்லிட\n(26)தொல்லைகள் தொலைந்திட அனுமன் அருள்வான்\nமனம், வாக்கு, செயலால் தியானிப் பவர்க்கே\n(27)தவம்புரி பக்தர்க்கு வரங்கள் நல்கிடும்\nராமனின் பணிகளை நீயே செய்தாய்\n(28)வேண்டிடும் பக்தர்கள் ஆசைகள் நிறைவுறும்\nஅழியாக் கனியாம் அனுபூதி பெறுவார்\n(29)நான்கு யுகங்களும் நின்புகழ் பாடிடும்\nநின்திரு நாமமே உலகினில் சிறந்திடும்\n(30)ஞானியர் நல்லோரைக் காப்பவன் நீயே\n(31)எட்டு ஸித்திகளும் ஒன்பது செல்வங்களும்\nகேட்டவர்க்கு அருள்வரம் சீதையுனக் களித்தார்\n(32)ராம பக்தியின் சாரமே நின்னிடம்\nஎன்றும் அவனது சேவகன் நீயே\n(33)நின்னைப் பற்றியே ராமனை அடைவார்\nதொடர்வரும் பிறவித் துன்பம் துடைப்பார்\n(34)வாழ்வின் முடிவினில் ராமனடி சேர்வார்\nஹரியின் பக்தராய்ப் பெருமைகள் பெறுவார்\n(35)மறுதெய்வம் மனதில் நினையா பக்தரும் அனுமனைத் துதித்தே அனைத்தின்��ம் பெறுவார்\n(36)துன்பங்கள் தொலையும் துயரங்கள் தீர்ந்திடும்\nவல்லிய அனுமனை தியானிப் பவர்க்கே\n(38)நூறுமுறை இதைத் துதிப்பவர் எவரோ\nஅவர் தளை நீங்கியே ஆனந்தம் அடைவார்\n(39)அனுமனின் நாற்பதைப் படிப்பவர் எல்லாம்\nசிவனருள் பெற்றே ஸித்திகள் அடைவார்\n(40)அடியவன் துளஸீ தாஸன் வேண்டுவான்\nஅனைவர் உள்ளிலும் திருமால் உறையவே\nஇந்து மதத்தை சார்ந்த பலரும் தற்போது தினம்தோறும் ஹனுமான் சாலிசா பாடலை துதிக்க துவங்கி உள்ளனர். தினம் தோறும் துதிக்க முடியாதவர்கள் அனுமனுக்கு உகந்த நாளான செவ்வாய் கிழமைகளில் துதிக்கின்றனர். இதை ஜெபிக்கும் பக்தர்கள் அனுமன் மீது எந்த அளவிற்கு பக்தியை கொண்டுள்ளனரோ அந்த அளவிற்கு அவர்களுக்கு பலன் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.\nஅனுமனை போற்றும் எத்தனையோ பாடல்களும் மந்திரங்களும் இருந்தாலும் அனுமன் சாலிசா தான் மிகவும் சக்தி மிக்கதாக கருதப்படுகிறது.\nஇந்த பாடல்கள் உருவானதற்கு பின்பு ஒரு அற்புதமான வரலாறும் உள்ளது..\nடெல்லியை முகலாயர்கள் ஆட்சி செய்துகொண்டிருந்தபோது துளசிதாசரை மன்னர் ஔரங்கசீப் சந்தித்தார். அப்போது துளசிதாசர் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியின் புகழை மன்னர் ஒளரங்கசீப்பிடம் கூறியுள்ளார்.\nஅதோடு ராம தரிசனம் குறித்தும் அவர் பல தகவல்களை கூறியுள்ளார். இதனை கேட்ட மன்னன் ஔரங்கசீப், ராமனை தனக்கு தரிசனம் தர வழி செய்யும்படி துளசிதாசரிடம் கேட்டுள்ளார். அதற்கு துளசிதாசர், உண்மையான பக்தியை வெளிப்படுத்தினால் மட்டுமே ஒருவருக்கு ராமதரிசனம் கிடைக்கும் என்று கூறியுள்ளார்.\nஅதை ஒப்புக்கொள்ளாத மன்னன் ஔரங்கசீப், துளசிதாசரை சிறையில் இட்டான்.\nசிறையில் இருந்தபடியே துளசிதாசர் அனுமன் சாலிசா என்னும் இந்த 40 பாடலையும் எழுதி அதை ஜபிக்க துவங்கியுள்ளார்.\nஉடனே டெல்லி நகரம் முழுக்க குரங்குகள் சூழ்ந்தன. மக்களாலும் மன்னனாலும் குரங்குகளின் அட்டகாசத்தை கட்டுப்படுத்த முடியவில்லையாம். சிறையில் இருக்கும் துளசிதாசரிடம் இது குறித்து மன்னன் உரையாடியுள்ளான். அப்போது துளசிதாசர், இது வானர படைகளின் ஒரு சிறு பகுதியே. படை முழுவதும் வந்த பிறகு ராமன் வருவார் உமக்கு தரிசனம் தருவார் என்றாராம்.\nஇதை கேட்டு அதிர்ந்த மன்னன் ஔரங்கசீப் தன் தவறினை உணர்ந்து துளசிதாசரை விடுவித்ததாகவும், உடனே குரங்குகள் அனைத��தும் அங்கிருந்து சென்றன எனவும் கூறுகின்றனர்.\nதுளசிதாசர் (கிபி.1532}1623) நாற்பது பாக்களைக் கொண்டு “அனுமன் சாலிசா’ எழுதியபோது அந்தப் புத்தகம் இந்து மதத்தின் மிக முக்கிய நூலாக விளங்கும் என்று நினைத்திருக்க மாட்டார். இன்று அனுமனை வணங்க, இந்திய மக்கள் இனம், மொழி, எல்லைகள் கடந்து, சமூக மற்றும் பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் மறந்து அனுமன் சாலிசாவைப் பல மொழிகளில் படிக்கின்றனர்.\nஇந்து மக்கள் அனைவராலும் ஏற்கப்பட்ட அவரது பாடல்கள் பெரும்பாலானவை அவர் ஒளரங்கசீப்பின் சிறைச்சாலையில் இருக்கும் பொழுது எழுதப்பட்டது.\nடி20 கிரிக்கெட் போட்டி இந்தியா-பாகிஸ்தான் போட்டி நடக்குமா\nஅண்டை நாடுகளில் இந்துக்கள் மீது தாக்குதல் – உலக நாடுகள் கண்டிக்கட்டும்\n இன்று தலித் தொழிலாளி கொடூர கொலை\nடி20 கிரிக்கெட் போட்டி இந்தியா-பாகிஸ்தான் போட்டி நடக்குமா\nஅண்டை நாடுகளில் இந்துக்கள் மீது தாக்குதல் – உலக நாடுகள் கண்டிக்கட்டும்\n இன்று தலித் தொழிலாளி கொடூர கொலை\nமனித குலத்தின் பல்வேறு பிரச்சனைகளுக்கு பாரதமே தீர்வு தரமுடியும் -ஆர்.எஸ்.எஸ் தலைவர் டாக்டர்.மோகன்பாகவத்\nநியூஸ் குரு ஒரு ஆன்லைன் செய்தி தளமாகும். நாங்கள் முக்கியமாக பிராந்திய அரசியல், கலாச்சாரம் மற்றும் பொருளாதாரத்தில் கவனம் செலுத்துகிறோம். கோயம்புத்தூரை மையமாகக் கொண்ட இந்த அமைப்பு, உண்மைகளால் இயக்கப்படும் ஊடக கலாச்சாரத்தையும், முக்கியத்துவம் வாய்ந்த கருத்துகளையும் வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.\nபாரம்பரிய வாகனத்தில் ஒரு உலா…\nநியூஸ் குரு - நவம்பர் 28, 2020 0", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/spiritual/horoscope-rishabam-rasi-palan-weekly-horoescope-skv-464953.html", "date_download": "2021-10-19T13:01:41Z", "digest": "sha1:VUM67SV4K6BKJ5IO5CQTPYMA6NQBVMOC", "length": 7847, "nlines": 100, "source_domain": "tamil.news18.com", "title": "Rasi Palan : ரிஷபம் ராசிக்கான இந்த வார ராசிபலன் | மே 17 முதல் மே 23 வரை | Rishabam rasi palan weekly horoescope – News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#T20 WorldCup#பெண்குயின் கார்னர்#பிக்பாஸ்#கிரைம்\nRasi Palan : ரிஷபம் ராசிக்கான இந்த வார ராசிபலன் | மே 17 முதல் மே 23 வரை\nRasi Palan : ரிஷபம் ராசிக்கான இந்த வார ராசிபலன் | மே 17 முதல் மே 23 வரை\nமேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான இந்த வார ராசிபலன். கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)\nரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதம், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதம்)இந்த வாரம�� நீண்ட நாட்களாக தடைபட்ட காரியத்தை செய்து முடிப்பீர்கள். விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இருந்தாலும் கொள்கைக்காக பாடுபடுவீர்கள். அதிகம் பேசுவதை தவிர்ப்பது நல்லது. அடுத்தவர் சொல்வதை நம்பும் முன் அதைப்பற்றி ஆலோசனை செய்வது நல்லது.\nதொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் ஒரே குறிக்கோளுடன் இருப்பதை விட்டு வாடிக்கையாளர் தேவை அறிந்து செயல்படுவது முன்னேற்றத்திற்கு உதவும். பணவரத்து அதிகரிக்கும். அரசாங்கத்தின் மூலம் உதவிகளைப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் துணிச்சலாக வேலைகளை செய்து வெற்றி பெறுவார்கள். சக ஊழியர்கள் மேல் அதிகாரிகளால் நன்மையும் உண்டாகும்.\nகுடும்பத்தில் தம்பதிகளிடையே இருந்த கருத்து வேற்றுமை குறைந்து நெருக்கம் அதிகரிக்கும். பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. பெண்களுக்கு அதிகம் பேசுவதை தவிர்த்து செயலில் வேகம் காட்டுவது நல்லது. கலைத்துறையினருக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். வீண்பயம் ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு சிலர் வீட்டை விட்டு வெளியில் சென்று தங்க நேரிடலாம்.\nமாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமடைய கூடுதல் கவனத்துடன் படிப்பீர்கள். ஆசிரியர்கள், சக மாணவர்கள் மத்தியில் நன்மதிப்பு உண்டாகும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி\nபரிகாரம்: பெருமாள் ஆலயத்தில் இருக்கும் ஆண்டாளை வழிபட மனதில் இருந்த சஞ்சலம் நீங்கும். தொழில் மாற்றம் ஏற்படும்.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube\nRasi Palan : ரிஷபம் ராசிக்கான இந்த வார ராசிபலன் | மே 17 முதல் மே 23 வரை\nஈத் மிலாதுன் நபி 2021 : இந்தியாவில் எப்போது கொண்டாடப்படுகிறது\nஐப்பசி பௌர்ணமிக்கு தனிச்சிறப்பு உண்டு காரணம் தெரியுமா\nஇந்த வாரம் வரவுள்ள சுபமுகூர்த்தம், ஆன்மிக சிறப்புள்ள நாட்கள் குறித்த தகவல்கள்...\nPanchangam : இன்றைய பஞ்சாங்கம்.. நல்ல நேரம்.. அக்டோபர் 19, 2021)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gktamil.in/2018/01/tnpsc-current-affairs-quiz-January-2018-220.html", "date_download": "2021-10-19T11:37:50Z", "digest": "sha1:OWIQASWPN6PBRNYOHGDLWXX3NF2QTP23", "length": 19432, "nlines": 69, "source_domain": "www.gktamil.in", "title": "GK Tamil.in: TNPSC Current Affairs Quiz 220 - January 2018 (Tamil) */ /* Content ----------------------------------------------- */ body { font: normal normal 14px 'Raleway', sans-serif; color: #222222; background: #f7f7f7 none repeat scroll top left; padding: 0 40px 0 40px; } html body .region-inner { min-width: 0; max-width: 100%; width: auto; } h2 { font-size: 22px; } a:link { text-decoration:none; color: #00ae86; } a:visited { text-decoration:none; color: #00ae86; } a:hover { text-decoration:none; color: #41d5b3; transition:0.3s; } .body-fauxcolumn-outer .fauxcolumn-inner { _background-image: none; } .body-fauxcolumn-outer .cap-top { position: absolute; z-index: 1; height: 400px; width: 100%; } .body-fauxcolumn-outer .cap-top .cap-left { width: 100%; _background-image: none; } .content-outer { -moz-box-shadow: 0 0 40px rgba(0, 0, 0, .15); -webkit-box-shadow: 0 0 5px rgba(0, 0, 0, .15); -goog-ms-box-shadow: 0 0 10px #333333; box-shadow: 0 0 40px rgba(0, 0, 0, .15); margin-bottom: 1px; } .content-inner { padding: 10px 10px; } .content-inner { background-color: #ffffff; } /* Header ----------------------------------------------- */ .header-outer { _background-image: none; } .Header h1 { font: normal normal 50px 'Raleway', sans-serif; color: #222222; text-shadow: -1px -1px 1px rgba(0, 0, 0, .2); text-align:center; } .Header h1 a { color: #222222; } .Header .description { font-size: 140%; color: #777777; text-align:center; } .header-inner .Header .titlewrapper { padding: 22px 30px; } .header-inner .Header .descriptionwrapper { padding: 0 30px; } /* Tabs ----------------------------------------------- */ .tabs-inner .section:first-child { border-top: 1px solid #eeeeee; } .tabs-inner .section:first-child ul { margin-top: -1px; border-top: 1px solid #eeeeee; border-left: 0 solid #eeeeee; border-right: 0 solid #eeeeee; } .tabs-inner .widget ul { _background-image: none; border-bottom: 1px solid #eeeeee; margin-top: 0; margin-left: -30px; margin-right: -30px; } .tabs-inner .widget li a { display: inline-block; padding: .6em 1em; font: normal normal 14px 'Raleway', sans-serif; color: #999999; border-left: 1px solid #ffffff; border-right: 1px solid #eeeeee; } .tabs-inner .widget li:first-child a { border-left: none; } .tabs-inner .widget li.selected a, .tabs-inner .widget li a:hover { color: #000000; background-color: #eeeeee; text-decoration: none; } /* Columns ----------------------------------------------- */ .main-outer { border-top: 0 solid #eeeeee; } .fauxcolumn-left-outer .fauxcolumn-inner { border-right: 1px solid #eeeeee; } .fauxcolumn-right-outer .fauxcolumn-inner { /*border-left: 1px solid #eeeeee;*/ } /* Headings ----------------------------------------------- */ div.widget > h2, div.widget h2.title { margin: 0 0 1em 0; font: normal bold 11px 'Raleway', sans-serif; color: #222222; } /* Widgets ----------------------------------------------- */ .widget .zippy { color: #262626; /* text-shadow: 2px 2px 1px rgba(0, 0, 0, .1); */ } .widget .popular-posts ul { list-style: none; } /* Posts ----------------------------------------------- */ h2.date-header { font: normal bold 11px 'Raleway', sans-serif; } .date-header span { background-color: transparent; color: #222222; padding: inherit; letter-spacing: inherit; margin: inherit; } .main-inner { padding-top: 30px; padding-bottom: 30px; } .main-inner .column-center-inner { padding: 0; } .main-inner .column-center-inner .section { margin: 0 15px; } .post { margin: 0 0 25px 0; } h3.post-title a { font: normal bold 15px 'Raleway', sans-serif; margin: .75em 0 0; } h3.post-title, .comments h4 { font: normal bold 20px 'Raleway', sans-serif; } .post-body { font-size: 110%; line-height: 1.4; position: relative; } .post-body img, .post-body .tr-caption-container, .Profile img, .Image img, .BlogList .item-thumbnail img { padding: 2px; background: #ffffff; border: 1px solid #eeeeee; } .post-body img, .post-body .tr-caption-container { padding: 5px; } .post-body .tr-caption-container { color: #222222; } .post-body .tr-caption-container img { padding: 0; background: transparent; border: none; -moz-box-shadow: 0 0 0 rgba(0, 0, 0, .1); -webkit-box-shadow: 0 0 0 rgba(0, 0, 0, .1); box-shadow: 0 0 0 rgba(0, 0, 0, .1); } .post-header { margin: 0 0 1.5em; line-height: 1.6; font-size: 90%; } .post-footer { margin: 20px -2px 0; padding: 5px 10px; color: #222222; background-color: #f7f7f7; border-bottom: 1px solid #eeeeee; line-height: 1.6; font-size: 90%; } #comments .comment-author { padding-top: 1.5em; border-top: 1px solid #eeeeee; background-position: 0 1.5em; } #comments .comment-author:first-child { padding-top: 0; border-top: none; } .avatar-image-container { margin: .2em 0 0; } #comments .avatar-image-container img { /*border: 1px solid #eeeeee;*/ } /* Comments ----------------------------------------------- */ .comments .comments-content .icon.blog-author { background-repeat: no-repeat; background-image: url(); } .comments .comments-content .loadmore a { border-top: 1px solid #999999; border-bottom: 1px solid #999999; } .comments .continue { border-top: 2px solid #999999; } /* Accents ---------------------------------------------- */ .section-columns td.columns-cell { /*border-left: 1px solid #eeeeee;*/ } .blog-pager { background: transparent none no-repeat scroll top center; } .blog-pager-older-link, .home-link, .blog-pager-newer-link { background-color: #ffffff; padding: 5px; } .footer-outer { border-top: 0 dashed #bbbbbb; } /* Mobile ----------------------------------------------- */ body.mobile { background-size: auto; } .mobile .body-fauxcolumn-outer { background: transparent none repeat scroll top left; } .mobile .body-fauxcolumn-outer .cap-top { background-size: 100% auto; } .mobile .content-outer { -webkit-box-shadow: 0 0 3px rgba(0, 0, 0, .15); box-shadow: 0 0 3px rgba(0, 0, 0, .15); } .mobile .tabs-inner .widget ul { margin-left: 0; margin-right: 0; } .mobile .post { margin: 0; } .mobile .main-inner .column-center-inner .section { margin: 0; } .mobile .date-header span { padding: 0.1em 10px; margin: 0 -10px; } .mobile h3.post-title { margin: 0; } .mobile .blog-pager { background: transparent none no-repeat scroll top center; } .mobile .footer-outer { border-top: none; } .mobile .main-inner, .mobile .footer-inner { background-color: #ffffff; } .mobile-index-contents { color: #222222; } .mobile-link-button { background-color: #00ae86; } .mobile-link-button a:link, .mobile-link-button a:visited { color: #ffffff; } .mobile .tabs-inner .section:first-child { border-top: none; } .mobile .tabs-inner .PageList .widget-content { background-color: #eeeeee; color: #000000; border-top: 1px solid #eeeeee; border-bottom: 1px solid #eeeeee; } .mobile .tabs-inner .PageList .widget-content .pagelist-arrow { border-left: 1px solid #eeeeee; } .post-list{ padding: 1px 1em 1em 1em; /* margin: -20px 0; */ margin-bottom: -20px; border: 1px solid #ddd; border-radius: 5px; } .post-list:hover { background:#f7f7f7; border-color:#00ae86; transition:.2s; } .post-label a{ margin-right:2px; white-space:nowrap; color: #222222; border-bottom: 1px dashed #00ae86; } .post-comment a{ color: #222222; } .post-label a:hover,.post-comment a:hover{ color: #00ae86; } #blog-pager{ margin: 3em 0; } .feed-links {display:none !important;} div.widget > h2, div.widget h2.title { font: normal bold 16px 'Raleway', sans-serif; border-bottom: 2px solid #ddd; padding: 5px 0; } .comments h4 { text-align: center; text-transform: uppercase; } .comments .comment .comment-actions a { background:#00ae86; border-radius: 3px; color: #f7f7f7; margin-right:5px; padding:5px; text-decoration: none !important; font-weight:bold; } .comments .comment-block { border: 1px solid #dddddd; border-radius:5px; padding: 10px; } .continue { border-top:none !important; } .continue a { background:#00ae86; border-radius:3px; color: #f7f7f7; display: inline-block !important; margin-top: 8px; text-decoration: none !important; } .comments .comments-content .datetime{ float:right; } #comments .avatar-image-container img { border-radius: 50px; } .comments .avatar-image-container { float: left; overflow: hidden; } .comments .comments-content .comment-replies{ margin-top:0; } .topnav { overflow: hidden; background-color: #000; } .topnav a { float: left; display: block; color: #ffffff; text-align: center; padding: 14px 16px; text-decoration: none; font-size: 17px; } .active { background-color: #00ae86; color: #ffffff; } .topnav .icon { display: none; } .dropdown { float: left; overflow: hidden; } .dropdown .dropbtn { font-size: 17px; border: none; outline: none; color: #ffffff; padding: 14px 16px; background-color: inherit; font-family: inherit; margin: 0; } .dropdown-content { display: none; position: absolute; background-color: #f9f9f9; min-width: 160px; box-shadow: 0px 8px 16px 0px rgba(0,0,0,0.2); z-index: 5; } .dropdown-content a { float: none; color: #000000; padding: 12px 16px; text-decoration: none; display: block; text-align: left; } .topnav a:hover, .dropdown:hover .dropbtn { background-color: #00ae86; color: #ffffff; } .dropdown-content a:hover { background-color: #00ae86; } .dropdown:hover .dropdown-content { display: block; } @media screen and (max-width: 600px) { .topnav a:not(:first-child), .dropdown .dropbtn { display: none; } .topnav a.icon { float: right; display: block; } } @media screen and (max-width: 600px) { .topnav.responsive {position: relative;} .topnav.responsive .icon { position: absolute; right: 0; top: 0; } .topnav.responsive a { float: none; display: block; text-align: left; } .topnav.responsive .dropdown {float: none;} .topnav.responsive .dropdown-content {position: relative;} .topnav.responsive .dropdown .dropbtn { display: block; width: 100%; text-align: left; } } div#crosscol.tabs.section {margin: 0 0 2em 0;} .post-page { padding: 0 1em; } .date-header{ color:#888;display:block;border-bottom: 1px solid #888;margin-top: 5px; } .section{margin:0} .column-right-inner .section .widget{ border: 1px solid #ddd; margin: 5px 0; padding: 10px; border-radius: 5px; } .footer-inner .section .widget{ margin: 5px 0; padding: 10px; } footer{ background: #f7f7f7; padding: 8px; margin: 25px -25px -25px -25px; border-top: 1px solid #dddddd; } /* STYLE 1 - Custom Blogger Labels Gadget Styles by Georgia Lou Studios */ .widget li, .BlogArchive #ArchiveList ul.flat li{ padding: 8px 0; } .list-label-widget-content ul { list-style-type:none; padding-left:0px!important; } .list-label-widget-content ul li:before { content: \"\\f054\"; float: left; color: #262626; font-weight: 700; font-family: 'Font Awesome 5 Free'; margin: 4px 5px 0 0; font-size:10px; } .list-label-widget-content li span{ color: #888888; } /*** Mozilla based browsers ***/ ::-moz-selection { background-color: #00ae86; color: #ffffff; } /*** Works on common browsers ***/ ::selection { background-color: #00ae86; color: #ffffff; } .breadcrumbs{ color: #888;margin:-15px 15px 15px 15px; } .status-msg-body{ width:95%; padding:10px; } /* MY CUSTOM CODE - Responsive Table ----------------------------------------------- */ .post table {border: 1px solid #dddddd;border-collapse: collapse;margin: 0;padding: 0;width: 100%;color:#222222;} .post table caption {margin: .25em 0 .75em;} .post table tr {border: 1px solid #dddddd;padding: .35em;} .post table th,.post table td {padding: .625em;border: 1px solid #dddddd;} .post table th {color:#357ae8;letter-spacing: .1em;text-transform: uppercase;background: #dcffed;white-space: nowrap;} .post table td img {text-align: center;} .post tr:hover { background-color: #dcffed; transition:.2s; } @media screen and (max-width: 600px) { .post table,table th,table td {border: 0;} .post table caption {} .post table thead {display: none;} .post table tr {border-bottom: 3px solid #dddddd;display: block;margin-bottom: .725em;} .post table th,.post table td {border:none;} .post table td {border-bottom: 1px solid #dddddd;display: block;} .post table td:before {content: attr(data-label);float: left;font-weight: bold;text-transform: uppercase;} .post table td:last-child {border-bottom: 0;}} body .navbar{height:0;} /* MY CUSTOM CODE - Button ----------------------------------------------- */ a.btn, .btn-toggle{ display:inline-block; padding:0.3em 1.2em; margin:0.3em; border-radius:5px; box-sizing: border-box; text-decoration:none; font-family:inherit; font-weight:700; color:#ffffff; background-color:#00ae86; text-align:center; box-shadow:0px 1px 0px #dddddd; transition: all 0.2s; } a.btn, .btn-toggle{ font-size:20px; } .btn-toggle{ font-size:inherit; } a.btn:hover, .btn-toggle:hover{ background-color:#41d5b3; } a.btn:active, .btn-toggle:active { position:relative; top:1px; } a.btn:before { content: '\\f019'; font-family: 'Font Awesome 5 Free'; font-weight: 900; display: inline-block; margin: 0 10px 0 0; } .btn-info { display: block; line-height: 1; font-size: 13px; font-style: italic; margin: 7px 0 0; } @media all and (max-width:30em){ a.btn,.btn-toggle{ display:block; margin:0.2em auto; } } .label-size { position:relative; font-size:13px; } .label-size a,.label-size span { padding: 5px; margin: 0 6px 6px 0; float: left; display: block; } .label-size a { color: #ffffff; background: #00ae86; border: 1px solid #00ae86; } .label-size a:hover { background:transparent; color:#00ae86!important; } .label-size span{ color: #222222; background: #f7f7f7; border: 1px solid #dddddd; } /* Start dropdown navigation */ #navigationbar li{ list-style:none; } .searchHolder{ background:#000000!important; float:right!important; } @media screen and (max-width:600px){ .searchHolder{float:left!important;} } #searchbar { display: none; margin: 0 auto; width: 100%; text-align: center; height: 50px; background: #000000; overflow: hidden; z-index: 4; } #searchicon { text-align: center; cursor: pointer; } #searchicon:hover { color: #888888; } #searchBox { font:inherit; -webkit-appearance: none; border: 0px; background: transparent; padding: 10px; outline:none; width: 90%; color:#888888; border-bottom:2px solid #888888; } #searchBox:focus { border-color:#00ae86; transition: .3s; color:#ffffff; } /* End dropdown navigation */ .BlogArchive #ArchiveList ul li{ color:#888888; } .widget.Text ul li, .widget.HTML ul li, .post ul li{ list-style:none; } .widget.Text ul li:before, .widget.HTML ul li:before, .post ul li:before{ content: '\\f0da'; font-family: 'Font Awesome 5 Free'; font-weight: 900; margin: 0 5px 0 -15px; } blockquote{ background: #f7f7f7; padding: 10px; border: 2px dashed #dddddd; margin: 0; } #comments{ padding:10px; } .post img:hover{ opacity: 0.8; transition: 0.2s; } -->", "raw_content": "\n2018 கேலோ இந்தியா பள்ளிகளிடை விளையாட்டுப் போட்டியை ஒளிபரப்பும் உரிமை பெற்றுள்ள நிறுவனம்\nஇந்தியாவின் முதல் வெளிநாட்டு சொத்து மறு சீரமைப்பு நிறுவனமாக அறிவிக்கப்பட்டுள்ள கே. கே. ஆர் குழுமம் (Kohlberg Kravis Roberts) எந்த நாட்டை சேர்த்தது\n2018 ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (U-19) எங்கு நடைபெறுகிறது\nஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் இந்திய அணி வென்றுள்ள சாம்பியன் பட்டங்கள்\n2018 ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன்\nபார்வையற்றோர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி 2018 நடைபெறும் இடம்\nபாகிஸ்தான் & ஐக்கிய அரபு அமீரகம்\nஷார்ஜா & ஐக்கிய அரபு அமீரகம்\nஐக்கிய அரபு அமீரகம் & ஷார்ஜா\nஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டி\nஅல்பைன் எட்ஜர் 3200 கோப்பை சர்வதேச பனிச்சறுக்கு போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை\nசில்லரை வர்த்தகம், கட்டுமானத்துறைகளில் எத்தனை சதவீதம் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது\nஇந்தியாவில் ஒரு ரூபாய் (ONE RUPEE NOTE) தாளை வெளியிடும் அமைப்பு\nஇந்திய அரசு & ரிசர்வ் வங்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/trump-to-meet-imran-khan-on-monday-pm-modi-on-tuesday-says-report-2104704", "date_download": "2021-10-19T12:41:51Z", "digest": "sha1:ON6HICUX26KWH4NLCSKRX3DDIPFQP6OB", "length": 9997, "nlines": 95, "source_domain": "www.ndtv.com", "title": "இந்திய, பாகிஸ்தான் பிரதமர்களை சந்திக்க ‘நாள் குறித்த’ அமெரிக்க அதிபர் Trump! | Donald Trump To Meet Pak Pm Imran Khan On Monday, Pm Narendra Modi On Tuesday In New York - NDTV Tamil", "raw_content": "\nமுகப்புஇந்தியாஇந்திய, பாகிஸ்தான் பிரதமர்களை சந்திக்க ‘நாள் குறித்த’ அமெரிக்க அதிபர் Trump\nஇந்திய, பாகிஸ்தான் பிரதமர்களை சந்திக்க ‘நாள் குறித்த’ அமெரிக்க அதிபர் Trump\nசெவ்வாய் கிழமையன்று, ஐ.நா சபைக் கூட்டத்தில் பேசி முடித்த பின்னர் ட்ரம்ப், பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்துவாராம்\nஇது குறித்து அமெரிக்க அரசு தரப்பைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் நம்மிடம் தகவல் தெரிவித்துள்ளார்.\n\"Howdy, Modi\" நிகழ்ச்சியில் மோடியுடன் பங்கேற்பார் ட்ரம்ப்\n\"Howdy, Modi\" நிகழ்ச்சியில் 50,000 கலந்துகொள்வார்கள் என எதிர்பார்ப்பு\nஇதைத் தவிர மோடி - டரம்ப், தனியாகவும் சந்தித்துப் பேச உள்ளனர்\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை, வரும் திங்கட்கிழமை சந்தித்துப் பேசுவார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக் கிழமை, டெக்சாஸில் நடக்கும் ‘ஹவுடி, மோடி' நிகழ்ச்சியில் பங்கேற்கும் அதிபர் ட்ரம்ப், பிரத���ர் மோடியை மீண்டும் செவ்வாய் கிழமை சந்தித்து உரையாடுவார் என்று தெரிகிறது.\nஐ.நா சபையின் பொதுக் கூட்டம் நடக்கவுள்ள நிலையில், இரு நாட்டுத் தலைவர்களையும் ட்ரம்ப் பார்க்க உள்ளார்.\nடெக்சாஸின் ஹூஸ்டனில் நடக்கும் ‘ஹவுடி, மோடி' நிகழ்ச்சியில் சுமார் 50,000 பேருக்கு மத்தியில் பிரதமர் மோடியும், அதிபர் ட்ரம்பும் உரையாற்றுவார்கள். அதைத் தொடர்ந்து அவர் ஞாயிற்றுக்கிழமை இரவு நியூயார்க் நகரத்துக்கு வருவார் என்று கூறப்படுகிறது. பின்னர் அவர் அமெரிக்காவின் ஒஹையோ மாகாணாத்துக்கு பயணம் செய்வார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.\nஇது குறித்து அமெரிக்க அரசு தரப்பைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் நம்மிடம் தகவல் தெரிவித்துள்ளார்.\n“திங்கட்கிழமை காலையில், உலக அளவில் மத சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று நோக்கில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதிபர் ட்ரம்ப் பேசுவார். தொடர்ந்து அவர் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை சந்திப்பார். பின்னர் பல நாட்டுத் தலைவர்களை சந்திக்க உள்ளார்” என்று அந்த அதிகாரி கூறியுள்ளார்.\nசெவ்வாய் கிழமையன்று, ஐ.நா சபைக் கூட்டத்தில் பேசி முடித்த பின்னர் ட்ரம்ப், பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்துவாராம். அடுத்து வரும் ஆண்டுகளில் இந்தியா - அமெரிக்கா இடையிலான உறவு எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து இரு நாட்டுத் தலைவர்களின் சந்திப்பின்போதும் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.\nஆப்கானிஸ்தானில் அமைதியை நிலைநாட்டுவது, ராணுவத் துறை மற்றும் மின்சாரத் துறையில் ஒப்பந்தங்கள் போடுவது, இரு நாட்டு வர்த்தகத்திலும் உள்ள சுணக்கங்களைப் போக்குவது, மற்றும் உலக அளவில் இருக்கும் பிரச்னைகளை எப்படி சேர்ந்து எதிர்கொள்வது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து அதிபர் ட்ரம்பும் பிரதமர் மோடியும் விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nகொரோனா தடுப்பூசி 2021 தொடக்கத்தில் கிடைக்கும்; ஆனால், மக்களுக்கு அதைக்கொண்டு செல்வதே சவால்\nநாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு 55 லட்சத்தினை கடந்தது\nகடந்த மூன்று ஆண்டுகளில் எல்லைப்பகுதியில் விமான தளங்களை இரட்டிப்பாக்கிய சீனா\nடாடா குழுமத்திலிருந்து பிரிய வேண்டிய நேரம் இது: மிஸ்திரி குடும்பம்\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக இன்றைய (செப்.22) கொரோனா நிலவரம்\nதமிழகத்தில் ஒரே நாளில் 5,334 பேருக்கு கொரோனா\nஇந்தியாவில் 30 லட்சத்தை நெருங்கும் கொரோனா இன்று 69,878 பேர் புதியதாக பாதிப்பு\nடாடா குழுமத்திலிருந்து பிரிய வேண்டிய நேரம் இது: மிஸ்திரி குடும்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanjai.today/sasikala-visit-thanjai/", "date_download": "2021-10-19T12:59:09Z", "digest": "sha1:3MRNLQTJJLBNXFRMSBLCLSTFVVBNV3JN", "length": 12814, "nlines": 132, "source_domain": "www.thanjai.today", "title": "சசிகலா தஞ்சை வருகை!.", "raw_content": "\nஅரசியல் தஞ்சை நகரச்செய்தி மாநகரச் செய்தி\nதஞ்சை மார்ச் 18 தஞ்சை சென்னையில் இருந்து திடீரெனத் தஞ்சாவூர் வந்துள்ள சசிகலா, திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி கோயிலில் ரேவதி நட்சத்திர லிங்க சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டார். சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருந்த ஜெயலலிதாவின் தோழி சசிகலா அண்மையில் விடுதலையானார். பெங்களூருவில் இருந்து வந்ததும் தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்த சசிகலா, பின்னர் திடீரென அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து சென்னையில் உள்ள உறவினர் இளவரசியின் வீட்டில் தங்கியிருந்தார்.\nஇந்நிலையில் சென்னையிலிருந்து நேற்று மாலை திடீரெனப் புறப்பட்ட சசிகலா, நேற்று நள்ளிரவு தஞ்சாவூருக்கு வருகை தந்தார். தஞ்சாவூர் அருளானந்த நகரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கிய சசிகலா, இன்று (18-ம் தேதி) காலை தனது கணவரின் சொந்த ஊரான விளாருக்குச் சென்றார்.\nவிளாரில் நடராஜனின் சகோதரர் பழனிவேலுவின் பேரக் குழந்தைகளுக்கு இன்று, அவர்களது குல தெய்வக் கோயிலான வீரனார் கோயிலில் காது குத்து விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட சசிகலா, சில நிமிடங்கள் மட்டுமே உறவினர்களுடன் பேசிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார்.\nஇதையடுத்து கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி கோயிலுக்குச் சசிகலா வருகை தந்தார். திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயில் 27 நட்சத்திர லிங்கங்களுக்குச் சன்னதி கொண்ட தலமாகவும், பிரம்மஹத்தி தோஷம் போக்கும் தலமாகவும் விளங்கி வருகிறது.\nஇன்று காலை 11 மணிக்கு மகாலிங்கசுவாமி கோயிலுக்கு வருகை தந்த சசிகலாவுக்கு, கோயில் நிர்வாகத்தினர் வரவேற்பளித்தனர். விநாயகரை வழிபட்டு பின்னர் கோயிலுக்குள் வந்த சசிகலா, 27நட்சத்திர லிங்க சன்னதிக்குள் சென்று ரேவதி நட்சத்திர லி��்கத்துக்கு சிறப்பு ஹோமத்துடன் பூஜை செய்து வழிபட்டார். தொடர்ந்து மகாலிங்கசுவாமி, சுந்தர குஜாம்பாள், மூகாம்பிகை அம்பாள் சன்னதிக்குச் சென்று வழிபட்டார். சுமார் 1 மணி நேரம் சுவாமி தரிசனம் செய்த சசிகலா, பின்னர் கோயிலுக்கு வெளியே வந்தார். அப்போது அங்கிருந்த பொதுமக்களுக்கு உணவுப் பொட்டலங்களையும் குடைகளையும் வழங்கினார்.\nதஞ்சாவூர் அருகே விளாரில் உள்ள குலதெய்வமான வீரனார் கோயிலில் வழிபட்ட சசிகலா.\nஅப்போது செய்தியாளர்கள் பேச முயன்றபோது, கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய மட்டுமே வந்தேன் என கூறிவிட்டு, காரில் ஏறிச் சென்றார். வரும் 20-ம் தேதி நடராஜனின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு, விளாரில் உள்ள அவரது சமாதியில் நடைபெறவுள்ளது. சசிகலா இதில் கலந்து கொண்டபின் சென்னை திரும்ப உள்ளார். தஞ்சாவூரில் மூன்று நாட்கள் தங்கியிருக்கும் சசிலா, பல்வேறு கோயில்களுக்குச் சென்று தரிசனம் செய்யவும், பல அரசியல் பிரமுகர்களைத் தனிப்பட்ட முறையில் சந்திக்கவும் உள்ளதாக சசிகலாவின் உறவினர் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nபொதுக்காப்பீட்டுத் துறை ஊழியர்கள் வேலை நிறுத்தம்\nதஞ்சை திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம்\nசமூகம் தஞ்சை நகரச்செய்தி மாநகரச் செய்தி\nவிபத்து இல்லா தீபாவளியாக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் தீயணைப்புத்துறை மாவட்ட அலுவலர்\nஅரசியல் தஞ்சை நகரச்செய்தி மாநகரச் செய்தி\nகட்டுமான பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த ஏஐடியூசி வலியுறுத்தல்\nதஞ்சை நகரச்செய்தி மாநகரச் செய்தி வேளாண்மை\nமாடித்தோட்ட சாகுபடியால் உடல் நிலையில் முன்னேற்றம் பெறலாம்; முதல்வர் வேலாயுதம்\nவிபத்து இல்லா தீபாவளியாக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் தீயணைப்புத்துறை மாவட்ட அலுவலர்\nகட்டுமான பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த ஏஐடியூசி வலியுறுத்தல்\nமாடித்தோட்ட சாகுபடியால் உடல் நிலையில் முன்னேற்றம் பெறலாம்; முதல்வர் வேலாயுதம்\nமுதல்வர் முன்னெடுப்பு திருவாரூர் காரைக்குடி ரயில் சேவை துவக்கம்; எம்பி பழனிமாணிக்கம்\nபள்ளி மாணவர்களுக்கு வரும் அக் 25, 26ம் தேதிகளில் கலைப்போட்டிகள்\nசமூகம் தஞ்சை நகரச்செய்தி மாநகரச் செய்தி\nவிபத்து இல்லா தீபாவளியாக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் தீயணைப்புத்துறை மாவட்ட அலுவலர்\nஅ���சியல் தஞ்சை நகரச்செய்தி மாநகரச் செய்தி\nகட்டுமான பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த ஏஐடியூசி வலியுறுத்தல்\nதஞ்சை நகரச்செய்தி மாநகரச் செய்தி வேளாண்மை\nமாடித்தோட்ட சாகுபடியால் உடல் நிலையில் முன்னேற்றம் பெறலாம்; முதல்வர் வேலாயுதம்\nசமூகம் தஞ்சை நகரச்செய்தி மாநகரச் செய்தி\nமுதல்வர் முன்னெடுப்பு திருவாரூர் காரைக்குடி ரயில் சேவை துவக்கம்; எம்பி பழனிமாணிக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ec2-34-235-123-65.compute-1.amazonaws.com/sasikumar-and-sr-prabhakaran-in-kombu-vacha-singamda-trailer-tamilfont-news-295564", "date_download": "2021-10-19T11:12:29Z", "digest": "sha1:VI4K3OUYYM32I6UZQW3VG3RJ64PKQ23E", "length": 16568, "nlines": 162, "source_domain": "ec2-34-235-123-65.compute-1.amazonaws.com", "title": "Sasikumar and SR Prabhakaran in Kombu Vacha singamda trailer - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » நம்ம தலையெழுத்த நம்ம தாண்ட எழுதணும்: 'கொம்பு வச்ச சிங்கம்டா' டிரைலர்\nநம்ம தலையெழுத்த நம்ம தாண்ட எழுதணும்: 'கொம்பு வச்ச சிங்கம்டா' டிரைலர்\nசசிகுமார் நடிப்பில் எஸ்ஆர் பிரபாகரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ’கொம்பு வச்ச சிங்கம்டா’ என்ற திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் விரைவில் இந்த படம் ரிலீசாக உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகியுள்ளது.\nசசிகுமார் ஜோடியாக மடோனா செபாஸ்டியன் நடித்துள்ள இந்த படத்தில் சூரி, மகேந்திரன், இந்தர் குமார், ஹரிஷ் பெராடி, உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் டிரெய்லரில் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் மற்றும் கிராமத்துப் பின்னணி காட்சிகள் இருப்பதால் நிச்சயம் இந்த படம் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உதாரணத்திற்கு,\nகுறிப்பாக இந்த டிரைலரில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு வசனங்களும் படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\n’விதி யார் தலையில் என்ன எழுதி இருக்கு என்று யாருக்கு தெரியும்’\n’நம்ம தலையெழுத்து நம்ம தான்டா எழுதணும், எவனுக்கும் அந்த உரிமையை விட்டுக் கொடுக்க கூடாது’\n’இந்த ஊரில் வாழ்ற வரைக்கும் அது நம்ம ஆட்டமாத்தான் இருக்கணும்’\n’ஒரு ஆளு முகத்தை பார்த்த உடனே நல்லவன் யார் கெட்டவன் யார் என்று முன்னாடி எல்லாம் சொல்லலாம், ஆனா இப்ப முகத்தைப் பார்த்து நல்லவன் யாரு கெட்டவன் யார் என்று முன்னாடி எல்லாம் சொல்லலாம், ஆனா இப்ப முகத்தைப் பார்த்து நல்லவன் யாரு கெட்ட���ன் யாரு என்று சொல்ல முடியாது எல்லாரும் அடிக்க ஆரம்பிச்சுட்டாங்க, இனி இவங்களோட தான் நாம வாழ்ந்தாகனும்’,\n’எத்தனை சூது கவ்வினாலும் தர்மம் வெல்லும்’ ஆகிய வசனங்களை கூறலாம்\nதிபு நினன் தாமஸ் இசையில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஏகாம்பரம் ஒளிப்பதிவும், டான்போஸ்கோ படத்தொகுப்பும் செய்துள்ளனர். இந்த படத்தை இந்தர் குமார் தயாரித்துள்ளார்.\nஏற்கனவே சசிகுமார் மற்றும் எஸ்ஆர் பிரபாகரன் இணைந்த ’சுந்தரபாண்டியன்’ என்ற திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற நிலையில் அதே வெற்றியை ’கொம்பு வச்ச சிங்கம்டா’ படமும் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Follow\nஅபிஷேக் காலில் விழுந்த தாமரை: எல்லாம் இதுக்குதானா\nநாமினேஷனில் திடீர் திருப்பம்: ஒருவர் தப்பிக்க வாய்ப்பு கொடுத்த பிக்பாஸ்\n'அண்ணாத்த' படத்தில் ரஜினியின் கேரக்டர்: குஷ்பு கூறிய ரகசியம்\nநடிகை தற்கொலைக்கு காதலர் காரணமா பிரேத பரிசோதனையில் தெரிந்த உண்மை\nசூர்யாவின் அடுத்த இரண்டு படங்களுக்கும் இவர்தான் இசையமைப்பாளர்\nபிக்பாஸ் 5: இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்டவர்கள் யார் யார்\nநான் சொல்றத மட்டும் கேளு: முழுசா சந்திரமுகியா மாறிய அபிஷேக்\nராகவா லாரன்ஸின் 'ருத்ரன்' படத்தில் 60 வருடங்களுக்கு முந்தைய பாடலின் ரீமிக்ஸ்\nசூர்யாவின் அடுத்த இரண்டு படங்களுக்கும் இவர்தான் இசையமைப்பாளர்\nநடிகை தற்கொலைக்கு காதலர் காரணமா பிரேத பரிசோதனையில் தெரிந்த உண்மை\nவிஜய் குறித்து ஒரே ஒரு வார்த்தை கூறிய பூஜா ஹெக்டே\n'அண்ணாத்த' படத்தில் ரஜினியின் கேரக்டர்: குஷ்பு கூறிய ரகசியம்\nநடிகை ஸ்ரேயா மகளுக்கு “ராதா“ பெயர்…. காரணத்தை கேட்டு அசந்துபோன ரசிகர்கள்\nஅபிஷேக் காலில் விழுந்த தாமரை: எல்லாம் இதுக்குதானா\nநாமினேஷனில் திடீர் திருப்பம்: ஒருவர் தப்பிக்க வாய்ப்பு கொடுத்த பிக்பாஸ்\nபிக்பாஸ் 5: இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்டவர்கள் யார் யார்\nபட்டு சாரி கட்டி போர் அடிச்சிருச்சா… நடிகை சினேகா ஸ்டைலை ஃபாலோ பண்ணுங்க..\nபுது ஹேர் ஸ்டைலால் ரசிகர்களை மிரள வைத்த நடிகை ஷில்பா ஷெட்டி… வைரல் புகைப்படம்\nஇந்த வார நாமினேஷனில் நீங்கள் காப்பாற்ற விரும்பும் போட்டியாளர் யார்\nகையில எடு பவர, துணிஞ்சு எடு பவர.. சூர்யாவின் 'ஜெய்பீம்' பாடல் வைரல்\nதனுஷை அடுத்து ஹாலிவுட் செல்லும் பிரபல தமிழ் நடிகர்\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் 'மருதாணி' பாடல் வீடியோ வைரல்\nமறுபடியும் பிக்பாஸ் வந்து அபிஷேக் மூஞ்சியில ஒண்ணு போடுங்க: நமீதா வீடியோவுக்கு நெட்டிசன் கமெண்ட்\nசாலையோர கடையில் பேரம் பேசினாரா நயன்தாரா\nபிக்பாஸ் வீட்டின் முதல் சண்டை: எதிர்பார்த்தது போலவே அபிஷேக் தான்\nநடிகர் ராமராஜனுக்கு என்ன ஆச்சு பரவி வரும் வதந்தியால் பரபரப்பு\n'சோலோவாக ரிலீஸ் ஆகிறதா ரஜினியின் 'அண்ணாத்த': பின்வாங்கும் தீபாவளி படங்கள்\nதலைவர் பதவிக்கு போட்டியிடும் போட்டியாளரை டார்ச்சர் செய்யும் அபிஷேக்\nதீபாவளி ரிலீஸ் பட்டியலில் இணைந்த மேலும் ஒரு பிரபல நடிகரின் படம்\nசிம்புவின் 'வெந்து தணிந்தது காடு' படத்தின் சூப்பர் அப்டேட்\nஷாருக்கான் படத்தில் நடிக்க மறுத்தாரா சமந்தா\nபாவாடை தாவணியில் நடிகை ரோஜா: வைரலாகும் போட்டோஷூட் புகைப்படங்கள்\nஇந்த வாரம் டார்கெட் செய்யப்படும் இரண்டு பெண் போட்டியாளர்கள்\nகுஷ்பு, மீனாவுடன் ரஜினியின் 'அண்ணாத்த' பாடல்: ரிலீஸ் தேதி அறிவிப்பு\n'கர்ணன்' படத்திற்கு பின் மீண்டும் தனுஷுடன் இணைந்த பிரபல நடிகர்\n'விஷால் 32' படத்தின் அட்டகாசமான டைட்டில் போஸ்டர்\nசூர்யாவின் அடுத்த படத்தில் 'தெருக்குரல் அறிவு' பாடல்: ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஉமா மகேஷ்வரி இறப்புக்கு இதுதான் காரணம்: நடிகை சாந்தி வில்லியம்ஸ்\nபிக்பாஸ் வீட்டிற்கு செல்கிறாரா ப்ரியா பவானிசங்கர்\nகமல்ஹாசனிடம் அபிஷேக்கை போட்டு கொடுத்த ஐக்கி, பாவனி ரெட்டி\nகமல் முன்னிலையில் சின்னப்பொண்ணுவை கதறி அழவைத்த அபிஷேக்\n'மெட்டி ஒலி' சீரியல் நடிகை காலமானார்: ரசிகர்கள் அதிர்ச்சி\nசாம்பியன் பட்டம் வென்ற சிஎஸ்கே அணிக்கு இத்தனை கோடியா\nவீட்டில் பொரி கடலை அதிகமா இருக்கா\nமாஸ் காட்டிய தோனி… சிஎஸ்கே ரசிகர்களை குளிர வைக்கும் இன்னொரு வரலாற்று சம்பவம்\nவாக்கிங் செல்லும் இளம்பெண்களிடம் பாலியல் சீண்டல்: ஸ்டார் ஓட்டல் ஊழியர் கைது\nபிரமிக்க வைக்கும் சுந்தர்பிச்சையின் தினசரி வழக்கம் பற்றி தெரியுமா\nதோனியை வித்தியாசமாகப் பாராட்டிய கல்லூரி மாணவி… ரசிகர்கள் வரவேற்பு\n ஆச்சர்யத்தில் ஒரு லட்சத்தை இழந்த இளைஞர்\nKKR vs CSK யாருக்கு அதி�� பலம் 2021 சாம்பியன் பட்டம் யாருக்கு\nடி20 உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் அதிரடி மாற்றம்\nவிருந்தில் கலந்துகொண்ட புலியால் அதிரும் சோஷியல் மீடியா\nமென்டர் பதவிக்கு தோனி வாங்கும் சம்பளத்தைப் பார்த்து வியந்துபோன ரசிகர்கள்\nஎன்னுடைய ராஜா இவர்தான்: மகனின் பெயரை அறிவித்த பிக்பாஸ் சாண்டி\n'குக் வித் கோமாளி' அஸ்வினுக்கு உதவி செய்த அனிருத்\nஎன்னுடைய ராஜா இவர்தான்: மகனின் பெயரை அறிவித்த பிக்பாஸ் சாண்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/tag/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2021-10-19T12:55:49Z", "digest": "sha1:BVQI3LQHGQWRT4TZDBNEGR7A6MBJC2JI", "length": 31266, "nlines": 302, "source_domain": "gttaagri.relier.in", "title": "இயற்கை பூச்சி கொல்லி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nTag: இயற்கை பூச்சி கொல்லி\nவேம்பில் இருந்து தயாரிக்கப்படும் பூச்சி கொல்லிகள் மூலம் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாமல் பயிர்களுக்கு மேலும் படிக்க..\nPosted in பூச்சி கட்டுப்பாடு Tagged இயற்கை பூச்சி கொல்லி 10 Comments\nஇலை, தழைகளில் தயாரிக்கலாம் இயற்கை பூச்சி விரட்டி\nஇன்றைய நவீன உலகில் செலவில்லாமல் எப்படி விவசாயம் செய்யலாம் என்று உலகம் முழுவதும் மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம் Tagged இயற்கை பூச்சி கொல்லி 4 Comments\nபரம்பு மலையின் (பிரான் மலை) இனக்குழுத் தலைவன் பாரியின் கெழுதகை நண்பரும் இயற்கையைப் மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம் Tagged இயற்கை பூச்சி கொல்லி Leave a comment\nஇயற்கை பூச்சி விரட்டி செய்வது எப்படி\nகசப்பு சுவையுள்ள (வேம்பு) 2 கிலோ, பாலுள்ள செடி (எருக்கு இலை) 2கிலோ, மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம் Tagged இயற்கை பூச்சி கொல்லி 1 Comment\nவிவசாயத்தில் பூச்சிகளை விரட்டும் மூலிகை பூச்சி விரட்டி ஒன்றை எப்படிதயாரிப்பது என்று விவசாயிகளுக்கு மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம் Tagged இயற்கை பூச்சி கொல்லி 3 Comments\nபூச்சி தாக்குதலால் பாதிப்பு வந்தால் ரசாயன மருந்துகள் ஊறுவிளைவிப்பதால் (நமக்கு மட்டுமல்ல கால்நடைகளுக்கும் மேலும் படிக்க..\nPosted in பூச்சி கட்டுப்பாடு Tagged இயற்கை பூச்சி கொல்லி Leave a comment\nஇயற்கை முறையில் காய்கறி சாகுபடி செய்து, அதிக உற்பத்தியை பெறுவது குறித்து பல்லடம் மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம் Tagged இயற்கை பூச்சி கொல்லி Leave a comment\n��ிவசாயிகள் பயிர் பாதுகாப்புக்கு பூச்சிக்கொல்லி மருந்துகளை புறக்கணித்து, தாவர வகை பூச்சிக்கொல்லி மருந்துகளை மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், பூச்சி கட்டுப்பாடு Tagged இயற்கை பூச்சி கொல்லி Leave a comment\nபருத்தி இயற்கை பூச்சி விரட்டி அக்னி அஸ்திரம்\nபருத்தி பயிரை போல் எந்த ஒரு பயிரையும் பூச்சிகள் தாக்குவதில்லை. அது என்னதான் மேலும் படிக்க..\nPosted in பருத்தி Tagged இயற்கை பூச்சி கொல்லி Leave a comment\nவேம்பு மூலம் பூச்சி கட்டுப்பாடு\nபயிர் களை நோய்த் தாக்குதலில் இருந்து காத்திடவும், சுற்றுப்புறச் சூழலை மாசில் இருந்து மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம் Tagged இயற்கை பூச்சி கொல்லி 1 Comment\nவேம்பிலிருந்து பூச்சி விரட்டிகள் தயாரிப்பு\nவேப்பமரத்தில் இருந்து பல விதமான இயற்கை பூச்சி விரட்டிகளை தயாரிக்கலாம். மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், பூச்சி கட்டுப்பாடு Tagged இயற்கை பூச்சி கொல்லி 2 Comments\nவிவசாய பயிர்களை அழிக்கும் பூச்சிகளை ஒழிக்க ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்துகிறோம். இதனால் மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம் Tagged இயற்கை பூச்சி கொல்லி 3 Comments\n“நம் வயல்களில் உள்ள பூச்சிகளை அழிக்க பூச்சிக் கொல்லி மருந்துகளைப் பயன்படுத்த வேண்டாம். மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம் Tagged இயற்கை பூச்சி கொல்லி Leave a comment\nஇயற்கை வழியில் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் இயற்கையின் கொடையான வேம்பின் பயன்பாடு குறித்து நெல் மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், பூச்சி கட்டுப்பாடு Tagged இயற்கை பூச்சி கொல்லி Leave a comment\nஐம்பதாண்டு பலன் தரும் வலையபட்டி முருங்கை\nமுறையான இயற்கை உரம் தந்து மரமுருங்கையை பராமரித்தால், தென்னையை விட கூடுதலாக, 50 மேலும் படிக்க..\nPosted in முருங்கை Tagged இயற்கை பூச்சி கொல்லி, பஞ்சகவ்யா Leave a comment\nவேம்பில் தயாராகும் பூச்சிக்கொல்லிகளுக்கு மவுசு\nவேப்பிலை, வேப்பங் கொழுந்து, வேப்பம் பழம் ஆகியவற்றின் மூலம் தயாரிக்கப்படும் பூச்சிக் கொல்லி மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம் Tagged இயற்கை பூச்சி கொல்லி Leave a comment\nசம்பா சாகுபடி செய்துள்ள விவசாயிகள் அதிக மகசூல் பெற, தொழில்நுட்பம் குறித்து, திருத்துறைப்பூண்டி கிரியேட் மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம் Tagged அசோஸ்பைரில்லம், ஆதிரெங்கம் இயற்கை விவசாய பண்ணை, இயற்கை பூச்சி கொல்லி, சூடோமோனஸ் ப்ளுரொசன்ஸ��, பஞ்சகவ்யா 1 Comment\nகோகோ கோலா பூச்சி கொல்லி வீடியோ\nகோகோ கோலா பானம் பூச்சி கொல்லியாக பயன் படுத்தவது பற்றிய ஒரு வீடியோ மேலும் படிக்க..\nPosted in பூச்சி கட்டுப்பாடு Tagged இயற்கை பூச்சி கொல்லி Leave a comment\nபூச்சி கொல்லியாக கோகோ கோலா\nஆந்திராவிலும் சத்திஸ்கர் மாநிலத்திலும் உள்ள விவசாயிகள் கோகோ கோலா மற்றும் பெப்சி பயன் மேலும் படிக்க..\nPosted in பூச்சி கட்டுப்பாடு Tagged இயற்கை பூச்சி கொல்லி 2 Comments\nஈரோடு: மானாவாரி சாகுபடி செய்யும் விவசாயிகள் அங்கக வேளாண்மை முறையை கையாண்டு நஞ்சில்லாத மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம் Tagged இனக்கவர்ச்சி பொறி, இயற்கை பூச்சி கொல்லி, சூடோமோனஸ் ப்ளுரொசன்ஸ், டிரைக்கோடெர்மா விரிடி 1 Comment\nபக்க விளைவுகள் ஏற்படுத்தாத தாவரப் பூச்சிக் கொல்லிகள்\nகுறைந்த பரப்பளவு நிலத்தில், அதிக விளைச்சல் காண வேண்டும் என்ற ஆவல் தான் மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், பூச்சி கட்டுப்பாடு Tagged இயற்கை பூச்சி கொல்லி Leave a comment\nஇயற்கை பூச்சி விரட்டியான பூண்டு கரைசல் செய்வது எப்படி\nஇயற்கை பூச்சி விரட்டியான பூண்டு கரைசல் எப்படி செய்வது என்று பாப்போம் தேவையான மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், பூச்சி கட்டுப்பாடு Tagged இயற்கை பூச்சி கொல்லி Leave a comment\nபசுமை தமிழகத்தில் இயற்கை பூச்சி விரட்டிகள் பற்றி படித்து இருக்கிறோம். இதோ, மேலும் மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம் Tagged இயற்கை பூச்சி கொல்லி Leave a comment\nஇயற்கையாகக் கிடைக்கும் தாவர இலைச் சாறு, எண்ணெய், உப்புக் கரைசல், சாம்பல் போன்றவற்றைக் மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், பூச்சி கட்டுப்பாடு Tagged இயற்கை பூச்சி கொல்லி 2 Comments\nஇயற்கை பூச்சி விரட்டி ஆகிய பொன்னீம் பற்றி நாம் ஏற்கனவே படித்து இருக்கிறோம். மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், பூச்சி கட்டுப்பாடு Tagged இயற்கை பூச்சி கொல்லி Leave a comment\nவிவசாயிகள் பொதுவாக பூச்சி நோய்களை கட்டுப்படுத்த பூச்சிக்கொல்லி மருந்துகளையே அதிகம் பயன்படுத்துகின்றனர். பூச்சிக்கொல்லி மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், எரு/உரம், பூச்சி கட்டுப்பாடு Tagged இயற்கை பூச்சி கொல்லி Leave a comment\nபூச்சி விரட்டும் பண்பை கொண்ட வில்வம்\nவில்வ மரத்தின் பாகங்களில் இயல்பாகவே பூச்சிக்கொல்லி ஆற்றலும், பூஞ்சை எதிர்ப்புத் தன்மையும் உள்ளன. மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், பூச்சி கட்டுப்பாடு Tagged இயற்கை பூச்சி கொல்லி 3 Comments\nஇன்னொரு இயற்கை பூச்சி விரட்டி – அரப்பு மோர்\nஇயற்கை தொழில்நுட்பங்களில் ஒன்றான அரப்பு மோர் கரைசல் தயாரிப்பது எப்படி குறிப்பாக சிறு மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், பூச்சி கட்டுப்பாடு Tagged இயற்கை பூச்சி கொல்லி 2 Comments\nஇஞ்சி பூண்டு மிளகாய் கரைசல் செய்வது எப்படி\nஇயற்கை பூச்சி கொல்லியான இஞ்சி பூண்டு மிளகாய் கரைசல் செய்வது எப்படி\nPosted in இயற்கை விவசாயம், பூச்சி கட்டுப்பாடு Tagged இயற்கை பூச்சி கொல்லி 1 Comment\nஇன்னொரு இயற்கை பூச்சி கொல்லி\nபசுமை தமிழகத்தில் பல வகை இயற்கை பூச்சி கொல்லிகளை படித்து இருக்கிறோம். இதோ, மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், பூச்சி கட்டுப்பாடு Tagged இயற்கை பூச்சி கொல்லி Leave a comment\nஅக்னி அஸ்த்ரா செய்வது எப்படி\n1. ஒரு பானையை எடுத்து கொள்ளவும் 2. அதில் 10 லிட்டர் கோமூதிரத்தை மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், பூச்சி கட்டுப்பாடு Tagged இயற்கை பூச்சி கொல்லி 1 Comment\nஇயற்கை பூச்சி விரட்டியான மூன்று இலை கரைசல் செய்முறை\nஇயற்கை பூச்சி விரட்டியான மூன்று இலை கரைசல் செய்யும் முறை: எருக்கு, வேம்பு, மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், பூச்சி கட்டுப்பாடு Tagged இயற்கை பூச்சி கொல்லி 1 Comment\nநெற்பயிரில் இயற்கை பூச்சி கட்டுப்பாடு\n“நெற்பயிரை அதிகளவில் தாக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்த பூச்சிக் கொல்லி மருந்துகளை அதிகளவில் பயன்படுத்துவதால், மேலும் படிக்க..\nPosted in நெல் சாகுபடி, பூச்சி கட்டுப்பாடு Tagged இயற்கை பூச்சி கொல்லி 1 Comment\nஇயற்கை முறையில் தென்னை ஈரியோபைட் சிலந்தி கட்டுப்பாடு\nஇயற்கை முறையில் விவசாயம் செய்யும் கொழுமம் கிராமத்தைச் சேர்ந்த பிறைசூடிப் பித்தன் தன்னுடைய மேலும் படிக்க..\nPosted in தென்னை Tagged இயற்கை பூச்சி கொல்லி 4 Comments\nஇயற்கை பூச்சி விரட்டியான வேப்பஞ்சாரை தயாரிப்பது எப்படி\n“இயற்கை பூச்சி தடுப்பு தயாரிப்புகள் விவசாயிகளிடையே பிரபலமானதற்கான முக்கிய காரணம், இதை தயாரிக்க மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், பூச்சி கட்டுப்பாடு Tagged இயற்கை பூச்சி கொல்லி 1 Comment\nநெல்பயிரில் இயற்கை முறையில் பூச்சி தாக்குதலைச் சமாளிப்பது எப்படி\nநெல் நடவு வயலில் குருத்துப் பூச்சி, இலை சுருட்டுப் புழு, இலை பிணைக்கும் மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், நெல் சாகுபடி, பூச்சி கட்டுப்பாடு Tagged இயற்கை பூச்சி கொல்லி Leave a comment\nமாவுப் பூச்சியைக் கட்டுப்படுத்தும் ஒட்டுண்ணிகள் அறிமுகம்\nமாவு பூச்சி என்ற புதிய வில்லனை நாம் ஏற்கனவே படித்து உள்ளோம். 56 மேலும் படிக்க..\nPosted in பூச்சி கட்டுப்பாடு Tagged இயற்கை பூச்சி கொல்லி, மாவுப்பூச்சி 1 Comment\nஇஞ்சி பூண்டு கரைசல் என்றால் என்ன\nசிவகங்கை மாவட்டத்தில் உள்ள இயற்கை விவசாய் திருமதி ராஜரீகா அவர்களின் இயற்கை பூச்சி மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், பூச்சி கட்டுப்பாடு Tagged இயற்கை பூச்சி கொல்லி 2 Comments\nமண் பூஞ்சனகளை கட்டுபடுத்தும் எளிய வழி\nமண்ணில் இருந்து பயிர்களுக்கு வரும் பூஞ்சன்களால், பயிர்களுக்கு ஏராளமான பாதிப்புகள் உண்டாகின்றன. இதை மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், பூச்சி கட்டுப்பாடு Tagged இயற்கை பூச்சி கொல்லி Leave a comment\nலேடி பர்ட் மூலம் இயற்கை பூச்சி கட்டுப்பாடு\nலேடி பர்ட் (lady bird) எனப்படும் இந்த பூச்சி விவசாயிகளின் நண்பன். இந்த மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், பூச்சி கட்டுப்பாடு Tagged இயற்கை பூச்சி கொல்லி Leave a comment\nபுதிய உயிரி பூச்​சிக்​கொல்லி அறிமுகம்\nபுதுச்சேரி காமராஜர் வேளாண் அறிவியல் நிலையம் உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகம் பயிர்களைத் தாக்கும் மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், பூச்சி கட்டுப்பாடு Tagged இயற்கை பூச்சி கொல்லி 2 Comments\nபொன்னீம் பூச்சிக்கொல்லி மூலம் கட்டு படுத்த முடியும் பூச்சிகள்\nஇயற்கை பூச்சி கொல்லி ஆகிய பொன்னீம் பற்றி நாம் ஏற்கனவே படித்து இருக்கிறோம். மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், பூச்சி கட்டுப்பாடு Tagged இயற்கை பூச்சி கொல்லி Leave a comment\nபசுமை தாயகத்தில் இயற்கை வழி பூச்சி விரட்டிகளை பற்றி ஏற்கனவே பார்த்துள்ளோம். இதோ, மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், நெல் சாகுபடி, பூச்சி கட்டுப்பாடு, வசம்பு Tagged இயற்கை பூச்சி கொல்லி 3 Comments\nஇயற்கை வழி முறையில் பூச்சி கட்டுபாடு\nமஞ்சள் கரைசல் சுமார் 20 கிராம் மஞ்சல் கிழங்கு சிறு சிறு தூண்டாக மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், பூச்சி கட்டுப்பாடு Tagged இயற்கை பூச்சி கொல்லி 2 Comments\nஇன்னொரு இயற்கை பூச்சி கொல்லி\nஇதுவரை நாம், இரண்டு வகையான இயற்கை பூச்சி கொல்லிகளை தெரிந்து கொண்டோம். போநீம் மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், பூச்சி கட்டுப்பாடு Tagged இயற்கை பூச்சி கொல்லி 2 Comments\n30 கிராம் அரளி கொட்டைகளை எடுத்து அரைத்து, 10 அல்லது 12 மேலும் படிக்க..\nPosted in ��யற்கை விவசாயம், பூச்சி கட்டுப்பாடு Tagged இயற்கை பூச்சி கொல்லி 1 Comment\nஒரு இயற்கை பூச்சி கொல்லி\nவிவசாயிகளுக்காக குறைந்த செலவில் சென்னை லயோலா கல்லூரி ஆய்வு மாணவர்கள் உருவாக்கியுள்ள பொன்னீம் மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், பூச்சி கட்டுப்பாடு Tagged இயற்கை பூச்சி கொல்லி 4 Comments\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noolaham.org/wiki/index.php/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A8%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D_2008.05", "date_download": "2021-10-19T12:35:39Z", "digest": "sha1:JZDUTWDRJ37SE5KKDEWC7CGH6CFOICHN", "length": 4511, "nlines": 65, "source_domain": "noolaham.org", "title": "இனிய நந்தவனம் 2008.05 - நூலகம்", "raw_content": "\nஇனிய நந்தவனம் 2008.05 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nவெற்றியைக் கொண்டாடுவோம் – சந்திரசேகரன்\nஉழைப்பை நம்பும் ஒவ்வொரு இளைஞனும் ஒரு அம்பானியே…\nஓடிக்கொண்டே இருங்கள் - சிவா\nவாசிக்க வாசிக்க வளமை வரும்\nசித்தார்த்தனை தேடும் போதிமரங்கள் – மனோகரன்\nகண்டேன்.. கண்டேன்.. – வ.சிவராசா\nவெற்றியை வென்றெடுப்போம் – லெணா\nசிரிக்கும் சித்திரையே – க.சண்முகசுந்தரம்\nசிறுகதை: எதிர்பார்ப்பு – மஞ்சுளா\nமன உளைச்சலில் எனது எதிர்கால இளைஞர்கள் – எஸ்.செந்தில்குமார்\nகாரிகையும் கற்பனையும் – பா.தனலெட்சுமி\nசேற்றில் மறையுது – க.காயத்ரி\nசிவாபிள்ளைக்கு “தமிழ்மொழி வித்தகர்” சிறப்புப் பட்டமளிப்புவிழா\nசிரித்து வாழ வேண்டும் – கலாவிசு\nநூல்கள் [11,760] இதழ்கள் [13,280] பத்திரிகைகள் [53,303] பிரசுரங்கள் [1,125] நினைவு மலர்கள் [1,513] சிறப்பு மலர்கள் [5,516] எழுத்தாளர்கள் [4,874] பதிப்பாளர்கள் [4,171] வெளியீட்டு ஆண்டு [185] குறிச்சொற்கள் [91] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,157]\n2008 இல் வெளியான இதழ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noolaham.org/wiki/index.php/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_(05.07)_1993.08.20", "date_download": "2021-10-19T10:55:28Z", "digest": "sha1:TBBZQHVDVDQSNNTN7I6UIIGKM3D25HFM", "length": 6182, "nlines": 79, "source_domain": "noolaham.org", "title": "தாயகம் (05.07) 1993.08.20 - நூலகம்", "raw_content": "\nஇதழாசிரியர் குருஷ்சேவ், ஜோர்ஜ். இ.\nதாயகம் (05.07) 1993.08.20 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nபேச்சு வார்த்தைக்கு தாயர் புலிகள் லண்டனில் அறிவிப்பு.\nபிள்ளைகளின் விடுதலையை அரசே குழப்பியது.\nவிடுதலைப் போராட்டத்தில் யுத்தக் குற்றங்கள்\nஐ.நா தலையீட்டுத் திட்டம் நிராகரிப்பு\nபொருளாதார தடையை நீக்க மறுப்பு\nகணவன் மனைவிக்கு இடையில் – சிவப்பிரகாசம்\nஆவணி 15 இந்திய சுதந்திரதினம் எமது சுதந்திரத்தையும் எண்ணிடுவோம் - கோபி\nஆழமாகும் நம்பிக்கையீனத்தின் மத்தியில் நம்பிக்கைக் கீற்றுக்கள்\nமனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள்\nமத்தியதர வர்க்கத்தின் மீதான பாதிப்பு\nஇல்லாத ஒரு தேசத்தின் இருக்கின்ற துயரங்கள் – தி. உமாகாந்தன்\nமலர் தந்த பொதுமகள் – ஜெயந்தீஸன்\nஐந்தாவது ஆண்டில் ஐரோப்பிய இலக்கியச் சந்திப்பு – கு. பரராஜசிங்கம்\nஈழம் ஒரு தொடர்கதை – சின்னத்தம்பி . வேலாயுதம்\nவன்னி மண் – வ.ந. கிரிதரன்\nபுலம் பெயர்ந்த எழுத்தாளர்களே உங்கள் எழுத்துக்கள் யாருக்கு\nநான் ஏன் தாயகத்தில் எழுதுவதில்லை\nஜே.வி.பி.யின் வரலாற்றுக் கதை – வசந்த திசாநாயக, சரத் த சில்வா, ரஞ்சித் குமார (தமிழாக்கம் செ. லோகநாதன்)\nஅறுசுவை பறக்கும் தட்டு – அறுஞர் கியூறியஸ் ஜி\nநூல்கள் [11,760] இதழ்கள் [13,280] பத்திரிகைகள் [53,303] பிரசுரங்கள் [1,125] நினைவு மலர்கள் [1,513] சிறப்பு மலர்கள் [5,516] எழுத்தாளர்கள் [4,874] பதிப்பாளர்கள் [4,171] வெளியீட்டு ஆண்டு [185] குறிச்சொற்கள் [91] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,157]\n1993 இல் வெளியான இதழ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2015/08/15/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2021-10-19T11:58:19Z", "digest": "sha1:CTVAZCZLGSH2VPH65FSANESVV74SSYV7", "length": 88842, "nlines": 247, "source_domain": "solvanam.com", "title": "எம்எஸ்வி – இசையும் காலமும் பகுதி 2 – சொல்வனம் | இதழ் 256 | 10 அக். 2021", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 256 | 10 அக். 2021\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nஎம்எஸ்வி – இசையும் காலமும் பகுதி 2\nஎஸ்.சுரேஷ் ஆகஸ்ட் 15, 2015 1 Comment\n1964. இந்த அளவுக்கு வித்தியாசமாக, பலவகைகளில் தம் திறமையை முழுமையாய் வெளிப்படுத்திக் கொள்ளும் திரைப்பட வாய்ப்புகள் எல்லா இசையமைப்பாளர்களுக்கும் கிடைப்பதில்லை. விஸ்வநாதன் ராமமூர்த்திக்கு 1964 அப்படிப்பட்ட ஒரு ஆண்டு.\nஇவர்கள் 1964ஆம் ஆண்டு இசையமைத்த அத்தனை படங்களையும் நான் பட்டியலிடப் போவதில்லை. இவர்களின் பன்முகத்திறமை வெளிப்பட்ட திரைப்படங்களில் சில பாடல்களை மட்��ும் சுட்டிக்காட்டுகிறேன்.\nஇதில் முதலில், அவர்களது சொந்த தயாரிப்பான கலைக்கோவில் என்ற திரைப்படத்தைப் பார்க்கலாம். ஸ்ரீதர் இயக்கிய இந்தப் படம் படுதோல்வியடைந்தது. இருவருக்குமிடையே பிரிவு ஏற்பட இது காரணமாக இருந்திருக்கலாம் என்று விக்கிப்பீடியா குறிப்பு ஒன்று கூறுகிறது. அதை விட்டுவிட்டு இப்படத்தின் இசை பற்றி பேசுவோம்- இந்த இசை அக்கால ரசிகர்களை ஈர்க்கவில்லை.\nபாலமுரளி, சுசீலா குரலில் ஆபோகி ராகத்தில் அமைந்த பாடல். தங்க ரதம் வந்தது, இன்று திரையிசையில் ஒரு செவ்வியல் அந்தஸ்தைப் பெற்றுவிட்டது. அந்த நாட்களில் இவ்வளவு பிரபலமடையவில்லை என்று நினைக்கிறேன். முதலில் கவனிக்கப்படாதபோதும், தரம் எப்போதும் அங்கீகாரம் பெறும் என்பதற்கு இது இன்னுமொரு சான்று.\nபாலமுரளி குரலில் உள்ள கம்பீரமும் சுசீலாவின் குரலின் இனிமையும் இதில் அழகாக இணைகின்றன. முதல் இடையிசையில் உள்ள புதுமையை கவனித்திருப்பீர்கள். இசை சீராக இல்லை, தாளம் மாறுபட்டு ஒலிக்கிறது. ஆனால் சரணம் அவர்களுக்குரிய வழக்கமான பாணியில் அமைந்திருக்கிறது. முன்னரே, மாலையிட்ட மங்கை படத்தில் நானன்றி யார் வருவார் என்ற பாடலை ஆபோகி ராகத்தில் அமைத்திருந்தனர் இவ்விருவர். ஆனால் அது ஏறத்தாழ ஒரு கர்நாடக சங்கீத கிருதி போலவே அமைந்திருந்தது. இது நவீன ஆபோகி.\nஅடுத்து, ஸ்ரீராகத்தில் அமைந்த அருமையான பாடல். முன்னிசையில் வீணை இனிமையாக ஒலிக்கிறது, தபலா ஏறத்தாழ ஒரு ஜலதரங்கம் போலவே பயன்படுத்தப்பட்டுள்ளது. இருவரும் சொந்தப் படத்தில் புதுமை செய்ய நினைத்தார்கள் போலிருக்கிறது. பிறர் தயாரிப்பில் இது சாத்தியமில்லை என்பது காரணமாக இருந்திருக்கலாம். இந்தப் பாடலுக்கு வீணை வாசித்தவர் வீணை மேதை சிட்டிபாபு என்று விக்கிப்பீடியா குறிப்பு சொல்கிறது.\nகலைக்கோவிலுக்கு நேர் எதிர் துருவம் புதிய பறவை. ஆங்கில திரைப்படம் ஒன்றன் தாக்கம் கொண்ட துப்பறியும் கதை, புதிய பறவை. நவீன சினிமா என்று சொல்லலாம், தனிப்பாணியில் அமைந்திருந்தது, இன்றைய திரை விமரிசனத்தில் ஸ்டைலிஷ் மேக்கிங் என்று எழுதுவார்கள். சிவாஜி கணேசன் தன் நடிப்புத் திறமையை முழுமையாக வெளிப்படுத்தியிருந்தார். திரைப்படம் படமாக்கப்பட்ட விதத்துக்கு ஏற்ப இசையும் நவீனமாகவும் ஸ்டைலாகவும் இருந்தாக வேண்டும் என்ற சவாலை விஸ்வநாதன் ராமமூர்த்தி எதிர்கொண்டதில் நமக்குச் சில அசாதாரணமான, மறக்க முடியாத பாடல்கள் கிடைத்தன.\nமேற்கத்திய ராக் அண்ட் ரோல் பாணியில் அமைந்த உன்னை ஒன்று கேட்பேன். விஸ்வநாதன் ராமமூர்த்தி, கண்ணதாசன், சுசீலா இணைந்து சிறிதுகூட சிரமம் தெரியாமல் அமைக்கப்பட்ட, மற்றுமொரு ஸ்டைலிஷ் பாடல். சுசீலாவின் மிகச் சிறந்த பாடல்களில் இந்த இரண்டு பாடல்களுக்கும் மிக முக்கியமான இடமுண்டு.\nஅற்புதமான பியானோ இசையும், இடையிசையில் சாக்ஸ் பயன்படுத்தப்பட்டிருப்பதும் மேற்கத்திய பாணி அணுகல்கள். இந்திய பாணி ட்யூனில் இந்த இசை மிக வித்தியாசமான ஓசையுடன் அமைந்திருக்கிறது. நிலவிலா வானம் என்ற இடத்தில் எவ்வளவு நன்றாக மெட்டு போட்டிருக்கிறார்கள். இந்தப் பாடலை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.\nஇந்தப் படத்தில்தான் மெல்ல நட மெல்ல நட, சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து என்ற இரு பாடல்களும் இருந்தன. ஆனால் எங்கே நிம்மதிதான் கற்பனையின் உச்சம் தொட்ட பாடல் என்று சொல்ல வேண்டும். இந்தப் பாடலில் எல்லா இசைக்கலைஞர்களும் உற்சாகமாக போட்டி போட்டுக் கொண்டு பங்கேற்றிருக்கிறார்கள். நம்மால் என்றும் மறக்க முடியாத ஒரு பாடல் கிடைத்திருக்கிறது. வயலின்கள் மிக அருமையாகப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. வயலின் கலைஞர்கள் அனைவரும் இந்தப் பாடல் பதிவில் இசைக்கச் சென்று விட்டதால் அன்று சென்னையில் வேறெந்த பாடலும் ஒலிப்பதிவு செய்யப்படவில்லை என்று சொல்வார்கள். போனால் போகட்டும் போடா பாடலை ஆங்காங்கே நினைவூட்டும் வழக்கமான விஸ்வநாதன் ராமமூர்த்தி பாணியில் அமைந்த இடையிசையுடன் இனிய ட்யூன். டிஎம்எஸ்ஸின் அப்பழுக்கற்ற குரல், சிவாஜியின் முத்திரை நடிப்பு. அனைத்தும் இந்தப் பாடலில் கைகூடி வந்திருக்கின்றன. ஆனால் இதில் மிகப்பெரிய வெற்றி கண்ணதாசனுக்கே உரியது- இந்தப் பாடல் வரிகள் வேறு யாராலும் தொட முடியாத இடத்தைத் தொடுகின்றன- எனது கைகள் மீட்டும்போது வீணை அழுகின்றது.\nபுதிய பறவை படத்தில் விஸ்வநாதன் ராமமூர்த்தியின் நவீன இசை வெளிப்பட்டால், தமிழ் திரைப்பட வரலாற்றின் மிகச் சிறந்த படங்களில் ஒன்றான காதலிக்க நேரமில்லையில் அவர்கள் இசையில் விளையாடிப் பார்த்தார்கள். கொண்டாட்டமாய் சில பாடல்களும் இனிய காதல் டூயட்களும் இந்தப் படத்தில் அமைந்திருந்தன.\nமேற்கத்திய இசையின் தாக்கத்தில் விஸ்வநாதன் வேலை வேண்டும்-\nஉந்தன் பொன்னான கைகளில் இந்த விளையாட்டு தொடர்கிறது. இதில் சிறிது இந்தி திரையிசை கலந்திருக்கிறது என்று தோன்றுகிறது. மைன் சலி மைன் சலி என்ற ப்ரொபசர் பாடலின் இடையிசை இதில் ஒலிப்பது போல் தெரிகிறது. ஆனால் ட்யூன் முழுக்க முழுக்க வேறுபட்ட ஒன்று. இது போன்ற பாடல்களுக்கு பிபிஎஸ் குரல் பொருத்தமானதுதானா என்பது குறித்து எனக்கு கேள்வி உண்டு.\nதலைப்புப் பாடலுக்கு சீர்க்காழி கோவிந்தராஜனைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். முதியவர் ஒருவர் பாடுவதாக படத்தில் வரும் பாடல் என்பதால், சீர்காழியின் குரல் நன்றாகப் பொருந்துகிறது.\nஆனால் ஏனோ எனக்கு இந்த இரு பாடல்களும் நிறைவு கொடுக்கவில்லை. இது போன்ற ஜாலியான பாடல்கள் எவ்வளவு லைட்டாக இருக்க வேண்டுமோ அது போன்ற இலகுத்தன்மை இந்த ட்யூன்களில் இல்லை. ஆனால், மலர் என்ற முகம் இன்று சிரிக்கட்டும், என்ற பாடல் பற்றி யாரும் எந்த கேள்வியும் எழுப்ப முடியாது. ராக் அண்ட் ரோல் பாணி பாடல், இதில் வரும் யோடலிங் கிஷோர் குமாரை நினைவுபடுத்துகிறது.\nஅனுபவம் புதுமை மற்றுமொரு ராக் அண்ட் ரோல் பாடல். இனிய ட்யூன், பின்னணியில் மேற்கத்திய இசை.\nஇவை போதாதென்று என்ன பார்வை உந்தன் பார்வை, நெஞ்சத்தை அள்ளிக் கொஞ்சம் தா, மற்றும் இதயத்தைப் பிசையும், நாளாம் நாளாம் திருநாளாம்-\nஎவ்வளவு சந்தோஷமான பாடல்கள், ஒன்றில்கூட சோகத்தின் சாயல் இல்லை. இந்தப் படத்தின் எல்லா பாடல்களும் வெற்றிவாகை சூடின. காதலிக்க நேரமில்லை படத்தின் வெற்றியில் பாடல்களின் வெற்றிக்கு கணிசமான பங்கு உண்டு என்று நினைக்கிறேன்.\nஇதே ஆண்டுதான் எம்ஜிஆரின் படகோட்டியும் வந்தது. ஆனால் வழக்கமான எம்ஜிஆர் படங்களின் பாடல்கள் இதில் இல்லை.\nஒரு சோதனை முயற்சியாக, தொட்டால் பூ மலரும்- எம்ஜிஆர் பாடல் என்பதைவிட, இதில் இழையும் மென்சோகத்தில் விஸ்வநாதன் ராமமூர்த்தி முத்திரை பதிந்திருக்கிறது. இந்தப் பாடலில் வரும் கரவொலி இன்றும் கொண்டாடப்படுகிறது.\nஇதில்தான் பாட்டுக்குப் பாட்டெடுத்து, கொடுத்ததெல்லாம் கொடுத்தான், கரைமேல் பிறக்க வைத்தான் என்ற பாடல்களும். அனைத்தும் திரைக்கு வந்ததும் வெற்றி பெற்ற பாடல்கள்.\nபொதுவாகவே படகோட்டி படப்பாடல்கள் எல்லாம் சோகமானவை என்றால், அதே ஆண்டு வந்த மற்றுமொரு எம்��ிஆர் படமான தெய்வத்தாய் பாடல்கள் அனைத்தும் உற்சாகமானவை – ஒரு பெண்ணைப் பார்த்து என்ற இந்தப் பாடலை யார் மறக்க முடியும்\nஇவற்றில் சிறந்ததை கடைசியில்தான் சொல்கிறேன். 1964தான் கர்ணன் வந்த ஆண்டு. இந்துஸ்தானி ராகங்களைச் சோதனை முயற்சியாக இதில் கையாண்டுள்ளனர். அனைத்து உணர்ச்சிகளையும் வெளிப்படுத்திய படம். தமிழ் திரைவரலாற்றில் கிளாசிக் அந்தஸ்தைத் தொட்ட படம்.\nகர்ணன் படத்தில் சுசிலா சில அருமையான பாடல்கள் பாடியிருக்கிறார். கண்ணுக்கே குலம் ஏது, இந்தப் படத்தின் சிறந்த பாடல் என்று நினைக்கிறேன். நாம் வழக்கமாகக் காணும் விஸ்வநாதன் ராமமூர்த்தி முத்திரை இதிலும் உண்டு. சோகத்தின் சாயல், இனிமையான மெட்டு, எளிய இசைக்கோர்வை- அனைத்தும் இந்த இரட்டையருக்கே உரியவை. தெலுங்கு மொழியிலும் இந்தப் படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது.\nஆனால் இந்தப் படத்தில் சுசிலா பாடிய வேறு இரு பாடல்கள் இருக்கின்றன. அவை விஸ்வநாதன் ராமமூர்த்தியின் மாறுபட்ட முகங்களை வெளிப்படுத்துகின்றன- இது கண்கள் எங்கே என்ற பாடல்\nஇதன் பல்லவி மட்டுமே குறிப்பிட்டுச் சொல்லத்தக்கது- மெல்ல ஒலிக்கும் மெட்டு முடிவில் வேகம் பிடிக்கிறது, கோரஸ் மிக அருமையாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பாடலின் வேகம் நிதானித்தும் விரைந்தும் மாறி மாறி பயணிக்கிறது. பெண்குரல் தனித்து பாடும் பாடல்களில் விஸ்வநாதன் ராமமூர்த்தி மிகவும் நேசித்த சர்வலகு தாளம் இதில் இல்லை. பாடல் முழுதும் நடை வேறுபாட்டைப் பார்க்க முடிகிறது. இது அத்தனையையும் மறைப்பதாக பாடலின் ட்யூனும் சுசிலாவின் குரலும் இருக்கின்றன.\nஇதில் உள்ள மற்றொரு பாடல், என் உயிர்த் தோழி. ஹிந்துஸ்தானி ராகமான ஹமீர் கல்யாணியில் அமைந்த பாடல். இதன் ட்யூன், ரிதம் என்று எதிலும் விஸ்வநாதன் ராமமூர்த்தி முத்திரை இருக்கிறது. ஆனால்கூட இடையிசையில் வரும் ஷெனாய் மற்றும் இந்துஸ்தானி சாயல், இந்தப் பாடலைத் தனித்தன்மை கொண்டதாகச் செய்கிறது-\nஇந்தப் படத்தில் உள்ள இன்னுமொரு ஹிந்துஸ்தானி பாணி பாடல் இன்றும் இசை ஆர்வலர்களைக் குழப்புகிறது- இரவும் நிலவும், என்ற மகத்தான வெற்றி பெற்ற பாடலைச் சொல்கிறேன். இது என்ன ராகம் விஷயம் தெரிந்தவர்கள் தொடர்ந்து இது குறித்து விவாதித்து வருகின்றனர். தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ஒருவர் இது திலக் க���மோத் ராகம் என்று உறுதியாகச் சொல்லக் கேட்டிருக்கிறேன். புகழ்பெற்ற வயலின் இசைக்கலைஞர் வி.வி. சுப்ரமணியம் உரையாற்றும்போது ஒரு முறை, இதன் ராகம் குறித்து மதுரை கிருஷ்ணனிடம் பேசியதாகச் சொன்னார். இந்தப் பாடல் ஷியாம் கல்யாண் ராகத்தில் அமைந்தது என்று மதுரை கிருஷ்ணன் சொன்னாராம். இதன் காணொளியை என் நண்பர் ஒருவருக்கு அனுப்பினேன். அவர் இசை ஞானம் மிக்கவர். அவரோ, ஷ்யாம் கல்யாண் போலிருந்தாலும் இது உண்மையில் அதற்கு மிகவும் நெருக்கமான சுத்த சாரங்க் ராகத்தில் அமைந்த பாடல் என்றார். எனக்கு இந்த ராகங்கள் எதுவும் தெரியாது என்பதால் நான் இந்த விஷயத்தில் ஒன்றும் சொல்வதற்கில்லை.\nஇந்தப் பாடலில் அழகாய் ஒலிக்கும் ஷெனாய், பிஸ்மில்லா கான் வாசித்தது. இதற்காகவே அவர் சென்னை வந்தார்.\nமகராஜன் உலகை ஆளலாம் என்ற பாடல் கரகரப்பிரியா ராகம். திஸ்ர நடையில் அமைந்தது. ஆனால் இந்தப் பாடலில் அதன் சாயல் முழுமையாக மாறிவிட்டதை ஜி எஸ் மணி ஒருமுறை ஒலிப்பதிவு உரையாடலில் கூறியிருக்கிறார்.\nஒரு படத்துக்கும் அதன் இசைக்கும் சாகாவரமளிக்க இந்தப் பாடல்களே போதும் என்று நீங்கள் நினைத்தால், இன்னும் இருக்கிறது. இதுவரை சொன்னதெல்லாம் கர்ணன் படத்தின் அடையாளங்கள், அவை இடம்பெறும் கட்டங்களுக்கு உரியவை.\nஇந்தப் பாடல் பாருங்கள்- வழக்கமான கர்ப்பகால பாடல்- இதிலும் ஷெனாய் எவ்வளவு அழகாக ஒலிக்கிறது. இரண்டாம் சரணத்தின் மெட்டு நம் இதயத்தைத் தொடுகிறது. எல்லாவற்றுக்கும் மேல், வார்த்தைகள். என்னவொரு அர்த்தம் பொதிந்த அழகிய, இனிய பாடல்.\nபேறு காலத்தில் பிறந்த வீடு செல்லும் பெண்ணுக்குரிய பாடல் இது. ஆனந்த பைரவியில் அமைந்த பாடல். கண்னதாசன் வரிகள் இந்தப் பாடலை மறக்க முடியாததாகச் செய்கின்றன.\nஇந்தப் பாடலின் விசேஷம் பத்யம் போன்ற பகுதியில் பல்வேறு பாடகர்கள் பல்வேறு ராகங்களில் பாடுகின்றனர். எவ்வளவு சிறந்த இசைக்கலைஞர்களை இங்கு விஸ்வநாதன் ராமமூர்த்தி ஒன்று சேர்த்திருக்கிறார்கள் என்பது ஆச்சரியம். படத்தில் ஒவ்வொரு புலவராக அடுத்தடுத்து கர்ணனைப் புகழ்ந்து பாடுகின்றனர். அவர்கள் பாடும் ஒவ்வொரு பாடலிலும் மெட்டும் சொற்களும் மிக அழகாகக் கூடிவருகின்றன. திருச்சி லோகநாதன் பாடுவது கானடா ராகத்தில் ஒரு முத்தாரம் என்று சொல்லலாம்- நற்பொருளைத் தேடிச் சிவந்தன ஞா��ியர் நெஞ்சம் என்று எழுதிய கண்ணதாசன் கற்பனையை என்னவென்று சொல்ல\nஇப்போது இந்தக் கட்டுரையின் இறுதியில் வரும் பாடல் சோகப் பாடல் என்று சொன்னாலே நினைவுக்கு வரும் பாடல். சக்ரவாகம் (அஹிர் பைரவ்) அடிப்படையில் அமைந்த பாடல், இது சீர்காழியின் குரலுக்கு கச்சிதமாகப் பொருந்தும் பாடல். பெருஞ்சோகத்தை இந்தப் பாடல் போல் கைப்பற்றிய வேறு பாடல்கள் அரிது, மிகச் சில பாடல்களே இதுபோல் உணர்வை இசையாய் வெளிப்படுத்துவதில் வெற்றி பெறுகின்றன. இங்கும் நாம் கண்ணதாசனுக்கு சிரம் தாழ்த்த வேண்டியதாகிறது, உள்ளத்தில் நல்ல உள்ளம் என்ற துவக்கம் முதல் முடிவு வரை கண்ணதாசன் பாணியில் மிக ஆழமான தத்துவ தேடல்.\nகர்ணன் படப்பாடல்களை எத்தனை எத்தனை விதங்களில் மாறுபட்டு ஆனால் பொருத்தமான வகையில் இவர்கள் இசையமைதிருக்கின்றனர் என்பது தீராத ஆச்சரியமாகவே இருக்கிறது. விஸ்வநாதன் ராமமூர்த்தியின் திறமையைக் காட்ட ஒரே ஒரு படம் போதும் என்றால் தயக்கமில்லாமல் நாம் கர்ணன் படப்பாடல்களைப் பரிந்துரைக்க முடியும். சந்தேகத்துக்கு இடமில்லாமல் தமிழ் திரையிசை வரலாற்றின் மிகச் சிறந்த பாடல்கள் அமைந்த படம் இது என்று சொல்லலாம்.\nOne Reply to “எம்எஸ்வி – இசையும் காலமும் பகுதி 2”\nஆகஸ்ட் 16, 2015 அன்று, 9:12 காலை மணிக்கு\nஇரவும் நிலவும் பாடல் ஹம்சநாதம் ராகத்தில் அமைந்தது என்றும் சொல்பவர்கள் உண்டு. 1964ம் ஆண்டு கட்டுரையாளர் சொல்வது போல விசுவநாதன்-ராமமூர்த்தி இசையில் ஒரு மகோன்னத ஆண்டு. கட்டுரையில் சொல்லப்பட்ட படங்கள் தவிர அவர்களின் சிறந்த பாடல்கள் இடம்பெற்ற பச்சை விளக்கு, பணக்காரக் குடும்பம், கை கொடுத்த தெய்வம் ஆகிய படங்கள் வந்த ஆண்டும் 1964தான். அந்த ஆண்டுதான் ஜெயகாந்தனின் பாரிசுக்குப் போ நாவல் எழுதப்பட்டது. அதில் தமிழ் சினிமா இசையை ஆபாசக் கூச்சல் என்கிறார். ஜேகே. ஒவ்வொருவர் பார்வைக்கும் இவ்வளவு வேறுபாடு இருக்குமா என்ன\nPrevious Previous post: கருவிகளின் இணையம் – ஒரு பருந்துப் பார்வை – பகுதி 2\nNext Next post: பவளமல்லியின் வாதை & மௌன முள்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவக் கட்டுரை அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அயல் விழா அரசியல் அரசியல் கட்டுரை அறிவிப்பு அறிவியல் அறிவியல் அதி புனைவு அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைக் கட்டுரை இசைத்தெரிவு இசையும் மொழியும் இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-232 இதழ்-233 இதழ்-234 இதழ்-235 இதழ்-236 இதழ்-237 இதழ்-238 இதழ்-239 இதழ்-24 இதழ்-240 இதழ்-241 இதழ்-242 இதழ்-243 இதழ்-244 இதழ்-245 இதழ்-246 இதழ்-247 இதழ்-248 இதழ்-249 இதழ்-25 இதழ்-250 இதழ்-251 இதழ்-252 இதழ்-253 இதழ்-254 இதழ்-255 இதழ்-256 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய வரலாறு இ���க்கிய விமர்சனம் இலக்கியக் கட்டுரை இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக நடப்புக் குறிப்புகள் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் எழுத்து ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சத்யஜித் ரே சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தழுவல் கட்டுரை தாவரவியல் தாவரவியல் கட்டுரை திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாரதியியல் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொடுவா நாட்டார் கலை பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதற்கனல் முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பு இலக்கியம் மொழிபெயர்ப்பு நாவல் மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை ரவிஷங்கர் லயம் வங்க ஓவியங்கள் வங்க மலர் வங்கச் சிறப்பிதழ் வரலாறு வரலாற்றாய்வு வரலாற்றுக் கட்டுரை வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேதியியல் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அகிலா ஆ. அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அஞ்சலி ஸச்தேவா அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அருண்குமார் மகோபாத்யாய் அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அவீக் சாட்டர்ஜீ அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆடம் இஸ்கோ ஆண்டனி கில் ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் குமார் ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆமிராபாலன் ஆரூர் பாஸ்கர் ஆர் நித்யஹரி ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி ஆஸ்டின் சௌந்தர் இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா முருகன் இரா. அரவிந்த் இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இராம் பொன்னு இலவசக் கொத்தனார் இலா இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உ நரசிம்மன் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உலகளந்த பெருமாள் உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.என். குண்டு எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் எம்.டி வாசுதேவன் நாயர் Raja எம்.ரிஷான் ஷெரீப் எரிக் நெஹர் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் எஸ் சியூயீ லு Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கஞ்சனூர் கவிப்ரியா கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட்ராமன் கண்ணன் இராமநாதன் கதீர் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கலாப்ரியா கலைச்செல்வி கல்யாணி ராஜன் கவியோகி வேதம் கா.சிவா கா.ரபீக் ராஜா காஜி நசருல் இஸ்லாம் காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் கிருபாகரன் கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலச்சுவடு கண்ணன் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் கி. ராஜநாராயணன் கிருஷ்ண பாசு Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரி எஸ். நீலகண்டன் குமரேசன் மு. குமாரநந்தன் குமார் சேகரன் குமுதினி கூம் கூம் ராய் கெ.ம.நிதிஷ் கென் லூ ���ே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கே.பாலசுப்பிரமணி கே.ராஜலட்சுமி கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரெக் பா(வ்)ம் க்ரேஸ் பேலி ச அர்ஜுன்ராச் ச. சமரன் ச. சிவபிரகாஷ் ச.திருமலைராஜன் சக்தி சட்டோபாத்யாய சக்தி விஜயகுமார் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் சமரேஷ் மஜும்தார் சரவணன் அபி சரவணன் மாணிக்கவாசகம் சரோஜ் பந்த்யோபாத்தியாய் sarvasithan சா.கா.பாரதி ராஜா சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்லி டைஸன் சார்ல்ஸ் ஸிமிக் சி.எஸ். லக்ஷ்மி Ayshwarya Shankaranarayanan சி.சு.செல்லப்பா சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி சியாம் பாரதி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. அருண் பிரசாத் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுகாந்தொ பட்டாச்சார்யா சுகுமார் ராய் சுசித்ரா பட்டாச்சாரியா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தரம் செல்லப்பா சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுனீல் கங்கோபாத்யாய் சுபத்ரா ரவிச்சந்திரன் சுபிமல் மிஸ்ரா சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் சௌதிக் பிஸ்வாஸ் ஜகதீஷ் சந்திர போஸ் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜான்பால் ரொசாரியோ ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜ���ஷுவா ராத்மான் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீபனானந்தா தாஸ் ஜீவ கரிகாலன் ஜீவன் பென்னி ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தா டே ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேன் ஹெர்ஷ்ஃபீல்ட் ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜொய் கோஸ்வாமீ ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த. நரேஸ் நியூட்டன் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தஸ்லிமா நஸ்ரின் தாட்சாயணி தாமரைக்கண்ணன் தாராசங்கர் பந்த்யோபாத்யாய் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் திலீபன் தீபேஷ் சக்ரபர்த்தி தீப் ஹல்தர் தென்கரை மகாராஜன் தெரிசை சிவா தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் தைஸ் லைஸ்டர் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நபரூன் பட்டாச்சார்யா நம்பி நரசய்யா நரேன் நரோபா நளினி நவநீதா தேவ் சென் நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகிலேஷ் குஹா நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு ravishankar குழு பத்மகுமாரி பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்மா ஸச்தேவ் பத்ரி சேஷாத்ரி பனபூல் பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி பா ராமானுஜம் Pa Saravanan பா.சுதாகர் பா.தேசப்பிரியா பானு கபில் பானுமதி ந. பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan பாஸ்கர் ஆறுமுகம் Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் பிபூதிபூஷன் பந்த்யோபாத்யாய் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபீர் சென் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புத்ததேவ போஸ் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம. செ. ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுமிதா மதுரபாரதி மதுரா மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் அரவிந்த டி ரெங்கநாதன் மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலேசியா ஸ்ரீகாந்தன் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாணிக் பந்தோபாத்யாய மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மாயா ஏஞ்சலொ மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ம இராமச்சந்திரன் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி முனைவர் ராஜேந்திர பிரசாத் நா மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோதி நந்தி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரக்ஷன் கிருதிக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரபீந்திர நாத் தாகூர் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமநாத் ராய் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ரிச்சர்ட் ரூஸ்ஸோ ருகையா ஷகாவத் ஹுசென் ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோகிணி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லாவண்யா சுந்தரராஜன் லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகமாதேவி லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வசந்ததீபன் வண்ணநிலவன் வர்ஜீனியா வுல்ஃப் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜயகுமார் சம்மங்கரை விஜயலக்ஷ்மி விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வித்யா அருண் விபீஷணன் விருட்சன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேங்கட ராகவன் நா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷாங்க்யா கோஷ் ஷாதிர் ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸிர்ஷோ பந்தோபாத்யா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் கின்சர் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாரலாம்பி மார்கோவ் ஹாலாஸ்யன் ஹுமாயுன் அஹமத் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் அக்டோபர் 2021 செப்டம்பர் 2021 ஆகஸ்ட் 2021 ஜூலை 2021 ஜூன் 2021 மே 2021 ஏப்ரல் 2021 மார்ச் 2021 பிப்ரவரி 2021 ஜனவரி 2021 டிசம்பர் 2020 நவம்பர் 2020 அக்டோபர் 2020 செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும். எழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nஆன்கர் எஃப்.எம். (anchor.fm) 4\nயூடியுப் – ஒளிவனம் (YouTube) 3\nசவுண்ட் கிளவுட் (SoundCloud) 1\nஎழுத்தாளர் அம்பை: சொல்வனம் சிறப்பிதழ்கள் 0\nரொபெர்த்தோ பொலான்யோ ஆக்கங்களும் விமர்சனங்களும் 0\nவீடும் வெளியும்: கவிதைகள���ம் கதைகளும் 0\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவங்கச் சிறப்பிதழ் 1: 240\nவங்கச் சிறப்பிதழ் II: 241\nவி. எஸ். நைபால்: 194\nகவிதை பற்றி புதுமைப்பித்தன் கூறியவற்றுள் சில\nவிஞ்ஞான வளர்ச்சியின் வளர்ச்சி- 2\nபெருந்தேவிக்கு பி. ஜி. உடௌஸ் வேண்டாம்\nசோ - ஒரு தன்னிகரற்ற நிகழ்வு\nஆட்டத்தின் ஐந்து விதிகள் (8)\nஇந்து தர்மமும் அதன் கலாசாரப் போர்களும் (14)\nஇவர்கள் இல்லையேல் – நாவல் (3)\nகாவிய ஆத்மாவைத் தேடி (3)\nசட்டமும் செயற்கை நுண்ணறிவும் (2)\nதலை சிறந்த 10 தொழில்நுட்பம் (11)\nதேர்ந்த வாசகருக்கான படப்புத்தகம் (2)\nநோயாளி எண் பூஜ்யம் (2)\nபய வியாபாரியா ஹிட்ச்காக் (2)\nபேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் (4)\nமிளகு: இரா முருகன் – நாவல் (7)\nமுதலியத்தை எதிர்க்கும் பொதுமம் (1)\nமொபைல் தொடர்பாடல் வரலாறு (2)\nவண்ணநிலவன் நாவல்கள் பற்றி (2)\nஸ்லாட்டர்ராக்- தாமஸ் டிஷ் (2)\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nஎழுத்தாளர் இரா முருகனின் சரித்திரத் தொடர் நாவல் “மிளகு” அத்தியாயம் - ஏழு 1999 அம்பலப்புழை 35:47\nஎழுத்தாளர் தி.ஜானகிராமன் எழுதிய சிறுகதை \"செய்தி\" 21:56\nஇந்திரா காந்தி – சூழியல் அரசியலின் முன்னோடி\nசிகரெட் மற்றும் புகையிலை சர்ச்சைகள் – பகுதி 3\nஓய்வுக் காலச் சேமிப்பும் அதை அபகரிக்க அரசாங்கம் நடத்தும் போரும்\nby கடலூர் வாசு\t ஆகஸ்ட் 22, 2021\nby கா.ரபீக் ராஜா\t ஆகஸ்ட் 22, 2021\nby லியோ டால்ஸ்டாய்\t ஆகஸ்ட் 22, 2021\n”ஆசிய அமெரிக்கர்கள்” – அமெரிக்காவில் மிகையாகும் வெறுப்பரசியல்\nby லதா குப்பா\t ஆகஸ்ட் 22, 2021\nகாவிய ஆத்மாவைத் தேடி… – 2\nby ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன்\t ஆகஸ்ட் 22, 2021\nபேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்\nby பானுமதி ந.\t ஆகஸ்ட் 22, 2021\nமூத்த கதைசொல்லி – டெம்சுலா ஆவ்\nby கோரா\t ஆகஸ்ட் 22, 2021\nதொட்டாலே கண் எரியும் மிளகாயா\nby லோகமாதேவி\t ஆகஸ்ட் 22, 2021\nஷோபா சக்தியின் ‘கொரில்லா’ – ஒரு பார்வை\nby ராஜேஷ் சந்திரா\t ஆகஸ்ட் 22, 2021\nஉங்கள் மின்னஞ்சல், படைப்புகளை அனுப்ப முகவரி: solvanam.editor@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arisenshine.in/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-10-19T11:54:21Z", "digest": "sha1:UEJI7NZHI2YRII7IY7EFUIWAQF62J4LO", "length": 5698, "nlines": 80, "source_domain": "www.arisenshine.in", "title": "பாவம் – Arise n shine", "raw_content": "\nஎந்த வயதில் தேவனுக்கு ஊழிய��் செய்யலாம்\n1 தீமோத்தேயு:2.5 – தினத்தியானம்\nஇயேசு-லேகியோன் சந்திப்பு – பாகம் 7\nதேவனிடம் சமரசம் செய்ய விரும்புகிறோமா\nஇயேசு-லேகியோன் சந்திப்பு – பாகம் 6\nகுடும்ப நபர்களுக்காக எப்படி ஜெபிக்கிறோம்\nஇயேசு-லேகியோன் சந்திப்பு – பாகம் 7\nஇந்த வேதப்பாடத்தில் லேகியோன் பிசாசின் தன்மைகளை குறித்து நாம் படித்து வரும் நிலையில், மாற்கு:5.9-ல் பிசாசு பிடித்த மனிதனிடம் இயேசு பெயரை கேட்கிறார். அதற்கு அவன், நாங்கள் அநேகர் என்பதால், என் பேர் லேகியோன் என்று கூறுகிறான்.\nவேதத்தில் கழுதைகள் – பாகம் 11\nஎல்லாரும் இயேசுவின் 2ம் வருகையில் போக முடியுமா\nஎந்த வயதில் தேவனுக்கு ஊழியம் செய்யலாம்\n1 தீமோத்தேயு:2.5 – தினத்தியானம்\nஇயேசு-லேகியோன் சந்திப்பு – பாகம் 7\nதேவனாகிய கர்த்தர் தாம் மனுஷனில் எடுத்த விலா எலும்பை மனுஷியாக உருவாக்கி, அவளை மனுஷனிடத்தில் கொண்டு வந்தார். ஆதியாகமம்:2.22\nஎந்த வயதில் தேவனுக்கு ஊழியம் செய்யலாம்\nதேவனுக்கு ஊழியம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இரட்சிக்கப்பட்ட எல்லாருக்கும் இருக்கிறது. ஆனால் அதன் பின்னணியில் எந்த வயதில் அவருக்கு ஊழியம் செய்யலாம்\n1 தீமோத்தேயு:2.5 – தினத்தியானம்\nதேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே. 1 தீமோத்தேயு:2.5\nஎந்த வயதில் தேவனுக்கு ஊழியம் செய்யலாம்\n1 தீமோத்தேயு:2.5 – தினத்தியானம்\nஇயேசு-லேகியோன் சந்திப்பு – பாகம் 7\nதேவனிடம் சமரசம் செய்ய விரும்புகிறோமா\nஇயேசு-லேகியோன் சந்திப்பு – பாகம் 6\nஎந்த வயதில் தேவனுக்கு ஊழியம் செய்யலாம்\n1 தீமோத்தேயு:2.5 – தினத்தியானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.noolaham.org/wiki/index.php/The_Cooperator_1969.02.15_(7.21)", "date_download": "2021-10-19T11:58:54Z", "digest": "sha1:YIZ7PGGWC2E6FZJ4JEDPMBDDIRPCJPB6", "length": 2628, "nlines": 45, "source_domain": "www.noolaham.org", "title": "The Cooperator 1969.02.15 (7.21) - நூலகம்", "raw_content": "\nசுழற்சி மாதம் இரு இதழ்\nThe Cooperator 1969.02.15 (7.21) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [11,760] இதழ்கள் [13,280] பத்திரிகைகள் [53,303] பிரசுரங்கள் [1,125] நினைவு மலர்கள் [1,513] சிறப்பு மலர்கள் [5,516] எழுத்தாளர்கள் [4,874] பதிப்பாளர்கள் [4,171] வெளியீட்டு ஆண்டு [185] குறிச்சொற்கள் [91] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,157]\n1969 இல் வெளியான பத்திரிகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/today-rasi-palan-12-10-2021/", "date_download": "2021-10-19T11:55:10Z", "digest": "sha1:Y4QT5YXC4MN53ESREJGCOG4KK42JQYWN", "length": 19893, "nlines": 169, "source_domain": "www.tamilstar.com", "title": "இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் 12 – 10 – 2021 - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி இன்றைய ராசிபலன் 12 – 10 – 2021\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி இன்றைய ராசிபலன் 12 – 10 – 2021\nமேஷம்: இன்று காரிய தடை, தாமதம் உண்டாகலாம். திடீர் மனவருத்தம் ஏற்பட்டு நீங்கும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. பணதேவை ஏற்பட்டாலும் அதை திறமையாக சமாளித்து விடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டாலும் அதை சமாளித்து முன்னேறுவீர்கள். எல்லா வகையிலும் நன்மை உண்டாகும். மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும். விட்டு சென்ற நண்பர் மீண்டும் வந்து சேர்வார். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 2, 9\nரிஷபம்: இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணிகளில் அலட்சியம் காட்டாமல் செயல்படுவது நல்லது. குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை காணப்பட்டாலும் குடும்ப உறுப்பினர்களுக்காக மருத்துவ செலவு செய்ய வேண்டி இருக்கலாம். பெண்கள் நன்மை தீமை பற்றிய கவலை இல்லாமல் எதையும் செய்ய முற்படுவீர்கள். நட்பு வட்டத்தில் நிதானமாக பழகுவது நல்லது. சகோதரர்கள் மற்றும் உறவினர்களிடம் பேசும்போதும் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்கள்: 1, 3\nமிதுனம்: இன்று கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. பிள்ளைகளை அவர்களின் போக்கிலேயே விட்டு பிடிப்பது நன்மை தரும். மற்றவர்களால் ஏற்படும் தொல்லைகளில் சிக்காமல் இருக்க கவனமாக செயல்படுவது நல்லது. எதிர்ப்புகள் குறையும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சலும், டென்ஷனும் ஏற்பட்டு நீங்கும். வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. க���வன், மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: பச்சை, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 5, 7\nகடகம்: இன்று மாணவர்களுக்கு கல்வியில் மெத்தன போக்கு காணப்படும். மிகவும் கவனமாக படிப்பது கல்வியில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும். எதிர்பார்த்த காரியம் தாமதமாக முடியும். ஆனால் நல்ல பலனை தரும். குடும்பம் பற்றிய கவலைகள் ஏற்பட்டாலும் அவை நீங்குவதுடன் உடல் ஆரோக்கியமும் அடையும். மாணவர்களுக்கு செயல்திறமை அதிகரிக்கும். உயர்கல்வி கற்பவர்கள் கூடுதல் கவனத்துடன் பாடங்களை படிப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, வெளிர் மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7, 9\nசிம்மம்: இன்று வீண்செலவு ஏற்பட்டாலும் அதை சமாளிக்கும் விதத்தில் வரவும் இருக்கும். பயணங்கள் மூலம் அலைச்சல் அதிருப்தி உண்டாகலாம். கனவுகளால் தொல்லை ஏற்படலாம். சரியான நேரத்தில் தூங்க முடியாத சூழ்நிலை உருவாகும். உஷ்ண சம்பந்தமான நோய் உண்டாகலாம். கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பாராத அலைச்சல் ஏற்படலாம். குடும்பத்தில் இருப்பவர்கள் எதையும் வெளிக்காட்டாமல் உங்களுடன் இன்முகம் கொடுத்து பேசுவார்கள். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பிரவுண் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nகன்னி: இன்று தொழில் வியாபாரத்தில் பணத்தேவை ஏற்படலாம். கடன் விவகாரங்களில் கவனமாக செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஓய்வு இல்லாமல் பணியாற்ற வேண்டி இருக்கும். இயந்திரம், நெருப்பு, ஆயுதத்தை பயன்படுத்துவோர் மிகவும் கவனமாக இருப்பது அவசியம். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வாகனம் வாங்கும் அல்லது புதுப்பிக்கும் பணியில் ஈடுபடுவீர்கள். பயணம் மூலம் சாதகமான பலன் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9\nதுலாம்: இன்று குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனைகள் உருவாகலாம். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டாலும் சரியாகிவிடும். வீடு, வாகனம் தொடர்பான செலவுகள் உண்டாகலாம். பிள்ளைகளுக்காக கூடுதல் செலவு செய்ய வேண்டி இருக்கும். உறவினர்களிடம் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு நன்மை அளிக்கக் கூடிய வாரமாக அமையும். சக பணியாளார்கள் உங்களுக்கு தொல்லை தருவதாக அமையும். அதிர்ஷ்ட நிறம்: கருநீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 9\nவிருச்சிகம்: இன்று மற்றவர்களின் வேலைகளுக்காக அலைய நேரிடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மாணவர்கள் கல்வியை தவிர மற்றவைகளில் கவனத்தை சிதற விடலாம். வாகனங்களில் செல்லும் போதும் எச்சரிக்கையாக செல்வது நல்லது. குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். கணவன், மனைவிக்கிடையே திருப்தியான உறவு காணப்படும். பிள்ளைகள் கல்வியிலும் மற்ற வகையிலும் சிறந்து விளங்குவார்கள். அதிர்ஷ்ட நிறம்: நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 5, 6\nதனுசு: இன்று காரியதடை, வீண் அலைச்சல் டென்ஷன் உண்டாகலாம். கவனம் தேவை. குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். எல்லாவற்றிலும் சாதகமான பலனே கிடைக்கும். பொருளாதார முன்னேற்றம் பணவரவில் திருப்தி ஆகியவை இருக்கும். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பெண்கள் அடுத்தவர்களிடம் பேசும் போது கவனமாக பேசுவது சிறந்தது. அலுவலகத்தில் எச்சரிக்கையாக இருங்கள். நீங்கள் பொறுமையை கடைப்பிடித்து வெற்றி காண்பீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 7\nமகரம்: இன்று உடல் ஆரோக்கியம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் இருந்த தொய்வு நீங்கி வேகம் பிடிக்கும். எதிர்பார்த்த ஆர்டர் கிடைக்கும். லாபம் கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் செயல்திறன் அதிகரிக்கும். மேல் அதிகாரிகளின் பாராட்டும், பதவி உயர்வும் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண எடுக்கும் முயற்சிகள் கைகூடும். நீங்கள் பொறுமையைக் கடைபிடித்தால் அனைத்து காரியங்களிலும் வெற்றிதான். அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nகும்பம்: இன்று புதிய வேலை தேடுபவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகள் மூலம் பெருமை ஏற்படும். உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் உண்டாகும். பெண்கள் சிறிய அளவில் நன்மையையும், பொறுமையையும் பெறக்கூடிய கால கட்டம், வேண்டிய அளவில்கிடைக்காவிட்டாலும் ஒரு சிறிய சன்மானம் உங்களுக்கு கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 6, 9\nமீனம்: இன்று திருமணம் தொடர்பான பேச்சுகள் சாதகமாக முடியும். வீடு, வாகனம் வாங்குவது அல்லது புதுப்பிப்பதில் ந��ட்டம் அதிகரிக்கும். எடுத்த காரியத்தை திறமையாக செய்து முடிப்பீர்கள். பணபுழக்கம் திருப்தி தரும். மதிப்பு மரியாதை அதிகரிக்கும். மாணவர்கள் உணர்ச்சிவசப்பட்டு யாரிடமும் எந்த ரகசியத்தையும் சொல்ல வேண்டாம். தொழில் வியாபாரம் சுமாராக நடக்கும். கடன் தொல்லை தலைதூக்கலாம். அடுத்தவர்களுக்காக எந்த பொறுப்பையும் ஏற்காமல் இருப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 5, 7\nஅரண்மனை 3 திரை விமர்சனம்\nஜமீன்தாராக இருக்கும் சம்பத், ஒரு திருமணத்தை தலைமை தாங்கி நடத்தி வைக்க செல்கிறார். சென்ற இடத்தில் மணப்பெண்ணான...\nவிநோதய சித்தம் திரை விமர்சனம்\nகனடாவில் கண்டெடுக்கப்பட்ட 4,000 ஆண்டுகள் பழமையான கத்தி\nகனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொவிட்-19 தொற்றினால் 1,353பேர் பாதிப்பு- 11பேர் உயிரிழப்பு\nகனேடியப் படையினரில் 90% பேர் முழுமையாகத் தடுப்பூசி பெற்றனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyaagarathi.com/case-of-si-beating-farmer-to-death-attur-magistrates-inquiry/", "date_download": "2021-10-19T13:02:31Z", "digest": "sha1:PG5YYCKJO53RHHD5K3WJ37TT6NGSPRZ2", "length": 14528, "nlines": 167, "source_domain": "puthiyaagarathi.com", "title": "விவசாயியை எஸ்ஐ அடித்து கொன்ற வழக்கு; ஆத்தூர் மாஜிஸ்ட்ரேட் விசாரணை! - புதிய அகராதி", "raw_content": "Tuesday, October 19மெய்ப்பொருள் காண்பது அறிவு\nவிவசாயியை எஸ்ஐ அடித்து கொன்ற வழக்கு; ஆத்தூர் மாஜிஸ்ட்ரேட் விசாரணை\nசேலத்தில், காவல்துறை எஸ்ஐ விவசாயியை அடித்துக் கொன்ற சம்பவம் குறித்து ஆத்தூர் நீதித்துறை நீதிமன்ற நடுவரின் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.\nஜூன் 22ம் தேதி மாலை,\nகீழே சரிந்து விழுந்தார் முருகேசன்.\nசிகிச்சை பெற்று வந்த முருகேசனை,\nஜூன் 23ம் தேதி அதிகாலையில்\nஇந்த சம்பவம் பொதுவெளியில் மட்டுமின்றி, அரசியல் தளத்திலும் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, சிறப்பு எஸ்ஐ பெரியசாமி மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர் உடனடியாக கைது செய்யப்பட்டார். அடுத்த சில நிமிடங்களில் அவரை சேலம் மாவட்ட எஸ்பி ஸ்ரீஅபிநவ் பணியிடைநீக்கமும் செய்தார்.\nஇச்சம்பவம் குறித்து மாவட்ட எஸ்பி மட்டுமின்றி சேலம் சரக டிஐஜி மகேஸ்வரியும் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.\nஉயிரிழந்த முருகேசனின் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.\nகைதான எஸ்எஸ்ஐ பெரி��சாமி ஆத்தூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிமன்ற உத்தரவின்பேரில் அவர் ஆத்தூர் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டார்.\nகாவல்துறையினர் பாதுகாப்பில் இருக்கும் ஒருவர் இறக்க நேரிட்டார் சிஆர்பிசி சட்டப்பிரிவு 176ன் கீழ் மாஜிஸ்ட்ரேட் மூலம் நேரடியாக விசாரிக்கப்பட வேண்டும். அதன்படி, இந்த சம்பவத்தில் உண்மையில் என்ன நடந்தது என்பது குறித்து ஆத்தூர் நீதித்துறை நீதிமன்ற நடுவர் ரங்கராஜ் பாதிக்கப்பட்ட முருகேசனின் குடும்பத்தினர் மற்றும் சம்பவத்தின் போது முருகேசனுடன் வந்திருந்த அவருடைய நண்பர்கள், சம்பவ இடத்தில் இருந்த காவல்துறையினர், வனத்துறையினர் ஆகியோரிடம் விசாரணை நடத்தின வருகிறார்.\nதவிர, காவல்துறை தரப்பில் ஆத்தூர் டிஎஸ்பி இமானுவேல் ஞானசேகரன், விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ளார்.\nஇது தொடர்பாக சேலம் சரக டிஐஜி மகேஸ்வரியிடம் கேட்டபோது, ”முதல்கட்ட தகவலின்பேரில் ஏத்தாப்பூர் எஸ்எஸ்ஐ பெரியசாமி மீது கொலை வழக்குப்பதியப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கு குறித்து ஆத்தூர் மாஜிஸ்ட்ரேட் விசாரணை நடந்து வருகிறது. காவல்துறை தரப்பில் ஆத்தூர் டிஎஸ்பியை விசாரணை அதிகாரியாக நியமித்திருக்கிறோம். இருதரப்பு விசாரணை அறிக்கையும் வந்த பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.\nகடந்த 6 மாதத்திற்கு முன்புதான்\nஅவர் சேலம் மாநகர காவல்துறையில்\nஇதுவரையிலான பணிக்காலத்தில் பெரியசாமியின் செயல்பாடுகள் எப்படி இருந்தது, பணிக்காலத்தில் அவர் மீது ஏதேனும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதா, பணிக்காலத்தில் அவர் மீது ஏதேனும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.\nPosted in குற்றம், சேலம், முக்கிய செய்திகள்\nPrevசேலத்தில் ஒரு சாத்தான்குளம்; விவசாயியை அடித்துக் கொன்ற போலீஸ்\nNextசேலம் பெரியார் பல்கலை புதிய துணைவேந்தராக ஜெகன்நாதன் நியமனம்\nபுற்றுநோயை குணமாக்கும் ஷிமோகா வைத்தியர்; நல்லதை நாலு பேருக்கு சொல்லலாமே\nஆளுங்கட்சியிடம் தஞ்சம் புகுந்த ஊழல் மாஜி துணைவேந்தர் தோண்டி துருவும் லஞ்ச ஒழிப்புத்துறை\nசேலம் மாநகராட்சியில் குப்பை வண்டிகள் வாங்கியதிலும் கொள்ளை\nதேவதாசி முறை ஒழிப்பு போராளி முத்துலட்சுமி ரெட்டி\nசட்டம் ���றிவோம்: குழந்தையை தத்து எடுப்பது எப்படி\nஉடுமலை சங்கர் ஆணவக்கொலை வழக்கில் பரபரப்பு தீர்ப்பு; கவுசல்யாவின் தந்தை உள்பட 6 பேருக்கு இரட்டை தூக்கு\n கம்பனே குழம்பிய தருணம் எது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://battimedia.lk/%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2021-10-19T10:58:39Z", "digest": "sha1:U6O65GHSZRPYCPITIDFDQDB2RLKTR22R", "length": 7764, "nlines": 115, "source_domain": "battimedia.lk", "title": "ஓட்டமாவடி மஜ்மா நகர் பகுதியில் இதுவரை 850 உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன. - Battimedia", "raw_content": "\nHome செய்திகள் கிழக்கு ஓட்டமாவடி மஜ்மா நகர் பகுதியில் இதுவரை 850 உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன.\nஓட்டமாவடி மஜ்மா நகர் பகுதியில் இதுவரை 850 உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன.\nகொரோனா தொற்றின் மூன்றாவது அலையின்போது தொற்றினால் மரணமடைந்த நபர்களின் உடல்கள் நல்லடக்கத்துக்காக நாளொன்றுக்கு 15 – 20 வரை வருகின்றன என்று ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌபர் தெரிவித்தார்.\nகடந்த மார்ச் மாதம் 5 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட பணிகள் இன்றுவரை ஓட்டமாவடி மஜ்மா நகர் பகுதியில் மிகவும் சிறப்பான முறையில் இடம்பெற்று வருவதாக தவிசாளர் மேலும் தெரிவித்தார்.\nகுறித்த நல்லடக்கப் பணிகள் இடம்பெறும் இடத்தில் அவசியம் காணப்பட்ட முக்கிய தேவைகள் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளன.\nதற்போது சடலங்கள் நல்லடக்கம் செய்யப்பட்டு வரும் மஜ்மா நகர் பகுதியில் இடப்பற்றாக்குறை நிலவும் பட்சத்தில் தொடர்ந்தும் உடல்களை நல்லடக்கம் செய்ய கிரான் பிரதேச செயலாளர் மற்றும் ஓட்டமாவடி பிரதேச சபை ஆகிய பிரதேச எல்லைக்குட்பட்ட சாப்பமடு எனும் பகுதியை அடையாளப்படுத்தி அதில் நல்லடக்கம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாகவும் தவிசாளர் தெரிவித்தார்.\nஓட்டமாவடி மஜ்மா நகர் பகுதியில் இன்று முதலாம் திகதி வியாழக்கிழமை பிற்பகல் 2.30 மணி வரை 850 உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 806 முஸ்லிம்களின் உடல்களும், 17 கிறிஸ்தவர்களின் உடல்களும், 16 இந்துக்களின் உடல்களும், 9 பௌத்தர்களின் உடல்களும் மற்றும் 2 வெளிநாட்டு பிரஜைகளின் உடல்களும் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன தவிசாளர் ஏ.எம்.நெளபர் தெரிவித்தார்.\nPrevious articleகல்முனையின் மருதமுனைப் பிரதேசம் முற்றாக முடக்கப்படாது.\nNext articleஅஸ்ட்ராசெனிகா முதலாம் கட்டத் தடுப்பூசி, இரண்டாம் கட்டத் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதற்கு இடையிலான கால இடைவெளி 45 வாரங்கள் வரை நீடித்தாலும்கூட நோயெதிர்ப்புச் சக்தி மேம்பாடு அடையும்.\nமட்டக்களப்பின் எல்லைக் கிராமங்களை பாதுகாக்கும் பணியினை ஆரம்பித்து வைத்த தமிழ் இளையோர் மக்கள் இயக்கம்\nதடுப்பூசி போடாத எந்த ஆசிரியரும் வகுப்பறைக்குள் நுழையமுடியாது.\nதிருகோணமலையில் சட்டவிரோதமாக சுறா பிடிப்பு.\nஅனைத்து விதமான செய்திகளையும் உடனுக்குடன் அறிந்துக்கொள்ள தொடர்ந்தும் இணைந்திருங்கள். ஊடகவியலாளர்களாக இணைய விரும்புபவர்களும் தொடர்புகொள்ளவும் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://battimedia.lk/%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-12/", "date_download": "2021-10-19T12:44:36Z", "digest": "sha1:JYNAFO7EW2Z5YQ77FXHCD2USS2HH6JRX", "length": 10267, "nlines": 116, "source_domain": "battimedia.lk", "title": "மட்டக்களப்பு மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐவரின் பங்குபற்றுதலுடன் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இடம்பெற்றது. - Battimedia", "raw_content": "\nHome மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐவரின் பங்குபற்றுதலுடன் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இடம்பெற்றது.\nமட்டக்களப்பு மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐவரின் பங்குபற்றுதலுடன் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இடம்பெற்றது.\nமட்டக்களப்பு மாவட்டத்திற்கான ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் மாவட்டத்தின் ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் இன்று (29) மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.\nமாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமாகிய கே. கருணாகரனின் ஏற்பாட்டில் பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் இக்கூட்டம் இடம்பெற்றது.\nஇதன்போது கடந்த ஆண்டில் மாவட்டத்தில் மெற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாகவும் இவ்வாண்டு நடைமுறைப்படுத்துவதற்காக முன்மொழியப்பட்டுள்ள திட்டங்களுக்கான அனுமதியினை பெற்றுக்கொள்வது தொடர்பாகவும் ஆராயப்பட்டன.\nமேலும் இம்மாவட்டத்தின் பொருளாதாரம், கல்வி, சுகாதாரம், சமுர்த்தி, சுற்றாடல் உட்பட அனைத்து திணைக்களங்���ள் சார் விடயங்களும் ஆராயப்பட்டதுடன் அவற்றில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.\nஇவற்றில் கிழக்கு மாகாண சபையின் ஒதுக்கீட்டிலான அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான முன்னேற்றங்களும், அரச சார்பற்ற நிறுவனங்களினால் மேற்கொள்ளப்படவுள்ள திட்டங்கள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டது.\nஇதுதவிர மாவட்டத்தின் விவசாயிகள் எதிர் கொள்ளும் நீர் பிரச்சினை தொடர்பாகவும், குளங்கள் தொடர்பான அபிவிருத்தி தொடர்பாகவும், காட்டு யானைகளின் தாக்கத்திலிருந்து விவசாய நிலங்களைப் பாதுகாக்க யானை வேலி அமைப்பது தொடர்பாகவும் இதன்போது ஆராயப்பட்டது.\nஇக்கூட்டத்தில் பின்தங்கிய கிராமிய அபிவிருத்தி மற்றும் மனைசார் கால்நடை வளர்ப்பு, சிறு பொருளாதாரப் பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன், பாராளுமன்ற உறுப்பினர்களான நஸீர் அஹமட், கோவிந்தன் கருணாகரம், இரா.சாணக்கியன், மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந், காணிப்பிரிவிற்கான மேலதிக அரசாங்க அதிபர் நவரூபரஞ்ஜினி முகுந்தன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் சசிகலா புண்ணியமூர்த்தி, உதவி மாவட்ட செயலாளர் ஏ. நவேஸ்வரன், மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் டினேஸ் கருணாநாயக்க, இராணுவ தரப்பு பிரதானி, கிழக்கு மாகாண பிரதி பிரதம செயலாளர் (திட்டமிடல்), உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள் ஏனைய திணைக்களங்களின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.\nPrevious articleமட்டக்களப்பு பார் வீதியில் உள்ள பிரபல விடுதி உரிமையாளர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nNext articleமட்டக்களப்பு கள்ளியங்காடு “ஹப்பி கிட்ஸ் பஃன் வேல்ட்” சிறுவர் உலகம் மீண்டும் ஆரம்பம்\nபாடசாலைகள் மிண்டும் 21ம் திகதி ஆரம்பம் 52536 மாணவர்கள் பாடசாலைக்கு வருகை தரவுள்ளனர்.\nவிவசாயத்துக்கான உரத்தை வழங்கக் கோரி, மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று (18) பரவலாக ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றன.\nமட்டக்களப்பின் எல்லைக் கிராமங்களை பாதுகாக்கும் பணியினை ஆரம்பித்து வைத்த தமிழ் இளையோர் மக்கள் இயக்கம்\nஅனைத்து விதமான செய்திகளையும் உடனுக்குடன் அறிந்துக்கொள்ள தொடர்ந்தும் இணைந்திருங்கள். ஊடகவியலாளர்களாக இணைய விரும்புபவர்களும் தொடர்புகொள்ளவும் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1754763", "date_download": "2021-10-19T11:22:26Z", "digest": "sha1:MSX773L6N73VVFUAQFSGHOMRK4YRFQYU", "length": 8386, "nlines": 20, "source_domain": "pib.gov.in", "title": "நிதி அமைச்சகம்", "raw_content": "2021-22 முதல் காலாண்டில் நிர்ணயிக்கப்பட்ட மூலதனச் செலவை 11 மாநிலங்கள் எட்டியுள்ளன: கூடுதலாக ரூ. 15,721 கோடி கடனாகப் பெற அனுமதி\n2021-22 முதல் காலாண்டில் மத்திய நிதி அமைச்சகத்தால் நிர்ணயிக்கப்பட்ட அளவிலான மூலதனச் செலவை 11 மாநிலங்கள் எட்டியுள்ளன. இதையடுத்து, ஆந்திரப்பிரதேசம், பிகார், சத்தீஸ்கர், ஹரியானா, கேரளா, மத்தியப்பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, நாகாலாந்து, ராஜஸ்தான் மற்றும் உத்தராகண்ட் ஆகிய 11 மாநிலங்கள் ஊக்கத்தொகையாக, கூடுதலாக ரூ. 15,721 கோடி கடனாகப் பெற செலவினத்துறை அனுமதி அளித்துள்ளது. மாநிலங்களின் மூலதனச் செலவை அதிகரிப்பதற்கு கூடுதல் நிதி ஆதாரங்கள் உதவிகரமாக இருக்கும்.\nகூடுதல் கடனைப் பெறுவதற்கு 2021-22ஆம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட மொத்த இலக்கில் 15 சதவீதத்தை முதல் காலாண்டிலும், 45 சதவீதத்தை இரண்டாவது காலாண்டிலு,ம் 70 சதவீதத்தை மூன்றாவது காலாண்டிலும், மார்ச் 31, 2022 இல் 100 சதவீத இலக்கையும் மாநிலங்கள் அடைய வேண்டும்.\nமாநிலங்களின் மூலதனச் செலவின் அடுத்த ஆய்வை செலவினத் துறை வரும் டிசம்பர் மாதம் மேற்கொள்ளும். அப்போது செப்டம்பர் 30, 2021 வரை மாநிலங்கள் மேற்கொண்டுள்ள மூலதனச் செலவுகள் மதிப்பீடு செய்யப்படும். அதன் பிறகு 2022 மார்ச் மாதத்தில் முதல் மூன்று காலாண்டுகளுக்கான மூலதனச் செலவின் அடிப்படையில் மூன்றாவது ஆய்வு நடத்தப்படும். இறுதிக்கட்ட ஆய்வு 2022 ஜூன் மாதத்தில் மேற்கொள்ளப்படும். 2021-22ஆம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட மூலதனச் செலவுத் தொகையுடன் ஒப்பிடுகையில் இந்தக் காலகட்டத்திற்கான மாநிலத்தின் ஒட்டுமொத்த மூலதனச் செலவு குறைவாக இருப்பின், 2022-23ஆம் ஆண்டில் மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் கடன் தொகையில் அது சரி செய்யப்படும்.\nமேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:\n2021-22 முதல் காலாண்டில் நிர்ணயிக்கப்பட்ட மூலதனச் செலவை 11 மாநிலங்கள் எட்டியுள்ளன: கூடுதலாக ரூ. 15,721 கோடி கடனாகப் பெற அனுமதி\n2021-22 முதல் காலாண்டில் மத்திய நிதி அமைச்சகத்தால் நிர்ணயிக்கப்பட்ட அளவிலான மூலதனச் செலவை 11 மாநிலங்கள் எட்டியுள்ளன. இதையடுத்து, ஆந்திரப்பிரதேசம், பிக��ர், சத்தீஸ்கர், ஹரியானா, கேரளா, மத்தியப்பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, நாகாலாந்து, ராஜஸ்தான் மற்றும் உத்தராகண்ட் ஆகிய 11 மாநிலங்கள் ஊக்கத்தொகையாக, கூடுதலாக ரூ. 15,721 கோடி கடனாகப் பெற செலவினத்துறை அனுமதி அளித்துள்ளது. மாநிலங்களின் மூலதனச் செலவை அதிகரிப்பதற்கு கூடுதல் நிதி ஆதாரங்கள் உதவிகரமாக இருக்கும்.\nகூடுதல் கடனைப் பெறுவதற்கு 2021-22ஆம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட மொத்த இலக்கில் 15 சதவீதத்தை முதல் காலாண்டிலும், 45 சதவீதத்தை இரண்டாவது காலாண்டிலு,ம் 70 சதவீதத்தை மூன்றாவது காலாண்டிலும், மார்ச் 31, 2022 இல் 100 சதவீத இலக்கையும் மாநிலங்கள் அடைய வேண்டும்.\nமாநிலங்களின் மூலதனச் செலவின் அடுத்த ஆய்வை செலவினத் துறை வரும் டிசம்பர் மாதம் மேற்கொள்ளும். அப்போது செப்டம்பர் 30, 2021 வரை மாநிலங்கள் மேற்கொண்டுள்ள மூலதனச் செலவுகள் மதிப்பீடு செய்யப்படும். அதன் பிறகு 2022 மார்ச் மாதத்தில் முதல் மூன்று காலாண்டுகளுக்கான மூலதனச் செலவின் அடிப்படையில் மூன்றாவது ஆய்வு நடத்தப்படும். இறுதிக்கட்ட ஆய்வு 2022 ஜூன் மாதத்தில் மேற்கொள்ளப்படும். 2021-22ஆம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட மூலதனச் செலவுத் தொகையுடன் ஒப்பிடுகையில் இந்தக் காலகட்டத்திற்கான மாநிலத்தின் ஒட்டுமொத்த மூலதனச் செலவு குறைவாக இருப்பின், 2022-23ஆம் ஆண்டில் மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் கடன் தொகையில் அது சரி செய்யப்படும்.\nமேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akuranatoday.com/45982/", "date_download": "2021-10-19T11:28:01Z", "digest": "sha1:G45XPAIS4B6W6JYCVV4H45SPNVBDS7TP", "length": 3274, "nlines": 65, "source_domain": "www.akuranatoday.com", "title": "மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும்! - Akurana Today", "raw_content": "\nகொவிட்-19 வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்குமானால்\nமாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்தை கட்டுப்படுத்துவது குறித்து ஆராயப்படும் என்று சுகாதார அமைச்சின் பேச்சாளர் வைத்தியர் ஜயருவான் பண்டார தெரிவித்தார்.\nசுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று ( 12) திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டபோதே இதனைத் தெரிவித்தார்\nசமூகப் பரவலைத் தடுப்பதற்கு அடிப்படை சுகாதார வசதிகளை பின்பற்றுவது மாத்திரமின்றி ஒவ்வொருவரும் உண்மை நிலைமையை வெளிப்படுத்துவ���ும் பெரும் உதவியாக அமையும் என்றும் அவர் தெரிவித்தார்.\nPrevious articleVIDEO: சீனத் தூதுவர்களை ஏன் 14 நாட்களுக்கு தனிமைப் படுத்தலுக்கோ , PCR க்கோ உட்படுத்துவதில்லை .\nNext articleஜனாஸா – புளுகொஹதென்ன மில்ஹான் (ரில்வான்)\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலை ஆட்சியை கைப்பற்ற அரசு பயன்படுத்தியது\nஉலமா சபை எமது கேள்விகளுக்கு பதில் தரவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2827914&Print=1", "date_download": "2021-10-19T13:08:40Z", "digest": "sha1:SFRYK5LRAN77LXI6UDE5TI6YGRTJ5XVX", "length": 10736, "nlines": 108, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "கோவை மாவட்ட விவசாயிக்கு இந்து மக்கள் கட்சி தலைவர் ஆறுதல்| Dinamalar\nகோவை மாவட்ட விவசாயிக்கு இந்து மக்கள் கட்சி தலைவர் ஆறுதல்\nகோவை:கோவை மாவட்டம், அன்னூர் அருகே ஒட்டர் பாளையம் வி.ஏ.ஓ., அலுவலகத்தில் நடந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட விவசாயி கோபால் சாமியின் வீட்டுக்கு சென்று அவரது தந்தை காளியப்பன் மற்றும் குடும்பத்தினருக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் ஆறுதல் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் அலட்சியமாக செயல்படுவதாக புகார் தெரிவித்தார்.\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகோவை:கோவை மாவட்டம், அன்னூர் அருகே ஒட்டர் பாளையம் வி.ஏ.ஓ., அலுவலகத்தில் நடந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட விவசாயி கோபால் சாமியின் வீட்டுக்கு சென்று அவரது தந்தை காளியப்பன் மற்றும் குடும்பத்தினருக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் ஆறுதல் தெரிவித்தார்.\nஇந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் அலட்சியமாக செயல்படுவதாக புகார் தெரிவித்தார். விரைவில் கோபால்சாமி மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும். வி.ஏ.ஓ., கலைச்செல்வி மற்றும் கிராம உதவியாளர் முத்துசாமியை கைது செய்ய வேண்டும். போலி பத்திரிகையாளர்களையும் இதற்கு தூண்டுதலாக செயல்பட்ட அமைப்புகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nவருகிற 23-ஆம் தேதிக்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால் தீவிர போராட்டம் அனைத்து அமைப்புகளுடன் சேர்ந்து நடத்தப்படும். கலவரத்தைத் தூண்டிவிடும் அமைப்புகள் குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு மூலம் விசாரணை நடத்த வேண்டும். என தெரிவித்தார்.\nகோவை:கோவை மாவட்டம், அன்னூர் அருகே ஒட்டர��� பாளையம் வி.ஏ.ஓ., அலுவலகத்தில் நடந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட விவசாயி கோபால் சாமியின் வீட்டுக்கு சென்று அவரது தந்தை காளியப்பன் மற்றும்\nஊடக தர்மம் உங்கள் கரங்களில்...\nசமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...\nஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.\nஇங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஆக.23-ல் தியேட்டர்கள்,செப்.1 முதல் பள்ளி ,கல்லூரி திறக்க தமிழக அரசு அனுமதி(12)\nதமிழகத்தில் கோவிட் பாதிப்பு 1,652 ஆக குறைந்தது: 1,859 பேர் நலம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaipoonga.net/cinema/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2021-10-19T11:54:53Z", "digest": "sha1:DU3ZAEOR3A37QXR4V3B5LPX2Z4KMUV7C", "length": 16722, "nlines": 203, "source_domain": "kalaipoonga.net", "title": "‘விநோதய சித்தம்’ திரைப்படம் உளவியல் ரீதியான மாற்றத்தை ஏற்படுத்தும்” - சமுத்திரகனி - Kalaipoonga", "raw_content": "\nHome Cinema ‘விநோதய சித்தம்’ திரைப்படம் உளவியல் ரீதியான மாற்றத்தை ஏற்படுத்தும்” – சமுத்திரகனி\n‘விநோதய சித்தம்’ திரைப்படம் உளவியல் ரீதியான மாற்றத்தை ஏற்படுத்தும்” – சமுத்திரகனி\n‘விநோதய சித்தம்’ திரைப்படம் உளவியல் ரீதியான மாற்றத்தை ஏற்படுத்தும்” – சமுத்திரகனி\nசமுத்திரகனி இயக்கி நடிக்கும் ‘விநோதய சித்தம்’ படம் ஜி5 ஒரிஜினலில் அக்டோப���் 13 ஆம் தேதி வெளியாகிறது.\nதமிழ் திரையுலகின் சிறந்த நடிகரும் , இயக்குநர்களில் ஒருவராகவும் திகழ்பவர் சமுத்திரக்கனி.தற்போது சமுத்திரக்கனி எழுதி இயக்கி நடித்திருக்கும் படம் வினோதய சித்தம் . சமுத்திரக்கனி மற்றும் தம்பி ராமையா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, சஞ்சிதா ஷெட்டி,முனீஸ்காந்த்,ஜெயப்பிரகாஷ்,இயக்குனர் பாலாஜி மோகன்,ஹரிகிருஷ்ணன் , அசோக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.\nதயாரிப்பாளர் அபிராமி ராமநாதன் தயாரித்துள்ள வினோதய சித்தம் படத்திற்கு N.K.ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.வருகிற அக்டோபர் 13-ஆம் தேதி நாளை நேரடியாக ZEE5 ஒரிஜினல் OTT தளத்தில் வினோதய சித்தம் திரைப்படம் வெளியாகிறது .\nதயாரிப்பாளர் அபிராமி ராமநாதன் பேசியவை,\nஇந்த படத்திற்கு அதிக செலவு செய்யாமல் குறைந்த செலவில் மிக அருமையாக படத்தை எடுத்து தந்துள்ளார் சமுத்திரக்கனி .இந்த படத்தை பார்த்து பெண்கள் சிலர் கண்ணீர் விட்டு அழுது உள்ளனர். நீங்கள் இந்த படத்தை பார்க்கும் பொழுது உங்களை அறியாமலேயே எழுந்து நின்று கை தட்டுவீர்கள் .\nபாலுமகேந்திரா சார் சொன்னபடி ஒரு சாதாரண கதையை இயக்குனர் இயக்குவான் . ஒரு நல்ல கதை இயக்குனரை இயக்கும் . அதுபோல இந்தப் படம் எல்லோரையும் இயக்க வைத்து நல்ல படமாக வெளிவந்துள்ளது . ‘மனித மனம் வேடிக்கையான முறையில் நடந்து கொள்கிறது. நம்மால் அவற்றை கட்டுப்படுத்த முடியாது. இதுதான் இந்தப்படத்தின் அடிப்படை கரு. அனைவராலும் இப்படத்தின் கதையை உணர்ந்து கொள்ளமுடியும். இந்த படம் பார்த்தால் கண்டிப்பாக உளவியல் ரீதியாக சிறு மாற்றத்தை உணர்வீர்கள். நான் படைத்த படைப்புகளில் இதுதான் சிறந்த படைப்பாக என் மனமார நம்புகிறேன். இந்த படத்தில் நடித்த அனைவருக்கும் எனது நன்றியும் வாழ்த்துக்களும்.\nநடிகை சஞ்சிதா ஷெட்டி பேசியவை,\nஇயக்குனர் சமுத்திரகனி சாருக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் .இந்த படத்தை தயாரித்த ராமநாதன் சாருக்கும் இப்படிப்பட்ட நல்ல படத்தை வெளியிடும் ZEE 5 நிறுவனத்திற்கும் நன்றி. இப்படத்தின் காட்சிகளை ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம் மிக அருமையாக கொண்டுவந்துள்ளார். இந்த படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் .இதுவரைக்கும் சப்போர்ட் செய்து வரும் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கு நன்றி.\nவினோதய சித்தம் இது வெறும் படம் அல்ல .நம் வாழ்க்கையில் அனைவரும் கற்கவேண்டிய பாடமும் கூட. அப்படிப்பட்ட முக்கியமான விஷயத்தை இந்த படத்தில் சமுத்திரக்கனி கூறியுள்ளார். இப்படிப்பட்ட ஒரு அருமையான படைப்பில் நானும் ஒரு அங்கமாக இருப்பதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். இயக்குனர் சமுத்திரகனி சாருக்கும் அபிராமி ராமணநாதன் சாருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.\nஒளிப்பதிவாளர் ஏகாம்பரம் பேசியவை :\nஇந்த படத்திற்கு மிக கவனமாக ஒளிப்பதிவு செய்ய வேண்டும் அதுதான் முக்கியம் என சமுத்திரகனி தெரிவித்தார் அதுபோலவே படத்தில் காட்சிகள் அருமையாக வந்துள்ளது. இந்த படத்தை 19 நாட்களில் எடுத்து முடித்தோம். அது சமுத்திரக்கனியால் மட்டுமே முடியும் .இந்த படத்தில் நவரசம் கலந்த நடிப்பில் தம்பி ராமையா அவர்கள் நடித்துள்ளார். மேலும் சமுத்திரகனி சார் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.\nஇந்த திரைப்படம் உளவியல் ரீதியான மாற்றத்தை ஏற்படுத்தும்” என்றார். இத்திரைப்படம் ஜீ-5 ஓ.டி.டி தளத்தில் விரைவில் வெளியாக உள்ளது.\n‘விநோதய சித்தம்’ திரைப்படம் உளவியல் ரீதியான மாற்றத்தை ஏற்படுத்தும்” - சமுத்திரகனி\nஜீ5 ஒரிஜினலில் வெளியாகிறது சமுத்திரகனியின் ‘விநோதய சித்தம்’\nNext articleடாப் நடிகருடன் தளபதி விஜய்யின் மகன் சஞ்சய்.. பலரும் பார்த்திராத புகைப்படம்\nசர்ச்சைக்குரிய வீடியோ பதிவிட்டதால் பிக்பாஸ் பிரபலம் கைது\nஒற்றை வார்த்தையில் நடிகர் விஜய்யை புகழ்ந்த ‘பீஸ்ட்’ நாயகி\nராகவா லாரன்ஸ் – பிரியா பவானி சங்கர் நடிக்கும் ருத்ரன் படத்தில் ‘பாடாத பாட்டெல்லாம்’ ரீமிக்ஸ் பாடல்\nசர்ச்சைக்குரிய வீடியோ பதிவிட்டதால் பிக்பாஸ் பிரபலம் கைது\nசர்ச்சைக்குரிய வீடியோ பதிவிட்டதால் பிக்பாஸ் பிரபலம் கைது பாலிவுட்டில் இளம் நடிகையாக வலம் வருபவர் யுவிகா சவுத்ரி. இவர், இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் மிகவும் பிரபலமானார். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும்...\nஒற்றை வார்த்தையில் நடிகர் விஜய்யை புகழ்ந்த ‘பீஸ்ட்’ நாயகி\nஒற்றை வார்த்தையில் நடிகர் விஜய்யை புகழ்ந்த ‘பீஸ்ட்’ நாயகி விஜய் மற்றும் நெல்சன் கூட்டணியில் உருவாகி வருகிறது ‘பீஸ்ட்’ அதிரடி ஆக்ஷனில் உருவாகி வரும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தய���ரித்து வருகிறது. இப்படத்தில்...\nராகவா லாரன்ஸ் – பிரியா பவானி சங்கர் நடிக்கும் ருத்ரன் படத்தில் ‘பாடாத பாட்டெல்லாம்’ ரீமிக்ஸ் பாடல்\nராகவா லாரன்ஸ் - பிரியா பவானி சங்கர் நடிக்கும் ருத்ரன் படத்தில் ‘பாடாத பாட்டெல்லாம்’ ரீமிக்ஸ் பாடல் பல வெற்றி படங்களை தயாரித்த 5 ஸ்டார் கிரியேஷன்ஸ் S.கதிரேசன் தயாரித்து இயக்கும் “ருத்ரன்” படத்தில்...\nசர்ச்சைக்குரிய வீடியோ பதிவிட்டதால் பிக்பாஸ் பிரபலம் கைது\nசர்ச்சைக்குரிய வீடியோ பதிவிட்டதால் பிக்பாஸ் பிரபலம் கைது பாலிவுட்டில் இளம் நடிகையாக வலம் வருபவர் யுவிகா சவுத்ரி. இவர், இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் மிகவும் பிரபலமானார். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும்...\nஒற்றை வார்த்தையில் நடிகர் விஜய்யை புகழ்ந்த ‘பீஸ்ட்’ நாயகி\nஒற்றை வார்த்தையில் நடிகர் விஜய்யை புகழ்ந்த ‘பீஸ்ட்’ நாயகி விஜய் மற்றும் நெல்சன் கூட்டணியில் உருவாகி வருகிறது ‘பீஸ்ட்’ அதிரடி ஆக்ஷனில் உருவாகி வரும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. இப்படத்தில்...\nராகவா லாரன்ஸ் – பிரியா பவானி சங்கர் நடிக்கும் ருத்ரன் படத்தில் ‘பாடாத பாட்டெல்லாம்’ ரீமிக்ஸ் பாடல்\nராகவா லாரன்ஸ் - பிரியா பவானி சங்கர் நடிக்கும் ருத்ரன் படத்தில் ‘பாடாத பாட்டெல்லாம்’ ரீமிக்ஸ் பாடல் பல வெற்றி படங்களை தயாரித்த 5 ஸ்டார் கிரியேஷன்ஸ் S.கதிரேசன் தயாரித்து இயக்கும் “ருத்ரன்” படத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaipoonga.net/tag/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2021-10-19T12:03:42Z", "digest": "sha1:2R7ZBCR365DRNO2DPMJMO27JIA5HU2BG", "length": 10897, "nlines": 182, "source_domain": "kalaipoonga.net", "title": "சாகும்வரை நகைச்சுவை நடிகனாகவே தொடர வேண்டும் என்பதே எனது ஆசை - வடிவேலு - Kalaipoonga", "raw_content": "\nTags சாகும்வரை நகைச்சுவை நடிகனாகவே தொடர வேண்டும் என்பதே எனது ஆசை - வடிவேலு\nTag: சாகும்வரை நகைச்சுவை நடிகனாகவே தொடர வேண்டும் என்பதே எனது ஆசை - வடிவேலு\nசாகும்வரை நகைச்சுவை நடிகனாகவே தொடர வேண்டும் என்பதே எனது ஆசை – வடிவேலு\nசாகும்வரை நகைச்சுவை நடிகனாகவே தொடர வேண்டும் என்பதே எனது ஆசை - வடிவேலு 'எனது பயணம் நகைச்சுவை பயணமாக இனி தொடரும். சாகும்வரை நகைச்சுவை நடிகனாக தொடர வேண்டும் என்பதே எனது ஆசை' என...\nசர்ச்சைக்குரிய வீடியோ பதிவிட்டதால் பிக்பாஸ் பிரபலம் கைது\nசர்ச்சைக்குரிய வீடியோ பதிவிட்டதால் பிக்பாஸ் பிரபலம் கைது பாலிவுட்டில் இளம் நடிகையாக வலம் வருபவர் யுவிகா சவுத்ரி. இவர், இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் மிகவும் பிரபலமானார். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும்...\nஒற்றை வார்த்தையில் நடிகர் விஜய்யை புகழ்ந்த ‘பீஸ்ட்’ நாயகி\nஒற்றை வார்த்தையில் நடிகர் விஜய்யை புகழ்ந்த ‘பீஸ்ட்’ நாயகி விஜய் மற்றும் நெல்சன் கூட்டணியில் உருவாகி வருகிறது ‘பீஸ்ட்’ அதிரடி ஆக்ஷனில் உருவாகி வரும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. இப்படத்தில்...\nராகவா லாரன்ஸ் – பிரியா பவானி சங்கர் நடிக்கும் ருத்ரன் படத்தில் ‘பாடாத பாட்டெல்லாம்’ ரீமிக்ஸ் பாடல்\nராகவா லாரன்ஸ் - பிரியா பவானி சங்கர் நடிக்கும் ருத்ரன் படத்தில் ‘பாடாத பாட்டெல்லாம்’ ரீமிக்ஸ் பாடல் பல வெற்றி படங்களை தயாரித்த 5 ஸ்டார் கிரியேஷன்ஸ் S.கதிரேசன் தயாரித்து இயக்கும் “ருத்ரன்” படத்தில்...\n‘டேக் டைவர்ஷன்’ முழு நீள கமர்ஷியல் பேக்கேஜ்\n'டேக் டைவர்ஷன்' முழு நீள கமர்ஷியல் பேக்கேஜ் 'டேக் டைவர்ஷன்' என்கிற படத்தை இயக்குநர் சிவானி செந்தில் இயக்கியுள்ளார். 80களில் 90களில் மட்டுமல்ல 2K -யில் பால்ய காலத்தைக் கடந்தவர்களையும் ஈர்க்கும் வகையில் ஒரு காதல்...\nசர்ச்சைக்குரிய வீடியோ பதிவிட்டதால் பிக்பாஸ் பிரபலம் கைது\nசர்ச்சைக்குரிய வீடியோ பதிவிட்டதால் பிக்பாஸ் பிரபலம் கைது பாலிவுட்டில் இளம் நடிகையாக வலம் வருபவர் யுவிகா சவுத்ரி. இவர், இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் மிகவும் பிரபலமானார். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும்...\nஒற்றை வார்த்தையில் நடிகர் விஜய்யை புகழ்ந்த ‘பீஸ்ட்’ நாயகி\nஒற்றை வார்த்தையில் நடிகர் விஜய்யை புகழ்ந்த ‘பீஸ்ட்’ நாயகி விஜய் மற்றும் நெல்சன் கூட்டணியில் உருவாகி வருகிறது ‘பீஸ்ட்’ அதிரடி ஆக்ஷனில் உருவாகி வரும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. இப்படத்தில்...\nராகவா லாரன்ஸ் – பிரியா பவானி சங்கர் நடிக்கும் ருத்ரன் படத்தில் ‘பாடாத பாட்டெல்லாம்’ ரீமிக்ஸ் பாடல்\nராகவா லாரன்ஸ் - பிரியா பவானி சங்கர் நடிக்கும் ருத்ரன் படத்தில் ‘பாடாத பாட்டெல்லாம்’ ரீமிக்ஸ் பாடல் பல வெற்றி படங்களை தயாரித்த 5 ஸ்டார் கிரியேஷன்ஸ் S.கதிரேசன் தயாரித்து இயக்கும் “ருத்ரன்” படத்தில்...\nசர்ச்சைக்குரிய வீடியோ பதிவிட்டதால் பிக்பாஸ் பிரபலம் கைது\nசர்ச்சைக்குரிய வீடியோ பதிவிட்டதால் பிக்பாஸ் பிரபலம் கைது பாலிவுட்டில் இளம் நடிகையாக வலம் வருபவர் யுவிகா சவுத்ரி. இவர், இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் மிகவும் பிரபலமானார். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும்...\nஒற்றை வார்த்தையில் நடிகர் விஜய்யை புகழ்ந்த ‘பீஸ்ட்’ நாயகி\nஒற்றை வார்த்தையில் நடிகர் விஜய்யை புகழ்ந்த ‘பீஸ்ட்’ நாயகி விஜய் மற்றும் நெல்சன் கூட்டணியில் உருவாகி வருகிறது ‘பீஸ்ட்’ அதிரடி ஆக்ஷனில் உருவாகி வரும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. இப்படத்தில்...\nராகவா லாரன்ஸ் – பிரியா பவானி சங்கர் நடிக்கும் ருத்ரன் படத்தில் ‘பாடாத பாட்டெல்லாம்’ ரீமிக்ஸ் பாடல்\nராகவா லாரன்ஸ் - பிரியா பவானி சங்கர் நடிக்கும் ருத்ரன் படத்தில் ‘பாடாத பாட்டெல்லாம்’ ரீமிக்ஸ் பாடல் பல வெற்றி படங்களை தயாரித்த 5 ஸ்டார் கிரியேஷன்ஸ் S.கதிரேசன் தயாரித்து இயக்கும் “ருத்ரன்” படத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newsguru.news/category/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-10-19T11:51:12Z", "digest": "sha1:UL33MUFLKUHHMWQ2DBLAWW3C4WDNAZ5E", "length": 7277, "nlines": 92, "source_domain": "newsguru.news", "title": "அறிவியல் & தொழில்நுட்பம் Archives - நியூஸ் குரு", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, அக்டோபர் 19, 2021 | எங்கள் மொபைல் ஆப்-ஐ பதிவிறக்கவும்\nHome அறிவியல் & தொழில்நுட்பம்\nசமீபத்திய அறிவியல் செய்திகளைப் பெற்று, உலகெங்கிலும் உள்ள அறிவியல் முன்னேற்றங்கள் மற்றும் கண்டுபிடிப்புகளைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள். இன்றைய செய்திகளை அறிவியல் எவ்வாறு உருவாக்குகிறது என்பதைப் பாருங்கள்.\nசத்தம் இல்லாமல் சரித்திரம் படைக்கும் இந்தியா\nஸ்ரீ ராம் - அக்டோபர் 13, 2021 0\nடாக்டர் விக்ரம் சாராபாய், சுதந்திர‌ இந்திய அறிவியலின் தந்தை\nஸ்டான்லி ராஜன் - ஆகஸ்ட் 12, 2021 0\nடிவிஎஸ் ஐ கியூப் ஸ்கூட்டர் டெல்லி மற்றும் பெங்களூரு நகரங்களில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு...\nநியூஸ் குரு - ஜூலை 1, 2021 0\nஜியோ புதிய பிரீபெயிட் சலுகை\nநியூஸ் குரு - ஜூன் 30, 2021 0\nரியல்மி நார்சோ 30 5ஜி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது\nநியூஸ் குரு - ஜூன் 21, 2021 0\nஸ்ரீ ராம் - ஜூன் 19, 2021 0\nபுதிய சலுகைகள் அறிவித்த ஏர்டெல்\nநியூஸ் குரு - ஜூன் 18, 2021 0\nS21 FE மாடலையும் கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வில் அறிமுகம்\nநியூஸ் குரு - ஜூன் 16, 2021 0\nபுதிய கேலக்ஸி எம்32 அமேசான் மற்றும் சாம்சங் ஷாப் வலைதளங்களில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.\nநியூஸ் குரு - ஜூன் 14, 2021 0\nTN 43 குழுமம் தனது அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையிலான புதிய மினி...\nநியூஸ் குரு - ஏப்ரல் 24, 2021 0\nடி20 கிரிக்கெட் போட்டி இந்தியா-பாகிஸ்தான் போட்டி நடக்குமா\nஅண்டை நாடுகளில் இந்துக்கள் மீது தாக்குதல் – உலக நாடுகள் கண்டிக்கட்டும்\n இன்று தலித் தொழிலாளி கொடூர கொலை\nடி20 கிரிக்கெட் போட்டி இந்தியா-பாகிஸ்தான் போட்டி நடக்குமா\nஅண்டை நாடுகளில் இந்துக்கள் மீது தாக்குதல் – உலக நாடுகள் கண்டிக்கட்டும்\n இன்று தலித் தொழிலாளி கொடூர கொலை\nமனித குலத்தின் பல்வேறு பிரச்சனைகளுக்கு பாரதமே தீர்வு தரமுடியும் -ஆர்.எஸ்.எஸ் தலைவர் டாக்டர்.மோகன்பாகவத்\nநியூஸ் குரு ஒரு ஆன்லைன் செய்தி தளமாகும். நாங்கள் முக்கியமாக பிராந்திய அரசியல், கலாச்சாரம் மற்றும் பொருளாதாரத்தில் கவனம் செலுத்துகிறோம். கோயம்புத்தூரை மையமாகக் கொண்ட இந்த அமைப்பு, உண்மைகளால் இயக்கப்படும் ஊடக கலாச்சாரத்தையும், முக்கியத்துவம் வாய்ந்த கருத்துகளையும் வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nastiknation.org/product/%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-1/", "date_download": "2021-10-19T12:43:21Z", "digest": "sha1:SNQ7LR7FE6WYKU7T34EOYZ55MMFSTJ32", "length": 3624, "nlines": 99, "source_domain": "nastiknation.org", "title": "லிபரேட்டுகள் – பாகம் 1 – Nastik Nation", "raw_content": "\nலிபரேட்டுகள் – பாகம் 1\nஅவன் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு வேட்டையாடக் காட்டிற்குச் சென்றான். மூன்று நான்கு மணிநேரம் சுற்றி அலைந்தும் அவனால் எந்த ஒரு பெரிய விலங்கையும் சுட்டுக் கொல்ல முடியவில்லை. சுரங்கத்திற்குத் திரும்பி வந்தான். அங்கு வேலை பார்த்த அடிமைகளில் வயதானவர்களில் பத்து பேர்களைப் பிடித்து வரச்சொல்லி அவர்களை சுட்டுக்கொன்று ஆவேசத்துடன் கத்திக் கூச்சலெழுப்பினான். அன்று இரவு ஆப்பிரிக்கா, ஆசிய அடிமைப் பெண்களை இழுத்துவரச் சொல்லி அவன் ஆட்களை விட்டுப் புணரச்செய்து அதைப் பார்த்து ரசித்தான். பெரிய வாள் கொண்டு புணரப்பட்ட அடிமைகளின் பிறப்புறுப்பு, பிட்டம், மார்பு, முகம், தலை என அவன் உடல் சோர்வுறும் வரை வெட்டி வீசினான்.\nலிபரேட்டுகள் - பாகம் 1 quantity\nதீர்ப்பு – இந்தியத் தேர்தல்களைப் புரிந்து கொள்ளல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/3127468", "date_download": "2021-10-19T13:24:17Z", "digest": "sha1:6TZP5O4W2HXEML4WULAFKF4P5XGDPADL", "length": 8013, "nlines": 81, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"இன்கா பேரரசு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"இன்கா பேரரசு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n08:42, 1 ஏப்ரல் 2021 இல் நிலவும் திருத்தம்\n1,281 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 6 மாதங்களுக்கு முன்\n→‎வரலாறு: இவர்கள் பண்டைய தமிழகத்தை சேர்ந்த மூவேந்தர்களுள் ஒருவரான சோழர்களின் வழிவந்தவர்கள் எனவும் சோழர் மற்றும் தென் அமெரிக்க இன்கா மன்னர்களுக்கும் உள்ள ஒப்புமைகளை ஆய்ந்து சோழர் வழித்தோன்றல்களே இன்கா மக்கள் என்று மீ. மனோகரன் அவர்கள் தென் அமெரிக்காவின் சோழர்கள் என்ற ஆய்வு நூலை படைத்துள்ளார்.https://www.google.co.in/books/edition/_/MFUctAEACAAJ\n14:13, 13 திசம்பர் 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nஎஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்)\n08:42, 1 ஏப்ரல் 2021 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nVelKadamban (பேச்சு | பங்களிப்புகள்)\n(→‎வரலாறு: இவர்கள் பண்டைய தமிழகத்தை சேர்ந்த மூவேந்தர்களுள் ஒருவரான சோழர்களின் வழிவந்தவர்கள் எனவும் சோழர் மற்றும் தென் அமெரிக்க இன்கா மன்னர்களுக்கும் உள்ள ஒப்புமைகளை ஆய்ந்து சோழர் வழித்தோன்றல்களே இன்கா மக்கள் என்று மீ. மனோகரன் அவர்கள் தென் அமெரிக்காவின் சோழர்கள் என்ற ஆய்வு நூலை படைத்துள்ளார்.https://www.google.co.in/books/edition/_/MFUctAEACAAJ\nஅடையாளங்கள்: காட்சி திருத்தம் Reverted\n12-ஆம் நூற்றாண்டு வாக்கில் பழங்குடியினராக இருந்த இன்க்கா மக்கள் மன்க்கோ கப்பாக் என்பவரின் கீழ் கசுக்கோ என்ற சிறிய நகர அரசை அமைத்தனர். பின்னர் சாப்பா இன்கா பச்சாகுட்டியின் காலத்தின் இது மேலும் விரிவடைந்தது. இவரும் இவரது மகனும் இவரது ஆட்சிக்காலத்தில் ஆண்டீய மலைத்தொடரின் பெரும்பகுதியை இன்காக்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். இவர்கள் பண்டைய [[தமிழகம்|தமிழகத்தை]] சேர்ந்த [[மூவேந்தர்|மூவேந்தர்களுள்]] ஒருவரான [[சோழர்|சோழ��்களின்]] வழிவந்தவர்கள் எனவும் சோழர் மற்றும் தென் அமெரிக்க இன்கா மன்னர்களுக்கும் உள்ள ஒப்புமைகளை ஆய்ந்து சோழர் வழித்தோன்றல்களே இன்கா மக்கள் என்று மீ. மனோகரன் அவர்கள் [[தென் அமெரிக்காவின் சோழர்கள் (ஆராய்ச்சி நூல்)|தென் அமெரிக்காவின் சோழர்கள்]] என்ற ஆய்வு நூலை படைத்துள்ளார்.{{Cite web|url=https://books.google.co.in/books/about/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE.html\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2021-10-19T12:56:05Z", "digest": "sha1:6CVMUA3OU6JZCRDSRFH2OL4XKEYUH3LF", "length": 25368, "nlines": 161, "source_domain": "ta.wikipedia.org", "title": "சீத்தப்பட்டி ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆளுநர் ஆர். என். ரவி[1]\nமுதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]\nமாவட்ட ஆட்சியர் சு. சிவராசு, இ. ஆ. ப [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nசீத்தப்பட்டி ஊராட்சி (Seethapatti Gram Panchayat), தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள தொட்டியாம் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, முசிறி சட்டமன்றத் தொகுதிக்கும் பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 1224 ஆகும். இவர்களில் பெண்கள் 629 பேரும் ஆண்கள் 595 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 10\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 7\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 4\nஊரணிகள் அல்லது குளங்கள் 1\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 75\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 3\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்��ியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தொட்டியாம் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nஉத்தமர்சீலி · திருப்பராய்த்துறை · திருச்செந்துறை · புலியூர் · போசம்பட்டி · போதாவூர் · பெட்டவாய்த்தலை · பேரூர் · பெருகமணி · பெரியகருப்பூர் · பனையபுரம் · பழூர் · முத்தரசநல்லூர் · முள்ளிக்கரும்பூர் · மேக்குடி · மருதாண்டாக்குறிச்சி · மல்லியம்பத்து · குழுமணி · கோப்பு · கொடியாலம் · கிளிக்கூடு · கம்பரசம்பேட்டை · எட்டரை · அந்தநல்லூர் · அல்லூர்\nவெங்கடாச்சலபுரம் · வைரிசெட்டிபாளையம் · தென்புறநாடு · தளுகை · சோபனபுரம் · சிறுநாவலூர் · பச்சபெருமாள்பட்டி · ஒக்கரை · நாகநல்லூர் · மாராடி · கோட்டப்பாளையம் · கொப்பம்பட்டி · காமாட்சிபுரம் · எரகுடி · இ. பாதர்பேட்டை · ஆங்கியம் · ஆலத்துடையான்பட்டி · அழகாபுரி\nவாளவந்தி · வாளசிராமணி · வளையெடுப்பு · தும்பலம் · துலையாநத்தம் · சூரம்பட்டி · சிட்டிலரை · சேருகுடி · பூலாஞ்சேரி · பிள்ளாபாளையம் · ​பைத்தம்பாறை · ஊருடையாபட்டி · ஊரக்கரை · முத்தம்பட்டி · மாவிலிப்பட்டி · மங்களம் · மகாதேவி · எம். புதுப்பட்டி · கோணப்பம்பட்டி · காருகுடி · கரிகாலி · ஜம்புமடை · தேவானூர் · ஆராய்ச்சி · அஞ்சலம்\nவேங்கூர் · வாழவந்தான்கோட்டை · திருநெடுங்குளம் · சூரியூர் · சோழமாதேவி · பத்தாளபேட்டை · பனையகுறிச்சி · பழங்கனாங்குடி · நவல்பட்டு · நடராஜபுரம் · குவளகுடி · கும்பக்குடி · கிருஷ்ணசமுத்திரம் · கிளியூர் · கீழமுல்​லைகுடி · கிழ குறிச்சி · காந்தலூர் · குண்டூர் · அசூர் · அரசங்குடி\nவெங்கடேசபுரம் · வேங்கடத்தானூர் · வீரமச்சான்பட்டி · வரதராஜபுரம் · வண்ணாடு · வி. ஏ. சமுத்திரம் · டி. ரெங்கநாதபுரம் · சொரத்தூர் · சொக்கநாதபுரம் · சிங்களாந்தபுரம் · சிக்கதம்பூர் · சேனப்பநல்லூர் · செல்லிபாளையம் · பொன்னுசங்கம்பட்டி · பெருமாள்பாளையம் · பகளவாடி · நரசிங்கபுரம் · நாகலாபுரம் · நடுவலூர் · முத்தையம்பாளையம் · முருகூர் · மருவத்தூர் · மதுராபுரி · குன்னுப்பட்டி · கொட்டையூர் · கோம்பை · கொல்லப��்டி · கீரம்பூர் · கண்ணனூர் · கலிங்கமுடையான்பட்டி · கே. பாளையம் · கோவிந்தபுரம் · அம்மாபட்டி · ஆதனூர்\nவாள்வேல்புத்தூர் · உன்னியூர் · தோளுர்பட்டி · ஸ்ரீராமசமுத்திரம் · ஸ்ரீனிவாசநல்லூர் · சீத்தப்பட்டி · சீலைப்பிள்ளையார்புத்தூர் · பிடாரமங்கலம் · பெரியபள்ளிப்பாளையம் · நத்தம் · நாகையநல்லூர் · முருங்கை · முள்ளிப்பாடி · மணமேடு · எம். புத்தூர் · எம். களத்தூர் · கொளக்குடி · கிடாரம் · காமலாபுரம் · காடுவெட்டி · ஏலூர்பட்டி · சின்னபள்ளிப்பாளையம் · அரசலூர் · அரங்கூர் · அப்பணநல்லூர் · அலகரை\nவிரகாலூர் · வெங்கடாசலபுரம் · வரகுப்பை · வந்தலைகூடலூர் · தின்னகுளம் · தெரணிபாளையம் · தாப்பாய் · சிறுகளப்பூர் · சரடமங்கலம் · ரெட்டிமாங்குடி · புதூர்பாளையம் · பெருவளப்பூர் · பி. சங்கேந்தி · பி. கே. அகரம் · ஒரத்தூர் · ஊட்டத்தூர் · நெய்குளம் · நம்புகுறிச்சி · என். சங்கேந்தி · முதுவத்தூர் · மேலரசூர் · மால்வாய் · எம். கண்ணனூர் · குமுளூர் · கோவண்டாகுறிச்சி · கீழரசூர் · கண்ணாகுடி · காணக்கிளியநல்லூர் · கல்லகம் · கருடமங்கலம் · இ. வெள்ளனூர் · ஆலம்பாக்கம் · ஆலம்பாடி\nவெங்கங்குடி · வாழையூர் · வலையூர் · திருவெள்ளரை · திருவாசி · திருப்பட்டூர் · திருப்பைஞ்சீலி · தீராம்பாளையம் · தத்தமங்கலம் · தளுதாளப்பட்டி · சீதேவிமங்கலம் · சிறுப்பத்தூர் · சிறுகுடி · சிறுகனூர் · சனமங்கலம் · பூனாம்பாளையம் · பிச்சாண்டார்கோவில் · பெரகம்பி · பாலையூர் · ஓமாந்தூர் · எண். 2 கரியமாணிக்கம் · மேல்பத்து · மாதவபெருமாள்கோவில் · கோவத்தகுடி · கூத்தூர் · கொணலை · கிளியநல்லூர் · இருங்களுர் · இனாம்கல்பாளையம் · இனாம்சமயபுரம் · எதுமலை · அய்யம்பாளையம் · ஆய்குடி · அழகியமணவாளம் · 94. கரியமாணிக்கம்\nவேங்கைக்குறிச்சி · வடுகப்பட்டி · உசிலம்பட்டி · தொப்பம்பட்டி · சூளியாப்பட்டி · சித்தாநத்தம் · சீகம்பட்டி · சமுத்திரம் · சாம்பட்டி · புத்தாநத்தம் · பொய்கைப்பட்டி · பொடங்குப்பட்டி · பண்ணப்பட்டி · மொண்டிப்பட்டி · மலையடிப்பட்டி · கருப்பூர் · கண்ணுடையான்பட்டி · கலிங்கப்பட்டி · கே. பெரியப்பட்டி · எப். கீழையூர் · செட்டியப்பட்டி\nதிருமலைசமுத்திரம் · தாயனூர் · சோமராசம்பேட்டை · சேதுராபட்டி · புங்கனூர் · பாகனூர் · பி. என். சத்திரம் · நாகாமங்கலம் · நாச்சிகுருச்சி · என். குட்டாபாட்டு · முடிகண்டம் · மெக்குடி · மாத்தூர் · குமார வாயலூர் · கே. கள்ளிகுடி · இனம் குளத்தூர் · துரைகுடி · அரியாவூர் · அம்மாபேட்டை · ஆலந்தூர் · அல்லிதுரை · அடவாத்தூர்\nவேம்பனூர் · வளநாடு · வைரம்பட்டி · வகுத்தாழ்வார்பட்டி · வி. இடையபட்டி · ஊத்துக்குளி · உசிலம்பட்டி · ஊனையூர் · திருநெல்லிபட்டி · தொட்டியபட்டி · தெத்தூர் · தேனூர் · தாதனூர் · தாலம்பாடி · டி. இடையபட்டி · செவல்பட்டி · பிராம்பட்டி · பிடாரபட்டி · பழுவஞ்சி · பழைய பாளையம் · பாலக்குருச்சி · நாட்டார்பட்டி · நல்லூர் · முத்தாழ்வார்பட்டி · மினிக்கியூர் · மருங்காபுரி · மணியன்குருச்சி · எம். இடையபட்டி · கொடும்பபட்டி · கருமலை · காரைபட்டி · கரடிப்பட்டி · கண்ணூத்து · கண்ணுகுழி · கன்னிவடுகப்பட்டி · கஞ்சநாய்க்கன்பட்டி · கல்லக்காம்பட்டி · களிங்கப்பட்டி · இக்கரைகோசிகுருச்சி · கவுண்டம்பட்டி · எண்டபுலி · டி. புதுப்பட்டி · அதிகாரம் · அம்மா சத்திரம் · ஆமனக்கம்பட்டி · ஆலம்பட்டி · அடைக்கம்பட்டி · ஏ. புதுப்பட்டி · ஏ. பொருவய்\nவேங்கைமண்டலம் · வெள்ளுர் · வெள்ளக்கல்பட்டி · வெளியனூர் · திருத்தியமலை · திருத்தலையூர் · திண்ணனூர் · திண்ணக்கோனம் · டி. புத்தூர் · டி. புதுப்பட்டி · சுக்காம்பட்டி · சித்தாம்பூர் · செவந்தலிங்கபுரம் · சாத்தனூர் · புத்தானம்பட்டி · புலிவலம் · பேரூர் · பெரமங்கலம் · நெய்வேலி · மூவானூர் · மண்பறை · கோட்டாத்தூர் · கோமங்கலம் · கொடுந்துறை · காட்டுக்குளம் · கரட்டாம்பட்டி · காமாட்சிப்பட்டி · ஜெயங்கொண்டான் · குணசீலம் · ஏவூர் · அய்யம்பாளையம் · ஆமூர் · அபினிமங்கலம்\nவாளாடி · திருமங்கலம் · திருமணமேடு · திண்ணியம் · தச்சன்குறிச்சி · தாளக்குடி · டி. வளவனூர் · டி. கல்விக்குடி · சிறுமயங்குடி · சிறுமருதூர் · செவந்திநாதபுரம் · செம்பரை · சாத்தமங்கலம் · ஆர். வளவனூர் · புதூர் உத்தமனூர் · புதுக்குடி · பெருவளநல்லூர் · பாம்பரம்சுதி · பல்லாபுரம் · நெருஞ்சலக்குடி · நெய்குப்பை · நத்தம் · நகர் · மேட்டுபட்டி · மருதூர் · மாங்குடி · மங்கம்மாள்புரம் · மணக்கால் · மகிழம்பாடி · மாடக்குடி · கொப்பாவளி · கொன்னைகுடி · கோமாகுடி · கூகூர் · கீழன்பில் · கீழப்பெருங்காவூர் · ஜெங்கமராஜபுரம் · எசனகோரை · இடையாற்றுமங்கலம் · ஆதிகுடி · அரியூர் · அப்பாதுரை · ஆங்கரை · ஆலங்குடிமகாஜனம் · அகலங்கநல்லூர்\nவெள்ளாளபட்டி · வையம்பட்டி · வி. பெரியபட்டி · தவளவீரன்பட்டி · செக்கணம் · புதுக்கோட்ட��� · பழையகோட்டை · நல்லாம்பிள்ளை · நடுபட்டி · முகவனூர் · குமாரவாடி · இனம்புதுவாடி · இனம்புதூர் · இனம்பொன்னம்பலம்பட்டி · எளமணம் · அயன்ரெட்டியபட்டி · அணியாப்பூர் · அமையபுரம்\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 நவம்பர் 2015, 20:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akuranatoday.com/49457/", "date_download": "2021-10-19T12:16:58Z", "digest": "sha1:WNBLXEK3MJ6BK255YGRBBJMAL3ZEEQ66", "length": 2632, "nlines": 65, "source_domain": "www.akuranatoday.com", "title": "புறக்கோட்டை கடையொன்றில் பணியாற்றும் நால்வருக்கு கொரோனா தொற்று . - Akurana Today", "raw_content": "\nபுறக்கோட்டை கடையொன்றில் பணியாற்றும் நால்வருக்கு கொரோனா தொற்று .\nபுறக்கோட்டை, நான்காம் குறுக்குத்தெருவிலுள்ள ஆர்.ஜி. ஸ்டோர்ஸ் வர்த்தக நிலையம் சுகாதார அதிகாரிகளால் மூடப்பட்டது.\nஅதில் பணியாற்றிய நால்வருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து இவ்வாறு மூடப்பட்டதாக தெரியவந்தது.\nஅந்த ஊழியர்களுடன் பணியாற்றியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.\nPrevious articleபல அதிர்ச்சி தகவல்களை, எதிர்காலத்தில் வெளியிடுவேன் – பூஜித்\nNext articleமினுவாங்கோடா கொத்தணியில் இருந்து மேலும் 47 கொரோனா நோயாளிகள்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலை ஆட்சியை கைப்பற்ற அரசு பயன்படுத்தியது\nஉலமா சபை எமது கேள்விகளுக்கு பதில் தரவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nitharsanam.net/219292/news/219292.html", "date_download": "2021-10-19T12:11:22Z", "digest": "sha1:ZTDROES6IBZETVSLGN42H2TSFUEHBZYQ", "length": 11078, "nlines": 91, "source_domain": "www.nitharsanam.net", "title": "சுவையும் அதிகம்… சத்தும் அதிகம்!! (மருத்துவம்) : நிதர்சனம்", "raw_content": "\nசுவையும் அதிகம்… சத்தும் அதிகம்\nகனிகள் என்பவையே சத்துக்களும், சுவையும் நிரம்பியவையும்தான். அவைகளில் சீத்தாப்பழம் மிகுந்த சுவையும், சத்துக்களையும் தன்னகத்தே கொண்டது. இக்கனியின் தனித்தன்மைகளை டயட்டீஷியன் உத்ரா விளக்குகிறார்…\n*Custard apple என அழைக்கப்படுகிற சீத்தாப்பழம் வைட்டமின்-சி, பி-காம்ப்ளக்ஸ், இரும்புச்சத்து, வைட்டமின்-ஏ, நார்ச்சத்து, மக்னீசியம், பொட்டாசியம் முதலான ஊட்டச்சத்துக்கள் கொண்டது. எனவே, சீத்தாப்பழத்தை குழந்தைகள், சிறுவர், சிறுமியர், நடுத்தர வயதினர��, முதியோர்கள் என அனைத்து தரப்பு வயதினரும் எவ்வித தயக்கமும் இல்லாமல் தாராளமாக உண்ணலாம்.\n* சீத்தாப்பழத்தில் உள்ள ‘பி’ காம்ப்ளக்ஸ் ஆஸ்துமா மற்றும் சளி போன்ற பிரச்னைகளைக் குறைக்க உதவுகிறது. அது மட்டுமில்லாமல், இந்தப் பழம் நமது தசைப்பகுதிகளை ரிலாக்ஸாக வைத்துக்கொள்ள மிகவும் உறுதுணையாக செயல்படுகிறது.\n* ரத்த அழுத்தத்தால் அவதிப்படுபவர்களுக்கு சீத்தாப்பழம் சிறந்த மருந்தாக உள்ளது. ஏனெனில், இதில் உள்ள பொட்டாசியம் ரத்த கொதிப்பைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்க உதவுகிறது.\n* ஆயுர்வேத மருத்துவத்தில் உடலில் ஏற்படுகிற புண்களைக் குணப்படுத்த சீத்தாப்பழம் தலைசிறந்த மருந்தாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், இப்பழத்தின் இலைகள் ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுவதாக இந்த மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.\n* சீத்தாப்பழத்தில் வைட்டமின்-ஏ ஏராளமாக உள்ளது. இது தலைமுடியையும், சருமத்தையும் பாதுகாக்க உதவுகிறது.\n* சீத்தாப்பழம் ரத்தசோகை குறைபாட்டைத் தடுக்கவல்லது. குறிப்பாக, பெண்களுக்கு மிகவும் ஏற்ற மருத்துவ குணம் நிறைந்த கனியாக திகழ்கிறது.\n* நம்முடைய உடல் ஆரோக்கியத்துக்குப் பொருந்தும் வகையில், எண்ணற்ற பயன்களைக் கொண்டுள்ள இந்தப் பழத்தை உணவோடு சேர்த்து சாப்பிடுவது நல்லதல்ல. சாப்பிடுவதற்கு ஒரு மணிநேரத்துக்கு முன்னதாகவும், உணவு உண்ட ஒரு மணிநேரத்துக்குப் பிறகும் சாப்பிடுவதே முழுமையான பலன்களைத் தரும்.\n* கருவுற்ற பெண்களுக்கு மிகச் சிறந்த உணவாக மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் கனியாக சீத்தாப்பழம் உள்ளது. இப்பழத்தை கர்ப்பிணிகள் தினமும் சாப்பிட்டு வர, சிசுவின் வளர்ச்சி ஆரோக்கியமாக அமையும்.\n* சீத்தாப்பழத்தில் நார்ச்சத்து 5.10 கிராம் அளவு உள்ளது. எனவே, மலச்சிக்கல் குறைபாட்டைச் சரி செய்து, வயிறு தொடர்பான உபாதைகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள இந்தக் கனி பயன்படுகிறது.\n* போதுமான உடல் எடை இல்லாமல் அவதிப்படுபவர்கள் சீத்தாப்பழத்தின் சதைப்பகுதியைத் தேனில் ஊற வைத்து, தினமும் சாப்பிட்டு வர வேண்டும். அவ்வாறு செய்து வந்தால் உடல் எடை கணிசமாக அதிகரிக்கும்.\n* சீதாப்பழத்தில் வைட்டமின் பி1, பி2 என ஏராளமான வைட்டமின்கள் உள்ளன. ஒரு சராசரி சீத்தாப்பழத்தில் பி 1 வைட்டமின் – 0.13 Mg, பி 2 வைட்டமின் – 0.09 Mg, பி 3 வைட்டமின் – 0.69Mg, பி5 – 0.19 Mg, வைட்டமின் பி 6 – 0.07 Mg என்ற விகிதத்தில் அமைந்துள்ளது. இது தவிர மக்னீசியம் 38.47 Mg-யும், பொட்டாசியம் 278 Mg-யும் புரோட்டீன் 1.62G, கொழுப்பு 0.67G-யும் அஸ்கார்பிக் ஆசிட் 21.51 Mg-யும் காணப்படுகிறது.\n* சீத்தாப்பழம் தன்னிடத்தில் அளவுக்கு அதிகமாக குளுக்கோஸைக் கொண்டுள்ளது. எனவே, சர்க்கரை நோயாளிகள் இதனை அறவே தவிர்ப்பது நல்லது.\n* சர்க்கரை நோயால் பாதிக்கப்படாதவர்கள் தினமும் 75 கிராம் முதல் 80 கிராம் வரை சாப்பிடலாம். அதிகமாக உட்கொண்டால் ரத்தத்தின் சர்க்கரையின் அளவைக் கண்காணிக்க வேண்டும்.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nபெண்களுக்கு பந்தா இல்லாத ஆண்களை தான் மிகவும் பிடிக்கும்..\nசெக்ஸ் என்பது ஆபாசம் அல்ல… ரசித்து அனுபவியுங்கள்.. \nகுழிகளை மறைக்க O3 + ஃபேஷியல்\nபெண்களின் இடுப்புக்கு அழகூட்டும் ஒட்டியாணம்\nஅப்படி என்னதான் நடக்கிறது இங்கே ஏயலியன்கள் நடமாடும் ஒரே இடம் ஏயலியன்கள் நடமாடும் ஒரே இடம்\nதிடீரென நடுவானில் தோன்றிய விசித்திர ஏலியன் விமானம்\nசீனா வழங்கிய நிதி: ஒரு வாளி நீரில் ஒரு துளி\nஒரு டாக்டர் ஆக்டரான கதை\nஇதய நோய் வராமல் இருக்கணுமா\n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.noolaham.org/wiki/index.php?title=The_Planting_Directory_for_India_and_Ceylon&oldid=411035", "date_download": "2021-10-19T13:08:26Z", "digest": "sha1:IYV3C455ZWWYB3COFAEFGCZDHGSJSMP6", "length": 3349, "nlines": 51, "source_domain": "www.noolaham.org", "title": "The Planting Directory for India and Ceylon - நூலகம்", "raw_content": "\nJeevakumari (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:09, 10 டிசம்பர் 2020 அன்றிருந்தவாரான திருத்தம்\n(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)\nThe Planting Directory for India and Ceylon (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [11,760] இதழ்கள் [13,280] பத்திரிகைகள் [53,303] பிரசுரங்கள் [1,125] நினைவு மலர்கள் [1,513] சிறப்பு மலர்கள் [5,516] எழுத்தாளர்கள் [4,874] பதிப்பாளர்கள் [4,171] வெளியீட்டு ஆண்டு [185] குறிச்சொற்கள் [91] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,157]\n1878 இல் வெளியான நூல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.noolaham.org/wiki/index.php?title=The_Returns_of_Peace_in_Sri_Lanka:_the_Development_Cart_Before_the_Conflict_Resolution_Horse%3F&action=info", "date_download": "2021-10-19T12:27:54Z", "digest": "sha1:XMFAD54E65COACDH4DLFDRAV3X6PGQ3N", "length": 4925, "nlines": 59, "source_domain": "www.noolaham.org", "title": "\"The Returns of Peace in Sri Lanka: the Development Cart Before the Conflict Resolution Horse?\" பக்கத்து��்கான தகவல் - நூலகம்", "raw_content": "\nபக்க நீளம் (எண்ணுண்மிகளில்) 1,326\nபக்க அடையாள இலக்கம் 18395\nபக்க உள்ளடக்க மொழி ta - தமிழ்\nபக்கள உள்ளடக்க மாதிரி விக்கிஉரை\nதானியங்கி மூலம் அட்டவணைப்படுத்தல் அனுமதிக்கப்படுகிறது\nஇந்தப் பக்கத்திற்கான வழிமாற்றுகளின் எண்ணிக்கை 0\nஉள்ளடக்கப் பக்கமாய்க் கணக்கிடப்பட்டது. ஆம்\nதொகுத்தல் அனைத்துப் பயனரையும் உள்ளிடு (காலவரையறையற்று)\nநகர்த்தல் அனைத்துப் பயனரையும் உள்ளிடு (காலவரையறையற்று)\nபக்க உருவாக்குநர் Valarmathy (பேச்சு | பங்களிப்புகள்)\nபக்கம் உருவாக்கப்பட்ட காலம் 01:07, 27 சூன் 2010\nஅண்மைய தொகுப்பாளர் OCRBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசமீபத்திய தொகுப்பின் தேதி 20:17, 24 செப்டம்பர் 2017\nமொத்தத் தொகுப்புகளின் எண்ணிக்கை: 11\nசாதகமான அம்சங்களை பெற்றிருக்கும் மொத்த தொகுப்பாளர்களின் எண்ணிக்கை 5\nஅண்மைய தொகுப்புகளின் எண்ணிக்கை (கடைசி 90 நாட்கள்-க்குள்) 0\nசாதகமான அம்சங்களை பெற்றிருக்கும் அண்மைய தொகுப்பாளர்களின் எண்ணிக்கை 0\nஇப்பக்கம் 4 மறைக்கப்பட்ட பகுப்புகளில் அடங்குகிறது:\nபகுப்பு:2003 இல் வெளியான பிரசுரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajinifans.com/2.0/trailer.php", "date_download": "2021-10-19T12:32:08Z", "digest": "sha1:YSCGTBUCYANGZKDZ4BYS7CNMJ2A3JH3O", "length": 11812, "nlines": 106, "source_domain": "rajinifans.com", "title": " 2.0 Movie Official Trailer Release Function - Rajinifans.com", "raw_content": "\n(3 Nov 2019) \"லைகா புரொடக்ஷன்ஸ்' நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் 2.0. ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய்குமார், எமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது.\nநடிகர்கள் ரஜினிகாந்த், அக்ஷய்குமார், இயக்குநர் ஷங்கர், படத்தின் தயாரிப்பாளர் சுபாஷ்கரண், நடிகை எமி ஜாக்சன், இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட படக் குழுவினர் ட்ரெய்லரை வெளியிட்டனர்.\nஇந்த விழாவில், நடிகர் ரஜினிகாந்த் பேசியது: இந்த படம் உலக தரத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்துக்கு லைகாவின் சுபாஷ்கரண் ரூ.600 கோடி முதலீடு செய்திருக்கிறார். என்னை நம்பியில்லை. ஷங்கரை நம்பி முதலீடு செய்திருக்கிறார். ஷங்கர் ரசிகர்களை மகிழ்விக்க தவறுவதில்லை. இந்தியாவின் ஸ்பீல்பெர்க் போன்றவர் ஷங்கர். அடுத்து என் நண்பர் கமல்ஹாசன் நடிப்பில் அவர் எடுக்கவுள்ள \"இந்தியன் 2' படமும் பெரும��� வெற்றி பெறும்.\nவிலக நினைத்தேன்: இந்தப் படம் ஆரம்பித்தபோது எனக்கு உடல் நிலை மோசமானது. என்னால் 5 வரி வசனம்கூட பேச முடியாமல் போனது. \"என்னை விட்டு விடுங்கள் ஷங்கர். என்னால் முடியவில்லை. வாங்கிய முன் தொகையை திருப்பித் தந்து விடுகிறேன்' என்றேன். ஷங்கர், 'சார் நீங்க இல்லாமல் இது முடியாது' என்றார். படப்பிடிப்பில் அவ்வளவு உதவியாக இருந்தார். ஷங்கரின் இந்தப் படம் அவரை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும். ஷங்கரும் உடல் நிலையை கவனித்துக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.\nநல்ல நண்பர்கள் கோஹினூர் வைரம்: அதேபோல், சுபாஷ்கரண் பற்றியும் சொல்ல வேண்டும். நல்ல நண்பர்கள் கோஹினூர் வைரம் மாதிரி. தயாரிப்பாளர் சுபாஷ்கரண் எனக்கு அப்படித்தான். நான் உடல் நிலை சரியில்லாமல் இருந்தபோது அவர் என்னை தனிமையில் சந்தித்துப் பேசினார். என் கைகளைப் பிடித்துக் கொண்டு \"4 மாதங்கள் இல்லை சார் 4 வருடங்கள்கூட காத்திருப்பேன். முடியவில்லை என்றால் படத்தை கை விட்டு விடலாம்; நீங்கள் இந்தப் படத்தை செய்வீர்கள்' என்று நம்பிக்கை வார்த்தைகள் சொன்னார். அவருக்கு என் நன்றிகள்.\nவந்தால் கண்டிப்பாக ஹிட்தான்: இந்தப் படத்தின் வெளியீட்டில் ஏன் இவ்வளவு தாமதம் என்றார்கள். வருமா என்றெல்லாம் பேசினார்கள். தாமதமாக வந்தாலும் கண்டிப்பாக ஹிட் அடிக்க வேண்டும். ( ரசிகர்கள் தொடர்ந்து கைதட்டினர்...) நான் சினிமாவை சொன்னேன். மக்கள் வரும் என்று முடிவு செய்து விட்டார்கள். \"ஹிட் அடிக்கும்' என்றும் முடிவு செய்து விட்டார்கள். தமிழ்த் திரையுலகை இந்திய அளவுக்கு தூக்கி சென்ற இயக்குநர் ஷங்கர். இப்போது சர்வதேச அளவுக்கு கொண்டு போகிறார் என்றார் ரஜினிகாந்த். விழாவில் படத்தில் பணியாற்றியுள்ள தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.\nகமல் வாழ்த்து: 2 .0 படத்துக்கு வாழ்த்து தெரிவித்து கமல்ஹாசன் அனுப்பியிருந்த விடியோ, விழாவில் ஒளிபரப்பப்பட்டது. அதில் பேசிய கமல்ஹாசன், \"நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் ஷங்கர் உள்ளிட்ட படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார். இது போல இயக்குநர் ராஜமௌலி, கன்னட நடிகர்கள் சிவ ராஜ்குமார், உபேந்திரா உள்ளிட்டோரும் படத்துக்கு வாழ்த்து தெரிவித்து அனுப்பியிருந்த விடியோ விழாவில் ஒளிபரப்பட்டது.\nநல்ல அன��பவம் - ஷங்கர்: இப்படி நடந்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனைதான் \"2.0'. சினிமாவைத் தாண்டி இதுவொரு நல்ல அனுபவமாக இருக்கும். தயாரிப்பாளர் சுபாஷ்கரண் இல்லாவிட்டால் இந்தப் படமே இல்லை. அவருக்கு சினிமா மேல் உள்ள ஆர்வம் காரணமாகவே இப்படியொரு படத்தை தயாரித்திருக்கிறார்.\nபடத்தின் பெரிய பலம் ரஜினி சார் தான். அவர் எத்தனையோ படங்கள் நடித்திருந்தாலும் இப்போதும் அவர் நடிப்பு புதிதாகவே இருக்கும். உடல் நிலை சரியில்லாத போதும், படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் நடித்து தந்தார் ரஜினி. இந்த நேரத்தில் எனது உதவி இயக்குநர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தை ஊடகங்கள் ஆதரிக்க வேண்டும் என்றார் ஷங்கர்.\nதமிழில் பேசிய அக்ஷய்குமார்: 2.0 படம் ஒரு பாடம். இந்தப் படத்தில் நான் நிறைய கற்றுக் கொண்டேன். ஷங்கர் என்ற அறிவுஜீவியிடம் நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன். ஷங்கர் இயக்குநர் மட்டுமல்ல, அவர் ஒரு விஞ்ஞானி என்றார் அக்ஷய்குமார்.\nஇந்த விழாவில் உரையைத் துவக்கும் போது தமிழில் பேசி அசத்தினார் அக்ஷய் குமார். \"வணக்கம் சென்னை'. மகிழ்ச்சி. பாலிவுட் நடிகரான நான் பேரும் புகழும் நிறைந்த ரஜினி, ஷங்கர், ஏ.ஆர்.ரஹ்மானுடன் பணியாற்றியது ஒரு பெரும் அரிய வாய்ப்பு. மகிழ்ச்சி. நன்றி என்றார் அக்ஷய்குமார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://battimedia.lk/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2021-10-19T12:08:13Z", "digest": "sha1:GN4R4QHTKDZAFSRH6KKKCV6IRLCLHHBU", "length": 7765, "nlines": 118, "source_domain": "battimedia.lk", "title": "மகனின் சடலத்தை கண்ட தாய் மாரடைப்பால் மரணம் . - Battimedia", "raw_content": "\nHome மட்டக்களப்பு மகனின் சடலத்தை கண்ட தாய் மாரடைப்பால் மரணம் .\nமகனின் சடலத்தை கண்ட தாய் மாரடைப்பால் மரணம் .\nஉயிரிழந்திருந்த தனது மகனின் சடலத்தைக் கண்ட தாயார், சில மணி நேரத்திலேயே மாரடைப்பால் மரணித்த சம்பவம், மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள ஜயங்கேணி பிரதேசத்தில் நேற்று (20) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nபுதூர் பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடைய ஞானப்பிரகாசம் மைக்கல் அவரின் தாயாரான 70 வயதுடைய ஞானப்பிகாசம் பாக்கியம் என்பவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.\nஉயிரிழந்த மகன், புதூர் பிரதேசத்தில் திருமணம் முடித்து வாழ்ந்து வந்த நிலையில், இரு தினங்களுக்கு முன்னர் மனைவியுடன் சண்டையிட்டுக் கொண்டு வீட்டைவிட்டு வெளியேறி, ஜயங்கேணியில் தனிமையில் வாழ்ந்து வரும் அவரது தாயார் வீட்டுக்கு வந்துள்ளதாக தெரியவருகிறது.\nஇந்நிலையில், நேற்றுக் காலை 11 மணியளவில் மகனைக் காணவில்லை என தாயார் தேடிய போது, அறைக்கதவு பூட்டப்பட்டுள்ளதையடுத்து, உறவினர்களின் உதவியுடன் அறைக்கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர்.\nஅங்கு தனது உயிரை மாய்த்த நிலையில் மகன் சடலமாக் கி்டப்பதைத் தாயார் கண்டுள்ளனார். ஏற்கெனவே புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருந்த தாயருக்கு சில மணி நேரத்தில் மாரடைப்பு ஏற்பட்டு அவரும் உயிரிழந்துள்ளார் என பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.\nஇது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு\nவருகின்றனர். உயிரிழந்த இருவரது உடல்களும் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு\nPrevious articleகிழக்கில் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு .\nNext articleஅமைச்சர் வியாழேந்திரனின் வீட்டின் முன்னால் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.\nபாடசாலைகள் மிண்டும் 21ம் திகதி ஆரம்பம் 52536 மாணவர்கள் பாடசாலைக்கு வருகை தரவுள்ளனர்.\nவிவசாயத்துக்கான உரத்தை வழங்கக் கோரி, மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று (18) பரவலாக ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றன.\nமட்டக்களப்பின் எல்லைக் கிராமங்களை பாதுகாக்கும் பணியினை ஆரம்பித்து வைத்த தமிழ் இளையோர் மக்கள் இயக்கம்\nஅனைத்து விதமான செய்திகளையும் உடனுக்குடன் அறிந்துக்கொள்ள தொடர்ந்தும் இணைந்திருங்கள். ஊடகவியலாளர்களாக இணைய விரும்புபவர்களும் தொடர்புகொள்ளவும் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ceylonsri.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE/", "date_download": "2021-10-19T11:49:18Z", "digest": "sha1:H5KPGF5YGTVEHX3NLI6DNUC2GNY6CVJF", "length": 8297, "nlines": 123, "source_domain": "ceylonsri.com", "title": "காபூலில் மீண்டும் இரத்தம் வழிகிறது - Ceylonsri News", "raw_content": "\nHome சர்வதேசம் காபூலில் மீண்டும் இரத்தம் வழிகிறது\nகாபூலில் மீண்டும் இரத்தம் வழிகிறது\nகாபூல் குண்டுவெடிப்பு குறித்து கருத்து தெரிவித்திருக்கும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் ரஷீத் கான், “காபூலில் மீண்டும் இரத்தம் வழிகிறது” என தெரிவித்த���ருக்கிறார்.\nநேற்று ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதுகுறித்து ரஷீத் கான் தனது ட்விட்டரில் “காபூலுக்கு மீண்டும் இரத்தம் வழிகிறது, ஆப்கானைக் கொல்வதை நிறுத்துங்கள்” என்று அழுகை ஈமோஜிகளுடன் எழுதியிருக்கிறார். முன்னதாக அவர் ஆகஸ்ட் 10 அன்று, தனது நாட்டு மக்களை குழப்பத்தில் விடாதீர்கள் என்று உலகத் தலைவர்களிடம் வேண்டுகோள் விடுத்தார். தலிபான் பிடியில் ஆப்கானிஸ்தான் வந்த நாள் முதல் தொடர்ச்சியாக தொடர்ச்சியாக ஆப்கன் மக்களுக்காக குரல் கொடுத்து வருகிறார்.\nதலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றி இருந்தாலும் காபூல் விமான நிலையம் மட்டும் அமெரிக்க படைகளின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. வெளிநாட்டவர்களை அந்தந்த நாடுகள் விமானம் மூலம் தாயகம் அழைத்துச் சென்று வருகின்றன. இது தவிர ஆயிரக்கணக்கான ஆப்கான் மக்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்காக காபூல் விமானநிலையம் அருகே குவிந்துள்ளனர்.\nஇந்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் விமான நிலையத்தின் வடக்கு நுழைவாயிலில் திடீரென மனித வெடிகுண்டு தாக்குதல் நிகழ்ந்தது. இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் அடுத்த 30 நிமிடங்களில் அமெரிக்க படைகளின் கூடாரத்தில் மற்றொரு வெடிகுண்டு தாக்குதல் நிகழ்ந்தது. இந்த இரட்டை வெடிகுண்டு தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் உட்பட 108 பேர் கொல்லப்பட்டனர்.\nPrevious articleநாட்டில் மேலும் 214 மரணங்கள் பதிவு\nNext articleஇலங்கை அரசியல் மிகவும் கீழ்த்தரமானது ; பதவியை இராஜிநாமா செய்த பாடகர் இராஜ் அதிரடி கருத்து\nஏமன் நாட்டில் அடையாளம் காணப்பட்ட பாரிய கிணறு; வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆராய்ச்சியாளர்கள்\nஐ.நா பொதுசபை கூட்டத்தில் கலந்து கொண்ட பிரேசில் அதிபரின் மகனிற்கு கொரோனா தொற்று\nவடக்கு வங்காள விரிகுடாவில் விருத்தியடைந்த “குலாப்” சூறாவளி\nச.தொ.ச. வெள்ளைபூடு விவகாரம் : தரகர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைப்பு\nசதொச நிறுவன வெள்ளை பூண்டு விவகாரம்; விசாரனையை CID க்கு மாற்றுமாறு அறிவிப்பு\nசுகாதார பணிப்பாளர் நாட்டு மக்களுக்கு விடுக்கும் அறிவிப்பு\nபொது சேவையை வழமைபோன்று செயற்படுத்த நாளை புதிய சுற்றுநிருபம்\nபிரதமர் மத்திய வங்கி ஆளுநரிற்கு வ��டுத்துள்ள அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ksradhakrishnan.in/?p=1616", "date_download": "2021-10-19T12:15:07Z", "digest": "sha1:P4AOXD3W2LNZEQMHBNSQWUWB7EOFFTUE", "length": 1893, "nlines": 49, "source_domain": "ksradhakrishnan.in", "title": "Report on Keeladi – கீழடி குறித்தான அறிக்கை – K S Radhakrishnan", "raw_content": "\nReport on Keeladi – கீழடி குறித்தான அறிக்கை\nReport on Keeladi – கீழடி குறித்தான அறிக்கை\nகீழடி அகழ்வாராய்ச்சி குறித்தான அறிக்கை\nNext மெய்யான நேர்மையான வரலாறு வேண்டும்.\nநாராயணசாமிநாயுடு விவசாய வாழ்வுரிமைப் போராளி பிறந்த நாள் .\nஇராஜபாளையம் சிவகாசி அருகேயுள்ள ஆலங்குளம் தமிழ்நாடு சிமென்ட்ஸ்\nநீர் மேலாண்மையில் கோட்டை விட்ட தமிழக அரசு\nஇலங்கை அரசு மீறிய ஒப்பந்தம்\nகேரள அரசு 20ஆண்டுகளுக்கு பின் முல்லை பெரியாறு அணைக்கு மின் இணைப்பு வழங்குகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://newsguru.news/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2021-10-19T12:46:51Z", "digest": "sha1:Z3MQXCKBQVV3Y6LQOUZFBWTV6RRYFCRQ", "length": 25488, "nlines": 201, "source_domain": "newsguru.news", "title": "தமிழர்களின் புத்தாண்டும் அரசியலும் - நியூஸ் குரு - அ.ஓம்பிரகாஷ்", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, அக்டோபர் 19, 2021 | எங்கள் மொபைல் ஆப்-ஐ பதிவிறக்கவும்\nHome ஆன்மிகம் & கலாச்சாரம் தமிழர்களின் புத்தாண்டும் அரசியலும்\nதமிழகத்தில் அனைத்து சுபகாரியங்களையும் பாரம்பரியமாக தமிழ்(இந்து) மாதங்களை அடிப்படையாகக் கொண்டே மக்கள் முடிவு செய்கின்றனர். கோயில் திருவிழாக்கள், திருமணம், புதுமனைப்புகுவிழா என்று அனைத்தும் பஞ்சாங்கத்தை வைத்தே நாள் குறிக்கப்படுகிறது. இந்துக்களாக இருந்து கிருஸ்தவ, முஸ்லீமாக மதம் மாறி சென்றுவிட்டவர்கள், தங்களை தமிழர்கள் என்று கூறிக் கொண்டாலும், தங்கள் மத காலண்டர் முறையையே தங்கள் வாழ்க்கையில் பயன்படுத்துகின்றனர்.\nநாத்திகத்தை தனது கொள்கையாக கூறிக் கொள்ளும் திமுக மட்டும் இந்து தமிழர்களின் புத்தாண்டு எது என்பதை தாங்கள் தான் முடிவு செய்வோம் என்று கூறிக்கொள்கிறது.\nஉண்மையான தமிழர்களின் புத்தாண்டு எது\nஅறிவியல் பூர்வமாக நம் முன்னோர்கள் நமக்கு கணித்து கொடுத்திருப்பது சித்திரை 1 ம் தேதியைத் தான்.\nசித்திரை-1 (ஏப்ரல் 14) அன்று புத்தாண்டு தொடங்குவது, தமிழ் நாட்டில் மட்டுமல்ல, நமது நாட்டில் உள்ள பல மாநிலங்களிலும், அந்த நாளிலேயே புத்தாண்டு கொண்டாடப் படுகிறது. அசாம், கேரளா, வங்காளம், பஞ்சாப், போன்ற நமது மாநிலங்களிலும், வெளி நாடுகளான பர்மா, கம்போடியா, லாவோஸ், நேபாளம், தாய்லாந்து போன்ற அயல் நாடுகளிலும் சித்திரை-1 (ஏப்ரல் 14) அன்று தான், புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகின்றது.\n‘சூரிய சித்தாந்தம்‘ என்ற சமஸ்க்ருத நூலில் நட்சத்திரங்களின் சுற்றுப் பாதையின் காலம், 60 வருடங்கள் என கணிக்கப்பட்டு உள்ளது.\n‘60 ஆண்டுகள் கணிப்பு‘ என்பது பூமி உடன் தொடர்புபடுத்தி, வானத்தில் மற்ற கிரகங்கள் இருக்கும் நிலையுடன் தொடர்புபடுத்தி, நமது முன்னோர்கள் கணித்து உள்ளனர். ஒரு முறை சூரியனை சுற்றுவதற்கு, சனி கிரகம் 30 வருடங்கள் எடுத்துக் கொள்ளும், வியாழன் கிரகம் 12 வருடங்கள் எடுத்துக் கொள்ளும், சூரியன் 60 வருடங்களுக்கு ஒரு முறை, குறிப்பிட்ட ஒரே நிலைக்கு வருவதை, இந்த அறுபது ஆண்டு சுழற்சி முறை குறிக்கின்றது.\nதமிழர்கள் பெரும்பொழுது, சிறுபொழுது என இரண்டு பொழுதாக பிரித்து வைத்து உள்ளனர்.\nஒரு வருடத்தை ஆறு பிரிவுகளாக பிரித்து வைத்து உள்ளனர்.\nஇளவேனில் காலம் – சித்திரை, வைகாசி\nமுதுவேனில் காலம் – ஆனி, ஆடி\nகார் காலம் – ஆவணி, புரட்டாசி\nகூதிர் காலம் – ஐப்பசி, கார்த்திகை\nமுன்பனி காலம் – மார்கழி, தை\nபின்பனி காலம் – மாசி, பங்குனி\nஎன பிரித்து பெரும்பொழுது என அழைத்தனர்.\nஅது போலவே, ஒரு தினத்தை ஆறாகப் பிரித்து…\nஎன ஆறாக பிரித்து வைத்து, அதை ‘சிறுபொழுது‘ என அழைத்தனர்.\nஒவ்வொரு தமிழ் மாதத்திலும், ”பௌர்ணமி” அன்று என்ன நட்சத்திரம் வருகிறதோ, அந்த நட்சத்திரத்தின் பெயரே, தமிழ் மாதப் பெயராக உள்ளது.\nதமிழ் புத்தாண்டும் அரசியலும் :\n1969 ஆம் ஆண்டு கருணாநிதி தமிழக முதல்வராக இருந்த போது, பொங்கலுக்கு அடுத்த நாளை, “திருவள்ளுவர் நாள்” என்று அறிவித்து, அரசு விடுமுறை நாளாக அறிவித்தார். பின்னர், 1971 ஆம் ஆண்டு, 50 ஆண்டு காலத்துக்கு முன்பு ஒரு கூட்டத்தில் சில திக சிந்தனையாளர்கள் எடுத்த முடிவின் அடிப்படையில் ‘திருவள்ளுவர்‘ ஆண்டு நடைமுறையை தமிழக அரசு ஏற்கும் அறிவித்தார். இதைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு நாட்குறிப்பில், தமிழ்நாடு அரசு இதழில் இது நடைமுறைக்கு கொண்டு வரப் பட்டது.\nபின்னர், 1981ஆம் ஆண்டு, எம்.ஜி.ஆர் அவர்களின் ஆட்சிக் காலத்தில், திருவள்ளுவர் ஆண்டு நடைமுறை என்பது அனைத்து அரசு அலுவலக நடைமுறைகளி��் வந்தது.\nபின்னர், ஜனவரி 29-ந்தேதி, 2008 ஆம் ஆண்டு கருணாநிதி அவர்களின் ஆட்சிக் காலத்தில், “தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு” நாளாக அறிவிக்கப் பட்டது. ஆனால் அது பலரால் ஏற்றுக்கொள்ளப் படவில்லை. ஏன் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் அளிப்பதைக் கூட, இந்த கலெண்டர் முறைக்கு கருணாநிதி மாற்றவில்லை. தமிழ் இந்துக்களும் சித்திரை 1 ம் தேதியை வருடப்பிறப்பாக கொண்டாடுவதை கைவிடவில்லை.\n2011 மீண்டும் முதல்வராக பதவியேற்ற ஜெயலலிதா, “சித்திரை முதல் நாளே தமிழ் புத்தாண்டு நாள்” என்று அறிவித்தார்.\nசித்திரை 1 – தமிழ் புத்தாண்டு நாள் – காரணங்கள் :\nமேஷ ராசியின் ஊடாக சூரியன் நகர்ந்து வரும் மாதமான சித்திரை மாதமே, வருடத்தின் முதல் மாதமாக, பண்டைய தமிழர்கள் கருதினர் என்பதற்கு, சங்க இலக்கியங்களிலேயே சான்று உள்ளது.\nசங்க இலக்கியங்களின் பதினென்மேல்கணக்கு நூல்களின் பத்துப்பாட்டில் ஒன்றான நெடுநெல்வாடையின் வரிகள் 160–161:\n“திண் நிலை மருப்பின் ஆடு தலை ஆக,\nவிண் ஊர்பு திரிதரும் வீங்கு செலல் மண்டிலத்து…\n“திண்ணிய நிலையினையுடைய கொம்பினையுடைய மேஷராசி முதலாக ஏனை இராசிகளிற் சென்று திரியும் மிக்க செலவினையுடைய ஞாயிற்றோடே”\nஅதாவது, மேஷ ராசி தொடங்கி மற்ற ராசிகளில் சென்று திரியும் சூரியன் என்று உரை. ஆகவே மேஷ ராசியே முதல் ராசியாக பண்டைய தமிழர்களும் கருதினர் என்று நாம் அறியலாம். மேஷ ராசியில் சூரியன் திரியும் மாதம் சித்திரை. ஆகவே, அதை முதல் மாதமாக கொண்டாடினர்.\nஆண்டின் தொடக்கம் வசந்த காலமாக இருக்க வேண்டும் என்பதனாலேயே, சித்திரை மாதம், ஆண்டின் தொடக்கமாக கணக்கிடப்பட்டு உள்ளது. பல ஆண்டு காலமாகவே, சித்திரை முதல் நாளையே, தமிழர்கள், புத்தாண்டாக கொண்டாடி மகிழ்ந்தனர்.\nகோடை காலமே, ‘முதலாவது பருவம்‘ என சீவக சிந்தாமணியில் கூறப்பட்டு உள்ளது. பண்டையத் தமிழர்களின் வானவியல் ஆய்வுப்படி, ‘சித்திரை ஒன்றையே, தமிழ் புத்தாண்டு என அனுசரிக்கப்பட்டது.\nசங்க இலக்கியங்களில் மிக பழமையானதான பத்துப்பாட்டு நூல்களில், சூரியன் மேஷத்தில் இருந்து தொடங்கி சுழற்சி செய்யும் உண்மையை நக்கீரனார் கூறி உள்ளார்.\nசென்னை பல்கலை கழகத்தால் 1912 ஆம் ஆண்டு, பதிப்பிக்கப் பட்ட தமிழ் பேரகராதியில், ‘சித்திரை முதல் நாளே தமிழ் புத்தாண்டு‘ என கூறப்பட்டு உள்ளது.\nஅரசவை கவிஞராக இருந்த நாமக்கல் வி. இராமலிங்கம் பிள்ளை அவர்களும், சித்திரை 1 தான், தமிழ் புத்தாண்டு என கூறி உள்ளார்.\nபல்வேறு சேர, சோழ, பாண்டிய கல்வெட்டுகளிலும், சித்திரை முதல் நாளே, ‘தமிழ் புத்தாண்டு‘ என உள்ளது.\nதிமுக ஆட்சி காலத்தில், தமிழ் புத்தாண்டை மாற்றினாலும், அதை ஏற்காமல் தமிழர்கள் சித்திரை 1 அன்று, தமிழ் புத்தாண்டை, வெகு விமரிசையாக கொண்டாடி மகிழ்ந்தனர்.\n60 தமிழ் வருட பெயர்கள் :\nபிரபவ – நற்றோன்றல் (1987–1988)\nவிபவ – உயர்தோன்றல் (1988-1989)\nசுக்ல – வெள்ளொளி (1989-1990)\nபிரமோதூத – பேருவகை (1990-1991)\nப்ரஜோத்பத்தி – மக்கட்செல்வம் (1991-1992)\nஆங்கீரச – அயல்முனி (1992-1993)\nஸ்ரீமுக – திருமுகம் (1993-1994)\nஈஸ்வர – ஈச்சுரம் (1997-1998)\nபகுதான்ய – கூலவளம் (1998-1999)\nபிரமாதி – முன்மை (1999-2000)\nவிக்ரம – நேர்நிரல் (2000-2001)\nவிஷூ – விளைபயன் (2001-2002)\nசித்ரபானு – ஓவியக்கதிர் (2002-2003)\nசுபானு – நற்கதிர் (2003-2004)\nதாரண – தாங்கெழில் (2004-2005)\nபார்த்திப – நிலவரையன் (2005-2006)\nவிய – விரிமாண்பு (2006-2007)\nசர்வசித்து – முற்றறிவு (2007-2008)\nசர்வதாரி – முழுநிறைவு (2008-2009)\nவிரோதி – தீர்பகை (2009-2010)\nவிக்ருதி – வளமாற்றம் (2010-2011)\nகர – செய்நேர்த்தி (2011-2012)\nநந்தன – நற்குழவி (2012-2013)\nவிஜய – உயர்வாகை (2013-2014)\nமன்மத – காதன்மை (2015-2016)\nதுர்முகி – வெம்முகம் (2016-2017)\nஹேவிளம்பி – பொற்றடை (2017-2018)\nவிளம்பி – அட்டி (2018-2019)\nசார்வரி – வீறியெழல் (2020-2021)\nசுபகிருது – நற்செய்கை (2022-2023)\nகுரோதி – பகைக்கேடு (2024-2025)\nவிசுவாவசு – உலக நிறைவு (2025-2026)\nபராபவ – அருட்டோற்றம் (2026-2027)\nபிலவங்க – நச்சுப்புழை (2027-2028)\nகீலக – பிணைவிரகு (2028-2029)\nசாதாரண – பொது நிலை (2030-2031)\nவிரோதி கிருது – இகல்வீறு (2031-2032)\nபரிதாபி – கழிவிரக்கம் (2032-2033)\nபிரமாதீச – நற்றலைமை (2033-2034)\nஆனந்த – பெரு மகிழ்ச்சி (2034-2035)\nராக்ஷச – பெருமறம் (2035-2036)\nபிங்கள – பொன்மை (2037-2038)\nகாளயுக்தி – கருமை வீச்சு (2038-2039)\nசித்தார்த்தி – முன்னிய முடிதல் (2039-2040)\nரௌத்திரி – அழலி (2040-2041)\nதுன்மதி – கொடுமதி (2041-2042)\nதுந்துபி – பேரிகை (2042-2043)\nருத்ரோத்காரி – ஒடுங்கி (2043-2044)\nரக்தாக்ஷி – செம்மை (2044-2045)\nகுரோதன – எதிரேற்றம் (2045-2046)\nஅக்ஷய – வளங்கலன் (2046-2047)\nஎல்லா சமஸ்கிருத பெயர்களுக்கும் ஈடாக, தமிழ் வருட பெயர்கள் உள்ளது. எவ்வாறு ஆங்கிலம் மொழி, பல நாடுகளுக்கும், பாரத தேசத்திற்கும் இணைப்பு மொழியாக உள்ளதோ, அது போலவே, சமஸ்கிருத மொழியும், நமது பாரத தேசத்தில் பயன் படுத்தப்பட்ட அனைத்து மொழிகளுக்கும், இணைப்பு மொழியாக இருந்து வருகின்றது.\nஎல்லா இந்திய மொ���ிகளிலும், நிச்சயமாக சமஸ்கிருத வார்த்தை கலந்து இருக்கும். தமிழில் எத்தனையோ சமஸ்கிருத வார்த்தைகளை, நாம் அன்றாடம் பயன்படுத்தி வருகிறோம்.\nசிலர் சமஸ்கிருத பெயர்களை ஏன் பயன்படுத்த வேண்டும் என கூறி வருகிறார்கள். இந்து மதத்தின் பொக்கிஷங்களை தன்னகத்தே கொண்டது சமஸ்கிருதம். எப்படி கிருஸ்தவர்கள் ஆங்கிலத்தை தங்கள் மதமொழியாக கருதுவதைப் போல, இஸ்லாமியர்கள் அரபை தங்கள் மதமொழியாக கருதி பின்பற்றுவதைப் போல இந்துக்களுக்கு தங்கள் மதத்தின் மொழியாக சமஸ்கிருதத்தை பின்பற்றும் உரிமை உள்ளது. இதை தமிழ், தமிழர் என்று கூறி அழித்துவிட முடியாது.\nஅரசியல்வாதிகள் பிற மத விவகாரங்களில் தலையிடாதது போலவே இந்து தமிழர்களின் மத விவகாரங்களில் தலையிடாமல் இருப்பதே நல்லது.\nடி20 கிரிக்கெட் போட்டி இந்தியா-பாகிஸ்தான் போட்டி நடக்குமா\nஅண்டை நாடுகளில் இந்துக்கள் மீது தாக்குதல் – உலக நாடுகள் கண்டிக்கட்டும்\n இன்று தலித் தொழிலாளி கொடூர கொலை\nடி20 கிரிக்கெட் போட்டி இந்தியா-பாகிஸ்தான் போட்டி நடக்குமா\nஅண்டை நாடுகளில் இந்துக்கள் மீது தாக்குதல் – உலக நாடுகள் கண்டிக்கட்டும்\n இன்று தலித் தொழிலாளி கொடூர கொலை\nமனித குலத்தின் பல்வேறு பிரச்சனைகளுக்கு பாரதமே தீர்வு தரமுடியும் -ஆர்.எஸ்.எஸ் தலைவர் டாக்டர்.மோகன்பாகவத்\nநியூஸ் குரு ஒரு ஆன்லைன் செய்தி தளமாகும். நாங்கள் முக்கியமாக பிராந்திய அரசியல், கலாச்சாரம் மற்றும் பொருளாதாரத்தில் கவனம் செலுத்துகிறோம். கோயம்புத்தூரை மையமாகக் கொண்ட இந்த அமைப்பு, உண்மைகளால் இயக்கப்படும் ஊடக கலாச்சாரத்தையும், முக்கியத்துவம் வாய்ந்த கருத்துகளையும் வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.\nமாணவர்கள் படிப்பில் வெற்றி பெறுவது எப்படி\nஅருள் பிரகாஷ் - பிப்ரவரி 9, 2021 0", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-10-19T13:20:28Z", "digest": "sha1:EKPG4TYF6S64H7RQHMEW667VX22ZQJZA", "length": 11859, "nlines": 178, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள கோயில்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள கோயில்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 9 துணைப்பகுப்புகளில் பின்வரும் 9 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\nஅராலியில் அமைந்துள்ள கோயில்கள்‎ (2 பக்.)\nஅரியாலையில் உள்ள கோயில்கள்‎ (5 பக்.)\nஇணுவிலில் உள்ள கோயில்கள்‎ (6 பக்.)\nசுதுமலையில் உள்ள கோயில்கள்‎ (2 பக்.)\nநல்லூரில் உள்ள கோயில்கள்‎ (4 பக்.)\nநாயன்மார்கட்டில் உள்ள கோயில்கள்‎ (3 பக்.)\nபுங்குடுதீவில் உள்ள கோயில்கள்‎ (3 பக்.)\nயாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள கிறித்தவக் கோவில்கள்‎ (1 பக்.)\nவண்ணார்பண்ணையில் உள்ள கோயில்கள்‎ (5 பக்.)\n\"யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள கோயில்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 67 பக்கங்களில் பின்வரும் 67 பக்கங்களும் உள்ளன.\nஅளவெட்டி வெளிவயல் முத்துமாரி அம்மன் ஆலயம்\nஉடுவில் சிவஞான பிள்ளையார் ஆலயம்\nஉடுவில் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவில்\nகச்சாய் கண்ணகை அம்மன் கோவில்\nகந்தர்மடம் சிறீ சித்தி விநாயகர் ஆலயம்\nகருணாகரப் பிள்ளையார் கோயில், உரும்பிராய்\nகல்வியங்காடு முக்குறுணிப் பிள்ளையார் கோயில்\nகற்பகப் பிள்ளையார் கோயில், உரும்பிராய்\nகோட்டு வாசல் அம்மன் கோவில்\nகோண்டாவில் உப்புமடம் பிள்ளையார் கோவில்\nகோப்பாய் வீரபத்திர சுவாமி ஆலயம்\nகோவிற்கடவை சித்தி விநாயகர் ஆலயம்\nசங்குவேலி சிவஞான பிள்ளையார் ஆலயம்\nசிட்டிவேரம் கண்ணகை அம்மன் ஆலயம்\nசிற்பனை முருகன் ஆலயம், வேலணை\nசிறீ பார்வதி சமேத பரமேசுவரன் ஆலயம்\nசீரணி நாகபூசணி அம்மன் கோயில்\nதம்புருவளை சித்தி விநாயகர் கோவில்\nதிருநெல்வேலி பத்திரகாளி அம்மன் கோவில்\nதிருநெல்வேலி முத்துமாரி அம்மன் கோவில்\nதிருநெல்வேலி வெள்ளைப் பிள்ளையார் கோவில்\nநயினாதீவு நாகபூசணி அம்மன் கோயில்\nநயினாதீவு வீரபத்திரப் பெருமான் ஆலயம்\nநவிண்டில் சிவகாமி அம்மன் கோவில்\nபண்ணாகம் விசவத்தனை முருகன் கோயில்\nபத்திரகாளி சமேத வீரபத்திரர் கோவில்\nபருத்தித்துறை பெரிய பிள்ளையார் கோவில்\nபலானை கண்ணகை அம்மன் கோவில்\nபழம் வீதி ஞான வைரவர் ஆலயம்\nபுளியங்கூடல் செருத்தனைப்பதி இராஜ மகாமாரியம்மன் கோயில்\nமானிப்பாய் மருதடி விநாயகர் கோவில்\nமீசாலை திருநீலகண்ட வெள்ளை மாவடி பிள்ளையார் கோவில்\nமுகப்புவயல் சிவசுப்பிரமணிய சுவாமி கோயில்\nயாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதி பொன்னம்பலவாணேசுவ��ர் கோவில்\nவண்ணை சிறீ வெங்கடேச வரதராஜப் பெருமாள் தேவஸ்தானம்\nவயாவிளான் தெற்கு ஞானவைரவர் ஆலயம்\nவல்வெட்டி வேவில் வீரகத்தி விக்னேசுவரர் ஆலயம்\nவேலணை சிற்பனை முருகன் ஆலயம்\nஇலங்கையில் உள்ள இந்துக் கோவில்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2019, 02:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/dulquer-salmaan/", "date_download": "2021-10-19T11:08:20Z", "digest": "sha1:U5P3V2K74KWIWCESRN3WQIYFSYT5OMIV", "length": 10567, "nlines": 143, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Dulquer Salmaan News in Tamil:Dulquer Salmaan Latest News, Photos, Breaking News Headlines, Videos- Indian Express Tamil", "raw_content": "\nபச்சைக்கிளி… முத்துச் சரம்… முல்லைக் கொடி.. மாஸ்டர் நாயகி அல்ட்ரா கிளாமர் போட்டோ ஷூட்\nActress Malavika Mohanan glamorous photos viral Tamil News: நடிகை மாளவிகா மோகனனின் கிளாமர் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.\n‘வரனே அவஷ்யமுண்டு’ சர்ச்சை: தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேட்ட துல்கர் சல்மான்\nDulquer Salmaan : உங்களில் சிலர் எங்களோடு சேர்த்து எங்கள் குடும்பத்தையும் வன்மத்துடன் திட்டி, மிரட்டி, அவமானப்படுத்தி வருகிறீர்கள். இது நடந்திருக்க வேண்டாம் என்று விரும்புகிறேன்”. இவ்வாறு…\nவிராட் கோலி அவதாரம் எடுக்கும் பிரபல நடிகர்… ஆர்வத்துடன் காத்திருக்கும் ரசிகர்கள்\nவிராட் கோலி வாழ்க்கை வரலாறு படமாக்கப்படுகிறது. இதில் விராட் கோலி கதாப்பாத்திரத்தில் பிரபல தென் இந்திய நடிகர் நடிக்கவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது. முழுசா விராட் கோலி போல…\n‘யார் இவர்கள்’ : பாலாஜி சக்திவேலின் அடுத்த படைப்பு\nசென்னை மாநகரத்தின் பல்வேறு பகுதிகளில், வெகுநாட்களாகவே ‘யார் இவர்கள்’ என்ற போஸ்டரை நம்மாள் பார்க்க முடிந்தது. பலரும் அதைப்பார்த்துக் குழம்பியிருந்த தருணத்தில், அதற்கான விடையை இன்று அளித்துள்ளார்…\n4 கதாநாயகிகளுக்கு ஜோடியாகும் துல்கர் சல்மான்\nஇயக்குனர் கார்த்திக் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்து வரும் புதிய திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக 4 நடிகைகள் நடிக்கிறார்கள்.\n“நடிகையர் திலகம்” திரைப்படத்தின் டீசர் இன்று வெளியீடு: நடிகை சாவித்திரியாக கீர்த்தி சுரேஷ்\n“நடிகையர் திலகம்” படத்தின் டீசர் இன்று வெளியானது. சாவித்திரியாக கீர்த்தி சுரேஷ், ஜெமினி கணேசனாக துல்கர் சல்மான் நடித்துள்ளனர்.\nதுல்கர் சல்மானின் ‘கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால்’ : சென்னையில் ஷூட்டிங் தொடங்கியது\nசென்னை ஆழ்வார்பேட்டையில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. 54 நாட்களில் மொத்த படப்பிடிப்பையும் முடிக்கத் திட்டமிட்டுள்ளனர்.\nதுல்கர் சல்மான் நடிக்கும் ‘கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால்’\nதமிழில் நான்காவது படமாக தேசிங் பெரியசாமி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் துல்கர் சல்மான். இந்தப் படத்துக்கு ‘கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.\nஅபிஷேக் காலில் விழுந்த தாமரைச்செல்வி… காரணம் என்ன\nவாட்ஸ்அப் குழு அழைப்புகளில் நடுவில் சேருவது எப்படி\nசினிமா ஆசை… வாய்ப்புக்காக போராட்டம்… சீரியல் நடிகர்… பிக்பாஸ் போட்டியாளர் ராஜூ ஜெயமோகன் லைப்\nஇலங்கை கடற்படை தாக்குதலில் தமிழக மீனவர் உயிரிழப்பு; தொடரும் துயரம்\nடெல்லி ரகசியம்: பாஜகவை எச்சரித்த மேகாலயா ஆளுநர்; பின்னணி என்ன\nஇந்துசமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு; 8 ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்\nபயிற்சி ஆட்டத்தில் வெற்றியை ருசித்த இந்தியா; அணியின் நிலை என்ன\nSBI Alert: எஸ்பிஐ எச்சரிக்கை… உங்க பணம் பாதுகாப்பா இருக்கணும்னா இந்த 3 விஷயத்தை மறக்காதீங்க\nஎன்னங்க ஜே.சி.பிய வச்சு தூக்குறீங்க\nNEET Results: இந்த தேதிக்குள் நீட் ரிசல்ட்; அடுத்து செய்ய வேண்டியது என்ன\nTamil Serial Rating : டைரக்டருக்கும் பாரதிக்கும் சுத்தியலால் இரண்டு தட்டு தட்டினால் சரியா இருக்கும்… பாரதி கண்ணம்மாவுக்கு இந்த நிலையா\nவெட்டியான நேரத்தில் இதுதான் என் வேலை – குக் வித் கோமாளி சுனிதா வைரல் வீடியோ\n‘நாம் தமிழர் போர்வையில் ஆர்.எஸ்.எஸ்… ஆதாரம் என்னிடம் இருக்கிறது’: இயக்குனர் அமீர்\nஅதிமுக முடிந்து விட்டது; இனி ஆட்சிக்கு வர முடியாது: எம்ஜிஆர் நிழல் ஆர்.எம்.வீரப்பன்\n“இந்தி தெரிந்திருக்க வேண்டும்” – கஸ்டமர்கேர் கருத்துக்கு கண்டனம்; தமிழில் மன்னிப்பு கேட்ட சொமேட்டோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newsguru.news/schooledu-samachir/", "date_download": "2021-10-19T11:48:25Z", "digest": "sha1:BW3RJQHR3GPFGV3PRYJVDMMZT3HDAVIM", "length": 20736, "nlines": 110, "source_domain": "newsguru.news", "title": "உயர்கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு நிரந்தர தீர்வா? - நியூஸ் ���ுரு - ரா.செந்தில்முருகன்", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, அக்டோபர் 19, 2021 | எங்கள் மொபைல் ஆப்-ஐ பதிவிறக்கவும்\nHome நியூஸ்குரு ஸ்பெஷல் உயர்கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு நிரந்தர தீர்வா\nஉயர்கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு நிரந்தர தீர்வா\nதமிழகத்தில் திராவிட கட்சிகள் ஆட்சிப் பொறுப்பேற்றதும், அரசுப்பள்ளிகளின் கல்வித்தரம் படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது. அதே வேகத்தில் தனியார் பள்ளிகளின் வளர்ச்சியும், தரமும் அதிகரிக்கிறது. தேர்தலை நடத்தும் அதிகாரிகளாக இருக்கும் அரசு பள்ளி ஆசிரியர்களின் தயவு தேவை என்பதை புரிந்து கொண்ட திமுக, அவர்களுக்கு சம்பளத்தை மற்ற அரசு ஊழியர்களை விட அதிகரித்தது. ஆனால் அதே சமயம் அவர்களின் வேலையின் தரம் குறித்து கேள்வி கேட்கப்படவில்லை. அரசு பள்ளி ஆசிரியர்களை ஒப்பிடுகையில் மிக குறைவான சம்பளம் வாங்கும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களை அதிக மதிப்பெண்கள் பெற வைத்தனர். போட்டித்தேர்வுகளிலும் வெற்றியடையும் தகுதியை ஏற்படுத்தினர்.\nஆனால் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் தாய் மொழி தமிழை பிழையின்றி கற்கும் வாய்ப்பைக் கூட பெற முடிவதில்லை. மாநிலத்தில் ஒன்றிரண்டு அரசுபள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் சுய விருப்பத்தால் தரமான மாணவர்களை உருவாக்குகின்றனர். ஆனால் அவற்றின் எண்ணிக்கையை விரல்விட்டு எண்ணிவிடலாம்.\nதனியார் பள்ளி மாணவர்களே உயர்கல்வி, வேலை வாய்ப்பு என்று அனைத்திலும் இடம்பிடிப்பதைக் கண்ட திமுக 2006 தேர்தல் அறிக்கையில் மாநிலத்தில் அனைவருக்கும் சமமான கல்வி கொண்டுவரப்படும் என்று அறிவித்தது. தேர்தலில் வெற்றி பெற்றதும் இதற்காக முனைவர் எஸ்.முத்துக்குமரன் தலைமையிலான ஒருநபர் குழு அமைத்தது. அவரும், இது தொடர்பாக ஆராய்வதற்கு கர்நாடகா, குஜராத், கேரளா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கு கல்வியாளர்கள் குழு நேரில் சென்று ஆய்வு செய்து அளித்த ஆய்வறிக்கையின் அடிப்படையில் சமச்சீர் பள்ளிக் கல்வி முறைச் சட்டம் சட்டப்பேரவையில் இயற்றப்பட்டது. அதன்படி மெட்ரிக்குலேசன், அரசு பள்ளிகள் அனைத்திற்கும் மாநில அரசே ஒரே மாதிரியான பாடப்புத்தகங்களை அச்சிட்டு வழங்கியது.\nஅந்தோ பரிதாபம், மேலே உள்ளவனோடு சமமான நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றால், கீழே உள்ளவனை மேலே தூக்கி விட வேண்டும். ஆனால் சமச்சீர் கல்வி முறையோ மேலே உள்ளவனை கீழே இழுத்து தள்ளி சமப்படுத்தியது. விளைவு பொதுத்தேர்வுகளில் 150 க்கும் மேற்பட்டோர் முதலிடம் பிடித்தனர். இரண்டாம், மூன்றாம் இடங்கள், பாடங்களில் சென்டம் வாங்குபவர்கள் எண்ணிக்கை எல்லாம் ஆயிரக்கணகில் உயர்ந்தது. தாங்கள் ஏற்கனவே படித்துவந்த பாடத்திட்டங்களைவிட சமச்சீர் கல்வி முறையில் பாடத்திட்டங்கள் சுலபமாக இருந்ததால் இதிலும் தனியார் பள்ளி மாணவர்களே ஸ்கோர் செய்தனர்.\nஆனால் தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் நடக்கும் உயர்கல்விக்கான போட்டித்தேர்வுகளை எதிர்கொள்வதில் சமச்சீர் கல்வி பயின்ற மாணவர்கள் திணறினர். இதனால் பல தனியார் பள்ளிகள் மத்திய அரசின் சிபிஎஸ்சி பாடத்திட்டத்திற்கு மாறத்தொடங்கின. இதைத்தொடர்ந்து ஆட்சியில் அமர்ந்த அதிமுக அரசு தற்போதைய முதல்வர் ஸ்டாலினின் தனிச்செயலாளர்களில் ஒருவரும், ஐஏஎஸ் அதிகாரியுமான உதயச்சந்திரனை செயலராக கொண்டு பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கும் குழு அமைத்தது. அந்த குழு புதிய பாடத்திட்டத்தை உருவாக்கியது. அதில் உள்ள சிறப்புகள் குறித்து அப்போது உதயச்சந்திரன் கூறியதாவது:\nமாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கனவை நனவாக்கும் வகையில் இருக்கும். இந்தியாவின் தலைச்சிறந்த வல்லூர்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.\n11 ஆம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு கொண்டுவரப்பட்டுள்ளது.\nநீட் உட்பட அனைத்து தேர்வுகளுக்கும் உதவும் வகையில் பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 11 ம் வகுப்பில் இயற்பியலில் மெக்கானிக்கல் பாடப்பிரிவு செயல் விளக்கத்துடன் கொடுக்கப்பட்டுள்ளது.\n+2 பாடப்புத்தகத்தில், படிப்பிற்கு அடுத்து என்னப்படிக்கலாம் என்ற விவரமும் இருக்கிறது.\nசிபிஎஸ்சி பாடப்புத்தகங்கள் 10 ஆண்டுகள் பழமையானது, இதில் பல போதாமைகள் இருக்கின்றன, இதை நிவர்த்தி செய்யும் வகையில் இருக்கும். மேலை நாடுகளில் இருந்து சிலவற்றை எடுத்து சேர்த்திருக்கிறோம்.\nஆசிரியர்களுக்கு விரிவான பயிற்சிக்கு ஏற்பாடு செய்ய திட்டம் தயாராக இருக்கிறது.\nயாரை வைத்து பாடம் எழுதப்பட்டதோ அவர்களே ஆசிரியர்களுக்கு பாடம் எடுக்க திட்டமிட்டுள்ளோம்.\nபாடத்தை எவ்வாறு நடத்துவது என வீடியோக்கள் இணையத்தில் அப்லோடு செய்யப்படும்.\n��மிழ் பாடத்திட்டத்தில் நவீன இலக்கியம் உட்பட பல்வேறு விஷயங்கள் இருக்கின்றன.\nஐஐடி, ஜெஇஇ தேர்வில் தீர்வுகளை சரிப்படுத்தும் முறை, நம்முடைய படிப்பு தியரி சம்பத்தப்பட்டதாக இருந்தது. இதை இம்முறை மாற்றி இருக்கிறோம்.\nஐஏஎஸ் தேர்வு எழுதிய மாணவர்களின் நேர்காணல்களும் இடம்பெற்றுள்ளன.போட்டித்தேர்வுகளுக்கு பாடம் எடுக்கும் ஆசிரியர்களின் ஆலோசனைகள் இடம்பெற்றுள்ளன. குடிமைப்பணிகளுக்கு செல்பவர்களுக்கும் இது உதவும் என்றார் ( பாடத்திட்டங்களை மாற்றி அமைத்தபோது, தேசிய சிந்தனையை குறைக்கும் மாற்றங்கள் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டுகளும் எழுந்தன).\nஒருவழியாக பாடத்திட்டம் சரி செய்யப்பட்டு மாணவர்கள் அவற்றை கற்று வந்தாலும், அரசு பள்ளி மாணவர்களின் தரம் உயர்ந்ததாக தெரியவில்லை. அதனால் அரசு பள்ளி ஆசிரியர்களின் பணிதரத்தை உயர்த்தாமல் இதற்கு நிரந்தர தீர்வு கிடைக்காது என்கின்றனர் கல்வியாளர்கள். ஆனால் அதை செய்யாமல் மருத்துவப்படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை அதிமுக அரசு வழங்கியதை பின்தொடர்ந்து, நுழைவுத்தேர்வு இல்லாத வேளாண்மை, பொறியியல் உள்ளிட்ட பட்டப்படிப்புகளுக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை அளித்து, அரசு பள்ளிகளில் தரம் இல்லை என்பதை தமிழக அரசு பகிரங்கமாக ஒத்துக் கொண்டுள்ளது. இத்தனைக்கும் அரசு பள்ளியில் படிக்கும் ஒவ்வொரு மாணவனுக்கும் குறைந்தது ஆண்டிற்கு 55 ஆயிரம் ரூபாய் செலவிடுகிறது. அதாவது பெரும்பாலான தனியார் பள்ளிகளில் வசூலிக்கப்படும் கட்டணத்தைவிட இது அதிகம்.\nஅரசு இடஒதுக்கீட்டில் உயர்கல்வி வாய்ப்பு பெற்றுச் செல்லும் அரசுப்பள்ளி மாணவர்கள், தனியார் பள்ளி மாணவர்களுடன் இணைந்து படித்து தேர்ச்சி பெறும் அளவிற்கு திறமை பெற்றவர்களாக இருப்பார்களா என்பது கேள்விக்குறி. இந்த ஒதுக்கீட்டு முறையால் உயர்கல்வியின் தரத்திற்கும் தமிழக அரசு வேட்டு வைத்திருப்பதாக கல்வியாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.\nஅரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு தரமான கல்வியை கற்பித்து, அவர்களை மற்ற மாணவர்களுடன் போட்டிபோடும் நிலைக்கு உயர்த்தினால் தான் இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். அத்தோடு பெற்றோர்கள் தனியார் பள்ளிகளை நாடிச்செல்லும் நிலையும் மாறும்.\nஆனால் த��ர்தல் வெற்றியையும், வாக்குவங்கியையும் மட்டும் கருத்தில் கொள்ளும் திராவிட கட்சிகள் அதை செய்யுமா என்பது மில்லியன் டாலர் கேள்வியே\nடி20 கிரிக்கெட் போட்டி இந்தியா-பாகிஸ்தான் போட்டி நடக்குமா\nஅண்டை நாடுகளில் இந்துக்கள் மீது தாக்குதல் – உலக நாடுகள் கண்டிக்கட்டும்\n இன்று தலித் தொழிலாளி கொடூர கொலை\nடி20 கிரிக்கெட் போட்டி இந்தியா-பாகிஸ்தான் போட்டி நடக்குமா\nஅண்டை நாடுகளில் இந்துக்கள் மீது தாக்குதல் – உலக நாடுகள் கண்டிக்கட்டும்\n இன்று தலித் தொழிலாளி கொடூர கொலை\nமனித குலத்தின் பல்வேறு பிரச்சனைகளுக்கு பாரதமே தீர்வு தரமுடியும் -ஆர்.எஸ்.எஸ் தலைவர் டாக்டர்.மோகன்பாகவத்\nநியூஸ் குரு ஒரு ஆன்லைன் செய்தி தளமாகும். நாங்கள் முக்கியமாக பிராந்திய அரசியல், கலாச்சாரம் மற்றும் பொருளாதாரத்தில் கவனம் செலுத்துகிறோம். கோயம்புத்தூரை மையமாகக் கொண்ட இந்த அமைப்பு, உண்மைகளால் இயக்கப்படும் ஊடக கலாச்சாரத்தையும், முக்கியத்துவம் வாய்ந்த கருத்துகளையும் வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.\nஸ்டான்லி ராஜன் - மார்ச் 4, 2021 1", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF_%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B5%E0%AF%8D", "date_download": "2021-10-19T12:42:59Z", "digest": "sha1:BU4HEANQGXYNKNP6N6TXXBX74IHMMEGR", "length": 14990, "nlines": 149, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜாக்கி லீவ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமலேசியாவில் ஒரு ஃபுட் கௌர்மெட் என்று அறியப்பட்ட முதல்\nஜாக்கி லீவ் (English: Jacky Liew; Chinese: 廖城兰; ஆகஸ்ட் 3 இல் பிறந்தார்), அவரது சி கோங்ஸி (Chinese: 食公子) அல்லது ஃபுட் மாஸ்டர் என்ற பெயரால் நன்கு அறியப்பட்டார். அவர் ஒரு பிரபலமான உணவு விமர்சகர், உணவு கட்டுரையாளர், எழுத்தாளர், தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் சர்வதேச சமையல் போட்டியின் நீதிபதியாக இருப்பவர். மலேசியாவில் ஒரு ஃபுட் கௌர்மெட் என்று அறியப்பட்ட முதல் நபரும் ஆவார்[2] .\nஜாக்கி லீவ் மலேசியாவில் பிறந்தார், அவருடைய மூதாதையர் வீடு குவாங்டாங் சீனாவில் உள்ளது.\n1996 முதல், பயணம் மற்றும் உணவு குறித்து \"Food World”, \"Apple\" மற்றும் \"Traveller's Digest” பத்திரிகைகளில் பத்திரிகையாளராகவும் கட்டுரையாளராகவும் அவர் தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.\n2000 ஆம் ஆண்டில், அவர் \"Feminine\" மற்றும் \"Oriental Cuisines\" ஆகியவற்றில் சமையல் விமர்சனங்களை \"Shi Gongzi\" எ���்ற பெயரில் எழுதினார்.\nவணிக முறையில் உணவு விமர்சகர்களையும் பரிந்துரைகளையும் வழிநடத்திய முதல் நபரும் இவரே, மேலும் மலேசியாவின் உணவு மேம்பாடு மற்றும் சுற்றுலாவில் எப்போதும் ஈடுபடுபவர், மலேசியாவின் நூறாண்டு உணவு கலாச்சாரத்திற்கான உணவகங்கள் மற்றும் ஆராய்ச்சிகளின் சமையல் குறிப்புகளைத் தக்கவைத்துக்கொண்டு இருப்பவர், மலேசியா உணவுக்கு பெரும் பங்களிப்பைச் செய்பவர்.\n2002 இல், அவர் இன்றைய வேளாண் கல்லூரியின் விரிவுரையாளராகவும், கல்லூரி இதழின் ஆலோசகராகவும் ஆனார். 2006 இல், அவர் நன்யாங் பிரஸ்ஸில் தேசிய வணிக ஒருங்கிணைப்பாளராக ஆக அழைக்கப்பட்டார்.\n2007 ஆம் ஆண்டில், அவர் உணவுப் பத்தியில் அரசியல் கூறுகளைச் சேர்த்தார், மேலும் தூதரக அமைச்சர், அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 119 மலேசிய மற்றும் வெளிநாட்டு அரசியல்வாதிகளைச் சந்தித்தார்.\n2013 முதல் தற்போது வரை, அவர் தரவு அறிவியலைப் படிக்கத் தொடங்கினார் மற்றும் மலேசியாவின் உணவு மதிப்பீட்டு தரங்களை மறுவரையறை செய்ய இணைய தொழில்நுட்பத்தைப் பிரயோகப்படுத்தினார்.\n2008 ஆம் ஆண்டில், மலேசியாவின் 10 வது Yang di-Pertuan Agong (தமிழில் யாங் டி பெர்துவான் அகோங்) என்பவரிடமிருந்து சமூகப் பங்களிப்புக்காக பி.எம்.சி சோசியல் சர்வீஸ் எஸ்சலன்ஸ் விருது மூலம் வெகுமதி மற்றும் அங்கீகாரம் பெற்றார் மற்றும் அரசரை சந்தித்த முதல் சீன உணவு எழுத்தாளராக திகழ்கிறார். அவர் பிரெஞ்சிலிருந்து உலக ஃபுட் கௌர்மெட் பேட்ஜ்களைப் பெற்றவர்[2]. 2011 ஆம் ஆண்டில், சீனா சர்வதேச கருத்தரங்கில் எஸ்சலன்ஸ் பேப்பர் விருதைப் பெற்றார். 2012 இல், அவர் “Who’s who compilation among 100 years” இல் சேர்க்கப்பட்டார்.\n\"ட்ரூலி நியோனியா மலாக்கா\" இன் அட்டை\nமலேசிய உணவு வரலாற்றில் ஒரு அறிஞராக, அவரது இலக்கியப் படைப்பான ட்ரூலி நியோனியா மலாக்கா (2010, வெளியீட்டாளர்: சீஷோர் எஸ்.டி.என். பிஎச்.டி) இல் தேர்ந்தெடுக்கப்பட்டது, மேலும் வாஷிங்டன், DC இல் உள்ள காங்கிரஸ் நூலகம், சிங்கப்பூரின் தேசிய நூலகம், மலேசியாவின் தேசிய நூலகம், பல்கலைக்கழக தொழில்நுட்ப மலேசியா (UTeM) நூலகம் மற்றும் சிங்கப்பூரில் உள்ள இங்கீ ஆன் பாலிடெக்னிக் ஆகியவற்றின் தொகுப்பின் ஒரு பகுதியாக மாறியது.\nஅவரது புத்தகத்தில், \"மலாய் தீவுக்கூட்டத்தின் மலேசிய உணவு தாக்கங்களை\" உள்ளடக்கிய நன்யாங் உ���வு வகைகளை அறிமுகப்படுத்திய முதல் நபரும் இவரே, மேலும் அவர் மலேசிய உணவை 3 சமூக வகைகளாகப் பிரிக்கிறார், அதாவது 1. அரசர் மற்றும் உயர்குடி உணவு வகைகள், 2. தேசிய பாரம்பரிய உணவு; 3. புவியியல், மொழிகள் குடும்பம் மற்றும் பலவற்றின் அடிப்படையில் 5 முக்கிய இனங்களின் உணவு வகைகள், அதாவது 1. மலாய்; 2. சைனீஸ்; 3. வட மற்றும் தென் இந்தியா, மமக், இந்திய முஸ்லிம்; 4. நியோனியா மற்றும் சிட்டி; 5. மலேசியா தீபகற்பத்தில் உள்ள பழங்குடியினர் மற்றும் சபா மற்றும் சரவாக் பழங்குடியினர் மற்றும் வட மலேசியாவில் உள்ள யூரேசிய போர்ச்சுகிஸ் மற்றும் சியாம் முஸ்லிம் ஆகியவற்றின் 2 சிறப்பு வகைகள்[3].\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 செப்டம்பர் 2021, 17:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpage.in/category/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81/page/3", "date_download": "2021-10-19T10:56:01Z", "digest": "sha1:MFYJLY6HNZ3QF5RFUH6CIRMHC4VOBAYA", "length": 7812, "nlines": 90, "source_domain": "tamilpage.in", "title": "பொது - Tamil Page", "raw_content": "\nஇந்திய தேர்தலும் அதன் வரலாறும்\nஒரு நாட்டின் மக்கள் பொது வாழ்வில் பதவிகளை நிர்வகிப்பதற்காக ஒரு தனிநபரை தேர்ந்தெடுக்க முடிவு செய்யப்படும் செயல்முறை தேர்தல் என்பதாகும். குடவோலை முறை என்பது நாம் அனைவரும் அறிந்ததே. சோழர்கள் காலத்தில் நிர்வாக சபை உறுப்பினர்களை தேர்வு செய்வதற்காக குடவோலை முறை...\nநமது இலக்கியங்களில் காந்தள் என்று சிறப்பித்து கூறுப்படும் இந்த மலர் கார்த்திகை மாதத்தில் பூப்பதால் “கார்த்திகைப்பூ” என்று அழைக்கப்படுகிறது. செங்காந்தள் மலர் காந்தள் பேரினத்தை சேர்ந்தது ஆப்பிரிக்கா, ஆசியா இதன் தயக்கமாகும். கார்த்திகை திங்களில் முகிழ்விடும். அது அகல் விளக்கு போன்று ஆறு...\n67வது தேசிய திரைப்பட விருதுகள்\n67 வது தேசிய திரைப்பட விருதுகள் இந்தியாவில் லூமியர் பிரதர்ஸ் சினிமாகிராபி என்ற நிறுவனத்தால் வாட்சன் விடுதியில் ஆறு சிறிய ஊமை படத்தை வெளியிட்டனர். இதுவே இந்தியாவில் முதலில் வெளியிட்ட திரைப்படங்களுக்கும். 67th Nation Film Awards இந்திய...\nமுதல்வரையே எதிர்க்கும் தேர்தல் மன்னன் பத்மராஜன்\nகஜினி முகமதுவின் படையெடுப்பையே மிஞ்சும் இந்த சேலம் மாவட்டம் குஞ்சாண்ட��யூரை சேர்ந்த எட்டாம் வகுப்பு மட்டுமே படித்திருக்கும் தேர்தல் மன்னன் பத்மராஜனின் படையெடுப்பு. இவன் வார்டு கவுன்சிலர் முதல் குடியரசு தலைவர் வரையிலான தேர்தலில் 216 முறை வேட்புமனு தாக்கல் செய்து...\nTamilnadu Capital – தமிழகத்தின் தலைநகரம்\nTamilnadu Capital – தமிழகத்தின் தலைநகரம் தமிழகத்தின் தற்போதைய தலைநகரம் ஆனது சென்னை ஆகும். சென்னை தமிழகத்தைப் பொருத்தவரை பண்டைய காலத்திலிருந்து மிக முக்கியமான இடமாக கருதப்படுகிறது. காரணம், சென்னை கடல் வழியாகவே வெளிநாட்டு தூதர்கள், வாணிபர்கள்,...\nHow to Create a Blog for Earn Money in 2020 – Tamil ஒரு பிளாக் உருவாக்குவதற்கு நமக்கு தேவையானவை. Domain Name Web Host Templates முதலில் நீங்கள் Blogger இணையதளத்திற்கு செல்ல வேண்டும் இந்த இணையத்தளமானது...\nTamilnadu districts – தமிழக மாவட்டங்களின் தொகுப்பு\nTamilnadu districts – தமிழக மாவட்டங்களின் தொகுப்பு Tamilnadu districts map மாவட்டத்தின் பெயர் இணையதளம் குறியீடுகள் 1. அரியலூர் மாவட்டம் https://ariyalur.nic.in/ AR 2. ராணிப்பேட்டை மாவட்டம் ——————————- RN 3. ராமநாதபுரம் மாவட்டம்...\nகேப்டன் விஜயகாந்த் வரலாறு | Tamil Page October 12, 2021\nசாலை விதிகள் பற்றிய சில தகவல் October 12, 2021\nநவராத்திரி கொலு பற்றிய சிறந்த தகவல் | Tamil Page October 12, 2021\nமுதுகு வலி குணமாக பாட்டி வைத்தியம் | Tamil Page October 5, 2021\nஇயற்கையின் மிச்சம் தனுஷ்கோடி | Dhanushkodi September 11, 2021\nமுதுகு வலி குணமாக பாட்டி வைத்தியம் | Tamil Page - Tamil Page on முதுகு வலி காரணங்கள் | reason for back pain\nPongal Festival | பொங்கல் திருநாள் - Tamil Page on Jallikattu | ஜல்லிக்கட்டு பற்றி தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/30263/", "date_download": "2021-10-19T11:56:55Z", "digest": "sha1:WUGCYWF6NVQIYZWPIJ2TYC6T2O6W4EYW", "length": 16264, "nlines": 119, "source_domain": "www.jeyamohan.in", "title": "காந்தி-நாராயண் தேசாய் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nபிற அறிவிப்பு காந்தி-நாராயண் தேசாய்\nஇன்று நாம் வாசிக்கும் காந்தியின் எழுத்துக்களை அந்த வரலாற்றுப் பிரக்ஞையுடன் ஆவணப் படுத்தியவர்களில் மிக முக்கியமானவர் மகாதேவ் தேசாய். அவரது மகனான நாராயண் தேசாய் இன்று வாழும் காந்தியர்களில் மிக முக்கியமானவர். காந்தி வாழ்ந்த காலத்தில் அவருடன் தன் இளமைப் பருவத்தைக் கழித்து இன்று நம்முடன் வாழும் வெகு சில காந்தியர்களில் ஒருவர். அவர் காந்தி கதா எனும் நிகழ்ச்சியைக் கடந்த ஏழெட்டு ஆண்டுகளாக நாடெங்கும் நடத்தி வருகிறார். அதன் ஒரு பகுதியாக மதுரைக்கு வரவிருக்கிறார். செப்டம்பர் 11 முதல் 15 வரையிலான தேதிகளில் மதுரை காந்தி நினைவு அருங்காட்சியத்தில் தினம் தோறும மாலை 5 முதல் 8 மணிவரை அவரது நிகழ்ச்சி ஏற்பாடாகி உள்ளது. காந்தி மீதும் காந்தியம் மீதும் ஆர்வமுள்ள அன்பர்கள் தவறவிடக்கூடாத நிகழ்ச்சி. மதுரை மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள வாசகர்கள் ஒரு நாளேனும் இந்த நிகழ்வை சென்று பார்க்கலாம்.\nகாந்தி இன்று தளத்தில் வெளியான அவருடைய மொழிபெயர்ப்புக் கட்டுரை\nநாராயண் தேசாய், தந்தை மகாதேவ் தேசாயுடன்\nமுந்தைய கட்டுரைபுத்தகம் ஒரு வலைப்பூ\nஅடுத்த கட்டுரைபின் நவீனத்துவம், பின்கொசுவம்\nஇன்று வெண்முரசு – இசை வெளியீட்டு விழா\nகாந்தி டுடே, புதிய முகவரியில்\nபூனா ஒப்பந்தம் – சில உண்மைகள் – அ.அண்ணாமலை\nபுதுவை வெண்முரசு கூடுகை 42\nவெண்முரசு புதிய வாசகர்களுக்கான விவாதங்கள்\nகாந்திய நிறுவனங்களை அரசு கையகப்படுத்துவதைத் தடுக்க\nஒரு கவிஞனின் சொல்லும் நிலமும்\nதேவதச்சன் கவிதை, விஷ்ணுபுரம் விருது\nஅருகர்களின் பாதை 20 - தரங்கா, கும்பாரியா\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி கி.ராஜநாராயணன் கோவை ஞானி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உணவு உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் தொல்லியல் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் நகைச்சுவை நேர்காணல் நேர்காணல் மற்றும் பேட்டிகள் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பிறர் படைப்புகள் நூல் மதிப்புரை மொழிபெயர்ப்புகள் வா���கர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் மதிப்புரை விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெண்முரசு – ஒலிவடிவம் வெண்முரசு – வாசகர் கடிதம் வெண்முரசு – வாசகர் மதிப்புரை வெண்முரசு ஆவணப்படம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/uyirinum-uyarndha-song-lyrics/", "date_download": "2021-10-19T11:22:35Z", "digest": "sha1:JJ7PAGTFVHTDX5CORNH3ZDGV2XAT5BV4", "length": 5594, "nlines": 148, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Uyirinum Uyarndha Song Lyrics - Ayngaran Film, Music by G. V. Prakash Kumar", "raw_content": "\nஇசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்\nஆண் : உயிரினும் உயர்ந்தது\nஉலகினில் உலகினில் ஒளி கிடையாது\nகனவுகள் உயிர் பெற வழி கிடையாது\nஆண் : கீழே மிகக் கீழே\nஆண் : பிறருக்கு வரந்தரா\nஒரு கரம் கொடுத்திடு ஐங்கரனே\nஆண் : ஏன் இது ஏன்\nஎமை நாமே அழிப்பது ஏன்\nஆண் : பொய்களின் புன்னிய வேடத்தை எல்லாம்\nபொசுக்கிட வா வா ஐங்கரனே…\nநன்மையை மிதித்திடும் நரிகளை எல்லாம்\nநசுக்கிட வா வா ஐங்கரனே…..\nஆண் : தீ ஒரு தீ\nஆண் : முடிந்திடும் முடிந்திடும்\nஆண் : உயிரினும் உயர்ந்தது\nஉலகினில் உலகினில் ஒளி கிடையாது\nகனவுகள் உயிர் பெற வழி கிடையாது\nஆண் : கீழே மிகக் கீழே\nஆண் : பிறருக்கு வரந்தரா\nஒரு கரம் கொடுத்திடு ஐங்கரனே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2021-10-19T12:16:56Z", "digest": "sha1:JXQJMOYEZKSMFAC3UJSLIXOBM6ZPJYEZ", "length": 13729, "nlines": 133, "source_domain": "ilakkiyainfo.com", "title": "வெளிவரும் திடுக்கிடும் தகவல்கள்!! :இறுதி யுத்தத்தின் போது சம்மந்தன் இந்தியா செல்வதை தடுக்கும் படி புலித்தேவன் என்னிடம் கூறினார் | ilakkiyainfo", "raw_content": "\nHome»இலங்கை செய்திகள்»வெளிவரும் திடுக்கிடும் தகவல்கள் :இறுதி யுத்தத்தின் போது சம்மந்தன் இந்தியா செல்வதை தடுக்கும் படி புலித்தேவன் என்னிடம் கூறினார்\n :இறுதி யுத்தத்தின் போது சம்மந்தன் இந்தியா செல்வதை தடுக்கும் படி புலித்தேவன் என்னிடம் கூறினார்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற போது சம்மந்தன் தலைமையிலான கூட்டமைப்பினர் இந்தியா செல்வதை தடுக்கும் படி புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் புலித்தேவன் என்னிடம் தொலைபேசியில் தெரிவித்தார் என கூட்டமைப்பின் முன்னாள் எம்.பியும் தமிழர் விடுதலைக் கூட்டனி சார்பில் வன்னியில் போட்டியிடும் வேட்பாளருமான சிவநாதன் கிசோர் தெரிவித்துள்ளார்.\nஇன்று வவுனியாவில் அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது, ஊடகவியலாளர் இறுதி யுத்தம் நடைபெற்ற போது கூட்டமைப்பின் நிலைப்பாடு தாங்களும் அக் கட்சி எம்.பி என்ற வகையில் என்னவாக இருந்தது என கேள்வி எழுப்பிய போதே இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,\nநாங்கள் எல்லோரும் பாராளுமன்றத்தில் இருந்தோம். அங்கு அமர்வு நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தம் கடுமையாக நடந்து கொண்டிருந்தது.\nஎமது கூட்டமைப்பினர் தமது தொலைபேசியை அணைத்துவிட்டு இந்தியா செல்ல திட்டமிட்டிருந்தனர். அப்போது இந்தியா அவர்களை கூப்பிட்டிருந்தது.\nகூட்டமைப்பினர் இந்தியா செல்லும் விடயம் விடுதலைப் புலிகளின் சமாதான செயலகத்தின் பணிப்பாளர் புலித்தேவனுக்கு தெரியவந்து அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முற்பட்டார்.\nஅப்போது கூட்டமைப்பினர் எவரும் புலிகளுடன் கதைக்கவில்லை. ஏனெனில் புலிகளின் கதை முடிகின்றது. இந்தியாவுடன் போவோம் எனக் கருதியிருந்தார்கள்.\nஇதன் போது எனது தொலைபேசிக்கும் அழைப்பு வந்தது. நான் கதைத்தேன். அப்போது தொடர்பினை மேற்கொண்ட விடுதலைப் புலிகளின் சமாதான செயலகத்தின் பணிப்பாளர் புலித்தேவன் சம்மந்தன் உள்ளிட்ட ஏனைய கூட்டமைப்பினர் எங்கே நிற்கிறார்கள் அவர்களுடன் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றார்.\nநான் அப்போது அவர்கள் அனைவரும் இந்தியா செல்ல தீர்மானித்துள்ளார்கள் என தெரிவித்திருந்தேன்.\nஉடனடியாக புலித்தேவன் என்னிடம் சொன்னார் அவர்கள் இந்தியா செல்வதை நிறுத்தும் படி ஏனெனில் இவர்களை இந்தியாவில் வாயை மூடிக்கொண்டு இருக்க வைத்துவிட்டு யுத்தத்தை முடிப்பதற்கு இந்த அரசாங்கமும் இந்தியாவும் பார்கிறது என்றார்.\nநான் இதனைக் கூறிய போது கூட்டமைப்பினர் அதனை கணக்கு எடுக்கவில்லை. அன்றிரவே இந்தியா சென்று விட்டனர்.\nஅவர்கள் யத்தம் முடிந்த பின்னே வந்து இறங்கினார்கள். அப்போது ஒரு அவசரகாலச் சட்டம் மீதான விவாதம் நடந்தது.\nஅந்நேரம் நான் பாராளுமன்றம் சென்றேன். அங்கு எங்களுடைய கூட்டமைப்பினர் எவரும் இல்லை. அதனால் நான் தனித்து வாக்களிக்க முடியாத ஒரு கட்டம் இருந்தது. அதனால் நான் வாக்களிப்பில் பங்குபற்றவில்லை.\nஅவ்வாறு மோசமான நிலமை காணப்பட்டது. நான் அதனை எதிர்த்து வாக்களித்து இருந்தால் என்னை மண்டையில் போட்டிருப்பார்கள். அவர்கள் சொல்லாமல் போனதால் நான் தனிமையில் மாட்டினேன் என்றார்.\nவீதிகளில் வெள்ளம்: பாரிய சமையல் பாத்திரத்தில் கேரளத் தம்பதியர்\n`சந்தன கடத்தல்’ வீரப்பனின் நிறைவேறாத இறுதி ஆசை – எப்படி இருக்கிறது மேற்கு தொடர்ச்சி மலைக் காடுகள்\n14 நாட்களில் 7,000 பேர் இலங்கைக்கு வருகை\nகொழும்பு தொட்டலங்க பகுதியில் இரு சடலங்கள்\nகாரைநகர் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட தமிழக மீனவர்கள் ; படகு மூழ்கியதில் ஒருவர் மாயம் – இருவர் மீட்பு\nநீர் மூழ்கி கப்பலூடாக வடகொரியா ஏவுகணை பரிசோதனை\nஇலங்கையில் பாடசாலைகள் திறக்கப்படாமையால் ஏற்படப்போகும் தாக்கங்கள் குறித்து உலக வங்கியின் எதிர்வுகூறல்\nமட்டு கரடியனாறு பகுதியில் ஒன்றில் அடித்து கொலை செய்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு\nஆப்கானிஸ்தானில் தாலிபனின் தேன் நிலவு முடிந்தது – இனி அதன் முன்னுள்ள சவால்கள் என்ன\n‘செப்டம்பர் 11’ தாக்குதல்: கடத்தப்பட்ட விமானத்துக்குள் நடந்தது என்ன\nகொழும்பு தொட்டலங்க பகுதியில் இரு சடலங்கள்\nகாரைநகர் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட தமிழக மீனவர்கள் ; படகு மூழ்கியதில் ஒருவர் மாயம் – இருவர் மீட்பு\nநீர் மூழ்கி கப்பலூடாக வடகொரியா ஏவுகணை பரிசோதனை\nஇலங்கையில் பாடசாலைகள் திறக்கப்படாமையால் ஏற்படப்போகும் தாக்கங்கள் குறித்து உலக வங்கியின் எதிர்வுகூறல்\nNakkeeran on தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆசன ஒதுக்கீட்டை வழங்கினால் பொதுதேர்தலில் போட்டியிடுவுன்- அனந்தி சசிதரன் (நேர்காணல்)\nlatha on ஒரே மலையில் 900 கோயில்கள்\narya on ஜெயலலிதாவுக்கு தண்டனை: தூக்கு -தீக்குளிப்பு– மாரடைப்பில் 14 பேர் சாவு\nஆப்கானிஸ்தானில் தாலிபனின் தேன் நிலவு முடிந்தது – இனி அதன் முன்னுள்ள சவால்கள் என்ன\n‘செப்டம்பர் 11’ தாக்குதல்: கடத்தப்பட்ட விமானத்துக்குள் நடந்தது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://onetune.in/life-history/field-marshal-sham-manekshaw", "date_download": "2021-10-19T13:04:21Z", "digest": "sha1:BIPRR2ZG22AUM77A7CH3UKUEY2UQCJWM", "length": 29800, "nlines": 207, "source_domain": "onetune.in", "title": "சாம் மானெக்ஷா - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nரேவந்தா – சூரியனின் இளைய மகன்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\nHome » சாம் மானெக்ஷா\nஃபீல்ட் மார்ஷல் சாம் மானெக்ஷா அவர்கள், இரண்டாம் உலக போரின் போது, இந்திய ராணுவத்தின் 4/12 எல்லை படை அணிவகுப்பின் இளம் காப்டைனாக இருந்ததோடு மட்டுமல்லாமல், ஜப்பானுக்கு எதிரான படையெடுப்பின் போது,\nபடைத் தளபதியாக இருந்து, படைப்பிரிவை வழிவகுத்தார். மியான்மரில் சிட்டங் ஆற்றிற்கருகில் இருந்த சிட்டங் பாலத்தில் நடந்த ஒரு பொங்கி எழும் போரில், அனைவரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார். இளம் படைத் தளபதியாக இருந்து, அந்த போரில், ஒளி இயந்திர துப்பாக்கியின் தோட்டாக்கள் பலவும் கடுமையாக அவரின் வயிற்றில் பல காயங்கள் ஏற்படுத்தினாலும், கடுமையான மனம் கொண்டு எதிரியை நேருக்கு நேராக முறைத்து, திறமையுடன் தனது படைகளை நிர்வகித்து, போரில் வெற்றி கிட்டும் வரை போராடினார். இந்திய படைகள் அந்த இடத்திற்கு வந்த போது, கடுமையாக காயமடைந்த படைத்தளபதியைப் பார்த்த மேஜர் ஜெனரலான டி.டி. கோவன், படைத்தளபதியின் வீரச்செயலைக் கண்டு, ‘ஒரு இறந்த நபருக்கு இராணுவ கிராஸ் கொடுக்கப்பட முடியாது’ என்று கூறி, அவரது சொந்த இராணுவ கிராசை கழற்றி, உயிருக்குப் போராடிய சாம் மானெக்ஷா மீது சுற்றி வளைத்தார். இந்த படைத்தளபதியே ‘சாம் மானெக்ஷா’ என்றும் ‘சாம் பஹாதுர்’ என்றும் அழைக்கப்பட்டார். உடனடியாக மருத்துவமனைக்கு அவரைக் கொண்டு சென்றனர். நுரையீரல், கல்லீரல், மற்றும் சிறுநீரகத்தில் 9 குண்டுகளுடன் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, கிட்டத்தட்ட இறந்தவிட்டதாக கருதிய இவரே, 94 வயது வரை வாழ்ந்த இந்தியாவின் முதல் ஃபீல்டு மார்ஷல் ஆவார். நாட்டிற்காக சேவை செய்ய வேண்டுமென்ற அவரது எண்ணமே, அவரை தைரியமாக மரணத்தை சந்திக்க வைத்து, எதிரிகளை அச்சுறுத்தும் வகையில் நேராக எதிர்த்து நிற்க வைத்தது. அவரது 40 வருட இராணுவ வாழ்க்கையில், அவர் வெவ்வேறு பதவிகளில் இருந்து, நான்கு போர்களைப் பார்த்த அவருக்கு பல விருதுகளும் வழங்கப்பட்டன. இந்த விருதுகளும், பெருமைகளும் அவரது வழியில் நின்றாலும், அவர் நேர்மை, நீதி, நியாயம் போன்றவற்றைக் கொண்டு அனைத்திற்கும் தீர்வு கண்டார். வீரதீர ஃபீல்ட் மார்ஷல் சாம் மானெக்ஷா அவர்களின் வாழ்க்கை வரலாறு, வீரச்செயல்கள், மற்றும் சாதனைகள் பற்றி மேலுமறிய தொடர்ந்து படிக்கவும்.\nபிறப்பு: ஏப்ரல் 3, 1914\nபிறந்த இடம்: அமிர்தசரஸ், பஞ்சாப்\nஇறப்பு: ஜூன் 27, 2008\nதொழில்: இந்திய இராணுவ வீரர்\nசாம் மானெக்ஷா அவர்கள், பஞ்சாப்பிலுள்ள அமிர்தசரசில் 3 ஏப்ரல், 1914 ஆம் ஆண்டு, ஒரு பாரசிய குடும்பத்தில் பிறந்தார். அவரது தந்தை ஹோர்முச்ஜி மானெக்ஷா ஒரு மருத்துவராவார், மேலும் அவர் முதல் உலகப் போரின் போது, அரச பிரிட்டிஷ் ராணுவத்தில் பணியாற்றியவர். அவரது தாயார் பெயர், ஹீராபாய். சிறிது காலம் கழித்து, மானெக்ஷாவின் குடும்பத்தார் அமிர்தசரசிலிருந்து குஜராத்திலுள்ள வல்சாத் என்ற சிறிய நகரத்துக்கு குடிபெயர்ந்தனர்.\nசாம் மானெக்ஷா அவர்கள், தனது பள்ளிப்படிப்பை அமிர்தசரசிலும், கல்லூரிப்படிப்பை நைனிடாலிலுள்ள ஷெர்வுட் கல்லூரியிலும் முடித்தார். இங்கிலாந்து சென்று மருத்துவம் பயில வேண்டுமென்ற அவரது ஆசைக்கு, ‘அவர் இன்னும் சிறியவராக இருக்கிறார், மேலும் அவரால் அங்கு தனியாக சமாளிக்க முடியாது’ என்று கருதி அவரின் தந்தை மறுப்பு தெரிவித்தார். 1932 ஆம் ஆண்டு, எழுச்சிகரமான செயலாக அவர், டேராடூனில் புதிதாக நிறுவப்பட்ட இந்திய இராணுவ அகாடமியில் விண்ணப்பித்து, 40 சிப்பாய்கள் கொண்ட முதல் தொகுப்பில் தேர்வு செய்யப்பட்டார். இரண்டு ஆண்டுகள் கழித்து, 1934ல், இந்திய இராணுவ அகாடமி தேர்வில் தேர்ச்சிப் பெற்ற பின், இரண்டாம் லெஃப்டினன்ட்டாக ராயல் ஸ்காட்ஸிலும், பின்னர், பிரிட்டிஷ் இந்திய இராணுவத்தின் கீழ் எல்லைப்படை படைப்பிரிவிலும் பணிக்கப்பட்டார். எழுச்சிகரமாக ஆரம்பித்த அவரது இந்த செயல், விரைவில் வீரச்செயல்களாக மாறி நாட்டின் எதிரிகளை வெளி கொண்டுவரும் அளவுக்கு மாறியது.\n1934 ஆம் ஆண்டு, இந்திய இராணுவ அகாடமியிலிருந்து தேர்ச்சிப் பெற்று வெளியே சென்றவுடன், சாம் மானெக்ஷா அவர்கள், பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில் இரண்டாம் லெஃப்டினன்ட்ட���க பணிக்கப்பட்டார். இதுவே இந்திய நாட்டிற்காக அவரது தன்னலமற்ற சேவையின் ஆரம்பத்தைக் குறிக்கிறது. முதலில் அவர் 2வது பட்டாலியன் ராயல் ஸ்காட்ஸிலும், பின்னர் 4/12 எல்லைப்படை படைப்பிரிவிலும் இணைக்கப்பட்டார். இவர் படைப்பிரிவின் படைத்தளபதியாக இருந்த போது தான், மியான்மரில் ஜப்பானியர்களை எதிர்த்து சண்டையிட்டு வெற்றி பெற்ற மிகவும் பிரபலமான போரானது நிகழ்ந்தது. இந்த போர் தான், மானெக்ஷா அவர்களுக்கு, ‘இராணுவ கிராஸ்’ என்ற அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தது. ‘இராணுவ கிராஸ்’ என்பது “எதிரிகளை எதிர்த்து எந்தவொரு போரிலோ அல்லது நடவடிக்கைகளிலோ வீரமாக செயல்படும் ஆயுத படையில் எந்தவொரு பதவியிலும் இருக்கும் வீரர்களுக்கு அளிக்கப்படும்’ பாராட்டுரிமை ஆகும். இந்திய-பாகிஸ்தான் பகிர்வுக்குப் பின், 4/12 எல்லைப்படை படைப்பிரிவு பாகிஸ்தானுக்கு சொந்தமானதால், மானெக்ஷா அவர்கள், 8 கூர்க்கா ரைஃபிள் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.\nநாட்டின் பகிர்வுக்குப் பின்னர், பல்வேறு தடங்கல்கள் இருந்து கொண்டே இருந்தது. அப்போது மானெக்ஷா அவர்கள், திட்டமிடல் மற்றும் நிர்வாக சிக்கல்களை தனது நுண்ணறிவாலும், மனப்போக்காலும் கையாண்ட விதம் குறிப்பிடத்தக்கது. சிறிது காலத்திற்குப் பின், பாகிஸ்தான் காஷ்மீரைப் படையெடுத்த போது, அவர் கர்னலாக பொறுப்பேற்றார். 1947-48 செயல்பாட்டின் போது, அனைத்து இராணுவ நடவடிக்கைகளிலும் ,அவர் தனது அசாதாரணமான வியூகம் மற்றும் போர் திறன்களை செயல்படுத்தியதே வெற்றிக்கு பெரிதும் காரணமாக அமைந்தது. பின்னர் 1962 ஆம் ஆண்டு, NEFAவில் (இப்போதைய அருணாச்சல பிரதேசம்) இந்தியா சீனாவின் கைகளில் தோல்வியை சந்தித்த போது, பிரதமர் ஜவஹர் லால் நேரு பின்னடைவு கண்ட இந்திய படைகளைத் தலைமைத் தாங்குமாறு மானெக்ஷா அவர்களைக் கேட்டுக்கொண்டார். அனைத்து சிப்பாய்களும் கூட, தங்கள் தளபதி மீது உன்னத நம்பிக்கை வைத்திருந்தனர், மேலும் சீனாவின் அடுத்த ஊடுருவலின் போது, இந்தியா வெற்றி அடைந்தது. 1965ல் இந்திய-பாகிஸ்தான் போரின் போது, மானெக்ஷா அவர்கள், கிழக்குக் கட்டளை படைத் தளபதியாக நிறுவப்பட்டார், மேலும் அவரது தலைமை வெற்றிகரமாக வெற்றிவாகை சூடியது. பின்னர், ஜூன் 7, 1969 அன்று, ஜெனரல் குமாரமங்கலம் அவர்களை பின்தள்ளி, எட்டாவது ராணுவ பணியாளர்களின் தலைவரானார், மான��க்ஷா.\n1971 ஆம் ஆண்டு, நடந்த இரண்டாவது இந்திய-பாகிஸ்தான் யுத்தம், அவரது போர் உத்திகளையும், திறமைகளையும் மீண்டும் கண்டது. ராணுவ நடவடிக்கை எப்போது எடுக்க வேண்டும் என்பதில், பிரதமர் இந்திரா காந்திக்கும், மானெக்ஷா அவர்களுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது என்றும், மானெக்ஷா அவர்களின் விருப்பப்படி நடக்காவிட்டால், அவர் ராஜினாமா செய்வார் என்று தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இந்திரா காந்தி அவரது திட்டங்களை ஏற்றுக் கொண்டதன் விளைவாக, குறுகிய காலகட்டமான 14 நாட்களிலேயே பாகிஸ்தானின் 93, 000 வீரர்கள் சரணடைந்தனர் என்பது தெளிவாக தெரிந்தது. இந்தியா போரில் வெற்றி பெற்று, இந்திய இராணுவ வரலாற்றில் மிக விரைவான இராணுவ வெற்றிகளில் ஒன்று என்ற முத்திரையையும் பதித்தது. இந்திய இராணுவத்திற்கும், நாட்டிற்கும் நான்கு தசாப்தங்களாக தனது தன்னலமற்ற சேவை புரிந்த பின்னர், சாம் மானெக்ஷா அவர்கள், முதன் முதல் ஃபீல்டு மார்ஷலாக மாற்றப்படும் முன்பு, ஜூன் 15, 1973 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.\n1942ல், ஜப்பானியர்களுக்கு எதிராக மியான்மரில் நடந்த போரில், கடுமையாக காயமுற்று, இராணுவ கிராஸ் சம்பாதித்த அவரால் இந்த தாக்குதலிலிருந்து மீண்டும் தேறி வர சிறிது காலம் தேவைப்பட்டது. தனது 12 எல்லை படை ரைஃபிளில் சேர்வதற்கு முன், சாம் மானெக்ஷா அவர்கள், குவெட்டாவில் உள்ள பணியாளர்கள் கல்லூரியில் ஒரு பயிற்சி மேற்கொண்டு, அங்கு பயிற்றுவிப்பாளராகவும் பணியாற்றினார். இரண்டாம் உலகப் போரின் இறுதியில், இந்திய-சீனாவில் ஜெனரல் டைசியின் ஸ்டாஃப் ஆபீசராக சேர்ந்து, 10000 போர் கைதிகளின் மறுவாழ்வுக்காக உதவினார். இதன் பின், 1946ல், ஆஸ்திரேலியாவுக்கு ஆறு மாதங்கள் நீண்ட விரிவுரை சுற்றுப்பயணம் மேற்கொண்டார். 1947-48 ஜம்மு & காஷ்மீர் நடவடிக்கைகளின் போது, அவர் காலாட்படைப் பள்ளியின் தளபதியாக தேர்வு செய்யப்பட்டு, மேலும் 8 கூர்க்கா ரைஃபிள் (அவரது புதிய ராணுவ படை அணிவகுப்பில்) மற்றும் 61 குதிரைப்படையின் கர்னலாகவும் பொறுப்பேற்றார். நாகாலாந்தில் கிளர்ச்சி நிலைமையை வெற்றிகரமாக கையாண்டதற்காக, 1968ல் அவருக்கு ‘பத்ம பூஷண் விருது’ வழங்கப்பட்டது. 1971ன் இந்திய-பாகிஸ்தான் போரின் வெற்றிக்கு, அவரது மாசற்ற மூலோபாய திறன்களும், பங்களிப்புமே காரணமாக இருந்ததால், 1972 ஆம் ஆண்டில், அவர் ‘பத்ம விப��ஷன் விருதை’ பெற்றார். இறுதியாக, ஜனவரி 1, 1973 ஆம் ஆண்டு, மானெக்ஷா அவர்களுக்கு மதிப்புமிக்க பட்டமான ‘ஃபீல்ட் மார்ஷல்’ ரேங்க் வழங்கப்பட்டது. சேவையில் இருந்து ஓய்வு பெற்ற பின், அவர் வாரிய இயக்குனராகவும், பல்வேறு நிறுவனங்களின் தலைவராகவும் வெற்றிகரமாக பணியாற்றினார்.\nஃபீல்ட் மார்ஷல் சாம் மானெக்ஷா அவர்கள், அவரது வாழ்வின் கடைசி காலத்தை, தனது மனைவியுடன் தமிழ்நாட்டிலிருக்கும் குன்னூரில் குடிபெயர்ந்து வாழ்ந்தார். அவரது 94வது வயதில், நிமோனியாவால் ஏற்பட்ட சிக்கல்களினால் தமிழ்நாட்டிலிருக்கும் வெலிங்டனிலுள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி காலமானார். அவர் தனது இரண்டு மகள்களான ஷெர்ரி, மாயா, மற்றும் மூன்று பேரக்குழந்தைகளுடன் தனது இறுதி வாழ்வை செலவிட்டார்.\n1914: சாம் மானெக்ஷா அவர்கள் பஞ்சாப்பிலுள்ள அமிர்தசரசில் 3 ஏப்ரல், 1914 ஆம் ஆண்டு பிறந்தார்.\n1932: இந்திய இராணுவ அகாடமியின் (IMA) முதல் தொகுதி தேர்வில் தேர்வான 40 சிப்பாய்களில் ஒருவர்.\n1934: இந்திய இராணுவ அகாடமி தேர்வில் தேர்ச்சிப் பெற்று, பிரிட்டிஷ் இந்திய இராணுவத்தின் இரண்டாம் லெஃப்டினன்ட்டாக பொறுப்பேற்றார்.\n1939: சில்லூ போடு என்பவரைத் திருமணம் செய்தார்.\n1942: தனது துணிகர செயலால் ‘இராணுவ கிராஸ்’ பெற்றார்.\n1945: லெஃப்டினன்ட் கர்னலாக பொறுப்பேற்றார்.\n1947: பிரிகேடியராக மாறினார். மேலும் பாகிஸ்தான் காஷ்மீரை படையெடுத்த போது, செயல்பாடுகளின் கர்னலாக இருந்தார்.\n1950: இந்திய இராணுவத்தின் பிரிகேடியராக மாறினார்.\n1957: மேஜர் ஜெனரலாக மாறினார்.\n1963: லெஃப்டினன்ட் ஜெனரலாக மாறினார்.\n1965: இந்திய பாகிஸ்தான் போரின் போது, கிழக்கு கட்டளை தளபதியாக பணியில் இருந்தார்.\n1968: பத்ம பூஷன் விருது பெற்றார்.\n1971: இரண்டாவது இந்திய பாகிஸ்தான் போரின் போது, அவரால் இந்தியாவுக்கு வெற்றி கிடைத்தது. .\n1972: பத்ம விபூஷன் விருது பெற்றார்.\n1973: ஃபீல்ட் மார்ஷலாக மாறினார்.\n2008: தனது 94வது வயதில் மரணம் நிமோனியாவால் இறந்தார்.\nLife History • இசைக்கலைஞர்கள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\nLife History • இசைக்கலைஞர்கள்\nLife History • இசைக்கலைஞர்கள்\nஜெனரல் கே. எம். கரியப்பா\nரேவந்தா – சூரியனின் இளைய மகன்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/explodes", "date_download": "2021-10-19T11:20:44Z", "digest": "sha1:XC3KCSEUPRX6XDT4XHSGPDIS35FCVMEL", "length": 15440, "nlines": 122, "source_domain": "tamil.asianetnews.com", "title": "explodes: Latest News, Photos, Videos on explodes | tamil.asianetnews.com", "raw_content": "\nமக்களே உஷார்.. சார்ஜ் போட்ட செல்போன் வெடித்தது.. கல்லூரி மாணவர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழப்பு.\nகோவை மதுக்கரை காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் மயில்சாமி (57). கூலி தொழிலாளி. இவரது மகன் சிவராம் (18). கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி முதலாம் ஆண்டு படித்து வந்தார்.\nதமிழக அரசு கல்லூரி பணிக்கு இந்துக்களை மட்டும் விண்ணப்பிக்க அழைப்பதா. ஸ்டாலினுக்கு எதிராக வெடிக்கும் சீமான்.\nஅரசு சார்பில் தொடங்கப்பட்ட கல்லூரியில் இந்து மதத்தினர் மட்டுமே பணிபுரிய வாய்ப்பளித்து, மற்ற மதத்தினர் பணிபுரியத் தடைவிதிப்பது திமுக அரசின் மதச்சார்பின்மை முகமூடியைத் தோலுரிக்கிறது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.\nஆப்கானிஸ்தானின் காபூலில் மீண்டும் சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்ததால் பதற்றம்..\nஇந்த தாக்குதலில் காபூல் விமான நிலையம் மீது தாக்குதல் நடத்த திட்டம் திட்டிய ஐ.எஸ். பயங்கரவாதிகள் 7 பேர் உயிரிழந்ததாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.\nவிம்மி வெடிக்கும் விஜயபாஸ்கர்... ஆத்திரத்தில் அண்ணாமலை... ரிசல்ட்டுக்காக காத்திருக்கும் அதிமுக..\nஅ.தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட்டால், இவர்களை தண்ணியில்லா காட்டுக்கு தூக்கியடிக்க வேண்டும் என கங்கணம் கட்டி வருகிறார்கள் அக்கட்சி நிர்வாகிகள்.\nதிமுகவை எந்தக் கொம்பனாலும் வீழ்த்த முடியாது... பாஜகவை நினைத்து வெடிக்கும் துரைமுருகன்..\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குரலை மேற்குவங்காளத்தில் ஒலிப்பவர் மம்தா பானர்ஜி. மம்தா பானர்ஜியை எப்படியாவது வீழ்த்திவிட முடியும் என மத்திய பாஜக அரசு கருதுகிறது.\nசெல்போன் வெடித்து மாணவர் பலி.. மகன் இறந்த அதிர்ச்சியில் தந்தை மாரடைப்பால் உயிரிழப்பு..\nசார்ஜரில் போட்டபடி செல்போனைப் பயன்படுத்திய மாணவர் ஒருவர், செல்போன் வெடித்து பரிதாபமாக உயிரிழந்தார். மகன் இறந்த அதிர்ச்சியை அறிந்த தந்தையும் அதிர்ச்சியில் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஅய்யோ.. என்னை உயிராக நேசித்தவர் உயிரோடு இல்லையே.. விம்மி வெடித்து கதறும் வைகோ..\nமதிமுக வடசென்னை கிழக்கு மாவட்ட அவைத் தலைவர் சு.நவநீதகிருஷ்ணன் மறைவுக்கு வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒழுங்கு நடவடிக்கைக்குழு உறுப்பினரும்,\nஎல்லா பிரச்சனைக்கும் காரணம் ஓபிஎஸ் தான். அதிரடியாக வெடிக்கும் சரவெடி ஜெ.தீபா.\nஓ.பி.எஸ் நடத்திய தர்ம யுத்தத்தால் தான் எல்லோருக்கும் தலைவலி ஏற்பட்டது. எல்லா பிரச்சினைக்கும் காரணம் இவர் தான். நான் இப்போது தெய்வத்தையும், ஜெயலலிதாவின் ஆன்மாவைதான் நம்பி உள்ளேன்.ஆறுமுகசாமி ஆணையம் 6 முறை அழைத்தும் ஓபிஎஸ் விசாரணைக்கு ஆஜராகாதது ஏன் நான் தேவையின்றி அரசியலுக்கு வந்ததற்கு ஓபிஸ் தான் காரணம். ஜெயலலிதா எப்படி இறந்தார் என்பது பற்றி அதிமுக தலைவர்களுக்கு கவலையே இல்லை என கொந்தளித்துள்ளார்\nஎன்.எல்.சி-யில் பாய்லர் வெடித்து பயங்கர விபத்து.. 7 ஊழியர்கள் காயம்\nநெய்வேலி அனல் மின் நிலையத்தின் 2வது ஆலையில் பாய்லர் வெடித்த விபத்தில் 7 ஊழியர்கள் காயமடைந்துள்ளனர்.\nசார்ஜ் போட்டுக்கொண்டே பாட்டு கேட்ட சிறுமி... படுக்கையில் செல்போன் வெடித்து உயிரிழப்பு..\nசெல்போனுக்கு சார்ஜ் போட்டுவிட்டு தலைக்கு அருகில் வைத்து பாடல் கேட்டபோது செல்போன் வெடித்து சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nபிரிட்ஜ் வெடித்து தனியார் டிவி நிருபர் குடும்பத்துடன் பலி.. - தாம்பரத்தில் பரபரப்பு சம்பவம்\nபிரிட்ஜ் வெடித்து, கரும்பு புகை வெளியானதால், தனியார் டிவி நிருபர், மனைவி, தாய் ஆகியோர் மூச்சு திணறி பரிதாபமாக இறந்தனர். இச்சம்பவம் தாம்பரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.\nமுட்டை வடிவில் அணுகுண்டு வெடிக்கும் அதிமுக, இரட்டை இலையை அமமுக கைப்பற்றும் அதிமுக, இரட்டை இலையை அமமுக கைப்பற்றும்\nமுட்டை வடிவில் அணுகுண்டு வெடிக்கும். அப்போது அதிகாரத்தில் உள்ளவர்கள் சிறைக்குச் செல்வார்கள்.\nபாகிஸ்தானில் பெட்ரோல் லாரி வெடித்துச் சிதறி விபத்து - பலி எண்ணிக்கை 148 ஆக அதிகரிப்பு\nபெட்ரோல் லாரி வெடித்துச் சிதறிய விபத்தில் பலி எண்ணிக்கை அதிகரிப்பு\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸ��க வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகோவிட் மூன்றாவது அலையில் இருந்து நம்மை காத்து கொள்ள சுயபரிசோதனை கருவியே நமக்கு தேவை \nபலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய விளையாட்டு வீரர்கள் \n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய கலைஞர்கள்\nமஹசூஸ் வெற்றியாளர் ஏசியாநெட் நியூஸ் தமிழுக்கு அளித்த பேட்டி\nகோவிட் மூன்றாவது அலையில் இருந்து நம்மை காத்து கொள்ள சுயபரிசோதனை கருவியே நமக்கு தேவை \nபலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய விளையாட்டு வீரர்கள் \nஇதெல்லாம் அக்கிரமம்... டாக்டர் ராமதாஸ் கொதிப்பு..\nடி20 உலக கோப்பையில் இந்திய அணியின் தொடக்க ஜோடி இதுதான்..\nபொய் வழக்குகள் போட்டு அதிமுகவினரை முடக்கிவிட முடியாது.. திமுகவை கடுமையாக சாடும் எடப்பாடி பழனிசாமி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://udhayasankarwriter.blogspot.com/2016/09/", "date_download": "2021-10-19T12:37:12Z", "digest": "sha1:YUN73BPRH5S25EAGUN3K6P3T2CU4MFNX", "length": 41140, "nlines": 232, "source_domain": "udhayasankarwriter.blogspot.com", "title": "கரிசக்காடு: September 2016", "raw_content": "\nகருப்பட்டிக் காப்பியும் காராச்சேவும் இடைசெவல் நயினாவும்\nகருப்பட்டிக் காப்பியும் காராச்சேவும் இடைசெவல் நயினாவும்\nகல்லூரிப்படிப்பு முடிந்திருந்த நேரம். அதற்கு கொஞ்ச நாட்களுக்கு முன்பு தான் கோவில்பட்டியில் உள்ள இலக்கியவாதிகளின் அறிமுகம், இலக்கியப்புத்தகங்களின் வாசிப்பு என்று எனது இலக்கிய அறிவு குழந்தைப் பருவத்திலிலிருந்தது. புத்தகங்களை வாசிக்க வாசிக்க எழுத்தாளர்களின் மீது பிரமிப்பு ஏற்பட்டது. எழுத்தாளர்களைச் சந்திக்கும்போதெல்லாம் அவர்கள் பேசுகிற ஒவ்வொரு வார்த்தையும் எனக்கு ஒரு புதிய வெளிச்சம் தந்தது. கனவுகளில் எழுத்தாளர்கள் வந்தார்கள். எழுத்தின் மீதான பிரேமை கூடிக்கொண்டிருந்தது. ஆனால் மிகப்பெரிய தயக்கம் என்முன்னால் மலை போல நின்று கொண்டிருந்தது. இயல்பிலேயே மிகுந்த தயக்கமும் கூச்ச சுபாவமும் உடைய நான் எழுத்தாளர்களைச் சந்திக்கும் போதும் சரி, படித்த புத்தகங்களைப் பற்றிய கருத்துகளைக் கேட்கும்போதும் சரி எதுவும�� பேசியதில்லை. கருத்துகள் முட்டி மோதிக் கொண்டிருந்தாலும் வாயைத் திறக்க மாட்டேன். அதையும் மீறி ஏதாவது ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசி, அதைப்பற்றி மீண்டும் யாராவது கேட்டுவிட்டால் வெலவெலத்து போய்விடும். உலகமே என் வார்த்தைகளில் இருண்டுவிடுமோ என்று பயந்துபோய் பேசாமலிருந்து விடுவேன்.\nஇலக்கியம், அரசியல், தத்துவம், என்று எழுத்தாளர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது இதுவரை இல்லாத புதிய உலகத்திற்கு நான் போய் வருகிற மாதிரி இருக்கும். அந்த உலகத்தின் அழகும் பயங்கரமும், என்னை வசீகரித்தது. அந்த வசீகரத்தின் பின்னால் ஓடித்திரிந்தேன். யாருடைய கைப்பிள்ளையாகவும் இருக்கத்துணிந்தேன். அப்போது என் பள்ளித்தோழனாகவும், கல்லூரித்தோழனாகவும் இருந்த மாரீஸ் மிக லகுவாக எல்லா எழுத்தாளர்களிடமும் பழகுவதையும் அவர் மனதுக்குப் பட்டதை பட்டென்று முகதாட்சண்யமின்றி சொல்வதையும் கண்டு அவர் மீதுபொறாமைப்பட்டிருக்கிறேன்.\nஇரவுகளில் எங்கள் ஜமா எப்போதும் காந்திமைதானத்தில் கூடிக் கலைய நள்ளிரவு தாண்டிவிடும். அப்படி ஒரு சந்திப்பில் மாரீஸ் என்னிடம் நாளை கி.ராவைப் பார்க்க இடைசெவல் போகலாம் வர்றியா என்றார். அப்போது தான் படித்து முடித்திருந்ததால் வேலையின்மையின் வெம்மை தாக்காத நேரம். அதோடு இந்தக் கிறுக்கும் சேர்ந்து விட்டதா நான் நடந்து திரிந்ததாக நினைவில்லை. பறந்து கொண்டிருந்தேன். இடைசெவலில் கி.ரா.வைப் பார்க்கப்போகிறோம் என்றதும் சரி என்று சொல்லிவிட்டேன். அதற்குக் கொஞ்சம் முன்னால் அவருடைய கதவு சிறுகதைத்தொகுப்பையும் குறுநாவலையும் படித்திருந்தேன். அதைப் படித்தபோது இலக்கியம் வேறு மாதிரியிருந்தது. அந்த எழுத்து நடையின் மீது ஒரு அந்நியோன்யமான உணர்வு எப்படியோ உணர முடிந்தது. அவரைச் சந்திக்க மறுநாள் காலை நானும் மாரீஸூம், கவிஞர் முருகனும், சென்றிருந்தோம். பேருந்து நிறுத்தத்திலிருந்து இடைசெவல் கிராமத்துக்குள் நுழைவதற்கு எப்படியும் ஒரு முக்கால் கி.மீ தூரம் இருக்கும். பல சமயங்களில் இந்த இடைவழி தூரத்தைக் கடப்பதற்குப் பலமணி நேரம் எடுத்திருக்கிறோம். நின்று பேசி, நின்று பேசி, நடந்து கொண்டேயிருப்போம். ஓரிருமுறை நயினா பேருந்து நிறுத்தம் வரை கூட வந்து வழியனுப்புவார்.\nஅவருடைய வீட்டில், அறையில் இருந்த ஒழுங்கு எங்களை ஆச்சரியப்படுத்தியது. ஏனென்றால் எழுத்தாலர்கள் நடைமுறை வாழ்க்கையில் அக்கறையற்றவர்கள் என்ற சித்திரம் எனக்குள் உருவாகிக் கொண்டிருந்தது. அதில் ஒரு பெருமிதமும் இருந்தது. ஆனால் நயினாவின் அறையில் சுத்தமும் ஒழுங்கும் அப்படி ஆட்சி செய்தன. அப்போது அவர் புகைத்துக் கொண்டிருந்த காலம். பீடிக்கட்டிலிருக்கும் பீடிகளைத்தரம் பிரித்து தனியே அடுக்கி வைத்திருப்பார். புகை பிடிக்கும் எண்ணம் வந்ததும், பீடிகளின் அருகில் வைத்திருக்கும் கத்தரிக்கோலை எடுத்து பீடியின் முனையைக் கத்தரித்த பின்னால் புகைக்கத் தொடங்குவார். அதைப்பார்க்க பார்க்க புகைக்கும் ஆசை யாருக்கும் வரும்.\nகரிசல் வட்டாரச்சொல்லகராதிக்கான சொற்களை அகரவரிசைப்படுத்தும் வேலையை நானும், மாரீஸும், முருகனும் செய்தோம். கணவதியம்மா நாங்கள் போனதும் மணக்கும் மோரும், மதியம் சாப்பாடும், சாயங்காலம் கருப்பட்டிக்காப்பியும் காராச்சேவும், தந்து உபசரித்துக் கொண்டேயிருப்பார்கள். அத்தனை இணக்கமான தம்பதிகளை இதுநாள் வரை வேறு யார் வீட்டிலும் நான் பார்த்ததில்லை.\nசுரங்கத்தைத் தோண்டியெடுத்த மாதிரி சொற்கள் குவிந்து கொண்டேயிருந்தன. அவ்வப்போது வரும் சந்தேகங்களை நயினாவிடம் கேட்டால் போதும். உரையாடல் தொடங்கிவிடும். உரையாடல் ஒரு கலை. அதில் நயினா வல்லவர். அணுக்கமாக அமர்ந்து நெருங்கிய பாந்தமான குரலில் அவர் பேசுவதைக் கேட்டுக் கொண்டேயிருக்கலாம். அத்தனை விவரங்கள், கதைகள், விவரணைகள், இலக்கியசர்ச்சைகள், என்று பேசிக்கொண்டேயிருப்பார். அப்போது நாங்கள் இருபதுகளில் இருந்தோம். நயினா அறுபதை எட்டிக் கொண்டிருந்தார். வயதின் இடைவெளியை அவருடைய பேச்சு குறைத்துவிடும். சமவயதினர் போலும் அவர் எங்களிடம் பகிர்ந்து கொண்டே சமாச்சாரங்கள் ஏராளம்.\nஅப்போது கோவில்பட்டியில் ஒரு புதிய தலைமுறை எழுத்தாளர்கள் உருவாகிக் கொண்டிருந்த நேரம். தேவதச்சன், பூமணி, கௌரிஷங்கர், வித்யாஷங்கர், அப்பாஸ், தமிழ்ச்செல்வன், பிரதீபன், ஜோதிவிநாயகம், கோணங்கி, உதயசங்கர், நாறும்பூ நாதன், திடவை பொன்னுச்சாமி, சாரதி, அப்பணசாமி, சோ.தர்மன், முருகன், ராம், என்று நகரத்துக்குள்ளேயே ஒரு பெரிய பட்டாளம் இருந்தது. எந்தத்திசை வழி நடந்து சென்றாலும் இரண்டு இலக்கியவாதிகள் காரசாரமாக விவாதித்துக் கொண்டிருப்பார்கள். எப்ப��தும் விவாதம்..விவாதம்… விவாதம்.. கோவில்பட்டி நகரமே கொந்தளித்துக்கொண்டிருப்பதைப் போலத் தோன்றும். சதா வெளியூர்களிலிருந்து எழுத்தாளர்கள் வந்து போய்க் கொண்டிருப்பார்கள். அவர்களின் வாய்மொழிக்கதைகள் மூலமாகவும் கோவில்பட்டி இலக்கியவட்டாரம் தமிழ் இலக்கிய உலகில் பிரசித்தி பெறத் தொடங்கியது. இதெற்கெல்லாம் பின்புலமாக நயினா இருந்தார். அவர் காரசாரமான விவாதங்களில் பங்கெடுத்ததில்லை. இலக்கியக்கூட்டங்களில் ஆவேசமாக உரையாற்றியதும் இல்லை. இலக்கிய அரசியலில் தன்னை முன்னிறுத்தும் சாணக்கிய வேலைகளைச் செய்ததும் இல்லை. ஆனால் கோவில்பட்டி இலக்கியச்சூழலுக்குப் பின்திரையாக இருந்தார். புதிய இளைஞர் படையைக் கண்டு பெருமிதம் அடைந்தார். அதை எல்லோரிடமும் சொல்லிச் சிலாகித்தார். எங்களின் தார்மீக பலமாக அவர் இருந்தார். இத்தனைக்கும் விமரிசன விவாதங்களில் நாங்கள் அவரை விட்டு வைத்ததும் இல்லை.\nஅவர் ஆரம்பத்திலிருந்தே வட்டார இலக்கியத்தின் மீதும், குறிப்பாகத் தான் வாழ்ந்த தனித்துவமிக்க கரிசல்மண்ணின் மீதும் தீராத நம்பிக்கை வைத்திருந்தார். வட்டார இலக்கியம் குறித்து எத்தனையோ எதிர்மறையான விமரிசனங்கள் வந்த போதும் அவர் விடாப்பிடியான நம்பிக்கை வைத்திருந்தார். அவருடைய நம்பிக்கை வீண்போகவில்லை.\nபெரும்பாலும் உயர்சாதி இலக்கியமாகவே இருந்து வந்த தமிழிலக்கியத்தில் கிராமத்தின் குரலை அழுத்தமாகச் சொன்னவர் நயினா தான். ஒரு வகையில் பிற்படுத்தப்பட்ட, மக்களின் வாழ்க்கை தமிழிலக்கியத்தில் பிரதிபலிக்க முன்னத்தி ஏர் பிடித்தவரும் நயினா தான். இன்று வட்டாரமொழி இலக்கியம் இத்துணை அங்கீகாரம் பெற்றிருக்கிறதென்றால் அதற்கு நயினாவின் தொடர்ந்த இலக்கியச்செயல்பாடுகளே காரணம். ஒரு பல்கலைக்கழகம் செய்ய வேண்டிய பணிகளை அவர் தனியாக நின்று செய்தவர். அவர் எங்கேயிருந்தாலும் அங்கே ஒரு இலக்கியச்சூழல் உருவாகிவிடும். கோவில்பட்டியில் அவர் இருந்த காலம் இங்குள்ள இலக்கியவாதிகளின் பொற்காலம் என்று சொல்லலாம். அதை நினைத்து நாங்கள் இப்போதும் பெருமை கொள்கிறோம்.\nபலசமயங்களில் நானும் மாரீஸும் பேசிக்கொள்ளும்போது எங்கள் கண்களில் அந்த நாட்களின் ஞாபகங்கள் நிழலாடும். இடைசெவல் சென்று வந்ததைப்பற்றி, நயினாவைப்பற்றி, கோவில்பட்டி நண்பர்கள் ஒவ்வொருவருக்கும் ஞாபகம் கொள்ள வெவ்வேறு ஞாபகங்கள் இருக்கும். எனக்கும் என் துணைவியாருக்கும் மேலும் நெருக்கமான ஒரு நினைவுக்குறிப்பு உண்டு. என் திருமணத்துக்கு ஒரு எழுத்தாளர் தாலி எடுத்துத் தர வேண்டும் என்று தோழர்கள் பேசி முடிவு செய்தார்கள். உடனடியாக எங்கள் அனைவரின் ஒருமித்த கருத்தாக நயினாவையும் கணவதியம்மாவையும் கூப்பிடலாம் என்று முடிவு செய்தோம். என் துணைவியாரின் சொல்லாடலில் கை தட்டி கலியாணம் என்று பெயர்பெற்ற என் திருமண புகைப்படத்தொகுப்பில் நயினாவையும் கணவதியம்மாவையும் அடிக்கடி நானும் என் குடும்பத்தாரும் பார்த்துக் கொள்வோம். எழுத்திற்கும் எனக்கும் இன்று வரையிலான உறவுக்கு நயினா ஒரு முக்கியக் காரணம் என்று நான் அடிக்கடி நினைத்துக் கொள்வேன்.\nஎண்பத்தியைந்து வயதைக்கடந்தும் இன்னும் தமிழிலக்கியத்துக்கு தன்னுடைய பங்களிப்பைச் செய்து கொண்டிருக்கும் நயினா புதிய தலைமுறை எழுத்தாளர்களுக்கும் உத்வேகமளிக்கிறார் என்றால் மிகையில்லை. மாரீஸிடம் நான் சொன்னேன்,\n“ நயினாவை அவருடைய நூறாவது வயதில் சென்று பார்க்க வேண்டும்..”\n அப்பவும் நயினா நமக்கு கருப்பட்டிக்காப்பியும் காராச்சேவும் கொடுத்து ஏகப்பட்ட சங்கதிகளைச் சொல்லுவார்..”\n( பத்து வருடங்களுக்கு முன்பு முன்னொரு காலத்தில் நூலில்\nLabels: இடைசெவல், இலக்கியம், உதயசங்கர், கட்டுரை, கி.ரா, முன்னொரு காலத்தில்\nபொதுவாகவே குழந்தைகள் எதையும் சுலபமாக நம்பி விடுவார்கள். அதுவும் உண்மையாகவே நம்பி விடுவார்கள். அவர்களுடைய குழந்தமை அவர்களுக்கென்று ஒரு உலகை உருவாக்குகிறது. அந்த உலகத்தில் மரப்பாச்சி பொம்மை அம்மாவாக, மகளாக, உருமாறுகிறது. மரப்பாச்சி பொம்மை பல் தேய்க்கிறது. குளிக்கிறது. பள்ளிக்கூடம் போகிறது. டீச்சரிடம் பாடம் கேட்கிறது. மரப்பாச்சிக்குக் காய்ச்சலோ வயிற்றுவலியோ வருகிறது. டாக்டரிடம் போய் மருந்து வாங்கிக் கொடுக்கிறாள் அம்மா. கசப்பு மருந்தைக் குடிக்க கஷ்டப்படுகிறது. டாக்டர் ஊசி போடும்போது அழுகிறது. தூங்க மறுக்கிறது. அப்போது அம்மா பூச்சாண்டி வந்துருவான் என்று பயமுறுத்த்துகிறாள். மரப்பாச்சி சமர்த்தாய் உறங்குகிறது. எல்லாவற்றையும் உயிருள்ள குழந்தையைப் போல மரப்பாச்சி செய்கிறது.\nஇந்தப் போலச்செய்தலை குழந்தை உண்மையாக நம்புகிறது. இதில் எங்கெல்லாம் எதையெல்லாம் யதார்த்தமாய் செய்யமுடியாதோ அங்கெல்லாம் அதையெல்லாம் ஃபேண்டஸியாக மாற்றுகிறது. இரண்டடி இடத்திலேயே வீடு, பள்ளிக்கூடம், ஆசுபத்திரி, கார், பைக், என்று நொடிக்கு நொடி எல்லாவற்றையும் மாற்றுகிறது. கைக்குக் கிடைக்கிற பொருட்களின் வழியே தன் கற்பனையின் எல்லைகளை விரிப்பதில் குழந்தமைக்கு எந்த தடையுமில்லை. அது தான் குழந்தைமையின் மாயாஜாலம்.\nகுழந்தை இலக்கியத்தைப் பொறுத்தவரை பல்வேறு கருத்துக்கள் வலியுறுத்தப்படுகின்றன. முதலில் இப்படியான கருத்துக்களை பொருட்படுத்தக்கூடிய சூழல் உருவாகியிருப்பது மிக முக்கியம். குழந்தை இலக்கியம் என்றாலே ஃபேண்டசியாகத்தான் இருக்க வேண்டும். ஃபேண்டசி இல்லாத கதைகளை குழந்தைகள் வாசிக்க மாட்டார்கள். குழந்தை இலக்கியம் நம்பமுடியாதவற்றை நம்பச்சொல்கிற மாதிரி இருக்கக்கூடாது. அது அறிவியல் கண்ணோட்டத்தை வளர்க்கும் விதமாக இருக்க வேண்டும். அறிவியல் சிந்தனைகளை விதைக்க வேண்டும். குழந்தை இலக்கியத்தில் நன்னெறிகளும், அறநெறிகளும் போதிக்கப்பட வேண்டும். குழந்தை இலக்கியம் யதார்த்தத்தைப் பிரதிபலிக்க வேண்டும். யதார்த்தமான படைப்புகளின்வழி குழந்தைகள் வாழ்க்கையைப் புரிந்துகொள்ள ஏதுவாக இருக்க வேண்டும். இப்படிப் பல்வேறு கருத்தோட்டங்கள் இருந்தாலும் உலகச்சிறந்த குழந்தை இலக்கியம் எல்லாம் பெரும்பாலும் ஃபேண்டசி என்று சொல்லப்படுகிற அதிமாயாஜாலக்கதைகளாக இருக்கின்றன. ஃபிரெஞ்ச் செவ்வியல் குழந்தை இலக்கிய நூலான அந்து வான் எக்சுபரியின் குட்டி இளவரசன் ஆக இருக்கட்டும் லூயி கரோலின் ஆலிசின் அற்புத உலகம் ஆக இருக்கட்டும் அல்லது மற்ற நாடுகளின் குழந்தை இலக்கியமாக இருக்கட்டும் பெரும்பாலும் ஃபேண்டசியாகவே இருக்கின்றன என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டியதிருக்கிறது.\nமற்ற பாணி இலக்கியவகைகளும் இருந்தாலும் ஃபேண்டசிவகை இலக்கியத்துக்கு ஒரு தனீ ஈர்ப்பு இருக்கிறது. ஏனெனில் ஃபேண்டசியில் குழந்தைகளின் கற்பனையின் எல்லை விரிகிறது. புதிய கற்பனைகள், மாயாஜாலங்கள் முதலில் குழந்தைகளின் படைப்பூக்க நுண்ணுணர்வைத் தூண்டி விடுகின்றன. நம்ப முடியாததை நம்புகிற உணர்வு குழந்தைகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. யதார்த்த உலகத்தில் இல்லாத, நடைமுறைப்படுத்த முடியாத, மாய உலகம் ��ுழந்தைகளின் மன உலகில் ஆழ்ந்த பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஆதிமனிதன் தன் குழந்தைப்பருவத்தில் தன்னால் அறியமுடியாததை எல்லாம் தொன்மமாக மாற்றினான். அந்தத் தொன்மங்களின் வழியே யதார்த்தத்தை மாற்றிவிடமுடியும் என்று நம்பினான். மாயமந்திரங்களை தொன்மங்களில் ஏற்றினான். அதன் மூலம் மனிதனின் உற்பத்தித்திறனை அதிகப்படுத்த முடியும் என்று நடைமுறையில் கண்டான். அதில் மகிழ்ச்சியடைந்தான். அவற்றைக் கொண்டாடினான். அந்தக் கொண்டாட்ட மனநிலையே முக்கியம்.\nகுழந்தை இலக்கியம் எப்படி எழுதப்பட வேண்டும் என்பதில் பல்வேறு கருத்தோட்டங்கள் இருந்தாலும் கொண்டாட்டம் இல்லாத, மகிழ்ச்சியளிக்காத, கறாரான ஆசிரியரைப் போன்று, பரீட்சைக்காக மட்டுமே படிக்கிற பாடப்புத்தகங்களைப் போன்று இருக்கக்கூடாது என்பதை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள் என்று நம்புகிறேன். மலையாள எழுத்தாளர் மாலி எழுதிய அய்யாச்சாமி தாத்தாவும் ஆட்டுக்கல் மீசையும் தொகுப்பில் உள்ள கதைகளில் பெரும்பாலானவை ஃபேண்டசிக்கதைகள் தான். அதனால் தான் அய்யாச்சாமி தாத்தாவின் காதுவழியே முளைத்த பெரிய பலாமரத்தில் அய்யாச்சாமி தாத்தாவே ஊஞ்சல் கட்டி ஆடுகிறார். தன்னுடைய வால் ரோமத்தைப் பிடுங்கிய சங்கரநாராயணனைத் துரத்தும் கிங்கர யானை அவன் குளத்தில் இறங்கினால் இறங்குகிறது. மரத்தில் ஏறினால் ஏறுகிறது. ஊதுகுழலுக்குள் நுழைந்தால் அதுவும் நுழைகிறது. இப்படியான கதைகளே இந்தத் தொகுப்பிலுள்ள கதைகள். வாசிப்பதற்குச் சுவாரசியமான மனித இயல்புகளை சுட்டாமல் சுட்டிச்செல்லும் கதைகள்.\nLabels: இலக்கியம், உதயசங்கர், குழந்தை இலக்கியம், நூல்வனம் பதிப்பகம், நூல்வெளியீடு\nபனிரெண்டு சிறுகதைத் தொகுதிகள்,ஒரு குறுநாவல் தொகுதி, ஐந்து கவிதைத் தொகுதிகள், பத்தொன்பது குழந்தை இலக்கிய நூல்கள்,எழுபது மொழிபெயர்ப்பு நூல்கள், ஆறு கட்டுரை நூல், தமுஎகசவில் மாநிலத் துணைப்பொதுச்செயலாளர். தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத்தலைவர்\nதுண்டிக்கப்பட்ட தலையில் சூடிய ரோஜாமலர்\nஇந்துக்களின் புனித நூல் எது\nபிராமணிய மேல்நிலையாக்கமும் பண்பாட்டு அழிப்பும்\nமனிதநலம் காக்கும் ஹோமியோபதி மருத்துவம்-2\nகாட்டு வாத்தாகச் சிறகை விரித்த கவிதை\nகத்தரிக்காய் குள்ளனும் கழுகுமலை பூதமும் - நாடோடிக்கதை\nகத்தரிக்காய் குள்ளனும் கழுகுமலை பூதமும் உதயசங்கர் ஒரு ஊரில் ஒரு பாட்டியும் தாத்தாவும் தனியாக வாழ்ந்து வந்தார்கள். அவர்களுக்கு எட்டு மக...\nஇந்துக்களின் புனித நூல் எது\nஇந்துக்களின் புனித நூல் எது உதயசங்கர் உலகிலுள்ள எல்லாப்பெருமதங்களுக்கும் ஒரு புனிதநூல் இருக்கிறது. கிறித்துவத்துக்கு பைபிள் என...\nசூரியனும் குட்டிக்குட்டிக்குருவிக்குஞ்சும் உதயசங்கர் காலை விடிந்தது. சூரியன் கண்களை மெல்லத் திறந்து உலகத்தைப் பார்த்தான். வெளிச்சத்தின...\nமின்னுவின் ஆசை உதயசங்கர் மின்னு சுண்டெலி தப்பித்ததே பெரிய காரியம். ஒரு விநாடி தாமதம் ஆகி இருந்தால் அவ்வளவு தான். வெள்ளைப்பூனை லபக் என்...\nபிராமணிய மேல்நிலையாக்கமும் பண்பாட்டு அழிப்பும்\nபிராமணிய மேல்நிலையாக்கமும் பண்பாட்டு அழிப்பும் உதயசங்கர் இப்போதெல்லாம் பெரும்பாலான நாட்டார் தெய்வக்கோவில்களில் கும்பாபிஷேகம் நடக...\nகுறள் அறமும் மனு (அ)தர்மமும் - (ஆய்வுக் கட்டுரை)\nஇட ஒதுக்கீடல்ல மறுபங்கீடு - ஆதவன் தீட்சண்யா உரை\nதமிழ்நாடு கிராம வங்கியை சீர்குலைக்கும் அதன் நிர்வாகம்\nஎன் 'கால்' கதை தெலுங்கில்\nபார்த்த படத்தை மறுபடி பார்க்க, படித்த கதையை மீண்டும் படிக்க விரும்புவதன் உளவியல்\nபுதுப்பேட்டை 15 ஆவது ஆண்டு நிறைவு\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nகருப்பட்டிக் காப்பியும் காராச்சேவும் இடைசெவல் நயின...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/india/2021/09/24/economists-advised-union-bjp-govt-to-do-this-for-states-revenues", "date_download": "2021-10-19T12:33:56Z", "digest": "sha1:DWSNZCKARKS3RTUJZWD4ORVOZMJYBHQ6", "length": 11871, "nlines": 58, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "economists advised union bjp govt to do this for states revenues", "raw_content": "\n”இதை செய்தால்தான் மாநிலங்களின் வருமானம் உயரும்” - ஒன்றிய பாஜக அரசுக்கு பொருளாதார நிபுணர்களின் அறிவுரை\nமாநில வரி வருமானங்களில் கைவைக்கும் போக்கினை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.\nஒன்றிய அரசு நாட்டு மக்களுக்கானதா நாளும் பொழுதும் வளம் கொழிக்கும் முதலாளிக்கானதா என்ற கேள்வி அனைவரிடமும் உள்ளது. ஆம் அப்படி தான் உள்ளது ஒன்றிய அரசின் ஒவ்வொரு செயல்பாடுகளும் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கல் துவங்கி இன்னும் ஏராளம் உள்ளது. அதில் முக்கியமாக மாநில உரிமைகளை பறிப்பது, அவர்களின் வரி வருவாயை குறைப்பத���. மக்கள் விரோத ஒன்றிய பாஜக அரசின் செயல்பாடுகளால் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு என அடிப்படை தேவைகளுக்கான அனைத்து பொருட்களின் விலையும் உச்சம் தொட்டுள்ளது.\nகடந்த 2018ம் ஆண்டுக்கும் 2021ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலங்களில் பெட்ரொல், டீசல், கச்சா எண்ணெய் விலையில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. 2001 ஆம் ஆண்டு கச்சா எண்ணெய் ஒரு பேரலுக்கு 10 டாலராக இருந்த நிலையில் 2013 ஆம் ஆண்டு ஒரு பேரல் கச்சா எண்ணெய் 130 டாலராக விற்பனை செய்யப்பட்டது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தாலும் பெட்ரோல், டீசல் விலை கட்டுக்குள் வைக்கப்பட்டது. 2014 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்படும் போது நேர்முக வரி 55 பைசாவாகவும், மறைமுக வரி 45 பைசாவாகவும் இருந்தது.\nபன்னாட்டு நிறுவனங்களுக்காக நேர்முக வரியை பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு குறைந்து கொண்டது. பாஜக ஆட்சி பொறுப்பு ஏற்ற போது பெட்ரோல் வரி 10 ஆகவும், டீசல் வரி 5 ரூபாயும் இருந்தது. தற்போது பெட்ரோல் வரி 32 ஆகவும், டீசல் வரி 31 ஆகவும் உள்ளது. மாநிலங்களில் இருந்து எடுக்கப்பட்ட செஸ் வரியை ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு பிரித்து கொடுக்காமல் வைத்துள்ளது. பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டு வரலாம் என ஒன்றிய அரசு சொல்லவில்லை. உயர்நீதிமன்ற தீர்ப்பில் கொடுப்பட்டதை ஒன்றிய அரசு சுட்டி காட்டியுள்ளது. ஜி.எஸ்.டி வரி வரம்பு குறித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியாது. ஒன்றிய அரசின் மொத்த வருமானத்தில் 20 சதவீதம் பெட்ரோல், டீசல் வழியாக வருகிறது.\nநாடாளுமன்றத்திலும் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பாஜக அரசு; மக்கள் தொகையை கட்டுப்படுத்தியதற்கான தண்டனையா இது\nபெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டு வர ஒன்றிய அரசும் விரும்பவில்லை, மாநில அரசுகளும் விரும்பவில்லை, பன்னாட்டு நிறுவனங்களுக்கு வரிகளை ஒன்றிய அரசு குறைத்து உள்ளதால் மக்கள் மீது இரு மடங்கு வரி உயர்த்தப்பட்டு உள்ளது. எந்தவொரு நாட்டிலும் இல்லாத அளவிற்கு நேர்முக வரியை 100 சதவீதம் ஒன்றிய அரசே எடுத்து கொள்கிறது. மாநிலங்களுக்கு பெட்ரொல், டீசல், ஆல்கஹால் ஆகிய இரு வரி வருவாய் மட்டுமே கிடைக்கிறது. மாநில வரி வருவாய் ஒன்றிய அரசு எடுத்து கொண்டால் மாநிலங்கள் எப்படி நிர்வாகத்தை நடத்த முடியும் என பொருளாதார நிபுணர் நாக���்பன் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஇதேபோல, பொருளாதார நிபுணர் வெங்கடேஷ் ஆத்ரேயா பேசியபோது மாநில வரி வருமானங்களில் ஒன்றிய அரசு கை வைக்கிறது. செஸ் என்பது குறிப்பிட்ட நோக்கத்திற்கு போடப்படுவது. அதை ஒன்றிய அரசுதான் முடிவெடுக்கும். வரி விதிக்கும் உரிமை மாநில அரசுகளிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல், புகையிலை பொருட்கள் உள்ளன.\nமாநில வருமான வாய்ப்புகளை உருவாக்க மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஜி.எஸ்.டி கட்டமைப்பில் மாற்றம் கொண்டு வரவேண்டும். 36% -22% கார்ப்ரேட் வரி வருமானத்தை குறைத்துள்ளது. சாதாரண மக்களின் மறைமுக வரியை அதிகரித்து பெரும் முதலாளிகளின் நேரடி வரியை குறைக்கிறது. இது தவறான கொள்கை என்றார். பெரு முதலாளிக்களுக்கான அரசாக அல்லாமல் பெரும்பான்மை ஏழைகளுக்கான அரசாக ஒன்றிய அரசு இருக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.\nசென்னையில் வாடகைக்கு வீடு எடுத்து லீஸ்-க்கு விட்டு லட்சக்கணக்கில் சுருட்டல்: பாஜக நிர்வாகி அதிரடி கைது\n“எங்க கல்யாணத்த மழை வெள்ளம் தடுப்பதா.. நெவர்” : காதல் ஜோடி எடுத்த முடிவு - இணையத்தில் வைரல்\nLKG படித்த சிறுமிக்கு பாலியல் தொல்லை.. ஆசிரியருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஐகோர்ட் அதிரடி\nசிறுநீரக கல்லுக்கு பதிலாக சிறுநீரகத்தையே அகற்றிய மருத்துவர்... நுகர்வோர் ஆணையத்தின் அதிரடி உத்தரவு\n“நாளை நம்மை காப்பாற்றிக்கொள்ள எந்த வாய்ப்பும் இருக்காது” : உலகிற்கு மாலத்தீவு சொன்ன அதிர்ச்சி செய்தி\nLKG படித்த சிறுமிக்கு பாலியல் தொல்லை.. ஆசிரியருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஐகோர்ட் அதிரடி\n“எங்க கல்யாணத்த மழை வெள்ளம் தடுப்பதா.. நெவர்” : காதல் ஜோடி எடுத்த முடிவு - இணையத்தில் வைரல்\n“விரைவில் ஆழ்கடல் அகழாய்வுப் பணிகளைத் தொடங்க ஆலோசனை” : அமைச்சர் தங்கம் தென்னரசு முக்கிய தகவல்\nசிறுநீரக கல்லுக்கு பதிலாக சிறுநீரகத்தையே அகற்றிய மருத்துவர்... நுகர்வோர் ஆணையத்தின் அதிரடி உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/aadamal-aadukiren-anarkali-song-lyrics/", "date_download": "2021-10-19T11:37:27Z", "digest": "sha1:4ZQQ272TWZ6MOP6MPMKDY237CZQ2YFP7", "length": 9016, "nlines": 202, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Aadamal Aadukiren Anarkali Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : மனோ மற்றும் வித்யா\nஇசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்\nபெண் : ஆடாமல் ஆடுகிறேன்\nபெண் : அ��்பர் மகனை தேடுகிறேன் வா வா வா\nநாம் ஆத்து பக்கம் போய் விடுவோம் வா வா வா\nபெண் : ஆடாமல் ஆடுகிறேன்\nஅக்பர் மகனை தேடுகிறேன் வா வா வா\nநாம் ஆத்து பக்கம் போய் விடுவோம் வா வா வா\nஆண் : அனார்கலி சுகமா\nபெண் : சலீம் மாமா நலமா\nஆண் : அனார்கலி சுகமா\nபெண் : சலீம் மாமா நலமா\nஆண் : ஆஹா ஆஹா\nபெண் : ஓஹோ ஓஹோ\nபெண் : தோட்டத்துக்கு வரட்டுமா\nஆண் : ஓசி முத்தம் கிடைக்குமா\nஆண் : அனார்கலி சுகமா\nபெண் : சலீம் மாமா நலமா\nஆண் : அனார்கலி சுகமா\nபெண் : சலீம் மாமா நலமா\nஆண் : ஆஹா ஆஹா\nபெண் : ஓஹோ ஓஹோ\nபெண் : நான் தென்னந்தோப்பில் நின்றிருந்தேன்\nஅவன் ஆப்பிள் வேண்டும் என்றான்\nஅவன் அல்வா வேண்டும் என்றான்\nபெண் : நான் தென்னந்தோப்பில் நின்றிருந்தேன்\nஅவன் ஆப்பிள் வேண்டும் என்றான்\nஅவன் அல்வா வேண்டும் என்றான்\nஆண் : நான் முத்து பல்லாக்கு கொண்டு வந்தேன்\nஅவள் மோட்டார் வேண்டும் என்றாள்\nநான் முத்து பல்லாக்கு கொண்டு வந்தேன்\nஅவள் மோட்டார் வேண்டும் என்றாள்\nநான் குதிரை சவாரி வாடி என்றேன்\nஅவள் ஒட்டகம் வேண்டும் என்றாள்\nநான் குதிரை சவாரி வாடி என்றேன்\nஅவள் ஒட்டகம் வேண்டும் என்றாள்\nஅட ஆரம்பம் ஆனது ஆட்டத்திலே\nஇவள் ஆடி திரிந்ததெல்லாம் தோட்டத்திலே\nஇவள் ஆடி திரிந்ததெல்லாம் தோட்டத்திலே\nபால்நிலா போல் வந்தாள் வீட்டுக்குள்ளே\nஅட ஆரம்பம் ஆனது ஆட்டத்திலே\nஇவள் ஆடி திரிந்ததெல்லாம் தோட்டத்திலே\nஆண் : உலகே மாயம் உறவே மாயம்\nஉனக்காக ஓடோடி காலில் காயம்\nஆண் : உலகே மாயம் உறவே மாயம்\nஉனக்காக ஓடோடி காலில் காயம்\nஆண் : உலகே மாயம் உறவே மாயம்\nஉனக்காக ஓடோடி காலில் காயம்\nஆண் : கல்லறை ரெண்டானது காதலோ ஒன்றானது\nபோலீஸ் காவல் மீறி துபாய் ப்ளேனில் ஏறி\nகல்லறை ரெண்டானது காதலோ ஒன்றானது…\nபெண் : கல்லறை ரெண்டானது காதலோ ஒன்றானது\nபோலீஸ் காவல் மீறி துபாய் ப்ளேனில் ஏறி\nகல்லறை ரெண்டானது காதலோ ஒன்றானது…\nஇருவர் : கல்லறை ரெண்டானது காதலோ ஒன்றானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanjai.today/tanjore-district-constituencies-ready-for-elections/", "date_download": "2021-10-19T12:09:32Z", "digest": "sha1:HWWKGXRFPCETW4VYREBIFSAZ5TI6ZYFX", "length": 11911, "nlines": 128, "source_domain": "www.thanjai.today", "title": "தேர்தலுக்கு ஆயத்தமான தஞ்சை மாவட்ட தொகுதிகள்", "raw_content": "\nஅரசியல் தஞ்சை நகரச்செய்தி மாநகரச் செய்தி\nதேர்தலுக்கு ஆயத்தமான தஞ்சை மாவட்ட தொகுதிகள்\nதஞ்சை ஏப்.5,தஞ்சை மாவட்டத்தில் 6 ஆம் தேதி ந��ைபெறவுள்ள தேர்தலுக்காக 5,000 போலீசார் ஆயிரம் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர், தஞ்சை மாவட்டத்தில் தஞ்சாவூர், ஒரத்தநாடு பட்டுக்கோட்டை பேராவூரணி திருவையாறு பாபநாசம் கும்பகோணம் திருவிடைமருதூர் ஆகிய எட்டு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன இதில் மொத்தம் 89 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர், எட்டு தொகுதிகளுக்கு 2886 வாக்குசாவடிகள் வாக்காளர்கள் வாக்களிக்க தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது இதில் 102 வாக்குசாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளது.\nஇதைத் தொடர்ந்து இங்கு கேமராக்கள் மூலம் வாக்குப்பதிவு முழுமையாக பதிவு செய்யவும் வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் தஞ்சை மாவட்டத்தில் 8 தொகுதிகளுக்கும் சுமார் 5,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் இவர்களுடன் 11 கம்பெனிக்கு துணை ராணுவத்தினர் என ஆயிரம் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் தஞ்சை மாவட்டத்தில் ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பதற்காக ஜிபிஎஸ் பொருத்தப்பட்ட வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது 204 மண்டல குழுக்களுக்கு தலா ஒரு வாகனம் வீதம் தயார் நிலையில் உள்ளது மேலும் கூடுதலாக 32 வாகனமும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.\nவாகனங்களுக்கு ஜிபிஎஸ் பொருத்தப்பட்டு அவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இணைக்கப்பட்டு தேர்தல் முடிந்து வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு வரும்வரை கண்காணிக்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது இதற்கிடையில் கருவுற்று ஏற்படாத வகையில் வாக்காளர்கள் தேர்தல் நடைபெறும் நாளன்று அச்சமின்றி வாக்களிக்க தேவையான ஏற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் செய்துள்ளது அதன்படி ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் முகக் கவசங்கள் தெர்மல் ஸ்கேனர், ஒருமுறை உபயோகப்படுத்தும் கையுறை சர்ஜிக்கல் மாஸ்க், சானிடைசர் பெரிய பாக்கெட் என 15 வகையான பொருட்களை மொத்தமாக வாங்கி மாவட்ட அளவில் இருப்பு வைக்கப்பட்டு இதையடுத்து இந்த பொருட்கள் அனைத்தும் ஒரு அட்டைப் பெட்டியில் வைக்கப்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள எட்டு தொகுதிகளுக்கு தஞ்சை அண்ணா கலை���ரங்கத்தில் இருந்து வாகனங்களில் அனுப்பி வைக்கப்பட்டது.\nதஞ்‍சை திராவிடர் கழகத்தலைவர் தேர்தல் பரப்புரை\nதஞ்சை கிறிஸ்தவ ஆலயங்களில் ஈஸ்டர் கொண்டாட்டம்\nசமூகம் தஞ்சை நகரச்செய்தி மாநகரச் செய்தி\nவிபத்து இல்லா தீபாவளியாக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் தீயணைப்புத்துறை மாவட்ட அலுவலர்\nஅரசியல் தஞ்சை நகரச்செய்தி மாநகரச் செய்தி\nகட்டுமான பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த ஏஐடியூசி வலியுறுத்தல்\nதஞ்சை நகரச்செய்தி மாநகரச் செய்தி வேளாண்மை\nமாடித்தோட்ட சாகுபடியால் உடல் நிலையில் முன்னேற்றம் பெறலாம்; முதல்வர் வேலாயுதம்\nவிபத்து இல்லா தீபாவளியாக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் தீயணைப்புத்துறை மாவட்ட அலுவலர்\nகட்டுமான பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த ஏஐடியூசி வலியுறுத்தல்\nமாடித்தோட்ட சாகுபடியால் உடல் நிலையில் முன்னேற்றம் பெறலாம்; முதல்வர் வேலாயுதம்\nமுதல்வர் முன்னெடுப்பு திருவாரூர் காரைக்குடி ரயில் சேவை துவக்கம்; எம்பி பழனிமாணிக்கம்\nபள்ளி மாணவர்களுக்கு வரும் அக் 25, 26ம் தேதிகளில் கலைப்போட்டிகள்\nசமூகம் தஞ்சை நகரச்செய்தி மாநகரச் செய்தி\nவிபத்து இல்லா தீபாவளியாக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் தீயணைப்புத்துறை மாவட்ட அலுவலர்\nஅரசியல் தஞ்சை நகரச்செய்தி மாநகரச் செய்தி\nகட்டுமான பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த ஏஐடியூசி வலியுறுத்தல்\nதஞ்சை நகரச்செய்தி மாநகரச் செய்தி வேளாண்மை\nமாடித்தோட்ட சாகுபடியால் உடல் நிலையில் முன்னேற்றம் பெறலாம்; முதல்வர் வேலாயுதம்\nசமூகம் தஞ்சை நகரச்செய்தி மாநகரச் செய்தி\nமுதல்வர் முன்னெடுப்பு திருவாரூர் காரைக்குடி ரயில் சேவை துவக்கம்; எம்பி பழனிமாணிக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/pope/news/2020-07/pope-angelus-treasure-pearl.print.html", "date_download": "2021-10-19T13:24:01Z", "digest": "sha1:436L6N4FDTPPW2ADPS4J2QX6WBZY3636", "length": 5884, "nlines": 26, "source_domain": "www.vaticannews.va", "title": "நிலத்தில் மறைந்திருக்கும் புதையல், நம் இயேசுவே - print - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nதிருத்தந்தை பிரான்சிஸ் மூவேளை செபவுரையின்போது - 260720 (ANSA)\nநிலத்தில் மறைந்திருக்கும் புதையல், நம் இயேசுவே\nதிருத்தந்தை பிரான்சிஸ்: இறையரசைக் கட்டியெழுப்புவதற்கு, இறைவனின் அருள் இருந்தால் மட்டும் போதாது, மனிதகுலத்தின் ஈடுபாட்டுடன்��ூடிய ஆர்வமும் தேவை\nகிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான் செய்திகள்\nவானுலக அரசைத் தேடுவதில் ஒவ்வொருவரும் சோர்வின்றி தொடர்ந்து ஈடுபடவேண்டும் என்று, இஞ்ஞாயிறன்று அழைப்பு விடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.\nஜூலை 26ம் தேதி, ஞாயிறன்று நற்செய்தியில் கூறப்பட்டுள்ள, நிலத்தில் மறைந்திருந்த புதையல், மற்றும், விலை உயர்ந்த முத்து ஆகிய உவமைகள் குறித்து, தன் ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையின்போது தன் கருத்துக்களை பகிர்ந்துகொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறையரசைக் கட்டியெழுப்புவதற்கு, இறைவனின் அருள் இருந்தால் மட்டும் போதாது, மனிதகுலத்தின் ஈடுபாட்டுடன்கூடிய ஆர்வமும் தேவை என்று கூறினார்.\nநிலத்தில் மறைந்திருக்கும் புதையல், மற்றும், விலைமதிப்பற்ற முத்து ஆகிய உவமைகளைச் சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எவ்வாறு ஒருவர் இப்பொருள்களை அடைய தனக்கு உள்ளதையெல்லாம் விற்கிறாரோ, அதுபோல், இறையரசைப் பெறுவதற்காக நமக்குள்ளதையெல்லாம் இழக்க நாம் தயாராக இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.\nநம்மிடம் இருப்பதைவிட விலைமதிப்பற்ற ஒரு பொருளை அடைய விரும்பினால், நம் உடமைகள்மீது கொண்டுள்ள பற்று, மற்றும், இலாபத்தின்மீது கொண்டுள்ள வேட்கை, சுயநலம், என்பனவற்றை இழக்க முன்வரவேண்டும், ஏனெனில், விண்ணரசு எனும் புதையல் நம் வாழ்வை தினமும் புதுப்பிப்பதுடன், இறைவனையும், அயலவரையும் அடைவதற்கு, புதிய பாதையை நமக்கு திறக்கிறது என, மேலும் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.\nநிலத்தில் மறைந்திருக்கும் புதையலாகவும், விலைமதிப்பற்ற முத்தாகவும் இருக்கும் இயேசுவை நாம் முழுமையாகப் பெறும்பொது, உலகிலுள்ள அனைத்து மகிழ்ச்சிகளையும் நம்மில் அவர் தூண்டுகிறார் என எடுத்துரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.\nஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு\nஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyaagarathi.com/tamil-sportswomen-won-the-gold-medal-in-worldcup-air-rifle-competion/", "date_download": "2021-10-19T11:22:25Z", "digest": "sha1:BKGOBNSQPMGWL5D6WR5Q4ZHQ44NMTGC7", "length": 12109, "nlines": 159, "source_domain": "puthiyaagarathi.com", "title": "உலகக்கோப்பை ஏர் ரைஃபிள் போட்டியில் தங்கம் வென்றார் தமிழக வீராங்கனை! - புதிய அகராதி", "raw_content": "Tuesday, October 19மெய்ப்��ொருள் காண்பது அறிவு\nஉலகக்கோப்பை ஏர் ரைஃபிள் போட்டியில் தங்கம் வென்றார் தமிழக வீராங்கனை\nபிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோவில், தற்போது மூத்தோர்களுக்கான உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் (ஏர் ரைஃபிள்) போட்டி நடந்து வருகிறது. உலகம் முழுவதும் 72 நாடுகளைச் சேர்ந்த 541 வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.\nநேற்று (ஆகஸ்ட் 28, 2019) நடந்த இறுதிப்போட்டியில் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வீராங்கனை இளவேனில் வாலறிவன், 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் 251.7 புள்ளிகள் பெற்று தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். இரண்டாம் இடத்தை, பிரிட்டனை சேர்ந்த வீராங்கனை சியோனட் மின்டோஸ் பெற்றார். அவர் 250.6 புள்ளிகள் எடுத்தார்.\nஉலகக்கோப்பை மூத்தோர் பிரிவில் இளவேனில் வாலறிவன், தங்கம் வெல்வது இதுதான் முதல்முறை. என்றாலும், அவர் இதற்குமுன் ஜெர்மனியில் நடந்த ஜூனியர்களுக்கான துப்பாக்கி சுடும் போட்டியிலும் தங்கம் வென்று சாதனை படைத்திருக்கிறார். அவருக்கு உலகம் முழுவதிலும் இருந்து பாராட்டுகளும், வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன. ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களிலும் இந்திய, தமிழக பிரபலங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.\nஇதற்கிடையே, இளவேனில் வாலறிவன் சிறு பேட்டி ஒன்றை ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்துள்ளார். அதில், சாதிக்கத் துடிக்கும் இளைஞர்களுக்கு ஆலோசனையும் வழங்கி, கவனத்தை ஈர்த்துள்ளார்.\nமட்டுமே முதல் மூன்று தர\n‘புதிய அகராதி’ இணைய இதழ் சார்பிலும், வாசக தோழர்கள் சார்பிலும் தமிழகத்தின் தங்க மங்கை இளவேனில் வாலறிவனுக்கு உளம்கனிந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.\nPosted in உலகம், கடலூர், தமிழ்நாடு, முக்கிய செய்திகள், விளையாட்டு\nTagged Air Rifle Competion, Gold Medal, ilavenil valarivan, Tamil Sportswomen, Worldcup, இளவேனில் வாலறிவன், உலகக்கோப்பை, ஏர் ரைஃபிள், தங்கப்பதக்கம், துப்பாக்கி சுடுதல்\nPrev8 லட்சம் கடனுக்கு 6 கோடி ரூபாய் சொத்தை வளைத்துப்போட்ட சங்ககிரி தொழில் அதிபர்கள் கைது\nNextடிகிரி படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு 10000 ரூபாய் உதவித்தொகை\nபுற்றுநோயை குணமாக்கும் ஷிமோகா வைத்தியர்; நல்லதை நாலு பேருக்கு சொல்லலாமே\nஆளுங்கட்சியிடம் தஞ்சம் புகுந்த ஊழல் மாஜி துணைவேந்தர் தோண்டி துருவும் லஞ்ச ஒழிப்புத்துறை\nசேலம் மாநகராட்சியில் குப்பை வண்ட���கள் வாங்கியதிலும் கொள்ளை\nதேவதாசி முறை ஒழிப்பு போராளி முத்துலட்சுமி ரெட்டி\nசட்டம் அறிவோம்: குழந்தையை தத்து எடுப்பது எப்படி\nசட்டம் அறிவோம்: பூர்வீக சொத்தில் பெண்ணுக்கு உரிமை உண்டா\nமக்களுக்காக ஜமீன் சொத்துகளை வாரி வழங்கிய 'வாழும் அதிசயம்' காளியண்ணன்\n: வரவு எட்டணா செலவு பத்தணா...: (தொடர்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://timestampnews.com/2-15-lakhs-salary-for-cultivating-cannabis-with-government-approval/1003/", "date_download": "2021-10-19T12:26:50Z", "digest": "sha1:QXGLAMIOTU7OYYDU6AGDVYA3IUWZTU4X", "length": 5792, "nlines": 87, "source_domain": "timestampnews.com", "title": "சட்டபூர்வ அனுமதியுடன் கஞ்சா வளர்ப்பதற்கு 2.15 லட்சம் ரூபாய் சம்பளம் – Timestamp News", "raw_content": "\nசட்டபூர்வ அனுமதியுடன் கஞ்சா வளர்ப்பதற்கு 2.15 லட்சம் ரூபாய் சம்பளம்\nAmerican Marijuana’ என்னும் கஞ்சா மருத்துவ ஆன்லைன் இதழ் ஒன்று கஞ்சா செடியின் மருத்துவ பயன்பாடு குறித்து ஆய்வு செய்து செய்தி வெளியிட்டு வருகிறது. அதில் இதற்காக கஞ்சாவை சுவைக்க ஆட்களை பணிக்கு வேலைக்கு அமர்த்த அந்த நிறுவனம் முடிவு செய்து விளம்பரம் செய்துள்ளது. ஆனால் ஒரு நிபந்தனை விதித்துள்ளனர். இந்த பணிக்கு சேர விரும்பும் நபர் தனக்கு சொந்தமான இடத்தில் கஞ்சா சட்டப்பூர்வ அனுமதியுடன் விளைவிக்க வேண்டும். ஒருவேளை உங்கள் நாட்டில் அதற்கான அனுமதி இல்லையென்றால் நீங்கள் அந்த வேலைக்கு சேர முடியாது. விண்ணப்பிப்பவர் 18 வயது பூர்த்தியானவர்களாக இருப்பது அவசியம். அத்துடன் நான் ஏன் இந்த வேலைக்கு தகுதியானவன் என்று ஒருநிமிட பேசி வீடியோவை அனுப்ப வேண்டும். தேர்வாகும் நபர்கள் வெவ்வேறு கஞ்சா ரகங்களை சுவைத்து அதுகுறித்து விமர்சனத்தைத் தெரிவிக்க வேண்டும். இதற்கு 2.15 லட்சம் ரூபாய் சம்பளம் கொடுக்கிறார்கள். இதுவரை இந்த வேலைக்கு 3 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என்று ஆன்லைன் இதழின் முதன்மை ஆசிரியர் ட்வைட் ப்ளேக் கூறியுள்ளார்.\nPrevious Previous post: ரேஷன் கடையில் ஸ்மார்ட் கார்டு சேவை நிறுத்தம்\nNext Next post: விண்வெளியில் சாதனை – நியூயார்க்\nதூத்துக்குடி மாவட்ட காவல்துறையில் உள்ள நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள்- மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் ஆய்வு.\nதமிழக மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நல்வாழ்வு சங்கத்தின் சார்பில் கொரோனா பணிகள்\nதூத்துக்குடி 17வது வார்டு பொதுமக்கள் சார்பில் தெரு மின் விளக்கு, சாலை வசதி மற்றும் குடிநீர் குழாய் அமைத்திட வேண்டி கோரிக்கை மனு\nதிருச்செந்தூா் கோயில் கும்பாபிஷேகம்: முதல்வா் விரைவில் அறிவிப்பாா்\nதூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அங்கன்வாடி மைய கட்டிடம் – அமைச்சர் கீதாஜீவன் அடிக்கல் நாட்டினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://johan-paris.blogspot.com/2006/08/", "date_download": "2021-10-19T12:33:39Z", "digest": "sha1:Q3ZH3CLNMDFBR7YTA2LZCTIRLF56ZRZI", "length": 21587, "nlines": 61, "source_domain": "johan-paris.blogspot.com", "title": "என் பார்வையில்..Johan-Paris: August 2006", "raw_content": "\n\" தெரியத் தெரியத் தெரியாமை தெரியும்\"\nஈழத் தமிழரின் வாழ்வோடு பின்னிப் பிணைந்த, இந்தப் பனை மரத்தை;அதன் முழுப் பயன் கருதி \"கற்பகதரு\" என்பர். இப் போர்ச்சூழலிலும் ,பல தழிழர்களின் வாழ்வாதாரமாகத் திகழும், பனையின் பயன் பற்றி இணையச் சமுதாயமாகிய எமது இளைய தலைமுறையில்; அறியாதிருக்கும் சிலர் அறிய ;எனக்குத் தெரிந்ததை;அறிந்ததை;அனுபவித்தை, பகிர்வதே இப்பதிவின் நோக்கம்.\"கடகத்தின்\" பின் இளையோர் மாத்திரமன்றி; நகர்ப்புற வாழ்வோடு தம்மை இணைத்துக்கொண்ட சில 50 க் கடந்தவர்கள் கூட; அறியப் பல பனை பற்றிய தகவல்கள் உள்ளதாலும்;பலவற்றை மறக்கக் கூடிய சூழ்நிலையில் வாழும்; எம் போன்றவர்களுக்கான ஓர் மீட்டலாகவும் இதைப் பதிவிடுகிறேன்.இதில் நான் தவறவிட்டவற்றைத் தெரிந்தோர் சுட்டிக்காட்ட வேண்டுகிறேன்.இம்மரத்தில் பெறும் உணவு; ஓலையின் பயன்;மரப்பகுதியின் பயன் என பிரித்துத் தரவுள்ளேன். இவை பற்றிப் பலர் தெரிந்திருக்கலாம்.உணவாக குருத்து; கள்; பனங்கட்டி;நுங்கு;பழம்;பூரான்;கிழங்கு என்பவற்றை உண்பர்.\nகுருத்து:- பனை தறிக்கும் போதோ;ஓர் வடலியை வெட்டிப் பிளந்தோ மரத்தின் வட்டுப் (தலை) பகுதியின் மிக இளம் மிருதுவான ஓலை மற்றும் மட்டைப் பகுதிகள் குருத்து என்பர்; இது இனிப்புச் சுவையுடன் மிக ருசியாக இருக்கும்.\nகள் :- பூம்பாளையைச் சீவிக் கள் இறக்குவார்கள்; முட்டிக்குள் சுண்ணாம்பிடுவதைக் கருப்பநி அல்லது கருப்பனியெனவும்;தென்னிந்தியாவில் பதநீர் என்பர். சூட்டுடம்புக்காரருக்கு காலையில் அளவுடன் குடிப்பது நல்லதென்பர். சுண்ணாம்பிடாதிறக்கும் கள்ளில் நொதியம் கலப்பதால் சற்றுப் புளிப்பு இருக்கும்;இதைக் குடித்தால் வெறிக்கும்;அளவுடன் குடித்தால் தீங்கற்ற பானம்.\nபனங்கட்டி:- இதைப் பனைவெல்லம்;பனங்கருப்பட்டி;எனவும் கூறுவ���். கருப்பநியைப் பதமாக வற்றக் காச்சிப் பெறும் இனிப்புப் பொருள் இது. இதைச் சீனிக்குப் பதில் பாவிக்கும் பழக்கம் உண்டு. ஆயுள் வேத வைத்தியத்தில் தேனுடன் உட்க்கொள்ளும் மருந்துகளுக்கு; தேன் கிடைக்காத போது; இதைச் சேர்க்கும்படி வைத்தியர் கூறுவர். சலரோகமுள்ளவர்கள் கூட சிறிது பாவிக்கலாம்.ஈழத்தில் பருத்தித்துறை இதன் தயாரிப்பிலும்;செய்பாங்கிலும் பிரபலம்.\nநுங்கு:- பனங்காயின் இளம் பருவத்தில் முற்றாத விதையை வெட்டி அதன் உட்பகுதியை உண்பர். மிக இனிமையான உணவு.\nபனம்பழம்:- இதைச் சுட்டு, சற்றுப் புளிக்கரைசலில் தோய்த்துச் சாப்பிட்ட அருமையாக இருக்கும்.பசியும் அடங்கும்.\nபனங்காய்ப் பணியாரம்:- பிளிந்தெடுத்த பனம்பழக்களியுடன் கோதுமைமாச் சேர்த்து; கொதிக்குமெண்ணெயில் பாக்களவு உருண்டையாக விழுதாக விட்டுப் பொரித்தெடுப்பது. மிக வாசமாகவும்;சுவையாகவும் இடுக்கும், சுமார் ஒரு வாரகாலம் எந்த விசேச பாதுகாப்புமின்றி வைத்துச் சாப்பிடக் கூடியது.\nபனாட்டு:- பனம்பழக்களியை பாயில் ஊற்றி வெய்யிலில் காயவைத்து தட்டுத்தட்டாக வெட்டி மடித்து ஓலை உமலில் கட்டி; அடுப்படிப் பறனில் புகை படக்கட்டி வருடக்கணக்கில் பாதுகாத்து உண்ணும் பனம் பண்டம். தேங்காய்ச் சொட்டுடன் மிக அருமையாக இருக்கும்; இது காலை;மாலை உணவு.\nசீக்காய்:- இது பனங்காயின் செங்காய்ப்பதம்; இதன் தோலைச் சீவி,மஞ்சள்சதைப் பகுதியை அரிந்து தட்டுத்தட்டாக சப்பிச்சாறையுறிஞ்சி விட்டு, தும்பைத் துப்புவார்கள்; இனிமையான மாலை ஆசைத் தீனி.\nபூரான்:- பனம் விதை; கிழங்கிக்குப் பாத்தி போடும்போது; சில விதைகள்;முளைத்து வேர் பாத்தியூடு நிலத்துக்கோட முடியாதநிலையில்; அதன் பூரான் மாத்திரம் முதிர்ந்துவிடும். அதைப் பிளந்து உண்ண நல்ல சுவையாக இருக்கும்; கிழங்கான விதையுளுள்ள பூரான் இருக்கமாக இராது. இதைச் \"சிதவல்\" என்பர். நீர்த்தன்மையுடன்;சுவை குன்றியிருக்கும்.\nஒடியல்:- \"நாராய் நாராய் செங்கால் நாராய்-பனம்படு கிழங்கின் பிளந்தன்ன வாய்\" என உவமிக்கப்பட்ட இக்கிழங்கை இரண்டாகப் கிழித்துக் காயவைத்துப் பெறுவதைப் பச்சை ஒடியல் என்பர். இதை இடித்தரித்து எடுக்கும் மாவுடன் முருங்கையிலை,சேர்த்துப் பிட்டவிப்பர்; கறியுடனோ;சீனி,சக்கரையுடனோ சாப்பிடலாம்.அன்றைய தமிழரின் பாரம்பரிய உணவு. அடுத்து இம்ம��வில் தயாரிக்கப்படும் முக்கிய உணவு;கூழ் இதில் சைவக்கூழ்;மச்சக்கூழ் எனக் காச்சுவார்கள்.ஒடியல்மாவுடன் மிளகாய்;உள்ளி;மிளகு;புளி;உப்பு கரைசல்; உழுந்து,பயறு,மரவள்ளிக்கிழங்கு;பூசணிக்காய்;ஈரப்பலாக்காய்;\nபலாக்கொட்டை;அவரைக்காய்;முல்லை;முடுட்டை; முருங்கைக் கீரை சேர்த்துக் காச்சுவது; தேங்காய்ச் சொட்டும் சேர்த்தால் அருமையாக இருக்கும். இது ஒரு நிறையுணவு.இது சைவ உணவு உண்பவர்களுக்குத் தயாரிப்பது ,இத்துடன் மீன்;நண்டு,கணவாய்,இறால்;திருக்கை;மட்டிச்சதை சேர்த்துச் சமைப்பது;மச்சக்கூழ்; இது மச்சப் பிரியர்களுக்கு; முல்லைத்தீவு சார்ந்த இடங்களில் இத்துடன் மான்;மரை வத்தல் இறைச்சியும் சிறிது சேர்ப்பர்.இது தடிமலுக்கு நல்ல கைவைத்தியம்; இதன் சமையல் குறிப்பைப் பின்பு பார்ப்போம்.\nஅவித்த கிழங்கு:- இதை மாலை நேரச்சிற்றுண்டியாக உண்பர். கிழங்குக்காலத்தில் ;இலங்கையில் சகல இனமக்கள் வீட்டிலும் உண்பர்.\nகிழங்குத் துவையல்:- அவித்த நன்கு தும்பு வார்ந்த கிழங்குத்துண்டுகளுடன் பச்சைமிளகாய்,உள்ளி,மிளகு;உப்பு;வெங்காயம் சேர்த்திடித்து உருண்டையாக்குவது.;சேமிபாட்டை இலகுவாக்கி;சிறுவர்கூடச் சாப்பிடக் கூடியது. மிக வாசமாகவும்,சுவையானதும் கூட.\nபுழுக்கொடியல்:- அவித்த கிழங்கை நன்கு துப்புவார்ந்து இரண்டாகப் பிளந்து நன்கு காயவைப்பது. இதை நீலமாகவும், வட்டமாகவும் சீவிக் காயவிடுவதுமுண்டு. அதைச் சீவலொடியல் என்பர். மாலை நேரச்சாப்பாடு; தேங்காச்சொட்டுடன் பிரமாதமாகக் கூட்டுச் சேரும்.பலவருடம் பாதுகாக்கக் கூடியது. இதை இடித்த மாவுக்கு தேங்காய்த் துருவல்;சீனி;சர்க்கரை,பனங்கட்டி சேர்த்து ;சிறுவர்களுக்கும்;பல்லுச் சப்பமுடியாத முதியவர்களுக்கும் கொடுப்பர். அண்றைய நாட்களில் பல் பலமாக இதைக் கடித்துச் சாப்பிடுவதாகப் கேள்விப்பட்டேன்.\nஇவையே, நானறிந்த பனை உணவு வகைகள்; மேலும் இருக்கலாம். தெரிந்தோர் சொல்லவும்.அடுத்ததாக ஓலையின் பயனைப் பார்ப்போம்.\n23.07.06 விகடனில், கற்றதும் பெற்றதும் பகுதியில் சுஜாதா அவர்கள், தனக்குப்பிடித்த கவிதைப்பகுதியில் சோ. பத்மநாதன் அவர்களின் கவிதையைக்குறிப்பிட்டு, அதிலே கடகம் என்பதற்கு சும்மாடு என விளக்கமிட்டிருந்தார்கள். வாசிக்கும் போது; தவறைக் கண்டால்;அது பற்றிச் சரியாகத் தெரிந்தால் சம்பந்தப்பட்டவர்களுக்கு எழுதித் தெரிவிக்கும் பழக்கம் உண்டு.அன்றைய தபாற் சேவையில் நமது கடிதம்;கிடைப்பதற்குள் மாதங்கள் பல உருண்டுவிடுவதனால்;அவை மறக்கப் பட்டுவிடும்.இன்றோ மின்னஞ்சல் சுடச் சுடப் படித்த சூட்டுடனே எழுத முடிகிறது.அன்று பல எழுதியும் எதுவும் கணக்கிலெடுக்கப்படவில்லை.கலைமகளுக்குக் கூட எழுதினேன். வெளியிடவுமில்லை; வெளி விடவுமில்லை.கி வா ஜ - மிகப் பெரிய இடம். (அவ் விடயம் ஒரு நாள் பகிர்வேன்) சுஜாதா அவர்களுக்கு இது குறித்து தெரியப்படுத்தியதும், சிறியேனின் மடல் பார்த்து; ஏற்றுக் கொண்டு; பிரசுரித்துள்ளார். பிரசுரத்திதற்கு நன்றிஎன்னைப் போல் கற்றுக் குட்டிகளுக்கு இவ் அங்கீகாரம் மிகமகிழ்வாக இருக்கிறது.\nமரத்தால் ;உலோகத்தால் ;ஓலையால்; நார்களால்;பிரம்பால்,காகிதத்தால்;கண்ணாடியால்; செயர்க்கை இழைகளால் செய்யப்படும் கொள்கலங்களைப் பெட்டி எனும் புழக்கம் உண்டு. அந்த வகையில் இதை கடகப்பெட்டி என்பர்.சாதாரண பனையோலைப் பெட்டிக்கும்; கடகத்துக்கும் உள்ள வித்தியாசம் ; கடகத்துக்கு வெளிப்பாகம் நாரால் இழைத்து; வாய்ப்பகுதிக்கு பலத்திற்காக தடிப்பான நார் பொருத்தியிருப்பார்கள். பாவனையிலும் கடகத்தின் உபயோகத்துக்கு சாதாரண பெட்டியைப் பாவித்தால் பிய்ந்து விடும். உ+ம்- மண் ;கல் அள்ளுதல்.சும்மாடு என்பது பாரமான பொருட்களைத் தலையில் காவும் போது அழுத்தாமல் மென்மையாக இருக்க பழைய துணி;சால்வை; முந்தானைச் சேலை போன்றவற்றால் உடன் செய்வது. அதாவது வட்டவடிவமாக ஒரு சாண் விட்ட அளவில் சுருட்டுவது.இதை துணிவகையிலேயே செய்வர்.தலைக்கு மெத்தென இருப்பதே நோக்கமும் தேவையும்.பெண்கள் தண்ணீர்க் குடம் தலையில் சுமக்க உடன் தங்கள் முந்தானை நுனியைச் சுற்றிச் செய்வார்கள்.நீத்துப் பெட்டியென்பது; பனை யோலையில் கூம்பு வடிவில் இழைக்கப் படும் ஒரு வகைக் கருவி; இதன் பயன்பாடு பிட்டவித்தல்;மா அவித்தல்; பால் வடித்தல்.குட்டான் என்பது பனையோலையில் இழைக்கப்படும் ஒருவகைப் பொதியாக்கம்; இதன் பயன்பாடு பனங்கட்டியை(பனஞ்சர்க்கரை) பொதியாக்குவதே இதில் பல அளவு உண்டு.ஒரு அங்குல உயரம் அரை அங்குல வாய் விட்டம் மிகச் சிறியது.(எப்பிடித்தான் அதை இழைக்கிறார்களோ இதில் பல அளவு உண்டு.ஒரு அங்குல உயரம் அரை அங்குல வாய் விட்டம் மிகச் சிறியது.(எப்பிடித்தான் அதை இழைக்கிறார்களோ)இப்பொழுதும் அது ஆச்சரியமாகத் தான் இருக்கிறது.\n ஆசை அறுமின் - ஈசனோடாயினும் ஆசையறுமின்யாரை விட்டது ஆசை எல்லோரும் தமிழ்மணத்தில் சொந்த வீடு கட்டுறாங்களே நாமும் ஒன்று கட்டினால் என்ன நாமும் ஒன்று கட்டினால் என்ன என்ற ஆசையே இந்த \"என் பார்வையில்\" என்ற ஆசையே இந்த \"என் பார்வையில்\"எனக்கு எதையும் வாசிக்கப் பிடிக்கும்;அறிவு தெரிந்த நாளிலிருந்து;என் அறிவுக்கெட்டியவரை வாசிக்கிறேன். அவற்றில் எல்லோரைப் போலும் \"என் பார்வை\"யும் உண்டு.அதை உங்களுடன் பகிரவேஎனக்கு எதையும் வாசிக்கப் பிடிக்கும்;அறிவு தெரிந்த நாளிலிருந்து;என் அறிவுக்கெட்டியவரை வாசிக்கிறேன். அவற்றில் எல்லோரைப் போலும் \"என் பார்வை\"யும் உண்டு.அதை உங்களுடன் பகிரவே இந்த \"என் பார்வையில்\"இது எப்படி இந்த \"என் பார்வையில்\"இது எப்படி என வந்து தான் பாருங்களேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://juniorpolicenews.com/2020/07/23/24%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-31%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AA/", "date_download": "2021-10-19T12:00:45Z", "digest": "sha1:DKZ35JPO4DQTKOEKBWHULERXHPXKVAST", "length": 15403, "nlines": 202, "source_domain": "juniorpolicenews.com", "title": "24ம்தேதி முதல் 31ம்தேதி வரை பொன்னமராவதியில் பால் மற்றும் மருந்துக்கடை நீங்கலாக அனைத்துக்கடைகளும் அடைக்க வர்த்தகர் கழகம் முடிவு.. | Police News | 24/7 Tamil News", "raw_content": "\n10 மாவட்ட காவலர்களின் மனக்கவலைகளை போக்கும் விதமாக குறைகளை நேரில் கேட்டறிந்த தென்மண்டல காவல்துறை…\nதுப்பறியும் திறனை வெளிக்கொண்டுவர ஒரு அரிய வாய்ப்பு.\nசீர்காழியில் 3 லட்சம் மதிப்புள்ள 9 ஆயிரத்து 200 குட்கா பாக்கெட்டுகளை காவல்துறையினர் பறிமுதல்…\nதூத்துக்குடியில் என்கவுண்டரில் ரவுடி சுட்டுக்கொலை.\nதமிழகம் முழுவதும் 35 இடங்களில் ஹெல்மெட் மாட்டிக்கொண்டு இரவு நேரங்களில் பூட்டியிருந்த கடைகளில் கொள்ளையடித்த…\n10 மாவட்ட காவலர்களின் மனக்கவலைகளை போக்கும் விதமாக குறைகளை நேரில் கேட்டறிந்த தென்மண்டல காவல்துறை…\nதுப்பறியும் திறனை வெளிக்கொண்டுவர ஒரு அரிய வாய்ப்பு.\nசீர்காழியில் 3 லட்சம் மதிப்புள்ள 9 ஆயிரத்து 200 குட்கா பாக்கெட்டுகளை காவல்துறையினர் பறிமுதல்…\nதூத்துக்குடியில் என்கவுண்டரில் ரவுடி சுட்டுக்கொலை.\nதமிழகம் முழுவதும் 35 இடங்களில் ஹெல்மெட் மாட்டிக்கொண்டு இரவு நேரங்களில் பூட்டியிருந்த கடைகளில் கொள்ளையடித்த…\nசட்டவிரோதமாக 3350 லாட்டரி சீட்டுகள் விற்ற நபரை கைது செய்து, சிறப்பாக செயல்பட்ட புதுக்கோட்டை…\nபுதுவையில் அனைத்து காவல் நிலையங்களிலும் ரூ.2 கோடி செலவில் சிசிடிவி பொறுத்தப்படும் என்று உள்துறை…\nதமிழகத்தை சேர்ந்த காவல் அதிகாரிகள் 8 பேருக்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் சார்பில் விருது…\nமுன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது 400 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல்\nசென்னை மாநகர ஆயுதப்படைபிரிவில் பணிபுரியும் காவலர் ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில்2021 நடைபெரும் ஒலிம்பிக்போட்டிக்கு தகுதி…\nகஞ்சா வியாபாரியை கைது செய்வதில் அலட்சியம்: வாணியம்பாடி காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்.. வேலூர்…\nகட்டப்பஞ்சாயத்து; கைத்துப்பாக்கி; வழிப்பறி – குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்ட ரௌடியின் பின்னணி என்ன\nபுதுவையில் அனைத்து காவல் நிலையங்களிலும் ரூ.2 கோடி செலவில் சிசிடிவி பொறுத்தப்படும் என்று உள்துறை…\nகோவையில் 10 சட்டமன்ற உறுப்பினர்கள் மீது தொற்று நோய் பரவல் சட்டம் அரசு ஊழியரை…\nபுல் பவர் தந்த ஸ்டாலின்.. வேட்டையாடிய சைலேந்திரபாபு\nகாஸ்ட்லி பைக்கை திருடி வெளியூர்களில் விற்போம்” : சிறுவனின் வாக்குமூலத்தால் அதிர்ச்சியடைந்த போலிஸ்\nசென்னை மாநகர ஆயுதப்படைபிரிவில் பணிபுரியும் காவலர் ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில்2021 நடைபெரும் ஒலிம்பிக்போட்டிக்கு தகுதி…\nஆன்லைன் ரம்மியை தடை செய்ய அவசர சட்டம் பிறப்பித்து தமிழக அரசு ஆணை –…\nமனநலம் பாதித்த தாயுடன் வறுமையில் வசித்து வரும் அரசு அதிகாரி ஆக வேண்டும் என்ற…\nகடலாடி அருகே வாலிநோக்கம் கடலில் குளித்த இளைஞர் அலையில் சிக்கி மாயம் : தேடும்…\nHome COVID-19 24ம்தேதி முதல் 31ம்தேதி வரை பொன்னமராவதியில் பால் மற்றும் மருந்துக்கடை நீங்கலாக அனைத்துக்கடைகளும் அடைக்க வர்த்தகர்...\n24ம்தேதி முதல் 31ம்தேதி வரை பொன்னமராவதியில் பால் மற்றும் மருந்துக்கடை நீங்கலாக அனைத்துக்கடைகளும் அடைக்க வர்த்தகர் கழகம் முடிவு..\nநாளை 24ம்தேதி முதல் 31ம்தேதி வரை பொன்னமராவதியில் பால் மற்றும் மருந்துக்கடை நீங்கலாக அனைத்துக்கடைகளும் அடைக்க வர்த்தகர் கழகம் முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஅதற்கான தீர்மான கடிதத்தை வர்த்தகர்கழக தலைவர் பழனியப்பன்..செயலர் முகமதுஅப்துல்லா.பொருளாளர் தேனப்பன் ஆகியோர் காவல் ஆ��்வாளர் கருணாகரன் அவர்களிடம் வழங்கினார்கள்\nPrevious articleநடிகை வனிதாவை சமூக வலைதளங்களில் விமர்சித்து வந்த சூர்யா தேவி என்பவர் சென்னையில் கைது\nNext articleசமயபுரம் காவல்நிலையம் முன்பு வாலிபர் குத்தி கொலை..\n10 மாவட்ட காவலர்களின் மனக்கவலைகளை போக்கும் விதமாக குறைகளை நேரில் கேட்டறிந்த தென்மண்டல காவல்துறை தலைவர் அவர்கள்.\nதுப்பறியும் திறனை வெளிக்கொண்டுவர ஒரு அரிய வாய்ப்பு.\nசீர்காழியில் 3 லட்சம் மதிப்புள்ள 9 ஆயிரத்து 200 குட்கா பாக்கெட்டுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.\n10 மாவட்ட காவலர்களின் மனக்கவலைகளை போக்கும் விதமாக குறைகளை நேரில் கேட்டறிந்த தென்மண்டல காவல்துறை தலைவர் அவர்கள்.\nதுப்பறியும் திறனை வெளிக்கொண்டுவர ஒரு அரிய வாய்ப்பு.\nசீர்காழியில் 3 லட்சம் மதிப்புள்ள 9 ஆயிரத்து 200 குட்கா பாக்கெட்டுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.\nதூத்துக்குடியில் என்கவுண்டரில் ரவுடி சுட்டுக்கொலை.\nதமிழகம் முழுவதும் 35 இடங்களில் ஹெல்மெட் மாட்டிக்கொண்டு இரவு நேரங்களில் பூட்டியிருந்த கடைகளில் கொள்ளையடித்த கொள்ளையன் மயிலாடுதுறையில் கைது\n10 மாவட்ட காவலர்களின் மனக்கவலைகளை போக்கும் விதமாக குறைகளை நேரில் கேட்டறிந்த தென்மண்டல காவல்துறை...\nதுப்பறியும் திறனை வெளிக்கொண்டுவர ஒரு அரிய வாய்ப்பு.\nசீர்காழியில் 3 லட்சம் மதிப்புள்ள 9 ஆயிரத்து 200 குட்கா பாக்கெட்டுகளை காவல்துறையினர் பறிமுதல்...\nகரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு பாதுகாப்பு கேட்டு காதல் கணவருடன் பெண் தஞ்சம்..\nதமிழக டிஜிபி புதிய உத்தரவு.. சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் எதிரொலி தொடர்ந்து Non-Bailable...\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் பெண் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பதிலாக அவரது கணவரோ, உறவினர்களோ தலையிடக்கூடாதுதடை செய்யப்பட்டுள்ளது..ஆட்சியர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://juniorpolicenews.com/2020/09/02/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-10-19T13:02:48Z", "digest": "sha1:MK77X7C43SBSEWOPXEGREPV3NE5S7X47", "length": 15390, "nlines": 200, "source_domain": "juniorpolicenews.com", "title": "சங்கரன்கோவில் பகுதியில் இருசக்கர வாகனத்தை திருடிய நபர் கைது | Police News | 24/7 Tamil News", "raw_content": "\n10 மாவட்ட காவலர்களின் மனக்கவலைகளை போக்கும் விதமாக குறைகளை நேரில் கேட்டறிந்த தென்மண்டல காவல்து��ை…\nதுப்பறியும் திறனை வெளிக்கொண்டுவர ஒரு அரிய வாய்ப்பு.\nசீர்காழியில் 3 லட்சம் மதிப்புள்ள 9 ஆயிரத்து 200 குட்கா பாக்கெட்டுகளை காவல்துறையினர் பறிமுதல்…\nதூத்துக்குடியில் என்கவுண்டரில் ரவுடி சுட்டுக்கொலை.\nதமிழகம் முழுவதும் 35 இடங்களில் ஹெல்மெட் மாட்டிக்கொண்டு இரவு நேரங்களில் பூட்டியிருந்த கடைகளில் கொள்ளையடித்த…\n10 மாவட்ட காவலர்களின் மனக்கவலைகளை போக்கும் விதமாக குறைகளை நேரில் கேட்டறிந்த தென்மண்டல காவல்துறை…\nதுப்பறியும் திறனை வெளிக்கொண்டுவர ஒரு அரிய வாய்ப்பு.\nசீர்காழியில் 3 லட்சம் மதிப்புள்ள 9 ஆயிரத்து 200 குட்கா பாக்கெட்டுகளை காவல்துறையினர் பறிமுதல்…\nதூத்துக்குடியில் என்கவுண்டரில் ரவுடி சுட்டுக்கொலை.\nதமிழகம் முழுவதும் 35 இடங்களில் ஹெல்மெட் மாட்டிக்கொண்டு இரவு நேரங்களில் பூட்டியிருந்த கடைகளில் கொள்ளையடித்த…\nசட்டவிரோதமாக 3350 லாட்டரி சீட்டுகள் விற்ற நபரை கைது செய்து, சிறப்பாக செயல்பட்ட புதுக்கோட்டை…\nபுதுவையில் அனைத்து காவல் நிலையங்களிலும் ரூ.2 கோடி செலவில் சிசிடிவி பொறுத்தப்படும் என்று உள்துறை…\nதமிழகத்தை சேர்ந்த காவல் அதிகாரிகள் 8 பேருக்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் சார்பில் விருது…\nமுன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது 400 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல்\nசென்னை மாநகர ஆயுதப்படைபிரிவில் பணிபுரியும் காவலர் ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில்2021 நடைபெரும் ஒலிம்பிக்போட்டிக்கு தகுதி…\nகஞ்சா வியாபாரியை கைது செய்வதில் அலட்சியம்: வாணியம்பாடி காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்.. வேலூர்…\nகட்டப்பஞ்சாயத்து; கைத்துப்பாக்கி; வழிப்பறி – குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்ட ரௌடியின் பின்னணி என்ன\nபுதுவையில் அனைத்து காவல் நிலையங்களிலும் ரூ.2 கோடி செலவில் சிசிடிவி பொறுத்தப்படும் என்று உள்துறை…\nகோவையில் 10 சட்டமன்ற உறுப்பினர்கள் மீது தொற்று நோய் பரவல் சட்டம் அரசு ஊழியரை…\nபுல் பவர் தந்த ஸ்டாலின்.. வேட்டையாடிய சைலேந்திரபாபு\nகாஸ்ட்லி பைக்கை திருடி வெளியூர்களில் விற்போம்” : சிறுவனின் வாக்குமூலத்தால் அதிர்ச்சியடைந்த போலிஸ்\nசென்னை மாநகர ஆயுதப்படைபிரிவில் பணிபுரியும் காவலர் ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில்2021 நடைபெரும் ஒலிம்பிக்போட்டிக்கு தகுதி…\nஆன்லைன் ரம்மியை தடை செய்ய அவசர சட்டம் ���ிறப்பித்து தமிழக அரசு ஆணை –…\nமனநலம் பாதித்த தாயுடன் வறுமையில் வசித்து வரும் அரசு அதிகாரி ஆக வேண்டும் என்ற…\nகடலாடி அருகே வாலிநோக்கம் கடலில் குளித்த இளைஞர் அலையில் சிக்கி மாயம் : தேடும்…\nHome தமிழ்நாடு சங்கரன்கோவில் பகுதியில் இருசக்கர வாகனத்தை திருடிய நபர் கைது\nசங்கரன்கோவில் பகுதியில் இருசக்கர வாகனத்தை திருடிய நபர் கைது\nதென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வரும் சண்முகராஜ் என்பவர் தனது தோட்டத்தின் அருகே நிறுத்தி வைத்திருந்த இரு சக்கர வாகனத்தை காணவில்லை என்று காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட உதவி ஆய்வாளர் திருமதி அருள்மொழி அவர்கள் இருசக்கர வாகனத்தை திருடிய மீன்துள்ளி பகுதியைச் சேர்ந்த மாரியப்பன்(20) s/o ஆறுமுகம் என்ற நபரை வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.\nPrevious articleநாமக்கல் மாவட்டத்தில் 13 இடங்களில் முகக்கவசம் அணியாமல் வந்த சுமார் 220 பேருக்கு கொரோனா விழிப்புணர்வு அறிவுரைகள் வழங்கப்பட்டது.\nNext articleKV நல்லூரில் உரிய அனுமதியின்றி சட்டவிரோதமாக ஜல்லி கற்களை திருடிய 2 நபர்கள் கைது\n10 மாவட்ட காவலர்களின் மனக்கவலைகளை போக்கும் விதமாக குறைகளை நேரில் கேட்டறிந்த தென்மண்டல காவல்துறை தலைவர் அவர்கள்.\nதுப்பறியும் திறனை வெளிக்கொண்டுவர ஒரு அரிய வாய்ப்பு.\nசீர்காழியில் 3 லட்சம் மதிப்புள்ள 9 ஆயிரத்து 200 குட்கா பாக்கெட்டுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.\n10 மாவட்ட காவலர்களின் மனக்கவலைகளை போக்கும் விதமாக குறைகளை நேரில் கேட்டறிந்த தென்மண்டல காவல்துறை தலைவர் அவர்கள்.\nதுப்பறியும் திறனை வெளிக்கொண்டுவர ஒரு அரிய வாய்ப்பு.\nசீர்காழியில் 3 லட்சம் மதிப்புள்ள 9 ஆயிரத்து 200 குட்கா பாக்கெட்டுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.\nதூத்துக்குடியில் என்கவுண்டரில் ரவுடி சுட்டுக்கொலை.\nதமிழகம் முழுவதும் 35 இடங்களில் ஹெல்மெட் மாட்டிக்கொண்டு இரவு நேரங்களில் பூட்டியிருந்த கடைகளில் கொள்ளையடித்த கொள்ளையன் மயிலாடுதுறையில் கைது\n10 மாவட்ட காவலர்களின் மனக்கவலைகளை போக்கும் விதமாக குறைகளை நேரில் கேட்டறிந்த தென்மண்டல காவல்துறை...\nதுப்பறியும் திறனை வெளிக்கொண்டுவர ஒரு அரிய வாய்ப்பு.\nசீர்காழியில் 3 லட்சம் மதிப்புள்ள 9 ஆயிரத்து 200 குட்கா பாக்கெட்டுகளை காவல்துறையினர் பறிமுதல்...\nகரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு பாதுகாப்பு கேட்டு காதல் கணவருடன் பெண் தஞ்சம்..\nதமிழக டிஜிபி புதிய உத்தரவு.. சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் எதிரொலி தொடர்ந்து Non-Bailable...\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் பெண் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பதிலாக அவரது கணவரோ, உறவினர்களோ தலையிடக்கூடாதுதடை செய்யப்பட்டுள்ளது..ஆட்சியர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sitharsastrology.com/blog/About-chidambaram-Temple-in-Tamil", "date_download": "2021-10-19T13:29:48Z", "digest": "sha1:TFJZZRM6XOA32OKAYWVKDSFO7ST2HOHZ", "length": 15357, "nlines": 93, "source_domain": "sitharsastrology.com", "title": "About chidambaram Temple in Tamil|Sithars Astrology Blog", "raw_content": "\nஆனால் 2010 ம் வருடம் படி பூமத்திய ரேகையின் மையைப் பகுதி சிறிது சிறிதாக நகர்ந்து இந்தியாவிற்கும் இலகைக்கும் நடுவே உள்ளது.\nபஞ்ச பூத கோயில்களில் ஆகாயத்தை குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம், காற்றை குறிக்கும் காலஹஸ்தி ஆலயம், நிலத்தை குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயமும் சரியாக ஒரே நேர்கோட்டில் அதாவது சரியாக 79 Degrees, 41 minutes East தீர்க்க ரேகையில் (LONGITUTE ) அமைந்துள்ளது,\nஇன்று google map உதவியுடன் நாம் வானத்தின் மேல் இருந்து பார்ப்பதை போன்று பார்த்தால் மட்டுமே விளங்கும் இந்த துல்லியம் அன்றைக்கு கணிக்கப்பட்டது ஒரு பொறியியல்,புவியியல் மற்றும் வானவியியலின் உச்சகட்ட அதிசயம்.\nமனித உடலை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் கோயிலில் 9 நுழைவு வாயில்களும், மனித உடலில் இருக்கும் 9 வாயில்களை குறிகின்றது.\nவிமானத்தின் மேல் இருக்கும் பொற் கூரை 21,600 தங்கத்தகடுகளை கொண்டு வேயப்பட்டுள்ளது , இது மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 21600 தடவைகள் சுவாசிக்கிறான் என்பதை குறிக்கின்றது\nவிளக்கமாகச் சொல்ல வேண்டுமானால் ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசிக்கிறான் (மேலை நாட்டுக் கணக்குப் படி ஒரு நிமிடத்திற்கு 18 முறை). இந்தக் கணக்குப் படி ஒரு மணிக்கு 900 முறை. ஒரு நாளைக்கு (15*60*24 = 21,600) 21,600 முறை சுவாசிக்கிறான்.\nஇந்த 21,600 தகடுகளை வேய 72,000 தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்த 72,000 என்ற எண்ணிக்கை மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளை குறிக்கின்றது.இதில் கண்ணுக்குத் தெரியாத உடலின் பல பாகங்களுக்கு சக்தியை கொண்டு சேர்ப்பவையும் அடங்கும்.\nஇக் கோவிலில் 64 விதமான மரத்தாலான வேல���ப்பாடுகளைப் பார்க்கலாம். ஆங்கிலத்தில் “beam” என்று சொல்லப் படும் இவை 64 கலைகளைக் குறிக்கும்\nதிருமந்திரத்தில் “திருமூலர்” மானுடராக்கை வடிவு சிவலிங்கம் மானுடராக்கை வடிவு சிதம்பரம் மானுடராக்கை வடிவு சதாசிவம் மானுடராக்கை வடிவு திருக்கூத்தே என்று கூறுகிறார், அதாவது ” மனிதன் வடிவில் சிவலிங்கம், அதுவே சிதம்பரம், அதுவே சதாசிவம், அதுவே அவரின் நடனம்”. என்ற பொருளைக் குறிகின்றது.\n“பொன்னம்பலம்” சற்று இடது புறமாக அமைக்கப்பட்டுள் ளது, இது நம் உடலில் இதயத்தை குறிப்பதாகும்.இந்த இடத்தை அடைய ஐந்து படிகளை ஏற வேண்டும், இந்த படிகளை “பஞ்சாட்சர படி” என்று அழைக்கப்படுகின்றது, அதாவது “சி,வா,ய,ந,ம” என்ற ஐந்து எழுத்தே அது. “கனகசபை” பிற கோயில்களில் இருப்பதை போன்று நேரான வழியாக இல்லாமல் பக்கவாட்டில் வருகின்றது. இந்த கனக சபை தாங்க 4 தூண்கள் உள்ளன,இது 4 வேதங்களை குறிக்கின்றது,\nபொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன, இவை 28 ஆகமங்களையும், சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன, இந்த 28 தூண்களும் 64 + 64 மேற் பலகைகளை கொண்டுள்ளது (BEAM ), இது 64 கலைகளை குறிக்கின்றது, இதன் குறுக்கில் செல்லும் பல பலகைகள்(CROSS BEAMS) , மனித உடலில் ஓடும் பல ரத்த நாணங்களை குறிக்கின்றது.\nபொற் கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்கள், 9 வகையான சக்தியை குறிக்கின்றது.அர்த்த மண்டபத்தில் உள்ள 6 தூண்கள், 6 சாஸ்திரங்களையும்,அர்த்த மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள 18 தூண்கள், 18 புராணங்களையும் குறிக்கின்றது.\nசிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டம் என்ற கோலம் “cosmic dance” என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கபடுகின்றது.\nசிதம்பரம் நடராஜரின் கால் கட்டை விரல் தரையில் வைக்கப் பட்டிருக்கும் இடமே புவியின் மையப் புள்ளியாக அமைந்துள்ளது என்றும் கூறுவதுண்டு\nசித்தர்கள் அறிவியலை உணர்வு பூரணமாக நம்பியதால் அதனை தெய்வீகத்துடன் இணைத்து நமக்கு கொடுத்தனர். இதுவே இவர்கள் எந்த அளவிற்கு விஞ்ஞான அறிவு பெற்றிருந்தனர் என்பதற்கு சான்று.\nசிதம்பரம் நடராஜர் கோயில் அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகிய சமயக் குரவர் நால்வராலும் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இத்தலம் “சிதம்பரம் தில்லை நடராஜர் கோயில்” என்றும் “சிதம்பரம் தில்லை கூத்தன் கோயில்” என்றும் “சிதம்பரம் கோயில்” என்றும் அழைக்கப்படுகிறது. இத்தலம் சைவ இலக்கியங்களில் கோயில் என்ற பெயராலேயே அழைக்கப்பெறுகிறது. அத்துடன் பூலோக கைலாசம் என்றும் கைலாயம் என்றும் அறியப்பெறுகிறது.\nசிதம்பரம் நடராஜர் கோயில் தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்திலுள்ள சிதம்பரம் எனும் ஊரில் அமைந்துள்ளது. இவ்வூரானது தில்லை என்று பழங்காலத்தில் வழங்கப்பட்டுள்ளது. இத்தலத்தின் மூலவர் திருமூலநாதர், தாயார் உமையாம்பிகை (சமஸ்கிருதம்:சிவகாமசுந்தரி). இத்தலத்தின் தலவிருட்சமாக தில்லை மரமும், தீர்த்தமாக சிவகங்கை, பரமானந்த கூபம், வியாக்கிரபாத தீர்த்தம், அனந்த தீர்த்தம், நாகச்சேரி, பிரம தீர்த்தம், சிவப்பிரியை, புலிமேடு, குய்ய தீர்த்தம், திருப்பாற்கடல் தீர்த்தங்களும் உள்ளன.\nசிதம்பரம் நடராஜர் கோயில் உள்ளே இருந்து (4) நான்கு கோபுரங்களையும் (உள்ளே உள்ள ) குளத்திற்கு அருகில் ஒரு கல்தூண் இருக்கும் அங்கே நின்று பார்த்தால் மட்டுமே கோபுர தரிசனம் கிடைக்கும் வேறு எந்தப் பகுதியில் காண இயலாது\nசிதம்பரம் நடராஜர் கோயில் தலமானது பஞ்சபூதத் தலங்களில் ஆகாய தலமாகும். மனிதரின் உடம்பும் கோயில் என்பதனை விளக்கும் வகையில் சிதம்பரம் நடராசர் கோயில் அமைந்துள்ளது. மனித உடலானது அன்னமயம், பிராணமயம், மனோமயம், விஞ்ஞானமயம், ஆனந்தமயம் என்னும் ஐந்து சுற்றுக்களைக் (கோசங்கள் என்னும் Layers) கொண்டது. அதற்கு ஈடாக சிதம்பரம் நடராசர் கோவிலில் ஐந்து திருச்சுற்றுகள் என்னும் பிரகாரங்கள் உள்ளன.\nபேரம்பலம், சிற்றம்பலம், கனகசபை, நிருத்தசபை, இராஜசபை ஆகிய ஐந்து சபைகள் சிதம்பரம் நடராஜர் கோயிலில் அமைந்துள்ளன. பேரம்பலம் என்பது தேவசபை என்றும் அறியப்பெறுகிறது. இந்துகளின் கோவில்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு அதிசயத்தை தன்னகத்தே கொண்டுள்ளது. இந்து மதம் எவ்வளவு பழமையானது புனிதமானது ரகசியமானது என்பதற்கு இதுவே சாட்சி. இது போன்று என்னற்ற அதியங்கள் நிறைந்தது நமது ஆன்மீகம் இவற்றை இன்றய இளைய தலைமுறைக்கு கொண்டு சென்று நமது கலாச்சார பொக்கிசங்களை பாதுகாக்க வேண்டும்.\nசிதம்பரம் நடராஜர் கோயில் அமைந்திருக்கும் இடமானது உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையைப் பகுதி என்று கூறப்படுகின்றது. ( Centre Point of World’s Magnetic Equator ).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/apprehension", "date_download": "2021-10-19T12:27:45Z", "digest": "sha1:OCJOFWUY5L24WDHVQ5MKMYQIQNFLHC5C", "length": 5021, "nlines": 110, "source_domain": "ta.wiktionary.org", "title": "apprehension - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஅச்ச உணர்வு; அச்சம்; ஆளைப்பிடித்தல்; கைப்பற்றல்; சிறை செயதல்; பயம்\nமருத்துவம். அச்ச உணர்வு உணர்வு; உணர்வு மிகைப்பு; எதிர்பார்ப்பு அச்ச உணர்வு\nஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +\nஆங்கிலம்-கொடை-2010-த. இ. க. கலைச்சொல்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 30 சனவரி 2019, 04:58 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://timestampnews.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%95/458/", "date_download": "2021-10-19T12:20:33Z", "digest": "sha1:O3CZQ6TH6Y23GL25PH72KTX7SEDE6C3S", "length": 5928, "nlines": 87, "source_domain": "timestampnews.com", "title": "குடும்ப வறுமை காரணமாக மகள்களுடன் தற்க்கொலைக்கு முயன்ற தாய் – Timestamp News", "raw_content": "\nகுடும்ப வறுமை காரணமாக மகள்களுடன் தற்க்கொலைக்கு முயன்ற தாய்\nதேனி அருகே குடும்ப வறுமையின் காரணமாக தனது மூன்று மகள்களுக்கும் விஷம்கலந்த உணவை கொடுத்து, தாயும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம், சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் போடி ஜக்க நாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி பால்பாண்டி என்பவர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் உடல் நலக்குறைவால் காலமானார். இதனால், அவரது மனைவி லட்சுமி, மூன்று பெண் குழந்தைகளுடன் குடும்பத்தை நடத்த மிகவும் சிறமப்பட்டுள்ளார் . ஏலக்காய் பிரித்தெடுக்கும் வேலைக்கு சென்று குறைந்த வருமானத்தில் மகள்களை படிக்க வைத்த அவர், அன்றாட உணவிற்கே மிகவும் கஷ்ட்டப்பட்டு வந்துள்ளார். வீட்டின் வாடகையைகூட செலுத்த முடியாததால் மனமுடைந்த லட்சுமி, தனது மகள்களுடன் விஷம்கலந்த உணவை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அதில் அனுசியா, ஐஸ்வர்யா ஆகிய இரு குழந்தைகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். கடைசி மகள் அக்க்ஷயாவும், தாய் லட்சுமியும் உயிருக்கு ஆபத்தான நிலையில் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nPrevious Previous post: எஸ்.ஏ.சந்திரசேகர் மீதான பண மோசடி புகாருக்கு மறுப்பு தெரிவித்த க்ரீன் சிக்னல் நிறுவனம்……\nNext Next post: தொடரும் பாலியல் தொல்லைகள் – கைதான அரசு பேருந்து நடத்துனர்\nதூத்துக்குடி மாவட்ட காவல்துறையில் உள்ள நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள்- மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் ஆய்வு.\nதமிழக மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நல்வாழ்வு சங்கத்தின் சார்பில் கொரோனா பணிகள்\nதூத்துக்குடி 17வது வார்டு பொதுமக்கள் சார்பில் தெரு மின் விளக்கு, சாலை வசதி மற்றும் குடிநீர் குழாய் அமைத்திட வேண்டி கோரிக்கை மனு\nதிருச்செந்தூா் கோயில் கும்பாபிஷேகம்: முதல்வா் விரைவில் அறிவிப்பாா்\nதூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அங்கன்வாடி மைய கட்டிடம் – அமைச்சர் கீதாஜீவன் அடிக்கல் நாட்டினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gunathamizh.com/2018/04/blog-post_24.html?showComment=1525621133716", "date_download": "2021-10-19T12:07:45Z", "digest": "sha1:PJXAWXVMFIXLCSCSTXA6B3X4EJH2CJG5", "length": 45671, "nlines": 137, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: சொல்லேருழவரான வில்லேருழவர்கள்", "raw_content": "\nதிருக்குறள் ஒரு வரி உரை\nகுடிமைப் பணித்தேர்வு - தமிழ் - UPSC - Tamil Optional\nவேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.\nசொல்லை ஏராகக் கொண்டு உழுது, மக்கள் மனங்களை ஆள்வோர் புலவர்கள், வில்லை ஏராகக் கொண்டு உழுது பகைவர் நிலங்களையும் ஆள்வோர் புரவலர்கள். பாடல் பாடுவதை மட்டுமே இயல்பாகக்கொண்ட புலவர்களோடு, நாட்டை ஆளும் புரவலர்களும் பாடல் பாடிய பெருமை உடையன சங்கப்பாடல்கள். புறநானூற்றில் இடம்பெற்ற பாடல்களுள் புரவலர்களால் பாடப்பட்ட பாடல்களின் சிறப்பியல்புகளை ஆராய்வது இக்கட்டுரையின் நோக்கமாகிறது.\nவில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க\nசொல்லேர் உழவர் பகை (திருக்குறள் -872) என்பார் வள்ளுவர். அதாவது வில்லை ஏராகக் கொண்ட உழவராகிய வீரருடன் பகைகொண்டபோதிலும், சொல்லை ஏராகக் க���ண்ட உழவராகிய அறிஞருடன் பகைகொள்ளக்கூடாது என்பது இக்குறளின் கருத்தாகும். ‘நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே’ (புறநா - 312) என, வேந்தரின் கடனைப் பொன்முடியார் குறிப்பிடுகிறார். வில்லை ஆளும் உழவரான வேந்தர்கள், சொல்லையும் நயம்பட ஆட்சிசெய்தனர் என்பதற்கான சாற்பகரும் பாடல்களுள் புறநானூற்றுப் பாடல்கள் குறிப்பிடத்தக்கன.\nஒல்லையூர் தந்த பூதப் பாண்டியன் வஞ்சினம் மொழியும்போது, நான் பகைவரை வெல்வேன். இல்லாவிட்டால் என் தேவியை நீங்குவேன், கொடுங்கோலாட்சியான் என இகழப்படுவேன், எம் பாண்டியர் குலப் பெருமையை நீக்கி சிற்றரசனாகப் பிறந்து வன்புலங்களைக் காக்கும் சிறுமைநிலையை அடைவேன் என்று மொழிகிறான். (புறநா – 71) இப்பாடலுள்,\nமாவனும், மன் எயில் ஆந்தையும், உரைசால்\nஅந்துவஞ் சாத்தனும், ஆதன் அழிசியும்\nவெஞ்சின இயக்கனும், உளப்படப் பிறரும்\nகண்போல் நண்பின் கேளிரொடு கலந்த\nஇன் களி மகிழ் நகை இழுக்கி யான் ஒன்றோ (புறநா – 71 -12-16)\nஎன்ற பாடலடடிகளில், மையல் என்னும் ஊருக்குத் தலைவனாகிய மாவனும், நிலையான எயில் என்னும் ஊருக்குத் தலைவனாகிய ஆந்தையும், புகழ் நிறைந்த அந்துவன் சாத்தனும், ஆதன் அழிசியும், வெம்மையான சினமுடைய இயக்கனும் உட்படப் பிறரும் என்னுடன் நட்புடன் கலந்தவர்கள். அவர்களுடன் இனிய பெருமிதம் கூடிய மகிழ்ச்சியான நகைப்பினைத் தவறவிட்டவன் ஆவேன் என உரைக்கிறார். வஞ்சின மொழிதலில் கூட நட்பின் பெருமை பேசும் திறன் நோக்கத்தக்கதாகவுள்ளது.\nபாண்டியன் தலையாலங்கானத்து செறுவென்ற நெடுஞ்செழியன் தம் பாடலில், தாம் பகைவரை வெல்லாவிட்டால், என்னைக் கொடுங்கோலன் என உலகம் தூற்றட்டும். என்று வஞ்சினம் மொழிகிறான். இப்பாடலில்,\n‘ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி\nமாங்குடி மருதன் தலைவன் ஆக\nஉலகமொடு நிலைஇய பலர் புகழ் சிறப்பின்\nபுலவர் பாடாது வரைக என் நிலவரை’ (புறநா - 72)\nஎன்ற பாடலடிகள் குறிப்பிடத்தக்கன. வேந்தனின் பார்வையில் தன் மானத்தின் எல்லையாக புலர்களின் பாடலைக் கருதியமை அறியமுடிகிறது.\nசோழன் நலங்கிள்ளி தம் வஞ்சின மொழிதலில், மெல்ல வந்து என்னைப் பணிந்து நின்றால் என் அரசாட்சியை மட்டுமல்ல என் உயிரையும் தந்துவிடுவேன். மாறாக என்னை எதிர்த்து வந்தால் பலரும் அறியுமாறு உறங்கும் புலியைக் காலால் இடறி எழுப்பிய பார்வையற்றவன் போலப் பிழைப்பது அரிது. ��ானையிடம் சிக்கிய மூங்கிலைப்போல பகைவரின் ஊர் சென்ற அவர் வருந்துமாறு போர் செய்வேன். அவ்வாறு போரிடாவிட்டால் பொதுமகளிர் தம்முடன் என் மாலை துவள்வதாகுக என்று என்று உரைக்கிறான். இப்பாடலில்,\nதுஞ்சு புலி இடறிய சிதடன் போல\nஉய்ந்தனர் பெயர்தலோ அரிதே மைந்துடைக்\nகழை தின் யானைக் கால் அகப்பட்ட\nவன் திணி நீள் முளை போ (புறநா-73 -7-10)\nஎன்னும் அடிகள் இவ்வேந்தனின் புலமைக்குச் சான்று பகரும் அடிகளாகத் திகழ்கின்றன.\nசேரமான் கணைக்கால் இரும்பொறை, உயிரைவிட மானம் பெரிது என்று கூறும் பாடலில், வெற்றி பெற்ற மன்னர்கள் தோல்வியுற்றவர்களை நடத்தும் வழக்கத்தையும், மானமுள்ள வேந்தர்களின் மனநிலையையும் புலப்படுத்துகிறார். இப்பாடலில்,\nகுழவி இறப்பினும், ஊன்தடி பிறப்பினும்,\nஆள் அன்று என்று வாளின் தப்பார் (புறநா -74 – 1-2)\nஎன்ற பாடலடிகள் தமிழர் வீரத்தின் அடையாளமாகத் திகழ்கின்றன.\nகடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி தம் பாடலில், இந்திரனுக்குரிய அமிழ்தம் கிடைத்தாலும், அது இனிமையானது என்று தனித்து உண்ண மாட்டர்கள், யாரையும் வெறுக்க மாட்டார்கள், சோம்பலின்றிச் செயல்படுவார்கள், பிறர் அஞ்சுவதற்குத் தாமும் அஞ்சுவார்கள், புகழ் வரும் என்றால் தம் உயிரையும் கொடுப்பார்கள், பழிவரும் என்றால் உலகம் முழுவதும் கிடைப்பதானாலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள், மனம் தளர மாட்டார்கள், இத்தகைய சிறப்புடையவர்களாகித் தமக்காக உழைக்காமல் பிறர்க்காக உழைப்பவர்கள் இருப்பதால்தான் இவ்வுலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது என்கிறார்.( புறநா -182 ) சான்றோரின் சான்றான்மையை வியந்து பாடும் இப்பாடலில்,\n‘புகழ் எனின் உயிரும் கொடுக்குவர் பழி எனின்\nஉலகுடன் பெறினும் கொள்ளலர் ( புறநா – 182-5-6) புகழ் உயிரைவிட உயர்ந்தது என்ற சிறந்த கருத்து பேசப்படுகிறது\nபாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் கல்வி பற்றி கூறும் பாடலில், தம் ஆசிரியருக்கு ஒரு துன்பம் வந்தபோது உடன் சென்று அதனைத் தீர்ப்பதற்குத் துணைநிற்க வேண்டும். மிகுதியான பொருளை அவருக்குக் கொடுத்தாவது கல்வி கற்றல் வேண்டும். அவரை வழிபடுவதற்கு வெறுப்படையக் கூடாது. இவ்வாறெல்லாம் செய்து ஒருவன் எப்படியாவது கல்வி கற்கவேண்டும். கல்வி கற்றல் அவ்வளவு நன்மை தரக்கூடியதாகும்.மேலும். ஒரு தாய் வயிற்றில் பிறந்த இருவருள்ளும் அந்தத் தாய் ���ூத்தவனை விட கல்வி கற்றிருந்தால் இளையவன் மீது பற்றுடையவளாக இருப்பாள்.அதுமட்டுமின்றி. ஒரு குடியில் பிறந்த பலருள்ளும் மூத்தவனை வருக என்று அழைக்காமல் அவருள்ளே அறிவுடையோனையே வருக என்று அழைத்து அரசனும் அவன் காட்டும் வழியில் நடப்பான். வேற்றுமை தெரிந்த கீழ்க்குல மக்களுள் ஒருவன் கற்று வல்லவனாயின் மேற்குலத்துள் ஒருவனும் இவன் கீழ்க்குலத்தான் என்று எண்ணாமல் கல்வியின் பொருட்டு அவனிடம் சென்று வழிபட்டு வேண்டி நிற்பான். அதனால் எவ்வகையில் பார்த்தாலும் கல்வி சிறப்புடையதாகும் என்ற கருத்து எடுத்தியம்பப்படுகிறது. (புறநா – 183) இப்பாடலில்,\nஉற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்\nபிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே (புறநா – 183 -1-2) அடிகள்\nஆசிரியரை மதிக்கும் மாண்பு பேசப்படுகிறது.\nபலசுவைமிக்க உணவுகளைப் படைத்துப் பலரோடும் அமர்ந்து உண்ணும் உடைமை எனப்படும் பெரும்செல்வம் பெற்றவராயினும் என்ன மெல்ல மெல்ல, குறு குறு என நடந்து சென்று, தம் அழகிய சிறிய கையை நீட்டி, உண்கலத்து நெய்யுடைச் சோற்றில் இட்டும் அக்கையாலேயே, பெற்றோரைக் கட்டிக் கொண்டும், வாயால் கவ்வியும், கையால் துழாவியும், தன் உடல் முழுவதும் சிதறியும், அக்குறும்புகளால் பெற்றோரை மயக்கி இன்பம் கொடுக்கும் புதல்வர்கள் இல்லாதவர்களது வாழ்நாள் பயனற்றதே என்று. பாண்டியன் அறிவுடைநம்பி குழந்தைச் செல்வம் பற்றிக் தம் பாடலில் நயம்பட எடுத்துரைக்கிறார். (புறநா – 188) இப்பாடலில்,\nகுறுகுறு நடந்து, சிறு கை நீட்டி,\nஇட்டும் தொட்டும், கவ்வியும் துழந்தும்\nநெய்யுடை அடிசில் மெய்ப்பட விதிர்த்தும்\nபயக்குறை இல்லைத் தாம் வாழும்நாளே (புறம் : 188)\nஎன்ற குழந்தைச் செல்வத்தின் ஒவ்வொரு அசைவுகளையும் அழகுபட மொழிந்துள்ளார்.\nவிளைந்து முற்றிய பின் அறுவடைக்கு முன் உள்ள சிறிய வயலில் இருந்து கதிராகிய உணவைக் கொண்டுசென்று எலி தன் வலைக்குள் மிகுதியாகச் சேர்த்து வைக்கும். அவ்வெலியைப் போல சிறுமுயற்சியும் சுயநலமும் கொண்டவர்களிடம் நட்புக் கொள்வதைவிட, வீரம் செறிந்த புலி முதல்நாள் வேட்டையாடிய ஆண்பன்றி இடப்பக்கம் விழுந்தால் அதனை உண்ணாது அடுத்தநாள் காத்திருந்து பெருமலைப்பக்கத்தில் வீரம் நிறைந்த ஆண்யானையை வலப்பக்கமாக வீழ்த்தி உண்ணும். அத்தகைய புலிபோன்ற பெருமுயற்சியும், கொள்கையும் கொண்டவர்களிடம் நட்புக் கொள்வதே சிறந்தது என்கிறார் சோழன் நல்லுருத்திரன். (புறநா – 190) நான் மகிழ்ந்து செல்வநிலையில் இருந்தபோதெல்லாம் அவன் வராவிட்டாலும் இப்போது நான் துன்பமடைந்திருக்கும் போது எனக்காக வருவான் என கோப்பெருஞ்சோழன் தனக்கும் பிசிராந்தையாருக்குமான நட்பு குறித்து குறிப்பிடுகிறார்.( புறநா - 215 ) மேலும், தன் பெயரைக் கேட்டால் பிறர்க்குக் கூறும்பொழுது என்பெயர் சோழன் என்று என் பெயரைத் தன்பெயராகக் கூறும் நெருங்கிய அன்புரிமை கொண்டவன் என உரைக்கிறார். (புறநா – 216)\nகோப்பெருஞ்சோழன் தன் மகன்கள் தன்மீது கொண்ட பகையால் மனம் வாடி தன் நாட்டை அவர்களிடமே கொடுத்து மானம் போனதாகக் கருதி வடக்கிருந்து உயிர்துறக்க முடிவுசெய்தார். அப்போது அவர் பாடியதாகக்கிடைக்கும் பாடலில், அறம் செய்வதையே நம் வாழ்க்கையின் இலக்காகக் கொள்வோம். நல்வினை செய்வோமா செய்யவேண்டாமா என்ற சிந்தனை கொண்டோர் நெஞ்சத் துணிவில்லாதவர்களாவர். யானை வேட்டுவன் தவறாது யானையை வேட்டையாடி மீள்வதும் உண்டு. சிறு பறவைகளை வேட்டையாட விரும்பிச் செல்வோர் அவற்றைப் பெறாது வெறுங்கையுடனே வருவதும் உண்டு. சாதிக்கப் பிறந்தவர்கள் நாம் வெறும் வயிற்றுக்கு வாழ்ந்து மடிந்து போவதா அடுத்தவர்களைப் பார்த்து வாழும் வாழ்க்கையை முதலில் தூக்கி எறிந்து இலக்கோடு வாழப்பழக வேண்டும் அறவழியே வாழ்ந்தால் சொர்க்கம் என்னும் மறு உலகம் கிடைக்கப் பெறும். பிறப்பு என்னும் நோயிலிருந்து மீண்டும் பிறவா நிலை அடையலாம். இவையிரண்டும் கிடைக்காவிட்டாலும் இமையத்தின் உயரத்துக்கு நம் புகழைப் பெற்று குற்றமில்லா உடலுடன் வாழ்ந்து மறையலாம் என்கிறார். இப்பாடலில், வாழ்க்கையில் அறம் செய்ய வேண்டும். சொர்ககம், நரகம், என்னும் மறு உலகம் மற்றும் மறுபிறப்பு ஆகியன உண்டு என்றும் இல்லை என்றும் எண்ணிய அக்கால நம்பிக்கை புலப்படுகிறது, மானம் போனால் வடக்கிருந்து உயிர்நீப்பர் எண்ணும் அக்கால மரபு சுட்டப்படுகிறது, அறவழியே வாழ்வதே வாழ்வின் இலக்கு என்னும் வாழ்வியல் அறம் உணர்த்தப்படுகிறது.\nகள்ளிச் செடிகள் முளைத்த களர் நிலமான சுடுகாட்டின் வெளிப்பகுதியில் மூட்டப்பட்ட தீயில் என் மனைவி மேலுலகம் அடைந்தாள். அவ்வாறு அவள் சென்றபின்பும் நான் இன்னும் உயிர் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். என் உயிரைப் போக்கிக்கொள்ளும் வலிமையற்று இருக்கின்ற என் துன்பத்தின் அளவு எவ்வளவோ இதன் பண்பு எத்தகையதோ என மனம் வாடி உரைப்பதாக, கையறுநிலைப்பாடலை, பெருங்கோப்பெண்டு இறந்தபோது சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை பாடியுள்ளார் (புறநா – 245)\nபுறநானூற்றில் வேந்தர்கள் பாடிய பாடல்களுள் வஞ்சின மொழிதல் குறித்த பாடல்களாக மூன்று பாடல்கள் கிடைக்கின்றன. தான் வெற்றி பெறுவேன் என்றும், வெற்றிபெறாவிட்டால் தன் நட்பை இழப்பேன், என்றும், புலவர் அவை பாடாது போகட்டும் என்றும், பொது மகளிருடன் இருந்தேன் என இவ்வுலகம் பழி தூற்றட்டும் என்றும் வேந்தர்கள் கூறும் கருத்துக்களின் வழியாக தன்மானத்தின் எல்லை குறித்த சங்ககாலப் பார்வை புலனாகிறது.\nசேரமான் கணைக்கால் இரும்பொறையின் பாடல் உயிரைவிட மானம் பெரிது என்று கூறுகிறது. கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி பாடல், புகழுக்காக உயிரையும் விடுவர் என்றும் உரைக்கிறது. இக் கருத்துக்களின் வழியாக மானம், புகழ் இரண்டையும் உயிரைவிட பெரிதாக தமிழர் போற்றினர் என்ற உண்மையும் வெளிப்படுகிறது.\nபாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனின் கல்வி குறித்த பாடலில் சங்ககாலக் கல்வியின் மேன்மை உணர்த்தப்படுகிறது. ஆசிரியரை மதிக்கும் மாண்பும், அறிவின் இயல்பையும் நயம்பட நுவலப்படுகிறது.\nபாண்டியன் அறிவுடைநம்பி குழந்தைச் செல்வம் பற்றிய பாடல், செல்வங்களுள் சிறந்த செல்வம் குழந்தைச் செல்வமே என்றுரைத்து. அச்செல்வம் இல்லாத வாழ்க்கை பயனற்றது என்று மொழிகிறது.\nசோழன் நல்லுருத்திரனின் பாடலில், சிறுமுயற்சியும் சுயநலமும் கொண்ட எலியைப் போன்றவர்களின் நட்பைவிட, பெருமுயற்சியும், கொள்கையும் கொண்ட புலியைப் போன்றவர்களின் நட்பே சிறந்தது என்று காட்டுகிறது.\nகோப்பெருஞ்சோழனின் பாடலில் நட்பின் இலக்கணம் பேசப்படுகிறது. உண்மையான நட்புக்கு சந்திப்பு கூட தேவையில்லை என்று உணர்த்தி, இன்பத்தில் பங்குபெறாவிட்டாலும், துன்பத்தைப் பகிர்ந்துகொள்வதே உண்மையான நட்பு என்று பாடம் கற்பிக்கப்படுகிறது.\nகோப்பெருஞ்சோழனின் பாடல் வழியாக, அறவழியே வாழ்வதே வாழ்வின் இலக்கு என்னும் வாழ்வியல் அறம் உணர்த்தப்படுகிறது.\nகணவனுக்காக உடன்கட்டை ஏறும் மனைவியைப் பற்றி பல பாடல்கள் இருந்தாலும், தன் மனைவியைப் பிரிந்த ஒரு கணவனின் மன வல��யைக் கையறுநிலையாக வெளிப்படுத்துகிறது சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை பாடல்.\nபுலவர்களின் பார்வையில் புரவலர்கள் பற்றி பல பாடல்கள் இருந்தாலும், புரவலர்கள் பார்வையில் தம் ஆட்சி குறித்தும், உலகம் குறித்தும், மானம், கல்வி, புகழ் குறித்தும் குறிப்பிடப்பட்ட கருத்துக்கள் சிந்திக்கத்தக்கனவாக உள்ளன.\nசங்ககாலத்தில் சொல்லேருழவர்கள் போற்றப்பட்டமைக்குக் காரணம் பல வில்லேருழவர்கள், நல்ல சொல்லேருழவர்களாக இருந்தனர் என்பதை புறநானூற்றில் இடம்பெறும் புரவலர்களின் பாடல்களின் வழியாக அறிந்துகொள்ளமுடிகிறது.\nLabels: தமிழாய்வுக் கட்டுரைகள், புறநானூறு\nஇந்திய குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - 2 - (UPSC EXAM TAMIL)\nபுறநானூறு - 182 -200 பாடல்களுக்கான விளக்கங்கள்\nகுறுந்தொகை 1 - 25 பாடல்களுக்கான விளக்கங்கள்\nதிருக்குறள் (இறைமாட்சி முதல் அவையஞ்சாமை வரை) விளக்கங்கள் - தமிழ் - 2 - (UPSC EXAM TAMIL)\nதிருக்குறள் (387) அன்று இதே நாளில் (346) பழமொழி (323) இன்று (319) பொன்மொழிகள் (233) அனுபவம் (211) அன்றும் இன்றும் (157) சிந்தனைகள் (153) திருக்குறள் ஒரு வரி உரை (134) நகைச்சுவை (114) குறுந்தொகை (108) இணையதள தொழில்நுட்பம் (107) புறநானூறு (96) வேடிக்கை மனிதர்கள் (89) உளவியல் (77) வாழ்வியல் நுட்பங்கள் (63) ஒரு நொடி சிந்திக்க (51) நற்றிணை (51) கவிதை (48) கல்வி (45) குடிமைப் பணித் தேர்வு - தமிழ் (45) தமிழ் அறிஞர்கள் (44) குறுந்தகவல்கள் (43) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (40) சங்க இலக்கியத்தில் உவமை (38) இயற்கை (37) கதை (37) அகத்துறைகள் (36) தமிழின் சிறப்பு (36) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) மாணாக்கர் நகைச்சுவை (33) விழிப்புணர்வு (33) தமிழாய்வுக் கட்டுரைகள் (30) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (27) சமூகம் (24) சங்கத்தமிழர் அறிவியல் (23) அகநானூறு (22) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (22) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) மாணவர் படைப்பு (21) மனதில் நின்ற நினைவுகள் (20) கலித்தொகை (19) படித்ததில் பிடித்தது (19) எதிர்பாராத பதில்கள் (18) காசியானந்தன் நறுக்குகள் (17) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) தமிழ் இலக்கிய வரலாறு (16) சிறப்பு இடுகை (15) தமிழர் பண்பாடு (15) திருப்புமுனை (15) சங்க இலக்கியம் (14) கலீல் சிப்ரான். (13) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவ�� (13) தன்னம்பிக்கை (13) புள்ளிவிவரங்கள் (13) பேச்சுக்கலை (13) காணொளி (12) புறத்துறைகள் (11) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (10) தமிழ்ச்சொல் அறிவோம் (10) மனிதம் (9) கிண்டில் மின்னூல் (8) வலைப்பதிவு நுட்பங்கள் (8) வைரமுத்து (8) சங்க கால நம்பிக்கைகள் (7) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) ஐங்குறுநூறு (6) கலை (6) செய்யுள் விளக்கம் (6) தென்கச்சியார் (6) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) தொல்காப்பியம் (5) பதிவா் சங்கமம் (5) மாமனிதர்கள் (5) காசியானந்தன் கதைகள் (4) பெரும்பாணாற்றுப்படை (4) கவிதை விளக்கம் (3) சென் கதைகள் (3) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) பட்டினப்பாலை (2) பன்னாட்டுக் கருத்தரங்கம் (2) புதிர் (2) குறிஞ்சிப் பாட்டு (1) சங்க இலக்கியச் சிறுகதைகள் (1) சங்கச் சாரல் (1) சிறுபாணாற்றுப்படை (1) சொல்புதிது (1) தமிழ் இலக்கிய விளக்கம் (1) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்மணம் விருது 2009 (1) திரைப்படங்கள் (1) நட்பு (1) நெடுநல்வாடை (1) பதிற்றுப்பத்து (1) பிள்ளைத்தமிழ் (1) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மலைபடுகடாம் (1) மாறிப்போன பழமொழிகள் (1) முத்தொள்ளாயிரம் (1) யாப்பு (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1) வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) (1) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) (1)\nதேடுபொறிகளும் செயற்கை நுண்ணறிவுத் தமிழும்\nமனிதர்களின் அறிவை இயற்கையான அறிவு , செயற்கையான அறிவு என வகைப்படுத்த இயலும். குலவித்தை கற்றுப் பாதி , கல்லாமற் பாதி என் ற பழமொழி கூட இக்கருத...\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இர...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 ...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nஅன்பான தமிழ் உறவுகளே.. எனது திருமணத்துக்காக நான் வடிவமைத்த திருமண அழைப்பிதழை என் வலைப்பக்கத்தில் வெளியிட்டிருந்தேன். அதனைப் பலநாட்கள் ச...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\nபக்தி இலக்கியங்களின் தோற்றமும் வளர்ச்சியும்\nவணிகமொழி ஆங்கிலம் என்றால் , சட்டத்தின் மொழி இலத்தீன் என்றால் , இசையின் மொழி கிரேக்கம் என்றால் , தத்துவத்தின் மொழி ஜெர்மன் , தூதின் மொழ...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nபேச்சுக்கலையில் மிகவும் நுட்பமான பணி நன்றி நவில்தல் ஆகும். தலைவர், சிறப்பு விருந்தினர், அவையோர், ஊடகத்துறை சார்ந்தோர், இடவசதி அளித்தோர...\nசடாயு உயிர் நீத்த படலம் விளக்கம்\nமாரீச மானால் வஞ்சித்து சீதையை இராவணன் எடுத்துச் சென்றபொழுது கழுகரசனாகிய சடாயு அவனைத் தடுத்துப் போரிட்டு வலிமையைச் சிதைத்து , இறுதியி...\nசிலப்பதிகாரம் - அரங்கேற்று காதை விளக்கம்\n1. மாதவியின் நாட்டியப் பயிற்சி் தெய்வ மால்வரைத் திருமுனி அருள எய்திய சாபத்து இந்திர சிறுவனொடு தலைக்கோல் தானத்துச் சாபம் நீங்கிய மலைப...\nமுனைவா் இரா.குணசீலன் தமிழ்உதவிப் பேராசிரியர் பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி கோயம்புத்தூர் -14\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF,_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88_(%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D)&action=history", "date_download": "2021-10-19T11:21:07Z", "digest": "sha1:YC354QIR65WZPVQKRFDLAJPFHYMKHE5C", "length": 3851, "nlines": 35, "source_domain": "www.noolaham.org", "title": "திருத்த வரலாறு - \"செல்வராணி, கிருஷ்ணபிள்ளை (நினைவுமலர்)\" - நூலகம்", "raw_content": "\nதிருத்த வரலாறு - \"செல்வராணி, கிருஷ்ணபிள்ளை (நினைவுமலர்)\"\nவரலாற்றில் தேடவும் ஆண்டு உட்பட முந்திய: மாதம் உட்பட முந்திய: அனைத்து மாதங்களும் ஜனவரி பெப்ரவரி மார்ச் ஏப்ரல் மே சூன் சூலை ஆகத்து செப்டம்பர் அக்டோபர் நவம்பர் டிசம்பர் குறிச்சொல் வடிப்பான்:\nவேறுபாட்டைக் காண வேண்டிய இரண்டு பத்திப்புக்களை தெரிவுச் செய்து கீழுள்ள பொத்தானை அழுத்தவும்.\nகுறியீட்டு விளக்கம்: (நடப்பு) = நடைமுறையிலுள்ள பதிப்புடனான வேறுபாடு, (கடைசி) = முந்திய பதிப்புடனான வேறுபாடு, சி = சிறு தொகுப்பு\n(நடப்பு | முந்திய) 06:14, 26 மார்ச் 2021‎ Janatha.p (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (972 எண்ணுன்மிகள்) (+205)‎\n(நடப்பு | முந்திய) 23:47, 24 ஆகத்து 2020‎ Meuriy (ப���ச்சு | பங்களிப்புகள்)‎ சி . . (767 எண்ணுன்மிகள்) (0)‎ . . (Meuriy, நினைவு மலர்: கிருஷ்ணபிள்ளை செல்வராணி 2008 பக்கத்தை செல்வராணி, கிருஷ்ணபிள்ளை (நினைவுமலர்) எ...)\n(நடப்பு | முந்திய) 00:35, 29 சூலை 2020‎ Janatha (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (767 எண்ணுன்மிகள்) (+148)‎\n(நடப்பு | முந்திய) 04:24, 24 சூலை 2020‎ Sangeetha (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (619 எண்ணுன்மிகள்) (+619)‎ . . (\"{{நினைவுமலர்| நூலக எண் = 768...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/idhayane-song-lyrics/", "date_download": "2021-10-19T11:52:39Z", "digest": "sha1:LV7RJB562O6QLJ4CZK63WNE7KB5E2MLE", "length": 5903, "nlines": 162, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Idhayane Song Lyrics", "raw_content": "\nபாடகி : நீட்டி மோகன்\nபாடகர் : அனிருத் ரவிச்சந்தர்\nஇசையமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர்\nபெண் : இதயனே என்னை\nபெண் : வானம் விரிகிறதே\nநாம் ஏன் கோண மாற்று\nபெண் : பொய்கள் நீங்குதே\nபெண் : பூமி மாறுதே\nஆண் : { உன் போலே\nமண் மேலே ஓர் எல்லை\nஉன் மேலே நீ வந்தனைகள்\nஎன் காதே } (2)\nபெண் : ம்ம் இதயனே என்னை\nபெண் : எதிரும் புதிரும்\nஎன்று நான் உதிர்ந்து வீழும்\nபோதும் சிறகு சிறகு தந்து\nஆண் : முதல் முறை\nமுதல் முறை எனது நெஞ்சம்\nகண்டு உண்மை கண்டு கண்கள்\nஆண் : { உன் போலே\nமண் மேலே ஓர் எல்லை\nஉன் மேலே நீ வந்தனைகள்\nஎன் காதே } (2)\nபெண் : ம்ம் இதயனே என்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/22589--2", "date_download": "2021-10-19T13:14:07Z", "digest": "sha1:KMLBYFZTZPFMQXSZGUSPWDYI75YLTVWH", "length": 23429, "nlines": 303, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 15 August 2012 - கடற்கரைச் சாலையில் கொண்டாட்டப் பயணம்! | E.C.R - Vikatan", "raw_content": "\nஎன் விகடன் - சென்னை\nஎன் ஊர்: நடிகை ரேகா\nமணலோடு மறந்து போன வரலாறு\nகடற்கரைச் சாலையில் கொண்டாட்டப் பயணம்\nசுயமரியாதையை விட்டுக் கொடுக்க முடியல\nகேம்பஸ் - ஆல்ஃபா கலை மற்றும் அறிவியல் கல்லூரி\nமுயல் போல பொண்ணு ஒண்ணு\nஎன் விகடன் - மதுரை\nவலையோசை - அவர்கள் உண்மைகள்\nஎன் ஊர் - உலகில் சிறந்த பாதை \nமுட்ட முட்ட வலி நீக்கும் கல் \nஎன் விகடன் - புதுச்சேரி\nஇப்போ பஞ்சர்... எதிர்காலத்தில் டீச்சர்\nசண்டே ஆனா சயின்ஸ் ஸ்கூல்\n’’மதிய உணவை மாணவர்களே சமைப்போம்\nகேம்பஸ் - இந்த வாரம் ஊரிசி கல்லூரி, வேலூர்\nஎன் விகடன் - கோவை\nஎன் விகடன் கோவை: அட்டைப் படம்\nபொரி கடலை வித் எம்.ஜி.ஆர்\nகேம்பஸ் இந்த வாரம்: ‘தி காவேரி இன்ஜினீயரிங் இன்ஸ்டிட்யூஷன்ஸ்’- மேச்சேரி\nநாளி க���டு சிந்திய ரத்தம்\nபாம்பு... முதலை... மற்றும் சிங்கராஜ்\nமாற்றி யோசித்த மாற்றுத் திறனாளிகள்\nஎன் விகடன் - திருச்சி\nஎன் ஊர் : திருக்குவளை\nடீக்கடை தங்கவேல் டு திருக்குறள் தங்கவேல்\nவலையோசை : அதிரடி ஹாஜா\nசவுத் சலம்ப... நார்த் நடுங்க\nநானே கேள்வி... நானே பதில்\nஉஷார்... இது மீண்டும் நிகழலாம்\nவிகடன் மேடை - வாலி\nசானியா சொதப்ப... சாய்னா கை கொடுக்க...\nதலையங்கம் - 'நாம'க்கல் பூதம்\n\" என் அரசியல் இனி ஆரம்பம்\n\"ராஜபக்ஷேவைக்கூட நம்புவோம்... கருணாநிதியை நம்ப மாட்டோம்\nசினிமா விமர்சனம் : மதுபான கடை\n\"அந்த நாலு பேர் போதும்\nவட்டியும் முதலும் - 53\nWWW - வருங்காலத் தொழில்நுட்பம்\nதலையங்கம் - பெரிய பொறுப்பு\nஜிஆர்டி ஜுவல்லர்ஸ் - மூன்று `டைம்ஸ் பிசினஸ் விருதுகள்' வென்று சாதனை\nமியாட் மருத்துவமனை - விபத்துக் காயங்கள் மேலாண்மையில் \"பொன்னான நேரம்\" என்றால் என்ன\nசொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா - கிராமத்தானின் பயணம் 14\nநம் வாழ்வில் ஒருமுறையாவது பார்க்க வேண்டிய இரண்டு தமிழ்ப்படங்கள்\nமழைக்கால மின்கசிவிலிருந்து வீட்டை பாதுகாப்பது எப்படி\nதேவிஸ்ரீ பிரசாத்தை பார்த்து அடுத்த இளையராஜான்னு கமல் சொன்னதுக்கு காரணம் இருக்கு\nவணிகத் தேவைக்காக நாட்டு விலங்குகள் படும் துயர் - தெளிவாக விளக்கும் புத்தகம்\nஅமைதியோ அமைதி ஓமான், ஆச்சர்யப்பட வைத்த ஜோர்டான் - கிராமத்தானின் பயணம் 13\nபாச மலர் 2.0 - வாசகி ஷேரிங்ஸ்\nஜிஆர்டி ஜுவல்லர்ஸ் - மூன்று `டைம்ஸ் பிசினஸ் விருதுகள்' வென்று சாதனை\nமியாட் மருத்துவமனை - விபத்துக் காயங்கள் மேலாண்மையில் \"பொன்னான நேரம்\" என்றால் என்ன\nசொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா - கிராமத்தானின் பயணம் 14\nநம் வாழ்வில் ஒருமுறையாவது பார்க்க வேண்டிய இரண்டு தமிழ்ப்படங்கள்\nமழைக்கால மின்கசிவிலிருந்து வீட்டை பாதுகாப்பது எப்படி\nதேவிஸ்ரீ பிரசாத்தை பார்த்து அடுத்த இளையராஜான்னு கமல் சொன்னதுக்கு காரணம் இருக்கு\nவணிகத் தேவைக்காக நாட்டு விலங்குகள் படும் துயர் - தெளிவாக விளக்கும் புத்தகம்\nஅமைதியோ அமைதி ஓமான், ஆச்சர்யப்பட வைத்த ஜோர்டான் - கிராமத்தானின் பயணம் 13\nபாச மலர் 2.0 - வாசகி ஷேரிங்ஸ்\nகடற்கரைச் சாலையில் கொண்டாட்டப் பயணம்\nஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்\nகடற்கரைச் சாலையில் கொண்டாட்டப் பயணம்\nசெய்திகளை உடனுக்குடன் ���ெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்\nகிழக்குக் கடற்கரைச் சாலை. சென்னையில் உள்ள டீன் ஏஜர் களின் முதல் என்டர்டெய்ன்மென்ட் சாய்ஸ். மூச்சு முட்டும் போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பித்து, அடையாறைத் தாண்டினால் திருவான்மியூரில் ஆரம்பித்து சிதம்பரம் வரை நீளும் இந்தச் சாலையில், எத்தனைக் கொண் டாட்டம்.\nஉண்மையில் இங்கு சனிக் கிழமை மதியத்தில் இருந்தே துவங்குகின்றன சந்தோஷ நிமிடங்கள். காற்றுக்குக் கூட இடைவெளிவிடாமல் காத லனைக் கட்டிப் பிடித்துக்கொண்டு செல்லும் பெண்களுடன் விர்ர்... விர்ர் என்று பறக்கின்றன பைக்குகள். மணல் வெளியில் சமைத்துச் சாப்பிட ஸ்டவ், தண்ணீர் கேன் மற்றும் அசைவப் பொருட்களுடன் நிழலான சவுக்குத் தோப்பில் இளைப்பாறிக்கொண்டு இருக்கிறது ஒரு குடும்பம்.\nஇன்னொரு பக்கம் கார் மற்றும் பைக்குகளில் பீரைப் பீய்ச்சி அடித்தபடி உற்சாகத் திருவிழா நடத்திக்கொண்டு இருக்கிறது இளசுகளின் கூட்டம். இவர்களைக் குறிப்பிட்ட இடத்தில் வசமாக மடக்குகிறார்கள் காக்கிகள். சில நிமி டங்கள்தான்... என்ன டீலிங்கோ தெரியவில்லை. வாய் நிறையச் சிரிப்புடன் பாக்கெட்டில் எதையோ திணித்துக்கொண்டே காக்கிகளே இவர்களைக் கை அசைத்து அனுப்பிவைக்கி றார்கள்.\nகடவுள் நம்பிக்கை இருப்பவர்கள் இங்கு உள்ள மருந்தீஸ்வரர் கோயிலுக்குச் சென்று சாமியைப் பார்த்துக் கன்னத் தில் போட்டுக்கொண்டு கிளம்புவது நலம்.\nஅடுத்து, ஈஞ்சம்பாக்கத்தில் 'பிரார்த்தனா’ டிரைவ்-இன் தியேட்டர்.இந்தியா வின் முதல் திறந்தவெளித் திரை அரங் கம் என்ற பெயர் பெற்றது. 'பிரார்த் தனா’வுக்குப் படம் பார்க்கத் தனியாகச் செல்வது வீண். காதலி அல்லது கேர்ள் ஃப்ரெண்ட்... அட்லீஸ்ட் நல்ல நண்பன் உடன் இருப்பது நன்று. அருகில் கோரமண்டல் கலைக் கிராமம் உள்ளது. சிறந்த கலைஞர்களின் சிற்ப படைப்புகள், கைவினைப் பொருட்கள் பார் வைக்கும் விற்பனைக்கும் வைக்கப்பட்டு உள்ளன.\nஅடுத்து, வி.ஜி.பி. கோல்டன் பீச். பர்ஸ் பலமாக இருப்பவர்கள் என்ஜாய் செய்யலாம். அடுத்து கானாத்தூரில் 'மாயாஜால்’ இருக்கிறது. 14 தியேட்டர்கள் பிரமாண்டமாக வரவேற்கின்றன. ஜோடி இல்லாமல் போனால்தான் சந்தேகமாகப் பார்ப்பார்கள். உள்ளேயே உணவகங்களும்உண்டு. இன்னும் கொஞ்சம் தூரம் பயணம் செய��தால் முட்டுக்காடு. இங்கு எம்.ஜி.எம். பீச் ரிசார்ட் மற்றும் டி.ஸி வேர்ல்டு உல்லாசப் பொழுதுபோக்கு பூங்கா உள்ளன. ராட்சத ராட்டினம், சுழல் சக்கர ராட்டினம் என்று நம்மைப் பிரமிக்க வைக்கும் சாகஸங்கள் இங்கே.\nஈ.சி.ஆர்.ரோட்டின் ஹைலைட்டே முட்டுக் காடு படகுத் துறைதான். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் 28 மோட்டார் படகுகள், 10 துடுப்பு படகுகள், ஒன்பது பெடல் படகுகள் உள்ளன. கரையோரம் பசுமையான மரங்களையும் அதில் பூத்துக்கிடக்கும் மஞ்சள் கொன்றை மலர்களையும் 'கியாங்...’ என்று கூவிக்கொண்டே பறக்கும் கடற் பறவைகளையும் ரசித்துக்கொண்டே படகில் பயணம் செல்வது சுகமான அனுபவம். காலை 9 மணி முதல் மாலை 6 மணிவரை மட்டுமே அனுமதி.\nகோவளம் பீச் கேவலமாக இருக்கிறது. வட நெம்மேலியில் முதலைப் பண்ணையையும் பாம்புப் பண்ணையும் தவறவிட வேண்டாம். நுழைவுக் கட்டணமும் குறைவுதான். அடுத்து, சூளேரிக்காட்டுக் குப்பத்தில் டால்ஃபின் சிட்டி பொழுதுபோக்கு பூங்காவில் கடல் சீல்களைக் கண்டு களித்துக் கடந்தால், சாலவான்குப்பத்தில் பல்லவர் காலத்தில் அமைக்கப்பட்ட திறந்தவெளி அரங்கத்தையும் புலிக் குகையையும் பார்க்கலாம். சுனாமியின்போது இங்கு பூமிக்குள் புதைத்து இருந்த பழங்கால முருகன் கோயில் வெளியே வந்த ஆச்சர்யமும் உள்ளது. அடுத்து மாமல்லபுரம். கடற்கரைக் கோயில், ஐந்து ரதம் சிற்பம் என இங்கு பார்த்துக் களிக்க ஏராளம் உள்ளன.\nஇங்கு இருந்து 37 கி.மீ. பயணம் செய்தால் முதலியார் குப்பம் படகுத் துறை தென்படுகிறது. துடுப்பு படகு, மோட்டார் படகு இருந்தாலும் இங்கு வாட்டர் ஸ்கூட்டர்தான் பிரபலம். படகில் பயணித்துவிட்டு அருகில் கடப்பாக்கத்தில் இருக்கும் ஆலம்பாறைக் கோட்டையை அவசி யம் பார்த்துவிட்டு வரவும். அப்போதுதான் கிழக்குக் கடற்கரைச் சாலைப் பயணம் முழுமை அடையும்\nதெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism\nஇதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://neervai.com/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5-14/", "date_download": "2021-10-19T10:57:19Z", "digest": "sha1:X5JMBZVSUIVEQLHK5T5TAC4UYMC3PELW", "length": 9763, "nlines": 77, "source_domain": "neervai.com", "title": "நீர்வேலி கந்தசுவாமி கோவில் மகா கும்பாபிஷேக புனருத்தாரண கணக்கறிக்கை 2016 – 2018 தை – Neervai Inayam", "raw_content": "\nநீர்வேலி அத்தியார் இந்துக் கல்லுரி\nநீர்வேலி கந்தசுவாமி கோயில் / புகைப்படங்கள்\nநீர்வேலி கந்தசுவாமி கோவில் மகா கும்பாபிஷேக புனருத்தாரண கணக்கறிக்கை 2016 – 2018 தை\nநீர்வேலி கந்தசுவாமி கோயிலில் நடைபெற்ற ஸ்கந்த மஹாத்மிய மஹா ஹோமமும் ஸ்ஹந்த சப்தசதி நூல் வெளியீடும்\nஇலங்கையில் முதல் தடவையாக நீர்வேலி கந்தசுவாமி கோயிலில் நடைபெறவுள்ள ஸ்கந்த மஹாத்மிய மஹா ஹோமமும் ஸ்ஹந்த சப்தசதி நூல் வெளியீடும்\nநீர்வேலி கந்தசுவாமி கோயில் தைப்பூச நிகழ்வுகள் (மணவாளக்கோல விழா – 2020)\nPrevious Article வீரபத்திரர் கோவிலில் இடம்பெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு\nNext Article நீர்வேலி தெற்கு இந்து தமிழ் கலவன் பாடசாலை விளையாட்டுப்போட்டி\nவலிகாமம் கிழக்குப் பகுதியில் பல பாகங்களிலுமிருந்து பாய்ந்து வருகின்ற மழை நீரைத் தன்னுள்ளடக்கி அதனைத் தனக்கு நீர் நிலையாலான வேலியாக்கி தன் கிழக் கெல்லையாக அமைத்துக் கொண்டதால் ‘நீர்வேலி’ என்னும் பெயரைக் கொண்டதே இந்த நீர்வேலிக் கிராமம்.\nதுறை சார்ந்த செய்திகள் Select Category Foreign Assosiations (28) அத்தியார் இந்துக் கல்லூரி (44) அபிவிருத்தி (11) ஒல்லை வைரவர் கோவில் (2) கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயம் (60) காமாட்சி அம்பாள் கோவில் (1) காளி கோயில் (1) சேவைகள் (3) நீர்வேலி அரசகேசரிப் பிள்ளையார் (71) நீர்வேலி இ.த.க பாடசாலை (4) நீர்வேலி கந்தசுவாமி கோயில் (135) நீர்வேலி சி. சி. த. க பாடசாலை (5) நீர்வேலி செல்லக் கதிர்காம கோவில் (16) நீர்வேலி தெற்கு பேச்சி அம்மன் (7) நீர்வேலி றோ.க.த.க பாடசாலை (26) நீர்வேலி வீரபத்திரர் ஆலயம் (39) நீர்வேலி ஸ்ரீ கணேஷா முன்பள்ளி (22) நீர்வேலி ஸ்ரீ செல்லக்கதிர்காம சுவாமி அறநெறி பாடசாலை (3) நூல் வெளியீடு (15) பாராட்டு விழா (15) பாலர் பகல் விடுதி (13) புகைப்படங்கள் (175) மாதர் சங்கம் (5) வாய்கால் தரவை விநாயகர் கோவில் (22) வாய்க்காற்தரவைப்பிள்ளையார் (3) விளையாட்டு (2) வீதி திருத்தப்பணிகள் (2)\nவாய்க்கால் தரவை பிள்ளையார் பற்றிய செய்திகள்\nஅரசகேசரிப் பிள்ளையார் பற்றிய செய்திகள்\nநீர்வைக் கந்தன் பற்றிய செய்திகள்\nசெல்லக் கதிர்காம கோயில் பற்றிய செய்திகள்\nமூத்த விநாயகரின் வரம் தரும் அருளோசை\nஅத்தியார் இந்துக் கல்லூரி பற்றிய செய்திகள்\nகரந்தன் இராமுப்பிள்ளை வித்த��யாலயம் பற்றிய செய்திகள்\nநீர்வேலி றோ.க.த.க பாடசாலை பற்றிய செய்திகள்\nநீர்வேலி சீ .சீ.த.க பாடசாலை பற்றிய செய்திகள்\nநீர்வேலி தெற்கு பாலர் பகல்விடுதி\nநீர்வேலி நலன்புரிச் சங்கம் கனடா\nதுறை சார்ந்த செய்திகள் Select Category Foreign Assosiations (28) அத்தியார் இந்துக் கல்லூரி (44) அபிவிருத்தி (11) ஒல்லை வைரவர் கோவில் (2) கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயம் (60) காமாட்சி அம்பாள் கோவில் (1) காளி கோயில் (1) சேவைகள் (3) நீர்வேலி அரசகேசரிப் பிள்ளையார் (71) நீர்வேலி இ.த.க பாடசாலை (4) நீர்வேலி கந்தசுவாமி கோயில் (135) நீர்வேலி சி. சி. த. க பாடசாலை (5) நீர்வேலி செல்லக் கதிர்காம கோவில் (16) நீர்வேலி தெற்கு பேச்சி அம்மன் (7) நீர்வேலி றோ.க.த.க பாடசாலை (26) நீர்வேலி வீரபத்திரர் ஆலயம் (39) நீர்வேலி ஸ்ரீ கணேஷா முன்பள்ளி (22) நீர்வேலி ஸ்ரீ செல்லக்கதிர்காம சுவாமி அறநெறி பாடசாலை (3) நூல் வெளியீடு (15) பாராட்டு விழா (15) பாலர் பகல் விடுதி (13) புகைப்படங்கள் (175) மாதர் சங்கம் (5) வாய்கால் தரவை விநாயகர் கோவில் (22) வாய்க்காற்தரவைப்பிள்ளையார் (3) விளையாட்டு (2) வீதி திருத்தப்பணிகள் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajinifans.com/detailview.php?title=14", "date_download": "2021-10-19T10:58:52Z", "digest": "sha1:44FODTRMUSWFG6XEKHBOKEUBS4GBO4NM", "length": 3972, "nlines": 106, "source_domain": "rajinifans.com", "title": "சூப்பர் ஸ்டாரின் ஆன்மீக குரு சச்சிதானந்தா சென்னையில் காலமானார் ... ரஜினி அமெரிக்கா விரைந்தார் - Rajinifans.com", "raw_content": "\nபாபா படம் பார்க்க ரஜினி ரசிகர்கள் தமிழ்நாடு முழுவதும் கட்டுப்படுத்த முடியாத கூட்டம்\nமலேஷிய-சிங்கப்பூர்‌ கலைவிழா - அத்தனை நட்சத்திரங்கள்‌ இருந்தாலும்‌ ஆரவாரங்கள்‌ அத்தனையும்‌ ர\nஉலக சினிமா சரித்திரத்‌தில்‌ முதல்முறையாக ஆடியோ கேசட்டுகளுக்கு முன்பதிவு - பாபா ஆடியோ\nரஜினியின் பாபா புதிய படம் படப்பிடிப்பு தொடங்கியது\nரஜினியின் பாபா திரைப்பட செய்தித்தாள் கட்டுரை தொகுப்புகள்\nசூப்பர் ஸ்டாரின் ஆன்மீக குரு சச்சிதானந்தா சென்னையில் காலமானார் ... ரஜினி அமெரிக்கா விரைந்தார்\nஒரு வாரத்திற்கு முன்பு, சத்யம் சினிமாவில் பாபா திரைப்பட முன்னோட்ட நிகழ்ச்சியில் ஆன்மீக குரு சச்சிதானந்தா பங்கேற்றார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/tag/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5/", "date_download": "2021-10-19T13:25:47Z", "digest": "sha1:OWGNSRROHBGJGVYAPNPQKPBD3XGXELWP", "length": 4240, "nlines": 99, "source_domain": "vivasayam.org", "title": "இயற்கை மற்றும் செயற்கை விவசாயம் என்னும் இணைய வலைதள விவதாம் Archives - Vivasayam | விவசாயம்", "raw_content": "\nHome Tags இயற்கை மற்றும் செயற்கை விவசாயம் என்னும் இணைய வலைதள விவதாம்\nTag: இயற்கை மற்றும் செயற்கை விவசாயம் என்னும் இணைய வலைதள விவதாம்\nகடந்த மின்னதழுக்கான வாசகர்களின் கருத்துக்கள்\nதத்கல் முறையில் 10 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்\nஅக்ரிசக்தியின் வீட்டுத்தோட்டப் பயிற்சியின் வளர்ச்சி\nபூச்சி விரட்டி – வசம்பு\nகறிக்கோழிப் பண்ணை தொடங்க வங்கிக் கடன் மற்றும் மானியம் பெறுவது எப்படி \nகொரோனா காலத்தில் விவசாயிகளுக்கு உதவும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்\nபிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி\nபிரதமரின் விவசாய நீர்பாசன திட்டத்தில் பாசன கட்டமைப்பு உருவாக்கிட விவசாயிகளுக்கு மானியம்\nமரங்களும் மற்றும் அதன் பயன்கள்\nநிலத்தடி நீர் ஓட்டங்களை கண்டறிய சுலபமான முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arisenshine.in/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2021-10-19T11:47:53Z", "digest": "sha1:DF62VGJI7MJA4FOSDLGEZHCNX4ZTEMCS", "length": 12236, "nlines": 80, "source_domain": "www.arisenshine.in", "title": "குடும்ப நபர்களுக்காக எப்படி ஜெபிக்கிறோம்? – Arise n shine", "raw_content": "\nஎந்த வயதில் தேவனுக்கு ஊழியம் செய்யலாம்\n1 தீமோத்தேயு:2.5 – தினத்தியானம்\nஇயேசு-லேகியோன் சந்திப்பு – பாகம் 7\nதேவனிடம் சமரசம் செய்ய விரும்புகிறோமா\nஇயேசு-லேகியோன் சந்திப்பு – பாகம் 6\nகுடும்ப நபர்களுக்காக எப்படி ஜெபிக்கிறோம்\nஎந்த வயதில் தேவனுக்கு ஊழியம் செய்யலாம்\nதேவனிடம் சமரசம் செய்ய விரும்புகிறோமா\nதேவன் மீதான அன்பு எந்த அளவிற்கு ஆழமானது\nகுழந்தைகளின் ஆவிக்குரிய நிலை எப்படியிருக்கு\nஎல்லா புத்தகங்களையும் படிப்பது நல்லதா\nஎல்லா தேவ கிரியைகளுக்கும் காரணம் உண்டு\nகுடும்ப நபர்களுக்காக எப்படி ஜெபிக்கிறோம்\nஒவ்வொரு கிறிஸ்தவர்களின் வாழ்க்கையிலும் ஜெபம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். தனி ஜெபம், குடும்ப ஜெபம், சபை ஜெபம் என பல ஜெபங்களில் நாம் கலந்து கொள்கிறோம். ஆனால் இதில் பலரும் தங்களுக்கு சார்ந்த காரியங்களுக்காக ஜெபிப்பது மிகவும் குறைவு.\nஇதை குறித்து கேட்டால், நாம் பிறருக்காக ஜெபிப்பது தான் முக்கியம். ���மக்காக நாமே ஜெபித்தால் நமக்குள் சுயம் வந்துவிடும் என்று பலரும் கூறுவதை கேட்டிருக்கேன். இது குறித்து பேசும் போது, ஒரு சகோதரன் கூறிய அனுபவம் ஞாபகத்திற்கு வருகிறது.\nதனது கல்லூரி நாட்களில் நடந்த காரியங்களை இப்படி என்னிடம் பேச ஆரம்பித்தார். சொந்த ஊரில் இருந்து 250 கிமீ தூரத்தில் உள்ள ஊரில் எனது கல்லூரி படிப்பை படித்தேன். புதிய ஊர் என்பதால், கல்லூரி நண்பர்களுடன் ரூம் எடுத்து தங்கினேன்.\n10 பேர் சேர்ந்து எடுத்த ரூமில் இரட்சிக்கப்பட்டவனாக நான் மட்டும் தான் இருந்தேன். ஒரு வாரத்திற்கு பிறகு, ஒவ்வொருவரின் தனிப்பட்ட தன்மைகளையும் புரிந்து கொள்ள முடிந்தது. நான் உட்பட இருவரை தவிர, மற்ற எல்லாரும் மது பழக்கம் கொண்டவர்களாக இருந்தனர்.\nஇதற்காக ரூமில் ஒரு பார்ட்டி வைத்து, எல்லாரும் கும்பலாக உட்கார்ந்து குடித்தனர். அப்போது எங்களையும் அதில் கலந்து கொள்ள கேட்டு கொண்டனர். ஆனால் நான் உடன்படவில்லை. தொடர்ந்து, ஓரிரு முறை கூறிய போதும், நான் ஒத்துக் கொள்ளவில்லை.\nஆனால் என் மனதில், நான் கிடைத்த நல்ல வாய்ப்பை தவற விடுகிறேனா இதை யார் பார்க்க போகிறார்கள் இதை யார் பார்க்க போகிறார்கள் என்ற சந்தேகம் ஏற்பட்டது. அதை குறித்து அவர்களிடம் எதுவும் கூறாமல், வேண்டாம் என்ற உறுதியுடன் இருந்தேன்.\nஅதன்பிறகு, ரூமில் இருந்த எல்லாரும் குடித்தாலும், என்னை குடிக்க தொந்தரவு செய்யமாட்டார்கள். அவன் இயேசு நாதர் அப்படித்தான் இருப்பான், என்று என்னை தனியாக விட்டு விடுவார்கள். இப்படியே நாட்கள் கடந்தன.\nகல்லூரி படிப்பை முடித்து, சொந்த ஊருக்கு திரும்பினேன். ஒரு முறை தாயிடம் பேசி கொண்டிருந்தேன். அப்போது, நான் கல்லூரியில் படித்த 3 ஆண்டுகளும், ஒவ்வொரு மாதத்தின் முதல் 10 நாட்களில் காலை ஒரு நேரம் எனக்காக மட்டும் உபவாசத்துடன் ஜெபித்ததாக கூறினார்.\nமேலும், என் கண்களுக்கு நீ தூரமாய் இருந்தாலும், தேவனுடைய பார்வையில் விலகி இருக்கக் கூடாது என்று ஜெபித்தேன். அவருடைய பாதுகாப்பின் கரம் உன்னோடு இருக்க வேண்டும் என்று விரும்பினேன் என்றார்.\nரூமில் என்னோடு குடி பழக்கம் இல்லாமல் இருந்த நண்பர், அங்கு வந்து மது குடிப்பது, புகைப் பிடிப்பது போன்ற பழக்கங்களைக் கற்று கொண்டு, வீட்டாருக்கு பின்னாட்களில் பெரிய தலைவலியாக மாறினார். ஆனால் நான் பாதுகாக்கப்பட்டதன் பின்னணியில் தாயின் உபவாச ஜெபம் இருந்ததை அறிந்து வியந்தேன் என்று கூறி முடித்தார்.\nஇந்த காலத்தில் பல ஊழியர்களின் பிள்ளைகள் கூட பின்மாற்றத்தில் போகிறார்கள். சிலர் உலகத்தில் உள்ளவர்களை விட மோசமான வாழ்க்கையை வாழ்கிறார்கள். இது குறித்து கேட்டால், அது பிசாசின் சதி, போராட்டம் என்று பல காரணங்களைச் சொல்கிறார்கள்.\nஆனால், சாதாரண விசுவாசியான மேற்கண்ட சகோதரனுக்கு அவரது தாயின் ஜெபம் பாதுகாப்பாக இருந்தது. பிறருக்காக ஜெபிப்பதில் தவறில்லை. அதே நேரத்தில் நம் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் ஜெபிக்க மறக்கக் கூடாது. அப்படி மறக்கும் பல கிறிஸ்தவ குடும்பங்களில் தான் பிள்ளைகள் பிசாசின் தந்திரமான யோசனைகளுக்கு இரையாகி விடுகிறார்கள்.\nநம் வீட்டில் இருக்கும் பிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லாருக்காகவும் தினமும் ஜெபித்து, அவர்களை தேவ கரங்களில் ஒப்புக் கொடுக்கும் போது, அவர் எல்லா தீமைக்கும் விலக்கி காப்பார் என்பதில் சந்தேகமில்லை. நான் எங்கள் வீட்டில் உள்ளவர்களுக்காக ஜெபிக்க முடிவு செய்துவிட்டேன். அப்ப நீங்க\n– கர்த்தருக்குள் அன்பான சகோதரன்.\nஎந்த வயதில் தேவனுக்கு ஊழியம் செய்யலாம்\n1 தீமோத்தேயு:2.5 – தினத்தியானம்\nஇயேசு-லேகியோன் சந்திப்பு – பாகம் 7\nதேவனிடம் சமரசம் செய்ய விரும்புகிறோமா\nஇயேசு-லேகியோன் சந்திப்பு – பாகம் 6\nஎந்த வயதில் தேவனுக்கு ஊழியம் செய்யலாம்\n1 தீமோத்தேயு:2.5 – தினத்தியானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sonakar.com/2021/01/blog-post_41.html", "date_download": "2021-10-19T12:15:06Z", "digest": "sha1:VHMGI6CUNS57XEDIEVC4ZRGWMA4G4LUW", "length": 5234, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "ஹிஜாசுக்கு 'கொரோனா' : நீதிமன்றில் தெரிவிப்பு - sonakar.com", "raw_content": "\nHome NEWS ஹிஜாசுக்கு 'கொரோனா' : நீதிமன்றில் தெரிவிப்பு\nஹிஜாசுக்கு 'கொரோனா' : நீதிமன்றில் தெரிவிப்பு\nசட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்கு கொரோனா தொற்றிருப்பதனால் அவரை இன்று நீதிமன்றுக்கு அழைத்துவரவில்லையென விளக்கமளித்துள்ளது குற்றப்புலனாய்வுப் பிரிவு.\nஏலவே ஹிஜாசை சட்டத்தரணிகள் பார்ப்பதற்கு அனுமதியளிக்கப்படவில்லையென சர்ச்சையெழுந்துள்ள நிலையில் இன்றைய தினம் 2 மணியளவில் நீதிமன்றுக்கு அழைத்துவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஎனினும், ஹிஜாஸ் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதனால் அழைத்���ுவரப்படவில்லையென இன்று தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nபணமில்லை 'ஜனாஸாவை' வைத்துக்கொள்: குடும்பங்கள் அதிரடி\nகொழும்பில் கொரேனா பாதிப்பிருப்பதாக தெரிவிக்கப்படும் ஜனாஸாக்களை அடக்குவதற்கு 58,000 ரூபா கேட்பது நிரந்தர வழக்கமாக உருவெடுத்துள்ள நிலையில்,...\nஇஷாலினி தன்னைத் தானே எரியூட்டியதாக வாக்குமூலம்\nரிசாத் பதியுதீன் வீட்டில் பணிபுரிந்த நிலையில் தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த மலையகத்தைச் சேர்ந்த இஷாலினி தன்னை...\nஅசாத் கைது செய்யப்பட்டது தெரியாது: பிரதமர்\nதேசிய ஐக்கிய முன்னணி தலைவர் அசாத் சாலி கைது செய்யப்பட்டது தனக்குத் தெரியாது என தெரிவித்துள்ளார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச. பயங்கரவாத தடுப்புச...\nஜனாஸா எரிப்பு வழக்கை விசாரணைக்கு ஏற்க மறுப்பு\nஜனாஸா எரிப்புக்கு எதிராக தொடுக்கப்பட்டிருந்த வழக்கினை விசாரணைக்கு ஏற்பதா இல்லையா என்பதனடிப்படையிலான விசாரணைகள் இரு தினங்களாக இடம்பெற்ற ந...\nநான் 'நல்ல மாதிரியான' முஸ்லிம்: முசம்மில்\nமுஸ்லிம் குடும்பம் ஒன்றில் பிறந்து இஸ்லாமிய கலாச்சாரத்தில் வளர்ந்தவன் என்ற அடிப்படையில் மாற்று மதத்தவரைத் திருமணம் செய்துள்ள போதிலும் தான்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://26ds3.ru/aktiplast-t/archives/2107", "date_download": "2021-10-19T11:27:41Z", "digest": "sha1:TROQ5UM6NC637237NSOS3IWFX2T2F6WW", "length": 19143, "nlines": 173, "source_domain": "26ds3.ru", "title": "பூவும் புண்டையையும் – பாகம் 207 – தமிழ் காமக்கதைகள் – ஓழ்சுகம் | 26ds3.ru", "raw_content": "\nபூவும் புண்டையையும் – பாகம் 207 – தமிழ் காமக்கதைகள்\n”ஷ்ஷ்.. ஹ்ஹா.. ம்ம்ம்ம்.. ம்மா.. புஜ்ஜு.. அறுவ்வு.. \nஅரைக் கண் சொருகியபடி.. சசியின் தோள்களை இறுக்கிப் பிடித்துக் கொண்டு அவனைக் கொஞ்சினாள் புவியாழினி.\n” ஹ்ம்ம்ம்ம்.. என்னடி அழகு.. \nஅடியில் இருந்து அவள் பெண் துளைக்குள் ஆழமாக விரலை விட்டு சுழற்றி எடுத்து சொருகிக் கொண்டிருந்த சசி.. இன்னொரு கையால்.. அவளது முலைரை பிசைந்து கொண்டே கேட்டான்.\n” கட்டிலுக்கு போயிடலாம் அறுவ்வு.. பூ எல்லாம் தூவிட்டு.. ஏன் இப்படி நின்னுட்டு.. என்ஜாய் பண்ணனும்.. \n” இன்னும் என்ஜாய் பண்ணலடி மயிலு.. சும்மா விளையாட்டுதான்.. \n” படுத்துக்கலாம் அறுவ்வு.. அப்றம் விளையாடிக்கோ.. \nஅவள் பெணமை துளைக்குள் குடைந்து கொண்டிருந்த அவன் கையை பிடித்து வெளியே தள்ளி வ���ட்டாள். அவன் உதட்டில் ஒரு முத்தம் கொடுத்து விட்டு.. இடுப்பில் இருந்த ஜட்டியை கழற்றி எடுத்தாள். அதை தூக்கி ஓரமாக வீசிவிட்டு.. நிர்வாணமாக நடந்து போய் கட்டிலில் உட்கார்ந்து.. அப்படியே பின்னால் சாய்ந்தாள்.\nநீட்டிய ஆண்மை தண்டுடன்.. அவளைநோக்கி போனான் சசி. அவள் பார்வை அவன் தண்டில் மேல் நிலைக்க.. கையில் பிடித்து உருவிக் கொண்டு கேட்டான்.\n” ஐஸ் ப்ரூட் சாப்பிடறியாடி மயிலு.. \n”மா.. நான் சொன்னா கோச்சுக்கப்படாது.. \nகால்களை ஒன்றன் மேல் ஒன்றாக போட்டு.. தொடைகளால் அவளது பெண்மை பீளவை லேசாக மறைத்துக் கொண்டிருந்தாள். அவளது இடது கையும் அதற்கு பக்கத்தில் மறைத்துக் கொண்டிருந்தது.\n” ம்ம்.. சொல்லு.. என்ன .. \n” நீ குளிச்சப்பறம்.. நான் ஐஸ் ப்ரூட் சாப்பிடறேன்.. ஓகே வா.. \nஅவள் கேட்ட விதம் அவனுக்கு புரிந்து விட்டது. அவளை அதற்கு கட்டாயப் படுத்துவதும் முறையல்ல.. \n” அவள் கால் பக்கத்தில் உட்கார்ந்தான். அவளது ஒரு கெண்டைக்காலை பிடித்து தடவினான். அப்படியே அந்த காலை மேலே தூக்கி.. அவள் காலில் இருந்த நூல் கொலுசை இழுத்து இழுத்து சுழற்றினான்.\nமெல்ல அவன் உதட்டைக் குவித்து அவளது உள்ளங் காலுக்கு முத்தம் கொடுத்தான்.\n” ம்மா.. என்ன பண்ற.. ” சட்டென காலை இழுத்தாள்.\n” அழகாருக்குடா உன் பாதம்.. \n” சினுங்கி காலை மாற்றி வைத்தாள்.\nஅவளது அழகான இளங்குறுத்து போண்ற வாழைத் தொடைகளை கீழிருந்து தடவிக் கொண்டே மேலே போனான்.. அவள் காலில் இருந்தே அவனது உதடுகள் அவளை முத்தமிட்டுக் கொண்டு போனது.. அவள் காலில் இருந்தே அவனது உதடுகள் அவளை முத்தமிட்டுக் கொண்டு போனது.. அதை தடுக்க முடியாத பவி.. நெளிந்து கொண்டு.. அவன் தோளை பற்றிக் கொண்டாள்..\nஅவள் தொடைகளுக்கு போன சசி.. அவளது இரண்டு சருக்கு மரத் தொடைகளுக்கும்.. நிறைய முத்தங்கள் கொடுத்தான். சில இடங்களில் மெண்மையாக கடித்து சூப்பினான்.. கட்டிலில் தடவி அவன் கைகளுக்கு கிடைத்த பூக்களை அள்ளி… அவளது தொடைகள் இணைப்பின் மேல் தூவினான். கட்டிலில் தடவி அவன் கைகளுக்கு கிடைத்த பூக்களை அள்ளி… அவளது தொடைகள் இணைப்பின் மேல் தூவினான். நழுவிய பூக்களை மீண்டும் எடுத்து.. அவளது பெண்மை மாதுளை மீது போட்டு.. பூக்களை தேய்த்தான்..\n” ம்ம்ம்ம்.. ம்மா.. அறுவ்வு… என்ன பண்ற.. ” கண்களை சொருகியபடி.. கசிந்து உருகும் காதல் மொழியாக கேட்டாள் புவி.\n” பூக்களை தூவி அர்ச்சன��� பண்றேன்டா மயிலு.. ” அவளது பெண்மை பிளவிலும் பூக்களை தேய்த்தான்.\n”ம்ம்ம்ம்.. மா.. போதும் அறுவ்வு.. எனக்கு தாங்கல.. \n” மணக்க மணக்க.. என் அழகு மயிலோட.. கல்கண்டு பணியாரத்த.. ருசிக்க வேண்டாமாடி அழகு.. \n” ம்ம்ம்ம்.. இப்படியுமா அறுவ்வு.. ”\nசசியின் உதடுகள்.. அவளது தொடைகளின் இணைப்பின் மேல் பதிந்தது. வெடித்து பிளந்து கொண்டிருந்த புவியின் மாதுளையை ஆசை ஆசையாக முத்தமிட்டது.. அவன் தேய்த்து விட்ட பூக்களின் நறுமணம்.. அவனை இன்னும் காம உச்சத்திற்கு அழைத்து போனது..\nபுவியின் விரல்கள் முதலில் பாய்ந்து பாய்ந்து.. அவன் உதடுகளை தடுத்தது.. அப்பறம்.. அவன் உதடுகளை தடவியும் வருடியும் விளையாடியது.. இறுதியில் அவன் உதடுகளை விட்டு.. அவன் கன்னங்களை வருடி விடத் தொடங்கியது.. \nசசியின் உதடுகள் புவியின்.. பெண்மை மாதுளையை ஆசையுடன் கொஞ்சின. அந்த பிளவை சுற்றின மெண்மை வீக்கம் முழுவதையும் முத்தத்தால் ஒத்தடம் கொடுத்தன. பின் அடியில் இருந்து.. அந்த பிளவின் வழியே..\nஅப்பறம்… அவன் உதடுகளை ஒதுக்கிக் கொண்டு வெளியே வந்த அவன் நாக்கு… அதன் பணியை சிறப்பாகச் செய்யத் தொடங்கியது..\nநீர் வழிய.. மெல்லிய உதடுகள் விரிய.. பிளந்து கொண்டிருந்த அவளது மாதுளை வெடிப்பின்.. வெளிப்புற உதடுகளை அவன் நாக்கு தடவியது. அந்தப் பிளவின் சுற்றழவு முழுவதும் தடவிய நாக்கு..\nபிளவின் உட்புறத்தில் மெதுவாக இறங்கியது. மேலும் கீழும் கோடு கிழித்து விட்டு.. அவளது பிளவின் மேல் பக்கத்தில் புடைத்துக் கொண்டிருந்த மல்லிகை மொக்கை.. தடவித் தடவி.. சுவைக்கத் தொடங்கியது..\nமான்சிக்காக – பாகம் 31 – தமிழ் காமக்கதைகள்\nமான்சிக்காக – பாகம் 32 – மான்சி கதைகள்\nபூவும் புண்டையையும் – பாகம் 307 – தமிழ் காமககதைகள்\nதிருமதி கிரிஜா : பாகம் 22 : தமிழ் காமக்கதைகள்\nதிருமதி கிரிஜா : பாகம் 21 : தமிழ் காமக்கதைகள்\nஅப்பா மகள் காமக்கதைகள் (33)\nஐயர் மாமி கதைகள் (35)\nRaju on சுண்ணி வலிக்குது – தங்கை காமக்கதைகள்\nRaju on திருமதி கிரிஜா : பாகம் 21 : தமிழ் காமக்கதைகள்\nRaju on முனகினாள் – பாகம் 01- தங்கச்சி காமக்கதைகள்\nfree sex stories Latest adult stories mangolia sex stories Mansi mansi story Oolkathai Oolraju Poovum Poovum Pundaiyum Sasi Sasi sex Sex story Swathi sex tamil incest stories Tamil love stories tamil new sex stories tamil sex Tamil sex stories Tamil sex story xossip xossip stories அக்கா அக்கா xossip அக்கா ஓழ்கதைகள் அக்கா செக்ஸ் அக்கா தம்பி அண்ணி செக்ஸ் அம்மா அம்மா செக்ஸ் காதல் கதைகள் குடும்ப செக்ஸ் குரூப் செக்ஸ் சித்தி சித்தி காமக்கதைகள் சுவாதி சுவாதி செக்ஸ் செக்ஸ் தமிழ் செக்ஸ் நண்பனின் காதலி மகன் மான்சி மான்சி கதைகள் மான்சிக்காக மான்சி சத்யன் விக்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://flirtymania.com/webcamo-ta.html", "date_download": "2021-10-19T11:46:24Z", "digest": "sha1:I5ZZO223M2ULLH4ZKCZG3TG5EBNSQGY3", "length": 7314, "nlines": 29, "source_domain": "flirtymania.com", "title": "புதிய வெப்கேமோ 2021", "raw_content": "\nஎந்த வீடியோ அரட்டை அறை சேவை குளிரானது, ஃப்ளர்டிமேனியா அல்லது வெப்கேமோ என்பதை நீங்களே பாருங்கள்\nஎங்கள் அரட்டை அறைகளில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஏராளமான பெண்களைச் சந்திக்கவும்\nஃப்ளர்டிமேனியாவின் பயனர் தளம் நிச்சயமாக வெப்கேமோவை விட மிகவும் விரிவானது. எனவே, நீங்கள் அதிகமான வெளிநாட்டு அழகிகளுடன் அரட்டை அடிக்க முடிகிறது\nமறக்கமுடியாத அரட்டைகளில் கலந்து கொள்ளுங்கள்\nஅரட்டை ரவுலட்டுகள் , பொது அரட்டை அறைகள் மற்றும் தனிப்பட்ட பேச்சுக்களில் அரட்டை அடிக்க Flirtymania ஐப் பயன்படுத்தவும். வெப்கேமோ இதுபோன்ற எதையும் செய்யவில்லை\nமறைமுகமாக இருங்கள் - யாரும் உங்கள் முகத்தைப் பார்க்கவோ அல்லது உங்கள் பெயரை அறியவோ மாட்டார்கள். நீங்கள் விரும்பும் போது மட்டுமே உங்களை வெளிப்படுத்துங்கள்\nஉங்கள் அரட்டையை ஸ்டிக்கர்களுடன் வளர்த்துக் கொள்ளுங்கள்\nஃப்ளர்டிமேனியா வெப்கேமோவில் நீங்கள் காணாத நிறைய குளிர் ஸ்டிக்கர்களை வழங்குகிறது. ஃப்ளர்டிமேனியாவின் ஸ்டிக்கர் சேகரிப்பு ஆட்டமிழக்கவில்லை. எங்களிடம் ஏராளமான வேடிக்கையான மற்றும் ஈர்க்கக்கூடிய ஸ்டிக்கர்கள் வெப்காமோவில் இல்லை நீங்கள் அவற்றை நாணயங்களுடன் வாங்கலாம் அல்லது வெளிப்படையான வாக்குகளில் வென்று நீங்கள் கவர்ச்சியாக நினைக்கும் பெண்களுக்கு அனுப்பலாம்.\nநீங்கள் அதிகம் செலவிட மாட்டீர்கள்\nஇலவசம் என்று கூறி, பின்னர் ஒற்றைப் பெண்களுடன் அரட்டையடிக்க பணம் வசூலிக்கும் டேட்டிங் தளங்களில் பதிவு செய்வதில் நீங்கள் சோர்வடைகிறீர்களா இங்கே நாங்கள் இருக்கிறோம் Flirtymania உலகின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் சிறுமிகளுடன் இலவச வீடியோ அரட்டையை அனுமதிக்கிறது. இந்த தளத்தை மிகவும் விரும்பத்தக்கது அதன் எளிய மற்றும் பயனுள்ள இடைமுகம். வெப்கேமோ போன்ற மந்தமான மற்றும் தடைசெய்யப்பட்ட சேவைகளைத் தள்ளிவிடுங்கள் - அதற்கு பதிலாக ஃப்ளர்டிமேனியாவைப் பயன்படுத்துங்கள்\nFlirtymania இல் நேரடி வெப்கேம் அரட்டைகளில் சேரவும்\nநீங்கள் ஒரு தனிப்பட்ட வெப்கேம் அரட்டையைத் தேடுகிறீர்களானால், Flirtymania உங்கள் சேவையில் உள்ளது. எங்கள் நேரடி வெப்கேம் தனிப்பட்டது, எனவே நீங்கள் விரும்பும் சிறுமிகளுடன் முழுமையான பாதுகாப்பில் அரட்டை அடிக்கலாம் இதைத்தான் வெப்கேமோ உங்களுக்கு வழங்க முடியாது.\nஇன்று நேரடி வெப்கேம் வேலைகள் மூலம் நிறைய சம்பாதிக்கவும்\nஎங்கள் ஆன்லைன் வெப்கேம் சேவைகளைப் பயன்படுத்தி அந்நியர்களுடன் அரட்டை அடித்து பணம் சம்பாதிக்கவும். சிற்றின்ப அரட்டை தேவையில்லை.\nபயன்பாட்டு விதிமுறைகளை தனியுரிமைக் கொள்கை Creator agreement Affiliate agreement சந்தைப்படுத்தல் பொருட்கள் ஆதரவு\nஅழகிய பெண்கள் வீடியோ அரட்டை சத்ராண்டம் விஆர் கேம் பெண்கள் அந்நியர்களுடன் பேசுங்கள் இலவச அரட்டை இணைப்பு திட்டம் வெப்கேம் பெண்ணாக மாறுங்கள் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இடுகையிடுவதன் மூலம் சம்பாதிக்கவும்\nவீடியோ அரட்டை தளங்கள் வீடியோச்சாட் மாற்றுகள் கேம்காட் மாற்றுகள் சட்ரூலெட் மாற்றுகள் அரட்டை மாற்றுகள் கேமர்கர்ல்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/ganguly-trolls-sachin-tendulkar", "date_download": "2021-10-19T11:37:35Z", "digest": "sha1:TOULB36C5QDYMLGVZFHU2ZYX27JM7YNE", "length": 6339, "nlines": 86, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ganguly trolls sachin tendulkar: Latest News, Photos, Videos on ganguly trolls sachin tendulkar | tamil.asianetnews.com", "raw_content": "\nசான்ஸ் கிடைக்கும் போதெல்லாம் சச்சினை வச்சு செய்யும் தாதா.. டெண்டுல்கரின் காலை வாரிய கங்குலி\nசச்சின் டெண்டுல்கரை கலாய்க்க கிடைக்கும் எந்த வாய்ப்பையும் கங்குலி தவறவிடுவதேயில்லை.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகோவிட் மூன்றாவது அலையில் இருந்து நம்மை காத்து கொள்ள சுயபரிசோதனை கருவியே நமக்கு தேவை \nபலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய விளையாட்டு வீரர்கள் \n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய கலைஞர்கள்\nமஹசூஸ் வெற்றியாளர் ஏசியாநெட் நியூஸ் தமிழுக்கு அளித்த பேட்டி\nகோவிட் மூன்றாவது அலையில் இருந்து நம்மை காத்து கொள்ள சுயபரிசோதனை கருவியே நமக்கு தேவை \nபலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய விளையாட்டு வீரர்கள் \nடி20 உலக கோப்பையில் அவர் தான் இந்திய அணியின் \"X Factor\" பிளேயர்.. கம்பீர், இர்ஃபான் பதான் ஒருமித்த குரல்\nராகவா லாரன்ஸ் - நடிக்கும் படத்தில் ‘பாடாத பாட்டெல்லாம்’ ரீமிக்ஸ் பாடல்..\nஎனது மூச்சு இருப்பதற்குள் கோட்டையில் அன்புமணி உட்கார வேண்டும்... இயலாமையில் துடித்த ராமதாஸ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/used-volvo-xc-90+cars+in+new-delhi?utm_source=newcar&utm_medium=modeloverview", "date_download": "2021-10-19T11:06:37Z", "digest": "sha1:GSM6J24IIRKAIVZMLT3GVNU2IGQCURQP", "length": 15835, "nlines": 424, "source_domain": "tamil.cardekho.com", "title": "Used Volvo XC90 in New Delhi - 4 Second Hand Cars for Sale (with Offers!)", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nமுகப்புஇரண்டாவது hand கார்கள் இல் பயன்படுத்திய கார்கள்\n4 Second Hand Volvo XC90 சார்ஸ் இன் புது டெல்லி\nமாருதி எஸ்எக்ஸ்4 எஸ் கிராஸ்\nமாருதி வாகன் ஆர் ஸ்ட்ரிங்ரே\nமாருதி ஸ்விஃப்ட் டிசைர் டூர்\nஹூண்டாய் கிராண்ட் ஐ 10 நியோஸ்\nடொயோட்டா லேண்டு க்ரூஸர் ப்ராடோ\nமஹிந்திரா போலிரோ ஆற்றல் பிளஸ்\nபிஎன்டபில்யூ 3 சீரிஸ் ஜிடி\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் இவோக்\nலேண்டு ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் விலர்\nலேண்டு ரோவர் டிஸ்கவரி 4\nலேண்டு ரோவர் ப்ரீலேண்டர் 2\nவோல்வோ வி40 கிராஸ் கிராஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/trend/cricketer-prithvi-shaw-rumoured-girlfriend-prachi-singh-raises-temperature-with-her-dance-moves-skv-ghta-460593.html", "date_download": "2021-10-19T12:08:40Z", "digest": "sha1:2TPWVM7PVIANFXRYTMOYNUPKB4A5B4OX", "length": 11193, "nlines": 106, "source_domain": "tamil.news18.com", "title": "இன்ஸ்டாகிராமை கலக்கும் பிராச்சியின் நடனம் - பிரித்திவி ஷாவின் காதலியா? | Cricketer Prithvi Shaw Rumoured Girlfriend Prachi Singh Raises Temperature With Her Dance Moves – News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#T20 WorldCup#பெண்குயின் கார்னர்#பிக்பாஸ்#கிரைம்\nprachi singh : இன்ஸ்டாகிராமை கலக்கும் பிராச்சியின் நடனம் - பிரித்திவி ஷாவின் காதலியா\nprachi singh : இன்ஸ்டாகிராமை கலக்கும் பிராச்சியின் நடனம் - பிரித்திவி ஷாவின் காதலியா\nபிரித்திவி ஷாவின் தோழி நடிகை பிராச்சி\nபிரித்திவி ஷாவின் தோழி நடிகை பிராச்சி, சத்யமேவ ஜெயத�� படத்தின் பாடலுக்கு ஆடிய நடனம் இன்ஸ்டாகிராமில் வைரலாகியுள்ளது.\nஇந்திய கிரிக்கெட் அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக உள்ள பிரித்திவி ஷாவின் காதலியாக கூறப்படும் நடிகை பிராச்சியின் நடனங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தை கலக்கி வருகின்றன. தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல்வேறு பாலிவுட் படங்களின் பாடல்களுக்கு அற்புதமாக நடனமாடி, அவர் பதிவு செய்து வருகிறார். பாலிவுட் உலகில் மிகப்பெரிய வெற்றியை ஈட்டிய சத்யமேவ ஜெயதே (Satyameva Jayate) படத்தின் தில்பார் பாடலுக்கு அவர் ஆடிய நடனம், தற்போது வைரலாகியுள்ளது.\nசுஷ்மிதா சென் மற்றும் சஞ்சய் கபூர் நடிப்பில் வெளியான தில்பார் பாடல் தற்போது அந்த பெயரிலேயே ரீமேக் செய்யப்பட்டுள்ளது. புதிதாக ரீமேக் செய்யப்பட்ட பாடலை நேகா கக்கார், த்வானி பானுஷாலி, இக்கா ஆகியோர் சூப்பராக பாடியுள்ளனர். நோரா ஃபதே இந்தப் பாடலுக்கு நடனமாடியுள்ளார். பாப்புலராக இருக்கும் இந்த பாடலை தேர்வு செய்து நடனமாடியுள்ள பிரித்திவியின் தோழி பிராச்சியின் வீடியோ பெரிய ஹிட்டாகியுள்ளது.\nநடன அசைவுகள் ஒவ்வொன்றும் ரசிகர்களை வியக்க வைக்கும் வகையில் இருப்பதாக நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.\nபிராச்சி - பிரித்திவி ஷா தொடர்பான வதந்தியானது கடந்த 2020ம் ஆண்டில் இருந்து பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. சமூக வலைதளங்களில் இருவரும் செய்துகொள்ளும் நகைச்சுவையான ரிப்ளை, காதலர்கள் என்ற வதந்திக்கு காரணமாக உள்ளது. பிராச்சி தொடர்ந்து பிரித்திவி ஷாவை புகழ்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். அண்மையில், அகமதாபாத் நகரில் நடைபெற்ற கொல்கத்தா அணிக்கு எதிரான ஐ.பி.எல் போட்டியில், டெல்லி அணிக்காக விளையாடிய பிரித்திவி ஷா மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.\nகொல்கத்தா அணியின் பந்துகளை நாலாபுறமும் தெறிக்கவிட்ட அவர், 41 பந்துகளில் 82 ரன்களை குவித்து டெல்லி அணியின் வெற்றியை உறுதி செய்தார். இந்தப் போட்டிக்குப் பிறகு பிரித்திவி ஷாவின் பேட்டிங்கை பலரும் பாரட்டினர். ஆட்டநாயகன் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகள் அந்தப்போட்டியில் அவருக்கு வழங்கப்பட்டது. போட்டிக்குப் பிறகு பிரித்திவி ஷா பேசிய விடியோ மற்றும் அவர் பெற்ற விருதுகளை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட பிராச்சி, பிரித்திவி வெற்றி பெற்ற பரிசுகளை எடுத்துச் செல்ல தனி சூட்கேஸ் வேண்டும் என நகைச்சுவையாக எழுதியிருந்தார்.\nஅவரின் இந்தப் பதிவு மீண்டும் இணையத்தில் வைரலானது. பிரித்திவி ஷா மற்றும் பிராச்சி தரப்பில் இருந்து அவர்கள் காதல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றாலும், நெட்டிசன்கள் அவர்கள் இருவரும் உறுதியாக காதலிப்பதாக தெரிவித்து வருகின்றனர். நெட்டிசன்களின் யூகங்களுக்கு ஏற்ப நடிகை பிராச்சி சிங்கின் பதிவுகளும் உள்ளன. தங்களின் காதல் குறித்து பிரித்திவி ஷா மற்றும் பிராச்சி சிங் ஆகிய இருவரும் விரைவில் மௌனம் கலைப்பார்கள் எனவும் கூறப்படுகிறது.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube\nprachi singh : இன்ஸ்டாகிராமை கலக்கும் பிராச்சியின் நடனம் - பிரித்திவி ஷாவின் காதலியா\nஉணவை திருடிய போது ஓனரிடம் மாட்டிக்கொண்ட நாய் - க்யூட் வைரல் வீடியோ\nபெட்ரோல் நிலைய கழிப்பறையில் ஆண்குழந்தை பெற்றெடுத்த பெண்\nதிருமணத்திற்கு அண்டாவில் மிதந்து வந்த மணமக்கள் ... கேரளாவில் நெகிழ்ச்சி சம்பவம்\nசெல்போன் பேசியபடி கைக்குழந்தையுடன் குழிக்குள் விழுந்த பெண் ... வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnarealestate.lk/properties-list-sidebar-left-2/", "date_download": "2021-10-19T12:47:08Z", "digest": "sha1:QBSWUINDKIQFWERAXXBJ5JGYPOGECVRZ", "length": 47775, "nlines": 1262, "source_domain": "jaffnarealestate.lk", "title": "Properties List – Sidebar Left – Re/Max North Realty", "raw_content": "\n2 மாடி வீடு விற்பனைக்கு (3)\n2 வீடுகள் விற்பனைக்கு (1)\nஅரிசி ஆலை விற்பனைக்கு (1)\nஉல்லாச விருந்தினர் மாளிகை (1)\nகடையுடன் காணி விற்பனைக்கு (1)\nகாணியுடன் பகுதியளவு கட்டப்பட்ட வீடு விற்பனைக்கு (4)\nகாணியுடன் வீடு விற்பனைக்கு (33)\nகைதடியில் வீட்டுடன் கூடிய காணி விற்பனைக்கு (1)\nசிறிய வீட்டுடன் இணைந்த காணி விற்பனைக்கு. (1)\nநல்லூரில் Guest House விற்பனைக்கு (1)\nவணிக / குடியிருப்பு சொத்து விற்பனைக்கு (1)\nவிசாலமான நிலத்துடன் கூடிய கட்டிடத்தொகுதி விற்பனைக்கு (2)\nவிசாலமான நிலத்துடன் வீடு விற்பனைக்கு (1)\nவியாபாரக் கட்டிடம் குத்தகைக்கு (6)\nவியாபாரக் கட்டிடம் வாடகைக்கு (2)\nவியாபாரக் கட்டிடம் விற்பனைக்கு (16)\nவிவசாய நிலம் விற்பனைக்கு (3)\nகொழும்பு - 14 (1)\nகொழும்பு - 15 (1)\nகொழும்பு - 6 (1)\nபழைய பூங்கா வீதி (1)\nகொழும்ப��� - 14 (1)\nகொழும்பு - 15 (1)\nகொழும்பு - 6 (1)\n2 மாடி வீடு விற்பனைக்கு (3)\n2 வீடுகள் விற்பனைக்கு (1)\nஅரிசி ஆலை விற்பனைக்கு (1)\nஉல்லாச விருந்தினர் மாளிகை (1)\nகடையுடன் காணி விற்பனைக்கு (1)\nகாணியுடன் பகுதியளவு கட்டப்பட்ட வீடு விற்பனைக்கு (4)\nகாணியுடன் வீடு விற்பனைக்கு (33)\nகைதடியில் வீட்டுடன் கூடிய காணி விற்பனைக்கு (1)\nசிறிய வீட்டுடன் இணைந்த காணி விற்பனைக்கு. (1)\nநல்லூரில் Guest House விற்பனைக்கு (1)\nவணிக / குடியிருப்பு சொத்து விற்பனைக்கு (1)\nவிசாலமான நிலத்துடன் கூடிய கட்டிடத்தொகுதி விற்பனைக்கு (2)\nவிசாலமான நிலத்துடன் வீடு விற்பனைக்கு (1)\nவியாபாரக் கட்டிடம் குத்தகைக்கு (6)\nவியாபாரக் கட்டிடம் வாடகைக்கு (2)\nவியாபாரக் கட்டிடம் விற்பனைக்கு (16)\nவிவசாய நிலம் விற்பனைக்கு (3)\nகொழும்பு - 14 (1)\nகொழும்பு - 15 (1)\nகொழும்பு - 6 (1)\nபழைய பூங்கா வீதி (1)\nகொழும்பு - 14 (1)\nகொழும்பு - 15 (1)\nகொழும்பு - 6 (1)\n2 மாடி வீடு விற்பனைக்கு (3)\n2 வீடுகள் விற்பனைக்கு (1)\nஅரிசி ஆலை விற்பனைக்கு (1)\nஉல்லாச விருந்தினர் மாளிகை (1)\nகடையுடன் காணி விற்பனைக்கு (1)\nகாணியுடன் பகுதியளவு கட்டப்பட்ட வீடு விற்பனைக்கு (4)\nகாணியுடன் வீடு விற்பனைக்கு (33)\nகைதடியில் வீட்டுடன் கூடிய காணி விற்பனைக்கு (1)\nசிறிய வீட்டுடன் இணைந்த காணி விற்பனைக்கு. (1)\nநல்லூரில் Guest House விற்பனைக்கு (1)\nவணிக / குடியிருப்பு சொத்து விற்பனைக்கு (1)\nவிசாலமான நிலத்துடன் கூடிய கட்டிடத்தொகுதி விற்பனைக்கு (2)\nவிசாலமான நிலத்துடன் வீடு விற்பனைக்கு (1)\nவியாபாரக் கட்டிடம் குத்தகைக்கு (6)\nவியாபாரக் கட்டிடம் வாடகைக்கு (2)\nவியாபாரக் கட்டிடம் விற்பனைக்கு (16)\nவிவசாய நிலம் விற்பனைக்கு (3)\nகொழும்பு - 14 (1)\nகொழும்பு - 15 (1)\nகொழும்பு - 6 (1)\nபழைய பூங்கா வீதி (1)\nகொழும்பு - 14 (1)\nகொழும்பு - 15 (1)\nகொழும்பு - 6 (1)\nகிண்ணியா பிரதான வீதியில் 3.5 பரப்பு காணியுடன...\nகிண்ணியா பிரதான வீதியில் 3.5 பரப்பு காணியுடன் அழகிய மாடி வீடு விற்பனைக்கு • Marble கடற்கரை 300 M தூரத்திலும் • கிண் [more]\nகிண்ணியா பிரதான வீதியில் 3.5 பரப்பு காணியுடன் அழகிய மாடி வீடு விற்பனைக்கு • Marble கடற்கரை 300 M தூரத்திலும் • கிண் [more]\nவத்தலவில் அழகான 2 மாடி வீடு விற்பனைக்கு\nவத்தலவில் அழகான 2 மாடி வீடு விற்பனைக்கு, நில அளவு – 3.5 பரப்பு கீழ் தளத்தில், சமையலறை உணவருந்தும் அறை படுக [more]\nவத்தலவில் அழகான 2 மாடி வீடு விற்பனைக்கு, நில அளவு – 3.5 பரப்பு கீழ் தளத்தில், சமையல��ை உணவருந்தும் அறை படுக [more]\nயாழ்ப்பாண நகரில் 2 மாடி வீடு விற்பனைக்கு\nயாழ்ப்பாண நகரில் 2 மாடி வீடு விற்பனைக்கு நில அளவு –2 பரப்பு சுற்றிவர மதிலால் சூழப்பட்டுள்ளது சிறந்த சூழல், அக [more]\nயாழ்ப்பாண நகரில் 2 மாடி வீடு விற்பனைக்கு நில அளவு –2 பரப்பு சுற்றிவர மதிலால் சூழப்பட்டுள்ளது சிறந்த சூழல், அக [more]\nபுங்குடுதீவில் வீட்டுடன் சேர்ந்த காணி விற்பன...\nபுங்குடுதீவில் வீட்டுடன் சேர்ந்த காணி விற்பனைக்கு மொத்த நிலப்பரப்பு :- 02 பரப்பு இவ் வீட்டில் 06 அறைகள் சமையலறை 02 [more]\nபுங்குடுதீவில் வீட்டுடன் சேர்ந்த காணி விற்பனைக்கு மொத்த நிலப்பரப்பு :- 02 பரப்பு இவ் வீட்டில் 06 அறைகள் சமையலறை 02 [more]\nஎழில் கொஞ்சும் கந்தன் வாழ் நல்லூரில் நோர்வே ...\nஎழில் கொஞ்சும் கந்தன் வாழ் நல்லூரில் நோர்வே நாட்டு கட்டிடக்கலை நிபுணர்களினால் வடிவமைக்கப்பட்ட புதிய சொகுசு வீடு விற [more]\nஎழில் கொஞ்சும் கந்தன் வாழ் நல்லூரில் நோர்வே நாட்டு கட்டிடக்கலை நிபுணர்களினால் வடிவமைக்கப்பட்ட புதிய சொகுசு வீடு விற [more]\nஉரும்பிராய் மேற்கில் வீடு விற்பனைக்கு\nஉரும்பிராய் மேற்கில் வீடு விற்பனைக்கு காணியின் அளவு –4.19பரப்பு சிறந்த சுற்றுப்புற சூழல்,அக்கம் ,குடியிருப்பு [more]\nஉரும்பிராய் மேற்கில் வீடு விற்பனைக்கு காணியின் அளவு –4.19பரப்பு சிறந்த சுற்றுப்புற சூழல்,அக்கம் ,குடியிருப்பு [more]\n2 மாடி வீடு விற்பனைக்கு (3)\n2 வீடுகள் விற்பனைக்கு (1)\nஅரிசி ஆலை விற்பனைக்கு (1)\nஉல்லாச விருந்தினர் மாளிகை (1)\nகடையுடன் காணி விற்பனைக்கு (1)\nகாணியுடன் பகுதியளவு கட்டப்பட்ட வீடு விற்பனைக்கு (4)\nகாணியுடன் வீடு விற்பனைக்கு (33)\nகைதடியில் வீட்டுடன் கூடிய காணி விற்பனைக்கு (1)\nசிறிய வீட்டுடன் இணைந்த காணி விற்பனைக்கு. (1)\nநல்லூரில் Guest House விற்பனைக்கு (1)\nவணிக / குடியிருப்பு சொத்து விற்பனைக்கு (1)\nவிசாலமான நிலத்துடன் கூடிய கட்டிடத்தொகுதி விற்பனைக்கு (2)\nவிசாலமான நிலத்துடன் வீடு விற்பனைக்கு (1)\nவியாபாரக் கட்டிடம் குத்தகைக்கு (6)\nவியாபாரக் கட்டிடம் வாடகைக்கு (2)\nவியாபாரக் கட்டிடம் விற்பனைக்கு (16)\nவிவசாய நிலம் விற்பனைக்கு (3)\nகொழும்பு - 14 (1)\nகொழும்பு - 15 (1)\nகொழும்பு - 6 (1)\nபழைய பூங்கா வீதி (1)\nகொழும்பு - 14 (1)\nகொழும்பு - 15 (1)\nகொழும்பு - 6 (1)\n83, கண்ணத்திட்டி வீதி, யாழ்ப்பாணம், இலங்கை\nபொலிகண்டியில் அழகிய வீடு விற்பனைக்க... LKR 24,000,000\nதெல்���ிப்பளை,துர்க்காபுரம் கல்வளவு ஒ... LKR 5,000,000\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajinifans.com/detailview.php?title=15", "date_download": "2021-10-19T12:21:59Z", "digest": "sha1:2OV6D5AKTPB72S4N2FAZ33XHJN6FCNMA", "length": 5278, "nlines": 105, "source_domain": "rajinifans.com", "title": "பாபா தியேட்டர் முன் பரபரப்பு : பா . ம . க . ஆர்ப்பாட்டம் - ரஜினி - ராமதாஸ் மோதல் வலுக்கிறது - Rajinifans.com", "raw_content": "\nசூப்பர் ஸ்டாரின் ஆன்மீக குரு சச்சிதானந்தா சென்னையில் காலமானார் ... ரஜினி அமெரிக்கா விரைந்தார்\nபாபா படம் பார்க்க ரஜினி ரசிகர்கள் தமிழ்நாடு முழுவதும் கட்டுப்படுத்த முடியாத கூட்டம்\nமலேஷிய-சிங்கப்பூர்‌ கலைவிழா - அத்தனை நட்சத்திரங்கள்‌ இருந்தாலும்‌ ஆரவாரங்கள்‌ அத்தனையும்‌ ர\nஉலக சினிமா சரித்திரத்‌தில்‌ முதல்முறையாக ஆடியோ கேசட்டுகளுக்கு முன்பதிவு - பாபா ஆடியோ\nரஜினியின் பாபா புதிய படம் படப்பிடிப்பு தொடங்கியது\nபாபா தியேட்டர் முன் பரபரப்பு : பா . ம . க . ஆர்ப்பாட்டம் - ரஜினி - ராமதாஸ் மோதல் வலுக்கிறது\nதமிழ்நாடு முழுவதும் ரஜினி சினிமா படத்துக்கு ரஜினி - ராமதாஸ் கொடும்பாவி எரிப்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு ரசிகர்கள் , தொண்டர்கள் கைது கூடுதல் டி . ஜி . பி . பேட்டி ஜெயங்கொண்டத்தில் பரபரப்பு - பதட்டம் : பாபா ' தியேட்டர் சூறை - தீவைப்பு ' பாபா ' வை ஓட விடாமல் தடுக்கவே படப்பெட்டியை கடத்தி சென்றோம் பாபா தயேட்டாசூறைத ரஜினி - ராமதாஸ் மோதல் வலுக்கிறது 10 பேர் கும்பல் புகுந்து படப்பெட்டி கொள்ளை ரஜினி ரசிகர்கள் கொந்தளிப்பு 36 மணி நேரத்துக்கு பிறகு ரஜினி ' கட்அவுட் தலையில் கடத்தப்பட்ட ' பாபா ' கல்லைப்போட்டனர் படப்பெட்டி மீட்பு ' பாபா ' தியேட்டர் முன் பரபரப்பு : பா . ம . க . ஆர்ப்பாட்டம் ; எம் . எல் . ஏ . உள்பட 70 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tnppgta.com/2019/12/blog-post_66.html", "date_download": "2021-10-19T12:26:33Z", "digest": "sha1:MM234VBISK7KQZ6JHTBBV7KKW5CJS6AT", "length": 6147, "nlines": 108, "source_domain": "www.tnppgta.com", "title": "பி.இ., பட்டதாரிகளுக்கு கணித ஆசிரியர் பணி தமிழக பாடத்திட்டத்தில் மாற்றம் வருமா", "raw_content": "\nHomeGENERALபி.இ., பட்டதாரிகளுக்கு கணித ஆசிரியர் பணி தமிழக பாடத்திட்டத்தில் மாற்றம் வருமா\nபி.இ., பட்டதாரிகளுக்கு கணித ஆசிரியர் பணி தமிழக பாடத்திட்டத்தில் மாற்றம் வருமா\nசிவகங்கை: ''பி.இ., முடித்தோருக்கு பள்ளியில் கணித ஆசிரியர் என்ற அரசின் உத்தரவால், பாடத்திட்டத்தில் மாற்றம் வ���ுமா என்ற கேள்வி எழுந்துள்ளது,'' என இடைநிலை ஆசிரியர் சங்க மாநில பொதுச்செயலாளர் ஏ.சங்கர் தெரிவித்தார்.\nஅவர் கூறியதாவது: தமிழகத்தில், 'டெட்' தேர்வு எழுதி ஆசிரியர் வேலைக்காக 35 ஆயிரம் பட்டதாரிகள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் பி.இ., முடித்தவர்கள் பள்ளியில் கணக்கு பாடம் எடுக்கலாம் என்ற அரசு அறிவிப்பு வேடிக்கை. ஆண்டுக்கு பி.இ., முடித்து 1 லட்சம், பி.எட்., முடித்து 4 லட்சம் பேர் வேலையின்றி உள்ளனர். இளங்கலை, முதுநிலை அறிவியல், கலை பட்ட படிப்பில் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியியல், பொருளியல், மொழி பாடம் படித்தவர்கள், பி.எட்., முடித்தால் தான் ஆசிரியர் ஆக முடியும். பாடத்திட்டமே இல்லாத இன்ஜினியரிங் பட்டதாரிகளால் எப்படி கல்வி கற்றுத்தர முடியும். இதனால் அவர்களுக்கு ஏற்ப பாடத்திட்டம் மாறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. பி.இ., முடித்து, பி.எட்., படிக்கலாம் என்ற அரசின் அனுமதிக்கு 3 ஆண்டுக்கு முன்பே ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அரசு பள்ளியில் ஏற்கனவே 13 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களை உபரியாக வைத்துள்ளனர். அதே போன்று இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரிகளாக தரம் உயர்த்த கல்வித்துறை முன்வரவில்லை.\nஇச்சூழலில் பி.இ., முடித்தவர்களை பள்ளியில் கணக்கு பாடம் எடுக்க நியமிக்கலாம் என்ற உத்தரவு ஏற்புடையதல்ல. அவரவர் கல்வி தகுதிக்கேற்ப அரசு வேலை வழங்க வேண்டும், என்றார்.\nஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தங்களது...மாத ஊதியத்தை (pay slip) Mobile மூலம் பதிவிறக்கம் செய்வது எப்படி \nFLASH NEWS-பாலிடெக்னிக் TRB தேர்வுக்கான அட்டவணை வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilfox.com/2021/10/14/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D-14-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-10-19T11:12:49Z", "digest": "sha1:PM5JSZXV53FPPILJKNJ72BU6UIQCUEGF", "length": 6490, "nlines": 81, "source_domain": "www.tamilfox.com", "title": "அக்., 14: தமிழக கொரோனா நிலவரம்..! – Tamil Fox – Tamil News – Tamil Video News – Android Tamil news", "raw_content": "\nஅக்., 14: தமிழக கொரோனா நிலவரம்..\nதமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,259 பேருக்கு\nதொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றுடன் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 26,83,396 ஆக அதிகரித்துள்ளது. மாநிலத்தில் தற்போது 15,451 பேர் சிகிச்சையில் உள்ளனர்.\nமட்டும் இன்று 143 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 552284 ஆக உயர்ந்த��ள்ளது. சென்னையில் இதுவரை 541942 பேர்\nசெய்யப்பட்டுள்ளனர். 8517 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஇன்று 143 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 244559 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 240592 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 2,371 பேர் பலியாகியுள்ளனர்.\nசெங்கல்பட்டில் இன்று 95 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 170215 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 166594 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 2489 பேர் பலியாகியுள்ளனர்.\n‘உள்ளாட்சி தேர்தலில் கிளீன் போல்டு’ அதிமுகவை மக்கள் நிராகரித்து விட்டார்கள் – திமுக அமைச்சர்\nதமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,36,944 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 4,81,01,791 பேருக்கு\nமாநிலத்தில் இன்று 1,438 நோயாளிகள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதால் இதுவரை குணமானோர்களின் எண்ணிக்கை 26,32,092 ஆக அதிகரித்துள்ளது. இன்று மேலும் 30 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 35,853 ஆக உயர்ந்துள்ளது.\nஉ.பி. தேர்தல்: முறிகிறது காங்கிரஸ், சமாஜ்வாதி கூட்டணி – அகிலேஷ் சொன்ன தகவல்\nசுகேஷ் சந்திரசேகர் மீதான ரூ.200 கோடி பண மோசடி விவகாரம்: பாலிவுட் நடிகை நோரா ஃபதேஹி அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜர்\n3,500 ரூபாயில் ஜியோ ஸ்மார்ட் போன்: அடுத்த மாதம் அறிமுகம்..\n70 வயது மூதாட்டிக்கு ஆண் குழந்தை பிறந்தது..\nபாஜக முன்னாள் அமைச்சர் அதிரடி.. பதவியை ராஜினாமா செய்தார்..\nசென்னை: `பணத்துக்கு பணம்; பைக்குக்கு பைக்’ -மோசடி வழக்கில் போலி பார்சல் மேலாளர் சிக்கியது எப்படி\nமாநகராட்சி முதன்மை நகரமைப்பு அதிகாரி பணியிடம் 3 ஆண்டுகளாக காலி: மதுரையில் விதிமீறல் கட்டிடக் கண்காணிப்பில் சிக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/category/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2021-10-19T12:21:45Z", "digest": "sha1:7K7DKBVKZAL4EZSD35AQDDD4D2LNRDGO", "length": 5626, "nlines": 130, "source_domain": "gttaagri.relier.in", "title": "கொத்தவரை – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nகொத்தவரைக்காய் சாகுபடி ரகங்கள்: பூசா சதபாகர், பூசா மவுசாமி, பூசா நவுபகார் மற்றும் கோமா மேலும் படிக்க..\nசீரான வருமானம் வழங்கும் கொத்தவரை\nவறட்சி பூமியிலும் இருக்கும் நீரை கொண்டு கொத்தவரை சாகுபடி செய்து அதிக லாபத்துடன் மேலும் படிக்க..\nபூச்சி தாக��குதலின் அறிகுறிகள்: இந்தப்பூச்சி பயறு வகைப் பயிர்களைத் தாக்கக்கூடிய மேலும் படிக்க..\nஇரகங்கள் : பூசா மவுசாமி, பூசா நவுபகார், பூசா சதபாகர் மற்றும் கோமா மேலும் படிக்க..\nPosted in கொத்தவரை Tagged அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா 1 Comment\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2017/06/18/%E0%AE%90%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-10-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2021-10-19T13:01:22Z", "digest": "sha1:6WODPWHQECVVX62WNDMKROZKJRUHISCY", "length": 101028, "nlines": 236, "source_domain": "solvanam.com", "title": "ஐபிஎல் -10 : க்ரிக்கெட் கோலாகலம் – சொல்வனம் | இதழ் 256 | 10 அக். 2021", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 256 | 10 அக். 2021\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nஐபிஎல் -10 : க்ரிக்கெட் கோலாகலம்\nஐபிஎல் (Indian Premier League)-க்கு வயது பத்தாகிவிட்டது. நேற்றுதான் பிறந்ததுபோல் இருக்கிறது. பெண்பிள்ளையைப்போல் வேகமாக வளர்ந்து பெரிசாகிவிட்டது; சந்தேகமில்லை\nஇந்த வருட ஐபிஎல் க்ரிக்கெட் ரசிகர்களிடையே வழக்கமான குதூகலத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் ஆரம்பித்தாலும், துவக்கத்திலேயே பல முக்கிய வீரர்களைக் காயங்களால் இழந்துவிட்டிருந்தது. விராட் கோஹ்லி, கே.எல்.ராகுல், அஷ்வின், முரளி விஜய், ரவீந்திர ஜடேஜா, டி வில்லியர்ஸ், மிட்ச்செல் மார்ஷ் (Mitchel Marsh) என நீண்டு ரசிகர்களை சோர்வுக்குள்ளாக்கிய பட்டியலது. சில மேட்ச்சுகளுக்குப்பின் கோஹ்லி, ஜடேஜா, டி வில்லியர்ஸ் போன்றோர் மைதானத்துக்குத் திரும்பிவிட்டனர். மற்றவர்களுக்கு இந்த யோகமில்லை. ப்ரதான ஸ்பின்னரான அஷ்வினை இழந்த புனே அணி, ஐபிஎல் ஏலத்தில் வாங்கப்படாத, தென்னாப்பிரிக்காவின் ஸ்பின்னர் இம்ரான் தாஹிரை சேர்த்துக்கொண்டது. இதேபோல் காயத்தால் விலகிய மிட்ச்செல் மார்ஷுக்கு பதிலாக, 17-வயதான தமிழ்நாடு ஸ்பின்னர் வாஷிங்டன் சுந்தரை அணியில் சேர்த்தது. இந்த சாதுர்ய முடிவுகள் புனேயின் ஐபிஎல்-10 பயணத்தில்தான் எவ்வளவு வசதியாக அமைந்தன\nவிராட் கோஹ்லி இல்லாத நிலையில், துவக்கப் போட்டிகளில் ஆல்ரவுண்டர் ஷேன் வாட்சன் பெங்களூர் அணிக்குத் தலைமை தாங்கினார். முரளி விஜய்யை இழந்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, க்ளென் மேக்ஸ்வெல்லைக்(Glenn Maxwell) கேப்டனாக்கியது. புனே அணி ஸ்டீவ் ஸ்மித்தை இந்த ஆண்டு தன் புதிய கேப்டனாக நியமித்தது.\nசிறப்பான வேக, சுழல் பந்துவீச்சு அவ்வப்போது காணக்கிடைத்தாலும், போட்டிகளின் துவக்கத்திலிருந்தே பேட்ஸ்மன்கள் தங்கள் அதிரடி அலைகளைப் பரப்பி நின்றார்கள். ஹைதராபாதில் ஆரம்பித்த முதல் போட்டி (5-4-17) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கிடையே விளையாடப்பட்டது. முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் 207 ரன்கள் குவித்து உற்சாகப் பட்டாசைக் கொளுத்திப்போட்டது. ஷிகர் தவன் 77, யுவராஜ் சிங் 62 ரன்கள் விளாசினர். கோஹ்லி, டி வில்லியர்ஸ் இல்லாத பெங்களூரு அணி, கிறிஸ் கேல்(Chris Gayle) விளையாடியும் இலக்கை எட்டமுடியாமல் தோற்றது. இந்தப் போட்டி தவிர இந்த வருட ஐபிஎல்-இல் 200-க்கும் அதிகமான ஸ்கோர்கள் மேலும் 7 போட்டிகளில் நிகழ்ந்தன; அதிகபட்ச ரன்கள் குவித்து ரசிகர்களைக் குதூகலிக்கவைத்த இப்போட்டிகளின் சாராம்சம் இப்படி இருந்தது:\nஏப்ரல் 11-ல் நடந்த போட்டியில் புனே அணிக்கெதிராக டெல்லி டேர்டெவில்ஸ் 205 ரன்களை எடுத்தது. துவக்க ஆட்டக்காரரான சஞ்சு சாம்ஸன் சதமெடுத்துக் கலக்கினார். பதில்கொடுக்க முயன்ற புனே, திக்கித் திணறி 108-ல் காலியானது. டெல்லியின் ஸ்பின்னர் அமித் மிஷ்ரா 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.\nராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், குஜராத் லயன்ஸை ஏப்ரல் 18-ஆம் தேதிச் சந்தித்தது. 38 பந்தில் 77 ரன்னெடுத்து சீறிய க்றிஸ் கேலின் (Chris Gayle) துணையுடன்205 ரன் குவித்து அதிரவைத்தது பெங்களூர். குஜராத் 192-வரை வந்து தோற்றது. பெங்களூரின் சுழல்வீரர் யஜுவேந்திர சாஹலுக்கு 3 விக்கெட்டுகள்.\n200-க்கு மேலான ரன் வேட்டையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் தன் பேட்டிங் வலிமையை மீண்டும் நிரூபித்துக் காட்டியது. ஏப்ரல் 28-ல் நடந்த போட்டியில் பஞ்சாபிற்கெதிராக 207 எடுத்தது. நல்ல துவக்கம் தந்த ஷிகர் தவண் 77 ரன்கள். பஞ்சாபின் கதையோ 181-லிலேயே முடிந்துபோனது. ஹைதராபாதின் இளம் வேகப்பந்துவீச்சாளர் சித்தார்த் கௌல் 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.\n30 ஏப்ரலில் நிகழ்ந்த கொல்கத்தாவிற்கெதிரான போட்டியில் 209 ரன்னெடுத்து அசத்தியது முதலில் ஆடிய ஹைதராபாத் அணி. கேப்டன் டேவிட் வார்னரின் அதிரடி சதம் (126) ரசிகர்களைக் சீட்டிலிருந்து எகிறவைத்தது. பதில்கொடுக்கவந்த கொல்கத்தா முடியாமல், 161-ல் ஆட்டம் இழந்தது. ஹைதராபாதின் புதியவேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் நன்றாக வீசினார்; 2 விக்கெட்டுகள் அவருக்கு.\nபோனவருட சோகக்கதையைத் தொடராமல், இந்த வருடம் எப்படியாவது சாதிக்கவேண்டும் என்கிற முனைப்பிலிருந்த குஜராத் லயன்ஸ் அணி டெல்லி டேர்டெவில்ஸுக்கெதிரான போட்டியில் (4-5-17) 208 ரன்னெடுத்து ரசிகர்களைக் கவர்ந்தது. சுரேஷ் ரெய்னா 77 எடுத்து சிறப்பான தலைமை கொடுத்தார். ஆனால் சவாலை எதிர்கொண்ட டெல்லி அணி 214 ரன் என எகிறிப் பட்டாசு கொளுத்தியது டெல்லியின் இளம் பேட்டிங் புயல் ரிஷப் பந்த் 43 பந்துகளில் 97 ரன் எனத் தூள்கிளப்பினார்.\nடெல்லி அணிக்கெதிரான இன்னொரு போட்டியில் (6-5-17), மும்பை அணி 212 என ஸ்கோரில் காட்டியது. துவக்க ஆட்டக்காரர் லெண்டல் சிம்மன்ஸ் 43 பந்துகளில் 66 எடுத்தார். எதிர்த்தாடிய டெல்லியின் நிலையோ அந்தோ பரிதாபம். மும்பையின் கரன் ஷர்மா 3 விக்கெட்டுகளை வீழ்த்த, வெறும் 66 ரன்களில் டெல்லி மூட்டையைக் கட்டியது. டெல்லி ரசிகர்களுக்கு இந்த ஐபிஎல்-இல் வாழ்க்கை வெறுத்துப்போனது இந்த மேட்ச்சில்தான்.\nபோனவருடம் கடைசிவரிசையில் களைத்து நின்றிருந்த பஞ்சாப், இந்தவருடம் தன்னாலும் 200-ஐத் தாண்டமுடியும் என்று காண்பித்தது. மே 11-ல் நடந்த போட்டியில், வலுவான மும்பை அணிக்கெதிராய் 230 ரன்னெடுத்துப் பரபரப்பை ஏற்படுத்தியது பஞ்சாப். அதன் விக்கெட்கீப்பர் வ்ருத்திமான் சாஹா 55 பந்துகளில் 93 ரன் என பேட்டிங் ஜாலம் காட்டினார். மும்பையும் விடாது இலக்கைத் துரத்தித் தன் ரசிகர்களை மகிழ்வித்தும், கடைசியில் 5 ரன் வித்தியாசத்தில் பஞ்சாபிடம் தோற்றது. High-scoring thriller.\n200, 230 என்றெல்லாம் அணிகளின் ஸ்கோர்கள் தவ்விய கதைகளைப் பார்த்தால் போதுமா நூறுக்கும் கீழே அணிகள் நொறுங்கிவிழுந்த ஐபிஎல்-இன் அபத்தக்கதைகளைப் பார்க்கவேண்டாமா நூறுக்கும் கீழே அணிகள் நொறுங்கிவிழுந்த ஐபிஎல்-இன் அபத்தக்கதைகளைப் பார்க்கவேண்டாமா போனவருடம் கீழ்வரிசையில் இருந்த பஞ்சாப் இந்தவருடம் முதல் நாலுக்குள் வரக் கடும் முயற்சி செய்தது. மும்பைக்கெதிராய் 230 போட்டுக் கலக்கிய இந்த அணி, டெல்லியையும் ஒருகை பார்த்தது. ஏப்ரல் கடைசிநாளில் நடந்த ஆட்டத்தில் சூப்பர் பௌலிங், ஃபீல்டிங் என ஆவேசம் காட்டி டெல்லி டேர்டெவில்ஸை 67 ரன்களில் சுருட்டி எறிந்தது. பஞ்சாபின் சந்தீப் ஷர்மா ஸ்விங் வித்தை காட்டி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். டெல்லிக்கு இந்த அவமானம் போதாதென்று விக்கெட் இழப்பின்றி இலக்கை எட்டி அசத்தியது பஞ்சாப். மார்ட்டின் கப்ட்டில் அணி எடுத்த 68-ல் 50 ரன்களை தானே எடுத்து நாட்-அவுட்டாக நின்றார்.\nஆனால் கிங்ஸ் லெவன், பஞ்சாப் அணியின் யோகம் மே 14-ல் புனே அணிக்கெதிராக நடந்த போட்டியில் தலைகீழானது. முதலில் ஆடிய பஞ்சாப் தடுமாறி 73 ரன்களில் சுருண்டது. புனேயின் வேகப்பந்துவீச்சாளர் ஷர்துல் டாக்குருக்கு 3 விக்கெட்டுகள் என இதில் பங்கு. புனே ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து எளிதாக வென்றது..\nமேற்சொன்னதைவிடவும் படுபாடாவதியான, ஐபிஎல் சரித்திரத்தின் மிகமோசமான பேட்டிங் ஒன்று ஆரம்பநிலைப் போட்டி ஒன்றில் நிகழ்ந்தது. கோஹ்லி தலைமையிலான பெங்களூர், கௌதம் கம்பீர் தலைமை வகிக்கும் கொல்கத்தா அணிக்கெதிராக மோதும்போதெல்லாம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்புகள் அதிகம்தான். சிலவருடங்கள் முன்பு ரஞ்சிக் கோப்பை போட்டியொன்றில், கோலியும் கம்பீரும் ஒருவரை ஒருவர் அடிக்கப்போகும் அளவுக்கு ரோஷம் காட்டியது ரசிகர்களின் நினைவுக்கு அடிக்கடி வருவதே இதற்கு மூலகாரணம் – என்ன செய்வது, பழைய கதைகளை மனம் மறக்கமாட்டேன் என்கிறதே கொல்கத்தாவில் 23 ஏப்ரலில் நடந்த ஐபிஎல் போட்டியில் பெங்களூருக்கெதிராக கொல்கத்தா தட்டுத்தடுமாறி 131 ரன்னெடுத்தது. சுழல்சிங்கம் யஜுவேந்திர சாஹலுக்கு விக்கெட்டுகள் மூன்று. கோஹ்லி & கோ. குஷியில் இருந்தனர். ஆனால் அவர்கள் பேட்டிங் செய்கையில் என்ன நடந்தது கொல்கத்தாவில் 23 ஏப்ரலில் நடந்த ஐபிஎல் போட்டியில் பெங்களூருக்கெதிராக கொல்கத்தா தட்டுத்தடுமாறி 131 ரன்னெடுத்தது. சுழல்சிங்கம் யஜுவேந்திர சாஹலுக்கு விக்கெட்டுகள் மூன்று. கோஹ்லி & கோ. குஷியில் இருந்தனர். ஆனால் அவர்கள் பேட்டிங் செய்கையில் என்ன நடந்தது கொல்கத்தாவின் வேக, சுழல்வீரர்களை பெங்களூரினால் சமாளிக்க முடியவில்லை. 49 என்கிற கேவலமான ஸ்கோரில் வீழ்ந்தது பெங்களூர். பத்து ஓவருக்குள் முடிந்தது அதன் கதை கொல்கத்தாவின் வேக, சுழல்வீரர்களை பெங்களூரினால் சமாளிக்க முடியவில்லை. 49 என்கிற கேவலமான ஸ்கோரில் வீழ்ந்தது பெங்களூர். பத்து ஓவருக்குள் முடிந்தது அதன் கதை வேகப்பந்து வீச்சாளர் காலின் டி க்ராண்ட்ஹோம் (Colin de Grandhomme) 1.4 ஓவர்களில் நாலே ரன் கொடுத்து மூன்று விக��கெட்டைச் சாய்த்தார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். என்னதான் பெங்களூர் இந்த வருடம் சரியாக ஆடவில்லை என்றாலும் இது அதலபாதாளம். யாரும் எதிர்பார்க்காதது. என்ன செய்வது கண்ணு, இது ஐபிஎல் \nPlay off matches – Qualifier-1: மே 16-ல் நடந்த முதல் ப்ளே-ஆஃப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ், ரைசிங் புனே சூப்பர்ஜெயண்ட்டைச் சந்தித்தது. முதலில் ஆடிய புனே அணி 4 விக்கெட்டிற்கு 162 எடுத்தது. அஜின்க்யா ரஹானே 56, மனோஜ் திவாரி 58 என எடுத்தனர் எனினும் தோனி தூள்கிளப்பிய 40 ரன்கள் (26 பந்து, 5 சிக்ஸர்) இல்லாமல் புனே 150-ஐயே நெருங்கியிருக்க வாய்ப்பில்லை. பதில் கொடுக்க இறங்கிய மும்பையின் பேட்டிங்கில் ‘தம்’ இல்லை. பார்த்தீவ் பட்டேலின் 52-ஐத் தவிர, ரோஹித் ஷர்மா, நிதிஷ் ரானா, போலார்ட் என்று செல்லும் அணியில் ஒருவரும் எடுபடாத நாளில் மும்பைக்குத் தோற்பதைத் தவிர வேறு வழி 142 மட்டுமே எடுத்துத் தோற்றது. புனேயின் வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.\nபோனவருடம் தடுமாறித் தடம்புரண்ட புனே, இந்த வருடம் புதிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தின் தலைமையில் தன் திறமையை வெளிப்படுத்தி சிறப்பாக ஆடியது. ஐபிஎல் இறுதியில் நுழைந்து புனே ரசிகர்களுக்குப் போதையூட்டியது.\nடேவிட் வார்னர், ஷிகர் தவன் ஆகியோரின் பேட்டிங், புவனேஷ்வர் குமார், முஹமது சிராஜ் ஆகியோரின் சாதுர்ய பௌலிங் என இதுவரைக் களைகட்டிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத், இன்னொரு ப்ளே-ஆஃப் போட்டியில் (eliminator match) கொல்கத்தாவைச் சந்தித்தது. இடையில் புகுந்து தன் ஆட்டத்தைக் காண்பித்த மழை, கடந்த வருட சேம்பியனான ஹைதராபாத் அணியின் விதியையே மாற்றிப்போட்டது. கம்மி ஸ்கோர் மேட்ச்சில் 50-ஓவர் விளையாடியும் ஹைதராபாத் அணியால் 128-தான் எடுக்க முடிந்தது. வேகப்பந்துவீச்சாளர்கள் நேத்தன் கோல்ட்டர்-நைல்(Nathan Coulter-Nile) மற்றும் உமேஷ் யாதவ் சிறப்பாக வீசி முறையே 3, 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். கொல்கத்தா அணி ஆடுமுன் வந்த மழை, கணக்கை வேகமாக மாற்றியது. நீண்ட மழை-இடைவெளிக்குப்பின் திரும்பிய கொல்கத்தாவிற்கு 6 ஓவர்களில் 48 என நிர்ணயிக்கப்பட்டது; டிஎல்எஸ்(Duckworth-Lewis-Stern)-முறையின் கைங்கர்யம். வெற்றிக்குப் பாடுபடவேண்டிய அவசியமில்லாமலே கொல்கத்தாவின் தட்டில் வந்து விழுந்தது பழம். ஐபிஎல் தொடர் முழுதும் சிறப்பாக ஆடிய ஹைதராபாத் அணி, மழைத்தேவனின் சூழ்ச்சியால் இந்த வருட ஐபிஎல்-ஐ விட்டுப் பரிதாபமாக வெளியேற நேர்ந்தது.\nQualifier-2: மேற்சொன்ன எலிமினேட்டர் போட்டியில் வென்றதால் கொல்கத்தா, மும்பை அணியை க்வாலிஃபையர்-2 போட்டியில் சந்தித்தது. இதுவரை அபாரமாக ஆடிவந்த கொல்கத்தா நைட்ரைடர்ஸுக்கு இந்தப் போட்டியில் என்ன வந்தது மும்பையின் பந்துவீச்சாளர்களுக்குமுன், கொல்கத்தாவிற்கு விழிபிதுங்கியது. ரன்கள் வருமுன்னாலேயே க்றிஸ் லின், கௌதம் கம்பீர், ராபின் உத்தப்பா என்று வரிசையாக நடையைக் கட்டினர். சூரியகுமார் யாதவின் 31-தான் டாப்-ஸ்கோர். வேகப்பந்துவீரர் ஜஸ்ப்ரித் பும்ரா (Jasprit Bumrah) 3 ஓவரில் 3 விக்கெட், ஸ்பின்னர் கரன் ஷர்மா 4 ஓவரில் 4 விக்கெட் என மிரட்டி, கொல்கத்தா வீரர்களைப் புரட்டி எடுத்தனர். கொல்கத்தா 107 ரன்களில் ஆட்டமிழந்தது.\nஐபிஎல்-10-ன் இறுதிக்குச் செல்ல, 108 என்கிற இலக்கைத் துரத்தியது மும்பை இந்தியன்ஸ் அணி. இத்தகைய முக்கியமான போட்டியில் லெண்டல் சிம்மன்ஸ், பார்த்தீவ் பட்டேல், அம்பத்தி ராயுடு ஆகிய மும்பைப்புலிகள் தடுமாறி வீழ்ந்தனர். கேப்டன் ரோஹித் ஷர்மா 26 எடுத்தார். இறுதியில், க்ருனால் பாண்ட்யா 30 பந்துகளில் 45 ரன்கள் எனக்காட்டிய அதிரடி கைகொடுக்க, மும்பை வென்றது; ஐபிஎல்-10 ஃபைனலுக்குள் ப்ரவேசித்தது.\nபுனே-மும்பை மோதிய ஐபிஎல் இறுதிப்போட்டி: மே 21-ஆம் தேதி ஹைதராபாதில் நடந்தது ஐபிஎல்-10-ன் இறுதிப்போட்டி. டெண்டுல்கர் ஆட்ட ஆரம்பத்தில் மைதானம்பற்றிச் சொல்கையில், அதிகபட்ச ஸ்கோர் தரும் மைதானம் என்றார். ஆனால் அப்படி நடக்கவில்லை. முதலில் ஆடிய மும்பை அணி சரியான துவக்கம் பெறவில்லை. ஆரம்பநிலை ஆட்டங்களில் வழக்கமாக நன்றாக ஆடிய நிதிஷ் ரானாவுக்கு பதிலாக அம்பத்தி ராயுடு ஆடவந்தார். புனேயின் பௌலிங்கை ஜெயதேவ் உனாத்கட்டும், ஸ்பின்னர் வாஷிங்டன் சுந்தரும் ஆரம்பித்துவைத்தனர். அதிசிக்கனமாக வீசிய சுந்தர் 4 ஓவர்களில் 13 ரன்கள் மட்டுமே கொடுத்தார். படேல், சிம்மன்ஸ், ராயுடு வந்தனர்; சென்றனர். உனாத்கட் துவக்க ஆட்டக்காரர்களை அனாயாசமாகத் தூக்கிவிட, ஆடம் ஜாம்பா(Adam Zamapa), டேனியல் க்றிஸ்டியன் (Daniel Christian) தலா 2 விக்கெட் என சாய்க்க, புனேயின் திறமையான பந்துவீச்சில் மும்பை விக்கெட்டுகளை சீரான இடைவெளியில் பறிகொடுத்தது. ரோஹித் ஷர்மா 24, க்ருனால் பாண்ட்யா 47 – முக்கிய ஸ்கோர்கள். 129 ரன்னில் ஆட்டமிழந்து தவித்தது மும்பை.\nபுனே அணிக்கு ஐபிஎல் கப் தன் கைக்குவந்துவிட்டது என்கிற நினைப்பு வந்துவிட்டதோ மும்பைக்கு சிறப்பாகத் துவக்கம் தரும் ராஹுல் த்ரிப்பாட்டி (Rahul Tripathi) இந்தமுறை ஏமாற்ற, அஜின்க்யா ரஹானே 44 ரன் எடுத்து ஆரம்பித்துவைத்தார். மும்பை மிட்ச்செல் ஜான்சன், பும்ரா ஆகிய வேகப்பந்துவீச்சாளர்களைக்கொண்டு கடுமையாகத் தாக்க, ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் புனே தடுமாறியது. ’ஃபீல்டிங்கிற்கேற்றபடி நான் பந்துவீசுவதில்லை; மூளையில்லாத பௌலர் நான் மும்பைக்கு சிறப்பாகத் துவக்கம் தரும் ராஹுல் த்ரிப்பாட்டி (Rahul Tripathi) இந்தமுறை ஏமாற்ற, அஜின்க்யா ரஹானே 44 ரன் எடுத்து ஆரம்பித்துவைத்தார். மும்பை மிட்ச்செல் ஜான்சன், பும்ரா ஆகிய வேகப்பந்துவீச்சாளர்களைக்கொண்டு கடுமையாகத் தாக்க, ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் புனே தடுமாறியது. ’ஃபீல்டிங்கிற்கேற்றபடி நான் பந்துவீசுவதில்லை; மூளையில்லாத பௌலர் நான்’ என்று ஒரு நேர்காணலில் சொன்ன ஜான்சன் இந்தமுறை என்ன செய்தார்’ என்று ஒரு நேர்காணலில் சொன்ன ஜான்சன் இந்தமுறை என்ன செய்தார் ஸ்மித் வேகப்பந்துகளைப் பாய்ந்து பாய்ந்து தட்டிவிட, ரோஹித் ஜான்சனைக் கூப்பிட்டு ‘இவனுக்கு வேகத்தைக் குறைச்சுப்போடப்பா ஸ்மித் வேகப்பந்துகளைப் பாய்ந்து பாய்ந்து தட்டிவிட, ரோஹித் ஜான்சனைக் கூப்பிட்டு ‘இவனுக்கு வேகத்தைக் குறைச்சுப்போடப்பா’ என்றிருக்கிறார். சொன்னபடி கேட்ட ஜான்சனுக்கு ஸ்மித்தின் விக்கெட் கிடைத்தது. தோனியை பும்ரா தீர்த்துக்கட்ட, பின் வந்த மனோஜ் திவாரியை வீட்டுக்கு அனுப்பினார் ஜான்சன். இருந்தும் இலக்கை நோக்கி இன்ச், இன்ச்சாக நகர்ந்தது புனே.\nஐபிஎல் 10-ன் கடைசிப் பந்தை வீசினார் ஜான்சன். புனே 126/6. வெற்றிக்குத் தேவை 4 ரன்கள். முழு லென்த்தில் நேராக வந்த பந்தை ஸ்கொயர்லெக் திசையில் அடித்தார் க்றிஸ்டியன். பௌண்டரி இல்லை. தடுமாறிய ஃபீல்டர் சுஜித் பந்தை பௌண்டரி ஆகாமல் எப்படியோ தடுத்து பட்டேலுக்கு திருப்பி வீசினார். இதற்குள் 2 ரன்கள் எடுக்கப்பட்டு மூன்றாவது ரன்னுக்காகப் பாய்ந்துகொண்டிருந்தார் வாஷிங்டன் சுந்தர். ஆனால் அவரை முந்திக்கொண்டு விக்கெட்கீப்பரின் கையில் பந்துவந்துவிட பெயிலைத் (bails) தட்டிவிட்டு புனேயின் கதையை முடித்தார் பார்த்தீவ் படேல். அப்பாடி இல்லை. தடுமாறிய ஃபீல்டர் சுஜித் பந்தை பௌண்டரி ஆகாமல�� எப்படியோ தடுத்து பட்டேலுக்கு திருப்பி வீசினார். இதற்குள் 2 ரன்கள் எடுக்கப்பட்டு மூன்றாவது ரன்னுக்காகப் பாய்ந்துகொண்டிருந்தார் வாஷிங்டன் சுந்தர். ஆனால் அவரை முந்திக்கொண்டு விக்கெட்கீப்பரின் கையில் பந்துவந்துவிட பெயிலைத் (bails) தட்டிவிட்டு புனேயின் கதையை முடித்தார் பார்த்தீவ் படேல். அப்பாடி ஐபிஎல்-10 கோப்பை மும்பையின் கையில் வந்து உட்கார்ந்தது ஐபிஎல்-10 கோப்பை மும்பையின் கையில் வந்து உட்கார்ந்தது மைதானம் குதூகலத்தில் எகிறிக் குதித்தது.\nசிறப்பாக விளையாடிய ரைசிங் புனே சூப்பர்ஜெயண்ட், இறுதியில் ஒரே ரன்னில் தனக்குக் கிடைத்திருக்கவேண்டிய முதல் ஐபிஎல் கோப்பையைத் தவறவிட்டது புனே ரசிகர்களுக்கு ஏமாற்றம்தான். ஆனால் பொதுவாக க்ரிக்கெட் ரசிகர்களுக்கு இந்த இறுதிப்போட்டி ஒரு edge of the seat excitement. அடுத்த ஐபிஎல் வரும்வரை இதைப் பேசிக்கொண்டிருக்கலாம். 2018 ஐபிஎல்-இல் கதையும் மாறும்; காட்சியும் மாறும்\nஐபிஎல் 10, தொடரினூடே, இன்னும் என்னென்னவற்றையெல்லாமோ நிகழ்த்திக்காட்டியது சூப்பர்-ஓவர் மேட்ச் ஒன்றையும் ரசிகர்களுக்குத் தந்து களிப்பூட்டியது அது. ஏப்ரல் 29-ல் குஜராத்தின் ராஜ்கோட்டில் நடந்த போட்டியில் குஜராத் அணி 153 ரன்கள் எடுத்தது. பதில் கொடுக்கமுயன்ற மும்பை அணி 153-ல் ஆல்=அவுட் ஆகி, போட்டியை சூப்பர்-ஓவருக்குத்தள்ளிச் சென்றது. ஜேம்ஸ் ஃபாக்னர் வீசிய சூப்பர் ஓவரில் 11 ரன் எடுத்தது மும்பை. ஜஸ்ப்ரித் பும்ராவின் அபார பந்துவீச்சினால் குஜராத் 6 ரன்கள் மட்டுமே எடுத்துத் தோற்றது.\nராஜ்கோட்டில், ஏப்ரல் 7 அன்று குஜராத் லயன்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸுடன் மோதிய இந்த வருடத்தின் மூன்றாவது போட்டியில், கேப்டன் சுரேஷ் ரெய்னா 68 நாட்-அவுட், தினேஷ் கார்த்திக் 25 பந்துகளில் 47 என எடுக்க, குஜராத் நன்றாகத்தான் ஆடியது. 183 என்கிற கௌரவஸ்கோரை அடித்த குஜராத்தை, கொல்கத்தா விக்கெட் ஏதும் இழக்காமலேயே வென்று கொக்கரித்தது குஜராத் ரசிகர்களைக் கடுப்பேற்றியது கொல்கத்தா அணியின் துவக்க ஆட்டக்காரர் க்றிஸ் லின் 41 பந்துகளில் 93 ரன்கள் என ஆவேசம்காட்டி பார்ப்போரைக் கிறுகிறுக்கவைத்தார். கௌதம் கம்பீர் 76.\nஐபிஎல்-10 இதோடு விடவில்லை. ஒரே நாளில் நடந்த இருபோட்டிகளில் இரண்டு பௌலர்கள் ஹாட்ரிக் விளாசிய அதிசயத்தையும் காண்பித்தது ஏப்ரல் 14-ல் நடந்த பெங்களூ���்-மும்பை போட்டியில் பெங்களூர் அணியின் சுழல்பந்து வீரர் சாமுவேல் பத்ரீ முதல் ஹாட்ரிக்கை எடுக்க, அடுத்த மேட்ச்சில் குஜராத்தின் வேகப்பந்துவீச்சாளர் ஆண்ட்ரூ டை (Andrew Tye), புனே அணிக்கெதிராக ஹாட்ரிக் எடுத்து ரசிகர்களை ஆரவாரப்படுத்தினார்.\nஇந்தவருடத் தொடரில் ஐந்து சதங்கள் விளாசப்பட்டன. டெல்லியின் சஞ்சு சாம்ஸன், ஹைதராபாதின் டேவிட் வார்னர், புனே அணியின் பென் ஸ்டோக்ஸ் (Ben Stokes), பஞ்சாப் அணியின் ஹஷீம் ஆம்லா ஆகியோர் சதமடித்த ஜாம்பவான்கள். ஆம்லா ஒருபடி மேலேபோய் இரண்டு சதங்களை விளாசி ரசிகர்களைக் கிளுகிளுக்கவைத்தார்.\nஐபிஎல்-10, டி-20 மேட்ச்சுகளில் ஸ்பின் பௌலர்களைப் பொதுவாகக் கேப்டன்கள் எவ்வளவு தூரம் நம்பியிருக்கிறார்கள் என்பதை மீண்டும் நிரூபித்தது. குறிப்பாக கம்பீரின் கொல்கத்தா அணி. என்னதான் கம்பீர், உத்தப்பா, லின் (Chris Lynn) ஆகியோர் சிறப்பாக பேட்டிங் செய்தாலும், குல்தீப் யாதவ், சுனில் நரைன், பியுஷ் சாவ்லா ஆகிய ஸ்பின்னர்களின் தாக்கம் கொல்கத்தாவின் வெற்றிகளில் நன்றாகத் தெரிந்தது. புனே அணியில் ஆரம்பத்திலிருந்தே இம்ரான் தாஹிரும், இறுதிப் போட்டிகளில் வாஷிங்டன் சுந்தரும் முக்கிய பௌலர்களாகத் திகழ்ந்தனர். அதேபோல் ஹைதராபாத் அணியில் ரஷீத் கான். பெங்களூர் அணியில் யஜுவேந்திர சாஹல், சாமுவேல் பத்ரீ(Samuel Badree), பவன் நேகி ஆகியோரும். மும்பை அணியில் க்ருனால் பாண்ட்யா, கரன் ஷர்மா, டெல்லிக்கு அமித் மிஷ்ரா – ஆகியோரும் அவரவர்களின் அணிக்கு பயனுள்ள பங்களிப்பை செய்திருக்கின்றனர்.\nமுன்னணி வேகப்பந்துவீச்சாளர்கள் என சன்ரைசர்ஸ் ஹைதராபாதின் புவனேஷ்வர் குமார் மற்றும் ரைசிங் புனே சூப்பர்ஜெயண்ட்டின் ஜெயதேவ் உனாத்கட்டை (Jayadev Unadkat) முக்கியமாகக் குறிப்பிடவேண்டும். அபாரமான ஸ்விங் பௌலிங் திறமையை வெளிப்படுத்தி எதிரிகளின் விக்கெட்டுகளை சூறையாடியவர்கள்.\nஐபிஎல் 10-ன் சிறந்த புதுமுகங்கள் யார் இவர்களைச் சொல்லலாம்: மும்பையின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மன் நிதிஷ் ரானா, புனேயின் துவக்க ஆட்டக்காரர் ராஹுல் த்ரிப்பாட்டி மற்றும் ஆஃப்-ஸ்பின்னர் வாஷிங்டன் சுந்தர், டெல்லியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மன் ரிஷப் பந்த் (Rishab Pant), ஹைதராபாதின் சுழல்வீரர் ரஷித் கான் மற்றும் வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ், குஜராத்தின் பாஸில் தம்பி (Basil Thampi) – பந்தை 143-145 கி.மீ. எனப் பறக்கவிட்ட வேகப்பந்துவீச்சாளர்.\nSensations of IPL 10 என ரஷீத் கானையும், ரிஷப் பந்தையும் குறிப்பிடலாம். இந்த ஐபிஎல்-இன் இன்னுமொரு ‘முதல்’, ஆஃப்கானிஸ்தானின் வீரர்கள் பங்கேற்றது. தன்மீது நம்பிக்கை வைத்து ஏலமெடுத்த ஹைதராபாத் அணிக்கு சிறப்பான பங்களிப்பைச் செய்தார் ஆஃப்கன் பதின்மவயது சுழல்பந்துவீரர் ரஷீத் கான். அபாரம். (ஐபிஎல்-இல் பங்கேற்ற இன்னுமொரு வீரர் முகமது நபி). சமீபத்தில் முடிந்த விண்டீஸ் (வெஸ்ட் இண்டீஸ்)-க்கு எதிராக ஆஃப்கானிஸ்தான் விளையாடிய ஒருநாள் போட்டியில் 7 விக்கெட்டுகள் எடுத்து விண்டீஸை கதி கலங்கவைத்ததோடு, உலக கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் இந்த ரஷீத், ஐபிஎல் சாதனை கொடுத்த உத்வேகம் அவரில் வேலை செய்கிறது – சந்தேகமில்லை.\nவாஷிங்டன் சுந்தரைப் போலவே, ரிஷப் பந்த் இந்தியாவின் 2016-ஆம் வருட Under-19 உலகக்கோப்பை அணியைச் சேர்ந்தவர். அதிரடி மிடில்-ஆர்டர் பேட்ஸ்மன். ஐபிஎல்-10-இல் மிகச் சிறப்பான ஆட்டத்திறனைக் காண்பித்திருக்கிறார் பந்த். ’இவர் விளையாடுவதைப் பார்க்கையில் யுவராஜ், ரெய்னாவின் கலவையோ எனத் தோன்றுகிறது’ என்கிறார் டெண்டுல்கர். ஒரு-நாள், டி-20 ஆட்டங்களில், இந்தியாவின் எதிர்கால அதிரடிவீரராக இவர் மலர்வாரா என்பதைக் காலம்தான் சொல்லவேண்டும்.\nPrevious Previous post: ஒரு படத்தைப் பார்த்து அது என்னவென்று எப்படி கணினி கண்டுபிடிக்கிறது\nNext Next post: நாம் ஏன் போரிடுகிறோம்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவக் கட்டுரை அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அயல் விழா அரசியல் அரசியல் கட்டுரை அறிவிப்பு அறிவியல் அறிவியல் அதி புனைவு அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைக் கட்டுரை இசைத்தெரிவு இசையும் மொழியும் இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ��-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-232 இதழ்-233 இதழ்-234 இதழ்-235 இதழ்-236 இதழ்-237 இதழ்-238 இதழ்-239 இதழ்-24 இதழ்-240 இதழ்-241 இதழ்-242 இதழ்-243 இதழ்-244 இதழ்-245 இதழ்-246 இதழ்-247 இதழ்-248 இதழ்-249 இதழ்-25 இதழ்-250 இதழ்-251 இதழ்-252 இதழ்-253 இதழ்-254 இதழ்-255 இதழ்-256 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய வரலாறு இலக்கிய விமர்சனம் இலக்கியக் கட்டுரை இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக நடப்புக் குறிப்புகள் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் எழுத்து ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்ட��ரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சத்யஜித் ரே சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தழுவல் கட்டுரை தாவரவியல் தாவரவியல் கட்டுரை திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாரதியியல் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொடுவா நாட்டார் கலை பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதற்கனல் முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பு இலக்கியம் மொழிபெயர்ப்பு நாவல் மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை ரவிஷங்கர் லயம் வங்க ஓவியங்கள் வங்க மலர் வங்கச் சிறப்பிதழ் வரலாறு வரலாற்றாய்வு வரலாற்றுக் கட்டுரை வாசக அனுபவம் வாசகர் மற���வினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேதியியல் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அகிலா ஆ. அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அஞ்சலி ஸச்தேவா அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அருண்குமார் மகோபாத்யாய் அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அவீக் சாட்டர்ஜீ அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆடம் இஸ்கோ ஆண்டனி கில் ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் குமார் ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆமிராபாலன் ஆரூர் பாஸ்கர் ஆர் நித்யஹரி ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி ஆஸ்டின் சௌந்தர் இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா முருகன் இரா. அரவிந்த் இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இராம் பொன்னு இலவசக் கொத்தனார் இலா இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உ நரசிம்மன் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உலகளந்த பெருமாள் உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.என். குண்டு எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் எம்.டி வாசுதேவன் நாயர் Raja எம்.ரிஷான் ஷெரீப் எரிக் நெஹர் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் எஸ் சியூயீ லு Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கஞ்சனூர் கவிப்ரியா கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட்ராமன் கண்ணன் இராமநாதன் கதீர் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கலாப்ரியா கலைச்செல்வி கல்யாணி ராஜன் கவியோகி வேதம் கா.சிவா கா.ரபீக் ராஜா காஜி நசருல் இஸ்லாம் காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் கிருபாகரன் கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலச்சுவடு கண்ணன் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் கி. ராஜநாராயணன் கிருஷ்ண பாசு Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரி எஸ். நீலகண்டன் குமரேசன் மு. குமாரநந்தன் குமார் சேகரன் குமுதினி கூம் கூம் ராய் கெ.ம.நிதிஷ் கென் லூ கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கே.பாலசுப்பிரமணி கே.ராஜலட்சுமி கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரெக் பா(வ்)ம் க்ரேஸ் பேலி ச அர்ஜுன்ராச் ச. சமரன் ச. சிவபிரகாஷ் ச.திருமலைராஜன் சக்தி சட்டோபாத்யாய சக்தி விஜயகுமார் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய ��ாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் சமரேஷ் மஜும்தார் சரவணன் அபி சரவணன் மாணிக்கவாசகம் சரோஜ் பந்த்யோபாத்தியாய் sarvasithan சா.கா.பாரதி ராஜா சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்லி டைஸன் சார்ல்ஸ் ஸிமிக் சி.எஸ். லக்ஷ்மி Ayshwarya Shankaranarayanan சி.சு.செல்லப்பா சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி சியாம் பாரதி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. அருண் பிரசாத் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுகாந்தொ பட்டாச்சார்யா சுகுமார் ராய் சுசித்ரா பட்டாச்சாரியா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தரம் செல்லப்பா சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுனீல் கங்கோபாத்யாய் சுபத்ரா ரவிச்சந்திரன் சுபிமல் மிஸ்ரா சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் சௌதிக் பிஸ்வாஸ் ஜகதீஷ் சந்திர போஸ் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜான்பால் ரொசாரியோ ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜாஷுவா ராத்மான் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீபனானந்தா தாஸ் ஜீவ கரிகாலன் ஜீவன் பென்னி ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தா டே ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேன் ஹெர்ஷ்ஃபீல்ட் ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜொய் கோஸ்வாமீ ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த. நரேஸ் நியூட்டன் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தஸ்லிமா நஸ்ரின் தாட்சாயணி தாமரைக்கண்ணன் தாராசங்கர் பந்த்யோபாத்யாய் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் திலீபன் தீபேஷ் சக்ரபர்த்தி தீப் ஹல்தர் தென்கரை மகாராஜன் தெரிசை சிவா தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் தைஸ் லைஸ்டர் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நபரூன் பட்டாச்சார்யா நம்பி நரசய்யா நரேன் நரோபா நளினி நவநீதா தேவ் சென் நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகிலேஷ் குஹா நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு ravishankar குழு பத்மகுமாரி பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்மா ஸச்தேவ் பத்ரி சேஷாத்ரி பனபூல் பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி பா ராமானுஜம் Pa Saravanan பா.சுதாகர் பா.தேசப்பிரியா பானு கபில் பானுமதி ந. பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan பாஸ்கர் ஆறுமுகம் Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் பிபூதிபூஷன் பந்த்யோபாத்யாய் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபீர் சென் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புத்ததேவ போஸ் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம. செ. ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுமிதா மதுரபாரதி மதுரா மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் அரவிந்த டி ரெங்கநாதன் மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலேசியா ஸ்ரீகாந்தன் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாணிக் பந்தோபாத்யாய மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மாயா ஏஞ்சலொ மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ம இராமச்சந்திரன் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி முனைவர் ராஜேந்திர பிரசாத் நா மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோதி நந்தி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரக்ஷன் கிருதிக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரபீந்திர நாத் தாகூர் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமநாத் ராய் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ரிச்சர்ட் ரூஸ்ஸோ ருகையா ஷகாவத் ஹுசென் ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோகிணி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லாவண்யா சுந்தரராஜன் லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெ���்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகமாதேவி லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வசந்ததீபன் வண்ணநிலவன் வர்ஜீனியா வுல்ஃப் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜயகுமார் சம்மங்கரை விஜயலக்ஷ்மி விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வித்யா அருண் விபீஷணன் விருட்சன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேங்கட ராகவன் நா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷாங்க்யா கோஷ் ஷாதிர் ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸிர்ஷோ பந்தோபாத்யா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் கின்சர் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாரலாம்பி மார்கோவ் ஹாலாஸ்யன் ஹுமாயுன் அஹமத் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் அக்டோபர் 2021 செப்டம்பர் 2021 ஆகஸ்ட் 2021 ஜூலை 2021 ஜூன் 2021 மே 2021 ஏப்ரல் 2021 மார்ச் 2021 பிப்ரவரி 2021 ஜனவரி 2021 டிசம்பர் 2020 நவம்பர் 2020 அக்டோபர் 2020 செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப���ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும். எழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nஆன்கர் எஃப்.எம். (anchor.fm) 4\nயூடியுப் – ஒளிவனம் (YouTube) 3\nசவுண்ட் கிளவுட் (SoundCloud) 1\nஎழுத்தாளர் அம்பை: சொல்வனம் சிறப்பிதழ்கள் 0\nரொபெர்த்தோ பொலான்யோ ஆக்கங்களும் விமர்சனங்களும் 0\nவீடும் வெளியும்: கவிதைகளும் கதைகளும் 0\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவங்கச் சிறப்பிதழ் 1: 240\nவங்கச் சிறப்பிதழ் II: 241\nவி. எஸ். நைபால்: 194\nகவிதை பற்றி புதுமைப்பித்தன் கூறியவற்றுள் சில\nவிஞ்ஞான வளர்ச்சியின் வளர்ச்சி- 2\nபெருந்தேவிக்கு பி. ஜி. உடௌஸ் வேண்டாம்\nசோ - ஒரு தன்னிகரற்ற நிகழ்வு\nஆட்டத்தின் ஐந்து விதிகள் (8)\nஇந்து தர்மமும் அதன் கலாசாரப் போர்களும் (14)\nஇவர்கள் இல்லையேல் – நாவல் (3)\nகாவிய ஆத்மாவைத் தேடி (3)\nசட்டமும் செயற்கை நுண்ணறிவும் (2)\nதலை சிறந்த 10 தொழில்நுட்பம் (11)\nதேர்ந்த வாசகருக்கான படப்புத்தகம் (2)\nநோயாளி எண் பூஜ்யம் (2)\nபய வியாபாரியா ஹிட்ச்காக் (2)\nபேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் (4)\nமிளகு: இரா முருகன் – நாவல் (7)\nமுதலியத்தை எதிர்க்கும் பொதுமம் (1)\nமொபைல் தொடர்பாடல் வரலாறு (2)\nவண்ணநிலவன் நாவல்கள் பற்றி (2)\nஸ்லாட்டர்ராக்- தாமஸ் டிஷ் (2)\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nஎழுத்தாளர் இரா முருகனின் சரித்திரத் தொடர் நாவல் “மிளகு” அத்தியாயம் - ஏழு 1999 அம்பலப்புழை 35:47\nஎழுத்தாளர் தி.ஜானகிராமன் எழுதிய சிறுகதை \"செய்தி\" 21:56\nஷார்தா உக்ரா – சந்திப்பு\nஇந்திய கிரிக்கெட்டிற்கு இரட்டைத் தலைமை சரியானதா\nகில்லி, கிரிக்கெட், சந்துரு மற்றும் சந்திரன்\nஓய்வுக் காலச் சேமிப்பும் அதை அபகரிக்க அரசாங்கம் நடத்தும் போரும்\nby கடலூர் வாசு\t ஆகஸ்ட் 22, 2021\nby கா.ரபீக் ராஜா\t ஆகஸ்ட் 22, 2021\nby லியோ டால்ஸ்டாய்\t ஆகஸ்ட் 22, 2021\n”ஆசிய அமெரிக்கர்கள்” – அமெரிக்காவில் மிகையாகும் வெறுப்பரசியல்\nby லதா குப்பா\t ஆகஸ்ட் 22, 2021\nகாவிய ஆத்மாவைத் தேடி… – 2\nby ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன்\t ஆகஸ்ட் 22, 2021\nபேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்\nby பானுமதி ந.\t ஆகஸ்ட் 22, 2021\nமூத்த கதைசொல்லி – டெம்சுலா ஆவ்\nby கோரா\t ஆகஸ்ட் 22, 2021\nதொட்டாலே கண் எரியும் மிளகாயா\nby லோகமாதேவி\t ஆகஸ்ட் 22, 2021\nஷோபா சக்தியின் ‘கொரில்லா’ – ஒரு பார்வை\nby ராஜேஷ் சந்திரா\t ஆகஸ்ட் 22, 2021\nஉங்கள் மின்னஞ்சல், படைப்புகளை அனுப்ப முகவரி: solvanam.editor@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2020/04/12/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2021-10-19T12:58:45Z", "digest": "sha1:DDEZ2Z3TAJX3LIMHV7MNQKCPGULRBYYN", "length": 119827, "nlines": 287, "source_domain": "solvanam.com", "title": "கண்காட்சி – சொல்வனம் | இதழ் 256 | 10 அக். 2021", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 256 | 10 அக். 2021\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nராம்பிரசாத் ஏப்ரல் 12, 2020 3 Comments\n‘அந்த ஆண் விந்தணு சுரைக்காய்க்குள் வைக்கப்பட்டு நாற்பது ண்-நாள்கள் ஒரு குதிரையின் கர்பப்பைக்குள்ளோ அல்லது அதற்கு சமமான வேறொன்றிலோ அசைவு தெரியும் வரை வைக்கப்பட வேண்டும். இப்படிச் செய்யின் அது உருவத்தில் ஓரளவிற்கு ஒரு மனித ஆணையொத்த ஆனால் உடல் முழுவதும் ஒளி ஊடுறுவும் வகையினதாக மாறிவிடும். இதற்குப் பிறகு மனித ரத்தம் அதற்குள் புகுத்தப்பட வ��ண்டும். இப்படி நாற்பது வாரங்கள் அந்த கரு உயிர்ச் சத்தூட்டப்பட வேண்டும். பிறகு அது மீண்டும் ஒரு குதிரையின் கர்ப்பப்பையில் வளர அனுமதிக்கப்பட வேண்டும். இப்படிச் செய்தால் ஒரு பெண்ணின் கருவில் உருவாகும் மனிதக் குழந்தைப் போல் ஒரு மனித இனம் உருவாகும். ஆனால் அது உருவத்தில் மிக மிகச் சிறியதாக இருக்கும்.’\nசித்திரக் குள்ள மனிதர்களை உருவாக்க ஒரு ஜெர்மானிய ரசவாத வல்லுனரால் பரிந்துரைக்கப்பட்ட செயல்முறை விளக்கத்தின் ஒரு பகுதிதான் இது. ஆனால் நான் இப்படி உருவாகவில்லை.\nஆயினும், நான் எப்படி உருவானேன் என்பது குறித்து எனக்கே இன்றைக்கு வரை ஒரு சரியான தெளிவான வடிவம் இல்லை. நான் அவதானித்தவரை என்னை ஓர் பரிசோதனைக்கூடத்தின் உயிரியல் வல்லுனர்கள், ஆராய்ச்சியாளர்கள் உணவளித்து வளர்த்தார்கள். சமயத்தில் அவர்களின் அன்பு குறித்து நான் வியந்திருக்கிறேன். இத்தனை அன்பு கொள்ள நான் என்ன புண்ணியம் செய்திருக்கவேண்டும் அன்பில்லாவிட்டால் என்மீது அவர்களுக்கேன் அத்தனை அக்கறை\nஎன்மீது அவர்களுக்கு எத்துனை அன்பென்றால் என் உடல் நலத்தை பல்வேறு கருவிகள் கொண்டு மிக மிகக் கவனமாக அவதானித்தார்கள். நான் என்ன சாப்பிடுகிறேன், அதை எத்தனை அவுன்ஸ் சாப்பிடுகிறேன், எப்போது சாப்பிடுகிறேன் என்பதையெல்லாம் வாரக் கணக்கில் மாதக் கணக்கில் தங்கள் கணினிகளில் குறித்துக் கொண்டார்கள். அதை வைத்து ஒவ்வொரு நாளும் எனக்கான பிரத்தியேக உணவு தயாரித்தார்கள். எனக்கு கொடுக்கப்பட்ட தண்ணீர் சுத்தமாக இருக்க ஒரு தனிக் குழுவையே வைத்திருந்தார்கள். அவ்வப்போது என்னை ஓர் அறைக்குக் கொண்டு சென்று ஆளுயர கண்ணாடி முன் நிறுத்தி புகைப்படங்கள் எடுப்பார்கள்.\nஅவ்வாறு முதல் முறையாகப் புகைப்படம் எடுத்தபோது என்னை நானே கண்ணாடியில் பார்த்து சற்று அதிர்ந்துதான் போனேன். அப்போது எனக்கு பதினைந்து வயது. ஆனால், நானோ பதினைந்தே சென்டி மீட்டர் உயரம்தான் இருந்தேன். அவர்களின் அத்தனை கவனிப்புக்கு அப்பாலும் நான் 15 சென்டி மீட்டர்தான் இருந்தேன் என்பதே என்னிடம்தான் ஏதோ பிரச்சனை என்று நான் ஊகிக்கப் போதுமானதாக இருந்தது. அந்த பிரச்சனையைத்தான் அவர்கள் அத்துனை பேரும் ஒன்றாகச் சேர்ந்து சரி செய்ய முனைந்தார்கள் என்று தெரிந்தபோது அவர்கள் எப்படி என்னைப் பூப்போல பார்த்த���க் கொண்டார்கள் என்றெண்ணி நான் கரைந்தே போனேன்.\nதுவக்கத்தில் எனக்குப் பதினைந்து வயது என்பதால் நான் பதினைந்து சென்டிமீட்டர் உயரம் இருந்தேனோ என்று எண்ணினேன். ஆனால், அந்த மருத்துவக்கூடத்தில் ஒருவருக்குப் பிறந்த நாள் கொண்டாடியபோது, அவர் முப்பத்து நான்கு வயதில் நூற்றியெண்பது அடி இருப்பதை அவதானித்து என் எண்ணம் தவறு என்றுணர்ந்தேன். அப்போது எனக்குக் குழப்பமாக இருந்தது. என்னால் யாரையும் கேட்க முடியவில்லை. ஏனெனில் நான் அளவில் மிக மக்ச் சிறியதாய் மட்டுமல்லாமல், ஊமையாகவும் இருந்தேன். என்ன காரணத்தினாலோ என்னால் ஏதும் பேச முடிந்திருக்கவில்லை. நானாக ஏதேனும் வாயசைத்தாலும் என் சத்தம் எனக்கே கேட்கவில்லை. ஆனால், என்னால் மற்றவர்களின் சத்தங்களை கேட்க முடிந்தது.\nஅப்படியும் இப்படியுமாக தர்க்க ரீதியாக நானாகவே யோசித்து அவர்கள் எனக்களித்த உணவில்தான் ஏதோ பிரச்சனை என்று நான் ஓரளவு ஊகித்துக்கொண்டேன். ஆனால், நான் என்ன உணவைத்தான் உண்ண வேண்டும் என்பது குறித்து எனக்கு எந்த அவதானிப்பும் இருக்கவில்லை. ஆதலால், அத்தனை அன்புடன் அவர்கள் அந்த உணவை எனக்கு தருகிறார்கள் எனில், அந்தளவிற்கு என் உடலில் ஏதோ பிரச்சனை என்றுதான் என்னால் எடுத்துக்கொள்ள முடிந்தது.\nதோற்றத்தில் ஒரு மானுட ஆண் போல் நான் இருந்தாலும் உடல் அளவில் என்னிடம் சில மாறுதல்கள் இருந்தன. என் தலையில் முடி கொட்டிவிட்டிருந்தது. தசைகளில் இறுக்கம் இல்லை. ஆதலால் சற்றே பலவீனமாகத்தான் இருந்தன. சருமமானது நீர்ச்சத்து குன்றிப்போய் வெளிரித்தான் இருந்தது. கைகளும், கால்களும் அவ்வப்போது குளிர்ந்துவிடும். நாளின் பெரும்பாலான நேரம் உறக்கத்திலேயேதான் இருப்பேன். அது உறக்கமா, மயக்கமா என்று பிரித்தரிய எனக்குப் போதுமான அறிவிருக்கவில்லை. நானாக அதை உறக்கம் என்றுதான் ஊகித்திருந்தேன். வெகு சுலபமாக ஏதாவதொரு நோய் பீடித்தது. ஆதலால் எப்போதும் ஏதாவதொரு மருந்து உட்கொண்டவாறுதான் இருந்தேன்.\nதுவக்கத்தில் என் உடலில் ஒரு சில பாகங்களில் ஒரு சில மணி நேரங்களுக்கு சுரணையற்று போயின. பிற்பாடு அந்த சில மணி நேரங்கள் நாள்கணக்கில் நீடிக்கவும் நான் அதிர்ச்சியடைந்தேன். அப்படி நடக்கையிலெல்லாம் பரிசோதனைக்கூடத்திலிருந்து யாரேனும் ஒருவர் ஏதாவது மருந்து தருவார். அந்த சுரணை இழந��த பகுதியில் உணர்ச்சி மீளும். ஆனால் பிறிதொரு இடத்தில் சுரணை போய்விடும். அதற்கும் அவர் ஒரு மருந்து தருவார். அதை உட்கொண்டவுடன் அந்தப் பகுதி சரியாகும். ஆனால் பிறிதொரு இடத்தில் சுரணை போய்விடும். இது ஒரு சுழற்சி முறையில் நிகழத்துவங்கியது. தலைவலி, வயிற்றுவலி, முதுகு வலி போன்றவைக்கெல்லாம் பரிசோதனைக்கூடத்தில் இருந்தவர்கள் வெவ்வேறு மருந்துகளை உட்கொள்வதை பார்த்திருந்தமையால் எனக்கு இது ஒரு பெரிய விஷயமாகத் தோன்றவில்லை. ஆனாலும் அவர்கள் என் போல் அடிக்கடி மருந்து உட்கொள்ளவில்லைதான் என்பது மட்டும் லேசாக உறுத்தத்தான் செய்தது.\nஉடல் அளவில் நான் மிகச் சிறியதாகத்தான் இருந்தேன். இது அந்த பரிசோதனைக்கூடத்தில் அவர்கள் என்ன செய்தார்கள் என்பதை ஊகிக்க உதவியது. அவர்கள் ஒரு மனிதக் குள்ளனை உருவாக்க முனைந்தார்கள். நான் அவர்களுடைய பெருமைக்குரிய படைப்பு. நான் கொஞ்சம் கொஞ்சமாக என் உடல் கட்டுப்பாட்டை இழந்துகொண்டிருந்த வேளையில் என்னை உருவாக்கிய பெருமை அவர்களுள் யாரைச் சேரும் என்று அவர்கள் விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.\nஇதையெல்லாம் நான் உணரவே செய்தாலும் உள்ளுக்குள் எதுவோ இதையெல்லாம் நம்ப மறுத்தது. அவர்கள் என் மீது எல்லையில்லா அன்பைக் கொண்டிருக்கிறார்கள் என்றே நான் எனக்குள் ஒரு நூறு முறை திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டேன். அந்த ஒரு நினைப்பால் மட்டுமே என்னால் அந்த பரிசோதனைக்கூடத்தில் நடப்பவைகளைக் கடந்து போக முடிந்தது.\nஒரு நாள் நான் கண்காணிப்பு அறையில் வழமையான பரிசோதனைகளுக்கு மத்தியில் இருந்தபோது என் வலது கையிலிருந்து ஒரு விரல் தானாகத் துண்டாகி கீழே விழுந்தது. அதில் ஆச்சர்யத்தக்க விஷயம் என்னவெனில், எனக்கு வலியே இருக்கவில்லை. அது ஏதோ விரல் நகமொன்றுத் துண்டாகி விழுந்ததைப்போன்றே இருந்தது. ஒரு விரல் எப்படி தானாகவே துண்டாகிக் கீழே விழும் என்று நான் ஆச்சர்யப்பட்டேன்.\nஅதைத் தொடர்ந்து ஒட்டுமொத்தப் பரிசோதனைக்கூடமும் பரபரப்பானது. ஒரு எலும்பு நிபுணர் வந்து ஏதேதோ சோதனைகள் செய்துவிட்டு எலும்புகள் மிகவும் பலவீனமாக இருப்பதாகவும் அதனால் எலும்புகளை இணைப்பது சாத்தியமல்ல என்றும் சொன்னார். ஒரு நரம்பியல் நிபுணர் வந்து இதற்கு மேல் மயக்க மருந்து கொடுக்கப்படின் என் மூளைச் செயல் இழந்துப் போகும் என்று என்னையும் சேர்த்துப் பயமுறுத்தினார்.\nஎனக்கு அந்தப் பரிசோதனைக்கூடத்தில் என்ன விதமான பரிசோதனைகள் செய்தார்கள் என்பது குறித்து எந்த தெளிவான புரிதலும் இருக்கவில்லை. ஆனால், நான் அவர்களது பரிசோதனையில் ஒரு தடங்கலாகிவிட்டேன் என்பதை மட்டும் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. அதையெல்லாம் தாண்டி அவர்கள் எனக்குத் தொடர்ந்து உணவளித்தார்கள். ஆனால் இப்போது அந்த உணவில் எவ்விதக் கணக்குகளும் இருக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் அவர்கள் தாங்கள் உண்பதையே எனக்கும் தரத் துவங்கினார்கள். அப்படி அதற்கு முன் நிகழ்ந்ததே இல்லை.\nஅவர்களின் நடத்தையில் இருந்த மாறுதல்களை வைத்து நான் சில விஷயங்களை புரிந்து கொண்டேன். அவர்களின் அறிவியல் என் விரல்களை குணப்படுத்தும் அளவிற்கு முதிரவில்லை என்பது முதலாவதான புரிதலாக இருந்தது. தாங்கள் செய்துகொண்டிருந்த ஆராய்ச்சியைக் கைவிடுவதா அல்லது என்னைக் கைவிடுவதா என்ற கேள்வி வந்தபோது அவர்கள் என்னைக் கைவிட முடிவெடுத்தார்கள். அதை நான் முற்றிலும் எதிர்பார்க்கவில்லை.\nஎன்னை ஒரு குளிர்சாதனப் பெட்டியில் வைத்து காலித் என்பவனிடம் விற்றுவிட்டார்கள். அவர்கள் என் மீது வைத்திருந்த அன்புக்கு என்னை இறுதிவரை கைவிட மாட்டார்கள் என்று நம்பியிருந்தேன். அப்படியே கைவிட நேர்ந்தாலும் கடைசியாக ஒரு முறையேனும் எனக்கு ஒரு பிரிவுபசார விழா எடுப்பார்கள் என்று நான் நம்பி இருந்தேன். அப்படி ஏதும் நடவாதபோது நான் அதிர்ச்சியுற்றேன். ஒரு வேளை காலித்தின் ஆட்கள் அதற்கு வாய்ப்பையே வழங்கவில்லையோ என்று தோன்றியது. நான் அப்படித்தான் இருக்க வேண்டும் என்று தீவிரமாக நம்பத் துவங்கினேன். என் இழப்பு அவர்களுக்கு ஒரு பொருட்டே அன்று என்பதை நான் நம்பவே இல்லை. நான் ஏன் நம்பவேண்டும் அவர்கள் என்னை பரிபூரணமாகத்தான் விரும்பினார்கள். அந்த அன்பில் கிஞ்சித்தும் களங்கமில்லை என்பது என் நம்பிக்கையாகவே தொடர்ந்தது.\nகாலித் பற்றிச் சொல்ல வேண்டுமானால், காலித் ஒரு கடை வைத்திருந்தான். பள்ளிக்கூடங்களில் பள்ளி செல்லும் பிள்ளைகள் செய்து எடுத்துவர நிறைய ப்ராஜெக்டுகள் தருவார்கள். அவற்றைக் காலித் தன் கடையில் ஏற்கெனவே செய்து வைத்திருப்பான். அவனிடம் காசு தந்துவிட்டால் போதும். காலித் எல்லாவற்றையும் வாங்குவதில்ல���. அவனுடைய வியாபாரத்திற்கு உகந்தவைகளை மட்டுமே வாங்கும் வழக்கம் அவனுக்கு இருந்தது. கல்லூரி செல்லும் பிள்ளைகள் செய்ய வேண்டிய ப்ராஜெக்டுகளைக்கூட அவன் செய்து விற்பான். அவனுக்கென ஒரு கிடங்கும் இருந்தது. அங்கே அவனுக்கென சில தொழில் நுட்ப வல்லுனர்கள் பணியில் இருந்தார்கள். காலித் வாங்குபவைகளைச் சோதிப்பதும், அவைகளை அட்டவணைப்படுத்துவதும், ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் அவற்றை சரி செய்வதும் அவர்களது பணியாக இருந்தது.\nகாலித்தின் இணைய தளத்தில் அவனிடமிருந்த எல்லா ப்ராஜக்டுகளும் பட்டியலிடப்பட்டிருந்தன. எவருக்கு எது வேண்டுமோ அதை அவர்கள் வாங்கிக்கொள்ளலாம். அப்படி காலித்தின் இணைய தளத்தில் சற்றேறக்குறைய அறுநூறு ப்ராஜக்டுகள் பட்டிலிடப்பட்டிருந்தன.\nகாலித்தின் கிடங்கில் இரண்டு தொழில் நுட்ப வல்லுனர்கள் என்னைப் பிரித்து மேய்ந்தார்கள். என் துண்டான வலது கை விரலை அவர்கள் கவனிக்கத் தவறவில்லை. அத்துணை பாரிய பரிசோதனைக்கூடத்தில் இருந்த ஆராய்ச்சியாளர்களாலும், உயிரியல் வல்லுனர்களாலுமே சரி செய்ய முடியாத என் வலது கை விரலை இவர்கள் எவ்விதம் சரி செய்ய இருக்கிறார்கள், எனது குறையை எவ்விதம் களைய இருக்கிறார்கள் என்று எனக்கு யோசனையாக இருந்தது. அது ஒரு விதமான ஆவலையும் தூண்டியது. அவர்களில் ஒருவன் சட்டென என இடது கையிலிருந்த அதே விரலை ஒடித்து பிய்த்து எறிந்தான். இப்போது என் இரண்டு கைகளும் ஒரே விதமாக நான்கு நான்கு விரல்களுடன் சமமாக இருந்தன. அவர்கள் என் குறையைச் சரிசெய்த விதத்தில் நான் பேயறைந்தாற்போல் அதிர்ந்து ஒடுங்கினேன்.\nஅதற்குப்பிறகு அவர்களுள் ஒருவன் என்னிடம் ஒரு விதையை நீட்டினான். அதை விழுங்கவும் பணித்தான். நானும் கர்ம சிரத்தையாக அதை விழுங்கினேன். அதன் காரணமாக என் நினைவை இழந்தேன். நான் கண் விழித்தபோது என்னை ஒரு அட்டைப் பெட்டியில் இழுத்துக் கட்டி வரவேற்பறை கண்ணாடி அலமாரியில் வைத்திருந்தார்கள். முதலில் என்னை அவர்கள் ஒரு மரத்தோடு பிணைத்து கட்டியிருக்கிறார்கள் என்றுதான் நினைத்தேன். சற்று கூர்ந்து கவனித்தபோதுதான் நான் நினைத்தது தவறு என்று எனக்கு புரிந்தது. என் உடலில் ஒரு பகுதி மரமாகவும், கிளைகளாகவும், இலைகளாகவும் விரிந்திருந்தது. அப்போது நான் பாதி மனிதனாகவும், மீதி மரமாகவும் இருந்தேன். ப��தி உடல் மரமாக உணர்ந்தேன். அவர்கள் எனக்கு என்ன பெயர் வைத்திருப்பார்கள் என்று யோசனையாக இருந்தது.\nவயிறுக்கு பதிலாக சக்தியை உற்பத்தி செய்து உடலுக்கு அளிக்கும் இயந்திரம், மனித மூளைக்கான உபரியான ஒரு மெமரி சிப் போன்றவைகளுடன் நானும் அந்த கடையில் வீற்றிருக்கப் பெருமையாக இருந்தது. சில உபகரணங்கள் அந்தக் கடையில் மிக நீண்ட காலமாக விற்கப்படாமல் இருப்பதாகத் தெரிந்தது. நானும் அப்படி அந்தக் கடையிலேயே விலை போகாமல் இருந்துவிடுவேனோ என்று பயம் வந்தது.\nஅதிர்ஷ்டவசமாக அந்தக் கடையில் அதிக நேரம் நான் காத்திருக்க வேண்டி இருக்கவில்லை. ஒருவர் தன் மகனுடன் கடைக்கு வந்தான்.\n“ஹாய், நான் சங்கரன். இது என் மகன், திலீப்.” என்றார் சங்கரன்.\n“ஆங்.. தெரிகிறது.. நீங்கள் ஒரு கலை நுணுக்கம் வாய்ந்த போன்சாய் வேண்டுமெனக் கேட்டிருந்தீர்கள். இல்லையா\n“அது உயிரோடு இருக்க வேண்டும். சரிதானே\n“என்னிடம் ஒரு பொருள் இருக்கிறது.”\nகாலித் என்னை அலமாறியிலிருந்து எடுத்து மேஜை மீது வைத்தான்.\n நான் எதிர்பார்த்த கலைப் படைப்பு” சங்கரன் ஆச்சர்யத்துடன் சொன்னார்.\nஅப்போது என் விரலை உடைத்த வல்லுனன் வந்தான். ஒரு இயந்திரத்தை கையில் வைத்திருந்தான். அதன் ஒரு முனை கூராக இருந்தது. அதன் மறு முனையில் ஒரு சிறிய திரை இருந்தது. அந்தத் திரையை அவன் சங்கரனை நோக்கி திருப்பினான். பின் அந்தக் கூர் முனையை என்னுள் செருகினான்.\n“நீங்கள் பார்த்தீர்களானால், அந்த போன்சாய் மனிதனிடம் விலங்கின மற்றும் தாவர இயல்புகள் இரண்டையுமே காணலாம்” என்றான் காலித்.\nசங்கரன் அங்கீகரிப்பாய்த் தலையசைத்தார். அதன் பின் அந்த வல்லுனன் என்னுள் செருகியிருந்த இயந்திரத்தை வெளியே இழுத்துக்கொண்டான்.\nதிலீப் என்னை ஆர்வமுடன் பார்த்தான். அந்தப் பார்வையில் லேசாகப் பயமும் இருந்தது. அவன் பார்வையிலிருந்து நான் அவனை வெகுவாக ஈர்த்தேன் என்பதை புரிந்துகொள்ள முடிந்தது. என்னைப் பார்த்தால் யாருக்குத்தான் ஈர்ப்பு வராது நான் ஒரு புத்தம் புதிய கருத்தாக்கம். போன்சாய் மரங்களை இந்தப் பூமி பார்த்திருக்கலாம். மனிதனையும் பார்த்திருக்கலாம். நான் ஒரு போன்சாய் மனிதன். இப்போது காலித் ஏன் என்னை பரிசோதனைக் கூடத்திலிருந்து வாங்கினான் என்று புரிந்தது.\nதிலீப் இன்னமும் தன் பார்வையை என்னிடமிருந்து விலக்க���யிருக்கவில்லை.\n“இங்கே இது போன்ற கலைப் படைப்பு கிடைப்பது அரிது”\nகாலித்தின் அந்த ஒற்றை வாக்கியம் சங்கரனை சமாதானப்படுத்தியிருக்க வேண்டும்.\nசங்கரன் காலித் நீட்டிய காகிதத்தில் கையொப்பமிட்டார். நான் கை மாறினேன்.\nசங்கரனும், திலீப்பும் என்னை ஒரு மகிழுந்தில் ஏற்றினார்கள். மகிழுந்து சாலையில் விரையத் துவங்கியது. மகிழுந்தில் பயணிக்கையில் திலிப் என்னை விலாவாரியாக மேலிருந்து கீழாக அவதானித்தான். எனக்கு முதலில் கொஞ்சம் கூச்சமாக இருந்தது. பிற்பாடு அதுவும் பழகிவிட்டது. அதுவுமில்லாமல் அவன் வெறும் ஒரு பாலகன்.\nயாருடையதாக இல்லாவிட்டாலும் குறைந்தபட்சம் ஒரு பாலகனது அன்பையாவது பெற முடியும் என்றே நான் நம்பினேன். நேரம் செல்லச்செல்ல என் உடலில் ஒவ்வொரு பகுதியாக செயல் இழப்பதைப் போன்ற ஒரு பிரஞ்ஞை எனக்கு. என் வலது கை முழுவதுமாக கட்டுப்பாட்டை இழந்திருந்தது. தோலின் நிறம் கருமை படிந்திருந்தது. ஆனால் அதையும் சங்கரனும், திலீப்பும் இரண்டும் கெட்டானாக இருப்பதன் பக்க விளைவெனக் கொள்வார்கள் என்றே எண்ணினேன்.\nதிலீப்பின் கவனத்தை ஈர்க்க, என் இடது கையைப் பலமாக அசைத்தேன். எனது நோக்கம் என்னவென்றால் அவன் கவனத்தை ஈர்த்து என்னை விட்டுவிடும்படி கெஞ்சுவது. பெரிய ஆட்களைவிட சின்னஞ்சிறு பிள்ளைகளிடம் கருணை சற்று எளிதாக கிடைக்கும் என்ற எண்ணம்தான். ஆனால், அவன் ஏதோ நான் அவனைக் குதூகலிக்கச் செய்வதாய் நினைத்து பதிலுக்கு கையசைத்தான். அதற்கு மேலும் ஒரு கையை மட்டும் அசைத்தால் எங்கே அவன் அந்த வல்லுனன் போல் இடது கையை ஒடித்துவிடுவானோ என்று பயம் வந்தது. ஆதலால் திலீப்பை நோக்கி கையசைப்பதை நிறுத்தினேன். இதற்கு அர்த்தம் நான் திலீப் போன்ற பாலகனை சந்தேகப்படுவது அல்ல. ஆனால், என் கடந்த காலத்தில் எனக்கு நிகழ்ந்ததை வைத்து என்னால் இந்த அர்த்தமன்றி வேறெந்த அர்த்தத்திற்கும் வந்திருக்க இயலாது.\nதிலீப் என்னை ஒரு குளிர்சாதனப் பெட்டியில் வைத்து மூடினான். நான் பாதி தாவரமாக ஆகிவிட்டதால் குளிர்சாதனப் பெட்டிதான் என்னை வைக்கச் சரியான இடம் என்று நினைத்திருப்பானோ என்று தோன்றியது. அந்த குறுகலான குளிர் சாதனப் பெட்டியில் எனக்கு மூச்சடைத்தது. மறுநாள் அவனுடைய பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடப்பதாக இருந்தது. அந்த கண்காட்சிக்காகத்தான் என்��ை அவன் வாங்கியிருப்பதாகப்பட்டது.\nநான் எனக்குள்ளாக குளிராக இருப்பதாக உணர்ந்தேன். அந்தக் குளிர் என் உணர்ச்சியற்ற தன்மையை வெகுவாக அதிகரித்தது. என்னால் எதையுமே உணர முடியவில்லை. சற்றுக்கெல்லாம் மூச்சு விடவே பிரயாசைப்பட்டேன். என் போன்ற ஒரு மோசமான பிறப்பை வேறு எவருக்கும் கொடுத்துவிடாதே ஆண்டவா என்று வேண்டிக்கொண்டேன். இப்படி கஷ்டப்படுவதில் நானே கடைசி ஜீவனாக இருக்க வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொண்டேன். அடுத்த நாள் வரை உயிருடன் இருப்பேன் என்று நினைக்கவே இல்லை. எனக்கு எப்போது நினைவு தப்பியது என்றே நினைவிருக்கவில்லை.\nதிலீப் மறுநாள் கதவைத்திறந்தபோது நான் இறந்திருக்கவில்லை. உயிருடன்தான் இருந்தேன். அதை என்னால் ஓர் அதிசயமெனவே கருத முடிந்தது. நான் எப்படி இறக்காமல் உயிருடன் இருந்தேன் என்று எனக்கே ஆச்சரியமாக இருந்தது. எனக்கு எவ்வித அசெளகர்யமும் இருக்கவில்லை. முந்தின இரவு எப்படியெல்லாம் புலம்பினோம் என்று நினைவுக்கு வந்தது. மனித மனங்கள் நெருக்கடியான தருணங்களில் எப்படியெல்லாம் வினோதமாக சிந்திக்கின்றன என்று யோசித்தால் எனக்கே நகைப்பாக இருந்தது.\nதிலீப் என்னைக் கையில் எடுத்துக்கொண்டான். சங்கரன் மகிழுந்தில் திலீப்பை ஏற்றிக்கொண்டார். மகிழுந்து சாலையில் விரைந்தது. மகிழுந்தின் கண்ணாடி ஜன்னலினூடே நாம் வெளி உலகை ஏறிட்டேன். கடந்து போன மரங்களும், தொடர்ந்து வந்த மேகங்களும் முன்னெப்போதையும்விட அழகாகத் தெரிந்தன.\nஅந்தக் காட்சிகள் விதி குறித்து ஆழமாக சிந்திக்க வைத்தன. ஒரு சில மணி நேரங்களில் விதி குறித்தான எனது பார்வைகள் இரண்டு முறைக்கு மேலாக மாறிவிட்டதை உணர்ந்தேன். ஒரு தத்துவவாதி இதை நான் எவ்விதம் அணுகி இருக்க வேண்டும் என்று விரும்பியிருப்பான் அவன் விரும்பியதற்கு மாற்றாக எவ்விதம் நான் அணுகி இருந்தால் எனக்குப் பொருத்தமாக இருந்திருக்கும் அவன் விரும்பியதற்கு மாற்றாக எவ்விதம் நான் அணுகி இருந்தால் எனக்குப் பொருத்தமாக இருந்திருக்கும் இக்கேள்விகளுக்கெல்லாம் விடை தேடி என் மனம் அலைபாய்ந்தது.\nஅன்று அறிவியல் கண்காட்சியில் நான்தான் எல்லோரையும் அதிகம் ஈர்த்தேன். திலீப் போல் எண்ணற்ற பிள்ளைகள் என்னென்னவோ செய்து கொண்டு வந்திருந்தார்கள். ஆனால், எதுவுமே என்னைப்போல் பலரின் கவனத்தையும் ஈர்க்கவில்லை. திலீப் என்னை ஒரு மேஜையில் வைத்து ‘போன்சாய் மனிதன்’ என்று பெயரிட்டான். போன்சாய் பலருக்கும் பரிச்சயமாகியிருந்தது. போன்சாய் மனிதன் என்பதே எல்லோருக்கும் புதிதாக இருந்தது. முதலில் ஒரு சிறு குழுதான் என்னைச் சுற்றி இருந்தது. அது பெரும்பாலும் திலீப்பின் நெருங்கின நட்பு வட்டத்தைச் சேர்ந்தவர்கள். நேரம் செல்லச்செல்ல அன்றைய அறிவியல் கண்காட்சிக்கு வந்திருந்த அத்தனை பேரும் என்னைச் சுற்றிக் கொண்டார்கள்.\nதிலீப்பின் நண்பர்கள் என்னுடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். என்னருகில் நிற்க அங்கே ஒரு போட்டி உருவானது. நீ , நான் என்று அடித்துக் கொண்டார்கள். சற்றைக்கெல்லாம் நான் ஒரு பிரபல்யமானவனாக என்னை உணர்ந்தேன். ஈர்ப்பை வேண்டுபவனாக நான் எப்போதுமே இருந்ததில்லை. ஆயினும் திலீப்பின் பள்ளியில் எனக்கு கிடைத்த வரவேற்பு மிக மிக அதிகப்படியாக இருந்தது. நான் மிகவும் வேண்டப்பட்டவனாக, விரும்பப்பட்டவனாக என்னை உணர்ந்தேன். பரிசோதனைக் கூடத்தில் எனக்கு கிடைத்த கூண்டுக் கிளி வாழ்வை விடவும், திலீப்பின் நண்பனாக எனக்குக் கிடைத்த வாழ்க்கையை சுவர்க்கமாக உணர்ந்தேன். திலீப்பின் கைகளில் வந்து சேர்ந்ததற்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். அவர்களின் அன்பில் நான் திக்குமுக்காடிப் போனேன்.\nஅப்போது சட்டென அறிவியல் கண்காட்சிக்கு வந்திருந்தவர்கள், பள்ளிக் குழந்தைகள் மத்தியில் சலசலப்பு கேட்டது. தொடர்ந்து சில ஆசிரியர்களும், இளம் தொழில் நுட்ப வல்லுனர்களும் கூட்டத்தை பிரித்துக்கொண்டு என்னை அண்டினார்கள். அது என்னைக் கொஞ்சமாய் கோபமூட்டியது. அந்த இடைஞ்சலை நான் விரும்பவே இல்லை. ஆயினும் என்னால் ஏதும் செய்ய முடிந்திருக்கவில்லை.\n“இன்று ஆகப் பெரும் ஈர்ப்பைப் பெற்ற ப்ராஜக்டிலிருந்து சோதனையை துவக்கலாம்” என்றார் ஒரு வயதானவர். பார்க்க தலைமை ஆசிரியர் போலிருந்தார். எல்லோரும் என்னையே பார்த்தார்கள்.\nஅந்த தொழில் நுட்ப வல்லுனன் என்னை அண்டி என்னுள் ஒரு இயந்திரத்தின் கூர் முனையை செலுத்தினான். அந்த இயந்திரம், காலித்தின் கடையில் என்னுள் செலுத்தப்பட்ட எந்திரத்தை ஒத்திருந்தது. சற்று நேரத்திற்குப் பிறகு,\n“இதில் விலங்கின இயக்கமேதும் தெரியவில்லை” என்றான் அந்த வல்லுனன் திரையைக் காட்டியபடி.\nஎனக்க���த்தான் அந்த பதில் அதிர்ச்சியூட்டுவதாயும், ஆச்சரியமூட்டுவதாயும் இருந்தது. சங்கரனும், திலீப்பும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்கள். அவர்களாக என்னை உருவாக்கி இருந்தால்தானே ஏதேனும் பேசுவதற்கு.\n“இது வெறும் போன்சாய் மட்டும்தான்” என்றும் அறிவித்தான் அந்த வல்லுனர்.\nஎல்லோரும் திலீப்பைப் பார்த்தார்கள். திலீப் இப்போது ஏதேனும் சொல்லியாக வேண்டும்.\n“உனக்கு ப்ராஜக்ட் செய்வதில் ஏதேனும் இடையூறுகள் இருந்தால் என்னிடம் சொல்லியிருக்க வேண்டும். நான் உனது ஆசிரியர். இதை நான் ஒரு விதி மீறலாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும், திலீப்” என்றார் அந்தத் தலைமை ஆசிரியர்.\n“விதிகளை மீற வேண்டும் என்று என்னிடம் எந்த நோக்கமும் இல்லை. இது நேற்று உயிருடன்தான் இருந்தது.” என்றான் திலீப்.\n“அது சரியாகவும் இருக்கலாம். ஓர் உடலில் இரண்டு விதமான உயிரணு மூலக்கூறுகள் இருப்பின் அந்த உடலில் எந்த உயிரணு ஆதிக்கம் செலுத்துவதென்று இரு உயிரணுக்களுக்கும் போராட்டம் இருக்கும். அப்படியான போராட்டத்தில் எந்த உயிரணு பலவீனமாக இருக்கிறதோ அந்த உயிரணு அழிந்து போகவும் செய்யலாம்.” என்றான் அந்த வல்லுனன் தனக்கு தெரிந்ததைப் பகிரும் தோரணையில்.\n“எதுவாக இருப்பினும், திலீப், நீ வாக்களித்தது ஒரு மனித போன்சாய்க்குத்தான். அது ஒரு புதிய கருத்தாக்கம் என்பதால்தான் நீ கடைசி நிமிடத்தில் உன் ப்ராஜக்டின் பெயரை மாற்றிக் கொள்ளவும் சம்மதித்தேன். இதில் மனித உயிரணுக்கள் இல்லை. இது ஒரு தெளிவான விதிமீறல். நம் பள்ளிக்கென ஒரு மரியாதை, மதிப்பு இருக்கிறது. நாட்டின் ஒட்டுமொத்த பள்ளிகளுக்கான தர வரிசைப் பட்டியலில் நம் பள்ளிக்கென ஒரு நல்ல இடம் இருக்கிறது. அது கீழிறங்க எக்காரணம் கொண்டும் அனுமதிக்க இயலாது. உன்னை அடுத்த அறிவிப்பு வரும் வரை பள்ளியின் செயல்பாடுகளிலிருந்து தள்ளி வைக்கிறேன்,” தலைமை ஆசிரியர் தீர்மானமான குரலில் சொன்னார்.\nஅதைக் கேட்டவுடன் என் உலகம் சுக்கு நூறாக உடைந்து தரை மட்டமானது. என்னைப் பற்றி யார் என்ன பேசுகிறார்கள் என்பதெல்லாம் என் கவனத்தில் பதியவே இல்லை. எனக்குள் என்ன நடக்கிறது என்று எனக்கு மெல்ல மெல்லப் புரிந்தது. நான் மனிதனாகப் பிறந்தவன். ஆனால் இப்போதோ முழுமையான தாவரமாகிவிட்டேன். அந்த ஆராய்ச்சிக்கூடத்தில் எனக்கு அள��க்கப்பட்ட உணவில் விஷம் இருந்திருக்க வேண்டும். அந்த விஷம் என் மனித உயிரணுக்களை மெல்ல மெல்ல அழித்துவிட்டது.\nஏமாற்றமடைந்த திலீப் கோபத்துடன் என்னை ஒரு கையால் அலட்சியமாக எடுத்துக்கொண்டு பள்ளிக்கூட வாயிலை நோக்கி நடக்க, கூடியிருந்த மாணவர்களும், ஆசிரியர்களும் அவனையும் அவன் கையிலிருந்த என்னையும் பார்த்து கள்ளப் புன்னகைகள் உதிர்த்தார்கள். வாயிற்கதவை அண்டியவுடன் திலீப் என்னை குப்பைத் தொட்டியில் வீசி எறிந்தான். பின் சாலையில் இறங்கி நடந்தான். அவன் ஒரு முறையாவது என்னைத் திரும்பிப் பார்ப்பான் என்று நான் தீவிரமாக நம்பினேன். ஆனால், அவன் என்னை ஒரு முறைகூட திரும்பியும் பார்க்காதது ஏமாற்றமாக இருந்தது. நம்மால் பயனில்லை என்று தெரிந்துவிட்ட பிறகு மனித மனங்கள் எப்படியெல்லாம் நம்மை அலட்சியப்படுத்துகின்றன என்று அவதானிக்க விசித்திரமாகவும், கேவலமாகவும் இருந்தது.\n இந்த பூவுலகில் பிறக்க நேர்ந்த எல்லா உயிர்களுக்கும் இந்தப் பூவுலகில் வாழ எல்லா உரிமையும் உள்ளதுதானே நான் ஏன் அப்படி ஒரு வீர்யமானதொரு ஆராய்ச்சியில் சோதனை எலி ஆக்கப்பட்டேன் நான் ஏன் அப்படி ஒரு வீர்யமானதொரு ஆராய்ச்சியில் சோதனை எலி ஆக்கப்பட்டேன் என்னிடம் யார் அனுமதி கேட்டது என்னிடம் யார் அனுமதி கேட்டது நான் தரவில்லையே எனக்கு ஏன் அப்படி ஒரு அன்பு அத்தனை சிறிய கால அவகாசத்திற்குக் கிடைக்க வேண்டும் அது ஏன் பிற்பாடு அத்தனை மூர்க்கமாக என்னிடமிருந்து பிடுங்கப்படவேண்டும் அது ஏன் பிற்பாடு அத்தனை மூர்க்கமாக என்னிடமிருந்து பிடுங்கப்படவேண்டும் இந்த ஒட்டுமொத்த நாடகத்தில் எந்தப் பக்கம் நியாயம் இந்த ஒட்டுமொத்த நாடகத்தில் எந்தப் பக்கம் நியாயம்\nநான் பிறந்தபோது ஆக்ஸிஜனை சுவாசித்தேன். இப்போதோ நான் கார்பன் டை ஆக்ஸைடை சுவாசிக்கிறேன். நான் என் எஞ்சிய வாழ்வை வெறும் ஒரு தாவரமாகவே கழிக்கக்கூட நேரலாம். என் வாழ்வின் எத்தனை சதவிகித நோக்கத்தை நான் விலங்காக இருந்து நிறைவேற்றினேன் எத்தனை சதவிகித நோக்கத்தை நான் இனி தாவரமாக இருந்தபடி நிறைவேற்றுவேன் எத்தனை சதவிகித நோக்கத்தை நான் இனி தாவரமாக இருந்தபடி நிறைவேற்றுவேன் நான் விலங்கிலிருந்து தாவரமானது இந்த பிரபஞ்சமென்னும் பாரிய ஒழுங்கின் எந்தப் புள்ளியை முழுமையடையச் செய்ய இருக்கிறது\nகேள்விகள் என்னைத் துளைத்தெடுத்தன. எதற்குமே என்னிடம் பதில் இல்லை. இந்தக் கேள்விகள் நான் இனி உயிருடன் இருக்கும் காலம் வரை என்னை எப்படியெல்லாம் அச்சமூட்டப் போகின்றனவோ என்று இப்போதே எனக்கு பயம் ஒரு நோய் போலப் பீடித்தது. ஆயினும், தற்போது முழுமையாக விடுதலை ஆனதில் கொஞ்சம் மகிழ்வாக உணர்ந்தேன். நான் என்ன பெரிதாக விரும்பினேன் எல்லோருக்கும் கிடைத்திருப்பது போலான ஒரு சாதாரண வாழ்வைத்தானே எல்லோருக்கும் கிடைத்திருப்பது போலான ஒரு சாதாரண வாழ்வைத்தானே எல்லோரையும் போல நானும் என்னை விரும்பும் சில பேரின் மத்தியில் வாழ்ந்துவிட்டுப் போகத்தானே விரும்பினேன்\nஇப்போது நான் மனிதனாகவே இல்லை. இன்னும் உடலாலும், மனதாலும் முழுமையாகத் தாவரமாகவும் மாறிவிடவில்லை. இன்னும் சொல்லப்போனால், விலங்குமல்லாத தாவரமுமல்லாத ஓர் இடைப்பட்ட நிலைப்பாட்டில் சிக்கிக்கொண்டு விட்டேன். விலங்கின் நிலைப்பாட்டிலிருந்து கடனாகப் பெறப்பட்ட ஒரு பிரஞ்ஞையுடன் தாவரமாகவே இருக்கிறேன். எல்லோருக்கும் எல்லாமும் கிடைப்பதில்லை. சிறிதேனும் அன்பு கிடைத்தாலும் போதும். என் ஜென்மமே சாபல்யம் பெற்றுவிடும். நான் ஒரு முழுமையான, எல்லா சுகங்களும், ஆஸ்திகளும் கிடைக்கப்பெற்ற ஒரு வாழ்க்கைக்காக ஏங்கவில்லை. இந்த உலகின் முழுமையின்மைகளைக், குறைகளைக் கடந்து போக, அந்த குறைகளுடனே வாழ்ந்து மறித்துப் போக கொஞ்சமே, கொஞ்சம் அன்பு மட்டும்தானே கேட்கிறேன்\nஏப்ரல் 13, 2020 அன்று, 8:12 மணி மணிக்கு\nவாழ்த்துக்கள் திரு. ராம்பிரசாத், மடைதிறந்த வெள்ளம் போன்ற நடை. ஆரம்பித்தால் முடிக்காமல் இருக்க முடியாது. அருமையான எழுத்து. தொடர்ந்து எழுதவும்.\nஏப்ரல் 14, 2020 அன்று, 8:02 மணி மணிக்கு\nநன்றிகள் பல. தோழர், எனக்கொரு மின்னஞ்சலிட முடியுமா\nநவின் சீதாராமன் (நவநீ - திண்ணை) சொல்கிறார்:\nஏப்ரல் 21, 2020 அன்று, 4:24 காலை மணிக்கு\nபத்திரமாக இருப்பீர்களென நம்புகிறேன். தங்களின் வலைதளம் பார்த்தேன். மிகச் சிறப்பான பணியினைச் செய்து கொண்டுள்ளீர்கள். நான் நவின் சீதாராமன் (நவநீ என்ற பெயரில் திண்ணையில் எழுதுகிறேன். என்னை மின்னஞ்சல் அனுப்பச் சொல்லியிருந்தீர்கள். அனுப்பினேன். பதில் இல்லை. பரவாயில்லை. நான் தற்போது அமொிக்காவில் வசிக்கிறேன். எனது அமொிக்க எண்கள் : +19493517280 இந்திய எண்கள் : +918056000663 (வாட்ஸ்ஆப்). தயவு செய்து தொடர்��ு கொள்ளவும். நன்றி \nPrevious Previous post: புத்தக அறிமுகம்: கடலெனும் வசீகர மீன்தொட்டி\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவக் கட்டுரை அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அயல் விழா அரசியல் அரசியல் கட்டுரை அறிவிப்பு அறிவியல் அறிவியல் அதி புனைவு அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைக் கட்டுரை இசைத்தெரிவு இசையும் மொழியும் இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-232 இதழ்-233 இதழ்-234 இதழ்-235 இதழ்-236 இதழ்-237 இதழ்-238 இதழ்-239 இதழ்-24 இதழ்-240 இதழ்-241 இதழ்-242 இதழ்-243 இதழ்-244 இதழ்-245 இதழ்-246 இதழ்-247 இதழ்-248 இதழ்-249 இதழ்-25 இதழ்-250 இதழ்-251 இதழ்-252 இதழ்-253 இதழ்-254 இதழ்-255 இதழ்-256 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய வரலாறு இலக்கிய விமர்சனம் இலக்கியக் கட்டுரை இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக நடப்புக் குறிப்புகள் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் எழுத்து ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சத்யஜித் ரே சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தழுவல் கட்டுரை தாவரவியல் தாவரவியல் கட்டுரை திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் ���ண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாரதியியல் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொடுவா நாட்டார் கலை பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதற்கனல் முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பு இலக்கியம் மொழிபெயர்ப்பு நாவல் மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை ரவிஷங்கர் லயம் வங்க ஓவியங்கள் வங்க மலர் வங்கச் சிறப்பிதழ் வரலாறு வரலாற்றாய்வு வரலாற்றுக் கட்டுரை வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேதியியல் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அகிலா ஆ. அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அஞ்சலி ஸச்தேவா அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அருண்குமார் மகோபாத்யாய் அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அவீக் சாட்டர்ஜீ அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆடம் இஸ்கோ ஆண்டனி கில் ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந���தனி மார்ரா ஆனந்த் குமார் ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆமிராபாலன் ஆரூர் பாஸ்கர் ஆர் நித்யஹரி ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி ஆஸ்டின் சௌந்தர் இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா முருகன் இரா. அரவிந்த் இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இராம் பொன்னு இலவசக் கொத்தனார் இலா இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உ நரசிம்மன் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உலகளந்த பெருமாள் உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.என். குண்டு எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் எம்.டி வாசுதேவன் நாயர் Raja எம்.ரிஷான் ஷெரீப் எரிக் நெஹர் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் எஸ் சியூயீ லு Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கஞ்சனூர் கவிப்ரியா கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட்ராமன் கண்ணன் இராமநாதன் கதீர் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கலாப்ரியா கலைச்செல்வி கல்யாணி ராஜன் கவியோகி வேதம் கா.சிவா கா.ரபீக் ராஜா காஜி நசருல் இஸ்லாம் காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் கிருபாகரன் கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலச்சுவடு கண்ணன் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் கி. ராஜநாரா���ணன் கிருஷ்ண பாசு Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரி எஸ். நீலகண்டன் குமரேசன் மு. குமாரநந்தன் குமார் சேகரன் குமுதினி கூம் கூம் ராய் கெ.ம.நிதிஷ் கென் லூ கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கே.பாலசுப்பிரமணி கே.ராஜலட்சுமி கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரெக் பா(வ்)ம் க்ரேஸ் பேலி ச அர்ஜுன்ராச் ச. சமரன் ச. சிவபிரகாஷ் ச.திருமலைராஜன் சக்தி சட்டோபாத்யாய சக்தி விஜயகுமார் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் சமரேஷ் மஜும்தார் சரவணன் அபி சரவணன் மாணிக்கவாசகம் சரோஜ் பந்த்யோபாத்தியாய் sarvasithan சா.கா.பாரதி ராஜா சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்லி டைஸன் சார்ல்ஸ் ஸிமிக் சி.எஸ். லக்ஷ்மி Ayshwarya Shankaranarayanan சி.சு.செல்லப்பா சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி சியாம் பாரதி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. அருண் பிரசாத் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுகாந்தொ பட்டாச்சார்யா சுகுமார் ராய் சுசித்ரா பட்டாச்சாரியா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தரம் செல்லப்பா சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுனீல் கங்கோபாத்யாய் சுபத்ரா ரவிச்சந்திரன் சுபிமல் மிஸ்ரா சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்��ொண்டல் சௌதிக் பிஸ்வாஸ் ஜகதீஷ் சந்திர போஸ் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜான்பால் ரொசாரியோ ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜாஷுவா ராத்மான் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீபனானந்தா தாஸ் ஜீவ கரிகாலன் ஜீவன் பென்னி ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தா டே ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேன் ஹெர்ஷ்ஃபீல்ட் ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜொய் கோஸ்வாமீ ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த. நரேஸ் நியூட்டன் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தஸ்லிமா நஸ்ரின் தாட்சாயணி தாமரைக்கண்ணன் தாராசங்கர் பந்த்யோபாத்யாய் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் திலீபன் தீபேஷ் சக்ரபர்த்தி தீப் ஹல்தர் தென்கரை மகாராஜன் தெரிசை சிவா தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் தைஸ் லைஸ்டர் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நபரூன் பட்டாச்சார்யா நம்பி நரசய்யா நரேன் நரோபா நளினி நவநீதா தேவ் சென் நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகிலேஷ் குஹா நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு ravishankar குழு பத்மகுமாரி பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்மா ஸச்தேவ் பத்ரி சேஷாத்ரி பனபூல் பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி பா ராமானுஜம் Pa Saravanan பா.சுதாகர் பா.தேசப்பிரியா பான��� கபில் பானுமதி ந. பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan பாஸ்கர் ஆறுமுகம் Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் பிபூதிபூஷன் பந்த்யோபாத்யாய் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபீர் சென் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புத்ததேவ போஸ் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம. செ. ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுமிதா மதுரபாரதி மதுரா மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் அரவிந்த டி ரெங்கநாதன் மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலேசியா ஸ்ரீகாந்தன் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாணிக் பந்தோபாத்யாய மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மாயா ஏஞ்சலொ மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ம இராமச்சந்திரன் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி முனைவர் ராஜேந்திர பிரசாத் நா மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோதி நந்தி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரக்ஷன் க��ருதிக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரபீந்திர நாத் தாகூர் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமநாத் ராய் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ரிச்சர்ட் ரூஸ்ஸோ ருகையா ஷகாவத் ஹுசென் ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோகிணி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லாவண்யா சுந்தரராஜன் லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகமாதேவி லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வசந்ததீபன் வண்ணநிலவன் வர்ஜீனியா வுல்ஃப் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜயகுமார் சம்மங்கரை விஜயலக்ஷ்மி விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வித்யா அருண் விபீஷணன் விருட்சன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேங்கட ராகவன் நா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷாங்க்யா கோஷ் ஷாதிர் ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸிர்ஷோ பந்தோபாத்யா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் கின்சர் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவி��் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாரலாம்பி மார்கோவ் ஹாலாஸ்யன் ஹுமாயுன் அஹமத் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் அக்டோபர் 2021 செப்டம்பர் 2021 ஆகஸ்ட் 2021 ஜூலை 2021 ஜூன் 2021 மே 2021 ஏப்ரல் 2021 மார்ச் 2021 பிப்ரவரி 2021 ஜனவரி 2021 டிசம்பர் 2020 நவம்பர் 2020 அக்டோபர் 2020 செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும். எழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும��� இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nஆன்கர் எஃப்.எம். (anchor.fm) 4\nயூடியுப் – ஒளிவனம் (YouTube) 3\nசவுண்ட் கிளவுட் (SoundCloud) 1\nஎழுத்தாளர் அம்பை: சொல்வனம் சிறப்பிதழ்கள் 0\nரொபெர்த்தோ பொலான்யோ ஆக்கங்களும் விமர்சனங்களும் 0\nவீடும் வெளியும்: கவிதைகளும் கதைகளும் 0\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவங்கச் சிறப்பிதழ் 1: 240\nவங்கச் சிறப்பிதழ் II: 241\nவி. எஸ். நைபால்: 194\nகவிதை பற்றி புதுமைப்பித்தன் கூறியவற்றுள் சில\nவிஞ்ஞான வளர்ச்சியின் வளர்ச்சி- 2\nபெருந்தேவிக்கு பி. ஜி. உடௌஸ் வேண்டாம்\nசோ - ஒரு தன்னிகரற்ற நிகழ்வு\nஆட்டத்தின் ஐந்து விதிகள் (8)\nஇந்து தர்மமும் அதன் கலாசாரப் போர்களும் (14)\nஇவர்கள் இல்லையேல் – நாவல் (3)\nகாவிய ஆத்மாவைத் தேடி (3)\nசட்டமும் செயற்கை நுண்ணறிவும் (2)\nதலை சிறந்த 10 தொழில்நுட்பம் (11)\nதேர்ந்த வாசகருக்கான படப்புத்தகம் (2)\nநோயாளி எண் பூஜ்யம் (2)\nபய வியாபாரியா ஹிட்ச்காக் (2)\nபேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் (4)\nமிளகு: இரா முருகன் – நாவல் (7)\nமுதலியத்தை எதிர்க்கும் பொதுமம் (1)\nமொபைல் தொடர்பாடல் வரலாறு (2)\nவண்ணநிலவன் நாவல்கள் பற்றி (2)\nஸ்லாட்டர்ராக்- தாமஸ் டிஷ் (2)\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nஎழுத்தாளர் இரா முருகனின் சரித்திரத் தொடர் நாவல் “மிளகு” அத்தியாயம் - ஏழு 1999 அம்பலப்புழை 35:47\nஎழுத்தாளர் தி.ஜானகிராமன் எழுதிய சிறுகதை \"செய்தி\" 21:56\n‘ஆற்றேன் அடியேன்’ கட்டுரைக்கு இரண்டு மறுவினைகள்\nஆயிரம் வருடங்கள் வாழ்வது எப்படி\nசெயற்கை நுண்ணறிவு: எந்திரன் 2.0\nஓய்வுக் காலச் சேமிப்பும் அதை அபகரிக்க அரசாங்கம் நடத்தும் போரும்\nby கடலூர் வாசு\t ஆகஸ்ட் 22, 2021\nby கா.ரபீக் ராஜா\t ஆகஸ்ட் 22, 2021\nby லியோ டால்ஸ்டாய்\t ஆகஸ்ட் 22, 2021\n”ஆசிய அமெரிக்கர்கள்” – அமெரிக்காவில் மிகையாகும் வெறுப்பரசியல்\nby லதா குப்பா\t ஆகஸ்ட் 22, 2021\nகாவிய ஆத்மாவைத் தேடி… – 2\nby ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன்\t ஆகஸ்ட் 22, 2021\nபேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்\nby பானுமதி ந.\t ஆகஸ்ட் 22, 2021\nமூத்த கதைசொல்லி – டெம்சுலா ஆவ்\nby கோரா\t ஆகஸ்ட் 22, 2021\nதொட்டாலே கண் எரியும் மிளகாயா\nby லோகமாதேவி\t ஆகஸ்ட் 22, 2021\nஷோபா சக்தியின் ‘கொரில்லா’ – ஒரு பார்வை\nby ராஜேஷ் சந்திரா\t ஆகஸ்ட் 22, 2021\nஉங்கள் மின்னஞ்சல், படைப்புகளை அனுப்ப முகவரி: solvanam.editor@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3_%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2021-10-19T13:13:15Z", "digest": "sha1:RXFXP7PNUMTH752FY6VUOPFAS6AEHUES", "length": 6536, "nlines": 134, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "செவ்வாய்க்கிழமையில் துவங்கும் சாதாரண ஆண்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமையில் துவங்கும் சாதாரண ஆண்டு\nஇது செவ்வாய்க்கிழமையில் துவங்கும் சாதாரண ஆண்டுகளுக்கான நாட்காட்டி ஆகும். (உ.ம். கிரிகோரியன் ஆண்டு 1985, 1991, 2002, 2013 மற்றும் 2019[1] ஜூலியன் ஆண்டு 1919)\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nசாதாரண ஆண்டுகள் துவங்கும் நாட்கள்: திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி ஞாயிறு\nநெட்டாண்டுகள் துவங்கும் நாட்கள்: திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி ஞாயிறு\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 ஆகத்து 2021, 02:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://timestampnews.com/due-to-tn-cm-visit-the-transportation-routes-are-has-to-be-changed/2743/", "date_download": "2021-10-19T11:31:22Z", "digest": "sha1:RTWWPF2ZGNTBT4Q4WIBALF7W2V72UXZG", "length": 6936, "nlines": 89, "source_domain": "timestampnews.com", "title": "மாண்புமிகு தமிழக முதல்வர் வருவதையோட்டி திருச்செந்தூர் – தூத்துக்குடி போக்குவரத்து மாற்றம்.. – Timestamp News", "raw_content": "\nமாண்புமிகு தமிழக முதல்வர் வருவதையோட்டி திருச்செந்தூர் – தூத்துக்குடி போக்குவரத்து மாற்றம்..\nடாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் மணி மண்டபம் திறப்பு விழாவிற்கு திருச்செந்தூருக்கு மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் 22.02.2020 அன்று வருகை தர இருப்பதால் திருச்செந்தூரிலிருந்து தூத்துக்குடி செல்லும் வழியில் வாகன போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு பயணம் செய்யும் பொது மக்களின் வசதிக்காக 22.02.2020 அன்று காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை மட்டும் தற்காலிகமாக போக்குவரத்து மாற்றத்திற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினர் செய்துள்ளனர்.\nஅதன்படி திருச்செந்தூரிலிருந்து தூத்துக்குடி செல்லும் நான்கு சக்கர வாகனங்கள், கன ரக வாகனங்கள் உட்பட அனைத்து வாகனங்களும், திருச்செந்தூரிலிருந்து குரும்பூர், ஏரல், சாயர்புரம், புதுக்கோட்டை வழியாகவும் அல்லது குரும்பூர், ஸ்ரீவைகுண்டம், பேட்மாநகரம், வாகைக்குளம், புதுக்கோட்டை வழியாக தூத்துக்குடி செல்வதற்கும், அதே போன்று தூத்துக்குடியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் வாகனங்கள் புதுக்கோட்டை, சாயர்புரம், ஏரல், குரும்பூர் வழியாகவும் அல்லது புதுக்கோட்டை, வாகைக்குளம், பேட்மாநகரம், ஸ்ரீவைகுண்டம் வழியாகவும் திருச்செந்தூர் செல்வதற்கும் போக்குவரத்து தற்காலிகமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.\nஆகவே பயணம் செய்யும் பொதுமக்கள் காவல்துறைக்கு ஒத்துழைப்பு கொடுத்து மேற்படி இரண்டு வழிகளில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தி போக்குவரத்து சிரமமில்லாமல் பயணம் செய்யுமாறு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக இதன் மூலம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.\nPrevious Previous post: சர்க்கரையின் அளவு சீராக இருக்க உதவும் கறிவேப்பிலை…\nNext Next post: பிப்ரவரி 21 “தாய்மொழி நாள்”\nதூத்துக்குடி மாவட்ட காவல்துறையில் உள்ள நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள்- மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் ஆய்வு.\nதமிழக மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நல்வாழ்வு சங்கத்தின் சார்பில் கொரோனா பணிகள்\nதூத்துக்குடி 17வது வார்டு பொதுமக்கள் சார்பில் தெரு மின் விளக்கு, சாலை வசதி மற்றும் குடிநீர் குழாய் அமைத்திட வேண்டி கோரிக்கை மனு\nதிருச்செந்தூா் கோயில் கும்பாபிஷேகம்: முதல்வா் விரைவில் அறிவிப்பாா்\nதூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அங்கன்வாடி மைய கட்டிடம் – அமைச்சர் கீதாஜீவன் அடிக்கல் நாட்டினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arisenshine.in/tag/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-10-19T11:25:08Z", "digest": "sha1:A5GNQUQ6PFLWD3QSSY5WB7JGQJJFHJ6J", "length": 5496, "nlines": 76, "source_domain": "www.arisenshine.in", "title": "தூக்கம் – Arise n shine", "raw_content": "\nஎந்த வயதில் தேவனுக்கு ஊழியம் செய்யலாம்\n1 தீமோத்தேயு:2.5 – தினத்தியானம்\nஇயேசு-லேகியோன் சந்திப்பு – பாகம் 7\nதேவனிடம் சமரசம் செய்ய விரும்புகிறோமா\nஇயேசு-லேகியோன் சந்திப்பு – பாகம் 6\nகுடும்ப நபர்களுக்காக எப்படி ஜெபிக்கிறோம்\nதேவ ஆலயத்திற்கு நாம் எப்படி போகிறோம்\nஇன்றைய கிறிஸ்தவர்களில் சிலருக்கு, தேவ ஆலயத்திற்கு ஏன் செல்கிறோம் என்று கூட தெரிவதில்லை. சிலர் பல ஆண்டுகளாக ஆலயத்திற்கு சென்றாலும், அவர்களில் எந்த மாற்றமும் நடக்காமல் இருப்பதற்கு இதுவே காரணம் எனலாம்.\n1 ராஜாக்கள்:19.9 – தினத்தியானம்\nஜெபத்தில் ஏற்படும் மாற்றங்கள் – 5\nஎந்த வயதில் தேவனுக்கு ஊழியம் செய்யலாம்\n1 தீமோத்தேயு:2.5 – தினத்தியானம்\nஇயேசு-லேகியோன் சந்திப்பு – பாகம் 7\nதேவனாகிய கர்த்தர் தாம் மனுஷனில் எடுத்த விலா எலும்பை மனுஷியாக உருவாக்கி, அவளை மனுஷனிடத்தில் கொண்டு வந்தார். ஆதியாகமம்:2.22\nஎந்த வயதில் தேவனுக்கு ஊழியம் செய்யலாம்\nதேவனுக்கு ஊழியம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இரட்சிக்கப்பட்ட எல்லாருக்கும் இருக்கிறது. ஆனால் அதன் பின்னணியில் எந்த வயதில் அவருக்கு ஊழியம் செய்யலாம்\n1 தீமோத்தேயு:2.5 – தினத்தியானம்\nதேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே. 1 தீமோத்தேயு:2.5\nஎந்த வயதில் தேவனுக்கு ஊழியம் செய்யலாம்\n1 தீமோத்தேயு:2.5 – தினத்தியானம்\nஇயேசு-லேகியோன் சந்திப்பு – பாகம் 7\nதேவனிடம் சமரசம் செய்ய விரும்புகிறோமா\nஇயேசு-லேகியோன் சந்திப்பு – பாகம் 6\nஎந்த வயதில் தேவனுக்கு ஊழியம் செய்யலாம்\n1 தீமோத்தேயு:2.5 – தினத்தியானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndpfront.com/index.php/authors/134-news/articles/thayakanravi", "date_download": "2021-10-19T13:09:46Z", "digest": "sha1:C63ISIEUHH5IJCWLILQ7GXPMUJEME5ES", "length": 4592, "nlines": 115, "source_domain": "www.ndpfront.com", "title": "தாயகன் ரவி", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nஎந்தக் கட்சியும் வெற்றிபெறாத களத்தில் தோற்றுப்போன மக்கள்\nஇனியொரு விதி செய்வோம் - பகுதி 11\t Hits: 4003\nஇனியொரு விதிசெய்வோம் – பகுதி 10\t Hits: 4145\nஇனியொரு விதி செய்வோம் – பகுதி 09\t Hits: 3984\nஇனியொரு விதி செய்வோம் – பகுதி 08 Hits: 3900\n“இனியொரு விதி செய்வோம்” – பகுதி 02\t Hits: 3805\n“இனியொரு விதி செய்வோம்” - பகுதி 01\t Hits: 4103\nமீண்டும் புதிய மிடுக்குடன் பேசவேண்டும்\t Hits: 3668\nஇன்றைய இலங்கையின் அரசியல் நிலவரம்\t Hits: 3818\nதை 2010 தேர்தல் பெறும் அர்த்தம்\t Hits: 3738\nசாதி – தேசம் – பண்பாடு - பகுதி-3\t Hits: 3938\nசாதி – தேசம் – பண்பாடு - பகுதி 2\t Hits: 3901\nசாதி - தேசம் - பண்பாடு - பகுதி-1\t Hits: 3976\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaaiman.com/2021/01/blog-post_14.html", "date_download": "2021-10-19T11:13:46Z", "digest": "sha1:NO3UOVX2MJAC4SCKRHSI5Q3Z4UQGYJ33", "length": 3823, "nlines": 66, "source_domain": "www.thaaiman.com", "title": "சீனாவிற்கு சென்ற உலக சுகாதார அமைப்பின் விஞ்ஞானிகள் குழு - THAAIMAN", "raw_content": "\nHome / Unlabelled / சீனாவிற்கு சென்ற உலக சுகாதார அமைப்பின் விஞ்ஞானிகள் குழு\nசீனாவிற்கு சென்ற உலக சுகாதார அமைப்பின் விஞ்ஞானிகள் குழு\nஉலகளாவிய ஆராய்ச்சியாளர்கள் குழு இன்று சீனாவின் வுஹான் நகரத்திற்கு கொரோனா தொற்றுநோயின் தோற்றம் குறித்து அரசியல் ரீதியாக முக்கியமான ஆய்வை நடத்த அங்கு சென்றுள்ளது.\nஉலக சுகாதார அமைப்பால் வுஹானுக்கு அனுப்பப்பட்ட 10 பேர் கொண்ட குழு ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின் அரசாங்கத்தால் பல மாதங்கள் இராஜதந்திர ரீதியிலான மோதலுக்குப் பின்னர் அங்கீகரிக்கப்பட்டது.\nசீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி, இந்த நோய் பரவ அனுமதித்ததாக பரவலான புகார்கள் உலக அளவில் எழுந்துள்ளது.\nஇந்நிலையில், வைரஸ் இறக்குமதி செய்யப்பட்ட கடல் உணவுகள் மூலம் வெளிநாட்டிலிருந்து வந்திருக்கலாம் என சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nசீன அரசு ஊடகமான உலக சுகாதார அமைப்பால் நியமிக்கப்பட்ட விஞ்ஞானிகள் குழுவின் வருகையை அறிவித்தது.\nஅந்த உறுப்பினர்களில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, ஜப்பான், பிரிட்டன், ரஷ்யா, நெதர்லாந்து, கத்தார் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த வைரஸ் மற்றும் பிற நிபுணர்கள் உள்ளனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaaiman.com/2021/05/blog-post_461.html", "date_download": "2021-10-19T13:19:00Z", "digest": "sha1:I6R3N3XJSIURXCVJ2E6OPZNJZ47EK7IY", "length": 4243, "nlines": 72, "source_domain": "www.thaaiman.com", "title": "போர்ட் சிட்டி ஆணைக்குழுவுக்கு உறுப்பினர்களை நியமித்தார் ஜனாதிபதி கோட்டாபய - THAAIMAN", "raw_content": "\nHome / Unlabelled / போர்ட் சிட்டி ஆணைக்குழுவுக்கு உறுப்பினர்களை நியமித்தார் ஜனாதிபதி கோட்டாபய\nபோர்ட் சிட்டி ஆணைக்குழுவுக்கு உறுப்பினர்களை நியமித்தார் ஜனாதிபதி கோட்டாபய\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவிற்கு அங்கத்தவர்களை நியமித்துள்ளார்.\nஜனாதிபதி சட்டத்தரணி காமினி மாரப்பனவின் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள ஆணைக்குழுவின் அங்கத்தவர்களது பெயர்கள் வருமாறு,\nதிறைசேரியின் செயலாளர் - திரு.எஸ்.ஆர்.ஆட்டிகல\nநீர்வழங்கல் அமைச்சின் செயலாளர் - கலாநிதி பிரியத் பந்து விக்ரம\nஇலங்கை முதலீட்டு் சபையின் முன்னாள் தலைவர் - திரு.சாலிய விக்ரமசூரிய\nஓரல் கோப்பரேஷன் தலைவர் மற்றும் முகாமைத்துவ பணிப்பாளர் - குஷான் கொடிதுவக்கு\nமேக்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட் என்ட் பினான்ஸ், முகாமைத்துவ பணிப்பாளர் - திரு.ஜெராட் ஒன்டச்சி\nமெக்லெரன்ஸ் குழுவின் தலைவர் மற்றும் முகாமைத்துவ பணிப்பாளர் - திரு.ரொஹான் டி.சில்வா\nஆகியோரே கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவிற்கு அங்கத்தவர்களாக நியமனம் பெற்றுள்ளனர்.\n🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷\n👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaaiman.com/2021/06/blog-post_80.html", "date_download": "2021-10-19T12:43:01Z", "digest": "sha1:SZHVKQLE3PRSV6J3OK5WH3TVF7FMSTH5", "length": 4884, "nlines": 67, "source_domain": "www.thaaiman.com", "title": "மட்டக்களப்பு இளைஞன் மரணம் தொடர்பில் சகோதரி பகீர் தகவல் ! - THAAIMAN", "raw_content": "\nHome / Unlabelled / மட்டக்களப்பு இளைஞன் மரணம் தொடர்பில் சகோதரி பகீர் தகவல் \nமட்டக்களப்பு இளைஞன் மரணம் தொடர்பில் சகோதரி பகீர் தகவல் \nமட்டக்களப்பில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில் உயிரிழந்த 21 வயது சந்திரன் விதுஷன் எனும் இளைஞனின் தங்கை , தனது அண்ணனை பொலிஸார் அடித்துக் கொன்றதை கண் முன்னே பார்த்தேன் என தெரிவித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்நிலையில் எனது அண்ணனுக்கு நீதி கிடைக்க வேண்டும் அதுவரைக்கு நான் சும்மா விடமாட்டன் தூக்கி போட்டு குத்தினார்கள் சுவரில் சாற்றி அடித்தார்கள் சுவர் உடைந்து போய் இருக்கு' என்றும் இவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஅத்துடன் மருத்துவ உடல் கூற்று அறிக்கையில் தனக்கு சந்தேகம் உள்ளதாகவும் அதற்கான சரியான நீதி கிடைக்க வேண்டும் எனவும் உயிரிழந்த இளஞனின் சகோதரி வலியுறுத்தியுள்ளார். கைவிலங்கிட்ட எனது அண்ணன் ஐஸ் போதைப்பொருட்களை எவ்வாறு விழுங்குவான் என கேள்வி எழுப்பியுள்ள குறித்த யுவதி, இவர்கள் அ��ைத்தையும் மூடி மறைக்க பார்க்கின்றதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.\nமட்டக்களப்பில் ஜஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்ட இளைஞன் 4 ஜஸ் போதைப் பொருள் பைகளை வாயில் போட்டு விழுங்கியதன் காரணமாக உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளதாக பொலிசார் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\n🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷\n👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585265.67/wet/CC-MAIN-20211019105138-20211019135138-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}